May 2025 – உபதேசம்

கணவன் மனைவி வாழ்த்த வேண்டிய வாழ்த்து

 

உங்கள் வாழ்க்கையில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ வேண்டும் என்றால் நளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்தும் மனைவி கணவனை மதித்தும் நடக்க வேண்டும். சாவித்திரியைப் போன்று எங்கள் இரு உயிரும் ஒன்றிட வேண்டும் இரு உணர்வும் ஒன்ற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதைப் போன்று எண்ணினால் எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்.

அப்படி என்றால் எமன் யார்…?
1.பிறருடைய வேதனையான உணர்வுகளை எடுத்து அதை நுகர்ந்து கொண்டால் வெறுப்பு வேதனை நோய் என்ற நிலை நமக்குள் வருகின்றது.
2.அப்படி நுகர்ந்த உணர்வே நமக்குள் எமனாகின்றது பல நோய்கள் வருகின்றது… அவர் உணர்வே நமக்குள் வலுவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு எப்போதுமே கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் தன் மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
1.அந்த அருள் என்றுமே எனக்கு உறுதுணையாக இருந்து
2.அந்த ஆசி கொடுத்தல் வேண்டும் என்று எண்ணிக் கணவன் வெளியிலே செல்லுதல் வேண்டும்.

அதே சமயத்தில் மனைவியும் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.அவர் எந்தக் காரியம் செய்தாலும் அது நல்லவையாக அமைய வேண்டும்.
2.அவரைப் பார்ப்பவருக்கு எல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எப்போதுமே மனைவி வாழ்த்துதல் வேண்டும்.

வெளியிலே எங்கே சென்றாலும் என் கணவருக்கு அந்த அருள் மணம் பெற வேண்டும் தொழிலில் செழித்திருக்க வேண்டும் அவர் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

. இதே மாதிரி எண்ணி இருவரும் வாழ்தல் வேண்டும்.

ஒருவன் தனக்குத் தீங்கு செய்தான் என்ற நிலையில்… அவன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தீங்கு செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணும் பொழுது அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இதே மாதிரி எண்ணினால் அவனுக்குப் புரை ஓடுகின்றது.

வாகனம் ஓட்டும்போது எண்ணினால் விபத்தாகின்றது. தொழிலில் இதே போன்று எண்ணினால் சிந்தனை குறைகின்றது… எந்திரங்களில் சிக்கி விடுகின்றார்கள்.

ஒரு கணக்கோ பொருளோ நல்ல முறையில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சிந்தனை குறைந்து முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டும் என்றால் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் அவருக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மனைவி வாழ்த்துக் கூறுதல் வேண்டும்.

அதே சமயத்தில் வெளியில் செல்லக்கூடிய கணவனும்
1.என் அன்னை தந்தையின் அருளால் மனைவியின் அருள் துணை எனக்குக் கிடைக்க வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி என்றுமே எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கணவனும் செல்லுதல் வேண்டும்.

இருவருமே இதைப் போன்று எண்ணி வாழ்ந்து வந்தால் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இணைந்து வாழ்கின்றோம் என்று பொருள்.

ரோட்டில் செல்கின்றோம். எதிர்பாராது எங்கிருந்தோ ஒரு பஸ் தறி கேட்டு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சந்தர்ப்பத்திலே “மனைவியின் உணர்வுகள் கணவனை அங்கே போக விடாது தடுக்கும்…”

அல்லது பஸ்ஸிலே ஏறப்போகின்றோம் என்றாலும் இதே நிலைகள் வளரப்படும் பொழுது “மனைவியின் உணர்வுகள் அந்தப் பஸ்ஸில் ஏற விடாது தாயின் உணர்வுகள் அங்கே தடுக்கும்…”

இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சாதாரணமாக நாம் நடந்து செல்லப்படும் பொழுது நமக்கு எதிரியாக இருப்பவர்கள்… “எனக்குத் துரோகம் செய்தான் அல்லது இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது மேடு பள்ளம் தெரியாதபடி விபத்தாகி விடும்.

அல்லது ஒரு வாகனம் வந்தாலும் தெரியாதபடி புரையோடுவது போன்று சிந்தனைகள் இழந்து விடும். இனம் புரியாதபடி விபத்தாகி விடும். இது எல்லாம் இயற்கையில் நடக்கும் சில சம்பவங்கள்.

ஆனால் இதை மாற்ற அன்னை தந்தையரை எண்ணி… “அவருடைய அருள் துணை எனக்கு என்றும் இருக்க வேண்டும்…” என்று எண்ணிச் சென்றால் நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வரும்.

தாய் எப்போதுமே தன் பிள்ளைகள் வாழ்க்கையிலே உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆசி கொடுத்துக் கொண்டே இருக்கும். அதே சமயத்தில் மனைவியின் எண்ணங்கள் வரும் பொழுது அந்த அன்பான எண்ணங்கள் மகிழ்ச்சியான உணர்வு கொண்டு எங்கே சென்றாலும் காக்கும் சக்தியாக வரும்.

தீமை என்று வரப்படும் பொழுது “அந்த எண்ணமே எமன்…”
1.எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்… இணைந்து வாழ்வதே சாவித்திரி.
2.ஆகையினால் மனைவி அருள் உணர்வு கொண்டு எண்ணப்படும் பொழுது அந்தச் சக்தி என்றுமே உறுதுணையாக இருக்கும்.

நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே தாய் தந்தையரை வணங்கி மனைவியின் அருள் பெற வேண்டும் என்று கணவன் வெளி செல்வதும் கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் மனதில் நினைத்து ஆசீர்வதித்து மனைவி அனுப்புதல் வேண்டும்.

தொழிலுக்குச் சென்றாலும் சரி அவர் செய்யும் தொழில் எல்லாம் உற்பத்தியாகும் பொருள்களிலும் அதை வாங்குவோர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதுமே “மனைவி கணவனை வாழ்த்திக் கொண்டிருத்தல் வேண்டும்…”

கணவன் மீது மனைவி பிரியமாக இருக்கின்றது. வீட்டில் இருக்கக்கூடிய சொந்த பந்தங்களோ நாத்தனாரோ மற்றவர்களோ வந்து கொஞ்சம் வேதனைப்படும்படி பேசி விடுகின்றார்கள்.

அந்த வேதனையால்… கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் “பாவிகள் இப்படிப் பேசுகின்றார்களே…” என்று இந்த உணர்வுகளைச் சேர்த்துத் தன் கணவனை எண்ணும் பொழுது இதே உணர்வுகள் அவர் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் தடைப்படும்.

அவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது மனைவி எண்ணினால் அவருடைய சிந்தனை இழக்கப்பட்டு விபத்தாகும்.
1.சாதாரண மனிதனுடைய உணர்வுகள் எண்ணும்பொழுது அந்த உணர்வு எப்படி இயக்குகின்றதோ இதைப் போன்று தான்
2.கணவன் மனைவிக்குள் மற்றவர்கள் செய்யும் உணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் கணவரை எண்ணினால் அங்கே தடையாகின்றது.

இதை எல்லாம் தடைப்படுத்த வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்ற உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று குறை கூறுவோர் நிலைகளை இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.

என் கணவருக்கு அந்த அருள் உணர்வு பெற வேண்டும். பேரானந்த நிலைபெறும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி கணவனை உயர்ந்த நிலை பெற எண்ணுதல் வேண்டும்.

இதே மாதிரிக் கணவனும் எங்கே சென்றாலும் மனைவியை எண்ணி மனைவிக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இப்படி எண்ணினால் அன்று அகஸ்தியன் எப்படி வாழ்ந்தானோ
2.அதைப்போல வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) சொல்லும் தியானத்திற்கு மந்திரம் சொல்ல வேண்டும்… அது எனக்கு மறந்து போய் விட்டது…! என்று எல்லாம் நீங்கள் சொல்லத் தேவை இல்லை.

ஈஸ்வரா… என்று உயிரை உங்கள் புருவ மத்தியில் நினைக்கின்றீர்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா..! என்று உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்தினாலே போதும்.

எந்த நல்லதைச் செய்ய விரும்புகிறீர்களோ அந்தக் காரியம் நல்லதாக இருக்க வேண்டும் என்று என்ணினாலே போதுமானது.

ஆனால் துருவ நட்சத்திரத்தை நினைத்தேன்… தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கின்றது… என்றைக்குத் தான் போகுமோ…? என் வயிற்று வலி என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று இருக்கிறது என்று இதைத் தியானித்தால்
1.இன்னும் விஷம் அதிகமாகப் போகும்
2.சுத்திகரிக்கும் நிலையே மாறிவிடும்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை விடுத்து விட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறுகின்றேன். துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் இரத்த நாளங்களில் கலக்கின்றது. என் உடல் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது. நோய் நீக்கும் சக்தி அந்த அரும் பெரும் சக்தியை நான் பெறுகின்றேன்…! என்று எண்ணுதல் வேண்டும்.

சர்க்கரைச் சத்தோ… இரத்தக் கொதிப்போ… வாத நோயோ… எதுவாக இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எனக்குள் சர்க்கரைச் சத்தை நீக்கும் அந்த அரும் பெரும் சக்தி வளர வேண்டும்.

அதே மாதிரி இரத்தக் கொதிப்பை நீக்கிடும் அரும்பெரும் சக்தி பெற வேண்டும். ஆஸ்துமா போன்ற நோய்கள் நீக்கி அந்த அரும்பெரும் சக்தி எனக்குள் பெற வேண்டும் என்று இதை மாற்றியமைக்க வேண்டும்.

இதைப்போல தியானத்தின் முலம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வாருங்கள்.

1.இந்த உணர்வை நீங்கள் அடிக்கடி அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்
2.இதை நுகர நுகர உங்கள் இரத்த நாளங்கள் பரிசுத்தமாகும்
3.எந்த நோயாக இருந்தாலும் அதை நீங்கள் மாற்றி அமைக்கும் நிலை வரும்.

உங்கள் எண்ணத்தால் தான் நோய் வருகின்றது. உங்கள் எண்ணத்தாலேயே அதைப் போக்கவும் முடியும்.

எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றது…? பிறர் படும் தீமைகளை அவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வை உற்றுப் பார்க்கின்றோம். அவர் உடலில் இருந்து வருவதை நுகர்கின்றோம்.

நுகர்ந்தது நம் இரத்த நாளங்களில் கலந்து நம் நல்ல குணங்களுக்கும் இதற்கும் போர் முறைகள் வருகின்றது. ஒன்றுக்கொன்று மோதல் அதிகமாகும்போது இந்த உணர்வின் தன்மை வரும்.

இடைப்பட்ட நேரத்தில் இதைச் சமப்படுத்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் இதைச் சமப்படுத்தலாம்.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை…!

ஏனென்றால் ஒருத்தருக்கொருத்தர் குடும்பத்தில் சண்டை போட்டுப் பல சிக்கல்கள் வருகின்றது. இதை யார் பஞ்சாயத்து செய்தாலும் ஒன்றும் நடக்காது.

அந்த உணர்வுக்கொப்பத் தான் இப்படிப்பட்ட செயலாக்கங்களும். அந்த உணர்வுக்கொப்பத்தான் இந்த எண்ணங்களும் வரும்.

அதை மாற்றிட…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என்னை இயக்கும் இந்த சக்தியிலிருந்து நான் விடுபட வேண்டும்.
3.என் பார்வையில் அனைவரும் நலமாக வேண்டும்
4.அனைவரும் நல்ல உணர்வுகளைப் பெறும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வை எண்ணினால் பகைமையான உணர்வு நமக்குள் வளர்க்காது பாதுகாக்கலாம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் மீண்டிட குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கும். இனி வரும் காலத்தில் அனைவரும் பிறவி இல்லை என்ற நிலை பெற வேண்டும்.

ஏகாந்த நிலைகள் கொண்டு… எதுவுமே நம்மைத் தாக்கிடாது… எதையுமே வென்றிடும் உணர்வுகளை நாம் இந்த மனித உடலில் உருவாக்கினால்தான் உடலை விட்டு உயிர் சென்றபின்… இந்த உணர்வின் துணை கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இல்லையென்றால் மீண்டும் மீண்டும் உடலின் தன்மை பெற்று அந்த உடலைக் காத்திடும் எண்ணங்கள் தான் வரும். உயிராத்மாவை ஒளியாக்கும் எண்ணம் வராது.

ஆனால் நம் உணர்வுகளை ஒளியாக்கி விட்டால் இருள் என்ற நிலை வராதபடி ஒளிச் சரீரம் நாம் பெறலாம். ஒளியாக மாற்றும் அந்தத் திறனை உருவாக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருமே துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவனுக்குக் கிடைக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் அன்னை தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று
4.இப்படி நாம் அடிக்கடி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

ஆகவே அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம். ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ்வோம்.

உங்களுக்குள் பதிவான ஞானிகளின் உணர்வின் சத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்

 

துன்பம் வரும் பொழுது உங்கள் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

நாரதன் கலகப் பிரியன்… நாரதன் கையிலே இனிமையான இசை உண்டு.
1.பிடிவாதமான உணர்வுகளை வளர்த்திடாது அருள் ஒளி கொண்டு இருளை நீக்கி இனிமை என்ற உணர்வினை இணைவாக ஏற்றி
2.மகிழச் செய்யும் உணர்வினை நமக்குள் வளர்த்திடல் வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.

இந்த வாழ்க்கையில் குறுகிய காலமே வாழும் நாம் இந்த உடலின் இச்சையை வளர்த்திட வேண்டாம். அருள் உணர்வின் தன்மையாக அவன் (அகஸ்தியன்) அருள் பெற வேண்டும் என்று இந்த இச்சையைக் கூட்டுங்கள்.

1.ஒளியின் உணர்வாக என்றும் நிலை கொண்ட மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்
2.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வை உணவாக எடுப்போம்
3.வருவது அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றுவோம் என்ற இந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை நம் உயிர் உருவாக்குகின்றது. எதை எண்ணுகின்றோமோ அதைக் கண் காட்டுகின்றது.

நமக்குள் அருள் ஒளி என்று பதிவான பின் மீண்டும் அது கண்ணுக்கு எட்டப்படும் பொழுது
1.எதனின் உணர்வை நமக்குள் நுகர்ந்தோமோ அந்த இடத்திற்கே கண் நம்மை அழைத்துச் செல்கின்றது.
2.அந்த உணர்வினை நுகரச் செய்கின்றது… பகைமை உணர்வை மாற்றுகின்றது
3.அருள் ஒளி என்ற உணர்வை உருவாக்குகின்றது.

ஆகவே அருள் ஒளியைப் பெறுவோம் என்று நாம் தியானிப்போம். இந்த வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் இதைப் போன்ற உணர்வுகளை நீக்குவோம்.

நோயாளியை அன்புடன் பண்புடன் பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் அவரைக் காக்க உதவுகின்றது. ஆனால் நம்மைக் காக்கும் நிலை அற்று விடுகின்றது. நம்மைக் காக்கும் நிலை இல்லை என்றால் நல்லது அழிந்து விடுகின்றது.

நல்லவைகள் அழிந்திடாது அருள் ஞானத்தைப் பெருக்கித் தீமையை நீக்கும் சக்திகளை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி… நம்முடைய சக நண்பர்களுக்கும் அதை உணர்த்தி
1.அவர்கள் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்… அவர்களும் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும்
2.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால்
3.அவர் உணர்வு கொண்டு நாமும் வளர முடியும்… நம் உணர்வு கொண்டு அவரை வளர்க்கவும் முடியும்.

நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகள் இந்தப் பரலோகத்தில் பரவுகின்றது. அந்த உணர்வின் தன்மை “நம் எண்ணமே நம்மைக் காக்கின்றது…”

அருள் ஒளியை நாம் பெற்றால் அனைவரும் அது பெற வேண்டும் என்று எண்ணினால் அனைவருடைய உணர்வுகளும் நமக்குள் ஒன்றென இணைகின்றது.

பகைமையற்ற உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது. நாரதன் கலகப்பிரியன் தீமைகளை அகற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது…
1.அதைப் பெருக்குகின்றது… அதுவே நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்வின் இயக்கமாக உயிர் ஒளியாகின்றது.

இதை நாம் அனைவரும் செயல்படுத்துவோம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய வாழ்க்கையில் நோயை நீக்க மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கே இன்னொரு விஷத்தின் தன்மை கொண்ட மருந்துகளைக் கொடுக்கப்படும்போது அதில் உள்ள விஷமும் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.

இப்படி மனிதன் நோயை நீக்கப் பல உபாயங்களைச் செய்தாலும் இந்த விஷத் தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் உறுப்புகளைப் பாழாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆக… கொஞ்ச காலம் வாழ்வதற்காக நாம் எத்தனையோ உபாயங்களை வைத்துச் செயல்படுத்துகின்றோம்.

மனிதன் உறுப்புகள் செயலிழந்து விட்டால் நுரையீரலில் இருந்து எல்லா ஈரல்களுக்கும்.. கிட்னி… இருதயம்… போன்றவைகளையும் மாற்று உறுப்புகளை வைத்து மனிதனை வாழ வைக்க முடியும்…! என்று விஞ்ஞானி செயல்படுத்துகின்றான்.

ஒரு எலும்பே இல்லை என்றாலும் அந்த எலும்பைப் போல இன்னொரு உடலில் அந்த எலும்பை உருவாக்கும் அணுக்களை வைத்து மோல்ட் (அச்சு) செய்கின்ற மாதிரி செய்து மனிதனுக்குத்தக்க எலும்புகளை உருவாக்கி… கை கால்களுக்கோ மற்ற இடங்களுக்கோ அதைப் பொருத்தி மீண்டும் சாதாரண மனிதனைப் போல வாழச் செய்ய முடியும்…! என்று விஞ்ஞானிகள் செயல்படுகின்றனர்.

ஏனென்றால் எலும்புகள் உருவாக்கிய அணுக்களை வைத்து மீண்டும் அதைப் பெருக்கப்படும் பொழுது அந்த மலம் உருவாகின்றது. அப்படி வளர்த்து மீண்டும் பொருத்துகின்றான்.

பண வசதி உள்ளவர்கள் இதைப் போல் பல லட்சம் செலவழித்து அதை எடுத்துப் பொருத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படிப் பொருத்தினாலும்…
1.அங்கங்களை இழந்த நிலையை எண்னும் போது
2.மற்றவர்கள் எல்லாம் சுயமாக இருக்கப்படும்போது நமக்கு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று
3.மீண்டும் அந்த நோயின் உணர்வுகள் கிளர்ந்து வருகிறது.

இதைப் போல் தொடர்ந்து வரும் போது அதை முழுமையாக நீக்கும் திறன் இல்லை.
1.செல்வத்தைச் செலவழித்து. உறுப்புக்களை மாற்றி அமைத்தாலும்…
2.உடலில் வரும் அந்த வேதனை உணர்ச்சிகள் (வேதனை என்றாலே நஞ்சு)
3.உடலை விட்டுச் செல்லப்படும்போது… உயிருடன் சேர்ந்தே செல்கின்றது.

சேர்த்துக் கொண்ட இந்த வேதனைக்கொப்ப மாற்று உடலாக மற்ற உயிரினங்களாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

ஆனால் நாம்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் இத்தகைய விஷத் தன்மைகளை எல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நம் உடலில் பதிவாக்கிக் கொண்டால்
1.நமது வாழ் நாளில் தீமைகளைக் கண்டாலும் உடனே அதைத் தடுத்து
2.நல்ல உணர்வாக அந்த அணுக்களையே மாற்றிவிட முடியும்.

இன்று எப்படி விஞ்ஞானி இந்த உறுப்புக்களின் தன்மையைப் பெற்று அந்த எலும்பையே உருவாக்கச் செய்கின்றானோ இதைப்போல நல் அணுக்களைப் பெருக்கி அதைச் சீராக்க இயக்கிட முடியும்.

உறுப்புகளை உருவாக்க முந்தி மற்ற பொருள்களால் செய்து வைத்தான். இப்பொழுது அதே போல் உறுப்புகளையே உருவாக்கிச் செயல்படும் நிலைகளை வைத்து கொள்கின்றான்.

மனிதனின் மேல் தோல் பாழாகிவிட்டால் அதைப் போல் தோலை உருவாக்கும் அணுக்களை வைத்து வளர்த்து மீண்டும் அழகான உடலாகவும் உருவாக்கும் நிலையைச் செய்கின்றான்.

1.ஆனால்.. இந்த உயிரைப் போல (அழியாத) உணர்வின் தன்மை உருவாக்கும் செயல் விஞ்ஞானியிடம் இல்லை.
2.உடலைக் காக்கப் பல முறைகள் கொண்டு விஞ்ஞானி செயல்படுத்தினாலும்
3.வேதனை உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
4.உடலுக்கு பின் சேர்த்து கொண்ட வேதனைக்கொப்ப இந்த உயிர் மாற்று உடலை உருவாக்கி விடுகின்றது.

இதிலிருந்து யாரும் தப்ப முடியவில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டால்… நாம் அந்த நினைவினை அடிக்கடி எடுக்கப்படும் பொழுது…
1.ஒரு கஷ்டப்படுவோரோ வேதனைப்படுவோரோ துயரப்படுவோரோ… அல்லது
2.ஒருவர் நம்மிடம் பழகி உடலை விட்டு அவர் பிரியும் போதோ அந்த நேரமெல்லாம்
3.அதைத் தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் நாம் வைத்து
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
5.உயிர் வழியாகக் கவர்ந்து நம் உடலுக்குள் கண்ணின் நினைவைக் கொண்டு செலுத்தி
6.நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று உள் முகமாகப் பாய்ச்சப்படும்போது
7.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நம் இரத்தத்தில் பெருகி தீமையான அணு உருவாகாதபடி தடுக்கின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. ஒளியான உணர்வாக மாறுகின்றது.

வாழ் நாளிலே எத்தனை கோடித் தவறுகளை நாம் பார்த்தாலும் அந்தந்தச் சமயத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டுமென்று உள்ளுக்குள் செலுத்தி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும். எந்த நேரத்தில் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் உயிரான்மா துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும்… அழியாத நிலைகள் பெறலாம்.

மெய் உலகை உருவாக்குவோம்

 

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள்… நேரமாகிவிட்டது வீட்டுக்குச் செல்ல வேண்டும்… தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்று சிலருடைய எண்ணங்கள் இருந்தால்… உங்கள் எண்ணங்களைப் பல நிலை கொண்டு அலைய விட்டால்… இந்த அருள் உணர்வுகளைப் பெறுவது கடினமாகி விடுகின்றது.

ஆலயங்களுக்குச் செல்கிறோம் என்றால் மலர் பூஜை விளக்கு பூஜை என்று எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள். அதைச் செய்ய நாள் கணக்கில் மணிக்கணக்கில் கூட உட்கார்ந்து இருக்கின்றோம்.

யாகங்கள் வேள்விகளைச் செய்தால் அங்கேயும் அமர்ந்து… தான் எந்த ஆசையில் போனோமோ “அவன் அதைக் கொடுப்பான்” என்று ஆர்வத்தில் உட்கார்ந்து இருக்கின்றோம்.

ஆனால் அந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் தெய்வத்தையே பழித்திடும் நிலைகள் வருகின்றது. ஆக ஆசைக்கொப்பத் தான் நாம் அங்கெல்லாம் செல்கின்றோம்.

அவ்வாறு இல்லாதபடி
1.நமது ஆசை அனைவரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும் என்றும்
3.என் பார்வை சொல் செயல் எல்லாம் அனைவரும் நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று
4.உயிரான நெருப்பில் இந்த உணர்வின் அலைகளைப் பரப்பினால்
5.உண்மையான யாகம்… உயிரின் நிலைகள் கொண்டு அவ்வாறு உருவாக்கும் சக்திகள் தான்.

அதாவது எண்ணத்தின் உணர்வு கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்ச்சிகளைப் பரப்புவதும்… அந்த உணர்வின் அணுக்களாக மாற்றுவதும்… சொல்லின் உணர்வுகள் அனைவருக்கும் பரவச் செய்து…
1.கண்ணின் நினைவாற்றல் கொண்டு யாரை எண்ணுகின்றோமோ அந்தச் சொல்லின் ஆற்றல் அங்கே ஊடுருவி
2.அவர்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் ஒன்றி வாழ வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் போது
3.நம் எண்ணத்தின் உணர்வுகள் கண்ணின் நினைவு கொண்டு அவர்கள் மேல் பாய்ச்சப்படுகின்றது.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “அவருடைய தீமை நமக்குள் வராதபடி தடுக்க இது உதவும்…”

ஆகவே ஒவ்வொருவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்வோம். உலக மக்கள் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம். நமது பார்வையும் சொல்லும் செயலும் புனிதம் பெறுவோம். அனைவரையும் புனிதமாக்கும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.

உலக மக்கள் நலம் பெறத் தியானிப்போம். விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழும் அனைவரும் அந்த அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய்ஞான வாழ்க்கை பெற வேண்டும் என்று தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் இந்த மனித வாழ்க்கையிலேயே ஒளி என்ற உணர்வை உருவாக்கும் பிறவி இல்லாத நிலை என்ற நிலையை அனைவரும் அடைய வேண்டும் என்று தியானிப்போம்.

1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்றும்
2.அவரவர்கள் குடும்பத்தில் பற்றுடன் வாழ வேண்டும் என்றும்
3.எதிர்காலக் குழந்தைகள் மெய்ஞானத்தை வளர்க்க வேண்டும்… மெய் உலகை உருவாக்க வேண்டும் என்றும்
4.எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் தன் உடலில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த உணர்வின் நிலையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கே பூமியில் சுழன்று கொண்டிருப்பதை ஈஸ்வரபட்டர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்ததை நினைவு கொண்டு எண்ணும்போது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நான் சுவாசிக்க நேருகின்றது.

என் உடலுக்குள் அது கலந்த பின்… தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பும் பித்தளையும் திரவகத்தை ஊற்றிப் பிரிப்பது போல
1.அந்த அருள் ஞானியினுடைய உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று
2.தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது…
3.தீமைகளைப் பிரித்துவிடுகின்றது… அதைச் சுத்தப்படுத்துகின்றது

இதுதான் ஆத்மசுத்தி என்பது.

மற்றவர்களுடைய குறைகளை நான் கேட்டாலும் இந்த முறைப்படி சுத்தப்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு முன்னாடி நான் எத்தனையோ வேதனைகளை அனுபவிக்க நேரும்.

உங்களுக்கு நன்மை செய்யலாம்… ஆனால் நீங்கள் பட்ட தீமைகள் எல்லாம் எனக்குள் அதிகமாக வந்து எனக்குள் நல்லதை மூடி மறைத்துவிடும்.

இதைப் போன்று தான் உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குவதற்கும் இந்த உபாயத்தை… அந்த மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையைக் காட்டிக் கொண்டு வருகின்றேன்.

எந்த அளவுக்கு நீங்கள் கூர்ந்து இதைக் கவனிக்கின்றீர்களோ இது ஊழ்வினையாக உங்கள் எலும்புக்குள் பதிவாகின்றது.

எப்போது நீங்கள் தீமைகளைச் சந்திக்க நேருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை நீங்கள் தூண்டப்படும் போது
2.அதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கும்போது
3.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வைச் சுவாசிக்க நேருகின்றது.

டி.வி.யுடன் சேர்ந்த ஆண்டன்னாவின் பவரைக் கூட்டும்போது வெகு தொலைவில்… செயற்கை கோள்கள் மூலமாக அங்கிருந்து ஒலி… ஒளிபரப்பச் செய்வதைக் கவர்ந்து அது காட்டுகிறது

அதை நாம் டி.வி.யில் பார்ப்பதைப்போல அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்பொழுது யாம் சொல்லும்போது கூர்ந்து கவனித்தால் உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு ஆவது மட்டுமல்ல…
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு
2.அதனின் நிலைகள் கொண்டு ஆழமாகப் பதிவானபின்
3.அந்த நினைவின் அலைகளை… மகரிஷிகளை எண்ணும்போதே
4.ஆண்டன்னாவின் சக்தியைக் கூட்டியது போல்… நம் கண் (ஆண்டன்னா) மிக சக்தி வாய்ந்ததாக மாறி
5.அந்த ஆற்றல்களைக் கவர்தல் வேண்டும்.

ஆகவே இப்பொழுது கேட்டுணரும்போது உங்கள் கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை இணைந்து… நான் சொல்வதை அதே கண் தான் ஈர்த்து ஊழ்வினையாக உடலிலே பதிவு செய்கின்றது.

அதே சமயம்
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிகளுக்கு…
2.அந்தத் திரைகளுக்கு அனுப்பும் கண்ணின் நினைவை
3.ஒவ்வொரு நுண்ணிய அலைகளையும் இது சக்தி வாய்ந்ததாகச் சேர்க்கின்றது.

பின்பு அந்த ஆண்டன்னா பவர் போல… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஏங்கினால் அதைக் கவர்ந்து உங்களைச் சுவாசிக்கச் செய்து உங்கள் உடலுக்குள் அந்த உணர்வுக்ள் சென்று அறியாது வந்த தீமைகளை நீக்கிட உதவும்.

இப்படிச் செய்யாமல் சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் என்ற எண்ணம் இருந்தால்
1.நமக்கு நாமே ஏமாந்து நமக்கு நாமே காலத்தை விரயம் செய்து
2.நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்வதுபோல் தான் ஆகும்.
3.யாகங்களைச் செய்தோ வேள்விகளைச் செய்தோ இதை எல்லாம் நிவர்த்திக்க முடியாது.

யாகம் என்பதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்த்தால் இது தான் யாகம்… அது தான் வேள்வி.

அந்த உயர்ந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணத்தை நமக்குள் செலுத்தினால் ஒழிய துன்பங்களை அடக்க முடியாது.

1.நம் உயிர் ஒரு நெருப்பு
2.அதிலே எதைப் போடுகின்றோமோ அந்த வாசனை தான் வரும்

ஒரு நஞ்சினை நெருப்பிலே போட்டால் அந்த நஞ்சின் வாசனை தான் வரும். ஆனால் அதிலே நல்ல மணத்தின் தன்மையைப் போட்டால் நல்ல மணத்தின் தன்மையை நாம் காணலாம்.

இதைப் போன்று தான் நம் உயிரில் நல்ல மணத்தின் தன்மையைப் போடும்போது நம் எண்ணங்கள் நல்லதாக வருகின்றது.

ஆகவே மிக சக்தி வாய்ந்த ஒரு நறுமணம் கொண்ட நிலையை நாம் இடும்போது அதிலிருந்து வெளிப்படுவதைச் சுவாசிக்கும்போது நல்ல வாசனை கொண்டதாக இருக்கின்றது.

ஆனால் நஞ்சான நிலைகள் நெருப்பிலே விழுகும்போது அதை நுகர்ந்தால் நாம் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விடுகின்றோம்.

இதைப் போலத் தான் நாம் எந்த உணர்வின் தன்மை எண்ணுகின்றோமோ இந்த நெருப்பான உயிருக்குள் இந்த உணர்வின் அலைகளாக உடலுக்குள் சென்று அந்த குணங்களுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.

ஆக அந்த ஞானிகளின் சக்தியை நமக்குள் எடுத்துத் தீமையின் உணர்வுகளை நீக்கி நல் உணர்வின் சத்தை நமக்குள் வலுக்கொண்டதாக மாற்றிக் கொள்வதற்குத்தான் எமது குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்றுதான் உங்களுக்குள்ளும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்கின்றோம்.

1.நீங்கள் அனைவரும் மெய்ப்பொருள் காண வேண்டும்
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.இருள் நீங்கிய உணர்வலைகள் கொண்டு நீங்கள் பேசப்படும்போது
4.நீங்கள் வெளியிடும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவரப்படும்போது
5.பிறருடைய உணர்வுகளுக்குள் அது சென்றாலும் அல்லது
6.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்
7.உங்கள் மூச்சின் அலைகள் பிறருடைய தீமைகளை நீக்க இது நிச்சயம் உதவும்.

சோம்பேறியாக இருக்கும் நம்மை உஷார்படுத்தும் சந்தர்ப்பம்

 

நம்மை ஒருவன் தவறாகப் பேசுகின்றான் பழித்துப் பேசுகின்றான் சங்கடமான நிலைகளில் தொல்லை கொடுக்கின்றான் என்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1அவன் எண்ணிய உணர்வுகளை நமக்குள் வளர்த்து அவன் நினைவிலேயே நாம் வளர்ந்து விடுகின்றோம்.
2.நல்ல உணர்வுகளை இழக்க நேர்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பகைமை உணர்வுகள் நமக்குள் விடாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பகைமை கொண்டு ஒருவன் பேசினால் அந்த உணர்வை நமக்குள் எடுத்தால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களும் அந்தப் பகைமை உணர்வுகள் ஒன்றுக்கொன்று வீரியத்தன்மை அடைந்து மேல் வலி கை கால் குடைச்சல் இது போன்று வேதனையின் நிலைகளைத் தோற்றுவித்து விடுகின்றது.

ஆகவே நம் உடலுக்குள் தீமை என்ற உணர்வு உள்புகாது காத்திடல் வேண்டும். ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றாலும் சேனாதிபதி தீமை உள்புகாதபடி தீமையை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து அதை வலுவான நிலைகள் கொண்டு உருவாக்குதல் வேண்டும்.
1.அந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.
2.ஒருவன் தீமை என்ற நிலையில் அதிகமான அளவு தொல்லை கொடுக்கின்றான் என்றால்
3.அதை மறக்க அருள் ஒளி பெற வேண்டும் என்று இதை உருவாக்கிடல் வேண்டும்.
4.இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகின்றது.
5.நாம் சும்மா இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்திருக்க மாட்டோம்.
6.ஆனால் ஒருவன் தீமை செய்யும் உணர்வுடன் வரும் பொழுது அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குகின்றோம்.
7.அந்த வலுவின் தன்மை நமக்குள் உருவாகின்றது
8.சோம்பேறியாக இருந்தவனை உஷார்படுத்தியது போன்று வந்து விடுகின்.றது.

வயல்களிலே தண்ணீரை வாய்க்காலிலிருந்து பாய்ச்சுகின்றோம். கவனக்குறைவாக இருந்தால் தண்ணீர் போகும் பாதையில் உடைப்பாகிவிட்டால் நீர் வேறு பக்கம் சென்று விடும். சீரான நிலையில் கொண்டு நம் வயலுக்குப் பாய்ச்ச முடியாது.

அதைப் போன்று நாம் இந்த வாழ்க்கையில் நமக்குள் நல்ல உணர்வின் தன்மையைத் தடைப்படுத்தும் நிலை எதுவாக இருந்தாலும் அவ்வாறு இடைமறித்தால் அதையெல்லாம் நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

நம் கண்ணுக்குப் பெயர் இடையன் என்றும்… நல்ல எண்ணம் கொண்டு நாம் செல்கின்றோம் இடைமறித்துத் தவறான உறவுகள் நமக்குள் வந்தால் அதனின்று காத்து நல்வழி செயல்படுத்தும் உணர்ச்சிகளை ஊட்டிடல் வேண்டும்.

நம் கண்களுக்குப் பெயர் கண்ணன் என்றும் இடையன் என்றும் அவன் மாடுகளை மேய்ப்பவன்… இந்தக் கண் நம்மை மேய்க்கின்றது. தவறு என்ற உணர்வு வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் நம்மை இடைமறித்து நல்வழியான நல்ல இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றது.

நண்பனுக்குள் ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கின்றோம் திடீரென்று எண்ணங்கள் உதயமாகும். நண்பரைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினால் “அவர் வேறு ஒரு தெருப் பக்கம் சென்று கொண்டு இருந்தாலும்” நம் கண்ணின் நினைவாற்றல்கள் அங்கே செல்லும். அவரை இழுத்துக் கொண்டு இங்கே வரும்.

அதைப் போன்று
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றி ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.
2.அதை பதிவாக்கிக் கொண்ட பின் நம்மை எங்கே அழைத்துச் செல்லும்…?
3.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

ஒரு நோயாளியை உற்றுப் பார்க்கிறோம் உதவி செய்கிறோம் என்றால் அதை வலுவாக்கினால் இதே கண் அந்த நோயாளி மடிந்த பின் நம் உடலுக்குள் அந்த ஆன்மாவை அழைத்து வந்துவிடும்.

ஆகவே இந்தக் கண்ணின் இயக்க நிலைகளை கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். எதன் உணர்வை வலுப்பெறுகின்றாயோ அதன் தன்மையை நீ அடைகின்றாய் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே நாம் இந்த உடலுக்கு பின் எதுவாக வேண்டும்…? அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

குரு பலம் நாம் பெற வேண்டும்

எனக்குள் (ஞானகுரு) வந்த தீமைகளிலிருந்து விடுபட மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “பல உணர்வின் ஒலிகளைக் கூர்மையாகக் கேட்டுணரும்ப்படி செய்து… அந்த உணர்வை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்தார்…!”

1.அவர் பதிவு செய்யும் போது
2.அவரைக் கூர்மையாகக் கவனிக்கும் போது
3.அவர் சொன்ன நிலைகளிலிருந்து
4.எனக்கு வரும் தீய விளைவுகளிலிருந்து என் குருவை எண்ணும் போதெல்லாம்
5.எனக்குள் வந்த தீமையை நீக்கி நல்ல வினைகளை எனக்குள் வளர்க்க முடிகின்றது.

அதே சமயம் மற்றவர்கள் என்னிடம் அவர்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கேட்க வரப்படும் போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் எனக்குள் கேட்டறிந்தாலும் “அந்தக் கஷ்டம்” என்னை இயக்காதவண்ணம் மாற்ற முடிகிறது.

இப்பொழுது கசப்பு புளிப்பு காரம் போன்ற பல சரக்குகளை இணைத்து எப்படிச் சுவையாகச் சமைத்து உணவாக உட்கொள்கின்றோமோ அதைப் போல் என்னால் மாற்றிக் கொள்ள முடிகிறது.

ஏனென்றால் ஒவ்வொருவரும் என்னை அணுகும் போது அவர்களின் துன்பத்தையும் கஷ்டத்தையும் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்து தான் நான் பதில் சொல்ல வேண்டியது வரும்.

1.உங்கள் உடலில் விளைய வைத்த துன்பங்களை நீங்கள் சொல்லும் போது
2.நான் கேட்டறியப்படும் போது அந்தப் பலவும் சேர்த்து என் உடலுக்குள் வந்தால்
3.ஒரு நூறு பேர் சொல்கிறீர்கள் என்றால்.. எனக்குள் அது நோயாக உருவாக்கத் தான் தூண்டும்.

ஆனால் அவை அனைத்தும் எனக்குள் நோயாக விளையாதபடி குருநாதர் காட்டிய வழிகளில் விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து அதனுடன் கலக்கச் செய்து நான் மாற்றிக் கொள்கிறேன்.

ஒரு குழம்பை வைக்கும் போது காய்கறிகளையும் மற்றதையும் போட்டு வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை (காரலை) நீக்கிச் சுவைமிக்கதாக ஆக்குகின்றோம் அல்லவா…!

அதைப் போல் நீங்கள் பேசும்… எம்மிடம் கேட்க வரும் அந்த நிலையை
1.எனக்குள் சேராவண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.அந்தக் குழம்பைச் சுவையாக்கியது போல் எனக்குள் அந்தத் தீமை விளைவிக்காதபடி சுவைமிக்கதாக ஆக்கிக் கொள்கிறேன்.

மிளகாயை வாயிலே போட்டவுடனே ஆ… என்று அலறுகின்றோம். நம் உமிழ் நீரே காணாது போய்விடுகின்றது. ஏனென்றால் அதில் உள்ள விஷத் தன்மை அதனின் துடிப்பு நம் அங்கங்களை அவ்வளவு வேகமாக இயக்குகின்றது.

அது வேகமாக இயக்கினாலும் அதே மிளகாயைப் பல சரக்குகளுடன் சேர்த்து இந்தக் காரத்தை அதிலே அளவுடன் போடும் போது
1.இரசனை கொண்டு நம் உமிழ் நீரைச் சுரக்கச் செய்து
2.ஆகா..!. என்று நாம் ருசித்துச் சாப்பிடும் நிலையாக உணர்ச்சிகளைத் தூண்டி
3.மனிதனுக்குள் வலுவின் தன்மை கூடி சிந்திக்கக்கூடிய உணர்வை ஊட்டி
4.நம்மை மகிழ்ச்சி அடையச் செய்கிறது அதே காரம்…! (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!)

இதைப் போல் தான் கோபமாகவோ வெறுப்பாகவோ சலிப்பாகவோ சஞ்சலமாகவோ வேதனையாகவோ பல சோர்வடைந்த நிலைகளில் அவரவர்களுடைய கஷ்டங்களை எம்மிடம் சொல்லி… அந்தக் கஷ்டத்திற்கு நிவாரணம் தேட என்னிடம் கேட்க வந்தாலும்… நீங்கள் கஷ்டப்படும் உணர்வின் தன்மை நான் கேட்டறியும் போது அந்த உணர்வுகளை என் செவிப்புலன் ஈர்த்தாலும்… அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நான் சுவாசித்து என் உயிரிலே பட்டு அதை அறிந்து தான் நான் பதில் சொல்ல வேண்டி வரும்.

1.குருநாதர் கொடுத்த சக்தி கொண்டு பல உபகாரங்களை உங்களுக்குச் செய்தாலும்
2.நான் அதை மாற்றவில்லை என்றால் நீங்கள் சொன்ன உணர்வுகள் என் உடலுக்குள் சென்று
3.கடுமையான தீய விளைவுகளை உண்டாக்கிவிடும்.

அத்தகைய நிலையை நான் சமப்படுத்துவதற்குத் தான் குருநாதர் அந்த விண்ணின் ஆற்றலை… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை… நீ எப்படிப் பருக வேண்டும்…? என்று தெளிவாக்கினார்.

அதை எடுத்துச் சுத்தப்படுத்தி… வேக வைத்து… அதனைச் சமப்படுத்தி… சமைத்து… ருசியாக்கி…
1.யார் உன்னிடம் சொன்னார்களோ அவர்களின் தீமைகளை நீக்க
2.அருள் உணர்வின் வாக்கினை அங்கே அவர்களுக்குள் பதிவு செய்து
3.அவர்களைத் தீமையிலிருந்து விடுபடச் செய்வதற்கு நீ இதைச் செய்…! என்று குருநாதர் சொன்னார்.

உங்களை அறியாது உடலில் சேரும் தீமையிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் “குருநாதர் சொன்ன வழியில்… உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்…!”

நீர் சக்தியை உருவாக்கும் அகஸ்தியன்

 

இந்தப் பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் எவ்வாறெல்லாம் சூரியன் கவர்ந்து இந்த உணர்வுகள் வளர்ந்துள்ளது…? தாவர இனங்கள் எதனெதன் நிலையை எடுத்துக் கொண்டதோ அது வித்தான பின் பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தைக் கவர்கின்றது.

பல உணர்வுகளை இரண்டறச் சேர்த்து ஒரு வித்தாகச் செடியாக மாறினால் அதிலிருந்து வரும் அதனின் வித்து அந்தத் தாய்ச் செடியின் சத்தை எப்படிக் கவர்கின்றது…? என்பதை அணுவின் ரகசியத்தை அகஸ்தியன் உணர்கின்றான்

1.ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வின் தன்மை மேகமாக மாறி அதன் வழி கொண்டு மேகத்திலிருந்து நீர் வருவதைக் கண்டு
2.இவனுக்குள் பல தாவர இனங்களை நுகர்ந்து வியர்வை போன்று வரும் உணர்வின் தன்மை உடலில் உருவாக்கிய பின்
அவன் எந்தப் பாறை மீது அமர்ந்தாலும் தனக்குள் ஈர்க்கும்… நீராக உருவாகும் ஊற்றாக உருவாகின்றது.

மின்னல்களோ மற்ற நிலைகளோ மோதி ஆவியின் தன்மை எடையற்ற நிலைகள் கொண்டு மேகங்களாகக் கூடினாலும்
1.இதனை ஈர்க்கும் சக்தி எடையற்ற நிலைகள் அந்த அகஸ்தியன் அமர்ந்த தரைப் பாகங்களில் பட்டால்
2.அங்கே ஈர்க்கப்பட்டு நீர் ஊற்று உருவாகும் நிலை வருகின்றது.

மலை உச்சியில் இந்த ஊற்றுகள் உருவாகின்றது. ஆனால் மலையின் அடிவாரத்தில் நீர் இருப்பதில்லை. கீழே தோண்டினாலும் நீர் வருவதில்லை. ஆனால் வெறும் பாறையாக இருக்கின்றது.
1.அதன் உணர்வின் தன்மை வியர்த்து அதன் உணர்வுடன் கரைக்கப்பட்டு
2.அதன் வழி பாறைகளின் இடைவெளிகளில் நீரூற்றுகள் தோன்றுகின்றது.

அகஸ்தியன் இருந்த இடங்களில் எல்லாம் நீர் சத்து கலந்தே வருகின்றது. ஆக பல பல உணர்வின் தன்மை அவன் உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையும் அவன் தாய் கருவிலேயே உருப்பெற்ற நிலைகள் தான் அவை.

ஆகவே முதல் மனிதனான அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை மாற்றியமைக்கும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கின்றது. இப்படிக் கிடைத்த மனிதன் தான் தன் ஐந்தாவது வயது வரப்படும் பொழுது காடுகளுக்குள் எங்கே சென்றாலும் அவனுக்கு எதிர்ப்பே இல்லாத நிலைகள் வருகின்றது.

காட்டு அரசன் என்ற நிலைகளில் அவனுக்குப் பெயர் சூட்டுகின்றனர்.
1.மிருகங்கள் அனைத்தும் அஞ்சுகின்றது. விஷம் கொண்ட மனிதர்கள் இவனைக் கண்டு அஞ்சுகின்றனர். இவன் வழியே இணங்கி வருகின்றனர்.
2.இப்படி ஒடுக்கும் உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்து அவன் அறியாமலே செயல்கள் செயல்படுகின்றான்.

ஒரு போக்கிரி இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதே சமயத்தில் சாந்த குணம் கொண்ட ஒருவன் கடையிலே சென்று சில்லறை கேட்கின்றான் என்றால் போயா…! உனக்கு இல்லை என்பான் கடைக்காரன்.

ஆனால் அந்தப் போக்கிரி கேட்டால் அவன் அறியாமலேயே அவனை இயக்கச் செய்து சில்லறையைக் கொடுத்து விடுகின்றான்.

இதைப் போல உணர்வின் இயக்கங்கள் உற்று நோக்கும் பொழுது அகஸ்தியனுக்கு எப்படிச் சாதகமாக இயங்குகின்றது…? என்றும் இது எல்லாம் சந்தர்ப்ப இயக்கங்கள் தான்.

இயற்கையில் கோள்கள் எதை நுகர்ந்ததோ அதைத் தனக்குள் நுகர்ந்திடும் வல்லமை பெற்றது. சனிக்கோளோ மற்ற அணுக்கள் மோதும் பொழுது ஆவியாக எடையற்ற நிலையாகப் பரவுவதும் தன் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் நீராக மாற்றும் சக்தி பெற்றது.

இதைப்போல மனித உடலுக்குள்ளும்
1.தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருந்த நிலையை நீராக மாற்றுவதும் விஷக்கழிவினை நீராக மாற்றி விஷத்தை நீக்கி விட்டு
2.நமக்குள் உமிழ் நீர் என்று ஜீரணிக்கும் உமிழ் நீராக மாற்றுகின்றது.

நமக்குள் ஊறும் உமிழ் நீர்கள் உணவாக உட்கொள்ளும் அந்தப் பொருளை அமிலமாக மாற்றி அதை இரத்தமாக மாற்றுகின்றது. குளுக்கோஸ் ஒரு சுவையின் தன்மை மாற்றுவதும் அது சுழன்று வரப்படும் பொழுது வடிகட்டும்போது அமிலமாக மாற்றுவதும் அது ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது வாயு உற்பத்தியாகின்றது.

அந்த வாயுவின் தன்மை கொண்டு கை கால்களைச் சுருக்குவதும் மடக்குவதும் போன்ற நிலை வருகின்றது. எண்ணத்தின் உணர்வு கொண்டு செயல்படுத்தும் பொழுது நரம்பு மண்டலம் சீராக இயங்கி எதை எண்ணுகின்றோமோ அதை இயக்கிச் செயல்படுத்துகின்றது.

நண்டை எடுத்துக் கொண்டால் தன் உணர்வின் வலு கொண்டு எதிலே எண்ணத்தைப் பாய்ச்சுகின்றதோ அது இயக்குகின்றது. ஆனால் அதற்கு நரம்பு மண்டலங்கள் கிடையாது.

இருந்தாலும் கூட்டாக அமைந்திருக்கும் அதனுடைய உணர்வுக்குள் அமிலங்கள் இரண்டறச் சேர்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தால் வாயு உருவாகின்றது.

இடுக்கி போன்ற தன் கை கால்களை இயக்குவதும் தன் உணர்வின் வலுக் கொண்டு அதைச் செயல்படுத்துவதும் நரம்பு மண்டலம் இல்லாமலே நண்டினங்கள் செயல்படுத்துகின்றது. தேள் இனங்களும் அவ்வாறே இயக்குகின்றது.

இதையெல்லாம் குருநாதர் இயற்கையின் உண்மையின் உணர்வால் அதை எவ்வாறு இயக்குகிறது என்பதையும் இந்த உண்மையை உனக்குள் அறிந்து கொள். இதை எல்லாம் கடந்து தான் நீ மனிதனாக வந்திருக்கிறாய்.
1.அவை அனைத்தையும் அறியும் உணர்வின் தன்மை உனக்குள் உண்டு.
2.கார்த்திகேயா என்று உனது எண்ணத்தை எதன் பால் செலுத்துகின்றாயோ அதனை அறியும் பருவம் பெறுகின்றாய்.
3.தீமையை அகற்றும் உணர்வினை நீ நுகர்ந்தால் தீமையகற்றிடும் சக்தியைப் பெறுகின்றாய் என்று
4.குருநாதர் அடிக்கடி இவ்வாறு எனக்கு உணர்த்துவார்.

அவர் கண்ட உண்மையின் உணர்வுகளைப் பதிவாக்கி நினைவு கொண்டு உற்று நோக்கிச் சுவாசிக்கும்படி செய்து தீமைகளிலிலிருந்து விடுபடும் உணர்வை உருப்பெறச் செய்யும்படி சொல்வார்.

தீமைகளிலிருந்து விடுபடும் சக்திகள் உனக்குள் அது உருப்பெற்றுவிட்டால்
1.உன் சொல்லைக் கேட்போர் உணர்வுகளுக்குள் இத்தகைய ஆற்றல்கள் பதிவாகி அவர்களும் தீமையிலிருந்து விடுபட இது உதவும்.
2.உன் சார்புடையோர் அனைவருக்கும் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை அவர்கள் வளர்த்து விட்டால்
3.தீமையை அகற்றிடும் வல்லமை கொண்ட காற்று மண்டலம் இங்கே சுழலுகின்றது.

எந்த நண்பனின் நிலைகளில் தீமைகளை அகற்றிடும் நிலைகளைப் பதிவாக்குகின்றோமோ அந்த நண்பன் அவன் உடலில் விளைய வைத்த உணர்வுகள் உனது ஆன்மாவாக மாறுகின்றது. அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் உன் உடலில் உருவாகின்றது.

1.ஒரு மனிதனை இவ்வாறு உருவாக்க வேண்டும் என்றால் அவனைக் காக்க வேண்டும் என்றால்
2.நீ கண்டறிந்த உணர்வினை உன் சார்புடைய மக்களுக்கு இதை எடுத்துரைத்து அவர்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்.

தீமையை நீக்கும் உணர்வுகள் அங்கே விளைந்தால் உனக்குள் தீமை அகற்றிடும் உணர்வுகளாக… அவர்களுக்குள் அது உற்பத்தியாகும் பொழுது தான் அந்த நிலை வருகின்றது.

சிறு துளிகளாக மழை பெய்கின்றது. ஆனால் அதை ஆங்காங்குள்ள பூமியினுடைய நிலைகள் இழுத்து விடுகின்றது… வெள்ளமாகச் செல்வதில்லை.

ஆனால் அதே சமயத்தில் சிறு துளிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வலுப்பெறும் போது வெள்ளமாக ஓடத் தொடங்குகிறது. இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் பெற்ற உணர்வினை அருள் ஒளியை உருவாக்குதல் வேண்டும். உணர்வின் வலிமையை உருவாக்குதல் வேண்டும்.

அவர் உடலிலிருந்து வெளிப்படும் அத்தகைய உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டால்
1.நம் உணர்வு அவர் உடலிலும் அவர் உணர்வு நம் உடலிலும் ஈர்க்கப்படும் போது
2.இருவரது உணர்வுகளும் ஒன்றாக இணைகின்றது.

கோபமான உணர்வு ஒரு உடலிலே பதிவானால் அந்தக் கோபமான உணர்வுகளும் இரண்டறக் கலக்கத்தான் செய்கின்றது. நமக்குள் நல்ல குணங்களை மீறி அந்தக் காரத்தின் உணர்ச்சியை ஊட்டும் பொழுது அத்தகைய அணுக்கள் விளைந்தால் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.

இதை அருள் ஞானிகள் உணர்வு கொண்டு அடக்கினால் தனது நண்பனுக்கும் அந்த நிலை பெற வேண்டும் என்று சந்தர்ப்பத்தால் வேதனையோ துன்பங்களை ஏற்படும் பொழுது அருள் ஒளி பெற வேண்டும் என்று தனக்குள் எடுத்து அதை உருவாக்க வேண்டும்.

அதாவது ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அவன் உடலுக்குள் ஊடுருவி தவறிலிருந்து மீட்கும் நிலையாகச் சிந்திக்கும் செயலாகப் பெற வேண்டும் என்று உணர்வை ஊட்டிடல் வேண்டும்.

பல முறை நாம் செய்தால் அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கின்றோம். நண்பன் என்று பேசப்படும் பொழுது ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. அத்தகைய உணர்ச்சிகளை ஊட்டி அதை ஏற்கும்படி செய்து அது அங்கே பதிவானால் நினைவு கொண்டு தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறுகின்றான்.
1.அந்த அருள் வழியில் என்றும் இணைந்து வாழலாம்.
2.இப்படிப்பட்ட கூட்டமைப்பை அதிகமாகச் சேர்த்தால் வலு கொண்ட உணர்வாகச் செல்கின்றது.

இராமாயணத்தில் வாலி என்ற நிலை வரும் பொழுது விஷம் கலந்த உணர்வுகள் எதனையுமே தாக்கிடும் நிலையாக அந்த ஆற்றல் பெற்றது. அது வாயுபுத்திரன் தான். உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகி விஷத்தின் தன்மை பாய்ச்சுகின்றது.

வாலி எவரைக் கண்டாலும் அவனுடைய வலுவையும் சேர்த்து சம வலிமை பெறுகின்றான். ஒரு நோயாளியின் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நமது கண்கள் உற்றுப் பார்க்கின்றது.

அவனின்று வெளிப்படும் உணர்வினை நல்ல குணங்களை அடக்கிடும் வாலியாக அது வருகின்றது. அதை நுகர்ந்தால் நல்ல குணங்கள் செயலிழந்து விடுகின்றது. நம்முடைய வலிமையும் இழக்கச் செய்கின்றது.

1.அதைப்போல சுக்ரீவன் என்று வரப்படும் பொழுது அது அவனுடைய சகோதர இனம் தான்.
2.சூரியனின் நிலைகள் கொண்டு அதீதமான வெப்பத்தையும் மற்ற உணர்வுகளையும் விஷத்தின் தன்மை கலந்து
3.வாயு என்ற நிலையில் அதிகரிக்கப்படும் பொழுது சூறாவளி போன்று தீமைகளை அடித்துச் செல்லுகின்றது.

ஆஞ்சநேயர் என்பது வாயுபுத்திரன் தான்.

நாம் எண்ணும் எந்த உணர்வின் தன்மையோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவி உணர்ச்சிகளைத் தூண்டி நாம் சொல்லைக் கேட்போர் உடலுக்குள் இந்த உணர்வுகள் தாவிச் சென்று அந்த உடலான கோட்டைக்குள் ஊடுருவி உணர்வின் உணர்ச்சிகளை உந்தி மெய் உணர்வாக அறியச் செய்கின்றது.

இதைப் போல தான் உணர்வின் தன்மை ஒன்றிலே மோதும் போது எண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றது…? அந்த உணர்ச்சியின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…? வெளிப்படுத்தும் உணவுகள் சூரியனுடைய காந்த சக்தி கவரப்படும்போது சீதா லட்சுமி ஆக மாறுகின்றது.

வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்தால் வாலி என்று வருகின்றது. கோபப்படும் உணவை நுகர்ந்து கொண்டால் காளி என்றும் இதைப் போன்று பல பல உணர்வுகள் தீமைகளை அடக்கும் தன்மை வருகின்றது.

1.ஓர் விஷத்தின் தன்மை கொண்ட நிலையில் மற்ற விஷத்தினை இதற்குள் கலக்கப்படும் பொழுது அடக்கும் தன்மையாக வருகின்றது.
2.தாவர இனங்களிலே பல விதமான விஷங்கள் உண்டு… அதிலே ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது
3.இதற்கும் அதற்கும் ஒத்துக்கொள்ளாது… அந்த விஷம் அதை ஒடுக்குகின்றது.

இதைப் போன்று நமக்குள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது விஷ அணுக்களை உருவாக்கும் தன்மை கொண்டால் அதை எப்படி மாற்ற வேண்டும்…?

மனிதனாக இருக்கும் நாம் நல்ல மருந்துடன் விஷத்தினைக் கலக்கின்றோம். அதை உட்கொள்ளும் பொழுது வேகமாக உடலுக்குள் பரவுகின்றது. உடல் முழுவதும் விஷ வாயுவாக உருவாக்குகின்றது. இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது அந்த இரத்தத்திலிருந்து தான் விஷ அணுக்களும் உணவாக எடுத்துக் கொள்கின்றது.
1.நல்ல மருந்துடன் விஷத்தைக் கலந்து உள்ளே அனுப்பப்படும் பொழுது நல்ல மருந்திற்கு வீரிய சக்தியாக அமைந்து
2.நம் உடலில் இருக்கும் விஷமான அணுக்களை மடியச் செய்கின்றது.

விஷமான உணர்வைக் கொடுத்து நல்ல மருந்தினைக் கொடுத்து அடக்கினாலும் நாம் அடுத்து அதை நிறுத்தாவிட்டால்
1.நல்ல மருந்து மற்ற விஷத்தை ஒடுக்கிய இந்த உணர்வுகள்
2.நம் உடலில் விஷத்தை உருவாக்கும் வேறொரு அணுக்களாக உருவாக்கி
3.மற்ற அணுக்களைக் கொன்று குவிக்கும் நிலை வருகின்றது.

அதனால் தான் டாக்டர்கள் குறித்த அளவு கொண்டு இந்த மருந்தினை உட்கொள்ளும்படி சொல்வார்கள். அந்த அளவுகோல் மீறி அந்த மாத்திரையை உட்கொண்டால் அதுவே நமக்குள் கடும் நோயாக மாறி விடுகின்றது.

சித்த வைத்தியர்களை எடுத்துக் கொண்டாலும் விஷத்தின் தன்மை கொண்டு மாற்றி அமைக்கும் தன்மை கொண்டு வருவார்கள். ஆனால் அவர் சொன்ன அளவுகோலுக்கு மீறி அதை உட்கொண்டால் விஷத்தின் தன்மை உடலில் பரவி நல்ல அணுக்களைக் கொல்லும் நிலைகள் வந்து விடுகின்றது.

நல்ல அணுக்களைக் கொல்லும் நிலைகளுக்கும் மற்ற உயிரைக் கொல்வது போன்று இதைப் போன்று இயற்கையின் உண்மை நிலைகளை அன்று அகஸ்தியனால் கண்டுணரப்பட்டது தான்.

மற்ற மனிதனின் உணர்வுகள் தன்மை கொண்டு எவ்வாறு வாழ்கின்றனர்…? எதன் எதன் உணர்வின் இயக்கங்கள் மாறுகின்றது…? நம் உயிர் எவ்வாறு செயலாக்குகின்றது…? என்ற நிலையை உண்மையினை நீ உணர்ந்து கொள் என்றார் குருநாதர்.

ஒருவன் ஏசுகிறான் என்று உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை சிவலோகம் என்ற நிலையை அந்த உயிரின் இயக்கமாக உணர்ச்சிகள் உடலுக்குள் தூண்டுகின்றது.
1.சுழற்சியின் உணர்வை ஊட்டுகின்றது உணர்வின் தன்மையாக இயக்குகின்றது.
2.இரத்தத்துடன் கலந்து கருவுறும் தன்மை வருகின்றது. இந்திரலோகமாக இந்திரீகமாக மாறுகின்றது.

கோழி முட்டை எப்படி உருவாகின்றதோ நம் இரத்த நாளங்களில் அது கருவுறும் அணுவாக உருப்பெறும் தன்மை பெறுகின்றது. கரு என்ற உணர்வுகள் உருவாக்கி விட்டால் அதனின் காலக்கெடு வரப்படும் பொழுது அந்தக் கருமுட்டை வெடிக்கின்றது. எக்குணத்தின் தன்மை பெற்றதோ அந்த அணுவின் தன்மையாக வருகின்றது.

இரத்த நாளங்கள் எங்கே சுழல்கின்றதோ எந்த உறுப்பில் அது வெடிக்கின்றதோ அந்த உறுப்புகள் நஞ்சாகி விஷத்தின் தன்மை பாய்ச்சி நல்ல அணுக்களைக் கொல்லும்… அல்லது செயலிழக்கச் செய்கின்றது.

நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் மடிந்தால் அல்லது அஞ்சி நடுங்கினால் உடலுக்குள் ஒரு விதமான வேதனை வருகின்றது. கல்லீரலோ மண்ணீரலோ மற்ற சுரப்பிகள் நரம்பு மண்டலங்களிலோ மாற்றப்பட்டால் கடும் வேதனைகள் வருகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

இதைப் போன்ற உணர்வுகள் எவ்வாறு மாற்றம் அடைகின்றது என்பதனை குரு உணர்த்துகின்றார். அகஸ்தியரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள் நஞ்சினை வென்றிடும் உணர்வு கொண்டு நஞ்சின் இயக்கத்தை உணர்ந்தவன் அவன்
1.நஞ்சினை அடக்கிடும் உணர்வு பெற்றவன்.
2.விண்ணை நோக்கி உற்றுப் பார்த்து மின் கதிர்களை நுகர்கின்றான் அதை அடக்குகின்றான்.
3.மின்னட்டாம் பூச்சி போன்று தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளிக்கதிராக மாற்றும் அணுக்களாக மாற்றுகின்றான்.
4.துருவப் பகுதியில் வரும் ஆற்றலை நுகர்ந்து துருவனாகின்றான்.
5.கடும் விஷங்களையும் அடக்கிடும் ஆற்றல் சந்தர்ப்பத்தால் இந்த உணர்வுகள் விளைகின்றது.

அந்த ஆற்றல்களை நாம் அனைவரும் பெறுதல் வேண்டும். அதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அடுக்கடுக்காக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்த இயக்க நிலை கொண்டு
1.“அகஸ்தியர் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்…”
2.அகஸ்தியனை நினைவுக்குக் கொண்டு வந்து அவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
2.மீண்டும் மீண்டும் இந்த நினைவினை ஒரு சக்கரம் சுழல்வது போன்ற திரும்பத் திரும்ப இணைத்து
3.இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை
4.அதன் அடிப்படையிலேயே சுழல விடுங்கள்… உங்கள் இரத்த நாளங்களில் அந்த ஆற்றலைப் பெருக்குங்கள்.

இப்படி ஒரு ஐந்து முறையாவது திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துச் செயல்படுத்துங்கள். உங்கள் உடலில் எந்த உறுப்புகளில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கொண்டு அங்கே உள்ளே செலுத்துங்கள்.

இதே மாதிரி சுவாசத்தை எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.
1.எத்தகைய நோயாக இருப்பினும்… நோய்க்குக் காரணமாக எத்தகைய அணுக்கள் இருப்பினும்
2.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று அந்தச் சக்திகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்துங்கள்.

இந்த அருள் சக்தி உயரும் பொழுது நோயை உருவாக்கும் அணுக்களின் செயலாக்கங்கள் சிறுகச் சிறுக தணியும். இதற்கு முன் உடலில் அறியாது சேர்ந்த நோய்களை உருவாக்கும் அந்த அணுக்களின் வீரிய சக்திகளைக் குறையச் செய்யும். நோயை உருவாக்கும் அணுக்கள் பலவீனமடையும்.

ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடனே உறங்கச் செல்லுங்கள்.

1.இந்த நினைவாற்றல் உங்களுக்கு அரும் பெரும் சக்தியாக வளரும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்கள் உணர்வலைகளை அழைத்துச் செல்லும்
3.இயற்கையின் உண்மையின் உணர்வினை உங்களுக்குள் உணரச் செய்யும்.
4.அகண்ட அண்டத்தின் ஆற்றல்… உடலான நம் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகிறது…? என்ற உணர்வினை அறிய முடியும்.

அந்தச் சக்தி இந்த உபதேசத்தைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உங்களுக்காக நானும் (ஞானகுரு) இரவில் பிரார்த்திக்கப் போகிறேன்… தியானிக்கப் போகின்றேன்.

நீங்களும் அதே நிலையில் அந்த உணர்வின் சக்தியை எடுத்து தியானனத்தின் மூலம் உங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நினைவாற்றலைப் பெருக்கி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

அகஸ்தியனுக்குள் விளைந்த நுண்ணறிவுகள்

 

1.அகஸ்தியன் கற்றறிந்து வந்தவனல்ல.
2.தாய் கருவிலே கவர்ந்த உணர்வுகள் அந்த அணுக்களே இயக்கி அவன் உடலுக்குள்ளே விளைந்தது.
3.விஞ்ஞானி எப்படி உணர்வுகளை உருமாற்றுகின்றானோ அதைப்போல
4.இயற்கையின் தன்மையைத் தனக்குள் உருவாக்கி அந்த உணர்வினைக் கண்டுபிடிக்கும் மெய்ஞானி ஆகின்றான்.

விஞ்ஞானி ஒன்றைப் பதிவு செய்து அதைப் பெற வேண்டும் என்று தன் உணர்வைக் கூட்டுகின்றான். அதன் வழி நுகர்ந்தறிந்த உணர்வு கொண்டு ஒவ்வொரு பொருளையும் அவன் உருவாக்குகின்றான்.

உருவாக்கும் உணர்ச்சிகள் அவனுக்குள் வரப்படும் பொழுது அந்த அணுக்கள் அவனுக்குள் உருவாகின்றது. அப்படிப்பட்ட அணுக்கள் உருவான பின் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உணர்வின் அறிவாக அது இயக்குகின்றது.

மேலும் மேலும் இவன் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாகவும் அதைச் செயலாக்கும் உணஸ்சிகளின் செயல்களும் மற்ற உணர்வுகளை நுகந்தறிந்து செயலாக்கத்தையும் கண்டுணர்ந்து விஞ்ஞானி ஆகின்றான்.

அதைக் கண்டுணர்ந்தவன் எந்திரத்தை உருவாக்கி அதை எப்படிப் பிரிப்பது…? என்று தத்துவத்தைக் கண்டு இவன் கண்டு கொண்ட ஒரு பொருளுக்குள் மறைந்த உணர்வை எவ்வாறு பிரிக்க வேண்டும்…? என்றும் அதற்குள் இன்ன பொருள் இருக்கிறது என்றும் விஞ்ஞானி காணுகின்றான்.

ஆனால் அதே சமயத்தில் இன்ஜினியர் அதற்குண்டான உறுப்புகளைச் செய்து விஞ்ஞானி கண்ட உணர்வுகளை எந்திரத்தின் துணைகொண்டு இவனின் உணர்வைக் கொண்டு
1.எதனை எதனுடன் கலந்தால் வெப்ப நிலைகள் எப்படி இங்கே கூடுகின்றது…?
2.வெப்ப நிலைகள் கொண்ட பின் ஆவியாக ஆன பின் இதை உறையச் செய்யும் மார்க்கம் என்ன…? என்ற
3.டெக்னிகலை இன்ஜினியர்கள் அதைக் கண்டுகொள்கின்றார்கள்.

அவன் கொடுத்த கருவினை இவன் உருவாக்கி இதைப் பிரித்துச் சேமிக்கும் உணர்வாக விஞ்ஞானி கொடுக்கும் நிலைகள் கொண்டு “இதனுடைய ஆக்கச் சக்தி இவ்வளவுதான்” என்ற அளவீடு கொண்டு வரப்படும் பொழுது இன்ஜினியர் அதற்குத் தக்க எந்திரங்களை உருவாக்கி உறுப்புகளுக்கு வலுக் கொடுத்து அதிலே வரும் தடைகளைச் சீர்படுத்தி உருப் பெறும் உணர்வுகளைப் பிரித்து அதை எவ்வாறு செயல்படுத்துவது…? என்ற நிலைகளைக் கொண்டு வருகின்றார்கள்.

உதாரணமாக மணல்களைக் கடலிலிருந்து எடுத்து வந்து அதிலே பிரிக்கப்படும் போது வெடிக்கும் நிலை வந்து விட்டால் என்ன செய்வது…? ஹைட்ரஜன் என்ற நிலையில் ஊடுருவப்பட்டு கடலின் தன்மை கொண்டு உப்புச் சத்தின் நிலைகள் அதிலே மின்னல் தாக்கப்படும் பொழுது “யுரேனியமாக” அது மாறுகின்றது.

அதே கடலின் சத்தின் தன்மையை எடுத்து இது பிரிக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்த பின் இதற்குள் அடைத்து மீண்டும் கிடைக்கும் உணர்வு கொண்டு இதைக் கரைத்து அணுத் தன்மை கொண்டதாகப் பல நிலைகள் பிரிக்கின்றார்கள்.
1.அணு விசைகளை அணுக் கதிரியக்கங்களை தனக்குள் ஒரு பவுடரைப் போன்று உருவாக்குகின்றார்கள்.
2.மணலில் இருக்கும் தன்மைகளை மணலைக் கருக்கி அதனுள் வரும் உணர்வினைப் பிரித்து அணுகுண்டுகளைத் தயார் செய்கின்றான்.
3.அந்தக் கடுகளவு இருக்கும் அணு விசைகளைக் கொண்டு ஒரு இயந்திரத்தில் இணைக்கப்படும் பொழுது
4.அதனுடைய வேகத்தடிப்பு கொண்டு இயந்திரத்தையே துரிதமாக இயக்கச் செய்கின்றது.

இது எல்லாம் விஞ்ஞானி கண்ட நிலைகள்.

இதைப் போன்று தான்
1.”விஷத்தின் துடிப்பு கொண்ட நிலைகளைத் தாய் கருவிலே பெற்ற அகஸ்தியர்”
தன் உணர்வின் எண்ணம் கொண்டு மூன்றாவது வயதிலே வானத்தை உற்றுப் பார்க்கின்றான்.
3.அந்த வானுலகம் எவ்வாறு இயங்குகின்றது…? என்பதையும் அது எப்படிப் பிரபஞ்சமாக மாறுகிறது…? என்பதையும்
4.அதிலிருந்து வரக்கூடிய சக்திகளை நமது பூமி துருவத்தின் வழி எவ்வாறு கவர்கிறது…? என்பதையும்
5.நஞ்சு கலந்ததாக வருவதைத் தனக்குள் இவன் ஒடுக்கி அந்த உணர்வின் இயக்கப் பொறிகளை அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.

அவ்வாறு கண்டு கொண்ட நிலையில் அந்தக் காட்டுக்கே அரசனாக மாறுகின்றான் தன் 5 வயதிலேயே…!

இறைச்சிகளை உணவாக உட்கொண்ட அவன் இன மக்கள் இறைச்சிகள் அல்லாத உணவை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்று கனிகளையும் மற்றதுகளையும் உட்கொள்ளும்படி செய்தான்.

பல பயிர்களை இட்டு பல பல வித்துக்களை ஒன்றாக்கி அதையெல்லாம் விளைய வைத்த பின் உணவாக உட்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருகின்றான்.

தனக்குள் உணர்ந்த நிலைகள் கொண்டு இறைச்சிகளை உட்கொள்ளாது அருள் ஒளி உணர்வினை உருவாக்கும் தன்மை பெறுகின்றான். முதல் மனிதன் அணுவின் தன்மையை அறிந்த அகஸ்தியன் பல பல தாவர இனங்களை உருவாக்குகின்றான்.

அதன் வரிசையில் மனித நிலைகளுக்குள் சிறுகச் சிறுக ஊடுருவி இதன் உணர்வின் எண்ணங்கள் வலுப்பெற்று விஞ்ஞானி ஆகின்றார்கள். கற்றுணர்ந்து உணர்வினை அறியும் அறிவுக்கு வரும் பொழுது இவன் உணர்வினை எதற்குள் செலுத்துகின்றானோ அதில் வளர்ச்சி பெற்று விஞ்ஞானி ஆகின்றான்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒன்றின் இயக்கங்களைத் தனித்துப் பிரித்து ஒழுங்குபடுத்தும் நிலைக்கு வருகின்றான் மனிதன். விவசாய நிலங்களில் கால சூழ்நிலைக்கொப்ப வெயில் காலங்களிலும் வளரும் பயிர்களை உருவாக்குகின்றான்.

வெயில் காலத்தில் நமக்கு வியர்க்கின்றது. சனிக்கோளின் உணர்வுகள் மற்ற மற்ற அணுக்களில் இருக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று வெப்பத்தின் தணல் ஆகும் பொழுது ஆவியாக மாறுகின்றது.

1.ஆவியின் தன்மை வரப்படும் பொழுது அதிலிருந்து நீர் சத்தைப் பிரிக்கின்றது.
2.அந்த நீர்சத்தை உணவாக உட்கொள்ளும் தாவர இனங்களை உருவாக்குகின்றான்.

மறைந்த நிலையில் நமக்குள் வியர்க்கின்றது. அதுவே அந்த அணுவின் உணவாக உட்கொண்டு பயிரினங்கள் வளரும் தன்மையும் அதை உருவாக்குகின்றான் விஞ்ஞானி.

அன்று மெய்ஞானி இத்தகைய நிலைகள் காலப்பருவத்திற்கொப்பத் தனக்கு உணவு தேவை என்றும் பல பல உணர்வுகளை இணைத்து மனிதனுக்கு உகந்த தாவர இனங்களாக உருவாக்கினான்.

இறைச்சிகளை உணவாக உட்கொள்ளாது தாவர இனத்தைப் பிரித்து அந்த உயர்ந்த குணங்களைத் தனக்குள் சேர்த்து உணர்வின் ஒளியாக மாற்றி ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றான் அகஸ்தியன்.

அவ்வகையில் வளர்ந்தவன் தான் பல தாவரங்களின் நிலைகளை உண்மையை அறியும் பொழுது அதையெல்லாம் நுகந்தறிந்து தனக்குள் அணுவாக உருவாக்குகின்றான்.
1.அறியும் உணர்வுகள் இவனுக்குள் இரு மடங்கு மோதப்படும் பொழுது ஞானத்தின் தன்மை பெறுகின்றான்.
2.ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அதனுடைய இயக்கங்கள் எவ்வாறு என்றும் தனக்குள்ளேயே அறிகின்றான்.
3.அவன் எவ்வாறு அறிகின்றான்…? என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை எல்லாம் அனுபவபூர்வமாக அறிந்தேன்.

அதையே தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் ஞானிகள் தவம் இருந்த இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

சில மந்திர ஒலிகள் கொண்டவர்களும் சரி… அல்லது தவத்தின் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தாலும் சரி… எந்தெந்த இடங்களில் அவர்கள் அமர்ந்து தியானம் செய்தார்களோ அங்கெல்லாம் உதாரணமாக ஒரு பாறை மீது என்றால் அங்கே அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.
1.அந்தப் பாறைகளில் நீரோட்டம் வரப்போகும் போது அதைச் சுவை கொண்டதாக மாற்றும்.
2.இது தான் இந்தப் பாறையினுடைய தன்மை.

திருச்செந்தூர் தூத்துக்குடி போன்ற இடங்களில் எல்லாம் அந்தக் காலத்தில் (ஆதியிலே) ஞானிகள் வாழ்நத காலம். பூமியின் மணல் திட்டுகள் மாற்றமாகி அல்லது நீராக (கடலாக) அந்தப் பிரதேசம் மாறப்படும் பொழுது அந்த ஞானிகள் விட்ட அலைகளால் அந்த நீரையே சுத்தப்படுத்தும் தன்மையாக வருகிறது.

இராமேஸ்வரம் திருச்செந்தூர் இந்தப் பகுதிகளில் எல்லாம் அத்தகைய பாறைகள் கடலில் மூழ்கி இருக்கிறது. கடந்த கால நிலையில் மெய் ஞான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்த மனிதர்கள் உண்டு. மனிதனுக்கு ஒத்த இந்த உணர்வின் தன்மை வரப்போகும் போது இந்த அலைகளை நல்ல நீராக மாற்றும் தன்மையும் உண்டு.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவனது உணர்வுகள் இங்கே அலைகளாகப் படரப்படும் போது
1.அகஸ்தியன் நடந்து சென்ற அவன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் நீர் சக்தியைக் கவரும் ஆற்றல் பெற்று
2.மேகங்களைக் குவித்து நல்ல நீராக வடியச் செய்கிறது,

கீழே பூமியில் தண்ணீர் இருக்காது…! அங்கே மழையும் பெய்திருக்காது…! ஆனால் அகஸ்தியன் அமர்ந்த அந்த மலை உச்சியில் மேகத்தை இழுத்து நீராக வடிந்து கொண்டே இருக்கும்.
1.எத்தகைய கடுமையான வறட்சியான காலமாக இருந்தாலும்
2.நீர் அங்கே வந்து கொண்டே இருக்கும்.

இதைப் போல அந்தக் காலங்களில் மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் அவர்கள் தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்திருந்தால் அங்கிருக்கும் நீரும் வற்றாது. சுவையாகவும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட அந்த எல்லையைத் தாண்டினால் நீரே இருக்காது. ஏனென்றால்
1.இதெல்லாம் மனிதனுக்குள் விளைந்த வீரிய உணர்வுகள் அலைகளாக
2.அங்கங்கே பதியும் பொழுது அதற்கொப்ப நீர் நிலைகள் வருகின்றது.
3.இதே மாதிரி கடல் நீருக்குள்ளும் பல ரகசியங்கள் உண்டு.

ஆரம்பத்தில் உயிரினங்கள் முதலில் தோன்றியது கடலில் தான். மீன் இனத்தில் இருந்து வந்தவன் தான் மனிதன்.

புயல்கள் வீசும் பொழுது கடல் நீரைக் கவர்ந்த மேகங்கள் அதனுடன் மீன் முட்டைகளையும் கருக்களையும் நிலப் பகுதியிலே மழையுடன் சேர்ந்து பெய்யும் பொழுது தரை வாழ் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் ஆகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று எந்த ரிஷிகளை எடுத்துக் கொண்டாலும் கையில் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள். ஏனென்றால் அந்த நீர் என்பது ஜீவ சக்தி… அதாவது உருவாக்கும் சக்தி…!

உருவாக்கும் சக்தியின் மகத்துவத்தை நாமும் அறிந்து அந்த ஞானிகளும் ரிஷிகளும் எந்த ஜீவ சக்தியை நுகர்ந்தார்களோ அதைப் பெற்று வளர்த்தால் இந்தப் பூமியைச் சொர்க்க பூமியாக மாற்றலாம்…! நமக்குள் அந்த ஆற்றல் உண்டு…!

குரு வழியில் உருவாகிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு

 

ஒரு கம்ப்யூட்டர் என்ற சாதனத்தில் எலக்ட்ரிக் என்ற அறிவின் தன்மை கொடுத்த பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு அது ஒரு ரூபத்தையே அமைத்துக் கொடுக்கின்றது.

இதைப் போன்று
1.நம் உயிர் உயிர் துடிக்கும் நிலையில் எலக்ட்ரிக்காக இயங்கினாலும்
2.நுகரும் உணர்வுகள் இணைந்த பின் பொறிகளைக் கிளப்பும் எலக்ட்ரானிக்காக (உணர்வுகள்) மாறுகின்றது.

அந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? விஞ்ஞான அறிவிற்கும் அன்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்ததற்கும் நுகர்ந்த உணர்வுகள் ரூபமாக எப்படிக் காட்சி தருகின்றது…? என்ற நிலையைக் காட்சியாகவே காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு உயிரினத்திலிருந்து (என்றோ வாழ்ந்து மடிந்த) வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்தறியும் பொழுது… அதன் வாழ்க்கையும் அதன் உணர்வின் தன்மையையும் கம்ப்யூட்டரால் விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி அதிர்வுகளைக் கூட்டி… அது வாழ்ந்த காலங்களில் அதனுடைய இயக்கங்களும் உணவுக்காக அது தேடி அலைந்ததும் அதன் ரூபத்தையும் அதனின் குணத்தையும் விஞ்ஞானிகள் அறிகின்றார்கள்.

அதாவது…
1.எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் இருப்பினும் பாறைகளுக்குள் மக்கிய உணர்வுகளும் அது ஆவியாகக் கலந்த பின்
2.அந்த ஆவியின் தன்மை அந்தப் பாறைகள் அமைந்த இடத்தில் எப்படிச் சுழல்கின்றது…? என்பதையும்
3.அந்த உணர்வைக் கவர்ந்து அது வாழ்ந்த காலங்களில் அதனுடைய உருவத்தைப் படமாக வரையப்பட்டு
4.அதனுடைய செயலாக்கங்களை விஞ்ஞான ரூபமாக இன்று காணுகின்றார்கள்.

இதைப் போன்று தான் நமது குருநாதர் அவர் வாழ்க்கையில்
1.அகண்ட அண்டத்தினை… அகஸ்தியன் கண்ட உணர்வினைக் கண்டுணர்ந்தார்
2.குரு தனக்குள் பெற்றதை நீ எவ்வாறு பெற வேண்டும்…? எதனை…? எவ்வாறு…? என்பதை எனக்கு (ஞானகுரு) அந்த வழியைக் காட்டி
3.செவி வழி ஓதி… உணர்ச்சிகளை உந்தச் செய்து… உணர்வினை அறியும்படி… நுகர்ந்தறியும் ஆற்றலை எனக்குக் கொடுக்கின்றார்.

நுகரும்போது உணர்ச்சியால் உடலில் அறிவதும் உணர்வின் தன்மை குவியும் பொழுது காட்சிகளாகத் தெரிவதும் இதைப் போன்று அறியும்படி செய்கின்றார்.
1.அதன் வழி அறிந்தேன்
2.அதனின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
3.அதை நீங்கள் ஏங்கிப் பெற்றால் அதற்குத் தக்கவாறு உங்களுக்குள் உருப்பெறும் தன்மையாக அது இணைகின்றது.

உணர்வுகள் குவிக்கப்படும் பொழுது அது காட்சியாகவும் தெரியும் கண் திறந்திருந்தாலும் சரி கண் மூடி இருந்தாலும் சரி உணர்வின் தன்மை அலைகளாக மாறும் தன்மை வரும்.

ஆக தெளிந்த மனம் கொண்டு கண்களை மூடினால் உணர்வின் தன்மை புற நிலை அடக்கி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை உயிருக்குள் உணர்வின் தன்மை காட்சியாகவும் நாம் அறியும் உணர்வாகவும் உணர்வின் தன்மை குவித்து ரூபமாகக் காட்சிகளாகத் தெரிய வரும்.

குருநாதர் பெற்றார் எனக்குள் அதை எனக்குள் பெறும்படி உபதேசித்தார். எனக்குள் பதிவானது பதிவின் நிலைகள் அறிவாக இயக்கி அந்த இயக்கத்தின் தன்மை எனக்குள் உருவாக்கினேன்.

அதையும் நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன். ஏனென்றால் ஒரு வித்து யாருக்கும் பசி தீர்க்காது.
1.அந்த உணர்வின் சத்தை எல்லோருடைய உணர்வுகளிலும் படரச் செய்து
2.அதை நீங்களும் வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் ஒன்றனை இணைத்து விடலாம்.

சிறு துளி என்ற நிலை வரப்படும் பொழுது புவிக்குள் அது இணைந்து விடுகின்றது. அதே சமயத்தில் சிறு துளி பெருவெள்ளம் என்பது போன்று
1.பலரும் பல உணர்வுகள் கொண்டு சிறு துளிகளாக இருப்பினும்
2.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் எண்ணங்களை இணைத்தால் பெரும் வெள்ளமாக மாறி
3.அரும் பெரும் சக்திகளை நாமும் பெறலாம்… நம்முள் வரும் தீமையான உணர்வுகளை அதை நீக்கவும் செய்யலாம்.

கூட்டமைப்பின் தன்மையில் நாம் உபதேசித்த உணர்வின் துணை கொண்டு கூட்டுத் தியானங்கள் மூலம் அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அருள் ஒளியைப் பெருக்கவும் அது உதவும்.

அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் தெளிவாகக் கூறிக் கொண்டு வருகின்றேன் அதை எளிதில் கண்டுணர… இந்தப் பூமி என்பது பரம். உணர்வுகள் அனைத்தும் இந்தப் பரமான பரலோகத்தில் பரவி உள்ளது. நாம் அதை நுகர்ந்தறிந்தால் சிவலோகமாக மாற்றுகின்றது.

1.உயிரின் துணை கொண்டு அருள் உணர்வுகளைத் தனக்குள் இழுக்கப்படும் பொழுது ஒளி என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் ஊடுருவுகின்றது.
2.உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது
3.இரத்தங்களில் கலக்கின்றது… நாளடைவில் உறைகின்றது
4.உணர்வுகள் கருவாகின்றது கருவின் தன்மை அணுவாகின்றது
5.எதன் வழி கொண்டு அணுவானதோ அந்த உணர்வை அது உந்துகின்றது.
6.உணர்வை நுகரச் செய்கின்றது
7.நுகரும் தன்மை வரப்படும் பொழுது அருள் உணர்வுகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது
8.உயிரின் தன்மை வரப்படும் பொழுது உணர்ச்சியின் தன்மை அறிவென்ற நிலைகள் அறிகின்றோம்.
9.அந்த அறிவின் தன்மை கொண்டு நம் உடலில் அருள் ஒளியின் அணுக்கள் விளைகின்றது.
10.தீமைகளை நீக்கும் அரும்பெரும் சக்தியாக நாம் பெறுகின்றோம்

ஆகவே… இருளை அகற்றி மகிழ்ச்சி பெறும் தன்மை பெற்றிட்ட அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும். அதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்முடைய சூரியக் குடும்பத்திலிருந்து கார்த்திகை நட்சத்திரம் விலகிப் போய்விட்டது. அதனால் நம் பிரபஞ்சத்தில் அறிவின் ஞானம் சூனியமாகிப் போய்விட்டது. ஏனென்றால்
1.ஒன்றுடன் ஒன்று மோதி… அந்த உணர்வின் தன்மை
2.”அறிவு ஒளியாக..” வருவதெல்லாம் குறைந்து விட்டது.

கார்த்திகை நட்சத்திரம் போல ஏனைய சில நட்சத்திரங்களும் விலகிக் கொண்டுள்ளது. அதனால் நம் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

சில ஆயிரம் ஆண்டுகள் செல்லப்படும் போது நம் சூரியன் தனித்துப் பிரிந்து விடும். நம் பூமிக்குள் நீர் வளம் அதிகமாகிவிடும். இந்த எடையின் தன்மை கூடும் போது ஈர்க்கும் தன்மையாகி சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

சூரியனை விட்டு விலகினால் அப்பொழுது பூமி முழுவதும் பனிப்பாறைகளாக (வியாழன் கோள் போல்) மாறும். அதற்குள் இங்கே இருக்கக்கூடிய உயிரினங்கள் தாவர இனங்கள் அனைத்தும் பூமிக்குள் (பனிகளுக்குள்) ஒடுங்கி விடும்.

ஐஸ் (பெட்டிக்குள்) பாறைகளுக்குள் வைத்து மறுபடியும் சுழலும்போது சிதறுண்டு போகும் போது உயிரணுக்கள் எல்லாம் அடுத்த பிரபஞ்சத்திற்குள் பரவும்.

நம் உயிரான அணுக்கள் அப்படிப் பரவப்போகும் போது அது எடுத்துக் கொண்ட… நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப… வேறு எங்கேயோ போய் உருவாக்கும். இதைத் தான் நாம் பெற முடியும்.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் இந்த உடலில் நாம் இப்பொழுது நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே குறுகிய காலத்திற்குள் நாம் ஒளி நிலை பெற வேண்டும்.

1.ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் நாம் வாழுகின்றோம்…? என்று தெரிகிறது. (அறுபதே எழுபதோ அவ்வளவு தான்…!)
2.நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக வாழ வேண்டும்…! என்று தான் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றோம்.
3.அதைச் செலவழிக்கவும் செய்கிறோம். ஆடம்பரப் பொருளுக்காகவும் செலவழிக்கின்றோம்.

ஆனால் இது எல்லாம் நமக்கு உதவியாக இருக்கிறதா…?

சம்பாதித்து வீடு சொத்து பணம் பொருள்கள் மனைவி மக்கள் எல்லாமே அழகாக வைத்திருந்தாலும் கூட
1.நமக்கு நோய் என்ற உணர்வு வந்தால் என்ன செய்கிறோம்…?
2.அதை எல்லாம் தள்ளி விட்டுத் தூக்கித் தூக்கி எறிகிறோம்.
3.உடல் சரியில்லை என்றால் நல்ல உணவை உட்கொள்ளும் எண்ணமோ சொத்தையும் சுகத்தையும் உடைகளையும் நகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறதா…? இல்லையே…!
4.அப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர “நன்றாக இருக்க வேண்டும்…!” என்று அது நமக்கு உதவுகிறதா…?

அதே போல் நாம் நன்றாகத் தான் இருக்கிறோம். அடுத்தாற்போல யாராவது வந்து நம்மை ஏளனமாகச் சிரித்து கேவலப்படுத்தினால் என்ன நினைக்கின்றோம்…?

பார்…! என்னை எப்படிக் கேவலப்படுத்துகின்றான்..? இப்படிக் கேவலப்படுத்துகின்றானே…! என்ற இந்த உணர்வைத் தான் எண்ணுகின்றோம்.

அந்த உணர்வை எடுத்தவுடனே நாம் நன்றாக இருந்ததை மறந்து விட்டு அவர் மேல் கோபமும் வெறுப்பும் வேதனையும் ஆகி அவர்கள் எதை எதை எல்லாம் சொல்கிறார்களோ… அதை நமக்குள் விளைய வைக்கின்றோம். அதைத் தான் பழகி வைத்திருக்கின்றோம்.

அதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்குகின்றார்கள்…!

1.அவர்கள் என்னமோ சொல்லி விட்டுப் போகிறார்கள்…
2.அவர்களுக்கு நல்ல புத்தி வரட்டும்…
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து
4.அவர்கள் சொல்லும் தீமை நமக்குள் வராது தடுக்கப் பழக வேண்டும்.

அதனால் தான் ஆறாவது அறிவைச் “சேனாதிபதி…” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள். அந்த அருள் ஞானத்தை நாம் பெருக்கப்படும் போது அது நமக்குப் பாதுகாப்பாக வரும்.

அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? நாம் எந்த மகரிஷிகளை எண்ணுகின்றோமோ அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் நினைக்கப்படும் போது உயிர் அதை உருவாக்குகிறது.

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. அறிந்துணர்ந்து செயல்படும் அந்தச் சக்தியைக் “கார்த்திகேயா…!” என்று காட்டுகின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் தீமையின் உணர்வின் தன்மையாக நம்மை மாற்றும். அதைத் தடுக்க அருள் ஒளியை உருவாக்கும் அணுவை நமக்குள் பெருக்கினால் அது நம்மைக் காக்கும்…!

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

நஞ்சை முறிக்கும் சக்தி

 

ஒரு தேள் வெள்ளாட்டைத் தீண்டி விட்டால் விஷம் பாய்ந்து அந்த ஆடு மடிகின்றது. ஆனால் அதே சமயத்தில் கோழி பட்சி மற்ற பறவைகள் இதை உணவாக உட்கொள்கின்றது. அவைகள் பயப்படுவதில்லை… அதற்கு வீரிய உணர்வுகள் வருகின்றது.

உதாரணமாக கருடனை எடுத்துக் கொண்டால் அதுவும் விஷத்தை ஒடுக்கும் நிலைகள் பெற்றது… அதை ஒடுக்கி விடுகின்றது தேள் கொடுக்கு மிகவும் விஷம் கொண்டது. தேள் இறந்தாலும் அந்தக் கொடுக்கை வைத்து லேசாகக் குத்தினாலே அதில் உள்ள விஷங்கள் நமக்குள் கடுகடுப்பை ஊட்டிவிடும்.

ஆனால் கோழி மற்ற பறவைகள் அதை உணவாக உட்கொள்கின்றது அதனின் உடலில் இருக்கக்கூடிய அமிலம் இந்த விஷத்தைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது… வீரிய நிலைகளும் பெறுகின்றது.

கருடனைப் பாம்பு சீறித் தாக்கினால் அதனுடைய விஷம் அதற்குள் ஏறுவதில்லை. கருடன் அதை தாங்கிக் கொள்கின்றது. அது கூட்டைக் கட்டிக் குஞ்சுகளைப் பொரிக்கின்றது.
1.இரும்புக் கம்பிகள் கொண்டு அந்த குஞ்சுகளை நாம் விலங்கிட்டோம் என்றால்
2.கருடன் பறந்து சென்று அதை முறிக்கக் கூடிய தாவர இனங்களைத் தேடிச் செல்கிறது.
3.அதனுடைய குச்சிகளை எடுத்துக் கொண்டு வந்து அந்த இரும்புக் கம்பி மேல் போடுகின்றது… அந்தக் கம்பிகள் அறுந்து விடுகின்றது.

அந்தத் தாவர இனத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்றால் நம்மால் முடியாது.

ஒரு வாய்க்காலிலே நீர் வேகமாக ஓடுகிறது என்றால்
1.அந்தக் கருடன் குஞ்சுகளை வைத்திருந்த கூட்டைப் பிரித்து அதில் போட்டால்
2.அது (மீன்களைப் போல்) எதிர்நீச்சல் அடிக்கும்.

மெய்ஞானிகள் சில முறைப்படுத்தி இதை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள் விஷத்தை ஒடுக்கும் உணர்வாக மற்ற உலோகங்களை முறித்திடும் நிலையாக அத்தகைய தாவர இனங்களுக்கு இந்த ஆற்றல் உண்டு.

இது எல்லாம் இயற்கையில் விளைந்த உணர்வுகள் தான்.

ஒவ்வொரு உயிரினங்களும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எவ்வாறு இயங்குகின்றது…? என்று இதையெல்லாம் அறிவதற்காகப் பல நிலைகளை எனக்குக் குருநாதர் காட்டுகின்றார்.

ஒரு சமயம் நான் கொல்லூரிலே குருநாதர் காட்டிய வழியில் தியானமிருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே ஆற்றங்கரை ஓரங்களில் கருநாகம் போன்று மிகப் பெரிய பாம்புகள் உண்டு… காளிங்கராயன் என்று சொல்வார்கள்.

அந்த ஆறு குடசாஸ்திரி என்ற மலையிலிருந்து பச்சிலைகளையும் மூலிகைகளையும் பல பல தாவர இனங்களின் சத்துக்களையும் கவர்ந்து கொண்டு இங்கே வருகின்றது.

அங்கிருக்கக்கூடிய ஒரு பாறையிலே தான் அமர்ந்து இயற்கையின் உண்மை நிலைகளை அறிவதற்காக இரவு முழுதும் தியானம் இருப்பேன். காலையில் எழுந்து காலைக்கடன் கழிப்பதற்காக எழுந்து நடக்கின்றேன்

அவ்வாறு நடந்து செல்லப்படும் பொழுது என்னை அறியாமலேயே ஒரு செடியின் புதரிலே காலை வைத்து விட்டேன்.
1.சிர்….ர்ர்ர்…! என்று அந்தப் பாம்பு எழுந்து நின்றது. சுமார் 70 அடி நீளம் இருக்கும்
2.என் தலைக்கு மேலே “சுளவு” போன்று படத்தைப் பிடிக்கின்றது.

அப்பொழுது குருநாதர் சொல்கின்றார். நீ அந்தப் பாம்பை இடறி விட்டாய். ஆனால் அது உன்னைச் சீறித் தாக்கவில்லை. நீ தெரியாமல் மிதித்து விட்டாய் என்பதை அது உணர்கின்றது… ஆகையினால் தாக்கவில்லை.

1.இங்கே வாழ்ந்த சில ரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகளை அந்தப் பாம்பு நுகர்ந்துள்ளது.
2.அதனால் அதனுடைய பரிமணம் சில விஷத்தன்மைகளை நீக்கும் வல்லமையும் பெற்றது என்று குருநாதர் இதையும் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எங்கெங்கு எங்கெங்கு ஏங்குகின்றனரோ அந்த ஏக்கத்தின் உணர்வை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது தான் என்னால் உபதேசமே கொடுக்க முடியும். நானாகப் (ஞானகுரு) பேச முடியாது.

ஏக்கத்தின் உணர்வின் தொடர்பு வரப்படும் போது அந்த உணர்விற்கொப்பத்தான் பேசும். ஞானிகளின் உணர்வுகளை நானாக எடுத்துச் சொல்வது என்றால்
1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது
2.மின்னலாகி ஒளிக் கற்றைகளாக மாறி அந்த அலைகள் எப்படிப் படர்கின்றதோ
3.அதைப்போலத் தான் இங்கே ஏங்கி உள்ளோர் உணர்வுகளை நுகர்ந்து தான் நான் பேசுகின்றேன்.

தீமைகள் எப்படி இயக்குகிறது…? என்று இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி தீமையைப் பிளக்கும் மெய் ஞானிகளின் உணர்வினை உங்களை நுகரச் செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய் ஞானிகள் தங்களுக்குள் விளைய வைத்த விண்ணின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்து அதை உங்களுக்குள் உருவாக்கச் செய்து அறியாது வரும் தீமைகளையும் பகைமைகளையும் அகற்றி கல்யாணராமனாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்ற ஆசையில் தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால் தான் எனக்கு மகிழ்ச்சி. சொல்வதைக் கேட்டு விட்டு அப்படியே விட்டு விட்டு போனீர்கள் என்றால்
1.சாமி சொல்கிறார்… பார்க்கலாம்…!
2.சாமி எனக்கு வேறு என்ன செய்தார்…? என்று எண்ணாதீர்கள்.

இன்னும் இதைவிட என்ன உதவி செய்ய வேண்டும்…? மெய் ஞானிகள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
2.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உங்கள் உயிரை எண்ணிச் சதா தியானம் இருக்கிறோம்.

அந்த உணர்வை நுகரும் பருவம் நீங்கள் இழந்து விட்டால்…! நல்ல சாப்பாடு ஆக்கி வைத்து விட்டு அதை உட்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்…?

விவசாயப் பண்ணைகளில் நல்ல வித்தைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்ததை மண்ணிலே விதைக்காமல் வெளியிலே இறைத்து விட்டால் என்ன செய்யும்…?
1.எறும்போ மற்ற பூச்சிகளோ பறவைகளோ எடுத்துத் தின்று விட்டுப் போகும்… முளைக்காது…!
2.அப்படியே முளைத்துப் பயிர் வந்தாலும் தகுந்த பருவத்தில் நீரோ உரமோ ஒன்றும் கொடுக்கவில்லை என்றால் மொத்தமாக அழித்து விடுகின்றோம்.

ஆகவே யாம் பதிவு செய்யும் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வைக் கூட்டினால் தான் உங்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும்.

அருள் ஞானத்தின் வழியில் வாழ முடியும். இருளை அகற்றிப் பேரொளியாக மாற்றும் ஆற்றலைப் பெற முடியும். பிறவியில்லா நிலையை அடைய முடியும். அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

இது உங்கள் கையில் தான் இருக்கிறது…!

சொர்க்கலோகம்

 

பல கோடி நஞ்சுகளை வென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனான். அவன் உணர்வை நாம் பெற்றோம் என்றால் சொர்க்கலோகம் என்ற நிலையை அடைகின்றோம்.

சொர்க்கவாசல் என்பது
1.நம் உயிரின் நிலை கொண்டு எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்கின்றோமோ
2.நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி அது விண் செல்லச் செய்கின்றது.

நாம் சுவாசிக்கும் உணர்வு எதுவோ நரகலோகம் செல்வதும் அதன் வழியே… ஆனால் சொர்க்கலோகம் செல்வதும் அதன் வழியே…! ஆனால்… ஆறாவது அறிவின் துணை கொண்டு எவர் ஒருவர் சொர்க்கத்தின் உணர்வை உருவாக்குகின்றனரோ அவரே விண் செல்கின்றார்.

அகஸ்தியன் அணுவின் இயக்கத்தைத் தன்னுள் உணர்ந்து அவன் வெளியிட்ட உணர்வுகள் அவனில் விளைந்த நிலைகள் இந்தப் பரமான பூமியில் பரலோகமாகப் படர்ந்து கொண்டே உள்ளது.
1.அவன் பெற்ற உணர்வை நாம் நுகர்ந்து சிவலோகமாக மாற்றி அருள் லோகமாக மாற்றி
2.இருளை அகற்றி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை ஊட்டி உருவாக்கி
3.எதனை உற்று நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கினோமோ – அதன் வழி கொண்டு சொர்க்கலோகம்
4.எந்தத் தீமையும் தனக்குள் வராது ஒளியின் சிகரமாகத் தனக்குள் உருவாக்கும் நிலைகள் பெறச் செய்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தை இழந்தால் எதன் உணர்வை நமக்குள் அதிகரிக்கின்றோமோ அதன் வழி கணங்களுக்கு அதிபதியாகி உயிர் உடல்களை மாற்றி அமைத்துவிடும்.

அதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடும் நிலையாக நமது குரு ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி நாம் அருள் ஒளி பெற்று பிறவியில்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்வோம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அலைகளை அதிகாலை நேரம் சூரியன் துருவப் பகுதி வழியாகப் புவியின் ஈர்ப்புக்குள் நமக்கு முன் அழைத்து வருகின்றது.

1.அதைப் பருகுவதற்கு எம்முடைய உபதேசத்தின் உணர்வைப் பதிவாக்கி
2,அந்த உணர்வின் எண்ணத்தை வலுவாக்கி விண்ணை நோக்கி ஏகி அருள் ஒளியின் உணர்வைச் சுவாசியுங்கள்.
3.சுவாசித்த உணர்வுகளை உயிர் உருவாக்கும் அதை நாம் உருவாக்குவோம்
4.இருளை அகற்றும் அருள் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமன் வாலியை எப்படிக் கொல்கிறான்…? இராமன் வாலியை மறைந்து இருந்து தான் தாக்குகின்றான்.

ஒருவரைப் பார்த்த பின் அவர் வேகமான நிலைகளில் நம்மைத் தாக்கி விடுவார் என்ற உணர்வை நாம் எடுக்கின்றோம். அவனை உற்றுப் பார்த்தால் என்ன செய்கின்றது…?

அவர் கோபமான உணர்வுகளை நம்மிடம் சொல்லப்படும் போது அதை நாம் நுகர்ந்தவுடனே அந்த உணர்வு நம்மை வீழ்த்துகிறது.

அவன் எண்ணத்தை நுகர்ந்து பதிலுக்கு நாமும் கோபமாகச் சொல்வதை விடுத்து விட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.புருவ மத்தியில் வலுவாக எண்ணிச் சுவாசித்து விட்டு – அந்த மறைந்த நிலைகளில்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனை அறியாது இயக்கும் இருள் நீங்க வேண்டும் என்ற உணர்வைத் திருப்பினால்
4.அவன் உணர்வை நாம் அடக்குகின்றோம்.

வாலி என்ற நிலைகளில் போர் முறைகள் செய்யும் போது அதனின் வலுவின் செயலாக்கங்களுக்கு நம்முடைய வலிமையை நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று தான் வான்மீகி தெளிவாகக் காட்டுகின்றார்.

ஏனென்றால் கண்கள் கொண்டு அவர் கோபமாகப் பேசுவதை உற்று நோக்கிக் கூர்ந்து பதிவாக்கி விட்டால் அவன் உணர்வே நம்மை இயக்கும். அதை இயக்கவிடாது அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தடுக்க வேண்டும்.

இருந்தாலும் இதைப் போன்ற உணர்வின் தன்மை நம்மை இயக்கும் நிலைகளைக் காட்டுவதற்குத்தான் மகாபாரதத்தில் அதே சமயத்திலே பீஷ்மரைக் காட்டியிருப்பார் வியாசகர்.

கடைசியில் பீஷ்மர் அம்புப் படுக்கையின் மீது தான் படுத்து இருப்பார்.
1.தான் செய்த பாவம் எல்லாம் தன் உடலில் எப்படி இருக்கிறது என்று உணர்த்தி
2.அதைத் தாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும் என்ற நிலையில்
3.மக்களுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பார் வியாசகர்.

கொலையோ மற்ற இம்சைகளையோ செய்தாலும் இந்த உணர்வு நமக்குள் இருக்கத்தான் செய்கிறது. அதனின் செயலாக்கங்கள் எப்படி வரும்…? என்பதையும் அதை மாற்றும் வல்லமை எப்படிப் பெறவேண்டும் என்பதையும் குருநாதர் அன்றைக்கு எமக்குக் (ஞானகுரு) காட்டுகிறார்.

சரித்திரத்தைக் காட்டி நம் கண்களின் வேலை என்ன..? நம் எண்ணங்கள் எப்படி இயங்குகிறது…? நம் உயிர் எப்படி இயங்குகிறது…? என்று ஒவ்வொன்றையும் அனுபவபூர்வமாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

“நம் கண்ணுடன் இணைந்தே” பல உணர்வின் எண்ணங்கள் வாழுகின்றது

 

ஒருவரைக் கெடுக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் முதலிலே கெடுகின்றோம்…” கெடுமதியின் உணர்வைப் பாய்ச்சுகின்றோம்… பாய்ச்சும் உணர்வுகள் கேட்போருக்குள் பதிவாகின்றது.
1.பதிந்த உணர்வுகள் அவர்களையும் கெடுக்கின்றது அவர்களில் விளைந்த உணர்வுகள் வெளிப்படுகின்றது.
2.எங்கே வித்தாகி உருவானதோ மீண்டும் இன்னொரு உடலில் விளைந்த உணர்வின் சத்தாக நமக்குள் கவர்ந்து அவரும் கெடுவர் நாமும் கெடுவோம்.

ஒருவர் கெட வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்கி அவரைப் பார்த்த பின் அவரை எப்படியும் வாழ்க்கையிலே கெடுக்க வேண்டும் துன்பத்தை ஊட்ட வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் தூண்டுகின்றது.

அவ்வாறு தூண்டி அந்த உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. இந்த உணர்வு எவர் கெட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அவர் மீது பாய்ச்சுகின்றோம்.

மீண்டும் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது. பகைமைகளைத் தான் நாம் வளர்க்கின்றோம். விளைந்த உணர்வுகளைப் பிறருக்குப் பாய்ச்சுகின்றோம்.

அவர்களும் நினைவு கொண்டு இதைக் கவர்கின்றனர் இருவருமே கெடுகின்றனர். கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். ஒருவரைக் கெடுக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தக் கெடும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கின்றோம். பிறரைக் கெடுக்கும் இச்சை வளர்கின்றது.

இதே போன்று
1.அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கி
2.நாம் பார்க்கும் அனைவரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும் என்று உணர்வுகளை உருவாக்கினால்
3.அருள் ஒளி என்ற உணர்வுகளை நமக்குள் உருவாக்குகின்றோம்… நாமும் அதுவாகின்றோம்.

ஆகவே… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும்பெரும் சக்திகளைப் பெற வேண்டும்… நாம் பார்ப்போருக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் நாம் அதுவாகின்றோம்.

அருளொளி பெற வேண்டும் என்ற உணர்வினை வித்தாக்குவோம். ஊழ்வினையாக உருவாக்குவோம். இந்த உணர்வின் துணை கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நமக்குள் அனைவரது உணர்வுகளும் உண்டு.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வுகளும் நமக்குள் நலம் பெறுகின்றது. கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். நம் கண்கள் கூறியது போன்று
1.ஒருவன் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்துடன் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய பின்
2.அவரைப் பார்த்த பின் நன்மை செய்ய வேண்டும் என்று உணர்ச்சிகள் தூண்டுகின்றது.
3.அதன் வழி நன்மை செய்யும் உணர்வுகளை நுகர்கின்றோம்… நல்வழிப்படுத்தும் உணர்வினை இயக்கச் சக்தியாக மாற்றுகின்றோம்.

இதை உணர்த்துவதற்காகக் கண்ணனும் பலராமனும் ஒன்றெனெ இணைந்தவர்கள்… “சகோதரர்கள்” என்று காட்டுகின்றார்கள்.

சுவை மிக்க உணர்வுகளை எண்ணும் பொழுது சீதா ராமன் என்றும் இப்படி பல கோடிஸ் சரீரங்களைப் பெற்ற நிலையில். கண்கள் ஒன்றைக் காட்டி அந்த உணர்வை நுகர்ந்து அந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்த எண்ணத்தின் உணர்ச்சியால் நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்ற நிலைகளைத் தெளிவாகக் கூறுகின்றனர்.
1.நம் கண்ணுடன் இணைந்தே பல உணர்வின் எண்ணங்கள் வாழுகின்றது.
2.அதனால் தான் கண்ணனின் சகோதரன் பலராமன் உடன் பிறக்கவில்லை என்றாலும்
3.உணர்வின் தன்மை கொண்டு இணைந்து வாழும் சக்தி பெற்றவர்கள் என்று காட்டுகின்றார்கள்.

எண்ணங்களின் இயக்கங்களுக்குக் காவியங்களாகப் படைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.

நமக்குள் இணைந்து வாழும் நிலைகள் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை… நண்பன் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எண்ணினால் அந்த கண்கள் உற்று நோக்குகின்றது உதவி செய்யச் சொல்கின்றது.

ஆகவே
1.எண்ணங்கள் வரும் பொழுது இந்தப் பார்வை அதைச் செய்கின்றது.
2.நண்பனைப் பார்த்த உடனே நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது.
3.ஒன்றுடன் ஒன்று இணைந்து எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையை அருள் ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
4.கண்ணன் வேறல்ல நம் எண்ணங்கள் வேறல்ல.

கண்கள் இல்லாத பொழுது பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் பல கோடிச் சரீரங்களில் வலுப் பெற்று உருவாகின்றது. உருவான உணர்வுகள் உடலுக்குள் தான் எண்ணி ஏங்கிய பின் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறக்கின்றான்.

கம்சன் என்ற இருளை நீக்கிப் பொருள் காணும் நிலைகளைச் செயல்படுத்துகின்றது என்று இப்படித் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

உதாரணமாக… புழுக்கள் இரண்டு நாள் வாழும் அல்லது நான்கு நாளைக்கு இருக்கும். இப்படி மடிந்து மடிந்து… தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வைக் கூட்டிக் கூட்டி அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் தான்
1.வாசு… சுவாசித்த உயிரான தேவனுக்குத் தனக்குத் தேவையான உணர்வு என்ற நிலையில் அந்த எண்ணங்கள் உருவாக்கப்படும் பொழுது தான்
2.வாசுதேவனுக்கும் தேவகிக்கும் உடலான சிறைச்சாலைக்குள் கம்சனை வெல்ல
3.அந்த நாராயணன் ஒளிக்கதிராக இருக்கும் இந்த உணர்வின் தன்மை
4.”ஒளியை ஊட்டி… ஒளியை அறிவாக்கும்… அதை அறிந்திடும் உணர்வின் தன்மை” தனக்குள் காட்டுவதே கண்ணன்.

ஆக… கண்ணனாகப் பிறந்தான் நாராயணன்…. துவாரகா யுகத்தில் இருளை நீக்கிக் கண் ஒளி கொண்டு உணர்வின் அறிவாகத் தான் இயக்கும் சக்தி பெற்றான். அதே நாராயணன் நமக்குள் இருக்கிறான் என்ற நிலைகளில் காட்டுகின்றார்கள்.

இவ்வாறு
1.கண்கள் எண்ணத்தால் தோன்றியது
2.பின் பார்வையால் நுகரப்படும் பொழுது எண்ணங்கள் வருகின்றது
3.எண்ணத்தால் எதை நாம் எண்ணி ஏங்குகின்றோமோ கண் அதைக் காட்டுகின்றது.

இப்படி எண்ணங்கள் பல உண்டு. பல கோடிச் சரீரங்களைப் பெற்ற பின் பலராம் என்ற நிலையினை மனிதன் அடைகின்றான். இதை மனிதன் தான் உணர்கின்றான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஸ்தல புராணம் என்பதே அரசர்களால் உருவாக்கப்பட்டது தான். அன்று வாழ்ந்த புலமைகள் பெற்றோர் அரசனைப் புகழ் பாடுவது வழக்கம். ஏனென்றால் தன்னுடைய பிழைப்பிற்காக அவ்வாறு செய்வார்கள்.

அந்தப் புகழ் பாடிய நிலைகள் வரப்போகும் போது ஸ்தல புராணத்திற்குப் பேர் ஜாஸ்தியாகின்றது. அரசனை உயர்த்துவதற்காக ஸ்தல புராணத்தில் புகழ் பாடினால் அவனுக்குப் பிழைப்பு வருகிறது.
1.ஆனால் மக்கள் உயர வேண்டும் என்று
2.ஏதாவது சொல்லி இருக்கார்களா என்றால் இல்லை.

அதனால் தான் திருவள்ளுவர் என்ன செய்தார்…? எந்த ஒரு அரசனையும் அவர் புகழ் பாடவில்லை. அருள் ஒளியின் உணர்வின் தன்மை கொண்டு “ஆதி ஆண்டவன்…!” என்று உயிரைத் தான் ஆதாரமாக வைத்தார்.

உயிரை வைத்துத் தான் பாடினார்கள். கடவுளாக உனக்குள் இயக்குவது எது…? என்ற நிலையில்
1.ஒருவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினால் காக்கும் நிலையாக அது வரும்.
2.ஒருவனை அழிக்க வேண்டும் என்று எண்ணினால் அழிக்கும் உணர்வாக அது வரும் என்று
3.அன்றைய பண்டைய தமிழில் பாடலாகக் கொடுக்கின்றார்கள்.

திருவள்ளுவர் ஏழ்மையில் வாடிக்கொண்டு இருக்கும் போது அவர் நுகரும் உணர்வுகள் தனக்குள் எது… என்ன…? என்று எல்லாவற்றையும் அறிகின்றார்.

அவருடைய மனைவி வாசுகியோ தன் கணவன்படும் துயரத்தைக் கண்டு அருள் ஒளியை இவருக்குள் பெற வேண்டும் என்ற உணர்வினைப் பாடலாகப் பாடுகின்றாள். அதாவது கணவனைத் தேற்ற அதைப் பாடுகின்றாள்.

யார்…? வாசுகி…!

துணிகளை நெய்து அதன் வழி ஜீவித்து வந்தவர்கள் தான் வள்ளுவரும் வாசுகியும். ஒரு துண்டை நெய்து அதை விற்று வந்தால் தான் அன்றைக்குச் சாப்பிட முடியும். அந்த அளவுக்கு வறுமை.

சந்தர்ப்பத்தில் அவர் நோய்வாய் படப்போகும் போது அந்த உயர்ந்த உணர்வு தனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கின்றார்.

அப்பொழுது தான் அவருடைய மனைவி வாசுகி
1.தன் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்.
2.அந்த உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்று புலமையில் பாடுகின்றார்.

ஆக தன் கணவன் எல்லாவற்றிலும் உயர்வான நிலை பெற வேண்டும் என்று கணவன் பெயரில் வாசுகி பாடியது தான் அந்த “வள்ளுவன் குறள்… வையகமெல்லாம் பரவியது…!” என்று சொன்னது. வள்ளுவர் உயர வேண்டும் என்று வாசுகி பாடிய பாடல்கள் தான் அது.

ஆனால் அன்றைய அரசன் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இவர்கள் இருவரும் இப்படி வாழ்ந்த காலத்தில் தான் கொங்கணரும் வருகின்றார். அவன் மந்திர ஒலிகளைக் கற்று கொண்டு வந்தவன். மதச் சார்பில் கடவுள் என்ற நிலைகளை இந்த மனித நிலைகள் எந்த பக்தி கொண்டானோ அவனைக் கைவல்யப்படுத்திக் கொண்டு வந்தவன்.

தனக்குள் தீமை என்ற நிலைகளில் யாராவது ஏவினால் அவர்களை எல்லாம் ஒடுக்கி விடுவான்.

ஒரு சமயம் மலர் சோலைகளுக்கு மத்தியில் நடந்து வரும் பொழுது கொக்கு ஒன்று பறந்து செல்லும் பொழுது அதனுடைய எச்சம் கொங்கணர் மீது பட்டுவிட்டது.

“கொக்கு என்னை இப்படி அசுத்தமாக்கி விட்டது…!” என்று தன் எண்ணத்தின் பார்வையால் அதனுடைய சிறகை ஒடித்து விடுகின்றான். அந்தக் கொக்கு ஒன்றும் தவறு செய்யவில்லை.

கொங்கணர் தான் கற்றுக் கொண்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்திருந்தாலும் போகும் பாதையில் தற்செயலாக எச்சம் விழுந்தது என்று சிநதிக்க முடியவில்லை.

“பிச்சாந்தேஹி…!” என்று கேட்டுக் கொண்டு வாசுகி வீட்டிற்கு வருகின்றான். அங்கே வந்தவுடன் பல குரல் கேட்கிறது. தன்னைச் சொல்லி “ஆண்டவனை வழிபடுபவனை நீ கவனிக்கவில்லையே…!” என்று கொங்கணர் அகம் கொள்ளுகின்றான்.

ஏனென்றால் ஒரு வீட்டிற்குச் சென்று தான் பிச்சாந்தேஹி என்று யாசகம் கேட்பார்கள். (கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் வேறு வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள்)

ஆனால் வாசுகிக்கோ உடுத்திக் கொள்ளச் சரியான துணி இல்லை. துணி நெய்யக்கூடிய குடும்பமாக இருந்தாலும் ஒரு முண்டு தான் உடுத்தி இருக்கிறது.

அதற்காக வேண்டி ஒரு துணியை மாற்றிக் கட்டிக் கொண்டு வருகிறது. பிச்சை போட்டாலும் உடலை வெளியில் காட்டிக் கொண்டா இருப்பார்கள்…! அதனால் நேரமாகிப் போய்விட்டது.

வாசுகி வந்ததும் கொங்கணர் விழித்துப் பார்க்கின்றான்.

கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா…! என்கிறது வாசுகி.

கொக்கின் இறக்கையை ஒடித்தது உனக்கு எப்படித் தெரிந்தது…? நீ எங்கே இதைக் கற்றுக் கொண்டாய்…! என்று கொங்கணர் கேட்கின்றார்.

கசாப்புக் கடைக்காரரிடம் கேள் என்கிறது வாசுகி. கசாப்புக் கடைக்காரனிடம் கேட்டால் தான் “உனக்குத் தெரியும்…!” என்று சொல்கிறது.

கசாப்புக் கடைக்காரன் என்ன செய்கிறான்…? ஆடை வெட்டி வியாபாரத்தைச் செய்கிறான். ஆட்டைக் கொல்லப் போகும் போது ஆட்டின் உயிர் அவனுக்குள் போய் அது மனிதனாகப் பிறக்கிறது.

ஆனால் ஆட்டைத் தின்றவன் உடலில் என்ன செய்கிறது…? ஆட்டை ரசித்துச் சாப்பிட்டவனை எல்லாம் ஆடாகப் பிறக்கச் செய்கிறது.

1.நீ கொக்கை வீழ்த்தினாய். உனக்குள் வீழ்த்திடும் சக்தி வருகிறது.
2.அதைக் கொல்லும் உணர்வு கொண்ட பின்… நீ அதே நிலையையே அடையப் போகின்றாய் என்று
3.வாசுகி தன்னுடைய கவிப் புலமைகளில் “சொல்லாமல் சொல்கிறது…”

அந்தச் சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது…?

ஏனென்றால் நான் (ஞானகுரு) படிக்காதவன். நான் ஏட்டையும் படிக்கவில்லை ஒரு கத்திரிக்காயும் தெரியாது. ஆனால் அன்று அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளின் பதிவு இங்கே இருக்கிறது.

அதை நுகர்ந்து அக்காலத்தில் நடந்ததை வெளிப்படுத்துகின்றேன். நான் மட்டும் இல்லை. நீங்களும் இதைப் பார்க்கலாம்… உணரலாம்… நுகரலாம்…! உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமையிலிருந்து விடுபடலாம்.
1.அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றால் எல்லாம் தன்னாலேயே வரும்.

மலைப் பகுதிகளில் குருநாதர் எனக்குக் காட்டிய இயற்கையின் பேருண்மைகள்

 

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் எத்தனையோ வகையான மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் பச்சிலைகளைக் கண்டு எடுக்கின்றார்கள்.
1.அந்தப் பச்சிலைகள் எப்படி உருவானது…?
2.அதற்கு அந்த ஆற்றல் எவ்வாறு வந்தது…? என்பதனைக் குருநாதர் எனக்குக் காட்டுகின்றார்.

தொடர்ந்து மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். இரண்டு வருடம் அங்கே அலைந்து திரிந்தேன்.

அக்காலங்களில் ஒரு மிருகம் மற்றொன்றை எப்படிக் கொன்று புசித்தது…? அதைக் கொன்று புசித்த பின் அந்த மாமிசத்தை மற்றவைகள் உட்கொள்ள முடியாத நிலை ஆகிறது.

கழுகு காக்கைகள் மட்டுமே உட்கொள்கின்றது. ஆனால் சிறிது காலம் கழித்து அது அழுகிய மணம் வந்த பின்பு தான் அந்தக் கழுகுகள் பறந்து வந்து அதனை நுகர்ந்து உட்கொள்ள வருகின்றது.

ஆனால் அதே சமயம் இது மடிந்த பின் இது உடலில் இருந்து வரக்கூடிய ஆவியின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாறுகின்றது… பரவுகின்றது…!

அந்த உடலை (அழுகிய) உருவாக்கிய அணுக்கள் திறந்த வெளிக்கு வந்தபின் அதையே உணவாக உட்கொள்ளும் புழுக்களாக அதிலே உருவாகின்றது. புழுவாக உருப்பெற்றாலும் உட்கொண்டு இரை தீர்ந்தபின் அவைகளும் மடிந்து விடுகின்றது.

1.மடிந்த உயிரான்மாக்கள் வெளியே செல்கின்றது.
2.சென்றாலும் எந்தெந்த உயிரினங்களை இது அடித்து உணவாகப் புசித்ததோ அந்த உணர்வின் துணை கொண்டு
3.அந்தந்த மிருகங்களின் உடலில் பட்ட பின் ஈக்களாக உண்ணிகளாக உருவாகின்றது.
4.அதன் ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்கின்றது.

இதையெல்லாம் காட்டுப் பகுதியில் வைத்து குருநாதர் காட்டுகின்றார்.

தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடல் பெற்றுத் தான் வாழும் நிலையானாலும் அது மடிந்த பின் மற்றதைக் கொன்று குவிக்கும் புலியோ நரியோ நாயோ மற்ற உடலைப் புசிக்கும் உணர்வு கொண்ட நிலைகள் மடிந்த பின் இவை எல்லாம் என்ன ஆகின்றது…? என்பதனை காட்டுக்குள் அழைத்துச் சென்று பார்க்கும்படி செய்கின்றார்.

உடலில் இருந்து சென்ற ஆவிகளைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து அலைகளாக மாற்றுகின்றது. ஒரு ஆட்டின் உடல் பெற்ற பின் நரியின் உணர்வைக் கவர்ந்து கொண்ட பின் இதைக் கண்ட பின் ஆட்டின் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும் ஓடு பாதையில் இன்னொரு தாவர இன சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கொண்டால் இதற்குள் ஊடுருவி சுழற்சியின் தன்மை அடைந்து ஒன்றுடன் ஒன்று மோதுகிறது.

மற்ற உயிரினங்களாகப் பெற்ற பின் இதனுடைய மணம் வெளிப்பட்ட பின் இது மூன்றும் இரண்டறக் கலக்கின்றது.

மோதலில் ஏற்படும் சக்தியைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொண்ட பின் தாவர இனத்தின் அடர்த்தி அதிகமாகி இதனுடன் இணைந்து விடுகின்றது. இணைந்த பின் ஒரு வித்தாகின்றது… நிலத்தில் பதிவாகின்றது.

வித்தான பின் புவியின் கால நிலைகள் கொண்டு மழை நீரோ மற்ற ஈரப்பசை கொண்ட காற்றலைகள் வரப்படும் பொழுது செடியாக முளைக்கின்றது. முளைத்து விட்டால்…
1.இது எதையெல்லாம் கொன்று புசித்ததோ அந்தச் செடி தன் அருகிலே வரக்கூடிய மிருகங்களை உயிரினங்களை
2.தன் கொடிகளைப் பாய்ச்சி அதனின் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றது.

உயிரணு பெற்ற பின் மீண்டும் தாவர இனங்களுடன் இணைந்து தாவர இனச் செடியாக மாறினாலும்
1.நீரை உணவாக உட்கொள்ளும் நிலை இருப்பினும்
2.அதே சமயத்தில் இரத்தத்தை உறிஞ்சி உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொள்ளும் நிலைகள் பெறுகின்றது.

இப்படிப் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது… இது எவ்வாறு நடக்கிறது…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர். இதையெல்லாம் அறிவதற்கு நான் சாதாரண உணவை உட்கொள்ளவே முடியாது.

சில பச்சிலைகளைக் கொடுத்து வாயிலே ஒதுக்கிக் கொள்ளும்படி சொல்வார். அதை மென்று கொண்டே இந்த உணர்வினைச் சுவாசிக்கும்படி செய்வார்.

நடந்து செல்லும் போது சில இடங்களில் ரொம்பக் களைப்பானால் நீரைக் குடிக்கும்படி சொல்வார், நீரைக் குடித்த பின் வயிறு உப்பிக் கொள்ளும்

சில இடங்களில் செடிகளின் இலைகளைத் தண்ணீரில் கசக்கிப் பிழிந்து விட்டால் நொங்கு போன்று ஆகிவிடும். அதை எடுத்து உணவாக உட்கொள்ளும்படி சொல்வார்.

இப்படி எல்லாம் பல தாவர இனங்களின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதைக் காட்டுவார்.

உயிரணு பெற்று அந்த உடலின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து கொண்டால் ஒன்றுடன் ஒன்று மோதி அது மீண்டும் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது எந்த உயிரினத்தில் இருந்து இந்தச் செடியுடன் கலந்ததோ அத்தகைய உயிரினங்கள் வரப்படும் பொழுது… இந்த இலைகள் அதனுடன் ஒட்டப்பட்டு இரத்தத்தைக் குடிக்கின்றது. இப்படிப் பல விதமான தாவர இனங்கள் உருபெறுகின்றது.

வேறு சில இடங்களுக்குச் சென்றால் அங்கே மனிதனையே பலியிட்டு உணர்வுகளைப் பிரித்து விட்டு அவருடைய உயிரை வெளியே எடுத்து இருப்பார்கள்.
1.அந்த உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் தாவர இனத்தின் மணத்தை கண்டபின் ராட்சசத் தன்மை கொண்டு ஆவிகள் வேகமாக ஓடுகின்றது.
2.இன்றும் சில இடங்களில் இந்தச் சுழிக்காற்றுகளைப் பார்க்கலாம்.
3.சில குறித்த நேரங்கள் வரும்பொழுது உயிர் பலி இடப்பட்ட இந்த உணர்வுகள் அதைக் கண்ட பின்
4.மற்ற தாவர இனங்களில் சுழிக் காற்றாக அடித்து ரொம்ப வேகமாகத் தள்ளிக் கொண்டு இருக்கும்.

அதற்குள் யாராவது மனிதன் சிக்கினால் உயிருக்குள் பட்டபின் காக்காய் வலிப்பு போன்று வந்துவிடும். கர்ப்பிணி யாராவது நுகர்ந்து விட்டால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பாதிப்பாகி அதனுடைய உறுப்புகளைச் சீராக உருவாகாதபடி செயலிழக்கச் செய்துவிடும்.

இது எல்லாம் காட்டிற்குள் சென்ற பின்
1.இயற்கையின் நிலைகள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.அக்கால மக்கள் எப்படி வாழ்ந்தனர்…?
3.கடும் பூதங்களாகவும் ராட்சசர்களாகவும் எப்படி உருவானார்கள்…? என்று காட்டுகின்றார்.

இன்றும் சில பகுதிகளில் மனிதன் பக்தி கொண்டு மந்திர ஒலிகளைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்ட பின் அவன் மடிந்தால் அந்த உயிரணுக்கள் எதனின் எல்லை கொண்டு இருப்பானோ அதன் பகுதிகளிலே அது சுழன்று கொண்டிருப்பதும் அந்த அலைகள் குவிவதும்… அங்கே செல்வோர் அஞ்சினால்… அந்த உணர்வை நுகர்ந்து அந்த உருவங்கள் தெரிவதும் அப்படிப் பல நிலைகள் உருவாகின்றது.

சில மலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது ராட்சச உருவம் கொண்டு மற்றவர்களைக் கொன்ற நிலையில்… அங்கே மற்றவர் படுத்திருக்கும் பொழுது அந்த உணர்வலைகள் அங்கே குவிகின்றது.

குவிந்தபின்
1.படுத்திருக்கும் உடலை எப்படிச் செயலற்றதாக அமுக்குகின்றது…?
2.அமுக்கிய பின் இரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றது…?
3.அந்த உடலை விட்டு உயிர் பிரிந்த பின் அதன் நிலை கொண்டு அதுவும் காற்றலைகளுடன் கலந்து எவ்வாறு செயல்படுகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

தீமைகள் வளர்ந்து வளர்ந்து மனிதனின் நிலைகளில் அக்காலங்களில் இருந்து இக்காலங்கள் வரையிலும் இதைப் போன்று தான் நடந்து வருகின்றது.

இந்த உடலில் எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு சாகாக்கலையாக இந்தப் புவியில் தான் மீண்டும் மாறி மாறி உடல்கள் பெறுவதும் நரகலோகத்தைச் சந்தித்து மீண்டும் சொர்க்கலோகம் வருவதற்குப் பல காலமாகின்றது.

இதிலிருந்து மீள்வதற்கு அக்காலங்களில் முதல் மனிதனானவன் தாவர இன்ங்களைப் பயன்படுத்தியவர்களைப் பற்றி மகாபாரதத்திலோ இராமாயணத்திலோ புலஸ்தியர்கள் என்று சொல்வார்கள்.

புலஸ்தியர் என்றால் காட்டுவாசிகள்…! அன்று அடர்த்தியான காடுகளில் அவர்கள் இருந்தாலும் அதன் உணர்வின் தன்மை கொண்டு இந்த இடத்தில் வாழ்ந்த அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்…? என்ற நிலையும் காலங்கள் எவ்வாறு சென்றது…? என்பதையும் உண்மையின் உணர்வைச் சொல்லி வருகின்றனர்.

எவ்வழியில் எதனை நாம் செயல்படுத்த வேண்டும்…? என்ற நிலைகளில் பின் தெளிவாக அவர்கள் கூறிய நிலையில் எழுத்து வடிவுக்கு வரும் பொழுது இதனைக் கூறியுள்ளார்கள்.

ஆனால் எழுத்து வடிவிற்கு வரப்படும் பொழுது அரசன் அந்த எழுத்தின் அறிவைக் கொண்டு வரப்படும் பொழுது ஞானிகள் காட்டிய பேருண்மையின் தன்மைகள் காலத்தால் மறைந்தும் போய் விட்டது.

இப்படித்தான் மறைந்து… மறைந்து…
1.விஞ்ஞான அறிவுகள் வளர்ந்த பின் விஞ்ஞான வளர்ச்சி முதிர்ந்து
2.இன்று மனிதனையே சீர்குலைக்கும் உணர்வாக விளைய வைக்கும் இந்தக் காலத்தில்
3.விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளோம்.
4.இருந்தாலும் இனி நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை குருநாதர் அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.

அஸ்ஸாம் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே காட்டு விலங்குகள் அதிகமாக இருக்கின்றது. அந்த மலைப்பாங்குகளில் எவ்வாறெல்லாம் தாவரங்கள் எப்படியெல்லாம் மாற்றம் அடைந்துள்ளது என்பதனைக் காட்டுகின்றார்.

குருநாதர் ஒரு பச்சிலையை எடுத்து நசுக்கி என்னிடம் கொடுத்தார்… இதை வைத்துக் கொள்…! என்று.

அது எதற்கு…? என்று எனக்குத் தெரியாது ஆனால் அதை வைத்துக் கொண்டு நடந்து செல்லும் பொழுது ஒரு யானைக் கூட்டமே அங்கே வருகின்றது.

கூட்டமாக வரக்கூடிய யானைகள் இந்த பச்சிலையின் வாசனையைக் கண்டபின் அது பிளிறுகின்றது… அஞ்சுகின்றது கத்துகின்றது… அருகிலேயே வராதபடி ஓடுகின்றது.

ஒரு காண்டாமிருகம் வருகின்றது. அது யானையைக் கூட ஒரு தட்டுத் தட்டி எறியக்கூடிய வலு பெற்றது. அது நடந்து வரப்படும் பொழுது
1.சந்தர்ப்பத்திலே ஒரு செடியிலே உராய்ந்து விடுகின்றது.
2.பட்டபின் இரத்தத்தை அந்தச் செடி உறிஞ்சி விடுகின்றது… அப்படியே கீழே விழுகின்றது.

முதலிலே ஒரு சில இதை நுகர்ந்து விடுகின்றது… அதனால் அந்தப் பக்கம் வருவதில்லை. ஆனால் காண்டாமிருகங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுத் தாக்குதல் ஏற்பட்டுத் தப்பி ஓடும் வேகத்தில் வரும் போது… இந்தச் செடிகளிலே உராய்ந்த பின் இரத்தத்தை உறிஞ்சிய பின் கீழே விழுந்து விடுகின்றது. இதைக் குருநாதர் காட்டுகின்றார். காடுகளில் இத்தகைய செடி கொடிகள் சில இடங்களில் உண்டு.

கேன்சர் நோய் என்றால் மருத்துவத்திற்கு இன்று ஏதேதோ செய்கின்றோம்.
1.ஆனால் இத்தகைய செடிகளின் சத்தை உடலின் மேலே முலாமாக அரைத்துப் பூசினால்
2.கேன்சர் எந்தப் பாகமோ அதற்குள் ஊடுருவி அந்த நோயை அழித்து விடுகின்றது… அதோடு அந்தக் கேன்சர் நோய் தீர்ந்து விடுகின்றது.

டிபி போன்ற நோய்களுக்கும் இந்தத் தாவர இனங்களை மேலே முலாமாகப் பூசினால் சுவாசிக்கும் பொழுது அந்த டிபி அணுக்கள் மடிந்து விடுகின்றது… நோயும் நீங்கி விடுகின்றது.

எப்படி எல்லாம் இது செயல்படுகிறது…? என்பதனை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளச் செயல்பட்டதையும் இன்று விஞ்ஞான அறிவால் எப்படிச் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்…? என்பதனையும் குருநாதர் காட்டுகின்றார்.

தன் உணவுக்காக வேண்டிக் கனிகளையும் மற்ற மிருகங்களையும் மற்ற உயிரினங்கள் கொன்று உணவாகப் புசித்தாலும் அத்தகைய மிருகங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அகஸ்தியன் என்று சொல்லும் அவருடைய தாய் தந்தையர்கள் இத்தகைய பச்சிலைகளின் இரகசியங்களை அறிந்து கொண்டார்கள்.
1.ஒருவர் அறிந்ததை மற்றவருக்குச் சொல்வதில்லை.
2.அதன் செயலாக்கங்களை அவரவர்கள் மட்டும் வலுவாக வைத்துக் கொள்கின்றார்கள்.

இன்றும் ஒரு சிலர் பச்சிலைகளுடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டால்… வசதி உள்ளவராக இருப்பார். சில நோய்களுக்காக வேண்டி இதை ஒரு சாமியார் கொடுத்தார். நான் தான் அதைப் பயன்படுத்துவேன் என்று சொல்வார்கள்.

ஆஸ்மா நோயைப் போக்குவதற்காக வேண்டி யாரோ ஒருவர் ஆந்திராவில் சொன்னதை
1.ஒரு மீனை எடுத்து அதற்குள் மருந்தைப் போட்டு முழுதாக விழுங்கப்படும் பொழுது
2.அந்த உயிரணுவின் செல்கள் ஊடுருவி ஆஸ்மா நோய் உருவாக்கும் அணுக்களை அது விழுங்கி விடுகின்றது என்ற இரகசியத்தைச் சொன்னார்கள்.

இது குடும்பப் பாரம்பரியத்தில் உண்டு. முழுதாக அந்த மீனை விழுங்கிய பின் உடலுக்குள் சென்று ஜீவ அணுக்களாக மீண்டும் அணுக் கருக்களாக மாற்றுகின்றது.
1.அந்த ஆஸ்மாவை உருவாக்கும் சளி எங்கே இருக்கின்றதோ அதற்குள் அணுக்களாக வெடித்து
2.சளியை உருவாக்கும் அணுக்களை விழுங்கி விடுகின்றது…. ஆஸ்மா நோய் நீங்கி விடுகின்றது.

இப்படி எல்லாம் சில முறைகள் எவ்வாறெல்லாம் அது இயங்குகிறது…? என்பதையும் நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

இதைப் போன்று அன்றைய காலங்களில் காடுகளில் வாழ்ந்தவர்கள் விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் வேட்டையாடி வந்த நிலையில் அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தப்பித்து வாழ்ந்தார்கள்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதல் மனிதன் அகஸ்தியனை… தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இன்று எத்தனையோ நிலைகள் கொண்டு அவனைத் தான் நாம் போற்றுகின்றோம்.

அவனுடைய தாய் தந்தையர்கள் தான் பற்பல விதமான மூலிகைகளைப் பச்சிலைகளைத் தாங்கள் படுத்துறங்கும் குகைக்கு முன் போட்டுக் கொள்வதும் தங்கள் உடலிலே முலாமாக அரைத்துப் பூசிக் கொள்வதும் போன்ற நிலைகளில் இருந்தார்கள்.

காரணம் இந்த மணத்தை விஷ ஜந்துக்களோ மிருகங்களோ நுகர்ந்தால் அவைகளுக்கு ஒரு மயக்கம் போன்று வரும்… அதனால் இவர்கள் அருகிலே அவைகள் வருவதில்லை. தங்களைக் காத்துக் கொள்வதற்காக அவ்வாறு செயல்படுத்தினார்கள்.

இந்த மணம் அவர்களுடைய சுவாசத்தில் கலந்து இரத்தத்திலும் கலக்கின்றது. கர்ப்பம் ஆகும்போது கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இது இணைகின்றது.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர் அந்தப் பச்சிலைகளின் மணங்களை நுகர நுகர இது எல்லாம் சந்தர்ப்பம் தான்.
1.கருவில் இருக்கக்கூடிய அகஸ்தியனுக்கு இந்த உணர்வுகள் கிடைக்கப் பெறுகின்றது.
2.நஞ்சை வென்றிடும் அணுக்களாக அவனுக்குள் உருப்பெறுகின்றது.
3.அதன் வழிப்படி அவன் உடலும் உருப்பெறுகின்றது
4.கருவிலேயே அத்தகைய ஆற்றல் பெற்றுப் பிறக்கின்றான்.
5.பிறந்த பின் இவன் அருகிலே விஷ ஜெந்துக்களோ மிருகங்களோ யானையோ மற்ற கொடூர மிருகங்களோ வருவதில்லை.
6.அவன் தான்… தன்னுடைய வளர்ச்சியில் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகின்றான்.

இதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். அதில் “சில விளக்க உரைகளைக் கூட்டி… இணைத்துத் தான்… ஒவ்வொரு தடவையும் கொடுப்பது…”

ஒவ்வொருவரும் தெளிந்த மனம் கொண்டு இந்த மனித வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்
1.அந்த அருள் ஞானி ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அரும்பெரும் சக்திகளை
2.நீங்கள் பெற “இது உதவும்” என்பதற்கே மீண்டும் பல கோணங்களில் வெளிப்படுத்துகின்றேன்.
3.இதை நுகரச் செய்து… பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கப்படும் போது கடும் விஷத்தன்மையிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.

ஆகவே
1.எதனின் எண்ணத்தைப் பதிவு செய்கின்றீர்களோ
2.கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏங்கி நுகரும் போது அது வளர்ச்சி வரும் சக்தியாக அடைகின்றது.
3.அந்த வழியிலே நீங்கள் வளர வேண்டும்.
4.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து காக்கும் சக்தியாக வளர வேண்டும்
5.எப்பொழுது இந்த உடலை விட்டு அகந்றாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

தீமை என்ற நிலையில் சிக்கி இன்னொரு உடலுக்குள் புகுந்து பிறப்பின் தன்மை அடையும் நிலையிலிருந்து விடுபட்டு இன்று நல்ல நினைவிருக்கும் பொழுதே அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்துத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சென்று பிறவி இல்லாப் பெரு நிலை அடைவதே நல்லது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு குழந்தை பிறந்து விட்டது என்ற உடனேயே நாம் ஜாதகக்காரனிடம் ஓடுகின்றோம்.

அவன் பார்த்து விட்டு குழந்தை பிறந்த நேரம் சரியாக இல்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் மிருக குணம் அதிகமாக இருக்கும். அவன் அசுர செயல்கள் கொண்டு செயல்படுவான் என்று அந்த ஜாதகம் பார்ப்பவன் கணக்குப் போட்டுச் சொல்கிறான்.
1.இந்தக் குழந்தை ஏழரை நாட்டுச் சனி பிடித்தவன்.
2.உங்கள் குடும்பத்திற்கே ஆகாது என்று சொல்கிறான்.

மிருகங்கள் எப்படி தன்னைக் கட்டுபடுத்தாத நிலைகள் கொண்டு செயல்படுமோ அதே உணர்ச்சிப்படியே இவன் போவான். “அவனால் உங்கள் குடும்பத்திற்கே சனியன் பிடிக்கும்…!” என்று விளக்குகிறான் ஜாதகக்காரன்.

ஆனால் அந்தக் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லை.

குழந்தை பிறந்த ஜாதகத்தை அவன் கட்டத்தைப் போட்டு எழுதுகிறான். நாம் நம்பிக்கையுடன் போனவுடனே இதை எடுத்து நமக்குள் உருவாக்கி வைத்துக் கொள்கிறோம்.

அடுத்தாற்போல என்ன செய்கிறோம்…?

“குடும்பத்திற்குச் சனியன் பிடித்துவிட்டதே…!” என்ற இதே உணர்வை எடுத்துக் கொண்டவுடன் தொழில் ரீதியாக ஒருவரிடம் வியாபாரம் செய்தாலும் நம் பணத்தை இவன் கொடுப்பானா.. கொடுக்க மாட்டானா…! என்று நினைத்துக் கொண்டே பொருளைக் கொடுக்கிறோம்.

நம்முடைய இந்தச் சோக உணர்வு அவனுக்குள் போன பின் அவன் நம் பணத்தைக் கொடுக்கவே மாட்டான். நம் எண்ணமே அதை மாற்றி விடுகிறது.

ஏனென்றால் ஜாதகக்காரன் சொன்ன அந்த உணர்வைப் பதிவு செய்யும் போது அது நமக்குள் கடவுளாக மாறுகிறது. “அவன் தான் நம்முள் சிருஷ்டிக்கிறான்…!” என்ற நிலைகள் கொண்டு எண்ணத்தால் எடுத்து நமக்குள் இப்படி அறியாத நிலைகள் கொண்டு உருவாக்கி விடுகிறோம்.

அதே சமயத்தில்
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை வேண்டி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்
3.அந்தக் குழந்தை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கருவிலிருந்து வளர்த்துப் பாருங்கள்.
4.குடும்பத்தில் தரித்திரம் இருந்தாலும் “அதை எல்லாம் நீக்கிடும் வல்லமை பெற்றவனாக” அந்தக் குழந்தை வளர்ந்து வருவான்.

சில வீட்டில் கர்ப்பமாக இருக்கும் போது பாருங்கள். ஆயிரம் சண்டை போடுவார்கள். பிறந்த பிற்பாடு அந்தக் குழந்தை என்ன செய்வான்…?
1.அந்தச் சண்டை போடும் வழக்கத்திற்கே போவான்.
2.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் வீட்டிற்குள் இழுத்துக் கொண்டு வருவான்.

ஏனென்றால் சண்டையை உற்றுப் பார்த்த உணர்வுகள் தாய் உடலில் ஊழ்வினையாகின்றது. கருவில் வளரும் குழந்தைக்கோ அது பூர்வ புண்ணியமாகின்றது.

ஆகவே இதை எல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அன்றைய அரசன் தன்னுடைய குழந்தை மிகவும் வலிமையாக இருப்பதற்காக என்ன செய்தான்…? அரசனின் மனைவி கர்ப்பம் ஆகி விட்டது என்றாலே ஒரு முடியில் விஷத்தைத் தொட்டு அதை உணவுடன் கலந்து அந்தத் தாய்க்குக் கொடுப்பார்கள்.

இப்படிப் பிறக்கும் குழந்தை வீரியமான வலு கொண்டதாகவும்… மற்றவர்கள் விஷத்தைக் கொடுத்தாலும் கொன்று விடமுடியாத அளவிற்கு இதைச் செய்தார்கள்.

மக்கள் யாரும் அதைச் செய்யவில்லை.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தாலே ஒவ்வொரு நிமிடத்திலேயும் கருவில் இருக்கும் குழந்தை மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும். உலகில் வரும் தீமைகளை எல்லாம் அகற்றக்கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும். நஞ்சை வென்றிடும் உணர்வு பெற வேண்டும் என்று குடும்பத்தில் இருக்கிறவர்களெல்லாம் சொல்லுங்கள்.

கர்ப்பமான தாயும் இந்த முறைப்படி எண்ணி அந்த மெய் ஞானிகளுடைய உணர்வை எடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தை அபூர்வ சக்தியாக ஞானக் குழந்தையாக வளர்வான்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். நீங்கள் ஜாதகக்காரனைத் தேட வேண்டியதில்லை…!

அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்… உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்

 

அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வேண்டினால் நமக்குள் பகைமை உணர்வுகள் வராது தடுக்கப்படுகின்றது. அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எண்ணி எடுத்தால் அது நமக்குப் பாதுகாப்பாகவும்… நமக்குள் நன்மை செய்யும் சக்தியாகவும் மாறும்.

அதே சமயத்தில் உலகுடன் ஒத்து வாழ வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்.

அன்று தாய் கருவிலே உருப்பெற்ற அகஸ்தியன்…
1.அவனின் தாய் சந்தர்ப்பத்தால் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் பெற்று அந்த உணர்வின் சக்தியைத் தான் நுகர்ந்தாலும்
2.அதன் வழி கொண்டு தாய் கருவிலே விளைந்த உணர்வின் துணை கொண்டு
3.அவன் பிறந்த பின் தன் தாய் தந்தையை இன்னொரு பிறவி இல்லா நிலைகள் அடையச் செய்தான்.

துருவ நட்சத்திரம் என்று சொல்கின்றோமே…
1.அகஸ்தியனுடைய தாய் தந்தையும் அகஸ்தியனின் மனைவியும் இவர்கள் நான்கு பேரும் பிரம்மமாக நின்று அன்னை தந்தை அரவணைப்புடன்
2.நஞ்சை வென்றிட்ட உணர்வினைத் தன்னுடன் அரவணைத்து ஒன்றிய நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக உருப்பெற்று
3.அதனின் அரவணைப்பில் சப்தரிஷி மண்டலங்களாகத் தன் ஈர்ப்பு வட்டத்தில் வாழச் செய்து கொண்டுள்ளான் அன்று அகஸ்தியன்.

இதனை வழிப்படுத்தி கர்ப்பமுற்ற தாய் கருவில் வளரும் சிசுக்களுக்கு ஒவ்வொரு நாளும் மகரிஷிகள் உணர்வுகளைக் கருவில் இருக்கும் சிசு பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால்
1.துருவ மகரிஷியின் ஆற்றல் அங்கே பெற்று
2.நஞ்சை வென்றிடும் உணவுகள் பெற்று உங்களையும் காக்கும் உணர்வாக வருகின்றான்.

நமக்குள் வளர்ந்த இனமாக இருப்பினும் “நாம் எண்ணிய உணர்வின் கருவின் உணர்வை அது ஒளியாக மாற்றுகின்றது…” நமக்குள் தெளிவாக்கும் உணர்வின் தன் மகனாகவும் வருகின்றது. நமக்கு அருள் ஞானத்தைப் போதிக்கும் அருள் ஞானக் குழந்தையாகவும் வளர்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் கர்ப்பம் என்று அறிந்தாலே துருவ மகரிஷியின் உணர்வுகள் கருவில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும் உலகைக் காத்திடும் உத்தம ஞானியாக வேண்டும் என்ற உணர்வினை நாம் எடுத்துக் குழந்தை பிறக்கும் வரையிலும் இந்த உணர்வினை வலுக்கூட்டிச் செயல்படுத்த வேண்டும்.

குழந்தை பிறந்த பின் உலக ஞானத்தை அவன் அறியும் தன்மையும் உலகைக் காத்திடும் உணர்வுகளும் அவனுக்குள் விளையும். காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அருள் ஞானிகள் உணர்வுகளைக் கருவில் வளரும் சிசுக்களுக்கு ஊட்டுதல் வேண்டும்.

எப்படி அகஸ்தியனின் தாய் தந்தையர் சந்தர்ப்பத்தால் விஷத்திலிருந்து விடுபடும் உணர்வுகளைத் தனக்குள் முலாமாகப் பூசும் போது… அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் கருவிலே வளரும் சிசுவுக்குள் இணைந்து… நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்று அதன் வாழ்க்கையில் நஞ்சை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரம் பெற்றது போன்று…
1.நீங்களும் இந்த உணர்வின் தன்மையை அருள் ஒளி பெற வேண்டும் என்ற நினைவினைக் கூட்டி
2.அருள் ஞானக் குழந்தையாக உருவாக்கி உங்களைக் காத்திடவும்
3.இந்தப் புவியில் வாழும் மனித இனத்தைக் காத்திடும் உணர்வாக உங்களில் அருள் ஞானம் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
4.அருள் ஒளிச் சுடராக அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்… உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் ஞானத்தைப் பெறக்கூடியதைத்தான் “அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை..! என்று
1.நான் யாரிடமும் யாசிக்கவில்லை…
2.நான் யாருக்கும் இல்லை என்று சொல்லக்கூடாது…! என்று இராமலிங்க அடிகள் இந்தப் பாடலைப் பாடுகின்றார்கள்.

அருள் ஒளியின் உணர்வைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது நமக்குள் ஒளியாக மாறுகின்றது. மற்றவர்கள் கேட்கும் பொழுது இல்லை என்ற நிலை வராதபடி அந்த அருள் ஒளி அவர்களுக்குள்ளும் படர்கின்றது.

1.நீ அன்பையே சிவமாக்கு…! என்று அவர் சொன்னார்.
2.அந்த அரவணைக்கும் உணர்வுகள் அன்பாகி இந்த உடலாகச் சிவமாக்கு.
3.எல்லாவற்றையும் நீ அரவணைத்துக் கொள்…!
4.இந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை உனக்குள் மகிழ்ச்சியூட்டும் ஒளியாகும் என்ற
5.இந்த உணர்வின் தன்மையைத் தான் அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை என்றார்.

மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சந்தோஷத்தை உருவாக்கிவிட்டால் எனக்குள் இருள் வருமோ…? வராது…! இருண்ட நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகளுக்காக இராமலிங்க அடிகள் அதைச் சொல்கிறார்.

அப்பொழுது அந்த மகிழ்ச்சி என்ற உணர்வுகள் அருள் பெரும் ஜோதியாகி தனிப் பெரும் கருணையாகின்றது.
1.நான் எண்ணியதை நீ உருவாக்குகின்றாய்… கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேலே…! (கந்தவேல் யார்…?)
2.நம் உயிர் தான் அந்தக் கந்தவேல்.

கந்த… அதாவது பல விதமான உணர்வுகள் கொண்ட கோட்டை இது. நம் உடல் என்ற கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அதாவது வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்து நம் உடல் கந்தக் கோட்டம்.
2.அந்த உயிருடன் ஒன்றி நாம் எண்ணப்படும் பொழுது
3.அந்தக் கூர்மையின் நிலைகளில் இயக்குகிறது என்பதைத்தான்
4.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே.. அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை…! என்றார் இராமலிங்க அடிகள்.

அங்கே கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்து கூர்மையாக… உணர்வின் ஜொலிப்பாக… உணர்வின் கூர்மையாக… உணர்வின் தன்மையை அறியச் செய்கின்றாய்…! நீ ஒவ்வொன்றையும் எனக்குள் ஒளியாக நின்று உணர்த்துகின்றாய்… அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய்…! என்று தன் உயிரிடம் தான் ஏங்குகின்றார்.

கந்தக் கோட்டம் என்று இந்த உடலுக்குள் இயங்கும் உயிரைப் பற்றித் தான் இராமலிங்க அடிகள் சொன்னார்.
1.இருளை அகற்ற வேண்டும்
2.ஜோதியாகப் பேரொளியாக ஆக வேண்டும் என்ற பொருள்படும்படியாகச் சொன்னார்.

மனிதனின் வாழ்க்கையில் தன் தாயை மறந்தால் அவன் மனிதனே இல்லை

 

சிறு வயதிலே நாம் பல குறும்புத்தனங்கள் செய்கின்றோம்… தாய் என்ன செய்கின்றது…? தூக்கி நம்மை வெளியே எறிந்து விடுகின்றதா…? இல்லை.

அவன் எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும்… எதை எதையோ சொல்லி அவனை அரவணைத்து “இந்தடாக் கண்ணு அதைச் சாப்பிடுடா இதைச் செய்யிடா…! என்னடா இப்படிச் செய்கின்றாய்…?” என்று குழந்தையைக் கெஞ்சிப் பராமரித்து வருகின்றது.

ஆனால் வளர்ந்த பின் தன் தாய் ஏதாவது சொன்னால்… தாயைப் பார்த்து “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகின்றாய்…” என்று தாயைப் பேசுபவர்கள் தான் பலர் உள்ளார்கள். தாயை மறக்கும் நிலையே வருகின்றது.

1.தாயை மறந்திடாது எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அந்த அருள் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும்.

ஒரு பித்துப் பிடித்த தாயாகவே இருந்தாலும் தன் குழந்தையை இன்னார் இந்த இடத்தில் அடித்து விட்டார்கள் என்று சொன்னால் போதும்.

பிள்ளை மீது கவனம் முழுமையாக இல்லை என்றாலும் “அடித்து விட்டார்கள்” என்று கேள்விப்பட்ட பின் உடனே பதறி அழுகும். ஆனால் அந்தப் பித்துப் பிடித்த தாயை ஒருவர் அடித்தால் அதனுடைய பிள்ளை இதைக் கேள்விப்பட்டு “கிரகம்…! அப்படித்தான் வேண்டும்” என்று சொல்லும்.

தாயைக் கவனித்துப் பார்ப்பார்களா…? என்றால் இல்லை. ஏனென்றால் இன்று மனிதனுடைய உணர்வுகள் அந்த வழிக்குச் சென்று விட்டது.

அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில்
1.தாயை எந்த அளவிற்குப் போற்றித் துதிக்கின்றோமோ
2.அந்த உணர்வுகள் என்றும் உறுதுணையாக இருக்கும்.

நண்பனுக்குள் உதவி செய்வது போன்று பின் தாயின் உணர்வுகள் நமக்கு உதவுகிறது. தாயை எண்ணி ஏங்கினால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும்.

ஒரு காரியமே நடக்கவில்லை என்றால்
1.அம்மா…! என்று ஏங்கித் தாயினுடைய அருளைப் பெற்று
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். உடனடியாக அது கிடைக்கும்.

இதையெல்லாம் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மனிதன் என்ற முழுமை பெற வேண்டும் என்றால் இந்த நிலை அடைய வேண்டும். அதற்காக வேண்டித் தான் அம்மா அப்பாவை நினைவுபடுத்தி அக்காலத்தில் வணங்கும்படி செய்தார்கள் “விநாயகர் ஆலயத்தில்…”

இதை வினையாக்க வேண்டும் அருள் உணர்வுகளை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

நம் பாட்டன் பாட்டி… அந்தக் குல வழியில் தான் நாம் மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். அவர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தால்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும். பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் ஈஸ்வரா என்று
3.காலை துருவ தியான நேரத்திலே அவர்களை எண்ணி விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் ஒளியின் சரீரம் ஆகின்றார்கள். சப்தரிஷியுடன் ரிஷியாகின்றார்கள். அவர்கள் உணர்வு நமக்குள் இருக்கின்றது மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் உடனடியாக அந்தச் சக்தி இங்கே கிடைக்கும்.

இதை வளர்த்துக் கொண்டால் நாம் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்முடைய உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்லும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை ஒருவன் துன்பப்படுத்துகின்றான். அப்பொழுது “இப்படிச் செய்கின்றானே…!” என்று எண்ணுகிறோம். திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது
1.அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.
2.கருவாகி 48 நாள் ஆனபின் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது
3.அது வேதனையை உருவாக்கும் அணுவாக அது உருவாகின்றது.
4.அணுவாகி உடல் உறுப்புகளில் ஒட்டிவிட்டால் நம் இரத்தங்களிலிருந்து தான் ஆகாரம் எடுக்கும்.

சூரியன் மற்ற தாவர இனச் சத்துக்களை எல்லாம் தனக்குள் எடுத்துக் காற்றுகளாக மாற்றியமைத்து வைத்துக் கொள்கிறது. ஒரு செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றும் பொழுது
1.காற்றுடன் காற்றாகக் கலந்து வரும்
2.தன் இனமான சத்தின் உணர்வைப் பிரித்தெடுத்து அந்தச் செடி விளையும்.

டி.வி ரேடியோ இவைகளில் ஒலி ஒளி அலைகளாக ஒலி பரப்பு செய்கிறார்கள், எத்தனையோ இடங்களிலிருந்து பரப்புகின்றார்கள். இருந்தாலும் நாம் எந்த அலை வரிசையில் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ இந்தக் காற்றிலிருந்து அந்த ஸ்டேசனிலிருந்து வருவதை மட்டும் பிரித்து நமக்குக் காட்டுகின்றது.

இதைப் போல நாம் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மை நமக்குள் எடுக்கும். நமக்குள் அதை இழுத்தே கவர்கின்றது.
1.வேதனைப் பட்டோம் என்றால் வேதனையைக் கவரும்.
2.கோபத்தை எண்ணினால் கோபமான உணர்வைக் கவரும்.

இப்படி எந்தெந்த எண்ணத்தின் உணர்வை கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மை நமக்குள் கரு முட்டையாக மாறும். இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகங்களில் இது இணைகின்றதோ அந்தக் காலப் பருவமாகும் பொழுது அது அணுவாக மாறுகின்றது. கூட்டை விட்டு வெளி வருகின்றது.

நத்தைகளைப் பார்த்தால் அந்த ஓட்டுடன் ஒட்டி இருக்கும். அந்த ஓடு அதற்குப் பாதுகாப்பு. அதே போல் நாம் கவர்ந்த உணர்வுகள் அனைத்தும் அணுக்களாகப் பாதுகாப்பாக நம் உடலின் உறுப்புடன் ஒட்டி உருவாகின்றது.

அது எந்த உணர்வு கொண்டு உருவானதோ அதனின் சத்தை இரத்தத்தின் மூலம் வருவதை உறிஞ்சி உணவாக எடுத்து அதன் மலத்தை இட்டு உறுப்புகளாகச் சேர்க்கின்றது.
1.ஏனென்றால் அணுவை நாம் பார்க்க முடியாது.
2.ஆனால் அந்த அணுவின் மலம் தசையாக உடலாக மாறும் பொழுது காண முடிகின்றது.

உறுப்புகளில் சேர்க்கும் பொழுது என்ன ஆகின்றது…?

ஏற்கனவே நல்ல அணுக்களால் ஆன உறுப்புகள் உடல் நன்றாக அழகாக இருக்கும். ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிலே சேர்த்து இணைந்து விட்டால்
1.உதாரணமாக நுரையீரலிலோ கல்லீரலிலோ அந்த மாதிரி அணுக்கள் தேங்கி விட்டால்
2.விஷத்தின் தன்மை பாய்ந்த பின் அந்தந்த உறுப்புகள் நலிகிறது.

அடுத்து நம் இரத்தங்களைப் பிரிக்கும் இருதயத்தில் உட் புகுந்து அங்கிருந்து பல உட்பிரிவுகளாகச் செல்கின்றது. இருதயத்தில் இயற்கையாகவே மூன்று வால்வுகள் இருக்கின்றது.

அதிலே இiந்த வேதனைப்படும் அணுக்கள் உருவாகினால்
1.மூன்றில் ஒன்று அடைபட்டாலும் இரண்டு எடுக்கும்
2.இரண்டில் அடைபட்டாலும் ஒன்று எடுக்கும்.
3.ஆனால் ஒன்றில் எடுக்கப் போனால் திணறல் அதிகமாகும்.
4.கடைசி அந்த ஒன்றிலும் அடைபட்டால் அவ்வளவு தான்.

விஞ்ஞான அறிவில் இதை எல்லாம் எத்தனையோ காட்டுகின்றார்கள். வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் நாம் எடுக்கும் எண்ணத்திற்குத் தக்கவாறு தான் இந்த உறுப்புகள் உருவாகின்றது, மற்ற மிருக இனங்களில் இத்தகைய நோய்கள் வருவதில்லை.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் (ஞானகுரு) என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு உணர்வுகளை எடுக்கப்படும் பொழுதும்
1.நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது…?
2.உறுப்புகளுக்குள் என்ன மாற்றங்கள் நடக்கின்றது…?
3.அணுக்களுக்குள் என்ன நடக்கின்றது…? என்று குருநாதர் ஒவ்வொன்றாகக் காட்டினார்.
4.அதை நேரடியாகப் பார்த்ததால் தான் உங்களிடம் சொல்கிறோம்.

சாமிக்கு ஈஸ்வரபட்டர் எல்லாச் சக்திகளும் கொடுத்தார். நாம் இதையெல்லாம் பார்க்க முடியுமா…? என்று எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நிலைகளை நீங்களே தடைப்படுத்திக் கொள்கின்றீர்கள்

யாம் உபதேசம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே
1.நாம் இதை எல்லாம் என்றைக்குப் பெறப் போகின்றோம் என்று
2.உங்கள் எண்ணத்தை இப்படிக் கொண்டு போனால்
3.நான் சொல்வது உங்களுக்குள் பதிவே ஆகாது – அந்த ஆற்றல்களை எடுக்கவும் முடியாது.

ஏனென்றால் நம் எண்ணத்தால் எப்படி நமக்கு நோய் வருகின்றதோ அதே எண்ணத்தால் அந்த நோய் நமக்கு வராமலும் தடுக்க முடியும். ஆகவே தீமைகள் தாக்கும் பொழுது நீங்கள் அதிலிருந்து விடுபட வேண்டும்.

அதற்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் கொடுத்த சக்திகளை பல கோணங்களில் உங்களுக்கும் சொல்லி அந்த ஆற்றல்களை ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.

எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

“என்றோ நடந்தது…” என்றாலும் நீங்களும் அதைப் பெற முடியும்

 

ஆதியிலே… ஒவ்வொரு அணுக்களும் மோதி மேகமாகி மேகம் அடர்த்தியாகி எடையற்ற நிலைகளில் கூடுகின்றது. இப்படி ஒரு அடர்த்தியின் தன்மை அடைந்தபின் இந்த அணுக்கள் மேகக் கூட்டத்திற்குள் மோதுகின்றது.

மோதலான பின் நீராக வடிகின்றது. நீரான பின் பல விதமான உணர்வு கொண்ட அணுக்கள் அதனுடன் சிக்கி எடை கூடுகின்றது… நகர்ந்து ஓடத் தொடங்குகிறது.

ஓடும் நிலையில் உராய்கின்றது… வெப்பமாகின்றது… ஆவியாக மாறுகின்றது இந்த உணர்வுகள் இரண்டறச் சேர்த்து ஒரு பொருளாக உருவாகின்றது.

அதாவது… இயற்கை அதனுடைய சந்தர்ப்பத்தில் இதைக் கடந்த நிலைகள் கொண்டு ஒன்றின் தன்மை அடைந்த பின் ஓடும் வேகத்தில் சூடாகி ஆவியாகி இதற்குள் சிக்கிய உணர்வுகள் அணுத் தன்மையாகும் போது பரமாகிறது.

பரம் என்றால் எல்லை… ஒரு பொருளாகின்றது… ரூபம்…! அதற்குத் தான் “பரம்பொருள்” என்று காரணப் பெயரை வைக்கிறார்கள்.
1.இது எல்லாம் இயற்கை எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் மனிதனான பின் அணுவின் இயக்க ஆற்றலைக் கண்டுணர்ந்தவன் அவன்.
2.அவனுள் அவன் கண்டு… உண்மைகளை உணர்ந்து… உணர்வின் இயக்கம் எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாக்கினான்
3.அவனுள் விளைந்த இந்த உணர்வின் ஆற்றல் வெளிப்பட்டதை நமது சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

என்றோ நடந்தது…!

ஆனால் மனிதனான பின் தன்னை அறிந்து கொள்ளும் உணர்வால் அறிந்த அவன் (அகஸ்தியன்) அவனுள் விளைந்த உணர்வின் ஒலியலைகளைப் பரப்பப்படும் பொழுது சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது நமது பூமியில்.

ஏனென்றால் திட்டியவர்களை எண்ணும் பொழுது உடனே உங்களுக்குக் கோபம் வருகிறது. வேதனைப்படும்படி ஒருவன் செய்வதைப் பார்த்தவுடன் பாவிப்பயல் இப்படிச் செய்கிறானே….! என்ற உணர்ச்சிகள் தூண்டுகின்றது… இது விளைகிறது.

இதைப் போல
1.இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தப் பூமியில் படர்ந்திருப்பதை
2.எமது குரு… அவன் அருளைப் பெறும் உணர்வினை எனக்குள் பதிவு செய்து
3.நினைவு கொண்டு அதனைப் பார்…! அதை நுகர்ந்து அறி…! உலகம் எப்படி உருவானது என்ற உண்மையை உன்னில் நீ காண்.
4.இந்த உணர்வின் தன்மையை உனக்குள் விளையச் செய்
5.இயற்கை எப்படி விளைந்தது…? நீ மனிதனானது எவ்வாறு…? மனிதனான பின் நீ எவ்வாறு செயல்பட வேண்டும்…?
6.உன்னுடைய வாழ்க்கையினுடைய கதி என்ன…? (ஏனென்றால்) இந்த மனிதனுக்குப் பின் உடல் இல்லை.

உயிர் ஒளியானது… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுதல் வேண்டும். அந்த அருளைப் பெற்றவன் அகஸ்தியன். அவன் மண்ணுலகை வென்றான்… விண்ணுலகை அடைந்தான்… வானுலகையும் அளந்தான்… அண்டத்தையும் அறிந்தான்…!

அந்தச் சக்திகள் எல்லாம் பிண்டத்திற்குள் எப்படி விளைந்தது…? என்ற நிலையை அவன் கண்டுணர்ந்ததனால் அவனுக்குப் பின் வந்தவரால் “அகஸ்தியன்” என்று காரணப் பெயராக வைக்கப்பட்டது.

1.ஆதியில் நமது பூமியோ சூரியனோ இல்லாத காலங்களிளிருந்து “அதையெல்லாம்” அவன் அறிந்து உணர்ந்தவன்.
2.அவனுள் விளைந்த இந்தச் சக்தியைப் பெற்றால் அவன் அடைந்த எல்லையை நீங்களும் அடைய முடியும்,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று எடுத்துக் கொண்டால் மதத்திற்கு என்று குருக்கள் உண்டு. உயர்ந்த தத்துவத்தை எல்லாம் பேசுவார்கள்.
1.ஆனால் அந்தத் தத்துவங்கள் மற்றவருக்குத் தானே தவிர
2.அந்தத் தத்துவம் தனக்கில்லை என்று நிலைகளில் தான் நடந்து கொள்வார்கள்.

அந்தத் தத்துவத்தின் கீழ் நடக்காதிருந்தாலும் அந்தத் தத்துவத்தை வளர்க்கப்படும் போது மற்ற மதங்களைப் பழித்துப் பேசுவதும் பகைமை ஊட்டுவதும் போன்ற நிலைகள் தான் இன்றும் உண்டு. எல்லோரையும் இணைத்துச் சேர்க்கும் நல்ல பண்புகள் இல்லை.

ஆனால் அந்த உயர்ந்த பண்பு நம் நாட்டில் நம் காலத்தில் வளர்ந்த தவறு செய்த ஒரு மகானுக்கு எப்படி வருகிறது…? தன் சுகபோகங்களுக்கும் சிற்றின்பங்களுக்கும் மது வகைகளுக்கு அடிமையான அந்த மனிதன் காந்திஜி தான்…!

காந்திஜி அரசியல் சட்டங்களை உணர்ந்தவர். BHARAT LAW மேல் நாட்டிலே படித்துணர்ந்தார். மேல் நாட்டின் அறிவையும் அவர் உணர்ந்தார். மேல் நாட்டில் செய்யும் அநாகரிகத் தன்மையெல்லாம் இங்கேயும் வந்து செய்தார்.

இவர் தனக்குள் இன்பத்தையும் சுகபோகத்தையும் குடிப்பதையும் தன் தாய் தந்தையையும் மீறியும் செயல்பட்டவர். மேலை நாட்டினர் நாகரீகத்தையும் மேலை நாட்டார் செய்யும் செயல்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டவர்.

ஏனென்றால் செல்வத்தின் செழிப்பில் ஜமீன்தார் என்ற முறையில் அவர் வளர்ந்து வந்ததனால் பல சுக போகங்களையும் அனுபவித்து வந்தவர் அவர்.

ஆனால் இவருக்கு எப்படி இந்த ஞானம் கிடைத்தது…?

ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலுக்காகச் செல்லும் பொழுது அவர் தன் கண் முன் பல தவறுகள் நடப்பதைக் கண்டுணர்ந்தார். அங்கே நீக்ரோக்கள் வேதனைப்படும் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உணர்கின்றார்.

மதத்தை அடிப்படையாகப் படிப்பதும் மற்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற சட்டத்தைப் படித்த அவர் தீமையில் இருந்து இந்த மக்களை எப்படி விடுவிக்க வேண்டும் என்ற நிலையைத் தனக்குள் நாளுக்கு நாள் வலு பெறச் செய்கின்றார்.

காந்திஜி தனது வாழ்க்கையில் தவறுகள் பல செய்து இருப்பினும் அந்த தவறுகளில் இருந்து தான் எவ்வாறு மீள வேண்டும் என்ற உணர்வுகள் படிப்படியாக அவருக்குள் மேலோங்குகின்றது.

பிரிட்டனிடம் இருந்து ஒரு மதத்தின் அடிப்படையில் சிக்கி அவனுக்குக் கீழ்
1.தர்மத்தை அழித்துக் கொண்டு இருக்கும் அதிலிருந்து நீதி வேண்டும்.
2.உலக மக்கள் மற்றோர் அடிமையில் இருந்து மீள வேண்டும்.
3.அருள் ஞானிகள் காட்டிய அருள் செயல்கள் தனக்குள் வளர வேண்டும் என்ற பேருண்மையை தனக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றார் காந்திஜி.

அதே சமயத்தில் தான் படித்த படிப்பின் நிலைகள் கொண்டு உலக நிலைகளை அறிவதற்கு தன் எண்ணங்களைப் பரவவிட்டு உலக நூல்களை அனைத்தும் படிக்கின்றார்… படிக்கின்றார்…!

படிப்பின் நிலைகள் கொண்டு
1.நாட்டில் நடக்கும் அரசியல் வாழ்க்கையும்
2.மதங்கள் சேர்ந்து மத வாழ்க்கையும் மக்களை எப்படித் திசை திருப்புகின்றது..?
மக்களுடைய மன நிலைகள் எப்படி மாறுகின்றது…?

மதத்திற்கு மதம் போர் செய்வதும் மதத்திற்குள் இனங்கள் ஒன்றொன்று போர் செய்தும் உண்மையில் மகான்கள் கொடுத்த ஞானிகள் கொடுத்த மனித வாழ்க்கைக்கு உண்டான நிலைகள் சிதறுண்டு உண்மையைப் பெற முடியாது எவ்வாறு போகின்றது இந்த நாடு என்ற நிலையைத் தெளிவாகக் கற்றுணர்கின்றார் மகாத்மாஜி.

வான்மீகி இயற்றிய இராமாயணத்தைக் காந்திஜி தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் அந்த வான்மீகி மகரிஷியைத் தான் தன் எண்ணத்தில் எடுத்துக் கொண்டார்.

அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் பெற்று விட்டால் நம்மை அறியாமல் இயக்கும் தீமை உணர்வுகளை அடக்கி தீமை செய்வோர் உணர்வுகளிலிருந்தும் நாம் விடுபட முடியும் என்று அதை முழுமையாக உணர்கின்றார்.

சுதந்திரம் என்றால்… “நம்மை ஒருவர் ஆட்சி புரியக்கூடாது…” அதற்காக காந்திஜி
1.ஆங்கிலேயர்களை… “அந்நியர்கள்…” என்று சொல்லவும் இல்லை.
2.கொடூர உணர்வு கொண்டு நம்மை ஆட்சி புரிவதை விடுத்து விட்டு
3.”சகோதரத்துவத்தைத் தான்…” நாம் வளர்க்க வேண்டும்
4.அதைத் தான் நமக்குள் ஆட்சி புரியச் செய்ய வேண்டும் என்று தான் காந்திஜி சொன்னார்.

”மகிழ்ச்சி…” என்ற உணர்வுகளை என்றுமே நமக்குள் சுதந்திரமாக இயங்கச் செய்வதே (கல்யாணராமா…!). வான்மீகி மாமகரிஷி காட்டிய இராமாயணக் காவியத்தின் மூலக் கரு அது தான்.

அந்த உணர்வை அவர் வைராக்கியமாகக் கடைப்பிடித்ததால்… அவருடைய எண்ண வலுவால்… நம் நாட்டுக்குச் சுதந்திரத்தையும் பெற்றுத் தர முடிந்தது. உலக மக்கள் மனதிலும் அவர் இடம் பிடித்தார்.

எண்ணவில்லை என்றால் “பதிவில்லை…” மீண்டும் நினைக்கவில்லை என்றால் “ஈர்ப்பு இல்லை”

 

ஒருவர் திட்டி விட்டார்… என்னை இப்படித் திட்டுகின்றான்…! என்ற எண்ணத்தைப் பதிவு செய்து விட்டால் மீண்டும் என்ன செய்கின்றோம்…?

திட்டினான்… திட்டினான்… திட்டினான்… என்று அவனுடைய உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி அவன் மீது வெறுப்பாகி இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் இதற்கும் வெறுக்கும் தன்மை வந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது… பல விதமான நோய்கள் உடலிலே உருவாகின்றது.

இதையெல்லாம் இயற்கை எவ்வாறு விளைகிறது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கே உணர்த்துகின்றேன். பொறுமையாகக் கேளுங்கள்.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் இன்று அஞ்ஞான வாழ்க்கை வாழுகின்றோம். அண்டத்தையும் அளந்தறியும் சக்தியாகக் கம்ப்யூட்டர் என்று சாதனம் மூலமாகக் காணுகின்றார்கள். உடலின் இயக்கத்தையும் அறிகின்றான்.

எங்கோ காணா இடத்தில் இருப்பதையும் (கோள்கள்) இங்கிருந்து நுகருகின்றான். எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று நிலைகளில் இங்கே பதிவாக்கிப் பல ஆயிரம் மடங்கு பெருக்கி உந்து விசையால் விண்ணிலே ஏவுகின்றான்.

கோள் எங்கே இருக்கின்றதோ அதை இங்கே பதிவாக்கி அதை வைத்து இராக்கெட் என்ற சாதனத்தை விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
1.தன் இனமான உணர்வு கண்டபின் அந்தக் கோளுக்கே இவன் செலுத்திய இராக்கெட்டை அழைத்துச் செல்கின்றது…
2.அங்கிருப்பதையும் அறியும்படி செய்கிறது.

இவ்வாறு இருக்கும் இன்றைய விஞ்ஞானக் காலத்திலே பக்தி மார்க்கங்களில்… யாரோ செய்வார் சாமியார் செய்வார் எந்திரம் செய்யும் மந்திரம் செய்யும் ஜாதகம் செய்யும் யாகம் செய்யும் வேள்விகள் செய்யும் என்ற நிலைகளில் தான் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.

நமக்குள் தீமை என்ற நிலை இருப்பினும் அதை நீக்கிட
1.அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அதை நமது உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகிறது
2.அவ்வழியில் அதைத் திரும்ப எண்ணும் பொழுது நமக்குள் அந்த நன்மை செய்விக்கும் நம் உடலை நலம் பெறச் செய்யும் சக்தியாக வளரும்
3.நம் சொல்லைக் கேட்போருக்கும் நலம் பெறும் சக்தியாக மாறும் என்பதனைத் தெளிவாகக் கூறி இருப்பினும்
4.அதை நாம் யாரும் இதுவரையிலும் பின்பற்றவில்லை.

சாமியார் வந்துவிட்டால் சாமியாரிடம் தான் பெரிய சக்தி இருக்கிறது என்று அவரிடம் ஆசி வாங்கச் சென்று விடுகின்றோம். ஆனால்
1.சாமி சொன்ன இந்த உணர்வின் சக்தியைப் பதிவு செய்து அதை மீண்டும் நினைவு கொண்டால் அந்த உயர்ந்த குணத்தை நாம் பெற முடியும்.
2.தனக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.
3.நம் சொல் பிறரைப் புனிதமாக்க உதவும் புனிதமாக்கும் உணர்வுகள் நமக்குள் விளையும் என்ற இந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அடிக்கடி நாம் ஒருவரைக் குறை கூறிக் கொண்டே இருந்தால் அடுத்து நாமும்… குறையான செயல்களைச் செயல்படுத்தும் அதுவாக மாறி விடுகின்றோம்.

அடிக்கடி ஒருவரை வேதனைப்படும்படி செய்தோம் என்றால் வேதனைப்படச் செய்யும் உணர்வுகள் நமக்குள் விளைந்து “ஐயோ எனக்கு மேல் வலிக்கின்றது… தலை வலிக்கிறது…” என்று வரும்.

இவர் நினைப்பார்…! நான் எல்லோருக்கும் நல்லதைத் தான் சொன்னேன். அவர் தவறு செய்வதைத் தானே நான் சொன்னேன் என்று…! ஆனால் தன்னை நியாயப்படுத்தி வேதனைப்படும்படி புண்படுத்தும்படி சொல்லைச் சொல்வார்.

இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்த பின்… கை வலிக்கின்றதே கால் வலிக்கின்றதே மேல் வலிக்கின்றது…! நான் எல்லோருக்கும் நல்லது தானே செய்தேன் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றானே…! என்று பெரும் பகுதி பிறரைக் குறை கூறிப் பேசும் நிலைகளே நடக்கின்றது.

ஆனால் இவர்கள்
1.தெய்வத்திற்குப் பூமாலை சூட்டுவதும் அபிஷேகங்கள் செய்வதும் ஆராதனைகள் செய்வதும் இப்படிச் செய்தாலும்
2.பிறரிடம் சொல்லும் போதெல்லாம் தன்னைத்தான் எண்ணாது தவறுகளைச் செய்து கொண்டே அதை நுகர்வதும்
3.அப்படி நுகர்வதை உயிர் அந்த அணுவாக மாற்றி இவர் உடலாக மாற்றி அந்த உணர்வின் சக்தியாகத் தனக்குள் இயக்கும் என்பதை மறந்து விட்டார்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் இயற்கை எப்படி விளைந்தது…? கடவுள் ஒருவனா…? கடவுள் ஒருவன் இல்லை…!

வெப்பம் காந்தம் விஷம் மணம் அந்தச் சத்து இந்த ஐந்தும் சேர்ந்து இயக்கும் நிலைகளில் உருவாக்கும் சக்தி பெற்றது. கடவுள் ஒருவன் என்றால் எப்படி நியாயமாகும்…!

ஓரு செடியானாலும் அது தான். ஐந்து புலனறிவு கொண்டு தான் எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் நிலையில்
1.ஒன்றுக்குள் சென்று உள் நின்று இயக்குவதே கடவுள்.
2.ஒரு உயிரணு இதை நுகர்ந்தால் உருவாக்குவதை ஈசன் என்றும்
3.உருவான பொருளைப் பிரம்மம் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும்
4.உயிரின் இயக்கம் ஈசன் என்றாலும் துடிப்புக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்று சாஸ்திரங்கள் தெளிவாக நமக்கு இப்படி உணர்த்துகின்றன.

நான் (ஞானகுரு) இப்போது பேசுகிறேன் என்றால்…
1.இது எல்லாம் ஆதியில் விளைந்த அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த அவனுள் விளைந்த உணர்வுகள் தான்
2.வெளியிலே பரவி உள்ளது… அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
3.அதை நீங்களும் நுகரலாம்…!

இந்த உலகில் மனிதனாகப் பிறந்தோர் அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப் பதிவு செய்து கொண்ட பின் அது மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது அதைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நல்ல பாம்பு தன் உடலில் உருவான நஞ்சை ஒரு எலி மேல் பாய்ச்சி அதை உணவாக எடுத்துக் கொள்கிறது. எலியின் உணர்வை இயக்குவதும் அந்த நஞ்சு தான்.

எலியின் உடலில் உள்ள நஞ்சின் தன்மை வேறு. அதே போல தவளையின் உணர்வுகள் அதில் உள்ள விஷங்கள் வேறு. நல்ல பாம்பு தவளை மேல் தன் விஷத்தைப் பாயச்சி அதையும் உணவாக உட்கொள்கின்றது.

பாம்பு தனக்குள் உருவாகும் விஷத்தைப் பல உயிரினங்களின் பாய்ச்சிப் பல விதமான விஷங்கள் கொண்ட உடல்களை அந்தப் பாம்பு விழுங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பலதரப்பட்ட உயிரினங்களைப் பாம்பு உணவாக உட்கொள்வதால் பல விஷத்தின் தன்மை அந்தப் பாம்பிற்குள் கலக்கப்பட்டு அது பல விதமான உணர்வின் வர்ணங்களாக இருக்கும்.
1.நாகரத்தினத்தை எடுத்துக் கொண்டால் அதிலே பல வர்ணங்கள் இருக்கும்.
2.ஆனால் வைரத்தின் நிறங்களோ நீலம் கலந்த நிலையில் வரும். அதனுடைய மின்னணு ஒளியின் தன்மை கூடும்.
3.பாம்பு விஷத்தைப் பாயச்சி பல உணர்வுகளை எடுத்ததால் நாகரத்தினத்தில் பல பல நிறங்கள் வரும்.
4.இதுதான் நாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் உண்டான வித்தியாசம்.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பல உயிரினங்களின் விஷங்களைத் தனக்குள் எடுக்கும் பொழுது அந்த விஷங்கள் உறைந்து விடுகிறது. ஆனால் வளர்ச்சி அற்றது. அது முழுமை அடைந்து விட்டால் அதிலே விளைந்த உணர்வுகள் அந்த ஒளியைத் தான் ஊட்டும்.

1.அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியான நிலையில்
2.பல விதமான கோணங்களில் விஷத்தை ஒடுக்கிய உணர்வுகளைப் பெற்றதால்
3.வைரத்தைப் போன்ற அந்த நீலத்தின் தொடர் கொண்டு நீல நிறமாக ஒளிச் சுடராகக் காட்டுகிறது.

உதாரணமாக நெருப்பு எரியும் போது அது நீல நிறமாக இருந்தால் தான் அந்த நெருப்பிற்கே வீரிய சக்தி உண்டு. சிவப்பாகவோ மஞ்சளாகவோ நிறம் இருந்தால் அதற்கு அவ்வளவாக வலு இல்லை.

நீலம் கலந்த ஒளி வரப்போகும் போது சூடு அதிகமாகும். ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை குவிக்கப்பட்டு வீரியத் தன்மை பெறுகிறது.

இதைப் போலத்தான் பல கோடிச் சரீரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக வளர்ச்சியாகி இயற்கையில் விளைந்த விஷத்தை ஒடுக்கி ஒடுக்கித் தன் வலுவான நிலைகள் பெற்றவன்.

தன் உடலில் உள்ள அணுக்களை எல்லாம் அத்தகைய வலுவான ஆற்றல்களைப் பாய்ச்சிக் கொண்டவன். திருமணமான பின் அகஸ்தியன் தான் பெற்ற சக்தி அனைத்தையும் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.

அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உணர்வும் ஒரு உணர்வாகி இரு உயிரும் ஒரு உயிராக ஒன்றென இணைத்துக் கொண்டவர்கள்,

இருந்தாலும் ஒரு மனிதன் தனித்த நிலைகள் கொண்டு எல்லாவற்றையும் வெல்வேன் என்ற உணர்வைக் கொண்டு வளர்ந்து வந்தாலும் பாம்புக்குள் வீரிய சக்தி எப்படி நாகரத்தினமாக மாறுகின்றதோ இதைப்போல தனித் தன்மை கொண்டு வளர்ச்சி பெறும் ஜீவனற்ற கல்லாகத் தான் இருக்கும்.

அதாவது கடும் தவம் என்ற நிலைகள் கொண்டு முனி என்ற நிலையில் எதையும் தாக்கிடும் உணர்வாகத் தான் வரும்.
1.அப்படிப்பட்ட உணர்வைத் தான் பெற முடியுமே தவிர
2.இரண்டறக் கலந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் சக்தி பெறச் செய்யாது.

ஆகவே ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் பேரருள் பேரொளியைக் கவர்ந்து “கணவன் தன் மனைவி பெற வேண்டும்… என்றும் மனைவி தன் கணவன் பெற வேண்டும் என்றும்…!” இரு உணர்வும் ஒன்று சேர்த்து விட்டால்
1.துடிப்பு கொண்ட ஜீவனுள்ள உணர்வின் தன்மையாகப் பேரொளியாக வருகிறது.
2.திடப் பொருளாக மாறாது. பேரருளின் சேமிப்பாக ஒளி அலைகளாகப் பேரொளியாக மாறும்.
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் இளம் நீல நிறமாக இருக்கும்.
4.தியானம் செய்பவர்கள் அதைக் கண்களால் நிச்சயம் காண முடியும்.

எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்

 

எம்முடைய அருள் உரைகளைக் கேட்கும் அனைவரும் நீங்கள் இதை ஆழமாகப் பதிவு செய்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி அந்த மெய்ஞானியின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து
1.என்றும் அழியா பெருவீடு பெருநிலை என்று ஒளிச்சரீரம் பெற்று
2.நீங்கள் இந்த வாழ்க்கையிலே இருள் சூழ்ந்த நஞ்சினை நீக்கி ஒளி பெறும் உணர்வின் தன்மை உங்கள் உடலிலே வளர்த்து
3.அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நூல் வடிவிலே உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.

உபதேச வாயிலாகக் கொடுத்ததை எழுத்து வடிவில் கொண்டு வரும் பொழுது சொல் வடிவிற்கும் எழுத்து வடிவிற்கும் சில குறைபாடுகள் இருப்பதினால் யாமே இதை எழுத முடியாததால் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவரை வைத்து இதை எழுதுவதினால்
1.சிறிது மாற்றங்கள் குறைகள் இருந்தாலும்
2.அதை மீண்டும் நீங்கள் தியானிக்கும் பொழுது இதனின் உணர்வுகளை நீங்கள் நிறைவு பெறும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.

ஆகவே அந்தக் குறைகளை எண்ணாது மீண்டும் மீண்டும் இதைப் படிக்கும் பொழுது இடைவெளியில் விடப்பட்ட சிறு குறைகளையும் அதை நீக்கக்கூடிய சக்தியாக உங்கள் உணர்வுக்குள் தோன்றி அதில் நிறைவு செய்யும் நிலையை நீங்கள் அடைகின்றீர்கள்.

1.நீங்கள் படிக்கும் பொழுது எத்தகைய குறை வந்தாலும் மீண்டும் இதைத் திரும்பத் திரும்பப் படிப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் மகரிஷியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
3.எழுத்து வடிவில் வரும் குறைபாடுகளை நீக்கிவிட்டு மூலப்பொருளை நீங்கள் அறிந்துணர்ந்து
4.உண்மையை உங்களுக்குள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

இந்த உணர்வோடு நீங்கள் படித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் அந்த மகரிஷியின் அருள் சக்தியை சேர்த்துப் பாருங்கள்.

1.எழுத்து வடிவில் மாற்றங்கள் இருந்து உண்மைகள் மறைந்து இருந்தாலும்
2.அந்த உண்மைகளைத் தெளிந்திடும் சக்தியாக உங்களுக்குள் உணர்வதை நீங்கள் பார்க்கலாம்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்று இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருந்த தீமைகளை அகற்றி இந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து என்றும் அழியா ஒளிச்சரீரமாக அதைப் பெறும் நிலையாக உங்களுக்குள் ஊட்டப்படுவது தான் இந்தத் தியானத்தின் அறவழிகள்.

ஆகவே இதைத் தெளிவாகத் தெரிந்து இதைக் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று அந்த உணர்வின் சக்தி ஒளியாக மாற்றும் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் சென்று என்றுமே அந்த மகரிஷிகளின்ன் நினைவுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.

தபோவனத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட
1.அனைத்துப் புத்தகங்களையும் அனைத்து ஒலி நாடாக்களையும் அதில் வெளிப்பட்டுள்ள உபதேசங்களை நீங்கள் படித்து கேட்டு…
2.மேற்கூறியவாறு சக்தி பெற வேண்டும் என்று உங்களைச் சதா பிரார்த்திக்கின்றோம்.

கூட்டுத் தியானம் இருப்போம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். ஆத்ம சக்தி செய்வோம்… அன்றாட வாழ்க்கையில் வரும் நஞ்சினை வெல்வோம். மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுவோம்.

பொன்னான இந்த மனிதச் சரீரத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் வாழ்ந்து வளர்வோம்
1.நாம் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று சதா பிரார்த்திப்போம்.
2.நாம் பார்க்கும் எல்லோரும் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
3.தபோவன தியான மண்டபத்தில் நீங்கள் அமர்ந்து தியானித்தால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆகாதவர்களைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வரும். போகிறான் பார்…! இவன் தான் என்னை ஏமாற்றினான்…! என்ற உணர்ச்சிகள் நம்மை அறியாமலே இயக்கும்.
1.ஏதாவது நல்ல காரியங்கள் செய்து கொண்டிருந்தாலும்
2.அவரைப் பார்த்ததுமே இத்தகைய உணர்வுகள் வரும்.

இது எதனால் வருகிறது…?

சில பேர் என்ன செய்வார்கள்…? அவர்களுடைய உணர்விற்குத் தகுந்த மாதிரி ஒரு கம்பீர நடையாக இருக்கும். கம்பீரமாக மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு அவர்கள் நடந்து போவார்கள்.

ஆனால் நம்முடைய உணர்வு சோர்வடைந்திருக்கும் பொழுது அவரைப் பார்த்தோம் என்றால் என்ன சொல்வோம்…? நடையைப் பார்…! என்னத்தைக் கண்டான்… என்று தெரியவில்லை…! என்போம்.

அவருடைய கம்பீரமான நடையைப் பார்த்தவுடனே நம்மை அறியாமலே அந்த வெறுப்பும் வேதனையும் சோகமும் வரும். அதாவது தாங்க முடியாமல் அந்த உணர்ச்சிகள் இயக்கும்.

அதிகமான ஒரு சுமையைத் தூக்கித் தலையில் வைத்தால் தாங்க முடியாமல் இருக்கிறோம் அல்லவா. அதே மாதிரி அவருடைய மகிழ்ச்சி நம் உடலில் நல்ல அணுக்களுக்கு தாங்க முடியாது போய்விடுகிறது.

அப்போது நாம் நுகரும் உணர்வுகள் பொறாமையாக வளர்ந்து விடுகின்றது. ஆனால் பொறாமை உணர்வை வளர்த்து விட்டோம் என்றால் அடுத்து என்ன தான் அங்கே நல்லதைச் சொன்னாலும் நம் வாயிலே வேறு விதமாகத்தான் வார்த்தைகள் வரும்.

யார் யாரை ஏமாற்றினாரோ…? என்னென்ன செய்தாரோ…? அதனால் தான் இப்படிக் கம்பீரமாகப் போகிறான் போல…! என்று அறியாமலே இந்த மாதிரி உணர்வுகளைச் சேர்த்து நம் உடலுக்குள் அணுக்களை வளர்த்து விடுகிறோம்.

ஆகவே நாம் எண்ணும் உணர்வுகள் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் நமக்குள் அந்தத் தாங்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

ஆனால் அந்த மாதிரி உணர்ச்சிகள் நமக்குள் தோன்றுகிறது என்றாலும் அது நாமல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை நம் உடலில் சில சிரமங்களும் பக்குப்பட முடியாத நிலைகளும் அவ்வாறு இயக்கிவிடுகின்றது.

1.அதாவது நம் குழந்தை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.கடன் வாங்கியவன் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றான் என்ற
3.இதைப் போன்ற உணர்வுகள் தொடர்ச்சியாக இயக்கினால் நம்மை அறியாமலே அந்தச் சலிப்பும் சஞ்சலமும் வரும்.
4.அந்த நேரத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்ற உணர்வு பட்டவுடனே
5.நம்மால் அதைத் தாங்க முடியாதபடி எதிர் நிலையாகின்றது.
6.அந்த அணுக்களால் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா..!

ஆகவே இதைப் போன்ற சந்தர்ப்பங்களால் தீமையான நிலை உருவாகிறது என்றால் “ஈஸ்வரா…! என்று தடைப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சேர்க்கப் போகும் போது இங்கே உருவாக்கி விடுகிறது.

1.விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) எப்படி வித்தின் தன்மை
2.அந்தச் செல்களை கொஞ்சம் மாற்றி அமைத்துப் புது வித்துகளை உருவாக்குகின்றார்களோ அது போல்
3.நமக்குள் மற்ற உணர்வுகள் பதிவாகும் போதே
4.அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் இணைத்திடல் வேண்டும்.

கோபமோ ஆத்திரமோ பயமோ வேதனையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

உதாரணமாக இரண்டு பேர் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்று பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துக் கொண்டு அவர்களுக்குள் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வு வர வேண்டும். அரவணைத்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுங்கள்.

இப்படிப் பழகிக் கொண்டால் இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் இங்கே பதிவாகும் (“RECORD”). அது மட்டுமல்ல…!
1.சண்டை போடுகின்றவர்களை எங்கே பார்த்தாலும்
2.அடுத்தாற்போல நமக்குள் அந்தச் சரிபடுத்தும் உணர்வின் தன்மைகளே வரும்.
3.நீங்கள் உங்கள் அனுபவத்தில் இதை எல்லாம் கொண்டு வர வேண்டும்.

அதை விட்டு விட்டு நான் சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன். நன்றாக ஆசிர்வாதமும் கொடுத்தார். நானும் தியானம் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

ஆனால் என் கஷ்டங்கள் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது. இது என்ன தியானம்…! என்று சொல்கிறவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் “கார்த்திகேயா…” என்ற நிலையில் தெளிவாக அறிந்து கொண்ட பின்… தீமைகளை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அந்த அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம். முறைப்படி எண்ணினால் காற்றிலிருக்கும் அந்தச் சக்திகளை எளிதில் நீங்கள் பெற முடியும்.

அந்த அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது புதுவிதமான உணர்ச்சிகளாக நம் உடலிலே இருக்கும். ஆனால்
1.தீமை செய்பவர்களைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள்
2.தொக்கிய நிலைகளாக நம் இரத்த நாளங்களில் கலந்து வந்தாலும்
3.நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அழுத்தம் அதை அடக்கும்.

வலுக்கொண்ட உணர்வுகள் நம் உடலிலே வளர்ச்சி பெறும். ஆக சிந்திக்கும் ஆற்றல் வரும். இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாள் இதைப் பழக்கம் செய்து கொண்டால் அப்புறம் சர்வ சாதாரணமாக வரும்.

நல்லதைக் காப்பதற்காக “அடுத்தவர்களிடம் நாம் வாதம் செய்ய வேண்டியதில்லை”

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து விட்டு
1.நாம் இப்படித் தான் நல்லதாக வர வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பாய்ச்சி
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களை அமைத்திருக்கின்றோம் (ஞானகுரு)
3.ஆகவே தியானத்தை கடைப்பிடிப்போர் அனைவருமே வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாகக் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.

கூட்டுத் தியானத்தில் எடுக்கின்ற சக்தியை வைத்துத் தான் அதிகாலை விழித்ததும் வீட்டிலே நீங்கள் தனித்து எடுத்தாலும் துருவ தியானத்தின் மூலமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாக இருக்கும்.

அதற்கடுத்து உங்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யத் தியானிக்க வேண்டும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டு விடக் கூடாது… அனுதினமும் செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் எப்போது குறையைக் காணுகின்றோமோ உடனே அது நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும். “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் பிறருடைய நிலைகளை நாம குறையாக எடுத்துக் கொண்டோம் என்றாலும் கூட மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் துடைத்துக் கொண்டு
1.“நீங்கள் உண்மையை உணர்வீர்கள்…!” என்று மட்டும் சொன்னாலே போதும்.
2.வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்… அந்தக் குறை நமக்குள் வராது.
3.அவர்கள் மீது அதிகமான வெறுப்பு உணர்வு கொண்டு ஜாஸ்தி பேச வேண்டியதில்லை.
4.சரி… எனக்கு வேண்டாம்… நீங்கள் சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
5.நன்றாக இருப்பீர்கள்…! என்ற சொல்லிவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

நல்லதுக்காக நாம் அவர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
1.அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் “என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்…! என்ற சோர்வும் வேதனையும் நிச்சயம் வரும்.
2.அப்பொழுது அந்த வேதனையை எடுத்தால் சிந்திக்கும் தன்மை குறைகிறது.
3.இத்தகைய உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்கிவிடும்.
4.அவர்களை நினைத்து வெறுப்பையும் வேதனையையும் நம்மை அறியாதபடியே நாம் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த மாதிரி ஆகாதபடி அவர்கள் அறியாத இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் வெறுப்பு வராது.

இது நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் மற்றவர்கள் மரியாதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நாம் வளர்ந்து காட்ட வேண்டும்.

“ஒரு தெய்வீகப் பண்புள்ளவர்கள்…!” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படித் தோற்றுவிக்கும் நிலைகளுக்கு நாம் வளர வேண்டும். சேவை மனப்பான்மை வர வேண்டும்.

பிறருடைய தீமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று அருள் உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
1.நம் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடியதாக வர வேண்டும்.
2.அந்தளவுக்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு மருந்தையோ மற்றதையோ நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுக்கும் உதவியாக இருக்கும். கூடுமான வரையிலும் அவர்கள் நோய் நீங்கும்.

ஆனால் அதற்காக வேண்டி மருந்து குடிக்காமலே நல்லதாக வேண்டும் என்பதில்லை. உடனடி நிவாரணத்திற்கு அந்த மருந்து உதவும்.
1.ஆனால் அந்த மருந்திற்கு வீரியம் ஊட்ட
2.உங்கள் வாக்கு நிச்சயம் பயன்படும்.

ஏனென்றால் ஒரு கடுமையான வேதனைப்படுவோர் உடலில் நல்ல மருந்தினைக் கொடுத்தாலும் அவரின் வேதனை உச்சகட்டம் ஆகி விட்டால் மருந்து கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளாது

அதற்காக வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து விட்டு அந்த உணர்வுடன் மருந்தை அவரை உட்கொள்ளும்படி செய்தால் உடனடியாக அது நல்லாகும்.

என்ன இருந்தாலும்
1.தூசியைத் துடைக்கின்ற மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து எடுத்து
2.உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அதே சமயத்தில் நமது நினைவாற்றல் முழுவதும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே இருக்க வேண்டும்.
4.தீமை செய்யும் எண்ணங்களை முறித்திட வேண்டும். நீக்கிட வேண்டும். அந்த உணர்வுகள் நமக்குள் வளரக் கூடாது.

கல்யாணராமா…! அதாவது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிவிட்டு தம்முடன் இணைந்து வாழும் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்த வேண்டும்.

“ஆயுள் கால மெம்பர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சமையல் செய்யும் பொழுது அதிலே பல பல பொருள்களைப் போடுகிறோம். நெருப்பை வைத்து வேக வைக்கப்படும் பொழுது பார்த்தால் பல விதமான வாசனைகள் வருகிறது.
1.ஏனென்றால் நெருப்பிலே போட்டு இரண்டறக் கலந்து
2.அது வேகப்படும் பொழுது தான் அது ருசியாக மாறுகிறது.
3.இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் இரண்டறக் கலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

எப்படி…?

நம் உயிர் இந்த உடலுக்குக் குருவாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்கோ வியாழன் கோள் குருவாக இருக்கின்றது.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களிலிருந்தும் வெளி வரும் தூசிகள் (கதிரியக்கச் சக்திகள்) ஒன்றுடன் ஒன்று மோதி மின்னல்களாகத் தாக்கப்பட்டு மற்ற கோள்களின் சத்துடன் கலக்கப்பட்டு அந்த உணர்வுகள் வந்தாலும்
1.இவை அனைத்தையும் ஒருக்க ஏற்றி இணைத்திடும் பாலமாக வியாழன் கோள் இருக்கின்றது.
2.ஆக எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வியாழன் கோளின் சத்து கலந்தால் தான்
3.மற்றதுடன் இணைத்து அந்த அணுத் தன்மைகளை மாற்றும் நிலை வரும்.
4.(இல்லை என்றால் வளர்ச்சி இருக்காது)

அதே போல் தான் நம் உயிரின் தன்மையும் குருவாக இயக்குகிறது.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் எதை எல்லாம் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ நுகர்கின்றோமோ அதையெல்லாம் நம் உயிர் இணைத்து நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது. இது தான் நம் உயிரின் இயல்பு.

இயல்பாக இப்படி இருந்தாலும்
1.நம் உயிரின் துணை கொண்டு அதாவது உயிரான குருவின் துணை கொண்டு
2.எந்தெந்த உணர்வின் தன்மைகளைச் சேர்க்கின்றோமோ
3.அதற்குத்தக்கவாறு மற்றதை எல்லாம் நாம் மாற்ற முடியும்.

நமது ஆறாவது அறிவை முருகா என்றும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டினார்கள் ஞானிகள். அதே சமயத்தில் முருகனை “குமரகுரு… குருபரன்…!” என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அதை வைத்து மாற்றியமைக்கும் தன்மை வருகிறது.

ஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய மெய் ஞானிகளின் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி நமக்குள் இணைத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் உணர்வை இப்படி இணைத்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் அகற்றி உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அமைக்க முடியும்…!

இதைக் கொண்டு நாம் இணைத்து நல்ல உணர்வுகளை நாம் வளர்த்தல் வேண்டும். நம் ஞானிகள் காரணப் பெயரை வைத்துக் காட்டியதன் நிலைகள் சாதாரணமானதல்ல.

யாரோ செய்வார்… எவரோ செய்வார்…! என்றால் யாரும் செய்து கொடுக்க முடியாது…! உருவாக்கும் சக்தியான உயிரிடேமே வேண்டினால் தான் நாம் மாற்றி அமைக்க முடியும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

கண்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள்…
1.உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்று அந்தச் சக்தியை முதலிலே நாம் பெறுதல் வேண்டும்.
2.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையை உருவாக்குதல் வேண்டும்.

இந்த உணர்வின் சக்தி கொண்டு குழந்தைகளுக்குள் சில குறைபாடுகள் இருப்பினும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும் என்று குழந்தைகளுக்கு இந்த ஆசியை ஊட்டுங்கள்.

நம்முடைய நினைவுகள் அதுவாக இருக்க வேண்டும்.

கல்வியில் திறன் இல்லை என்றாலும்
1.மகரிஷிகளின் அருள் உணர்வு அவர்கள் பெற வேண்டும்
2.கல்வியில் சிறந்தவனாக வளர வேண்டும்
3.என்றும் அருள் வழியிலே வாழ வேண்டும் என்று எண்ணங்களைக் கூர்மையாக அவன் மேல் பாய்ச்சுங்கள்.

அதைப் போல குழந்தைகளும் எண்ணி ஏங்கி இதைப் பதிவாக்குங்கள்.

அம்மா அப்பா அருளால் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்து இணையுங்கள்.

அப்படி இணைக்கக் கற்றுக் கொண்டால் இந்த உணர்வின் சக்தி நிச்சயம் குழந்தைகளுக்குள் ஞானமாக வளரும்… அந்த உணர்வின் தன்மை விளைகின்றது. குழந்தைகள் மீது இப்படித்தான் பாசம் வைக்க வேண்டும். கல்வியில் சிறந்த ஞானம் வரும்.

இன்று தெரிந்தோ தெரியாமலோ விஞ்ஞான அறிவில் சிக்குண்ட நாம் ரேடியோ டிவி இதைப் போன்ற நிலைகளில் பார்த்து கர்ப்பமுற்று இருக்கும் காலங்களில் பகைமை உணர்வுகளையும் மற்ற தீமைகளின் உணர்வுகளை அதிகமாகப் பார்க்கப்படும் பொழுது இதைப் பதிவாக்கி விட்டால்… பிறக்கும் குழந்தைகள் அதைத்தான் செய்யும்.

ஆனால் கர்ப்ப காலங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று யாம் உபதேசித்த உணர்வுப்படி
1.அகஸ்தியன் பெற்ற சக்திகளை எல்லாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினைச் செலுத்தினால்
2.வியாசகன் எப்படி விண்ணுலக ஆற்றலைக் கண்டானோ இந்த உணர்வுகள் அனைத்தும்
3.கருவிலே வளரும் குழந்தை அதை அறியும் ஆற்றல் பெறும்.

அகஸ்தியன் எவ்வாறு வானஇயலையும் துருவத்தின் ஆற்றலையும் புவியியலையும் அறிந்தானோ கருவிலே வளரும் குழந்தைகள் அதைப் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்குங்கள் துருவ தியான நேரத்தில்.

அதன் உணர்வைத் தனக்குள் செலுத்துங்கள்… தன் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கண்ணின் நினைவை உள்ளுக்குள் செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வலைகள் கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் அது பாயும். நமக்குள் வளர்ச்சி கொண்டிருக்கும் அணுக்களுக்குள்ளும் இந்தச் சக்தி பெருகும்.

கண்ணின் பார்வை எங்கிருந்தாலும் அதைத்தான் “பரமாத்மா” என்று சொல்வது.
1.நாம் இந்த நினைவை… இந்தப் பிரபஞ்சத்திற்குள் எங்கே நினைவைச் செலுத்தினாலும்
2.அதை ஈர்க்கும் சக்தி நம் கண்களுக்கு உண்டு.

அதை ஈர்க்கும் சக்தி கொண்ட மனித உடலுக்குள் உங்களுக்குள் பதிவு செய்யப்படும் பொழுது அதைப் பெற வேண்டும் என்ற நினைவின் ஆற்றலைச் செலுத்துங்கள்.

எனக்கு குருநாதர் அதை கொடுத்ததால் தான்…
1.அந்த வலிமை கொண்டு பெறும் சக்தியும் அதை அறிந்திடும் உணர்வும் வளர்த்திடும் உணர்வும் பெற்றாலும்
2.உங்களுக்குள் நீங்களும் அதை பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் உங்களுக்குள் இதைப் பதிவு செய்கிறேன்.

நீங்கள் அனைவரும் பெற்று உங்களைச் சார்ந்தவர்களையும் அதைப் பெறச் செய்து பகைமைகளையும் தீமைகளையும் அகற்றும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதை நீங்கள் எல்லோரும் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் மின் கதிர்கள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகித் தாக்கும் பொழுது மின்னல்கள் உருவாகின்றது. அத்தகைய மின்னல்கள் கடலிலே தாக்கப்படும் போது அதற்குள் அடங்கி மணல் பாங்காக மாறுகின்றது. அதை விஞ்ஞானி பிரித்து எடுத்து கதிரியக்கப் பொறியாக மாற்றுகின்றான்.

மாற்றிய கதிரியக்கச் சக்தியை வைத்து அணு உலைகளை உருவாக்கி அணு குண்டுகளையும் உருவாக்கி விட்டார்கள். அணுவின் இயக்கத்தைப் பிரித்து அணுவின் ஆற்றலைப் பெருக்கி ஒரு பொருளுடன் மோதச் செய்து வெடிக்கச் செய்து நாட்டையே அழிக்கும் தன்மைக்கு வந்துவிட்டார்கள்.

இயற்கையில் இரு நட்சத்திர உணர்வுகள் மோதும் போது மின் கதிர்களாக எப்படி மாறுகின்றதோ அதே போல விஞ்ஞானிகளால் பிரித்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு கதிரியக்கச் சக்திகளையும் அவன் சோதித்து இது இரண்டையும் மோதச் செய்யும் போது அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது,

பூமியில் உருவான ஒவ்வொரு பொருளுக்குள்ளும் (கல்லானாலும் மணலானாலும் மற்ற எதுவாக இருந்தாலும்) நட்சத்திரத்தின் சக்திகள் பதிந்துள்ளது. செயற்கையில் உருவான நிலைகள் கொண்டு வெடிக்கச் செய்து இரண்டும் மோதும் போது
1.கல்லுக்குள் இருக்கும் உணர்வுகள் அது வீரியம் ஆகி
2.அந்தக் கல்லை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் பஸ்பமாக ஆவியாக மாறி
3.மரங்களுக்குள்ளும் மனித உடலுக்குள்ளும் மற்ற உயிரினங்களுக்குள்ளும் அனைத்திலும் ஊடுருவி
4.அதற்குள் இருக்கும் எதிர் நிலையான நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதி மின்னலைப் போன்று மின்னிப் பொசுக்கிப் பூராவற்றையும் பஸ்பமாக்குகிறது.

ஆகவே இதைப்போல விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அணு விசைகள் அனைத்தும் மக்களையும் நாட்டையும் அழிக்கும் உணர்வுகளுக்கே பயன்பட்டது. நாட்டாசை கொண்டு உலகை அழித்திடும் உணர்வுகளுக்கே அதைப் பயன்படுத்துகின்றார்கள்.

அன்றைய அரசர்கள் மந்திரங்களைச் சொல்லி மாயங்களைச் சொல்லித் “தான் சக்தி பெற்று வாழ வேண்டும்…!” என்று அவர்கள் வித்திட்ட அதே உணர்வே இன்றும் இயக்கிக் கொண்டுள்ளது.

அசுர உணர்வு கொண்டு ஒரு மனிதனுக்கு மாமிசங்களைக் கொடுத்து சோம பானம் (மது) என்ற உணர்வுகளைக் கொடுத்து அவனை மதி மயங்கச் செய்து மந்திர ஒலிகளை எழுப்பி அவனுக்குள் அதை வளர்க்கப்பட்டு அவன் இறந்த பின் அந்த உணர்வை மந்திரத்தால் கவர்ந்து கொண்டார்கள் அன்றைய அரசர்கள்.

தனது ஆட்சிக்காக வேண்டி இதைப் போன்ற நிலைகளை ஒரு இயக்கச் சக்தியாக மாற்றி பில்லி சூனியம் ஏவல் என்ற நிலையில் மனித உடலுக்குள் மோதச் செய்து மற்ற எதிரி நாட்டாரைப் பித்தனாகவும் பைத்தியக்காரனாகவும் தன்னை மறந்து செயல்படும் நிலைகளுக்கு அன்று அரசர்கள் செயல்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

அதைப் போலத் தான் இன்று விஞ்ஞானிகளும் விஞ்ஞானக் கருவி கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகள் கொண்டு வந்து மனிதனைப் புத்தி பேதமாக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஆக மொத்தம் நியூட்ரானும்… எலக்ட்ரிக் – எலெக்ட்ரான்… அதே சமயத்தில் கதிர் இயக்கப் பொறியான அந்தக் கதிர் வீச்சின் உணர்வுகள்…! இந்த மூன்றையும் தனித்தனியாக எடுத்தாலும் அதிலே “நியூட்ரான்…” என்ற அழுத்தம் கடும் விஷத் தன்மை கொண்டது.

விஷத் தன்மை கொண்ட நிலையில் சுழல் போல உருவாகி அந்த உணர்வின் தன்மை ஒன்றோடு ஒன்று மோதி
1.கட்டிடங்களிலேயோ மரங்களிலேயோ மற்றதுகளிலேயோ மோதும் போது
2.அது பூராவற்றையும் தூசி தூசியாகக் கரைத்துத் தூக்கி எறிந்து கொண்டு போகும்.

வலுக் கொண்ட கட்டிடங்களாக இருந்தாலும் அதற்குள் ஊடுருவி இந்தக் கதிர் இயக்கங்களின் விஷத் தன்மையால் அதனுடைய சக்தியை இழக்கச் செய்து காற்றலைகளாகப் பறக்கின்றது.

1.அதே சக்தி கடல் நீர்களிலே படரப்படும் போது கொதிகலனாக மாற்றி
2.மிகப் பெரிய மேகக் கூட்டங்களைக் கூட்டிச் சூறாவளியாக மாறி
3.நீரை எல்லாம் தனக்குள் அள்ளி வீசி மழை நீர் கொட்டு கொட்டென்று கொட்டி
4.நகரங்களையே சுத்தமாக அழித்திடும் உணர்வுகள் விஞ்ஞான அறிவால் இன்றைக்குப் பெரும் பகுதியான நிலைகள் வருகின்றது.

இன்று (இப்பொழுதும்) மிகப் பெரிய புயல் என்று சொல்கிறார்கள் அல்லவா… (CYCLONE, TYPHOON, HURRICANE). இது எல்லாமே ஏற்கனவே பரீட்சாந்திரமாகச் சோதித்த நிலைகளும் அணு உலைகள் மூலமாகக் கசிந்த கதிரியக்கச் சக்திகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டுப் பரவியதே காரணம்.

1.பரவி இருக்கிறது என்றால் பூமிக்கு வெளியில் மட்டுமல்ல.
2.பூமியின் நடு மையத்திலும் கலந்து விட்டது.
3ஆகவே எப்பொழுதெல்லாம் அது எதிர்மறையாகின்றதோ அப்பொழுதெல்லாம் எதிர்பாராத நிலைகளாக இது நடக்கும்.
4.எங்கெங்கு அதிகமாக அந்தக் கதிரியக்கங்கள் கசிந்ததோ அங்கே இதனின் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்
5,இவர்கள் வைத்திருக்கும் கருவிகளால் அதை முழுமையாகக் கணிக்க முடியாது. அப்படியே கணித்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஆகவே இதைப் போன்ற சூறாவளி என்று வரப்படும் பொழுது அதன் உணர்வுகள் நாம் மாற்றி அமைக்கும் சக்தியாக வளர வேண்டும். விஞ்ஞானத்தால் விளைந்து கொண்டிருக்கும் இத்தகைய இருள் சூழ்ந்த நிலைகளை முறியடிக்கும் சக்தியாக நாம் வளர வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன்… தன் உணர்வின் தன்மை ஒளியாக்கி உலகில் உள்ள நஞ்சினை வென்று ஒளியின் உணர்வைப் பெற்றவர். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவரும் பெற்று நாம் இடும் மூச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு நம் பூமியில் பரவும் நிலைகள் கொண்டு மக்களை நல்வழிபடுத்தும் உணர்வாக அது அமைந்து அதன் மூலம் நாமும் வாழ்ந்து நமது எதிர் கால சந்ததிகளையும் அருள் வழியில் வாழச் செய்வோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வைக் கூட்டி இருளை அகற்றி உணர்வை ஒளியாக்கி தெளிந்த மனம் கொண்டு வாழ்ந்திடும் நிலை பெறுவோம்.

1.விஞ்ஞான அறிவில் வரும் உணர்வுகளை நமக்குள் வராது
2.ஒரு சுழல் காற்றாக நாம் இடும் மூச்சலைகள் ஒவ்வொன்றும் அது செயல்படும்…!
3.உங்களை நீங்கள் நம்புங்கள்.
4.நம்மைக் காப்போம்… நம் வீட்டைக் காப்போம்.. நம் ஊரைக் காப்போம்… உலகை காப்போம்…! என்ற உணர்வு கொண்டு நாம் செயல்படுவோம்.

“அன்னை தந்தையரின் அரவணைப்புடன் விண் சென்றவர்கள்” எண்ணிலடங்காதோர் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு

 

அகஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது பெற்ற ஆற்றல்களை எல்லாம்… அவனைச் சுற்றி இருந்த வட்டாரங்கள் அனைத்தும் இந்த அதிசயங்களைப் பார்க்கின்றது… பார்த்து ஆச்சரியப்படுகின்றார்கள்.
1.இவன் நுகர்ந்த உணர்வுகள் வெளிவரும் பொழுது “உற்றுப் பார்த்தபின்”
2.இந்த உணர்வின் தன்மை அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் இதைத் தெரிந்திடும் அறிவாக வருகின்றது.

இவனுக்குள் விளைந்த அலைகளைக் கூர்மையாக அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது இவன் காணும் அதிசயங்களை மற்றவர்களுக்கும் அறியும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகிறது. அவைகள் இன்றும் உண்டு.

அகஸ்தியன் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் பெரும்பகுதி நான் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது… 10 வருட காலம் காடு ,மேடெல்லாம் அலைந்தது.
1.அகஸ்தியர் எந்தப் பகுதிகளுக்கு எல்லாம் சென்றாரோ அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் என்னை அலையச் சொன்னார் குருநாதர்.
2.குருநாதர் பதித்த உணர்வினை ஆங்காங்கு சென்று அதைப் பதிவாக்கிய பின் எது உண்மை எது பொய் என்பதை அறியும் பருவத்தைக் கொடுத்தார்..
3.இன்றும் எல்லோரும் அதை நுகர முடியும்.
4.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் நிச்சயம் அதை நுகர முடியும்.
5.நுகர்வதற்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றேன்.

வானை நோக்கி அகத்தியன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவனுக்குள் சிறுகச் சிறுக அந்த ஆற்றல்கள் வளர்கின்றது.

மிருக இனங்களோ விஷ ஜந்துகளோ பூச்சிகளோ எல்லாமே இவனைக் கண்டு விலகி ஓடுகின்றது. கொசுக்களும் எரி பூச்சிகளும் ஓடுகின்றது… இவன் மேல் பட்டால் மடிந்து விடுகின்றது. குரு அருளால் இதையெல்லாம் என்னால் காண முடிந்தது… அறிந்து கொள்ள முடிந்தது.

நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்டால் ஓம் நமச்சிவாய…!
1.திருப்பி இந்த உணர்வின் தன்மையை அதிகமாக நீங்கள் வளர்த்துக் கொண்டால் இந்த உண்மையின் உணர்வுகளை நீங்களும் அறியலாம்.
2.பிறருடைய தீமைகளைப் போக்கவும் உங்களால் முடியும்.

சாமி மட்டும் கெட்டிக்காரர் அல்ல. குரு கொடுத்தார்… அதை வளர்த்துக் கொண்டேன். குரு காட்டிய வழியில் உங்களுக்குள்ளும் இதை வளர்க்கச் சொல்கின்றோம்.

வளர்த்துக் கொண்டால் நீங்களும் அதைச் செயல்படுத்த முடியும் பிறருடைய தீமைகள் விடுபட வேண்டும் என்று நீங்கள் உங்களுக்குள் அந்தச் சக்திகளை வளர்த்தால் உங்களுக்குள் தீமையை நீக்கும் சக்தி வளர்கின்றது.

அகஸ்தியரும் அவர் மனைவியும் அவர்கள் இரு உணர்வும் ஒன்றாக இணைந்து… எந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்றுப் பார்த்து நுகந்தார்களோ… அந்த உணர்வின் வலிமை கொண்டு உடலை விட்டுச் சென்ற பின் அதே எல்லையை அடைகின்றார்கள்.. பூமிக்கு வரும் உணர்வினை ஒளிக்கதிராக மாற்றுகின்றார்கள். “இது ஓர் குடும்பம்…”

அகஸ்தியன் தாய் தந்தையர் அவன் உடலிலே இருந்தார்கள். அந்தச் சக்தி கொண்டு அதே ஒளியின் சரீரமாக இருக்கின்றார்.
1.இதைப் போன்று சென்றவர்கள் இவருடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றவர்கள் இணைந்து
2.அன்னை தந்தையின் அரவணைப்பில் இருக்கும் இவனைப் போன்று சப்தரிஷி மண்டலங்களில் இருப்போர் பலரும் உண்டு.

அன்னை தந்தையை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்… உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னவர்கள்… அவர்கள் தனித்துச் சென்றாலும் அந்தக் கூட்டமைப்பில் அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள் அழியா ஒளிச்சரீரமாக.

சப்தரிஷி மண்டலங்களிலே பார்க்கலாம் எண்ணிலடங்காத நிலைகள்…!
1.நம் கண்ணுக்கு புலப்படாதது ஏராளம் உண்டு… டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்தாலும் ஒரு சில தான் தெரியும்.
2.அதைக் காட்டிலும் நுண்ணிய நிலைகள் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் சென்றவர்களும் அதன்பின் சென்றவர்களும் பலர் உண்டு.
3.அந்த எல்லையை அடைவதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக தண்ணீரின் மீது சூரிய வெயில் அடிக்கடி பட்டதென்றால் விஷம் (POISON) உண்டாகிறது. விஷத்தின் தன்மை பச்சை பசேலென்று என்ன கொஞ்சம் கொஞ்சமாக உறைகிறது. அந்தத் தொட்டியில் உறைகிறது.

அப்புறம் பார்த்தால் கொடி போல உருவாக ஆரம்பித்து விடுகிறது. கொடி போல உருவான பிறகு மனிதனோ மற்ற உணர்வின் உணர்ச்சிகளோள் அதிலே படும்போது அதற்குள் சேர்ந்து அணுத் தன்மை உண்டாகிறது.

தொட்டியிலே முதலில் தண்ணீர் இருக்கும் பொழுது பார்த்தால் ஒன்றும் இருக்காது. ஆனால் மேலே சொன்ன நிலைகள் ஆன பின் பார்த்தால் தண்ணீருக்குள் கொச… கொச… என்று நெளிந்து கொண்டிருக்கும்.

இது எங்கிருந்து உற்பத்தியாகிறது…? சூரியனின் ஒளிக்கதிர்கள் அதனின் உணர்வின் தன்மை உறையும் போது கொஞ்சம் கொஞ்சமாக உறைகிறது.

சாதாரணமாக சிறு நீரைக் கழிக்கிறோம் என்றால் இந்த உடலில் உணர்வுகள் அது மோதல் ஏற்படும். மோதலால் ஏற்படும் உணர்வுகள் உறையும். கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து சுண்ணாம்புக் கல் போல வரும். சிறுநீர் கழிக்கும் இடங்களில் இதைப் பார்க்கலாம்.

இதே மாதிரி ஒவ்வொரு தன்மையும் நம் இரத்த நாளங்களில் இது கலையும். இதைத் தான் நாம் எடுக்கக்கூடிய உணர்வுகளில் விஷங்கள் வந்தால் நம் கிட்னி (KIDNEY – சிறு நீரகங்கள்) அந்த இரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்கிறது.

1.ஆகாரத்திற்குள் சேர்ந்து வரும் சில விஷங்களையும் வடிகட்டுகிறது.
2.நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கும் நிலைகளையும் இந்தக் கிட்னி வடிகட்டுகிறது.
3.அதாவது நாம் சுவாசிக்கும் போது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் இரத்தத்தில் தான் மீண்டும் கலக்கிறது. அதை வடிகட்டி அனுப்புகிறது.

வடிகட்டி அனுப்பும் போது வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் என்ன செய்கிறது…? இதனுடைய உணர்ச்சிகள் தாங்காது வடிகட்டும் தன்மையை இழந்து விடுகிறது.

அதீதமான வேதனை உணர்வுகளை கிட்னி வடிகட்டும் போது விஷங்கள் அதிகமாகத் தாக்கித் தாக்கிக் கிட்னி பலவீனமடைகிறது. அது பலவீனம் அடைந்து விட்டால் விஷத் தன்மைகள் நம் இரத்த நாளங்களில் அதிகமாகப் பரவுகிறது.

ஒரு சல்லடையில் ஓட்டை அதிகமானால் தொப்… தொப்…! என்று விழுவது போல் இயக்கச் சக்தியின் தன்மை… பிழியும் தன்மை முடியாத நிலை வரும் போது கெட்ட அணுக்கள் இரத்தத்தின் வழி கூடி எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.

அதனால் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு வேண்டிய நல்ல உணர்வுகள் கிடைப்பதில்லை. அசுத்த இரத்தம் பரவும் பொழுது இதயத்தில் உள்ள வால்வுகளில் பம்ப் (PUMP) பண்ணிப் போகும்போது அந்தக் கழிவுகள் இதயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உறையத் தொடங்குகிறது.

ஒன்றுக்கு ஒன்று வடிகட்டிச் செல்லப்படும் போது உறைந்து விட்டது என்றால் நம்ம இதயத்தில் தொந்தரவுகள் அதிகமாகிறது. அப்போது அழுத்தம் அதிகமாகப் போகும் போது இரத்தத்தை இழுக்கும் சக்தி குறைகிறது.

காற்று அடிக்கும் பம்பில் ஒரு ஓட்டை இருந்தால் சரியாகக் காற்றை இழுத்துத் தள்ள முடியாது. அதைப் போல்
1.இருதய வால்வுகளில் ரொம்பப் பலவீனப்படுத்தும்.
2.அடிக்கடி மூச்சுத் திணறல் வரும்.

வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நாம் அறியாமல் நுகரும் வேதனைகளையோ கோபத்தையோ ஆத்திரத்தையோ பயமான உணர்வுகளையோ வடிகட்டத் தவறும் பொழுது அதனால் ஒவ்வொரு நிமிடத்திலேயும் வேதனை உணர்வுகள் வரப்படும் போது இப்படி நம் கிட்னி செயலிழக்கும் தன்மை வந்து விடுகிறது.

கிட்னி செயலிழந்தால் மற்ற உறுப்புகளும் சீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. உங்களுக்கு வைத்திய ரீதியில் இதை எல்லாம் சொல்கிறேன். நான் (ஞானகுரு) வைத்தியம் படிக்கவில்லை. இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.

அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி தீமைகளை நுகர்ந்திருந்தாலும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்த முடியும். அடுத்து…
1.விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் நம் கிட்னி முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
2.கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும என்ற வீரிய சக்தியை உண்டாக்க வேண்டும்.
3.கிட்னி இதயம் தொந்திரவு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது இப்படி இதை எண்ணி எடுக்க வேண்டும்.

அப்பொழுது அகஸ்தியன் எப்படி விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ அத்தகைய வலுவான நிலைகள் நம்முடைய கிட்னி பெறும். நல்ல இரத்தங்களாக உருவாக்கிடும் ஆற்றல் பெறும். உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் சீராக இயங்கத் தொடங்கும்.

சலிப்போ சோர்வோ சஞ்சலமோ வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் போது
3.தீமைகளை வடிகட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.

இதைப் பழகிக் கொண்டால் இந்த வாழ்க்கையில் நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்த தீமையின் உணர்வு நம்மை இயக்காது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கடவுள் தனித்து ஒருவன் இல்லை

 

அடிக்கடி ஞாபகப்படுத்துவது எதை ஆரம்பித்தாலும் “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்று நாம் செயல்படுத்துகின்றோம். காரணம் நமது உயிர் “ஓ…” என்று இயங்கிக் கொண்டே உள்ளது.

இதைத்தான் ஓ என்று ஞானிகளால் காரணப்பெயர் சூட்டப்பட்டது. நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகின்றது. ம் என்று நம் உடலாக மாற்றுகின்றது அதனால் தான் ஓம் ஈஸ்வரா குருதேவா.

1.நான் எண்ணியதை உருவாக்குகின்றாய்.
2.என் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் குணங்களுக்கும் நீயே குருவாக இருக்கின்றாய் என்ற பொருள்படும்படித் தான்
3.இதை நாம் அடிக்கடி பயன்படுத்துவது.

ஈசன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… ஆண்டவன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… கர்த்தர் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்…!

ஆகவே நமக்குள் இந்த உயிர் நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதை ஆட்சி புரிகின்றது… அதை இயக்குகின்றது… என்ற பொருள் படும்படித் தான் உணர்த்தியுள்ளார்கள்.

ஆண்டவன் என்று சொல்லும் பொழுது உடலுக்குள் இருக்கும் அனைத்தையும் ஆண்டு கொண்டிருப்பதும் உயிர்தான். ஆகவே
1.அவனன்றி அணுவும் அசையாது என்பது போன்று
2.நம் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் இந்த உடலில் உள்ள ஒரு அணுவும் அசையாது.
3.அதனால் தான் அவன் இன்றி அணுவும் அசையாது என்று சொல்கின்றோம்.

கடவுள் இல்லை என்றால் எதுவும் அசையாது என்பார்கள்.

நமக்குள் அந்த உயிர் கடவுளாக நின்று இயங்குகின்றது.
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அது எத்தகையதாக எண்ணுகின்றோமோ அவை அனைத்தும் நம் உடலாக இறையாகி…
2.இறையின் உணர்வுகள் நமக்குள் அணுவாகி அணுவின் சக்தியாக நமக்குள் இயங்கப்படும் பொழுது… நம்முள் நின்று இயக்கம் கடவுளாகின்றது.

ஆகவே கடவுள் என்று ஒருவர் தனித்து யாரும் இல்லை.

நமக்குள் பல விதமான குணங்களும் பல விதமான உணர்வுகளும் நம்மை இயக்கிக் கொண்டே தான் உள்ளது… நாம் இயங்கிக் கொண்டுதான் உள்ளோம்.

நாம் கோபமாகப் பேசுகிறோம் என்றால் அந்தக் கோபத்தின் உணர்வை உயிர் உருவாக்கி… அணுவாக்கி உடலாக்கப்படும் பொழுது நமக்குள் அது எந்தக் குணமோ அந்தக் குணத்தின் செயலாக இயக்கப்படும் பொழுது… அதற்குத் தெய்வம் என்று பெயர் வைக்கிறார்கள்… காரணப்பெயர்.

அதே சமயத்தில் நமக்குள் நின்று அது இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது நாம் நினைக்கின்றோம் அதைப் பதிவாக்கிவிடுகின்றோம்.
1.மறுபடியும் அதை நினைத்தோம் என்றால்
2.அது குருவாக வந்து அந்தத் தெய்வமாக நம்மை இயக்குகிறது என்று பொருள்.

ஆகவே அந்த அணுவின் தன்மை நமக்குள் இங்கே நிலை கொண்டிருந்து அதே உணர்வை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கிறது என்றால் “உருவாக்கிக் கொண்டே இருக்கும்…”

ஒரு வித்தினை மண்ணிலே ஊன்றி விட்டால் அது செடியாகித் தன் இனத்தின் வித்தினை உருவாக்குவது போன்று…
1.நமக்குள் கடவுளாக இருந்து அந்தக் குணத்தின் தன்மையைப் பெருக்கிக் கொண்டே இருக்கும் என்று பொருள்.
2.ஆக… கடவுள் தனித்து ஒருவன் இல்லை… இயக்கத்தை ஞானிகள் இவ்வாறுதான் உணர்த்தி உள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.உணர்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது தான் நாடித் துடிப்பு என்றும்
2.அந்த நாடித் துடிப்பின் வீரிய உணர்வுகளுக்குத் தகுந்த மாதிரித்தான் நம்முடைய செயலாக்கங்கள் என்றும்
3.மருத்துவர்கள் பார்க்கின்றார்கள்
4.(அன்று கருவி எதுவும் இல்லாமல் பார்த்தார்கள்… இன்று கருவிகளை வைத்துப் பார்க்கின்றார்கள்)

ஆகவே “நாடித் துடிப்பு…!” என்றாலும் உடலில் சில நோய்களின் உணர்வுகள் வரப்படும் பொழுது அதில் உறைந்த உணர்வுகளை ஸ்கேன் மூலம் (SCAN) பல விதமான நுட்பங்களை உபயோகித்துப் பார்க்கின்றார்கள்.

ஸ்கேன் மூலம் உடலுக்குள் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் துடிப்புகள் அதிர்வுகளாக ஒலி அலைகள் ஏற்படும். அந்த எக்கோ (ECHO) வருவதைப் பார்த்து
1.நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் அதிகம்…
2.நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் குறைவு…! என்ற நிலைகளுக்குத் தக்க
3.ஒலி அலைகளைப் பெருக்கிக் காட்டுகிறது…!
4.அதன் மூலம் இரத்த நாளங்களில் எது கூட இருக்கிறது… எது குறைபாடாக இருக்கிறது என்ற வகைகளில்
4.அந்தந்த உறுப்புகளைப் பற்றி “இதிலே இன்னது தான்…! என்று கண்டறிகின்றனர்.
5.பின் அந்தக் குறைபாடுகளை அகற்றி நல்லதாக மாற்றுகிறார்கள்.

இயற்கையில் கை நாடி பார்ப்பது போலத் தான் ஒலி அதிர்வுகளை வைத்து
1.உடல் உறுப்புகளில் எங்கெங்கே மோதுகிறது…?
2.எதன் வழிகளில் அது செயலற்றதாக மாறுகிறது…? என்ற நிலைகளில்
3.மருத்துவத் துறையில் இவ்வாறு விஞ்ஞானி காண்கிறான்.

அதே போல குகை (CAVE) போல் ஒரு புற்று இருக்கிறது. அதற்குள் ஒரு பாம்பு புகுகின்றது என்றால் அதற்குள் சிறு கம்பியைத்தான் (PROBE) விடுகிறார்கள்.

புற்றுக்குள்ளிலிருந்து வரும் உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கவர்ந்து… அதை நுகர்ந்து… உள்ளே என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது…? என்று அப்படியே தெரிந்து கொள்கிறார்கள்.

இதே மாதிரி கர்ப்பமுற்ற தாயின் கருவில் வளரும் குழந்தைக்கும் இதே போல ஒலி அதிர்வுகளைக் கூட்டிக் “கருவிலே வளரும் குழந்தை என்ன செய்கிறது..?” என்று பார்க்கிறார்கள்.

விஞ்ஞானம் இவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னேற்றம் அடைந்திருந்தாலும்
1.அவர்களால் உடலில் உள்ள தசைகளிலோ அல்லது உறுப்புகளிலோ இருக்கும் நிலைகளைத்தான் சீர் செய்ய முடிகிறது.
2.எலும்புக்குள் ஊனாக இருப்பதை அவர்களால் காணவும் முடியவில்லை… அதை மாற்றவும் முடியவில்லை.

சிறிது காலத்திற்கு இந்த உடல் வாழ்க்கைக்குத்தான் அதைப் பயன்படுத்த முடியும். உடலுக்குப் பின் உயிராத்மாவைக் காக்கும் எந்த நிலையும் அவர்களால் முடியவில்லை,

ஆனால் அன்றைய மெய் ஞானிகள் என்ன செய்தார்கள்…?
1.தன்னுடைய உணர்வலையால் – வரும் அலைகளை நுகர்ந்து
2.அதனின் ஆற்றலையும் அதற்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளை அறியக்கூடிய தன்மையையும்
3.அவ்வாறு வரும் அந்த உணர்வுகள் தன்னை இயக்காதபடி மாற்றிக் கொள்ளும் தன்மையையும் வளர்த்து
5.விண்ணின் ஆற்றலைப் பெற்று அதை உடலுக்குள் விளைய வைத்து உயிராத்மாவை வலுவாக்கி
5.உயிருடன் ஒன்றிய ஒளியாக… அழியாத ஒளிச் சரீரம் பெற்றார்கள்.

யார்…? அகஸ்தியன்…!

அவன் தாய் கருவில் சிசுவாக இருக்கும் பொழுதே விஷத்தை முறிக்கும் ஆற்றல் பெற்றதால் எத்தகைய விஷத்தையும் வென்றிடும் அதனின் உணர்ச்சியின் இயக்கங்கள் அவனுக்குள் விளைந்தது.

அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த நுண்ணிய ஆற்றல்கள் அனைத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக நமக்கு முன் பரப்பி வைத்துள்ளது. அதை ஒவ்வொருவரும் நுகரலாம்.

1.அந்த அகஸ்தியனின் ஆற்றல்களை நுகர்ந்தால் நாமும் அவனைப் போன்று
2.எல்லாவற்றிலும் வல்லவனாக… உயர் ஞானம் பெற்று மெய் ஞானியாக ஆகலாம்…!

துருவத்தின் ஆற்றல்

 

உயிரணு தோன்றி மனிதனிலிருந்து விடுபட்டு ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குப் பழக்கத்தில் பெறும்படி யாம் செய்தது.

இதை நீங்கள் எளிதில் கவர்ந்து நுகர்ந்து உணர்ந்து தீமைகளை நீக்கிடும் ஞானத்தைப் பெற முடியும். அதைத்தான் இப்பொழுது பெறச் செய்தது.

இதை எடுத்துக் கொண்ட பின்
1.அடுத்து எப்பொழுது வேண்டுமென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கண்களை மூடி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கி
5.ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் தியானித்தால் போதும்.

அதை நம் உடலுக்குள் வலுவாக்கி வேதனைப்பட்டோர் உணர்வைக் கேட்டறிய நேர்ந்தாலும் அது நம் உடலுக்குள் வலுப் பெறாதபடி அதை நீக்கி… நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களைப் பாதுகாப்பாக… நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

இல்லையென்றால் அந்த வேதனை என்று அணுக்கள் வளர்ச்சி அடைய கடுமையான நோய்களும் கடுமையான வேதனைகளும் வரும்.

தேடிய செல்வம் எது இருப்பினும் வைத்தியத்திற்குச் செலவழித்து அதை நீங்கள் பாதுகாத்தாலும் உங்கள் உடலில் இருந்த உணர்வுகள் கடைசி நிலை எதுவோ அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறு ஒரு உடலாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களுக்குள் வளர்த்துப் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி நிலை.

ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனைப்படுவதோ அல்லது வேதனைப்படுபவர்களை நுகர்ந்தாலோ உடனே நீங்கள் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்றாலும் சேனாதிபதி ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்கின்றோம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை புருவ மத்தியில் உயிரின் நிலைகள் இணைக்கப்படும் போது
2.கண் வழி கவர்ந்தாலும் கண்ணின் நினைவினை உயிரிலே இணைக்கப்படும் பொழுது
3.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஈர்க்கும் திறன் வரும் பொழுது
4.மூக்கின் வழி செல்லும் தீய உணர்வுகளை அது தடைப்படுத்துகின்றது.

பின் நம்முடைய நினைவாற்றல் நம் உடலில் உள்ள அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது அதுவும் வலுப்பெற்று நம் உட;லுக்கு முன் முகப்பில் உள்ள விஷத்தன்மைகளை தூர ஒதுங்கிச் செல்லத் தள்ளி விடுகின்றது. நமது ஆன்மா தூய்மை அடைகின்றது.

1.அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா ஒரு வட்டம் உண்டு… அந்த ஜீவான்மாக்களும் சுத்தமாகின்றது.
2.இந்த உயிரைப் போல உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக அணுக்கள் வளர்ச்சி வரும் சக்தி பெறுகின்றது.

அப்படி ஒளியாக்கப்படும் பொழுது உயிருடன் இணைந்து… ஒளி என்ற அறிவு எப்படி இருந்ததோ அதன் அறிவின் தன்மை பெற்ற அணுக்களை இப்படிச் சிறுகச் சிறுக மாற்றி… இந்த உடலுக்குப் பின் நாம் நமது உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக மாறுவதே கடைசி நிலை.
1.எந்தத் துருவத்தின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ
2.அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

செடி நன்றாக வளர்வதற்காக நாம் என்ன செய்கிறோம்…? உரத்தைப் போடுகின்றோம். அது ஆவியாகப் போய் செடியில் இணைந்து விடுகிறது.

1.உரத்தின் சத்து செடியில் இரண்டறக் கலந்த பின் தான்
2.அந்தச் செடி தன் இனமான சத்தைக் காற்றிலிருந்து எடுத்து செழித்து வளர்கிறது.
3.ஆகவே அந்தச் செடியைச் செழித்து வளரச் செய்வதற்கு இந்த உரம் உறுதுணையாக இருக்கின்றது.

ஆனால் செடியில் உள்ள சத்துடன் உரம் இணையவில்லை என்றால் காற்றிலிருந்து இழுக்கும் சக்தி இல்லை. செடி செழிப்பாக வளர்வதில்லை.

அதே மாதிரித்தான் உங்களுக்குள்ளும் அந்த மெய் ஞானிகளின் உணர்வலைகளை உரங்களாகக் கொடுத்து காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் ஆற்றலைக் கொடுக்கிறோம்.

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் நீங்கள் அதைப் பரப்ப வேண்டும்.

நான் சும்மா வாயிலே சொல்லிக் கொண்டு போனால் இந்த குண்டு சட்டிக்குள் குதிரையை ஓட்டுவது போல் தான் ஓடிக் கொண்டு இருக்க வேண்டும். யாம் (ஞானகுரு) அப்படிச் சொல்லவில்லை…!
1.அந்த விண்ணுலக ஆற்றலைச் செருக வேண்டும் என்றால்
2.குருவின் அருள் நாம் பெற்று இருக்க வேண்டும்.
3.அதை உங்களிடம் கொடுத்துப் பழக வேண்டும்.
4.அந்தப் பாதை தெரியாமல் நாம் போக முடியாது.

ஆரம்பக் கல்வியும் உயர் கல்வியும் பள்ளிகளில் நமக்குச் சொல்லித் தருகிறார்கள். அதிலே படிப்படியாக வந்த பிற்பாடு விஞ்ஞானிகளிடம் போனால் அந்த விஞ்ஞான அறிவின் கலவைகள் பெருகுகின்றது. அந்த நிலைக்கு வருபவன் விஞ்ஞானியாகவே வளர்வான்.

அதைப் போன்ற பெருக்கத்தின் உணர்வுகளை நமக்குள் கொண்டு வர வேண்டும். அதற்காக வேண்டித்தான்…
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தனக்குள் வளர்த்த மெய் ஞானத்தையும்
2.மெய் ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளையும் எடுக்கும் பழக்கத்தை எனக்கு எப்படி ஏற்படுத்தினாரோ…
3.அனுபவ வாயிலாக உணரச் செய்து எனக்குள் மெய் ஞானத்தை எப்படி விளையச் செய்தாரோ…
4.அதைப் போல உங்களுக்குள்ளும் வளர்க்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும். மெய் ஞானியாக நீங்கள் வளர்வீர்கள்.

தீமை செய்யும் உணர்வுகளை அடிக்கடி சுவாசித்தால் உடல் உறுப்புகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள்

 

எந்த மனிதன் கோபிக்கின்றானோ வெறுப்படைகின்றானோ தற்கொலை செய்து கொள்கின்றானோ குரோதமான நிலைகளில் ஒருவனைத் தாக்குகின்றானோ இவையெல்லாம் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டு இந்தக் காற்றிலே அலைகளாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த மனிதனை நாம் பார்க்கப்படும் பொழுது
1.அந்த மனித உடலிலிருந்து வெளிப்பட்டதை
2.நமது கண் அந்த மனிதனை நெஞ்சு எலும்பில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

அவன் உடலிலிருந்து என்னென்ன நிலைகள் வெளிப்பட்டதோ அவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அல்லது வெறித்தனமாகப் பேசுகிறான் என்றால்
1.அதன் உணர்வுகள் நம் உடலில் பதிவாக்கி
2.அவனை எண்ணும் போதெல்லாம் அந்த வெறித்தனமான சொல்லும் நமக்குள் அந்த செயலும் வருகின்றது.

அல்லது அவன் வெறித்தனமாகச் செயல்படுத்தும் போது அந்த உணர்வு நமக்கு அது பயமாக இருந்தால் அந்த நேரத்தில் வெறித்தன்மையான உணர்வுகள் நம் உடலில் பயத்தையே ஊட்டும். சிந்திக்கும் ஆற்றலையும் செயலற்றதாக மாற்றிவிடும்.

இப்படி
1.நாம் சந்தர்ப்பத்தால் சந்தித்த உணர்வுகள் எல்லாம்
2.நெஞ்சின் எலும்புக்குள் “எண்ணிலடங்காத வித்துக்களாக” ஊழ் வினையாக அது பதிவாகியுள்ளது.

இவை அனைத்தும் அதனதன் உணர்வுகளைக் கவர்ந்து அதற்கொப்ப நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அத்தகைய அணுக்கள் நம் உடலில் உருவாகத் தொடங்கி விடுகின்றது நம் இரத்தத்தில்.

இந்த இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளில் இவையெல்லாம் கலந்து விடுகின்றது ஆனால் உடலில் நல்லவைகளாக இருந்து வளர்ந்த இந்த உணர்வுகளில் நிலைகளில் நாம் படிப்படியாக வேதனைப்பட்டோர் வெறுப்படைவோர் உணர்வுகளை நாம் நுகர நுகர நமது உடலில் அத்தகைய அணுக்கள் விளைந்து விடுகின்றது.

மீண்டும் அவர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நமக்கு வெறுப்பு பயம் கோபம் குரோதம் அது எந்தெந்த குணங்களோ… எண்ணும் போதெல்லாம் அந்த உணர்ச்சிகள் முன்னணியில் வந்துவிடுகிறது.

அப்பொழுது அதனால் நம் உடலுக்குள் நல்ல குணங்களுக்கும் வெறுப்பான குணங்களுக்கும் இது ஒன்றுக்கொன்று இந்த உணர்வலைகள் பாயப்படும் பொழுது
1.உடலுக்குள் பல விதமான வலிகள் பல கலக்கங்கள் நம்மை அறியாமலேயே ஏன் எதற்குச் சங்கடப்படுகின்றோம்…? என்று தெரியாது.
2.அத்தகைய உணர்வுகள் நம் உடலுக்குள் போர் செய்யத் தொடங்கி விடுகின்றது.

நம் கண்ணால் பார்த்தவுடன் அல்லது நினைத்தவுடன் அந்த அதிர்ச்சி வருகின்றது. அதே சமயத்தில் உடலுக்குள்ளும் அந்த அதிர்ச்சியின் உணர்வு தோன்றுகின்றது அன்றைய நிலைகளில். அப்போது நல்லதை எண்ணுவதோ அல்லது அதைச் செயல்படுத்துவதோ முடியாது.

அந்த வெறித்தனமான உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அறியப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி சிறு குடலுக்கு வரும் பொழுது வெறித்தனமான உணர்ச்சிகள் சிறு குடலை உருவாக்கிய அணுக்களை… (நாம் எப்படிப் பயந்தோமோ) அதனின் இயக்கத்தைத் தணியச் செய்து நாம் சாப்பிட்ட ஆகாரத்தை அஜீரணம் ஆக்கி விடுகிறது அல்லது விஷத்தன்மையான இரத்தமாக மாற்றி விடுகின்றது.

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் பெருங்குடலில் சேர்ந்தாலும் அதே வெறித்தனமான உணர்வுகளைச் செயல்படுத்தும் போது பயத்தின் உணர்வுகள் வந்து ஆகாரத்தை ரசமாக மாற்றும்போது அதிலேயும் இந்த விஷத்தன்மை கலந்துவிடுகிறது.
1.அவை நம் கணையங்களிலே சேர்க்கப்பட்டு அமிலங்களாக மாற்றும் போது
2.அந்த அமிலங்கள் கல்லீரல் மண்ணீரலிலே படும் பொழுது இதே உணர்ச்சியின் தன்மை கொண்டு
3.அந்தக் கல்லீரல் மண்ணீரலில் நல்ல இரத்தமாக மாற்றுவதற்கு மாறாக அதையும் சரியாக இயக்க விடாதபடி
4.இரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட அணுக்களாகப் பரவும் தன்மை வருகின்றது.

இப்படி இந்த விஷத்தின் தன்மை பரவி நுரையீரலுக்குள் சென்றபின் அதையும் சீராக இயக்காத படி அந்த நுரையீரலில் கலந்த பின் விஷத்தின் தன்மை நுகந்து சிந்திக்கும் தன்மையை இழந்து நம்மை அறியாமலே ஏன் எதற்கு என்று வெறி உணர்ச்சிகள் வருவதும் அல்லது சோர்வடைவதும் பயமடைவதும் வரும்.

அனால் நாம் தவறு செய்யவில்லை. இதே போல நமது உடலில் அடிக்கடி நிகழும் இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அண்டத்தில் உள்ளது இந்தப் பிண்டத்தில் (மனித உடலில்) உள்ளது என்று சொல்கிறோம். அண்டத்தில் இருக்கிற சக்திகள் நம் உடலில் எவ்வாறு இயங்கி கொண்டு இருக்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அண்டம் என்பது அகண்ட அண்டம். அதிலே பிரபஞ்சம் என்பது ஒரு சூரியக் குடும்பம். 27 நட்சத்திரங்களும் நவக் கோள்களும் அதனுடைய உபகோள்களும் சேர்ந்து ஒரு சூரியக் குடும்பமாகின்றது.

ஒரு நூலாம்படைப் பூச்சி வலையை விரித்துத் தனக்குத் தேவையான உணவை எப்படி எடுக்கிறதோ அது போல் சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் வலை வலையாகப் பால்வெளி மண்டலங்களைத் தனக்கென்று அமைத்துக் கொள்கிறது.

நட்சத்திரங்களின் சுழழும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் அமிலங்கள் நூலாம்படை போல் அது விரிவடைகிறது. விரிவடையும் போது இந்த மொத்தச் சூரிய பிரபஞ்சமும் சுற்றும் நிலையில் அதிலே மற்ற அகண்ட அண்டத்திலே வரக்கூடிய துகள்களைச் சேமித்து வைத்துப் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகிறது.

1.கார்த்திகை நட்சத்திரம் முன்னாடி இருக்கிறது. அடுத்து ரேவதி நட்சத்திரம் இருக்கிறது.
2.27 நட்சத்திரங்களும் இப்படி வரிசையில் பல மைல் தூரம் வித்தியாசத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும்.
3.வித்தியாசத்தில் இருக்கிறது என்றால் சூரியனுடைய சுழற்சி வேகத்தில் வரும் போது அது பின் தங்கி வரும்.
4.இரண்டாவது நட்சத்திரம் அதைக் காட்டிலும் பின் தங்கி வரும்.
5.மூன்றாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வருகிறது.
6.சூரியனை ஒட்டி இருக்கும் கோள்களும் இதைப் போன்று தான். ஒன்றன் பின் ஒன்றாகத் தன்னுடைய சுழற்சியில் பின் தங்கி வரும்.

பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய துகள்கள் நட்சத்திரங்கள் விரித்த வலையில் ஒட்டி கொள்கிறது. நட்சத்திரம் சுழற்சி ஆகும் போது (RICE MILL போல்) பால்வெளி மண்டலமாகிறது… தூசிகளாக மாறுகின்றது.

அதற்கு அடுத்தது இன்னொரு நட்சத்திரம் எதிர்த்து இருக்கும். இது இடைமறித்து வரும் போது இதற்கும் அதற்கும் மோதலாகி இரண்டு கலவைகள். இப்படி 27 நட்சத்திரக் கலவைகள் மாறி மாறித் தூசிகளாக வருவது தான் பிரபஞ்சத்திற்குள் பரவுகிறது.

நட்சத்திரங்களின் மோதலில் வெளி வரும் இந்தத் தூசிகளை இடைமறித்து முதலில் வரக்கூடியதை கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை மட்டும் எடுத்து கொள்கின்றது. வரக்கூடிய கரும் புகைகளை ராகுக் கோள் எடுத்துக் கொள்கிறது.

ஆவியாக வெளிப்படுவதைச் சனிக் கோள் எடுத்து நீராக மாற்றுகிறது. 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கங்களை வியாழன் கோள் எடுத்துக் கொள்கிறது.

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் துகள்கள் மோதும் பொழுது வெளிப்படும் ஒளிக்கற்றைகளை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கிறது. மோதலில் உண்டாகும் நாதங்களை செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கிறது.

இதையெல்லாம் கலவையாகிச் சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கோளுக்குள் செல்லும் பொழுது அதனின் அதீத வெப்பத்தால் உலோகங்களாக மாற்றிக் கொள்கிறது.

அந்தந்தக் கோள்கள் உணவாக எடுத்து அது வெளிப்படுத்தும் உணர்வுகள் பல கலவையாகின்றது. ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷத் தன்மையின் உணர்வுகள் கலவையாகின்றது.

இந்தக் கலவையின் தன்மைகள் வரப்படப்போகும் போது மற்ற கோள்களுடன் கலக்கப்படும் போது ஒவ்வொன்றும் மாற்றங்கள் ஏற்படும். மாற்றங்கள் ஏற்பட்டு அதெல்லாம் சூரியனுக்கு வரும் போது அந்த விஷத்தை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறது. விஷத்தைப் பிரித்து ஒளியாகப் பாதரசமாக மாற்றுகின்றது.

1.முதலில் அமிலமாக இருந்தது தான் நட்சத்திரங்கள்.
2.அதிலிருந்து வரப்படும் போது இதனுடைய உணர்வுகள் மாற்றமாகி மாற்றமாகி
3.சூரியன் அதைப் பாதரசமாக மாற்றும் நிலை வரும்.
4.அப்பொழுது அது முழுமையான விந்தாக இந்த உலகையே உருவாக்குவதற்கான மூலமாக ஆகின்றது.

பாதரசம் மிகவும் எடை கூடியது. எடை கூடிய நிலைகளாக வரப்போகும் போது மற்றதைத் தள்ளுகின்றது. அகண்ட அண்டத்திலிருந்து வரக்கூடிய சக்திகள் நட்சத்திரங்கள் கோள்களில் கலவையான பின் அதைச் சூரியன் இழுத்துக் கவரும் பொழுது மோதலாகின்றது.

சூரியனுக்கு வெளிப்புறத்தில் ஏற்படும் இந்த மோதலினால் தான் வெப்பமாகின்றது. ஆனால் சூரியன் மிகவும் குளிர்ச்சியானது. சூரியனுக்குப் பல ஆயிரம் மைலுக்கு அந்தப் பக்கம் தான் இந்த மோதல் நடக்கிறது.

வெப்பமாகும் பொழுது கெட்டதைப் பூராம் தூக்கி எறிந்து விடுகிறது. நல்லதைப் பாதரசமாக மாற்றிக் கொள்கிறது. இது மெய் ஞானப்பாடம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதைத் தெளிவாகக் காட்டினார். அந்தப் பாதரசத்தினுடைய நிலைகளை எடுத்துக் காட்டி
1.அது மற்ற பொருளுடன் சேர்க்கும் போது திடப்பொருளாக எப்படி ஆகிறது…?
2.இன்னொரு பொருளைச் சேர்த்தவுடனே ஆவியாகப் பிரிந்து எப்படிப் போகிறது?
3.ஆவியாகப் போன பிற்பாடு பொருள்கள் எப்படி இணைகின்றது…? என்றும்
4.அதன் துணை கொண்டு உலகில் உள்ள எல்லாவற்றுக்கும் உணவாகக் கொடுக்கவும்
5.மற்றொன்றை எடுத்துச் செல்லவும் மற்றொன்றோடு இணைத்து வாழச் செய்யும் நிலையாகவும்
6.சூரியன் எப்படிச் செயல்படுகிறது…? என்று காட்டினார்..

அப்படிப் பாதரசமாக மாறவில்லை என்றால் உலகம் இல்லை. ஆகையினால் தான் இதை “நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…! என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

ஆதியிலே நாத விந்துகள் என்ற உணர்வின் தன்மை வரப்படும் போது தான் இது எல்லாமே உருவானது.
1.அந்த உணர்வின் இசையின் ஒலிகள் எப்படி உருவானது…?
2.ஒவ்வொன்றும் அந்த உணர்வின் ஒலியாக
3.நமக்குள் சுருதியின் இயக்கமாக
4.அந்த உணர்வின் ஒலியாக
5.அந்த உடலின் ரூபமாக மாறுகின்றது..! என்று இதற்குள் இவ்வளவு கருத்து இருக்கிறது.

27 நட்சத்திரங்களின் கலவைகள் உணர்வின் இயக்கங்களாகவும் நவக் கோள்களின் கலவைகள் உடல் உறுப்புகளாகவும் நமக்குள் அமைந்துள்ளது. உயிர் சூரியனாக இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கின்றது.

தியானத்தில் அமரும் பொழுது இதை எல்லாம் இணைத்துப் பார்த்தீர்கள் என்றால் அண்டத்தையே நீங்கள் பார்க்கலாம். ஆர்வத்துடன் கேட்டு இதை நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் தியானத்தில் உங்களை அங்கேயே அழைத்துக் கொண்டு போகும். நிச்சயம் உணரலாம்…!

உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தான் நம் மனக் கதவைத் திறக்க வேண்டும்

 

நாம் நண்பர்களாகப் பழகிய அல்லது குடும்பத்தில் பழகியவர்கள் உடலில் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் பதிவாகி இருப்பதால்
1.அதே நினைவு கொண்டு நாம் எண்ணினோம் என்றால்
2.அவர் உடலில் இருந்த உணர்வுகளும் நோய்களும் நினைத்தவர் உடலுக்குள் வருகின்றது.
3.இருள் சூழ்ந்த நிலையாகி விடுகிறது.

ஆனால் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தப்படும் பொழுது ஒளியின் உடலாகின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவான பின்
1.சப்தரிஷி மண்டலம் என்று எண்ணினாலே அந்தச் சக்திகள் நம் உடலுக்குள் புகுந்து தீமைகளை அகற்றி
2.நல் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நல்ல குணங்களுக்கு நம் மனம் இடம் கொடுக்கின்றது.

ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! ஒரு செடியில் எத்தகைய குணம் உண்டோ சுவை உண்டோ அதிலே விளைந்த வித்தினை நிலத்திலே போட்டால் அதைக் கவர்ந்து அதனுடைய சுவை அதனுடைய குணங்களை மீண்டும் காட்டுகின்றது.

இதைப் போல் தான் பிறிதொரு உடலில் விளைந்த நோயின் உணர்வுகள் அது வெளிப்படும் என்றால் “அது வித்து…” நாம் நுகர்ந்து நம் உடலில் பதிவாகி விட்டால் அவரைப் பற்றி எண்ணினால் அந்த நோயின் உணர்வே வரும்.

அதற்கு முன்பு அவர் நல்லதாக இருந்த நிலையை எண்ணும் பொழுது அடுத்து இப்படி ஆகிவிட்டாரே…! என்று தான் வரும். அப்போது அவருடைய முழுமை விஷத்தன்மை அடைவதால் நாம் எண்ணினோம் என்றால் அந்த விஷத்தின் உணர்வே நமக்குள் இயக்கப்பட்டு அவர் எப்படி வருத்தப்பட்டாரோ அதே வருத்தம் நமக்குள்ளும் வருகின்றது.

எத்தனை பேருடன் இப்படி பழகுகின்றோமோ வாழ்நாள் முடிவில் நோயின் தன்மை கொண்டு உடலை விட்டு வெளியேறும் போது அவர்கள் உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.ஆக நோய் என்ற உணர்வுகள் கொண்டு பலவும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது
2.அவர்களுக்குள் விளைந்த தீமைகளை நமக்குள் வந்து சேருகின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்களை இணைக்கப்படும் பொழுது நஞ்சுகள் கரைக்கப்படுகின்றது.
2.அந்த எண்ணத்தை நமக்குள் செலுத்தப்படும் பொழுது நஞ்சை நீக்கும் உணர்வும் நல்ல சிந்திக்கும் தன்மையும் நமக்கு கிடைக்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதில் சாவியைப் (PASSWORD) போட்டோம் என்றால் எந்த அட்டைக்கு எந்தச் சாவி என்று அதைப் பாய்ச்சி விடுகின்றனர்.

அதைச் சரியாகப் போட்டால் தான் திறக்கின்றது… இல்லையென்றால் திறப்பது இல்லை இதைப் போன்று பல விதமான உணர்வின் தன்மைகளை பிளாஸ்டிக் அட்டைகளிலேயே கொடுத்துத் திறக்கும்படி செய்கின்றார்கள்.

இதைப் போல
1.நாம் நமது உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால்
2.நமது எண்ணத்தின் திறவுகோலை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
3.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு இருளை நீக்கி நல்வழி நடத்தச் செய்யும் நிலை வருகின்றது.

ஆகவே நாம் நம் மனதைத் திறக்க வேண்டியது உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு மட்டும் தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிரபஞ்சத்திலுள்ள கோள்கள் எல்லாம் ஒரே நேர் கோட்டில் வரப்படும் போது தான் சில பூமியினுடைய ஈர்ப்புத் தன்மை குறைகிறது. (இது ஏற்கனவே இந்த மாதிரி ஆகி விட்டது).
1.அதனால் நம் பூமி ஒரு நிமிடம் வித்தியாசத்தில் வரும்.
2.அதனால் வித்தியாசத்திற்குப் பூமி சூரியனை விட்டு நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகும்.
3.இதே மாதிரி மற்ற கோள்களும் நகர்ந்து நகர்ந்து வித்தியாசமாகப் போகும்.

கீழே இருக்கும் கோள்கள் தடுத்து நிறுத்தி விட்டது என்றால் இந்த (சூரியனின்) ஈர்ப்பு இல்லை என்றால் நகர்ந்து மேலே போகும். அதற்கு மேல் இருக்கும் கோள்கள் அப்படியே நகன்று நகன்று மேலே போகும். (மேலே என்றால் ஈர்ப்பை விட்டு வெளியே என்று அர்த்தம்)

நகர்ந்து மேலே போகும் கோள்கள் எல்லாம் என்ன செய்யும்…? இது நட்சத்திரங்களாக மாறும் சக்தி கிடைக்கிறது. இதே மாதிரி ஈர்ப்புத் தன்மை இல்லை என்கிற போது இந்த 27 நட்சத்திரங்களும் நகர்ந்து செல்லும்.

ஆக அப்படி நகர்ந்து செல்லப்போகும் போது மற்ற உணர்வுகள் எடுத்து நம் பிரபஞ்சம் முதலில் எப்படி உருவானதோ அது போல் இந்த 27 நட்சத்திரங்களும் அது அது தன் வளர்ச்சிக்குண்டான நிலையில் கோள்களை உருவாக்கும்.

கார்த்திகை நட்சத்திரம் ஒரு சூரியக் குடும்பமாக வளர ஆரம்பித்து விட்டது. இதே மாதிரி மற்ற நட்சத்திரங்களும் தனித் தனிப் பிரபஞ்சமாகிவிட்டால் இந்தச் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்படும்.

அதனால் தான் நம் சூரியனில் அநேகமாக இந்தக் கருப்பு நிலைகள் (SUNSPOT) அதிகமாக வருகிறது. ஒளியாக மாற்றுவதற்குண்டான நிலைகள் மாறிப் போகும்…. மாறிக் கொண்டிருக்கிறது…!
1.அப்படி மாறியது என்றால் இன்னும் கொஞ்ச காலத்தில் சூரியன் மங்கிப் போய்விடும்.
2.அதனுடன் சேர்ந்த (நம்) பூமி எங்கே போகும்…? என்று சொல்ல முடியாது.

மற்றொரு சூரியக் குடும்பம் அழிந்து அதிலிருந்து கரைந்து வந்த ஒரு கோள் வியாழன் கோளில் ஏற்கனவே சுமார் 25 வருடத்திற்கு முன்னாடி விழுந்தது அல்லவா…! பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். (விழுவதற்கு முன்னாடி குருநாதர் காட்டிய வழியில் இந்த மாதிரி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னேன்… பழைய அன்பர்களுக்குத் தெரியும்)

நம் பூமியில் விழுந்திருந்தால் நாமும் அம்போ தான். ஏனென்றால் அந்தக் கல் நம் பூமியைப் போல ஒரு இரண்டு மடங்கு. ஆனால் வியாழன் கோளில் பனிப்பாறைகள் அதிகமாக இருப்பதால் அதற்குள் போய் அமிழ்ந்து விட்டது.

வியாழன் கோள் முழுவதுமே பனிப்பாறைகளாக உள்ளது. இப்போது நாம் வாழும் பூமியும் சூரியனின் ஈர்ப்பை விட்டுக் கொஞ்சம் நகன்று விட்டதென்றால் முழுவதும் பனியாக உறைந்து விடும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் சூரியனாக வளர்ச்சி ஆகிவிட்டது என்றால் அந்தச் சூரியனுக்கு சாப்பாடு கிடைக்காது பிற மண்டலத்திலிருந்து சக்திகளை நட்சத்திரங்கள் எடுத்து கொடுக்கவில்லை என்றால் சூரியன் மங்கலாகிவிடும்.

கார்த்திகை நட்சத்திரம் ஏற்கனவே விலகிப் போய்விட்டது. அதைப் போல ஒரு ஐந்தாறு (ரேவதி அசுவினி) நட்சத்திரங்களும் சூரியக் குடும்பமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தனிப் பிரபஞ்சமாக வளர்ந்து கொண்டுள்ளது. மற்ற நட்சத்திரங்களும் அதைப் போன்ற நிலைகள் கூடிய சீக்கிரம் ஆகும்.

1.நாம் குழந்தையைப் பெற்று அது வளர்ச்சி அடைந்தவுடனே அது ஒரு குடும்பமாகப் பிரிந்து போகிற
2.அதே மாதிரித் தான் சூரிய குடும்பத்திலேயும் நட்சத்திரங்கள் சூரியனாகும் பருவம் வந்த பின்
3.தனக்கென்ற ஒரு குடும்பமாகப் பிரிந்து போய்விடும்.
4.பிரிந்த பிற்பாடு நாளுக்கு நாள் இந்தச் சூரியன் செயல் இழக்கும் தன்மை ஆகும்.
5.அதனுடன் சேர்ந்த பூமி கரைந்து ஓடும்.

அப்பொழுது பூமிக்குள் இருக்கும் உயிர் அணுக்கள் என்ன செய்யும்….? மற்ற உயிரினங்களுக்கு இது குருவாகும். நம் வியாழன் கோளில் இதைப் போன்ற மற்ற நிலைகள் சிக்கப்பட்டு அதன் மூலமாக இந்தப் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது.

வியாழன் கோளில் இன்னும் உயிர் அணுக்களினுடைய நிலைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. அதிலிருந்து தோன்றியது தான் கொஞ்சம் கொஞ்சமாக வந்து நம் பிரபஞ்சத்தில் பரவப்பட்டு வருகிறது.

அத்தகைய கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதனால் வியாழன் கோள் தான் உயிரணுக்களின் தோற்றத்திற்கு மூல காரணமாகின்றது. அதில் இருந்து வரும் கரு இல்லை என்றால் உயிர் அணுக்ககளின் தோற்றமே இல்லை.
1.அதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.
2.சும்மா சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).

நாம் வாழும் இந்தச் சூரியனும் செயலிழக்கும் தன்மைக்கு இப்பொழுது வந்துவிட்டது. இன்று நாம் மனிதராக இருந்தாலும் இந்தச் சூரியக் குடும்பம் அழிந்து விட்டது என்றால் அணுக்களாகப் போவோம். மீண்டும் பிரபஞ்சத்தில மிதப்போம். ஏதாவது கோளுக்கு இழுத்துக் கொண்டு போகும்.

அந்த கோள்களில் அதற்குண்டான சத்து இல்லை என்றால் புழுவாகவோ பூச்சிகளாவோ கிருமிகளாவோ தான் வளர முடியும். வேறு வழி இல்லை. நம்மை விஷத் தன்மையாக மாற்றிக் கொண்டு இருக்கும்.

நம் பூமியில் தாவர இனங்கள் இருக்கிறது. அதனால் மனிதனாக இருகின்றோம். தாவர இனங்கள் அழிந்து போய்விட்டது என்றால் உயிரினங்கள் வாழ முடியாது.
1.அப்படி நாம் வெளியிலே போய்விட்டால் அப்புறம் எந்தக் கோளுக்குள் நாம் போவோம்…?
2.என்ன ஆவோம்…? என்று சொல்ல முடியாது.

இதிலிருந்து தப்புவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இத்தனை வேலையும் செய்து கொண்டிருக்கின்றோம்.

விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் எடுத்து உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால்
1.இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் சேர்த்துக் கொண்ட ஒளியான உணர்வுக்கொப்ப
2.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.
3.வேகா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.
4.உயிருடன் சேர்த்து ஒளியாக்கப்படும் போது அகண்ட உலகில் எங்கே வேண்டும் என்றாலும் நாம் போகலாம்.

ஞானிகள்… நினைவு நாளைக் கொண்டாடச் சொன்னதன் நோக்கம்

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாக்களை விண் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விட்டால்
1.அவர் உடலில் விளைந்த உணர்வுகள் எப்படி அங்கே கரைந்ததோ
2.உடலில் பெற்ற உணர்வு ஒளியின் உடலாகப் பெற்றதோ அவரை எண்ணி
3.அந்த உணர்வின் தன்மையை ஒளியின் உடலாக பெறச் செய்த இந்த உணர்வுகளை நினைவு கூர்ந்து
4.நாம் அந்த ஆன்மாக்களை விண் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அவர் சார்புடைய நிலைகள் அங்கே இருந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் பெற்று அவர் சம்பந்தப்பட்ட உணர்வுகள்… ஏனென்றால்
1.கண் கூர்ந்து கவனிக்கும் பொழுது கருவிழியால் பதிவான உணர்வுகளை அதே நினைவு கொண்டு
2.அவர் நினைவு நாளில் இதைப் போன்று நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்துவோம் என்றால்
3.அவர் குறை கூறிய உணர்வோ அல்லது குடும்பத்தின் மீது இருந்த வெறுப்புணர்வோ
4.அவர் நோயாக வேதனைப்பட்ட உணர்வோ நமக்குள் பதிவாகி இருந்தாலும் அந்தப் பதிவின் மீது இது வந்து மேலே பதிவாக்கும்.

ஒரு வித்து விளைந்த பின் மற்ற தாவர இனங்களின் வித்துக்களை இதனுடன் கலக்கச் செய்து அதிலே புது விதமான வித்துகளை உருவாக்குவார்கள்.

அதைப் போன்று உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தபின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது போக “அவருடன் உணர்வுகள் ஒளியாக நிற்கும்…”

அந்த நிலையில்…
1.நினைவு நாளில் நாம் அதை எண்ணிக் கொண்டு வந்தோம் என்றால் உடலுக்குள் பதிந்த அவரின் உணர்வை மாற்றி விடலாம்.
2.அதே சமயத்தில் அவர் உடலில் இருந்து வந்த உணர்வுகள் காற்றலைகளில் இருப்பினும் அதை ஈர்க்கும் சக்தியை இங்கே தடுத்து விட்டால்
3.அவர் உடலில் இருந்த நோயோ அவரைப் பற்றிய பகைமை உணர்வுகளோ நம்மை இயக்காது.

அதற்குத் தான் இந்த நினைவு நாளைக் கொண்டாடச் சொல்வது.

அவரின் உணர்வுகள் நம் உடலில் பதிந்திருப்பதால்
1.அவர் உணர்வுக்கு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாகப் படைத்தால்
2.நமக்குள் தீமை என்ற உணர்வு இல்லாது மறைக்கப்படுகின்றது.
3.நினைவு நாளைக் கொண்டாடுவதற்கு அன்று ஞானிகள் இவ்வாறு வழி வகுத்தனர்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவானாலும் அதன் தனித்தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது தான் வருகின்றது.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால்… இந்த வாழ்க்கையிலே வெறுப்பு வேதனை சலிப்பு கோபம் பகைமை என்ற உணர்வுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது சிறிது நேரமே செயல்படுத்துகின்றோம். ஒரு நாளைக்கு காலையில் எழுந்ததும் செயல்படுத்துகின்றோம்.

அதற்குப் பின்
1.ஏதாவது சிரமம் வந்தால் அந்தச் சிரமத்தை தான் எடுத்துக் கொள்கிறோம்.
2.ஆனால் அவரைப் பற்றிய நினைவு நமக்கு வருவதில்லை.
3.ஆனால் அந்த வேதனைப்படும் உணர்வுகள் தூண்டி அதை வளர்க்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மாற்றி அமைக்க… உடலை விட்டுப் பிரிந்து சென்று அந்த ஆன்மாவிற்கு…
1.நம் உடலில் அந்த\த் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவான (அவரைப் பற்றியது) நிலைகளுடன் சேர்த்து விட்டால்
2.அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் காற்றில் இருப்பதை நாம் நுகராமல்… நமக்குள் அது வளர்ச்சி பெறாமல்… தடுத்து நிறுத்த முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எந்த உணர்வை எண்ணுகிறோமோ அது “ஓ…” என்று நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்குகிறது.

அவ்வாறு இயக்கப்படும் போது எந்தக் குணத்தை நாம் இயக்கி நம் உடலில் சேர்க்கின்றோமோ நம் உயிர் அதைத்தான் ஆளுகிறது.
1.அதை வைத்துத் தான் நம்மை செயல்படுத்தச் செய்கிறது.
2.அதை வைத்து தான் நாம் சொல்லைச் சொல்கிறோம்.
3.அதன் வழி தான் நாம் செயலைச் செய்கிறோம்.

சங்கடமாகவும் சலிப்பாகவும் இருக்கும் போது அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்கி நம்மை ஆள்கிறது.
1.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது சரியான கணக்குப் பார்க்க முடியுமோ…?
2.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது ஒருவர் யோசனை கேட்டால் உங்களால் சொல்ல முடியுமோ…? முடியாது.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வை வைத்துத் தான் நம்மை ஆட்சி புரிகிறார். யார்…? நமது உயிர் தான்…! அந்த வழியில் நம்மை இயக்குவதும் நம்மை ஆள்வதும் அவனாகத்தான் இருக்கிறான்.

இருந்தாலும் அதே உணர்வை நம் உடலில் சேர்க்கும் போது அது ஈசனாக இருந்து நாம் எதை நுகர்ந்தோமோ அதை நம் உடலில் சேர்க்கின்றது. நம் உடலுக்குள் புகுந்து விட்டால் அது நம் இரத்தங்களில் கலந்து அது நம் உடலாக ஆகிவிடுகிறது.

நீங்கள் நல்லதோ கெட்டதோ எந்த குணங்களை நுகர்ந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலுள்ள இரத்தங்களில் கலந்து கொண்டே தான் இருக்கும்.

அதில் பலவிதமான வண்ணங்கள் இருக்கும். பலவிதமான உணர்வுகளை உணர்ச்சிகளை ஊட்டிக்கொண்டே இருக்கும். எதன் உணர்வு வலுவாக இருக்கிறதோ அந்த உணர்வு இயக்கமாகி உணர்ச்சிகளை வெளிப்படச் செய்து அது சொல்லாகவும் செயலாகவும் மாறும்.

கோபம் வரும்போதெல்லாம் பார்க்கலாம். ஒருவர் தவறான செயலைச் செய்யும் போது உங்கள் இரத்தங்களில் எப்படி அந்த உணர்ச்சிகள் மாறுகின்றன…? என்று தெரியும்.

இதே மூச்சலைகளை மற்றவர்களும் நம்மைப் பார்த்து நுகரும் போது இந்த உணர்வுகள் அவர்களுக்குள்ளும் இயக்கப்பட்டு அவர்களும் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலைகள் வரும்.
1.அவர்கள் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன…? என்ற வகையில்
2.அடுத்து கலந்து பதில் சொல்லும் நிலையாக வரும்.

உதாரணமாக நம்முடைய நண்பன் அவனுடைய இன்னொரு நண்பருடன் இருக்கிறான். நம்முடைய நண்பனுக்காக அவன் எதையும் செய்யக்கூடியவன்.

இருந்தாலும் நம் நண்பருடன் சேர்ந்தவன் சரியில்லை… தவறு செய்கிறான் என்ற நிலையில் அவன் தப்பு செய்வதை நாம் திருத்தச் சொல்லிச் சொன்னோம் என்றால் நம் நண்பன் இந்தத் தப்பை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

1.ஏனென்றால் நம்முடைய நண்பனின் உணர்வுக்கு முன்னாடி அவனின் நண்பன் உணர்வு இருப்பதால்
2.அதை எண்ணி முன்னாடி வலு சேர்த்துக் கொள்ளும் போது
3.நம் உணர்வுகளை நுகர்ந்த உடனே குற்றப் பெருக்குகளைக் கூட்டி
4.நம்மைத் தான் குற்றவாளியாகத்தான் சொல்வான்.
5.ஆக நுகர்ந்த உணர்வுகள் பற்று எதனின் உணர்வு கொண்டு வருகிறதோ
6.அதன் உணர்வு வலு சேர்க்கப்படும் போது நல்ல உணர்வுகள் செயல் குறைந்து போகும்.
7.இரத்தங்களில் கலந்த நிலைகள் கொண்டு இத்தகைய நிலை வருகிறது.

நம்முடைய உணர்வை ஏற்கவில்லை என்னும் போது நம்மிடம் உள்ள நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுவிற்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து
1.அந்த நல்லது ஒடுங்குகிறது.
2.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தியை அது இழக்கிறது.
3.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் போது அது ஒடுங்குகிறது… ஏற்றுக் கொள்வதில்லை… பார்க்கலாம்…!

ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும் நம்முடைய உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகும் போது கூடக் கொஞ்ச நேரம் நிலை நிறுத்தி விட்டோமென்றால் இதற்குச் சாப்பாடு தேவை.

நாம் எப்படி மூச்சு விடுகிறோமோ அதேபோல அந்த இயக்கத் தொடருக்குப் பிரணவம் – ஜீவன் வேண்டுமென்றால் நம் உடலின் உஷ்ணத்தினால் வாயு உண்டாகிறது. அழுத்தமும் ஏற்படுகிறது.

நாம் சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனை வருகிறது…? எந்தெந்தப் பொருள்களை அதற்குள் அதிகமாகப் போட்டிருக்கின்றோமோ அந்த வாசனை தான் அதிலிருந்து வெளியிலே வரும். அதிலிருந்து உருப்பெரும்.

அதைப் போன்று நல்ல அணுக்களுக்கு உண்டான ஆகாரம் இல்லை என்கிற நிலையில் மற்ற உணர்வுகளின் அழுத்தத்தினால் உடலிலே ஒருவிதமான மாற்று உணர்ச்சிகள் தோன்றுவதைப் பார்க்கலாம்.

இதையெல்லாம் எது இயக்குகிறது…? நமது உயிர் தான். அது எலெக்ட்ரிக் ஆக இருக்கிறது. நாம் நுகரும் உணர்வுகள் எலெக்ட்ரானிக் ஆக எதிர் நிலையான நிலையில் இயங்குகிறது.

இதைப் போன்ற நிலையில் ஒவ்வொரு நிமிடமும் நம் இரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பலவிதமான அணுக்களின் மாற்றம் ஆவதும் நடக்கிறது, நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மற்றவர்களுடன் பழகும் போது எதன் உணர்வைக் கவர நேருகின்றதோ அதனால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்…! இவை எல்லாம்.

நல்லவர்களுடன் நாம் அமைதியான நிலையில் கேட்டு வந்து பேசிக் கொண்டு பழகி வந்திருந்தாலும் அடுத்தாற்போல் திடீரென்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வெறுப்பாகித் தாக்கிப் பேசும் போது என்ன நடக்கிறது…?

அதை நுகர்ந்தவுடன் நமக்கு மிகவும் இக்கட்டான நிலை\யாகி ஆகின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஒன்றுக்கொன்று மோதும் போது சலனங்களும் சஞ்சலங்களும் ஆகி நம்முடைய நல்ல அணுக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது உடல் சோர்வடைகிறது. உணர்ச்சியும் மாறுகிறது.

எந்த உணர்வின் தன்மையை அதிகமாக்குகிறோமோ கண் வழி அதை நுகர்ந்து உயிரிலே பட்டு மீண்டும் அந்த உணர்ச்சிகள் அதிகமாக நம் இரத்த நாளங்களிலே சேர்க்கிறது.
1.இந்த இரண்டு பேருக்குள் சண்டை போட்டுவிடப் போகிறார்களோ…! என்று
2.வேடிக்கை பார்க்கும் நமக்குள் இந்தப் பதட்டம் வருகிறது. (ஆனால் நாம் சண்டை போடவில்லை)

அடுத்து அந்தச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களிடம் சொல்வதற்கு நமக்குத் துணிவு வந்தாலும் சிந்தையான பதில் சொல்லத் தெரியாது.
1.பின்பு நம்மை அறியாமலேயே பகைமை உணர்ச்சிகள் உடலுக்குள் சேரும்.
2.அப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்தங்களில் தான் முதலில் கலக்கிறது.

உயிர் அதை நம் உடல் முழுவதும் பரவச் செய்கிறது என்றும் அதன் வழியே தான் நம்மை வாழச் செய்து ஆளுகின்றது என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஆண்டவன் யார்…? நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும். நம் உடல் முழுவதற்கும் அந்த உணர்வைப் பரவப் செய்யும் போது நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு நிம்மதியையும் சாந்தமும் சாந்தமான நிலைகளையும் தருகிறோம்.

நல்ல உணர்வின் உணர்ச்சிகளை நமக்குள் பரப்பச் செய்யும் பொழுது தீமையின் உணர்வுகளை அடக்கி நம்மை அமைதிப் படுத்தச் செய்கிறது

ஆனால் சாதாரண மனிதனின் உணர்வை வைத்து அதை நாம் அமைதி படுத்த முடியாது. அதற்காக வேண்டித்தான் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அந்தப் பதிவின் நினைவு கொண்டு “ஈஸ்வரா..!” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எடுத்து அதைத் தடுத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று நம் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தும் போது ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை என்ற (தீமையான) வித்திற்குள் இது கலந்து கொஞ்சம் கொஞ்சமாக இதன் வலு கூடும் போது அதை அடக்கக் கூடிய சக்தி பெற்று விடும்.

அப்பொழுது தீமையை அடக்கி நம் மனதை அமைதிப்படுத்தும் வல்லமையை நாம் பெறுகின்றோம்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடையும் நெறி

 

மனிதனின் வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகி விட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகின்றது
1.நல்ல குணங்கள் அடங்கிய பின் வேதனை அதிகமாகி
2.”இந்த உடலை விட்டு எப்படா செல்வோம்…” என்ற இந்த உணர்வுகள் வந்துவிடும்

ஆனால் யாம் சொல்லும் தியானத்தைக் கடைப்பிடித்த ஒரு அன்பரின் நினைவு என்ன…?

1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்ற உணர்வுகள் வலுவாக இருப்பதால்
2.அந்த துருவ தியான நேரத்தில் காலை நான்கு மணிக்கு அதனின் வலுக் கொண்டு
3.அந்த ஆன்மா பிரிந்து அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலே சென்றடைகின்றது.

ஆனால் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டவர் அனைவருமே அமாவாசை நாளுக்கு அருகிலே தான் உடலை விட்டுப் பிரிவார்கள். அதாவது விஷ அலைகள் பரவும் நேரத்திலே தான் அந்த ஆன்மாக்கள் பிரியும்.

அப்படிச் சென்றால் வேதனையான உணர்வுகளை அதிகமாக எடுத்து விஷத்தின் தன்மை பெற்று அந்த உணர்வோடு வெளி வரப்படும் பொழுது பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக எடுக்கின்றதோ இந்த விஷம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளும்.
1.அதன் உணர்வு கொண்டு இந்த மனித உடலைச் சவமாக்கிவிட்டு விஷத்தின் அணுக்களாகப் பெருகி…
2.உயிர் பாம்பின் ஈர்ப்பிற்கு அழைத்துச் சென்று நம்மைப் பாம்பாக உருவாக்கிவிடும்,

ஆடு, மாடு மற்ற உயிரினங்கள் எல்லாம் ஓர் விஷத்தின் தன்மையைத் தனக்குள் உடலாக்கிக் கொள்கின்றது. அதனுடைய கழிவை (சாணத்தை) நல்லதாக வெளிப்படுத்துகின்றது.

இத்தகைய தன்மையிலே இந்த மனித உடலில் வேதனை என்று உணர்வு அதிகமாகி விட்டால் விஷத்தின் உணர்வைக் கவர்ந்து அந்த வலுவின் தன்மை கொண்ட மாடாகவோ ஆடாகவோ… அதிகமான விஷமானால் விஷத்தைப் பாய்ச்சிப் பாம்பாகும் நிலை வந்துவிடும்.

காரணம்… ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று… “அதைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள்” என்றால் நிச்சயம் பாம்பாகத்தான் அடுத்து பிறப்பார்கள்.

சந்தர்ப்பத்தால் வேதனைகளின் உணர்வை நுகர்ந்தால்…
1.அந்த வேதனையை மறக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் நாம் சேர்த்துக் கொண்டு வந்தால் அந்த உணர்வு வலுவாகி
2.அந்த அடிப்படையில் உடலை விட்டுச் செல்லும் பொழுது சப்தரிஷி மண்டலத்தின் எல்லையைச் சென்றடைகின்றோம்
3.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும் செயல்படுத்த வேண்டிய நெறி முறை இது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் மலைப் பகுதிகளில் சில பாறைகளில் அமர்ந்துள்ளான். அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அதிலே பதிவான நிலைகள் கொண்டு அந்தப் பாறைகள் மேகங்களைக் கவர்கின்றது.

மேகங்களை இழுத்துக் கவர்ந்து மோதியவுடனே அங்கே நீராக வடியத் தொடங்குகிறது. அகஸ்தியருடைய கையில் அதனால் தான் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.

அகஸ்தியன் எங்கெங்கெல்லாம் போய் உட்கார்ந்தானோ அங்கெல்லாம் இத்தகைய தண்ணீர் இருக்கும்.
1.கீழே நீர் இருக்காது.
2.ஆனால் அந்த மலை உச்சிகளில் மேகங்கள் போவதைக் கவர்ந்து நீராக வடிந்து
3.சில தெப்பங்களும் அங்கே இருக்கும்… கர்நாடக மாநிலத்தில் நிறைய இடங்களில் இது இருக்கும்.

பெல்காம் பக்கத்தில் ஒரு மலை இருக்கிறது. அதில் உள்ள ஒரு சிறிய குகையில் சிலை இருக்கிறது. அந்தச் சிலை மீது நெய்யை விட்டால் அது வெண்ணெயாக மாறும். அந்தக் கல்லில் அந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும்.

நெய்யைக் கொண்டு போய் சிலை மீது ஊற்றுவார்கள். பின் தண்ணீரை விட்டு அபிஷேகம் செய்து முடிந்தவுடன் சுரண்டி எடுத்தோம் என்றால் அந்த வெண்ணெயாக மாறும்.
1.நெய்யில் இருந்து வெண்ணெயாக மாறும்.
2.அந்தச் சிலைக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
3.அபிஷேகத்திற்கு நெய்யைக் கொடுப்பார்கள். மாற்றம் அடைந்தவுடன் வெண்ணெயாக எடுத்து வருவார்கள்.
4.அதை எடுத்து வந்து சாப்பிடுவார்கள்.

அந்த மாதிரி சில இடங்கள் அங்கே உண்டு. அதற்கு மேலே உச்சியில் பார்த்தீர்கள் என்றால் நாழிக்கிணறு. அதில் நீங்கள் தண்ணீர் எவ்வளவு மோந்தாலும் வந்து கொண்டே இருக்கும்.

அங்கே மலை மீது ஏறும் இடத்தில் இன்னொரு குகை இருக்கிறது. அதற்குக் கீழே பார்த்தீர்கள் என்றால் தண்ணீர் இருக்கும். அந்தத் தண்ணீரில் ஏதாவது ஒரு பொருளைப் போட்டோம் என்றால் கீழே ஒரு பாதை இருக்கும். அதிலே மிதந்து வெளியிலே வரும். ஆனால் இந்தத் தண்ணீர் வற்றுவதே இல்லை.

மைசூர் பாகமண்டலம் தலைக் காவிரிக்குப் போனால் அங்கே மலை உச்சியிலிருந்து தண்ணீர் வரும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமாக இப்படி வரும்.

மேக மண்டலங்களை இழுத்து மோதித் தண்ணீராக வருகின்றது. அங்கேயும் அந்தத் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால்
1.அங்கே அகஸ்தியன் அமர்ந்த இடம்.
2.மேகங்களை இழுத்து தண்ணீராக மாற்றக்கூடிய நிலைகள் அங்கே இருக்கிறது.

அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள்
1.நீருக்காக வேண்டி அங்கே மேகத்தை இழுப்பதற்காக வேண்டி
2.பல பச்சிலைகளையும் அங்கே தடவி இருக்கின்றார்கள்.

இயற்கை எப்படி மாற்றங்கள் ஆகின்றது…? நீர் சுரபிகள் எப்படி உருவாகின்றது..? என்று இதெல்லாம் அனுபவபூர்வமாகக் கண்டறிந்தது.

மனிதனுக்கும் இத்தகைய நீர் சுரபிகள் உண்டு. ஒரு பச்சிலையைக் கொடுத்தால் நீர் சுரப்பி எல்லாம் அடைத்துக் கொள்ளும். பின் வறட்சி ஆகிவிடும்.

அதே சமயத்தில் சாப்பிடக்கூடியதை இரத்தமாக மாற்றக்கூடிய சில பச்சிலைகளும் உண்டு. இப்படி எத்தனையோ வகைகள் இருக்கிறது. ஒரு தாவர இனத்தின் உணர்வுகள் மற்றொன்றோடு மாற்றப்படும் போது எப்படி மாறுகிறது…? என்று இது அத்தனையும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்தார்… உணர்த்திக் காட்டினார்.

இந்த மாதிரி அதிசயங்களை எல்லாம் யாம் (ஞானகுரு) பார்த்தோம். ஏனென்றால் இதெல்லாம் அந்த மலைப்பகுதியில் நடந்து போய்ப் பார்த்து வந்தது.

அவ்வாறு கண்ட பார்த்த உணர்ந்த உண்மைகளை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். இதைப் பதிவாக்கிக் கொண்டால்
1.அன்று வாழ்ந்த மெய் ஞானியான அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நீங்கள் எளிதில் பெறலாம்.
2.அவன் பெற்ற அண்டத்தின் ஆற்றல்களை நீங்களும் பெறலாம்.

“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்

 

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தையும்
1.நமது உயிர் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று அந்தக் குணங்களில் இயக்கும் அணுவாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
2.இவ்வாறு காலையிலிருந்து இரவு வரையிலும் சதாசிவமாக்கிக் கொண்டே உள்ளது நமது உயிர்.

நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ வேதனைகள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவை அனைத்தையும் நமது உயிர் “ஓ…” என்று ஜீவணுவாக மாற்றி “ம்” என்று நமது உடலாக மாற்றி விடுகின்றது.

உதாரணமாக… செடி கொடியினில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றுகின்றோம். ஆனால் (முதலில் உருவான) அந்தச் செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

நிலத்தில் ஊன்றப்பட்ட அந்த வித்து நிலத்தின் துணை கொண்டு… சூரியனால் கவர்ந்து வைக்கப்பட்டுள்ள தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அதே செடியாக விளைந்து அதன் வித்தை மீண்டும் உருவாக்குகின்றது.

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் பயம் அவசரம் ஆத்திரம் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால்
1.எந்தெந்த மனிதனின் உடலிலிருந்து அந்த வேதனை உருவாகி வெளி வந்ததோ அதனை நாம் நுகரப்படும் பொழுது
2.அதே வேதனையை உருவாக்கும் அணுவாக நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது.

இப்பொழுது ஒரு செடியில் விளைந்த வித்து எவ்வாறு தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது தனது வித்தை உருவாக்குகின்றதோ… தன் இனத்தை உருவாக்குகின்றதோ அதே போல்
1.நம் உடலுக்குள் பிறர்படும் வேதனையோ அல்லது மற்றதையோ வேடிக்கை பார்த்தால்
2.அல்லது சாபமிடுவதைப் பார்த்தால் ஒருவர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்தால்
3.அந்த உணர்வை நாம் நுகர்ந்து வேதனைப்படுகின்றார் என்று அறிகின்றோம்.

ஆனாலும் அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்த பின் உயிர் அறியச் செய்கின்றது. அவை நம் இரத்தங்களில் கலந்து…
1.எந்த உடலில் அது உருவானதோ அதே அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது அதற்கு இரை தேவை.
2.எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ அது காற்றில் உண்டு.
3.அப்பொழுது நம் உடலுக்குள் இருந்து அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது அதே உணர்வை நாம் நுகர்வோமென்றால்
4.நமக்குள் இதே போல் வேதனைப்படுவதும் வெறுப்படைவதும் சங்கடப்படுவதும் போன்ற நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

இவ்வாறு நமக்குள் வருவதிலிருந்து நாம் மீள்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கச் செய்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்றால் யாம் கொடுக்கும் உபதேச உணர்வினைப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரமோ இப்புவியில் துருவ மகரிஷி அல்லது அகஸ்தியராக இருக்கும் பொழுது தீமைகளை வென்று வானை நோக்கி உணர்வுகளை நுகர்ந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

அதனின்று வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமியோ அதைத் துருவப் பகுதியில் கவர்ந்து நமது பூமிக்குள் கொண்டு வருகின்றது.

1.அதனை நீங்கள் நினைவு கூர்ந்து உங்களில் பதிவாக்கி நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற முடியும்.
2.அப்போது நாம் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத் தீமையின் அணுக்களை நமக்குள் வளராது தடுக்க உதவும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வுகளை நமக்குள் அந்த அணுக்களைப் பெருக்கவே நாம் தியானமிருக்கின்றோம்….
3.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யவும் சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் என்னைத் தங்கம் செய்யச் சொன்னார் குருநாதர். பாதரசம் ஈயம் காரீயம் இதை எல்லாம் கொண்டு வரச் சொன்னார். ஒரு இரும்புக் கரண்டியையும் கொண்டு வரச் சொன்னார்.

எல்லாம் போட்டு அதிலே அதிலே பாஷாணக் கல்களைப் போட்டவுடனே தண்ணீராகக் கரைகிறது. ரசமாக மாறி குழம்பு மாதிரி ஆகிவிடுகிறது.

அது குழம்பு மாதிரி ஆன பிற்பாடு அங்கே இருக்கிற குப்பை செத்தை எல்லாவற்றையும் போட்டு எரிக்கச் சொன்னார். அது எரித்தவுடனே அதிலே இருக்கக்கூடிய அழுக்குகள் எல்லாம் ஆவியாகப் போய்விடுகிறது.

அதிலே பாதரசம் மாதிரி மிஞ்சுகிறது, பல பொருள்களும் அது வேக வேக இந்த உணர்வுகள் அதிகமாகிறது. கடைசியில் “இது எப்படிடா இருக்கிறது…?” என்று கேட்டார் குருநாதர்.

நெருப்பிலே இருந்தால் எப்படி இருக்கும்..? அது பளீர்…! என இந்த நெருப்பு மாதிரியே தெரிந்தது.

எப்படிடா இருக்கிறது…? என்றார்.

தக…தக…! என்று இருக்கிறது என்று சொன்னேன்.

என்னடா…! தக…தக…? என்று சொல்லி எனக்கு இரண்டு அடி கொடுத்தார். அவர் எப்படி இருக்கிறது என்று கேட்கக் கேட்க நான் தக…தக…! என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

தக…தக…! என்றால் என்ன…? என்றார்.

தங்கம் மாதிரி இருக்கிறது….! என்றேன்.

தூ……! என்று துப்புடா… போட்டு விட்டார். தூ…! என்று அவர் துப்பினார். இது எனக்குத் தெரியாது. தூ…! என்று உமிழ் நீரைத் துப்பி அதாவது
1.தங்கம் மாதிரி இருக்கிறது என்று சொல்லச் சொல்லி விட்டு
2.அந்த உணர்வை எடுத்து அது மேலே துப்புகின்றார்.

மூடுடா…! என்றார். அப்புறம் பார்த்தால் தங்கக் கட்டியாக இருக்கிறது. இதிலே இத்தனை வேலை இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்லி அந்த உணர்வை எல்லாம் எனக்குள் ஊட்டி ஒவ்வொரு அறிவையும் கொடுக்கிறார்.

தங்கத்தைக் கொண்டு போய் கடையில் விற்று வா என்றார் குருநாதர். நகைக் கடை ஆசாரி ஒருவரிடம் கொடுத்ததும் அவர் உரசிப் பார்த்தார்.

அட… அட… அடா…! நைனா… கிடைத்துவிட்டது கிடைத்துவிட்டது…! அவருக்கு வார்த்தையே வர மாட்டேன் என்கிறது. நீங்கள் இதை எதிலே செய்தீர்கள்…? எப்படிச் செய்தீர்கள்…! என்று கொஞ்சம் சொல்ல வேண்டும். பெரிய கட்டிடமாகவே கட்டிவிடலாம் என்று சொல்கிறார்.

நீ கிழவனுடன் (ஈஸ்வரபட்டருடன்) சேர்ந்து சுற்றிக் கொண்டு இருக்கும் போதே எனக்குத் தெரியும் என்று சொல்கிறார் அந்த ஆசாரி. இன்னும் கொஞ்சம் செம்பை அதிலே சேர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா நான் வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். அதை விற்று வந்துவிட்டேன்.

ஏனென்றால் குருநாதர் தங்கம் செய்ய என்னென்ன வேலை செய்தார்…? என்று
1.தங்கம் மாதிரி இருக்கிறது என்று சொல்லி
2.அந்த உணர்வுக்குண்டான கலவைகள் என்னென்ன…?
3.அதைச் சொல்லும் பொழுது “என்னென்ன உமிழ் நீர்கள் சுரக்கிறது…?” எனக்கு அந்த உணர்வை ஊட்டுகிறார்.

ஏனென்றால் பல கோடித் தாவர இனங்களையும் சாப்பிட்டு விட்டுத் தான் இன்று மனிதனாக வந்து இருக்கிறோம். அதில் எதை எதைக் கலக்க வேண்டும்…? என்று உணர்த்தி அந்த உமிழ் நீரை அதில் துப்பும்படிச் சொல்லி அதில் பட்டவுடனே எப்படித் திரவகத்தை ஊற்றியதும் நிறங்கள் மாறுமோ அது மாதிரி அங்கே உயர்ந்த தஙகமாகிறது.

இப்படி அனுபவபூர்வமாகச் செய்து காட்டினார் குருநாதர்.

(ஆனால் மற்றவர்கள் தங்கம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பாதரசத்தையும் பச்சிலைகளையும் உருட்டிப் பிரட்டி என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள். கடைசியில தங்கத்தையும் கலக்கின்றார்கள். எல்லாம் முடிந்ததும் பார்த்தால் போட்ட தங்கம் மட்டும் இருக்கிறது மற்ற எல்லாம் கரைந்து போய்விடுகிறது. தங்கம் செய்வதைக் கொஞ்சம் காட்டிக் கொடுங்கள். உங்களுக்குக் கோவிலையே கட்டிவிடலாம் என்று எமக்குப் (ஞானகுரு) பின்னாடி சுற்றியவர்கள் ஏராளம் பேர்)

அப்புறம் குருநாதர் எப்படிச் செய்தாரோ அதே போல் நானும் முயற்சி செய்தேன். அவர் எங்கெங்கே போய் குப்பை செத்தை எல்லாம் அள்ளச் சொன்னாரோ மறுபடியும் நான் அதை எடுத்தேன்.
1.எல்லாம் செய்து அவர் சொன்ன மாதிரி அந்த உணர்வு கொண்டு தூ……! என்று துப்பினேன்.
2.இரண்டாவது தரம் தங்கமாகிப் போனது…!

நகைக் கடைக்குக் கொண்டு போனவுடனே அந்தக் கட்டியைப் பார்த்தவுடனே “துள்ளுகிறார்கள்…” அடடா…! தினம் இவ்வளவு கொண்டு வந்து கொடுத்தால் போதும்…! என்கிறார்கள்.

அப்புறம் என்னை விரட்டி விரட்டிப் பிடித்தார் குருநாதர்.
1.அவன் ஆசையை ஊட்டி விட்டு உனக்கு யோசனை சொல்கிறான்.
2.”நீ உன் மனதை தங்கமாக்க வேண்டும்…!” என்று நான் சொன்னால்
3.நீ இதைப் போய்த் தங்கமாக்குகிறாயே…!
4.அவன் ஆசையை ஊட்ட நீ தங்கத்தைச் செய்ய எங்கேடா போகிறாய்…?
5.உன்னுடைய ஒவ்வொரு உணர்வும் அது மங்காத நிலைகளுக்கு
6.”அந்தத் தங்கம் போல் உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்யச் சொன்னேன்..!” என்று தெளிவாக்கினார் குருநாதர்.

சாதாரணமாக நான் கற்றுக் கொள்ளவில்லை. ஒவ்வொன்றிலேயும் “அடி வாங்கித் தான் கற்று வந்தேன்…” சொல்வது அர்த்தம் ஆனதா…?

முதலில் தங்கத்தை விற்றதற்கு ஒன்றரை ரூபாய் கொடுத்தார். இரண்டாவது கொடுக்கும் போது… சுத்தமாகவே நீ பொய் பேசினாய்… ஏமாற்றினாய் அதனால் உனக்குக் காசில்லை… போ…! என்று விற்ற காசு எல்லாவற்றையும் வாங்கி கொண்டு விட்டார்.

அது மட்டுமல்ல. அடி வேறு கொடுத்தார்.
1.நீ திருடன்டா…! என்கிறார்.
2.தங்கம் செய்துவிட்டு ஏமாற்றித் தப்பி ஓடலாம் என்று பார்க்கிறயா…?
3.நீ உன் மனதைத் தங்கமாக்குடா… போடா…….!

இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்க வேண்டும்

 

கர்ப்பிணியாக இருக்கும் அனைவரும்
1.வியாசகன் அகஸ்தியன் போகர் என்று பெரும் தத்துவ ஞானிகளுடைய பெரும் மகரிஷிகளின் உணர்வுகளை எண்ணி எண்ணி ஏங்குங்கள்.
2.கருவிலிருக்கக்கூடிய குழந்தை அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.இவ்வாறு பெரும் மகரிஷிகளை நீங்கள் சிருஷ்டிக்க வேண்டும்.

எதிர்காலக் குழந்தைகள் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்திகளைப் பரப்பினால் தான் விஞ்ஞான அறிவால் பேரழிவாக வந்து கொண்டிருக்கும் நிலையிலிருந்து இந்த உலகை மீட்ட முடியும்.

காரணம்… மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற நிலையில் உருப்பெற்றுக் கொண்டிருக்கும்… அசுர உணர்வுகள் பரவிக் கொண்டிருக்கும்… மனிதனை மனிதன் என்று இல்லாது அசுரத் தன்மை கொண்டு அழித்திடும் உணர்வுகள்… ஒவ்வொரு மனிதனின் நிலைகளிலும் இது ஊடுருவி உள்ளது.

அத்தகைய அசுர உணர்வுகளிலிருந்து மீட்டிட அந்தச் சப்தரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு உருப்பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கிப் பெறுவீர்கள் என்றால்
1.அந்தக் குழந்தை உங்களையும் காக்கும் உங்கள் குடும்பத்தையும் காக்கும்.
2.எந்த ஊரிலே பிறந்ததோ அந்த ஊரையும் காத்திடும்.
3.அதனின்று உலகைக் காத்திடும் நிலை வரும்.

விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவை அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைகள் அது வளர வளர வளர இந்த உலகில் உள்ள தீமைகளை மாற்றி அமைத்திடும் திறன் பெறும்.

இனி இந்த உலகம் பெரும் மாற்றங்களைச் சந்திக்கப் போகின்றது. எவ்வளவு கோடிப் பணம் வைத்திருந்தாலும் அவை நமக்கு உதவப் போவதில்லை.

1.இன்று காஷ்மீரிலோ அல்லது இந்தியாவின் சில பகுதிகளை எடுத்துக் கொண்டாலோ
2.அல்லது மற்ற பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் உள்ளோர் அனைவருமே தன் பிள்ளை எது…? தன் குழந்தைகள் எது…? என்று
3.செல்வங்கள் அழிந்து… அனாதைகளாக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
4.இது போன்று உலக நிலைகள் அனைத்திலும் ஆப்பிரிக்காவிலும் இன பேதங்களால் பேரழிவுகள் வந்து கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் இது போன்று ஏற்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில்… அகஸ்தியனால் தீமைகளை அழித்திடும் ஆற்றல் அவனில் பெற்று தீமையற்ற உடலாகத் தான் வளர்த்து… இன்றும் துருவ நட்சத்திரமாக… ஒரு பேரண்டமாக சப்தரிஷி மண்டலமாக வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அகஸ்தியன் காட்டிய அறநெறியைப் பின்பற்றி எத்தனையோ தத்துவ ஞானிகளும் மகான்களும் தோன்றியுள்ளார்கள். ஆகவே… இன்று கர்ப்பிணியாக இருப்பவர் அனைவரும் அந்த அகஸ்தியன் வியாசகன் போகர் போன்ற அந்த மகரிஷிகளுடைய உணர்வுகளைக் கருவிலிருக்கும் குழந்தைக்கு இணைத்துப் பழகுதல் வேண்டும்.

பிருகு அத்திரி போன்றவர்கள் ஆரம்பத்தில் அரசர்களாக இருந்தாலும் பின்பு பெரும் கொண்ட சக்திகளை தங்களுக்குள் பெருக்கி வளர்த்துக் கொண்டார்கள். அத்தகைய மகரிஷிகளின் உணர்வுகளைக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைகள் பெற வேண்டும் என்று சதா அதை உருப் பெறச் செய்யுங்கள்.
1.உலகில் இருக்கும் அசுர சக்திகளை மாற்றிடும் திறன் அந்த எதிர்காலக் குழந்தைகளுக்கு வளர்கின்றது.
2.தீமைகளில் இருந்து உலகைக் காத்திட இந்தத் தென்னாடு பயன்படப் போகின்றது.

உலகில் பேரழிவு வரும் இந்த நேரங்களில்… இந்த உபதேசத்தைக் கேட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள சகோதரிகள் கர்ப்பிணிகளாக இருந்தால் இதை உபதேசியுங்கள்.

அவ்வாறு நாம் செய்தோம் என்றால்
1.இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்கலாம்.
2.அவர்களின் மறைவில் நாமும் பிறவா நிலையை அடையலாம். இதை மனதில் வைத்துச் செயல்படுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

போகருடைய தாயை ஒரு விஷம் கொண்ட பாம்பு தீண்டி விடுகின்றது. காளிங்கராயன் என்பவரை போகர் அப்போது அணுகுகின்றார்.

தன் தாயைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அவரிடம் பல பச்சிலை மூலிகைகளை அறிந்து அதை வைத்துத் தன் தாயை எழுப்புகின்றார். விஷத்தின் தன்மை எவ்வாறு ஒடுக்குவது…? என்று அவரிடம் பழகித் தெரிந்து கொள்கின்றார்.

விஷத்தை ஒடுக்கும் உணர்வினைத் தனக்குள் அதன் உணர்வின் அறிவாக தெளிந்த நிலையில் கொண்டு வருகின்றார். போகர். அதன் வரிசையில் தான் பல ஆற்றல்கள் அவருக்குள் பெருகத் தொடங்கியது.

1.நட்சத்திரங்கள் கோள்கள் இயக்கங்களையும் அறிகின்றான்… வான மண்டலத்தையும் அறியத் தொடங்குகின்றான்.
2.இதையெல்லாம் அறிந்த பின் அவன் இன்னொரு கூட்டிற்குள் (உடலுக்குள்) செல்லவில்லை
3.ஒளியின் தன்மையைப் பெருக்குகின்றான்…
4.ஒளியின் தன்மை ஆனாலும் உந்தித் தள்ளி விண்ணுக்கு அவனை அனுப்பும் வழி இல்லை.
5.ஏனென்றால் அதற்குண்டான முகப்பு வரவேண்டும்… இருந்தாலும் அந்த ஒளி அலைகள் வருகின்றது.

குருநாதர் போகரைப் பற்றிச் சொல்லும் பொழுது அவன் பெரிய திருடன்… வானத்தையே திருடி இருக்கின்றான்…! ஆனால் விண்ணுக்குப் போகும் வழியைத் திருடத் தெரியவில்லை…! நீயும் ஒரு திருடன் ஏன்று என்னிடம் (ஞானகுரு) சொல்கின்றார்.

அப்பொழுதுதான் இந்த உணர்வின் தன்மை எடுத்து
1.போகருக்கு நீ அந்த விண் செல்லும் பாதையின் உணர்வைச் செலுத்து
2.அந்த உயர்ந்த உணர்வுகளை… நினைவுகளை எடு
3.அவருடன் தொடர்பு கொள்… அந்த உணர்வின் துணை கொண்டு இந்த முகப்பைக் கூட்டு.
4.ஒளி நிலை பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியை அவரிடம் இருந்து நீ பெறு
5.ஏனென்றால் உயர்ந்த சக்தி பெற்றவர்.. அந்த உணர்வின் துணை கொண்டு விண்ணுக்குச் செலுத்து என்றார் குருநாதர்..

இப்படித்தான் இராமலிங்க அடிகள்… காந்தியடிகள்… விவேகானந்தர் என்று இது போன்று ஏனைய எத்தனையோ மகான்களை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர். “ஒன்று இரண்டு அல்ல…”

ஒவ்வொருவரும் தத்துவங்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டாலும்
1.விண் செல்லும் பாதையை அந்த முகப்பின் தன்மை எவ்வாறு அவர்களுக்குச் சேர்க்க வேண்டும்
2.ஆன்மாக்களை எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்று தெளிவாகக் கூறினார் குருநாதர்.

இந்தப் பழக்கத்தை எல்லாம் ஏற்பபடுத்திய பின்பு தான் அவருக்கும் “தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும்” என்று குருநாதர் இந்த வேலையைச் செய்தார்.

ஏனென்றால்
1.அவர் (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ உடல்களைத் தாவியவர் தான்
2.தகுந்த உடல்கள் பெறவில்லை… அதற்குத் தகுந்த உணர்வுகள் கிடைக்கவில்லை
3.அவரவர்கள் இச்சைக்குத் தான் செல்கின்றார்கள்.
4.(குரு தன்மை அடைவதற்கு இப்படி எத்தனையோ நிலைகள் இருக்கின்றது).

அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இருக்கின்றதோ அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் முருகன் சிலையை வைத்தான் போகன். அது யாருக்கும் தெரியாது.

போகன் சிலையை மாற்ற வேண்டும்… வைக்க வேண்டும்… என்று பல பேர் வந்து கேட்டார்கள். அந்த மாதிரிச் செய்ய முடியாது. ஏதாவது மீறித் தொட்டீர்கள் என்றால் குடும்பம் எல்லாம் நாஸ்தி ஆகிவிடும்… தொடும் குடும்பம் எல்லாம் நாஸ்தியாகிவிடும் என்று சொன்னேன்.

உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிலையை வைத்தான் போகன்.

ஆனால் தனித்த நிலைகள் கொண்டு சுயநலத்திற்காக வியாபாரத்திற்காக அந்தச் சிலையைப் பயன்படுத்தினால் அவன் யாரும் உருப்பட மாட்டான்.

ஏமாற்றும் நிலைகள் கொண்ட எவனும் இங்கே உருப்படியாக மாட்டான். மற்ற கோவில்களில் செய்வது வேறு… அங்கிருக்கக்கூடிய சிலைகள் வேறு. பழனி முருகன் சிலை அப்படிக் கிடையாது. அத்தனை பெரிய அணையை போகன் இங்கே போட்டு வைத்திருக்கின்றார்.

தவறு செய்ய முடியாது… தவறு செய்தான் என்றால் நொறுங்கிப் போவான். உணர்வின் தன்மை விஷமாகிவிடும். விஷத்தை உட்கொண்டால் எப்படி நினைவிழக்கச் செய்யுமோ… புழுவாக பூச்சியாக பாம்பாகத் தான் அடுத்து பிறக்க நேரும்.

இந்த உடலில் நேரமாகி விட்டது

 

நமது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் ஒன்றைப் பார்த்து, அதனிடமிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகொண்டு அதற்கு இரையாகி அதனின் உணர்வைக் கவர்ந்து… கவர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப சரீரம் பெற்று, இப்படி பல கோடிச் சரீரங்களைப் பெற்றுப் பல கோடி சரீரங்களைப் பெற்றதன் பின்
1.இன்று எல்லாவற்றையும் அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாக
2.நம்மை மனிதனாக உருவாக்கியது… இதுதான் “கோடிக்கரை”.

நாம் எதை எண்ணுகின்றோமோ உயிர் அதை உருவாக்குகின்றது. உணர்வின் தன்மையை நமது உடலாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக, அன்று ஞானிகள் இராமேஸ்வரம் என்று பெயரை வைத்து, ஸ்தல புராணங்களை வடித்து வைத்தார்கள்.

1.உலகில் எங்கிருந்து சுழன்று வந்தாலும் எத்தனை ஆலயங்களுக்குச் சென்று வந்தாலும் எத்தனை தெய்வங்களை வணங்கினாலும்
2.கடைசியாக மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும் என்று கூறுகின்றனர்.

ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு குணமும் நுகரப்படும்போது, அந்த குணங்களுக்கெல்லாம் அந்தந்த உடலைக் காக்கும் நிலை வருகின்றது. காத்திடும் உணர்வுகள் அந்தந்த உடலில் வரப்படும்போது, அந்த குணங்கள் அனைத்தும் தெய்வமாகின்றது.

நுகர்ந்த உணர்வின் எண்ணங்களை உயிர் உடலாக உருவாக்குகின்றது. அதாவது, எதை நுகர்கின்றோமோ அதை “ஓம் நமச் சிவாய” என்று நமக்குள் ஜீவ அணுவாக மாற்றி, உடலாக மாற்றி விடுகின்றது நமது உயிர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை நாம் ஏசும் பொழுது “ஏசுகின்றார்” என்ற உணர்வை எடுத்து, அந்த உணர்வுகள் அவரிடத்தில் உடலாகி விட்டால் அவருடைய உடலுக்குள் சேரும் அனைத்தும் “சிவதனுசு”.

நம் உடலுக்குள் அதே ஏசிய உணர்வின் தன்மை பதியும்போது, அதனின் எண்ணங்கள் கொண்டு நமது செயலாக்கங்கள் இருக்கும் என்பதைத்தான் நமக்குக் காவியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

நமது உடலில் சேர்த்த உணர்வு கொண்டு “ஒருவன் என்னைக் கோபித்தான்” என்று தன் நண்பன் ஒருவரிடம் சொல்லி,
1.“என்னை இது மாதிரியெல்லாம் பேசுகிறான் அவனை விடுவேனா பார்” என்று அங்கு சொல்லப்படும்போது,
2.நமது உடலில் விளைந்த இந்த உணர்வுகள் தனுசாக மாறி கோபமான சொல்லின் உணர்வுகள் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.அதற்குத்தான் “தனுசு” என்று பெயர் சூட்டுகின்றனர்.

ஓருவர் நமக்கு தீங்கு செய்தார் எனும்போது, அதனின் உணர்வின் தன்மை “ஓம் நமச்சிவாய” என்று
1.நமது உடலாகும் பொழுது சிவம் ஆகின்றது.
2.அதனின் உணர்ச்சிகள் சொல்லாக வெளிப்படும் போது சிவதனுசு ஆக மாறுகின்றது.

ஆனால் ஒருவர் நம்மைத் திட்டியதை நமது நண்பரிடம் சொல்லுகின்றோம். நண்பரிடத்தில் சொல்லப்படும் பொழுது, இந்த உடலில் திட்டிய உணர்வுகள் வந்ததனால்“அவனை நான் விடுவேனா பார் அவனைத் தொலைத்துக் கட்டுகிறேன் பார்” என்று நாம் சொல்லுகிறோம்.

ஆனால் நம்முடைய நண்பர் அவருக்கும் (திட்டியவர்) நண்பராக இருக்கும் பட்சத்தில் நம்மைப் பற்றி அவர் (திட்டியவர்), நமது நண்பரிடத்தில் கூறியதை நண்பர் நம்மிடம் வந்து “அவர் உன்னை இந்த மாதிரிப் பேசுகிறார்…” என்று சொல்லும்போது என்ன ஆகின்றது…?

நாம் “ஆ…. அப்படி ஆகிவிட்டதா…! அவனை அடிக்கிறேன் அவனைக் கொல்கிறேன்” என்று இத்தகைய உணர்வுகளைச் சுவாசிக்கும்போது, சுவாசித்த உணர்வுகள் என்ணங்களாக மாறுகின்றது,

1.அதனின் உணர்ச்சிகளை உடலாக மாற்றுகின்றது
2.சொற்கள் தனுசாக மாறி, எவரைச் சொல்கின்றோமோ
3.அவரிடத்தில், இதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
4.அதனால்தான், நமது உடலிலே விளைந்த உணர்வுகளை “சிவதனுசு” என்று காவியங்கள் தெளிவாக கூறுகின்றன.

ஆகவே நாம் உயிரால் நுகரப்படும் உணர்வுகள் உடல் பற்றுடன் இருக்கப்படும்போது, பற்றின் உணர்வுகள் இந்த உடலைக் காப்பதற்குத்தான் இந்த தனுசு உதவும்.

உடல் பற்றின் தன்மை கொண்டுதான் பல கோடிச் சரீரங்களைப் பெற்று, இன்று “கோடிக்கரையாக” மனித உடலைப் பெற்றோம் என்பதனை இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

இராமாயணத்தில் “இராமேஸ்வரம்”, எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது, என்பதை உணர்த்தும் நிலையாக இராமர் தனுசுகோடிக்கு வந்தபின் பூஜைக்கு நேரமாகிவிட்டது என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.

ஏனென்றால்
1.“நேரமாகிவிட்டது” என்றால் பூஜை செய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர்.
2.ஆனால் “இந்த உடலில் காலதாமதமாகி விட்டது” என்பதுதான் அதனுடைய பொருள்.
3.நமது உணர்வுகளை ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு, இராமர் மணலைக் குவித்து (மனதைக் குவித்து)
4.சிவபூஜை செய்தார்… சிவலிங்கத்தை பூஜித்தார்… சிவலிங்கமாக மாற்றினார் என்று காண்பித்தார்கள்.
5.எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.

அனைத்துத் தீமைகளையும் விஷத்தையும் வென்றது, துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை, காலையில் சூரியன் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. அதை நமது பூமி, துருவப் பகுதி வழியாகக் கவர்கின்றது.

இப்படி நம் பூமியில் படரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை, மனிதர்களான நாம், நமது எண்ணம் கொண்டு நம்முள் பெற முடியும். ஆகவே
1.இதிலிருந்து நாம் இராமேஸ்வரம்… நமது எண்ணத்தால்… துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
2.“தனுசுகோடி”, நம் என்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் நுகரும்போது,
3.அதனின் உணர்வுகள் நமது உயிருடன் ஒன்றி கடைசி நிலையாகப் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது என்ற நிலையை அறிந்து தியானித்து, இதனின் உணர்வின் எண்ணங்களை நமக்குள் வளர்க்க வேண்டும்.

இதனை நமது எண்ணங்கள் கொண்டு, எப்படி வளர்க்க வேண்டும்…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், தன்னைக் காத்திடும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து நுகர்ந்தறிந்த உணர்வுகளுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆகவே, எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட உணர்வுகள் மனிதராகப் பிறக்கின்றது.
1.தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து
2.தீமையிலிருந்து விடுபடும் மனிதரின் உடலை நமது உயிர் உருவாக்கியுள்ளது.
3.ஆகவே மனிதர்களான நாம் தான் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைகளை எண்ண முடியும்.

ஆனால் தனுசுகோடி என்பது உயிர் பல கோடித் தீமைகளை வென்று தீமைகளையும் விஷங்களையும் வெல்லக்கூடிய சக்தி பெற்று உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.

நாம் அனைவரும் உயிரோடு ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் எமது அருளாசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் கடைசிக் கரையாக இதை மனிதன் புரிந்து கொள்வதற்காக ஓரத்தில் ஒதுங்கி ஒரு திட்டுக்குள் கொண்டு வருகின்றார்கள் – கோடிக்கரை.

அங்கே கடல் தெரிகின்றது.
1.அந்தக் கடலுக்கு நேராக வடக்குத் திசையில் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கும் அளவிற்கு அந்தத் தீவும் அமைந்திருக்கின்றது.
2.அதனால் இராமேஸ்வரம் என்ற ஊரில் அங்கே துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சாதாரண மக்களும் எண்ணி ஏங்கி
3.இந்த உடலுக்குள் சார்ஜ் செய்வதற்குக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஏற்றி வலுப்படுத்திக் கொண்டபின் அடுத்து தனுசு கோடி.

சந்தர்ப்பத்தில் நம் வாழ்க்கையில் எத்தனையோ வேதனைகளைச் சந்திக்கின்றோம். உதாரணமாக ஒரு பொருள் உடைந்து அதிகமான பணம் செலவழிந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்திவிட்டு, “சரி நாளைக்குச் சம்பாதித்துக் கொள்வோம்…” என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம்
1.பக்தி மார்க்கத்திலே பக்தி எப்படி இருக்க வேண்டும்…?
2.மனிதன் தீமைகளை எப்படி நீக்க வேண்டும்…?
3.அதற்கு வேண்டிய உபாயங்களைக் கொடுத்துக் காட்டியுள்ளார்கள்.

ஆகவே தனுசு கோடி எத்தனை கோடி உணர்வுகளைப் பெற்று இன்று இந்த மனிதனாக ஆனோமோ தீமைகளை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த வாழ்க்கையில் எடுத்துக் கொண்டு வந்தால் ஒவ்வொரு நிலைகளிலும் கோடி.
1.இப்படிக் கோடி உணர்வுகளை எடுக்கப்படும்பொழுது
2.நம் உயிர் ஒன்றாகின்றது.

கோடி உணர்வின் ஒளியின் ஒன்றாகி அது இன்றைக்கு ஒளியின் சரீரமாக இருப்பது துருவ நட்சத்திரம். அங்கே சென்றால் நாமும் ஒளியின் சரீரம் ஆகின்றோம்.

27 நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து சூரியன் ஒளியாக ஆகிறது. அதே போல 27 நட்சத்திரத்தின் உணர்வுகளால் விளையப்பட்ட தாவர இனங்களின் உணர்வையெல்லாம் எடுத்து இந்த உயிர் என்ன செய்கிறது…? உணர்வின் ஒளியாக மாறுகின்றது.

1.27 நட்சத்திரத்தின் உணர்வுகள் எடுத்து நமக்குள் மனிதனாகி ஒளியின் உணர்வு பெற்றபின்
2.அது ஒளியின் உடலான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.

சாதாரணமாக நாம் வாழும் (மற்ற) இடங்களில் துருவ நட்சத்திரத்தைப் பார்க்க முடியாது. அந்தக் கடலோரப் பகுதிப் பக்கம் போகும் போது இராமேஸ்வரத்தில் வடக்குத் திசையில் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம்.

துருவ நட்சத்திரத்தைப் பார்த்து அதை நமக்குள் உரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் ஞானிகள் அன்று அந்த இராமேஸ்வரத்தில் காட்டியுள்ளார்கள்.

இதை யாரும் சொல்வதில்லை. ஆனால் இன்று என்ன செய்கிறார்கள்…?

காசை வாங்கிக் கொண்டு சாங்கியங்களைச் செய்து பாவத்தைப் போக்கும் இடம் என்று
1.தவறான பாதைகளைக் காட்டித் தவறான வழிகளில் போய்
2.அதுதான் நமக்குச் சிறந்தது என்று
3.இதன் வழிதான் பெரும்பகுதி மக்கள் போய்க் கொண்டுள்ளார்கள்.

நமது வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஞானிகள் காட்டிய நிலைகளில் உன் உயிரை நீ மதித்து நட, உன்னை அறியாது சேர்த்த அழுக்கை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியை எடுத்துக் கொள் என்று தான் இராமேஸ்வரத்தை வைத்துள்ளார்கள்.

ஏனென்றால் 27 நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத்தான் பாதரசமாக மாற்றி இந்த உலகையே ஒளியாக ஆக்குகின்றது சூரியன்.

27 நட்சத்திரத்தின் உணர்வால் விளைந்த தாவர இனத்தின் உணர்வை உயிர் உணர்ச்சியின் எண்ணங்களாக ஆக்கப்பட்டு உணர்ச்சிக்கொப்ப நாம் இயங்குகின்றோம். (மனிதனாக்கப்பட்ட நிலை)

27 நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒளியின் உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன்.
1.விஷத்தின் தன்மையை முறித்தவன்,
2.உணர்வின் தன்மையை ஒளியாக்கியவன்
3.ஒளி உடலாக ஆனவன் அகஸ்தியன்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆண் பெண் என்ற நிலைகளில் இணைந்து ஒளி உடல் பெற்றவன் அவன். உணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை இதே சூரியன் தான் கவர்கின்றது. நமக்கு முன் வந்து கொண்டிருக்கின்றது.

ஒரு செடியிலிருந்து வெளிப்படும் சத்தை சூரியன் கவர்கின்றது. உயிரணு நுகர்ந்தால் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அணுவின் தன்மை உருவாகி உடலாக மாறுகின்றது.

செடியில் விளைந்த சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்தால் அந்தச் செடியின் வித்தை மண்ணிலே ஊன்றினால் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தை எடுத்து அதே செடியாக விளைகின்றது. அதே உணர்வு அதே வித்து அதனின் நிலையாக உருவாக்குகின்றது.

27 நட்சத்திரத்தின் சத்தை முழுமையாக எடுத்துப் பாதரசமாக சூரியன் மாற்றி உலகை உருவாக்குவது போன்றுதான்
1.இதே உயிர் பல விதமான உணர்வுகளை எடுத்து 27 நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டது.
2.ஒளியின் உடலாக அதே உயிர் கொண்டு நம் உணர்வை ஒளியாக மாற்ற முடியும்.

வேதனைப்படுவது என்பது மனிதனைக் கொல்லும் நஞ்சு

 

ஒரு விஷம் தாக்கப்பட்டால் எப்படி உடல் எல்லாம் செயலற்றுப் போகின்றதோ “இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மையினால்”
1.உடலில் உள்ள மற்ற நுண்ணிய பாகங்களில் அது பட்டபின் நம் நரம்பியல்கள் உணர்ச்சியற்ற நிலையாகி விடுகின்றது.
2.தசைகளில் மிஞ்சியுள்ள இரத்தத்தில் அதனுடைய உணர்ச்சிகள் கோபத்தை உண்டாக்குவதும் அங்கங்களைச் செயலற்றதாகவும் மாற்றி விடுகின்றது.
3.உடல்களிலே உணர்ச்சியற்ற நிலையும் உணர்வுகள் இழந்த நிலையில் நரம்புகளில் உள்ள அனைத்தும் சுருங்கப்பட்டு முடக்கு வாதங்கள் போன்று பிரஷர் வந்தவருடைய நிலைகள் கை கால் அங்கங்கள் குறுகி விடுகின்றது.
4.சிறு மூளையில் இது தாக்கப்பட்டால் அதனின் செயலற்ற நிலைகள் வரும்பொழுது கைகால் அங்கங்கள் செயலற்றதாக மாறிவிடுகின்றது.
5.பித்த சுரப்பியில் நஞ்சின் தன்மை அதிகமாகி விட்டால் பித்தம் அதிகமானால் தலை சுற்றி கீழே எப்படி விழுகின்றோமோ இதைப் போல் ஒவ்வொன்றும் செயலற்றதாக மாறி அங்கங்கள் சோர்ந்து வீழ்ச்சி அடைந்து விடுகின்றது.
6.சுவாச உறுப்புகள் பலவீனம் ஆகிவிட்டால் சரியாகச் சுவாசம் எடுக்க முடியாத நிலைகளும் ஆகி விடுகிறது.

இதைப் போன்று சிறுகச் சிறுக நாம் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தால் நம்முடைய சுவாச நாளங்களில் உள்ள அனைத்தும் பலவீனமாகி அதில் ஏற்படும் உராய்வின் தன்மை சரியாக இயக்கவில்லை என்றால் ஆஸ்மா போன்ற நோய்களும் மூச்சுத் திணறல் போன்ற நோய்களும் உருவாகி விடுகின்றது.

நாம் கூர்ந்து சிந்திக்கும் கண்களுக்கு… பார்வைக்குச் செல்லும் பொழுது வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் நமக்குள் கலக்கப்படும் பொழுது கண் கொண்டு ஒரு பொருளை நாம் காணுவது என்பது அந்த பொருளைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைந்து விடுகின்றது… மறைத்து விடுகின்றது.

பொருளைச் சிறிது நேரம் காணுவோம் என்றால் அல்லது அந்தப் போருளைச் செயல்படுத்த முடியாத நிலைகள் சோர்வடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால் கண்ணில் இருக்கும் கருவிழியால் அது கவர்ந்தாலும் அதிலே எடுத்த அமில சக்தியின் தன்மை உடல் முழுவதும் ஊடுருவி அடையச் செய்யும் இந்த நாளங்கள் அது மங்கிச் செயலற்றதாகி விடுகின்றது.

இவ்வாறு நாம் அடிக்கடி செயல்படுவோமே என்றால் கருவிழிகளில் படும் பட உணர்வுகளை அது தெளிவாக எடுத்துக்காட்டாத நிலைகள் மங்கும் நிலை அடையப் படும்பொழுது பொருள் காணும் நிலைகளில் கவர்ந்த கருவிழியும் அதுவும் பலவீனமடைகின்றது.

கண்களில் உள்ள அந்த நுண்ணிய படத் திரைகளைக் காட்டும் அந்தத் திரை வழியும் பலவீனம் அடைந்து விடுகின்றது. நாம் பிறரைப் பார்த்தாலும் தெளிவாகத். தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உருவாகின்றது.

இரண்டு பேர் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்து அதன் மூலம் வேதனப்பட்டதால் இத்தகைய நிலை ஏற்பட்டு விடுகின்றது.

ஆகவே இது சிறுகச் சிறுக விளைந்து
1.இதனின் பலனாக நமக்குள் கோபமும் வேதனையும் வரும் பொழுது
2.குடும்பத்தில் அவசர உணர்வுகள் உந்தப்படும் நிலையும்
3.பிறிதொன்றைப் பார்க்கப்படும் பொழுது நமக்குள் பதிய வைத்த இந்த உணர்வுகள்
4.குடும்பத்தில் உற்று நோக்கும்பொழுது நம்மை அறியாது கோபமும் வேதனையும் பட நேரும்.

இதைப் போன்ற உணர்வுகள் நமக்குள் ஆன்மாவாக மாறும் பொழுது நமக்குள் இனம் புரியாது மனக்கலக்கங்களும் கோபமும் வெறி கொண்ட உணர்வுகளும் செயல்படுத்திக் கொண்டே இருக்கும்.

பலவிதமான உணர்வுகளை நமக்குள் அவ்வப்பொழுது சந்திக்கும் நிலைகள் கொண்டு நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் மாறுபட்ட நிலைகள் கொண்டு உடலில் “பல பிணிகளை” ஏற்படுத்தும் நிலைகள் உருவாகி விடுகின்றது

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான எதிர் நிலையாகும் பொழுது கிட்னிக்கோ கண்ணிற்கோ கல்லீரலோ நுரையீரலிலோ இதைப்போன்ற நிலைகள் மாசுபடும் பொழுது இந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகின்றது

1.அதீதமான வேதனைகளை நாம் படுவோமே என்றால் கேன்சர் என்ற வித்தாக முளைக்கத் தொடங்கி விடுகின்றது
2.விஷச் செடியின் தன்மை முளைத்து விட்டால் ஆரம்பமாக இருக்கும் பொழுது தெரியாது… .கேன்சர் நோயும் அப்படித்தான்.
3.அதனின் முதிர்ந்த பருவம் வித்தின் தன்மை முளைத்து முடிவில் தான் தெரிய வரும்.

உதாரணமாக கஞ்சாச் செடி அது முதிர்ந்து கடைசியில் பிசின் ஒழுகும் போது தான் அதனுடைய மணங்கள் தெரிய வரும்.. அதுவரையிலும் அது கஞ்சாச் செடி என்று தெரிந்து கொள்ளவே முடியாது அதனுடைய மணம் அப்பொழுது தான் வீசும்.

1.இதைப் போன்ற துரித நிலையில் மனிதன் வேதனைப்பட்ட இந்த உணர்வுகள் அது சிறுகச் சிறுக விளைந்து
2.கஞ்சா செடியைப் போல\ இந்த உடலின் மணத்தை வேதனையாக உருவாக்கி வரும் பொழுது தான் கேன்சர் என்றே அறிய முடியும்
3.அதுவரையிலும் வயிற்று வலி மற்ற வழி என்ற நிலையில் அல்லது மேல் வலி கை வலி என்ற நிலைகளும்
4.அதை நாம் எத்தகைய மருந்து சாப்பிட்டாலும் அது கேட்காது.

சிறுகச் சிறுக வேதனையைக் குறைத்து வந்தாலும் “அது முழுமையான வித்தை அடையப்படும் பொழுது” நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஆகிய விடுகின்றது.

நவீன விஞ்ஞான அறிவு கொண்டு கருவிகளை வைத்துக் கண்டுணர்ந்தாலும் அதனைத் தடுத்திடவும் முடியாத நிலை ஆகிவிடுகிறது.
1.ஒரு வேதனை என்ற வித்து நமக்குள் தொடர்ந்து விட்டால் அதனுடைய கிளைகள் அதிகமாக உடல் முழுவதும் பரவி
2.நாம் எண்ணிய எண்ணத்துடன் மூளை பாகம் வரையிலும் அதனுடைய தொடர்பலைகள் உண்டு.
3.மூளையிலிருந்து எண்ணத்தால் உருப்பெறும் உணர்வுகள் ஒரு பக்கம் அறுவை சிகிச்சை செய்து அதை எடுத்தாலும்
4.அதனின் விழுதின் தொடர் கொண்டு மீண்டும் அவருடைய தொடர் வரிசையாகத் தான் வரும்.

இன்று இல்லை என்றாலும் பத்து வருடம் கழித்து வேதனை என்ற நிலைகள் உருவாகி அந்த கேன்சர் என்ற நிலை வந்தால் அந்த கேன்சரை எடுத்து விட்டு மீண்டும் அதை மீண்டும் அதை விட்டோம் என்றால் வாழ் நாளுக்குள் மீண்டும் அது தழைத்து ஓங்கச் செயல்படுத்திவிடும். முழுமையாக அறுத்திடும் நிலை இல்லை.

காரணம்
1.நஞ்சினுடைய அதிவீரியத்தன்மையின் செயலாக்கங்கள் தான் இவைகள் எல்லாம்.
2.எக்காரணத்தைக் கொண்டும் வேதனைகளை நம் வாழ்க்கையில் வளர்த்து விடக் கூடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைக்க வேண்டும்.

அவருடைய உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு. நாம் எடுத்துக் கொண்ட ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் என்று
1.அவர்களை உந்திச் செலுத்தும் பொழுது
2.நேராக சப்தரிஷி மண்டலம் போய்ச் சேர்கின்றது.

சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளை அவர்கள் கரைத்தவர்கள். அங்கே சென்றவுடன் நம் முன்னோர்கள் மீண்டும் உடல் பெறும் அந்த உணர்வுகளைச் சுட்டுப் பொசுக்கி விடுகின்றது… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது

கரைத்த பின் அறிவாக இருக்கும் அந்த ஒளி நிலைத்து நிற்கின்றது. அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் அவர்கள் சுழலத் தொடங்குகின்றார்கள்.

அதே போன்று குடும்பத்தில் யார் உடலை விட்டுப் பிரிகின்றார்களோ கணவன் இறந்தால் கணவனை முதலில் அனுப்புகின்றோம்… மனைவி இறந்தால் மனைவியை முதலில் அனுப்புகின்றோம்.

சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கணவன் முதலில் ஒளியாக ஆன பிற்பாடு மனைவி இங்கே இருக்கும் பொழுது
1.அதே உணர்வுடன் கணவன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி இதை எண்ணப்படும் பொழுது அடுத்து மனைவி உடலை விட்டுச் சென்றாலும் அங்கே சென்று விடும்.
3.அதாவது அந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக மனைவியின் ஆன்மா அங்கே சென்றடைந்து விடும்.

நாம் எல்லோரும் சேர்ந்து அந்த உணர்வை நமக்குள் பெருக்குவதற்குத் தான் இப்போது கூட்டாக உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றோம். செய்கிறோம்.
1.இந்தப் பதிவு இல்லை என்றால்
2.அங்கே நாம் யாரையும் அனுப்ப முடியாது.

மனைவி முதலில் பிரிந்தால் மனைவியின் ஆன்மாவைக் கணவன் உந்தி அங்கே சப்தரிஷி மண்டலத்தில் செலுத்திய பின் கணவன் இங்கே எண்ணியவுடன் ஆட்டோமேட்டிக்காக கணவனின் ஆன்மாவும் அங்கே சென்று விடுகின்றது.

யார் பிரிந்தாலும் முதலில் அவர்களை அங்கே அனுப்பி வைத்து விடுகின்றோம். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றோம்.
1.அங்கு இணைந்த பின் அவர்கள் உணர்வு இங்கே இருக்கின்றது.
2.அந்த ஒளியின் உணர்வை இங்கிருந்து நாம் பெருக்குகின்றோம்.
3.பெருக்கிக் கொண்டால் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை
4.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சப்தரிஷி மண்டலம் தான் நாம் செல்வோம்.

நண்பர்களுக்குள் நன்மை செய்தான் என்று பாசமாக இருக்கின்றனர். ஆனால் சந்தர்ப்பத்தில் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால்…
1.பாசத்தால் எண்ணி “நண்பா நான் போகின்றேன்…” என்று எண்ணினால் நண்பனுடைய உடலுக்குள் தான் அந்த ஆன்மா செல்லும்.
2.அந்த நண்பனும் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தானே “இப்போது போய் விட்டானா…” என்று எண்ணும் பொழுது அந்த உடலுக்குள் தான் செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

ஆகவே… இதற்கு முன்பு மூதாதையர்களை விண் செலுத்தும் அந்தப் பழக்கத்தை நாம் விட்டு விட்டோம். இப்போது மீண்டும் அந்த ஞானிகள் கண்ட வழியினை “உங்களுக்குள் தொடரும்படி செய்கின்றோம்…”

மனிதனான பின் பிறவி இல்லா நிலை அடைந்தவர்கள் அக்காலத்தில் விண் சென்றவர்கள் தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்” என்று சொல்வது. சப்தரிஷி மண்டலத்திற்குள் கண்ணுக்குப் புலப்படாது ஒளியாக எண்ணிலடங்காதோர் உள்ளார்கள்.

அவர்கள் பல கோடி ஆண்டுகள் ஆகித்தான் ஒளியின் சரீரமாக உள்ளார்கள் “என்றும் பதினாறு” என்று வாழுகின்றார்கள்.
1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற சூரிய குடும்பத்தில் இருந்து ஆற்றல்களைப் பெற்றதனால்
2.அதிலே நஞ்சாக வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள்.
3.என்றும் பதினாறு என்று அகண்ட நிலையில் எங்கும் செல்லும் திறன் பெற்றவர்கள்
4.ஒரு எல்லையில் இருந்து தனக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள்.

எந்த எல்லையில் இருக்கின்றார்களோ… துருவத்தை எல்லையாக வைத்து சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் வருவது போன்றது துருவ நட்சத்திரத்தினுடைய வட்டத்தில் அவர்கள் சுழன்று வருகின்றார்கள் சப்தரிஷி மண்டலங்களாக…! மனிதனாகப் பிறந்து வாழ்ந்தவர்கள் தனித்தன்மை கொண்டு வாய்ந்தவர்கள் தான் அகண்ட அண்டம் பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது.

அதிலே எத்தனையோ கோடி ஆண்டுகள் வரப்படும் பொழுது அணுவாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனான பின் நட்சத்திரமாகிக் கோளின் தன்மை அடைந்தது பலர்.

இந்தக் குடும்பங்கள் அழிந்தாலும் அதற்குள் எத்தனையோ நிலைகள் உள்ளது

ஒரு சூரிய குடும்பமே எத்தனை கோடி மைல்கள் எல்லை விஸ்தீரணம் கொண்டது. அதேபோன்று அடுத்த சூரிய குடும்பத்தை எடுத்தாலும் அது எத்தனை கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது.

நாம் இந்த 2000 சூரியக் குடும்ப வட்டத்தில் தான் வாழுகின்றோம். ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான் சுழலுகின்றது. இது வேறு 2000 சூரியக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய சக்தியை எடுத்து தான் வாழுகின்றது.

இப்படி ஒவ்வொன்றிலும்
1.மனிதனாக உருப்பெற்றவன் ஒளியாக மாறிய பின் தனித்தன்மை வாய்ந்ததாகச் செல்லுகின்றது
2.இதற்கு அதற்கும் சம்பந்தமில்லாது செல்கின்றது… துருவத்தின் எல்லையில் தான் வாழ்கின்றார்கள்.

ஆகவே என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அடைய வேண்டும். இல்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.

ஆகவே யாராக இருந்தாலும் நாம் பலருடைய ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்துகின்றோம்… மூதாதையர்களை அனுப்புகின்றோம்.
1.இவ்வாறு செய்து கொண்ட பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால்
2.யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை நாம் அங்கேதான் செல்கின்றோம்.

தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… மூதாதையர்களின் உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று இந்த உணர்வை நாம் வளர்க்க வளர்க்க
1.உடலை விட்டு நாம் சென்றால் அங்கே தான் உயிர் நம்மை அழைத்துச் செல்லுமே தவிர
2.புவியின் ஈர்ப்புக்குள் இருக்காது…!

இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால் ஒரு தொடர்பு வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஆன்மாக்களை அங்கே அனுப்புகின்றோம். எல்லோரும் சேர்ந்து சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியம் ஆகும் பொழுது நம் குருநாதர் காட்டியபடி “ஒளியின் கூட்டமைப்பாகின்றது…”

பூணூல்

 

ஒருவன் நம்மைப் பழித்துப் பேசுகின்றான் என்றால் அந்தச் சமயத்தில் நம் உடலில் உள்ள குணங்களைக் காத்திட நாம் ஆவேச நிலைகள் கொண்டு தான் செயல்படுவோம்.

அப்போது… “நாம் எண்ணிய நிலைகள் கொண்டு தான் உயிரே இயக்குகின்றது” என்ற இந்த நிலையின் தத்துவத்தைத் தெளிந்து உணர்த்துவதற்கே வசிஷ்டாத்வைதம் என்ற நிலைகளை வியாசகன் பிரித்து உடலின் உறுப்புக்குள் இயக்கும் நிலைகளை உணர்த்தினான்.

1.மகரிஷிகளால் உணர்ந்து ஒளியின் சரீரம் பெற்றதை… வியாசகன் கண்டுணர்ந்த இந்தத் தத்துவத்தைத் தான்
2.தனக்குள் அதை ஆதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில்
3.“ஆவணி அவிட்டம்” என்றும் அந்த நாளில் “பூணூல் போடுவது” என்று காட்டினார்.

நமக்குள் எத்தனை நிலைகள் வந்தாலும் அதிலிருந்து தன்னைக் காத்திடல் வேண்டும். உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இதை உணர்த்திய மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று தான் “வசிஷ்டாத்வைதத்தை” வியாசகன் காட்டிணார்.

நம் உடலுக்குள் அனைத்து நிலைகளும் இருப்பினும்
1.அந்த ரிஷிகளுக்குள் தீமைகள் அடங்கியது போல…
2.அத்தகைய அடக்கி ஆட்சி புரியும் நிலைகளைப் பெறும் நன்னாளாக எண்ணுவது தான் “பூணூல் பூட்டும் நாள்…”

சாஸ்திர விதிப்படி பூணூலை அணிந்து கொண்டு என் மதம் என் இனம் என்ற நிலைகளில் எங்கள் இனத்திற்காக நாங்கள் அதை அணிந்து அந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சாரார் அவரவர்கள் விதிப் பிரகாரம் அதைச் செயல்படுத்துகின்றார்கள். அன்று இதைச் செய்து சாஸ்திரீகம் சாங்கியம் என்பதைப் பின்பற்றுகின்றனர்.

1.வசிஷ்டாத்வைதம் என்ற நிலையினை நமக்குள் ஆதாரமாக அமைத்து
2.எப்படி இந்த இரு நூலின் தன்மை வலுக்கொண்டதாக மாற்றுகின்றதோ இதைப் போல நமக்குள் இணைந்திருக்கும் நிலைகள் கொண்டு
3.ரிஷியின் தன்மையாக உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றும் இணைக்கும் தன்மையாக
4.நமக்குள் புறநிலைகளிலே ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் நிலையைத் தான் உணர்த்தப்பட்டது.

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தன்னை அறியாது தன் சந்தர்ப்பத்தால் மெய் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளைத் தனக்குள் கண்டுணர்ந்து அவனின் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றான்.
1.அவனைப் பின்பற்றி அவன் ஒளியான நிலைகளை வெளிப்படுத்தியதுதான்
2.இந்த 4000 ஆண்டுகளுக்குள் வியாசகரால் சந்தர்ப்பத்தால் விண்ணுலக ஆற்றலை அறியும் ஆற்றல் வருகின்றது.

காரணம் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அறிந்தாலும் அதைச் சந்தர்ப்பத்தால் அறிந்துணர்ந்த வியாசகரால் சாதாரண மக்களும் எட்டும் அளவிற்கு அவன் கண்டறிந்த நிலைகளை வெளிப்படுத்தினான்.

வெளிப்படுத்தினாலும் அரும்பெரும் சக்திகளைத் தனக்குள் எவ்வாறு பருக வேண்டும் என்ற நிலைகளை மறந்து ஐதீகம் என்ற நிலையில் மாற்றப்பட்டதே தவிர ஐதீகம் என்று சாஸ்திர விதிகளைத் தான் பின்பற்றும் நிலை வந்தது. ஐதீகத்தை எடுத்துக் கொண்டால் சாங்கியம் சடங்குகள் என்று புறநிலைகளுக்குத் தான் வருகின்றது.

அகநிலைகளைக் கூட்டும் நிலைகள் இல்லை.

1.அந்த ஆற்றல்மிக்க அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தியை நமக்குள் உள் செலுத்தி அதனைப் பூணூல் ஆக அதனின் நிலையே நமக்குள் அடக்கி
2.வசிஷ்டாத்வைதத்தை நமக்குள் நம்முடைய நிலைகளுக்குள் அடங்கி நடக்க வேண்டும் என்ற நிலையும்
3.அதனை ராஜரிஷி என்ற நிலைகள் மற்றவர்கள் ஒடுங்குவது போல அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுத்து
4.நமக்குள் அகங்காரமோ பாசமோ மற்ற நிலைகள் தீமையை விளைவிக்கும் நிலைகளில் இருந்து மீட்டி
5.உயிருடன் ஒன்றிய இந்த ராஜ நீதியை அன்று உணர்த்தினான் வியாசகன்.

அதனின் வழிகளை நாம் பின்பற்றிச் செல்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் ஒரு குழம்பை வைக்கப் போகும்போது சமமான நிலைகள் கொண்டு சுவையாக சமைத்து விடுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலே சந்தர்ப்பவசத்தால் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் உணவாக உட்கொள்ளும் அனைவருமே மயக்க நிலை பெற்று சிந்தனை இழந்து விடுகின்றார்கள்.

அதே சமயம் ஞாபகக் குறைவாக சிறிதளவு மிளகாய்த் தூளை அதிகமாகச் சேர்த்து விட்டால் சாப்பிடும்போது வாயில் காரம் அதிகமாகின்றது. அதிலே உணவு உட்கொள்வது கணவராக இருந்தால் “குழம்பு வைத்திருக்கும் லட்சணத்தைப் பார்…!” என்று கோபமாகப் பேசுவார்கள்.

அதே சமயத்தில் நாம் நன்றாகத் தானே வைத்துள்ளோம்… என்ற எண்ணத்தால் “சந்தர்ப்பத்தால் நாம் ஒரு மிளகாய் அதிகமாகச் சேர்த்தோமா…! என்ற நினைவு இருக்காது.

இது எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும்…!

அப்பொழுது கணவன் இவ்வாறு கோபமாகப் பேசிவிட்டாரே…! என்ற அந்த வேதனை வரும்போது…
1.விஷத்தை ஒரு துளி நுகர்ந்து விட்டால் நம் சிந்தனை குலைந்து விடுவது போன்று
2.சிந்தித்துப் பதில் சொல்வதை விட்டுக் கண்ணை கசக்க அழுகத் தொடங்கிவிடுவோம்.

நான் இப்பொழுது என்ன செய்தேன்…? இப்பொழுது என்னைக் கணவர் இப்படிக் கோபித்துப் பேசுகின்றார்…! நான் நன்றாகத் தான் குழம்பை வைத்துள்ளேன்…! என்று எண்ணுவார் மனைவி.

கணவரோ… நான் என்ன செய்து விட்டேன்…? என்று நீ கண்ணைக் கசக்குகின்றாய்…! என்று சொன்னால் போதும்.

மீண்டும் அந்த உணர்வின் தன்மை விளையச் செய்து இங்கே காரத்தின் உணர்வுகள் மனைவிக்குள் அதிகமாகும்.

ஏனென்றால் இந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகள் இங்கே இருக்கப்படும்போது அதே உணர்வுகள் தூண்டப்பட்டு எதைச் சொன்னாலும் இப்படித் தான் அழுகும் என்ற நிலைகள் வரும்.
1.கணவரைப் பார்க்கும்போது அந்த வேதனையின் உணர்ச்சிகள் அந்த மனைவிக்கு ஏற்பட்டுவிடுகின்றது.
2.இங்கே மனைவியைப் பார்க்கும்போது கோபத்தின் தன்மை கணவனுக்கு வந்துவிடுகின்றது.

மாமியாருக்கோ… நம் பிள்ளை சொல்கின்றான் ஆனால் பார்..! எதிர்த்துப் பேசும் அளவுக்கு வந்து விட்டாள். இப்பொழுது வர…வர… வர..வர… மருமகளுக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டது என்று அதைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆக இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள்…!

இப்பொழுது என்ன சொன்னோம்…? என்று நீ அழுது கொண்டிருக்கின்றாய். இப்படியே அழுது கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆகும்…? என்று கேட்கத் தொடங்குவார்கள்.

இவைகள் எல்லாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகளை (அவரவருக்குத் தக்க) நமது உயிர் நம்மை இயக்கிக் காட்டுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தவறு யாரும் செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் இயக்கி
1.இந்த உணர்வுகளை உயிர் உணர்த்துகின்றது… உணரச் செய்கின்றது.
2.உணர்ந்ததை ஜீவனாக்குகின்றது… ஜீவ அணுவாக மாற்றுகின்றது
3.நம் உடலாக மாற்றிவிடுகின்றது உயிர்…!

April 2025 உபதேசம்

கூட்டுத் தியானத்தை யாம் அமைத்ததன் முக்கியமான நோக்கம்

 

ஒவ்வொரு நொடியிலும் நமது வாழ்க்கையில் நாம் நல்லோரைச் சந்தித்தாலும் சரி… அவருடன் உறவாடினாலும் சரி… ஆனால் அவர் உடலிலே அதற்கு முன் அவர் அறியாது வந்த நோய்கள் பல உண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்நிலைப் பட்ட அந்த உணர்வின் தன்மைகள் உண்டு. உதாரணமாக இவர்கள் தவறு செய்யவில்லை என்றாலும்
1.ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நிலைகள் பெற்றது.
2.மற்றொரு உணர்வின் தன்மை எதிர் நிலையாகி அது துடிப்பின் இயக்கமாக உயிராக உண்டாகி
3.அதனின் துடிப்பின் இயக்கத்திற்குள் அது எடுத்துக் கொண்ட உணர்வினை ஜீவணுக்களாக மாற்றும் நிலைகள் பெற்றது “ஒவ்வொரு உயிரும்…”

கார்த்திகை நட்சத்திரம் என்பது அறிந்திடும் அறிவாற்றல் மிக்க நிலைகளையும்… ஒளி கண்டு உணர்ந்திடும் உணர்வின் அலைகளாக அது பெருகினும்… மற்ற மற்ற 27 நட்சத்திரங்களும் ஒவ்வொருவிதமான நிலைகள் கொண்ட்து.

வைரங்களில் எத்தனை விதமான கலர்கள் இருக்கின்றதோ அவை அனைத்துமே ஒவ்வொரு நட்சத்திரத்தின் வலுவின் தன்மை பெற்றது.
1.27 விதமான வைரக் கற்கள் உண்டு.
2.இதைப் போல தான் உணர்வின் இயக்கங்களும் இருக்கும்.

இந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் இயக்கமும் இருப்பினும் பிறிதொரு உடலில் விளைய வைத்த கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர்கள் அவர் உடலில் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு அவருக்கு ஒத்ததாக விளைந்த எண்ணங்கள் வெளிப்படுத்தினும் அவர்கள் நல்லவராகத் தோன்றினும் அதே சமயத்தில் அது எதிர்மறையான நட்சத்திரம் கொண்ட நான் அவருடன் நட்புடன் இருப்பினும் நாம் பேசிடும் உணர்வு கொண்டு அவர் உணவாக உட்கொண்ட மற்ற அந்த நட்சத்திரத்துடன் ஒத்துக் கொண்ட மற்ற உணர்வின் நிலைகள் கொண்டு எதிர்நிலையாக இயக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கத்தால் தான் ஒவ்வொரு உணர்வின் எதிர் நிலையின் மறைகள் உருவாகி அதனின் நிலைகள் கொண்டு தாவர இனங்களும் விளைகின்றது.

அந்தத் தாவர இனச் சத்தை உணவாக உட்கொள்ளும் பொழுது அதனின் மணங்கள் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒத்து வரும். அங்கே மகிழ்ச்சியின் தன்மை வரும். வலுக்கொண்ட நிலைகளும் வரும். ஆனால் அதே சமயம்
1.மற்றவர்களுடைய நிலை வரும் பொழுது எண்ணத்தால் எதிர் நிலைகள் வரும்.
2.அவர் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் அவர் சொல்லால் எனக்குள் வரப்படும் பொழுது
3.என்னை அறியாமலே எனக்குள் தீமையை விளைவிக்கும் நிலையாக வரும்.

இதைப் போல உணர்வுகள் மாறுபட்ட நிலைகள் விண்ணிலே நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாது அதனின் உணர்வின் தன்மை அலைகளாகப் பிரிந்து… “எப்படித் தாவர இனங்கள் இருக்கின்றதோ இதைப் போல தான் நட்சத்திரங்களின் இயக்கமும்…”

1.அதனின் உணர்வுகள் எதிர்மறையாகி ஒன்றுடன் ஒன்று எதிர் நிலையாகும் பொழுது தான் விண்ணுலகில் ஆற்றல் இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
2.அதைப் போல ஒன்றுடன் ஒன்று ஒன்றும் நிலைகள் வரப்படும் பொழுது எதிர்மறையான உணர்வுகள் வரும் பொழுது தான் அதனுடைய இயக்கமும் வருகின்றது.

இன்று எலக்ட்ரானிக் என்று வரப்படும் பொழுது அது இயக்க வேண்டுமென்றால் அதற்கு எதிர்மறையான நிலைகள் இருந்தால் தான் இயக்கும். அதைப் போல
1.ஒரு உணர்வின் சக்தி உடலுக்குள் ஒத்துக் கொண்ட உணர்வாக இருப்பினும்
2.எதிர்மறையான நிலைகள் இருக்கும் பொழுது தான் அது உந்தி இயக்கும் நிலைகள்.

கரண்ட் ஆக நாம் உபயோகப்படுத்தினாலும் அதனின் நிலைகள் கொண்டு நெகட்டிவ் பாசிட்டிவ் என்று எதிர்மறையான நிலைகள் வரும் பொழுது தான் மின் அணுவின் நிலைகளும்… அதனின் அழுத்தத்தைக் கொண்டு மற்ற மோட்டார்களை இயக்கச் செய்யும் நிலைகள்.

ஆனால் அந்த மின் அழுத்தத்தின் நிலைகள் கொண்டு அதனின் இயக்கத்திற்குத் தக்கவாறு மற்ற பொருள்களை இணைக்கப்படும் பொழுது அதனுடைய ஒலிப்பேழைகளை மாற்றி அமைப்பதும் அதற்குத் தக்க நிலைகளை அது உருவாக்கவும் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகள் தொடர… மனிதனின் உணர்வுக்குள் நாம் நண்பர்களாகப் பழகியிருந்தாலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறைகள் உண்டு.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடும் பொழுது இரண்டு குழந்தைகள் ஒத்து வரலாம்… ஒரு குழந்தை ஒத்து வராத நிலை வரும். எதிர்மறையான நிலைகள் வரப்படும் பொழுது எதிர்ப்பு உணர்வுகள் வருகின்றது.

இதைப் போன்று தான் வசிஷ்டாத்வைதம்
1.27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் நவக்கோள்களின் சக்திகளையும் உள்ளடக்கி
2.உணர்வின் சக்தி ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள் சப்தரிஷிகள்… சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.
3.அந்த மண்டனல்களிலிருந்து வரும் உணர்வின் சக்தியை நாம் கவரும் திறனாகத்தான் உங்களுக்குக் கூட்டுத் தியானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நாம் பலருடன் பழகினாலும்… எண்ணத்தால் கவர்ந்து நட்பின் நிலைகள் கொண்டு கேட்டுணர்ந்தாலும்… கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் எதிர்மறையை உண்டாக்கி நோயாக உருவாகும்.

சந்தேகம் இருந்தால் பார்க்கலாம்… நண்பர்கள் பலருடன் சந்தித்துப் பேசும் பொழுது இன்னொரு நண்பருடன் நாம் பேசி வரும் பொழுது தன்னை அறியாமலே ஒரு கலக்கமும்… ஒரு வியாபார ரீதியாகச் சென்றாலும் அவருடன் உறவாடி விட்டுச் சென்றால் இனம் புரியாது கலக்கங்கள் ஏற்படுவதைக் காணலாம்.

இது எல்லாம் நம்மை அறியாது நடக்கும் செயல்கள். நமது உயிர் கார்த்திகை நட்சத்திரமாக இருப்பினும் மற்றவருடைய உணர்வின் தன்மை எதிர்நிலையாக மாற்றங்கள் அமைக்கப்பட்டு நம்மை இயக்குகின்றது.

இதைப் போன்ற நிலைகள் தான் “வசிஷ்டாத்வைதம்” என்ற தத்துவம்.
1.எதையுமே தனக்குள் கவரச் செய்து – அருந்த்தி…!
1.இணைந்தே வாழும் நிலைகளும்
2.இணைத்து அறிந்திடும் நிலைகளும்
3.இணைந்தே தெரிந்திடும் நிலைகளும்
4.இந்த உடலிலே இணைத்திடும் நிலைகள் கொண்டு என்று நாம் என்று கொள்ளுகின்றோமோ
5.இதனை இணைந்திடும் நிலைகள் ஆக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பருக வேண்டும்.
6.அப்படிப் பருகும் நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்தக் கூட்டுத் தியானம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடும்பத்தில் குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் வருவதற்கு நாம் காரணம் அல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அது இயக்குவது தான். அதை மாற்றி அமைக்க ஆத்ம சுத்தி செய்து குடும்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.குடும்பத்தில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குக் காரணம் இன்று மட்டும் அல்ல
2.தாய் கருவிலிருந்தே சில நிலைகள் வந்து கொண்டிருக்கிறது

அது மட்டுமல்ல…! ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கின்றோம்… ஒருவருக்கு ஒருவர் சாபம் விடுகின்றார்கள்… அதை நாம் கேட்டிருப்போம்… நமக்குள் பதிவாகி இருக்கும். அதனாலும் குடும்பத்தில் தீமைகள் வரும். நாம் தவறு செய்து அந்த நிலைகள் வரவில்லை.

1.இந்த மாதிரி சாப அலைகள் எத்தனையோ வகைகளில் எத்தனையோ விதமாக நமக்குள் பதிவாகியுள்ளது
2.அதெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக ஒரு கேமராவிலே படம் எடுக்கின்றார்கள் என்றால் யாராவது குறுக்கே வந்தால் அந்தப் படம் ஆடும். அதுவும் பதிவாகும் அதே போன்று நாடாவில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்றால் குறுக்கே யாராவது சப்தம் போட்டால் அதுவும் பதிவாகத்தான் செய்யும்.

இது போன்று நமக்குள் ஊழ்வினை என்ற நிலையில் நாம் எண்ணும் அந்த எண்ணங்களுடன் சேர்த்து மற்றதும் (தீமைகளோ குறைகளோ) பதிவாகத் தான் செய்யும்.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது சில உணர்வுகள் ஊடுருவி நமக்குள் வருவதும் தெரிய வரும். அதே சமயத்தில் அது நம் போகும் காரியங்களுக்குத் தடைப்படுத்தும் உணர்வாக வந்து விடும்.

1.தடைப்படுத்தும் உணர்வோ சாபமிடும் நிலையோ நாம் நுகர்ந்த பின்
2.அடுத்து நாம் ஒரு நல்ல காரியத்திற்குச் செல்கிறோம் என்றால்
3.அங்கே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும் இதுவும் சேர்ந்து அதனுடன் ஜாயிண்ட் ஆகும்
4.எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ இந்த வேலையெல்லாம் நமக்குள் நடக்கும்

இது எல்லாம் உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு இந்த மன(ண)மாகி நமக்கே மீண்டும் எதிரியாக வரும்.

இதைத் துடைப்பது யார்…?

இயற்கையின் நிலைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் நாம். அதுதான் “பலராம்” – பலருடைய எண்ணங்களை அறியும் சக்தி. அந்த எண்ணங்கள் இயக்கவில்லை… நமக்குள் உண்மைகளை உணர்த்துகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நரசிம்மா…!

எப்பொழுது தீமை என்று உணர்கின்றமோ அது நமக்குள் புகாதபடி பிளக்க வேண்டும் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால்
1.இங்கே புருவ மத்தியிலே… உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்குள் அனுப்ப வேண்டும்.
2.தீமை உள்ளே போகாதபடி இது பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும்
3.இதுதான் ஆத்ம சக்தி என்பது.

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழியில் நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்து பழகிவிட்டால் தன்னிச்சையாக (AUTOMATIC) வந்துவிடும்.

முந்திய பழக்கத்தில் நாம் இருக்கப்படும் பொழுது… யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அந்த எண்ணத்திலேயே தான் இருப்போம் ஆத்ம சுத்தி செய்ய முயற்சி செய்யும் பொழுது “இடைவெளியில் அதைத் தடுக்கும்… அதைக் கூட நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்…!”

ஆனால் சிறிது காலம் யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொண்டால்
1.உடனே அந்த உணர்வுகள் ஆத்ம சுத்தி செய்யும்படி செய்து
2.தீமையைப் பிளக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்.

அழுக்குத் தண்ணீரில் நன்னீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்குகள் எப்படிக் குறைகின்றதோ… அதை ஊற்ற ஊற்ற நல்ல தண்ணீரின் அடர்த்தி கூடுகிறதோ…
1.அந்த அந்த ஞானிகள் உணர்வுகளை நமக்குள் போடப் போட அது பெருகும்
2.அது முழுமை அடைந்து விட்டால் “தன்னிலை அடைந்து விட்டது என்று பொருள்…”

செய்து பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் வலிமை

 

வராகன் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நல்ல பொருளை எடுத்து அது உணர்வுக்குள் நல்லதாக மாற்றி நாற்றமான உடலைப் பிளந்து மனிதனாகப் பிறக்கச் செய்தது

அதைப் போல் விஞ்ஞான அறிவால் இந்த காற்றுக்குள் இருக்கும் நச்சுத்தன்மைக்குள் மகா ஞானியின் உணர்வலைகள் நமக்கு முன் மிதந்து கொண்டிருக்கின்றது. அதை நாம் நுகர வேண்டும்.

1.அந்த மகா ஞானியின் உணர்வலைகளை உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்ய
2.உங்கள் நினைவின் எண்ணங்களைக் கூர்மையாக்க
3.அந்த ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்வதற்கே இந்த நிலை.

பதிந்தபின் நீங்கள் தியானித்து அந்த அருள் சக்தியைப் பெறுவதற்காக…
1.நாம் அனைவரும் சேர்ந்து எண்ணி ஏங்கி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது எளிதில் கிடைக்கும்.

ஒரு நூலால் ஒரு கடினமான பொருளைத் தூக்க முடியாது ஆனால் பல நூல்களை இணைத்துப் பெரும் கடினமான பொருளையும் தூக்க முடியும்.

சாதாரண மனிதன் இந்தப் புவியின் ஆசையுடன் இருக்கப்படும் பொழுது நம் எண்ணத்திற்கு வலு குறைவு. ஞானிகள் பிறவிக் கடனை வென்று இன்னோரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி ஒளியின் சுடராகச் சென்றவர்கள்.

அவர்கள் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளுக்கு அருகிலே நம் உணர்வுகள் செல்ல அருகதையற்றது. அதனை நுகர்வது என்றால் மிகக் கடினமானது.

அந்த ஞானிகள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டி உணர்ந்து உணர்வின் தன்மையை எம்மை ஏங்கிப் பெறச் செய்து
1.அதை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.ஞானிகள் கண்ட உணர்வினை உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி இந்த உணர்வுகளைக் கேட்க வைத்து
3.இந்த உணர்வுகளை நுகரச் செய்து நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து
4.இந்த நினைவின் ஆற்றல் எண்ணும் பொழுது
5.டிவியும் ரேடியோவும் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதை காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் காட்டுவது போல
6.இந்த மகா ஞானிகளின் உணர்வலைகளை நம்மால் எடுக்க முடியும். வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

ஆலயங்களிலே தேரை இழுக்கப்படும் பொழுது பலரும் ஒன்று சேர்த்து அந்தக் கடினமான தேரை இழுப்பது போன்று நாம் அனைவரும் இந்நேரம் வரை கேட்டுணர்ந்த உணர்வை அந்த மகரிஷ்களின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் தியானிக்கப்படும் பொழுது “காற்றுக்குள் மறைந்துள்ள இந்த ஞானிகள் உணர்வலைகளை இங்கே படரச் செய்வதுதான்…”

இங்கே படர்ந்த உணர்வின் சத்தை அவரவர்கள் ஏங்கிய நிலையில் கொண்டு பெற முடியும்.

இந்தத் தியானம் முடிந்த பின் தியானத்தில் அமர்ந்த அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்… எல்லோருக்கும் பெற வேண்டும் என்று உணர்வினை வெளிப்படுத்தும் போது சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து உயர்ந்த எண்ணத்தின் வலுவாக அது கூடி… நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் புற நிலையில் ஈர்த்து உங்களுக்குள் சக்தி வாய்ந்தத உணர்வுகளாகப் பதியச் செய்வதே இந்தக் கூட்டுத் தியானம்.

கூட்டுத் தியானத்தின் மூலம்
1.அனைவரின் எண்ணத்தின் வலு கொண்டு நாம் ஈர்க்கும் திறன் பெற்று
2.இங்கே அணைத்து வந்த உணர்வுகள் நமக்குள் இணைத்திடும் சக்தியாக ஆக்கிய பின்
3.இதற்கடுத்து நாம் தனித்து இருந்தாலும் அந்த உயர்ந்த சக்திகளை “எப்பொழுது வேண்டுமென்றாலும் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனதில் நாம் எதைப் பதிவு செய்கிறோமோ அது தான் இயக்கும்.

உதாரணமாக… உங்களுக்கு முன்னாடியே நல்லது செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.ஆனால் அதை நீங்கள் மோசமாக எண்ணுகின்றீர்கள்
2.அப்போது நல்லது செய்தார்கள் என்று அதை ஏற்றுக் கொள்வீர்களா…?
3.அதில் எப்படிக் குறை காணுவது…? என்ற உணர்வு தான் வரும்.
4.அது உங்களுக்கே தெரியாது… உங்களுக்குத் தெரியாமல் அது இயக்குவது தான்.

ஆகையினால் குறையான உணர்வுகள் வந்தபின் நல்லது செய்கிறார்கள் என்றால் அதிலே எப்படியெல்லாம் குறைகளைக் காண வேண்டுமோ அப்படி எல்லாம் அதைத் திருப்பிக் கொண்டு வரும். ஆக நல்லதாக்கும் நிலைகளுக்கு வராது. இது எல்லாம் மனிதனுடைய இயற்கையின் நிலைகள்.

எவ்வளவு பெரிய சக்தி எடுத்தாலும் எல்லாம்… எல்லாம் அனுபவித்தாலும் “நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த ஆதங்கம்”
1.மற்றவருடைய நிலைகளைப் பார்க்கப்படும் போது
2.தன்னை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தும் நிலை வருகின்றது.

நன்மை செய்வதற்கு நான் பற்று கொண்டுள்ளேன்… ஆனால் மற்றவருக்குப் பற்று இல்லை என்கிற பொழுது இந்த மாதிரிக் குறைகளை வடிவமைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இதனால் எத்தனையோ பிழைகள் வருகின்றது.

இத்தகைய உணர்வுகள் ஒவ்வொருவருடைய மனதிலும் தோன்றும். நாம் போகும் பாதையை விட்டுவிட்டுத் திசைகளைத் திருப்பும்… ஆனால் சேவை செய்ய வேண்டும் என்ற பற்று இருக்கும்.

எல்லா உணர்விலும் அது சாம்பிள் போட்டுக் கொண்டே இருக்கும் நன்றாக இருக்கின்றது நல்ல ருசியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஸ்ஸ்…ஆ…! காரமாக இருக்கிறது நல்லதைக் காரமாகச் சொல்வது போன்று காண ஆரம்பிக்கும்.

இது எல்லாம் அன்பைக் காட்டுகின்றது ஆனால் பேராசையைக் காட்டுகின்றது ஆனால் கடைசியில் நிராசையாக மாறுகின்றது.
1.இந்தப் பேராசை (நல்லது செய்ய வேண்டும்) என்ன செய்யும்…?
2.நிராசையாக மாற்றிக் கொள்ளும் சக்தி தான் வருகின்றதே தவிர நல்லாக்கும் நிலை இல்லை.

பேராசை என்கின்ற பொழுது எப்படி இருக்க வேண்டும்…?

நீங்கள் (அடுத்தவர்கள்) உயர வேண்டும் என்றால் இது பேராசை.
1.நான் உயர வேண்டும்…
2.நான் உயர்ந்திருக்கின்றேன் என்ற இந்தப் பேராசை வரக்கூடாது.

இதுவும் பேராசை தான்… அதுவும் பேராசை தான்.

மற்றவர்கள் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எப்படியும் தெளிந்த மனம் எல்லோருக்கும் வர வேண்டும் என்ற இந்தப் பேராசை நம்மைக் குறைகளிலிருந்து மீட்கச் செய்யும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் குறை காணும் இயல்புகள் உண்டு எனக்கும் கூட உண்டு உங்களிடம் எல்லாம் சொல்கின்றேன் அந்த மாதிரி உணர்வு… சில நேரங்களில் எனக்குள்ளும் (ஞானகுரு) வரும்.

இதனால் தான் குருநாதர் என்ன செய்தார்…?

ஒரு சந்தர்ப்பம் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரு மரத்தைக் காண்பிக்கின்றார். “தூக்கி வீசுடா…..!” என்றார் அவர் சொன்ன முறைப்படி செய்த பின் மரம் பறந்து போய் அங்கே விழுகின்றது.

1.அடுத்து எனக்குத் திமிரே வருகின்றது
2.யாராவது ஏதாவது செய்யட்டும்… நான் தூக்கிப் பந்தாடுகின்றேன் பார்…! என்று சொல்கின்றேன்.

“இப்போது உனக்குத் திமிர் வந்து விட்டது” என்று குருநாதர் சொல்கின்றார். எதற்காக வேண்டி உன்னை மரத்தைத் தூக்கி எறியச் சொன்னேன் தெரியுமா…?

ஒருவருக்குள் ஆட்டிப் படைக்கும் தீய சக்திகளைத் தூக்கி எறிய வேண்டும்.

சாதாரணமாக ஜீவனுடன் வாழும் அந்த மரத்தைத் தூக்கி எறிந்த உடனே உனக்குத் திமிர் வருகின்றது. அதை வைத்து யாரை வேண்டுமென்றாலும் தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணம் தானே உனக்கு வருகின்றது என்று அந்த இடத்தில் அதைச் சுட்டிக் காட்டுகின்றார்.

அந்தத் திமிர் வருவதனால்… யாராவது கோபித்துச் சொன்னால் அல்லது தவறாகச் செய்தால்
1.இருக்கட்டும்… கொஞ்சம் சுண்டிப் பார்க்கலாம்
2.அப்போதுதான் அவருக்கு அந்த அனுபவம் வரும் என்று நான் இதைச் செய்தால் எப்படி இருக்கும்…?

குறைகள் தான் வரும்.

அதை நிவர்த்திப்பதற்குண்டான வழியைத் தானே நான் சொல்ல வேண்டும்.
1.இன்னென்ன காரணத்தால் குறைகள் ஏற்பட்டது
2.அதனால் அது உங்களை இப்படிப் பாதிக்கின்றது என்று வழி காட்ட வேண்டுமே தவிர
3.அங்கே குறையைக் குற்றமாக ஆக்கி அவரைத் தண்டிக்கும் நிலைகளுக்கு வரக்கூடாது.

குருநாதர் எனக்கு முதலில் இதைத் தான் உணர்த்தினார்.

என்னைப் பெரிய ஆளாகக் காட்டுவதற்கும்… என்னை மெச்சும்படி செய்வதற்கும்… உங்களுக்கும் அந்தச் சக்தியைக் கொடுத்து மரத்தை தூக்கி எறியச் செய்யலாம்.

அப்போது உங்களுக்கும் அதே எண்ணம் தான் வரும். மனிதனுக்குள் இது போன்ற சக்திகள் கிடைத்தால் உடனே… அப்போதே… அந்தத் திமிர் வரும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.நல்லது என்ற எண்ணத்தில் மற்றவருக்குச் சேவை செய்யும் நேரங்களில் இது போன்ற சில உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.
2.நாம் அல்ல… நாம் எடுத்துக் கொண்ட ஆர்வத் துணிவு குற்றத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதில் குற்றத்தைப் பெருக்கத்தான் செய்யும்.

குற்றம் என்ற நிலையில் அவர்கள் தாழ்ந்து போனால் “பேசாமல் போகின்றார்கள் பார்…” என்ற நிலை வந்துவிடும். அதைக் கொண்டு குற்றங்களை எப்பொதுமே மாற்ற முடியாது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆகவே சேவை செய்ய நாம் அணுக வேண்டிய முறைகள் எப்படி இருக்க வேண்டும்…?

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று அவர்களை மதித்து
1.அங்கே அமைதி பெறும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.அமைதி பெறச் செய்யும் அந்தச் சக்தியை கொண்டு வந்தால் தான் அது சீராகும்.

அது அல்லாதபடி மற்ற எத்தனையோ பெரிய நிலைகளைச் செய்தாலும்
1.ஞானத்தின் வழியில் தேர்வு பெறுவது கடினம் தான்…
2.ஒரு சிலர் தான் தேற முடியும்.

கூட்டமாக ஒரு பக்கம் வந்து கொண்டே இருந்தாலும் “இதிலே என்னடா இருக்கின்றது…?” என்று களைந்து வெளியில் போய்க் கொண்டு தான் இருப்பார்கள்…. வர முடியாது… இதை வளர்க்கவும் முடியாது.

உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா…!

ஞான வழியில் வளர்வதற்கு மாறாகத் “தன்னுடைய செயல்கள்தான் உண்மை…” என்று அதை நிலை நாட்டும் போது நல்லதை நிலைநாட்ட முடியாது போய் விடுகிறது.

அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகள்

 

அகஸ்தியனின் தாய் தந்தையர் காட்டிலே வாழும் போது அவர்களுடைய புலனறிவால் தன்னைக் காத்துக் கொள்ளும் ஞானத்தின் நிலைகள் வளர்கின்றது. அப்படி வளர்த்த அந்த தாய் தந்தையரின் கருவில் வளர்ந்த நிலைதான் பிற்காலத்தில் அகஸ்தியன் என்ற நிலை வந்தது.

அகஸ்தியன் அங்கே குழந்தையாகப் பிறந்த பின் அவன் அருகிலே நஞ்சு கொண்ட எதுவுமே வருவதில்லை. மிருகங்கள் கொஞ்சித் திரியும் நிலைகளுக்கு வந்து விட்டது.

1.ஆக தாய் தந்தையர் முலாம் பூசிக் கொண்ட அந்த நஞ்சு கொண்ட மணத்தை நுகர்ந்து கண்டு மற்ற மிருகங்கள் விலகிச் சென்றாலும்
2/ஆனால் அதே சமயம் அந்த நஞ்சு கொண்ட மிருகங்கள் அனைத்தும் அகஸ்தியனைத் தீண்டாமல் பாதுகாக்கும் நிலைக்கே அமைகிறது.

இதைக் கண்ட அன்னை தந்தையர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
1.கடவுளின் அவதாரமாக நம் குழந்தை பிறந்து இருக்கிறது என்று பேரானந்த நிலை பெற்று
2.அன்று சூரியனை வணங்கி வந்த வழக்கப்படி அந்தக் குழந்தைக்கு அவனே தான் இந்த அருள் கொடுத்தது என்று
3.அவர்கள் அறியாது இயங்கிய நிலைகள் கொண்டு அந்த குழந்தையைப் போற்றிக் காத்து வந்தார்கள்.

இருப்பினும் அவர்கள் உடலிலே அதிகமான நஞ்சின் தன்மை பூசியதால் அதனின் உணர்வுகள் உடலில் சிறுகச் சிறுக விளைந்து இந்தக் குழந்தை ஐந்து வயது ஆவதற்கு முன் அந்த உடல்கள் மடிந்து விடுகின்றது.

மடிந்தபின் இவன் தனித்து வாழுகின்றான் அகஸ்தியன். தன் அன்னை தந்தையர் இறந்துவிட்டனர் என்று இந்த ஏக்கத்தின் நிலைகள் கொண்டு காலை கதிரவன் அவன் சுடரை வீசி வரப்படும் போது கதிரவனைப் பார்த்து…
1.என்னை ஈன்ற அன்னை தந்தையர் மடிந்து விட்டனர்
2.அந்த அன்னை தந்தையரின் அருளை நான் பெற வேண்டும்
3.அவருடைய அணைப்பு எனக்கு வேண்டும் என்றும்
4.என் அன்னை தந்தையரை நான் பார்க்க வேண்டும் என்றும் இந்த உணர்வினை விண்ணை நோக்கி ஏங்கி
4.அன்னை தந்தையரைப் பெற வேண்டும் என்ற உணர்வில்… அறியாப் பருவத்தில்
5.ஒளி சுடராக வீசி வரும் அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி அந்தக் கதிரவனின் காந்தப்புலனை எண்ணி ஏங்கி வணங்குகின்றான்.

அப்படி வணங்கப்படும் போதுதான் தான் தாயின் கருவிலே அவன் உடலுக்குள் விளைந்த நஞ்சின் உணர்வின் தன்மை… “நஞ்சினைக் காணும் நிலையை” அவனுக்குள் உருவாக்குகின்றது.

இப்படித் தன் தாய் தந்தையரை எண்ணி அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஏக்கம் கொண்டு கதிரவனைப் கண்ணால் பார்க்கப்படும் பொழுது கதிரவனிலிருந்து வெளிப்படும் அந்த நஞ்சின் தன்மையை அவன் உணர்கின்றான்.

விஞ்ஞானிகள் அல்ட்ரா வயலட் என்று இன்று சொல்வதை அன்று இவன் உடலில் இருந்த நஞ்சின் ஆற்றலால் அந்தச் சூரியனிலிருந்து வெளிப்படும் அந்த நஞ்சினைக் கண் கொண்டு பார்க்கின்றான்.

ஆக இவன் அறியாத நிலைகளில் இருந்தாலும்
1.இவன் உடலில் விளைந்த இந்த உணர்வின் தன்மைகள் இவன் எதை எடுத்துச் சூரியனை வணங்கினானோ
2.அந்த ஞானத்தின் உணர்வின் தொடராக அந்த காந்தப் புலனின் ஆற்றல் பெருகி
3.இவன் எண்ணத்தின் நிலைகள் வலுப் பெற்று
4.சூரியனிலிருந்து வெளிப்படும் இந்த உணர்வினை உற்று நோக்க அதனின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தான்.

அதிலிருந்து வெளிப்படும் நஞ்சும் சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப் புலன்களும் அதைக் கடந்து வரப்படும் பொழுது அந்த அணுவின் இயக்கங்கள் எவ்வாறு மாறுகிறது…? என்று முதல் முதலிலேயே அணுவின் இயக்க உணர்வின் ஆற்றலைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

ஆகையினால் தான் அவன் விண்ணுலக ஆற்றலும்… அதனின் பரிணாம வளர்ச்சியும்… அணுவின் ஆற்றலும்… பிரபஞ்சம் உருப்பெற்றதையும்… அந்த இளம் பிஞ்சு உள்ளத்திலே அவன் மெய்யுணர்வைக் காணும் நிலைகள் அங்கே வளர்ந்தது.

ஏனென்றால் தாயின் கருவில் இருந்து வளர்ந்த நிலைகள்
1.அந்த நஞ்சு வலுக்கொண்டதாக… நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் வளர்ந்ததனால்
2.நஞ்சான உணர்வின் தன்மைகளைப் பிளந்து நல்ல உணர்வின் தன்மையை அகஸ்தியன்ன் அறிந்திடும் பருவம் பெற்றான் முதல் நிலைகளில்.

அவன் உடலில் விளைந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் பிரபஞ்சத்தின் இயக்கமும் பிரபஞ்சத்தில் அணுவின் ஆற்றலின் பெருக்கமும் அதனின் நிலைகள் கொண்டு கோள்களானதும் கோள்கள் நட்சத்திரமாவதும் நட்சத்திரங்கள் சூரியன் ஆவதும் என்ற நிலையினை வெளிப்படுத்துகின்றான்.

அந்தச் சூரியன் நட்சத்திரமாகும் போது அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் அது எவ்வாறு கோள்களாக மாறி கோள்கள் நட்சத்திரமாகி நட்சத்திரங்கள் அனைத்தும் விண்ணுலக ஆற்றலைப் பெற்று இந்த நட்சத்திரங்கள் நஞ்சினை வென்று நல்ல உணர்வுகளைத் தனக்குள் பாய்ச்சி இந்த பிரபஞ்சத்திற்குள் செலுத்துகிறது என்றும்
1.பிரபஞ்சத்திற்குள் இருக்கும் நிலைகள் அதனைக் கவர்ந்து கோளாக மாறி
2.அது உமிழ்த்தும் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து ஒளியின் சுடராக மாற்றி
3.அதனுடன் கலந்த நஞ்சினைப் பிரித்து ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கும் நிலை பெற்றது என்ற உண்மை நிலையை
4.முதன் முதலில் உணர்ந்து பரிணாம வளர்ச்சியும் அணுவின் வளர்ச்சி நிலையும் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாம் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். அப்பொழுது பக்கத்திலே ஒருவர் கடுமையாக வேதனைப்படுகின்றார்… பார்க்கின்றோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள்.

இதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் அவரிடம் அதிகமான பழக்கமில்லை. இரயிலில் போகும் பொழுது தான் அவரிடம் நாம் யதார்த்தமாகப் பழகுகின்றோம்.
1.அவர் படும் வேதனையை நாம் மிகுந்த இரக்கத்துடன் பார்க்கின்றோம்.
2.ஆனால் அவருடன் கூட வந்தவர்கள் சலிப்பாக சஞ்சலமாகத் தான் பேசுவார்கள்.
3.ஏனென்றால் அடிக்கடி அவர்களிடம் துயரப்பட்டுப் பழகியதால் அந்த நிலை.

இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இந்த மாதிரி அடிக்கடி அது வேண்டும்… இது வேண்டும்… என்று கேட்கிறாய்…? என்பார்கள்.

ஆனால் நாம் இரக்க மனம் கொண்டு ஏனம்மா…! என்ன செய்கிறது…? உனக்கு என்ன வேண்டும்…? என்று இரக்கத்துடன் கேட்கின்றோம். ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே நாம் பழகியது…!
1.அது அவருக்குள் பதிவாகிறது.
2.அவருக்கு ஆதரவாக நாம் அப்படிப் பேசுகின்றோம்.
3.பண்புடன் நாம் அங்கே சொல்லப்படும் பொழுது அவர்களுக்குக் கொஞ்சம் தணிவாகின்றது.
4.இந்த உணர்வு “அவருடைய உடலில் வலுப்பெற்று விடுகின்றது…”

நாம் என்ன நினைக்கின்றோம்…? அந்த அம்மா இவ்வளவு தூரம் சிரமப்படுகின்றது ஆனால் கூட வந்தவர்கள் கொஞ்சம் கூட இரக்கமில்லாதபடி இப்படிப் பேசுகிறார்கள்… சமுதாயம் இப்படி இருக்கின்றதே…! என்று “அவர்கள் உணர்வை நமக்குள் பதிவு செய்கிறோம்…”

ஆனால் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் அவரை சார்ந்தவர்கள் வரப்படும் பொழுது நோயாளிக்குள் எண்ணங்கள் அதிகமாகிறது.

பார்…! ஆரம்பத்திலிருந்து இவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தோம்… எத்தனை வசதிகள் செய்தோம்… நல்லது செய்தோம்…! நம்மை இவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை…!

ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது அந்த மகாராசி எனக்கு அவ்வளவு ஆதரவாக உதவி செய்தார்… எந்த அளவுக்கு உபசாரம் செய்தார்…! என்று இந்த உணர்வுகள் வலுப்பெறுகின்றது.

நாம் அவர்கள் பட்ட வேதனையை வலுப்பெற்று வைத்திருக்கின்றோம்
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…
2.நம்முடைய உணர்வுகள் பதிவானது அங்கே….
3.அவர் வீட்டில் அவரைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பு.

கடைசியில் உடலை விட்டுச் செல்லும் போது தனக்கு இரயில் பிரயாணத்தில் உதவி செய்த நல்லவர் மீது… அதாவது நம் மீது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது.

விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்…!

அப்படி எண்ணிய உடனே அந்த உயிரான்மா
1.நாம் இங்கே இருந்தாலும் எதனின் வலுப்பெற்றதோ இங்கே இழுத்துக் கொண்டு வந்து விடுகிறது.
2.நம் உடலில் புகுந்து விடுகிறது… நமக்குத் தெரியாது… ஒன்றுமே தெரியாது.

ஆனால் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்படைந்த உணர்வைப் பதிவு செய்தது… “எல்லோரும் பாவிகள்” என்று அங்கே அந்த எண்ண அலைகளைப் பரப்புகின்றது.

அந்தச் சாப அலைகள் அந்தக் குடும்பத்தையே சாடுகின்றது. இந்த உடலில் விளைந்தது அங்கே போகின்றது

தன் மீது பற்று கொண்ட உணர்வின் நினைவுடன் “மகராசி எனக்கு உதவி செய்தார்…” என்று அவர் உடலில் விளைந்தது இங்கே வந்து… விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்குமோ அது போன்று அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வந்து விடுகின்றது.

கடைசி நேரத்தில்
1.என்னென்ன வேதனைப்பட்டுப் புலம்பல் ஆனதோ
2.தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பாவிகள் என்று வெறுப்புடன் எப்படிப் பேசியதோ
3.அது எல்லாம் இங்கே வந்து அவர் செயல்படுத்தியது போன்றே தன் குடும்பத்தில் வெறுப்பாகப் பேசும்.

குடும்பத்தில் சிலருடைய நடவடிக்கைளைப் பார்க்கலாம்…! நேற்று வரை எல்லாம் செய்தார்… இப்பொழுது என்னமோ தெரியவில்லை “கண்டபடி வெறுத்துப் பேசுகின்றார்…! நல்லது செய்தவர்தான்… ஆனால் வெறுத்துப் பேசுகின்றார் என்று அவருடைய செயலாக்கங்கள் திடீரென்று மாறுவதைப் பார்க்கலாம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா.

இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே ஏற்படக்கூடிய சில தீங்கான நிலைகள்…!

இதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோம்.
1.அறியாமல் வரக்கூடிய தீங்குகளை… அதனின் உண்மையை உணர்ந்து
2.ஞானிகள் காட்டிய வழியில் அதை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

பிறருக்கு நாம் எப்படி உதவி செய்ய வேண்டும்…? உதவி செய்தாலும் அவர் பட்ட துன்பங்களும் வேதனைகளும் நமக்குள் வராதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்…?

1.நம்மையும் காத்து பிறரையும் காக்கும் சக்தியாக
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்பதற்குத்தான்
3.இதை உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்

 

இப்பொழுது நம் உடலில் வேதனை என்ற உணர்வுகள் அடர்த்தியானால் கேன்சருக்குண்டான அணுவாக உருவாகின்றது. அப்பொழுது விஷத்தைத் தான் அது உணவாக உட்கொள்கின்றது.

அந்த அணுக்கள் உருவானவுடன் விழுதுகளைப் பரப்புகின்றது. எந்தப் பாகத்தில் போகின்றதோ அந்தப் பாகத்தில் எல்லாம் பரப்புகின்றது. அந்த விஷத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது.
1.விஷம் இருந்தால் தான் அது இயக்கும்.
2.அப்பொழுது என்ன செய்கின்றது…? நம் உடலில் கேன்சர் வருகின்றது.
3.ஆக வேதனை ஒரு பக்கம் அதிகமாகக் குமியும். நல்ல அணுக்களைச் செயலற்றதாக்கும்.

இப்பொழுது நமக்குள் சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று அதிகமானால் நம் நுரையீரல்களில் அது அதிகமாகச் சேர்கின்றது. அப்பொழுது அது சளி கட்டும் தன்மை வரும்.

இந்த வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் கிட்னி ஃபெயிலியர் ஆகி இரத்த நாளங்களில் இருக்கக்கூடியது நீர்ச்சத்தாக மாறி நெஞ்சுகளில் அதிகமாக ஆகும்.
1.கிட்னி சரியாக இயங்குவதில்லை… நீர்ச்சத்தாக மாறும்.
2.துரித நிலைகள் கொண்டு மனிதனை அழித்துவிடும்.

அடிக்கடி வேதனை என்ற உணர்வு அதிகமானால் பித்த சுரப்பியின் உணர்வுகள் அதிகமாகின்றது. இந்தப் பித்த சுரப்பிகள் அதிகமாகி விஷத்தின் தன்மை கூட்ட நம் இரத்தத்துடன் அது கலக்கப்படும் பொழுது தலை சுற்றும் கிறு… கிறு… என்று வரும்.

ஆகவே இந்த வேதனை என்ற உணர்வுகளை நாம் பார்த்தால் நினைப்பு வேதனை. ஆனால் இங்கே பித்தங்கள் அதிகமாகும். நாம் தவறு செய்யவில்லை. அந்த விஷத்தின் தன்மை பெருகுகின்றது.

அதே மாதிரி இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது நம் உடலில் மேலே தடிப்பாகின்ற மாதிரி கல்லீரலில் அதே மாதிரித் தடிப்பானால் நம் உடலில் இனம் புரியாத வலி ஏற்படும்.

அப்பொழுது அந்தக் கல்லீரல் வீக்கம் ஆகத் தொடங்கி விடும். கல்லீரல் வீக்கமானால் மண்ணீரலிலும் இதைப் போன்று பல வீக்கங்கள் தொடரும். அதைப் பார்த்தோம் என்றால் ஈரல் பக்கம் முழுவதும் பெரிதாகிவிடும். அது நீண்டு வளரத் தொடங்கிவிடும்.
1.ஆக அந்த மாதிரி அணுக்களை உருவாக்கினால் ஈரலைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.
2.டாக்டரிடம் சென்றால் ஈரலை குறைத்தால்தான் நல்லது என்று சொல்வார்கள்.
3.ஆனால் அதைக் குறைத்து யாரும் பிழைத்த மாதிரிக் கண்டதில்லை.

ஆகவே இதைப் போல உறுப்புகளை மாற்றி உறுப்புகளை வளர்த்தாலும் சிறிது காலமே இருக்க முடியும்.

தேடிய செல்வம் எல்லாம் கொஞ்ச நாள் வாழ்க்கைக்கு பல லட்சங்கள் இருப்பதைப் போட்டு தப்பித்து வந்து விடுகிறார்கள். அடுத்தாற்படி வாழ்க்கைக்கு இல்லை என்றால் மறுபடியும் அந்த வேதனையைத்தான் உருவாக்கும்.

ஓரளவுக்கு அரையும் குறையுமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் நிம்மதியாக இருக்கும். உதவிக்கு ஆள் இருக்க வேண்டும். காசு போய்விட்டால் கடன்காரனாகி விடுவோம். இருக்கிற வீட்டை விற்றுவிட்டுச் சிறிய வீட்டிற்குச் செல்வார்கள்.
1.ரொம்பச் செல்வந்தர்களாக இருந்தாலும் கடைசியில்
2.இதை எல்லாம் எதற்கு…? போ…! என்று போகின்ற நேரம் தான் வரும்.
3.ஆகவே இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்.

என்றும் ஏகாந்த நிலை என்ற உணர்வுகள் நாம் பெறுவதற்கு நாம் இப்பொழுது சொல்லும் இந்த ஆயுட்கால மெம்ராகப்படும் பொழுது உங்களுக்கு கொடுத்த இந்தச் சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

என் பிள்ளை இப்படி வரவில்லையே அது வரவில்லையே என்று கூறிக் கொண்டு அதாவது இந்த உணர்வின் தன்மைக்கு நீங்கள் செலவழித்தால் இதிலிருந்து நாம் என்றைக்கும் மீள முடியாது.

அப்பொழுது
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வை நீங்கள் பெருக்கி
2.என் பிள்ளைக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும் அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று
3.கல்வியிலோ அல்லது வேறு எந்த நிலைகளிலோ தவறானாலும்
4.அவன் செய்யும் அந்தத் தவறான உணர்வு நமக்குள் வளராது காத்துக் கொள்ள வேண்டும்.

அவன் செய்யும் தவறின் உணர்வை நாம் நுகர்ந்தால் வேதனை ஆகி இந்த உணர்வுகள் வந்த பிற்பாடு நமக்கு நோயாகின்றது. நோயாகி வெளியே வந்த பிற்பாடு யார் உடலுக்குள் செல்வோம்…?

யாரைப் பற்றி எண்ணி இந்த விஷங்கள் உருவானதோ அவர் உடலுக்குள் தான் செல்வோம். அவனும் பாழானான் நாமும் பாழானோம். இது தான் நடக்கும்.

ஆகவே தெரிந்தும் தவறு செய்யக் கூடாது.
1.நீங்கள் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகி
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் வளர்ந்து தீமைகளை அகற்ற வேண்டும்.

கணவன் மனைவி ஒன்று சேர்த்தே வாழ்தல் வேண்டும். கணவன் வெளியில் சென்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும். அவர் செய்யக்கூடிய காரியங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

கணவன் வெளியில் போகும் பொழுது மனைவிக்கு அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும். ஒன்றுபட்ட உணர்வோடு நாங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.
1.பண்பு கொண்ட உணர்வுகளை மனதால் நினைத்து அருள் உணர்வைச் சேர்த்து
2.அந்த ரசத்தை… பெண்பாலின் உணர்வைக் கணவன் எடுத்துக் கொண்டால் வெறுப்பு என்ற நிலைகள் மாறும். இருவருக்குமே இது பாதுகாப்பாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புலி தன் குட்டிகளுடன் இன்பத்தைக் காணுகின்றது அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தி இம்சித்துத்தான் தன் உணவை உட்கொண்டு வாழுகின்றது.

தன் குட்டியைக் கண்டு மகிழ்ந்து வாழுகின்றது ஆனால் மற்றொன்றை இம்சிக்கும் பொழுது அது இரையாக்கி ரசித்து வாழ்கின்றது இருந்தாலும் தன் இரையை எடுத்து ரசித்து உட்கொள்ளும் பொழுது
1.தனது இனம் அருகே வந்தாலும் கூட வெறுக்கின்றது.
2.பசியின் உந்துதல் வேகம் அதிகமாகும் பொழுது குட்டியாக இருந்தாலும் கூட விரட்டுகின்றது..

இரை உட்கொள்ளும் போது பார்க்கலாம். அதனுடைய குட்டி இரையைத் தன் பக்கம் அதிகமாக இழுத்தால் போதும். குட்டிக்குப் பாலை அரவணைத்துக் கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் இரையை இப்படி இழுக்கும்பொழுது உடனே விர்ர்ர்…” என்று ஒரு தட்டு தட்டும்.

ஏனென்றால் தன்னுடைய வாழ்க்கை என்று நிலை வரும் பொழுது தன் இனமாக இருந்தாலும் தனக்கு இரை கிடைப்பதைத் தடை செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகிவிடுகிறது.

மனிதன் நாம் நம்முடைய குழந்தைகளை வளர்த்தாலும் கூட நாம் சொன்னபடி குழந்தை கேட்கவில்லை என்றால் என்ன வருகிறது…?
1.அவன் மீது வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
2.”இவன் இப்படித்தான் இருப்பான்…” என்ற உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்

அது ஒரு தரம் பதிவாகிவிட்டால் பல காலம் அவன் மீது பேரன்பை வளர்த்து வைத்திருந்தாலும் ஒரு தரம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வு முன்னணியில் வந்து விடுகின்றது.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பான எண்ணங்களே வருகின்றது… அது வளர்ச்சியாகும். ஆனால்
1.அவனை நல்லவனாக மாற்றும் நிலைகள் நமக்குள் மாறி விடுகின்றது.
2.நமக்குள் அவன் மீது இருக்கும் பற்றைத்தான் மாற்றும்.
3.ஆனால் அவன் மீது வைத்திருக்கும் பற்றில் தீமையிலிருந்து அவனை மாற்றி நல்வழிக்குக் கொண்டு வரும் எண்ணம் வராது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கங்களில் “தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…” ஆக இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் இரவிலே புலன் அடங்கி நாம் தூங்கும் நேரத்தில் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்.

தினசரி காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ தடவை ஆத்ம சுத்தி செய்தாலும் தூங்கப் போகும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது
1.நம் நினைவை துருவ மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து
2.துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து
4.அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
5.அதாவது தீமையான உணர்வுகளுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
6.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பற்றும்படி செய்தல் வேண்டும்

இதுதான் ஆத்ம சுத்தி செய்வதில் உள்ள “முக்கியமான மூலக்கூறு…”

நன்மைகள் பல செய்யத் துணிவோம்

 

உலகில் பக்தி மார்க்கங்களில் எத்தனையோ தவறுகள் செய்து வருகின்றனர். அகண்ட அண்டமும் இந்தப் பிரபஞ்சமும் இந்த உடலும் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் அறியாமையிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய முடியும்..

ஒருத்தர் இங்கிருந்து போகிறார் என்றால் அங்கே சாக்கடையாக இருக்கின்றது…! என்று சொல்கின்றோம். அந்தச் சாக்கடையில் அவர் விழுகாமல் இருப்பதற்காகச் சொல்கின்றோம்.

ஒருத்தர் குளிக்கப் போகின்றார். இந்த இடத்தில் மடுகு இருக்கின்றது நீ விழுந்து விடாதே என்று சொல்வதற்கு நாம் தயங்கக் கூடாது. ஏனென்றால் அவன் அங்கே சென்றால் செத்துப் போய்விடுவான் என்று காப்பாற்றுவதற்காகக் கட்டாயப்படுத்தி நாம் இழுக்கின்றோம்.

சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான்… “போகட்டும்…!” என்று விடுவதற்கு மனது வருகின்றதா…?
1.அதே போல் நம்முடைய ஞானத்தால் மற்ற மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
2.அவன் அகராதி பிடித்தவன் என்று சொல்லக்கூடாது‌ அந்த உணர்வு நமக்குள் வந்து நம் நல்லதையே மாற்றிவிடும்.

அதே சமயத்தில் நம் வீட்டிலோ அல்லது மற்றவர்களோ சில சந்தர்ப்பங்களில் சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்… குறைபாடுகள் வந்துவிடும்.

அந்த அறியாமை என்னும் இருளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்ற வகையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று அவர்களுக்கு நாம் பாய்ச்ச வேண்டும்.

அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் நமக்குள் முதலில் இயங்கிவிடக் கூடாது. முன்னால் தடுத்துப் பழக வேண்டும் இல்லை என்றால் அவர்களுடைய தவறு செய்யும் உணர்வு நம்மையும் தவறு செய்பவர்களாக மாற்றுகின்றது.

இப்பொழுது நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…?
1.நான் சொல்லிப் பார்த்தேன் முடியவில்லை என்றால்
2.அதைக் காட்டிலும் நாம் கடுமையான தவறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

வெறுப்பு வேதனை என்ற நிலைகளில் வரப்படும் பொழுது தேடிய செல்வத்தைக் கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லை. நல்ல ஒழுக்கங்கள் எல்லாம் போய் என்ன வாழ்க்கை…? என்ற இந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும். இராமேஸ்வரத்தில் என்ன செய்கின்றோம்…? நாம் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கோடிக்கரை. இப்பொழுது மனிதனாக ஆனபின் என்ன செய்கின்றோம்…? தனுஷ்கோடி.

அகஸ்தியன் என்ன செய்கின்றான்…? தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றினான்.
1.ஆக நமது வாழ்க்கையில் தீமையின் நிலைகள் வந்தால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

இப்பொழுது நோயாளியைப் பார்த்து இரக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டதே என்று ஏங்கினால் சிவ தனுசு ஆகின்றது. அந்த உணர்வின் தன்மை நாம் இயக்கப்பட்டு அந்த நிலைக்குப் போனால் நாம் அடுத்த பிறவிக்குப் போகின்றோம். மனிதனல்லாத பிறவிக்குத் தான் போக வேண்டும். அவன் வேதனை எப்படிப் பெறுகின்றானோ அந்த உணர்வாகின்றது.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன பிற்பாடு அந்த துருவ நட்சத்திரம் என்பது விஷ்ணு தனுசு.
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றும்.
2.நமது குருநாதர் காட்டிய வழியில் அதை நமக்குள் பெருக்கி எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் அகஸ்தியரும்… அவரைப் பின்பற்றிய நமது குருவும்… சப்தரிஷிகளின் அருளும் அதன் பின் 4000 ஆண்டுகளுக்குள் வியாசகர் பெற்ற நிலையும் தான்.

1.அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் எடுத்து உணர்வின் ஒளியாகப் பெற்றவர் வியாசகர்
2.அவரிடமிருந்து வெளிப்பட்டதை பிருகு அத்திரி இதைப் போன்ற மகரிஷிகள் அந்த உணர்வை தனக்குள் வளர்த்து
3.அதை எல்லோரும் பெற வேண்டும் என்ற உணர்வு கொண்டு எழுத்து வடிவில் பதிவு செய்தனர்
4.எழுத்து வடிவில் இல்லை என்றாலும் கூட சுருதி வடிவிலே தனக்குள் வளர்த்துக் கொண்டவர்கள்
5.அதன் வழியில் அவர்களுக்குள் விளைந்ததும் பின் அவர்கள் பிறர் பெற வேண்டும் என்று எண்ணியதும்
6.மற்றவர்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் நன்மை பெற வேண்டும் என்று அவர்கள் செயல்படுத்தினார்கள்.

ஆனால் பின் வந்தோர் அதை மாற்றி விட்டார்கள் இது எல்லாமே உங்களுக்குத் தெரிய வரும். உபதேசத்தின் மூலக்கூறுகளை அந்தந்தக் காலகட்டத்தில் உங்களுக்குள் எல்லாவற்றையும் தெளிவாக்கிக் கொண்டு வரும்.

நீங்கள் வளர… பிறரைத் தெளிவாக்க தெளிந்த பூமியாக தெளியச் செய்யும் உணர்வாக நமக்குள் வளர்க்க… என்றும் பேரானந்தப் பெருநிலை என்று நிலை அடைய இது உதவும். நாம் எல்லோரும் அதைப் பெறுவோம்.

உதாரணமாக பலசரக்குக் கடையிலே பொருள்களை வாங்குகின்றார்கள். பொருள்களை எல்லாம் விற்றால் வியாபாரம் நன்றாக இருக்கும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

அதே மாதிரித் தான்
1.அந்த அருள் ஞானிகளின் சக்திகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தால்
2.அவர்கள் அதைப் பெறும்பொழுது மகிழ்ச்சியின் நிலைகள் உங்களுக்குள் வளரும்.

புறப்பொருளை விற்றுப் பணத்தை வாங்குகின்றீர்கள் ஆனால்
1.அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் எடுத்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று செலுத்தும் போது
2.அதை அவர்கள் பெற்று மகிழ்ந்திடும் உணர்வுகள் வரும் போது பேரானந்தச் செல்வமாக நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஆகையினால் “எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளைக் கிடைக்கச் செய்யுங்கள். அந்த மகிழ்ச்சியான அரும்பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் இது பேரானந்தப் பெரும் செல்வம்.

ஆகையினால் அதைப் பெறுவதற்கு முயற்சிப்போம் குரு அருளை நாம் என்றுமே பெறுவோம். அவருடைய அருளால் எல்லா நிலைகளையும் நாம் பெறுவோம் எல்லோரையும் நாம் மகிழ்வடையச் செய்ய முடியும்.

நம்மை மனிதனாக உருவாக்கிய நம் அன்னை தந்தை உயிரைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய நிலையும் மனிதன் நல் ஒழுக்கத்தையும் நல் நிலைகள் பெறுவதற்குக் குருவாக வழிகாட்டிய முதல் குருவின் ஆசியை நாம் பெறுவோம். அவர்கள் துணை கொண்டு
1.மெய் உலகின் உணர்வின் தன்மையை வழிகாட்டும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளும்
2.அவரின் அருள் துணை கொண்டு மெய் ஞானிகள் அருளும்
3.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வையும்
4.அதிலிருந்து வளர்ச்சி பெற்ற சப்தரிஷிகளின் அருள் உணர்வுகளையும் நாம் பெறுவோம்.

உலக இருளை மாய்ப்போம்… மெய்ப்பொருள் காணும் அந்தப் பாக்கியத்தைப் பெறுவோம்.

அருள் ஞானச்சக்கரம்

 

“அருள் ஞானச்சக்கரம்” பூஜை அறையில் வைக்க வேண்டும். சில சிரமங்களையோ சங்கடங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளையோ உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும் “எந்தக் காரணத்தைக் கொண்டும்…”
1.கணவன் மனைவிக்குள் பேரானந்த நிலையைத் தான் என்றும் உருவாக்க வேண்டும்.
2.கோபங்கள் வரலாம்… ஆத்ம சுத்தி செய்து உடனே அதைத் தடுத்துப் பழக வேண்டும்…
3.நானும் விடுபட வேண்டும்… மனைவியும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று
4.ஆனால் இதை நீங்கள் சீராகச் செய்தால் “நான் செய்வது தான் சரி” என்று வராது.

பால் ருசியாகத் தான் இருக்கின்றது… அதிலே பாதாமைப் போட்டால் ருசியாகத் தான் இருக்கிறது. ஒரு துளி காரம் பட்டு விட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சி தான் வரும்.

ஆது போல் நம் நல்ல மனதில் வெறுப்பை ஊட்டினால் என்ன செய்யும்…? விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைத் தணித்துச் சுவையாக மாற்ற வேண்டும்.

தியானம் செய்தேன் என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என்றால் நீங்கள் எதைச் செய்கின்றீர்கள்…? இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகிறீர்கள்.

1.தியானத்தைக் கூட்டி நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்
2.அந்த உணர்வு பெறுக வேண்டும் என்று மனதிலே பெருக்க வேண்டும்.

வேதனை உணர்வுகளை எடுத்து “எல்லாம் செய்தேன்… இப்படி ஆகிவிட்டது என்னத்தைத் தியானம்…?” என்று கொண்டு போனால் அது நமக்கு அல்ல. கடைசியில் நாம் எதை எடுத்து எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் உருவாக்கும்.

ஆகவே எந்த காரணத்தைக் கொண்டும் தனுசுக்கோடி…! வரக்கூடிய தீமைகளை மாற்றி… கோடி என்று சொன்னால் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்குவது… பிறவில்லா நிலை அடையச் செய்வது.

உணர்வின் எண்ணங்களைப் பற்றி இராமாயணத்தில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள். அதை நாம் கடைபிடித்து நம் வாழ்க்கையை இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும்.

என்னதான் ஒழுங்குபடுத்திச் செல்வத்தைத் தேடினாலும் அது நிற்குமா…? இந்த உடலே சொந்தமில்லை என்கிற போது உடலால் தேடிய செல்வம் எப்படி நிலைத்து இருக்கும்…!

1.அந்தப் பேரருளை இந்த உடலிலே கூட்ட வேண்டும்
2.எந்த அளவுக்குக் கூட்டுகின்றமோ இது அழியாச் செல்வமாகின்றது.
3.என்றும் ஏகாந்த நிலை வருகின்றது… அழியா ஒளிச்சரீரம் பெறுகின்றோம்
4.அதைத்தான் ஒவ்வொரு மகரிஷிகளும் பெற்றார்கள்… அதையே நாமும் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.எத்தனை வகையான உணர்வுகளுடன் இயங்குகின்றோமோ அத்தனை உணர்வுகளையும் தட்டி எழுப்பி
2.அந்தந்த உணர்வுகளுடன் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கச் செய்வதற்கும்
3.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வுக்குள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் செய்வதற்கும்
4.நடைமுறையில் இயக்கும் உணர்வுகளையும் உங்களுக்குள் தூண்டச் செய்து மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்வதும் தான்
5.”இயக்கமும்… உணர்வின் சேர்க்கையும்…” என்ற நிலையில் இப்பொழுது உங்களுக்குள் எம்மால் (ஞானகுரு) உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

அதன் வழியில் வளர்க்கப்படும் பொழுது அது உங்களுக்குள் வளர்ச்சி பெறும். எத்தனையோ விதமான குணங்கள் நமக்குள் இயங்கிக் கொண்டுள்ளது “அத்தனை குணங்களிலும்” நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

அது மட்டுல்ல…
1.வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் நம்மை மோதும்
2.அக்காலங்களில் மகரிஷிகள் உணர்வுகளை அதனுடன் இணைத்தல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் சேர்த்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்க்கையில் இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

ஏனென்றால் சிறு பிள்ளையாக நாம் வளர்ந்ததிலிருந்து எத்தனையோ உணர்வுகள் நமக்குள் வித்தாக ஊன்றப்பட்டு இருக்கிறது.

“ஊழ்வினை” என்று அவைகள் இருப்பினும் வினைக்கு அந்த உணர்வின் அணுவாக வளரப்பட்டு அதனின் மலமாக நம் உடலுக்குள் அணுக்களாக உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

1.அப்படி வளர்த்துக் கொண்ட அணுக்கள் அது முதுமை அடைந்து விட்டால் அதனுடைய மலம் குறையும்
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் இணையும்.
3.இணைந்து கொண்ட உணர்வுகள் உடலை விட்டுச் சென்ற பின் உயிருடன் ஒன்றும்
4.எது உயிருடன் ஒன்றுகிறதோ அது தான் நம்முடைய அடுத்த நிலைக்குக் காரணமாகிறது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நம் ஆத்மாவாகி உடலில் ஜீவாத்மாவாக விளைந்து அதிலே வடித்தது உயிராத்மாவாக மாறுகிறது.

ஏனென்றால் இந்த உடல் பெறும் உணர்வுக்கு அந்த மலம் இல்லை என்றால் அணுவின் தன்மை உடல் குறையும். ஆனால் அந்த உடலின் உணர்வின் தன்மை அணுவின் மலம் (தசைகள் உறுப்புகள்) அது முதுமை அடையப்படும் போது உயிருடன் ஒன்றி நிலைகொள்ளும். அந்த உணர்வின் அணுவே உயிருடன் ஒன்றி வெளி வரும்.
1.மீண்டும் தன் இனத்தைப் பெருக்க அதனின் செயலாக்கத்தை உருவாக்கிவிடும்
2.ஆகையினால் தான் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை எல்லாவற்றிலும் இணைத்தல் வேண்டும் என்று யாம் சொல்வது

வாழ்க்கையில் எத்தனையோ விதமான சந்தர்ப்பங்கள் வரும். அத்தனை சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது
1.அந்த மகரிஷிகளுடன் ஒன்றி நாம் ஒளியின் உணர்வாகவே நாம் வளர்கின்றோம்.
2.ஆகவே எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பேராசை கொள்ளுங்கள்.

சந்தேக உணர்வின் விளைவுகள்

 

தன் கணவன் ஒருவரோடு பழகுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த உடனே.. நேரடியாகப் பார்க்கும் மனைவி அதைச் சந்தேகப்படுகின்றார்.

அந்தச் சந்தேகப்படும் உணர்வுடன் கலந்து மனைவி நுகர்ந்து விட்டால் அதன் உணர்வின் தன்மை திருப்பிப் பாய்ச்சப்படும் போது அந்த உணர்வின் அணுக்கள் இங்கே வருவதும் இதனால் தன் மனதில் “மனக் கலக்கம்” ஆகும் உணர்ச்சிகள் தோன்றுகின்றது.

அதே போல் கணவன் மனைவி மேல் வெறுப்படைந்து இதே போல் சந்தேக உணர்வு ஏற்பட்டால் இந்த உணர்வுகள் இதனுடன் கலக்கப்பட்டு இங்கே மனதில் கலக்கத்தின் தன்மை ஏற்படுகின்றது.

இப்படி வெறுப்படையும் உணர்வுகள் இருவருக்குள்ளும் வரும்போது
1.உடலுக்குள் எதிர்நிலைகள் உருவாக்கப்பட்டு
2.நல்ல குணங்களை உருவாக்குவதற்கு மாறாகத் தீமையின் உணர்வுகளைத் தான் அந்த அணுக்கள் மாற்றும்.

இப்படி மாற்றி வரப்படும் போது பகைமை உணர்வுகள் சேரத் தன் உடலுக்குள் மீண்டும் தீமையின் உணர்வுகளை விளைவிக்கும் தன்மையாக வந்துவிடும்.

ஆனால் அதே சமயத்தில் தொழில் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை என்ன செய்யும்…! இப்போது எதற்கடா…? என்று தோன்றும்.

ஆனால் அதே சமயத்தில் எப்படியும் சம்பாரிக்க வேண்டும் நம் குடும்பத்தைப் பெரிதாக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.

பிறகு அந்த நிலைகளில் பலவீனமான நிலைகள் அடையும் பொழுது வளர்த்து வந்த தன்மையும் இழந்து மற்ற உணர்வின் தன்மை தன் உள்ளடக்கும் தன்மை வருகிறது… பகைமை உணர்ச்சிகளே வரும்.

1.அப்போது நம்மை எது இயக்குகின்றது…?
2.நாம் தவறு செய்கின்றோமா…? என்றால் இல்லை…!
3.சந்தர்ப்பம்… இவ்வாறு நுகரப்படும்போது நம் உணர்ச்சிகளை மாற்றி சந்தேகப்படுபவர்களாக இரண்டு பேரையும் மாற்றி விடுகின்றது.

இதனின் விஷத்தன்மை மனித உடலையே அழிக்கச் செய்யும். தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் செல்லும். இல்லையென்றால் ஏன் எதற்கு என்று வாழ்க்கையையே விரயமாக்கச் செய்யும். கணவன் மனைவியைப் பிரித்து வாழச் செய்யும்.

ஆகவே பிரித்து வாழும் போது வேதனையின் தன்மை உருவாகும். இதைப் போல இந்த உணர்வுகள் அதிகமாக விளைந்தால் என்ன ஆகும்…?

மனிதனாகப் பிறந்தும்
1.விஷத்தின் தன்மை கொண்டு தனக்குத் தானே எமனாகவும் மனித உருவுக்கு எமனாகவும்
2.இரண்டு பேருமே பெற்றுக் கொள்ளும் தன்மை வருகின்றது.

இப்படி விளையும் உணர்வுகள் எதிர் நிலையாகப்படும் பொழுது நரகலோகத்தையே சந்திக்க நேர்கின்றது…! ஏன் வாழ்கின்றோம்…? எதற்காக வாழ்கின்றோம்…? என்று இந்த உணர்வுகள் இரண்டு பாலருக்கும் இருக்கும்.

இரண்டு பேருக்குள்ளும் இப்படி மனப் போராட்டங்கள் ஏற்படும் பொழுது இந்த உணர்வுகள் பித்த சுரப்பிகளில் வேதனை உணர்வுகள் (விஷம்) அதிகரித்து கடும் நோயாக மாறிவிடுகிறது. அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அகஸ்தியனும் மனைவியும் நஞ்சினை வென்று ஒன்றாக இணைந்தனர். துருவத்தின் எல்லையில் இருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றினர். இன்றும் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

என்னை குருநாதர் அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஆயுட்கால மெம்பராக ஆக்கினார். அதே போல்
1.மனித வாழ்க்கையில் இருளை நீக்கித் துருவ நட்சத்திரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ
2.அதிலே நீங்களும் ஆயுட்கால மெம்பராக இணைந்து என்றும் ஒளியாக நிலை பெற வேண்டும்.
3.இருள் சூழ்ந்த நிலைகள் உங்கள் மனதை மாற்றக்கூடிய நிலைகள் வரக்கூடாது.

தங்க நகை செய்யப் பித்தளை செம்பு போன்ற சில பொருட்களை அதனுடன் இணைக்கின்றோம். அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தால் இதைப் பிரித்து தங்கத்தைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம்.

இதைப் போல் நமக்குள் மனப் போராட்டங்கள் பல சந்தர்ப்பத்தில் இணைந்தாலும் திரவகத்தை ஊற்றித் தங்கத்தைத் தெளிவாக்குவது போல
1.மனிதனின் வாழ்க்கையில் வரும் இப்படி சந்தேக உணர்வுகளும் மற்ற நிலைகளும் கடும் விஷத்தின் தன்மையை உருவாக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து தனக்குள் இணைத்தோம் என்றால்
3.கணவனும் மனைவியும் ஒன்றி வாழும் நிலை ஏற்படும். மகிழ்ந்து வாழச் செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.குருநாதர் எம்மைத் தொட்டு உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்தார் (பவர் கொடுத்தார்).
2.என் ஒருவனுக்குத் தான் குருநாதர் சக்தி கொடுத்தார் ஆனால் உங்களிடம் யாம் (ஞானகுரு) என்ன செய்கின்றோம்…?
3..அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
4.உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக மதித்து அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்கள் உயிருடன் நினைவை இணைக்கின்றேன்.
5.அந்த அலைகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் உயிர் மேக்னெட்.. கவரும்
6.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு நீங்கள் எல்லோருமே அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

ஒரு பக்கத்திலே கம்ப்யூட்டரை வைத்து இயக்குகின்றார்கள். அதிலிருந்து இணைப்பைக் கொடுத்த பின் “உலகம் முழுவதற்கும் அது இயக்குகின்றது…”

ஒரு இடத்திலே அதை வைத்து ஆணையிட்டாலும் அடுத்த பக்கத்தில் மற்றதை இயக்கும்படி வைத்திருக்கின்றனர். இதே மாதிரித் தான்
1.குருநாதர் கொடுத்த அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
2.இந்த உணர்வை அங்கே எண்ணி உங்களுக்குள் பதிவு செய்து… உங்களை எடுக்கச் சொல்கின்றோம்.
3.(உபதேசத்தின் வாயிலாகப் பல முறை பதிவு செய்திருக்கின்றோம்)
4.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கினால்… எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த உயர்ந்த நிலைகளை நீங்கள் பெற முடியும்.

இப்படித்தான் உயர்ந்த நிலைகளை யாம் உங்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கின்றோம்…!

ஏனென்றால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து இந்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஆனால் குருநாதரைப் பார்க்கும் போது ஒரு பைத்தியக்காரராகத் தெரிந்தார்… பைத்தியக்காரராகத் தான் நான் நினைத்தேன்.

ஆனால் நான் சொல்வதை இப்பொழுது நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்…? சாமி சாதாரணமாகச் சொல்கின்றார் என்று…!
1.சொல்லிலே சாதாரணம்…!
2.ஆனால் எம்முடைய வாக்கின் பதிவு “குரு அருளின் சக்தியை அப்படியே உங்களிடம் பதிவு செய்கிறேன்…!”

ஒரு கொலைகாரனைப் பார்த்த பின் அது பதிவாகி அவனை நினைக்கும் போதெல்லாம் நடுக்கமும் பயமும் உண்டாகின்றது.

அதே மாதிரி… தீமைகளை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பதிவு செய்யப்படும் பொழுது நமக்குள் முந்தி ஏற்கனவே பதிவு செய்த தீமையின் விளைவுகள் அதைக் கண்ட பின் நமக்குள் நடுக்கம் உண்டாகும்.
1.நான் நினைத்தேன்… ஒரு நாள் எடுத்தேன்… அடுத்த நாள் என்னால் எடுக்க முடியவில்லை… என் உடல் எல்லாம் நடுங்குகிறது
2.சிறிது நாளைக்கு அந்த நடுக்கம் வரும்.

காரணம்… ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்துப் பதிவு செய்த பின் அவனை நினைக்கும் போதெல்லாம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் எல்லாம் கிடு…கிடு… என்று நடுங்கும். அவனை நினைக்கும் போதெல்லாம் நல்ல செயல்களைத் தடைப்படுத்துகின்றது.

இத்தகைய சங்கடத்தை உருவாக்கும் தீமையின் நிலைகளை அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் யாம் பதிவு செய்ததை எண்ணி உயிருடன் ஒன்றி இந்த உணர்வினை நம் உடலுக்குள் ஆக்கினை இங்கே இணைத்து விட்டால் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் ஆணையிட வேண்டும். என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

1.மகரிஷிகளின் உணர்வுகளைக் கண் கொண்டு தான் பதிவு செய்கிறோம். (பொட்டில் தொட்டு அதைப் பதிவு செய்ய முடியாது)
2.அதைப் பெற வேண்டும் ஏக்க உணர்வு கொண்டு பதிவு செய்து விடுகின்றோம்.
3.மீண்டும் இதை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது… இயக்கம் “அந்த உயிரின் இயக்கமாக வருகின்றது…”

இதை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிருடன் இணைத்துக் கொண்டு வர வேண்டும். முதலில் கண் கருவிழி பதிவாக்கி விடுகிறது. பதிவானால் தான் எடுக்க முடியும். ஆன்மாவில் வந்து உயிரிலே பட்டு நாம் தெரிய முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தை இங்கே கொண்டு வரச் சொல்கின்றோம்… பதிவாக்கி விடுகிறோம். இது தான் “தொட்டுக் காட்டுவது…!” என்று சொல்வது.

அன்றாட வாழ்க்கையில் உடனுக்குடன் நாம் செய்ய வேண்டியது

 

நாம் எப்போது பிறருடைய உணர்வுகளை எடுக்கின்றோமோ அதன் உணர்வின் தன்மை நமக்குள் வந்து விடுகின்றது. அப்போதே நாம் அதைக் கொன்று விட்டால் தீமை செய்யும் இயக்கமாக வராது.

வேதனையான உணர்வு வரப்படும் பொழுது ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அதை அடக்கி விட்டால் நமக்குள் அந்தப் பரம்பரை என்ற நோய்கள் வராது.

தொழிலில் நஷ்டம் ஆகிறது… வேதனைப்படுகின்றோம்.
1.அந்த வேதனை உணர்வு நமக்குள் வளராது
2.நாம் அப்பொழுதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துக் கொன்று விட்டால்
3.அந்த உணர்வின் தீமைகள் நமக்குள் செயல்படாது.

உணர்வின் உணர்ச்சிகள் நுகர்வது எண்ணங்களாக எப்படி ஆகின்றது…? அந்த உணர்ச்சியின் தன்மை நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

காரணம் தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்ம குரு. இப்பொழுது நாம் ஒருத்தர் பேசுவதை நாம் கவர்ந்து கேட்டால் வசிஷ்டர். உணர்வின் தன்மை நுகர்ந்தால் நம் உடலில் அக்குணத்தின் தன்மை நமக்குள் உருவாக்கும் பிரம்மம் ஆகி அணுவாக உருவாகிவிடுகின்றது.

அந்த அணுத்தன்மை ஆகிவிட்டால் வசிஷ்டர் பிரம்மகுரு. பிரம்மகுருவின் மனைவி யார்…? அருந்ததி.

1.எந்தக் குணத்தின் தன்மை கவர்கின்றோமோ அது உணர்வின் தன்மை அணுவாகும் பொழுது
2.அதன் இனத்தின் தன்மையே தான் இயக்கும் அருந்ததி… என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது சாஸ்திரங்கள்.

ஆக இங்கே விஷ்ணு உயிர். விஷ்ணுவின் மகன் பிரம்மா. சீதாராமன் விஷ்ணுவின் மறு அவதாரம் என்ற நிலைகளைத் தெளிவாக கூறுகின்றனர்.

நாம் எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை பிரம்மம் ஆகும்பொழுது அந்த பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
1.இங்கே அதன் ஞானமாக இயக்கும் என்றும்
2.வசிஷ்டரின் மனைவி அருந்ததி எதைக் கவர்ந்தோமோ அது உருவாக்கப்படும் பொழுது பிரம்மம் ஆனாலும்
3.அது இணைந்தே அந்தச் சக்தியாக இயக்குமென்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றது.
4.எந்த உணர்வின் தன்மையோ அந்த ஞானத்தின் தன்மை இங்கே இயக்கும் என்று கூறுகின்றனர்.

ஆனால் விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். எதன் சுவையின் உணர்ச்சிகள் எண்ணங்களாக இயக்குகின்றதோ அப்பொழுது அது அணுவாகப் படும் பொழுது அதனுடைய இயக்கமும் ஈசன்… அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.

உயிரின் இயக்கமும் இதே தான். விஷ்ணு என்று இருக்கும் பொழுது இயக்கம் ஈசன் அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.

ஆகவே விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். ஆக எந்த உணர்வின் தன்மையோ அதன் உணர்ச்சியின் அணுவாகி அந்த உணர்வின் தன்மை உடலாகி அதன் வழியே இயக்கும் என்றும் நமது சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஆகவே இங்கே இராமாயணத்தில் பரதன் கைகேயிடம் என்ன சொல்கின்றார்…? உன் தாயார் பாட்டன் வீட்டில் எதைச் செய்ததோ… அதையே நீ இங்கேயும் செய்கின்றாய். அதாவது
1.பரம்பரை நோயும் பரம்பரை குணங்களும் நமக்குள் வருகின்றது.
2.ஏனென்றால் இன்னொரு உடலில் விளைந்த உணர்வின் தன்மையை நாம் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மையே நமக்குள் வருகின்றது.
3.அப்பொழுது நமக்குள் அது வளராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அதைக் கொன்று பழக வேண்டும்.

சங்கடத்தையோ சலிப்பையோ வேதனையோ வெறுப்பையோ சந்தர்ப்பத்தால் நுகரும்போது ஆசையின் நிமித்தம் வரப்படும் பொழுது அதன் அருகிலே நாம் செல்கின்றோம்.

தொழிலில் நாம் வேலை செய்து வரப்படும் பொழுது எல்லோருக்கும் நன்மையை செய்கின்றோம். அதில் எதிர்பாராத நிலைகளில் ஒருவன் குறை கூறினால் நாம் நல்லது செய்தும் குறை கூறும் போது அவன் நம்முடைய இடத்தைப் பிடிப்பதற்காக அவன் குறை கூறுகின்றான் அந்தக் குறையின் உணர்வை நுகரப்படும் பொழுது அந்த உணர்வு நமக்குள் விளைந்த பின் அது தான் தாய் ஆகின்றது.

அந்த உணர்ச்சியின் தன்மை வெறுப்படைந்து… “என்னை இப்படிச் செய்கின்றானே..” என்று வேதனை உணர்வை நமக்குள் எடுக்கப்படும் பொழுது அவனை நினைக்கும் பொழுதெல்லாம் வேதனை வருகின்றது.

அப்பொழுது நாம் வேதனைப்படும் செயல் வரப்படும் பொழுது நம் சிந்திக்கும் தன்மை எல்லாம் இழக்கின்றது. நமக்குத் தீங்கு செய்தவன் உணர்வு தான் வளர்கின்றதே தவிர நமது நன்மை செய்த உணர்வை நாம் வளர்க்க முடியவில்லை.

1.ஆனால் அந்தத் தீமை செய்யும் உணர்வு நமக்குள் வளராது “அப்போதே அதைக் கொன்று பழகுதல் வேண்டும்…”
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று அந்த இயக்கச் சக்தியை நாம் மாற்றினோம் என்றால்
3.நமக்குள் அந்தத் தீமை என்ற நிலைகள் வராது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் சொன்னது:-
1.உனக்கு இடைஞ்சலாகும் பொழுது நான் சொன்ன உயர்ந்த சக்தியை நீ சேர்த்துக் கொண்டால்
2.உன் கெடுதல் நீங்கும்… உன் துன்பங்கள் விலகும்
3.அந்தத் துன்பத்தை நீக்குவதற்குத் தான் உனக்குள் இதைப் பதிவு செய்கிறேன்…!

இதைக் கடைசியில் சொல்வார். ஆனால் அதற்கு முன்னாடி என்னை உதைப்பார்… எனக்கே தெரியாது.

“ஏன் தான் இப்படித் தொல்லை கொடுக்கின்றாரோ…” என்று அவர் மேல் எனக்கு வெறுப்பு வரும். அவரிடமிருந்து “தப்பித்து ஓடிப் போய் விடலாமா…!” என்று நினைப்பேன்.

எங்கேயடா நீ தப்பப் போகின்றாய்…? என்பார் குருநாதர்.. பல இம்சை…!

வழுக்கலான பாறையாக இருக்கும் அங்கே போகச் சொல்வார். போனால் கீழே விழுந்து பல்லெல்லாம் உடைந்து விடும். அதிலே ஒரு பொருளைக் காட்டி “நீ எடுத்துக் கொண்டு வாடா…” என்பார்

அதே போன்று பனிப்பாறையாக இருக்கும் இமயமலை போன்ற இடங்களுக்குச் செல்லும்படி சொல்வார் ஆனால் மேலே துணி ஏதும் போடக்கூடாது… கோவணத் துணியை மட்டும் தான் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பார்.

பார்த்தால் பாறைகளாக எல்லாம் உருப்படியாகத் தான் தெரியும் ஆனால் மரத்தின் மேலே பனி உறைந்திருக்கும். ஏமாந்து அங்கே கையை வைத்து விட்டால் “டப்…” என்று உள்ளே போய் பாதாளத்திற்கே போய்விடுவோம். ஆனால் அங்கே போடா… என்பார்.

இதையும் காட்டுவார்… எல்லாவற்றையும் சொல்வார்…!
1.ஆனால் இதில் இருந்து எல்லாம் உன்னைக் காப்பாற்றுவதற்குச் சக்தி வேண்டும்… வலு வேண்டும்…
2.அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா…? என்பார்
3.நான் சொன்னதை நினைக்கவில்லை என்றால் நீ உள்ளே சென்று விடுவாய்
4.நான் சொன்ன முறைப்படி எண்ணினால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஏனென்றால் ஆபத்து வரும் நேரங்களில் இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பார் குருநாதர்.

நான் போய்க் கொண்டே இருப்பேன். ஒரு இடத்தில் மரத்தின் மீது பனிக்கட்டியாக உறைந்து இருக்கின்றது. ஆனால் அந்தப் பக்கம் பார்த்தால் திடு…திடு… திடு…திடு… என்று பனிப்பாறைகள் உடைந்து விழுந்து கொண்டிருக்கின்றது.

இங்கே பனி மலையில் காலை வைக்கின்றேன். பொரு..பொரு.. என்று உள்ளே போகின்றது. என்னுடைய ஒரு கால் “டபக்…” என்று உள்ளே இறங்கி விட்டது. இறங்கியவுடன் என்னுடைய எண்ணம் எப்படி வருகின்றது…?

“செத்து விடுவேன்…!” என்ற எண்ணம் தான் எனக்கு வருகின்றது…!

1.நான் உன்னிடம் என்னடா சொன்னேன்…!
2.நீ இப்போது என்னடா செய்கின்றாய்…? என்கிறார் குருநாதர்

ஆக… என்னுடைய உணர்வு ஏன்ன செய்கின்றது…?

1.குருநாதர் கொடுத்த சக்தியை அந்த இடத்திலே என்னால் பயன்படுத்த முடியவில்லை.
2.புவியின் ஈர்ப்பில் இருக்கப்படும் பொழுது இறந்துவிடுவோம்…! என்ற உணர்வு தான் உடனடியாக வருகின்றது
3.நல்லதை நினைக்கவே முடியவில்லை…!

இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து ஈஸ்வரா…! என்று எண்ணித் தியானத்தில் அமர்ந்தவுடன்… எனக்கு மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை (கான்சன்ட்ரேஷன் பண்ண முடியவில்லை) தியானம் வரவில்லை… என்னால் எண்ணத்தை நிலையாக நிறுத்த முடியவில்லை… சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

நிலையாக அதை நிறுத்த முடியாது… அது பல அலைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இப்பொழுது யாம் சொல்லும் போது கேட்டுக் கொண்டிருந்தால் அது நல்ல அலைகளாக இருக்கும். ஆக… எப்பொழுதெல்லாம் குணங்கள் கெடுகின்றதோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நல்ல உணர்வு எனக்குள் வளர வேண்டும் என்று எண்ணி உங்கள் உடலுக்குள் செலுத்தக்கூடிய நிலையில் ஆத்ம சுத்தியில் தான் இருக்கின்றது.

குருநாதர் காட்டிய வழியில் மிக மிக உயர்ந்த அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி காற்றிலே படர்ந்து இருக்கின்றது.
2.அதை எடுக்கக்கூடிய திறன் உங்களுக்கு வேண்டும் அல்லவா…!
3.நான் பேசுகின்றேன்… நீங்கள் கேட்கின்றீர்கள்… அதற்கு வேண்டிய கரண்ட் தேவை…!
4.இல்லை என்றால் உங்களால் எடுக்க முடியாது… வெறுமனே எண்ணி எடுக்க முடியாது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் தொடர்பு கொண்டு அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

தையல் வேலை பழகியவர்கள் துணியை வெட்டி அழகாக நேர்த்தியாகத் தைக்கின்றார்கள். மற்றவரிடம் பேசிக் கொண்டு கூட தைப்பார்கள்.

ஆனால் புதிதாகத் தைக்க வேண்டும் என்று சென்றால் கவனமாகப் பார்த்துத் தைத்தாலும் கூட சரியாக வராது. அந்தப் பழக்கம் வரும் வரை அது சீராக வராது.

அதைப் போன்று தான் அந்தப் பழக்கத்திற்கு வருவதற்குத் தான் உங்களுக்குத் திரும்பத் திரும்ப… பல கோணங்களில் உணர்த்திக் கொண்டு வருவது.

குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று தான்… “முதலிலே சொன்ன மாதிரி பல இம்சைகளைக் கொடுத்து… ஞானிகள் சக்திகளைப் பெறுவதற்குப் பழக்கிக் கொடுத்தார்…!”

இப்பொழுது உங்களிடம் இதை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லித் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். மரம் செடி கொடிகளுக்கு உரத்தைப் போடுவது போன்று
1.இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அவரவர்கள் மன நிலைக்குத் தகுந்த மாதிரி…
2.எத்தனை பேர் எந்தெந்த வகையில் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்ற நிலையில் தான்
3.என்னுடைய இந்த உபதேசமே அமையும்… உங்களுக்குள் அந்தச் சக்தி கூடும்.

ஞானிகள் உணர்வை இப்படி உரமாக உங்களுக்குள் ஏற்றி வைத்த பின் ஈஸ்வரா…! என்று நீங்கள் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல குணங்கள் வலுவாகி… அடுத்து நல்லதைச் சிந்திப்பதற்கும் நோய்கள் அகன்று… வேதனைகள் அகன்று உங்கள் சொல்லிலே வலிமையும் செயல்கள் புனிதமும் பெறும்.

என் பையன் சொன்னபடி கேட்கவில்லை; என் வீட்டுக்காரர் என்னை எதிர்த்துக் கொண்டேயிருக்கின்றார்; என் நண்பன் வெறுத்துப் பேசுகின்றான்; என் தொழில் சரியாக நடக்கவில்லை என்று இப்படி எல்லாம் சொல்ல வராது.

என் பையன் தெளிந்த நிலை பெறுவான்… என் வியாபாரம் விருத்தியாகும்… கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ்வோம்… நோய்கள் அகலும்… என்று தன்னாலே சொல்ல வைக்கும்.

தீமையாக எண்ண விடாதபடி நல்லதாகவே உங்களை எண்ண வைக்கும்… உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

நல்லது எது…? கெட்டது எது…?

 

குருநாதர் என்னைக் காடு மேடெல்லாம் அலையச் செய்து ஒவ்வொரு உணர்வுகளும் நீ நுகரப்படும் போது என்ன செய்கின்றது…? என்று பச்சிலையின் ரூபமாகக் காட்டினார்.

1.ஒரு பச்சிலையை நுகர்ந்த பின் அது உனக்குள் எப்படிப் பேசுகின்றது…? என்று பார் என்கின்றார்.
2.அதை நுகர்ந்த உடனே அந்தப் பச்சிலை பேசுமா…? என்று கேட்கின்றார்.

எப்படி சாமி பேசும்…! என்றேன்.

இப்பொழுது பேச வைக்கின்றேன் பார்…! என்று பச்சிலையை நசுக்கி என்னை நுகரச் செய்தார். நுகர்ந்தவுடனே “ஓ…ய்” என்று பேச ஆரம்பிக்கின்றது… ஐய்யய்ய… என்று ஒரு மாதிரியாக உமட்டலாக வருகின்றது.

1.இப்பொழுது எது பேசுகின்றது…? நீ பேசுகின்றாயா…? இல்லை… அந்தப் பச்சிலையா…?
2.இப்படி ஒவ்வொரு இலைகளையும் நுகரப்படும் பொழுது உணர்த்துகின்றார்.

திடீரென்று என்னை ஓங்கி அடிக்க வருகிறார். அப்பொழுது அடிக்க வந்தவுடன் நுகர்ந்தவுடன் என்ன செய்தது…? யார் அடிக்க வந்தது…? நுகர்ந்த உணர்வு உனக்குள் வந்து உன்னைப் பயப்பட வைக்கிறது.

அப்பொழுது நீ பயந்தாயா…? நான் செய்த செய்கையை நீ நுகர்ந்த பின் உன்னைப் பயமுறுத்தச் செய்கின்றது. அப்பொழுது நீயா…? இல்லை நானா…?

1.இதில் இரண்டையும் சொல்லி இப்படி எல்லாம் வினாக்களைக் கேட்பார்.
2.ஏனென்றால் இதை அனுபவ ரீதியில் ஒவ்வொன்றையும் உணர வைக்கின்றார்.

சில நேரங்களை எடுத்துக் கொண்டோம் என்றால் இதை ஏதாவது ஒன்று சொல்வார். இது நல்லதா… கெட்டதா…? என்பார். நல்லது என்று சொன்னால் எப்படி நல்லது…? என்பார் கெட்டது என்று சொன்னால் எப்படிக் கெட்டது…? என்பார்.

இந்த வினா கொடுப்பதற்கு முன்பே கெட்டது என்று சொன்னாலும் கூட எப்படி கெட்டது என்று…! நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல என்பார்.

இப்பொழுது நீங்கள் நல்ல தேனும் பாலும் சுவையாகச் சாப்பிடுகிறீர்கள்… அது நல்லது தானே…!
1.ஆனால் உடம்புக்கு முடியாத நேரத்தில் இதைச் சாப்பிட்டால் என்ன செய்கின்றது…? எதிர்நிலையாகின்றது.
2.அப்பொழுது இது நல்லதா… கெட்டதா…? என்பார்.

இதைச் சொல்லிவிட்டு இது எல்லாம் நல்லது தானே..! எப்படி நீ நல்லது என்று சொல் பார்ப்போம்…? என்று கேட்பார். உடம்பு முடியாமல் போனால் நல்லதை நீ சாப்பிட்டவுடன் அது நல்லது செய்கின்றதா இல்லை கெட்டது செய்கின்றதா…? என்பார்.

1.எவ்வளவு நாசூக்காக அவருடைய உணர்வுகளை உணர்த்துவதற்காக வேண்டி அனுபவரீதியாகக் கொடுக்கின்றார்.
2.ஆனால் மனிதன் வாழ்க்கையில் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல.

இப்பொழுது நாம் மருந்து சாப்பிடுகின்றோம்… அது கசப்பாக இருக்கின்றது. ஆனால் நோயை நீக்கக்கூடிய தன்மை இருக்கின்றது. மருந்தைச் சாப்பிட்டவுடன் என்ன செய்கின்றது…?
1.நமக்குள் இருக்கக்கூடிய கெட்டதை நீக்கிவிட்டு நல்லது ய்கின்றது.
2.அப்பொழுது அந்த மருந்துக்குள் இருக்கக்கூடிய கசப்பின் உணர்ச்சி என்ன செய்கின்றது…? நமக்கு நல்லது செய்கின்றது அல்லவா…!

ருசியின் தன்மை இருக்கும் போது நீ ருசியாகச் சாப்பிடுகின்றாய். சாப்பிடும் போது உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்கின்றது…? வயிற்று வலி வருகின்றது தலைவலி வந்து விடுகின்றது வாந்தி வந்து விடுகின்றது எல்லாம் வந்து விடுகின்றது. அப்பொழுது இது எப்படி நல்லதாகும்…? என்று கேட்கின்றார்.

ஆக நாம் நுகரும் உணர்வுகளை இயக்குவது யார்…? நமது உயிர். அப்பொழுது நமக்குக் கடவுள் யார்…? நமது உயிர். அந்த உணர்வின் தன்மையை நாம் இயக்கி உடலில் உணர்வின் தன்மை அணுவாகி விட்டால் நம் உள் நின்று குணத்தின் தன்மை உயிரைப் போலவே உள் நின்று கடவுளாக இயக்கும்.

1.அது தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் பிரணவத்திற்குள் பிரணவம்.
2.இயக்கத்தின் தன்மை எப்படி இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

ஆகையினாலே நாம் இந்த ஆயுட்கால மெம்பராக இருப்பதெல்லாம் எப்போது நமக்குத் தீமை என்று தெரிகின்றோமோ அப்போதே அதைக் கொன்று பழக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது நமக்குள் வளராது ஆத்ம சுத்தி செய்து அதை நாம் அடக்கிப் பழக வேண்டும். அதை வளரவிடக் கூடாது.

நாம் மிளகாயை அள்வாகக் குழம்பில் போடும்போது அது ருசியாக வருகின்றது. அதே மிளகாய் அதிகமாகி விட்டால் ருசி கெடச் செய்கிறது. ஆகவே நாம் தீமை என்ற கார உணர்ச்சிகளை நுகரும் போதெல்லாம் கொன்று பழக வேண்டும்.

குழம்பில் அதிகமாக காரம் இருந்தால் இரண்டாவது முறை சாப்பிடத் தோன்றுமா? உஷ்…உஷ்… என்று தள்ளி விட்டுவிடுகிறோம். அப்போது அதைச் சாப்பிடுகின்றோமா…? இல்லை.

இதை போல தான் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒருவர் தீங்கு செய்தான் என்று தெரிகிறது. இப்படித் தீங்கு செய்தானே இப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று நாம் உள்ளுக்குள் போட்டவுடன் என்ன செய்கின்றது…? நமக்குள் இருக்கக் கூடிய நல்ல குணங்களை எல்லாம் கொல்கின்றது. ஆக நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றும்.

அப்பொழுது நாம் எதைக் கொல்ல வேண்டும்…?
1.அவனை எண்ணி அவன் வழியில் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் கொல்வதா…?
2.ஆனால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காக்க… தீமை என்று உணர்வு நமக்குள் வருவதை அதைக் கொல்வதா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

அந்த உயர்ந்த சக்திகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதற்காக குருநாதர் எப்படி ஆயுட்கால மெம்பராக என்னை இணைத்தாரோ அதே போல் ஆயுட்கால மெம்பராக உங்களையும் இணைக்கின்றேன்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ்நாளில் நஞ்சினை வென்றானோ கணவன் மனைவி ஒன்றாக இணைந்தனரோ இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியின் சரீரமாகப் பெற்றனரோ… அதன் வழிப்படி இந்த ஆயுட்கால மெம்பர்கள் உங்கள் குடும்பத்தில் அன்புடனும் பற்றுடனும் பரிவுடனும் வாழ்தல் வேண்டும்.

தன்னை அறியாது வரும் தீயவினைகளை…
1.இராமாயணத்தில் பரதன் சொன்னது போல அந்தத் தீமை என்ற உணர்வுகளை
2.அப்போதே அதைக் கொன்று அருள் உணர்வினைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

ஆயுட்கால மெம்பராக வந்தவர்கள் நீங்கள் இதனை வழிப்படுத்தி நடத்தி இந்த உடல் தான் கடைசி உடல் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.தாய் தந்தையரை நாம் மறவாது இருக்க வேண்டும்.
2.குரு அருளையும் மகரிஷிகளின் அருளை பெற வேண்டும் என்றால் எப்பொழுதுமே அன்னை தந்தையை வணங்கிப் பழக வேண்டும்.
3.அவர்கள் அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

அதன் வழியில் யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாக்கினை உற்று நோக்கி சீராக உங்களுக்குள் பதிவு செய்தால் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாகிறது.

ஞான வித்தினை நீங்கள் வளர்க்க வளர்க்க… தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்
1.உங்களால் சிரமங்களைப் போக்க முடியும்… அதற்குண்டான வழியையும் காட்டும்
2.அருள் வழியில் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும்
3.அருள் உணர்வை உடலுக்குள் அணைத்துக் காட்டும்
4.எண்ணிய உணர்வின் ஞானமாக உங்களில் உணர்த்தும்
5.உங்களைக் காத்திடும் சக்தியாக வரும்
6.அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆகவே யாம் கொடுக்கும் அருளாசியை நேர்முகமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஏக்கத்திலே… எதைப் பெற வேண்டும் என்று வந்தீர்களோ… உங்கள் துன்பங்கள் நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.

குரு அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களைப் பார்ப்போரெல்லாம் நலம் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லைக் கேட்பவர் வாழ்க்கையில் இனிமை பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்போருக்கும் எங்களைப் பார்ப்போருக்கும் நல்ல எண்ணம் பெற வேண்டும் என்று
11.இதை எல்லாம் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி இருங்கள்
12.பல பல உணர்வுகள் வரும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இணையும்

யாம் கொடுக்கும் இந்த வாக்குகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… “நூறு முறை… ஆயிரம் முறை…” இது போன்று எண்ணி ஏங்கிப் பாருங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் நோய் நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும். உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

ஒரு டம்ளரில் நீரை வைத்து இது போன்று தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அதைத் தீர்த்தமாக எடுத்துப் பருகிப் பாருங்கள். நோய் இருந்தால் அதற்குண்டான மருந்தையும் இதிலே வைத்துத் தியானித்த பின் உட்கொள்ளுங்கள்
1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய சர்வ வேதனைகளும் விலகும்…
2.அதை உங்களால் நிச்சயம் உணர முடியும்

யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை நீங்கள் சீராக வைத்து.. அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்… “நீங்கள் ஏங்கும் பொழுதெல்லாம் இந்தச் சக்தி கிடைக்கும்…”

நம்மைப் பலவீனப்படச் செய்வது எது…?

 

நான் என்னுடைய அனுபவத்தில் சொல்கின்றேன். 20 வருட காலம் குருநாதர் காட்டிய அருள் வழியில் எதை எதை எப்படி எல்லாம் நுகர்கின்றோமோ…? அது எல்லாம் எப்படி என்னை இயக்குகிறது…? என்று அதைக் காட்டுகின்றார்.

உதாரணமாக காட்டுக்குள் செல்லப்படும் பொழுது ஒரு மோசமான இலை இருக்கின்றது. அதை நசுக்கியவுடன் ரொம்ப நாற்றம் அடிக்கின்றது.
1.நாற்றம் அடிக்கின்றது என்று முகத்தைச் சுளித்தால்
2.இந்த உணர்வின் தன்மை முகத்தைச் சுளிக்க வைப்பது எது…? நீயா… இல்லை அந்தப் பச்சிலையா…? என்று கேட்பார்.

அந்த பச்சிலையின் உணர்வு உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சியின் தன்மை உடலாக்கப்பட்டு
1.அந்த உணர்ச்சிகள் உன்னை எப்படி முகத்தைச் சுளிக்க வைக்கின்றது…?
2.வாந்தி உமட்டல் எப்படி வருகின்றது…?
3.இது எதனுடைய காரணம்…?

நீ நுகர்ந்த உணர்வு தான் அதை இயக்குகின்றது. இயக்குவது யார்…? உயிரே…! ஆக அந்த உயிர் இயக்கும் உணர்வுகளில் இருந்து இது எப்படிச் செயல்படுகின்றது…? என்பதனை இப்படித் தெளிவாக்குகின்றார்.

இதைப்போல் எத்தனையோ வகையான பச்சிலைகளை நுகரும்படி செய்கிறார். சந்தர்ப்பங்களில் என்னை இடக்கு முடக்கான இடங்களில் கொண்டுபோய் ஏற்றி வைத்துவிட்டு நீ இங்கே இரு… நான் வருகின்றேன்…! என்று போய்விடுவார்.

அப்பொழுது அவர் போனவுடனே என்ன நடக்கிறது…? அவர் இருக்கும் பொழுது முதலில் தைரியமாக இருந்தது. ஆனால் அதற்குப் பின் அந்த இடத்திலிருந்து கீழே இறங்க முடியாத நிலையும் பயம் கொள்ளும் உணர்ச்சிகளை எனக்குள் ஊட்டுகிறது.

இந்த உணர்வுகள் தோன்றிய பின் அதன் பின் நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் என்னென்ன செயல்கள் செயல்படுகின்றது…? அதிலிருந்து நீ எப்படி விடுபட வேண்டும்…? என்று இவ்வளவும் ஞாபகப்படுத்தினாலும்
1.அந்தப் பயம் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறந்து விடுகின்றோம்.
2.மறந்தவுடன் நடுக்கம் ஆகின்றது… மன உறுதியே இருக்காது. நாக்கு கூட சில நேரங்களில் வறண்டு போகும்.

ஒரு ஆபத்தான இடத்தில் விட்டவுடன் அந்த உணர்ச்சியின் வேகம் வரும்போது இதை உற்றுப் பார்க்கும்போது நாக்கு வறட்சியாகி விட்ட்து. தண்ணீருக்கு எங்கே செல்வது…? அப்பொழுது வறட்சி ஆகும்போது பலவீனமடைகின்றது.

இதையெல்லாம் எது இயக்குகின்றது…?

1.நீ உன்னுடைய எண்ணத்தால் நுகர்ந்த நிலை உன்னைப் பலவீனப்படுத்தச் செய்து
2.அப்பொழுது நீ எடுக்கும் மன பலம் குறைகின்றது.
3.இங்கே வறட்சி ஆகின்றது. உன் உடலில் வேர்வையாகின்றது.

ஆக இதன் உணர்வுகள் உள் நின்று வெப்பமாகி இதன் உணர்வுகள் ஆவி ஆக்கப்படும் போது நீ எந்தப் பொருளைத் தொட்டாலும் அது வழுக்கும் தன்மை வருகிறது. மீண்டும் இங்கே உன் பலவீனம் தான் காட்டப்படுகின்றது.
1.பலவீனம் காட்டுவது எது…?
2.உன்னுடைய எண்ணம் தான்.

உயிரிலே பட்டு இயக்குவது யார்…? அந்த உயிரே தான். அந்த உணர்ச்சியின் தன்மை உன் உடலில் இயக்குவது யார்…? இந்த உயிரே தான் என்ற நிலையில் இப்படி ஒவ்வொரு நிலைகளையும் தெளிவாகக் காட்டுகின்றார்.

நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான் ஞானியர்கள் அரங்கநாதன் என்றும் இந்த அரங்கத்திற்குள் உணர்வின் தன்மை மோதும் போது அந்த உணர்ச்சிகள் (ஆண்டாள்) நம்மை ஆளுகின்றது… அது சொல்லைக் கேட்பவரையும் ஆளுகின்றது என்று தெளிவாக்கினார்கள்

இப்பொழுது வேறு ஒன்றும் தேவையில்லை. நாம் கொஞ்சம் தைரியமாக இருப்போம், ஒருத்தர் முடியாத நிலையில் அவர் பலவீனமான உணர்வை நுகர்ந்த பின் அந்த நாதத்திற்கொப்ப அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு அவருடைய செயலைப் பார்க்கும்போது நாம் வலுவாக இருப்பவர்கள் என்ன செய்வோம்…?

என்னப்பா…? இதற்கெல்லாம் போய் நடுங்கிக் கொண்டிருக்கின்றாய்…! என்று நாம் கேலி செய்வோம். ஆனால் அவருக்கு அங்கே முடியாத நிலை. ஆனால் நாம் கேலி செய்வோம்.

அந்தக் கேலியின் தன்மை சிரிக்கச் சிரிக்க மீண்டும் அவருடைய பலவீனத்தைத் தான் ஊட்ட முடியும். ஆனால் அவருக்குத் தெளிவூட்டுகின்றோமோ…?

ஆனால் அதே சமயத்தில்
1.அவன் முடியாத நிலைகளை நாம் நுகர்ந்து விட்டால் அடுத்து இந்த மாதிரிச் சந்தர்ப்பம் வரும்போது நமக்கும் இதே மாதிரி நடுக்கம் வரும்.
2.நடுக்கம் வரும்போது யாராவது சிரித்தால் நமக்கு உடனே கோபம் வரும்.
3.என்னைப் பார்த்து அவன் கிண்டல் செய்கின்றான் பார் என்று கோபம் வரும்… அல்லது பதட்டம் வரும்.

ஆக
1.அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நுகர்ந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக பரவப்பட்டு
2.நம்மை ஆளுவது நாம் எண்ணிய எண்ணங்கள் தான் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொரு நிமிஷமும் எத்தனையோ வகையான ஆயிரக்கணக்கான நிலைகள் வருகின்றது. அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் மகரிஷிகள் அனைவருமே நெருப்புக்குச் சமமானவர்கள்… தீமையைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய சக்தி பெற்றவர்கள். அந்தச் சக்தி நமக்கு முன் இந்தக் காற்றிலே இருக்கின்றது.

நம்மை அறியாது வரக்கூடிய தீமைகளை நீக்குவதற்கு அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… மெய் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று எடுத்து நமக்குள் அந்தத் தீமைகளைப் பொசுக்கிப் பழகுதல் வேண்டும்.

குருக்ஷேத்திரப் போர்…! குரு…! இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

நான் பேசுகின்றேன்; நீங்கள் திட்டுகிறீர்கள்; மற்றதைப் பார்க்கின்றேன்; எல்லாவற்றையும் சுவாசித்து… உயிரான குருவிடம் சென்றுதான் அது வேலை செய்கின்றது… உயிர் அதை எல்லாம் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.

உதாரணமாக… வேதனை வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.வேதனை உருவாக்கக்கூடியதைக் காதிலே கேட்டு…
2.அந்த உணர்ச்சிகளைச் தூண்டி சுவாசித்து… உயிரான குருவிடம் சென்ற பின்… (அப்போது மனப் போராகிறது)
3.ஈஸ்வரா…..…! என்று உயிரை எண்ணி (மனப் போரை நாம் குருக்ஷேத்திரப் போராக்க வேண்டும்)
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
5.குருக்ஷேத்திரப் போரில் அவனிடம் (உயிரிடம்) ஒப்படைத்து விட்டால்
6.மற்றவர்கள் திட்டியது… கேலி பேசியது… வேதனைப்படச் செய்தது… உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகிறது.

அதாவது குருவிடம் (உயிரிடம்) சொல்லி தனக்குள் கெட்டது புகாமல் தடுக்கச் செய்வதற்குத் தான் “குருக்ஷேத்திரப் போர்…” என்று நமக்குக் காண்பித்துள்ளார்கள்.

நம்மை ஒருவன் திட்டிக் கொண்டே இருக்கின்றான் என்று அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும். சுவாசித்ததும் ஜிர்.. ஜிர்..ர்ர்.. ஜிர்.. என்று இயக்கிக் கொண்டிருக்கும் (நமக்குள் இரைச்சலாகிறது).

அந்த உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
1.ஈஸ்வரா…….! என்று ஓங்கி (சொல்லி) அந்த ஓங்காரம்… வானை நோக்கி ஏகி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இங்கே குருவிடம் (புருவ மத்தியில்) வந்து விடுகிறது.
3.அப்போது சாதாரண மனிதன் பேசிய (திட்டியதை) உணர்வைச் சுட்டுப் பொசுக்கி விடுகிறது.

இத்தகைய பேருண்மைகளைக் காட்டிய மெய் ஞானியின் உணர்வை எண்ணி அதைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அவனிடம் வேண்ட வேண்டும்.

ஏனென்றால் அவன் தான் சிருஷ்டிக்கின்றான்…!

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும். என்னைத் திட்டியவர்களுக்கு என் சொல் நல்லதாகப் பட வேண்டும்… என் பார்வை அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… என் சொல் அவர்களுக்கு இனிமை ஊட்ட வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் வர வேண்டும்.

இப்படிச் செய்தால் குருக்ஷேத்திரப் போர்… தீமைகள் நமக்குள் வராதபடி தடுக்கப்படுகின்றது.

.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பதஞ்சலி அரசனாக இருக்கும் போது அறிதல் அழித்தல் காத்தல் என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் பயந்தே வாழ வேண்டியிருக்கின்றது. என்ற இந்த நிலையைச் சிந்திக்கின்றான்.

எப்போது…?

ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர்.
1.ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை.
2.கூடு விட்டுக் கூடு பாயும் போது பிறிதொருவர் கையில் இவன் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.

உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாகப் பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள்…? என்று பல செயல்களைக் காண விரும்பினார்.

மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.

அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.

எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டித் தன் உடலைப் பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற உண்மையை… பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான் செய்த தவறை உணர்கின்றான்.
2.ஏழ்மையான மாடு மேய்ப்பவனின் உடலில் புகுந்த பின் அதை முழுமையாக அறிகின்றான்

மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.

ஆக… திருமூலர் என்று சொல்பவன் ஒரு அரசனுடைய உயிரான்மா தான். மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் வந்த பிற்பாடு தான் உண்மைகளை எல்லாம் அவன் அறிகின்றான் – நடராஜா…!

நடராஜா என்றால் நமக்குத் தெரியுமா…? தெரியாது. உருவம் கிடையாது… நடராஜாவை வைத்திருக்கின்றார்கள் நம் பூமி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது… இதற்குப் பெயர் நடராஜா.

இதற்குள் தோன்றிய நிலைகள் கொண்டு “நடனங்கள் பல…” சுழற்சியின் தன்மை கொண்டு அது நிற்காமல் ஓடுகின்றது.

அதே சமயத்தில் அது மோதும் நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு உணர்வின் அணுக்களின் செயல்களும் “ஒலி ஒளி என்ற நிலைக்கே…”
2.இந்த பூமிக்குள் வளர்ச்சியின் தன்மை மாறி மாறிப் பல ஆயிரம் உடல்களாக எடுத்து
3.ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்கி – புலிக்குக் கோபம் மானுக்குச் சாந்தம் எருமைக்கு அசுர குணங்கள் என்று
4.ஒவ்வொரு குணத்தின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டதை 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 நடனங்களைக் காட்டினார் திருமூலர்.

நடராஜா என்கிற பொழுது பூமி ஓங்கார நடனம்…! அதாவது சுற்றும் பொழுது சுற்றும் வேகத்தில் “ஓங்காரக் காளி” தீய சக்திகள் அனைத்தையும் அழித்து விடுகிறது. காலிலே அசுரனைப் போட்டு மிதிப்பதாக அதைக் காட்டுகின்றார்கள்

இங்கே சிவத்தைக் காட்டும் பொழுது நடராஜா…! பூமி சுழலும் போது அதில் ஏற்படக்கூடிய விஷத்தின் சக்தி உள்ளே வடிகட்டி வருவதை அசுரனைக் காலிலே மிதித்து அடக்குவதாக இங்கே காட்டப்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் தவறான செயலைப் பார்த்துக் கோபப்படுகின்றோம். கோபமான உணர்வைச் சுவாசித்து உயிருக்குள் பட்ட பின் எரிச்சலாகின்றது.

ஆனால் அதே சமயம் இந்த உணர்வின் சக்தி உடலுக்குள் பரவி நல்ல குணங்களுக்குள் கலந்தவுடனே அனைத்தும் எரிச்சலாகிறது. அப்போது இந்த உடலான சிவம் என்ன செய்கிறது…?
1.ஓங்கார நடனம்… இரு உன்னை அழித்து விடுகிறேன்…! என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.
2.சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என்றால் அது கோப உணர்வின் சக்தி உடலை இயக்கும் நிலைகள் – ஒலி ஒளி
3.தாவர இனத்தினுடைய மணம்… குணம்… ஆனால் அதனுடைய உணர்வு… இயக்கம்…!

மிளகாயை வாயிலே போட்டால் என்ன செய்கின்றது…? காரம்… ஸ்…ஆ…! என்று அலறுகின்றோம் கசப்பை வாயிலே போட்டால் ஓய்…! உமட்டல் என்ற நிலை வருகிறது.

இதைப் போன்று தான் இந்தப் பூமி நடராஜா… நிற்காமல் சுழல்வதால் அதனின் ஜீவன் கொண்ட நாம் எப்படி இருக்கின்றோம்…? என்பது தான் அந்த ஸ்தல புராணத்தின் தத்துவம்.

சிதம்பரத்தில் தான் இருக்கின்றோம்… இந்த ஸ்தல புராணத்தின் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அன்று பதஞ்சலி மந்திரங்களைக் கற்றுக் கொண்டு தன்னுடைய சுகபோகத்திற்காக எத்தனையோ பாவங்கள் செய்தாலும் பாம்பு உடலில் வந்த பின் மாடு மேய்ப்பவனைத் தீண்டுகின்றான்.

தீண்டி அந்த உடலில் வந்த பின்
1.அங்கே அந்த ஏழ்மையான குடும்பத்தில் மகிழ்ச்சியான ஆனந்தமான உணர்வைக் கண்ட பின்
2.அரச நிலையின் உண்மைகளை உணர்ந்து அரசைத் துறக்கின்றான்
3.இந்த உடலிலிருந்தே மெய் ஒளியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றான்.

தான் பாம்பாக இருக்கும் போது விஷத்தால் தீண்டி அந்த (மூலனின்) உயிரை வெளியேற்றினாலும்… அதையும் தன் அணைப்பின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மை தான் செயலாக்கி வந்தது தான் “நடராஜன்” என்ற திருச்சிற்றம்பலம்…!
1.உடலுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு இந்த உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்
3.திருச்சிற்றம்பலம் என்பது சிறு உடலுக்குள் நின்று அங்கே இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினார் திருமூலர்

அந்தத் திருச்சிற்றம்பலத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

வெள்ளிக் கோளும் அகஸ்தியன் ஒளியாக ஆனதும்

 

தாய் கருவிலே விஷத்தை முறிக்கும் ஆற்றல் பெற்ற இந்த அகஸ்தியன் அவன் வாழ்நாளிலே இது எப்படி செடிகளுக்கு மணம் வந்தது…? எப்படி இயக்குகின்றது…? என்ற வகையில் அறிய ஆரம்பிக்கிறான்.

ஏனென்றால் விஷத்தை முறிக்கும் ஆற்றல் வரப்படும் பொழுது அந்த உண்மையை அறியக்கூடிய சக்தி அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது. அப்பொழுது இவனைக் கண்டால் காட்டில் உள்ள விஷ ஜந்துக்களே மறைகின்றது.

1.மின்னல்கள் வந்தால் எப்படி வெள்ளிக் கோள் அதை எடுத்து அதன் உணர்வின் தன்மை ஒளிக்கற்றையாக மாற்றுகின்றதோ
2.இதே மாதிரி மின்னல்களிலிருந்து வரக்கூடிய உணர்வை இவன் எடுத்து ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றான் அகஸ்தியன்.

அதாவது சூரியன் அருகிலே செல்லப்படும் பொழுது மோதும் உணர்வின் ஒளிகளை வெள்ளிக் கோள் எடுத்து ஒளியாக மாற்றுவது போல இவன் மனிதன் நிலையில்
1.பூமிக்குள் வரும் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய உணர்வின் ஒளியைத் தனக்குள் எடுத்து
2.அந்த ஒளியின் அறிவாலே எங்கெங்கெல்லாம் அது மோதுகின்றதோ… அங்கிருக்கும் இருள்கள் எல்லாம் நீங்குகின்றதோ
3.அதன் உணர்வின் இயக்கம் எதுவோ அதை எல்லாம் அறியக்கூடிய சக்தியாகப் பெறுகின்றான் இந்த அகஸ்தியன்.

அப்பொழுது அணுவை அறிந்து அகஸ்தியன் ஆகப்படும் பொழுது அவன் வாழ்க்கையில் தீமையை வெல்லும் சக்தி பெறுகின்றான். அந்தத் தீமையை வெல்லும் சக்தி பெற்ற பின் அவனுக்குப் பருவம் வரும் பொழுது திருமணத்தை முடிக்கின்றார்கள்.

திருமணம் முடிந்த பிறகு அவன் எதையெல்லாம் தெரிந்து கொண்டானோ அவை அனைத்தையும் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான். மனைவிக்கு எடுத்துச் சொல்லும்போது மனைவியும் அதைக் கேட்கிறது.

கேட்டுணர்ந்த பின் கணவன் மேலும் உயர வேண்டும் என்றும் தன் மனைவி ரொம்ப உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும் எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும் இரு உயிரும் ஒன்ற வேண்டும்… இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இரண்டு பேருமே இப்படி எண்ணி வாழ்கின்றார்கள்.

அப்போது இவர்கள் இரண்டு பேர் கண்ட உண்மையின் உணர்வுகள் ரெண்டு பேர் உடலிலும் உருவாக்கி இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் இந்த உடலுக்குப் பின்
1.எந்தத் துருவத்திலிருந்து வரக்கூடிய நிலையினை எதை இவர்கள் நுகர்ந்தார்களோ
2.அந்தத் துருவத்தில் வரக்கூடிய உணர்வை நுகர்ந்த பின் அதையெல்லாம் ஒளியாக மாற்றிய பின்
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் முதல் மனிதர்களில் இந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது.

இந்தப் பிரபஞ்சத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது. துருவ நட்சத்திரம் நமது துருவத்தின் நேராகத்தான் அது இருக்கிறது.

ஏனென்றால் இந்தப் பூமியில் வந்து உயிரணு தோன்றி அந்தத் துருவத்தின் எல்லைக்குப் போன பிற்பாடு நம் பூமிக்கு வரக்கூடிய உணர்வெல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

அதிலிருந்து விளைந்த உணர்வுகளைக் காலையில் சூரியன் எடுத்து நமது பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமி துருவ வழியில் கவர்ந்து வந்து நமது பூமிக்குள் பரவச் செய்கிறது.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் இப்பொழுது இந்த இயக்கத்தின் உண்மைகளை உணர்த்துவது.

என் குருநாதர் இதையெல்லாம் சொல்லி எனக்குள் பதிவு செய்தார்.
1.உனது வாழ்க்கையில் நீ எதையெல்லாம் நுகர்ந்தாயோ அதனால் உன் உடலில் எப்படி எல்லாம் கெடுதல் உண்டானது…?
2.அந்தக் கெடுதலை நீ எப்படி நீக்க‌ வேண்டும்…? என்று சொல்லி
3.அந்தத் துருவ நட்சத்தித்தினை எண்ணி எடுக்கச் சொந்னார்.

இந்த உடலுக்குள் அது சென்ற பின் எப்படித் தீமையின் வலு குறைகின்றது. அதனை உனக்குள் எப்படி நல்லதாக மாற்றி அமைக்க முடியும்…? என்பதனை உணர்த்தினார்.

ஆகவே
1.உன் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை நீக்க
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நீ எடுத்து உன் உடலில் செலுத்திக் கொண்டே வந்தால்
3.இந்த வாழ்க்கையில் அதனுடைய வலு பற்று அதிகமாகின்றது
4.அப்பொழுது உன்னை ஆயுள் காலம் மெம்பராக அதிலே இணைக்கின்றேன் என்றார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.இராவணன் யார்…? அவன் சிவ பக்தன்… (மனித உடல்).
2.இராமனோ விஷ்ணு பக்தன் உயிரின் இயக்கத்தைக் கொண்டவன்.

இராவணன் இந்த உடலின் இச்சைக்குச் சகலத்தையும் கற்று உணர்ந்தவன். சகோதரி சூர்ப்பணகையின் பாசத்தால் “என்னை அவமதித்து விட்டானே…” என்று அந்த சாம்ராஜ்யத்தில் வெறுப்பின் தன்மை வளருகின்றது.

பத்துத் தலை இராவணன் என்று சொல்லும் பொழுது மனிதன் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டு பத்தாவது நிலை அடையக்கூடிய தன்மை வந்தாலும்
1.நான் என்ற அகம் வரப்படும் பொழுது வளர்ச்சியின் தன்மை இல்லாது போய் விடுகின்றது.
2.நான் என்று அகம் வரப்படும் பொழுது தன் சகோதரனாக இருக்கும் அதாவது இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் தூங்குகின்றது (கும்பகர்ணன்).

இராவணவன் எல்லாவற்றிலும் வல்லமை பெற்றவன் இந்த உடலின் இச்சைக்குச் செயல்படுபவன் என்று தான் அவனைக் காட்டுகின்றார்கள்.

எதனின் சுவையின் தன்மை கொண்டானோ சூர்ப்பணகையினால் வந்த வினையை… தன் சகோதரி மேல் இருக்கும் பாசம் என்ற அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது… தனக்கென்று அகம் கொண்ட செயலின் தன்மை வரப்படும் போதுதான் அங்கே அழிவின் தன்மை வருகின்றது.

1.இங்கே இராவணனைக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உணர்ச்சி வசப்படும்போது சிந்தனை (கும்பகர்ணன்) இல்லை
2.அங்கே அவமதிக்கும் தன்மை வரும் பொழுது இதே உணர்வுகள் எதிரியின் தன்மையாக (இலட்சுமணன் – சூர்ப்பணகை) வாழ்க்கையில் எப்படி வளர்கின்றது…? என்ற நிலையைத்தான்
3.இந்த உடலுக்குள் எண்ணிய சக்திகள் இயக்கமும்
4.அதே சமயத்தில் தசரதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உயிர் சக்கரவர்த்தியாக இயக்குகின்றது என்ற நிலையும்
5.இந்த இரண்டு பிரிவையும் காட்டியுள்ளார்கள்.

குருநாதர் இதை மிகவும் தெளிவாக உணர்த்துகின்றார்…!

இராவணன் எங்கே இருக்கின்றான்…? என்றால்
1.எல்லாவற்றிலும் முன்னேற வேண்டும் என்ற இச்சை கொண்ட நம் உடல் தான்.
2.முடிவின் தன்மையில் இருக்கப்படும் போது அகம் என்ற நிலையில் தேய்பிறையாகி விடுகின்றது.

பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அந்தச் சக்திக்கு எது அருவமோ அதனின் உணர்வின் தன்மை கொண்டு இங்கே சக்கரவர்த்தியாக இருந்தாலும் இது அதற்குள் இயங்கி (உயிர் உடலுக்குள்) எவ்வாறு வருகிறது…? என்று காவியத் தொகுப்புகள் தெளிவாகக் காட்டுகின்றது.

இதற்காக வேண்டி இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று கூட நினைத்தேன் (ஞானகுரு). ஆனால் நேரமில்லை…!

1.பலரும் பல விதமாக எழுதி இருக்கின்றார்கள்
2.அதற்குள் நீ எதற்காகப் போகின்றாய்…? நான் சொல்வதை மட்டும் புரிந்து கொள்…! என்று சொன்னார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் உணர்வுகள் காற்றிலே படர்ந்து இருப்பதை நுகர்வதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகச் சொல்லி உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.
1.சும்மா இல்லை…
2.நீங்கள் நினைத்த உடனே… யாரும் சொன்னவுடனே…
3.இப்படி எடுங்கள்…! என்றால் எடுக்க முடியாது…!

நீங்கள் அதைப் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்தி இந்த நினைவுக்குள் உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு),

1.திட்டியவனை எண்ணிய உடனே எப்படி ஜிர்..ர்ர்ர்… என்று வேகம் வருகின்றதோ
2.திட்டியவனைப் பத்து வருடம் கழித்துப் பார்க்கப்படும் போது… துரோகம் செய்தான் பாவி…! டட்டட்…டட்ட… என்று கோபம் வருகின்றது…”
3.பல்லை எல்லாம் நற…நற… தன்னை அறியாமலே கடிக்க வைக்கும்.
4.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற நிலை வரும்.

அதைப் போன்று தான்
1.உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அந்த நேரத்தில்
2.ஈஸ்வரா…….! என்று “வேகமாக எண்ணுங்கள்…”

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… என் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு அடுத்து எதை வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்..

துன்பத்தைப் போக்கச் செய்து உங்கள் காரியத்தை நல்லதாக ஆக்கிவிடும்.

சில உடல்களிலே ஆவிகள் இருக்கும்… என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் சதா திட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் நமக்கு வேதனை அதிகமாகும்.

அதைக் கேட்கக் கேட்க நமக்குக் கை கால் குடைச்சல் வந்துவிடும்
1.பேசுபவர்களுக்குக் கொஞ்சம் குடைச்சலாகும்…
2.ஆனால் அதைக் கேட்பவர்களுக்கு அதிகமான கைகால் குடைச்சல் வரும்.

சண்டை போடுபவர்களை… திட்டுபவர்களை எல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அடுத்த நாள் பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்பார்கள்.

முதுகுத் தண்டில் மூன்றாவது எலும்பு… இடுப்பில் இருக்கும் மூன்றாவது எலும்பு… கழுத்தில் இருக்கும் எட்டாவது எலும்பு… தன்னாலே அங்கே வலி எடுக்க ஆரம்பித்துவிடும்.

டாக்டரிடம் சென்றால் “எலும்பு தேய்மானம்” ஆகிவிட்டது என்பார்கள் அல்லது இடுப்புக்குப் பெல்ட் போட வேண்டும் என்று சொல்வார்கள். இது தான் நடக்கும்.

அடிக்கடி கவலை… வீட்டிலே சண்டை போடுவது போன்ற எரிச்சலான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
1.இது இரண்டும் ஒன்றாகக் குவியும்
2.விரிந்து கொடுக்கும் நிலை வரப்படும் பொழுது அந்த இரண்டு எலும்புகளுக்குள் நீர் புகுந்து விடும்
3.புகுந்த பின் தாங்க முடியாதபடி வலிக்க ஆரம்பிக்கும்
4.நரம்பு செயலற்றதாகி வேதனையாகி (நரம்பு) பிடித்துக் கொள்ளும்.

மூன்றாவது எலும்பு விரிந்து கொண்டே இருக்கும்… எக்ஸ்ரேயில் பார்த்து உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள். இப்படி எல்லாம் வரும்.

இது போன்ற நிலையில் இருந்து நீங்கள் உங்களை மீட்டிக் கொள்வதற்கு ஆத்ம சுத்தியை அவசியம் செய்து கொள்ளுங்கள். இருளை நீக்கி மெய் ஒளியின் தன்மையை பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

தீமையை நீக்கும் சக்தியைப் பற்றி குருநாதர் எனக்கு உணர்த்திய விதம்

 

மனிதனான பின் நாம் என்ன செய்கின்றோம்…? மனிதன் ஆன பின் பண்பு பரிவு பாசம் என்ற நிலை வருகின்றது பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனைகளையும் பங்கு கொள்கின்றோம்… கேட்கின்றோம்.

நம்மிடம் சம்பாத்தியம் இருந்தால் உதவி செய்கின்றோம். சம்பாத்தியம் இல்லை என்றால் கூட உடலால் சிறிது உதவி செய்கின்றோம். ஆனால் அவர் கஷ்டத்தை நுகர்கின்றோம்.

நாம் நுகர்ந்த அந்த உணர்வைச் சுத்தப்படுத்துகின்றோமா…? இல்லையே…! அதற்கு என்ன வழி…?

அதற்குத்தான் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று
1.அந்தப் பழங்கால நிலைகளில் வாழ்ந்த அந்தப் புலஸ்தியர்கள்
2.தங்களுக்கு வரும் தீமையிலிருந்து எப்படித் தப்பித்துக் கொண்டார்கள்…? என்பதைச் சொண்னார்.

காட்டிற்குள் கூட்டிக் கொண்டு போனவுடனே ஒரு பச்சிலையை எடுத்து நசுக்கச் சொல்கின்றார்.

யானைகள்… கூட்டமாக வரும் நேரத்தில் கொண்டு போன உடனே அந்தப் பச்சிலையை நசுக்கச் சொன்னார்/

யானை மனிதனைப் பார்த்த உடனே சும்மா விடுமா…? அது என்ன செய்கின்றது. அது தனக்குள் காதை விடைத்துத் தலையைத் தூக்குகின்றது.

அப்பொழுது
1.கையில் பச்சிலையை நசுக்கி “ஃபூ…” என்று ஊது என்கின்றார்..
2.ஊதியவுடன் அந்த விஷத்தினால் அந்த யானையிக்கு ஒரு மயக்கம் வரச் செய்கின்றது.
3,அப்பொழுது அதற்குப் பெயர் யானை மிரட்டி.. அந்தப் பச்சிலையைப் பார்த்தவுடன் யானை மிரண்டு ஓடுகின்றது.

இதே மாதிரி புலி வருகின்றது. அந்த புலியின் தன்மைக்கு என்ன செய்கின்றார்…? அதே மாதிரி ஓரு பச்சிலையை எடுத்து நசுக்கி இதே மாதிரி “ஃபூ…” என்று ஊது என்கிறார்.

அப்பொழுது அந்தப் பச்சிலையின் மணத்தை நுகர்ந்தவுடனே விஷம் ஒடுங்குகின்றது… புலி விலகிச் செல்கிறது.

அப்போது இன்னொரு பச்சிலை எடுக்கின்றார். ஒரு தேன்கூடு இருக்கின்றது. நீ பச்சிலையைத் தேய்த்து விட்டுக் கையைக் கொண்டு போய்க் கூட்டிற்குள் விடு என்கின்றார்.
1.தேனீ என்னைக் கொட்டவில்லை.
2.அதுபாட்டிற்கு விலகிச் சென்று விட்டது. அப்பொழுது அந்த பச்சிலையைப் பார்த்தவுடன் அதனின் விஷங்கள் ஒடுங்குகின்றது.

அப்புறம் ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொள்ளச் சொன்னார்/ தேளைப் பிடித்து என் மீது விடுகின்றார். சாமி…சாமி…! என்கின்றேன்.

அட நீ இதையெல்லாம் பார்த்தாய் அல்லவா. தேள் உன்னை என்ன செய்யும் என்கிறார்…? பச்சிலையை கையில் கொடுத்து விட்டு தேளை விடுகின்றார். தேள் என்னை ஒன்றும் செய்யவில்லை.

பச்சிலையைக் கீழே போடு என்கின்றார். கீழே போட்டவுடன் பட்டீர்… என்று அடித்தது. கீழே போட்ட உடன் பொட்டென்று அடித்தது.

ஏன்டா இப்பொழுது கொட்டுகின்றது என்றார்…? எனக்கென்ன சாமி தெரியும்…! என்றேன்.

1.உன் உடலில் இருந்த அந்தப் பச்சிலையின் மணத்தினால் தேளின் விஷத் தன்மை ஒடுங்குகிறது.
2.பச்சிலைகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரியுமா…?
3.பச்சிலை நம்மைக் காக்கவும் செய்கின்றது… மருந்தாகவும் பயன்படுகின்றது
4.பல விஷ ஜந்துகளிடமிருந்து நம்மைக் காக்கவும் செய்கின்றது.

இந்தப் பச்சிலைகளைத் தான்… உயிரணு புழுவில் இருந்து எல்லா உயிரினமும் எல்லாவற்றையும் சாப்பிட்டு வந்தது. இத்தகைய நிலைகள் கொண்டு தான் மனிதனாக இருக்கிறோம்.

மனிதனான பிற்பாடு என்ன செய்கின்றோம்…? இதையெல்லாம் தெரிந்து கொள்கின்றோம். தெரிந்த பிற்பாடு கெட்டது வராதபடி தடுக்கின்றோம்.

இப்படித்தான் புலஸ்தியர் என்று சொல்பவர்கள்… காட்டு விலங்குகளுடன் விலங்குகளாய் வாழ்ந்து வந்த அந்தக் காலத்து மனிதர்கள் இந்த மாதிரி விஷங்களை ஒடுக்கக்கூடிய பச்சிளைகளை எல்லாம் சந்தர்ப்பத்தால் தெரிந்து கொள்கின்றார்கள் என்று என்னைத் தெளிவாக்கினார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்… கண்ணன் வழிகாட்டிச் செல்கின்றான்… என்றால் நம் கண்கள் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றது என்று காட்டுகிறார்கள்.

இங்கே மாடு வருகின்றது… மனிதன் வருகின்றான்… அவன் தவறாகப் பேசுகிறான்… என்றும் ஒரு காரை ஓட்டிச் செல்லும் பொழுது
1.ஒருவன் குறுக்கே வருகின்றான் வந்தால் மோதிவிடும் என்று கண்கள் தான் உபதேசிக்கின்றது.
2.வண்டியை நீ இப்படி ஓட்டு என்று அந்த உணர்வுடைய நிலைகளை அங்கங்களை கைகளை இயக்கச் செய்வது கண்கள் தான்…!

அதாவது…
1.நம் கண் பார்க்கின்றது… அந்த உணர்வினை இழுக்கின்றது… சுவாசிக்கச் செய்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு “அங்கங்களை இயங்குகிறது…”

எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு நாம் இயங்கினாலும் “இந்த உணர்வுகள் வடிகட்டப்படுகிறது…”

இதைப் போன்று அவன் (கண்கள்) கொடுக்கும் உபதேசத்தின் தன்மை தன்னைக் காக்கும் உணர்வாக எடுக்கப்படும் பொழுது… தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.

அதே சமயம்… ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்தத் தாக்கும் உணர்வு அவனைத் தாக்கும் நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்கின்றது.

அவனை அழிக்க வேண்டும் என்ற நிலையில் சிந்திக்காது செயல்படும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.

கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டுகிறார்கள். விநாயகர் தத்துவத்தில் நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவே உனக்கு வாகனமாக அமைந்து நீ அதுவாக ஆகின்றாய் என்று காட்டுகிறார்கள். இதை ருத்ர தாண்டவம் என்று திருமூலர் காட்டியுள்ளார்.

1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் எப்படித் துடிக்கின்றதோ
2.நாம் எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அந்த அங்கங்களைப் பாசமாக அணைக்கின்றதோ
3.நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படியோ
4.அதை எல்லாம் நடனங்களாகக் காட்டி… அபிநயங்கள்…!
5.அதாவது… தான் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
6.அந்த நரம்பியல்கள் எப்படி நாதத்தின் நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது என்பதைத்தான் (ஏனென்றால் அங்கங்களை இயக்குவது நரம்புகள் தான்) ஒலி ஒளி என்ற நிலையில்
7.நாதத்தைப் பற்றி… அந்த நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் தெளிவாகக் காட்டியுள்ளார்.
8.ஒலி ஒளி அதற்குள் எத்தனையோ உட்பொருள்கள் அடங்கியுள்ளது.
9.ஒலியைப் பற்றி எத்தனையோ வியாக்கியானங்கள் செய்யலாம்…
10.ஆனால் நம் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று அந்த மெய் ஒலி(ளி)யைக் காட்டியது சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்.

விண்ணிலே தோன்றிய அந்த உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது ஓங்காரமாகிப் (ஓ…ம்ம்ம்ம்) பல நிலைகள் ஆகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்குகிறது.

ஒவ்வொரு தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்ட உடனே அந்த இலையின் ரூபங்கள் விரிவடைவதும்… உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்…
1.சுவாசிக்கும் உணர்வின் தன்மை கொண்டு உயிரணுக்களின் இயக்கமும்
2.அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
3.ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருமாற்றமும்
4.அந்த உணர்வுக்குள் ஒலியின் மகிழ்ச்சியும்… ஒலியின் தன்மை கொண்டு “ஒளியாக நீ எவ்வாறு ஆவது…? என்று வெளிப்படுத்திய ஸ்தலம் தான் இது.

அந்த உட்பொருளை நாம் இன்னும் காண முடியாது தேடிக் கொண்டிருக்கின்றோம். புரியவில்லை என்று எண்ண வேண்டாம்…! நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம் (ஞானகுரு)

ரோட்டிலே செல்லும் பொழுது எத்தனையோ உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. காரணம் நமக்குள் 1008 குணங்கள் இருக்கின்றது பார்க்கப்படும் பொழுது இரக்க மனம் கொண்டு “ஐயோ இப்படி ஆகிவிட்டதே…!” என்று எத்தனையோ எண்ணுகின்றோம்.

மனிதரை உருவாக்கிய அந்த 1008 நல்ல குணங்களை வைத்துத் தான் அடுத்தவர்களிடம் நாம் என்ன ஏது என்று கேட்டறிகின்றோம். அப்போது
1.நல்ல குணத்துடன் அது சேர்ந்து வடித்து அந்த நல்ல குணமும் ரிப்பேர் ஆகிவிடுகின்றது.
2.அந்த நல்ல குணத்தை எண்ணும் போது அந்த வேதனை பயம் ஆத்திரம் கோபம் எல்லாமே வருகின்றது.

ஆனால் யாரும் தவறு செய்யவில்லை.

பிறருடைய குறைகளையோ அவர்கள் படும் துன்பங்களையோ தவறான செய்திகளையோ பார்க்கின்றோம். பத்திரிகை டிவிகளைப் பார்க்கின்றோம் உலகம் இப்படி இருக்கிறது…? நாளைக்கு என்ன ஆகுமோ…! என்று வர்ணனை செய்திருப்பார்கள்.

இங்கே திருடி விட்டார்கள் அங்கே கொன்று விட்டார்கள் அடித்து நொறுக்கி விட்டார்கள் என்று எத்தனையோ சம்பவங்களை நாம் பார்க்க… படிக்க… கேட்க நேருகிறது. அந்த நேரத்தில் நல்ல குணங்கள் அனைத்தும் பதறுகின்றது… பதட்டமாகின்றது. நல்ல குணங்கள் எல்லாமே ரிப்பேர் ஆகி விடுகின்றது.

உதாரணமாக… ரேடியோ கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒரு மின்னல் தாக்குகின்றது. ஏரியில் வழி எடுக்கப்படும் பொழுது எர்த் ஆனவுடன் கரகரப்பாகி… கொர…கொர… என்று சத்தம் போடுகின்றது.

ஒலியை இழுத்துக் கொடுப்பது அங்கே ஓட்டையைப் போட்டு விடுகிறது அப்போது எதையுமே தெளிவாகக் கேட்க முடிவதில்லை.

1.ஒவ்வொரு ஸ்டேஷனிலிருந்து எடுத்து வடிகட்டி கொடுக்கக்கூடிய…
2.நுண்ணிய அலைகளில் பாய்ந்து வரக்கூடிய
3.அந்த அலைவரிசைகளைப் பிரித்து எடுத்துக் கொடுப்பதில் உள்ள இணைப்புகள் சூடாகி
4.அந்த இணைப்பு (பற்ற வைப்பு – SOLDERING) கழன்று விடும்… அதற்குப் பின் இது எடுத்துக் கொடுக்காது.

இதைப் போன்றுதான்
1.மனிதனுடைய உடலில் நுகர்ந்த உணர்வுகள்… மூளைக்குள் இந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.குறையான உணர்வுகள் பட்டவுடனே பொறிகளை இழுக்கும் அந்த நிலைகள் நின்றுவிடும்.
3.என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நம் உடலுக்குள் நல்லதை இயக்கக்கூடிய குணங்கள் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

உங்களால் அதைச் சரி செய்ய முடியவில்லை…! அப்போது
1.ரிப்பேரான குரலில் தான் பேச முடியும்
2.ரிப்பேர் ஆன நிலைகளைத் தான் சுவாசிக்க முடியும்
3.ரிப்பேரான நிலைகளைத் தான் எடுக்க முடியும்…!

அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்குத் தான் ஞானிகள் கோவிலைக் கட்டி வைத்துள்ளார்கள். அதாவது வாழ்க்கையின் இடைவெளியில் ரிப்பேரானால் அதில் மீட்டுவதற்கு அங்கே வழி காட்டுகின்றார்கள்.

உன் உடலில் இன்னென்னது இப்படி மறைந்திருக்கின்றது. ஆகையினால் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று எண்ணு… மகரிஷிகளின் அருள் சக்தியை அதிலே போடு அபிஷேக ஆராதனைகளைப் போடு சுவையான இனிமையான மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணு. இதை உணர்த்திய அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணு…!
1.பொருளைக் காட்டி… அதைக் கண்ணில் உற்றுப் பார்க்கும்படி செய்து…
2.உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி சொல்கின்றார்கள்… காவியத்தையும் படைத்துள்ளார்கள்.

மந்திரம் தந்திரம் தெரிந்தவர்களிடம் பழக்கம் வைப்பது நல்லதல்ல

 

இன்றும் நமது நாட்டில் பல நிலைகள் இருக்கின்றது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் திருநெல்வேலியில் டாக்டர் இருக்கின்றார் அவர் பல நிலைகளில் சென்று வந்தவர். இருந்தாலும் குட்டிச் சாத்தான் என்ற நிலைகளை வைத்து மந்திரவாதிகளிடம் பழக்கம் உள்ளவர்.

ஆனால் அந்தக் குட்டிச் சாத்தான் இவர் வீட்டில் இருக்கும் நகைகளை எடுத்துக் கொண்டு போகிறது. இங்கே தபோவனத்திற்கு வந்து ஒரு வாரம் தங்கி இருந்தார்கள்.

இங்கே தங்கி இருக்கும் பொழுது நகைகள் போகவில்லை. மறுபடியும் அங்கே வீட்டிற்குப் போனவுடன் நகைகள் போகின்றது.

நான்கு பவுன் செயின் கழுத்தில் இருந்தால் எடுக்க முடியாது. இவர் கழுத்தில் உள்ளதைக் கழட்டி என்ன செய்கின்றார்…? தலையணைக்கு அடியில் வைத்தார். எடுத்துக் கொண்டு போய் விட்டது. இரவு எனக்குப் ஃபோன் செய்கின்றார்.

இது வரை பத்தாயிரம் நோட்டு… கட்டாக அப்படியே எடுத்துக் கொண்டு போய்விட்டது. குட்டிச்சாத்தான் ஏவல் தான் அது.

இந்த மந்திரவாதிகள் ஜீ…பூம்பா… வரும் என்று சொல்கிறார்கள் அல்லவா.
1.நமக்குச் சொத்து கிடைக்கும் சுகம் கிடைக்கும் என்று அவர்களிடம் ஜாஸ்தி பழகியவர்.
2.இப்பொழுது பழகியவுடன் என்ன ஆகிவிட்டது…? இங்கே இருக்கும் காசு எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விடுகின்றது.

சிலருக்கெல்லாம் இந்த நோட்டைக் காட்டுகிறார்கள் அல்லவா. சில தாயத்துகளை எடுத்துக் காட்டுவார்கள். வீட்டில் வைத்துவிட்டு அதை அப்படியே எடுத்து வரும்.

அதே மாதிரி நீங்கள் வீட்டில் நோட்டை வைத்திருந்தால் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும். இன்னொரு வீட்டில் லட்டு வைத்திருந்தால் அதை எடுத்துக் கொடுக்கும். ஆனால் அந்த மந்திரவாதியை லட்டைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட மாட்டான்.

இந்த மாதிரி ஒரு குட்டிச்சாத்தான் ஒரு மனித உணர்வின் தன்மையை இப்படி முச்சந்தி மண்ணை எடுத்துக் கொண்டு போய் அதுவும் அமாவாசை காலம் கூப்பிட்டோம் என்றால் அது குட்டிச்சாத்தான் என்றால்… கரு கலைந்த சிதைந்த அதற்கு மேல் இதை வைத்து… அதற்காக வேண்டி சில மந்திரங்களைச் செய்து இந்த உணர்வை எடுத்து அந்த ஆவியை அழைத்துக் குட்டிச்சாத்தான் ஆக வைத்துக் கொள்வார்கள்.

அதை மற்ற பக்கம் ஏவல் செய்யும் பொழுது அது இவன் சொல்லும் வேலையை எல்லாம் செய்யும்.
1.நகையை எடுத்துக் கொண்டு வரச் சொன்னால் எடுத்து வரும்.
2.ஒரு பொருளைத் தொட்டுக் கரைத்து விடு என்றால் கரைத்து விடும்… ஆவியாக மாறும் அவன் கைக்கு வந்துவிடும்.

இந்த மாதிரி எல்லாம் இன்றைக்கு மனிதனைப் பயன்படுத்துகிறார்கள். அரசர் காலங்களில் செய்த கொடுமை. ஆனால் இனி விஞ்ஞான உலகம் வந்த பின் நாம் அறிந்து கொண்டோம். இனி நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
2.ஆக நாம் அதைத்தான் அதிகமாக விரும்ப வேண்டும்.

எத்தகைய நிலைகள் இருந்தாலும் ஆயுள் கால மெம்பராகச் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து என்றும் பிறவியில்லா நிலையை அடைவது தான் நம்முடைய முழு நோக்கம்.

ஆக அந்த அருளைப் பெற்றால் இருளை நீக்க முடியும். கையில் விளக்கை எடுத்துக் கொண்டால் என்ன செய்யும்…? அங்கிருக்கும் பொருள் தெரியும்.
1.அவ்வப்போது ஆத்மசுத்தி செய்து கொண்டால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கும் பொழுது
2.நாம் எப்படிச் செயல்படுவது…? என்கிற சிந்தனை வரும்.
3.அதற்குத் தக்க உபாயமும் கிடைக்கும். ஆக நாம் நல்வழிப்படுத்தி நம்மை வழி நடத்திக் கொள்ள அந்தச் சக்தி கிடைக்கும்.

இல்லை என்றால் நாம் கோயிலுக்குப் போய் எல்லாம் செய்து மந்திரம் செய்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கி விடுவோம் என்றால் அது நடவாது.

இடைஞ்சல் வந்தது என்றால் வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்து… “இந்த வீட்டு வாசல்படியை இப்படி இடித்துப் போடு… அப்படி இடித்துப் போடு… இதை மாற்று…!” என்றால் சம்பாதித்த காசைஸ் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

ஆசையின் நிமித்தம் இன்னொருத்தர் செய்தால் இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்பான் இன்னொரு வாஸ்து சாஸ்திரக்காரன். அப்பொழுது எந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்ப்பது…?

ஜாதகத்தை பார்த்தாலே இன்றைக்கு எடுத்துக் கொண்டால் இன்றைக்கு ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் ஒன்று போல எல்லாம் இருக்கின்றதா…? என்றால் இல்லை.

கௌரி பஞ்சாங்கத்தில் ஒரு விதமாக ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஒரு விதமாய் இருக்கின்றது இந்த மாதிரி பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் மூன்றையும் பார்த்தால் மூன்றும் மூன்று விதமாக இருக்கின்றது.

நீங்கள் எதை நம்புவீர்கள்…?

அவரவர்கள் எடுத்துக் கொண்ட்து இதுதான் சரி என்கின்றார்கள். அவர்கள் அதைத் தான் சரி என்கின்றார்கள் ஆனால் அவன் சொன்னது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்து இது தான் பதிவாகி இருக்கின்றது இதுதான் எனக்குச் சரியாக இருக்கும் என்பான்.

அந்த உணர்வை எடுத்து வழிபடும் பொழுது இப்படி ஆகின்றது. அடுத்தவன் சொன்னால் இதை மோசம் என்போம்

ஆக இதன் வழி தான் உலகம் முழுவதற்கும் பஞ்சாங்கங்களைப் பார்த்து நடப்பதும்… நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் பார்ப்பதா…? என்று ஆகிவிடும்.

நல்ல நேரத்தையும் கெட்ட நேரத்தையும் உருவாக்கியவன் மனிதன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்.

1.மனிதனால் நல்ல நேரங்களை நல்ல காலங்களை உருவாக்க முடியும்.
2.நல்ல காலங்களை உருவாக்கக்கூடிய திறனை உங்களுக்கு கொடுத்து
3.ஆயுட் கால மெம்பராக இருப்பவர் எல்லாம் அடுத்தர்களுக்கு ஞானத்தைப் போதிக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கூட்டுத் தியானத்தினுடைய முக்கியத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் மட்டும் தனித்து ஒன்றும் செய்து விட முடியாது. பலரின் அலைககளைக் குவிக்கச் செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டுதான்
1.விஞ்ஞான உலகின் நச்சுத்தன்மைகளிலிருந்து மீட்கும் சக்தியாக
2.எத்தகைய விஷமும் நம்மை அணுகாத நிலையாகக் கூட்டுக் குடும்ப தியானம் செய்து
3.மகரிஷிகளின் அலைகளைப் பரப்பி நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

பூமி தனக்குப் பாதுகாப்பாக ஓசோன் திரையை அமைத்துக் கொள்வது போன்று… எத்தகைய நிலைகள் வந்தாலும் ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்கள் ஆன்மாவிலே வலுகொண்டதாகப் பெருக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம்.. உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஏதோ
1.சாதாரணமாகக் கிடைக்கின்றது
2.சாதாரணமாகக் குருநாதர் சொல்கின்றார்
3.சாதாரணமான நிலையில் விளக்கம் சொல்கின்றார்
4.சாதாரண நிலைகள் இருக்கின்றதே… என்று
5.சாதாரணமாக விட்டு விடாதீர்கள்…!

எவ்வளவோ பணத்தைச் செலவழித்து… அலைந்து திரிந்தாலும் பெற முடியாது… அப்படி எல்லாம் இருக்கும் போது சாமி சாதாரணமாகச் சொல்கிறார்…! நாம் பெற முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

நீங்கள் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இதைக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

வாரத்தில் ஒரு நாள் ஆவது கூட்டுக் குடும்ப தியானம் இருந்து பழகுங்கள். நாள் முழுவதும் உழைக்கின்றோம் ஒரு பத்து நிமிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தினமும் நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தால் அது காக்கக் கூடிய சக்தியாக உங்கள் எண்ணம் வரும்.

ஒவ்வொரு சமயமும் சொன்னதையே சாமி சொல்கின்றார் என்று தெரிந்தாலும்… அப்படிச் சொல்வதற்குள் “சில நுண்ணிய உணர்வுகளைக் கலந்து” சொல்வேன்.

மரங்களுக்கு உரம் கொடுப்பது போன்று… வெயில் காலத்திற்குத் தகுந்த மாதிரி… மழை காலத்திற்குத் தகுந்த மாதிரி… அந்தந்தக் காலங்களுக்குத் தகுந்த மாதிரி… சூழ்நிலைக்குத் (உங்களுடைய) தகுந்த மாதிரி
1.ஞானிகள் உணர்வுகளை உரமாக உங்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குச் செருகேற்றி
2.அதன் மூலம் காற்றில் இருக்கக்கூடிய அரும் பெரும் சக்திகளை எடுத்துக் கொண்டு வந்து மெய் ஒளி பெறச் செய்கிறோம்.

ஆகையினால் உங்களை நீங்கள் நம்புங்கள்… உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உடலை ஆலயமாக மதியுங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்துப் பழகுங்கள்… உடலில் வரக்கூடிய விஷத்தை நீக்கிப் பழகுங்கள்… ஒளியின் சுடராக நீங்கள் பெற வேண்டும்.

எந்த நேரத்தில் எல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க நீங்கள் பழகிக் கொள்ளுங்கள்.

“திட்டியவனை எண்ணியவுடன்” நம் உடல் எப்படிப் பதறுகின்றதோ… “இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது எப்படி மனம் சோர்வடைகின்றதோ…
1.அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணுங்கள்.
2.சாமி சொன்னார்… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணி எடுத்தீர்கள் என்றால்
3.அந்த நடுக்கமோ சோர்வோ இவைகள் நீங்கி உங்கள் எண்ணம் சொல் வலுவாகி
4.உங்களுக்குள் அனைத்தும் வலுகொண்டதாக ஆற்றல்மிக்கதாகச் செயல்படக்கூடிய சக்தி கிடைக்கும்.

உங்களுக்கு ஒருவர் தீமை செய்கின்றார்… குறையாகச் சொல்கிறார்… திட்டுகின்றார் என்றால் உங்கள் நல்ல குணங்கள் வலு குறைந்து… இனிமை குறைந்து… மயக்கப்படும் நிலையாக… எதிர்மறையான உணர்வுகளை எப்படித் தூண்டுகிறதோ… அதைப் போன்று தான்
1.அந்த மாதிரி நேரங்களில் சாமி சொன்னார்…!
2.அவர் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்
3.என் உடல் முழுவதும் அது படர வேண்டும்
4.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
5.என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
6.அந்தக் கணமே இப்படி எண்ணி எடுக்கப் பழகிக் கொன்டீர்கள் என்றால் “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்…!”

அதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்வது

யாம் சொன்னதைச் சிறிது காலத்திற்குச் செய்யப் பழகிக் கொண்டால் போதும்
1.எத்தகைய சந்தர்ப்பங்களிலும் சமாளிக்க கூடிய ஆற்றல்
2.உங்களுக்குக் கிடைக்கும்… செய்து பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் இருந்து முடிந்த பின் உடலை விட்டுப் பிரிந்த நம்முடைய முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று… வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்த்து “உந்தித் தள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்…”

1.உங்கள் எண்ணங்கள் அனைத்தும் விண்ணை எட்டி அங்கிருந்து உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு
2.பௌர்ணமி அன்று சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

காரணம்… அன்று சூரியனுடைய காந்த சக்தி சந்திரனில் முழுமையாகப் படுகின்றது
1.உங்கள் எண்ணங்களை மேல் நோக்கிச் செலுத்தச் செய்து
2.சந்திரனையும் பார்க்கச் செய்து… அந்தக் காந்தப் புலனுடன் இழுக்கச் செய்து
அதைத் தாண்டி இருக்கும் சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்கும்படி செய்கிறோம்
4.உங்கள் உணர்வின் எண்ண அலைகளை அங்கே பதியச் செய்கின்றோம்.

உங்கள் குடும்பத்தில் உடலைப் விட்டு பிரிந்தவர்கள் யாராக இருந்தாலும் சரி… “குலதெய்வங்களாக அவர்களை எண்ணி” அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

விஞ்ஞானிகள் இராக்கெட்டை உருவாக்கி அது நூறு டன் எடையாக இருந்தாலும் கூட விண்ணிலே செலுத்துகிறார்கள்.

அங்கேயும் ரேடார் (RADAR) வைக்கின்றனர் பூமியிலும் ரேடாரை வைக்கின்றார்கள். விண்ணில் இருப்பதையும் இங்கு இருப்பதையும் இழுத்து அதே சமயத்தில் லேசரையும் (LASER) கலந்து விண்ணிலே ஏவுகின்றார்கள்.

லேசர் என்றால் எதிலேயும் ஊடுருவி மற்றொன்றுடன் மோதி… அந்த அலை நிற்காமல் ஊடுருவிச் செல்லும் நிலைகள் பெற்றது.

இப்படிச் செய்து எல்லாம் இணைத்துக் கொண்ட பின் மனிதனுடைய பேச்சைச் சொல்லாலே… இடத்தைக் குறித்து… ஒலிகள் மூலமாகக் கம்ப்யூட்டரில் பதிவு செய்து… அந்த நாடாவிலே போட்ட பின் (COMMANDS) ரேடார் கவனித்துக் கொள்கிறது.

இராக்கெட்டைத் திசை திருப்ப வேண்டும் என்றால் இங்கிருந்து ஆணையிடுகின்றனர்.
1.மனிதனுடைய எண்ண ஒலிகளால் பதியச் செய்த நுண்ணிய அலைகள்
2.இயந்திரத்தில் பதிவு செய்ததன் துணை கொண்டு தொலைதூரத்தில் செல்லும் இராக்கெட்டைத் திசை திருப்புகின்றது.

கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மனிதனுடைய எண்ண ஒலியைப் பதிவு செய்து இயந்திரத்திற்குள் அதை அலை வரிசையை வைத்து இராக்கெட்டில் இணைக்கச் செய்து இயக்குகின்றார்.

அதே போன்று…
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் முன்னோரின் உணர்வுகளின் துணை கொண்டு
2.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை விண்ணிலே உந்திச் செலுத்தப்படும் பொழுது
3.சப்தரிஷி மண்டல அலைகளுடன் கலக்கச் செய்கின்றது.

அந்த அலைகளுக்குள் (ஒளி கங்கையிலே – ஒளிக் கடல்)) இந்த ஆன்மாக்கள் பட்டவுடன்… புவியிலே மனித வாழ்க்கையில் “வாழ வேண்டும்” என்று எடுத்துக் கொண்ட வேதனை சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளை எல்லாம் கருக்கிப் பஸ்பமாக்கி விடுகிறது.

அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக ஒளியாக… ஞானிகளால் படைக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து… ஒளி உடலாக முன்னோர்கள் பெறுகின்றார்கள்.

அனைவருமே ஒருவருக்கொருவர் நாம் பேசிப் பழகி இருக்கின்றோம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை கூட்டுக் குடும்ப தியானமிருந்து மேலே சொன்ன முறைப்படி விண் செலுத்த வேண்டும்.

அப்படி இல்லாதபடி அவர்களை எண்ணி ஏங்கி
1.எல்லாம் சம்பாதித்து வைத்தார்… போய்விட்டாரே…! என்று அழுவதும்
2.மிகவும் நல்லவராக இருந்தார்… போய்விட்டார்…! என்று ஏங்கி இழுத்து விட்டால் போதும்.
3.யார் அதிகமாக எண்ணி ஏங்கினாரோ அந்த உடலுக்குள் புகுந்துவிடும்

எந்த அளவுக்கு அவர் மேல் பாசம் கொண்டு பற்று கொண்டு எண்ணி எடுக்கின்றார்களோ… அந்த உடலில் புகுந்து “நான் வந்து விட்டேன்…” என்ற நிலையில்… உடலை விட்டுப் பிரியும் பொழுது கடைசிக் காலத்தில் அவர் உடலில்பட்ட வேதனை… நோய்… எல்லாவற்றையும் இங்கே உருவாக்கிவிடும்.

ஆகவே… அப்படி அழுக வேண்டும் என்றால் அழுது “இழுத்துக் கொள்ளுங்கள்…” இல்லை… நமது குருநாதர் சொன்ன முறைப்படி மோட்சத்திற்கு – சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் “உந்தித் தள்ளுங்கள்…”

முன்னோர்கள் விண் சென்ற பிற்பாடு அவர்களின் துணை கொண்டு இந்த மனித வாழ்க்கையில் முழுமை பெற்றுப் பிறவியில்லா நிலை அடையலாம்.

ஆன்மாவைத் தூய்மை செய்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுப்பது

 

ஒருத்தர் என்னைத் திட்டினார் என்று எண்ணப்படும் பொழுது அவன் நினைவே நமக்குள் வருகின்றது. அவன் நினைவு வரப்படும் பொழுது அவன் உணர்வைத் தான் நமக்குள் வளர்க்கின்றோமே தவிர நல்ல குணங்களை நாம் பாதுகாக்கின்றோமா என்றால் இல்லை.

பையன் மேல் பிரியமாக இருக்கின்றோம். அவன் நஷ்டம் ஆகிவிட்டான் என்று எண்ணப்படும் பொழுது அவன் நஷ்டத்தைப் பற்றித் தான் சிந்தித்து
1.“இப்படியே ஆகிக் கொண்டிருக்கின்றதே…” என்று நஷ்டத்தை நமக்குள் வளர்த்து நமக்குள் நோய் ஆக்குகின்றோம்.
2.நமக்குள் விளைந்ததை நம் பையனைப் பற்றித் திரும்ப “இப்படியே செய்து கொண்டிருக்கின்றானே…” என்று எண்ணும் போது
3.அவனும் கஷ்டமும் நஷ்டமும் தான் படுவானே தவிர அவனை மீட்டவும் வழியில்லை… நமக்குள் மீளவும் வழியில்லை.

இப்படித்தான் நமக்குள் அதிகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது. நாம் இதைப் போக்க வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதற்கு உங்களுக்குள் பதிவாக்குவது. இதை நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.

அதற்குத்தான் உங்களை ஆயுட்கால மெம்பராகச் சேரச் சொல்வது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் எடுத்து இந்த ஆயுள் முழுவதற்கும்
2.இந்த வாழ்க்கையில் எப்போது துயரங்கள் வருகின்றதோ சங்கடங்கள் வருதோ சலிப்புகள் வருதோ படிக்க முடியாமல் ஞாபக சக்தி குறைகின்றதோ
3.அப்பொழுதெல்லாம் அதை மாற்றிக் கொள்ள முடியும்.

பிறருடைய நிலைகளில் தவறு செய்பவரைப் பார்த்தவுடனே அந்த வேதனை என்ற உணர்வாகப் படும்பொழுது பாலில் விஷம் பட்டால் பாதாமிற்குச் சக்தி இல்லாதது போல நாம் நுகர்ந்த வேதனை என்ற உணர்வு நம்மைச் சிந்தனையற்ற நிலைகளும் மறதிகளும் வந்து விடுகின்றது. படிக்கிற குழந்தைகளுக்குப். பிறர் செய்யும் தவறுகளை நுகரப்படும் பொழுது அந்த வழியில் சென்றவுடன் அவர்கள் ஞாபக சக்தி இழக்கப்படுகிறது.

இதைப் போன்ற நிலைகள் வரும் பொழுது மீண்டும் அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம். இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாமோ எப்படி ரேடியோ டிவிகளில் ஒலிபரப்பாகும் பொழுது எங்கிருந்து ஒலிபரப்பாகின்றதோ எந்த ஸ்டேஷனோ அந்த ஸ்டேஷனில் வைக்கின்றோம். அப்பொழுது அந்த அலைவரிசையில் நாம் பார்க்கின்றோம்.

இதைப் போல மனிதனின் வாழ்க்கையில் நமக்கு எப்போது துன்பங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் நமக்குள் தாக்கி இயக்குகின்றதோ அப்பொழுதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால்
2.அதன் உணர்வலைகள் நமக்குள் சென்று நமக்குள் தீமையின் நிலைகளை மாற்றிவிடும்..

ஆக இப்படி நமது வாழ்க்கை முழுவதுமே கஷ்டம் சங்கடம் நோய் இதைப்போல எத்தகைய விதமான உணர்வுகள் தாக்கினாலும் அது நமக்குள் இயங்காது தடுக்கும் வேண்டும்.

இப்பொழுது நமக்கு ஒருவர் தொல்லை கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்காவில் இருக்கின்றார். அவரை நினைக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் அவனெல்லாம் உருப்படுவானா…? என்று எண்ணும் பொழுது நம் காரியம் இங்கேயும் கெடுகின்றது… அங்கேயும் தாக்கப்படுகின்றது.

அவனுடைய நிலைகளில் சாப்பிடும் பொழுது பேசினால் புரை ஓடுகின்றது. இதைப்போல பல நிலைகளில் நம்மைத் தொடர்ந்து இயக்கும் இந்த நிலைகளில் இருந்து மீட்டிக் கொள்ளத் தான் உங்களை ஆயுள் காலம் மெம்பராக சேர்த்தது.

1.என்னை குருநாதர் எப்படி ஆயுட்கால மெம்பராகச் சேர்த்தாரோ
2.அவர் பெற்று உணர்ந்த உணர்வுகள் கொண்டு அகண்ட அண்டத்தை அறியச் செய்தாரோ
3.அதையெல்லாம் உங்களுக்குள் ஒவ்வொரு உபதேச காலங்களில் பதிவாக்குகின்றோம்.
4.அதை வளர்க்க உங்கள் நினைவு தான் முக்கியமாகத் தேவை.

ஆக ஒவ்வொரு நிமிடமும் துயரமான உணர்வைக் கேட்டறியும் பொழுது அதை மறக்கச் செய்ய ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இதைச் சேர்த்து அதைத் தூய்மையாக்கப்படும் பொழுது அந்த இரத்த நாளங்களிலே கலந்த பின்… எப்படி தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகின்றதோ… இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏங்கி நம் இரத்த நாளங்களில் அதிகமாகக் கலக்கச் செய்யும் பொழுது இப்பொழுது நமது அணுக்களில் அதைக் குறைக்க உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் என்னிடம் சொன்னது:-
1.உடலை விட்டுச் செல்லும் பொழுது நீ எங்கே இருக்க வேண்டும்…? என்று சொன்னார்
2.அந்த உணர்வுக்குள் என்னைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்…
3.வெளியில் வந்த பிற்பாடு “நான் எவ்வாறு செல்கிறேன் பார்,..!” என்றார்.

குருநாதர் இங்கே உடலுடன் இருக்கும்போது வெறும் துண்டு மட்டும்தான் கட்டி இருப்பார். அசூசையான (சாக்கடை) இடங்களில் தான் அவர் படுத்திருப்பார்.

குளிர்காலம்…! நல்ல வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்ளுங்கள் என்று கொடுத்தால் அதை எல்லாம் கிழித்துக் கைகளிலும் கால்களிலும் கட்டிக் கொள்வார்.

பார்… யாரோ வந்து இவ்வாறு கிழித்து விட்டான்…! என்று சொல்வார் எவனோ கிழித்து விட்டுப் போய்விட்டான்…! என்பார்.

என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…? என்று கேட்பேன்.

கிழித்து விட்டுச் சென்று விட்டான்… நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன் அவன் கிழித்து விட்டான்…!

ஏனென்றால் அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித்தான் சிந்தித்தார். அவர் பைத்தியக்காரத்தனமாகக் காண்பிக்கும் போதெல்லாம்…
1.ஐயோ… இவரோடு ஒரே தொல்லையாகி விட்டதே… வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டோமே என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
2.அவர் பேசுவது… செய்வது… எல்லாம் பார்க்கும் பொழுது இப்படித்தான் தோன்றியது.

ஆனால் அவர் “உடலை விட்டுச் செல்லும் பொழுது…” எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது “பளீர்… பளீர்ர்…” என்று தள்ளிக் கொண்டு போகின்றது.

அப்படிச் சென்றாலும் இந்த பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிரான்மா என்ன செய்கிறது…? பார்…! முன்னாடியே எனக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருந்தார்.

அன்றைய ஞானிகளும் மகரிஷிகளும் பூமியில் வாழும் காலத்தில் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியே சென்றாலும் மீண்டும் பூமிக்குள் வராதபடி தடுப்பதற்கு எவ்வாறு செயல்பட்டார்கள்…? என்று குருநாதர் காட்டுகிறார்.

அந்த உணர்வுக்கொத்த (ஞானிகளின்) விழுது “பூமியிலிருந்து உந்தித் தள்ள வேண்டும்…!” இதற்காக வேண்டித்தான் எவ்வளவு பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனைத் தேடி அந்த ஞானிகள் வருகின்றார்கள்.

அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு அங்கே மகிழ்ச்சியை ஊட்டி அவனிடமிருந்து வரக்கூடிய மகிழ்ச்சியான மூச்சுலைகளைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு… ஏகாந்தமாக விண் சென்றார்கள்.

ஒருவன் துன்பப்படுகிறான் என்றால் பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷமான சில நிலைகளையும் தான் கஷ்டப்பட்டு எடுத்து… அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று அவர்கள் துன்பத்தை நீக்கினார்கள்

ஆனால் அன்றைக்கு அவர்கள் காசு எதுவும் வாங்கவில்லை…!

துன்பப்படுகிறான் என்றால் உடனே அவனுக்குள் நிவாரணத்தை ஏற்படுத்தித் துன்பத்தை நீக்கிவிட்டு மெய் ஒளியின் சுடராக மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து… மருந்து கொடுத்து நோயை நீக்கி அங்கே சந்தோஷத்தை உருவாக்கினார்கள்.

1.”எனக்கு நல்லது செய்தார்…” என்ற அந்த எண்ணத்தை ஏங்க வைத்து
2.அதை ரசித்துத் தனக்குள் எடுத்து அவன் பேரானந்த நிலை பெற்றான்.

சகஜ வாழ்க்கையில் பார்த்தோம் என்றால்…
1.பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள்… ஒருவன் துன்பப்படுகிறார் என்றால் வேதனை வருகின்றது
2.அசுர உணர்வு கொண்டு துன்பப்பட்டவனைப் பார்த்து… “கிடக்கட்டும் அவனுக்கெல்லாம் அப்படித்தான் வேண்டும்…” என்று எண்ணினால் முரட்டுத்தனமான நிலைகளில் சிக்கி அவன் அடிபடுகின்றான்

ஆனால் ஞானிகளோ
1.துன்பப்படுபவனுக்குள் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை நீக்கி
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து
3.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.

விஷத்தைத் தனக்குள் இயங்காத வண்ணம் அதை அடக்கினான்…! எந்த விஷமாக இருந்தாலும் அவனுக்குள் அது ஒடுங்க வேண்டும்.

இதை எல்லாம் தெளிவாக இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன் என்றால் “குருநாதர் கொடுத்த அந்த நிலைகள் தான்…!”

வாழ்க்கையில் உங்களை அறியாது இருள் சூழ்ந்த நிலைகள் வந்தாலும்… அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்று யாம் உபதேசிக்கும்போது இதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்குள் பதிவாகிறது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்தவுடன் உங்கள் துன்பத்தைப் போக்கச் செய்து நோயைப் போக்கச் செய்கிறது. அத்தகைய மெய் ஒளியினைப் நீங்கள் பெற வேண்டும் என்ற அந்த ஆசையில் தான் சொல்கிறேன்.

ஆனால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல இம்சைகளைக் கொடுத்தார்.. பல தொல்லைகளைக் கொடுத்தார்.

யானைக்குப் பலமா…! எனக்குப் பலமா…? என்று கேட்பார்.

இவருக்குப் பலம் என்று சொன்னால் எப்படி…? என்று கேட்பார் யானைக்குத் தான் பலம் என்று சொன்னாலும் வம்பு தான்…! அது எப்படி…? என்று கேட்பார்.

என்ன சொன்னாலும் இரண்டு உதை கிடைக்கும்…!

எப்படி என்று நீ சொல்லுடா என்பார்… எப்படிடா நீ சொல்கின்றாய் என்று கேட்பார் நான் சுவாசிக்கின்றேன்… யானை இப்போது என்ன செய்கிறது என்று பார்…!

சுவாசித்து உணர்வலைகளை அவர் வெளிப்படுத்தும் போது யானை பயப்படுகின்றது. இப்போது யாருடா பயப்படுகிறது…? என்று கேட்பார்.

நான் எப்படிச் சொன்னாலும்… நான் எதைச் சொன்னாலும்
1.ஏறுக்கு மாறாகவே சொல்லிச் சொல்லிச் சொல்லி
2.இந்த உணர்வின் மோதல் எப்படி ஆகின்றது… உனக்குள் எப்படி உருவாகின்றது…?
2.நான் சொல்வது உனக்குள் எப்படி ஆகின்றது…?
3.இந்த உணர்வின் தன்மை காற்றிலிருந்து எவ்வாறு வருகின்றது…?
4.கவர்ந்து கொண்ட பின் எண்ணத்தின் நிலைகள் என்ன ஆகிறது…?
5.உடலுக்குள் பதிவாகும் பொழுது என்ன ஆகின்றது…? என்று இப்படித்தான் பாடம் கொடுத்தார்

நான் எந்தப் புத்தகத்தையும் படித்து உங்களுக்கு உபதேசிக்கவில்லை.

குருநாதருடைய உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எவ்வாறு எதன் நிலையில் கொண்டு நான் என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் தான் வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று தெளிவாகக் காட்டினார்

அவர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை “நீங்களும் பெற வேண்டும்…” என்பதற்குத் தான் உங்களுக்குள் செல்களாகப் பதிவு செய்கின்றேன்.

பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷங்கள் வந்தாலும் அதைத் தனக்குள் ஒளியாக மாற்றி… உணர்வின் தன்மையை மகிழ்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்… “சப்தரிஷி மண்டலங்களாக அந்த ஞானிகள்…”

அந்த நிலையை நீங்களும் அடைய வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.

கோவிலுக்குச் செல்கின்றோம்… ஒவ்வொரு கோவிலிலும்… முன்னாடி “ஓ…ம்” போட்டு வைத்திருக்கின்றார்கள். நாம் கோவிலுக்குச் சென்றால் சாமி கும்பிடுகின்றோம்…! ஏன் கும்பிடுகிறோம்…? எப்படிக் கும்பிடுகின்றோம்…? கும்பிடுவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கின்றது…? இதை யாரும் தெளிவாக நமக்குச் சொல்லவில்லை.

1.கஷ்டம் வந்தது என்றால் “அந்தத் தெய்வத்திடம் உன் குறைகளை எல்லாம் சொல்லிக் கேள்…”
2.மனம் உருகி நீ அழுது முறையிடும் பொழுது “தெய்வம் உனக்கு உதவி செய்யும்…” என்று தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.

இப்போது நாம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம் ஈஸ்வரா என்றால் “ஈஸ்வரன் எங்கேயோ இருக்கின்றான்…” அங்கிருந்து அவன் சிருஷ்டிக்கின்றான்…! என்று தான் நாம் நினைக்கின்றோம்.

ஆனால் அந்த ஈஸ்வரன் யார்…?

ஓ…ம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… ஜீவன் உள்ளது…! என்று இப்படித்தான் எல்லோரும் வாதிடுகின்றார்கள்.

உதாரணமாக ரோட்டில் செல்கின்றோம். ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து விடுகின்றான். நாம் பாசமாக இருக்கின்றோம் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது
1.நம் கண் அவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் அந்த வேதனையான உணர்வுகள் அவன் வெளிப்படுத்துவதைக் கண் இழுக்கிறது
3.இழுத்துச் சுவாசித்தவுடன் உயிரிலே பட்டு நமக்கும் வேதனை தெரிகின்றது.

அவன் கீழே விழுந்தான்… அடிபட்டு அவன் உடலில் வேதனையாகின்றது வேதனை தாங்காது அவன் அழுகின்றான். அவன் வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய “வெப்ப காந்தங்கள்” அது தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

“வேதனைப்படுகின்றானே…” என்று அவனைப் பார்த்தவுடனே அதே உணர்வலைகளை நம் கண் இழுத்து உணர்த்துகிறது.

உதாரணமாக இப்பொழுது நான் (ஞானகுரு) பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால்
1.இந்த மைக் நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுத்துக் கவருகின்றது
2.அதே போன்று தான் அந்த அடிபட்ட பையன் வேதனையான உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.நம் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கிறது… கண் அதைப் பார்க்கின்றது.
4.அந்த அலை பட்டாலும் கண் கருவிழி அதைக் படமாக்குகின்றது.
5.கண்ணில் இருக்கக்கூடிய காந்தம் அதை இழுக்கின்றது… இழுத்தவுடன் நாம் சுவாசிக்கின்றோம்.

நல்ல குணம் கொண்டு ரோட்டில் செல்கின்றோம் அப்பொழுது பையன் கீழே விழுகின்றான் பார்த்ததும் வேதனையான நிகழ்ச்சிகள் தெரிகின்றது.

அந்தச் சப்தத்தைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து நாம் நுகரும்பொழுது நமக்குத் தெரிய வைக்கிறது.
1.சுவாசித்தவுடன் அந்த வேதனையான உணர்வு உயிரில் பட்டு
2.அது ஜீவன் பெறுகின்றது. அதற்குப் பெயர் தான் “ஓ…”

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடியிலே நெருப்பை வைத்தால் கொதித்து… “ததாபுதா…!” என்று சப்தம் இடுகின்றது. தண்ணீர் தான்… ஆனால் அது சப்தம் போடுகின்றது.

காரணம்
1.கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியில் படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் பட்டவுடன்
2.அதை இழுத்து இந்தச் சப்தத்தைப் போடுகின்றது… இது இயற்கை…!

இங்கே எப்படிச் சப்தமிடுகின்றதோ இது போன்றுதான் அந்த உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட உடனே
1.அந்தப் பையன் வேதனைப்பட்டது… காந்த அலைகளால் கவரப்பட்டது
2.இங்கே பிரணவமாகி நமக்குள் ஜீவன் பெறுகின்றது.
3.நமக்கும் உடலில் வேதனையான உணர்ச்சிகளைத் தூண்டி உணர்த்துகின்றது.

அவன் அடிபட்டு வேதனையை “ஆ…!” என்று அலறி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். ஆனால் இந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது

நாம் கண்ணிலே பார்த்தாலும் அதை இழுத்துக் கவர்ந்து உயிரிலே பட்டபின் ஜீவன் பெற்று நமக்கும் அந்த வேதனையைத் தூண்டி “அடிபட்டு விட்டனே…!” என்று அவனைக் காப்பாற்றும்படி செய்கின்றது.

பாச உணர்வால் நாம் காப்பாற்றுவதற்குச் செயல்பட்டாலும் அவன் பட்ட வேதனை உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் இது ஓ…!

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெருப்பைக் கூட்டி நீரைப் உற்றி அதில் எந்தச் சரக்கைப் போட்டு வேக வைக்கின்றமோ அது கொதித்து அந்த வாசனைகள் நீருடன் கலக்கிறது.

நாம் குழம்பு வைக்கும் பொழுது. பொருளை வேக வைத்தால் கரைந்து மற்றதோடு இணைகின்றது. இது போன்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வுகளைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.அந்த உணர்வுகள் அது பிரிந்து விடுகிறது.
3.வேதனையின் சத்து உமிழ் நீராக மாறி நம் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது.

இது “ஓ…ம்” அதாவது
1.கண்ணுக்குப் புலப்படாத அந்தச் சக்தி உயிரிலே பட்ட பின் ஜீவனாகி
2.உடலுடன் சேர்த்து இரண்டறக் கலக்கப்படும் பொழுது ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய…
3.அவருடைய வேதனை நமக்குள் வந்த பின் அந்தச் சக்தி… சிவமாக… உடலாக… மாறி விடுகின்றது
4.சக்தியாக நம் உடலில் சேர்ந்து இயக்க ஆரம்பிக்கின்றது.

ஆக நாம் சுவாசித்ததை உயிர் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது… உடலுடன் ஐக்கியமாகி விடுகின்றது. ஓ… என்பது பிரணவம் ம்… உடலுக்குள் சேர்த்து பிரம்மமாகி விடுகின்றது.

வேதனையை உருவாக்கும் சக்தியாக உடலுக்குள் விளைந்து… அது உயிருடன் சேர்ந்து விட்டால் நம்மை அறியாமலே அடுத்து வேதனைப்படும்படி செய்யும்.
1.எதை எடுத்தாலும் வேதனை… எதை எடுத்தாலும் வேதனை… என்று
2.அந்த வேதனையான உணர்வுகள் உடல் முழுவதும் படர்ந்து அதையே பேச வைக்கும்.

ஆயுள் கால மெம்பராக நாம் எதிலே சேர்ந்திருக்கின்றோம்…?

 

நாம் எல்லாம் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகச் சேர்ந்திருக்கிறோம் என்றால்… குருநாதர் என்னை ஆயுட்கால மெம்பராகச் சேர்ப்பதற்கு முன்னாடி இதையெல்லாம் வரிசைப்படுத்தி எனக்குள் உபதேசித்தருளினார். அதாவது
1.நாம் எப்படி வாழ்கின்றோம்…?
2.நம் வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பம் நம்மை எப்படி எல்லாம் பல இன்னல்களைக் கொடுக்கிறது…?
3.இதிலிருந்து எல்லாம் நாம் எப்படித் தப்ப வேண்டும்…? என்பதை உணர்த்தினார்.

அதன் வழிப்படி துருவ நட்சத்திரம் என்பது அகஸ்தியன் துருவனாகி அவர்கள் திருமணமான பின் அவர்கள் இரு மனமும் ஒன்றாகித் துருவத்தின் நிலையை எண்ணி ஏங்கி அந்த ஆற்றலைப் பெற்று… அவர்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி… இரு உயிரும் ஒன்றி அவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் பெற்று…
1.எந்தத் துருவத்தின் எல்லையை அது குறியாக வைத்து
2.அதனின்று வரும் உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இருக்கின்றனரோ
3.இந்த மனித உடலுக்குப் பின் கடைசி நிலை அது பிறவியில்லா நிலை.
4.தங்கள் உடலில் உள்ள நஞ்சுகளைக் கரைத்து விட்டு
5.எத்தகைய நஞ்சினையும் கரைத்து ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம் ஆனார்கள்.

அதிலே தான் நாம் அங்கத்தினராகச் சேர்ந்திருக்கிறோம். இனி பிறவியில்லா நிலை என்ற நிலை அடைவதற்குத் தான் ஆயுட்கால மெம்பராக இணைந்திருக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றதோ அதே போல் நமது வாழ்க்கையில் வரும் இன்னல்களை நீக்கி இந்த வாழ்க்கையிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று நமது உடலில் தீமைகள் புகாது பாதுகாத்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த அந்த அருளை நமக்குள் பெருக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைவதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்போது நாம் தியானிக்கும் முறைகள்.
3.குரு வழி வகுத்த இந்த முறைப்படி நாம் நடந்தோம் என்றால் அடுத்து நமக்குப் பிறவியில்லை.

ஆகவே நாம் இதை முழுமையாகக் கடைப்பிடித்தல் வேண்டும். ஆக ஆயுள் கால மெம்பராக எதிலே சேர்த்திருக்கின்றோம்…?

இப்பொழுது இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை வந்தாலும் நாம் இந்தத் தியானத்தில் கொடுத்த சக்தியின் துணை கொண்டு தீமைகளை வராதபடி அதை மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தனக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் நாம் அதை கடைப்பிடித்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமையைக் கண்டுணர்ந்தால் அடுத்த நிமிடமே ஆத்ம சக்தி செய்து கொண்டால் இதற்குப் பெயர் “நரசிம்ம அவதாரம்…” அந்த ஞானிகள் உணர்வுகளை இவ்வாறு சேர்த்துக் கொண்டே வந்தால் தான்
1.உடலை விட்டு உயிரான்மா பிரிந்து சென்றாலும்
2.வேறு எந்த ஒரு உடலின் ஈர்ப்பிற்கும் செல்லாதபடி உயிரான்மா ஒளியின் சரீரம் பெறும்… இது உறுதி.

இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் நிலைகள் கொண்டு நஞ்சு கலக்காது நாம் செயல்படுவதே யாம் சொல்லும் ஆத்ம சுத்தியின் நோக்கம்.

வாழ்க்கையில் வேதனை தாக்கப்படும் பொழுதெல்லாம்… ஆத்ம சுத்தியைக் கூடக் கொஞ்ச நேரம் செய்து அதைச் சுத்தப்படுத்திக் கொண்டால் நஞ்சினைப் பிளந்து அருள் உணர்வினை வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் உணர்வுகள் விளைந்து உடலில் இருந்து வெளியேறும் போது
1.அது ஒளியின் உணர்வுகளாகக் கல்கியின் அவதாரமாக உயிர் பெறுகின்றது
2.நம் உடலின் உணர்வுகள் அதனுடன் இணைகின்றது
3.என்றும் அழியாத சரீரமாக மகிழ்ச்சி கொண்ட உணர்வுகள் உயிருடன் ஒன்றிப் பெரு வீடு பெரு நிலை அடைய முடியும்.

இது தான் “சகஜ மார்க்கம்” என்று ஞானிகள் சொன்னார்கள்.

சகஜ மார்க்கம் என்றால் வாழ்க்கையில் எப்பொழுது துன்பங்கள் வருகின்றதோ… அந்த நேரத்தில் எல்லாம் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் நிலையாக “உன்னை நீ தகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான்…!”

அதற்குத் தான் “விநாயகர் தத்துவம்” என்று கொடுத்தார்கள். அந்த ஞானி காட்டிய உணர்வைத் தனக்குள் வளர்த்து ஒவ்வொரு நிமிடமும் சதுர்த்தி…! தீய வினைகளை தனக்குள் வளராது அதை நிறுத்தி மெய் ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்ப்பிக்கும் நிலையே “விநாயகர் சதுர்த்தி” என்பது.

இதையெல்லாம் நீங்கள் அவசியம் பழகிக் கொள்ள வேண்டும்.

மெய் ஞானிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் வளர்ந்து… உலகில் படர்ந்துள்ள இருள் சூழ்ந்த நஞ்சான உணர்வுகளை நீக்கிட உங்கள் மூச்சலைகள் பயன்பட வேண்டும்.

ஆகவே அந்த ஆற்றல்கள் உங்களில் விளைய வேண்டும்… உங்களுக்கு அது கிடைக்க வேண்டும்… என்று சதா நான் தியானிக்கின்றேன். நீங்களும் இதே போன்று
1.மகரிஷிகளின் அருள் ஒளியை நான் பெறுவேன்
2.என்னை அறியாத வந்த இருளை நீக்குவேன்
3.மெய்ப் பொருளைக் காணுவேன்… மெய் வழியில் செல்வேன்
4.மெய் உணர்வுடன் என் வாழ்க்கையை வழி நடத்துவேன்
5.வாழ்க்கையில் வரும் இருள்கள் நீங்கி நோயற்ற வாழ்க்கையாகவும் மெய் உணர்வினைப் பெறும் பாக்கியமாகவும் அடைவேன்.
6.அழியா ஒளிச் சரீரம் பெறுவேன் என்று இதனைச் சபதம் ஏற்று
7.இதன் அடிப்படையில் உணர்வுகளைச் செயல்படுத்தி நினைவினை இயக்கிப் பாருங்கள்..!

ஒரு வீடு கட்ட நாம் பிளான் செய்து அதை நினைவில் கொண்டு அதே வேலையாக இருந்து அந்த வீட்டை எப்படிக் கட்டி முடிக்கின்றோமோ… புதிதாக வேலைக்குச் சேர வேண்டும் என்றால் பல இடங்களுக்குச் சென்று பல பேரை நாம் சந்தித்து அந்த வேலையை வாங்கி நாம் அங்கே சென்று எப்படி அமர்கின்றமோ… அதே போன்றுதான்
1.இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெறுவேன்
2ஒவ்வொரு நொடியிலும் மகரிஷியின் அருள் சக்திகளைப் பெற்று அறியாது வரும் இருளை நீக்குவேன்
3.மெய் உணர்வுகளை வளர்த்து ஒளியின் சரீரமாக இந்தச் சரீரத்தை ஆக்குவேன் என்ற உறுதி கொள்ளுங்கள்

அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன் (ஞானகுரு). குரு அருள் உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞானி அணுவைப் பிளந்து அந்த ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அதனை அடக்கி வெடிக்கச் செய்யும் பொழுது உலகை அழித்திடும் நிலையாக அணு குண்டாக வருகின்றது.

ஆனால் நம் ஆறாவது அறிவு கொண்டு
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வின் ஆற்றலை எடுத்து நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.இருள் சூழ்ந்த நிலையைப் பிளந்து உடலுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
3.என்றும் ஒளிச் சுடராகத் தன்னுடன் அணைத்துச் செல்லும்.

இரும்போ மற்ற உலோகங்களோ மரமோ கல்லோ மண்ணோ இவை அனைத்துமே கதிரியக்கச் சக்தியின் துணை கொண்டு தான் வீரிய உணர்வைத் தனக்குள் கவர்ந்து அது வளரச் செய்கின்றது.

ஆனால் விஞ்ஞான அறிவால் அணு குண்டை உருவாக்கும் போது அணுவைப் பிளந்து… “ஹைட்ரஜன்” நீருக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து அதனின் (ஹைட்ரஜன்) துணை கொண்டு இதனை அடக்கி அதனுடன் ஒருக்கிணைந்து வெடிக்கச் செய்யும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வேகமாக எல்லாவற்றிலும் ஊடுருவுகிறது.

சக்தி வாய்ந்ததாக உள்ள இரும்பாக இருந்தாலும் சரி… மற்ற உலோகங்களாக இருந்தாலும் சரி… அதற்குள் ஊடுருவி அந்த உலோகத்திற்குள் இருக்கும் கதிரியக்கங்களுடன் ஒன்றிணைந்து கொள்கின்றது.

இணைந்த பின்
1.அதே இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அந்த உலோகங்கள் அனைத்தும் ஆவியாக மாறுகின்றது.
2.கதிரியக்கத்தால் ஈர்க்கப்பட்டு விளையச் செய்த கல்லும் மண்ணும் அதுவும் ஆவியாக மறைந்து விடுகிறது.

அதே போல்
1.எதனின் உணர்வால் கல்லின் மண்ணின் சத்தைத் தாவர இனங்கள் கவர்ந்ததோ
2.அந்தக் கதிரியக்கச் சக்தியின் காந்த செல்கள் வெடித்தவுடன் தன் இனத்துடன் கலந்து
3.அதனால் கவரப்பட்ட அனைத்துமே தரைமட்டமாகி விடுகின்றது.

வெடித்த பின் அந்த கதிரியக்க செல்கள் மனித உடலுக்குள் பட்ட பின் நெகட்டிவ் பாசிட்டிவ் (-/+) என்ற நிலைகள் கொண்டு “தசைகள் அனைத்தும் கருகி…” காந்தப் புலனின் செயல்கள் ஒன்றிணைந்து விடுகின்றது.

ஆனால்
1.இது அனைத்தும் நம் உயிரைத் தொட முடியாது
2.உடலுக்குள்… உணர்வுக்குள் இருப்பதைத் தொடலாம்
3.உயிரின் நிலைகள் தொடும் ஆற்றல் அணுக் கதிரியக்கத்திற்கு இல்லை.

எந்த அணு குண்டு வெடிப்பால் கதிரியக்கங்கள் நம் தசைகளுக்குள் பாய்ந்ததோ தசைகள் வெந்து வேதனைப்படும் உணர்வுகளாக வருகிறது. தசைகளில் விளைந்த வேதனை உயிருடன் சேர்த்த பின் எப்பொழுதும் வேதனையாகவே இருக்கும்.

உயிரிலே இயக்கப்படும் இந்த வேதனை அடுத்து வேதனைப்படும் சரீரங்களாக விஷம் கொண்ட உயிரினமாக… விஷத்தை உணவாக எடுக்கும் அத்தகைய உடல்களிலே புகுந்தால் தான் இது அடங்கும்.

இல்லையென்றால் அந்த அணுக்கதிரியக்கத்தின் வேகம் வீசிய பின் இறந்த பின் உயிரின் தன்மைகள் சதா வேதனையிலேயே இருக்கும்.
1.வேதனை வென்றிட்ட அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்த்தால் ஒழிய அதை நீக்கவே முடியாது
2.ஆகவே மனிதனாகப் பிறந்த நாம் மெய் ஞானிகள் உணர்வை நாம் பருக வேண்டும்
3.உங்களை அறியாது வந்த தீயவினைகள் நீக்கிட வேண்டும்
4.மெய்ப்பொருளின் உணர்வுகள் உங்களுக்குள் வளம் பெற வேண்டும்

அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றல் மிக்க நிலைகளை கண்டு கொண்ட விஞ்ஞானியைப் போன்று மெய் ஞானிகள் அணுவைப் பிளந்து… மனித உடலுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து… அந்த அணுவின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி…
1.அணுவால் ஈர்க்கப்பட்ட தசைகளுக்குள் சேர்ந்த நஞ்சினை வென்று
2.உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவர்களே அருள் ஞானிகள்

அத்தகைய மெய் ஞானிகளின் ஆற்றலை எனது குருநாதர்… நமது குருநாதர்… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் புகுத்திக் கொண்டிருக்கின்றேன்.

அந்த மெய் ஞானிகளைப் போன்று நீங்களும் ஆக வேண்டும் என்று இச்சைப்படுகின்றேன். அந்த இச்சைகளை நான் கவர்ந்தால் எனக்குள் அது வளர்கின்றது.

அதனால்தான் மணிக்கணக்கில் இடைவிடாது தொடர்ந்து உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே வருகின்றேன். எதை உங்களுக்கு உபதேசித்தேனோ அந்த உணர்வினை எனக்குள் கவர்ந்து கொள்கின்றேன்.

அதே சமயத்தில் இந்த உபதேசத்தினைக் கூர்ந்து நீங்கள் கவனிக்கப்படும் பொழுது உங்களுக்குள் இருக்கும் உயிரின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் கவரப்பட்டு… உங்கள் உடலுக்குள் ஈர்க்க்கும்படி செய்து ஊழ்வினை என்ற வித்தாகவும் பதிவு செய்கிறேன்.

இந்தப் பதிவை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் இருக்கும் தீய வினைகளைப் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை நீங்களும் பெற முடியும் என்ற “இந்த நம்பிக்கையில் தான் உங்களுக்குள் சொல்கிறேன்… நீங்கள் இதை எடுத்துப் பாருங்கள்.

மனித வாழ்க்கை என்பது உடல் நமக்குச் சதம் அல்ல
1.நமக்குச் சதமான உயிரைப் பிடித்துக் கொள்ளுங்கள்…
2.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று உங்கள் உயிரைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள்
3.உங்களை ஆள்வதும் அவனே…
4.எண்ணியதை இயக்குவதும் உயிரே…
5.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே…
6.எண்ணியதை எல்லாம் உடலிலே விளையச் செய்வதும் உயிரே…
7.விளைந்ததின் உணர்வைத் தனக்குள் எடுத்துச் செல்வதும் உயிரே…
8.எடுத்துக் கொண்ட உணர்வுக்கு ஒப்ப உடலாக்குவதும் உயிரே…!
9.நம்மை ஆள்பவனும் இந்த உயிரே…!

இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் எண்ணும் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததோ…
1.எந்த ஞானியின் உணர்வை நமக்குள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ
2.அதை ஜீவனாக்கி.. அந்த உணர்வின் தன்மை உடலாக்கி… ஒளியான அணுக்களாக உருவாக்கி
3.அதனின் துணை கொண்டு ஒளியின் சரீரமாக நம்மை ஆக்கக் கடமைப்பட்டிருக்கின்றான்… உயிர்…!

நாம் எண்ணியதைத்தான் உருவாக்கிக் கொடுக்கின்றான் காரணம் உயிரின் வேலை கொடுப்பதைச் சமைத்து உருவாக்குவது தான்.

நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு எந்த ஞானிகள் உணர்வைக் கவர்ந்து எடுத்துக் கொடுக்கின்றோமோ அதை வைத்துத்தான் நம்மை அடுத்த நிலைக்கு அவன் உயர்த்துவான்…!

நம்மை வளர்ததவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்கிறோமா…?

 

உதாரணமாக நமது குடும்பத்தில் இருப்போர் (மூத்தவர்கள்)) அனைவரும் நமக்கு நன்மை செய்துள்ளார்கள். அந்த நன்மை செய்த பின் நாம் அந்த நன்மை செய்தவரை எண்ணும் பொழுது எப்படி எண்ணுகின்றோம்…?

அவரால் நான் பாதுகாக்கப்பட்டேன்… எனக்கு எல்லாம் நல்ல வழி வகுத்துக் கொடுத்தார் என்று நாம் ஏங்குகின்றோம். ஆனால் அவர் அந்த உடலை விட்டுப் பிரிந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படிச் செலுத்துகின்றோம்…?

1.இப்படி எனக்கு எல்லாம் உதவி செய்தார்.
2.நோயோடு வாடும் பொழுது… “நல்ல மனிதன் இப்படி நோயோடு வாடுகின்றார்…” என்று. இந்த உணர்வைப் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
3.ஆனால் உடலை விட்டு அவர் பிரியப்படும் பொழுது நல்ல மனிதன் போய் விட்டாரே என்று வேகமாக எண்ணும் பொழுது
4.அவருடைய உணர்வு நமக்குள் வேதனைப்படும் காலத்தில் நமக்குள் இருப்பதனால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடுகிறது.
5.நல்லது செய்தார்… ஆனால் உடலை விட்டுப் பிரியும் போது அவருடைய பக்குவ நிலையை நாம் இழுக்கப்படும் போது நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

ஆனால் அவர் கடைசியில் எந்தக் கஷ்டத்தைப் பட்டாரோ அந்தக் கஷ்டமான உணர்வு நமக்குள் வளர தொடங்கி விடுகின்றது.

ஆகவே அவரை எங்கே இழுக்கின்றோம்…?

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினாலும்… நமது அறியாமை பண்பும் அன்பும் பரிவுடன் நாம் எண்ணும் பொழுது அவருடைய ஜீவன் பிரியப்படும் பொழுது நம்முடைய வேகமான உணர்வுடன் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

1.ஆனால் நம் உடலுக்குள் வந்த பின் நம் உடலில் அது கவரப்பட்டு நமக்கும் அவரின் நோய் வரத் தொடங்கி விடுகின்றது.
2.நோயின் உணர்வு நமக்குள் வரும் பொழுது அவருடைய ஆன்மா நமக்குள் இருந்து விஷத்தை வளர்த்து
3.நாம் இறந்தபின் மனித உடலுக்குள் செல்லாதபடி விஷத்தின் தன்மை கொண்ட மிருக உடல்களுக்குள் அவரை அழைத்துச் சென்று விடுகிறது.

மாடு ஆடு என்று இவையெல்லாம் தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்கு: அதனதன் விகிதாச்சாரப்படி விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்கின்றது.

மானோ யானையோ மாடோ புலியோ நாயோ நரியோ இவையெல்லாம் அதனதன் உணர்வுக்கொப்ப அதன் விகிதாச்சாரப்படி அந்த உறுப்புகளை எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப அந்த விஷத்தின் இயக்கத்தினால் அதன் ரூபங்கள் உருவாகின்றது.

உயிரால் உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் பொறிகள் உருவாக்கப்பட்டு அதன் வழி அந்த உடல்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது…? என்பதனை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே இவ்வழியில் தெளிந்து கொண்ட பின்னும் இப்பொழுது நமக்கு நன்மை செய்தார்கள் என்றால் நமக்காக நன்மை செய்தார். இனி இவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?

அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கும் பொழுது அந்த நோயின் தன்மையால் வேதனைப்படுகின்றாரே…!
1.இதிலிருந்து விடுபட்டு இனி அவர் ஆனந்த நிலை அடைய வேண்டும்.
2.அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக மீண்டும் பிறவிக்கு இழுத்துச் சென்று நமக்குள் அந்த வேதனை உணர்வு உருவாக்கப்பட்டு நாம் இறந்தபின் மனிதனல்லாத உருவை உருவாக்கத்தான் பயன்படுத்த முடிகிறது. அவரைப் பிறவியில்லா நிலை அடையச் செயல்படுத்த முடியவில்லை.

மௌனமாக இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
1.அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா எல்லோருக்கும் நன்மை செய்திருந்தாலும்
2.அவர் கேட்டறிந்த விஷத்தின் தன்மை அந்த உடலிலிருந்தாலும்…
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
4.இந்த உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
5.இனி துயரமே இல்லாத நிலையாக என்றும் ஏகாந்த நிலை அடைய வேண்டும் என்று அவரை உந்தித் தள்ள வேண்டும்.
6.அது தான் ஞானிகள் காட்டிய முறை.

பிறருக்கு உதவி செய்து தன் துயரத்தின் தன்மை தனக்குள் எடுத்து நோயாகிப் பிரிந்து சென்றாலும் இனி அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று யாராவது எண்ணுகின்றோமா…? யாரும் எண்ணுவதில்லை.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பற்றுடன் இருந்தால் “ஐய்யய்யோ இவ்வளவு நாள் எல்லாம் கொடுத்தாயே… இப்படிப் போய்விட்டாயே… இவ்வளவு சொத்தையும் வளர்த்தாயே… என்னைக் கண்காணித்தாயே…!” என்ற நிலையில் அழுகப்படும் பொழுது யார் அதிகமாக எண்ணுகின்றாரோ அவர் உடலில் அந்த ஆன்மா வரும்.

அந்த உடலுக்குள் வந்தால் மீண்டும் அந்த உடலை வீழ்த்திவிட்டு அந்த விஷத்தின் தன்மை ஓங்கி வளர்ந்த பின் மீண்டும் பாவ நிலையான மனிதனல்லாத உடலைப் பெறுகின்றது.

இப்படித்தான் நம்மை அறியாதபடி நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். உடலை விட்டுப் பிரிந்தவர்களை விண் செலுத்த வேண்டும். அதற்குத்தான் தெளிவாகச் சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே… அகஸ்திய மாமகரிஷி விண்ணுலக ஆற்றலைத் துருவத்தின் வழியாக நுகர்ந்து தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி அவர் எவ்வாறு விண் சென்றார்…? என்பதை குருநாதர் எனக்கு உபதேசித்தார்.

1.அகஸ்திய மாமகரிஷி கடந்த காலங்களில் எங்கே தோன்றினார்…?
2.ஆற்றல் மிக்க சக்திகளை அவர் எவ்வாறு பெற்றார்…? என்பதை எல்லாம்
3.அகஸ்தியர் சுழன்ற அந்தந்த இடங்களுக்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்.

இன்று நாம் கதைகளில் படிக்கக்கூடிய அகஸ்தியர் அல்ல அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்.

ஒன்றுமறியாத காட்டுவாசியாக இருந்தாலும் அவர் எவ்வாறு சக்திகள் பெற்றார்…? என்பதை…
1.அவர் சக்தி பெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று
2.நேரடியாகக் காட்டி அந்த உண்மைகளை எல்லாம் அறியும்படி செய்தார்.

அன்று அகஸ்தியர் பெற்ற அத்தகைய சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

அதனைப் பெறும் தகுதியாக…
1.27 நட்சத்திரங்களின் சக்திகளையும் நவக் கோள்களின் சக்திகளையும்
2.சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல்களையும் சப்தரிஷிகளின் அருள் சக்திகளையும் உங்களைப் பெறும்படி செய்கின்றேன்.

27 நட்சத்திரம் என்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் “27 விதமான உணர்ச்சிகளைத் தூண்டும்” நிலைகள் பெற்றது. பேரண்டத்தில் இருந்து வரும் மற்ற சத்துக்களை இந்த 27 நட்சத்திரங்களும் ஊடுருவி… அதனுடைய செயலாக்கத்தைத் தணியச் செய்து… நம் பிரபஞ்சத்திற்கு ஒத்ததாக மாற்றி அனுப்புகின்றது.

எந்தெந்த நட்சத்திரம் அந்தச் சக்திகளை வீழ்த்தி அந்த அலைகளைப் பரப்புகின்றதோ… அதற்கடுத்து இருக்கக்கூடிய கோள்கள் அதைக் கவர்ந்து தன் உணர்வின் சத்தாக அதை வளர்த்துக் கொள்கின்றது.

அதனின்று உமிழ்த்தி வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதில் கலந்துள்ள நஞ்சைப் பிரித்துவிட்டு “வெப்ப காந்த அலைகளாக” உலகைச் திருஷ்டிக்கும் நிலையாக மாற்றுகின்றது.

அதனின்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் பூமி தோன்றி…
1.பூமிக்குள் கல் மண் உருவானாலும் அதிலே தாவர இனங்கள் உருவாகி
2.அந்த உணர்வின் சத்தை உயிரணுக்கள் பருகி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி
3.சூரியனைப் போன்று மனிதனும் தன் உணர்வின் தன்மை கொண்டு
4.எண்ணங்களால் கெட்டதைத் தனக்குள் வராது தடுக்கும் ஆற்றல் பெறுகின்றான்.

தன் எண்ணத்தின் வலு என்றால்… உதாரணமாக கோபம் என்றால் அந்தக் கோபத்தை வைத்துச் சமப்படுத்தும் நிலையாக உடலுக்குள் அமைத்துக் கொள்கின்றது.

அதே போன்று இந்த எண்ணங்கள் என்பது நட்சத்திரங்கள். நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வுகள் உயிருடன் படும்பொழுது அது ஜீவன் பெற்றுத் தசைகளாக (கோள்கள்) மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வலைகள் தசைகளுக்குள் விளைந்து… அதிலே விளைந்தது உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உடலுக்குள் உயிர் சூரியனாகின்றது.

எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அதற்குள் விளைந்து மாற்று உடலை அமைக்கும் திறன் அது பெறுகின்றது. இவ்வாறு மனித நிலைகள் பெற்று வந்தாலும்
1.மனித உடலுக்குப் பின் “மாற்று உடல் பெறாது” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்
2.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடியதையும் 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கோள்களின் சக்தியையும் இணைத்து சூரியனின் காந்த சக்தியாக இருக்கும் நெருப்புக்குள் இணைத்து தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

27 நட்சத்திரங்களுடைய சக்தியைப் பருகும் சக்தியைக் குருநாதர் கொடுத்ததால்
1.எந்த வழியில் அதனைக் கவர வேண்டும்…?
2.அந்த நினைவலைகளை எப்படி எடுக்க வேண்டும்…?
3.சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளை அதிலே எந்த அளவுகோல் கொண்டு கலக்க வேண்டும்…?
4.மற்ற கோள்களின் சக்திகளை எந்த அளவிற்கு நினைவு கொண்டு வர வேண்டும்…? என்று
5.அந்த உணர்வின் நினைவலைகளை ஓர் எண்ண வலுவாகக் கூட்டச் செய்து
6.அதனை உங்கள் உணர்வுக்குள் பாய்ச்சச் செய்து அந்தச் சக்தியை நீங்கள் பருக வேண்டும் என்றும்
7.பிரபஞ்சத்தில் விளைந்ததை எல்லாம் ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை இதற்குள் கலந்து
8.ஒளி சரீரமாக மாறி விண் சென்ற அந்த உணர்வுகளையும் இணைக்கச் செய்கின்றோம்.

அதற்காக வேண்டி…
1.எதனை எதனின் அளவுகோல் எடுத்துக் கொள்ள வேண்டும்…?
2.எதை உபதேசிக்க வேண்டும்…? எப்படி உபதேசிக்க வேண்டும்…? என்று
3.அவர் சொன்ன வழி முறைப்படி உபதேசித்து
4.உங்களை அறியாது வரும் தீமைகளை மாற்றவல்ல சக்தியாகக் கொடுத்து
5.நல்வினைகளை ஓங்கச் செய்து அருள் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் உங்களை இணையச் செய்து கொண்டுள்ளோம்,

புத்தாடை

 

ஒருவன் தீமை செய்வதைக் கண்களால் பார்க்கின்றோம் தீமை செய்பவனைப் பார்க்கப்படும் பொழுது கண்கள் கூர்மையாகப் பார்க்கின்றது. அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றது. அவன் செய்த தவறின் உணர்வுகள் நமக்குள் வந்து நல்ல குணங்களைக் கொல்கிறது.

நமது வாழ்க்கையில் அறிந்து கொள்ள நம் எண்ணங்களைச் செலுத்துகின்றோம். நோயோடு வாடுகின்றான் உற்றுப் பார்க்கின்றோம். கேட்டு உதவி செய்கின்றோம்… இதே கண்களால் தான்…!

1.கண்கள் கொண்டு பார்த்து உதவி செய்தாலும் தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தே விடுகின்றது.
2.நம் உடலுக்குள் சேர்ந்த பின் பூராம் நரகாசுரனாக மாறி விடுகின்றது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று பார்த்து உணர்ந்து நுகர்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் நமக்குள் “திருடனைப் போன்று” அந்த வலிமை புகுந்து நம் நல்ல குணங்களைக் கொன்று குவிக்கின்றது.

நரகாசுரனைக் கொன்ற நாள் எது…? தீபாவளி.

தீமை என்ற உணர்வைத் தெரிந்து தீமையை நுகர்ந்ததனால் நமக்குள் இத்தனை நோய்கள் வந்தது… அதைக் கண்களால் பார்த்தோம்.
1.அதே கண்களால் தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
2.அந்தக் காலையில் 4 மணிக்கு எண்ணப்படும் பொழுது
3.கண்ணுற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து
4.நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கும் ஜீவணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பாய்ச்ச வேண்டும்.

யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ அந்தக் குடும்பங்கள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் தொழில்கள் வளம் வர வேண்டும் அருள் வழி வாழ வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அன்றைக்கு முழுவதுமே இப்படிச் சொல்ல வேண்டும்.

இப்படி நமக்குள் தீமைகளை மறந்து செயல்பட்டால்
1.நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை காலை 6 மணிக்கெல்ல்லாம் சூரியன் அதை எடுத்துச் சென்று விடுகின்றது.
2.பரமாத்மாவில் உள்ள அசுர குணங்களும் மாற்றப்படுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட அருள் உணர்வுகள்… எல்லோரும் அன்புடன் பண்புடன் இருக்கப்படும் பொழுது நம் ஆன்மாவிலே அன்பு கொண்ட புத்தாடையாகின்றது.

தீமைகளை நீக்கி நல்ல உணர்வு கொண்டு நமது வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்…? என்று தான் இந்த புத்தாடை அணியும் நிலையைக் காட்டுகின்றார்கள்.

நாம் துணிகளைப் புதிதாக அணிவதல்ல…!

தீமைகளை நீக்கும் துருவ நட்சத்திரத்திண் உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி… நமக்கு அது புத்தாடையாகி பகைமை உணர்வு வராதபடி நம்மை எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும்…? நாம் எப்படி மற்றவர்களைப் பார்க்க வேண்டும்…? என்பதற்காகத்தான் தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள்.

நாம் அதை எல்லாம் மறந்திருக்கின்றோம் விஞ்ஞான உலகால் உலகம் அழியும் தருணத்தில் நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகள் காட்டிய நெறிகளைப் பின்பற்றினால் வரும் விஷத் தன்மைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ளலாம்.

வருடம்தோறும் ஒவ்வொரு மாதத்திலும் விழாக் காலங்களில் அருள் உணர்வுகளைப் பெருக்கிப் பாருங்கள்.
1.உடலுக்குள் இருக்கும் பகைமைகள் மாறுகின்றது.
2.இந்த காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய தீமையான உணர்வுகளும் தூய்மையாக்கப்படுகின்றது
3.எல்லோரும் இதை செயல்படுத்தும் பொழுது பரமாத்மா பரிசுத்தம் அடைகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எல்லோருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று யாம் (ஞானகுரு) பூரண ஆசீர்வாதம் கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலமாக வேண்டும் பிள்ளைக்குத் திருமணமாக வேண்டும் தொழில் சீராக வேண்டும் என்று
1.உங்களுக்கு எது நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை மனதில் எண்ணி ஆசி பெறுங்கள்.
2.சிந்தனைகளைச் சிதற விட்டுப் பல பல கோரிக்கைகளை வைக்காதீர்கள்.

எம்மிடம் வருகின்றீர்கள் என்றால்… என் பிள்ளைக்குத் திருமணம் நடக்க வேண்டும் அது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு ஆசீர்வாதம் வேண்டும் என்று மனதில் எண்ணி இப்படிக் கேளுங்கள். “அதைக் கொடுத்து விடலாம்…”

அடுத்த முறை வரும் பொழுது இன்னொன்றை நீங்கள் கேட்கலாம்…!

ஆனால் ஒன்றைக் கொடுத்த பின் மொத்தமாக எல்லாத்தையும் கேட்க ஆரம்பித்துச் சொல்ல ஆரம்பித்தால்
1.என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது
3.சம்பாதிக்கிற பணம் செலவழிந்து கொண்டிருக்கின்றது
4.வியாபாரம் நஷ்டமாகிக் கொண்டே வருகின்றது என்று இப்படி வரிசையில் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

நான் எதற்கு ஆசி கொடுப்பது… எதற்குப் பதில் சொல்வது…?

எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஆசி கேளுங்கள் அதே போல் எங்கள் தொழில் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். அதற்கு நல்ல ஆசி வேண்டும் என்று கேளுங்கள்.

இது எல்லாம் வாக்கு தான்…!

திட்டியவர்களைப் பதிவு செய்கின்றோம் திருப்பி எண்ணும் பொழுது “திட்டினான்… திட்டினான்…” என்று வருகிறது.

நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாக்காகப் பதிவு செய்கின்றேன்.
1.அதைத் திரும்ப நீங்கள் எண்ணினீர்கள் என்றால்
2.அதே மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள் வேலை செய்யும்
3.ஏனென்றால் நான் சதா தியானம் இருந்து கொண்டே இருக்கின்றேன்

ஒருவர் ஒரு தரம் திட்டிவிட்டார் என்றாலும் அடுத்து அதை யாரிடம் சொன்னாலும் மீண்டும் மீண்டும் சொல்லி திட்டிக் கொண்டே இருப்பார். அந்த அலைகளை அவர் பரப்பிக் கொண்டே இருப்பார்.

பதிலுக்கு நீங்களும் அவர்களை அடிக்கடி நினைத்துத் திட்டிக் கொண்டே இருப்பீர்கள். நீங்களும் இந்த எண்ணத்தை பரப்பிக் கொண்டே இருப்பீர்கள்
1.அவருடைய நினைப்பு உங்களிடம் வளர்கின்றது
2.இரண்டும் கலந்து பேசிக் கொண்டே இருக்கும்.

இதே போன்றுதான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “எந்தெந்த வகையிலோ தந்திரமாக உங்களுக்குள் நுழைய வைக்கின்றேன்…”

அதைப் பெற வேண்டும் என்று திரும்ப எண்ணி விட்டீர்கள் என்றால் அதை நீங்கள் பெருக்கிக் கொள்கின்றீர்கள் உங்களிடம் கோபப்படச் செய்யும் உணர்வுகள் வெளிப்படுவதை அது கொஞ்சம் அடக்குகிறது.

உங்கள் சொல்லே உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.

1.எந்த எந்த வகையிலோ உங்களுக்குத் தெரியாமலே கஷ்டம் எப்படி வருகின்றதோ அதே போலத்தான்
2.உங்களுக்குத் தெரியாமலேயே கஷ்டத்தை நீக்க கூடிய சக்தியை கொடுக்கின்றோம்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் யாரைப் பார்த்தாலும் “உங்கள் பார்வையால் அவர்கள் கஷ்டம் விலக வேண்டும்…” என்ற நிலைக்கு வளர வேண்டும்.

அந்தச் சக்தியைத் தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்… பரப்புகின்றேன்…!

ஆகையினால் கூடுமான வரையில் அடுத்தவருடைய கஷ்டங்களையோ குறைகளையோ எடுத்துப் பேசாதீர்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய குறைகள் நீங்க வேண்டும் என்று எண்ணிப் பழகுங்கள்.

எங்கேயாவது ஏதாவது குறை நடந்தது என்றால் அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணுங்கள். ஏனென்றால்
1.முந்திப் பதிவு செய்த குறையான உணர்வுகள் இருக்கும்
2.அது எல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவர்கள் மனது நிறைவு பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.இதைத்தான் நாம் சொல்ல வேண்டும்… பெருக்க வேண்டும்.

குறையைக் கண்டு… பார்த்து… பேசி… அதையே வளர்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படியே விட்டு விட்டால் அந்தக் குறை நமக்குள் வளர்ந்து கொண்டே வரும் குறையை இயக்குவதற்குண்டான தூண்டுதலாக நமக்குள் வளர்ந்துவிடும்.

இது போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி என்று வளர்த்துக் கொண்டே வர வேண்டும் நீங்கள் அனைவரும் அதைப் பெறுவீர்கள் என்று பிரார்த்தனை செய்கின்றேன் (ஞானகுரு).

உயிரின் இயக்கம்

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் நமது உயிரை ஈசனாக மதித்து உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உடலுக்கும் உயிரே குரு என்ற நிலையில் மதித்தல் வேண்டும்.

ஓம் என்றால்…
1.நமது உயிர் ஓ என்று இயங்கிக் கொண்டே உள்ளது.
2.நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்த்து எல்லாம் நமது உயிரில் மோதும் பொழுது ஓ என்று அந்தக் குணங்கள் இயங்கி
3.அந்தக் குணத்தின் உணர்வுகள் ம் என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.

ஆதாவது ஓம் நமச்சிவாய…! நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரைப் போன்று ஜீவ அணுவாக மாற்றி அணுவின் மலம் நம் உடலாக சிவமாக மாறுகின்றது.

.இப்பொழுது நாம் எத்தனை வகை குணங்களை நுகர்ந்து அறிகின்றோமோ அறிய உதவுகின்றது…
1.உணர்வு அந்தந்த நிலைக்கொப்ப குணங்களுக்கொப்ப அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் இயக்கினாலும் அந்த உணர்வின் தன்மை அணுவாக அந்தக் குணத்தை வளர்க்கும் சக்தி பெறுகின்றது..

ஒரு செடியில் வித்து உருவானால் நிலத்தில் அதை ஊன்றினால் எந்தச் செடியில் அது விளைந்ததோ அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய சத்தை இந்த வித்து நுகர்ந்து செடியில் விளைந்த வித்தைப் போல பல வித்துக்கள் உருவாகி அதன் செடிகளை உருவாக்கும்.

அதைப் போன்று ஒருவன் கோபப்படுகிறான் என்ற உணர்வை உற்றுப் பார்த்தால் நமது கருவிழி ருக்மணி நமது விலா எலும்புகளில் ஊழ் வினை என்ற வித்தாக பதிவாக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ
1.அந்த மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நமது ஆன்மாவாக மாற்றி
2.நம் உயிரிலே மோதும் போது அவன் கோப்த்தின் உணர்வு எதுவோ அதே போல அந்தக் கோப உணர்வுகள் நம் உயிரிலே மோதும் போது
3.அந்தக் கோபத்தைச் செயல்படுத்தும் உணர்ச்சிகளாக நம் உடல் முழுவதும் பரவுகின்றது.
4.கோபித்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி ம் என்று உடலாக அமையும் சந்தர்ப்பம் வருகின்றது.

காரணம் அது உமிழ் நீராக மாறும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுடன் கலக்கப்படும் பொழுது
1.அவன் எப்படிக் கோபித்தானோ அதே போல நாம் ஆகாரத்திற்குள் கார உணர்ச்சிகளை உருவாக்கி “அதன் உணர்வுகள் இரத்தமாக மாறுகின்றது…”
2.இப்படித்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உயிர் நம் சுவாசித்ததை எல்லாம் இரத்தமாக அணுக்களாக உடலாக மாற்றிக் கொண்டே வருகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் முதல் நாள் கடைகளுக்குச் சென்று சாம்பில் (SAMPLE) காண்பித்து அதை வைத்து “ஆர்டர்” எடுக்கின்றோம்.

சரக்கு நன்றாக இருக்கிறது. ஆகவே காண்பித்த சாம்பில் பிரகாரம் இத்தனை பண்டல் சரக்கைக் கொண்டு வந்து கொடுங்கள்…! என்று கேட்கின்றார்கள்.

ஆர்டர் பிரகாரம் மறு நாள் நாம் சரக்கைக் கொண்டு செல்கிறோம். ஆனால் நம் நினைவுகள் எங்கே இருக்கின்றது…?
1.ஆர்டர் கொடுத்த கடைக்காரரிடம் இருக்கின்றது.
2.இவ்வளவு விற்றால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று அந்த மகிழ்ச்சியான சிந்தனையிலே சென்று கொண்டிருக்கின்றோம்.

மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது… ரோட்டிலே நாம் கடந்து செல்லும் பாதையிலே… ஒரு கண்ணாடி பாட்டில் உடைந்து எண்ணை எல்லாம் சிதறிக் கிடக்கிறது… அதைப் பார்த்து விடுகிறோம்.

பார்த்தவுடன்… “காலில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்…! என்று நமக்குள் பதட்டமாகி… அறிவு கெட்ட நாய்கள்…! இப்படி நடுரோட்டில் பாட்டிலை உடைத்து போட்டுவிட்டுச் சென்று விட்டார்களே…” என்று பேச ஆரம்பிக்கின்றோம்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் பார்த்தவுடன் அந்த உணர்வு என்ன செய்கிறது…? காலில் குத்தி இருந்தால் என்ன ஆயிருக்கும்…! என்று அந்த வேகம் வருகிறது.

ஆனால் தாண்டி விட்டோம்… காலில் அடிபடவில்லை…! இருந்தாலும் அதைப் பார்த்த மாத்திரத்தில் “உலகமே கெட்டு விட்டது…! நடு ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்திருக்கின்றான் பார்…!” என்று சொல்ல ஆரம்பிக்கின்றோம்.

1.அந்த இடத்தில் நம் கண்கள் “இது கெட்டது…!” என்று உணர்த்துகின்றது.
2.அதைத் தான் கண்கள் (கண்ணன்) உபதேசம் செய்கிறான் என்று காட்டுகிறார்கள் (கீதா உபதேசம்).

எண்னணெய் சிந்தியிருக்கிறது… கண்ணாடி காலில் குத்திவிடும். அதனால் அதை ஒதுக்கி ஓரமாகப் போட்டுவிட்டு யார் அவ்வாறு செய்தார்களோ அவர்களுக்குப் பரிகாரமாக நல்லது வர வேண்டும் என்று எண்ணினால் “இது நல்ல சிந்தனை…”

ஆனால் அதற்குப் பதிலாக “அறிவு கெட்டதனமாகப் போட்டிருக்கின்றார்கள் பார்…!” என்று சொன்னால் என்ன ஆகும்…?
1.கெட்டதை நீக்கச் சொல்லித் தான் கண்ணன் (கண்கள்) வழிகாட்டுகிறது.
2.ஆனால் கெட்டதைத் தான் (அறிவு கெட்டதனமாகச் செய்தார்கள் என்று) நாம் எடுத்துக் கொள்கின்றோம்.
3.வியாபாரத்தை எண்ணி மகிழ்ச்சியாகச் செல்லும் பொழுது “காலில் குத்தியிருந்தால் நம் காரியம் தடைப்பட்டிருக்குமே…” என்று இதைத்தான் நினைக்கின்றோம்.

ஆனால் அந்தக் கெட்டதை நீக்குவதற்கு மனது வருகின்றதா…! கீதையிலே கண்ணன் இதை எல்லாம் தெளிவாகச் சொல்கிறான்.

எப்படி…?

அவன் (பாட்டிலைப் போட்டவன்) அயோக்கியத்தனம் செய்தான் என்ற எண்ணத்தை நாம் எடுக்கும் போது உதைக்க ஆரம்பிக்கின்றான். அரச தண்டனையாக நமக்குள் மாறுகின்றது (உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சி).

பொதுவாக நாம் எடுத்துக் கொண்ட குணத்தின் தன்மை நல்ல குணமாக இருந்து ஆட்சி செய்கின்றது. இருந்தாலும்…
1.இந்தச் சந்தர்ப்பம் எடுத்துக் கொண்ட எண்ணம் நீ இப்படியா செய்கின்றாய்…? என்று
2.“அது நோயாக மாறுவதற்கு” “அரச தண்டனையாக” அமைந்து விடுகிறது.

எடுத்த எண்ணம் அரசனாக ஆனாலும் அதை இயக்கக்கூடியது குரு… “குருக்ஷேத்திரம்” என்று காட்டுகின்றார்கள். இங்கே அந்தக் கேட்டதை நினைக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை என்னை இயக்குகிறது என்றால் ஈஸ்வரா…! குருக்ஷேத்திரத்தில் உயிரை எண்ணி அவனிடம் (நல்லதை) கேட்க வேண்டும்.

கண்ணன் என்ன செய்கின்றான்…?
1.உனக்குள் அனைத்தையும் இயக்கும் உயிர் குருவாக இருக்கின்றான்
2.அவனிடத்தில் நீ முறையிடு…!

கண்ணின் உணர்வின் இயக்க நிலைகளை அன்று வியாசகர் இப்படித் தெளிவாக உணர்த்தி உள்ளான்.

குருக்ஷேத்திரப் போரில் ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது அந்தத் தீமை உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகின்றது. ஈசன் அதைத் தடைப்படுத்துகின்றான்.

நாளைக்கு இந்தத் தவறு நடக்காதபடி
1.அவனுக்கு (பாட்டிலை உடைத்தவன்) நல்ல சிந்தனைகள் வரவேண்டும் என்று இங்கே நிலை நிறுத்தினால்
2.குருக்ஷேத்திரப் போரில் இது அரசனாக வந்து விடுகிறது.
3.அப்போது தீமைகள் உள்ளே புகாதபடி அந்தத் தீமைக்குத் தண்டனை கொடுத்து விடுகின்றான்.

ஆனால் அதற்குப் பதிலாக நாம் இங்கிருந்து “அறிவு கெட்டதனமாகச் செய்கிறான்…!” என்று சாபமிட்டு அவனை எண்ணும் பொழுது இந்த உணர்வு அரசாட்சியாகி நல்லதைக் கெடுக்கின்றது.

1.நான் சொல்கிறேன்… நீ அயோக்கியத்தனம் செய்து விட்டாய்…! என்று
2.உடலுக்குள் அது நோயாக மாற்றி விடுகின்றது… தண்டனை ஆகிவிடுகிறது.
3.நம் நல்ல குணங்கள் என்ன ஆகிறது…? வெறுப்பின் தன்மையாக மாறும் போது “நல்லது எல்லாம் அழிகின்றது…”
3.ஆகவே அந்தத் தீமைகளை வடிகட்டுவதற்கு மெய் ஞானிகள் உணர்வைச் சேர்க்க வேண்டும் என்று தான் கீதாச்சாரத்தில் சொன்னது.

நம் கண் எவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது…! என்று அதனுடைய உணர்வின் இயக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எண்ணியதை (கண்கள்) அலைகளாக மாற்றுகின்றான்… அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் சேர்க்கின்றான். இந்த உணர்வின் இயக்கமே அது.

ஆனால் எண்ணியதை உயிர் பிரம்மமாக இருக்கின்றான் உருவான ஒவ்வொன்றுக்கும் அவனே வழி காட்டுகின்றான். உணர்வின் தன்மையை அவனே பிரம்மனாக இருந்து சிருஷ்டிக்கின்றான். எடுத்துக் கொண்ட மணம் ஞானமாக இருந்து இயக்குகின்றது சரஸ்வதி…!

எடுத்துக் கொண்ட உணர்வின் நாதம்… எந்தக் குணத்தின் தன்மை உணர்வானதோ இயல்பான அந்த நாதம்…
1.அது இனிமையான நாதங்களாக இருந்தால் ஆனந்தமாகத் தலையை அசைக்கச் செய்கிறது.
2.ஆனால் படபடா…! கடபுடா…! என்று ஒரே சத்தமாக இருந்தால் என்ன ஏது என்று அதிர்வாகி எரிச்சலாகி முறைக்கின்றோம்.
3.எந்த வேகத்தின் உணர்வு நாதமானதோ அந்த உணர்வு நம்மை இயக்குகின்றது… வீணையின் நாதம்.

அதனால் தான் சரஸ்வதிக்கு இங்கே வீணையைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள். நாம் எந்த உணர்வின் தன்மை சுவாசித்து உராயச் செய்கின்றோமோ அந்த நாதத்தின் சுருதியே நம்மை இயக்கும்.

ஏனென்றால்
1.குருவின் ஆணைப்படி தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்
2.நீங்கள் தெளிவானால் உங்களுடைய மூச்சு மற்றவர்களின் கெட்டதை எல்லாம் நீக்கும்.
3.நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சு உங்கள் நோயைப் போக்க வேண்டும். அதற்காக வேண்டித் தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

விஞ்ஞான உலகில் நாளை வரக்கூடிய விஷமான உணர்வுகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்க முடியும். “அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்” (ஞானகுரு).

பாட்டில் உடைந்ததைப் பார்த்துத் திட்டி விட்டு அதை ஓரமாகவும் ஒதுக்கிப் போடாதபடி அப்படியே அந்த உணர்வுடன் நாம் கடைக்குச் செல்கிறோம்.

கொண்டு போன சரக்கை அவரிடம் சிரித்துக் கொண்டே காட்டுகின்றோம். ஆனால் எந்த வேகத்தை வரும் வழியில் எடுத்தேனோ எனக்கு முன்னாடி அது (ஆன்மாவிலே) இருக்கின்றது.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…!

இங்கே பாட்டில் உடைத்தவனை “அயோக்கியன்…” என்று சொல்லித் திட்டிய உணர்வு ஆன்மாவில் முன்னணியில் இருப்பதால்… துணியை எடுத்து அந்த உணர்வுடன் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது…?

என் உணர்வு பட்டவுடனே… கடைக்காரர் துணியைப் பார்க்கின்றார் பார்க்கப்படும் பொழுது
1.இங்கே ரோட்டில் எப்படி நாம் வெறுத்து பேசினோமோ
2.அவருடைய கண் இந்த வெளிப்படும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
3.அந்த அலைகள் இயக்கி நான் சொன்ன நல்ல உணர்வுடன் கலந்து அவரை இயக்குகின்றது.
4.என்னங்க…? நேற்று ஒரு சரக்கைக் காண்பித்தீர்கள். இன்று வேறு சரக்காகக் கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்று கேட்க ஆரம்பிப்பார்.

ஆனால் சாம்பிள் காண்பித்ததும் கொண்டு போன துணியும் இரண்டும் ஒரே துணி தான்…!

அது தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. மணி ஓசையைக் கேட்டவுடன் யானை வருகிறது என்ற உணர்வு இயக்கி நாம் ஒதுங்கிக் கொள்கிறோம்.

அது போல்
1.நம்முடைய எண்ணம் அவருக்குள் முன்னாடியே பாய்ந்து
2.அந்தக் கெடுதலான எண்ணம் நம் சரக்கை அவருக்கு மட்டமாகக் காண்பித்து விடுகிறது… வியாபாரம் போய்விடுகிறது.

நாம் என்ன நினைப்போம்…? நேற்று சரக்கைக் கொண்டு வரச் சொன்னான்.. கொண்டு வந்த பின் இந்த மனுஷன் வேண்டாம் என்று இன்றைக்குச் சொல்கிறான்…!
1.ஆக என்னுடைய உணர்வு தான் அங்கே அவனை அவ்வாறு பேச வைக்கின்றது என்பதை
2.நாம் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

இது எல்லாம் இயற்கை…!

குருக்ஷேத்திரப் போர்…! என்ற நிலையில் இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து அதைத் துடைத்து விட்டு… “அவர்களுக்கு நாளை நல்லது நடக்கட்டும்…” என்று அங்கே சொல்லிவிட்டு தீமையை அப்புறப்படுத்தி விட்டு நாம் செல்ல வேண்டும்…!

ஆகவே… ஒன்பதாவது அவதாரத்தில் இப்போது இருக்கின்றோம். அடுத்து “கல்கி அவதாரம்…” என்றால் உயிரின் தன்மை ஒளி கொண்டு விஷத்தின் தன்மையை நீக்கி… நிலையாக நின்று ஒளியின் சரீரமாகப் பறந்து செல்வது (குதிரை மீது) கல்கி…!
1.உணர்வின் தன்மை வேகத்தின் துடிப்பு கொண்டு எதிலே இருக்கின்றதோ
2.வாளை வைத்துக் குதிரையைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
3.ஒளியின் சரீரமாகச் செல்லும் “கல்கி அவதாரத்தின் வேகங்கள் வேறு…”

பத்தாவது நிலை அடையப்படும் பொழுது ஒளியின் தன்மையாகக் கல்கி அவதாரமாகப் போகின்றோம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாரதர் சிவனிடம் வருகின்றார்… கனியைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். உலகை யார் முதலில் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்தக் கனி.

முருகனின் வாகனம் மயில் ஆற்றல் மிக்கதாக இருப்பதால் ஏறி உட்கார்ந்தால் ஒரு நொடியில் உலகை சுற்றிச் வரலாம் என்று அவருடைய உணர்வு வேகம் செல்கின்றது.

ஆனால் விநாயகன் இருந்த இடத்திலிருந்தே… அதாவது
1.புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில்
2.பல உணர்வின் சத்துக்களை எடுத்துச் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக
3.மனித உடல் பெற்ற இந்த உடல் அது இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

இருந்தாலும்… இந்த உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள் அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது (முருகன்).

விநாயகன் இருந்த இடத்திலிருந்து உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து வினையின் ரூபமாகச் சேர்க்கப்பட்டது.

உடல் பெற்ற நிலையில் தாய் தந்தையருடைய நிலைகள் என்பது பேரண்டமும் பேருலகமும்… என்று (அதனின் சக்தியைத்) தனக்குள் எடுத்துக் கொண்டது. இருந்த இடத்திலிருந்து தன் உணர்வின் சக்தியை எடுத்துக் கருவாக எடுத்துச் சிசுவாக விளைய வைத்தது.

ஆகவே
1.ஒரு மரம்…! அது பல அலைகளின் தொடர் கொண்டு
2.தனக்குள் எடுத்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு இந்த சத்துக்குள் விளைந்தது கனி (மாங்கனி)
3.அது போல் அன்னை தந்தையருக்குள் விளைந்ததே இந்த உணர்வின் வித்து… (மனித உடல்)
4.இந்த வித்தின் தன்மையே “உயிரான அந்தச் சத்து…!”

இந்த உடலிள் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலையான நிலைகள் கொண்டு… இந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாக
1.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல உயிரின் (ஒளியின்) தன்மை தனக்குள் எடுப்பது.

மாங்கனி அது வித்தாகி மரமாகி மீண்டும் தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்ப்பது போன்று
1.தன் இனத்தின் சத்தின் தன்மையை
2.ஒளியின் சுடராக வளரும் பக்குவ நிலைகள் பெறுகின்றது.
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா)

அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத் தான் (நாரதன் கொடுப்பதாக) கனியைக் காட்டி
1.தாய் தந்தையருடைய பாசத்தால் தான் நாம் வளர்கின்றோம்
2.பாசத்தால் வளர்க்கப்படும் பொழுது… அந்த ஞானி காட்டிய உணர்வின் எண்ண அலைகளை நீ எடு
3.அவன் வழியில் நீ செல்…!

அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான்… துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றான்…! துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய அணு தான் நாரதன். ஆகவே அந்த உணர்வின் தன்மை தான் வான்மீகிக்குள் ஈர்க்கப்பட்டது என்பதை “நாரதன் வான்மீகிக்கு ஓதினான் என்றார்கள்…”

ஏனென்றால் அது “விளைந்து முதிர்ந்த கனி…!” கனியிலிருந்து வரும் மணம் சுவையானது… இனிமை கொண்டது. நாரதனிடம் இருப்பது சுருதி ஏழு… சரஸ்வதியிடம் இருப்பது சுருதி ஏழு..! என்று இவ்வளவையும் படத்தைப் போட்டுப் பல உணர்வின் தன்மை அறிவதற்குக் காட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.

தாய் தந்தை இறந்த பின் பாசத்தினால் இங்கு (பிள்ளைகளின் ஈர்ப்புக்குள்) வந்தாலும்
1.மெய் ஒளியின் தன்மை நாரதன் காட்டிய அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து
2.எண்ணத்தாலே தாய் எப்படி நம்மைக் (தன் பிள்ளைகளை) கருவாகக் கூட்டியதோ
3.அதே போல பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான்… அதற்குள் இருந்து தான் நீ ஜெனித்தாய்…! என்ற
4.இந்தப் பேருண்மையைக் காட்டி அது தான் உன்னை முதல் தெய்வமாக உருவாக்கியது
5.அதனுடன் நேசித்து நீ வளர வேண்டும் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் மரத்துடன் ஒன்றிய காய் “அது கனியாகும்…!”

காயாக (மரத்திலிருந்து) விழுந்து விட்டால் சுவை இருக்காது… இயக்கம் புளிப்பாகும். அதை எல்லாம் அன்று அந்த அகத்தின் இயக்கத்தின் தன்மையைத் தெளிவுற உணர்த்தப்பட்டது.

தாய் எப்பொழுதுமே தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே வாழ்கிறது. அதே வழியில் நாமும் நம் தாய் தந்தை உயர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி… அந்தப் பாசத்துடன் ஒன்றி… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் செயல்படுத்தி… அந்தச் சக்தியை வளர்த்திட வேண்டும்.

1.இப்படி இதன் வழியிலே வளர்ந்தவர்கள் தான் விண் சென்றார்கள்… கனியாக ஆனார்கள்…! என்று கனியைக் கொடுத்து (நாரதன் கொடுக்கும் கனி)
2.மக்களுக்கு விளக்கம் சொல்வதற்கு இப்படிக் கதையாகக் காட்டிப் பேருண்மையை உணர்த்திச் சென்றார்கள்.

தீமைகள் எது வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

 

தீமையிலிருந்து விடுபடுவதற்கு உபாயம் என்ன…? இந்த ஆறாவது அறிவு தீமை என்று அறிந்து கொள்கின்றது கார்த்திகேயா.
1.தீமைகளை நீக்கி ஒளியின் உடலாக இருப்பது துருவ நட்சத்திரம்.
2.அதை வழிநடத்தி அதனின் உண்மையின் உணர்வை அறிவதற்காக இதைச் செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்களால் ஏங்கி வானை நோக்கி அதன் உணர்வு பெற வேண்டும் என்று ஏக்கத்தால் எண்ணி அதே கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தப்படும் பொழுது கண்ணால் பார்த்து உயிரிலே படும் பொழுது தான் உணர்வால் அறிகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் வேதனை என்ற உணர்வைக் கண்களால் நுகர்ந்தோம் உயிரின் காந்தம் நுகர்ந்து அந்த உணர்வை அறியச் செய்கின்றது கண்ணால் பார்க்கின்றோம் உயிரால் உணர்கின்றோம்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில வைக்கப்படும் பொழுது அது வலிமையாகி விடுகின்றது.

ஏனென்றால் வேதனைப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்றோம் கேட்டு அறிந்து. ஆனால் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் புருவ மத்தியில எண்ணி அதைப் பெற வேண்டும் என்று ஆறாவது அறிவின் துணை கொண்டு கட்டளையிட வேண்டும் சேனாதிபதி.

தீமையான உணர்வை நுகர்ந்திருந்தாலும் முதலிலேயே அது சிறிதளவு போய்விட்டது… அது புகாதபடி தடுக்க வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இணைக்கும் போது உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றது.

தடைப்படுத்துவது மட்டுமல்ல நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே செலுத்துதல் வேண்டும்.

இதை ஆணையிடுகின்றது… ஆறாவது அறிவு சேனாதிபதி கார்த்திகேயா. இந்த உணர்வு கொண்டு உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் செலுத்தப்படும் பொழுது அவை வீரியமடைகின்றது.

நாம் எண்ணியபடி அந்தத் தீமை வராதபடி உஷாராகின்றது.

நுகர்ந்து சிறிதளவு போன நிலையும் இந்த உணர்வுகள் சேர்த்து
1.இது உமிழ் நீராக மாறி உள்ளே சேர்க்கப்படும் பொழுது அந்த விஷத்தை அடக்கும் சக்தியாக
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தீமை நுகராது தடுத்த பின் சிறுத்து விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி உமிழ் நீராக மாறும் பொழுது அது சிறுக்கப்படுகின்றது. இதன் வழி கொண்டு எத்தகைய தீமையின் உணர்வை நுகந்தாலும் நம்மால் மாற்றிக் கொள்ள முடியும்.

அந்தச் சக்தியை எடுத்து நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவாக்கி நினைவாக்கி நீங்கள் தீமையிலிருந்து விடுபட முடியும்.

தீமையில் இருந்து விடுபட முடியாதபடி… நன்மை செய்தோர் அனைவரும் தீமையில் சிக்குண்டு… “நான் எல்லோருக்கும் நல்லது செய்தேனே என்னை இப்படி ஆண்டவன் சோதிக்கின்றானே…!” என்று எண்ணுகின்றார்கள்.

நாம் எண்ணியதை உணர்த்துவதும் உணர்வின் தன்மை உடலாக்குவதும் உடலாக்கிய பின் இதை ஆள்வதும் ஆண்டவனாக இருக்கின்றான் நமது உயிர். எண்ணியதை இயக்குகின்றான். ஆக யாரைப் பழி போடுவது…?
1.எங்கேயோ ஆண்டவன் இல்லை நமக்குள் எண்ணுவதைத் தான் உருவாக்குகின்றான்.
2.அந்த உணர்வு வழி தான் நம்மை வழி நடத்துகின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

மனிதனுடைய ஆறாவது அறிவு சேனாதிபதி. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எடுத்து கண்ணின் நினைவை இங்கே தடைப்படுத்தினால் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
1.அதைச் செலுத்தப்படும் பொழுது அணுக்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து அந்தப் படைகலன் தீமைகளை எதிர்க்கும் சக்தியாக பெறுகின்றது.
2.மனிதன் ஒருவனால் தான் இதைச் செயல்படுத்த முடியும்.
3.தீமைகள் எது வந்தாலும் மாற்றிக் கொள்ள முடியும்

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் கொடுப்பது அனைத்துமே வாக்குகள் தான்… வெறும் பேச்சு அல்ல…!

உடனுக்குடன் தீமைகளை நீக்குவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும் ஏனென்றால் முந்தி ஆரம்பத்திலே யாம் (ஞானகுரு) போட்ட வித்து அது…!

உதாரணமாக வயலிலே களைகள் முளைக்கிறது என்று அவைகள் எல்லாவற்றையும் பிடுங்கிச் சுத்தம் செய்கிறோம். ஆனால் மீண்டும் அவைகள் முளைத்து விடுகின்றது. மற்றதை விளைய விடுவதில்லை.

இது போன்று தான்
1.நம் உடலுக்குள் முந்தி விளைந்ததெல்லாம் இருக்கின்றது.
2.இருந்தாலும் அவைகள் மீண்டும் முளைத்து விடாமல் நாம் கொஞ்சம் தடுத்துக் கொண்டே வர வேண்டும்.
3.அருள் ஞான உணர்வை எடுத்து நல்ல பயிரை நாம் வளர்ப்பதற்கு முற்பட வேண்டும்
4.எத்தனை துன்பங்கள் வந்தாலும் அந்தத் துன்பங்களை மறைப்பதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும்..

ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவ்வப்பொழுது களைகளை அப்புறப்படுத்திக் கொண்டே வாருங்கள்

“என்னத்தை… ஆத்ம சுத்தி செய்து…?” என்று சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. ஆயுதத்தைக் கையில் கொடுத்திருக்கின்றோம். புல்லை நோண்டி அப்புறப்படுத்துவதற்கு அதைக் கொடுத்திருக்கின்றோம்.

கையிலே தான் புடுங்க முடியவில்லை. இந்த ஆத்ம சக்தி என்று ஆயுதத்தை வைத்து அதை எடுத்து விடலாம் அல்லவா. வாக்கால் தான் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையே கொடுக்கின்றோம்.

1.நான் (ஞானகுரு) பேசுவது அனைத்துமே வெறும் பேச்சு அல்ல
2.எல்லாவற்றையும் வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன்
3.பதிவு செய்து எப்படியும் நீங்கள் அந்தத் துன்பத்திலிருந்து மீள வேண்டும்
4.உங்கள் மூச்சு உங்கள் துன்பத்தை நீக்க வேண்டும்
5.உங்கள் பேச்சு மூச்சும் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அவ்வாறு செய்கின்றேன்

இதைத்தான் அன்று கந்த புராணத்தில் நாரதன் சொல்வதாக அன்னை தந்தையின் உணர்வுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்கள்.

தாய் உன்னைக் கருவில் வைத்து வளர்த்தது. அந்தத் தாய் தந்தையரின் ஆன்மாக்கள் பிரிந்த பிற்பாடு அதற்கு நல்ல ஆகாரமாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் நாம் அதன்படி செய்கிறோமா…?

தாய் தந்தையர் இறந்து விட்டார்கள் என்பதற்காக சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கவும் கடலில் கரைக்கவும் எங்கெங்கோ இடத்தைத் தேடிச் செல்கிறோம். இது சாங்கிய சாஸ்திரம்.

தண்ணீரே ஓடவில்லை என்றாலும் ஒரு குழியைத் தோண்டி அதில் தண்ணீரை ஊற்றிக் கரைக்க வேண்டும் என்று எத்தனை வழியில் செயல்படுத்துகின்றார்கள்.

ஏனென்றால் மழை பெய்து நாளைக்கு வெள்ளம் வந்தால் அது கடலில் சேர்த்துவிடும் என்று இப்படி ஒரு நம்பிக்கை. ஆனால்
1.தாய் தந்தையருடைய ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக்கடலிலே
2.உந்தித் தள்ளி இணைக்க வேண்டும் என்று தான் அன்று சொன்னார்கள்
3.அதை யாரும் செய்யத் தயாராக இல்லை.

பணத்தைச் செலவழித்துச் சாங்கியத்தைச் செய்து உணவு படைப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். காரணம் பாவ நிலைகளை நீக்குவதற்கு இப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

அதே சமயத்தில் துணிமணிகளை எடுத்து மற்றவர்களுக்குத் தானமாக கொடுத்தால் ஒட்டி இருக்கும் பாவங்கள் போய்விடும்… தோஷங்கள் போய்விடும் என்று
1.அப்பா பேரைச் சொல்லித் தானம் செய்வதும்
2.அம்மா பேரைச் சொல்லித் தானம் செய்வதும் என்று இப்படித்தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தானம் செய்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
1.நாம் அங்கே ஒன்றி இருத்தல் வேண்டும்.
2.அவ்வாறு செய்தால் தான் அந்த ஒளிகள் நம்முடன் இணையும்
3.இல்லையென்றால் அந்த ஒளிகள் ஒன்றும் செய்யாது.

நாம் தேட வேண்டிய அகச் செல்வமான அருள் செல்வம்

 

நாம் நமது வாழ்க்கையில் இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம். எத்தனையோ ஆண்டு வாழ்கிறோம் என்று இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தைப் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது.
2.வேதனை என்ற உணர்வு வளர்ந்தால் தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் சக்தியும் இழக்கப்படுகிறது.
3.பாதுக்க்கும் தன்மை இழந்து விட்டால் நம் உடலில் நோய் உருவாகின்றது.
4.நோய் உருவானால் இதுவே நாம் தேடிய செல்வமாக மாறிவிடுகின்றது.
5.நோயின் உணர்வுகள் விளைந்தால் அந்தச் செல்வத்தின் வழியே உயிர் அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்த உடலை உருவாக்கி விடுகின்றது.

ஆகவே தேடிய செல்வங்கள் நமக்குச் சொந்தமில்லை. இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை. வேதனை வெறுப்பு என்ற உணர்வைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடும். கோபம் குரோதம் என்ற நிலையானால் அதன் வழி அடுத்த உடலை உருவாக்கி விடுகிறது.

ஒரு நிலம் சரி இல்லை என்றால் அதைப் பண்படுத்துகின்றோம். ஒரு வீடு கட்டினால் அது சரியில்லை என்றால் அதைக் காட்டிலும் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகின்றோம்.

இதைப் போல தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது உயிர். ஆனால் அதைப் போன்ற உடலின் தன்மை வரும் பொழுது அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது.

1.அத்தகைய வேதனைகளை உருவாக்குவதற்கு மாறாக
2.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றைக்கும் நிலையான சரீரமாக வாழும் நிலையை
3.பேரருள் பெற்ற உணர்வினைச் செல்வமாக்கி… பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கிப் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

அதைத் தான் இராமேஸ்வரத்தில் ராமன் நேரமாகிவிட்டது என்று உணர்வின் தன்மை கூட்டி பூஜிக்கத் தொடங்கினான் என்று காட்டியுள்ளார்கள்.

இதைப் போலத் தான்
1.அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் பகைமையற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் உணர்வினை ஒன்று சேர்த்துக் கூட்டி
2.அந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாகி ஒன்றாகி ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வுகளைப் பெருக்கி நீங்கள் எண்ணும் பொழுது
3.அந்த உணர்வுகள் உங்களுக்குள் ஒளியாக மாறி அருள் ஒளி என்ற நிலைகள் பெறும் தன்மை வரும்.

ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றேன்.

இந்த உடலின் நிலைகள் நாளடைவில் கரையும் தன்மை தான் வளரும். அதாவது வளரும் தன்மையில் உடல் கரையும்… ஆனால் உணர்வுகள் வளரும்.

1.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… ஆக அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்
2.அந்த அருள் ஒளியை நாம் பெறுவதற்கே நாம் முயற்சிப்போம்.

செல்வமும் இந்த உடலும் நம்முடன் வருவதில்லை. அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளரும் பருவத்தினை ஏற்படுத்தி வளர்த்திடும் நிலையும்… இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியில் நாம் செல்வோம் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) சித்தாவதற்கு முன் என்னுடைய ஆரம்ப வாழ்க்கையிலும் நான் நல்லதைச் செய்யப்படும் போது அதிலே எத்தனையோ சிக்கல்கள் வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் வந்தது.

நல்லதைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்பி இன்றும் எத்தனையோ பேர் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றார்கள். நல்ல உணர்வுடன் செய்யும் போது தீய உணர்வுகளில் சிக்கி அதிலிருந்து தப்ப முடியாதபடி இருக்கின்றார்கள்.

அதை எல்லாம் மாற்றிடும் சக்தி பெற வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? எங்கே பெற வேண்டும்…? என்ற இந்த உணர்வு கொண்டுதான்
1.ஒவ்வொரு நிலையிலும் குருநாதர் காட்டிய நெறிகள் கொண்டு
2.அது எத்தனையோ சிரமங்கள் எல்லை கடந்து சந்தர்ப்பங்கள் செல்லும் பொழுது அதிலிருந்து மீள்வதற்கு
3.அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வது…? என்று அவர் கொடுத்த சக்திகளைத் தான்
4.உங்களுக்குள் சொல்லாக… வாக்காக… இப்பொழுது கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆனால் ஆரம்பத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் போல் வேகமாக உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தேன்… அர்த்தத்தைக் காண முடியாத அளவிற்கு…! ஏனென்றால் இங்கே அதைப் பதிவு செய்வதற்காக அவ்வாறு செய்தது.

முதலிலே இந்தச் சக்திகள் காற்றிலே இல்லை. ஆகவே அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் இந்தக் காற்று மண்டலத்திலே பரப்பி வைப்பதற்காக வேகமாக உபதேசித்தேன்.

1.யாரெல்லாம் அதை ஏங்கிப் பெறுகின்றார்களோ… எண்ணும் போது அவர்களுக்குக் கிடைப்பதற்காகவும்
2.காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெறச் செய்வதற்கும்
3.எண்ணியவுடன் அந்த உணர்வுகள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் வேகமாக உபதேசித்து வந்தது.

ஆரம்ப நிலைகளில் சஷ்டிச் கவசத்தைக் கூட நான் பாடி இருக்கின்றேன். சில அன்பருடைய வீடுகளில் குருநாதர் எனக்குக் காட்டிய உண்மைகளை இரவு முழுவதும் விடிய விடியப் பேசியும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

உதாரணமாக மங்களூர் நாராயணசாமி வீட்டுக்குச் சென்றால் எல்லாக் கோவில்களுக்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வந்தது தான். கர்நாடகாவில் உள்ள பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று வந்தது தான்.

குருநாதர் காட்டிய வழியில் அனுபவங்கள் பெறுவதற்காக எல்லா இடங்களிலும் இவ்வாறு சுழன்று வந்தது. காரணம்…
1.எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு நான் உங்களுக்கு உபதேசிக்கவில்லை.
2.குருநாதர் கொடுத்த சக்திகளை எல்லாம் எனக்குள் விளைய வைத்தேன்
3.அதிலே விளைந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

ஆகவே இதை எல்லாம் பதிவு செய்யும் நீங்கள் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் வரக்கூடிய சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ
2.அந்த மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெற்று
3.அதை நீக்கக்கூடிய அளவிற்கு முதலில் “பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்…”

கோபமோ வெறுப்போ வேதனையோ மற்ற இன்னல்கள் வரும் பொழுதெல்லாம் அருள் உணர்வுகளைச் சேர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்

உங்களுக்குள் தீமைகளை நீக்கிய பின் அது யாரால் எவரால் அந்தத் தீமைகள் வந்ததோ…
1.நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் அந்த உயர்ந்த உணர்வு கிடைக்கச் செய்யும் விதமாக
2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

யாரிடத்தில் நாம் பேசினாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்தே நாம் வெளிப்படுத்த வேண்டும். அப்போது நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகிக் கொண்டே வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனித வாழ்க்கை என்று இருந்தாலும் இந்த உடலை விட்டு நமது ஆன்மா ஒரு நாள் பிரியத் தான் செய்யும். அது சமயம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி தியானம் இருக்கும் போதெல்லாம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து உந்தி விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகள் இந்த உயிரான்மாவில் பட்டபின்
2.இன்னொரு உடல் பெறும் உணர்வின் சத்தை அது பஸ்பமாக்கிவிட்டு உணர்வின் ஒளி சுடராக அந்த உயிரான்மா வளரும்

எத்தனையோ மனிதர்களை விஞ்ஞான அறிவு கொண்டு இராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அந்த இராக்கெட் விபத்தாகி வெடித்து விட்டால் இறந்த ஆன்மா அங்கே விண்ணிலே தான் மிதந்து கொண்டிருக்கும்.

அப்படி மிதந்தாலும் அங்கிருக்கக்கூடிய மற்ற கதிரியக்க சக்திகள் அதிலே படப்படும் பொழுது
1.அந்த உயிராத்மா அது உயர்ந்த நிலை பெற முடியாது ஒளிச் சரீரமும் பெற முடியாது
2.வானில் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மிதந்தாலும் அது செயலற்றதாகத் தான் மாறும்.

ஆனால் இங்கே ஒரு அமைப்பை ஏற்படுத்தி உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் இங்கிருந்து சப்தரிஷி மண்டலத்திற்குக் கூட்டமைப்பாக விண் செலுத்தும்படி செய்கின்றோம்.

அப்போது அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வலைகள் இந்த உயிர் ஆத்மாவிலே கலக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒளியாகச் செயல்படுகிறது.

விஞ்ஞான முறைப்படி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தாலும் விபத்தாகி இறந்தால் நச்சுத்தன்மை கொண்ட உயிரான்மாவாகத் தான் விளைகின்றது.

விண்ணிலே சுழன்று கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திலே மற்ற கோளின் ஈர்ப்புக்குள் வந்தால்
1.உடல் பெறும் தன்மையற்று விஷத்தின் ஆற்றல் கொண்ட குறுகிய உடல்களால
2.புழு போன்ற உயிரினங்களாகத் தான் உடல் பெற முடியும்.
3.அல்லது அப்படியே மனித உணர்வு கொண்ட உடல் பெற்றாலும் கூட
4.சிந்தனை இழந்து வேதனைப்பட்டு விஷத்தின் தன்மையைத் தான் வளர்த்துக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லப்படும் பொழுது சுலப நிலைகளில் விண் செல்ல முடியும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.விண் செல்லும் பாதையை “எந்த மகரிஷி நமக்குக் காட்டினாரோ”
2.அவரின் உணர்வின் ஆற்றலை இங்கே தொடர்புகளாக உங்களுக்கு ஏற்படுத்தி
3.அதைத் தொடர் வரிசையாக உங்களுக்குள் பதிவு செய்து
4.அந்த ஆற்றலை ஓங்கி வளர்க்கும்படி செய்து இந்த உணர்வின் புலனறிவை
5.சப்தரிஷி மண்டலத்துடன் (உங்களை) இணைக்கச் செய்யப்படுகின்றது.

அவ்வாறு இணைத்துக் கொண்டோமானால் உடலை விட்டுப் பிரியும் போது அனைவரும் சேர்ந்து ஏக காலத்தில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “உந்தி அங்கே செலுத்தப்படும் பொழுது…” சுலப நிலைகள் அங்கே இணையச் செய்ய முடியும்… நாமும் அங்கே இணைய முடியும்.

இதைப் போல் உந்தச் செய்வதற்குத் தான் அன்று ஒவ்வொரு ஞானியும் சாதாரண மனிதனைத் தேடி வந்தார்கள்.

அந்த ஞானிகள் பூமியிலே வாழும் காலத்தில்… எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க சக்திகளை அவர்கள் பெற்றிருந்தாலும்
1.மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய துன்பத்தைப் போக்க செய்து
2.அந்தப் பாச உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து… நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து
3.தன் மீது அந்த எண்ணத்தை வளர்க்கும்படி செய்து
4.தன் சிஷ்யர்கள் சிலரிடம் சொல்லி… இன்ன உணர்வு கொண்டு என்னை விண்ணிலே உந்திச் செலுத்து என்று
5.உந்திச் செலுத்தும்படி செய்து அவ்வாறு விண் சென்றவர்களே பலர்…!

அதனால் தான் ஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.அவர்களை விண் செலுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.சப்தரிஷி மண்டல நினைவுகள் உங்களுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

அதைத் தான் பயிற்சியாக யாம் (ஞானகுரு- கொடுக்கின்றோம்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரிந்த… எடையற்ற அந்த உயிரான்மாவை இயக்க வல்ல உணர்வின் ஆற்றலை
2.மனித உடலுக்குள் இருந்த நினைவின் அலைகளைக் கூட்டி… அந்த உணர்வுடன் தொடர்பு கொண்டு
3.சப்தரிஷி மண்டலத்திலே அங்கே செலுத்த முடியும்.

அத்தகைய விண் செல்லும் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்தினால்… நாமும் சரி… நமக்குப் பின் செல்பவர்களுக்கும் அதே நிலை இயக்கப்படுகின்றது

ஆனால் இதை அறியாதவர்கள் அல்லது இந்த முறைப்படி தியானம் செய்யாதவர்களை அங்கே விண் செலுத்த வேண்டும் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை அவர்கள் தாய் தந்தையருடன் ஒன்று சேர்த்து
2.அந்த உணர்வுடன் இயக்கச் செய்து அவருடைய துணை கொண்டு அங்கே அனுப்ப முடியும்.
3.இந்த வழி தெரியாதவர்களை அப்படித் தான் விண் செலுத்த முடியும்.

நீங்கள் வெளிவிடும் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தைப் பரிசுத்தப்படுத்தும் சக்தியாகப் படர வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உடலில் பதிவாக்கி அதை நினைவு கொண்டு வளர்த்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் அசுத்த உணர்வுகளை நீக்கி அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும் இருளை அகற்றிடும் வல்லமையும் பெறுவீர்கள்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போல அவ்வப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் நுகர்ந்த உணர்வுக்குள் கலந்த விஷத்தை அகற்றி நல் உணர்வினைப் பெருக்கி இப்பிறவியில் பிறவி இல்லா நிலை என்னும் அருளுணர்வைப் பெருக்கி நாம் வாழ முடியும்.

அதனைப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருளை பதிவாக்கி கொண்டே வருகின்றேன்.

திட்டியவரை மீண்டும் எண்ணப்படும் பொழுது தீமையின் உணர்வு எப்படி வருகின்றதோ… வேதனைப்படுபவரைப் பார்த்து அந்த உணர்வு பதிவானால் அவரை எண்ணும் பொழுது வேதனை உணர்ச்சிகள் எப்படித் தூண்டுகின்றதோ… இதைப் போல
1.வேதனைகளை அகற்றிய இருளை அகற்றிய அருளைப் பெருக்கும் தன்மையை நுகர்ந்து உங்களுக்குள் பதிவாக்கச் செய்கின்றேன்
2.எமது குருநாதர் எமக்குள் பதிவாக்கியது போன்று…!
3.அதன் வழியில் இருளை அகற்றிடும் அருள் ஞானிகளாக நீங்கள் ஆக வேண்டும்.
4.உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை இருளில் இருந்து மீட்டிடும் திறன் பெற வேண்டும்.
5.உங்கள் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தையே நஞ்சினை அகற்றிடும் தன்மை பெறுதல் வேண்டும்
6.உங்கள் மூச்சால் உணவாக உட்கொண்ட உணவு தாவர இனங்களில் அது பட்டபின் நல்ல அணுக்களாக உருவாகி
7.அதனுடைய மலங்கள் தாவர இனங்களைச் செழித்து வளரச் செய்யும் தன்மை வர வேண்டும்.
8.உங்கள் மூச்சால் கேட்போர் உணர்வில் இருளகற்றி நல் அணுக்களாக உருவாக்கி நற்பயனை அடையும் மக்களாக நீங்கள் மாறுதல் வேண்டும்.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றேன்.

என் ஒருவனால் இது முடியாது. ஒரு உயர்ந்த வித்தினை அது பலவாக உருவாக்கி பல வளர்ச்சிகளைப் பெறச் செய்து அனைவரது உடல்களிலும் இத்தகைய நிலைகளை உருவாக்கினால் உலக இருளை அகற்றலாம்… அருள் ஒளியைப் பெருக்கலாம்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும் என்ற நிலைகள் கொண்டு அருள் ஒளியைத் தனக்குள் வளர்த்து விட்டால் அது தன் இனத்தை வளர்க்கச் செய்யும்… அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.

1.ஆகவே பேரருளை நமக்குள் பதிவாக்குவோம்
2.இருளை அகற்றுவோம் பேரொளியை வளர்ப்போம் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம். அகஸ்திய மாமகரிஷி கண்டுணர்ந்த உணர்வுகளையும் இதில் கலந்தே உங்களுக்குள் இணைத்துக் கொண்டிருக்கின்றோம்..

யாம் (ஞானகுரு) உபதேசித்ததை எண்ணித் தியானிக்கும் போது
1.மகரிஷிகள் கண்டதை எல்லாம் உணரும் பருவம் நீங்கள் பெறலாம்…
2.அதைக் காட்சியாகவும் தெரியலாம்… நறுமணங்களாகவும் உங்களுக்குள் வரும்…!
3.அவரவர்கள் இந்த உபதேசத்தைக் கேட்டுப் பதிவு செய்த நிலைகள் கொண்டு நிச்சயம் உணர முடியும்… மணத்தால் உணர முடியும்
4.கடந்த காலக் காட்சிகளை குருநாதர் எனக்கு எந்தெந்த இடத்திலே வைத்து எப்படிக் காட்டினாரோ
5.அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகளையும் உணர முடியும்… புது உணர்வுகளாக உங்களுக்குத் தோன்றும்.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகள் நமக்கு முன் இந்தக் காற்றிலே படர்ந்து இருந்தாலும் அதைக் கவரக்கூடிய வலிமை நமக்கு வேண்டும்.

ஆயிரம் பேர் சேர்ந்து தான் ஆலயத்தில் இருக்கும் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனால் அந்தத் தேரை இழுக்க முடியாது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.மகரிஷிகள் அனைவரும் இந்தப் புவியின் ஈர்ப்பின் பிடிப்பை அறுத்து
2.அந்த அறுத்த உணர்வுகளை அவர்களுக்குள் விளைய வைத்து
3.எந்த மனிதனுடைய ஈர்ப்பிற்குள்ளும் தான் சிக்காதபடி
4.இன்னொரு உடல் பெறாதபடி சப்தரிஷி மண்டலங்களாக விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

இருந்தாலும்…
1.புவியின் ஈர்ப்பின் பற்று கொண்ட நாம்
2.உடலின் உணர்ச்சிகளுக்கு அடிமையான நாம்…
3.எண்ணத்தால் அந்த மகா ஞானிகளின் சக்திகளைக் கவர வேண்டும் என்றால்
4.நமக்கு அந்தத் திறன் நிச்சயம் தேவை.

அந்தத் திறனைப் பெறுவதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அருள் வழிப்படி மகா ஞானிகளின் ஆற்றல்மிக்க உணர்வின் எண்ணங்களை
1.உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்து
2.அந்த உணர்ச்சிகளை உந்தும்படி செய்து
3.அனைவரும் சேர்ந்து ஏங்கிப் பெறும்படி செய்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏகமாக நீங்கள் ஏங்கினால் ஆயிரம் பேர் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுப்பது போன்று அந்த மாமகரிஷிகளின் சக்திகளை நமக்கு முன் கொண்டு வர முடியும்

1.அவரவர்கள் எந்தெந்த விகிதாச்சாரப்படி எண்ண வலு கொண்டு
2.எண்ணி ஏங்குகின்றீர்களோ அவரின் ஆன்மாக்களிலே அது கவரப்படும்.
3.ஆன்மாவில் கலந்து சுவாசித்து அந்த அருள் ஞான சக்தியைப் பெறும் தகுதி பெற்று
4.உங்களுக்குள் அருள் ஞான வித்தாக அதை விளைய வைக்க முடியும்

அதைத்தான் இப்பொழுது குரு வழியிலே யாம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

தியானிக்கும் போது அவரவர்கள் எண்ண வலுவுக்கு ஏற்றார் போல் மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் ஆன்மாவில் கலப்பதை உணரலாம். எந்த அளவுக்கு உயர்த்தி எண்ணுகின்றீர்களோ நிச்சயம் உணரலாம்… அதை நுகர முடியும்.

அந்த அறிவின் தன்மை தான் உங்களுக்குள் இப்போது படைக்கப்படுகின்றது. யாம் உபதேசிப்பதை ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் உங்களில் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும். அறியாது வந்த சாப நிலைகளை பாவ நிலைகளை மாற்ற முடியும்.

மெய் ஞானிகளின் அருள் சக்திகளைக் கூட்டமைப்பாக இழுத்துக் கவர்ந்து…
1.எல்லோரும் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்கே யாம் சொல்லும் இந்தத் தியானம்.
2.ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வலுக் கொண்டு தியானித்து நாம் அனைவரும் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காற்றிலே மகரிஷிகளின் அருள் சக்திகள் இருக்கின்றது. அந்த அருள் ஞான வித்துக்களை நீங்கள் பெறுவதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

உதாரணமாக பலகாரம் சுட வேண்டும்… அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அது கரண்டியை எடுத்துக் காய வைத்துக் கொள்கின்றார்கள் அதற்குப்பின் அதிலே மாவை ஒட்ட வைத்துச் சுடுகின்றார்கள்.

ஆனால் அந்த கரண்டியை காய வைக்காதபடி அதைச் செயல்படுத்த முடியுமா…?

அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அந்த இரும்பு கரண்டியை முதலிலேயே அது சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
1.அது சூடான பிற்பாடு மாவிலே முக்கினால் சொய்ங்… என்று ஓட்டிக் கொள்கிறது
2.அதற்குப் பின் எண்ணைய்ச் சட்டியிலே அதைச் சுட்டால் முறுக்கு சீராக வரும்… கரண்டியிலிருந்து அச்சு முருக்கு அழகாக விழுகும்.

பக்குவம் தெரிந்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள்…!.

அச்சு முறுக்கு அவர்கள் சுடுகிறார்கள் என்று நாம் கரண்டியைக் “காய வைக்காதபடி… பச்சையாக வைத்தால்” என்ன ஆகும்…? மாவு ஒட்ட மாட்டேன் என்கிறது கரண்டி சரியில்லை என்று சொன்னால் சரியாக இருக்குமா…?
1.அந்தக் கரண்டி சூடாகி
2.மாவை இழுக்கக்கூடிய அந்தப் பவர் (சக்தி) வேண்டும்.

அதே போன்றுதான் நம்மிடம் எத்தனையோ குணங்கள் இருக்கின்றது சொன்ன முறைப்படி தான் நான் தியானம் செய்கின்றேன் என்று “காந்த சக்தியை எடுக்காதபடி…” தியானம் செய்தால் எப்படிச் சரியாக வரும்…?

1.காந்த சக்தியை எடுத்து நமக்குள் சூட்டை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்
2.ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரைப் பரிபூரணமாக
2.அந்த உணர்வோடு புருவ மத்தியில் எண்ண வேண்டும்… இது முக்கியம்…!

(“ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…” என்று சும்மா வெறுமனே சொல்வதனால் பயன் இல்லை)

1.ஓ…ம் ஈஸ்வரா என்கிற போது நாம் எண்ணியது பிரணவமாகின்றது
2.உணர்வுடன் நினைவை அங்கே செலுத்தப்படும் பொழுது காந்த சக்தி ஓடுகின்றது… இழுக்கக்கூடிய திறனும் கூடுகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணியது பிரணவமாகின்றது. எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டு ஜீவன் பெறும் போது பிரணவம். அதற்குப் பெயர் தான் ஓ…!

ஓ…! என்று சப்தமாகி ம்… உடலுக்குள் சென்று அந்த உணர்வின் சத்து அடங்குகின்றது. ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அது நம் உடலாக மாறுகின்றது ஆகையினால் ஈஸ்வரா என்று எண்ணும் போது அந்தச் சக்தி கிடைக்கின்றது.

ஆனால் “அயோக்கியப் பயல்…!” என்று ஒருவனை எண்ணும் பொழுது அவனை நினைத்தாலே எரிச்சல் ஆகின்றது.

அதை மாற்றி அமைக்க… “ஈஸ்வரா…!” என் சொல் பேச்சு அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம்மைக் கெடுதலாக நினைத்தார்கள் என்றால் என் பேச்சு அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று இந்த எண்ணத்தை நாம் எண்ணினாலே போதுமானது.
1.காந்தப் புலன்கள் ஈர்க்கின்றது
2.இந்த நல்ல உணர்வின் சக்தி நமக்குள் கூடுகின்றது.

யாருடனாவது சண்டை போட்ட பின்பு பாருங்கள் உங்கள் நெஞ்சுப் பகுதியில் படபட… படபட… என்று துடிப்பலைகள் வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் யாராவது வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்லட்டும். இந்த நேரத்திற்கு வந்து சொல்கின்றான் பார்…! என்று வெறுப்பு தான் வரும். நல்லதைச் சொன்னாலும் கூட சனியன் எப்படியோ போகுது போ…! என்ற எண்ணம் தான் வரும்.

வீட்டிலே பையன் நம்மிடம் சண்டை போட்டு விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் தொழிலில் வேலை செய்வோர் நம்மிடம் வந்து பத்தாயிரம் ரூபாய் லாபம் வருகிறது என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம்…?

சந்தோஷமான செய்தியாக அவர் சொன்னாலும் கூட என்னத்தைச் சம்பாரித்து வைத்து என்னத்தைப் பண்ணப் போகின்றோம்…? போய்யா நீ…! என்ற சொல் தான் வரும்.

பத்தாயிரம் ரூபாய் பணம் லாபம் வருகிறது என்று அந்த நேரத்தில் சந்தோஷப்பட முடியுமா…? முடியாது.

ஏனென்றால் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட பையன் மீது வெறுப்பாக இருக்கின்றோம் காரணம் நாம் சொன்னபடி அவன் கேட்கவில்லை… நம்மை எதிர்க்கின்றான்… முறைக்கின்றான்…! என்றால் உடனே வெறுப்பாகி விடுகிறது.

அப்போது இங்கே வியாபாரத்தில்
1.லாபம் அதிகமாக வருகிறது சரக்கு எல்லாம் நன்றாக விற்பனையாகிறது என்று சொன்னாலும் கூட
2.இந்த அளவுக்குப் பணம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுச் சொன்னாலும் கூட
3.எனக்கு இந்த அளவுக்கு நீங்கள் கமிஷன் கொடுத்தால் கூட போதும் என்று அவர் நம்மிடம் விவரங்களை எல்லாம் சொன்னாலும் கூட
4.எனக்கு எல்லாம் தெரியும்… நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்யா…! என்று
5.பணம் அதிகமாகக் கிடைக்கிறது என்று சந்தோஷப்பட முடியாதபடி உதறித் தள்ளும் உணர்வு தான் வரும்.

ஏனென்றால் பையன் மீது இருக்கும் வெறுப்பு நம்மை இவ்வாறு இயக்கி விடுகின்றது. பணம் சம்பாதிக்கும் எண்ணத்தையும் அடுத்து மாற்றுகிறது.

இது எல்லாம் நடைமுறையில் ஒவ்வொருவரும் செய்வதைத் தான் சொல்கின்றேன்.. நான் புதிதாக ஒன்றும் சொல்ல வரவில்லை. இதைத் தான் அனுபவம் என்று சொல்வது.

உங்களுக்கும் இப்போது தெரிகின்றது இதை மற்றவர்களுக்கும் சொல்லத் தெரிய வேண்டும்.

இதிலிருக்கும் உண்மைகள் இன்னென்ன மாதிரி இருக்கின்றது என்று பிறருக்குச் சொல்லிச் சொல்லி… ஞானிகள் காட்டிய வழியில் திரும்பத் திரும்ப நாம் செயல்படுத்தினோம் என்றால் “அந்த ஞானம் நமக்குள் தன்னிச்சையாக வரும்…”

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துக் கொண்டே வந்தால்
1.அந்த ஞானிகள் உணர்வுகள் உயிரிலே பட்டு
2.அந்த உணர்ச்சியில் தூண்டப்பட்டு அந்த ஞானத்தின் தொடராக அது வரும்
3.மற்றவர்களுக்கு தெளிவாகவும் அமைதியாகவும் எடுத்துச் சொல்லக்கூடிய நிலையாக வரும்.

தொடர்ந்து இதைச் செய்தால் உயர்ந்த சத்தாகவும் உங்களுக்குக் கிடைக்கின்றது உங்கள் சொல் அனைவரையும் காக்க கூடிய சக்தியாகவும் வரும்…!

எங்கள் சாமி (ஞானகுரு) பிரமாதமாகப் பேசுகிறார் என்று சொல்வதை விடுத்து விட்டு சாந்தமான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்து… எல்லோரையும் பெறச் செய்யும் அந்தப் பக்குவத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் கண்ட அகண்ட பேரண்டம்

 

அகண்ட அண்டமும் பிரபஞ்சமும் அண்டத்துடன் அகண்டு அதன் நிலைகள் வந்த பின் இதிலே தோன்றிய உயிரணுக்கள் ஒவ்வொன்றும் ஆற்றல்களை நுகர்ந்து நுகர்ந்து… இந்தப் பிரபஞ்சத்தின் நிலையையும் அகண்ட அண்டத்தினையும் அறிந்திடும் உணர்வு பெற்ற மனிதன் “ஆறாவது அறிவு பெற்றவன்” என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.

அதன் வழி பெற்றாலும்
1.அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைப் பெறுகின்றான்.
2.அகண்ட அண்டத்தையும் அறிகின்றான்
3.பிரபஞ்சம் உருவான உணர்வின் தன்மையை அறிகின்றான்
4.பேரண்டம் உருவான உணர்வின் தன்மையை அறிகின்றான் அகஸ்தியன்.

அவன் அறிந்த உணர்வுகள் தான் இன்று உலகம் எங்கிலும் வானவியல் தன்மைகளும் உருப் பெற்றது. இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை மட்டும் தான் இன்று காண முடிந்தது.

அகண்ட அண்டத்தையும் அதற்கு முந்திய நிலைகள் இருண்ட உலகையும் அறிந்துணர்ந்தான் அகஸ்தியன். அணுவின் இயக்கப் பொருளை உணர்ந்தவன் அகஸ்தியன்.

அவனால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகள் அவன் உடலில் விளைந்தது.
1.2000 சூரியக் குடும்பமாக இருந்தாலும் அதைக் காட்டிலும் எத்தனையோ 2000 குடும்பங்கள்
2.அகண்ட பேரண்டமாக இருக்கும் அதன் உணர்வுகளில் ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான்
3.ஒவ்வொன்றும் வாழ்கிறது என்ற நிலையை உணர்ந்தான்.

இவை அனைத்தும் கலந்த உணர்வு கொண்டு தான் மனித உடலுக்குள் அனைத்தையும் அறியும் தன்மை வருகின்றது. சகல பிரபஞ்சங்களையும் சகல அண்டங்களின் இயக்கங்களிலிருந்தும்… அத்தகைய அகண்ட அண்டத்துடன் தொடர்பு கொண்டு தான் நமது பிரபஞ்சமும் இயங்குகின்றது.
1.இதன் உண்மையின் உணர்வின் தன்மையை அறிந்தவன் அகஸ்தியன்.
2.இந்த உண்மைகளை நமது குருநாதர் என்னிடம் தெளிவாக எடுத்துக் காட்டிநார்.

இந்தப் பூமியில் மனிதனான பின் நஞ்சினை வென்றிடும் முதல் மனிதனாக அகஸ்தியன் பிறக்கின்றான். தாய் கருவிலே சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நஞ்சினை மாற்றியமைக்கும் நிலையைப் பெறுகின்றான்.

அவ்வாறு பெற்றவன் தான் பிறந்தபின் அவன் உடலுக்குள் இயக்கும் உணர்வின் தன்மையை அறிகின்றான். அறிந்து கொண்ட பின் உணர்வின் தன்மையை பிரபஞ்சத்தையும் பிரபஞ்சம் அகண்ட அண்டத்துடன் இயக்குவதையும் நமது பிரபஞ்சத்தில் கவரும் உணர்வுகளை நமது பூமி கவர்ந்து துருவத்தின் வழி கவர்வதையும் அறிந்துணருகின்றான்.

அவன் உணர்ந்த உணர்வுகள்
1.அவனுக்குள் உலகை அறியும் தன்மையும் உடலுக்குள் இயக்கும் உணர்வையும் அறிகின்றான்.
2.அகஸ்தியன் துருவன் ஆனான்… துருவ மகரிஷியானான்.

திருமணமான பின் தன் மனைவிக்குச் சொல்லி மனைவியும் ஏற்றுக் கொண்டு… கணவன் பெற்ற உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கி… தான் ஓதிய உணர்வுகள் மனைவி ஏற்றுக் கொண்டு இரு மணமும் ஒன்றானது.

அவர்கள் இருவரும் ஒன்றான பின் தான் அண்டத்தை உணர்ந்த உணர்வுகள் அணுக்களாக விளைந்து… அண்டத்தின் ஆற்றலையும் அருள் ஒளியாக அது மாறிய நிலைகளை… கணவன் மனைவி ஆண் பெண் என்ற நிலையில் உருவாக்கினார்கள்.

அவ்வாறு உருவாக்கித் துருவத்தை எல்லையாக வைத்து அதை நுகர்ந்தறிந்து துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வருகின்றார்கள்
1.அகஸ்தியன் கண்ட பேரண்டத்தையும் அந்த ஆதியின் நிலையையும் நீங்கள் அறிய முடியும்
2.அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இது எல்லாம் இமயமலையில் வைத்து குருநாதர் எனக்கு உணர்த்திய உண்மை நிலைகள்.

ஒருவர் பெரும் செல்வந்தராக இருக்கின்றார். ஆனால் கடைசியிலே வாத நோய் வந்து துடித்துக் கொண்டிருக்கிறார்… பேச முடியவில்லை. அவர் உடலில் இயற்கைக் கழிவு வெளியே வருகின்றது. அதை அவரால் சொல்ல முடியவில்லை. ஓ… என்று சத்தம் போடுகின்றார்.

ஆனால் கிரகம்…! இப்படிச் செய்கின்றாரே…! என்று அவரை கவனிப்பவர்கள் ஏசிப் பேசுகின்றார்கள். இதை எல்லாம் அப்படியே கண்ணில் காண்பிக்கின்றார் குருநாதர்.

“பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!”

1.சொத்துக்கள் ஏராளமாக இருந்தாலும்… எல்லாம் மறைந்து போய் அவர் எந்த ஏக்கத்தில் இருக்கிறார்…?
2.ஆனால் இவர் விரும்பிய நிலைகளை அங்கே செயல்படுத்த முடியவில்லை…! என்று குருநாதர் காண்பிக்கின்றார்.

இப்பொழுது உங்களுடைய வாழ்க்கையிலும் நல்லதாக நடந்தால் “சாமி செய்து கொடுத்தார்…!” என்று சந்தோசப்படுவீர்கள். கஷ்டம் வந்து விட்டாலோ
1.கஷ்டத்தை எண்ணிய பின் “சாமி என்னத்தைச் செய்தார்…? என்று எண்ணம் வந்துவிடும்.
2.ஆக… பத்து தடவை உங்களுக்கு நல்லதாக நடந்து இருந்தாலும் கூட
3.மற்ற எண்ணங்கள் உங்களிடம் புகுந்து விட்டால் இது ஓங்கி வளர்ந்து அந்த நல்லதை மறந்து
4.“சாமி என்ன செய்தார்…?” என்று உணர்வுகளை மாற்றி உண்மையைப் பெற முடியாது தடைப்படுத்தி விடுகின்றது.

இதிலிருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் மனிதனுக்குள் விளைந்த 1008 உணர்வின் இயக்கங்களை உணர்த்தினார் குருநாதர். ஒரு மனிதப் பிறப்பில் இருக்கப்படும் பொழுது அவனுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடக்கிறது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

குடும்பத்தில் சம்பாதித்த சொத்துக்கள் எவ்வளவோ இருக்கின்றது… கூட்டுக் குடும்பமாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பபேதத்தால் ஒருவருக்கொருவர் பகைமை ஆகின்றது… சாபமிடுகின்றார்கள்.

சாபமிட்ட உணர்வுகள் உடலுக்குள் விளையப்படும் பொழுது இறந்த பின் சாபமிட்ட ஆன்மா யார் மேல் சாபம் இட்டதோ அந்த உடலுக்குள் சென்று
1.தீய விளைவுகளை அந்தக் குடும்பத்தில் எவ்வாறு பரப்புகின்றது…?
2.அந்தக் குடும்பங்கள் எப்படி அல்லல்படுகின்றது…?
3.செல்வங்கள் இருந்தாலும் எல்லாமே எப்படிச் சிதறிப் போகின்றது…?
4.இப்படி 1008 விதமான (மனிதனுடைய) எண்ணங்கள் உருவாகும் நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்

இப்படித் தான் மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார் குருநாதர் அதிலே 1008 குணங்களாக இருந்தாலும்
1.மனிதப் பிறப்பின் தன்மை ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பங்கள் எவ்வாறு உருவாகின்றது…?
2.செல்வங்கள் சம்பாதித்தாலும் அதில் என்ன பாடுபட்டார்கள்…?
3.சம்பாதிக்கும் போது அதில் எத்தனை வேதனைப்படுகின்றார்கள்…?
4.சம்பாதித்த பின் தான் எண்ணியபடி குடும்பத்தார் நடக்கவில்லை என்றால் வேதனைகள் எவ்வாறு உருவாகின்றது…?
5.வேதனை வளர்ந்து நோயாக ஆனபின் எப்படி மரணமடையும் நிலை வருகிறது…?
6.இவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கின்றோமே… இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்…? என்ற எண்ணத்திலே உயிர் பிரியும் போது
7.யார் மீது நினைவுகள் அதிகமாகின்றதோ இந்த உயிரான்மா அங்கே அவருக்குள் சென்றுவிடுகிறது.
8.ஆன்மா அந்த உடலுக்குள் சென்ற பின் சம்பாதித்து வைத்த காசையே அது நிலைத்து இருக்காதபடி அந்தக் குடும்பங்கள் எப்படி இன்னல் படுகின்றது…?
9.பணமோ சேர்த்து வைத்த சொத்துகளோ இவர்களுக்கு உதவி செய்கிறதா…?

இல்லை.

அதே சமயத்தில் எத்தனையோ வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டினாலும் அவருடைய சந்ததிகள் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவருடைய சாப அலைகள் பின் தொடர்ந்து அவர்களை எவ்வாறு மடியச் செய்கின்றது…? என்று இதை எல்லாம் குருநாதர் காணும்படி செய்கின்றார்.

அதே சமயத்தில் ஒரு சிலர் போக்கிரித்தனங்கள் செய்து அந்த வலுவைக் கொண்டு செல்வங்களைச் சம்பாதிக்கின்றனர். அப்படிச் சம்பாதித்தாலும் போக்கிரித்தனமாகச் சேமித்த சொத்தை எல்லாம் அவருடைய சந்ததிகள் அழித்து விடுகின்றார்கள்.

போக்கிரியாகச் செயல்பட்டுச் சமுதாயத்தில் பிறரை வேதனைப்படுத்திய உணர்வுகள் நோயாக விளைந்து அந்த உடலில் தன் எண்ணத்தால் கவர்ந்த அந்த உணர்வுகள் அவன் குடும்பம் முழுவதும் படர்கின்றது.

1.இவன் செய்த நிலையால் குடும்பத்தார் வேதனை அனுபவிப்பதும்
2.மற்றவரை ஏசிச் பேசி வேதனைப்படுத்திய உணர்வுகள் உடலில் விளைந்து
3.அவனுடைய மறு பிறவி எங்கே எப்படிச் செல்கின்றது…?
4.மீண்டும் வேதனைகளை அனுபவிக்கும் சரீரமாக அடுத்து அது எப்படி உருவாக்குகின்றது…?

உடனடியாக எந்த உடலுக்குள்ளும் செல்வதில்லை…! இருந்தாலும் பிறரை எப்படி எல்லாம் வேதனைப்படுத்தியதோ அதிலே விளைந்தது உயிருடன் ஒன்றி அது எவ்வாறு இயங்குகின்றது…? என்று காணும்படிச் செய்தார் குருநாதர்.

இதைத்தான்
1.அன்றைய பெரியவர்கள் உன் நிழல் உன்னுடனே தான் இருக்கும்…!
2.என்று தெளிவாக நமக்கு உணர்த்தி உள்ளார்கள்.

இன்று ஒருவரை நாம் வேதனைப்படச் செய்தாலும் அதை ரசித்துக் கொண்டிருந்தால் அதை உயிர் அணுக்களாக உருவாக்கி உடலில் விளைய வைத்த உணர்வுகள் உயிருடன் இணைந்து அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்கும்படிச் செய்யும்.

மறு உடல் பெறும் வரை அதை அனுபவித்துக் கொண்டிருப்பதும் வேதனைக்குண்டான சரீரம் கிடைத்தபின் நஞ்சு கொண்ட சரீரமாக உயிர் உருவாக்கி விடுகின்றது.

இப்படி ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று “நீ சென்று பார்…!” குருநாதர் எனக்கு இட்ட ஆணைப்படி உலகம் முழுவதும் நகர் பகுதிகளிலும் சிறு ஊர்களிலும் மற்ற கிராமத்துப் பகுதிகளிலும் எல்லா இடங்களுக்கும் யாம் (ஞானகுரு) சென்று வந்தது தான்.

ஒரு இடத்தில் மூலையிலே அமர்ந்து கொண்டு ஒவ்வொரு மனிதனாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் என்னென்ன நடக்கின்றதோ அதையெல்லாம் பதிவு செய்ய வேண்டும்… பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அந்தந்தக் குடும்பத்தில் இதற்கு முன்னாடி இறந்தவருடைய உணர்வுகள்
2.அந்த வீடுகளில் எப்படிப் படர்ந்திருக்கின்றது…? என்று குருநாதர் காட்டுவார்.

அதை எல்லாம் அறிந்து இப்படி 1008 பேரின் உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின் என்னை இமயமலைக்குச் செல்லும்படி சொன்னார். அங்கிருந்து கொண்டே உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் எந்த நிலை அடைகின்றது…? என்பதையும் அறியும்படி செய்தார்.

இமயமலையில் அமர்ந்து
1.விண்ணின் ஆற்றலை எவ்வளவு சுலப நிலையில் பெற வேண்டும்…?
2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீ எவ்வாறு பெற வேண்டும்…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி தியானிக்கும் போது உயர்ந்த சக்திகளை அப்பொழுது நான் பெற முடிந்தது… நுகர முடிந்தது.

எறும்புக் குழியில் அமர வைத்து எனக்கு குரு கொடுத்த அனுபவம்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் உலக அனுபவங்களைப் பெறுவதற்காக பல இன்னல்களை என்னை அனுபவிக்கச் செய்தார்.
1.நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயலாக்குகின்றது…?
2.இதிலிருந்து மாற்றியமைக்கும் தன்மை எப்படிக் கொண்டு வர வேண்டும்…? என்று உணர்த்தினார்.

எறும்புக் குழியில் அமர்ந்து தவம் இருக்கும்படி செய்கின்றார். அமைதியாக நான் இருக்கும் பொழுது ஒன்றும் நடக்கவில்லை ஒரு எறும்பு என் காதிற்குள் சென்றது. அது உள் செல்லாதபடி விரலை வைத்துத் தள்ளினேன். அது துடித்து விட்டது.. மடிந்து விட்டது.

அந்த உணர்வின் அலைகளை மற்ற எறும்புகள் நுகர்ந்து துரித கதியில் இயங்கத் தொடங்குகிறது. புற்றிலிருந்து வரக்கூடிய எறும்புகள் அனைத்தும் இந்த உணர்வின் ஒலியை எப்படி அறிந்ததோ மணத்தின் தன்மை எப்படி அறிந்ததோ தெரியவில்லை.

என்றாலும் அதன் உணர்வின் தன்மையை வேகமாக அறிந்து கொண்டு என் உடலில் பல நிலைகள் கொண்டு கடிக்கின்றது. கடி தாங்காது அதையெல்லாம் நான் தேய்க்கத் தொடங்கினேன்.

1.நீ தேய்த்து நசுக்கிய எறும்புகள் அனைத்தும் உன்னுடைய ஈர்ப்புக்குள் வந்து விடுகிறது.
2.உனது உணர்வைக் கவர்ந்து கருவாக மாறுகின்றது.
3.ஆனால் எறும்பின் உடலில் உள்ள விஷமும் அது நசுக்கப்படும்போது அதனின் வேதனையையும் நுகர்ந்து நீ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாய்.
4.அந்த உணர்வுகள் உன் உடலுக்குள் செல்லும்போது உன் இரத்த நாளங்களில் விஷ அணுக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது.

நீ எத்தனை எறும்பை நசுக்கினாயோ உன் உடலில் 48 நாட்களுக்குள் இது ஒரு கூட்டமைப்பான உணர்வுகள் விளையப்பட்டு
1.உன் உடலில் கை கால் குடைச்சல் என்றும்
2.அந்த எறும்புகள் சாகும்போது எந்தத் துடிப்பு அவைகளுக்கு இருந்ததோ
3,பளீர் பளீர் என்று ஊசி குத்துவது போல் அதை நீ உணரலாம் என்று உணர்த்தினார்.
4.அதனுடைய இயக்கங்கள் எப்படி இருக்கிறது என்பதையும் காட்டுகின்றார்.

மனிதனான பின் ஒன்றைக் கொன்றோம் என்றாலும் அல்லது மனிதனாகப் பிறந்தாலும் கொல்லும் பொழுது பட்ட வேதனையின் உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது.

கொல்லவில்லை என்றாலும் விஷம் தாக்கப்பட்டு அதன் உணர்வின் நினைவானால் உடலுக்குள் செல்கின்றது. இதிலிருந்து மீளும் மார்க்கம் என்ன…? என்று இந்த வினாவை எழுப்புகின்றார்.

ஆக மொத்தம் எறும்பு தான் வாழ அது செயல்படுகிறது. அதனைக் காக்க அதன் உணர்வால் நம்மைத் தீண்டுகின்றது. நம்மைத் தீண்டும் போது அதன் உணர்வு நமக்குள் பட்டால் நாம் அதுவாக மாறிவிடுகின்றோம். இது இயற்கையின் நியதிகள்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் நாம் அதைக் கொன்றால் உடலுக்குள் வந்தாலும் அதனின் வேதனையை நாம் துடைக்க வேண்டும் அல்லவா அதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்…? என்று கேட்கின்றார் குருநாதர்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீ நுகர்ந்தால் அது உனக்குள் பதிவாகி இருந்தால் அந்தச் சக்தியை நீ பெற முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் உடலில் படர வேண்டும்.
2.கொன்ற உயிரான்மாக்கள் என் உடலுக்குள் வந்தாலும் “அருள் உணர்வு பெற வேண்டும் அருள் ஒளி என்ற உணர்வைப் பெறுதல் வேண்டும்…”
3.அருள் ஞானம் பெறும் உயர்ந்த உணர்வாக எனக்குள் வளர வேண்டும் என்று உடனுக்குடன் அதை மாற்றப்படும் பொழுது
4.அதைக் கொன்றாலும் நமக்குள் வந்து “அருள் ஞான உணர்வை வளர்த்திடும்” கருத்தன்மை அதிலே இணைந்து வளரும் தன்மை வருகின்றது.

இவ்வாறு இந்த உணர்வின் தன்மை இணைத்து விட்டால் உடனடியாக நமக்குள் அந்த அணுக்கள் ஈரத்தத்தில் வளரப்படும் பொழுது தீமையை மாற்றி நன்மையின் உணர்வை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

இது அனைத்தும் நம் இரத்த நாளங்களில் வந்த பின் தான் உடலை உருவாக்கும் கரு விந்து என்ற உணர்வுகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அதனின் வலுக் கொண்டு தான் மனிதனை உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.

1.அப்படிக் கருத்தன்மை அடைவதற்கு முன் இந்த உணர்வினை மாற்றி விட்டால்
2.நாம் ஏங்கிய அருள் உணர்வுகள் கரு அறைகளுக்கு செல்லப்படும் பொழுது
3.அதை மாற்றி அமைத்து விடுகின்றது என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மந்திரவாதி அவன் இறந்து விட்டால் அவனுடைய மந்திரத்தை இன்னொருவன் கேட்டுணர்ந்து அதன் துணை கொண்டு செயல்பட்டால்
1.அந்த மந்திரவாதி உடலில் விளைந்த உணர்வுகள் இவன் உடலுக்குள் வந்த பின்
2.அதே ஆவியின் தன்மை இங்கே வந்து பல பல நிலைகளைச் செயல்படுத்தும் “அவனை அறியாமலே…!”
(இது எல்லாம் படித்துத் தெரிந்து கற்று வருவதல்ல – மனிதனுக்குள் விளைந்தது)

மந்திரவாதி எந்தெந்தச் சக்திகளைச் செய்தானோ இந்த உணர்வின் தன்மை அவனுடன் பற்று கொண்டு அவன் செயலாக்கும் தன்மையை இங்கே உருவாக்கும்.

ஆனால் அதனால் விளைந்த உணர்வின் வினைகள் அங்கே விளையும் பின் இவனின் (உடலுடன் உள்ளவன்) காலத்தில் இவனின் இச்சைகள் கூடி நஞ்சின் தன்மை கொண்டு அது மறையும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்Rறைய மெய் ஞானியான அகஸ்தியனுக்கு எப்படிப் பேராற்றல் கிடைத்தது…? அவன் எவ்வாறு வளர்ச்சி பெற்றான்…? என்ற உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்குத் தான்.

அன்று அவன் பெற்றாலும்
1.இன்றைய நிலைகளில் நடைமுறை சாத்தியத்திற்கு… நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
2.விண்ணுலக ஆற்றலை அன்று அகஸ்தியன் ஐந்து வயதில் அந்தப் பிஞ்சு உள்ளத்திலே எப்படிக் கற்றுணர்ந்தான்…? என்ற நிலைகளை
3.உங்களுக்குள் நினைவு கொள்ள இது உதவும்…!

குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகளை நீங்களும் தெளிந்திடும் உணர்வாகத் தெரிந்திட வேண்டும்.
1அன்று பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற உண்மையின் சக்தியை
2.இன்றைய நடைமுறைக்கு நீங்கள் உணர இது உதவும்… அது உணர்ந்தால் தான் வரும்.

ஏனென்றால்…
1.சாமி சொல்கிறார் நிஜமாக இருக்குமோ…! அல்லது பொய்யாக இருக்குமோ…? என்று எண்ணினால் அங்கே வீழ்ந்து விட்டது
2.சந்தேக உணர்வு கொண்டால் மெய் உணர்வின் தன்மை பெறும் தகுதியை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

ஒரு இயந்திரத்தைக் கட்டுப்படுத்த கம்ப்யூட்டரில் ஆணையிட்டு வைக்கின்றனர். வெப்பத்தின் நிலைகள் வரும் போது அந்த அலைகளைக் கொண்டு அளந்தறிந்து (SENSOR)
1.இத்தனை டிகிரியில் அது இயங்க வேண்டும் என்று வைத்து விட்டால்
2.அதே டிகிரி வெப்பம் வந்தபின் அந்தக் கம்ப்யூட்டர் சமநிலைப்படுத்தி இயந்திரத்தை இயக்கச் செய்கின்றது.

இதைப் போன்று தான் அருள் ஞானியின் உணர்வை நீங்கள் எண்ணி வரப்படும் பொழுது
1.உங்கள் டிகிரியை சந்தேக உணர்வு கொண்டு வந்து விட்டால் கீழே இழுத்து விடும்.
2.நான் கொடுக்கும் பதிவின் தன்மையை மாற்றிவிடும்.
3.மாறாது இருப்பதற்கே இடைமறித்து இடைமறித்து உங்களுக்குள் ஒவ்வொரு ஞானத்தின் நிலைகளையும் உபதேசிக்கின்றோம்.

ஒவ்வொரு உணர்வின் இயக்கங்களும் அது எவ்வாறு இயங்குகின்றது…? என்பதைத் தெளிந்து கொண்டால் இந்த மனித வாழ்க்கையில் விஞ்ஞான உலகில் உடலை விட்டு நாம் அகன்றாலும் மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளிச் சரீரத்தைப் பெற முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை இப்பொழுது இழந்து விட்டால் மீண்டும் தேய்பிறையாக விஞ்ஞான அறிவினால் நஞ்சுக்குள் சிக்கப்பட்டு வேதனை கொண்ட சரீரங்களுக்கே நம்மை உயிர் கொண்டு சென்றுவிடும்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனுக்குள் விளைந்த சக்தி வாய்ந்த உணர்வுகள் அனைத்தும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக இன்றும் படர்ந்து கொண்டுள்ளது. அதை நாமும் பெற முடியும்.

ஆரம்பத்திலே குருநாதர் என்னைப் பழனியிலே மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறுவதற்கு விண்ணை நோக்கி ஏங்கும்படி செய்து இந்த உயர்ந்த உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

குருநாதர் அவர் கண்டறிந்த உணர்வுகளை எனக்குள் தூண்டச் செய்து அதை நான் நுகர்ந்தறியும் பொழுது அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை இன்று நாம் டிவிக்களில் பார்ப்பது போன்று உருவமாகக் காண முடிந்தது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு சேட்டிலைட்டை (செயற்கைக் கோள்) பூமிக்கு வெளியியே அனுப்பி ஒளி/ஒலியலைகளைப் பதிவு செய்து
1.பூமிக்குள் நடக்கும் பூகம்பமும்
2.பூமிக்கு அடியில் இருக்கும் நீர் நிலைகளையும்
3.பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணை வளங்களையும்
4.பூமிக்கு அடியில் இருக்கும் உலோகத் தன்மைகளையும் எப்படி அறிகின்றார்களோ
5.அதைப் போன்று தான் என்னுடைய எண்ணத்தை ஊடுருவச் செய்து
6.“நினைவை அண்டத்திலே பாய்ச்சிப்பார்…! என்ற குருவின் வாக்குப்படி அவரின் துணை கொண்டு
7.அகஸ்தியன் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

அகஸ்தியன் கண்டதை நீயும் காண முடியும். அவனுடைய அறிவின் தன்மையை நீ உனக்குள் பெற்று அதை முழுமையாக அறிய முடியும் என்று எனக்குள் ஆழமாகப் பதிவாகும்படி உபதேசித்தார் குருநாதர்.

அதே வழியில் இப்பொழுது உங்களுக்கும் அகஸ்தியனின் ஆற்றல்களைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் பழனியில் இருந்த என்னை (ஞானகுரு) திடீரென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மலைப்பகுதியில் வெறும் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய ஒரு இடத்திலே குருநாதர் கொண்டு போய் நிறுத்தி வைத்து விட்டார்.

இதற்கு முன் அவர் எத்தனையோ உபதேசங்களை எனக்குக் கொடுத்திருந்தாலும்
1.அந்த இடத்திற்கு வந்த பின் எல்லாவற்றையும் காற்றிலே விட்டுவிட்டேன்.
2.அவர் போதித்ததையெல்லாம் விட்டுவிட்டுச் சிந்தனை இல்லாது இருக்கின்றேன்
3.கீழே பார்த்தால் கிறு கிறு என்று வருகின்றது… இந்தப் பக்கம் காலை வைப்பதற்கு இடமில்லை
4.நிமிர்ந்து பார்த்தால் கீழே சாய்ந்து விழுந்து விடுமோ என்ற எண்ணம் வருகின்றது.
5.குருநாதர் சொன்ன தத்துவங்களை நினைத்துப் பார்க்க நேரமில்லை…
6.குருவை மறந்து என் உடலைப் பற்றிய இச்சைக்கு வந்து விட்டேன்… என் குடும்பத்தை எண்ண ஆரம்பிக்கின்றேன்.

என் குழந்தை என்னுடைய மனைவி அவர்களுடைய சிந்தனை வந்தது. ஏனென்றால் என் மனைவியை நோயிலிருந்து குருநாதர் அப்போது தான் எழுப்பி வைத்தார்.

அது மீண்டும் இறந்து விட்டால் யார் காப்பது…? பிள்ளைகள் அனைத்தும் சிறியவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு யார் நல்லதைச் சொல்லிப் பாதுகாப்பது…? என்று இந்தப் புத்தி எனக்குள் வர ஆரம்பித்துவிட்டது

ஏனென்றால் அவர்கள் மீது வளர்த்துக் கொண்ட பாசம் உடலின் இச்சை வரப்படும் பொழுது தன் இனத்தை வளர்க்கும் நிலைக்காக எனக்குள் வந்துவிட்டது.

பதட்டம் ஆகின்றது… உடலில் வேர்வை அதிகமாகின்றது…! மேலே ஒரு குடம் நீரை ஊற்றிக் குளித்தால் எப்படி நீர் ஓடுமோ அப்படி வேர்வை வருகின்றது.

நான் இருந்த இடம் வழுக்குப் பாறை… செங்குத்தாக இருக்கின்றது அதில் தான் இரண்டு பாதம் மட்டும் இருக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கின்றேன். கால் வழுக்கும் நிலையும் வருகின்றது.

எதையாவது பிடிக்க வேண்டும் என்றாலும்… வழுக்கி விட்டால் என்ன செய்வது…? நான் தொங்கத்தான் வேண்டும். தப்பித்துக் கீழே இறங்கும் பாதையும் இல்லை… குதித்தால்தான் இறங்க முடியும்…! என்று இப்படி என்னுடைய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.

என் வீட்டை நான் எப்பொழுது பார்ப்பது…? என் மனைவி பிள்ளைகளை எப்படிப் பார்ப்பது…? என்று இந்த சந்தேகம் வந்துவிட்டது. தவித்துக் கொண்டிருக்கிறேன்…!

இனி எத்தனை நாள் இப்படி வேதனைப்படப் போகின்றோமோ…? என்று உயிர் பிரியுமோ…? அது வரை இந்த வேதனையை அனுபவிக்கத் தான் வேண்டும் வெயில் அடிக்கின்றது… தண்ணீர் தாகமாக இருக்கிறது… உணவு இல்லை… இதிலே தான் இருக்கிறேன்…!

1.இப்படிப்பட்ட இம்சையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று தான்
2.பல உபதேசங்களையும் உண்மைகளையும் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

இந்த இடத்தில் இப்படி நிற்பதற்கு முன் மந்திரம் செய்வதைப் பற்றியும் மந்திரவாதிகளைப் பற்றியும் அப்பொழுது நிறைய சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.

மந்திரவாதி எப்படியெல்லாம் ஆள்களை இன்னொரு பக்கம் மாற்றுவான்… பெரும் கல்களையும் பாறைகளையும் தூக்கி எறிவான்… எத்தனையோ அமானுஷ்யமான வேலைகளைச் செய்வான்…! என்பதை நேரடியாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

இதை எல்லாம் முதலில் சொல்லி இருந்ததால்
1.எவனோ ஒரு சக்தி வாய்ந்த மந்திரவாதி தான் நம்மை இப்படிச் சிக்க வைத்து விட்டான்
2.மந்திரவாதியிடம் சிக்கி விட்டோம் இது தெரியாமல் போய்விட்டதே.
3.மந்திரவாதிகளிடம் சிக்கினால் எப்படித் தப்புவது…? என்ன செய்ய வேண்டும்…! என்று
4.குருவிடம் கேட்க மறந்து விட்டோமே…! என்று அப்பொழுதுதான் குருவைப் பற்றி எண்ணமே வருகின்றது.

உடலில் கடும் அவஸ்தைகளைக் கண்ட பின் குருவிடம் கேட்காமல் விட்டு விட்டோமே…! என்று அப்பொழுதுதான் அந்த நினைவாற்றல் வருகின்றது

அப்பொழுதுதான் ஒரு பாடலும் வருகின்றது… குருவையும் நான் காண முடிகின்றது…!

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதை பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? என்று இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு வருகின்றார்.

குருநாதரின் குரலைக் கேட்டு அவரை உற்றுப் பார்க்கும் போது என் முன்னே அலையாக வந்து நிற்கின்றார்… அப்போது சிரிக்கின்றார்…!
1.என்னை நீ நினைக்க மறந்து விட்டாய்…
2.நான் உபதேசித்ததை எல்லாம் தெருவிலே விட்டுவிட்டாய் காற்றிலே விட்டாய்.

இத்தகைய சந்தர்ப்பங்கள் வந்தால் உன்னை நீ காக்க முடியாது…
1.பிறரைக் காக்க வேண்டும் என்று நான் சொன்னேனே…!
2.அதை உன்னால் காக்க முடியுமா…? என்று இப்படி வினாக்களை எழுப்புகின்றார்.

குருநாதரிடம் விளைந்த அந்த உயர்ந்த சக்தியை வேண்டி ஏங்கிப் பெறுவோம் என்றால்
1.பதிந்த உணர்வுகளுக்கு ஊக்கமாகி உணர்வின் அலையாக அதைப் பருகி
2.தன்னைக் காத்திடும் நிலையும் பிறரைக் காத்திடும் உணர்வுகளும் அது வரும்…! என்று அங்கே வைத்துத்தான் உபதேசித்தார்.

துருவ நட்சத்திரத்தின் வலிமையை நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்

 

ஆசையின் வாலிப பருவத்தின் உணர்வில் ஆணைக் கண்ட பின் அந்த உணர்வின் தோற்றமானால் அந்த உணர்வுக்கு நாம் அடிமையாகி விட்டால் அதன் உணவின் வளர்ச்சியாகி நம்மை வளர்த்த தாய் தந்தைக்கு நாம் இழுக்கு தேடும் நிலையே வருகின்றது.

தாய் வேதனைப்படுகிறது என்பதனை உணர்வதில்லை. நம் இச்சைகள் இப்படி வளரப்படும் போது இப்பொழுது உலக மாற்றங்கள் ஏற்படும் போது இதனுடைய விளைவுகள் எத்தனையோ ஆகிறது.

1.தாய் தந்தையை மறுத்து வெளியே சென்று தனித்து வாழும் உணர்வுகள் அனைத்தும்
2.துயர்படும் நிலைகள் தான் வாழ நேருகின்றது.
3.அது தவிர தாயையும் தந்தையையும் துயரத்தில் ஆழ்த்துகின்றோம்.

தேடிய செல்வங்கள் இருப்பினும் அதைக் கொண்டு தன்னைக் காத்திடும் நிலை இல்லாதபடி வேதனை என்ற உணர்வுகளை உருவாக்கித் தன் தந்தைக்குள் விஷத்தன்மை ஊட்டப்பட்டு
1.பாம்பாய் இருந்தேன்… என்னை அடித்து உன்னிடம் வளர்த்து மனிதனாக்கினாய்
2.நீ பாம்பாகப் போ என்று வேதனை உணர்வைத் தன் தாய் தந்தைக்கு ஊட்டி
3.அந்தப் பாம்பினத்தில் சேர்க்கும் தன்மை தான் இன்றைய குழந்தைகளுக்கு உள்ளது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுதல் வேண்டும்.

மனிதனான பின் உணர்வின் தன்மை எல்லாவற்றையும் கடந்து உணர்வின் ஒளியானது நட்சத்திரம். தீமையை நீக்கும் ஆறாம் அறிவின் தன்மை கொண்டு அவன் தெளிந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரம் ஆனான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வை
1.ஆறாவது அறிவின் வலிமையின் துணை கொண்டு காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்வோமென்றால்
2.நுகர்ந்த உணர்வுகள் வலிமைமிக்கதாக மாறி அந்த உணர்வுகள் தெய்வ ஆணையாகி
4.தீமைகளை வெளியேற்றும் உணர்வின் வலிமையாகி நமக்குள் தீமை புகாது உணர்வின் வலிமை பெறச் செய்யும்.

இவ்வாறு வலிமை பெற்ற உணர்வுகள் எதன் வலிமையைப் பெற்றோமோ நாம் இந்த உடலை விட்டுக் கடந்த பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நம்மை இணைத்து… ஆறாவது அறிவை ஏழாவது நிலையான இனி பிறவி இல்லா நிலை நிலையும்… உடல் மாற்றம் இல்லாது இந்த உடலிலேயே ஒளியின் உணர்வாக நாம் மாறிடும் நிலை வருகின்றது.

எப்பொழுது துயரம் என்ற நிலைகளைச் சந்தர்ப்பத்தால் நுகர்கின்றோமோ அதை உடனே மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் வலிமையை
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய நிலைகள்…
1.நான் சொன்ன முறைப்படி நீ அருள் ஞானிகள் உணர்வுகளை உனக்குள் எடுத்து அதை விளைய வைத்து
2அந்த உணர்வின் வித்தை மற்றவர்களுக்குள் நீ பதிவு செய்ய வேண்டும்.
3.யாரெல்லாம் கவர்ந்து அதைப் பதிவாக்குகின்றார்களோ… விளையும் பருவத்தை அவர்களுக்குள் ஊட்டி
4.ஞானியின் வித்து அங்கே விளையும்படி என்று நீ உருவாக்குகின்றாயோ
5.அந்த உணர்வின் துணை கொண்டே அவர்களுக்குள் “என்னை நீ காண முடியும்…!” என்றார்.

உங்களை எப்போது எங்கே பார்ப்பது…? என்று நான் (ஞானகுரு) வினா அவரிடம் எழுப்பும் போதெல்லாம்
1.எங்கும் எதிலும் என்னை நீ பார்க்கலாம்…
2.நான் கொடுத்த அருள் உணர்வின் தன்மை பிறரில் இயக்கச் செய்து
3.அதன் வழி தீமைகள் அகன்று எங்கெல்லாம் அது மகிழ்ந்த உணர்வாக வருகின்றதோ
4.அங்கே நான் வருவேன்…! என்றார் குருநாதர்.

குருநாதர் காட்டிய வழியில் யாம் உபதேசிப்பதை நினைவு கொண்டு யாரெல்லாம் அதன் படி செயல்படுத்துகின்றீர்களோ
1.உங்கள் பார்வையால் பிறருடைய கஷ்டங்களும் நோய்களும் என்று அது நீங்குகின்றதோ
2.நான் பார்த்தேன்… சொன்னேன்… அதன் வழி கடைப்பிடித்தார்கள்…
3.இப்போது நாங்கள் நலமாக இருக்கின்றோம் என்று மற்றவர் எப்பொழுது சொல்லுகின்றனரோ
4.அதிலே தான் என் குருவை உங்களில் நான் காண முடியும்.

மணிக்கணக்காக உங்களிடம் நான் பேசினாலும் உங்களில்… குருவைக் காணும் நிலையாக… உங்கள் மகிழ்ச்சியால் பேரானந்த நிலை பெறும் பாக்கியசாலியாக நான் ஆகின்றேன்.

1.உங்களிடம் இருந்து தான் அவரின் சக்தியை என்னைப் பெறும்படி செய்தாரே தவிர
2.தனித்து “நான் மகான் என்று காண்பித்து… மற்றதை அடக்கு…!” என்று அவர் சொல்லவில்லை.

ஆகவே குருநாதர் உணர்த்தியபடி ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம் என்றால்… உண்மையின் உணர்வின் தன்மை கொண்டு மனிதனில் முழுமை அடைந்து… உயிருடன் ஒன்றி என்றும் நிலையான ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இதைத் தெளிந்து கொள்ளுங்கள்… தெரிந்து கொள்ளுங்கள்… அறிந்து கொள்ளுங்கள்…!
1.பல காலம் இதை மறைத்து வைத்திருந்தேன்.
2.விஞ்ஞான அழிவுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்த உண்மையினுடைய நிலைகளை வெளிப்படுத்துகின்றேன்.

இதைக் கேட்டு உணர்ந்தோர் உங்களை அறியாத வந்த தீமைகள் நீங்க வேண்டும். தீமை உங்களை அணுகாது தடுக்கும் சக்தி பெற வேண்டும்.

1.தீமையை நீக்கிட்ட உங்கள் சொல்லின் உணர்வுகள் பிறரின் செவிகளில் உந்தப்பட்டு
2.உங்களை அவர்கள் உற்றுப் பார்க்கும் போது தீமையை அகற்றும் உணர்வுகள் அவர்களுக்குள் புகுந்து
3.அவரில் அறியாது சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்…
4.அந்தச் சக்தி எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே தான் இதை உபதேசிக்கின்றேன்.

உபதேசிக்கும் பொழுதெல்லாம் குருவின் நினைவு எனக்குள் வருகின்றது… அவரின் ஆற்றல் எனக்குள் பெருகுகின்றது… அவர் உணர்வின் அலைகள் இங்கே படர்கின்றது… கேட்டுணர்ந்தோர் உங்கள் உடலிலும் பதிவாகின்றது.

பதிந்த குருவின் ஆற்றல் உங்களுக்குள் நிச்சயம் செயல்படும்…! என்ற நம்பிக்கையிலே உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… மெய் உணர்வின் ஆற்றல் உங்களில் விளைய வேண்டும் என்ற ஆசையில் இதைச் செயல்படுத்துகின்றேன்.

அதன் வழி உங்களுக்குள் மகிழ்ச்சி பெருக வேண்டும். அதுவே எனக்குள் பேரானந்தப் பெரு நிலையை உருவாக்கும்.

தீமை அகற்றிடும் சக்தி பெற்றவரை நான் (ஞானகுரு) காணும் பொழுதெல்லாம்
1.எனக்குள் தீமை அகற்றிடும் சக்தியாக அது விளைந்து
2.குருவின் அருள் எனக்குள் விளைந்து அவருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.என்றும் நிலையான பிறவா நிலை வேகாநிலை என்ற நிலையை நான் உங்களிடமிருந்து பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் அனுபவம் பெறுவதற்காக யாம் (ஞானகுரு) கன்னியாகுமரியில் இருந்து வடக்கே சைனா பார்டர் வரை சென்று வந்தது தான்.

என் கால்களிலே எத்தனையோ ஆணிகள் உண்டு. இமயமலையின் மீது செல்ல வேண்டுமென்றால் வெறும் கோவணத் துணியுடன் தான் செல்ல வேண்டும்.
1.குருநாதர் சொன்ன முறைப்படி அவர் எதை எண்ணும்படி சொன்னாரோ
2.அதை எண்ணிக் கொண்டுதான் அங்கே செல்ல வேண்டும்.

நடந்து செல்லும் வழியில் ஒரு சுடு தண்ணீர் குளம் இருந்தது. அங்கே சூடு கதகதப்பாக இருந்ததால் அந்த இடத்திலே அமர்ந்து குருநாதர் சொன்னதைச் செய்யலாம்…! என்று நினைக்கின்றேன்.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கின்றார். நீ இங்கே குளிர் காய வரவில்லை… குளிர் அடிக்கும் இடத்திலே போய் உட்கார்…! என்றார்.

விண்ணுலக ஆற்றல் அனைத்தையும் நினைவு கொண்டு எடுத்துக் கொண்டிருந்தேன்.
1.ஒரு முக்கியமான ஒன்றைச் சொன்னார்…
2.அதை நீ எண்ணும் போது இன்ன நிலை இருக்கும். உனக்குக் குளிர் வராது உன்னைப் பாதிக்காது
3.அதே சமயத்தில் உன் நினைவுகள் அனைத்தும் விண்ணை நோக்கிச் செல்லும்… துருவ நட்சத்திரத்துடன் உன்னை இணைக்கும்
4.அன்று அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை ஒடுக்கினானோ அந்த சக்தி உனக்குள் பெருகும்
5.உன் உணர்வின் தன்மை உயர்த்த இது உதவும் என்று சில முறைகளைச் சொன்னார்.

அவ்வாறு செய்து கொண்டிருந்தேன்..!

ஆனால் முதலில் நடந்து செல்லும்போது அது சைனா பார்டராக இருப்பதால் அங்கு இருப்பவர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்னென்னமோ சொல்கிறார்கள்…! எனக்கு ஒன்றும் புரியவில்லை… கண்களை இறுக்கி மூடி விட்டேன்.

நடந்து செல்லும் போது காலை வைத்தால் முழங்கால் வரை உள்ளே செல்கின்றது. பனி முழுமையாக உறையாமல் இறுகலாக இல்லாதபடி கால் உள்ளே செல்லும்படியாக பொல பொல என்று இருக்கின்றது. கால் எல்லாம் கடு..கடு.. என்று இருக்கின்றது.

1.அத்தகைய பனிக்குள் கால் அதிக நேரம் இருந்தால் உணர்ச்சியற்றுப் போகும்
2.உன் கால் அழுகிப் போய்விடும் என்று ஏற்கனவே குருநாதர் சொல்லி இருக்கின்றார்.

அங்கே எப்படிச் சென்றாலும் என் உணர்வு குரு கொடுத்த சக்தியை மறந்து செயல்படும் பொழுது கடுகடுப்பு அதிகம் ஆகிவிட்டது. கடுகடுப்பு அதிகமான பின் என் நினைவுகள் எப்படி வருகிறது…?

இப்படி ஆகிவிட்டதே… ஊரை விட்டு இங்கு வந்து விட்டோமே… என் பையன் அவன் என்ன செய்கிறானோ…? என்று நினைவு வந்து விட்டது. உடனே என் இருதயம் குளிரினால் கிர்… என்று இறைய ஆரம்பிக்கின்றது. சரி… இதோடு எல்லாம் முடிந்துவிடும் போலிருக்கின்றது என்ற எண்ணம் தான் வருகின்றது.

உடலின் பற்று வரும் பொழுது அந்த இடத்தில் இத்தனை இம்சைகளும் வருகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து காக்கப்பட வேண்டும் என்றால்
1.குரு சொன்ன நினைவை எடுக்க வேண்டும்
2.உன்னைக் காக்க வேண்டும் என்றால் நீ அந்த உயர்ந்த சக்தியை எடுத்தே ஆக வேண்டும்.
3.உயர்ந்த சக்தியைப் பெற்றால் தான் உன் குழந்தையைக் காக்க முடியும்
4.உடலில் காக்கும் உணர்வு இருக்கின்றது… அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் உயர்ந்த சக்தி எடுக்க
5.இந்த உடல் தேவை…! என்று இப்படி உபதேசிக்கின்றார்.

குருவை எண்ணி அவர் கொடுத்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

உலக மக்கள் அனைவரும் எத்தனையோ வகையில் சிக்குண்டுள்ளனர்.. வேதனையில் உழன்று கொண்டுள்ளனர். அதிலிருந்து மீட்ட “அந்த அருள் ஞானிகள் உணர்வை எல்லோரும் பெற வேண்டும்…” என்று எண்ணும்படி சொன்னார்.

விண்ணை நோக்கி ஏங்கி அந்தச் சப்தரிஷி மண்டலங்களை உற்றுப் பார்த்து… இருளை மாய்த்து உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வை நுகரும் பொழுது இங்கே இருள் மறைகின்றது.

இந்த இடத்திலே
1.எல்லோருக்கும் சேர்த்து வேதனைப்படுவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணு.
2.உன் பிள்ளைக்கு மட்டும் என்று தனித்துக் கேட்காதே…! என்று குருநாதர் சொன்னார்.

பாச உணர்வுகள் என்னை எப்படி இயக்குகிறது என்பதை உணர்த்துகின்றார். பழனியில் அங்கே காட்சி தெரிகின்றது வீட்டில் என் பையன் ரோட்டின் முச்சந்தியில் உட்கார்ந்து நானா… நானா… (நைனா) என்று என்னைச் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

அவனுக்கு மூலம்…! இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கின்றது இமயமலையில் இருந்து பார்த்தால் எனக்கு எப்படி இருக்கும்…? குரு அனைத்தையும் குரு காண்பிக்கின்றார்.

ஆக அவன் வேதனைப்படுவதை எண்ணும் பொழுது தான் எனக்குள் இருள் சூழச் செய்கிறது… இருதயம் இறைய ஆரம்பித்தது. அப்போது என் பையனைக் காக்கும் எண்ணமே எனக்கு வரவில்லை.

அவனை எண்ணி வேதனைப்படும் நிலையில் அந்த வேதனை என்ற நஞ்சு உன்னை எப்படிச் செயலற்றதாக மாற்றுகின்றது…? ஆதை மாற்ற நீ என்ன செய்ய வேண்டும்…? இந்த உணர்வின் இயக்கங்களில் இருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்…? என்ற உண்மையை இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

உங்களிடம் இப்போது லேசாகச் சொல்லுகிறேன்… நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்து தெரிந்து கொள்கின்றீர்கள்.
1.ஆனால் இதைக் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் சென்ற பின் மறந்து விடுகின்றீர்கள்
2.சாமி என்ன சொன்னார் தெரியவில்லையே…! என்று விட்டு விடுகின்றீர்கள்.

குருநாதர் என்னைக் கடுமையான கஷ்டங்களுக்கு உள்ளாக்கித் தான் இந்தப் பேருண்மைகளை உணர்த்தினார்.
1.என்னால் மறக்காது…
2.குரு காண்பித்த அந்த உயர்ந்த சக்தியை எடுக்க முடிகின்றது.

கஷ்டப்பட்டுப் பெற்ற அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன். ஆனாலும் சாமி பிரமாதமாகப் பேசுகிறார்… இதை என்ன என்று சொல்வது…! என்று பெருமை பேசி விட்டுச் சென்று விடுகிறார்கள்.

உபதேசத்தைக் கேட்டு விட்டு வீட்டிற்குச் சென்றால் அங்கிருக்கக் கூடிய சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி பக்கத்து வீட்டுக்காரர் இவ்வாறு செய்கின்றார் என் அப்பா இப்படிச் சொல்கிறார்… என் பிள்ளை இப்படிச் செய்கின்றான்… எனக்கு ஒரே கஷ்டமாக இருக்கிறது என்ற உணர்வுகள் தான் உங்களுக்குள் வருகின்றது.

அதை எல்லாம் மாற்றுவதற்குத் தான் இந்த உண்மைகளை உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். நீங்கள் எங்கு சென்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் யாம் சொல்லிக் கொடுத்த பக்குவம் கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.பார்க்கும் அனைவரையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வேன்
3.எங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
4.என்னைப் பார்க்கும் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ வேண்டும்
5.அவர்கள் குடும்பங்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
6.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினைக்கும் பொழுதும் அவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
7.இப்படித்தான் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அந்த பனிப்பாறைகளுக்கு மத்தியிலே எனக்கு குருநாதர் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

நீங்கள் இங்கிருந்தே அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும். குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களை அறியாத இருங்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். அனைவருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று
1.ஏகோபித்து நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.
2.குரு இட்ட ஆணைப்படி இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

அதைப் போன்று நீங்களும்… பிறருடைய தீமைகளைக் கண்டபின் அதை அவர்கள் நீக்கிடும் நிலையாக நீங்கள் செயல்பட்டு… அவர்கள் தீமைகளை நீக்கி மகிழும் போது… நீங்கள் அதைக் கண்டு பேரானந்த நிலை பெற வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய இந்த வழியில் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதற்கே இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

கலகப்பிரியன் நாரதன்

 

ரெண்டு பேர் சண்டை போடுகின்றார்கள். அதில் ஒருவர் நல்ல மனுஷன்…! இவன் இப்படிப் பேசுகின்றானே…! என்று நினைக்கின்றோம்.

திட்டப் போகும்போது நம்முடைய மனது கேட்கிறதோ…? ஏம்பா இந்த மாதிரி எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றாய் என்கிறோம்.

உனக்கென்ன ஐயா…? என்று கேட்டால் இல்லாத வம்பெல்லாம் வரும். திருப்பி அதைத் திருத்த முடிகின்றதா என்றால் முடியவில்லை.

உங்களால் சொல்ல முடியுமா…?

1.அதே உணர்வு நமக்கு வந்தால் விட்டுவிடுவோமா. நான் சொல்கின்றேன் கேட்க மாட்டேன் என்கிறாய்.
2.இரு நான் பார்க்கிறேன் என்று வம்பு தான் பேசுவோம்.

தெரியுது… ஆனால் சொன்னாலும் வம்பு தான். அப்பொழுது அந்தக் கலகம் வருகிறது.

ஆனால்
1.அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தோம் என்றால் உயிருக்கு வருகின்றது
2.அந்த உணர்வுகள் ரத்தத்தில் கலக்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரம் இதையெல்லாம் கரைத்தது. உள்ளுக்கே சென்று பிடிவாதமாக இருப்பதை உடனே சிந்திக்கும்படி செய்கிறது.

வாயிலே சொன்னால் அந்த சமயத்தில் கேட்காது. நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்தங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று எண்ணிச் செலுத்துதல் வேண்டும்.

1.அப்பொழுது முன்னாடி பாதுகாப்பு வருகின்றது.
2.அதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
3.அதைச் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இரத்தத்தில் கலக்க வேண்டும் என்று சேர்த்து விட்டால் நாம் எடுத்த உணர்வுகள் உமிழ் நீராகி சிறுகுடல் பெருங்குடலுக்குச் செல்லுகின்றது. இரத்தமாக மாறுகின்றது.

உடல் முழுவதற்கும் ஒரு நன்மை செய்யும் பக்குவமாக வருகின்றது.

வேதனைப்படுபவரைப் பார்க்கின்றீர்கள். அந்த உமிழ் நீர் வருகின்றது இந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கம் சென்று வேதனைப்படுத்துகின்றது.

ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் அவன் கலகப் பிரியன். இந்த பிடிவாத குணங்களை விடுத்து விட்டு இருவரும் சமாதானமாகச் செல்லுங்கள் என்று விளக்கத்தைச் சொல்ல முடியும்.

நம் உடலிலும் அதைச் சமாதானப்படுத்த வேண்டும்

இந்த மனிதன் சும்மா இருந்தாலும் இவன் இப்படிப் பேசுகின்றான் பார்…!
1.அதை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
2.ஆனால் அவர்கள் செய்த தவறை நாமும் செய்கின்றோம்..
நாம் தவறு செய்யவில்லை ஆனால் இந்த உணர்வு வருகின்றது.

அது தான் நாரதன் கலகப் பிரியன் கலகமோ நன்மையில் முடியும். நம் உடலில் எத்தனை விதமான கலக்கங்கள் இருக்கின்றதோ “அதை எல்லாம் மாற்றி விடுகின்றது…”

March – 2025 உபதேசம்

தீமைகளை நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்… எப்படி…?

 

உதாரணமாக நாம் ஒரு இரும்புக் கம்பியைக் காய்ச்சுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.. அதைக் கையிலே பிடிக்கிறோம் என்றால் அதன் வழி சூடு வந்துவிடும்.
1.அந்தச் சூடு கைக்கு வராதபடி ஒரு துணியைச் சுற்றினால் கொஞ்சம் தாங்கிக் கொள்ளலாம்.
2.மனிதன் தான் அந்தச் சூடு தாக்காதபடி இதைச் செயல்படுத்துகின்றான்.
3.இதே மாதிரி ஒரு வேதனைப்படும் உணர்வு நம்மைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் அல்லவா.

காரணம் அந்த வேதனை மீண்டும் நம்மைக் கீழே கொண்டு செல்கின்றது.

பார்க்கிறோம் அல்லவா எத்தனையோ நல்ல பேரை…! எல்லோருடைய கஷ்டத்தையும் கேட்டு அதனால் வேதனைப்படுகின்றார்கள்.

எல்லோருக்கும் நன்மை செய்தேனே… எனக்கு இப்படி இருக்கிறதே… கடவுள் என்னைச் சோதிக்கின்றானே என்று கடவுளைத்தான் திட்டுகின்றோமே தவிர ஏதாவது நம்மால் மாற்றிக் கொள்ள முடிகின்றதா…?

1.ஆனால் இந்த ஆறாவது அறிவால் நாம் மாற்றிக் கொள்ள முடியும். அதற்குச் சக்தி தேவை.
2.ஏனென்றால் இது எல்லாம் உங்கள் அனுபவத்தில் இருக்கும்…
3.ஞாபகப்படுத்தும் போது அந்த உணர்ச்சிகள் வரும்… அப்பொழுது பழைய நினைவுகள் வருகின்றது
4.அதனுடன் சேர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டு வருகின்றேன்.
5.உங்கள் குணங்களில் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதை நீங்கள் பிரித்துப் பார்க்கக் கூடிய நிலை வேண்டும் என்பதற்குத்தான்
6.இதைச் சொல்லி கொண்டு வந்து இணைக்கின்றேன்.

அதையும் நினைக்கின்றீர்கள் இதையும் சேர்த்து இணைத்தவுடன் என்ன செய்கின்றது…?

வேதனைகளைக் குறைக்கும். அப்பொழுது வேதனையான உமிழ் நீர் மாறுவது பலம் குறைந்து நல்ல சக்திகள் கூட வந்து நீங்கள் சாப்பிடுகின்ற ஆகாரத்தை நல்ல முறையில் ஜீரணித்து இரைப்பையில் வரப்படும் பொழுது “நமக்குக் கோளாறு செய்யாது…”

அந்த நிலையைத்தான் உங்களுக்கு செய்து கொடுக்கின்றோம்.

ஆனால் இப்பொழுது நமது வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வே வரப்படும் பொழுது… வரிசையில் வந்து…
1.கடைசியில் உடல் உறுப்புகள் குறைந்து உடல் குறைந்து
2.ஆளே அடையாளம் தெரியாமல் சென்று விடுகின்றது.

இத்தகைய நிலையில்… உயிர் சென்றவுடன் என்ன ஆகிறது…? விஷத்தை உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்களுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது இதை மாற்ற வேண்டும் அல்லவா.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் தீமையை நீக்கக்கூடிய அணுக்களை விளைய வைத்திருக்கின்றார்கள் நாம் குழந்தை பிறக்க ஆசைப்படுகின்றோம். அவர்கள் உணர்வின் தன்மை ஒளியின் உடலாக இரண்டு உயிரும் ஒன்றாகக்கூடிய நிலையை ஆசைப்பட்டார்கள்.
1.அவர்கள் உருவாக்கிய குழந்தைதான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது
2.அந்தக் குழந்தையில் ஒன்றை எடுத்துக் கொண்டால் தான் நமக்குச் சரியாக இருக்கும்
3.அதை வளர்த்தோம் என்றால் நமக்கு ஞானத்தை ஊட்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனம் ஒன்றி அந்த பேரருள் பெற்று பேரொளி என்ற நிலையாக அடைகின்றார்கள்.

அந்தச் சக்திகளைத்தான் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 

நாம் பற்ற வேண்டிய முக்கியமானது எது…? இந்த உடல் சீராக இயங்க வேண்டும். உடல் சீராக இயங்கவில்லை என்றால் என்ன ஆகும்.

குருநாதர் இமயமலைக்கு என்னை அழைத்துச் செல்கின்றார் நடந்து போய்க் கொண்டிருக்கின்றேன் மலை மாதிரி தெரிந்தது நடந்து சென்றேன் திடீரென்று திரும்பிப் பார்த்தால் திடு…திடு… என்று பனிப் பாறைகள் இடிந்து விழுகின்றது.

அதைப் பார்த்தவுடன்… “திரும்ப எப்படிச் செல்லப் போகின்றேன்…?” என்ற பயம் வருகின்றது.
1.பயம் வந்தவுடன் பலவீனமான எண்ணங்கள் வருகின்றது
2.குடும்பத்தில் பையன் என்ன செய்வான்…?
3.நாம் போய் விட்டோம் என்றால் என்ன செய்வார்கள்…? என்ற எண்ணம் வருகின்றது.
4.போய்விட்டால் என்ன செய்வது…? என்ற மனம் வரப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது.

வெறும் துண்டும் வேஷ்டியும் தான் கட்டி இருக்கின்றேன். அதைத் தவிர வேறு இல்லை.

ஆனால் குருநாதர் சொன்ன முறைப்படி சக்திகளை அணுக்களில் சேர்த்துக் கொண்டிருந்த பொழுது குளிர் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பாதை இடிந்து விழுந்தவுடன் என்ன நடக்கின்றது…?

பயங்கரமான ஓசையாக வருகின்றது பயம் வராமல் இருக்குமா…? நான் நிற்கும் இடமும் விழுந்து விடுமோ…! என்ற பயம் வருகின்றது. வீட்டின் ஞாபகம் வருகிறது. கிர்ர்… என்று இருதயம் இறைய ஆரம்பித்துவிட்டது.
1.அப்புறம் வீட்டைக் கவனிப்பதா…? பையனை காப்பாற்றுவதா…?
2.சொத்து… இந்த உடலையே காக்க முடியவில்லை என்றால் பின் எதை வைத்துச் செய்வது…?

குடும்பத்தில் எல்லாம் தைரியமாகச் செய்கின்றோம். அடிக்கடி கோபமும் வேதனையும் அதிகமாகப் பட்டால் வாத நோய் வருகின்றது கை கால் இழுத்து விடுகின்றது நாம் எதைச் செய்ய முடியும்…?

பனிப் பாறையில் வைத்து இருத\யம் இறைத்தவுடன் நினைவுகள் மாறுகின்றது… அப்படி ஒரு அனுபவத்தைக் கொடுக்கின்றார்.

அப்பொழுதுதான் குருநாதர் காட்சி கொடுத்து மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே என்ற பாடலைப் பாடி வருகின்றார். பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? இப்பொழுது நீ போய்விட்டால் நீ எதை காக்கப் போகின்றாய்…!

1.கொஞ்ச நேரத்தில் நீ ஆசைப்பட்டதெல்லாம் சென்றுவிடுமே
2.மின்னலைப் போல மறைவதைப் பாராய் உன் ஆசை எல்லாம் மறைந்து விடுகின்றது.
3.எதிலே மடிந்தாயோ அங்கே தான் செல்வாய்.
4.ஆக நீ எண்ண வேண்டியது எது…?
5.அவர்களுக்கு அந்த அருள் பெற வேண்டும் இருள் நீக்கிப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அங்கே வலுவாகும்.

ஆனால்… நான் சொல்லிக் கொடுத்த உயர்ந்த குணங்களை எடுக்கத் தவறினால் நீ எங்கே செல்கின்றாய்…? ஏனென்றால் அந்த இடத்தில் மன உறுதி கொண்டு வருவதற்காக இப்படி அனுபவத்தைக் கொடுக்கின்றார்.

அனுபவித்துப் பெற்ற அந்த உயர்ந்த சக்திகளை நீங்களும் பெற முடியும். குருநாதரிடம் கஷ்டப்பட்டு அனுபவித்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நிவர்த்திப்பதற்குச் சக்தி கொடுக்கின்றேன். வீட்டிலிருந்தே அதைப் பெற முடியும்..

ஆனால் நான் காடு மேடெல்லாம் அலைந்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது வீட்டில் இருந்தே அதை நீக்குவதற்கு வழியைச் சொல்லிக் கொடுக்கின்றேன்.

கொடுத்தாலும் கூட… நானும் தியானம் செய்து கொண்டே தான் இருக்கின்றேன்
1,எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது என்று
2.இதையே சொல்லிக் கொண்டிருந்தால் எது வரும்…? அதுதான் ரிமோட் பண்ணிக் கொண்டே இருக்கும்.

சிக்னல் கொடுக்கின்றார்கள்… கரெக்டாக மாற்றிக் கொடுக்கின்றது. அந்த சிக்னலை நிறுத்தி விட்டால் மறுபடியும் சிவப்பு என்றால் சிவப்பைத்தானே கொடுத்துக் கொண்டேயிருக்கும்.
1.அப்போது நமக்கு அந்த உணர்வு டேஞ்சரான… சோர்வான உணர்வைத் தான் ஊட்டும்.
2.இது எல்லாம் நன்றாகத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

மலை மீது வைத்து எனக்கு அனுபவத்தைக் கொடுத்து அதைத் தெளிவாக்குகின்றார்.
1.எப்படி இருக்கின்றது…?
2.அப்போது எடுக்க வேண்டிய முறை எது…?
3.அவர் கொடுத்த சக்தியை ஏன் எடுக்க முடியாமல் போனது…?
4.ஏன் அந்த மாதிரியானது…? என்று காண்பிக்கின்றார்.

இதுபோல் உங்கள் வாழ்க்கையில் குறைகள் வந்தால் நீங்கள் அதை நீங்கள் மாற்றப் பழக வேண்டும் அல்லவா உங்களுக்கு இந்தப் பவரை எடுப்பதற்குச் சக்தியைக் கொடுத்திருக்கின்றோம்.

அந்தக் கண் கருமணிகளில் பதிவாகி விடுகின்றது. அதன் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சக்திகளைச் செலுத்தும்படி சொல்லுகின்றோம்.

ஆனால்
1.சோர்வான எண்ணங்கள் எடுக்கப்படும் பொழுது
2.அந்தச் சோர்வுக்குத் தக்கவாறு சோர்வடைந்து கொண்டே செல்கின்றோம்.

பையனுக்குக் குறைபாடு என்றால் அவனுக்கு நல்ல நிலை வரவேண்டும் எண்ணினால் அவனுக்கும் உற்சாகம் வருகின்றது நமக்கும் தெளிவாகின்றது நன்றாக இருக்கின்றோம்.

ஆக நமக்குள் காப்பாற்றப்பட வேண்டியது எது…?
1.உங்களுக்கு அந்தப் பவரைக் கொடுக்கின்றோம்.
2.அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

நல்ல சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி… உயிர் அதை இயக்கும்படி செய்ய வேண்டும்

 

கோபத்தின் உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது நமது நல்ல அணுக்களுக்குள் அது ஊடுருவி நல்ல உணர்ச்சிகளை மாற்றி “ஓமுக்குள் ஓ…ம்…!” பிரணவத்தின் தத்துவத்தை அது மாற்றி விடுகின்றது.

இப்படி மாற்றிக் கொண்ட உணர்வுகளால்…
1.உடலுக்குள் இருக்கும் மற்ற உணர்வுகள் அனைத்தும் இதை நுகர நேர்ந்தால் இரத்தக் கொதிப்பாக ஊடுருவுகின்றது.
2.அதன் மூலம் நல்ல அணுக்கள் இட்ட மலங்கள் மடிய நேர்ந்தால் விஷத்தன்மை கொண்ட நிலையும்
3.கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வுகளும் நம் இரத்தங்களிலே கலந்து
4.இதன் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே ட்ரான்சாக்சன்…! அதாவது உடலுக்குள் பரவச் செய்யும் உணர்வுகள் தான் அது.

எப்படி ஒரு ட்ரான்சிஸ்டர் மோதியபின் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப ஒலிக்கற்றைகளை இணைத்து மைக்கிற்கு அனுப்பி அதன் வழி சப்தங்களை எப்படி நாம் கேட்கின்றோமோ இதைப் போல தான் உணர்வின் ஒலிக்கற்றைகளை நமக்குள் பரப்பப்படும் பொழுது
1.கோபத்தின் உணர்ச்சிகளை நாமே அடக்க முடியாதபடி ஓங்கிச் சப்தமிடுவதும்
2.சத்தமான பேச்சுகளைப் பேசுவதும் கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் செயல்களை நாம் செயல்பட ஆரம்பிக்கின்றோம்.

அப்போது அதைக் கேட்போர் இதைக் கண்டபின் வெறுக்கும் தன்மை வருகின்றது. வெறுக்கும் தன்மை அதிகரிக்க அதிகரிக்க கோபத்தின் தன்மை எல்லை கடந்தே செல்லும்.

யார் மீது வெறுப்பு அதிகமாகின்றதோ அவர்களை நினைத்து நினைத்து கோபத்தின் உணர்வுகள் எல்லை கடந்து சென்று நமது உடலில் கடுமையான நோயாக உருவாகி விடுகின்றது.

பின் சிந்திக்கும் நிலைகள் இழந்து… அழுத்தம் அதிகமாகி விட்டால் அதனால் இரத்த அழுத்தங்கள் அதிகமாகும் பொழுது கண்ணுக்குச் செல்லும் இரத்தத்தின் வழி இந்த உணர்வின் தன்மை இயக்கம் கண்ணுக்குள் இரத்தம் அதிகரித்து விட்டால் “கண்கள் சிவந்து விடும்…”

சிவந்து விட்டால் கொடூர உணர்வாகத்தான் தெரிய வரும். சில பேரைப் பார்த்தோம் என்றால் அந்த கோபத்தின் கனலைக் கண்களிலே கண்டு விடலாம்.

சிவப்பு நிறமாக அதன் உணர்வுகள் இயக்கும். எதைக் கண்டாலும் எதைப் பார்த்தாலும் படித்தாலும் வெறுக்கும் தன்மையாகி… அழிக்கும் உணர்வாகவே வந்துவிடும்.

1.கோபம் வந்துவிட்டால் தன் பிள்ளையானாலும் அடிக்கும் உணர்ச்சி வந்துவிடும்
2.கோபம் வந்துவிட்டால் கண்ணிலே கண்டாலே தட்டியெறியச் செய்யும்… நல்ல பொருள்களை உடைக்கவும் செய்வோம்.

சிந்தனைகள் குறைந்து புலி மற்றதை இரக்கமற்றுக் கொன்று புசிப்பது போன்று நல்ல உணர்வுகள் தென்பட்டாலே… மகிழ்ச்சியாக யாராவது சிரித்தாலோ… அவர்களைப் பார்க்கும் பொழுது வெறுப்பு என்ற உணர்வுகளே தோற்றுவிக்கும்.

அதுதான் நம்மை இயக்கும். இது எல்லாம் காரணம் யார்…?
1.சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!
2.அந்த உணர்ச்சிக்கொப்ப அதை இயக்குவது நம் உயிர்.

ஆகவே இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு
1.அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கும் சந்தர்ப்பங்களையும்
2.அதை வளர்த்திடும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி உயிர் அதை இயக்கும்படி செய்து
3.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியின் தன்மையாக ஞானிகள் மகரிஷிகளைப் போன்று உருவாக்கி
4.நாம் தெளிந்த நிலையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறுதல் வேண்டும்.

கோபம் வரும் பொழுது அதைத் தனக்குள் வளர்த்து விடாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து அருள் வழியில் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்த காலங்களில்
1.இறந்த பக்தி கொண்ட ஆன்மாக்கள் அதே போல் பக்தி கொண்டவர்கள் உடலுக்குள் புகுந்த பின்
2.எப்படி எல்லாம் அவர்கள் அவஸ்தைப்படுகின்றார்கள்…? அவருடைய எண்ணங்கள் எப்படி ஆகின்றது…? என்பதையெல்லாம்
3.குருநாதர் காட்டிய வழியில் அறிந்து கொண்டோம்.

கிராமத்தில் ஒரு அம்மா இருந்தது. அது ஒரு முருக பக்தர். அந்த அம்மாவிற்குச் சொத்து அதிகம் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டது.

என்னை அந்த அம்மா இருந்த வீட்டில் திண்ணையில் உட்காரச் சொன்னார் குருநாதர். அந்த அம்மாவால் எழுந்து நடக்க முடியாது.

அந்த அம்மாவிற்கு வயது எழுபது இருக்கும். அது புலம்பிக் கொண்டே இருந்தது.

என்னிடம் இருந்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, என்னை அநாதையாக்கி விட்டார்கள். செல்வமும் செருக்கும் உள்ள பொழுது என் மடி மேல் உட்கார்ந்து விளையாடுவையே, “முருகா…!”

இப்பொழுது எங்கடா போனாய்…? செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா…? நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன்… என்னைக் காக்கவில்லையா…? நான் அநாதைதானா…? என்று புலம்பிக் கொண்டு உள்ளது.

ஆனால் உடலெல்லாம் மலத்தால் சூழ்ந்து அசிங்கமாக வைத்திருந்தது.

அந்த அம்மா வீடு பெரியது… சொத்துக்களும் அதிகம். ஆனால் நோய்வாய்ப்பட்ட பின் சாலையில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

“முருகா…!” நான் நினைக்கும் பொழுதெல்லாம் வரம் கொடுத்தாய். நான் சொல்கின்றவருக்கு எல்லாம் நல்லது செய்தாய். எனக்கு நல்ல வழியும் காட்டினாய்.. என்னிடம் செல்வம் இல்லையென்று நீ கூட இப்போது வராமல் போய் விட்டாயேடா…! என்று சொல்லிக் கொண்டு இருந்தது.

நான் அவர்களுக்கு எல்லாம் செய்தேனே… எனக்கு இப்படிச் செய்கின்றார்களே…! எனக்குச் சொத்து வேண்டாம்.. நீ இருந்தால் போதும் முருகா…!

என்னை இந்த நிலைக்கு விட்டு விட்டார்கள்… நான் அசிங்கமான நிலையில் இருக்கின்றேன்… என்னைக் கவனிப்பதற்கு நீ கூட வரவில்லையே. இந்த அசிங்கத்தைப் பார்த்து நீ கூட விலகி விட்டாயா…?” என்று கேட்டுக் கொண்டிருந்தது.

இரண்டு மணி நேரம் அந்த அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த அம்மா புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் கதவைத் திறந்து உள்ளே போனேன். அந்த அம்மவைப் பக்கத்தில் இருந்த கிணற்றில் குளிக்க வைத்துத் துணிகளை துவைத்துக் கொடுக்கச் சொன்னார் குருநாதர், செய்தேன்.

பின்பு ஆசீர்வாதம் கொடுத்தேன். மனது தெளிவடைந்து அந்த அம்மா அமர்ந்தது,

“முருகா…! நீ வந்துவிட்டாயா…?” “நீ இந்த ரூபத்தில் வருவாய் என்று எனக்குத் தெரியவில்லையே…” என்று அப்போதும் முருகனைத் தான் நினைக்கின்றது.

என் பிள்ளை மாதிரி என் மடியில் அமர்ந்து விளையாடுவாய். இப்பொழுது பெரிய ஆளாக வந்து இருக்கின்றாய்… “நீ திருடனப்பா…!” என்று சொல்கின்றது.
1.நான் முருகன் இல்லை… சாதாரண மனிதன் தான்…! என்று சொன்னேன்.
2.முதலில் முருகன் வந்தான் என்றால் இப்போது ஏன் வரவில்லை…? என்று கேட்டேன்.

இது எல்லாம் மந்திர வழியால் (மந்திர ஒலிகள்) எடுத்துக் கொண்ட உணர்வுகள் தனக்குள் சிக்கப்பட்டு இதே உணர்வு கொண்டு முருகன் மேல் பக்தியாகச் சென்ற ஆன்மாக்கள் இறந்த பின்
1.உடலுடன் உள்ளவர்கள் அதே பக்தியை யார் கொள்கின்றார்களோ அந்த உடலுக்குள் புகுந்து
2.அவர்கள் வாழ்ந்த காலத்திலே (இறந்தவர்) கடைசியிலே நோய்வாய்ப்படும் பொழுது அவர்களை எப்படிக் கவனிக்காமல் விட்டார்களோ
3.அதே ஆன்மா இங்கே “முருகனைப் போன்று காட்சி தருவதும்…” பல நிலைகளைச் செய்வதும்
4.ஆனால் நாளடைவில் அந்தக் காட்சியின் உணர்வுகள் விளைந்து இப்படிக் கடும் நோயாக மாறுகின்றது.

சமுதாயத்தில் அவர்கள் குடும்பத்திலே இந்த வயதான அம்மா மீது எப்படி வெறுப்படைந்தனாரோ அந்த வெறுப்பினால்… சேர்த்து வைத்த சொத்தைப் பறிக்கத்தான் முடிந்தது… முருகன் காக்கவில்லை…!

செல்வத்தைப் பெற்றோம்… சந்தோஷமாக இருப்போம் என்ற நிலை இல்லை. எப்பொழுது மடிவார்…! என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்… தொலைந்து விட்டால் தன் இஷ்டத்திற்குச் செய்துவிடலாம் அல்லவா…!

காரணம் என்ன என்றால்
1.உயிரோடு இருக்கும் பொழுது சொத்தை எல்லாம்
2.மற்றவர்களுக்கு உயிலாக எழுதி வைத்துவிட்டால் என்ன செய்வது…?

ஏனென்றால் ஒரு சிலர் உயில் எழுதி வைத்ததைத் தெரிந்து கொண்டால்
1.சொத்து தன் கைக்கு வராது… மற்றவர்களுக்குச் சேர்ந்து விடும் என்றால்
2.இப்படி எல்லாம் சில குடும்பங்களில் நடக்கிறது.

செல்வம் இருந்தாலும்… அதைக் கொடுத்துச் சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நிலையில் இருந்தாலும்… அவர்களைக் காக்கும் நிலை கூட மாறி விடுகின்றது.

இந்த அம்மா “யாருக்கோ உயிலை எழுதி வைத்துவிட்டார்…” என்று சொன்னதற்காகறகக வேண்டி இவரைத் தொல்லைப்படுத்திச் சொத்தைப் பறித்து அனாதையாக இப்படி விட்டு விட்டார்கள்.

குடும்பத்தில் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

சொத்து என்று வந்து விட்டால் அம்மா அப்பா என்று கூடப் பார்ப்பதில்லை… சகோதரர்களுக்குள்ளும் பகைமை வருகின்றது…!

1.முருகனை பக்தி கொள்கின்றோம் சிவனை வணங்குகின்றோம் என்று எல்லாம் தான் சொல்கிறோம்.
2.அதே சமயத்தில் அம்மாவோ அப்பாவோ சகோதரர்களோ அவர்கள் எனக்குத் துரோகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்துடன்தான் தெய்வத்தை வணங்குகின்றோம்
3.மந்திரத்தைச் சொல்லி சகோதரன் சாக வேண்டும்.. அல்லது தந்தை சாக வேண்டும் என்ற எண்ணத்துடன் முருகனை வணங்குகின்றார்கள்
4.ஆக பக்தி எந்த அளவிலே இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.
5.உடலின் மேல் இச்சை கொண்டு தெய்வத்தைச் சாட்சியாக வைத்துச் செய்யக்கூடிய செயல்கள் தான் இது.

ஆனால் நல்ல உணர்வுகளை எடுத்துத் தீமைகளை அகற்றும் அந்த உணர்வின் தன்மை பெற்றால் நமக்குள் “நாம் தெய்வமாகலாம்…”
1.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
2.தெய்வீக குணத்தைப் பெற வேண்டும்
3.தெய்வீகப் பண்புடன் இருக்க வேண்டும்
4.தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும்
5.பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்றும்
6.நாம் ஒவ்வொருவரும் எண்ணினால் பகைமை மாறிவிடும் என்பதற்காக
7.ஆலயங்களில் இதைச் சொல்லி இருந்தாலும் இதை யாரும் செயல்படுத்துவதில்லை.

பக்தி என்ற பேரில் ஆலயத்திற்குச் சென்றாலும் தன் ஆசையின் நிலைகள் கொண்டு சந்தர்ப்பவசத்தால் சாமி சிலையையோ அல்லது படத்தையோ திரும்பத் திரும்பப் பார்த்துப் பதிவாக்கி எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் “தெய்வமாகக் காட்சி தருவதும்… மற்ற நிலைகளும்…”

இப்படி மனிதனுடன் பழகிய நிலைகள் இந்த மனித வாழ்க்கைக்குத் தான் அது பயன்படுகிறது. தான் எண்ணியது கிடைக்கவில்லை அல்லது நடக்கவில்லை என்றால் உடனே வேதனை வருகின்றது.

வேதனைகள் அதிகமான பின் அடுத்து மற்ற தெய்வங்களை
1.காளிக்கோ அங்களேஸ்வரிக்கோ மாடசாமிக்கோ முனுசாமிக்கோ ஆடுகளையும் மற்றதையும் பலியிட்டு
2.அந்த இரத்தத்தை அபிஷேகித்து மகிழும் நிலையில் தான் இருக்கின்றது.

இப்படி எல்லாம் செய்தால் அந்தத் தெய்வம் நம் கஷ்டத்தை நீக்கும் என்று தவறான வழிகளைத் தான் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

அந்த தவறின் நிலைகளில் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்தால் அசுர உணர்வு உண்டு மாடனாகவும் முனியனாகவும் இன்னொரு உடலுக்குள் ஆவியாகச் சென்று ஆட்டிப்படைக்கும்.

ஆகவே நாம் வணங்கும் முறைகள் எதுவோ உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றி வெளியே செல்லப்படும் பொழுது நாம் எந்தத் தெய்வத்தை வணங்கினோமோ அந்த உணர்வு தான் அங்கே காட்சியாக… நோயாக மாறுகின்றது.

இது எல்லாம் மனிதனால் மனிதனுக்குள் உருவாக்கப்பட்ட நிலைகள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

27 நட்சத்திரங்களின் சக்திகளும் கடுமையான விஷத்தன்மை கொண்டது ஏனென்றால் அது பிற மண்டலங்களிலிருந்து எடுத்துக் கொண்டது.
1.நம் பூமிக்குள் வரும் பொழுது மின்னலாக மாறுகின்றது.
2.கடலிலே தாக்கப்படும் பொழுது மணலாக மாறுகின்றது
3.விஷத்தின் தன்மை மற்ற தாவர இனங்களில் எதிர்மறையாக பொழுது மரம் கருகுகின்றது
4.இதன் உணர்வின் ஈர்ப்பு பூமிக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது.
5.பாறைகள் உருகிய பின் நிலநடுக்கம் ஆகின்றது.

இது எல்லாம் 27 நட்சத்திரங்களின் மின்னலால் ஏற்படும் நிலைகள்.

ஆனால் இத்தகைய நஞ்சையும் அடக்கிப் பழகியவன் அகஸ்தியன். தாய் கருவிலிருக்கும் போது பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்தியால் அவனுக்கு அந்த ஆற்றல் கிடைக்கிறது.

மின்னலிலிருந்து வரக்கூடிய ஆற்றல்களை வெள்ளிக் கோள் அந்த ஒளிக்கற்றைகளை எப்படி எடுத்துக் கொள்கின்றதோ… அதைப் போல் அகஸ்தியன் தன் உடலுக்குள் அதைப் பெருக்கி… உயிரைப் போன்ற உணர்வின் அறிவாக “ஒளியாக மாற்றிக் கொள்கின்றான்…”

மின்னல் தாக்கப்படும் பொழுது கடலிலே விழுந்தால் ஒரு பக்கம் மணலாக மாறினாலும்… அந்த மணலுக்கடியில் சந்தர்ப்பத்திலே ஒரு மீன் சென்றால் அதன் மீது மின்னல் தாக்கப்பட்டால் அது “எலக்ட்ரிக் மீனாக…” மாறுகின்றது.

1.எப்படி மின்னல் தாக்கும் பொழுது “ஒளிக்கற்றைகள்…” உருவாகின்றதோ
2.இந்த உணர்வின் தன்மை மீன் இனங்களுக்குள் சென்ற பின்
3.உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகிறது.

இயற்கையின் நிலையில் இவ்வாறு தான் மாற்றங்களாகின்றது என்று அகஸ்தியன் கண்டு கொள்கின்றான்.

அகஸ்தியன் துருவனாகி அவன் பதினாறாவது வயதில் திருமணமான பின் அவன் கண்ட இயற்கையின் உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்குச் சொல்கிறான்.

அகஸ்தியனின் மனைவி தன் உடலுக்குள் அதைப் பதிவாக்கி வளர்த்துக் கொண்ட பின் “தன் கணவன் உயர வேண்டும்…” என்று எண்ணுகின்றது இப்படி இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் உயர்த்திடும் உணர்வு கொண்டு
1.துருவ ரிஷியாக (துருவ மகரிஷி) மாறுகின்றனர்.
2.கணவன் மனைவி ஒன்றிணைந்து ரிஷித் தன்மை பெறுகின்றனர்
3.இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றாகித் துருவ நட்சத்திரமாகின்றனர்.

தாவரங்களோ உயிரினங்களோ எதுவாக இருந்தாலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் அதனுடைய இன வித்துக்களை உருவாக்க முடியும்.

ஆகையினால் தான் கணவன் மனைவியாக இந்த அருள் சக்திகளைப் பெறும்படி சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவன் தன் மனவி பெற வேண்டும் என்றும்… மனைவி தன் கணவன் பெற வேண்டும் என்றும் ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்திவாய்ந்த உணர்வுகள் உடலுக்குள் செல்லப்படும் பொழுது “ஒரு மின்சாரம் பாய்வது போன்று…” உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.

இப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறப்படும் பொழுது
1.உங்கள் புருவ மத்தியிலே மின் அணுக்கள் உருவாகும்
2.உயிர் வழி நுகர்ந்து உடலுக்குள் செல்லும் பொழுது உடலுக்குள் ஒளி மயமான உணர்வுகள் தோன்றும்
3.உடலிலிருந்து வெளிச்சமும் வெளிப்படும்… மகிழ்ச்சியான உணர்வுகளையும் ஊட்டும்.

இதை எல்லாம் தியானத்தில் நீங்கள் காணலாம்… உணரலாம்…!

தீமையைக் காணும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்

 

இன்றைய நாளில் உங்களுக்கு ஏன் இதை ஞாபகப்படுத்துகிறேன் என்றால் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் “இன்று சந்திரன் மிகவும் பிரகாசமாக இருக்கின்றது…”

1,சந்திரனுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிடைக்கும் பருவம் பெறுகின்றது.
2.வெள்ளிக் கோளின் உணர்வுகளும் மற்ற கோளின் தடையில்லாது வருகின்றது.
3.இத்தருணத்தில் இங்கே துருவ தியானத்தில் எடுக்கும் உணர்வுகள் இருளை அகற்றும் நிலையும்
4.அருள் வழி வாழும் உணர்வுகளும் தெளிந்து வாழும் உணர்வுகளும் நமக்குள் கூட்டுகின்றது.

அதனைப் பருகுவதற்குத் தான் உபதேசிப்பது.

அதே சமயத்தில் இயற்கையில் நாம் விளைந்தாலும் செயற்கையில் தீமையின் உணர்வுகளை எவ்வாறு நுகரச் செய்கின்றது…? செயற்கையினால் நம் உடலுக்குள் பகைமை உணர்வுகள் எவ்வாறு வருகின்றது…? பகைமை எப்படி உருவாகின்றது…? இது போன்ற நிலைகள் மனிதனின் வாழ்க்கையில் வருவதிலிருந்து தடுப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

காரணம் 2000க்கு மேல் கடும் விஷத்தன்மைகள் பரவும் நிலையில் அதை நுகரும் தன்மை வருகின்றது. அதை நுகரும் தன்மை வந்தாலோ விஷத்தன்மைகள் கூடி மிகவும் மிருக நிலையிலான உணர்வுகளுக்கு நாம் சென்று விடுவோம்.

அதிலிருந்து நம்மைக் காக்கத் தீமை உணர்வுகள் வராதபடி தடுக்க இன்றிலிருந்து நாம் தயாராக வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொரு குடும்பத்திலும் தனக்குள் பருகி
2.உலக மக்கள் சேமமாக இருக்க வேண்டும் என்றும் உலகில் நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்றும் நல் பயன் பெற வேண்டும் என்றும்
3.உலக இருளை அகற்றிடும் அருள் சக்தி பரவ வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் தெளிவான நிலைகள் பெற வேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மை நாம் நுகர வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியினை நமக்குள் பெருக்கி இருள் சூழும் நிலைகளைத் தடுத்து மெய்ப்பொருள் காணும் உணர்வை வளர்த்து நம் மூச்சும் பேச்சும் அத்தகைய நிலையாக இந்த உலகில் பரவச் செய்தல் வேண்டும்.

எத்தகைய கடுமையான தீமையானாலும் நோயானாலும் துருவ தியானத்தின் மூலம் பெற்ற ஆற்றலைப் பெருக்கி… அருள் உணர்வைப் பெருக்கி ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

1.எப்பொழுதெல்லாம் தீமையைக் காணும் சந்தர்ப்பம் வருகின்றதோ
2.அந்தச் சந்தர்ப்பத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி தீமைகளை அகற்றி
3.அந்த இருளை அகற்றி ஒளி என்ற உணர்வை ஆட்சி புரியும் தன்மையாக
4.தெளிந்த மனம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.

ஆகவே அத்தகைய சீர்படும் உணர்வினை நாம் ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொள்வோம். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆன அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் ஏங்கி இப்பொழுது தியானிப்போம்.

கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து… உயிரான ஈசனிடம் வேண்டி… துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி… அதைப் பெற வேண்டும் என்று “கண்களைத் திறந்தே…” நாம் ஏங்கி தியானிப்போம்.

இப்பொழுது நாம் சுவாசிக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தங்களிலே ஒரு புது விதமான உணர்ச்சிகளாகத் தோன்றும்.

1.அன்று அகஸ்தியன் பல விதமான மூலிகைகளின் மணங்களை நுகர்ந்து
2.தனக்குள் வரும் விஷத்தன்மைகளை அடக்கி ஒளியாக எவ்வாறு மாற்றினானோ
3.அத்தகைய மூலிகை வாசனைகள் இப்பொழுது உங்கள் சுவாசத்திற்குள் வரும்.

அதை நுகரப்படும் பொழுது உடலுக்குள் ஏற்கனவே உள்ள தீய வினைகளை இது மாற்றும்… நல்ல உணர்வினை உருவாக்கும் அந்தச் சக்தியும் பெறுவீர்கள்.

துருவ நட்சத்திரத்தை எண்ணி அதைப் பெற வேண்டும் என்று நுகரப்படும் பொழுது மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் இரத்தநாளங்களில் தோன்றும்.

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆவதற்கு முன் அவன் உடலில் விளைந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் இந்தப் பூமி முழுவதுமே பரவி உள்ளது. அதை நாம் எளிதில் கவரலாம்.

இப்பொழுது நினைவனைத்தையும் மேல் நோக்கிச் செலுத்துங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது சுவைமிக்க உமிழ் நீர் வரும்… அறுசுவையாக அது வரும்
2.அகஸ்தியன் பெற்ற அந்த நறுமணங்கள் அனைத்தும் உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து அதை நீங்கள் சுவாசிக்க நேரும்.
3.நல்ல நறுமணங்களை நுகர்வீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவைச் செலுத்துங்கள்.

நண்பர்களாகப் பழகிய பின் அந்த நண்பனை எண்ணிய பின் அவனுடன் இணைந்து கொண்ட உணர்வு விக்கலாக எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று
1.எம்முடைய அருள் உபதேசங்களைப் பதிவாக்கி… அதை நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் இருப்பதனால்
2.கண்ணின் நினைவு கொண்டு உடலில் உள்ள அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உள்முகமாகச் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறும் தகுதி எளிதில் கிடைக்கின்றது.
4.இப்பொழுது புது விதமான ஒளி… ஒரு வெளிச்சம் உங்கள் உடலிலே வரும்… அதை உணரலாம்.

உயிர் வழி நாம் ஏங்கித் தியானிக்கும் போது
1.மின்சாரம் பாய்வது போன்று
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு இரத்தத்திற்குள் “வீரிய உணர்வாக” வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு டாக்டர் ஊசி மூலம் மருந்தை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அது இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுழன்று விஷத்தன்மையான அணுக்களை வலுவிழக்கச் செய்கின்றது.

அதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து இரத்தநாளங்களில் சேர்க்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் அந்த வீரிய சக்தியைப் பெறும் தகுதி இப்பொழுது பெறுகின்றது. இரத்தத்தில் உள்ள தீமைகள் இப்போது வலு இழக்கின்றது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இரத்தங்களில் துரிதமாக உடல் முழுவதும் பரவும்.
2.இரத்தம் எங்கெல்லாம் செல்கின்றதோ அங்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வேகமாகப் பரவும்.

அத்தகைய உணர்வை உங்கள் இந்த உடலிலே உணரலாம். உடலுக்குள் அந்த இயக்கம் எப்படி இயங்குகிறது…? என்பதையும் நீங்கள் உணரலாம்

துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வுகள்
1.புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் ஊடுருவிச் செல்வதை
2.அந்த ஒளிமயமான உணர்வுகளைக் காணலாம்.

பேரானந்த நிலை பெறுவீர்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில் மிகுந்த சிக்கல்கள் ஆகிவிட்டால் என்ன செய்ய வேண்டும்…?

1.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மூலிகைகளின் மணங்கள் நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.யாம் (ஞானகுரு) உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து
4.அதை உங்களுக்குள் சேர்த்து உமிழ் நீருடன் கலந்து ஆகாரத்துடன் கலந்து இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். அகஸ்தியன் பெற்ற சர்வ தோஷங்களை நீக்கிடும்… சர்வ பிணிகளையும் நீக்கிடும்… அந்தப் பச்சிலை மூலிகைகளின் மணங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானியுங்கள்.

அவ்வாறு தியானிக்கும் போது உடலிலே நோய் உள்ளவர்களுக்கு
1.இது எதிர்நிலையான பின் உடலில் வலி கூட அதிகமாகும்.
2.ஏனென்றால் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க விடாது அந்த அணுக்கள் தடுக்கும்.

ஆனாலும் மீண்டும் அதை எண்ணி ஏங்கி எங்கள் உடலில் அந்த அகஸ்தியன் பெற்ற நஞ்சை வெல்லக்கூடிய சக்தி படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படர வேண்டும் நல்ல அணுக்களாக மாற வேண்டும் எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

1.எம்மா… எப்பா…! என்று வேதனையாக எண்ணுவதற்கு மாறாக
2.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

எப்படித் தான் வாழ்ந்தாலும் குறுகிய காலம் தான் நாம் வாழுகின்றோம். உடலில் சிறிது காலம் தான் நாம் இருக்க முடிகின்றது.

அதற்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் அகஸ்தியன் பெற்ற தீமையை நீக்கிய உணர்வுகளையும் நமக்குள் சேர்த்துச் சேர்த்து… சேர்த்துச் சேர்த்து… இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அதற்குத்தான் இந்த மார்க்கத்தைத் தெளிவாக்குவது.

நான் சம்பாரித்தேன் எல்லாம் செய்தேன் என் குடும்பத்தில் என் பையன் நாளை என்ன செய்வான்…?

அதே போன்று தொழில் செய்யும் இடத்தில் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்… நாளை என்ன ஆகுமோ…? என்று அதை நமக்குள் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த ஏமாற்றும் உணர்வு நமக்குள் நோயாக மாறி
1.இறந்த பின் எவன் ஏமாற்றினானோ அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல முடியும்.
2.மீண்டும் உடலுக்குத் தான் நாம் வருகின்றோம்
3.விண் செல்லும் உணர்வுகளை இழந்து விடுகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையில் எப்போது சிரமம் என்று வந்தாலும் கொடுத்த பயிற்சிப் பிரகாரம் அந்த அகஸ்தியன் பெற்ற சக்திகளைப் பெற்றுப் பாருங்கள். எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

1.எதனையும் பற்றி “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற சிந்தனை செய்ய வேண்டியது இல்லை.
2.அருளைப் பெறுவேன்… இருளை நீக்குவேன்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்…!
3.என் இரத்த நாளங்களிலே அந்தப் பேரருள் பேரொளியைக் கலக்கச் செய்வேன்
4.என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்த அருள் சக்தியைப் பெறும்படி செய்வேன் என்று எண்ணுங்கள்.

அதே சமயத்தில் அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல விஷத் தன்மைகளை ஒடுக்கினான். அந்த உணர்வுகளைத் தனக்குள் வலிமை மிக்கதாக அவனுக்குள் உருவாக்கிக் கொண்டான்.

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகளும் இங்கே பரவி உள்ளது. உங்களுக்குள் பதிவு செய்ததை எண்ணத்தால் அதைக் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற நஞ்சை வென்றிட்ட அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்களைத் திறந்து ஏங்குங்கள். உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்…!

இப்போது
1.உமிழ் நீர்கள் வாயிலே சுவை மிக்கதாக பச்சிலை மணம் கலந்ததாகச் சுரந்து உங்கள் உடலுக்குள் செல்லும்
2.உங்கள் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து உடலுக்குள் விஷத்தன்மையை மாற்றும் சக்தியாக நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.காற்றிலே இது உண்டு… உங்களால் அதை எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும்.

அதற்குத் தான் இந்தப் பயிற்சிகள் எல்லாம்…!

சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தை இணைத்துவரும் பகுதியில் ஆலயத்தினை வைத்தார்கள் ஸ்தபதியர்

 

ஓர் உணர்வின் தன்மை கொண்டு ஒரு கோளின் உணர்வை அதிகரித்து இந்த மனித உடலில் வாழ்ந்தால்
1.அந்தக் கோளுக்கு மாற்றாக நல்ல உணர்வின் தன்மை இணைந்து வாழும் உணர்வின் கணக்கிற்கொப்ப நட்சத்திரங்களின் திசை நோக்கி
2.எந்த கோள்களுக்கும் சிக்காது அதன் உணர்வின் நேர் பார்வையிலே
3.சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தை இணைத்துவரும் பகுதியில் ஆலயத்தினை இணைத்து வைப்பார்கள்.

அப்படி இணைக்கும் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் இணைப்பும் மற்ற கோள்களின் இணைப்பும் இந்த துருவப்பகுதியில் கவரும் உணர்வை அதற்கு நேராக ஆலயம் அமைத்து “தெய்வீகப் பண்பை நாம் பெற வேண்டும்” என்று வைப்பார்கள்.

ஏனென்றால் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பையும்
1.மற்ற வெள்ளிக் கோளின் உணர்வுகளையும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் இரண்டாகச் சேர்க்கும் நிலை வரும் பொழுது
2.அதன் ஒளிக் கற்றைகள் அது விரிவடைந்து அந்த ஆலயத்தின் அமைப்புக்கு
3.சூரியனுடைய நேர் பார்வையில் வரும் போது அதனை மாற்றி அமைத்து அது எதனைக் கவர்கிறது…? என்பதனை அளவுகோலிட்டு
4.முந்தைய காலத்தில் கணக்கிடும் தன்மைகள் வந்தது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கால்குலேட்டர் என்ற சாதனங்களை வைத்து மனிதன் சிந்தித்து நுகரும் தன்மை இல்லாது கால்குலேட்டர் வைத்து பதிவு செய்து அதன் மேல் ஞாபகப்படுத்தும் நிலையும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பதிவின் தன்மை கொண்டு ஒன்று ஒன்றுடன் மோதும் பொழுது ஒன்றின் உணர்வுகள் எப்படிக் கணக்கிடுகிறது…? என்ற நிலையில் கணக்கிடுகின்றார்கள்.

இப்படிச் சென்றவன் இதிலே தான் நாட்டம் செல்கின்றதே தவிர மெய்ஞானிகள் உணர்வின் நிலையும் பிரபஞ்சத்தின் உணர்வின் ஆற்றலையோ கணக்கிடும் முறைப்படுத்தி உலக பிரபஞ்சத்துடன் இயக்கும் நிலை காலத்தால் மறைந்து விட்டது. விஞ்ஞான அறிவு ஓங்கி விட்டது. அதன்வழி கம்ப்யூட்டரை இயக்கும் நிலை வந்து விட்டது.

நம் உயிர் எலக்ட்ரிக் உடலுக்குள் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. மாற்றிய உணர்வின் தன்மை கொண்டு மீண்டும் எண்ணுவுமே என்றால் நமது உணர்வுக்கும் நுகர்ந்த உணர்வுக்கும் எதிர்நிலை வரப்படும் பொழுது அதன் உணர்வின் அறிவைப் பிரித்துக் காட்டுகின்றது.

அதே சமயத்தில் கம்ப்யூட்டர் இதைப் போன்ற நிலையில் இயக்கினால் அதனை உடனே மாற்றி அமைக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றார்கள். கணக்கை மாற்றி விடுகின்றனர்.

இதைப்போல
1.நமது உயிரின் தன்மை எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று வரப்படும் பொழுது
2.இதனை துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

இதைப் போல் மனிதனின் நிலையில் ஓர் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் மாற்றமாகும் பொழுது அதற்குத் தக்க நல்ல குணங்களின் உணர்வுகளைப்
1.பிறிதொரு எதிர் நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட நிலையில் இருந்து
2.தெய்வம் என்று காரணப் பெயராக வைத்து அந்தத் திசை நோக்கி நாம் எண்ணும் பொழுது அதன் உணர்வுகள்
3.வெள்ளிக் கோளின் உணர்வுகளும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகளும் மற்ற கோள்கள் நிலைகளை இணைந்து
3.இந்த உணர்வு மூன்றும் ஒன்றாகச் சேர்க்கும் அத்தகைய நல்ல உணர்வை உருவாக்கும்
4.இத்தகைய உணர்வுகள் பரவும் பொழுது அந்தத் திசை நோக்கி வைப்பார்கள்.

அதை நோக்கி நாம் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டு அது கவர்ந்து வரும் திசையில் நோக்கும் பொழுது “அந்த உயர்ந்த குணத்தின் உணர்வுகள் நமக்குள் கிடைக்கும் படி வைத்தார்கள்…”

இது எல்லாம் வானவியல் சாஸ்திரத்தைக் கடந்த காலம் இயற்கையின் உண்மை உணர்வு கொண்டு உணர்வினைத் தனக்குள் மனிதனால் பதிவு செய்து கொண்ட உணர்வின் தன்மை கொண்டு… கணக்குகளை மனக்கணக்காக வைத்து அந்த மனக்கணக்கின் உணர்வு கொண்டுதான் தெளிவாக்கி தெளிந்த உணர்வு கொண்டு செயலாக்கி
1.அதன்படி வான இயலின் உணர்வின் தன்மைக்கொப்ப ஆலயங்களை அமைப்பதும் அதன் வழி செயலாக்கமும்
2.அன்று ஸ்தபதியர் என்று அவர்களைச் சொல்வார்கள்.
3.இப்படிக் கணக்கிட்டுச் செயல்படுத்தியவர்கள் உலக நிலையில் பெரும் கொண்ட மெய்ஞானிகளாக இருந்தனர்.

மெய்யைப் பெறுவதற்கு செயல்பட்ட இந்த நிலைகள் எல்லாம் இக்காலங்களில் பிறிதொரு தீமையின் நிலைகளால் மறைந்து விட்டது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோபப்படுபவனைப் பார்த்து இரக்கமற்றுக் கொல்பவனை நாம் பார்க்க நேர்ந்தால் இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு உணர்வின் கருத்தன்மை அடைகின்றது நம் இரத்தங்களிலே. ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

ஆக… இப்படித் தவறு செய்கின்றானே…! மற்றவனைத் துன்பப்படுத்துகின்றானே… கொல்கின்றானே…! என்ற இந்த உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் அதனின் உணர்வுகள் நமக்குள் பெருகி “இரத்தக் கொதிப்பாக” மாறுகின்றது. நல்ல உடலை உருவாக்கிய அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

ஆக…
1.எப்படி எல்லாம் உணர்வுகளை இந்த உயிர் இயக்குகிறது…?
2.எத்தனை விதமான உணர்வுகளை நுகருகின்றோமோ உயிர் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதை அறிவதற்குத்தான்
3.நகருக்குள்ளும் நாட்டுக்குள்ளும் காட்டுக்குள்ளும் எம்மைச் செல்லும்படி செய்து
4.அந்த இயற்கையின் உண்மையின் உணர்வலைகள் எப்படி இயங்குகின்றது…?
5.அதிலிருந்தெல்லாம் நீ எப்படி மீள போகின்றாய்…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

இரவிலே சுற்றும்படி செய்து ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கும்படி செய்வார்.
1.அந்தக் குடும்பத்தில் சாபமிட்டவர் எத்தனையோ பேர்கள்.. தொல்லைப்படுத்துவோர் எத்தனையோ பேர்கள்…
2.தொல்லைப்படுத்துவோர் இறந்தபின் அவர்கள் குடும்பத்தில் என்ன ஆகின்றது…?
3.ஆவியாக பின் அதே பற்றுடன் இன்னொரு உடலுக்குள் சென்று பேயாக அது எப்படி ஆட்டிப் படைக்கின்றது…?

அவர்கள் செல்வந்தராக இருந்தாலும் உடலுக்குள் சென்று அந்தச் செல்வத்தைக் காப்பதற்கு மாறாக தவறின் நிலைகள் இழைக்கப்பட்டு… அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கடும் நோயாக உருவாக்கப்பட்டு… தேடிய செல்வத்தைப் பாதுகாக்க முடியாத நிலையும்… தன் உடலில் கடும் நோயாக அவர்கள் எப்படி வேதனைப்படுகின்றார்கள்…? என்பதையும் ஒவ்வொரு வீட்டிலும் இரவிலே அதைப் பார்ப்பதற்காகச் சுற்றி வரும்படி செய்வார் குருநாதர்.

அவர்கள் வீட்டிற்கு நேராக சில இடத்தில் அமரும்படி செய்து அதைச் செயல்படுத்துவார். ஆனால் இதை உள்ளூரிலே செயல்படுத்துவதில்லை. ஏனென்றால் “என்னை யார்…?” என்று தெரிந்து கொள்வார்கள் அல்லவா…!

ஆகையினால் வெளியூர்லேதான் இதையெல்லாம் அமர்ந்து பார்க்கும்படி சுற்றிப் பார்க்கும்படி செய்வார். தெரியாத இடத்திலே “ஒரு பிச்சைக்காரன்…” போன்று அமர்ந்து அதைப் பார்க்கும்படி சொல்வார்.

இறந்த ஆன்மாக்கள் பழி தீர்க்கும் உணர்வுடன் அந்தக் குடும்பத்திற்குள் சென்றது. அந்த உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…? அந்த உணர்வுகளை நுகரச் செய்வார்.

1.உடலுடன் இருக்கும் பொழுது “பாவிப்பயல்…!” இப்படியெல்லாம் என்னை மோசம் செய்கின்றான்…! என்று எண்ணிய உணர்வுகள்
2.“ஆக இப்படியா…!” என்று இவருக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலிலே விளைந்து அது எப்படிக் கடும் நோயாக மாறுகின்றது…?
3.உறுப்புகள் சிதைந்து போகச் செய்து நல்ல உறுப்புகளை எப்படிப் பாழ்படுத்துகிறது
4.கை கால் அங்கங்கள் வராதபடி எப்படிச் செயல்படுத்துகின்றது…?

இதனின் உணர்வுகள் வளரும் பொழுது…
1.இனம் புரியாதபடி விபத்துகள் ஏற்படுவதும்
2.முந்திய வினைகள் அந்த உணர்வின் வளர்ச்சி பருவம் வரும் பொழுது அதனுடைய இயக்கங்கள் எப்படி இயக்குகின்றது…? என்பதனையும்
3.இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படிச் செய்தார்.

ஏனென்றால்
1.உண்மையின் உணர்வின் இயக்கங்களைப் பற்றி நீ நேரடியாகத் தெரிந்து கொண்டால் தவிர மற்றதை நீ உணர முடியாது
2.காரணம்… உன்னுடைய உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் நீ செல்வாய்.
3.பிறிதொரு உணர்வின் இயக்கம் மனிதனை எப்படி மாற்றுகின்றது…? என்பதனை நீ அறியவில்லை என்றால்
4.உன்னால் உனக்குள் புகும் தீமைகளை நீ மாற்றி அமைக்க முடியாது.

ஆகவே மனித வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை மாற்றி அமைத்த அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகளைப் பெறக்கூடிய தகுதி நீ எப்படிப் பெற வேண்டும்…? என்று இப்படித்தான் எனக்கு உணர்த்திக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் தியானித்து அந்தச் சக்திகளை பெற்றுக் கொண்டே வருகின்றோம்.

1.புதிதாக இந்தத் தியானம் செய்வோரும் சரி…
2.ஏற்கனவே செய்து பழகியோரும் சரி…
3.அதை எவ்வாறு பெற வேண்டும்…? என்றும்
4.அதை எப்படிப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்…? என்பதையும் உணர்ந்து கொள்வது நல்லது.

தியானத்தில் எடுக்கும் பொழுது துருவ நட்சத்திரம் என்று எண்ணினாலும் அது துருவ நட்சத்திரம் என்று தெரியாது. ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகள் நம் உடலுக்குள் மோதும் பொழுது ஒரு வெளிச்சம் வரும்.
2.அங்கே மட்டுமல்ல… நம் உடலுக்குள்ளும் ஒரு விதமான அலைகள் வரும்
3.உடலுக்குள் அந்த உணர்வலைகள் அலை அலையாகப் படர்ந்து அது வெளியேறும் (சீராகத் தியானம் செய்வோர் இதைப் பார்த்திருக்கலாம்)

ஏனென்றால் புதிதாக இருப்பதால் சிலர் இதைப் பார்க்க முடியவில்லை அல்லது தெரிய முடியவில்லை என்றாலும் தொடர்ந்து எடுத்துப் பழகுதல் வேண்டும்.

காரணம்… இந்த வாழ்க்கையில் நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்ட சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் குரோதம் பயம் அதிகமாக நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

இதை நாம் அமைதிப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஆரம்பத்திலே நாம் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும்
1.அந்த உணர்வுகள் நம் ஆன்மாவிலே முன்னாடி இருப்பதால்
2.அதைப் பிளந்து விட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசித்து எடுக்க முடியாது.

தியானத்தில் கண்களை மூடி இருக்கும் போது அப்போது என்ன நடக்கிறது…?

யார் யாரிடம் சண்டையிட்டோமோ அல்லது கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் ஏற்பட்டதோ… குடும்பத்தில் பையன் சொன்னபடி கேட்கவில்லை அவன் சரியாகப் படிப்பதில்லை ஏதாவது சொன்னால் அவன் அடிக்கடி முறைத்துப் பார்க்கின்றான்… திட்டுகிறான்… சாபமிடுகின்றான்…! என்று இது போன்று எத்தனையோ உணர்வுகள் வரும்.

என்னால் தியானத்தில் அமர முடியவில்லை… ஒருநிலைப்படுத்த முடியவில்லை (CONCENTRATION) என்ற நிலை வரும் இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும் அல்லவா.

அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதெல்லாம்
1.உடனடியாக கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்த வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி
3.எங்கள் உடல் முழுவதும் அது படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
4.கண்களைத் திறந்து இப்படி எடுத்துச் செலுத்தி வலுப்பெற்ற பின் குறுக்கே வரும் சங்கட அலைகளை மற்ற நினைவுகளை விலக்கிச் செல்லும்.
5.அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அமைதி கொண்டு நாம் பெற முடியும்.

ஆனால் அதே சமயத்தில் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த சங்கடமும் மற்ற நிலைகளும் குறுக்கே வந்து கவரும். மீண்டும் அவ்வாறு சிந்தனை இல்லாது வந்தாலும் “உடனே கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்த வேண்டும்…!”

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிச் சுவாசித்து எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்… எங்கக் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று இந்த உணர்வுகளைச் சேர்த்து அடிக்கடி சுத்தப்படுத்திக் கொண்டு வந்தால்
1.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கும் சிறுகச் சிறுக இந்த வலு ஏற்றப்பட்டு
2.தீமை வராதபடி… பிற உணர்வுகள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

சோப்புப் போட்டு துணியில் உள்ள அழுக்கை நீக்குவது போன்று… ஒரு தடவை செய்து சரியாக வரவில்லை என்றால் இரண்டாவது தடவை மீண்டும் அந்தச் சோப்பைப் போட்டு நீக்குவது போல்… ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் ஆன்மாவை அது துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

இது தான் தியானப் பயிற்சி…!

தியானம் இருந்தேன்… எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை எங்கே உட்கார்ந்தாலும் எழுந்து செல்லும்படி செய்கின்றது எனக்கு ஒரு எதிரி இருக்கின்றான் அவனை நினைத்தவுடன் தியானம் செய்ய முடியவில்லை என்று அதையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

அதே போல் வியாபாரத்திலோ மற்ற வகைகளிலோ கொடுக்கல் வாங்கலில் சண்டையிட்டிருந்தால் நினைவுகளைத் தூண்டி “அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்…!” என்றெல்லாம் சிலருக்கு தியானத்தில் அமரும் பொழுது அந்த உணர்வுகள் வரும்.

அப்பொழுதெல்லாம் உடனடியாகக் கண்களைத் திறந்து “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.இப்படிச் செலுத்தினால் முன் நின்று சுவாசித்து (துருவ நட்சத்திரத்தின் சக்தியை)
2.உடலில் அந்த தீமை செய்யும் உணர்ச்சிகளை மாற்றிடும் சக்தி நமக்குள் உருவாகின்றது.

பின்.. யார் நமக்குத் தொல்லை கொடுத்தார்களோ… அறியாது செய்யும் தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்… பிறருக்கு நல்லது செய்யும் அந்த எண்ணங்கள் அவர்களுக்குள் தோற்றுவிக்க வேண்டும்…! என்று எண்ண வேண்டும்.

பையன் சொன்னபடி கேட்கவில்லை எதிர்த்துப் பேசுகிறான் என்றால் அந்த உணர்வுகள் தியானத்தை எடுக்க விடாதபடி தடுக்கும்.

அந்த நேரத்தில் உடனே கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு… என் பையன் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும்… சிந்திக்கக்கூடிய ஆற்றல் வரவேண்டும்… உயர்ந்த பண்புகள் வளர வேண்டும் என்று இந்த உணர்வை அங்கே “அவன் மீது பாய்ச்ச வேண்டும்….”

இப்படி எண்ணி எடுத்தால் அவன் உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க முடியும். அதே சமயத்தில் அவனைப் பற்றி உயர்ந்த எண்ணங்களைச் சிந்திக்கும் ஆற்றல் நமக்குள் வலுவான நிலைகளாக உருவாகிறது.

இப்படி எடுத்துப் பழகினால் தான் “தியானத்தில் அந்தச் சக்தி நமக்குள் வளர்ந்து கொண்டே வரும்…”

எடுத்தவுடனே முழுமையாக அந்தச் சக்தியைக் கொண்டு வரமுடியாது.

உடலில் எத்தனையோ வகையான உணர்வுகள் உடலுக்குள் சுழன்று கொண்டிருப்பதால் அதை மாற்றிட
1.கண்களைத் திறந்து மீண்டும் மூடி
2.திரும்பக் கண்களைத் திறந்து மூடி…
3.இப்படி நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுக்கும் ஒரு பழக்கமாக
4.துருவ நட்சத்திரத்தினை இணைத்துக் கலவையாக மாற்றி
5.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுக்கக்கூடிய ஒரு பயிற்சியாக நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

சப்தரிஷி மண்டலத்தை அடையச் செய்யும் தொடர் வரிசை

 

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றோமோ…
1.உடலை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்று அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டால்
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர் வாழ்ந்த காலத்தில் நம்முடன் பழகியதை எண்ணி “ஐயோ… நல்லவராக இருந்தார்… இங்கே எல்லாம் வந்தார்… இப்பொழுது போய்விட்டாரே…!” என்று எண்ணுவதை விடுத்துப் பழக வேண்டும்.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால் மனித வாழ்க்கையின் துன்பத்தை அவர் கடந்தார்… இனி பேரின்பப் பெரு வாழ்வு அவர் பெற வேண்டும்…! என்ற இந்தப் பேரின்பத்தைத் தான் எண்ண வேண்டும்.

1.உடலில் வாழ்ந்த காலத்தில் பல துன்பங்களை அனுபவித்தார்
2.உடலை விட்டு அகன்ற பின் இனித் துன்பமில்லா ஏகாந்த நிலையை அவர் அடைய வேண்டும்
3.அவர் அருள் ஒளி பெறுதல் வேண்டும்
4.உலகில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்… அவர் அருளானந்தம் பெற வேண்டும்
5.அந்த ஆன்மா ஏகாந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உடலிலே நீடித்த நாள் வாழ்ந்தவர் எவரும் இல்லை. ஆகவே நாம் செயல்படுத்த வேண்டியது துன்பத்தைக் கடந்து அவர் செல்கின்றார்… பேரின்பத்தை அவர் அடைய வேண்டும் என்பது தான்.

அவர் உணர்வு நமக்குள் இருப்பதால் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்துதல் வேண்டும்.
1.நமக்குப் பின்னும் இதே போன்று… “பின் உள்ளோர்” நாம் உடலை விட்டுப் பிரிந்த பின்
2.நாம் செய்வது போன்று அவர்கள் செய்தார்கள் என்றால் நாமும் எளிதில் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.
3.அந்தத் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்

அதற்குத் தான் கூட்டமைப்பாக அமைத்துள்ளோம்.

ஏனென்றால் “ஒரு மனிதன் தனித்த நிலைகள் அங்கே செல்ல முடியாது…!” ஒன்றுபட்ட உணர்வினை இயக்கப்பட்டுத் தான் செயல்படுத்த முடியும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் எப்படி விண் செலுத்துகின்றோமோ… இது போல நம்முடன் தொடர் கொண்டவர்கள்… நம்முடன் இணைந்தவர்கள்… கேள்வியுற்றபின் அங்கே செலுத்த வேண்டும்.
1.இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் சென்று விடாது அருள் ஒளி என்ற நிலைகள் உந்தப்பட்டு
2.என்றும் ஏகாந்த நிலை என்ற ஒளியின் சரீரத்தை நாம் பெற இது உதவும்.

ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழ்கின்றது… ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் உணர்வு ஒன்றுதான் நாம் வாழுகின்றோம்…!

ஆகவே இதை வழிப்படுத்தி நாம் செயல்படுத்துதல் வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவருமே வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழுகின்றது. இயற்கையின் நியதி இது.

அதைப் போன்று ஒரு நண்பரின் துணை கொண்டு தான் நாமும் வாழுகின்றோம். ஆனால் சந்தர்ப்பத்திலே அதிலே வெறுப்பு என்ற உணர்வுகள் வரும் பொழுது
1.இதிலிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுகளைத் தூண்டுகின்றது
2.எதிரியிடமிருந்து மீள வேண்டும் என்று வருகின்றது.
3.எதிரி என்ற உணர்வுகள் இல்லை என்றால் “தன்னைக் காக்கும் நிலை” என்பதே மறந்துவிடும்.

ஆகவே எந்த நிலை ஆனாலும் நமது வாழ்க்கையில் எதிர்ப்பு என்று வரும் பொழுது… அடுத்து சிந்தித்து நாம் அதிலிருந்து மீளும் உணர்வுகளை எடுத்தால்… அந்த வெறுப்பு நமக்குள் வராதபடி தடுக்க முடியும்

1.நஞ்சின் தாக்குதல் இல்லை என்றால் அணு என்ற இயக்கமும் இல்லை
2.நஞ்சின் தாக்குதல் இல்லை என்றால் கோள் அதுவும் உருவாகாது.
3.நஞ்சின் தாக்குதலினால் தான் சுழற்சியின் தன்மை ஆகி அதனால் வெப்பமும் ஈர்க்கும் காந்தமும் அது உருவாகின்றது.

கோள் என்று வரும் பொழுது தான் சுழற்சியில் அது வளர்ச்சி பெற முடியும். சுழற்சியின் வேகம் கூடும் பொழுது தான் சூரியனாகி… நஞ்சை வெல்கின்றது. ஒளியின் தன்மையாகப் பிரகாசிக்கின்றது. நஞ்சு இயக்கினாலும் அந்த நஞ்சை வெல்லக்கூடிய சக்தி சூரியன் பெறுகின்றது.
1.நஞ்சை வென்றாலும் அதனின் தொடர் கொண்டு
2.அந்த இயக்கத்தின் வரிசையில் வாழுகின்றது.

இதைப் போன்று தான் நமக்குள் வரும் உணர்வின் தன்மையும்…! “விருப்பும் வெறுப்பும்” அது எத்தகைய நிலையில் வந்தாலும் அதை நமக்கு நன்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நெருப்பு என்று வரும் பொழுது அதை ஒளியாக… வெளிச்சமாகப் பயன்படுத்தி அதனால் மற்ற பொருளைத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது. அதே சமயத்தில் அந்த நெருப்பை அதிகரித்து கடினமான பொருள்களையும் நாம் உருக்குகின்றோம்.

உணவுப் பதார்த்தங்கள் அனைத்துமே அந்த நெருப்பை வைத்து நாம் சமைக்கின்றோம். அந்தப் பக்குவங்கள் கொண்டு வரும் பொழுது உணவு சுவையாக மாறுகின்றது. அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வெறுப்போ துன்பமோ இவைகள் வரும் பொழுது அதனை நாம் அடக்கி
2.நன்மை பயக்கும் நிலையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய சக்தி பெற்றது தான் நம் ஆறாவது அறிவு. தீமை என்று வந்தாலும் அதைச் சுவைமிக்க நிலையாக மாற்றிக் கொள்ளும் நிலையில் அவ்வாறு சுவை மிக்கதாக மாற்றிக் கொண்ட “அருள் ஞானிகள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி… ஆனந்த நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்…!”

1.நெருப்பை வைத்து உணவைச் சமைத்து நாம் ஆனந்தமாக எப்படி உட்கொள்கின்றோமோ
2.அதே சமயத்தில் இருளை நீக்கி அந்த நெருப்பு ஒளியாகக் காட்டும் போது பொருள்கள் தெரிகிறது என்று எப்படி ஆனந்தப்படுகின்றோமோ
3.சாதாரணமாக உருக்க முடியாத பொருள்களை நெருப்பை வைத்து உருக்க நாம் முற்படும் பொழுது அது உருகி விட்டால் அதைக் கண்டு நாம் எப்படி ஆனந்தப்படுகின்றோமோ
4.எதனை உருக்க எதனின் தன்மை வேண்டும்…? என்ற நிலையில் கடுமையாக இருந்தால் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று நாம் எப்படி அறிந்து கொள்கின்றோமோ இது போன்று…
5.கடுமையான பகைமைகள் வந்தாலும் அது நம்மைத் தாக்காதபடி அருள் ஒளியைக் கூட்டி அந்தப் பகைமைகளை நீக்கி நாம் ஆனந்தப்படுதல் வேண்டும்.
6.நாம் எடுக்கும் உணர்வின் தன்மை கொண்டு அந்த ஆனந்தம் என்ற நிலை வருதல் வேண்டும்.

ஆகவே… நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் தன் வாழ்நாளில் தீமைகளை நீக்கினான். தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அவன் கருவிலே பெற்றது கருவிலே பெற்ற உணர்வின் துணை கொண்டு தான் அருள் ஞானமே அவன் பெறுகின்றான்.

விஷத்தை முறிக்கும் ஆற்றலைப் பெற்றுப் பிறந்த பின் அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தைக் கண்டு மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகின்றது. இவன் தீமையிலிருந்து விடுபடுகின்றான்.

விஷத்தின் தன்மை முறிக்கும் சக்தி இவன் உடலில் இருப்பதனால் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அந்த விஷங்கள் பிரிகின்றது. விஷங்களைப் பிரிக்கப்படும் பொழுது எப்படி ஒளிக் கற்றைகளை வெள்ளிக்கோள் எடுத்துக் கொள்கிறதோ அது போல்
1.மின்னலில் இருந்து வரக்கூடிய அந்த உணர்வின் ஒளிக் கற்றைகளை அகஸ்தியன் நுகர்கின்றான்
2.தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் அதைச் சேர்த்துக் கொள்கின்றான்.

ஏனென்றால் 27 நட்சத்திரங்களும் கடும் விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும் மோதலில் விஷத்தைப் பிரித்து விட்டு ஒளியின் உணர்வாக வரப்படும் பொழுது அதனை அகஸ்தியன் நுகரும் தன்மை வருகிறது.
1.அப்படி நுகர்ந்த உணர்வுகள் தான்
2.அவன் உடலுக்குள் உயிரைப் போன்றே உணர்வின் தன்மை பெறுகிறது.

27 நட்சத்திரங்களும் ஆண் பெண் என்ற துடிப்பின் நிலைகள் வரும் பொழுது தான் உயிரின் தன்மை ஈர்க்கும் தன்மை வருகின்றது.

27 நட்சத்திரங்களின் சக்திகளை ஒன்றாக இணைத்திடும் உணர்வுகளைத் தெரிந்து கொண்ட பின் அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்…? ஒன்றாக உடலில் இணைக்க வேண்டும்…! என்று அறிந்து கொண்டவன் அகஸ்தியன்.

வியாழன் கோள் 27 நட்சத்திரங்களுடைய சக்திகளை ஒன்றாகச் சேர்த்து குருவாக இருந்து மற்றவைகளுடன் சேர்த்துக் கலவையாக மாற்றுகின்றது என்பதையும் அகஸ்தியன் அறிந்து கொள்கிறான்.

அதே சமயத்தில்
1.நம் உயிரும் வியாழனாக (குருவாக) இருக்கின்றது
2.ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் எல்லாவற்றையும் ஒன்றாக்கிச் சேர்த்துக் கொண்டால் தனுஷ்கோடி
3.தீமைகளை நீக்கும் உணர்வினைச் சேர்த்து பகைமைகள் நமக்குள் வராதபடி உயிருடன் ஒன்றி ஒன்றாக்கப்படும் பொழுது
4.எல்லாம் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது “கோடி…!”
5.உயிர் ஒன்றாகின்றது… ஒளி என்ற உணர்வு ஆகின்றது.

இராமாயணத்தில் எண்ணத்தைக் கொண்டு (உணர்வுகள்) வாழ்க்கை எப்படி நடத்துகிறோம்…? என்று தான் காட்டப்பட்டுள்ளது. நமக்குள் எண்ணங்கள் எப்பொழுதும் உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது. குருக்ஷேத்திரப் போராக உயிரிலே வழி நடத்திக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆகவே இந்த உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தான் காவியங்களாகப் படைத்துச் சாஸ்திரங்களாகக் காட்டினார்கள் ஞானிகள்.
1.நாம் எதை எதைத் தவிர்க்க வேண்டும்…?
2.எதை எதை வளர்க்க வேண்டும்…? என்ற உண்மைகள் உணர்த்தப்பட்டது.

அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் பொழுது பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் அவருடைய தாய் தந்தையர்கள் படுத்திருக்கும் இடங்களில் பரப்பி வைத்திருந்தனர். அந்த மணங்களை எல்லாம் தாய் நுகர்கின்றது… அப்போது விஷத்தை முறிக்கும் தன்மை வருகின்றது.

உதாரணமாக… ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் விஷம் கொண்ட தேள் நம்மைக் கொட்டுவதில்லை கீழே போட்டால் உடனே கொட்டிவிடும்.

ஒரு பச்சிலையைக் கையில வைத்துக் கொண்டால் விஷமான பாம்பும் நம்மைத் தீண்டாது. ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் தேனீக்களும் கொட்டாது.

இது போன்ற உண்மைகளைக் கண்டுணர்ந்த அகஸ்தியனுடைய தாய் தந்தையர் பல விஷ ஜந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொண்டார்கள்.

மின்னல் தாக்கப்படும் பொழுது அது உடலில் தாக்கப்பட்டால் கருக்கிவிடும். ஆக மொத்தம் அந்த மின்னலின் விஷத்தன்மையை அடக்குவதற்கும் அனுபவரீதியாகப் பச்சிலைகளைக் கண்டறிந்து இரவிலே படுத்துத் தூங்கும் பொழுது அதைப் பரப்பி வைத்துக் கொள்வார்கள்.

அதே சமயத்தில் வெளியிலே செல்லும் போது அந்த மின்னல்களில் இருந்து தப்புவதற்காக
1.பச்சிலைகளைக் குப்பிகளில் போட்டு உடலில் அணிகலன்களாகப் போட்டுக் கொள்வார்கள்.
2.சில கல்லின் (கற்கள்) தன்மை அரைக்கப்பட்டு விஷத்தின் தன்மை நீக்கும் அத்தகைய பாசிகளையும் கழுத்திலே போட்டுக் கொள்வார்கள்.
3.எங்கே சென்றாலும் மின்னல்கள் பாய்ந்தால் தன்னைத் தாக்காதபடி காத்துக் கொள்வதற்கு அக்காலங்களில் இப்படி எல்லாம் செயல்படுத்தினார்கள்.

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது அன்று வாழ்ந்த மனிதர்கள் இந்த உபாயங்களை எப்படித் தெரிந்து கொண்டார்கள்…? பச்சிலைகள அனுபவபூர்வமாக எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று காட்டுகின்றார்.

அகஸ்தியன் தாய் தந்தையர் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நுகர்ந்த உணர்வுகளும் அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் மணங்களாக வெளிப்பட்டது அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு இன்றும் இந்தப் பூமியில் உண்டு.
1.அதைப் பெறச் செய்வதற்கு குருநாதர் எனக்கு இப்படிக் கொண்டு வந்தார்
2.உங்களுக்குள்ளும் இதைப் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதைப் பதிவாக்குகின்றேன்
3.பதிவானதை நினைவு கொண்டால் உங்கள் எண்ணம் இந்தக் காற்றிலிருந்து அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்யும்.

அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்

 

ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதியுங்கள் அவர்கள் உடலையும் கோவிலாக மதியுங்கள். உடலைச் சிவமாக மதியுங்கள் அவருடைய கண்களைக் கண்ணனாக மதியுங்கள்.

அவர்களை மதிக்கப்படும் பொழுது நமது கண்ணை மதிக்கின்றோம் நமது உயிரை மதிக்கின்றோம் உடலை சிவம் என்று மதிக்கின்றோம் அருள் ஞானிகள் உணர்வு நமக்குள் வரும் பொழுது அந்தக் கணங்களைக் கணபதி என்று மெச்சுவோம். ஆறாவது அறிவை முருகன் என்று மதிப்போம்.

1.அருள் ஒளி கொண்டு தீமைகளை அகற்றிடும் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனையும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்
2.அப்படி நாம் எண்ணினோம் என்றால் ஒரு மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்வை மாற்றிட முடியும்.
3.அவர் மேல் வரும் பகைமைகளைத் தடுத்திட முடியும்

ஒவ்வொரு உயிரையும் ஈசனாகவும் கண்ணைக் கண்ணனாகவும் உடலைச் சிவனாகவும் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு அந்த வினைக்கு நாயகனாக மனித உடல் என்றும் தீமைகளை அகற்றும் சக்தியாக மனித உடல் பெற்றதை ஆறாவது அறிவை முருகன் என்றும் எண்ணுங்கள்.

நம் எண்ணமே இராமன் என்றும் உயிரை ஈசன் என்றும் உயிருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் உயிரால் ஈர்க்கப்படும் காந்தத்தை லட்சுமி என்றும் நாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வே நமக்குள் வளர்ச்சி பெறுகின்றது என்ற நிலையை
1.ஒவ்வொரு மனிதனையும் அத்தகைய சக்தி வாய்ந்தவர்கள் என்று எண்ணினால் நமக்குள்ளும் அதைப் பெறுகின்றோம்.
2.நீங்கள் வாழ வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
4.உங்கள் உயிரை மதிக்கின்றேன் உங்கள் உடலைச் சிவமாக மதிக்கின்றேன் உங்கள் கண்ணைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
5.இப்படி எண்ணும் பொழுது கண்களால் அவர்களைப் பார்க்கப்படும் பொழுது வெறுப்பு வருவதில்லை.

ஒருவர் தவறான நிலைகளைச் செய்து விட்டால் நாம் பார்த்தவுடன் கண்கள் சிவந்து விடுகின்றது. கண்ணனுக்கே நாம் துரோகம் செய்கின்றோம் அந்த உணர்வினை நுகர்ந்து விட்டால் உடலான சிவனுக்குத் துன்பத்தை உருவாக்குகின்றோம்.

ஆகவே நம் ஆறாவது அறிவைத் தெளியும் மனதினை… வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது முருகனுக்கே நாம் துன்பத்தை உருவாக்குகின்றோம் என்று நினைவில் வையுங்கள்.

அருள் ஞானம் பெற்ற இந்த உணர்வு கொண்டு அண்டம் பிண்டத்திற்குள் உருப்பெற்ற உணர்வின் சக்தியை நீங்கள் தெளிந்து ஒவ்வொரு மனிதனையும் இதைப் போல எண்ணி ஏங்குங்கள். மதம் இருக்காது இனம் இருக்காது மொழி பேதம் இருக்காது

1.ஒவ்வொரு நொடியிலும் உங்களை நான் நேசிக்கும் பொழுது என்னை நேசிக்கும் பண்பு வருகின்றது.
2.நான் உங்களைக் கடவுளாக மதிக்கும் பொழுது என்னை நீங்கள் கடவுளாக மதிக்கின்றீர்கள்.
3.கடவுள் என்ற தன்மை வரும் பொழுது பகைமைகள் அகற்றப்படுகின்றது.

குறைகளைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே பெற வேண்டும் ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும். அந்த உடலின் தன்மை சிவனாக வீற்றிருக்கும் அந்த ஆலயம் நல்ல நிலை அடைய வேண்டும் நல்வழி காட்டும் கண்ணன் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அந்தச் சக்தி நமக்குள்ளும் பெருகுகின்றது

ஆகவே
1.இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்.
2.உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் செலுத்துங்கள்
3.பேரின்பப் பெரு வாழ்வு அடையுங்கள்
4.என்றும் பிறவியில்லா நிலை அடைய இந்த வாழ்க்கை அது உதவும்.
5.அருள் ஒளியைப் பெறுங்கள்… அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா…! புருவ மத்தியில் இருக்கும் உயிர்…
1.நாம் பார்ப்பதை… கேட்பதை… நுகர்வதை எல்லாம் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது..
2.ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! ஆதிசக்தி என்பது விஷம் அந்த விஷத்தின் தாக்குதலால் ஏற்படுவது தான் வெப்பம் அந்த வெப்பத்தின் தாக்குதலால் அணுக்களாகச் சிதறி ஓடுகின்றது.

சிதறி ஓடும் போது அந்த நேரத்தில் ஈர்க்கும் காந்தம் வருகின்றது. அதற்கு லட்சுமி என்று காரணப் பெயர் வைத்துள்ளார்கள்.

1.நமது உயிர் ஆதி சக்தியின் துடிப்பின் இயக்கமாக நம்மை இயக்கிக் கொண்டுள்ளது
2.அதனால் தான் ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! என்று சொல்கின்றோம்.

குருதேவா…! நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் குணங்களுக்கும் உடலுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது ஆகவே நான் நமது உயிரைக் குருவாக எண்ணி ஏங்குகின்றோம்.

நமது குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்)
1.எதன் வழியில் இந்த வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் அருள் சக்தி பெற்றாரோ அந்தச் சக்திகளையும்
2.அகஸ்தியன் பெற்றதை நமது குரு பெற்று அதன்வழி நமக்குள் உபதேசித்த உணர்வையும்
3.நாம் நுகர்ந்து நமக்குள் பதிவாக்கிக் கொண்ட பின்…
4.அப்படிப் பதிவான அனைத்தையும் நாம் குருவாக மதித்தல் வேண்டும்.

ஒரு மனிதன் கோவிக்கின்றான் என்றால் அந்த கோபத்தின் உணர்வு நமக்குள் பதிவாகி இருக்கும் பொழுது அதை மீண்டும் எண்ணினால் அந்த கோபத்தின் உணர்வே நமக்குள் குருவாக இருக்கும்.

அதே போன்று வேதனையான உணர்வை நுகர்ந்தால் வேதனையை அறிகின்றோம்… அந்த உணர்வு பதிவாகிறது. மீண்டும் அதே வேதனையை எண்ணினால் அதுவே வேதனைப்படுத்தும் உணர்வின் குருவாக நமக்குள் இருக்கும்.

1.ஆனால் நமது குரு மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி பெற்றவர்.
2.அவர் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் அதைக் குருவாக உருவாக்க வேண்டும்.

நமது உயிரும் பல கோடிச் சரீரங்களைக் கடந்து ஈசனாக இருந்து வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் உடலை (மனிதனாக) அமைத்தது… நமக்குக் குருவாக அமைந்திருக்கின்றது அனைத்திற்கும் குருவாக நம் உயிரே இருக்கின்றது.

என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்…! எதை எல்லாம் நாம் எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் இசையாகச் சொல்லாகவும் செயலாகவும் நான் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலாகவும் அமைத்துக் கொண்டு இருப்பது நம் உயிர் தான்.

ஆகவே…
1.இயற்கை நிலைகள் என்னை மனிதனாக உருவாக்கிய
2.இந்த உணர்வின் நினைவு எனக்குள் எப்பொழுதுமே வரவேண்டும்.

அதாவது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் மனித சரீரத்தைக் கொடுத்த “உயிரான ஈசனை… நாம் நினைவில் கொள்தல் வேண்டும்…”

இருளை நீக்கி ஒரு பொருளைக் காணச் செய்வதும்… அந்த உணர்வின் உணர்ச்சியின் இயக்கங்களைக் காணச் செய்வதும்… நமது உயிரே. உணர்வை அறிவாக இயக்கி அறிவின் உணர்வாக நம்மை இயக்குவதும் நமது உயிரே. எப்பொழுதுமே உன் நினைவாகவே நான் இருத்தல் வேண்டும்,

என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்…!
1.உயிராக இருந்து நுகர்ந்த உணர்வுகளை எப்படி எனக்கு அறிவிக்கின்றாயோ
2.இதைப் போன்று ஏகாந்த நிலைகள் கொண்டு அருள் ஒளி பெற்று துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருள் ஒளியைப் பெற்று
3.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக உருவாக்கும் உணர்வு அந்த நினைவு என்னில் வர வேண்டும் ஈஸ்வரா.

உயிரான உணர்வுகள் ஒளியான உணர்வாக உருவாகி… அனைத்தையும் உணர்வின் அறிவாக இயக்குவதும்… மனிதன் ஆன பின் அனைத்து அறிவையும் இயக்கி
1.அறிவின் ஒளியாக ஒளியின் சரீரமாக உருவாக்கும் அந்த (உன்னுடைய) அருள்…
2.உன் நினைவு எனக்குள் வரவேண்டும் என்று தான் பொருள்.
3.உயிரின் நினைவாகவே… நினைவுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றியே நாம் வாழ்தல் வேண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகிறது என்று அறிகின்றோம். ஆகவே அருள் ஒளி பெறும் உணர்வினை நாம் எண்ணி நம் எண்ணங்கள் அனைத்தும் உயிருடன் ஒன்றி அவனிடம் அதை வேண்டினால்
1.நாம் வேண்டிய உணர்வுகளை ஒளியாக இயக்குகின்றான்
2.இருளை அகற்றிடும் ஒளியாக மாற்றுகின்றான்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அகஸ்திய மாமகரிஷியின் அருல் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

இந்த உணர்வுகளை உயிர் வழி செலுத்தப்படும் பொழுது
1.அதன் உணர்வைப் பெறும் நிலையாகவும்…
2.அதன் வழி நுகரச் செய்வதும்…
3.அந்த அருள் ஒளியை நமக்குள் இயக்கச் செய்வதும்…
4.அணுவாக உருவாக்குவதும் அதை உடலாக ஆக்குவதும்…
5.“அருள் வழியில் – அதுவே உயிரின் வேலை…!”

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி… உயிரான ஈசனை மதித்து… உடலில் இருக்கும் அனைத்திற்கும் ஈசனும் அவனே…! குருவும் அவனே…! என்று மதிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனை வேண்டுவோம்.

பின் கண்களை மூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தநாளங்களில் கலந்து… இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில்
1.தாய் கருவிலே அவன் பெற்ற நஞ்சினை வென்றிடும் உணர்வுகளையும்
2.அவன் பிறந்த பின் சர்வ நஞ்சுகளையும் தனக்குள் ஒடுக்கிடும் சக்திகள் பெற்றதையும்
3.இருளை அகற்றிடும் அருள் சக்திகள் பெற்று மெய்ப் பொருள் கண்டுணர்ந்து வாழ்ந்த… அவனில் விளைந்த உணர்வுகளையும்
4.நாம் நுகர்வோம்…. நம் உடலுக்குள் செலுத்துவோம்
5.அருள் ஒளி பெறும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.

அகஸதிய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

நஞ்சினை வென்றிடும் மின்னணுக்களை அகஸ்தியன் நுகர்ந்து உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியின் கதிராக அவன் எவ்வாறு மாற்றினானோ அதைப் போன்று நாமும்…
1.அந்த அகஸ்தியன் நுகர்ந்த மின்கதிர்களை எடுப்போம் என்றால்
2.இந்த உலகில் வரும் விஷத்தின் தன்மைகளை அடக்கி ஒளியாக ஆக்க முடியும்.

இரு நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் மோதும் பொழுது மின்னலாகப் பாய்கிறது.
1.அந்த ஒளிக் கதிர்களை அகஸ்தியன் வழியில் எடுத்தால்…
2.(அதாவது) மறைமுகமாக எடுத்து உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இரையாகக் கொடுத்தால்
3.நஞ்சை வென்றிடும் சக்திகளை நிச்சயம் பெறுவோம்.

ஆகவே அகஸ்தியன் எப்படித் துருவ நட்சத்திரமாக ஆனானோ… அதனின்று வரும் பேரருள் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் “இந்த உணர்வை ஊட்டி… உங்கள் நினைவை அங்கே அழைத்துச் சென்று… அந்த உணர்வை நுகரும்படி செய்கின்றோம்…”

அதை நீங்கள் எடுத்துக் கொண்டால் உங்கள் உடலில் அது இந்திரீகமாக மாறி அதே உணர்வுகள் அணுவாக விளையத் தொடங்கும். விளைந்த பின் அது தன் இரைக்காக உணர்ச்சிகளை உந்தும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரும் தன்மையாக வரும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படிக் கவரும் போது… அறிவின் தன்மையாக இருளை நீக்கும் எண்ணங்கள் வந்து… உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்த அது உதவும் என்று தெளிவாகக் கூறுகின்றோம் (ஞானகுரு).

நீங்கள் வாழ வேண்டும் அந்த உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்ற இந்த இச்சையில்தான் குருநாதர் இட்ட கட்டளைப்படிதான் அருள் சேவையாக இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

ஆகவே அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம் அருள் வழியைப் பெறுவோம். இருளை அகற்றிடும் அருள் சக்தியை அனைவரையும் பெறச் செய்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.என்னிடம் (ஞானகுரு) ஆசீர்வாதம் வாங்க விரும்புவோர் உடல் நலம் பெற வேண்டும் “எனக்கு அருளாசி கொடுங்கள்..”
2.என் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் “அந்த அருள் பெற வேண்டும்” என்று கேட்டுப் பழகுங்கள்.

அருள் வழியில் பெற வேண்டிதைக் கேட்டு நீங்கள் வேண்டி வந்தால் அது உங்களுக்குள் பதிவாகும். “யாம் கொடுக்கும் வாக்கு” உங்களுக்குள் அது சீராக இயங்கும்.

குடும்பத்தில் திருமணமோ மற்ற நல்ல நிகழ்ச்சிகளோ நடக்க வேண்டும் என்று அதற்கு அருளாசி வேண்டும் என்று கேட்டால்… அதன் வழியில் நடக்கும் என்று கொடுத்தால்… அதை நீங்கள் பதிவாக்கினால்… சுப நிகழ்ச்சிகள் நிச்சயம் நடக்கும்.

வரன் வரவில்லை… ஒருவரும் கிடைக்கவில்லை…! வந்து பார்த்துவிட்டுச் சென்று விடுகிறார்கள்…! என்று அப்படி எண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் ஒரு சிலர்
1.நான் என்ன செய்தாலும் அது நடக்கவே மாட்டேன் என்கிறது…! என்று எம்மிடம் இப்படிக் கேட்டு விடுகின்றார்கள்.
2.அப்பொழுது நான் எதைச் சொல்வது…?
3.நடக்காது… கிடைக்காது…! என்று சொல்வதா…?
4.நடக்கவே மாட்டேன் என்கிறது என்று அவர்கள் கேட்கும் பொழுது “நான் நடக்கும் என்று சொன்னால்…”
6.அது நடக்கும்…! என்று அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்…?

என் குழந்தைகளுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும்… அவர்கள் எதிர்காலம் சிறந்ததாக இருக்க வேண்டும். சீக்கிரம் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இப்படி வேண்டினால்… யாம் அதன்படி வாக்கு கொடுத்தால் அது செயலாகும். ஏனென்றால் இப்படித்தான் கேட்க வேண்டும்.

நான் வெளியிலே கொடுத்திருக்கக்கூடிய கடன்… பாக்கி பணம் வர வேண்டும். அவர்கள் அதைக் திருப்பி கொடுக்கக்கூடிய சக்தியாக அவர்கள் செய்யும் தொழிலில் வருமானம் வர வேண்டும். எனக்கு அந்த அருளாசி வேண்டும்.
1.நான் பொருளைக் கொடுத்தோர் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும்
2.எனக்கு அவர்கள் பணத்தைக் கொடுக்க வேண்டும் அந்த அருள் வேண்டும் என்று என்னிடம் ஆசி வாங்கினால்
3.அதன் வழி யாம் நடக்கும் என்று சொல்ல முடியும்.

அதே பிரகாரம் நீங்கள் வழி நடந்தால் வர வேண்டிய பணம் சரியாக வந்து சேரும் வாழ்க்கை எதிர்காலமும் நலம் பெற இது உதவும்.

அருள் ஆசியின் தன்மைகள் நாம் எடுத்துக் கொண்ட தவத்தின் தன்மையால் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவான பின்…
1.நீங்கள் அதை எண்ணி வளர்த்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம்… உங்கள் நினைவு… உங்களைக் காக்கும்
3.ஆகவே சீராகப் பயன்படுத்தினால் யாம் கொடுக்கக் கூடிய வாக்கின் பலிதம் சரியாக இருக்கும்.

ஆனால் என்னிடம் கேட்கும் போது கஷ்டமாக இருக்கின்றது… நோய் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… பல காலம் பல டாக்டர்களைப் பார்த்து விட்டேன்…! என்று இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் “நான் எதைச் சொல்வது…?”

என் உடலில் உள்ள சர்வ பிணிகளும் நீங்க வேண்டும் எனக்கு அந்த அருள் ஒளி பெற வேண்டும் நான் உடல் நலம் பெற வேண்டும் அந்த அருள் ஆசி வேண்டும் என்று சொன்னால் “கேட்போர் யாரும் இல்லை…”

ஆகவே அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து நீங்கள் விடுபடுங்கள். குருவிடம் இருந்து பெற வேண்டிய நல்ல வாக்கினை நீங்கள் இழந்து விடக்கூடாது.

ஏனென்றால் எதிர்மறையான எண்ணம் கொண்டு நீங்கள் என்னிடம் கேட்டால்… நீங்கள் சொல்வதை இடைமறித்து நான் வாக்கினைக் கொடுத்தாலும் அது பலிதம் ஆவது சிரமமாகி விடுகின்றது.

நீங்கள் எண்ணிய உணர்வுக்கும் நான் சொல்வதற்கும் எதிர்மறையாகி விடுகின்றது. ஆக மீண்டும் அந்த துன்பத்தைத் தான் நுகருகின்றீர்கள். ஆகவே அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

ஒரு விஷச் செடியின் அருகிலே நல்ல மணம் சென்றால் அது விடுவதில்லை. அது போன்று
1.எந்தக் குணத்தின் தன்மை முன்னணியில் வைத்திருக்கின்றீர்களோ
2.அந்த உணர்வு… நான் கொடுக்கக்கூடிய நல்ல வாக்குகளை ஏற்றுக் கொள்ள விடாதபடி உங்களைத் தடைப்படுத்தி விடுகின்றது.

இதை எல்லாம் நீங்கள் மாற்றிப் பழகுதல் வேண்டும்.

எங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று கேட்டால் பரவாயில்லை.
1.துன்பம் போகவே மாட்டேன் என்கிறது
2.பல தொல்லைகள் வந்து கொண்டிருக்கின்றது
3.நான் என்ன செய்தாலும் ஒன்று முடியவில்லை…” என்று கேட்டால்
4.நான் ஒன்றும் சொல்ல முடியாது.

இதை மாற்றி அமையுங்கள்…! என்று தான் உங்களிடம் சொல்கின்றேன். எப்பொழுது உங்கள் எண்ணம் மாறுகின்றதோ… நல்லதைக் கேட்டு எம்மிடம் ஆசி பெறுகின்றீர்களோ… நாம் கொடுக்கும் வாக்குகள் உங்களுக்குள் பலிதம் ஆகும்.

நான் சொல்லும் முறைப்படி உங்கள் எண்ணங்களை மாற்றிவிட்டு… எதை நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ… அது பதிவாகின்றது. அதன் வழி உங்கள் எண்ணம் உங்கள் நினைவு உங்கள் செயல் அனைத்துமே நல்லவையாக இருக்கும்.

செயல்படுத்திப் பாருங்கள்.

அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

 

ஆத்ம சக்தியின் வளர்ச்சிக்கு வானியலாக வழி வகுத்துத் தந்திட்ட “மகரிஷிகள்…” ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வாழ்வின் உண்மை நிலை உணரும் பொருட்டு…
1.நான் என்பது யார்…? என்ற ஞான முகிழ்விப்பு உதயம் காட்டிட
2.ஆத்ம விழிப்பால் பூரணத்துவ நிறைவைத் தன்னுள் கண்டு… தெளிந்து…
3.அன்பெனும் வித்தை ஊன்றி… ஞான நீரை மனமெனும் நெடு வயல் பாய்ச்சி எதிர் மோதல் களைய
4.பலன் எனும் செழுமை வளர்ப்பை ஆகாரமாகப் புசித்து உலக நலன் நாடும் வழிகாட்டியது
5.அளவுகோல் காணா… “பரிவின் வழி பாசமப்பா…”

உம்மை நீ உணர்ந்து கொண்டிட அளவில் சிறிதாகினும் பிடிப்பின் (உலகப்பற்று) நிலை விலக்கிடப்பா…!

முழுமையாக உம்மை ஆட்கொண்டிட்ட பிறகு… உம்மையே இயக்கும் செயல் சித்தம் தொடர்ந்த பிறகு… ஞானக்கண் திறந்திடவில்லை என்றிட்ட எண்ண (உன்னுடைய) உணர்வே எதிர் மோதல் அமில குணங்களாக வாயு பித்த சிலேத்துமம் என்பதில் ஒன்றின் பிரிவே கிளையாகக் கிளைத்து எழுந்தது உடல் நலிவின் காரணம்.

காயத்தைக் கல்வப்படுத்திடும் மூலிகை அன்றோ அருந்தினாய். காயத்திற்கு ஏது நலிவு…? எண்ணத்தின் சோர்வன்றோ விளையாடியது. “பஞ்சமுக ஒளியின்” பாடம்தான்… எண்ணியதை எண்ணியாங்கு நடத்துகின்ற ஆற்றலன்றோ நீ படைத்திட்டது.

பிரம்மனின் ஐந்து முகத்துள் சிரசின் முகம் உச்சியில் ஈஸ்வரரால் களையப்பட்டதாகப் படித்திருப்பாய். உன்னைச் சுற்றிச் சுழன்றோடும் ஒலி நாதத்தில் கலந்திருக்கும் ஒளியின் ஊடாக ஒலி ஒளியை ஈர்த்தே ஒளியில் கலந்தது என்ற சூட்சும உரையின் பதம்.

உரையின் தெளிவை உயர் ஞான வலுவால் அறிந்திடும் சிறு முயற்சி பதத்தின் உரையைக் காட்டும்…! விரித்தே உரைக்கின்றேன்.

பெற்றுக் கொண்டிட்ட சக்தியின் வளர்ச்சி அளவீடு சித்தன் காட்டிட்ட சித்தின் நிகழ்வாக (உலக நலனுக்காக) மழை வேண்டும் என்று எண்ணத்தை உரைத்திட்டானப்பா. உரையைச் செயலில் விளக்கி விட்டாய்.

மனதின் கூறு மேம்பட… ஈர்த்து வெளிக்காட்டிட தொடர்பு என்ன…? சொல்வது அனைத்தும் பாடம் தான். உன்னில் ஊன்றிப் பார். ஞானவழிச் செல்வங்கள் யாராக இருந்தாலும் அவர்களும் காணட்டும்.

உனது எதிர்புறமும் நேர்புறமும் இடது வலது பக்கங்களிலும் ஜோதியாகக் காண்ப்பது உயிராத்ம சக்தியின் வளர்ப்பு. எண்ணத்தில் உன்னையே நீ ஜோதியாகக் காண்கின்றாய்.

பஞ்சமுக ஜோதியாக விளங்கி விட்டால் பிறப்பின் நிலை ஏது…? அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

ஐம்முகத் தொழிலில் அறிந்து உணர்ந்து செயல் கொள்ளுதல் எல்லாம் விளக்கவொண்ணா ஆனந்த இலயத்தின் பேரருள் செல்வ நிலையில்
1.பிரம்ம சாயுஜ்யம் என்ற உண்மையை உணர்வோன்
2.முத்தொழில் புரியும் படைத்தல் காத்தல் அளித்தல் பிரம்மா விஷ்ணு சிவன் அனைத்தும் தன்னுள்ளே தன்னையே காண்பான்.
3.எண்ணுகின்ற எண்ணம் ஈடேறுதல் சிருஷ்டி – அதுவே படைப்பு
4.எண்ணம் கொண்டு அனுபவித்தல் – காத்தல்
5.தன்னுள் அனைத்தையும் கட்டுக்குள் நிலை நிறுத்தி மோனத்தில் லயித்தல் – அழித்தல்.
6.பின்பு நிலை நிற்பது என்ன…? அதுவே அருளல் என்னும் “ஆதிசக்தியின் சக்தியாகக் கலத்தல் என்பதே… மறைத்தல் தத்துவம்…”

அண்டவெளியின் இயக்க கதியில் ஞானச் செல்வங்கள் உணர்ந்து அனுபவிக்கும் நிலைக்கு வித்திட்டேன்.
1.உயர்ந்து காட்டிடல் வேண்டும் என்ற
2.உமது செயற்பாடே… எமது ஆனந்தக் களி நடனம்.

சொல்லில் மறைபொருள் காட்டுவது… சித்தன் வல்லமை காட்டிய அனுபவித்தல் என்ற எட்டா நிலையை எட்டி விடவே இந்தப் பாடங்கள் அனைத்தும்.

கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை

 

கணவனைப் பிரிந்தவர்கள் மனைவியைப் பிரிந்தவர்கள் அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும் என்றும் அவர் இட்ட மாங்கல்யம் உங்களிடம் இருக்கிறது என்ற உறுதி கொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும்.
1.அவர் உணர்வுகள் உங்கள் உடலிலே உண்டு
2.அதன் வலுக் கொண்டு அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்,

இப்பொழுது சாங்கியம் சாஸ்திரம் கொண்டு எதைச் செய்கின்றார்கள்…?

கணவன் இறந்துவிட்டால் கணவனை மனைவி மறந்துவிட வேண்டும் என்பதை ஆதாரமாகக் காட்டிக் “கணவனை இழந்தவள்” என்று மற்றவர்களை அறியச் செய்வதற்கு மாங்கல்யத்தைப் பறிக்கின்றார்கள். அங்கேதான் தவறு செய்கின்றார்கள்.

தன் கணவன் தன்னுடன் உண்டு என்ற உணர்வினை நினைவு கொண்டு கணவன் பால் அப்படி நினைவு கொண்டால் அந்த உணர்வின் சக்தி தவறு செய்ய விடாது.

இந்த மத இனங்களில் இப்படித் தவறான நிலைகள் செயல்படுத்தப்பட்டு “கணவனை இழந்தவள் இழந்தவள்” என்று இந்த உணர்வின் தன்மை துக்கமும் துயரமும் கொண்டு வேதனை உணர்வைக் கொண்டு அந்த வேதனையால் பேய் மணமாக மாற்றி… இந்த உணர்வின் துணைகொண்டு தன் குடும்பத்தின் நிலைகள் கொண்டு அது செயல்படும்.

இறந்த பின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலில் சென்று பேய் உணர்வுகளைத் தான் ஊட்டி… அந்தப் பாசத்தால் அந்தக் குடும்பத்திற்கும் தீங்கு தான் செய்ய முடியுமே தவிர ஒளியின் சரீரம் பெற முடியாது… நல்வழி செல்ல முடியாது.

ஞானிகள் காட்டிய நிலைகளில்…
1.வசிஷ்டரும் அருந்ததி போன்று கவர்ந்து கொண்ட உணர்வுகள் என்றும் ஒன்றி மனிதனுக்குள் வாழ்ந்தால்
2.அருள் ஒளி கணவனுக்கு கிடைக்க வேண்டும் என்று அருள் ஒளி மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும்
3.அப்படிப்பட்ட உணர்வுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள் தான் என்றும் பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

இந்த உடலில் குறுகிய காலமே இருப்பினும் அது மனைவியின் உணர்வின் துணைகொண்டு வலு கொண்டு சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று எண்ணி அந்த வலுவினைச் சேர்த்து விட்டால் அதை நினைவு… அந்த விண்ணை நோக்கிச் செல்கின்றது மனைவியின் எண்ணம்.
1.அந்த உணர்வு கணவன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ந்திருந்ததோ
2.கனாக்களில் மகிழ்ச்சியின் உணர்வையே தோற்றுவிக்கும்.

அருள் ஒளி பெற வேண்டும் என்று அண்டத்தின் நிலைகளில் மிதந்து கொண்டிருக்கும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விட்டால்… அவர் அருள் ஒளிச் சுடர் பெறும் நிலைகள் கொண்டு… நமக்குள் இந்தப் புவியின் பற்றினை நீக்கிடும் அருள் உணர்வுகளை நமக்குள் தோற்றுவித்து நம்மை அந்த எண்ணத்துடன் வாழச் செய்யும். நம் நினைவில் நம் மக்களை வாழ்த்தச் செய்யும்.

இல்லை என்றால் மாங்கல்யத்தைப் பறித்து விட்டால் இழந்து விட்டோம் இழந்து விட்டோம் என்று சர்வத்தையும் இழந்திடும் நிலைகள் கொண்டு வேதனை கொண்டு தான் வாழும் நிலை வரும்.

கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் இனி தவறு செய்யாது
1.உங்களுடன் அவர் வாழ்கின்றார் என்ற நினைவு கொண்டு
2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக உங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது.

அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் இதை ஒவ்வொருவரும் தலையாயக் கடமையாக வைத்து
1.என்று அவர் உங்களுடன் ஒன்றினாரோ அந்த நினைவுகள் வந்து கொண்டே இருக்கும்
2.அந்த அணுக்கள் இருந்து கொண்டே இருக்கும்.

அவர் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணி இதை போன்ற காலங்களில் சப்தரிஷி மண்டலங்களுடன் ஆன்மாக்களை இணைத்து விட்டால் இந்த நினைவு அங்கே செல்லும்.

நம் உணர்வுகள் இங்கே வளரும். அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்லாது தடுக்கும். அருள் ஒளிச் சுடராக மாற்ற நமது எண்ணங்கள் அந்த ஞானிகள் காட்டிய வழியில் செல்ல முடியும்.

ஆகவே கணவனை இழந்துள்ளோம் என்று எண்ண வேண்டாம். அவருடைய உணர்வுகள் உங்களுக்குள் உண்டு.

இதைப் போன்று இந்த உணர்வின் வலுக் கொண்டு இன்னொரு உடலுக்குள் அந்த ஆன்மா சென்று இருந்தாலும் அல்லது இங்கே சுழன்று கொண்டிருந்தாலும் இந்த ஆன்மாக்களைத் தொடர்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
1.காலை துருவ தியானங்களில் செயல்படுத்துவீர்கள் என்றால் அந்த உணர்வுகள் ஒளியாகப் பெறுகின்றது.
2.அவர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுகின்றது
3.அவர் அருள் வழி பெறுகின்றார் ஒளியின் சரீரம் பெறுகின்றார்
4.அந்த உணர்வு உங்களுக்குள் இருளை அகற்றும் நிலையும் ஒன்றி வாழும் உணர்வினை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.

இதைப் போல மனைவியை இழந்தவர்களும் மாற்று மனைவி பெற்றாலும் தவறில்லை. ஆனாலும் முந்திய மனைவியின் உணர்வுகள் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி சரீரம் பெற வேண்டும் என்று எண்ணினால்
1.அந்த ஆன்மா முன் சென்றால் அந்த அருள் ஒளி கொண்டு இணைந்து வாழும் மற்ற மனைவிக்கும் அருள் கொடுக்கும்.
2.அதனால் மக்களும் அருள் ஒளி பெறும் தகுதியும் இந்த வாழ்க்கையில் இருள் சூழா நிலையும் உருவாகும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற உயர்ந்த சக்திகள் கொண்டு தாவர இனங்களுடைய சக்திகளை அறியும் ஆற்றல் பெற்றான்.
1.தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்து நுகர்ந்து தனக்குள் அதை எடுக்கும் பொழுது
2.இந்த தாவர இனங்களுக்கு ஜீவ நீராக ஊட்டும் மேகங்கள் கூடுவதை அறிகின்றான்
3.இவன் எண்ணத்தால் எண்ணினால் அவன் உணர்வுகள் மேகங்களை அழைத்து வருவதும்
4.அப்பகுதியில் அதிகமாக மழை பெய்வதும் போன்ற நிலை உருவாகிறது.

ஏனென்றால் அகஸ்தியன் விஷத்தின் தன்மை கொண்டு அதை ஒடுக்கிடும் தன்மை பெற்றவன். ஆதியிலே பொருள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அடர்த்தியாகி ஆவியாகும் போது தான் மேகத்தின் தன்மை அடைகின்றது. மாறுபட்ட சத்துகள் கலந்ததும் நீராக வடிகிறது.

அந்த ஆற்றலைத் தான் அகஸ்தியனும் பெறுகின்றான். அந்த நீரின் தன்மை மற்ற தாவர இனங்களிலும் படுகின்றது இதைப் போன்ற உணர்வுகள் இவனுக்குள் படரப் படும் பொழுது
1.இவன் எங்கே அமர்ந்து சிறிது காலம் செயல்படுகின்றானோ
2.இவன் உடலில் இருந்து உணர்வுகள் அங்கே படரப்பட்டு
3.மேலே மேகங்கள் படர்ந்து செல்வதை அது கவர்ந்து நீராக மாற்றிடும் நிலை பெறுகிறது.

அதே போல் அகஸ்தியன் மின்னலை உற்றுப் பார்த்தான் என்றால்
1.இவன் உயிர் அதை மின் அணுக்களாக மாற்றுவதும்
2.நுகர்ந்ததை அடக்கி ஒளியின் உணர்வாகப் பெறும் தகுதியும் பெறுகின்றான்.

ஒரு சமயம் குருநாதர் காட்டிய வழியிலே நாசிக் என்ற இடத்திற்கு நான் (ஞானகுரு) செல்லப்படும் பொழுது அங்கே ஒருவனைச் சந்திக்கும்படி செய்தார். அவனுக்கு வயது பதினேழு இருக்கும்.

அவன் வேறொரு மனிதனைக் கோபமாக உற்றுப் பார்த்தால் போதும்…! கண்ணின் ஒளிகள் பாய்ந்து அங்கே ஓட்டையே போட்டு விடும். சுரீர்ர்ர்ர்…! என்று இந்த உணர்வுகள் பாயும். அவன் அலற வேண்டியதன்.

அவனுக்கு இது எப்படி வந்தது…?

தாய் கருவிலே இவன் இருக்கப்படும் பொழுது தாய் மின்னலை எட்டிப் பார்த்தது. அப்போது அந்த மின்னலின் உணர்வுகள் கருவிலே இணைந்து விட்டது. ஆனால் தாய் தன் கண் பார்வையை இழந்துவிட்டது.
1.கருவில் இருக்கும் சிசுவிற்கு அந்த மின்னலின் ஒளிக் கற்றைகள்
2.இரத்தத்தின் வழி கூடி உடலிலே கலந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பெறுகின்றது.

தாய் கண் இழந்த பின் நெற்றியின் உணர்வு கொண்டு பார்க்கும் நிலையும் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கர்ப்ப காலங்களில் இந்த உணர்வுகள் கருவிலே இணைந்து அது விளைந்து கொண்டே வருகின்றது.

குழந்தை பிறந்த பின் அவன் இளம் வயதிலே அதை அறியவில்லை பதினேழாவது வயதை அவன் எட்டப்படும் பொழுது
1.இவன் எண்ணத்தின் கோப உணர்வுகள் பொறிகள் கிளம்புவது போல வருகிறது.
2.ஒரு இரும்பை அவன் பார்த்தால் அது சூடாகும்… அப்படியே வளைக்கலாம்

அதாவது சிறிது நேரம் ஒரு இரும்பை அவனை உற்றுப் பார்க்கும்படி செய்தால் அது சூடாகிவிடும்… வளைத்து விடலாம். இந்த மாதிரி மின் கதிர்கள் அவன் கருவிலே விளயப்படும் பொழுது வந்த சக்தி.

(அவன் நீடித்த நாள் வாழவும் இல்லை சுற்றுப்பயணம் சுற்றி விட்டு இரண்டாவது தடவை நான் அங்கே வரும் பொழுது அவன் இல்லை).

அவன் உணர்வுகள் அந்த அறிவின் தன்மை கொண்டு வெளி வரப்படும் பொழுது மற்றது கெடுகிறது. ஆனால் முதலில் தெரியாது.
1.அடுத்தவனை இவன் உற்றுப் பார்த்தால் அவன் மயங்கி விழுந்து விடுவான்.
2.இவனால் தான் அப்படி ஆனது என்று ஒருவருக்கும் தெரியாது.

இப்படி அவனை அறியாமலே பல நிலைகள் வந்து விபத்துகள் ஆகிறது. பின்னாடி மற்றொருவர் கூறும் பொழுது தான் தெரிய முடியும்.

ஆக… ஒரு மனிதன் மீது மின்னல் பட்டால் அவன் எப்படிக் கருகி விடுவானோ அதே போன்று இவன் பார்வை பட்டால் அடுத்தவர்களை அது கறுக்கி விடுகின்றது.

அனுபவ ரீதியாக குருநாதர் எமக்குக் காட்டிய உண்மை நிலைகள்

மின்னலைப் பார்த்ததால் முதலில் தாய்க்குக் கண்கள் போனது ஆனால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கோ அது வளர்ந்த பின் “ஈர்க்கும் சக்தி பெருகி அணு செல்களாக அது பெருகுகின்றது…”

மின்னலைப் பார்த்துவிட்டு அடுத்தவனைப் பார்த்தால் சுட்டுப் பொசுக்குகின்றது. அப்போது அவனைக் கண்டாலே மற்றவர்கள் அஞ்சி ஓடும் நிலைகள் வந்துவிட்டது.

அவனை வீட்டை விட்டு வெளியே செல்லாதபடி செய்துவிட்டார்கள் எல்லோருக்குமே பயம்… அவன் மீது கோபப்படவும் முடிவதில்லை.

ஆனால் அவனுக்கு எப்போது இந்த நிகழ்ச்சிகள் நடக்கிறது என்றால்
1.மின்னல் பாயும் பொழுது இழுத்து அந்த உணர்வுகள் பார்வைக்குள் வந்து
2.எக்கோ (ECHO) மறுபடியும் அந்த உணர்வுகள் இயக்குகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன்…
1.அவன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது மின்னலை அடக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது
2.பிறந்த பின் குழந்தை அவன் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில்
3.இவனுக்குள் கதிரியக்கப் பொறிகளை அடக்கிடும் சக்தியும் வருகின்றது.
4.இந்த அணுக்கள் இவனுக்குள் பெருகிப் பெருகி வானுலகை உற்று நோக்கும் அறிவின் தன்மை வந்து வான இயல் ஆற்றலைப் பெறுகின்றான்.
5.அதன் மூலம் எதனையுமே வென்றிடும் சக்திகளும் ஒளியாக மாற்றிடும் ஆற்றலும் அவனுக்குள் பெறுகின்றது

ஆனால் அகஸ்தியன் சக்தி வாய்ந்த நிலைகள் இப்படிப் பெற்றதை மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாதபடி… கிடைக்க முடியாதபடி காலத்தால் அது மறைக்கப்பட்டு… அரசர்கள் தடைப்படுத்தி விட்டனர்.

உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டாலே உங்கள் தீமைகள் அகலும்

 

ஞானிகள் காட்டிய வழியில் உயிரை மதித்து… இந்த உண்மையை உணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரமாக இருக்கும் இந்த அருள் மகரிஷிகளின் உணர்வு நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.கண் கொண்டு கூர்மையாகப் பார்த்து உணர்வின் தன்மை தனக்குள் பதிவாக்கி
2.மீண்டும் கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏகி உயிருடன் ஒன்றி கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே ஏற்றி
3.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
4.என் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
5.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்
6.அந்த அருள் ஒளி என் உடலில் வளர வேண்டும் என்று எண்ணும் படி செய்தான்.

உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றும் மார்க்கத்தை இவ்வாறு காட்டினான் அருள் ஞானி.

வாழ்க்கையில் எத்தனையோ கோடி வேதனை சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி அதனுடன் தொடர்பு கொண்டு தன் உடலுக்குள் பெற வேண்டும் என்று “ஒவ்வொரு அணுவிலும் ஒரு பாதுகாப்புக் கவசமாக மாற்றும்படி செய்தான்…”

1.வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மை இங்கே அடைபட்டு விட்டால் இழுக்கும் சக்தி குறைகின்றது
2.வேதனை உருவாக்கி உயிரிலே பட்டு இந்த எண்ணங்கள் தோற்றமாவதை மாற்றுகின்றது.

அதுதான் கடைசி நிலை நரசிம்ம அவதாரம்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஒளிச் சரீரம் பெற்ற அவனின் உணர்வை உயிருடன் ஒன்றி நாம் நுகர்ந்து ரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும். ஏனென்றால் அதன் வழி கவர்ந்து தான் மற்ற அணுக்களுக்கு உணவே செல்கின்றது.

மகரிஷிகளின் உணர்வை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் கண் கொண்டு தான் உற்றுப் பார்த்தோம் மற்றவரை. இந்த உணர்வின் பதிவின் தன்மை கொண்டு தான் ஊழ்வினை என்ற பதிவாக்கி இந்த உணர்வின் துணை கொண்டு தான் கவர்ந்து வருகின்றது.

1.அப்போது நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் கலந்து அதன் வழி வளர்ந்த அந்த அணுக்களின் தன்மை வட்டமிடுதல் வேண்டும்
2.அருள் மகரிஷிகளின் உணர்வு அங்கே செல்லப்படும் பொழுது ஈர்க்கும் வன்மை குறையப்படும் பொழுது
3.காற்றிலிருந்து ஆன்மாவாக மாற்றுவதை அதைத் தடைப்படுத்துகின்றது.
4.அந்த அருள் ஒளி தீமைகளை அகற்றுகின்றது.

கடவுளின் அவதாரம் நரசிம்ம அவதாரம் என்று மடி மீது இரணியனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து இரணியனை பிளந்தான் என்று சூட்சுமத்தில் நடப்பதைக் காவியமாகப் படைத்து இயற்கையின் உண்மை நிலையை அறிவதற்காக விநாயகர் தத்துவத்தைத் தெளிவாகக் காட்டப்பட்டது.

வாழ்க்கையில் சேர்த்த தீமைகள் ஆன்மாவில் வரப்படும் பொழுது அருள் ஒளியை உள் செலுத்தி விட்டால் ஈர்க்கும் வன்மை அந்த அணுக்கள் அடைபடுகின்றது… ஈர்க்கும் வன்மை இழக்கின்றது… அது நீக்கப்படுகின்றது… நமது எண்ணங்கள் மாறுகின்றது.

நுகர்ந்தால் தான் உணர்வின் இயக்கமாக உடல் இயக்குகின்றது. உணர்வின் தன்மை நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது. அதன் வழி உணவை எடுத்து அது வளர்கின்றது.

இப்பொழுது கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம்
1.இத்தருணம் உங்களுக்குள் அரும்பெரும் சக்தி படர்கின்றது.
2.உங்கள் உடலில் இருதயங்களிலோ மற்ற உறுப்புகளிலோ கால் மூட்டுகளிலோ எந்த நோய் இருப்பினும்
3.அருள் உணர்வை நுகர்ந்த பின் அந்த நோயெல்லாம் தணியும் குறையும்.

இந்த உபதேசத்தை நுகரப்படும் பொழுது தீமைகளை விளைவிக்கும் அணுக்களில் கவசமிடும் போது அது ஈர்க்கும் சக்தி குறைந்தால் அதனுடைய வலுவை இழக்கும். இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் “நோயின் வலிமை குறையும்..”

துவர் ஆடை கொண்டு ஞான நீர் அருந்த வேண்டும்

 

வியாசக பகவான் பார்த்தனுக்குத் தத்துவப் பொருளாகக் கீதையை உபதேசித்து… கண்ணன் என்று பாரத இதிகாசத்தை உலகினுக்கீந்த சூத்திரதாரியாகச் செயல்பட்ட அந்த மாமுனிவர் யாரப்பா…?

இயங்கும் இயக்கம் என்று தத்துவப் பொருள் காட்டிய எத்தனை எத்தனையோ வாழ்க்கை நடைமுறைகள்… அவற்றின் சம்பவங்கள்…
1.ஆத்மா ஐக்கிய நிலை
2.நீதியை நிலைநாட்டும் வேகம்… வேகம் கொண்டிட்ட விவேகம்…
3.இயங்கும் இயக்கமான சம்பவங்களில் நீதியை நிலைநாட்டும் போராட்டம்
4.வாழ்க்கை மோதல் சம்பவங்களின் நன்மை தீமைகளில் இருவினைப் பயனால் செயல்படுத்திடும் தாந்திரீகங்கள்
5.தாந்திரீகத்தால் வெற்றிக்கு வழி தேடும் போராட்டங்கள்
6.ஒலி உச்சாடனங்கள் என்று கைக்கொள்ளும் வாழ்க்கை நிலைகளில் நடைபெறும் செயலாக
7.வேத விளக்கங்கள் காட்டி “உண்மையின் சக்தியே வெற்றி பெறும்…” என்றும்
8.சத்தியத்திற்கு ஏற்படும் சோதனையில் வென்று காட்டிடும் வழியாக
9.பேரருள் பெறும் மனத்தின் பக்குவமே “வானவியல் ஞான திருஷ்டி…!”

சத்தியமே விஸ்வரூபம் காட்டி வினைப் பயன் களைந்திட்ட உபதேசமும்… சத்திய நியாய தர்மத்தை வெறுத்திடும் கலியில் “குருவே (உயிர்) தர்மத்தை நிலை நாட்டும் தர்ம தேவனாக…” மனப்போராட்டத்தையே வென்று காட்டிடும் ஜீவன் முக்தனாக… ஒவ்வொரு ஆத்மாவும் நன்னிலை பெற்று விட்டால்… மனித எண்ணத்தின் உயர்வைக் கைக்கொள்ளும் காரியமாக… நன்னெறி வழிகாட்டிய மகரிஷிகளின் உயர் தத்துவத்தால் ஆத்ம வலு பெற்றிட வேண்டுமப்பா.

கிருஷ்ண லீலைகள் என்று காட்டியவற்றை இன்ப ரசம் என்று எண்ணுகின்றான். அனைத்துமே இன்பம் தான். “ஈஸ்வரரின் சொரூபத்தில்”
1.அனைத்து உயிர்களையும் ஒரே பாவனையாகக் காட்டுபவனவற்றில்,
2.எண்ணத்தால் ஆத்ம ஐக்கியம் பெற்றிடும் சம்பவங்களின் கோவையே கோபியர்கள் கொஞ்சிட்ட லீலைகள்.

“இறை சக்தி” தன்னுள் ஒன்றான தனி சக்தி என்றே…
1.அன்பு மனத்தினோடு நாயகன் நாயகி பாவனையாக
2.ஒன்று கலந்திடும் உயிர் ஆத்ம கலப்பே உயர் ஞானப் பொக்கிஷம்.

கோபியர்களுக்குத் தீங்கிழைக்க வந்துற்ற எத்தனை அசுரர்களைக் கண்ணன் மாய்த்தான்…? என்று காட்டியவற்றில் மனிதன் பெற்று உயர வேண்டிய ஒளி காந்த சக்தி… ஆத்மாவின் அருள்…
1.பேரருள் செல்வத்திடம் பற்று வைத்திடும் உள்ளமாக
2.காக்கப்பட வேண்டிய நிலைகள்… காக்கும் தன்மைகள் அனைத்தும் உணர வேண்டும்.

உயர் ஞான வளர்ப்பின் சித்து… சித்தன் கண்ட செயலாகக் கொண்ட எண்ணத்தின் லட்சியம் எதுவோ… அந்த லட்சியத்தை வென்றுவிடும் திட மனத்தின் சித்தம் எவ்வகையில் செயல் கொண்டிட வேண்டும்…? என்று விளக்கிட்ட காவிய படைப்பின் ஓர் அங்கமாக…
1.ஞானப்பயிர் வளர்க்க மகான்கள் உபதேசமாக மொழிந்த நிலைகளில் எல்லாம்
2.மனிதன் பஞ்சேந்திரியங்கள் கொண்டு செய்யும் தொழில் “கர்மா” என்று சூட்சுமப் பொருள்படுத்தி
3.செய்கின்ற வினைகளுக்கு உரிய நாயகன் எனும் உயர் சக்தி முயற்சி என்ற
4.ஆய்வில் கருத்தினைச் செலுத்திடும் பாங்கில் கண்ட இலச்சினை (அடையாளம் – LANDMARK)
5.அதுவே லட்சியமாகக் கொள்ளும் மனத்தின் திறன் வளர்க்க
5.மனத்திறன் ஈர்ப்பில் ஆத்ம ஒளிப்பயிர் வளர்க்க
6.வியாச பகவான் பெற்று உயர்ந்த அனுபவ ஞானமே… “அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டுமப்பா.

அர்ஜுனன் கைக் கொண்ட “காண்டீபம்” (கூர்மை) லட்சியத்தை அடைந்திட… கருவின் திருவாக உள்ளத்தில் விளைந்தது என்ன…? மரம் தெரிந்ததா…? மரக் கிளைகள் தெரிந்ததா…? கிளைகளில் ஆடும் இலைகள் தெரிந்ததா…?
1.இலை மறைவு… காய் மறைவு… அன்றோ அவன் கண்டது…!
2.மகரிஷி புகட்டிடும் உண்மைத் தத்துவம் இலச்சினை கண்டான்… அடைந்திடும் லட்சியம் கொண்டான்.

லட்சியம் மறைந்திடாத் தன்மையாக அடைய வேண்டிய குறிக்கோள்… அதுவே “உயர் ஞான விழிப்பின் பின் சாந்தம் குடிகொள்ளும் அமைதி…” காப்பிய ரிஷியின் ஒவ்வொரு அனுபவமே “ஆரம் கொண்ட முத்துக்களப்பா…”

நீர் தேடிப் பாலையில் அல்லலுற்ற பேய்த்தேர் என்றும் அலகைத் தேர் என்றும்… அன்று காட்டிட்ட கானல் நீரைக் கண்ட பொழுது… உயிர் வாழப் பதைபதைட்ட “பீமன்” என்னும் பலவான் ஆகும் மனித மனத்தின் பாங்கு… நீர் பருகிடும் அதி அவசரத்தால்… “பாலையின் நீரைப் பருகிட முடிந்திடுமோ…?”

1.நகுல மன உத்தியால் நீர் அருந்த… நீரைச் சுவைத்திட
2.சகாதேவனும் துவர் (துறவியின் ஆடை) ஆடை கொண்டு ஞான நீர் அருந்த
3.வென்றது தர்மம் என்று மனத்தின் பாங்கு பலம் பெறுவதே “ஆத்ம பலம் பெற்றிடும் சீரிய சிந்தனை…”

ஆடையில் நனைத்த நீரினைப் பருகிப் பின்னர் ஆடையை உதறிவிட்டால் பாலையின் ஏடென்ற துர் மணல் நீங்குமப்பா. “ஞானத்தைக் கூட்டி இதைத் தெரிந்து கொள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கலாம்… போல அணு ஜீன்களை எடுத்து அதைப் பல விதமாக மாற்றி அமைக்கின்றனர். ஒரு தாவர இனத்தில் உள்ள ஜீன்களை எடுத்து மற்ற தாவர இனங்களில் இணைத்துப் புதுப்புதுக் காய்கறிகளையும் கனிகளையும் உருவாக்குகின்றனர்.

1.இது போக நாம் அணியும் உடைகளின் நிறங்களுக்கு உண்டான சாயங்களையும் புதிதாக உருவாக்கக் கற்றுக் கொண்டார்கள்
2.எந்த வகையான நிறம் வேண்டுமோ அந்த நிறத்தைத் தாவரங்களின் வித்துக்களில் இணைத்து விட்டால்
3.அதிலே உருவாகும் பஞ்சு அந்த நிறத்திற்கு வந்து விடும் என்று…!

இவர்கள் நினைத்தனர்… கெமிக்கல் கலந்த சாயத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது… அதில் இருக்கும் விஷத்தன்மைகள் நீரிலும் கலந்து ஆவியாகவும் சென்று காற்று மண்டலமும் நச்சுத்தன்மையாகின்றது… இதை மறைக்க இப்படி நேரடியாக வித்திலிருந்தே மாற்றி விடலாம் என்று…!

எதுவுமே விஷத்தின் தன்மை கொண்டு தான் மற்றதுக்குள் ஊடுருவச் செய்ய முடியும். வித்துக்குள் இந்த ஜீன்களை இணைக்கப்படும் பொழுது இதே விஷத்தின் தன்மை பெருக்கி அதனுடைய மலத்தின் தன்மை பஞ்சின் நிலையும் மாறுகிறது.

ஆனாலும்…
1.இப்படி உற்பத்தி செய்து அந்த உடைகளை நாம் மேலே ஆடையாக அணிந்தால்
2.உடலின் துடிப்பின் வெப்பத்தினால் அதில் துணியிலிருந்து வெளிப்படும் அலைகளால் உடலில் கடும் நோய்களாக வரத் தொடங்கும்.
3.ஆக… அதைச் சுவாசிக்கப்படும் பொழுது உடலுக்குள் விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களாக மாறும் என்பதை விஞ்ஞானிகள் மறந்து விட்டனர்.

எதைச் செயற்கையின் தன்மையில் கொண்டு வருகின்றோமோ இவை அனைத்தும் நமக்குள் பெரும் மாற்றங்களைத் தான் உண்டாக்கும்.

நிறங்களை மாற்ற வேண்டும்… உருவாக்க வேண்டும்… என்றால் விஷத்தின் தன்மை கொண்டு தான் அவைகள் இயங்குகின்றது. மனிதன் இப்படி எத்தனையோ நிலைகளில் அந்த இயற்கையின் நியதிகளை மாற்றிக்கொண்டு வருகின்றான்.

ஆகவே
1.இப்பொழுது நாம் எதை நுகர வேண்டும் எதை உடலுக்குள் அணுவாக மாற்ற வேண்டும் என்று
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உண்மைகளை உணர வேண்டும்.

அக்காலத்தில்… அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும்போது பல விஷத்தை வென்றிடும் ஆற்றல்களைப் பெற்றான். எப்படி…?

அவனுடைய தாய் தந்தையரோ காடுகளில் வாழப்படும் போது விஷ ஜந்துக்களும் கோடூர விலங்குகளும் அவர்களைத் தாக்கி விடாமல் இருக்க
1.விஷத்தை ஒடுக்கும் மூலிகைகளை அரைத்து அதை உடலில் முலாமாகப் பூசிக் கொண்டு
2.அந்த மணத்தால் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் கர்ப்பமுறும் காலத்தில் உடலிலிருந்து வெளிப்பட்ட மூலிகைகளின் மணங்கள் சுவாசத்தின் வழி உடலுக்குள் பரவி இரத்தத்தின் வழியாகக் கருவில் இருக்கக்கூடிய அந்தச் சிசுவிற்கும் அது கலந்து விடுகின்றது.

அதாவது முதலில் சொன்னபடி… வித்துகளில் எப்படி விஞ்ஞானிகள் செயற்கையாக ஜீன்களை இணைக்கின்றனரோ அது போல் அகஸ்தியனுக்கு நஞ்சினை வென்றிடும் சக்தி இயற்கையாகவே இப்படிக் கிடைக்கிறது.

ஆனால் விஞ்ஞானிகள் விஷத்தின் ஆற்றலைக் கலந்து ஒரே நிலையை பல நிலைகளாகப் புதிது புதிதாக மாற்றிக் கொண்டு வரும் போது ஒரே வித்தாக இருந்தாலும் அது கலந்த நிலையில் சாயங்களை (நிறங்களை) மாற்றுகின்றது. இருந்தாலும் அதிலே விஷத்தின் தன்மை ஓங்குகிறது.

இத்தகைய சாயத்தை வடித்துக் கொண்ட அந்த வித்துக்களையோ அந்தச் செடிகளையோ (பருத்திச் செடி) மாடுகள் உட்கொண்டால் அதுவும் விஷத்தன்மையாக மாறுகின்றது.

1.மாட்டின் உடலும் விஷமே இதுவும் விஷமே
2.இருந்தாலும் அதனுடைய குணங்கள் மாறுகின்றது
3.பால் கறக்கும் மாடுகளுக்கு இதை கொடுத்தாலும் பால் பச்சையாகக் கறக்கும்.
4.ஆனால் பின்னாடி தான் இதை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

தெரிந்த பின் இதை உரங்களாகக் காட்டுகளுக்கு போட முடியுமே தவிர அதே சமயத்தில் மற்ற உயிரினங்கள் அதை உணவாக உட்கொண்டால் அங்கேயும் வித்தியாசமாக மாறும்.

காளைகளுக்கு இதை கொடுத்தாலும் அதனுடைய உணர்வுகள் அமிலங்களாக மாற்றப்பட்டு அது தன் இனத்தை உருவாக்கும் இணை சேரும் காலங்களில் அது கன்றுகளாக உருவாகும் நிலை வரும் பொழுது “அந்த மாட்டின் கன்றுகளுக்கும் இது மாறத் தொடங்குகின்றது…!”

1.இப்படி ஒரு ஜெனரேஷன் மாற ஆரம்பித்தால்
2.அது மூன்றாவது நிலை நான்காவது நிலை என்று மாடுகளின் உருமாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.

இப்பொழுது நாம் சொல்கிறோம் அல்லவா…! கடந்த காலம் போய் இன்று விஞ்ஞான காலம் வந்துவிட்டது என்று. அது போன்று தான் ரூப மாற்றங்களும்.

விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் இயந்திரங்களிலும் புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் ஏற்கனவே செய்தது பழமை ஆகி விடுகின்றது.

புதிதாகக் கண்டுபிடித்தது வேகத்துடிப்பு அதிகமாகவும் அதனுடைய செயலாக்கங்களும் அதிகமாக வருகிறது. விஷத்தின் சேமிப்பாக இப்படி மாறிக் கொண்டே போகின்றது. இது இன்றைய நிலை.

ஆனால் அக்காலங்களில் நஞ்சினை வென்றிடும் அணு ஜீன்கள் தாய் கருவில் இருக்கும் போது அகஸ்தியன் உடலில் விளைந்தது.

அவன் பிறந்த பின்
1.மற்ற விஷத்தின் தன்மைகள் தனக்குள் நாடாது…
2.அப்படியே வந்தாலும் அதை அடக்கி ஒளியின் உணர்வாக மாற்றும்
3.அறிவின் தெளிவாக இயக்கக்கூடிய சக்தியாக அவனுக்குள் வந்தது.

காரணம் தாய் நுகர்ந்த உணர்வுகள் பூர்வ புண்ணியமாக அமைந்து நஞ்சை வென்றிடும் சக்தியாக வருகின்றது பிறந்த பின்
1.நஞ்சினைக் காணுகின்றான்… அதனின் இயக்கத்தை அறிகின்றான்
2.நஞ்சினை அடக்கிடும் எண்ணங்கள் உருவாகி… அந்த யுக்தியின் தன்மைகள் பெருகுகின்றது.
3.அதன் வழி அந்த உணர்வை அவன் சுவாசிக்கின்றான் நஞ்சினை வென்றிடும் அணுக்கள் அவன் உடலில் அதிகரிக்கின்றது.

இப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்…!

தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்தான். விஷத்தின் தன்மை ஒடுக்கினான். சிந்தித்துச் செயல்படும் தன்மையாக அவனுக்குள் வருகின்றது.

பல விதமான தாவர இனங்களின் சக்திகளை எடுக்கும் பொழுது அதனுடைய உணர்வின் இயக்கம் தெளிந்திடும் உணர்வின் அறிவாக அவனுக்குள் வருகிறது. இது எல்லாம் அவன் இளம் வயதில் பெற்ற சக்திகள்.

1.நஞ்சினை வென்றிடும் சக்தியாக உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது
2.அவன் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அறிவாக அவனை இயக்குவதும்
3.கண்ணுக்குள் இருக்கும் கருவிழி அதன் இனமான உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து
4.அந்த அறிவாகவே அவனை இயக்கத் தொடங்குகிறது.

அகஸ்தியனின் அருள் சக்திகளைப் பெறுவதற்குத் தான் மீண்டும் மீண்டும் அகஸ்தியனைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்வது.

அவன் பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதியை நீங்கள் பெற்று… இனி வரக்கூடிய எத்தகைய கடுமையான நஞ்சாக இருந்தாலும் அதை மாற்றிட வேண்டும் என்று தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

தன் நிலை அறிதல் வேண்டும்

 

வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்று நிலை பெறும் பொழுது தான் அது இயக்கச் சக்தி என்று பொருள் வருகிறது.
1.“தனித்து ஒருவன் தான் கடவுள்” என்று சொல்வது பிழை சொல்.
2.ஒன்று என்ற நிலை இல்லை.
3.நமக்குள் உயிர் இருந்து அனைத்தையும் உருவாக்கும் ஒருவனாக இருக்கின்றான் உயிர்.
4.ஆனால் ஒருவன் என்று சொல்லும் பொழுது மூன்று நிலை கொண்டு தான் நம்மை இயக்குகின்றது.

நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் பலவாக மாற்றுகின்றது. அது தன்னுடன் இணைத்து அந்த உணர்வின் தன்மை தனக்குள் சக்தியாக மாற்றப்படும் பொழுது பலவும் ஒன்றாக்குகின்றது.

அப்படிப் பலவும் ஒன்றாக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஒளியின் தன்மை அடைந்தவன் அவன்.
1.அவன் எண்ணத்தில் அவன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்
2.உள் நின்று கடவுளாக நின்று அந்த உணர்வின் தன்மை உருவாக்கியது அதை.

இன்றைய உலகம் குறுகிய உலகமாக மனிதனின் சிந்தனையைக் குறுக்கும் உலகத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அதிலிருந்து மீண்டிட அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் சுடர் ஒளியாக மாற்றும் வல்லமை பெற வேண்டும். உபதேசித்த உணர்வினை நுகர்ந்து அதனின் அறிவை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு நினைவைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.இன்னொரு பிறவிக்குச் செல்லாமல் இந்த உடலில் ஆறாம் அறிவு இருக்கும் பொழுதே தடுத்துக் கொள்ளுங்கள்… தப்பித்து விடுங்கள்.

உங்களிடம் இருந்து புகழ் பெறுவதற்காக நான் இதைச் சொல்லவில்லை குரு கொடுத்த அருள் ஒளியினை எனக்குள் சேர்ப்பித்து அதில் விளைந்த உணர்வின் “ஞான வித்தை” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

ஒரு மனிதனுக்குள் வேதனை என்ற உணர்வை விளைய வைத்து வேதனையான சொல்லைச் சொல்லும் பொழுது கேட்டறிந்தால் அந்த வித்து உங்களுக்குள் வேதனையை உருவாக்கும் தீமை செய்யும் உணர்வின் வித்தாக விளைகின்றது.

ஆனால் நமது குருநாதர் காட்டிய வழியில் ஞான வித்தினை உங்களுக்குள் உணர்த்தப்படும் பொழுது அருள் ஒளியின் சுடராக வாழும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி இனி பிறவி இல்லாத நிலை அடையச் செய்தல் வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை இந்த உடலின் உணர்வு கொண்டு நமக்குள் உயிரின் உணர்வு கொண்டு ஒளியின் உணர்வாகச் சொந்தமாக்குவது தான் மனிதனின் ஆறாவது நிலை.

1.இந்தச் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டால் மீண்டும் தன்னிலை அறிய முடியாத நிலைகள் கொண்டு
2.தன்னைக் காத்திடும் நிலையே வளர்ச்சி வரும்… தன் நிலையை அறியும் தன்மை வராது.

தன்னிலை என்பது மிருகங்களோ மற்றவைகளோ தன்னிலை அறியும் நிலை இல்லை தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகளே வருகின்றது. மற்றொன்று வலிமையான பின் அதனிடம் அடிமையில் சிக்காது தப்பித்து ஓடும் உணர்வுகள் தான் வருகின்றது.
1.ஆனால் வலிமையான அந்த மிருகங்கள் இதனை வென்றே தீரும்
2.அது இதை இரையாக்கியே தீரும்.
3.இரையாகும் போது இது நரக வேதனைப்பட்டு அனுபவித்தே தீர வேண்டி இருக்கும்.

இப்படிப் பல கோடி நரக வேதனையில் இருந்து மீண்டு வந்தவர்கள் தான் நாம்… நம்மை அப்படி மனிதனாக உருவாக்கியது நமது உயிர்.

1.நமக்குள் உருவாக்கிய ஈசனை மறந்து விட்டு
2.எவனோ செய்வான் என்று அவன் உணர்வை நமக்குள் சேர்த்தால்
3.அவனுக்கு நாம் அடிமை ஆகி அவனுக்கு கீழ் தான் நாம் வர வேண்டுமே தவிர அவர் இச்சைக்கே அடிமையாக முடியும்.

ஆனால் அருள் ஒளியின் சுடரை நமக்குள் சேர்த்தால் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் தன்மை உங்களுக்குள் கடவுளாக நின்று உங்களுக்கு வழிகாட்டும்… மறந்திட வேண்டாம்…!

செம்பான்

 

பரமேஸ்வரர் மாமகரிஷியின் வாசஸ்தலமாக விளங்கும் கோகர்ணக் கடற்கரையை ஒட்டி மீனவர் குப்பம் தென்படுகின்றது. கடல் ஓடும் மீன்பிடி நாவாய்கள் கூடுதலாக வைத்திருப்பவன் எவனோ அவனே அந்த இனத் தலைவனாக அந்த இனத்தையே ஆளும் தகுதியை பெறுவான்.

வாய்ச் சொல்லின் கட்டளைக்கு ஏற்பக் கட்டுப்பட்டு ஒழுகும் வைராக்கிய இன மக்களின் பிறப்பில் வந்தவன்தான் நாவாய்கள் உடைய “செம்பான்…”

அந்த இனத்தின் முக்கிய குல வழக்கம் கடல் ஓடும் மரக்கலங்களை மறித்து கொள்ளை அடிப்பது தான். இருந்தாலும்… கொள்ளையடிக்க விருப்பம் காட்டும் அந்த மக்களில் தெய்வீக நம்பிக்கை கொண்டே வாழ்ந்தவன் செம்பான்.

இனத்தாரின் வற்புறுத்தல்களை ஏற்றுக்கொண்டு கொள்ளையிடச் சென்றாலும்… மீன் பிடித்தே வாழ்க்கை நடத்தும் லட்சியமாக ஒதுங்கி வாழ்ந்த செம்பானை ஆட்கொள்ளப்பட்ட சக்தி தான் என்ன…?

கொள்ளை இடச் சென்ற சமயத்தில்… ஆயுதம் கொண்டு போர் புரியும் காலத்தே… உடைமைகளைக் காத்திடல் வேண்டும் என்றே போர் புரிந்திடும் இரு குழுக்களின் தன்மைகளை விடுத்து ஒதுங்கி இருந்தான் செம்பான்.

அப்போது தெறித்து வந்த ஒரு ஆயுதம் செம்பான் உடலில் தைத்து சரீரம் மரண காயப்பட்டது. சிறிய படகொன்றில் தப்பிச் சென்றிட முனைந்த பொழுது சூறாவளி ஏற்பட்ட்து.

அங்குள்ள அனைவருமே கடல் கொந்தளிப்பில் மாய்ந்துவிட அந்தச் சூறாவளியில் சிக்கி உயிருக்காக போராடும் அச்செம்பானின் உடலில் செயல்பட வந்திட்ட ரிஷியை நீ அறிவாயப்பா…!

அலை கடலின் சூறாவளியில் சிக்குண்ட செம்பான்… உடல் துன்பமுற ஜீவன் பிரிந்து விடும் அந்தக் காலகட்டத்தில்… இவன் புசித்திட விழைந்த மீன் இனத்தால் அலை கடலில் கரையில் ஒதுக்கப்பட்டான்.

அப்போது
1.அந்தச் சரீரத்தை “சூட்சும முனிவனால்” இயக்கப்பெறும் பேறு பெற்று எழுந்து
2.உயிரின் ஆதி மூலமாகத் தன்னுள்ளே உபதேசம் பெற்று
3.தான் வேறல்ல தன்னுள் இயங்கும் அந்த மாமகான் வேறல்ல என்கின்ற நிலையின் கருத்தொருமித்த கூட்டாகி…
4.தன்னை இயக்க வந்த சக்தியையே உபாசிக்கும் பரமாத்மாவாக உபதேசம் ஏற்ற செம்பான் (ஜீவாத்மா)
5.தான் ஏற்றுக் கொண்ட பக்குவத்தால் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்று சேரக்கூடிய சந்தர்ப்பமாக அது அமைந்த்து.

கடமையைச் செய்தலின் பிரதிபலன் எதிர் நோக்கா மனத்தின் பக்குவம்… ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்திடும் லயத்தின் மெய்யொலி மெய் ஞானமாக… கீதையின் ரசமாக வடித்துத் தந்தவர் யார்…? என்ற உண்மையை… இன்று உம்மை இயக்கிடும் சூட்சமத்தால் தெரிந்து கொள்.

கிருஷ்ணாவதாரக் காலம் நிகழப் பெற்ற சம்பவங்களின் கோர்வையில்… பக்தி ரசம் சொட்டும் லீலைகளாகக் காட்டிடும் கோபியர்கள் என்றிட்ட ஆனந்த லயமாகும் மனத்தின் செயல் காட்டி… அசுர குணத்தன்மைகளை மாய்த்திட்ட உயிர் சக்தி… ஆத்ம பலம் காட்டும் அர்ஜுன உபதேச கீதையில் உணர்த்த வந்திட்டது எது…?

கலியில் உழன்றிடும் மனிதனின் மன நிலை அதி பேராசை உணர்வுகளும்… வினைப் பயன் கூட்டும் விந்தைகளும்… மகாபாரதக் கதை முழுக்க வியாசரின் அனுபவங்கள் பேசுகின்றனவப்பா.

1.சரீரம் கொண்டு வாழும் உலகியல் நிலையில் மனத்தின் கண் எழும் மாபெரும் போராட்டமும்
2.பஞ்சேந்திரியங்கள் அடங்கும் நிலையும்… துர்க்குண சம்காரம் நிகழ்த்தப் பெறும் நிலையில்
3.கலியின் செயல் சூட்சுமம் காட்டிடும் பண்பு நெறி விலக்கிடும் அதர்ம காரியங்கள் நிகழப் பெற்று உயிராத்மா வதைபடும் நிலை உணர்ந்தால்
4.சாதுர்ய அறிவின் ஆற்றலாகத் தன்னைக் காத்துக் கொள்ளும் முழுமையை விளக்குவதில்
5.மகாபாரத வியாசர் பெற்றிட்ட அனுபவங்கள் விரிவாக அறிய வேண்டிய ஒன்று.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கருடன் என்ற பறவையை எடுத்துக் கொண்டால் அதனுடைய கூட்டிலே நாம் ஒரு இரும்புச் சங்கிலியை “விலங்கு போடுவது போல்” முடிந்து வைத்து விட்டால் அது என்ன செய்யும்…?

கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகளை மீட்டுவதற்காக அலைந்து திரிந்து
1.சில செடிகளின் விழுதுகளை அல்லது அந்தக் காம்புகளை எடுத்து அந்தச் சங்கிலி மீது வைத்து அதைத் தெறிக்கச் செய்துவிடும்.
2.இது கருடன் கண்ட உபாயம்… இரும்பு உலோகங்களைக் கத்திரிக்கும் திறன் பெற்றது.

ஆனால் கருடனுக்கு இந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது…?

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று மனிதனாக ஆன பின் மீண்டும் மடிந்து மடிந்த நிலைகளிலிருந்து “அவன் பட்சிகளாக உருவானால்…” இவனுக்குள் உருவாகிய இந்த உணர்வின் அணுக்கள் அது உணவாக உட்கொள்ளும் பொழுது “அந்த உணர்வின் ஞானங்கள்…” அங்கே கிடைக்கின்றது.

மனிதனாகிப் திருப்பிப் பட்சியாக வந்த பின்…! மனிதனுக்குண்டான சிந்தனைகள் எல்லாம் அந்தப் பட்சிக்கு உண்டு.

எப்படி…?

காடுகளில் மனிதன் ஒரு விஷத்தால் தாக்கப்பட்டுத் தேய்பிறையாகி அவன் மடிந்து கிடந்தால் அந்த உடலிலிருந்து வந்த விஷத்தின் தன்மை மற்ற தாவர இனங்களில் இது கலந்துவிடும்.

விஷம் தீண்டி மடிந்த இவன் உடலில் இருந்து வெளிவரக்கூடிய உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து கவர்ந்து வைத்துக் கொள்கிறது.

அதே சமயத்தில்
1.மற்ற சாந்தமான தாவர இனங்களின் சத்து சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பரவி வருவது இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும்
2.இன்னொரு விஷமான செடியின் மீது அது மோதும் சந்தர்ப்பத்தில் சுழற்சி ஆகுவதும்
3.சுழற்சியான பின் தனக்குள் கவர்ந்து கொண்டு புது விதமான தாவர இனச் சத்தாக செடியாக விளைகின்றது.

ஏனென்றால்… பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின் ஒரு விஷம் தீண்டி மனிதன் மடிந்தால் இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம் மற்ற தாவர இனச் சத்துக்களுடன் கலக்கப்பட்டு… இரண்டறக் கலந்து ஒரு வித்தாக உருவாகி நிலத்தில் பட்டு விட்டால்… கடும் விஷத்தையே முறிக்கும் சக்தி பெறுகின்றது.

இதைத் தான்… அந்த விஷத்தை முறிக்கக் கூடிய சக்தியைக் கருடன் கண்டுள்ளது. அதாவது.. உலோகங்களில் இந்தத் தாவர இனத்தின் சத்து பட்டபின் அது பலவீனமாகி… அந்த உலோகம் தெறிப்பதையும் அது கண்டுள்ளது.

ஏனென்றால் மனிதனாக ஆன பின் இவனுக்குள் விளைய வைத்த சத்துக்கள் தாவர இனத்துடன் கலக்கப்பட்டு இது பட்சியானாலும் கூட…
1.அதற்குள் இருக்கக்கூடிய உணர்வு (ஞானம்) சிக்கலில் இருந்து தீர்க்கும் நிலையாக வருகின்றது
2.இது பட்சி இனமாகத்தான் இருக்கின்றது… ஆனால் இதற்கு எப்படி இந்த அறிவு வந்தது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

இதே போல் தான் கீரிப்பிள்ளை மீது பாம்பின் விஷம் தீண்டப்பட்ட பின் அது ஓடிச் சென்று அதை முறிக்கும் அந்தத் தாவர இனத்தில் பிரள்கிறது. அந்த மணங்களை நுகர்கிறது. நுகர்ந்து அந்த விஷத்தை நீக்கிய பின் அந்தப் பாம்பினை மீண்டும் அது தாக்குகிறது.

இது போன்று தான்
1.”ஒரு உயிரணு” தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் அணுக்கள்
2.மாறி மாறிப் பல விதமான ஒரு சக்திகள் பெற்று வளர்ச்சிக்கு வருகின்றது.

இப்படி எல்லாவற்றையும் கடந்து மனிதனாக உருப்பெற்ற பின் இத்தகைய தாவர இனங்களுடைய சக்திகளைப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் கண்டறிய நேர்கிறது.

அந்த வழியில் தான் அகஸ்தியன் சர்வ நஞ்சுகளையும் ஒடுக்கிடும் சக்திகளைப் பெற்றான்… ஒளியாக மாற்றிக் கொண்டான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக காலில் மூட்டில் வலி இருக்கிறது… நடக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.கொஞ்ச நேரம் கையை அந்த மூட்டில் வைத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.காலில் இருக்கக்கூடிய மூட்டு வலி நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்
4.அந்த வலி நீங்க வேண்டும்… நல்லதாக வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.

அந்த வலி குறைய ஆரம்பிக்கும்.

இதே போன்றுதான் இருதயத்திலோ மற்ற இடங்களிலோ வலி இருந்தால் இதே மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வை எடுத்து “அங்கே கையை வைத்து… இந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்…”

அங்கே சளி இருந்தாலும் இரண்டு கையையும் நெஞ்சிலே வைத்து அந்தச் சளி நீங்க வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சிப் பழகுங்கள்.

1.சொல்லிக் கொடுக்கின்றோம்… ஆனால் இதை நீங்கள் செய்ய வேண்டும்
2.ஒரு நாளைக்கு வைத்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்.
3.(ஏனென்றால் முதலில் ஆர்வமாக கேட்பார்கள் பின்னாடி அதைச் செயல்படுத்துவதில்லை)

எங்கே வலி இருக்கின்றதோ அந்த இடத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று நினைத்துக் கையை வைத்து அந்த வலி குறைய வேண்டும் என்று உணர்வுகளை
1.இதன் வழி பாய்ச்சி அந்த எண்ணத்தைக் கொண்டு வாருங்கள்
2.வலி குறைவதைக் காணலாம்…!

உதாரணமாக சங்கடமாக இருந்து ஒரு காயையோ அல்லது குழம்பையோ சமையல் செய்து பாருங்கள்… அது ருசி கெட்டுப் போகும். சந்தோஷமாக இருக்கும் பொழுது செய்து பாருங்கள்… நன்றாக இருக்கும்.

காரணம்,,, அன்றன்று உள்ள குணத்திற்குத் தக்க மாதிரித் தான் இதனுடைய செயல்கள் நடக்கும். நீங்கள் சலிப்போடு அரிசியை வேக வைத்துப் பாருங்கள்… சாதம் தண்ணீர் பட்டுப் போகும். இதெல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

சங்கடமாக இருந்து சமையல் செய்தால் அந்தக் காய்கறிகளை சல…சல… என்று ஆகிவிடும்… குழம்பின் ருசியே மாறிவிடும்.

யாம் (ஞானகுரு) சொல்லும் வழிகளில் நீங்கள் செயல்பட்டால் உங்கள் உடல் நலமாக உதவும். இந்த உடல் நமக்குச் சதமானது அல்ல…! அவ்வப்போது மனது அமைதி பெறுவதற்கு… மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் வலி நீங்க வேண்டும் என்று இந்த எண்ணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐயோ… எனக்கு அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது என்று அதைச் சொல்ல வேண்டியதில்லை.
1.எழுந்திருக்க முடியவில்லை நடக்க முடியவில்லை என்று சொல்லாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… வலி நீங்க வேண்டும்
3.நான் எழுந்து நடக்க வேண்டும்… நடக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று
4.வலி வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசித்து நன்றாக வேண்டும் என்று எண்ணி
5.இதைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்… அந்த வலிகள் நீங்குகிறதா இல்லையா என்று நீங்கள் பாருங்கள்.

சாமி…! நீங்கள் சொன்ன தியானத்தைத் தான் நாங்கள் செய்கிறோம் என்று இப்படித்தான் எண்ணுகின்றார்களே தவிர “தியானம் என்றால் என்ன…?” என்று முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா…!

நீங்கள் சொன்னீர்கள்… ஆனால் நடக்கவில்லை நடக்கவில்லை என்று அந்த இராகத்தைப் பாடக்கூடாது.
1.உடலின் இச்சைக்கு நாம் செல்லக்கூடாது.
2.அருளைப் பெருக்கும் பொழுது இந்த இருள் நிச்சயம் நீங்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் மூன்று வயதுக்குள் இயற்கையின் உண்மை நிலைகளை அறியும் சக்தி பெறுகின்றான். உயிர் அணுக்களின் தோற்றங்களையும் அதனின் உண்மைகளையும் அறிகின்றான்.

விஷத்தின் தன்மையை அடக்கி… அந்த அருள் ஒளியின் தன்மை கொண்டு தான் எடுக்கும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றான்.

ஒரு மின்னட்டாம் பூச்சியை எடுத்துக் கொண்டால்… மற்ற பூச்சிகளைக் காட்டிலும் அது உணவாக உட்கொள்ளும் பொழுது…
1.பின் பாகம் உணர்வின் மூச்சலைகள் வரப்படும் பொழுது பளீர்…. பளீர்… என்று மின்னும்.
2.இது எடுத்துக் கொண்ட உணவுகள் மெர்குரியாக மாறுகின்றது
3.இது போன்றுதான் அகஸ்தியன் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சுகின்றது.

இதைக் கண்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் அகஸ்தியனை “மகரிஷி” என்ற நிலையிலும் ஒரு “தெய்வீகப் பிறவி” என்றும் “கடவுள்” என்றும் “உயர்ந்த சக்தி வாய்ந்தவன்” என்றும் அவனைப் பின் தொடர்ந்து செல்கின்றனர்.

காட்டுக்குள் அவன் செல்லப்படும் பொழுது விலங்குகளும் இவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது… விஷ ஜந்துக்களும் அஞ்சி ஓடுகின்றது.

இப்படிப் பெற்றவன் தான் ஐந்தாவது வயது வரப்படும் பொழுது பூமிக்குள் துருவத்தின் வழி வரும் சக்திகளை எல்லாம் நுகர்ந்தறிகின்றான். துருவத்தின் ஆற்றலைப் பெறுகின்றான்.

அப்போது அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் அக்காலத்தில் வைக்கின்றார்கள்… அகஸ்தியன் துருவன் ஆகின்றான்.

ஐந்தாவது வயதில் வானுலக இயக்க உண்மைகளையும் அவன் கவர்ந்து… அதை உணர்வைத் தனக்குள் எடுத்து இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளைப் பெறுகின்றான்.

பதினாறாவது வயது வரும் பொழுது அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.
1.தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவி பெற வேண்டும் என்றும்
2.கணவனால் பெற்ற அந்தச் சக்தி கணவனுக்கு அது மேலும் கிடைக்க வேண்டும் என்று மனைவி எண்ணுவதும்
3.இப்படி இருவருமே உணர்வுகள் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றார்கள்.

எந்தத் துருவப் பகுதியைக் கூர்மையாகப் பார்த்து… எதை எல்லையாக வைத்தனரோ… அந்த எல்லையில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

மனிதனில் தீமைகளை வென்று… பிறவியில்லா நிலை அடைந்து ஒளிச் சரீரம் பெற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களைப் பெறச் செய்வதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம். அது தான் துருவ தியானம்…!
1.அந்தப் பயிற்சியின் பிரகாரம்…
2.யாரெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை முறைப்படுத்தி
3.தனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்கின்றனரோ அவர்கள் இந்த உடலில் பிறவி இல்லா நிலை அடைகின்றனர்.
4.மனிதனான பின் தான் அதைச் செயல்படுத்த முடியும்.

ஆகவே… நாம் சொந்தமாக்க வேண்டியது உயிருடன் ஒன்றி அருள் ஞானிகள் உணர்வை “அருள் செல்வமாக… ஒளிச் செல்வமாக…” நமக்குள் பெருக்கிப் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதி பெறுவீர்கள்

 

சாமி (ஞானகுரு) சொல்வதைப் புரியவில்லை என்று நீங்கள் விட்டு விடாதீர்கள்…!
1.அதை அறிய வேண்டும் என்று ஆற்றலுடன் உயர்ந்த நோக்கத்துடன் உணர்வினைப் பதிவு செய்து கொண்டால்
2.இந்த நினைவின் ஆற்றல் உங்களை அறியச் செய்கின்றது.
3.மனிதனாக எவ்வாறு உருவானோம்…? என்ற உணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றது.
4.மனிதனான பின் ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும்
5.துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் எப்படி இயங்குகிறது…? என்ற நிலையை அறியும் வல்லமை பெறுகின்றது.

அந்த உணர்வை நுகர்ந்தால் நமக்குள் ஏற்படும் உருமாற்றத்தையும் இனி பிறவியில்லா நிலைகளை அடையும் மார்க்கத்தையும் நீங்கள் தெரிந்து அந்த நிலை அடைய வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.
1.என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
2.இந்த உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்திடல் வேண்டும் என்பதற்கே இதை உங்களுக்குள் சொல்கின்றேன்.

இயற்கையின் நிலைகள் நமக்குள் எப்படி உருவானது…? என்ற நிலையில் ஆதியில் எப்படி உருவானது…? என்ற நிலையும் அந்த உணர்வின் உணர்ச்சிகளை எப்படி…? என்று நாம் அறிந்து கொள்வதற்கு இது ஏதுவாக இருக்கும்.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் உலகமே மனிதனின் சிந்தனை அனைத்தும் சிந்திக்கும் திறன் இழக்கும் தருணம் வந்துவிட்டது. சிந்தனையற்ற செயல்களைச் செயல்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து விட்டது.

1.ஒரு மனிதன் ஆயிரம் சிந்தனை கொண்டாலும் விஷம் தாக்கி விட்டால்
2.அந்தச் சிந்தனையை அனைத்தையும் அழித்துவிட்டு ஐய்யய்யோ…! என்ற இருள் சூழ்ந்த நிலைக்கே செல்லச் செய்யும்.
3.இந்த உடலைக் காக்கும் உணர்ச்சியின் தன்மை கூட வராது.
4.எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று அதனுடன் ஒன்றி அது மடியும் தருணமே வருகின்றது.
5.ஆக மனிதனின் நல்ல உணர்வுகள் முழுமையும் மடிந்து விடுகின்றது.

இதைப் போன்று உலகக் காற்று மண்டலம் நச்சுத்தன்மை அடையும் தன்மையும் இந்த சூரியக் குடும்பமே பிரபஞ்சமே மனிதனால் ஏற்படுத்தப்பட்ட விஞ்ஞான அறிவு கொண்டு அகண்ட பிரபஞ்சத்திற்குள் விஷத்தன்மைகள் பரவி… அதிலே சுழலும் தன்மை வந்து சூரியன் கவரும் காந்தப்புலனறிவிலும் விஷத் தன்மைகள் பரவி… அதிலிருந்து வெளிப்படுவதை நம் பூமி கவரப்படும் பொழுது இங்கே பெரும் மாற்றங்களே ஏற்படுகின்றது.

தாவர இனங்களிலும் சரி முந்தி வளர்ச்சி அடைந்த தாவர இனங்கள் உருமாறுகின்றது. சரியான வெள்ளாமை இல்லாது போகின்றது. மனிதனுடைய சிந்தனையும் சீர்குலைந்து வருகின்றது.

இனம் புரியாது புதுப்புது அணுக்கள் (வைரஸ்) உருவாகி மனித உடலில் புதுப் புது நோய்களும் உருவாகின்றது. இதைப் போன்று மனிதன் சிந்தனை இழக்கப்பட்டு மீண்டும் புழு பூச்சியாக பறவையாக பிறக்கும் நிலை வந்துவிடும்.

1.இதிலிருந்து நம்மைக் காத்திடும் நிலை வர வேண்டும்.
2.மனித உணர்வின் தன்மை கொண்டு நாம் விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து வளர்த்துக் கொள்ள முடியும்.

அந்த நம்பிக்கை வர வேண்டும்.

நாம் எண்ணியதை நமது உயிர் உருவாக்குகின்றது. உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது அதன் வழியே நாம் வாழுகின்றோம்.
1.ஆக அவனன்றி அணுவும் அசையாது.
2.நாம் நுகர்ந்த உணர்வை உணர்த்துகின்றது… நம் உடலாக மாற்றுகின்றது
3.மீண்டும் நினைக்கும் போது அந்த வழியே நம்மை இயக்குகின்றது.

ஆகவே நம் உயிர் இவ்வாறு செயல்படும் நிலைகள் வரப்படும் பொழுது
1.விண்ணுலக ஆற்றலை நீங்கள் அறிந்து தீமைகளை அகற்றும் வல்லமை பெற்று
2.அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்த்து இதனை நீங்கள் உங்கள் எண்ணத்தால் உருவாக்கிடல் வேண்டும்.

ஆத்ம பலம் எனும் “சூடாமணி” பெற்றிடவே உரைக்கின்றோம்

 

மனிதன் பெற்றிட வேண்டியது… சிந்தனைத் தெளிவு… பௌருஷம்… மனோதிடம்… உயர்வைக் கூட்டிக் கொண்டிடும் சித்தன் நிலை ஆகும்.

நன்மை பெறத்தக்க காரியங்களில் வெற்றி… அறிவின் சாதுரியம்… அனைத்தும் கொண்டு,
1.”ஆத்ம பலவான் என்ற ஆஞ்சநேயன்” பெற்று வளர்த்துக் காட்டிய அனுபவ சாரங்களை
2.கொள்கின்றவன் (கடைப்பிடிப்பவன்) ஜெபமாக உணர்ந்து கொண்டிட
3.வாயு புத்திரன் துணை கொண்டு இராமன் “சூடாமணி பெற்றான்” என்றே மாமகரிஷி மறைபொருள் காட்டியவற்றுள்
4.மனித ஞானம் உயர் ஞான வளர்ப்பின் ஆக்கத்தில்
5.மெய்ஞான விழிப்பால்… மெய் அறிவாம் வாலறிவன் (தெய்வ சக்தி) தன்மையாகச் சுடர்தல் எனும் ஜோதித்துவ பூரணமாக
6.தன்னைத்தான் வளர்த்துக் கொள்ளுதல் தன் அனுபவ ஞான வளர்ப்பால்… மெய்யின் முழுமை பெற்றிட
7.சூட்சுமப் பொருள்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

வெட்டன மறத்தல் (உடனுக்குடன் மாற்ற வேண்டியது) கோபத்தின் குணங்களே. மீண்டும் மீண்டும் புவி ஈர்ப்பின் பிடிப்பில் உழன்றிடவே மனிதன் தனக்குத்தானே விரித்துக் கொள்கின்ற “மாய வலையப்பா” அது.

விண் ஏகும் செயல் சூட்சுமம் காட்டிய வான்மீகி மாமகரிஷி… வாயு புத்திரனாகத் தன்னையே காவியப் படைப்பாக்கி… ஆஞ்சநேயன் கொண்டிட்ட வலு வீரியச் செயலை விளக்குவதே… ககன வழி மார்க்கம் உடல் கொண்டு பிறந்த நிலை.

1.இராமனாகிய உய(யி)ர் சக்தி அளித்திட்டதோ கணையாழியாகக் காட்டப்படும்
2.சூரிய ஜோதியாகத் துலங்கும் ககனமணி (விண்ணில் ஒளிச் சுடராக மிதக்கும் தன்மை).

இக்கலியின் மனிதன் கொண்ட பேராவல் நிலையினால் மெய்யைப் பொருள் உரைப்பதிலும் தாமதம் நாம் சுட்டிக் காட்டிடும் இந்த எளிய தியானத்தின் வழியாக…
1.உயிர் சக்தி வலுக்கூட்டும் செயலில்
2.விண் ஏகும் சூட்சுமம் உள்ளடக்கி
3.ஆத்ம பலம் எனும் “சூடாமணி” பெற்றிடவே உரைக்கின்றோம்.

ஸ்ரீராம ஜெயம் உரைக்கும் இடமமெங்கும் உயர்வைக் கொண்டு உயர்வைக் காட்டும் வான்மீகியாரின் பதிவு செயல் நிலை… “சப்த நாதங்களாக ஈர்ப்பின் வலுக் கூட்டிடுமப்பா…”

ஆஞ்சநேயர் கொண்ட விஸ்வரூபத்தில் ஜெபத்தின் அளவீடு காட்டிட முடிந்திடுமோ…? எண்ணத்தின் அளவீடு கொண்டு உணர்ந்திடப்பார்.

உணர்வுகள் மாற்றிக் கொண்டிட்டே… அந்த வினையின் வழி ஏகல் என்பதில்…
1.இராம காவியத்தில் நாம் கொடியது என உரைத்திடாவிட்டாலும்
2.விளக்கத்தின் பொருள் மோகமும்… கோபமும் குலத்தின் நாசம் (இராவணன்) என்று போதனையை அறிந்து கொண்டிடல் வேண்டும்.

எல்லோரையும் அருள் வழியில் நலம் பெறச் செய்வதற்குத் தான் விநாயகர் தத்துவம்

 

நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும். எவ்வாறு…?

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. மகரிஷிகளின் உணர்வுகள் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவு கொண்டு நினைவை விண்ணை நோக்கி ஏகி
2.மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி அந்த நினைவலைகளை உள்ளே பரப்ப வேண்டும்.
3.இப்படிப் பரப்புவோம் என்றால் அந்த உணர்வு வேகமாக உடலில் பரவிவிடும்.

உதாரணமாக நோயாளியைப் பார்த்த உணர்வுகள் நமக்குள் இருந்தால் அந்த மகரிஷிகள் உணர்வுகள் வலு ஆனபின் அந்த நோயாளியின் உணர்வைத் தள்ளிவிடும்.

சந்தோஷமாக இருக்கும் பொழுது மணம் ஜாஸ்தியாக இருக்கும் ஒருவர் வேதனைப்படும் நிலைகளைச் சொல்லி அதை நாம் கேட்டால் சந்தோஷமான மனதில் பட்டவுடன் அப்போது வேதனை தான் தோன்றுகின்றது.

வேதனையாக இருக்கப்படும் போது சந்தோஷமாக யாராவது சொன்னால் அதைத் தள்ளி விடுகின்றது. ஏனென்றால் விஷத்திற்கு வலு அதிகம். ஆனால்
1.இதையெல்லாம் வென்றவன் மகரிஷி
2.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை சொல்லிவிட்டு
4.எந்த நோயாளியைப் பார்த்தீர்களோ மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறுவாய்
5.உன் உடல் நோய்கள் சீக்கிரம் நீங்கும் நீ இதன் வழிப்படி மகரிஷிகளை எண்ணி பார்.
6.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
7.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று சொல்லி அதனை ஏங்கிப் பெறு
8.உன் உடல் நலம் பெறும் நீ நலமாவாய் என்று இந்த வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

நீங்கள் சொன்னதை அவர்கள் பின்பற்றத் தொடங்கினால் அவருடைய எண்ணம் அங்கே போகின்றது தீமைகளை நீக்க அந்த அருள் உணர்வுகள் அவருக்கு உதவுகிறது.

அதே சமயத்தில்
1.நமக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றதனால் தீமையை ஈர்க்கும் சக்தி குறைந்து
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாகக் கூட்டிக் கொள்கின்றோம்.
3.அந்தத் தீமையை அப்பொழுது அடக்கி விடுகின்றோம்.

இப்படிச் செய்வதற்கு தான் விநாயகர் தத்துவத்தை வைத்தார்கள்.

வேதனைப்படுபவர் உணர்வை நுகர்ந்து விட்டால் என்ன நடக்கின்றது…? உதாரணமாக எலி என்ன செய்கின்றது…? தரையிலே வங்கு போடுகின்றது நல்ல மனம் கொண்டு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து விட்டால் உங்கள் நல்ல மனதை அது வங்கு போட்டு விடுகின்றது.

ஆனால் அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் இந்த வேதனைப்படும் அந்த மனிதனின் உணர்வை அடக்கி விடுகின்றது.

வேதனைப்படுவோர் உணர்வைக் கேட்டபின் நல்ல குணத்தை அது அடக்குகின்றது. அதற்குத் தான் எலியைப் போட்டது.

ஆகவே வேதனைப்படுவோர் உணர்வைக் கேட்டபின் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அதை அடக்குதல் வேண்டும்.

அதற்குத்தான் வேம்பையும் அரசையும் போட்டு
1.மனித வாழ்க்கையில்… நீ நல்லவன் “நல்லவனாக இருக்க வேண்டும்”
2.நீ அறிந்து நல்லதைச் செய்தது… உனக்குள் அந்த நல்லது நிலைத்திருக்க வேண்டும்
3.பிறருடைய தீமை உன்னை ஆட்கொள்ளக்கூடாது… அவன் வழியில் நீ சென்று விடக்கூடாது.
4.அருள் ஒளி நீ பெற வேண்டும்… அறியாது வரும் இருளை நீக்கும் சக்தியை நீ அவனுக்குள் ஊட்ட வேண்டும் என்பதற்குத்தான்
5.விநாயகர் தத்துவத்தில் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

காலை துருவ தியானத்தில் மொத்தமாக நாம் பார்த்தவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்… தொழில் செய்யும் இடங்களில் அந்த நண்பர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று எல்லோரையும் நினைத்து இதை எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.இதை எண்ணினால் நாமும் நலமடைகின்றோம்… அவர்களும் நலமடைகின்றார்கள்.
2.எல்லோரையும் அருள் வழியில் நலம் பெறச் செய்வதற்கு தான் விநாயகர் தத்துவம்.

சாப விமோசனம்

 

ஒன்றினுள் இயங்குகின்ற இயக்கம்… அந்த இயக்கமாகச் செயலுறும் சக்தி… உயிர்த் தொகைகள் எதுவாயினும்… பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட மனிதனாகினும் சரி… “சந்தர்ப்பவசம் என்பது”
1.உயிரணுக்கள் உதித்திட
2.இணைந்து கொண்டிடும் உருவாக்கச் செயல் நிகழ்வுகள் ஒன்றினுள் மற்றொன்று ஒன்றி…
3.தத்தமது குண இயல்பு நீங்கப் பெற்றுப் புதிதென உருக்கொள்ளும் செயல் கூறுகள்.

வான் தொடர்பின் சூட்சமங்களை… ஞானம் பெற விழையும் ஞானச் செல்வங்கள் தாம் பெற்று உயர்ந்து கொண்டிட… தம்முள் விளங்கிக் கொள்வதே சந்தர்ப்பவசம்.

உலகோதய நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்களின் “வித்தியாசங்களைக் காட்டவல்லவையப்பா சந்தர்ப்பவசம்…!”

பால்வெளியில் கலந்து இயங்கும் இயக்க கதிகள்… செயல்படுநிலையை படைப்பின் படைப்பாக வளர்ச்சியுறும் ஆக்கமும்… அந்த ஆக்கமே மறைபொருளாகின் இவ்வாழ்க்கை சாகரத்தில் ஜீவன் கொண்ட உயிர் நிலைகள்…
1.சரீர நிலை விடுத்த இயக்கத்தில் ஓடி (இறப்பு)
2.தமக்கொத்த எண்ணத் தொடர்பு கொண்டிட்ட சரீர இயக்க கதி ஜீவனுடன் ஒன்றி விடுவது
3.புவி ஈர்ப்பில் செயலுறும் உயிர்த்தொகைகளின் மறைபொருள் இயக்க சந்தர்ப்பவசம்.

வான் இயக்கம் புவி இயக்கம் இந்த இரண்டு தொடர்களில்… புவி ஈர்ப்பின் இயக்க வான் தொடர்பு… சந்தர்ப்பவசம் ஆக்கும் உயிர் நிலைகாட்டும்.

மாமகரிஷிகள் இந்நிலையை விளக்குவதே “சாப விமோசனம்…”

தாய்மை என்ற அன்பு குணம் வளர்க்கும் மனத்தின் திறன் கொள்ளும் ஜெபம் எதுவோ “அதுவே மந்திரம்…” சகலத்திற்கும் மனத்தின் திறன் விளக்கிக் கொள்ளவே அனுபவ ஞான உதய மெய்ஞான விழிப்பால் வளர்வது.. சுடர்தல் எனும் ஆத்ம பலம் பெற்றிடும் ஒளி நிலையப்பா.

இராம காவியத்தில் நடைமுறை சந்தர்ப்பவச சாபங்கள் என்று
1.இராவணன் பெற்றுக் கொண்டிட்ட சாபம்
2.தசரதன் பெற்றிட்ட சாபம்
3.வாலி பெற்றிட்ட சாபம்
4.கந்தர்வன் பெற்றிட்ட சாபம் என்று
5.பல இடங்கள் சந்தர்ப்பவசம் நிகழ்த்தும் முன் வினைத் தொடர் என்று உணர்த்தினாலும்
6.விமோசனம் என்பதன் பொருள் காண வேண்டுமப்பா.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடவுள் எப்படி இருக்கின்றான்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் கடவுள் ஒருவனே…! தேவன் ஒருவனே…! என்பதெல்லாம் மதங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள்.

ஒவ்வொருவரும் தனக்குகந்த உணர்வுகளை அது உருவாக்கி மந்திரங்களை உருவாக்கி… அதனை மனிதனுக்குள் பதிவாக்கி… இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் கடவுள் அதற்காக அடிபணிந்து நமக்கு எல்லாம் செய்து தருவான்…! என்று சட்டங்களை இயற்றப்பட்டு… அதற்கென்று வேதங்களை உருவாக்கப்பட்டு… மந்திரங்களை ஒலிக்கச் செய்து கேட்டுணரும்படி செய்து… மனிதனை உருமாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

மதங்களால் இயற்றப்பட்ட சட்டத்தை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அது தான் கடவுளாக இயக்குகின்றது நம்முள் நின்று…!”

ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்து… தீமை எனக்குச் செய்தான் என்று உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை ஜீவ அணுவாக மாற்றி அது பிரம்மமாக்கி நம் உடலுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது தீமை செய்யும் கடவுளாக அது உருவாகின்றது.
1.தீமை செய்யும் எண்ணங்கள் அதிகமாகச் சேர்த்து விட்டால்
2.அந்த அணுவின் தன்மை தீமையை உருவாக்கும் கடவுளாக உருவாகின்றது.
3.ஆனால் நன்மை செய்யும் உணர்வுகளை உருவாக்கி விட்டால் நல்ல உணர்வை நுகரும் ஆற்றல் பெறுகின்றோம் நமக்குள் கடவுளாக…!

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் விஞ்ஞானம் இன்று இதைத் தெளிவாக நிரூபிக்கின்றது.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக்கை வைத்து அதை இயக்கச் செய்கின்றார்கள்.
1.அதிலே பொருத்தப்பட்டுள்ள நாடாக்களில்
2.காந்தப் புலனறிவை ஈர்த்து ஒலி அலைகளைப் பரப்புவதைக் கவர்ந்து
3.மீண்டும் எதிர் நிலைகளில் உருவாக்கும் ஆற்றலை அதிலே மூலமாகப் பூசி உள்ளார்கள்.

அதில் நாம் தட்டெழுத்தால் (KEY BOARD) எப்படி அடிக்கின்றோமோ… அடித்துக் காந்தப் புலனால் ஒலி அலைகளை எழுப்பப்படும் பொழுது
1.எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
2.ஒலி அலைகளைப் படமாக்குகின்றது… அதற்குத்தக்க உருவத்தையும் காட்டுகின்றது
3.ஒரு மனிதனையே உருவாக்கிக் காட்டுகின்றது.

அதைப் போன்று தான் நம் உயிர் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. நாம் எண்ணும் எண்ணங்களை எல்லாம் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. அந்த உணர்வுக்கொப்ப உடலில் உறுப்புகளை இயக்குகின்றது.

மனிதனால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் இயக்கினாலும் அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன்… “தட்டெழுத்தால் அடிக்கும் அந்த உணர்வு கொண்டு…” காந்தப்புலனால் ஈர்க்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்ட நிலைகள்

அதைச் செயல்படுத்தும் பொழுது “இவன் உணர்வும் அதிலே கலந்து…” அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக அந்தக் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.

இதைப் போன்று அது உருவாக்கும் நிலைகள் வரப்படும் பொழுது…
1.அந்தக் கம்ப்யூட்டரை இயக்கப்படுபவனுக்கு குடும்பத்தில் எதிர்மறையான உணர்வுகள் வந்து விட்டால்
2.அது… இவன் தட்டெழுத்தால் அடிக்கும் உணர்வுக்குள் கலந்து “வைரஸ்” என்ற நிலையாக… இது பிழைகள் கொண்டதாக மாற்றி விடுகின்றது.

(இதே நாடாவை மற்றவர்கள் பார்த்து இந்த உணர்வை எடுக்கப்படும் பொழுது தட்டெழுத்துக்களில் இந்த உணர்வின் மாற்றங்கள் அங்கேயும் வைரஸாக வரும்).

பிழைகளை இவன் அழித்து மீண்டும் செயல்படுவான் என்றால்
1.அங்கே திரையில் காட்டும் உணர்வுகளை இவன் நுகர்ந்து உணர்வுக்குத்தக்க மாற்றப்படும் பொழுது
2.இவனுக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து… தன் சிந்தனை இழந்து பிரமை பிடித்தவன் போன்று ஆகிவிடுவான்.

இந்த கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் யார் அதிகமாக அதை இயக்குகின்றார்களோ… அவர்கள் வேறு சிந்தனையே இல்லாது… இதன் உணர்வுகளிலேயே இருப்பார்கள்.

எந்திரத்தின் துணை கொண்டு இந்த உணர்வின் தன்மை இயக்குவது போன்று “மனித உணர்வுக்குள் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு…” மனிதனுக்குள் இயக்கும் இந்த உணர்வுகளுடன் கலந்தே எலக்ட்ரானிக்கின் தன்மை அடைகின்றது.

இவை எல்லாம் விஞ்ஞான அறிவால் உருவானாலும் இயற்கையின் உணர்வுகள் மனிதனான பின் இதனுடன் கலந்தே அது இயக்குகின்றது.

விஞ்ஞான அறிவால் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெற்றிருந்தாலும்
1.எலக்ட்ரானிக் என்ற நிலையில் வருவதை மனிதன் தனக்குள் நுகரப்படும் பொழுது
3.இயற்கையின் நிலைகளை அது மாற்றி விடுகிறது.

ஏனென்றால் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயங்கி நுகருவதை எலக்ட்ரானிக்காக… உடலையே இயக்குகின்றது. (ஏற்கனவே சொன்னோம்)

விஞ்ஞான அறிவின் தன்மைகள் கொண்டு இயந்திரத்தின் துணையால் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இந்த உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது
1.மெய் (தன் நிலை – இயல்பு) உணர்வுகள் மறைகின்றது…
2.மெய் உணர்வுகளை வளர்க்கும் தன்மை அது இழக்கப்படுகின்றது.

இது மட்டுமல்ல…! வானுலக ஆற்றலை… நஞ்சு கலந்த உணர்வுகளை அளவுகோலிட்டு அதைக் கம்ப்யூட்டரில் இயக்கிப் பார்க்கின்றான்…!
1.நஞ்சின் தன்மை பூமிக்குள் வருகின்றது… மனிதனைக் காக்கும் உணர்வுகள் அதிலே இல்லை.
2.மனிதனை அழித்திடும் உணர்வுகள்… கண்டுபிடிப்புகள் இங்கே அதிகமாகின்றது
3.இதை இயக்குவனுக்குள் அந்த அழித்திடும் உணர்வுகள் வளர்ந்து எல்லா இடங்களுக்கும் (காற்று மண்டலம்) பரவுகின்றது.

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த உணர்வுகள் காற்று மண்டலம் முழுவதும் பரவி
1.மனித இனத்தையே பூண்டோடு அழித்திடும் நிலைகளுக்கு மாற்றிக் கொண்டு வருகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.

ஆக கடவுள் யார்…? நமது உயிர் தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியனும் அவர் மனைவியும் இருவருமே நம் பூமியின் துருவத்தின் வழி வரும் உணர்வுகளை அது தாவர இனங்களாக மாறுவதற்கு முன் அதன் உணர்வின் ஒளி அலைகளை நுகர்ந்தறிகின்றனர்.

1.துருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி… பிரபஞ்சத்திலிருந்து வரும் உணர்வினைத் தனக்குள் பெற்று
2.தன் வளர்ச்சியின் முதுமையில் இருவரும் ஒன்றாக இணைந்து
3.அவருடைய தாய் தந்தையரின் உயிரான்மாக்களும் இவர்களுடன் இணைந்து
4.உடலை விட்டுச் சென்ற பின் “ஓர் குடும்பமாக… முதல் துருவ நட்சத்திரமாக அமைக்கப்படுகின்றது…!”

இருவரின் உயிரான்மாக்களும் அங்கே சென்றபின் இவர்கள் உடலுடன் இணைந்த தாய் தந்தை உயிரான்மாக்களும் துருவத்தைச் சென்றடைகின்றனர். அடைந்தபின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சேர்க்கப்படும் போது ஆறாவது அறிவின் தன்மை… ஏழாவது நிலைகள் அடைந்து “சப்தரிஷி மண்டலங்களாக அமையப்படுகின்றது…”

அவர்கள் முதலில் துருவ நட்சத்திரமாக ஆனபின் அவர் ஆற்றலின் துணை கொண்டு தாய் தந்தையர்களும் அவருடைய ஈர்ப்பு வட்டத்திலேயே சுழலத் தொடங்குகின்றார்கள்.

அதன் வளர்ச்சி கொண்டு அக்காலங்களில் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்தவர்களும்… அதைப் பின்பற்றியோரும்… உடலை விட்டுப் பிரிந்த பின் அவர்கள் செய்தது போன்றே இவர்களும் சப்தரிஷி மண்டலங்களாக அமைந்து வளர்ச்சி பெற்று (முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களாக) வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால்…
1.இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இவை அனைத்தும்… ஏன் நான்காயிரம் ஆண்டுகள் என்று கூடச் சொல்லலாம்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் சக்திகள் மனிதனில் குறைவாகி குறைவாகி குறைவாகித் தேய்பிறையாக ஆகி… இன்று மறைந்து விட்டது.
3.வான்மீகி வியாசகர் போன்றவர்கள் கடைசியாக விண் சென்றார்கள்.
4.அதற்குப்பின் ஒன்றொன்றாகக் குறையப்பட்டு… விண்ணுலகம் செல்லும் தன்மைகள் குறைந்து விட்டது.

அரசர்கள் என்ற நிலை முதலில் உருவானதும் அவர்கள் இட்ட சட்டங்களைத் தான் பின் வந்தோர் சிற்றரசர்கள் பேரரசர்கள் என்று உலகெங்கிலும் பரவத் தொடங்கியது.

மனித உடலின் இச்சைக்கும் சுகபோகங்களுக்கும் இது மாற்றப்பட்டு… அதற்குப் பின் விண்ணுலகம் செல்லும் ஆற்றலைப் பெறும் தகுதிகள் இழக்கப்பட்டு விட்டது.

மனிதனில் உயர்ந்த நிலை பெற்றவர்கள்…! என்று
1.அதிலே மந்திரங்களைச் சொல்லித் தன் வாழ்க்கையில் பெருக்குபவர்களை…
2.கடவுளாக எண்ணியும் ரிஷிகளாக எண்ணியும் திசைகள் மாற்றப்பட்டு
3.இன்றளவிலும் விண்ணுலகம் செல்லும் நிலைகள் மறைந்தே போய் விட்டது.

நமது குருநாதர் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்தவர்…!

அன்று அகஸ்தியன் துருவ மகரிஷியாகி விண்ணுலகம் எவ்வாறு சென்றார்…? என்ற நிலைகளை அறியும் வாய்ப்புகள் பெற்ற பின்… அதன் வழி கொண்டு அவருக்குண்டான உணர்வின் துணை கொண்டு
1.விண் செல்லும் மார்க்கங்களை எனக்கு (ஞானகுரு) உபதேசித்து
2.எவ்வாறு விண் சென்றார்…? என்ற அந்த முறைகளையும் எனக்கு உபதேசித்தார்.

குருநாதர் உடலை விட்டுப் பிரியும் சமயம் உற்றுப் பார்க்கும்படி செய்தார் குருநாதர்…!
1.சப்தரிஷி மண்டலத்துடன் அவர் இணையும் ஆற்றலையும்
2.அவர் உடல் பெறும் உணர்வுகள் அங்கே எவ்வாறு கரைகின்றது…? என்பதையும் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

இப்பொழுது தற்காலத்தில் (1971) விண் சென்றவர் தான் நம் குருநாதர்…!

அவர் உயிரான்மா எவ்வாறு விண் செல்கிறது…? என்று விண் செல்லும் மார்க்கங்களை உபதேசித்தார். அதற்கு என்ன உபாயங்களைச் செய்ய வேண்டும்…? என்றும் சொன்னார்.

அவரைப் பின் தொடரும் நிலையாக… இதை எப்படித் தனக்குள் பெருக்க வேண்டும்…? என்று அவர் காட்டிய அருள் வழிப்படி செய்கின்றேன்.

அன்று அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன… அதன் வழிகளில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு. அதைப் பின்பற்றியோர் சப்தரிஷி மண்டலங்களாக உருப்பெற்ற உணர்வுகளும் உண்டு

அதை எல்லாம் எப்படிப் பெற வேண்டும்…? என்று குரு உபதேசித்த வழிப்படி நுகர்ந்தறிந்து எனக்குள் விளையச் செய்தேன்.
1.அதன் உணர்வின் எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் செவிப்புலனில் இது ஈர்க்கப்பட்டு
2.அதன் உணர்வின் துணை கொண்டு நீங்கள் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

மனிதனில் உயர்ந்து சென்ற அந்த மெய் ஞானிகள் தீமைகளை அகற்றிட்ட… அந்தத் தீமைகளை அகற்றும் உணர்வுகளை நுகரப்படும் போது தான்
1.நம் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி
2.என்றென்றும் பிறவி இல்லை என்று அடையச் செய்யும் உணர்வுகள் இங்கே உருப்பெறுகிறது.

நாம் எண்ணுவது (சுவாசிப்பது) உடலுக்குள் அணுக்களாகி… அதனின் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது…?

 

ஒருவன் தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்துக் கோப்ப்படுகின்றோம். கோபத்தை உண்டாக்கும் அணுவாக உருவாக்கி விட்டால் உடலில் என்ன நடக்கிறது…?

கோழிக் குஞ்சு முட்டையை விட்டு வந்த பின் அது கத்துகின்றது… அதற்கு இரை தேடுகின்றது. அந்த உணர்ச்சியைத் தூண்டிய பின் கோழி கூப்பிட்டு இரையைக் கொடுக்கின்றது.

இதைப் போல
1.நம் உடலுக்குள் அந்த அணுவின் தன்மை கரு முட்டை நம் இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
2.எந்த உறுப்புக்குள் அது தேங்கி விடுகின்றதோ தேங்கிய அணு அதனின்று தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.இந்த இரத்தங்கள் நம் மூளை வரையிலும் போய்வரும்.
4.சிறு மூளை பாகம் சென்ற உடனே இந்த உணர்வுகள் உந்திய பின்
5.ஒருவரை உற்றுப் பார்த்து அந்த அலைகளை முதலில் எப்படி நுகர்ந்தோமோ அந்த நினைவு வரும்.
6.அயோக்கியப் பயல்…! இந்த மாதிரித் தவறு செய்தான் பார் என்று…!
7.நம்மை அறியாமலேயே அவன் நினைவு வரும்… அந்த அலைகளை நாம் நுகர நேரும்.
8.நுகர்ந்த பின் அந்த அணுத்தன்மை நம் உடலில் பெருகும்.
9.இரத்தங்களில் கலந்த பின் நமக்குள் அந்த அணு இதை உணவாக எடுத்துக் கொள்ளும்.

கோழி எப்படித் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுக்கின்றதோ இதை போலத் தான்… நமது உயிர் நாம் எண்ணியதைக் கருவாக்கி உருவாக்கி விட்டால் அணுவாகி விட்டால் அந்த உணர்ச்சியைக் கேட்டவுடன் உயிர் எடுத்து அதை உணவாகக் கொடுக்கும்.

ஆனால் உயிரிலே படும் பொழுது அவனை எப்படி நாம் கோபமாகப் பேசினோமோ அந்த உணர்வெல்லாம் கலந்து நம் இரத்தங்களிலே கலக்கும்.
1.இரத்தங்களிலே ஓடிக்கொண்டிருப்பதை அணுக்கள் சாப்பிடும்.
2.நம் உறுப்புடன் ஒட்டி இருக்கப்படும் போது தன் குஞ்சுகளைப் பெருக்க ஆரம்பிக்கும்… தன் இனத்தைப் பெருக்க ஆரம்பித்து விடுகிறது.
3.தன் இனத்தைப் பெருக்கப் பெருக்க நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட நம்முடைய உறுப்புகள்
4.இரத்தக் கொதிப்பு என்று வரும் பொழுது வீரிய உணர்வாக வரும்.

நல்ல அணுக்களில் இது பட்ட பின் புலி எப்படி மற்ற உயிரினங்களைக் கொன்று தன் பசியைத் தீர்த்துக் கொள்கின்றதோ இதைப்போல தசைகளில் இருப்பதைத் தன் பசியைத் தீர்த்துக் கொள்ள அந்த அணுக்கள் விழுங்கத் தொடங்கிவிடுகின்றது.

அப்போது தசைகளில் வலியும் வேதனையும் வீக்கமும் அதிகமாக வரத் தொடங்குகிறது. இந்த மணங்கள் தோன்றத் தோன்ற இனம் புரியாதபடி நம்மை இயக்கும்.

ஏதாவது ஒரு வேலையை செய்வோம் அங்கே ஒருவர் வருவார் அவருடைய செயலைப் பார்த்தபின் இனம் புரியாது கோபப்படுவோம்.
1.அந்த உணர்வு அதைச் சாப்பாடாகக் கேட்டுக் கொண்டே இருக்கும்.
2.இப்படி இந்த உணர்வுகள் நமக்குள் தோன்றி விட்டால் நல்ல ஆணுக்கள் பூராமே செயலிழக்கத் தொடங்கிவிடும்.

கோபமான உணர்வை எடுக்க எடுக்க உடல் எரிச்சல் கண் எரிச்சல் கால் காந்தல் இதை போன்று அந்த அணுக்கள் பரவும் இடங்களில் எல்லாம் இந்த நிலை ஏற்பட்டு விடுகின்றது.

அதே சமயத்தில் மன எரிச்சல்…!
1.நெஞ்சுக்கு முன் அந்தக் கோபமான நிலைகள் இங்கே வந்த உடனே இருதய பாகம் மோதி அங்கே நிறுத்தும்.
2.அந்த உணர்வு வரும் பொழுது கடிகாரம் போன்ற அதை இழுத்து வைக்கும்.
3.இழுத்து வைத்துத் தான் உயிருக்குக் கொடுக்கும் அப்பொழுது இருதய பாகங்கள் எல்லாம் வலி எடுக்கத் தொடங்கிவிடும்… எரிச்சல் ஏற்படும்.
4.நாம் சுவாசிக்கும் போது நமக்குள் எரிச்சல் என்ற உணர்வே வரும்.

இப்படி ஒருவன் தவறாகச் செயல்பட்டதை நாம் நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது நம் உயிர் அந்தக் கருவாக உருவாக்கி விடுகின்றது.

உருவாக்கி விட்டால் நம் கண்கொண்டு பார்த்ததை நமக்குள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாக்கி வைத்திருக்கின்றது.

நீங்கள் மருந்து சாப்பிட்டு நோயைத் தணித்தாலும் வயல்களில் களைகள் முளைத்தால் களைகளை நீக்கினாலும் மறுபடியும் களை முளைக்கும். இதைப்போல நமக்குள் அந்தக் கோபத்தின் உணர்வை ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாக்கப்படும் பொழுது நம் உடலில் இது பதிவாகின்றது.

இரத்தத்தைப் பரிசோதிக்கின்றார்கள். இந்த வாழ்க்கையில் எந்த அளவிற்கு நாம் கோபப்பட்டோமோ ரத்த கொதிப்பிற்குண்டான அணுக்கள் இருக்கின்றது இந்த வாழ்க்கையில் எந்த அளவுக்கு வேதனைப்படுத்தினார்களோ வேதனை உருவாக்கும் அணுக்கள் இருக்கின்றது.

ஏனென்றால் கோபம் வரும் பொழுது எண்ணிய காரியம் நடக்கவில்லை என்றால் வேதனை என்ற நிலை வரும் அதற்கு சாப்பாடு இங்கே தயாராக இருக்கின்றது.

1.இப்படி இது இரண்டும் மோதும் பொழுது இயக்கச் சக்தி மாறிவிட்டால் நமது உமிழ் நீர் கெட்டியாக மாற்றக்கூடிய அணுக்களாக வந்துவிடும்.
2.சாப்பிடுவோம்… தண்ணீர் குடித்த பின் பார்த்தால் கொழ… கொழ… என்று ஆகிவிடும்… சளியாகிவிடும்.
3.இந்த அணுக்கள் உருவான பிற்பாடு நுரையீரல் பக்கம் சென்று விட்டால்… அஹ்..அஹ்ஹ்… என்று மூச்சுத் திணறல் வந்துவிடும்.

இதையே நாம் சுவாசிக்கும் பொழுது சிரசு பாகம் செல்லும் பொழுது இந்த உணர்ச்சிகளைத் தூண்டும்… மூக்கில் தண்ணீராக ஒழுக ஆரம்பிக்கும். இது எல்லாம் எங்கிருந்து வருகின்றது…?

நம்முடைய எண்ணத்தால் வருவது தான்…!

உயிர் என்ன செய்கின்றது…? நாம் எதை எண்ணுகின்றோமோ சீதாலட்சுமியாக இருப்பதை நுகர்ந்த உடனே உயிரிலே பட்ட பின் சீதாராமா நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் (உடலுக்குள் எண்ணங்களாகத் தோன்றுகிறது).
1.ஒரு மனித உடலில் விளைந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் இந்த நிலை.
2.இதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் அல்லவா…!

தெய்வ நிலை பெற்றிடும் மனித(னி)ன் நிலை நின்று கொள்ளும் (தெய்வம் நின்று கொள்ளும்)

 

மூலத்தில் கலந்து இலயிக்கும் ஆனந்தப் பெருநிலை… மூலப் பிரகிருதி சகலமும் சகலமாகக் கலந்து முகிழ்தலின் செயல் நிலை… சூரியனின் சக்தியே வெப்ப ஒளிக் கதிர்களாக… சிவலிங்க அணுக்களாக… சமைத்திடும் நிலைகள் “பரவெளியில் வீசிப் படர்ந்து செயல்படும் சக்திகள்…”

அதை எல்லாம் பூமி தன் ஈர்ப்பின் சமைப்பில் பெற்று… வளர்த்து… வளர்ந்து வரும் பரிணாம வளர்ச்சி என்னும் செயல் நிகழ்வுகளை எல்லாம் “பிண்டத்தைக் கொண்டு” அன்றே மாமகரிஷிகள் உணர்ந்தனர்.

முத்தொழில் உணர்ந்திடும் உயர்வு கொண்டு… சரீர முச்செயல்களால் தங்கள் மெய்ஞானத்தைக் கூட்டி அறிந்து… அதன் வளர்ப்பாக ஞான விழிப்பார்வை கொண்டு அண்டத்தை அறிந்து கொண்டிடும் ஞான திருஷ்டியின் வழியாக… தெய்வீக நிலை பெற்றிடும் மனிதனின் உயர்வைக் கோளங்களின் செயல்பாட்டில் சூரியனை முதன்மையாகக் காட்டி… பூமியின் ஈர்ப்பில் காலைப் பொழுது நண்பகற் பொழுது இராக்காலப் பொழுது என்றே இவ்வண்டத்தில் நடைபெற்றிடும் சூட்சும இரகசியங்களை… நல்லெண்ண நற்சுவாசம் கொண்டே தியானத்தின் வழியாகப் பெற்று உயர்ந்திட நற்போதனைகளாகக் காட்டியவற்றுள்… மாமகரிஷிகள் வழிகாட்டி உயர்ந்ததைப் போல் இக்கலியின் வேகத்திலும் உண்மை உணரும் ஞானச் செல்வங்கள் “பிறவா நிலை எனும் அதனினும் சிறப்புற்ற பேரானந்தப் பெரு நிலையை எய்திட முடியுமப்பா…”

இராம காவியம் காட்டிய ரிஷி உணர்த்தும் வான் தொடர்பில்…. “மகாலட்சுமி உலவிடும் வேளை…” என்று வாய்மொழிச் சொற்கள் போதிக்கப்பட்டதே… சிருஷ்டியின் முதல் இரகசிய காத்தல் தொழில் எனும் சூரிய சமைப்பு நிலைகள் பூமி பெற்றிடும் காலத்தே… உணர்வலைகள் குணங்களாக ஆத்மா என்றிட்ட பதிவு நிலை பெற்றிடும் தெய்வீக உயர்வைக் கூட்டிக் கொண்டிட… இந்த மனித குலம் பெற்றிடவே “போதனைப்படுத்தப்பட்ட உண்மைகள்…”

1.படைப்பின் படைப்பு செயலுருவே பிரம்மனின் ஹேம அணுக்களாக உலவி ஓடிடும் சிவ சதா மண்டலமும்…
2.சூரியன் சமைப்பில் புலனாக வீசிடும் சிவலிங்க அணுக்களாகக் கலந்து…
3.பூமியின் தொடர்பில் மனிதன் தன் உயர் ஞானத்தால் பெற்றிட…
4.அறிவைத் தூண்டுகின்ற சக்தியாகப் பிரணவ ஆகாச வாணி என்னும் ஒலி சக்தியாக (சரஸ்வதியாக)…
5.தியானத்தில் பெற்றிடும் உண்மைகள் அதி வெப்ப சக்தியால் படைப்பின் ஜீவ ஆதாரம் செயல் கொண்டிடும் சமைப்பு வெப்ப அலைகளால் சமைத்திட்ட சமைப்பு…
6.செயலுறும் மாலை தொடங்கிய இரவின் பொழுதையே சிருஷ்டியின் சமைப்பே ருத்திரனாகவும்
7.அதன் உத்வேக ஊட்டம் அளித்திடும் துர்க்கை என்றே பெயர் நாமமிட்டு அழைத்து…
8.விண்ணின் சக்திகளை இம்மண்ணிலே ஜீவிதம் பெற்றிடும் உயிராத்மாக்கள் பெற்றிடவே…
9.உயிரின் குரு சூரியன் என்றே முதன்மைப்படுத்திட்டு…
10.மாமகான்கள் மெய்யறிவை அறியும் ஞானம் சுடர்ந்திடும் விளக்கைத் தூண்டிடும் தூண்டுகோல் என்றே அளித்த வழி வகைகள்…
11.இந்தக் கலியில் மனிதன் கொண்டிட்ட அறிவின் மெத்தனப் போக்கால்… பாகுபாடு கண்ட செயல்களால்…
12.சிருஷ்டியின் இரகசியங்கள் மாமகான்களால் மறைபொருள் படுத்தப்பட்டன.

“அரசு அன்று கொள்ளும்” என்ற சித்தன் சொல் இம்மனிதனால் “அரசு அன்று கொல்லும்” என்று மாற்றிட்ட சொல் வழக்கு போல் “தெய்வம் நின்று கொள்ளும்…? என்பதில்
1.எது அறிவைத் தூண்டுகின்றதோ
2.எது நின்று நிலை பெற்ற ஒளிப்பொருளோ அப்பொருளை வணங்குதல் மாத்திரம் அன்று
3.அந்த மெய்ப்பொருளாகத் தன்னை வளர்த்து… ஒளி எனும் ஜோதித்துவ நிலை பெற்றிட…
4.எண்ணம் கொள்ளல்… எது பேரருள் ஒளிச்செல்வமோ… அதனைச் சிந்திக்கத் தலைப்படும் எண்ணத்தின் உயர்வால்
5.நற்சுவாச ஒளி நுண்காந்த அலைகள் ஈர்த்திடும் பக்குவத்தால்
6.சிந்தனையில் கொள்ளும் பொருள் எதுவோ… “அதுவாக இவன் ஆதல்…” என்பது
7.”தெய்வ நிலை பெற்றிடும் மனிதன் நிலை நின்று கொள்ளும்…” பாங்கு அதுவே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கலசம் என்பது யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகள் உயிரான உணர்வுகளில் படப்பட்டு உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் பரப்பும் நிலை தான்.

“கலச நீர்…” என்பது…
1.அருள் ஞானிகளின் அருள் சக்தியை உங்கள் உயிருக்குள் ஊட்ட(ற்ற)ப்பட்டு
2.அதன் வழி உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் நிலைகள் தான்.

ஆகவே… யாம் கொடுக்கும் உபதேசத்தை எந்த அளவிற்குக் கேட்டு உணர்ந்தீர்களோ உங்களுக்குள் இது அரும் பெரும் சக்தியாக வளர்கின்றது… தீமைகளை அகற்றிடும் சக்தியாகப் பரவுகின்றது.

அதற்குத் தான் இந்த துருவ தியான நேரத்தில் இது உபதேசித்தது. அதன் மூலம் இங்கே வைக்கப்பட்டுள்ள கலசத்திற்குள்ளும் நாம் தியானிக்கும் உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது.

மனித உடலுக்குள் இந்த சிரசு (தலை) கோபுரமாக இருக்கின்றது கோபுரத்திற்குள் வீற்றிருக்கும் இந்த உயிரிலே அருள் ஞானிகளின் அருள் சக்திகளை நமக்குள் நீராட்டுவது போன்று…
1.நாம் தியானித்த ஞானிகளின் உணர்வின் சக்தியைக் கலச நீருக்குள் ஊட்டி
2.ஆலயத்தின் கோபுரத்தில் இதை ஊற்றப்படும் பொழுது (கும்பாபிஷேகம்)
3.அதில் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு நாம் பாய்ச்சும் அருள் ஞான உணர்வுகளைக் கவருகின்றது.

இன்று எப்படி ரேடியோ டிவிக்களில் ஏரியல் ஆண்டனாக்களை வைத்து காற்றில் பரவி வருவதை அது இழுத்து நமக்கும் ஒலி ஒளியாகக் கொடுக்கின்றதோ அது போன்று ஞானிகளின் உணர்வை அது நமக்கு இழுத்துக் கொடுக்கும்.

ஏனென்றால்
1.அங்கே வைக்கப்படுள்ள கலசம் அது செம்பு…. அதற்குள் காந்தப் புலன் உண்டு
2.அதே சமயத்தில் ஜீவ அணுக்களாக என்றும் வற்றாத “வரகு…” அதற்குள் போடப்பட்டுள்ளது.
3.உபதேச வாயிலாகக் கொடுக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை எல்லோரும் ஏகோபித்து அங்கே பதியச் செய்யப்படும் போது
4.ஞானிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து அதன் கீழ் இருக்கும் சிலைகளுக்கு அது கிடைக்கச் செய்யும்
5.சிலையை உற்றுப் பார்ப்போர் அனைவரும் அந்த அருள் ஞான சக்திகளைப் பெறுவார்கள்
6.இத்தகைய நெறிகளைத் தான் அன்று தத்துவ ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டினார்கள்.

ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் செய்திருப்போம் என்றால் இன்று உலகில் வரும் தீங்குகளை அடக்கி இருக்கலாம்… அதிக அளவுக்கு விஷத் தன்மை பரவாது நாம் தடுத்தும் இருக்கலாம்.

மாறாக… அன்று ஆண்ட அரசர்கள் ஆலயங்களைக் கைப்பற்றி அவர்களுடைய ஆசைகளை இதற்குள் ஊட்டி… அவர்கள் ஆசையின் உணர்வைத் தான் கலச நீராக மாற்றினார்கள்.

அதே தீமையின் உணர்வுகளை அங்கே பதியச் செய்யப்படும் பொழுது ஆலயத்திற்கு வருவோர் எண்ணங்களிலும் இதே ஆசைகள் தான் தூண்டப்படுகிறது. ஞானிகள் காட்டியது நமக்குக் கிடைக்காது செய்துவிட்டனர்.

ஆக…
1.மனிதர்கள்… தம் ஆசையினால் வரும் விளைவுகளில் இருந்து மீண்டிட வேண்டும்
2.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற தத்துவத்தை
4.ஆறாவது அறிவால் தனக்குள் உருவாக்கும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மை
5.ஞானிகளால் உணர்த்தப்பட்டது காலத்தால் மறைந்து விட்டது.

இனியாவது… இந்த விஞ்ஞான உலகில் பேரழிவாக வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.கலச நீராட்டும் உணர்வின் ஆற்றல் ஆலயத்தில் பெருகி
2.ஆலயம் வருவோர் அனைவரும் இதை நுகர்ந்து… அவருக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் அகன்று
3.மெய் ஞானிகளின் அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உணர்வின் ஒளிகளை நாம் அனைவரும் பரப்புவோம்

ஆலயம் வருபவர் இருள்கள் நீங்கட்டும்…! அருள் ஞானிகள் உணர்வு ஆலயங்கள் முழுவதும் பரவி… வருவோர் அனைவரது குடும்பங்களும் தெளிந்த நிலைகள் கொண்டு வாழ்ந்து… எல்லோரும் நலமாக இருக்க நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் உடலில் உருவான விண்ணுலக ஆற்றல்…
1.வானவியல் புவியியல் உயிரியல் அடிப்படையில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வுகள்..
2.தன் இன மக்கள் அறிந்து கொள்வதற்காக அவன் வெளிப்படுத்திய அந்த உணர்வுகள் அனைத்தையும்
3.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து இன்றும் அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.

அகஸ்தியனைப் பின் தொடர்ந்து வந்தோர்… நுகர்ந்தவர்கள் இதை அறிய முடியும். அந்த விண்ணுலக ஆற்றலை அவர்களும் அறியும் தன்மை பெறுகின்றார்கள்.

அதன் வழியில் தான்
1.நமது குருநாதரும் பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தார்… தனக்குள் பெற்றார்
2.தனக்குள் பெற்றதை எம்மையும் (ஞானகுரு) பெறச் செய்தார்..
3.சந்தர்ப்பத்தால் அவரைச் சந்திக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது
4.தான் பெற்ற அந்த விண்ணுலக ஆற்றல் ஒவ்வொன்றையும் எனக்குள் ஞான வித்தாகப் பதியச் செய்தார்.
5.பதிந்ததை… நான் நினைவு கொண்டு அதைப் பெற வேண்டும் என்று ஏக்கத்தைத் தூண்டுகின்றார்
6.அவர் சொன்ன முறைப்படி விண்ணிலே என் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அவர் கண்ட உண்மைகளை நானும் காண முடிந்தது.
7.குருவின் தொடர் கொண்டு அந்த அறியும் ஆற்றலை நானும் பெற முடிகின்றது… அகஸ்தியன் உணர்வை நுகர முடிகின்றது
8.உலகம் எப்படி உருவானது…? என்ற நிலையை என்னில் அறிய முடிகின்றது.

அதில் விளைந்த உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும் என்று அதன் உணர்வுகளைத்தான் சொல்லாக இங்கே வெளிப்படுத்துகின்றேன்.
1.செவி வழி உணர்ச்சிகளைத் தூண்டி…
2.உங்கள் கண் பார்வையில் நுகரும் ஈர்ப்பாகக் கொண்டு வருகின்றேன்.
3.நீங்கள் நுகரப்படும் போது… உயிருடன் ஒன்றி உணர்வின் அலையை உங்களில் பரப்பச் செய்து
4.அதை உங்கள் உடலிலே ஊழ்வினை என்ற வித்தாக விதைக்கும் தன்மையாகப் பக்குவப்படுத்துகின்றேன்.
5.அந்த உணர்வுக்குள்ளிருந்து அருள் ஞானி கண்ட உணர்வை நீங்கள் வளர்க்க முடியும்.

ஏனென்றால் குருநாதர் எவ்வாறு எனக்குச் செய்தாரோ அதன் வழியில் தான் உங்களுக்கும் கிடைக்கச் செய்கின்றேன். பிரபஞ்சத்தின் இயக்கத்தை அகஸ்தியன் கண்டதை நீங்களும் நேரடியாகக் காண முடியும். பேரண்டத்தின் நிலைகளையும் உணர முடியும்.

உங்களுக்குள் உருப்பெரும் இந்த உணர்வின் தன்மை கொண்டு “உங்களை நீங்களும் உணர முடியும்…” ஏனென்றால் மனிதரான பின் கார்த்திகேயா…!

எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் பெற்றவன்… உருவாக்கத் தெரிந்து கொண்டவன் மனிதன். அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது. இதையெல்லாம் நம் காவியங்கள் தெளிவாக்குகின்றது.

1.அந்த அருள் ஞானி அகஸ்தியன் கண்ட… நமது குருநாதர் கண்ட அனைத்தையும்
2.நீங்கள் அறிதல் வேண்டும் என்ற நிலைக்கே இதை உருவாக்குகின்றேன்.

அருள் ஞானி அகஸ்தியன் பெற்ற பேருண்மைகள் உங்களுக்குள் வளர வளர மனித இச்சையின் ஆசைகள் உருவாகும் நிலையை அடக்குகின்றது… உங்களை அறியாது வரும் இருள் சூழும் நிலைகளை அடக்குகின்றது… தீமை விளைவிக்கும் நிலையை அது அடக்குகின்றது.

அதற்குத் தான் இந்த உபதேசம்…!

ஆகவே… மெய் ஞானிகள் உணர்வை இந்த உபதேச வாயிலாகக் கேட்கப்படும் பொழுது அதே உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டி
1.அதனின் அறிவாக நீங்கள் நுகரும் தன்மை வருகிறது – நீங்கள் நினைவைச் செலுத்தினால்…!
2.ஆனால் இதையெல்லாம் கேட்டுணர்ந்து… “நன்றாக இருக்கின்றது…!” என்று மறந்து விட்டால் மெய்ப்பொருளைக் காணும் திறனை இழக்கின்றீர்கள்.

யாம் சொல்லும் இணக்கத்தின் உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அந்த உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் பதிவு செய்தால் மீண்டும் நினைவின் ஆற்றல் வருகின்றது.

அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை நுகர முடியும்… அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றும் திறனைப் பெறுகின்றீர்கள்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

“எனது நிலை (எல்லை)” பிறவி இல்லா நிலை அடைவது தான்

 

1.கோடிச் செல்வம் சேர்த்தாலும் அவர்கள் வாழ்க்கையில் மன அமைதி என்பது இல்லை.
2.அழியாச் செல்வம் (அருள் செல்வம்) என்ற நிலையை எடுத்துக் கொண்டால் எச்செல்வம் இருந்தாலும் அதைக் காக்க முடியும்.
3.ஞானம் இல்லை என்றால் செல்வத்தைக் காக்க முடியாது. செல்வத்தைக் காக்க அருள் ஞானம் நமக்குத் தேவை.

இதையெல்லாம் மனதில் வைத்து இந்த வாழ்க்கையில் குறை கூறும் வழக்கத்தை விடுத்து விட்டு குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று உணர்வினை வளர்த்துக் கொள்வோம்.

எங்கிருந்து எதனுடைய நிலைகள் வந்தாலும் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் குறைகள் ஏற்படுவது சகஜம்.
1.அந்தக் குறையை உற்று நோக்கி அதையே திரும்பத் திரும்ப எண்ணுவோம் என்றால்
2.நம்மை அறியாமலேயே அந்தக் குறையான செயல்களைச் செயல்படுத்தும் நிலையும்
3.நம்மை அறியாமலே தவறுகள் செய்யும் உணர்வுகளே வளர்ந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மாறுதல் வேண்டும்.

குறையின் உணர்வுகள் வளர்ந்து விட்டால் இந்திரலோகத்திற்குள் இரண்யன் சென்று நம்மை நல்வழியில் செயல்படுத்தாத நிலையை உருவாக்குகின்றான் என்று சொல்வார்கள்.

சொர்க்கத்தை அடையும் உணர்வின் தன்மை நமக்குள் இருக்கும் பொழுது பிறருடைய குறைகளை நுகர்ந்து விட்டால் நம் காரியமே செயலற்றதாக ஆகி… நமக்குள் குழப்ப நிலைகள் உருவாகி சிந்தித்துச் செயல்படும் சக்தியும் இழந்து “துருவத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம்…!”

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் இதன் வழி கொண்டு அந்த வித்தினை குரு காட்டி அருள் வழியில் நாம் பெறுவோம்.
1.இந்த வாழ்க்கையில் இனி பிறவி இல்லாத நிலை அடைவேன்.
2.அரும்பெரும் சக்தியான மகரிஷிகளின் அருள் சக்திகளை எனக்குள் சேர்ப்பேன்.
3.இந்த வாழ்க்கையை அருள் வழியில் நான் வாழ்வேன்
4.இந்த நிலையே எனது கடைசி எல்லை பிறவி இல்லா நிலை என்ற இந்த உணர்வுடன் வாழ்ந்து பழகுங்கள்.

உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

செல்வங்கள் நிலைப்பதில்லை… செல்வம் இருப்பினும் இந்த உடலின் உபாதைக் காலங்களில் கூட செலவழிப்பதற்கு அது பத்துவதில்லை. செல்வம் அதிகமாக இருப்பினும் உபாதைகள் அதிகரிக்கப்படும் பொழுது “நல்ல உணவை உட்கொள்ள முடிவதில்லை…”

இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு இந்த பிறவிக் கடனை அகற்றி… இனி பிறவியில்லா நிலையை அடையும் நிலையினைச் செயல்படுத்துதல் வேண்டும்.

அது தான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. நமது வாழ்க்கையில் அருள் ஒளியின் சக்தியை பெற வேண்டும் என்று நினைத்தால் “அருள் ஒளியே நமக்குள் வளர்கின்றது…”

இல்லை இவன் இப்படி அவன் அப்படி அவன் இப்படி என்று குறை கூறிக் கொண்டே இருந்தால் குறையின் உணர்வு வளர்ச்சியாகி… நோயாகி… நமக்குள் அதுவாகவே நாம் ஆகி விடுகின்றோம்.

நமக்குள் சீர்படும் செயலை இழந்து செயலற்ற நிலைகள் படும்பொழுது நம் தொழிலே குந்தகமாகி… வாழ்க்கையிலே எதிர்ப்பின் உணர்வுகளாக நமக்குள்ளேயே எதிரிகளை உருவாக்கி… மனிதனல்லாத நிலையை உருவாக்கும் நிலை வந்து விடுகிறது.

இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
1.அருள் ஒளி பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
2.அருள் ஞானம் பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.

அதற்குத் தகுதியான நேரம் இந்தக் காலை துருவ தியான நேரமே. நான்கிலிருந்து ஆறரைக்குள் விழித்த நேரத்திலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்யத் தவறி விடாதீர்கள்.

1.அருள் ஒளியைப் பரப்புங்கள்… அருள் வழியில் வாழ்க்கை வாழுங்கள்.
2.அருள் சொல்லையே சொல்லுங்கள்… உங்கள் சொல்லைக் கேட்போர் தீமைகள் அகலட்டும்.
3.அருள் ஞான வழியில் நாம் வளருவோம்
4.நம் பார்வையில் அனைவரது தீமைகளையும் அகற்றுவோம் நம்மைப் பார்ப்போர் அனைவரது தீமைகளும் அகலட்டும்.
5.அருள் ஞான வழியில் நாம் வாழ்வோம் வளர்வோம்…!

உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்… தியானிக்கின்றேன் (ஞானகுரு).

யார் அந்தணன்…?

 

வான்மீகியார் இராமனாக நாம ஜெபம் உபதேசிக்க…
1.அதைத் தன்னுள் ஏற்றுக் கொண்டிட்ட… பூரண முழுமையை உபதேசிக்கத் தகுந்த நிலை பெற்றிடும் விஸ்வாமித்திரன்
2.தனித்துவ தன்மையை உலகினுக்கு உணர்த்தி வழி காட்டவே
3.விஸ்வாமித்திரன் வான் தொடர்பாக பூமியின் ஈர்ப்பில் “அபூர்வ தனித்துவ குணத்தன்மைகள் பெற்றிடவே”
4.நடந்திட்ட யாகத்தை வில்லேந்தும் செம்மல் எண்ணத்தின் பலமே…
5.நற்சுவாச நல்நோக்கு செயல்படும் காலத்தில்
6.எண்ணத்தின் பாங்கே ஆங்கு சக்கர வியூகமாகக் காத்திடும் செயலை உபதேசித்து அருளி
7.நல்வழி செயல் நடத்திடும் மெய் யாகத்தின் தன்மைகள் அன்று மறைபொருள் ஆக்கப்பட்டது.

இன்று உம்மையே (இதைப் படிப்பவர்கள்) அச்செயல் நடத்திடும் பாத்திரப் படைப்பாக்கினேன்.

“அக்னி அஸ்திரம்” என்ற எரி அம்பு பாதுகாவலாக… இராமனாக… வான்மீகியால் விசுவாமித்திரர் பெற்று உயர்ந்திட… யாகம் காக்கப் பெற… அதிலும் “ஓர் சூட்சுமம்” மறைபொருள் காட்டும்.

மூர்க்க குணத்தன்மைகளை வென்று காட்டிய “வான்மீகி” வனவேடு குலத்தினனாக அந்தணர்களும் சத்திரியர்களும் ஒருவரை ஒருவர் அழித்திட முனைந்த செயலை நீக்கிட்டுக் கர்வ சம்ஹார மூர்த்தியாகக் கீர்த்தி பெற்றிட்டதே அவரின் ஆக்கம்.

அந்தணன் என்பவன் யார்…? என்று வழி அமைத்திட்ட வழக்கங்களைப் பழக்கத்தில் கொண்டிட முனைந்தனரா…?

அக்கால நாகரீக மேம்பாட்டிலே அந்தணருக்கு என்று சிறப்பு இடம் உண்டு. அதைத் துஷ்பிரயோக செயல்கள் நடத்திட்டு… பெற்றிட்ட கீர்த்தியை மாய்த்திட்ட நிலைகளும் உண்டு.

1.தனக்கென வாழாதவனும்… பிறருக்காக வாழ்பவனும்… இந்த இரண்டு சொற்களின் கருத்துக்களை கடைப்பிடிப்பவனே அந்தணன்… பிறப்பினாலன்று…!
2.சகல ஜீவர்களுக்கும் தவம் கொண்டு உயர் ஞான சித்தில் திளைத்து
2.சித்தன் நிலையாகப் பெறும் பேறு காந்தப்புல இயற்கையின் சக்தியை சக்தியுறச் செய்திடும் செயலுக்கு
3.இவ்வுலகிற்கு வழிகாட்டுபவன் யாராக இருந்தாலும் அவன் அந்தணனே…!

பிறப்பில் வேடுவன்… செயலில் அவன் அந்தணன்…!
1.விஸ்வாமித்திரர் தான் வெற்றி பெற்றிட்ட சக்தியின் வலிவு கொண்டு அந்தணன் சம்ஹாரச் செயல் நடத்திட முனைந்த போது வான்மீகியால் தடுத்து ஆட்கொண்ட செயலும்…
2.பிறப்பில் அந்தணன்… பரசுராமர் சத்திரிய சம்ஹாரம் செய்திடுவேன் என்று கொண்ட எண்ணத்தின் வஞ்சத்தை மாற்றி அமைத்து
3.சாந்த குணசீலனாக்கிய… வஞ்சம் தவிர்த்த வேடனை வழி நடத்திய அந்தணன்
4.இராம காவியம் இன்று நிலை உலகின் கண் பல இடங்களில் பரப்பிட்ட விஸ்வாமித்திரன் உத்வேக செயலுக்கு வழி நடத்திட்ட மாமகான் – வான்மீகி.

மனிதன் தெய்வநிலை பெற்றிடும் சூட்சம இரகசியங்கள் நாற்பூத புரவிகள் ஐம்பூத சக்தியாகச் செயலுறும்… இயற்கையின் தத்துவ சாரங்களை அனைவரும் பெற்றிடவே… காட்டிட்ட அனுபவ ஞான வழிகள் பல உண்டு.

பாடத்தின் கடினம்… விண்டு உரைப்பதில் தாமதம் ஆகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு பயிற்சி:-

1.நீங்கள் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண் பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.

அப்போது
1.நம் கண் பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
2.நம் நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்

செய்து பாருங்கள்.

இதைப் போன்று தான் ஒருவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

சாபமிட்ட அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம் அங்கே அது முதலில் வந்து விடுகின்றது.

நண்பர் நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ.. நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த நேரத்தில் “நின்று…”
3.அந்தச் சாபமிடுபவன் சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.

“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்.

இந்த மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.

அதே மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

அவன் உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம். அடுத்தது என்ன எண்ண வேண்டும்…?

1.யாம் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு. ஆனால் நாம் சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு… அதிலிருந்து போன பிற்பாடு நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நல்ல குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச் சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது…?
3.சாப அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.

அப்பொழுது நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதை… “சொல்லால் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்…!”

சாபமிட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்…?

1.நம் உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள் ஒன்று பட்டு வாழ வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.

இப்படிச் செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்..?

நடு ரோட்டில் சாபமிட்டார்கள்…! என்று நினைக்கும் போதெல்லாம்
1.இவர்கள் விட்ட சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி
2.அவர்களிடம் இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
3.நமக்குள்ளும் இதை வளர்த்துக் கொள்கிறோம்.

“இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் இப்படியெல்லாம் நடக்கின்றது…” இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டால் சாபமிட்ட உணர்வுகளும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளும் தீமையான உணர்வுகளும் அனாதையாகிவிடுகின்றது.

நாம் யாரும் ஈர்க்கவில்லை என்கிற பொழுது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது.

1.எது எது பிடிப்பில் இல்லையோ
2.அதையெல்லாம் சூரியன் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் அதை மாற்றி
3.நல்ல கதிர்களாக உருவாக்கி வெப்பமும் காந்தமுமாக அனுப்புகின்றது.
4.இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் பயிற்சி…” இது தான். செய்து பாருங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மனிதனின் வாழ்க்கையில் தீமைகள் எப்படி எல்லாம் வருகின்றது…? என்று தெரிந்து கொள்தல் வேண்டும்.
1.இதை மாற்றுவதற்கு உங்களுக்குச் சக்தி வேண்டும்.
2.உங்களுக்குத் தெரியாது… தெரிய வைக்கின்றோம்.
4.அந்தச் சக்தி பெறுவதற்குண்டான ஊக்கத்தையும் கொடுக்கின்றோம்.
5.தெரியக்கூடிய அளவிற்கு அருள் ஞானிகளின் அருள் வித்துக்களைப் பதிய வைக்கின்றோம்.

(1) ஞானம் கிடைக்கும் சந்தர்ப்பம் எது…?
திட்டியவனை நினைத்தவுடன் உடனே நமக்கு ஆத்திரம் வருகின்றது. நம்முடைய காரியங்கள் எல்லாம் தடைப்படுகின்றது.

அப்பொழுது அந்தச் சங்கடம் வரும்போது நான் (ஞானகுரு) உங்களுக்குள் பதிவாக்கியதை எண்ணினால் உங்களுக்குள் ஞானம் வரும். தீமையை விலக்கக்கூடிய யுக்தி வரும்.

உங்கள் சொல் என்ன செய்யும்…?

அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் நாம் பேசும் இந்த உணர்வலைகள் திட்டியவர்கள் மனதிற்குள் போய்… நம் மீது உள்ள கடுப்பைக் கொஞ்சம் குறைக்கச் செய்யும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

(2) நம் உணர்வு அடுத்தவருக்குள் புகுந்து மீண்டும் நமக்கே திரும்ப வந்து இயக்கும் நிலை
1.“என்னிடம் இப்படிப் பேசினான்” ஆகவே… என்னை இப்படித்தான் எப்போதும் பேசுவான்…! என்ற உணர்வு வந்து
2.நாம் அந்த அச்ச உணர்வோடு பேசும் பொழுது ஏதாவது ஒன்று பதில் சொன்னோம் என்றால்
3.அவர்களுடைய செவியில் பட்டு “நம்முடைய அந்தப் பயப்படும் உணர்வே…” அவர்கள் உடலுக்குள் போய்
4.நம்மை அவர்கள் மிரட்டும் நிலையை உருவாக்கிவிடும்.

ஒருவரிடம் கடன் வாங்கி இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம் திருப்பிச் செலுத்தச் சிறிது கால தாமதம் ஆகின்றது. நாம் எப்படியும் வாங்கிய பணத்தைக் கட்டவேண்டும் என்று விரும்புவோம்.

அப்பொழுது அதை எப்படி எண்ண வேண்டும்…?

ஏனென்றால்… அவன் சரியான நேரத்தில் கொடுத்து உதவினான். அது நியாயம் தான். ஆனால்… நாம் வாங்கினோம் அவனுக்குக் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும்
1.சரியான முறையில் எப்படியும் கொடுக்கக்கூடிய சக்தி எனக்கு வர வேண்டும்.
2.நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்டு அமைதியாக இருந்து
3.எனக்கு அந்த வழி கொடுக்க வேண்டும்… அந்த நிலை பெற வேண்டும்… என்று நாம் எண்ணினோம் என்றால்
4.அந்த வலுவான உணர்வுகள் நாம் எண்ணும்போது மூச்சலைகள் வெளிப்படுகின்றது.

கடன் கொடுத்தவர் நம்மை எண்ணி வரும்போது அதை அவர் சுவாசித்தால் அவர் உடலில் இது இணைந்து நம் மேல் இருக்கக்கூடிய வெறுப்பின் தன்மையை “நிச்சயம் குறைக்கும்…”

இதே மாதிரி தொழிலே ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு… இந்தப் பொருளை வாங்குவோர் நன்றாக இருக்க வேண்டும். அதற்குண்டான மன பலம் பெற வேண்டும்.

நம்மிடம் பழகும் நண்பர்களுக்கும் ஒத்துழைக்கக்கூடிய தன்மை வரவேண்டும். நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நம்முடன் ஒத்துழைக்கும் தன்மை வரவேண்டும் என்று இப்படித்தான் இணைத்துக் கொண்டு போக வேண்டும்.

(3) சங்கடத்தை நீக்குங்கள்
வேலை செய்பவர்களிடம் போய்… சங்கடத்துடன் எண்ணி நீங்கள் ஒரு வேலையைச் சொன்னால் இதே சங்கடம் அவனை இயக்கி அவனைத் தவறு செய்ய வைத்துவிடும்.

நீங்கள் சங்கடத்துடன் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் வாடிப் போகும். நம்மை அறியாமல் இயக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு வலுவான சக்தி வேண்டும். அந்த வழி அறிந்து செயல்படும் நிலைகள் பெற வேண்டும்.

1.ஒரு பள்ளிக்குச் சென்றால் விஞ்ஞானியாக வேண்டும் என்றால் அது எப்படி…? என்ற நிலைகளைச் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.
2.ஒரு இஞ்சினியராக வேண்டும் என்றால் எப்படி…? என்றும்
3.ஒரு ஆசிரியராக வேண்டும் என்றால் எப்படி…? என்றும் சொல்லிக் கொடுக்கின்றார்கள்…
4.அதற்குண்டான பாடங்களைப் படிக்கின்றார்கள்.

இதைப் போன்று தான் குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்த அந்த உணர்வை நினைவுபடுத்தி உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவானது மீண்டும் உங்கள் நினைவுக்கு வரும் பொழுது
1.சங்கடங்களைச் சமாளிக்கும் ஞானம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
2.அந்த ஞானத்திற்குண்டான யுக்தி கிடைக்கச் செய்வதற்குதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் பெற வேண்டும் என்று
3.அடிக்கடி சொல்லி அதை உங்களுக்குள் ரிக்கார்டு செய்து வைத்து விடுகின்றேன்.

அப்பொழுது “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது தீமையை நீக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குள் பெருகத் தொடங்குகின்றது.

(4) தீமையை நல்லதாக மாற்றும் முறை
உதாரணமாக… பாலில் சர்க்கரையைப் போட்டால் இனிப்பாக இருக்கின்றது. அந்தச் சர்க்கரையுடன் சேர்த்துக் காபித் தூளைப் போட்டால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.

சர்க்கரையுடன் கொஞ்சம் புளிப்பைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது. அந்தப் புளிப்புடன் இலேசான காரத்தைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.

மிளகைப் போட்டுப் பாருங்கள் அது ஒரு ருசியாக இருக்கும். மிளகாயைப் போட்டுப் பாருங்கள். அந்தப் புளிப்பு காரம் எல்லாம் சேர்த்து “பானக்கம் கரைத்தால்” அது ஒரு ருசியாக இருக்கும்.

இதைப் போலத்தான் உங்களுக்குள் எத்தகைய தீமையான நிலைகள் வந்தாலும் அதை நல்ல சுவை மிக்கதாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வேண்டும்.

அதற்குத்தான் இந்த வழிமுறைகளைச் சொல்கின்றோம்.

துருவ நட்சத்திரம் உருவாக்கும் “ஒளியான அண்டம்”

1.பிரபஞ்சத்தில் உயிரணு தோன்றி பூமியில் மனிதனாக உருவான பின் துருவ நட்சத்திரம் ஆன நிலை என்பது…
2.அது அகண்ட அண்டத்தின் நிலைகளைத் தனக்குள் நுகர்ந்து
3.ஒளிச் சரீரமான ஒளியான அண்டத்தை உருவாக்கும்,

இப்படி…
1.ஒளி அண்டங்கள் ஒன்றுடன் ஒன்று நமது சூரியக் குடும்பத்தில் இருப்பது போல பல பல சூரியக் குடும்பங்களில்
2.எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்களில் உயிரணு தோன்றி உணர்வின் ஒளியாக மாறி… அகண்ட அண்டத்தில் சுழன்று கொண்டு தான் உள்ளது.

உயிரணு தோன்றி இந்த உயிர் நுகர்ந்த உணர்வு கொண்டு உணர்ச்சிகள் கொண்டு நாம் இயங்கினாலும்… அதனதன் வழி கொண்டு சந்தர்ப்பத்தில் வேதனை என்ற உணர்வை நுகர்ந்த பின் வேதனையை உருவாக்கும் அணுக்கள் உருவாகி உடலிலே நரக வேதனையைத் தான் அனுபவிக்க நேர்கின்றது.

இப்படி ஒவ்வொரு சரீரத்திலும் நரக வேதனைகளை அனுபவித்து… அதிலிருந்து “தப்பிக்க வேண்டும் தப்பிக்க வேண்டும்” என்ற உணர்வுகளை வளர்த்து வளர்த்துத் தான் இன்று நம்மை மனிதனாக வளர்த்துள்ளது உயிர்.

1.மனிதனான பின் இத்தகைய வேதனைகளிலிருந்து தப்ப வேண்டும் என்று
2.அவ்வாறு தப்பிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் இந்த உடலிலே அது வளர்க்கப்பட்டு
3.உடலை விட்டுச் சென்ற பின் வேதனையற்ற உணர்வும்
4.வேதனை உருவாக்கும் அந்த நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று
5.அகண்ட அண்டத்தில் எங்கும் செல்லும் நிலையும்…
6.எங்கிருந்து எது உருவானாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று ஒளிச் சரீரமாகப் பெறும் தகுதியும் பெறுகின்றது.

அதை இந்த மனித சரீரத்திலே பெறத் தவறினால் மீண்டும் நாம் எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மை கொண்டு விஷ அணுக்கள் உருவாகி… உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தன்மை கொண்ட உடலாக உருவாக்கிவிடும் நமது உயிர்.

மீண்டும் நரக வேதனையில் தான் சுழல நேரும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கினால் உடலில் வரக்கூடிய நோய்களையோ அல்லது வாழ்க்கையில் தொழிலில் வரக்கூடிய சிக்கலையோ அதை நிவர்த்திக்கும் வல்லமை பெறுகின்றோம்.
1.தியானத்தின் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறப்படும் போது
2.நாம் இந்த வன்மை (வலிமை) பெறுகின்றோம்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தும் பொழுது நமது நினைவாற்றல் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றது.
1.அதன் உணர்வை நாம் எளிதில் பெறும் தன்மையும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றிடும் திறனும் பெறுகின்றது.
3.அதே சமயம் இந்த உடலை விட்டு நாம் சென்றால் எளிதில் அந்த சப்தரிஷி மண்டலத்தை அடையும் நிலையும் வருகின்றது.

மாடு மேய்ப்பவன் தலைகீழாக நட்ட செடி

“வான் நோக்கிய நோக்கில்” உயர் ஞான வேதம் உள் நிறைந்து நிலைக்களன் ஆக்கிட… உயர் காந்த ஒளி அணுக்கள் நூறில் ஒருவருக்குப் பாய்ந்திடும் செயல்… உயர்வெண்ண நினைவோட்ட சிந்தனையின் வசத்தால் ஆங்கு கிட்டியது “மெய்ஞான மகிழ்விப்பு…”

பறவையை வீழ்த்திய பின்…
1.“வான்மீகியின் கண்டத்தில் இருந்து எழுந்திட்ட ஒலி நாதம்” திரும்பத் திரும்பக் கீதமாக மனதின் கண் எழ
2.மௌடீக மாயை அகல… மோகத்தை வேரறுக்கும் “மனத்தின் திண்மை” செயலுற்றது.

மெய்ப்பொருளைத் தேடி பரத கண்டம் முழுக்க யாத்திரையாக உலவிப் பற்பல அனுபவ நிலைகளைப் பெற்று…
1.அகத்தின் பொருள் நாடிடும் நிலையாக நாரத மாமகரிஷியின் தொடர்பில்
2.அகத்தினுள் அகண்ட அண்டத்தை அறிதல் என்பதாக மேலாம் நிலை விளக்க
3.கீழாம் அறிவு செயல்படா நிலை பெற “ஆச்சா மரம் வீழ்த்தும் மராமரம்” நாரதரால் உபாசிக்கப்பட்டது.

இரு வித அமில குணங்கள் செயற் கொண்டிடும் மராமரத்தில் வான்மீகி கண்டு கொண்டது மாசற்ற மனம் கொள்ளும் தியானமாக உளநலன் கண்டது மராமரா.

உடலை வறுத்திடும் உணர்வுகள் உள்ளத்தின் உணர்ச்சியாம் மோக நிலைகளை வேருடன் வீழ்த்த… மனிதன் கொண்டிடும் எண்ண உயர்வால் தெய்வீக நிலை கண்டிடும் மராமரா என்றே அதைக் கண்டதும் உண்டு.

புறப் புயலாக எழுந்த கௌசிகனின் கோபம் களைய… அந்த வேந்தனுக்கு உபதேசம் தந்திட வான்மீகி கடைப்பிடித்த உபாயம்… நாட்டரசனை உலகாளும் அரசனாக்கி…
1.உலகையே நேசித்த விசுவாமித்திரன் சமுதாய நலன் பேண
2.இராம காவியத்தை இந்தப் பூமி எங்கும் பரப்பிட்ட செயலுக்கு வித்திட்டதே “வான்மீகி மாமகரிஷி தான்…”

ஜீவன்களுக்கு ஏற்படும் மரணத்தை வென்றிடத் துடித்து எழுந்த “கௌசிகனின் தவ சக்தியைக் காத்திடவே…” மாட்டுக்காரனாகக் கோலூன்றி… வரும் வழியில் காத்திருந்த வான்மீகியாரின் எண்ணம் ஈடேறிற்று.

வேடுவன் ஞானம் வேந்தருக்கு உரைத்தல்
தியாகம் உணர்த்திய யோகம்
பண்டு இணைவென்ற விமோசனம்
ஆறாம் அறிவு உணர்த்திய சாந்தம்
மாடு மேய்ப்பவன் தலைகீழாக நட்ட செடி

ஓர் கிணற்றருகே சிறு தோட்டம். அந்தத் தோட்டத்தின் செடி கொடிகள் வேருடன் பிடுங்கப்பட்டு
1.வேர் மேல் இருக்க கிளைகள் பூமியில் புதைந்திருக்க
2.சகல செடி கொடிகளையும் இதே தன்மையாக அமைவுப்படுத்தி
3.ஓட்டை மண் கலையத்தில் நீர் இறைத்து
4.அந்த மாட்டுக்காரன் நீர் குடத்தைச் சுமந்து கொண்டு செடிகளுக்கு நீர் பாய்ச்சிட ஓடுவான்.

அங்கு நீர் மிஞ்சுமா…? மிஞ்சாது…!

வெறும் கலயத்தை வேர்ப்பாகம் மேலிருக்கும் செடிகளின் மீது கவிழ்ப்பான். “நீர் இல்லையே…” என்று மீண்டும் ஓடுவான். மீண்டும் நீரை இறைப்பான்.

வியர்க்க விறுவிறுக்க மீண்டும் ஓடுவான். காலிக் கலயத்தைக் கவிழ்ப்பான். நீர் இல்லையே…! என்று ஏங்குவான். களைத்துப் போய் மர நிழலில் படுப்பான். விருட்டென எழுந்தே மீண்டும் நீர் சுமக்க ஓடுவான்.

இதுவே செயலாகப் பல முறை நிகழ… சூரியன் உச்சிப் பொழுதைக் காட்டிற்று.

வழிப்பயணத்தில் நடந்து வந்த களைப்பும் தாகமும் மேலிட நீர் தேடி அலைந்த கௌசிகன் இந்த அரிய காட்சியைக் கண்டு தாகவிடாயும் மறந்து இது என்ன விபரீதச் செயல்…? இவன் மாட்டுக்காரனா… அல்லது தோட்டக்காரனா…? இது என்ன புதிர்…! என்று எண்ணிக் கோபம் முற்றும் நீங்கப் பெற்று “இதில் ஏதோ பொருள் உண்டு…” என்று எண்ணி அப்பனே இது என்ன செய்கை…? என்று வினவினான்.

பதில் ஏதும் கூறாமல் கார்மேகக் கண்ணனாக எதையும் காதிலே வாங்கிக் கொள்ளாமல்… பொழுது சாயும் வரை இப்படியே நடைபெற்றது.

கௌசிகனும் விடவில்லை வான்மீகியும் பதில் உரைத்திடவில்லை. நடந்து நடந்து கால் ஓய்ந்தது. கௌசிகனுக்கோ கேள்வி கேட்டுக் கேட்டுக் குரல் ஓய்ந்தது.

இருவரும் அந்த மரத்தடியில் அமர்ந்து ஒருவரை மற்றொருவர் பார்த்துச் சிரிக்க… சிரிப்பின் ஒலி உச்சத்தை அடைய… நீர் மொள்ளும் ஓட்டைக்கலயம் கை தவறி விழுந்து உடைந்தது.

மீண்டும் கௌசிகன் வினா தொடுக்க… “பிச்சி கொண்ட அறிவு இப்படித்தான் செயலுறும்… இது என்ன கூத்து…?” என்று தலைகீழாக நடப்பட்ட செடி கொடிகளைக் காட்டி கேட்கின்றான்.

வான்மீகியோ
1.விரைவாகப் பலன் பெற்றிடவே
2.இயற்கையின் கதியை மாற்றி அமைத்தேன் என்றார்.

இது நடைபெறக்கூடிய காரியமா…? என்றான் கௌசிகன்.

இயற்கையின் கதியை மாற்றி அமைக்க நீ முயலலாம்… ஏன்…? அது என்னால் சாத்தியப்படாது…! என்று எதிர் வினா தொடுக்கின்றார்.

கௌசிகன் வாயை அடைக்கச் செய்து மீண்டும் விளக்குகின்றார் வான்மீகி.
1.மரணத்தை வெல்கின்ற மார்க்கமாகத் தன் சக்தியைக் குறைவு நிலைப்படுத்திக் கொண்டாய் அன்று நீ…!
2.ஆனால் உன் சக்தியை வலுக்கூட்டும் செயலாக… “ஜீவர்களுக்கு உரையாகப் புகட்டி… முறையாக வெல்லுதல் நன்று…”

இயற்கையுடன் ஒன்றியே சக்தியை வளர்ப்பாயாக..!.
1.வளர்ந்து பெறுகின்றவன் தன்னை வளர்ப்பதோடு மட்டுமின்றி
2.இயற்கையின் சக்திக்கே சக்தி அளித்துச் சப்த நாதத்தில் கலந்து இயங்கும் வாழ்வாங்கு வாழ்வான்.
3.நீ இயற்கையின் சத்துரு அன்று…! இயற்கையின் மித்திரன் (நண்பன்)
4.வானில் இயங்கும் ஒளி நிலையை உன் முயற்சியால் தான் பெற முடியும்…! என உபதேசித்தார்.

நாட்டரசனும் காட்டரசனும் சமத்துவ மனோபாவனையாக்க் கலந்தது “ஒன்றின் முழக்கம்… மற்றொன்றின் எதிர் முழக்கம்…”

உணர்வுகளின் தீமை நிலை தாடகை. அது உள்ளத்தில் மூண்டெழுலும் ஞான நெருப்பை அணைத்திடும் மாய நீரூற்று. ஆக… தீமையின் குணத்திற்குப் பேதம் ஏது…?

1.வென்றிட்டவன் அடைவதோ தாய்மையின் பேறு
2.காமத்தை ஆட்சி புரியும் ஞான அரசாட்சி.
3.அதுவே ஞான விழிப்பின் பின் “சுடரும் நிர்விகல்ப… மோன தவ… சாயுஜ்ய… பெரு நிலை மாட்சி…”

வேள்வி காத்த விசுவாமித்திரன் வேதத்தை ஆண்டது எப்படி…? பரசு அஸ்திரம் பலம் குன்றிப் பலன் காட்டியது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வெறுப்பு வேதனை கோபம் என்ற நிலையில் பிறரைக் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் இன்று அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர… குறைகளை நீக்கும் உணர்வுகளை நாம் வளர்க்கவில்லை.

சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து அதில் இருக்கும் நல்லதை நுகரும் வராகனைப் போன்று (பன்றி)
1.நாம் பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும் அதைப் பிளந்து விட்டு
2.அவர்களை அறியாது சேர்ந்த அந்தக் குறைகள் நீங்க வேண்டும் என்ற நல்ல உணர்வை நுகரப் பழக வேண்டும்.

தெளிந்துணர்ந்து செயல்படும் அந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது இந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குறைகளை நீக்கிடும் சக்தியாக அங்கே தோன்றுகின்றது.

இதை எனக்குத் (ஞானகுரு) தெளிவாக்குவதற்குத் தான் சாக்கடை அருகே அமரச் செய்து சாக்கடை உபதேசமாகக் கொடுத்தார் குருநாதர்.

உனக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகவும்… தீமைகள் உனக்குள் புகாத நிலையும் பெற வேண்டும் என்பதற்காகத் தான் சாக்கடை அருகே அமரச் செய்தேன்.

அப்போது நீ எதை நுகர்கின்றாய்…? அந்தச் சாக்கடையை எண்ணி ஐய்யய்யே…ஐய்யய்யே.. என்று நினைக்கும் போதெல்லாம் உனக்குள் அந்தச் சாக்கடை நாற்றமே வருகின்றது.
1.ஆனால் இந்த நாற்றத்தை நீக்க வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது
2.அதை நீக்கும் எண்ணங்களாக உனக்குள் வளர்கின்றது.

இதைப் போன்று தான் நீ யாரைக் கண்டாலும்… எவரைக் கண்டாலும்… அங்கே குறைகள் எதுவாக இருந்தாலும்… அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று உனக்குள் ஏற்றுக் கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும்
2.அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருள் கண்டுணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்று நீ எண்ணுவாய் என்றால்
4.உனக்குள் அறிவித்த இந்த உணர்வுகள் “மெய்ப்பொருள் காணும் நிலையாக உன்னிலே வரும்…” என்று உணர்த்தினார் குருநாதர்.

ஆகவே நாம் இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் காண… அது நமக்குள் அறிவிக்கச் செய்கின்றது
1.அறிவிக்க மட்டும் தான் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.அதற்கு அடுத்து அதைப் பயன்படுத்தக் கூடாது..

ஏனென்றால் அறிவிக்கச் செய்யும் நிலையைத் திரும்பத் திரும்ப எண்ணினால் என்ன ஆகும்…?

இப்படிச் செய்தான்… அப்படிச் சொன்னான்… அப்படிச் செய்தான்… இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்…! என்று எண்ணும் பொழுது
1.அந்த அறிவிக்கும் நிலை நமக்குள் எதைத் தவறு என்று காட்டியதோ
2.அந்தத் தவறின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்து
3.நம்மைத் தவறு செய்வோராகவே வளர்த்து விடும்.

அதற்குப் பதிலாக “தவறை நீக்கும் நிலைகளைக் கொண்டு வந்தோம்…” என்றால் அது தெளிவாக இருக்கும்.

ஏனென்றால் குறையே இல்லாத மனிதர்கள் எவரும் இல்லை.

ஒரு மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வுகள் வரும் பொழுது… அதுவே இயக்கச் சக்தியாக இயக்கப்படும் பொழுது
1.அதிலிருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?
2.குறைகளை எப்படி அகற்ற வேண்டும்…? என்று
3.அந்த அருள் ஞானிகள் உணர்வை வலுவாக ஏற்று நாம் எண்ணுவுமேயானால்
4.”குறைகளை அகற்றிடும் சக்தியாக நாம் மாறுகின்றோம்…”

ஆகவே நாம் யாருடன் பழகியிருந்தாலும் அவரின் உணர்வு நமக்குள் வந்தாலும் அவர் அறியாமல் வந்த தீமைகள் நீங்கி… பொருளறிந்து செயல்படும் ஆற்றல் அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது இருளை நீக்கிடும் நிலையாக… “ரிமோட் கண்ட்ரோல்…” போல் வேலை செய்யும்.

டி.வி. மற்றும் இது போல் உள்ள சாதனங்களில் மூடி மறைத்திருப்பதை “நாம் அந்த சுவிட்சைப் போடும்போது…” தெளிவாகத் தெரிகின்றது. அந்த படங்களைத் திறந்து கவர்ந்திடும் நிலையாக ஆக்குகின்றது.

இதைப் போன்று தான்
1.அருள் ஞானிகள் உணர்வினை நாம் எண்ணும் பொழுது
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் எண்ணத்தை நமக்குள் கொண்டு வரும் பொழுது
3.மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலைகள் “ரிமோட் கண்ட்ரோல்” ஆக நம்மை அங்கே அழைத்துச் செல்லும்
4.நம் சொல்லைக் கேட்பவருடைய நிலைகளும் அங்கே இயக்கும்
5.குறைகளை மாற்றி அமைக்க இது உதவும்.
5.நல்ல குணங்களை நமக்குள் தெளிந்து கொள்ளும் நிலையாகவும் வருகிறது.

இதைத்தான் “மகா சிவன் இராத்திரி – நீ விழித்திரு…!” என்று சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உடலுக்குள் எத்தகைய விஷம் கொண்ட அணுக்கள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அங்கே செலுத்தச் செலுத்த அந்த அணுக்களை மாற்றி அமைத்து விடலாம்.

நம் உடலில் இடுப்பு வலியோ முதுகு வலியோ எலும்புகள் வலியோ அல்லது தசை மண்டலங்களில் வலியோ அதிலே வேதனைகள் வந்தால்
1.கண்ணின் நினைவு கொண்டு அந்த வலி இருக்கும் இடத்தில் எல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் செலுத்தி வலி நீங்கி அங்கே நலமாகும் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஒரு சிலருக்கு இருதய வலி இருக்கலாம் சிலருக்கு குலை நோய் இருக்கலாம் சிலருக்கு வயிற்றுக்குள் நோய் இருக்கலாம் சிலருக்கு கர்ப்பப்பையில் வலி இருக்கலாம்.

அங்கங்கே வலி வருவதை நம்முடைய கண்ணால் தான் அதை உணர முடிகின்றது. அதன் தொடர் கொண்டு “இன்ன இடத்தில் இப்படி வலிக்கிறது…” என்பதை உணர முடிகின்றது.

ஆகவே நாம் கண்ணிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து கர்ப்பப்பையில் குறைபாடுகள் இருந்தால் அங்கே நினைவைச் செலுத்தி அங்கே இருக்கக்கூடிய கட்டிகள் கரைய வேண்டும்… கர்ப்பப்பை சீராக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

உதிரப்போக்குகள் நிற்காது இருந்தால்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அந்தக் கர்ப்பப்பையை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரருள் பெற்று இந்தப் பை சீராக உருவாக வேண்டும்
3.உதிரப் போக்கு நீங்க வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்று
4.பெண்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவையாவது செய்து செயல்படுத்த வேண்டும்.
5.அதிலே பலவீனமான நிலைகள் மாறும்.

கர்ப்பப்பையை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வுகள் பெறும் பொழுது அதில் உருவான விஷமான அணுக்களின் தன்மை மாறும். நல்ல அணுக்களை அங்கே நாம் உருவாக்க முடியும்.

இப்படி நம் உடல் உறுப்புகளில் எந்தப் பாகத்தில் வலி வந்தாலும் இருதயமோ குடல் பாகங்களோ நுரையீரல் போன்ற உறுப்புகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உறுப்புகளில் செலுத்திக் கொண்டே வரவேண்டும்.

அப்பொழுது அங்கே இருக்கக்கூடிய குறைபாடுகள் அகன்று நல்ல அணுக்களாக உருவாக்க முடியும்.

ஆனால் வலியோ வேதனையோ நோயோ வரக் காரணம் என்ன…?

நாம் நல்லவர்களாகத் தான் இருக்கின்றோம். இருந்தாலும் பிறருடைய வேதனைகளைக் கேட்டு நுகரும் பொழுது நம் உடல் உறுப்புகளுக்குள் அந்த வேதனை பரவி உடல் உறுப்புகளில் அதே வலியும் வேதனை உருவாகின்றது.
1.கண்ணால் பார்த்துக் கவர்ந்த நுகர்ந்த அந்த உணர்வுகள்
2.நம் இரத்தத்தில் கலக்கப்படும் போது இப்படித் தீமைகள் பரவி விடுகின்றது.

கார்த்திகேயா…! எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியாக நமது ஆறாவது அறிவு இருக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நமது ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
2.உயிரான ஈசனிடம் அதைப் பொருதப்படும் பொழுது
3.இந்த உணர்வின் இயக்கமாக உயிரிலேயும் வலுப் பெறுகின்றது.

ஏற்கனவே நாம் அறியாத நுகர்ந்த வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் சோர்வு வேதனை இவைகளை உள்புகாதபடி அகற்றி விடுகின்றது அல்லது மாற்றி விடுகின்றது.

இப்படி நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு நம் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை உணவாகக் கொடுத்து
1.கண்ணின் நினைவு கொண்டு அங்கே கட்டளை இடப்படும் போது இந்த உறுப்புகள் வலுப்பெறுகின்றது.
2.தீமையிலிருந்து விடுபடக்கூடிய சக்தியும் நோயிலிருந்து விடுபடக்கூடிய சக்தியும்
3.ஆரோக்கியமாக வாழும் நிலைகளும் நாம் பெறுகின்றோம்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லா அணுக்களிலும் சேர்க்கச் சேர்க்க துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழும் அந்தத் தகுதியும் நாம் பெறுகின்றோம்.

இதே மாதிரி யாம் பயிற்சி கொடுத்த முறைப்படி செய்து பழகுங்கள்.

வான்மீகி ஞானம் பெறக் காரணமான “அதிர்ச்சி வைத்தியம்”

மோகத்தைப் பேரின்ப இலயமாக அனுபவித்தல் என்பதே… அதை வென்று காட்டிடும் மனோ தைரிய வலுவை வளர்க்கும் செயல்பாடாக… எவ்வளவு வீரியம் பெற்றிருத்தல் வேண்டும்…?

மோகத்தின் வசமான மனம் கொண்டவன்… அதிலே ஏமாற்றம் கொண்டிட்டால்
1.அப்போது கனன்று எழும் கோபாக்கினியின் உணர்வலைகள்
2.மனோ பீஷ்டம் (விருப்பம்) நிறைவேறிடாத அந்த (தன்) எண்ணமே ஓர் தடைக்கல்.

தடையை அகற்ற முயலும் மனம் “நிதானத்தையும் இழந்து விட்டால்” அறிவுறுத்தும் அனுபவ ஞான உரையால் என்ன பயன் காட்டும்…?

கனன்று எழும் மனத்தின் கோபக்கனல்…
1.அது சுட்டெரிக்கும் விழிப் பார்வையில் காட்டிடும் கோபப் புயலாக எண்ணம் கொண்டவுடன்…
2.நாண் ஏற்றும் உத்வேக கோபாக்கினிப் புயல் என்றே… சம்ஹரிக்கத் துடித்திடும் நிலையாக எழும்.

இதனின் “சூட்சுமம் உணர்ந்து கொள்க…”

மூடனாக அலைந்திடும் வில்வேடனை (வான்மீகி) மோகத்தீயில் மூட்டிய கனல் தகித்தாலும்… அவனுக்குள் சிந்தனா சக்தியைத் தூண்டப் பெறும் அனுகூலமாக… ஞானத்தின் வழி தொடர… அந்த நல்வழியை உணர்த்திட… அவன் எதிர்கொள்ள வந்துற்ற வினையின் செயல் “ஓர் அதிர்ச்சி வைத்தியம்…”

பட்சிகளின் நயன பாஷைகளை அறிந்து கொண்டிடாச் செயலில்… இயற்கையின் அரவணைப்பில் குதூகலமிட்டு ஒன்று கலந்து மகிழ்ச்சியாக இருக்கும் ஆண் பெண் பட்சிகளை வான்மீகி கண்ணுற்றவுடன்… “மோகக்கனல் தகிக்க” இடக்கரம் வில்லை உயர்த்த வலக்கரம் நாணைத் தொடுக்க போடப்பட்டது ஓர் ஏரி அம்பு.

அக்கினி அஸ்திரம் சுட்டெரிக்கும் ஜுவாலையாக பட்டெனத் தைத்து உயிர் குடிக்க இணைப் பறவை துடி துடித்து கீழே விழுந்தது. கண்ணுற்றான் வேடன்.

1.கத்திக் கூக்குரலிட்டு வேதனை ஒலி எழுப்ப…
2.பதறித் துடித்து இணையைச் சுற்றி வரும் அப்பறவையின் நிலை
3.ஏவப்பட்ட கணையைப் போல… பன் மடங்கு வேகமாக வில் வேடன் மனதில் தைக்க…
4.அவன் கண்டத்தில் இருந்து எழுந்த குரல் “ஹா…!”

வேதனையுற வைத்துவிட்டான் வான்மீகி… துயர் துடைக்க வழி என்ன…?

இவ்வொலியின் நாதம் வட்டமிட்டுச் சுழன்றிடும் ஒலி வேக நிலையால்… பதிவு கொண்டிடும் செயலாக எழுந்திட்ட வினாவின் ஏக்கமாக… அதை வென்றிடத் துடித்த அனுபவ ஞான உரையே… “வான்மீகியின் இராம காதை…”

1.அந்த நேரத்தில் வானை நோக்கிய பார்வையின் ஏக்கம்…
2.கொண்ட மோகத்தை வென்றிடும் மார்க்கம்…
3.தெய்வீக இலட்சண அறிவை ஒலி அணுக்களாக
4.வானெழுந்து பாய்ந்த செயல்… அதை வெளியிட அனுமதி இல்லையப்பா…!

கடைபிடிக்கும் வழி முறைகள் கொண்டால் அந்தப் பேருண்மைகளை உங்களுக்குள் உணர்த்தும்.

கணவனும் மனைவியும் தியானத்தில் ஒன்று சேர்ந்து விட்டால் மட்டும் பத்தாது…!

துருவ தியானத்தில் கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடல் வேண்டும் ஒவ்வொரு உயிரிலும் ஆண்பால் பெண்பால் என்ற உணர்வுகள் உண்டு பெண்பால் நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்தால் அது பெண்ணின் உணர்வுகளைத் தூண்டி பெண்ணாகும் உறுப்புகளையும் உணர்வுகளையும் மாற்றுகின்றது.

அதே போல் ஆண்பால் நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமானால் ஆண்களாக மாற்றுகின்றது.
1.ஆண்பால் என்ற நட்சத்திரம் இருந்தாலும் பெண்பாலின் உணர்வுகள் சிறிதளவாது கலந்திருந்தால்தான்
2.இந்த உணர்வே உணர்வாகி அணுவின் தன்மை பெருக்கி உடலை வளர்க்கவே உதவுகின்றது.

பெண்பால் என்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது உடலின் அமைப்பு வந்தாலும் ஆண்பால் என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது கவர்ந்து தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் கலந்து கொண்ட உணர்வுக்கொப்பத் தான் உடல் அமைப்பும்… மற்றதை வளர்ப்பதும்… தனக்குள் உருவாவதும் என்ற நிலை உருவாகின்றது.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மனிதன் ஒருவனால் தான் உயர்ந்த நிலை பெற முடியும்.

1.முதல் மனிதன் அகஸ்தியன் இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்த பின் மனைவிக்கு அதையெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றான்.
2.கணவன் வழியிலேயே அந்த மனைவியும் செயல்பட்டதனால் அந்த உணர்வுகள் இரண்டும் ஒன்றி வாழ்ந்தது.
3.அதன் வழி தான் அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றார்கள்.

அதிலிருந்து வரும் உணர்வைத்தான் எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்ற நிலையும் அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நுகர்ந்து நாம் இந்த உடலில் வளர்த்து பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

1.இரத்த நாளங்களிலே துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெருக்கப் பெருக்க நம் உடலில் உள்ள அணுக்களில் சிறுகச் சிறுக அது சேரும்.
2.அதன் உணர்வுக்கொப்ப உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறும்.
3.கணவனும் மனைவியும் இதைப் போன்று எடுத்துக் கொண்ட உணர்வுகள் இனி பிறவி இல்லா நிலை அடையச் செய்யும்.

விஞ்ஞான அறிவால் பேரழிவாகச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் அவன் பெற்ற பேரருளை நாமும் பெற்று அணுவின் இயக்கங்களை அறிந்து சிந்தித்து செயல்படும் தன்மையும் ஒன்றுபட்ட நிலைகள் கணவன் மனைவிக்குள் வரவேண்டும்.

தியானத்தில் ஒன்று சேர்ந்து விட்டால் மட்டும் பத்தாது…!

அதற்குப்பின் ஏற்கனவே சேர்த்துக் கொண்ட விஷத்தன்மைகள் அதற்குக் கொஞ்சம் சந்தர்ப்பத்தை விட்டால் நம்மை அது கணவன் மனைவி நிலைகளை மாற்றிவிடும்.

அது போன்ற நிலைகள் வராதபடி தடுத்து கணவன் மனைவியும் அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று அதிகாலையில் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

கணவன் மனைவி வேறு வேறு ஊரில் இருந்தாலும்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
2.மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் இருவருமே எண்ணுங்கள்.
3.அதன் உணர்வுப்படி ஒளியான அணுக்களாக மாறும்.

இதன் வழி செய்தால் மூதாதையர்களை விண்ணிலே செலுத்த முடியும். இதற்கு முன் செய்யவில்லை.

இப்பொழுதாவது இதைச் செயல்படுத்தி அவர்களைச் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்து
1.நாமும் அந்த ஞானிகள் சென்ற வழியில் ரிஷி ரிஷிபத்தினி என்ற நிலையில்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சிருஷ்டிக்கும் சக்தியாக உருவாக முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை எதிர்த்துத் தாக்கும் சக்தி நமக்கு வேண்டும். இயற்கையாகவே நமக்கு அது உண்டு.

எப்படி…?

1.நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நிலையை அல்லது
2.நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் தீமையை
3.”பெரு மூளை உருவாக்கும் திரவகத்தை” – சளி என்ற நிலையில் அதை முன் செலுத்தி
4.நாம் நுகரும் உணர்வுகளை வடிகட்டி மற்ற உணர்வுடன் கலக்கச் செய்து
5.தீமையிலிருந்து விடுபடும் சக்தியாக இயற்கையிலேயே பரிணாம வளர்ச்சியில் வந்த மனிதனுக்கு உண்டு.

ஆனால் மற்ற உயிரினங்களோ விஷத்தின் தன்மையைக் கவர்ந்து விஷமான அணுக்களை உருவாக்கும் சக்தியே பெறுகின்றது ஆனால் மனிதனுக்கு இந்த ஆற்றல் உண்டு.

பெரு மூளையிலிருந்து வரும் அந்த அமிலம் உடலுக்குள் எதிர்ப்படும் உணர்வுகளை அதை வடிகட்டிச் சளி வழியாக வெளியேற்றி விடுகின்றது

அதாவது
1.நமது மூக்கின் நேர் பகுதியில் நஞ்சு உள்புகாது தடுத்துக் கொள்ளும் சளி என்ற நிலை உருவாகிறது.
2.சுவாசத்தினை அதிலே வடிகட்டித் தான் உள்ளே அனுப்புகின்றது.

ஆனால் அப்படி வடிகட்டினாலும் சந்தர்ப்பத்தில் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் அதையெல்லாம் அதிகமாக எடுக்கும் பொழுது இந்த உணர்வின் அழுத்தம் வடிகட்டும் நிலையைத் தடுத்து இது வலுப்பெற்று விடுகின்றது.

நாம் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து அதற்குத் தக்க இரத்தமாக மாறி நம் இரத்த நாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.

அப்படிப் பெருகத் தொடங்கினால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கிடும் திறன் பெற்று வந்தாலும்… நம்மை அறியாது நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து நம் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் விஷத் தன்மையாகச் சேர்ந்து விடுகிறது.

1.அப்போது அந்த அணுக்கள் அனைத்தும் செயலிழந்து இந்த மனித உடலை உருக்குலையச் செய்து
2.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது
3.எதனால் இந்த உடல் சுருங்கியதோ… எதன் உணர்ச்சிகளால் அது உருவானதோ… அதற்குத்தக்க உயிர் வெளியே சென்ற பின்
4.பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கி வளர்ந்து வந்த நிலையை மாற்றி
5.இன்று தீமைகளைச் சேர்த்திடும் தன்மை கொண்ட உடலாக மாற்றிவிடும் நமது உயிர்.

இதை எல்லாம் தெளிவாக அறிந்து கொண்ட ஞானி தான் அகஸ்தியன். அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி தன் உடலில் அப்படி வந்த நஞ்சினை மாற்றி… மாற்றி… உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அவன் ஒளியாக மாறக் காரணமானது “துருவத்திலிருந்து வரும் நிலை தான்…!”

1.விண்ணுலக ஆற்றலை பூமி அதன் வழியில் எவ்வாறு கவர்கிறது…? என்பதை உணர்ந்து
2.அந்த நஞ்சினை… துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பெற்று அவனுக்குள் பெருக்கி
3.அதன் வலு அதிகமாகும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்றதனால்
4.மனித உடலை மாற்றியமைக்கும் சக்தி பெற்று ஒளியாக மாற்றுகின்றான் அகஸ்தியன்.

அவனுக்குத் திருமணம் ஆன பின் கணவன் மனைவி இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாக ஆன பின்…
1.விண்ணுலக ஆற்றலின் உணர்வின் தன்மையை உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி
2.எதிலிருந்து பூமி கவர்கின்றதோ அதை உற்று நோக்கி அதைத் தனக்குள் கவர்ந்து
3.விஷத்தைப் பிளந்து விஷத்தை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை இருவருமே பெறுகின்றனர்.

அதை நீங்களும் பெறக்கூடிய தகுதிக்குத் தான் இதைத் தெளிவாக உணர்த்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிர் ஒளியாக இருக்கின்றது… எல்லாவற்றையும் தெரியச் செய்கின்றது… தெரிவிக்கச் செய்கின்றது…! இந்த உயிரைப் போன்றே உடலில் உள்ள ஜீவணுக்களை உயிர் அணுக்களாக… “ஒளியான அணுக்களாக…” மாற்றிட வேண்டும். அது தான் நம் குருநாதர் நமக்குக் காட்டிய வழி.

1.தேனீக்கள் தேன் கூடுகளை உருவாக்கித் தன் இனங்களைப் பெருக்கி
2.அதில் சுவைமிக்க தேனாக எப்படி உருவாக்குகின்றதோ அதைப் போன்று
3.உயிரைப் போன்று உடலில் இருக்கக்கூடிய அணுக்களை நாம் ஒன்றாக்க வேண்டும்.
4.தேன் கூட்டைப் போல்தான் நம் உடலும் அமைப்பாக இருக்கின்றது
5.அதிலே அருள் ஒளியினைச் சேர்த்து உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக நாம் பெற முடியும்.

ஏனென்றால் அப்படி உருவானது தான் துருவ நட்சத்திரம்…! இந்தப் பூமியிலே வாழ்ந்தவர்கள் யாரெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பின்பற்றிச் சென்றனரோ… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அவர்கள் இணைந்து… பிறவி இல்லா நிலையை அடைந்து அருள் வழியில் இன்றும் வாழுகின்றனர்.

சூரியனே கூட ஒரு காலம் அழியலாம். சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களும் மறையலாம். ஆனால் சூரியக் குடும்பத்தில் உருவான உயிரணுக்களின் தன்மை மனிதனான பின்
1.உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரமோ சப்தரிஷி மண்டலமோ
2.தன் ஆறாவது அறிவை ஏழாவது… ஒளியாக மாற்றியவர்கள் என்றுமே அழிவதில்லை.
3.பேரண்டத்தில் விஷத்தின் தன்மை கலந்தாலும் அதையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள் தான் அவர்கள்.

அதாவது… ஒரு பாம்பினம் தன் வாழ்க்கையில் தன் உடலில் உருவான விஷத்தைப் பாய்ச்சிப் பாய்ச்சி… மற்ற உயிரினங்களின் உடல்களைத் தான் விழுங்கி விழுங்கி… அந்தந்த உடலின் விஷத்தையும் தன் உடலில் உருவான உருவான விஷத்தையும் (அனைத்தையும்) தனக்குள் அடிமையாக்கி… அந்த விஷமெல்லாம் ஒன்றாக ஆன பின் நாகரத்தினமாக அது மாறுகின்றது.

பாம்பு விஷத்தை நாகரத்தினமாக மாற்றுவது போல் தான் துருவ நட்சத்திரமும் விஷத்தை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது. ஆனால் அது கல்.. ஆனால் இது ஒளிக்கற்றைகளாக மின் கதிர்களாக மாற்றுகிறது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் நம்முடைய மனித வாழ்க்கையிலும்… விஷத்தின் தன்மை சிறிதளவு நமக்குள் வந்தாலும் அறிந்து கொள்ள முடிகின்றது.
1.அப்போது உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அதை அடக்கி
2.அந்த விஷம் நமக்குள் அடங்கியே வாழும் உணர்வின் தன்மையாக நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

அப்படி மாறினால் துருவ நட்சத்திரம் அழியாத நிலைகள் கொண்டு வாழ்வது போல் நாமும் அழியா வாழ்க்கை வாழலாம். நம் உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு அழைத்துச் சென்று ஏகாந்த நிலை பெறச் செய்யும்.

ஏனென்றால் விஷத்தின் துடிப்பின் தாக்குதலால் தான் வெப்பமும் மற்ற எல்லா இயக்கங்களும் வருகிறது. ஆகவே…
1.எந்த விஷமும் உயிரை இருளச் செய்யாதபடி ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது
2.மனிதனின் ஆறாவது அறிவு… அது தான் கடைசி நிலை…!

இதனைத் தெளிவாக உணர்ந்து குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செயல்படுத்துவோம்.

வான்மீகியின் “பூர்வாங்கம்”

எண்ணுகின்ற எண்ணத்தின் அசைவுகளை அறிந்து கொண்டிடும் ஆற்றலாக… அதை உணர்த்தி அறிவுறுத்தும் மாமகரிஷிகளின் ஒளி காந்தத்துடன் ஒன்றி… உண்மையின் சக்தியாய் இக்காலத்தில் பெறுகின்ற நிலையே “முக்காலமும் உணரும் நிலை…!”

“அகால மரணத்தின் முன்னறிவிப்பை”
1.மெய் ஞான அறிவால் அறிந்து கொண்டிட
2.காட்சிப் புலனாகும் விழிப்படலங்களின் சூட்சுமம் (கண்ணில் உள்ள பாப்பா) பற்றி உரைத்திருந்தோம்.

மனிதன் தான் வாழ்ந்து வரும் வாழ்க்கையில்… உலகோதய தொழில் அறிவு வாழ்வின் ஜீவித செயலுக்கு அவரவர்கள் வழியமைத்துக் கொண்டு செல்லும் அனுபவ உண்மை (அது).

1.இன்று வழக்கு நடையில் உரைத்திட்ட நாட்டரசன் கோட்டை
2.அதுவே வான்மீகி மாமகரிஷி ஞானப்பயிர் வளர்க்க வந்திட்ட ஊர்.

ஏடறிவு அற்ற வில் வேடர் குலத்தில் பிறந்தவன் வான்மீகி. வில் அம்பை வைத்து வேட்டையாடுதல்… கிழங்கு கள்ளி எடுத்தல்…தானியங்கள் பயிரிடுதல்… இதுவே முன்பு வாழ்ந்த வனவேடுவ குலத்தின் வித்து,

வில்வீரன் என்ற பெயர் நாமத்தில் உலவி… தாய்மையின் பேறு… கற்பு நெறி காக்கும் இராமாயண மாகாவியத்தைப் படைத்தது.

வேடுவ குலத்தின் திருமண விழாவில் முக்கிய பங்கு ஏற்பது வில்லும் அம்பு தான். வில்லின் வித்தைகள் பயிற்சிக்கும் செயலில் வீரத்தை உடலின் வலிமையைக் கொண்டு… வெற்றி பெற்றிடத் துடிக்கும் விவேகமற்ற மௌடீக வைராக்கியத்தைக் காட்டி… மணம் முடிக்கத் துடித்த நிலையில்… அவன் வில் ஒடிந்ததால் களரியில் அன்று நாணம் மேலிடத் “தலை குனிந்தான்,..”

தன் வாழ்க்கையில் பங்கேற்கத் தேர்வு செய்த மங்கை… வெற்றி வாகை சூடிய மற்றொருவனுக்கு மாலை சூட்டியதால் ஏற்பட்ட மனத்தின் ஊடல்கள்… மோகத்தின் வசம் எழுந்த கோபமாய் அந்த வித்து அவனுக்குள் (வான்மீகி) வேரூன்றி விளைந்த்து.

அஸ்திரத்தில் ஏவப்படும் பொழுது அக்கினியை உருவாக்கிடும் முறையைக் காண இச்சம்பவமே வழி வகுத்தது.

1.ஐம்புலன்களையும் ஒன்றாக நிறுத்தி… ஐம்புலன் அடக்கம் என்கின்ற நிலை கொண்டு வளர
2.காட்டில் ஒரு சித்தன் மூடனாக உலவிய இந்த வேடனிடம் தானாக முன் வந்து
3.இவனின் உயர்வை அன்றே கண்டு… அஸ்திரங்கள் ஏவுதலின் நாட்டத்திற்கு வழிகாட்டினான்.

தானாக தன் அனுபவத்தில் “தென்னம்பாளையினுள் அக்கினியைக் கண்டது…” எத்தகைய ஞானமப்பா…?

தென்னம்பாளைப் பஞ்சு
அம்பின் நுனிக் குஞ்சு
பாறையின் மோதல் வேக நெருப்பு
காதையின் வழிகொண்டுகொள் விருப்பு

1.தென்னம்பாளையினுள் கிளைத்து ஓடும் காம்புகளை கடின நுனியில் பஞ்சு போல நைத்து…
2.அம்பின் நுனியில் கட்டி வில்லில் அதை நாணேற்றி முழு வேகம் கொண்டு எய்ய
3.காற்றின் உராய்வில் தென்னம்பாளை பற்றி எரியும் சூட்சுமம் அறிந்து கொண்டது ஏகாந்த விளையாட்டிலப்பா.

அத்துடன் சிறு நுனியில் வைக்கப்படும் சில பொருள்கள் எரியூட்டும் குணத்தன்மைகள் கொண்டது. எய்யப்படும் வேகத்தில் பாளைப் பஞ்சில் பற்றி இணைக்கப்பட்டு இருக்கும் எரிபொருளும் பற்றி எரிந்து செயல்படுதல் “அக்கினி அஸ்திரம்” என்று பெயர் சூட்டப்பட்டது.

சிற் சில பாளைகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது அக்கினிப் பொறிகள் வெளிப்படுதலை அறிந்திட்டதைப் போல்… சிற் சில பாறைகளிலும் அதே சூட்சுமத்தைக் கண்டறிந்தவர் வான்மீகி மாமகரிஷி.

சகலத்திலும் சகலமாய்க் கலந்து பரவிப் படர்ந்த
1.ஆதி அமில குண சக்திகள் ஒன்றுடன் ஒன்று கலந்து செயல்படும் செயலின் நிகழ்வுகள் பிரம்மமாக
2.அந்த மறைபொருள் உறைபொருளாக விளைந்து உருக்கோலம் கொண்டிட்ட பிறகு
3.பூமியே சிவலிங்கமாக சுழன்றோடிக் கொண்டிருக்கும் இயக்க கதியில்
4.ஈர்ப்பின் பாசம் சமைத்திடும் சமைப்பு… உள்ளிட்ட நிகழ்வே சக்தியாக… ஒலி ஒளி இணைந்து கொண்டிட்ட சிவ சக்தியாக
5.விண்ணுலக சக்திகள் “வான் எழுந்து ஈர்க்கும் கரு எதுவோ…” அதை நிறைவாக்க
6.தெய்வீக வடிவம் பெற்றிடும் ஜோதியின் உள் குளிர்வு – ”நீல வண்ணமாக”
7.தன்னுள் (வான்மீகி) வான்கொண்டு வானில் ஒளி பெற்றிட்ட செயல் போல் அனைவரும் பெற்றிட
8.ஞான முன்னோடியாகக் காட்டும் நிலை ஞானச் செல்வங்களும் பெற்றிட வேண்டுமப்பா.

உடல் நலிந்தாலும்… நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்

மனிதனான பின் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

அந்தச் சக்திகளை எடுத்து நாம் முன்னோர்களை விண் செலுத்திப் பழகுதல் வேண்டும். சப்தரிஷி மண்டலங்களுடன் அவர்களை இணைக்கப்படும் போது அங்கிருந்து உயர்ந்த சக்திகளை நாம் பெறலாம்.

1.சப்தரிஷி மண்டல உணர்வுகளைக் கவர்ந்தோம் என்றால் அந்த வலிமையை நாம் பெறுகின்றோம்
2.இதை வளர்க்க வளர்க்க இருளை அகற்றும் நிலையும் வலிமையான உணர்ச்சிகள் நமக்குள் தோன்றும்
3.தீமை அகற்றும் வல்லமையும் நமக்குள் பெறுகின்றது.
4.இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை வந்தாலும் “தாங்கும் வலிமை கொண்டு” நல்லதை வளர்க்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம்.

அருள் ஒளி என்ற உணர்வுகள் பெருகுகின்றது எந்த நிமிடம் உடலை விட்டுச் சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து சப்தரிஷி மண்டலத்தில் பிறவியில்லா நிலை அடையலாம்.

சூரியன் ஒரு காலம் அழியலாம். மனிதனுடைய உணர்வுகள் ஒளியான பின் அது அழிவதில்லை. ஏனென்றால் நஞ்சை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.

அத்தகைய திறன் பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் போது நமது உடலில் கலந்துள்ள நஞ்சை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.
1.நஞ்சை ஒளியாக மாற்றப்படும் பொழுது
2.நம் உடலில் இப்பொழுது அந்த உணர்வுகள் அதிகமானால்
3.இந்த உடல் நலியத்தான் செய்யும்.

வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது நஞ்சின் தன்மை மாறுகின்றது. ஆனால்
1.அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டப்படும் பொழுது
2.ஐய்யய்யோ… நான் தியானம் இருக்கின்றேனே என் உடல் நலிந்து போய்விட்டதே என்று எண்ண வேண்டியது இல்லை.

ஏனென்றால்
1.விஷத்தின் தன்மை கொண்ட உடலின் தன்மையை மாற்றி அருள் ஒளியைக் கூட்டி இந்த உணர்வு வளர்ந்தால்
2.இந்த உடலை விட்டுச் சென்றால் ஒளியின் சரீரம் ஆகிறது.

வேதனையை எடுத்தால் உடல் நலிந்து வேதனையையே மீண்டும் ஊட்டி மீண்டும் பிறவிக்கு வருகின்றோம் ஆகவே எத்தகைய வேதனைகள் வந்தாலும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினைச் சேர்த்தால் நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.
1.எந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைப் பெற்றோமோ அங்கே செல்கின்றோம்
2.நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்.

எப்போது இருந்தாலும் நாம் இந்த உடலை விட்டுப் பிரியத்தான் வேண்டும். உடலில் வளர்த்த உணர்வு எதுவோ அந்த நிலைக்குண்டான ஈர்ப்புக்குத் தான் அழைத்துச் செல்லும். உயிருடைய வேலை அது தான்.

ஆகவே நமது வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் இருபது வருடம் முப்பது வருடம் காடு மேடெல்லாம் அலைந்தேன்.
1.ஒவ்வொரு நிமிடத்திலும் எதிர் நிலையான உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…?
2.இதற்கு மாற்று நீ என்ன செய்ய வேண்டும்… நீ எப்படி இருக்க வேண்டும்…?
3.தீமைகளை நீ எப்படி மாற்ற வேண்டும்…? என்று தான் குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் பல தொல்லைகள் பட்டேன்… என் குடும்பத்தையே அனாதையாக விட்டு விட்டுத் தான் சென்றேன்.

அவர்களைப் பற்றி எண்ண விடாதபடி செய்தார் குருநாதர். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றி எண்ணும் பொழுது… பாசத்தால் அவர்களின் உணர்வுகள் உன் உடலுக்குள் எப்படி வேகமாக வருகின்றது…! என்றும் காட்டினார் குருநாதர்.

ஒரு பாத்திரம் சரியாக இருந்தால் அது நலமாக இருக்கும். அதிலே ஓட்டை விழுந்து விட்டால் அதை உபயோகப்படுத்த முடியாது.

அது போல் இந்த உடல் என்ற இந்தப் பாத்திரத்திலே இருக்கக்கூடிய ஓட்டைகளை (பிற தீமையின் உணர்வுகள்) அடைக்க வேண்டும் என்றால்
1,அதைச் சமப்படுத்தினால் தான் நீ உன்னைக் காத்து உன் குடும்பத்தில் உள்ளவரையும் காப்பாற்ற முடியும் என்று
2.இதெல்லாம் அனுபவபூர்வமாகத் தான் குருநாதர் உணர்த்தினார்.

இமயமலையில் பனிப்பாறைகளுக்கு மத்தியில் நான் செல்லப்படும் போது எனக்குள் சில உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கிறார். பழனியில் என் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததை அங்கே நேரடியாகக் காட்டுகிறார்.

அதைக் கண்ட பின் என் குழந்தையை எண்ணும் பொழுது பனிப்பாறையிலே என் இருதயமே இரைச்சலாகின்றது… உறையும் தன்மை வருகின்றது. அப்படியே விட்டு விட்டால் உயிரே போய்விடும்.

அப்போதுதான்… நீ உன் குழந்தையை இங்கிருந்து எப்படிக் காக்கப் போகின்றாய்…? என்று வினா எழுப்பினார்.

உன் குழந்தையைக் காக்க வேண்டும் என்றால்
1.நான் உனக்குச் சொன்ன உணர்வின் வலு கொண்டு
2.உன் எண்ணத்தால்… கண் வழியாக அங்கே அருளைப் பாய்ச்சு
3.அவனைக் காப்பதற்குண்டான நிலைகளை நீ செய்…! என்றார்.

இப்படி என் குடும்பமே பல வகைகளிலும் அல்லல்பட்டது. என்னைச் சார்ந்தோர் அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் தான் நான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ள முடிந்தது… “இப்படித்தான் தெரியச் செய்தார் குருநாதர்…”

அதைப் போன்று தான் இப்போது உங்கள் குடும்பத்திலும் உங்களை அறியாது எத்தனையோ தீமைகள் வருகின்றது. ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை. பிற மனித உடலில் விளைந்த உணர்வுகளை நீங்கள் நுகரும் போது அந்த நிலை ஆகிறது.

பத்திரிக்கை வாயிலாக டி.வி. வாயிலாக உங்களுக்குள் தினசரி எத்தனையோ அதிர்ச்சியான உணர்வுகள் புகுகின்றது.
1.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு உங்கள் உடலை என்னவெல்லாம் அது பாடு படுத்துகின்றது…?
2.அப்போது அந்தத் தீமையே உங்களை ஆட்சி புரிகின்றது… நல்ல குணங்கள் ஆட்சி புரிவதில்லை.
3.உயிரிலே படும் அந்தக் கலக்கமான உணர்வுகளே இயக்கச் சக்தியாக வருகிறது.

காரணம்… நெருப்பிலே எந்தப் பொருளைப் போடுகின்றமோ அந்த மணம் தான் வரும். நம் உயிர் நெருப்புக்குச் சமம்.

ஆனால் நமது ஆறாவது அறிவால் இருளை நீக்கும் ஒளியான உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் அந்த உணர்ச்சிகளை ஊட்டி… எண்ண வலிமை கொண்டு நம் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியும்.

இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அருள் ஞானிகள் உணர்வை நுகர்ந்து உடலில் இருக்கக்கூடிய இரத்தங்களில் செலுத்தி ஒவ்வொரு அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்தால்
1.இருளை நீக்கும் ஆற்றல் பெற்று சிந்தித்துச் செயல்படும் தன்மை வாழ்க்கையில் வரும்
2.அதே சமயத்தில் நம் மீது மோதும் தீமையின் உணர்வுகளை எதிர்கொண்டு நீக்கும் தன்மை வரும்.

எப்படி…?

எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! ஒரு உணர்வின் அழுத்தத்தின் தன்மை எதுவோ அதைக் கொண்டுதான் நவீன இயந்திரங்களை இன்று இயக்குகின்றான் மனிதன்… “விஞ்ஞான அறிவு கொண்டு…!”

இதைப் போன்று தான் நமது உயிர் நமக்குள் எலக்ட்ரிக்காக இருக்கின்றது… நாம் சுவாசிப்பதை எலக்ட்ரானிக்காக மாற்றி இயக்குகிறது. ஆனால் வேதனை என்ற உணர்வுகள் எலக்ட்ரானிக்காக மாறி விட்டால் அந்த வேதனையின் இயக்கமாகத் தான் உயிர் நமக்குள் உருவாக்கும்.

இதையெல்லாம் வென்ற
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எலக்ட்ரானிக்காக நாம் மாற்றினால்
2.இதன் உணர்வுகள் எதிர் கொண்டு அந்த வேதனைகளைத் தள்ளிவிட்டு விடும்
3.நமக்குள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் தன்மையும் வரும்
4.எதிர்வரும் தீமையின் உணர்வின் தன்மையை நமக்கு நாமே உணர்ந்து அந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி தடுக்கவும் முடியும்.

உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவால்… இருளை நீக்கி என்றுமே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழலாம். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழச் செய்ய முடியும்.

1.நீங்கள் ஒருவர் மகிழ்ந்து வாழ்ந்தால் போதும்
2.அதன் உணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் சக்தியாகப் படரும்
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் ஒளியாக மாறும்.

உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு பெறும் பயிற்சியைத் தான் இப்பொழுது யாம் (ஞானகுரு) தந்து கொண்டிருக்கின்றோம்.

இதனைக் கற்றுக் கொண்டு நீங்களும் சரி உங்கள் குடும்பத்தாரும் சரி உங்களைச் சார்ந்தோரும் சரி எல்லா நலமும் வளமும் பெற்று… இந்த பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் நச்சுத்தன்மைகளை நீக்கக்கூடிய அந்த வலிமையை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஷக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அந்த விஷத்தன்மைகள் நமக்குள் வராது தடுத்துப் பழகுதல் வேண்டும் காரணம்… இனி வரும் காலம் மிகக் கடினமாக இருக்கின்றது.

இன்று நாம் வாழக்கூடிய இந்தக் கால கட்டத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இந்தப் பூமி முழுவதும் பரவச் செய்து
2.நம் உடலுக்குள் அதிகமாகப் பெருக்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.நமக்குள் “பெரும் வட்டமாக…” மாற்றிக் கொள்ள வேண்டும்.

எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கும் சக்தியினைப் பெறச் செய்வதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

பதிவானதை நினைவாக்கி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்வதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்

மற்ற மார்க்கங்களில் எல்லாம் இப்படிச் செய்ய மாட்டார்கள். காசைக் கொடுத்துத் தான் அதிலே மெம்பராக வேண்டும். அவர்கள் சொல்கிறபடி எல்லாம் கட்டுப்பட வேண்டும்… கட்டுப்பட்டவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆனால் யாம் உங்களுக்கு நேரடியாக பப்ளிக்காக (PUBLIC) சொன்னால்…
1.நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…? அலட்சியப்படுத்தி விடுகின்றீர்கள்…!
2.இங்கே இந்தப் பக்கம் கேட்டு விட்டு அந்தப் பக்கம் காது வழியாக வெளியில் விட்டு விட்டுச் செல்கின்றீர்கள்.

என் குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கின்றது. என் பிள்ளைகள் இப்படி இருந்து கொண்டிருக்கின்றது. நான் எதைச் செய்தாலும் அது நஷ்டம் ஆகின்றது…! என்று இதைத்தான் இராகமாகப் பாட ஆரம்பிக்கிறீர்கள்.

“நான் (ஞானகுரு) கொடுத்த சக்தியைப் பயன்படுத்துவோம்…!” என்ற நிலை இல்லாது இருக்கின்றது. எவ்வளவோ சிரமப்பட்டுப் பெற்ற… எனக்குள் விளைய வைத்த… அந்த உயர்ந்த ஞானத்தைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.ஆனால் கொடுத்த வித்தை உதறித் தள்ளிவிட்டு உங்களுக்குள் வேதனையைக் கூட்டிக் கொண்டு
2.என்னையும் வேதனைக்கு உள்ளாக்கும் நிலைக்குத்தான் நீங்கள் வருகின்றீர்கள்
3.உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்
4.இருளை நீக்கும் குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை
5.இருக்கலாம்… மதிப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம்…
6.ஆர்வம் இருக்கும்…! ஆனால் அப்புறம் என்ன செய்வீர்கள்…?
7.அவன் அப்படிப் பேசினான்… இவன் இப்படிச் செய்கின்றான்…! சும்மா விடுவதா…?
8.கடன் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்ப கொடுக்கவில்லையே… என்னை ஏமாற்றுகின்றானே…! என்ற
9.இந்த நினைவுகள் தான் வருகின்றதே தவிர நான் சொல்லும் நிலைகளை எடுக்கும் நிலை இல்லை…!

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் ஆட்டிப்படைக்கின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க அருள் உணர்வுகளைப் பெருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் முடிவு மிகவும் நெருங்கி விட்டது…!

இன்று இளம் குழந்தையாக இருந்தாலும் சரி… வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி… நம் பூமி கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது… விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றது.

இந்தப் பூமிக்குள் மட்டுமல்ல…! இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே கடும் தீய விளைவுகள் ஆகி அல்லோகலப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றது. யார்… எதைத் தேடி… எதைக் காக்கப் போகின்றோம்…!
1.இது போன்ற நிலைகளை எல்லாம் கடந்து
2.என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தச் சூரியனே அழிந்தாலும் பிரபஞ்சமே அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய உயிரணு மனிதனாக வளர்ச்சி அடைந்து.. தன் ஆறாவது அறிவை ஏழாவது… ஒளியாக மாற்றி விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக வாழ்வது போல் நாமும் அங்கே வாழ முடியும்…! ஏகாந்த நிலையை அடைய முடியும்… எதிர்ப்பே இல்லாத நிலையும் நஞ்சை ஒளியாக மாற்றிடும் திறனும் பெற முடியும்.

அதைப் பெறக்கூடிய தகுதியைத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இங்கே ஏற்படுத்துகின்றோம்.

விஞ்ஞான அறிவால் பேரழிவு வரும் இந்த நேரத்தில் “அகஸ்தியன் உணர்வு தான் தெற்கிலே வளரப் போகின்றது”

“தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று பாடலைப் பாடுகின்றோம். இந்த உலகமே விஷத்தன்மையில் சிக்கினாலும்
1.அகஸ்தியன் உணர்வு கலந்த இந்தத் தமிழ் நாட்டில் விஷத்தை அகற்றும் சக்தியாகப் பெறுகின்றோம்.
2.நான் இதைப் பேசுகின்றேன் உங்களைப் பெறச் செய்கிறேன் என்றால் நான் அல்ல
3.நமது குருநாதர் காட்டிய வழியில் அந்த அகஸ்தியன் உணர்வையும்
4.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரியஷியாகித் துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் பெருக்கப்படும் பொழுது
5.விஞ்ஞான அறிவால் எத்தகைய பேரழிவுகள் வந்தாலும் “நம் தமிழ்நாடு காக்கக்கூடிய சக்தியாக வரும்… விஷத்தை வெல்லும் சக்தியாக வரும்…”

நீங்கள் இதைச் சாதாரணமாகக் கேட்கிறீர்கள் என்று எண்ண வேண்டாம்…!

அருள் உணர்வுகளைப் பெருக்கப்பட்டு இருளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே… குரு எனக்குக் கொடுத்த அந்த அருள் உணர்வுகளை நீங்களும் பெருக்கி… அதை நீங்கள் உலகமெங்கும் பரவச் செய்யும் பொழுது நம்மைக் காக்க நம் உணர்வுகள் பாதுகாப்பாக வரும்.

நியூட்ரான் என்ற குண்டின் சக்தி அதிகமாகும் பொழுது அது அழுத்தமான நிலையில் மற்றதை எப்படி விரட்டிச் செல்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெருக்கப்படும் பொழுது விஷத்தின் தன்மை ஒடுக்கி ஒளியின் தன்மையாக அது உருவாக்குகின்றது.

1.அந்த உணர்வை நமக்குள் பெருக்கினோம் என்றால் நாளை வரும் விஞ்ஞானப் பேரழிவிலிருந்து தமிழ்நாடு தப்பும்.
2.பெரிய பெரிய தத்துவ ஞானிகள் இதைத்தான் கூறுகின்றனர்.
3.அகஸ்தியனின் உணர்வு தான் இதையெல்லாம் வெளிப்படுத்துகின்றது.

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் அகஸ்தியனுடைய தத்துவங்கள் வரும். ஆனால் முழுமையாக யாரும் அதை விளக்க உரையாகக் கொடுக்கவில்லை. அரசர்களுக்கு உகந்ததாக மட்டுமே மாற்றி விட்டார்கள். உண்மையின் உணர்வை அறிய முடியாது மறைத்து விட்டார்கள்.

இனி வரக்கூடிய எதிர்காலம் மிகவும் சிக்கலாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் தமிழ் மண்ணைக் காக்க வேண்டும். அதன் வழி கொண்டு உலகைக் காக்க வேண்டும்.

உலக மக்களைக் காக்கும் உணர்வு வர வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தை எடுத்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி இங்கே பரவச் செய்து இதன் வழி கொண்டு ஒவ்வொரு நிலையிலும்… அறியாத இருளை நீக்கும் சக்திகள் பரவி அந்த ஞானிகள் காட்டிய பண்புகள் “இங்கிருந்து உலகைக் காத்திடும் நிலைகளாக வர வேண்டும்…”

அன்று ஒரு சமயம் அகஸ்தியன் இந்தப் பூமியைத் திசை திருப்பினான். அதைக் காவியங்களாகப் படைத்துள்ளார்கள். சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் ஆகின்றது. அப்போது அனைவரும் அங்கே திரண்டு வரும் பொழுது பூமி தாங்காது என்பதற்காக அகஸ்தியனை… “நீ தெற்கில் போ…” என்று சிவன் சொன்னார்.

தெற்கிலே அவன் சென்ற பிற்பாடு… தன் எண்ணத்தால் இந்த பூமியைக் கவிழும் நிலையில் இருந்து திசை திருப்பினான்… ஒரு நிலையில் நிலைப்படுத்தினான் அகஸ்தியன்.

விஞ்ஞான அறிவால் பேரழிவு வரும் இந்த நேரங்களில் அதே அகஸ்தியன் உணர்வு தான் தெற்கிலே வளரப் போகின்றது. அதாவது உணர்வுகள் மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.அகஸ்தியன் உணர்வைப் பெருக்கி… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாமும் பெருக்கி
2.இந்த நாட்டைக் காத்திடும் நிலை பெறுதல் வேண்டும்.
3.நாட்டைக் காக்க வேண்டும் என்றால் நம்மை நாம் காக்க முடியும்
4.மற்றவரை காக்க வேண்டும் என்றால் நம்மை நாம் காக்கின்றோம்

ஆனால் நம்மை மட்டும் நம் வீட்டை மட்டும் தனித்துக் காக்க வேண்டும் என்றால் பிறரின் வெறுப்பின் தன்மையைத் தான் கவர நேரும்.

பிறர் காக்கப்பட வேண்டும் என்ற தெளிவான நிலையில் பெற வேண்டும் என்றால் நம்மை நாம் காக்கின்றோம்… வீட்டையும் காக்கின்றோம்… நாட்டையும் காக்கின்றோம்.

இதைப் போன்று அகஸ்தியன் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது அவன் வாழ்ந்த வழியில் நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும். ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

தவறாதீர்கள்… என்னமோ ஏதோ என்று இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

மூடமதி விலகிட “க்ஷண நேர சபலம்… மின்னலின் ஒளி (துருவ நட்சத்திரத்தின் சக்தி) என வித்தாக ஆனது…”

உலகிலே உதித்த உடல் கொண்ட
1.உடல் தொடர்பின் வானியலை வழி வகுத்த மாமகரிஷிகள்
2.மனிதன் பெறுகின்ற பேறு என உண்மைகளை முழுவதும் பெட்டகத்தில் வைத்துப் பூட்டிடவில்லை.

தனித்து இயங்கும் ஆற்றலாக… முகிழ்விக்கும் ஞானம் செயற்கொண்ட வளர்ச்சியின் முதிர்வாக… மெய்ஞான அனுபவங்கள் உலகின் கண் செயல் கொண்ட காலத்தே…
1.உலகோதய வாழ்க்கை நெறி வழி மெய் ஒலி மெய்ஞானம் பிறந்திட…
2.க்ஷண நேர சலனம் அக்கணநேரம் என்பது படி…
3.பலன் உருவாக விளைய மீண்டும் மீண்டும் கூட்டிக் கொண்டிட்ட அனுபவ நிலைக்களன்களே (சான்றோர்) சாட்சி.

காவியமாகப் படைத்து அளித்திட்ட நிலைகள் எதற்கப்பா…?

இன்று சமுதாய சீர்திருத்தம் என்ற நிலையில் மக்கள் நலன் பெற உழைக்கின்றோம் என உரைக்கின்றவர்கள்… வாழ்வின் மாளிகை அமைக்கப் பெறும் அஸ்திவாரத்தைக் கூட அறிந்து கொண்டார்களா…?

வாழ்வின் நலன் காக்கும் ஒழுக்கம்… ஒழுக்கத்தின் வழி நற்பண்புகள்… அப்பண்புகள் நெறி கொண்டு சமைத்த பாசம்… சங்கட நிலை விலக்கி நீதியை நிலைநாட்டும் வீரம்… எதிர் மோதல் குணங்கள் நெருங்கிடாக் கவசம்… என சீரிய சிந்தனையாக தானம்… நெறி முறையை மாற்றிக் கொண்டிடும் செயல்களுக்குத் தக்க ஒறுத்தல் (தண்டனை) என்ற சட்ட நிபுணத்துவங்கள்…! இவை அனைத்தும் உலகிற்கு அன்புடன் அளித்திட்டாலும் “அதில் ஓர் சூட்சமம்” உள்ளது.

1.”ஒளி கொண்டு ஈர்த்தல்” என்றே தன் நிலையின் உயர்வைக் கூட்டிக் கொண்டிட…
2.வெளியிடாத காரியார்த்த உண்மைகளும் உண்டு.

வான்மீகி மாமகரிஷி மனிதன் தெய்வ நிலை பெற்றிடும் வளர்ச்சியின் வழியையே… குணங்கள் நிறங்கள் சூட்சும மணங்கள் என்று மகிழ்ச்சியுடன் அளித்திட்ட உண்மைகளை இனி உரைப்போம்.

அன்றோ காட்டுக்கு அரசன்… இன்றோ இராம ராஜ்ய ஜெப விசால அரசருக்கு அரசன்…! மூடமதி விலகிட “க்ஷண நேர சபலம்… மின்னலின் ஒளி (துருவ நட்சத்திரத்தின் சக்தி) என வித்தாக ஆனது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில பேர் என்னிடம் (ஞனகுரு) எதையாவது எதிர்பார்த்து வருவார்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் “என்ன சாமி இவர்…?” என்பார்கள்.

இவர்கள் எண்ணத்தைத் தான் நான் நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால் யாம் சொல்வதை அவர்கள் வழிப்படுத்தி நடப்பதில்லை. அவர்கள் ஆசைக்கு நான் இணங்கி வர வேண்டும். இப்படி வரக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.
1.யாம் சொல்லும் முறைப்படி குருநாதர் காட்டிய நெறிகளை எடுப்பதற்கு இல்லாதபடி
2.தவறின் நிலைகளிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்

சாமியிடம் சென்றேன்… ஏதோ சொன்னார்… பின் நடக்கும் என்றார்…! என்று
1.யாம் சொன்ன முறைப்படி அவர்கள் செய்ய வேண்டியதை விட்டு விட்டு
2.அவர்கள் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இப்படித்தான் இந்தச் சமுதாயம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இங்கே எம்மிடம் வந்து கஷ்டத்தைத் தான் சொல்கிறார்கள். “கஷ்டத்திலிருந்து நான் மீள வேண்டும்…” என்று யாரும் கேட்பதில்லை.

குடும்பத்தில் உள்ள குறைகளையும்… “தொழிலில் கடன் வாங்கியவன் தன்னை ஏமாற்றுகின்றான்…!” என்றும் இதைத் தான் சொல்கிறார்கள்.

1.வாங்கிச் சென்றவர்களுக்கெல்லாம் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் எண்ணம் வர வேண்டும்
2.அதற்கு வேண்டிய வருமானம் அவர்களுக்கு வர வேண்டும் என்று எண்ணும்படி
3.பல முறை சொல்லியிருக்கின்றேன்… அதை யாரும் கேட்பதில்லை.

நீங்கள் சண்டை போட்டாலும் பணம் வரப் போகின்றதா…? இல்லை…! கோர்ட்… கேஸ் என்று அலைந்து… மேற்கொண்டு பணத்தைச் செலவழித்து வேதனையாகி நோயாக ஆனது தான் மிச்சம்.

பாவிகள் இப்படிச் செய்துவிட்டனர்…! அதனால் எனக்கு நோய் வந்து விட்டது… என்று தான் சொல்ல வேண்டி வரும்.

யாம் சொல்லும் முறைப்படி உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றினால் அங்கே நிச்சயம் மாறும்… அமைதி கிடைக்கும்… சாந்தம் கிடைக்கும்.

அவன் உடனடியாகக் காசைக் கொடுக்கவில்லை என்றாலும் கூட நம் எண்ணம் நம் செல்வத்தை வளரச் செய்யும். மன வேதனையாகி நோயாகாமல் தடுத்துக் கொள்ள முடியும். குடும்பத்தையும் சீராகக் காக்க முடியும்.

இப்படி…
1.விஷத்தை ஒதுக்கி விட்டால் அது நம்மை ஒன்றும் செய்யாது
2.ஆனால் நான் நன்றாகத் தானே சமைத்து வைத்தேன்… என் பொருளில் விஷம் விழுந்து விட்டதே…! என்று
3.அத்தனை பொருளையும் வெளியிலே தூக்கி எறிவதா…? என்று விஷம் பட்டதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்…?
4.அந்த விஷம் நம்மைக் கொல்லத்தான் செய்யும்.

ஆக… எல்லோருக்கும் நான் நல்லதைச் செய்தேன். எனக்கு இந்த நிலையைச் செய்கின்றார்களே…! என்ற வேதனை (வேதனை என்பது விஷம்) உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அதைத்தான் செய்யும்

இருபது வருடம் அனுபவத்திலே இதையெல்லாம் தெரிந்து தான் உங்களுக்குச் சொல்கின்றேன். காடு மேடு எல்லாம் அலைந்து… குடும்பத்தில் உள்ள மனைவி பிள்ளைகள் அனைவரையும் விட்டுவிட்டு… குருநாதர் காட்டிய வழியில் உலக உண்மைகளை எல்லாம் தெரிந்த பிற்பாடு தான் இங்கு வந்து இதைச் செயல்படுத்த முடிந்தது.

அது வரையிலும்
1.என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனாதையாக இருந்து
2.செல்வத்தை இழந்து நரக வேதனைப்பட்டுத் தான் வாழ்ந்தார்கள்

ஆனால் இதை எல்லாம் அனுபவபூர்வமாகக் கொடுத்தாலும் குருநாதர் விளக்கத்தையும் கொடுக்கின்றார்.

உன் குடும்பம் நீ இல்லாத போது எத்தனை அவஸ்தைப்பட்டதோ… அதைப் போன்று
1.ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பத்தால் எத்தனையோ தொல்லைகள் ஏற்பட்டு விடுகிறது
2.அதனால் அவர்கள் அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தை (உடலை) அசுத்தப்படுத்துகின்றார்கள்
3.அவர் அறியாமலே அதைப் புண்படுத்துகின்றனர்… அதை நீ அவர்களுக்கு உணர்த்து
4.உயிரான ஈசனை மதிக்கும்படி செய்… அவனால் உருவாக்கப்பட்ட ஆலயத்தை மதிக்கும்படி செய்…
5.உடலைச் சிவமாக மதிக்கச் செய்.
6.அவர்களுக்கு இதை நீ ஓதும் போது… உனக்கு அதிலே அந்தப் பங்கு கிடைக்கும்.

அவர்கள் தன் உடலை மதிக்கவில்லை என்று இருந்தாலும்…
1.மதிக்கக்கூடிய பண்புகள் அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்தால்
2.நீ எண்ணிய உணர்வு (இந்த உயர்ந்த எண்ணம்) உனக்குள் வளர்கின்றது.

ஒரு தீயவன் என்னைத் தவறாகப் பேசுகின்றான் என்றால் “இப்படிப் பேசுகின்றானே…” என்று மீண்டும் மீண்டும் எண்ணினால் அந்த உணர்வு எனக்குள் வளர்ந்து தீமையாகவே வருகின்றது.

அப்போது அந்த நேரத்தில்
1.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் அவன் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.அவனுடைய வேக உணர்வு… அந்தத் தீமையான உணர்வு நமக்குள் வருவதில்லை.

இப்படி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று மனதில் நிறுத்தி… பிறரின் உணர்வை நமக்குள் வளர்க்காதபடி… அந்த உயர்ந்த சக்தியை நாம் வளர்க்கப் பழகுதல் வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வளர்த்துக் கொண்டால் – “ரிமோட் (REMOTE)”
2.தீமை என்ற உணர்வுகள் உங்கள் அருகில் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறைப்படுத்தி கம்ப்யூட்டர் என்ற் சாதனத்தை வைத்து எத்தனையோ வேலைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.

ஒரு இடத்தில் பிழையாகி விட்டால் உடனே அந்தக் கம்ப்யூட்டர் அதைத் திருத்தி எத்தனையோ நிலைகளை மாற்றிச் சீர்படுத்துகின்றது.

அது போன்று தான்… நம் உயிர் எலக்ட்ரிக்காக இருக்கிறது… சுவாசிக்கும் உணர்வுகளை எலெக்ட்ரானிக்காக… (அழுத்தம்) உணர்ச்சிகளால் இயக்குகிறது.
1.நாம் சுவாசிக்கும் போது மாறுபட்ட உணர்வுகள் வந்தால்…
2.அது நம் அழுத்தங்களை மாற்றினால்… அது தவறு என்று தெரிந்தால்…
3.அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் நாங்கள் பெற வேண்டும் என்ற “இந்த அழுத்தத்தைக் கொடுத்து”
5.முதலில் நுகர்ந்த மாறுபட்ட உணர்வின் அழுத்தங்களை மாற்றிக் கொண்டு
6.இனி நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்து வலுவாக்கி…
6.இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்.

நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்… கண்ணின் கரு விழியால் பதிவாக்கிய நிலைகள் கொண்டு… உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து,,, நல்லதாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!
1.நல்ல நேரத்தை உருவாக்குவது உங்கள் கையிலே தான் இருக்கின்றது
2.துருவ நட்சத்திரத்தின் அழுத்தத்தைக் கொண்டு எதையுமே நல்லதாக்கும் ஒரு பழக்கம் நமக்கு வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் சம்பாதிக்கின்றேன்… நீயும் சம்பாதிக்கின்றாயா…? என்று ஆசைப்பட்டாலும் இனி உலகப் போர் நடந்தால் அணு குண்டு யுத்தம் தான் நடக்கும்.
1.எந்த நிமிடம் அணுகுண்டோ மற்ற நிலைகளோ எங்கே… எப்படி விழுகப் போகிறது…! என்று சொல்ல முடியாது
2.அடுத்தவன் நம் மேல் போடப் போகின்றான்… நாம் அவன் மீது போடப் போகின்றோம்…
3.இது தான் நடக்கப் போகிறது…!

அந்த நிலை ஆவதற்கு முன் இந்த உடலை விட்டுச் செல்லும் முன் “நாம் எதைச் சேமிக்க வேண்டும்…?” என்பதைத்தான் இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரம் வேகா நிலை பெற்றது. நம் உயிரும் எந்த நெருப்பிலும் வேகுவது இல்லை.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்த்துக் கொண்டு வந்தோம் என்றால் உயிரைப் போன்று வேகா நிலை பெற்றுத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

என் சொத்து உன் சொத்து…! என் காசு உன் காசு…! கௌரவம்…! அனைத்தும் போய்விடும். காரணம் உலக யுத்தம் மிக அருகில் இருக்கின்றது;. ஆரம்பித்தால்…
1.ஒரு பத்து நிமிடம் அல்லது குறைந்தது ஒரு பதினைந்து நாட்களுக்குள் உலகம் முழுவதற்குமே விஷத்தன்மை பரவப் போகின்றது.
2.நாம் என்ன செய்யப் போகின்றோம்…?

உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் மீண்டும் அடுத்த உடலுக்குள் சென்று விடக்கூடாது இன்னொரு பிறவிக்கு வந்து விடக்கூடாது

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் சாதாரணமாக யார் உடலை விட்டுப் பிரிந்தாலும் நஞ்சின் தன்மையைத் தான் அடைகின்றார்கள்.

ஆக… இந்தக் காற்று மண்டலமே நஞ்சின் தன்மையாக இருந்தாலும் அதை நீக்கக்கூடிய சக்தியை நாம் இப்போதே சேர்த்துக் கொண்டு வரவேண்டும்.

எது எப்படி இருந்தாலும்
1.உயிர் உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் நாம் செல்ல வேண்டும்.
2.தோக்கி உள்ள விஷங்களை அங்கே கரைத்துப் பழகுதல் வேண்டும்

அதற்குத் தான் இப்பொழுது பயிற்சியாக உங்களுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

எத்தனை பேர் இதை நீங்கள் எடுக்கிறீர்கள்…! என்று தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1.எந்தச் சாமியும்… எந்தச் சாமியாரும்… “உங்களை யாரும் காக்கப் போவதில்லை…”
2.உங்கள் உயிர் தான் உங்களைக் காக்க முடியும்.

உயிரின் துணை கொண்டு எந்த உயர்ந்த சக்தியை நீங்கள் எடுக்கின்றீர்களோ… அந்த உணர்வை வைத்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடவும்… இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதற்கும்… இந்த ஒன்றைத் தவிர வேறு வழி இல்லை.

ஏற்கனவே பல முறை உங்களுக்கு இதை எல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டே தான் வருகின்றோம். இனி எந்த நேரம்… எது நடக்கும்…? என்று சொல்ல முடியாது அந்த அளவுக்குத் தான் இந்த உலகம் இருக்கின்றது. ஆகவே
1.நம் குருநாதர் காட்டிய வழியில் தியானத்தைக் கூட்டுங்கள்
2.ஆத்ம சுத்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் செய்து கொண்டே வாருங்கள்
3.மன அமைதியைக் கொண்டு வாருங்கள்
4.எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டமடையாதபடி மன உறுதி கொண்டு அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றது…!

இதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் என்றால் தியானத்தைச் சரியான முறையில் கடைப்பிடித்து துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்த்துப் பழகுங்கள்.

இதைச் செய்தால் தான் தப்ப முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் போது உணர்வுகள் ஒளியாகிறது… ஆனால் உடல் நலியத் தான் செய்யும்

மனிதனான பின் ஆரம்ப நிலைகள் எப்படி உயிரணு நுகர்ந்து… நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல்களை மாற்றுகின்றதோ இதைப் போல நாமும்
1.இந்த உடலில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் சக்தியை துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்தோம் என்றால்
2.உடலில் அதிகமாகச் சேர்த்தோம் என்றால் இரத்தங்களில் கலந்து கலந்து
3.நம் உடலில் அடுத்த உடல் பெறும் உணர்வுகளோ அல்லது நாம் நுகர்ந்த உணர்வால் வந்த நோய்களையோ அது வராதபடி தடுக்கலாம்.

அப்படி நோய்கள் வந்தாலும்
1.இந்த உணர்வுகள் ஆனபின் புது விதமான அதற்கு எதிர் நிலையாக ஆகும்பொழுது இதுவும் நோய்தான்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பெறும் பொழுது அதற்கு எதிர் நிலையாகின்றது.
3.இந்த உணர்வுகளைக் கவரப்படும் பொழுது இந்த உடலும் நலியத்தான் செய்யும்.

ஒரு விஷம் கொண்ட உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது அந்த உடலும் நலியத்தான் செய்யும். ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலந்து அந்த அணுக்கள் பெறத் தொடங்கினால்
1.அதையே ஏங்கி துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து நுகர்ந்து
2.உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மை வருகின்றது.

இந்த உடலிலேயே துருவ தியானமும் மற்ற தியானங்களும் நாம் எடுத்து அந்த உணர்வினை வலுப்பெறச் செய்து கொண்டால்… எப்படிப் பட்டுப் பூச்சி தன் உணர்வின் வளர்ச்சியில் இறக்கைகள் முளைத்து வெளிவந்த பின் மற்ற செடியின் உணர்வை எடுத்துக் கொண்ட பின் வண்டாக எப்படி உருமாறுகின்றதோ… இதைப் போல நாம் அந்த அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையை மனிதன் இயற்கையின் உணர்வின் தன்மை மாற்றி ஒளி நிலை அடையலாம்.

அப்படி வளர்ச்சி அடைந்த… நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் இந்த உணர்வுகளைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து வருகின்றது. பூமி துருவத்தின் வழி அதைக் கவர்ந்து பூமிக்குள் கொண்டு வருகிறது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்த்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்ற உணர்வை…
2.இப்போது சொல்லும் பொழுது செவி வழி கேட்கப்படும் பொழுது எண்ணங்கள் கண் வழி கவர்ந்து மூக்கு வழி நுகர்ந்து
3.உயிரிலே பட்டு இந்த உணர்வுகளை உடலில் உள்ள இரத்தநாளங்களில் கலக்கச் செய்கின்றது.

அவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உங்கள் இரத்த நாளங்களில் பெருகப் பெருக பெருக அதன் உணர்வை உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

ஏற்கனவே பலவிதமான உணர்வுகளை எடுத்து உடலை மகிழச் செய்திருக்கலாம். அல்லது வேதனையின் உணர்வு நோயாகவும் உருவாகி இருக்கலாம்.
1.வேதனை உணர்வுகளை எடுத்தாலும் நோயாக மாற்றுகின்றது
2.அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுக்கப்படும் பொழுது
3.விஷத்தின் தன்மை குறையும் பொழுது விஷமற்ற உணர்வின் அணுக்கள் மாறுகின்றது.
4.இருப்பினும் இதைப் போன்று இந்த உடலில் இருந்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகச் சென்றது துருவ நட்சத்திரம்.
5.இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு நமக்குள் அருள் ஒளியை உருவாக்க முடியும்.

நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பேரருள் பேரொளியாக மாற்றி “இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை…” என்ற நிலையை நாம் அடைதல் வேண்டும்.

தேகம் கொண்ட பின் ஆனந்த இலயம் கெட்டது… தன்னை உணர்ந்தபோது பேரானந்த இலயம் ஆட்கொண்டது

வரலாற்றின் தொடர்பு தொடர்ந்து வந்தாலும் அதனுள் காட்டப்படும் சூட்சுமப் பொருட்கள்… “காரண காரிய விளக்கங்கள்” அதனின் ஆய்வில் சிந்தனை செயல் கொண்டிடல் வேண்டும்.

ஏனென்றால் “அனைத்துமே” பால்வெளி எனும் ஆகாய சம்பந்தம் கொண்டது…!

ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் தொடர்பில்
1.பூமியின் ஈர்ப்புப் பிடிப்புக்குள் அகப்பட்டுவிடும் ஜீவன்
2.தேகம் கொண்ட செயலாக ஆனந்த இலயத்தை மாயை மறைக்கின்றது.

வித்து வித்துக்களாக விளைந்திடும் நிலையில்
1.அவ்வானந்த இலயத்தை நாட்டம் கொண்டிடும் மனது
2.”ஆகாய சம்பந்தம்” கொள்கின்றது.

வித்துக்கள் பூமியில் ஊன்றப் பெற்று முளைத்து தழைத்து… பின் கிளைத்து உயர்ந்தோங்கல் எனும் மரமாக வளர்ந்துற்றாலும்… ஊன்றப்பட்ட அதே வித்தே கனிகளாகத் தோன்றி வித்துக்கள் அதன் அடக்கம் கொண்டு தோன்றிட்டாலும்… “மரத்தின் கனியில் உண்டாக்கிய வித்துக்கள் ஆகாய சம்பந்தம் கொண்டது…”

அந்த வித்துக்கள் மரத்துடன் ஒன்றிக் கனிந்து முதிர்ந்த நிலை பெற்றவுடன் அந்த மரத்திலிருந்து வேறுபட்டு பூமிக்கு வருகின்றது. காரணம் மரத்தின் தொடர்புடன் ஆகாய சம்பந்தம் கொண்டது.

அந்த மரமானது புவி ஈர்ப்பின் சக்திக்குள் அடக்கம் பெற்றிட்டதால்… கிளைதனில் விளைந்த “ஆகாய சம்பந்த வித்து…” ஈர்ப்பின் செயலில் வித்தாக வருகின்றது.

1.சரீரம் பெற்ற மனிதன் இதே சூட்சுமத் தத்துவங்களில் தான் பிறப்பின் நிலை கொள்கின்றான்
2.தேகம் கொண்ட பின்… ஆனந்த இலயம் கெட்டது
3.தன்னை உணர்ந்த பொழுது… அப்பேரானந்த இலயம் ஆட்கொண்டது.

வளர்ச்சி கொண்டிட்ட செயல் அனைத்தும் ஜீவனின் வளர்ப்பு தான்.

1.ஞானக்கண் விழிப்பால் பிடரிக் கண் தெளிந்த பொழுது
2.கவனம்… மூலாதார அக்கினியில் இலயிக்கின்றது.

இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று.

மூலாதாரத்தின் சிவலிங்க அணுக்கள்… நீர் சக்தி எனும் விந்து ஒளி கொண்டு மேல் எழுகின்ற செயல் “மூலாதாரத்தில் இலயித்த கவனம்” மேல் எழும்புகின்ற ஊர்த்துவ சக்தியின்.. “உந்துகின்ற எண்ணம் அதுவும் கவனம்…”

மூலமும்… ஆண் பெண் குறி ஸ்தானங்கள் கொண்ட இடமும்… மூல ஆதாரம் எனும் இடமாகத் தோன்றிடும்… தோன்றி நிலை கொண்டிடும் ஜோதி சொரூப சக்தி… மேல் எழுந்திட சிரசின் நெற்றிப் பகுதி என உரைத்திடும் சதாசிவ மண்டலம்… அந்த மண்டலத்தின் ஈர்ப்பிற்கே ஊர்த்துவமாகச் செல்கிறது.

1.நாபியில் நிலை பெற்றுப் பின் இதயத்தில் நிலை கொள்கின்றது
2.பின்னும் மேல் எழுந்து கண்டத்தில் கடைவாய்ப் பற்கள் அமைவு கொண்ட இடத்தில் மறைமுகச் சக்தியில் கலந்து “தேஜோமயமாக” விளங்குகின்றது.
3.அச்சக்தியே அறுகோணச் சக்கரத்தில் நடித்திடும் சிவத்துள் விளக்கம் தோன்றிட
4.முதலில் கண்ட சக்தியுள் கலந்து எழும் சக்தியே நாவின் அடிப்பாகத்தில் ஓ…ம் எனும் பிரணவத்துள் கலந்து
5.ஓமின் அந்த ஒலி நாதத்தை மேலெழும் சக்தியாக… நெற்றிப் பொட்டின் அறுகோணத்துள் அமைவுறச் செய்திடல் வேண்டும்.

ஓ…ம் என்னும் ஒலி நாதம் நாவினுள் கிளர்ந்திடும் பொழுது… உதடுகள் அசைவதும் அன்றி பிரிந்திடவோ செயல் கொள்ளல் தகாது.

1.நெற்றிப் பொட்டில் ஆரோகணிக்கும் அச்சிவசக்தி தியானத்தின் வலு வீரியம் பெற்றிடுங்கால்
2.சரீரத்தில் இருக்கும் கோடான கோடி உயிரணுக்கள் உயிராத்ம சக்தியின் வசப்பட்ட எண்ணத்தின் செயலுக்கொப்ப
3.இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் சக்தி எவ்விடத்திலும் சென்று மீண்டிடும் “சூட்சும சித்து” இதனால் அடக்கம்.

தெளிவாக விளங்கிட இதற்கு ஒரு சித்திரம் காட்டிடல் வேண்டும். நிறைகுடம் தளும்பாது.

கடைபிடிக்கப்படும் காரியங்களில்…
1.எண்ணத்தின் சிதறல் ஊசி முனை அளவாக இருந்தாலும்
2.அந்தச் சிறு துவாரம் வழியாக… பெற்றிடும் சக்தியின் உயர்வைக் குறைத்து விடும்.

அதே போல்…
1.சிதறுகின்ற எண்ணங்களின் அந்தச் சிறு வழியை அடைத்து விட்டால் நிறை குடமாக ஆகும்
2.வாழ்வின் எந்த நிலையிலும்… எத்தனை சந்தர்ப்பங்கள் வசமாயினும் நிறை குடம் தளும்பிடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புதிதாக வாங்கும் போது ஓரு பாத்திரம் அழகாக இருக்கின்றது. ஆனால் அதிலே அழுக்குகள் படிந்து விட்டால் இருண்டு விடுகின்றது. அப்போது அந்தப் பாத்திரத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும்…? நன்றாக இருக்காது.

பாத்திரத்தில் அழுக்குப் படும்போது அவ்வப்பொழுது அதைத் துடைத்துக் கொண்டு அல்லது தூய்மைப்படுத்திக் கொண்டு வந்தால் அது “பளிச்…” என்று இருக்கும்.

ஆனால்
1.அழுக்குகள் ஏறிய பின் தேய்த்துப் பார்த்தால் போகாது… களிம்பு ஏறி இருக்கும்
2.அதிகமான களிம்பு ஏறிவிட்டால் சொர சொரப்பு அதிகமாகிவிடும்
3.மீண்டும் அதைச் சுரண்டி அல்லது சாணை பிடித்துத் தான் சரி செய்ய முடியும்.

இது போன்றுதான் இயற்கையின் நிலைகளில் நாம் சுவாசிக்கும் உணர்வுகளில் நம்மை அறியாது ஆன்மாவில் அழுக்குகள் சேர்கிறது. அதைத் தூய்மைப்படுத்தாது விட்டுவிட்டால் பாத்திரத்தில் களிம்பு ஏறியது போல் தீயவினைகளாக உடலில் சேர்ந்து அதனால் பல பல தொல்லைகள் வந்து சேர்கிறது.

ஆகவே ஆன்மாவை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியானத்திலும் சரி… மற்ற கூட்டுத் தியானத்திலும் சரி… உயர்ந்த சக்தியை எடுத்துப் பழகிக் கொண்டவர்கள் நீங்கள் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தை மறவாது பயன்படுத்துங்கள்.

தீமைகளைச் சந்திக்கும் போதெல்லாம் அல்லது நுகரும் பொழுதெல்லாம்… அல்லது எதிர்பாராது தீமைகள் வந்து மோதும் போதெல்லாம்… அதை மாற்றிக் கொண்டே வாருங்கள்.

1.எத்தனையோ வகைகளில் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று யாம் (ஞானகுரு) அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டேயிருக்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருந்து கொண்டிருக்கின்றோம்.
3.அந்தச் சக்தி உங்களுக்குள் வந்து கொண்டு இருக்கின்றது… வலுவும் கூடுகிறது.
4.நினைத்தவர்களுக்குத் தான்…!

நினைக்காதவர்களுக்கு இல்லை… காரணம் உணவை எடுத்துச் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் தானே உள்ளே போகும்.

எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! வீட்டிலே டிவி.யில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த ஸ்டேஷனில் இருந்து ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் காற்றிலிருந்து அதை இழுத்து நாம் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

ஆனால் நீங்கள் உங்கள் எண்ணத்திற்குள் எத்தனை ஸ்டேஷனை வைத்திருக்கிறீர்கள்…?

சண்டை போட்டவன் ஏமாற்றியவன் கேலி செய்தவன் திட்டியவன் கொலை செய்ய வந்தவன் என்று இப்படி எல்லா ஸ்டேஷனும் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.

இப்படிப்பட்ட பதிவுகளை வைத்திருக்கும் போது என்ன செய்கிறது…?

சிரமமான நேரத்தில் அவர்களை எண்ணும் பொழுது அந்த ஸ்டேஷனுக்குள் இணைந்த பின் அடுத்து நமக்குள் நல்ல சிந்தனைகள் வருவதில்லை.
1.என்னை இப்படி ஏமாற்றினார்களே… அவர்களை என்ன செய்யலாம்…?
2.என்னை இப்படித் திட்டினார்களே… அவர்களைச் சும்மா விடுவதா… இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று
3.இத்தகைய உணர்வு தான் மனதில் ஓடிக்கொண்டிருக்குமே (டி.வி.யில் படம் ஓடுவது போல்) தவிர நல்ல உணர்வுகள் வருவதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாம் செயல்படுத்த வேண்டியது எது…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.வரக்கூடிய தீமைகளை மறக்க இதை நாம் எடுத்தால் அதனுடைய வலு குறைகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது
3.ஆகவே இந்த ஸ்டேஷனைத் தான் நாம் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் நண்பரைச் சந்திக்கின்றோம்… பார்த்தால் சோர்வாகத் தெரிகின்றது ஏன் இப்படி இருக்கின்றாய்…? என்று கேட்கின்றோம்.

ஆமாங்க… என் பையன் ஏதேதோ செய்து விட்டான்…! கடன் கொடுத்தது பணம் திரும்ப வரவில்லை… குடும்பத்தில் ஒரே ரகளையாக இருக்கின்றது… என்ன செய்வது என்று தெரியவில்லை…! என்று சொல்கின்றார்கள்.

நம் நண்பர்களிடம் நல்லதைத்தான் விசாரிக்க விரும்புகின்றோம் ஆனால் அவர்கள் படும் கஷ்டத்தை எல்லாம் சொல்கின்றார்கள்.

அப்படிச் சொல்லும் பொழுது “இதையெல்லாம் என்னிடம் சொல்லக் கூடாது.. போங்கள்…!” என்று சொல்ல முடியுமா…?

அப்படி அவர்கள் சொன்னாலும் நாம் அந்த இடத்தில் விழித்திருக்க வேண்டும். அவர் அவருடைய கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாலும்…
1.அவருடைய கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்
2.அவர் தொழில் சீராக வேண்டும்
3.அவர் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த ராகத்தை
4.இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் “அவர் நலம் பெற வேண்டும்… நலம் பெற வேண்டும்…” என்று இதைச் சொல்லிக் கொண்டிருந்தால்
1.அவருடைய கஷ்டம் நமக்குள் புகாது அதை இழுக்காது
2.வெளியில் தான் தேங்கி நிற்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும். எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர வேண்டும். எலும்புக்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் இதைச் செலுத்தி வலுவாக்க வேண்டும்.

“ஒரு நிமிடத்திற்குள்” இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த நண்பரிடம் மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள் உங்களுக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும்… உங்கள் தொழில்கள் சீராகும்… “கஷ்டம் என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்…!” என்று சொல்லிப் பாருங்கள்.

அவர் படும் கஷ்டங்கள் உங்களுக்குள் விளையாது. இப்படி நமது சகஜ வாழ்க்கையில் பிற தீமைகள் வந்தால் விழித்திருக்க வேண்டும்.

ரோட்டில் செல்கின்றோம். சந்தர்ப்பம் ஒரு விபத்தைக் காண நேர்கின்றது உற்றுப் பார்த்த பின் நமக்குள் அது வந்து விடுகின்றது… ரெக்கார்ட் ஆகிவிடுகிறது.

இப்படிப் பதிவான அனைத்துமே நாம் எப்பொழுது சோர்வடைகின்றோமோ அப்பொழுது நினைவுக்கு வரும். அந்த மாதிரி நேரங்களிலும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரை எண்ணி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

ஊனை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே இணைத்துப் பழகுதல் வேண்டும்.
1.நாம் கண்ணிலே பார்த்தது இங்கே தான் ரெக்கார்ட் ஆகும்
2.விலா எலும்புகளில் தான் அதிகமாகப் பதிவாகும்…
3.காரணம் அங்கு அதிகமான மேக்னெட் (காந்த சக்தி) இருக்கின்றது.. அங்கே இழுத்து வைத்துக் கொள்ளும் ரெக்கார்ட் ஆகும்
4.பதிவானதன் துணை கொண்டு காற்றிலிருந்து இழுத்துத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்ளும்
5.ஆன்மாவில் எது வலுவாக இருக்கின்றதோ… அது உயிரிலே மோதும்
6.அதனுடைய வேலையைச் செய்யும்… “உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற விடாது…”

தியானத்தில் நீங்கள் இருக்கும் போது இது எல்லாமே தெரியும். எத்தனையோ நினைவுகள் உணர்வுகள் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

என்னால் ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.

அந்த ஆன்மாவில் வலுவாக இருப்பது முன்னாடி வந்தபின் தியானம் எடுப்பதை மறந்து விட்டு அதற்குள் சென்று விடுவார்கள். பின் “இப்படி வருகிறதே…” என்று எண்ணும் பொழுது
1.அதைக் காட்டிலும் வலுவானது வந்தால் அது இயக்கும்
2.அதற்கடுத்து மனதிலே சோர்வு வந்துவிடும்… நல்ல சக்திகளைப் பெற முடியாது.

இதைச் சீர்படுத்த வேண்டும் என்றால் அவ்வப்பொழுது வரக்கூடிய தீமைகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஆன்மாவைச் சுத்தம் செய்து கொண்டே வர வேண்டும்.

சிறிது நாட்கள் இதைச் செய்து நீங்கள் அனுபவத்திற்கு வந்தால் பின் தன்னிச்சையாகச் (AUTOMATIC) செயல்படுத்த முடியும்… மன நிம்மதி கிடைக்கும்.

கலக்கமான நேரத்தில் யாம் சொன்ன ஆத்ம சுத்தியைச் செய்தால் நல்ல சிந்தனைகள் வரும்
1.அந்த நேரத்திற்கு வேண்டியது – என்ன செய்ய வேண்டும் என்ற உபாயங்களும் வரும்
2.அந்த வழியும் தெரியும்… உள் உணர்வை ஊட்டும்.

ஆனால் இருள் என்ற உணர்வுகள் வரப்படும் போது அதை அப்படியே விட்டு விட்டால் அந்த உள் உணர்வைக் கூட நாம் அறிய முடியாதபடி தடைப்படுத்திவிடும்.

அதற்குத்தான் அந்தந்த சந்தர்ப்பங்களில் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுவதற்கு இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

“தென்னாட்டில் தோன்றிய ஞானிகளின் உணர்வுகளை” நாம் உலகம் முழுவதற்கும் கொண்டு சென்று பரப்ப வேண்டும்

ஒரு சமயம் குருநாதர் எம்மை ஒரு மலை மீது போகச் சொன்னார்.
1.அது அகஸ்தியன் அன்று இருந்த இடம்… அவன் நீர் சக்தியைத் தனக்குள் பெற்றவன்.
2.அவன் பாதம் பட்ட இடங்களில் எல்லாம் மேகங்களைக் குவிக்கின்றது உச்சியிலே தண்ணீர் உருவாகின்றது.

ஆனால் மலைக்குக் கீழே தண்ணீர் இல்லை. மேலே உருவாகின்றது… அங்கே தண்ணீர் உருவாகி ஒரு பக்கம் போகிறது. ஆனால் அடிவாரத்தில் தண்ணீர் இல்லை.

அதே சமயத்தில் ஒரு இடத்திலே குருநாதர் என்னை உட்காரும்படி சொல்கின்றார். அந்த இடத்தில் அமர்ந்து சங்கடமாக வெறுப்பாகப் பேசச் சொல்கிறார்.

அவன் இப்படிச் செய்கின்றான் இவன் மோசம் செய்கின்றான் இவன் இப்படித் தவறு செய்கின்றான் நீ தீமையான நிலைகளை நினைத்துச் சொல்லிக் கொண்டிரு…! என்று சொன்னார்.

சொல்ல ஆரம்பித்ததும் அந்த இடத்திலே மேகங்கள் குவிவது அப்படியே விலகிச் செல்கின்றது… அங்கிருக்கும் ஈரப்பசையே காணாமல் போய் விடுகிறது.

1.மனிதனுடைய உணர்வுகளால் மேகக் கூட்டங்கள் எப்படி விலகுகிறது…? மேகத்தை எவ்வாறு கலைக்கின்றது…?
2.மனிதரின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

காடு மேடு எல்லாம் அலைந்து திரிந்து உண்மைகளை அறிந்துணர்ந்து அதை நீங்களும் அறிய வேண்டும் என்று சொல்கின்றோம். காரணம் விஞ்ஞான உலகம் கடும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

கூடுமான வரையிலும்
1.நீங்கள் வாழும் ஒவ்வொரு ஊரிலும் அந்த அருள் உணர்வுகள் படர வேண்டும்
2.மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்.
3.நீங்கள் எடுத்துக்காட்டாக வளர வேண்டும்.

அத்தகைய உணர்வுகள் விளைந்து ஒவ்வொருவருமே அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்ப நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

உங்கள் உடலும் நன்றாக இருக்கும்… குடும்பமும் நன்றாக இருக்கும்… தொழிலும் நன்றாக இருக்கும்.

1.நாம் வாழும் தெரு ஊர் நாடு எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
2.தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும்
3.தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய சக்தியாக
4.உயர்ந்த பண்புகளுடன் வளர வேண்டும் என்று நாம் கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் அதற்காக வேண்டித் தென் இந்தியா வட இந்தியா மற்ற நாடு என்று பிரித்து விடக்கூடாது. நம் நாட்டு மக்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று படிப்படியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.

உலகத்தையே காக்க முடியும். தமிழ்நாடு தான் உலகைக் காக்கப் போகின்றது.
1.இங்கே தருமத்திற்கும் நியாயத்திற்கும் செயல்பட்ட பூமி இது… அதர்ம வழிகளில் அதிகமாக இங்கே செயல்படவில்லை.
2.அதர்ம வழிகள் அதிகமாக இல்லாததால் கூடுமானவரை இங்கே மற்றவரைப் பாதுகாக்க கூடிய நிலைகள் வளர்கின்றது.

ஒருவர் திட்டினாலும் கூட இரக்கம் ஈகை என்ற பண்புகள் இங்கே அதிகமாக உண்டு. மற்ற இடங்களில் இரக்கம் என்ற நிலை இல்லை.

ஆகவே…
1.தென்னாட்டில் தோன்றிய ஞானிகளின் உணர்வுகளை
2.நாம் உலகம் முழுவதற்கும் கொண்டு சென்று பரப்ப வேண்டும்.
3.நம் உடலிலே முதலிலே பெருக்கினால் தான் நம்முடைய உணர்வுகள் இங்கே பரவும்.

நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலைகளை நாம் செயல்படுத்த வேண்டும். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

கஷ்டம் என்பதைத் தூக்கி எறிந்து விட்டு அருள் ஒளி எனக்குள் படர வேண்டும் ஊர் நன்றாக இருக்க வேண்டும் வீடு நன்றாக இருக்க வேண்டும் என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்தால் “அருள் உணர்வுகளை நல்ல முறையில் பெருக்க முடியும்…”

1.இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்… இந்த வழியை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்
2.ஒவ்வொருவரும் உண்மையின் உணர்வுகளை உணர்ந்து அந்த அருள் ஞானத்தைப் பெருக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

“ஓம்காரத்தின்” சூட்சம இரகசியம்

1.”சூட்சும இரகசியங்கள்” செயல்படுகின்ற காரியத்தன்மைகள் அகம் புறம் இரு நிலைகளிலும்
2.நாவின் சூட்சமம்… ஒலி நாத செயலாகச் சிரசின் உச்சியில் நடிக்கின்ற (இயக்கம்) சிவ நடனம் காட்டுவதன் மறைபொருள் என்ன…?

அஷ்டமம் என்பது எட்டாம் இடத்தின் நிலை. எட்டு என்பதே பூரண சந்திரனைக் குறிக்கும். சந்திரன் வியாபகமாக “நீல வண்ண ஒளித்தன்மை நிலைபெற்றிடும் வாழ்வு…”

இதையே இன்றைய காலகட்டத்தில் ஜோதிட விற்பனர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அஷ்டமத்தில் சனி என்றும்… செவ்வாய் என்றும்… சித்தன் காட்டிய பேருண்மைகளை வேறு பொருள் காட்டிவிட்டனரப்பா.

“சரீரத்தின் ஆதிக்க நிலை” – சூரிய சக்தியின் ஒளி பெறும் சந்திரன்… தன் சுயப்பிரகாச நிலையை அதனுள் உள்ளிட்டு (தனக்குள் எடுத்து) வெளிப்படுத்துதல் போல்… அனிமாது (அஷ்டமாசித்து) சித்துக்கள் கொண்டு உயர் நிலை வளர்ச்சி பெறுதல் என்பதில் கடைப்பிடிக்க வேண்டிய காரிய நிகழ்வுகளும் உண்டு.

அறிந்து தெளிந்திட… சிந்தனையை அதன் ஓட்டத்தைச் செலுத்திடத் தான் வேண்டும். பிரம்மத்தின் நின்று சித்து கிளைத்த விந்தையாம் “விந்தை அடக்கு…” என்பார் வேதாள மகரிஷி.

ஓர் கனியினைச் சுவைக்கின்றோம். சுவைத்து அந்தக் கனியின் சுவையின் பொருள் அறிகின்றோம். அந்தக் கனியின் சுவை உண்டான முறையை உணர்தல் என்பதே சூட்சுமம்.

கனிவு என்பது நாம் உரையாடும் வார்த்தைகளினால் வெளிப்போந்து வந்து… உள்ளத்தின் தன்மைகளை உணர்த்துகின்றோம்.
1.இந்நிலை உருவாகின்றதே… உள்ளத்தில் அங்கு இருக்கின்றது சூட்சமம்.
2.உயர் ஞான சக்தியை உணர்ந்து கொண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பக்குவங்கள் அதனில் அடங்கும்.

“விந்தையாம் விந்தை அடக்கு” என உரைத்ததில் பொருள் உண்டு. சித்துக்களின் செயல்பாடு ஒவ்வொரு நிலையைக் காட்டும்.

ஓசை என ஓர் கலை உண்டு.
1.ஓங்காரப் பொருள் காட்டும் அதன் தத்துவம் “நாவின் அடி சூட்சுமம்…” இந்நிலை பிரம்மம் என உரைப்பர்.
2.அதனைச் செயல்படுத்துகின்ற சக்தியானது கண்டத்தின் சூட்சுமத்தில் உள்ளது.
3.நாபிக் கமலத்திலிருந்து மேல் எழுகின்ற பிரம்ம இலய நாதம்
4.கண்டத்தின் சக்தியைத் தூண்டி நாவின் பிரம்ம நிலையில் வியாபித்து
5.ஆக்ஞா சக்கரம் என்ற அறுகோணக் கருவறை நெற்றியினுள் எண்ண சிவம் நடிக்கும் (இயக்கும்).
(6. ஓ…ம்.. என்று நாதத்தை நாம் எழுப்பினால் இதனை (Sl.No.1-5) முழுமையாக உணரலாம்)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

செல்ஃபோன் எல்லோருமே வைத்திருக்கின்றோம். காந்தப் புலனால் இயக்கும் செல்ஃபோன்… அதற்குள் தொடர்பு என்ன இருக்கின்றது…?

வயர் (WIRE CONNECTION) இல்லை…
1.ஆனால் காந்தப் புலனால் கவரப்பட்ட உணர்வுகள் அது ஈர்க்கும் சக்தி… விஞ்ஞான அறிவால் வைத்த நிலைகள்
2.அதனுடன் தொடர்பு கொண்டு எங்கிருந்தாலும் நாம் இயக்க முடிகின்றது.
3.குறித்த எல்லைகள் வரையும் கொண்டு செல்ல முடிகின்றது.

வெகு தொலைவில் இருந்தால் சேட்டிலைட் மூலமாக அமெரிக்கா மற்ற ஏனைய நாடுகளுக்கும் தொடர்பு கொள்ள முடிகின்றது… பேசவும் முடிகின்றது… பார்க்கவும் முடிகின்றது.

இப்படி எப்போது வேண்டும் என்றாலும்… எங்கே வேண்டுமானாலும் நம்பரைத் தெரிந்து அழுத்தினால் உடனடியாக மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள முடிகின்றது. அவர்களுக்கும் :இன்னார் தான் பேசுகிறார்…” என்று அந்த நம்பரை வைத்து அறிய முடிகிறது.
1.அடுத்து அவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றால் அதை அணைத்துக் கொள்ளவும் (SWITCH OFF)
2.தொடர்பே வேண்டாம் (BLOCK) என்று நிறுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

இதைப் போன்று தான் சிலருடைய உணர்வுகளை உங்களுக்குள் அது இயக்காமல் தடைப்படுத்த… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

இது எல்லாம் உணர்வின் இயக்கங்கள் தான்…!

உங்களுக்குள் பதிவான தீமையான உணர்வுகளைத் தடைப்படுத்த “மிக மிகச் சக்தி வாய்ந்த நிலையைத் தான்…” இந்தத் தியானத்தின் மூலம் கொடுப்பது. ஆகவே இதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துப்பாக்கியைக் கையிலே கொடுத்துப் “புலி வருகிறது… சுட்டு விடுங்கள்…!” என்று சொன்னால்
1.புலி வருகிறது… புலி வருகிறது… என்று சொல்லிக் கொண்டு
2.நீங்கள் சுடாமல் இருந்தால் என்ன ஆகும்…? புலி தாக்கத்தான் செய்யும்…!

அது உங்களைத் தாக்காது பாதுகாப்பதற்குத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம் “அதை நீங்கள் பயன்படுத்தும் முறைகளில் தான் இருக்கின்றது…” (ஞானகுரு)

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஆசையின் உணர்வுகள் எங்கே அழைத்துச் செல்கின்றது…?

1.நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் உடனே வேதனை வருகின்றது.
2.அந்த வேதனை வந்த பின் சிந்தனை தவறினால் உடனே கோபம் வருகிறது.
3.கோபம் வந்தபின் அதைக் காட்டிலும் வெறுப்பான செயல்களைச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக்கூடிய செயல்கள்… நாம் செயல்படுத்தவில்லை. நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டுத் தான் அவ்வாறெல்லாம் இயக்குகின்றது.

ஆனால் அதை எல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது. அதை நாம் பயன்படுத்த வேண்டுமா இல்லையா…!

கருணைக்கிழங்கில் இருக்கக்கூடிய விஷத்தை வேக வைத்துப் புளியைக் கரைத்துவிட்டு… காரம் உப்பு என்று பல சுவையான சரக்குகளைப் போட்டு ருசியாக மாற்றுகின்றோம்.

இதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்
2.இல்லையென்றால் மனிதனாகப் பிறந்தும் பயன் இல்லாது தேய்பிறையாகப் போய்
3.இன்று மனிதன்… நாளைக்கு மனிதன் அல்லாத மற்ற உயிரினங்களாக உயிர் உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் தப்புவதற்குத் தான் மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகள் கிடைக்க வேண்டும் என்று பதிவு செய்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

யாம் சொன்னதைப் பயன்படுத்தும் போது “தக்க சமயத்தில்” உங்களுக்கு அந்தத் தீமையை நீக்கக்கூடிய உபாயங்களும் உயர்ந்த ஞானங்களும் உதயமாகும். அந்த ஞானத்தை வளர்த்தால் தீமை புகாது தடுக்கும் அந்தச் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

சாமி தீர்ப்பார் சாமியார் தீர்ப்பார் என்ற எண்ணத்திற்கு மாறாக “யாம் சொன்ன முறைகளைக் கடைப்பிடித்தாலே…”
1.உங்களுக்குள் இருக்கும் சக்திகளை நீங்கள் பயன்படுத்தித் தீமைகள் புகாது தடுத்து
2.உங்களையும் காத்து உங்கள் குடும்பத்தையும் காத்து அனைவரையும் காக்கும் சக்தியாக
3.பண்பை வளர்த்து அன்பை வளர்த்து மற்றவர்களுக்கும் பண்பினை ஊட்டி
4.நீங்கள் இடும் மூச்சுலைகள் காற்றிலே படர்ந்து தீமைகளை அகற்றும் சக்தியாக வரும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உயிரான ஈசனை மதித்து அவனால் அமைக்கப்பட்ட உடலை ஆலயமாக மதித்து நடத்தல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் நல்லதைத் தான் எண்ணுகின்றோம். அதன் படி நடக்கவில்லை என்றால் ஒவ்வொரு செயல்களிலும் வேதனை கலந்தே வருகின்றது. ஆனாலும்…
1.”வேதனைப்படுகிறோம்… கஷ்டப்படுகிறோம்…” என்ற எண்ணங்கள் இப்படி வரும் பொழுதுதான்
2.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சக்தியும் உண்டு.

இருப்பினும் வேதனை வெறுப்பு சோர்வு என்ற உணர்வு அதிகரித்து விட்டால்… எத்தகைய நல்ல செயல்களாக நாம் செயல்படுத்திக் கொண்டிருந்தாலும் அதைச் செயல்படுத்த முடியாதபடி ஒரு சோர்வு வந்து விடுகிறது.

சோர்வடைய… சோர்வடைய… நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் சோர்வடையத் தொடங்குகிறது. சோர்வால் மீண்டும் வேதனை வருகிறது.
1.இப்படி வேதனைகளை நாம் அடுக்கடுக்காக இந்த உடலிலே
2.இப்போது சேர்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் – எந்த நிலையில் யாராக இருந்தாலும் சரி… அப்படித்தான்.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் வேதனையிலிருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான எண்ணத்தில் தான் வளர்ச்சியாக வந்தது.

இப்படி எல்லா வகைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்த நாம்… வீட்டிலே ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். அந்த நேரத்தில் ஒரு கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்து விடுகிறது.

நேற்றுத் தான் வாங்கி வந்தேன்… அதற்குள் இப்படி உடைந்து விட்டதே…! என்று மன திருப்தி இல்லாதபடி வேதனைப்படுகின்றோம். அன்றாட வாழ்க்கையில் இப்படி நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனை அல்லது சோர்வு அல்லது சஞ்சலம் என்ற இந்த உணர்வுகளைத் தான் கவர நேர்கின்றது… அதைத்தான் சுவாசிக்கின்றோம்.

இப்படி நுகர நுகர… நம் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் உருவாகத் தொடங்கி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிந்து நாம் விடுபட வேண்டும்.
1.இருந்தாலும் இது எல்லாமே உடலின் இச்சைகள் கொண்டு வருவது தான்.
2.ஆனாலும் இந்த உடல் வேண்டும்
3.இந்த உடல் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நம்மை அறியாது வரும் தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதாவது
1.பிற உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அது இயக்காதபடி
2.உடலுக்குள் அது அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் மூக்கு வழி நுகர்ந்தது (சுவாசித்தது) உயிரிலே பட்டுத்தான் அந்தந்த அறிவின் இயக்கமாக இருக்கின்றது. ஆகவே புருவ மத்தியில் (உயிரில்) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து இந்த வலுவைக் கூட்டி தீமையான உணர்வுகள் புகாதபடி தடுத்தல் வேண்டும்.

பின் கண்களை மூடி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று “ஒரு நொடிக்குள் கண்ணின் நினைவை உள்ளே செலுத்தி விட வேண்டும்…”

இப்படி ஒரு பழக்கம் வந்து விட்டால் உடலுக்குள் தீமை செய்யும் அணுக்கள் உருவாகாதபடி தடுத்துவிடலாம். இதற்கு முன்னாடி பதிவான உணர்வுகள் விளைந்தது… உடலிலிருந்து மீண்டும் அந்த நினைவுகள் வந்தாலும்… அதையும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆக… இந்த உடலுக்குப் பின் நாம் கொண்டு செல்வது எது…?

செல்வமோ சொத்தோ எல்லாம் இருந்தாலும் கடைசியில் நோயாகி விட்டால் அதை அனுபவிக்க முடியாத நிலை தான் வருகின்றது. முதலிலே சொன்னபடி வேதனைகள் அதிகரிக்கும் சந்தர்ப்பமாகத் தான் ஆகிவிடுகின்றது.

அதைப் போன்ற நிலையிலிருந்து தப்புவதற்கு ஒவ்வொரு நொடிகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த ஆத்ம சுத்தியைக் கையாளுங்கள்.
1.தீமைகளை நீக்குங்கள்
2.அருளைப் பெருக்குங்கள்
3.இருளை அகற்றலாம்
4.அமைதியான வாழ்க்கை வாழலாம்
5.சிந்தித்துச் செயல்பட முடியும்
6.சிந்தனையுடன் வாழ்க்கை நடத்த முடியும்.

இதை எல்லாம் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

“உயிரான ஈசனுடன் ஒன்றி” அந்த ஈசனின் உணர்வை நாம் பெருக்குதல் வேண்டும்

உலகெங்கிலும் கடும் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா போன்ற பல நாடுகளில் “சூறாவளிகள்” அதிகமாக உருவாகின்றது. பாதுகாப்பிற்காக லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து… ஊரைக் கடந்தே செல்கிறார்கள். எத்தனையோ நகரங்களில்… மக்கள் வாழும் இடங்களை அழித்து விடுகின்றது.

ஆக சூறாவளி எங்கிருந்து வருகின்றது…?

விஞ்ஞான அறிவால் அணு குண்டுகள் ஹைட்ரஜன் குண்டுகள் செய்யும் போது
1.அதில் கசிவான உணர்வுகளைச் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது
2.சூரியன் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கும் அதனுடைய உணர்வுகளுக்கும் எதிர்மறையாகும் பொழுது சூறாவளி உருவாகின்றது.
3.இந்த வீரியத் தன்மைகள் கட்டிடங்களுக்குள் ஊடுருவுகின்றது.
4.எவ்வளவு பெரிய காங்கிரீட் ஆக இருந்தாலும் சுழற்றி வளைத்து நொறுக்கி விடுகின்றது.

இப்படிப்பட்ட உலக நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பூமிக்குள் இத்தகைய குழம்புகள் அதிகமாகி எங்கே மொத்தமாகச் சேருகின்றதோ அங்கே திடீரென்று இந்த ஆவிகள் வெளியே கிளம்பி நிலநடுக்கமாகிக் கட்டிடங்களையும் மற்றவைகளையும் நொறுக்குகின்றது.

நாம் வாழும் பகுதிகளில் மிகக் குறைவு தான். வட இந்தியாவில் கூட அதிகமாக உண்டு. காரணம்
1.நம் நாட்டில் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று
2.தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் வாழ்ந்த நாட்டில் கூடுமானவரையில் உயர்ந்த சக்திகள் பரவி உள்ளது.

பாருங்கள்…! தமிழ்நாட்டிலே பொதுவாகச் சேதங்கள் அதிகமாக ஆவதில்லை. அருள் மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே இருப்பதால் ஓரளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றது.
1.மீண்டும் அந்த மகரிஷிகளின் அருள் மணங்களை நாம் வலுவாகப் பெருக்கி
2.தமிழ்நாட்டையும் காத்து உலக நிலையை காப்பதற்காக வேண்டி நாம் தியானிக்க வேண்டும்.

நான் சொல்வது சாதாரணமானதல்ல…!

நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து இங்கே பரப்பினோம் என்றால் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கின்றது.

பூமிக்குள்ளே எந்தெந்த இடங்களில் குழம்புகள் அதிகமாகின்றதோ அந்த இடத்தில் வெடிக்கின்றது. ஒரு செகண்டிலே மேலே இருப்பது கீழேயும் கீழே இருப்பது மேலேயும் மாறி எல்லாமே குலுங்கி விடுகின்றது.

அணு உலைகள் எங்கெங்கெல்லாம் உருவாக்கி வைத்துள்ளார்களோ அங்கெல்லாம் நிலநடுக்கம் அதிகமாக உண்டு. இங்கேயும் அணு உலைகளை வைத்துள்ளார்கள்.

நாம் எல்லாம் சேர்ந்து பிரார்த்தனை செய்து நிலநடுக்கம் இங்கே வராதபடி பாதுகாக்க வேண்டும்.

அணு உலைகளை என்று உருவாக்க முற்பட்டார்களோ சூரியனால் அந்தக் கசிவுகள் கவரப்படுகின்றது. மின்னல்கள் வரும் போது ஊடுருவுகின்றது பூமிக்குள் நடு மையம் புகுந்த பின் எந்த இடத்தில் அதிகமாகின்றதோ குழம்பாக மாறுகின்றது… ஆவிகள் உருவாகி வெளிப்படுகின்றது… வெடிக்கின்றது.

மேலே இருப்பது தாங்காது சிறிது கீழே இறங்கி விடுகின்றது. இந்த மாதிரி நிலைகள் இருப்பதால்0 “இந்த உலகில் நாம் எப்படி வாழ வேண்டும்…?” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உடலுக்குப் பின் என்ன…? பிறவியில்லா நிலை அடைய வேண்டும்…! என்று நாம் தெரிந்து கொண்டோம்.

1.எவ்வளவுதான் இந்த உடலை அழகுபடுத்திப் பாதுகாக்க முற்பட்டாலும் கடைசிலே மண்ணிலே தான் இதை விட்டுச் செல்ல வேண்டி வருகின்றது
2.உயிரான ஈசன் இங்கே இருக்கும் வரை தான் எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்… நன்றாக இருக்கின்றோம்.
3.ஈசன் சென்று விட்டால் சிவம் சவமாகி விடுகின்றது.

உயிரால் தான் உடலாக்குகின்றது சிவம். ஈசன் போய்விட்டால் சவமாகி விடுகிறது. பின் அதற்கு ஏன் நாம் இவ்வளவு பாடுபட வேண்டும்…?

1.உயிரான ஈசனுடன் ஒன்றி அந்த ஈசனின் உணர்வை நாம் பெருக்குதல் வேண்டும்.
2.ஆகவே அந்த அருள் சக்தி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்வோம்… அதை வலுப்படுத்துவோம் பேரருள் பேரொளியாக நாம் மாறுவோம்.

கீழ் நோக்கியது – புவி ஈர்ப்பு நிலை… மேல் நோக்கியது – தெய்வீக நிலை

இயற்கையின் படைப்பில்… ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் உலகோதய நடைமுறை நிகழ்த்த பெரும் காரியங்கள் வினைக்கீடாய் (புவி ஈர்ப்பில் சுழலும் நிலை) வினைக்கு ஈடான செயல் கொள்கின்றான்.

புவி ஈர்ப்பு நிலை
1.சரீரமும்…
2.மூச்சு – ஈர்த்திடும் தன்மையாக மனிதனுக்குக் கீழ்நோக்கிப் பாய்தல்
3.வாய் – உண்டிடும் உண்டி… அருந்திடும் நீர்… சரீர கதியில் கீழ்நோக்கிப் பாய்தல்
4.அதுவே ஜீவநோத்பவம் பெற்ற பின்பு மலவாய் வழி கீழ்நோக்கிச் செல்கின்றது
5.சிறுநீர் வெளியேறும் வழியும் அத்தகையதே.

தெய்வீக நிலை
பூமியின் ஈர்ப்பில் செயல்படும் காரியங்கள் எதுவாக இருந்தாலும்
1.ஒளி நெறியாம் உயர்வெண்ண தியானத்தின் வலுவாகச் செயல்படும் காலத்தே
2. மேல் நோக்கிய சுவாசம் கொண்டு மற்ற புற காரிய செயல் நிகழ்வுகள் உயர்வெண்ண உந்துதல்
3.அதுவே தெய்வீக நிலையாகத் தொழில்படும்.

இதையே வேதாள மகரிஷி அலகினால் உணவைக் காட்டிடும் கோழி என்பார். குஞ்சுகளைப் பேணுகின்ற கோழியானது உணவின் தானியங்கள் இருக்கின்ற இடமாகக் கண்டு… தனது அலகினால் தானியத்தைக் கொத்திப் பேணுகின்ற செயலாக… தன் குஞ்சுகளுக்கும் அந்த ஆகாரத்தைப் பெற்றிடும் வழி காட்டுவதைப் போல்…
1.நெறிப்பயிர் ஞான உணவு எடுத்தல் – உயிராத்மா சக்தி பெற்றிடும் செயலில்
2.சரீர உயிரணுக்கள் அனைத்தும் பெற்றுக் கொண்டிடும் – போஜனம் (உணவு கொடுக்கும் நிலை) என்று பேணுதல்.

இந்நிலை பெறுகின்றவர்… நெறிப்பயிர் விளைவாக்கும் “கிழார்” என்றதில் பெற்றுக் கொண்டிட்டதின் முழுமை விளங்கும்.

எண்ணம் கொண்டே மாமகரிஷிகள் காட்டிடும் சூட்சும உணவு பெற்றுக் கொண்டிடும் நியதியில்… சுவாசக் காற்று என்பதின் தொடர்பு… “தூங்காமல் தூங்கி அரிதுயில்” எனும் அறிவியல் தத்துவமாக விளக்குவது எது…?

பிராண வாயு சுவாசமாக உள் நுழைவதும் கரியமில வாயு வெளியேறிடும் செயலும்…
1.இச்சூட்சுமத்தில் பளுவாக இயங்கிடும் இதய கேந்திரங்கள் இலகுவாக…
2.உள் நுழைந்திடும் சுவாசம் குறைவு கொண்டு
3.வெளியேற்றிடும் கரியமில வாயு குறைவு கொண்டு
4.மூப்பு அற்ற நிலையைக் காட்டி
5.அரிதுயில் அழகன் எனும் மால்… (“திருமால்”) எனும் தெய்வ வடிவு தாங்கிடும் பேறு பெறுகின்றான்.

“உயிராத்ம சக்தியை இணைத்துக் கொண்டிடு…!” என உரைப்பதெல்லாம் வேதாள மகரிஷியின் கூற்றாக “இணைப்பறவையின் உறும் (பொருந்தும்) கருத்து” என்பார்.

அதாவது… மகரிஷிகள் உரைத்திடும் இத்தகைய மறைபொருள் தன்மையில் “அநேக விளக்கங்கள்” உண்டு.

இரு பறவைகள் இருந்ததாம். ஆண் பெண் என்ற அவைகள்… கருத்து வேற்றுநிலை பெற்றதாம். உறும் கருத்து வேறுபடின் – மனத்தின் பிரிவு கொண்டதாம்.

இருந்தாலும்… எந்த நிலை ஆயினும் சக்தியாகிய அந்தப் பெண் பறவை… சிவத்தின் நினைவே பிரிவுறா நிலை நினைவால் கொண்டு தான் இருக்கும்.

இறை தேடி இயங்குகின்ற அவைகளின் செயலில்
1.ஒன்றினில் ஒன்றாக மனத்தின் பேதம் நீக்கிட சிவத்துவ நிலை கண்டது தான் உயிராத்ம சக்தியையே பறவைகளாகக் காட்டி
2.உலகோதய நாட்டம் காட்டிடுவதை மனத்தின் பேதம் என்றும்
3.இறை தேடும் செயலுக்கு இணைகின்ற சூட்சுமம்… ஒன்று கலந்திடும் தன்மையாக
4.பேரருள் செல்வத்தைப் பெற்று உயரும் வழிதனை உரைத்திட்ட செயலே அது.

சூட்சுமப் பொருள் காட்டி சித்தின் தொடர்புக்கு… எண்ணம் சொல் செயல் மூன்றும் அனுபவ ஞான விசேஷ குணத்தன்மையாகப் பெற்றிட… அதற்குண்டான பக்குவத்தைக் கனிந்திடச் செய்ய… எல்லோருக்கும் வேதாள மகரிஷி ஆசி வழங்குகின்றார்.

தன்னிடத்தில் ஞானத்தை உரைத்திடும் குழந்தை மற்றவரிடம் அதே ஞான வழியாக நடக்கின்றதா…? அன்பு கொண்டு செல்கின்றதா…? மாயையின் வசம் ஆட்பட்டு… கோபத்தின் குணமாகப் பெற்றுக் கொண்ட சக்திகளை விரயம் செய்கின்றதா…? என்று ஞானிகள் பரிசோதிப்பார்கள்

முகம் காட்டிடும் கண்ணாடி… தான் கொண்டிடும் உயர்வெண்ணத்தைக் காட்டுவது எப்படி…?

1.சாந்தம் என்ற குணத்தால் அமைவு பெற ஆத்ம ஞானி கொண்ட உயர்வைக் காட்டுவது “கண்கள்…”
2.சுவாசத்தின் செயல் சிந்தையைச் சீர்படுத்த உரைப்பது “கனிவு…”
3.கேட்கின்ற ஒலிகள் நாராசமாயினும் ஞானி அதனை சங்கீதமாகக் கொள்வான் “ஓங்காரமாக…”
4.இல்லத்தில் வீசுகின்ற பாசம் மெய் ஞானிக்கு அன்பின் வசமாக “அகில உலகும் பின் தொடரும்…” ஆத்ம பதிவை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.
5.கணவன் மனைவி தொடங்கி… தன்னைச் சார்ந்தவர் தொடங்கி எல்லோரையும் அரவணைத்திடும் அன்பு
6.அகண்ட வியாபகமாய் (எங்கும் நிறைந்திருக்கும்) பேரருள் செல்வத்தைக் கொணரும்.
7.அத்தகைய ஞானவான்… பிரம்மத்தை அறிந்திடும் பிராமணன் ஆகின்றான்.

பக்குவங்களை எல்லாம் மகரிஷிகள் வழிகாட்டிட… குழந்தை தவழ்ந்து தளிர் நடை பயின்று… ஓடியாடி வளர்ந்து… இசைவாக எண்ணம் கொண்டு… உறுதியின் நிலை நிற்றலை…
1.ஞானச் செல்வங்கள் குருதேவருடன் மனம் ஒன்றி வாழ்ந்திடும் அந்த வளர்ப்பு
2.சாஸ்வதம் கொண்டு அனைவருக்கும் அது வழி காட்டும்.
3.இந்தக் குறுகிய கலியில் பிறவியின் தளை விடுத்துப் பேரருள் செல்வத்தில் கலந்திடவே “அனைவரையும் அழைக்கின்றோம்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எல்லோரையும் தியானிக்கச் சொல்கிறோம். இது ஒன்றும் புதிது அல்ல… சாஸ்திரங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டது தான்…!

1.ஆனால் துருவ நட்சத்திரம் என்றால் என்ன…? என்று கேட்கின்றார்கள் அந்த அளவுக்குத் தான் இருக்கின்றது பிழைப்பு…
2.துருவ நட்சத்திரம் என்றால்… “அது என்ன…? புதிதாகச் சொல்கிறீர்கள்…!” என்று கேட்கின்றார்கள்.

இராமாயணத்தில் இருக்கின்றது… மற்ற எல்லாவற்றிலும் இருக்கின்றது. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் அறுத்துத் துண்டாக்கி விட்டார்கள்… நாம் புரிந்து கொள்ளாதபடி ஆக்கிவிட்டார்கள்.

காலையில் ஒரு அரை மணி நேரமாவது வடகிழக்கிலே விண்ணிலே நினைவைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.
1.வடகிழக்கில் தான் விநாயகரை வைத்திருப்பார்கள்…
2.சிவனுடைய நிலைகளும் சில இடங்களில் அப்படித்தான் அதுவும் வடக்கிழக்கில்தான் இருக்கும்.

வடகிழக்கைப் பார்த்து ஈஸ்வரா…! என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் ஏங்கி… அந்த உணர்வுகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்ப்பிக்க வேண்டும். சாஸ்திரப்படி இது உண்மை…!

உங்களுக்கெல்லாம் இதைப் பதிவாக்கி வைத்துவிட்டோம். நீங்கள் வடகிழக்கைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
1.எப்பொழுது வேண்டுமென்றாலும்… எந்தத் திசையை நோக்கினாலும்… காற்றிலிருந்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற முடியும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் இங்கே மிதந்து கொண்டிருக்கின்றது.

காரணம்… நீங்கள் எண்ணிய உடனே அந்தச் சக்தி கிடைப்பதற்குத் தான் இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

திட்டியவனை எண்ணியவுடன் எப்படி அவனுடைய நினைவுகள் உங்களுக்கு வருகின்றதோ அது போன்றுதான் என்னைச் சந்தித்து “யாம் சொன்ன முறைப்படி எண்ணுபவர்களுக்கெல்லாம்…”
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அவர்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் துன்பங்கள் துயரங்கள் அகல வேண்டும் என்றும்
3.நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் சாதாரண நிலையில் பிறரை எண்ணும் போது உங்களுக்கு எத்தனையோ துன்பங்கள் வருகின்றது. ஆனால் நான் பதிவு செய்யும் ஞானிகள் உணர்வுகள்… கஷ்டம் போக வேண்டும் என்று அந்த உணர்ச்சிகளை யாம் உந்தப்படும் பொழுது அதை நீங்கள் எண்ணினால் உங்களுக்கு அது கஷ்டத்தை நீக்கக்கூடிய சக்தியாக வருகின்றது.

நான் உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது… அதை விடுத்து விட்டு
1.என் பையன் இப்படி இருக்கின்றான்
2.என் தொழில் இப்படி இருக்கின்றது
3.என் குடும்பம் இப்படி இருக்கின்றது
4.கடன் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லையே
5.என் உடலில் ஏதாவது நோய் வந்து கொண்டே இருக்கின்றது என்று இப்படி எண்ணினால் அதைப் பெற முடியாது.

எப்படியும் அந்த உயர்ந்த சக்திகளை கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்று தான் தொடர்ந்து இதை நான் குரு இட்ட கட்டளைப்படி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

நான் ஆசைப்பட்டு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றேன். ஆனால் நீங்கள் ஆசைப்பட வேண்டுமா… இல்லையா…!

சாமி நன்றாகத் தான் சொல்கின்றார்…! என் கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்று அதன் மீது எண்ணங்களை வலுவாக்கி விட்டால் யாம் சொல்லும் நிலைகளை எண்ணவே வராது.

வேதனை… வேதனை… நோய்…! என்று தான் எண்ண முடியுமே தவிர “அதை நீக்கிப் பழக வேண்டும்…” எண்ணத்திற்கு அது விடுவதில்லை ஆக மொத்தம் தெய்வத்திடம் சென்று முறையிட்டு… என்னை “இப்படிச் சோதிக்கின்றாயே…!” என்று கேட்பது போன்று தான் எண்ணுகிறார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துன்பங்களிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா…? யாம் சொல்லும் முறைப்படி எண்ணுகின்றார்களா…!

ஆனால் எல்லாவற்றையும் பதிவாக்கிக் கொடுக்கின்றோம்.
1.கஷ்டமான நேரங்களில் தான் “இதை எடுக்க வேண்டும்…” என்று சொல்கின்றோம்
2.ஆனால் கஷ்டமான நேரங்களில் தான் இதை விட்டு விடுகின்றார்கள்…!

ஏனென்றால் குருநாதர் எனக்கு இப்படித்தான் அனுபவங்களைக் கொடுத்து மிக மிக உயர்ந்த சக்தியைப் பெறும்படி தகுதி ஏற்படுத்தினார். அதையே தான் உங்களுக்கும் செயல்படுத்துகிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாம் வாழும் இந்தச் 2000 சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் தான் வால் நட்சத்திரம் என்பது. அக்காலங்களில் இதைத் “தூம கேது…” என்றும் சொல்வார்கள்.

சூரியனால் இழுத்து வரப்படும் போது வேகத்தால் வான் வீதியில் மற்ற அணுக்களோடு மோதும் பொழுது “ஒளி வெள்ளமாக… நீளமாக…” அது தெரிகின்றது.

ஆனால் சூரியனுக்குப் போகும் பாதையில் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து விட்டால்… பூமி இழுத்துக் காற்றழுத்த மண்டலத்தில் மோதும் போது நெருப்பாக மாறி… நம் பூமிக்குள் விஷத்தன்மையாகப் பரவி விடுகின்றது… “சுத்திகரிக்கும் நிலை இல்லாது போய் விடுகின்றது…”

எந்தப் பிரதேசத்தில் இது அதிகமாகப் பரவுகின்றதோ
1.அந்த இடத்தில் வாழும் மக்களுக்கு அதிகமான நோய்கள் வரும்
2.தாவர இனங்களுக்கும் மாற்றங்கள் வரும்…
3.விஷத்தன்மை கொண்ட கிருமிகளை உருவாக்கும் சக்தியும் பரவும்.

அரசர்கள் ஆட்சி புரியும் காலத்தில் வால் நட்சத்திரம் (தூமகேது) தெரிந்தாலே அவர்கள் மத ஆச்சாரப்படி அங்கே உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்பட்டு… மனிதர்கள் சிந்தனை குறைந்து… அதனால் சாம்ராஜ்யத்தை ஆட்சி புரியும் நிலையை அரசன் இழந்து விடுகின்றான்… அல்லது அழிகின்றான்.

ஆகவே வால் நட்சத்திரம் எந்தப் பிரதேசத்தில் தென்படுகின்றதோ “அந்த அரசனுக்கு ஆகாது…!” என்று அக்காலங்களில் சொல்வார்கள்.

ஏனென்றால் இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.பிறர் உடலில் விளைந்த தீய உணர்வுகள் (வால் நட்சத்திரம் போல்) சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
2.இந்த பரமாத்மாவில் காற்று மண்டலத்தில் அலைகளாகப் பரவினாலும்
3.நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் ஊழ்வினை என்று வித்தாக நம் செல்களில் பதிவாக்கி விடுகின்றது.

வேதனைப்படும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் தான் “வேதனைப்படுகிறார்…” என்று அறியத் தெரிகின்றது. அதே போல் அதிர்வான செயல்களைக் கண்டு நுகர்ந்த பின் நமக்கு அச்சத்தை ஊட்டி விலகிச் செல்லும்படியும் செய்கிறது… அந்த உணர்வுக்கொப்ப.

உயிரிலே பட்டால் பயம் வருகிறது… வேதனை வருகின்றது. இதைப் போன்ற உணர்வுகளை நுகர்ந்தால் இரத்தத்தில் அது கலந்தால் இதே அணுக்களை உருவாக்கி விடுகின்றது. (அதாவது வால் நட்சத்திரத்தின் விஷத் தன்மைகள் பூமிக்குள் கவரப்பட்டால் அந்தந்த இடத்தில் விஷத்தன்மைகள் பரவுவது போல்).

அதைத் தடுத்து நாம் நல்லதாக மாற்றி அமைக்க வேண்டுமல்லவா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் செலுத்தி
1.எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அது படர வேண்டும்.
2.எங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் படர வேண்டும்
3.ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று
4.முந்தி இது போன்ற உணர்வுகளை எண்ணங்களைச் செலுத்தி விட்டால்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

இப்படிச் செய்யும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது… இரத்தத்தின் வழி உள்ளே செல்லாதபடி தடுக்கப்படுகிறது.

இப்படி அடிக்கடி நாம் தடுத்துப் பழகும் இந்த உணர்வுகள் தான்… சிறிது நேரம் இதை எடுத்துக் கொண்டால்
1.உள்ளுக்கே இது பிடிக்கவில்லை என்றால்… அதாவது அதன் மீது பற்று இல்லை என்றால் “உள்ளே இழுக்காது…”
2.ஒரு காந்தத்தை (MAGNET) வைக்கும் போது இடையிலே ஒரு காகிதத்தையோ அல்லது ஒரு அட்டையையோ கொடுத்துவிட்டால் அது எப்படி இரும்பை இழுக்காதபடி தடைப்படுத்துகின்றதோ அது போன்று
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இடைமறித்து உள்ளே செலுத்தி விட்டால்
4.அந்த வேதனைப்படும் உணர்வுகளை இழுக்காதபடி அனாதை ஆக்கி விடலாம்.

ஏனென்றால் நம் உடலில் ஏற்கனவே உருவான அல்லது புதிதாக உருவாகும் தீய அணுக்களுக்கு “ஆகாரம் செல்லாதபடி தடைப்படுத்தும் முறை தான் இது…” (மேலே உள்ள Sl No 2 – மிகவும் முக்கியமானது)

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதைச் செய்து பழகினாலே தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி அனாதையாக்கப்படுகின்றது. ஈர்க்கும் சக்தி இவ்வாறு இழக்கப்படும் போது பிடிப்பில் இல்லாத இந்த உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து மாற்றிவிடுகின்றது.

ஏனென்றால் இந்தப் பூமியின் பிடிப்பில் எது இல்லையோ அதை அனைத்துமே சூரியன் கவர்ந்து கொள்ளும். நம் ஆன்மா… ஜீவான்மா… உயிரான்மா… எல்லாமே தூய்மையாகிறது.
1.ஞானிகள் எல்லாம் இத்தகைய ஆற்றலைப் பெற்றவர்கள் தான்.
2.தீமை வராது தடுத்து அவருக்குள் விளைந்த உணர்வுகள் சொல்லாக வரும் பொழுது நாம் கேட்டால்
3.அந்த உணர்வுகள் நமக்கு நிச்சயம் நல்வழி காட்டும்
4.சிந்தித்து செயல்படும் தன்மையும்… தீமைகள் புகாது… நோய்கள் வராது… பாதுகாக்கும் தன்மைகளும் பெறுகின்றோம்.

பாவத்தைப் போக்கும் இடம் எது…?

கடையில் வேலை செய்கின்றார்கள். வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராது அங்கே ரோட்டிலே சம்பவங்கள் நடக்கிறது. அதாவது கடும் வேதனைப்படுகின்றனர். நம்மால் அல்ல…! வேறு யார் கூடேயோ சண்டை போடுகின்றார்கள். அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை நாம் நுகர்ந்து விடுகின்றோம்.

நுகர்ந்த பின் அதே உணர்வு ஓம் நமச்சிவாய என்று உடலில் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது. அந்த நேரத்தில் பயமும் அதிர்ச்சி வருகின்றது.
1.அந்த அதிர்வான உணர்வு வரப்படும் பொழுது கடையிலே இவன் (சண்டையிட்டதைப் பார்த்து நுகர்ந்தவன்) வேலை பார்க்கின்றான்
2.பயமான உணர்வுடன் வேலை செய்யும் போது சரியான முறையில் வேலை செய்யவில்லை.

முதலாளி பார்த்துக் கேட்கும் போது… “ரோட்டில் சண்டை போடுவதை நீ ஏன் பார்க்கின்றாய்…? அதைப் பார்த்து என் தொழிலை நீ கெடுக்கிறாயா…? உனக்கு இங்கே வேலை இல்லை போடா…!” என்று சொல்லி விடுகின்றார்.

இந்த உணர்வுகள் அதைச் சொன்னாலும் ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்…! வேலை செய்பவன் பயப்படும் போது துரத்தி விடுகிறார் முதலாளி. ஆனால் பிழைப்பு போய் விடுகின்றது.
1.இந்தப் பாவத்தைப் போக்குவதற்கு என்ன செய்வது…?
2.வேதனை வந்துவிடுகிறது… அந்த நேரம் இராமேஸ்வரம் போவீர்களா…?

ரோட்டிலே போகின்றோம். திடீரென்று அங்கே விபத்து நடக்கிறது. பார்த்ததும் பாவ நிலைகள் இங்கே வந்து விடுகின்றது. பதட்டம் ஆகின்றது. கடையிலே வந்து வேலை செய்ய முடியவில்லை. வீட்டிற்கு வந்தாலும் சமையல் செய்து சாப்பிட முடியவில்லை…!
1.பயமாக இருக்கின்றது.
2.அதற்காக வேண்டி இங்கிருந்து இராமேஸ்வரம் போவீர்களா…?

தப்பு செய்யவில்லை…! ஆனால் பாவ நிலைகளைப் பார்க்கின்றோம். அவன் வேதனைப்படுகிறான் என்று அந்தப் பாவ நிலையைக் கண்கள் உணர்த்துகின்றது உடல் முழுவதும் பரவச் செய்கிறது… அதனால் நடுக்கம் ஆகிறது.

அப்போது இராமேஸ்வரம் போய் விட்டு வருகின்றீர்களா…? யாராவது அப்படிப் போகின்றோமா…?

இங்கே சோற்றுக்கே வழியில்லை. அப்புறம் இராமேஸ்வரத்திற்குச் சென்று அத்தனை கிணற்றிலும் காசைக் கொடுத்துக் குளித்துவிட்டுச் சுற்றி வந்து முடிந்தால் பாவம் போய்விடுமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும்…? பாவத்தைப் போக்க வேண்டும் என்றால் அதைப் போக்கக்கூடிய சக்தி நம்மிடம் இருக்கின்றது.
1.அந்தச் சக்தியைத் தான் தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
2.உங்களுக்குள் அதைப் பதிவு செய்துவிட்டால் போதும்.

ஒரு விபத்தாகின்றது என்னால்
1.அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலே நினைவைக் கொண்டு சென்று
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
4.இதை வலுவாக்கிக் கொண்டால் அந்தப் பாவமான உணர்வுகளை இது மறைத்து விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இப்படிச் சுத்தம் செய்து விட்டோம் என்றால் போதும்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷியின் அருள் சக்தி விபத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா பெற வேண்டும்
1.அவர்களும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
2.அந்த ஆன்மாவுக்கு நல்ல மோட்சம் கிடைக்க வேண்டும். என்று நாம் இப்படி எண்ண வேண்டும்.

ஆனால் அடிபட்ட வேதனையால் வாடுகின்றார்கள் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திவிட்டு
1.அவர்களுக்கு இந்தச் சக்தி கிடைக்க வேண்டும்.
2.இனி ஒரு நல்ல நிலையை அவர் அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? ஆ…ஆ…! என்று பயத்தால் பதட்டமடைந்து விடுகின்றோம். அது பாவ நிலையாக உருவாகி விடுகின்றது.

ஆனால் உடனே நமக்குள் துடைக்கும் விதமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தூய்மைப்படுத்தி விட்டு விபத்தில் சிக்கியவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால்
1.“நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் உருவாக்குகின்றது…”
2.இதைப் போன்று நாம் நமக்குள் வரும் பொழுது தீமை வென்றிடும் உணர்வுகள் மன உறுதி கிடைக்கின்றது
3.அருள் ஒளி என்ற உணர்வினை நமக்குள் செலுத்தப்படும் பொழுது இருளை அகற்றுகின்றது.

இப்படி ஒவ்வொரு நேரத்திலும் துருவ நட்சத்திரத்த்தின் சக்தியை எடுத்து நமக்குள் நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாவத்தைப் போக்க இதுதான் சுலபமான வழி… ஞானிகள் காட்டியது…!

பூமியின் உயர் ஞான வித்துக்களைப் பேணிக் காத்திடும் வல்லமை கொண்டவர்கள் சப்தரிஷிகள்

ஒலி கொண்டு ஒளி பெற்று… ஒலி ஒளியாக ஆத்ம வலுக் கொண்டு… சீரிய சுடர்தல் எனும் நிலையாகத் தன்னை வளர்த்து… உயர்நிலை கொண்டிடும் ஒலி(ளி) ஜீவன்கள் ஒன்றாக மிளிர்ந்திடும் சூட்சும உலகே “சதாசிவ மண்டலம்…” (சப்தரிஷி மண்டலம்)
1.ஆதி சக்தியின் வளர்ப்பையே வளப்பாக்கும் செயல் கொண்டு
2.பூமியின் உயர் ஞான வித்துக்களைப் பேணிக் காத்திடும் வல்லமை கொண்டிட்டவர்கள் அவர்கள் தான்…!

அவர்களுடன் இணைந்து…
1.வளர்ப்பின் பக்குவத்தில் தன்னை வளர்த்திடும் உயர் ஞான எண்ணம் கொண்டிடும் ஜீவன்கள்
2.அந்த மகான்கள் அருள் எனும் ஒளி நெறி கண்டு… தாமும் அந்த நிலை பெற்றிடவே
3.பேரருள் பேரொளி கொண்டு சிவமாக… “தான் சமைத்து” சிவ சூரிய நிலை என்னும் உயிராத்ம உயர் ஒளி நிலை பெறுவர்.

இங்கே உபதேசிக்கும் நிலை கொண்டு மெய்ஞான முகிழ்விப்பாக சக்திகளை வளர்த்திடும் ஆத்மாக்கள்
1.அந்த மகான்களுடன் தொடர்பு கொண்டு
2.ஈஸ்வரர் நெறி நின்று வளர்வது கண் கூடு.

மதங்கள் எனும் போர்வை போர்த்திக் கொண்ட பற்பல தத்துவ விசாரங்களும்… “படைப்பின் படைப்பு” எனும் சூட்சுமத்தைக் கூறத்தான் செய்கின்றன.

இருந்தாலும்… தவ நெறியில் நிற்காத தன்மையினால் அதனைக் கொள்பவர் இன்றி… விட்டேத்தியான வாதங்கள் புரிந்து வேடமிடும் நிலையில்… உண்மையின் பொருள் உணர்ந்தார் இல்லை.

இறை சக்தியின் முன்பு உரையாடினார் என்றும்… உலகக் கோட்பாட்டின் மாய இருள் விலக்க உண்மையின் பொருள் கொணர்ந்தார் என்றும்… புர்க்க என அழைக்கப் பெறும் ஓர் வாகனத்தில் பயணம் செய்து ஒளி மண்டலம் கண்டு திரும்பினார் நபி…! என உரைக்கின்ற வேதம் அதனின் சூட்சுமப் பொருள் “இந்தத் தியானத்தின் வழி தான்” என அறிந்து கொண்டிட்டவர் யார்…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட விஷக் கதிரியக்கங்கள் சூரியனுக்குள்ளும் சேர்ந்து அங்கேயும் இப்போது கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இருந்தாலும் இரு மடங்கு அழுத்தத்தின் தன்மை சூரியனுக்குள் அதிகமாகப் பாய்ச்சப்பட்டுப் பிரபஞ்சத்தில் அத்தகைய நிலைகள் பரவுமேயானால் “விஞ்ஞான அறிவால் வந்த இவை அனைத்தும் சூனியமாகிவிடும்…!”

இப்பொழுது இரு மடங்கு மின்சாரம் வயர்களில் வந்தால் அதனுடன் சேர்க்கப்பட்ட பல்புகள் அனைத்தும் ஃப்யூஸ் (FUSE) ஆவது போன்று இந்த உணர்வுகள் அதிகமானால்….
1.மனிதனுடைய சிந்தனைகளும் மிருகங்களுடைய உணர்வுகளும் மாறுபட்டு
2.”வெறி பிடித்தது…” போன்று உலகம் முழுவதும் பரவும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து நாம் மீள்வதற்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

கஷ்டமோ நஷ்டமோ மற்ற எது வந்தாலும் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் உடலில் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி நாளும் வளர்த்துக் கொண்டே வந்தால் மன உறுதி கிடைக்கும். நம்முடைய காரியங்களை எல்லாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற அந்த உயர்ந்த ஞானம் கிடைக்கும்.

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சொல்வார்கள்…
1.பிறருடைய கஷ்ட நஷ்டங்களை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டே வந்தால்
2.அந்தக் கணக்கின் பிரகாரம் அவருக்கு வந்த கஷ்டமெல்லாம் நமக்குள் வந்து நம்மையும் அது பாதிக்கும்.
3.அவர் உடலுக்குள் வந்த அவர் நோய்களும் நமக்கும் வர நேருகிறது.

ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று “இந்தக் கணக்கைக் கூட்டினால்” இந்த உடலில் சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கும்.

ஆக… அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க… மன உறுதி கொண்டு இந்த வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும்… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடையவும் இது உதவும்.

அதே சமயத்தில்
1.நீங்கள் எடுத்துக் கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அனைத்தும்
2.உங்கள் மூச்சலைகள் மூலம் இந்த உலகம் முழுவதும் பரவி
3.நச்சுத்தன்மைகளைப் போக்கக்கூடிய சக்தியாகப் படரும்.

அகஸ்தியன் அன்று தன்னுடைய பார்வையில் இந்தப் பூமி குடை சாயும் நிலையில் இருந்ததைத் திருப்பி… வெப்பத்தின் தன்மை கூடச் செய்து “துருவத்தில் உறைந்த பனிகளைக் கடலாக மாற்றி…” பூமியைக் காக்கும் சக்தியாக அன்று அவன் செயல்படுத்தினான்.

அகஸ்தியனுக்கு முந்திய காலத்தில் இருந்த கடல் நிலைகள் வேறு அகஸ்தியனுக்குப் பின் வந்த கடல் நிலைகள் வேறு.

மனிதன் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் இன்று அதிகமாக… அதிகமாக… நீர் நிலைகள் பெருகி நிலங்கள் குறைந்து கடல் நீர் பெருக்கமாகி… ஊரை அழிக்கும் நிலையாக வருகின்றது.

துருவப் பகுதியில் உள்ள உறைபனிகள் அனைத்தும் உருக உருக கடல்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. இது மட்டுமல்ல…!

பூமிக்குள் வெப்பத்தின் தணல் அதிகமாகும் பொழுது பூகம்பங்களும் எரிமலைகளும் அதிகமாகி உள்ளே கொதிகலன்கள் அதிகமாகி “எந்த நேரத்திலும்…” இந்தப் பூமி சிதையும் நிலைகள் இருக்கின்றது. நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களிலும் இதே நிலைகள் ஆகி கொண்டிருக்கின்றது.

ஒரு கோள் சிதைந்தாலே போதும்…! அதனுடைய விகிதாச்சாரம் மனிதனுடைய நிலைகள் அது கிடைக்காது போனால்
1.மனிதனும் மிருகமாகி விடுகின்றான்… விஞ்ஞானமும் அழிந்து விடுகின்றது…
2.இருளான உணர்வுகளே உலகெங்கும் பரவும் சந்தர்ப்பங்கள் வருகின்றது… இந்த விஞ்ஞானம் பயனற்றதாக ஆகிவிடும்.
3.இன்று செயல்படுத்தும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் பூராமே பாழாகி அதனால் இயங்கும் சாதனங்கள் செயலிழந்து அனைத்தும் திசை திருப்பப்பட்டு
4.“அடுத்து விஞ்ஞான அறிவால் எதுவுமே செயல்படுத்த முடியாதபடி ஆகப் போகின்றது…”.

ஆனால் மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் கவர்ந்து கொண்டால் இந்த உலகைக் காக்கலாம்… உங்களையும் காக்கலாம்… பிறவி இல்லா நிலையும் அடையலாம்.

இதைப் பெறுவதற்கும் செயல்படுத்துவதற்கும் உங்களுக்கு “மன உறுதி தேவை…!”

ஆகவே… ஏதோ என்று இல்லாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வாழும் இடத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அதிகமாகப் பரவச் செய்யுங்கள்.

1.அன்று ஒரு அகஸ்தியன் இந்தப் பூமியைச் சமப்படுத்தினான்.
2.இன்று அவனுடைய அருளைப் பெற்று பல ஆயிரம் அகஸ்தியர்களை உருவாக்குங்கள்.
3.குருநாதர் காட்டிய வழியில் உலகைக் காக்கும் சக்திகளாக இதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் யாருக்குமே நாம் தொல்லை கொடுக்க வேண்டாம்… “சும்மா தான் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் தொல்லைப்படுவரையும் கஷ்டப்படுபவரையும் வேதனைப்படுபவரையும் வெறுப்படைபவரையும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்காமல் இருக்க முடியாது… அந்தந்த உணர்வுகளை நுகராது இருக்கவும் முடியாது.
1.நாம் நுகர்ந்த அந்த உணர்வுகளை எல்லாம்
2.உயிரிலே பட்ட பின் தான் அதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

கண்களால் பார்க்கின்றோம் பிறருடைய செயல்களை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால் அவர் செயலின் உணர்வுகள் வெளி வருவதை நாம் நுகர்ந்து தான் அவர் இன்ன நிலையில் இருக்கின்றார் என்று அவர் கோபப்படுகின்றாரா.. வேதனைப்படுகின்றாரா…! வேதனைப்படுத்துகின்றாரா…? என்ற உணர்வால் அறிகின்றோம்.

இந்த உணர்வை ஈர்த்து நம் உயிர் சரியாகச் செயல்படுத்தவில்லை என்றால் “என்ன தான் நடந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியாது…”

வாழ்க்கையில் சிலர் மிகவும் விரக்தி ஆகி இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் உள்ளோருக்கு…
1.எதிர்த்தாற்போல் இருக்கக்கூடிய ஒரு பொருளை அறிய முடியாது… காண முடியாது… தெரிய முடியாது… அவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.
2.வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் “தன் வீடு” எங்கே இருக்கிறது…? என்று தெரியாது.
3.அவருடைய நண்பரே அருகில் வந்தாலும் அந்த நண்பரை அவரால் அறிய முடியாது… தெரியாது.

ஏனென்றால் இந்த உணர்வின் அறிவு அங்கே மழுங்கி விட்டால் இந்த உணர்வுகளை அங்கே செயலாக்குவது இல்லை. உதாரணமாக…
1.கண்களிலே பூ விழுந்தால்… அதாவது கண் கருவிழிக்குள் கருமணியில் அழுக்குகள் சேர்ந்து விட்டால் எப்படிப் பார்வை சரியாகத் தெரியாதோ இதே மாதிரி
2.நம் உயிரிலே உணர்வுகள் (நாம் சுவாசிப்பது) மோதும் இடத்தில் ஒரு “தடயம்…” ஒன்று உண்டு
3.அடிக்கடி வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்தால் உயிரைச் சுற்றி அழுக்குகள் அதிகமாகிவிடும்.

அந்த அழுக்கு என்பது வேதனையின் நிலையாக உருவாவது உண்டு. அதிகமான அழுக்குகள் அங்கே சேர்ந்து விட்டால் சோர்வின் தன்மை வந்துவிடும்.

1.எதை நினைத்தாலும் அது சரியான நினைவுகள் வராது
2.என்ன செய்கின்றோம்… ஏது செய்கின்றோம்…? என்று எதையும் அறிந்து கொள்ள முடியாது (தன்னை மறந்த நிலை என்று சொல்கிறோம் அல்லவா)

இத்தகைய உணர்வு கொண்டு இந்த உயிரான்மா வெளியே சென்றால் எங்கே செல்லும்…? மனிதன் யார் மீதும் நினைவில்லை.

ஆனால் இதைப் போன்று சில உயிரினங்கள் அடிக்கடி தன்னை நினைத்து மறந்து போகும். அத்தகைய உடலைப் பெறும் நிலையாக இந்த உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும்.

உயிர் ஒன்றுதான்… பல உடல்களாக எடுத்து எடுத்து இன்று மனிதனாக வந்தது. இருந்தாலும் “உயிர் தான் நம்மை உருவாக்கியது…” என்று மனிதனாக ஆன பின் தான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

தெரிந்தாலும் அதை மதித்து ஞானிகள் காட்டிய வழியில் நாம் செயல்பட வேண்டுமா இல்லையா…?

1.புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று சொல்லித் துருவ நட்சத்திரத்தைப் அடிக்கடி எண்ணச் சொல்வதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறதா…?
2.தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போது கண்ணின் நினைவு புருவ மத்தியில் இருக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே நிலை நிறுத்த வேண்டும்.

அப்போது தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியாக மாறும். நம் உணர்வுகள் தெளிவாகும்… பேரருளாக பேரொளியாக மாறும்.

இந்தப் பிறவிக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

அசம்பாவிதங்களிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும்

நாம் எங்கு சென்றாலும் ஆத்ம சக்தி செய்து விட்டுத் தான் வெளியில் செல்தல் வேண்டும். தீமைகள் புகாது தடுக்கும் நிலையாக நம் வாழ்க்கையையே தியானம் ஆக்குதல் வேண்டும்.

தியானம் மட்டும் செய்து விட்டு
1.அதற்குப் பின் மற்றதை எல்லாம் பார்த்துப் பதிவாக்கிக் கொண்டே சென்றால் தீமைகள் தான் அதிகமாகும்.
2.தியானத்தின் பலன் முழுமையாகக் கிடைக்காது..
3.அப்போதைக்கு நன்றாக இருக்கும்… உடலுக்குள் மற்ற அணுக்கள் பெருகி விட்டால் நம்மையே அது மாற்றிவிடும்.
4.ஆகவே… ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையையே தியானமாக்கிப் பழகுதல் வேண்டும்.

தெளிவாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.

ரோட்டிலே செல்லும் பொழுது முதலில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டு… என் சொல் செயல் பார்வை அனைத்தும் புனிதமாக வேண்டும் என்று நினைத்துத் தான் நாம் ரோட்டிலே செல்ல வேண்டும்.

ஒரு வாகனமே ஓட்டுகின்றோம் என்றால் என் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்று நாம் எண்ணிவிட்டுச் செல்தல் வேண்டும்… ஒரு புனிதத் தன்மையாக வரும்.
1.அதன்படி நாம் ரோட்டில் செல்லும் பொழுது நல்ல சிந்தனைகள் வரும்
2.வித்தியாசமான நிலைகள் வந்தால் நம்மை ஒதுங்கிப் போகச் சொல்லும்.
3.அருள் உணர்வுகள் அதிகமாகி விட்டால் நமக்குப் பின்னாடி வாகனத்தில் வந்தாலும் கூட அதையும் ரிமோட் பண்ணி நம்மைக் காக்கும்.
4.நம்முடைய உணர்வுகளை அவர்கள் நுகர்வார்கள்… அப்போது தன்னாலேயே விலக்கி விட்டு விடும்.

சில விபத்துகள் நடக்கும் பொழுது பார்த்தோம் என்றால் எல்லோரும் அதிலே சிக்கி விடுவார்கள். ஆனால் அங்கிருக்கக்கூடிய ஒரு கைக் குழந்தை எந்தப் பின்னமும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்.

1.காரணம் அது பயப்படுவதில்லை… விபத்து என்றால் குழந்தை அது பயப்படுமா…? அடிபட்ட பிற்பாடு தான் பயப்படும்.
2.ஆனால் நாம் அடிபடப் போகும் போது பயந்து விடுகின்றோம்.

குழந்தையின் உணர்வுகள் ரிமோட் செய்து எந்த விதமான ஆபத்தும் இல்லாதபடி தப்பித்துக் கொள்கிறது. நிறைய விபத்துகளைப் பார்த்தால் அங்கே கைக் குழந்தைகள் மட்டும் தப்பியிருப்பதைப் பார்க்கலாம்.
1.குழந்தையின் உள்ளங்கள் வித்தியாசமான எண்ணங்கள் இல்லாது இருக்கின்றது…
2.அந்த உணர்வே அதைப் பாதுகாக்கின்றது.

பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்…! ட்ரெயின் ஒன்று விபத்தானது. அதிலே ஒரு பெட்டியில் உள்ள அனைவரும் இறந்து விட்டார்கள். ஆனால் ஒரு குழந்தை மட்டும் அடித்த பின் ஒரு பலகை மீது அப்படியே பாதுகாப்பாக இருக்கின்றது சிறிதளவு கூட அதற்குப் பின்னமில்லை.

ஒரு சமயம் நான் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ட்ரெயினுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு தாய் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்து வருகின்றது. திடீரென்று ட்ரேயினுக்குக் குறுக்கே சென்றுவிட்டது. தாய் சுக்கு நூறு ஆகிவிட்டது.

ஆனால் குழந்தை அதனின் சந்தர்ப்பம் தண்டவாளத்திற்கு மத்தியிலே அப்படியே எந்த விதமான பாதிப்பில்லாமல் இருக்கிறது. தண்டவாளத்திலிருந்த கல்லில் கூட அடிபடவில்லை. அந்த அளவுக்குப் பாதுகாப்பாகத் தாயின் கையில் அப்படியே படுத்திருக்கின்றது.

நான் கண்ணில் நேரடியாகப் பார்த்த நிகழ்ச்சி.

குருநாதர் இதை என்னிடம் சொல்லி…
1.அந்தக் குழந்தையின் உணர்வுகள் அதன் (அடிபடும் என்ற) மீது அச்சமில்லை
2.இந்த சந்தர்ப்பம் எப்படி அது காக்கப்பட்டது…? என்று காட்டுகின்றார்.

ஆனால் அதே குழந்தை ஆ…! என்று பயந்திருந்தால் அதனுடைய கதியும் பாதிப்பாகி இருக்கும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள். அந்தப் பரிசுத்தமான குணமாக இருக்கின்றது. ஆகையினால் அதற்கு அந்த விபத்துகள் கூடுமானவரை வருவதில்லை.

ஆகவே நீங்கள் வெளியில எங்கே சென்றாலும் சரி அல்லது அங்கிருந்து வீட்டுக்குத் திரும்ப வந்தாலும் சரி
1.ஆத்ம சுத்தி செய்யும் ஒரு பழக்கத்திற்கு வந்து விட வேண்டும்.
2.அப்போது தான் நம்மை அறியாது நடக்கும் தீமைகளிலிருந்து காக்கப்பட முடியும்.

தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம்

தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம் பற்றி வேதாள மகரிஷியினால் வலியுறுத்தி உபதேசமாக உரைக்கப்பட்டது.

மனிதச் சரீரத்தினுள்… சிவசக்தி நாடிகள் சுழுமுனை நாடியுடன் இணைந்து மூலாதாரத்தில் இருந்து மேல் எழுந்து… சிரசின் நெற்றிப் பொட்டு என்ற அறுகோணச் சக்கரத்தினுள் “சூலாயுதம் போல் தோன்றும்…”
1.செந்நிற ஒளியும் பொன்னிற ஒளியும் இரு புறம் விளங்க
2.மையத்தில் நீல வண்ண ஒளியாகத் தோன்றிடும் நிலையே அது.
3.உயிர் எனப்படும் குரு… இந்நிலை தருகின்ற செயல் எண்ணம் கொண்ட ஜீவன்… தான் என்று பெறல் வேண்டும்.
4.மகரிஷிகள் உவந்து ஊட்டுகின்ற “சூட்சுமங்களை” முயன்று பெற்றிட வேண்டும்.

இந்த நிலை எதனுள் அடங்கும்…?

சூட்சுமம் அங்கு உள்ளது. செய்கின்ற தொழில் என்பது…
1.கர்ம காரியங்கள் ஆயினும் சரி… உயர் ஞான சக்தி விளைவாக்கிடும் செயலாயினும் சரி…
2.ஒருவர் ஜெபித்து ஒருவருக்கு அளிப்பது அல்ல ஞானம்.
3.செய் தொழில் மேன்மைக்கு… தான்… தனக்கு ஜெபிக்கின்ற நிலை…!
4.அதுவே சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கும்.

முத்தலை சூலாயுதம் ஒளி வடிவாகச் சிரசினுள் உதிக்கும். இதனையும் கடந்த நிலையே சிவம் சூரியப் பிரகாசமாக உச்சியின் மேல் உதயம் காட்டுதல்.

சிவ சூரிய நிலை பெற்று வளர என்னுடைய ஆசிகள்… வேதாள மகரிஷி…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல காலம் எண்ணிப் பல காலத்திற்குப் பின் தான் மனிதருக்குள் நோய் என்ற விளைவே சாதாரணமாக வருகின்றது.

ஏனென்றால்… நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தீமையான நிலைகளைப் பார்க்க நேருகின்றது. அதனால் தீமை செய்யும் உணர்வுகளின் அணுக்கள் நம்முள் பெருகிவிடுகின்றது.

அந்த அணுக்கள் வளர்ச்சியான பின் அதனின் மலங்கள் நமக்குள் நல்ல அணுக்களில் உள்ள மலங்களில் படப்படும் பொழுது தான் இந்தத் தசைகள் கரைகின்றது.

அப்பொழுது நம் உடலில் வலிகள் வருகின்றது… வேதனையாகின்றது… நோயாகின்றது. வலித்தவுடன்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை வலுக்கொண்டு நமக்குள் கவர்தல் வேண்டும்.
4.இப்படி நம் உடலில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.

ஆனால் தியானத்தைக் கடைப்பிடிக்கும் சிலர் என்ன சொல்வார்கள்…?

இப்படித்தான் நான் எண்ணினேன்… இன்னும் வலி குறையவில்லை, வலி நிற்கவில்லையே…! என்பார்கள். வலி நிற்கவில்லையே என்ற உணர்வைச் சேர்த்தால் என்ன நடக்கும்…?

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது
1.ஒரு இடத்தில் (நிறுத்திய பின்) “FULL STOP” என்று புரோகிராம் செய்து வைத்தால்
2.அந்த இடம் வந்தவுடன் தன்னாலே நின்றுவிடும்.

அதைப் போன்றுதான் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… வலி நீங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தால் நாம் தொடர்ந்து இதைக் கூட்டும்போது அதனுடைய பருவம் வரும் பொழுது “நிச்சயம் வலி நிற்கும்…”

அதற்குள் நான் “ஐய்யய்யோ அம்மம்மா… இன்னும் நிற்கவில்லையே…” என்று எண்ணிக் கொண்டு என்ன செய்வார்கள்…?
1.அந்த மகரிஷிகளை எண்ணி
2.“வலி நிற்கவில்லையே… வலி நிற்கவில்லையே…” என்று இப்படித்தான் மாற்றுகின்றார்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும், அந்தத் தசைப் பாகம் உள்ள அணுக்களில் அருள் ஞானம் விளைய வேண்டும் என்று இதைக் கலக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நாம் தீமையைப் பார்த்த உணர்வுகள் அதன் உணர்வு கொண்டு கருவாகிச் சுழன்று வரப்படும் பொழுது… தேங்கிய இடத்தில் வெடித்த உணர்வுகள் அணுவாக உருவாகின்றது.

உருவான அந்த அணு தன் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி அது உணவுக்காக ஏங்கும் நிலைகளில் அது தன் இனத்தைப் பெருக்குகின்றது. தன் இனத்தைப் பெருக்கும் போது நம் உடலில் ஏற்கனவே உருவான அணுக்களுக்கு எதிர்நிலை ஆகின்றது. அப்பொழுது
1.நம் நல்ல அணுக்களின் செயலாக்கங்கள் குறைகின்றது
2.அதனால் அது சோர்வடைகின்றது
3.அதனால் நம் உடலில் வேதனையும் வலியும் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஆகவே… இதையெல்லாம் அறிந்துணர்ந்த நீங்கள்
1.ஒவ்வொரு நிமிடத்திலும் எதைச் செய்ய வேண்டும்…? என்பதைச் சற்று சிந்தியுங்கள்
2.“எதை நம்முள் முன்னிலைப்படுத்த வேண்டும்…?” என்ற நிலைக்கு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை முன்னிலைப்படுத்தி உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்த்தோம் என்றால் வலியோ… வேதனையோ… நோயோ… எதுவாக இருந்தாலும் அதனின் வீரியத்தை அடக்கி அதைத் தணித்து நம்மை நலம் பெறச் செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா

சப்தரிஷிகள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை அருளாக்கிப் பேரருளாக மாற்றிப் பேரொளியாக மாறி எப்படி பிறவியில்லா நிலை அடைந்தனரோ அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சப்தரிஷிகள் என்றால் யார்…?

இருளை அகற்றி ஒளியின் உணர்வினைத் தங்களுக்குள் சிருஷ்டித்தவர்கள் தான் சப்தரிஷிகள்.
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் பெற்று
2.ஒளியின் சரீரமாக விண்ணிலே வாழ்பவர்கள் சப்தரிஷிகள்.

அவர்கள் மனிதச் சரீரத்தில் வாழ்ந்த காலத்தில் தங்களுடைய வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்தனர்.

அவர்கள் தங்களிடமிருந்து வெளிப்படுத்திய அருள் உணர்வுகளை நாங்கள் பெற்று அந்த அருள் ஞான வழியினை எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டுதல் வேண்டும்.

உதாரணமாக… பலகாரங்களைச் செய்யும் பொழுது நாம் பல பொருள்களை ஒன்றாக இணைத்துச் சுவைமிக்க நிலைகளை எப்படி உருவாக்குகின்றோமோ இதைப் போன்று சப்தரிஷிகள் ஒன்றென இணைந்து உணர்வுகளைப் பேரருளாகப் பெற்றுப் பேரொளியாக மாற்றிப் பேரொளி என்ற நிலைகள் அடைந்து பிறவியில்லா நிலையாகத் தனக்குள் உருவாக்கி வளர்த்துக் கொண்டவர்கள்.

ஆகவே தான் அந்தச் சப்தரிஷிகள் பெற்ற அந்த அருள் சக்திகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று தியானிக்கச் சொல்கிறோம்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது போன்று குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்பொழுது நாம் எந்தச் சப்தரிஷிகளை எண்ணுகின்றோமோ நாம் அதுவாக ஆகின்றோம்.

சப்தரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக்கிச் சென்ற அந்த அருளைப் பெற வேண்டும் என்ற நினைவினை
1.கண்ணின் வழி கொண்டு உணர்வினை உடலுக்குள் பதிவாக்கி
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
3.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கி இருங்கள்.

அவர்கள் பெற்ற பேரருளின் தன்மையை பேரொளியாக மாற்றிய உணர்வின் தன்மைகளை நாம் ஏங்கும் பொழுது
1.நமது உயிரோ அதை “ஓ…” என்ற நிலையில் அதை கருவாக்கி
2.உயிரான ஈஸ்வரலோகத்தில் சிரசின் பாகத்தில் அதன் அணுவின் தன்மையை உருவாக்கி
3.நம் இரத்த நாளங்களில் அதனின் கருவின் தன்மையாக உருவாக்கச் செய்கிறது.

அத்தகைய கருவினை நமக்குள் உருவாக்கி விட்டால் அணுவாக உருவாகும் போது
1.அதற்கு உணவு அந்த சப்தரிஷிகள் எடுத்த அருள் சக்திகள் தான்…
2.அதையே உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுவதைப் பற்றுடன் பாசத்துடன் உற்று நோக்கி அதன் உணர்வை நாம் நுகர்ந்தறிகின்றோம்… பின் அவர்களுக்கு உதவியும் செய்கிறோம்.

நாம் உதவி செய்தாலும் நாம் நுகர்ந்த அந்த வேதனையான உணர்வுகளை ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உயிர் ஈசனான ஈஸ்வரலோகத்தில் அந்த வேதனையை உருவாக்கும் அணுவின் கருவாக உருவாக்குகின்றது.

அவனைப் பரிவு கொண்டு உற்று நோக்கி இப்படி அவதிப்படுகிறானே…! எண்ணும் பொழுது நாம் அதுவாக மாறிவிடுகின்றோம்.

அதைப் போன்று தான் சப்தரிஷிகள் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நாம் கண்களால் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

சப்தரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
1.உயிரான ஈசனிடம் ஏங்குகின்றோம்… இந்த உணர்வின் தன்மை அங்கே ஈஸ்வரலோகத்தில் உருவாக்குகின்றது.
2.நம் இரத்தங்களிலே அது இந்திரலோகமாக மாறுகின்றது
3.பின் அந்த அணுவின் தன்மை உருவாகும் பொழுது பிரம்மலோகமாக மாறுகின்றது.

சப்தரிஷிகள் அவர்கள் எப்படி இந்த வாழ்க்கையில் இருளை நீக்கிவிட்டு உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழுகின்றனரோ
1.அந்த அரும்பெரும் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும்பொழுது
2.அந்த ஏக்கம்… நாம் அதுவாக மாறுகின்றோம்.

சாமி சொன்ன வழியைக் கடைப்பிடித்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்த முடிகின்றது… என்று இரண்டு பேர் சொல்லுங்கள் பார்ப்போம்

அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேருடன் பழகுகின்றோம்.
1.அவன் இப்படிச் செய்தான்… இவன் இப்படிச் செய்தான்… மோசம் செய்து விட்டார்கள்… ஏமாற்றி விட்டார்கள்
2.இவன் நல்லவனாக இருந்தான்… எல்லோருக்கும் உதவி செய்தான் ஆனால் நோயால் இப்பொழுது அவதிப்படுகின்றான் என்று
3.இப்படிப்பட்ட எத்தனையோ உணர்வுகளை நாம் நுகருகின்றோம்.

சந்தர்ப்பங்களில் இது போன்று நுகர்ந்து விட்டால் நமக்குள் என்ன நடக்கின்றது…?

இந்த உணர்வு அனைத்து நம் உடலுக்குள் சென்று அது நரகாசுரனாக மாறி நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைக் கொன்று தின்ன ஆரம்பிக்கின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

ரோட்டிலே செல்கின்றோம்… திடீரென்று ஒருவன் அங்கே அடிபடுகின்றான். அடப் பாவமே…! என்று கண்களால் உற்றுப் பார்க்கின்றோம்… நுகர்ந்து விடுகின்றோம்… பதட்டம் பயமும் வருகின்றது.

இது போன்று அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ விபரீத உணர்வுகளை அறிய நேருகின்றது… பார்க்க நேருகின்றது நம்மை அறியாமலே நமக்குள் பதிவாகி உடலுக்குள் வந்து விடுகின்றது.

கண்களோ இது அனைத்தையுமே நமக்குத் தெரியச் செய்கின்றது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும் செய்கின்றோம். ஆனால்
1.அப்போது நாம் எடுத்துக் கொண்ட பயமோ பதட்டமோ வேதனையோ அவை எல்லாம் உமிழ் நீராக மாறி
2.நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறி அந்த இரத்தம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குள் செல்லப்படும் பொழுது
3.அந்த நல்ல அணுக்களைக் கொல்லக்கூடிய நரகாசுரனாக மாறி விடுகின்றது
4.அதாவது… நம்மையும் வேதனைப்பட வைக்கிறது என்று காட்டுகின்றார்கள்.

அதைத்தான்
1.தீப ஒளித் திருநாளன்று கண்ணன் (நம் கண்கள்) நரகாசுரனைக் கொன்ற நாள்…! என்று காட்டி நீ விழித்திரு உடலுக்குள் தீமைகள் புகாது தடுத்து நிறுத்து என்றும்
2.விநாயகர் சதுர்த்தி அன்று தீமைகளை நிறுத்திப் பழகு என்றும்
3.இவ்வளவு அழகாக வருடத்தில் 12 மாதங்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

ஞானிகள் கொடுத்ததை யாராவது நாம் சிறிதளவாவது மதிக்கின்றோமா…? அவர் சொன்னதை நம் வாழ்க்கையில் கடைபிடிக்கின்றோமா…?

இப்பொழுது இதை எல்லாம் நான் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றேன்… எல்லாம் கேட்கின்றீர்கள். எத்தனை பேர் இதைப் பின்பற்றுகின்றீர்கள்…?

“சாமி நன்றாகச் சொன்னார்…” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள்
1.எவ்வளவு அழகாகச் சொல்கின்றார் தெரியுமா…!
2.என்னைப் புகழ் பாடி விட்டுப் பொருள் காணாதபடி… பொருளைத் தனக்குள் வளர்க்கத் தெரியாதபடி
3.இன்றும் தியான வழியில் வருபவர்கள் இருக்கின்றார்கள்.

எங்கள் சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று கேட்பார்கள். ஆனால்
1.நான் கடைப்பிடித்தேன்… நான் செய்து காட்டினேன்…!
2.சாமி சொன்னார்… நான் செய்தேன்… என்னால் நிறுத்த முடிகின்றது… நிறுத்த முடியும்…! என்று
3.ஒரு இரண்டு பேர் நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்…!

ஏனென்றால் யாம் சொன்னபடி நீங்கள் செய்து பழக வேண்டும். தீமையை நீக்கும் அந்தப் பழக்கத்திற்கு நீங்கள் வரவேண்டும். அன்றாட வாழ்க்கையில் அதைச் செயலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான் நான் “மௌன விரதம்…” இருந்தது.

என்னுடைய நோக்கமே எப்படியாவது உங்களுக்குள் அருள் உணர்வுகளைத் தூண்டி அந்த ஞானிகள் உணர்வுகளைக் கவரும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான்.

ஆக…
1.அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்களே உங்கள் எண்ணத்தால் மாற்றி
2.உங்களுக்குள் வரக்கூடிய கெடுதலை நீங்களே தடுத்து நிறுத்திக் கொண்டே வந்தால்
3.பிறவில்லா நிலை அடைய முடியும் என்று உறுதிப்படுத்துவதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பரிணாம வளர்ச்சியில் நாம் தீமைகளை நீக்கி வளர்ந்தோம். அகஸ்தியன் தீமைகளை நீக்கித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அதை நாம் எடுக்க வேண்டும்
2.அதை எடுத்து நம் உடலில் பதிவு செய்து நம் உடலில் உள்ள இரத்தங்களில் பரவச் செய்ய வேண்டும்.
3.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

உதாரணமாக விஞ்ஞான அறிவுப்படி செல்ஃபோன்களை (AIRCELL) வைத்திருக்கின்றார்கள் அதிலே எங்கிருந்து எல்லாம் பேசுகின்றார்களோ அந்த நம்பர் தெரிந்தால் பேசுகிறோம்.

வருகிறது… ரெக்கார்ட் செய்கிறோம்… மீண்டும் தொடர்பு கொள்கிறோம். திரும்பப் பேசும் போது யார்… யார்…? என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

செல்ஃபோன்களில் யாரிடம் எல்லாம் நாம் பேசுகின்றோமோ பதிவாக்குகின்றோமோ தெரிந்து கொள்கின்றோமோ இது அனைத்துமே பதிவாகி ஒரு ரெக்கார்டு போன்று ஆகிவிடுகின்றது. திரும்பி அவர்களுக்கு ஃபோன் செய்தோம் என்றால் அங்கே போகிறது.

இதே மாதிரித் தான் நம் உடலில் இருக்கக்கூடிய செல்கள் (ஊனுக்குள்) அதைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றது – எலும்புக்குள்.

அதையெல்லாம் நாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
2.எலும்புகளுக்குள் இருக்கும் ஊனுக்குள் (செல்கள்) அங்கே செல்போன்களில் பதிவாக்குவது போன்று இப்பொழுது பதிவாக்கி
3.அதை கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

அதைப் பெருக்கிக் கொண்டு வந்தால் நமது வாழ்க்கையில் முந்தி இதற்கு முன்னாடி எத்தனை வகையான அறியாத நிலைகள் குறைகளை செய்தோமோ அதை எல்லாம் குறைக்க முடியும்.

இப்படிக் குறைத்துப் பழகுவதற்குத் தான் நாம் இருக்கக்கூடிய தியானம். சுவாமி செய்வார் சாமியார் செய்வார் ஜோதிடம் செய்யும் யாகம் செய்யும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

நாம் கண்களில் பார்க்கின்றோம்… கருவிழி ருக்மணி பதிவாக்குகின்றது… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் மற்றவரிடமிருந்து வெளி வருவதைக் கவர்ந்து இந்த நோய்… இந்த குறைபாடு… இந்தத் தவறு என்று அதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

தெரிந்து கொள்கின்றோம்… கெட்டவன் என்றால் விலகிக் கொள்கிறோம். விலகினாலும் அந்தக் கெட்ட உணர்வுகள் கொண்டு “மோசமானவன்… மோசமானவன்” என்று பேசுகிறோம்.

1.அவன் உடலில் விளைந்த உணர்வுகள் இங்கே நம் எலும்புகளுக்குள் பதிவாகி
2.நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்தில் கலந்து அப்படிப் பேசக்கூடிய அளவிற்கு நம் உணர்வுகளைத் தூண்டி
3.அந்த அணுக்கள் விளைய ஆரம்பிக்கின்றது.

நாம் நினைக்கின்றோம் அவன் தான் தவறு செய்தான் என்று. ஆனால் உடனடியாக அதைத் துடைத்துப் பழகவில்லை என்றால் அவன் உடலில் விளைந்த தீமை நமக்குள் விளைந்த பின்… அவனைப் போன்று நாம் பல மடங்கு தவறு செய்யக்கூடியவர்களாகவே வந்து விடுகின்றது.

இதை நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.

கையிலே அழுக்குப்பட்டால் எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ உடலில் அழுக்குப்பட்டால் எப்படிக் குளிக்கின்றோமோ துணியில் அழுக்குப்பட்டால் எப்படித் துவைக்கின்றோமோ இது போன்று தான் ஆன்மாவில் படக்கூடிய அழுக்குகளை நாம் துடைத்து பழக வேண்டும்.

ஏற்கனவே நம் உடலில் ஜீவ அணுக்களாக அது இருக்கும் பொழுது அதற்கு அந்தத் தீய உணர்வு ஆன்மாவாக இருக்கும். நாம் எடுக்கக்கூடிய இந்த தியானத்தின் மூலம் அந்த ஆன்மாவையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே தியானம் எடுத்துப் பழகியிருக்கின்றோம். அதன் துணை கொண்டு நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்
1.நம் வாழ்க்கையைப் புனிதப்படுத்துவதற்கும்
2.சிந்தித்துச் செயல்படுத்துவதற்கும் அமைதிப்படுத்துவதற்கும்
3.அருள் ஞான வாழ்க்கை வாழ்வதற்கும் இது பயன்படும்.

இல்லையென்றால்…
1.நம் உடலில் உருவான அணுக்கள் அது சாப்பாடுக்கு ஏங்கத்தான் செய்யும்
2.உணர்ச்சியை உயிரிலே ஊட்டத்தான் செய்யும்
3.கண் வழி கவரத் தான் செய்யும்
4.உயிரிலே மோதத் தான் செய்யும்
5.அதே வேதனை உணர்வு நமக்குள் வரத்தான் செய்யும்.
6.அப்படியே விட்டு விட்டால் அதை மாற்றவும் முடியாது அந்த உணர்வு தான் வேலை செய்யும்

ஆகவே நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்குமே வாழ்க்கையை தியானம் என்று நாம் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

சிறிது காலம் தான் வாழுகின்றோம் நூறு வருடம் வாழ்ந்தாலே அதிகம் தான். சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டுகின்றார்கள் நாம் எதையெல்லாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ நம் உயிர் அதை எல்லாம் உருவாக்கிவிடும்… அந்தக் கணக்குகள் கூடிவிடும்

அதிலே எந்தக் குணத்தை இந்த வாழ்க்கையில் நாம் அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் வேதனை என்றால் அடுத்துப் பாம்பு… கோபம் என்றால் புலி… வெறி என்றால் நாய் நரி போன்ற நிலைகளுக்கு நமது உயிர் இந்த உடலை மாற்றிவிடும்.

நம் உடலில் எத்தனை குணங்கள் இருக்கின்றதோ அதைப் போல பரிணாம வளர்ச்சியில் குணங்கள் கொண்ட உயிரினங்கள் எத்தனையோ உண்டு.

எந்தெந்த உணர்வுகளில் எந்தெந்த விஷம் இயக்குகின்றதோ அதனதன் வழி இயக்குகின்றது. இந்த வாழ்க்கையில் நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ இன்று மனிதன் என்றாலும்… “இன்றைய செயல் நாளைய உடலாக மாறும்…!”

உயிர் மாறுவதில்லை.. உயிர் உணர்வுகளை மாற்றிக் கொண்டே இருக்கும்… உடலை மாற்றிக் கொண்டே இருக்கும்.

உயிரோடு ஒன்றி “ஒரே நிலையாக நிலை கொண்டு இருப்பது…” துருவ நட்சத்திரம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்து நம் உடலில் பெருக்கி
2.நாமும் இனி பிறவியில்லை என்ற நிலையை அடைந்து… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
3.எந்த வேதனையும் நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ளப் பழகுதல் வேண்டும்.

“சப்தரிஷிகளுடன் கலக்கல்” என்பதே மகோன்னத ஜாலம்

“இந்திரஜால வித்தை” என்று கர்ம சித்துக்கள் ஆரம்ப நிலை ஆயினும்… அதனையும் வென்றிட்டவன் சித்தன் நிலையில் சித்துக்கள் பெறுகின்றான்.

ஒரு பொருளை உண்டாக்கிக் காட்டுவதும்… இருக்கின்ற பொருளை வேறு ஒரு பொருளாகக் காட்டுவதும்… அது ஜால நிலையே. அத்தனையும் தத்தம் செய்து கர்ம பல தியாகம் என்று காத்திட்டது வேதாள மகரிஷி கைக் கொண்ட சூட்சமம்,

1.ஞானக்கண் திறந்து… பிடரிக்கண் பார்வை அறிந்திட்ட சக்தியாக…
2.சிவாக்கினி உள்நாக்கின் மேலன்னத்தில் உருவாகி… சூட்சும தேகம் அதனுள் மூழ்கி
3.உலகப் பிடிப்பின் அதி ஆவலால் பொசுங்கிட்ட தன்மையால்
4.கைக்கொண்டிடும் தியானத்திலும் உயர்வாகப் பெறுகின்ற நிலையே சித்துக்கள் கைவரத்தக்க நிலை.

கர்ம தியாகம் கொள்கின்றவன் “மூலக்கறி” சமைத்து உண்கின்ற பேரருளின் பேராற்றல் பெறுகின்றான். உணவு சமைத்து உண்ணுகின்ற கறியால் அதனைக் கொண்டு குடிலை (உடலை மட்டும்) அலங்கரித்து வைப்பதால் பலன் என்ன…?
1.அதனை உண்ணுகின்ற முறை அறிந்து
2.உடல் வளர்த்து… “உயிர் பேணுகின்ற தன்மை உண்டல்லவா…!”

ஆத்ம நிலக் கூடமும் உயிர் மூலக்கறி வளர உண்ணுகின்ற முறை உணர்ந்து சமைப்பின் பலனைச் சமைத்திட்ட உட்பொருள் தன்மையின் தொடர் வழி ஈர்த்து உண்ணுகின்ற உணவு சிதாக்கினியைக் காட்டும்.

அங்கு உருவாகிடும் ஜாலம் எது தெரியுமா…?

1.உயிராத்ம சக்தியினை இணைத்து விழுப்பொருள் என்கின்ற தன்மைக்கு ஊட்டுவித்து…
2.சகலத்தையும் ஆட்டுவிக்கின்ற “சப்தரிஷிகளுடன் கலக்கல்” என்கின்ற சக்தியாகப் பயிர்ப்பித்தல்… அதுவே மகோன்னத ஜாலம்…!

இது எல்லாம்… இன்று புதியனவாக உணர்த்த வந்த நிலை அன்று. அத்திரி மகரிஷியும் அன்று ஊட்டுவித்ததால் பெற்றதே அனிமாது சித்துகளில் ஏழாம் நிலை.

ஒரு நிலை தவற விட்டதால் பிறப்பின் சூட்சுமத்திற்கு அதுவே வித்து எனும் நிலை உண்டாயிற்று. இந்த ஏழு நிலைகளுக்கும் சப்தரிஷிகளினால் “சப்த மாதாக்கள்” என்று பெயர் நாமப்படுத்திட்ட… உருவாக்கிட்ட சக்திகள் உண்டு.
1.சகலத்திலும் சகலமாகக் கலந்து அனுபவித்தல் என்ற பேரின்ப நிகழ்ச்சி
2.அதுவே எட்டாம் நிலை…!

கோலமாமகரிஷி தவமிருந்த குகைக்குள் தியானிக்கும் போது குருநாதர் எனக்கு உணர்த்திய உண்மைகள்

நான் கொல்லும் உயிரினங்களின் உயிரான்மாக்கள் மனித உடலுக்குள் வந்த பின் மனிதனின் உணர்வை நுகர்ந்து அது கருப்பைக்குள் செல்லும்போது மனித உருப்பெறும் தன்மைகள் எப்படிப் பெறுகின்றது…?

மனித உருப் பெறும் பொழுது
1.அந்தத் தாய் வேதனை கொண்டவரையோ சலிப்படைந்தவரையோ சங்கடப்படுவோரையோ
2.கால் முடமானவர்களையோ கண் இழந்தவர்களையோ இதைப் போன்று பார்க்கப்படும் பொழுது
3.அந்த உருவத்திலிருந்து வெளிப்படுவதை சூரியனுடைய காந்த சக்தி கவரும் பொழுது
4.கர்ப்பமான தாய் நுகர்ந்து விட்டால் கருவிலே எவ்வாறு அது உறுபெறுகின்றது…?

ஒவ்வொரு நொடிகளிலும் ஒரு உயிரணு ஒரு உடலுக்குள் செல்வதும் மனித உணர்வை நுகர்ந்து மனிதனாகப் பெறும் நிலையும்… தாயின் கருப்பைக்குச் சென்ற பின் கருவிலே வளரும் பொழுது தாய் நுகரும் உணர்வுகள் அதற்குப் பூர்வ புண்ணியமாக எவ்வாறு அமைகிறது…? என்ற நிலையையும் காட்சியாகக் காட்டினார் குருநாதர்.
1.குறைந்தது ஒரு லட்சம் உணர்வுகளை அறிந்து கொள்வதற்காக
2.மூன்று வருடம் அதைக் காணும்படி செய்தார்.

அப்போது சரியான ஆகாரம் கிடையாது. குறித்த நேரம் விடுபடும் பொழுது பச்சிலைகளைச் சாப்பிட்டு விட்டு பேரீச்சம்பழத்தையும் சாப்பிட்டுவிட்டு வெறும் தண்ணீரைக் குடித்துக் கொள்ளும்படி சொல்வார்.

அரை மணி நேரம் கொடுப்பார்… அதற்குள் அதைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அமர்ந்து அவர் சொல்வதைக் காணும்படி செய்வார்.

இவை அனைத்தையும் கொல்லூர் என்று சொல்லும் முகாம்பிகை மலைக் காட்டில் தான் காட்டினார். அங்கே மேலே தபோவனம் என்று உண்டு.
1.அங்கே கோலமாமகரிஷி தியானமிருந்த இடம் ஒரு குகையாக இருக்கும்.
2.ஆனால் பெரிய வனமாக இருக்கும்… மலை மீது செல்ல வேண்டும்… கூடு மாதிரி இருக்கும்
3.அதற்குள் அமர்ந்து அவர்கள் பெற்ற உணர்வுகளையும் மற்றதையும் அறியும்படிச் செய்தார்.

மற்ற உயிரினங்களை மனிதன் கொல்வான் என்றால் அவர் உடலுக்குள் செல்வதும் அது எப்படி எந்த நிலை ஆகிறது என்பதை உணர்த்தினார்.

செல்ல பிராணிகளை இன்று நாம் வளர்க்கின்றோம் அல்லவா. அவைகள் இறந்த பின் யார் மீது பற்றுள்ளதோ அந்த வளர்த்தவர் உடலுக்குள் சென்று மனிதனாக எப்படிப் பிறக்கிறது என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஏனென்றால் நாம் எத்தனையோ நிலைகள் பட்டு இன்று மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம். அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான இந்த உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்.
1.அவர்கள் எத்தனையோ இன்னல் பட்டு உயர்ந்த உணர்வை வளர்த்துக் கொண்டவர்கள்
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்து ஒளியின் சரீரம் பெற்றவர்கள்.
3.அதை நாம் நுகர்ந்தோம் என்றால் இந்தச் சந்தர்ப்பம் நம்மைப் பிறவி இல்லா நிலையை அடையச் செய்யும்.

அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.

ஞானச் செல்வங்களுக்கு வழிகாட்டுகின்றோம்

1.புகழ் கொண்ட ஜீவன் பல்லக்கில் செல்கின்றது…
2.அதே ஜீவன் சிவத்தின் தன்மை நீக்கம் பெற்று “சவம்” எனப்படும் நிலையில் அதுவும் ஊர்வலம் செல்கின்றது.

இரண்டும் காரண பேதங்கள் என்றாலும்… சுமந்திடும் பல்லக்கு மூங்கிலால் உருவானதே.

கலைஞன் கை பட்டு இளந்தளிர் மூங்கில் அதன் பக்குவம் கொண்ட திடம் என்ற வளர்ச்சியில் அது வளைக்கப்படும் பாங்குகளில் வளைந்து… வளர்ந்து… பல்லக்கு உருவாக்கிடும் கலைஞனின் கைவண்ணத்திற்கொப்ப வளர்ந்து நிற்கின்றது.

வெட்டிடத் தழைக்கும் தழைவுறுகின்ற தன்மை தன்னிச்சையில் மூங்கில் உயர்ந்து வளர்ந்து நின்றாலும் பக்குவத்தின் வளர்ச்சி அற்ற தட்டை எனப்படும் மூங்கிலானது அது வளர்ந்துள்ள புதரின் கண்வாசம் செய்திடும் “இசை வண்டு” வளர்ச்சியின் திடமற்ற மூங்கில்களைத் துளைத்து விட்டு அதனுள்ளும் வாசம் செய்திடும்.

காற்றில் அசைந்திடும் அந்த மூங்கில்கண்
1.அதனுள் நுழைந்திடும் காற்று உண்டாக்கிடும் ஓசை… மூங்கிலை இசை பாட வைக்கின்றது.
2.ஆனால் வண்டு துளைத்த மூங்கில்கள் “இறுதி ஊர்வல நிலைக்கே…”
3.மற்றும் மனிதனின் தேவைப்படும் காரியங்கள் ஆற்றிடக் கொண்டு செல்கின்றான்.

கலைஞன் கைபட்டு உருவாக்கிட்ட பல்லக்கு… தேவ ஆராதனை பெற்றிடும் சிறப்பாகப் பரிணமித்து விளங்குகின்றது. அது போல் ஆத்ம பலம் கூட்டிடும் செயலாக ஜீவன் பெறுகின்ற சத்தியத்தின் சக்தி எனும் வளர்ப்பு பக்குவம் காட்டிடும் உனது பண்பை.

அன்று வேதாள மகரிஷி வேதாந்த நாதனுக்கு உரைத்ததைப் போல்
1.“வண்டு துளைத்திடாப் பக்குவம்” என்றே
2.ஆத்ம பலம் நாடிடும் உயர் ஞானச் சித்தின் நலம் விரும்பும் ஞானச் செல்வங்கள் பக்குவம் கொண்டிடவே
3.”கர்ம தியாகம்” வழி காட்டப்பட்டது
4.இந்தச் சொல்லை வியாசக பகவான் உரைத்தது.

அர்ஜுனனும் கிருஷ்ண பரமாத்மாவும் “நரநாராயண ஐக்கிய நிலை” என்றிட்ட சூட்சுமத்தை அன்று அந்த மகான் உரைத்த நிலையையே இன்று இந்தக் கலியில் அதனை முழுமைப்படுத்திக் காட்டியவர் ஐயப்பன்.

ஐயப்பன் உரைத்தது என்ன…?
1.சிவத்துக்குள் நான் இருக்கின்றேன்…
2.நாராயணன் உள்ளும் நான் இருக்கின்றேன்…!

மத பேதங்கள் கடந்திட்ட தெய்வ நிலை காட்டிடும் ஓர் சிறந்த தத்துவத்தை இந்தக் கலியிலும் மனிதன் கேடுறுத்துகின்றான்.

1.அவர் பெற்று வளர்த்திட்ட ஜோதிஸ்வரூப நிலையை என்றும் காணலாம்
2.அதிலே பல சூட்சுமங்கள் உண்டு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்து கொள்ள… பக்தி என்ற மார்க்கத்தில் நல்ல ஒழுக்கத்தைக் கடைபிடித்து நல்லதன் நிலைகள் கொண்டு… மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி அருள் உணர்வுகளைத் தனக்குள் கூட்டி… மெய் வழி செல்லும் மார்க்கங்களைச் சாதாரண மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் நன்னாள் தான் “மார்கழி மாதம் பௌர்ணமி…!”

மார்கழி மாதம் ஏகாதசி அன்று தான் உடலை விட்டுக் குருநாதர் விண் சென்றார். விண் சென்றபின் முதல் நிலையாக என்னை இயக்கியதும் பேசச் செய்ததும் அவருடைய ஆன்மாவின் உணர்வின் நிலைகள் தான்.

பல உண்மைகளை உணர்வதற்கு அவர் உணர்வின் தொடர் வழி கொண்டு நான் செல்ல 12 வருட காலம் பல அனுபவங்களைக் கொடுத்துக் கொடுத்து அவர் எப்படிச் சூட்சும நிலைகள் கொண்டு இருக்கின்றாரோ அந்த சூட்சும நிலையைக் கண்டுணரும்படிச் செய்தார்.

1.அவர் ஒளி முன் செல்ல நான் பின் சென்று அவர் காட்டிய அருள் நெறியின் நிலைகள் கொண்டு
2.ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு உடலின் உறுப்புகளும் அது எவ்வாறு உருவானது…?
3.இயற்கையின் நிலைகள் கொண்டு என்பதை இது எல்லாம் எவ்வாறு ஆனது என்ற மெய் உணர்வைக் காட்டி
4.அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய ஆற்றல்மிக்க சக்திகளை எவ்வாறு பெற வேண்டும்…? என்று எனக்குக் காட்டினார்.

அவர் எனக்கு அருளிய அந்த ஆற்றல்மிக்க நிலைகளை நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதை இன்று உபதேசிப்பது. ஆக… மார்கழி மாதம் இந்தப் பௌர்ணமி மிக முக்கியமான நாள்.

ஈஸ்வரபட்டர் என்ற நாமம் கொண்ட உடலிலிருந்து குருநாதர் விண் சென்றாலும்
1.இதற்கு முந்தி எத்தனையோ கோடி லட்சம் ஆண்டுகள் முன்னாடி விண் சென்று சப்தரிஷி மண்டலங்களாக அடைந்தது
2.அவருடைய (ஈஸ்வராய குருதேவர்) உணர்வின் தன்மை அந்த அலைகள் வரும் பொழுது தான்
3.பூமிக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதர்களின் உள்ளத்திலும் இது பட்டு
4.அதன் வழி இந்த மெய் உணர்வின் ஒளிகள் வளர்ந்து வளர்ந்து இன்றும் பரப்பிக் கொண்டிருக்கின்றது
4.இந்த பூமி என்ற நிலையில் பல பாகங்களிலும் இது பரவிக் கொண்டிருக்கின்றது.

உடலை விட்டுச் சென்ற ஒரு உயிரான்மா… பூமியின் பிடிப்பில் இருப்பதை… அதை எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்ற பேருண்மையை எனக்கு உணர்த்தினார் குருநாதர். ஏனென்றால்
1.இந்த மார்கழி மாதம் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்…
2.ஈஸ்வரபட்டராக இருக்கப்படும் பொழுது இந்த உடலில் இருந்து வெளிச் சென்று விண்ணுலகம் சென்றார்.

அவர் உடலுடன் இருக்கப்படும் பொழுது பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகளைச் சொல்லாக சொல்லி… எனக்குள் (ஞானகுரு) அதை உபதேசித்து உணர்த்தி… அவரின் ஆற்றல்மிக்க சக்தியைப் பதிவு செய்தார்.

குருநாதர் உங்களுக்குப் பதிவு செய்தார்… எங்களுக்கு நீங்கள் எப்படிப் பதிவு செய்கிறீர்கள் என்று நிறையப் பேர் கேட்கலாம்.

ஒரு மனிதன் நம்மைத் திட்டுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவன் நமக்குப் பின்புறமாக சுவருக்கு அப்பால் நின்று பேசிக் கொண்டிருந்தாலும்
1.என்ன…? நம்மைப் பற்றி குறை பேசுகிறார்களா…! என்று கூர்ந்து கவனித்தால் போதும்
2.அவன் திட்டியதெல்லாம் இங்கே பதிவாகின்றது.

பதிவான பின் என்ன செய்கின்றோம்…?

ஆகா… அவ்வளவு தூரத்திற்கு ஆகிவிட்டதா…? என்று அந்த உணர்வை ஏற்று அந்த உணர்வையே நாம் தியானிக்கிறோம்.

அதற்கடுத்து அவனுடன் சண்டை செய்வதற்கும் எப்படி எந்தெந்த வகையில் அவனுக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்றும் செயல்படுத்துகின்றோம். சாதாரண நிலையில் இப்படித்தான் இருக்கின்றோம்.

1.இது எல்லாம் காந்தப்புலனின் நிலைகள்
2.நாம் எதன் மேல் கவனத்தைச் செலுத்துகின்றமோ அந்தக் கவனத்தின் உணர்வலைகள் அதற்குள் பதிவாகின்றது.

தெளிவாக இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

குருநாதர் பித்தனைப் போன்று இருந்திருந்தாலும்… பல பல முறைகளிலே பல எண்ணங்களை எனக்குள் சொல்லும் பொழுது நான் முதலில் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தான் இருந்தேன்.

அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை. இப்போது நான் சொல்லும் பொழுது உங்களுக்குப் புரியவில்லை… புரியவில்லை… என்று சொல்கிறீர்கள் அல்லவா. சாமி… நீங்கள் சொல்கிறீர்கள்… எங்களால் திருப்பிச் சொல்ல முடியவில்லை…! என்று சொல்கின்றீர்கள்.

அதைப் போன்று தான் குருநாதர் அவர் உடலுடன் இருக்கும் போது எனக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது நான் செவிகளில் கேட்டாலும்
1.ஒரு நிமிடத்தில் கன்னடத்தில் பேசுவார்
2.ஒரு நிமிடத்தில் மலையாளத்தில் பேசுவார்
3.ஒரு நிமிடத்தில் தமிழில் பேசுவார்
4.ஒரு நிமிடத்தில் தெலுங்கில் பேசுவார்
5.இந்த உலகில் எத்தனை பாஷைகள் இருக்கின்றதோ அத்தனை பாஷைகளிலும் ஒவ்வொரு வார்த்தையைச் சொல்வார்.

அதை நான் எப்படிப் புரிந்து கொள்வது…?

எல்லாம் சொல்லி விட்டு நான் என்ன சொன்னேன்…? என்று கேட்பார்.

“தெரியவில்லை” என்று சொன்னால் ஏன் தெரியவில்லை…? என்று கேட்பார். “தெரிகிறது” என்று சொன்னால் என்ன தெரிந்து கொண்டாய்…? என்று கேட்பார். இரண்டுக்கும் நான் விடை சொல்ல வேண்டும்.

இப்படித்தான் என்னைச் சிக்கலிலே மாட்டிப் பல இம்சைகளைக் கொடுத்துக் கொடுத்துத் தான் பல பல முறைகளைக் கையாண்டு
1.என்னுடைய கவனத்தை அவர்பால் திருப்பச் செய்து
2.அவர் என்ன சொல்கிறார் என்று உற்றுக் கவனிக்கச் செய்து
3.அவருடைய சொல்வாக்கின் நிலைகளைப் பதிவு செய்தார்.

அப்படிப் பதிவு செய்த அந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்தாற்போல் அடித்து விடுவாரோ… திட்டி விடுவாரோ… பிடித்து விடுவாரோ…! என்ற
1.இந்த எண்ணத்தைக் கொண்டு தான் அவரைக் கூர்ந்து கவனித்து
2.அவருடைய சொல்லுக்குள் நான் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
3.அந்த ஆற்றல் மிக்க நிலையை எனக்குள் பதிவு செய்தார்.

ஏனென்றால் அந்த அருள் ஞானி அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை என்றாலும் நான் ஜெபமிருந்து வரம் வாங்கி அதை எடுக்கவில்லை.

அவர் உணர்வின் ஆற்றலை எனக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு அவர் சென்ற வழிகளிலேயே அதன் வழிகளில் பின்னாடி அதைப் பின்பற்றும் பொழுது தான் அந்த ஆற்றலின் சக்தியை நான் உணர முடிந்தது. இப்பொழுது அதை உங்களிடம் பரிமாறிக் கொள்ளவும் முடிகின்றது.

விண்ணுலக ஆற்றலையும் மண்ணுலகத்தின் தன்மையும் மண்ணுலகத்தில் விளைந்தது உயிரியலாக மனித உடலுக்குள் உயிர் நிலைகளில் இருந்து மனிதனுக்குள் விளைந்தது எவ்வாறு…? என்ற நிலையை உணர்த்தினார்.

அதை நான் பின்பற்றுவதற்கு எத்தனையோ முறைகளைக் கையாண்டார்.

குருநாதர் ஆற்றல் பெற்ற நிலைகளில் ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில் செயல்பட்டார். ஆனாலும் பித்தரைப் போன்று தான் பல சரீரங்களில் இருந்துள்ளார்.

“பித்தன்…!” என்றால்
1.புறவாழ்க்கையின் நிலைகளை (அதாவது இன்று நாம் வாழும் வாழ்க்கை என்ற நிலைகளை) அப்புறப்படுத்திவிட்டு
2.மெய் ஒளியையே காண வேண்டும் என்ற உணர்வுடன் தான் அவர் கடந்த காலங்களில் செயல்பட்டுள்ளார்.

மெய் வழியில் செயல்பட வேண்டும் என்று அன்று எண்ணி இருந்தாலும் “அவர் எண்ணங்கள் அனைத்தும்” அவருக்குள் விளைவித்த அனைத்தையும் அக்காலத்தில் வாழ்ந்தோருக்கும் சரி… இக்காலத்தில் வாழ்வோருக்கும் சரி… அவர் எண்ண ஒளிகளைப் பதிவு செய்து அவரவர் எண்ணங்களிலே அதை விளைவிக்கும் ஆற்றலாகத் தான் வெளிப்படுத்திச் சென்றார்.

ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில் இருக்கப்படும் பொழுது அவரை அணுகியவர்கள்… சந்தித்தவர்கள்… அனைவருமே
1.சொத்து வேண்டும்… சுகம் வேண்டும்… நோய் போக வேண்டும்,,, வைத்தியம் பார்த்து அதிலே சம்பாதிக்க வேண்டும்…
2.குருநாதரிடம் ஆசி வாங்கினால் வீடு வாங்கலாம் சொத்து வாங்கலாம் வயல்கள் வாங்கலாம் என்ற இந்த ஆசையில் தான் வந்தார்கள்.

ஆனால் நானோ அவரைப் பார்க்கும் போதும் சரி… அவர் என்னைக் கூப்பிட்டுச் சொல்லும் போதும் சரி… இவர் பெரிய மந்திரக்காரர் போல் இருக்கிறது… பித்துப் பிடித்திருக்கின்றார்…! என்ற எண்ணத்தில் அவரை பார்த்தாலே நான் விலகி ஓடிக்கொண்டு இருந்தேன்.

ஆனால் நகர்ந்து விலகிச் சென்றாலும்… “உன்னை விட்டேனா பார்…!” என்று விரட்டிக் கொண்டு வந்தார். தப்பித்து நான் விலகிச் சென்றாலும் கூட அவருடைய மெய் உணர்வின் தன்மையை பல சக்திகளை எனக்குள் பதிவு செய்தார்.

குருநாதர் மெய் ஒளியைக் கண்டு.. இந்த மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று தான்… அவர் விண் சென்றார்.

ஆகவே அவர் எனக்கு உணர்த்திய நிலைகள் கொண்டு
1.ஞானத்தைப் பெற வேண்டும் என்று உண்மையான நிலைகளில் வருபவருக்கு
2.அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் எல்லோருக்கும்… கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே தான் இதை வெளிப்படுத்துகின்றேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் எனக்கு எப்படி ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்தாரோ அதைப் போல் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் செவி வழி கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து… உங்கள் புலனறிவு கொண்டு ஈர்க்கும் நிலையாக… அந்த மெய் ஞானிகள் உணர்வின் சத்தை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

இந்த உணர்வின் நினைவை நீங்கள் கூட்டும் போது காற்றிலிருந்து உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.
1.அத்தகைய பழக்கத்தினைக் கொண்டு வருவதற்குத் தான் தியான வழியினைக் காட்டி
2.அதன் மூலம் உங்கள் சிந்தனையைத் தூண்டச் செய்து
3.காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் ஞானிகளின் அருள் சக்திகளையும்
4.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேராற்றல்மிக்க சக்திகளையும் நீங்கள் பெறுவதற்காக இதைச் செய்கின்றோம்.

ஏனென்றால் அறிந்துணர்ந்து… தெரிந்து கொண்டு அதன் வழிகளில் நீங்கள் பின்பற்றும் நிலைகள் வேறு.

“ஒருவர் நம்மைத் திட்டுகிறார்…” என்ற உடனே அந்த உணர்ச்சிகள் பட்டதும்… நம்மை அறியாமலே
1.அவர் மேல் நமக்கு எவ்வளவு எண்ணங்கள் தோன்றி… சிந்தனைகள் தோன்றுகிறதோ…?
2.அவரை எப்படி உதைக்க வேண்டும்…?
3.எதன் எதன் மறைவிலே அதைச் செயல்படுத்த வேண்டும்…? என்ற “அந்த ஞானம் பேசுகிறது….”

அதைப் போன்று தான் மெய் வழி செல்ல வேண்டும் என்ற உணர்வுடன் ஏங்கி இருப்போருக்கு அந்த ஞானிகளின் ஆற்றல்கள் துரித கதியில் கிடைக்கும்.

ஆகவே எல்லாம் தெரிந்து எடுப்பது என்றால் மிகவும் சிரமம்…!

“எதையோ பின்னிப் பின்னிப் பேசுகின்றேன்…” என்று எண்ண வேண்டாம். இந்தப் பின்னலுக்குள் பல நிலைகள் உண்டு. பல நூல்களின் தன்மை பின்னி வரும் பொழுது தான் எத்தனையோ வகையான துணிமணிகளை நாம் ஆடைகளாக அணிகின்றோம்… அழகுபடுத்தும் நிலையாக அது வருகிறது.

ஆகவே இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வரப்படும் பொழுதுதான் சிந்தனைக்குரிய நிலைகள் கூடி
1.யாம் சொல்லும் தியான நிலையில் வரப்படும் பொழுது பல ஆற்றல் மிக்க நிலைகளைக் குவித்து
2.உங்களுக்குள்ளேயே அருள் ஞான வழிகளை அது காண்பிக்கும்… அருள் வழியிலே செல்லவும் இது உதவும்.

காரணம்… குருநாதர் எனக்கு எவ்வழியிலே காட்டினாரோ அதே போன்றுதான் உங்களை அறியாமலேயே மெய் ஞானத்தின் அருள் வழி நீங்கள் சென்று விஞ்ஞான உலகில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை விடுவிக்கும் சக்தியாக… மெய் வழியைப் பெறும் சந்தர்ப்பத்தையும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்யவும் இதைச் செய்கின்றோம்.

“யாம் முழுமையாகச் சொல்லவில்லை…” என்று சிலர் அந்த ஏக்கத்தில் இருக்கலாம். முழுமையாகச் சொல்வது என்று இல்லாதபடி
1.யாம் பதிவு செய்த நிலைகளை எல்லாம்
2.நீங்கள் தியானத்தில் இருக்கும் பொழுது அந்த உண்மையின் நிலைகள் உங்களுக்கு நிச்சயம் தெரிய வரும்.
3.வளர்ச்சியாக… வளர்ச்சியாக… உங்களுக்குள் “உள்ளிருந்தே அது தெரிய வேண்டுமே தவிர…”
4.வெளியிலே முழுமையாகப் பேசிக் கேட்டு அதைத் தெரிந்து கொள்வதால் பலன் ஏதுமில்லை.

எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் விளையப்படும் போது தான் இருள் சூழும் நிலைகள் குறைந்து… மெய் ஒளியின் ஆற்றல்கள் கூடி… உங்களுக்குள் அறியாது வந்த தீமைகள் குறையும்… அருள் ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகும்… அதைக் கவரும் தகுதியும் உங்களுக்குள் வளர்ச்சியாகும்… நீங்கள் வளர்வதற்கு அது பயன்படும்.

அதனால் தான் சுருங்கச் சொல்லி உங்களுக்குள் பதிவு செய்து… அருள் வழியில் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் இதை உணர்த்துகின்றேன்.
1.ஆகவே எனக்குக் கிடைக்குமா…? என்று நீங்கள் சந்தேகப்பட வேண்டியதில்லை
2.சந்தேகத்தின் நிலைகள் கொண்டு வந்தால் இதைச் செயல்படுத்த முடியாது.

விண்வெளியில் எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் இராக்கெட்டை அனுப்புகின்றார்கள். ஆனாலும் இங்கிருந்து தான் அதை அங்கே இயக்குகிறார்கள்… இயக்க முடியுமா…! என்ற சந்தேக நிலை இல்லை.

ஆக அந்த இயந்திரத்தில் இருக்கும் ஆற்றல்களுக்கும் மனிதன் சொல்லிப் பேசி நாடாக்கள் வழி பதிவாக்கிக் கம்ப்யூட்டர் மூலம் ஆணையிடுவதற்கும் (COMPUTER LANGUAGE) “அது செருகப்படுகின்றது…”

அவ்வாறு செருகி அதிலே பதிவு செய்த நிலைகள் கொண்டு நாடாக்கள் வழி ஆணையிட்டு அந்த இராக்கெட்டை இங்கிருந்து திசை திருப்புகின்றார்கள்… அதை இவர்கள் வசதிக்குத் தக்கச் சீராக்கவும் செய்கின்றார்கள்.

இப்படி…
1.ஆயிரம் டன் எடையுள்ள அந்த இயந்திரத்தையும்
2.மனிதனுடைய எண்ண வலுவானது அந்த எண்ண ஒலிகள் அது இயக்குகின்றது (மனிதனின் எண்ண ஒலிகள் மிகவும் வலு கொண்டது)

அதைப் போன்று தான் குருநாதர் காட்டிய வழியில் “உயர்ந்த சக்திகளை” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்… ஒரு கம்ப்யூட்டர் மூலம் அங்கே இராக்கெட்டை இயக்குவது போன்று.

இன்னும் சிலர்… இத்தகைய முக்கியமான விஷயங்களை எல்லோருக்கும் சொல்லி ஏன் இதைத் தெரியப்படுத்தவில்லை…? என்று நினைக்கலாம்.

1.உண்மைகளை வெளிப்படுத்தி… ஆர்வத்தைத் தூண்டி… அதன் மூலம் அவர்கள் வருவதைக் காட்டிலும்
2.”மெய் ஒளியைப் பெற வேண்டும் என்று ஆசையைத் தூண்டி…” அதன் வழி வருவது தான் முக்கியம்.

முக்கியமான நிலைகள் என்று பெறுவதற்குரிய நிலையில் இருந்தாலும் அதை விளம்பரம் செய்யாதபடி
1.”விளம்பரத்தைச் செய்து…” பெரும் ஆசைகளை ஊட்டுவதைக் காட்டிலும்
2.”தான் பெற வேண்டும்…” என்று ஆசை அவரவர்களுக்குள் உந்தப்பட்டு
3.அதை மையமாக வைத்து வரும் பொழுது தான் ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளைக் கிடைக்கப் பெறச் செய்ய முடியும்.

சாமி நமக்கு எல்லாவற்றையும் சொல்வார்… சாமி நமக்குச் செய்து கொடுப்பார்… ஆகையினால் சாமியைச் சந்திக்க வரலாம்…! என்று அத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டி… இந்த உணர்வின் வேட்கைகள் வரும் பொழுது “அது உங்களுக்குள் நிலைத்திருக்காது…”

தான் உள்ளத்தால் உண்மையான நிலையில் வேட்கைகள் உருவாகி அந்த வேட்கையின் அடிப்படையில் வரும் பொழுது தான் அந்த அருள் வழியைப் பெறும் தகுதி பெற முடியும்.

மெய் ஞானிகள் சென்ற அருள் வழி கொண்டு
1.“உங்கள் உணர்வுகளை ஒளியாக மாற்றும் வல்லமை உங்களுக்கே கிடைக்கும்…!”
2.அதைக் கிடைக்கச் செய்வதற்குத் தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு அடிக்கடி உபதேசிப்பது.

February – 2025 உபதேசம்

அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்

 

சில உடல்களில் சில ஆன்மாக்கள் இருக்கும்… எதிர் நிலையாக அது இயங்கும். தியானத்தில் அமர்ந்தால் செய்ய விடாது. இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அந்த ஆன்மாக்களுக்கு இணைக்கப்படும் பொழுது நன்மை செய்யும் சக்தியாக மாறும்.

ஆனால்
1.அப்படியே விட்டுவிட்டால் குடும்பப் பற்றை இழக்கச் செய்து விடும்… பல துன்பங்களை அனுபவிக்க நேரும்.
2.குடும்பப் பற்றை இழந்த ஆன்மாக்கள் தான் இன்னொரு உடலுக்குள் வந்தால் அதே உணர்வை இயக்கும்.

எந்த உடலிலிருந்து இயக்கியதோ அவர்களைக் குற்றவாளியாக ஆக்கிடாது குற்றத்திலிருந்து மாற்றிட அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தொடர்ந்து எடுக்க எடுக்க அந்த ஆன்மாக்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்க… அந்தத் தீமைகளிலிருந்து நாம் விடுபடலாம்.

அந்த ஒரு பக்குவத்திற்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

அருள் வாழ்க்கை வாழ்வீர்கள். அனைவரையும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தி உங்களிடம் பெருகும். உங்கள் பார்வையால் அனைவரும் நலம் பெறுவார்கள்.
1.அனைவரும் ஆனந்தப்படும் அந்த நிலையை நீங்களும் கண்டு உங்கள் உடலில் ஆனந்தம் என்ற பேரானந்த நிலையைப் பெறுங்கள்.
2.பல நிலையில் ஆனந்தப்படும் பொழுது பேரானந்தம் வருகின்றது.
3.ஒருவர் என்ற நிலையில் ஆனந்தம் வருகின்றது… அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றால் பேரானந்தமாகின்றது
4.உங்கள் பார்வையில் அனைவரும் நலம் பெற வேண்டும்
5.அதை கண்டு நீங்கள் பேரானந்தப்படும் நிலைக்கு வர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நோயாக இருக்கிறது என்று என்னிடம் கேட்காதீர்கள். என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் குழந்தைகளுக்கு திருமணம் ஆக வேண்டும் அந்த அருள் வேண்டும் தொழில்கள் வளம் பெற வேண்டும் எங்களுக்கு வரவேண்டிய பாக்கி வர வேண்டும்… அதற்கு அந்த அருள் வேண்டும் என்று இப்படிக் கேட்டுப் பாருங்கள்.

இந்த உயர்ந்த நிலைகள் வர வர தன்னாலே அந்தப் பணங்கள் வந்து சேரும். பார்க்கலாம். உங்கள் எண்ணம் அவர்களை உயர்த்தும்… வருவாயை உயர்த்தும். பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஊட்டும்.

சிறிது கால தாமதமாகும்.

ஆனால் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டோம் என்றால் வருவதையும் தடுத்து நிறுத்திவிடும். சங்கடப்பட்டால் அவர்களுக்கும் அதே நிலையினை இயக்கி விடும். அவர்களுக்கும் வருமானம் வராது… நமக்கும் வராது.

ஏனென்றால் கொடுக்க முடியவில்லை என்று எண்ணும் போது அங்கே சங்கடம்

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அவர்களுக்கு வரவு வரும் நமக்கு கொடுப்பார்கள் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நொடியிலும் பிறருடைய குறைகளை எண்ணாது அவர்கள் நிறைவு பெறுவர் நமக்கு வருமானம் வரும் என்று
1.நிறைவான உணர்வை எடுத்தால் நிறைவான உணர்வாக வழி அமைக்கின்றது.
2.நம் சொல்லைக் கேட்போர் நிலைகள் நிறைவான மனங்களாக வருகின்றது.
3.வாழ்க்கையில் மகிழும் உணர்வுகளே அங்கே இயக்கத் தொடங்குகிறது.

ஆகவே அருள் வாழ்க்கை வாழ்வோம். பேரானந்தம் பெற்று ஏகாந்த நிலை என்று ஏகாதசி என்ற பத்தாவது நிலைகளை நாம் அடைவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான் சிஷ்யன்”

 

மனிதனின் நெற்றியும்… நெற்றிப்பொட்டில் அறுகோணக் கருவறை குணங்களும்… சிருஷ்டியையே… சிருஷ்டியைப் பிணைத்திடும் செயலும் காட்டப்பட வேண்டும்.
1.இந்த நிலை உணர்ந்து கொண்டால்
2.இவைகள் குவிப்பு “அகஸ்திய போக இடும்ப சூட்சம இரகசியங்கள்…!”

“மகரிஷிகளின் சர்வோதய சக்தி” வலுக்கூட்டும் கூட்டு தியானத்தின் போது கார்மேக வான் எழுந்த ஓசையுடன் விண் நீர் பெய்திடும் சூழலில்… தியானத்தின் ஈர்ப்பலையாக மின் நுண் காந்த சக்தி எனும் பதிவு படுத்திட்ட நிலை நிறைவின் போது… உபதேச உரையாக உரைத்திட்டதன் செயலில் “கர்ம தியாகம்” என்ற சூட்சமம் உள்ளது.

சூரியனை எண்ணி ஈர்த்திடும்… “ஓர் ஜெப மந்திரம் – கர்ண முறை வழி” என்று இரகசியப்படுத்தப்பட்டு உலகினுக்கு உரைத்திடாத் தன்மையாக வந்தது தான்.
1.ஆசான் சிஷ்யனுக்கு வெளியில் நீ இதை உரைத்திட்டால் உரைப்பவன் நரகம் எய்துவான்
2.ஆனால் இந்த வேத மந்திரம் கேட்பவன் சொர்க்கம் பெறுவான்.
3.இருந்தாலும் “இதை வெளியில் உரைத்திடாதே…!” என மொழிந்தார் ஆசான் தன் சிஷ்யனிடம்.

ஆனால் அப்பொழுது மௌனமாக அமர்ந்திருந்த அந்த சீடன் காலைப் பொழுதில் உயர்ந்த ஓர் மதில் மீது நின்று அனைவரையும் அழைத்தான்
1.எல்லோரும் நன்நிலை பெற்றிட வாருங்கள் என்று
2.அவன் ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான்…”

ஆசான் கனன்று எழுந்து… அடா… என்ன காரியம் செய்தாய்…! இரகசியப்படுத்தப்பட்ட நிலையை உரைத்தாயே… ஏன்…? என்று கேட்கின்றார்.

சீடனோ… “கேட்டவர் அனைவரும் சொர்க்கம் புகுவர்” என உரைத்த ஆசானே…!
1.இதோ இத்தனை ஆத்மாக்களும் கடைத்தேறட்டும்…
2.நான் ஒருவன் மட்டும் கேட்பதில் “ஸ்ரீமன் நாராயணன் பதம் பெறுவேன்…” என்ற எண்ணத்தை
3.இதோ…! இங்கே குழுமி இருக்கும் சிரத்தை மிக்க ஆத்ம ஜீவன் ஒவ்வொருவரிலும் நான் அந்தப் பரந்தாமனையே காண்கின்றேன்.
4.இந்தக் “கர்ம தியாகம்” உள்ளன்புடன் உவந்த எனக்கு “என் நிலை செய்வதாகிலும் ஆகுக…! என்றே உரைத்திட்டான்.

அப்படி வெளிப்படுத்திய அந்தப் பெரியோர் இன்றும் ஒளி நிலை பெற்றிருக்கின்றனரப்பா.

அதே சமயத்தில்… மறைமுகப்படுத்துவது வளர்ச்சிக்கே…!

நுணுகி ஆய்வு செய்திடும் சிந்தனையின் வளர்ச்சி… பக்குவம் கொண்டிட்ட நிலையின் அடுத்த வளர்ச்சிக்கு “மகரிஷிகள் உவந்து வழிகாட்டுகின்றார்கள்…”

நீர் பாய்ச்சித் தானியங்கள் விளைச்சல் எனும் மகசூல் பெற்றிடும் ஓர் உழவன் “கேணியில் நீர் நிறைந்திருக்கின்றதே…!” என்று உட்கொண்டிடும் தேவைக்கு மேல் பாய்ச்சிட்டால்… வளர்ப்பின் பலன் செழிப்பைக் காட்டினாலும்… பெற்ற பயனைப் பெற்றுத் தந்திடும் சூட்சும நிலை காட்டிடாது.

1.பக்குவம் கண்டு உபதேசங்கள் அளிப்பதில் தடை ஒன்றுமில்லை.
2.மாமகரிஷிகள் ஆசிகள் என்றும் உனக்குத் துணை நிற்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக செல்ஃபோன்களில் அதற்குள் இயங்கக்கூடிய நிலைகளில் மிகவும் நுண்ணியதாக சிறிதளவே கொடுத்துள்ளார்கள்.
1.ஆனால் அதிலே பல இலட்சக்கணக்கான உணர்வுகளைப் பதிவு செய்கின்றனர்.
2.அதை வைத்து நாம் இயக்கப்படும் பொழுது பலரிடம் நாம் தொடர்பு கொள்கின்றோம்… இயக்குகின்றோம்

இதைப் போன்று தான் நாம் கோபப்பட்டவர் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் அவனை எண்ணியவுடன் நமக்குக் கோபம் வருகிறது. சோர்வடைந்து வேதனைப்படும் பொழுது சிந்தனை குறைகிறது.

இது எல்லாம் நமக்குள் இயக்கும் தன்மைகள்.

ஆனால் அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதன் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது “நாம் எண்ணும் போதெல்லாம்…” உடனே அந்தச் சக்திகளைக் கவர்ந்து நம் உடலில் நல்ல இரத்தங்களாக உருவாக்க முடியும்.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுக்க முடியும்.

வேதனையான உணர்வுகளைச் சுவாசித்த பின் அந்த விஷத்தன்மைகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் பட்ட பின் அவை மயக்கம் அடைகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தத்தில் அதைக் கலக்கச் செய்தோம் என்றால் அது விஷத்தை எல்லாம் ஒடுக்கியது… அப்போது நமக்குள் அது உற்சாகத்தை ஊட்டுகின்றது.

நம் உயிர் எப்படி உலக உணர்வின் தன்மை அறிவிக்கின்றதோ இதைப் போன்று
1.தடையின்றித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
2.உடலுக்கு பின் உயிரைப் போன்று உணர்வுகளை ஒளியாக மாறற முடியும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
3.இப்படித்தான் அகஸ்தியன் ஒளி நிலை அடைந்தான்… அவனுக்குள் கற்றறிந்த உணர்வின் துணை கொண்டு
4.அதே போன்று நாமும் அடைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் (ஞானகுரு) பல காடு மேடேல்லாம் அலையச் செய்தார்.
1.இயற்கையில் சூழ்நிலைகள் எப்படி மாறுகின்றது…?
2.தாவர இனங்கள் எப்படி மாறுகின்றது…?
3.வலுவான தாவரங்களின் மணத்தைக் கண்ட பின் மற்ற வலுவற்ற தாவரங்கள் எப்படி அஞ்சி ஓடுகின்றது…?
4.ஓடிய உணவுகள் மற்றொன்றுடன் மோதிக் கலந்து புதுப்புது வித்துக்களாக எப்படி உருவாகின்றது…?
5.விஷத்தன்மையும் வளர்கின்றது விஷமற்ற உணர்வுகளும் வளர்கின்றது அது எல்லாம் எப்படி…? என்று காட்டினார் குருநாதர்.

அது எப்படியோ அதே போல் தான் ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் உணர்வுகள் எத்தனை வகையான உணர்வுகளாக உடலுக்குள் சென்று அது தொடர்ந்து இயக்கி விடுகின்றது.
1.உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போராக நடக்கின்றது
2.உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராக நடக்கின்றது.
(வேதனை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராகின்றது)

மகாபாரதப் போர் என்றால்… இந்த மனித உடலுக்குள் எத்தனையோ வகையான செய்திகளைக் கேட்கின்றோம் நமக்குள் அந்தப் பதிவுகள் உண்டு.

அதிலே நல்ல அணுக்களும் உண்டு… ஆனால் வேதனைப்படும் உணர்வுகள் அந்தக் கணக்கு அதிகரித்து விட்டால் கலக்கமும் சஞ்சலமும் வெறுப்பும் வேதனையும் கொதிப்படையும் தன்மையும் ஆகி “தன் நிலையை…” சீராக ஆக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.

உற்றுப் பார்த்து நம் கண்களால் கவரப்படும் பொழுது அது எந்த உணர்வோ உயிரிலே படும் பொழுது “கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் குருக்ஷேத்திரப் போர்…”

கண்கள் கவர்ந்தது உயிரிலே பட்ட பின் அந்த நாதங்கள் உடலுக்குள் உணர்ச்சிகளாக இயக்குகின்றது. நல்லது என்றால் மகிழ்ச்சி அடைகின்றது தீமை என்றால் குருக்ஷேத்திரப் போராக நல்ல உணர்வுக்கும் நாம் நுகர்ந்ததற்கும் போர் நடக்கின்றது.

தீமை என்றால் உடலுக்குள் புகுந்து விடுகிறது. உடலுக்குள் சென்றால் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான். அந்த வலுவான உணர்வுகள் அனைத்தையும் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் சேர்த்து விடுகின்றது இதே கண்கள் தான்.

அந்த வெண்ணையைத் திருடிய பின்…
1.எதனுடைய உணர்வு அதிகமோ உடலை விட்டுச் சென்ற பின்
2.அதனுடைய ஈர்ப்பிற்குள் அழைத்துச் சென்று விடுகின்றது உயிர்.

கண்கள் தான் (கூர்மை) அர்ஜுனன் அதாவது அர்ஜுனன் என்பது வலிமை…! எதையும் தாக்கும் வலிமை பெற்றது.. அந்த உணர்வுடனே உடலை விட்டு வெளியிலே செல்கிறது.

அதாவது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாக இருந்து வழி நடத்துகின்றான்…! உடலுக்குள் நாம் நுகர்ந்தவைகளின் வலிமை கொண்டு அடுத்த உடலுக்குள் அழைத்துச் செல்கிறது என்று காவியங்கள் நமக்குத் தெளிவாக இந்த உண்மைகளை உணர்த்துகின்றது

1.வியூகத்தைத் தகர்த்து அதற்குள் சென்று நீ அதுவாக ஆகு…! கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது.
2.எதன் உணர்வோ… அதனுடைய வலிமைக்கொப்ப அதனுடைய எல்லையை அடையும் நிலை வருகிறது.

இது எல்லாம் நம்மை நாம் அறிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளை ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம்… காய்கறிகளை எல்லாம் வேக வைக்கின்றோம் வேக வைத்துத் தான் உணவாக உட்கொள்கிறோம். வேக வைத்து விட்டால் அந்தக் காய்கள் மீண்டும் முளைப்பதில்லை.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் தீமைகள் வந்தால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடனடியாகச் சேர்த்து
2.அந்தத் தீமைகளைப் பலவீனப்படுத்திப் பழகுதல் வேண்டும்

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான்…! என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்

எத்தனையோ கோபம் ஆத்திரம் குரோதம் வெறுப்பு பயம் வேதனை இவைகளெல்லாம் நாம் அன்றாடம் சந்திக்க நேர்கிறது. இதற்கு வாலி என்று பெயர்.

அத்தகைய குணங்கள் நமக்குள் வந்த பின் அதனுடைய வலிமையைக் காட்டிவிடும்… அப்போது நம் நல்ல குணங்கள் செயல் இழந்துவிடும்.

எப்படி…?

சந்தோஷமாகத் தான் நாம் இருப்போம்… ஆனால் வேதனைப்படும் செயல்களைப் பார்த்து விட்டால் அந்தச் சந்தோஷம் அங்கே இழக்கப்படுகின்றது.

அதே போல் ஒரு கோபப்படுவரைப் பார்த்தவுடன் அந்தச் சந்தோஷம் மாறி அது வாலியாகி அதனின் உணர்வாக நம்மை மாற்றிவிடுகிறது.

இராமன் குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் எய்து அந்த வாலி வெளியே வராதபடி அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான். அப்போது வாலியின் செயல்கள் தடுக்கப்படுகின்றது.

ஆகவே… நம் வாழ்க்கையில் தீமை வந்தால்
1.நமது எண்ணத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து தீமையான உணர்வை அடைத்துப் பழகுதல் வேண்டும்.

உயிரிலே பட்டால் தான் இயக்கும்.

உதாரணமாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்… காற்றடிகிறது. தவறிப்போய் அந்த நெருப்பிலே ஒரு மிளகாய் விழுந்தால் என்ன செய்யும்…?
1.நெருப்பிலே பட்டபின் நெடி வரத்தான் செய்யும்
2.நம்மை அறியாமலே தும்மலும் வரத்தான் செய்யும்.

அதைப் போன்றுதான்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டால் அது அதனின் உணர்ச்சிகளை ஊட்டியேவிடும்.
2.தீமையான உணர்வுகள் பட்டால் அதை உயிர் இயக்கிவிடும்…
3.தெரியாமல் பட்டாலும் அதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…?

அதற்குத்தான் அவ்வப்பொழுது உங்களுக்குத் தியானப் பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

தீமை என்று பார்த்தாலும் நாம் அதை நுகர்கின்றோம்… நுகர்ந்த பின் அதை அறியவும் முடிகின்றது. அறிந்தாலும் உயிரிலே பட்டு உடலுக்குள் சென்றால் கடுமையாகும்.

குழம்பிலே அளவுடன் மிளகாயைப் போட்டால் ருசியாக இருக்கின்றது காரம் அதிகமாகி விட்டால் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகிறது… எரிச்சலாகிறது.

இதைப் போன்று தான் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கோபமோ குரோதமோ வெறுப்போ பயமோ வேதனையோ உயிரிலே பட்ட பின் அறிந்து கொள்கின்றோம்.

அறிந்தாலும்…
1.உடனே அடுத்த கணம் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இடைமறித்து அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.
3.புருவ மத்தி வழி கூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுக்க வேண்டும்… உயிர் வழி…! (இது முக்கியமானது),

இவ்வாறு தீமைகளை அடைத்துப் பழகுதல் வேண்டும் ஏனென்றால் நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டுத் தான் இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் செல்லும்.

ஆனால் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து… உயிருடன் ஒன்றி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதன் வழி இழுத்தால்
2.அங்கே புருவ மத்தியில் வலு கூடுகின்றது
3.அடுத்து அதே நினைவினைக் கண்களை மூடி உடலுக்குள் செலுத்தினால் மிகவும் ஆற்றல்மிக்கதாக மாறுகிறது.

கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் நாம் செலுத்த வேண்டியது:-
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும்
3.எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
4.எங்கள் நரம்புகள் முழுவதிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள்ளும் ஊனை உருவாக்கிய அணுக்களுக்குள்ளும்ம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
6.”ஒரு நொடிக்குள்…” இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி விட்டால்
7.நாம் நுகர்ந்தறிந்த தீமை உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன் இது மாற்றிக் கொண்டு வருகிறது.

நண்பனாகப் பழகுகிறோம்…! இருந்தாலும் சந்தர்ப்பத்தில் பகைமையாகி விடுகிறது. திடீரென்று அந்த நண்பன் நினைவு வந்தது என்றால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் “துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் உருப்பட மாட்டன்,,,!” என்று நம் கண்ணின் நினைவைப் பாய்ச்சினால் அது உடனடியாகப் போய் அவனைத் தாக்குகிறது.

அதே போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி எடுத்து
2.நம் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் அதைப் பாய்ச்சி விட்டால்
3.அதாவது தீமையை நுகர்ந்த அந்தச் சந்தர்ப்பத்திலேயே இதைப் பெருக்கி விட்டால்
4.விஷமான உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ வெளியிலிருந்து அது இழுக்கும் சக்தி குறையும்
5.உடலுக்குள் அத்தகைய அணுக்கள் இருந்தாலும் அதற்குண்டான ஆகாரம் கிடைக்காதபடி தடையாகும்
6.புறத்திலே குழம்பை நாம் சுவையாக்கிக் கொண்டு வந்தது போன்று சுவை மிக்க உணர்வாக நமக்குள் படைக்க முடியும்.

செய்து பாருங்கள்…!

புருவ மத்தியில் உயர்ஞான நற்குணங்கள் மோதினால் “மனிதன் சிருஷ்டிக்கும் பிரம்மன்”

 

சிருஷ்டியின் தொடராக மகரிஷிகளால் மறைமுகப்படுத்தப்பட்ட நிலைகள் தெளிவு பெறும். படைப்பாக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொள்ளும் செயலில்
1.சிதாகால மண்டலம் என்றே தன்னுள் கவன ஈர்ப்பு நரம்பு நெற்றி பொட்டினுள் எண்ணங்களும்…
2.எண்ணத்திற்கொப்ப வாசனைகளும் வாசனைக்கொப்ப ஜீவன் கொண்டிடும் அணுக்களின் செயலாக
3.சிருஷ்டிக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பிரம்மனே.

உலகோதய நிலை நாடிடும் மனிதன்… நொடிப்பொழுதினுள் அதற்கும் குறைவாக உயிரணுக்கள் எண்ணத்திற்கொப்ப ஈர்த்து… சிருஷ்டியின் செயல் உலகோதய நாட்டமாக மோகத்தின் குணங்கள் முதன்மையாகக் கொண்டிடும் பொழுது… சரீரத்தின் சகல அணுக்களும் சக்தி கொண்ட சூட்சுமம் “ஓம்” பொருள் என்னும்… ஓங்கார ஒலி கொண்டு ஒளி காட்டும் “தன் ஆத்ம வலுவை உணர்வதில்லை…”

வேல் என்ற அறிவு நற்குணங்கள் என்ற முருகன் கைக்கொள்ளும் செயலில்… அகங்காரம் ஆணவம் மோகவலைப்படுத்தும் “சிருஷ்டி என்றிட்ட குணங்களென்னும் பிரம்மன்…” தன் செயல் ஒழித்து நற்குணங்கள் வசம் சிறைப்படுகின்றான்.

பின் துர்க்குணங்கள் தன் செயல் விடுக்க
1.நற்குணங்கள் சிருஷ்டிப்பதே அதுவும் பிரம்ம தத்துவமாக
2.உலகோதயம் எனும் ஈர்ப்பின் நிலை விடுத்து கை கொண்ட அறிவாகக் காட்டுவதே
3.சிருஷ்டியையே முருகன் சிருஷ்டித்தான்… “பிரம்மாவைச் சிறை பிடித்தான்…!” என்று சொல்வதில் ஓர் சூட்சமப் பொருள் உண்டு.

நெற்றிப்பொட்டு எனும் கவனத்தின் ஈர்ப்பில் உள் நுழைந்திடும் ஈர்ப்பினும் எண்ண நினைவலையாம்… அணுக்கள் அறுகோணக் கருவறை என்ற அறிவின் சூட்சமம் செயல் கொண்டிட… அணுக்களின் எந்த வீரிய குண சக்தியோ அந்தச் சக்தியே செயலாக வேல் தோன்றுவதும் தோன்றாதிருத்தலும் துர்க்குண சம்ஹாரச் செயலுக்கு மனிதன் கொண்டிடும் வைராக்கியம் அந்தச் செயலின் வலுக் கூட்டும்.

1.சப்த கன்னிகள் சாப விமோசனம் என்பதுவும் சூட்சமப் பொருள் தான்
2.ஒளி கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் சப்தத்தின் நாத வாகினி “உலகத்தின் ஈர்ப்பில் செயல்படுவது சாபம்…”

அத்தகைய சிருஷ்டி அன்றி “சக்திவேல் எனும் அறிவு செயல் கொண்டிட…” உலகோதயம் மாற்றிட்ட சப்த நாதங்களைத் தன்னுள் மெய் ஒலி ஒளி சக்தியாகச் சப்தரிஷிகளின் படைப்பே “நேர்முகமாகக் கொள்தல் என்பது ஈர்ப்பின் நிலை விடுத்த சாப விமோசனம்…”

1.எண்ணத்தின் உயர்வே அறுகோணக் கருவறை உயர்த்திட்ட பீடம்…!
2.அதனில் உயிராத்ம சக்தியை அளந்திடச் செய்திட “நீல வண்ணம்” காட்டும் குளிர்விப்பு சக்தியாகத் தோற்றம் காட்டும்.

பர வெளியில் உருக்கொள்ளும் உயிரணுக்கள் அதனின் சுழற்சி அறுகோணத் தன்மையதாய் அமில குண ஈர்ப்பின் எண்ணம் கொண்ட ஜீவன் பெறுகின்றது. சிருஷ்டியின் இரகசியங்களை இப்படி பிண்டத்தில் கண்டனர் மகரிஷிகள்.

சரீரத்தில் கண்ணுற்ற செயல் எண்ண ஜீவித செயல்பாடு “சிரசின் நெற்றிப் பொட்டில் அறுகோணக் கருவறையாக”
1.அதனுள் எண்ண குண வாசனை சுவாச அலை எனும் ஈர்ப்பாகச் செயல் கொண்டிட
2.சிவசக்தி சுழுமுனை நாடிகள் மூலாதாரம் தொடங்கி பிடரிக்கண் பார்வையுடன் இணைந்து கொண்டு
3.அறுகோணக் கருவறையின் உள் நிகழ்வாகச் செயல் கொண்டு எண்ணங்களின் ஜிவித சிருஷ்டியே நடைபெறுகின்றது.

பர வெளியின் உயிரணுக்கள் தன்மையில் உள்நிகழ்வாகச் செயல் கொண்டிடும் சூட்சுமங்களை… சித்தர்கள் மனித சரீரத்தில் செயல் கொண்டிடும் சூட்சுமத்தையே ஒப்பு நோக்கி… உதயம் கொண்டிடும் அணுக்களின் தன்மையை உணர்த்தினர்.

அணுக்களின் செயல்பாட்டைச் சரீர நிகழ்வாகக் கண்ட மாமகான்கள்
1.சிவன் கையில் முத்தலை சூலாயுதம் சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் என்றே
2.”சூல்” என்று அணுக்களின் ஜீவித செயலின் கரு என்றே மறைபொருள் காட்டினர்.

ஏழு பிறவிகள் என்று கூறியவற்றுள் அணுக்களின் உதயம் காட்டிடும் செயலில்… “அறுகோணங்கள்” உலகின் ஜீவித அணுக்கள் கொண்டிடும் “பிறப்பின் இரகசியங்கள்” எனவும்… அந்த உயிரணு தனக்கு ஒத்த அமில குணத்தன்மைகள் ஈர்த்துக் கொண்டிட்டு அறுகோண சூட்சுமத்துள் எந்நிலை வலுக்கொள்கின்றதோ அதுவே அந்த உயிரணுவின் ஜீவித நிலை.
1.அறுகோணத்தின் மையப் பகுதியே
2.தெய்வப்பிறவி எனும் ஏழாம் நிலை.

அறுகோணச் சக்கரம் என்று உரைத்த பின்பு… வாசனையின் குணங்கள் மனிதச் சரீரத்தினுள் கவன ஈர்ப்பெனும் நெற்றிப்பொட்டில்… அறுகோணங்களின் உட்குவிந்த பகுதிகள் நற்குணங்கள் எனவும்… பிறப்பின் சூட்சுமத்தில் தாய்மைப் பேறு குழந்தைக்கு ஊட்டுவது அன்பு பரிவு பாசம் என்ற முத்தொடர்களும்… உயிரணு கருக் கொண்ட நிலைத் தொட்டு ஜீவித சரீரம் பெற்றிடும் எண்ணத்தின் ஈர்ப்பில் தாய்மையால் ஊட்டப்படுகின்றது.

ஞானம் வீரம் சாந்தம் என்றிட்ட குணங்களுக்கே… உள்முகமாக உயிராத்ம சக்தி வலுக் கொண்டிடும் அந்தச் செயலுக்கே
1.அந்த மூன்றின் குணங்களுக்கு வீரிய சக்திகளை
2.ஈர்ப்பினால் ஊட்டப்படல் வேண்டும் “அதுவும் தியானம் கொண்டே…”

சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் “இடப்பக்கம் வளைந்திட்ட நிலை கரு கொண்டிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு… பின்பு அந்த உயிரணுவைப் பேணுகின்ற தன்மை மையப் பகுதியின் கூர்வேல்… முத்தலை சூலாயுதத்தின் வலப்புற வளைவே அந்த ஜீவனை ஈன்றிடும் தாய்மைப் பெறும் என…” – சிருஷ்டியின் இரகசியங்கள் காத்தலாகக் கரங்களில் கொண்ட நிலையும் “சித்தர்களால் கட்டப்பட்டதே…”

ஈஸ்வரரின் கையில் முத்தல சூலாயுதம் உயிரணுக்கள் உதயம் காட்டித் தாய்மைப் பேற்றின் முழுமைக்கு அளித்தலால்… ஈஸ்வரர் கொண்ட முத்தலை சூலாயுதம்
1.சரீர அமைப்பில் சிவசக்தி நாடிகள் சுழுமுனையில் ஒன்றி உயர் ஞானம் வாய்க்கப் பெறின்
2.அங்கு “சோமாஸ் ஸ்கந்தன்” (சிவம்+சக்தி+முருகன்) உதயமாகின்றான்.

சூரிய சந்திர ஒளி பெற்றவன் என்ற பெயர் நாமச் சூட்சுமம் மூலாதாரச் சக்தியாக எழுகின்ற ஊர்த்துவ சக்தி… அருகோணக் கருவறையுள் முத்தலை சூலாயுதம் செயல் கொண்ட நிலை… ஞானவேல் என்ற சக்தியாகக் காட்டுவது…
1.உயர் ஞான நற்குண எண்ணங்கள் நெற்றிப்போட்டில் மோதிடும் செயலாக
2.தெய்வப் பிறவி எனும் மைய நிலையை அறிவால் பொருத்தி… சுடர்தலால் “மனிதனே சிருஷ்டிக்கும் பிரம்மன் ஆகின்றான்…”

பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மை பெற முடியும்

 

அகஸ்தியன் தன் வாழ்நாளில் தாய் கருவிலே வளரும் பொழுதே நஞ்சினை வென்றிடும் உணர்வினைப் பெற்று… பிறந்து வளரும் பொழுது அதே ஆற்றலை வளர்த்து அவன் வாழ்நாளில் அனைத்து அறிவினையும் அறிந்திடும் உணர்வு பெற்றவன்.

1.அகஸ்தியன் அவனது வாழ்க்கையில் சர்வ ஞானமும் பெற்று
2.அதன் வழி கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் துருவனாகி துருவ மகரிஷியான அந்த உணர்வுகள் அனைத்தும் எதை உற்று நோக்கியதோ
3.அந்த உணர்வின் துணை கொண்டு அங்கே நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்த்தும் வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் உணர்வுகளை நுகர்ந்தவர்கள் அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

நாம் நமது வாழ்க்கையில் இதற்கு முன் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த உணர்வுகள் நம் உடலில் கலந்து இருப்பினும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உடலுக்குள் செலுத்தி அந்த நஞ்சான உணர்வை மாற்றி
2.அனைத்தையும் அறிந்திடும் அறிவென்ற உணர்வினை நமக்குள் வளர்த்து
3.இந்த வாழ்க்கையில் தீமைகள் நமக்குள் வந்தாலும் அதனைச் சமப்படுத்தி
4.நமது உடலில் ஒளி உணர்வைக் கூட்டும் சக்தி பெறச் செய்யும் நிலையே நாம் எடுக்கும் தியானம்.

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் சக்திகள்… ஒரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறையாக மோதும் பொழுது தான் மின்னல்கள் வருகின்றது.

இந்த மின்னல் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த மின் அலைகள் வெகு தூரம் பரவுகின்றது.
1.அப்படி வரக்கூடிய உணர்வுகளை அகஸ்தியன் நுகர்ந்தறிந்து தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை ஒளிமயமாக ஆக்கிக் கொண்டான்.
2.அதன் வழி தான் விண்ணுலகை உற்று நோக்கி உணர்வை ஒளியாக மாற்றி
3.துருவத்தின் வழி வரும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது.

அந்த உணர்வை நமக்குள் பெற்றால் இந்த 27 நட்சத்திரங்களும் எதிர்நிலை கொண்டு அது மின்னலாக மாறும்பொழுது ஒளிக் கற்றைகள் பரவுவதை…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் இருப்பதனால்
2.அதை எளிதில் நம் உடலுக்குள் கலந்து எல்லா அணுக்களுக்கும் அதைக் கொடுக்க முடிகின்றது.

உதாரணமாக… வேதனைப்பட்ட ஒரு மனிதனின் உணர்வை நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தால் அவன் நினைவு வரும் பொழுதெல்லாம் அதே வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இதைப் போன்று 27 நட்சத்திரங்களும் இந்தப் பிரபஞ்சத்திற்குப் பல உணர்வுகளை இயக்கக்கூடிய சக்தி பெற்றது. 27 நட்சத்திரங்களின் இணை சேர்த்த உணர்வு கொண்டுதான் ஒவ்வொரு உயிரும் அந்த உணர்வினை அணுக்களுக்குள் சேர்த்தது தான் அணுத் துகள்களும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு நமது வாழ்நாளில் அதைத் தியானித்துக் கொண்டே வந்தோம் என்றால் அந்த வலுவை நமக்குள் பெற்ற பின்
1.உடலை விட்டுச் சென்றால் அங்கே அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் தான் நமது உயிரான்மா நிலைகொள்ளும்.
2.உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விட்டு என்றும் நிலையான சரீரமாக முழுமை பெறும்.

இந்தச் சூரிய குடும்பமே… சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரமும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் அனைத்தும் என்றும் அழிவில்லாத நிலைகள் கொண்டு வேகா நிலை அடைந்தது.

1.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றி அகண்ட பேரண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உணர்வின் சக்தி வருகின்றது
2.சூரியன் அழிந்து விட்டால் அதனின் பிடிப்பை அறுத்து ஏகாந்த நிலை கொண்டு
3.எதனையும் இருந்த இடத்திலிருந்து கவர்வதும் பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மையும் பெற முடியும்.

இப்படிப்பட்ட சூரியக் குடும்பங்கள் பேரண்டத்தில் எண்ணிலடங்காது உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உடல் முழுவதற்கும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுவதற்குத் தான் இங்கே பயிற்சி கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நம் கண்ணின் கரு விழிக்குள் இருக்கும் கருமணி தான் எல்லாவற்றையும் படமாக்கிக் கொடுக்கின்றது…
2.அதனுடன் தான் எல்லா வயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றது…
3.வெளியிலிருந்து எடுத்துக் கொடுப்பது அது தான்.

வேதனை வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நாளடைவில் அந்தக் கருவிழி மாசுபட்டு விடுகின்றது. விஷத்தின் தன்மை முன்னணியில் இருந்தால் அது அதிகரித்துக் கருமணிகள் விஷத்தன்மை அடைந்து விடுகிறது.

நம்மை அறியாமலே விஷத்தின் தன்மை அடைந்து உடலுக்குள் பரவப்பட்டு உடலில் கடும் நோயையும் உருவாக்கி விடுகின்றது.

கண்ணுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலங்களிலும் விஷத்தின் தன்மை கவர்ந்து கொண்ட பின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமாகி கண் பார்வை மங்கி விடுகின்றது… அல்லது இழந்து விடுகிறது.

எத்தனையோ கோடி உடல்களில் “தான் பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு கொண்டு தான் கண்கள் உருவானது. ஒன்றை ஒன்று பார்த்து வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியானது.

பரிணாம வளர்ச்சி அடைந்த அந்த உணர்வுகளைப் பெற்றால்… நம் கண்கள் மாசுபடும் தன்மைகளை மாற்றலாம். அதை வைத்து மற்ற உடலில் உள்ள உறுப்புகளுக்கும் உயர்ந்த சக்திகளை பாய்ச்ச முடியும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றால்…
1.அந்த எண்ணம் முதலில் கண்ணுக்குத் தான் வரும்… கருவிழி அதைத்தான் கவரும்.
2.ஆகவே முதலில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கண்களில் அதிகமாகப் படரச் செய்ய வேண்டும்.

அதைத்தான் தியானப் பயிற்சியாக இப்போது கொடுக்கின்றோம்.

நம் உடலில் இருக்கக்கூடிய நரம்பு மண்டலங்கள் அனைத்திலும் விஷத்தன்மை பரவி விட்டால் நரம்புகளில் வேதனை வருகின்றது… வாத நோய்கள் வரக் காரணமாகிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நரம்பு மண்டலத்தில் பாய்ச்சி அதைச் சீராக்க முடியும். வாத நோய் வராது தடுக்க முடியும்.

அடிக்கடி வேதனைகளை எடுக்க எடுக்க எலும்பை உருவாக்கிய அணுக்கள் பலவீனமாகின்றது. சில நேரங்களில் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள்
1.வெறுமனே கையை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.
2.நடந்து போனேன்… காலை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.

இது எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள்… உணர்வுகள்… அந்த எலும்பை உருவாக்கிய அணுக்களுக்குண்டான உணவுகளைக் குறைக்கப்படும் போது அந்த எலும்புகளின் மலம் பலவீனமாகி எலும்பின் பலம் குறைந்து விடுகின்றது.

எலும்பில் பலம் குறைந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

நிலத்திற்குள் எத்தனையோ வித்துக்கள் மறைந்துள்ளது. நிலத்தின் அடியில் ஆழத்தில் நீர் இருக்கிறது. இருந்தாலும் அந்த வித்துகள் கீழ் இருக்கும் நீரை எடுப்பதில்லை. நிலங்களில் பரவி இருக்கும் நீரைத் தான் எடுக்கிறது.

ஆனால் பாறைகளோ கற்களோ இருந்தாலும் மரங்களுக்குத் தன் விழுதுகளைப் பாய்ச்சி நீரை எடுத்துக் கொள்ளும் சக்தி இருக்கின்றது… மற்ற செடி கொடிகள் சிறிது காலமே வாழும்… அதற்கு அந்தச் சக்தி இல்லை.

அதைப் போன்று தான் நம் எலும்புக்குள் இருக்கும் ஊழ்வினை என்று வித்துக்களின் இயக்கங்களும். ஆகவே…
1.என்றுமே… எங்கிருந்தும்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துக் கொள்ளக்கூடிய சக்திகளை
2.அந்த ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் நாம் ஆழமாகப் பதிவாக்க வேண்டும்.

நம் பிரபஞ்சத்தின் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதனால் அதன் உணர்வைக் கவர்ந்து உங்களுக்குள் எளிதில் வளர்த்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்தால் கருவிழி இழுத்து இங்கே நெஞ்சின் எலும்புக்குள் தான் பதிவாக்குகின்றது. இங்கே பதிவானால்தான் அந்த நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறியவும் முடிகின்றது

நோயாளியைக் கூர்ந்து கவனித்தால் பதிவாக்குகின்றது.
1.கருவிழி ருக்மணி (கருமணிகள்) உடலுடன் இணைத்துக் கொள்ளும்.. அதாவது ரெக்கார்ட் செய்வதுதான் அதனின் வேலை.
2.பதிவான பிற்பாடு கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிலிருந்து வரும் அதனின் இனமான உணர்வினைக் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகிறது.
3.ஆன்மாவிலிருப்பதை மூக்கின் வழியாக உயிரின் காந்தப்புலன் கவர்ந்து உயிரான்மாவாக மாற்றுகின்றது.
4.இதிலே எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் செயல்படுத்தும்.

எத்தனையோ வருடங்கள் நாம் சேர்த்து வைத்திருந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக இருக்கும்.

ஒரு நிலம் கேட்டு விட்டால் அதைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்து அதன் பின் அதிலே நல்ல பயிரினங்களை வளர்க்கின்றோம். பண்படுத்தவில்லை என்றால் விஷம் கொண்ட பயிரினங்கள் தான் அதிகமாக விளையும்.

இதைப் போன்று நம் உடலான நிலைகளைப் பண்படுத்த…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி
2.அருள் ஞானிகளின் அருள் சக்திகளைப் பதிவாக்கும் திறனுள்ள ஊனாக மாற்றி அமைப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். வெறும் ஞான வித்து அல்ல… அருள் ஞான வித்து…!

இருளை நீக்கும் அருள் ஞான வித்தை… இருளை நீக்கிட்ட அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். உங்கள் மனதில் தான் இனி அதை வளர்த்துக் கொள்ளும் நிலை இருக்கின்றது,

1.இந்த உலகில் நாம் வாழக்கூடிய காலம் மிகக் குறுகியது…
2.எந்த நிமிடத்தில் இனி எது வேண்டுமென்றாலும் நிகழலாம்
3.உலகம் எப்படி இருக்கும்…! என்றும் சொல்ல முடியாது
4.மனிதன் சிந்தனையுடன் இருப்பானா என்பது கேள்விக்குறிதான்…!
5.அதற்குள் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் வழி வாழ வேண்டும் என்று உங்கள் மனதிலே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
6.எந்த நிமிடம் எதுவானாலும் உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக வாழ்வோம்.
7.”பிறவி இல்லா நிலை அடைவோம்…!” என்ற உணர்வுகளுக்கு நீங்கள் திரும்பி ஆக வேண்டும்.
8.ஆகவே உடல் பற்று வைக்காதீர்கள்.
9.யாம் சொல்லும் உணர்வின் தன்மையை உயிரிலே வளர்க்கப்படும் போது உடலைக் காக்கும் உணர்வுகள் தன்னிச்சையாக வரும்
10.அது இல்லை என்றால் உடலை காக்க முடியாது…!
11.காப்பதாக எண்ணுவோம்… ஆனால் வேதனை கொண்டு உடலை அழித்துக் கொண்டுதான் இருப்போம்
12.தன்னைப் பாதுகாக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்

ஆகையினால் இதைப்போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு மெய் ஞானத்தை வளர்க்கும் அருள் சக்தியைப் பெறுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று வளர்த்துக் கொள்ளுங்கள்.

எங்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும். எங்கள் குழந்தைகள் நல்லவர்களாக ஆக வேண்டும். என் கணவர் உயர்ந்தவராக வரவேண்டும்… என் மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும்… நாங்கள் ஒருவருக்கொருவர் மதித்திடும் பண்புகள் வளர வேண்டும்… அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அறியாது சேர்ந்த பகைமைகளை மாற்றுங்கள்… அருளைப் பெருக்குங்கள்.

நீங்கள் எண்ணியவுடனே அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்வதற்குத் தான் இந்நேரம் வரை இதை ஞான வித்தாகப் பதிவாக்குகின்றோம்.

காரணம்…
1.படிக்காதபடி ஒன்றும் செய்ய முடியாது…
2.ஆசிரியர் சொல்லிக் கொடுத்தால் தானே எடுக்க முடியும்
3.ஆசிரியர் சொல்லத் தவறி விட்டால் தவறாகத்தான் போய்விடும்.

நம் குருநாதர் நமக்குத் தெளிவாக காட்டிய வழிப்படித் தான் உங்களுக்கு இதை எல்லாம் எடுத்துக் காட்டுகின்றேன் (ஞானகுரு). உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலை ஆலயமாக மதிக்கின்றேன். மனித உடலை உருவாக்கிய அரும் பெரும் சக்தி கொண்ட ஞான சக்தியான தெய்வங்களை மதிக்கின்றேன். உங்களுக்குள் அமைதியும் சாந்தமும் பெற வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.

என்றுமே இந்த உணர்வுகளை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொண்டால் நீங்கள் எண்ணியது இறையாகி… இறையின் உணர்வு செயலாகும் போது… அதுவே உங்களில் தெய்வமாகிறது.

ஆகவே…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் இறையாகி அதனின் உணர்வு தெய்வமாகி
2.இருளை நீக்கிடும் சக்தியாக உணர்வின் ஒளியாகி பிறவி இல்லா நிலை அடைவீர்கள்…!

நம் குலதெய்வங்கள் “சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து விட்டார்களா…?” என்று சந்தேகப்பட வேண்டியதில்லை

 

கூட்டுத் தியானத்தின் மூலம் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த குலதெய்வங்களை உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை இன்று விண் செலுத்தினோம்…
1.அவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து விட்டார்கள்.
2.ஆனால் இணைந்து விட்டார்களா…! இல்லையா…? என்று நீங்கள் சந்தேகப்பட வேண்டாம்.

துருவ தியானம் முடிந்தபின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்திட வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
1.அந்த ஆன்மாக்கள் ஒளியின் சரீரமாக “சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்ததை” நீங்களும் காணலாம்.
2.ஒரு 48 நாட்களுக்குத் தொடர்ந்து இதைச் சீராகச் செய்து வாருங்கள்.
3.சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் பேரருளைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.

அவர்கள் முன் செல்ல அந்த உணர்வின் தன்மை நமக்குள் இணைந்து வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது. கரைந்து விட்டால் சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து மாற்றிவிடும்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் அறிவுகள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இணைந்ததால்
1.அதிலிருந்து வரும் உணர்வினை உணவாக உட்கொண்டு
2.ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் வாழத் தொடங்குகின்றனர் நம் முன்னோர்கள்.

ஆகவே நாம் இதை முழுமைப்படுத்தி உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும். நம்முடைய முன்னோர்களை இப்படி அனுப்பினால் நமக்கும் நலம் பெறும் சக்தி கிடைக்கும்.

நண்பர்கள் உடலைப் விட்டுப் பிரிந்திருந்தால் துருவ தியானத்தில் இருந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை முதலில் நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அவர் உடலில் நோயோ மற்ற துன்பங்கள் இருப்பினும் இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் அது நமக்குள் வளராது தடுக்கக் காலை துருவ தியானங்களில் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட வேண்டும் என்று எண்ணினால்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது அவர்களும் சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றனர்.
3.அவர்களும் பிறவி இல்லாத நிலை அடைகின்றனர்.

மனிதர்கள் நாம் தான் இதைச் செயல்படுத்த வேண்டும்.

உயிராத்மாவில் பேதங்கள் நீங்கிட வேண்டும்

 

“சாதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டிட்ட வேதாந்த நாதன்” வார்த்தைகள் ஆடி மௌனமாக அமர்ந்திட்ட விசாலவதி தேவியைப் பேச வைத்திட்ட செயல்… சாகுந்தலம் என்ற விசுவாமித்திர காலபங்கம் வெளிப்பட்டு உண்மை நிலையை உலகத்தவர் உணர்ந்திட வாயுரைத்த பிள்ளையாகக் “காளியின் தாசன்” ஆயினர்.
1.”ஓர் தாயின் இரு குழந்தைகள்” என்ற சூட்சுமமே
2.விசாலவதி தேவியைப் பேசிட வைத்தது.

எங்கும் வியாபகமாய் இந்த பூமியின் சுவாசத்தில் செயல் கொண்டிடும் காற்று… அனைத்து உயர் ஜீவன்களும் சுவாசம் கொண்டே அந்தக் காற்றினை உட்கொள்கின்றன.

மெய்ஞான விழிப்பாக்கும் செயல் கொண்டிடும் ஆத்ம ஞானம் பெற்றிட விளையும் செயல் தன்மை கொள்பவர் யாராயினும்…
1.”சுவாச கதியினால்”
2.இந்த பூமியில் மாத்திரமன்று…! எங்கும் எதிலுமாக வியாபித்தே படர்ந்துள்ள சூட்சும சக்திதனைப் பெற்றே உயர்வு நிலை காணலாம்.

தன் நிலை வளர்ப்பாக்கிடும் செயலின் பக்குவத்திற்கு வரும் போது… ஞானி எண்ணிட்ட அனைத்து செயல்படு காரியங்கள்… தங்கு தடையற்ற வழிப் பாதையாக ஆக்கம் காட்டும்.

வேதாந்த நாதன் செயல் கொண்ட காரியங்கள் பேரருள் சூட்சும இலயமாக விளங்கிதை… அதனை எண்ணி உணர்ந்து செயல்படுகின்ற நிலை பெற்றோர்களுக்கெல்லாம் இன்றளவும் அவை அமுதமான செயலாகத்தான் உள்ளது.

வாக் தேவியின் அம்சம் கொண்டவள் விசாலவதி தேவி வாய் திறந்திட… மௌனம் பூண்டு தனக்குத்தான் ஒரு செயலை வகுத்துக் கொண்டிட்டவள்.

வேதாந்த நாதன் முன் திரை மறைவில் அமர்ந்திட்ட அவளின் அருகே உடன் இருந்த தோழிப் பெண்… கல்வியின் சகல பந்தனங்கள் கொண்ட வினாக்கள் தொகுத்திட… பதிலுரைத்து வந்தான் வேதாந்த நாதன்.

பின் அவன் வினா எழுப்பினான்…
1.அம்மணி…! ஒரு தாயின் இரு குழந்தைகள் தமக்கு விருப்பமுடைய பொருளை வேண்டுகின்றனர்.
2.அவற்றில் ஒன்று… தனியே இருந்து தான் பெற்றுக் கொண்ட “அகப்பொருளைக் காக்கின்றது…”
2.மற்றொரு குழந்தை தான் பெற்றுக் கொண்ட பொருளும்… தன் உணர்வும் கொண்டு… “மற்றொன்றுடன் போராடும் செயல் வன்மம் கொள்கின்றது…”
3.தாயின் நிலை சமநோக்கு எனினும் உட்பொருள் தெளிந்திடும் ஞானம் “இடை புகுவோர் பெறுவது என்ன…?”

திரை மறைவில் “ஆ…!” என்ற குரல் எழுந்தது.

வேதாந்த நாதன்… தோழிப் பெண்ணே…! தலைவிக்காக நீ வினாக்கள் தொகுத்தாய்… ஆனால் உன் குரலின் தோனி திரை மறைவின் புதிர் விடுத்து விட்டது. உன் தலைவியே உனக்காக விடை உரைத்திடல் வேண்டும் என்று கூறினான்.

நிலைமையின் நிகழ்வு… விசாலவதி தேவியைத் தன் மௌனம் விடுக்கச் செய்து… பின் வாக் தேவியாக அவள் விடை பகர்ந்தாள்.

ஒரு பொருள் நிறைந்த அங்காடி… அந்தப் பொருளின் உரிமம் கொண்ட பொறுப்பின் மிக்கவர் இருவர். இருவரில் ஒருவர் மற்றவர் அறிந்திடாமல் பொருளைக் கவர்ந்திடும் வழியாக… அந்த அங்காடியில் விற்பனைப் பொறுப்புள்ள சிறுவனிடம் பொருளைக் கவர்ந்திடும் சூட்சும வழிகள் உரைத்திட்டாலும்… அன்றி அந்தச் சிறுவனே அவ்வழி உரைத்தான் எனினும்… “செயல் ஒன்றே…”

1.அங்காடியே – இந்தச் சரீரம்
2.பொறுப்பின் மிக்கவர் – ஆத்ம நிலை…
3.உணர்வுகளின் வழி – உயிர் சக்தி
4.பொருள் விற்பனை காவலர் – செயல் கொண்டிடும் குணங்கள்.

ஆத்ம நிலையின் நோக்கு நீர் கேட்ட வினாவிற்கும் விடை இதில் அடங்குவதே. ஞானத்தின் ஒப்புமை நீரே காட்டும். பின் விடையை உரைக்கின்றேன்…! என விசாலவதி தேவி வாய் மலர்ந்து அருளிட்டாள்.

வேதாந்த நாதன்…
1.நற்குண காரியங்கள் உயிர் சக்தியின் செயலாக அதுவே ஆத்மன் என்ற வலு
2.குணங்களின் செயல்பாட்டில் மாற்று நிலைத் தன்மைகள் உயிர் கூட்டிக் கொண்டிடும் உயர் நிலையைப் பேதப்படுத்தி
3.அச்செயலினால் “ஆத்மாவும்… உயிரும்” சூட்சுமமாக இரு குழந்தைகளாகக் காட்டப்பட்டது.
4.இங்கு “தாய் என்று கூறுவது – பேரருள் சூட்சமம்” என்றான்.

உடனே விசாலவதி தேவி… மனிதனாகப் பிறப்பிற்கு வந்தாலும் குணங்களின் செயல்பாட்டை எப்பொழுது மனிதன் உணர்கின்றானோ… அப்பொழுதுதான் மனிதன் என்ற பெயர் பெறுகின்றான்.

ஞானம் இடை புகுந்தவர் யார்…? குணங்களின் பேதத்தை உணர்ந்து கொண்டு உயர் ஞான சித்திக்குத் தான் பெற்றார் உயர்வின் உருவாக.

அந்தக் குழந்தைகளின் பேதங்கள் நீங்கி… ஒன்றுடன் ஒன்று உறவாடி மகிழும் பேரின்ப இலயத்தில் உணர்வதும் ஒன்று.
1.ஜீவன் கொள்ளும் உயிரணு – உயிராத்ம வலு எனும் சுழற்சியாக
2.பிறப்பெனும் மாய இருளை விலக்கிடும் சக்திக்கே அன்று பெற்ற உயர்வு.

இவ்வாறு விடை பகர்ந்ததும் இருவரும் ஒரே நேரத்தில் திரைகளை விலக்கினர். “மங்கள நாண்” பூட்டிடும் விழா எழுந்தது.

தன்னை ஆட்கொண்ட சூட்சமத் தொடர்பை வேதாந்த நாதனது உயிர் சக்தி விழிப்பாகப் பெற்றுக் கொண்டிட வேதாள மகரிஷி தவமியற்றும் மாகாளிப்பட்டினத்திற்கே தன் துணைவியுடன் வாழ வந்தான்.

அங்கே குப்த மன்னனும் வேதாந்த நாதனும் சீரிய நட்பு வளர்ப்பாகி… நவநீதியர்கள் குழுவில் தலைமை பீடம் ஏற்று பற்பல சூட்சுமங்களுக்கே “காளிதாசனாக” வழி காட்டினான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நெருப்பில் நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை நெருப்பிலே போட்டால்… அதை நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.
1.நாம் உடுத்திய உடையை அந்த நெருப்பிலே போட்டால்
2.“மனித உணர்வுடன் கலந்து…” இந்தக் கருகிய மணம் வரும்.

ஒரு மனிதன் சட்டையைப் போட்டிருக்கும் போது அவன் நல்ல மனிதனாக இருந்தால் அதைக் கழட்டி நெருப்பில் போட்டுப் பாருங்கள்.
1.கெட்ட நெடி… அந்தக் கருகிய வாசனை வராது
2.நல்ல வாசனைகள் தான் வரும்.

சந்தேகம் இருந்தால் ஒன்றை நீங்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்.

ஒரு மணி நேரம் நீங்கள் கோபமாக இருந்து பாருங்கள். அதற்குப் பின் நீங்கள் அணிந்திருக்கும் சட்டையை நீங்களே முகர்ந்து பாருங்கள் அதில் நெடி நிச்சயம் வரும்.
1.ஏனென்றால் நாம் எதை நுகர்கின்றோமோ
2.அதுவே உள் நின்று… அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

உதாரணமாக… மிளகாயை நெருப்பிலே போட்டால் என்ன செய்கின்றது…?

இத்தனை பேர் இங்கே கூடி இருக்கின்றோம் பக்கத்திலே சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்… அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம் அனைவரையுமே இரும வைத்துவிடும்.

நெருப்பிலே படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.

ஆனால் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்…?

1.எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத் தர்மத்தை செய்தாலும்
4.நல்ல உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்… அவர்களால் அதைத் தாங்க முடியாது.

அப்பொழுது இதை யார் இயக்குவது…? நமது உயிர்…!

அதனால் தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்…” என்று ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன் உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ…
2.உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.

மிளகாய்த் தூளை நெருப்பில் போட்டால்… நீங்கள் அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது…? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.

இதைப் போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்… அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள் இந்த உடலை ஆளுகின்றது… ஆண்டாள்…!

யார் ஆள்வது…? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் சொன்ன முறைப்படி இமயமலையிலே நான் (ஞானகுரு) சென்று கொண்டிருந்தேன். அங்கே பனிப்பாறையைக் கடந்து செல்லும் பொழுது அந்தப் பாதை திடீரென்று இடிந்து விழுந்து விட்டது.

அந்த நேரத்தில் குருநாதர் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சொல்லிக் கொடுத்த அத்தனையும் மறந்து விட்டேன். மரணம் அடையும் நிலையே ஏற்பட்டு விட்டது. என் மனைவி மக்களை எல்லாம் எண்னத் தொடங்கிவிட்டேன்.

குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…
1.பனிப்பாறைகள் நொறுங்கிய பின் திரும்ப எப்படிப் போவது…? என்று பயந்தாய்…
2.உனக்குள் புயலே வந்து விட்டது… தலை சுற்ற ஆரம்பித்து விட்டது
3.உன்னுடன் இணைந்த மனைவி மக்கள் எல்லோரையும் எண்ணத் தொடங்கி விட்டாய்.

அவர்களை எண்ணும்போது இந்தப் பனியின் குளிரிலிருந்து தப்ப முடியவில்லை நீ மரணம் அடையும் நிலைக்கு வந்து விட்டாய்… இப்போது நீ யாரைக் காக்கப் போகின்றாய்…? என்று கேட்டார் குருநாதர்.

ஆகவே மனமே இனியாகிலும் மயங்காதே…! இந்த மனித வாழ்க்கையில் நீ தயங்காதே..
1.இந்த உடல் ஆசையை நீ வைக்காதே
2.எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்
3.ஆனால் நடக்காது தடுப்பதற்கு உனக்குள் சக்தி கொடுத்துள்ளேன்.

அதை எண்ணி எடுக்காதபடி… இந்த உடல் இச்சையை நீ பட்டு விட்டால்… “என் குழந்தை… என் பிள்ளைகள்… என் மனைவி…!” என்று நீ எண்ணினால் இந்த உணர்வின் இச்சைப்பட்டு… உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய்.

உன் குழந்தையின் ஈர்ப்பிற்குள் போகின்றாய்… அல்லது மனைவியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல முடியும். அந்தக் குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க வைக்க முடியுமா…?

“நீ இறந்து விடுகின்றாய்…” என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையுடன் அவர்கள் ஏங்கி இருக்கப்படும் பொழுது அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக்கி… நோயாக்கி விடுகின்றாய்.

1.உன்னை நம்பிய அனைவருக்கும் நீ பட்ட வேதனைகளை உருவாக்கி
2.துரித நிலையில் அவர்களும் மடியும் தன்மையை நீ உருவாக்குகின்றாய்.
3.அந்த வேதனையைத்தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும் அவர்களைக் காக்க முடியாது.

ஆகவே நீ எண்ணிய உணர்வுகள் அவர்கள் உணர்வுடன் நீ மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய். அவர்களையும் அழித்து விடுகின்றாய்.

அந்த உடலுக்குப் பின் எந்த வேதனையும் துயரத்தையும் பட்டாயோ இந்த உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்… அடுத்து நீ எங்கே போகின்றாய்…? என்று தெரியுமா…!

நீ எந்த வேதனை என்ற உணர்வை எடுத்தாயோ… அந்த விஷத்தையே தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாக்கும் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் அழைத்துச் சென்று உயிர் அதற்குத் தக்க உடலை அங்கே உருவாக்கிவிடும்.

இதனை அனுபவபூர்வமாகக் காட்சியாகவே குருநாதர் காட்டுகின்றார்.

அதற்குப் பின் அங்கிருந்து டெல்லி வந்து… சென்னைக்கு விமானத்தில் திரும்பும் போது… குருநாதர் இன்னொரு அனுபவத்தையும் கொடுக்கின்றார்.

விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது “விமானம் கவிழும்…” சந்தர்ப்பம் ஏற்பட்டது.

விமானி முதற்கொண்டு மற்றவர்கள் எல்லாருமே பயந்து கதிகலங்கி விட்டார்கள். நான் மட்டும் அசையாமல் உட்கார்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.

குருநாதர் அங்கே சில விளக்கங்களைக் கொடுக்கின்றார்.

மற்றவர்கள் எல்லாம் பயந்தார்கள்… நீ ஏன் பயப்படவில்லை…?
1.உடலின் இச்சையை நீ படவில்லை… நீ உயிரின் இச்சைப்பட்டாய்.
2.உயிர் ஒளியானது.. அறிவின் தன்மை ஆனது.
3.அதே அறிவின் தன்மை நீ அச்சமில்லாது இருப்பதனால் உனது சக்தியும் சேரலாம் என்று சொல்கிறார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நொடிக்குள் எடுத்து அங்கே செலுத்துகின்றாய்… அவர்களையும் காக்கின்றாய்… உன்னையும் காத்துக் கொண்டாய்…!

அத்தனை பேரிலும் ஒருவன் நீ எண்ணிச் செயல்பட்டதால் “இது உனக்குள் இருக்கக்கூடிய வலு…” என்று சொல்கின்றார். இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று விமானத்தில் வைத்து குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

இருந்தாலும்… எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை.

இன்று நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி… மகான் என்று மக்கள் மத்தியிலே அவரைப் போற்றிக் கொண்டிருந்தாலும் சரி…
1.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்..
2.எதனுடைய அழுத்தம் அதிகமாகின்றதோ இந்த உடல் போய்த்தான் ஆகும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் இந்த மனித உடல் என்ற இச்சையிலிருந்து விடுபட்டு… உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றது.

குலதெய்வங்களை வழிபடும் முறை

 

மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் நிலை பெறுவதற்குத் தான் அருள் ஞானிகளின் உணர்வுகளை அடிக்கடி உங்களைச் சேர்க்கும்படி சொல்கின்றோம்.
1.அப்படிச் சேர்த்துக் கொண்டால் வினைக்கு நாயகனாக ஆகி இயக்கி கணங்களுக்கு அதிபதியாகி
2.நஞ்சினை வென்றிட்ட அருள் உணர்வுகள் அவ்வழியில் கணங்களுக்கு அதிபதியாகும் (உடலுக்குள்).

அதிகாலையில் இத்தகைய ஆற்றலைப் பெறும்படி… அந்த உணர்வை நுகரும்படி… அந்த எண்ணங்களை நமக்குள் ஊட்டும்படி… “ஒரு பழக்கம்” வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் உருவ நிலைகளை ஆலயங்களிலே அமைத்து அருவ நிலையில் உயர்ந்த சக்திகளைப் பெற வழி காட்டினார்கள் ஞானிகள்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய அந்த வழியினை நாம் எடுத்தால் அந்த உணர்வுகள் ஓ என்று ஜீவணுவாக உருவாகி நம் உடலுக்குள் அதுவே தெய்வமாகின்றது.
1.அந்த உயர்ந்த குணங்கள் நமக்குள் கடவுளாக நின்று பகைமை உணர்வுகளை மாற்றுகின்றது.
2.தெளிந்திடும் மனமும் மகிழ்ந்திடும் உணர்வையும் ஊட்டுகின்றது.

ஒவ்வொரு நொடியிலும் வரும் தீமைகளை நாம் இந்த வாழ்க்கையில் அதை அகற்றிக் கொண்டே வருதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அடிக்கடி வலு சேர்க்க வேண்டும்.

அதிகாலையில் இருந்தே இது போன்ற உணர்வுகளை வரிசையாக எடுத்து எங்கள் தாய் தந்தையருக்கும் முன்னோர்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

1.எனக்காகப் பட்ட துன்பங்களிலிருந்து என் தாய் தந்தையர் விடுபட வேண்டும்.
2.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்
3.அவர்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பரவ வேண்டும்
4.நஞ்சினை வென்றிடும் ஆற்றல் என் தாய் தந்தையர் பெற வேண்டும்.
5.மகரிஷிகளின் அருள் வட்டத்திலே என் தாய் தந்தை இணைந்து வாழ வேண்டும்
6.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் மனமும் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று அவரவர்கள் இதை எண்ணிப் பழகுதல் வேண்டும்.

அதற்குப்பின் நம் மூதாதையர்களுக்கு நாம் உயர்ந்த சக்திகளைப் பாய்ச்சுதல் வேண்டும். ஏனென்றல் அவர்கள் குல வழியில் தான் நாம் உருவாகி இருக்கின்றோம். மனிதனாக உருவாகியதற்கு காரணமே அவர்கள் தான்.

வீட்டில் பாட்டன் பாட்டி இருந்தால் அவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்.
1.எங்கள் அன்னை தந்தையையும் எங்களையும் காத்திட எத்தனையோ துன்பங்கள் பட்ட அந்த உணர்வுகள் எல்லாம் அவர்களிடமிருந்து நீங்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என் பாட்டன் பாட்டி வாழ வேண்டும்
3.உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்துதல் வேண்டும்.

அவருடைய உணர்வுகள் குல வழியில் நமக்குள் இருக்கப்படும் பொழுது சந்தர்ப்பத்திலே உடலை விட்டு அவர்கள் பிரிய நேர்ந்தால்… அடுத்த கணமே எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்தோமோ அதனின் வலுக் கொண்டு… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலங்களின் தெய்வங்களான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்று அந்த சூட்சும சரீரம் பெற்ற உயிரான்மாக்களை அங்கே அனுப்புதல் வேண்டும்.

நஞ்சு கலந்த உடலை குறுக்கச் செய்து வேதனை என்ற உணர்வுகள் கலந்து அந்த ஆன்மாக்கள் வெளியே சென்றால்… இன்னொரு உடலுக்குள் புகுந்து அந்த உணர்வுக்குத் தக்க உடலாக உருவாக்கிவிடும் உயிர்.

இதைப் போன்ற நிலையில் இருந்து அவர்களை மீட்டிட உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்தால்
1.உடல் பெறும் நஞ்சினைக் கரைத்து விடுகின்றது.
2.நம்மை வாழ வைத்த அந்த உயர்ந்த சக்திகள்… அந்த உயிர்கள் அங்கே நிலைத்திருக்கின்றது.

நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்திடமிருந்து வெளிப்படும் உணர்வைக் கொண்டு அந்த ஆன்மாக்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்த பின் அந்த உணர்வின் துணை கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விடுகின்றது. மூதாதையர்களை அங்கே சேர்த்தல் வேண்டும்.

அவர்கள் முன் சென்றால்… ஒளியின் சரீரமாக ஆன பிற்பாடு அவர் அருளை எளிதில் பெறலாம். நமக்குள் வரும் இருளை அகற்றி ஒளியின் சரீரம் பெறுவது மிகவும் எளிது.
1.அகஸ்தியன் கண்ட அந்த உண்மையின் வழியிலே நாமும் சென்றோம் என்றால்
2.அந்த அருள் வழியைப் பெற்று பேரருளைப் பேரொளியாக மாற்றிவிடும். உடலில் இருக்கும் அனைத்து அணுக்களையும் பேரொளியாக மாற்றிவிடும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் ஒளியின் தன்மை அடைகின்றது. உயிருடன் ஒன்றி நிலையான ஒளிச்சரீரம் அடைகின்றது.

மனிதன் தான் இதை எல்லாம் செயல்படுத்த முடியும்.

சின் முத்திரை விளக்கம்

 

வேதாந்த நாதன் வேதாள மகரிஷிடம் கற்றுக் கொண்டது மௌனமாக அமர்ந்திருக்கும் ஓர் நிலை. அஃது அன்றி அறிந்திடாத வேதாந்த நாதன் மடந்தையின் (விசாலவதி தேவி) முன் நின்றிட்ட பொழுது “அவனைச் செயல்படத் தூண்டிய சக்தியாக அகப்பொருள் காத்திட நின்றது வேதாள மகரிஷியின் அருள் சக்தி…”

மடந்தை வேதாந்த நாதனிடம் உரைத்த வினா… ஒரு கை ஓசையும்… ஒரு விரல் அறிவும்… நான் என்பதுடன் கூடி நிலை பெற்றால்… “நீ என்பது என்ன…?”

1.அபரிதமான சிந்தனை உடையவள் அந்த மடந்தை கொண்ட அறிவு…!
2.ஆனால் “அவளின் அகங்காரமின்றேல்” அவள் அம்மன் சக்தியாய் செயல் கொண்டிருக்க முடிந்திடும்.

கூர்ந்த மதி கொண்ட வேதாந்த நாதன் பெற வேண்டிய உயர்வின் தன்மைக்கு… பெறுகின்ற அனுபவ நிலைகள் “கவிகாளிதாசன்” என்றிட்ட சொல் நாமத்திற்கு… வித்தின் நிலை போல் செயல் கொண்ட விதம் வேதாள மகரிஷியினுடையது.

1.ஆலமரத்தின் வித்து சிறியது தான் என்றாலும் அதன் திறத்தை அறிந்து கொண்டிட முடிவது
2.அந்த வித்து முளைத்து கிளைத்து அறியதாகிய வளர்ப்பாக ஈர்த்து வளர்ந்த பின்
3.அந்நிலையில் அதனை நாம் முழுமையாக உணர்கின்றோம்.

தெளிந்த மனம் கொள்கின்ற பாங்கு செயல் உருவாக வளர்ச்சியின் விதம் காண்பிக்கப்படுவதாக… சிறப்பரிய ஆலின் வித்து போல் உயர் ஞானத்தின் வளர்ச்சி… “ஆலின் வித்து தழைப்பதைப் போல் ஞானத்தின் பாங்காக வளர்ச்சி நிலை பெறுதலும் உண்மை…”

1.வேதாந்த நாதன் மடந்தையின் முன் நின்று அவள் வினவிய பொருள் தன்மை உணர்ந்திடாத நிலையிலும்
2.அவன் உள்ளத்தை ஆட்கொண்டது வேதாள மகரிஷி காட்டும் “சின் முத்திரை…”
3.அதுவே மன மண்டலத்தில் வியாபிக்க… அந்த முத்திரை கூட்டித் தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.

மடந்தையின் வினாவிற்கு வேதாந்த நாதனின் இந்நிலை கண்ட அவள்… சொல்லாமல் சொல்வித்த பதில்… அவள் கரம் கூப்பிக் கண்களில் ஆனந்த நீர் சொரிய சிரம் தாழ்த்தித் தொழுதாள்.

கூடி இருந்த புலவர் பெருமக்கள்… அம்மணி…! வேதாந்த நாதன் பதில் உரைத்திடா வண்ணம் தியானத்தில் அமர்ந்து விட்டான். வினா தொடங்கிய நீயே இதற்குரிய பதிலும் அளித்திட சூழ்நிலையை அவரே உருவாக்கி விட்டார். பதில் உரைத்திடல் வேண்டும் என்று கேட்டனர்.

மடந்தையோ… கல்வியின் செருக்கு என் மனக்கண்ணை மூடி அகங்காரம் கொண்டுவிட்டேன்… கல்வியின் சிறப்பை அவமதித்துவிட்டேன். இவர் ஒருவர் பதில் உரைத்து என் அகக்கண் திறந்து… ஆட்கொண்டிட்டார்.

1.ஒரு கை ஓசையே – பிருகிருதியின் நாதக்தம் (இயற்கையின் நெறி)
2.அதனைச் சுட்டிக்காட்டும் மாமகான்கள் – “பரப்பிரம்ம பெருநிலை அறிவு என்பர்…”
3.“நான்” – என்றிட்ட தன்மையைத் தெளிந்து
4.பிருகிருதியின் சூட்சுமத் தன்மைகள் தன்னில் கலந்தே – “தானும் அதுவாகி”
5.சிவமென்று அழைக்கப் பெற்றிட சுட்டும் அறிவும் தன்னுள் தெளிந்த “நான்” என்னும் நிலை தெளிவுபடுத்தவே
6.சுட்டு விரலும் கட்டை விரலும் இணைந்து… அந்தப் பொருளை முத்திரையாக… சிவ ஜீவ ஐக்கியமாக மறைபொருள் காட்டுகின்றனர்.

என் செருக்கு நீங்கிடப் பெற்றேன்…! என்று உரைத்தாள் அந்த மடந்தை (விசாலவதி).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரியல் தத்துவத்தில் நமது உயிர் நுகர்ந்த உணர்வை அணுக்களாக மாற்றுகிறது. அணுவின் மலம் நம் உடலாகி உணர்வின் அறிவாக நம்மை இயக்கச் செய்கின்றது.

உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து எத்தனையோ உடல்களைக் கடந்து மனிதனாக வந்த நாம் இன்று விஷத்தன்மை கொண்ட உலகில் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
1.இந்தப் பிரபஞ்சமே இந்தச் சூரியனே விஷத்தன்மையால்… விஞ்ஞானத்தின் கதிரியக்கத் தன்மையால்
2.சீக்கிரம் அழியப் போகின்றது… திசை மாறப் போகின்றது.
3.வாழும் இந்தக் குறுகிய காலத்தில்… சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்…
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களுக்குள் நல்ல சிந்தனைகள் வரும்
5.கஷ்டங்களை எண்ணாதீர்கள்… உடலில் வேதனையோ நோயோ இருந்தால் அதை மறந்து விடுங்கள்
6.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்று இந்த ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

வீட்டிலே பூஜை அறையிலையோ அல்லது இருக்கும் மற்ற இடங்களிலோ இது போன்று செயல்படுத்திப் பாருங்கள்.

உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வதற்கு எம்முடைய (ஞானகுரு) உபதேசங்களைக் கேட்டும் படித்தும் வாருங்கள். அடிக்கடி அதை ஞாபகப்படுத்திக் கொண்டே வாருங்கள். அருள் சக்திகள் உங்களுக்குள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். தீமைகளை அகற்ற முடியும்.

கஷ்டம் என்ற வார்த்தையைத் தூக்கி எறிந்து விடுங்கள்…!

1.“யார்…” எந்த நிலையில் இருந்தாலும் கூட இந்த உடலுடன் இருப்பவர் யாரும் இல்லை
2.உடலுக்காக வேண்டி வேதனைப் பட வேண்டிய அவசியமும் இல்லை.
3.இந்த உடலிலிருந்து வேதனையை நீக்கிவிட்டு வேதனை நீக்கிடும் அருள் சக்தியைப் பெற்றால் தான்
4.உலகில் வரக்கக்கூடிய விஷத்தன்மைகளை நீக்க முடியும்.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பல உயிரினங்களை உணவாக உட்கொண்டு அதிலுள்ள விஷத்தையும் சேர்த்து எப்படி நாகரத்தினமாக மாற்றுகின்றதோ அதே போன்று தான் அகஸ்தியன் அகண்ட அண்டத்தில் வரும் இருளை வென்று… உணர்வை ஒளியாக மாற்றி… ஒளிச் சரீரமாக ஆனான்.

அந்த அகஸ்தியனின் உணர்வுகளை எடுத்து நம் உடலில் வளர்ப்போம்.
1.இனி நமக்கு இந்த உடல் தேவை இல்லை
2.உணர்வின் ஒளியே போதுமானது
3.உயிருடன் ஒன்றி… அவனுடன் அவனாக வாழ்வதே கடைசி நிலை.

அகண்ட அண்டத்தில் எத்தகைய பிரளயங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரமும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழிவதில்லை.

சூரியன் ஒரு காலம் அழியலாம்… அப்படி அழியும் காலம் வந்துவிட்டது. அழிந்து… இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது பூமியில் வாழும் மனிதனின் நிலையும் செயலற்றாக மாறிவிடும்.

“அதற்கு முன் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றடைய வேண்டும்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உடல் நோயைப் போக்குவதற்கோ தீமைகளைப் போக்குவதற்கோ யாம் சொன்ன முறைப்படி நீங்கள் தியானித்து வந்தால் நோய்கள் குறைவதையும் தீமைகள் அகல்வதையும் அதிசயமாகவே நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவதையும் நீங்கள் பார்க்கலாம்… உங்களால் அதை உணர முடியும்.
1.ஏன்…! பிறர் செய்வதைக் காட்டிலும் நீங்களே மாற்றி அமைக்க வேண்டும்…
2.உங்களால் நிச்சயம் முடியும்.

நுகர்ந்த உணர்வு தான் உங்களுக்குள் நோயாக மாறுகின்றது. அதிலே தீமையை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் நுகர்ந்தால் நோயைப் போக்கும் சக்தியைப் பெறுகின்றீர்கள்… மன வலிமையும் பெறுகின்றீர்கள்… அமைதியும் பெறுகின்றீர்கள். அமைதியான வாழ்க்கை நடத்த முடிகின்றது.

ஆகவே அமைதி காக்க அருளைப் பெருக்குங்கள் அகஸ்தியன் பெற்ற அருளைப் பெறுங்கள்… அவன் துருவனாகித் துருவ நட்சத்திரமான அந்த அருள் சக்திகளைப் பெறுங்கள். அகண்ட அண்டத்தை அகஸ்தியன் அறிந்தது போல் நீங்களும் அறிய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு வியாசகன் எப்படி பேருண்மைகளைக் கண்டானோ வான்மீகி எப்படிக் கண்டுணர்ந்தானோ திருமூலர் எப்படி உண்மைகளை உணர்ந்தாரோ அதே போல் நீங்களும் காண முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கண்டுணர்ந்த பின்பு தான்
2.பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அகண்ட அண்டம் எப்படி உருவானது என்பதையும் ஞானிகள் காவியங்களாகத் தொகுத்து
3.மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வழி வகுத்துக் கொடுத்திருந்தாலும்
4.மனிதனுடைய ஆசைகள் அனைத்தும் இந்த உடல் வாழ்க்கைக்கே முழுமையாகச் சென்று விட்டது தான்.

அதிலே தான் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனைகள் கூடி அது நோயாகவும்… சிந்தனைகளை இழக்கச் செய்வதும்… மனிதனல்லத உடலை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பங்களாகவும் தான் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது.

அதை எல்லாம் மாற்றி அமைக்க மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.எளிதில் அந்த உயர்ந்த சக்தியைப் பெறலாம்
2.அமர்ந்த இடத்திலிருந்து பெறலாம்
3.வீட்டிற்குள் இருந்தே பெறலாம்
4.எங்கும் பெறலாம் – காற்றிலே அது உள்ளது.

டிவி ரேடியோவை எங்கே வைத்தாலும்… அந்தந்த அலைவரிசையில் வைத்த பின் ஆண்டென்னா மூலம் கவர்ந்து காட்டுகின்றது.

அதே போன்று உங்கள் கண் ஒரு ஆண்டென்னா. கண்ணால் தான் பதிவாகின்றது. இந்த உபதேசத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்தைப் பதிவாக்குகின்றோம்.
1.அதையே மீண்டும் கண்ணால் நினைவாக்கப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்.

திட்டியவனை உற்றுப் பார்த்துக் கண்களால் பதிவு செய்த பின் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அதே உணர்வை எடுத்து அவன் மேல் வெறுப்பும் கோபமும் எப்படி வருகின்றதோ
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்கும்
2.மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெறுவதற்கும்
3.குரு உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அதை நினைவாக்கப்படும் பொழுது காற்றிலிருந்து அந்த சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும். இந்தத் தன்னம்பிக்கையுடன் நீங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.

விவேகமும் கிடைக்கும்… உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஞானமும் கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும்

 

பிறருடன் பற்று கொண்டு தான் நாம் வாழுகின்றோம். ஆனால் அவருடைய சந்தர்ப்பம் நோயாகி விட்டால் அதை நாம் நுகர்ந்து நமக்குள் ஜீவன் கொடுக்காதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அருள் வழியைக் கூட்டிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் யாருடன் அவ்வாறு பழகினோமோ வாழ்க்கையில் அவர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் சும்மா இருக்க முடியுமா…? மாமனாரோ மாமியாரோ உடல் சரியில்லை என்றால் சும்மா இருக்க முடியுமா…?
1.அந்த உணர்வை நுகர்ந்தே அறிய வேண்டியதிருக்கும்.
2.உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் துடைப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

துயரமான நிலைகளைக் கேட்க நேர்ந்தால்
1.அந்தக் கணத்திலேயே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
2.அப்போதே அந்த உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும் என்று தீமை புகாதபடி செயல்படுத்த வேண்டும்.

இதைத்தான் வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் மடி மீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று சொல்வது.

ஆகவே ஞானிகள் கூறியபடி நினைவை விண்ணிலே செலுத்தி மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவன் மனிதனில் தீமைகளை எல்லாம் வென்ற அகஸ்தியன் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளைத் தான் பின் வந்தோர் கவர்ந்து
2.நாமெல்லாம் இந்த நிலைகளை அறியும்படி செய்கின்றார்கள் சப்தரிஷிகள்
3.சப்தரிஷி மண்டலங்களாக அவர்கள் வாழ்கின்றார்கள்.

அதையெல்லாம் உணர்த்தும் நிலை தான் விநாயகர் தத்துவம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மனதில் பதிவாக்கி நினைவை உயிருடன் ஒன்றிப் புருவ மத்தியிலே வைத்து நாம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிரான ஈசன் அவன் உருவாக்குகின்றான். கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி ஏங்கித் தியானத்தில் வேண்டும்.

வட மேற்காகத்தான் விநாயகரை வைத்திருப்பார்கள் வடகிழக்காக நாம் அங்கே பார்க்கின்றோம்.
1.வட கிழக்காக நாம் நினைவைச் செலுத்தினால்…
2.துருவ நட்சத்திரத்தின் எல்லை அந்தத் திசையில் இருப்பதால்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்தியினை அந்த பாதையில் பூமி கவர்ந்து வரும் நிலையில் நாம் நுகர்ந்து
4.நமக்குள் இந்த உணர்வினை பதிந்து உடல் உள்ள தீமைகளை அகற்றும் அந்த நிலையை நமக்குள் உருவாக்குகின்றார்கள் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பதிவாக்கி… உடலுக்குள் செலுத்தும் படி செய்கின்றார்கள்.

கண்ணிலே உற்று நோக்கி துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது
1.அதே உணர்வின் தன்மையைப் புருவ மத்தியில் எண்ணி கண்ணின் நினைவை மீண்டும் உடலுக்குள் செலுத்தி
2.உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அதைப் பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஊட்டுதல் வேண்டும்.

கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று இதைத் தெளிவாக்குகின்றார்கள்.

இதையெல்லாம் ஒரு பழக்கமாக நாம் வைத்து அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் எப்பொழுதும் இணைந்திருக்கும்படி
2.நாம் ஒரு பயிற்சியாக செயல்படுத்திக் கொள்தல் வேண்டும்.

காற்றோலம்… வாயோலம்…!

 

காற்றோலம்… வாயோலம்…! என்றால் என்ன…?
1.காற்றின் ஓலம் மிகுந்து விடும் பொழுது அது கடும் மழையைக் காட்டும்.
2.அதே போன்று வாய் ஓலம் மிகுந்தது எனில் அது கோபத்தைக் காட்டும்.

காற்றின் ஓலத்தால் வருவது மழை மாத்திரம் அன்று. அந்த மழை நீர் பெருக்கத்தால் ஏற்படுகின்ற பெரும் வெள்ளமானது… அலை கடலெனப் பொங்கி… நீரின் கரைகளை உடைத்து விடுகின்ற வேகம் கொண்டு நீர் கரையை உடைக்கின்றது.

அதே போன்று மனிதனின் வாய் ஓலம் “அவனின் கோப குணத்தை உணர்த்துவதோடு மட்டுமின்றி…” அந்தக் கோப நீர் பெருகி மனிதனின் ஆற்றல் சிந்தனா சக்தி செயற் கொள்ளும் நிலையைத் தகர்த்துவிடும்.

நீரின் கரைகள் உடையாது இருக்க… அந்த நீர்க் கரையைக் காக்கக்கூடிய பயிர்கள் நடப்பட்டு அந்தப் பயிர்கள் வளர்ந்து பூமியில்
1.ஒன்றுடன் ஒன்று வேர் தொகுதியினால் பின்னிப் பிணைந்து
2.எத்தகைய வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும் அந்த நீர்க் கரையைப் பெரு வெள்ளத்தினால் உடைத்திடாமல் காப்பதைப் போன்று
3.தியானத்தின் மூலம் எடுக்கும் ஞான சக்திகள் சாந்தப் பயிர்களாக ஊன்றப்பட்டு
4.”நிறை பேணல்” என்பதன் வழியாகக் காக்கும் பயிராக வளர்ந்து… சிந்தனையின் சக்தியைக் கட்டிக் காத்து
5.”உலகோதய மோதல்” எனப்படும் செயலில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.

மரத்திலே காயும் உண்டு… கனியும் உண்டு… அந்த மரத்தைப் பாதுகாத்திட்டவன் பிறருக்கு அதைத் தந்திடும் செயலும் உண்டு. அக்கனி கொண்ட மரத்தினைக் காத்திட்டவர் நிலையே “வேதாள மகரிஷியின் நிலை…”

1.”ஞானம் என்ற கோல் தந்து எண்ணம் போல் பெற்றிடுக…” என உரைத்ததில்
2.அந்தக் கோல் கொண்டு காயை விடுத்துவிட்டுக் கனியைக் கவர்ந்திட முயற்சித்திடும் செயலில்
3.அந்தக் கனி விழுகின்ற வேகப்பொருளாக… அதையும் ஆடை கொண்டு காத்திட்டு அளிக்கின்ற பக்குவம் “ஞான நிலைக்கன்றோ வாய்த்தது…”

ஒளி நாதம் கூட்டும் சொல் என்ற சொல்லின் வன்மை பெற்றிட… கனி என்பதே பெற்றிடும் பக்குவ நிலை…. இனியவை இன்னாதவை என்று திருவள்ளுவர் உரைத்த முறையின் பொருள் உணர்ந்க்திருக்கின்றாய் அல்லவா.

சொல் நாத வேறுபாடும் உரைத்து வந்திருக்கின்றோம். அத்தனையும் சூட்சம சக்தியாக மாமகரிஷிகள் வழிகாட்டிட்ட தன்மைக்கு… மனது ஒன்றிச் செயல் கொண்டிடும் சூட்சம உபாயங்கள் கொண்டு… பெற்ற பயனைப் பெற்றுத் தருகின்றேன் என்றே பாடுகின்றாய். அவ்வாறு
1.ஊன் உயிர் கலந்து பெறுகின்ற முயற்சிக்குக் காட்டுகின்ற வழியைக் கூர்மதி கொண்டவன் கலப்பாகப் பெற்றாலும்
2.காக்கின்ற பொருளின் மறைபொருளை உணர்ந்து கொள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம்.

கண்களைத் திறந்தபடியே நேராக உற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.

இப்பொழுது…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்ற
2.மகரிஷிகள் அனைத்தும் உங்கள் காட்சிக்கு வரலாம்.

சப்தரிஷிகள் அருள் சக்திகள் இங்கே படர்ந்து இருப்பதனால்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் சப்தரிஷிகளின் அருள் சக்திகளை நுகரும் பொழுது
2.சப்தரிஷி மண்டலமும் சப்தரிஷி மண்டலமும் காட்சியாகக் கிடைக்கலாம்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய ஒளி அலைகளும் (நீல நிற ஒளிக்கற்றைகள்)
4.துருவ நட்சத்திரத்தைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்களும் இப்பொழுது கிடைக்கின்றது.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு உணர்த்திய அருள் உணர்வுகள் இப்பொழுது தெளிவாகத் தெரிய வரும்.
6.குருநாதருடைய அருள் உணர்வு கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளைப் பெற முடியும்

அகஸ்தியனை நீங்கள் பார்த்ததில்லை… ஆனால் அகஸ்தியனுடைய பேரருளைப் பார்க்க முடியும். அகஸ்தியன் வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை நீங்கள் எடுத்து வளர்க்க வளர்க்க
1.அகஸ்தியனையும் காணலாம்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரையும் காணலாம்.

ஏனென்றால் டிவி ரேடியோ அலைகளைப் பதிவாக்கிய பின்… அது எப்படி அந்த அலைத் தொடர்களின் மூலம் படங்களையும் ஒலிகளையும் நாம் காண்கின்றோமோ… கேட்கின்றோமோ… அதைப் போல்
1.அருள் மகரிஷிகள் உணர்வுகளை… ஒருங்கிணைந்த அந்த ஆன்மாக்கள் படர்ந்திருப்பதை
2.நாம் நுகர்ந்து வலுப்பெற்றால் நமக்குள் அவர்களின் காட்சியையும் காண முடியும்
3.அவர்களின் அருள் சக்திகளைப் பெற முடியும்…
4.அந்த ஞானிகள் காட்டி வழியில் நாம் வாழ்ந்து இருளை அகற்றலாம்… பேரருளையும் பெற முடியும்…!

நீங்கள் எங்கே இருந்தாலும் எந்த நிமிடத்திலும் இந்த அருள் சக்திகளைப் பெற முடியும். கண்ணின் நினைவு கொண்டு உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் அதை வளரச் செய்யலாம்… எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய முடியும்.

இன்று உலகம் கடும் மோசமாக இருப்பதனால் அதையெல்லாம் நாம் மாற்றக் கூடிய சக்தியாக அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை நாம் அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று… காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில்
1.அதற்குள் மறைந்துள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்று
2.அந்தப் பேரருளை நாம் வளர்த்துப் பேரொளியாக மாற வேண்டும்.

இத்தகைய பழக்கத்திற்குத் தான் நாம் வர வேண்டும்.

வாழ்க்கையில் எதையுமே குறையாக எண்ண வேண்டியதில்லை… குறைகளைக் காண வேண்டியதில்லை.

சந்தர்ப்பத்தில் எங்கே யாரிடம் எதிலே குறைகளைக் கண்டாலும் அடுத்த கணம்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அவர்களும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.. தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இது போன்று ஆத்ம சக்தி செய்து செயல்படுத்தி வாருங்கள்.

இவை எல்லாம் குருநாதர் காட்டிய வழியில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய வழி முறைகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய வாழ்க்கையில் நல்லதுக்காக நீங்கள் ஏங்கித் தவிக்கப்படும் பொழுது உயிரான ஈசன் அமைத்த ஆலயத்தில் (உங்கள் உடலில்) அருள் மகரிஷிகள் உணர்வுகள் படர்ந்து இருளை நீக்கிப் பொருள் காணும் அந்தத் திறன் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் நான் (ஞானகுரு) “மௌன விரதம்” இருக்கின்றேன்.

1.உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று தியானமும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா நிலை அடைந்தானோ
3.அதே போன்று உங்கள் வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தியும்… தீமைகள் உட்புகாது தடுக்கும் ஆற்றலும்
4.அருள் ஒளி என்ற நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் வாழ்க்கை வாழ்ந்திடவும்
5.உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடையவும் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

உங்கள் உடலுக்குள் ஒன்றுபட்டு வாழும் உணர்வுகள் வளருதல் வேண்டும். காரணம் உங்கள் உடலுக்குள் வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்ற உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்று பகைமை கொண்டு மோதும் போது தான் உறுப்புகளில் வேதனையும் உணர்ச்சிகளில் வேதனையும் வேதனைப்படுத்தும் செயல்களையும்… சொல்லாகச் சொல்லும் பொழுது கேட்போருக்கும் அந்த வேதனையை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நீங்கள் மீள வேண்டும் என்பது தான் என்னுடைய தியானமே…! அரும்பெரும் சக்திகளைக் குருநாதர் காட்டி அருள் வழியில் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.

யாம் பதிவு செய்த அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் நுகரும் போது உங்கள் ஆகாரத்துடன் அது கலந்து நல்ல இரத்தமாக மாறுகிறது. உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெருக்கி உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய இந்தத் தியானம் உதவும்.

ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்… உயிர் வழி நுகருங்கள்.
1.கண் வழி கவர்கின்றோம்
2.ஆனால் உயிர் வழி நுகர்தல் வேண்டும்.

சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…! தீமை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக்
1.கண்களால் ஏங்கிப் புருவ மத்தியில் பதிவு செய்யப்படும் பொழுது
2.அந்த உயிரான நிலைகள் – அதனுடைய காந்தப்புலன் அறிவு
3.நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உயிர் வழி…
4.உயிர் என்ற உணர்வுடன் ஒன்றித் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றது.
5.அதனின்று வரும் பேரருளை நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

இப்பொழுது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை உயிரான காந்தம் கவரும் பொழுது
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள்
2.நீல நிற ஒளிக்கற்றைகளை உயிர் கவருவதை நீங்கள் உணரலாம்.
3.உங்கள் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை ஈர்க்கும் அந்த வலிமை கிடைக்கும்… அதை இப்பொழுது உணரலாம்.

துருவ ஒரு நட்சத்திரத்தின் பேர்ருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் இரத்தங்களில் செலுத்துங்கள். இப்பொழுது இரத்த நாளங்களில் ஒரு புது விதமான உணர்ச்சிகள் வரும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… கணையங்கள் கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் சிறுநீரகங்கள் இருதயம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் ஒரு புது விதமான உணர்ச்சிகள் உருவாகிறது. உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.கண்களில் கவரும் நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவரும் வலிமை மிக்க நரம்பு மண்டலங்களாக மாறி கண் ஒளி சீராக அமைந்து
3.அனைத்தையும் அறிந்திடும் அருள் ஞானக் கண்ணாக கண் நரம்பு மண்டலம் உருப் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணுக்குள் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கண்களை இயக்கிக் கொண்டிருக்கும் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து
1.அகண்ட அண்டத்தில் வரும் அருள் உணர்வுகளை அறிந்திடும் அருள் சக்தியும்
2.அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான உணர்வைப் பெறும் தகுதியும்
3.கண்ணின் நரம்பு மண்டலம் பெற வேண்டும்… அதைப் பெறக்கூடிய தகுதி பெற வேண்டும் என்றும் ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய அனைத்து நரம்பு மண்டலங்களும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இவ்வாறு செலுத்தும் போது நரம்பு மண்டலங்களில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகள் அனைத்தும் இப்பொழுது அகல்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக மாற்றும் தகுதி பெறுகின்றோம்.

கணவன் மனைவி என்ற நிலை இல்லாது ரிஷித் தன்மை அடைய முடியாது

 

பூரண நிலவாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெறுதல் வேண்டும்.
1.ஏனென்றால் அதிலே எதுவும் இருள் சூழாது… எதுவும் அதை அடக்கிட முடியாது.
2.எத்தகைய விஷத்தன்மை வந்தாலும் அது ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே இருக்கும்.

அதன் அரவணைப்பில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்ற சப்தரிஷி மண்டலம்… அதைக் கவர்ந்து உணவாக எடுத்து என்றும் பதினாறாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதன் ஆன பின் கடைசி நிலை பூரண நிலா என்ற நிலைகள் கொண்டு பூரண ஒளிச்சுடராக மாறுவது என்பது… மனிதன் எண்ணத்தால் கவர்ந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் நிலை. அந்த நிலையை நாம் பெறுதல் வேண்டும்… அனைவரும் அதைப் பெற முடியும்…!

அகண்ட அண்டத்தில் எல்லையே இல்லாத இடத்தில் விரிவடைந்த நிலையில் ஏகாந்த நிலைகள் கொண்டு எதனையும் அடக்கி உணர்வினை மகிழ்ந்து செயல்படும் நிலையாக நாம் பெற முடியும்.

அது தான் ஏகாதசி என்பது. ஏகாந்த நிலைகள் கொண்டு பத்தாவது நிலை என்ற ஒளியின் உணர்வாக நிலையான சரீரமாக நாம் இருக்க முடியும்.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் போன்று நாமும் வாழ முடியும். அகஸ்தியன் தான் பெற்ற சக்தி எல்லாம் தன் மனைவிக்குக் கொடுப்பதும்… மனைவி அதனை ஏற்று கணவன் வழி நடப்பதும்… கணவனால் பெற்ற சக்தி மீண்டும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும்… கணவன் மேலும் உயர வேண்டும் என்று அது ஏங்குகின்றது.

1.எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும்… அந்த உணர்வின் ஒளியை உருவாக்க வேண்டும் என்று இருவருமே இணைந்த நிலையில் செயல்பட்டார்கள்.
2.ஏனென்றால் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தவன் அவன் (ஆகஸ்தியன்). அது இல்லை என்றால் எதுவும் உருப்பெறாது என்ற உண்மையை உணர்ந்தவன்.

கல்லானாலும் தாவர இனங்கள் ஆனாலும் ஆண் நட்சத்திரத்தின் இயக்கமும் பெண் நட்சத்திரத்தின் இயக்கமும் இணைந்தால் தான் உருப் பெற முடியும் என்று இதையெல்லாம் அகஸ்தியன் உணர்ந்தவன்.

1.கணவன் மனைவியும் இரண்டறக் கலக்க வேண்டும்… பேரொளியைத் தனக்குள் பெற வேண்டும் என்று
2.27 நட்சத்திரங்களின் மின்னலின் சக்தியைத் தனக்குள் கூட்டி
3.மின்னல் தாக்கப்படும் பொழுது எப்படி இருள்கள் மாய்கின்றதோ ஒளியின் மின் அணுக்களாகப் பரவுகின்றதோ இதைப் போல
4.உடலின் உணர்வுகள் அனைத்தையும் அவன் தனக்கும் தன் மனைவிக்கும் சேர்த்து
5.இந்த உணர்வினை ஒன்றாக இணைத்து “மின்னணுக்களாக உடலில் உள்ள அணுக்களை மாற்றிடும் சக்தி பெற்றான்…”
6.துருவத்தை உற்று நோக்கித் தனக்குள் அந்த உணர்வுகளை நுகர்ந்து
7.மின் அணுக்களைத் தனக்குள் மாற்றி துருவ மகரிஷி ஆனான். தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டான்.

ஆனால் கணவன் மனைவி ஒன்று சேராது தனித்த நிலையில் கடும் தவம் இருந்து சக்தி பெறுவேன் என்றால் முனி என்ற நிலையைத் தான் அடைய முடியும்… மனைவி என்ற நிலை இல்லாது ரிஷி என்ற நிலைக்கு வர முடியாது.

திருமணமாகாத பெண்களும் கடும் தவம் இருக்கிறேன் என்று சொன்னால் உருப் பெறும் தன்மையைக் கருவாக உருவாக்க முடியாது.

1.கணவன் மனைவி எவர் ஒருவர் ஒன்று சேர்ந்து இந்த அருள் உணர்வுகளைப் பெருக்குகிறார்களோ
2.அவர்களே ஒளித் தன்மையாக உருவாக்க முடியும்.

உயிர் எப்படி உருவானதோ… அதே போல தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போன்றே உணர்வின் ஒளியாக அது மடியாது… தனக்குள் ஒளியாக மாற்றிடும் தன்மை பெற முடியும்.

அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.

“புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி

 

அருந்துகின்ற நன்னீர் உடைய அழகிய ஒரு பொய்கை உள்ளது. அருமருந்து போல் தித்திக்கின்ற சிறப்புடைய அந்தக் குளத்தின் நீரை… அந்நீரின் தூய்மை கெடாத வண்ணம் பாதுகாத்தலே சிறப்பாகும்.

அந்த நன்னீர் பொய்கையைக் கண்டவுடன் அந்த நீரில் நமது ஆடைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறப்புடையது என்ற எண்ணம் கொண்டிட்டால்… ஆடை தூய்மை பெறும்.
1.ஆனால் குளத்தின் நீர் தன்மை மாறு கொண்டுவிடும்.
2.அதன் தூய்மை கெட்டு அருமருந்தை விருந்தாக்கிடும் செயலும் அற்றுப்போகும்.

நீண்ட நெடும் அறிவின் தர்க்கத்திற்கே… “தர்க்கம் என்பது வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்ற நல்ல வாய்ப்பு…” என்றால் மிகையன்று.

சிறப்புடைய ஓர் காலகட்டத்தின் மன அசைவு நிலை… பாடத்தின் தன்மை கருத்தோவியமாக விளங்குதலினால்… காட்சிப்புலன் உலகோதய நடைமுறை ஆத்ம ஞானம் கூட்டிடும் சிறப்பு என்று சுருங்கக் கூறினாலும்… விளங்கிக் கொள்கின்ற தன்மையாக அதன் தொடரை இதில் உரைப்போம்.

நன்னீர் பொய்கை என்று உரைத்திட வந்ததே…
1.உயிராத்மா வலு வேண்டி உயர் ஞான முகிழ்விப்பில்
2.தன் உயிராத்மா சக்தியின் முலாமை வளர்த்துக் கொண்டிட வேண்டும் என்ற உத்வேக உந்துதல் தான்.

அந்த முயற்சியின் வித்து… அஷ்ட பேதங்கள் கூட்டிடும் “சிருஷ்டியின் உதயத்திலும்” அதே செயல் தன்மை “உயர் ஞான வளர்ப்பிலும்” உண்டு.

நெருப்பாகவும் நீராகவும் காற்றாகவும் நிலமாகவும் ஆகாயமாகவும் அமில குணத்தன்மைகளாகப் பால்வெளியில் படர்ந்து விளங்கிட்ட சக்தியின் சக்தியையே பஞ்சபூதங்களாகக் காட்டிட்ட அத்தன்மைகள்…
1.ஒன்று கலந்த உயிரணுவாக பரிணமித்திடச் செய்வது “அகங்காரம்” என்ற பேதம்.
2.இந்நிலையின் கூட்டுச் சுழல் தன்மையால் மனம் “எண்ணம்” என்ற பேதத்தைக் காட்டுகின்றது.
3.இதனினும் சூட்சும பேதமே “அறிவேனும் புத்தி”
4.ஆக ஓர் சிருஷ்டியின் அஷ்ட பேத குணங்களின் சங்கமத்தின் மூலம் தான் ஆத்ம நிலை ஐக்கிய ஜீவன் பெறுகின்றது.

இத்தன்மைகளின் மூலத்தையே பிரகிருதி (இயற்கையின் நியதி) என்பார் வியாச பகவான்.

“எத்தனை பேதங்கள் ஒன்றுபட்டு” அற்புதமான இந்த மனிதச் சரீரம் வாய்க்கப் பெறுகின்றது…? காலத்தின் தன்மையைத் தவறவிட்டால் அது தகுமா…?

இயற்கையின் சிருஷ்டியே பேதங்களாகப் பாகுபடுத்திக் காட்டிட வீரியத் தன்மைகள் கிடைத்தற்கரிய பாக்கியம் பெற்ற இந்த மானிட ஜென்மத்தின் சக்தி பெற்றிடும் வழி அறிந்தும்…
1.பஞ்சபூதங்கள் எனும் பரந்த பேரருள் செல்வத்தை மனிதன் தேடியே அலைந்து
2.அதைக் கூவி அழைத்தாலும் அது பருப்பொருளாகக் (கண்ணுக்குப் புலப்பட்டதாகக் கையில்) கிடைக்குமா…!

பஞ்சபூதங்களை இவனில் ஐக்கியப்படுத்திவிட்டு… ஒன்றில்லாமல் ஒன்று இல்லை என்றே பின்னிப் பிணைந்திட்டு… சுவாசத்தின் தன்மையாகச் சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள சக்தியைத் தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டு வளர்வதில்… “தான் எத்தகைய பேதமும் உரைத்திட முடிந்திடாது…”

மகா ஞானியாக இருந்தாலும் இச்சுவாச அலை ஈர்ப்பில்… தன் ஆத்ம சக்தியைப் “பிறரைப் போற்றி அடிமை கொண்டிடும் பொழுது… பஞ்சபூதங்களே பேதங்கள் காட்டும்…”

இனி உயர் ஞான வளர்ப்பில் சிந்திக்கலுறும் மனித ஜீவன்… அஷ்ட பேதங்களை ஒன்றுபடுத்திடும் உயர்வான ஜெப அலையை ஈர்த்திடும் பொழுது… சரீரம் கொண்டிட்ட உணர்வுகள் பஞ்சேந்திரியங்களாகச் செயல்படும் காலத்தில்… அதி நுட்ப உணர்வுகள் கிளைத்தெழும் தன்மையை வளர்த்துவிடும் “காந்தப்புலம்…”
1.இங்கு தான் மனத்தின் பேதம்
2.புத்தி எனும் அறிவின் பேதத்தை நாடுகின்றதா…?

அன்று பஞ்சேந்திரியங்கள் கட்டவிழ்த்து ஓடும் ஓர் பிடிப்பின் தன்மைக்கு… அறிவின் ஆற்றலையே உண்டுவிடும் ஈர்ப்பில் அது செயல் கொள்கின்றதா…? என்ற வினாவிற்குப் “புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி.

பரிவு எனும் பேதம் கொண்டது நன்னீர் பொய்கை. ஆடை என்பது உலகோதயப் பிடிப்பு எனும் அதி ஆசை நிலை.

அந்த ஜெபநீரைப் பெற்றிடவே… பேரருள் செல்வமாக விளங்கிடும் அந்தப் பேரானந்தப் பெருநிலையை… அறிவு என்னும் தீட்சண்யம் கொண்டு விளங்கிச் சுடர்ந்திடும் அத்தன்மையை… மனிதன் உலகோதயப் பிடிப்பில் செயல் கொண்டு வாழ்ந்திடும் செயலின் நிலையே – நன்னீர் பொய்கையும்… அதிலே ஆடை சுத்தி செயல் தன்மையும்…!

தனக்குள் கட்டுக்குள் அடங்கி நிற்கின்ற பேத குணத்தன்மைகள் அது கட்டவிழ்ந்து ஓடும் செயல் நிகழ்வு புலன்கள் காத்திடாத் தன்மையாக உள்ளதே மௌடீக (மூடத்தனம்) நிலை.

கற்பு என்றிட்டால் சிற்றின்ப நிலை அடக்கும் தன்மையையே இன்றைய மனித மனம் உரைத்திடும். அது அல்ல…!

பஞ்சபூதங்கள் தன்னுள் செயல் கொண்டு… பஞ்சேந்திரியங்களான…
1.மனம் புத்தி அகங்காரம் என்ற சூட்சுமத் தன்மைகளைத் தன்னுள் தெளிவுபடுத்திக் கொண்டு
2.இயற்கையுடன் ஒன்றி வாழ்பவனுக்கு பேரின்ப நாட்டமன்றோ சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கிடும்.

இதையே கற்பு என்பர் மகரிஷிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.உயிரிலே எது பட்டாலும் அதைத்தான் அது இயக்குகின்றது,,, அதைத் தான் இயக்கும்…!
2.அது தன்னிச்சையாக எதுவும் செயல்படுத்தாது

ஒரு நெருப்பை வைத்தோம் என்றால் அது தன்னிச்சையாக சமைக்குமா என்றால் இல்லை. நெருப்பை வைத்து… அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து… அதில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அதைத்தான் அது சமைக்கின்றது.

இதைப் போன்று தான்
1.“வெப்பத்தின் உணர்வு கொண்ட நமது உயிர்…”
2.அதில் இருக்கக்கூடிய காந்தம் எதைக் கவர்கின்றதோ சுவாசிக்கின்றதோ
3.அந்த உணர்ச்சியின் செயலே செயல்படுத்துகின்றது
4.அந்த உணர்வுக்கொப்பதான் வாழ்க்கை அமைகின்றது
5.இந்த உணர்ச்சிக்கொப்பதான் நாதங்களை எழுப்புகிறது.
6.உணர்ச்சிக்கொப்பத்தான் எண்ணம் சொல் செயல் என்று இயக்குகின்றது.

உயிரே கடவுள் என்றாலும் மிருக நிலையிலிருந்து ஆறாவது அறிவு கொண்டு மனிதனாக எப்பொழுது முழுமை பெற்றானோ… முழு முதல் கடவுள். தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெற்றவன் என்று விநாயகனைப் போட்டு மனிதனுக்குள் இருக்கும் சக்திகளைக் காண்பித்துள்ளார்கள்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி நீக்கி… தீமைகளை நீக்கிடும் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது உயிர் தான்.

ஆகவே அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்…! அருள் மகரிஷிகளின் உணர்வுகளை யாம் (ஞானகுரு) ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது மீண்டும் அதை நினைவு கொண்டு நீங்கள் எடுத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறலாம்… தீமைகளை அகற்றலாம்.

இதற்கு பயிற்சி அவசியம் தேவை.

ஒரு தையல் மிஷினில் அமர்ந்த உடனே துணியைத் தைத்து விட முடியுமா…? சமையல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சமைக்கத் தெரியாதபடி உணவைச் சுவையாகக் கொண்டு வர முடியுமா…?

எல்லாக் காய்களையும் போட்டாலும் அது பக்குவப்படுத்தி வைத்தால் தான் அந்தக் குழம்பு ருசியாக இருக்கும்.

வெறும் சோறை ஆக்க வேண்டும் என்றாலும் கூட நெருப்பைத் திகு திகு… என்று எரித்துவிட்டு அதிலே அரிசியைப் போட்டால்
1.அதில் வைக்கக்கூடிய நெருப்பின் அளவுகோல்படி ஒரு பக்கம் அரிசி வேகும்.
2.அடியில் இருப்பது கருகிவிடும். மேலே இருப்பது வேகாது இருக்கும்.
3.கருகிய அரிசி மேலே சென்ற பின் அந்தச் சமையலே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

இந்த நெருப்பின் அளவுகோல் மாறினால் அரிசியின் வேக்காடும் மாறிவிடும்.

“ஆகவே எதிலுமே பக்குவம் தேவை…”

யாம் சொல்லும் இந்த தியானத்தின் மூலம் பக்குவப்படுத்தக்கூடிய முறைகளைப் பழகிக் கொண்டால் தீமைகளை மாற்றி அமைக்கும் பழக்கம் வந்துவிடும்.

தையல் வேலை தெரிந்தவர்கள் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே துணிகளைக் கத்திரித்து அதைச் சீராகத் தைப்பது போன்று
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பயன்படுத்தப் பழகிக் கொண்டால்
2.தீமைகளை நீக்கும் அந்த ஆற்றல் இயற்கையாக நமக்குள் வந்துவிடுகிறது

எலக்ட்ரிக்… எலக்ட்ரான்…! எதனின் அழுத்தம் அதிகமாகிறதோ அதன் நிலைக்கே வருகிறது. சங்கடம் சங்கடம் என்ற இந்த அழுத்தம் அதிகமாகி விட்டால் நமக்கு முன்னாடி அதுவே எலக்ட்ரானிக்காக இருக்கின்றது.

தீமை என்ற உணர்வு எலக்ட்ரானிக்காக மாறிவிட்டால் அது நன்மைகளை நமக்குள் விடுவதில்லை. ஆனால் தீமைகளை நீக்கிய அருள் உணர்வுகளை நமக்கு முன்னாடி வைத்து… தீமை என்ற உணர்வு உள்ளே புகாதபடி நன்மையின் உணர்வுகளாக… அந்த எலக்ட்ரானிக்காக மாற்ற வேண்டும்.

உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகரும் உணர்வுகள் சந்தர்ப்பத்தில் நமக்குள் பதிவான நிலை கொண்டு எலக்ட்ரானிக்…
1.வேதனை வெறுப்பு குரோதம் கோபம் என்ற உணர்வின் அழுத்தம் அதிகமானால்
2.மனிதன் எவ்வளவு தான் நல்லது செய்ய வேண்டும் என்று நல்ல உணர்ச்சிகள் ஆனாலும் அதைச் செயல்படுத்த முடியாது போய்விடும்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை மாற்ற ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம்… மகிழ்ந்து வாழ்வோம்… பிறவி இல்லா நிலை அடைவோம்.

இது தான் மனிதனின் கடைசி நிலை.

அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா இல்லை அடைந்தானோ… உயிருடன் ஒன்றி ஒளியாக மாறினானோ… அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.
1.இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.
2.அந்த ஆற்றலை நாமும் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக கோப குணத்தை நாம் நுகர்ந்து விட்டால் உடலுக்குள் என்ன நடக்கிறது…?

ஒரு மிளகாயை வாயிலே போட்ட பின் நாம் எப்படி அலறுகின்றோமோ இதைப் போல் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் அதே உணர்ச்சிகளைத் தூண்டும்.

அதைத் தாங்காத நிலைகள் கொண்டு அந்தக் கார உணர்வுகள் அதிகமானால் இந்த அணுக்கள் அந்தக் காரத்தையே ஏற்று காரமான மலத்தை அது வெளிப்படுத்தும் தன்மை வருகிறது.

இப்படி நமது வாழ்க்கையில் சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து வந்தாலும்
1.கோபத்தின் உணர்வு கொண்டு கோப (கார) உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது
2.நரம்பு மண்டலங்களில் அதனுடைய இயக்கம் நாளுக்கு நாள் சேர்ந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது
3.அப்பொழுது நம்முடைய உடல் அங்கங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இந்த உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகி விட்டால் அந்த உணர்ச்சிகள் நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றி… இந்த உணர்வின் இயக்கம் நரம்பு மண்டலங்களில் மாற்றப்படும் பொழுது “கை கால் அங்கங்களைச் சுருக்கி விடுகின்றது…”

ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் அந்தக் கோப குணம் உடலை எப்படிப் பாதிக்கின்றது என்பதைக் காட்டுவதற்காகக் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காட்டியுள்ளனர் ஞானிகள்.

புலி எப்படி இரக்கமற்று மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுகின்றதோ அதே போல
1.பிறிதொருவர் மீது வெறுப்புகள் வரப்படும் பொழுது
2.அந்தக் கார உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது
3.சிந்தனை அற்றவனாக ஆக்கி வெறித் தன்மை கொண்டு இயக்கப்பட்டுவிடுகிறது.

நண்பனாகப் பழகினாலும் கூட தான் எண்ணிய வழி அவன் சரியான நிலைகளில் வரவில்லை என்றால் ஆத்திரங்கள் அங்கேயும் வருகின்றது.

ஆத்திரம் அதிகரிக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது. யாரைப் பார்த்து இந்த உணர்வைச் சேர்க்கின்றோமோ “தாக்க வேண்டும்…” என்ற உணர்வுகளை உண்டாக்கிடுகின்றது.

ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன நடக்கின்றது…?

தாக்குபவனின் உணர்வுகளும் தாக்கப்பட்டவனின் உணர்வுகளும் அங்கே அவர்களுக்கு முன்னாடி இருக்கின்றது. அந்தக் கார உணர்ச்சிகள் உயிரிலே மோதினால் அது நம் உடலில் காளியாக மாறுகின்றது.

உயிரிலே மோதப்படும் போது அதே வேக உணர்வுகள் மோதியவுடனே உடலை இயக்கத் தொடங்கி விடுகிறது. இதைத்தான் “சிவன் – ருத்ர தாண்டவம் ஆடுகிறான்…” என்று காட்டினார்கள்.
1.ஆக… நாம் ஆடுகின்றோமா…!
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மை ஆட்டுவிக்கின்றதா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தாக்கப்படுபவன் நண்பனாக இருக்கும் பட்சத்தில்… அவன் மீது அன்பைச் செலுத்தி அவன் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அவன் படும் வேதனை நம்மை இயக்குகின்றது. ஆனால் வேதனை என்பதே விஷம்.

நண்பனைத் துன்புறுத்தும் உணர்வு கொண்டு எதிராளி தாக்குகின்றான். நண்பனின் வேதனையை நுகர்ந்து விஷத்தின் தன்மை உடலுக்குள் சென்று விட்டால் நமக்குள் என்ன நடக்கிறது…?

காற்று மண்டலத்தில் சில செடி கொடிகள் விஷத்தின் தன்மை கொண்டதாக இருக்கும். அந்தச் செடி கொடிகள் உமிழ்த்தும் மணங்கள் காற்றில் கலந்து வருவதை நாம் சுவாசித்தால் நமக்கு மயக்கம் வருகின்றது.

அதைப் போல் நண்பனின் வேதனையை நாம் சுவாசித்தவுடன் உடல் முழுவதும் பரவி சிந்தனை இழக்கச் செய்து விடுகின்றது.

சிந்தனை இழந்த பின் யார் மீது பற்று இருக்கின்றதோ அவனைத் தாக்குவோர் மீது எதிர் நிலையாகி “அவரைத் தாக்க வேண்டும்…” என்ற வேக உணர்வு வருகின்றது.

வேதனை வரும் பொழுது “முதலில்” சிந்தனையை இழக்கச் செய்கின்றது… சோர்வடையச் செய்கின்றது. ஆனால் கார (கோப) உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது விஷமும் கார உணர்வுகளும் வேக நிலையில் கலந்து ஏதிராளியைத் தாக்கும் உணர்ச்சிகளே நமக்குள் கூடுகின்றது.

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் நண்பருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது இதைப் போன்ற நிகழ்ச்சிகள் தான் வாழ்க்கையில் நடக்கின்றது.

நமக்கு வேண்டியவரை ஒருவர் தாக்கி விட்டால் நமக்கு எப்படி இருக்கும்…? வேதனைப்படும்போது அலறுகின்றோம். ஏன் எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை..! ஆனால் தாக்கிவிட்டான் என்று அடுத்தவன் மீது கோபப்படுகின்றோம்.

இப்படி… நமது வாழ்க்கையில்
1.நாம் தவறு செய்வதும்…
2.நாம் தவறு செய்யாமல் இருப்பதும்…
3.நம்மைத் தவறு செய்ய வைப்பதும்… “பிறருடைய நிலைகளை வைத்துத் தான்…”

இந்த உணர்வுகள் அணுக்களாக மாறி விட்டால் உணர்ச்சிகளைத் தூண்டிக் கண் வழி கவர்ந்து உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் உமிழ் நீருடன் கலந்து இரத்தத்திலே கலந்து விடுகின்றது… தீமைகளாக விளைகின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமா இல்லையா…!

இந்த உபதேசம் எளிதானதல்ல…!

 

பூமிக்குள் உருவாகும் தாவர இனங்கள் அனைத்திற்கும் உணவு எங்கிருந்து எப்படிக் கிடைக்கிறது…? என்பதை அறிய முற்படுகின்றான் அகஸ்தியன். அப்பொழுதுதான் பூமி துருவத்தின் வழியாக அதைக் கவர்கிறது என்று உணர்ச்சியால் அறிகின்றான்.
1.துருவத்தினை நோக்கி உணர்வினைச் செலுத்துகின்றான்
2.அது தாவர இனங்களுக்குப் போவதற்கு முன் இவன் நேரடியாக நுகரும் தன்மை வருகிறது.
3.இவனுக்குள் இருக்கும் சக்தியின் தன்மை அதை மாற்றி அமைக்கின்றான்.

மற்ற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி அதிலிருந்து வரும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது மின்னல்களாக மாறி ஒளிக்கற்றைகளாகப் பரவி மற்றதுடன் இணைந்து விடுகின்றது… பல மாற்றங்கள் ஆகின்றது.
1.அகஸ்தியன் துருவத்தை உற்று நோக்கும் பொழுது அந்த நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பார்க்க நேருகின்றது.
2.அதை அவன் நுகர நேர்கின்றது. அவன் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் பெருக நேர்கின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியும் ரேவதி நட்சத்திரத்தின் சக்தியும் அதிலிருந்து வரக்கூடிய துகள்கள் தூசியாக வரப்படும் பொழுது… வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கமும் சந்திக்கும் பொழுது… அதைக் கண்ட பின் தாக்கி ஓடும் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து மோதி… அதிலே சிக்குண்ட நிலைகள் கொண்டு தான் துடிப்பு என்ற நிலையில் “ஒரு உயிரணு உண்டாகிறது…”

இந்த நட்சத்திரத்தின் இயக்கத்தில் தான் உயிர் உருவாகின்றது.
1.மின்னணு போன்று அது துடித்துக் கொண்டே இருக்கும் நமது உயிர்.
2.நுகரும் உணர்வைத் தான் அதே துடிப்பின் நிலை கொண்டு உடலாக மாற்றுகின்றது.

ஏனென்றால் எல்லாவற்றிலும்… செடி கொடிகள் அனைத்திலும் நட்சத்திரங்களின் இயக்கங்கள் உண்டு நட்சத்திரங்கள் இல்லாது எதுவும் இல்லை கல்லானாலும் மண்ணானாலும் அதிலே அது உண்டு.

கார்த்திகை நட்சத்திரம் ஆண்பால்… ரேவதி நட்சத்திரம் பெண்பால். ரேவதி நட்சத்திரத்தின் சக்தி அதிகமாகப் பெற்றிருந்தால் அந்த பாறைகள் வளரும் பெண்பால் என்று அந்தப் பாறைகள் வளர்ச்சியாகும்.

கார்த்திகை நட்சத்திரம் என்ற ஆண்பால் உணர்வுகள் பெற்றிருந்தால் அதனின் வளர்ச்சி குன்றியே தான் இருக்கும். செடிகளிலும் ஆண் செடி பெண் செடி என்ற நிலையில் உருவாகின்றது.

நமது உயிருக்குள்ளும் அத்தகைய நிலை உண்டு. கார்த்திகை நட்சத்திரம் ஆண் பால் என்றால் ரேவதி நட்சத்திரம் பெண்பால் ரேவதி நட்சத்திரத்தின் துகள்கள் அதிகமாக இருந்தால் பெண்ணாக உருவாக்கி மற்றொன்றைத் தன் இனத்தை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

கார்த்திகை நட்சத்திரம் என்றால் அதில் ஆண் என்ற நிலையில் தான் இருக்கும். இவ்வாறு நட்சத்திரங்களின் உணர்வு கொண்டு ஆண் பெண் என்ற உணர்வுகள் உருப்பெறுகிறது. பெண்ணாக இருந்தால் கருவாக்கி தன் இனத்தை அதன் ரூபமாக உருவாக்கும் நிலை பெறுகின்றது.

இவையெல்லாம் இயற்கையின் நியதிகள் என்று நமது குருநாதர் தெளிவாக்குகின்றார்.
1.உங்களுக்குச் சுருங்கச் சொல்கின்றேன் பார்த்த நிலையோ ஏராளம்.
2.அதையெல்லாம் வடித்து உங்களிடம் சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்குப் பொறுமை பத்தாது…
3.அவ்வளவு காலம் உங்களால் உட்கார்ந்து இருக்கவும் முடியாது.

கேட்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கும். அதே சமயத்தில் சிலருக்கு உடல் வலியும் இருக்கும்.
1.ஆனாலும் இதையெல்லாம் கேட்டு நுகரப்படும் பொழுது அவருடைய உடல் வேதனைகள் குறையும்.
2.முதலில் உட்கார முடியவில்லை என்று நினைத்திருப்பார்கள். இதை நுகர நுகர அந்த உடலில் இருக்கக்கூடிய வலிகள் நீங்குவதைக் காண முடியும்.
3.இருதய ஓட்டத்தின் துடிப்பு அதிலே அடைப்புகள் இருந்தால் இந்த உபதேசத்தைக் கேட்கக் கேட்க
4.இருதய ஓட்டத்தின் அடைப்புகளும் நீங்கும்… இதயம் சீராக இயங்கும்.

இந்த உபதேசம் எளிதானதல்ல…!

அகஸ்தியன் கண்டதை நமது குருநாதர் காட்டிய நிலையில் அதைக் கவர்ந்து உணர்வின் ஒலியாக வெளிப்படுத்தும் போது கேட்போர் செவிகளில் பட்டு இந்த உணர்வைக் கவர வேண்டும் என்று கண்ணின் பார்வையைச் செலுத்தப்படும் பொழுது நுகர்ந்து உயிரிலே பட்டு தான் உணர்வின் தன்மையே வருகின்றது.

அந்த உணர்வுகள் உங்கள் உடலில் சேர்க்கப்படும் பொழுது உடல் முழுவதும் சுழல்கின்றது. இதைச் சுழலச் செய்து
1.ஆதியும் அண்டத்தையும் அறிந்த அகஸ்தியன் உணர்வுகளை நீங்கள் எப்படியும் பெற வேண்டும்.
2.நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாக அவன் எப்படிப் பெற்றானோ அந்த நிலை நீங்கள் அடைய வேண்டும் என்பதற்குத்தான்
3.இதை உங்களிடம் உபதேசித்துக் கொண்டே இருக்கின்றேன் அடிக்கடி.

ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில வித்தியாசம் இருக்கும் முழுமையும் சொல்ல முடியாது.
1.இன்று சொன்னதை நாளை அதனுடன் சிறிதளவே இணைத்து அதைச் சேர்க்க முடியும்.
2.கண்ட உண்மையின் உணர்வினை அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு தான் உபதேசிக்க முடியும்… உங்களை நுகரச் செய்ய முடியும்
3.உயிர் உங்களுக்குள் ஜீவணுவாக மாற்றும் திறன் எதுவோ அதன் அளவு அங்கே மாறும்.

அகஸ்தியன் அருளாற்றலைப் பெற செய்வதற்குத் தான் இதைச் செய்வது.

அருள் வழியில் என்றும் வாழ்ந்திட அத்திரி மாமகரிஷியின் ஆசிகள்

 

“காசினி” என்று அழைக்கப்படும் பூமியின் நடு மையத்தில் ஆழ் உறைகின்ற நெருப்பானது… “ஈர்ப்பின் அலைபடுகின்ற பேதத்தினால் எதிர் மோதல் நிலைபெற்றுப் பொங்கிப் பிரவாகித்து (எரிமலை)… காசினியை விட்டு ஆசினி என அழைக்கப்படும் விண்ணை நோக்கி உயர்ந்து எழ.. மலை வாயின் வழி வழிவிட்டு அலைபடுத்தும் பேதத்தை நீக்கித் தன்னுள் சமன்படுகின்றது.

“ஆழ் உறையும் நெருப்பு” மலை வாயின் வழியே சொரிந்து வெளிப்படுத்துகின்ற செயலின் காரணம் “அலைபடுபேதம்…” (எதிர் மோதல் அலைகள்).

மனித மனத்தின் மாண்பு உலகோதய நடைமுறை ஈர்ப்பின் செயல் வசத்தில் வண்ணம் கொண்டு விளங்கிடும் மனக்கடல் அலையை
1.”உலகோதய நாட்டம்” எனும் மிகைப்பட்ட குணங்கள் (TENSION) அலைபடுகின்ற பேதத்தால்… அந்த அலைபடு பேதத்தை நீக்கிடவே…
2.காசினியின் நெருப்பு ஆசினியின் வழி ஓடி மலைவாயின் வழி சொரிதல் போல்
3.தெய்வீக நெறி நின்று வண்ண நிலை கொண்ட மனத்தின் பாங்கையே கேடுறுத்தும்
4.உலகோதயம் என்னும் அலைபடுபேதத்தைப் “பிடர் வழி போக்கிவிடு…”

எப்படி…?

“உந்துவிசை குணங்கள்” (தியானத்தின் மூலம் உந்தி எடுக்கக்கூடிய நல்ல எண்ணங்கள்) எண்ணியது எண்ணி ஆங்கு நிகழ்த்தப் பெறும் செயல்திறத்தால்
1.எடுக்கப்படும் உயர் குணத்தன்மைகள்… கொடுக்கப்பெறும் நற்குணங்களின் பிடர்தல் எனும்… “உந்துவிசையின் வழி”
2.மனதினை அலைக்கழிக்கின்ற அந்தப் பேதங்களைப் போக்கும்… சமன்படுத்தும்.

போகும் என்பது செயல்வழி போக்கும் என்பதே “முயற்சி வழி…”

ஆனால் சமன்படுத்தாதபடி… அலைபடு பேதத்தின் செயல்வழியாய்ச் சென்றிடுங்கால்… அலை கடலில் துடுப்பற்ற படகு தத்தளிக்கின்ற நிலைக்கு… அந்தந்தக் குணங்களின் ஆவேச உந்துதல் தன் வழியில் பற்றி இழுத்து நல்ல குணங்களைக் கேடுறுத்தும்.

ஆகவே… படகை (வாழ்க்கையை) நீ எங்கு செலுத்திட விரும்புகின்றாயோ அந்த இடத்திற்குச் செலுத்திட
1.“முயற்சி எனும் துடுப்பிட்டு” அலையைத் தணிவாக்கி
2.விரைந்து செலுத்தப்படுகின்ற தன்மையில் நிலை பெற்று நின்று வாழ்ந்திட எமது ஆசிகள்… அத்திரி மாமகரிஷி…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழும் பொழுது நம்மை அறியாது சில உடல் நோய்கள் வந்தாலும் தியானத்தின் மூலம் அதை நீக்கிக் கொள்ள முடிகிறது.
1.ஆனால் நோய்களை நீக்கினாலும் சிறிது காலமே இந்த உடலிலே வாழ்கின்றோம்.
2.எப்படியும் இந்த உடலை விட்டுச் சென்று தான் ஆக வேண்டும்
3.இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற அந்த அருள் ஒளியை எடுத்துப் பாய்ச்ச வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றோம்…”

உணர்வுகள் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்கின்றது. அருள் ஒளி பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையும் பொழுது அப்பொழுதும் உடல் சுருங்கத் தான் செய்யும்.
1.ஆனால் பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே அந்த ஒளி பட்டு ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து அதைக் கவர்ந்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து ஒளியின் பிளம்பாக மாறும்
4.நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

இதைத்தான் இராமன் நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்துத் தியானிக்கின்றான் என்று இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

நம்முடைய தியானங்கள் அனைத்தும்… நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்துப் பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உயிருடன் ஒன்றி… உடலில் இருக்கும் பொழுதே ஒளியின் உணர்வைச் சேர்த்து ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும்.

இதுதான் கடைசி நிலை…!

குளவி புழுவின் மீது விஷத்தைப் பாய்ச்சிக் கொட்டியபின் புழு குளவியாக மாறுகின்றது. சில புழுக்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும்
1.அந்த உடலில் இருந்து தன் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி… தான் சுவாசித்துப் புழு – பூச்சிகளாக மாறுகின்றது.
2.இந்தப் பூச்சிகள் வேறு இலையில் மீது பட்டால் அந்த உணர்வை எடுத்து வண்டாக மாறுகின்றது
3.இந்த வண்டுகள் மற்ற நிலைகள் பட்டபின் பலவிதமான உணர்வுகள் மாறி ஒரு உடலாக சேர்த்துக் கொண்ட உணர்வு மேல் ஒடுகள் மாறிப் போகின்றது.

இதைப் போன்று தான் நாம் அந்த அருள் உணர்வுகளை எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் இங்கே விளைந்து… இந்த உடல் ஒளியாக மாறுகின்றது. அடுத்து நாம் பிறவிக்கு வருவதில்லை.

இதற்காக வேண்டித் தான் பல கோடி தவயோகிகள் எத்தனையோ வகைகளில் முயற்சி செய்து செயல்படுத்தி உள்ளார்கள். இருந்தாலும் மார்க்கங்கள் மாறிவிட்டது.

இமயமலைப் பக்கம் நான் (ஞானகுரு) செல்லும் பொழுது ஜீவ சமாதியாக எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இமயமலைச் சாரல்களில் மண் இடுக்குகளில்… சந்துகளில் குகை மாறி அமைத்து… ஓ…ம் நமச்சிவாய… என்றும் ஓ…ம் நமோ நாராயணா… என்றும் இந்த ஒலிகள் வருகின்றது.
1.சிறையில் அடைத்தது போன்று குகைக்குள் இருக்கின்றார்கள்
2.வேறு எங்கும் செல்ல முடியவில்லை… உடல் என்ற இந்த கூட்டில் தான் அடங்கியுள்ளார்கள்

இதெல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்…! ஆகவே இப்போது நல்ல நினைவு இருக்கும் போதே ஒளியின் உணர்வாக மாறுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் செய்து நல்லதையே வளர்த்துக் கொண்டு வரும் பொழுது ஒருவன் கடுமையான தவறு செய்தால் எப்படி நினைக்கின்றோம்…?

1.நான் இவ்வளவு நல்லது செய்து கொண்டிருக்கின்றேன்…
2.இப்படித் தவறு செய்கின்றானே…! என்று “இரண்டு மடங்கு” வேதனைப்படும் நிலைகள் வந்து விடுகின்றது.

அதாவது… தியானம் செய்து நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வந்தாலும்… வேதனைகளை வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக இணைந்து விடுகின்றார்கள்.

ஆனால் வாழ்க்கையில் வரும் வேதனைகளை நீக்கும் நிலைகளுக்குத் தான் இங்கே உபதேசம் கொடுக்கின்றோம்.
1.நல்லதைச் செய்தாலும்… தர்மத்தைச் செய்தாலும்
2.எத்தனையோ பல நன்மைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று செயல்பட்டாலும்
3.வாழ்க்கையின் நிமித்தம் இடையில் வரக்கூடிய தவறுகளையும் தீமைகளையும் வேதனைகளையும் சுத்தப்படுத்தும் நிலைக்கு வர வேண்டும்.

பரிவு கொண்டு பண்பு கொண்டு பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகளை எடுத்து நம்மையே படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையாக வந்து விடுகிறது.

அது போன்று ஆகாதபடி தடுப்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். அந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

திட்டியவனை மட்டும் இப்படித் திட்டினான்… திட்டினான்… என்று நினைவுக்குக் கொண்டு வருகின்றோம். அப்பொழுது அது கோப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது.

அந்த நேரத்தில்
1.நம் குழந்தை ஏதாவது அழுதால் கூட “போடா நாயே…” என்று திட்டும்படி செய்யும்.
2.யாராவது நல்லது செய்தால் அட போய்யா…! என்று கோபமாகப் பேசும்படி வரும்… ஆக நல்லது செய்தாலும் கூட வெறுப்போம்.

என்ன இவர் இப்படிச் சீறிப் பாய்கிறார்…? என்று அவர்கள் நினைப்பார்கள்.

வேலை செய்யும் இடங்களிலே “மேலதிகாரி” தன்னிடம் வேலை செய்பவர்களை இது போன்று கடுமையாகத் திட்டினால் அது பய உணர்ச்சிகளைத் தூண்டி அவர்கள் சிந்திக்கும் வலுவை இழக்கச் செய்யும். கடைசியில் தவறு செய்யும் நிலையில் கொண்டு போய் விட்டுவிடும்.
1.நீங்கள் அதிகாரியாக இருந்து உங்களிடம் வேலை செய்பவர்களை மிரட்டிப் பாருங்கள்.
2.அடுத்து… அவர் செய்யும் வேலைகளில் தவறுகளை அதிகமாகச் செயல்படுத்துவார்கள்.

ஒரு சிலர் அவன் அப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்… என்று ஆத்திரத்துடன் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இரத்தக் கொதிப்பு நிச்சயம் இருக்கும்.

இது போன்ற நிலைகள் எல்லாம் நாம் மாற்ற வேண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவசியம் எடுத்து ஆக வேண்டும்.

காரணம் கோபப்பட்டுக் கொண்டிருந்தால் நம் காரியங்கள் தடைப்படுகின்றது யாரைப் பார்த்து நாம் கோபித்தோமோ அவனுக்கும் இதே உணர்வுகள் ரிமோட் செய்து அவனையும் இயக்கும்.

ஏனென்றால் காற்றிலே இருக்கின்றது… இந்த உணர்வின் வேகங்கள் அவனை இயக்கி…
1.கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் அதைத் தப்பாக்கி விடுகின்றது…
2.இயந்திரத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் என்றால் அதைத் தவறாக இயக்கச் செய்யும்…
3.வாகனத்தில் சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை இழந்து விபத்து ஆகிவிடும்.

இது எல்லாம் எதனால் வருகிறது…? சந்தர்ப்பம்…!

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இருந்து நாம் எப்படி மீள்வது…?

சந்தர்ப்பங்களில் இது போன்ற உணர்வுகள் மோதல் ஆனாலும்…
1.அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி…
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தீமை புகாது தடைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் யாரால் நமக்குக் கோப உணர்ச்சிகள் தோன்றியதோ அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால் கோப உணர்ச்சிகள் வருவதைத் தடைப்படுத்தும்.

நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

“அகஸ்தியனின் முழு ஆற்றலையும்… நீங்கள் பெறும் சந்தர்ப்பம்”

 

27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி தூசிகளாகக் கலந்து வரப்படும் பொழுது உராயும் நிலையில் அதிர்வுகளாகி மற்றதோடு கலந்து தூசிகளாக மாற்றி விடுகின்றது.

பல பல வர்ணங்களும் பல பல நிலைகளை உருவாக்கும் துகள்களாக மாற்றி விடுகின்றது.
1.அதைச் சூரியன் எவ்வாறு எடுத்து வைத்துக் கொள்கின்றது என்பதையும்
2.அதை அகஸ்தியன் எப்படி கண்டான் என்பதையும் “நீ உற்றுப் பார்” என்றார் குருநாதர்.

அடிக்கடி மின்னலைப் பார் என்று சொல்வார்… பார்த்தால் கண் போய்விடுமே என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும். பின் அந்த மின் அதிர்வுகளை உற்றுப் பார்க்கும் பொழுது மற்றதுடன் எப்படி ஊடுருகின்றது…? என்பதனை அறிந்தேன்.

முதலிலே பயந்தேன்…
1.பின் அவர் சொன்ன முறைப்படி எடுக்கப்படும் பொழுது அது எப்படி அடங்குகின்றது
2.உன் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் எப்படி அதைப் பெறுகின்றது…? அதைப் பெறக்கூடிய தகுதி நாளடைவில் வரும் பொழுது
3.நீ அதை பெற முடிகின்றது என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

துருவ நட்சத்திரமாக இருப்பதும் இதன் வழி தான்.

பல மின்னலின் ஒளிக்கற்றைகளைத் தனக்குள் பெருக்கிப் பெருக்கி உயிரின் துடிப்பு எப்படி மின்னலால் நட்சத்திரங்களால் உருவானதோ அதைப் போன்று
1.பல நட்சத்திரங்களின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒளிக் கதிர்களாக மாற்றிய அகஸ்தியன்
2.உயிருடன் ஒன்றி அவன் நிலை கொண்டு உள்ளான் துருவ நட்சத்திரமாக.

அந்த எல்லை அடைய வேண்டும் என்றால் அகஸ்தியன் தாய் கருவிலே சந்தர்ப்பத்தால் அவன் எவ்வாறு பெற்றான்…? அதன் வழியில் எப்படி வளர்ந்தான்…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றார்.

ஏனென்றால் தாவர இனங்கள் மாறுவதும் உடலான பிற்பாடு வளர்ச்சிகள் எப்படி வருகிறது…? என்பதையும் ஒவ்வொரு இடங்களுக்கும் அது அழைத்துச் சென்று அந்த உணர்வைக் காணும்படி செய்தார்.

விஷத்தை ஒடுக்கும் சக்தி உடல் பெற்ற பின் தாவர இனங்களுக்குக் கிடைத்து அதே தாவர இனம் மனிதனைக் காக்கும் நிலை வருகின்றது மனிதனை காக்கும் நிலையானாலும் அந்த உணர்வுக்குள் நுகர்ந்தது அனைத்தும் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குக் (அகஸ்தியனுக்கு) கிடைக்கின்றது.

1.உங்களிடம் இப்பொழுது சொல்கிறேன் என்றால் எனக்கு குருநாதர் இதையெல்லாம் காட்சியாகக் காட்டினார்.
2.நாம் இப்போது சொன்னதை நீங்கள் எடுத்துக் கொண்டால் அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும் பொழுது
3.அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை நீங்களும் காண முடியும். அது விளையும் போது பிறவி இல்லா நிலையும் அடையலாம்.

அதற்கே உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றேன்

நீங்கள் நினைவு கொண்டு அதனை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அதைப் பெற்று மனிதனுக்கு பின் பிறவியில்லா நிலை அடைந்த அருள் மகரிஷியின் உணர்வை நுகர்ந்து அதை உருவாக்குதல் வேண்டும்.

அகஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது இவன் உற்றுப் பார்த்த நிலையில் அந்த நட்சத்திரங்களில் வெளிப்படும் மின்னல்கள் ஒன்றுடன் ஒன்று தாக்கும் பொழுது
1.அந்த ஒளிக் கதிர்களை இந்தக் குழந்தையும் பார்க்கின்றது நுகர்கின்றது
2.உடல்களிலே சேர்த்துச் சேர்த்து அந்த அணுக்களின் தன்மை விஷத்தை ஒடுக்கிடும் அணுக்களாக மாறுகின்றது.

அந்த வழியில் வளர்ந்தவன் தான் மூன்று வயதாகும் பொழுது காட்டிற்குள் நடந்து சென்றாலே இவன் பின் ஒரு கூட்டமே செல்கின்றது. அவன் எண்ணத்தால் செல்லும் பொழுது இளமைப் பருவத்தில் பாம்போ தேளோ மற்ற விஷ ஜந்துகளோ யானைகளோ, புலிகளோ மற்ற கொடூர மிருகங்களோ இவனைக் கண்ட பின் அப்படியே நின்று விடுகின்றது.

ஏனென்றால் அதில் உள்ள விஷத்தின் இயக்கம் தடைப்படுவதனால் செயலற்ற நிலையாகின்றது.

1.அகஸ்தியன் உடலிலிருந்து வரக்கூடிய விஷத்தை ஒடுக்கிடும் மணங்களை நுகர்ந்தால் அந்த மிருகங்களின் அணுக்கள் ஒடுங்கி
2.இவனைத் தாக்குவதிலிருந்து தன்னைப் பாதுகாக்கும் நிலைகளிலேயே அமிழ்ந்து விடுகின்றது.
3.இவன் அங்கிருந்து சென்ற பின் சிறிது நேரம் கழித்துத் தான் மூச்சுகளை எடுத்து… பின் செல்கின்றது என்பதனை
4.அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டான் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நமது குரு இந்த உண்மையின் இயக்கங்களை உணர்ந்தார். பின் எனக்குள் அதைப் பாய்ச்சி நீ எதைச் செய்ய வேண்டும் என்று எம்மைத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றார்.

அகஸ்தியன் சென்ற பாதைகளில் அவன் பாத நிலைகள் கீழே படிந்துள்ளது…
1.அந்த உணர்வுகளைப் பூமியில் இழுத்து வைத்துள்ளது.
2.அவன் எந்தெந்தப் பாதையில் எப்பொழுது சென்றானோ
3.அந்தப் பாதையில் செல்வோருடைய நிலைகளிலும் சிலருக்கு அந்த அற்புத சக்திகளும் கிடைத்துள்ளது.
4.அதன் உணர்வை நீ நுகர்ந்து காட்டுக்குள் செல்லும் பொழுது
5.அகஸ்தியன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றதோ
6.அதே உணர்வுடன் நீ செல்லப்படும் பொழுது அந்த அருளை நீ பெறலாம்.

இப்படி அகஸ்தியன் சென்ற காட்டுப் பகுதிகளுக்கு எல்லாம் என்னை அலையும்படி செய்தார் குருநாதர்.

ஒரு கம்ப்யூட்டருக்குள் இயக்கத்தை ஊட்டியபின் அதனுடைய அலை வரிசையில் சென்ற பின் அதனுடன் தொடர்பு கொண்ட இயந்திரங்களை எப்படி எல்லாம் இயக்குகின்றதோ இதைப் போல குரு காட்டிய அருள் வழியில் என் உடலுக்குள் பதிவான பின் அகஸ்தியன் சென்ற பாதையில் என்னை அதே பாதையில் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி என்னை அங்கே போகும்படி செயல்படுத்துகின்றார்.

அந்த பகுதிகளுக்குச் செல்லும் பொழுதெல்லாம் அகஸ்தியன் எதை எதையெல்லாம் செய்தான் என்று காட்டுகின்றார் குருநாதர்

“பால் கடல் அமுது” எனும் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்கும் வழி

 

உஜ்ஜயினி மாகாளியம்மன் கும்பேஸ்வரி பிரதிஷ்டைக்குப் பின் பிருகு மகரிஷி “கதிரி” (மங்களூர்) சென்று செயல் கொள்ளும் முன்…
1.தன்னுடைய படைப்பின் வித்து செயல் கொள்ளப் போகும் காலத்தின் நியதியை ஞான நோக்கால் அறிந்து கொண்டு…
2.தீர்க்கதரிசன வாக்குகள் என்றே மூன்று குறிப்புகள் பதிப்பித்து அவற்றை ஓரிடத்தில் இட்டு… வாய்ப்பாகம் சிலை செய்து
3.உஜ்ஜயினி மாகாளிப்பட்டினம் உருக் கொள்ளும் எல்லைக்குள் அந்தப் பெட்டகத்தின் காப்பென பூமியினுள் புதைத்து வைத்து
4.நல் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அது பிற்காலத்தில் பயன்பட வேண்டும் மானசீக ஆசி அருளி
5.தெற்கு திசை நோக்கி நிர்விகல்ப சமாதி எனும் செயல் கொண்டிடும் கதிரி எனும் இடத்தில்
6.செவ்வேள் எனும் சூட்சும ஆன்ம நேய வளர்ப்பு என்றே பக்குவம் கொண்டு
7.மண்டல சூட்சும செயலுக்குத் தன்னைத்தான் தெளிவுபடப் பொருந்திக் கொண்ட இடம் மூடுபத்திரி (கர்நாடகா).

பிருகு மகரிஷியின் அருள் சக்தி பெறுவோம்… பெற்று அவர் பதித்த வாக்குகளை அனைவரையும் பெறச் செய்வோம்.

மூவிரண்டு நிலை (ஆறு குணங்கள்) என்னும் நற்குண செயல்பாட்டையே மனமெனும் ஆழ்கிணறு – அதனுள் சுவை நீர் – தண்ணமாய் (ஒரு பக்கம் உள்ள பறை) ஒலிக்கும் அகப்பொருள் தின்மையாகக் (வலிமை) கொண்டிடும் உறுதி என்பார் வேதாள மாமகரிஷி.

மனக்கிணற்றின் நீர்… “எண்ணத்திற்கொப்ப” சுவை மாறு கொண்டிடும் இயல்பு கொண்டிட்டது. ஆழம் கண்டிட முடியாத அந்த மனக்கிணற்றினுள் “வண்ணமாய்… அழகிய ஒரு பொருளும் உண்டு.
1.அதுவே “பால் கடல் அமுது” எனும் நிலையாம் “ஆத்ம பொக்கிஷம்..”
2.அதனைப் பெற்றிடும் உறுதி… மூவிரண்டு முனை கொண்டிட்ட பொருள் பற்றிக் கொண்டிடல் வேண்டும்… அதுவே நற்குணங்கள்.

அதாவது… நற்குணங்கள் கொண்டு தான் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்க முடியும். கிணற்றில் விழுந்துவிட்ட வாளியைப் “பாதாள குறடு (கரண்டி)” கொண்டு எடுக்கின்றோம் அல்லவா.
1.அதுவே தன்மையாக ஒலிக்கின்ற அகப்பொருள்
2.அகப்பொருளைப் பற்றினால் ஒளி நிலை பெறுவது தன்னுள் சாஸ்வதம்.
3.“தனது உடலின் வால் தனைக் கண்டு மிரண்டு ஓடி” இடம் தேடி அலைகின்ற பூனை போல்
4.நம் மனதின் நிலை செயல் கொள்ளல் தகாது
5.அறிந்துணர்தல் என்ற “ஞானத்தைக் கொண்டு” நிலை நிற்றலே விவேகம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு வேதனை என்ற உணர்வு வந்த பிற்பாடு அது நோயாக மாறிவிட்டால் என்ன ஆகிறது…?

குழந்தைக்கு ஒரு நல்ல துணிமணியை எடுத்துக் கொடுக்கட்டும். நோயாளியாகக் கட்டிலிலே தந்தை படுத்திருக்கும் பொழுது எடுத்துக் கொடுத்த பட்டுச் சேலையைக் கொண்டு நீங்கள் வந்து காண்பியுங்கள்.

அதைக் காண்பிக்கும் பொழுது “எவ்வளவு கோபம் வருகிறது…?” என்று பாருங்கள்.

தன் பிள்ளைக்கு அதைக் கொடுக்க வேண்டும்.. இதைக் கொடுக்க வேண்டும்… நல்ல துணிகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

ஆனால் தந்தை மிகவும் நோயாக இருக்கும் போது இந்தச் சேலை எப்படி இருக்கிறது…? என்று கேட்டால் என்ன ஆகும்…?

நான் இருக்கிற நிலைமையில் இதைக் கொண்டு வந்து காண்பிக்கின்றாயே…! வந்ததா வினை…!

பிள்ளைக்கு நல்ல துணி வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். வாங்கிச் சென்று போய் விட்டால் பரவாயில்லை.

அப்பாவிடம் காட்டி விட்டு அதன் பின் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தால்…
1.இங்கே அவர் படும் வேதனையில் இந்த நல்ல துணியைப் பார்க்கும் போது எதிர்ப்பு உணர்வு வரும்… நெகட்டிவ்… பாசிட்டிவ்…!
2.மனதில் என்ன செய்யும்…? துணியைக் கொடுத்த பின் வாங்கிச் செல்ல வேண்டியது தானே.
3.நான் உடம்புச் சரியில்லாத போது என்னிடம் இதை காட்டி வேதனைப்படுத்துகின்றீர்களே…!

தன்னாலே இத்தகைய உணர்வு வரும்.

பாசத்தால் சொல்கிறார். ஆனால் உடலில் உள்ள உணர்வுகள் எதிர்க்கிறது. நம் மீது சிறிதளவு கூட அக்கறை இல்லையே என்று குழந்தை மீது வெறுப்பு வந்து விடுகிறது.

துணி வாங்கிக் கொடுத்தால் துணியை எண்ணி அந்த ஆசை தான் வருகின்றதே தவிர என்னைக் கவனிக்கவில்லையே.

சந்தர்ப்பம் எப்படி எண்ண வைக்கின்றது என்று பாருங்கள்…! ஆனால் தவறு நாம் செய்யவில்லை.

அப்பா தான் வாங்கி கொடுத்தார். அப்பாவிடம் காண்பிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன். அவர் உடலில் நோயினால் வேதனைப்படும்பொழுது அது எதிர்மறை ஆகிறது. நான் இருக்கும் நிலையில் சிறிதளவு கூட இந்தப் பெண்ணுக்கு வருத்தமில்லையே…!

சரிப்பா… சேலையை நான் எடுத்துக் கொண்டேன் என்று சொன்னால் நன்றாக இரு அம்மா…! என்ற வாக்கு தந்தையிடமிருந்து வரும்.

ஆனால் காண்பித்தால் என்ன செய்யும்…? கூடக் கொஞ்சம் எரிச்சல் வரும். இந்த உணர்வுகளின் இயக்கங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
1.அது மாறாகப் (தவறாக) போய் விடுகிறது.
2.குழந்தைக்கு அவர் தான் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அந்தச் சந்தோஷம் இழக்கப்படுகிறது… வெறுப்பும் வந்து விடுகிறது.

தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

சந்தர்ப்பங்கள் இது போன்று வந்தாலும் ”அப்பா சொல்லிவிட்டார்… நான் எடுத்துக் கொண்டேன். பரவாயில்லை… நல்ல சேலையாகத் தான் இருக்கின்றது அப்பா என்று சொல்லலாம். இல்லை என்றால் “நீங்கள் நன்றாக ஆன பிற்பாடு எடுத்துக் கொள்கிறேன் அப்பா…” என்றும் சொல்லலாம்.

இந்த உணர்ச்சிகள் அங்கே தந்தைக்கு ஒரு சந்தோசத்தை ஊட்டும். ஏனென்றால் ஒரு உணர்வின் உணர்ச்சிகள் மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகின்றது…? என்று உங்களுக்குச் சொல்கின்றேன்.

மனிதனின் வாழ்க்கையில் எந்த மாதிரி நிலைகள் வந்தாலும் நாம் விழித்திருக்க வேண்டும்.

விழித்திருக்க வேண்டும் என்றால் எப்படி…?
1.புதுச் சேலையைக் காட்டி அந்த மகிழ்ச்சியைச் சொன்னால் அவர் மனம் புண்படும்
2.அந்த உணர்வை எடுத்தால் நாமும் சங்கடப்படுவோம் என்று விழித்திருத்தல் வேண்டும்.

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்ட வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எந்தக் காரணத்தினால் இது நிகழ்ந்ததோ… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர் வாழ வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு என் தந்தை உடல் முழுவதும் படர வேண்டும் மகிழ்ந்த நிலை வர வேண்டும் என்று இதைப் போன்ற உணர்வுகளை எடுத்தோம் என்றால் வேதனை யாருக்கும் வராது.

சில பேர் என்ன செய்வார்கள்…?

அப்பா உடல் நோயாக இருக்கும் போது இந்தத் துணியை எடுத்துக் கொள் என்று பிள்ளையிடம் சொல்வார்கள்.

ஆனால் பெண்ணோ… அப்பாவுக்கு இப்படி நோயாக இருக்கின்றதே… வேதனைப்படுகின்றாரே… துணியை எடுத்துக் கொள்ளச் சொல்கிறாரே…! என்று எண்ணி அழுகத் தொடங்கும்.

தகப்பனுக்கு முன்னாடி அழுதால் எப்படி இருக்கும்…? சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறது அல்லவா.

ரியாக்ஷன் ஆகி… “வேண்டாம்…” என்று சொன்னாலும் அப்பாவுக்கு வேதனையாக இருக்கின்றது. அந்த வேதனை எடுத்துச் சமைக்கும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம்… கண்களிலே நீர் வருகின்றது.

தகப்பனார் இதைப் பார்த்தால் “நான் இருக்கும் நிலையில் இப்படி அழுகின்றார்களே…!” என்று அவருக்கு அந்த வேதனை அதிகமாகும். ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நிலைக்கொப்ப அந்த வேலையைச் செய்யும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்துப் பல பொருள்களைப் போட்டுச் சமைத்தாலும்… அதிலே பக்குவம் தவறி விட்டால் சுவை கெட்டு விடுகின்றது.

ஆகவே ஆயுள் கால மெம்பர்கள் எப்படி இருக்க வேண்டும்…?
1.நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்.
2.நம் பற்று அதன் மீது வரவேண்டும்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரக்கூடிய சிக்கல்களை நிவர்த்தி செய்ய முடியும்.

குடும்பத்தில் ஒருவர் மட்டும் செய்தால் பத்தாது. கணவன் மனைவி குழந்தைகள் எல்லோரும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழக வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்றாட வாழ்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் சண்டை போடுபவர்களை… வெறுப்படைபவர்களை… கோபப்படுபவர்களை… குரோதப்படுபவர்களை… எல்லோரையும் நாம் பார்க்க நேர்கிறது. அந்த உணர்வுகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.

அவர்களுக்கும் நமக்கும் நேரடியான சம்பந்தமே இல்லை. இருந்தாலும் பதிவு ஆகிவிட்டால் இரவு தூக்கத்தில் கனவுகளாகப் பார்க்கலாம்.

பகலில் நல்ல இடத்திலே… எப்படிச் சண்டை போட்டார்கள்…? என்று
1.“தூங்குவதற்கு முன்…” இந்த உணர்வலைகள் வரும்.
2.அடுத்து தூக்கத்தில் பார்த்தால் நாம் யாருடனோ சண்டை போடுகின்ற மாதிரி கனவுகள் வரும்… முழிப்பாகி விடும்… எழுந்து விடுவோம்…!
3.யார்… என்ன…? என்ற நிலையில் தெரியாது… உருவமும் தெரியாது
4.நம் எண்ணமும் இந்த உணர்வுகளும் சேர்த்துச் சரியான உருவம் தெரியாதபடி நமக்கு அதிர்ச்சியாகிவிடும்
5.யாரோ நம்மைத் தாக்க வருகிறார்கள்…! என்று கனவிலே வரும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து இதே உணர்வுகள் “மற்ற அணுக்களுக்கு எதிர்மறையாக வரும் போது…” இந்தப் பதட்டமும் பயமான உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுத் திடீரென்று இரவிலே எழுந்து விடுவோம்.

இது எல்லாம் எது செய்கின்றது…? பகலில் நுகர்ந்த உணர்வுகளை நமது உயிர் இயக்கிக் காட்டுகிறது.

அந்த உணர்ச்சியின் தன்மை அந்தந்த அணுக்களுக்கொப்ப அதனதன் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்தச் செயல்களை உணர்ச்சிகள் வழி தான் செயலுக்கு வருகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

காரணம் பகலில் எல்லாவற்றையும் நாம் பதிவு செய்து விடுகின்றோம். இரவு தூக்கத்திலே அந்த மாதிரி நம்மை இயக்குகிறது.

நம்மை ஒருவன் திட்டிவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்கடுத்து மற்ற வேலைகளைச் செய்கிறோம். வேலையில் சோர்வடையும் பொழுது… தன்னை அறியாமலே அந்தத் திட்டியவனின் நினைவு வரும்.

என்னை இப்படி எல்லாம் பேசினான்… செய்தான்… என்று எண்ணினால் அந்த நேரத்திலே செய்யக்கூடிய வேலை கெட்டு விடுகின்றது… வேலையைச் சரியாகச் செய்து முடிக்க முடியாது.

அப்போது வீட்டில் ஏதாவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களிடம் சண்டைக்குச் செல்வோம்… நண்பர்களிடத்திலும் பகைத்துக் கொள்வோம்.

அதாவது மிகவும் பழகிய நண்பர்களாக இருந்தாலும் கூட வீட்டிலோ வெளியிலோ வெறுப்பாக இருந்தால் தமாஷாக ஏதாவது சொன்னால் போதும். இரண்டு பேருக்கும் நிஜமாகவே சண்டை கடுமையாகிவிடும்.

சந்தோஷமாக இருக்கும் போது ஒன்றும் இருக்காது. ஆனால் சங்கடமாக இருக்கும் பொழுது… வெறுப்பாக இருக்கும் பொழுது… என்னைக் கிண்டல் செய்கின்றாயா…? என்று இந்த நல்லவன் மீது… உதவி செய்தவர்கள் மீது… சண்டை வந்துவிடும்… பார்க்கலாம்… எதிரியாகவே மாற்றிவிடும்.

ஆகையினால் தமாஷாக… விளையாட்டாக… எப்போதும் நாம் செயல்படுத்தக் கூடாது. அன்புடன் அரவணைத்து ஒரு அர்த்தத்துடன் நாம் சொல்லி
1.நீங்கள் இப்படிச் செய்ததால் தான் தீமையின் விளைவுகள் இப்படி உங்களுக்கு வந்தது
2.அதற்குப் பதிலாக இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால்
3.அந்த நேரத்தில் நல்ல நிலைகளைக் கொண்டு தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.

ஆகவே இந்தத் தியானத்தை கடைப்பிடிப்பவர்கள் கேலியாகப் பேசுவதோ கிண்டலாகப் பேசுவதோ அல்லது அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதற்காகச் செயல்படுத்துவதோ அந்த வழிக்கே நாம் போகக் கூடாது. கடும் எதிரியாக மாறிவிடும்… சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்துவிடும்.

வேதனையாக இருக்கிறார் என்ற சிந்தனை இல்லாதபடி அவர்களை நாம் கேலி செய்வோம்… கிண்டல் செய்வோம்…
1.உடனே அவர்கள் நம் மீது சீறிப்பாய்வார்கள்… கடும் சண்டையாகும்…
2.நம்மை அறியாமலே… நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் நமக்கு எதிரியாக மாறி வரும்.
3.பின் வேதனையாகி உடலில் கடும் நோயாக மாறி நம்மைத் தீமையின் எல்லைகளுக்குக் கொண்டு சென்றுவிடும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து… அவைகளை நாம் மாற்றிப் பழகுதல் அவசியம். அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்கிறோம்.

எந்த நேரத்திலும் இந்த ஆயுதத்தை எடுத்துச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பகைமை இல்லாது வேதனை வராது மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.

இரத்தத்தை உறிஞ்சும் கொடிகள்

 

காடுகளுக்குள் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று பல உண்மை நிலைகளை அறியும்படி செய்தார்.

புலி கொடூரமாக பல மான்களை அடித்து உட்கொள்கின்றது ஆனால் மானையே அதிகமாக அந்தப் புலி உட்கொண்டிருந்தால் அதனுடைய முதுமைப் பருவத்திலே உடலை விட்டுப் பிரியும் சமயம் அந்த உயிரான்மா மானினுடைய ஈர்ப்புக்குள் செல்வதையும் காட்டுகின்றார்.

அதே சமயத்தில்… புலி இறந்த பின்
1.புலியின் உடலை வளர்த்த அணுக்கள் அந்த உடலையே உட்கொள்கின்றது.
2.எதை எதையெல்லாம் இந்தப் புலி கொன்று விழுங்கியதோ அதனதன் அணுக்களின் தன்மையாக
3.உடல் உறுப்புகளில் உள்ள நிலைகள் அந்தப் புழுக்கள் அந்த உடலைச் சாப்பிடுகின்றது.

பின் இதிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மை நாற்றம் ஆகின்றது. அது ஆவியாக மாறுகின்றது… சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்கின்றது… அலைகளாகச் செல்கின்றது.

பல தாவர இனங்களை புசித்த உயிரினங்களின் உடல்களை இது உட்கொண்டதால் அத்தகைய உணர்வின் தன்மை கொண்ட
1.அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிவரும் வாசனைகளைச் சூரியன் கவர்ந்து கொண்ட பின்
2.இதே போல இன்னொரு பாம்பு மடிந்திருந்து அதனுடைய உணர்வின் அலைகள் வெளி வருவதைக் (அந்த மணத்தை) கண்டபின்
3.அது வலுவான நிலையாக இருப்பதால் புலியின் உணர்வலைகள் அஞ்சி ஓடுகின்றது.
4.அது ஓடும் பாதையிலே ஒரு விஷச் செடியிலிருந்து வெளிப்படும் மணத்துடன் இது மோதினால்
5.கிறு…கிறு… என்று சுழற்சியின் தன்மை அடைகின்றது.

சுழற்சியின் தன்மை அடைந்தபின் மூன்றும் இரண்டறக் கலந்து அது ஒரு ஒரு தாவர இன வித்தாக… கொடியாக மாறுகின்றது. பூமியின் ஈர்ப்பிலே பட்டப்பின் கொடியின் தன்மை அடைகின்றது.

அந்தக் கொடி மூன்று உணர்வும் (புலி+பாம்பு+விஷச்செடி) கலந்து உருவானது. அந்தந்த உடலில் இருந்து வெளிப்படக்கூடிய அழுகிய மணங்களைச் சூரியன் எடுத்துக் கொண்ட எந்த உணர்வின் தன்மை பெற்றதோ “அந்த மணத்தின் தன்மை கொண்டு கொடியின் தன்மை அடைகின்றது…”

உடல்கள் இறந்த பின் பெற்ற உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியன் எப்படிக் கவர்ந்து வைத்துள்ளது…? நீ தெளிவாகத் தெரிந்து கொள்…! என்று குருநாதர் காட்டுகின்றார்.
1.அதைப் பார்ப்பதற்குண்டான சக்தியை கொடுத்தார். அனுபவரீதியிலே தெரிந்து கொண்டது.
2.இதை எல்லாம் புத்தகங்களிலே பார்ப்பது மிகவும் கடினம்.

அப்படிக் கொடியாக வளர்ந்த நிலையில் ஜீவனுள்ள உயிரினங்கள் இதன் அருகில் வந்தால் அலுங்காமல் அது நகர்ந்து வரும்.
1.பாம்பு விழுங்குவது போன்று அந்தக் கொடி சுற்றிவிடும்…
2.உடலில் இருக்கும் சத்தை எல்லாம் உறிஞ்சி விடும்… பின் மரணம் தான்.

சந்தன மகாலிங்கம் என்ற குகைப் பகுதிகளில்… அங்கே புலியினங்களும் பாம்பினங்களும் ஜாஸ்தி உண்டு. அத்தகைய கொடிகள் உண்டு பெரிய விலங்குகள் இறந்த பின் பச்சிலை மூலிகைகளும் பல நிலைகள் உண்டு அஸ்ஸாம் காடுகளிலும் இதைப் போன்று உண்டு.

மிருகங்களும் மற்ற உயிரினங்களும் இதைப் போன்று மடிந்த நிலைகள் கொண்டு சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் வெளியே செல்லும் பொழுது அதற்கு ஒத்த மற்ற உடலுக்குள் செல்கின்றது… உடல் பெறுகின்றது.

ஆனால் இறந்த உடலில் இருந்து கெட்ட மணம் வெளி வந்த பின் சூரியன் எடுத்துக் கொண்டால் அவைகள் கலந்து கொடியின் தன்மைகளாக செடியின் தன்மைகள் எப்படி மாறுகிறது…? அந்தச் செடி கொடிகள் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை எப்படிப் பெறுகின்றது…? என்பதை அங்கே காட்டுகின்றார்.

தீமை வருகின்றதே…! என்று சங்கடப்படக் கூடாது

 

1.உன்னைக் கண்டு திகைப்பின் வசம் ஆழ்த்திடக்கூடாது
2.இது வலைபடு பாசமாக உட்கிடந்த நிலை…! அந்நிலை நீக்கிடவே தவத்தின் கடுமை காட்டினோம் (அத்திரி மாமகரிஷி சொன்னது)

அஞ்சற்க…! யாரும் காண முடிந்திடாத நிலையே உமக்குக் காணும் வாய்ப்பு கிடைத்தது. “அதிபாசம்” கொண்டு செயல்படுகின்ற உலகோதய வாழ்க்கை முறை வலையினைப் போன்றது. அவ்வலை பாசமாக உட்கிடந்த நிலை.

உலகப் பிடிப்பினில் அகப்பட்டே விடுபடாத் தன்மையாக இருந்திட்டாலும்
1.பாசத்தின் வலையையே பாதுகாவல் எனப் போர்த்திக் கொண்டிட்டவன்
2.அவனுள் கிளர்ந்து எழுகின்ற அதி ஆவேச உணர்வுகள் நச்சு அரவம் (நஞ்சு கொண்ட பாம்பு) போல் தோற்றம் காட்டி…
3.தான் எங்கு வளர்ந்து… அந்த வளர்ச்சியின் முதிர்வை அடைந்ததோ…
4.சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவதைப் போல் அந்தக் குண நிலைகள் அவனையே தீண்டிட வருகின்றது.

ஆகவே…
1.வலைக்குள் விழிப்புடன் இருப்பது வேறு…
2.அதுவே (வலை) சாஸ்வதம்…! என எண்ணிப் பாதுகாவல் எனக்கொண்டு கிடந்து உறங்குகின்ற செயல் வேறு.

உலக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கி அகப்பட்ட தன்மையையே உறங்குகின்ற செயல் என்று உரைக்கின்றோம்.

உலகோதய நிலையாக… அதன் பிடிப்பில் அகப்பட்டுவிட்ட மனது என்ன செய்யும்…?
1.தீதெண்ண குணங்கள் என்னும் நச்சரவம் தீண்டிட வருகின்றதே என்று
2.சங்கட உணர்வுகளை மேன்மேலும் வளர்க்கும் நிலை… அந்த நச்சரவத்திற்கே பால் வார்த்திடும் செயலினை ஒத்தது.

அந்தத் தீதெண்ண நச்சரவத்தை வளர்த்த செயலில்… அது மீண்டும் தீண்டிட வருங்கால்… பாசமெனும் பிடிப்பின் நிலையை மனிதன் “உலகோதய நாட்டம்” என்று எங்ஙனம் பலப்படுத்துகின்றான் தெரியுமா…?

அதிபாசம் எனும் உணர்வுகளின் தன்மையை…
1.ஒளியும் காற்றும் உள் சென்றிடாத் தன்மைக்குப் பலப்படுத்திடும் சுவர் எடுத்து…
2.அதையே சுகம் என அதனுள் கடந்து உறங்கிட்டாலும்…
3.நச்சரவம் வாழ்ந்திடும் புற்று… “எது தனக்குப் பாதுகாவல்” என எண்ணி மனிதன் உலகோதய நாட்டத்தில் செயல் கொண்டிட்டானோ…
4.அந்த இடமே புற்றாகக் கிளைத்து… “நச்சுப்புற்றாக வளர்ந்து விடுகிறது…!”

ஆகவே… அதனுள் எழுகின்ற நச்சரவம் உன்னைத் தீண்டிடும் முன் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்.
1.அந்த நிலையை விட்டு வெளிவந்து பார்
2.தெய்வத்தன்மை பெற்றிடும் சிறப்பு ஒன்று கிட்டிடும்.

நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் மண்ணினுள் வாசம் செய்யும் பிராணியான எலி போன்று (காம விகார குணங்கள்) அதி பாசம் உட் சென்றிடவே வழி அமைக்கும்….!

இதனை உணர்ந்து நீ நட…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்முடைய பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் என்ன நினைக்கின்றோம்…? இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்… எதிர்காலத்தில் என்ன ஆகப் போகின்றானோ…! என்று வேதனைப்படுவோம்.

வேதனையாக எண்ண… எண்ண… கை கால் குடைச்சல் ஆகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து பையனை உதைக்கும் நிலைக்கு வருகின்றது. கடைசியில் நாசமாகப் போடா…! என்று சொல்கின்றோம்.

பையனால் இப்படி வேதனை ஆகிவிட்டது என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் இறந்தால் எங்கே போகிறோம்…?
1.பையன் உடலுக்குள் தான் செல்ல வேண்டி இருக்கும்.
2.பையன் உடலுக்குள் சென்ற பின் வேதனையை அங்கே கூட்டி அவனைக் கெடுத்து அவனையும் வாழ விடாது செய்யும்.

சம்பாதித்த சொத்தைக் காக்க ஞானம் வேண்டுமா இல்லையா…! ஞானம் இல்லை என்றால் சொத்தைக் காக்க முடியுமா…?

அதே போன்று வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் வெளியிலே போய்விட்டு வந்தபின் வெறுப்பாக இருப்பார்கள்.

அப்போது வீட்டிர்குள் வந்த பின் பெண்கள் எதாவது கேட்டால் பதில் வெறுப்பாக வரும்.

எப்பொழுது பார்த்தாலும் என் வீட்டுக்காரர் எரிந்து எரிந்து விழுகின்றார். கொஞ்சம் சாந்தமாகத் தான் சொன்னால் என்ன…! என்று கேட்பார்கள்.

நானா கோபமாகப் பேசுகின்றேன்…! நீ தான் என்னைக் கோபமாகப் பேசத் தூண்டுகிறாய்…! என்று மீண்டும் அங்கே சண்டை உருவாகும்.

சண்டை போட்ட பின் என்ன செய்வார்கள்…? சரி… கணவர் கோபமாக இருக்கின்றார்… “கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யலாம்…” என்று செய்யப் போனால்…
1.கணவர் எண்ணிய வேகத்திற்குச் செய்யவில்லை என்றால்
2.ஏறுக்கு மாறாகச் செய்கின்றாய்…! என்று மீண்டும் சண்டை வரும்

இது எல்லாம் உணர்வுகளின் இயக்கம்.

இப்படிச் சண்டையிட்ட உணர்வுகள் கலவை ஆன பின் அடுத்து சம்பாதிக்க வெளியிலே சென்றாலும்… எடுத்துக் கொண்ட உணர்வுகள் அங்கே வியாபாரத்தைத் தடைப்படுத்தும்… குழந்தைகளிடம் வெறுப்பாகப் பேசச் சொல்லும்… நண்பர்களாக இருந்தாலும் பகைமையாக்கிவிடும்…!

ஆக… சம்பாதிக்கக்கூடிய நிலையை நாம் தெளிவாக வைத்திருக்கிறோமா…?

இதெல்லாம் சந்தர்ப்பம்…
1.மோதலின் உராய்வினால் வரக்கூடிய உணர்வுகள்
2.நம்மை இப்படி எல்லாம் மாற்றி அமைக்கின்றது.

நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்..! எல்லா நல்லதும் செய்து இப்படி ஆகிவிட்டது.. “எனக்குக் குடும்பத்தில் நிம்மதியே இல்லை…!” என்று தொழிலை விட்டுவிடுவார்கள். சிந்தித்துச் செயல்படும் நிலை இல்லாது போய் வெளியிலேயும் வெறுப்பு… வீட்டிலும் வெறுப்பு…!

இது எதனால் வருகின்றது…?

1.கோபத்தையும் வெறுப்பையும் தனக்குள் விளைய வைக்கின்றோம்…
2.பொறுமை இல்லாது பொறுப்பை இழந்து இங்கே பேசப்படும் பொழுது தொழிலும் மட்டமாகின்றது
3.வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரியிடம் கெட்ட பேர் வருகின்றது.

குடும்பப் பற்றுடன் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் இப்படி உணர்ச்சி வசப்பட்டுச் செய்தார் என்றால் அந்தக் குடும்பம் முழுவதும் வெறுப்பு வளர்கின்றது.

அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

நாம் வேகமாகச் சமையல் செய்ய வேண்டும் என்று அடுப்பிலே நெருப்பைக் கூட்டினால் என்ன ஆகும்…?

அடியில் இருப்பது கருகிவிடும் நடுப்பகுதியில் இருப்பது ஒரு மாதிரி வேகும்… குழைந்து போகும். மேலே இருப்பது சுத்தமாகவே வேகாது போய்விடும். இந்த மூன்று நிலையில் வரும்.

ஆகவே கோபம் வருகிறது என்றால்…
1.அது எதனால் வருகின்றது என்று தியானத்தைச் சீராக கடைப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்
2.அதை மடக்கித் திருப்பி ஆத்ம சுத்தி செய்யச் சொல்லும்
3.இது உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் முழுமையாகத் தெரியாதபடி “நானும் தியானம் தான் செய்கிறேன்…” என்று சொல்லிக் கொண்டு
1.எதைச் செய்தாலும் வீட்டிலே தொல்லைகள் வருகின்றது
2.எப்பொழுது பார்த்தாலும் சண்டை வருகின்றது
3.யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று இப்படிச் சொல்பவர்களும் உண்டு.

காரணம் இது எல்லாம் பூர்வ புண்ணியத்தில் வருவது. பூர்வ புண்ணியத்தின் வழியில் வந்தாலும் அதை மாற்றுவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டினால் அதை மாற்றிக் கொள்ள முடியும்.

அறியாது இயக்கும் இது போன்ற தொல்லைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறக்கூடிய சக்தியை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஆனால் செய்து பார்த்தேன்… முடியவில்லை என்று விட்டு விட்டால் என்ன ஆகும்…! ஆகவே நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காட்சிகளையும் சக்திகளையும் யாம் (ஞானகுரு) கொடுத்தால் பெரியவர்களே பல தவறுகள் செய்கின்றார்கள். காரணம்…
1.“சாமி எனக்குத் தான் சக்தி கொடுத்திருக்கிறார்…!” என்ற நிலையில்
2.உண்மைகளை அறிவதற்கு மாறாகத் தவறு செய்கின்ற நிலைகளிலேயே சென்று விட்டார்கள்.

அதற்குப் பின் தான் இதையெல்லாம் நிறுத்தியது.

நீங்கள் உயர்ந்த பண்புகளை வளர்த்துக் காட்டினால் நீங்கள்தான் சாமி. உங்கள் நிலை கொண்டுதான் இங்கு சாமியின் நிலைக்கு மதிப்பு.

என் சக்தியின் நிலைகளை நீங்கள் பயன்படுத்தினாலும் உங்களை உயர்த்திக் காட்டினால்தான் எல்லோருக்கும் சந்தோஷம் கிடைக்கும்… உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும்… எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கலாம்.

ஆகவே நாம் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டும் அருள் வழியினைக் கடைபிடிக்க வேண்டும். அவர் பித்தனைப் போலத்தான் இருந்தார். பல நிலைகளிலும் பல இன்னல்களைப் பட்டார்.
1.அவருடைய நிலையைப் பிறர் பார்க்கும் போது பைத்தியக்காரனாகத்தான் காட்டினார்.
2.ஆனால் அந்த பைத்தியக்கார நிலையில் அவருக்குள் எவ்வளவு பெரிய ரகசியங்கள் இருந்தது என்று நம் நிலைகளுக்குத் தெரியாது.

அதே குருநாதரை வைத்து நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… ரசமணி செய்கிறேன்… என்று மந்திரங்கள் தந்திரங்கள் என்று அவர் பேரைச் சொல்லி இப்படியும் சில பேர் செய்திருக்கிறார்கள்.

ஆனால் அவர் உடலில் பல உணர்வுகள் உண்டு. அவர் எடுத்துக் கொண்ட நிலைகளிலும் கற்றுணரந்த நிலைகளிலும் அவர் உடலைவிட்டுச் சென்றாலும் அவர் உடலில் இருந்து பிணைத்த உணர்வுகள் உண்டு.

அதன் வழியில்…
1.தீமையை எண்ணுவோர்க்குத் தீமையே கிடைக்கும்
2.நம் குருநாதர் காட்டிய அருள் ஒளி பெற வேண்டுபவர்களுக்கு அந்த அருள் ஒளி கிடைக்கும்
3.அந்த அருள் ஞானத்தை நாம் பெறுவோம் என்றால் நமக்கு மெய்வழி காணும் நிலைகள் கிடைக்கும்.

முந்தி வந்தவர்களுக்கெல்லாம் நோயைப் போக்க வேண்டும் என்று பெரும்பகுதி யாம் செயல்படுத்தினோம். இப்பொழுதும் நோய் போகும் என்று சொன்னால் போகத்தான் செய்கின்றது.
1.ஆனால் சாமி மீது தான் நம்பிக்கை வருகின்றது.
2.சாமி கொடுக்கும் சக்தியை நாம் பெற முடியும்… நோயை நீக்க முடியும்… என்ற நம்பிக்கை வருவதில்லை

இதை எல்லாம் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். நான் உங்களுக்குச் சொல்லும் பொழுது நன்றாக ஆவது போன்று… உங்கள் பார்வையால் உங்கள் சொல்லால் அனைத்தும் நல்லதாக்க வேண்டும்.

தீமைகள் புகாதபடி தடுத்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தான் இவ்வளவு தூரம் உபதேசிக்கின்றோம்.

நீங்கள் எடுத்துக் கொண்ட சக்தியை உயிர் விளைவிக்கின்றது உடலாக மாற்றுகின்றது. எதை எண்ணுகின்றீர்களோ அதையே தான் உயிர் உருவாக்குகிறது.

திட்டியவனைப் பதிவு செய்து கொண்ட பின் “அவன் நாசமாகப் போக வேண்டும்…” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் அவனையும் கெடுக்கின்றது… இங்கே நம்மையும் கெடச் செய்கிறது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ வேதனையோ எது வந்தாலும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி இங்கே அதிகமாகி விட்டால் வேதனைப்படும் உணர்வுகள் உள்புகாதபடி அதைத் தடுத்துவிடும்… விலக்கி விட்டுவிடும். அருள் ஞான சக்தியும் உங்களுக்குள் பெருகும்.

இந்த இரண்டு வேலையும் செய்யும்.

அதனால்தான் உங்கள் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…? என்று மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

இந்த உடலில் இருக்கும் போழுதே அந்த அருளைப் பெற வேண்டும். அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவியும் இதைப் போல எண்ணுதல் வேண்டும்.

1.துருவத்தில் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றடைவோம்
2.பிறவி இல்லா நிலை பெறுவோம் என்று பிரார்த்திக்கின்றேன்.

உயிரே கடவுள்

 

காலயிலிருந்து இரவு வரை
1.நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ எதையெல்லாம் கேட்கின்றோமா எதையெல்லாம் நுகர்கின்றோமோ
2.இவை அனைத்தையும் நமது உயிர் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று
3.நாம் எண்ணிய உணர்வுகளை அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றி விடுகின்றது.

ஏனென்றால் நமது உயிர் நம் உடலில் இயக்கச் சக்தியாக இருக்கின்றது நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் அணுத்தன்மை பெறும் இயக்கமாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றி விடுகின்றது.

நாம் எண்ணும் எண்ணங்கள் எதுவோ அது ஈசனாக இருந்து உருவாக்குவதும் நாம் எண்ணும் குணங்களை இரையாக்குவதும் இறையின் உணர்வுகள் செயலாக்குவதும் என்ற நிலையில் நமது உயிரின் இயக்கங்கள் உண்டு.

நம்மை ஆள்வது யார்…?
1.நமது உயிரே ஆண்டவனாக இருந்து ஆளுகின்றது.
2.ஈசனாக இருந்து எண்ணியதை உருவாக்குகின்றது.
3.எண்ணியதை இயக்குவதும் உருவாக்குவதும் அதை ஆள்வதும் ஆண்டவனாக இருப்பதும் நமது உயிரே.
4.ஈசன் என்பதும் உயிரே
5.ஆண்டவன் என்பதும் உயிரே
6.இறைவன் என்பது நாம் எண்ணும் உணர்வுகளை இறையாக்குவதும் உயிரே.

இறை என்றால் எதன் குணத்தை எடுக்கின்றோமோ அதை இறையாக்கி உணர்வின் செயல் ஆகும் பொழுது அக்குணமே தெய்வமாகின்றது என்பதனை ஞானிகள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

உயிரின் இயக்கம் ஈசன் என்றாலும் இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்று காரணப் பெயர் வைத்து நாமெல்லாம் அறிந்து கொள்வதற்கு இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள் ஞானிகள்.

இருந்தாலும் இன்று விஞ்ஞான உலகில் வாழுகின்றோம் ஆனாலும் அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம் பக்தி என்ற நல்ல ஒழுக்கத்தில் வாழுகின்றோம் ஆனால் பக்தி என்றால் எதுவென்று அறியாத நிலையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.

இயற்கை நியதிகள் எதுவோ அதன் வழி தான் என்று நாம் வாழுகின்றோம். இயற்கையின் சீற்றத்தில் இருந்து காக்கும் உணர்வுகள் பெற்ற மனிதன் ஆறாவது அறிவை நாம் சீராகச் செயல்படுத்தாது மீண்டும் தேய்பிறை என்ற நிலையில் வாழ்கின்றோம்.

அதை எல்லாம் மாற்றிடும் நிலையாக
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசித்து
2.அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அழியாத நிலை பெற வேண்டும்.

வரும் வினைக்காக அஞ்சினால் அதிலே தான் சிக்குவோம்… மீளுவோம் என்ற நம்பிக்கை தான் வேண்டும்

 

வினைக்கு அஞ்சிடுவோர் வலைக்குள் உட்படுவோர் (சிக்கப்படுவோர்) ஆயினர். ஓர் சாதனையின் நிகழ்வே சகாப்தம் காட்டியது எனில்
1.ஆத்ம வலு கூட்டிடும் செயலில்… பெற்றுக் கொண்ட வலு
2.உலகினையே ஆட்டிடும் சித்தனாகச் செயல்படும் காரிய நிகழ்வுக்கு
3.அடிப்படையே “நம்பிக்கை தான்…”

எப்படி என்றால்
1.வெளியில் நிகழ்வுறும் சம்பவங்களால்… “எண்ணத்தின் நிலை கருத்தின் தெளிவை மாறுபடுத்திடும் என்பது” மக்களின் கணிப்பு
2.எண்ணத்தில் விளைந்திடும் செயல்களே… “நம்மைச் சுற்றி நிகழ்ந்திடும் சம்பவங்களாய் நடைபெறுதல் என்பது” மகரிஷிகளின் கணிப்பு.

அரைத்த நெல் மாவை வெளி வாசலில் உலர்த்திடும் பொழுது அந்த மாவைக் கரைக்க மழை வந்துவிட்டால் நம்மை அழைத்து உரைப்பது எது…?

மழை கரைத்திடும் மாவினை எடுப்பாயா…? அன்றே மழை பெய்யும் முன் அதை விரட்டி விடுவாயா…?

வேதாள மகரிஷி அன்று உரைத்த சொல்லில் இன்றைய உலகின் நடைமுறையில் தெளிந்து ஆட்கொண்டவர்கள்… ஆத்ம வலுவின் நம்பிக்கை கொள்பவர்கள்… கொள்ளப்படும் எண்ணங்கள் அரிதாகி வருகின்றது.

சூரசம்ஹார நிலை என்று காட்டியது மனத்தில் எழும் துஷ்ட குண சம்ஹாரம் தானே…!

உடலின் தாவு என்றிடும் செருக்கு மிகுந்து விட்ட கால நிகழ்வு… இடருகின்ற சிறு கல் அடலேறு போன்ற நடையை பிரளச் செய்திடில்
1.இடருகின்ற அந்தக் கல்லை நோவதில் பயன் என்ன…?
2.வலிமையான ஆத்ம வலுப்பெற்றவர் முன் மற்ற குணத்தின் செயல்கள் அனைத்தும் காற்றினிலே சருகு.
3.இடர் வராது இருக்கின்ற வழியைக் காண்பதே உயர்வாம்… “குணம் வளர்க்கும் ஞானத்தின் வலுவில் அன்றோ…!”

முள்முனை முள் எடுப்பதற்கே காப்பான் ஜெபம் வேண்டும் என்கிறோம். பட்ட நிலை சிறிது தான் என்றாலும்… அதனால் உண்டான “வேதனையின் வலிமை பெரிது என எண்ண வேண்டியதில்லை…”

“அகப்பேழையைத் திறந்து பார்…” என்று உரைத்த வேதாள மகரிஷி கூற்று கூற்றுபவன் எனக் கால வெள்ளத்தைத் தேக்கிக் காட்டிய முறையே சித்துக்களின் வளர்ப்பின் பலன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்… நீங்கள் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன். அதே போல் எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்களும் தியானியுங்கள்.

எல்லோரும் நல்ல நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வருகின்றது. ஒன்றுபட்ட நிலைகள் கொண்டு இவ்வாறு செய்தோம் என்றால் நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் தெருவிலும் ஊரிலும் படர்கின்றது.

கொடுமையான நோய்களோ சில விஷத்தன்மை வாய்ந்த நிலைகளோ இங்கே வராது நாம் எளிதில் தடுத்து நிறுத்த முடியும். தெருவில் வசிக்கும் மக்களையும் நாம் மகிழ்ந்து வாழச் செய்ய முடியும். குடும்பத்திலும் ஒன்றுபட்டு வாழும் நிலையினை உருவாக்க முடியும்.

ஆகவே…
1.இனி எந்த நிலை வந்தாலும் குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்..
2.என் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்வேன்.
3.பேச்சால் மூச்சால் இந்த ஊர் முழுவதும் நல்லதாக்கச் செய்வேன் என்று பிரார்த்தனை செய்து
4.அதன் வழியில் இந்த ஊர் நன்றாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்டு வாருங்கள்.

ஒருவருக்கு நோய் வந்துவிட்டது என்றாலும் யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அவரை நிற்கச் செய்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு அதே உணர்வை அவரையும் எண்ணி எடுக்கும்படி செய்யுங்கள்.

சக்கரத்திற்கு முன்னாடியே இதைப் போன்று செய்து பழகுங்கள். அதே பிரகாரம் அந்த நோய்களும் நீங்கும்… தீமைகளும் அகலும்.

இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இப்படி நம்முடைய சக்திகளைப் பரப்பப்படும் பொழுது நாம் பாய்ச்சிய உணர்வுகள் அங்கே வேலை செய்வதைப் பார்க்கலாம்.

எப்படி…?

ஒருவன் நம்மைத் திட்டுகிறான் என்றால் அவன் திட்டிய உணர்வு நமக்குள் வந்து நம்மைத் தவறான வழிகளுக்கு அது இயக்குகின்றதல்லவா…?

இதைப் போன்று தான் நீங்கள் எங்கிருந்தாலும்
1.குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
3.தீமை செய்யும் உணர்வுகளை நீங்கள் மாற்றிப் பழக வேண்டும் என்று அருளைப் பாய்ச்சுகின்றேன்.

எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலில் சிறிது காலம் தான் இருக்கின்றோம். அந்த நேரத்திற்குள் நாம் எதை எடுத்து வளர்க்க வேண்டும்…?

அருள் சக்திகளைப் பெற்று இருளை அகற்றிடும் நிலை பெற வேண்டும். அப்போது நம் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.

ஆனால் விஷத் தன்மையானால் உடல் குறுகுகின்றது… விஷத்தின் இயக்கமாகவே மாற்றுகின்றது.

ஒளியா… இருளா…?

1.இருள் என்ற நிலைக்கு வரும் பொழுது மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்
2.ஒளி என்ற நிலையினை வளர்க்கும் போது பேரொளியாக மாறுகின்றது.

இந்த நிலையை நாம் பின்பற்ற வேண்டும்.

ஆகவே துருவ நட்சத்திரத்துடன் நாம் அங்கத்தினராக இருக்க வேண்டும் ஆயுள் மெம்பராக இருக்க வேண்டும். அதனுடன் இணைந்து என்றுமே நாம் பிறவி இல்லா நிலை அடையும் அந்த மார்க்கத்திற்குச் செல்ல வேண்டும்.

எதிர்காலத்தில்… வரும் தீமைகளை நீக்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம். எல்லோரும் அருள் உணவு பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோபப்படுபட்டுச் சண்டையிடுவோரைப் பார்க்க நேர்ந்தது என்றால் உடனே ஈஸ்வரா…! என்று சொல்லி உள்ளே புகாதபடி நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்தி விட்டு
1.சண்டை போட்ட இருவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் திறன் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி எண்ணினால் அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நமக்குள் நல்லதாக மாற்றிக் கொள்கின்றோம்.

அவர்களும் இதே பிரகாரம் எண்ணினால் சரியாக இருக்கும்.

இருந்தாலும்… சண்டை போடுபவர்களிடம் சென்று புத்தி சொன்னால் கேட்பார்களா…!

இரண்டு பேரும் சண்டை இடுகிறார்கள். ஒருவரிடம் சென்று “நீ கொஞ்சம் பொறுத்துப் போ…! என்று சொன்னால் நீ அவனுக்குத் தான் சாதகமாகப் பேசுகின்றாய் என்று இவன் நம்மிடம் சண்டைக்கு வருவான்.

சமாதானப்படுத்த முடியுமா…?

ஆனால் அடுத்தவனை பார்த்துப் நீ பொறுத்து போப்பா…! என்று சொன்னால் “நீ அவனுக்குச் சாதகமாக பேசுகிறாய்…” என்று சொல்வான். ஆக இப்படித்தான் வரும்.
1.அவர்கள் உணர்வுக்குத் தக்க நாம் ஒத்துக் கொள்ளவில்லை என்றால்
2.நம்மைத்தான் அவர்கள் குற்றவாளியாக ஆக்கிவிடுவார்கள்.

அதை நாம் நுகர வேண்டியதில்லை…!

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் உடனே ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

அவர்கள் இருவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்… ஒன்றுபட்டு வாழ வேண்டும்… என்ற உணர்வுகளை நாம் வளர்க்க வேண்டும்.

அவர்கள் சாந்தமடைந்த பிற்பாடு நாம் என்ன செய்ய வேண்டும்…?

இருவரும் சண்டையிட்டதால் கஷ்டமானது. அதனின் விளைவுகள் இப்படி ஆனது. ஆகவே நீங்கள் இப்படிச் செய்து பாருங்கள்…! என்று
1.நமக்குள் வளர்த்திருக்கும் நல்ல உணர்வுகளை அவர்களைக் கேட்க வைத்து
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்கும்படி செய்யலாம்.

இப்படித் தான் நாம் அவர்களைத் தெளிவாக்க வேண்டும். அட என்னப்பா… நீ தானே சண்டை போட்டாய்…! என்று சொல்லக்கூடாது.

உங்கள் சந்தர்ப்பம்…
1.உணர்ச்சி வசப்பட்டுச் சண்டை போட்டீர்கள்.
2.அதனால் நீங்கள் இருவரும் அன்பைக் கெடுத்துக் கொண்டீர்கள் என்ற
3.”உணர்வின் ஞானத்துடன் சொன்னால்” நாம் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நிலை வரும்.

அந்த ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அவர்களை நல்லதாக்க முடியாது.

சண்டையிட்டீர்கள்… இரண்டு பேருடைய வாழ்க்கையும் இந்த மாதிரி ஆனது. இது உங்களுக்குள் நோயாக மாறுகின்றது சிந்திக்கும் தன்மையை இழக்கின்றீர்கள்.

ஆகையினால் நீங்கள் பொறுப்புடன் இருந்து இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… உங்கள் உடலில் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். தெளிந்த மனம் வர வேண்டும் என்று எண்ணுங்கள் என்று இரண்டு பேரிடமும் இந்த மாதிரிச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

அப்பொழுது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருகின்றது… சிறிதளவு கேட்பார்கள். கேட்டால் உள்ளுக்குள் செல்லும். சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

ஆக மொத்தம் இந்த முறைப்படி அருள் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய சண்டை நமக்குள் விளைவதில்லை அருள் உணர்வுடன் நாம் எடுத்துச் சொல்லப்படும் பொழுது அவர்களும் மாறுகின்றார்கள்.

ஆகவே…
1.தியானம் என்பது வாழ்க்கையில் தீமைகள் நமக்குள் வராதபடி
2.அருள் உணர்வுகளைச் சமைத்து அந்த மெய் ஞானத்தினை நமக்குள் வளர்ப்பது தான்.

எல்லோருக்கும் தெளிந்த மனம் வருகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் விளைகின்றது. இதைச் சொல்லிக் கொண்டே வந்தால் கோடிக்கரையில் இருந்து நாம் தனுஷ்கோடியாக பிறவி இல்லா நிலை அடைகின்றோம். சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் தினசரி பழக்கப்படுத்த வேண்டியது

 

1.தினசரி காலை துருவ தியானத்தில் நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கே உங்களை அழைத்துச் சென்றது.
2.நீங்கள் நுகர்ந்தது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய என்று உங்கள் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
3.இதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினால் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை
4.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.

துருவ நட்சத்திரம் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய கதிரியக்கங்களை “ஒளியாக” மாற்றிக் கொள்கின்றது. அந்த நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்தால் மின்னலாக மாறி மற்றொன்றைக் கருக்கி விடுகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரமோ ஒளி அலைகளாக மாற்றுகின்றது
1.அதை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி விட்டால்
2.அத்தகைய மின்னலையும் உணவாக உட்கொண்டு
3.ஒளியின் நிலையாக உருவாக்கும் உடலாக நம்மைத் துருவ நட்சத்திரம் மாற்றிவிடும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் செயலாக உருவாக்குகின்றது… அதையே செயல் ஆக்குகின்றது நமது உயிர்… அதையே உடலாக்குகின்றது… அந்த உணர்வே நம்மை வாழ வைக்கிறது.

தெரிந்து கொள்ளுங்கள்… மனிதன் ஒருவன் தான் இதை உருவாக்க முடியும்…!

மற்ற உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட உணர்வைச் சுவாசித்து அந்த வலுவான உணர்வு வரும் பொழுது இந்த உடலில் உள்ள எளிமையான அணுக்கள் மடிந்து வலுவான உணர்வுகள் விளைந்து… உடலை விட்டுச் சென்ற பின் அதைப் போன்ற கொடூர மிருகங்களாக மாற்றி விடுகின்றது.

பல கோடிச் சரீரங்களிலிருந்து விடுபட்ட பின் இதை அறிந்து உணர்ந்து வென்றவன் அகஸ்தியன் துருவனாகி… கணவனும் மனைவியும் இரு மனம் ஒன்றென இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து பேரருளைத் தனக்குள் உருவாக்கி (எல்லாவற்றையும் இயக்குவது தான் பேரருள் என்பது) பேரொளி என்ற உணர்வினை உருவாக்கினான். தன் உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தையும் ஒளியாக உருவாக்கினான் அகஸ்தியன்.

1.துருவ நட்சத்திரமோ 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக் கதிர்களை எடுத்து ஒளியாக மாற்றிக் கொள்கிறது
2.அதிலிருந்து வரக்கூடியதை நாமும் எடுத்தால் மின்னல்கள் பலவாறு பரவினாலும் அதனைச் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்து
3.வாழ்க்கையில் இன்னொரு உடல் பெறாதபடி உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறுகின்றோம்.

ஒவ்வொருவரும் இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் எதை எண்ணி ஏங்குகின்றீர்களோ அதை உருவாக்கும் பொறுப்பு உங்களுடைய உயிருடையதாகும். உருவாக்கிய பின் மீண்டும் அதற்கொப்ப அடுத்த உடலை உருவாக்குவதும் உயிருடைய வேலை

ஆகவே நாம் பேரருள் பேரொளி என்ற அழியா ஒளிச் சரீரத்தை உருவாக்குவோம்… பிறவியில்லா நிலையை அடைவோம்.

நஞ்சை அமுதமாக்கிடும் சக்தி நிலை கண்டமே “நீலி…”

 

உணர்வுகள் முன்னறிவிப்பாக அனைத்தும் தெளிவுபட… அறிவில் பொருந்துதல்… அதுவே உயர் ஞான வளர்ப்பின் சித்து.

கனியாகும் முன் காயின் நிலை கண்டு… மனத்தின்கண் நினைப்பது கனிந்து விருந்தாக்கும் என்று நினைப்பதே நன்று.

வாயுள் படும் அந்தப் பொருளை (கனி) அதன் சுவையை முன்னறிதல்… சுவாச செயலாக நின்று…
1.உயிரின் உயர் நிலை கண்டு உண்டு களித்திருத்தல்…
2.ஞானமாகப் பயிர் வளர்த்திடும் வித்தகம் என்று பூரணத்துள் ஞான திருஷ்டி ஏற்பட்டுவிடும் பாங்கு வளர்ப்பின் நிலையின் “ஓர் அனுபவம்…”

இதுவே பிருகு மகரிஷி உண்டு… கண்டே உண்டு… களிப்பு எனும் பேரானந்தப் பெருநிலை அனுபவித்தல் தன்மையாக வேதாள மகரிஷி உரைத்திட்டது.

சரீரத்தின் தன்மைகள் கண்டு காற்றலையில் ஈர்த்திடும் விஷத்தின் குணங்களும் அன்றி… சரீரத்தில் நேரடியாக உட்கொண்டு விடும் விஷ அமிலத்தன்மைகள் எதுவாக இருந்தாலும் “நீலி கொண்டு தான்” சித்தர்கள் சரீர வைத்தியத்தில் அனுபோக முறைகள் கண்டு உரைத்துப் போயினர்.

நீலன் என்று உரைப்பது மனிதன் பெற்ற இந்தச் சரீரத்தையே…!
1.தவசியாய்ச் செயலுறும் பாங்கில்… விஷ அமிலத்தன்மைகளின் ஈர்ப்பில் தாக்குண்டு
2.அதனால் பெற்றிடும் அக்குணத்தன்மைகளை “அமுதமாக்கிடும் சக்தி நிலை கண்டமே நீலி…”

மருத்துவக் குறிப்புகள் நீலியைக் காட்டும் அந்தப் பெயர் படைத்திட்டது ஓர் மூலிகை. விஷத்தின் முறிவு சக்தியாக அதனைக் கைக்கொள்வோர் மிக அரிது.

மனமாகிய உலகினில் கண்டு தெளிதல்…
1.நாபியின் நாடிக்குள் பச்சை நிற வண்ணம் காட்டிடும் அமைப்பின் உள் நிலையை நீலி என்று புகழ்வது..
2.பிடரிக்கண்… சக்தி கொண்ட மூலாதாரத்தை நோக்கிடுங்கால்…
3.கிளர்ந்து எழுந்திடும் கந்தன் எனும் ஜோதி நீலியின் உட்பகுந்து சென்றிடும் பொழுதே…
4.எண்ணத்தால் உட்கண்டு தெளிதல் என்பது ஆங்கு செலுத்தப்படும் எண்ணமானது
5.தூய நிலை கொண்டு மாற்று நிலைத் தன்மைகளையும் மாற்றி…
6.உயர் நுண் காந்த அலையின் உயர்வாகச் சேர்க்கும் மனித இனத்தை வழி நடத்திட…
7.வழிகாட்டிடும் அவ்வின மாமகரிஷிகள் உரைத்திட்ட வழி நடத்தலே
8.நீலி கொண்டு நீலன் நஞ்சு முறித்திட்ட “ஸ்தூல… சூட்சம…” இரு நிலையின் “ஒரு பொருள்” காட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று பெரும்பகுதியான மக்களுக்கு விஞ்ஞான அறிவால் வளர்ந்த நிலையில் உணவுடன் கலந்த விஷத்தன்மைகள் (பூச்சி மருந்துகள்) உடலில் பரவிக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையில் இயக்குகின்றது. அதனால் உடலில் கடுகடுப்பு அதிகமாக இருக்கும்.

நாம் தவறு செய்தோமா…? இல்லையே…!

விஞ்ஞான அறிவிலே சிக்கி இன்று இந்த நிலைகளில்தான் நாம் இருக்கின்றோம். குருநாதர் இதையெல்லாம் உணர்த்தினார்… கண்டேன். அதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு)

மருத்துவம் படிக்கின்றார்கள்…
1.உடலில் இன்னென்ன குறைபாடுகள் இருக்கிறது
2.இன்னென்ன மருந்து இன்னென்ன வேலை செய்யும்
3.இன்ன மருந்தைக் கொடுத்து மாற்றினால் குறைபாடு நீங்கி உடல் சரியாகிவிடும் என்று அறிந்த பின்பு அதன் வழி செய்கின்றார்கள்.

ஆனால் தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும்…? என்ன ஆனதோ ஏது ஆனதோ…! என்று பதட்டம் அடைய வேண்டி இருக்கும்.

டாக்டர்கள் சில கருவிகளை வைத்து உடலில் அந்தந்த இடங்களில் நாடித் துடிப்புகளைப் பார்ப்பார்கள்.
1.இருதயத்தினுடைய வேகத் துடிப்பைப் பார்த்து… இந்த நிலைகள் தான் இருக்கும் என்று டாக்டர்கள் அறிகின்றார்கள்
2.சரியான மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… இந்த உலகம் எப்படி இயங்குகின்றது…? எந்தெந்த நிலையில் இருக்கின்றது…? என்ற ஞானத்தைக் கொடுத்து அதைத் தெரிய வைத்தார்.

அதற்கு 20 வருடங்கள் ஆனது. காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து தான் அதை எல்லாம் கண்டேன்… உணர்ந்தேன்.

“டாக்டராக” ஒருவர் வந்தாலும்… படிக்கப்படும் போது அவர்கள் ஆரம்ப நிலையில் இருந்து படிப்படியாகத்தான் அந்த அறிவினுடைய ஞானத்தில் வளர்ச்சியாகி வருகின்றனர்.

அது முழுமையாகும் போது தான்…
1.இது இன்ன நோய்…
2.அது இந்த நிலையில் இருக்கிறது…
3.அதற்கு இந்த மருந்து கொடுக்க வேண்டும்…! என்று பழக்கப்படுத்திச் செயல்படுகின்றார்கள்.

பழக்கப்படுத்தி… அதைச் சரியான நினைவு கொண்டு மீண்டும் அவர்கள் செயல்படுத்திக் கொண்டு வந்தால் என்றால் அவர் உயர்ந்த டாக்டராக மாறுகின்றார்.

அதில் ஏமாந்து விட்டால் இதற்கும் அதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால்… ஒரு நொடி மாறினால்… இவர் கொடுக்கும் மருந்து நல்லது செய்வதற்குப் பதில் தீமைகளை உண்டாக்கிவிடும்.

ஒரே மருந்து தான் அந்த நோயைக் கேட்கும் ஒரே டாக்டர் தான் அந்த மருந்தினையும் கொடுக்கின்றார். இருந்தாலும்
1.மருந்து கொடுக்கப்படும் பொழுது இன்னொரு இடத்தில் துடிப்பு வேறாக இருக்கிறது என்றால்
2.அந்த எதிர்ப்பு நிலைகளைப் பரீட்சித்துப் பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி அதையும் அனுசரித்து
3,அதைத் தணிக்கும் மருந்துகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

சிலர்… அது என்ன…! இந்த டாக்டர் இத்தனை மருந்துகளைக் கொடுக்கிறார் என்றும் கேட்பார்கள்.
1.அறிந்து கொண்ட உணர்வு கொண்டு
2.அது வளர்ச்சியான நிலையில் கொண்டு செயல்படுத்துவது தான் அது.

ஆக… டாக்டருக்குப் படித்துக் கொண்ட மாதிரி உங்களுக்குள் வரக்கூடிய தீமைகளையும் நோய்களையும் நீக்கக்கூடிய சக்தியாக “பெரிய டாக்டராக… துருவ நட்சத்திரத்தின் உணர்வை…” உங்களிடம் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் “அத்தகைய டாக்டராக…” எப்படி வளர்ந்தது…? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அதைச் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.

அதை வைத்து “நீங்களும் பெரிய டாக்டராக ஆக முடியும்..!”

உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி ஒளியாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குக் கிடைக்கும்.

அதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விறகுக் கட்டை இருக்கின்றது அதை எரித்தால் ஒளியாக (வெளிச்சம்) மாறுகின்றது… நன்மை செய்கின்றது.

அதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் தீமை என்ற உணர்வுகள் நம் மீது மோதினாலும்… அருள் ஒளி என்ற உணர்வை எடுத்துக் கலந்து அதை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

எப்படி…?

தீமை என்றாலும்…
1.அதிலே தொக்கி உள்ள விஷம் தான் அதனின் இயக்கத்திற்கு வருகிறது.
2.ஆக அதற்குள் மகரிஷிகளின் உணர்வை இணைத்து இயக்கப்படும் பொழுது “ஒளி…” என்ற உணர்வாக மாறுகின்றது.

அதாவது… கட்டையை எரித்தால் அது கருகுகின்றது… ஆனால் “வெளிச்சம்…” கொடுக்கின்றது. அந்த “வெப்பத்தால்…” மற்றொன்றைச் சமைக்க முடிகின்றது

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் வரும் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் எல்லாம் கதிரியக்கப் பொறிகளால் (அதற்குள் இருக்கும்) தான் இயக்கப்படுகின்றது.

ஆனால் அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை அதற்குள் சேர்த்து
2.நல்ல முறையில் அதை இயக்கப்படும் பொழுது கருகிய உணர்வுகளை நீக்கிவிடுகிறது.
3.அப்போது நமக்குச் சமைக்கும் பக்குவமும் அந்த வெப்பமும் உணர்வைப் பக்குவப்படுத்தும் வலிமையும் கிட்டும்.

இதை நாம் செய்து பழகுதல் வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதையெல்லாம் உங்களிடம் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

உங்களுக்குக் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்தை உற்றுப் பார்த்துத் தியானிக்கும் போது அதிலிருந்து வெளிச்சம் வரும்… உங்களுக்கு நல் வழி காட்டும்… நல்ல சிந்தனைகள் வரும்.

அதிலே ஆசைகளை மட்டும் அதிலே கூட்டி விடாதீர்கள்.

ஆசை என்றால் அது எதுவாக இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த ஒரு ஆசையை மட்டும் கூட்டிக் கொள்ளுங்கள். உடல் ஆசையைக் கூட்டி இருக்க வேண்டாம். எல்லாம் செய்து… எனக்கு இப்படி வருகிறது…! என்று வேதனையை மட்டும் எடுத்து விடாதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும்
1.என் செயல் நல்லதாக இருக்க வேண்டும்… மற்றவர்களைப் புனிதப்படுத்தும் சக்தியாக அது வரவேண்டும்
2.குழந்தைகள் நல்ல பண்புள்ளவர்களாக வாழ வேண்டும்… உயர்ந்த நிலை பெற வேண்டும்
3.கணவனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்… மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
4.நாங்கள் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று
5.இது போன்று செய்து வாருங்கள்… உங்களை அது பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும்.

உயிருடன் ஒன்றுகின்றோம் உணர்வில் கலந்த இருளை அகற்றுகின்றோம்… ஒளியாக நாம் வளர்கின்றோம். என்றுமே நாம் அழியாது ஒன்று சேர்த்து மகிழ்ந்து வாழும் நிலை பெறுகின்றோம்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள். நான் (ஞானகுரு) உங்களுக்கு அருளைப் பாய்ச்சுகின்றேன்… நீங்கள் எனக்கு அருளைப் பாய்ச்சுகின்றீர்கள்.

இந்த உணர்வு ஒன்றாகி ஒளியின் உணர்வுகளாக வலுப் பெறும் போது இருளை அகற்றும் வலிமை பெறுகின்றது. என்றும் அழியாத அந்த ஒளியின் சக்தியைப் பெறுகின்றோம்.

அந்த நிலையை நாம் அனைவரும் அடைதல் வேண்டும்.

ஆகவே ஆயுள் மெம்பர்கள் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த அருள் வழிகளை நமக்குக் காட்டினார்.
1.அவர் காட்டிய நெறிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்
2.அவருடன் ஒன்ற வேண்டும்.
3.அவருடைய ஒளி பட இருள் நீங்கும்
4.அருள் பெற நமக்குள் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறலாம்.

அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும். ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தியானம் இருக்கும் பொழுது என் (ஞானகுரு) நெற்றியைப் பார்க்கச் சொல்கின்றேன். அதிலிருந்து நமது குருநாதரின் அருளை நீங்கள் பெற முடியும்.
1.குருநாதர் எனக்கு இப்படித்தான் செயல்படுத்தினார்
2.அவர் நெற்றியைப் பார்க்கும் பொழுது அவர் கண்ட உண்மை எல்லாம் எனக்குத் தெரிய வந்தது… அதே போன்று நீங்களும் காண வேண்டும்.

குருநாதர் நமக்குக் காட்டியது துருவ நட்சத்திரம். அதிலிருந்து ஒளி அலைகள் இங்கே வருகின்றது. அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள். துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்க்க வளர்க்க உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெருகப் பெருகப் பேரருள் என்ற நிலைகளில் இருளை நீக்க கூடிய சக்தியாக நீங்கள் பெறுகின்றீர்கள்

ஆகவே புருவ மத்தியை எண்ணுங்கள். ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த உணர்வின் சக்தியை நீங்கள் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
1.நமது குருநாதர் காட்டிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நான் நுகர்கின்றேன்
2.நுகர்ந்த உணர்வை நீங்கள் கவரக்கூடிய சக்தி பெறுகின்றீர்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி என் புருவ மத்தியைப் பாருங்கள்.

என் உயிரான ஈசனை வேண்டி… குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அகஸ்தியனின் அருளும்… அவன் துருவனான அந்த அருள் உணர்வும்… துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.

அதன் வழி நீங்கள் ஏங்கும் போது அந்த உணர்வுகள் ஒளி அலைகள் இங்கே வந்து.. உங்கள் உடல்களில் உணர்ச்சிகள் பரவி அந்தப் பேரருளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைகின்றோம்.

அகஸ்தியன் பெற்ற தீமைகளைக் கருக்கும் ஆற்றல்

 

ஒரு புழுவை எடுத்து வந்து குளவி தன் விஷத்தை அதன் மீது பாய்ச்சினால்… விஷம் புழுவின் உடலில் பரவி… புழுவின் உயிர் இந்த விஷத்தின் நிலைகள் கொண்டு உடலில் உள்ள அணுக்களை மாற்றி அமைத்து விடுகின்றது. ஆனால் அது குளவியாக அடுத்து மாறுகிறது.

புழுவின் உடலுக்குள் சென்று அந்தப் புழு குளவியாக மாறிய பின் அதே உணர்ச்சியின் தன்மை அதற்கு வருகின்றது. முதல் குளவி எதைச் செய்ததோ இதுவும் அதே வேலையைச் செய்கின்றது. இதைப் போன்று தான்
1.தாய் கருவிலே விளைந்த அகஸ்தியன்
2.தன் உடலிலே கடும் விஷத்தின் தன்மையையும் அடக்கிடும் வல்லமை பெறுகின்றான்.

இயற்கையில் விளையும் சத்தினை வேக வைத்து உணவாக உட்கொள்ளும் பயிரினங்களையும் உருவாக்குகின்றான் ஐந்தாவது வயதிலேயே…!

இன்றும் பார்க்கலாம்…! தத்துவஞானியின் உணர்வைப் பெற்ற பின் தாய் கருவிலே கர்ப்பமாக இருக்கப்படும் போது அந்தத் தத்துவத்தை நுகர்ந்தறிந்தால் அந்த குழந்தையாகப் பிறந்த பின் இளமையிலிருந்து அவன் அறியாதபடி பல வேதங்களையும் பாடுகின்றான் படிக்கின்றான் தத்துவத்தை எடுத்துச் சொல்கின்றான்.

கணக்கிடும் பொழுது ஒரு கம்ப்யூட்டர் கணக்குகளைச் செய்து முடிப்பதற்கு முன் ஒரு நொடிக்குள் இவன் விடைகளைச் சொல்லி விடுகிறான் என்று பார்க்கலாம்.

உலகில் நடக்கக்கூடிய இதைப் போன்ற சம்பவங்களைப் பத்திரிகைகளில் பார்க்கலாம். இப்படிப் பெரிய மேதையானவர்களும் உண்டு. இது எல்லாம் “தாய் கருவிலே பெற்ற நிலைகளைக்கொப்பத் தான்” உருப்பெறுகின்றது.

இயற்கையின் நிலைகள்
1.இந்த உயிர் எதை நுகர்கின்றதோ அதை அணுவாக மாற்றுகின்றது என்பதை
2.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் ஐந்தாவது வயது ஆகும்பொழுது தாவர இனங்களுக்கு எங்கிருந்து எவ்வாறு உணவு கிடைக்கின்றது…? எதன் வழி கிடைக்கின்றது…? என்பதனைச் சிந்திக்கும் தன்மை பெறுகின்றான்.

விண்ணை நோக்கிப் பார்க்கின்றான்… பிரபஞ்சத்தில் உருவாகும் பல நிலைகளையும்…!
1.இந்த பிரபஞ்சத்திற்குச் சக்திகளை நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதையும்
2.பால்வெளி மண்டலங்களாக அதை அமைப்பதையும் தூசிகளாகப் பரவுவதையும்
3.ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் எதிர்மறை ஆகும் பொழுது ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது
4.மின் கதிர்களாகப் பரவுவதையும் ஒலி அலைகள் பரவுவதையும் மற்றதோடு இணைவதையும்
5.அது எவ்வாறு…? என்பதனை அகஸ்தியன் அறிகின்றான்.

இப்படி அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை தான் மின்னல்கள் எவ்வாறு உருப்பெறுகிறது என்று உணரும் போது
1.தன் இளமைப்பருவத்திலேயே அந்த நட்சத்திரத்தின் உணர்வுகளை அவன் நுகர்ந்ததினால்
2.அவன் உடலுக்குள் அந்த மின் அணுக்களின் நிலை உருவாக்குவதும்
3.ஒன்றை உற்று நோக்கினால் பகைமை உணர்வுகளை… தீய உணர்வுகளைக் கருக்கிடும் சக்தியைப் பெறுகின்றான் அகஸ்தியன்.
4.அவன் பெற்ற அந்த ஆற்றல்களை நாமும் பெறுதல் வேண்டும்.

“வேதாள மாமகரிஷி”

 

அன்று பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பெற்ற பெருநகரில் செல்வத்தின் அதிபதியாக வாழ்ந்து வந்தவர் திருச்சாடனார்.

வாழ்க்கைத் துணை நலம் நன்கு அமையப் பெற்றும் பன்னெடும் காலமாக மக்கள் செல்வம் அமைந்திடாமல் கணவனும் மனைவியும் குழந்தைப் பாக்கியப் பேறு வேண்டி அன்னதானங்கள் இட்டு… அது மிகப்பெரிய சாமாராதனையாக (இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை) அனுதினமும் நடைபெற்று வந்தது.

ஒரு பெண் மகவை ஈன்ற பின் துணைவியார் இயற்கை நிலை எய்துகின்றார். அந்தக் குழந்தையைப் பேணும் பொறுப்பை திருச்சாடனார் ஒரு தவமாய்ச் செய்து வந்தார்.

குழந்தையின் மங்கைப் பருவத்தில் உபேந்திரன் என்கின்ற தவநெறிச் செல்வனுக்கு மணமுடித்து திருச்சாடனார் முழுமையாகத் தவ வாழ்க்கையில் ஈடுபட்டார்.

பூமியில் சில விசேஷ அலைத்தன்மைகள் பாயப்பெறும் காலகட்டம்… இரு சம்பவங்கள் அப்பொழுது நடந்தேறியது.

செல்வச் சீமான் திருச்சாடனார் உள்ளத்தால் துறவறத்தை மேற்கொண்டார். காட்டு வழிப் பயணம் செல்கின்ற காலத்தில் செல்வ நிலையைக் குறிக்கோளாக வைத்த ஊரின் எல்லையில் வாழ்ந்து வந்த மந்திரவாதி ஒருவன் திருச்சாடனாரை அழித்திடும் நோக்கம் கொண்டு வேதை (தாக்குபவன்) என்பவனை ஏவி விடுகின்றான்.

வேதையும் ஓர் அம்பை ஏவியது.

1.பகலை இரவாக்கிட்ட கடும் மழைக்காலம் ஞானத்தின் சூட்சுமத்தில் “மகரிஷிகளால் ஆட்கொள்ளப்படுகின்ற செயலும் உண்டு…”
2.“நில் என்றால் உடனே நிற்கும்…” ஞானக்காவலுடன் சூட்சும மகரிஷிகள் உடன் இருக்க
3.அச்செயல் தடுக்க… முதலில் எய்த அம்பு திருச்சாடனாரின் மார்பைத் துளைத்தது.
4.பின் மீண்டும் தொடுத்த அம்பு பாயும் முன் திருச்சாடனார் வாயிலிருந்து “நில்…” என்றே ஒலித்த ஒலியின் தொனியினால்
5.வினை… சுவரில் எறியப்பட்ட பந்து போல் எய்த இடமே திரும்பச் சென்றது.

“நில்” என்ற வெளிப்பட்ட தொனியின் அதிர்ச்சியினால் வேதை என்பவன் மயங்கி உயிர் துறந்தான்.

“சூரிய மண்டல தேவன் அங்கே சூட்சமமாக திருச்சாடனார் சரீர நிலையில் செயல் கொண்டு” முன்னிலும் பிரகாசமான தேஜசுடன் சரீர துன்பங்கள் நீக்கம் பெற்று…
1.“வேதம்” என்ற மறைபொருளை ஒலியின் தன்மைகளை ஆளுகின்ற செயலினால்
2.”வேதாள மாமகரிஷியாக” அவர் இன்றும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்.

வேதாள மகரிஷி உரைப்பான்…! மனமாகிய கிணற்றில் குறுக்கே சுவரெடுத்தால் நீர் இறைத்திடும் செயல் தடைப்படுகிறது. ஆனால் மனக்கிணறோ பழுதுராத் தன்மையில் நலம் பெற விழைகின்றது.

ஜெப நீர் (தியானத்தில் எடுக்கும் சக்தி) பெற்றுத் உயிராத்ம சக்தியைக் காத்திட முனைவோர்… மனக்கிணற்றின் ஜெப நீர் பெற்றிட குறுக்கே எழுந்திட்ட தடைகள் அது சூட்சமமாக இருந்தால் “அதைத் தகர்த்து விடவேண்டும்…” என்ற மன எண்ணத்தின் உயர்வைக் கூட்டிடல் வேண்டும்.

பின் ஜெபநீர் அருந்திடத் தடை ஏது…? இந்நிலையின் பொருள்கள் விளக்கி
1.எது தீமை தந்திட விளைந்ததோ அதையே நன்மையாக்கிடும் நல் நிலைகள் காட்டி
2.அஷ்டமாசித்துக்கள் பெற வைத்துக் காத்திட்ட வேதாள மகரிஷியின் செயல்கள் பல உண்டு.

புறக்கண்ணால் நோக்கிடும் செயல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பிற்கே தவிர்க்கப்பட்டாலும்… கொண்ட சேமிப்பைக் குறைவாக்குவது
1.உலகோதய வாழ்க்கையில் வந்திடும் மோதல் காலங்களில்
2.உற்று உறுத்துக் கேட்டல்… அதிசயித்து எச்செயலையும் விழிப்பார்வை கொண்டு பார்த்தல்…
3.இந்த இரண்டு வகையான காரியங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்.

திருச்சாடனார் சூட்சும அவதார நிலையின் நோக்கமே… மனித சரீரத்தின் உயிர்களுக்கு ஊறு விளைவித்திடும் கபாலிகர்கள் வசம் இருந்து அவைகளைக் காத்திடத் தான்.

அதற்காக… தனது உருவை விகார வடிவம் அமைத்து… வேதாளம் என்ற பெயரும் படைத்திட்டுப் புனித பூமியை மாசு படுத்திடும் அவர்களை விரட்டிட வேதாள வடிவம் தாங்கித் தன்னை அச்சுறுத்தும் தோற்றமாகக் காட்டினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகாபாரதத்தில் கௌரவர்கள் நூறு பேர் என்றும் பாண்டவர்கள் ஐந்து பேர் என்றும் காட்டுகின்றார்கள். அதனின் உட்பொருள் என்ன…?

எந்த உணர்வின் தன்மை நாம் நுகர்கின்றோமோ அவை தான் நம்மை ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டியுள்ளனர். அதாவது
1.வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு என்ற இந்த ஐந்து (பாண்டவர்கள்) நிலையில்
2.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ (கௌரவர்கள்) அதுவே அதன் வழியில் நம்மை ஆளுகின்றது
3.நம் உயிர் அதனின் உணர்வை இயக்குகின்றது – நம் உயிர் சக்தியாக இயக்குகின்றது.

நாம் நினைக்கும் (எண்ணும்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அங்கே உருவாக்கி அதைக் கௌரவர்கள் என்று காட்டியுள்ளனர்.

ஒரு குணத்தை நான் எடுத்துக் கொண்டால் அதைக் காக்க வேண்டும் என்றும் அதே குணத்தைத் தான் நான் வளர்த்துக் கொள்ளும் நிலையும் வருகின்றது.

உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபத்தை வளர்த்துக் கொண்டால் அந்தக் கோபமே எனக்கு உகந்தது என்றும்… அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும் நிலை இல்லாது அதை வழி நடத்த வேண்டும் என்றும்… அகங்காரம் கொள்ளுகின்றது.

அதே போல ஒருவர் தொழில் செய்தால்
1.அதிலே தான் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாதபடி
2.நான் செய்தது எப்படித் தவறாகும்…? என்று பிடிவாத குணங்கள் இருப்பதும்
3.தெரியாதபடி ஒரு சொல்லைச் சொன்னாலும்… தான் நுகர்ந்த உணர்வுகள்… தான்… தனது… என்ற நிலையில்
4.தன்னைக் காக்க அதன் உணர்வுகளை நாம் வலுப்படுத்தும் போது தீமையின் உணர்வுகளே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வுகள் தனக்குள் வளராது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா…?

ஆகையினால் தான் அதைக் கௌரவர்கள் என்றும் தனக்குள் எடுக்கும் குணங்கள் ஒவ்வொன்றும்… “தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையாகவே வரும்…” என்று மகாபாரதத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மை கொண்டு தன் கௌரவத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. ரோஜாப் பூவோ தன் நறுமணத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. மற்ற மணங்கள் தனக்குள் வராது தடுக்கின்றது.

இதைப் போல ஒருவனைத் தாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் மற்றவர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
1.தான் வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் பிறருடைய துன்பங்களை நாம் பார்ப்பதில்லை… துன்பப்படுத்தியே நாம் வாழுகின்றோம்
2.துன்பப்படுத்துகின்றோம் என்று உணர்த்தினாலும் “எனது வாழ்க்கைக்காக நான் இதைச் செய்தேன்…” என்று
3.அசுர குணங்களைத்தான் அகங்களைக் கொண்டு தான் வாழ்கின்றோம்.

இவ்வாறு வாழும் நாம் எதனின் உணர்வை நாம் பெற்றோமோ அதனின் நிலையாகவே உயிர் நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் தான்…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதன் உணர்வையே நீ பெறுகின்றாய்
2.அதை வளர்க்கின்றாய்… அதுவாக ஆகின்றாய் என்று கீதாச்சாரம் சொல்கிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சந்தர்ப்பத்தில் ஒரு வேதனை வந்து விட்டால் நம்மால் ஒரு கணக்கைச் சீராக பார்க்க முடிகிறதா… ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடிகிறதா… ஒரு சாமானை எடுத்துப் பத்திரமாக வைக்க முடிகிறதா…? இல்லை.

நாம் சரியாகச் செய்யவில்லை என்கிற பொழுது மீண்டும் வேதனைப்படுகின்றோம். அப்பொழுது எது இயக்குகின்றது…? காரணம் என்ன…?

நாம் நல்லது செய்து கொண்டிருக்கும் பொழுது
1.திடீரென்று ஒரு தவறான நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்கிறார்கள்..
2.தவறு செய்வோரை உற்றுப் பார்க்கின்றோம் அல்லது என்ன ஏது என்று விசாரிக்கின்றோம்…
3.உணர்ச்சிகளைத் தூண்டிய பின் அது நமக்குள் வளர ஆரம்பிக்கின்றது.

அந்த நேரத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் வேலையைச் சரியாகச் செய்வதற்கு மாறாகத் தவறாகச் செய்து விடுகின்றோம். ஐயோ… இவ்வளவு தூரம் நாம் செய்தும் அது சரியாகவில்லையே… பலன் இல்லாமல் போய்விட்டதே… நஷ்டமாகிவிட்டதே…! என்ற வேதனை வந்து விடுகின்றது

1.தவறு நடக்கிறது என்ற அந்த உணர்ச்சிகளை ஊட்டும் பொழுது நமக்குள் ஜீவன் பெறுகின்றது
2.நாம் சுவாசிக்கும் ஆன்மாவிலே அது புகுந்து கொள்கின்றது
3.உயிரிலே பட்டபின் அதற்குத்தான் சாப்பாடு கிடைக்கின்றது… நல்ல குணங்களுக்கு நல்ல சாப்பாடு போவதில்லை
4.ஆகையினால் நல்லதை நம்மால் இயக்க முடியாமல் போய்விடுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் இயக்கத்திற்கு வருகிறது. நம் உடலில் அணுக்களாக விளைந்ததை மீண்டும் நினைவுபடுத்திய உடன் நமக்குள் இவ்வாறு சில மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்வதில்லை.

இதைப் போன்ற தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…? அதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா…!

அந்த சக்தி பெறுவதற்குத் தான் உங்கள் நல்ல குணங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்பொழுது ஊட்டமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

நல்லதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கி வருகின்றீர்கள். உங்களுடைய உணர்வுகள் எதையெல்லாம்… எப்படி எல்லாம் அது இயக்குகிறது…? என்பதை உணரும்படி செய்கிறோம்.

எதன் வழி கொண்டு…!

குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் (ஞானகுரு) எனக்குள் கலந்து வைத்திருக்கின்றேன்.
1.உங்களுக்குள் அதைக் கலந்து உண்மையின் உணர்வுகளைத் தெரியப்படுத்துகின்றோம்.
2.அந்த நல்ல நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்… அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எண்ணத்துடனே இதை உபதேசிக்கின்றேன்.
4.கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணர்வுகளில் அதை இணைத்துக் கொண்டே வருகின்றேன்
5.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி தன்னாலே உங்களுக்கு வந்துவிடுகிறது

தன்னால் எப்படி வருகின்றது…?

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள். அப்போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த அந்தப் பதிவு உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுவில் சிறிதளவு இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து உங்களுக்குள் அதைப் பெருக்க ஆரம்பிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வளர வளர… உங்களுக்குள் அது சக்தி வாய்ந்ததாக மாறும். தீமை அகற்றும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

“வேதனையை நீக்க வேண்டும்” என்று யாராவது கேட்கின்றீர்களா…?

 

1.மனிதனாகப் பிறந்த நாம் “பிறர் மகிழ்ந்து வாழ வேண்டும்” என்று எண்ணினால்
2.அந்த மன மகிழ்ச்சியால் செல்வம் அதுபாட்டுக்குத் தன்னிச்சையாக நமக்குள் பெருகும். செல்வம் குமியும்… செல்வாக்குடன் இருக்கலாம்…!

எல்லாச் செல்வத்தையும் வைத்துக் கொண்டு மனதில் நிம்மதி இல்ளாமல் என்னை இப்படி பேசுகின்றார்களே…! என்று வேதனையை எடுத்தால் நோய் தான் அதிகமாகும்.

வைத்தியரிடம் சென்று பணத்தைக் கொடுக்க வேண்டியது வரும். சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்கும் நிலை அற்றுப் போய் விடுகின்றது. வேதனையினால் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இழக்கப்படுகின்றது.

இதை விடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்…?

மனிதனாகப் பிறந்தோம் என்றால்
1.அருள் ஞானிகள் காட்டிய வழியிலே நடக்க வேண்டும். நம்மை அறியாது வரும் இருள்களிலிருந்து நாம் மீள வேண்டும்.
2.மெய்ஞானிகள் உணர்வு நமக்குள் வளர்க்கப்பட வேண்டும். அதைப் பற்றுடன் பற்றிடல் வேண்டும்
3.எல்லோரையும் அந்த ஞானத்தின் வழியைப் பற்றிடச் செய்தல் வேண்டும்.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது.

தயவு செய்து என்னை யாரும் கோபித்து விடாதீர்கள் ஞானிகள் சொன்னதைச் சொல்கின்றேன் குருநாதர் என்னைச் சாக்கடை அருகே அமர வைத்து தான் இந்த உபதேசத்தை எல்லாம் கொடுத்தார்.

நாம் என்ன செய்கின்றோம்…?

சங்கடம் சலிப்புடன் உட்கார்ந்திருக்கிறோம். என் குடும்பத்தில் இப்படி இருக்கின்றது அப்படி இருக்கின்றது… என்று சாமியிடம் சென்று துன்பத்தையும் வேதனையும் எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி அதைத்தான் கேட்கின்றீர்களே தவிர “வேதனையை நீக்க வேண்டும்” என்று யாராவது கேட்கின்றீர்களா…?

அப்படி நினைப்பது இல்லை.

ஏனென்றால் இந்த மாதிரி உணர்வுகள் தான் (நமக்குள் இருக்கும் சங்கட உணவுகள்) நல்ல குணங்கள் இருந்தாலும் அந்த நல்லதைப் பேசவிடாது தடைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

நாம் தவறு செய்யவில்லை. இந்த உணர்வுகள் நம்மை எவ்வாறு இயக்கி விடுகின்றது.
1.அதை நீக்குவதற்குத் தான் அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கும்படி சொல்கின்றோம்.
2.அதன் வழியில் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
3.உங்கள் உயிர் அவ்வாறு இயக்குகின்றதா இல்லையா…? என்று பாருங்கள்.
4.அதன் வழிப்படி உயிர் இயக்கப்படும் பொழுது கண் அதே வழியைக் காட்டும்… உடலை மகிழச் செய்யும்.

இதைக் கேட்டுணர்ந்தோர் இதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

கோவிலுக்கு போகும் பொழுது அந்தத் தெய்வ குணங்களைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அந்த ஆலயத்திலே தனக்கு முன் நிற்பவருக்கெல்லாம் அந்தத் தெய்வ குணம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அவர்கள் தொழில் வளம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த எண்ணத்தோடு செய்தால் யாரையும் நீங்கள் முண்டியடித்துத் தள்ள மாட்டீர்கள்.
1.நீங்கள் அந்த உயர்ந்த குணமாக அதுவாக ஆகின்றீர்கள்
2.உங்கள் சொல் அவர்களை நல்லதாக்குகின்றது.
3.கோவிலில் எந்தத் தெய்வத்தை வைத்திருக்கிறார்களோ அந்தத் தெய்வமாக நீங்கள் ஆகின்றீர்கள்.

உங்களிடம் இருக்கும் நல்ல குணத்தைத் தெய்வமாக மாற்றுவதற்குத் தான் இதையெல்லாம் சொன்னார்கள். மற்றவர்களைத் தள்ளிவிட்டு சாமியின் சக்தியைப் பெற வேண்டும் என்று சொன்னால் தள்ளும் குணம் தான் வரும். நல்ல குணங்களை நம்மிடமிருந்து தள்ளி விட்டு விடும்.

இதை எல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத் தான் ஆலயத்தை கட்டி அதில் தெய்வத்தை வைத்து நம் மனதைத் தூய்மைப்படுத்தும் வழிகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

உயிருடன் ஒன்றுபவனுக்கு “எந்த நிலையிலும்… எதிலும் பாதிப்பு ஏற்படாது”

 

ஆதி சக்தியின் செயல்:-
1.ஒன்றுடன் ஒன்று மோதிடும் எதிர் மோதல் குணங்கள் தன் குணத்தின் சுவைக்கொப்ப
2.ஆகர்ஷன சக்தியால் வான்வெளியில் பூதி என்று அழைக்கப்படும் பெருவெளியில் கலந்து
3.எதிர் மோதல் தன்மைகளில் “எந்தக் குணம் அமிலம் வீரிய நிலை பெறுகின்றதோ”
4.அவைகளில் கலந்திடும் அணுக்களின் குணங்களுக்கு ஒப்ப வீரிய நிலை பெற்றிடும் அந்த அமிலத்தன்மைகள்
5.தனக்கொத்த நிலைகளை எல்லாம் “உயர் மின் நுண்காந்த சக்தியாக வளர்க்க”
6.எதிர் மோதல் குணத்தன்மையாக “எரிபொருள் சக்தி அக்கினி என்ற வெப்ப சக்தியாக” செயல் உருவாக உருக்கோலம் கொண்டு
7.தன் சக்தியின் பரிமாணத்தை வளர்ச்சி நிலை கொள்ளும் செயலாக மென்மேலும் ஈர்த்துக் கொண்டு
8.சுழற்சியின் வேகத்தால் “ஓங்கார நாதத்தைக் கூட்டி” பால் வெளியில் சுழன்று ஓடிக்கொண்டே அமைவு பெறும் தன்மையாக
9.தனது செயலின் வீரியம் வலுக்கொண்ட சக்தியாக கன பரிமாணம் கொண்ட திடமாய் உருவாகும் முன் தன்னுள்ளே பூதியை உருவாக்கி
10.எப்படி அக்கினியால் எரிக்கப்பட்ட பொருள்கள் காற்றில் கலந்து செயல்படும் தன்மையைப் பெறுகின்றதோ அவைகள் போன்றே
11.தூசு படலங்களும்… படர்வு நிலையில் மறைபொருளாகும் அத்தன்மைகள் ஜீவன் கொண்டிட்டு
12.”தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும்” நிலை பெறுகின்ற செயல் ஒன்று
13.ஜீவ அணுக்களாகப் பின் வளர்ச்சியில் எண்ணிறந்த கோளங்களாக நட்சத்திரங்களாக சூரியன்களாக வளர்ச்சி நிலை பெற்று
14.ஈர்த்துக் கொண்டிடும் ஈர்ப்பு நிலைக்கொப்ப விசேஷ தனித்துவ சக்தியாக வளர்க்க
15.உறை பொருள் சிவமாக… இயங்கும் இயக்கச் செயல் ஈர்ப்பு சக்தியாக இணைந்து கொண்டிடும் “சிவ சக்தியாக”
16.ஆதி சக்தியின் செயல் உருவாய்… ஓடிக்கொண்டே உள்ளது.

நம் பூமியின் சுழற்சியின் வேகத்தில் பௌர்ணமி காலங்களிலும் அமாவாசை காலங்களிலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிட்ட கோள்களின் ஈர்ப்பின் தொடர்பினால் நீர் சக்தியின் மாறுதல்களை… இந்நிலையிலும் உயர் நாதத்தை ஈர்த்துக் கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் “மறைபொருளை விளக்குவார்கள்…”

சப்த மாதர்கள் என்று வணங்குகின்றாய். ஒருவர் குரல் போல் மற்றவருக்கு இருப்பதில்லை. கோடான கோடி சப்தஸ்வர நாதங்கள் “கண்டத்தில் (தொண்டையில்) எழும் ஆகாயக் கூறு” காட்டும் நிலை தான் என்ன…?

சப்த நாதங்களில் செயல்படும் சப்தரிஷிகள்
1.ஆதி சக்தியின் அம்சமாக வழி நடத்தும் அரிய உண்மைகளை
2.தியானத்தைக் கூட்டுவதன் மூலம் நீ அறிந்து கொள்ளலாம்.

சப்தரிஷி மண்டலங்கள் இயக்கிடும் நவக் கோள்கள்… வான் இயல் மையக் கோள் என்ற பால் வெளியின் உண்மை நிலைகளை அறிந்து வளர வேண்டுமப்பா.

பஞ்சபூதங்களான… ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் பரவெளியில் ஜீவ மின் நுண்காந்த சக்தியாக அனைத்திலும் பரவிப் படர்ந்துள்ளதை “பராசக்தி… என்றும் பரமார்த்த சக்தி…” என்றும் பெயரிட்டு மகரிஷிகளால் அழைக்கப்படுகின்றது.

பால்வெளியில் உதித்திடும் உயிரணுக்கள் கோடான கோடி நிறம் மணம் குணம் என்ற முத்தொடர் சூட்சுமத்தின்
1.நீரமில சக்தியுடன் கலந்து உதிக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொண்ட சுழற்சியாய்
2.எண்ணம் கொண்ட உயிரணுக்கள் எண்ணம் கொண்ட ஆத்மாவாக ஜீவன் பெற்றே பிறப்பிற்கு வருகின்றது.

மனிதன் கூறுகின்றான் வயதான காலத்தில் அவன் ஞானம் பெற வேண்டும் என்று. எப்படிப்பா இருக்கின்றது இது…? காலம் கடந்து ஞானம் வருவது எங்கே…?

நாம் கூற முற்படுவதில் தேகம் கொண்டே…
1.”தேகம் கடந்த ஞானம் பெற்றிடல் வேண்டும்”
2.பெற்று உயர்ந்து வளர்ந்திடல் வேண்டும்… என்று உணர்த்தியும் வந்துள்ளோம்.

எமது சித்தின் நிலையை வெளிப்படையாக உரைத்து விட்டால் மாத்திரம் நீ சக்தியைப் பெற்றிட முடிந்திடுமா…?
1.தன் நிலையைத் தான் வளர்க்க
2.அந்நிலையில் நன்நிலையாக வளர்த்துக் காட்டிட வேண்டுமப்பா.

உலோதய வாழ்க்கை நடைமுறையில் ஞானத்தின் போர்வையைப் போர்த்திக் கொண்டு… உண்மை நிலையை உரைக்க வந்ததாகப் பாஷாண்டகமிடும் செயலை… உண்மை நிலையை “நான்” என்றிட்ட அகங்கார ஆணவ மாயை என்றிட்ட அனைத்துக் காரியார்த்த செயல்களை “யார் தான் வென்றிடுவார்கள்…?”

1.சகலத்திலும் சகலமாக ஈஸ்வரரின் அருள் நிறைந்திருக்க…
2.தனித்துவ காரண காரியங்களுக்குச் செயல் கொண்டு – சகலத்திலும் ஈஸ்வரரின் அருள் என்ற பேரின்ப சாயுஜ்ய (உயிருடன் ஒன்றும் நிலை) லயத்தைக் கொள்பவனுக்கு
3.எந்த நிலையிலும் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட்டுவிடாது… “சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை உண்டு…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புதிதாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் ஒரு இன்ஜினியரை வைத்து அதற்குத் தேவையான பிளானைப் போடுகின்றோம். தேவையான பொருள்களை வாங்கிக் கொத்தனாரையும் மற்ற ஆட்களையும் வைத்து அந்த வீட்டைக் கட்டுகிறோம்.

ஆக… வீட்டைக் கட்டுவதற்கு முன்னாடியே எப்படி…? என்ன…? ஏது…? என்று எல்லைகளை வகுத்து விட்டுத் தான் வேலைகளை நாம் செய்யத் தொடங்குகின்றோம்.

அதே போல் ஒரு பலகாரத்தை செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே அரிசியை ஊறவைக்கின்றோம். ஊறிய பின் அதை அரைத்து மற்ற பொருள்களை அதனுடன் சேர்த்து அதைப் புளிக்க வைக்கின்றோம்.

ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து மாவினை எடுத்து வடையாகச் சுடும் போது அதற்குத் தக்க ருசியும் சுவையும் பலகாரத்தில் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளை எவ்வாறு நாம் தெளிந்து செயல்படுத்துகின்றோமோ அதைப் போல் நமது வாழ்க்கையிலும்… எதை… எக்காலத்தில்… எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற பக்குவ முறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாவை அரைத்து வைத்துவிட்டுப் பத்து நாளைக்குச் சேமித்து வைத்தால் அது அதிகமாகப் புளித்துப் போய் விடுகின்றது. ஆனால் பத்து நாள் சேமித்து வைக்க வேண்டும் என்றால் அதை ஒரு ஐஸ் பெட்டியில் பத்திரமாக வைத்தால் கெடாமல் இருக்கின்றது.

விஞ்ஞான அறிவில் வாழும் நாம் இப்படிப் பக்குவப்படுத்துவது போன்று
1.அந்த மெய் ஞானிகளுடைய உணர்வு கொண்டு நமக்குள் அருள் ஒளியைப் வளர்த்து
2.அதை வைத்துப் பக்குவப்படுத்தி… நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும்.
3.சமயம் வரும் பொழுதெல்லாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

பொருள்கள் கெட்டுப் போகாது அதை பாதுகாக்க எப்படிச் செயல்படுத்துகின்றோமோ அதைப் போன்று நமக்குள் தீமையான உணர்வு வந்தால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் கொண்டு அந்தத் தீமை நமக்குள் வளராதபடி பாதுகாத்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் ஒளியை நுகர்ந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பாதுகாத்து என்றும் வேகா நிலை பெறும் தன்மையை உறுதிப்படுத்தி இந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து பழகுதல் வேண்டும்.

ஆகவே குரு காட்டிய அருள் வழியில்…
1.அருள் ஒளி பெறுவோம்
2.இருளை அகற்றுவோம்
3.ஒளியான உணர்வை வளர்ப்போம்
4.ஒளியின் சரீரமாக நிலைப்போம்
5.நிலையான ஒளி சரீரத்தைப் பெற இந்த வாழ்க்கையினை அருள் வாழ்க்கையாக மாற்றி அமைப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக… கண்ணாடியில் எழுத்துக்களை எழுதும் பொழுது பக்குவமாகச் செயல்படுத்தவில்லை என்றால் கண்ணாடி உடைந்துவிடும். நமது மனதும் ஒரு கண்ணாடி போன்றது தான்…!

1.நமக்கு அனைத்துமே தெரிந்திருக்கலாம்
2.இருந்தாலும் அடுத்தவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி சமமாகப் பதிவாக்கவில்லை என்றால் அவரின் மனம் நொறுங்கிவிடும்.

“நன்மையாகவே இருந்தாலும்” அழுத்தத்தின் தன்மை கொண்டு பக்குவம் தவறி மற்றவர்களுக்குச் சொல்லால் சொல்லப்படும் போது மனது கண்ணாடி போன்று உடைந்து விடுகிறது.

மனம் உடைந்து விட்டால் திரும்பச் சரி செய்வதே கடினம். பக்குவ நிலைகளை இழந்தால் நம் மனம் நொறுங்கி விடுகின்றது ஆகவே அதைப் போன்று சிதறுண்டு போகாதபடி பக்குவ நிலைகள் கொண்டு நாம் வாழ்தல் வேண்டும்.

1.காரியம் வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தத்தின் தன்மை கொண்டு
2.கோப உணர்வையோ வேக உணர்வையோ எடுத்தால் சாந்த உணர்வுகள் சுக்கு நூறாகத் தெறித்து விடுகின்றது.
3.அன்பு கொண்டு அரவணைக்கும் மற்றவர்களின் நல்ல மனதையும் நமது சொல் சிதறச் செய்து விடுகின்றது.

வாழ்க்கையில் பரிபக்குவம் கொண்டு வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அருள் வழியைப் பெறுதல் வேண்டும். இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும்.

நம் குரு காட்டிய வழியினை வெறும் “சொல்லால் மட்டும் சொல்லிவிட்டுப் போகாதபடி…” காலத்தை அறிந்து பக்குவ நிலை கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

1.அருள் ஒளியின் உணர்வை நாம் நுகர்ந்தால் அந்தப் பக்குவம் தன்னாலே வரும்
2.அருள் சக்திகளை நுகர மறந்தால் பக்குவம் தவறி விடுகின்றது.

பலகாரம் செய்கிறோம் என்றால் அதிலே எண்ணை காயும் பருவத்தை அறிந்து எந்தப் பொருளை இணைக்கின்றோமோ அதற்குத் தக்க அதிலே சுவையின் தன்மை வருகின்றது.

வடையைச் சுடுகிறோம் என்றால் எண்ணை காய்ந்திருக்க வேண்டும் அது காய்ந்திருக்கின்றதா…? என்றும் நாம் முதலில் சரி பார்த்தல் வேண்டும்.

பார்த்தபின் மாவைத் தட்டிப் போட்டால் வடை சுவையாக இருக்கும். என்னை காயாதபடி வடையைச் சுட்டால் எண்ணையை அதிகமாக ஈர்த்துவிடும்… சுவை கெட்டுவிடும்.

1.ஆகவே அடுத்தவரிடம் நாம் பேசும் பொழுது பக்குவம் பார்த்துச் சொன்னோம் என்றால்
2.இணைந்து வாழும் தன்மையும் அவர்களைத் திருத்தும் நிலையும் தன்னுடன் அரவணைக்கும் தன்மையும் வருகின்றது.

அதைத் தான் இராமன் அம்பை எய்தான் என்றால் அதைத் திரும்ப வாங்கிக் கொள்வான் என்று சொல்வது.

1.நாம் சொல்லும் உணர்வுகள் எதுவோ… அதுவே பதிலாக நமக்குள் வரும்.
2.ஒன்றி வாழ்வதும்… இணைந்து வாழ்வதும்… பிரிந்து வாழ்வதும்… எல்லாமே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் இணக்கத்திற்குள் தான் உண்டு.
3.நான் உங்களை மகிழச் செய்யும் நிலைகள் கொண்டு வந்தால்… அதே மகிழ்ச்சி என்ற நிலைகளை எனக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பாய்ச்சினோம் என்றால் கல்யாணராமன் ஆகின்றோம்.

நீங்கள் மகிழ வேண்டுமென்ற எண்ணம் கொண்டு நான் சொன்னால் உங்களுடைய உணர்வு எனக்குள் இணைந்து வாழும் தன்மையாக வருகின்றது. என் சொல்லும் உங்களுடன் இணைந்து வாழ்கின்றது. மகிழ்ச்சி பெறும் தன்மை கொண்டு மகிழச் செய்யும் உணர்ச்சியாக இயக்குகிறது.

எண்ணங்களின் இணக்கமும்… எண்ணத்தின் உணர்ச்சியும்… நமக்குள் எவ்வாறு இயக்குகின்றது…? என்று எண்ணத்தால் இயக்கும் நிலைகளை விஷ்ணுவின் மறு அவதாரம் இராமன் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

வெப்பத்தின் உணர்வு கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக அது எவ்வாறு இயக்குகிறது…? என்று சூரியனின் இயக்கத் தொடர்களைக் காட்டி உணர்வின் இயக்கங்களை நமக்கு ஞானிகள் காட்டினார்கள்.

உணர்வின் இயக்கம் தனக்குள் வலுவாகப் படும்பொழுது உணர்த்த வேண்டும்… உணர வேண்டும்… பார்க்க வேண்டும்… என்ற நிலையாக “எண்ணத்தால் தான் கண்கள் உருவானது…” என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஞானிகள் நமக்குக் காட்டிய நிலைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக வாழும் அருள் சக்தி பெற வேண்டும்.

மகரிஷிகள் மீது பற்று கொண்டு அவர்கள் வழியினைப் பின்பற்றுவோம்

 

1.நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ உயிர் அதை இயக்குகின்றது
2.எதை எண்ணுகின்றீர்களோ அதை உடலாக்குகின்றது உயிர்
3.எதனை எண்ணுகின்றீர்களோ அந்த உணர்வின் தன்மை வளர்க்கின்றது.
4.வளர்ந்த உணர்வின் தன்மையை தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.
5.இந்த உடலை விட்டு நாம் அகன்றால் நாம் எதை எண்ணினோமோ அந்த உணர்வின் செயலாக அடுத்த உடலாக நம்மை உருவாக்குகின்றது.
6.ஞானிகள் உணர்வை நமக்குள் இணைப்போம் என்றால் அவர் ஒளியின் சரீரம் ஆனது போன்று நமது உயிர் நம் உடலில் இதை உருவாக்கும்.

நமக்குள் இருக்கும் உயிரை ஈசனாக மதித்து… ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலைச் சிவம் என்று உணர்ந்து… நமக்குள் ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய நிலைகள் காந்தம் மகாலட்சுமி சர்வ நிலைகளை வளர்த்து நமக்குள் உருவாக்கிய நிலைகள் மகாலட்சுமி உண்டு என்பதை உணர்தல் வேண்டும்.

அது கவர்ந்த உணர்வின் மணங்கள் மகா ஞானம் சரஸ்வதி அனைத்தையும் அறிந்திடும் ஞானமாக நம் உடலில் உண்டு. ஒவ்வொரு அணுவிற்குள்ளும் இணைந்த உணர்வின் நிலைகள் ஒருக்கிணைந்து அனைத்தையும் உருவாக்கும் வெப்பத்தின் நிலைகள் பராசக்தியாக நமக்குள் உண்டு… அனைத்தையும் உருவாக்கிடும் ஆற்றல் நமக்குள் உண்டு.

அனைத்தையும் அறிந்திடும் உணர்ந்திடும் நிலையும்… தீமையை நீக்கிடும் உணர்வின் சக்தியாக ஆறாவது அறிவு முருகா என்ற நிலையும் நமக்குள் உண்டு. அதனின் துணை கொண்டே நாம் செயல்படுத்த முடியும்.

எண்ணியதை வழிகாட்டும் கண்ணின் நிலைகள் இருந்தாலும் எண்ணியதைத்தான் அது வழி காட்டுகின்றது. எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது.

ஆனால் இவை அனைத்தையும் மாற்றி அமைக்கும் சக்தி மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை முருகன் என்று பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்றும் நமக்குள் ஆறாவது அறிவு உருப் பெறும் சக்தியாக நமக்குள் அடக்கி அதனின் நிலைகள் இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.அவர்கள் உணர்வை நாம் பின்பற்றி
2.அவர்கள் மீது பற்று கொண்டு
3.அதன் வழிகளில் நாம் பெற வேண்டும்.

இந்த உடலைச் சிவனாக மதித்து சர்வத்தையும் அறிந்திடும் ஞானம் நமக்குள் உண்டு மகா சரஸ்வதியாக. சர்வத்தையும் கவர்ந்திடும் சக்தி மகாலட்சுமி உண்டு சர்வத்தையும் உருவாக்கிடும் அந்த வேகத் துடிப்பான பராசக்தி நமக்குள் உண்டு.

நமது கண்கள் கண்ணனாக இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. நமக்குள் விளைந்த உணர்வின் எண்ணங்கள் அர்ஜுனனாக இருக்கின்றது. எதனின் வலிமையைக் கொண்டோமோ அதனின் வலிமையின் தன்மையாக நாம் எண்ணியது சாரதியாக நின்று கண் வழிகாட்டுகின்றது.

1.ஞானிகள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அதுவே சாரதியாக அமைந்து
2.ஞானிகள் சென்ற பாதையில் நம்மை அழைத்துச் செல்லும்.

அது தான் கண்ணின் நிலைகள் நமக்குள் இவ்வாறு இருக்கிறது…? என்று கீதையில் தத்துவங்களைக் கூறியுள்ளார்கள். அந்த அருள் ஞானிகள் சொன்ன நிலைகளை நாம் பின்பற்றுவோம்.

நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் மனிதனை உருவாக்கியது விநாயகா. உயிரின் தன்மை நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த வினைக்கு நாயகனாக உணர்வின் செயலாக இயக்கப்பட்டு அந்த உணர்வின் தசைகளாக அங்கங்கள் அமைக்கப்பட்டது.

ஆக நமக்குள் அனைத்துத் தத்துவங்களும் உண்டு..!

பேரண்டம் இந்த பிண்டத்திற்குள் எவ்வாறு இயங்குகிறது…? என்றும்… பேரண்டத்தில் தனித்து இயக்கம் மற்ற கோள்கள் தன் தன் உணர்வின் சக்தி கொண்டு இயக்கினாலும்… அதனில் இணைந்த உணர்வு கொண்டு தாவர இனங்களாக மாற்றினாலும்
1.அதனின் தன்மை கொண்டு உயிர் தனக்குள் இணைத்து
2.ஒருக்கிணைந்த நிலையாக உணர்வின் சக்தியாக ஒருக்கிணைந்து நமக்குள் எவ்வாறு இயக்குகிறது…? என்பதை
3.அண்டம் பிண்டத்திற்குள் எவ்வாறு உணவின் செயலாக ஒன்றி வாழுகின்றது…?
4.ஒன்றிய வலுவின் துணை கொண்டு நம்மை எவ்வாறு இயக்குகின்றது என்ற தத்துவ ஞானிகள் கொடுத்த
5.அருள் மகரிஷிகளின் அருளாற்றலை நாம் பின்பற்றுவோம்
6.அவர்களின் வழியிலே நாம் செல்வோம்
7.மனிதன் என்ற நிலைகள் புனிதம் பெறுவோம் முழுமையின் நிலைகள் பெறுவோம்.
8.நமது உணர்வுகள் உயிருடன் ஒன்றிய ஒளியாக நிலைத்திருப்போம்.
9.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் அதைப் பெறுவோம்
10.அருள் ஞானம் பெறுவோம்… ஒளியின் உணர்வாக வளர்வோம்
11.இருளைப் போக்கும் நிலையை நாம் பெறுவோம்… ஒளியின் சிகரமாக உயிருடன் ஒன்றியே நிலைத்திருப்போம்.

நம்மைக் காத்திடும் ஔஷதங்களாகச் செயல்படுபவர்கள் “அன்பு சித்தர்கள் முனிவர்கள் மாமகரிஷிகள்”

 

கரிய நிழல் மாயை கால் சதங்கைதான் அசைக்க
அறியப்பெறும் எண்ணம் அசைத்த ஒலியின் கண் நின்றசைய
மாமுதல்வன் ஆர் அறிய வந்திட்ட உயிரணுவே
ஆவெனும் மாயப்பசு இயல் குணத்தின் சுவை மாற்றும்
வாரணன் கோடி வாதிட்ட வன்மை நிலை போலும்

இது ஒரு சிருஷ்டி… உலக நடைமுறையின் இயக்கம், வந்த வினை கண்ட உயிரின் பரிணாம வளர்ச்சியின் “தாத்பரியம்…”

திசை யானைகள் இழுக்கும் சிவமாக (பூமி) நீ அமைந்தாய். சுவை குணம் விளக்க… மாயை தன் நிலையில் எண்ணத்திற்கொப்ப செயலுறுத்தும் நிலையை விளங்கிக் கொள்.

1.வினையால்… பசுக்களாகிய உயிரணுக்கள் (உடலில் உருவான அணுக்கள்) தன் நிலையில் தான் ஏக…
2.அந்த வினையின் தொடர் வலுப்பெற
3.எண்ணம் கதியாகி… கதியுறும் எண்ணம் வினையாகி
4.வினையின் தொடர் நீண்டு விதி செயலுற
5.கொண்டிட்ட எண்ணங்களே சகலத்திலும் வழி நடத்திடும் இயக்கமப்பா.

மறுவினைப் பயன் காட்டும் ஜெபமாம் ஆகுதி (நெருப்பு – வெப்பம்) கொண்ட எண்ணத்தின் உயர்வைக் கூட்டி (தியானத்தில் எடுக்கும் சக்தி)… மனிதன் தெய்வநிலை பெற்றிட சகலத்தையும் தம்முள் உணர்த்தும்… சகலமும் காந்தமாகச் செயல்படும் நிலை அறிவாய்.

தீவினையாகிய உயிரணுக்கள் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டால் தாக்குறும் நிலையே “மாயப்பசு” (தீமை செய்யும் அணுக்கள்). அந்நிலையை மாற்ற வேண்டும் என்றால்
1.ஈஸ்வர தியானமே ஆகுதியாக… நல்ல நிலை உணர்த்தும் யாகமாக
2.தன்னைத்தான் உயர்த்தி… நற்சுவாசத்தால் நல்ல அணுக்களைக் கூட்டி,
3.உயிரான்மாவின் பரிமாணத்தைக் காத்துக் கொண்டு எது நல்நிலையோ அந்நிலைக்கு உயர்த்துவது
4.சகலத்திற்கும் சகலமாய்க் கலந்துள்ள “ஈஸ்வரர் அருள் (வேகா நிலை பெற்ற மகரிஷிகளின் சக்தி) என்ற பேரருள் சூட்சுமம்…”

“கல்ஆல்” என்பதே உலகோதய நிலையைக் குறிக்கின்றதப்பா. அதன் கீழ் வாழும் நாம்
1.அந்த உலகோதய நிலையை மறந்து எடுக்கின்ற நற்சுவாசம்
2.தியானத்தின் வழியாக சதா சர்வ காலமும் நின்று நிலை பெற்றிருக்கும் அது “உன்னத நித்திய பரிபூரண ஆனந்த லயம்…”
3.அதுவே ஊன்றி உயர வேண்டிய நல் நிலைகள்.

மனிதன் என்ற ஜீவிதத்தின் தொடக்கமே பரமார்த்த நிலை (மனிதப் பிறவி தான் முழுமுதல் கடவுள்). அன்றி வேறு எந்தப் பிறவியாலும் மெய்யை அறியப்படுகின்ற செயல் கூறுகள்… எந்த விதத்திலும் சாத்தியமில்லை…! என்பதே மகரிஷிகள் காட்டிய உண்மை நிலை.

கரும்பின் சாறு சிதறி விடாமல் காக்கின்ற “கரும்பின் கணுக்கள் போல்…” நாம் கூட்டிக் கொள்ளும் ஆத்ம பலத்தின் நிறைவுகளைக் காக்கின்றவர்கள் யார்…?
1.அன்பு சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் மாமகரிஷிகள் சப்தரிஷிகள் சூட்சுமமாகச் செயல்பட்டு
2.ஆதி சக்தியின் சூட்சும மூலத்தின் மூலமாக… நம் மீது அருள் ஒளிபாய்ச்சி
3.நம்மைக் காத்திடும் ஔஷதங்களாகச் செயல்படுபவர்கள் அவர்கள் தான்.

மனிதன் பெற வேண்டிய பேறு என்னப்பா…? திசை யானைகளாகக் காட்டிய கல் யானைகள் கரும்பு அருந்தியதாகத் திருவிளையாடல் புராணம் விளக்கம் கேட்கின்றாய்.

கல் யானை… “கரும்பு அருந்தியது” என்பதன் மெய்ப்பொருள் என்னப்பா..? “பேரருள் செல்வம்” தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் பேரானந்த நிலையைச் சித்தரிக்கும் ஆனந்த நிலையப்பா அது.

கரும்பின் இயல்பான குணத்தன்மைகள் தன் சுவையை… சுவையின் குணத்தை ஈர்த்திட்டே வளர்ச்சியின் வளர்ப்பாகப் பலன் என்று உருவாவதைப் போல்… ஞானத்தின் பங்கு அந்த நிலை பெற… காத்திடும் மகரிஷிகள் செயல் கொண்டிட… சூட்சுமமாய் ஜோதியில் கலந்திடவே அந்த நிலைகள் கூறப்பட்டன.

சிவலிங்கம் என்பது இந்த உலகம் தான். பால்வெளி சூட்சுமத்தில் செயல்படும் நிலைகள் பேரண்ட இருளாக அனைத்திலும் காந்தத்தின் புலமாய் எங்கும் பரவிப் படர்ந்ததைப் “பராசக்தி” என்று கூறிய உண்மை நிலை என்ன…?

சகலமும் ஆவி தான்…! ஆவியின் அமில நிலைகள் தான். எரிகின்ற நெருப்பு அதனுள் இருந்து வெளிப்படுத்தும் புகைத்தன்மை போன்ற மெல்லிய படலங்கள் கண பரிமாணம் கொண்டு… தன் குண நிலைகளுக்கொப்ப “திடக்கோளம்” கொள்கின்ற சூட்சுமத்தின் உண்மைகளை உணர்ந்து பார்.

மறைபொருள் எப்படி உறை பொருள் ஆகிறது…?

1.அனைத்திலும் ஆவியான அமில குணத்தன்மைகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி
2.தத்தமக்குரிய குணங்கள், அதனுடன் இணையும் அமில குணங்களுடன் இணைந்து கொண்டிட்டு
3.ஒவ்வொன்றின் குணத்தன்மைகளுக்கொப்ப மேகங்களாக மாறி
4.அந்த அமில மேகங்கள் மூலத்தின் மூலங்களின் தன்மைகளைத் திரவநிலை கொண்டிடும் அமில நிலைகளாகவும்
5.உருவாக்கும் செயல் தன்மைகள் பிறிதொன்றில் மோதி தன் நிலை மாற்றி மற்றொன்றாக உருவாக்கிடும் செயலில் செயல்பட்டு
6.அதன் செயல்பாட்டில் தன் குண நிலைகளை மாற்றிக் கொண்டு செயலுக்குச் செயல்படும் குணங்கள் கொண்டும்
7.அவைகள் உயிரணுக்கள் செயலுக்கு நிறம் மணம் குணம் என்றே கோடான கோடியாகப் பல்கி பெருகி
8.உதிக்கின்ற உயிரணுக்கள் பூதியின் தூசுப்படலம் என்கின்ற தன்மையாக நெருங்கிச் சேர்ந்து
9.ஒவ்வொன்றின் ஈர்ப்பில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாகும் நிலையே உறை பொருள் தன்மை (ஆவியாக இருப்பது நீராகி பொருளாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகி பிரபஞ்சமாகும் நிலை).

கோடான கோடி நிறங்கள் மணங்கள் குணங்கள் என்றே பால்வெளியில் படர்ந்து… காந்தத்தின் புலமாக… உறை பொருளில் உருவாகும் நீரமில சக்தியில் ஒன்றுடன் ஒன்று கலந்து… செயலுறும் தன்மைகள் எத்தனை எத்தனையோ நடைபெற்றுக் கொண்டிருக்கும் “இயற்கையின் சக்தியே பேரானந்தப் பெருநிலை…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உபதேச வாயிலாக உங்களைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கின்றேன் (ஞானகுரு). அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் ஒரு கருத்தன்மையாக உருவாக்கச் செய்கின்றேன்.

1.ஒரு கம்ப்யூட்டரில் சேமித்து வைத்தது போன்று உங்களுக்குள் பதிவு செய்து விட்டேன்
2.எப்போழுது தீமை வருகிறதோ அந்த நேரத்தில் யாம் சொன்ன உபதேசங்களை நினைவுபடுத்தினால்
3.தவறை நீக்கக்கூடிய உபாயம் வரும்.

சந்தர்ப்பத்தில் வேதனையான நிலைகள் வந்தாலும் உடனடியாக ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்திந் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வரும்.
1.அந்த இடத்தில் எப்படிச் செயல்பட வேண்டும்…?
2.நாம் எப்படி வாழ வேண்டும்…?
3.இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற நல்ல சிந்தனைகள் வரும்.

ஆனால் இன்று பெரும்பகுதி… ஒருவன் தவறு செய்கிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவு செய்து விட்டால் அவனை எப்படி மடக்க வேண்டும்…? என்று உணர்வு தான் வரும்.

அந்த உணர்வைச் சேர்த்த பின் அவனை இங்கே தட்டலாமா…? அங்கே தட்டலாமா…? என்று கால்குலேசன் பண்ணுவோம்.

பணம் இருப்பதால் தானே எவ்வாறு செய்கின்றான். பணம் வராமல் தடுத்தால் நம்மை எதிர்க்க மாட்டான் அல்லவா… கஷ்டப்படுவான் அல்லவா…! என்று இந்தச் சிந்தனைகள் ஓடுகின்றது.

ஆக… கம்ப்யூட்டரில் ஆணைகள் இடப்பட்ட பின் அது தன்னிச்சையாக இயக்குவது போல் நமது உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது. நம் நுகர்வதை எலக்ட்ரானிக்காக மாற்றி
1.ஊழ்வினை என்ற வித்தாக்குகிறது
2.எல்லா ரெக்கார்டையும் சேர்த்து வைக்கிறது.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் படிப்படியாக வளர்ந்து சர்வத்தையும் உருவாக்கும் மனித உடலுக்குள் ஊனாக மாறிவிடுகிறது.

எந்த அணுவின் தன்மை வந்தாலும் அதன் கருத்தன்மையாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கும்… எலும்புக்குள் இருக்கும் ஊன் என்ற வித்து…!

ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை வளர்த்து அடுத்துப் பிறவியில்லா நிலையை அடையுங்கள்.
1.நாம் தேடிய சொத்து எதுவும் நம்முடன் வரப்போவதில்லை.
2.உடலையே காக்க முடியாது போகிறது… பின் தேடி வைத்த சொத்தைக் காக்க முடியுமா…?
3.செல்வம் கூடக் கூட வேதனைகள் கூடிக் கொண்டே வரும்
4.வேதனை கூடக் கூட எந்த செல்வத்தைப் பெற முடியும்…? வேதனை என்ற அழுக்குச் செல்வத்தை தான் தேட முடியும்.

ஒரு மிருகமாக ஆகிவிட்டால் செல்வத்தைப் பார்க்க முடியுமா…? அதை பார்த்தாலும் மிதித்து விட்டுத் தான் செல்லும். அதே போலத் தான் வேதனை என்ற உணர்வு அதிகரித்து விட்டால் நாம் மிருக உடலிற்குத் தயாராகி விடுகிறோம் என்று அர்த்தம்.

கடுமையான வேதனைக்கு உள்ளாகும் போது அழகான துணிகளையோ நகை நட்டுகளைப் பார்த்தால் நமக்கு வெறுப்பு தான் வரும். நோயுடன் நீங்கள் படுத்திருக்கும் பொழுது அப்படி அலங்காரம் செய்ய வேண்டும் இப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னாலே நமக்கு எரிச்சலாகும்.

அட… கொஞ்ச நேரமாவது நல்ல சட்டையைப் போடுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்…? போட வேண்டும் என்று சொன்னவர் மீது வெறுப்பு தான் வரும்.

மிருகம் என்ன செய்யும்…? எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுத் தான் போகும். ஆகவே இந்த உணர்வின் தன்மை மிருக உடலுக்குத் தான் தயாராகின்றது.

அதைத் தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரம் காட்டுகிறது. ஒரு மனிதனுடைய தவறான நிலையைப் பார்க்கும் பொழுது சித்திரம். அவன் வெளிப்படுத்தும் உணர்வினை நமக்குள் சேர்த்த பின் புத்திரன். உடலில் அணுவாக உருவாகிறது.

புத்திரன் ஆன பிற்பாடு…
1.எந்த உடலில் இருந்து வந்ததோ அதே குணத்தை எடுத்து உடலுக்குள் கொடுத்து நாம் வளர்க்கின்றோம்
2.இதையே வழியாக அமைத்துக் கொண்டு அந்த உணர்வைப் பெருக்கிக் கொண்டு வரும்பொழுது
3.எந்தக் குணத்தை எடுத்தோமோ அதுவே பாசக் கயிறாக மாறுகின்றது.

எமன் எது மேலே வருகின்றான்…? எருமை மீது…! சிந்தனையற்ற நிலைகள் ஆகும் போது எடுத்துக் கொண்ட பாசக் கயிறு அந்த உணர்வுக்குத் தக்கவாறு எமன் நரகலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றான் என்று தெளிவாகவே நமக்குக் காட்டுகின்றார்கள்.

அப்பொழுதாவது இந்த உண்மையை உணர்கின்றோமா என்றால் இல்லை.

“மார்க்கண்டேயன்…” என்றும் பதினாறாக சிவலிங்கத்தை… உயிரைக் கட்டிப்பிடித்துக் கொள்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.
1.உயிரை கட்டிப்பிடித்தால் என்ன செய்யும்…?
2.எமனால் அவனை இழுக்க முடியவில்லை…

அதாவது…
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியாக ஆக்கப்படும் பொழுது
2.எவரும் இழுக்க முடியாது என்று அதையும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

துருவ நட்சத்திரமும் சரி சப்தரிஷி மண்டலங்களும் சரி அது என்றும் பதினாறாக அழியாத நிலைகள் கொண்டது. அந்த எல்லையை நாம் அடைய வேண்டும்.

வாழ்க்கையில் எத்தனை சந்தோஷங்களை நாம் அனுபவிக்கின்றோமோ என்றும் பேரானந்தப் பெரு வாழ்வு பெற முடியும். இருளை அகற்றி மகிழ்ச்சி என்ற ஒரு கோட்டையாக அது அமைக்கும்.
1.இந்த உடலில் சந்தோஷம் எப்படி இருக்கிறதோ
2.அதே மாதிரி உணர்வு உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையாக மாறும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமையை நீக்கும் எண்ணங்கள் வரும் பொழுது தான் இராமன் சீதாவை அரவணைத்துக் கொள்கின்றான் என்று காவியம் காட்டுகிறது.

1.தாக்கும் உணர்வு வந்தால்… எதிர்த்துத் தாக்கும் உணர்வே வருகின்றது
2.ஆனால் அரவணைக்கும் உணர்வின் தன்மை இருந்தால்… தன்னுடன் இணைந்து வாழும் நிலை வருகின்றது.

அது தான் “கல்யாணராமா…”

அரவணைக்கும் தன்மை கொண்டு நாம் நண்பனை இணைத்தால்… இந்த உடலுக்குள் தன்னுடன் இணைந்து வாழும் சக்தியாக அது எவ்வாறு கொடுக்கிறது என்று இராமாயணக் காவியம் தெளிவாகக் கூறுகின்றது.

அதை நாம் சிந்தித்தோமா…? என்றால் இல்லை.

மூலக்கூறுகளை விடுத்து விட்டு அவரவர்கள் உணர்வுக்கொப்ப காரியங்களைத் தீட்டிக் கருத்தினை மாற்றி மனிதன் வாழ்க்கைக்குண்டான போர் முறைகளைக் கையாண்டு “ஏமாற்றுவதும்… ஏமாற்றி வாழ்வதே சரி…” என்ற நிலைகளுக்குக் கொண்டு சென்று விட்டனர்.

இராமன் மிகவும் வலிமை கொண்டவன் என்று காட்டுகின்றனர். அன்று விசுவாமித்திரர் தான் யாகம் செய்யும் போது அசுரர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக இளம் பிராயத்தவர்களான இராமனையும் இலட்சுமணனையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார்.

பல வித்தைகளையும் கற்றுக் கொடுத்து எனக்குப் பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்கிறார். அதன்படி அசுரர்கள் தாக்குதலில் இருந்து இராமன் விசுவாமித்திரனைக் காக்கின்றான்.

ஆனால் விசுவாமித்திரனோ மிகவும் கொடூரமானவன்… கோபக்காரன்… பல அரசாட்சிகளைப் பிடித்தவன்… யாகத்தை வளர்த்தவன்… வலிமை பெற்றவன் தான்.

இவ்வளவும் இருந்தும் மீண்டும் வலிமை பெற வேண்டும் என்ற ஆசையின் உணர்வு உண்டு உலகை அடக்க வேண்டும்… உலகை அடிமையாக்க வேண்டும் என்று உணர்வின் வேகம் கொண்டு யாக வேள்விகளை நடத்த விரும்புகின்றான்.

யாக வேள்விகள் நடத்தப்படும் பொழுது எதிர்கொண்டு தாக்கும் உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக இராம இலட்சுமணர்களை அழைத்துச் செல்கின்றான். அந்த யாக வேள்வியும் நிறைவடைகின்றது.

ஆனால் அப்பேர்ப்பட்ட நிலையில்…
1.மற்றவர்களைக் காக்கும் நிலையாக அசுரர்களைக் கொல்லும் திறன் பெற்றவன்…
2.அசுரர்களின் செயலாக்கங்களை அறிந்து அவர்களை வீழ்த்தக்கூடிய திறன் பெற்றவன்…
3.மிக வல்லமை பெற்றவன் இராமன் என்று இருந்தாலும் தன் மனைவியுடன் காட்டிற்குள் செல்லும் போது என்ன நடக்கிறது…?

காட்டிற்குள் செல்லப்படும் பொழுது சூட்சம நிலைகள் கொண்டு அசுரனான இராவணன் சீதாவைக் கடத்திச் செல்கின்றான்.

ஆனால் வலுக் கொண்ட இராமன் அதைக் கேள்விப்படும் போது “தன் மனைவி போய் விட்டதே என்று மயங்கி விழுகிறான்…!” என்றால்
1.அப்பொழுது இராமனின் செயல் என்ன…?
2.இதை ஏன் காவியத்தில் இவ்வாறு சித்தரித்துக் காட்டுகின்றார்கள்…? என்று சற்று சிந்தித்தல் வேண்டும்.

வலிமை கொண்டவன் “தன் மனைவி போய் விட்டதே” என்று எண்ணும் பொழுது இதைப் போல் பிறிதொரு மனிதன் வெளிப்படுத்திய வேதனையைத் தனக்குள் நுகரப்படும் பொழுது… அந்த வாலியின் தன்மையே (நல்ல உணர்வின் வலிமை குறையும்) இங்கே வரும்.

கோதண்டத்தை முறித்து வேதனைகளை நீக்கிச் சீதாவை திருமணம் செய்து கொண்டவன்… கல்யாணராமன் என்று சுயம்வரத்தில் வென்றவன்… சீதாவைக் காணவில்லை என்று
1.“அந்த வேதனையான உணர்வை… விஷத்தின் தன்மையைக் கொடுத்தால்…”
2.இவனுடைய எண்ணத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்…? என்பதைத்தான் இராமாயணக் காவியம் தெளிவாகக் காட்டுகிறது.

இதையெல்லாம் அவர்கள் உணர்வுகளுக்கொப்ப காவியங்களைத் தீட்டி உண்மையின் உணர்வை அறியாதபடி தீமையின் விளைவுகளுக்கே பயன்படும்படி செய்து விட்டார்கள்.

நீங்கள் அந்த மூலக்கூறுகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் “செருகேற்றிக் கொள்ள வேண்டும்”

 

நம் எண்ணத்தின் வலுவான நிலைகள் கொண்டு மகரிஷிகளைப் பற்ற வேண்டும் என்றால் நம்முடைய எண்ணத்தை அது அழித்து விடும்.
1.மகரிஷிகளை நுகர்ந்தெடுப்பது மிகவும் கடினம்.
2.தனித்து இருந்து மகரிஷியின் ஒளியைப் பெறுவேன் என்றால் அது முடியாத நிலைகள்.

தனித்துப் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

பல கயிறுகளை எடுத்து ஒரு கயிறாகத் திரித்து வலுவாக்குவதைப் போன்று
1.நமது எண்ணங்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஒருக்கிணைந்த வலுவின் துணை கொண்டு நாம் ஏங்கி எடுப்போம் என்றால்
3.நமக்கு முன் படர்ந்திருக்கும் அவருடைய உணர்வுகள் நமக்குள் பலவாகி அவருடன் சமமாகி
4.அந்த உணர்வின் நிலைகள் நாம் எண்ணி ஏங்கும் பொழுது நம் ஆன்மாவிலே கலக்கிறது.
5.பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் உறையும் தன்மையாக நினைவின் ஆற்றலை
6.மகரிஷியின் அருள் ஒளி எனக்குள் படர வேண்டும் என்று எண்ணி உள் செலுத்தும் பொழுது நமக்குள் ஊடுருவுகின்றது.
7.அப்பொழுது அந்த உணர்வின் சத்து மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது கருவுற்று “உணர்வின் வித்தாக உருப்பெறுகின்றது…”

நமக்காக எத்தனையோ வேதனைகள் பட்டு நம்மைக் காக்க நம்முடைய மூதாதையர்கள் அனுபவித்த நிலைகள் அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் அந்த உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

கூட்டுத் தியானம் இருந்து வலுவேற்றிய உணர்வு கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை ஏகோபித்த நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தல் வேண்டும்.

அவர்கள் மீண்டும் உடல் பெறாத நிலைகளில் உடல் பெற்ற உணர்வினை அங்கே கரைத்துப் பஸ்பமாக்கி
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை
2.அறிந்திடும் ஆற்றலின் இயக்கத்தின் தன்மை கொண்ட அந்த உணர்வின் நினைவலைகள் உயிருடன் ஒன்ற அங்கே செயல்படுத்த வேண்டும்.
3.அங்கே ஒளிக் கடலிலே கலக்கப்பட்டு உடல் பெறும் தன்மை அங்கே கருக்க வேண்டும்
4.உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை அங்கே நிலைக்கச் செய்தல் வேண்டும்.

அப்போது அந்த ஒளி பெற்ற உணர்வின் தன்மை “அந்த ஞானியின் உணர்வுகள் இவர்களுக்குள் உணவாகச் சேருகின்றது…” ஒளியின் சுடராக ஒளியின் சரீரமாக அவரின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் நிலைத்திருப்பார்கள்.

அதுதான் பெருவீடு பெரு நிலை என்ற நிலை…!

அந்த அருள் ஞானிகள் கண்ட உணர்வை நாமும் பின்பற்றி அதைப் போல நாமும் ஒருங்கிணைந்து அருள் ஞானிகள் ஆற்றலைப் பெற வேண்டும் என்று ஏங்கினோம் என்றால்… அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பட்டு நம்மை அறியாது வந்த இருளை அகற்றும் நிலையும்… பொருள் கண்டுணர்ந்து செயல்படும் தன்மையும் அவர்கள் உணர்வு கொண்டு நாமும் அங்கே விண் செல்லலாம்.

ஆகவே தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானியின் உணர்வின் வலுக் கொண்டு அதனை நாம் நுகர்ந்தோம் என்றால் அதைப் பற்றி அதனின் நிலைகள் கொண்டு பிறவா நிலையும் ஒளியின் சரீரமாகவும் ஒளியின் சிகரமாகவும் நாம் வாழ்ந்திட முடியும்.

என்றும் பதினாறு என்று நிலை…!

ஒளியின் சிகரம் வளர வளர அது என்றும் 16 என்ற பருவத்தையே அடைந்திருக்கும்… நிலையான நிலைகள் பெற்றிருக்கும்… இன்னொரு உடல் பெறாது இருளை அது கவராது.

ஒரு வைரம் ஒளியின் சுடராக இருக்கின்றது. அது சுக்கு நூறாகத் தெறித்தாலும் அது மங்குவதில்லை.
1.அந்த வைரத்தை வைத்து ஒரு பொருளை கோடிட்டால் அதைக் கீறி விடும் இதைக் கீற முடியாது.
2.இதனை ஒத்த அதே வைரத்தின் தன்மையை இதனுடன் இணைத்தால்
3.உராயும் தன்மை கொண்டு அதனின் நிலைகளைச் செருகேற்றலாம்… ஒளியின் தன்மை மின்னச் செய்யலாம்.

இதைப் போலத்தான்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் எடுத்துச் செருகேற்றி
2.நமக்குள் இருக்கும் குணங்களை மின்னச் செய்யலாம்.
3.மின்னும் நிலை கொண்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வின் ஆற்றலும்… பொருள் கண்டுணர்ந்து செயல்படும் தன்மையும் நமக்குள் வருகின்றது.

ஆகவே அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் அனைவரும் பருகுவோம்.

கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக மாறினாலும் அதை அறிய வேண்டுமல்லவா…!

 

ஜீவன் பெற்று உடல் கொண்டு வாழும் மனிதன்
1.இயற்கையின் கதி குணங்களுக்கொப்ப எண்ணுகின்ற எண்ணத்தின் காந்தப்புல ஈர்ப்பு நிலைகளில்
2.சுவாசம் எனும் காற்று கொண்டு… பிடர்தல் (உந்துதல்) குண எந்த எண்ணமோ
3.அந்த எண்ணத்தின் வலு வீரிய காந்த ஈர்ப்பில் பிடர்தல் குணத்தன்மைகள் போல்
4.காற்றில் உலாவி ஓடிடும் படர்தல் குண கோடானு கோடி விசேஷத் தன்மைகளில்… “ஒத்த நிலையை ஈர்த்துக் கொண்டு”
5.சுவாசக் காற்றாக ஈர்க்கப்பட்ட ஒத்த குணங்களின் வலு வீரியத்தில்… “எக்குணம் பிடர்தல் கொண்டு வலுவாக்கப்பட்டதோ”
6.அந்த வலுவின் வலுவிற்கே வலு கூட்டிக் கொண்டிடும் ஜீவனாக… “அதே குணங்கள் மென்மேலும் ஈர்க்கப்பட்டு”
7.இரத்தத்தில் கருவுற்று அணுக்களாக உருப்பெற்று… அது தசைகளில் சேர்க்கப்பட்டு
8.எண்ணுகின்ற எண்ணம் தெய்வீக குணங்களற்ற… மாற்று நிலை (மீண்டும் பிறவிக்கு வரும்) கொள்ளப்படும் குணங்களாக இருந்திட்டால்
9.அந்தக் குணங்களுக்கொப்ப சேர்க்கப்படும் அமிலங்கள்… தியானம் கொண்டு நல்ல அணுக்களாக மாற்றம் செய்யப்படவில்லை என்றால்
10.உறைதல் குணம் கொண்டிட்டே (உடல் உறுப்புகளில் மாற்றமாகி) சரீரத்தையே நலிவுறச் செய்திடும் கதியாகி
11.பின் வினையாகி… பின் செயலுறும் வினைப் பயனாகி…
12.பின் விதியாக்கிடும் நிலைபெறும் செயல் கூறுகள் கொள்ளுகின்ற
13.கொள்ளப்படுகின்ற (விதிப்படி எடுக்கப்படும்) எண்ணத்தையே செயல் நடத்திடும் உயிர் கடவுளை இயக்கிடும் உணர்வலைகள்
14.உயிராத்மாவாகப் பதிவு பெற்றிடும் ஆத்ம சூட்சுமத்தில்
15.நாம் கூறிடும் இந்த எளிய தியானத்தின் வழியாகப் பெறப்பட வேண்டியது “ஆத்ம பலம் ஒன்றே…”

இயற்கையின் கதியால் சுவாச நாடிகளில் ஓடிடும் காற்று… பரிசுத்தமாக அமையப் பெற்றிட உன் முயற்சி இருந்திட்டால் மாற்று நிலை அமிலக் கூறுகளின் அணுக்கள் உடலுக்குள் உறையும் நிலை தடுக்கப்படும்.

மேல் நோக்கிய சுவாச நிலைகள் மாறு கொண்டிட்டால்… “கனம் கொண்ட” சுவாச அலைகள் (கோபம் பயம் துன்பம் பொறாமை குரோதம்) சரீர நாடிகளில் ஓடிடும் பொழுது அதனால் தடை ஏற்பட்டு… சரீரத்தின் வெப்ப கதியும்… நீர் அமில சக்தியில் கலந்திட்ட மாற்றமில குணத் தன்மையையும் சுவாச நாடிகளில் “நற்சுவாசத் தடங்கல்கள்” ஏற்பட்டுவிடும்.

அத்தகைய காலத்தில்…
1.வெப்பமும்… நீர் சக்தியுடன் கலந்திட்ட அமில குணங்களும் சுவாச நாடிகளில் நற்சுவாசத் தொடர்பின்றி
2.நற்சுவாசக் காற்றின் தொடர்பும் வெப்ப சக்தியில் கலந்துறும் சூரிய சக்தியும் நீர் அமில சக்தியுடன் கலந்து… தீவினைப் பயனுறும் செயலாக மாறி
3.விசேஷ செயல் உறாமல் (நல்லது ஏற்படாது) காற்றின் சூட்சுமம் தடைப்பட்டே… ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கொண்டிட்ட தன்மையாக
4.காற்றின் மூலத்தைத் தாக்கிடும் செயலாக… தசைகளில் வேதனையாகி சுவாச சமைப்பால் அங்கு (உடலில் ஆங்காங்கு ஏற்படும் வலி) அறிந்து கொள்கின்றோம்.

உறையும் நிலை இங்கு அதிமுக்கியம். நற் சுவாச குணங்கள் எடுக்கப்படும் போது அதனால் காக்கப் பெறுவது சரீரம் மாத்திரம் அன்று… ஆத்மாவும் தான் காக்கப்படுகிறது.

வேதனையைச் சரீர உணர்வுகள் காட்டுகின்றன… அதுவே ஆத்மாவின் பதிவாகச் சேரும் நிலையை உணர்ந்தாயா…?

சரீரம் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டிடும் செயல் கூறுகள் இந்த மனிதனுக்கு மாத்திரம் தான் உண்டு என்று எண்ணிடலாகாது. இயற்கையில் ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் இத்தகைய நிலை உண்டு.

அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் வந்து நீ கண்டிருப்பாய். ஆகாய நீர் உரிக்க அறிந்தவனப்பா நீ. புலர் காலைப் பொழுதில் புல் பூண்டு செடி கொடிகளின் மீது பனித்திவலைகள் முத்து முத்துக்களாக உரு கொண்ட நிலையைப் பார்த்திருக்கின்றாய். அது எவ்வாறு உருப்பெறுகின்றது…?

பருவ காலமான பனிக்காலத்தில் பெய்கின்ற பனி அப்படி உருப்பெறுகின்றது என்று நீ நினைக்கின்றாய். ஞான விழிப்பு தந்தாயிற்றே… சொல் பார்க்கலாம்…!

அறிந்ததைத் தெளிவதே ஞானியருக்கு அழகு.

நண்பகலில் சூரியனின் வெப்ப அலைகளைச் சமைத்திடும் பூமி… தன் சமைப்பில் வெளிப்படுத்திடும் வெப்பத்தின் அலைகள்… உணர்வலைகள் கொண்டு வெப்ப கதியாகப் படரும் செயல் பகல் பொழுதிலும்… அதே வெப்ப அலைகளைப் பெற்றிடும் சகல தாவரங்களும் ஜடப் பொருள்களும் ஏன் மனிதனும் கூட உணர்ந்து கொண்டிடும் அச்செயல் சூரிய அஸ்தமன செயலுக்குப்பின் இரவிலே வெப்பத்தின் நிலை என்ன…?

பூமி சமைத்து வெளித்தள்ளும் சுவாசகதியாக
1.அதி வெப்ப நிலைகள் பூமியின் சுவாச உணர்வலைகளால் சமைப்பின் பின் வெளிப்படும் நிலையே
2.மேல் நோக்கித் தள்ளப்படும் வெப்பக் காற்று சென்று…
3.பின் அந்த இடத்தை நோக்கி குவியப் பெறும் பருவ காலத்தின் நீர் அமிலக் காற்று… கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.

தாவரத்தை எடுத்துக் கொள். வெப்பத்தைப் பெற்றிருக்கும் பகல் பொழுதில் பூமியின் சுவாச அதி வெப்பம் தணிவுறும் இரவின் போது… தான் பெற்றுக் கொண்டிட்ட வெப்ப அமில நிலைகளை வெளிப்படுத்திடும் பொழுதே… காற்றில் படர்வு நிலை பெறும் குளிர்வு நிலை நீர் அமில சக்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்திடும் பொழுதே… ஈர்த்திடும் கிரியைகள் மிக மிக நுண் நீர் அமிலக் கூறுகள், ஈர்ப்பில் படர்வு பெற்றே… இரவுக் காலம் முழுவதும் நடைபெறும் அந்தச் செயலால் உருப் பெற்றிடும் திவலையாக… துளிகளாகக் காண முடிகின்றது (VAPORISATION AND CONDENSATION).

இதையே உன் சரீர செயலில் கண்டு கொள்.

ஜடப்பொருளான எத்தனையோ பொருள்கள் மேஜை சுவர்கள் எங்கிலும் நடைபெற்றிடும் செயலில் ஜீவன் கொண்ட தன்மைகளில் அந்த செயல் ஜடப் பொருள்களில் அறியவொண்ணாதது.

உறைபடு செயல்கள்… மறைபடு பொருள்கள்…! அதாவது…
1.கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக உறைந்தாலும்
2.உடலுக்குள் ஆகப்படும் போது அது மறை பொருள் தான்.
3.அதை அறிய வேண்டியது மிகவும் அவசியம் அல்லவா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் என்னைக் காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று பல கஷ்டங்களைச் செயற்கையாக ஏற்படுத்தித் தான் உண்மைகளை உணரும்படி செய்தார்.

ஆனால் நீங்கள் இங்கே சமமான இடத்தில் அமர்ந்து இந்த உபதேசங்களைக் கேட்கின்றீர்கள்.
1.எந்த அளவிற்கு இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்குகின்றீர்களோ
2.உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து வாழ்வதற்கு இது உதவும்.

ஒரு பச்சிலையைக் காட்டி… “இந்தப் பச்சிலை பேசுமாடா…!” என்பார் குருநாதர்.

அது எப்படி சாமி பேசும்…? என்பேன். அவர் ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றார். பச்சிலை எப்படி சாமி பேசும்…! என்று நான் கேட்கின்றேன்.

“பச்சிலை தான் பேசுகிறது…” என்பார்.

நான் பேசாது என்பேன். இரண்டு பேருக்கும் “சண்டை” வரும்.

காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின்…
1.பச்சிலை தான் பேசும் என்பதை நீ தெரிந்து கொள்ளும் வரை
2.“உன்னை விடமாட்டேன்” என்பார் குருநாதர்.

அப்போது நான் என்ன செய்ய முடியும்…! அவர் ஒவ்வொரு பச்சிலையாகக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்வார். பல பச்சிலைகளை முகர்ந்த பின் கடைசியிலே என்ன செய்தார்…?

எனக்குத் தெரியாமலே ஒரு விஷமான செடியைக் கையில் கொடுத்து அதை என்னை நுகரும்படி செய்தார்.

மயக்கம் வருகின்றது… அம்மா… அப்பா…! என்று சொல்கின்றேன்.

இப்பொழுது யாருடா பேசுகிறது…? என்று கேட்கின்றார்.

என் உடலில் “நோய் பேசுகிறது…” என்று சொன்னேன்.

நோய் எப்படிடா வந்தது…? இந்த பச்சிலை தானே காரணம் என்று சொல்கிறார் குருநாதர்.

சில பச்சிலைகளை நுகரும் பொழுது எனக்கு உற்சாகம் வந்தது… ஜம்… என்று இருக்கின்றது.

காட்டிற்குள் அங்கே சாப்பாடு ஒன்றும் கிடையாது. ஒரு லிட்டர் அரிசி; ஒரு டப்பா; மோரில் ஊறப் போட்ட கத்திரிக்காய்; மோரில் ஊறப் போட்ட மிளகாய்… (உப்பு கலந்தது) இதை வைத்துத் தான் இரண்டு மாதம் நாங்கள் இரண்டு பேரும் காட்டிலே காலம் தள்ளினோம்.

இரண்டு கட்டையை வைத்துத் தீயை மூட்டி மேலே பாத்திரத்தை வைத்து நீரை அதிகமாக ஊற்றி அரிசியைப் போட்டுக் கஞ்சி மாதிரிக் காய்ச்ச வேண்டும். அதிலே மிளகாயையும் கத்திரிக்காயையும் ஒரு துண்டு போட்டால் அது தேவாமிர்தமாக இருக்கும். இது தான் அங்கே சாப்பாடு.

ஆனால் குருநாதர் பச்சிலைகளை நுகர்ந்து பார்க்கும்படி சொன்னார். நுகர்ந்து உடலுக்குள் மாற்றங்களாகும் போதுதான் எனக்குத் தெரிய வருகின்றது.

பச்சிலை பேசுமாடா என்று கேட்டுக் கேட்டுச் சில விஷமான பச்சிலைகளை நுகரும்படி செய்ததும் எனக்கு மயக்கம் வந்து விட்டது. எம்மா… எப்பா…! எம்மா… எப்பா…! என்று கத்தத் தொடங்கினேன்.

என்னடா செய்கிறது…? என்று குருநாதர் கேட்டார்.

சாமி… எதையும் சாப்பிட முடியவில்லை.. தலை வலி வருகின்றது எப்படியோ மயக்கமாக இருக்கிறது…! என்று சொன்னேன்.

இதை எல்லாம் பேசுவது யாருடா…? என்று கேட்டார்.

“நான் தான் பேசுகிறேன்…” என்று சொன்னேன்.

உன்னை பேச வைப்பது எது…? அது யாருடா…! நீ நுகர்ந்த பச்சிலை தான் இவ்வாறு பேச வைக்கின்றது என்றார்.

பச்சிலைகளுக்கு மணம் உண்டு.
1.தன் மணத்தால் மற்றொரு செடியின் மணத்தை அருகில் விடாது தள்ளி விடுகின்றது
2.இப்பொழுது நீ நுகர்ந்த பச்சிலையின் உணர்வுகள் உன் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்த பின்
3.இந்த வேலையை எல்லாம் செய்கின்றது… நல்லதை வர விடாதபடி தடுக்கின்றது…!

நீ எம்மா… எப்பா… என்று அலறுகிறாய் என்றால் அப்பொழுது எது பேசுகின்றது…?

உயிரணு எப்படி ஆனதோ இதைப் போன்று அந்தப் பச்சிலை உருவாகி குறித்த காலம் வந்து உனக்குள் இவ்வாறு செய்கின்றது. “பச்சிலை தான் பேசுகிறது…” என்பதை இவ்வாறு உணர்த்துகின்றார்.

உயிர் தோன்றிய பின் வளர்ச்சியில் மனித உடல் பெற்ற பின் உணர்ச்சிக்கொப்ப எண்ணமும் அதற்குத்தக்க செயலும் வந்தது. ஆனால் விஷமான செடிகளின் மணத்தை நுகர்ந்த ஐந்தாறு நாட்களுக்குள் உனக்கு இப்படி ஆகிவிட்டது. எம்மா… எப்பா… என்று வேதனைப்படுகின்றாய்…!

உங்களிடம் இப்பொழுது நான் சொல்கின்றேன் ஆனால் நான் காட்டிற்குள் சிரமப்பட்டு… இன்னல்பட்டு… வேதனைப்பட்டுத் தான் அதையெல்லாம் அறிந்து கொண்டேன்.

விஷமான செடிகளின் மணங்களை நுகரும்படி செய்து கை கால் குடைச்சல்களை ஏற்படுத்தித் தான் குருநாதர் தெரிய வைத்தார்.

ஒரு மாதம் இரண்டு மாதம் இவ்வாறு சுற்றிய பின் ஒவ்வொரு குணங்களுக்கும் நீ நுகர்ந்தது என்ன செய்கின்றது…?
1.இந்த உணர்வுகள் உன் உடலில் என்ன செய்கின்றது…?
2.அந்த அணுக்களுக்குள் என்ன இயக்கங்கள் ஏற்படுகின்றது…?
3.அதை மீண்டும் சரி செய்வது எப்படி…?

அதைத் தெரிய வைப்பதற்காக வேண்டி வேறு சில பச்சிலைகளை நுகரும்படி செய்தார். அதை நுகர்ந்த பின்பு “அப்பாடா…!” என்று சொல்கிறேன். உடல் நன்றாக ஆகின்றது.

உன் உடல் இப்பொழுது எவ்வாறு நன்றாக ஆனது…? என்று அதை எல்லாம் அனுபவபூர்வமாகத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.

நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிய வைப்பதற்குத் தான் இதை எல்லாம் செய்தார்

.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானத்திற்கு வருகின்றோம் என்று சொல்பவர்கள் எந்த நினைவுடன் வருகிறார்கள்…?
1.என் பிள்ளைக்கு நன்றாகப் படிப்பு வர வேண்டும்
2.நான் தியானம் எடுத்தால் உடனே செல்வம் வர வேண்டும்… செல்வாக்கு வர வேண்டும்… என்று
3.இவைகளை எண்ணித்தான் தியானம் எடுக்கின்றார்கள்

ஆனால் அவ்வாறு எண்ணித் தியானம் செய்த பின் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்கின்றார்கள்…?

காரணம் ஆசை ஒன்றிலே இருக்கின்றது… செய்வது வேறாக இருக்கிறது.

பலகாரத்தைச் செய்யும் போது இன்னென்னதைச் சேர்த்தால் ருசியாக வரும் என்று நினைக்கின்றோம். ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செல்லும் பொழுது கலக்கும் பொருளைச் சேர்த்து அதை ருசியாகக் கொண்டு வருவதற்கு மாறாகக் கலக்கும் பக்குவத்தை மாற்றினால் ருசி எப்படி வரும்…?

ஏனென்றால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்களை அறியாது இயக்கும் சங்கடமான உணர்வுகளைத் துடைத்துவிட்டு
2.சிந்தித்துச் செயல்படும் தன்மைக்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத் தான் இந்தத் தியானத்தையே கொடுக்கின்றோம்.

ஆனால் தியானத்தை எடுத்து என்ன செய்கின்றார்கள்…?

1.தான் பெற வேண்டும் என்ற ஆசையில் வரப்படும் பொழுது
2.நாளுக்கு நாள் அதையே கூட்டுகிறார்கள்… கவர்கின்றனர்
3.வலுவாக (அழுத்தமாக) எண்ணி எடுக்க வேண்டிய அருள் சக்திகளையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் விட்டுவிடுகிறார்கள்.

கம்ப்யூட்டர் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு தான் இயக்குகின்றது.
1.அதனுடைய அழுத்தங்கள் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்குத் தான் இயக்கமாகின்றது – அனைத்தும் மேக்னட்
2.அதற்குள் உணர்வின் உணர்ச்சிகளைத் தட்டும் போது (ஆணைகள் – COMMANDS) அழுத்தம் எதுவோ அந்த ஒலி அலைகளை எழுப்புகிறது.

அதாவது… காந்தப்புலன் அறிவால் வரக்கூடிய உணர்வுகளும்… அதனுடன் சேர்த்துக் கெமிக்கலில் அந்த அழுத்தத்திற்குத் தக்க ஒலி அலைகளைப் பரப்புகின்றது.

அதே போன்று தான் நம் உயிரின் தன்மைகள் கொண்டு எதனின் உணர்வுகளை நுகர்கின்றமோ உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் எழும்பி அதற்குத் தக்க தான் ஒலி/ஒளியாகி நம்மை இயக்குகின்றது.
1.இன்றைய விஞ்ஞானம் இதை நிரூபிக்கின்றது
2.அன்றைய மெய் ஞானிகள் சொன்னதை நாம் ஏற்க மறுக்கின்றோம்.

ஆகவே இதைப் போன்றுதான் நம் நம்மை அறியாமலே பல தவறுகள் இயக்கத் தொடங்கி விடுகின்றது. நடக்கவில்லை… கிடைக்கவில்லை… என்ற பிடிவாதமான உணர்வு வளரப்படும் பொழுது இப்படியே நடக்கின்றதே… இப்படியே நடக்கின்றதே… இப்படியே நடக்கின்றதே…! என்று வேதனைப்படும் பொழுது எல்லாருடைய மனமும் கெடுகின்றது.

சிந்திக்கும் தன்மை இழக்கப்படும் பொழுது
1.தன்னை அறியாமலே அவரும் தவறு செய்கின்றார்
2.நம்மையும் தவறு செய்யும் நிலைகளுக்கு அது அழைத்துச் சென்று விடுகின்றது.

நாம் எண்ணும் எண்ணங்களும்… பித்த சுரப்பியின் இயக்கங்களும்

 

இந்த வாழ்க்கையில் அடிக்கடி நம்மை அறியாமல் வேதனைப்பட்டோம்… பயந்தோம்… என்றால் அத்தகைய உணர்வுகளினால் உடலில் இருக்கக்கூடிய “பித்த சுரப்பிகள் சுரக்கும் சுரப்பும்” அதிகரித்துவிடும்.

பாம்பு கடுமையான தன் விஷத்தின் தன்மை கொண்டு அதனுடைய தலை சிறிதாக இருப்பினும் பெரிய உயிரினங்களைக் கூட விழுங்க முயற்சிக்கும். அந்த உயிரினத்தைப் பிடித்து விட்டால் தன் உடலில் உருவான விஷத்தின் தன்மைய கொண்டு அந்த உயிரினத்திலே பாய்ச்சி அதைப் பலவீனப்படுத்தி… உடலுக்குள் செல்லச் செல்ல அந்த உயிரினம் கரையும் தன்மை அடைகின்றது.

அதைப்போல மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் நாம் உணவாக உட்கொண்டாலும் நமக்குள் இருக்கும் பித்த சுரபி அதுவும் நஞ்சு தான்.
1.பித்த சுரப்பி எந்த அளவிற்கு உமிழ்த்துகின்றதோ
2.அது உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவைக் கரைத்து விடுகின்றது.

அடிக்கடி நாம் கடினமான உணவுப் பொருளை உட்கொள்கிறோம் என்றால் “பித்த சுரப்பிகள் அதிகமாக இயக்கப்பட்டு” அந்தக் கடினப் பொருளைச் சீக்கிரமே அது கரைத்து விடச் செய்யும்.

ஆனால் அடுத்த சமயங்களில் இந்த கடின பொருளை நாம் உட்கொள்ளவில்லை என்றால்
1.பித்த சுரப்பி உமிழ்த்திய வேகத்தில் நஞ்சு அதிகமாகி குடலுக்குள் அரிப்பும்
2.பசி கொடூரமாக இருந்தாலும் உணவு உட்கொள்ள முடியாதபடி தடைப்படுத்தும்.
3.நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது உடலின் உணர்வின் செல்கள் சீராக இயங்காது.
4.அப்போது உணவாக உட்கொள்வதில் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படுகின்றது.
5.சுவை அறியவில்லை என்றால் உணவை உள்ளே ஈர்க்கும் திறன் அது தடைப்படுகின்றது.
6.பித்தத்தில் கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உணவை உள்ளே செல்ல விடாதபடி வெளிப்படுத்தும் சக்தியாக மாற்றி விடுகின்றது.

உதாரணமாக… ஒருவர் பலகாரம் சுடுகிறார் என்றால் தண்ணீரைத் தெளிப்பார்… எண்ணெய் எந்த அளவுக்குக் காய்ந்திருக்கிறது…? என்று பரீட்சித்துப் பார்ப்பார். வடையைத் தட்டிப் போடும் பொழுது அதில் எழும் நாதத்தின் ஒலி கொண்டு வெப்பத்தின் தணனலைக் கண்டு கொள்கிறார்.

வெப்பம் சரியாக இருந்தால் வடை நன்றாக வேகின்றது… சுவையாகவும் இருக்கின்றது. ஆனால் வெப்பம் சரியாக இல்லை என்றால் வடையைத் தட்டிப் போட்டால் அது லேசாக இருக்கும் பொழுது எண்ணெய் ஊடுருவி விடும்… வடை சுவை அற்றுப் போய்விடும்.

ஆக
1.வெப்பத்திற்குத் தக்கவாறு வடையில் அந்த மாவின் சத்தைச் சுவை கொண்டதாக மாற்றுவது போன்று
2.நமது உணர்வின் இயக்கச் சக்தி எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதைப் போன்றே ஜீரணிக்கும் சக்தி பித்த சுரபிகளுக்கு வருகின்றது.
3.பித்தம் அதிகரித்து விட்டால் மற்ற உறுப்புகளை இயக்கும் தன்மையும் குறைந்து விடுகின்றது உணவாக உட்கொள்ளும் நிலையும் மறைகின்றது.

ஏனென்றால் சாதாரணமாகத் தான் நாம் எண்ணினோம் கோபப்பட்டோம் வேதனைப்பட்டோம் எல்லாம் வேடிக்கை தானே பார்த்தோம் என்று நாம் இருக்கலாம்.

அந்தக் கோபித்த உணர்வின் செயல்கள் நம் உடலில் எவ்வாறு விளைந்து மாறுகிறது என்ற நிலையை தத்துவ ஞானிகள் இப்படித் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
1.ஆகவே நமது வாழ்க்கையில் நம்மை அறியாமல் இயக்கும் மனித உணர்வுகள் அனைத்தையும்
2.தெரிந்திடும் நிலையும் தெளிந்து செயல்படும் நிலையும் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

வழி நடத்த நான் இருக்கின்றேன்… சங்கடத்தை விட்டிடப்பா…!

 

கடலில் சதா சர்வ காலமும் கரைதனில் அலை வீசி மீண்டும் அதன் செயல் நடைபெறுதல் போலவே… சூட்சும நுண் அலைகள் நீல வண்ணம் காட்டிடும் அன்பாகக் கருணை என்னும் நிலையில்… நீ அன்பு என்னும் அலைக்கரத்தை நீட்டியே மெய் வழி அறிவாய்…!

யாம் சொல்லும் தியானத்தின் மூலம் எடுக்கும் நுண் மின் காந்த அலைகளால் இருளான இந்த உடலுக்குள் “ஒளி பெற்றிடும் உயிரணுக்கள் தோன்றிடும்…”
1.அப்படி ஒளி மண்டலமாகும் ஆக்கத்தில் திகழும் மூலக்கனல் பெறும் கந்தன்
2.தாய் மூச்சு நாடியின் (குறுதெலும்பு பாகம்) துணையுடன் மேல் எழுந்தே ஆறு ஆதார நிலைகளில்
3.நன்மை என்னும் உறுதி மலை மேல் ஏறி… ஆகாயக் கூறு என்றே அழைக்கப் பெற்றிடும் சிரசின் உச்சியில்
4.ஒளி பொருந்திய வேல் போல் தோற்றம் தந்திடும் அமைப்பினில் கிளர்ந்து எழுகின்ற பொழுது…
5.தாய் மூச்சு நாடியின்… சக்தி ஒளி மண்டல சுவாச அலைகளை
6.கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கரைதனையில் வந்து மோதுவதைப் போல்
7.சிரசினில் மோதிடும் இடைவிடா காந்தப்புலன் மெய் ஒலி/ஒளி காட்டித் தடைப்படாத ஆனந்தத்தை உமக்கு அளித்திட… இனி தடை ஏது…?

ஆகவே… எத்தகைய சங்கட அலைகளையும் எண்ணியே ஈர்த்துக் கொண்டிடுதல் “இனி உன் நிலைக்குத் தகாதப்பா…”

சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு இயற்கையில் பூத்திடும் புஷ்பங்கள் அனைத்துமா விரிந்து மனம் வீசுகின்றது…? பக்குவப்பட்ட மலர்களையே கதிரவனின் கதிர் ஒளி அரவணைத்துப் பூக்கச் செய்கின்ற அன்பினை உணர்ந்து கொண்டாயா…?

1.ஓர் முறை வழி நடந்த என் பயணத்தில் என் தலைச்சுமையை இறக்கி வைத்து… இளைப்பாற்றி…
2.மேல் உத்தரியத்தினால் காற்றினை வீசி அரவணைத்த உனது உள்ளம் தான் இன்னும் உன்னை நாடியே வந்தடையச் செய்கின்றது.
3.சிவத்தின் தன்மை சிவாயத்துள் உன் மனநிலையை அறிந்து கொண்டிடவே தொடங்கிய பயணம் தொடர்கின்றது.

சகடம் போல் சுற்றுகின்ற வாழ்க்கைதான்… எண்ணத் தேர் மனமாம் மனதில்… அசைந்து அசைந்து ஏறுகின்ற செயலிலும் சகடம் சுழல்கின்றது.

தேரின் மையம் எது தெரியுமா…?

“தனித்துவ சக்தி” செயலுறுகின்ற மூகமோ (மௌனம்) அன்றி நிதானமோ…
1.சுழலுகின்ற சகடத்தையும் அந்தச் சுழற்சியின் ஓட்டத்தில் சுழலச் செய்யும் நிலை பெற்ற தேரின் அமைப்பை
2.அந்நிலையில் நிலைக்கச் செய்து… சாஸ்வதக் காட்சியாக வெளித் தோன்றாது.

சிறு பாகமான “அச்சாணி” விசை சேர்த்துக் கொள்கின்ற மையமாம் தனி சக்தி விசையாக்கும்.
1.வாழ்வினுக்கும் வழித் துணை என்றாலும்
2.செலுத்துபவனாய் நாமிருக்க… பஞ்சபூதங்கள் அமைவு பெறும் அனைத்தும் ஆகாயம் என்ற பால் வெளி.

வேதாள மாமகரிஷி அன்று உரைத்த “இந்த உரையில்” மறைபொருள் இரகசியங்கள் பல உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஏற்கனவே சொன்னது போன்று அருணகிரிநாதரைக் காக்க வேண்டும் என்று அவருடைய சகோதரி
1.தீமைகளை அவர் உடலில் ஏற்றுக் கொள்ளாதபடி திருமூலர் உணர்வுகளைத் தனக்குள் ஏற்று
2.தன் சகோதரன் அவன் திருந்த வேண்டும் என்று அவனுக்குள் சென்று அவனையும் திருத்தி
3.மெய் உணர்வுகளைப் பெறச் செய்து இந்த உடலுக்கு பின் சகோதரனும் ஒளியானது… தானும் ஒளியானது.

திருமூல மந்திரம் என்பது சாதாரணமானதல்ல…!

இந்த உலகம் தோன்றிய நிலையிலிருந்து சூரியன் எப்படி உருவானது…? பிரபஞ்சம் எப்படி உருவானது…? பிரபஞ்சத்தில் இருந்து உயிரணுக்கள் எப்படி உருவானது…? மனித உடலுக்குப்பின் நாம் என்ன செய்ய வேண்டும்…? என்ற தத்துவத்தை அன்று அகஸ்தியன் கண்ட உண்மைகள் அனைத்தையும் திருமூலர் கண்டார்.

அதே காலத்தில் தான் வியாசகர் கண்டார் அதே காலத்தில் தான் வான்மீகியும் கண்டார். ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்
1.உலகில் ஒரு சோதனை என்று வரப்படும் பொழுது
2.அறிந்திடும் ஆற்றலைப் பெற்ற அந்த அருள் ஞானிகள் தான்
3.அகஸ்தியன் பெற்ற பேருண்மை எல்லாவற்றையும் அறிந்து
4.மக்களுக்கு அதை ஒரு பொக்கிஷமாகக் கொடுத்தனர்.

அந்த அருள் ஞானிகள் அகஸ்தியன் பெற்றதைத் தங்களுக்குள் வளர்க்கப்பட்டு வெளிப்படுத்திய உணர்வுகள் எல்லாம் நமக்குள் இனி இயங்கத் தொடங்க வேண்டும்.

விஞ்ஞானத்தால் வரும் பேரழிவிலிருந்து நம்மை காக்க வேண்டும். காரணம் விஞ்ஞானத்தின் அழிவு எப்படி வரும்…? என்று சொல்ல முடியாது.

காற்று மண்டலம் நாளுக்கு நாள் விஷத்தன்மையாக மாறினாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைய வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது விஞ்ஞானத்தால் வந்த விஷத்தின் தன்மை நம்மைத் தாக்காது. இந்த உடலுக்குப் பின் ஒளி என்ற நிலையை அடைய முடியும்.

என்றும் மாறாத நிலையாக நாம் பெறுவதற்கு வலிமையான உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பழகுதல் வேண்டும் அதற்குத் தான் இங்கே அருள் ஞானச் சக்கரத்தைக் கொடுத்துத் தியான பயிற்சியையும் கொடுக்கின்றோம்.

நான் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞானச் சக்கரத்தைத் தெய்வீக நிலையாக குரு காட்டிய அருள் வழியில் பேரின்ப நிலை என்ற நிலையில் அருள் சக்கரமாக எண்ணிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதன் முன் அமர்ந்து தியானித்தாலே உயர்ந்த சக்திகள் கிடைக்கும் கவலையுடனும் சஞ்சலத்துடனும் இருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தில் சக்கரத்தை உற்றுப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணினால்
1.சக்கரத்தில் இருந்து உயர்ந்த உணர்வு வரும்…
2.நம்மைத் தெளிவாக்கும்… தெளிவான மனம் கிடைக்கும்… சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்…
3.வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும்…? என்ற உணர்வும் வரும்
4.பிறருடைய தீமைகள் நம்மை இயக்காதபடி தடைப்படுத்தி வாழவும் முடியும்
5.இந்த உடலுக்குப் பின் என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்
6.மகிழ்ந்து வாழ முடியும்… மன நிறைவும் கிடைக்கும்.

ஆனால் வேதனை என்ற உணர்வு வளர்க்கப்படும் பொழுது இன்னொரு உடலுக்குள் சென்று மீண்டும் அதே வேதனையைத் தான் வளர்க்க முடியும். மனிதனல்லாத உருவாக மாற்றிவிடும் உயிர். இது போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அருள் வழி வாழ்வோம்… மெய்ப்பொருளைக் காணுவோம்.

1.இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை அடைய
2.வாழ்க்கையில் தொழில் வளம் பெருகவும் மன அமைதி பெறவும் அருள் வழி வாழவும்
3.அருள் வழி வாழச் செய்யும் அருள் சக்தி பெறவும் இது உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நோயாளியிடம் நோயின் உணர்வைப் பற்றி நாம் அதிகமாகக் கேட்க நேர்ந்தாலும் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது… இரத்தத்தில் கருவாக உருவாகின்றது… அணுவாக வளர்கின்றது.

அதே போல் சண்டை போடுபவர்களைப் பார்த்தாலும் அந்தக் கார உணர்வுகள் நமக்குள் கருவாக உருவாகி உடலிலே அணுக்களாக விளைகின்றது.

நாம் கோபப்படவே வேண்டாம்…!
1.கோபப்படுபவர்களை ஒரு பத்து நாளைக்குச் சேர்ந்தால் போல் வேடிக்கை பார்த்தால் போதும்.
2.அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்பிற்கு உண்டான அறிகுறிகள் இருக்கிறது என்று சொல்வார்கள்.

ஆஸ்த்மா நோய் உள்ளவர்களை அதிகமாகக் கவனித்துப் பார்த்தால் அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் சளி இருக்கிறது… ஆஸ்த்மாவிற்கு உண்டான அறிகுறிகள் தென்படுகிறது என்று சொல்வார்கள்.

ஒரு சர்க்கரைச் சத்து அதிகமாக உள்ளவரிடம் நாம் அடிக்கடி பேசிப் பழகினால் போதும். அதே சர்க்கரைத் சத்தை உருவாக்கக்கூடிய அணுக்கள் இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தைப் பரிசோதித்தால் சர்க்கரை வியாதி உங்களுக்கு ஆரம்பித்துவிட்டது என்பார்கள்.

1.இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
2.எந்த வகையில் நமக்கு நோய் வருகிறது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்.

சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் “என்னால் முடியவில்லை… முடியவில்லை…” என்று சொல்லும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே நம் நினைவு ஈஸ்வரா என்று புருவ மத்திக்குச் செல்ல வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இரத்த நாளங்களில் இதைக் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப்பின் நோயாளி உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவருடைய சர்க்கரை வியாதி நீங்க வேண்டும் என்று இவ்வாறு நாம் அங்கே பாய்ச்சி விட்டால் அந்த நோய் நமக்குள் உருவாகாதபடி தடுத்துவிடலாம்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

நாம் எல்லோருடனும் சகஜமாகத்தான் பழகுகின்றோம். வலி அதிகமாக இருக்கிறது என்று அவர் வேதனைகளைச் சொல்லும் பொழுது நாம் பரிவுடன் தான் கேட்கின்றோம். இந்த உணர்வு உயிரிலே பட்ட பின் பதிவாகி விடுகிறது.
1.இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.ஞாபகமாக இருந்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்றும் நாம் சொல்லிவிட வேண்டும்.

இந்த உணர்வுகள் உடனே நம் இரத்தத்திலே கலந்துவிடுகிறது. அந்த நோயைத் தணிக்கக் கூடிய சக்தியாக மாறிவிடுகின்றது.

கையிலே அழுக்குப் பட்டால் உடனடியாக எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ… உடையிலே பட்டால் அதை எப்படித் துவைத்துத் தூய்மையாக்குகின்றோமோ இது போன்று எந்த நோயைப் பற்றிய உணர்வு நமக்குள் வந்தாலும் அதை மறந்து பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும்…
1.உடல் நலமாகக் கூடிய சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் இரத்தக் கொதிப்பு குறைய வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி உடலிலே படர வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.

இப்படிப் பெருக்கிக் கொண்டால் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்போ சர்க்கரை வியாதியோ அவைகள் எல்லாம் குறைவதைப் பார்க்கலாம்.

நம் எண்ணத்தாலேயே இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியும்.

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என் உடல் நோய் நீங்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் நரம்பு மண்டலங்கள் சீராக இயக்க வேண்டும் என்று என்று எண்ணிக் கொண்டே வர வேண்டும்.

இது கூடக் கூட நம் உடலில் எல்லாம் மாறத் தொடங்கும்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும்
1.நீடித்த நாள் இந்த உடலில் நாம் வாழப் போவதில்லை
2.குறித்த காலம் வரையிலும் நாம் அந்த அருள் சக்தியைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலுக்குப் பின் தீமைகள் நமக்குள் சேராதபடி பிறவி இல்லா நிலை அடைகின்றோம். இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு அவசியம் வர வேண்டும்.

காரணம்… நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது…?

அருள் சக்தியைப் பெருக்கிக் கொண்டே வந்தால் நோய் பலவீனமாகும்… சிந்திக்கும் தன்மை வரும். சிந்திக்கும் தன்மை வந்தாலும்
1.உதாரணமாக ஒரு செடி மரமாகிக் காய்த்து அதனுடைய காப்பு எல்லாம் முடிந்த பின் அந்த மரம் பட்டுப் போகத் தான் செய்யும்.
2.அது போல் நம் உடலில் உள்ள அணுக்கள் மடியத்தான் செய்யும்.

மடிந்தாலும் கடைசியில் எந்தச் சத்து உயிருடன் ஒன்றி இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே எஞ்சி இருக்கப்படும் பொழுது நாம் அங்கே செல்கின்றோம்.

ஆகவே இந்த உடலுக்குப் பின் உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதே “சொர்க்கம்” என்று சொல்வது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்ட பிற்பாடு நமது உயிர் அங்கே இழுத்துக் கொண்டு செல்கின்றது.
2.அதற்குத்தான் உங்களுக்கு இப்பொழுது பயிற்சி கொடுக்கின்றோம்.

கோபம் அதிகமானால் விளையும் தீமைகள்

 

சந்தர்ப்பவசத்தால் “கோப உணர்வுகளை” அதிகமாக… தொடர்ச்சியாக நுகர நேர்ந்தால் இந்தக் கார உணர்ச்சிகள் நம் இரத்தங்களிலே உந்தப்படும் போது இரத்தத்தில் இருக்கும் நீரின் சக்தியை வடிக்கப்பட்டு அது காணாது போய் விடுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்பு உள்ளோருக்கு அடிக்கடி ஆவேச உணர்வுகளும் தாகமும் வரும். இந்த உணர்வுகள் படரப்படும் பொழுது அந்த உணர்ச்சியின் வேகங்களாகும் பொழுது சிறு மூளையின் இயக்கத்திற்குச் சென்ற உடனே அதன் உணர்வைத் தாங்காது அது அதிகரித்துவிட்டால் கைகால் நரம்புகளை வேகமாக இறுக்கி மடக்கிவிடும்.

1.நாம் எவ்வாறு “ஆ…!” என்று அலறப்படும் பொழுது வாயின் தன்மை தன்னிச்சையாக அந்த உணர்ச்சிகள் இயக்கச் செய்கின்றதோ
2.இதைப்போன்று தான் இந்தக் கார உணர்வின் சத்து நமக்குள் இப்படி இயக்கமாக மாறிவிடுகிறது.
3.“ஆ…!” என்று அலறுவது போல நம் இரத்தத்திற்குள் இருக்கும் நீர் சத்து நிலைகள் மடிந்து விடுகின்றது அல்லது வேர்வையாகக் கொட்டி விடுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்பு உள்ளவருக்கு நடக்கும் பொழுது தலைசுற்றல் கிறுகிறுப்பு இத்தனையும் வரும். அடுத்து ஒரு காரியத்தை எண்ணினார்கள் என்றால் அதைச் செயல்படுத்தும் போது உணர்ச்சியின் வேகங்கள் உந்தப்பட்டு
1.உடனே மயக்கத்தின் நிலைகள் “ஹோமா ஸ்டேஜிக்கும்” சென்றுவிடும்.
2.சிந்தனையற்ற நிலைகளும் நரம்பியல்களை இயக்காதபடி இருதய வால்வுகளைச் சரியாக இயக்காத நிலைகள் ஆகி விடுகின்றது.

காரணம் இந்த உணர்வின் வேகம் அதிகரித்து விட்டால் இரத்தத்தில் கார உணர்ச்சிகள் அதிகரிக்கும் பொழுது இரத்த வால்வுகளிலே கார உணர்ச்சிகள் ஆனபின் அந்த வால்வின் நுழைவாயிலில் அதிக வீக்கம் ஆகிவிடுகிறது.

உற்பத்தியான இரத்தத்தை உள்ளுக்குள் இழுத்து வடிகட்டும் நிலையாக ஈர்க்கப்படும் பொழுது வராது. அப்பொழுது கடினமாக இழுக்கப்படும் பொழுது அந்த ஒரு பாகத்தில் எரிச்சலும் அடுத்த பாகம் இழுக்கும் நிலைகள் மின் அதிர்வைப் போன்று பளீர்….ர்ர்… என்று மின்னிவிடும்.

இப்படி மின்னினாலும் இதன் தொடர் வரிசை தனக்குள் வரவில்லை என்றால் ஆவேச உணர்வு கொண்டு பதட்டமும் பயமும் நடுக்கமும் ஏற்பட்டு விடுகின்றது.

நடுக்கமும் பயமும் உருவானால் அது அதி துரிதமாக இயங்கப்படும் பொழுது… நம் எண்ணங்கள் அப்பொழுது எதுவாகின்றதோ…
1.நாளை இந்தக் குடும்பம்… தன் குழந்தைகள் என்ன ஆவார்கள்…?
2.தொழில் என்னவாகும்…? பணம் கொடுக்கல் வாங்கல் என்ன ஆகும்…? என்று அதனால் பலவாறு சோர்வடையும் நிலைகளும்
3.உணர்ச்சியின் வேகம் பயம் அதிகரித்து நடுக்கத்தில் கொண்டு போய் விடுகின்றது.
4.இவ்வாறு ஒரு சமயம் இரண்டு சமயம் ஆனால் இந்த உணர்வுகள் இயக்கி “ஹார்ட் ஃபெயிலியர்…!”

இருதய வால்வுகள் சீராக இயங்காது ரத்தத்தின் அழுத்தம் அதிகமாகச் செல்லாது. அப்போது ரத்தத்தின் அழுத்தம் உள்ளே அதிகமாகி விட்டால் கை கால்களைச் சுண்டிவிடும்.

பயமும் நடுக்கமும் அதிகரிக்கப்படும் பொழுது இருதயம் வேகமாகத் துடிக்கும் நிலை வரும் பொழுது அதற்கு வேண்டிய இரத்தம் சரியாக வரவில்லை என்றால் பட்…! என்று நின்று விடும்.

ஹார்ட் அட்டாக் என்று மருத்துவர்கள் இதைச் சொல்வார்கள்.

சதிபதி

 

ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்றால் வாழ்க்கை நடைமுறையில் புறச்செயல்படும் காரியங்கள் குறிக்கின்ற கலைகள் என்றே எண்ணமிடுகின்றாய்.

வீரம் விவேகம் நளினம் முதற்கொண்டு நாம் காரியங்கள் நிகழ்த்தும் கலைகளும் உண்டு. மகரிஷிகள் உணர்த்திச் செயலுற வந்த மெய்ஞ்ஞானச் சுடராக்கும் கலைகள் அறுபத்தி நான்கினையே இங்கே உரைத்திட வந்தோம்.

எண்ணத்தின் தெளிவு…
1.இக்கணம் நீ என்ன “எண்ண நினைவில் இருக்கின்றாய்…?” என்று வினவினால்
2.“நான் இதை நினைத்தேன்…” என்று கூறுமளவிற்கு மனத்தின் தூய்மை வலுப்பெற்றிருத்தல் வேண்டும்.
3.அந்நிலை வலு கொண்டு விட்டால் கலைகள் தொடக்கம் அச்சரம் ஐம்பதில் தொடங்கும்.

ஓங்காரப் பொருள் காட்டும்
1.“பிரணவம்” என்றே அழைக்கப் பெறும் ஓம்…!
2.அதனுள் மூன்று நிலைகளாக கலைகள் (1)ஈர்த்து (2)சமைத்து (3)அமைதல் என்கின்ற விதமாக கலைகள் ஐம்பது.
3.அதாவது உயிரிலே ஈர்க்கப்பட்டு சமைத்து – ஓ; உடலாக அமைவது – ம்

ஈர்ப்பின் அகரம் பத்தாக… ஈர்த்த பின் செயல் வரும் உகரமாக பதினான்கு செயல் கொண்டு… அமைவு பெறும் மகரம் இருபத்தி ஆறாக ஓம் என்ற பிரணவ கலைகள் ஐம்பது நாற்பூத செயல்பாடலாய் விந்து கலைகள் நான்கு… நாதக்கலைகள் பத்தாக ஆக “அந்த அறுபத்தி நான்கு கலைகளையே சரீரத்தில் கண்டனர் மகரிஷிகள்…!”

இதற்கும் மேல் ஒளியாகும் நிலை ஒன்று சிரசின் உச்சியில் ஈஸ்வர ஜோதி…! ஒளி நிலை பெற மகரிஷிகள் காட்டிட்ட அனிமாது சித்துகளை (அஷ்டமாசித்து) அடைந்து விட்டாலும்
1.அடக்கத்தின் திரு உருவாக ஒளி மண்டலத்தில் உறையும் மனமாகக் காரியமாற்றி… காரணத்துடன் வாழ்வான்
2.அதனின் நிலைக்கு வேறு எந்த நிலையும் நாம் எண்ணிடல் ஆகாது.

இச்சரீர வாழ்க்கையிலும் சிவசக்தி (சதி+பதி) சமேதராகச் சக்தி நிலை பெற்றிடவே உணர்ந்து கொண்டிட வேண்டிய பயன் தரும் நிலை காணுவோம். தாகம் எடுக்கின்றது தாகத்தைத் தணிக்க நீர் அருந்த வேண்டும் என்று மனம் நாடுகின்றது.

இது “சதியானவள்…” (வேகா நிலை) கொள்கின்ற செயலுறும் எண்ணத்தின் நிலையே கோபுரம் போல் உயர்ந்து விளங்குகின்றது. அதுவும் மலையின் மீது அமைந்த கோபுரம்.

“பதியானவன்…” மோகத்தின் வழிப்பாதை பயணமுற்று… அந்த வழிப் பாதையின் தொடரில் பன்மாடங்கள் இளைப்பாரி… நீக்கமுறாத் துயில் வசம் ஆட்படுகின்றான் (பல பிறவி எடுத்த நிலை).

அறிவின் சுடர்தல் தொடங்கி மெய்ஞான விழிப்பு ஏற்படுத்தும் கருத்தினுள் ஒன்றியவுடன் பதியானவன் விழித்துக் கொள்கின்றான்.

விழிப்பு நிலை பெற்றவுடன் வழித்தடங்கல் நிலையினை எண்ணியே செல்லும்
1.வேகத்திற்கு மேல் வேகமாக எண்ணத்தைச் செலுத்தி
2.கோபுரம் வாழ்கின்ற தன் பாகமாம் “சதியின் துணை நாடி…”
3.சதிபதி சிவசக்தி கூடும் நிலைகாட்டி…
4.இரு புறத்தூய்மையும் அகத்தின் வசம் எழ…
5.ஒளிநிலைப் பிரவாக மெய்ஞானச் சுடராக நிலை பெற்றிருக்கும் சூட்சுமம் செயல் கொள்கிறது.

மோகத்தின் நிலை மாற்றும் “இரகசியக் குறிப்புகளை” இங்கே காட்டி விட்டோம். சித்துக்களைப் பற்றியும் கூறி விட்டோம். கலைகளின் வகை இரு நிலைப்படும் நிலையைக் காட்டி “ஆய்வை” உனக்குள்ளே தூண்டி இருக்கின்றோம்.

செயலில் “வேகம்” வேண்டும்.. வேகத்தின் பிரதானம் “நிதானமும்” வேண்டும். எண்ணத்தில் ஆட்டுகின்ற கருத்தே சொல்லியவன் சுருதி கணபதியாக வரல் வேண்டும்.

சகல நிலைகளையும் உணர்த்தி ஏற்றுக் கொண்டிடும் பக்குவத்திற்காகப் பண்படுத்தி விதைத்திருக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதன் ஆன பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் அதுதான் கடைசி நிலை. அதை விடுத்து விட்டு… “சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன் தொழில் நனறாக நடக்க வேண்டும்…” என்று எண்ணினால் தொழில் எல்லாம் உங்களிடம் தான் இருக்கின்றது.

காரணம் அதற்குண்டான மன வலு பெற வேண்டும். மன வலிமை பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும்.
1.சாமியை நம்பி வந்தேன்… தியானம் செய்தேன்…
2.“எனக்கு அது கிடைக்கவில்லை… இது கிடைக்கவில்லை…” என்று சொன்னால் உங்களை நீங்கள் நம்பவில்லை என்று தான் பொருள்.

கடலிலே ஒரு படகிலே செல்கிறோம் என்றால் அது கடந்து செல்லப்படும் பொழுது அலைகள் வந்து மோதும். அப்பொழுது அந்த அலைகள் இருந்து தப்பி நாம் அடைய வேண்டிய எல்லையை அடைய… துடுப்பை வைத்து மாற்றிக் கொள்கின்றோம்.

இதைப் போன்று தான் மனிதன் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலை வரும் பொழுது பாச அலை வெறுப்பு அலை வேதனை அலை சங்கட இலை என்று இந்தப் பூமியில் எத்தனையோ அலைகள் நம் மீது மோதுகின்றது.

அதிலிருந்து கடந்து செல்ல வேண்டும் அல்லவா…!

ஆகவே நமது எல்லை எது…? அந்தத் துருவ நட்சத்திரம்தான் என்ற உறுதி கொண்டு அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றால் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நாளும் எதை எண்ண வேண்டும்…? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

எல்லோருக்கும் யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். இருந்தாலும்..
1.சாமி சொன்னார்…! நான் தியானம்தான் செய்கின்றேன் எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வருகின்றது…?
2.தியானத்தைச் “செய்து கொண்டே இருக்கின்றேன் அல்லவா…” எனக்கு ஏன் நோய் வருகின்றது…” என்றால்
3.துடுப்பைக் கையிலே கொடுத்த பின் கடலிலே எல்லையை நோக்கிப் போகாதபடி “இப்படி அலைகள் வந்து கொண்டே இருக்கிறது…!” என்றால்
4.அலைகளில் மோதி எந்த உணர்வின் தன்மையோ அதில் தான் மூழ்க நேரும்.

அன்றாட மனித வாழ்க்கையில் எத்தனையோ அலைகள் மோதிக் கொண்டே தான் இருக்கின்றது. நமது எல்லை பிறவி இல்லா நிலை தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தினால் சிந்திக்கும் ஆற்றலும் உணர்வின் வலுவும் நமக்குள் வரும்.

குருநாதர் என்னைப் பல இன்னல்களைப் படச் செய்தார்.
1.எது உன்னை என்ன செய்கின்றது…?
2.எதன் உணர்வு உனக்குள் என்ன செய்கின்றது…? என்பதை உணர்த்தினார்.

இந்தப் பச்சிலை பேசுமாடா…? என்று குருநாதர் அடிக்கடி என்னிடம் கேட்பார்.

அவர் சொன்னபடி நுகர்ந்த பின் கசப்பு என்றால் ஐய்யய்ய…! என்றும் காரமாக இருந்தால் ஸ்ஸ்… ஆ… என்பேன். அப்பொழுது எது பேசுகின்றது என்று கேட்பார்.
1.நீ பேசவில்லை…
2.உன் உயிரின் உணர்வுக்குள் அந்த உணர்வின் சத்து
3.அதில் பட்ட சுவையின் உணர்ச்சிகள் தான் உன்னை இயக்குகின்றது
4.எதன் சுவையின் உணர்வை நுகர்கின்றாயோ அந்த உணர்வின் வழியே உன்னை இயக்குகின்றது
5.அது நீ அல்ல…!
6.நுகரும் உணர்வே இயக்கமாகின்றது… அதன் உணர்வே உடலாக மாறுகின்றது…
7.அதன் வழி (தன்னை) அதை வளர்க்க அது உடலுக்குள் உருவாகின்றது.

ஆகவே தீமைகளை நீக்க நீ என்ன செய்ய வேண்டும்…?

தீமை என்ற நிலையோ… அதீத ஆசை என்ற நிலையோ… இருளான நிலைகள் வரப்படும் பொழுது அதை எல்லாம் அப்பொழுதே தவிர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.

அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும்…? என்று நம் உள்ளே வரும் உணர்வுகளுக்குத் தக்கச் சரியான உபாயத்தை அது காட்டும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து ஆயுள்கால மெம்பராகி அமைதிப்படுத்தி ஞானத்தின் நிலைகள் சிந்தித்து செயல்படும் நிலைகளும் பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும் என்றால் உண்மையின் உணர்வை அறிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உடலுக்குள் அதைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்

அடிக்கடி இதைச் செய்தோம் என்றால் தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போன்று நமக்குள் வரும் கலக்கமோ வேகமா ஆசையோ அனைத்தையும் அது மாற்றி அமைக்கும்.

ஏனென்றால்
1.ஆசையினால் வருவது தான் அனைத்துமே
2.ஆசையின் உணர்வுகள் தடைபட்டால் வேதனை.
3.வேதனை என்று வரும் பொழுது சிந்தனை குறைந்தால் கோபம்
4.கோபம் என்று வந்துவிட்டால் அடித்து நொறுக்கும் உணர்வாக வெறி கொண்டு தாக்கும் உணர்வு வரும்.
5.இது என்ன…? என்று உதறித் தள்ளும் உணர்வைத் தான் நமக்குள் உருவாக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் வேதனை என்று வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து தன் உணர்வின் இயக்கத்தையே மாற்றி விடுகின்றது.

இதை போல் உலகெங்கிலும் தீவிரவாதங்கள் நுழைந்து ரேடியோ டிவி என்ற நிலையில் விஷத்தன்மை பரவி இருப்பதால் அதையெல்லாம் நாமும் பதிவாக்கி இருப்பதினால் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அந்தத் தீமையின் நிலைகளுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

1.தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றேன்
2.எப்பொழுதெல்லாம் உணர்ச்சிகள் மாறுகின்றதோ… உணர்வுகள் மாறுகின்றதோ… செயல்கள் மாறுகின்றதோ… அது நமக்கே தெரிய ஆரம்பிக்கும்.

அந்த மாற்றத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.இதன் வழி செய்தால் நமக்குள் ஏற்பட்ட கலக்க உணர்வுகளை மாற்றும்
2.நாளை எப்படி அதை வழி நடத்த வேண்டும்…? என்ற நல்ல சிந்தனை வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குரு அவருடைய வாழ் நாளில் பல நஞ்சான உணர்வுகளை நீக்கி ஒரு பித்தரைப் போன்று தான் வாழ்ந்தார். ஆனால் மக்கள் பித்துப் பிடித்த நிலையில் தான் இந்த உலகிலே வாழுகின்றனர். அதிலிருந்து அவர்கள் அகல வேண்டும் என்ற நிலையைத் தான் எனக்கு குருநாதர் சொன்னார்.

ஏன் சாமி…? பைத்தியம் பிடித்த மாதிரி போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள்…! என்று நான் அவரிடம் கேட்டேன்.

நீ தான்டா கேட்டாய்…! வேறு யாரும் கேட்கவில்லை…!
1.பைத்தியம் என்று சொல்லுகின்றாய்… என்னிடமே நீ அதைக் கேட்கின்றாய்
2.என் செயலை நீ அறிய விரும்புகின்றாய்
3.நீ நாளடைவில் அறிந்து கொள்வாய்
4.அதைப் போன்று நீ செயல்படு…! என்று காட்டினார்.

உலக மக்கள் தான் நுகர்ந்த உணர்வின் ஆசைகள் கொண்டு பித்தரைப் போன்று தான் வாழ்கின்றனரே தவிர தனக்குள் இருளை நீக்கிடும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

தீமைகள் எனக்குள் வராதபடி பித்தனாக நான் இருக்கின்றேன்…!
1.தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக நான் இருக்கப்படும் போது எனது உயிர் ஒளியின் சரீரம் பெறுகின்றது
2.ஒளி பெறும் சரீரத்தை அதனின் உண்மை ரகசியத்தை நீ அறிந்து கொள்…
3.என்னுடன் இணைந்து வா…! என்றார்.

தாவர இனங்களின் மணங்கள் எப்படி இயங்குகின்றது…? தாவர இனம் பேசுமா…! என்று குருநாதர் என்னிடம் கேட்டார்.

பேசாது…! என்று நான் சொன்னேன்.

அப்போது காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்களின் உணர்வின் சத்தை நுகரும்படி செய்து அனுபவமாகக் காட்டினார்.
1.தாவரங்களின் மணமே நம் எண்ணங்களாக வருவதும்… நம்மை இயக்கச் செய்வதும்
2.அது தான் நம்மைப் பேச வைக்கின்றதே தவிர… நாம் அல்ல…!

எந்த உணர்வின் சத்து நம்முள் உண்டோ… அதனின் உணர்வின் மணங்கள் நமக்குள் எப்படி உண்டோ அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்கிக் காட்டுவது உயிருடைய வேலை. அந்த உணர்வின் தன்மை உடல் ஆக்குவதே உயிரின் வேலை.
1.உணர்வின் தன்மை எது அதிகமோ
2.அதன் வழி தான் நம்முடைய இயக்கமும்… அடுத்த உடல் வாழ்க்கையும் என்று குரு தெளிவாக்கினார்.

காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அலைந்து உண்மையின் உணர்வுகள் அறிந்ததை… பல காலம் பல தொல்லைகளுக்கு மத்தியில் அவர் ஊட்டிய உணர்வின் தன்மைகளை அறிந்து கொண்டோம்.

அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குரு சொன்னார். ஏன் அதைச் சொன்னார்…?

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக எண்ணி… அந்த உடலை உயிர் தான் உருவாக்கியது என்ற நிலையில் அதை ஆலயமாக மதித்து
1.ஒவ்வொரு மனிதனையும் கடவுளாக மதித்தால்
2.அவர்கள் செய்யும் குறைகள் உன்னைச் சாடாது என்றார் குரு.

அந்தக் குறைகள் நீக்கப்பட வேண்டும் என்று உணர்வினை நீ எடுத்தால் இந்த உணர்வலைகள் காற்றலைகளில் பரவுகின்றது. நம் பூமியிலே பரமாத்மாவிலே படர்கின்றது.

அவர்கள் குறைகளை எண்ணாதபடி அவர்கள் நல்ல மனம் நிறைவு பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால்
1.நமது உயிரான கடவுளுக்கும் சேவை செய்கின்றோம்
2.இந்த உடலான ஆலயத்திற்குள் அசுத்தத்தை நீக்கிடும் சக்தி பெறுகின்றோம்
3.நல்ல உணர்வைக் காக்கும் தன்மை பெறுகின்றோம்.

ஆகவே பேரருள் என்ற உணர்வுகளைச் சேர்த்துப் பழகி ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று “ஆலயங்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது போன்று… ஒவ்வொரு உயிருக்கும் அதை நீ செய்ய வேண்டும்…!” என்று எனக்கு உபதேசித்தருளினார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

“மகரிஷிகள் வாழும் இடத்திற்கு” நாம் செல்ல வேண்டும்

 

பிறர் படும் துயரத்தைத் துடைக்க உற்று நோக்கி அவர் உணர்வை நுகர்ந்தறிந்த நிலைகள் கொண்டு அவர்கள் தீமைகளை அகற்றப் பொருள் உதவியோ உடல் உதவியோ மற்றதைச் செய்கின்றோம்.

அப்படிச் செய்தாலும்
1.நாம் கண்டுணர்ந்த கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்த உணர்வின் செயல் நமக்குள் வந்திடாது அது இணைந்திடாது
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பற்றி நமக்குள் செலுத்தி
3.தீமையை தனக்குள் பற்றிடாது பற்றற்றதாக்கி
4,யார் உடலில் அந்த தீமைகள் பற்றிக் கொண்டதோ அதைப் பற்றற்றாக்க வேண்டும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் நமக்குள் அது வராது துடைத்து அந்தத் தீமைகள் பட்டோருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அங்கே நஞ்சுகள் நீங்க வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியால் தீமைகளை அகற்றி மெய் ஒளி காணும் நிலை அவர்கள் பெற வேண்டும் என்று
2.இப்படி நாம் எண்ண வேண்டும். இதனைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

வேதனையை நாம் கண் கொண்டு நினைக்கப்படும் பொழுது அந்தக் கண் அவர்கள் படும் வேதனையை உணர்த்துகின்றது. இந்த வேதனை உணர்வுடன் நாமும் அவருடன் ஒன்றி விட்டால் நாம் அதுவாகத்தான் ஆகின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உணர்வினை விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்களுக்குள் படர வேண்டும் என்று
1.மகரிஷிகளுடன் ஒன்றி அந்த உணர்வின் சக்தியை வலுவாக்கி அதைப் பற்றிக் கொண்டு
2.தனக்குள் கேட்டறிந்ததைப் பற்றற்றதாக நீக்கிவிட்டு அது நமக்குள் பற்றிடாது பற்றற்றதாக மாற்ற வேண்டும்.

பின்… அவர்களை அறியாது இயக்கிய அந்த உணர்வுகளில் இருந்து தீமைகள் பற்றிடாது பற்றற்றதாக ஆக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலிலே படர்ந்து தீமைகள் அங்கே அகன்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவருடைய நினைவலைகள் பற்றிட வேண்டும் என்று இப்படி நாம் எண்ணுவோம் என்றால்
1.நாம் எண்ணியதை நம் உயிர் வலுவாக ஏற்று
2.மகரிஷிகள் வாழும் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.

எப்படி எளிமையான உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுகொண்ட மிருகங்களின் உணர்வுகளை நுகர்ந்தறிந்து அதனிடமிருந்து காத்திடும் உணர்வுகள் விளைந்து விளைந்து அதனின் துணை கொண்டு அதனின் வலு கொண்டு அந்த உடலுக்குள் சென்று அதநின் உருவாகப் பெற்றதோ இதைப் போன்று
1.ஞானிகள் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி விண்ணுலகில் ஒளிச் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும்
2.அவர்களின் உணர்வை நாம் பற்றுதல் வேண்டும்.

அதை அடிக்கடி நாம் பற்றி நமது வாழ்க்கையில் கண்டறிந்த கோபமோ விரோதமோ வேதனையோ அவசரமோ ஆத்திரமோ போன்ற உணர்வுகள் தனக்குள் பற்றிடாது அருள் ஞானிகள் உணர்வைப் பற்றிக் கொண்டு… கேட்டறிந்த பார்த்துணர்ந்த உணர்வு தனக்குள் பற்றிடாது செய்தல் வேண்டும்.

அதே சமயத்தில் யார் உடலில் பற்றியிருந்தாலும் மகரிஷிகள் உணர்வை அவர்கள் பெற வேண்டும் என்று “அவர்களையும் அங்கே பற்ற வைத்தல் வேண்டும்…”

அந்தப் பற்றுடன் அவர்கள் வளர்ந்திடும் நிலைகள் நம் எண்ணத்தால் நாம் செயல்படும் பொழுது அந்த உணர்வின் வலுவாக நமது ஆன்மா வளர்கின்றது. நமது பிறவிக் கடனை நீக்கிட நாம் எண்ணிய நிலைகளை இந்த உயிரே தனக்குள் சமைக்கின்றது… அதை வளர்க்கின்றது.

மனிதன் முழுமை பெற வேண்டிய மார்க்கங்கள் இவை…!

“உலகுக்கு வழிகாட்டிகளாக” உங்களை உருவாக்கிடவே இதை உபதேசிக்கின்றோம்

 

இங்கே யாம் உபதேசமாக உரைத்திட வந்திட்ட… ஒளி நிலை பெறச் செய்யும் ஒளி மண்டல தியானம்… “உணர்வுடன் கூடியதாகும்…”
1.ஈர்ப்பின் நிலை உணர்வுடன் பெறுதலால் புறக்கண் பார்வையை அகக்கண்ணால் அகழ்ந்து நோக்கின்
2.ஊர்த்துவ (மேலான) சக்தியாக மேல் எழும் கந்தன் தோன்றிடுவான் என்கின்ற சூட்சுமம்
3.ஒவ்வொரு மனித ஆத்மாக்களும் பெற்று உயர்ந்திட வேண்டும்.

அத்தகைய நன்நெறி நன்நோக்கத்தால் உங்களைப் போதினியாக (உலகுக்கு வழிகாட்டிகளாக) உருவாக்கிடவே இதை உரைக்கின்றோம்.

போதனைப் படுத்திடும் உயர் வழி நெறியைக் கற்றே… கற்றதைத் தன் வழி நின்று… கொண்ட கொள்கையை தகமைசால் (தெய்வீகப் பண்பு) நன்றே…! என அறிந்து… பின்பற்ற விரும்புவோர் இதை முயலட்டும்.

போதனை பெற்றிடும் இந்தச் சூட்சும வழியினைக் கடைப்பிடிக்கும் எளிமையும்… உணர்ந்து கொண்டால் அருமையும்… அத்தகைய இனிமை உணர்வு கூட்ட… உன்னுள்ளே கந்தன் (முருகன்) தோன்றுவது எப்படி…?

1.தியானத்தில் மகரிஷிகளின் ஒளியான நுண் மின்காந்த அலைகளை ஈர்க்கின்றாய்
2.ஈர்க்கின்ற செயல் உனது புருவ மத்தியில் கார்த்திகை (வெளிச்சம்) விளங்கிடும் சுடருள் பாய்ச்சி
3.ஈர்க்கப்படுகின்ற நிலை எங்கெல்லாம் செல்கின்றது தெரியுமா…?

சரீரத்தில் ஓடிடும் சகல சுவாச நாடிகளையும் அறிந்து கொண்டவனப்பா நீ. நீ ஈர்த்துக் கொண்டிட்ட ஒளி நுண் மின்காந்த அலைகள் சுவாச கதியின் சமைப்பின் சமைப்பாக சிரசைக் கடந்து கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதார அக்கினியில் அது செலுத்தப்படுகின்றது.

கந்தன் சிவன் நெற்றிக்கண்ணில் தோன்றினார் என்று புராணம் உரைக்கின்றது…!

மூலாதாரத்தில் பாய்ந்த நெற்றிக்கண்ணின் ஒளி சக்தி…
1.ஆங்கே கனல் விளைந்த ஒளியாக சுழுமுனை நாடியில் எழும்பொழுது (உயிர் வழி சுவாசம்)
2.புருவ மத்தியில் ஆறு ஆதார நிலைகள் அதே நிலை கொண்ட ஜோதி ஸ்வரூபமாக எழுந்து
3.மீண்டும் ஆகாயக்கூறு எனும் சிரசின் உச்சியில் சிவசக்தி நாடிகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட சிரசைக் கடந்து
4.எழுந்து நிற்கின்ற அந்த வடிவே கந்தன்,

பேரின்ப நிலை கிடைக்கப் பெறுகின்றது என அனு தினமும் பகர்கின்றாய். அந்தப் பேரின்ப லயத்தை நாடிட்ட மனம் வேறொன்றையும் நாடிடாது.

இத்தகைய பேரின்ப நிலை உனக்கு உரைத்த போதனையை நீயே வளர்ப்பாக்கி நீயே வளர்த்து… கண்டு கொண்டிட்டது தான்…!
1.இங்கே பயிலும் மெய்ஞானச் சுடர் ஆக்கும் தியானத்தின் வழி நின்றிடும் உன் மன உறுதியின் செயலை
2.அனைவரும் பெற்றிட வேண்டும் என்றே எண்ணத்தால் ஆசிர்வதித்து மென்மேலும் வளர்ச்சிப்படுத்திட்டு
3.வளர்நிலையின் ஜொலிப்பை எமக்குக் காட்டு.

வேதிக்கும் நிலையே (மெய்யை அறியும் குணம்) இடைவிடாத உன் மன உறுதி…! வாதிக்கும் நிலையே நம் உணர்வில் உந்துதலால் செயல் கொள்ளும் புறக்காரியங்கள்.

மெய்ஞானச் சுடராக்கும் வழிப் பயணத்தைக் காட்டிவிட்டோம். அறிவின் ஒளி இயல்பாக மஞ்சள் வண்ணம் எனில் தெய்வ வடிவைப் பெற்றிடும் குணம்… அன்பின் வழி வண்ணம் நீலம்…!
1.சாற்றும் வழி போற்றுவான் (மெய்யை உணர்ந்தவன்)
2.கடைப்பிடிப்பவன் மெய்ஞானி ஆகின்றான்

காட்சி:-
மிகப்பெரிய வட்டம் தோன்றுதல் ஒளி நுண் மின் அலைகள் காந்தத்தின் புலனாக அசைதல் சிரசின் உச்சியில் குவிதல்
நெற்றிக்கண் திறந்திடும் சூட்சுமம் மெய்ஞான விழிப்பு
நெற்றிக்கண் திறந்த பின்பு ஜீவன் சிவனாகத் தான் விளங்க
நெற்றிக்கண் ஒலி மூல ஆதாரத்தைத் தான் நோக்க…
கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதாரக் கனல் கிளம்பி முதுகுத்தண்டு வழி ஓடி
சுழுமுனை நாடியுள் அக்கினிப் பிரவாகம் பெருக்கெடுத்து சிரசின் உச்சியில் எழுந்து நிற்றல்…!

சந்திர கலைகள் செயல்படுங்கால்… ஆறு ஆதாரங்களும் ஒரு நிலைப்படுத்தப்பட்ட… “கந்தன் என்ற ஞானவேல் தோன்றுவான்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிரபஞ்சத்தில் வருவது அனைத்தையும் சூரியன் தன் பாதரசத்தால் மோதி வெப்பம் காந்தமாக உருவாக்கப்பட்டு விஷம் தனித்துப் பிரிந்து ஓடுகின்றது.

ஆனால் அந்த விஷத்தை வெப்பகாந்தம் மறுபடியும் எடுத்து அணுக்களாகச் சேர்த்து “எலக்ட்ரிக் எலக்ட்ரான்…” என்ற நிலையில் மற்ற பொருளை எடுத்துச் செல்கிறது.

அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடியது ஒரு அழுத்தமான உணர்வுகள் கொண்டது… அது மிகவும் வலுவானது. அது நேராகச் சூரியனுடைய ஈர்ப்புக்கு வரும்போது…
1.வரும் பாதையில் பார்த்தோம் என்றால் மற்ற நுண்ணிய அணுக்கள் எல்லாம் அதைக் கண்டு அஞ்சி ஓடி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும்
2.அப்போது அதனுடைய அழுத்த நிலைகள் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதைக் கண்டறிந்து
3.நியூட்ரான் என்று அதற்கு விஞ்ஞானிகள் பேரை வைக்கின்றார்கள்.

அது “நியூட்ரானாக…” எப்படி மாற்றமடைகின்றதோ அதே போல நமக்குள் இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எதையுமே “நல்லதாக” மாற்ற முடியும்.

எதை வைத்து…?

27 நட்சத்திரங்களிலிருந்து வருவது வலுவான நிலைகள் கொண்டு சந்தர்ப்பத்தால் மோதுகின்றது. ஆனால் நம் குருநாதர் காட்டிய வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அந்தந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்கச் சொல்கின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.இதனுடைய உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது
4.எத்தகைய தீமையையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக உருவாகின்றது.

மாடு ஆடுகள் இவைகள் எல்லாம் இயற்கையில் வந்ததை உணவாக உட்கொண்டு அதனுடைய உணர்ச்சிக்குத் தக்க தான் இயங்குகின்றது. ஆனால் மனிதன் இயற்கையிலே விளைந்ததை வேக வைக்கும் போது அந்தச் சந்தர்ப்பம் அதனுடைய சக்தி இழக்கப்படுகிறது.

நெருப்பிலே பாத்திரத்தை வைத்து மற்ற பொருள்களைச் சேர்த்து எதன் எதன் அளவுகோல் கொண்டு அதற்குள் போடுகின்றோமோ அதை ருசியாக மாற்றுகின்றோம்.

இயந்திரத்தையோ மற்ற கருவிகளையோ உருவாக்க… உலோகத் தன்மைகளையும் இதே மாதிரித் தான் செயல்படுத்துகின்றோம்.

பல விதமான நோய்களை நீக்க அதற்குண்டான மருந்தினைக் கலவையாக உருவாக்கி அதை மருந்தாகக் கொடுத்து இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம்… நோய்களையும் தணிக்கின்றோம்.

அதே போல் தான்
1.தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அடுத்த கணமே அதிலே இணைத்து விட்டால் அதனுடைய செயலை இழக்கச் செய்துவிடும்.
3.அப்போது தீமைகளை இழுக்கும் சக்தி குறைகின்றது.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் எல்லாவற்றையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது. அந்த உணர்வினை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.27 நட்சத்திரத்தின் உணர்வுகள் எப்படி வலுவாக வருகின்றதோ (நியூட்ரான் போல்)
2.அது போன்று அழுத்த நிலைகளில் துருவ நட்சத்திரம் தீமையினுடைய செயலை இழக்கச் செய்கின்றது.

சில பேருக்குத் தன்னை அறியாமலே பதட்டங்கள் வரும். ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்ட பின் அந்தப் பதட்டம் வராதபடி மன வலிமையைக் கொடுக்கும். பதட்டமான உணர்ச்சிகள் நம்மை இயக்காதபடி தடுக்கலாம்.

மன வலிமை கூடிய பின் சிந்திக்கும் ஆற்றல் கூடுகின்றது. அந்த சந்தர்ப்பத்தில் எப்படிச் செய்யலாம்…? என்று அதற்குத் தக்க உபாயங்களும் வருகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தனித்து நான் (ஞானகுரு) சாமியாராக இருந்தேன். குருநாதர் காட்டிய வழியில் காடு மேடு எல்லாம் அலைந்து பல அனுபவங்களைப் பெற்று விட்டு வந்த பிற்பாடு என் மனைவிக்கு இதையெல்லாம் சொன்னேன்.

ஆனால் “சாமியாராகப் போய்விட்டார்…!” என்று ஊரெல்லாம் என்னைத் திட்டினார்கள். குடும்பத்தை விட்டு விட்டுச் சாமியாராகச் சென்று விட்டார் என்று திட்டிய சொந்தக்காரர்களும் நண்பர்களும் ஏராளம்.

சாமியம்மாவும் “பாவிப்பயல்…! என்னை விட்டு விட்டுச் சென்று விட்டார்…” என்று என்னைத் திட்டியதும் உண்டு. அதே சமயத்தில் என் பிள்ளைகளைக் கூப்பிட்டு உன் அப்பனிடம் காசு வாங்கிக் கொண்டு வா…! பெத்துப் போட்டுச் சென்று விட்டால் யார் கொடுப்பது…? என்று துரத்தி விட்டவர்களும் உண்டு.

இது எல்லாம் இமயமலையில் நான் குருநாதர் காட்டிய வழியில் அனுபவம் பெறுவதற்காகச் சென்ற போது நடந்த நிகழ்ச்சிகள்.

குருநாதர் எம்மைக் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு தான் அங்கே போகச் சொன்னார். அங்கெல்லாம் பனி ஜாஸ்தி. அது சீன எல்லை வேறு. அதிலே பல இம்சைகள். துணி இல்லை கிடு… கிடு… என்று நடுங்குகின்றது.

அப்படி நடுக்கம் வரும் பொழுது குருநாதர் சிலவற்றைச் சொல்லியுள்ளார். அதன்படிச் செய்தவுடன் உடலுக்குள் வெப்பமாகி நடுக்கம் நீங்குகின்றது.

நடுக்கம் நீங்கியபின் என்னுடைய பையன் தண்டபானி இருக்கின்றான். அவனைக் காட்டுகிறார் குருநாதர்.

அவனுக்கு மூல பௌத்திரம் மாதிரி இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தெரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நைனா… நைனா… என்று சொல்லிக் கொண்டு வலி பொறுக்க முடியாமல் உட்கார்ந்து போய்க் கொண்டிருப்பதைக் குருநாதர் காட்சியாகக் காட்டுகின்றார்.

அதைப் பார்த்ததும் பாசத்தால் எண்ணியவுடன் உடனே எனக்குக் குளிர் அதிகமாகிறது. மறுபடியும் கிடு… கிடு… என்று உதறுகிறது. பார்த்தோம் என்றால் “கிர்…” என்று இருதயமே விரைக்கின்றது.

அப்பொழுது குருநாதர் என்ன சொல்கிறார்…?

அனுபவம் பெறுவதற்காக எனக்குக் காட்டிய அந்த மூன்று இலட்சம் குடும்பங்களை எண்ணச் சொல்கிறார்.

அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் “நன்றாக வாழவேண்டும் என்று நீ இங்கிருந்து எண்ணு…” என்று அங்கே உபதேசிக்கின்றார்.

அப்பொழுது அவர்களுக்கெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணும்போது இங்கே குளிரினால் வரும் இரைச்சல் குறைகிறது. பனி என்னைத் தாக்கவில்லை.

ஏனென்றால்… இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்ற நிலையை அந்த இடத்தில் வைத்துத்தான் பாட நிலையாகக் கொடுக்கின்றார்.

அதாவது… அங்கே காட்சி தெரியும்போது “இப்படி ஆகிவிட்டதே…” என்று பையன் மேல் பாசம் வருகிறது. அதே சமயத்தில் சாமியம்மா (என் மனைவி) என்ன நினைக்கின்றது…?

இரண்டு மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அது பட்டினியாக இருக்கின்றது. ஏனென்றால் என் மூத்த பையன் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்று சொல்லி சொத்தை எல்லாம் இழக்கச் செய்துவிட்டான்.

இந்தச் சூழ்நிலையில்… இப்படியெல்லாம் இருக்கிறதே என்று சொல்லி மைசூரில் இருக்கும் என் மகள் என்னைத் திட்டுகின்றது. “பிள்ளைகளைப் பெத்துவிட்டுச் சோறு போடாமல் சுற்றிக் கொண்டுள்ளான்…!” என்று திட்டுகிறார்கள்.
1.இதெல்லாம் என் காதில் கேட்கிறது.
2.நான் இமயமலையிலிருந்து இதெல்லாம் பார்க்கின்றேன்.

பாசத்தினால் எடுக்கும் பொழுது எப்படியெல்லாம் இந்த உணர்வுகள் மாறுகின்றது…?

அந்த உணர்வால் நான் என்ன அவஸ்தைப்படுகின்றேன்…? என்று குருநாதர் அந்த இடத்தில் வைத்து நேரடி அனுபவமாகக் கொண்டு வருகின்றார்.

ஆக…
1.கஷ்டப்படும் குடும்பங்களை எண்ணி அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆகவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் போது குளிர் ஒடுங்குகின்றது.
2.அதே சமயத்தில் குடும்பப் பாசம் என்ற நிலையில் அந்த இடத்தில் எண்ணும் பொழுது குளிர் பாதிக்கின்றது… நல்லதை எண்ண முடியவில்லை.

சிலர் எல்லோருக்கும் நல்லவைகளைச் சொல்வார்கள். தன் குடும்பப் பற்று வரும்பொழுது “தன் பையன்… தன் பிள்ளை…” என்று வரும்போது அவர்களுக்குள் அந்த உணர்வுகள் வரத்தான் செய்யும்.

ஏனென்றால் அந்தப் பாசம் என்ற உணர்வு வரும்போது எப்படியெல்லாம் தடைப்படுத்துகிறது…? என்று இமயமலையில் வைத்து குருநாதர் சொல்லிக் கொடுக்கின்றார்.

யாம் சந்தித்த அந்த மூன்று இலட்சம் பேரை எண்ணி… அவர்களெல்லாம் நலம் பெற வேண்டும் என்று அங்கிருந்து எண்ணச் சொல்கிறார்.

இப்படி பல வகையில் சிரமப்பட்டு உண்மைகளை எல்லாம் தெரிந்து நான் இங்கே வந்த பிற்பாடு சில இடங்களில்
1.இந்தச் சாமி கல்யாணம் செய்து விட்டாரே…!
2.கல்யாணம் பண்ணிய சாமியார்கள் எல்லாம் அயோக்கியச் சாமியார்கள் என்று இப்படியும் சொல்கின்றார்கள்.

காரணம்… சாமியார் ஆகிவிட்டால் கல்யாணம் செய்யக்கூடாது.

எப்பொழுதாவது என் மனைவி என் அருகில் வந்து ஏதாவது பேச முற்பட்டால் சில பேருக்கு இதைப் பார்க்கும் பொழுது “குடும்பப் பற்றுடன் இருக்கின்றாரே இந்தச் சாமியார்…” என்று சொல்கின்றார்கள்.

இது எல்லாம் “மனித உணர்வுகளுக்குள்…” நடந்த நிகழ்ச்சிகள்.

உடலின் கடைசி முடிவு

 

மகாபாரதத்தில் திரௌபதி என்பது உயிர் (உணர்வின் உணர்ச்சி) பஞ்ச பாண்டவர்கள் (புலனறிவு ஐந்து) நுகரப்படும் பொழுது இந்த ஐந்து பேருடைய உணர்வுகள் கொண்டு அதை இயக்குகின்றனர்.

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் நுகரும் சத்தும் அதன் உணர்வின் தன்மை மணமும் சேர்த்துப் புலனறிவு ஐந்து என்று
1.இந்த உணர்வின் தன்மை நாம் எக்குணத்தை நுகர்கின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்குகின்றது.
2.கண்ணனின் சகோதரி திரௌபதி. தன்னுடன் இணைந்து உணர்வினைக் கண் காட்டுகின்றது உடலிலே.
3.சகோதரியாக உடலுக்குள் தன் உணர்வின் நிலையாக உணர்த்துகின்றது… கண்ணன்.
4.ஆக எதை எண்ணுகின்றானோ அந்த உணர்வின் தன்மை அது உள்முகமாக எவ்வாறு ஊட்டுகின்றது என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

ஆனால் பிறரை அடிமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்வதைக் ”கௌரவர்கள்” என்று காட்டுகின்றார்கள்.
1.உண்மையின் உணர்வை நுகர்ந்தால் பஞ்ச பாண்டவர்களை சூதின் நிலைகள் கொண்டு திசை திருப்புகின்றனர்.
2.தன் உணர்வின் வலிமை கொண்டு உள் புகாது நன்மையினைப் பெறாது கௌரவர்கள் தடைப்படுத்துகின்றார்கள்.

ஆக… கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருக்கும் போர் முறை என்று காட்டுகின்றார்கள்.

உணர்வின் வலுவைக் காட்டப்படும் போது நாம் எண்ணும் உணர்வுகள் அர்ஜுனன் என்றும்… அவன் உணர்வின் தன்மை கொண்டே நம்மை மாற்றுகின்றான் என்றும் இதே உணர்வின் செயலாக அதனின் செயலாக்கங்களும்… “அதுவே வலுவாகிறது என்றும்”
1.உணர்வின் உணர்வுகள் நமக்குள் எடுக்கும் போது – ஆன்மா எதனின் உணர்வோ அது…!
2.அதாவது கெடுமதியோ அல்லது கெடுமதியை நீக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது “பீமன்” அது வலுக் கொண்ட உணர்வின் ஆன்மாவாகின்றது.

ஆன்மாவிற்குள் அதனின் வலிமை பெறுகின்றது என்ற உண்மையைக் காட்டுகின்றனர்.

பாண்டவர்கள் வலுக் கொண்டாலும் உள் நின்று புகாது தடுக்கும் நிலையே கௌரவர்கள். பல நிலைகள் கொண்டு மகாபாரதப் போர் நடந்தாலும் தீமை என்ற உணர்வுகள் வளரப்படும் பொழுது இவர்கள் (பாண்டவர்கள்) ஜெயித்தாலும் கண்ணன் மடிகின்றான். அதற்கு முன் பலராமன் மடிகின்றான்… “கடைசி முடிவு…”

1.நாம் நுகரும் உணர்வுகள் எண்ணம்…
2.எண்ணத்தின் நிலை கொண்டே கண்.
3.கண்ணின் நிலை கொண்டே பல உணர்வுகள் அதிலிருந்து பல எண்ணங்கள்
4.அதன் வழி கொண்டே உணர்கின்றோம் வளர்கின்றோம் என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.

கண்ணனின் சகோதரன் பலராமன் மூத்தவன் என்று கொண்டு வருகின்றார்கள். பலராமன் மடியப்படும் போது கண்ணனுக்கும் செயலில்லை… அவனும் மடிகின்றான். பின் ஈர்க்கும் வலுவின் தன்மை இல்லை என்றால் பீமனும் மடிகின்றான்

நகுலன் சகாதேவன்… உணர்வைக் கவர்ந்தால் தான் நகுலனும் இயக்க முடியும் நன்மை தீமை என்பதை அறியும் நிலை அவர்களால் தான் அங்கே இருக்கின்றது… அப்போது அவர்களும் செயலை இழந்து விடுகின்றார்கள்.

அனைத்து வலிமை கொண்டு தீமைகள் புகாது தடுக்கும் அர்ஜுனனும் வலுவை இழக்கின்றான்,,, மடிகின்றான். வீரிய உணர்வுகளை இழந்த பின் அவன் கண்ணுக்கு முன்னாடியே திருடர்கள் திருடுகின்றார்கள் மாடுகளை ஓட்டிச் செல்கின்றார்கள்.

காண்டீபத்தை எடுத்து மந்திரத்தைச் சொல்லி ஏவுகின்றான்… ஆனால்.
1.மற்ற சகோதரகள் செயல் இழந்த பின் அது ஒன்று சேர முடியவில்லை.
2.இவனுடைய ஆயுதங்கள் அங்கே பாய முடியவில்லை. திருடர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
3.தான் வீழ்ந்து விட்டோமே என்ற உணர்வுகள் வருகின்றது.

ஏனென்றால் கண்களால் கவர்ந்த உணர்வுகள் வலுவை இங்கே ஊட்டித்தான் “அந்த வலுவால் இயக்குகின்றது” என்பதை இங்கே காட்டுகின்றார்கள்.

உடலுக்குள் உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது கண்ணன் மடிந்த பின் மற்ற நிலைகள் மடிந்த பின் எப்படி உடலுக்குள் செயல்கள் மடிகின்றது என்பதை மகாபாரதத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நாம் நுகரும் உணர்வுகள் எண்ணங்கள் வேதனை என்று நுகர்ந்தால் வாலி… கோபம் என்றால் காளி…!

நாம் நுகரும் உணர்வு உயிரில் பட்ட பின் இந்த உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…? இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்திடல் வேண்டும்.

1.நமக்குள் புகுந்த பிறிதொரு உணர்வுகள் நல்லதைப் புகவிடாமல் தடுக்கும் நிலையினை எவ்வாறு தடுக்க வேண்டும்…?
2.மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழி வகைகளை ஞானிகள் காட்டுகின்றார்கள் மகாபாரதத்தில்.

“ஈஸ்வர ஜோதி”

 

பால்வெளி சூட்சுமம் சதா அசைவு பெறும் ஒளி மண்டல சூட்சும அணுக்கள் நிறத்தின் தன்மைக்கொப்ப மணமும்… மணத்தின் வீரிய அடர்வு செயல்பாட்டில் குணமும்… குணத்தின் அமைப்பு எண்ணத்தின் கருவாகும்… கருவின் ஒரு ஆத்ம ஒலி ஒளி விந்து கலைகள் இணைந்து செயல் கொண்டிடும்… ஜீவ பிம்ப சரீர நிலை பெற்றிடும்… ஜீவாத்மாவாகப் பயிர் கொண்ட நிலைகள் வளர்ப்பு ஜீவத் துடிப்பலைகள் வரும்,

அலை வீசாக் கடல் எனும் பால்வெளி சூட்சுமத்தில் உயிர் கொள்ளும் உயிராத்மா…
1.மனிதன் என்ற பிறப்பு எடுத்து மாயத்திரை போர்த்திக் கொண்ட செயலை விலக்கி
2.இச்சரீரம் கொண்ட வினையின் நாயகன் உயிர் சக்தி
3.ஆத்ம நிலை உருவாக்கிடும் செயல் கொள்ளும் அமைவு எப்படி உருவாகின்றது…?

“உன் முயற்சி தான் ஏற்பு… திரை விலக்கிடும் முயற்சியே தியானம்…!” (நல்லதைப் பெற வேண்டும் என்ற முயற்சியுடன்… உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்… அதை வைத்து இருளை விலக்கிட வேண்டும். அதுவே தியானம்)

வேதாள மகரிஷி வலியுறுத்தி உரைத்திட்ட ஒலி நாதங்கள் இன்றும் ஒலி அலைகளாக ஓடிக்கொண்டிருக்கும் கருத்தின் ஆழம் கொண்ட “இந்த உபதேசங்களைப் படிப்பதே மாபெரும் பாக்கியமப்பா…!”

பார்க்காமல் வருகின்றவன் சிந்தனா சக்தியின் துரிதமற்ற நிலையில் ஓர் குளத்தில் வந்து விழுந்து விடுகின்றான். வேரோ அன்றி விழுதோ பிடித்துக்
1.கரையேறுகின்ற முயற்சியையும் நீக்கிவிட்டு
2.குளத்தின் நீர் வற்றிய பிறகு வெளியேறிச் செல்லலாம்…! என்பது என்ன பேதைமை…?

சிந்தனையற்று அந்தக் குளத்தினுள் இறங்கியவன் சிந்திக்கின்றான்… நீர் வற்ற வேண்டும் என்று…! (நீர் வற்றுமா…? மனிதனின் இன்றைய சிந்தனை அப்படித்தான் உள்ளது) அப்படி இருந்தால்
1.மாமகரிஷிகள் மனிதர்களுக்கு உவட்டாமல் (திகட்டாத சுவையாக) ஊட்ட வந்த
2.ஒளி காந்த நிலைபெறும் ஒளி மார்க்க சிந்தனை செயல்படுவது எங்கே…?

உன் முயற்சி தான் ஏற்பு.

1.உலகோதய நிலை வாழ்க்கை என்பது தான் “குளம்”
2.ஜீவன் கரையேற முயற்சிக்கும் முயற்சி “அறிவின் தூண்டுதலால் ஈஸ்வர அனுபூதி”
3.கரையேறாத நிலையில் உள் உடைந்து கிடத்தல் – “தொடர் பிறப்பின் சூட்சுமத்தில் சுழன்று கொண்டே இருக்கின்ற” மனிதனின் சிந்தனையின் செயல்பாடு
4.வேரும் விழுதுகளும் “வழிகாட்டிடும் மார்க்கங்கள்”
5.அன்றி சுயத்தின் முயற்சியாக நின்று வெளி போதல் சுயசக்தியின் வளர்ப்பாக்கும் “ஒளிகாந்த ஒளி மண்டல சிந்தனாலயம்…”

கரையேறும் நிலையாகத் தன் முயற்சி கொண்டிடும் நிலைக்கே
1.அக்ஷி என்ற நிலைகாட்டி அகக்கண்ணால் உள்நோக்கின்
2.பிடரிக்கண் என்று உரைத்திட்ட பார்வையின் தன்மை “மூலாதார அக்கினியை உற்று நோக்கும்…”
3.அகக்கண்ணின் சிந்தனா சக்தி அங்கு செலுத்தப்பட்டால்
4.சரீர செயல்பாட்டில் உணர்ந்து அறியத்தக்க ஒளி அலைகள் பாய்ந்து
5.ஒளி கலந்த புலமாக்கும் ஈஸ்வர ஜோதி சிரசில் தோன்றுவதே
6.சிவம் என்றிட்ட ஈஸ்வரனும்… சக்தியின் நிலையும்
7.ஒன்று கலந்த பேரின்பப் புணர்ச்சி… எண்ணத்தால் ஆட்டி உதயத்தில் காட்டும்…!
8..பிறவி என்ற இன்னலிலிருந்து விடுபட்டு… என்றுமே ஏகாந்தமாக… பேரானந்த நிலை கொண்டு வாழச் செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் தினசரி சந்திக்கின்றோம். வேதனைப்படுபவரையோ கோபப்படுவோரையோ வெறுப்படைவரையோ பார்க்காமல் நாம் இருக்க முடியாது.

ஆனால் அந்த வேதனை கோபம் வெறுப்பு உள்ளுக்கே போகாதபடி தடுப்பதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா. அதற்குத் தான் இதை உபதேசிக்கிறோம்.

தீமை நீக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டீர்கள் என்றால் உங்களுக்குள் வரும் தீமைகளை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

பிள்ளை மேலே பாசமாக இருக்கின்றோம்… ஒரு மார்க் குறைந்து விட்டால் போதும் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…? பிள்ளைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…?

நீங்கள் சமப்படுத்த வேண்டும் அல்லவா.
1.ஆனால் வேதனையை எடுத்துச் சமப்படுத்த விரும்புகின்றீர்கள்
2.இந்த உணர்வுகள் நமக்குள் வந்து மீண்டும் சிவ தனுசாக மாறுகின்றது… வேதனைக்கொப்ப உடலாக (வேதனைப்படும் உடலாக) மாறுகின்றது.

அதனால் தான் பிரகலாதன் கதையிலே நாராயணனுக்கும் இரணியனுக்கும் இரண்டு பேருக்கும் அங்கே கேட்கின்றார்கள்.

பிரகலாதன் என்றால் இதிலே பிறக்காதவன். அதாவது
1.எதிலுமே பிறக்காதவன் தான் பிரகலாதன் என்று காட்டுகின்றார்கள்.
2.சூரியனிலிருந்து ஒவ்வொரு இயக்க அணுக்களும் வருகிறது அல்லவா…!

என்னால் தான் பிறந்தது என்கிறான். சூரியனால் தான் இயக்கப்படுகின்றான் என்கிறான். என்னால் தான் பிறந்தது என்னால் தான் உருவானது என்று இயக்க அணுவைப் பற்றிப் பிரகாலதன் கதையிலே காட்டுகின்றார்கள்.

ஹரி ஓம் நமோ நாராயணா…! சூரியனின் இயக்கமாகத்தான் நம் உடல் எல்லாம் இருக்கின்றது என்று பிரகலாதன் சொல்கிறான்.

அவன் எங்கே இருக்கின்றான் என்று இரண்யன் கேட்கின்றான்…?

உன்னிலும் இருக்கின்றான்… என்னிலும் இருக்கின்றான்… எல்லாவற்றிலும் இருக்கின்றான்.

அவனைக் காட்டு…! என்கிறான்.

தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்று காட்டுகின்றான்.

அவனை அழித்து (தூணை உடைத்து) அந்த உணர்வின் வேகத்தைப் பார்க்கப்படும் பொழுது அதிலிருந்து அந்த உண்மையை உணர்த்திக் காட்டுகின்றது

1.தன் உடலுக்குள் இருக்கும் தன்னையே அழித்துக் கொள்ளும் தன்மை தான் வருகின்றதே தவிர
2.உன்னால் அழிக்க முடியும்… உணர முடியாது
3.அதை ஈர்க்க முடியும்… ஆனால் வளர்க்க முடியாது.
4.தீமையைத்தான் வளர்க்க முடியும்…! என்று பிரகலாதன் கதையில் அதைக் காட்டுகின்றார்கள்

எவ்வளவு பெரிய உண்மையைக் காட்டுகின்றார்கள்.

வெறும் கதையாக நினைக்கின்றோம். மக்கள் நாம் புரிந்து கொள்வதற்கு இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா.

ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நல்ல குணத்தில் அதை வலுவாக்க வேண்டும்.

அந்தச் சக்தி வலுவான பின் வேதனையான உணர்வுகள் இங்கே வருகிறது அல்லவா… அதை உள்ளிருந்து பிளந்து விடுகின்றது.

இது தான் மடி மீது இரணியனை (நஞ்சான உணர்வுகள்) வைத்து நமக்குள் வரும் தீமைகளை வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன் இந்த ஆறாவது அறிவால் இதைப் பிளந்து பழகுதல் வேண்டும்.

இப்பொழுது நாம் ஒன்பதாவது நிலையிலிருக்கின்றோம். அதைப் பிளந்தால் “பத்தாவது” நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) அகஸ்தியனைப் பற்றித் தொடர்ந்து உபதேசிக்கின்றோம். காரணம் ஆயுள் கால மெம்பர்கள் இதை எல்லாம் தெரிந்து கொண்டால் தான் அந்த அகஸ்தியன் பெற்ற சக்திகளை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.

முந்தி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு வந்தோம். மெம்பர்களுக்கு எப்படியும் முழுமையாகச் சொல்லித் தான் ஆகவேண்டும். அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சித் தான் ஆக வேண்டும் என்பதற்கே பரிபூரணமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அருள் ஞானச் சக்கரத்தைச் “சும்மா வாங்கிக் கொண்டு போய்…” நானும் பூஜை செய்தேன் எனக்குக் கிடைத்தது என்று அதைச் செய்வதில் பலன் இல்லை.

1.சக்கரத்திற்கு முன்னாடி நீங்கள் நின்றாலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்…
2.அதற்குத் தான் சக்கரத்தைக் கொடுப்பது
3.குருபீடத்திற்கு அடியில் தான் அந்தச் சக்கரங்களை எல்லாம் வைத்து
4.அதிலே எல்லாச் சக்திகளையும் பரப்பி இப்போது உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அகஸ்தியன் தாயின் கருவிலிருக்கும் போது பெற்றது தான் அனைத்து நஞ்சினை வெல்லும் சக்திகளும். தாய் சுவாசித்த நஞ்சை வெல்லும் பல பல தாவர இனங்களின் மணங்களை இரத்தத்தின் வழி நுகர்ந்து அகஸ்தியன் பூர்வ புண்ணியமாகப் பெறுகின்றான்.

அதை எல்லாம் பெற்றுப் பிறந்த பிற்பாடு கொசுவோ பாம்போ தேளோ அவன் அருகில் வருவதில்லை. அதைப் பார்க்கும் போது சுற்றி இருப்பவர்கள் அவனைக் “கடவுளின் பிள்ளை” என்று போற்றும் நிலை வருகிறது.

அகஸ்தியன் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைய அடைய…
1.மற்ற மிருகங்கள் எல்லாம் அவனைக் கண்டாலே ஒடுங்கி நிற்கிறது.
2.செடி கொடிகளும் இவன் மணம் பட்டாலே இரைச்சலாகி ஒடுங்குகிறது
3.அப்போது அதன் குணங்களை முழுமையாக அறிகின்றான்.

வேப்பிலையைப் பச்சையாக நான்கு நாளைக்குச் சாப்பிட்டால் நம் உடலிலிருந்து வேப்பிலை வாசனை வரும். கத்திரிக்காயை இரண்டு நாள் சாப்பிட்டால் மூன்றாவது நாள் அந்த மணம் வரும்.

வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டால் அடுத்த நிமிடமே அந்த வாசனை வரும். சாப்பிட்டு அந்த அணுக்களில் சேர்ந்த பின் அந்த வாசனை வருகிறது.

இதை எல்லாம் அன்று அகஸ்தியன் அறிந்து முதலில் வேக வைக்கும் பழக்கத்தைக் கண்டுபிடிக்கிறான். இயற்கையில் விளைந்ததை வேக வைத்துவிட்டு அதனுடன் பல நல்ல பொருள்களைச் சேர்த்து ருசியாகச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டு வருகின்றான்.

அதே சமயத்தில் மனிதனுக்குகந்த தாவரங்களைப் புதிதாக உற்பத்தி செய்கிறான். தன் மூன்றாவது வயதில் இதைச் செய்கிறான். இன்று நாமும் பத்திரிக்கையில் படிக்கின்றோம் அல்லவா… மூன்று வயதுக் குழந்தை என்னென்னமோ செயல்படுத்துகின்றது என்று.

தாய் கருவில் இருக்கும் போது தாய் நுகரும் உணர்வுகள் மூலம் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் இவை எல்லாம். சில சந்தர்ப்பங்களில் அபூர்வமான எத்தனையோ செயல்கள் அதனால் வந்துவிடுகிறது.

அகஸ்தியன் இதை எல்லாம் கண்டுணர்ந்து புதிய புதிய பயிரினங்களைக் கண்டுபிடிக்கின்றான்.
1.இயற்கையில் உருவான கனிகளைக் கூட
2.வேக வைத்துத் தான் அகஸ்தியன் சாப்பிட்டான்.

இன்று நாம் கனிகளைப் பச்சையாகச் சாப்பிடுகின்றோம். ஆனால் அதை வேக வைத்துவிட்டால் அதில் உள்ள மற்ற அணுக்கள் செத்து விடுகிறது. அதனின் ருசி வேறாக இருக்கும். அதைச் சாப்பிடலாம்.

இது அகஸ்தியனால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே… வேகா நிலை பெற்ற அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நாம் நுகர்ந்து பழகினால் அவனைப் போன்றே நாம் மெய் ஞானியாகலாம்.

கூர்படு சிந்தை கொள்

 

அன்பு அறிவாக நிலைகொள் என்றால் என்ன…?

“அன்பின் வடிவாக நிலை பெற்றிருப்பாய்…! என்று ஆசி வழங்கிடும் முதியோர் சொல்…” அறிவு மனம் குணம் மூன்றும் எண்ணத்தின் செயல் வழி என்றாலும் தான் எடுத்துக் கொள்ளும் குணங்கள் நிலைக்கொப்பத்தான் வாசனையால் ஆளப்படும்.

வான்மீகி கூறிய நீல வண்ணராமன்… தெய்வீக வடிவு…! என்பதெல்லாம் அறிந்த சொல்… ஆனால் அது மறைக்கப்பட்ட பொருள்.

அன்பு என்ற சொல்லின் கொள்ளப்படும் நிலை குணம் அக்குணங்களின் வாசனையாகிய மணம் அது வெளிக்காட்டும் ஒளியாக (நிறம்).

அன்பின் நிறம் என்ன தெரியுமா…?

அன்பின் அறிவு நீக்கமற நிலை கொள்ளும் செயலுறும் இயக்க சூட்சுமம். அன்பு தான் வான்மீகி மாமகரிஷி காட்டிய “நீல வண்ணம்…”
1.வீரம் விளைவித்த சாந்தமாக கண்ணின் ஒளி நீல வண்ணம் காட்டி
2.ஆத்ம சுடர் பிரகாசித்து… காண்பவரையும் உயர் ஞான வழி வரும் செயலாக ஆக்கும்.

சூரிய கிரகண கால நிகழ்வில்… கதிரவன் ஒளி கிரகணங்கள் பூமியில் பாய்ந்திடாத குறுகிய அந்தக் கால நேரத்தில் நீரில் நிறைந்திடும் நுண்ணிய விஷ அணுக்கள்… சூட்சும செயல் மென்மேலும் பல்கிப் பெருகி… நீர் சம்பந்தமான கடுமையான நோயாக… இந்த உலகம் எதிர் கொள்ளத்தான் போகின்றது.

கடுமையான விஷ மணத்தின் செயலில் உயிரையே உண்டுவிடும் நடைமுறை சாத்தியமும் உண்டு, அதற்காக அஞ்சிட வேண்டாம்…!

சூரியப் பிரகாசத்தினை எண்ணி ஈர்த்திடும் பக்குவ நிலை பெற்றிருக்கும் சரீரத்தில் எலும்பையே ஊடுருவி ஒளி அருளால் உள் செலுத்திப் பாதுகாப்புக் கவசமாக…
1.சகலமான ஒளி மண்டலவாசிகள் எனும் மகரிஷிகள் வழி வழியாக வந்திடும் ஞானச் செல்வங்கள்…
2.இந்த உலகத்தையே இரட்சித்துக் காத்திடும் செயலுக்கு “மாமருந்தாய்” அளித்துள்ளனரப்பா.

“சிவ சக்தியான ஒலி ஒளி” நீக்கமறச் செயல் கொண்டிடும் திறத்தில்… ஒலி கொண்ட சக்தி ஒளியுறும் சிவமாகக் கலந்திடும் கலப்பு… சிவ சக்தியின் இணையான நிலை விளக்க முறை செயல்படுத்திடும் நடைமுறையில் ஒலி கொண்ட சக்தி ஒளியாம் நிலை சிவத்துள் ஐக்கியமாகச் செயல்படும் தொழிலில்… “அறிவு சிவமாக அதனுள் இட்ட ஒளி சக்தியாகப் பரிணமிக்கிறது…”

மெய்ஞானச் சுடர்தல் வேதாள மாமகரிஷி அருளிச் செய்த சுடர் விளக்கமாக…
1.நீரை இறைப்பது ஏற்றம்
2.நீண்ட நெடு வயல்கள் என்பதே உலகம்
3.வயலில் விளைகின்ற பயிர்கள் அவைகளே ஞானம்… ஞானப்பயிர்.

கிணற்றில் நீர் நிறைந்திருக்கின்றது… அதுவே மனத்தின் பாங்கு அருள்.
1.ஜீவன் தந்திடும் ஒளிக் கதிர்கள் “நீர் ஒன்று இல்லாவிடில்…”
2.ஜீவன் என்றாலும் செயல் கொள்ளா நிலையில் உருவாக்கிடும் சக்தியின் பாங்கில்
3.அநித்தியமான சூடு மறைபொருளாக விளங்கி… பிரம்மம் (சிருஷ்டி) என்ற நிலை காட்டாது.

நீர் இறைத்து நெடுவயல் நீர் பாய்ச்சிச் செயல்படுத்திட ஓர் உபகரணம் தேவை. அதுவே “தியானம்” என்ற பெயர் பெறும் ஏற்றம்.

முயற்சி செயல் கொள்ளும் பொழுது ஏற்றத்தில் நீர் இறைக்கின்றாய். அந்தச் செயலின்றி நெற் பயிர் எப்படி விளையும்…?

தென்னை ஊன்றினாய் என்றால் தென்னை தான் விளைவாகும். அது போல் ஞானப் பயிர் வளர்த்திடும் கருவின் வலுவிற்கு வீரிய நல்வித்துக்களை ஊன்றிட வேண்டும்.

அந்தச் செயலுக்கே மாற்று அலை நிலைகள் திசை மாறிச் செலுத்திடத் துடிதுடிக்கும் எண்ணத்தின் பாங்குகள் வந்தாலும்…
1.ஞானியற்கு மேலாம் உயர்வெண்ண செயலில் செயல் கொண்டு
2.திட நிலை சங்கல்பம் பெற வைத்திட்டது எது…?

சிந்தை என்ற சொல் பெரும் பொருள் அறிவுறுத்தும் நிலையன்று… “கூர்படு சிந்தை கொள்” என்றே உரைத்திட்டோம்.

உறை பொருள்… மறைபொருள்… உட்பொருள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முந்தைய நிலைகளில் உருவானது இனம் புரியாத நிலையில் வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டாலும் அந்த நிமிடம் என்ன செய்கிறது…? உடலில் இருந்து தான் அந்த வேதனை தோன்றுகின்றது. அந்த வேதனை உணர்ச்சிகள் ஆன பின் நம் உயிருக்கு வருகின்றது

உதாரணமாக
1.முள் குத்திவிட்டால் உடனே உயிருக்குத் தான் வருகின்றது… அப்பொழுது கண் என்ன செய்கின்றது…?
2.எங்கே முள் இருக்கின்றது…? என்று தேடுகின்றது
3.அதைக் கூர்ந்து கவனித்து நுகர்கின்றோம்.
4.ஆ… காலிலே முள் ஏறி விட்டதா… என்ன…? என்கிற அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.

இப்படித் தான் நம் உடலுக்குள் முந்தைய நிலைகள் பெற்ற உணர்வுகள் அந்த அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.

உடலில் வலி இருக்கிறது என்றால் நாம் சந்தோஷமாக இருக்க முடியுமா…?

நம் உடலிலே ஏற்கனவே உருவான அணுக்கள் (முன்னாடி வேதனைப்பட்ட்து) தன் பசிக்கு வேதனையான உணர்வுகளை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த வேதனையை நாம் அறிய முடிகின்றது.

அந்தச் சமயங்களில் நமக்குள் அந்த நினைவு வந்தாலும் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளியும் பெற வேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

அதாவது…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போய்ச் சேராதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.

பின் கண்களை மூடி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ
2.அங்கே உங்கள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

உடலில் “வேதனையை உருவாக்கும் அணுவிற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

இப்படி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வாருங்கள்.
1.இதை இவ்வாறு செய்ய
2.இந்த உணர்வுகள் அந்த அணுக்களில் படர
3.விஷத்தன்மைகள் குறைந்து வலியைக் குறைக்க உதவும்.

இதைப்போல எடுத்து அந்த உணர்வின் தன்மையை நம் உடலில் செலுத்த செலுத்தச் சிறுகச் சிறுக அதனுடைய வீரிய சக்தி இழந்து நல்ல அணுக்கள் வலுப்பெறத் தொடங்கி விடுகின்றது.

இதைத் தான் “கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று சொல்வார்கள்.

நம் உடலில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலைகள் எத்தனையோ விதமான அணுக்கள் இருக்கின்றது. அந்த அருள் ஒளியை நம் கண்ணிலே கவர்ந்து… அதே கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அங்கே “ஊடுருவிப் பாய்கின்றது…”

எங்கே வலி எடுக்கிறதோ அங்கே நேராகக் கண்ணின் நினைவைச் செலுத்தினோம் என்றால் சிறுகச் சிறுக வலிகள் தணியத் தொடங்கும்.

இதே போலத் தான் நம் நரம்பு மண்டலங்களில் கை கால் குடைச்சலோ மற்ற நிலைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் தசைகளில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளில் படர வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்தி எங்கள் உறுப்புகள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்வுகளை படரச் செய்யும் பொழுது “மின்சாரம்…” பாய்வது போல உடலுக்குள் பரவும்.

சிறுகச் சிறுக எடுத்தோம் என்றால் உடலில் வரக்கூடிய வலிகள் தணிய நேரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக… வேகமாக ஒருவர் நம்மை திட்டி விட்டார் என்றால்… “இப்படித் திட்டினான்…” என்று அதை வலுவாகப் பிடித்துக் கொள்கின்றோம்.

ஒரு நல்ல காரியத்தைச் சாந்தமாகச் சொல்லி இருந்தால் அது சந்தோஷத்தை ஊட்டக்கூடியது தான்.
1.இருந்தாலும் அது நினைவில் இருக்காது… கெட்டது நினைவில் இருக்கும்
2.நல்லதைச் சாந்தமாக சொன்னால் இது உடனே மறந்துவிடும்
3.நறுமணம் அதுதான்… அதில் விஷம் பட்டால் அது மறந்து விடுகின்றது… அதனுடைய செயலை இழக்கச் செய்து விடுகின்றது

நாம் நல்ல குணம் கொண்டிருக்கின்றோம். ஒருவர் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினால்…
1.அதை நாம் கேட்டறிந்தால் நம் நல்ல குணங்களை இது மூடி விடுகின்றது
2.நல்லது செய்வதை மறந்து விடுவதற்கு காரணமே அது தான்
3.இந்த விஷம் எப்பொழுதுமே அதனுடைய வேகத்தை காட்டிக் கொண்டே இருக்கும்.

ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷம் பட்டால் அந்த ஒரு குடம் பாலும் பாழாகி விடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் நூறு குடம் பாலை அதிலே விட்டால்
1.அந்தப் பாலிலே இந்த விஷம் குறைந்து அந்தப் பாலுக்கே ஒரு வீரிய சக்தி உண்டாக்கக்கூடிய சக்தி வருகிறது
2.அதாவது விஷம் அதிகமானால் கொல்கிறது… “விஷம் சிறுத்தால் வீரிய சக்தி உண்டாக்குகின்றது” (முக்கியமானது)

ஏனென்றால் நாம் எப்படி வாழ்கின்றோம்…? எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூடுமானவரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்… “ஆயுள் கால மெம்பராக இருப்பதால்…”

உயிர் தீயிலே பட்டால் அழிவதில்லை. ஆகவே உயிரைப் போலவே உணர்வுகளை ஒளியாக மாற்றுவது தான் நம்முடைய குறிக்கோள். ஆகையினால்
1.உயிரோடு சேர்த்து அவன் ஒளியாக இருப்பது போல் ஆயுள் கால மெம்பராக அவனுடன் இணைந்து
2.அந்த உயிரின் இயக்கமாக நாம் மாறுவதுதான் மெம்பராக இருப்பதனுடைய நோக்கம்.

நமக்குள் இருக்கும் இயக்கத்தை… இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நமக்குள் நாம் அறிந்தாக வேண்டும்.

உதாரணமாக… கெமிக்கல் கலந்த நாடாவில் ஒலி.. ஒளி… என்று பதிவாக்குகின்றார்கள். திருப்பி அதை இயக்கிச் சுழல விடும்பொழுது அந்த உணர்வுகள் வெளி வருகின்றது.

அதே போன்றுதான் இந்த உபதேசக் கருத்துக்களை நீங்கள் இப்பொழுது கூர்ந்து கவனிக்கும் பொழுது… கருவிழி ருக்மணி “ஊழ் வினை” என்ற வித்தாக உங்கள் நெஞ்சின் எலும்புக்குள் பதிவாக்குகிறது.

பதிவாக்கிய பின் கண்ணின் காந்தப் புலனறிவு அதைக் கவர்ந்து அதன் அறிவாக இயக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி மீண்டும் உயிரிலே படும் பொழுது அந்த உணர்வுகள் உணர்ச்சியாக இயக்குகின்றது

இந்த உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அதை நுகர்ந்தோர் உணர்வுகளையும் அதே உணர்ச்சிகள் இயக்கத் தொடங்குகிறது. இதை நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

அதன் வழியிலே தான் அந்த அருள் ஞான வித்தாக உங்களுக்குள் உருவாக்குகின்றேன். எனக்கு குருநாதர் எப்படி உருவாக்கினார்களோ அந்த ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்கி அதை உருவாக்குகின்றேன்.

நமது குருநாதர் காட்டிய வழியில்
1.துருவ தியானத்தில் அதற்குண்டான சத்தைக் கூட்டிக் கொண்டே வந்தால்
2.அருள் ஞானச் சொத்தாக அது உங்களுக்குள் வளர்ந்து கொண்டே வரும்.

அகஸ்தியன் எப்படிப் பெற்றானோ அதே மாதிரி நாமும் இருளை நீக்கி உணர்வுகளை ஒளியாக மாற்ற முடியும் அதற்குத்தான் அருள் ஞான வித்தைக் கருவிழி ருக்மணி மூலம் பதிவாக்குகின்றேன்.
1.நான் (ஞானகுரு) சொன்ன அருள் ஞான உணர்வுகள் இங்கே படர்கிறது.
2.உங்களுக்குள் பதிவாகின்றது… அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது.

உபதேசக் கருத்துக்களை உற்று நோக்கி ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்

 

மனிதன் தன் எண்ணத்தின் வலிமை கொண்டு ஆயிரம் டன் எடையுள்ள இராக்கெட்டை விண்ணிலே அனுப்புகின்றான். எண்ணத்தின் வலிமை கொண்டு அண்டத்தை அறிகின்றான்… அதன் உணர்வின் இயக்கத்தை அறிகின்றான் விஞ்ஞான அறிவு கொண்டு.

ஆனால்
1.அன்று மெய் ஞானி அலஸ்தியன் தன் உணர்வின் தன்மை பதிவாகி அகண்ட அண்டத்தில் எண்ணத்தை வீசினான்.
2.அதன் உணர்வைத் தன் உடலுக்குள் கவர்ந்தான். அதன் உணர்வின் அறிவினைக் கண்டான்
3.தீமைகளை அகற்றும் வழியும் கண்டான் அகஸ்தியன்.

அவன் பெற்ற உணர்வின் தன்மை அவனில் விளைந்த உணர்வுகள் இன்றும் நம் பூமியில் கலந்தே உள்ளது. அதை நாம் எளிதில் பெற முடியும்.

1.இப்போது உங்களுக்குள் செவி வழி இந்த உணர்ச்சிகளைத் தூண்டும் படி செய்து
2.சொல்லும் உணர்வைக் கண் வழி ஈர்த்து மூக்கு வழி சுவாசித்து
3.உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
4.உணர்ச்சியின் தன்மை அமைதி கொண்டு பார்த்துத் தனக்குள் சேர்க்கச் செய்கின்றது.

ஆனால் உபதேசிக்கும் பொழுது வீட்டுக்குப் போக வேண்டும்… தொழிலுக்கு நேரமாகிவிட்டது அங்கே சொல்லாமல் வந்து விட்டேன்… என்று நினைவினைக் கூட்டினால் இங்கே உபதேசிக்கும் உணர்வுகள் அவர்களுக்கு உபயோகமாகாது.

உணர்வின் நிலை எதுவோ அங்கே அழைத்துச் சென்று அந்த வாழ்க்கையின் நிலையையே ஊட்டும். “வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் ஆற்றலைப் பெறுவது மிகவும் கடினம்…”

உற்று நோக்கிய உணர்வின் தன்மை எதைப் பெறுகின்றோமோ அதன் நிலையே பெறுகின்றது. ஆகவே
1.யாம் உபதேசிக்கும் போது கண்களால் உற்று நோக்கி
2.உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

அதற்குப் பின்… கண்ணின் நினைவை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்த அருள் சக்திகளைப் பெருக்கி இரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைக் கண் வழி கலக்கச் செய்து ஜீவான்மா ஜீவணுக்களைப் பெறச் செய்தல் வேண்டும்.

கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…!

1.கண்கள் ஊடுருவி அந்த உணர்வலைகளைக் கொண்டு வருகின்றது.
2.கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தப்படும் பொழுது எட்டா தூரத்தில் இருந்தாலும்
3.அதிலிருந்து வரும் உணர்வை நம்மை நுகரும்படி செய்கின்றது.

அந்த உணர்வலைகளை உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது உணர்வுகளை அதற்குள் செலுத்துகின்றது.

நோயாளியை உற்றுப் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்தால் இரத்த நாளங்களிலே அது கலந்து சுழன்று அணுக்கள் பெறாது தடைப்படுத்த
1.இந்த வழியில் அருள் ஒளியை நாம் நுகர்ந்து
2.நேரடியாகக் கண்ணின் நினைவு கொண்டு உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை உந்தி விட்டால்
3.இந்த வலிமை கொண்ட பின் தீமை என்ற உணர்வை நுகராது தடுக்கும்.

அதே சமயத்தில் கிட்னி ரத்தத்தைச் சுத்திகரிக்கும் சக்தி பெற்றது விஷத்தன்மைகள் அதிலே பட்டால் கிட்னி சீராக இயங்கவில்லை என்றால் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் நிலை இழந்து விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் வலிமை பெறுகின்றது.
1.தீமை என்ற நிலை வராது உடனடியாக தடுத்து நிறுத்தப்படுகின்றது.
2.கிட்னி சீராக இயங்குகின்றது.

அதே சமயத்தில்… கல்லீரல் நுரையீரல் உணர்ச்சியின் வேகத்துடிப்பானால் விஷத்தின் உணர்வுகளை உந்தினால் உறுப்புகள் சுருங்கி வேதனைப்படும் நிலை வரும்.

அத்தகைய வேதனையை உருவாக்கும் முன் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அருள் ஒளி என்ற உணர்வினைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைந்து அந்த உறுப்புகளைத் தாக்காதபடி இந்த உணர்வுகள் பாதுகாத்துக் கொள்ளும்.

இந்த உணர்வை உடலுக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால் பேர்ருள் பேரொளியின் அலைகளாக மாறுகின்றது. தீமை வரும் பொழுது அந்த இருளை மாய்க்கின்றது.

இந்த வழியில் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று தான்
1.இயற்கையின் உண்மை நிலைகளைக் கண்டுணர்ந்த அகஸ்தியர் தன் இனத்தை வளர்க்கும் முறையை நமக்கு வகுத்துக் கொடுத்தார்.
2.அதை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம்

 

அதீத செயல்பாடுகள் சக்தியின் வளர்ப்பாகக் கண்டு கொண்ட மகரிஷிகள் சரீரத்தினுள் அந்தச் செயல்பாட்டை அறிந்து கொண்டு… (தெய்வ குணங்களை) ஒவ்வொரு நிலையாகச் செயல்பாடுகள் கலைகளாய்… அவைகள் செயலுறும் நாதவிந்துவாக தெய்வீக உருவங்களாகப் பெயர் நாமப்படுத்தி… விநாயகர் சிவன் சக்தி கந்தன் என்று சூட்சுமப்படுத்தி அருளினார்கள்.

நாத விந்துகள் கலைகள் செயல் கொண்டிடும் நிலைகளும் நாவின் அடிப்பாகம் பிரணவம் (உமிழ் நீர் சுரக்கும் இடம்) என்று செப்பிய சூட்சும நிலைகளின் அகழ்வுகள்… நாவின்படி தொடங்கி தொண்டைப் பகுதியினுள் செயல்படும் ஆகாய இருள் மாயை.

1.உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை என்றுமே அணைந்திடாத அக்கினிக் குண்டம் உண்டு (சுவாசம் உள் சென்று வெளி வரும் போது சூடாக இருக்கிறதல்லவா)
2.ஈஸ்வர ஜோதி எனும் சிவத்தை அறிந்து கொண்டிடும் ஜீவன்களுக்கு அந்த நிலை தமக்குள் உணர்த்தும்
3.உயிராத்ம சக்தியின் வலுவாக்கும் செயலுக்கு தெய்வீக வடிவ நீல வண்ணம் காட்டி
4.உயிர் ஆத்மா (உயிரும் அதனுடன் ஒன்றும் ஒளியான உணர்வுகளும்) ஐக்கிய நிலையே “சீதை அக்கினி குண்டத்தில் இறங்கினாள்…” என்று
5.சூட்சும சொல்லால் பொருள் காட்டி உரைத்தாரப்பா வான்மீகி மாமகரிஷி.

தட்டாது ஒதுக்கும் நிலையே நமக்கு வேண்டியது.

வேதாள மாமகரிஷி உலகியல் தன்மையில் “தேகி” எங்ஙனம் செயல் கொள்வார்…? என்றே நயம்பட உரைத்த உரை… கட்புலன்களால் (கண் பார்வை) பௌதீக மாயப் பொருள்கள் அனைத்தையும் ஒளி கொண்டு நோக்கி அறிதலும்… அறிந்ததை அறிந்ததாகப் பொருளின் குறிப்பைத் தெளிவாக உணர்தல் என்றே அறிந்த பின் தெளிந்து உணர்ந்து கொள்கின்றோம்.

அறிந்து கொண்ட செயலை நடைமுறைப்படுத்திடும் வழி வகைக்கே செயல் கொண்டாலும்
1.கட்டுப்படாத தன்மைகளையும் அதே உணர்வின் எண்ணம் உணர்த்தியும் தெளிதல் போல்
2.அந்த நிலையிலும்… ஈர்த்துக் கொண்டிட்ட வாசனைக்கொப்ப அறிந்திடாத் தன்மைகளும் செயல்கொள்ளும் விதத்தை
3.மேலாம் அறிவு உரைத்த நன்மைதனை நாளும் பொருள் விளக்கம் பெறுவது எப்படி…?

கடும் மழைக்காலத்தில் புள்ளினங்கள் (பறவைகள்) மழை நீரால் நனைந்து “குளிர் தன்மையாக விதிர்விதிர்ப்ப” அந்தப் பறவை இனங்கள் சிலிர்த்துச் சிறகினை வீசி அத்தன்மை படாது ஒதுக்கும்.

அதைப் போல்
1.எந்த நிலையாகினும் அந்நிலையின் அலைகள் நம்மைச் சாடிடாத வண்ணம்
2.புள்ளினங்கள் தன் மீது படாது ஒதுக்குவதைப் போல் ஞானச் செல்வங்கள் பிரகாசித்திடும் விழிப்பார்வையின்
3.சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம் மறைபொருளாகக் குளிர்ந்து எழுந்த குளிர்கனல் மேல் நிலை காட்டும்.

அவ்வாறு ஈர்த்துக் கொண்டிடும் உயிர் சக்தி… ஆத்ம நிலைக்கே ஊட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் எந்தெந்த வழிகளில் எல்லாவற்றையும் தெரிந்து இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு (ஞானகுரு) அது தெரியவில்லை என்றாலும் அறிய வைக்கின்றார்.

குருநாதர் டெலிஃபோன் கம்பத்தை அடிப்பார்… எலக்ட்ரிக் கம்பத்தை அடிப்பார். அடித்த உடனே
1.இந்த லயன் அந்த லயன்…
2.இந்த லயன் இந்த லைன்…! என்று சொல்லிக் கொண்டே வருவார்.

இப்படி என்னத்தைக் கிரகத்தைச் சொல்லுகின்றாரோ…! பைத்தியம் போன்று பேசிக் கொண்டிருக்கின்றார்…! என்று நான் (ஞானகுரு) நினைப்பேன். அவர் சொல்வது ஒன்றும் புரியாது.

டேய்… மிளகாய் ஒரு லட்சம்…! கோடி… கோடி… என்று சொல்வார். அவர் எல்லா பாஷைகளும் பேசுவார்.

நான் என்ன சொல்வேன்…? கோடி (கோழி) இங்கே இருக்கிறது சாமி…! என்பேன் (தெலுங்கிலே).

அந்தக் கோடி இல்லைடா… “ஈகோடி” என்பார். மிளகாய் கோடி… அந்தக் கோடி… காரம் கோடி… அது… இது… என்று என்னென்னமோ கோடி… கோடி… என்று சொல்வார். எனக்கு அர்த்தம் புரிய மாட்டேன் என்கிறது.

இந்த லைன் அந்த லயன் அந்த லயன் அந்த லைன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். அர்த்தமே புரியாது…!

அப்புறம் அந்த உணர்வுகளை எல்லாம் சொன்ன பிற்பாடு…
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று கலந்து
1.உணர்வுகள் எத்தனை கோடியாக மாறுகின்றது…?
2.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது…?
3.எதன் செயலை மாற்றுகின்றது…? – அப்படி என்றால் அந்த லயன்…!

அதாவது நட்சத்திரத்திலிருந்து மின்னலாகப் பாயும் பொழுது
1.இந்த உணர்வுகள் எதனுடன் எப்படிச் சேர்கின்றது…?
2.உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையை உள் உணர்விலே அதை உணர்த்துகின்றார்.

முதலிலே சொல்லிவிடுவார்… பின் புரிய வைப்பார்.

அதே போன்று தான் உங்களிடம் இதைச் சொல்லிப் புரிய வைக்கின்றேன் குருநாதர் எனக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதே போல உங்களிடமும் அதைப் பதிவு செய்கின்றேன்.

சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லாம் இந்த நினைவுகள் உங்களுக்கு வரும்.

காரணம்… தீமைகளை அகற்றக் கூடிய சக்தி உங்களுக்குள் வளர வேண்டும். இந்த உலகம் விஷத்தன்மையாகப் பரவும் நேரத்திலே விஞ்ஞானத்தால் வந்த விஷத்தை வெல்லக்கூடிய சக்தியை நீங்கள் பெற வேண்டும்.

உங்கள் மூச்சு பிறரைக் காக்கும் சக்தியாகப் பரவ வேண்டும் என்பதற்குத்தான் இந்த நேரத்திலே இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை… குருநாதருடைய உணர்வு தான் பேசுகின்றது.
2.அந்த உணர்வு தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றது.

இதை நிலை நிறுத்தி அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களையும் நீங்கள் காக்கின்றீர்கள்… இந்த நாட்டையும் காக்கின்றீர்கள்… மக்களையும் காக்கின்றீர்கள்… இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்.

இப்படிப் பல முறை லயன் லயன் லயன் என்று புரியாத உணர்வுகளைச் சொல்லிச் சொல்லித் தான் குருநாதர் கண்டுணர்ந்த எல்லாவற்றையும் என் உடலுக்குள்ளே பதிவு செய்தார்.

குரு வழியில் நான் எதை எதைப் பதிவு செய்தேனோ அதை மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.
1.பதிவு செய்ததை நினைவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் எண்ணினால்
2.குருநாதர் எனக்கு உணர்த்தியது அனைத்தும் உங்களுக்குள் நிச்சயம் வரும்… வளரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் பழனியில் ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது என்ன செய்தார்…?

டாக்டரிடம் போய் “நோயாளிகள் எல்லோரும் குணமாக வேண்டும், இல்லையென்றால் சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுவேன்” என்று சொல்லி சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வாடா…! என்று என்னிடம் (ஞானகுரு) சொல்கிறார் குருநாதர்.

நான் போய்விட்டு வந்தேன். என்னை “உள்ளே வராதே” என்று டாக்டர் சொல்லிவிட்டார் என்றேன்.

குருநாதர் என்ன சொல்கிறார். “ஏண்டா.. நீ அங்கே போகவே இல்லை.. என்னிடம் பொய் சொல்கிறாய். போய் நிஜமாகவே சொல்லிக் கொடுத்துவிட்டு வா என்கிறார்.

இவர் சொல்கிற வார்த்தையெல்லாம் அங்கே சொன்னால் என்ன செய்வார்கள்…? நீ டாக்டரா… நான் டாக்டரா…? என்று கேட்கிறார்கள்.

ஆனால்“நான் எல்லா சக்தியையும் பெற்றிருக்கின்றேன்” என்று டாக்டரிடம் போய்ச் சொல்லுடா…! என்கிறார் குருநாதர்.

ஐயோ… அவர் செய்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியெல்லாம் சொல்லி அடுத்து என்ன செய்தார்…?

1.நீ போய் அவனுக்கு லெட்டர் எழுதிப் போடுடா.
2.லெட்டர் எழுதிப் போட்டு போஸ்ட் ஆபீசில் கொண்டு போய் போடு.
3.உடனே எல்லோருக்கும் நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி ஆண்டவனுக்கு எழுதிப் போடுடா என்கிறார்.

யார்..? ஆண்டவனுக்கு.

சாமி… விலாசம்…? என்று கேட்டேன்.

எழுதுடா… “ஆண்டவன்” என்று எழுதிப் போஸ்ட் ஆஃபீஸில் கொண்டு போய்ப் போடு…! என்று என்னை எழுதச் சொல்லிப் போடச் சொல்கிறார் குருநாதர்.

இந்த மாதிரி பெரிய கூத்தெல்லாம் பண்ணுவார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அப்புறம் விளக்கமெல்லாம் கொடுப்பார்.

உன்னை ஆள்பவன் யார்…? உன் உயிர் தான்.

“அவனிடத்தில் நீ சொல்லுடா…”
1.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நீ எண்ணு
2.உன் இருள் போக வேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நீ நினைத்து எழுது.
4.அங்கே எண்ணித்தான் நீ எழுதுகிறாய்.

இந்த லெட்டர் என்ன செய்யும்…? நீ போடு.

ஆக உனக்குள் அந்த அருள் சக்தி வருகின்றது. அதே சமயத்தில் அவர்களும் அங்கே அந்த அருள் சக்தி பெறுகின்றார்கள்.

இப்படியெல்லாம் சுருக்கமாக அந்த இயற்கையின் நிலைகளை
1.உயிரின் இயக்க நிலைகளை
2.எனக்குப் புரியும்படி செய்தார் நமது குருநாதர்.

வேறு ஒன்றும் வேண்டியதில்லை… “தியானம் இருப்பதற்கு பதில்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடல் நன்றாக ஆக வேண்டும் என்று எழுதிக் கொண்டிருந்தாலே போதும். இந்த உணர்வுகள் அங்கே பாயும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
2.உடல் நன்றாக வேண்டும் என்று இப்படி எழுதிக் கொண்டேயிருங்கள்.
3.அப்பொழுது அங்கே பாஸாகிக் கொண்டே இருக்கும்
4.உங்கள் எண்ணமே அந்த உணர்வாகும்… மற்ற எண்ணங்கள் கலப்பதில்லை.

என் உடல் நன்றாக வேண்டும். இந்த நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி நீங்கள் லெட்டர் எழுதுங்கள். அப்படி லெட்டர் எழுதும் பொழுது, ஆண்டவனை இங்கே (உங்கள் உயிருக்குள்) போய்ச் சேருகின்றது.

1.அந்த உணர்வை அங்கே சிந்தித்துத்தான் நீங்கள் எழுதுகின்றீர்கள்.
2.அந்த உணர்வு தான் இங்கே வருகிறது…. அந்த எழுத்து எல்லாம் இங்கே வருகின்றது.

இதையெல்லாம் அங்கே காட்டுவதற்காக குருநாதர் எமக்கு இப்படியெல்லாம் ஒரு வழியைக் காட்டினார்.

ஏனென்றால் இன்றிருக்கக்கூடிய விஷ உலகில் உங்களைக் காக்க “இருந்த இடத்திலிருந்து…” இந்தச் சக்திகளை நீங்கள் பெற முடியும். அந்த அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திர முகப்பு எல்லையில் நாம் இருக்கின்றோம்…!

 

விநாயகர் பக்கம் அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் வைத்துள்ளார்கள். அரச மரம் என்பது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரம் ஆனது… “அது அரசு…”

இந்தப் பிரபஞ்சத்திற்குள் வரும் அனைத்தையும் ஒளிச்சுடராக மாற்றி எத்தகைய இருளையும் வெல்லும் வல்லமை பெற்றது.
1.அதனை எந்த விஷமும் தாக்காது
2.அப்படித் தாக்கினால் அந்த விஷம் அதற்குள் ஒளியாக மாறும்.

விஷத்தின் தாக்குதலால் தான் சூரியனும் ஒளியாகின்றது விஷத்தின் தாக்குதலால் தான் உயிரும் துடிப்பாகின்றது… வெப்பமாகின்றது… உணர்வின் அறிவாக இயக்குகின்றது.

விஷம் இல்லை என்றால் இயக்கம் எதிலும் இல்லை. விஷம் இல்லை என்றால் ஒரு பொருளின் தன்மை உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டாது.

வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால்… விஷம் அதிகரித்தால் மனிதனை நினைவிழக்கச் செய்கின்றது. ஆக… உணர்வின் தன்மை எதைப் பகுந்து எடுக்கின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாக நமது உயிர் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்கினர் ஞானிகள்.

நீர் நிலை இருக்கும் பக்கம் வட மேற்காக விநாயகரை வைத்து வட கிழக்காக வணங்கும்படி செய்கின்றார்கள் காலையில் நான்கிலிருந்து ஆறுக்குள் உடல் அழுக்கைப் போக்கிவிட்டு
1.ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தினை எண்ணி… அந்தச் சக்தியைப் பெறும்படி செய்கின்றார்கள்.
2.துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை அதிகாலை உதயமாகும் சூரியன் கவர்கிறது.
3.காரணம் அதனுடைய கதிரியக்கங்கள் அதிலே படுகின்றது
4.அப்போது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாக இந்தப் பிரபஞ்சத்திற்குள் சுழலச் செய்கின்றது.
5.நாம் துருவத்தின் அதாவது துருவ நட்சத்திரத்தின் முகப்பு எல்லையில் இருப்பதால்
5.நமது பூமி கவரும் பொழுது துருவத்தின் வழியாக முதலில் நம்மிடம் கவர்ந்து வருகின்றது.
6.மனிதனாகத் தோன்றி உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற அந்த உணர்வுகள் பூமிக்குள் படர்ந்துள்ளது… பிரபஞ்சத்திலும் பரவி உள்ளது.

அதனை நுகரும் பருவம்… மனிதன் தன் எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்து அந்த உணர்வைப் பெறும் தகுதி ஏற்படுத்தும் நிலையாக… தீவினைகளை அகற்றும் அந்த வினையை நமக்குள் வினைக்கு நாயகனாக “கணங்களுக்கு அதிபதியாக்கும் முறையை” நமக்குத் தெளிவாக்கினார்கள்.

அதனை நாம் பின்பற்றினால் அருள் ஒளி பெறலாம் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றலாம்
1.அகஸ்தியன் கண்ட பாதையில் பேரருள் பேரொளி என்ற நிலையில் இங்கே வாழலாம்… பேரொளியாக மாற்றும் தன்மையும் பெறுகின்றோம்.
2.அதனைப் பெறச் செய்வதற்குத் தான் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதை நுகரும்படி நமக்கு வழிப்படுத்தினார்கள் அன்றைய ஞானிகள்.

“அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே” வழி நடத்திச் செல்கின்றனர் மகரிஷிகள்

 

விஸ்வேஸ்வர மாமகரிஷி அன்னபூரணியின் தாய்மை அருள் நெறியில் மகிழ்ந்து… தன் நிலையில் தான் இயங்கி… வானவியல் மண்டல கோள் அமைவு சூட்சமம்
1.“முக்கண் என்றே காட்டிடும் அக்ஷி நிலை கண்டு…” அனுபவித்து… மகிழ்ச்சியுடன் அளிக்க
2.”பிடரிக் கண்” சூட்சும நிலைதனை திருமூலர் மரபு தென்னாட்டிலே உரைக்க வந்தது.

ஒன்றிலிருந்து ஒன்று வளர்ப்பாக்கும் வளர்ச்சி நிலை பெறுவதைப் போல் உபதேசிக மூலகாரண நிலை ஒன்று (ஓவ்வொன்றுக்கும்) முன்பே உண்டு.

மறைபொருள் தன்மைகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலில்… உன்னுள் செயலுறுகின்ற ஆக்கம் ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் படைப்பின் படைப்பு என உத்வேக ஊர்த்துவம்… (மேல் நோக்கிய) உயர்வெண்ணச் செயலில் “சிருஷ்டியின் எதிர்ச்சொல்லான… முக்தி…” என்ற பேரருள் சூட்சும நிலையைப் பெற்றிடலாம்.

யானை உண்டது விளாங்கனி. விளாங்கனியை உண்ணுகின்ற யானை தீனியின் செரிமானம் பிண்டி (எச்சம்) என்னும் கழிவாக வெளிப்படுத்துதலில்… வெளிப்படும் விளாங்கனியின் ஓட்டை உடைத்துப் பார்… அங்கே ஊண் இருப்பதில்லை.

இச்செயல் எப்படி நடந்தது…?

1.ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் சிருஷ்டியின் காரண மூலம்
2.ஈர்த்துக் கொண்டிடும் நல்லணுக்கள் வலுவின் வலு வீரியம் என்பைத் (எலும்பை) துளைக்கும் ஒளி என்ற காரியம் பற்றியே
3.தன்னுள் உட்கொண்ட விளாங்கனியைச் செரிமானப்படுத்தும் தன்மையில்
4.அந்தக் கனியில் ஓர் சிருஷ்டியே யானை ஈர்த்திடும் வீரியத் தொடர்பாக
5.கனிக்குள் அணுக்கள் தோன்றி அந்தக் கனியை உண்டு விளத்தின் ஓட்டுடன் ஐக்கியப்படுத்துகின்றன.

சிருஷ்டியின் ஓர் நிலை அங்கு செயலுற்று வெளிவரும் அக்கனி சூரியனின் வெப்ப சக்தி கொண்டு “உருவான உயிரணுக்கள்” மண் தன்மையினுள் கலந்து பிருத்வி (பூமிக்குள்) கண்டு அண்டத்தில் நுழைகின்றன.

ஒளிமார்க்கச் செயலில் நாம் செயல்பட வேண்டியது எப்படி…?

மகரிஷிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒளி மண்டல ஒளி அணுக்களாகச் செயல் கொண்டு
1.மனித வித்துக்களை வளர்ப்பின் பயிர் பலனாக்கும் சிருஷ்டியையே
2.ஊர்த்துவ நிலையால் முக்தி என்ற பெயர் நாமத்தில் அழைத்திடும்
3.அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே வழி நடத்திச் செல்கின்றனர்.

அந்த மகரிஷிகள் நடத்துகின்ற செயலில் தேகம் கண்டு கொண்ட தேகி… “தன்னுள்ளேதான் தலைமை எது…?” என்று அறிதல் வேண்டும்.

உயிர் அணுக்களின் தலைமை ஒளி தானப்பா…!

அந்த நிலையை உணர்ந்து செயல்படுகின்ற ஒவ்வொருவரும் சூட்சுமத்தில் வழி நடத்திடும் ஒளி அன்பர்களின்… குரு பரம்பரை வழி வரும் சீடர்களப்பா. அந்தச் சீடர்களே கனகம் (பொன்னான உரையை) உரைப்பவர்கள்.

கார்காலம் மிகுந்து விடுகின்றது. வீட்டின் முற்றத்தில் பாதுகாப்பு என மனிதன் இட்ட மணல் மேட்டினையே மழை நீர் கரைத்து விடுகின்றது. மணல் கரைத்த விசுப்பதன் (வேகமாக வரும்) நீர்… மனைக்குள் உள்ளே வராது இருக்க வழி காணல் வேண்டும் என்று உரைத்தவரப்பா வேதாள மாமகரிஷி.

“முறைகோலுகின்ற வழியது காண்” என்று ஆணையிட்டே உரைத்த உரை பொருள் அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி… அதைக் கடைபிடித்திடும் நல் பாக்கியத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

எந்த நிலையிலும் இந்த நிலையை அறுதியிட்டு
1.உறுதியாகக் கடைப்பிடிக்கின்ற ஞானச் செல்வங்கள் மனக்கோளம் உருப்பெறும் கோளமாக அமைவுற்று
2.படைப்பின் படைப்பாக்கும் செயல் திறத்தினை வலுக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாற்றி அமைக்கும் சக்தி பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு. ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்…?

வாஸ்து சாஸ்திரத்தைப் பார்க்கின்றோம்… ஜோதிடம் பார்க்கின்றோம்.. நல்ல நேரம் வந்ததா…? கெட்ட நேரம் வந்ததா…? என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

தவறாக நினைக்காதீர்கள்… நம்மை அறியாது எந்தெந்த அளவுக்கெல்லாம் நம்மை இழுத்துச் சென்று இருக்கின்றது…? என்று கவனித்துப் பார்த்தால் தெரியும்.

“வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர்கள்…”
1.உங்கள் வீட்டு வாசல் கொஞ்சம் ஒதுங்கி இருக்கின்றது
2.இதை இடித்துவிட்டு “வாஸ்துப்படி…” நேராக இப்படி வையுங்கள் என்பார்கள்.
3.கஷ்டம் வந்ததற்கு காரணமே இதுதான்…! ஆகவே கட்டிடத்தை இடித்து விட்டு இப்படி மாற்றி வையுங்கள் என்று
4.அவர்கள் சொல்வதைக் கேட்டுச் செயல்படுத்துவோம். ஒரு ஓரத்தில் கொஞ்சம் இப்படி மாற்றினாலே… மறைத்து விட்டால் அது நல்லது என்பார்கள்.

அவர் சொல்வதை எல்லாம் நாம் பதிவு செய்து கொள்கின்றோம். அதை ஏற்றுக் கொள்கின்றோம். காசைச் செலவழித்து எல்லாவற்றையும் செய்து வைக்கின்றோம். “இது தான் வாஸ்து சாஸ்திரம்…”

ஆனால் அதற்கு பின் என்ன நடக்கிறது…?

குடும்பத்தில் குழந்தைகள்… உடன் பிறந்தவர்கள் என்று ஏழு பேர் எட்டுப் பேர் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் அன்பாகப் பண்பாக உதவி செய்பவர்கள் தான் நாம்.

இருந்தாலும் சந்தர்ப்பம்… ரோட்டிலே நடந்து செல்கிறோம். அப்பொழுது ஒரு விபத்தாகி ஒரு வாகனம் வேறொருவர் மீது ஏறி விடுகின்றது.

பார்த்த்தும் “ஆ….ஆ…” என்று அலறி விடுகின்றோம். அதனால் பிரமை பிடித்த மாதிரி ஆகி விடுகின்றது. பிரமையானால் என்ன ஆகும்…?
1.இந்த அழுத்தம் கவன நரம்புகளை வீங்கச் செய்து விடுகின்றது.
2.விரிவடைந்த பின் அது பழையபடி அடங்குவதில்லை.

இதைச் சரி செய்ய எத்தனையோ வைத்தியங்கள் நாம் பார்க்கின்றோம் ஆனால் மற்றவர்கள் பாசமாக இருப்பவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். ஐயோ… என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே… பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே… அல்லது என் தம்பிக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று எல்லோரும் எண்ணுவார்கள்.

தொழில் செய்யும் நிலைகளில் தான் இந்தக் குடும்பம் இருக்கின்றது. இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சிக்குப் பின் தொழிலைச் சரியாக அல்லது சீராகக் கவனிக்க முடியுமா…?

இல்லை.

சங்கடமான உணர்வுகள் இங்கே பரவப்படும் பொழுது நன்றாக இருந்த வியாபாரம் இந்தச் சங்கடத்தினால் மந்தமாகும். உடனே நாம் என்ன நினைப்போம்…?

கெட்ட காலம் வாருங்கள்…! ஒரு விபத்து ஆனது எல்லாம் இப்படி ஆகிவிட்டது. வரிசையிலே இப்படியே தொழில் எல்லாம் கெட ஆரம்பிக்கும்.

கஷ்டமாக இருக்கும் அந்தச் சூழ்நிலையில் நாம் கடன் கொடுத்தவர்களிடம் கூடப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பா…! என்று கேட்டால் நான் தான் தருகிறேன் என்று சொன்னேனே அதற்குள் என்ன…? என்பார்கள்.
1.இல்லை… இங்கே குடும்பத்தில் நோயாகி விட்டது என்று சொன்னால்…
2.எங்களுக்கும் தெரியும்…! பணம் வந்தால் தானே கொடுக்க முடியும்…! என்று அந்த நேரத்திலே “எதிர்ப்புகள்…” வரும்.

அப்போது இந்த வாஸ்து சாஸ்திரம் எங்கே போகும்…?

ஆனால் இந்தக் குடும்பம் முதலிலே நன்றாக இருந்தது தான். ஆனால் இது போன்று சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதனால் குடும்பத்தில் தொழில் நஷ்டம் எல்லாம் வந்து விடுகின்றது.

வாஸ்து சாஸ்திரம் செய்த பின் இப்படி வந்தால் இதையெல்லாம் யார் சரி செய்வது…? அந்தச் சாஸ்திரம் நமக்கு உதவி செய்யுமா…?

ஆகவே… திருத்தி அமைக்க வேண்டும் என்றால் எப்படி…?

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு அதிர்ச்சியான நிகழ்வு வந்தால் அதை மாற்றிடும் நிலையாக எப்படிச் செயல்பட வேண்டும்… என்ற நிலையில் அதிர்ச்சியை மாற்றி அமைக்கும் “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றால்” இந்த நிலை வராது.

அதை விட்டு விட்டு வீட்டின் வாசல் தெற்கே இருக்கின்றது… வடக்கே இருக்கின்றது… என்று துருவத்தைப் பார்த்து எத்தனையோ சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லை.

1.ஏனென்றால் நமக்குத் துருவம் (திசை) நாம் சுவாசிப்பது (வாசி – வாஸ்து) தான்
2.அதன் வழி நுகரப்படும் பொழுது அத வழிதான் இந்த வாழ்க்கையில் எல்லாமே செயல்படுத்துகின்றது.
3.அதை (சுவாசிப்பதை) எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பது தான் முக்கியம்…!

நியூமராலஜி என்று அதையும் சொல்வார்கள். கடையில் நஷ்டமாகின்றது குடும்பத்தில் சிக்கல் வருகிறது என்றால் உங்கள் பெயரில் உள்ள எழுத்தை இப்படி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்… இது இராசியாக இருக்கும் என்பார்கள்.

அவர் சொல்வதை நம்பிச் செய்தால் நான்கு நாளைக்கு நன்றாக இருக்கும். இப்போது பரவாயில்லையா…? என்று கேட்பார்கள்

அடுத்தாற்போல்
1.நண்பர்கள் யாராவது சங்கடப்பட்டு வந்தால் இந்த உணர்வுகளை நுகர்ந்த பின்
2.கடை சரியாக நடக்கவில்லை என்றால் இந்த நியூமராலஜி எங்கே செல்லும்…?

இது எல்லாம் மனிதர்கள் நமக்கு நாமே ஏமாற்றிக் கொள்கின்றோம் என்று தான் அர்த்தமே தவிர
1.இயற்கையின் உண்மையிலிருந்து
2.நாம் தப்ப முடியாத நிலைகள் கொண்டு தான் வாழ்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் படர்ந்துள்ளது. அதை எடுத்து நான் (ஞானகுரு) மட்டும் பேசுவதில்லை
1.நீங்கள் எல்லாம் அதைத் தெரிந்து கொள்ள முடியும்… “தெரிந்து கொள்ள வேண்டும்”
2.தெரிந்தால் தான் இந்த நாட்டையும் மக்களையும் விஞ்ஞானத்தின் விஷத்தன்மையிலிருந்து காக்க முடியும்
3.காலத்தால் மறைந்து விட்டது… மறைந்த நிலைகளை மீண்டும் கொண்டு வந்து நாம் தப்ப வேண்டும்.

காரணம் சூரியன் அழியும் தருணம் வந்துவிட்டது… சூரியன் அழிவதற்கு முன் பூமிக்குள் உயிரினங்களில் மாற்றங்கள் அதிகரிக்கும்.

மனிதர்களாக இருக்கும் நாம் இன்று நல்ல நினைவு இருக்கும் பொழுதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டு… உடலை விட்டுச் செல்லும் போது பிறவியில்லா நிலை அடைந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைய வேண்டும்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும். நமது குரு உயர்ந்த உணர்வைப் பெற்றார். அந்த இனம் வளர வேண்டும் என்று எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.
1.அதே குருவின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.குரு வழியில் அருள் ஒளியை நாம் எல்லாம் சேர்க்கப்படும் பொழுது இது பெரும் கூட்டமைப்பாக மாறுகின்றது.

மனித உருவாக ஆன பின் அடுத்து அந்த இறந்த உடலைப் புதைத்தால் அது கரைக்கப்படுகின்றது மீண்டும் மற்றொன்றுக்குத் தான் அது இரையாகின்றது.

அது போல் தான் நம் சூரியனும் தன் செயலை இழந்தால் கரைந்து விடும். மற்றதுக்கு இரையாகிவிடும்.

ஏனென்றால் நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் தனித்தனியாக… ஒவ்வொரு சூரியக் குடும்பமாக மாறிக் கொண்டிருக்கின்றது. கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது. மற்ற ஏனைய நட்சத்திரங்களும் இவ்வாறு சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

நம் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கின்றது. அதனால் இது முதுமை அடைந்து விட்டது.
1.27 நட்சத்திரங்களுக்குள் சரி பகுதி தனிச் சூரியக் குடும்பமாக மாறிவிட்டால் நம் சூரியனுக்கு இரையில்லை.
2.அப்போது சுழற்சியின் தன்மை சூரியனின் ஈர்ப்பு வட்டம் குறையும்.
3.இந்த ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய நமது பூமியோ அந்தச் சுழலுக்குள் சென்று இதுவும் கரைந்துவிடும்… ஆவியாக மாறும்.
4.27 நட்சத்திரங்களும் சூரியக் குடும்பமாக உருவான நிலைகளுக்குள் இது உணவாகி இதுவும் மாறிவிடும்

2000 சூரியக் குடும்பங்கள் சேர்ந்து ஓர் குடும்பமாக மாறுகின்றது. நமது பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் 27 சூரிய குடும்பமாக மாறினால் இது ஒரு அண்டமாகின்றது… பேரண்டமாகிறது.

இதைப் போன்று வளர்ச்சியின் நிலைகள் மாறி மாறித்தான் தனது பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளர்ந்து வந்தது.

இதை எல்லாம் நான் வெறுமனே சொல்லவில்லை. படிக்காதவன் தான் இதைச் சொல்கின்றேன். படித்திருந்தால் தப்பாகத் தான் சொல்லி இருப்பேன் என்று நினைக்கின்றேன்.

குருநாதர் கொடுத்த அருள் உணர்வின் தன்மையை நினைவு கொண்டு வளர்த்துக் கொண்டேன். வளர்த்துக் கொண்ட உணர்வுகளைத் தான் இங்கே உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.பதிவு செய்தை எண்ணி அந்த உணர்வுகளை நுகர்ந்து நீங்களும் அண்டத்தை அறிய முடியும்
2.உடலான பிண்டத்திற்குள் வளர்க்கவும் செய்யலாம்.

உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும் அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).

நன்மை செய்வதை… நாம் நிலையானதாக இருக்கச் செய்ய வேண்டுமல்லவா…!

 

நமது கண்கள் நமக்கு நல்ல முறையில் உதவி செய்கின்றது… நம்மைப் பாதுகாக்கின்றது. அதற்குப் பெயர் இடையன் என்று வைத்துள்ளார்கள்.

ரோட்டிலே செல்கின்றோம். எதிரிலே எதிர்பாராது ஒரு மாடு மிரண்டு வருகின்றது. கண்ணின் கருவிழி அந்த மாட்டினை நமக்குள் பதிவாக்கி விடுகின்றது ருக்மணி.

மாடு மிரண்டு வரும் வேகத்தினை… அந்த உணர்வு வெளிப்படுவதைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்கிறது. அதன் உணர்வை நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ கவர்கின்றது… நம்மை நுகரச் செய்கின்றது.

இந்த உணர்வுகள் மோதும் பொழுது அதனால் விபத்து ஏற்படும் என்ற உணர்வினைக் கூட்டிப் பாதுகாக்கும் உணர்வுகளைத் தூண்டி அந்த இடத்தை விட்டு நகரும்படி செய்கின்றது.

1.அப்பொழுது நம்மை மேய்ப்பது யார்…? நமது கண்களே…!
2.அந்தத் தீமையில் இருந்து விடுபட உணர்த்துகின்றது.
3.ஆனால் நமது உயிரோ அந்த உணர்வின் வலிமையை நமக்குள் அணுவாக உருவாக்கி விடுகின்றது.
4.அந்த அணுவை நாம் மாற்றும் திறன் வருதல் வேண்டும்.

ஈஸ்வரா…! என்று அடுத்த கணமே அந்தப் பயத்தால் நுகர்ந்த உணர்வு தனக்குள் அதிகரிக்காது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைக் கலந்து… இதை ஓம் நமச்சிவாய என்று நம் உடலாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

ஆனால் காக்கப்பட்டோம். இருந்தாலும்
1.பயத்தின் உணர்வு அந்த வேகத்தின் தன்மை அணுக்களாக விளைந்தால் உடலில் இருக்கக்கூடிய சாந்த குணங்கள் இதைக் கண்ட பின் நடுங்கும்.
2.உடலிலே அடிக்கடி பதட்ட நிலை வருவதைக் காணலாம். ஏன் பதறுகின்றோம்…? பதட்டம் வருவது ஏன்…? என்ற நிலையே நமக்குத் தெரியாது.
3.நுகர்ந்த உணர்வின் இயக்கம் நம் உயிர் அதை அணுவாக உருவாக்குகின்றது. அந்த உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றது.

இதைப் போன்ற கொடுமையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்தல் வேண்டும். நன்மைகள் பல செய்யத் துணிவானாலும் நன்மை செய்த துணிவின் தன்மை கொண்டு அருள் ஒளி என்ற பேரருளை நமக்குள் கூட்டி… “அந்த நன்மை செய்ததை நிலையானதாக்க வேண்டும்…”

தீமையைக் கண்டுணர்ந்து தான் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றோம். ஆனால்… அப்படிக் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத் தீமைகள் நமக்குள் உருப்பெறாது தடைப்படுத்த வேண்டும்.

அந்த வழியினைப் பெறச் செய்வதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அவ்வப்பொழுது எடுக்கும் பழக்கம் வருவதற்காக இங்கே பயிற்சி கொடுக்கின்றேன் (ஞானகுரு).

“ஊர்த்துவம்” – கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணிலே செலுத்துவது

 

மகான்கள் இறை (தன்னை) உணரும்படியாக வழி காட்டியதில் மூன்று உண்டு.
1.உருவம் கொண்டு அறியும்… வழிபடுகின்ற நெறி ஒன்று
2.உயிருதய கமலாயத்தில் ஜெபிக்கின்ற தியான வழி இரண்டு

“ஆரம்ப நிலை” தியான வழி ஞானச் செல்வங்கள் அறிந்து கொண்டது இந்த இரண்டு தான்……

உயர் நிலை என்னும் ஒளி நிலை பெற்ற மாமகரிஷிகள்… தம்மை எண்ணிடும் உருவம் கொண்ட ஜீவன்களை சதாக்கியமாக (சதா சர்வ காலத்திலும்) இயங்கி வழி நடத்துவர். (ஜீவன் என்றால் உயிர்)

அந்த ஒளி நிலையை உணர்ந்து கொண்டிடும் வழியாக அனுபவ ஞான லயமாக… சத்தியத்தின் சக்தியாக இங்கே போதனையாகத் தந்ததை,
1.எது பேருண்மை பொருந்திய நாத விந்துக் கலை என்ற முத்தொடரோ…
2.சூரிய சந்திர ஆத்ம ஒளி நிலையோ (காற்று நூல் – சுவாச நாடிகளின் இயக்கமாக)
3.அதனுள் சிவன் நடிக்கும் நடனம் ஜீவனுள் சிவமாக
4.ஈஸ்வர ஜோதியாக வளர வழிகாட்ட வந்த செயலில்… அதைப் பெற்று வழி காண முயல்வோர் முயலட்டும் (மூன்றாவது வழி)

பஞ்ச பூத ஒளிவண்ண ஈர்ப்பில் தேகம் பெறுகின்றவன் அப்படி மனிதன் எனும் குணச் செயலாக வந்துற்ற ஆத்மாக்கள் அனைவரும் “தேகி” (உயிருடன் ஒன்றுதல்) என்ற பெயர் நாமம் பூண்டு விட இயலாது.

சதா ஒலி அணுக்கள் அசைந்திடும் உராய்வின் ஒலி நாதமாக
1.வான இயல் தத்துவம் அறிந்து கொள்ள முயல்வோருக்கு
2.யாம் சுட்டிக் காட்டும் ஒளி மண்டல தியானமாக
3.சிரசின் உச்சியில் எண்ணி (புருவ மத்தி – பிடர் வழி) எடுத்திடும் ஞான திருஷ்டியின் நோக்கால் தன்னுள்ளே சகலத்தையும் காணலாம்.

ஒளி அணுக்கள் அசைந்திடும் ஒளி நுண் மின்காந்த அலைகள் போல்… தனக்குள்ளும் அசைந்திடும் ஒளி அணுக்களின் செயலைச் செயல் கொள்ள…
1.வான் தொடர்பாகக் கொண்டிடும் நினைவோட்ட ஒளி மார்க்க எண்ண அம்பு வீசிடும் செயலாக (கண்ணின் ஆண்டென்னா சக்தி)
2.குவியும் குவிப்பு ஆகாய ஒளி அணுக்களின் உராய்வில் தன் உயர்வு எண்ண அணுக்களும் உராய்ந்து
3.சகலமும் சகலமாகப் படர்ந்துள்ள பால்வெளியில் நிறைந்ததை… நிறைந்த பொருளை…
4.அறிந்ததை அறிவால் அறிந்துணர்ந்து ஈர்த்தலே “ஞானத்தின் திருஷ்டி நோக்கு…”

தேகம் கொண்டவன் தேகி என்று தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் பஞ்சபூதங்கள் அமைப்புப் பெற்ற தேகத்தில்… அந்தத் தேகத்தையே தாங்கிச் செயல் புரிந்திடும் ஜீவன் – தன்னுள் அமைவு கொண்டிட்ட ஒளியே ஆத்மா என்பது.

தேகத்தை உணர்ந்து கொண்டவருக்கு ஜீவனும் ஒளி தான். ஜீவனால் அமைவு கொண்ட ஆத்மா பேரானந்தப் பிரகாசம் தான்.

அதனுள் சிவ நடனம் காட்டிடும் ஜீவன் சிவன் கலந்த ஜீவஜோதியின் அசைவாம் நடனம் காட்டி அனுபவிக்கச் செய்திடும் செயலை எடுத்துரைக்க முடியுமோ…?

அகம் கனன்ற கனல் சிவ நடனம் கண்ட ஜீவன் தன்னை மாற்று நிலைத் தன்மைகள் நெருங்கிட முடிந்திடாது.

ஏன்…? என்ற வினா எழும்பலாம்

ஜீவன் அந்த மனப்பரியை (கட்டுக்கடங்காத எண்ண ஓட்டங்கள்) அடக்குகின்றதே…! கடினமான ஒரு பாட நிலை தான்.

மனம் கீழ் நிலைக்குச் சென்றிடும் பொழுது… விந்து நீக்கம் பெற்றே ஜீவனைச் சூழ்ந்து கொண்டிடும் துர்க்குணங்கள்… எண்ணத்தின் ஈர்ப்பலையாகத் தன்னைத்தான் கேடுறுத்தும் செயலை… “வேதாள மாமகரிஷி” உரைத்ததன் நிலை என்ன…?

யானைக்கு மதம் பிடிக்கின்றது அது தன் அகன்ற காதுகளை அசைத்து விரைந்து ஓடி வருகின்றது… கடுவாய் கொண்ட சிங்கமானது சீறிச் சினந்து ஓடி வருகின்றது.

அவைகள் கொண்டிட்ட வீரியத் தன்மைகள்… குணங்களில் கொடூரமும்… உணர்வையே மறக்கச் செய்திடும் ஆவேசமும்… எந்த நிலையாகினும்…
1.எரிகின்ற நெருப்பினைத் தன் அருகே கண்டு விட்டால்
2.உணர்வையே மறக்கச் செய்த தன் நிலையில்
3.உணர்வின் மாறுதல் கொண்டு அந்த இடத்தை நெருங்கிடாது.

நமக்கும் இதைப் போன்ற தீய குணங்களிலிருந்து மீண்டு பயணம் செய்திட ஒரு வாகனம் உண்டு.
1.அது “ஊர்த்துவம்” (மேல் நோக்கிய… அதாவது கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றி விண்ணிலே செலுத்துவது) என்ற பெயர் நாமத்தில்
2.விந்து ஒளி நிலையாக மேலெழும் செயலாக… சிரசினுள் நாத விந்துவாக விளங்கிட
3.மனப்புரவி (கல்கியின் உருவம்) என்றும் நீக்கமற உண்டு.

தான் தணலாக (நெருப்பாக) ஆகுங்கால் மாற்றொத்த நிலைத் தன்மைகள் (நஞ்சுகள்) நெருங்கிடாத் தன்மையாக… ஜீவன் சிவ நடனம் (பேரானந்தப் பெரு நிலை) காணும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் நஞ்சினை வென்றான் இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான். அவனில் விளைந்த உணர்வு இந்தப் பூமியில் படர்ந்துள்ளது.

அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வினைப் பெற நாம் ஏங்கித் தியானிப்போம். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்குங்கள்.

கண்களை மூடி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உயிரான ஈசனிடம் “இந்த உணர்வை இயக்குங்கள்… அதை நுகருங்கள்…”
2.நுகர்ந்த உணர்வை… அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் சக்தியை உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உயிர் உருவாக்கும்
3.ஓ… என்று ஜீவ அணுவாக உருவாக்கும் கருத்தன்மை அடையச் செய்யுங்கள்.

உங்கள் உடலுக்குள் அந்த அகஸ்தியனின் அணுக்கருக்கள் பெருகும். அணுக்களாக வளர்ச்சி பெற்ற பின் அகஸ்தியன் உணர்வுகளை உட்கொள்ளும் அந்த உணர்ச்சிகளை உந்தும்.

அப்போது அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகள் நீங்குகிறது… நஞ்சினை நீக்கி… இருளை அகற்றி… மெய்ப்பொருள் காணும் அந்த அருள் சக்தியைப் பெறும் தகுதி நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.அந்தப் பேரருளை உங்களுக்குள் உருவாக்குங்கள்
2.பேரொளி பெரும் கரு உலகமாக… உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
3.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைப் புருவ மத்தியிலே உணரலாம்.

ஒரு நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது… அந்த உணர்வுகள் “மின் கற்றைகளாக… மின்னல்களாக எப்படி வெளி வருகின்றதோ…” இதைப் போன்று உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி இருளினை அகற்றி உடலுக்குள் ஒளியின் நிலையாக உருவாகும்.

1.உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுக்கும்
2.இருளை அகற்றும் அருள் ஒளி என்ற உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே பெருகும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எடுக்க இப்படிப் பழகிக் கொள்ளுங்கள்.

“டக்… என்று அந்த ஞாபகம் வரும்… நோய் வராது தடுக்க முடியும்

இதற்கு முன்னாடி நோய்கள் இருந்தாலும் அடுத்தடுத்து வேதனை வரும் பொழுது இதைக் கலந்து எடுத்துக் கொண்டே வாருங்கள்.
1.நல்ல உணர்வுகளுக்குள் மற்ற கஷ்டம் என்ற உணர்வுகளைக் கேட்டறிந்த பின் அந்த நல்ல உணர்வை அது எப்படிக் கெடுக்கின்றதோ
2.அதே போன்று தீய உணர்வுகளை அழித்த அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொண்டு வாருங்கள்.
3.அந்த உணர்வுகள் மாறும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வரவேண்டும்… வாழ்க்கையில் வரும் நிலைகளை பற்றதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்று ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).

செவிகளில் கேட்கின்றீர்கள்… கூர்ந்து கவனிக்கின்றீர்கள்… நுகர்கின்றீர்கள் இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலில் அணுக் கருவாக மாறுகின்றது கருவானால் உங்களுக்குள் அது விளையத் தொடங்கும்.

உதாரணமாக…
1.கோழி அடைகாக்கத் தவறினால் அந்த முட்டை குஞ்சாகப் பொரிக்காது.
2.அது போல் தீமையான உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த எண்ணத்தை அங்கே இணைத்தால்
4.அந்த பேரருள் என்ற உணர்வின் தன்மை அணுத் தன்மையாக உங்களுக்குள் விளையும்
5.தீமைகள் விளையாது தடுக்கப்படுகிறது… உங்கள் எண்ணமே உங்களைக் காக்கும்.

தொடர்ந்து இதைச் செயல்படுத்துதல் வேண்டும். மனிதனான பின் பிறவி இல்லா நிலை தான் நாம் அடைதல் வேண்டும்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ…? பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? மின்னலைப் போல மறைவதைப் பாராய்…! ஏன்று குருநாதர் பாடியது போன்று
1.செல்வத்தை எவ்வளவு தேடிச் சென்றாலும்… அதன் வழி சம்பாரித்து வைத்திருந்தாலும்…
2.அந்தச் சொத்தைக் குழந்தைகள் சீராக அமைக்கின்றனரா…? பாதுகாக்க முடியவில்லை.
3.எத்தனையோ அரசுகளை அரசர்கள் ஆண்டார்கள்… சாம்ராஜ்யத்தை ஆண்ட அந்த அரசர்கள் இருக்கின்றார்களா…? அவருடைய சொத்துக்கள் இருக்கின்றதா… “இல்லை…”
4.இல்லாததற்கு நாம் ஏன் இந்த மன உறுதியைக் கொண்டு வர வேண்டும்…?
5.என்றும் நிலையானதாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

எப்படி அணுவாகிச் சூரியன் ஆனதோ பிரபஞ்சமான பின் உயிரணு ஆக ஆனால் அது என்றுமே அழிவதில்லை. தீயில் குதித்தால் உயிர் வேகுவதில்லை… உணர்வுகள் கருகுகின்றது.

எதிலும் அழியாத உயிரை… அந்த உயிரைப் போன்றே ஒளியான அணுக்களின் தன்மையாக நாம் பெருக்குதல் வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன் உன்னிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணிப் பாடலைப் பாடுகின்றோம்.

அதனின் உட்பொருளே…
1.“உயிரான ஈசன்” நீ எப்படி ஒளியாக இருந்து எல்லாவற்றையும் அறிவிக்கின்றாயோ…
2.இருளை அகற்றி நீ எப்படி என்றுமே ஒளியாக இருக்கின்றாயோ…
3.அதன் உணர்வாக என்னை நீ இயக்குதல் வேண்டும்.
4.அதன் வழியே நான் வாழ வேண்டும்…
5.பொருளறிந்து செயல்படும் தன்மை நான் பெற வேண்டும்
6.இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி எனக்கு வேண்டும்.

ஒளி பட்டால் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப்போல எனக்குள் இருளை நீக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும். ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலான சிவம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

உயிரால் இயக்கப்பட்ட நிலையும்… உணர்வால் என்னை உருவாக்கிய நிலையும்… மகிழ்ச்சி என்ற உணர்வின் சக்தியை நான் எண்ணும் பொழுது என் இசையில் நீ இயக்குகின்றாய்
1.என் நினைவில் நீ எப்பொழுதும் வர வேண்டும்.
2.”நீ இருக்கின்றாய்…” என்ற நிலையில் அந்தப் பயம் எனக்குள் வரவேண்டும்.
3.தவறு என்ற உணர்வு எனக்குள் வராது தடுத்து நிறுத்தும் அந்த ஆற்றல் பெற வேண்டும் ஈஸ்வரா.

என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா…! என்று உயிரே வேண்டுகிறோம்.

ஆனாலும்… அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கின்றோம்.
1.அந்த ஆசையினால் நமக்குள் தீமை என்ற உணர்வுகள் வந்து சேர்ந்து விடுகின்றது.
2.தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகிறோம்
3.இந்த உடலின் ஆசைதான் நமக்குள் வருகின்றது
4.”உயிரான ஈசன் இருக்கின்றான்…” என்ற நிலை மறந்துவிடுகின்றது.

வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் கடும் வேதனை உருவாகின்றது. அவனால் அமைக்கப்பட்ட இந்த உடலான கோவிலில் “அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர…” ஈசனான நிலையை நாம் வணங்க மறுக்கின்றோம். அவன் அறிவை நாம் தெளிவாக்கும் நிலையையும் இழந்து விடுகின்றோம்.

ஆகவே இந்த உடலின் இச்சைக்கு நாம் செல்லாதபடி அருள் ஒளி பெற்று இருளை அகற்றிடும் சக்தி பெற்று… உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும். இருளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

உயிர் எவ்வாறோ… நீ எப்படி இருக்கின்றாயோ என் உணர்வுகள் அனைத்தும் ஒளிமயமாக மாறுதல் வேண்டும்

தீமையைப் பிளக்கும் நரசிம்மா என்ற நிலையில் வரும் தீமைகளை மாற்றி விட்டால் கல்கி. இந்த உயிர் ஒளியாக உள்ளது. அதைப் போல் நம் உணர்வின் தன்மை பத்தாவது நிலை ஆகும் போது தான் கல்கி.
1.பூமியின் ஈர்ப்பை விடுத்து விண்ணுலகம் செல்கிறது…
2.எதுவுமே தன்னை ஈர்த்து விடாது பறந்து செல்கின்றது.
3.குதிரை மேல் பறந்து சென்று வாளை வீசித் தப்பிச் செல்வதாக உருவம் அமைத்து
4.அருவ நிலையில் நாம் உயர்ந்த சக்திகளை எப்படிப் பெற வேண்டும்…? என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

வான் வீதியில் தோன்றிய “உயிர்” மனிதனான பின் இனி பிறவி இல்லா நிலை அடைவது தான் கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் “துருவ நட்சத்திரம்…”

ஞான வித்து

 

பிறரின் நோயைப் பற்றி நாம் அறிந்து உதவி செய்தாலும் அந்த நோயின் அணுக்கள் நம் நல்ல குணத்துடன் இணைந்து அதைப் பாழாக்கிடாதபடி நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அதைத் தான் “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து உன் செயலை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…?” என்று காட்டுகின்றது தத்துவங்கள்.

நோயின் தன்மை உயிரான மூலாதாரத்தில் மோதுகின்றது. அந்த உணர்வினை அறிகின்றோம்.
1.அப்போது நாம் எதைச் செய்ய வேண்டும்…? நாம் நுகர வேண்டியது எது…?
2.அந்த தீமையைக் கண்டு நுகர்ந்த பின் நாம் செய்ய வேண்டிய பக்குவம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதைத்தான் இங்கே காட்டுகின்றார்கள்.

இதை வென்றவன் அருள் மகரிஷி துருவ நட்சத்திரம் என்பதை உணர்ந்து இருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்
1.ஏனென்றால் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது
2.இந்த விஷத்தின் தன்மை உடல் முழுவதும் பரவுகின்றது இரத்தத்தின் துணை கொண்டு.
3.இந்த உடலில் வளரும் நல்ல அணுக்கள் விஷத்தைக் கண்டபின் தன் உணர்வு கிடைக்காததனால் சோர்வடைகின்றது… நல்லதாக உருப் பெறுவதில்லை.

அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று வேதனை உணர்வு அந்த நல்ல அணுக்களுக்குள் சேர்வதற்கு முன் அதனைத் தடுக்க வேண்டும்.

கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்.
1.தீமை என்ற உணர்வு இங்கே வருகின்றது
2.அது வருவதற்கு முன் நீ உன்னை காத்துக் கொள்ளும் நினைவினைக் கண்ணின் நினைவு கொண்டு
3.உடலில் இருக்கும் அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வினை வலுவாக்கினால்
4.இதன் அருகிலே வரப்படும் பொழுது அந்த உணர்வினை அகற்றிவிடும் அல்லது மாய்த்துவிடும்.

அதனால் தான் கண்ணுக்குப் பெயர் இடையன் என்று வைத்தார்கள்.

கண்ணின் கருவிழி நோயாளியை உற்று நோக்குகின்றது. அவன் வேதனைப்படுகிறான் என்று உயிரோடு உணர்த்துகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்று ஆறாவது அறிவு கொண்டு நாம் செயல்படுகின்றோம்.

ஆனால் அந்த உணர்வு நமக்குள் வந்தபின் நம் உடலுக்குள் தீமை புகாது அந்த அணுக்கள் உட்கொள்ளாது அருள் மகரிஷியின் உணர்வுகளை இங்கே கண் கொண்டு உயிருடன் ஒன்றி இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்தி கண்ணின் நினைவினை அந்த அணுக்களுக்கு உபதேசித்தல் வேண்டும்.

1.இந்த உணர்வின் தன்மை உருப் பெற்றபின் இதன் வலுகொண்ட பின் அதன் அருகிலே ரத்தங்களில் வந்தாலும் ஏற்றுக் கொள்ளாது
2.இதனின் உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் வரும் பொழுது கிட்னி அந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது… வெளியேற்றி விடுகின்றது
3.ஏற்றுக் கொள்ள முடியாத நிலை வரும்பொழுது இது பிரித்து விடுகின்றது.

ஆகவே நாம் எண்ணும் அருள் உணர்வுகள் உடல் உறுப்புகளில் வலுப் பெறும் போது அந்தக் கிட்னியை அந்த விஷத்தன்மை செயலற்றதாக மாற்றுவதற்கு முன்… கிட்னியை உருவாக்கிய அணுக்களுக்கும் அருள் ஒளி படர்கின்றது.

பின் அந்த விஷத்தின் தன்மையை வடிக்கும் தன்மையாக வெளியேற்றி விடுகின்றது.

ஆனால் நாம் மாற்றத் தவறினால் என்ன நடக்கிறது…?

வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அது அணுக்களாக மாறப்படும் பொழுது கிட்னிக்கு சிறுநீரகத்தின் மூலம் அதைச் சீராகப் பிரிக்காதபடி விட்டுவிடுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் விஷத்தின் தன்மை மற்றொன்றுக்குச் சேர்கின்றது. வடிக்கத் தவறினால் உடலுக்குள் கடும் நோய் உருவாகி மடியும் தன்மை வருகின்றது.

ஆகவே நமது ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் சொல்வது உங்களுக்கு எளிதாக இருக்கலாம்.
1.இதை எல்லாம் கண்டுணர்வதற்கு எவ்வளவோ சிரமப்பட்டேன்… கடும் வேதனைகளை அனுபவித்தேன்.
2.வேதனை எப்படி வருகின்றது என்று உணரும்படி செய்தார் குருநாதர்.
3.வேதனை உன்னைத் தாக்கப்படும் பொழுது அதை நீ எவ்வாறு மாற்ற வேண்டும்…?
4.என்னென்ன உபாயங்களைக் கையாள வேண்டும்…? என்று என்னைத் தெளிவாக்கினார்.
5.அதனின் உணர்வினைத் தான் ஞான வித்தாக உருவாக்கி உங்களுக்குள் பதிவாக்குகிறேன்.

காரணம்… தீமை வரும் பொழுது உங்கள் எண்ணத்தால் அதை அகற்றிடும் வலிமை நீங்கள் பெற வேண்டும் என்று தான் தொடர்ந்து இங்கே உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.

ஒளிச் சரீரம் பெறச் செய்யும் ஆகார சக்தியான அன்னபூரணி

 

காரண காரியமாக விளங்கும் இந்த உடல் கொண்ட ஜீவாத்மா… சிருஷ்டி எனப்படும் பிறவிக்குத் தனக்குகந்த தன்மைக்கே… கொண்ட குணங்களின் தன்மைக்கொப்ப பிறப்பினுக்கே வந்தாலும்… சகலமும் மறைக்கப்படுகின்ற சூட்சமம்… ஒளி நிலை பெற்றிட மேலெழும்பும் சக்தியின் தன்மையாக எடுத்துக் கொண்டால் ஆத்மா ஒளி பெற்றே திகழ்கின்றது.
1.”காரணம்” என்பது ஆகாய சூட்சுமமாக சகலமும் மூலத்தின் தன்மையாக விளங்கி
2.சிருஷ்டியின் செயலாக… கொண்ட எண்ணம் செயலுற்று… “காரியமாகின்ற” சரீரத்தைப் பெறுகின்றது.

காரண காரியம்… காரிய காரணமாக மனிதன் செயல்பட்டு… பெற்று… வளர்த்து (தன்னை) உயர்த்திக் கொண்டிட்டால் ஒளிமார்க்க நிலை…!

“அன்னபூரணி காட்டும் ஆகாரக் குறிப்பு” வியாபித்திருக்கின்ற மூலப்பிரகிருதி… (இயற்கையின் படைப்பு) சகலமும் ஈஸ்வர சொரூபம் தான் என்றாலும் மூலத்தின் குணத்திற்கு வண்ணங்கள் உண்டு.
1.பிருதிவி (பூமி – நிலம்) தத்துவத்தில் மண்ணாகக் காண்பதே செந்நிறம்
2.அக்கினியாகக் காண்பது கருமை நிறம்
3.நீரின் தன்மையில் அடங்குவது வெண்ணிறம்
4.காற்றின் புலப்படாத் தன்மையுள் பச்சை நிறம்
5.ஆகாய நிலையின் புகைவண்ணம் வெளிர் நீலம்.

இந்த ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) ஜீவன் புசித்திட ஈஸ்வர சக்தியாக… அன்னபூரணி – விஸ்வேஸ்வரர் மாமகரிஷியின்… தாய் சக்தி எனும் பஞ்ச காரண காரணியாக… ஒளிமார்க்க (ஓளிச்சரீரம் பெறுவது) நிலை உபதேசிக்கப்பட்டதப்பா.

மூல காரணியை… மனிதன் செயல் கொள்ளும் விதத்தில் “வேதாள மாமகரிஷி” உரைத்திட்ட நிலையும் உண்டு.

பெரும் நெருப்பாக இருந்தாலும் அதுவும் நீருக்குள் அடங்குகின்றது. பெரும் நீரானது இழுத்து இயங்கும் செயலாக… காரண சக்தி இயற்கையின் சீற்றம் காட்ட… காரியம் ஏற்படும் நீர் அடங்காது.

சூரியக்கதிர் அம்பு பாய்ந்து… அகநிலையால் புறமும்… காத்திடுகின்ற செயலாக
1.இப்பரு உடலைக் கொண்டு ஆத்ம சக்தியை வளர்த்துக் கொண்டாலும்…
2.இவ்வுடலையே சூழ்ந்து காத்துக் கொள்ளும் வலு வீரிய “காரண மூல சக்தி ஆத்மாவிற்கு உண்டு…”

காட்டையே பற்றி எரித்து உரத்து ஆடும் பெரும் நெருப்பானது நாணல் புல்லைப் பற்றி அதையும் தீய்ப்பினும்… கடும் மழை நீருள் அந்தக் காட்டுத் தீயானது அணைகின்றது.

அது போல் மனித மனத்தின் நிலை அகம் புறம் இரண்டு செயல் தன்மைகளில்
1.உலகோதய நிலை நாட்டத்திலும்… நாம் எடுக்கும் ஜீவ ஆதார சக்தி…
2.காட்டுத் தீயை அடக்கிய நீர் சக்தியானது
3.பூமியின் மேற்பரப்பில் காற்று நெருப்பால் ஒவ்வாத நிலைகளற்று… (கருகிய நிலைகள்)
4.பூமிக்குள் மறைந்திருக்கும் கிளைத்தெழும் ஜீவசக்திகள் அந்த நீரின் சக்தி கொண்டே (கருகியது) தழைத்து எழுவது போல்…
5.மன எண்ணக் கரு அவ்வண்ணமே ஜீவ ஆதார சுருதியாக “அகக் கனலாகக் கனன்று எழும்…”

இதிலே காட்டிட்ட தன்மைகள் பண்டு (பண்டைய – பழைய) வழியாக இருந்தாலும் அதை விண்டு அறிந்திடுதல் வேண்டும்.

உலகமும் ஜீவஜோதியும் வரைந்திடும் பொழுது அந்தப் படத்தினால் அஷ்டலட்சுமி அன்னபூரணி வாக்கு தேவி மண்டல அமைப்பு காட்டப்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு பயமுறுத்தும் உணர்வை நாம் பதிவாக்கிவிட்டால் என்ன நடக்கிறது…?

இந்த இடத்திலே போனேன்… பார்த்தேன் விபத்தானது என்று ஒருவர் அதை விவரித்துச் சொன்னால் போதும்.
1.நாம் பதிவாக்கிக் கொண்ட பின் அங்கே சென்றாலே இந்த நினைவு வரும்
2.அங்கே சென்று அந்த உணர்வான பின் நம்மை அறியாமலே கிடு…கிடு… என்று நடுக்கம் வரும்.

இதே போன்றுதான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே என்ன செய்கிறோம்…?

எனக்கு (ஞானகுரு) என் குருநாதர் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி அறிமுகப்படுத்தினாரோ இதே போன்று உங்களுக்குள் அந்த அரும் பெரும் சக்திகளைப் பெற வேண்டும் என்ற நிலைகளிலேயே இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.காரணம்… இனம் இனத்தைத் தான் பெருக்கும்.
2.அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளில் எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆகவே குரு எனக்கு ஊட்டிய அந்த அருள் வழிகளை உங்கள் உயிரை ஈசன் என்று மதித்து அந்த அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும் உங்கள் உடலிலுள்ள அணுக்களில் இணைய வேண்டுமென்று தான் இதை உணர்த்திக் கொண்டு வருகிறேன்.

“குண்டலினி சக்தி” என்று சொல்லி “இங்கே தட்டி எழுப்புகிறேன்…” என்று செயல்படுத்தும் போது அவர்கள் உணர்வு இங்கே வந்து விடுகிறது. அவர்களின் ஆசையின் உணர்வு இங்கே வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள்.
1.அந்த மந்திரத்தின் உணர்வு இங்கே வந்தபின் “ஆக்கினைக்கு நீ இங்கே தொடு…” என்று காட்டுவார்கள்
2.அப்போது அவர் ஆசையின் உணர்வுகள் இங்கே இயக்கத் தொடங்கும்… மற்ற மனிதர்களுடைய உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும்.
3.தொட்டவுடன் கிர்ர்ர்… என்று ஏறும்… அந்த உணர்வே தான் அவர்களுக்குப் பழக்கம் வரும்
4.நெற்றி வலிக்க ஆரம்பிக்கும்… பல நிலைகளும் ஆரம்பிக்கும்.

இது அல்ல…!

நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காட்டுவது என்ன…?

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளையும்… இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது “அது எப்படி உருவானது…?” என்ற உணர்வுகளையும் பதிவாக்குகின்றோம்.

அதாவது உங்கள் உடலில் விளைந்த அணுக்களில் அதைத் தான் தொட்டுக் காட்டுகின்றோம்.

நான் பேசும் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாயும். அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “நீங்களே உங்கள் எண்ணத்தால் அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்…!

ஒன்றுமே வேண்டாம்… ஒரு பையனைக் கூப்பிட்டு “இங்கே கரண்டு பாய்கிறதா பார்…” என்று உடலைத் தொட்டவுடன் உடலுடன் இருப்பதெல்லாம் வர ஆரம்பிக்கும். இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் விதமும்.

மூலாதாரம் என்றால்… நமக்குள் வரும் ஒரு உணர்வின் தன்மை
1.எலும்பும் இரத்தங்களும் நரம்பு மண்டலமும் இந்த மூன்றும் சேர்த்து
2.அணுத் தன்மை கருத் தன்மையை ஜீவன் பெற செய்யக்கூடிய நிலைகளாகக் கவர்ந்து
3.விந்துடன் கலக்கும் ஜீவணுக்களாக மாற்றுகின்றது.
4.இதுதான் மூலம் என்பது… மூலாதாரம் என்பது.
5.அங்கே உயிர் அணுக்கள் தோற்றுவிக்கும் நிலை வருகிறது என்றால் “வைத்திய ரீதியிலே” அன்று அகஸ்தியன் கண்டுபிடித்தான்.

“ஆக்கினை…” (ஆக்ஞை) என்றால் நாம் எதை நுகர்கின்றோமோ உயிரிலே பட்ட பின் இந்த உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது. இதைத் தெரிந்து கொண்டால் பரவாயில்லை. ஆகவே ஆக்கினை என்றால் உணர்வின் தன்மை இதிலிருந்து தான் ஆணையிடுகிறது.

மூலாதாரத்தில்… கீழே மாற்றுகிறது என்று உணர்வின் தன்மை தனக்குள் கொண்டு வரப்படும் பொழுது வித்தியாசமான நிலைகளில் சென்று விடுகின்றது.

1.மூலாதாரம் என்றால் நமது உயிர் மூலம்
2.நாம் நுகரும் உணர்வே ஆதாரம்.
3.எந்த உணவின் தன்மையோ அந்த ஆதாரத்தின் வழி கொண்டு தான் நம் உணர்வுகள் இயக்குகிறது என்று
4.சாஸ்திரங்களும் வேதங்களும் தெளிவாக நமக்கு காட்டும் நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.உயிரணு தோன்றி… மனிதனாகப் பிறந்து வளர்ந்து
2.27 நட்சத்திர உணர்வுகளை உணவாக உட்கொண்ட பின்…
3.உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது.

துருவத்தை எல்லையாகக் குறி வைத்து அதன் வழி நட்சத்திரங்களின் உணர்வுகளைத் தனக்குள் கவர்ந்து அதனின் எல்லையை அடையும் போது துருவ நட்சத்திரமாகிறது.

நம் பிரபஞ்சம் மற்ற நிலைகளில் அவைகளை எடுத்தாலும் உயிரணு தோன்றிய பின்… நட்சத்திர உணர்வுகளை உட்கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மை வருகிறது… மற்றதைக் கருக்கி விடுகின்றது.

1.நட்சத்திரம் மின் கதிர்களாக வரப்படும் பொழுது எப்படி மாற்றுகின்றதோ அதைப் போன்று தான்
2.இந்த உயிரணுவின் தோற்றங்கள் இப்படி உருவாகித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.

மனிதரான பின் கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றான பின் அந்தத் துருவ நட்சத்திரமாக மாறுகின்றது. அந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உணர்வுகளும் ஒளியாகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றி “சப்தரிஷி…” சிருஷ்டித்துக் கொண்ட உணர்வு… அந்த மண்டலங்களாக துருவ நட்சத்திரத்துடன் இயங்குகின்றது.

மகாபாரதத்தில் இது தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் காலத்தால் மறைத்து விட்டார்கள். இந்த உண்மைகளை நாம் மறந்தே போய் விட்டோம்.

காரணம்… அரசர்கள் தனக்குத் தெரிந்த “ரகசியம்…” மற்றவர்களுக்குத் தெரிய கூடாது என்ற நிலையில் அவ்வாறு செயல்படுத்தி விட்டார்கள்.
1.வேதங்களை மாற்றப்பட்டு… உண்மையின் இயக்கங்கள் மறைக்கப்பட்டு…
2.மறைந்த உணர்வுகளை… அந்த உண்மைகளைத் தேடிக் கொண்டே இருக்கின்றோம். இன்னும் கிடைத்த பாடு இல்லை…!

ஆனால் இப்பொழுது நீங்கள் அதை தேடிக் கொள்ள வேண்டாம்..! உங்கள் உடலுக்குள் அனைத்தும் உண்டு.

ஒளியாக எப்படி மாற்ற வேண்டும்…? என்று தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு) இருந்தாலும் ஏற்றுக் கொள்வார் குறைவாகவே உள்ளனர்… ஏற்றுக் கொள்வதே மிகக் கடினமாக இருக்கின்றது

காலை துருவ தியானத்தில் எப்படியும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை எல்லாம் தொடர்பு கொள்ளச் செய்கிறோம்.

அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய அந்தப் பேரருளை எடுத்து
1.அந்த இயக்கச் சக்தியை உங்களுக்குள் உருவாக்கப்பட்டு அதன் வழியில் இயங்கிப் “பேரொளியாக…”
2.உயிர் எப்படி ஒளியானதோ உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒளி மயமாக மாற்றி
3.அதற்கப்புறம் எத்தகைய தீமையும் தனக்குள் வராதபடி வேகா நிலையை அடைந்து
4.என்றும் பேரருள் பேரொளியாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதில்
5.வாழக் கற்றுக் கொள்வது தான் இந்தத் துருவ தியானப் பயிற்சியின் நிலைகள்.

உங்களுக்குள் ஆழப் பதிவு செய்த இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வந்து இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி… இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதை அடிப்படை ஆதாரமாக வைத்துச் செயல்படுங்கள்.
1.மனித வாழ்க்கையில் வரும் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ பகைமை உணர்வோ போன்றவைகளை மாற்றி அமைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதைப் பற்றுடன் பற்றுங்கள்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் தனக்குள் புகாத வண்ணம் தடுத்துக் கொள்ளுங்கள்.

சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது அதன் வலிமையை இழக்கச் செய்ய முடியும்.

ஆகவே அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து உடலுக்குள் அதை அணுக்களாக மாற்றிடும் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான் துருவ தியானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

அதை லேசாக நினைத்து விடாதீர்கள்…!

அகக்கண் என்ற முக்கண்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நட்சத்திரத்தின் பால் இணைந்து… அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.முக்கண் என்ற உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.
2.இப்பொழுது புருவ மத்தியில் பேரருள் பேரொளியாக மாறும்
3.உயிருடன் ஒன்றி அதை நீங்கள் காணலாம்… அகக்கண் கொண்டு…!
4.துருவ நட்சத்திரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வை நீங்கள் இப்போது அகக்கண்ணால் பார்க்கலாம்.
5.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அகக்கண்ணால் நீங்கள் இப்பொழுது பார்க்கலாம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் பாய்ச்சி… அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது
1.துருவ நட்சத்திரத்தினுடைய அருள் மணம் வெளி வரும் போது உங்கள் உடல் முழுவதும்
2.“ஒரு பாதுகாப்புக் கவசம்” போன்று பேரருளின் ஒளி வட்டம் காணும்.
3.தீமைகள் உங்கள் ஆன்மாவிலே புகாது பாதுகாக்கும் உணர்வின் சக்தியாக இது அமையும்.
4.உங்கள் உடல் முழுவதும் ஒரு ஒளி வட்டம் தெரிவதை அகக்கண்ணால் நீங்கள் உணரலாம் பார்க்கலாம்.
5.இப்பொழுது உங்கள் உடலே ஒளிமயமாகக் காட்சி தரும்.

துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி கணவன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கணவன் மனைவி இவ்வாறு ஒருவருக்கொருவர் பாய்ச்சி இரு மனமும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக இணைந்து பேரருள் என்ற உணர்வுகளை உங்களுக்குள் உருவாக்குங்கள்.

உங்கள் இருவரது உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் பேரொளி பெறும் அணுக்களாக… கருக்களாக… உருவாக்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் பெற்று… எங்களுக்கு அவர்கள் அந்த அருளைப் பாய்ச்சி… எங்கள் வாழ்க்கையில் நாங்கள் அனைவரும் பொருளறியும் திறன் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. இப்பொழுது “சப்தரிஷி மண்டலங்களின் காட்சி உங்களுக்குக் கிடைக்கும்… மனக்கண்ணால்…!”

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவை விண்ணிலே செலுத்தி சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை ஊட்டுங்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்பு வட்டதில் இணையச் செய்வோம்… உந்திச் செலுத்துவோம்.

இப்பொழுது
1.அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருப்பதை அகக்கண்ணால் உணர முடியும்.
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் ஒளி வட்டத்தில் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதை அகக்கண்ணால் பார்க்கலாம்.

அன்னபூரணி அஷ்டலட்சுமி வாக்குதேவி

காசியம்பதியில் விறகு சுமந்த வேண்மா சந்தர்ப்பத்தில் மயக்கமுற்றுச் சாய்ந்து… அந்தச் சரீரத்திலிருந்து ஜீவன் நீங்கிடும் தருவாயில் ஆங்கு வட்டமிட்ட “விஸ்வேஸ்வர மாமகரிஷி” (காசி விஸ்வநாதன்)… வேண்மாவின் உடலில் சூட்சும செயல் கொண்டு “கல்லால சித்தன்” என்ற நாமம் பூண்டு மௌனித்து எடுத்த சக்தி நிலை பெரிது.

1.மௌனமே சக்தி பெறச் சம்மதம் எனப் பொருள்பட
2.வானியல் தொடர்பாக வாக்கு தேவி அன்னபூரணி… அஷ்டலட்சுமி… என்ற மண்டலங்களாகப் பெயர் நாமப்படுத்தி
3.அதைச் சிரசினுள் காட்ட வந்ததே
4.அன்னபூரணியை வலக்கண்ணும்
5.அஷ்டலட்சுமியை இடக்கண்ணும்
6.வாக்கு தேவியைப் பிடரிக் கண்ணும் என்று காட்டி
7.மனக்கண் குறிப்பாக உள் முகம் நோக்கி… அகப்பார்வை ஒளிமார்க்கம் காட்டும் விதம்… – அதுவே “அக்ஷி…”

இத்தன்மையை அறியும் போது அறிய வேண்டியது ஒன்று உண்டு.

கிணற்றில் நீர் இருக்கின்றது. கிணற்றில் இருக்கின்ற நீரை நீர் இறைக்கின்ற உபாயமாகக் கைக்கொள்ள வேண்டிய முறை உண்டு.

அதாவது யாம் சொல்ல வருவது “அறிவை அறிவால் அறிதல்” என்பது.

சிறு குழந்தைகள் ஓரு மண் கலயத்தைக் கயிற்றினால் கட்டி அதைக் கிணற்றிற்குள் விட்டு நீர் இறைக்கின்ற செயலில் அது பக்குவமற்ற தன்மை என்றாலும்… “கவனத்தின் குறைபாடு தான்…”

சிறு பிள்ளை விளையாட்டு என்றபடி நீர் மொண்ட அந்தச் சிறு மண்பாண்டம் நீர் இறைக்கும் தருவாயில் கிணற்றுச் சுவரில் பட்டு உடைந்து விடுகிறது. அந்தக் குழந்தைகள் தாங்கள் கைக் கொண்ட செயலுக்கு நாணமுறுகின்றனர். அதைப் போல் இல்லாதபடி
1.இந்த ஞான வழியினை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறை என்பது… சிந்தனையில் சிரத்தையோடு
2.சூட்சும மாமகரிஷிகள் காட்டுகின்ற வழித்தன்மையைக் கையாள்வதில் கொள்கின்ற தனித்துவ செயல்பாடு “உறுதியாக” இருத்தல் வேண்டும்.

அந்த உறுதியை எப்படிச் செயல்படுத்துவது…?

கிணற்றில் நீரை இறைக்க வேண்டும் என்றால் உடையாத ஓர் கலம் வேண்டும். நீர் இறைக்கும் தருவாயில் நீர் இறைக்கின்ற கலம் நீர் மொள்கின்ற சத்தத்தைப் புலனறிவால் அறிந்து கொண்டு… கலத்தில் நீர் நிறைந்து விட்ட தன்மையை உணர்ந்தே… பக்குவமாக வெளிக்கொணர்ந்து பயனுறக் கைக்கொள்ளல் வேண்டும்

அது போல்
1.விஸ்வேஸ்வர மாமகரிஷி காட்டிய அந்த உயரிய வழித்தன்மை
2.அவராலும் அவருடைய சீடர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த அந்த முறையை
3.இன்று அறியப்பட வேண்டிய இரகசிய உண்மைகளை நீங்கள் அறிந்து தெளிந்து… ஆக்கச் செயலுக்காக உயர்ந்து
4.பால்வெளியின் பூதியில் ஓர் மண்டலமாக உருக் கொள்கின்ற திறனுக்கே
5.உயர்வெண்ணம் செலுத்தப்படல் வேண்டும்

அரை குறையாக அறிந்ததை… அறிந்து விட்டதாக எண்ணி இரகசிய உண்மைகளைச் செல்வம் சேர்த்திடும் எண்ணத்திற்குச் செயல்படுத்திட எண்ணிய இந்தத் தேசத்தில்… அக்ஷி முறை செயலுறுவாகச் செயல் கொண்டு “இயங்கிடாத நிலையே” இன்று திபெத்தில் இரகசிய முறையாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது.

1.ஆத்மாவும் ஜீவனாடி நாத விந்துவும்
2.மேலது கீழாய் கீழது மேலாய்
3.சிருஷ்டி எனப்படுவது கீழ் இறங்கல்
4.ஞானம் எனப்படுவது மேலுயர்தல்
5.சிருஷ்டி… சிருஷ்டிக்கும் சக்தி… என்று ஆதி சக்தியின் தன்மையையே அவ்வாறு குறிப்பிட்டோம்.

“ஸ்ரீ பாதங்கள்…” என்று உரைப்பதே “நாத விந்து” எனப்படுகின்ற ஒலி ஒளி சக்திகளையே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனாக வருவதற்கு முன் நாம் பாம்பாக இருந்திருப்போம்… தேளாக இருந்திருப்போம்.. நமது தாய் அவர்களைப் பாதுகாக்க நம்மை அடித்துக் கொன்று இருப்பார்கள்…
1.இந்த (நம்) உயிர் அவர் உடலுக்குள் சென்றிருக்கும்
2.போன உடனே அவர்கள் உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி வருகின்றது.

கருவாக ஆன பிற்பாடு தேளாக இருந்த… பாம்பாக இருந்த நம்மை… மனிதனாக உருவாக்குகின்றது நமது தாய். அப்போது நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்…?

நம் தாய் தந்தையினுடைய உயிர் தான்…! கடவுளாக இருந்து மனிதனாக நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள்தான்.

அம்மா அப்பாவைக் கடவுளாக நாம் மதித்துப் பழகுதல் வேண்டும் யாராவது நாம் நினைக்கின்றோமா…?

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தாயைத் திட்டுபவர்கள் தான் உண்டு. எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் உடனே தாயைத் திட்டுவார்கள்.
1.இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்…
2.உண்மையை உணர்தல் வேண்டும்.

பத்து மாதம் நம்மைச் சுமந்து உருவாக்கியவர்கள் தாய். பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும்… ஒரு நாளைக்குத் தலையிலே கல்லை வைத்துத் தூக்கிப் பாருங்கள். சுமக்க முடிகிறதா என்று…!

ஆனால் பத்து மாதம் நம்மைச் சுமக்கின்றது.

சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்… தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வையே எண்ணி எடுக்கின்றது.

இத்தனை அவஸ்தைகளும் பட்டுப் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.

விவரம் தெரிவதற்கு முன் நாம் நெருப்பைத் தொட முயற்சிப்போம். டேய்… டேய்… நெருப்புடா…! என்று நம்மைப் பாதுகாக்கின்றது… அந்தத் தெய்வமாக இருக்கின்றது.

இது நல்லது இது கெட்டது இது அசுத்தம் என்று அனைத்தையும் சொல்லிக் கொடுக்கக்கூடிய குரு யார்…?

நம் தாய் தான். ஆனால் எத்தனை பேர் நாம் தாயை மதிக்கின்றோம்…?

1.தாயை மதிப்பவர்கள் சிறிது பேர்தான்.
2.தாயின் அருள் வேண்டும்… எனக்கு நல்லது நடக்க வேண்டும்…! என்று வேண்டுபவர்கள் கொஞ்சப் பேர் தான்.

அந்த தாயின் உணர்வைப் பெறச் செய்வதற்குத் தான் குருநாதர் காட்டிய வழியில் இதை உணர்த்துகின்றோம்,

எத்தனையோ துன்பங்கள் பட்டு என்னை நீங்கள் வளர்த்தீர்கள். எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் அங்கே மறைய வேண்டும்.
1.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெற வேண்டும்
2.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் அவர் பெற வேண்டும்.
3.தாய் தந்தையர் என்றென்றும் எங்களுக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று
4.தாய் தந்தையரை நாம் வணங்கி எண்ண வேண்டும்.

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று தாய் தன் எண்ணத்தால் எடுத்துப் பதிவாக்கியிருக்கின்றது. நமக்குள்ளும் அந்தப் பதிவு உண்டு. இந்தக் காற்றிலும் அது உண்டு.
1.எவ்வளவு துயரப்பட்டாலும் சரி…
2.அம்மா… எனக்கு நோய் நீங்க வேண்டும் அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.தாயும் இதே மாதிரி என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றது
4.அந்த உணர்வை நுகர்ந்தீர்கள் என்றால் உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.

உதாரணமாக… காட்டுக்குள் செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். புலியோ யானையோ துரத்தி வரும் நேரத்தில் அம்மா…! என்று சொன்னால் போதும். அந்தப் புலியானாலும் யானை ஆனாலும் உங்களைத் தாக்காது.

என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் போகச் சொல்லி “தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…?” என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர்.

போய்க் கொண்டே இருப்பேன். திடீரென்று புலி வந்தால் உடனே நான் “ஐய்யய்யோ…” என்று சத்தம் போடுவேன்.

அப்பொழுதுதான் குரு உணர்த்துவார்
1.டேய்…! உன் அம்மா எங்கேடா போனது…?
2.உன் அம்மாவை நினைடா…! என்பார்.

நினைத்து நான் அம்மா… என்று சத்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வரும் புலி அப்படியே நின்றுவிடும். இது எல்லாம் அனுபவத்தில் பெற்ற உணர்வு.

நீங்களும் இதே போல் தாயின் அருள் சக்தி பெற்று… ஞானிகள் காட்டிய வழியில் சென்று அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடுங்கள்.

பாதுகாப்புக் கவசம்

 

அருள் ஞானிகள் பெற்ற உணர்வினை…
1.இயற்கை எப்படி விளைந்தது…? என்றும்
2.இயற்கையில் இருந்து ஞானிகள் எவ்வாறு மீண்டனர்…? என்பதையும்
3.இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கப்படும் பொழுது நீங்கள் செவி வழி அதைக் கேட்டுக் கூர்ந்து கவனித்து
4.அந்த உணர்வினை நுகர்ந்தது அனைத்தும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலாக உருவாக்கி விடுகின்றது உயிர்.

ஆக இவை அனைத்தும் உங்கள் எதிர்காலத்தில் வரும் பகைமை உணர்வுகள் தாக்காது அதனின்று விடுபடும் அருள் ஒளியின் உணர்வினைச் சேர்த்தால் இது உங்களைப் பாதுகாக்கும் சேனாதிபதி என்ற நிலை பெறுகின்றது.

அத்தகைய நிலைகள்
1.உங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக உணர்வின் அணுக்களைப் பெறச் செய்ய
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைக் கலந்து அதனை உருவாக்கினால் இந்த உணர்வின் எண்ணம் உங்களைக் காக்கும்.

அதுவே சேனாதிபதி.

எண்ணத்தின் தன்மை கொண்டு விண்ணின் நிலையை நீங்கள் நுகர்ந்தறிந்தால் உங்கள் உயிர் அதை உருவாக்கி விடுகின்றது. மனிதன் தான் இதைச் செய்ய முடியும்… பிரம்மாவைச் சிறை பிடித்தான்.

அருள் ஒளி பெறும் உணர்வை நாம் நுகர்ந்தால் உணர்வின் அறிவாக ஒளியின் சரீரமாக மாற்றும்… ஒளிச் சுடராக உருவாக்கும்.

ஆகவே காலத்தால் விளைந்த விஷத் தன்மைகளை மாற்றிச் சுவை கொண்டதாக… இருளற்ற ஒளியான நிலைகளை உருவாக்கும் உணர்வுகள் பெறுகின்றது. இதனை நாம் பெறும் மார்க்கம் இதுதான்.

ஆகவே பேரருள் பேரொளி பெற்ற அருள் உணர்வினை நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களில் இணைத்தால் பேரொளி என்று உருவாக்கி விடுகின்றது… உடலை ஒளியாக மாற்றி விடுகின்றது.

1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்து அந்த அரும்பெரும் சக்தியை ஏங்கிப் பெற்று
2.நம் உடலில் பரப்பி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் பெறச் செய்வோம்.
3.பேரருள் பெறும் தன்மையாக… ஏகாந்த நிலையை அடைவோம்.

விஸ்வேஸ்வரர் உபதேசித்த அக்ஷி

 

முன்பு ஒரு காலத்தில் காசியம்பதியில் விறகு சுமந்து விற்று ஜீவனம் செய்து வந்தவர் வேண்மா என்ற பெயர் கொண்டவர். காசி நகர் சக்தியாகச் செயல்படும் அன்னபூரணியை மானசீகமாகப் பூஜித்த அன்பன் அவன்.

“விஸ்வேஸ்வரர்” வேண்மாவில் செயல் கொண்டு “அக்ஷி முறை” வகுத்துத் தந்த வழி இன்று “குண்டலினி” யோகப் பயிற்சியாக…
1.அந்த முறையும் இந்த முறையும் ஒன்றெனக் கூறி
2.பொருள் ஈட்டும் செயலாகப் பேராசை வலையில் சிக்கித் திகழ்கின்றனர்.

விஸ்வேஸ்வரர் சூட்சுமமாய் வேண்மாவில் செயல் கொண்டு அன்றைய காலகட்டத்தில் “சம்பூத் தீவாக” வழங்கி வந்த அத்தீபகற்பத்தில் அக்ஷியை உபதேசித்தார்.

அவர் “கல்லால சித்தன்” எனப் பெயர் பூண்டு காட்டிய வழி இன்றும் திபெத்திய பீடபூமியில் சீடர்கள் வழி கூற வந்த “லாமாக்கள்” என்று பெயரிட்டே அவர்கள் தம் வசம் இன்றும் செயல் கொண்டு செயல்படுத்தி… மறைக்கப்பட்டு… பேரின்ப லயத்தை தியானத்தின் வழியாகச் சித்தன் நிலை கைகொள்கின்றனர்.

சரீரத்தில் ஓடிடும் சுவாச நாடிகள் (காற்று நூல்) மகரிஷிகளால் காட்டப்பட்டதை ஏற்கனவே உணர்த்தி உள்ளோம். சுவாசங்கள் ஓடிடும் அந்தந்தக் காலகட்டத்தில் “அந்நாடிகளின் வழி எண்ணிடல் வேண்டும்” என்று எத்தனை பேர்களுக்குச் சொல்கின்றாய்…?

எண்ணல் வேண்டும் என்கிறாயே அது என்ன…?
1.நீ கூறுகின்ற வழியே தான் இன்னும் ஒரு படி மேலாக “அகக் கண்ணால் கண்டு”
2.அந்தந்த இடங்களின் சக்தியை… சக்தியின் செயல்பாட்டையும்
3.சிரசின் உச்சிக்கே அகக்கண் கொண்டு நகர்த்தி
4.மேலெழும்ப வைத்திடும் செயலில் கிடைத்திடும் பேரானந்தம்
5.நீங்காமல் நின்று நிலை பெற்றிருக்க அனுபவித்தலே “அக்ஷி…”

அதற்கும் மேலாக ஆத்ம பலம் கூட்டிடும் தத்துவார்த்த உபதேசமாக
1.“யக்ஞம் வேதாள மாமகரிஷி” அன்று முன் மொழிந்ததை
2.இந்த உலகினுக்கு இக்கலியில் மொழிய வந்திருக்கின்றோம்.

அவைகள் முற்றுப் பெறவில்லை. நீங்கள் அருந்த வேண்டிய ஞானச் சுடர் விளக்கம் எத்தனையோ உண்டு.

1.மூலாதாரம் முதல் கொண்டு உச்சி வரை ஒவ்வொரு இடமாக ஒளித்தன்மையைச் சித்தித்தே
2.விழிப்பார்வை கொண்டு எண்ணிப் பிறக்கும் அக்ஷி ஜோதியை… ஆகாய லிங்கத்தைக் காண்பதே சித்தன் நிலை…!

சரீரம் முழுக்க காந்தத்தின் புலன் உணர்வுகளால் தாக்க (உடல் உறுப்புகள் தியானம்) ஆத்ம பலம் கூட்ட அறிந்து கொள். அறிந்ததைத் தெரிந்ததே மெய்ஞானச் சுடராகும் வழி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நோயுற்ற ஒரு பெண் குழந்தையைக் குணப்படுத்துவதற்காக எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்தார்கள். சுமார் 13 வயது இருக்கும்.

குழந்தை நோயால் மிகவும் வாடிக் கொண்டிருக்கும் பொழுது வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டதால் விஷத்தின் தன்மை அடைந்து விட்டது.

1.மருந்து மாத்திரைகள் என்று விஞ்ஞான அறிவு கொண்டு விஷத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதனல்லாத உடலாகத் தான் பிறக்கும்.

அந்த உடலிலேயே அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை ஏற்று வளர்த்துக் கொண்டால் அடுத்து உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியில்லா நிலை அடைகின்றது.

ஆகவே…
1.மகரிஷிகளின் உணர்வை அந்த குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு
2.உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்று அந்த உணர்வுடனே தொடர்பு கொண்டு தியானப் பயிற்சி கொடுத்தோம்.

ஏனென்றால் அது உடலில் ஆஸ்த்மா தொல்லை உண்டு.

நுரையீரல் பாகங்களில் நரம்பு இழுத்துப்பிடித்து இருப்பதனால் அத்தகைய பாதிப்பு வந்தது. இந்தப் பிடித்தம் அவர்களின் பரம்பரையில் வந்தது அப்பாவுக்கும் உண்டு… தாத்தாவுக்கும் அது இருந்தது

பரம்பரை வழியிலே வந்ததனால் இந்த பின்னம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டே இருக்கும். இதிலிருந்து விடுபட்டால் தான் அதனுடைய நிலைகள் தப்ப முடியும்.

ஆகவே பெண் குழந்தையாக இருப்பதால் இப்போது காப்பாற்றினாலும்… அதனுடைய மண வாழ்க்கையில் மீண்டும் அதிகமான வேதனைப்பட்டால் மனிதனல்லாத உருவைத் தான் உருவாக்கிவிடும்.

ஆகவே பருவம் வரப்படும் பொழுது அருள் ஒளியின் தன்மை கொண்டு இந்த உடலிலே மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அவர்களையே பெறும்படி செய்தோம்.

இப்போது எடுக்கும் அருள் உணர்வுகளின் வளர்ச்சி கொண்டு…
1.அடுத்து உடலை விட்டுப் பிரியும் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்
2.உடல் பெறும் உணர்வுகள் கரையவும் பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவருடைய நிலைகளை நாம் இத்தகைய நிலைகளில் அது மாற்றி அமைக்க வேண்டும்.

குழந்தையினுடைய தாயும் வேதனை உணர்வையே எடுத்துக் கொள்கின்றது. அதை மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும் என்ற நினைவைக் கூட்டும்படி செயல்படுத்தப்பட்டது.

1.இதன் வழி செய்தால் அந்த ஆன்மா எளிதில் அங்கே போய்ச் சேர்கின்றது
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகிறது.

காரணம்… எந்த நேரமும் எத்தருணத்திலும் உடலை விட்டுப் பிரிய நேரலாம். முயற்சி செய்தால் இன்னொரு பத்து வருடம் வாழப் போகின்றோம்… அவ்வளவு தான்…!

ஆனால் இங்கே இந்தப் பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது சீரான உடல் அமைப்பு இல்லை என்றால் மண வாழ்க்கையில் காலப் பருவம் வரும் போதெல்லாம் வேதனைப்படும்.
1.ஆகவே “இது தேறாது…” என்ற நிலை வந்தபின்
2.தேறுவது எது…? என்ற நிலையில் அருள் உணர்வின் ஒளியே தேறுகிறது… அதுவே என்றும் பிறவியில்லா நிலை.
3.இந்த இளமைப் பருவத்தில் அது ஒளியாகிவிட்டால் நலமாக இருக்கும் என்று
4.அந்த ஆன்மா அதன்படி சப்தரிஷி மண்டலம் இணைந்தது.

இப்படி… இந்த உடலுக்கு என்று இச்சை அதிகமாகப் பெறாதபடி அருள் ஒளி பெற வேண்டும்… இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் எடுத்தாலே போதுமானது.

1.குறித்த காரியங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியை நமக்குள் பெருக்கும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்
3.வழியறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்
4.சோர்வு என்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.

எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும்… அருள் ஒளி பெறும் அந்த நினைவு பெருக வேண்டும்… இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… அந்த அரும் பெரும் சொத்தே நமக்குச் செல்வம் என்று செயல்படுத்த வேண்டும்.

நாம் தேடிய செல்வங்கள் நம்முடன் வருவதில்லை… அழகான உடலும் வருவதில்லை… நாம் அலங்காரம் செய்யக்கூடிய பொருள்களும் வருவதில்லை… ஆடம்பரமாக நாம் கட்டிய வீடும் வாங்கிய காரும் வருவதில்லை. மற்ற எத்தகைய பொருளாக இருந்தாலும் நம்முடன் வருவதில்லை.
1.ஆனால் அந்த அருள் ஞானத்தை இந்த உடலிலே வளர்த்துக் கொண்டால்
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை பெறும்.
3.வேகா நிலையாக பிறவியில்லா நிலை அடைய முடியும்
4.அகண்ட அண்டத்தில் என்றுமே ஒளியாக வாழ முடியும்
5.அப்படி வாழக்கூடிய பருவத்தை இந்த உடலிலேயே சேர்த்தால்தான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

செல்வம் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தினாலும் தனக்குள் வரும் பகைமைகளை நிர்வகிக்கும் திறன் இருக்கின்றதா…?

வாழ்க்கை என்ற நிலைகளில் செயல்படும் போது “ஒரு எஞ்சினியர்” அவர் கண்டுபிடித்த கருவியை உருவாக்குவதில் கால தாமதமானால் வேதனை என்ற உணர்வு அவருக்குள் அதிகமாகிறது.

இப்படி வேதனையை உருவாக்கி விட்டால் பின் அதனுடைய நிலைகள் ஆன பின் அந்த இயந்திரத்தைச் சீராகப் பயன்படுத்த முடியாது.

காரணம்… வேதனை என்று வரப்படும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்தால் அருகில் இருக்கும் தன்னுடைய சிஷ்யனை (தன்னிடம் வேலை செய்பவனை) கோபித்துப் பேசுவான்.

அவன் சொன்னபடி சரிவர செய்யவில்லை என்றால்… சரியான பதில் சொல்லவில்லை என்றால் “போடா அறிவு கெட்டவனே… ஏன்டா இப்படிச் செய்கின்றாய்…?” என்று சீறிப்பாயும் தன்மை தான் வரும்.

ஏனென்றால்…
1.மனிதன் தான் நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் – உயிருடன் ஒன்றி உணர்வின் பொறிகள் இயக்கி
2.அந்த உணர்வு எப்படி இயக்குகின்றது…? என்பதனை நமது குருநாதர் தெளிவாக எடுத்து என்னிடம் கூறினார்.

மனிதனின் வாழ்க்கையில் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். அந்த ஆசை நிராசையாக எப்படி மாறுகின்றது…? நிராசையாக மாறும் பொழுது மனித உணர்வுகள் எப்படி மாறுகின்றது…?

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நோய் என்ற நிலைகள் வருகின்றது. பல துறைகளைக் கற்றுணர்ந்த டாக்டர்களும் இந்த உடலை விட்டு அதனால் தான் மடிகின்றார்கள். வேதனை என்ற உணர்வு கொண்டு மீண்டும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றார்கள்.

1.செல்வத்தைத் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தி நிர்வாகத்தை நடத்தும் திறன் வந்தாலும்
2.இந்த உடலுக்குள் இருக்கும் பகைமையான உணர்வுகளை நிர்வகிக்கும் தன்மை எவருக்கும் இல்லை.

அப்படி நிர்வகிக்கும் அந்தத் திறனைப் பெற
1.அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் அந்த மெய் ஞானியின் உணர்வை
2.எவர் ஒருவர் இங்கே தேடிக் கொள்கின்றனரோ அவரே அதனைப் பெற முடியும்.

ஆகவே… அந்த அருள் ஞானத்தின் உணர்வின் தன்மையை நாம் நமக்குள் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

விஞ்ஞானத்தின் அறிவு வந்தால் அது இந்த உடலின் இச்சைக்கே வருகின்றது. ஆனால் மெய் ஞானத்தினுடைய அறிவால் ஒவ்வொரு அணுவின் இயக்கங்களையும் அறிய முடிகின்றது.

அருள் உணர்வின் தன்மை கொண்டு மெய் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கி விட்டால் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக நமக்குள் வருகின்றது.

உதாரணமாக குறும்புத்தனம் செய்வோரை உற்றுப் பார்த்த பின் அந்த குறும்புத்தனத்தை உருவாக்கும் அணுவாக நம் உடலில் விளைய ஆரம்பிக்கிறது.
1.அவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்ச்சிகள் தூண்டும்
2.நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நாமும் குறும்புத்தனம் செய்வோம்… பார்க்கலாம்…!

அது நமக்குள் உருப் பெறாதபடி தடுக்க வேண்டுமல்லவா…!

ஏனென்றால் தவறு செய்கின்றான் என்று தெரிந்து கொள்ள முடிகின்றது. அது கார்த்திகேயா. கார்த்திகேயா என்றால் ஆறாவது அறிவு… நம்மைக் காத்திடும் சேனாதிபதி.

ஆகவே… தீமையான உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும் என்றால் சேனாதிபதிக்கு வலு எப்படி கொடுக்க வேண்டும்…?

நஞ்சினை வென்ற அகஸ்தியன் துருவனாகி… துருவ மகரிஷியாக உள்ளான்.
1.அவனின் உணர்வை அடுத்த கணமே இணைத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்குதல் வேண்டும்.
2.அந்தத் தீமைகள் உள்புகாதபடி நம் வழிக்கு அது வசப்படும்படி செய்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் ஞானத்தின் வழிகளில் அருள் ஒளியின் உணர்வைத் தன்னுடன் இணைத்து தீமைகளை அடங்கச் செய்ய வேண்டும். அது தான் அங்குசபாசவா…!

தீமையான உணர்வை நாம் நுகர்ந்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து… இதை வைத்து அதை அடக்கி நமக்குள் செயலாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்காக
1.சிறு கல்லைக் காட்டி (ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வச் சிலை)
2.அடுத்து உன் வாழ்க்கையை நீ எப்படி அமைக்க வேண்டும்…?
3.இந்த உடலை விட்டுச் சென்றால் நீ என்ன ஆவாய்…? என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளான் அருள் ஞானி.

இயற்கையின் உண்மை நிலைகள் எப்படி மாறுகின்றது…? என்பதை உணர்ந்த மெய் ஞானிகள்… உருவாக்கும் திறன் பெற்ற ஆறாவது அறிவால் நாம் எப்படிச் சீராகச் செயல்பட வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.

சொல்வது நன்றாக அர்த்தம் ஆகிறது அல்லவா.

இராமலிங்கம்

 

உயிரான ஈசன் தான் கவரும் உணர்வுகளை… “உருவமாக்கி அருவத்தின் செயல்கள் எவ்வாறு இருக்கிறது…?” என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது நமது அகஸ்தியன் காட்டிய அறநெறி வழி கொண்டு “அவனில் பெற்ற உணர்வின் செயல்…” அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உயிரணு தோன்றி எத்தனையோ வகை உருவங்கள் பெற்று… உணர்வுக்கொப்ப அணுக்கள் விளைந்து உடலை விட்டுச் சென்ற பின் அதன் இணைப்பு கொண்டு அடுத்த உடலைப் பெறுகின்றது.

இப்படித்தான்
1.பல கோடி உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்று இறையாகி
2.அதனின்றி மீள வேண்டும் என்ற உணர்வைப் பெருக்கிப் பெருக்கி எண்ணிலடங்காத உடல்களுக்கு இரையாகி
3.அதன் உணர்வைக் கவர்ந்து உடலின் உருவங்களை மாற்றி மாற்றி மனிதனாக நம்மை உருவாக்கி உள்ளது உயிர்.

மனிதன் தான் உயிரை ஈசன் என்று மதிக்கும் தன்மை பெறுகின்றான்.
1.தனக்குள் உருவாக்கியது யார்…? என்றும் உணர்வை இயக்குவது யார்…? என்றும்
2.தன்னில் இயக்கும் உயிரை முதல் மனிதன் அகஸ்தியன் காணுகின்றான்.
3.அதன் உணர்வின் செயலாக்கத்தைக் காணுகின்றான்.
4.கண்டபின் தான் நுகரும் உணர்வுகள் தான் தனக்குள் உருவாகின்றது என்பதை உணர்ந்தான்
5.உயர்ந்த நிலைகள் கொண்ட உணர்வினை அவன் நுகர்கின்றான்
6.தீமைகளை அகற்றும் உணர்வை நுகர்கின்றான்
7.அதன் உணர்வு கொண்டு தீமையை அகற்றிடும் அணுக்களை உருவாக்குகின்றான்
8.இருளை வென்றிடும் உணர்வினை நுகர்கின்றான். இருளை அகற்றிடும் அணுக்களைப் பெருக்குகின்றான்.
9.இப்படிப் பெருக்கித் தான் விண்ணின் ஆற்றலை நுகர்கின்றான்
10.அதனில் வரும் நஞ்சினை ஒளிச் சுடராக மாற்றுகின்றான்.
11.அறிவின் ஞானமாக இயக்குகின்றான்… அருள் ஒளி என்ற உணர்வினைப் பெருக்குகின்றான்.

பெருக்கிய நிலைகள் கொண்டு அதை எல்லாம் தன் மனைவிக்கே ஓதுகின்றான். இவை இவை…! என்றும் இதனின் உணர்வுகள் இவ்வாறு…! என்றும் செவி வழி கூட்டும் பொழுது உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அதன் வழி
1.மனைவியும் கணவனுடன் ஒன்றிணைந்து தான் கண்ட உணர்வுகளை இருவரும் ஒன்றென இணைந்து
2.இரு உணர்வும் ஒன்றென இணைந்து இரு மனமும் ஒன்றென இணைந்து இரு உயிரும் ஒன்றென இணைந்து உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து ஒளி என்ற உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன் துருவனானான்
4.துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக ஆனான்… அவர்கள் வளர்ச்சியில்.

எண்ணத்தால் உணர்வால் ஒளியின் சரீரமாக… “எண்ணம் கொண்டு” உயிருடன் ஒளியின் சரீரமானதால் இராமலிங்கம் என்ற காரணப் பெயரை வைத்து அழைத்தனர்.

மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்

 

1.உள்ளத்தின் கூளமதை உணர்ந்து கொண்டு… அதை தூய்மையாக்கிடும் முயற்சிக்கு (தன் ஆத்மாவைச் சுத்தம் செய்வது)
2.இன்றைய மக்களின் நிலை வேர்விடும் ஒதிய மரமாகக் காணப்படுகின்றன.
3.சூறைக்காட்டில் ஒதிய மரம் (மிகவும் மென்மையான மரம்) நின்று நிலை பெற்றிடாது.

கருமானின் (கொல்லன்) உலைக்களத்தில் சென்று தேவையற்ற இரும்புப் பொருட்கள் அங்கே ஏன் கிடைக்கின்றது…? என்று கேள்வி கேட்க முடியுமா…! அவைகளை அவன் உளைக்களத்தில் தானே வைக்க முடிந்திடும்.

உலக சிருஷ்டியின் கூளத்தைப் பார்…! உலகத்தின் குப்பைகள் ஒவ்வொன்றும் புதிய புதினங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் சிருஷ்டியின் இரகசியங்களை நீ அறிந்து கொண்டிட வேண்டும்.

மனித மனத்தின் கூளங்கள்… மனிதனின் மனக்கருவையை மூடிக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து… ஆத்ம பரிபாலன அரசை இந்த உலகோதயம் சூதிலே வீழ்த்திவிடும்.

உரத்து எழுகின்ற காற்றே குப்பைகளை அகற்றும். அது போல் மகரிஷிகளின் சக்தியை வைத்துத் தான் ஆன்மாவில் பட்ட அசுத்தங்களை அகற்ற முடியும்.

தூய்மைப்படுத்த வேண்டுமென்றால்… சப்தரிஷிகளின் அருள் வழி கடாக்ஷங்கள்… மகரிஷிகளின் அருள் ஒளியாக உரத்து மனத்தூய்மை காட்டும் அந்தச் செயல்பாட்டின் உறுதி நம்மிடம் எப்படி இருக்க வேண்டும்…?

தென்னம்பாளைப் பஞ்சு…
அம்பின் நுனிக் குஞ்சு…
பாறையின் மோதல் வேக நெருப்பு… (SELF IGNITION)
(இராம) காதையின் வழி கண்டுகொள் விருப்பு.

1.தென்னம்பாளைப் பூவின் பஞ்சு போல் அமைத்திட்ட கோலாக அம்பாக அமைந்து…
2.நாண் பூட்டிய வில்லின் மூலம் அதை எறிய…
3.காற்றின் உராய்வு சக்தி கொண்டு கனன்று எரிகின்ற நெருப்பாக…
4.மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்

நீ ஈர்த்துக் கொண்டிடும் “உயர் மின் நுண்காந்த அணுக்கள்” ஆகாயச் சித்தன் (அகஸ்தியன்) கண்ட செயலில்… சரீர உள் நிகழ்வில்…
1.உச்சி முதல் உள்ளங்கால் வரை… உள்ளங்கால் முதல் உச்சி வரை அந்த ஒளி அணுக்கள் ஓடிடும் ஓட்ட கதியில்…
2.மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக ஓட்ட கதி சந்திப்பின் உராய்வில் உண்டாக்கப்படும் ஒலி நாதம்…
3.நம் சரீரத்தைச் சுற்றி ஓடும் அண்ட கோசம் என்ற ஒளிச்சுற்றலாக அமைவு கொண்ட அமைப்பில்
4.உன்னுள்ளே ஓங்கார நாதத்தை இடைவிடாது கேட்டு அனுபவிக்கின்றாய் அல்லவா.

ஞானமாகச் சுடர்கின்ற தன்மைக்கு அதுவே முன் முயற்சி. அனைத்தையும் அறிந்து கொள்ள… தெளிந்து கொள்ள முடியும். அத்தகைய மனித மனத்தின் மனோ சக்தியின் ஆற்றலை… இன்றைய மனிதன் இன்னும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

பூட்டி இருக்கின்ற மனக் கதவைத் திறந்து கொள்ள… இங்கே கொடுக்கும் உபதேச வாயிலாகத் “தியானம் என்ற சாவியை” மனமுவந்து அளிக்கின்றோம்.

அதை வைத்துத் தன் மனக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன்… உள்ளே இருந்து கொண்டு கதவடைத்துத் தாழ்பாளை இட்டு பூட்டிக் கொண்ட பின்… சாவியைத் தொலைத்து விட்டானப்பா…! (மீண்டும் பிறப்புக்கு வராது மகரிஷிகளுடன் ஒன்றிடும் நிலை).

1.அத்தகைய மெய் ஒலி மெய் ஞானம் சுடராக விளங்க… உண்மை நிலை உணர்ந்து தங்களை உயர்த்திக் கொள்வோர்
2.இங்கே வழிகாட்டும் மாமகரிஷிகள் நிலையின் வழி ஒன்றுவர்.

படைப்பின் படைப்பே சிருஷ்டி… அனைத்தும் பெற என்னுடைய ஆசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) எத்தனையோ சிரமங்கள் பட்டேன். காட்டிற்குள் சென்று பல துன்பங்களை அனுபவித்துக் குருநாதர் காட்டிய உண்மைகளையெல்லாம் அறிந்து அதை உங்களுக்குள் பதிவு செய்து அந்த உணர்வை வளர்க்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

ஆனால் பற்று கொண்டவர்கள் இரவெல்லாம் சாமி…! எனக்குத் தலை வலிக்கிறது… மேல் வலிக்குதே… உடம்பு வலிக்குதே… என்னை காப்பாற்ற மாட்டீர்களா…! என்று தான் நினைக்கிறார்கள்.

சாமியைத் தான் நினைக்கின்றார்களே தவிர
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் என்றும்
2.அது எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்
3.தீமையை வென்றிடும் அந்த அருள் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று
4.ஒவ்வொருவரும் எண்ணுங்கள் என்றும் யாம் சொன்னாலும் அதை எண்ணுவதில்லை.

சாமியைத் தான் நினைக்கிறார்கள்… ஆனால் ஞான வித்தை நான் தான் உங்களுக்கு பதிவு செய்திருக்கின்றேன்.

இது போன்று ஆயிரம் பேருடைய உணர்வு என்னைத் தாக்கினால் எனக்கு எப்படி இருக்கும்…? அத்தனை பாதிப்புக்கும் நான் உள்ளாக வேண்டியிருக்கின்றது இத்தனைக்கும் நான் சமாளிக்க வேண்டி இருக்கின்றது
1.என்னையும் காக்க வேண்டும்… உங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
2.என்னை அந்த உணர்வுகள் சாடாதபடி பாதுகாத்துக் கொள்வதற்குக் குருநாதர் அருள் கொடுத்தார்
3.அதைப் போன்று உங்களுக்கும் அந்த அருள் பாதுகாப்பு உண்டு… என்றுமே எமது அருள் உறுதுணையாக இருக்கும்.

அதை எல்லாம் நீங்கள் எளிதில் பெற முடியும். குரு அருள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும். அது கிடைக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது.

இந்த வாழ்க்கை என்ன…? என்று அறிந்து கொண்டபின் இனி நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற நிலையில் உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

ஆனால் ஒரு பிறவி என்று இனி வந்தாலோ நரகத்திற்குத் தான் நாம் செல்கின்றோம். இப்போது நரகலோகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
1.மனித உடல் பெற்றால் சொர்க்கலோகம் என்று சொல்வார்கள்
2.அது பண்டைய காலமாகப் போய்விட்டது.

உடலுக்குள் பல வேதனையும் நரக வேதனை உருவாக்கும் உணர்வுகளையும் நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு நொடியிலும் போர் முறைகளே நமக்குள் வருகின்றது.

நல்ல குணங்களுக்கும்… தீமை செய்யும் குணங்களுக்கும்… மற்றவர்கள் செய்யும் உணர்வுகளை நுகர்ந்தபின் நமக்குள் பெரிய போரே நடக்கின்றது இந்த போரினால் மனக் கலக்கங்கள் வருகின்றது… உடல் நோய்கள் வருகின்றது… சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.

நம் உடலுக்குள் நாம் நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் எது அதிகமோ அதன்வழி இந்த உணர்வுகள் சென்று அந்த வழிக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

1.என்ன வாழ்க்கை…? என்றும் இனி வாழ்ந்து என்ன…? என்றும்
2.இந்த உடலையே அழித்திடும் நிலைக்குத் திருப்பி விடுகிறது.

இதை எல்லாம் நாம் செய்யவில்லை. உணர்வின் இயக்கங்கள் உயிரிலே பட்டபின் அது எதுவோ அந்த உணர்ச்சிக்கொப்ப நம்மைச் செயலாக்குவதும் இதே உயிரே தான்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்றும் இருளை அகற்ற வேண்டும் என்றும் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதித்தல் வேண்டும்.

பதித்த அந்த நினைவு கொண்டு காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வளர்த்துக் கொண்டால்
1.வாழ்க்கையில் வரும் போர்களை அடக்கும்.
2.அது எத்தகைய போராக இருப்பினும் நம்மைப் பாதிக்காத நிலையில் கொண்டு வரலாம்.

அத்தகைய வலிமை பெற்று விட்டால் நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியின் வலுவைப் பெற்றோமோ உடலை விட்டுச் சென்ற பின் நம்மைப் பிறவியில்லா நிலைக்கு அழைத்துச் செல்லும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் காட்டிய வழியினைப் பற்றுடன் பற்றும் பொழுது அருளை நாம் பற்றுகின்றோம். அதன் வழியே காரியங்கள் எல்லாம் நடக்கின்றது.

வாழ்க்கையில் குடும்பப் பற்றினை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றினைக் குறைக்கப்படும் போது செயல்கள் தடைப்படுகிறது. காரணம்…
1.குடும்பப் பற்று என்று வந்தாலே
2.அதிகமான நிலையில் தன் சிந்தனையை இழக்கச் செய்யும்.

இந்தக் குழந்தைக்கு இப்படி ஆக வேண்டும்… அங்கே இப்படி நடக்க வேண்டும்… என்ற உணர்வு வந்து விட்டாலே போதும்.
1.நமக்குள் பதிந்திருந்த “பழைய உணர்வுகள்” அனைத்தும் முன்னாடி வந்துவிடும்.
2.அது முன்னாடி வந்து விட்டால் அதனைக் காப்பது என்பதே பெரிய சிரமம்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டுமென்றால் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… எல்லாம் தெளிவாக வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி நாம் கூட்டிக் கொண்டே வந்தால் சரியாக இருக்கும்.

1.கண்களைத் திறந்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணி
3.அந்த அருள் சக்திகளைச் சுவாசிக்க வேண்டும்.

அதற்குப் பின் வாழ்க்கையில் எது நமக்குக் குறையாகத் தென்படுகிறதோ அது நிறைவேற வேண்டும்… குழந்தைக்கு திருமணம் ஆக வேண்டும் சீக்கிரம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்

ஆனால் ஆகவில்லை என்கிற போது பெண்ணுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது… திருமணம் ஆகவில்லையே…! என்று ஏக்கம் வருகிறது.

ஏக்கத்தின் தன்மை கொண்டு “அது நடக்க வேண்டும்…” என்ற நிலை இருந்தால் சோர்வு நமக்குள் வராது. ஆனால் சோர்வடைந்த நிலையில் எண்ணி எடுக்கப்படும் பொழுது இந்த விஷத் தன்மைகள் கூடி
1.இந்தப் புவியின் பற்றும் உடலின் பற்றும் அதிகரித்து விடுகின்றது.
2.அருள் ஞானிகளின் பற்று தணிகின்றது.

ஆனால் அருளைக் கூட்டினால் அது வளர்ந்து எதையும் நாம் வெல்ல முடியும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வுகள் உயர்வாக இருக்கப்படும் பொழுது நலமாகின்றது.

கொஞ்சம் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மை கூடி விடுகின்றது மனித வாழ்க்கையின் எண்ணங்கள் கூடினால் அருள் ஞானத்தை இழக்கும் சக்தி வருகின்றது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும்
1.நமக்குள் வரும் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மனதில் இருத்தாதபடி
2.அருள் ஒளி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.அருள் ஞானம் பெருக வேண்டும் அருள் வழியில் எங்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும்
4.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டே வந்தால் இந்த உயர்ந்த குணம் நமக்குள் உருவாகும்… நமக்குள் அது பெருகும்… நம்முள் அது வளரும்.
6.நம் சொல் அனைவரையும் பற்றுடன் இயக்கும் நிலை வரும்
7.நாம் எண்ணிய காரியங்கள் ஜெயமாகும்… அந்த உணர்வின் இயக்கமும் நமக்குள் தொடர்ந்து செயலாகும்.

“அகஸ்தியனின் சகாக்கள்” சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்

 

1.அகஸ்தியன் தன் இளமைப் பருவத்தில் பல விஷம் கொண்ட தாவர இனங்களை நுகர்ந்தாலும் உணவாக உட்கொண்டாலும்
2.அவை அனைத்தும் இவனுக்குள் விஷத்தை ஒடுக்கி… உணர்வின் தன்மை மாற்றும் நிலை வருகின்றது.

உதாரணமாக ஒரு தட்டான் பூச்சி எதன் மேல் தன் முட்டைகளை இட்டதோ அந்த உணர்வுக்கொப்ப அதிலுள்ள மணத்தைத் தாங்கி அந்த உணர்வுக்கொப்ப பல வித வர்ணங்கள் கொண்டு பல பல வகையில் பூச்சிகளாக வருகின்றது.
1.ஒரே தட்டான் பூச்சி தான் முட்டைகளை இட்டது
2.ஆனால் முட்டைகளை இட்ட செடிகளுக்கொப்ப அந்த கருக்களில் நுகரப்பட்டு
3.பல வண்ணங்களில் பல விதமான பூச்சிகள் உருவாகின்றது.

இது எல்லாம் இயற்கையில் விளைவது.

இதைப் போல தான் இயற்கையில்
1.அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது விளைந்த உணர்வுகள்
2.பல பல இயக்கத்தின் உணர்வுகளையும் நஞ்சினை அடக்கிடும் தன்மையும் உணர்கின்றான் அகஸ்தியன்.

“அவனில் இணைந்த உணர்வுகள்” நஞ்சினை வென்றிடும் உணர்வுகளாக நுகர்ந்ததனால் அதை அவனின் எண்ண ஒலி கொண்டு வெளிப்படுத்துகின்றான். அதனைச் சூரியனுடைய காந்த சக்தி இதைக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
1.அவனுடன் பழகியோர் அவன் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அவன் உணர்வைப் பதிந்தோர்
2அவர்களுக்கும் அது கிடைக்கப் பெறுகின்றது

அகஸ்தியன் தாய் கருவில் பெற்றான். அவனுக்குக் கிடைத்த உணர்வுகள் தன் சகாக்கள் கேட்டறியப்படும் போது அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் விளையத் தொடங்குகிறது

இவனில் விளைந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஜீவனுக்களாகப் பெற்று அந்தச் சகாத் தோழர்களும் இவனைப் போன்றே அவனை ஒட்டி வாழும் நிலைகள் வருகின்றது

காரணம்… அவரவர்கள் சந்தர்ப்பம் இயற்கையில் எதை எதை நுகர்கின்றோமோ அவை அனைத்தையும் உயிர் உடலில் அணுக்களாக உருமாற்றிக் கொண்டே உள்ளது.

இதை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். பல கோடி இன்னல்களைக் கடந்து அதனைத் தான் அறிந்து தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து வளர்த்து தீமையை அகற்றிடும் அருள் சக்தி பெற்றான் அகஸ்தியன்.
1.அவன் நிலையை நாமும் காண முடியும் காண வேண்டும் என்பதற்கே
2.குரு வழியில் இதை வெளிப்படுத்துகின்றேன்

அகண்ட அண்டத்தின் நிலையும் பிரபஞ்சத்தின் நிலையும் சூரியனின் இயக்கமும் இந்தப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) எப்படி உருவானது என்ற உண்மை நிலையையும் அகஸ்தியன் உணர்கிறான்.

அணுவின் இயக்கத்தை உணரும் பருவம் பெறுகின்றான். அந்த உண்மையின் இயக்கத்தை அறிந்ததனால் அவனுக்கு அகஸ்தியன் என்ற காரணப் பெயர் வைக்கின்றனர்.

இந்தப் பேருண்மைகள் அனைத்தும் அவனுக்குள் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து தான் கண்டதைத் தன் அருகில் உள்ள அவன் சகாக்களுக்கும் சொல்கிறான்.

அவனின்று வெளிப்பட்ட உணர்வு இன்றும் புவியில் படர்ந்துள்ளது. அவன் நடந்து சென்ற எல்லைகளிலும் பதிந்துள்ளது.
1.அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.
2.அவனுடைய சகாக்கள் அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.அந்த அகஸ்தியனின் உணர்வைக் கவர்ந்தால் நாமும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழலாம்.

மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில் “அன்பே” முதன்மையாகும்

மனித மனம் சமுத்திரத்திற்கே (கடல்) ஒப்புவமை காட்டப்பட்டது. அமைதியாகத் தோற்றமளிக்கும் அந்தக் கடல் நீர்
1.பரப்பளவிலே உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடிடும் உண்மை நிலையே “நம் மனத்தின் அலைபாயும் எண்ணங்கள்…”
2.இடையறாது சதா வீசிக்கொண்டே இருக்கும் அலைகள் போல் குணங்களின் தன்மைகள்
3.பல பல குணங்களாக ஆர்ப்பரிக்கும் மனத்தின் எழுச்சி எண்ண அலைகளானது…
4.நாம் கொள்ளப்படுகின்ற (முடிவெடுக்கும் நிலைகள்) கருத்தின் வாசனையாக… “பருவ கால மாற்றம் போல்…”
5.அதனால் ஏற்படுகின்ற கடலின் சூறாவளி போல்… கொண்ட குணத்தின் தன்மை காட்டும்.

மனத்தினுள் மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில்… “அன்பே முதன்மையாக” அந்த குணங்களே வீசிடும் அலைகளாகப் பரவி… புறத்தின் பொய்மை நிலைகள் அகன்று… சாஸ்வதமான மெய் ஒலியால் ஒளி காட்டும் மெய் ஞான நிலை கூட்டி… மெய் ஞானச் சுடராக விளங்கும்.

அதீத நோய்வாய்ப்பட்டவன் நறுமலர் தேனின் சுவையை அறிந்து கொண்டிட முடியாத் தன்மை போல் மெளடீகத்தின் (மூடத்தனம்) வலையில் உட்படும் மனிதர்கள் அதிகரிக்க…
1.மெய் ஞான மணம் காட்டி… சுவை கூட்டும் எளிய தியானத்தைக் காட்டினாலும்
2.கடைப்பிடிக்க முன் வருபவர்கள் அரிதிலும் அரிதாகிக் கொண்டே வருகின்றார்கள்.

அதீத சுகவாசம்… சோம்பேறித்தனம்… இவை எல்லாம் அருள் செல்வத்தைப் பேணிக் காத்திடும் கடமையைக் குறைத்துவிடும்.

அருள் செல்வத்தைப் பேணுகின்ற பொறுப்பு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதனுக்கே உரியது…. அந்தப் பொறுப்பும் அதைக் காக்கின்ற கடமையும் அவனையே சார்ந்தது.

வாசல் வழி திறந்திருந்தால் திருடன் புக ஏதுவாகும். தீய குணங்களையே அவ்வாறு கூறுகின்றோம். ஆத்ம பலம் கூட்டிடும் கடமையை ஏற்றுக் கொண்ட மனிதன்
1.திருடனாலும்… அதாவது தீய குணங்கள் அருள் செல்வத்தை அபகரிக்க…
2.”தனக்கு அதிலே எதுவும் பொறுப்பில்லை…” எனத் தட்டிக் கழித்திட முடிந்திடுமோ…?
3.பொருளைக் காக்கின்றவன் காக்கின்ற கடமையைத் தவறிவிட்டால் அதனுடைய முழுப் பொறுப்பும் அவனுக்கே உரியது.

விழுப்பொருளாம் (உயிருடன் ஒன்றி விண் செல்லும் ஆற்றல்) அந்தப் பொருளை முன் நிலை போல் சமன்படுத்த… மனித மனத்தின் செயலுக்கே அது உரியது.

உவப்பு (மகிழ்ச்சி) மனத்தினுள் நிலைபெற்றுப் பேரானந்த லயமாகக் கலந்திடவே… மனத்தின் பாங்கு அன்று மலர்ந்த மலர் போல் மணம் வீசும் செயலை உணர்ந்து கொண்டிடும் மகிழ்வால்… நாதமாக ஈர்த்திட்டு பேரொளி பெற்றிடவே இங்கே உரைப்பதெல்லாம்.

துறவறம் பூண்டு ஒளி நிலை பெற வேண்டும் என்றே கூறுகின்றார்கள். நாம் கூறிடும் நிலையோ “இல்லறத்தின் வழியாக… ஒலி கொண்டு ஒளி பெறுதல் தான்…”

நாதத்தைக் கூட்டி நாத நாதாந்தம் ஆகுதல்… பேரொளியாகுதல்…” என்பதெல்லாம் நல்லறம் ஆக்கிடும் இல்லறத்தில் பயனுறப் “படைப்பின் படைப்பாதல்…” என்பதனையே உணரல் வேண்டும்.

ஔவையின் உரை… வறுமை கொடியது…! பசியை நோய் என்றே பகர்ந்த உரை. பசி நோயானது தொடர்ந்து பீடிக்கப்படுங்கால்… சரீரம் பசி நோய்த் தாக்குதலில்… உணர்வின் உந்துதல் கொண்டு உயர் நிலையை எண்ணிடாது.

புசித்தால் அந்த நோய் அகலும். ஆனால் தொடர்ந்து வருத்தும் அந்தப் பசி நோயிற்கு “வறுமையில் உழல்பவன்… வளமாக வாழ்பவன்…” என்றெல்லாம் பேதங்கள் ஏது…?

ஜீவ பிம்ப சரீரம் பெற்ற அனைத்து உயிர்களையும் தான் பசி நோயானது வருத்துகின்றது. புசிக்க வழி காணும் ஆக்கத்தின் செயல் இன்றி பசி அகன்றிடுமா…?

வாழும் வாழ்க்கையின் செயலில் முயற்சி அன்றோ திருவினை தருகின்ற உசித மனம் வேண்டும். உசித மனம் கொண்டவன் உரப்ப தானேகும் பசி நிலை (கட்டுக்குள் அடக்க முடியும்).

இந்தத் தியானத்தின் வழியில் செயலுறும் வழியாகக் காற்றமில சக்தியை (உயிர் வழி சுவாசம்) ஈர்த்துக் கொண்டிடும் பக்குவத்தில்… மூல அமில சக்தியாக ஆகாரத்தை (பசிக்கு உட்கொள்ளும் உணவு) இந்தச் சரீரத்திற்கே பெற்றுக் கொள்ள முடிந்திடும். அதாவது
1.தொடர்ந்துற்ற பசிக்குத் தொடர்ந்தே உணவு அருந்திடும் தன்மை போல்
2.தொடர்ந்தே காற்றமில சக்தியைச் சரீரத்தினுள் ஈர்த்துக் கொள்ளும் செயலில்
3.”நிலை நிற்கும் பேறு அதுவே…” என மாமகரிஷிகளால் அந்தச் சக்திகளை வளர்த்துக் கொண்டிடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் பாஷை புரியாதபடி எதை எதையோ சொல்லுவார் என்னென்னவோ சொல்லுவார். எனக்குத் (ஞானகுரு) தெரியாது
1.தெரியாது… என்று நான் சொன்னாலும் வம்பு…!
2.தெரியும் என்று நான் சொன்னாலும் “எப்படித் தெரிந்து கொண்டாய்…?” என்று கேட்பார் குருநாதர்

இப்படி வழக்கத்திற்கு மாறான நிலையில் செய்து அதனைத் தனக்குள் செய்யச் செய்து
1.அவரின் சக்தி வாய்ந்த உணர்வை எனக்குள் போதிக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் வளர்ந்தபின்
2.இப்போது எப்படி இருக்கின்றது…? என்று கேட்பார்…?

அவர் சொல்லும் (உபதேசம்) பொழுதும் எனக்குக் கஷ்டங்கள் வரும் பொழுதும் மறைமுகமாகவே எனக்குள் இப்படித் தான் சொல்வார். சொல்லிவிட்டு
1.அதைப் பார்… இதைப் பார்…
2.இப்படிப் பார்… அப்படிப் பார்…! என்பார்.

அதை நான் கேட்கும்போது இவர் என்ன சொல்லுகிறார்…? என்று நான் நினைத்து விட்டால்
1.ஏன்டா திருடா நீ இதைத் திருட வேண்டும் என்றால் அதைத் திருடுகின்றாயே…!
2.நான் சொல்வதை விட்டுவிட்டு எதை எதையோ திருடிக் கொண்டிருக்கிறாய்… “என்னவோ ஏதோ என்று…”

ஆக அதைத் திருடினால் நீ திருடனாகின்றாய். ஆனால் நான் சொல்லும் உணர்வின் தன்மையைப் பெற்றால் நீ திருடன் அல்ல. நீ என்னிடம் கேட்டு வாங்குகிறாய்…! ஆகவே நான் கொடுக்கும் உணர்வின் தன்மையை நீ ஏங்கிப் பெறு என்பார்.

ஆனால் இவர் (ஈஸ்வரபட்டர்) சொல்வது எப்படி…? எனக்கு ஒன்றும் அர்த்தம் ஆகவில்லையே… அதாகின்றது… இதாகின்றது… என்று எண்ணினால்
1.திருட்டுத்தனமாக உனக்குள் “குறையின் உணர்வை” எடுத்துக் கொள்கின்றாய்.
2.அது உன் திருட்டுத்தனத்தின் நிலையைக் காட்டுகின்றது.

நான் கொடுக்கின்றேன்… நீ எடுத்துக்கொள்…! ஆகவே கொடுப்பதை விடுத்துவிட்டுக் கிடைக்காததை நினைத்து நீ எங்கோ நினைவு செலுத்துகின்றாய்.

நான் மனமுவந்து கொடுக்கும் உணர்வை நீ நுகர்ந்தறிந்தால் அதன் அணுவாக உனக்குள் வரும். அருள் ஞானத்தின் உணர்வுகளை உனக்குள் வளர்த்துக் கொள்ள உதவும்…! என்றார்.

இப்படித்தான் அவருடைய சொல் செயல் இவை எல்லாம் வெளிப்பட்டது. அதன் வழி கொண்டு எனக்குள் தெளிவாக்கினார்.

எனக்குக் கல்வி அறிவே இல்லை… நான் மூடனாக இருப்பினும் என் மூடத் தன்மையை நீக்கி அருள் ஞானத்தை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று வளர்த்தார்.

காடு மேடெல்லாம் அலையச் செய்தார் உணவு இல்லாதபடி தேடச் செய்தார். இயற்கையில் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது…? என்று இப்படி எத்தனையோ பல உணர்வுகளைக் காட்டுகின்றார். அதையெல்லாம் பசியோடு இருந்து தான் பார்த்தேன்.

1.என் குரு எனக்குச் சொன்னது போன்று…
2.அவர் எனக்கு உணர்த்தியது போன்று…
3.நீங்களும் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…! என்று தான் இப்பொழுது உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

January – 2025 உபதேசம்

நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

 

“அணு ஆயுத இயந்திரங்களை…” கால மணிகளை உருவாக்கும் நிலைகள் கொண்டு எலக்ட்ரானிக் முறைப்படி நாடாக்களில் பதிவு செய்து பாதுகாப்பாக வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

அதன் மூலம் விஷத்தன்மை கொண்ட அணுகுண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

மற்ற நாடுகளில் இராக்கெட்டுகளை ஏவுவதற்காக அதாவது அங்கிருந்து எதிர் அலைகள் வந்தால் சீறிப்பாய்ந்து அந்த இலக்கினைத் தாக்குவதற்காக… அடுத்த நாட்டை அழிப்பதற்காக இப்படி வைத்துள்ளார்கள்.

விமானங்களையும் இராக்கெட்டுகளையும் கம்ப்யூட்டர் துணை கொண்டு இயக்கச் செய்யும்… உணர்வின் அறிவு எலக்ட்ரானிக்காக மாற்றப்பட்டு எதிர் அலை கொண்டு இவன் இடும் கட்டளைகளைச் சீராக வேலை செய்யும் நிலையில் வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் சூரியனுக்குள் இயங்கும் எலக்ட்ரிக் இப்போது அதிகமாகி விட்டால் என்ன நடக்கும்…?

இன்று வீடுகளில் நாம் உபயோகப்படுத்தும் மின்சாரம் அதிகமாகிவிட்டால் பல்புகள் ஃபியூசாகி விடுகின்றது. அதைப் போல்
1.மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் சூரியனுக்குள் அதிகரிக்கப்படும் பொழுது உற்பத்தியாகும் எலக்ட்ரிக் அதிகமாகி
2.சீராக இயங்கிக் கொண்டிருக்கும் எலக்ட்ரானிக்… குண்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்தச் சாதனங்கள் செயலிழந்து விடும்
3.இராக்கெட்டுகளோ மற்ற சாதனங்களோ தன்னிச்சையாக இயங்கத் தொடங்கும்.

காரணம் அதற்கென்ற மானிட்டர்கள் வைத்துச் செயல்படுவது செயலிழந்து… சிதைவுண்டு… விஷத் தன்மைகள் அதிகளவில் பரவும் நிலை உண்டு.
1.அத்தகைய நிலை வெகு நாளில் இல்லை… வெகு துரிதத்தில் இயங்கி விடும்.
2.இதைக் குறித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்… விஞ்ஞானிகளை அறியாமலே இத்தகைய சிதைவுகள் இனி வரும்.

நடக்கப் போகும் அத்தகைய கொதி நிலைகளில் இருந்து தப்ப வேண்டும் அல்லவா. ஆகவே உடலை விட்டுச் சென்றாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

விஷத்தன்மைகள் பரவி விட்டால் இந்தப் பூமி பரிசுத்தமாகப் பல ஆயிரம் ஆண்டுகளாகும். அதற்குள் மனிதர்கள் வாழ்ந்தால் மிருகமாகத் தான் வாழ வேண்டும்.

விஷத் தன்மை கொண்டு சிந்தனையற்ற நிலைகளில் ஆரம்ப நிலையில் இந்த பூமியில் உருவான மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தது போன்று தான் வாழ முடியும். சிந்திக்கும் தன்மை இழந்தே இருக்கும்.

1.ஆகவே இப்பொழுது நல்ல நினைவு இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள்.
2.உங்கள் குடும்பங்களில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்கள் முன்னோர்கள் ஆன்மாக்களை விண் செலுத்த மறந்து விடாதீர்கள்.
3.அவர்களை ஒளியின் சரீரம் பெறச் செய்யுங்கள்.

அவர்கள் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் இனி எதிர்காலம் விஞ்ஞான உலகில் இருந்து தப்பும் நிலையாக பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று செயல்படுத்துங்கள்

இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்… நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி விட்டால் நாம் விண்ணுலகம் செல்ல முடியும்.
1.துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் பிற மண்டலங்களிலிருந்து வருவதை உணவாக எடுத்து
2.ஒளியின் சுடராக வாழ்வது போன்று நாமும் வாழ முடியும்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் இங்கிருந்து அகன்று சென்று மற்ற மண்டலங்களின் சக்திகளை நுகர்ந்தறிந்து விண்ணிலே “என்றும் 16” என்ற நிலையை அடைய முடியும்.

மனிதனான நாம் தான் இத்தகைய நிலையை உருவாக்க முடியும். அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்குவோம்… மெய் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்வோம் என்று உங்களைப் பிரார்த்தித்து வேண்டிக் கொள்கின்றேன்.

நான் சொல்வதைத் தயவு செய்து அலட்சியப்படுத்தி விடாதீர்கள் குரு எனக்கு இந்த உண்மைகளை உணர்த்தினார் அதைத்தான் நீங்களும் பெற வேண்டும் என்று
1.உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலைச் சிவமாக மதித்து
2.அந்த உயர்ந்த நிலை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று நான் தவம் இருந்து கொண்டிருக்கின்றேன்.

சரீரத்தின் அனைத்து அணுக்களும் “உயர் மின் நுண்காந்த அலைகளை…” ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்

 

குணங்களாக உள் அடக்கும் “ஓர் மறை பேறு” என்பதே மனித மனம் வளர்த்துக் கொள்கின்ற குண நலன்கள்… அகத்தின் அருட் சிந்தனையில் பிரகாசிப்பதே “உயர் ஞானம்…”
1.ஞானச் செல்வங்கள் (நீங்கள்) அகத்தின் அருள் செல்வத்தினை
2.உங்கள் சிந்தையில் பற்றுக…! என அன்பு கொண்டே அழைக்கின்றோம்.

காலமாம் வேக கதியில்… அனைத்துமே மறைதல் தத்துவம் பெறுகின்றது.

உயிர் சக்தி வலு கூட்டிக்கொள்ள இந்தச் சரீரமும் காக்கப்பட வேண்டும். நோயுற்ற ஒருவனைப் பிழைத்தெழ வைத்திடும் வைத்திய நூல் கற்று அதனைச் செயல்படுத்திக் காட்டிட்ட எத்தனையோ மருத்துவர்கள் உள்ளார்கள்.

இருந்தாலும்… அவர்களும் காலத்தின் பிடியில் தான் சிக்கி உள்ளார்கள். உடலை விட்டு எப்படியும் பிரிந்து தான் ஆக வேண்டும்.

ஆனால்
1.மெய் ஞானத்தின் விழிப்பு கொண்டு உயர் ஆத்ம சக்தியை வலுக் கூட்டிய மாமகான்கள்
2.காலத்தால் இன்றும் அழியாது வாழ்ந்து வருகின்றனர்…

அவர்கள் செயல் கொள்கின்ற நிலை என்ன…?

காலில் அணியும் சலங்கை பார்த்திருக்கின்றாய் அல்லவா. உயர்ந்த உலோகத்தால் உருவாக்கப்படும் கால் சதங்கை ஒலிப்பது எவ்வாறு…?

பொருத்தமான பரல்கள் உள்ளிட்டு அமைக்கப்படும் அந்தச் சதங்கை வாய் ஒலிக்கின்ற ஒலி போல்…
1.இங்கே யாம் காட்டும் பொருளை
2.ஆத்ம பலம் கூட்டிடும் ஞானத்திற்கே காணுதல் வேண்டும்.

பொருந்தாப் பொருள் அமையப் பெற்ற சதங்கை எவ்வாறு ஒளி நாதத்தைக் காட்டாதோ அதைப் போன்றே
1.சரீரத்தின் அனைத்து அணுக்களும் “உயர் மின் நுண்காந்த அலைகளை…” ஈர்த்துக் கொண்டிடும் பக்குவம் இல்லை என்றால்
2.மனிதச் சரீரத்தை ஒளியாக்கிடும் சித்தன் நிலை குறைவுபடுமப்பா.

நாம் ஈர்க்கின்ற உயர் காந்த சக்தியை… சரீரத்தில் உள்ள அனைத்து அணுக்களும் பெற்று… உயிர் ஆத்ம சக்தியின் வலுவால் ஒலிக்கின்ற நாதமே பின் “விந்து கலையாகும்…”

அந்த நிலையின் பக்குவம் பெற்றுவிட்டால் “துடி முழவின்” (இசைக் கருவி) ஒலி கேட்டிருக்கின்றாய் அல்லவா. அத்தகைய முழங்கு நாதம்… சொல் (உன் சொல்) அறப்பெற்றிடலாம்.

இதையே சரீரத்தின் தொடர்பிற்கும் உணவினை உட்கொள்ளும் குணங்களாகக் காணலாம்.

உடல் பொருந்துகின்ற உணவினையே உட்கொள்ளல் வேண்டும் உணவின் குண மாறுபாட்டால் நம் சரீரத்திற்குள் பிற உயிர்த்தொகைகள் உட்கொள்ளும்… உணவின் குண விசேஷ வாசனையால் ஆட்கொண்டு உடல் வாழ்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

சமைக்கப்படும் உணவில் அதன் வாசனைக்கொத்த உயிரணுக்கள் அசைகின்ற தன்மைகளையும் அதன் செயல்பாட்டையும் காட்டி இருக்கின்றோம். “இலையில் திகழ்கின்ற பிண்டம்…!” என்று உரைத்திருக்கின்றோம்.

எல்லாமே வாசனைகள் ஆகுகின்றன. ஆனாலும்
1.குணங்களின் வேகத்தை அது எத்தகையதாக இருந்தாலும்
2.ஆத்ம பலத்திற்கே அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

தொழில் புரியும் ஓர் தொழிலாளி… கருத்தொன்றி தொழில் நாட்டம் கொண்டிட்டால் பசி தாகத்தை உணர்வதில்லை. சிலர் பொருளைப் பெற்றிடும் வேகத்தால் உத்வேகம் ஊட்டப்பெறும் ஒன்றின் கருத்தால் பசியினை மறந்தும் தொழில் புரிகின்றார்கள்.

இப்படி வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ சம்பவங்களைக் காண்கின்றோம் அதுவும் கருத்தொருமித்த நிலை தான்.

அதே மனநிலையைத்தான் “இந்தத் தியானத்திற்குச் சிறிதளவேனும் செயல் கொள்ளுங்கள்…” என்று உரைப்பதெல்லாம்.

1.ஞானத்தின் வித்துக்களைத் தேர்ந்தெடுக்கும் வேகத்திற்கே சப்தரிஷிகள் செயல் கொள்கின்றனர்…
2.ஆக்கம் அனைத்தையும் காக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தென் துருவம் வட துருவம் என்கிற போது
1.தென் துருவம் பூமியின் அச்சிலே இருக்கிறது
2.வட துருவத்தின் வழியாக வரும் போது… மற்றது எது வருகிறதோ ஒதுக்கித் தள்ளும்.
3.தென் துருவம் தனக்குள் இழுத்துக் கொள்ளும்… பிடிப்பாக இருக்கும்.

இதனுடைய காந்தப் புலனறிவுகளை அறிந்து கொண்டு இன்று விஞ்ஞான அறிவுகளில் பல விதமான வித்தைகளைச் செய்கின்றனர்.

துருவப் பகுதியை அறிந்து இன்று விஞ்ஞானி அதைச் செய்கின்றான். அன்று துருவத்தின் எல்லையில் நின்றான் அகஸ்தியன்

அந்தத் துருவத்தின் எல்லையில் அகஸ்தியன் இருக்கும் போது வானுலக ஆற்றலை அறிந்தான். துருவத்தின் எல்லையில் அவன் நின்று
1.துருவத்தில் நீளமாக இந்தப் பூமி மாறும் போது (கோழி முட்டை போல் நீளமாக) அதனின் உணர்வை மாற்றியமைத்து
2.சமமான நிலையில் வைத்தான் அகஸ்தியன்… இன்றும் அவன் வைத்தது தான் ஓடிக் கொண்டுள்ளது.

ஏனென்றால் சர்வத்தையும் தனக்குள் கவர்ந்திடும் சக்தியாக அவன் எல்லை கடந்து தன் எண்ணங்களை விண்ணிலே செலுத்தி… உணர்வின் தன்மை ஆற்றலைப் பெறும் போது “துருவத்தின் வழியாகத் தான்…” இவன் நுகர்ந்தறிய முடிந்தது.

அதன் வழி அறிந்த அகஸ்தியன் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. நம் பூமி துருவத்தின் வழியில் அதைக் கவர்கிறது.

அப்படிக் கவரப்படும் போது
1.அவன் எப்படி ஒளியின் தன்மை பெற்றானோ… பூமியைத் திசை மாற்றினானோ…
2.இதைப் போல் அவன் உணர்வின் தன்மையை நாம் அனைவரும் பெற முடியும்.
3.அப்படிப் பெறுவதற்குத் தான் அகஸ்தியன் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தான்.

அதாவது முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது என்று மனித உடலில் யானையின் தலையைப் போட்டு
1.வடமேற்காக விநாயகரை வைத்து… வடகிழக்காக விண்ணிலே நம்மை உற்றுப் பார்க்கும்படி செய்து
2.அகஸ்தியன் எப்படி ஒளி உடல் பெற்றானோ துருவ நட்சத்திரமாக ஆகும் பருவம் பெற்றானோ
3.தன் இன மக்கள் அதைப் பெறுவதற்காக… அவன் இருக்கும் போது அத்தகைய நிலையை உருவாக்கி விட்டுச் சென்றான்.

அவன் வழியிலே சென்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாமும் பெற வேண்டும். நம் உடலில் ஆழமாக ஊழ்வினை என்ற வித்தாக அதைப் பதிவாக்கிக் கொண்டால் காற்றுக்குள் மறைந்திருக்கும் அருள் உணர்வை நாம் பெற முடியும்.

ஏனென்றால் அவன் சர்வ சக்தியும் பெற்றவன். தெற்கிலிருந்த அந்த உணர்வுகள் அது வழக்கில் வந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்து அவன் ஒளியின் உடல் பெற்றான். அந்த உணர்வின் தன்மை வடக்கிலிருந்து பூமிக்குள் பரவிக் கொண்டு தான் உள்ளது.

1.அது வரும் பாதையில் வடகிழக்கினை உற்று நோக்கி – அதிகாலையில் நாம் நுகர்ந்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே எடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

அவன் உணர்வை எடுத்து நமக்குள் உருவாக்கினால் நமது உயிர் அதன் வலுவாகக் கொண்டு செல்கிறது. ஆகவே அந்த அகஸ்தியன் பெற்ற அருளைப் பெற மறந்துவிடாதீர்கள்… தவறி விடாதீர்கள்.

அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான உணர்வை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டே வர வேண்டும். அந்த உணர்வுகளை வலு ஏற்றிக் கொள்ளுங்கள். அவன் உணர்வைப் பெற்ற பின் அவன் அடைந்த எல்லையை நாம் அடையலாம்.

இந்தப் பூமியில் உயிரணு தோன்றி உணர்வின் தன்மை ஒளியாகி ஆன பின்
1.சூரியனே அழியலாம்… அத்தகைய சந்தர்ப்பம் வந்து கொண்டுள்ளது
2.இந்தப் பிரபஞ்சமே அழியப் போகிறது… இதிலே சிக்கிய உயிரணுக்கள் எல்லாம் மீண்டும் வேறு பிரபஞ்சத்தில் பரவும்
3.எந்தப் பிரபஞ்சம் கவர்கிறதோ அங்கே சென்று அடுத்த உடல் பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை வேதனை தான் இருக்கும்.
4.நரகலோகத்தைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே இன்று இந்த உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே அந்த அருள் உணர்வைச் சேர்த்துக் கோண்டால் நாம் அங்கே சப்தரிஷி மண்டலம் செல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ரேடியோ டி.வி. நாம் பார்க்கிறோம் என்றால் அது எந்தெந்த ஸ்டேசனிலிருந்து ஒலி பரப்பு செய்கின்றனரோ அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் இந்தக் காற்றில் கலந்துள்ள அந்த அலைகளைக் குவித்து அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து பார்க்கின்றீர்கள்… பட வழி கூடி…!

இதைப் போன்று
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வினை
2.உங்களுக்குள் இப்போது பதிவு செய்கின்றேன்… இந்த ஸ்டேசனை நீங்கள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்
3.வெகு தூரத்தில் இருப்பதை நீங்கள் நுகர்ந்தறிய வேண்டும் என்ற எண்ணங்களை ஊடுருவிச் செலுத்தினால்
4.அதனின் கவர்ச்சியாகி அகஸ்தியனின் உணர்வலைகளை நுகர்ந்து அந்த உணர்வலைகளை உங்கள் உயிர் தெரியப்படுத்தும்.

தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாதபடி அண்டத்தின் இயக்கமும் தனக்குள் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இருக்கிறது…? என்பதையும் அறிய முடியும்.

நீங்கள் எண்ணியதை உயிர் ஈசனாக இருந்து… மோதலில் வெப்பமாக விஷ்ணுவாகி… அந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் பரப்பச் செய்யும்.

விஷ்ணு கையில் என்ன இருக்கிறது…? சங்கு சக்கரம்…!

எண்ணிய உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த ஒலியின் நாதங்களாகி அந்த நாதங்கள் உடலில் சுழற்சியாக இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்கத் தொடங்கும்.
1.காந்தம் இழுத்து உயிருடன் ஒன்றப்படும் போது சுழன்றாலும்
2.இந்த உணர்வின் தன்மை கருவாகி இரத்தநாளங்களில் அணுக்களாக உறைந்து விடுகிறது.

அகஸ்தியன் கண்ட அண்டத்தின் உணர்வுகளை நினைக்க நினைக்க அதைச் சேர்க்கச் சேர்க்க அந்த உணர்வுகள் அணுக்கருக்களாக நமக்குள் வளர்ச்சி அடையும்.

அவன் வழியில் அவன் கண்டுணர்ந்த உணர்வும் நமக்குள் நினைவுக்கு வரும்.
1.அகஸ்தியன் துருவனாகி… துருவத்தின் ஆற்றலை நுகர்ந்தறிந்தது போல் நமக்கும் அந்த நுகரும் ஆற்றல் கிடைத்து
2.அதே உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை அறியாமலே அங்கே அழைத்துச் செல்லும்.

இப்போது இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் உணர்வுகள் அனைத்தும் நீங்கள் நுகரும் போது உங்கள் உடலில் கருக்களாக உருவாகும். பின் நாளடைவில் அதனுடைய எண்ணங்கள் வரும் போது கரு வலுவாகும்.

கரு வலுவான பின் இரத்தநாளங்களில் கலந்து எந்த உறுப்புகளில் இணைகின்றதோ அந்தக் குணத்தின் அணுவாக உருவாகி அதனின் உணர்ச்சிகளை உந்தச் செய்து அந்த உணர்வை நாம் மணத்தால் நுகரப்படும் போது உள் நின்று தன்னை வளர்க்கும் அந்த மணத்தின் உணர்ச்சி கொண்டு நமக்குள் அந்த எண்ணங்கள் செயல்படுகிறது.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணும் போது அது அணுக்கருவாகி அணுக்களாக உருவாகி விட்டால் அந்த அருள் ஞானி பெற்ற உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை நீங்கள் எளிதில் கவர முடியும்.

கவரும் நிலையில்… அகஸ்தியன் கணவனும் மனைவியுமாக ஒன்றாகச் சேர்த்து ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனானோ அந்த உணர்வுகளை
1.நம் உயிர் உடலுக்குள் கடவுளாக நின்று தனக்குள் வளர்க்கப்படும் போது நம் எண்ணமே அங்கே கடவுளாகிறது
2.அந்தக் கடவுளே உள் நின்று இயக்கும் அந்த உணர்வின் குணங்களைப் பாய்ச்சுகின்றது.
3.அதுவே அருள் ஞானத்தின் உணர்ச்சிகளைத் தூண்டி அதனின் செயலாக அங்கங்களை இயக்குகிறது.

நாம் அதை நுகர நுகர… அந்த அருள் ஒளியின் உணர்வைத் தனக்குள் சிறுகச் சிறுகக் மாற்றி நம்மை ஒளியின் சுடராக மாற்றுகின்றது. நம் உணர்வுகள் எல்லாம் ஒளியாக மாறுகிறது.

பிறருக்கு நன்மை செய்தாலும்… தீமை நமக்குள் ஏன் வருகிறது…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் உரைகளைத் தான் உங்களுக்குப் போதித்து வருகின்றோம் அதை நீங்கள் தெளிந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் செம்மையான பாதையினை அமைத்துக் கொள்ள அதற்குண்டான பக்குவங்கள் வரும்.

இது தீமை இது நன்மை என்று சொல்லும் பொழுது
1.தீமை என்ற நிலைகளை விலக்கி விட்டுச் சென்றால் தீமை வருவதில்லை.
2.நன்மை பயக்கும் இடங்களுக்குச் சென்றால் அந்த நன்மையே வலிமையாக அது உங்களை அழைத்துச் செல்லுகின்றது.

இதைப் போன்று தீமை நன்மை என்றும் உணரும் நிலைகளில் நீங்கள் எதனை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று சற்று சிந்தியுங்கள் உங்கள் சிந்தனைக்குரியதாக இதை விட்டு விடுகின்றேன்.

இன்று நமக்கு ஞானத்தைப் போதிப்பவர்களில் புகழ்வதற்கும் போற்றுவதற்கும் தான் ஆசீர்வதிக்கின்றார்கள். புகழுக்காக ஏங்குகின்றார்கள்… போற்றுவதற்கு ஏங்குகின்றார்கள்.

நாம் போற்றித் துதிக்கவில்லை என்றால் இவன் ஏதோ பழித்துப் பேசுகின்றான்…! நம்முடைய தெய்வங்களுக்கும் கொள்கைகளுக்கும் விரோதமானவன்…! என்று குறை கூறி மாயக்காரன் என்றும் மாயா ஜாலக்காரன் என்றும்… மதிக்கக் கூடியவன் அல்ல என்றும் அசுர குணங்கள் கொண்டவன் என்றும்…
1.உண்மையின் உணர்வுகளை அறியாது உண்மையின் உணர்வை அறியச் செய்தாலும் அதைப் போதிக்கும் வன்மைகள் இழக்கப்பட்டு
2.மனிதனின் வாழ்க்கை ஞானிகள் உணர்வைத் தனக்குள் பெருக்கும் நிலையை இழக்கச் செய்துவிட்டார்கள்.

ஆக யாரையும் நான் குறை கூறவில்லை… அவர்கள் அறிந்தார்களோ இல்லையோ…! மெய் உணர்வுகளைத் தான் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

பிறருக்குத் தர்மம் செய்ய விரும்புவோர்
1.வேதனைப்படுவோர் உணர்வை நுகர… அந்த வேதனையான அணுக்கள் உடலுக்குள் புக
2.இந்த இந்திரலோகத்திற்குள் (இரத்த நாளங்கள்) நன்மை செய்யக்கூடிய நிலைகள் இழக்கப்படுகின்றது…
3.எம்மா… எப்பா…! என்று வேதனையைத் தான் வளர்க்க முடியும்.

அப்பொழுது தன்னுடைய திசைகள் எங்கே செல்கின்றது…? அதற்குப்பின் தர்மம் செய்யப் போகின்றாரா…?

எல்லோருக்கும் நன்மை செய்தேன்… என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே…! என்ற இந்த உணர்வைத் தான் பேசுகின்றார்கள் தவிர
1.எதனால் இது வந்தது என்று அறிய வாய்ப்பினைக் கொடுத்தாலும் அதை அறியாத வண்ணம் காலத்தால் மறைந்தே சென்று விட்டது.
2.அதைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
3.அருள் ஞானிகள் உணர்வைப் பதிவாக்குகின்றேன்… நினைவு கொண்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.

தீமைகள் எப்படிப் புகுகிறது…? உங்களுக்குள் அறியாது புகும் அந்தத் தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும்… அதை மாற்றும் வல்லமை உங்கள் ஆறாவது அறிவுக்கு உண்டு என்று தான் உணர்த்துகின்றேன்.

ஆகவே ஆறாவது அறிவின் துணைனை கொண்டு அருள் ஞானிகள் உணர்வுகளை நுகருங்கள். அதை உங்களுக்குள் சிருஷ்டி ஆக்குங்கள். உங்கள் இரத்த நாளங்களில் பெருக்குங்கள். தீமைகள் வராது தடுக்க இது உதவும்.

“நிற உலகு…” ஒன்று இருப்பதை மனிதன் அறியவா போகின்றான்…?

 

காலம் குறுகியது என்று பல முறைகள் உரைத்திட்டோம்… அதை எத்தனை பேர் அறிவில் தெளிந்து கொண்டனர்…?

பேரண்ட சூட்சும இரகசியத்திற்குள்… காலத்தின் நிலையால்
1.இதுவரை கடந்து சென்றிட்ட வெகு நீண்ட கால நிகழ்வுகள்…
2.எதிர் கொள்ள இருக்கின்ற வெகு நீண்ட காலத்தின் நியதிகள்…
3.இதிலே உன்னுடைய பங்கு எவ்வளவு என்று கூற முடியுமா…?

பேரண்டத்தின் அளவீட்டில் மானிடப் பிறப்பு என்பது அணுவிற்குள் அணுவே. ஈர்த்து உயர்த்திக் கொண்டிடும் செயல் வேகம் கண்டாயா…?

மனிதன் என்ற ஜீவ பிம்ப வாழ்க்கையின் குறுகிய காலத்தினை அறிந்து கொண்டு காலச்சக்கரத்தில் அனைத்தும் மறைந்துவிடும் மாயை…! அதுவே புனிதமாகத் தோன்றும் செயலின் சித்து. சித்து என்பது எதுவப்பா…?

ஜடப்பொருளாகப் புறப்பொருள் காட்டுவது சித்து விளையாட்டு.

சிருஷ்டியின் சித்து சகலமாய்ச் சகலமும் தோன்றிடும்… ஜீவ பிம்பம் காட்டிடும் அனைத்து பொருட்களும்… மற்றும் அதனுள் அடங்குவது ஜடப்பொருள்களும் தான்.

சித்தன் நிலை பெற்றால் சித்து நிலை விளங்கும்.

சகலமும் பொருள்கள் என்றே உரைத்திட்டோம். காலம் குறுகியது என்பதை உணர்ந்து விட்டால் நாம் உரைத்த சகல பொருட்களின் தன்மையும் விளங்கும்.

தோன்றி மறையும் அனைத்தும் வேகம் வேகம் வேகம் தான்…! நிலை பெற்றிடும் பொருள் எது…?

மனித மனத்தின் சிந்தனை ஓட்டம் செயல்படுவதை ஊன்றிப் பார்த்திருப்பாய். இந்தப் புற உலகத்தில் வாழும் வாழ்க்கைக்கே பொருள் தேடுகின்ற மனிதனின் ஆசைக்கு எல்லை உண்டா…?
1.பொருள் தேடும் சிந்தனையில் பேராசை வயப்படுகின்றான்… அந்தப் பொருளுக்காக உலகினை நேசிக்கின்றான்.
2.பொசுக்… என பொருள் மறைந்தால்…? உலகின் கண் பகைமை காட்டுகின்றான்.
3.மனித மனத்தின் முரண்பாடே ஒரு பொருளாக இரு செயல் நிகழ்வுற்று
4.அந்த இரண்டிலும் பாதிப்புக்கு உள்ளாவது பகைதான்… “மனது தானப்பா பகை…!”

இவைகளில் உழலுகின்ற மனிதன் “நிற உலகு…” ஒன்று இருப்பதை அறியவா போகின்றான்…? அந்த வட்டச் சுழற்சியில் இருந்து விடுபட்டு உயரவே இவ்வளவு “கடுமையாக உரைக்கின்றோம்…”

நிற உலகு என்பது “ஒளிதானப்பா…”

இகழ்ந்துரைக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். உலகம் பழிக்கின்ற செயல் இது என வழிகளாக நெறிமுறைகள் வகுத்துத் தந்த மாமகான்கள்… நன்நெறியில் வளர்ப்பாக்கும் செயலில் மனிதன் தெய்வநிலை பெற்றிட மெய்ஞானச் சுடராக விளங்கிட போதனைகள் உரைத்திட்டனர்.

இகழ்ந்துரைக்கும் நிலை மாற்றுகின்ற மனம் வேண்டி உறுதியாக நிலை நின்று மனிதன் செயல் கொண்டால் “உட்பொருள்… தன் பகை நீக்கும்…”

பாடநிலையின் ஆரம்பத்தில் கொடுத்த வினாவிற்கே வருகின்றோம்.

1.மனிதன் புறப்பொருளைப் பிரிந்த ஏக்கத்தால் பேராசையின் அதிர்வு கொண்டிட்ட ஆவேசம்
2.வெறுப்பின் சிந்தனையில்… புற உலகினைப் பகைப்பதாக எண்ணித் தன் மனதையே தான் பகையாக்கி
3.வாசம் செய்திடும் இறை சக்தியை… உட்பொருளை… அகத்தின் அருட் சிந்தனையை… பகை உணர்வு கொண்டுவிடுகின்றான்.

அப்படிப் பகை கொள்கின்ற (தனக்குள்… தனக்குத் தானே) செயலின் வீரியம் எந்த நிலை பயக்கும்…? என உணர்ந்திருப்பாய்.

1.”உட்பொருள்…” தன் பகை நீக்கும் வழி வகைதனைக் காட்டி விட்டோம்
2.தியானத்தின் மேன்மையை அக உணர்வால் உண்ணல் வேண்டும்

சித்து… சடம்… இரண்டிலும் “ஈஸ்வர ரூபம்…” மனித மனத்தின் அகலவொண்ணா பொருள் அதுவே. அதைப் பெற்று உயர்ந்திட எனது ஆசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பெற்ற பின் நஞ்சினை மாற்றும் உடலின் அமைப்பு வருகிறது.

பன்றியின் உடலாக இருக்கும் போது நஞ்சை நீக்கும் உணர்வுகள் பெற்று… நல்ல மணத்தை நுகர வேண்டும் என்று பட்டது. அதன் உணர்வின் தன்மை வரும் போது கலியாகி மனிதனாக மாற்றியுள்ளது.

எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின் தீமையை நீக்கும் உணர்வு பெற்று மனிதனாக ஆன வலிமை கொண்டு
1.இன்று விஞ்ஞானியோ அல்லது வைத்தியரோ
2.இதைக் காட்டிலும் வலுவான உணர்வு கொண்டு விஷத்தை மாற்றுகின்றனர்.

“சாம வேதம்…” என்று சொன்னாலும் வேப்ப மரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டால் சாம. அதாவது…
1.வேம்பின் மணத்தை நாம் நுகரப்படும் போது ஓ…ய்… என்ற சப்தத்துடன் உமட்டல் வருகிறது.
2.கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் போது மற்றதை விடாதபடி வாந்தி வருகிறது – இது சாம.
3.அந்த வாசனை வரப்படும் போது அந்த உணர்ச்சிகள் உந்தி வெளியே தள்ளுகிறது.

உணர்வின் தன்மை கவரப்பட்டு உறையும் நிலை வரும் போது கிரேதா. அதைக் கடந்து அதிலிருந்து வரக்கூடிய மணம் தான் சாம… இசை. அதை உயிரணு நுகரப்படும் போது “உணர்ச்சியின் எண்ணங்கள்…” வருகிறது.

ஆனால் தாவர இனங்களாக இருக்கும் போது அந்த மணத்தின் வலிமை கொண்டு மற்றதைத் தன் அருகில் விடாது பாதுகாத்துக் கொள்கிறது.

ஆகவே அதைப் போன்று மனிதனான பின் தீமைகள் நமக்குள் வராது தன்னைப் பாதுகாக்கும் நிலையாக அருள் உணர்வை எடுத்துச் சேர்த்தல் வேண்டும்.

சாம வேதத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டவர்கள்
1.இந்தச் செடி இதைச் செய்யும்… இந்தச் செடி இன்னதைச் செய்யும்… என்று மணத்தால் நுகர்ந்து
2.எந்தச் செடியின் மணத்தை அதிகரித்து மனித உடலில் தீமையை நீக்கியதோ
3.அதன் உணர்வின் குணத்திற்கொப்பத் தாவர இனத்தின் மணத்தைக் கூட்டி
4.மனிதனுக்கு வரும் நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டார்கள் கடந்த கால மனிதர்கள்.

நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டாலும் இதன் வலுவின் தன்மை கொண்டு மாற்றும் போது அன்றைய காலத்தில் இந்தச் சாம வேதம் என்று வரும் போது இதைக் கொடுப்பதற்கு முன்
1.அந்தத் தாவர இனச் சத்தைக் கையில் ஏந்தி
2.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சேர்த்து
3.விஷத்தினை வென்றிடும் வலுவைக் கூட்டும் போது கலியை மாற்றிக் கல்கியாகக் கொண்டு வந்தனர்.

இப்படி அந்த ஞானிகள் கூட்டிய சாம வேதத்தின்படி அந்த அருள் மணத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும். கலியாக மாறாமல் கல்கிக்குச் செல்ல வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடும்பத்தில் அன்புடன் தான் வாழ்கின்றோம். பிள்ளை அமெரிக்காவில் இருந்தாலும் “என் பிள்ளை ஒரு மாதமாகத் தபால் போடவில்லையே…” என்று தாய்க்குள் வேதனையின் உணர்வின் தன்மை வரும் போது அது வலுவான உணர்வுகளாக வருகின்றது… பாச உணர்வு இயக்குகிறது.

அந்த வேதனையின் உணர்வுகளைப் பாசத்தால் தாய் பதிவு செய்கிறது. பாசத்தின் உணர்வு கொண்டு குழந்தையை எண்ணி வேதனைகளைப் பாய்ச்சப்படும் போது அங்கே என்ன நடக்கிறது…?

தாய் வெளிப்படுத்திய வேதனை உணர்வு
1.அங்கே (அமெரிக்காவில்) அந்தக் குழந்தையின் உணர்வுகளில் அது நுகரப்பட்டு… சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு
2.மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து காயமாகின்றான்.

அப்போது… நான் நினைத்தேனே… அது போல் ஆகிவிட்டதே…! என்று தாய் மீண்டும் வேதனைப்படுகிறது. ஆனால் தபால் வரவில்லையே என்ற வேதனையுடன் எண்ணப்படும் போது… “என்ன ஆனதோ…? ஏது ஆனதோ…? என்ற பதட்ட உணர்வின் இயக்கம் தான்…” அங்கே குழந்தையை அவ்வாறு இயக்குகிறது.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை தபால் போடவில்லை… சரி…!
1.இருந்தாலும் மன வலு கொண்டு உறுதியான நிலைகள் கொண்டு
2.தபால் வருவதில் ஏதோ மாற்றங்கள் இருக்கலாம்… என்று இதை மாற்றி விட்டால்
3.தபாலின் மாற்றங்களாகத் தான் நாம் அறிந்து கொள்ளக் கூடிய தன்மை வரும்.
4.பின்னாடி பார்த்தோம் என்றால் ஓ… தபால் தேங்கி வந்தது…! என்ற நிலை வரும்.

ஆனால் தபால் வரவில்லையே என்ற வேதனை உணர்வு கலக்கப்படும் போது எந்தக் குழந்தை மேல் பாசமாக இருந்தோமோ… அங்கே இயக்கப்பட்டுச் சிந்தனை இழக்கச் செய்து குழந்தை தடுமாறிக் கீழே விழுந்து விடுகிறது.

அதே மாதிரி நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் நல்ல சந்தோஷமாக இருக்கின்றோம் என்று பதிவாக்கிக் கொள்கிறோம். கூட்டாகத் தொழிலும் செய்கிறோம்.

ஆனால் சந்தர்ப்ப பேதத்தால் வியாபாரத்தில் ஏதோ மந்தமாகி விட்டால் இவன் எனக்குத் துரோகம் செய்கிறான்… இல்லை நீ தான் எனக்குத் துரோகம் செய்தாய்…! என்ற கோப உணர்வுகள் பதிவாகத் தொடங்கிவிடுகிறது.

இருவரும் சேர்த்து தொழில் செய்யும் போது பொருள் நஷ்டமான பின்… இரண்டு பேருமே “துரோகம் செய்தான் பாவி…” என்று ஒருவருக்கொருவர் சாபமிடும் நிலை வருகிறது.

“உன்னை நம்பி வந்தேன் எனக்கு நஷ்டமாகிவிட்டது… உன்னை நம்பி வந்தேன் எனக்கு நஷ்டமாகிவிட்டது…!” என்று இருவருமே அடிக்கடி சொல்லத் தொடங்குவார்கள்.

1.இப்படி இரண்டு பேருக்குள்ளும் ஆகிப் பிரிவு ஏற்பட்ட பிற்பாடு
2.அடுத்து அவர்கள் எங்கே போய் எந்தத் தொழில் செய்தாலும் சரி…
3.இந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நல்லதை அவர்கள் பெறவே முடியாது.
4.இவரும் சரி… அவரும் சரி… இரண்டு பேரும் தான் கெடுகின்றனர்.

இதைப் போல் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருக்கும் போது இது எல்லாம் எதைக் காட்டுகின்றது…?

சிறு திரைகளாக அமைந்து நம் நல்ல குணங்களை அது மறைத்துச் சிந்தனை என்ற நிலை நமக்குள் வருவதில்லை. ஆகவே தெளிந்த மனதுடன் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று நினைவுபடுத்துவதற்குத் தான் சித்திரை… புது வருடப் பிறப்பைக் கொண்டாடுகின்றோம்.

எப்படி..?

நம் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ வரக்கூடிய நிலைகளில் இருந்து
1.என் நண்பன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.என் குழந்தை கல்வியில் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்… சிந்திக்கும் தன்மை பெற வேண்டும்
3.கணவன் மனைவி நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ்தல் வேண்டும்.
4.யாருடன் பகைமையாக இருந்தாலும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வர வேண்டும்
5.அருள் உணர்வு பெற வேண்டும் என்று எல்லோரும் சொல்ல வேண்டும்.

இப்படி எண்ணும் போது குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பகைமையை மறந்து விடுகின்றோம். சிறு திரைகளை நீக்கிவிடுகின்றோம். பேரருளை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோம்.

நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற நிலைக்கு வரும் போது நம்மை அறியாது ஒருவருக்கொருவர் இயக்கும் தீமையான உணர்வின் இயக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

அதற்குண்டான பயிற்சி தான் இது.

“குருநாதர் மூலம் பெற்ற சக்திகளை” நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்

நஞ்சுகளை எல்லாம் முறித்தவன் “துருவ மகரிஷி…” அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள்… சப்தரிஷி மண்டலங்களாக பிறவியில்லா நிலை அடைந்து வாழ்கின்றார்கள்.

அதனின்று வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது.
1.அதை நீங்கள் பருக வேண்டும்… பெற வேண்டும்… உங்களுக்குள் வளர்க்க வேண்டும்.
2.குருநாதர் அதைப் பெறும் தகுதியை எனக்கு ஏற்படுத்தினார்… உண்மையின் உணர்வுகளை உணர்த்தினார்… கேட்டறிந்தேன்…!
3.நீங்களும் பெற வேண்டும் என்று இப்பொழுது உணர்த்துகின்றேன்.

காடு மேடெல்லாம் அலைந்தேன். துன்பம் நேரும் போதெல்லாம் அதை அகற்றிடும் நிலை பெற்றேன். அதே போல்
1.துன்பப்படுபவருக்கெல்லாம் அந்தத் துன்பத்திலிருந்து அவர்கள் அகல வேண்டும்… அருள் ஒளி பெற வேண்டும் என்று
2.எனக்குள் இந்த உணர்வுகளை வளர்த்தேன்… அதைத்தான் இப்போது உங்களுக்குப் போதிக்கின்றேன்.
3.இந்த உணர்வை யார் பெற வேண்டும் என்று ஏங்குகின்றார்களோ அவர்களுக்கு அந்த நன்மைகள் ஏற்படுகின்றது.

புத்திர பாக்கியம் இல்லை… கரு உருவாகும் சிசுவாக உருவாகும் அந்த வளர்ச்சி இல்லை. என்று சிலர் சொல்லலாம்.

தற்கொலை செய்து கொண்ட ஆன்மாவோ… இடைமறித்து மடிந்ததோ… தாய் கருவிலிருக்கும் போது இத்தகைய உணர்வுகளை நுகர்ந்தால்… இரத்த நாளங்களில் தன் இனத்தை உருவாக்கும் அணுக்கருக்களை அது வளர விடாது தடுக்கும்.

அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் அங்கே வளர வேண்டும். இனவிருத்தியின் உணர்வுகள் வளர வேண்டும் என்று இந்த உணர்வுகளை நுகர்ந்து…
1.உனக்குக் குழந்தை கிடைக்கும் போ இந்த உணர்வினை பாய்ச்சுகின்றேன்.
2.அதைப் பெறுவோம் என்று “ஏங்கிப் பெறுபவருக்கு” நிச்சயம் குழந்தைகள் கிடைக்கும்.
3.கேன்சர் நோயே வந்திருந்தாலும்… இல்லை…! இது கேன்சர் அல்ல சாதாரண நோய் தான்…!
4.சீக்கிரம் குணமாகிவிடும் என்ற வாக்கினைப் பதிவு செய்தால் இதை ஏற்றுக் கொண்டு
5.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இந்த உணர்வின் அணுக்கருக்கள் விளைந்து அந்தத் தீமைகளை அகற்றும்.

ஆனால் இது எல்லாம் யாம் வாக்காகக் கொடுக்கிறோம் நோய்கள் அகலும் என்று…!

“எங்க சாமி…?” நோய் எங்களை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் அந்த உணர்வுகள் இயக்கிக் கொண்டுதான் இருக்கும். கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று சொன்னால் வேதனை வந்து கொண்டு தான் இருக்கும்.

சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நம்மைப் பார்ப்போருக்கும் நம் மீது வெறுப்பு வரும். கடையிலிருந்து ஒரு பொருளை எடுத்துக் காட்டினாலும் வெறுப்பு தான் வரும்.

ஆனால் அதை வாங்குவோர் நலம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எனக்குள் படர வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று இவ்வாறு எண்ணினால்… இந்த உணர்வின் மணம் அந்த அருள் உணர்வினைப் பெற்று அவர்கள் நுகரப்படும் பொழுது
1.“அவர்களுக்கும் இது நல்வழி காட்டும். நமக்குள்ளும் நல் உணர்வுகளாக விளையும்…”
2.இதையெல்லாம் உங்களுக்கு வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன். எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளுக்கு ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது

 

பூமியின் இயக்கச் சுழற்சி அது கதியுறும் ஓட்ட அமைப்பு தொடர்பு கொண்ட கோளங்களாக சூரியக் குடும்ப அமைப்பில் அவை அவை ஈர்த்திடும் நிலைக்கொப்ப வளர்க்கும் வளர்ப்பாக்கி… காலத்தின் சுழற்சியாக இயற்கையின் நிகழ்வில் பூமியில் நடைபெறும் மாற்றங்களை… மனிதன் “விதி” என்று உரைக்கின்றான்.

உடல் நலக் குறைவுபடும் காலத்தை நோய் என்று பெயரிட்டு மருத்துவர் அளிக்கும் சிகிச்சையுடன் நோயின் குணம் நாடிப் பத்தியமும் இருக்கின்றோம்.
1.மருத்துவர் அளித்திடும் மருந்தினைக் “கசப்பு” என்று விலக்கிடுவோமா…?
2.இங்கு நோயைப் போக்க வேண்டும் என்ற கருத்தே முதன்மையாகின்றது.

மனிதச் சரீரமும் பூமியும் ஒன்றே. கருத்தொன்றும் செயல் என விலக்கிடுவோமா…? ஆனால் கருத்தொன்றும் செயல் என்பான் மெய் ஞானி.

பூமியின் இயற்கை மாறுதல்களில் பூமித்தாயின் நலன் கருதி…
1.அதை ஏற்றுக் கொண்டிடும் பக்குவ மனது வேண்டும்
2.இவை அனைத்தும் மன வலிமை கொண்டு ஈர்த்திடும் செயலாக…
3.ஜெபத்தின் வளர்ப்பில் வளர்ப்பாக்கவே உரைப்பதெல்லாம்.

கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் வண்ணம் கலந்த நீர் அது எந்த வண்ணமோ அந்த வண்ணத்தையே குடுவையில் காண்கின்றோம். இது மனித மனத்தின் நிலை.

ஆனால் மெய் ஞானிகளுக்கோ ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது.

இந்தக் கலியின் மனித மனத்தின் நிலை உயிர் ஆத்ம சக்தியைக் கேடுறுத்தும் செயலுக்கே செயல்படுகிறது என்று பல முறை கூறிவந்துள்ளேன்.

சாயம் ஏறிய நூல் போல் இன்றைய மனிதன் தான் கொண்டிட்ட தீய எண்ணத்தின் வலுவால் தன் ஆத்மாவையே கொடுமைக்கு உள்ளாக்குகின்றான்.

இதை எந்த வார்த்தையில் உரைப்பது…?

தனக்கு உகந்த இரையை நாடிச் செல்லும் நாரையானது செல்கின்ற தூரம் எவ்வளவு இருப்பினும் அந்தத் தூரத்தைப் பறந்தே கடந்து செல்கின்றது.
1.பறந்தே ஏகுகின்ற அதன் வலிமையை மனதில் கொள்…!
2.”பார்வையின் கூர்மை… அது இரையை நாடுகின்ற நாட்டம்…”

மனிதனுக்கு நரை திரை நாட்டம் ஏற்படுகின்றது பார்வையின் ஒளியும் குன்றுகின்றது. நரை திரை நாட்டத்தின் செயலே உலகோதயம்.
1.அத்தகைய குறைவு நிலைகளை… “போ…!” என்றால் போகும்படி செய்வார்களா…! மெய் ஞானியர்… இல்லை…!
2.”ஆத்ம பலம் நாடும்… சிந்தனா சக்தி அன்றோ இங்கே முதன்மை வழி…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தியானம் செய்து கொண்டே இருப்பது தியானமல்ல.
2.அது தியானம் ஆகாது.

காரணம்… தியானத்தை எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள். அடுத்தாற்போல் திடீரென்று ஒரு விபத்து ஆகிறது என்றோ உங்களை நோக்கி ஒரு மாடு மிரண்டு ஓடி வந்தால் ஆ…! என்று அலறினால் போதும். இது வந்து உள்ளே உருவாகிவிடும்.

இந்த உணர்வு அதிகமானால் தியானத்தில் அடுத்து உட்கார முடியாது.
1.அதிர்ச்சியான செய்தியைக் கேட்டால் அது தான் முன்னாடி நிற்கும்.
2.அப்புறம் நீங்கள் எப்படித் தியானம் எடுப்பது…?

ஆகவே அப்போதைக்கப்போதே துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திற்கே விடும். அப்படிப் பழகவில்லை என்றால் தியானத்திற்கே வர முடியாது.

மனதை ஒரு நிலைப்படுத்துவது (CONCENTRATION) என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் முடியாது.
1.நீங்கள் எவ்வளவு செய்தாலும்… பல காலம் நான் தியானமிருந்தேன் என்று சொன்னாலும்
2.முதலில் நன்றாக இருந்தது… இப்போது தியானம் செய்ய முடியவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

காரணம் எதிர்பாராதபடி அதிர்ச்சியோ மற்றதோ வந்த பின் அது நமக்குள் வலுப் பெற்று விடுகிறது. நம் ஆன்மாவில் கலந்து விடுகிறது. அது வலிமை பெறுகிறது… அதனால் முடியாது போகிறது.

அந்தச் சமயத்தில்… நன்றாகத் தியானம் செய்தேனே… போய்விட்டதே…! தியானம் செய்தேனே… போய்விட்டதே…! என்று வேதனைப்பட்டு அந்த விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் கையில் அழுக்குப்பட்டதைத் துடைப்பது போல் யாம் (ஞானகுரு) கொடுத்த அருளை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.

1.எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ அப்போதெல்லாம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று
3.புருவ மத்தியில் இணைத்து உள்ளே புகாது தடுத்துவிடுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் அது வளர வளர…
1.எந்தத் தீமையை நுகர்ந்தோமோ அதை உங்கள் ஆன்மாவிலிருந்து தள்ளிக் கொண்டே போகும்
2.நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டுக் கடந்து சென்றால் சூரியன் அதைக் கவர்ந்து சென்றுவிடும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூடக் கொஞ்ச நேரம் சேர்த்து எடுத்தீர்கள் என்றால் யாம் சொல்வதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்களைத் திறந்தே எடுங்கள்… அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
2.கண்களை மூடுங்கள்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலில் இருக்கும் எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.
3.இப்படி எண்ணி உங்கள் நினைவைக் கூட்டிப் பாருங்கள்.

உங்களால் சாத்தியமாகிறதா இல்லையா என்று பாருங்கள். ஆகவே… வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

அப்போதைக்கப்போது துடைக்கவில்லை என்றால் உள்ளுக்குள் சென்று அது வலுவாகிவிடும். உங்கள் ஆன்மாவில் அது வலுவாகிவிடும்.

அடுத்து… தியானத்தில் உட்கார்ந்தவுடனே அவன் அப்படிச் சொன்னான்… அதிர்ச்சியாகிவிட்டது என்று அந்த நிலை தான் வரும். அந்த மாதிரி அதிர்ச்சி வந்தாலும் மீண்டும் மேலே சொன்ன முறைப்படி எண்ணி எடுத்து அதைத் தடுத்துக் கொள்ளுங்கள்.

இது தான் உண்மையான தியானம். ஒவ்வொரு நொடியிலும் உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

எதை எதையோ ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் பதிவு செய்கின்றோம். திருப்பி எண்ணும் போது அதனின் உணர்வே நம்மை இயக்குகிறது… நம்மைத் திசை திருப்புகிறது.

ரேடியோ டி.வி.யில் எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ காற்றிலிருந்து இழுத்து அதைப் பேசுகின்றது. அது போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

அதை நினைவுக்குக் கொண்டு வரும் போது
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் உடனடியாகப் பெற முடியும்.
2.மன பலம் பெற முடியும்… மகிழ்ந்து வாழும் சக்தி நிச்சயம் பெற முடியும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளைப் பெறுவோம். துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே நாம் வாழ்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கணவன் மனைவிக்குள் அன்பு கலந்ததாக இருப்பினும் சில நேரங்களில் கணவர் தொழில் நிமித்தம் கடினமான வேலைகள் செய்துவிட்டு வீட்டிற்குள் வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

தொழிலில் சோர்வடைந்த நேரத்தில் மனைவி சிரித்துக் கொண்டு (இதற்கு முன் அன்பாகப் பேசியது போல்) கணவரிடம் பேசினால் அது கணவனுக்கு எதிர்மறை ஆகின்றது.

1.நேரம் காலம் தெரியாதபடி சிரிக்கும் நேரம் இது தானா…? என்று
2.இந்தச் சந்தர்ப்பம் அந்த நல்ல குணங்களை வேதனை என்ற உணர்வால் அது மறைக்கப்படுகிறது
3.வேதனை என்ற உணர்வுகள் மறைப்பதால் மனைவி மீது இருக்கக்கூடிய பாசங்கள் அது மறைந்து விடுகின்றது.

ஏனென்றால் கணவனின் சந்தர்ப்பம்… வெளியிலே கஷ்டமான நிலைகளில் வேலை செய்துவிட்டோ… அல்லது மற்றொருவரிடம் தகராறு செய்துவிட்டோ… மிக வருத்தத்துடன் வீட்டுக்கு வரும் பொழுது
1.மனைவி அதற்கு முன் கணவனிடம் சந்தோஷமாக இருந்தாலும்
2.கணவன் வருத்தம் அடைந்த நேரத்தில் அதே சந்தோஷத்தை ஊட்டும் பொழுது
3.அங்கே சந்தோஷத்தை வெளிப்படுத்தினால் எதிர்மறை ஆகின்றது.

எதிர்மறையாகும் போது மனைவி மீது வெறுப்பு வருகின்றது. நல்ல குணத்தில் இந்த விஷத்தின் தன்மை திரையாக மூடி விடுகின்றது. அவர் மீது இருக்கக்கூடிய அன்பை அது மறைத்து விடுகின்றது.

அன்பை மறைத்து விட்டால் மீண்டும் அதிலிருந்து பகைமை தான் வளர்கின்றது. அதை மாற்ற வேண்டும் என்றால் அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்.

கணவன் அங்கே வருத்தத்துடன் இருக்கப்படும் பொழுது அவரை மனைவி உற்றுப் பார்க்கப்படும் பொழுது கண்கள் வழி அதை நுகர நேருகின்றது.

இதை… மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

வெளியில் கணவனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை…! அவர் சோகத்துடன் இருக்கின்றார்… வருத்தத்துடன் இருக்கின்றார்… என்ற உணர்வை அறிந்து அவரை மனைவி பார்த்த பின் நுகர நேர்கின்றது… உயிரிலே மோதுகின்றது மூலாதாரத்தில்…!

மூலத்தில் (உயிரிலே) மோதும் பொழுது வேதனை உணர்வுகள் தெரிய வருகின்றது. தெரிந்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
1.கணவருக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்
2.சாந்தமும் ஞானமும் அவர் பெற வேண்டும்
3.அவரைப் பார்ப்போருக்கு நல்ல மனம் பெற வேண்டும் என்று
4.மனதால் அந்த உணர்வின் தன்மையை தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்
5.மனைவியும் அந்தச் சமயத்தில் அமைதியாக (பொறுமையாக) இருந்து
6.அவர் பார்த்துச் சொல்லப்படும் பொழுது என்ன விவரத்தை சொல்கிறார் என்று “எதிர்பார்த்து…”
7.நாம் அந்த உயர்ந்த நிலையை அவருக்கு எப்படிக் கொடுப்பது…? என்று மனைவி சிந்தித்து அதைச் சொன்னால்
8.கணவர் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருகின்றது.

ஆனால் காலம் தெரியாதபடி அவர் வருத்தமாக இருக்கும் பொழுது சிரித்து… “ஏன் இப்படி வேதனைப்பட்டு கொண்டே இருக்கின்றீர்கள்…?” என்று சொன்னால்… இந்த வேதனை உணர்வுகள் அங்கே சோர்வாக இருக்கும் பொழுது எதிர்மறையாகி… நல்ல செயல்கள் அங்கே செயல்படுவதில்லை

இதைப் போன்று மனிதனின் வாழ்க்கையில் சித்திரையாக… சிறு சிறு திரைகள் நம்மை மறைத்து விடுகின்றது… உண்மையின் உணர்வை அறிய முடியாது போகின்றது.

மறைத்து விட்டால் அது என்ன பொருள் என்று தெரியவில்லை. அப்போது அந்தப் பொருளின் தரத்தை நாம் அறிந்து கொள்ள முடியுமா…?

1.நமது வாழ்க்கையில் நல்ல குணங்கள் இப்படித்தான் மறைக்கப்படுகின்றது
2.நல்ல குணங்களை அந்த நேரத்தில் செயல்படுத்த முடியாதபடி பகைமை உணர்வு வந்து விடுகிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் பயிற்சியாக இத்தகைய உபதேசங்களைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

உயிர் இயக்கினாலும்… ஆணையிடும் சாதனம் சிறு மூளை

 

உதாரணமாக ஒரு விஷம் கொண்ட தேளினை நாம் அடித்துக் கொன்று விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் உற்றுப் பார்த்துத் தான் அதை அடித்தோம் இருந்தாலும் அது எப்படி வேதனைப்பட்டதோ சூரியன் காந்த சக்தி கவர்ந்த அந்த விஷமான உணர்வலைகள் கரு முட்டைகளாக நம் இரத்த நாளங்களில் பரவிச் சுழலத் தொடங்கி விடுகின்றது.

நம் இரத்தம் போகும் பாதை எல்லாம் சுழன்று செல்லும் காற்று மண்டலத்தில் தூசிகள் எப்படிச் சுழல்கின்றதோ இரத்த நாளங்களில் அது ஊடுருவி மிதக்கும்.

அதாவது…
1.தரையிலே சக்கரம் வைத்து வாகனங்களை ஓட்டுகிறோம்
2.கடலிலே துடுப்பை வைத்துப் படகினைத் தள்ளுகின்றோம்
3.நீருக்குள் ஓடுவது போன்று இங்கே காற்றலைகள் படர்கின்றது… இரத்த நாளங்களில் அந்த அணுக்கள் சுழல்கின்றது.
4.இப்படிச் சுழன்று வந்தாலும் சுழற்சியின் தன்மையில் எந்த உறுப்புகளின் மீது மோதி அங்கே தேங்கி நிற்கின்றதோ அதற்குள் ஒட்டுகின்றது.

முட்டையைக் கோழி அடைகாக்கும் பொழுது அதனின் பருவமான பின் ஓடை விட்டு குஞ்சு எப்படி வெளி வருகின்றதோ அதைப் போன்று
1.இரத்த்த்தில் கருமுட்டையாக இருக்கும் விஷத்தை உருவாக்கும் அணுவாக அது உருவாகின்றது.
2.அந்த அணுவின் தன்மை நம் உடல் உறுப்பின் பாகத்தில் ஒட்டிக் கொள்கின்றது
3.பின் அந்த விஷத்தின் தன்மை நுகர்ந்து தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

தேள் கொட்டினால் எவ்வளவு விஷமோ எப்படிக் கடுகடுக்கின்றதோ இதைப் போல கடுகடுக்கச் செய்யும் அணுக்களாக அது உருப் பெற்று விடுகின்றது.

அப்படி அணுவாக விளைந்து விட்டால் அது தன் உணவுக்காகப் பசிக்கு ஏங்கும். அப்படி ஏங்கப்படும் பொழுது அதே உணர்வை நம் உடலுக்குள் இருக்கும் உயிர் அந்த உணர்ச்சியை உள் நின்று இயக்கப்படும் பொழுது அது ஆணையிடுகின்றது.

கண்ணின் புலனறிவுக்கும் உடலின் நிலைகளுக்கும் சுவாசிக்கும் மூக்கிற்கும் இந்த உணர்வுகளைக் கவர்ந்த பின்
1.கண் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.சுவாசித்த உணர்வோ உயிருக்குள் சென்று இந்த உணர்வலைகளை உடலுக்குள் பரவச் செய்து
3.உருவான அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றது இந்த உயிர்.

செடி கொடிகளை வளர்த்த பின் சூரியன் அதிலிருந்து வெளிப்படும் சத்தைக் கவர்ந்து வைத்து அதில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அதே உணர்வின் கிளர்ச்சி எழுந்து அதே செடியாக விளைந்து அதன் வித்துக்களை மீண்டும் உருவாக்குவது போன்று
1.நாம் நுகர்ந்தறிந்த அந்த விஷமான உணர்வுகள் கருவாகி உடலுக்குள் தேங்கிய பின் அணுவாக மாறிவிட்டால்
2.அந்த உணர்ச்சியைத் தூண்டி இந்த உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது நம் உயிர் மற்ற உறுப்புகளுக்கு ஆணையிடுகின்றது.
3.அந்த ஆணையிடும் சாதனம் சிறுமூளை.
4.இந்த உணர்வுகள் பட்டபின் ஆணையிட்டு உணர்வினை கவர்ந்து நுகரச் செய்து உயிருடன் இணைக்கச் செய்து உடல் உறுப்புகளில் பரப்பச் செய்கின்றது.

இரத்த நாளங்களில் இப்படிப் பரவி வருவது விஷத்தின் அணுக்களாகப் பெருக்கமாகின்றது. அது உணவாக எடுத்து விஷத்தின் அணுக்களாகத் தன் இனமாகப் பெருகத் தொடங்குகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

தேள் நம்மைக் கொட்டி விடுமே என்று நம்மைக் காக்கத் தான் அதை அடித்தோம். ஆனால் அது வேதனைப்பட்டுத் துடித்த உணர்வலைகள் நம் இரத்தங்களில் இப்படி விஷமான அணுக்களாகப் பெருகுகிறது.

தேளின் உயிரானமா மனிதனாகப் பிறக்கின்றது ஆனால்
1.தேளின் விஷத்தன்மை நம் இரத்த நாளங்களில் அணுக்களாகப் பெருகும் பொழுது மூட்டுக்கு மூட்டு அது பளீர்ர்ர்… என்று மின்னும்.
2.உறுப்புகளின் சில பாகங்களுக்குள் சென்றால் ஊசி தைப்பது போல் பளீர் என்று மின்னும்.
3.அந்த உணர்வலைகள் அங்கே பரவி நம் உடலில் வேதனை உருவாக்கும் அணுக்களாகப் பெருகி விடுகின்றது.

இதைத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சாஸ்திரம் கூறுகின்றது.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் உயிர் அந்த உணர்வின் அணுவாக உருவாக்கி விட்டால் அந்த அணு தன் இனத்தைப் பெருக்கி விடும். அது தன் இனமாக எந்த அளவிற்குப் பெருக்குகின்றதோ அதன் உணர்வின் தன்மை கொண்டு அது வளர்ச்சிக்கு வருகின்றது.

இந்தப் பேருண்மைகளை எல்லாம் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது

 

உயிரணுவின் ஈர்ப்பின் செயலால் ஆத்ம நிலை பெற்று ஜீவ பிம்பம் பெற்றிடும் செயலில் சரீரத்தினுள் அடக்குவது பஞ்சபூதங்கள் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்.

இவற்றின் கூறுகள் மூலசக்தியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலில்… அளப்பரியா அவைகளின் செயல் நிகழ்வுகள் இயல்பாக இயங்கிடும் சக்தி அண்டசராசரம் முழுவதிலும் உண்டு.

மனிதன் என்ற சரீரத்தினுள்ளும்… சரீரம் பெற்றிட்ட உயிர்த்தொகைகள் அனைத்தினுள்ளும் அந்தப் பஞ்சபூதங்களே கட்டுக்குள் அடங்கிச் செயல் புரிகின்றன.

ஆனால் பகுத்தறிவு கொண்ட மனிதன்…
1.அந்த ஆற்றலின் துணையினால் மனதின் இயக்க சுதந்திரம் பெற்று வாழும் வகைகள் அறிந்த பின்னும்
2.பஞ்சபூத சக்தியைத் தன்னுள்ளே கொண்டுள்ள மனிதன் உரைக்கின்றான்… “மனதினை அடக்க இயலவில்லை என்று…”

பிறர் தர்ம செய்கையால்… ஞானத்தின் வழியில் நிற்போர்… மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது. ஏனென்றால்
1.மற்றவர்களின் காரியங்களால் நாம் பாதிக்கப்படும் நிலை பெறுவதல்ல.
2.பிறர் மேல் நாம் கொண்டுள்ள கருத்துக்களால்… “அவர்களின் செயல்கள்…” நம்மைப் பாதிப்பதாக எண்ணுகின்றோம்.

ஆவேச உணர்வுகள் நீக்கம் பெற்று ஜெபநீர் ஆடிடவே அழைக்கின்றோம்

1.”வலைஞன்” வீசுகின்றான் வலை. அந்த வலையினுள் படுகின்ற மீன்களைத் தன் ஆகார நியதிக்கே கொண்டு செல்கின்றான்.
2.அவன் பற்றியது ஒன்று அப்பற்றும் பொருளினால் அவனுள் குடிகொண்ட குறிக்கோள் மற்றொன்று.

இடையில் நடைபெறும் காரண காரியங்களின் சூட்சுமப் பொருளை அறிந்து கொண்டவனப்பா நீ.

1.தன்னுள் சுரந்து வெளிவரும் ஓர் பசையினால் வலையைப் பின்னுகின்றது “சிலந்தி…” அதுவும் வலை விரித்தே காத்திருக்கின்றது.
2.தன் வலையில் விழும் சிறு உடல் ஜீவன்களை நேரடியாகத் தன் நிலைக்கே புசிக்கிறது.

மனக்கருவைக் குணங்களாகக் காணல் வேண்டும். ஆவேச நிலையின் இயக்கத்தைக் காட்டிடவே பாடங்கள்,

ஆகாரத்தின் நிலைக்கு மற்றொரு பொருள் காட்டுவோம்.

1.”திகம்பரன்” (சந்நியாசி) செய்யும் பூஜை… அவனும் ஆகார நியதியை அளித்தே
2.அறிந்து கொண்ட வழிமுறைகளால் “ஏதோ” ஒன்றினைப் பெற்றிட முயல்கின்றான்.

மேலே சொன்ன மூன்று நிலைகளையும் (வலைஞன், சிலந்தி, திகம்பரன்) விளங்கிக் கொள்…!

ஜெபத்தின் தன்மையாகச் சிந்தனையில் கொண்டு பார்… ஆவேச நிலைகள் நமக்கு உரியனவன்று.

தாகவிடாய் கொண்டவன் அருந்த நீர் கேட்பான்… தாகம் தீராமல் நீராட முயல்வானா…? ஞானமும் அத்தகையது தான்…!

1.தவசியே ஆனாலும் “அருந்த வேண்டிய பசி” ஒன்று உண்டு
2.ஞான தாகம் தீர்ப்பதே மகரிஷிகள் வழி காட்டிய போதனைகள்.
3.அதைப் பெற்று அந்தப் போதனையின் வழி நடந்து முனைவது மனக்குளத்தின் ஜெபநீர் ஆடிடவே.

உணர்வுகளை மாற்றிடும் ஆவேசம் நீக்கு…! என்றே இங்கே இந்தப் பாட நிலையில் பகர்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் செய்யும் தியானம் இந்த உடலுக்காக அல்ல… உடலைப் பார்ப்பதற்காக அல்ல.
1.நிலையாக இருக்கும் இந்த உயிர் இருக்கின்றதே…
2.அதைத்தான் நாம் தியானிக்க வேண்டும்.

தியானம் இருந்தேன் நல்லதானது… காப்பாற்றினார் (ஞானகுரு) கடவுளாக இருக்கின்றார் என்று இத்தகைய உணர்வுக்கு நாம் சென்றால் மீண்டும் புவியின் ஈர்ப்புக்குத் தான் வருவோம்.

ஆகவே நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த உணர்வுகளைக் கொண்டு வந்தோம் என்றால் அது அருள் வழியாக இருக்கும்.

ஆனால் அதை விடுத்து விட்டு
1.இந்த வாழ்க்கைக்காக நாம் எண்ணினால் என்ன ஆகும்…?
2.தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வருத்தம் வரும்… அப்போது வேதனை வருகிறது.
3.அப்பொழுது எந்தப் பற்று…? வேதனை என்ற பற்று தான் வருகின்றது அது தான் அதிகமாகின்றது

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்கு உண்டான அந்த முயற்சியை நாம் எடுக்க வேண்டும்.

எப்பொழுதுமே எதிலுமே இந்த உடல் பற்று என்று இல்லாதபடி உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதைப் போன்று எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்ற இந்தப் பற்றை நாம் வளர்த்துக் கொண்டால் அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வந்த இருள் என்ற நிலையை பற்றற்றதாக மாற்ற முடியும்.

இது தான் தியானம்.

நான் தியானமிருந்தேன் கல்யாணம் நடந்தது… நான் தியானமிருந்தேன் உடல் நலமானது… நான் தியானமிருந்தேன் தொழில் நன்றாக நடந்தது… என்று வெறுமனே சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதற்காக நம்முடைய ஆசையைக் கூட்டக் கூடாது…!

நாம் பார்ப்பவர் நலமாக வேண்டும் என்ற ஆசைப்படலாம். அப்போது அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற இச்சை நமக்குள் விளைகின்றது.

இச்சா சக்தி கிரியா சக்தி…!
1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த இச்சையைக் கூட்டும் பொழுது
2.நம் உயிரிலே அந்த உணர்வு பட்டு கிரியை ஆகி அந்த ஞானத்தின் வழி நம்மை அந்த எல்லைக்கு அழைத்துச் செல்லும்.

உடல் இச்சைக்காக நாம் ஆசைப்பட்டு அதை நமக்குள் கிரியை ஆக்கினால் அது இந்த வாழ்க்கையினுடைய நிலைகளுக்குத் தான் வரும்
1,சிறிது தடைப்பட்டால் என்ன செய்யும்…?
2.ஞானம் இழக்கப்பட வேண்டியிருக்கும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்… அருளைப் பெருக்க வழியைத் தேட வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே…? என்ற நிலையில் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

அது தான் ஏகாதசி…!

1.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கிவிட்டு
2.எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவது தான் ஏகாதசி விரதம்.

அன்றைய நாள் முழுவதும்… ஒவ்வொரு மாதத்திலும்… அவ்வப்பொழுது வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்… “அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டும்… என்று அந்த ஏகாந்த உணர்வை வளர்த்துக் கொள்ளும் பொழுது “ஏகாதசி…”

யாருடைய பகைமையையும் நாம் நமக்குள் வளர்ப்பதில்லை. அந்தப் பகைமை இல்லாது செல்லப்படும் பொழுது “பத்தாவது நிலையான பிறவி இல்லா நிலையை அடைய முடியும்…”

12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் ராசிகள் அங்கே மாறப்படும் பொழுது
2.அந்த ராசியை எப்படி மாற்ற வேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள்.

வைகுண்ட ஏகாதசி…! எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி… ஒருவருக்கொருவர் பகைமை ஆகாதபடி… வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெல்லாம் உடலுக்குள் வளராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும்.

அனாதையாக்கினால் காலையில் 6:00 மணிக்கு சூரியன் அதைக் கவர்ந்து சென்று விடுகிறது. அதைச் சூரியன் கவர்ந்து செல்லப்படும் பொழுது இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றோம்.

ஒளி என்ற உடலும்… ஒளியான அறிவும்… இருளை நீக்கும் ஞானமும்… மெய்ப்பொருள் காணும் சக்தியும் கிடைக்கும்.

ஆகவே…
1.நாம் மேலே செல்வதற்குப் பதில் கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது
2.இந்த உடலில் வாழ்வதற்காக யாம் (ஞானகுரு) கூட்டத்தைக் கூட்டவில்லை
3.இதிலிருந்து பிரிந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

அதுதான் நமக்கு முக்கியம்…!

சிறிது நாட்கள் தான் நாம் வாழ்கின்றோம். அப்படி இந்த உடலில் வாழும் நாள்களுக்குள் நம் மனம் ஐக்கியமாக வேண்டும்… எல்லாவற்றையும் ஒன்று சேர்க்க வேண்டும்
1.ஒளியாக மாறுதல் வேண்டும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மூன்று லட்சம் பேரைச் சந்தித்து குருநாதர் காட்டிய வழியில் பல வருட காலமாக அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

இப்பொழுது நல்ல உணவை உட்கொள்கின்றேன்… ஆனால் அன்று அப்படி அல்ல. என் இரண்டு காலிலேயும் 28 ஆணி இருந்தது. ஆனால் நீ செருப்பு போடக்கூடாது என்று குருநாதர் சொல்லி விட்டார்.

ஒரு சின்னக் கல் மீது காலை வைத்தால் போதும்… அ…ஆ…! என்று தலை உச்சி மயிர் நட்டமாக நிற்கும் பாத்ரூமில் சிறிது நேரம் அதிகமாக உட்கார்ந்திருக்க முடியாது… எரிச்சலாகும்.

கால் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும் என்ன வலி வேதனை எப்படி இருக்கிறது என்று…!

இத்தனையும் பொறுத்துக் கொண்டு
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று குருநாதர் சொல்லி விட்டார்
2.ஒவ்வொரு குடும்பமும் எத்தனை பாடு படுகின்றது
3.குடும்பத்தில் உள்ளவர் யாராவது இறந்தால் அங்கே என்ன நிகழ்கின்றது…?
4.இறந்தவரின் ஆன்மாக்கள் எங்கே… எப்படி… என்ன செய்கின்றது…? என்று அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.

கஷ்டப்பட்டுத் தான் நான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வந்தேன். ஆனால்
1.உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நான் சொல்லும் முறைப்படி செய்து அதை நீக்கிக் கொள்ளுங்கள்
2.உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றேன்
3.அதற்குண்டான முறைகளையும் சொல்லி… வழிகளையும் காட்டி சக்திகளைப் பெறும்படி செய்தாலும் “ஏற்பதற்கு ஆள் இல்லை…!”

“தியானத்தைக் கடைபிடிக்கிறோம்… என்று தியான வழியில் வருகின்றார்கள்…! சக்திகளைக் கொடுத்து… உங்களுக்கு வரக்கூடிய தீமைகளை இப்படி மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்… யாரும் எடுப்பதில்லை.

1.”சாமி (ஞானகுரு) எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார்…” என்ற இந்த உணர்வுடன் தான் இருக்கிறார்கள்
2.சாமி சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்று (சாதாரணமாக) கேட்கின்றார்கள்.

ஆக மொத்தம் நான் சொல்வதை… “நீங்கள் எடுத்தால் தானே” அது நடக்கும். உணவைக் கொடுத்த பின் அதைச் சாப்பிடவில்லை என்றால் பசி எப்படித் தீரும்…?

பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்குச் சத்துதான். ஆனால்
1.சாப்பிட வேண்டும் என்று ஆசையை மட்டும் பட்டுக் கொண்டு
2.சாப்பிட முடியாதபடி (சாப்பிடாதபடி) வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்…?
3.அந்தச் சத்து உங்களுக்குக் கிடைக்காது… விஷம் தான் வளரும்…!

ஒவ்வொரு நொடிப்பொழுதும் இந்த உயர்ந்த சக்தி நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.

யாம் சொன்ன முறைப்படி செய்து ஒரு சமயம் நல்லதாக ஆன பின் மீண்டும் (இன்னொரு) சிக்கல் வந்தால் அதே முறைப்படி செய்து அதிலிருந்து மீண்டு கரையேறுவதற்கு ஆள் இல்லை.

காரணம் அந்தப் பழக்கம் வரவேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

எத்தனையோ பேருக்குத் துயரங்களும் துன்பங்களும் வரும் பொழுது… அதிலிருந்து மீட்டி விடுகின்றோம்… அவர்கள் எப்படியும் தெளிந்து வருவார்கள் என்று…! அந்த எண்ணத்தில் தான் இதைச் செயல்படுத்துகின்றோம்

ஆனால் அதற்காக வேண்டி
1.என்னுடைய சக்தியை நான் எல்லா நேரத்திலும் விரயம் செய்ய முடியாது
2.உங்களுக்கு வழி அமைத்துக் கொடுத்தாலும் கரை ஏறி வருவதற்குண்டான தன்னுடைய சுய பலம் வேண்டும் அல்லவா
3.”எல்லாம் சாமி பார்த்துக் கொள்வார்” என்றால் சாமி எதைப் பாப்பார்…?

நீங்கள் கஷ்டப்படுவது துன்பப்படுவது இதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால்… அந்தத் தீமையிலிருந்து தப்புவதற்குத்தான் நான் பார்க்க முடியும். உங்களை எப்படிக் காப்பது…?

யாம் இப்பொழுது கொடுக்கக்கூடிய வாக்கின் பிரகாரம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்து… அந்தந்த நேரத்தில் சரியாகப் பயன்படுத்தித் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையுங்கள்
2.இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை
3.சிறிது காலம் செய்து பழகிக் கொண்டாலே போதுமானது.

தொழிலிலே ஆசை மற்றதில் ஆசை என்று அதை எண்ணி ஏங்கி… கடைசியில் அது நிராசையாகி விட்டால் வேதனை தான் வருகிறது வேதனை வளர்ந்தால் சிந்தனை இழக்கப்படுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் கண்டிப்பாக யாம் சொன்ன முறைப்படி நீங்கள் ஆத்ம சக்தி செய்ய வேண்டும். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திவிட்டு அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன…? என்று சிந்தனை செய்ய வேண்டும்.

அதற்குண்டான உபாயங்கள் நிச்சயம் வரும். அந்த உயர்ந்த சிந்தனைகள் வருவதற்குத் தான் மணிக்கணக்காக உங்களுக்கு உபதேசிக்கிறோம்.
1.குருநாதர் எனக்குக் காட்டிய வழி முறைகளை எல்லாம்
2.உங்களுக்குப் பல வகைகளிலும் எடுத்துக் காட்டிக் கொண்டே வருகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

குலதெய்வங்களை வணங்க வேண்டியது என்பது பௌர்ணமி அன்று தான்… அமாவாசை அல்ல…!

 

மாதாமாதம் அமாவாசை அன்று அல்லது ஆடி மாதம் அன்றோ படையல் செய்து குலதெய்வங்களை வணங்கி வருவார்கள். உணவைக் கொடுத்துக் கூப்பிடவும் செய்வார்கள்.

அவர்கள் சமாதிக்குச் சென்று தூய்மைப்படுத்தி வணங்கி வருவார்கள். அது மட்டுமல்ல… குலதெய்வத்தைக் காவல் காக்கும் காவல் தெய்வங்களுக்கு ஆடு கோழி என்று உயிர்ப்பலி கொடுப்பார்கள்.

இப்படித்தான் நாம் வணங்கி வருகின்றோம்.

எதை எதையெல்லாம் செய்து குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று உணர்வின் துணை கொண்டு இதைச் செய்தோமோ குலதெய்வங்களாக இருப்பவர்கள் அவர்கள் இறந்த பின்
1.அந்த ஆன்மாக்களுக்குப் படையல் செய்து அவர்களைக் கூப்பிடும் பொழுது
2.குடும்பத்தைச் சார்ந்தவர் உடல்களிலே அந்த ஆன்மாக்கள் புகுந்துவிடும்.
3.அப்படி வரவில்லை என்றாலும் கூட வலுக்கட்டாயமாக இசைக் கருவிகளையோ மற்றதுகளையோ செயல்படுத்தி வரவழைத்து விடுவார்கள்.

இந்த உடலில் வந்து ஆடத் தொடங்கும். ஒரு சில ஆன்மாக்கள் பார்த்தால் மேடு பள்ளம் தெரியாது கூட உருளும்.

“மகனே உன்னை நான் காப்பாற்றுகின்றேன்டா…!” என்று சொல்லி ஆட வைப்பார்கள்…. பலிகளையும் இடுவார்கள். ஆனால் நம்முடைய செயல் எதுவாக இருக்கிறது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

குலதெய்வங்களுக்கு ஆகாரம் கொடுத்து இப்படிக் கூப்பிட்டு இன்னொரு உடலில் இறக்கிய பின் அடுத்து அங்கே ஜோசியம் கேட்பார்கள்.

இந்த வருடம் எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்… குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும்… அவர்களுக்குக் காலகாலத்தில் கல்யாணமாக வேண்டும். விவசாயம் போன தடவை சரியாக வரவில்லை… அது சரியாக வேண்டும்…! என்று இதை எல்லாம் கேள்வியாகக் கேட்பார்கள்.

அந்த ஆன்மாவும் “மகனே உன்னை நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்…!” அந்த உடலில் இருந்து அது பேசும். இவ்வாறு அந்த ஆன்மாக்கள் மூலமாக நாம் கேட்டறிகின்றோம்.

அதே சமயத்தில் ஒரு குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் இருந்து அதிலே ஒருவர் மற்றவரிடம் சண்டையிட்டுப் பிரிந்து சென்றால் போதும்.

அவர்கள் இதே நிலையில் வணங்கிச் செயல்பட்டால் “நான் உடலுடன் இருக்கும் போதும் எனக்குத் தொல்லை கொடுத்தான்… போன பிற்பாடும் தொல்லை கொடுக்கின்றான்…!” என்று குலதெய்வங்கள் அருளாடும் இடத்திலும் கூட இந்த இரு நிலைகள் கொண்டு சண்டை வந்துவிடும்.
1.இவரைச் சார்ந்தவர் இவர்கள் உடலில் வருவதும்
2.அவரைச் சார்ந்தவர் அவர்கள் உடலில் வருவதும் அருளாடுவதிலும் இப்படிச் சண்டைகள் வரும்.

காரணம்… இவை எல்லாம் மனித உடலுக்குள் பெருக்கப்பட்ட உணர்வுகள் அதை அழைத்து மீண்டும் “இந்தக் குரோத விரோத உணர்வுகளை வளர்த்து” இப்படித்தான் கொண்டு செல்கின்றோம்.

பார்க்கலாம் சில குடும்பங்களில்… எனக்கு அவன் ஒன்றுமே செய்யவில்லை… அந்தக் குடும்பம் என்ன ஆகின்றது பார்…? என்று இவர்கள் சொல்லவார்கள். அவர்களும் பதிலுக்கு இதே போன்று சொல்வார்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் சொல்லி இருவர் உடல்களிலும் இது வளர்ந்து குலதெய்வங்களை வணங்கி வருபவர்கள் நற்பயன் அடைந்திருக்கின்றார்களா…? என்றால் அது இல்லை.

வழிவழியாகச் செயல்பட்டு இறந்த பின் அந்த ஆன்மாக்கள் அந்தந்தக் குடும்பத்திற்குள்ளே தான் சுழலத் தொடங்குகிறது. இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.

பௌர்ணமி அன்று நம்முடைய குலதெய்வங்களான அந்த ஆன்மாக்களை உந்தித் தள்ளிச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பேரின்ப பெருவாழ்வாக வாழச் செய்ய வேண்டும்.

அவர்கள் அங்கே விண் சென்று அங்கிருந்து அருள் ஒளியைப் பாய்ச்சி இந்த வாழ்க்கையில் வரும் இருளில் இருந்து நீக்கக்கூடிய சக்தி எங்களுக்கு அந்த ஆசி வழங்க வேண்டும் என்று
1.யாரெல்லாம் இந்த முறைப்படி செய்கின்றார்களோ அவர்களே உயர்ந்த நிலைகளை பெறக்கூடிய தகுதி பெற்றவர் ஆகின்றார்கள்.
2.இது எல்லாம் ஞானிகள் காட்டிய மெய் வழி… விண் செல்லும் மார்க்கமாகும் குல தெய்வங்களை வணங்கும் முறையும் ஆகும்
3.பௌர்ணமி அன்று தான் இப்படிச் செயல்படுத்த வேண்டும்… அமாவாசை அன்று அல்ல…!

ஈஸ்வரா…! என்று உயிரின் ஏக்கத்துடன் விழிப்பார்வை இருக்க வேண்டுமப்பா…!

 

மனித நேயமனம் அன்பினுக்குகந்த அறவழி நடக்கலுற்று… பகுத்தறியும் ஆற்றல் வழி பண்பு கொண்ட தவமயர் இல்லறத்தின் வழி நடந்தே… மகோன்னத முனைப்பாற்றல் சக்தியை நிறைவாகப் பெற்று… அந்த ஆற்றலின் சிறப்பாக வளர்ச்சியில் வளர்ந்திட முடிந்திடும்.

பகல் இரவு என்று எண்ணாத எறும்பு ஊர்ந்து சென்று தன் இனங்களுக்கு ஊட்டும் சேமிப்பாகவே உணவினைத் தேடுகின்றது. அது போல்
1.அகம் ஜெபித்திடும்… (தனக்குத் தானே – உயிருடன்)
2.ஆத்ம பலம் கூட்டிடும்… (தன்னை வளர்ப்பதற்கு)
3.மெய்ப் பொருள் செல்வம் எனும் சேமிப்பின் சூட்சுமம் கொண்டு வளர்ந்திட… (உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அழியாச் சொத்து)
4.வழி நடத்தும் வழி முறைகள் காட்டியதே வல்லார் (மகரிஷிகளின்) தம் ஞான நிலை.
5.தவமாக வாழ்வின் நிறைவு பெற்ற மாமகான்களே அவர்கள்…!

அதை எண்ணி ஈர்த்திடும் பக்குவத்தில் வளரும் நம் ஞான நிலை.

1.நம் ஒளி காந்த சக்தியுடன் அந்த மகரிஷிகள் ஒளி காந்த சக்தியாக ஒன்றிச் செயல்படுகின்ற
2.அந்தத் தவப்பயன் வழியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அகத்தின் அழகு பற்றி வழக்கில் உரைக்கும் உரையைச் செவி வழியாக அறிந்திருப்பாய். எது அகத்தின் அழகு…?
1.அல்லார் எனும் நிலை விடுகின்ற பொழுது அக மலர் மலர்ந்து மணம் வீசுகின்றது.
2.விருப்பு வெறுப்பற்ற தன்மை அக வாழ்வினோடு புற வாழ்க்கைக்கும் அது பொருந்தும்.

அந்த நிலை பெற்ற மனத்தின் மாண்பு செயலுறும் விதம் என்ன…?

அத்தகைய அக அழகு பெற்றவனும் ஏங்குகின்றான்… அது உயர்வு எண்ண ஏக்கமப்பா…!
1.அக அழகின் கண் ஏங்கும் வழிப்பாதை… விழிப்பார்வையில் உண்டு.
2.ஈஸ்வரா…! என்ற எண்ணமுடன் ஈர்ப்பின் நிலை ஏக்கமாகப் பெற்றிருத்தலே “விழிப் பார்வையின் காப்பு…”

இந்த நிலையால் மனத்தின் மாண்பு உயர்ந்து கொண்டிடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை மறைத்திருக்கும் சித்திரை என்ற நிலைகளிலிருந்து… அந்தத் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும் என்பதற்குத் தான் அருள் உரைகளை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எல்லாம் கற்றுக் கொடுத்தாலும் அதை நான் (ஞானகுரு) மறைத்து விட்டால் என்ன செய்யும்…? அவ்வாறு இல்லாது
1.இந்த விஞ்ஞான உலகில் வரும் பெரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.
2.உங்கள் பார்வையால் மற்றவர்களின் தீமைகளைப் போக்கும் நிலை பெற வேண்டும்.
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக அந்த ஞானத்தின் வழியில் நீங்கள் வாழ்ந்திட வேண்டும்.

உதாரணமாக நாம் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தில் ஒரு அச்சுறுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நம் நல்ல குணத்தில் அது இணைந்து விடுகிறது.

அந்தப் பயமுறுத்தும் உணர்வு நமக்குள் விளைந்து விட்டால் நல்ல குணங்களை நம்மால் காக்க முடியவில்லை… காக்க முடியாது போகிறது.

அதாவது…
1.ரோட்டிலே இன்ன மரம் இருந்தது… அந்த இடத்தில் கோர விபத்தானது என்று கேள்விப்பட்டவுடனே “ஆ…” என்று பயமான உணர்வு பதிவாகின்றது.
2.பதிவான பின் அதே நினைவு வருகிறது… அந்த இடமே அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிடும்.

ஆகவே அச்சுறுத்தும் உணர்வை மாற்றிடும் சக்தியாகத் தான் குருநாதர் கொடுத்த அந்த அருள் சக்திகளை… தீமைகளை வென்ற அந்த அருள் உணர்வுகளை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

1.எம்மிடமிருந்து (ஞானகுரு) சொல்லாக அது வெளி வந்தாலும் (உங்களுக்குள் பதிவு)
2.அந்த அருள் ஞானிகள் நுகர்ந்த அந்த எல்லையில் யாம் பெற்ற நிலையில்
3.அங்கே யாம் பெற்றதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
4.உங்கள் நினைவாற்றல் என் குருநாதர் காட்டிய அந்த எல்லைகளுக்கே செல்லும்
5.அங்கே உருவான அந்த மெய் உணர்வை நீங்களும் நுகர முடியும்.

நீங்கள் மீண்டும் மீண்டும் அதை நினைவுபடுத்தி உங்கள் நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும் சித்திரை என்ற நிலைகளை மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வின் அணுவாக மாற்றிட வேண்டும்.

ஏனென்றால் திரும்பத் திரும்பச் சொல்லித் தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வை இணைத்துக் கொண்டு வருகின்றேன்.

உதாரணமாக பள்ளியில் படித்த பின் தேர்வை வைக்கின்றனர். தேர்வின் மூலமாக அவன் தெரிந்து கொண்டானா…? இல்லையா…? என்று பரீட்சித்துப் பார்க்கின்றனர்.
1.படித்தது நினைவுக்கு வந்தால் எழுதிவிடுகின்றான்.
2.படித்ததை நினைவுக்குக் கொண்டு வந்தால் சிந்திக்கும் தன்மையும் வருகின்றது.

படித்ததை வைத்து நினைவு கொண்டு அந்தச் செயலாக்கங்களை எப்படி மாற்ற வேண்டும் என்ற சிந்தனை கொண்டால்… சிந்தித்துச் செயல்படும் ஞானமாக அங்கே வருகின்றது.

அது போன்று தான் குருநாதர் காட்டிய உண்மைகளை எல்லாம் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றேன்.
1.அதை யாரெல்லாம் நினைவுபடுத்தி அதைக் கவரும் நிலைக்கு வருகின்றனரோ
2.அவர்களுக்கு நிச்சயம் குரு பெற்ற அருள் ஞானம் கிடைக்கும்… மெய்ப் பொருள் காணும் திறனும் கிடைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மிளகாய் காரமாக இருக்கிறது என்றால் அந்தக் காரத்தை நாம் வாயிலே சுவைத்துத் தான் ஸ்… ஆ…! என்று உணர்கின்றோம். ஆனால் விஞ்ஞான அறிவோ அந்தக் காரத்தின் நிலையையே மாற்றி அமைத்து அதைச் சுவையான மிளகாயாக உருவாக்குகின்றார்கள்.

எப்படி…?

1.மிளகாயின் காரத்தின் அளவுகோலை அறிந்து… அதனுடைய இயக்கம் எவ்வாறு…? அதனின் வீரியங்கள் எவ்வாறு…? என்று
2.இயந்திரத்தின் மூலம் எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற உணர்வின் துணை கொண்டு இயக்கங்களைக் கண்டறிகின்றான் தன் விஞ்ஞான அறிவால்.

மனிதனாக வளர்ச்சி பெற்ற பின் காரத்தைக் குறைப்பதற்கு இப்படிக் கண்டறிகின்றான்.

உதாரணமாக… மிளகாயைச் சட்டியில் போட்டு வறுக்கிறார்கள் அல்லது மிளகாயைப் பொடியாக அரைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் நுகர்ந்தால் என்ன ஆகும்…?

நச்… நச்… என்று தும்ம வேண்டி வரும். கார உணர்ச்சிகள் உடலுக்குள் சென்ற பின் “ஒரே நெடியாக இருக்கிறது…” என்று தான் நாம் அறிகின்றோம். காரணம்… அந்தக் காரத்தின் உணர்ச்சிகள் நம்மை இயக்கிவிடுகின்றது.

இதைத் தணிப்பதற்காக… மனிதன் இயந்திரத்தினை உருவாக்கி அதனின் உணர்வின் அதிர்வுகளை எலெக்ட்ரான் ஆக மாற்றி அதனின் உணர்வின் செயலாக்கங்களைச் செயல்படுத்துகின்றார்கள்.

காரம் என்று சொன்னாலும் அதிலே எத்தனையோ வகை உண்டு.

“குடமிளகாய்…” பெரிதாக இருக்கும். அதிலே பல விதமான வாசனைகளும் வரும். ஆனால் காரம் இலேசாக இருக்கும். இது மனிதன் உருவாக்கியது.

தாவர இன வித்திலேயே பல விதமான உணர்வுகளைக் கலந்து செயல்படுத்துகின்றனர். அதாவது… ஒவ்வொரு செடிகளுக்கென்று மரபணுக்கள் உண்டு.

1.காரம்… புளிப்பு… உப்பு… நல்ல நறுமணங்கள்… கொண்ட தாவர இனங்களில் உள்ள மரபணுக்களை எடுத்து
2.அதை ஒரு புது விதமான வித்தாக உருவாக்குகின்றனர்.

எந்தெந்தச் செடிகளில் அந்தச் சுவைகள் தனித் தனியாக வளர்ந்ததோ அதனின் மரபணுக்களை இணைத்து ஒன்றாகக் கூட்டாக அமைக்கப்படும் போது காரத்தின் அளவும் நல்ல நறுமணத்தின் நிலைகளையும் அதே சமயத்தில் அந்த மிளகாயில் சுவையும் கூடுகிறது.

அதை நாம் குழம்பிலோ மற்றதிலோ போடப்படும் போது அதிலே இத்தனை மணங்களும் வருகிறது. ஏனென்றால்
1.பல விதமான செடிகளின் மரபணுக்களிலிருந்து காரத்தை எடுத்து இணைத்து
2.இந்த உணர்வுக்கொப்ப குடமிளகாயை உருவாக்குகின்றார்கள் மனிதன்.

இப்படி நம் சுவைக்காக வேண்டி அதை உருவாக்கி உணவாக உட்கொள்ளும்போது நாம் ரசித்துச் சாப்பிடுகின்றோம். மகிழ்ச்சி பெறும் சக்தியாக “ஆறாவது அறிவு” உருவாக்குகின்றது.

ஆக இந்த உடலை மகிழச் செய்ய விஞ்ஞானம் இப்படித் தாவர இனங்களை உருவாக்கி மகிழச் செய்யும்படி வைக்கின்றது.

ஆனால் மெய் ஞானியோ வாழ்க்கையில் தன்னை அறியாமல் வரும் எத்தனையோ சுவையற்ற நிலைகளை (தீமைகளை) சுவைமிக்கதாக மாற்றிக் கொண்டவர்கள்… முருகு… மாற்றியமைக்கும் சக்தி பெற்றவர்கள்.

ஏனென்றால் நல்ல குணத்துடன் இருக்கின்றோம். கஷ்டப்படுகின்றவர்களைப் பற்றிக் கேட்டறிகின்றோம். அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்கின்றோம். அவர்கள் கஷ்டப்பட்டது ஆறாவது அறிவில் இங்கே வந்து சேர்ந்து கொள்கின்றது.

அப்பொழுது இதைச் சேர்த்தால் வேதனையான எண்ணம்தான் வருகின்றது.
1.வேதனைப்படும்போது யார் காப்பாற்றுவது…?
2.இந்த ஆறாவது அறிவில் கலந்ததைச் சுத்தப்படுத்துவது யார்…?

பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள். முருகனைப் பார்க்கப்படும் போது எதை எண்ண வேண்டும்…?

இந்த உண்மையை உணர்த்திய
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று
3.இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு தன்னைக் காத்திடும் நிலையாகத் துடைக்க வேண்டும்.

இப்படி எண்ணினோம் என்றால் ஓ…ம் நமச்சிவாய. இந்த ஆறாவது அறிவின் தன்மை நமக்குள் அதைப் வலுப்படுத்தும் சக்தியாக தீமைகள் நம் உடலுக்குள் உருவாகாதபடி பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று செயல்படுகின்றது.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகள் விளையாது அந்த ஞானியின் உணர்வை நமக்குள் விளையச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கின்றான். இந்த ஆறாவது அறிவு கொண்டு நாம் எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று ஞானிகள் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உன் உணர்வின் தன்மை ஒளியாக்கு – கார்த்திகேயா…! கார்த்திகேயா என்றால் வெளிச்சம். கெட்டதை நீக்கி நீ இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று ஞானிகள் சாதாரண பாமரனுக்கும் புரியும்படி தெரியப்படுத்துகின்றர்கள்.

ஆகவே…
1.நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில்
2.உனக்குள் உன்னைக் காப்பாற்றிய நல்ல தெய்வம் இந்த ஆறாவது அறிவு தான்…! என்கின்ற நிலையில்
3.நீ பக்குவப்படுத்திப் பார்…!” என்று ஞானிகள் தெளிவாகவே காட்டியுள்ளார்கள்.

வெறும் வாயிலே சொல்லி முன்னோர்களை விண் செலுத்த முடியாது

 

குருநாதர் காட்டிய அருள் வழியை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். அதன்படி முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிரான்மக்களை நீங்கள் விண் செலுத்துதல் வேண்டும்.

தற்காலத்தில்… ஒன்றிலிருந்து 48 நாட்களுக்குள் உடலை விட்டு யாராவது பிரிந்து இருந்தால் அந்த ஆன்மாக்களையும் பௌர்ணமி காலங்களில் அவர்கள் பெயரைக் குறித்துச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரையச் செய்து பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
1,நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏகக்காலத்தில் ஒன்று சேர்ந்து
2.அந்த வலிமையை ஏற்றிக் கொண்டு முன்னோர்களை விண் செலுத்துதல் வேண்டும்… சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ள வேண்டும்.

அப்படி இல்லாது மோட்சம் அடைய மார்க்கம் வேறு இல்லை. அதை நமக்குள் வளர்த்தால் தான் அந்த வழியிலே நாம் அனுப்ப முடியும்.

ஒரு ராக்கெட் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்றாலும் “உந்து விசையால் தான்” மேலே விண்ணுக்குச் செல்லுகின்றது. உந்திச் சென்ற பின் அதனுடைய எல்லையை அடைகின்றது. பின் அங்கிருக்கும் உணர்வுகளைக் கவர்ந்து தரை மார்க்கத்திற்கு அனுப்புகின்றது.

இதைப் போன்று தான் முன்னோர்களை விண்ணுக்கு அனுப்பி அங்கிருந்து அருள் ஒளியின் சக்தியை நாம் இங்கே எளிதில் பெற முடியும்.

சாதாரணமாக வெறும் வாயில் சொன்னால் அவர்கள் விண் செலுத்த முடியாது.
1.அந்த அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் முதலில் போதிக்க வேண்டும்.
2.உங்களுக்குள் அந்த நினைவாற்றலைப் பெருக்குதல் வேண்டும்
3.அதை ஏங்கித் தியானித்தல் வேண்டும்…
4.அந்த வலுவின் துணை கொண்டு முன்னோர்களின் உயிரான்மாக்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

இருந்தாலும் இதற்கு முன் செய்யத் தவறி இன்னொரு மனித உடலில் அவர்கள் இருந்தாலும் பரவாயில்லை. தொடர்ந்து நாம் இந்த வரிசையிலே செய்து வந்தோம் என்றால்
1.அந்த உடலை விட்டு எப்பொழுது வெளி வந்தாலும்
2.அதன் துணை கொண்ட நாம் இதைப் போன்று கூட்டமைப்பாகச் செயல்படுத்தினால் விண் செலுத்த முடியும்… ஒளிச் சரீரம் பெறச் செய்யலாம்.
3.அதன் துணை கொண்டு நாம் அந்தச் சக்திகளை எளிதில் பெறலாம்.

பெற்று… குடும்பத்தில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு அருள் ஞானிகள் உணர்வு துணை கொண்ட நாம் எந்த நேரம் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்மை அங்கே அழைத்துச் செல்லும் உயிர்.

நம் முன்னோர்கள் முதலில் விண் சென்றால் தான் அந்த உணர்வின் வலு கொண்டு நாமும் அந்த வலுப்பெற்று விண் செல்ல முடியும். அதற்குத்தான் மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இதன் துணை கொண்டு எண்ணி ஏங்கி முன்னோர்களின் ஆன்மாக்களை விண் செலுத்துங்கள் அந்த எல்லையை அடையச் செய்யுங்கள் உடல் பெறும் உணர்வை அங்கே கரையச் செய்யுங்கள்.

இதன்படி செய்தால் பேரின்ப வாழ்க்கையாக வளரும்… அப்படி நீங்கள் வளர வேண்டும்… அதை நீங்கள் பெற வேண்டும் மூதாதையர்கள் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்பதற்கே இதை உபதேசிப்பது.

கூட்டமைப்பாகத் தியானிக்கும் வழிகளில்
1.மெய் ஞானிகளின் உணர்வுகள் அனைத்தும் உங்கள் இரத்த நாளங்களிலே அந்த உணர்வின் அணுக்கருக்களாகப் பெருக்கச் செய்கின்றோம்.
2.அப்படி அணு கருக்களாக உருவாக்கி அந்த நினைவாற்றலை மீண்டும் வளர்த்து விட்டால்
3.அந்த அணுக்கள் விளைந்து உங்களுக்குள் பேரின்ப பெரு வாழ்வாக வாழச் செய்யும்.

மனித வாழ்க்கையில் என்றும் பிறவியில்லா நிலையை அடைய உங்களுக்கு இது உதவும்.

“உயிரிடமிருந்து” நற்றேன் பருகிடல் வேண்டும்

 

நரலாகும் பொருள் உணவாகும் பொழுது அதைச் சுவைக்கின்றோம். எப்படி…?

மனிதன் எண்ணுகின்ற எண்ண ஓட்டத்தில் உலகோதய நடைமுறைச் செயலுக்கு கவனத்தைச் செலுத்தி உணவை உட்கொண்டிடும் பொழுது அது சுவைபட அருந்தும் நிலையன்றி இப்பரு உடலினுள் அமைவு பெற்றிருக்கின்ற பை “இரைப்பை…!”

அந்தப் பையினுள் எரிகின்ற நெருப்பு தன்னில் இடப்படுகின்ற எரியைச் செரித்திடும் முன்பாக
1.நாசியில்… சுவாச ஓட்ட கதியில்… எண்ண ஓட்ட வாசனைக்கொப்ப சமைப்பின் சமைப்பு தொடங்கப் பெற்றே
2.இரசமாகிய சக்தி நரம்புகளின் சுவாச ஓட்டச் செயலில் ஈர்த்துக் கொண்டிடும் துடிப்பு அலைகளாக ஓடி
3.இரைப்பையில் இடப்பட்ட எரிவைப் பயனுறும் செயலாக்கி
4.கழிவையும் நீக்குகின்ற உடல் தொழில் சூட்சுமத்தில் “ஆத்ம பலம் கூட்டுமப் பொருள் காண வேண்டும்…”

நரல் என்று தேனை உரைத்தோம். முதல் பண்ணவன் (உயிர் – குரு)) இடத்தில் நற்றேன் பருகிடல் வேண்டும். நேற்றைய பாடத்தின் தொகுப்பில் மறைபொருளாகக் காட்டியதையே விண்டு உரைக்கின்றோம்.

நாத நாதாந்தம் காட்டிடும் எண்ணக் குவிப்பாக உயிரான்ம சக்தியை ஜெபிக்கின்ற வழிதனில்
1.உயிரே குரு என அழைத்திடும் முதல் பண்ணவன்
2.”உயிரை எண்ணி,,,: அகம் விடாது ஜெபித்திடும் ஜெப நிலையில்
3.நாதவாகினி அமுதமாகப் பெருகிடும் ஜெபத்தின் சக்தியே “நாம் கூற வந்த நரல்…” (உயிருடன் ஒன்றும் நாதம்)

புற உடல் பயனுறச் செயல் கொள்ளும் நிலை போல் அக உடல் அருந்தும் ஞானத்தேன் எந்த நிலை பெறும்…?

அனைத்துமே அவரவர்களின் எண்ணத்தின் செயல்பாட்டில் இயங்குகின்றதப்பா…!

காட்சி:- வெற்றிடமான இடம்… பின்பு தென்னங்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து தோப்பாகின்றது. தன் இனத்தைக் கூவி அழைத்து உணவு உண்ணும் காக்கை. உணவினை எடுத்துச் செல்கின்ற சிற்றெறும்புகளும்.

இதன் பொருளைக் கூறும் முன் தெரிய வேண்டியது… எரிகின்ற அக்கினியில் போடப்படுகின்ற பொருள்கள் எல்லாமே ஒரு நிலை பெற்று “கனன்று…” உருமாறி பொருள் தன்மையே மாறி விடுகின்றது.

ஆனால் பரு உடலில் இயங்கிடும் மறைமுக அக்கினி பொருளின் ரசத்தினைப் பிரித்து உடல் செயல் கொண்டிடச் சேமிப்பாக்குகின்றது.

சேமிப்பின் நிலையைப் பற்றிக் காட்டிடவே காட்சியின் விளக்கம்…!

நீர் நிலை கொண்ட இடமாகத் தேர்வு செய்து பயிர் வளர்த்து வளர்ந்த பின் அது தோப்பாகின்றது. அதையே தனக்கு உகந்த இடம் எனத் தேர்வு செய்து கூடு கட்டுகின்றது காகம்.

தன் இனத்திற்கு உணவை ஊட்ட… அரற்றியே கரைகின்றது… உணவை உண்கின்றது… தன் குஞ்சுகளுக்கும் ஊட்டுகின்றது. உணவாம் சேமிப்பு செயல் கொண்டிட அது கொண்டிட்ட உணர்வால் சேமிப்பின் வழிமுறைகள் இன்றி உலவுகின்றது.

ஆனால் எறும்போ ஊர்ந்து கொண்டிருக்கும். தன் தொழிலின் நிலையில் தன் இனத்திற்கு ஊட்டும் சேமிப்பையும் பெற்று விடுகின்றது.

அப்படி என்றால் நமக்கு இனமூட்டும் சேமிப்பு எது…?

ஜீவ ஆதார சக்தி வலு கொண்டிடும் ஜெபமாக…
1.சரீர உயிரணுக்கள் அனைத்திலும் ஒளியை ஊட்டமாகப் பெற்று
2.அதை வழி நடத்தும் தன்மையாக தொழில் படவே இனமூட்டும் சேமிப்பை உரைத்தோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உணர்வின் இயக்கங்கள் பற்றி உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றேன்.

விஞ்ஞான நிலைகள் படித்தவர்களோ… அல்லது எஞ்சினியர்களோ அந்த தொழில்நுட்பம் (TECHNIQUES) கொண்டு பாட நிலைகளை உற்றுப் பார்த்துப் பதிவாக்கி அதற்குண்டான இயந்திரங்களில் நினைவச் செலுத்துகின்றனர்.

அதை வைத்துத் தாவர இனங்களுக்குள் சூட்சும நிலைகள் இயக்கும் இந்த உணர்வினை அறிந்து
1.அதை மாற்றி அமைத்தால் என்ன…? இதனுடைய செயலாக்கங்கள் என்ன…? என்ற நிலைகள் விஞ்ஞானி கண்டறிந்து
2.இது மனிதனுக்கு உகந்ததா… இது உகந்ததல்லவா…? என்று இந்த உணர்வின் தன்மை அளவுகோல் சேர்க்கப்படும் பொழுது
3.அந்த உணர்வால் இவனுக்கு இந்த நிலை வருகின்றது.

உணவு உட்கொண்டு மற்ற நிலையில் இருக்கப்படும் பொழுது இந்த உணவிற்குச் சத்தை ஏற்றுவதற்கும்… மற்ற தாவர இனச்சத்தை இணை சேர்த்துப் புதுப் புது வித்துக்களை உருவாக்கி “சத்துள்ள ஆகாரம்…” என்றும் விஞ்ஞானி உருவாக்குகின்றான்.

இதைப் போன்று தான் அன்று மெய் ஞானி பெற்ற உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் கொண்டு நஞ்சினை வென்ற அந்த அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

இயற்கையின் நிலைகள் எப்படி மாறுகிறது…? என்று ஞானிகள் கண்டதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டால்
1.இந்த மனித வாழ்க்கையில் அறியாத நிலைகள் கொண்டு அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்
2.மகிழ்ந்து வாழும் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் போகன் விஷத்தின் தன்மை வென்றிடும் நிலைக்காக முருகன் சிலையை உருவாக்கினான்.

கோள்களிலிருந்து வரும் நவபாஷணத்தை எடுத்து… சூரியனிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு தாவர இனங்களையும் அதிலே பாதரசம் கலந்திருப்பதைப் பிரித்து இதனுடன் இணை சேர்த்தான்.

மனிதனுக்குண்டான ஆறாவது அறிவின் ஆற்றலை… அதாவது நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றுவது போல… மனிதனின் ஆறாவது உருவைக் கண்டு தீமைகளை அகற்றிடும் பச்சிலைகளை அதிலே சாரணைகளைக் கொடுத்து இணைத்தான்.

சூரியன் எப்படி மற்றதுடன் மோதும் பொழுது தன் வெப்பத்தின் தன்மை கூட்டுகின்றதோ இதைப் போல
1.சிலையின் மேலிருந்து சொட்டு சொட்டாக நீரை ஊற்றப்படும் பொழுது அதிலே எதிர்நிலையாகும்… அதிலே ஒரு விதமான வெப்பம் உருவாகும்.
2.அந்த வெப்பத்தினால் சிலைக்குள் போகன் மருந்துகளாகச் சேர்த்த உணர்வின் ஆவி அலைகள் வரும்
3.கண்களால் அதை உற்றுப் பார்த்து நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
4.போகன் காட்டிய நெறிப் பிரகாரம் சிலையிலிருந்து வெளிவரும் அலைகளை (வாசனைகளை) நுகர்ந்து எடுத்தோம் என்றால்
5.பெரும் குஷ்டரோகமாக இருந்தாலும் சரி… கேன்சராக இருந்தாலும் சரி… அந்தத் தீமைகளை நீக்கிவிடும்.

ஆகவே இயற்கையின் உணர்வுகள் எதைக் கலவையாக எடுத்து நாம் எண்ணுகின்றோமோ அதன் அணுவாக நுகர்ந்து அந்த உணர்வின் செயலாகவே நம்மை மாற்றும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ உணர்வுகளை எண்ணத்தால் நாம் எண்ணி எடுத்தாலும் அதிலே அறியாது வரும் தீமைகளைத் தடுக்க வேண்டும் அல்லவா.

அதற்காகத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தின் மூலம்
1.மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).
2.அதைச் சாதாரணமாக எண்ண வேண்டாம்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்து
4.”கொஞ்சம்…” நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும்.

கோபித்தான்… துன்பப்பட்டான்… கஷ்டப்பட்டான்.. என்ற உணர்வு வரப்படும் போது ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.

ஆனால் முதலில் கண்ணின் நினைவைக் கோபித்தவர் மேல் அல்லது துன்பப்படுவோர் மீது வைத்தோம். அதை ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கினோம். அவர் உடலிலிருந்து வந்த கோபமான உணர்வுகள் அல்லது வேதனையான உணர்வுகள் நமக்குள் ஆன்மாவாக மாறுகின்றது.

நுகர்ந்து (சுவாசித்து) உயிரில் பட்டவுடனே உணர்ச்சிகள் எழும்புகிறது. விஷ்ணு என்ன செய்கிறான்…? வரம் கொடுக்கின்றான். ஒலி எழுப்புகிறது. உடல் முழுவதும் அந்த உணர்ச்சிகள் பரவுகிறது.

அவன் கோபமாகப் பேசியதை…
1.ஒன்று – நாம் கொஞ்சம் வலு கொண்டவராக இருந்தால் சண்டைக்குப் போவோம்.
2.இரண்டு – நாம் வலு குறைவாக இருந்தால் கிடு… கிடு… என்று பயமாகி இப்படிப் பேசுகிறானே.. என்று வேதனைப்படுகின்றோம்.

அதற்கடுத்து ஏதாவது அவனிடம் வாய் திறக்கின்றோமா..? நமக்கு வேதனை என்ற உணர்வு வருகின்றது. அந்தக் கார உணர்வுடன் வேதனை உணர்வைச் சேர்த்தவுடனே என்ன செய்யும்…?

மிளகாயை எடுத்து அரைத்தால் கையில் எரிச்சல் ஆவது போல் நம் உடலில் எரிச்சல் ஆகின்றது. ஆகவே அத்தகைய தீமைகள் புகாது தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்ல வேண்டும்.
1.உயிரான ஈசனிடம் நாம் வேண்ட வேண்டும்…
2.அவனிடம் கேளுங்கள்… அவனிடம் தான் கேட்க வேண்டும்
3.ஏனென்றால் எல்லாவற்றையும் அவன் தான் நமக்குள் உருவாக்குகின்றான்.
4.இத்தனையும் தெரிய வைப்பது அவன் தானே…!

ஆனால் நாம் ஈசனை எங்கேயோ தேடிக் கொண்டிருக்கின்றோம்.

உருவாக்குவது அவனே தான். நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது எல்லாவற்றையும் இயக்கிக் காட்டுவது அவனே தான். நம்மை ஆண்டு கொண்டிருப்பது உயிர் தான் என்கிற வகையில் நாம் மறந்துவிடுகின்றோம்.

அழகான துணிகளைப் போடுகின்றோம்… நம்மை அழகுபடுத்துகின்றோம். இருந்தாலும் யாராவது ஒரு கடும் சொல் சொல்லிவிட்டால் நம்மால் தாங்க முடியவில்லை.

உயிர் வெளியே போய்விட்டால் என்ன செய்கிறது…? கோடீஸ்வரனின் மகனாக இருந்தாலும் உடல் சவமாகி விட்டால் சீக்கிரம் தள்ளி விடப்பா…! என்று தானே நாம் சொல்கிறோம்.

சொத்து எல்லாம் இருந்து என்ன செய்வது…? அவனால் அதை அனுபவிக்க முடிகிறதா…? இல்லையே…!

இது எல்லாருக்கும் தெரிகிறது. தெரிந்தாலும்
1.இந்த உடலில் எடுத்து நாம் வளர்த்துக் கொண்ட வேதனையான உணர்வு… அதற்குச் சாப்பாடு தேவை.
2.அந்த உணர்ச்சிகள் உந்தி நம்மைச் சிந்திக்க விடாதபடி செய்கிறது.

ஆகவே… பிறர் செய்யும் தீமையான எண்ணங்களும் குற்றச் செயல்களும் நம் உடலுக்குள் போனால் என்ன செய்யும்…? அந்தத் தீமையின் உணர்வாக அதனுடைய வலிமை கொண்டு இயக்க ஆரம்பித்துவிடும்.

நம் நல்ல குணம் வேலை செய்யுமோ…? அது செயலற்றுப் போகும். இப்படி நாம் நல்லதைச் செய்து வந்தாலும் தீமைகள் உடலுக்குள் வருகிறது. வெளியிலிருந்து தான் அது வருகிறது.

அதனால் தான் இராமாயணத்தில் வாலியை இராமன் குகைக்குள் போட்டு மூடி விடுவதாகக் காட்டுகிறார்கள். அதாவது “தீமைகள் நமக்குள் உட்புகாதபடி தடுக்க வேண்டும்…” என்று உணர்த்துகிறார்கள்.
1.குகைக்குள் வாலி இருக்கின்றான்.
2.இராமன் அம்பை எய்து ஒரு கல்லைப் போட்டு அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான்.
3.ஆனால் அவனைக் கொல்லவில்லை.
4.அவன் வீரியத்தைத் தடைபடுத்துகிறான்…! என்று காட்டுகின்றார்கள்..

தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அதைத் தடுக்க வேண்டும்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

உயிரின் வேலை

 

சூரியன் மரம் செடி கொடியில் விளையும் சத்தைத் தனக்குள் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதிலே விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது
1.எந்த மரத்தின் வித்தோ அந்த உணர்வின் துணை கொண்டு காற்றில் கலந்திருப்பதைக் கவர்ந்து
2.பூமியின் துணைகொண்டு அந்த மரமாகவும் அந்தச் செடியாகவும் விளைகின்றது.

உதாரணமாக வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் நம் உயிர் அதை ஜீவ அணுவாக மாற்றி மனித உடலின் இனத்திற்குள் சேர்த்து அதைக் கருவாக உருவாக்கி விடுகின்றது.

இருப்பினும் கோழியோ தன் இனப்பெருக்கத்தில் அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலையில்… அதனதன் நிறங்கள் அங்கே குஞ்சுகளாக வருகின்றது.

ஆனால் மனிதர்கள் நாம் நுகர்ந்த அணுவின் தன்மையோ (வேதனை) விஷத்தின் தன்மை கொண்ட அணு முட்டைகளாக விளைந்து விடுகின்றது. இரத்தங்களிலே அது சுழன்று வந்தாலும் குறித்த காலங்களில்…
1.கோழி அடைகாத்த முட்டை குஞ்சான பின்… குஞ்சு முட்டையிலிருந்து வெளி வந்து அது தன் உணவை எப்படித் தேடச் செல்கின்றதோ
2.இதைப் போல நம் இரத்தத்தில் உருவான அந்த அணுக்கள் இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
3.உடலில் உள்ள அணுக்களுக்கு உணவாக எடுத்துச் செல்கின்றது.

அணுக்களுக்கு இரத்தம் உணவானாலும் அதன் உணர்வின் சத்து கலந்து நம் உடலுக்குள் அணுவின் தன்மை முழுமை அடைகின்றது.
1.எந்த விஷத்தின் தன்மை கொண்டு அது உருவானதோ எந்த உடலில் இருந்து அது உருவானதோ
2.அதனின் உணர்ச்சியைத் தூண்டிய பின் அந்த உணர்வுகள் கண்ணின் நினைவலைகளுக்கு வரும் உயிருக்கும் வரும்
3.இந்த உணர்வுகள் உணர்த்தியபின் கண்ணின் நினைவாற்றல் வேதனைப்பட்டோரை நினைக்கச் சொல்லும்.
4.அந்த உணர்வினை நுகரும்… உடலுக்குள் அந்த அணுக்களுக்கு இதை உணவாக கொடுக்கும்.

உயிரின் வேலை இது…!

இந்த உணர்ச்சிகள் கிளர்ந்த பின் எந்தக் கண்ணால் பார்த்துப் பதிவானதோ அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு அந்த உண்மையான உணர்வை எடுத்து அது உணவாகக் கொடுக்கும்.

வேதனைப்படுகின்றான் என்று உணர்த்தினாலும் வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்த பின் வேதனை உணர்ச்சியைத் தூண்டும் பொழுது
1.உயிரின் உணர்ச்சிகள் கண்ணின் அலையில் அனுப்புகின்றது. அந்த உணர்வை ஈர்க்கச் செய்கின்றது.
2.அந்த உண்மையான உணர்வைச் சுவாசிக்கச் செய்கின்றது. நமது இரத்த நாளங்களிலே கலக்கச் செய்கின்றது.
3.இப்படி அந்த வேதனைப்படுத்தும் அணுவிற்கு உணவாகக் கொடுக்கின்றது.

இயற்கையின் நியதிகள் இது.

ஆகையினால் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.
1.உடலை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சத்தை உணவாகக் கொடுத்து
2.ஒளியான அணுக்களாக உருவாக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும்படி சொல்கிறோம்.

“உறுதி மலை” மேல் நின்று… தொடர் ஜெபத்தால் விண்ணின் ஆற்றல் பெற்று உயர்ந்திட எமது ஆசிகள்

 

இன்றைய மனித வாழ்க்கை புற வாழ்க்கைச் செயலில் அதி ஆவல் எனும் பற்று கொண்டு… பிறப்பு எனும் சுழற்சி வட்டத்தில் உழல்கின்ற தன்மையாக உழன்று கொண்டுள்ளது.

ஆனாலும்… “உயிர் துடிப்பு எனும் ஜீவன்…” வலுக்கொண்டிடும் வளர்ப்பைச் செயலாக்கிடும் அக வாழ்வு இன்பத்தின் சுரப்பாகப் பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்திட… வானியலாக வழி அறிந்து உயர்ந்திடும் செயலாக்கம் தான் என்ன…?

உடல் கடந்து… அகம் ஜெபிக்கும் உணர்வெண்ணத் தியானத்தில்… மேலும் ஓர் படி அறிந்ததைத் தெளிதலே சிறப்பு.

காட்சி:- மதகு நீர் வற்றிய வண்டல் மண்ணும்… கோடையின் வெப்பத்தில் ஆற்றின் மணல் ஊற்றில் சுரக்கின்ற நீரை மக்கள் கொண்டு செல்லுதல்.

இது ஆத்ம பலம் அறிவுறுத்தும் பாடம்…!

மதகு நீரடி மண் கோடையின் வெப்பத்தில் மண்ணின் உள்ளிட்ட நீரும் வரும் வழியாகக் காய்ந்து அந்த மண்ணில் நீ சுரந்திடாத தன்மையாக வெடிப்பு ஓடிக் காணப்படுகின்றது அல்லவா.

இதுவே இந்தக் கலியில் வாழும் மனிதன் கொண்ட மன எண்ண நிலையப்பா…!

கோடையிலும் மேன்மை சிறப்பு உருவாய் என்று உரைத்திட வந்ததே…
1.வாழும் வாழ்க்கையில் கோடையின் அதி வெப்பம் போல் எண்ணத்தின் மோதல்கள் இருந்திட்டாலும்
2.நாம் கொண்ட அன்பு எனும் ஊற்று மனத்தின் நிறைவாகத் தன்னுள் ஆத்ம பலம் கூட்டிடும் தேவையின் பூர்த்தியைச் சிறக்கச் செய்வதோடு
3.அது மற்றவருக்கும் அமுத நீராகிய ஞானத்தைப் போதனையாக வழங்கிடும் ஆசான் என்று அழைக்கப் பெறும் போதினியாக
4.தன்னை உயர்த்திக் கொள்தலே மெய்ஞான விழிப்பின் பலனாகப் பெற்றுச் சுடர்ந்திடும் ஞானத்தின் அமுத ஊற்று.

இந்த நிலையின் வழியறிந்து பெறுகின்ற மனத்தின் திறன் எத்தன்மையாக விளங்கிடல் வேண்டுமோ… அதுவே எரியடி தண்டம்…!

மனத்தின் சஞ்சலம் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். எண்ண ஓட்டத்தின் வேகம் நிலை பேர் அறியாத செயலாகக் கொள்கின்ற வழித்தொடர் ஈர்ப்பின் நிலை கொண்டு நாம் அளித்திட முடியும்.

கரவுகின்ற (வஞ்சனை கொண்ட) மனம் எண்ணத்தின் செயலால் அன்பின் சிறப்பு அற்றுப்போய்விடும்.

மதகு நீர் குறைந்து விட்டால் நீர் வற்றிய பின் ஆங்கு படிந்துள்ள வண்டல் மண்… சூரியனின் வெப்பத்தால் இறுகி வெடிப்பு ஓடிக் கெட்டிப்பட்ட தன்மையாக ஆன பின்… அந்த மண்ணைத் தோண்டினால் நீர் சுரந்திடும் ஊற்று நிலை காணுவது அரிது.

அதுவே கரவுகின்ற மனம் மதகின் நீரடி மண்ணாக அன்பின் சிறப்பு அற்றுவிடும் என உரைத்திட வந்தோம்.

கோடை எனும் வாழ்க்கையாக ஆற்றின் நீரடி மணலாகத் தோண்ட சுரந்திடும் ஊற்று நீர் போல் “அன்பின் சிறப்பு” கொள்கின்றாய். அத்தகைய மனத்தின் பாங்கையே மேன்மை சுரப்பு உருவாய் என்று அழைக்கின்றோம்.
1.உயர் ஞானத்தின் வழி உயர்வெண்ண செயல் வான் தொடர்பாகப் பெற்றால்
2.அந்த அன்பின் சிறப்பு… எரியடி தண்டமாக்கும் உன்னை.

அக்கினியை அக்கினியால் அணைத்திட முடியாது…! எரிகின்ற அக்கினியை எரிகின்ற கைப்பந்தம் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக வீசிப்பார்.
1.மேலும் அக்கினியின் சுடர்தான் பிரகாசிக்குமே தவிர அது குறைவு படாது.
2.அந்த நிலையே உடல் கடந்து அகம் ஜபித்திடும் சூட்சும நிலை…!

இன்னும் விளங்கக் கூற வேண்டும் என்றால் இயேசுநாதரை சிலுவையில் அறையப்பட்ட பொழுது… உடல் துன்பம் உணர்ந்திடாத நிலையில் புற உடல் தவிர்த்து… அவர் உடல் வாழ்ந்த விதம் என்ன…?

அக்கினியில் போடப்படும் பொருள்கள் எல்லாமே சருகாகி அக்கினியை மேலும் அது வளர்க்கும். அது போல் தான் எத்தகைய துன்பங்களும் ஆத்ம ஞானிகளைத் தாக்கிடாது.
1.அவர்கள் கொண்ட எண்ணத்தின் வலு வீரியம் உடல் கடந்து…
2.அக உடல் வாழ்வாங்கு வாழ்ந்ததைப் போல் அன்பு கொண்டே உங்களையும் அழைக்கின்றோம்.

சுவரினை நோக்கி வீசப்படும் பந்து சுவற்றில் மோதுண்டு… எய்தப்பட்ட செயல் எய்த இடத்திற்கே திரும்புகின்ற செயல் போல்… அழுக்காறு எனும் பொறாமை குணமும்… சினம் என்று உரைக்கின்ற கோபத்தின் குணமும் கொண்ட உலகோதய நடைமுறை வாழ்க்கையில் உள்ள மக்கள் வெளிப்படுத்தும் அத்தகைய உணர்வுகள்… உண்மையான உயர் ஆத்ம ஞானத்தை வளர்த்திடல் வேண்டும் என்று செயலுறும் ஆத்ம ஞானிகளை அது நெருங்கிடாது.

உறுதியாக உரைக்கின்ற வாசகம் இது.

இன்றைய மனிதர்களின் மனோபாவனை… நடைமுறை வாழ்க்கை எவ்வாறு இருக்கின்றது…?

பாலைவனத்தில் மணல் குன்றைப் பார்த்து இருக்கின்றாய் அல்லவா…! இன்று ஓர் இடத்தில் இருக்கும் அந்த மணல் குன்று மறுநாள் வேறொரு இடத்தில் தோன்றுகின்றதே அது எப்படி…?

காற்றால் இடம் மாறும் மணல் குன்று போல் தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை.

ஆனால் நாம் உரைத்திட வந்திட்ட உயர் ஞானம் கடைபிடிக்கும் மனித மனத்தின் நிலை அதுவே உறுதி மலை.
1.மனத்தின் திடத்தைத் தான் உரைக்கின்றோம்
2.உறுதி மலை மேல் நின்று அகன்றிடாத் தொடர் ஜெபத்தால்
3.வானியலாகச் சக்தி பெற்று உயர்ந்திட எமது ஆசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உபதேசத்தைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டவர்கள் ஒவ்வொருவருமே தியானத்தை வழி நடத்த முன் வர வேண்டும்.

தியானம் முடிந்த பிற்பாடு யாருக்காவது உடல் நலம் சரியில்லை சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு வாத நோய் இருந்ததென்றால்… அவர்களை எழுந்து நிற்கச் சொல்லி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்
3.நோய் நீங்க வேண்டும்… உடல் நலமாக வேண்டும் என்று
4.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

இந்தப் பழக்கத்தை நாம் எங்கே சென்றாலும் கொண்டு வர வேண்டும். இங்கே சொல்லிக் கொடுப்பதை ஒருவர் செய்தாலும்… மற்றவர்களும் நான் செய்கின்றேன்…! என்று முன்னுக்கு வர வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் உள்ளவர்கள் இதை வழி நடத்த வேண்டும்.

1.ஏனென்றால் எம்மைச் சந்தித்தவர்களுக்கு இந்த அருள் வாக்கினைக் கொடுக்கின்றோம்.
2.கணவன் மனைவியாக இந்தக் கூட்டமைப்பினை உருவாக்கி வழி நடத்த வேண்டும்.

ஒரு கட்டுப்பாடான நிலைக்கு வர வேண்டும்.

குறைகளைக் கண்டால் அந்தக் குறையைப் பற்றிப் பேசக் கூடாது. அதை நிவர்த்தி செய்வதற்கு என்ன மார்க்கமோ அதை எடுத்துப் பேச வேண்டும்.

உதாரணமாக ஒரு இடத்தில் தூசி விழுந்தால்… பிசின் மாதிரி இருக்கிறது. அது ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதிலே எண்ணை விட்டால் போகாது. சோப்பைப் போட்டுத் தண்ணீரை விட்டால் போய்விடும்.

ஆனால் எண்ணையுடன் சேர்ந்த அழுக்காக இருந்தால் தண்ணீரை விட்டால் போகாது. அதற்குக் கிரசினை விட்டுத் தான் தூய்மைப்படுத்த வேண்டும்.

1.ஆகையினால் எது எதற்கு எப்படிச் செய்ய வேண்டும்…? என்ற நிலைப்படுத்தி
2.ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அறியாது வந்த தீமைகளை நீக்கக்கூடிய சக்திகளை நாம் பெற வேண்டும்.

நாம் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும். அதற்குத் தான் இந்தத் தியானமே…!

தியானம் என்றால் என்னமோ ஏது என்று இல்லை.

1.உங்கள் எண்ணங்களை அங்கே சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு சென்று
2.அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வுகளை எல்லாம் உங்களுக்குள் பதிவு செய்யப்படும் போது நீங்கள் அந்த நிலைக்கே ஆளாகின்றீர்கள்.

அதற்குத் தான் இவ்வாறு உபதேசிப்பது.

என்னைப் (ஞானகுரு) போன்று நீங்களும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற வேண்டும். நான் எப்படிச் சொல்வது…? என்று கூச்சம் இல்லாதபடி தெளிவாக எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி ஒரு பழக்கத்தைக் கொண்டு வந்து
1.உலக மக்களுக்கு வழி காட்டக் கூடிய தன்மைக்கு ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்
2.நீங்கள் ஒவ்வொருவருமே ரிஷியாக வேண்டும்.

உங்கள் பார்வையில் மற்றவர்கள் தீமைகளையும் துனபங்களையும் பிணிகளையும் போக்கக்கூடிய சக்தி பெற வேண்டும். அதற்குத்தான் இந்த அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம்.

குறைகளையோ மற்ற நிலைகளையோ காண நேர்ந்தால்
1.அதை நீக்கும் உபாயங்களைச் சொல்லுங்கள்
2.அந்தக் குறைகளையே பேசி அதையே வளர்க்கும் நிலை இல்லாதபடி
3.துணிவுடன் அதை நீக்கும் முறைகளை எடுத்துக் காட்டி அந்த அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றும்படி செய்யுங்கள்.

அருள் உணர்வின் மீது பற்று கொண்டு மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றி வாழச் செய்யும் அருள் ஞானத்தைப் பெருக்கச் செய்யுங்கள். அருள் வழியில் வளர வேண்டும் என்று நமது குரு அருளை அனைவரையும் பெறச் செய்யுங்கள்.

எல்லோரும் மெய்ப் பொருள் காணும் நிலையைப் பெறச் செய்யும் அந்தத் திறனை நீங்கள் பெற வேண்டும் என்று நமது குரு அருளை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு). நாம் அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.

உலக மக்கள் அறியாது சேர்த்துக் கொண்ட பகைமைகள் நீங்கி அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்திட மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்…! என்று பிரார்த்திப்போம்.

1.சாமானியர்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்யும் சக்தியாக
2.எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒன்றிணைந்து வாழும் நிலையை உருவாக்குவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) உபதேசம் கொடுக்கும் பொழுது சிலதுகளை விளங்காமல் சொல்கிறேன் என்றால் அதற்குக் காரணம் உண்டு.
1.சிலருக்குக் கிடைக்காமல் செய்வதற்கும்
2.பதிவானதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் தெரிந்து கொள்வதற்கும் இது உதவும்.

ஏனென்றால் உபதேச வாயிலாகப் பேருண்மைகளைச் சொன்னாலும் சில மாயாஜாலங்கள் உள்ளவர்கள் இதை எடுத்து
1.அதிலிருக்கும் உள் மூலக்கூறைத் தெரிந்திடாது
2.விஷம் கலந்த உணர்வு கொண்டு அவன் இச்சைக்கே அதைக் கவர்ந்து விடுவான்.

ஆக இந்த உண்மையின் தன்மை செயல்படும் பொழுது அங்கே அவனுக்குப் பயனற்றதாகும் ஆகும். அவன் மக்களை வசியப்படுத்த சொற்றொடரில் இது உதவும். அதைப் போன்ற தீமைகள் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்குதான் அவ்வாறு செய்வது.

ஆனால் அதே சமயத்தில்
1.உங்களுடன் தொடர்பு கொண்ட நிலையில்… உங்களுக்குள் பதிவாக்கும் இதனின் விளக்கம்
2.அடுத்த உபதேச நிலைகள் வரப்படும் பொழுது இணைத்து
3.அந்த உண்மைப் பொருளின் உணர்வை நீங்கள் அறிந்து
4.உங்கள் வாழ்க்கையில் தெளிவாக்கிக் கொள்ள முடியும்.

எம்முடைய உபதேசப் கருத்துக்களைப் புத்தக வாயிலாக வெளிப்படுத்தினாலும் மற்றவர்கள் இதைக் கலவையாக்கி மனித வாழ்க்கைக்குத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் உணர்வுகள் பதிவு செய்யும் எண்ணமும் இல்லை.

அவருடைய ஆசை கொண்டு…
1.இதை எடுத்து இப்படிச் செய்தால் தனக்குச் செல்வம் வரும்… செல்வாக்கு வரும்… என்று நிலைகள் வரப்படும் பொழுது
2.அந்த ஆசையின் உணர்வு வந்து உண்மையின் தன்மை பெறாதபடி ஆகி
3.யாம் கூறிய ஞானத்தின் உணர்வுகளும் நாளடைவில் மறைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் மாற்றுவதற்குத் தான்
1.இங்கொன்றும் அங்கொன்றும் தொட்டு உங்களுக்குள் இதைப் பதிவாக்கப்படும் பொழுது
2.அடுத்த உணர்வுடன் இணைந்து தெளிந்த மனம் பெற்றிடும் அந்த நிலையை உருவாக்கிடத் தான்

இப்போது ஒன்றைச் சொல்கிறேன் என்றாலும்… இதனுடன் இணை சேர்த்த நிலைகள்… அடுத்த அறிவின் தன்மை தொடர் வரும் பொழுது உங்களுடன் இணைத்து… அந்த ஞானத்தைப் பெற்று எத்தகைய தீமையில் இருந்தும் நீங்கள் விடுபட முடியும்

விஷத்தினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறுவதற்குத் தான் எல்லாவற்றிலும் கலந்து கலந்து… உபதேசங்களை அந்தந்தக் காலப் பருவத்தில் கொடுக்கின்றோம்.

அதற்குண்டான விளக்கங்களைத் தான் இங்கே வெளிப்படுத்திக் காட்டுகின்றோம் (ஞானகுரு).

“மாமகரிஷி ஈஸ்வரர்” தன இன மக்கள் பால் கொண்டுள்ள ஆசை

 

விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம் அதிலே அஞ்ஞான வாழ்க்கையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்தின் துணை கொண்டு வாழ்ந்தாலும் அஞ்ஞானத்தின் வளர்ச்சியே அதிகரிக்கிறது… மெய்ஞானத்தின் நிலைகள் மறைகின்றது…!

இதைப் போன்ற நிலையில் இருந்து மனிதர்கள் மீள வேண்டும் என்பதற்கே
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரர் தனது வாழ்க்கையில் கண்டறிந்த பேருண்மைகளை
2.மனிதனான தன் இன மக்கள் அறிதல் வேண்டும்… அருள் ஞானம் பெறுதல் வேண்டும்
3.தன்னை அறியாது வரும் இருளை நீக்கிடும் அந்த ஆற்றல் பெற வேண்டும் என்ற இந்த ஆசையில்
4.தனக்குள் பெற்ற அருள் சக்தியை மக்கள் பெற வேண்டும் என்று அதற்கு வேண்டிய உணர்வுகளை வழி நடத்தினார்.
5.அதற்காக எம்மை அனுப்பினார்.. அவருடைய உணர்வுகளுடன் என்னை ஒன்றாக இணையச் செய்தார்.
6.உணர்வுகளை ஆழமாகப் பதியச் செய்தார்… அவர் கண்ட பேருண்மைகளை எம்மையும் அறியும் படி செய்தார்.
7.அறிந்த உணர்வின் தன்மையை மக்களுக்கு நீ எடுத்துக்காட்டு என்று சொன்னார்.

அந்த உணர்வினை மக்களுக்கு எடுத்துக்காட்டு என்று சொன்னாலும் “ஊழ்வினை என்ற வித்துக்களாக” முதலிலே அவர்களுக்குள் பதியச் செய். அவர்கள் மீண்டும் அதை எண்ணும் பொழுது அந்த அருள் வழியில் அந்த எண்ணமே அவர்களை மீட்ட உதவ வேண்டும்.
1.உன்னை நீ நம்புகின்றாய்…!
2.அதைப் போன்று அவர்கள்… “அவர்களை நம்ப வேண்டும்…”

அருள் உணர்வின் சக்தி எதையெல்லாம் உன்னிடமிருந்து அவர்கள் கேட்டு உணர்கின்றார்களோ… “நல்லது என்று உணர்ந்த பின்” அந்த நல்லதையே கவரும் உணர்வுகளை நீ ஊட்ட வேண்டும்.

அதைக் கவர்ந்தால் அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் பெருகும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெறுகின்றார்கள்.
1.அதனை நீ செய்வாயாக…! என்று அருள் வாக்கினை வாங்கிக் கொண்டுதான்
2.எமக்குப் பல உண்மையின் உணர்வுகளை உபதேசித்தார்… உணர்வின் ஆற்றலைப் பெறும்படி செய்தார்.

உலக மக்கள் அனைவரும் நல்லவரே…! இன்று உலகெங்கிலும் மதம் இனம் என்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலையில் இருந்து மக்களை மீட்டிட வேண்டும் என்பதற்காக இதைச் சொன்னார் குருநாதர்.

அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

வான் திறப்பின் திறவுகோல்

 

நதி ஜீவ நதி – புதுப்புனல் பெருகிடும் மகா நதியின் மூலம் – சிறு துளி பெருவெள்ளம்.

சுரந்திடும் நீர்த்திவலைகள்… ஒன்று ஆயிரமாகப் பல்கிப் பெருகி ஓடிடும் சிற்றாறாக… ஓடி அதனுடன் இணைந்து கொண்டிடும் பல சிற்றோடை நீர் நிலைகள் மாநதியாக உருவெடுத்துக் கடலுக்குள் சங்கமிக்கின்றது.

ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் செயலும் அதே நிலைதான்…!

ஞான ஆற்றல் கொண்டிடும் அறிவின் கருவூலம் ஆத்ம பலம் எனும் சேமிப்பு நிலையைக் காட்டிடவே… மனித அறிவின் விஞ்ஞானம் பகுத்தறிவின் ஆற்றலின் வளர்ப்பால் இயற்கையை வென்று காட்டிடும் மதிநுட்பம்… நதி ஓட்டத்தின் குறுக்கே அணையை நிறுவி நீரின் சேமிப்பால் பயிர்களை வளர்க்கும் முறைகள் கண்டது.

மெய்ஞானத்தின் நெறிப்பயிர் வளர்க்கும் பக்குவம் உயிராத்மா பலம் பெற்றிடும் அமில முலாமை ஜீவகாந்த ஒளி சக்தியின் வலுவை உலகோதய உணர்வுகள் மோதிடும் எந்த நிலையிலும் விழிப்பாற்றல் குறைவுபடும் செயலுக்கே செயல் கொண்டிடும் மன எண்ணத்தின் நிலையை விளக்கிடவே முன்பு காட்டிய நிலைகள். ஆனால்
1.வானியல் தன்மைக்கே செயலுறுருங்கால்
2.மெய்ஞான விழிப்பாக வளர்த்திடும் சேமிப்பே “அதி உன்னதமான பொக்கிஷமாகும்…”

மலருக்குள் தேன் இருக்கும் வரை அது மது. தேனீக்கள் அதனை உண்டு உமிழ்கின்ற செயலில் அதுவே மருந்து. அது செயல்படும் தொழிலோ இயற்கை… அதன் செயல்பாட்டின் பொருளை நடத்திடும் மாற்று குண நிலைகள் செயற்கை.

மரத்தின் உச்சியில் தேன் கூட்டின் அடையில் சேமிப்பாகிடும் மருந்து போல் நாம் செயல் கொள்ளும் “மெய் ஞான விழிப்பாக்கும் ஈஸ்வர தியானத்தால் பெற்றிடும் உயர் நுண் மின்காந்த ஒலி அலைகள்…” சமைப்பின் ஒளியாக ஆத்ம முலாமின் சேமிப்பாகச் செயல்படுவதே ஆக்கம்.

1.நற்குணங்களும் அசுர குணங்களும் கொள்ளப்படும் செயலில்
2.அறிவை அறிவுறுத்தும் ஞானம் உலக நடைமுறையில்
3.சராசரி மனிதனுக்குப் பிடர்தலின் குணங்களாக அவன் வலுக் கொண்டிடும் எந்தக் குணங்களோ
4.அவன் சிந்தனை வசமாகும் வரை சுவைகள் வெளித் தோன்றாது.

ஆனால் ஆத்ம பலம் பெற்றிட எண்ணி ஏங்கிடும் ஆத்ம ஞானிகளுக்கு அறிவின் விவேகம் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் தெய்வீக குணங்களால் தன் உயர்வைத் தானே கூட்டிக் கொள்ள… “அல்லாதவைகள் (தீமைகள்) தானே விலகும் என்பதே மாண்பு….”

உணர்வுகள் கூட்டிக் கொள்ளும் செயலுக்கு ஒரு உவமானம்.

மது வண்டின் தேன் ஒரு துளி பாறை மேல் சந்தர்ப்பத்தில் படர்ந்திட… மலையில் வாழ்ந்து வரும் ஓர் கரடி அதனைச் சுவைத்துவிட… மேலும் துளித்திடும் தேனால் கவரப்பட்டுக் கரடி அந்தத் தேன் கூட்டையே கேடாக்கத் துணிந்த செயலுக்கு இருவித நிலைகளை உரைத்தோம்.

1.தீதெண்ண குணங்கள் நற்குண சேமிப்பின் சக்தியைச் சுவைத்திட்டால்
2.நாம் வளர்த்துக் கொள்ளும் அந்த குணங்களுக்கே வலு வீரியமாகச் செயல் கொண்டு
3.மனித ஞானம் வளர்ப்பில் தேக்கத்தைப் பெறும்.

ஆனால் தீதெண்ண உணர்வுகள் மோதிட்டாலும்… ஜெபித்திடும் தியான வழியில் நற்குணங்களின் வலு வீரியம் செயல் கொண்டு தீதெண்ண நிலைகள் நீக்கிட…
1.கூட்டையே சிதைத்திடும் கரடியை… தான் கொண்ட வீரியத்தால் தேனீ கொட்டி வீழ்த்திட்ட நிலை போல்
2.அல்லாதென அமில நிலைகள் அகல… நல்லவை பெருகிடும் அமுதமாக
3.சேமிப்பின் ஆற்றல் பெருகி வழிகாட்டிடும் உபாயமாக அதுவே “வான் திறப்பின் திறவுகோலாகின்றது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு இடத்தில் விபத்தாகிறது… அடிபடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வின் ஒலி ஒளிகளைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது.

இன்று டி.வி.யில் படங்களை எவ்வாறு பார்க்கின்றோம்…?

இயந்திரத்தின் துணை கொண்டு ஒரு மனிதனைப் படமாகி அதை ஒலிப் பேழைகளில் பதிவு செய்கிறார்கள்… வீடியோ. அப்போது அதனுடைய படச்சுருள்களில் அந்த உருக்களை நாம் பார்க்க முடியவில்லை.

பதிவு செய்ததை மீண்டும் காந்தப் புலனறிவால் ஒரு இயந்திரத்தின் துணை கொண்டு இயக்கப்படும் போது ஒலி/ஒளிப் பேழைகளிலிருந்து அலைவரிசைகளை வெளிப்படுத்துகிறது. அதைத் தான் நம் டி.வி பெட்டி கவர்கிறது.

காந்தப் புலனறிவால் எந்த மனிதனைப் படமாக உருவாக்கப்பட்டதோ அவன் எந்த நிலையில் இருந்தானோ அதைத் திரைகளில் நாம் காணுகின்றோம்.

இதே காந்தப் புலனறிவால் தான் அதுவும் கவர்கின்றது அதனின் உணர்வின் தன்மை ஒலி ஒளி என்ற நிலைகளில் அது பரப்புகின்றது. இது விஞ்ஞானம்.

அதே போன்று தான்
1.அடிபட்ட அந்த மனிதனின் உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படும் பொழுது
2.ஒலி ஒளி என்ற நிலையில் அலைவரிசைகளில் வெளிப்படுகின்றது… சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்கின்றது.
3.அப்போது எந்த மனிதனை நாம் அங்கே உற்றுப் பார்க்கின்றோமோ அதே ஒலி ஒளி என்ற நிலைகளில்
4.நமக்குள் அந்த உடலின் உருவத்தையும் அதிலிருந்து வெளி வரும் சோக நாதத்தையும் நாம் பார்க்கின்றோம்.

அதை நமக்குள் உணர முடிகின்றது.

உயிரில் இருக்கும் காந்தப்புலன் மகாலட்சுமி என்றாலும் நாம் உற்றுப் பார்க்கும் ஒவ்வொன்றையும் லட்சுமி தனக்குள் கவர்ந்து விஷ்ணு என்ற தன் கணவனுடன் இணைந்து அந்த உணர்வின் சக்தியை (விபத்தான) அதே வேதனைப்படும் உணர்வின் அணுவாக மாற்றுகின்றது பிரம்மமாக.

நாம் கண்ணுற்றுத் தான் பார்த்தோம்… ஆனால் உயிர் அதனின் ஜீவ அணுவாக மாற்றுகின்றது விபத்தில் சிதைந்து போன அந்த உணர்வின் தன்மை அது நமக்குள் உருப்பெறப்படும் பொழுது
1.அவன் எத்தகைய வேதனைப்பட்டானோ அதே உணர்வின் தன்மை கொண்டு வரும் போது
2.இரவிலே அவன் சிதைந்த உணர்வின் தன்மை கனவாக வருகின்றது
3.அவன் உடலைப் பார்த்திருந்தாலும் அவனின் உருவம் வராது… வேறு உருவமாகத் தெரியும்.

உடல்கள் சிதைவதையும் சிதைந்து கொண்டே இருப்பதும் போன்ற இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நம் ஆன்மாவிலிருந்து உடலுக்குள் செல்லும் போது ஒவ்வொரு குணத்திலும் இந்தச் சிதைந்திடும் உணர்வுகள் பரவிப் பரவி நாம் மனிதனாக உருப்பெற்ற நிலைகள் மறைந்துவிடுகிறது.

அச்சுறுத்தும் நிலைகளும் அஞ்சிடும் நிலைகளும் நமக்குள் வலுப் பெற்ற நிலைகளாக உருப்பெற்று அந்த அணுவின் தன்மை நமக்குள் பரப்பத் தொடங்குகிறது.

அந்த மனிதன் விபத்தில் அவன் எப்படிச் சிதைந்தானோ அதிலே உருவான அணுவின் தன்மை அதனின் மலத்தை உமிழ்த்தும் போது நம் உடல்கள் சிதைந்து விடுகிறது.

எந்த எலும்பு அவனுக்குள் ஒடிந்ததோ அதிலிருந்து வந்த உணர்வின் அலைகளை நமக்குள் இருக்கும் காந்தப் புலனறிவுகள் நுகர்ந்த பின்
1.அதாவது முறிந்த எலும்பின் உணர்வுகள் நம் எலும்புகளில் இது பட்டுவிட்டால்
2.நம் உடலில் எலும்பை உருவாக்கும் அந்த அணுவின் மலங்கள் அது குறையத் தொடங்கிவிடும்.
3.பின் எலும்புகளிலே சிதைவின் தன்மை ஆகி அடுத்து ஏதாவது பட்டால் உடனே சடக் என்று முறிந்துவிடும்…. ஆக மாவு போல் ஆகும்.

ஆகவே அங்கே எலும்புகள் நொறுங்கியது… நொறுங்கிய உணர்வின் தன்மை வெளி வந்தது.
1.அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகளை இங்கே கவர்ந்தது நமது கண்.
2.இந்த உணர்வின் தன்மை ஓ என்று நமக்குள் ஜீவனாகின்றது… ஜீவ அணுவாகச் சிவமாகின்றது (உடலாகிறது)

சிவத்திற்குள் அணுவின் தன்மை ஆன பின்… அது தன் உணர்வினை ஏங்கிப் பெற்று நொறுங்கிய உணர்வின் மலத்தை நமக்குள் விடும் போது நம் எலும்புகளைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.

இது போன்ற நிலைகளிலிருந்து விடுபட
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்வழிப்படி,
2.அந்த மெய்ஞானியரின் அருள் ஒளியை நமக்குள் கூட்டி
3.இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும்.

நாம் இரவில் படுத்து உறங்கும் பொழுது
1.அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி
2.நம்மைத் தாக்கும் தீமைகளிலிருந்து
3.நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காட்டிற்குள் சில வகையான செடிகள் உண்டு அந்தச் செடிகளின் மீது மிதித்து விட்டால் நம் நினைவையே இழந்து விடுவோம். அடுத்து எங்கே போகின்றோம்…? என்ன செய்கிறோம்…! என்றே தெரியாது.

அந்தச் செடியைத் தூசி போல் ஆக்கி… வீட்டு வாசல்படியில் தேய்த்து விட்டால் உங்கள் நினைவுகள் மறந்துவிடும். உங்கள் கடையில் கொண்டு போய்ப் போட்டால் உங்களுக்குச் சிந்திக்கும் தன்மை வராது. இதை “மறதிப் பூடு…” என்று சொல்வார்கள்

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் எமக்கு (ஞானகுரு) ஞாபகப்படுத்திக் காட்டுகின்றார்.

நாங்கள் ரெண்டு பேரும் செல்லும் பொழுது திடீரென்று அவர் ஒதுங்கிச் செல்கிறார்… என்னைச் செடி மீது மிதித்து விட்டு வாடா…! என்று சொல்கின்றார்.

செடியை மிதித்து நான் கடந்து சென்றவுடன் என் நினைவே இல்லை…! எந்த பக்கம் போகின்றேன்… என்ன செய்கின்றேன்…? என்றே எனக்குத் தெரியவில்லை

செடிகளுக்குச் சத்து எப்படி இருக்கிறது பாருடா…! என்கிறார்.

1.மனிதனான பின் காட்டிற்குள் அவன் அடிபட்டு வேதனையுடன் கீழே விழுந்து தன்னை மறந்த நிலைகள் மடிந்த பின்
2.அவனுடைய உணர்வுகள் செடியுடன் கலந்து அதை அது உணவாக உட்கொண்ட பின்
3.அதன் விழுதுகளில் இப்படி எல்லாம் ஆற்றல் வருகிறது…. அதை மிதித்தால் நம் சிந்தனையை இழக்கச் செய்கின்றது

பிறகு குருநாதர் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே செல்கின்றார். ஆனால் என்ன செய்வது… எந்தப் பக்கம் போவது…? என்று எனக்குத் தெரியவில்லை.

வேகமாக என் கையை பிடித்து இழுத்து… வாடா… வாடா… வாடா… வாடா… என்று என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றார்.

பின் வேறு சில செடிகளைக். காண்பித்து… “அதன் மீது உட்கார்…” என்றார். உட்கார்ந்த பின் அப்புறம் எனக்கு நினைவு வருகின்றது.

இப்படி அனுபவரீதியில் தான் குருநாதர் எனக்குக் கொடுத்தார். வெறும் வாயால் சொல்கிறேன் என்று அல்ல.

1.உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் திரை மறைவாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும்
3.விஞ்ஞான உலகில் வரும் கடுமையான தீமைகள் இருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் இத்தனையும் கற்றுக் கொடுத்தார். இருந்தாலும் இதை எல்லாம் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் விட்டால் என்னவாகும்…! எனக்குள் அது மறைந்து விடுகின்றது.

அப்படி இல்லாதபடி உங்களுக்குள் அதை எல்லாம் உணர்த்தப்படும் போது
1.உங்கள் பார்வையால் மற்றவருடைய தீமைகளைப் போக்க முடியும்
2.சிந்தனை இழக்கச் செய்யும் நிலையிலிருந்து மற்றவர்களை மீட்கும் சக்தியும்
3.அதனை மாற்றியமைக்கும் சக்தியாகத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக
4.அந்த ஞானத்தின் வழிகளில் உங்கள் வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

இதன் வழியில் ஒவ்வொருவரும் சென்றால் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் உங்களுக்குள் கிடைக்கின்றது. ஆகவே… நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும்.

உங்கள் உணர்வைக் கேட்போருக்கும் அருள் ஞானத்தை ஊட்டி மறைத்திருக்கும் தீமையான உணர்வுகளை நீக்கி அருள் ஒளியின் உணர்வை அவர்களும் பெருக்க வேண்டும்… உங்களுக்குள்ளும் அருள் சக்தி பெருக வேண்டும்.

அத்தகைய நோக்கத்தில் தான் குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டிய உண்மைகளை உங்களுக்குள்ளும் தெளிவாக்குகின்றேன்.

துருவ நட்சத்திர அணுக்களின் பெருக்கம்

 

நமது வாழ்க்கையில் அன்புடன் பண்புடன் பரிவுடன் பாசத்துடன் பிறருடைய கஷ்டங்களையும் துயர்களையும் வேதனைகளையும் கோபங்களையும் குரோதங்களையும் கேட்டறிகின்றோம்… சந்தர்ப்பத்திலே.

அவர்கள் உடலில் விளைவதைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து விடுகின்றது. அவர்களை உற்றுப் பார்த்தால்
1.நம் கண்ணின் கருவிழி ருக்மணி நம் உடலிலே பதிவாகி விடுகின்றது… எலும்புக்குள்.
2.கண்ணோடு சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உணர்வலைகளை நுகர்ந்து அறியச் செய்கின்றது உயிருடன் ஒன்றி.
3.நுகர்ந்தறியப்படும் பொழுது அவை அனைத்தும் இரத்தத்திலே கருக்களாக முட்டைகளாக உருப் பெறத் தொடங்குகிறது.

உயிரினங்கள் பலவும் முட்டைகளை இடுகின்றது. முட்டையை அடைகாத்துக் குஞ்சுகளாகப் பொரிக்கச் செய்கின்றது. கருமுட்டை என்றால் கருவில் இருந்து தான் குஞ்சின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளி வருகின்றது.

மாடு ஆடு இவைகள் அனைத்தும் அது நுகர்ந்த உணர்வுகள் அணுக்கருக்களாக உருவாகி அதன் துணை கொண்டு கருப்பையில் உருவாகி குட்டிகளாக ஈன்று அதன் இனத்தை அது வளர்க்கின்றது.

இதைப் போன்று தான் நாமும் அதன் வழியில் வளர்ந்தவர்கள் கருமுட்டையின் தன்மை கொண்டு தன் இனத்தை வளர்க்கும் சக்தி பெற்றது.

ஆனாலும் நம் உடலுக்குள் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அனைத்தும்… உதாரணமாக ஆத்மா நோயுற்றவரைப் பார்த்தோம் என்றால் அவரைப் பரிவுடன் அணுகுகின்றோம்… நோயினைக் கட்டறிந்து அதை நுகர்ந்தே அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றோம்.

அப்போது அந்த உணர்வுகள் அணுக்கரு முட்டையாக நம் உடலில் இரத்தங்களில் கருவுறத் தொடங்கி விடுகின்றது… முட்டையாகி விடுகிறது. நாம் கண் கொண்டு பார்த்த கரு விழி எலும்புக்குள் பதிவாக்கி விடுகின்றது.

அதன் தொடர் வரிசையில் கவரும் தன்மை நமக்கு “அந்த வலு (நோயின் பாதிப்பு) ஏற்படுகின்றது…”

இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடனும் நம் நினைவாற்றலை அங்கே செலுத்தி
2.அதனைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வினை உந்தி அதன் உணர்வின் தன்மை நுகரச் செய்தால்
3.”அத்தகைய கருக்களை” – துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை
4.ஒளியின் சக்தியாக வளர்க்கும் கருமுட்டைகளை உங்களுக்குள் உருவாக்க முடியும்.

அதற்குத் தான் உங்களுக்குத் தியானப் பயிற்சியே கொடுக்கின்றோம். அதனை அடிக்கடி வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

அப்பொழுதுதான் ஒளியான உணர்வுகளாக நமக்குள் பெருகும்… ஒளியின் அணுக்களும் விளையும்… உயிரோடு ஒன்று உணர்வுகளும் ஒளியாக மாறும் நாம் ஒளியின் சரீரமும் பெற முடியும்
1.இரத்தங்களிலே அடிக்கடி துருவ நட்சத்திர உணர்வைப் பெருக்கிக் கருக்களாக்கி முட்டையாக்கி ஒளியான அணுக்களாகப் பெருக்கச் செய்யத்தான்
2.ஆத்ம சுத்தியைச் செய்யச் சொல்லி வாழ்க்கையை தியானமாக்கும்படி அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

யாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் “மெய் வித்துக்களே” இந்தக் கலியில் தேவையப்பா

 

மனிதன் என்றே பெயர் பெறும் ஜீவ பிம்ப சரீரம் பெற்ற உயிராத்மா… தான் தன் சுய வளர்ப்பால் வளர்ந்து… உயர் ஞானத்தின் தொடரில் தன்னைத்தான் உணரும் பக்குவ கதியால்… தன்னை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலில் உணரும் அனுபவ உயர் ஞானமாகத் தன்னுள் தெளிந்து… மனித குலச் சமுதாய நன்மைக்குத் தான் கண்ட பேரின்ப அனுபவ லயத்தை உவப்புடன் உலகினுக்கு ஈந்து… மனித மனத்தின் திறன் எண்ண வலுவால் உயர்ந்திட… உயர்வெண்ண மனித குலத்தின் நலன் நாடும் அன்பு இராஜ்ஜியமாக இக்கலியில் மனிதன் வாழ்ந்து காட்டிவிட்டால்… “சப்தரிஷிகளின் செயல்களுக்கே சக்தி அளித்திடும் மெய்ஞான விழிப்பு ஏற்பட்டு விடுமப்பா…!”

1.”உற்றுறுத்துக் கேட்டலும் அதிசயத்து நோக்கலும்…” எப்படி எல்லாம் நம் ஆத்மாவை கேடுறுத்தும்…! என்று ஏற்கனவே படிப்படியாகக் கூறி வந்துள்ளேன்
2.நாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் மெய் வித்துக்களே இந்தக் கலியில் தேவையப்பா.

இதை அறிவுரை என்றே எடுத்துக் கொள்தல் வேண்டும்.

அனுபவங்கள் கொண்டே அறிவுறுத்தும் தன்மைகளில் மெய்ப்பொருளை உணரல் வேண்டும் (இது மிகவும் முக்கியம்). குருதேவரின் விளையாட்டு…! என்ற எண்ணம் கொண்டால் அங்கே நடந்த அனுபவத்தைப் பார்த்தாய் அல்லவா.

தாய் தன் நகையைக் கழற்றி மகனிடம் கொடுக்கின்றாள். மகன் அதைத் தரையில் வைத்து விட்டுத் தியானத்தில் ஈடுபடுகின்றான். ஒரு சிறு எலி ஆனது அதைத் தன் வளைக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது.

திரும்பி வந்த தாய் நகை எங்கே…? என்று கேட்கிறாள். மகன் தேடுகிறான்… தாயும் தேடுகிறது…! தியானத்தின் சக்தியில் வலுக்கொண்ட குடும்பம்… தாய் தன் மகனைச் சந்தேகிப்பாளா…?

மகன் சிரித்துவிட்டு “இது குருதேவரின் விளையாட்டு…” என்று கூறுகின்றான். தியானத்தின் மூலம் காட்சியில் எலி வளையில் நகை இருப்பதை இருவரும் பார்க்கின்றார்கள்.

தேடும் பொழுது நகையை வளையில் கண்டு எடுக்க மீண்டும் “இது குரு தேவரின் விளையாட்டு…” என்றே கூறுகின்றான்.

ஆக விவேக உணர்வு கொண்டு நிதானத்தைக் கூட்ட வேண்டுமப்பா. அவனும் மெய்ப்பொருள் நாடும் நன்னிலை பெற்றவன்தான்.
1.எதையும் அலட்சியப்படுத்தி விடாமல்
2.சிறு பிராணியின் செயலை “எமது விளையாட்டு” என்று உரைத்திடாதே…! (புகழ்ந்து விடாதே)
3.”நாம் உரைக்கும் கருத்தின் வழி நிற்றல் தான்” உலகத் தேரில் பவனி வரும் ஆரம்ப அனுபவமப்பா.

மறு சமைப்பைப் பற்றி வினா எழுப்புகின்றாய்

ஒலிப்பதிவை (செயற்கைத் தன்மை) மீண்டும் அதே ஒலி நாதத்தைக் கேட்டிடும் சமைப்புத் தன்மைகள் பற்றி அறிய நினைக்கின்றாய். ஒலி நாத வேறுபாட்டில் கருப்பொருள்தான் முதன்மையப்பா (இயற்கைத் தன்மை).

கண்டத்தில் எழுப்பும் ஒலி… ஒலி அலைகளாக மாறுவதை உணர்ந்துள்ளாய். எண்ணுகின்ற அத்தனை எண்ணங்களும் ஒலி அலைகளாகச் சமைக்கப்படும் சமைப்பை… அவைகள் ஓடிக்கொண்டே இருக்கும் ஓட்ட கதியை உணர்ந்து கொண்டாயா…? உணர்ந்து கொள்…! மன எண்ணத்தின் அசைவு தெளிவுபடும்.

கண்ணாடிக் குடுவையில் காய்ச்சப்படும் நீர் வெப்ப சக்தி கொண்டு நீராவி அமில நிலை பெற்றுப் பின் குளிர்ச்சி நிலை பெறும் பொழுது… மாற்றுக் குடுவையில் சேமிக்கும் நீராக ஏற்கப்படுகின்றது.

பரிணாம தத்துவப்படி… கொள்ளப்படும் பொருளும் ஏற்றுக்கொண்டிடும் மன நிலையும் தான் முக்கியம். கருத்துக்களில் தீய உணர்வுகளை ஏற்றிடும் அமில அணுக்களின் தன்மைகள் ஜீவ ஆதாரம் அற்ற தன்மையாக சமைப்பின் சமைப்பில் உராய்வு கொண்டு… கருத்தின் தன்மையும் ஜீவனற்று ஆத்ம பயிர் வளர்ச்சி உறாத செயலுக்கே செயல் கொண்டிடும்.

1.உயிரணுக்களை மாய்த்திடும் விஷப்பொருளில் விஷத்தையே உண்டு வாழும் உயிரணுக்கள் வாழ்வதைப் போல்
2.ஒலிபெருக்கியில் ஒலி நாதத்தைக் கேட்டிடும் செயல் எல்லாம் நோய் உண்டவன் வாழ்வதைப் போல்
3.ஒலி நாத வேறுபாட்டால் தாக்குண்ட இந்தக் காலகட்டத்திலும்
4.அமுதம் கொண்டிட்ட உயர் ஞான கருத்துக்களின் தன்மைகள் எந்த ஒலி சமைப்பின் மறு சமைப்பிலும்
5.உயர்நிலை அணுக்கள் “தன் சுவாசத்தைக் கொண்டு… தன்னைத்தான் காத்துக் கொள்ளும்…”

அறிந்ததைத் தெளிவதே உயர் ஞானத்தின் வழி பெற்றே உயர்ந்திட ஆசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன்… “உங்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணுங்கள்…” அவர்கள் தான் உங்களைக் காத்திடும் எண்ணங்கள் கொண்டு செயல்படுத்துபவர்கள்.

அந்த அரும் பெரும் சக்திகள் எத்தனையோ இந்தக் காற்று மண்டலத்தில் பரவி உள்ளது அவர்கள் உணர்வில் பதிவு செய்தது உங்கள் உடலிலும் ஆற்றல்மிக்க சக்தியாக உள்ளது.

அதன் துணையாகக் கொண்டு…
1.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்… உங்கள் கண்களைத் திறந்து.
2.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்
3.மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5.மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவாத்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா இப்படி ஐந்து முறை கண்களைத் திறந்து ஏங்குங்கள்.

பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா பெற அருள்வாய் ஈஸ்வரா உள்முகமாக உங்கள் உடலுக்குள் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள். இவ்வாறு ஐந்து முறை எண்ணுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா பெற அருள்வாய் ஈஸ்வரா கண்களை மூடி ஐந்து முறை மீண்டும் நினைவைச் செலுத்துங்கள்.
1.உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்களைத் திறந்து மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…
2.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…
3.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று சொல்லி
4.ஒரு ஐம்பது தரமாவது எண்ணிச் சுவாசியுங்கள்.

இதே போல் கேன்சரோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் சரி… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள கேன்சர் நோய் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் என்று முந்நூறு தரமாவது முதலில் சொன்ன மாதிரிச் சுவாசித்து அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
1.இந்த நோய் தன்னாலேயே போய்விடும்.
2.நீங்கள் எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் சரி இந்த மாதிரிச் செய்யுங்கள்.
3.மருந்து சாப்பிடுவதற்கு முன்பு இதே மாதிரிச் செய்யுங்கள்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் மருந்து சாப்பிட்டுப் பழக்கமாகிப் போய்விட்டது. அதைச் சாப்பிடும் போது மகரிஷிகளின் உணர்வை எண்ணிக் கொண்டு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தச் கேன்சருக்கெல்லாம் இன்று மருந்தே இல்லை என்று கூடச் சொல்லலாம். ஆனால் ஒரு ஆயிரம் தராமவது இப்படிச் சொன்னால் அதன் மூலம் அதை நீக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஆயிரம் தரமாவது நீங்கள் எண்ணி அதைச் சுவாசித்தீர்கள் என்றால் நிச்சயம்
1.உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி உங்கள் உடலுக்குள் வலுப் பெற்று
3.அந்தக் கேன்சரையே “கேன்சல்…” செய்துவிடும்

அத்தகைய சக்தி உங்கள் எண்ணத்திற்கு உண்டு. நீங்கள் எண்ணும் எண்ணங்கள் உங்கள் உடலுக்குள் சென்று அந்தக் கேன்சரை நீக்கிவிடும்.

இதைப் பழக்கப்படுத்தினால் உங்கள் எண்ணங்களுக்கு மிக மிக வலிமையான ஆற்றல்கள் கூடும். அத்தகைய நிலை பெறச் செய்வதற்கே இந்தத் தியானப் பயிற்சி.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதைக் கடைப்பிடிக்க நோய் நீக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

1.சாதாரணமாகச் சொல்கின்றேன்…! என்று யாரும் எண்ண வேண்டாம்.
2.உங்களுக்குள் அந்தச் சக்தி பெருகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு வாக்கின் மூலம் பதிவாக்குகின்றேன்.

ஒவ்வொரு மனிதனும் தன் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்.

நண்பனுக்கு நோய் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நூறு முறை சுவாசித்து விட்டு
1.உன் நோய் நீங்கி விடும்
2.நலமாக இருப்பாய் என்று சொல்லுங்கள்.
3.இந்த வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

அவர் நோயால் அவதிப்படுகிறார் என்பதைக் கேட்டுணர்ந்தாலும் சோர்வடையாது மீண்டும் நூறு தரம்
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்
4.மகரிஷியின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
5.அவர் உடலிலுள்ள நோய்கள் நீங்க வேண்டும்.
6.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

நீங்கள் இந்த உணர்வை எண்ணினால் கீதையிலே சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.மற்றவர்கள் நலமாக வாழ வேண்டும் என்று நாம் எண்ணும்பொழுது
2.நலமடையும் சக்தியை நாம் முதலில் பெறுகின்றோம்.

தீமைகளை அகற்றும் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்க்கப்படும்போது தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

அந்தத் தீமையை அகற்றும் ஆற்றல்களை நாம் பெற்றால் தான் இந்த உடலை விட்டு நாம் அகன்றால் பிறிதொரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி மகரிஷியின் அருள் வட்டத்திற்குள் செல்ல முடியும்.

அங்கே சென்று உடல் பெறும் நிலையைக் கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிச்சயம் பெற முடியும்.

1.ஏதோ… எளிதில் சொல்கின்றேன்… எளிதில் கிடைக்கச் செய்கிறேன் என்று
2.அலட்சியப்படுத்தி விடாதீர்கள்… அது உங்களுடைய இஷ்டம்.

நீங்கள் பெற வேண்டும் என்று நான் சதா தியானிக்கின்றேன். எனது குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

குரு அருளால் உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் தீய வினைகள் நீங்க வேண்டும் என்றும் உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகள் சாப வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

மகரிஷிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது சேர்ந்த தீமைகளை நோய்களை “நீங்களே நீக்க முடியும்…” என்ற அந்தத் தன்னம்பிக்கையில் செயல்படுங்கள்.

உணவை உட்கொள்ளும் போதும் உணவில் கை வைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு பின் உட்கொள்ளுங்கள்.

அந்த அலைகள் அந்த உணவுக்குள் பாயும். சிறிது நேரம் ஆகாரத்தில் கையை வைத்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று குறைந்த பட்சம் பத்து தரமாவது எண்ணுங்கள்.

நாங்கள் உணவாக உட்கொள்ளும் இந்த உணவு அனைத்தும்
1.எங்கள் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும்.
2.மன பலம் மன வளம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் உணவை உட்கொள்ளுங்கள்.
3.இந்த உணர்வின் உமிழ் நீர் சுரக்க சுரக்க
4.இந்த உணர்வுகள் சத்துள்ளதாகக் கூடி
5.உங்களுக்குள் நல்ல சக்தியாக நலம் பெறச் செய்யும் சக்தியாக வளர இது உதவும்.

இதை நீங்கள் பயிற்சியாகச் செய்து உங்கள் அனுபவத்தில் நல்ல முன்னேற்றங்களைப் பார்க்கலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எனது எண்ணத்தில் நான் அதீதமாக ஆன்மீக நிலைகள் பெற வேண்டும் என்று ஆசையை வைத்துக் கொள்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம்.

அதை ஒன்றை மட்டும் குறிக்கோளாக வைத்து விட்டால்… அந்த ஆசையில் அதைப் பெறுவேன் என்ற எண்ணம் கொண்டாலும் அந்த ஆசை ஒன்றேதான் தனக்குள் மிஞ்சுகின்றது.

ஆனால் அதை நான் பெறும் தன்மையை எதன் வழி…? என்ற நிலைகளை இழந்து விடுகின்றேன்

நான் எண்ணியபடி அதைப் பெற வேண்டும் என்று எண்ணினாலும் அந்த சக்தியின் தன்மை ஒன்றேதான் நினைவில் இருக்கின்றதே தவிர அந்தச் சக்தியை எவ்வழியில் பெற முடியும்…? என்ற நிலைகளில்
1.எனது குருநாதர் காட்டிய நிலைகளை நான் இழந்துவிட்டால்
2.அதை நான் பெறுவது மிகவும் கடினம்.

இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனிடமும் எத்தனையோ ஆசைகள் வருகின்றது எத்தனையோ நிலைகள் விளைகின்றது…. இந்த வாழ்க்கையில் ஆசைப்பட்டபடி தான் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.

அப்படி எண்ணினாலும் அதே சமயத்தில்
1.அவருடைய எண்ணத்திற்குள் அவரின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் சித்திரை…
2.அடுத்து எதிர்ப்பக்கம் என்ன வருகிறது…? என்று சிந்தனையற்ற நிலைகள் இருப்பார்கள்.

அது மறைத்திடும் பொழுது அதனின் நிலை இல்லாதபடி இவர் ஆசைப்பட்டபடி வாழ்க்கையில் நடக்காது அந்த நல்ல உணர்வுகளும் மறைந்து விடுகின்றது.

அதனைத்தான் “இந்தச் சித்திரையை” (இடைமறிக்கும் தீமைகளை) நீக்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர்.

உதாரணமாக ஒரு வியாபாரத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோம். அப்போது வியாபாரத்தில் லாபம் வர வேண்டும் என்ற ஒரே நோக்குடனே செல்கின்றோம்.

ஆனால் அது எந்த காலப் பருவம்…? என்ற நிலைகளைத் தெரியாது “வியாபாரம் செய்ய வேண்டும்…” என்ற அந்த நோக்கம் ஒன்றுதான் நமக்குள் வருகின்றது

காலத்தை அறியாதபடி பொருள்களை வாங்கி வைத்து விட்டால் யாரும் வாங்கமாட்டார்கள். யாருமே வாங்கவில்லை… வியாபாரம் நடக்கவில்லை… என்றால் அங்கே அந்த உணர்வின் தன்மை
1.நாம் ஆசைப்பட்ட நிலைகளை இடைமறித்து அதை மறைத்துவிடுகிறது…
2.சித்திரையாக அது வந்து விடுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட ஆசையின் உணர்வுகள் அதைக் காக்கும் நிலையற்று நாம் போகும் பாதையையே அது தடைப்படுத்திடும் சக்தியாக வந்து விடுகின்றது.

இதைப் போல சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் எத்தனையோ உணர்வுகள் சித்திரையாக நம்மை மறைத்து விடுகின்றது. இதைக் குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நோக்கம் கொண்ட நிலையில் வருவார்கள். அவர்களுடைய எண்ணம் அதுவாக இருந்தாலும்
1.அவருடைய சந்தர்ப்பம் சூழ்நிலை அங்கிருக்கும் நிலைகளைத் தெளிவாக்கி
2.இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வினை நீ அவர்களுக்குத் தெரியப்படுத்தினால்
3.அருள் உணர்வுகளை அவர்களுக்குள் விளைவிக்கும் சந்தர்ப்பத்தை நீ ஏற்படுத்தினால்
4.உனக்குள் இருக்கும் நிலைகளை உன்னில் தெரிந்திடும் நிலைகள் வரும்.

ஆகவே… கேட்போர் உணர்வுகளில் அருள் ஞானத்தைப் பதிவு செய்து… அறியாத நிலைகள் கொண்டு அவர்கள் நல்ல உணர்வுகளை மறைத்திருக்கும் சித்திரையை நீக்கி…
1.அவர்கள் உணர்வின் தன்மை ஒளி பெறும் சக்தியாகவும்
2.கனியின் தன்மை பெறும் நிலையாகவும் நீ உருவாக்கு…! என்றார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

பஞ்ச அபிஷேகம் பஞ்ச அமிர்தம்

 

முருகனுக்குப் பஞ்சாபிஷேகம்…! பல பழங்களைப் போட்டு அபிஷேகம் செய்தால் முருகன் நமக்கு நல்லது செய்வான் என்று எண்ணுகின்றோம். ஐந்து கனிகளின் உணர்வுகள் வரப்படும் பொழுது… வெப்பம் காந்தம் விஷம் இதனால் தான் அந்தக் கனியின் தன்மை அடைந்தது.

எதன் பொருளை எடுத்துக் கொண்டதோ புலனறிவு ஐந்தாகின்றது. ஆறாவது அறிவின் துணை கொண்டு அங்கே பஞ்ச அபிஷேகம் நடக்கிறது என்றால்
1.அதைப் போன்ற மணம் நான் பெற வேண்டும் அந்தச் சுவையின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி நம் உயிரிலே அபிஷேகித்தால்
2.அது எப்படி ஐந்து விதமான சுவைகளை ஊட்டி உயர்ந்த உணர்வினை ஊட்டியதோ – பஞ்சாமிர்தம்
3.அந்த ஐந்து விதமான அமிர்தங்களாக நமக்குள் எப்படிச் சுவையை ஊட்டுகின்றதோ இதைப் போல
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவில் கவர்ந்து கொண்டால் இவை அனைத்தும் “பஞ்ச அமிர்தம்” என்ற நிலை நமக்குள் வருகின்றது.

அது தான் காயத்ரி…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று அந்த எண்ணத்தை இயக்கினால் இதற்குப் பெயர் வசிஷ்டர். அந்த உணர்வு உயிரிலே படும் பொழுது அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.
1.உடலுக்குள் செல்லப்படும் பொழுது அவன் எப்படித் தீமைகளை வென்றானோ அந்த உணர்வின் தன்மை நம் உடலிலே வருகின்றது.
2.அது தான் வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்மகுரு.

அப்போது நம் உடலிலே தீமையை வெல்லும் உணர்வுகள் எப்படிப் பிரம்மம் ஆகின்றதோ அந்தச் சக்திக்கு பெயர் அருந்ததி காரணப்பெயர் வைக்கின்றார்கள் நாம் தெரிந்து கொள்வதற்கு…!

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்தாவது நிலை அடையக்கூடிய மனித உடலில் நாம் நுகர்ந்த உணர்வுகள் எப்படி ஆகின்றது…? என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி உடலாகின்றதோ இந்தப் பத்தாவது நிலை அடையக்கூடிய சக்கரவர்த்தியின் மனைவி “அதனுடன் இணைந்து வாழும் சக்தி” என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “முருகு” மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவன். கருணைக்கிழங்கில் என்று விஷம் இருக்கிறது என்றால் அதை வேக வைத்து விஷத்தை நீக்குகின்றோம். தொக்கி உள்ள நிலைகளைப் புளியைக் கரைத்து விட்டு விஷத்தைத் தணிக்கின்றோம்.

மிளகாயைத் தனியாகச் சாப்பிட்டால் ஆ…! என்று அலறச் செய்கின்றது. ஆனால் புளியுடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது உணர்ச்சிகளை ஊட்டும் தன்மை பெறுகின்றோம். உப்பையும் மற்ற சரக்குகளையும் சேர்த்துச் சுவையாந குழம்பாக மாற்றுகின்றோம். முருகு… மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்.

கார்த்திகேயா என்ற நிலையில் சகலத்தையும் அறிந்து… பொருள்களை இணைத்துச் சுவையாக மாற்றி கருணைக்கிழங்குக் குழம்பை உட்கொள்ளும் பொழுது
1.அந்த உணர்வுகள் உணர்ச்சிகள் பஞ்ச அபிஷேகமாக நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டு அத்தகைய உணர்வின் அமிலங்களாக உருவாக்கப்படுகின்றது… எச்சில் நீராக அது மாறுகின்றது.

அதாவது உணவாக உட்கொள்ளும் அந்தச் சக்திக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது நம் இரத்தத்தில் கலந்து… அந்த அணுக்களின் மலமாகி “நம் உடலை நல்லதாக்கி உடலை ஆரோக்கிய நிலை பெறச் செய்கின்றது….”

ஆனால் விஷத்தை அடக்குகின்றது. ஆறாவது அறிவு மகிழ்வாகனா மயில் தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுவதை அங்கே காட்டி நம்மைத் தெளிவாக்கும்கின்றனர்.

காரணம்… மயில் நஞ்சினை விழுங்குகின்றது அதனின் உடலில் உள்ள உறுப்புகள் அந்த நஞ்சை அடக்குகின்றது.

விஷத்தைக் காலடியில் வைத்து அடிமைப்படுத்தி இருக்கின்றது என்று காட்டுவதற்குத் தான் உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டி
1.அதனுடைய இயபஞ்ச அபிஷேகம் பஞ்ச அமிர்தம்

முருகனுக்குப் பஞ்சாபிஷேகம்…! பல பழங்களைப் போட்டு அபிஷேகம் செய்தால் முருகன் நமக்கு நல்லது செய்வான் என்று எண்ணுகின்றோம். ஐந்து கனிகளின் உணர்வுகள் வரப்படும் பொழுது… வெப்பம் காந்தம் விஷம் இதனால் தான் அந்தக் கனியின் தன்மை அடைந்தது.

எதன் பொருளை எடுத்துக் கொண்டதோ புலனறிவு ஐந்தாகின்றது. ஆறாவது அறிவின் துணை கொண்டு அங்கே பஞ்ச அபிஷேகம் நடக்கிறது என்றால்
1.அதைப் போன்ற மணம் நான் பெற வேண்டும் அந்தச் சுவையின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி நம் உயிரிலே அபிஷேகித்தால்
2.அது எப்படி ஐந்து விதமான சுவைகளை ஊட்டி உயர்ந்த உணர்வினை ஊட்டியதோ – பஞ்சாமிர்தம்
3.அந்த ஐந்து விதமான அமிர்தங்களாக நமக்குள் எப்படிச் சுவையை ஊட்டுகின்றதோ இதைப் போல
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவில் கவர்ந்து கொண்டால் இவை அனைத்தும் “பஞ்ச அமிர்தம்” என்ற நிலை நமக்குள் வருகின்றது.

அது தான் காயத்ரி…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று அந்த எண்ணத்தை இயக்கினால் இதற்குப் பெயர் வசிஷ்டர். அந்த உணர்வு உயிரிலே படும் பொழுது அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.
1.உடலுக்குள் செல்லப்படும் பொழுது அவன் எப்படித் தீமைகளை வென்றானோ அந்த உணர்வின் தன்மை நம் உடலிலே வருகின்றது.
2.அது தான் வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்மகுரு.

அப்போது நம் உடலிலே தீமையை வெல்லும் உணர்வுகள் எப்படிப் பிரம்மம் ஆகின்றதோ அந்தச் சக்திக்கு பெயர் அருந்ததி காரணப்பெயர் வைக்கின்றார்கள் நாம் தெரிந்து கொள்வதற்கு…!

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்தாவது நிலை அடையக்கூடிய மனித உடலில் நாம் நுகர்ந்த உணர்வுகள் எப்படி ஆகின்றது…? என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி உடலாகின்றதோ இந்தப் பத்தாவது நிலை அடையக்கூடிய சக்கரவர்த்தியின் மனைவி “அதனுடன் இணைந்து வாழும் சக்தி” என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “முருகு” மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவன். கருணைக்கிழங்கில் என்று விஷம் இருக்கிறது என்றால் அதை வேக வைத்து விஷத்தை நீக்குகின்றோம். தொக்கி உள்ள நிலைகளைப் புளியைக் கரைத்து விட்டு விஷத்தைத் தணிக்கின்றோம்.

மிளகாயைத் தனியாகச் சாப்பிட்டால் ஆ…! என்று அலறச் செய்கின்றது. ஆனால் புளியுடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது உணர்ச்சிகளை ஊட்டும் தன்மை பெறுகின்றோம். உப்பையும் மற்ற சரக்குகளையும் சேர்த்துச் சுவையாந குழம்பாக மாற்றுகின்றோம். முருகு… மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்.

கார்த்திகேயா என்ற நிலையில் சகலத்தையும் அறிந்து… பொருள்களை இணைத்துச் சுவையாக மாற்றி கருணைக்கிழங்குக் குழம்பை உட்கொள்ளும் பொழுது
1.அந்த உணர்வுகள் உணர்ச்சிகள் பஞ்ச அபிஷேகமாக நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டு அத்தகைய உணர்வின் அமிலங்களாக உருவாக்கப்படுகின்றது… எச்சில் நீராக அது மாறுகின்றது.

அதாவது உணவாக உட்கொள்ளும் அந்தச் சக்திக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது நம் இரத்தத்தில் கலந்து… அந்த அணுக்களின் மலமாகி “நம் உடலை நல்லதாக்கி உடலை ஆரோக்கிய நிலை பெறச் செய்கின்றது….”

ஆனால் விஷத்தை அடக்குகின்றது. ஆறாவது அறிவு மகிழ்வாகனா மயில் தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுவதை அங்கே காட்டி நம்மைத் தெளிவாக்கும்கின்றனர்.

காரணம்… மயில் நஞ்சினை விழுங்குகின்றது அதனின் உடலில் உள்ள உறுப்புகள் அந்த நஞ்சை அடக்குகின்றது.

விஷத்தைக் காலடியில் வைத்து அடிமைப்படுத்தி இருக்கின்றது என்று காட்டுவதற்குத் தான் உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டி
1.அதனுடைய இயக்கத் தொடர் நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் இருக்கப்படும் பொழுது எப்படி எல்லாம் வளர்ந்து மனிதனாக வந்தோம்…?
2.தீமைகள் அகற்றிடும் சக்திகளை நாம் பெற்று வந்ததைக் காட்டுகின்றார்கள்.

மனிதனாக வருவதற்கு இத்தனை சக்திகளும் காரணமாக இருந்தது என்பதனை மயிலை காட்டி அதன் காலடியில் பாம்பையும் வைத்து நமக்கு காட்டுகின்றார்கள் இந்த உண்மையை கண்டுணர்ந்த ஞானிகள்.

புற நிலையில் செய்வதை அகநிலைகளுக்குக் காட்டி
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு தீமைகளை அடக்கிச் சுவை மிக்கதாக
2.பஞ்ச அமிர்தமாக நமக்குள் உருவாக்க முடியும் என்று உருவத்தை காட்டி உள் பொருளை அறியும் படி செய்கின்றார்கள்.
க்கத் தொடர் நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் இருக்கப்படும் பொழுது எப்படி எல்லாம் வளர்ந்து மனிதனாக வந்தோம்…?
2.தீமைகள் அகற்றிடும் சக்திகளை நாம் பெற்று வந்ததைக் காட்டுகின்றார்கள்.

மனிதனாக வருவதற்கு இத்தனை சக்திகளும் காரணமாக இருந்தது என்பதனை மயிலை காட்டி அதன் காலடியில் பாம்பையும் வைத்து நமக்கு காட்டுகின்றார்கள் இந்த உண்மையை கண்டுணர்ந்த ஞானிகள்.

புற நிலையில் செய்வதை அகநிலைகளுக்குக் காட்டி
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு தீமைகளை அடக்கிச் சுவை மிக்கதாக
2.பஞ்ச அமிர்தமாக நமக்குள் உருவாக்க முடியும் என்று உருவத்தை காட்டி உள் பொருளை அறியும் படி செய்கின்றார்கள்.

வராமல் வந்துற்ற மாமணியை… (உயிராத்மாவை) அறிந்து கொண்ட பின் அதைச் சாராமல் போவாயா…!

 

குணங்களை உள் அடக்கும் மறை பேராம்
1.மனித ஆற்றலின் மகோன்னத சக்தியாக வழியறிந்து கொண்டவன்
2.அவன் வழிப்பயணாமாகும் செயலில் தடை எதுவும் கிடையாது.

ஆசையும் மோகமும் வாழ்க்கை அனுபவத்திற்குள் அடங்கும். அவைகளைக் காட்டிலும் சினத்தின் குணமே வலிமை உடையது. மனிதன் சினத்தின் வசம் ஆட்படும் போதெல்லாம் உலக சிருஷ்டியை பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1.நாம் ஏனையோரை வழி நடத்த வந்துள்ளோம் அல்லவா…?
2.நாமே கோபப்பட்டால் தகுமா…? என எண்ணிடல் வேண்டும்.

யானைக் கூட்டங்களை வழி நடத்தும் வலிமை கொண்ட மன்மத யானை பக்குவமாக மேய்ச்சல் இடம் காட்டி… அருந்துவதற்கு நீர் நிலையையும் காட்டித் தன் குழுவைப் பாதுகாப்பது போல்… நல் நிலையில் செயல்படுவோம்… உயர்வோம்…! என்ற சிந்தனை கொள்ளல் வேண்டும்.

சகல சிருஷ்டிகளும் அணுத் திறளால் ஆனது. மனிதனும் ஓர் பொருள். “வளர்ந்து கொண்டிருக்கும் உயிராத்ம சக்தியால்…” மனிதன் உயர் நிலை பெறுகின்றான்.

1.மரணத்தை வென்றிடும் மனோதிடம் கொள்ளுதல் தான்
2.சித்தனாகும் உயர்வுக்குப் படிக்கட்டு.

மனத்தினை மெய்ஞானத்தின் பால் செலுத்திவிட்டால்… அது மீண்டும் மாற்று நிலை பெற்றிடா வலிமை கொண்டு விடும்… “பஞ்சு திரி ஆவதைப் போல்…!”

காற்றினால் உந்தப்படும் பஞ்சு அலைக்கழிந்து ஓடுகிறது. அந்தப் பஞ்சானது நீரினை உண்டு விட்டால் விழும் நிலையும்… அதே பஞ்சு நெருப்பினை உண்டு விட்டால்… தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
1.இதை அழியும் நிலை பாடம் என்று எண்ண வேண்டாம்
2.வானுறப் பறக்கும் பருந்துக்கும் பாடமுண்டு
3.சுட்டிக் காட்டுதல் எல்லாமே மனத்தின் பக்குவத்திற்கே.

“வராமல் வந்துற்ற மாமணியை… உயிராத்ம சக்தியை… மெய் உணர்வால் அறிந்து கொண்டிட்ட பின்… அதைச் சாராமல் நீ போவாயோ…?”

இரு வித செயல்நிலைகள் ஒவ்வொரு குணத்தின் செயல்படு நிலையில் சாந்த குணத்தை வளர்க்க… சமமான நிலை நிலைக்க… யாம் சுட்டிக் காட்டிடும்
1.மனத்தின் கரு விழித்து விட்டால்
2.சித்தன் நிலை (உன்) கை வசமே…!

ஆற்றெடுத்த மன வாழ்வில் இரு நிலை தவிர்த்திருத்தல் (நன்மை/ தீமை… இன்பம்/துன்பம்) என்பது
1.ஞானத்தின் பால் திருப்பப்படும் மனமே திரியான பஞ்சு.
2.எண்ணத்தை மறைந்திருக்கும் மாயை எனும் மூட மேக இருள் நீக்கப்படும் போது தான் மனிதன் உயர்கின்றான்.

சூரியனை மறைத்திடும் மேகக்கூட்டம் விலகிடும் செயலில்
1.முன்பாகவே ஒளிக்கதிர்கள் காட்டிடும் அவ்வாதவனின் நிலையை
2.மனத்தின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்.

மேக இருள் விலக்குதல் என்பதே முயற்சி…!

ஞானச்சுடராம் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சூட்சமப் பொருளைச் சுவாசித்திடும் பொழுதே “உணர்ந்து கொள்வீர்கள்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பணத்திற்கு அடிமையானவர்கள்… பணத்தையே குறிக்கோளாக வைத்துப் பிறருடைய துன்பத்திற்குத் தீர்ப்பு கூறுவார்கள். அங்கே உண்மையின் நிலைகள் தீர்ப்பு வராது. இன்று சத்தியம் தர்மம் “செல்வத்தில் தான்…” இருக்கின்றது.

இது போன்ற சூழ்நிலையில்
1.நாம் வளர்த்துக் கொண்ட அருள் செல்வத்தை வைத்து…
2.அந்த அருள் ஞானத்தின் உணர்வைத் தவறு செய்வோருக்குள் பாய்ச்சி
3.அவர்கள் தவறு இல்லாத நிலையில் நடந்து கொள்வதற்குச் செயல்படுத்த வேண்டும்.

தவறு செய்வோர் உணர்விலும்…
1.அந்த உண்மைகளை உணர வேண்டும்
2.அவர் தெளிவான செயலாக்கத்திற்கு வரவேண்டும் என்று உணர்வைப் பாய்ச்சும் பொழுது
3.நம்மை அவர்கள் எண்ணும் பொழுது இது ஊடுருவி
4.தவறு செய்யும் உணர்வினைப் பிளந்து உண்மையை உணர்த்தும் சக்தியாக அங்கே மாறும்.

இந்தச் சக்தி உங்களுக்கு உண்டு…!

ஒருவர் மேல் வெறுப்படையும் போது அந்தச் சக்தி கொண்டு “நாசமாகப் போவான்…!” என்று சொல்லப்படும் பொழுது அவர் செவிகளில் இது பட்டு இந்த உணர்வுகள் அவர் தொழிலுக்குப் பாதகத்தைப் ஏற்படுத்தும்… அவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தால் எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகின்றது.

1.மனித வாழ்க்கையில் எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும்
2.பிறருடைய வேக உணர்வுகள் தாக்கி விட்டால் நம்முடைய சிந்தனையை அது சீர்குலையைச் செய்து விபத்துகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
3.சில விபரீத செயல்கள் நம்மை அறியாமலேயே செயல்படுத்தத் தொடங்கிவிடும்.
4.விபரீத செயல்கள் செயல்படுத்துவது மட்டுமல்லாதபடி குற்றவாளியாக ஆக்கும் நிலையும் உருவாக்கி விடுகின்றது.

பகைமையை வளர்த்து வெறுப்பின் தன்மை வரப்படும் பொழுது அடுத்து நம் நண்பரிடத்தில் பழகினாலும் அவரையும் வெறுப்பின் தன்மை அடையச் செய்யும்.

நம் பெயரைச் சொன்னாலே இந்த உணர்வுகள் அவருக்குள் சென்று ஏற்கும் நிலை இல்லாதபடி நமக்கு உதவி செய்வதும் தடைப்படும்.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் விடுபட ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எண்ணி எடுக்கும் பொழுது பிறருடைய தீமைகள் எதுவாக இருப்பினும் அது நமக்குள் பதிவாக்கப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டாது இது அடக்கிவிடும்.

அதே சமயத்தில் யார் யாரெல்லாம் நமக்குத் தீங்கு செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்
2.அவர்கள் அறியாது செய்த தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.எனக்குத் தீங்கு செய்யும் நிலையிலிருந்து விடுபட வேண்டும்
4.உண்மையின் உணர்வை அவர்கள் அறிய வேண்டும்
5.உண்மையின் செயலாக மாற வேண்டும்
6.உண்மையை உணர்த்தும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
7.உண்மையின் செயலே அவர்களுக்குள் வரவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

யார் தீங்கு செய்தாலும் அவர்களுக்கு அருள் ஞானத்தை இப்படி ஊட்டுங்கள்.

நாரதன் கலகப்பிரியன்… நாம் ஈடுக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாரதனாகச் சென்று உண்மையை வெளிப்படுத்தும் சக்தியாக வருகின்றது. இதைத் தான் காவியங்களில் நாரதனை முக்கிமாக வர்ணித்துக் காட்டியிருப்பார்கள்… “நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்று…!”

இதனின் உணர்வினை நாம் வழிப்படுத்தினால் தீமைகளை உருவாக்கும் நிலையில் இருந்து “நம் எண்ணத்தாலேயே நாம் விடுபட முடியும்…”
1.இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகள் உணர்வை நாம் தொடரப்படும் பொழுது அதைப் பற்றுடன் பற்றுகின்றோம்
2.மகரிஷிகள் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் செல்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையிலே நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனாலும் தவறு செய்தோர் நிறைய உண்டு. அவர்களைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் வந்தால் நம் நல்ல குணங்களை அது மறைத்து விடுகிறது.

அப்போது அவர்கள் விடும் சாபங்களோ ஏசிப் பேசும் உணர்வுகளோ அல்லது துன்பப்படும் உணர்வுகளோ வந்துவிடுகிறது.
1.அதை நுகர்ந்தால் நம்மையும் சாபமிடச் செய்யும்… ஏசிப் பேசும்படி செய்துவிடும்.
2.நம் குழந்தையாக இருந்தாலும் இரக்கமற்று அடிப்போம்.

ஒரு சிலர் வாழ்க்கையில் நன்றாக முன்னுக்கு வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்துப் பொறாமைப்பட்டு இப்படிச் செய்கிறான்… அப்படிச் செய்கிறான்… என்று பாவ வினைகளைச் சேர்த்துக் கொண்டிருப்போம்.

இது எல்லாம் நம்மை அறியாமலே நடக்கும் நிலைகள்.

நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் உணர்வின் தன்மை மாறுபடப் போகும் போது பார்… இவன் பெரிதாக என்ன செய்து விட்டான்…? என்று பாவ வினைகளாகச் சேரும். அவர்களுக்கு இடையூறு செய்யும் தன்மையாக வேதனைப்படச் செய்து அதை இரசிக்கும் நிலையாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

உயிரின் வேலை என்ன…?

எதை நாம் எண்ணினாலும் உயிரிலே பட்ட பின் ஓ… என்று ஜீவனாகி ம்.. என்று உடலாக்கச் செய்யும்.
1.ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ..ம். ஆக உடலின் வேலை இதைத் தான் செய்யும்.
2.ஆனால் உயிரின் வேலை… நெருப்பிலே எந்தப் பொருளை இட்டாலும் அதன் மணத்தை அது வெளிப்படுத்திக் காட்டுவது போல்
3.உயிரான நெருப்பிலே நாம் சுவாசிப்பது பட்டவுடனே எண்ணம் சொல் செயல் என்று அதை இயக்கிக் காட்டும்.

எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அதன் மணத்தின் தன்மை கொண்டு அதுவாகும். அதனின் இயக்கத்தின் தன்மை கொண்டு உணர்வாகும்.

ஒரு சிலர் செய்வதைப் பார்த்து உனக்குக் கொஞ்சமாவது உணர்ச்சி இருக்கின்றதா…? அறிவு இருக்கின்றதா…? அறியக் கூடிய திறன் இருக்கின்றதா…? என்றெல்லாம் நாம் வழக்கத்தில் பேசுவோம்.

ஒன்றைச் சொல்லப்படும் போது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… அப்போது… இப்படிச் சொல்லிவிட்டாயா…? இரு நான் பார்க்கின்றேன்… என்று இந்த உணர்வின் தன்மை எனக்குள் விளைகின்றது சொல்லின் தன்மை கேட்போருக்கும் உணர்ச்சியைத் தூண்டுகிறது.

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகள் எவ்வாறு வருகிறது…? என்று உணர்ந்து அந்தத் தீமைகள் நமக்குள் வராதபடி நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் சுமார் இருபது வருடம் காடு மேடு நகரம் எல்லாம் எம்மைச் (ஞானகுரு) சுற்றச் செய்து மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்து பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

அந்தக் குடும்பங்களை எல்லாம் சுட்டிக் காட்டி
1.தவறு செய்யாமலே தொல்லைகள் அவர்களுக்கு எப்படி வருகிறது…?
2.தவறு உள்ளவர்களாக எப்படி மாற்றுகின்றது…?
3.பாவ வினையாக எப்படி இயங்குகிறது…?
4.சாப வினைகளாக எப்படி வருகிறது…?
5.தீயவினைகளாக எப்படி உருவாக்குகிறது…? என்பதைக் காட்டி
6.அதிலிருந்து அவர்களை மீட்க எப்படிச் செய்யப் போகிறாய்…?
7.இது குருநாதர் எம்மிடம் கேட்ட கேள்வி.

அந்த அருள் ஞானி காட்டிய உண்மையின் இயக்கங்கள் அது எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையில் உபதேசத்தைக் கொடுத்து என்னை அறியும் ஆற்றலாகச் செயல்படுத்தினார் குருநாதர்.

அவர் கொடுத்த அருள் ஞானத்தைத் தான் உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு வருகின்றோம்.
1.உங்களை அறியாது வரும் தீமைகளை உங்களாலேயே அகற்ற முடியும்
2.அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொள்ளும் போது உயிரால் இயக்கப்பட்டு அதை ஜீவனாக்க முடியும்
3.அந்த உணர்வின் சக்தியாக… உங்கள் உடலாக ஆக்க முடியும்.

குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்கும் செயல்படுத்துகிறேன். காரணம் குருநாதரை உங்களிடம் பார்க்க விரும்புகின்றேன்.

தீமைகள் தன்னை அறியாமலே சாடுகின்றன. அதிலிருந்து ஒவ்வொருவரும் அகல வேண்டும் என்று நீ அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சு..!

1.எனக்குள் விளைய வைத்த வித்துக்களை உனக்குள்ளும் விளையச் செய்கின்றேன்.
2.அதை நீ விளைய வைத்து அந்த உணர்வை யார் யார் உற்று நோக்குகின்றார்களோ அவர்களுக்குள் பதியச் செய்.
3.அங்கே விளைந்த நிலைகள் அது வெளி வரும் போது என்னை அங்கே காண்.
4.அவர்கள் மகிழ்ச்சி பெறும் போது அங்கே என்னைப் பார்…! என்றார் குருநாதர்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… யாம் உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குத் தக்க சமயத்தில் வழி காட்டும்.

எத்தகைய சந்தர்ப்பத்திலும் ஞானத்தின் தொடர் கொண்டு உங்களை அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்று “குருவின் ஆணைப்படி…” இதைச் செயல்படுத்துகின்றோம்.

உங்களுக்குள் துன்பங்கள் வந்தாலும் அதை மாற்றி அமைக்கும் ஆற்றலாகவும் அருள் உணர்வை வளர்க்கும் தன்மையாகவும் வரும்.

ஒரு சிலர் நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் எங்களுக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை… நீங்கள் சொல்வது எல்லாம் அர்த்தமாகவில்லை என்று எண்ணுவார்கள். அப்படி எண்ணினால் அது அர்த்தமாகாது.

1.எப்படியும் ஞானகுரு சொன்ன வழியில் நடக்க வேண்டும் என்று
2.அந்த ஒரு சொல்லை எண்ணினால் அது நிச்சயம் உண்மையை விளக்கிக் காட்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேராற்றல்

 

நாம் யாரும் தவறு செய்யவில்லை…! அன்பு கொண்டு பண்பு கொண்டு பாசம் கொண்டு தான் வாழ்கின்றோம். பாசத்தால் பிறர்படும் துயரத்தை நுகர்ந்து விடுகின்றோம்
1.நம் உயிரிலே தான் படுகின்றது
2.அதன் உணர்வுகள் நமக்குள் கருவாகின்றது இந்திரலோகமாக மாறுகின்றது
3.கருவாகிப் பின் உருவாகி விடுகின்றது.

பிறிதொரு மனித உடலில் விளைந்த தீமையின் உணர்வுகள் அந்த விஷத்தன்மை நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும் ஊடுருவி அதை கருவாக்கி அணுக்கள் மாற்றமாகும் தன்மைக்கே வருகின்றது.

இதை நல்ல முறையில் மாற்றிக் கொள்வதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

இது போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் துருவன்… அவன் துருவ மகரிஷியாக ஆனான்… துருவ நட்சத்திரமாக ஆனான். அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் இன்றும் என்றும் வந்து கொண்டே உள்ளது.

உயிர் தோன்றி மனித உணர்வின் தன்மை பெருக்கிய பின் இன்றும் அகஸ்தியன் ஒளியின் சரீரமாக இருக்கின்றான்.
1.அதைக் கவர்ந்து தன் உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் இந்த இருளை அகற்றி
2.உடலுக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றது.

இன்று விஞ்ஞானி பல உணர்வுகளைச் சேர்த்து பல ஆயிரம் ஆண்டு காலம் வாழலாம் என்று சொல்கின்றான்.
1.ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியோ என்றும் ஏகாந்தமாக பல கோடி ஆண்டுகள் வாழும் நிலை
2.இந்தச் சூரியன் அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே காணாமல் போனாலும்
3.அகண்ட அண்டத்திலிருந்து வரும் தூசுகளை நுகர்ந்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று விடுகின்றோம் மனிதனான நாம்.

எண்ணத்தால் கவர்ந்து உணர்வின் தன்மை தீமைகளை நீக்கியவன் அகஸ்தியன். அவன் எந்தத் தீமைகளை நீக்கினானோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு ஒவ்வொரு பொருளின் தன்மையையும் மாற்றி செயல்படுகின்றான்.

எப்படி…?

இன்று கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது உணர்வின் அதிர்வுகளை வைத்து எதன் அதிர்வோ அதை மாற்றி அமைக்கும் பல நிலைகள் கொண்டு வருகின்றான் விஞ்ஞானி.

ஒரு பாஷையில் எழுதினால்
1.அதில் எலக்ட்ரான் என்ற மோதலுக்கொப்ப உணர்வின் அறிவாக எழுத்தின் ரூபத்தைக் கொடுத்து
2.ஒரே நிலையில் ஒரே அழுத்தத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் போன்ற உலகில் உள்ள நூறு பாஷைகளை மொழிபெயர்ப்பு செய்கின்றான்…
3.உருவத்தின் அமைப்பையும் கொடுக்கின்றான் அதிர்வின் நிலைகள் கொண்டு.

இதெல்லாம் நாம் இன்று பார்க்கின்றோம் அல்லவா…!

எதன் உணர்வின் விஷத்தன்மை கலக்கின்றானோ இந்த உணர்வுக்கொப்ப இணைத்தால் “இது இன்ன ரூபமாகும்…” என்று ஒரு நொடியில் செய்து விடுகின்றான்.

நாம் படித்து அர்த்தம் கண்டு பல நிலைகள் எழுத்து வடிவிற்குக் கொண்டு வருவதற்கு முன் “ஒரு நொடிக்குள் நூறு உணர்வை மாற்றிக்கொண்டு வருகின்றான் விஞ்ஞானி…”

அதைப் போன்று
1.ஒரு நொடிக்குள் அருள் உணர்வின் தன்மை பெற்று
2.தனக்குள் வருவதை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
3.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெற்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றார்கள்.

மனிதனானவன் தன் இனத்தின் தன்மை கொண்டு வாழப் படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று அங்கே செல்ல முடியு,

நம் தாய் தந்தை முன்னோர்கள்… குல வழியில் வந்தவர்கள்… அவர்கள் இதற்கு முன் விண் செல்லத் தவறினார்கள்.
1.இப்போது நாம் அதைப் பெற்ற பின் அவர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்
2.அவர்கள் இன்னொரு உடலில் இருந்தாலும் கூட அதிலிருந்து வெளிவந்த பின்
3.நாம் எடுத்துப் பாய்ச்சிய உணர்வு கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.

துருவ நட்சத்திரத்தின் வலுவை நமக்குள் பெருக்கிப் பெருக்கி உடலை விட்டுச் சென்ற ஆன்மாக்களை எளிதில் வின் செலுத்த முடியும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழச் செய்ய முடியும்… பிறவி இல்லாத நிலை அடையச் செய்ய முடியும்.

நன்மை தீமைகளை உணருவதைக் காட்டிலும்… உயர்ந்த சம நிலையை உணர்த்துகின்றேனப்பா

 

1.மனதில் கொள்ளப்படும் குண நலன்களால்
2.நான் எனும் உயர் நிலையைச் சிறக்கச் செய்திடும் மனிதன்
3.கனிவுறும் ஞான தேசிகனாகின்றான்.

உலகத்தின் இயக்கம் போல் உடலின் இயக்கம்… சமைப்பின் குணம் காட்டும் உணர்வின் அலைகள்… எங்கிலும் ஜீவன் கொண்டே இயங்குகிறது. காலத்தின் இயக்க கதி ஓட்டத்திலிருந்து மனிதன் தன்னைப் பிரித்துக் காணல் என்பது ஒவ்வாத செயல்…!

ஆதி சக்தியின் சக்திக்கே சக்தி அளித்திடும் இணக்க இயக்கமாக… ஆத்ம பயிர் வளர்த்தல் என்பதே…
நற்குண…
நன்னெறி கொள்ளும்…
மனத்தின் திட சங்கல்ப…
“உறுதி நிலை…”

மோகம்… கோபம்… அதி ஆசை… என்கின்ற குணங்களின் வளர்ப்பு மனிதனை இயற்கையின் இயக்கத்தில் இருந்து தனிமைப்படுத்திக் காட்டும்.

குணங்களின் முற்றுதல் என்பது
1.நெருப்பைத் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற விறகு போல்
2.”அதிக ஆசையே – வீசும் காற்றாக…” வளர்த்துக் கொண்ட குணங்களின் உராய்வால்
3.மனம் ஆகிய பெருங்காட்டில் அதுவே பற்றிக் கொள்ளும் அக்கினியாகிவிடும்.

நல்ல நிலை வளர்ப்பாக்கும் செயல் இரு நிலை தவிர்த்திருத்தல் என்பது சூட்சுமம். உலகின் கண் உற்பாதங்கள் பெருகி வரும் இந்தக் காலகட்டத்தில் உரையின் பொருள் மறைத்து உரைப்பதில் பொருள் கிடையாது என்றே மெய்ஞானச் சுடர் ஆக்கும் பக்குவத்தின் பாகமாய் உரைக்கின்றோம்.

ஞானம் என்பது எது…?

பகுத்தறியும் அறிவு பெற்ற மனிதன் அந்த அறிவின் முதிர்வின் பக்குவத்தில் நன்மை தீமைகளை உணர்கின்றான்.
1.நாம் கூறிடும் பக்குவம்…
2.இதற்கும் மேலாக “சமமான நிலை…”

உயிராத்ம சக்தியின் தெய்வீக நிலையை உணர்ந்தே “அதைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று செயல்படுவதில் இருக்கின்றதப்பா ஞானம்…” தீய குணங்கள் விலக்கி நற்குணத் தன்மைகளை கடைப்பிடிக்கும் போது தான் ஞானம் வெளிப்படுகிறது.

1.தன் மனத்தின் உறுதியால்
2.பிறருக்கு நாம் செய்திடும் சேவையாக விளங்கி
3.பிறர் நமக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தவிர்த்திடுதல் எதுவோ… அதுவே மெய் ஞானத்தின் முதிர்ச்சி…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது.

நம் உயிர் ஓ என்று இயக்கி ம்… என்று உடலாக்கப்படும் போது உடலில் உருவான அனைத்திற்கும் நம் உயிரே குருவாகின்றது.

1.நம் குருநாதர் அவர் உயிரிலே உருவாக்கிய உணர்வின் தன்மையை
2.இந்த மனித வாழ்க்கையை வென்று என்றும் ஒளிச் சுடராக வளர்ந்திடும் அவர் சக்தியை
3.நமது குருவை எண்ணி அதை ஏங்கிப் பெறும் பொழுது
4.நம் உயிர் அணுவின் கருவாக அதை எல்லாம் உருவாக்கப்படும் போது
5.நமக்குள் உருவாக்கும் ஈசனாக நம் குரு (குருநாதர்) வருகின்றது (வருகின்றார்).
6.(அதனால் தான்) ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் அவருக்குப் பெயர் வைத்தார்கள்.

அவர் தனக்குள் வளர்த்த அந்த அருள் சக்தி… அவர் உபதேசித்த உணர்வுகள் நமக்குள் குருவாக இருந்து… அரூப உணர்வை நமக்குள் அது உணர்த்தி… அவர் பெற்ற வழியில் நம்மையும் அருளானந்தம் பெறும் நிலைகளுக்கு… அது குருவாக அழைத்துச் செல்லும்.

அகஸ்திய மாமகரிஷியை அவர் கண்டுணர்ந்த வழியில்
1.நஞ்சினை வென்றிட்ட அகஸ்தியர் உணர்வினைப் பெற்ற அந்த குரு அருள் நமக்குள் உறுதுணையாக இருந்து
2.அவர் தான் நுகர்ந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியை நாம் கவரும் தன்மை பெற்று
3.இருளை வென்று ஒளியை உருவாக்கும் உணர்வின் சக்தியைப் பெறும் தகுதியை நாமும் பெறுவோம்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம்
“நம் உயிரும்…”
“நம் குருவும்…”
இணைந்தே வருகின்றார்கள்.

இந்த இணைவுடன் குரு அருளை நமக்குள் பெறுவோம் என்ற ஏக்க உணர்வுடன் அகஸ்திய மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை வேண்டிக் கண்களின் நினைவினை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

நம் உயிருடன் தொடர்பு கொண்டு குரு காட்டிய அந்த உணர்வின் நிலையை நமக்குள்ளும் உருவாக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை இரத்த நாளங்களில் கருவுறச் செய்து அந்த உணர்வின் அலைகள் உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் பெற வேண்டும் என்று ஏக்கத்தைச் செலுத்தி உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவன்மாக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.அகஸ்தியர்… அவர் தான் பெற்ற அந்தச் சக்தியும்
2.நமது குருநாதர்…அவர் தான் பெற்ற அந்த அருள் சக்தியும் கலந்து
3.அதை நீங்கள் நுகரும் பொழுது அரும் பெரும் சக்தியாக
4.புதுப் புது தாவர இனங்களில் மணங்களை… அந்த நஞ்சினை வென்றிடும் அருள் சக்திகளை நுகர்வீர்கள்
5.நஞ்சினை வென்றிடும் அணுக்கருக்கள் உங்களிலே உருவாகும்.
உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் தகுதியை இப்போது பெறுகின்றீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மீண்டும் மீண்டும் உங்களுக்குள் ஞாபகப்படுத்துகின்றோம். நாம் எடுத்துக் கொண்ட தியானத்தின் வளர்ச்சி நமக்குள் பேரின்பத்தை ஊட்டும் நிலையாக வரும்.
1.இந்த உடல் இருக்கும் பொழுதே அந்த அருள் உணர்வை வளர்த்துக் கொண்டால்தான்
2.நமக்கு அந்த வளர்ச்சி கிடைக்கும்.

ஆனால் யாரோ எவரோ செய்து கொடுப்பார்…! என்று எண்ண வேண்டாம்.

யாரோ செய்வார் என்று அந்த ஏக்கத்தில் செல்லப்படும் பொழுது தான் மகா சக்தி என்ற நிலைகள் கொண்டு அடுத்தவர்கள் வலையில் நாம் சிக்கி நம் புத்தி இழந்து அவருக்குள் அடிமையாகி விடுகின்றோம்.

அதற்குப்பின் அவர்களிடமிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

உதாரணமாக ஆசைகளை ஊட்டி “இந்தத் தொழிலில் நீங்கள் லாபம் பெறலாம்…” என்ற உணர்ச்சிகளை ஒருவர் நமக்குள் தூண்டி விட்டால் அவரைப் புகழாரம் பாடத் தொடங்குவோம்.

அவர் உதவி செய்வார்… உதவி செய்வார்… என்று அதே எண்ணத்தில் ஏக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு நூறு ரூபாய் வேண்டும் என்று புகழ்ந்து பேசி நம்மிடம் கேட்பார். கேட்டவுடன் கொடுத்துவிடுவோம்.

அடுத்தாற்போல் நாம் அதைக் கேட்கப் போனால் நல்ல நேரத்தில் அன்று உபகாரம் செய்தீர்கள் இன்னும் ஒரு 500 ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை…! என்று கேட்பார்கள்.

ஆக.. புகழ்ந்து பேசுபவருடைய நிலையில் நாம் அடிமையாகி விட்டால் அவர் புகழ்ந்து பேசியே காசை நம்மிடம் வாங்கிச் சென்று விடுவார்.

நமக்குக் கஷ்டமாக இருக்கும் பொழுது பணத்தைக் கேட்டால்
1.ஐயோ… என்னிடம் காசு இல்லையே…! என்பார்
2.ஆனால் நாம் கொடுத்ததைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்
3.ஆனால் கேட்பதை நிறுத்த மாட்டார்
4.நாம் இல்லை என்று சொல்லி விட்டால் பகைமையை ஊட்டிவிடுவார்
5.காசைத் திருப்பி கேட்பார் என்று அடுத்தவரிடம் சீண்டி விடுவார்
6.கற்பனையாக உருவாக்கி கற்பனையான சொல்களைச் செய்து இடையூறை ஊட்டி பணத்தை வாங்க இவ்வாறு செயல்படுத்தி விடுவார்
7.கடைசியில் எப்பொழுது நீ பணம் கொடுத்தாய்…? நம்மைக் கேட்கும் அளவிற்கு வந்து விடுவார்

புகழாரம் பாடுவோர் கையிலே நாம் சிக்கிவிட்டால் மனிதனின் வாழ்க்கை இப்படிக் கடுமையாகி விடுகின்றது. சிந்திக்கும் செயலும் இழந்து விடுகிறது

ஆகவே நாம் ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றால்
1.திருப்பிப் பெறும் நிலைகளுக்கு இருக்கக் கூடாது
2.திருப்பிப் பெறாத நிலையில் இருக்க வேண்டும்

“மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருக்க வேண்டும்…” என்று அருள் வாக்கினைக் கொடுத்து விட்டால் திரும்பக் கேட்கும் நிலை வராது. ஆகவே திரும்பக் கேட்கும் நிலை அற்று இருக்க வேண்டும்.

உபகாரம் செய்வதில் கவனமாக இல்லையென்றால் நட்புக்குள் பகைமையும் வந்து விடுகின்றது இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நமக்குள் அணுக் கருக்களாக… அதைக் கருவாக்கி நாம் வளர்த்தோம் என்றால் உடலுக்குள் அணுக்களாகப் பெருகி ஒளியான வளர்ச்சியின் தன்மை கூடிக் கொண்டே வரும்.

1.பிறிதொரு பகைமையோ…
ஏமாற்றும் உணர்வோ நமக்குள் வராதபடி அருள் உணர்வின் தன்மை வலிமை பெற்று
2.என் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்… சிந்திக்கும் தன்மை பெறச் செய்ய வேண்டும்
3.என்னைப் பார்க்கும் போதெல்லாம் மற்றவர்களுக்கு நல்ல எண்ணம் வரவேண்டும் என்று
4.இந்த உணர்வினைக் கருவாக்கி வளர்த்துக் கொண்டால்
5.உற்று நோக்கி நம்மை ஏமாற்றுவார்கள் இதை நுகர்ந்த பின்
6.ஏமாற்றும் செயலே அவர் உடலில் இருந்து விலகிச் சென்று விடுகிறது.

இதைப் போன்று நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்

எப்போதுமே அடுத்தவரிடம் நாம் பழகும் போது… அவர் கஷ்டங்களைச் சொன்னால் “அவருடைய கஷ்டத்தை நீக்கும் உபாயங்களை…” நாம் சொல்லிப் பழக வேண்டும்.

இதன் வழி நாம் செல்லும் பொழுது
1.அந்த அருள் உணர்வுகள் நமக்குள்ளும் பெருகும்… துன்பத்தைப் போக்கும் உணர்வுகள் நமக்குள் விளைகிறது.
2.நம் எண்ணங்கள் கொண்டு அந்தக் கஷ்டங்களைப் போக்கும் தன்மை வரும்.
3.ஆகவே அருள் வழியில் இத்தகைய உபாயங்களை நீங்கள் சொல்லுங்கள்.

இவ்வாறு செயல்பட நாம் அந்த உணர்வுகளை எண்ணும் போதெல்லாம் நம் உடலுக்குள் வளர்ந்த அணுக்களுக்கும் இந்த நல்ல உணர்வை ஊட்டி அதை வளர்க்கும் தன்மையும் பெறுகின்றது நாம் வாழ்க்கையில் இப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்துப் பழகிக் கொண்டால் உடலை விட்டுச் செல்லும் போது நாம் மெய் ஒளி பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எளிதில் பெறுவீர்கள்

 

எப்பொழுது துன்பம் என்று காணுகின்றோமோ ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் உடலுக்குள் சேர்த்து இருளை நீக்கி வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் அது வலுவாகி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று அடைகின்றோம்.
1.இதைத்தான் குருநாதர் எமக்குக் காட்டினார்… அதைத்தான் உங்களுக்கும் சொல்கின்றேன்.
2.உங்களால் உங்களால் முடியும். எப்படிச் சாத்தியமாக முடியும்…? என்று எண்ணாதீர்கள்.
3.அருளைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் பேரின்பப் பெரு வாழ்வாக நீங்கள் பெற முடியும்.

தீமை என்று உணர்வைக் கேட்டறிந்தாலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை உடனுக்குடன் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.

யார் வெறுப்படைந்தனரோ அவருக்கும்… அதாவது அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் பரிசுத்தமாக்கும் உணர்வுகள் தோன்ற வேண்டும் என்று நினைவைச் செலுத்தினால் போதுமானது. “அவர் வேண்டாதவர்” என்ற எண்ணங்கள் வராது அடுத்து.

காரணம் அந்த உயிர் அவரை ஆளுகின்றது. ஈசன் ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தினால் நமது ஆலயம்… நம் உடலும் தூய்மையாகின்றது.

இப்படி நாம் எண்ணும் உணர்வு எதுவோ அதுவே அரங்கநாதன் இந்த உணர்வின் சக்தியாக நம்மை அருள் வழியில் இயக்கும்.
1.அதையே நமது உயிர் ஆளும் ஆண்டவனாக.
2.ஆகவே… அனைவரும் ஆண்டவனின் பிள்ளைகள் தான்.
3.அவன் ஆண்டு கொண்டிருக்கும் உடல்தான் ஆலயம்.

இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! உயிரால் உருவாக்கப்பட்ட பிள்ளை தான் இது.

பல கோடிச் சரீரங்களில் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம். இன்று மனிதனான பின் இயற்கையில் விளைந்ததை வேக வைத்துச் சுவை மிக்க உணர்வுகளைப் படைத்துச் சாப்பிடும் மனித உடலைப் பெற்றுள்ளோம்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறத் தொடர்ந்து உங்களுக்கு உபதேசம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன். இவை எல்லாம் அருள் ஞானிகள் கண்ட பேருண்மைகள்.

1.ஞான வித்தை ஊன்றியுள்ளோம்… தியானத்தின் மூலம் அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உங்களுக்குள் உரமாக்கிக் கொள்ளுங்கள்.
3.உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் அந்த சக்தியைப் பெறச் செய்யுங்கள்.
4.மெய் வழியில் செல்லும் அருள் பாதையை அது வகுத்துக் கொடுக்கும்.

மெய் வழி வாழ்வோம்… அருள் வழி வாழ்வோம்…!

ஞான முறுவல்

 

மனிதன் ஏடறிவால் கற்கின்ற கல்வி…
1.புவியியல் எனப்படுகின்ற உன்னதத் தன்மைகள்
2.உயிரியல் எனப்படுகின்ற சூட்சும நிலைகள்
3.வானியல் என்கின்ற மூலபிரக்ருதி ஆதியின் அந்தம் உணர்ந்து கொள்கின்ற செயல் தன்மைகள் அனைத்தும்
4.மெய்ஞானத்தைக் கூட்டி போதனையின் வழி அறிந்ததைத் தன்னுள் தான் தெளிந்து
5.பெற வேண்டிய உண்மை நிலை எதுவோ அந்நிலையாய் விளங்கிடவே
6.அன்று சித்தர்கள் காட்டிய சீரிய உண்மைகளை இன்றைய புத்தக அறிவால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியுமா…?

கற்கின்ற கல்வியின் சாரங்கள் எந்நிலையாயினும் தொடருமா…? கற்பவை கற்ற நிலையில் வராது.

1.செவி வழியாக அறிந்து கொண்டிடும் காரிய உண்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு உரைத்திட…
2.சொல்லின் கோர்வைகள் மாறுபடா நிலையாக உரைத்திட இயலாத கல்வியின் தன்மை…
3.அறிந்து கொண்டதை… கொண்ட வழியிலே உரைத்திட வழி உண்டு.

மெய்ஞானத்தின் வழி உற்றவைகள் (உகந்தவைகள்) நற்குணங்களாகப் பரிணமிக்க நன்னெறி வளர்ப்பில் திட மனது கொள்கின்ற நிலையும்… அற்றவைகள் (ஆகாதவைகள்) என்று உரைக்கின்ற மனிதனின் நடைமுறை வாழ்க்கை செயலில் அதை எண்ணிச் செயல்படும் பொழுது உற்ற பயனே வரும் என்ற எண்ணிடாத் தன்மையாக… அற்றவைகளின் செயலில் அந்நிலையையே மீண்டும் எண்ணி ஏக்கமாகச் செயல்படும் பொழுது அந்த வினையின் தொடரே “விதி…” என யார் தான் உணர்கின்றனர்…?

மெய்ஞானத்தின் சுடராக நீக்கமற விளங்கும் மெய்ஞானச் செல்வங்களே…!
1.”முக்தி…!” என்று பக்தி வழியாக அதை உரைத்திட்டால் உரைக்கின்ற உரையின் முழுமை (உங்களுக்கு) விளங்கிடாது.
2.குழந்தைக்கு மருந்து புகட்டிடும் தாய் சுவையான பதார்த்தங்களைக் காட்டி நோய் அகலக்கூடிய அந்த மருந்தை அளிப்பதை போல்
3.இன்றைய மனித குலத்தையே மனித குணத்தையே பீடித்துள்ள எண்ணத்தில் செயல்படுகின்ற வினைகள் அகல
4.மாமகரிஷிகள் உவந்து (மகிழ்ந்து) ஊட்டுகின்றனர்… இவை அனைத்துமே பாட நிலை தான்.

ஆத்ம பலம் பெற்று… உயிர் ஆத்மக் கலப்பாக… ஆதிசக்தி எனும் “ஜோதித்துவ சங்கமத்தின் சங்கமேஸ்வரனாய்” சிறப்புற விளங்குதலே… சித்தன் சூட்டிய சொல்… அகம் காட்டிடும் அழகு… என்றும் அகலா “ஞான முறுவலாகப் (மகிழ்ச்சிக் குறி) பூத்திட வேண்டுமப்பா…!”

ஞான முறுவல் காட்டிடும் முகம்… அகம் வாழ் ஜெபமாய் சித்தி நிலை பெற்றிருக்கும்…! என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.

1.ஞான முறுவல் கொள்கின்ற மனத்திற்குள் கோபம் ஏது…?
2.கோப குணம் தவிர்த்திட நந்தி ஞான முறுவல் கொள் என்பார்கள் சித்தர்கள்
3.உள்ளன்போடு உவந்து… “சினம் தவிர்க்கும் உபாயம்” விருப்பமோடு செயல் நிலை ஆக்கிடவே இதை உரைக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் யாம் (ஞானகுரு) இமயமலைக்குச் செல்லப்படும் பொழுது மலை உச்சியில் பனிகள் உறைந்து இருக்கின்றது. ஆனால் உறைந்த பனிகள் (சுடு தண்ணீர் கிணறு – அடியில் கந்தகப் பாறை இருப்பதால்) சூட்டினால் கரைந்து ஒரு குளம் மாதிரி இருக்கின்றது.

அந்தக் குளத்திற்குள் பார்த்தோமென்றால் அடியில் இருக்கக்கூடிய சிறு துரும்பு கூட… கண்ணாடி போன்று பளிச்சிட்டுத் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் அதில் இருந்து சூட்டினால் புகை வருகின்றது.

ஒரு துணியில் அரிசியைப் போட்டுக் கட்டி அதில் முக்கி 10 நிமிடம் வைத்திருந்தால் போதும். ஒரு பிரஷர் குக்கரில் அரிசியை வேக வைப்பது போன்று அவ்வளவு சீக்கிரம் வேக வைத்து விடுகின்றது.

அங்கே உட்கார்ந்து நான் தியானம் இருக்கச் சென்றேன். குருநாதர் அப்போதுதான் சொல்கின்றார் நீ குளிர் காய்வதற்கு இங்கே வரவில்லை… எழுந்திரு…! என்று சொல்லி குளிர் அடிக்கும் இடத்தில் போய் அமரச் செய்தார்

காரணம்…
1.குளிர் வரும் பொழுது உனக்குள் எப்படி நடுங்குகிறதோ
2.அந்த நடுக்கத்தை நிறுத்துவதற்கு இங்கே (சுடு தண்ணீர் இருக்கும் இடம்) எப்படி அமர்ந்தாயோ…
3.பின் “அதி சக்தி வாய்ந்த உணர்வை” நுகரப்படும் பொழுது உனக்குள் இந்த குளிர் வராது.
4.”அந்தச் சக்தியை நுகர்வதற்குத் தான்… இந்த குளிரிலிருந்து நீ தப்பிப்பதற்குத் தான்
5.”நீ உயிர் வாழ வேண்டும்” என்பதற்குத் தான் இதைச் செய்தேன்…! என்று
6.நீ போ…! என்று சொல்லி குளிர் அதிகமாக உள்ள இடத்தில் அமரச் செய்தார்.

வெறும் கோவணத்தைக் கட்டிக் கொண்டு தான் அங்கே சென்றேன். ஆனால் நீங்கள் இங்கே சமமான இடத்தில் உட்கார்ந்து மகிழ்ச்சியாக “இவ்வளவு இரகசியத்தையும்…” கேட்கின்றீர்கள்.

ஆனால் அங்கே கிடு…கிடு கிடு…கிடு என்று நடுங்கும். குருநாதர் சொன்ன முறைப்படி நான் தியானிக்கவில்லை என்றால் கிர்ர்ர்ர்ர்… என்று இரைச்சல் வரும்.

மார்கழி மாதப் பனிக்காலத்தில் ஒரு சிலருக்கு உள்ளுக்குள் இருந்து கிர்ர்ர்… என்று உடல் இரையும். அது போன்று அங்கே இமயமலைக் குளிரில் இருந்தால் எப்படி இருக்கும்…?

இருதயம் இரையப்படும் போது கொஞ்சம் வேகமாக உள்ளே வந்து டக்… என்று குறைந்து விட்டால் மூச்சு போய்விடும். காரணம் அந்த இரத்தங்கள் ஓடும் பொழுது அந்த இயக்கச் சக்தியாகும் போது உறைந்து விட்டால் எல்லாம் இன்ஜின் நின்றுவிடும்.

அந்த மாதிரி இடங்களில்…
1.”மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை” நுகரும் பொழுது
2.உடலுக்குள் இந்த உணர்வை நான் செலுத்தும் பொழுது ரொம்ப சுகமாக இருக்கின்றது.
3.தியானத்தில் என் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கெல்லாம் அந்தச் சக்தியைக் கொடுக்க முடிந்தது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்குவதற்காகத் தான் தனித்து அங்கு அனுப்பினார் குருநாதர். அதில் வளர்த்த உணர்வின் ஒளி அலைகளைத் தான் இப்போது உங்களிடம் சொல்கின்றேன்.

குருநாதர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் அந்த ஆற்றல்களைப் பெறுவதற்கு…! அவருக்குள் விளைந்த உணர்வின் உணர்ச்சிகளை அதைக் கவரும் ஞான வித்தாக எனக்குள் பதிவு செய்தார்.

அவர் வழியில் அதைச் செய்யப்படும் பொழுது அந்த அனுபவபூர்வமாக நான் தெரிந்து கொள்ள முடிந்தது… எடுத்துக் கொண்டேன்.
1.அதைத்தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் ஏங்கிப் பெறுவீர்கள் என்றால்
3.தீமைகள் செய்யும் உணர்வுகள் அனைத்தையும் கருக்கிவிடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

நம் உயிரே ஈசனாக இருந்து நாம் எண்ணியதை எல்லாம் அந்த உணர்வின் கருவாக “உயிரே மாற்றுகின்றது…!” அப்படிக் கருவின் தன்மை பெறச் செய்வதற்கு நமது உயிரே குருவாக இருக்கின்றது.

நம் குருநாதரின் அருள் சக்தியைப் பெற்று அவர் வழியில் அகஸ்தியரின் அரும் பெரும் சக்திகளை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக உருவான அந்த உணர்வு கொண்டு அவன் வழியில் நாமும் சென்று ஆறாவது நிலையை ஏழாவது ஒளியாக மாற்றி அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடையும் சக்தியை நாம் பெறுவோம்.

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது
1.அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் சக்திகள் உங்கள் அருகிலேயே வந்தது போன்று இருக்கும்
2.அகஸ்தியனைப் பற்றி உபதேசிக்கும் போதெல்லாம் அவன் நகர்ந்த அந்த “மகா பச்சிலையின் மணங்கள்…” உங்களுக்குள் வரும்
3.அந்த மணங்கள் உங்கள் உடலுக்குள் புதுமையான நிலைகளில் ஊர்ந்து செல்லும்
4.உங்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் வலிமை மிக்க சக்தியாக நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வாக நீங்கள் நுகரும் தன்மை பெற்று
5.அந்த அணுவின் தன்மை கருவாக உருப்பெறும் சக்தியும் பெறுகின்றது.

கருவுறும் அந்த உணர்வின் கருவிற்குக் காலை துருவ தியானத்தின் மூலம் அருள் சக்திகளை நீங்கள் தினசரி செருகேற்ற வேண்டும்.

நீங்கள் கேட்டுப் பதிவாக்கிய எம்முடைய உபதேசத்தின் பல கலவைகளும் சேர்த்து அதுவும் அணுக்கருக்களாக உங்களில் உருவாகும். தியானத்தில் எடுக்கும் அருள் சக்திகளை இரத்தநாளங்களில் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஒருங்கிணைந்து அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் பெருகும்.

அகஸ்தியன் உடலிலிருந்து உருவாகி வெளிப்பட்ட அருள் உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது. அதை நீங்கள் கவர்வதற்காக இந்நேரம் வரையிலும்
1.அதைப் பதிவு செய்தது
2.எண்ணத்தால் உருவாக்கப்பட்டது
3.உங்களுக்குள் உள் நின்று அது இயக்கத் தொடங்குகின்றது

அதை நீங்கள் மீண்டும் எண்ணும் பொழுது அந்த எண்ணம் உங்கள் கண்ணிற்கே வருகின்றது. யாம் சொல்லும் சொல்லின் நிலைகளைக் கண் உங்களுக்குள் பதிவாக்கி அந்த உணர்வை நுகரப்படும் பொழுது கண்ணால் தான் பதிவாகின்றது.

அது தான் ஹரி…! அறியக்கூடிய அறிவாக… சூரியனால் இயக்கப்படுவது ஹரி கிருஷ்ணா “கிருஷ்…“ என்றால் பதிவாக்குவது அப்படிப் பதிவான பின்…
1.இந்த உணர்வு எண்ணம் ஆகும்போது ஹரி ராமா.
2.அந்த எண்ணத்தை எண்ணி மீண்டும் கண்ணிற்குக் கொண்டு வந்தால் ஹரி கிருஷ்ணா.

அதாவது…
1.கண்ணின் நினைவு கொண்டு எண்ணத்தின் மூலம் உள்ளுக்குள் பதிவாக்கி
2.மீண்டும் எண்ணத்தில் வரப்படும் பொழுது அந்த பதிவின் நிலையை நுகர்ந்து
3.நமக்குள் அணுவின் கருவாக உருவாக்கும் திறனைப் பெறுகின்றோம்.

கண் வழி நுகரும் சக்தி பெறுகின்றீர்கள். நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் அணுவாக மாறி இரத்த நாளங்களில் கருத் தன்மை அடையும் கருக்களாக உருவாக்கப்படுகின்றது

1.அகஸ்திய மாமகரிஷி பெற்ற நஞ்சினை வென்றிடும் தாவர இனச் சக்தியும்
2.நஞ்சினை வென்றிடும் அணுவின் தன்மை விளைந்து அவனின்று வெளிப்பட்ட மூச்சின் உணர்வலைகளும்
3..உங்கள் உடலுக்குள் ஊடுருவும் போது உயர்ந்த சக்திகளின் உணர்ச்சிகளை நுகர்ந்தறியும் அறிவின் ஆற்றலாகப் பெறுகிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையில்…
அதை நுகரும் சக்தியும்
அறியும் சக்தியும்
வளர்க்கும் சக்தியும்
வளர்ந்திடும் சக்தியும் பெருகும்…!

1.அந்த அரும்பெரும் சக்தி உங்கள் அருகில் சுழன்று
2.நீங்கள் சுவாசிக்கும் சுவாசத்தின் வழி கூடி உடலுக்குள் செல்லும் நிலை இப்போது உருவாகின்றது.

ஆகவே அகஸ்தியமாமகரிஷி வெளிப்படுத்திய மணத்தின் தன்மைகளை நுகர்ந்து அந்த உணர்வின் ஆக்கச் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?

 

வாழும் வாழ்க்கையின் இயல்(பு) கொண்டு… வானியல் அறிந்திடும் செயலுறும் எண்ணத்தின் உயர்வால்… ஞானத்தின் சுடர்தல் தெளியும்.

வாழ்வேனும் சமுத்திரம் கண்டாய்…!
1.ஞானச்சுடர் வாழ்வியல் ஆக்கும் தெளிவின் வழியை அறிவுறுத்தி
2.எது செயல்படும் ஆக்கமோ அவ்வழி நிற்றல் “மனத்தின் திறன்” என்றே
3.செயலுறும் செயல்பாட்டின் வேகம் “வானியல் (விண்ணுலக ஆற்றல்) பெற்றிடும் விவேகத்தில் நிலைநிற்றல் வேண்டும்…”

பால்வெளியின் உவர் அமில அடர்வு செயலுறும் தன்மைகள் கண்டோம். நீரமில சக்தியில் கலந்திட்ட அந்நிலை உருக்கோலம் கொண்டிட்ட செயலில் மாமகான்கள் தத்துவங்களாகக் காட்டியதில் உருக்கோலம் கொண்ட உவர் அமில அடர்வு நீரின் ஆழம் காணச் சென்றதாக உரைப்பதும் உண்டு.

பக்தியின் தொடர் காட்டும் செயலில் பெற்று உயர்வது எக்காலம்…?

உயிரணுவைச் சுவாசமாகச் சூழ்ந்திட்ட நல் உணர்வெனும் ஆத்ம முலாம் சுடர்ந்திடும் செயலுக்கு எல்லாமே எண்ணம் தான்.

ஞானத்தின் செயலுக்குக் காட்டிடும் வேகம் உணர்வெண்ணத்தின் மாற்றத்தில் முன்பு கூறிட்ட “அதே விவேகம்” தியானத்தின் வழியாக மெய்ஞானச் சுடர் எனும் விழுமிய வேதப் பொருளாக நன்நிலையை உயிர் ஆத்ம சக்தி பெற்று வளர்த்து உயர்த்திக் காட்டும்.

மாமகான்கள் உரைத்திட்ட நல்ல நெறிகள் வெறும் போதனை மாத்திரம் அன்று. வாழ்க்கையின் நிலைகாட்டி உயர் ஞான வலுவில் மெய்ஞானியாய் வாழும் வகை காட்டியதே போதனாமூர்த்திகளான அப்போதினிகள் கைக்கொண்ட செயல் நிலையை “எளிமையாக உரைக்கின்றோம்…”

வாழ்க்கையே மணல் குன்று…!
1.ஏற சறுக்கும் மணல் குன்று…
2.சாணுக்கு முழம் சறுக்கும் என்று மெய்ஞானியர் சுட்டிக்காட்டுவதில்
3.மெய்ஞானத்தின் விழிப்பு விவேகமாகத் தன்னைத்தான் வளர்த்துக் கொண்டிடவே இந்த எளிய தியான முறை.

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?
1.”வாழ்ந்து காட்டுவோம்…” என்ற மனதின் உறுதிக்கு
2.அந்தப் புறச்சான்றுகளைக் காட்டினோமப்பா.

அகத்தின் உயர்வு கூட்டும் அதே மன உறுதி தான் தியான நிலையில் ஆத்ம பலம் கூட்ட எண்ணுகின்றோம். பிறப்பறுக்கும் உயர்வாம் ஆத்ம கலப்பாக எண்ணுகின்றோம்.
1.உணர்வலைகள் தொழில்படும் ஜீவ சரீர பிம்பத்தில்
2.“சகல உயிரணுக்களும்… சக்தியின் வலு கூட்டிக் கொள்ள எண்ணுகின்றோம்….”

சித்தன் நிலையைப் பெறச் செய்யும்… சித்தத்தின் சிந்தனா சக்தி குவிக்கப் பெறும் ஓர்முக நினைவோட்ட குணத்தன்மைகளில்… “பிடர்தல்” எனும் எண்ணத்தின் பாங்கு வான் இயல்பு காட்டிடும் முறைகள் முறையாக உரைப்போம்.

கடும் நோய்களைப் போக்கி எல்லோரையும் நலமும் வளமும் பெறச் செய்யும் சக்தி

 

உதாரணமாக ஒருவர் திட்டினால் காதிலே கேட்கின்றோம்… அந்த உணர்வுகள் உயிரிலே படுகின்றது… உணர்ச்சிகள் ரத்தத்திலே கலக்கிறது. அவரைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது “ரத்தக் கொதிப்பு” வருகிறது

அதே போல உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம்… அதை நுகர்ந்தறிந்து உதவி செய்கின்றோம். அவருடைய வேதனையை அறிந்த பின் அந்த உணர்ச்சிகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது. கருவாகி உருவாகிக் “கடும் நோயாக” நமக்குள் மாறுகின்றது. மனிதனுடைய சகஜ வாழ்க்கையாக இது மாறுகின்றது.

ஆனால் இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்க
1.கூட்டு தியானங்கள் இருந்து துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று
2.ஆயிரக்கணக்கானவர்களின் சக்தி வாய்ந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பப்படும் பொழுது
3.ஒவ்வொருவருடைய செவிகளிலும் இது பட்டு கண்ணின் கருவிழியால் பதிவாக்கி…
4.இந்த உணர்வின் ஈர்ப்பு காந்தமான கண்ணின் காந்தப்புலனறிவால் கவரப்பட்டு உங்கள் உயிரிலே மோதப்படும் பொழுது அரங்கநாதன்…!
5.அத்தனை பேரின் உணர்ச்சிகளும் உங்கள் உடலிலே தீமைகளை நீக்கிடும் உயர்ந்த சக்தியாக மாறுகின்றது.
6.இந்த உணர்ச்சிகள் உங்கள் உடலிலே அரங்கநாதனாக இருந்து “கடும் நோய்களையும் நீக்கும் சக்தி பெறுகின்றது…”

அருள் உணர்வுகள் உங்கள் ரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரலோகமாக தீமைகளை நீக்கிடும் வலுக்கொண்ட உணர்வின் அணுவாக உருவாக்க இது உதவுகின்றது.

ஆகவே கூட்டுத் தியானத்தின் மூலம் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் சக்திகளைச் சேர்த்துக் கொண்டால் தீமைகளை நீக்கும் அந்த அணுக்கள் நம் உடலில் உருவாகிறது.

சர்வ பிணிகளையும் நீக்கிடும் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெறும் தன்மையும் இந்த வாழ்க்கையில் பெற்று நாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று தீமைகள் புகாத சக்தியும் நாம் பெற்று பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

“அத்தனை பேரும் சேர்த்த உணர்வுகள்” ஒவ்வொரு செவிகளிலும் பட்டு இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது நாம் எல்லோரும் நலமும் வளமும் பெறுகின்றோம்.

1.கூட்டமைப்பாக உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது எல்லோருக்குள்ளும் இது ஊடுருவி ரத்த நாளங்களில் குவிக்கின்றது.
2.சர்வ நோய்களிலிருந்து விடுபடச் செய்யும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

ஆனால் நோயுடன் இருப்பவரை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் நமக்கும் நோய் வருகிறது. அதற்குப் பதிலாக அருளைப் பெருக்கி இருளைப் போக்க வேண்டும் என்ற உணர்வுகளை இதைப் போல கூட்டமைப்பாக நுகரப்படும் பொழுது
1.தீமையை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பெறுகின்றோம்…
2.மன வலிமை பெறுகின்றோம்… துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெருக்குகின்றோம்.

இந்த வழியில் நாம் தொடர்ந்து செல்லப்படும் பொழுது நமது வாழ்க்கை சீராகச் செல்ல ஏதுவாகின்றது. இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடைகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கல்வி கற்றுக் கொண்ட ஒருவர் புதிதாக ஒரு சாதனத்தை உருவாக்குகிறார் என்றால்…
1.எந்தெந்த அளவில் சேர்த்து அந்தப் பொருளை உருவாக்கினால்
2.இயக்கச் சக்தி… இந்த இடம்… “இது வலுவை தாங்கக் கூடியது…” என்று உணர்கின்றார் விஞ்ஞானி
3.அதன் வழியில் தான் புதிய சாதனத்தை உருவாக்குகின்றார்கள்.

இப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு அவர் கற்றுணர்ந்ததை யார் அவரிடம் சீடராக வருகின்றாரோ அவருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர்.

முதலில் கல்வியைக் கற்பிக்கின்றார்கள். அவர் கற்றுணர்ந்த வழியிலேயே சீடருக்கும் காட்டப்படும்போது அதைக் கற்றுணர்ந்து வருகின்றார்.

கற்றுணர்ந்து அதன் வழிகளிலே வந்தாலும்… போதித்தவரின் வழியிலே சீராக அவர் செயல்படுவார்…! என்றால் அவர் அதில் வெற்றி பெறுகின்றார்.

ஆனால் கற்றுக் கொடுக்கப்படும் பொழுதே
1.“கடினம்…” என்று எண்ணி அந்தக் கல்வியை அவர் கற்க நேர்ந்தால்
2.அவர் எண்ணங்களிலும் கடுமை வந்துவிடும்
3.அவருடைய சிந்திக்கும் திறனும் வலு இழக்கப்படும்.

அவர் இன்ஜினியராக வரும் நிலையில்… “எப்படியோ” பாட நிலைகளை எண்ணி உயர்வுக்கு வந்தாலும்… அந்தப் பாட நிலைதான் அவருக்கு மீண்டும் மீண்டும் வரும். “மூலக்கூறுகளை அவர் அறிய முடியாது…”

ஆகவே அவரவர்கள் எடுத்த உணர்வு கொண்டு தான் அது இயக்கும்.

இதைப் போன்று யாம் கொடுக்கும் உபதேசங்கள் வாயிலாக அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம். உங்கள் உணர்வுடன் இணைந்து விட்டால் அந்த உணர்வை நீங்கள் நுகரும் போது… அறிவின் ஞானமாக வருகின்றது.

அது ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதற்குத்தான் ஒவ்வொரு குணங்கள் உருவாவதும்… அதனின் சிறப்பின் தன்மையை நினைவு கூறும் பொழுது அதனதன் கருக்களாக உங்களுக்குள் உருவாகின்றது.

1.ஞானிகளைப் பற்றிய நினைவின் தன்மை உங்களுக்குள் வருவதற்கு
2.ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் உடலுக்குள் இருக்கும் ஊனுக்குள் இதைப் பதிவாக்குகின்றோம்.

அந்தப் பதிவினை நினைவாக்கப்படும்பொழுது அவ்வப்பொழுது இந்த வாழ்க்கையில் வரும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.

யாம் பதிவாக்கியதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது வாழ்க்கையில் வரும் இருளை மாற்றச் செய்யும் சக்தியாக அது நிச்சயம் வரும்.

1.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை எப்போதுமே இணைத்துக் கொண்டு வந்தால்
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து நீங்கள் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

இல்லை என்றால் இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் மற்ற உணர்வுகள் வளர்ச்சி அடைந்தால் மீண்டும் இதனுடைய நிலைகள் இன்னொரு பிறவியைத் தான் உருவாக்கும்.

மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.மனிதனின் வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே மறைமுகமாகத் தீங்குகள் எப்படி விளைகிறது…?
2.நம்மை அறியாமல் தீமைகள் எப்படி விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகள் எப்படித் தூண்டுகின்றது…?
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிகளுக்கும் தூண்டப்பட்டு இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…? என்று
5.இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் நமக்கு அடிக்கடி தொந்தரவு செய்கிறார் என்று எண்ணுகின்றோம். அவ்வாறு எண்ணும் பொழுது அந்த உணர்வு
1.நம் உடலுக்குள்ளும் இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.அதே சமயத்தில் எதிரிகளின் உடல்களிலும் இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது
3.நாம் வெறுக்கும் உணர்வுகளைத் தூண்டுகின்றோம்… அங்கேயும் வெறுக்கும் உணர்ச்சிகளைத் தான் தோற்றுவிக்கின்றது.

ஆகவே அதனதன் உணர்வுக்கு அது அது போராடும். அங்கேயும் அதனதன் உணர்வுக்காகப் போராடும்.
1.எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்
2.அங்கேயும் எதிரிகளை வளர்த்திடும் சக்தியே வருகின்றது.

ஆனால் இதை எல்லாம் வென்றவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக உள்ளான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சக்தியைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் நாரதனாக இயக்கத் தொடங்குகிறது. நாரதனாக நமக்குள் வந்தபின்… “நாம் எதைப் பிடிவாதமாக வைத்திருக்கிறோமோ…” அந்த உணர்வைத் தணிக்கச் செய்கிறது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை வலுப்படுத்திக் கொண்டு அங்கே யார் மீது வெறுப்படைந்தோமோ நம் கண்ணின் நினைவலைகளை அவர் பால் செலுத்தப்படும் பொழுது
1.நமது கண்கள்… (அதாவது) கண்ணனும் அந்த நாரதனுக்குண்டான நிலைகளை இங்கே சொல்லி
2.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது
3.எதிரியின் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அந்த “நாரதன் வேலையைச் செய்வான்…”

நம்முடைய உணர்வுகள் அங்கே பகைமையாக்கும் உணர்வாக முதலிலே சென்றது. அடுத்து இந்த அருள் ஞானியின் உணர்வுகள் அங்கே சென்றபின் அங்கே சற்று சிந்திக்கச் செய்யும் சக்தி வருகின்றது.

1.நாரதன் கண்ணனிடம் (கண்கள் வழி) இவ்வாறு செயலாக்கிய பின்
2.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
3.கண்களுக்கும் நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு செய்கிறது…? என்று
4.வியாசகர் எவ்வளவு தெளிவாக எழுதி இருக்கிறார் என்ற நிலையை நாம் தெரிந்து கொண்டால் போதும்

எப்போதுமே “எதிரிகளை…” எதிரிகள் என்று எண்ணாதபடி… அந்த எதிரியின் உணர்வு நமக்குள் வளராதபடி முதலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் துருவ தியானத்தில் கொடுக்கப்படும் சக்தி கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை நீங்கள் வளர்க்க வளர்க்க… அதே சமயத்தில் யார் நமக்குத் தீங்கு செய்கின்றார்களோ…
1.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும் என்றும்
2.தவறு செய்ததை அவர் சிந்திக்கும் தன்மை வரவேண்டும் என்றும்
3.இந்த உணர்வினை நமக்குள் பதிவாக்கிக் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அதாவது… “அவர் எனக்குத் தீங்கு செய்தார்…” என்ற அந்த உணர்வை நமக்குள் வளர்த்து நம்மை பலவீனப்படுத்துவதற்குப் பதில்
1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து
2.அந்த உணர்வினைக் கண் கொண்டு செலுத்தப்படும் போது நாரதனாக அங்கே செல்லும்.

அங்கே சென்ற பின் அவர் செய்த தீங்கினையும் அங்கே வெளிப்படுத்திக் காட்டும். அப்போது நம் மீது வரக்கூடிய உணர்வுகளைப் பலவீனப்படுத்துகின்றது.

இதைப் போன்று அடிக்கடி அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் எண்ணங்கள் கொண்டு நம் இரத்தநாளங்களில் பெருக்கப்படும் போது தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர்கின்றது.

இதற்கு முன்னாடி அறியாமல் நாம் எடுத்துக் கொண்ட சலிப்போ சங்கடமோ சஞ்சலமோ வெறுப்போ வேதனை போன்ற உணர்வுகளால்… இரத்த நாளங்களில் உருப்பெற்ற இந்தக் கருக்கள் அனைத்தும் அடைகாத்து அணுவாக ஆன பின் நம் உறுப்புகளில் தீங்கு விளைவிக்கச் செய்கின்றது.

அதைத் தடுக்கத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள்ம் இதைக் கருக்களாக உருவாக்கப்படும் போது இரத்த நாளங்களில் இது பெருகுகின்றது.

1.ஏனென்றால் உடலுக்குள் இரத்தம் போகாத இடமே இல்லை
2.அருள் உணர்வுகளை இப்படி எண்ணி எடுத்துக் கொண்டால்
3.பாதுகாப்பான நிலைகளுக்கு நம்மை அழைத்துச் சென்று பகைமை உருவாகாதபடி தடுக்கும்.

அதைத் தான் காட்டிலே “இராமனுக்குக் குகன் உதவி செய்கிறான்…” என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. (இராமன் – எண்ணங்கள்; குகன் – இரத்தநாளங்கள்)

குருநாதர் விண் சென்ற வழியில் தான் அனைவரையும் விண்ணுக்கு ஏற்றுகின்றோம்

 

நமது குருநாதர் (ஈஸ்வரபட்டர்) மனிதரோடு வாழ்ந்தவர் தான். இருந்தாலும் அருள் உணர்வின் தன்மை கொண்டு மக்கள் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கின்றார்.

ஆனால் சாமியைப் பார்த்தால் அது கிடைக்கும் இது கிடைக்கும் என்று சொல்லி ஏதோதோ வைத்தியத்திற்கெல்லாம் வருவார்கள்… என்னென்னெமோ கேட்பார்கள்.
1.கேட்பதற்குத் தான் என்னிடம் வந்தார்களே தவிர “நல்லதாக்குவதற்கு யாருமே இல்லையப்பா…” என்று என்னிடம் சொன்னார் குருநாதர்.
2.ஆகவே நான் சொல்லும் முறைப்படி அருள் உணர்வை எடுத்து என் ஆன்மாவை நீ விண் செலுத்து.
3.அதற்குண்டான சிஷ்யனைத் தான் (ஞானகுரு) அவர் தேர்ந்தெடுத்தார்.

மந்திரவாதிகள் என்ன செய்வார்கள்…?

சாகும் போது மந்திரத்தை எல்லாம் அதற்குண்டானவரிடம் சொல்லிவிட்டு இறக்கி வைப்பார்கள். ஆன்மா வெளி செல்வது எவன் அந்த மந்திரத்தை ஜெபிக்கின்றானோ அவன் உடலுக்குள் வரும். கற்றுணர்ந்த உணர்வை எல்லாம் இங்கே மீண்டும் செயல்படுத்தும்.

ஆனால் நம் குருநாதர் என்ன செய்தார்…?

1.அந்த அருளைப் பெருக்கிய உணர்வு கொண்டு இருளை நீக்கிடும் உணர்வுகளை வளர்த்து
2.அருளைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு கொண்டு விண் சென்றார்.
3.அதே முறையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து அதன் வலு கொண்டு சாதாரண மக்களையும் விண் செலுத்தினால்
4.இந்த உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைகின்றது… உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளிச்சரீரம் பெறுகின்றது.
5.அந்தக் குடும்பத்தாருக்கு மிகவும் நல்லது.

அந்த நிலையைச் செய்வதற்குத் தான் மாதம்தோறும் பூரண பௌர்ணமி அன்று ஆன்மாக்களை கூட்டுத் தியானத்தின் மூலம் விண் செலுத்தும் படி செய்கின்றோம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் ஆன்மாக்களை விண் செலுத்தினால் அவர்கள் வழியில் நாமும் பின்பற்றி சப்தரிஷி மண்டல எல்லை அடைய ஏதுவாக இருக்கும்.

1.ஏனென்றால்… நம்மை மனிதனாக உருவாக்கி வளர்ந்து உயர்ந்த நிலை பெற வழி வகுத்துக் கொடுத்தவர்கள் முன்னோர்கள் தான்.
2.அந்த விழுதுகள் நாம் தான்
3.ஞானிகள் காட்டிய வழியிலே விண் செலுத்தினால் அவர்கள் ஒளிச் சரீரம் பெற்றால்
4.நம்முடைய எண்ணத்தால் துரிதமாக அங்கிருந்து உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்
5.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளையும் அகற்ற முடியும்.

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற விஷஜந்துக்களும் உள்ளிட்ட சாகரம் தான் மனித வாழ்க்கை நிலை

 

உலக நடைமுறை வாழ்க்கையினை உணர்ந்து செல்லும் வழி… நிதான நடைமுறையைக் குறிக்கும்.
1.ஊருடன் ஒன்றி வாழவும் வேண்டும்
2.நாம் கொள்ளும் “ஈஸ்வர அனுபூதியால்” பெற்று வளர்த்துக் கொண்டிட்ட “தனித்துவ மெய்ஞானச் சுடராக”
3.மற்றவர்களுக்கு வழி காட்டிடவும் வேண்டும்.

பேரருள் ஜோதியாக நம் உயிர் ஆத்ம சக்தியை வலு கூட்டிக் கொள்வதின் “பயன் இது…” என்று அன்பு மகரிஷிகளும் இயற்கையில் ஒன்றி வழி நடத்திடும் விதம்தான் என்னப்பா…?

ஆசையுடன் வாழும் மேன்மையையே ஆரம்ப நிலையிலிருந்தே உரைத்துக் கொண்டு வருகின்றோம்.

1.வாழ்வேனும் சாகரத்தில் அலைகள் ஓய்ந்தபின்
2.படகில் பயணம் செய்ய நினைக்கின்ற மனிதன் “பித்து நிலை பெற்றவனப்பா…”

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற எத்தனையோ விஷமான ஜீவஜந்துக்களும் அனைத்தும் உள்ளிட்ட சாகரம் தான் மனிதன் வாழுகின்ற வாழ்க்கையின் நிலை.

தத்துவம் உரைத்திட நான் வரவில்லை…!

வள்ளுவச் சித்தன் உரையே “பிறவிப் பெருங்கடல்… அதனைக் கடந்திடும் காப்பெனும் கவசம் ஈஸ்வர தியான வழிமுறை…!” அதுவே ஒளி தந்து ஒளியாக்கும் செயலுறும் நிலை.

நூல் வழியில் அதை அறிந்து கொண்டவனப்பா நீ.

நீர்க்கரை ஓரம் வேரோடு வளர்ந்திட்ட விருட்சம் புதுப்புனலில் கரை கரைந்து தலை சாய்த்த விதமும்… நீர்க்கரை கொடி நிலை நின்ற விதமே…
1.இவ்வாழ்வின் சாதுரிய வாழ்க்கையின் நடைமுறை என்பதிலும்
2.ஜெபத்தின் வழி தியானமாகத் தன் உயர்வைத் தான் கூட்டி…
3.கிளர்ந்தெழும் ஐந்தடக்கிச் (அதி ஆசை நிலை விடுத்தல்) செயல்படும் காலத்தே
4.சிந்தனையில் உணர்ந்திட்ட “சித்தன் நிலை பெற்றிடும் வாய்ப்பு…”

“உவர் அமிலம்” என்பது மூலகப் பொருளாக பால்வெளியின் தன்மையாக மூலக்கூறுகள் இணைவதும் அந்த உவர் அமில அடர்வு நம் பூமியின் வட தென் துருவங்களாக ஈர்ப்பில் செயலுறும் குளிர்விப்பாக… அம் மூலக அடர்வுகள் நீர் சக்தியின் முத்தொழில் தன்மைகளில் ஒன்றாகச் செயலுறுகின்றது.

திடம் கொண்டிட்ட நீர் சக்தி (பனிப்பாறைகள்) திரவ நிலை பெற்றிடும் நீராகச் செயலுறுங்கால்… ஈர்ப்பின் செயலில் உவர் அமிலம் நீரினுள் கரைந்து அடர்ந்து விட்டால்… உவர் அமில அடர்வில் மிதக்கும் உடல் நீர் மேல்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பகைமை இல்லாது எதுவுமே நடப்பதில்லை.
1.ஒரு பகைமை என்று வந்து விட்டால்
2.“உஷார் தன்மை கொண்டு”
3.நல்லதைக் காக்கும் உணர்வை வளர்த்து விட வேண்டும்.

பகைமை உணர்வுகள் வந்தால் எனக்கு இப்படி நடக்கிறதே…! என்று எண்ணத்தை வளர்த்து விட்டால் அந்த உணர்வின் அணுக்கருக்கள் நமக்குள் வளர்ந்து நோயாகவும் மாறுகின்றது… நமது எண்ணங்களும் சீர் கெடுகின்றது.

அதை மாற்ற வேண்டுமென்றால் துருவ தியானத்தில் கொடுத்த ஆற்றலைப் பருகி அதை வலுப் பெறச் செய்ய வேண்டும்.

எப்பொழுது நம் மனம் சோர்வடைகிறதோ அந்தச் சோர்வை நமக்குள் விடாதபடி தடைப்படுத்த ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருக வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இதைத் தான் கண்ணன் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது.

கர்ப்பமான தாயின் கருவிலே சிசு இருக்கப்படும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கருவிலே இந்த நினைவைச் செலுத்தினால் அந்த உணர்வின் தன்மை அங்கே குழந்தைக்குள் வளர்ச்சியடைகின்றது.

அதே போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைகின்றது. கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தான் நமக்குள் அணுவின் தன்மையாக உருவாகின்றது.

அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கினாலும் அருள் மகரிஷிகளின் அருள் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி எண்ணி அந்த உணர்வினை உயிருடன் ஒன்றி மீண்டும் உடலுக்குள் செலுத்தும் போது
1.இரத்த நாளங்களில் அந்தக் கருக்கள் உருவாக வேண்டும் என்றும்
2.அது எங்கள் உடல் முழுவதும் பரவி உடல் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்றும்
3.வெறும் வாயால் சொல்லக் கூடாது.
4.இந்த நினைவினை உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அது பெற வேண்டுமென்று நினைவினை “உள் பாய்ச்ச வேண்டும்…” (3 & 4 முக்கியம்)

வெளியிலேயே பார்க்கும் பொழுது வேண்டாதவர்கள் யாராவது இருந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் “எனக்கு இப்படிச் செய்தார்கள்…” என்று எண்ணினால் போதும்.

இந்த நினைவலைகள்… கண்ணின் நினைவாற்றல்…
1.அவர் உடலில் நம் உணர்வுகள் பதிவாகி இருப்பதால்
2.அங்கே (அதைப்) போய் உடனே தாக்கச் செய்யும் (EARTH).

எப்படி இராக்கெட்டை விண்ணில் செலுத்தி அதனுடன் தொடர்பு கொண்ட நிலையில் இங்கே தரையிலிருந்து இயக்குகின்றனரோ இதைப் போல “வேண்டாதவர்களை எண்ணும் பொழுது…”
1.உடனே அவர்களை அது இயக்குகின்றது.
2.அவர் செயலாக்கங்களை இடைமறிக்கின்றது
3.அவருக்கு இடையூறு வருகின்றது
4.அந்த அணுக்களின் தன்மை அங்கே வளர்ச்சி பெறுகின்றது… அதன் வழி அங்கே தடைப்படுத்துகின்றது.

இதைப் போன்றுதான் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்து விட்டால் இந்த நினைவு உடனே அங்கே செல்கின்றது. இது நமக்குள் இங்கே வலுப்பெறுகின்றது. வேண்டாதவர் என்ற நிலையில் அவர் உணர்வின் சக்தியைத் தடைபடுத்துகிறது.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அருள் ஒளியை நமக்குள் பெருக்கப் பெருக்க… நமகு யார் தீமை செய்தாலும் “என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்…” என்று எண்ணினால் போதும்.

நாம் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள்…
1.அவர்கள் நமக்குத் தீமை எண்ணும் பொழுதெல்லாம்
2.சிறுகச் சிறுக சிறுகச் சிறுக அவர்களுக்குள் இது ஊடுருவப்பட்டு
3.அங்கிருக்கும் நமக்குத் தீமை செய்யும் அணுக்களைத் தணியச் செய்யும்.

இது போன்ற நிலைகள் வளர்ந்து விட்டால் தீமையான அணுக்கள் நமக்குள் வளராது… நமக்கு நோய் வராது… நம் காரியங்களைத் தடைத்தும் நிலைகளும் வராது.

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானிகளின் ஞான வித்தை உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். அதைக் கூர்ந்து பதிவாக்கினாலே போதுமானது.

ஞானிகளின் அருளாற்றலைப் பெறக்கூடிய தகுதியாக யாம் உபதேசிக்கும் இந்த அருள் உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கரு வளர்ச்சியாகி பின் அணுக்களாகப் பெருகும்.

முதலில் கரு என்பது முட்டை. பின் யாம் பதிவு செய்த உணர்வின் தன்மையை நீங்கள் மீண்டும் எண்ண எண்ண அந்த அணுக்கள் வளர்ச்சி அடைந்து விடுகின்றது.

1.கோழி தான் இட்ட முட்டைகளை எப்படி அடைகாக்கின்றதோ
2.அதனின் உணர்வின் தன்மை உடலில் வெப்பம் ஆகின்றதோ
3.அதன்பின் அந்த அணுவின் தன்மை வெப்பத்தின் துடிப்பு கொண்டு
4.கருவின் துணை கொண்டு அது குஞ்சுகளாக விளைகின்றது.

குஞ்சுகள் வெளி வந்த பின் தாய்க் கோழி எந்த உணவினை உட்கொண்டதோ அதே உணவைக் குஞ்சுகளும் உட்கொள்ளத் தொடங்குகிறது.

அதே போன்றுதான் இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்கள் இரத்தங்களில் கருவாக உருவாகின்றது.
1.அதனை மீண்டும் நினைவு கூறக் கூற… முட்டையின் வளர்ச்சி பெறுகின்றது
2.சாமி சொன்னார்… என்று அடிக்கடி எண்ணும் பொழுது அதை அடை காத்தது போல் ஆகின்றது.

கோழி எங்கே இரை தேடிச் சென்றாலும் தன் குஞ்சின் நினைவு கொண்டு தன் முட்டைகளை எப்படி அடைகாக்கின்றதோ அதைப் போன்று
1.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி உங்களுக்குள் விளைய அடிக்கடி இந்த நினைவுகளை எடுத்து
2.நீங்கள் எத்தொழிலைச் செய்தாலும் இவ்வாறு எண்ணிப் பாருங்கள்.

முதலில் நாம் பதிவு செய்து கொண்ட அந்த உணர்வுகளை நினைவுபடுத்த நினைவுபடுத்த அதை அடைகாப்பது போன்று ஆகி ஞானிகளின் அரும் பெரும் சக்திகள் நமக்குள் விளைகின்றது.

கோழி இரை தேடும் பொழுது கூவி… தன் குஞ்சுகளைக் கூப்பிட்டு அதற்கு எப்படி இரை கொடுக்கின்றதோ இதைப் போல
1.யாம் பதிவு செய்த ஞான வித்து உங்களுக்குள் அந்த அணுவின் கருவாகி விட்டால்
2.இந்த உணர்ச்சியின் கிளர்ச்சிகள் இரத்த நாளங்களில் கிளம்பும்போது
3.உங்கள் உயிர் அந்த உணர்வின் ஒலிகளை வெளிப்படுத்தி
4.காற்றில் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
5.கண் வழியும்… காது வழியும்… உடல் வழியும்… சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் உங்களுக்குள் கொண்டு வந்து
6.சுவாசத்தின் மூலம் உடலுக்குள் பரவச் செய்து அந்தக் கருக்களை உருவாக்குகின்றது.

இந்த வழியில் நடந்து அதனின் வளர்ச்சி பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் “அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்லும்…”

“ஒளி நிலை” பெறும் மார்க்கத்தைக் கொடுத்தவன் மெய் ஞானி

 

1.ஒளியான உணர்வை எடுத்து உடலில் செல்களை மாற்றி
2.உயிரைப் போன்றே ஒளியாக மாற்றும் மார்க்கத்தைக் கொடுத்தான் மெய் ஞானி.

ஆனால் இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கையாக உடல் இச்சைக்கே கொண்டு செல்கின்றார்கள்… இருளின் நிலைகளுக்குத் தான் சிக்க வைக்கின்றார்கள்.

இந்த மனிதனுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்ற நிலையை எண்ணவில்லை.

அதே சமயத்தில் இந்த உடலின் உணர்வினைப் பெருக்குவதற்கு அதர்வண வேதம் (யாகம் வேள்வி மந்திரங்கள் சொல்தல்) என்று இந்த வாழ்க்கையே சொர்க்கம் என்ற நிலையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ வைத்து விட்டார்கள் பக்தி மார்க்கத்தில் அனைவரையும்.

எப்படி…?

பிறருடைய தோஷங்கள் சேர்ந்து விட்டால் பிரதோஷம் என்று பிரதோஷத்தை நீக்க சிவன் கோவிலில் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியான உணர்வுகளைச் செயல்படுத்தப்பட்டு அந்தப் பிரசாதத்தை எடுத்து நந்தீஸ்வரன் வாய்க்கு அருகில் கொண்டு சென்று… காதிலே போய் சிவனிடம் சிபாரிசு செய்யச் சொல்கிறார்கள்.

1.என் பையன் சொன்னபடி கேட்கவில்லை
2.கடன்காரர்கள் பணத்தைத் திரும்பத் தராது எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்
3.எல்லோருக்கும் நான் நல்லது தான் செய்தேன். சந்தோசம் தான் படுத்தினேன்
4.ஆனால் என் வீட்டில் கஷ்டமாகவே வந்து கொண்டிருக்கின்றது.
5.நீ ஈஸ்வரனிடம் சொல் என்று இப்படி நம்மை செயல்படுத்தும்படி அஞ்ஞானிகளாக மாற்றி விட்டார்கள்.
6.மெய்ஞானியாக நம்மை வளர்க்கவில்லை… வளரவிடவில்லை…!

நன்றாக யோசனை செய்து பாருங்கள்

மற்றவருடைய கஷ்டங்களைக் கேட்டோம்… கேட்டறிந்து உதவியும் செய்தோம்.
1.ஆனால் அந்தக் கஷ்டங்கள் நமக்குள் அணுக்களாக விளைந்து விடுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நம்மையும் சங்கடப்பட வைக்கிறது… வேதனைப்படச் செய்கின்றது… உடல் நோயாகிறது மன நோயாகிறது.

இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் அங்கே ஆலயத்தில் அபிஷேகத் தத்துவங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.

தெய்வத்திற்கு அபிஷேகம் நடக்கப்படும் பொழுது பன்னீரைப் போன்ற தெளிந்த மணம் பெற வேண்டும்… சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும்… மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்… “நமது உயிரிலே இது அபிஷேகம் நடக்கிறது…”

1.நாம் நுகரும் ஈந்த அருள் உணர்வுகள் உயிருக்குள் பட்ட உடனே நாதங்களாக மோதி
2.உணர்ச்சிகளாக உடல் முழுவதும் படர்ந்து இயக்கும் பொழுது நம் நல்ல குணங்களை இயக்க முடிகின்றது.
3.இந்த உணர்வு நமக்குள் சென்ற உடனே சுவையும் கிடைக்கின்றது நறுமணமும் கிடைக்கின்றது நம் ரத்தங்கள் முழுவதிலும் அது படர்கின்றது.
4.உயிர் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றது.

ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எதை வளர்க்க வேண்டும்… உயர்ந்த சக்திகளை எப்படி வளர்க்க வேண்டும்…? மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று தான் கோவிலிலே காட்டுகின்றார்கள்.

நாம் அதன்படி இப்பொழுது வணங்குகின்றோமா…? நம்மைத் தூய்மைப்படுத்துகின்றோமா…? உயர்ந்த சக்திகளை எண்ணி எடுத்து வளர்த்துக் கொள்கின்றோமா…?

சற்று சிந்தனை செய்து பாருங்கள்.

தியானம் எடுப்பவர்களுக்கு “வேக குணம்” ஆகாத ஒன்று…!

 

மண்ணிற்குள் மறைந்திருக்கின்றது கிழங்கு. பசியின் வேகம் இருந்தாலும் அந்தக் கிழங்கினை அகழ்ந்து எடுக்கின்ற செயல்… மிருக இனங்களில் ஒன்றான காட்டுப்பன்றி மூர்க்க குணம் கொண்டே வளர்ந்தது அதன் செயல்.

பூமிக்குள் மறைந்து கிடக்கும் கிழங்கை அறிந்து கொண்டு தன் கொம்புகளால் மண்ணை அகழ்ந்தது. அந்தக் கிழங்கைப் பற்றி எடுக்கின்றது. காரணம் பசியின் வேகம்…!

காட்டுத் தீ பற்றி எரிகின்றது. பிறகு பெய்கின்ற மழைக்குப் பின் மண்ணிற்குள் மறைந்து கிடக்கும் கிழங்கு துளிர்விட்டுத் தழைத்து வளர்கின்றது.

பெரும் நெருப்பாகப் பற்றி எரிகின்ற காட்டுத் தீ… மரம் செடி கொடிகள் பசும்தளிர்கள் அனைத்தையும் பஸ்பமாக்கிப் பின் ஒருவாறு அடங்குகின்றது.

காய்ந்த மரம் பற்றி எரிகின்ற பொழுது பசுமை நிறைந்த மரங்களையும் தன் வெப்ப நாக்குகள் வெளிப்படுத்திடும் உஷ்ணத்தினால் தகித்து… பின் அதுவும் கனன்று பற்றிக் கொள்கின்றது.

அந்த வனத்திற்குள் வாழ்கின்ற கொடிய ஜந்துக்கள் அப்பொழுது வாழ்வது எங்கே…?

மண்ணிற்குள் மறைந்த கிழங்கை அகழ்ந்து எடுத்திடும் காட்டுப் பன்றியானது பசியின் வேகத்தால் கிழங்கினை அறிந்து கொள்ளும் அறிவு பெற்றது தான்.

இருந்தாலும்…
1.காட்டுத் தீயின் பெரும் நெருப்பில்… பன்றி தன்னைக் காத்துக் கொள்ள ஓடிடும் வேகத்தைக் காட்டிலும் நெருப்பின் வேகம் அதிகம்.
2.மூர்க்கத்தனமான அறிவு அங்கே செயல்படாது ஒழிந்தது.
3.குணங்கள் அறிவுறுத்தும் தன்மைகள் அனைத்திலுமே மனத்தின் பக்குவம் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

திருமுல்லைவாயில் என்னும் இடத்தில் பௌர்ணிகர் ஒருவர் காட்டு வழிப் பாதையில் தாகத்திற்கு அருந்த நீர் கிடைத்திடாத வனப்பகுதியில் நீருக்காக அலைந்து ஏங்கி ஓடிய பொழுது பற்றிக் கொண்ட காட்டுத் தீயானது விரட்ட… ஓடி அலைந்து அவருடைய உயிர் நீங்கப் பெறும் தருவாயில் “வேதாள மாமகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டார்…!”

அவர் அன்று ஒலித்த ஞானத்தின் சுடர்தல்… இன்றும் இந்தக் காற்று மண்டலத்தில் ஓடி உலவுகின்ற கருத்தின் கோர்வைகளப்பா.
1.அப்பொருள்களையே இங்கே உரைக்கின்றோம்…
2.உரைத்துக்கொண்டே வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞானிகள் எத்தனையோ நிலைகளில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உருவாக்குகின்றனர்.

உதாரணமாக நாம் ரோட்டிலே நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். போகும் பாதையிலே ஒரு அழுத்தமான மிளகாய் நெடி காற்றிலே கலந்து வந்தால்
1.எவ்வளவு திறமையுள்ளவராக நாம் இருந்தாலும்
2.அதைச் சுவாசிக்கும் போது… அந்த நேரத்தில் நல்ல குணங்களை மாற்றிவிட்டு நம்மைத் தும்ம வைத்து விடுகின்றது
3.சிந்திக்கும் தன்மையை அந்த இடத்தில் இழக்கச் செய்துவிடுகிறது.

அது எலக்ட்ரானிக் ஆக மாறுகின்றது.

அதாவது… எதனுடைய உணர்வைச் சூரியனின் இயக்க அணுக்கள் (வெப்பம் காந்தம்) கவர்கின்றதோ அதை நாம் நுகரப்படும் போது அதனின் உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்கி விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுதான் நம்மை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். இருந்தாலும் அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.

ஆனால் சில சந்தர்ப்பங்களில்…
1.ஒருவரைப் பார்த்தபின் இனம் புரியாது அவன் மேல் வெறுப்பு வரும்
2.இனம் புரியாத சோர்வு நமக்குள் வரும்
3.சும்மா பார்த்தாலே… இனம் தெரியாத சிந்தனைகளும் வரும்
4.ஏன்… எதற்கு…? நம் மனம் அப்படி மாறுகிறது…! என்று நிலை கூட வந்துவிடும்.

காரணம்… மனித உடலிலிருந்து வரக்கூடிய அந்த உணர்வின் தன்மை நம்மை அறியாது இயக்குவதை நாம் அறிய முடியவில்லை.

விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்கி அதிலே காந்தப் புலனையும் கெமிக்கலும் கலந்து எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பேழைகளை உருவாக்குகின்றனர்.

1.தட்டும் போது மோதலின் அதிர்வின் ஒலி அலைகள் எப்படி வருகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு அது இயக்கி அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப
3.எதிர் நிலை வரும்போது எலக்ட்ரானிக் ஆக மாற்றி
4.எவ்வளவு பெரிய இயந்திரமாக இருந்தாலும் அதை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் நம் உடலான இந்த இயந்திரத்தை… நம்மை இயக்கிவிடுகின்றது. அதனால் இனம் புரியாது சோர்வடைந்து விடுகின்றோம்.

உதாரணமாக ஜோதிடம் ஜாதகம் பார்ப்போரெல்லாம் தன்னிடம் வருபவர்களைப் பார்த்துப் பார்த்து
1.ஒரு வார்த்தையை விட்டு அதற்கப்புறம் என்ன வருகிறது…? என்று பார்ப்பார்கள்…
2.நம்மிடமிருந்தே தெரிந்து கொள்வார்கள்.

அதை வைத்து… நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்…! என்று சொல்வார்கள் காரணம்… அதே குறிக்கோளாக இருப்பதால் அவர்களால் என்ன… ஏது..? என்று சொல்ல முடிகிறது.

ஆனாலும் மற்றவர்கள் குடும்பத்தில் நடந்த கஷ்டத்தை எல்லாம் கேட்டு வாங்கிக் கொண்ட பின் கடைசியில் அவரால் அவரைக் காக்க முடியாது. அவர் குடும்பத்தில் பார்த்தோமென்றால் பல தரித்திரங்களும் பல சங்கடங்களும் பல வெறுப்புகளும் தான் இருக்கும்.

வயிற்றுப் பிழைப்புக்காக ஜாதகம் பார்த்தாலும்…
1.பிறருடைய உணர்வின் அதிர்வுகளைச் சேர்த்து சேர்த்து
2.பிறருக்கு ஜோதிடம் சொன்னாலும் இவர் வாழ்க்கை பாழாகிவிடும்.

அதே போல் தான் மந்திர ஒலிகளைச் சேர்த்துப் பிறரை இயக்கலாம். பின் இதுவும் பாழாகி உடலுக்குப்பின் பிறருடைய ஈர்ப்புக்கு அவர் ஜெபித்த மந்திரத்தால் ஈர்க்கப்பட்டு முதலிலே இவன் எதைச் செய்தானோ அங்கே போய் அதற்குத் தான் பயன்படும்.

இது எல்லாம் சாகாக்கலையாக… ஒரு உடலில் விளைந்தது மீண்டும் மீண்டும் அடுத்த உடலிலே சுற்றிக் கொண்டிருக்கும். கடைசியில் யானை தேய்ந்து கட்டெறும்பானது போன்று மனிதனல்லாத உடலாகத் தான் போக நேரிடும்.

ஆகவே மனித உடலிலே குறுகிய காலமே வாழுகின்றோம் என்பதை உணர்தல் வேண்டும். சிறிது காலமே வாழ்கின்றோம்… என்பதை
1.“நேரமாகி விட்டது…” என்று இராமன் மனதைக் குவித்தான் (மணலைக் குவித்து சிவலிங்கமாக்கிப் பூஜித்தான்) என்று இராமாயணத்தில் அதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
2.வளர வளர உடலின் தரமும் குறைகின்றது… ஆயுளும் குறைந்து கொண்டே வருகிறது…!
3.இதற்குள் நாம் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலைப் பெற வேண்டும் என்றால் நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்.

பகைமைகளை அகற்றி நம் பார்வையால் மற்றவர்களுக்கும் அந்தத் தீமைகள் அகலும் சக்தியாகச் செயல்பட வேண்டும்.

இந்த உலகில் இருளை ஒளியாக மாற்றி… விஷத்தை ஒளியாக மாற்றிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாமும் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக என்றும் நிலையாக ஏகாந்த நிலையாக வாழ முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கேள்வி:
நண்பர் ஒருவர் வயிற்று வலி என்று என்னிடம் வந்தார். வலி நீங்கிவிடும் என்று சொன்னேன். அவருக்கு நன்றாகி விட்டது… ஆனால் எனக்கு வயிற்று வலி வந்துவிட்டது. இதற்கு என்ன காரணம்…!

பதில்:
தியான வழியில் பொதுவாக என்ன செய்கிறார்கள்…? நமக்கு இந்த உயர்ந்த சக்தி கிடைத்தது என்று எல்லாம் செய்கின்றார்கள். ஆனால் பிறருடைய தீமையான உணர்வுகள் தனக்குள் வராதபடி முதலில் ஆத்ம சுத்தி செய்வதில்லை.

நாம் ஆத்ம சுத்தி செய்து விட்டால் அந்த நோய் நமக்கு வராது தடுக்கப்படும். அதற்குப்பின் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று சொன்னால் அவர்கள் உடலும் நலமாகும்.

அப்படி இல்லாதபடி…
1.எடுத்த உடனே அவர் உடல் எல்லாம் நலமாக வேண்டும் என்று பாசத்தால் எண்ணினால்
2.உடனே ஜிர்ர்ர்ர்ர்… என்று உங்கள் உடலுக்குள் அவர் உணர்வு வந்துவிடும்
3.அவர் நன்றாகி விடுவார் உங்களுக்கு வயிற்று வலி வரத் தான் செய்யும்.

உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆத்ம சுத்தி என்ற வலுவான ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். நாம் எடுக்கக்கூடிய உணர்வுகள் அந்தப் பக்தி மார்க்கத்தின் வழி வந்ததால் அத்தகைய பாச உணர்வின் செயலே வருகின்றது.

குருநாதரின் உடலிலே எல்லாமே உண்டு. அவரும் பக்தியின் நிலைகளில் செயல்பட்டவர் தான். அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் எத்தனையோ இருக்கிறது.

ஆனால் அவர் உடலிலிருந்து
1.அருள் ஞானத்தைப் பெற்ற உணர்வுகளும் உண்டு
2.இருளை அகற்றிய உணர்வுகளும் உண்டு
3.விஷத்தை நீக்கிய உணர்வுகளும் உண்டு
4.ஒளியான உணர்வுகளும் அவரிடம் உண்டு

இப்பொழுது யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது இருளை நீக்கும்… நஞ்சை வெல்லும்… உணர்வுகளைத் தான் உங்களிடம் கொடுக்கின்றோம் இதை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு மற்ற தீமைகள் வராது தடுக்கலாம்.

நான் தியானம் செய்தேன். பாருங்கள்… எண்ணியபடி நடக்கின்றது என்று சொன்னாலும் உங்களுக்கு வயிற்று வலி ஏன் வருகிறது…?

அதற்குத் தான் இதைச் சொல்வது.

எப்போதுமே முதலில் அந்த ஞானத்தின் வழியில் அருள் சக்திகளை எடுத்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்டு அதற்குப் பின் “உங்களுக்கு நோய் நீங்கிவிடும்” என்று மற்றவரிடம் சொன்னால் சரியாகும்.

இல்லாமல் போனால் அவர்கள் உடலில் இருப்பதை இழுத்து உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும். அவர் நன்றாக ஆகிவிடுவார்.

ஆகவே எப்போதுமே ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும்.
1.சந்தர்ப்பத்திற்குத் தக்க அந்த உணர்வின் ஞானங்களும் வரும்.
2.அந்த ஞானத்தை அருள் வழியில் பயன்படுத்த வேண்டும்
3.நடக்கின்றது என்ற ஆர்வத்தில் பக்குவமில்லாது செய்தால் அதில் சில தீமைகளும் வந்துவிடும்.

குருநாதர் சொன்ன முறைப்படி காட்டிற்குள் நானும் செல்லப்படும்போது ஒவ்வொரு மிருகங்களுக்குத் தக்கவாறும் சில உணர்வுகளை எடுத்து அந்த ஒலி அலைகளை எழுப்பினால் எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.

யானைக் கூட்டம் இருந்தால் அதற்கென்று ஒரு ஒலி அலைகளை எடுத்துப் பரவச் செய்தால் யானைகள் அமைதியாக இருக்கும்.

இத்தகைய உபாயங்களைக் காட்டிற்குள் செய்தாலும் நாட்டிற்குள் மோசமான கரடி புலி எல்லாமே இருக்கின்றது. இதில் இருந்து எப்படித் தப்பிப்பது…?

காட்டிலே தப்பித்தாலும் நாட்டிற்குள் மனிதர்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால் முடியாது. உடனே அது நம் மீது பாயும். ஒருவருக்கு நன்மை செய்தால் உடனே பதிலுக்கு எப்படி இடைஞ்சல் செய்ய வேண்டும்…? என்று திரும்ப வரும்.
1.நீங்கள் ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள்
2.அவர்கள் அடுத்து நிமிர்ந்த உடனே நீங்கள் தாழ்ந்து விடுவீர்கள்

அதனால் நாம் எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

மற்றவர்களைத் தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யத் தூண்ட வேண்டும்.
1.நீங்கள் இதைச் செய்யுங்கள்… உடல் நலமாகும்…! என்று சொல்லி இந்த வாக்கினை பதிவு செய்ய வேண்டும்
2.ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதை எடுக்கச் சொல்ல வேண்டும்.

நானும் (ஞானகுரு) எத்தனையோ பேருக்கு ஆசீர்வாதம் செய்கிறேன். இந்த உணர்வுகள் அங்கே சென்று வேலை செய்கின்றது… நோய் கீழே இறங்குகிறது. நான் அதை இழுத்துக் கொள்வதில்லை.
1.ஆனால் நீங்கள் இழுத்துக் கொள்கின்றீர்கள்.
2.அப்படி இழுப்பதால் தான் அந்த வயிற்று வலி உங்களுக்கு வந்தது.

என்னிடம் எத்தனையோ மோசமான நிலையில் வருகின்றார்கள். அதை எல்லாம் என் உடலில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…? எனக்கு ஒர் பாதுகாப்பு கட்டிக் கொண்டு வரவேண்டும் அல்லவா.

அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்

 

பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் அதை மீண்டும் ஏற்றிக் கொள்வது போன்று
1.ஒவ்வொருவரும் அதிகாலை துருவ தியானத்தைச் சீராக எடுத்துக் கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அதிகரித்துக் கொண்டால்
3.அன்றாட வாழ்க்கையில் வருவதையெல்லாம் நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.

காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ பேரைச் சந்திக்க நேர்கின்றது. சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் போன்ற உணர்வுகளை நாம் சந்திக்க நேர்கின்றது.

அப்படி நாம் பார்த்து கேட்டு நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்காது தடைப்படுத்த… “துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை உடனடியாக துரிதமாக ஏங்கி நம் உடலுக்குள் செலுத்தினால்” தீமைகள் நமக்குள் புகாது தடுக்க உதவும்.

காலையில் இந்த நினைவலைகளை நாம் அதிகமாகப் பெருக்கி அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க
1.துருவ நட்சத்திரத்துடன் நம்முடைய பற்று அதிகரிக்கின்றது…
2.இந்தப் புவியின் பற்றைத் தகர்த்துக் கொண்டே வருகின்றோம்.
3.எந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை அதிகமாக எடுத்தோமோ… உடலுக்குப் பின் நம்மை அங்கே அழைத்துச் செல்லுகின்றது நம் உயிர்.

இந்த உடலில் சேர்த்த உணர்வுகள் தீமை என்றால்…
1.துருவ நட்சத்திரத்தின் அருகிலே செல்லும் பொழுது இந்த உடலில் பெற்ற தீமைகளை அங்கே கருக்கி விட்டு…
2.இருளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.
3.எத்தகைய நஞ்சு இருந்தாலும் அதை மாற்றி விடுகின்றது.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உட்கொண்டாலும் அந்த விஷமே அதற்குள் மீண்டும் சேமித்துச் சேமித்து நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் நமது வாழ்நாளில் அருள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

மனிதராக இருக்கும் நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

மிருகங்கள் தான் வாழத் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உணர்வைச் சுவாசிக்கும் பொழுது… அந்த உணர்வை வளர்த்து உடலுக்குப் பின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த உடலைப் பெறுகின்றது.

ஆனால் மனிதன் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு இருப்பினும் பிறருடைய நோய்களைக் கேட்டறியும் போது உதவி செய்தாலும் அந்த நோய் மிகவும் வலிமையானது… விஷம் கலந்தது.

அதை நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது. பின் நல்ல குணங்களை வீழ்த்தி விடுகின்றது.

இந்த உணர்வுகள் கலக்கக் கலக்க மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நலிந்து அணுக்கள் மடியத் தொடங்கும். நம் உடல் உறுப்புகளும் குறையத் தொடங்கும்.

உடல் குறைந்து விஷத்தின் தன்மை பெருகும் பொழுது உயிர் உடலை விட்டுச் சென்று மனிதரல்லாத உருவை உருவாக்கி விடும்.

அதை மாற்றியமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை சேர்க்கச் சேர்க்க
1.உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா எதன் வலுக் கொண்டதோ
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருகிலே நம்மை அழைத்துச் செல்லும்.

தீமைகளைக் கருக்கிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகள் பட்டப்பின் மனித வாழ்க்கையில் நாம் சேர்த்துக் கொண்ட தீமைகளை அங்கே கருக்கிவிட்டு… உயிரின் ஈர்ப்பு துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்பட்டு பேரருள் பேரொளி என்று ஒளியின் சரீரமாக… அழியா ஒளிச் சரீரமாக பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

உயிர் தோன்றி மனிதனாக வளர்ச்சி பெற்ற பின்பு தான் முழுமை அடைய முடியும்… உயிர்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகள் பெற்ற ஒளிச் சரீரத்தை நாமும் பெறுவோம்.
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் பெற்று
2.இல்லற வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்.

எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!

 

மண்ணினால் பாண்டங்கள் செய்கின்றான் கலைஞன். அந்தக் குயக்கலைஞன் பாண்டங்கள் வடித்திடும் பொழுது
1.தன்னுடைய ஆகாரத்திற்காகத்தான் அந்தத் தொழிலைச் செய்கின்றான் என்றாலும்
2.“மனக்கருவின் திருவை” (திருவை – பானை செய்யும் சக்கரம்) செய்தொழில் கலையாகச் சிறக்கச் செய்கின்றான்

(பானைகள்) குயக்கலங்கள் வடிவத்தில் சிறிதாக இருந்தாலும்… அந்த உருவம் தந்திடும் எண்ணத்தின் சிறப்பு… “எண்ணுவதால் கலத்திற்கும் சிறப்பு…!”

குயக்கலத்தின் சிறப்பை… செயலின் திறத்தை எண்ணுகின்ற மனம்… உயிர்த்தொகைகள் வடிவு எடுக்கின்ற எண்ணற்ற பிறவிகளில் மானிடப் பிறப்பே பகுத்தறியும் ஆற்றலின் வன்மையால் காணச் சிறப்பு எது…?

குரல் – உடல் என்றும்… குருமுனி என்றும் அழைக்கப் பெறுதலின் குரல் உடல் கொண்ட மனிதன் குருமுனிவன் ஆன விதம் என்ன…? குரல் உடல் பெற்ற சிறப்பு.

குயக்கலம் போல்…
1.குரல் உடல் பெற்றுக் கொண்டிட்ட மனிதன்… வளர்த்துக் கொண்டிட்ட விதம்
2.“காணாச் சிறப்பே கண்ணுறும்…” என்ற சொல்லுக்கொப்ப செய்தொழில் செய் திறத்தால் அமைவது என்னும் பாங்கில்
3.மெய்ஞானம் மெய்ஞான விழிப்பாகி… முகிழ்ந்த பின் மெய்ஞானச் சுடர் எனும் சுடர்தல் தன்மையாக
4.குரல் உடல் குருமுனியாகி… மாமகரிஷியாகி சப்தரிஷிகளுடன் கலந்து வாழ்ந்திடும் இயக்க நிலையை…
5.ஞானச் செல்வங்கள் அறிவால் அறிந்துணர்ந்து அதைப் பெற்று உயர்ந்திடவே அழைக்கின்றோம்.

சூரியன் தன் முகம் காட்டிய பின்பே உயிர்த்தொகைகள் உருக்காட்டுகின்றன (கண்ணுக்குப் புலப்படுவதாக) என்றால் என்னப்பா…?

சகல ஜீவன்களும்… ஜீவ ஆதார வித்துக்களும்… உயிரணுக்கள் தன்மையில் வளர்ந்த ஆத்மாக்களும்… ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு உயர்நிலை வளர்ப்பாக்கும் மெய் ஒலி… ஒளியின் கூட்டுறவாம் இயக்க சுருதி நாத லய மறைபொருள் தன்மைகள் என பல பல உரைத்தாலும்
1.இருளுக்குப் பின் ஒளி கண்டு இருளினில் மறைந்த பொருள்கள் புலப்பட்டு
2.கட்புலனாய்க் (நமக்குத் தெரியக்கூடியதாக) காணப்பட்டு உணர்கின்றோம்.

ஆக… எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!

1.உணர்கின்ற தன்மையே (தன்னைத் தான் அறிதல்) மனத்தின் ஒளியாகும்
2.அந்த ஒளியினால் கருக்கொள்ளும் மனத்தின் திரு ஆத்ம முலாமாகச் சுடர்ந்திடவே…
3.மறைபொருள் தன்மைகளை (மறைக்கப்பட்ட… மறைந்து போன… உண்மைகளை) இங்கே உணர்த்துகின்றோம்.

குணங்களின் செயல் வளர்க்கின்ற தன்மைகளில் மனத்தின் கருவே வித்தாக… சகல ஜீவராசிகளும் உலகோதய நடைமுறை மனித மனத்தில் உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வெள்ளம் வருவதற்கு முன் அணை போட்டுத் தடுத்துக் கொள்வது போல் தீய சக்திகள் உங்களுக்குள் புகாதபடி தியானத்தின் மூலம் அருள் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.இதற்குக் காசோ… பணமோ… ஒன்றும் தேவையில்லை.
2.அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து ஒரு அரை மணி நேரம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.அந்தச் சக்தியினை உங்களுக்குள் வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.

யாம் (ஞானகுரு) ஆரம்பத்தில் கொடுத்த உபதேசங்களை யாரும் எட்டிப் பிடிப்பது என்றால் சிரமம். உபதேசம் கேட்ட பழைய அன்பர்களுக்குத் தெளிவாகத் தெரியும். எக்ஸ்பிரஸ் மாதிரி ஓடிக் கொண்டே இருக்கும். யாரும் அர்த்தம் காண முடியாது.

ஆனால் இப்போது எல்லோருக்கும் அர்த்தம் புரியும் அளவிற்குச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

காரணம் முன்னாடி சில ரகசியங்களை எல்லாம் சொல்வேன். மந்திரவாதிகள் அதைத் திருடிச் சென்று விடுவார்கள் என்பதற்காக… பட்டும் படாமல் அவர்களுக்குப் புரியாமல் இருப்பதற்காக்க் கட…கட…கட… என்று உருட்டிக் கொண்டு செல்வேன்.

இப்பொழுது அது எல்லாம் இல்லை.

உலகம் இன்று மிகவும் மோசமான நிலையில் இருள் சூழும் நிலையாக இருப்பதால் எல்லோருக்கும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பவரைக் (POWER) உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

1.இதை கேட்டவர்கள் நீங்கள் தயாரானால் போதும்
2.இந்த உலகையும் காக்கலாம்… ஊரையும் காக்கலாம்… உங்கள் வீட்டையும் காக்கலாம்…!

யாம் சொல்லும் உபதேசக் கருத்துக்களை முறைப்படுத்திக் கொண்டு பக்குவப்படுத்தி கொண்டு வந்தாலே போதுமானது. நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. சிரமத்திலிருந்து நீங்கள் விடுபடுவதற்கான வழிகளைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நான் சிரமப்பட்டேன்… தெளிந்தேன்…! அந்தத் தெளிந்த உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும் என்று குரு வழியில் உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.இதில் நீங்கள் யாராவது தயாரானால் தான் உண்டு
2.அரையும் குறையுமாக விட்டு விட்டுச் செல்ல முடியாது
3.அது போன்ற நிலை இல்லாதபடி நீங்கள் வளர்ந்து காட்ட வேண்டும்.

காற்று மண்டலமே இன்று நச்சுத் தன்மையாக மாறி விட்டது. கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படிச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ இதைப் போலக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கி உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

இந்தச் சூரியனும் அழியக் கூடியது தான். அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய பூமி எந்த நேரம் தலை கீழாக ஆகும்…! என்றும் சொல்ல முடியாது. அணு குண்டுகள் வெடித்தால் போதும்.

ஏனென்றால் குறுகிய காலமே இருக்கின்றது. 2004க்கு மேல் உலகம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. எங்கே பார்த்தாலும் தீவிரவாதம்..! அந்தக் கடுமையான உணர்வுகள் காற்றலைகளில் பதிவாகின்றது.

பத்திரிக்கையிலும் டிவியிலும் பார்த்து அதை எண்ணும் போது நமக்குள்ளும் தீவிரவாதம் ஆகிவிடுகின்றது.
1.நம்மை அறியாமலே பகைமைகள் வருகின்றது
2.நம்மை அறியாமலே உடலுக்குள் தீமைகள் வருகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

எப்படியும் நீங்கள் சிறிது பேராவது முந்திக் கொண்டீர்கள் என்றால் அதை வைத்து மற்றவர்களுக்கும் நன்மை செய்ய முடியும்.

நான் ஒருவன் இருந்தால் போதுமா…! நீங்கள் எல்லோரும் தயாராக வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதைச் சொல்கிறேன்.

உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம். அதன் மூலம் நன்மைகள் நடக்கிறது என்றால் அதில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை
1.இந்த மாதிரித் தெரிகின்றது
2.இதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும்…?
3.எப்படிப் பக்குவப்படுத்துவது…? என்று எம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாமியிடம் (ஞானகுரு) எப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்வது…? என்று எண்ண வேண்டியதில்லை. தெரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அதிகாலையிலேயே தினமும் உங்களுக்கு உயர்ந்த சக்தியை ஏற்றிக் கொடுப்பது.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்…
1.ஆயிரம் பேருக்குப் பல தீமைகளைப் போக்க முடியும்
2.உங்கள் அரவணைப்பில் ஆயிரம் பேரைக் காப்பாற்ற முடியும்.

ஆகவே பழமையையே எண்ணாதபடி எதிர்காலத்தின் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள ஆர்வத்தைக் காட்டுங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் உபாதைகளோ வந்தால்
2.நாம் சரியான முறையில் தியானம் எடுத்து வந்தால்
3.அந்தக் கஷ்டத்தை மாற்றுவதற்குண்டான ஞானமும்… அதை எப்படி வழி நடத்த வேண்டும் என்ற உபாயமும்… வரும்.

சங்கடங்கள் வரப்படும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்போது சலனம் சஞ்சலம் சங்கடம் இதையெல்லாம் நீக்கிவிட்டு
1.எது உண்மையோ அதை உணர்ந்து
2.அதற்குத் தக்க நம்முடைய எண்ணங்களைச் சீராக்குவதும்… நல்ல செயல்களைச் செயல்படுத்தவும் முடியும்.

உடல் உபாதை உற்றவரைப் பார்க்கும் பொழுது முதலிலே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அது சிறு குழந்தையாக இருந்தாலும்… தன்னால் வெளியிலே சொல்ல முடியவில்லை என்றாலும்
1.எலக்ட்ரிக் எலகட்ரானிக் என்ற உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் பாய்ச்சும் மகரிஷிகளின் அருள் சக்தி அந்தக் குழந்தை உடலில் ஊடுருவி அங்கே இயக்கச் சக்தியாக மாற்றும்.

“முடியவில்லை…” என்பவர்களுக்கு இருதயத் துடிப்பு நின்றாலும் கூட இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு அந்த இருதயத்திற்கு மேல்… “கை வைத்தோம்…” என்றால் அந்தத் துடிப்பு மீண்டும் வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் மிகவும் பழுதாகி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. திடீரென்று எதிர்பாராதபடி சில நிலைகள் வந்திருந்தால் அதை மீண்டும் இயக்க வைக்க முடியும்.

இருதயத்திலிருந்து வரக்கூடிய நிலைகளால் அங்கே துடிப்பிலே ஏதாவது சிறிது பிசகானால் இருதயத்திற்கு மேல் கையை வைத்தவுடனே இயங்கிவிடும்.

ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறுமூளையில் உள்ள நுண்ணிய நரம்புகளில் பழுதாகி அதனால் இருதயம் சரியாக இயங்கவில்லை என்றால் அது ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவே
1.இதைப் போல ஒவ்வொரு சந்தர்ப்பமும்… ஒவ்வொரு நோய்க்கும்… ஒவ்வொரு விதமாக இருக்கும்.
2.இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தான்.

அதைப் பெற வேண்டுமென்று வலுவான நிலையில் எண்ணி நமது பார்வையைச் செலுத்தி அதே உணர்வுடன் நம் கையைக் குழந்தையின் உடலில் வைத்தால் அதை எழுப்ப முடியும்.

ஆக… சிறு குழந்தையால் எண்ண முடியாது… அதனால் சொல்ல முடியாது… சொன்னால் கேட்க முடியாது…! என்று இருந்தாலும் கூட உடலில் கையை வைத்தோம் என்றால் அங்கே வேலை செய்யும்.

உதாரணமாக… நாம் வேலை செய்யும் இடத்தில் ஆபீஸர் நம் மீது கோபப்பட்டு… நமமைக் குறை சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தக் குறை நமக்குள் வராதபடி ஆத்மசுத்தி செய்து விட்டு
2.அவர் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் நம் மீது அவருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்றும் எண்ணினால்
3.இந்த உணர்வு அங்கே ஊடுருவும்.

ஆனால் நாம் தவறு செய்துவிட்டு ஆபீஸர் நமக்குச் சாதகமாக வரவேண்டும் என்று சொன்னால் அது நடக்காத காரியம்.

நமக்குள் தப்பு இல்லாத நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு செய்துவிட்டு தவறுக்குச் சரியான மார்க் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது தவறான நிலைகள்.

ஆகவே உண்மை என்று தெரிந்தால் ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.அவர் என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் அது நல்லதாகும்.

இதை எல்லாம் ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டால் நம்முடைய மன உறுதியும் நாம் எடுக்கும் அருள் உணர்வும் தீமையிலிருந்து விடுபடக் கூடிய சக்தியாக நமக்குள் வருகின்றது…!

ஒவ்வொருவருக்கும் இது போன்ற சந்தர்ப்பங்கள் உண்டு. இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் மாற்றி அமைக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

ஞானிகள் பெற்றதைப் போன்று ஒளிச் சரீரம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய தியானம்

 

அன்று சப்தரிஷிகளாக வாழ்ந்தவர்கள் அவரில் கண்டறிந்த உணர்வுகள்… தெளிந்த உணர்வுகள் அவர்கள் உடலில் விளைந்ததை… சொல்லின் மூலமாகவும் செயல் வடிவிலும் வெளிப்படுத்திய
1.அந்தப் பேரருள் உணர்வுகள் அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு
2.அந்த அருள் உணர்வுகள் வான் வீதியில் நம் பூமியில் பரமாக இருக்கின்றது
3.பரமாத்மாவாகக் கலக்கப்பட்டுள்ளது… பரத்தின் ஆன்மாவாக.

தாவர இனங்கள் தன் உணர்வின் சத்தைக் கவர்ந்து செடிகளாக விளைந்தாலும் அதனின்று வெளிப்படும் சத்து… அதுவும் இந்தப் பரமாத்மாவில் தான் கலந்துள்ளது.

அந்தந்தத் தாவர இனங்களில் விளைந்த வித்துகளை எடுத்து நிலத்திலே ஊன்றப்படும் பொழுது… புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தன் தாய் செடியின் சத்தினைக் கவர்ந்து… அதன் வழி வளர்ந்து அதன் உணர்வுகள் குணங்கள் அனைத்தும் விளைந்து… மீண்டும் தன் தன் இனத்தின் வித்துகளை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் சப்தரிஷிகள் தனது வாழ்க்கையில் தன்னை அறிந்து இருளை அகற்றி பேரருள் பெற்றுப் பேரொளியாக ஆன அவர்கள் உடலிலிருந்து வெளிவந்த உணர்வுகள் அனைத்தும் இங்கே பரமாத்மாவாக இருக்கின்றது.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்… எமக்கு அருளிய அருள் வழிப்படி யாமும் கண்டுணர்ந்து
2.அருள் உணர்வை எமக்குள் வளர்த்துச் சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்தும் போது இந்த பரமாத்மாவில் இதுவும் படர்கின்றது.
3.சொல்லப்படும் பொழுது எவரெவர்கள் இதைக் கவர வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தறிகின்றனரோ
4.கவர்ந்த உணர்வுகள் வித்தாக அவர்களுக்குள் பதிவாகின்றது.

நிலத்திலே எப்படிப் வித்துக்களைப் பண்படுத்தி அதைச் சீராக வளர்க்கின்றோமோ இதைப்போல மகரிஷிகளின் உணர்வலைகளைப் பெறக்கூடிய சத்தாக… “உங்களுக்குள் ஞான வித்தாக இப்பொழுது பதிவு செய்கின்றேன்…”

நீங்கள் எந்த அளவிற்கு அதைப் பெற வேண்டுமென்று கவர்கின்றீர்களோ அந்த அளவிற்கு அது பதிவாகி விடுகிறது. அப்படிப் பதிவான நிலையை நினைவு கொண்டு மீண்டும் கவர்ந்தால்
1.அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
2.வளர்த்த உணர்வின் தன்மை கொண்டு உங்கள் வாழ்க்கையில் தீமைகளை அகற்ற முடியும்.
3.சப்தரிஷிகள் இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து எப்படி வாழ்ந்தனரோ
4.பிறவியில்லா நிலை என்னும் நிலையை அடைந்தனரோ அந்த அருள் உணர்வை நீங்களும் பெற முடியும்.

குருநாதர் எப்படிப் பல உண்மைகளை அறிந்துணர்ந்தாரோ அதனை எமக்குள் பாய்ச்சி அதன் வழி என்னிலிருந்து வெளிப்படும்படி செய்தாரோ அதே வழிப்படியே உங்கள் அனைவருக்கும் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன். உங்களுக்குள் அறியாத சேரும் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றேன்.

நீங்கள் வளர்க்கும் அந்தப் பேரருள் உணர்வுகள் பரமாத்மாவிலே பரவுகின்றது.
1.இங்கே வாழும் மக்கள் அனைவரும் அவரவர்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட இருளை அகற்றி அருள் வழி அனைவரும் வாழ்ந்திடவும்
2.எத்தனை கோடிச் சரீரங்களில் அதை எல்லாம் கடந்து இந்த உயிர் இன்று மனிதனாகக் கொண்டு வந்ததோ
3.உயிரைப் போன்றே உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி ஒளிச் சரீரம் பெறுவதே
4.அதாவது ஞானிகள் பெற்றதைப் போன்று ஒளிச் சரீரம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய தியானம்.

இங்கே இப்போது பதிவு செய்ததை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து “அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணினால்” அதுவே தியானம் ஆகின்றது.

ஜெப ஆற்றலை அருந்துவதே… “சித்தன் சுட்டிக் காட்டிய அன்னம்”

 

மொழி வளர்ச்சி உற்ற விதத்தில் எண்ணுகின்ற எண்ணத்தை வெளியிடும் விதமாக வளர்ந்து… முதிர்வின் மூலமே சப்தஸ்வர நாதலயமாக (இசை) மொழி அமைப்பின் கோர்வை கொண்டு… உள்ளக்கிடக்கையை வெளியிடும் ஏற்றதோர் அமைப்பாக்கி வெளியிடும்… கருத்தின் பாங்கை இரசனையாக உணர்ந்து கொண்ட இடம்… செயலை… யாதென உரைக்கலாம்…?

பாணன் இசைக்கின்றான்… அந்த இசைக் கலைஞன் ஸ்வர பேதமின்றி உள்ளன்போடு இசைக்கின்ற பொழுது “அந்த இசை… உயிரைப் பற்றி நிற்கின்றது…”

இப்படி உரைக்கின்ற பொருளின் உண்மை நிலையே…
1.உணர்வின் எண்ணத்தை மாற்றிக் கொண்டிடும் நிலையால்
2.தீமையான எண்ண குணங்களின் வசம் ஆட்படும் மனது
3.உயர் தன்மையின்… உயர்வு எண்ண நிலை பெற்றிட முடியாது.

நற்குணத் தன்மைகளின் செயல்பாட்டில் “தெய்வீக இசை…” உடல் கடந்து “உயிரைத் தொடுகின்றது” என்ற சொல்லில் ஈர்த்துக் கொண்டிடும் குணச் சிறப்பு விளங்கும்.

மோகத்தின் பால் சிக்குண்ட மனம்…
1.அக்கணையால் தாக்கப் பெற்று… அந்த மோகக் கனலால் தகிக்கப் பெற்று
2.ஆத்ம நிலையே அதனால் தேய்ந்துவிடும் நிலைக்குச் சென்று விடுகிறது.

அதே சமயத்தில் இந்தப் பேருண்மையை உணர்ந்து கொண்டு செயல்படுகின்ற அறிவின் ஆற்றலாக… மோக குணத்தை விலக்கிக் கொள்ள வேண்டிய ஆகார ஜெப ஆற்றலை அருந்துவதே… சித்தன் சுட்டிக் காட்டிய “அன்னம்”

1.மெய் ஞான விழிப்பைச் செயல்படுத்திடும் அறிவாகிய அன்னம்
2.தீதெண்ண குணத்தன்மைகள் விலக்கி… நற்குணத் தன்மைகள் சுரந்திடும் ஈர்ப்பின் அமுதத்தை அருந்த வேண்டிய செயலையே
3.பாலுடன் கலந்த நீரை விலக்கிப் “பாலை மட்டும் அருந்தும் அன்னம்” என்று உரைக்கப்பட்டது

அத்தகைய பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட அறிவாகிய “அன்னத்தின் மேல் பிரம்மனுடன் சரஸ்வதியாகக் காட்டப்பட்டது மறைபொருள்…”

அந்த நிலையே சிவ சக்தியின் கலப்பாக… ஓங்கார நாதத் தொனியாக… “நாதத்தின் தலைவியாம் கலைமகள்…” பிரம்மத்துடன் கலந்து செயல்படும் சக்தியாக… ஓ…ம் என்ற ஓங்கார நாதம் கேட்பது எங்கே…?

ஊன் உயிர் கலந்திட்ட ஒன்றிய மனத்தின் செயல் தன்மையாக…
1.நாம் உரைக்கின்ற தியானத்தின் வழியாகக் கடைப்பிடிக்கும் ஞானச் செல்வங்கள்
2.அந்த ஓ…ம் என்ற ஓசை கேட்கும் நிலை அடைவர்… மெய்ஞானச் சுடராக விளங்குவர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விபத்து நடந்த இடத்திலேயே மீண்டும் விபத்து நடக்கக் காரணம் “அந்த இடமா…? அல்லது பதிவு செய்து கொண்ட நம் எண்ணமா…?”

கேள்வி:
வாகனத்தில் செல்லும் போது ஒரே இடத்தில் இரண்டு தடவை விபத்தாகி விட்டது. கேட்டால் சாப அலைகள் அங்கே இயக்குகிறது என்று சொல்கிறார்கள்.

நானும் தியானம் செய்துவிட்டுத் தான் அந்த வழியாகச் செல்கிறேன். அந்தப் பாதையை நான் மாற்றிக் கொள்ள வேண்டுமா…? எதனால் அங்கே விபத்தானது…?

பதில்:-
1.இந்த இடத்தில் சாப அலைகள் உள்ளது… வாகனத்தில் சென்றால் அடிபடும்… என்று
2.மற்றவர்கள் சொன்ன உணர்வுகள் உங்களுக்குள் பதிந்திருக்கின்றது.
3.அந்த இடம் வந்தவுடன் சரியாக அவர்கள் சொன்ன நினைவு வருகின்றது… விபத்தாகிறது.

இது தான் அங்கே நடந்தது…!

காரணம்… அந்த அலைகள் உங்களுக்குள் இருக்கிறது. நினைவு வந்ததும் அதை இழுத்துக் கொண்டு வருகின்றது… விபத்தாகிறது.

ஆனால் மற்றவர்கள் சொன்ன உடனே ஆத்ம சுத்தி செய்து நீங்கள் மறைத்து விட்டால் அத்தகைய விபத்து நேராது.
1.பிறர் சொல்லும் உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதியும் போது அந்த இடத்தில் போகும் போது டக்… என்று அந்த எண்ணம் வரும்.
2.அந்த சமயத்திலே பிரேக் இடாதபடி மற்ற வண்டிக்கு முன்னாடி உங்களை அழைத்துச் செல்கிறது
3.வண்டிக்காரன் வந்து அடிக்கவில்லை… நீங்கள் தான் சென்று விழுகிறீர்கள்.

காரணம் அதைப் போன்ற சந்தர்ப்பங்களில் நம்முடைய நினைவாற்றல் தான் அந்த வேலையைச் செய்கின்றது. ஒரு மனிதனுடைய உணர்வுகள் இப்படி எல்லாம் இயக்குகிறது… சந்தர்ப்பம் தான் இதெல்லாம்.

உதாரணமாக வீட்டில் கஷ்டம் என்றால் வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லிக் கொண்டு என்ன தான் வீட்டுச் சுவரை இடித்து மாற்றி வைத்தாலும் மீண்டும் அவன் சொன்ன “இடி…” தான் அங்கே வரும். குடும்பத்தில் மீண்டும் சங்கடங்களும் தொல்லைகளும் தான் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நாம் பதிவு செய்த உணர்வு மீண்டும் அந்த இடம் வந்ததும் ஞாபகம் வரும்

ஒரு பனை மரத்தில் பெரிய பூதம் இருந்தது. அதைப் பார்த்தேன்…! என்று வேண்டுமென்றே ஒருவர் வந்து சொல்லட்டும்.

எங்கப்பா…?

அங்கே அந்த ஒற்றைப் பனை மரம் இருக்கிறதல்லவா.. அது தான்…! என்று சொன்னால் போதும்.

அப்படீங்களா…! என்று பதிவாகி விட்டால் போதும்.

ஆனால் அங்கே பேயும் இல்லை பூதம் இல்லை.

இங்கிருந்து நடந்து போகும் போது… பூதம் இருக்கிறது என்று அவர் சொன்னாரே… “இந்த இடம்தான் தானே…!” என்று எண்ணினால் போதும். உடனே அந்த இடத்தில் பேயாகக் காட்சி கொடுக்கும்.

பார்க்கலாம்…
1.மனிதனுடைய உணர்வலைகள் அவன் பரப்பியது
2.அங்கே நாம் செல்லும் பொழுது அந்த இடத்தில் அதைக் குவித்துக் கொடுக்கும்
3.ரேடியோ டி.வி. அலைகள் மாதிரி தான் மனிதனுடைய உணர்வின் இயக்கங்கள்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை கொடுத்திருக்கின்றோம். அதை எடுத்துப் பயன்படுத்தி விட்டு “நாளை நடப்பது அனைத்தும் நல்லவையாக இருக்க வேண்டும்…!” என்று எண்ணி அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆக மொத்தம் வாஸ்து சாஸ்திரம் நியுமராலஜி ஜாதகம் ஜோதிடம் என்று
1.கஷ்டம் வருகிறது… கஷ்டம் வருகிறது… எல்லோருமே கஷ்ட நஷ்டங்களைச் சொன்னால்
2.முதலில் கஷ்டத்தைத் தான் ஏற்றுக் கொள்கின்றோம்… அப்புறம் நன்மை எங்கே கிடைக்கும்…?

அதைக் கழிக்கச் சாங்கியம் செய்வதற்காகக் காசை செலவழித்து காசும் போனது தான் மிச்சம். இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:-
சூரியனுக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் உண்டான ஒற்றுமை என்ன..? வேற்றுமை என்ன…?

பதில்:-
நம் உடலுக்குள் உயிர் சூரியன் தான். இதிலே (உடலிலே) ஒற்றுமையாக வரக்கூடிய உணர்வுகளை ஒளியாக்கப்படும் பொழுது ஒளி ஒன்றாகின்றது. ஆறாவது அறிவைத் தெளிவாக்குகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகிய உணர்வின் தன்மை ஒளியானபின் உயிரைப் போன்றே உடலில் உள்ள ஜீவ அணுக்களை மாற்றுவது தான் ஒளி… பிறவியில்லா நிலை… துருவ நட்சத்திரத்துடன் இணைகின்றது

சூரியன் நம்முடைய உடலைப் போன்றது தான்… அழியும் தன்மை பெற்றது… நிரந்தரமானதல்ல…! நம் உடல் எப்படி நிரந்தரமற்றதோ சூரியன் உடலும் நிரந்தரமற்றது தான்.

அதிலே விளைந்து உயிரணு தோன்றி எத்தனையோ உணர்வுகள் கடந்து உணர்வை ஒளியாக மாற்றியது நிரந்தரமானது. அது அழியாப் பேரருள் கொண்டது.
1.பிரபஞ்சத்தில் உருவானதுதான் அந்தத் துருவ நட்சத்திரம் (அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது) ஆனால் அது அழிவதில்லை.. சூரியன் அழியும்.
2.ஆறாவது அறிவினை அகஸ்தியனைப் போன்று நாமும் சீராகப் பயன்படுத்தினால்… ஏழாவது நிலையாக ஒளியாகின்றோம்.

அது தான் பிறவியில்லா நிலை என்று சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாராக இருந்தாலும் மற்றவருடன் நாம் ஒத்துழைத்து… “நம்முடைய தத்துவத்தை” இணைந்து அவரிடத்தில் சொல்லும் போதுதான் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அங்கே வரும்.

1.இல்லை… இல்லை… நாங்கள் இந்தத் தியானத்தின் வழியில் மிகப் பெரிய சக்தி பெற்றிருக்கின்றோம்
2.இப்படிச் செய்தால் மட்டும் தான் நன்றாக இருக்கும்…! என்று சொன்னால்
3.நம் காரியங்கள் அத்தனையுமே அது தடைப்படுத்தும்
4.நீங்கள் நல்லதை எடுத்து யாருக்கும் சொல்லவும் முடியாது… அதை வளர்க்கவும் முடியாது.

எது எதிலே பழக்கத்தில் இருக்கின்றோமோ அந்தப் பழக்க உணர்வு தான் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதைத் தெரிய வைக்க வேண்டியது… தெளிவாக்க வேண்டியது… நம்முடைய கடமைகளாக இருக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நமது தான் உயர்ந்தது என்று நாம் சொல்லப்படும்போது
2.அடுத்தவர்கள் “அவர்களது உயர்ந்தது என்று என்று தான் சொல்வார்கள்…!”

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் தியானத்தைக் கடைப்பிடிக்கும் நம்மிடம் இந்தப் பிடிவாதம் இருக்கக்கூடாது.

மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு… நம்முடைய தத்துவத்தை அவர் உடலில் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவ நிலைக்கு அதை உருவாக்க வேண்டுமே தவிர…
1.நாம் பிடிவாதமாக இருந்து வெறுக்கும் தன்மைக்குக் கொண்டு வந்து விடக்கூடாது.
2.எப்பொழுது பார்த்தாலும்… “என்னமோ சாமியார் என்கிறார்கள்…
3.அதைப் பண்ணுகிறேன்… இதைச் செய்கிறேன்… என்று என்னென்னமோ வேலை செய்கின்றார்கள்…! என்ற நிலைக்குச் செல்ல விடக்கூடாது.

வீட்டில் நடக்கும் சில நிலைகளுக்குச் சாங்கியங்களும் சடங்குகளையும் செய்வார்கள். உதாரணமாக உடலை விட்டு ஒரு ஆன்மா பிரிந்த பிற்பாடு என்ன செய்வார்கள்…?

காக்காய்க்கு நாங்கள் சோறு வைக்கின்றோம்… பித்ருக்களுக்குச் சாப்பாடு கொடுத்துக் கூப்பிடுகிறோம்… என்று சொன்னாலும் “அவர்கள் இஷ்டத்திற்கு” விட்டு விட வேண்டும்.

நாம் முறைப்படி தியானம் இருந்து அந்த உடலை விட்டு பிரிந்த அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

நாம் கூட்டுத் தியானமிருந்து அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

இதை… அவர்களிடம் சொல்லப்படும்போது…
1.இந்த ஆன்மா எப்படி விண்ணுக்குப் போகிறது என்று பாருங்கள்…! என்று சொல்லிக் கொஞ்சம் தூண்டி விட்டால்
2.அந்த ஆர்வம் அவர்களுக்குள் வரும்… ஏற்றுக் கொள்ளும் பருவங்களும் வரும்.
3.அப்போது அந்த ஆன்மா விண்ணுக்குச் செல்வதை அவர்களும் பார்க்க நேரும்.

ஆக… ஒரு பழக்கத்தில் இருக்கிறோம் என்றால் அதைப் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டும் என்றால்
1.எவ்வளவு நல்லதாக இருந்தாலும்…
2.அந்தப் பழக்கத்தை மாற்றுவது எளிதானது அல்ல.

கேரளாவில் மொக்கை அரிசி சாப்பிடுகிறார்கள். இந்த அரிசியைப் பார்த்து இதை யார் சாப்பிடுவார்கள்…? என்று நாம் சொல்கின்றோம்.

இங்கே சன்ன ரகமான பொன்னி அரிசியை நாம் சாப்பிடுவதைப் பார்த்து இந்த அரிசியை யார் சாப்பிடுவது…? என்று அவர்கள் சொல்கிறார்கள். அவரவர்கள் ருசி தான் அவரவர்களுக்கு வரும்

ஆகவே எப்போதுமே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மற்றவர்களை நாம் மதித்துப் பழக வேண்டும்.
1.அவர்களை உயர்த்தினால் தான் நமது சொற்களை அங்கு ஏற்கும் பருவம் கிடைக்கும்.
2.இல்லை என்னுடையது தான் உயர்ந்தது..! என்று சொன்னால் நமது உணர்வை அவர்கள் தாழ்த்தித் காட்டுவார்கள்.

நமது தத்துவங்களை அவர்களை அணுகிப் போய்த்தான் சொல்ல முடியுமே தவிர
1.கட்டாயப்படுத்தி யாருக்கும் திணிக்க முடியாது
2.கட்டாயப்படுத்திச் சொல்வதோ… இது தான் மிகவும் நல்லது என்று வலியுறுத்தினாலோ
4.நம் மீது வெறுப்பு தான் வரும்.

அந்த வெறுப்பை எடுக்க விடாதபடி… நாம் அவர்களைப் பக்குவப்படுத்தி நம்முடைய நிலைகளைப் படிப்படியாக அங்கு சொல்லி மாற்றி… “அவர்களை உணரும்படி செய்வது தான்…” நம்முடைய கடமையாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் உடலில் இயக்குவது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்…! அவரின் எதிர் நிலையான அழுத்தங்கள் நாம் எவ்வளவு தான் உண்மையைச் சொன்னாலும் வெறுக்கும் தன்மை தான் வரும்.

ஆகையினால் இதைப் போன்ற பழக்கத்தை எல்லாம் நாம் மாற்றி
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகளை உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ நிலைக்கு
2.அந்தப் பக்குவ நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

உலகில் சூழ்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற செயல்பாடுகள்

 

இராமன் விஷ்ணு தனுசை எடுத்தான் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தான் சுவை மிக்க நிலை சீதாராமன்…!
1.அந்தச் சுவைமிக்க உணர்வு கொண்டு… சொல்லாக உணர்ச்சிகள் உடலுக்குள் வரும்பொழுது
2.உடலுக்குள் உருவான சிவ தனுசு உடலைக் காக்கும் நிலைகளில் இருந்து அருள் ஒளியின் உணர்வாக மாற்றி
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றும்.

சிவ தனுசு விஷ்ணு தனுசு என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருளை எப்படிக் காண வேண்டும்…? என்று கூறப்பட்டுள்ளது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடும் யுத்த காலமாக இருக்கிறது. பார்த்தால் சமாதானமாகப் போவதாகத் தெரிய வரலாம். இருந்தாலும் ஒவ்வொரு நொடிகளிலும் ஒருவருக்கொருவர் போட்டியின் தன்மைகள் அதிகரித்து… “மிரட்டும்” தன்மையே வந்துவிடும்.

விஷமான குண்டை ஒரு நாட்டின் மீது போட்டால் அது வெடிக்கும் தன்மை விஞ்ஞான அறிவால் வந்துவிடும்.
1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற இயக்க சக்தியின் நிலைகள் கம்ப்யூட்டர் பாதுகாப்பில் இருக்கும் அந்த நிலைகள் (குண்டுகள்)
2.ஒரு நொடி திசை மாறினால் விஷ குண்டுகள் முழுவதும் வெடிக்கப்பட்டு உலகம் முழுவதற்கும் பரவும் தன்மை வந்துவிடும்.

அப்படிப் பரவினால் மக்களை அழித்திடும் உணர்வாகவே வந்துவிடும். விஷ உணர்வுகள் பரவினால் உடலை விட்டுச் சென்ற பின் புழுவாகப் பூச்சியாகப் பிறக்கும் நிலை வந்துவிடும்.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் பல காலம் கழித்துத் தான் மீண்டும் மனிதனாக உருப் பெரும் நிலை உருவாகும்.

1.மனித உடலில் இனி இருப்பார்கள்.. ஆனால் அசுரனாகத்தான் இருப்பார்கள்.
2.அதே சமயத்தில் கடும் நோய்களாக உருவாகிவிடும்.
3.கேன்சர் டிபி போன்ற நிலையில் எல்லாம் விஷத்தன்மையால் உருவானது தான்.

இவைகளில் இருந்து நாம் மீள துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தியானித்து அந்த வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தல் வேண்டும்.

அவர்கள் உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைக்கப்பட்டு அதன் துணை கொண்டு நமக்குள்ளும் இருக்கும் நஞ்சின் உணர்வுகளை நாம் கரைக்க முடியும்.

பற்றும் பாசத்துடன் நம் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நோயின் உணர்வு கொண்ட நிலையில் பண்பால் பரிவால் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் தான் வளர்கின்றது. அந்தத் தீயவினைகளை நம்மில் இருந்து அகற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து அந்த மூதாதையரின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கப்படும் பொழுது உடலில் பெற்ற நஞ்சு கரைக்கப்படுகின்றது. சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றி வாழத் தொடங்குகிறது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வை உணவாக எடுத்து வாழத் தொடங்குகிறது.

ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றினார்கள் என்பது இதுதான். ஆகவே உடலை விட்டு யார் பிரிந்து சென்றாலும் அந்த 48 நாட்களுக்குள் நாம் விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
1.கணவன் மனைவியாக இருப்பினும் யார் முதலில் உடலை விட்டுச் சென்றாலும்
2.விண் செலுத்தும் உணர்வுடன் உந்திச் செலுத்தப்படும் பொழுது கணவன் மனைவி உயிரான்மாக்கள் இரண்டற இணைக்கப்பட்டு
3.ஒளியின் உணர்வாகி என்றுமே உணர்வின் ஒளியாகப் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

வாழ்க்கையில் இதை நாம் அவசியம் பெறுதல் வேண்டும்.

பூரண பௌர்ணமி ஆன நிலையில் சப்தரிஷி மண்டலம் அருகில் வரும் அந்தச் சமயத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை நாம் எண்ணி எடுக்கப்படும் பொழுது அதைக் கவர்ந்து ஒளி அலைகளைப் பரப்பி தியானத்தின் மூலமாக விண் செலுத்தும் ஆற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். இப்பொழுது ஊழ்வினை என்ற வித்தாக அது ஊன்றப்படுகின்றது.

அதை நினைவு கொண்டு மீண்டும் எங்கள் எண்ணி வளர்த்தல் வேண்டும் அதற்குத் தான் உபதேசிப்பது.

திட்டியவனை எண்ணியவுடன் அது பதிவாவது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களுக்குள் போதிக்கின்றேன்… ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

நீங்கள் மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால் “தீமைகள் அகற்றிடும் அந்த எண்ணம்” உங்களைக் காக்கும்.
1.எதை நுகர்கின்றீர்களோ உயிர் உங்களை இயக்கி நஞ்சினை நீக்குகின்றது… நல்ல உணர்வுகளை வளர்க்கின்றது
2.பிறவி இல்லாத நிலை அடையச் செய்கின்றது.

ஆகவே பேரரருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

மனச் சோர்வுக்கு மருந்தே தியானம் தான்

 

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலால்… தன்னை வளர்த்துக் கொண்டிடும் “ஒலி மின் நுண்காந்தப் புலமாய்”
1.தனக்குள் ஆட்டுவிக்கும் சக்தியைத் தன்னை ஆட்கொண்ட “ஈஸ்வரரின் அருள்” என்றே உரைக்கின்றாய் அல்லவா.
2.அந்த வார்ப்பினைக் காத்துக் கொண்டிருக்கும் செயலில் “காட்டும் உறுதி”
2.சகல மகரிஷிகளினாலும் அன்பு சப்தரிஷிகளினாலும் அருள் நோக்கால் கணிக்கப்படுகின்ற செயலை அறிந்து கொண்டே
3.இத்தியான வழியில் பெற்றிடும் பக்குவத்தில் பெற்று வளர்த்திட “முயல்வோர்கள் முயற்சிக்கட்டும்…!”

“ஈர்ப்பின் கனி” ஈர்த்துக் கொண்டிடும் செயல் பற்றிக் கூறியவை போல் “விளத்தின் கனி” பற்றி அறிந்திடும் ஆக்கம் கூறுவேன்.

ஜீரணிக்கக் கூடிய செரிமானத் தடையைப் பற்றிப் பேசுகின்றாய்.
1.மனத்தின் பரிமாணம் கொள்ளும் உணர்வுகள்
2.தமக்குகந்த “சலனத்தின் நிலை” ஏற்பட்டு விடாத மனத் திறனே
3.உடலைக் காத்திடும் கவசம் ஆகும்.

ஓடு நெகிழ்ந்து அக்கனியின் சேமிப்பாம் சக்தியே… அந்த ஓடு உடைந்து விடாத வண்ணம் வெளிக்கொண்டு வரும் செயல் நிகழ்வு எப்படி உண்டானது…?

வேழம் (யானை) தன்னுள் கொண்டிட்ட ஈர்ப்பின் வலு வீரிய சக்தி கொண்டுதான்…! தன் ஜீவனைப் பற்றிச் சிந்திக்கும் செயலற்ற நிலையாக இருந்தாலும்… “மாற்று நிலைகள் உட்பகுந்திடாதபடி” அந்த வேழத்தின் வலு வீரியம் நாம் வழி நடத்தும் இந்த தியான வழியிலே செயல்படுமப்பா.

1.மனச்சோர்வினுக்கு மருந்து எது…”
2.மனத்தினைத் தெளிவுபடுத்திடும் இந்தத் தியானமே ஆகும்.

வரும் வேக அப்பொருளைக் காப்பது யார்…?

உன் உயிர் குரு வழி நடந்திடும் பக்குவத் தன்மையில்தான்…! என்றே அதை உரைத்திடல் வேண்டுமோ…?

மாலைக்குப் பின் இருள் வரும்…! ஆனால்
1.மாலை வருவதற்கு முன்பே நம் பார்வையில் இருள் காட்டினால்
2.நாம் கொள்ள வேண்டிய பக்குவம் இன்னும் அதிகமாக வலுவாக்கப்படுதல் வேண்டும் என்பதே “அப்பொருள்…!”

அருள் வழியில் தன்னுள் வளர்ப்பாக்கும் சகல சக்திகளையும் செயல்பாட்டில் உலகினுக்கு வழிகாட்டி… சோர்வு நிலை நீக்கி… திண்மையின் மனம் ஏந்தி… ஞானச் செல்வங்கள் (நீங்கள்) நிலைபெற்று வளர்ந்து வலுவாகி… சிவ சக்தியாக ஆதி சக்தியின் கலப்பாக வேண்டும். அதுவே எமக்கு மகிழ்ச்சி.

எமது ஆசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் உயிரைத்தான் எண்ண வேண்டுமே தவிர சாமியின் (ஞானகுரு) உயிரை எண்ணுவதால் பலனில்லை.

சாமி உயிரால் உருவாக்கப்பட்ட அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை இங்கே பரவியிருக்கப் படும்போது நீங்கள் நுகர்ந்தால் அது உங்கள் உடலிலே அது பதிவாகின்றது.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உணர்வைத் தான்
2.அவர் வழியில் எல்லோரும் ஏகமாக எண்ணி
3.அவரின் அருள் உணர்வுகளை இங்கே தபோவனத்தில் பரப்பச் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் சில சிக்கல்கள் வந்தால் அதை நிவர்த்திக்க உங்களுக்கு வழிகாட்டியான முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்.

ஞானகுரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் தபோவனத்தை எண்ண வேண்டும்.

காரணம்…
1.நாம் எல்லோரும் தவம் இருந்த அந்த உணர்வலைகள் அங்கே உண்டு…!
2.அது மிகவும் வலிமை மிக்கது… சக்தி வாய்ந்தது.

தபோவனத்தை எண்ணி குரு அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதை எளிதில் பெற முடியும். அதைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும்.

ஆனால் நமது ஆசை…
1.நல்ல உணர்வைக் கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்
2.நல்லது செயல்படுத்தக்கூடிய அந்த இச்சையை நாம் பெற வேண்டும்.

அதன் வழியில் நாம் பெற்று இயங்கினோம் என்றால் உங்களுக்குக் கிடைக்கும்.

எந்தத் திசையில் நீங்கள் எங்கே இருந்தாலும் தபோவனத்தை எண்ணி…
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கினால்
2.மிகவும் எளிதாகக் கிடைக்கும்… வலிமை மிக்க சக்தியாகவும் இருக்கும்.

அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய எண்ணங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவதாக இருக்க வேண்டும்.

தபோவனத்தில் எல்லோருடைய அருள் உணர்வுகளும் பரப்பப்பட்டுள்ளது. குரு அருள் துணை கொண்டு தான் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது பூமி முழுவதும் அந்தச் சக்தி பரவுகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எங்கிருந்து நீங்கள் எண்ணினாலும் அந்த அருள் உணர்வுகளைப் பெற முடியும்
1.ஏனென்றால் அவர் உணர்வைப் பெற்றுத் தான் நான் (ஞானகுரு) ஆனது.
2.அவர் உணர்வை எடுத்துத்தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றோம்.
3.ஒளியின் உடலாக இருக்கும் குருவின் உணர்வை எளிதில் பெற முடியும்.

ஆகவே அவர் காட்டிய அருள் வழியில் குரு பெயரை வைத்துத்தான் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்…” என்று வைத்தது. அவர் உணர்வுகளை எனக்குள் விளைய வைத்து விளைந்த அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

1.ஞானகுரு கூறிய உணர்வுப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவேன் என்றால்
3.அந்த முறைப்படி… அந்த நெறிப்படி… அந்தச் சக்திகளை நாம் பெறுகின்றோம்.

குருநாதர் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியாக இருக்கின்றார். அவர் உடலோடு இருக்கக்கூடிய காலங்களில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் பதிவானதால்… அதை உங்கள் எல்லோர் உணர்வுகளிலும் பதியச் செய்து… ஒருக்கிணைந்த அந்த உணர்வின் தன்மைகளை அலைகளாக இங்கே தபோவனத்தில் பரப்பி வைத்திருப்பதால் எளிதில் பெற முடியும்.

சாமி செய்து கொடுப்பார் என்றால்…
1.அந்தக் குருவின் (ஈஸ்வராய குருதேவர்) அருளை நமக்கு வழிகாட்டினார் என்று
2.இந்த ஞானத்தின் வழியில் உங்களுக்குள் பதிவாக்கப்படும்போது
3.இதுவே உங்களுக்குள் அந்தக் குருவாக இருந்து
4.ஞான வழியாக அந்த உணர்வின் தன்மை உங்களை வழிநடத்தும்.
5.குரு ஒளியான உணர்வைப் பெறக்கூடிய தகுதியையும் ஊட்டும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கேள்வி:-
சில நாள்களில் காலை துருவ தியானம் செய்ய முடியாதபடி உடல் கனமாகவும் சோர்வாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன…?

ஞானகுரு:-
உதாரணமாக… வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் இருந்தால் நம் செயலில் வேதனை அதிகமாக இருக்கும். நாம் எடுக்கும் இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மை உண்மையை உணரச் செய்யும்… உணர்வின் ஆர்வத்தைக் கூட்டும்… அதை எடுத்துக் கொள்ளும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.விஷத்தால் இயங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் சோர்வடையப்படும் பொழுது
2.நம்மைப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க விடுவதில்லை… அது சோர்வடைந்து விடுகிறது.
3.அந்த விஷத்தின் ஊக்கமே நமக்குள் வலிமை கொடுக்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் தியானத்தை எடுத்து உடல் உறுப்புகளில் செலுத்தப்படும் போது… “ஏற்கனவே இருந்த விஷங்கள் தணியப்படும் பொழுது…” நம்மால் முடியாது போய்விடுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று செலுத்திப் பழகுதல் வேண்டும்.

பின் சிறிது நேரத்தில் அது தெளிவாவதைப் பார்க்கலாம்.

1.இந்த மாதிரி வரும்… காரணம் எல்லோருக்குள்ளும் இந்த வேதனையான உணர்வுகள் உண்டு.
2.நாம் இந்தச் சக்தி எடுத்தவுடன் அது சோர்வடையும்
2.என்னடா… நாம் தியானம் செய்து இந்த மாதிரி ஆகிவிட்டதே…! என்று கூட நினைப்போம்..

விஷத்தின் இயக்கத்திற்கு ஆக்கபூர்வமான நிலைகளைக் கொடுக்கவில்லையென்றால் அதனுடைய நிலை இந்த மாதிரி வந்துவிடும்.
அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில்…
1.படுக்கையில் இருந்தபடியே சிறிது நேரம் கண்ணின் நினைவை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
3.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்போது அதிலிருந்து விடுபடுவதை உணரலாம்.

கேள்வி:-
தியானம் செய்து கொண்டிருக்கும் போது உடல் உறுப்புகள் அனைத்தும் காட்சியாகத் தெரிந்தது. அதனுடைய துடிப்பும் தெரிந்தது. ஆனால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பயமும் நடுக்கமும் வந்து விட்டது. ஏன்…?

அந்த மாதிரி பயம் வராதபடி எனக்கு மன பலம் வேண்டும்.

ஞானகுரு:-
பணம் வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். திடீரென்று “ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்து விட்டது…!” என்று கேள்விப்பட்டால் உங்கள் மனது எப்படி இருக்கும்…?

பயத்தைக் காட்டிலும் படபட… படபட… என்று நெஞ்சிலே துடிப்பு அதிகமாக இருக்கும். பணம் வந்துவிட்டது என்று கேட்டதுமே அதனால் மூச்சு நின்று போனவர்களும் உண்டு. இல்லையா…!

இதைப் போன்று தான் உயர்ந்த சக்திகள் நமக்குள் வரப்படும் போது..
1.ஆக அதைப் பெறுகின்றோம் என்ற நிலையில்
2.அந்த அருளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்ற ஆனந்தத்தைச் சேர்த்தால் அது வலுவாகும்.

ஆனால் பயத்தைக் கொடுத்தோம் என்றால் பய அலைகள் தான் வரும். வேகமாக இயக்கப்படும் போது இதனுடன் கொஞ்சம் விஷத்தைக் கலந்து விட்டால் எப்படி இருக்கும்…? பலவீனம் தான் ஆகும்.

ஆகவே… நாம் அந்த அருள் சக்திகளைப் பெறுகின்றோம் இந்த ஆசையில்
1.நல்ல நிலைகளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம்…
2.துருவ நட்சத்திரத்துடன் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்…
3.அந்த உணர்வு நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றது…! என்ற இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இது எல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய சரியான நெறி முறைகள்.

ஞானிகள் காட்டிய நெறி

 

நமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் வெறுப்பு வேதனை சலிப்பு, சஞ்சலம் நம் உடலுக்குள் நுகர்ந்த இவை அனைத்தும் வினையாகச் சேர்த்து அந்த உணர்வுகள் மாற்றமடைகின்றது. அப்படி மாறாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அல்லவா.

அதற்குத்தான் விநாயகருக்கு அருகிலே வேம்பையும் அரசையும் வைத்தது. நாம் காலையிலிருந்து நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று சதாசிவமாகிக் கொண்டே உள்ளது.

ஆனால் நல்லதைத் தான் எண்ணுகின்றோம்.
1.ஒருவன் தவறு செய்கின்றான் என்றால்
2.அதை நுகர்ந்து நாம் வேதனைப்படுகின்றோம்.

குழந்தைகளை நல்ல முறையிலே வளர்க்க வேண்டும் என்று தான் விரும்புகின்றோம்… வேண்டிய உபகாரத்தையும் செய்கின்றோம்.
1.ஆனால் சொன்னபடி அவன் கேட்கவில்லை என்றால் வேதனையைத் தான் நுகர்கின்றோம்.
2..நம் நல்ல குணங்கள் அனைத்தும் வேதனை கலந்து விடுகின்றது

ஒருவருக்குக் கடனைக் கொடுத்து உதவி செய்கின்றோம் குறித்த காலத்திற்குள்
1.கொடுத்த பணம் வரவில்லை என்றால்
2.“நான் கொடுத்தேன் அவர் திரும்பத் தரவில்லையே…” என்று வேதனைப்படுகின்றோம்.

வியாபாரம் நன்றாகச் செழித்து வளரும் என்று எண்ணுகின்றோம். புதிதாகக் கடை வைக்கும் பொழுது செழித்து வருகின்றது. அடுத்து அது குறைந்தால் நாம் வாங்கியவர்களுக்கு பணத்தைக் கொடுக்க முடியவில்லை மற்ற நிலைகளைச் செயல்படுத்த முடியவில்லை வட்டி கட்ட முடியவில்லை என்றெல்லாம் எத்தனையோ எண்ணி வேதனைப்படுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் எந்த நல்லது பெற வேண்டும் என்றாலும் இந்த வேதனைகளைச் சுவாசிக்கும் போது அது அனைத்தும் விஷம். ஆக இந்த உணர்வுகள் வினையாக வளர்கின்றது.

இப்படி வளர்ந்து விட்டால் வேதனை வேதனை என்ற உணர்வு வரும் பொழுது கை கால் குடைச்சல் மூட்டு வலி இதைப் போன்ற உணர்வு நம் உறுப்புகளில் விளையத் தொடங்கி விடுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் இப்படி வருகிறது. இதை நாம் துடைக்க முடிகின்றதா…? துடைக்க வேண்டுமா இல்லையா…?

துணியில் அழுக்குப்பட்டால் துவைத்து விடுகின்றோம் கையிலே அழுக்குப் பட்டால் கழுவி விட்டுச் சாப்பிடுகிறோம். ஆனால் நம் ஆன்மாவில் பட்ட அழுக்கினைத் துடைக்க வேண்டுமா இல்லையா…!

1.அதை நாம் எப்படிச் செய்ய வேண்டும்…?
2.எதன் வழி செயல்படுத்த வேண்டும்…? என்பதற்குத்தான்
3.வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் விநாயகர் அருகே வைத்தது.

மனிதனின் வாழ்க்கையில் நல்லதைச் செய்தாலும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு கசந்த வாழ்க்கையாக மாற்றி விடுகின்றது. அதிலிருந்து நாம் விடுபட வேண்டுமல்லவா.

ஒருவருக்கு நாம் பணத்தைக் கொடுத்திருக்கின்றோம்… பணம் வரவில்லை அப்பொழுது வேதனைப்படுகின்றோம். அந்த வேதனையை எண்ணும் பொழுது அது நம் உடல் முழுவதும் பரவுகின்றது.

நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டேனே… பணத்தை அவர் கொடுக்கவில்லையே என்று சோர்வடைகின்றோம். அதே சமயத்தில் “என்னால் முடியவில்லையே நாளைக்கு என்ன செய்யப் போகின்றேன்…?” என்று எண்ணும் பொழுது கோபப்பட்டு விடுகின்றோம்.

வேதனையும் கோபமும் வரும் பொழுது அதனின் உணர்ச்சியின் அணுக்கள் விளைந்து விட்டால் அணுத்தன்மை ஆன பின் உடலிலே மூட்டுக்கு மூட்டு குத்தலும் குடைச்சலும் வந்துவிடுகிறது.

கார உணர்வுகளும் வேதனை உணர்வுகளும் அந்த விஷமான உணர்வுகள் சாடப்படும் பொழுது நம்மை அறியாமலே அது இயக்கத் தொடங்கி விடுகின்றது. நாம் தவறு செய்தோமா…? இல்லை.

இத்தகைய நிலை வராது தடுக்க “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பருகுதல் வேண்டும்.

அதை அதிகாலையில் நாம் பெறுவதற்குத் தான் வட மேற்கில் விநாயகரை வைத்து வட கிழக்காக நம்மைப் பார்க்கும்படி செய்து அருள் உணர்வுகளை அதிகாலையிலேயே நம்மைப் பருகும்படி செய்தார்கள்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரழிவு பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படித் தீமையிலிருந்து நாம் விடுபட்டு அருள் வழி வாழும் நிலையை நெறிப்படுத்திச் சென்றார்கள் ஞானிகள்.

மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்

 

மனிதச் சரீர ஆற்றலின் உண்மையைச் சிந்தனையில் (விஞ்ஞான அறிவு கொண்டு) சீர்படுத்திப் பார்த்தோம் என்றால்… விஞ்ஞானத்தால் காந்த அமிலம் பூசப்பட்ட நாடாக்களில்… மின் ஒளியைக் கொண்டு ஒலி அதிர்வால் பேசுபவற்றை எப்படிப் பதிவு செய்து மீண்டும் இயக்கச் செய்கிறார்களோ அதைப் போன்று…
1.இச்சரீரத்தின் காந்த ஒலியானது நாம் எண்ணி எடுக்கும் செயல் கொண்டு
2.ஆத்மாவின் பதிவான நினைவின் ஓட்டம் ஏற்கும் செயல் நிகழ்வால் “மனிதனின் நினைவாற்றல் இருக்கின்றது…”

ஆனாலும்…
1.சுவாச கதியில் “கனம் கொண்டு” எடுக்கப்படும் எண்ண ஓட்டங்கள்தான்
2.பதிவின் நினைவில் மீண்டும் மீண்டும் நினைவு பெற “எண்ணத்தில் மோதுகிறது…”

ஜீவ உற்பத்தி முதற்கொண்டு ஒவ்வொரு செயலுக்குமே… காந்த ஒளி நிகழ்வால் செயல்படும் உண்மைகளை… இன்று விஞ்ஞான அறிவால் (எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்) உணர்ந்த நாம்…
1.எப்படி மனோதத்துவத்தால் அன்று மந்திரவாதிகள் மட்டும் உபயோகப்படுத்தினார்களோ அதே வழி முறை போன்று
2.ஓர் மனிதனின் எண்ணப் பதிவு நிலையை எடுக்கும் ஆற்றல் கொண்ட கருவியாக
3.விஞ்ஞான முறை கொண்டு செயலாகின்றது “விஞ்ஞான யுகமாக…”

1.ஒலி நாடாக்கள் பேசும் உண்மையை விஞ்ஞானம் வழிப்படுத்தியது.
2.“மெய்ஞானத்தில் விழிப்படையும் – மகோன்னத சக்தியை” நம் ஒவ்வொருவருக்குள்ளும் நாம் அறிதல் வேண்டும்.

அதாவது… மெய்ஞான ஒலியால் காந்த அமிலத்தைத் தியானத்தின் நிகழ்வால் ஆத்மாவில் பதிவுபடுத்தும் முறை கொண்டு… மனித சக்தியின் உயர்ந்த ஒளி காந்த சக்தியாக மனித ஆற்றலின் விழிப்பை விவரிக்க முடியாத அளவுக்கு உண்மையின் செயல்திறன்… “எண்ணத்தால் எடுக்கும் ஆத்ம தியானத்தால்” அறியவும் உணரவும் முடியும்.

நமது வளர்ச்சிக்கு… சூட்சுமத்தின் ஒளியான ரிஷிகளின் எண்ணமுடன் ஒன்றிய தெய்வ குண எண்ணமாக… நம் எண்ணத்தைச் செலுத்தும் பக்குவ முறையைக் கைக்கொள்ள வேண்டும்.

பேரருள் பேரொளி சக்தி கொண்ட மகரிஷிகளின் எண்ண ஓட்ட உணர்வுடன்… இச்சரீர உணர்வுடன் கொண்ட எண்ணத்தைச் செலுத்தும் நம் மூச்சலையின் நிகழ்வால்… ஆத்மாவில் பதிவானது மகரிஷிகளின் ஒளி அலை அமிலங்கள்.

ஜீவகாந்த சரீரத்தில் (நமது உடலில்) சாந்த உணர்வு கொண்டு…
1.பேரருள் பேரொளி பெற்ற மகரிஷிகளின் அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று…
2.அந்த மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்.

அம்மகரிஷிகள் பெற்ற ஞானத் தொடர்பின் அலைகள் நம் உணர்வில் மோதும் பொழுது… காற்றலையில் பரவியுள்ள உன்னத தத்துவ ஞானத்தை ஒலியாகவும் ஒளிப்படங்களாகவும் (உணர்வுபூர்வமாக) நாம் காண முடியும்.

நிகழ்ந்த ஒளியும்… ஒளிப்படங்களும்… வலுக்கொண்ட செயல்கள் எவையுமே… ஜீவகாந்த சரீரத்தில் பதிவு செய்யப்பட்டு வெளிப்பட்ட நிலைகள் அழிவதில்லை.

பல வருடங்களுக்கு முன் சிறு பிராயத்தில் நமக்கேற்பட்ட சில நிகழ்வுகள்… அதாவது அந்த நேரத்தில் கனமாக எடுக்கப்பட்ட எண்ணங்களை… வயது முதிர்ந்த பிறகும் நம்மால் நினைவு கொண்டு எடுக்க முடிகிறது.

அதைப் போன்று
1.ஞானிகள் மகரிஷிகளின் ஒளி காந்த தத்துவங்களை… அவர்கள் உடலில் விளைய வைத்த பேராற்றல்களை…
2.விஞ்ஞானத்தின் பதிவால் ஒலியையும் ஒளிப்படங்களையும் காண முடிவது போல… காண முடியும்.

அதே சமயத்தில்… இந்த மனித ஆற்றலின் உண்மையில்… ஜீவகாந்த சரீரப் புலனில் எடுக்கும்… ஒலி காந்த மின் அலையின் செயல் கொண்டு வளர்க்கும் வழித்தொடருக்கு… ரிஷி சக்திகளின் ஒளி சக்தியின் எண்ணத்தால் (அவர்கள் எண்ணமும் நம் எண்ணமும் ஒன்றுபட வேண்டும்) ஆத்ம சக்தி வலுப்பெற சிவசக்தியின் (கணவன் மனவியாக) தொடர்பாக எடுக்கும் தியானத்தின் சூட்சுமத்தில்… பல ஆற்றல் மிக்க உண்மைகள் உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கலி…! நாம் தீமையின் உணர்வை வளர்த்தால் தீமையின் செயலாகவே நம்மை மாற்றும். ஒளியின் உடலாகப் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்தால் தீமையை நீக்கி ஒளி என்று உருவாக்கும் பொழுது கல்கி…!
1.உயிர் ஒளியாக இருக்கின்றது…
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் அருள் சக்தியை நாம் பெறுகின்றோம்.

நான் (ஞானகுரு) படிக்காதவனாக இருந்தாலும் குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும் அருள் உணர்வை இணைத்து அதனுடைய செயலாக்கங்கள் உடலில் எப்படி உருமாறுகிறது…? என்பதை அனுபவரீதியாக எனக்குக் கொடுத்தார்.

1.நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டபின் உடலுக்குள் செல்லும் பொழுது அந்த உணர்ச்சிகள் வேறு
2.அதே சமயத்தில் உடலில் உள்ள எதிர் அணுக்கள் மாற்றப்படும் போது அது எப்படி ஆகின்றது…?
3.அப்படி அது தன்னுடைய வலுவாக இயக்கினாலும் அதைக் குறைக்க…
4.நான் (ஈஸ்வரபட்டர்) கொடுக்கும் வலுவான உணர்வுகளை நீ அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது அது எப்படி அடங்குகின்றது…?
5.ஆக… சுவாசிக்கும் பொழுது முதலில் எதிர்க்கின்றது. “அதிகமாகி விட்டால் ஒடுங்கி விடுகின்றது” என்று தெளிவாக்கினார்.

உதாரணமாக… தண்ணீரில் ஒரு நிறத்தைக் கலந்து விட்டால் அந்த நிறமே முழுமையாக ஆகிறது.
1.அதில் சிறிதளவு நல்ல நீரை விட்டால் அதுவும் அதே நிறமாகத் தான் தெரியும்.
2.ஆனால் நல்ல நீரை ஊற்ற… ஊற்ற… ஊற்ற… அந்த நிறம் மாறத் தொடங்குகிறது.

அதே போல் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்
1.அதில் நன்னீரை விட… விட… அழுக்குத் தண்ணீர் பொங்கி வெளியே வருகின்றது
2.நல்ல நீர் சேரச் சேரச் சேர அழுக்கின் தன்மை குறைந்து நன்மையின் உணர்வுகள் வருகின்றது

இதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் பொங்கச் செய்ய வேண்டியது எது…? என்ற நிலையில் அருளைப் பொங்கச் செய்து இருளைத் தணியச் செய்ய வேண்டும்… அது தான் தைப் பொங்கல்…!

ஆகவே… பொருளைக் காணும் உணர்வின் அறிவைக் கூட்டுங்கள். வெகு தொலைவிலிருந்து வரும் இருளை நீக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். துருவ நட்சத்திரம் அதைத்தான் செய்கின்றது.

அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. வெகு தொலைவிலிருந்து வரும் எத்தகைய உணர்வையும் அது பலவீனப்படுத்தி ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

துருவ நட்சத்திரத்தை எண்ணி… பேரருள் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வினை நாம் அதிகாலையில் கவரப் பழக வேண்டும்.

1.பொங்கும் மங்கலமாக அதை நினைவுபடுத்தி
2.உங்கள் எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
3.நானும் (ஞானகுரு) பிரார்த்தனை செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று தினமும் அதிகாலையில் நீங்கள் விரும்பினால் “அந்த நறுமணங்கள்…” நிச்சயம் உங்களுக்குள் வரும்… பேரானந்த நிலை பெறுவீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தை…! (தை மாதம்) என்றால் இணைத்தல் என்று பொருள். ஒரு நூலின் தன்மை கொண்டு இணைக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்கிறது. அதைத் தான் “தை…” என்று காட்டினர்.

இணைத்திடும் உணர்வின் தன்மை கொண்டு இணைந்து வாழச் செயல்படுத்துவது தான் அதன் நிலை. அன்றைய கால பாஷையில்
1.“தை” என்ற நிலையில் “இணைத்து விடு…” என்று பொருள்படும்படி
2.உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நிலையாக
3.சுவைமிக்க நிலைகளை உருவாக்கும் நாள் “தைப் பொங்கல்” என்று காட்டினார்கள்.

ஒருவருக்கொருவர் பகைமையை மறந்து அருள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து ஒளியின் உணர்வாக அத்தகைய பெரும் சக்தியை எவ்வாறு நமக்குள் வளர்த்தல் வேண்டும்…? என்பதைத் தெளிவாக்கும் நாள்தான் தைப் பொங்கல்.

அதிகாலையில் எழுந்து நான்கிலிருந்து ஆறு மணிக்குள் சூரிய உதயத்திற்குள் பொங்கல் வைத்துப் பழகுதல் வேண்டும். பண்டைய காலத்தில் அப்படித்தான் வைப்பார்கள்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். செல்லப்பிராணிகளை வைத்து அதை வணங்கும் முறையைக் காட்டி
1.அத்தகைய உயிரினங்களிலிருந்து தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்
2.மனிதனாக இன்று வந்திருக்கிறோம்…! என்று நினைவுபடுத்தும் நாள் தான் மாட்டுப் பொங்கல்.

அதாவது இன்று மனிதனாக இருக்கும் நிலையில் இதற்கு முந்திய நிலையில் நாம் எப்படி வாழ்ந்தோம்…? எப்படி வளர்ந்து வந்திருக்கின்றோம்..? இன்றைய மனித வாழ்க்கையில் அதை நாம் எப்படிச் செயல்படுத்துகிறோம்…? மற்ற உயிரினங்கள் எப்படி வாழ்கின்றது…? அதில் இருந்து வந்தவர்கள் தான் நாம்…! என்ற நிலை அங்கே தெளிவாக்கப்படுகின்றது.

காரணம்… ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று நாம் பார்த்தால் அவருடைய கஷ்டத்தை ஈகையால் நுகர்ந்து விட்டால் வேதனை உணர்வுகள் நமக்கு அதிகரித்துவிடும். நம்மையும் கஷ்டத்திற்குள் ஆழ்த்திவிடும்.

ஆகவே அந்த வேதனை நமக்குள் வராது தடுக்க அந்தப் பேரருள் பேரொளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் ஈகையால் நுகர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில்…
1.ஞானிகளின் அருள் சக்தியை அவர்களுக்குள் பாய்ச்சி
2.அந்த வேதனையிலிருந்து அவரும் விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்
3.வெறுமனே எண்ணினால் நம்மைத் தீமையின் நிலைக்குத் தான் அது ஆளாக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வேக வைக்கிறோம் என்றால் சூடு அதிகமாகி விடுகின்றது. ஒரு உபகரணத்தையோ அல்லது துணியையோ வைத்துத் தொட்டால் தான் அதை நாம் எடுக்க முடியும். இல்லையென்றால் கையைச் சுட்டுவிடும். ஆகவே அதை நாம் பக்குவமான நிலையில் எடுக்க வேண்டும்.

அது போலத் தான் வாழ்க்கையில் நாம் தீமைகளைச் சந்திக்கும் போது அந்த அருள் ஞானிகள் உணர்வை வைத்துத் தான் அதைச் செயல்படுத்த வேண்டும்.

ஒருவன் வேதனையால் அவதிப்படுகிறான். கேட்டறிந்தவுடனே அது வந்து விடுகின்றது. நாம் நல்ல பண்புகள் கொண்டிருப்பினும் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்துவிட்டால் நல்ல மனதையும் கெடுத்து விடுகின்றது. இதை எல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி… துருவ மகரிஷியாகி வாழ் நாளில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த அரும் பெரும் சக்தியை யாரொருவர் நுகர்கின்றனரோ அந்த உணர்வினை வலுவேற்றிக் கொண்டால அடுத்து வரும் தீமை எதுவாக இருந்தாலும் அதை வளராது தடுத்து விடலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டினால் வேதனையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் வளரும்.

அரிசி இயற்கையில் சூரியனால் விளைந்தது தான். அதில் இருக்கக்கூடிய தோடை (உமியை) நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் அரிசியைத் தான் எடுத்து வேக வைக்கின்றோம்.

வேக வைப்பது எதற்கு…? வெறும் சுவைக்காக அல்ல…!

1.இயற்கையில் விஷத்தின் ஈர்ப்பால் அதனின் உணர்ச்சியைத் தூண்டி
2.அந்த உணர்வுக்கொப்பத் தான் அது விளைகின்றது.
3.ஆனால் வேக வைத்தாலோ தன் இனத்தை அது வளர்க்காது.

அதைப் போன்று வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால்… அது நமக்குள் வளராது அடக்க வேண்டுமென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் இணைத்து
2.அதை வேக வைக்க வேண்டும்.
3.அதனின் இயல்பை மாற்றி மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியாக நாம் வளர்க்க வேண்டும்.

அது தான் ஞானிகள் அடைந்த வேகா நிலை என்பது.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தையே பொங்கச் செய்கின்றது அதனதன் வாழ்விற்கு அதனதன் நிலையைக் கொடுக்கின்றது. ஆனால் மனிதன் அருள் ஞானத்தின் உணர்வைத் தனக்குள் செலுத்தி வாழ்க்கையில் வரும் இருளை நீக்குதல் வேண்டும்.

1.சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்குகின்றது
2.நமது உயிரோ மற்ற அணுக்களின் தன்மையை அறிவாக இயக்கச் செய்கின்றது
3.துருவ நட்சத்திரமோ இருளை வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

நம் உடலில் தெரிந்தோ தெரியாமலோ தீமையான அணுக்கள் உருவானால் அந்த அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தி அதனின் வீரிய உணர்வு பெற வேண்டும் என்று செலுத்தினால் அது ஒளியின் தன்மை பெறும்.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு நல்ல மருந்தினை உருவாக்கி நோயுற்ற உடலில் செலுத்தப்படும் பொழுது அது இரத்த நாளங்களில் கலந்து மற்றவையுடன் சேர்த்து நல்ல அணுக்களாக உருவாக்குகின்றது.

இதைப் போன்றுதான் நாம் நுகரும் உணர்வுகள் நம் சிரசு பாகம் இருக்கும் உயிருடன் கலந்தால் அது ஈஸ்வரலோகம். உயர்ந்த குணத்தை உருவாக்கி அந்த அணுவின் கருவாக நம் இரத்த நாளங்களில் சேர்க்கின்றது… இந்திரலோகமாக மாறுகிறது.

அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் சென்று இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளில் இணையப்படும் போது பிரம்மலோகமாக மாறுகிறது. எக்குணத்தின் தன்மை பெற்றோமோ இந்த உணர்வின் இயக்கமாக அது இயக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே அதன் வழி கொண்டு நமது வாழ்க்கையில் தெளிந்த மனதையும் உயர்ந்த உணர்வுகளையும் உருவாக்கிப் பேரின்பப் பெரு வாழ்வு வாழச் செய்யும் அருள் உணர்வுகளை நாம் உருவாக்குதல் வேண்டும்.

1.உலகில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

காரணம் உலக மக்கள் உணர்வுகள் நமக்குள்ளும் உண்டு.

எல்லோருடைய உணர்வுகள் நமக்குள் இருந்தாலும்… கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்பது போல்
1.எல்லோரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருளொளி நமக்குள் பெற வேண்டும் என்றும் நாம் எண்ணும் பொழுது
3.நமக்குள் இருக்கும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றுகின்றது.

அரிசியையும் பருப்பையும் சர்க்கரையும் பாதாமையும் முந்திரியையும் போட்டுச் சுவையாகப் பொங்கலை உருவாக்குவது போன்று நமக்குள் பல சரக்குகள் இருந்தாலும்
1.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு எல்லோரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நுகர்ந்தால்
2.அதுவே நமக்குள் சுவையாக உருவாகின்றது… பொங்கல்…!
3.இது தான் தை… “இணைத்தல்” என்று நமக்குள் சேர்க்கின்றது.

ஆகவே… எந்த உணர்வின் தன்மையை இணைக்கின்றோமோ அதன் உணர்வுக்கொப்ப நம்மை இயக்குகிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொண்ட நிலையில்… உலக மக்கள் அருள் ஞானம் பெற்று அவர்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளை நீக்கி மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற தியானிப்போம்… நம் உடலுக்குள் அதை உருவாக்குவோம்
2.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… மகிழ்ந்து வாழும் சக்தியை நம் உடலில் உருவாக்குவோம்
3.நம் சொல்லும் செயலும் பிறரை மகிழச் செய்யும் நிலையாக நமக்குள் உருவாக்குவோம்.
4.உலக மக்கள் அனைவரும் தெளிந்த மனம் கொண்டு வளர “குரு அருளை” நமக்குள் பெருக்குவோம்
5.குரு அருளைத் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம்
6.உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறத் தியானிப்போம்… தவம் இருப்போம்.
7.அந்தத் தவத்தின் பலனாக அனைத்து மக்களும் உடல் நலம் பெற… நம் உடலில் உள்ள அணுக்களும் நலம் பெற
8.நம் சொல் கேட்போர் உணர்வுகளை நலம் பெறச் செய்யக்கூடிய சக்தியாக ஒவ்வொரு நாளும் நாம் செயல்படுத்துவோம்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

இன்றைய உடலின் கணக்கு எதுவாக இருக்க வேண்டும்…?

 

உதாரணமாக நாம் கோபப்பட்டு ஆத்திரப்பட்டுப் பிறருக்குத் தொல்லை கொடுக்கிறோம் என்றால்… நாமே அசுர குணங்களை வளர்க்கும் தவத்தை மேற்கொள்கின்றோம் என்று பொருள்.

நாம் எண்ணிய தவம் அனைத்தையும் உயிர் அந்த உணர்வின் கருவாக இந்திரலோகத்தை மாற்றி அமைக்கின்றது.
1.மகிழ்ச்சியை மாற்றி நமக்குள் வெறுப்பு என்ற உணர்வுகளும் எவரையும் கொன்று புசிக்கும் உணர்வே வருகின்றது.
2.இங்கே பிரம்மலோகம் அதன் உணர்வின் தன்மை வளர்க்க நேர்கின்றது.
3.சிவனும் அதன் வழிப்படி வரம் கொடுத்து விடுகின்றான்.
4.ஆகவே மூன்று லோகத்தையும் வென்றிட வேண்டும் என்று தான் இராவணனின் தவம் அமைகின்றது.
5.அந்தத் தவத்தின் பலன் கொண்டு இந்த உடலில் விளைந்து (வீழ்ச்சி அடைந்து) இந்திரலோகத்தைக் கைவல்யப்படுத்திய பின்
6.அசுர உணர்வுகளை உருவாக்கும் அணுவின் தன்மையாக வருகின்றது.
7.இந்த மனித உடலை விட்டுச் சென்ற பின் புலியாகப் பிறக்க நேர்கின்றது.

அப்படி உருவான பின் புலியின் உயிரும் ஈசனே. அதன் இயக்கத் தொடரும் விஷ்ணுவே ஈர்க்கும் காந்தம் லட்சுமி.

அப்போது தீமைகளை உருவாக்கும் பிரம்மத்தின் தன்மை அந்தப் பசியை அடக்கும் தன்மையாக அல்லது தன் பசிக்காக ஏங்கும் பொழுது மற்றொன்றைக் கொன்று புசிக்கும் உடலாக (அது பிரம்மமாக) மாறுகின்றது.

அந்த உணர்வின் தன்மை உடலாகும் போது அது சிவம் ஆகின்றது. ஆக புலியின் உடலும் சிவமே அதன் உடலுக்குள் உருவாக்கும் அந்த இந்திரலோகத்தை மாற்றி அசுர உணர்வுகளை உருவாக்கும் உலகமாக மாற்றுகின்றது.

உயிரின் தன்மை விஷ்ணுவாக இருக்கின்றது இயக்கம் ஈசன் ஆகின்றது. இதை எல்லாம் தெளிவாக தெரிந்து கொள்வதற்குத் தான்
1.ஓர் உடலை விட்டு உடல் மாறும் பொழுது ஒரு உடலில் நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிர் எவ்வாறு உருவாக்குகின்றது…?
2.அந்த உணர்வின் தன்மை கருவாக எப்படி உருவாகின்றது…?
3.கருவான பின் ஏற்கனவே இருந்த உடலை அது எப்படி நலியச் செய்கின்றது…?
4.உயிர் இந்த உடலில் எதனைச் சேமித்ததோ அதன் வழி வெளிவந்த பின் அதற்குத்தக்க உணர்வை நுகர்ந்து
5.உடல்களை எப்படி மாற்றுகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.

இது தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்ட்டி இருப்பார்கள். சாதாரண மக்களும் நாம் புரிந்து நம் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று என்பதனைக் கற்பிக்கின்றது நம் சாஸ்திரங்கள்.

நந்தீஸ்வரன் என்றால் ஒரு கோபப்படும் உணர்வை நுகர்ந்தால் உயிருக்குள் பட்டு அந்த உணர்வின் தன்மை உருவாக்குகின்றது. உருவாக்கிய பின் அதே கோபத்தின் உணர்வு மீண்டும் இந்த உடலுக்குள் அணுவின் தன்மை அடைந்து கோபத்தை உருவாக்கும் உணர்வின் அணுவாக விளைகிறது.

அப்பொழுது அதனுடைய தன்மையை அது உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது.. அது தான் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.

இந்த வாழ்க்கையில் கோபத்தின் தன்மை அதிகமாக்கினால் அதன் உணவின் தன்மை கொண்டு இப்படி நிகழ்ந்து விடுகின்றது.

அதே சமயத்தில் கோபம் வரும் பொழுது “தந்திரமாக மற்றவர்களை ஏமாற்றிச் சென்றால் அதன் உணர்வின் தன்மை நரியாகப் பிறக்கச் செய்கின்றது…”

இதைப் போல எந்தெந்த உணர்வின் தன்மையை நமக்குள் மாற்றி அமைக்கின்றோமோ அதன் உணர்வுக்கொப்ப மனிதனாக இருப்பதை இந்த உயிர் மாற்று உடலை அமைத்து விடுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு

 

மான் இனம் தனது குட்டிக்கு ஊட்டுகின்ற பாலானது அது ஊட்டுகின்ற செயலை… மாற்று குணம் பொருந்திய எதிரி விலங்கினங்களைக் கண்டுவிட்டால்… ஈர்ப்பின் அலை செயல் புரிந்திடும் விதமாக…
1.அந்த அலையானது மானின் சுவாசத்திலே பட்டவுடன்
2.பால் ஊட்டுகின்ற சுரப்பைச் சட்டென நிறுத்தித்
3.தன்னைக் காத்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றுவிடும்.

அதே போன்றது தான் நீங்கள் தியானத்தில் எடுக்கும் சக்தியும்… அதை உங்களுக்குக் கொடுக்கும் நிலையும்.

அதாவது… மகரிஷிகளின் பேரருள் பேரொளி சக்தி உங்களுக்குள் பாயப் பெற்றிடும் நிலையில்… அந்த மகான்களின் சப்த அலைகள் நுண் ஒலி காந்த அலைகளாகப் பரவ விட்டுச் சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் ஓட்ட கதியில்
1.ஈஸ்வரராய் அளிக்கப்படும் (உயிர் வழி சுவாசம்) சுரக்கும் அமுதமாகிய அருளாசி கொண்டு உரைக்கப் பெறும் அருள் உபதேசங்கள்
2.எண்ணத்தின் கூர்மை மாற்று அலையின் சிந்தனையில் சிறிது மோதியவுடன் (சந்தர்ப்பத்தில் தீமைகள் மோதும் போது)
3.காட்சியின் ஒளிப்பதிவு நிலைகள்… ஒலி அலைகளாக மாறு கொண்டிடும் நிகழ்விற்கே “சற்று தடங்கலும் காட்டி…”
4.இப்படியும் நிகழ்ந்தனவா…? என்ற அதிசயப் பொருளாக வினா தொடுத்தால் (ஞானத்தின் வழியில் அறியும் எண்ணம் கொண்டால்)
5.காட்சிப் புலனறிவு பதிவு பெற்ற ஒலி அலைகளை நேரிடையாக உணர்ந்து கொண்டிடும்
6.ஞான திருஷ்டி எனும் விழிப்பார்வை கொண்டு “காலத்தின் நிகழ்வுகளை” எம்மால் உணர்த்தப்படும். (ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு).

எமது (ஈஸ்வரபட்டர்) சர்வ ஆக்ஞையில் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஞானச் செல்வங்களுக்காகக் (உங்களுக்காக) காரண காரிய செயல்முறைகள் இதிலே காட்டப்பட்டுள்ளது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புகளில் படர்ந்து அதற்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

செல்ஃபோன்களில் நாம் அழுத்திய பின் எங்கிருந்து ஃபோன் செய்கின்றனரோ… அவருடைய பதிவை நாம் பார்க்கின்றோம். அதே போல
1.ஒரு வேதனைப்படுவர் உணர்வைப் பதிவாக்கி விட்டால்
2.அந்த வேதனைப்படுவதை மீண்டும் எண்ணினால்
3.காற்றிலிருந்து அந்த வேதனைப்படும் உணர்ச்சிகளை நாமும் நுகர நேருகின்றது

அதே சமயத்தில் வேதனைப்படுவரைப் பார்த்தபின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அடுத்த கணமே… அதனுடன் இணைக்கப்படும் பொழுது
1.வேதனையைத் தணித்த அந்த உணர்வின் சக்தி அதன் அருகிலே படும்பொழுது
2.வேதனையான உணர்ச்சியைத் தூண்டும் நிலைகள் வலு இழக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை இப்படி அங்கே பெருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் படர்ந்து ஊனை உருவாக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி இந்த உணர்வைப் பதிவாக்குங்கள்.

நம் நெஞ்சுக்கு மத்தியில் இருக்கும் குருத்தெலும்புக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கப் படும்பொழுது
1.அங்கே ஒரு விதமான உணர்ச்சிகள் வந்து
2.இந்தக் காற்றிலே படர்ந்துள்ள அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமது உடல் அருகிலே ஈர்த்துக் கவரும்படி செய்யும்.

அபப்டி ஈர்க்கும் பொழுது… நாம் எந்த அளவிற்கு எண்ணுகின்றோமோ அதற்குத் தக்க அந்தத் துடிப்பின் தன்மை குருத்தெலும்பிலே வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் விலா எலும்புகளில் படர்ந்து அங்கே ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மறுபடியும் ஏங்கித் தியானியுங்கள்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…!
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எந்த அளவிற்கு நெஞ்சின் விலா எலும்புகளில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ
2.அந்தக் கணக்கு கூடக் கூடக் கூட நம் உடலில் வந்த இருளை நீக்கவும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் தகுதியும் நாம் பெறுகின்றோம்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் தன்மை அதிகரித்தால் இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் சென்று விடுகின்றோம்.

ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால் இந்தக் கணக்கு கூடினால் விஷத் தன்மை கொண்ட உடல் எதுவோ அதன் ஈர்ப்புக்குள் இந்த உயிர் அழைத்துச் சென்று அந்த வேதனைப்படும் உடலாக உருவாக்கி விடுகின்றது.

ஆகவே நமது பற்றெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பால் இருக்க வேண்டும். அதிலிருந்து வரும் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கி இருக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நாம் எண்ணுவோம் என்றால்
1.இந்த உணர்வின் வளர்ச்சிகள் நம் உடலில் உள்ள குறைபாடுகளைக் குறைத்து நோய்களைக் குறைத்து
2.சிந்திக்கும் ஆற்றலை வலிமை பெறச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருகச் செய்து
4.என்றும் பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைய இது உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரிடம் யாம் பெற்ற அனுபவங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அனைத்தையும் யாம் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

1.குருநாதர் கொடுத்த அந்த அருளை ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.கண்ணின் நினைவை அதிலே செலுத்தப்படும் பொழுது “கெட்டது போகாமல்” உங்களுக்குள் தடுக்கப்படுகின்றது.

அதே நினைவு கொண்டு உள்முகமாக உங்கள் உடலுக்குள் இரத்த நாளங்களில் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று செலுத்தினால் வீரியமடைகின்றது. உடலுக்குள்ளே வலுவான பின் தீமைகளைத் தள்ளிவிட்டு விடுகின்றது

உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம். மீண்டும் அவரை நினைக்கும் பொழுது அந்த வேதனை வருகின்றது. வேதனையான உணர்ச்சி வரப்படும்போது
1.ஒரு பலகாரத்தைச் சுட்டுக் கொண்டிருந்தால் சரியாகச் செயல்பட முடியாது.
2.ஒரு இயந்திரத்தில் வேலை செய்தாலும் அதைச் சீராக இயக்க முடியாது
3.ஒருவர் சந்தோஷமான வார்த்தையைச் சொன்னால் காது கொடுத்துக் கேட்க முடியாது.

இப்படி ஒரு சமயம் பதிவானது மறுபடியும் இந்த உணர்வு கலக்கப்படும் பொழுது நம்மால் சரியான பதிலும் சொல்ல முடியாது போய்விடுகிறது. அதனால் இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி பழகுதல் வேண்டும்.

சூரியன் தனக்குள் உருவாகும் பாதரசத்தால் 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து விஷமான நிலையைக் கொண்டு வரப்படும் பொழுது இது மோதி அந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது.

அதிலே…
1.கேது விஷத்தை எடுத்துக் கொள்கின்றது
2.இராகு கருகிய புகைகளை எடுத்துக் கொள்கின்றது
3.ஓடும்போது மின் கதிர்களை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கிறது.
4.மோதலில் வரக்கூடிய சப்தத்தைச் செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது
5.மோதி ஆவியாகப் பிரிந்து செல்வதை சனிக்கோள் எடுத்துக் கொள்கின்றது.

இப்படி அதனதன் வலு கொண்டு அதனதன் நிலைகளில் எடுக்கின்றது.

சூரியனுக்கு எப்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் இருக்கின்றதோ அதே போன்றுதான் நமக்குள் சுவாசித்த பின் இரத்தத்தில் கலந்த உணர்வுகள் உடலில் உள்ள உறுப்புகளில் இயங்குகின்றது.

கல்லீரல் ஓரளவுக்கு விஷத்தைப் பிரித்து வடிகட்டி அனுப்புகின்றது.
1.அங்கு அதிகமான விஷத்தன்மையானால் முடியாது போகிறது… விட்டு விடுகிறது.
2.மண்ணீரலுக்குப் போனாலும் இதே நிலைதான்.
3.அதை இழுத்து நுரையீரலுக்கு வரும் பொழுது அங்கே தேங்கினால் நுரையீரலும் கெட்டு விடுகின்றது.
4.நுரையீரல் கெட்டு அந்த விஷத்தின் தன்மை அனுப்பப்படும் போது சிறுநீரகம் இரத்தத்தில் இருக்கக்கூடிய மாசுகளைப் பிரிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

உப்புச் சத்தையோ சர்க்கரைச் சத்தையோ பிரிக்க முடியவில்லை என்றால் அந்தச் சத்துக்கள் எல்லாம் அளவு கூடி விடுகின்றது… வாத நீர்களை உண்டாக்கிவிடுகிறது…. பலவீனமாகி விடுகிறது.

அத்தகைய பலவீனத்தை மாற்ற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சிறுகச் சிறுக… சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் வளர்ச்சி அதிகமானால் சர்க்கரை சத்தையும் உப்புச் சத்தையும் குறைக்க முடியும். ஆகவே…
1.உடல் உறுப்புக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்து விட்டால்
2.இந்த உடலுக்குப்பின் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

மனிதன் ஒருவனால் தான் இது முடியும்.

கோபமும்… இரத்தக் கொதிப்பும்

 

சந்தர்ப்பத்திலே கோப உணர்வுகளை நாம் நுகர நேர்ந்தால் அந்த உணர்ச்சிகள் மீண்டும் மீண்டும் நமக்குள் வளர்ந்தால் கார குணத்தின் இனத்தை அது விருத்தி செய்து கொண்டே இருக்கும்.

ஒரு அணுவிற்கு ரத்தத்தில் அந்த உணர்ச்சியின் தன்மை வரும் பொழுது… அது பல அணுக்களாகப் பெருகி விட்டால்
1.பல அணுக்களும் அந்தக் கார உணர்ச்சிகளை உணவாக உட்கொண்டால் என்ன செய்யும்…?
2.அது போன்று வளர்ச்சி பெற்றவர்களுக்குக் கோபம் அதிகமாக வருவதைப் பார்க்கலாம்… வேகமாக வரும்
3.நரம்புகள் எல்லாம் அவர்களுக்குப் புடைத்து விடும்
4.அவர்கள் நரம்பைப் புடைக்க வைக்கின்றார்களா இந்த உணர்ச்சிகள் ரத்த நாளங்களில் அவ்வாறு இயக்குகின்றதா…?
5.கண்கள் எல்லாம் சிவந்து விடும் தலை கும்… என்று ஆகிவிடும்
6.நெற்றியில் கண்ணுக்கு வரக்கூடிய ரத்த ஓட்டங்களில் வேகமாக இருப்பதைக் காணலாம்.

தவறு யார் செய்தது…?

கோபப்படுவோரை வேடிக்கை தான் பார்த்தோம் அந்த உணர்வுகள் அணுவாக விளைகிறது. அந்த அணுக்கள் பெருகும் பொழுது அதனுடைய மலம் ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது இந்த உணர்வின் வேகம் உயிரிலே இயக்குகிறது.

எப்படி…?

டி.வி ரேடியோக்களில் ட்ரான்ஷாக்ஷன் என்று சொல்வார்கள். இந்த உணர்வின் தன்மை அது எந்த உணர்ச்சியோ “ட்ரான்ஷாக்ஷன்…” அதை எடுத்து இந்த உணர்வுகளை மூளை பாகம் வரை சிந்திக்கச் செய்து உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
1.நுண்ணிய நரம்புகளில் கார உணர்ச்சிகள் ஆகிப் பலூன் மாதிரி உப்பிவிடும்.
2.நம்மை அறியாதபடியே தலை கிண் என்று ஆகிவிடும் கண்களும் அப்படியே ஆகும்.

குழந்தை மீது பாசமாக நாம் இருந்தாலும் அந்த நேரத்தில் அவன் எதையாவது கீழே போட்டான் என்றால் “அறிவு கெட்டதனமாகச் சாமானைப் போடுகிறான் பார்…” என்று கோபம் வரும்.

தன் மனைவியைக் கூப்பிட்டு ஒரு பொருளை எடுக்கச் சொன்னால் சரி எடுத்து வரலாம் என்று சாதாரணமாக அவர்கள் நடந்தால் “நடப்பதைப் பார்… நீ என்ன வேலை செய்கின்றாய்…?” என்று அவர்கள் மீதும் வெறுப்பு வரும்.

தொழில் செய்யும் இடங்களில் பார்த்தோம் என்றால் வேலை பார்க்கும் பையனிடம் ஒரு வேலையைச் சொல்லி “இந்த ஃபைலைக் கொண்டு போய் இன்னாரிடம் கொடுத்து வா…” என்று சொன்னால் சரிங்க சார்…! என்று சாந்தமாகச் சென்றால்
1.அவன் போகும் பொழுது நடையைப் பார் இவனெல்லாம் உருப்படுவானா…? எப்படி வேலை செய்கின்றான் பார்…! என்று
2.நம்மை அறியாமல் அவனைத் திட்டுவோம்..

ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்…! அவனிடம் இதைச் சொன்ன பின் காதிலே கேட்கின்றான் கேட்டபின் அதே உணர்வின் தன்மை “என்ன இப்படிக் கோபிக்கின்றார்…?” என்று கோபத்துடன் செல்வான்.

இந்த உணர்வோடு செல்லும் பொழுது யாரிடம் அந்த ஃபைலைக் கொடுக்க வேண்டுமா அவரிடம் கொடுக்காத படி வேறொருவரிடத்தில் கொடுத்து விடுவான். ஃபைலைக் கொடுத்துவிட்டேன் என்று சொல்லிவிடுவான்.

ஆனால் ஆனால் யாரிடம் போய்ச் சேர வேண்டுமோ அங்கே சேர்ந்திருக்காது. அவரிடம் பெல் அடித்து ஃபைல் வந்து சேர்ந்ததா என்று கேட்டோம் என்றால் இல்லை வரவில்லை என்பார்.

அந்த பையனைக் கூப்பிட்டு “உன்னை எங்கேடா நான் கொடுக்கச் சொன்னேன் எங்கேடா கொடுத்தாய்…?” என்று சண்டை வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள்
1.இவர் உணர்வு தான் அந்தப் பையனை இயக்குகின்றது.
2.அதன்படி அவன் சரியாகச் செய்ய முடியாமல் போய்விடுகின்றது.

குற்றம் யார் செய்தது…? அது தான் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்…! நம் உணர்வுகளை அது இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது.

அப்போது தவறு யார் செய்தது…? நாம் நுகர்ந்த உணர்வுகளே அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது. நுகர்ந்தது அணுவின் கருக்களாகப் பெருகி அது வளர்ச்சி அடைந்த பின் “நமக்குக் கோபம் அதிகமாக வருகின்றது…”

உணவு சாப்பிடுவதற்காக மனைவி சாப்பாடு கொண்டு வருகிறார்கள் என்றால் அதைப் பார்த்த உடனே உணர்ச்சிகள் ஆவேசம் வரும். கொண்டு வரும் பொழுது இடையிலே சிறிது நின்றால் போதும்.

ஏன் இப்படிக் கொண்டு வந்து வைக்க வேண்டியதுதானே அதற்குள்… என்ன…? என்று தன்னாலே மனைவியிடம் சண்டை வரும்.
1.இது மாதிரி நிறைய ஆன பின் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
2.அடுத்து எதைப் பார்த்தாலும் அந்தத் துடிப்பின் வேகம் தான் வரும்.
3.சிறு மூளையில் போய் ட்ரான்சாக்ஷன் செய்யக் கூடிய அதிர்வுகளை உருவாக்கும் இடத்திலே பலூன் மாதிரி உப்பி விடும்.

அது நுரையீரல் பக்கம் சென்றால் அங்கே விரிவடைந்து மூச்சுத் திணறல் அதிகமாகிவிடும் சிறிது நேரத்தில் சிந்திக்கும் தன்மை இல்லாது மனிதனை ஆபத்திற்குள் கொண்டு போய் விட்டு விடும்.

அதே சமயத்தில் கை பாகம் இயக்கப்படும் பொழுது ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டும் என்று உணர்ச்சிகள் வரும் போது அதனுடைய அழுத்தமானால் ஒரு பக்கம் இருக்கும் கை காலிலே செயலிழந்து விடும். “டபக்” என்று இழுத்துச் சுண்டிவிடும்.

ஏனென்றால் அதற்குச் செல்ல வேண்டிய உணர்வின் உணர்ச்சிகளைத் தடைப்படுத்தி விடுகின்றது பலூன் மாதிரி அந்த இடத்தில் உப்பிக் கை கால்கள் சுருங்கி விட்டால் அப்புறம் அதற்கு வேண்டிய வைத்தியங்களைத்தான் பார்க்க வேண்டி வரும்.

ஆனால் பலூன் மாதிரி உப்பியது வெடித்து விட்டால் “இரத்தக் கொதிப்பு வந்தது இறந்துவிட்டார்” என்று சொல்லிவிடுவார்கள்.

இதை எல்லாம் மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்… வழி வேண்டுமல்லவா…!

பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்ல உனக்காகக் காத்திருக்கின்றேன்

 

பிறப்பு வளர்ப்பு இறப்பு (எல்லாவற்றிலும்) எனும் உண்மைகளை உணர்ந்து… தம் ஆத்ம நிலையைக் காத்துக் கொள்ள… உள்ளபூர்வமாக… இதயத்தின் ஒளியாக…
1.யாம் சுட்டிக் காட்டிய தியானத்தின் வழித் தொடராக
2.பயணம் செய்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனரப்பா…!

ஆனாலும் பிறவி என்னும் மகா சமுத்திரத்தில் வாழ்க்கை என்னும் ஓடத்தில்… இக்கலியின் மக்கள் “மாக்களாக மாறிடும் நிலையை நீக்கிட”
1.அறிவு பூர்வமான ஆக்க செயல்களை உணர்த்தி
2.மாயத் தளைகளை அகற்றி
3.”விழிப்பாக உணர்ந்திடும்” – ஞானச் செல்வங்களை (உங்களை)
4.பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்லும் “யாம் (ஈஸ்வரபட்டர்) ஓர் ஓடக்காரன்…”

கால தேச வர்த்தமானம் எண்ணிடாதபடி… என் கடமையின் வினைச் செயலாக… இரவு பகல் “எந்த நேரமும் நான் காத்திருக்கின்றேன்…”

1.இரவிலோ… இன்னும் பேரருள் பிரகாசம் என்னும் ஜோதியைக் கையில் ஏந்தி
2.உங்கள் வாழ்க்கையின் பயனைக் காட்டிடவே சூட்சுமத்தில் செயல் கொள்கின்றேன்.

பயன் கொள்ளுங்களப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனான பின் அடுத்தவர்கள் செயலைப் பார்த்து… இது தீமை இது பகைமை என்ற நிலைகளை அறிகின்றோம். அறிந்தாலும் மீண்டும் தவறைச் செய்து அவன் கோபிக்கின்றான் என்றால் அந்தக் கோப உணர்வு நமக்குள் வரக்கூடாது.

கோப உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அங்கே அவன் உடலில் படர வேண்டும். அந்த அறிவின் தெளிவு அங்கே வர வேண்டும் என்று நாம் எண்ணினால் அவனின் கோப உணர்வுகள் நமக்குள் வராது.

அதைத் தான் விழித்திரு என்று சொல்வது…!

ரோட்டிலே சும்மா போய்க்கொண்டே இருக்கிறோம். ஒரு பக்கத்திலே ஏதாவது ஒரு புகையைப் போட்டுவிடுகிறார்கள். நாம் போகும் பாதையில் அது வருகிறது.
1.சுவாசித்தவுடனே தலை சுற்றுகிற மாதிரி இருக்கின்றது…
2.எதனால் என்று நமக்குத் தெரிவதில்லை.
3.இருந்தாலும் தலை சுற்றுகிறது என்று மீண்டும் அப்படியே நடந்து செல்வோமா…?

இல்லை…!

1.உடனே மூக்கைப் பொத்திக் கொள்கின்றோம்
2.எப்படியோ ஒரு ஓரத்திலிருந்து அதைச் சமப்படுத்த நிற்கிறோம்.
3.ஒதுங்கிய பின் நம் மனது ஒரு தெளிவாகின்றது.

அதைப் போன்று தான் வாழ்க்கையில் வெறுப்பு என்ற நிலைகள் வந்து நம்மைக் கோப உணர்வு இயக்கிவிட்டால் அடுத்த கணமே…
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியிலே உயிரை எண்ணி அந்த உணர்வைக் கொண்டு கோபத்தைத் தடைப்படுத்துதல் வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
3.இந்த உணர்வினைக் கலந்து நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்

இதைத்தான் விழித்திரு என்று சொல்வது.

மனிதனின் ஆறாவது அறிவைக் “கார்த்திகேயா… தகப்பன்சாமி…! என்று சொல்வார்கள்.
1.இந்த உடலிலிருந்து உருவானதுதான் இந்த ஒளியின் அறிவு.
2.ஓ…ம் என்ற பிரணவத்தைச் சிவனுக்கு ஓதினான் முருகன்… தகப்பன்சாமி.

இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அருள் ஒளியின் உணர்வை இங்கே ஜீவனாக்க (உடலுக்குள்) வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

உடலிலிருந்து வந்த நிலையை
1.செவி வழியில் உணர்வுகளை உந்திக் கண்களின் வழி நினைவாற்றலைப் பெருக்கி
2.உணர்வின் தன்மையை இழுத்துக் கண் வழி கொண்டு தனக்குள் இந்த உணர்வினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சிவம் என்பது உடல்… ஆனால் தகப்பன்சாமி…! இந்த உடலிலிருந்து விளைந்தாலும் தகப்பனுக்கே சொல்கின்றான்… மந்திரத்தை ஓதினான் பிரணவத்தை… அதாவது ஜீவன் பெறுவதை…!

1.நாம் எண்ணுவது எதுவோ அதுதான் ஜீவன் ஆகின்றது என்பதை
2.இந்த ஆறாவது அறிவு தான் சுட்டிக் காட்டுகின்றது

நான் (ஞானகுரு) இப்போது பேசுவது எல்லாம் என்னுடன் சிவம் ஆகின்றது.. இத்தனை (உபதேசிப்பதை) அறிவையும் எனக்குள் சொல்வது சிவனுக்குத் தான்.

சிவனுக்குள் ஜீவன் என்ற நிலையில் இருக்கும் பொழுது… சிவனுக்குள் ஜீவ அணுவின் தன்மை இது எப்படி வாழ வேண்டும்…? எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் இத்தனை தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

மகா சிவன்ராத்திரி…! பல கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அதற்குள் இருள் சூழா நிலைகள் கொண்டு ஒளியின் சரீரம் பெற்ற அருள் ஒளியின் உணர்வினைக் கூட்டுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாதாரணமாக… ஒரு பேட்டரி இயங்கிக் கொண்டே உள்ளது. அதிலே சார்ஜ் குறைந்து விட்டால் செல்கள் எதுவும் இயங்காது. மீண்டும் ஏற்றினால் தான் இயக்கம் இருக்கும்.

இதைப் போன்று
1.நம் உயிரின் உணர்வு கொண்டு உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரியத்தை ஊட்டினால் சிந்திக்கும் வலிமை கிடைக்கும்.

மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்படும் பொழுது
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பெற்று
2.நமக்குள் வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பேட்டரி சரியாக இருந்தால் அதனுடன் இணைக்கப்பட்ட எல்லா இயந்திரங்களும் சீராக இயக்கும்… அதிலே இருக்கும் சார்ஜ் உறுதுணையாக இருக்கும்.

ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துச் சார்ஜ் செய்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து உங்கள் உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு வீரிய சக்தி ஊட்டித் தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்… இதனால் உங்கள் வாழ்க்கையே தியானமாகும்…!

வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி… அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வர வேண்டும்.

நம் உறவினர்களையும் நண்பர்களையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைப் பற்றும்படி செய்து
1.அவர்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றிடும் உணர்வுகளை ஊட்டினால்
2.அவர்களும் நலமாகின்றார்கள்… நாமும் நலமாகின்றோம்.
3.நம் உடலும் நலமாகும்… நம் வாழ்க்கையும் நலமாகின்றது… தொழிலும் நலமாகிறது.

இந்த முறையை ஒவ்வொரு குடும்பத்திலும் பழகிக் கொள்ளுங்கள்.

சங்கடம் சலிப்பு வேதனை வெறுப்பு பகைமை வந்தால் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும். அவர்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும்… அவர் உடல் உறுப்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் தெய்வீக அன்பைப் பெற வேண்டும்… தெய்வீக அருளைப் பெற வேண்டும்… தெய்வீக சக்தி பெற வேண்டும்… தெய்வீக வழியில் நடக்கும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

பண்பும் பரிவும் அன்பும் பாசமும் எங்கள் குடும்பத்தில் வளர வேண்டும்… அரவணைத்து வாழும் அருள் ஞானம் பெற வேண்டும். நாங்கள் அனைவரும் மகரிஷி வட்டத்தில் இணைந்து வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு சமயமும் அந்த ஆற்றலைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்

1.இது போன்று நாம் செயல்படுத்தினால் நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த இது உதவும்.
2.வேறு யாரும் சொல்லி நாம் செயல்படுத்த முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை இந்த முறைப்படி செய்து பெற்றால் அருள் ஞானம் பெற்று இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெறுவீர்கள்.

இல்லை… வெறுப்பு வேதனை என்ற உணர்வு வந்தால் வேதனையான உணர்வுக்கொப்ப உங்கள் சொல்லும் உங்கள் செயலும் அமைந்து
1.பிறிதொருவர் நல்லது சொன்னால் ஈர்க்காதபடி அந்த நியாயத்தைத் தான் பேசுவீர்கள்.
2.பண்பை ஏற்றுக்கொள்ளும் தன்மையோ… பண்பை நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலையோ
3.வரும் தீமைகளை அகற்றிடும் நிலையோ வருவது மிகவும் சிரமம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலைகள் ஆகாதபடி குருநாதர் காட்டிய வழிப்படி நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞான வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானம் செய்வதற்கு முன் இருந்த அனுபவமும் தியான வழிக்கு வந்த பின் பெற்ற சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.

அதனை நீங்கள் கூர்ந்து கவனித்து
1.அந்த உணர்வின் இயக்கம் நாம் இயங்குகின்றோமா…?
2.நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா…?
3.அவ்வாறு இயக்கிய உணர்வுகளுக்குத் தக்க நாம் செல்கின்றோமா…? என்று
4.நன்றாக நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றுகிறது. ஆகவே தீமை என்ற உணர்வின் தன்மையை மாற்றியமைக்கக் கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.

அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்பதை உணர்ந்து… மாற்றி அமைப்பதற்குண்டான சக்தியை நீங்கள் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமையிலிருந்து தப்புவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை குருநாதர் எனக்குள் பெறச் செய்தாரோ அதைப் போன்று உங்களுக்குள்ளும் அதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீய வினைகள் இருந்தாலும் குறையும்.
2.புதிதாக தீயவினைகள் நமக்குள் வளராதபடி தடுக்க முடியும்.

இந்த இரண்டும் இல்லை என்று சொன்னால் நான் தியானம் செய்தேன்.. அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்…! என்று சொன்னால் அர்த்தமற்றது.

செடிக்கு அது சரியான பருவத்தில் நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால்தான் அது முளைத்து வளரும்.
1.செடியை வைத்து விட்டேன்… நீரையும் ஊற்றி விட்டேன்…
2.அது வளர்ந்து விளைந்துவிடும்… என்று சொன்னால் அது எப்படி விளையும்…?

எத்தனையோ கோடி உடல்களில் சந்தர்ப்பவசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு தான் மனித ரூபத்தைக் கொடுத்தது நம் உயிர்.

பல விஷத் தன்மைகளை அடக்கினான்… உணர்வின் தன்மை மாற்றி அமைத்தான்… அகஸ்தியன் ஒளியின் உடல் பெற்றான்… துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்ய வேண்டும். அந்தத் தகுதியை நாம் பெற வேண்டும்.

அகஸ்தியன் ஒளியாக ஆனது போல
1.நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக மாற்றி
2.முந்திய வினைகள் இருந்தால் அதைத் தணித்து… புதிதாக வினைகள் சேராதபடி தடுத்து
3.நம் உணர்வினை வலுவாக்கி ஒளியாக்க முடியும்.

அத்தகைய வலு பெறச் செய்வதற்குத் தான் இங்கே உபதேசம் கொடுப்பது.

சாமியிடம் உபதேசங்களைக் கேட்டதும்… அதன்படி உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டதும்…
1.உங்களை எது இயக்கியது…?
2.வெறுப்பு வந்து குடும்பத்தில் பகைமை எப்படி வந்தது…?
3.தொழில் எதனால் நஷ்டம் அடைந்தது…? என்பதை நீங்கள் உணர்ந்து
4.தியானத்தின் மூலம் அனுபவபூர்வமாகப் பெற்ற தீமையை நீக்கக்கூடிய அந்த உணர்வுகளை
5.நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

அதற்குத் தான் உங்கள் அனுபவங்களைச் சொல்லச் சொல்வது.

நாரதன் கலகப்பிரியன்… கலகமோ நன்மையில் தான் முடியும்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி… ரிஷி என்று சிருஷ்டித்துக் கொண்ட உணர்வாக… துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வைத்தான் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

அதைத் தான் ரிஷியின் மகன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வார்கள்.

1.அதை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்த்து…
2.யார் தீங்கு செய்கின்றார்களோ அவர் உடலில் அது படர வேண்டும் அவர் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி என் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நமக்குள் எடுத்தால்
5.பையன் மீது பிடிவாதமாக இருக்கும் உணர்வுகளை மாற்றி அவன் மீது இருக்கும் வெறுப்பினை மாற்றி அமைக்கின்றது.

நாரதன் கலகப் பிரியன்… ஆனால் கலகமோ நன்மையில் முடியும்.

நாம் பிடிவாதமாக இருக்கின்றோம். மற்றவரிடத்தில் எல்லாம் என்ன சொல்வோம்…? என் பையன் சேட்டை செய்து கொண்டேயிருக்கிறான் என்போம்.

அவன் நல்லது தானே செய்கிறான் என்பார்கள்.

நீங்கள் ஒரு பக்கத்திலே…! அவன் செய்யும் குறும்புத்தனம் இன்னது தான் என்று சொல்ல முடியாது. எப்போது பார்த்தாலும் வம்பு இழுத்துக் கொண்டே வருவான் என்று நாம் பிடிவாதமாக இருப்போம்.

அப்போது அந்த அருள் உணர்வை எடுத்துக் கொண்டால் நாரதனாகி கலகப் பிரியனாக இருந்து செயல்படும்.
1.என் பையன் நல்ல நிலையில் வர வேண்டும் எல்லோரும் போற்றும் நிலையாக அவன் வரவேண்டும்…
2.நல்ல உணர்வுகளைச் சிந்திக்கும் திறன் வேண்டும் என்று அதிகாலையில் அந்தச் சக்தியை எடுத்து
3.பையனுடைய தீமை செய்யும் உணர்வுகளை அடக்கும்படி செயல்படுத்தும்.

அடக்கி அவன் நல்ல நிலையில் வர வேண்டும் எண்ணினால் அவன் மீது அந்த வெறுப்பு வராது. இப்படிப் பாய்ச்சப்படும் போது நம்முடைய பிடிவாத குணத்தை நீக்கி விடுகின்றது. நமக்கு நன்மை ஏற்படுகிறது.

நாம் எடுத்துக் கொண்ட அந்த அருள் ஒளியின் உணர்வு குருக்ஷேத்திரப் போராகி இரண்டுக்கும் போர் வரப்படும் போது தீமை என்ற உணர்வினை அடக்கும் தன்மை வருகிறது… பையனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.

உதாரணமாக நண்பன் நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கலாகிறது… துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் புரை ஓடுகின்றது.

அதே போல் “பாசத்தால்” தாய் பையனை எண்ணி…
1.அவன் சுட்டித்தனம் செய்கின்றான் என்று எண்ணினால்
2.அவனைச் சிந்தனை செய்ய விடாதபடி மீண்டும் குற்றவாளியாகத் தான் ஆக்க முடியும்…
3.அவனை நல்லவனாக மாற்ற முடியாது.

ஆகவே அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் தீமையை மாற்றிய துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவன் எல்லோரும் போற்றும் தன்மைக்கு வர வேண்டும் என அடிக்கடி சொல்ல வேண்டும்.

இந்த உணர்வு உங்கள் உடலிலே படரும் போது உங்களுடைய பார்வை அவன் திருந்த வேண்டும் என்று செயல்படுகின்றது அதற்குத் தகுந்த சொல்லும் வருகின்றது. அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அவனை மாற்றும் நிலைகளாக வரும்.

இப்படித்தான் அவனை மாற்ற வேண்டும்.

இந்தப் பக்குவ நிலை பெறுவதற்குத் தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி எடுக்கும்படி சொல்லி அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் என்று யாம் உபதேசிப்பது.

சித்தனாக்கும் “சிந்தனா சக்தி”

 

“ஒருமையுள் ஆமை போல் ஒன்றடக்கல்…” என்ற வள்ளுவச் சித்தனாரின் வேதம் உரைக்கும் பொருளின் உண்மை என்ன…?

1.பஞ்சேந்திரியங்கள் எனச் சொல்லப்படும் மெய் கண் மூக்கு செவி வாயினால்
2.உடல் இயக்கும் எண்ணத்தின் வழியாகச் செயல்படும் இந்த உறுப்புகளையா…?
3.அல்லது காற்று நூல் உரைத்த பஞ்சேந்திரியங்களின் உட்செயல் காட்டும் பஞ்சபூதங்களையா…?

அதாவது அடக்கப்பட வேண்டியது ஐம்புலன்களையா… அல்லது அவைகளை இயக்கும் காற்றையா…? (மூக்கு வழி புகும் காற்று)

குதிரையைச் செலுத்துபவன் அதற்குக் கண் முகப் படலமிட்டு… அதற்கு மேல் கடிவாளமிட்டு… தான் அமர்ந்து செல்வதற்காக வேண்டிய சேணத்தையும் இட்டு… இத்தனை அமைப்புகளுக்கும் பிறகு
1.எங்கே செல்ல வேண்டும்…? என்று உதித்திடும் எண்ணத்திற்கொப்ப
2.கடிவாளத்தின் தூண்டுதலை உணர்ந்து… நேர் பாதையாகத் தன் வழி உணர்ந்து செல்லுதலுக்கொப்ப
3.மனித சரீரத்தில் செயல்படும் பஞ்சபூதங்களின் செயலையே
4.உயர்ந்த நன்மார்க்க சிந்தனையாக… ஆத்ம பலம் பெற வேண்டும் என்ற சிந்தனையாக
5.சித்தின் நலம் பெற விளையும் சிவசக்தி தத்துவ சாரமாக…
6.(தன்) மன எண்ணத்தின் இலயிப்பு விளங்கிடல் வேண்டும்.

அதுவே சித்தனாகும் சீரிய வழியாகும்…!

அப்படி அல்லாதபடி… பஞ்ச பூத புரவிகள் இயங்கிடும் இயக்கம்… செயலுறும் செயலில்… “மன எண்ணத்தின் எழுச்சி சிந்தனையை மாற்றிவிடும் கருத்தாக இருந்து விட்டால்…”
1.அப்புரவிகளின் வலு கட்டுக்கடங்காத செயல் நிலையாக
2.பஞ்ச பூதங்களாய் வழி நடத்தும் “உயிரான்ம சக்தியின் உயர் நோக்க செயல்” என்ன ஆவது…?

ஆகவே…
1.சிந்தனை சக்தியின் கூர் பார்க்க… (பார்த்து)
2.சிந்திப்பின் அவலங்கள் நீக்கப்பட்டு…
3.தர்மத்தின் செயலுறும் வழியில்… சத்தியம் என்ற மெய்ப்பொருளை உணர வைத்து (தனக்குத் தானே உணர்ந்து)
4.அதிலே உவகை மகிழ்ச்சி தரும் பேரின்ப நிலையை அனுபவித்தலே சித்தின் நிலையப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் காட்டிய வழியில் நாம் விழித்திருக்க வேண்டும். அப்போது தான் மனிதனான நிலயில் பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளி நிலையை அடைய முடியும். உயிரணு தோன்றி மனிதனாக ஆனபின் தான் பத்தாவது நிலை அடைய முடியும்.

ஆதியில் ஒரு வெப்பத்தின் தன்மை அடைந்து கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகும் போது இது ஒன்பதாவது நிலைதான் வருகிறது.
1.இந்தப் பிரபஞ்சத்தைச் சூரியன் இயக்கலாம்
2.ஆனாலும் அது அழியக் கூடிய தன்மை பெற்றது.

ஆனால் இதிலே உருவான மனிதன் தான் இன்று மின்னலையும் அடக்குகின்றான்… மின்னலைக் காட்டிலும் மின்னணு தாக்கும் நிலைகளையும் விஞ்ஞான அறிவால் ஊடுருவுகின்றான்.

மண்ணிற்குள் படிந்துள்ள பொருளைக் கண்களால் காண முடியவில்லை என்றாலும்
1.இயந்திரத்தின் துணை கொண்டு உணர்வின் அதிர்வுகளைக் கூட்டி
2.இங்கே தங்கம் உள்ளது… இங்கே வெள்ளி உள்ளது… இங்கே நீர் உள்ளது… இங்கே எண்ணை உள்ளது… என்று
3.மேலே பறக்கும் நிலையிலிருந்தே பல ஆயிரம் அடிகளுக்கு அப்பால் ராக்கெட்டுகளைச் செலுத்தி
4.பூமியின் சுழற்சியில் பூமிக்குள் இருக்கும் நிலைகளை இங்கிருந்து காணுகின்றான் விஞ்ஞானி.

காந்தப் புலனறிவு கொண்ட (POWERFUL TELESCOPE) கண்ணாடிகளைக் கொண்டு… ஒவ்வொரு கோளும் எதை எதை உருவாக்குகின்றது…? அதனின் உணர்வுகள் எவ்வாறு வெளியில் பரவுகிறது…? என்றும் காணுகின்றனர்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று மாற்றும் உணர்வின் அறிவு கொண்டு கண்ணாடிகளில் எடுத்த அந்தப் பதிவின் துணை கொண்டு இவன் ஏவும் இராக்கெட் அந்தக் கோளின் திசையை நோக்கிச் சரியான நிலையில் சென்றடைகிறது.

இராக்கெட் அங்கே செல்வதற்குண்டான அளவுகோலை அறிந்து கொள்ள தரையிலிருந்தே காந்தப் புலனறிவு கொண்ட கண்ணாடியை வைத்து வெகு தூரத்தில் இருப்பதையும் தனக்குள் இழுத்து உணர்த்தும் நிலைகளை உருவாக்குகின்றான் மனிதன்.

கம்ப்யூட்டர் மூலமாக அதைப் பதிவாக்கி அதிலிருந்து அழுத்தத்தை ஆயிரம் மடங்கு பெருக்கி நுண்ணிய நிலைகளில் ஒளியின் அதிர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் ஆற்றலை அதிகமாகச் சேர்த்து உந்து விசையாகச் செல்லும் இராக்கெட்டின் முகப்பில் அதை வைக்கின்றார்கள்.

பிரபஞ்சத்தில் கோள்கள் உமிழ்த்தும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து சென்றாலும்
1.அதில் வரும் நுண்ணிய அதிர்வின் வலு கொண்டு தன் இனத்துடன் அது மோதி
2.அந்தக் கோள் எங்கே இருக்கிறதோ அங்கே இந்த இராக்கெட்டை அழைத்துச் செல்கின்றது.

இதைப் போன்றுதான் இந்த மனிதனின் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் நாம் எண்ணி எடுக்கும் பொழுது அது நமக்குள் முதலிலே பதிவாகிறது.

பதிந்தது வளர்ச்சி அடைந்து அதை வலுவாக்கிக் கொண்ட பின் மனித உடலை விட்டுச் செல்லும் போது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் எண்ணி எடுத்தானோ
2.அந்த நட்சத்திரத்திலிருந்து வரும் நிலைகள் புவியின் ஈர்ப்பைக் கடந்து அங்கே அழைத்துச் செல்கிறது.
3.அங்கே உடல் பெரும் உணர்வினைக் கரைத்து விடுகின்றது.
4.உயிரான்மா ஒளியாக மாறுகிறது.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் குடும்பத் தியானங்கள் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை துருவ நட்சத்திரத்தின் சக்தி வெளிப்படும் காலங்களில் உந்திச் செலுத்தினால் (இராக்கெட் போன்று) அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்.

உடல் பெறும் உணர்வைக் கரைத்துப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும். இது மனிதன் செயல்படுத்த வேண்டிய நிலைகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவு கொண்டு அணுவைப் பிளந்து அணுகுண்டைத் தயார் செய்து இங்கே பூமி முழுவதும் கலக்கச் செய்து விட்டார்கள். அது படர்ந்த இடங்களில் எல்லாம் துரித நிலைகள் கொண்டு விஷ அணுக்கள் உருவாகின்றது.

அதுவே மனிதனுக்குள் கடும் நோயாக… டி.பி. போன்ற நிலைகளும் இதனின் உணர்வின் அதிர்வுகள் அதிகமான பின் கேன்சர் போன்ற கடும் நோய்களும் உருவாகிக் கொண்டுள்ளது.
1.அணுக் கதிரியக்கப் பொறிகளால் ஏற்பட்ட விளைவுகளால்
2.”இன்ன நோய் தான்…” என்று காண முடியாத நிலைகளில் ஏராளமாக வந்து கொண்டுள்ளது.

இருப்பினும் வான் வீதியில் வீசப்பட்ட கதிரியக்கங்கள் அதனுடைய நிலைகள் சிதறப்பட்டு நம் பிரபஞ்சத்திலும் பரவியது. ஒவ்வொரு கோளும் அதை நுகர்ந்து மற்ற கலவையுடன் சேர்த்துச் சூரியனுக்குள்ளும் புகும் தருணம் வந்துவிட்டது.

சூரியனுக்குள் இயற்கையாக உருவாகும் ஆற்றலும் மனிதனால் பரப்பட்ட விஷக் கதிரியக்கமும் இது இரண்டும் மோதும் நிலைகள் அதிகமாகி விட்டது.

எலக்ட்ரிக்கில் மின்சாரம் செல்லும் இரண்டு வயரை ஒன்றாகச் சேர்த்தால்
1.எப்படிக் கரண்ட் அதிகமாகி அனைத்தும் ஃபீஸ் ஆகுமோ அது போன்று தான்
2.இந்த எலெக்ட்ரானிக்கால் இயக்கப்படும் அனைத்துக் கம்ப்யூட்டர்களும் செயலிழக்கப் போகின்றது.

உலகெங்க்லும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று சீராகப் பயன்படுத்தும் நிலைகள் கொண்டு எத்தனையோ ஆயுதங்களைத் தயார் செய்துள்ளார்கள்.

அந்த ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய இடத்தில் மின்னலோ மற்றதோ தாக்கி விடாதபடி திசை திருப்பும் நிலைகள் கொண்ட கம்ப்யூட்டர்களை வைத்துள்ளார்கள். பாதுகாப்பாக இருப்பினும் அந்தக் கம்ப்யூட்டர்கள் செயலிழக்கப் போகின்றது.

தன் நாட்டைக் காக்க என்று சொன்னாலும் இராக்கெட்டுகளை ஏவி மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற நிலையில் பொருதி வைத்திருக்கின்றார்கள்.

வேறு நாட்டில் இருந்து ஆயுதங்களை இங்கே எப்போது ஏவினாலும்…
1.அடுத்த கணமே அந்த ஏவலின் ஒலி அதிர்வைக் கண்ட பின்
2.இங்கிருந்து அந்த கம்ப்யூட்டர் உடனே இயக்கிச் சீறிப்பாயும் அலையாக
3.இதனுடைய ஆணைகள் இடப்பட்டு எதிர்த்துத் தாக்கி வானிலேயே அதைச் சிதறடிக்கும்படியாக
4.இராக்கெட்டுகளை வைத்துள்ளார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.

கம்ப்யூட்டர் மூலமாகத் தான் அதை வைத்துள்ளார்கள். அணு விசைகளின் தன்மைகளையும் வைத்துள்ளார்கள்.

அக்காலத்தில் நடந்த போர் முறைகள் வேறாக இருந்தது. ஆனால் இன்று கதிரியக்கப் பொறிகளை அதிக இயக்கமாக வைத்துள்ளார்கள். சமீபத்தைய போர்களில் இதைப் பார்த்திருப்போம்.

இராக்கெட்டை வைத்து வான் வீதியிலே மோதும் பல நிலைகளை அது எப்படியெல்லாம் உருவாகிறது…? என்ற நிலையை அறிந்து கொண்டோம்.

இந்த வான் வீதியிலே பரவிக் கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் அனைத்தும் விஷத்தன்மையாகப் பாய்ச்சப்பட்டு சூரியனுக்குள் வரப்படும் பொழுது அதனுடைய இயக்கம் எதிர்மறையாகி “அதிகமான எலக்ட்ரிக்கை உருவாக்கப் போகின்றது…!”

1.நம் உயிரும் எலக்ட்ரிக்கைத் தான் உருவாக்கிக் கொண்டுள்ளது.
2.சூரியனுக்குள் மாறப் போகும் தன்மை கொண்டு நம் உயிரின் துடிப்பு அதிகமாகி விட்டால்
3.நம் உடலில் உள்ள அணு செல்கள் இயக்கம் அதிகமாகிவிடும்.
4.மனிதன் பித்துப் பிடித்தவன் போல ஆகப் போகின்றான்.
5.சிந்தனை இழந்து தவிக்கும் நேரம் வெகு தூரத்தில் இல்லை… குறுகிய காலத்திற்குள்ளேயே உண்டு.

இதனுடைய அடர்த்தி அதிகமான நிலைகள் கொண்டு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஓசோன் திரையும் கிழிந்து விட்டது. துருவப் பகுதி வழியாக கதிரியக்கங்கள் அதிகமாக வரப்படும் பொழுது துருவப் பகுதியில் பனிகள் கரைந்து கடல்களும் பெருகுகின்றது.

கடல் நீருடன் கலந்த அந்தக் கதிரியக்கப் பொறிகள் விஷத்தன்மையான உணர்ச்சிகளை ஊட்டும் நிலைகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பூமியையே… மனிதன் அழிக்கும் தருணத்திற்குக் கொண்டு வந்துவிட்டான்.

இதையெல்லாம் வென்ற அருள் மகரிஷிகள் உணர்வை நாம் சேமித்தால் தீமைகள் புகாது நம்மைக் காக்க முடியும். அதனால்தான் விழித்திரு…! என்று சொல்வது.

ஒவ்வொரு நொடியிலேயும் உலகில் நடக்கும் அதிர்ச்சிகளைக் கேட்டுணர்ந்தால்
1.அடுத்த கணமே நாம் விழித்திருந்து “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி
2.அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.
3.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து நாம் தப்பித்து விண் செல்ல வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நடக்கக்கூடிய யுத்தங்கள் அனைத்தும் எனக்கா… உனக்கா…? என்று போர் முறை வருகின்றது. போர் முறை வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு நாடும் விஷமான குண்டுகளைக் கையில வைத்துள்ளது.
2.எந்த நிமிடமும் அது வெடிக்கலாம்…!

அதனால் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறி அதைச் சுவாசித்தவர் அனைவரது உடலுக்குள்ளும் அது அணுக்களாகும் பொழுது இன்று மனிதனாக இருக்கும் நாம் அடுத்து எங்கே போகின்றோம்…?

விஷத் தன்மை அதிகரித்தால் பாம்பினங்களாகத் தான் பிறக்க நேரும்.

மதத்தின் பால்… இனத்தின் பால்… தெய்வீக பண்பு என்ற நிலைகள் கொண்டு இருந்தாலும்
1.இந்த இடம் எங்களுக்குத்தான்… இது எங்கள் புண்ணிய பூமி…! என்ற உணர்வு கொண்டு
2.விஷத்தின் தன்மை உலகமெங்கும் பரவப்பட்டு தீமையின் விளைவுகள் உலகம் முழுவதும் இன்று பரவிக் கொண்டுள்ளது.

மற்ற நாடுகளை அடக்குவதற்காகப் பல அணு ஆயுதங்களைத் தயார் செய்து அத்தகைய விஷ குண்டுகளின் வீரியத்தைக் கண்டுணர்வதற்காக அடிக்கடி பரீட்சித்துப் பார்க்கின்றார்கள். அதன் மூலம் விஷ அலைகள் பூமியிலே பரவுகின்றது… பரவிக் கொண்டே உள்ளது.

யுத்தத்தைப் பற்றிய செய்திகளைப் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். டி.வி. வாயிலாகவும் நேரடியாகக் காணுகின்றோம். அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் பதிவான பின் அதே ஆவேச எண்ணங்களைத் தூண்டுகின்றது… அங்கிருந்து பரவும் உணர்வின் தன்மைகளை நேரடியாக நுகர நேருகின்றது.

1.அப்போது நம்மை அறியாதபடியே சிறுகச் சிறுக அந்த விஷத்தன்மை உடலுக்குள் செல்கிறது
2.நம் நல்ல குணங்களை அது மாற்றிக் கொண்டு இருக்கின்றது.

இதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

எத்தகைய விஷத்தன்மைகள் வருகிறதோ உடலுக்குள் பரவி விளைந்த பின் உயிரிலே அது இணைந்து விடுகிறது. உயிரான்மாவில் இணைந்த மணத்திற்கொப்பத் தான் உயிர் அடுத்த உடலை உருவாக்கும் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய வழியில் அகஸ்தியன் சென்ற பாதையினைக் கைப்பற்ற வேண்டும்.

1.அவன் தாய் கருவிலே எத்தகைய நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்றானோ
2.அகண்ட அண்டத்தை எப்படி அறிந்தானோ
3.அறிந்த உணர்வைத் தனக்குள் பெற்றானோ
4.இருண்ட உலகை எப்படி அகற்றினானோ
5.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றானோ
6.முதல் மனிதன் துருவ நட்சத்திரமாக ஆன அதிலிருந்து வரும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்கின்றது.

அந்த உணர்வை நீங்கள் பெறுவதற்குத் தான் இதைப் பதிவாக்குகிறேன் (ஞானகுரு). துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் எத்தகைய நஞ்சினையும் வெல்ல முடியும். உணர்வுகளை ஒளியாக மாற்றவும் முடியும்.

இன்றைய கடுமையான சூழ்நிலையிலிருந்து தப்ப முடியும்…!

விஷ்ணு தனுசு

 

பரசுராம்… மனித உடலைப் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றினாலும்… ஒருவன் தீமையான இடைஞ்சல்களைச் செயல்படுத்தும் போது அதை நுகர்ந்த பின்… அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் அது அணுத் தன்மையாக ஆகி விட்டால் இதில் விளைந்த உணர்வுகள் என்ன செய்யும்…?

ஒருவர் மீது எதிரியாகி விட்டால் எப்படியும் தாக்க வேண்டும் என்று தான் எண்ணம் வரும் அவரை வீழ்த்த வேண்டும்… தன்னைக் காக்க வேண்டும் என்று சமப்படுத்தும் நிலை வரும் பொழுது பரசுராமனுக்கும் ராமனுக்கும் போர் முறை வருகின்றது.

ஆனாலும் அதிலே ராமன் தான் ஜெயிக்கின்றான்.

1.காரணம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நாம் நுகர்ந்து
2.இந்த உணர்வினைத் தனக்குள் எடுத்து உருவாக்கி அதைத் தனுசாகத் தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அந்த வேதனையான உணர்வுகளைத் தாக்கி அதை அழிக்கின்றது.

அதைத் தான் ராமன் விஷ்ணு தனுசை எடுக்கின்றான்
1.உயிரின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தினை எண்ணித்
2.தன் உடலுக்குள் இருக்கும் தீமைகளை மாற்றும் சக்தி பெறுகின்றது என்று காட்டுகின்றார்கள்.

தீமையை அப்படியே விட்டுவிட்டால் அந்த உணர்வின் தன்மை ஆக்கிரமிப்பு “வாலி என்ற உனர்வு நமக்குள் வந்து” தீமை என்ற நிலைகள் அந்த வீரிய உணர்வு கொண்டு தனுசாக மாறி நமக்குள் தீங்கு செய்யும் எண்ணங்களையே உருவாக்குகின்றது.

அதனால் தான் அதைச் சிவ தனுசு என்று காரணப்பெயர் வைத்து சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள
1.தனது வாழ்க்கையில் எவ்வாறு அது நம்மை இயக்குகின்றது எப்படி இயக்குகின்றது…?
2.நாம் இயங்குகின்றோமா…? அல்லது நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகின்றதா…? என்று உணர்த்துகிறார்கள்.

ஆறாவது அறிவு கொண்ட நாம் கார்த்திகேயா…! தீமை என்று தெரிந்து கொண்டாலும் அது உடலுக்குள் புகாது சேனாதிபதியாக… பாதுகாப்பாக இருக்கும் இந்த ஆறாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

தீமைகளை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து “அதை உயிரிலே சேர்க்கப்படும் போது தான்” விஷ்ணு தனுசாக மாறுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் வலிமை கொண்டு வரும் பொழுது
1.நம் உடலில் தீங்கு செய்யும் இந்த அணுக்களுக்குள் ஊடுருவி
2.தீங்கான உணர்வைக் கவராதபடி அதை அடக்குகின்றது.

விஷ்ணு தனுசு கொண்டே தீமை என்ற உணர்வினை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும் என்பதைத் தான் இராமாயணக் காவியங்கள் உணர்த்துகின்றது.

அதாவது வாலி (தீமைகளை) என்ற நிலையைக் குகையிலிருந்து வெளி வராதபடி அடைத்து “அதனின் செயலைத் தடுக்க வேண்டும்” என்று காட்டுகின்றனர்.

ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே… “முடிவு இப்படித் தான் இருக்கும் என்று”

 

சித்தன் காட்டிய சொல்லில்…
1.எதிலுமே அதனின் ஆரம்ப நிலை கொண்டு
2.”முடிவு இதுதான்…” என்று நாம் கணித்து விடக்கூடாது.

ஞான வளர்ச்சியின் பாதையில் இருப்போர்… சித்தர்கள் என்னும் நிலையைப் பெற… வாழ்வியல் அனுபவ ஞானம் பெறும் போது வெறுப்பு மிகுதியாக இருக்கும் காலங்களில் எல்லாம் தங்களைக் காத்துக் கொள்ள
1.உண்மைகளை உணர வேண்டும் என்று மறைபொருள் சூட்சும சூத்திரங்கள் கொண்டு
2.அந்த அறிவின் மயக்கத்தை நீக்க அவர்கள் கூறி வெளிப்படுத்திய பாடல்களில் சிறிது கடுமையும் உண்டு.

சிவசக்தி நிலை கலப்பாக மேன்மையுறும் செயல்களைத் தம்முள் கண்டு தெளிந்து… தங்களை வளர்த்துக் கொள்ளும் பக்குவத்தில்… மௌனத்தின் செயல்பாடாகச் சாந்த நிலையை ஏற்றிட… அதை “ஊக்குவிக்கும் செயல் சக்தியை…” சித்தர்கள் தமக்குள் எப்படி கூட்டிக் கொண்டார்களப்பா…?

1.“ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே…” என்று கூறுவதெல்லாம்
2.பிறர் பால் நாம் கொண்டிடும் எண்ணத்தின் உயர்வைக் கூட்டுவதற்குத் தான்.

மாமகரிஷி போகப்பெருமான் தன்னை வளர்த்து உயர்த்திக் கொள்வதற்காகத் தாய் சக்தியினைப் பெற்ற பேறைச் சொல்லால் விளக்கிட முடியுமா…?

தாய்மையின் சக்தியை விளக்குதல் என்பது என்றால் இந்த பூமியின் (புவனேஸ்வரி) உயர்வு நிலையைத் தான் முதலில் காட்டப்பட வேண்டும். பல முறையும் இதைக் கூறி வந்துள்ளேன்.

என் நிலையோ அந்த நிலை…? நன் நிலையே நமக்கு.

அம்மன் சக்திகள் அனைத்தும்… “ஆவியின் நிலைகள்…” என்று உரைத்திட்டால்… எந்த வகையில் தெளிந்திட்ட உண்மை அது…?

1.சகலமும் ஆவி தான்
2.இந்தப் பூமியும் ஆவி தான்
3.அண்ட சராசரங்களும் ஆவி தான்
4.”ஆவியான உன்னை…” (நீ) அறிந்து கொள்ள காட்டப்படும் நெறிமுறைகளில் தெளிவினைக் காட்டுவது எது…?

அம்மன் சக்திகளில் “பெயர் சொல்லி உலவக்கூடிய ஆவிகள்” – மை போட்டுக் குறி கூறுபவன் நிலையாக வளர்ந்து… அவைகளின் வளர்ச்சி நிலையைப் பற்றிச் சிறிது கோடிட்டுக் காட்டிடவும் முடிந்திடும்.

அது எல்லாம் மனிதனின் எண்ணத்தை வயப்படுத்தும் செயலுக்கே உபயோகப்பட்டுக் கொண்டுள்ளது. பத்திரிக்கை உலகையும்… மற்ற எத்தனையோ வெளி உலகத் தொடர்புகளையும் (MEDIA) விட்டுவிடவில்லை…. “வசியம் என்ற பேரில்” எல்லாவற்றையும் பீடித்திருக்கிறது.

மனித மனத்தினைத் தாக்கிடும் சக்தியாகச் செயலுறும் அவைகளின் பிடியிலிருந்து… தங்களைக் காத்துக் கொள்ள எண்ணம் கொள்வோர் அரிதாகிக் கொண்டே வருகின்றனரப்பா.

சத்தியம் என்பது உன்னுள் நிலைபெற்று இருத்தலே சாஸ்வதமானது.
1.எந்தச் சிறு சக்தியின் எதிர்ப்பின் நிலையும் தமக்குகந்த வேகத்தை காட்டும்
2.அந்த நிலை நமக்கு எதற்கு…?

“அம்மன் சக்திகள்” அக்கினி போல் சுடர்கின்றதப்பா. அருளாசி வேண்டுவது நம்மை வளர்த்துக் கொள்வதற்குத் தான்… புரிகிறதா…? அந்த நிலையில் நமது எண்ணம் உயர்வு அடைவதற்குத் தடைக்கல்லாக இருப்பது எது…? என்று உணர்ந்து கொண்டாயா…?

“சக்தி புராணம்” என்று கூறப்பட்டதே வான இயல்புகளைக் காட்டுவதற்குத். தான்.
1.”ஆகாய கங்கை” பாகீரதன் தவத்திற்கு எங்கிருந்தப்பா இறங்கி வந்தாள்…?
2.நாம் கூறுவது நம்முள் வளர்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டிய “தாய் சக்தியின்” உயர்வைத் தான்.
3.எண்ணத்தின் உயர்வு உயர் ஞானம் என்றால்… அந்த மெய் ஞானம் விழிப்பாகி அது சுடராகப் பிரகாசிக்கும்
4.அமிர்தவர்ஷினியாக அது பெருகிடுமப்பா.

ஜோதித்துவ பொருளுக்கும் – உயிர் சக்தியின் தொடர்பிற்கும் மறைபொருள் உண்மையை நீ உணர்ந்து பார். சக்தியின் கலப்பாகப் பொருள் காட்டும் எந்த நிலையாக இருந்தாலும்
1.“அதிலே குறை காண்பது நம் நோக்கம் அல்ல….!”
2.நாம் கொண்ட உண்மையில் வளர்ந்து காட்டுவதே விவேகம்
3.வாய்ச்சொல் தவத்தைக் காட்டும்… மொழியின் உயர்வையும் காட்டும்.
4.ஆனால் நாவடக்கம் நம்முள் உயர்வைக் காட்டி தவத்தைக் கூட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் இளம் பருவத்தில் விளைந்த பின்
1.ஒவ்வொன்றும் அறிந்திடும் நிலையாகவும்
2.மிகவும் வலுக் கொண்ட உணர்வாகவும் வருகின்றது.

எந்த மிருகத்தின் அருகில் இவன் சென்றாலும் இவனைக் கண்டு அது அஞ்சி ஒடுங்குகின்றது.

தாவர இனங்களில் இருக்கும் சத்துகளை இவன் உணவாக உட்கொண்ட நிலையில் அதனின் உணர்வின் தன்மை வரும் போது
1.அந்தத் தாவர இனங்கள் ஒடுங்குவதையும் காண்கின்றான்
2.அதன் இயக்கத்தையும் அவன் இளமைப் பருவத்திலேயே உணர்கின்றான்.

நாம் பார்க்கிறோம்… ஒரு குளவி கூட்டினைக் கட்டி அதற்குள் புழுவைக் கொண்டு வந்து அடைத்து வைக்கிறது. சிறிது நாள்களில் அந்தப் புழுவே குளவியாக மாறுகிறது.

மாறிய பின் அதுவும் தாய்க் குளவி எதைச் செய்ததோ அதே போல் ஒரு கூட்டினைக் கட்டிப் புழுவைக் கொண்டு வந்து அடைத்துத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்குகின்றது.

ஆக… எப்படி குளவி சொல்லிக் கொடுக்காத நிலையில் புழு குளவியாக மாறிய பின் செயல்பட்டதோ அதே போல் அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் அந்த இயக்கங்கள் ஆன பின் “அவன் அறியாமலேயே…” சில செயல்களைச் செயல்படுத்துகின்றான்.

விஷத்தை ஒடுக்கும் தன்மை வரும் பொழுது
1.விஷத்தை நுகர்ந்தாலே மற்றவர்களுக்கு (நமக்கு) மயக்கம் வருகின்றது
2.ஆனால் விஷச் செடியின் அருகில் சென்றால் அகஸ்தியன் மீண்டும் வீரியம் அடைகின்றான்… வலுவடைகிறான்.

காரணம்…
1.விஷத்தின் தன்மை ஒடுக்கும் வல்லமை கொண்டதனால்
2.அவன் தெளிந்த மனமும் வலுவான உணர்வு கொண்டவனாகவும் மாறுகின்றான்.

ஐந்தாவது வயது வரப்படும் பொழுது புவியின் ஈர்ப்பின் தன்மைகளை அறிகின்றான். நமது பூமி தனக்குள் ஆகாரம் எப்படி எடுக்கிறது…? என்பதை உற்று நோக்கினான்.

வான இயலை இளம் பருவத்திலேயே கண்டுணர்கின்றான். இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பூமி துருவப் பகுதி வழியாக எப்படி விண்ணின் ஆற்றலைக் கவர்கிறது…? என்பதை உணர்கிறான்.

உணர்ந்தாலும் “விஷத்தின் தன்மையே…” விண்ணிலிருந்து வருகின்றது… தாவரங்களும் இந்த விஷத்தின் உணர்வின் செயலாகவே வளர்கின்றது…! என்றும் அறிகிறான்.

இருப்பினும்…
1.தாவர இனங்களுக்குச் செல்லும் சக்திகளை நேரடியாக அகஸ்தியன் உட்கொள்கின்றான்
2.தன் உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றும் திறனும் பெறுகின்றான்.

துருவத்தை உற்று நோக்கும் பொழுது பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் அறிகின்றான். அவன் ஆதியிலே கூறியது தான்… இருண்ட நிலையிலிருந்து அகண்ட அண்டங்கள் எப்படி உருவானத் என்ற உண்மைகள் அனைத்துமே…!

விஷத்தின் ஆற்றல் உருவாகும்போது விஷத்தின் அளவுகோலையும் அந்த விஷம் எப்படி உருவாகிறது…? என்ற நிலையையும் முதல் மனிதன் உடலில் இவன் உணர்கின்றான்.

இதை வைத்துத்தான் அகண்ட அண்டம் எப்படி இருந்தது…? அதனின் நிலைகள் கொண்டு எப்படி வளர்ந்தது…? என்று துருவத்தை உற்று நோக்கும் போது இவனுக்குள் கண்டறிகிறான்.

விளைந்த உணர்வுகள் இவனின்று வெளிப்படுவதை சூரிய காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதன் வழி சென்ற… பின் வந்த மக்கள் இதை அறிவாக அறிகின்றனர். அறிவின் வளர்ச்சியாகத் தெளிந்த நிலை பெறுகின்றனர்.

இருளை வெல்லும் திறன் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியனே…! அவனுடைய ஆற்றலைத் தான் குருநாதர் காட்டிய வழியில் இங்கே உணர்த்தி அதனைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தைப் புதிதாகக் கேட்பவர்கள் சிலருக்கு வித்தியாசமாக இருக்கும்.

ஆனால் முன்னாடி உபதேசத்தைக் கேட்டவர்களுக்கு அல்லது பல முறை உபதேசத்தைக் கேட்டவர்களுக்கு
1.அந்த உபதேசத்தின் வாயிலாக உடலிலே உருவான அணுக்களுக்கு
2.இப்பொழுது கொடுக்கும் உபதேச உணர்வுகள் மூலம் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உணவாகக் கிடைக்கும்.

பல முறைகளில் பல கோணங்களில் அந்த உணர்வின் சத்தை உங்கள் உடலில் விளைந்த அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுப்பதற்குத் தான் இந்த உபதேசங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் புதிதாகக் கேட்பவர்களுக்கு அருள் ஞான வித்தாக உருவாக்கப்படுகின்றது. வித்தாக ஊன்றிய பின்
1.இதை நீங்கள் மீண்டும் தொடர்ந்து எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அது கருவாகி உருவாகி அந்த அருள் ஞானத்தைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

சிலர் எண்ணலாம்… ஒன்றும் அர்த்தம் ஆகவில்லையே என்று. உங்களுக்கு அர்த்தமாகாது…!
1.ஆனால் பேசிய உணர்வு பின்னர் கருவாகும்… பின் அது உருவாகும்.
2.பின் அதனின் உணர்வுகள் உங்களுக்குள் தெளிவாகும்

அதனால் தான்
கருவாய்…
உருவாய்…
வருவாய்…
முருகா…
குருவாய்…! என்று
1.எதனை நாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை கருவாகி உருவாகி உங்களுக்குள் குருவாக வரும்.
2.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நமக்குள் அது தெளிவாக உருவாக்கும் என்பது அது தான்.

நாடாக்களில் படமோ பாடலோ பதிவு செய்து விட்டால் திருப்பி அதைப் போட்டுப் பார்க்கும் பொழுது மீண்டும் அந்தப் பாடலைக் கேட்க முடிகின்றது.
1..இதைப் போல் தான் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகிவிடும்
2.உடலில் அணுவாகவும் உருவாகிவிடும்.

அந்த அணுக்களுக்குச் சிறிது காலம் உணவைக் கொடுத்தால் அது மீண்டும் வளர்ச்சியாகித் “தன்னிச்சையாக…” அதனின் உணவை எடுத்துக் கொள்ள அந்த வளர்ச்சிகள் பெறும்.

முந்திய நிலையில் உபதேசங்களைக் கேட்டவர்களுக்கு… உடலில் விளைந்த அணுக்களுக்கு உயர்ந்த ஞான உணவாக இப்பொழுது கொடுக்கப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி பெற இது உதவும்.

அதே சமயத்தில் புதிதாகக் கேட்பவர்களுக்கு ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்கப்படுகிறது. ஊன்றிய வித்து உருவாகிக் கருவாக வேண்டுமென்றால்
1.உங்கள் நினைவினைக் கூட்டினால் அது உருவாகும்
2.அந்த உணர்வின் தன்மை அது உருவாகும் பொழுது குருவாகும்
3.நல்வழியையும் காட்டும்…. அதே உணர்வை உணவாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும்.
4.இந்த உணர்வை ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுது அருள் ஞானம் தன்னிச்சையாக வளரும்.

அதனால் தான் “சாமி சொல்வது எனக்குப் புரியவில்லையே…! என்று எண்ண வேண்டாம்” என்று திரும்பத் திரும்பச் சொல்வது.

குருநாதர் எனக்குள் எப்படி ஆழமாகப் பதிவு செய்து… அந்த உணர்வின் அணுக்களைப் பெருக்கச் செய்து… இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரச் செய்தாரோ… உங்களிடம் அதைப் பெறச் செய்து… உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபடும் நிலைக்கே இது உருவாக்கப்படுகின்றது.

அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் வலுப்பெற… உணவாகக் கிடைக்கச் செய்வதற்கே தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

பொதுவாக உபதேசம் சொல்லும் போது
1.முதலிலே மெதுவாகச் சொல்ல முற்பட்டேன்
2.இரண்டாவது சிறிது வேகமாகச் சொன்னேன்
3.மூன்றாவது அதை காட்டிலும் வேகமாகச் சொல்லும் நிலை வந்தது.
4.(எம்முடைய உபதேச ஒலிகளைக் கேட்டவர்களுக்கு இது தெரியும்)

காரணம்… இந்த உணர்வின் ஈர்ப்புகள் உங்களுக்குள் பதிய வேண்டும் என்பதற்குத் தான்.

அந்த உணர்வின் ஆற்றல் ஆழமாகப் பதிந்தால்…
1.அப்போதுதான் சாமி என்ன சொன்னார்…? என்று ஏக்கமாக இருப்பீர்கள்.
2.அப்போது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.

பின் அதனுடைய நிலைகள் உருவாக இந்த உணர்வுகள் உங்களுக்கு உதவும். – இது புதிதாக வந்தவர்களுக்கு.

ஏற்கனவே கேட்டவர்களுக்கு அந்த அருள் உணர்வின் சக்தி உணவாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
1.அருள் ஞானம் பெருகிக் கொண்டே இருக்கும்
2.மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெறும் வலிமையும் பெருகிக் கொண்டே வரும்.

கத்தியைத் தலை மேல் தொங்கவிட்டு எப்பொழுது அறுந்து விழுகும்…! என்ற நிலை தான் இன்று இருக்கின்றது

 

வளர்ச்சி அடைந்த நாடுகளில் எல்லாம் “நியூட்ரான்” குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள். அதை வெடிக்க நேர்ந்தால் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு உலகம் முழுவதுமே விஷத்தன்மையாகப் பரவும் நிலை வந்துவிடும்.

அது எந்த விஷத்தன்மையோ… ஆடு மாடு மற்ற உயிரினங்களில் பட்டால் புது விதமான அணுக்களாக மாற்றிவிடும். மனித உடலுக்குள் வந்தாலும் ஒரே இனமாக மாற்றிவிடும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் விஷம் கொண்ட அணுக்களாக மாறி விடுகின்றது.

1.இந்த குண்டைச் செய்தவனும் (நாடு) சரி… எந்த இடங்களில் வீசுகின்றார்களோ அங்கேயும் சரி…
2.அது காற்று மண்டலத்தில் பல லட்சம் மைல்கள் என்று கூடச் சொல்லலாம்…
3.அந்த விஷத்தன்மைகள் பரவி ஊடுருவும் தன்மை பெற்றது.

இப்படிப்பட்ட குண்டுகளை ஒருவருக்கொருவர் வீசி விட்டால் தேடிய செல்வமோ… கௌரவமோ… இந்த நாட்டை ஆட்சி புரிகின்றேன் அந்த நாட்டைப் பிடிக்கப் போகின்றேன் என்ற நிலையில் அரசியல் சூழ்நிலைகளால் வரும் நிலைகளோ… “எங்கே போகும்…? எப்படிப் போகும்…?” என்று நிலை இல்லாது போய்விட்டது.

அரசாங்க உத்தியோகத்தில் இருப்போரும் சரி அரசியல் வாழ்க்கையில் இருப்பவரும் சரி மக்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவதாக எண்ணுகின்றார்கள்.
1.ஆனால் ஒருவருக்கொருவர் உணர்வின் தன்மை மாற்றப்பட்டு
2.குற்ற இயல்பான உணர்வுகளை வளர்க்கும் தன்மையே வளர்ந்து விட்டது.

இப்படி வளர்ந்த இந்த உலகம் “மனிதனுக்கு மனிதன் தாக்கிக் கொள்ளும் உணர்வுகள்” எல்லா நாடுகளுக்கும் தோன்றி விட்டது.

எல்லா நாடுகளும் இதைப் போல நியூட்ரான் என்று குண்டுகளைத் தயார் செய்து வெடிக்கச் செய்தால் எங்கே வெடிக்கின்றார்களோ எங்கே உருவாக்கினார்களோ அனைத்து உயிரினங்களும் விஷத்தன்மையாக மாறிவிடுகின்றது.

இவர்கள் தேடிய விஞ்ஞானம் தன்னையே அழித்துக் கொள்ளும் நிலையாகத் தான் மாறுகின்றது.
1.கட்டிடங்கள் அப்படியே இருக்கும் மரம் செடி கொடிகள் அப்படியே இருக்கும்
2.ஆனால் தாவரங்களின் மரபு அணுக்களை மாற்றி அமைக்கும் சக்தியாக வந்துவிடும்.

அதிலே விளைந்த பொழுது தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் பொழுது… உயிர் அந்த உணர்வினை நுகரப்படும் போது அந்த விஷமான உணர்வுக்கொப்ப உணர்ச்சிகளை எழுப்புகின்றது.

நியூட்ரான் என்ற உணர்வலைகள் தாவரங்களில் எளிதில் ஊடுருவும் சக்தி பெற்றது. அவ்வாறு விஷத்தன்மையாக மாறி விட்டால் அந்த விஷத்தன்மை கொண்டதை உயிரினங்கள் நுகர நேர்ந்தால் விஷத்தன்மை கொண்ட அணுக்களாகத் தான் மாற்றும் தன்மை வருகின்றது.

இப்படி இந்த உலகம் கூடிய சீக்கிரம் விஷத் தன்மையாகப் பரவப்படும் பொழுது… மனிதனின் சிந்தனை சக்தியை இழக்கப்பட்டு மனித உடல் மாறும் நிலை வருகின்றது.

அப்படியே உடல்கள் இருந்தாலும் விஷத்தன்மை கொண்ட செயலைச் செயல்படுத்தும் நிலையும் சிந்தனையற்ற நிலைகளும் உருப்பெறுகின்றது.

உலகில் ஏற்படும் இத்தகைய நிலை…
1.கத்தியைத் தலைக்கு மேல் தொங்கவிட்டு எப்பொழுது அறுந்து விழுகும்…? என்ற நிலையில் தான் இன்றைய வாழ்க்கை இருக்கின்றது.
2.இதிலிருந்து நம்மைக் காக்க வேண்டும் என்றால்
3.தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்
4.அந்த அகஸ்தியனின் உணர்வை நுகர்ந்தே ஆக வேண்டும்.
5.நம் ஆன்மாவிலே அகஸ்தியன் உணர்வை வலுவாக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாகன் (பாம்பு) தன் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சுகின்றது. விஷத்தைப் பாய்ச்சி மயங்கச் செய்த பின் அதை உணவாக எடுத்து உட்கொள்கின்றது.

ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் உண்டு. எதனின் விஷமோ இதனில் கலந்து அதற்குள் இணைந்த பின்
1.பாம்பின் விஷம் அதை மடியச் செய்கின்றது… அந்த விஷத்தின் வலுவைக் குறைக்கின்றது
2.குறைத்த பின் அதன் உடலின் தன்மை உணவாக உட்கொள்கின்றது.
3.உட்கொண்ட பின் அந்த விஷத்தை ஒடுக்கித் தனக்குள் எடுத்துக் கொள்ளும் போது
4.இப்படிப் பல உணர்வுகள் சேர்ந்து இந்த விஷத்தின் தன்மை அடைந்த பின்
5.அதுவே ஒளியின் தன்மையாக நாகரத்தினமாக விளைகின்றது.

இதைப் போன்று தான் ஆதியிலே அகஸ்தியன் துருவனாகும் போது உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன்.

வேதனைப்படுவோரை அடிக்கடி நாம் எண்ணினால் நம் இரத்த நாளங்களில் அந்த வேதனை கலந்து மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள் தாக்கிய பின் அது சோர்வடைகிறது.

வேதனை என்பது விஷம். அந்த வீரிய உணர்வு கொண்டு அனைத்தையுமே மாற்றுகின்றது.

ஆனால் இதை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். அந்த அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகரப்படும் போது நம் இரத்தத்தில் கலக்கின்றது. இதை அதிகமாக உடலுக்குள் செலுத்திய பின் இரத்தங்கள் மூலம் எல்லா உறுப்புகளுக்குள்ளும் சுழன்று வருகிறது.

நாம் நுகர்ந்த வேதனை என்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் உருவாகிறது. நஞ்சினை வென்றிடும் அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகும் பொழுது அந்த நஞ்சினை மாற்றிவிடுகிறது… விஷம் பிரிந்து செல்கின்றது.

இது போன்று இப்படிப் பெருகிய உணர்வுகள் தான்
1.அணுவின் துடிப்பால் ஏற்பட்ட உணர்வுகள் அகஸ்தியனுக்குள் “மின் அணுவின் தன்மையாக” உருவானது.
2.அந்த அகஸ்தியனுக்குள் விஷம் ஒடுங்கி எப்படி மின் (பேரொளி) அணுவாக உருவானதோ
3.அதே போல நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.

இதை எல்லாம் சற்றுக் கவனமாகக் கேட்க வேண்டும். இதை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் நினைவுகள் அந்தப் பேரருளைப் பெற்ற அருள் ஞானிகளின் அருகிலேயே அழைத்துச் செல்லும்.

தீமை செய்கிறான் என்று எண்ணினால் நம்முடைய நினைவுகள் தீமை செய்பவனிடமே அழைத்துச் செல்கின்றது… அங்கேயும் இயக்குகின்றது.

அதைப் போல் நண்பன் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணினால் நினைவலைகள் அங்கே சென்று விக்கலாக நல்ல உணர்ச்சியை ஊட்டுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஒளியின் உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த ஞானியின் வட்டத்திற்குள் நாம் செல்கிறோம்.

1.மகரிஷிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றல்கள் வெளிப்பட்டதை குரு எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.
2.அந்த உணர்வின் வித்தினை வளர்த்தேன்
3.அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள்ளும் விளைய வைக்கின்றேன்.
4.இதன் தொடர் கொண்டு நீங்கள் எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நீங்கள் ஓட்டலாம்.

அதன் உணர்வின் தன்மையை நீங்களும் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்யலாம். உங்களில் தீமை செய்யும் உணர்வுகளுக்கு இந்த அருள் உணர்வினை இணைத்து அதைக் குறைக்கலாம்.

இது சிறுகச் சிறுக வளர்ச்சியாக நஞ்சின் தன்மையும் குறையும். உணர்வின் மணமும் குறையும்.
1.உங்கள் உணர்வின நினைவும் விண்ணிலே செல்லும்
2.பிறவி இல்லை என்ற அழியா ஒளி நிலை பெறலாம்.

ஒளியின் சக்தியைப் பெற்று உயர்ந்திடுவேன்

 

இராமன் குகன் மீது நட்பு கொண்டான்… குகனின் துணை கொண்டு கங்கையில் ஓடத்தில் இராமன் சென்றான் என்றாலும்…
1.இராமன் கொண்ட பாசம் சகோதர நயமாக…
2.தன் மனத் தேரில் குகன் பவனி வரும் பாங்காக வந்தது என்பது… அது அன்பில் சிறந்தது

ஒரு தேரை (தவளை) ஆற்றின் கரையில் வாழும் பொழுது ஆகாரம் புசிப்பதற்காக சிறு சிறு பூச்சிகளை விழுங்குகின்றது. அந்தப் பூச்சிகளின் உயிர் தேரைக்குள் சென்று தேரையாகப் பிறக்கும் நிலை பெறுகின்றது.

ஆனால் இராமன் தன் பாணத்தால் “அறிந்திடாத் தன்மையால்” அதன் மீது எய்த பொழுது அவ் உயிர் சக்திகளின் பிறப்பின் நிலை மனித உடலுக்குள் வந்து உயிரணுக்களாக… மனிதனாகப் பிறக்கும் (உயர்ந்த நிலையாக) விமோசனம் பெறுகிறது.

ஆனாலும்…
1.சந்தர்ப்பத்தின் வசம் வினைப் பயன் காரியார்த்த நடைமுறைகள் அதை உணர்ந்து கொண்டிடும் உயர் ஞானம் போல
2.அதிவேக உணர்வுகள் கூட்டிக் கொண்டிடும் உணர்வுகளால்
3.எண்ணத்தால் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பத்தின் வசம் “இராமன் கொண்ட அனுபவமாக”
4.தெய்வீக புருஷன்… அரக்க குணம் கொண்ட (இராவண) பிறப்பின் நிலை எண்ணத்தால் வரு(ந்)த்திட்டான் என்று காட்டி
5.”இராமபாணம் துளைத்தது” என்று கொண்டிட்ட உயர்வான எண்ணம் எடுத்துத் தன்னைத்தான் காத்துக் கொண்டு
6.சாப நிலையை மாற்றி விமோசனத் தன்மையாகத் தன்னை உயர்த்தியது என்பதுதான் இராம காவியத்தின் சூட்சுமம்.

அன்பின் வசம் தான் அனைத்துமே (அகண்ட அண்டத்தில்) அடங்கும்…!

உலக நிலையில் ஒன்றை அறிந்து கொள்தல் என்பது இன்றைய அனுபவ நடைமுறையாக இருக்கலாம். ஆனால் இயற்கை என்ற “வசுக்கள் சக்தியை…”
1.மனிதன் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னில் தெளிந்து
2.ஆத்ம பலம் பெற்றிடும் வழியாகத் தன்னைத்தான் வளர்த்து
3.ஈர்ப்பின் செயல் (எங்கே செல்ல வேண்டும் என்ற) சூட்சுமம் அறிந்து கொள்ள வேண்டும்

புயலால் கடல் மிகவும் கொந்தளிக்கும்… அது போல் கோப குணத்தால் மனிதனின் மனம் தத்தளிக்கும்….! ஞானச் செல்வங்கள் அத்தகைய உணர்வுகளில் சிக்கிடாத நிலைக்கு வானவியல் தத்துவ செயல் குணம் கொள்ள வேண்டும்,

மேகத்தின் ஊடே சூரிய ஒளியைக் கவர்ந்து பல வண்ணம் காட்டும் “ஸ்படிக நீர்…” வான்வெளியில் செயலுருவாக கருப்பொருள் காட்டுவதைப் போன்று
1.ஒளியின் சக்தியைப் பெற்றுப் பெற்று உயர்ந்திடுவேன் என்ற எண்ணம் வளர வளர
2.அந்த மேன்மையான நிலையில் வழி நிற்றலே சம்பூரணம்

ஆக…
1.தானாக வளர்வது இயல்பு நிலை…
2.பலனாய் வளர்ப்பது “நம் நிலை…!” (ஞானிகள் வழி)

இதிலே பொருள் உண்டு… உணர்ந்து கொள்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இடமறித்து அதன் சக்திகளைப் பெறுதல் வேண்டும்

 

நமது நாட்டில் முதன் முதலில் தோன்றிய மனிதன் அகஸ்தியன் அண்டத்தின் உணர்வினைப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) இயக்கத்தின் உணர்வை அறிந்துணர்ந்தவன்.
1.அகஸ்தியன் கண்டறிந்த உணர்வின் வழிப்படி
2.பின் வந்த ஞானிகளும் மகரிஷிகளும் அதைத் தொடர்ந்து வழி நடத்தி வந்தனர்.

ஆனால் கால வெள்ளத்தால் அரசர்கள் மதம் இனம் மொழி என்ற நிலைகளில் அவரவர்களுக்கொப்ப மதங்களை வகுத்து… அதற்குச் சட்டங்களை இயற்றி அதன் வழியில் பல விதமான மதங்களையும் இனங்களையும் உருவாக்கி விட்டார்கள்.

அதன் வழி தான் இப்பொழுது நாமும் அரசர்கள் காட்டிய வழியில் வழி நடத்தி வருகின்றோம். ஞானிகளும் மகரிஷிகளும் கூறிய இந்த உணர்வுள் கால வெள்ளத்தால் மறைந்தே போய் விட்டது.

அரசர்களின் ஆசையின் நிமித்தம் போர் முறைகள் ஏற்படப்பட்டு மதங்களை உருவாக்கி மதத்திற்கு மதம் என்ற போர்முறையை வைத்து மதத்திற்குள் இனம் என்று இனத்தின் நிலைகள் கொண்டு போர்முறையாகி “மகரிஷிகள் காட்டிய அருள் வழிகள் முழுமையாக மறைந்து விட்டது என்றே சொல்லலாம்…”

ஆனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாமும் ஒரு மதம் தான்…!
1.பிறவா நிலை என்ற (மதம்)… இந்த உலகப் பற்றை விட்டு
2.இந்த உடலின் பற்றை விட்டு… உயிரின் பற்றுடன் சென்றவர்கள் ஞானிகள்
3.மனிதர்களான நாம் உடல் பற்று… உயிரின் இயக்கம்…! எண்ணத்தை உயிரில் உணர்வாக இழுக்கப்பட்டு “உடலின் சேர்க்கை…”

ஆனால் “உயிர் ஒளியால் உணரப்பட்ட…” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றப்படும் பொழுது
1.அதாவது “உயிருடன் ஒன்றிய சேர்க்கை… ஒளி…!”
2.அவ்வாறு ஓளியாக ஆனவர்கள் மகரிஷிகள்

அப்படி மகரிஷிகளான நிலைகளில் நமது குருநாதர் காட்டிய நெறியைப் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் விண்ணுலக ஆற்றல் மண்ணுலகில் வந்து… மனிதனான பின் அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கண்டான்.
1.குருநாதர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் இணைத்தார்
2.நான் (ஞானகுரு) உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.

அணுவின் ஆற்றலைத் தனக்குள் உணர்ந்து அணுவின் வளர்ச்சியின் தன்மையும் உணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதை வலு சேர்க்கின்றார் அகஸ்தியர்.

நமது பூமி விண்ணிலிருந்து வருவதைத் தனக்குள் ஈர்க்கும் போது அதை இடைமறித்து அந்த உணர்வை நுகர்ந்து அதனின் வலுவை பெறுகின்றான் அகஸ்தியன்.
1.அதனால்தான் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தைக் கொஞ்சம் உங்களை இடைமறிக்கும்படி சொல்லி
2.அதனின் ஆற்றலை உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.

உயர் ஞானத்தால் மகரிஷிகளுடன் கலக்க முடியும்

 

1.ஆதிசக்தியின் (ஆவியாக இருக்கும் இருண்ட உலகில்) அகண்ட பேரண்டத்தில் காந்தத்தின் புலமாய் (BLACK HOLE)
2.அண்டத்தின் செயலில் காந்தத்தின் உள் நிகழ்வாகச் சிருஷ்டியின் அளப்பரிய செயலுறும் வளர்ச்சியாக
3.எண்ணிலடங்காத கோடானு கோடி உயிரணுக்களின் ஜீவிதமாகத் துடிப்பும் வெப்பமும் கொண்டு
4.அநித்திய மறைபொருள் சூட்சுமக் கலப்பே பிரம்மமாகப் படைப்புகள் உருவாகி… பின் மாற்றமாகி…
5.சுருதியின் ஆதார நாதமய செயல் உருவாக… குணங்களாக உள்ளடக்கும் ஓர் மறை பேரும் உன்னுள் அறிந்திடவே (ஒலி மொழி சொல் உணர்வு)
6.காந்தப்புலனின் ஈர்ப்பாக சரீரத்தையே சுற்றி ஓடும் ஓங்கார நாத இலயத்தில் கலந்து (ஆன்மா)
7.அதே துடிப்பின் நிகழ்வுகளை அறிந்திட முடியும்.

மகரிஷிகளின் சக்திகளை எடுத்துத் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களும்… இஜ்ஜீவபிம்ப சரீரம் கொண்டே உணர்ந்து கொள்வதோடு மட்டுமின்றி… உண்மையின் நெறி முறைகளைக் கருத்தினுள் தெளிந்து கொள்ள முடிவதே… “உயர் ஞான வளர்ப்பின் துவக்கமப்பா…”

ஒன்றுக்குள் செயல்படும் கருத்தின் வழிமுறைகளை…
1.வினா (விடை) என்ற பாங்கில் எண்ணி எடுக்கப்படும் போது…
2.அதிலே தெளிவுபடுத்திக் கொள்ளும் விடையே “அறிவின் தெளிவு…”

தெளிந்ததைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும் போது அதுவே உயர் நிலை பெறுவதற்கு வழி வகுக்கும்.

“சிரசின் உச்சியே ஆகாயம்…” என்று உணர்த்திய பொழுது… தொழில்படு வினையின் “கட்டளைக் கேந்திர மூளையின் செயலிலும்” இரு விதமான செயல்கள் உண்டு (இடது வலது).

சுவாசம் கொண்டு கவன ஈர்ப்பு நரம்பின் மூலம் எடுக்கும் நாதம்… (உயிர் வழி சுவாசம்) அந்த எண்ணத்தின் பாங்கைச் செயல் நடத்திடும் அமைப்பின் கருத்து உயர் ஞானம் என்றால்
1.அவ்வளர்ப்பின் ஆக்கம் வினைப் பயன் களைந்திட… வேரற நீக்கிடும் செயலுக்கு…
2.மனித சரீரத்தின் கட்டளைக் கேந்திர மூளையின் வலப் பக்க செயலைச் சிவமாகக் காட்டினான் சித்தன்.

அதே போல்
1.தாய்மையின் மேன்மையை… சக்தியாகச் சுடர்விடும் ஒளியே
2.மகரிஷிகளின் பாசப் பிணைப்பில் கட்டுண்டு செயல்படும் நிலையைக்
3.கட்டளைக் கேந்திர மூளையின் இடது புறமாகக் காட்டினான்.

ஒன்றின் செயலில் கொள்ளப்படும் அறிவு உயர் ஞானம் என்றால்… அது வினைப் பயன் களைவதோடு மட்டுமின்றி எண்ணம் சொல் உள்ளடங்கிய செயல் உயர் ஞானத் தெளிவைக் காட்டி மேலாம் அறிவாகச் சித்திக்கும்… பரப்பிரம்ம லயத்தில் (மகரிஷிகளுடன்) அது கலக்கச் செய்யும்.

பூமியின் நிகழ்வுகளை ஊன்றி அறிந்திருப்பாய், மழை பெய்த அடுத்த நாளே… நீரின் சக்தியில் அணுக்கள் பச்சை வண்ணமாகப் “பாசி பிடித்தல்” என்ற நிலையைக் காட்டும்.

வண்ணத்தின் பகுப்பைக் காட்டும் சந்திரனின் காந்த ஒளி அலைகள் பூமியில் படரும் பொழுது… நீரின் ஊடே பாய்ந்திடும் அந்த ஒளிக் கிரணங்கள் பூமியின் ஒத்த நிலையாக… பூமியின் ஈர்ப்பின் செயலிலும் ஜீவத் துடிப்பு ஏற்பட்டு… சூரியக்கதிர்களின் வெப்ப அலைகள் தணிவுற்றுச் சமைத்திடும் காலங்களில் ஏற்படும் அதே ஜீவத்துடிப்பு மரகதக் கற்களாக பூமியில் விளைகிறது.

அது போல்…
1.நீரமில சக்தியை உண்டு சூரியக் கதிர் சமைப்பு நிலைகளாக வளர்ந்திடும் அனைத்துத் தாவர இனங்களும்
2.”பச்சையம்” என்ற ஜீவரசத்தைத் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்கு உள் நடத்துவதைப் போல்
3.புவியியலில் நாம் பெற்றிடும் ஞானம் வானவியலில் தொடர்பு கொண்டு
4.அவ்வண்ணம் கடந்த உயர்வு… சுடரில் மறைந்துள்ள வண்ணமாக (ஆறு வண்ணம் – ஏழாவது வெண்மை ஒளி)
5.வான் காட்டும் திறப்பில் படர்ந்துள்ளதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விழித்திரு… விழித்திரு… விழித்திரு… “தனித்திரு…!” என்ற நிலைகளைச் சொல்வார்கள். ஆனால் “விழித்திரு… தனித்திரு…” என்றால் எப்போதுமே
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் கலக்காது
2.பிறருடைய உணர்வுகள் நமக்குள் கலந்துவிடாது
3.தனித்த அந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
4.அந்த மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றி நாம் தனித்து வாழ முடியும்.

இல்லை என்றால் பிறருடைய தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்கிவிடும். அதனால்தான் நீ விழித்திரு… நீ தனித்திரு… என்று காரணங்களைச் சொல்லி ஞானிகள் ஒவ்வொரு நிலைகளிலும் கூறுகின்றார்கள்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் விழித்திருந்து அந்த உணர்வின் தன்மையை தனக்குள் வளர்த்துக் கொண்டால் பிறிதொரு தீமை செய்வோருடைய உணர்வுகள் நம்மை இயக்காது.

இந்த உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் தனித்தே… தனித்தன்மையில் வாழ்கின்றோம்.

துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக மற்றொன்று இதை இயக்கிடாது அது தனக்குள் இயக்கப்பட்டு ஒளியின் தன்மையாக “தனித்தன்மையாக…” வளர்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் எவரொருவர் விழித்திருந்து… தீமை தனக்குள் வளராது அது தனித்துத் தன் ஒளியின் சுடராக மாற்றினார்களோ…
1.அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சுடராக ஆகி
2.அவரவர்கள் நிலைகளுக்கேற்ப தனித்தே வாழ்கின்றார்கள் “தனித்தன்மை கொண்டு…”

ஆகவே நாம் இந்த மனிதனின் வாழ்க்கையில் நாம் எதனின் தன்மை கொண்டு நாம் நுகர்கின்றோமோ அடுத்தவருடைய தொடர்பு கொண்டு தான் நாம் வாழுகின்றோம். ஒருவருக்கொருவர் இணை சேர்த்து ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ்கின்றோம்.

கோள்களும் அதே போன்று தான் அதனதன் நிலையில் வளர்ந்து அதனதன் தனித்தன்மையில் வளர்ந்தாலும் அதனில் விஷத்தன்மைகள் வளர்கின்றது. ஆனாலும்
1.சூரியன் “தனித்தன்மை கொண்டு…” வரும் நஞ்சினைப் பிரித்துவிட்டு ஒளியின் சுடராக அது மாற்றுகின்றது
2.இதைப் போன்றுதான் நாம் தனித்திருந்து விழித்திருத்தல் வேண்டும்.

சூரியன் எப்படி நஞ்சினைப் பிரித்து அதனுடைய தனித்தன்மையைக் காட்டுகின்றதோ… தனித்த நிலைகள் அதனுடைய ஒளியின் தன்மையாக அது செயல்படுகின்றதோ… இதைப் போன்றுதான் தீமையின் உணர்வுகள் ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் சேராது நமக்குள் தனித்திருத்தல் வேண்டும்… அதே போல விழித்திருத்தல் வேண்டும்…!

ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு நல்லவருடைய உணர்வுகளையும் அறிந்தாலும் அதிலே அவர்களுடைய உணர்வுகளில் சிக்கி…
1.அவருடைய உணர்வுகளுக்கு அடிமையாகி விடாது “தனித்திருப்பது நல்லது…”
2.தனித்திருப்பது என்றால் நாம் விழித்திருப்பது நல்லது.

தீமைகள் எப்பொழுதும் நமக்குள் ஊடுருவாது அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து… அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கித் தீமைகள் தன்னை நாடாது தனித்தன்மையாக நமது உணர்வுகள் பிறருடைய தீமைகளிலிருந்து அகன்று… நாம் தீமையற்றவர்களாக வாழும் நிலை பெற வேண்டும்.

1.மகரிஷிகள் தனித்திருந்து… அவர்கள் விழித்திருந்ததனால் தனித்திருக்கும் நிலை பெற்றார்கள்
2.அதனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.நமது வாழ்க்கையில் விழித்திருக்கும் உணர்வும்
4.நமது வாழ்க்கையில் தனித்து வாழும் நிலைகளும் .
5.நமது வாழ்க்கையில் தீமையற்ற நிலைகளும் வளர்ந்திடும் நிலைகள் பெறுகின்றோம்.

இதை நினைவுபடுத்தும் நன்னாள் தான் சிவன்இராத்திரி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் அனைவரும் இயற்கையின் பேருண்மைகளைக் கண்டுணர்ந்தவர்கள். தங்கள் உடலில் வந்த தீமைகளை அகற்றி மெய் உணர்வுகளை அவர்களுக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள்.

அவர்களின் நினைவுகளைத் தான் எனக்குள் (ஞானகுரு) பதியச் செய்து எமக்கு உபதேசித்து அருளினார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

1.மனித வாழ்க்கையில் தன்னை அறியாது வந்த சோர்வடைந்த உணர்வுக்குள்
2.அந்த மெய்ஞானிகளின் உணர்வை இணைத்து அவர்களின் நினைவு கொண்டு நீ கவர்ந்தாயானால்
3.அந்த மெய் உணர்வைப் பெறும் தகுதியை நீ பெறுகிறாய்.

அதனின் உணர்வு உனக்குள் விளைய… விளைய… உன்னிடமிருந்து வெளிப்படும் எண்ணத்தின் சொல் கேட்டுணர்வோர் உணர்வுகளில் ஓ… என்று ஜீவன் பெற்று ம்… இன்று அவர் உடலுக்குள் பிரம்மமாகின்றது.

இவ்வாறு நீ எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை… நீ பிறர் நலமாக இருக்க வேண்டும் என்றும்… அவர்கள் மெய் ஞானிகளின் அருள் ஆற்றல் பெற வேண்டும் என்றும்… ஏக்க உணர்வுடன் வரும் பொழுது அனைத்து உணர்வின் சத்தைப் பெற்று நீ வலுப்பெற்றவன் ஆகிறாய்.
1.அந்த உயர்ந்த சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணுகிறாயோ
2.அத்தனை பேருடைய எண்ணம் உனக்குள் வலுவாகக் கிடைக்கின்றது.

மெய் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது… இந்த உணர்வுகள் அவர்கள் உடலுடன் இரண்டறக் கலந்து… சக்தி வாய்ந்த நிலைகளாக அங்கேயும் விளைகின்றது.

விளைந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது “அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சி பெறுகின்றார்கள்…?” என்று நீ எண்ணிப் பார்க்கும் பொழுது இந்த உணர்வின் சக்தியை உனக்குள் ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றாய் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

“நாம்…” என்ற நிலையை அடைந்தால் நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து வலு கொண்ட நிலையாக அடைகின்றோம்.

1.நான்…! என்ற நிலையில் சென்றோம் என்றால்
2.அது தனித்து நின்று மற்றவரின் உணர்வின் வலு இழக்கப்படுகின்றது… வலு கிடைக்காது.
3.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை வருகின்றது.

குரு என்னிடம் இதை எச்சரித்தார்.

மகரிஷிகளும் ஞானிகளும் உயர்ந்த ஆற்றலை எப்படி வளர்த்துக் கொண்டார்களோ… எப்படிக் கலந்து உறவாடினார்களோ அந்த உணர்வின் சக்தியை நீ பெற வேண்டும் என்று தான் உனக்குள் அதை இணைக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).
1.நீ பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
2.உன்னுடன் இணைத்தே நான் ஆகின்றேன்… ஆக “நாம்… ஆகின்றேன்…”

இதைப்போல அனைவருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அவர்களுடன் இணைந்த நீயும்… அவர்கள் ஆகின்றாய்.
2.அவர்களும் உன்னுடன் இணைந்து… அவர்கள் ஆகின்றார்கள்

இதைப் போன்றுதான் “நாம்…” என்ற நிலைகளில் அந்த அருள் ஞானிகளின் சக்திகளைப் பெற நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

விண்ணிலிருந்து பல பல தீமைகள் (நஞ்சுகள்) வந்தாலும் அந்தப் பலவும் ஒன்றாக இணைந்து சூரியன் ஒளியின் சுடராக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக இயக்குகிறது.

அதைப் போல நீயும் மெய் ஞானிகளின் உணர்வைப் பருக வேண்டும். அதைப் பருகிடும் சக்தியைப் பெற வேண்டும் என்றால் அனைவருக்கும் நீ அதைப் பெறச் செய்ய வேண்டும்.

அதனின்றுதான் நீ அதைப் பெறுகின்றாய்…! என்ற நிலையைக் குரு தெளிவாக எனக்கு வழிகாட்டினார். அவர் எனக்குக் காட்டிய அதே அருள் வழியைத் தான் உங்களுக்கும் உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.குருநாதர் காட்டிய வழியில் நாம் சென்று
2.ஒளியின் சரீரமாக அனைவரும் ஆக முடியும்…! என்ற நிலைக்குத் தான் இந்த உபதேசம்…!

அருள் ஒளியினைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி பேரொளியாக நாம் வாழ வேண்டும்

 

ஒரு வேதனைப்படும் மனிதனை உற்று நோக்கினால் அப்போது நமது எண்ணங்கள் பலவீனம் அடைந்து விடுகின்றது. அதை மாற்றி அமைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் உடனடியாக எண்ணி எடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் தீமைகளைக் கருக்கியது… தீமையை வென்றது… நஞ்சினை வென்றது. ஆகவே அந்த உணர்வின் சக்தியை நாம் நுகர்ந்து வேதனையான உணர்வுகள் நமக்குள் செயலாகாதபடி அதைச் சேர்த்து வேதனையைக் குறைத்துப் பழகுதல் வேண்டும்.

வேதனைப்படுவோரைப் பார்த்தால்…
1.அவர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.வேதனையிலிருந்து அவர் விடுபட வேண்டும்
3.அவர் உடல் நலம் பெற வேண்டும்
4.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் எடுத்து அங்கே பாய்ச்சுதல் வேண்டும்.

இந்த உணர்வை நுகர்ந்தோம் என்றால் நமது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றும் அணுவின் கருவாக உருவாக்குகின்றது.

பின் நம் இரத்த நாளங்களில் கலந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுவாக மாறும் பொழுது
1.நாம் எத்தகைய நிலை பெற்றோமோ அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து அது தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.
2.அப்பொழுது நம் உடலுக்குள் தீமை அகற்றிடும் அணுக்கள் பெருகுகின்றது
3.தீமையை மாற்றி அமைக்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம்.

நமது வாழ்க்கையில் தீமை என்ற நிலைகளோ அல்லது வேதனைப்படும் உணர்வுகளோ கோபமோ வெறுப்போ… சந்தர்ப்பத்தால் பயமோ ஆத்திரமா இத்தகைய உணர்வுகள் தோன்றும் போதெல்லாம்… அவைகள் நமக்குள் அணுக்களாக உருவாகாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வு உண்டு அவைகளைத் தணித்துப் பழகுதல் வேண்டும்.

ஆனால் தீய உணர்வையே நுகர்ந்து தீய அணுக்களே நம் உடலுக்குள் பெருகி விட்டால் நம் உடல் சீர்குலைகின்றது… கடும் நோய் ஆகிறது.

ஆகவே அத்தகைய நோய்கள் வளராது தடுப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அவ்வப்போது நமது ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றுகின்றோமோ அதனால் நமக்குள் இந்த பூமியின் பற்று அற்றுப் போய் விடுகின்றது.

ஆனால் நோயின் தன்மையை அதிகமாக நேசிக்கும் போது புவியின் பற்றுக்கே வருகின்றோம். நோயினைப் பற்றி விட்டால் மனிதனல்லாத உருவையே பெறுகின்றோம்.

இதிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

ஆகவே துருவ தியானத்தில் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நொடிப்பொழுதும் பெற்றுத் தீமைகள் விளைந்திடாது தடுக்க வேண்டும்.

1.நாம் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் என்று உணர்வினைக் கூட்டி வளர்த்தால் நமக்குள் தீங்கு விளையாது.
2.அருள் ஒளியினைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி வாழ வேண்டும்
3.பேரருள் என்றால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் தீமைகளை அகற்றிடும் அணுக்களாக மாற்றி
4.பேரொளி என்ற நிலையை நம் உடலுக்குள் உருவாக்க வேண்டும்.

உலகளவிற்கு மனதிற்குள் இடர்கள் வந்தாலும்… அது ஒரு கடுகு அளவு தான்

 

பரிசுத்தம் தங்கும் மனம் என்பது எதுவப்பா…?

தங்கத்தைச் சுத்தம் செய்யும் ரசம் (திரவகம்) தங்கத்தின் செழுமையைக் காட்டும். “மகரிஷிகளின் அருள் சக்தி” பரிசுத்த மனதைத் தெளிவாக்கிடும் உண்மையின் நிலை ஆகும்.

1.“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதத்தைக் கூட்டி… உன்னுள் உன்னை நீ தெளிந்த விதம்
2.உலகத்தையே உன்னைப் பார்த்திடச் செய்துவிடும்.
3.யாம் சொன்ன தியான வழியைக் கடைப்பிடிக்கும் போது உன் உள்நிலை சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

அதை யாம் (ஈஸ்வரபட்டர்) அறிவோம்.

பாய்மரக்கப்பலில் “விரிக்கபட்ட பாய்”
1.காற்றின் வேகத்தால் கடலில் படகைச் செலுத்துவதோடு மட்டுமல்லாதபடி…
2.சில நேரத்தில் படகையே நிலைகுலையைச் செய்திடும் செயலும் உண்டு.

அது போல்
1.அறிவின் விவேகம் (ஆறாவது அறிவு) அலைக்கழித்திடாமல் சமன்படுத்திட பழியைக் காண்கின்றது
2.காண்பதோடு செயல்படுத்தும் காரியமும் ஆற்றுகின்றது.

அறிவின் பரிணாம வளர்ச்சி விஞ்ஞான அறிவினால் இயந்திர பாகங்கள் பொருத்தப்பட்டுக் கடலோடும் வழிவகுக்க அறிவின் நிலைக்களன் வித்தாகின்றது.

மகரிஷிகளின் அருள் பார்வை உன் மீது விழும் பொழுதே அது “சத்திய சோதனையின் துவக்கம்” என்று நீ எண்ணுவாய்.

அது சோதனை அல்லவப்பா…!

தாய் தன் குழந்தையைப் பரிந்து எடுக்கும் பாசத்தின் விளைவு… தவழ்ந்திடும் குழந்தை தானே நடந்திடும் செயலில் கொள்கின்ற அனுபவ நடைமுறை போல்…
1.மகரிஷிகளின் ஒளி சக்திகளை “எந்தெந்த உயிராத்மாக்கள்” தன் நிலையை உயர்த்துவதற்காக வேண்டி ஏக்கமாய் ஏங்குகின்றதோ
2.அந்த மகான்களின் எண்ணத்துடன் தானும் ஒன்றி…
3.அவர்களுடன் இணைந்து ஜெபித்திடும் செயலில் தியானிக்கின்றதோ…
4.அந்த நல்வழி நிச்சயம் அங்கே சிறக்கும்.

உலக வாழ்க்கை நடைமுறையிலும் “பொன் (தங்க) நகை படும் பாடு… உன் பாடு…!” என்ற சூட்சுமப் பொருளாக உணர்த்தி வந்ததனை…
1.உம்மைப் பக்குவப்படுத்திட முனைந்ததன் பொருளாக
2.நீ அறிய வேண்டியது முக்கியம்.

காப்பிய ரிஷி தசரதன் பெற்றுக் கொண்ட “புத்திர சோகம்” என்று சுட்டிக் காட்டப்பட்டதை…
1.உறவின் வழிமுறைக்குப் போதனைப்படுத்தியதாக உணர்ந்து
2.சிந்தனையில் அதை நீ சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மனதின் விசாலம் எது…? தயை என்ற சொல்…!

உலகளவிற்கு மனதிற்குள் இடர்கள் வந்தாலும்… அதுவும் ஒரு கடுகு அளவு தான். ஆனால் சித்தன் ஆகும் மனதின் விசாலம் எத்தனை பெரியது…? சிந்தனை செய்…!
1.முயற்சி வினையாக்கும்
2.விடாமுயற்சி திருவினைப் பயனாகும்.

ஆஞ்சநேயன் விஸ்வரூபம் காட்டினான்… ஆகாயத்தில் நீந்தினான்… அணுவளவாய் ஒரு மாறினான்… நெருப்பில் உலவினான்… நீரில் மிதந்தான்… உடலையே சிறகு போல் எளிதாக ஆக்கினான்… கணம் கொண்ட பக்குவ கதியாக்கினான்… பேரின்ப லயத்தை அனுபவித்தான்…! என்று காட்டுவதெல்லாம்
1.கூறிடும் பொருளின் அடிப்படை நிலைகளின்
2.தியானம்… தியானம்… தியானமே…!

கண்டவன் சக்தியை… மகரிஷிகளின் செயல்பாட்டை… “புறம் கூறி” செயலின் செயல்பாட்டை… அணை போட்டுத் தடுக்க முடியாது. ஆனால் மகரிஷிகள் “அறம் கூறினால்…” நிலைமை என்ன ஆகும்…? அவர்கள் அன்பு மகான்களப்பா.

நம் கைகளைக் கொண்டு சூரியனை மறைத்து விட முடியுமா…? முடியாது…! ஆனால் “நான் மறைத்து விடுவேன்…” என்று அதைச் செயல்படுத்தித் தனக்குத் தானே மறைந்துக் கொண்டால் அது எண்ணத்தின் மாயை தான்.

ஒருமையைப் பலப்படுத்திடும் செழுமை… சித்தர்கள் மகரிஷிகளின் செயல். அதற்குள் ஐந்தும் அடங்குதல் என்பது விண் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும் தெய்வீக நிலை.

1.பூக்களின் மணத்தை நுகர்ந்திடும் மன நிலையே
2.யாம் சுட்டிக் காட்டும் இந்த எளிய தியானத்தில் உணர்ந்து கொள்ள வேண்டிய “ஆரம்ப அனுபவ நிலை…”

மகோன்னத நிலையே ஆத்ம சம்பூரணம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமன் எப்பொழுது கல்யாணராமன் ஆகின்றான்…?

தீமைகளை விளைவிக்கும் வில்லை… அந்த அம்பினை ஒடித்து விடுகின்றான். தீமைகள் செய்யாத உணர்வினை எப்பொழுது தனக்குள் விளைவிக்கின்றானோ அப்போதுதான் மற்றவரை அரவணைக்கும் தன்மை வருகிறது… சீதாவை அரவணைத்துக் கொள்கிறான்… கல்யாணராமா.

அரவணைக்கும் உணர்வைத் தனக்குள் சேர்த்து… பேரன்பு கொண்ட உணர்வினை வளர்த்து ஒன்றிய நிலைகள் கொண்டு இயக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் “கல்யாணராமா…!” என்று காவிய காப்பியங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

எத்தகைய தீமையின் உணர்வுகள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அதை எண்ணி தீமை நமக்குள் விளைந்து விடாது அதை ஒழித்தல் வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் தீமை செய்யும் உணர்வே நமக்குள்ளும் வரும். நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அழித்திடும் எண்ணங்களையே அது உருவாக்கும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று என்ற உணர்வினை நமக்குள் இணைத்தால்
1.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாதபடி
2.அருள் உணர்வின் தன்மையை அரவணைப்பதாகக் கல்யாணராமனாக மாற முடியும்.

நம் உடலில் இதனின் வலிமை ஆகிவிட்டால்
1.யார் நமக்குத் தீமை செய்தனரோ அதை அடக்கும் நிலைகள் வரப்படும் பொழுது
2.இதே உணர்வின் எண்ணங்கள் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்கள் உணர்வுகளை அடக்கும் தன்மை வருகின்றது.
3.அவருடைய செயலாக்கங்கள் அவர்களையே ஒடுக்கிவிடும்
4.யார் ஒருவர் தீமை எண்ணுகின்றனரோ அவருள்ளே நின்று அவர் அதற்குள்ளேயே மடிவர்.

ஆகவே அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் விளையும் தீமையை அடக்கி வலிமை மிக்கதாக மாற்றிக் கொள்ளலாம்.

இதைத்தான் விழித்திரு…! என்ற நிலைகளில் மகா சிவன்ராத்திரி என்று காட்டுகின்றார்கள்.

இந்த உலகில் ஒவ்வொரு நாளும் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் பார்த்தாலும் அந்தத் தீமை நமக்குள் விளையாதபடி ஒவ்வொரு நொடியிலும் நாம் விழித்திருத்தல் வேண்டும்.

பத்திரிகையைப் பார்த்துப் படித்தபின் அல்லது டி.வியைப் பார்த்தபின் அவர்கள் இப்படிப் பேசினார்கள்… இவர்கள் இப்படிப் பேசினார்கள்… இவர்கள் இதைச் செய்தார்கள்… கெடுதல் செய்தார்கள்…! என்று
1.மற்றவர்கள் பார்த்தவர்கள் பதிவு செய்ததை எண்ணத்தால் எண்ணி நாம் பேசும் பொழுது
2.அதே உணர்வு நமக்குள் பதிவாகி எந்த நிலையை அவர்கள் செய்தார்களோ அதையே நுகர்ந்து
3.மோசமான ஆள்…! என்று நாமும் அந்தக் கெடுதலையே பேசத் தொடங்குவோம்.

அப்போது அவர்கள் எத்தகைய மோசம் செய்தார்களோ அதே மோசத்தின் தன்மை நமக்குள்ளும் விளைகின்றது இதைப் போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம் உடனடியாக மாற்றுதல் வேண்டும்.

இதற்குத் தான் நீ விழித்திரு என்று சொல்வது…! ஏனென்றால் இதை ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு சமயத்திலும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

நாம் மறந்து இருந்தாலும்… அடுத்த கணமே…
1.மற்றவருடன் பேச்சுத் தொடரான பின் நம் நினைவின் ஆற்றலை உயிருடன் புருவ மத்தியில் ஒன்ற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவன்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
4.நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும்
5.எங்களைப் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும்
6.நாங்கள் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று இந்த உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

பகைமையான உணர்வுகளை நமக்குள் வளர்த்து விட்டால் அதே உணர்வுக்கு அது இரை தேடும்… அதற்கு உணவு கொடுத்தாக வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் இணைத்து
2.அந்தத் தீமைகளை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி நாம் வேதனைப்படும் உணர்வுகளை எடுப்போம் என்றால்
1.நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகளில் அது சுரக்கும் உணர்வுகள் அதிகமாக அதிகமாக
2.வேதனை உணர்வுகள் உறையப்பட்டு அது மோதப்பட்டு அதனின் உணர்வுகள் கற்களாக உருபெறுகிறது.

அவ்வாறு உருப்பெற்று விட்டால் இந்தப் பித்தத்தையே விஷம் கொண்ட கற்களாக அது மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்று சிறுநீர்ப் பைகளிலும்… இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கிட்னியில் மணலைப் போன்று அது தேங்கி விட்டால் அந்த விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து விஷத்தையே தனக்குள் எடுத்து இரத்தத்தில் வரும் மாசுகளைச் சுத்திகரிக்கும் தன்மை இழந்துவிடுகிறது

கிட்னி பழுதடைந்து விடுகின்றது. அதனின் உணர்வின் தன்மை உடல் முழுவதும் தீமையை உருவாக்கும் நிலையாக உருவாகி விடுகின்றது.

பின் உடல் முழுவதும் விஷத் தன்மைகள் பரவி அடுத்து மாற்று உறுப்புகளை மாற்றித்தான் விஞ்ஞான அறிவு கொண்டு வாழ வேண்டி உள்ளது. அப்படிச் செயல்பட்டாலும் அதிலிருந்து முழுமையாக மீள்வது என்பது மிகவும் கடினமாகி விடுகிறது.

இதைப் போன்றுதான் நாம் சுத்திகரிக்கும் உறுப்பான கல்லீரல் போன்ற உறுப்புகளில் விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகரித்து விட்டால் அங்கே உணர்வின் தன்மை வளர்ச்சி பெறப்படும் போது அதுவும் பாழடைகிறது.

ஏனென்றால்…
1.சில கடுமையான நிலைகளை உருமாற்றும் அல்லது கரைத்திடும் திறன் கொண்ட
2.அமிலத்தை உருவாக்கும் திறனை நம் கல்லீரல் இழந்து விட்டால்
3.மற்ற கடின பொருள்களைக் கரைக்கச் செய்யும் தன்மையும் அது செயல் இழந்துவிடுகிறது.

இதைப் போன்று வாழ்க்கையில் நாம் எடுக்கும் விஷத் தன்மையான உணர்வுகளால் நஞ்சான அணுக்கள் விளையத் தொடங்கி விட்டால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாழடையும் தன்மையே அடைகிறது.

இயற்கையிலே ஒவ்வொரு இனப் பறவைகளும் தன் தன் குஞ்சுகளுக்கு என்று அது உணவைத் தேடிச் சென்று அதை வாயிலே ஊட்டுகின்றது.

எப்போது…?

அந்தக் குஞ்சுகள் இரைக்காக ஏங்கி இருக்கும் பொழுது அதனதன் இனம் அதனதன் வழியில் உணவாகக் கொடுத்து அதை வளர்க்கின்றது. இதைப் போன்றுதான்
1.நம் உடலில் உள்ள அனைத்து குணங்களுக்கும் நம் உயிரே தாயாகின்றது.
2.அதனால் உருவாக்கப்பட்ட அணுக்களுக்கு அது எதனின் வழியில் வேதனையின் நிலைகள் உருவானதோ
3.அந்த வேதனையான உணர்வு தான் அதற்கு உணவாகத் தேவை.
4.அதே வேதனை உணர்வைத்தான் உயிர் உணவாகக் கொடுக்கும்.
5.வேதனையால் உருவான அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டி ஏங்கப்படும் போது
6.உயிர் (தாய்) காற்றிலிருந்து கவர்ந்து அந்த வேதனையான அணுக்களுக்கு உணவைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றது.

நல்ல குணங்கள் கொண்டும் நாம் வாழ்ந்திருப்பினும் வேதனை என்ற குணங்கள் வரும் பொழுது அதனின் ஆற்றல் பெருகி விடுகின்றது. அதனின் மலங்கள் உடலில் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல குணங்களுக்குக் கிடைக்கும் உணவு தடையாகி… அதனின் வலு இழக்கப்படுகின்றது.
1.சரியான வளர்ச்சி பெறுவதில்லை
2.நாம் நல்லதை எண்ணினாலும் நம்மால் முடியாது போகிறது.

அது காலத்தால் தடைப்படும் போது அந்த விஷத்தை உருவாக்கும் விஷ அணுக்களின் உணர்வுகள் நமக்குள் அதிகமாகப் பெருகி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் விழித்திருத்தல் வேண்டும்.

1.ஒரு புளியங்கொட்டை அது மண்ணில் செடியாக முளைக்கும் போதே
2.அதைக் கிள்ளி எறிந்து விட்டால் ஒன்றும் சிரமமில்லை
3.அதைப் பிடுங்க கோடாரியோ மற்ற ஆயுதமோ தேவையில்லை.

ஆனால் பெரிய மரமாக வளர்ந்த பின் அதை வெட்டக் கோடாரி அவசியம் தேவை. ஏனென்றால் மரங்களைக் கோடாரி போன்ற போன்ற ஆயுதத்தை வைத்துத் தான் வெட்ட முடியும்.

ஆனால் செடி சிறியதாக இருக்கும் பொழுது தெரிந்து கொண்டால் எளிதாக நீக்க முடியும். அதனால் தான் விழித்திரு…! என்று சொல்வது

மரம் பெரிதாக வளர்ந்த பின் அதனுடைய விழுதுகளைப் பாய்ச்சி விட்டால் கட்டிடத்தையே பலவீனமாக்கிவிடும்… நடந்து போகும் பாதையும் தடுத்துவிடும்.

ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட்டால் பாதையும் மறைக்காது… கட்டிடத்தையும் இடிக்காது. ஆகவேதான் நாம் விழித்திருத்தல் வேண்டும்.

1.நமது வாழ்க்கையில் எந்த வழியில் தீமை என்ற உணர்வை நாம் நுகர்ந்தாலும்
2.அடுத்த கணம் அது நம் உடலுக்குள் வளராது விழித்திருத்தல் வேண்டும்

தீமைகளைக் கேட்டுணர்ந்த பின்… அல்லது பார்த்துணர்ந்த பின்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி அந்தச் சக்திகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த வேதனையை உருவாக்கிய உணர்வுக்குள் மகரிஷிகளின் உணர்வை இவ்வாறு பாய்ச்சப்படும் போது அதை அடக்கி அதன் தன்மையை மாற்றிவிடும்.

வலுவாகத் தியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

துன்பத்தை விளைவிக்கும் அணுவாக உடலில் வளர்ந்து விட்டால்
1.உயர்ந்த ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தாலும் இது அணுக்களாக வளரப்படும் போது அது (துன்ப அணுக்கள்) அஞ்சும்…
2.அது கிளர்ச்சியை உண்டாக்கும்… அது நடுங்கும்… உணர்ச்சிகளை ஊட்டும்.
3.அப்போது மேல் எல்லாம் வலிக்கிறதே என்போம்.

நான் தியானம் செய்கின்றேன். எனக்கு மேல் வலிக்கிறதே என்று சொல்வார்கள். சில பேர் நான் தியானம் இருக்கின்றேன்… எனக்கு நல்ல எண்ணங்களே வர மாட்டேன் என்கிறது…! என்று சொல்வார்கள். நுகரப்படும் பொழுது என்னுடைய எண்ணங்களை எங்கோ அழைத்துச் செல்கின்றது என்றும் சொல்வார்கள்.

அழுக்குப் பட்டு விட்டால் அதை நுகர்ந்தால் அந்த அழுக்கின் மணமே வரும். அந்த அழுக்கு நமக்குள் நிலைத்திருக்காது அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எண்ணினால் இந்த அணுக்கள் விளைந்து அசுத்தத்தை உருவாக்கும் அணுக்கள் மடிகின்றது.

1.மடியும் போது எப்படித்தான் இருந்தாலும் அது துடிக்கத்தான் செய்யும் அதனுடைய உணர்வை ஊட்டத்தான் செய்யும்
2.வேதனை என்ற உணர்வு ஆக்கப்படும் பொழுது அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரப்படும் பொழுது அதற்கு வேதனை…
3.அது துடிக்கும் உணர்ச்சிகளை ஊட்டும். நாம் நல்ல நிலைகளைப் பெற விடாதபடி அது தடுக்கும்.

ஆனாலும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று மீண்டும் “ஒரு தடவைக்குப் பல முறை செய்ய வேண்டும்…”

இந்த உணர்வின் நினைவாற்றல் அதை அடக்கிடும் ஆற்றளாக நமக்குள் பெருகுகின்றது… அதுவே நமக்குள் வலுவாகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் பெற்ற சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை இணைக்கச் செய்யும்.

அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்தவர்கள்… ஒளியாக வளர்ந்து கொண்டிருப்பவர்கள். அதனை நாம் நுகரப்படும் பொழுது தெளிந்து தெரிந்து தெளிவாக வாழ்ந்திடும் அணுக்களாக நமக்குள் விளையும். ஆகவே அதைச் சொந்தமாக்க வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் வரும் இன்னல்களைச் சொந்தமாக்கி விட்டால்…
2.நான் நல்லதைச் செய்தேன் எனக்கு இப்படி வந்து விட்டதே…! என்ற இந்த ஏக்கத்தை வளர்த்து விட்டால்
3.மீண்டும் பிறவிக்குத் தான் வர முடியும்.

இந்தச் சாமியார் தருவார் அந்தத் தெய்வம் தரும் என்று இப்படி எண்ணங்களை அலைய விட்டால் நாம் நுகர்ந்த அந்த உணர்வே நமக்குள் தெய்வமாக இயக்குகின்றது.

அந்த எண்ணமே சீதா ராமனாகின்றது சுவையின் எண்ணங்களாக உருவாக்குகின்றது அதன் உணர்வின் சக்தியாக கடவுளாக நமக்குள் இயக்குகின்றது. அந்தக் குணமே நமக்குள் தெய்வமாக வரும்.

அஞ்சும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் அதுவும் சீதா தான் அந்த உணர்வின் எண்ணங்களை நமக்குள் உணர்த்தப்படும் பொழுது சீதாராமா தான் இதை உருவாக்குவது நாராயணன் சூரியன். தனக்குள் கலந்து கொண்ட உணர்வுகள் உயிரிலே நுகர்ந்தால் சீதாராமா.

நாராயணன் திரேதா யுகத்தில் சரீர யுகத்தில் எண்ணங்கள் கொண்டு இயக்குகின்றான் நாராயணன். நரநாரயணனோ நாம் நுகர்ந்த உனர்வை அணுவாக மாற்றுகின்றான் என்ற உண்மையைத் தெளிவாக்குகின்றார்கள்.

ஆகவே இதை உணர்ந்து கொண்டு இந்த வாழ்க்கையில் நாம் எதைப் பற்றிடல் வேண்டும்…?
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றிடல் வேண்டும்
2.இந்த வாழ்க்கையில் வாழும் பொழுதே “தீமைகளை அகற்றிடும் வல்லமையைப் பெற வேண்டும்…”

சோகமா…! சுகமா…?

 

இமைகளின் துரித கதி இயக்கத்தின் ஊடே (தூசி) உள் நுழையும் செயலே சந்தர்ப்பவசம்.

ஞானத்தின் பாங்கு செயல்பட விழிப்பு கொள்ளும் மனம்… வாழ்க்கையின் நடைமுறை அனுபவ சந்தர்ப்பங்கள்… படர்தல் எனும் எண்ணத்தின் குணம் நம்முள் இயங்கி அனுபவ நிகழ்வுகளை உணர்த்துகின்றன.

1.இமை காத்திடும் செயலின் கவனம்
2.அந்த இயற்கை உணர்வின் உந்துதல்… “நொடிக்கும் குறைவான காலமே…”

கண்ணில் படிந்த தூசியின் உறுத்துதல் “உடனடியாக உணர்த்துவதைப் போன்று…”
1.மெய் ஞானத்தின் ஆன்ம வலு காட்டிடும் செயலில் நாம் ஊட்டிக் கொள்ளும் குணங்களின் செயலில்
2.அக்குணங்களின் வலுவைக் கூட்டும் ஈர்ப்பின் சந்தர்ப்பவசங்கள்…
3.வாழ்வின் நடைமுறை அனுபவ நிகழ்வுகள் காட்டுவதை மனிதர்கள் உணர்வதில்லை.

நடைமுறை அனுபவங்களில் நாம் சந்திக்கும் துக்கமோ அல்லது மகிழ்ச்சியோ அதை அனுபவித்திடும் செயலாக அதே உணர்வுகளின் வலுவைக் கூட்டிக் கொள்வதினால் மாமகரிஷிகள் சுட்டிக்காட்டிய “சோ..க…ம்” கிடைக்குமா…?

ஆத்ம சக்தி எனும் அருமருந்தைக் கைகொள்ளும் நமக்கு… எண்ணியதை எண்ணியபடி பெற்றுவிடும் நற்பயனாய்… ஈர்ப்பின் செயல் அச்செயலுக்குள் சமைப்பு…
1.“சமைப்பின் பலன்…” என்றே கொள்ளும் குணங்களின் வலுவை வலுவாக்கிடும் செயலில்
2.”சோகம்” என்ற நாதம் இன்று மனிதனின் எண்ணத்தில் அது வெறும் துக்கமாகத் தான் காட்டப்படுகின்றது.

கலங்குகின்ற நெஞ்சம் சரீரம் கொண்டு அனுபவித்திடும் துக்கமாகப் பெருக்கிக் கொண்டு இடர்படும் நிலைகள் இராமன் பெற்ற அனுபவங்களாக அதனுள் மூழ்கி… கொண்ட குணங்களை வலுவாக்கிடும் செயலின் துரிதம் போல… நற்குணங்களின் செயல்பாட்டில் உயர்வைக் கூட்டிக் கொள்ள செயல்படும் குணங்களின் தன்மைகளில் “துரிதமும்… செயல்பாடும்… ஒன்றே…!

வானைச் சுட்டிக்காட்டி செயல்பாட்டின் பேதங்களைப் பகுத்தறியும் பண்பாக “சோ…” என்ற ஒலி ஈர்ப்பில் “க…” எனச் சமைத்து “ம்…” எனும் முழுமையாக நம்மால் நற்குண நற்சுவாசமாக எடுத்து… மாறு கொண்ட குணங்கள் நமக்குள் வந்து ஊறு விளைவிக்கும் செயலை மாற்றி… விரிவு கொண்டிடும் நல் ஒளி அணுக்களின் செயல் உறுதியாக்குவதே “சோ…க…ம்…”

(குறிப்பு:- சோகம்…சோகம்…சோகம்… என்று ஒரு இருபது முறை வேகமாகச் சொல்லிப் பாருங்கள்… “சுகம்” என்று வரும்)

சூரியன் சுழலும் பொழுது ஒலி வருகின்றது “சோ……கம்”.
1.அதாவது தன் நிலைகளில் மற்றதை விரிவடையச் செய்து
2.தனக்குள் இழுத்து “கம்…” – “சோ……கம்”.
3.விஷத்தை வெப்பத்தால் நீக்கி விட்டுத் தனக்குகந்ததாக எடுத்துக் கொள்கின்றது என்று
4.அந்த நாத சுருதியின் தன்மையை அன்று வியாசகர் தெளிவாகக் காட்டினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை நீங்கள் கேட்டு அதைக் கடைப்பிடித்து வழி நடந்து கொண்டிருந்தாலும் உங்கள் உடலுக்குள் எத்தனையோ குணங்கள் எதிர்ப்பு உணர்வுகளைக் காட்டும்.

1.உங்களுக்குள் அவ்வாறு எழும் நிலைகளை மாற்றி
2.அந்தச் சந்தேக உணர்வுகளை நீக்கும் நிலைக்காகத்தான்
3.திரும்பத் திரும்ப யாம் உபதேசிப்பது.

அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அந்த மெய் ஞானிகள் பெற்ற உணர்வுகளை மீண்டும் மீண்டும் ஆழமாகப் பதிவு செய்யும் பொழுது
1.இதுவே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய உள் பொருளைக் காண முடியும்.
3.உங்களுக்குள் நல்லதைப் பெற முடியும்.

அந்த நம்பிக்கையில்தான் இதை உபதேசிக்கின்றேன்.

குருநாதர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி “என்னை விழித்திருக்கச் செய்த அந்த நிலையை…” நீங்களும் என்றும் விழித்திருந்து… தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்துப் பழக வேண்டும்.

காரணம்… உங்களுக்குள் தீமைகளை அறிவிக்கச் செய்யும் நிலையில் “தீமை இது தான்…” என்று அது காட்டினாலும் அந்தத் தீமைகள் உங்களுக்குள் விளையாது நல்ல உணர்வின் தன்மையை வளர்த்து தீமைகளை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் விளைய வேண்டும்.

ஆகவே… தீமையை அகற்றிட்ட இருளைப் போக்கிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் பொருள் கண்டுணர்ந்திடும் அந்த ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்களுக்குள் வளர வேண்டும் என்றுதான் எமது குரு அருளாசிப்படி
1.நீங்கள் அனைவரும் அதை அவசியம் பெற வேண்டும்…
2.நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள் என்ற தன்னம்பிக்கையில்
3.காலமானாலும்… கால நேரம் பார்க்காது உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
4.உங்கள் நல்ல உணர்வுடன் அருள் ஞானிகளின் உணர்வை இணைத்து இணைத்து
5.ஈஸ்வரப்பட்டர் அருள் ஆசைப்படி உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உண்மையின் உணர்வின் தன்மையை அகஸ்தியன் தனக்குள் வளர்த்துக் கொண்டவன். நஞ்சைத் தனக்குள் ஒளியாக மாற்றிக் கொண்டவன்.

அவன் கண்ட உண்மையின் உணர்வை நமக்குள் பெற்று “கல்கி…” என்ற நிலையில் ஒரு தெளிவான உணர்வை உருவாக்கத் தான் மீண்டும் மீண்டும் உபதேசிப்பது (ஞானகுரு).

ஒருவன் நமக்குச் செய்யக்கூடிய தவறை நாம் கூர்ந்து கவனிக்கின்றோம். பார்த்துப் பதிவான பின் “அவனை விடுவேனா பார்…!” என்ற அசுர உணர்வு வருகிறது.

ஆனால் அவன் நம்மைத் தாக்கவில்லை.. இருந்தாலும் தாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றான்… என்று வைத்துக் கொள்வோம்.
1.செவி வழி கேட்கின்றோம்
2.மூக்கு வழியாக நுகர்கின்றோம்
3.உயிரிலே பட்டதும் உணர்ச்சிகள் தூண்டுகின்றது
4.அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் படருகின்றது.

அப்பொழுது தீமையை உருவாக்கக் கூடியதாக மாறி விடுகின்றது. அதாவது நம் உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொல்லக்கூடிய சக்தியாக மாறுகின்றது. அதுவே “கலி…” என்ற நிலையாக வந்துவிடுகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கப்படும் போது
1.அது அந்த நஞ்சினை அடக்குகின்றது
2.உணர்வின் அறிவாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை ஒளியாக மாறிக் கல்கி ஆகின்றது.

ஆகவே…
1.உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாகி நாம் கல்கி ஆக மாறுவதா…?
2.அல்லது கலி என்ற நிலைகளில் தீமைகளை உருவாக்கி தீமையாக மாற்றுவதா…? என்று சற்று சிந்தியுங்கள்.

விஞ்ஞான உலகில் இன்று எத்தனையோ வகையான புது மிருக இனங்களை (கண்டுபிடிப்பு) உருவாக்குகின்றார்கள். ஆனாலும் அந்த மிருகங்களை உருவாக்க
1.எத்தனையோ உயிரணுக்களைக் கொல்கின்றார்கள்
2.பல விஷத்தின் தன்மைகளைக் கலக்கின்றார்கள்
3.புது உணர்வின் அணுக்களாக உருவாக்குகின்றார்கள்.

அத்தகைய அணுக்களின் சத்தை எல்லாம் சூரியன் கவர்கின்றது. விஞ்ஞான அறிவால் செயற்கை முறையில் மாற்றப்பட்ட உணர்வின் அணுக்கள் சூரியனால் கவரப்படும் பொழுது காற்றுடன் காற்றாக அவை கலந்து
1.மனித உடலில் பட்டால் கடும் நோயாக மாறிவிடுகிறது
2.மனிதன் உணவாக உட்கொள்ளும் தாவர இனங்களில் புது விதமான விஷக் கிருமிகளாக (VIRUS) உருவாகின்றது

தாவர இனங்களை உட்கொண்டு மடிந்தால் மீண்டும் மனிதனுக்குள்ளே வருகின்றது. மனித உடலிலே புதிய வியாதிகளாகத் தோன்றுகிறது.

தீமைகளை நீக்க… பூச்சியைக் கொல்ல மனிதன் கலியாகவே மாறி விடுகின்றான். அதைக் கொன்ற பின் அந்த விஷத்தின் தன்மை (MUTATION) உணவு வகைகளில் நமக்குள் வருகின்றது… கலி…!

தீமைகளை வளர்க்கும் தன்மையே வருகின்றது. நாளுக்கு நாள் கலி என்ற நிலையையே உருவாக்கும் நிலைக்கு மனிதன் வருகின்றான். மனிதனை மனிதன் அழித்திடும் உணர்வு வருகின்றது.

விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது சிந்தனை இழக்கப்படுகின்றது.
1.மனிதனை உருக்குலைக்கும் உணர்வுகள் வருகின்றது
2.மனிதனை உருக்குலைத்தாலும்… உணர்வை உருக்குலையச் செய்யும் கலி என்ற தன்மைகள் வருகின்றது.

இதிலிருந்து மீள்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் இங்கே ஞாபகப்படுத்துகின்றோம். சூரியன் விஷத்தை நீக்கி இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்குவது போல
1.அதிலே உயிரணு தோன்றி இத்தனையும் வடிகட்டியதோ
2.வடிகட்டிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமானதோ
3.அதனின்று வரும் உணர்வினை நாம் நுகர்ந்தால் கல்கி ஆகலாம்

ஆனால் அதை மறுத்தால் நாம் கலி ஆகலாம்…!

ஆகவே இதில் எதைப் பெற வேண்டும்…? என்ற நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள். அருளைப் பெருக்கினால் இருளைப் போக்கலாம்.

“உயிரோடு ஒன்றி ஜொலித்திடும் நிலையாக” ஒளி நிலை பெற வேண்டும்

 

நமது உயிரில் (புருவ மத்தியில்)
1.அது கூர்மையாக ஈர்க்கும் இடங்களில் அது சேமித்து சேமித்து வைரத்தைப் போன்று கற்கள் உருவாக்கும் நிலை வருகின்றது.
2.நரிக்குக் கொம்பு என்று சொல்வது போன்று நமக்குள்ளும் இது உறைகின்றது
3.அந்த உணர்வுகள் விளைந்து விட்டால் அதுவே வைரமாக மாறுகின்றது.

கடந்த காலங்களில் 200 வருடம் 300 வருடம் ஆகியும் மனிதர்கள் இறக்கவில்லை என்றால் அவர் உடலில் சேமிக்கப்பட்ட உணர்வுகள் மண்டை ஓட்டிலே எடுத்துக் கொண்டால் “வைரங்கள்” அங்கே விளைந்திருக்கும்.

எந்த நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்றார்களோ அந்த உணர்வின் தன்மை தனக்குள் நுகர்ந்து அவருக்குள் உறையப்பட்டு வைரமாக ஜொலிக்கின்றது.

கடந்த கால நிலைகள் இப்படி உண்டு.

குருநாதர் இமயமலைச் சாரலுக்கு எம்மை அழைத்துச் சென்று
1.அங்கே புதையுண்டு உடல் அழியாது இருந்த பல நூறு வருடங்கள் வாழ்ந்த
2.அக்கால மனிதர்கள் உடலில் பிளந்து காட்டுகின்றார் இந்த வைரங்களை.

காடு மேடெல்லாம் அலையச் செய்து தான் இந்த பேருண்மைகளைக் காட்டுகின்றார். மனிதனான பின் இத்தகைய உணர்வுகளை நுகர்ந்து உயிரோடு ஒன்றி வளர்ச்சி பெற்று அது வைரமாக விளைவதையும் காட்டுகின்றார்.

நட்சத்திரங்கள் ஜொலிப்பின் தன்மை பெற்றாலும் கார்த்திகை நட்சத்திரம் ஜொலிப்பான நிலைகள் நீலம் கலந்த வெளுப்பு நிறமாக இருக்கும். ரேவதி நட்சத்திரம் மஞ்சள் கலந்த நிறமாக இருக்கும்… கோமதேகம் போன்ற உணர்வுகள் உருவாகும்.

இப்படி 27 நட்சத்திரங்களில் இருந்தும் வைரக்கற்கள் உருவாகின்றது. சில நட்சத்திர கலவைகள் அணுக்களாக மாற்றப்படும் பொழுது வைரங்களின் ரூபங்களும் மாறும்.

இதைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

மனித உடலுக்குள் ஒவ்வொரு தாவர இனங்களும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்தே உள்ளது. அந்தக் குணத்தை அது சிறப்பிக்கின்றது.

இருந்தாலும்… அந்த விஷம் தோய்ந்த அணுக்களின் தன்மை… “எந்த நட்சத்திரத்தின் தன்மை கொண்டு உயிரின் தன்மை இயக்குகிறதோ” அதனின் தன்மை கொண்டு வைரமாகவே பின் நாட்களில் மாற்றுகின்றது.

இமயமலைச் சாரலுக்கு அழைத்துச் சென்று தொடர் வரிசையாக குருநாதர் எடுத்துக் காட்டுகின்றார்.

ஆனால் மறைந்திருக்கும் வைரத்தைக் காட்டினால் ஆஹா…! என்று பெருமைப்படுவதும்… அதனால் பயனில்லை என்றாலும் அதை எடுத்து வந்து கிரீடங்களிலே வைத்து வீட்டில் பெட்டிக்குள் வைத்து பூட்டிக் கொள்வதும்…
1.“நான் வைரத்தை வைத்துள்ளேன்” என்று பெருமை பேசும் நிலைகளுக்குத் தான் அதைக் கொண்டு செல்கின்றோம்.
2.உணர்வின் தன்மை உயிரின் ஒளியின் ஜொலிப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் நமக்கு வருவதில்லை.

இந்த உடலின் இச்சையும் நம்மை மற்றவர் போற்றும் நிலைக்காகப் பல ஆடம்பரப் பொருள்களைச் சேர்த்து… பிறர் மெச்ச வேண்டும் போற்ற வேண்டும் என்ற இந்த ஆசைகள் தான் தூண்டுகின்றது.

அவர்கள் போற்றத் தவறினால் பகைமைகளை உருவாக்கி விடுகின்றது… அதற்குப் பின் நல்ல குணங்களையும் அழித்து விடுகின்றது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இயற்கையின் இயல்புகள் நம் உயிர் எவ்வாறு மாற்றுகின்றது…? என்ற நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை என்பதை உணரலாம்.

நாம் அணிந்திருக்கும் அணிகலன்களும் ஆடைகளோ நமக்குச் சொந்தம் ஆகின்றதா…? ஆடம்பர அலங்கார வீடுகள் நமக்குச் சொந்தமாகின்றதா…? அழகாக வளர்த்த இந்த உடல் சொந்தமாகின்றதா…?

வேதனைகள் அதிகமாக உருவாகிவிட்டால் அதற்குள் மடிகின்றது… உடல் குறுகுகின்றது… வேதனைகள் வளர்கின்றது… நல்ல ஆடைகளை அணியும் திறனும் இழந்து விடுகின்றோம். நல்ல ஆடைகளைக் கண்டால் சீ…! வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுகின்றோம்.

எப்போது…?

அதை உடல் ஏற்றுக் கொள்ளாத நிலை வரும் பொழுது இப்படி ஆகி விடுகின்றது. கடைசியில் பணம் இல்லாத நிலை ஆகிவிடுகின்றோம் இதைப் போன்ற உணர்வு எவ்வாறு வளர்கிறது என்று குரு காட்டுகின்றார்.

ஆகவே நாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்…?
1.உயிரின் மீது இசைப்பட வேண்டும்
2.உயிரோடு ஒன்றி ஜொலித்திடும் நிலையாக ஒளி நிலை பெறுவது மனிதனின் முதிர்வு நிலை.

திரு + பதி = திருப்பதி

 

தாய் சக்தியுடன் ஒன்றிட்டே செல்வநாயக சூத்திரம் பெறும் ஸ்ரீனிவாச கொங்கணரும்
1.மலைமுகட்டுக் குடிசை முன் (இப்பொழுது வெங்கடாஜலபதி கர்ப்பக்கிரகம் உள்ள இடத்தில்) தவமியற்றும் மாமுனி
2.தாயம்மை புதைக்கப்பட்ட இடம் கடும் மழைநீரால் கரைந்து அவ்விடம் கரைவெய்தி “காந்தப் பாறை எனும் சுயம்பு” உள்ளடங்கி
3.உள்ளே ஓர் பெரும் பாறைப் பகுதி வெளிப்பட்டுவிட அதன் மேலே அமர்ந்து காந்த நீர் சக்தியை ஈர்த்து
4.தன் அவதார மகிமையை வெளிப்படுத்தியது என்பது எல்லாம் சூசகமாய் மறைக்கப்பட்டு விட்டது.

பரணி… தரணி ஆளும் என்கின்ற சொல் சூட்சுமத்தில் எலும்புகளுக்கு சரீரம் தொட்டு வலு நிலை கூடி அதன் ஈர்ப்பின் தொடரில்
1/பரணி நட்சத்திர அமில சேர்க்கையின் செயல்பாட்டில் ஒளி காந்தத்தைக் கூட்டி கூட்டித்
2.தக்க வைத்துக் கொள்ளும் சேமிப்புக் கிடங்காய் செயல் கொண்டிடும் சூட்சுமத்தில்
3.அறிவின் சூட்சுமத் தொடருக்கு கார்த்திகை அமில குண சேமிப்பும்
4.சூரிய ஒளி காந்தத்தை ஈர்க்கும் தொடரில் சமைக்கும் சமைப்புக்கு மூலமாய்
5.விஷ்ணு சக்தி எனும் சந்திரன் ஒளி காந்தத்தையும் சேர்த்து எடுக்கும் சமைப்பும் கலந்திட்ட நாளே அந்நந்நாள்.

அந்நாளிலே அவ்விடப் “பதி” கொண்ட காரணம் தொட்டே “திரு” என்று அடைமொழி சேர்க்கப்பட்டு “திருப்பதி” என்ற சொல் வழங்க காரணமாயிற்று.

அபூர்வமாய் ஏற்படும் இந்நாளில் அப்பதிதனில் தவமியற்றப்பட வேண்டும். செல்வம் தொட்டு இல்லாவிட்டாலும் “மண்டல செயல் நிலைப்பட” அருளாசி வேண்டித் தவமியற்றப்பட வேண்டும்.

கொங்கணச் செல்வ நாயகன் கொலுவிருந்த அப்பதியின் பத்மாவதி ஸ்ரீனிவாசனுமாய் கோடி வீட்டுப் புருஷனே குபேரனாய் மாடி வீட்டின் அரசனாய் மருமகனுமாய் ஆன கதைத் தொடர் விசேஷம்.

பதினாறு வயதுடைய வாலிபனுக்கு ஏற்பட்ட அனுபவ ஞானம் என்பது விசேஷம் மட்டுமில்லாது அவன் ஜெப வழித்தொடருக்கு வைராக்கிய சிந்தனைக்கு வலுக்கூட்ட வந்த சக்திதான் எத்தனை எத்தனை…?

தாய் சக்தி பெற்ற தன் சக்தியையும் வலுக்கூட்டிக் கொண்டு வாலிபனாய் உலா வரும் பொழுதே… தன் ரிஷி சக்தியின் தொடருக்கு வலுக்கூட்டும் சக்தி மண்டலமாய்
1.வாக்தேவி, அன்னபூரணி, அஷ்டலட்சுமி எனும் நட்சத்திரத் தொடரில்
2.அஷ்டலட்சுமி நட்சத்திர சக்தியின் தொடர்பே பத்மாவதி என்னும் தொடர்பையும் அறிந்து கொண்டு
3.அஷ்டலட்சுமி சக்தி தன்மையின் அவதார நிகழ்வே தன் சக்திக்கு மேலும் சக்தியூட்டும் என்பதறிந்து
4.மணமுடிக்கும் மார்க்கமாய் கொண்டு வந்த குபேரப் பொருள் எங்கிருந்து வந்தது…?

இந்தக் கேள்வியின் ஞானத்திற்கு சித்தின் செயல் தொடரின் பரிணாம முதிர்வே மாமுனிவன் சக்திக்கு சக்தியூட்டும் வகுளாம்பிகை தாய்சக்தி மூலம் பெறப்பட்ட தொடரெல்லாம் சூட்சுமமே.‌..!

பத்மாவதி எண்ணம் ஸ்ரீனிவாசன் மேல் விழுந்தவுடன் அக்கணமே கொங்கண மாமுனி தன் சக்திக்குச் சக்தியூட்ட அவதார மகிமையின் மூலம் “செல்வநாயகனான நிலை முழுமை பெற்றுவிட்டது…”

கொங்கண மாமகரிஷி தன் மண்டல செயலுக்கு வரும் முன்பு பத்மாவதி நாயகன் என்ற தொடரில் தவம் இயற்றும் தவ வாழ்வு செல்வநாயகனான பின்பு தான் அதிகப்பட்டுவிட்டது.

பத்மாவதி அம்மன் தன் நாயகனின் ரிஷி சக்திக்கு பக்கபலமாய்த் தன் ரிஷி பத்தினி சக்தியை ஒன்றச்செய்து ஒழுகும் இல்லறப் பயன் வாழ்வில் கொங்கணர் மாமகரிஷி சக்தி பெறவே “ஓர் திருப்புமுனை” ஏற்பட்டது.
1.அது பத்மாவதியும் தன் தவத்தின் முழு சக்தியையும் கணவருடன் ஒன்றிச் செயல் கொண்டிட மூல சக்தியாய் கலக்கும் செயலுக்கு
2.தன் பூத உடல் நீத்துத் தன் கணவருக்கு வலுக்கூட்டிட்ட சூட்சும சக்தியான மூலத்தில் கலந்ததுதான்.

அதன் பின் மலை முகட்டுப்பாறை மீது தவமியற்றும் மகரிஷி சக்தியாய் சக்தி பெறும் மார்க்கம் வந்துற்ற பொழுதே அவருடன் ஒன்றி வழி நடந்திடும் தாய் சக்தி வழிகாட்டியாய் அவருக்கு அமைந்த விதம் விண்டுரைக்க முடியாதது.

1.ரிஷித் தன்மை பெற்றுவிட்ட கொங்கண மகரிஷியால் அமைக்கப்பட்ட விஸ்வரூப சிவலிங்கம் தவமிருந்த பாறையின் உள்ளிருக்கும் குகை அமைப்பும்
அதனுள் எழுந்த சுயம்பு காந்த பாறையும்.. காந்த சுயம்பு மேல் அமைக்கப்பட்ட விஸ்வரூப சிவலிங்கமும்
3.நீர் காந்த சக்தி தாரையாய் அந்த லிங்கத்தின் மீது வர்ஷிக்க அதன் எதிர் அமர்ந்து தன் சரீரத்தைப் பக்குவ கதியாக்கி
4.உயிரான்ம சக்தியின் ஈர்ப்பினால் மின்காந்த சக்தி பெற்று தனக்கென ஓர் மண்டலமாய் உருமாறும் சக்தியை உருவாக்கி
5.இன்றோ மண்டலத் தன்மைக்கும் சென்றிட்டார்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் எம்மைச் (ஞானகுரு) சாக்கடை அருகே அமர வைத்து உபதேசமாகக் கொடுத்தார். பன்றி சாக்கடையின் நாற்றத்தை நுகராது அதற்குள் இருக்கும் நல்ல உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து அதனின் உணர்வின் வளர்ச்சியில் பரிணாம வளர்ச்சியாகி மனிதனாக வளர்ந்து வந்தது.

நாற்றமான உணர்வுகள் நீக்கப்பட்டு நாற்றத்தை நீக்கிடும் உணர்வின் எண்ணங்களாக மனிதனாக எப்படி வளர்ந்து வந்துள்ளோம்…? என்பதை உணர்த்தவே அங்கே உபதேசித்தார் குருநாதர்.

சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை நீ நுகராதே. சாக்கடையற்ற நிலையாக
1.நாற்றத்தை நீக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வை நீ இங்கிருந்து பெறு.
2.அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நீ பெற்றால் அந்த நாற்றத்தை நுகரவிடாது
3.அதை அறியத் தான் உதவும்… அந்தத் தீமை உனக்குள் விளையாது.

அதைப் போன்று இந்தச் சாக்கடையான வாழ்க்கையில் இருக்கும் அந்த உணர்வினை நீக்கி மெய்ப்பொருளைக் கண்டுணரும் அந்த சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் உன்னை இங்கே அழைத்தேன்.

காரணம் இன்று இந்தக் காற்று மண்டலமே சாக்கடையாக இருக்கின்றது. இதை நுகர்ந்து நுகர்ந்து உடலுக்குள் அந்தச் சாக்கடையான சத்தையே நுகரும் தன்மையைத் தான் அடைந்துள்ளோம்.

விருப்பு வெறுப்பு வேதனை என்று
1.பிறரைக் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர
2.குறைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கவில்லை.

ஆகவே நாற்றத்தைப் பிளந்த பன்றியைப் போன்று குறைகளை நீக்கி நல்லதை நுகரும் ஆற்றல் பெற வேண்டும்.

பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும் அவர்கள் குறைகள் அகல வேண்டும்… தெளிந்துணர்ந்து செயல்படும் தன்மை நமக்குள் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அவ்வாறு எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குறைகளை நீக்கும் சக்திகளாக அங்கே தோன்றுகின்றது.

தீமைகளை அகற்றிடும் நிலையையும் தீமைகள் உனக்குள் புகாத நிலையையும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இங்கே சாக்கடை அருகே உன்னை அமரச் செய்து உனக்கு உணர்த்தியது.

ஆனால் சாக்கடையை நுகர்ந்து அய்யய்யே… என்று எண்ணினால் அதை நினைக்கும் பொழுதெல்லாம் உனக்குள் சாக்கடையை நுகரும் உணர்வே அதிகமாக வருகின்றது.

அந்தச் சாக்கடை நீக்க வேண்டும்… அதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தச் சாக்கடையை நீக்கும் எண்ணங்களாக உனக்குள் வருகின்றது.

அதைப் போன்று தான்…
1.நீ யாரைக் கண்டாலும்… எவரைக் கண்டாலும்… அங்கே காணும் குறைகள் எதுவாக இருப்பினும்
2.அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினை உனக்குள் ஏற்றுக் கொண்டு
3.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் அவர்களை அறியாத இருள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று நீ இதை எண்ணுவாய் என்றால்
5.உனக்குள் அறிவித்த இந்த உணர்வுகள் மெய்ப்பொருள் காணும் நிலையாக உனக்குள் வள்ரும்.

இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இருந்தாலும் குறை என்று அது அறிவிக்கச் செய்கின்றது.
1.அறிவிக்க மட்டும் தான் அதைப் பயன்படுத்த வேண்டும்
2.அதற்கடுத்து அதைப் பயன்படுத்தக்கூடாது.

ஆனால் அறிவிக்கச் செய்யும் நிலையையே திரும்பத் திரும்ப எண்ணி
1.இப்படிச் செய்தான்… அப்படிச் செய்தான்… இப்படியே செய்தால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா…?
2.அவனை விடக்கூடாது…! என்று எண்ணும் பொழுது
3.நமக்குள் அறிவித்த அந்த நிலை… நமக்குள் எது தவறு…? என்று காட்டியதோ
4.அந்தத் தவறை நமக்குள் விளைய வைத்து நம்மையும் தவறு செய்பவனாகவே வளர்த்துவிடும்.

ஆக தவறை நீக்கும் நிலைகளைத் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனித வாழ்க்கையில் குறை இல்லாது நடந்தவர் யாருமில்லை. ஒரு மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வு வரும் பொழுது குறையான உணர்வாக அதை ஈர்க்கப்படும் பொழுது…
1.அதிலிருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?
2.,குறைகளை எப்படி நீக்க வேண்டும்…? என்று நாம் எண்ண வேண்டும்.

அது தான் முக்கியம்.

அந்தக் குறைகளை நீக்க அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வலுவாக ஏற்றுக் கொண்டால்… நாம் எடுத்துக் கொண்ட “அந்த ரிமோட் கண்ட்ரோல் சக்தி” யாருடன் பழகினாலும்… பேசினாலும்… அவர்களை அறியாது இயக்கும் தீமைகளை நீக்கிடும் சக்தியாகவும்… அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாகவும் அங்கே இயக்கச் செய்யும்.

இதை நாம் செய்து பழக வேண்டும்.

இன்று நாம் உபயோகப்படுத்தும் டி.வி. மற்ற எலெக்ட்ரானிக் சாதனகளில் மூடி மறைத்து இருப்பதை “ரிமோட் கண்ட்ரோல்…” என்ற அந்த பட்டனைப் போடும் பொழுது சீராக இயக்குகிறது.. படமோ பாடலோ அல்லது எந்த இயக்கமாக இருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே அதைக் கவர்ந்து இயக்க முடிகின்றது

இதைப் போன்றுதான் மெய் ஞானிகளின் ஆற்றலை நாம் எடுத்து
1.அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளரும் பொழுது
2.மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலையாக ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) ஆக
3.நம்மை அந்த ஞானிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் அங்கிருக்கக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்க இது உதவும். நமக்குள்ளும் அது வராதபடி நல்ல உணர்வுகளைத் தெளிந்து கொள்ளும் நிலையாக வரும்.

இதைத்தான் மகா சிவராத்திரி என்று இருளுக்குள் மறைந்த பொருளைக் கண்டுணர்ந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளை நாம் பெறும் நிலையாக மகா…! அனைத்தும் நமக்குள் உண்டு என்று காட்டியுள்ளார்கள்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் தெரிந்திடும் நிலையாக சிவன்ராத்திரி என்று விழித்திருப்போம்.
1.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக
2.விழித்திருக்கும் அந்த உணர்வின் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பித்தனைப் போன்று தான் இருந்தார். புற உலகிற்கு அவரைப் பார்க்கும் பொழுது ஒன்றுமறியாத பித்தன் என்றே எண்ணினோம். ஆனால்
1.பித்தான உடலுக்குள் நின்று
2.ஒளியான சத்தை தனக்குள் வளர்த்து உலகின் தன்மை அறிந்துணர்ந்து
3.அறிந்திட்ட உணர்வின் சத்தைத் தனக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்.

மாமரத்தில் உருவாகும் காய் முதலில் புளிப்பின் தன்மை அடைந்தாலும் முதிர்வில் கனியாகி மற்றவர்கள் ரசித்து உணவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

அதைப் போன்று நம் குருநாதர் இந்த மனித வாழ்க்கையில் வந்த
1.நஞ்சினை நுகராது இனித்த வாழ்க்கை என்ற நிலையைத் தனக்குள் எடுத்து
2.நஞ்சினை வெறுத்து மெய் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.”தன்னிச்சையாக…” மகிழ்ந்திடும் உணர்வுடன் செயல்பட்டார்.
4.அப்படி இருக்கும் நிலையை… அவரைப் பார்ப்போருக்கு பித்தனைப் போன்று காணப்பட்டார்.

பிற்காலங்களில் அவர் உணர்த்திய உணர்வின் ஒலிகள் கொண்டு தான் அதை அறிய முடிந்தது.

இந்தப் பூமியில் வாழ்ந்த உடல் பற்றை அவர் அகற்றிவிட்டு அந்த மெய் ஞானிகள் மீது பற்று கொண்டு அந்த அருள் உணர்வுகளை அவர் வளர்த்துக் கொண்டு ஒளியின் தன்மை பெற்றார்.

நமக்குள் எதைப் பற்ற வேண்டும் எதைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் என்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக உணர்த்தினார்.

வெறுப்பு வேதனை கோபம் குரோதம் என்ற நிலையும் பிறரை வெறுத்திடும் நிலையும் பிறரை அழித்திடும் உணர்வுகளையும் நமக்குள் இணையவிடாது அதை வெறுத்து அந்தத் தீமைகளைப் பற்றிடாது அருள் ஞானியுடன் பற்று கொண்ட உணர்வுகளை வளர்த்து அதைக் காத்திடும் நிலையாக நீ எவ்வாறு இருக்க வேண்டும்…? என்றும் உணர்த்தினார்.

என்னைப் பிறர் காணும் பொழுது நான் பித்தனாக இருக்கின்றேன். காரணம்
1.இந்தப் புவியின் ஆசை கொண்ட நிலையில் அவர்கள் என்னைப் பார்க்கும் பொழுது
2.என்னைப் பித்தன் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்
3.ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு அவர்கள் தான் பித்தராக இருக்கிறார்கள் என்று அவர்கள் உணரவில்லை.

பித்தனாகி… இந்த உடலின் தன்மைக்கோ பித்தைப் போன்ற உடலின் உணர்ச்சிகளுக்கோ… நான் அடிமையாவதில்லை. உணர்ச்சிகளை அடக்கி
1.அந்த மெய் ஞானிகளின் உணர்வை நான் பெற வேண்டும் என்று
2.அந்தப் பித்துப் பிள்ளையாகத்தான் (பித்துக்குளி) நான் இருக்கிறேனே தவிர
3.இவர்களைப் போன்று உடலின் பித்துப் பிள்ளையாக நான் இல்லை…! என்று எம்மைத் தெளிவாக்கினார் குருதேவர்.

நாம் சமைக்கும் உணவின் ருசி “எப்படியெல்லாம் மாறுகிறது…?” என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

சமையல் செய்யும் பொழுது வெறுப்புடன் இருந்தார்கள் என்றால் அவர்களை அறியாமலேயே காரத்தை அதிகமாகப் போட்டு விடுவார்கள். இந்த உணர்வுக்குத் தக்க தான் பதார்த்தங்கள் சமைக்கப்படும். உணர்வின் எண்ணத்தால் இயக்கப்படும் நிலைகள் இது…!

ஆனால் உணர்வின் நிலைகள் நம்முடைய எண்ணங்கள் அதற்குள் பட்டவுடன்
1.பாத்திரத்திற்கு இதை ஈர்க்கும் சக்தி வந்து விடுகின்றத
2.அதற்குள் இருக்கக்கூடிய பொருள்கள் இழுக்கும் சக்தி பெறுகின்றது.

வேதனையுடன் இருந்து நீங்கள் சாப்பாட்டைச் சாப்பிட்டால் கசக்கத் தொடங்கும். காரணம் வேதனை என்ற உணர்வு நுகரப்படும் பொழுது பித்த சுரப்பிகள் அதிகமாகி அது விஷம் தோய்ந்ததாக மாறுகின்றது.

அப்படிச் சுரக்கப்படும் நிலையில் உணவுடன் இணைந்து விட்டால்
1.எவ்வளவு ருசியாக உணவு சமைக்கப்பட்டு இருந்தாலும் அது கசக்கத்தான் செய்யும்.
2.இவரின் உணர்வு பட்ட பின் காற்றிலிருக்கும் கசப்பு அதற்குள் கலக்கப்பட்டு உணவின் ருசியை மாற்றிவிடும்.

சில வீடுகளில் சமையல் நன்றாகச் செய்வார்கள். ஆனாலும் அங்கே கோபமாக வெறுப்பாக வேதனையாக இருப்பவர்கள் சமைத்தார்கள் என்றால் ருசி கெட்டுவிடும்.

இது நம்மை அறியாமலே மறைமுகமாக நடக்கும் சமாச்சாரம். இதையெல்லாம் எனக்குத் தெளிவாக காட்டுவதற்காக குருநாதர் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்றார்.

சிறிது அரிசி… மோரில் ஊற வைத்த கத்திரிக்காய்… மோரில் ஊற வைத்த மிளகாய் அதனை எல்லாம் உப்பை கொஞ்சம் போட்டு எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஒரு சிறிய டப்பா தான். தீப்பெட்டி ஒன்றுதான்.

காட்டிற்குள் இருக்கும் குச்சிகளை எடுத்து அடுப்பு போல மூட்டி டப்பாவில் நீரை ஊற்றி ஒரு பிடி அரிசியை உள்ளே போட வேண்டியது தான். நன்றாகக் கொதித்து வரும் பொழுது இன்ன அளவுக்கு இத்தனை மிளகாய் இத்தனை கத்திரிக்காய் என்று போடச் சொல்வார். அதிகமாகப் போட்டு விட்டால் ருசி கேட்டுவிடும் என்பார்.

போட்டுக் கொதித்து வந்த பின் அந்தக் கஞ்சியைப் பசியோடு இருக்கும் பொழுது சாப்பிடும் போது நல்ல ருசி வருகின்றது. சிறிதளவு அரிசி தான்… ஆனால் இரண்டு பேருமே சாப்பிட முடிந்தது அதைக் குடித்த பின் பசியும் அடங்குகின்றது.

இதற்குப் பின் என்ன செய்கின்றார்…?

ஒரு வாரம் ஆனது.
1.பசியை உண்டாக்குகின்றார்… சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை உருவாக்குகின்றார்
2.அந்த நேரத்தில் இந்தக் கஞ்சியைக் குடித்தால் கசக்கின்றது.
3.அந்த உணர்வுகள் அங்கே சென்றபின்… அதனுடன் கலந்து சுவை கேட்டு விடுகின்றது… குடிக்க முடியவில்லை.

எங்கிருந்து வந்தது…? போன வாரம் சாப்பிட்டாய் இன்று சுவை இல்லாத நிலைகள் அடைகின்றாய்…!. இதனின் காரணம் உன் உணர்வின் நினைவுக்குள் எடுக்கப்படும் போது அணுக்கள் தனக்குள் இணைத்து உயிருடன் பட்டு உடலுக்குள் சுழலப்படும் பொழுது அதனுடைய நினைவுகள் இப்படி இயக்கத் தொடங்குகிறது.
1.அந்த உணர்வின் அமிலங்கள் நாக்கில் சுரபிகள் சுரக்கின்றது
2.பொருளைச் சாப்பிட்டால் சுவையற்றதாக மாற்றுகின்றது.

இப்படி விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர்.

நீ தவறு செய்யவில்லை. எப்படி உன்னுடைய சந்தர்ப்பங்கள்…
1.நீ நுகர்வதையும் எண்ணங்கள் உருவாவதையும்… நுகரும் ஆற்றல் எப்படி வருகின்றது…?
2.நுகர்ந்த உணர்வுகள் உன் உடலில் எப்படிச் செயல்படுகிறது என்பதை அனுபவரீதியாகக் கொடுக்கின்றார்.

குருநாதரிடம் பெற்ற அனுபவங்களைத் தான் உங்களுக்கு அவ்வப்போது சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

“படியளக்கும் பெருமாள்…”

 

காலத்தின் சுழற்சியில்… ஓர் நாள் “மாடி வீட்டு அரசன் மகள் பத்மாவதி” தன் நாயகனை வரித்திட்ட செயல் மலைமுகட்டுக் குடிசையின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் அச்சம்பவம் நடைபெற்றது.

கொங்கணவ மாமுனி தன் அவதார ஸ்ரீனிவாச காலத்தில் வீரன் போல் காட்டினுள் திரிந்து மனித மனச் செயலாய் சரீரத்தின் மதத்தினை கர்வத்தை வென்று காட்டி…
1.காட்டினுள் மாமதமாய் எழும் யானையின் சரீரச் செயல் வழியிலும் அதை அடக்கும் ஆற்றல் காட்டி
2.மிருக மனத்தையும் வசீகரித்து நேசிக்க வைத்திடும் செயற்பாங்கு காட்டிய நிலையில்
3.பத்மாவதி மனத்தையும் தன் பால் ஈர்த்து தன் ரிஷி சக்திக்கு ரிஷி பத்தினியாக்கும் செயலும் நிகழ்ந்தது.

காட்டினுள் வனபோஜணம் உண்ண வந்த அரசனும் பரிவாரங்களும் ஸ்ரீனிவாசன் தன் அவதார இயல்பின் சூட்சுமம் கொண்டு இவர்கள் செயலைக் கவனிக்க… அங்குள்ள யானை ஒன்று மதம் கொண்டு தழையறுத்துக் கொண்டு அனைவரையும் விரட்ட… கூட்டமே கலகலத்து உயிர் காக்க ஓடி ஒளிய… பத்மாவதியை விரட்டிக் கொண்டே தொடர்ந்து யானையும் வந்துற்றது.

அரசனும் அரசியும் வீரர்களும் கலக்கமுற ஸ்ரீனிவாசன் அருகே வந்த வகுளாம்பிகை ஆசி கூறி மகனை அனுப்பி வைக்க அவதார மகிமை முன் தொடர்பால் முன் சென்றான் ஸ்ரீனிவாசனும்.

குடிசையை நோக்கி ஓடி வரும் பத்மாவதி தஞ்சமென ஸ்ரீனிவாசனின் பின் மறைய… தாயைத் துதித்து முன் சென்ற ஸ்ரீனிவாசன் ஓர் கை உயர்த்தி “நில்” என யானையை அதட்டிட… ஸ்ரீனிவாசன் குரலுக்கும் கண் பார்வை காந்த சக்திக்கும் கட்டுண்ட யானை மதம் நீங்கி மண்டியிட்டு அமர்ந்து கொண்டது.

ஸ்ரீனிவாசனை… தன் வாழ்க்கைத் துணை இவன்தான் எனத் தேர்ந்தெடுக்க காரணமாய் அமையலுற்றது அச்சம்பவம்.

1.கொங்கண மாமுனி தன் ரிஷிபத்தினி சக்தியை வளர்ச்சிப்படுத்தி
2.தாய் சக்தியின் மூல சக்தியாய்க் கலந்து
3.தன் அவதார விசேஷ குணத்தன்மை மனத்தைக் கொண்டு நடத்தியதே அடுத்து மற்றெல்லாம்.

இரு மனங்களும் சிவ சக்தியாய்க் கலந்துவிட்ட குணத்தின் வாசனையே நல்லறத்தின் செயலாய் இல்லறத்தில் மணமாய் பரிணமளிக்கும் தொடருக்கும்… “திருமாங்கல்ய மன வைபோகம்” என்றெல்லாம்… பெருமைப்படுத்திட்ட வாழ்க்கைத் துணை நலம் பேணும் செயலுக்குச் சக்தி பெற வந்த கொங்கணரும் எப்படி விலக்காக முடியும்…?

இல்லறம் ஏற்படும் செயலுக்கு மண எண்ண முடிவுரையைத் தெளிதல் அவசியம் எனும் பாங்கில் முறையாய் பெண் கேட்கும் படலத்தில் கொங்கணருக்குத் “தரித்திரன்” என்ற பட்டம் தான் வந்துற்றது.

அச்சொல்லின் விஷமம்… அவர்தம் வைராக்கியத்தை மீண்டும் தூண்டும் தூண்டுகோலாய் அமைய… வகுளாம்பிகை அம்மையும் புன்னகைத்து தனது அவதார மகிமை செயலுறும் தருணமும் இது தான் எனத் தெளிந்து தன் சரீர செயலும் உயிர் ஆன்ம சக்தி கொங்கண மாமுனியுடன் ஒன்றி வழிகாட்டிட எண்ணினார்.
1.எச்செயலுக்கும் வகுளாம்பிகையாய் வந்து பணி செய்து பயன்பெறும் மார்க்கம் காட்டிட்ட தாயாரம்மாள் என்கின்ற வகுளாம்பிகை
2.சரீரத்தை விட்டு உயிர் ஆன்மா சக்தித் தொடர் காந்தத்தை ஒளி சக்தியாக்கும் ரிஷியின் தொடரில் கலந்து ஒளி காந்தமாக்கி செயல் கொண்டிட
3.தான் எடுத்த ஸ்தூல சரீரத்தை விட்டொழித்துச் சூட்சுமமாய் செயல்படுத்திட முனைந்தாள் வாலாம்பிகை.

ஸ்தூல சரீரம் புதைக்கப்பட்டது குடிசைக்கு முன்புறத்திலே…!

எந்தத் தாய் சக்தியை நேரிடையாய்க் கண்டு துதித்து வந்த ஸ்ரீனிவாச கொங்கணரும் தன் மனித குண சரீர கதிக்கு இயல்பாய் கலக்கம் கொண்டிட்டு கண்ணில் நீர் பெருக அப்பிண குழிக்கு மேல் படுத்து கலக்கமுறவே “தாக்கியது ஓர் மின் காந்தம்…”
1.மயக்கமுற வைத்து ஸ்ரீனிவாசனுள் ஒன்றித் தாய் சக்தியாய் கலந்து
2.ரிஷியின் சக்திக்கு மண்டலமாக்கிவிடும் தாய் சக்தியாய்ச் செயல்படத் தொடங்கியது.

இனி கொங்கணர் பெற்றிடும் பெரும் தவ செல்வ நாயகனாக்கி… எச்செல்வம் பொன் பொருளாய் வேண்டினானோ “அம்மாடி வீட்டு அரசன்” தன் பெண் பத்மாவதியைக் கொடுக்க அம்மாடி வீட்டு அரசனே திகைக்க “இக்கோடி வீட்டுப் புருஷன் கொங்கணரும்” மாடி வீட்டு அரசனுக்கு நிகருக்கு மேல் செல்வம் பெறும் செல்வநாயக சூத்திரத்தை “அம்மாமகரிஷி கொங்கணரே மனமுவந்து கூறினாலொழிய யாரறிவர் அச்சூட்சுமத்தை…?”

கூறுகின்றார் கூறுகின்றார் குறைவுபடாமல் கூறுகின்றார்…! தன் சுய சக்தி மட்டுமல்ல…
1.தாய் சக்தியுடன் எந்த ரிஷிபத்தினி சக்தி தன் செயலுக்குச் சக்தியளிக்க மனத்தினால் எப்பொழுது வரித்ததோ
2.அக்கணம் முதலே தான் ஒரு குபேரன் என்று கூறுகின்றார்.

வறுமைப் பிணி களையக் குபேர சம்பத்து பெற்ற கொங்கணரும் குபேரன் என்ற சிறப்பு பெற்ற பின்னரே தான் அறிந்ததும் ஒன்று உண்டு. அதுவே “படியளக்கும் பெருமாள்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகா சிவன் ராத்திரி என்ற நிலைகளில் விநாயகர் தத்துவத்தைப் பார்க்கப்படும் போது… விண்ணுலகில் விளைந்த அனைத்தும் மண்ணுலகில் விளைந்துள்ளது. அந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு தாவர இனங்களில் மணமும் குணமும் அறிவும் ஞானமுமாக இணைந்துள்ளது.

அதிலிருந்து வந்த அந்த உணர்வுகளைத் தான்
1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு ஒப்ப உடல்களுக்குள் அதை வினையாகச் சேர்த்து
2.மகா என்ற நிலைகள் அடைந்து.. மகா சிவன்… மகா சிவமாக… இந்த மனித உடலை உருவாக்கியுள்ளது… மகா சிவன் இராத்திரி.

அன்றைய தினம் இதை எல்லாம் முழுமையாக அறிந்துணர்ந்த மகரிஷிகளின் உணர்வை உற்று நோக்கி… விண்ணை நோக்கி ஏக வேண்டும். காரணம்… “இருளான இந்தச் சரீரத்தைக் கடந்து… வெளியே சென்று…” உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள் அந்த மகரிஷிகள்.

“முருகு…” மாற்றியமைக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று விழித்திருக்க வேண்டும்…!

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
1.உணர்வுக்குள் இருக்கும் உயிரை உடல் மறைத்தது…
2.அதே சமயத்தில் உணர்வின் நல்ல எண்ணங்களை வேதனை என்ற நஞ்சின் தன்மை மறைக்கின்றது.
3.கோபம் என்ற கார உணர்ச்சிகள் நல்ல உணர்வுகளை அது மறைக்கின்றது

இதைப் போன்று
1.இருளுக்குள் இருளாக மறையச் செய்யும் இந்த உணர்வின் தன்மையை
2.இருளுக்குள் ஒளியாக மாற்றிய அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் இணைத்து
3.நல்ல உணர்வின் ஞானத்தை மறைத்திடும் அந்த இருளைப் போக்கி அந்த ஞானிகளின் உணர்வுடன் ஒன்றி
4.வாழ்க்கையில் தெளிந்திடும் நிலைகள் கொண்டு அந்த ஞானியின் உணர்வுகளை நமக்குள் பொங்கச் செய்து
5.நம்மையும் மகிழச் செய்து.. நம்மைப் பார்ப்போர் நிலைகளையும் மகிழச் செய்ய வேண்டும்… மகிழ்வாகனா…!

ஆகவே வாழ்க்கையில் இது வரையிலும் வந்த தீமைகளை நீக்கிவிட்டு மெய் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து
1.ஆறாவது அறிவால் “உத்தராயணம்” என்று ஞானிகள் பால் திசை மாற்றி
2.மெய் ஞானியுடன் நம் வாழ்க்கையை இணைத்து
3.எத்தகைய இருள் ஆனாலும் அதைப் பிளந்திடும் நிலை பெற வேண்டும் கார்த்திகேயா…!
4.ஒளி பட்டபின் அங்கிருக்கும் பொருள்களை எல்லாம் காணுவது போல நாம் ஒளியாக மாற வேண்டும்.

வாழ்க்கையில் கண்டுணர்ந்த தீமைகள் உங்களை இயக்கினாலும் அந்தத் தீமையை இயக்கும் தன்மையைப் பிளந்து… மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து… மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து… ஒளியின் சரீரமாக ஆன அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியாக நீங்கள் மலர வேண்டும் என்பதற்குத் தான் மகா சிவன் இராத்திரி என்று இதை உபதேசிப்பது (ஞானகுரு).

காரணம் நாம் பல கோடிச் சரீரங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் நமக்குள் மகா சிவனாக நம் உடலின் தன்மை அமைந்துள்ளது.

அந்த இருளுக்குள்… (நம் உடலுக்குள்)
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் செயலாக நமக்குள் உணர்த்திக் கொண்டு
2.உணர்வின் இயக்கமாக அறிந்து கொண்டு அதனின் அறிவாக நமக்குள் தெளிந்திடும் நிலையாக
3.புற நிலையைக் கண்டுணரச் செய்யும் ஆறாவது அறிவாக நமக்கு முன் இருப்பதை
4.தீமைகளை விலக்கி மெய்ப்பொருளைக் காணும் உணர்வின் ஆற்றலாகப் பெற்றால் “அது தான் கார்த்திகேயா…!”

ஆறாவது அறிவால் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்பது போல மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து நமக்குள் இருள் சூழ்ந்திருக்கும் உணர்வின் குணங்களைப் பிளந்து மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் இணைத்து மெய்ப்பொருள் கண்டுணர்ந்த உயிருடன் ஒன்றுவோம்.
1.மெய்ப்பொருள் என்பது உயிரே மெய்ப்பொருள்
2.உயிரின் இயக்கமாக உணர்வின் தன்மைதான் அதனுடன் இணைந்த பொருள். (உயிர் என்பது மெய்… நுகரும் போது உணர்வு… பொருள்)

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் உணர்ந்திடும் உணர்வை ஒளியின் சரீரமாக மெய்ப்பொருளாக… மெய்யுடன் மெய்யாக… என்றும் ஒளியின் சிகரமாக அடைந்திட முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையில் இதை உபதேசிக்கின்றேன்.

உத்தராயணம்…! நாம் திசை மாற்றி மெய் ஞானியின் உணர்வை நாம் பெற்றிடுவோம்.
1.உடல் பெறும் உணர்வை மாற்றிவிட்டு
2.மீண்டும் மீண்டும் உடல் பெறும் அந்தத் திசையை மாற்றிவிட்டு
3.உயிருடன் ஒன்றிய அழியா ஒளியின் சரீரமாக மாற்றுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரின் (கதிரியக்கம்) துடிப்பு ஒலிகள் விண்ணிலே தோன்றியது தான். இதை முதலில் உணர்தல் வேண்டும்.

அதே சமயத்தில் மற்ற அணுக்களும் விண்ணிலே தோன்றியதுதான். ஆனாலும் பூமிக்குள் வந்தபின் பூமிக்குள் மண்ணாக மறைந்து மற்றதுடன் கலந்து விடுகிறது.

இதிலே உருவாகும் உணர்வின் ஆவியின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் நிலைகளுக்கொப்ப அணுக்களாக மாறுகிறது.

அத்தகைய அணுக்களின் துணை கொண்டு தாவர இனங்களாக உருவாக்கினாலும்
1.அதிலே தோன்றிய உயிரினமும் அதை உணவாக உட்கொண்டால் இந்த புவியின் ஈர்ப்பிலேயே நிலைத்திருக்கும்.
2.இதனின்று கடந்து செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆதியிலே
1.பேராற்றல் மிக்க பேரண்டங்களிலிருந்து அவை உமிழ்த்தும் துகள்களை
2.பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் வீழ்த்தி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றவாறு சக்திகளாக மாற்றி.. கோள்களாக உருவாக்கி
3.கோள்களில் இருந்து வருவதை வடித்து அந்த நஞ்சினைப் பிரித்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சிகரமாகத் திகழ்ந்ததோ
4.அதைப் போன்று விண்ணின் நிலைகளைக் கொண்டு
5.ஒரு நட்சத்திரத்தின் மின் கதிரியக்கப் பொறி மற்றொரு கதிரியக்கப் பொறியுடன் மோதும் பொழுது
6.அதனால் துடிப்பின் நிலைகள் ஏற்பட்டு தன் அருகில் இருக்கக்கூடிய கோளின் சக்தியைக் கவர்ந்து
7.அப்படிக் கவர்ந்த நிலைகள் கொண்டு தான் ஒரு உயிரணுவின் தோற்றம் (மின்னிக் கொண்டிருக்கும் நிலை) உருவாகிறது.

உயிரின் முன்னணி எதுவோ அதனின் நிலைகள் கொண்டு மற்ற நட்சத்திரங்களின் பொறிகளால் உருவாக்கப்பட்ட அணுவின் தன்மை எதிர் நிலையாகும் போதுதான் ஒரு இயக்கச் சக்தியாக மாறுகிறது.

அதன் வழியில் உடலின் உறுப்புகள் உருமாறி… உணர்வின் சத்து தசைகளாக மாறி… உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மாறி வந்தது தான் இயக்கச் சக்தி. பல சரீரங்களைக் கடந்து இதன் வழியில் தான் மனிதனாக இன்று நாம் வந்திருக்கின்றோம்.

இதை எல்லாம் தெளிந்து தெரிந்து முழுமையாக உணர்ந்தவர்கள் மாமகரிஷிகள்.
1.தனது உயிரணு எந்த நட்சத்திரத்தின நிலைகள் கொண்டதோ
2.அந்த நட்சத்திரத்தின் உணர்வின் மின் அணுவின் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்துப் பேரொளியாக மாற்றிக் கொண்டார்கள்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் இத்தனையும் பேசுகின்றேன். காரணம்… குருநாதர் இதையெல்லாம் எனக்குள் பதிவு செய்து இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கின்றார்.

சாமி சொல்வது அர்த்தம் புரியவில்லையே… ஏதோ ஒரு உலகத்தில் பெரிதாகச் சொல்கிறார்…! என்று விட்டுவிட்டால் அதைத் தள்ளி விட்டுவிடும்.

உதாரணமாக… திட்டுபவர்களையோ கேலி செய்பவர்களையோ உற்றுப் பார்த்து என்னை மோசம் பண்ணினார்… கேவலமாகப் பேசினார்…! என்று பதிவு செய்தால் அந்த உணர்வுகள் நமக்குள் வேகமாக விளையத் தொடங்குகிறது அல்லவா…! அதைப் போல்
1.சாமி சொல்லும் சக்தியை நான் பெற வேண்டும் என்று
2.இறுக்கிப் பிடித்துக் கொண்டால் இதை வளர்க்க முடியும்.

ஆதியிலே உருவான அகஸ்தியனுக்கு அவன் தன் தாய் கருவிலிருக்கும் போது பெற்ற விண்ணின் ஆற்றல் கொண்ட நஞ்சின் இயக்கமான உணர்வுகள் “பூர்வ புண்ணியமாக” அமைந்தது.

இந்த உணர்வின் சத்து கொண்டு அவன் விண்ணை நோக்கி ஏகும் போது…
1.அவனின் உயிரின் ஆற்றல் எதனின் தன்மை கொண்டு அந்த நட்சத்திரத்தின் இயக்கங்கள் இயக்கியதோ
2.அதையே நுகர்ந்து… நுகர்ந்து… நுகர்ந்து… அதனின் உணர்வின் தன்மையை அந்த விண்ணின் ஆற்றலை ஒளியாக மாற்றி
3.தன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் தனக்கென்ற நிலைகளைப் பிரித்துப் பிரித்து
4.உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.

துருவப் பகுதியிலிருந்து நம் பூமி கவரும் உணர்வின் சத்தை…
1.அங்கே துருவத்திலே நிலைகொண்டு அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து
2.நஞ்சினைப் பிரித்து விட்டு தன் உயிரான ஒளியின் சிகரத்தை அடைந்து
3.எந்த நட்சத்திரத்தில் பிறந்தானோ அதனின் இனத்தின் தன்மையை உணவாக எடுத்துக் கொண்டு
4.இன்றும் மின்னிக் கொண்டு உள்ளான்… துருவ நட்சத்திரமாக…!

அதைப் போன்றே நம் உயிரணுவின் தோற்றம் அது எந்த நட்சத்திரத்தின் கதிரியக்கத்தால் உருவானதோ அந்த உணர்வின் சத்து கொண்டு
1.சிவன் இராத்திரி… உடலான இருளுக்குள் இருப்பதை அந்த மறைந்த நிலையை
2.தன் உணர்வின் நிலையால் (உயிரின் நட்சத்திர ஆற்றல்)… ஒலி அலைகளாக எண்ணங்களாக எப்படி மாற்றியதோ
3.அகஸ்தியனின் உணர்வினை நம் உயிரான இயக்கத்திற்குள் இணைத்து இணைத்து
4.இந்த வாழ்க்கையில் வரும் எத்தனையோ எதிர் நிலையான இயக்கங்கள் இருப்பினும்
5. ஒருக்கிணைந்த இயக்கமாக நாமும் அகஸ்தியனைப் போன்று ஒளியாக மாற்ற முடியும்.

ஆக… உடலான இருளுக்குள் இருந்து தான் அந்த இருளைப் பிளந்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற வேண்டும்.

வெங்கடாஜலபதியை தோஸ்த் செய் என்றார் குருநாதர்… “எனக்கு முருகன் தான் வேண்டும்” என்றேன் நான்

 

என்னுடைய உபதேசத்தை எத்தனை பேர் எத்தனை விதமாக எடுத்துக் கொள்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. காரணம் எத்தனையோ பேர் சொத்துக்கும் சுகத்திற்கும் தான் ஆசைப்படுகின்றார்கள்.

குருநாதர் என்னிடமும் இப்படித்தான் வினா எழுப்பினார்…! அழியாச் சொத்து கிடைக்கும்டா…! என்றார்.

ஓய்… தெலுங்கு ராஜ்யம்…! இங்கே வாடா…! என்று என்னைக் கூப்பிட்டார்.

நான் போனேன்.

வெங்கடாஜலபதியை தோஸ்த் பண்ணிக்கோ… நிறையச் சொத்து கிடைக்கும்…! என்று சொன்னார்.

ஆனால் நான் தெரிந்தோ தெரியாமலோ…
1.என்னை காப்பாற்றுவதற்கு ஞானம் வேண்டும்.
2.ஞானவான் என்று முருகனைச் சொல்லி இருக்கின்றார்கள்…
3.ஆகையினால் முருகன் தான் எனக்கு வேண்டும் என்று சொன்னேன்.

அவன் ஆண்டிப்பயல்… ஒன்றும் கொடுக்க மாட்டான்…! ஆனால் வெங்கடாஜலபதியைப் பிடித்தால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்…! என்று இப்படி எல்லாம் என்னைச் சிக்கலான நிலையில் சோதிப்பார் குருநாதர்.

ஆறாவது அறிவு ஞானம். வாழ்க்கையில் மெய் ஒளியின் தன்மையை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இதைச் சொல்லி இருக்கின்றார். கேள்விகளைப் போட்டு என்னை மடக்கி ஆசையைத் தூண்டுவார்
1.உடல் இச்சைக்குக் கேட்கின்றேனா அல்லது
2.அருள் ஞானத்திற்கு என்னுடைய எண்ணங்கள் செல்கின்றதா…? என்று பல பரீட்சைகள் வைப்பார்.

அப்பொழுது நான் என்ன செய்வது…? எனக்கு முருகன் தான் வேண்டும் என்றேன்.

இல்லை… வெங்கடாஜலபதியை நீ வைத்துக் கொள்…! முருகன் என்றால் ரொம்பக் கஷ்டப்படுவாய் என்றார்.

முருகனை வைத்து எனக்குக் கஷ்டம் வராது…! என்பேன்.

அடிக்கடி இரண்டு பேருக்கும் இப்படி வாக்குவாதம் வரும்.

1.குருநாதர் பைத்தியக்காரத்தனமாகத்தான் பேசுவார்.
2.ஆனால் அத்தனையும் பொருள் பொதிந்ததாக இருக்கும். குறுகிய காலத்திற்குள் இந்த மாதிரி உருவாக்குவார்.

ஆகவே அதிகாலையில் விழித்தவுடன் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும். ஆன்மாவில் பட்ட அழுக்கைக் காலையில் போக்கப் பழக வேண்டும்.

அதிகாலை 4 மணியிலிருந்து ஆறரை வரையிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வருகின்றது. அந்த நேரத்தில் நாம் அதை எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு இந்த உபதேசமே அடிக்கடி கொடுப்பது. எனக்கு
1.குருநாதர் இப்படித்தான் கொடுத்தார் அந்தச் சக்தியை எடுக்கவும் சொன்னார்.
2.உங்களுக்கும் அதையே தான் கொடுக்கின்றேன்

எத்தனை பேர் நீங்கள் அதிகாலையில் எண்ணி… அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவர்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

ஆனால் வெறும் உடல் அசைக்காக வேண்டி சொத்து கிடைக்கும் உடல் நலம் கிடைக்கும் என்ற நோக்கத்தில்… சாமியைச் சந்தித்தோம்…! சாமியிடம் ஆசிர்வாதம் கேட்டோம்…! என்றால் அது சிறிது நாளைக்குத் தான் இருக்கும். ரொம்ப நாளைக்கு இருக்காது.

உடலில் ஆசைகள் கூடிக் கொண்டே போகும். கிடைக்கவில்லை என்றால் வேதனை என்ற விஷம் வரும்… பின் நல்ல குணங்களைக் காக்காதபடி அழித்துச் சென்று விடும்.

“இது எல்லாம் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நிலைகள்…”

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அந்த அதிகாலை நேரத்திலே எடுத்துப் பழக வேண்டும்… “படுக்கையிலே இருந்தாலும் கூட…!”

ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டுங்கள். அம்மா அப்பா ஆசி வேண்டும் என்று அடுத்து எண்ணுங்கள். பின் உயிரை வேண்டி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவை
3.உடலுக்குள் திரும்பத் திரும்ப செலுத்திக் கொண்டே இருங்கள்.

இது மிகவும் முக்கியமானது.

ஸ்ரீனிவாச அவதாரம்

 

கொங்கண முனி தன் அவதாரம் ஸ்ரீனிவாசனுள் செயற்பட்ட அன்றைய தினம் என்றும் போல் புலர… மாடுகள் மேய்க்கும் சிறுவர்களுடன் மாட்டை ஓட்டிச் செல்லும் ஸ்ரீனிவாசனும் அம்மையிடம் அன்றும் ஆசி பெற்று… மகிழ்வுடன் சென்று கொங்கணர் புற்றருகே விளையாடினான்.

மாடுகள் அன்று தறிகெட்டு ஓடும் நிலையில் மற்ற சிறுவர்கள் ஸ்ரீனிவாசனை தனியே விட்டு விட்டு மாடுகளை திருப்பிக் கொண்டு வரச் சென்ற பொழுது தனித்திருந்த ஸ்ரீனிவாசனுக்கு ஏதோ ஒன்று ஆங்கு நிகழ்ந்தது. (என்ன என்று புலப்படுத்தாத சூட்சுமப்படுத்தி மறைத்தார்கள்).

மயங்கிச் சாய்ந்த ஸ்ரீனிவாசன் கொங்கணப் புற்றருகே மிக அருகில் புற்றுடன் ஒட்டியவாறு அமைந்திருந்த ஓர் பள்ளத்தினுள் வீழ்ந்து செடிகளால் மறைக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கலுற்றான்.

இச்செயலை அருகிலிருந்த பசு கண்டு புற்றருகே சென்று நின்று கொண்டு கத்திக் குரல் கொடுக்க மாடு மேய்க்கும் சிறுவர்கள் மாடுகளை ஓட்டிக் கொண்டு அங்கே வர ஸ்ரீனிவாசனைக் காணாமல் தேடும்பொழுது ஸ்ரீனிவாசனைக் காணாத தன்மை கொண்டு திரும்பிச் செல்லத் தொடங்க அந்த ஓர் பசு மட்டும் செல்லாமல் அங்கே தங்கிவிட்டது.

மாட்டைக் காணாமல் தேடிவரும் மாட்டின் சொந்தக்காரன் அது காட்டுப்பகுதி ஆனதால் தகுந்த ஆயுதங்களுடன் மாட்டுக்கார சிறுவன் சொல்லிய இடமாகிய அப்புற்றை அடையாளமிட்டு தேடிக் கொண்டு வந்தான்.

அப்படி வருகின்ற காலகட்டத்தில் புற்றருகே பந்தலிட்டு சிறுவர்கள் கோவிலாக்கி விளையாடிய அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.

மாலைப் பொழுதில் பால் தரும் பசு தன் கன்றின் நினைவில் புற்று மேல் நின்று பாலைச் சொரிய தானாக நிகழ்ந்த அச்செயலினால் உண்மை புலப்படாத மாட்டுக்காரன் கோப மேலீட்டால் தடி கொண்டு மாட்டி அடித்து விரட்டினான்.

அதற்குப் பின் மாடு மேய்க்கும் சிறுவர்கள் பந்தலிட்டு புற்று மேல் கோவில் ஆக்கிய நிலை கண்டு மேலும் அதிகக் கோபம் கொண்டு மாட்டுச் சிறுவர்கள் மேல் பொங்கிய கடும் கோபம் இப்பொழுது கொங்கணப் புற்றின் மீது திரும்ப… கையில் கொண்டு வந்திருந்த பலமான ஆயுதத்தினால் பந்தலை உடைத்து எறிந்து விட்டு “அப்புற்றையே இடிக்கத் தொடங்கினான்…”

பண்டு வினைப் பயன் (பண்டைய கால) வந்துறுத்த மாட்டுக்காரன் செய்த இச்செயல் அவனது கடும் கோபம் மாட்டின் பால் வீணாய்ப் போனதாலும் சிறுவர்கள் மாடுகளை ஒழுங்காகக் கவனியாமல் விளையாடினார்கள் என்றெல்லாம் கருத்தில் கொண்டு… அத்தனையும் இப்புற்று இனி இங்கிருந்தால் மீண்டும் அதே செயல்நிலை தொடரும் என்ற எண்ணினான்.

அப்போது கோபம் கொண்டு சுய அறிவு நீங்கிப்போன மாட்டின் சொந்தக்காரன் கரத்தில் இருந்து நழுவி விழுந்த அக்கனமான ஆயுதம் புற்றருகே இருந்த பள்ளத்தில் வெகுவேகமாகப் பாய்ந்து சென்று ஏதோ மயக்க கதியில் துயில் கொண்டுள்ள ஸ்ரீனிவாசன் தலை மீது விழுந்து தலை பிளந்து உயிர் பறித்தது.

பரிசுத்தவானாகிய ஸ்ரீனிவாசன் தன் சரீரம் செயல் கொண்டிட காத்திருந்த கொங்கண மாமுனி வெளியேறும் அவ்வுயிர் ஆன்மாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு பரிசுத்த ஆவி ஆகிய தன் உயிர் ஆத்ம ஒளிகாந்தத்தை அவனுள் பாய்ச்சி உட்சென்றார்.

“எந்த அவதார நோக்கமோ” அது நடைபெறும் செயல் நிலைக்குத்தானே ஸ்ரீனிவாச உருக்கோலம் கொண்டு ஜடாக்கினி ஜெபத்தால் வீறு கொண்டு பள்ளத்தினுள் இருந்த சடாரென எழுந்து நிண்றார்.

கனவில் கூட இத்தகைய காட்சியை கண்டிராத அம்மாட்டின் சொந்தக்காரன் ஆயுதம் கை நழுவி அப்பள்ளத்தில் விழ்ந்த ஒரு கணத்தில் திகைத்தவன் திகைப்பு தொடர்போல் நடக்கும் அக்கண நேர சம்பவத்துள் தலையில் சொருகப்பட்ட ஆயுதத்துடன் குருதி கொப்பளித்து வழிந்தோடி வர செக்கச் சிவந்த குருதி உடலெங்கும் வழிந்தொழுக சிவந்த நிற உடலுடன் விருட்டென எழுந்த ஸ்ரீனிவாச அவதாரத்தைக் கண்டு திகைப்படைந்தான்.

முடிவில் பய உணர்வு ஆட்கொள்ள “ஆ” என அலறிய மாட்டின் சொந்தக்காரன் வெல வெலத்துப் போய் மிக மிக பயந்து நடுங்கி ஓட்டம் எடுத்து ஓடும் பொழுதே மயக்க நிலையில் விழுந்தான்.

அதைக் கண்ணுற்ற கொங்கண ஸ்ரீனிவாச நாயகன் எப்பொழுதும் எண்ணி வந்த தாய் சக்தி அழைத்திடும் நிலை அறிந்து, தலையில் தைத்த ஆயுதத்தைப் பறித்து அகற்றிவிட்டுத்
1.தான் ஏற்ற ஸ்ரீனிவாச அவதார சரீரத்தின் நலிவு அகற்ற கூட நாட்டமின்றி
2.பசுவைக் கண்ட கன்று போல் வெகுவேகமாக செல்லத் தொடங்கினார்.

ஸ்ரீனிவாசன் அவதாரம் எடுத்த கொங்கண மாமுனி தான் ரிஷித் தன்மைக்கு உயரும் வழிகாட்டும் செயல் நிகழ்த்த உருக்கோலம் கொண்டிட்ட தாய்சக்தி “வாலை” அம்மன் வகுளாம்பிகை என்று பெயர் நாமப்படுத்தி அமர்ந்திட்ட மலைமுகட்டுக் குடிசையை நோக்கிச் சென்றார்.

இவர் வரவைக் காத்துக் கொண்டிட்ட அவ்வம்மை தலையில் இருந்து குருதி வழிந்தோடும் செயல் கண்டு புன்னகையுடன் நின்று கொண்டு மகன் கைகூப்பி வணங்கும் பாவனைப் படுத்திய நிலை கூட மறந்து தாயுள்ளம் கொண்டிட்ட பாசத்தினை வெளிப்படுத்தி “மகனே ஸ்ரீனிவாசா…!’ என்ற சொல் தொடரில் வேகத்தைக் காட்டிணார்.

காயம்பட்ட இடத்தில் பச்சிலை வைத்தியம் செய்திட்ட கருணைக்குப் பின் அக்குடிசைக்குள் அனுதினமும் நடைபெற்று வந்த
1.வகுளாம்பிகையின் ஆராதனை என்பது கொங்கண மாமுனிக்குப் போதனையும்
2.தாய் தெய்வ வணக்க முறை என்பது கொங்கணருக்குத் தவமுமாய் நடைபெற்று வந்தது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எவ்வளவு உயர்ந்த நிலைகளை நாம் பேசிக் கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தில் நம் நல்ல எண்ணங்கள் எல்லாம் என்ன ஆகிறது…!

உதாரணமாக… கடலிலே பெருங்காயத்தைக் கலக்கினால் அந்த வாசனை சிறிது நேரமே இருக்கிறது. அடுத்த நிமிடம் அது கரைந்து விடுகின்றது. பெருங்காயத்தின் மணம் இல்லாது போய்விடுகின்றது.

ஆக… கடலைப் போல ஒவ்வொரு நிமிடமும் வேதனையும் வெறுப்பும் உப்பு கைப்பது போன்ற உணர்வுகளே அதிகமாக இந்த மனித வாழ்க்கையில் இருக்கின்றது.

1.நல்லதை எண்ணினாலும் கடலில் கரைத்த பெருங்காயம் போன்று சிறிது நேரமே அது வலுவாக இருக்கின்றது
2.அடுத்த நிமிடம் நமக்குள் இருக்கக்கூடிய அந்த நல்ல எண்ணங்கள் அனைத்தும் மறைந்து
3.கவலையும் வெறுப்பும் சோர்வும் வேதனையும் படக்கூடிய உணர்ச்சிகளை நமக்குள் தூண்டி
4.”நம்மால் முடியாது போலிருக்கிறது…” என்ற நிலை வந்து விடுகிறது.

சிறிது நேரம் சிந்திக்கின்றோம் நல்லது செய்ய வேண்டும் என்று… ஆனால் அடுத்த கணம் அது எப்படி நடக்குமோ…? எப்படி நடக்கப் போகின்றதோ…? நாளைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லையே…! என்று தனக்குத்தானே பலவீனமாகி சந்தேக உணர்வு தோற்றுவிக்கின்றது.

மனித வாழ்க்கையில் இத்தகைய நஞ்சுக்குள் சிக்கப்பட்டு நம் எதிர்காலமே நசிந்து கொண்டிருக்கும் நிலையாகத் தான் இன்று இருக்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால்
1.நாம் கூட்டமைப்பாக இருந்து மெய் ஞானிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் எண்ணி ஏங்கி
2.அந்த உணர்வை நமக்குள் பதியச் செய்து… அந்த உணர்வின் அலைகளாக நமக்குள் பெருகச் செய்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நம் உடலுக்குள் அதைச் சேர்த்து வலுவாக்க வேண்டும்.

அனைவரும் சேர்த்து ஒன்றாக இயக்கி இந்த உணர்வின் தன்மை கொண்டு உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கச் செய்ய வேண்டும்.

நாம் யாரையெல்லாம் சந்திக்கின்றோமோ…
1.எந்த மதத்தவராக இருந்தாலும்
2.எந்த இனத்தவராக இருந்தாலும்
3.எந்த மொழி பேசுவோராக இருந்தாலும் அவர்களை எல்லாம் சகோதரர்களாக எண்ணி
4.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உதாரணமாக… நமக்கு ஒரு பொருள் வேண்டும் என்றால் எந்த மதத்தவரோ… இனத்தவரோ… வேறு மொழி பேசுவோரோ… கடை வைத்திருந்தாலும் அவர்களிடம் சென்று வாங்கத்தான் செய்கிறோம்.

அதே போல் அவர்களுக்குப் பொருள் வேண்டும் என்றால் நம்மிடம் வந்து வாங்கத்தான் செய்கிறார்கள்.
1.இதில் வேற்றுமை இருக்கின்றதா…? இல்லை…!
2.இவ்வாறு வேற்றுமை இல்லாத நிலைகள் வாழப்படும் பொழுது
3.நம் மனதிற்குள் மட்டும் ஏன் வேற்றுமைகளைக் கொண்டு வரவேண்டும்…?

வேற்றுமை ஏற்பட்டால்
1.இந்த மனித வாழ்க்கையில் நமக்கு நாமே நைந்து கொள்ளும் நிலை தான் வருகின்றது
2.மனிதன் என்ற நல்ல உணர்வு அழிந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே… ஒவ்வொரு நிலைகளிலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழி பேசுவோராக இருந்தாலும் இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடும் நிலையாக
1.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்றும்
2.எங்களுக்குள் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்றும் நாம் எண்ணி
3.நமக்குள் இருக்கும் பகைமை உணர்வுகளை ஓங்கச் செய்யாது அதைத் தாழச் செய்ய வேண்டும்.

இதைச் சிறிது பேர் செய்வதில் பலனில்லை.

காரணம்… எல்லோரும் இதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாதத்தில் ஒரு நாள் பண்டிகையாகத் தேர்ந்தெடுத்து
1.சகோதர உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும்
2.மனிதனின் பண்பை வளர்க்கவும்… இருளை நீக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தவும்
3.மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான் இது.

திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.

எத்தனையோ உணர்வுகள் நமக்குள் மாறி மாறிச் சுழன்று கொண்டிருக்கின்றது. திரும்பத் திரும்பச் சொல்லி நினைவின் ஆற்றலை பெருக்கச் செய்து அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் பருக வேண்டும் என்பதற்குத்தான் சொல்வது (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விண்ணிலே உருவான உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின்… ஆரம்பத்திலே (உதாரணமாக) அந்த உயிர் ஒரு பருத்திச் செடியின் மீது விழுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த உணர்வை நுகரும் பொழுது அது ஊழ்… ஆகி அது வினைக்கு நாயகனாக இயக்கத் தொடங்கி விடுகின்றது… புழுவாக உருப்பெறுகிறது
2.உயிருடன் அது முதலிலே ஒன்றுகின்றது… அந்த உணர்வின் சத்தை நுகர்கின்றது
3.நகர்ந்து சென்று மீண்டும் அது தன் இரையைத் தேடுகின்றது.

முதலில் பரிணாம வளர்ச்சியில் வரும் பொழுது இந்த நிலை…!

பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சி ஆகி இன்று மனிதனாக வளர்ந்தபின் ஒருவர் நம்மைக் கோபிக்கின்றார்… தன் வாழ்க்கைக்காக பல தவறுகளைச் செய்து நாம் தவறு செய்யாமலேயே நம் மீது அபாண்டமான நிலைகளில் பொய்யைச் சொல்கிறார்… வேதனைப்படும் செயலைச் செயல்படுத்துகின்றார்.

1.நமது கண் அந்த மனிதனைப் படம் எடுக்கின்றது…
2.எலும்புக்குள் ஊனாகப் பதிவாக்கி விடுகின்றது. அதுதான் ஊழ்வினை என்பது.

பின் அவன் எத்தகைய தீமைகளை நமக்குச் செய்தானோ அந்த மனித உடலில் இருந்து வந்த உணர்வின் அலையை நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு கவர்ந்து நம் ஆன்மாவாக முதலில் மாற்றுகின்றது.

உயிர் அவ்வாறு தன் ஆன்மாவாக மாறியதை இழுத்து நம் உயிருடன் ஒன்றி நமக்குள் உணரச் செய்கின்றது. உணர்ந்தாலும் அது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.

1.முதலில் நாம் எதை எண்ணுகின்றோமோ… அது ஊழ்வினை என்ற வித்தாக ஆன பின்
2.அந்த உணர்வின் சத்து கருவாகி உடலுக்குள் உருவாகத் தொடங்கி விடுகின்றது.

அவன் எத்தகைய வேதனையை உருவாக்கினானோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் அணுவாக உருவாக்கி விட்டால் அது தான் அதற்கு உணவு.

காரணம்… அணுவாக உருவாகிய பின் அது மீண்டும் தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும். இதை உருவாக்கியது யார்…?

உயிர்.

அந்த உயிரின் தன்மை கொண்டு நாம் நுகர்ந்தபின்… அது தாயல்லவா…!
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படும்படி சொன்னானோ அந்த உணர்வினை நுகரப்படும் பொழுது
2.அவனின் நினைவாற்றல் நமக்குள் மீண்டும் மீண்டும் வருகிறது.
3.நம்மைக் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணிய அந்த உணர்வலைகளை அனுப்புகின்றான்.
4.அதே உணர்வின் சத்தை நம் உடலில் உருவான அணுக்கள் உணவாக எடுத்துக் கொள்கிறது.

இதை நன்றாகக் கவனமாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!

நாம் ஆயிரம் நன்மைகள் செய்தாலும் ஒருவன் நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னான் என்றால் ஆழமாக அதைப் பதிவு செய்து விட்டால் அந்த எண்ணம் உங்களைக் கெட்டுப் போகவே வைக்கும்.

அதிலிருந்து தப்புவதற்கு வழி வேண்டும் அல்லவா… அதுதான் விழித்திரு…!

1.“விழித்திரு…” என்றால் ஒருவர் நமக்குத் தீமை செய்கிறார் என்று உற்று நோக்கினால்
2.அந்த உணர்வுகள் தனக்குள் வராதபடித் தடுத்து நிறுத்த… அப்பொழுதே நாம் விழித்திருத்தல் வேண்டும்.

தாய் தந்தையரை எண்ணி ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த உணர்வுகளை ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

அடுத்து… நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.மெய் ஞானிகளால் நமக்குக் காட்டப் பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை எடுத்து…
2.நம்மைக் காத்திடும் உணர்வாக என்றும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உணர்வை நம் நல்ல குணங்களுடனும்… சோர்வடைந்த மற்ற உணர்வுகளுடனும் இணைத்து அதை நாம் தியானித்து வருவோம் என்றால் நம்மிடமிருக்கும் இருள்கள் அகல்கின்றது.
1.பொருளறிந்து செயல்படும் உணர்வாக
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நம்மிடத்தில் இயக்கம் பெறுகின்றன.

நாம் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுகிறோம்.

உலக மக்கள் அனைவரும் அருள் ஒளி பெரும் சக்தி பெற்றிடத் தவமிருப்பேன்

 

1.ஓம் ஈஸ்வரா…! என் உடலை உருவாக்கிய உயிரை “ஈசன்” என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…! உயிரால் உருவாக்கிய என் உடலைச் “சிவன்” என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா…!

2.என் உடலுக்குள் இணைந்த உணர்வுகள் அனைத்தையும் வினைக்கு நாயகனாகத் துதிப்பேன்…! விநாயகனாகத் துதிப்பேன்…! நான் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் சீதாராமனாகத் துதிப்பேன்…! ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

3.உயிரால் உருவாக்கிய கண்ணைக் கண்ணன் என்று துதிப்பேன். கண்ணின் கருவிழியை ருக்மணி என்று துதிப்பேன். கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவை சத்தியபாமா என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

உயிரால் உருவாக்கிய கண்ணின் கருவிழி தன் எதிரிலே இருப்பதை உடலுக்குள் பதிவாக்குகின்றது. அந்த உருவத்தில் இருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவோ கவர்ந்து அங்கே இருக்கும் உண்மை உணர்வுகளைத் தனக்குள் ஊட்டுகின்றது சத்தியபாமா என்று. இரண்டும் சேர்த்துக் கண்ணன் என்று ஞானிகள் இதைக் காரணப் பெயர் சூட்டினார்கள்.

4.கண்ணின் கருவிழியை ருக்மணி என்று துதிப்பேன். கண்ணின் காந்தப் புலனறிவை சத்தியபாமா என்று துதிப்பேன். கவர்ந்த உணர்வுகளைச் சீதாராமன் என்று துதிப்பேன். கவர்ந்த உணர்வுகள் அனைத்தும் என்னுள் எண்ணங்களாக இயக்கும் உணர்வைச் சீதாராமன் என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

5.உயிரின் துடிப்பை ஈசன் என்று துதிப்பேன். உயிரின் துடிப்பால் உருப்பெறும் வெப்பத்தை விஷ்ணு என்ற துதிப்பேன். துடிப்பால் ஈர்க்கும் சக்தியை லக்ஷ்மி என்று துதிப்பேன். உயிரால் நுகர்ந்த உணர்வுகள் உடலில் அணுவாகும் பொழுது பிரம்மா என்று துதிப்பேன். உருப்பெற்ற மணத்தைச் சரஸ்வதி என்று துதிப்பேன்… பிரம்மாவின் மனைவி என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

6.பல கோடி உடல்களில் அறிந்துணர்ந்த உணர்வுகள் அனைத்தும் மனித உடலுக்குள் உருப்பெற்று வளர்ந்த அரும் பெரும் சக்தியை அருள் ஞான சக்தியாகத் துதிப்பேன். மாற்றி அமைக்கும் சக்தியாக முருகா என்று துதிப்பேன்… முருகு என்று துதிப்பேன்… என்னை அழகுப்படுத்தும் அறிவு என்று துதிப்பேன். அருள் ஞான சக்தி என்று துதிப்பேன். அருள் வழியில் எனக்குள் உருவாக்கும் ஆறாவது அறிவைப் பிரம்மன் என்று துதிப்பேன். பிரம்மா என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

7.அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் சக்தியாக ஆறாவது அறிவு கொண்டு அந்த அருள் ஞான வழியில் வாழ்வேன்.., அருள் ஒளியாகப் பெறுவேன், பிறவியில்லா நிலை அடைவேன்…! அண்டத்தில் ஒளிச்சுடராக வாழ்வேன், வளர்வேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

8.உயிரால் உருவாக்கிய இந்த மனித உடலைக் காப்பேன். அருள் ஞான சக்தியை நுகர்வேன். எனக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகளை அகற்றுவேன். அருள் சக்தியை எனக்குள் பெறுவேன். இந்த உடலுக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் அனைத்தையும் அகற்றுவேன், அருள் ஞான சக்தி பெறுவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

9.இந்த உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த ஆஸ்துமா நோய், சர்க்கரை சத்து, இரத்தக் கொதிப்பு, வாத நோய் அனைத்தையும் அகற்றுவேன். அருள் ஞான சக்தியை என் உடலில் வளர்ப்பேன்… அருள் சுடராக வளர்ப்பேன்.

என் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்வேன். அருள் ஞான வழியில் இந்த உடலைக் காப்பேன். இந்த உடலை உருவாக்கிய ஈசனைத் துதிப்பேன். அருள் ஒளி பெறுவேன். இந்த உடலில் வந்த இருளை நீக்குவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

10.என் உடலை உருவாக்கிய என் அன்னை தந்தையைக் கடவுளாகத் துதிப்பேன். என்னைக் காத்தருளிய அருள் சக்தியாக விளங்கிய என் அன்னை தந்தையைத் தெய்வமாகத் துதிப்பேன்.

என் வாழ்க்கைக்கு வழி காட்டிய என் தாய் தந்தையை முதல் குருவாகத் துதிப்பேன். அவர்கள் வழியில் அருள் ஒளி பெறுவேன். இருளை நீக்கும் ஆற்றலைப் பெறுவேன். என் அன்னை தந்தை துணை கொண்டு அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

11.வாழ்க்கையின் இருளை அகற்றுவேன். அருள் ஞான வழியில் வளர்வேன். என் பார்வையில் நான் பார்ப்போர் அனைவரும் தெளிந்த மனம் பெறத் தியானிப்பேன். உலகைக் காத்திடும் உணர்வாக என்னுள் வளர்த்திடுவேன். உலகம் அனைத்தும் ஒன்றென்று இணைப்பேன். உலக சக்தியே எனக்குள் உண்டென்று உணர்வேன்.

அருள் ஞான வழியில் உலக மக்கள் அனைவரையும் என்னுடன் இணைந்து… கல்யாணராமனாக வாழ்ந்திடுவேன். இணைந்து வாழ்ந்திடுவேன். இன பேதமின்றி மொழி பேதமின்றி மத பேதமின்றி வாழ்ந்திட அருள் ஞான சக்தியைத் தியானிப்பேன். உலக மக்கள் அனைவரும் அருள் ஒளி பெரும் சக்தி பெற்றிடத் தவம் இருப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

“தாய்” சக்தியும் “ரிஷி பத்தினி” சக்தியின் கூட்டுக் கலப்பும்

 

சரீரம் புற்றான பிறகு அப்புற்றினுள் சூட்சும சரீரம் கொண்டு வாழ்ந்து வரும் கொங்கணர்…
1.ரிஷி சக்தியாகும் சூட்சுமமே ஸ்ரீனிவாச அவதாரமும்
2.அதன் தொடரில் தான் பெற்ற “தாய்” சக்தியும் “ரிஷி பத்தினி” சக்தியின் கூட்டுக் கலப்பும்.

மண்டலமாய் சக்தி சுழன்றிட அமைப்பு ஏற்பட்டு அதன் வழி மேன்மேலும் சக்தியை தான் வலுக் கூட்ட ஆத்ம பலமே பல அவதார நிலைகள் கொண்டு அந்தந்த அவதாரங்களின் சூட்சுமம் வெளி உலகம் அறியாத் தன்மைக்கு மறைந்து போய்… மக்களின் எண்ணம் எல்லாம் செல்வம் பெறும் மார்க்கமாய் உலகோதய ஆசை வழித்தொடரில் அதுவே பேராசை என்னும் பிடிக்குள் சிக்குண்டு… செல்வநாயக அவதார சூட்சுமமே பிரகாசிக்க மக்களின் எண்ணம் செல்வம் பெறும் மனத்தின் வளத்தன்மைக்கு ஒப்ப… ‘படியளந்தான் பெருமாள்’ என்ற தொடரில் வந்துற்றது.

“மாடி வீட்டு அரசன்… கோடி வீட்டுப் புருஷன்” என்றதன் முழுமையே ஸ்ரீனிவாச அவதார மகிமையைக் கொங்கணவர் செயல் கொண்ட சூட்சுமச் செயல்… பரிசுத்த ஆவி என்ற தொடர்புபடுத்தி ரிஷியின் மூல சக்தி முனிவனின் தொடரில் பெறப்படும் ஒவ்வொரு நிலை சக்தியின்… கூட்டு நிகழ்த்தும் நிகழ்வுகளின் ஆக்கம் என்றதன் செயலில் வந்துற்ற செயற்பாட்டுச் சிறப்பின் தன்மைக்கு ஒப்ப ஆங்கு நிகழ்ந்தது “ஓர் செயல் நிகழ்வு…”

எந்தவொரு சித்தனும் சித்தின் செயல் ஆக்கம் வைத்திய முறையோ அல்லது வேறெந்த செயற்பாட்டிற்கும் அம்மன் சக்தி என்ற தொடரில் உபாசிக்கும் “வாலை” என்ற பெயர் நாமமிட்டு சக்தி பெறும் தொடர்பில் வந்துறும் நற்சக்தி கதி “தாய்” சக்தி என்னும் பாங்கில் பெறப்படும் தொடர் ஒன்றுண்டு.

இவ்வொன்றுடன் மட்டும் நின்று விடுவதில்லை. தாய் சக்தி பெறும் பல வழித் தொடர்பில் இதுவும் ஒன்று. “கொங்கணருக்காகச் சக்தியூட்ட” தாய் சக்தி காத்துக் கொண்டிருந்த செயல் விந்தை கொங்கணருக்கே உரிய தனிச் சிறப்பு.

அதோ மலைமுகட்டுக் குடிசையில் வயோதிக வயதுப் பெண்மணியின் உருவம் கொண்டு ஓர் அளப்பரிய தாய் சக்தி ஜெபித்துக் கொண்டும் அவ்வழி செல்வோருக்குக் கருணைக் கரம் காட்டி இயன்ற உதவி செய்வதோடு தன் சக்தியைத் தான் தன்னுள்ளே மறைத்துக் கொண்டு உலா வந்த “வாலாம்பிகை” என்னும் தாய் சக்தி அம்மலை முகட்டுக் குடிசைக்குள் “வகுளாம்பிகை” என்ற பெயர் நாமம் பூண்டு வசித்து வருகிறாள்.

மலை மீது அமைந்திருந்த குடிசையில் வாழ்ந்து வரும் வகுளாம்பிகை எத்தனையோ ஜீவன்களுக்குத் தவம் என்னும் கருணை மழை பொழிந்து எந்த அவதார நலனுக்குத் தன்னையும் உட்படுத்திக் கொண்ட சக்தியான “வாலை அம்மன்” காத்துக் கிடந்தாள் என்பது குரு சிஷ்ய மனோபாவனையைக் காட்டும் திறம் உணர்க.

அங்கே வறுமையில் வாடி வந்து சேர்ந்தான் ஒரு சிறுவன். தன்னை யார் என்று கூறக் கூட பெயர் நாமத்தில் கூட அறியாத அச்சிறுவனை மேற்கொண்டு செல்ல ஒட்டாமல் தடுத்து தான் வளர்க்கும் மகானாக ஆக்கிக் கொண்டு அந்த அனாதைச் சிறுவன் தனக்கு ஏற்ற ‘தாய்’ இவளே சேய் உறவாக வளர்ந்தது.

இச்சிறுவனைக் கொண்டே கொங்கண முனிவனை எதிர்கொள்ளக் காத்திருந்தாள் அத்தாயான வகுளாம்பிகை.
1.அஷ்டலட்சுமி சக்தி என்ற நட்சத்திர சக்தியின் அவதார நிலையில் இச்சிறுவன் பெறும் சக்தியை முன்னிட்டே
2.வகுளாம்பிகை தாய்… கொங்கணர் பெறும் சக்தி தொடருக்கு சூசகமாகச் சிறுவனுக்கே ஸ்ரீனிவாசன் என்ற பெயர் நாமப்படுத்தி
3.ரிஷி பத்தினி சக்தியில் கலந்து நிரந்தரமாக வசிக்கப் போகின்றான் ‘இவன்’ என்று தொடர் காட்டி விட்டார்.

ஸ்ரீனிவாசனும் மாடுகளை மேய்க்க வரும் மாட்டுக்கார சிறுவர்களுடன் கலந்து விளையாடி மகிழ்ந்து மாடு மேய்ப்பான். பிறகு பித்தன் போலும் நடந்து கொள்வான். ஆகாயத்தையே வெறித்து நோக்குவான்.

இப்படியெல்லாம் விளையாட்டுப் பருவம் கடந்து வரும் தொடரில் கொங்கணர் தம் அவதார நிகழ்வுக்கு ஏற்ற பக்குவம் போல் தன்னையும் தயார்படுத்திக் கொண்டது போல் ஸ்ரீனிவாசன் நடவடிக்கைகள் அமையலுற்றது.

இவர்கள் விளையாட்டெல்லாம் கொங்கணப் புற்றருகேதான் அதிகம் இருக்கும். அந்த இயற்கை காலம் கனியட்டும் என்று காத்திருந்த கொங்கணர் தொடருக்கு உறுதியாவதுபோல் அந்த அவதார காலமும் விரைந்து வந்துள்ளது.

சிறுவர்கள் விளையாட்டில் துறுதுறுப்பாய் விளங்கும் ஸ்ரீனிவாசன் அடிக்கடி சரீரத் தொடரில் ஏதேனும் காயம் ஏற்பட்டுக் கொண்டிருக்க வகுளாம்பிகை சிறுக்ஷைகள் செய்து அவனைக் கண் போல் காத்துக் கொண்டிருந்தார்கள்.

காரணம்… “சுவர் வைத்துத்தானே சித்திரம் எழுத வேண்டும்” என்ற சூட்சுமத் தொடரில் அமையலுற்றதன் பொருளே
1.அச்சிறுவனைக் கொண்டுதான் கொங்கணர் தம் நிலை உயர்த்த வேண்டும் என்பதன் சூட்சுமத்தில்
2.சரீரம் தரும் அச்சிறுவன் நிலையும் உயிர் சக்தி முனிவனின் சக்தியுடன் கூடி வளர்ச்சியின் தன்மைச் செயல் வீரியத்தின் வித்தாகி
3.மண்டல சுழற்சிக்கு வேண்டிய வேகத்தின் குணம் எல்லாம் ஒன்று கூடி நல்வினைப் பயன் தொடருக்கு உறுதுணையாய் விளங்கின என்பது
4.மாமகரிஷி ஆகும் கொங்கணர் செல்வநாயகன் பெற்ற பேறுதான் செயல் நிலைக்கு கொண்டு சென்று
5.மன எண்ண வீரிய வைராக்கிய சிந்தனை கொண்டு அடையும் தொடருக்கு நிதானம் என்ற செயலுறும் தன்மையைப் பிரதானமாக்கி
6.முனிவன் தன் மனோபீஷ்டம் நிறைவுற்றதும் தொடர்ந்து வந்துற்ற அருட்சக்தியாலும்
7.அதைத் தக்க முறையில் பயன்படுத்தும் விதமாக்கி நேர்கோடாய்க் கொண்டு சென்ற சூட்சுமத் தொடர் மிக முக்கியம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடை வைத்து நாம் வியாபாரம் செய்கின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்து விட்டுக் கடையில் உள்ள சரக்குகளைப் பார்க்க வேண்டும்.
1.இந்தப் பொருளைப் பயன்படுத்துபவர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்.
2.அவருடைய உள்ளங்களில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்…. எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்.
4.எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.
5.பிறர் எங்களைப் பார்க்கும் பொழுது நல் உணர்வின் தன்மை கொண்டு பார்க்க வேண்டும் என்று
6.இத்தகைய உணர்வலைகளைக் கடையில் முதலில் பரப்பிவிட்டு வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.

ஒரு தடவைக்கு இரண்டு தடவை மூன்று தடவை மாற்றி மாற்றி அதைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் உணர்வின் தன்மை வலுப்பெறும்… தொழில் சீராகும்… வியாபாரத்தில் நஷ்டம் என்பது வராது.

ஒவ்வொரு நிமிடமும்…
1.நாம் எடுத்துக் கொண்ட இந்த உயர்ந்த உணர்வுகள் ஒலிபரப்பாகி
2.அது மீண்டும் நமக்குள் கவரப்பட்டு ஒரு பாதுகாப்புக் கவசமாக
3.சக்தி வாய்ந்த உணர்வின் அலையாக அங்கே தேங்கி நிற்கும்.

அப்போது நாம் யாரைச் சந்தித்தாலும் நாம் பேசும் உணர்வுகள் இது முன்னணியில் சென்று அங்கே நல்ல உணர்வுகளை ஊட்டும். யானை வரும் பின்னே… மணி ஓசை வரும் முன்னே…!

உதாரணமாக சங்கடமான அல்லது வேதனையான உணர்வுகளை ஒரு பதினைந்து நிமிடம் நாம் எடுத்து விட்டால் அடுத்து நாம் எந்த நல்ல காரியத்திற்குச் சென்றாலும் அல்லது நல்லதையே செய்தாலும் நாம் பேசும்போது
1.இந்த உணர்வுகள் முன்னணியில் சென்று
2.நாம் எந்த வேதனைப்பட்டோமோ அந்த உணர்ச்சிகளை அடுத்தவருக்குத் தூண்டி
3.அந்த உணர்வின் எண்ணத்திலேயே நம்மைப் பார்க்க வைக்கும்.

எந்த வேதனையினால் துடித்துக் கொண்டிருக்கின்றோமோ இந்த உணர்வின் தன்மை அங்கே செயல்பட்டு நாம் எடுத்துக் கொண்ட அந்த காரியத்திற்குத் தடை விதிக்கும் நிலையாக உருவாகிவிடும்.

இதைத்தான் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…” என்று சொல்வது.

ஆகவே நாம் வெளிப்படுத்தும் உணர்வின் நிலைகள் உடனே அங்கே காட்டிக் கொடுத்து நம்முடைய உணர்வே அங்கே நம்மை எதிர்க்கச் செய்யும்… மற்றவர்கள் அல்ல.

1.நேற்று நல்லதைச் சொன்னார்கள்… இன்று என்னமோ கெட்டதாகச் சொல்கிறார்கள் என்று நாம் எண்ணினாலும்
2.நாம் அன்று எடுத்துக் கொண்ட உணர்வின் நிலை அவர்களுக்குள் பாய்ந்து அவ்வாறு அவர்களைப் பேசச் செய்கின்றது.
3.அவர்கள் நம்மை அவ்வாறு பேசவில்லை… நம் உணர்வே நமக்கு எதிரியாக மாறி விடுகின்றது.

ஆனால் நம்முடைய உணர்வே நமக்கு நண்பனாக வேண்டுமென்றால் அடிக்கடி அவசியம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். ஆத்ம சுத்தி மூலம் நல்ல உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கச் சுவாசிக்க நம் உயிர் அது அனைத்தையும் படைக்கின்றது.

இதைத் தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய் என்று சொல்வது.

இவ்வாறு மகரிஷிகளின் அருள் ஒளியை உயிரின் துணை கொண்டு நமக்குள் படைத்து
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலே சுழல வேண்டும் என்ற நினைவைக் கூட்டி வளர்த்தால்
2.மீண்டும் ஒரு உடல் பெறாத நிலையில் நாம் அங்கே விண் செல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோள் தனக்குள் மற்ற சத்துக்களை எடுத்து
1.ஒவ்வொன்றிலும் கருவுறும் சத்தாக
2.குருவாக முன்னின்று இருக்கின்றது.

சந்திரனோ மற்றவைகளை எடுத்துச் “சாந்தமான நிலையில்…” தனக்குள் உருவாக்கும் நிலையாக உருப்பெறுகின்றது. காரணம் ஒவ்வொரு குணங்களின் தன்மை அது அது கவரும் நிலைகள் கொண்டு தான் கோள்களின் இயக்கம்.

சந்திரனின் சுழற்சி வட்டத்தினை எடுத்துக் கொண்டால்… வரும் சக்திகளை அது சாந்தமான நிலைகள் கொண்டு மெதுவாக எடுத்துத் தனக்குள் மாற்றி அமைக்கின்றது.

1.இதற்கு மாறாக வியாழனோ படு வேகமாகச் சுழற்றி
2.மற்றவைகளைத் தனக்குள் வேகமாகக் கவர்ந்திடும் சக்தி கொண்டது
3.அதனால் அதனுடைய வளர்ச்சி வேகமும் அதிகரிக்கின்றது.
4.வெகு தொலைவிலிருந்து வரும் உணர்வினையும் தனக்குள் கவரும் ஆற்றல் பெற்றது
5.அதே சமயத்தில் அதனின் உமிழ்த்தும் உணர்வின் வேகமும் அதிகம்.

மற்ற கோள்களைக் காட்டிலும் உயர்வான இடங்களில் அது இருப்பதனால் தனக்கு மேல் இருக்கும் கேது ராகு கோளின் சக்தியையும் கவரும் திறன் கொண்டது.

ராகு இருள் சூழ்ந்தது… கேதுவோ விஷம் கொண்டது. அவைகளையும் வியாழன் தனது சுழற்சியின் வேகத்தில் கவர்ந்து இந்தப் பிரபஞ்சத்திற்குகந்ததாக மாற்றுகிறது.

அதாவது…
1.சூரியன் எவ்வாறு தனது சுழற்சியின் வேகத்தில் மற்ற நட்சத்திரங்களின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து
2.கோள்களுக்கும் ஜீவனூட்டித் தனது நிலைகளில் அது ஒளியாக மாற்றுகின்றதோ
3.அதைப் போன்று வியாழன் கோள் மற்ற சத்துக்களைத் தனக்குள் கவர்ந்து
4.விஷம் மற்றவைகளையும் கலந்து அதை ஒரு குருவாக்கி
5.மற்ற கோள்களுக்கும் தனது இணையாக இணைத்துக் கொண்டு வருகின்றது.

கோள்கள் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் சக்தியை நமது பூமி கவர்ந்து உயிரணுக்களை ஜீவன் பெறச் செய்வதும்… உயிரணுக்களை வளர்க்கச் செய்வதும்… தாவர இனங்களைத் தனக்குள் வளர்ப்பதும்… தாவர இனத்தின் நிலைகள் கொண்டு உயிரினங்களுக்கு ஊட்டச்சக்தி கொடுப்பதுமாக மாற்றி அமைக்கின்றது.

இந்தப் பிரபஞ்சத்தைப் போன்று தான் நாம் மற்றவருடைய எண்ணங்களை எந்த அளவிற்குக் கவர்கின்றோமோ அந்த உணர்வின் சக்திகளை எல்லாம் “நம் உயிர் குருவாக நின்று…” இந்த உணர்வின் சத்தைப் பெருக்கி உடலாக மாற்றுகின்றது

1.சூரியன் இந்த பிரபஞ்சத்திற்கே குருவாக இருப்பினும்
2.இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அணுக்களுக்கு வியாழன் கோளே குருவாக இருக்கின்றது.

இதைப் போல…
1.அனைத்து சக்திகளையும் எடுத்த இந்த மனித உடலுக்குள்
2.நாம் எண்ணும் எண்ணங்களுக்கு இந்த மனித உடல் உருவான நிலையே குருவாகின்றது.

ஏனென்றால்…
1.மற்ற சத்துக்களை எடுத்து வியாழன் கோள் தனது நிலைகளில் இந்தப் பிரபஞ்சத்தில் குரு தன்மையை எப்படி அடைந்ததோ
2.அதைப் போல மனித உடலாக உருவாக்கப்படும் பொழுது நம்முடைய உணர்வின் எண்ணங்களுக்கு இது குருவாகின்றது.
3.அதே சமயத்தில் உடலுக்குள் உயிர் குருவாகின்றது… நமக்குள் சூரியனாக அது மிளிரும் தன்மையை அடைகின்றது.

அன்று ஞானிகளால் சாஸ்திர விதிகளை வகுக்கப்பட்ட இத்தகைய உண்மைகளை எல்லாம் எண்ணத்தால் எண்ணி நமக்குள் அதைப் பொங்கச் செய்ய வேண்டும்.

சூரியன் எவ்வாறு தான் கவர்ந்து கொண்ட அணுக்களில் இருக்கும் நஞ்சினைப் பிளந்துவிட்டு நல்ல உணர்வினை எடுத்து ஒளிச் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று
1.மகரிஷிகள் தமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எத்தகைய நிலைகளைக் கவர்ந்து கொண்டாலும்
2.அதில் வரும் நஞ்சினைத் தனக்குள் அணுகாதபடி தன் உணர்வின் எண்ணங்களை ஒளியாக மாற்றி
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சப்தரிஷி மண்டலத்தில் வெளி வரும் உணர்வுகளைச் சூரியன் தனக்குள் ஒளிச் சுடராகப் பொங்கி இங்கே பூமிக்குள் பரவச் செய்கிறது.

நமது வாழ்க்கையில் குடும்பத்திற்குள் வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ ஏற்பட்டால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து நமக்குள் அதை மாற்றி அமைக்க வேண்டும்.

தாவர இனங்களில் விளைந்ததை நாம் வேக வைத்து எப்படிச் சுவைமிக்கதாக உணவாகப் படைக்கின்றோமோ அது போல்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.நமக்குள் வரும் அனைத்தையும் ஒளியாகப் படைக்கும் சக்தி பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதைச் சொல்லிச் சொல்லி கணவன் மனைவி இருவருமே ஆத்ம சுத்தி செய்து கொண்டால்
1.இந்த உடலை விட்டுச் சென்றால் வேறு எங்கேயும் போகாது…
2.சிவசக்தி என்ற நிலையில் இங்கே வருகின்றது.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்யும் பொழுது எந்த விண்வெளியை நோக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம் உணர்வுகளைச் செலுத்திக் கொண்டோமோ அந்த மகரிஷியின் எல்லையை அடையலாம்.

மனைவியோ கணவனோ ஒருவருக்கு ஒருவர் யார் முந்திச் சென்றாலும் ஆத்மா இந்த உடலுக்குள் தான் போகும். அப்போது இருவருமே சேர்ந்து எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை தனக்குள் ஒளியாக ஆக்கப்படுகிறது,
1.இன்னொரு பிறவிக்குப் போகாதபடி இரண்டு எண்ணங்களும் ஒன்று சேர்த்து
2.மெய் ஒளியின் தன்மையைக் கூட்டி உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் ஆற்றல் பெறுகின்றது.

அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்று உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று நம்முடைய குழந்தைகளையும் எண்ணச் சொல்லி உந்தி விண்ணிலே செலுத்தப் பழக்கிக் கொடுக்க வேண்டும்.

கூட்டுக் குடும்ப தியானங்களிலும் இதைப்போல செய்து இறந்த உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று உந்திச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது இரண்டு நிலைகளாக இருந்தாலும் அது சிவ சக்தியாக ஒன்றாகச் சேர்த்து இன்று எப்படிக் குடும்ப வாழ்க்கையில் இருக்கின்றோமோ இதே நிலையாக ஒளியின் தன்மையை அங்கே வாழ முடியும்.

1.சப்தரிஷி மண்டலமாக ஆனது என்பது… தனித்து எந்த மனிதனும் சென்று உருப் பெற்றதில்லை.
2.கணவன் மனைவியும் இந்த உணர்வின் தன்மை இணைத்துக் கொண்ட நிலைகள் கொண்டு தான்
3.அங்கே சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது.

எப்படி இருந்தாலும் பெண்களுடைய கரு உணர்வின் தன்மை என்பது ஒரு உயிரின் தன்மை கொண்டு தனக்குள் வளர்க்கும் ஆற்றல் பெற்றது.

அதாவது கணவன்-மனைவி சரீரம் இரண்டாக இருந்தாலும்… உயிரின் தன்மை ஆணாக இருந்தாலும்… சக்தி என்ற தாவர இனச் சத்தை இது இரண்டும் சேர்த்துத் தான் உருவமாகிறது. உணர்வின் அணுக்களாகத் திசுக்களாக மாற்றும் நிலை தாவர இனச் சத்தினால் தான் உருப்பெறுகிறது.

1.உயிரின் துடிப்பு ஈசனாக உருவாக்கினாலும்
2.ஈஸ்வரியாக உருவாக்கும் இந்த சக்தியின் தன்மையால் கருவின் தன்மை உருவாகி ஒரு உருவின் தன்மை கொண்டு வரும்.

அதைப் போன்று தான் சூட்சம நிலை பெற்று இந்த மனித உணர்வு வந்தபின்
1.ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு கணவன் மனைவி உணர்வின் தன்மை ஒன்று சேர்த்து
2.இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அது ஒளியின் சரீரம் பெற்று
3.இந்த மனித வாழ்க்கையில் எப்படி இருக்கின்றோமோ ஒளியின் கூட்டாக அது அமைகின்றது.
4.விண்ணின் ஆற்றல் எது வந்தாலும் ஒளியின் சரீரம் ஆகின்றது
5.அதனால் தான் சப்தரிஷிகள் என்பதைக் கணவன்-மனைவி ஒன்று சேர்த்த நிலைகளாக உணர்த்தினார்கள்.

சாதாரண மனிதனும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் நளாயினி சாவித்திரி கதைகளைக் காட்டினார்கள்.

கணவன் மனைவி இரண்டு உடலாக இருந்தாலும் உணர்வுகள் இரண்டறக் கலந்து ஒரு உணர்வாக ஒளியாக மாறுகிறது. இதை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து ஒளியின் தன்மை பெறுவதற்கு அக்காலத்தில் இப்படிக் காட்டியிருந்தாலும் இன்று அவரவருக்கு உகந்தபடி “எப்படி எப்படியோ பிரித்து விட்டார்கள்…”

அந்த மெய் ஞானிகள் காட்டிய பேருண்மையைத் தான் இங்கே உணர்த்துகின்றோம்.

December – 2024 உபதேசம்

“அன்பு” தானப்பா கடவுள்

 

அன்பு வழி காட்டிட்டு… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாய் செயற்படுபவன்…
1.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
2.பிற உயிர்களையும் தன்னுயிர் போல் நேசிக்கும் செயற்பாடு உடையவனாய் இருத்தல்
3.தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாய் வெளிப்படும் பொழுதே போதனையை ஏற்று
4.தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு உபதேசத்தை ஏற்றவன் அந்த நன்நெறியில் பிறழாமல்
5.அவ்வன்பையே பற்றுக் கோடாய்க் கொண்டிட்ட எண்ண செயலினால்
6.நல் வழிவகைச் செயலைக் கைக் கொள்வோன் மனிதன் என்ற முழுமை பெறுகிறான்.
7.அன்பும் பரி பூரணத்துவம் பெறுகின்றது.

இயேசு காட்டிட்ட அன்பு வழி… “மதம்” என்ற ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. ஆனால் எம்மதத்தினரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம் வழி.

மனித எண்ணத்தையும் அன்பு சாம்ராஜ்யத்தையும் ஆள வந்த அம்மகானுக்கே தந்திட்ட பரிசு “சிலுவை ஏற்றுதல்…” இன்றும் உண்மையைப் புகட்டினாலும் மத வழிச் செயலில் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா…!

அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?

1.குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
2.உலக மக்கள் படும் இன்னல்களுக்காக தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு தாய்மையின் உணர்வு கொண்டே
3.ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி உயர் நிலை பெறவே ஊட்டிட்டார்… ஊட்டிட்டார்… அன்பு கொண்டே ஊட்டிட்டார்.

தாய் முகம் கண்ட குழந்தை தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களை செவிமடுத்தினர் என்றால்… அன்றைய கால கட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயற்படாதொழிந்த குழப்ப சூழ்நிலையில் உண்மையை உணர்த்தி அளித்திட்ட போதனைகள் மக்களுக்கு தெளிந்த சிந்தனை அளித்து ஈர்த்தது என்றால் அன்பின் திறத்தை என்னவென்பது…?

அன்புதானப்பா கடவுள்.

சத்திய நிலை கடைப்பிடித்த மகான்களுக்கே அவச்சொல் என்றால்
1.சிந்தனா சக்தி செல்லும் வழிதான் என்ன…?
2.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா கூட்டங்கள் கூட்டினார்….!

இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகிறது.

ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுவோர் அம்மத வழிதனில் எண்ணிக்கையில் பலர் இருப்பினும்… அவர்களும் வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத வெறி உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.

உண்மை வழியறிந்து அம்மகான் காட்டிட்ட வழிதனை கடைப்பிடிக்க முயலுவோர் முயலட்டும்.

அன்பு கொண்டு குணங்களின் செயலை தன்னுள் கண்ட இயேசுபிரான்
1.’சைத்தான்’ என்று காட்டியது தீய குணங்களைத் தான்.
2.சைத்தானின் குணங்களுக்கு ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி
3.அவைகளைப் பக்குவமாய் விலக்கிடவே தியானத்தின் வழி காட்டியதே “அப்பமும் மீனும்…”

கண்ணன் தேரின் சக்கரத்தை அழுத்தினான் என்றால் உட்பொருள் என்ன…?

 

அர்ச்சுனன் சகலகலா வல்லவன் என்று காட்டுகின்றார்கள். சகல சக்தியான அந்த வல்லமை பெற்ற நிலைகள் நம் எல்லோருக்கும் உண்டு என்பாதை நினைவுபடுத்திக் கண்ணின் நினைவு கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்றால் உடனே ஈஸ்வரா…! என்று இங்கே புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி அங்கே தாக்க வருபவர் உள்ளத்திற்குள் அதைப் பாய்ச்ச வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையைத் தன் புலனறிவால் எடுத்து
1.தீமை செய்ய வேண்டும் என்று எவன் எய்ய விரும்புகின்றானோ
2.அவனுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சி
3.என்னுடன் நேசமாக வரும் எண்ணங்கள் அங்கே வளர வேண்டும் என்று
4.இந்த அம்பை நம்மை எய்யச் சொன்னார்கள்.

அதாவது அங்கிருக்கும் தீய அலையின் தன்மையை வீழ்த்தச் சொன்னார்கள் ஞானிகள். ஆனால் ஆளையே வீழ்த்தச் சொன்னார் என்றும் அது தான் வீரம்… வல்லமை…! என்று இங்கே காட்டுகின்றார்.

ஒருவன் நமக்குக் கெட்டது செய்கிறான் என்றால் பதிலுக்கு அவனை அழிக்க வேண்டும் என்று தான் பெரும் பகுதி எண்ணுகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் ஈஸ்வரா அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து
1.அறியாத நிலையில் செயல்படுவதிலிருந்து அவன் விடுபட வேண்டும்
2.நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் அவனுக்குள் உதயமாக வேண்டும் என்ற இந்த அம்பை எய்ய வேண்டும்.

இது மனிதனின் தலையாயக் கடமை…!

ஏனென்றால் மனிதன் உருவாக்கும் நிலைகள் பெற்றவன்… பிரம்மாவாகச் சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்றவன். ஒளியின் சிகரமாகச் செல்லக்கூடியவன். இதை அனுபவத்தில் கொண்டு வருவதற்குத் தான் கீதா உபதேசத்தின் நிலைகளைக் காட்டினார்கள்.

எந்தெந்த உணர்வின் தன்மை தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளை நினைவு கொண்டாயோ அந்த உணர்வின் தன்மை கொண்டு
1.சகலத்தையும் உருவாக்கும் ஆற்றலாக இந்த உடலை உருவாக்கினேன்.
2.அனைத்திலும் நான் கலந்துள்ளேன்
3.எதை எடுத்தாலும் எதை நினைத்தாலும் நான் அதிலே கலந்தே வந்தவன்.
4.நீ எதை நினைக்கிறாயோ அதை நான் வழி நடத்திச் செல்கின்றேன் என்று கண்ணன் சொல்வதாக…
5.அதாவது “நம் கண்கள்…!” சொல்வதாகக் கீதையில் அவ்வளவு தெளிவான நிலைகளைத் தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

இதை நாம் உணர்ந்து கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்ய பழகிக் கொள்ள வேண்டும்… தயவு செய்து அலட்சியப்படுத்தி விடாதீர்கள். ஒவ்வொரு நொடிக்கும் அதை எடுத்துப் பழகுங்கள்.

1.எப்பொழுது ஒருவர் நமக்குத் துன்பம் ஏற்படுத்தும் நிலைகள் ஏற்படுத்துகின்றாரோ
2.அந்தத் துன்பம் நமக்குள் வந்த பின் அவனைத் துன்ப்படுத்த வேண்டும்… அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ
3.அது தான் ஓ…ம் நமசிவாய சிவாய நம ஓ…ம்.
(துன்பம் ஏற்படுத்தியது நமக்குள் சிவமாகி ஓ…ம் நமசிவாய… நம்மிடமிருந்து அதுவே அடுத்தவரைத் துன்ப்பபடுத்தும் சக்தியாக வெளி வருகிறது சிவாய நம ஓ…ம்)

எந்தக் குணத்தை எண்ணுகின்றேனோ அது எனக்குள் ஜீவன் ஆகி ஓ…ம் என்று பிரணவத்தின் சக்தியாக வளர்கின்றது. அந்தச் சக்தி என் உடலுக்குள் சேருகின்றது. அது தான் ஓ…ம் நமசிவாய சிவாய நம ஓ…ம். நான் எதை எண்ணினாலும் அந்த உணர்வு எனக்குள் சிவமாகிறது (உடலாகிறது).

நான் ரோட்டில் நடந்து செல்லும் போது
1.ஒருவன் செய்கையைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி… அந்த உணர்வை எனக்குள் சேர்க்கும் பொழுது உமிழ் நீராகச் சேர்ந்து சிவம் (உடல்) ஆகின்றது.
2.அடுத்து ஒருவன் தவறு செய்கின்றான்… அயோக்கியத்தனம் செய்கின்றான்… என்று பார்த்து அந்த உணர்வை எடுத்தவுடனே அதுவும் உடலாகிறது

இப்படி சதாசிவமாக நம் உடலாக ஆகிக் கொண்டே உள்ளது. வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சையும் உடலாக ஆக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

கீதையில் சொன்னது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகிந்றாய். நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அந்தச் சுவாசத்தின் வழி அதுவாகிறாய்.

எப்பொழுது தீமை உங்களுக்குள் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மெய் ஒளியின் சக்தியை நமக்குள் சிவமாக ஆக்கிடல் வேண்டும்.

1.எதிரிகள் எத்தகைய நிலைகள் கொண்டு நம்மைத் துன்புறுத்துகின்றனரோ
2.தீய உணர்வுகள் நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறதோ
3.எத்தகைய ஆவியின் தன்மை நமக்குள் தீமையை உருவாக்குகின்றதோ
4.அப்போதெல்லாம் ஈஸ்வரா என்று (புருவ மத்தியில்) குருக்ஷேத்திரப் போரில் நின்று
5.அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எனக்குள் இருக்கக்கூடிய ஆன்மாக்கள் அனைத்தும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்
5.என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்
6.என் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்க வேண்டும்.

யார் நமக்குத் தீமை செய்தாலும் மேலே இந்த உணர்வின் தன்மை அங்கே பாய்ச்சப்பட்டு அவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் பிறருக்கு நன்மை செய்யக்கூடிய சக்தி அங்கே ஓங்கி வளர வேண்டும் என்று
1.இந்த அம்பை அங்கே பாய்ச்ச வேண்டும்
2.அர்ஜுனன் சகலகலா வல்லவன் என்று சொன்னாலும் அந்த அருள் உணர்வின் தன்மை கொண்டு
3.இந்த எண்ணத்தை அந்த ஸ்தலத்திலே நிறுத்திவிடு… குருக்ஷேத்திரப் போராக நடத்து…! என்று காட்டினார்கள்.

ஆனால் போரை நடத்த வேண்டும் என்றாலும் அங்கே என் குருநாதர் இருக்கின்றார் என் சகோதரர்கள் இருக்கிறார்கள் இவர்களை வைத்து நான் எப்படி சண்டையிடுவது…?

உன் சகோதரன் என்று இருந்தாலும் அவனை அறியாத விஷமான எண்ணங்கள் அவனையே அந்த உணர்வுகள் அழித்திடும் எண்ணமாக வருகின்றது. தீமையுடன் சேர்த்துத் தீமையை உருவாக்கும் நிலையாக வருகின்றது.

1.அவன் தீமை செய்யும் எண்ணத்தை அழிக்க நீ எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் சக்தியை
2.உயர்ந்த உணர்வின் அம்பாக அங்கே பாய்ச்சு… அங்கே தீமையை வீழ்த்து…! என்று சொன்னான்.

இதனுடைய ரகசியத்தை அன்று மெய் ஞானியான வியாசன் சொன்ன நிலைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“கண்ணன் தேரின் சக்கரத்தை அழுத்தினான்…” என்று காட்டினால் அதனுடைய உட்பொருள்
1.அந்தத் தீமையான உணர்வு தனக்குள் வராதபடி அழுத்தி
2.தன் உணர்வின் எண்ண அலைகளை அங்கேயே பாய்ச்சி அந்த உணர்வை அழித்தான்
3.நல்ல உணர்வின் தன்மையை ஊட்டச் செய்தான்… இந்த அம்பைப் பாய்ச்சினான்.

இதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

“அன்பு” தானப்பா கடவுள்

 

அன்பு வழி காட்டிட்டு… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாய் செயற்படுபவன்…
1.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
2.பிற உயிர்களையும் தன்னுயிர் போல் நேசிக்கும் செயற்பாடு உடையவனாய் இருத்தல்
3.தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாய் வெளிப்படும் பொழுதே போதனையை ஏற்று
4.தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு உபதேசத்தை ஏற்றவன் அந்த நன்நெறியில் பிறழாமல்
5.அவ்வன்பையே பற்றுக் கோடாய்க் கொண்டிட்ட எண்ண செயலினால்
6.நல் வழிவகைச் செயலைக் கைக் கொள்வோன் மனிதன் என்ற முழுமை பெறுகிறான்.
7.அன்பும் பரி பூரணத்துவம் பெறுகின்றது.

இயேசு காட்டிட்ட அன்பு வழி… “மதம்” என்ற ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. ஆனால் எம்மதத்தினரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம் வழி.

மனித எண்ணத்தையும் அன்பு சாம்ராஜ்யத்தையும் ஆள வந்த அம்மகானுக்கே தந்திட்ட பரிசு “சிலுவை ஏற்றுதல்…” இன்றும் உண்மையைப் புகட்டினாலும் மத வழிச் செயலில் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா…!

அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?

1.குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
2.உலக மக்கள் படும் இன்னல்களுக்காக தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு தாய்மையின் உணர்வு கொண்டே
3.ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி உயர் நிலை பெறவே ஊட்டிட்டார்… ஊட்டிட்டார்… அன்பு கொண்டே ஊட்டிட்டார்.

தாய் முகம் கண்ட குழந்தை தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களை செவிமடுத்தினர் என்றால்… அன்றைய கால கட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயற்படாதொழிந்த குழப்ப சூழ்நிலையில் உண்மையை உணர்த்தி அளித்திட்ட போதனைகள் மக்களுக்கு தெளிந்த சிந்தனை அளித்து ஈர்த்தது என்றால் அன்பின் திறத்தை என்னவென்பது…?

அன்புதானப்பா கடவுள்.

சத்திய நிலை கடைப்பிடித்த மகான்களுக்கே அவச்சொல் என்றால்
1.சிந்தனா சக்தி செல்லும் வழிதான் என்ன…?
2.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா கூட்டங்கள் கூட்டினார்….!

இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகிறது.

ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுவோர் அம்மத வழிதனில் எண்ணிக்கையில் பலர் இருப்பினும்… அவர்களும் வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத வெறி உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.

உண்மை வழியறிந்து அம்மகான் காட்டிட்ட வழிதனை கடைப்பிடிக்க முயலுவோர் முயலட்டும்.

அன்பு கொண்டு குணங்களின் செயலை தன்னுள் கண்ட இயேசுபிரான்
1.’சைத்தான்’ என்று காட்டியது தீய குணங்களைத் தான்.
2.சைத்தானின் குணங்களுக்கு ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி
3.அவைகளைப் பக்குவமாய் விலக்கிடவே தியானத்தின் வழி காட்டியதே “அப்பமும் மீனும்…”

இருபத்தியேழு நட்சத்திரங்களும் நவக்கோள்களும்

 

27 நட்சத்திரங்களும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கத்தின் தன்மை கொண்டது.

அந்த நட்சத்திரத்தின் இயக்கம் கொண்ட எந்தெந்தத் தாவர இனமோ அதனின் உணர்வின் தன்மை விளைந்த பின் தன் இனத்தின் தன்மை இங்கே ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளது.
1.ஒவ்வொரு உயிரும் 27 நட்சத்திரத்தால் இயக்கும் உணர்வின் துணை கொண்டு
2.அந்த நட்சத்திரங்களின் சக்திகள் நமக்குள் ஐக்கியமாகிடல் வேண்டும்.

எப்படி 27 நட்சத்திரங்களுடைய சக்தி ஒருங்கிணைந்து ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி சூரியன் ஒளியின் சுடராக வாழுகின்றதோ இதைப் போல
1.உயிரின் இயக்கத்தால் உணர்வின் எண்ணங்களை வளர்க்கப்பட்டு வாழ்ந்திடும் உணர்வின் தன்மையும்
2.தன் இனத்தின் பெருக்கம் வரும் பொழுது ஒளியின் சிகரமாக ஒளியின் நிலையாக நமக்குள் அந்த இனத்தைப் பெருக்கும் நிலை தான்
3.27 நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற வேண்டும் என்று நமக்குள் ஒருங்கிணைந்த நிலையில் கூட்டச் செய்வதற்கே “இது…”

இப்பொழுது நான் பேசும் நிலையோ நவக்கோள்கள். உயிரணு தோன்றும் பொழுது எந்த கோளின் தன்மையை அதிகரித்துச் சேர்த்திருந்ததோ அதனின் பங்கு விகிதமே மனிதனுக்குள் வரும் பொழுது அந்தக் கோள் முன்னணியில் இருக்கும்.

நவக்கிரகம் என்பதும் இதே தான்…! எந்தக் கோளின் தன்மை நமக்குள் அதிகரித்தோமோ மற்ற கோளின் தன்மை வரும் பொழுது எதிர்மறையான நிலைகள் இயக்கச் சக்திக்கே இது உதவும்.

நம் உடலின் தன்மை உடல் ஒரு கோள்தான்.
1.சகோதர உணர்வு கொண்டு எடுக்கப்படும் பொழுது இது ஓ என்று இயக்கப்பட்டு ஒன்றிட்ட நிலை வரும் போது
2.நவக் கோளின் சக்தியை ஒருக்கினைந்த நிலைகள் கொண்டு நமக்குள் உருவாகும் நிலையே வருகின்றது.

“நான் ஏதோ சாதாரணமாகச் சொல்கிறேன்” என்று எண்ண வேண்டாம்
1.குருநாதர் பித்தரைப் போன்று இருந்து உயர்ந்த நிலைகளை எனக்குள் அனுபவபூர்வமாகக் கொடுத்த நிலைகளை
2.நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் அழிவின் தன்மை சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மனிதனின் சிந்தனை அழியும் நிலை வருகின்றது.

மனிதனின் சிந்தனையே அழியும் பொழுது இழிநிலையான நிலைகளுக்குச் செல்வதற்கு முன் “நீங்கள் அனைவரும் தயாராகி விட வேண்டும்…”

தயாரானால்…
1.இருண்ட உலகை அப்புறப்படுத்தி விட்டு ஒளி காணும் உணர்வாக
2.உங்கள் பேச்சும் மூச்சும் உலகைக் காத்திடும் நிலையாகப் பெற வேண்டும் என்பதற்குத்தான்
3.என் குரு இட்ட ஆணைப்படி உங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.
4.அந்த நவக் கோள்களின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன்.

இதனின் தொடர் கொண்டு சூரியன் எப்படி ஒளிச் சுடராக இருக்கின்றதோ உயிருடன் நீங்கள் தொடர் கொண்டு… காந்தப் புலனாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிரின் நிலைகள் கொண்டு… மகரிஷிகள் உணர்வைத் தனக்குள் அறிவாக எடுத்து…
1.நாம் அனைவரும்… அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று
2.ஒளியின் சுடராக இணைக்கச் செய்வது தான் உயிரின் நிலைகள்.

சூரியன் எவ்வாறு மற்ற கோள்களின் தன்மையை தனக்குள் எடுத்துச் சமமாக ஒளியாக மாற்றுகின்றதோ இதைப் போல நமக்குள் ஒளியின் சிகரமாக “அந்த மாமகரிஷிகளுடன் நாம் ஒன்றி” உணர்வினை ஒளியாக மாற்ற முடியும்.

இதற்குத் தான் 27 நட்சத்திரங்களின் சக்தியும்… நவக்கோள்களின் சக்தியும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும்… சப்தரிஷிகளின் அருள் சக்தியும்… மனிதனாக உருவாக்கிய நிலைகளில் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு… “ஒளியின் சரீரமாக இருக்கும் அதனை நாம் அனைவரும் பெரும் பாக்கியமாக இணைத்திடும் நிலை தான்… தியானத்திலே இந்த உணர்வினை ஐக்கியப்படுத்துகின்றோம்…”

நவக்கோளின் சக்தி என்றால் வேறு எதுவும் இல்லை…!

இந்த உடலை விட்டு எப்பொழுது வேண்டுமென்றாலும் உயிர் வெளியில் செல்லும் என்பதை மனதில் வைத்து…. அதற்கு முன் அருள் ஒளியைச் சேர்க்க வேண்டும்.

காரணம்… இந்த உடலுக்குள் எதை எல்லாம் இணைத்தோமோ அந்த உணர்வின் துணை கொண்டே அடுத்த உருவை உயிர் உருவாக்கும். இன்று மனிதன் என்ற வெறுப்பு கொண்டால் மனித ஈர்ப்பிற்குள்ளே மீண்டும் இழுத்துச் சென்று விடும்

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அது மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வின் தன்மை கொண்டு
3.நம்மை மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு உயிர் அழைத்துச் செல்லும்.
4.உயிர் நமக்குள் இருந்து அதைச் செயல்படுத்திக் காட்டும்.

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எமது குருநாதர் காட்டிய அருள் வழி… உங்களுக்கெல்லாம் அது பெற வேண்டும்… இந்த உணர்வின் தன்மை உங்களில் விளைய வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் அதுவாகின்றேன்.

1.நீங்களும் இதைப் போன்று உலக மக்கள் ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ணத்தைக் கூட்டி
2.அந்த ஒளியின் சரீரமாகும் உணர்வைப் பற்றுடன் பற்றி அதன் வழி சென்றால் உங்கள் உயிர் உங்களை அங்கே அழைத்துச் செல்லும்.

மனித சக்திகளைத் தெய்வ சக்தியாக்குங்கள் ஒவ்வொருவருமே

 

ஆண் பெண் ஆத்மக் கூட்டு ஐக்கியத் தொடருடன் பிறக்கும்… ஒளியின் உயர்வு வட்ட வளர் தொடர் சக்தியான “ஆதிமூலம்” என்று உணர்த்தும் மூலத்தையே
1.ரிஷி பத்தினி மூலத்தால் உருவாகும் வழியில் செல்லும் வழி முறைகளையும்
2.மனித ஆத்மாவின் உணர்வு எண்ண மோதலைக் கொண்டு தெய்வ குண சக்திகளைப் பெறும் நிலைக்கு
3.மனிதனின் எண்ண ஓட்டச் சமைப்பினால் செல்லும் வளர் முறைகளை இது நாள் வரை வழிப்படுத்தி வந்துள்ளேன்.

இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இங்கே காட்டியதைச் செயல் முறைப்படுத்தி வளர்ந்து வரும் தொடரில் தங்களுக்கு ஏற்படும் வினாக்களைத் தெளிவு முறை பெறும் மார்க்கத்திற்கு வழி உண்டு.

அதாவது இதைப் படிக்கும் போது ஏற்படக்கூடிய எண்ண மாற்ற நிலைகளைத் தெளிவு காணும் அறியும் நிலைக்கு… நீங்கள் எதை அறிய விரும்புகின்றீர்களோ
1.அறியும் எண்ணத்துடன் புருவ மத்தியில் நினைவைக் கூர் பாய்ச்சிச் செலுத்துங்கள்..
2.பின் மேல் நோக்கிய சுவாசத் தொடர்பினால் உயர்ந்தோரின் நிலையுடன் எண்ணத்தைச் செலுத்துங்கள்…
3.வளர்ந்த ரிஷிகளுடன் நம் அறியும் எண்ண ஞானத்தைச் செலுத்துங்கள்.

அறிந்து கொள்ளும் உயர் ஞான அறிவாற்றலினால் இவ் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
1.உயர் ஞானம் பெற்ற அலை சக்தியின் தொடர் நமக்குக் கிடைத்து
2.நம் உடலின் காந்த நுண் அலை ஈர்ப்பில்
3.நமக்கு அறிய விரும்பிய அனைத்திற்கும் விடைகள் அனைத்தும் கிடைக்கும்.

வாழ்க்கை, சொந்த பந்த தொழில், சுற்றுப்புற, விஞ்ஞான, வியாபார, மருத்துவ எத்தொடரில் நம் வாழ்க்கை அமைந்திருந்தாலும், வாழ்க்கைத் தொடர் சுழற்சியுடனேயே நாம் தொடர்பு கொண்ட சுழற்சிக்கு நம் வளர்ச்சியின் வலுவைக் கூட்டிக் கொண்டு வாழ்க்கைப் பிடிப்பலைதான் மனிதனின் முற்றிய நிலையென்று இன்பத்தைக் கொள்ளாமல்
1.மனித ஆத்மாவின் உயர்வு வழிக்கு வழிகாட்டி இங்கே உணர்த்திய இத்தொடரில் பல நிலைகளை
2.அந்தந்த இடங்களில் அதைப் படித்துச் செயலாக்கி அதில் விட்டுள்ள… நூலில் உணர்த்தப்படா பல உண்மைகளும்
3.ஞானத்தைப் படிப்பவர்களின் ஞானத்தைக் கொண்டு உணர்த்திய முறையை
4.செயலாக்கிச் செயல்வழிக்கு உயரக்கூடிய சில நிலைகளை இப்பாடத்திலும் “ஆங்காங்கு விட்டுள்ளது…”

வரப்போகும் கால நிலையில் துர்மார்க்க அச்சம் கொள்ளும் அலை உணர்வுதான் காற்றலையின் நச்சுத்தன்மை வளர்ந்தோங்கிச் சுழலும் தருணமாக உள்ளது.

மனிதன் தன்னைத் தான் உணர்ந்து தன் வலுவைக் கூட்டி பிற ஈர்ப்பின் பிடிப்பில் சிக்காமல்… உயர் ஞான வழித் தொடரின் தொடர்பைக் கொண்டு… வளர்ந்த பல கோடி தேவாதி தேவர்களும் செயலில் சக்தியாய் செயல் கொள்ளும் சப்தரிஷிகளின் சகல சக்தியையும் சமைக்கவல்ல ஆற்றல் கொண்ட உயர்ந்தோரின் உயர்வுடன்… பூமிப்பிடிப்பில் பிறப்பெடுத்து வாழும் மனித ஞான உணர்வெண்ணத்தைச் செலுத்தி
1.உயர்ந்தோரின் உயர்வுடன் உயரும் எண்ணத்தில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும்
2.உயர்ந்தே செல்லும் வழிமுறையாய் இங்கே வழிகாட்டிய வழிமுறையின் உண்மையை ஏற்று…
3.ஞானத்தைப் போதனையாக்கி வழிகாட்டிய ஞானகுரு ‘வேணுகோபால சுவாமிகளின் போதனைப் பெற்றும்
4.ஆத்ம ஐக்கியக் கூட்டு வழிமுறை தியானச் செயலில் ஞானவிளக்கப் போதனை நிலைகளை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
5.மனித சக்திகளைத் தெய்வ சக்தியாக்குங்கள் ஒவ்வொருவருமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எனக்குள் (ஞானகுரு) இருளச் செய்து கொண்டிருக்கும் உணர்வுகளை நான் அறிந்திடும் வண்ணமாக குருநாதர்… அவருக்குள் அறிந்திடும் சக்தியாக வளர்த்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகளைச் சொல்வாக்காக எனக்குள் பதிவு செய்தார்.

அவர் கொடுக்கும் அந்த அருள் சக்திகள் எவ்வாறு இயங்குகின்றது…? என்று எனக்கு உணர்த்தி… அந்த அருள் ஞான வித்துக்களை எனக்குள் குருநாதர் விளையச் செய்திருந்தாலும்
1.என்னுடைய மனித வாழ்க்கையில் நான் ஏற்கனவே வளர்த்துக் கொண்ட உணர்வுகள்
2.அவர் கொடுத்த அருள் சக்தியை நான் அறிய முடியாது இயக்கி
3.மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே மங்கச் செய்து கொண்டு வந்தது.

காரணம்… ஒரு பொருளுடன் நஞ்சு இணைந்து விட்டால் மீண்டும் அதில் எந்தப் பொருளைப் போட்டாலும் அதுவும் நஞ்சின் செயலாகவே மாறிக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துவதற்காக எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

என்னுடைய இந்த மனித வாழ்க்கையில்
1.நான் வளர்த்துக் கொண்ட ஆசைகள் கொண்டும்
2.எனக்குள் மதிப்பைத் தேட வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டும்
3.சுய கௌரவத்தை மனதில் வைத்துக் கொண்டும் நான் இயக்கப்படும் போது
4.அடுத்தவர்கள் என்னை ஏளனமாகப் பேசுகின்றனர்
5.பைத்தியக்காரனுடன் (ஈஸ்வரபட்டர்) சுற்றிக் கொண்டிருக்கிறான்
6.பிழைக்கத் தெரியாதவன் என்று இழிவான பேச்சுகளாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் எங்கே போனாலும் சரி… என் நண்பனே என்னால் அவன் சௌகரியப்பட்டிருந்தாலும் கூட “பைத்தியக்காரன்…” என்று என் கண் முன்னாடியே என்னைப் பேசுகிறான்.

தெரிந்தவர்கள் என்று ஒரு கடையிலே போய் உட்கார்ந்தாலும் கூட பைத்தியத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்… நீயும் ஒரு பைத்தியம்… நீ இங்கே உட்கார்ந்தால் தரித்திரம் பிடித்துவிடும்… போ…! என்று விரட்டி விட்ட நண்பர்களும் உண்டு.

குருநாதரோ… மிகப்பெரிய சக்திகளை எனக்குக் காட்டி அது எவ்வாறெல்லாம் விளைகிறது…? என்ற நிலையையும் பல அற்புதங்களையும் என்னையே செய்யச் சொல்கிறார். அற்புதங்களை என்னை நேரடியாகவே காணச் செய்கிறார்.

அதை எல்லாம் செய்து “பொருளை அறியும் ஆற்றலும்…” அறிந்தபின் அது உருபெற்று அதனால் வாழ்க்கைக்கு எவ்வளவு லாபங்கள் (பணம்) வரும் என்று இந்த உடலின் தன்மையிலேயும் ஆசையை ஊட்டுகிறார்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருள் ஆற்றலைப் பெற்று இந்த உடலில் வந்த இருளை நீக்கிப் “பெரும் செல்வமான பேரானந்த நிலைகள் எவ்வாறு பெறலாம்…?” என்ற நிலையைக் குருநாதர் காட்டினாலும்
1.அவர் கொடுக்கும் சக்திகளை வைத்து
2.இந்த மனித வாழ்க்கையில் என்னை நீங்கள் மதிக்க வேண்டும்
3.எல்லோரும் என்னைப் போற்ற வேண்டும்… என்னைச் செல்வந்தனாக மதிக்க வேண்டும்
4.எனக்குள் பெரும் சக்தி இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் எனக்கு அதிகமாக வந்தது

ஆக… ஒரு பக்கம் பேரும் வரும்… புகழும் வரும்… காசும் வரும்… மகிழ்ச்சியும் ஊட்டுவார். ஆனால் என் வீட்டிற்குள் வந்தால் கடும் தரித்திர நிலையைக் காட்டுவார்.

அப்போது தான் ஒன்றைச் சொல்வார்…!

எதன் வழிகளிலே நீ தேடினாலும் அது இருள் சூழ்ந்த நிலைக்கே இந்த உடலின் பற்றுக்கே வருகிறது. உடலின் பற்றுக்கு வந்தால் நான் கொடுத்த பெரும் சக்திகள் மறைந்து விடும். இருளைப் போக்கும் நிலையை அறுத்துவிடும் என்றார்.

அதே நேரத்தில் இன்னொன்றையும் காட்டுகின்றார் குருநாதர்.

பூமியில் இருந்து மனிதனாகப் பிறந்த நீ
1.இந்த உடலை விட்டு எவ்வாறு வெளியே செல்ல வேண்டும்…?
2.சென்றபின் எந்த நிலையில் நீ நிலைத்திருக்க வேண்டும்…? என்று அதையும் ஒரு பக்கம் காட்டுகின்றார்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரியச் செய்கிறார்…
2.ஒளியின் சுடரைக் காட்டுகின்றார்…
3.ஒளியின் சுடராக ஆனபின் அது எந்த நிலையில் இருக்கும்…? என்று
4.இந்த உடலை விட்டுச் சென்றபின் அதையும் நிலைத்துக் காட்டுகின்றார்.

ஒரு பக்கம் ஆசையை ஊட்டுகின்றார். மற்றொரு பக்கம் துன்பத்தையும் கொடுக்கின்றார். இதில் என்ன செய்வதென்றே ஒன்றும் புரியவில்லை.

குருநாதர் பித்தனைப் போன்று இருந்த மாதிரி
1.இதைப் பிடிப்பதா… அல்லது அதைப் பிடிப்பதா…!
2.அல்லது அவர் சொன்னதைப் பிடிப்பதா…? என்ற நிலை எனக்கு வருகின்றது.

அவர் கொடுக்கும் சக்திகளை நான் சரி வரப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல சந்தர்ப்பங்களில் இப்படி அனுபவத்தைக் காட்டி எனக்குள் தெளிந்து தெரியும்படி செய்தார்.

அதிலே முழுமை பெற்ற உணர்வுகளை… உயிருடன் ஒன்றி ஒளியாகப் பெறும் ஆற்றலைத் தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நன்றாகத் தான் இருப்பீர்கள். ஒன்றுக்கும் ஆகாதவன் யாராவது வந்து “நீ என்னய்யா செய்துவிடுவாய்…?” என்பான்.

கேட்டவுடனே “உன்னைத் தொலைத்து விடுகிறேன்…” என்று மனதில் வேகம் வரும். “இவனுக்குக் குசும்பைப் பார்….” என்போம். இப்படி உணர்ச்சி வசப்படும் நிலை வந்து விடுகிறது. அப்பொழுது என்ன செய்கின்றோம்…?

1.அவன் சொல்லக்கூடிய நிலைகளில் அகம் (நான்) என்ற அலைகளில் நாமும் சிக்கி
2.அவனை அழித்து விட வேண்டும் என்றே நினைப்போம்.
3.அதற்குண்டான முயற்சிகளை எல்லாம் எடுத்துக் கொண்டே இருப்போம்
4.அவனை அழித்து விட வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வந்து நம்மை அழித்துவிடும்.
5.நாம் சேர்த்து வைத்த செல்வத்திற்கு வேலை வந்துவிடும்.

செல்வத்தைச் சேமிக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் மேலே சொன்ன மாதிரி “அடுத்தவனை அழிக்க வேண்டும்…” என்று கோர்ட்டு… கேஸ்… சாப்பாடு… அது இது என்று பணத்தை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு
1.என்றைக்கு இதிலிருந்து விடுபடப் போகின்றோமோ…? தெரியவில்லை…! என்பார்கள்.
2.இப்படித்தான் அந்தப் பணம் காணாமல் போகும்.

இவருக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் ஆதரிப்பார்கள் ஆனால் பணம் எல்லாம் போய்க் கொண்டே இருக்கும் சம்பாதித்த பணம் காணாமல் போய்விடும். இந்த அலைகளில் சிக்கி விடுகின்றோம்.

அதே போன்று குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருப்பார்கள். ஒரு பையன் சொன்னபடி ஏதாவது கேட்காது இருப்பான்.
1.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்…
2.இவனுக்குச் சொத்தே கொடுக்கக் கூடாது… என்று மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள்.

“நல்லவனாக நடக்க வேண்டும்” என்று அவன் வந்தாலும் கூட “தொலைந்து போகிறவன் எங்கேயோ போடா… ஒரு காசு கூட உனக்குக் கிடையாது…!” என்று சொல்வோம். இந்த அலைகளில் சிக்கி விடுவோம்.

அவன் மேல் முதலில் பாச அலையாக இருக்கின்றோம். திடீரென்று வெறுப்பலை வந்துவிட்டால் அதில் மூழ்கி விடுகின்றோம்.

இவனை எண்ணி இங்கே மூழ்கினாலும் மற்ற பிள்ளைகளிடமும் அதைப் பேசுவோம். டேய்… அவனை மாதிரி யாரும் ஆகிவிடாதீர்கள்…! என்போம். இந்த அலைகள் அங்கேயும் போய் மோதும்.

என்னுடைய அப்பா எப்பொழுது பார்த்தாலும் அவனை வைத்துக் கொண்டு என்னையும் சும்மா ஜாடை பேசிக் கொண்டே இருக்கிறார் என்று அடுத்த பிள்ளையும் சொல்ல ஆரம்பிப்பான். அங்கேயும் வெறுப்பலைகளில் சிக்கிக் கொள்வோம்… அதிலேயும் மூழ்கிவிடுவோம்.

1.எதை எதைச் சம்பாரிக்க வேண்டும்…?
2.எப்படி எல்லாம் நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டும்…?
3.தான் உயர்வாக எப்படி வர வேண்டும்…?
4.எல்லோரும் என்னை எப்படிக் கௌரவமாக மதிக்க வேண்டும்… போற்ற வேண்டும்…? என்ற
4.பல வகையான எண்ணங்களில் இந்த அலைகளில் சிக்கிக் கொண்டு அப்படியே தத்தளித்துக் கொண்டிருப்போம்…”

எத்தனை சம்பாரித்து வைத்து என்ன பலன்…? இந்த மாதிரிச் செய்கின்றார்களே…! என்று வருவோர் போவோர் அனைவரிடமும் இந்தக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்போம்.

இந்த அலைகளில் தான் மூழ்கிக் கொண்டிருப்போம். மீட்கும் நிலையோ மீளும் வழியோ இல்லாது தத்தளித்துக் கொண்டிருப்போம்.

நிறையக் குடும்பங்களில் இப்படித்தான் இருக்கும். மனிதனுடைய வாழ்க்கையில் மீளாத் துயரத்தில் இப்படிச் சுழன்று கொண்டு இருக்கிறோம்.

காரணம்… உயர்ந்த சரக்குகளை எடுத்து அதிலே நஞ்சினைக் கலந்து விட்டால் நஞ்சின் செயலாக்கம் எவ்வாறு இருக்குமோ… அதைப் போன்றுதான் மனிதனுடைய வாழ்க்கையில்
1.உயர்ந்த குணங்களைக் கொண்டோர் அனைவரும்
2.வாழ்க்கையில் எத்தனையோ அலைகளில் சிக்கி… புயலில் சிக்கி விடுகின்றோம்.

உதாரணமாக ஒரு புயல் அடித்தால் அது சுழன்று பெரும் நிலைகளாகப் பரவி எல்லாவற்றையும் அழித்துச் செல்கின்றது. புயல் ஓய்ந்த பின் பார்த்தோம் என்றால் எதையும் காணவில்லை… அடித்துச் சென்றுவிடுகிறது.

இதைப் போல மனிதனின் உணர்வில் (வாழ்க்கையில்) பெரும் புயல் வீச ஆரம்பித்தால் என்ன ஆகும்…? என்ன வாழ்க்கை…? என்ற நிலையில் கொண்டு தனக்குள் அனைத்தும் இருள் சூழச் செய்து கடைசியில் தற்கொலைக்கே அழைத்துச் செல்கின்றது.

அத்துடன் நமக்குள் வளர்த்த ஆசைகள் அனைத்தும் அழிந்து விடுகிறது. அந்தப் புயலின் நிலைகளில் சிக்கும் பொழுது நமக்குள் என்னென்ன ஆசைகள் இருந்ததோ அது அனைத்தையும் நொறுக்கிவிடுகிறது.

ஆகவே
1.நமக்குள் தீமை செய்து கொண்டிருக்கும்
2.அது போன்ற அலைகளைப் பிளக்கும் தன்மை வரவேண்டும்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழிகள் கொண்டு நம் எல்லையை வகுப்போம்.

மகரிஷிகள் அனைவரும் எத்தகைய இருளையும் ஒளியாக மாற்றிக் கொண்டு உள்ளார்கள் பேரானந்தப் பெரு வாழ்வு என்ற நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலாமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டே உள்ளார்கள்.

அந்த அருள் ஞானிகள் சென்றடைந்த எல்லையை நாம் அனைவரும் அடைவோம்.

ஏவல்

 

உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண்ணுலகம் (சப்தரிஷி மண்டலம்) ஏற்ற சக்தி தேவை. விண் செலுத்தி விட்டால்
1.அவர்கள் விண் சென்ற பின் அந்த விண்ணினுடைய ஆற்றலை
2.அவர்கள் துணை கொண்டு அருள் ஞானிகளின் உணர்வை எளிதில் பெறலாம்.
3.நம்மை அறியாத வந்த தீமைகளைச் சுட்டுப் பொசுக்க முடியும்.

இது தான் உண்மையான தியானம்.

இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைக் கவரும் நிலைக்கே “உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்ததும் வசியப்படுத்தியதும்…”.

நீங்கள் ஏக்கத்துடன் இருக்கப்படும் பொழுது அந்த அருள் மகரிஷிகள் போதித்த உணர்வையே உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

1.இந்த உணர்வின் தன்மை கூடும் பொழுது அந்த ஞானிகள் உணர்வைக் கைவல்யப்படுத்த முடியும்
2.உங்களுக்குள் அந்த வசியப்படுத்தும் நிலையாக உற்று நோக்கிய உணர்வுகள்
2.அந்த ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பதிவான பின் வசியம்.
3.அதே சமயத்தில் நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது அது கைவல்யம்…
4.தனக்குள் அந்தச் சக்தியைச் சேர்த்திட முடியும்… பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல்…!
5.யாரைப் பார்த்தாலும் தீமைகள் அகன்றுவிடும் என்று சொல்லால் சொல்லி ஏவல்படுத்தும் பொழுது அங்கிருக்கக்கூடிய தீமைகள் ஒடுங்கும்.

இதைப் பெற வேண்டும் என்றால் வலிமை கொண்டு ஒன்று சேர்ந்து மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

ஒரு தேரைப் பல நூறு பேர் சேர்ந்து இழுத்து எல்லையைச் சேர்ப்பது போன்று பல ஆயிரம் பேர் சேர்ந்து ஒருக்கிணைந்து இயக்குவோம் என்றால் நமக்கு முன் பரவிக் கிடக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அவரவர்கள் எண்ணி ஏங்கிய பங்கின் விகிதாச்சாரப்படி ஆன்மாவிலே கலக்கும்.

இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வரும் பொழுது தான் கைவல்யமாகும்.

1.முதலில் வசியப்படுத்தும் நிலைக்கே உங்களைத் தயார் செய்கின்றேன்… அதற்கு உபதேசம்.
2.பின் அதனின் உணர்வின் தன்மை ஏங்கப்படும் பொழுது கைவல்யம் உங்களுக்குள் அந்த சக்தியின் தன்மை பெருகுகின்றது.
3.பின் அந்த தீமையை அகற்றும் உணர்வின் தன்மை கொண்டு நினைவால் சொல்லால் ஏவல்…! தீமைகளை அகற்ற முடியும்…!

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள். எனது குருநாதர் அதைத்தான் கொடுத்தார்

தயவு செய்து இந்த உபதேசத்தைக் கேட்டுணர்வோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்னை அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் கேட்டு பழகுங்கள்.

எதை எண்ணி ஏங்கிக் கேட்கின்றீர்களோ கேட்டுணர்ந்த உணர்வுகள் நீங்கள் எண்ணும் பொழுது
1.நான் கொடுக்கும் வாக்கு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி
2.அந்த நினைவின் ஆற்றல் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளையும்.
3.பல முறை நான் இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆண் பாதி… பெண் பாதி – “சிவ சக்தி…”

 

ஆண் பெண் இன விருத்தியில் ஆணின் அமில சத்தின் பெண் ஈர்ப்பு ஜீவ நிலையில் சரீர வாழ்க்கை திருமண பந்த சொந்தத்தால் மனிதனின் வம்சத் தொடர் மக்கள் செல்வ நிலை பெற்று வாழும் வழித் தொடர் பூமிப் பிடிப்புச் செயலுடன் ஒன்றிய வாழ்க்கையாக உள்ளது.

இதனை ஒத்த பிறப்பு வளர்ப்பு இறப்புடன் ஒன்றிய சுழற்சியையே எப்படி இரண்டு இரண்டு உறுப்புகளின் உருவ உடல் ஞான ஒன்றிச் செயல்படுகின்றதோ அதற்கொத்த தன்மை போன்றே
1.ஆண் இன அமில ஆத்ம அலையும்
2.பெண் இன ஜீவ வளர்ப்புக்குகந்த ஆத்ம அலையும் ஒன்றாக
3.இரண்டு ஜீவ சரீர பிம்ப ஆத்மாக்களின் தொடர்பு பிறப்பு சிசு பிறப்பதைப் போன்று
4.வலுக் கொண்ட ஆத்ம இணைப்பின் தொடரில் பிறக்கும் நிலைதான் “அர்த்தநாரீஸ்வரர்” என்று காட்டினார்கள்.

ஆண் பாதி… பெண் பாதி… “சிவ சக்தி…” என்றுணர்த்திய தெய்வ நிலையில் வழிகாட்டிய உண்மைத் தத்துவ விளக்க நிலைக்கொத்த… ஆத்ம ஐக்கியத்தில் பிறக்கப்படும் வளர்ச்சி நிலை சுழற்சியுடன்… இச்சுழற்சியுடன் ஒத்த ஆத்ம தொடர் கொண்டோரின் ஈர்ப்பு நிலை மகவுகளை சரீரப் பிறப்பில் சரீர சிசு வளர்வதைப் போன்று… ஆத்மாவினால் ஆண் பெண் இன ஆத்ம உயர் சக்தியைக் கொண்டு கூட்டமைப்பின் ஞானச் சித்தால் “ரிஷி பத்தினி..” என்ற ஒளி நிலை பெறும் ஆத்ம சக்தியைக் கொண்டு “இந்தப் பூமி மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மண்டலங்களுக்கும் உயர்வைக் காட்டிட முடியும்…”

ஞானச் சித்து கொண்டு “இரண்டு ஆத்ம ஐக்கியத்தில் ஒன்றானவர்கள்…”
1.உயர்வு கொள்ளாத் தனித்த நிலையில்
2.சித்து நிலையுடன் வளர்ச்சி பெற முடியா உயர் சக்தி கொண்ட தொடர்புகளும்
3.ஆத்ம இணக்க ஆண் பெண் சரீர இயக்கமுடன் ஒத்த நிலையில்
4.சித்து நிலை கொள்ளக்கூடிய ஜீவ சக்தித் தொடர்புடன் வளரும் ஆத்ம ஐக்கிய வளர் சக்தியின் கூட்டமைப்பில்
5.அந்த வலுவாகும் சக்திகள் ஐக்கியம் கொள்ளும்… தன் வளர்ப்பின் நிலைக்காக…!

பல கோடி உண்மைத் தத்துவ உயர் வளர்ச்சி “இன்பத்தின் கோடி…” என்று உணர்த்துகின்றார்களே அத் தொடருக்கும் உயர்ந்த சக்தி நிலைகளை இச்சரீர வாழ்க்கை பந்த ஆண் பெண் ஆத்ம வலுவைக் கொண்டு உயர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவோம்… என்றுமே ஏகாந்தமாக வாழ்வோம்

தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்தால் அதை மடியச் செய்யும் சக்தியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும். அதை நீங்கள் எளிதில் பெறலாம்.

நான் (ஞானகுரு) சிரமப்பட்டேன்… பார்த்தேன்… குருநாதர் அருளால் எல்லாவற்றையும் தெரிய முடிந்தது.
1.தீமையான உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயல்படுகிறது…? என்று முதலில் காட்டினார்.
2.பின் அந்தத் தீமையை நீக்கும் வழியையும் காட்டினார்.

அதைப் போன்றுதான் வாழ்க்கையில் நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உங்கள் உடலுக்குள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை உணர முடியும்.

தீமை என்று உணர்ந்தவுடனே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து “அதை மாற்றிக் கொள்ளும் சக்தி” உங்களுக்கு வர வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் பெறக் கூடிய தகுதிக்குத் தான் இதை ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

உதாரணமாக…
1.செல்ஃபோன்களில் எதை எதையெல்லாம் பதிவு செய்கின்றோமோ அதை மீண்டும் திரும்பப் பார்க்க முடிகின்றது….
2.பதிவானதை இன்னொருவருக்குச் செலுத்தவும் முடிகின்றது.

இதைப் போன்றுதான் கேட்ட… பார்த்த உணர்வுகள் எல்லாமே நம் உடலில் எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

தீமை என்று பதிவானால் அந்த உணர்வு தனித்து இயங்காதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதற்கு அருகிலேயே இதைப் பதிவாக்க வேண்டும்.

காரணம்… துருவ நட்சத்திரத்தின் சக்தி அதைக் காட்டிலும் வலுவானது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுத்துக் கொண்ட பின் அடுத்து
1.அவன் நல்லவனாக வேண்டும் நல்லது செய்ய வேண்டும்
2.நல் வழி வர வேண்டும்… உலகம் நலம் பெற வேண்டும் என்று
3.நாம் இதைப் பதிவாக்கிக் கொண்டால் அதைச் சுற்றி “பெரிய வட்டமாக…” மாறி விடுகின்றது.

ஒரு குழம்பை வைக்கிறோம் என்றால் பல பொருட்களைச் சேர்க்கின்றோம். அதில் எந்தப் பொருள் அதிகமோ அதன் சுவை தான் முன்னணியில் வருகின்றது.

இதைப் போன்று அந்த அருள் ஞானிகள் உணர்வை நாம் சிந்திக்கும் உணர்வுகளுக்குள் கலந்து விட்டால்… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக வளரத் தொடங்கும்.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் இதைப் பார்க்கலாம்.

இரவில் படுத்துத் தூங்கும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே உறங்கச் செல்லுங்கள்.

காலையில் எழுந்ததும்… கண் விழித்ததும் இதே நிலைகளைச் செயல்படுத்துங்கள். அதற்குப் பின் மற்ற காரியங்களைச் செயல்படுத்துங்கள்.

எந்தக் காரியத்தை ஆரம்பிக்கும் முன்பும் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சுருக்கமாக இப்படிச் சொல்லிக் கொண்டு வரலாம்.

1.வெளியில் செல்லும் பொழுதும்
2.தொழிலுக்குச் செல்லும் பொழுதும்
3.வீட்டிற்கு வந்தாலும் அமைதியாக இருக்கும் போதும் இதைச் செய்யலாம்
4.எந்தச் சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.
5.காற்று மண்டலத்தில் விஷத் தன்மைகள் நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
6.பேரின்ப வாழ்க்கையாக உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மையாக நாம் மாறுவோம்.

மனிதனாகத் தோன்றிய பின் உயிர் என்ற நிலையில் அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டால் கார்த்திகேயா… அந்த வெளிச்சத்தின் உணர்வாக மதி கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.

ஆகவே ஒளி என்ற மதி கொண்டு நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும். அதைப் பெற்று உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை நாம் அடைவோம்… என்றுமே ஏகாந்தமாக வாழ்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நோய் எல்லாம் போய்விடும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று யாம் (ஞானகுரு) சொன்னால் எங்கெங்கே…? என்று அதைத்தான் திருப்பிக் கேட்கிறார்கள்.
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கிறது… என்று சொல்வார்கள். “அது எல்லாம் நீங்கிப் போய்விடும்… நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள்…” என்று யாம் சொல்வோம்.
3.நீங்கள் சொல்கிறீர்கள்… என் பையன் எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான்…! என்று சொல்லி
4.யாம் கொடுக்கும் வாக்கினை… அப்பொழுதே அதை ஜீவனற்றதாக மாற்றி விடுகின்றார்கள்.

எவ்வளவோ சிரமப்பட்டுத் “தந்திரமாக…” உங்கள் உடலிலே அருள் உணர்வைப் பாய்ச்சி… அருள் ஞான வித்தை உங்களுக்குள் தங்க வைக்க வேண்டும் என்று யாம் முயற்சி செய்கிறோம்.

ஆனால் விளை நிலத்தில் விதைத்த விதைகளை எறும்புகள் எடுத்துச் சென்று எப்படி முளைக்காமல் செய்து விடுகின்றதோ… அதைப் போல்
1.உங்கள் உடலில் ஏற்கனவே பதிந்த சாப அலைகள் நின்று
2.யாம் கொடுக்கும் உபதேச உணர்வுகளை ஆழமாகப் பதிய விடாதபடி அது தடுத்து விடுகிறது.

எம்மிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள். பின் ஊருக்குப் போய் வருகிறேன் என்பார்கள். ஆனால் அடுத்த கணம் என்னுடைய கஷ்டம் இப்படியெல்லாம் இருந்து கொண்டே இருக்கிறதே என்று திருப்பி
1.நான் கொடுத்த வாக்குகளை விட்டுவிட்டு… கஷ்டத்தைத் தான் எடுத்துக் கொண்டு செல்கின்றார்கள்
2.நான் கொடுத்த அருள் வாக்கை இங்கேயே விட்டுவிட்டு கஷ்டத்தைத் தான் வாங்கிச் செல்கின்றார்கள்.

காரணம் இந்த சாப அலைகளே இதற்கு மூலம் ஆகின்றது. அவருடைய குறை அல்ல. ஆகவே நான் உங்களைக் குறையாக எண்ணவில்லை.

முந்தைய நிலையில் உங்களுக்குள் விளைந்த உணர்வுகள் உங்களை அறியாது எப்படி எல்லாம் இயக்குகின்றது…? அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும்…? என்பதைத்தான் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உங்கள் வீட்டில் ஒருவர் சொன்னபடி கேட்கவில்லை என்றால் உங்கள் மனது எப்படிச் செல்கின்றது…? நன்றாக இருக்க வேண்டும் என்று ஒருவருக்கு எல்லா உதவியும் செய்து கொடுக்கின்றீர்கள். ஆனால் அவரால் அதைச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை என்றால் உங்கள் மனது அது எப்படி ஆகின்றது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் எண்ணிலடங்காத பேர் என்னிடம் வாக்கினை வாங்கிச் செல்கிறார்கள். நீங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று குருநாதர் கொடுத்த நிலைகளை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

என்னை எத்தனையோ ஆபத்தான நிலையில் எல்லாம் குருநாதர் சிக்க வைத்தார். ஒவ்வொரு நொடியிலும் அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்குள் எப்படி இயங்குகின்றது…? நீ எப்படி இருக்க வேண்டும்…? என்று
1.மூன்று லட்சம் பேரின் குடும்ப நிலைகளைக் காட்டி
2.மனித உடலிலே மாய வாழ்வாகத் தான் இருக்கின்றது
3.இதில் நீ எதைக் காணப் போகின்றாய்…? என்றார்

என்றும் நிலையான நிலைகளில் இருக்கும் மகரிஷிகளின் எல்லையை நீ எப்படி அடைய வேண்டும்…? என்று தெளிவாகச் சொன்னார். இதை எல்லாம் அனுபவ ரீதியில் குருநாதர் காட்டுகின்றார்.

நம்முடைய கடைசி எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான். அவர்கள் ஒளிச் சரீரம் பெற்று வாழும் சப்தரிஷி மண்டல எல்லையில் தான் நாம் இருக்க வேண்டும்.. அதைத் தான் பின்பற்ற வேண்டும்…! என்று குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

உலகை அழிவிலிருந்து காக்கும் பித்தராகிய குருநாதர் என்னிடம் சொன்னது

 

“உலகை அழிவிலிருந்து காக்கும்” அன்று பித்தனைப் போன்று இருந்த எமது குருநாதர் பல நிலைகளை எமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.அந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு மனிதனாக உருவாக்கிய நற்குணத்தினை நீ தெய்வமாக மதி.
2.உயர்ந்த உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய்தால்… உனக்குள் அது விளையும்.
3.அந்த உணர்வின் சொல்லாக அந்தக் கடவுளுக்கு மகிழ்ச்சியான உணர்வு கொண்டு ஆராதனை செய் என்றார்.

ஆகவே… உங்கள் உயிரைக் கடவுளாகக் காட்டினார்… உடலைக் கடவுள் அமைத்த கோட்டை என்று காட்டினார். மனிதனாக உருவாக்கிய அந்த உயர்ந்த உணர்வின் ஆக்கச் செயல்களை தெய்வமாக மதிக்கச் சொன்னார். அதைத்தான் உங்களில் நான் பார்க்கின்றேன்.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் உங்களை அறியாது சேர்ந்த இன்னல்களில் இருந்து மீண்டு “மகிழ்ச்சி…” என்று வாயில் எப்பொழுது சொல்கின்றீர்களோ அது தான் எனக்குப் பேரானந்தப் பெருநிலையான அந்த சொத்தின் தன்மையாக அந்த மகிழ்ச்சி எனக்குள் விளையும்.

தீமைகள் சுழன்று கொண்டிருக்கும் இந்த வேளையில் அதிலிருந்து விடுபட நான் (குருநாதர்) காட்டிய அருள் சக்தியை
1.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவச் செய்து
2.அங்கே உட்புகுந்த தீமைகளை நீக்கச் செய்து
3.மகிழ்ந்திடும் உணர்வின் எண்ன அலைகள் அங்கே விளையச் செய்து
4.அவர்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் ஒலிபரப்பும் நிலைகளைக் கண்டு நீ ஆனந்தப்பட வேண்டும்.

அதைத்தான் குரு எமக்குச் சொன்னார்.

ஒருவர் நமக்கு எதிரியாகி விட்டால் அவன் வேதனைப்பட வேண்டும் அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… நமக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தான்… அவன் கஷ்டப்பட்டுத் தான் ஆக வேண்டும் என்று ரசிப்பார்கள்.

இப்படி ரசிப்பவருடைய நிலைகள்… தன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை எல்லாம் நஞ்சின் தன்மையாக அது அடையச் செய்துவிடும்.

பின் இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது எந்த நஞ்சு இங்கே விளைந்ததோ மனிதன் சிந்தனை இழக்கப்பட்டு இறந்த பின் பாம்பின் ரூபமாகத்தான் நஞ்சினைப் பாய்ச்சி மற்றதை ரசித்துச் சாப்பிடும் நிலையாகச் செல்ல வேண்டி வரும். நஞ்சுகள் கூடி பாம்பினமாகத் தான் பிறக்க வேண்டும்…
1.அதிலே நீ சென்று விடாதே
2.நஞ்சினை நீக்கி அருள் ஞானிகள் உணர்வுகள் அங்கே பெற வேண்டும் என்று நீ தியானி.
3.அதனின் உணர்வின் தன்மை ஒளியான உணர்வுகளைப் பரப்பு தீமைகளைப் போக்கு அதைக் கண்டு நீ மகிழ்ச்சி பெறு.

குருநாதர் சொன்னது இது தான்.

பித்தனைப் போன்று தான் அவர் இருந்தார். உலகம் அனைத்தும் “அவரைப் பித்தன்” என்று எண்ணினார்கள். ஆனால் “உலக மக்கள் பித்தராக இருக்கிறார்கள்” என்று தான் அவர் சொன்னார்.

உலகம் பித்தின் நிலையில் இருந்து தன்னை அறியாது பல சித்தின் நிலைகள் கொண்டு… அவரவர்கள் உற்பத்தியாகும் நிலை தான் இவ்வாறு உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்… அதிலிருந்து நீ மீள வேண்டும்.

என்னைப் பித்தன் என்று சொல்பவர்கள் அவர்கள் தன்னைப் பித்தன் என்பதை மறந்து விட்டார்கள்.
1.அந்தப் பித்து கொண்ட உணர்வின் தன்மை எனக்குள் எட்டிடாது
2.அந்த மகரிஷிகள் உணர்வை ஒன்றே எனக்குப் போதும் என்று
3.இந்தச் சாக்கடைக்கு மொழி பூச வேண்டாம்… உடல் சாக்கடை என்று உணர்த்திவிட்டு
4.சாக்கடை அருகில் இருந்து தான் இந்த உபதேசங்களை உணர்த்தினார்.

இந்தச் சாக்கடைக்கு முக்கியத்துவம் கொடுக்காதே…! எதை எடுத்தாலும் சாக்கடை கழிவுகள் சேரும். ஆகவே… உயிராக இயக்கப்பட்ட உணர்வின் ஒளியின் தன்மை கொண்டு ஒளியின் சுடராக ஆக வேண்டும்.

வராகன் எப்படி நாற்றத்தைப் பிளந்து சாக்கடைக்குள்ளிருந்து நல்ல உணர்வை எடுத்து மனிதனாக உருவாகக் காரணமானதோ அதைப் போல் அந்த மெய் ஞானிகள் உணர்வை நீ நுகர்ந்து (உனக்குள்) சாக்கடைக்குள் மறைந்து இருக்கும் உயிரின் நிலைகள் கொண்டு அவனுடன் நீ ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு என்றும் நீ வாழ வேண்டும்.

அதை நீ பெற வேண்டும் என்றால் நீ சந்திக்கும் கோடானு கோடி மக்களும் அதாவது முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்… ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலைச் சிருஷ்டித்தது ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு குணத்தின் அடிப்படையில் இயக்குகின்றது
1.யாராக இருந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் ஒருக்கச் சேர்ந்து ஒளியின் சரீரமாகப் பெற வேண்டும்.
2.அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் பெற வேண்டும்… ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்
3.அங்கே மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி நான் உனக்குக் காட்டிய நிலைகள் கொண்டு நீ தியானி.

அதை நீ செய்தால் நீ அதுவாகின்றாய்… ஒளியின் சரீரமாகின்றாய். உன்னைப் பார்ப்பவர்களும் உன்னுடன் அவரும் ஒளியாக ஆகின்றார்கள் என்று இப்படித்தான் எனக்கு வழி காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

தீயதில் இருந்து “நல் முத்தை” எடுக்கும் வழி

 

உலக வாழ்க்கை… பந்த… கர்ம… காரியங்கள் நடத்திட…
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடி… விழுதின் மூலம் சத்தை எடுத்து அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் “நம் உயர்வின் வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாக” அமைக்க வேண்டும்.

1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல்
2.தீயதில் இருந்து தான் “நல் முத்தை” எடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணதின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.

மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்… நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்த… அலை உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.

ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் – இருட்டில் இருந்து ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை
4.ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.

இத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் நாம் எப்படி முயற்சிக்க வேண்டும்…?

அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் “நடை” போடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல் கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களை… ஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை போன்றும் இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான் காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.

ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி…
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாகக் காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவி… சுவாசம்… “இவற்றின் இணைப்பு” இந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல…!

1.“சிவம்” என்ற அமிலமும்..
2.“சக்தி” என்ற ஈர்ப்பும்…
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த “ஆண் பெண் அமில உணர்வு” வளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை (ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான உலகில் உருவான நச்சுத் தன்மைகள் மனிதனுடைய சிந்தனைகள் முழுமையாக அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியினை எடுத்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

1.உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளப் பத்திரிக்கையையோ டி.வியையோ பார்த்தாலும் போர் முறை தான்
2.வீட்டிலே பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை என்றால் போர் முறை தான்
3.வியாபாரம் செய்யும் இடத்திலும் கொடுக்கல் வாங்கலில் போர் நடக்கின்றது

இப்படி ஒவ்வொரு இடத்திலும் சங்கடம் சலிப்பு கோபம் ஆத்திரம் என்று நாம் எடுத்துக் கொள்ளும் போது அங்கே போர் நடக்கின்றது. கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை என்றால் வேதனை வருகிறது.

அந்த வேதனையான உணர்வுகளுக்கும் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கும் போர் முறையாகி அம்மா… அப்பா… என்று மேல் வலி.. இடுப்பு வலி.. கை கால் வலி… என்று உடலுக்குள் மகாபாரதப் போர் நடக்கின்றது.

உடலுக்குள் நடக்கும் இத்தகைய போரிலிருந்து மீளும் நிலையில்லாது இருக்கும் இதற்கு மாற்றாக நாம் குருக்ஷேத்திரப் போரை நடத்தியே தீர வேண்டும்.

உயிர் தான் நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கிறது. உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாகவும் இருக்கின்றது. ஆகவே
1.புருவ மத்தியில் உயிரான குரு இருக்கும் அந்தச் க்ஷேத்திரத்தில் “குருஷேத்திரப் போராக…”
2.அந்தக் குருவின் (உயிரின்) துணை கொண்டு மெய் ஒளியை நமக்குள் சேர்த்து
3.நமக்குள் இருள் சூழும் நிலையிலிருந்து அந்தப் போரிலே வென்று
4.குருவுடன் ஒன்றி… உயிரைப் போன்று ஒளியாக மாற்றி
5.மெய் ஞானிகள் சென்ற அருள் வழிகளில் நாம் செல்ல வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

குருசேத்திரப் போரை நாம் நடத்த வேண்டும். அந்த பழக்கம் வர வேண்டும். உயிர் குருவை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நமக்குள் வந்த வெறுப்பு கோபம் ஆத்திரம் இவைகளை அகற்றிட வேண்டும்.

காரணம்… தான் வாழ வேண்டும் என்ற ஆசையில் இரக்கமற்ற நிலையில் ஒருத்தரை வீழ்த்திடும் அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சுவாசிக்கப்படும் பொழுது அது நல்ல உணர்வை வீழ்த்தும் தன்மையாக வருகிறது.

அது போன்ற நிலையை அகற்ற குருவிடமே வேண்டி அந்த மெய் வழி சென்ற அந்த மெய் ஞானியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அடிக்கடி ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெறுவோம் என்றால் இந்த குருக்ஷேத்திரப் போரில் விஞ்ஞானத்தை வென்று நாம் அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் விண் செல்ல முடியும்.

நாம் எல்லாம் சாதாரணமான மக்கள் என்று எண்ண வேண்டாம்.

இந்தப் பூமியில் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத் தன்மைகளை வீழ்த்தி மெய் ஞானிகளின் அருள் வித்துக்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்ற ஆசையிலே தான் ஆற்றல்மிக்க வித்தை உங்களுக்குள் விளையச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

வயலைப் பண்டுத்தியது போல் உங்கள் மனதைப் பண்படுத்தி மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியின் வித்தை உங்களுக்குள் விதைக்கச் செய்கின்றேன். அந்த அருள் வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும்.

யாம் பதிவு செய்த ஞான வித்தை வளர்க்க
1.இடைவிடாது குரு அருளை நீங்கள் பெற்று
2.ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் ஒன்றி… அவனுடன் இணைந்து…
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனிடமே வேண்டி
4.உயிர் குருவின் துணை கொண்டு விஞ்ஞான விஷத்தின் தன்மை தனக்குள் இணையாது அதை வீழ்த்தி
5.மெய் வழியில் மெய் ஒளியாகப் பெற்று… சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து
6.கல்கியின் அவதாரமாகப் பறக்கும் நிலை பெற வேண்டும்.

குதிரையைப் போட்டுக் கையிலே வாளைப் போட்டுக் காட்டி இருப்பார்கள். வாளைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன..?

தானியங்கள் மற்ற காய்கறிகளை எல்லாம் வேக வைத்து அதிலிருந்து வரக் கூடிய காரலை நீக்கிவிட்டுப் பக்குவப்படுத்திச் சமைத்துச் சாப்பிடுகின்றோம்.

சுவையான உணவை உட்கொண்டாலும் நம் உடல் அதில் உள்ள விஷத்தைக் கழிவாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகிறது. ஆறாவது அறிவின் செயல் இது.

அந்த நஞ்சுகளை அகற்றுவது போன்றுதான் விஞ்ஞான அறிவினால் வரும் விஷத்தன்மை உடலுக்குள் போவதற்கு முன் உயிரான ஈசனிடம் வேண்டி குருக்ஷேத்திரப் போரை நடத்த வேண்டும்.

1.எப்போது இந்த உடலை விட்டுச் சென்றாலும்
2.இன்னொரு ஆத்மா நம்மைக் கவர்ந்து இழுத்து விடாதபடி அதை வீழ்த்தி (அதற்குத் தான் வாள்)
3.மெய் ஒளியின் தன்மையை விண்ணை நோக்கி அங்கே பறந்து செல்ல வேண்டும்.

பேரண்டத்தில் எண்ணிலடங்காத சூரிய குடும்பங்கள் ஒவ்வொன்றும் அது பல பல நச்சுத் தன்மைகளை உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது. நஞ்சுகள் வந்தாலும் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் அதைத் தன்னுடைய கதிர்வீச்சால் மாய்த்து இங்கே நல்லதாக மாற்றிக் கொடுக்கின்றது.

அதைப்போல
1.நம் உயிராத்மாவின் நிலைகள் அந்த நச்சுத் தன்மைகளை எல்லாம் மாற்றும் ஆற்றலாக
2.தனக்கு தானே அந்த நச்சுத் தன்மையை மாற்றிடும் சக்தியாக
3.உணவுகளைச் சுவைமிக்கதாக ஆக்கி இந்த உடலில் எப்படி மகிழ்ச்சியாகின்றோமோ
4.அதைப் போல ஒளிச் சரீரத்தில் மகிழ்ச்சியாக என்றும் பதினாறாக நீடித்த நாள் வாழ முடியும்

ஆனால் இந்த உடலின் தன்மை “அற்ப நிலை தான்…!” இருந்தாலும் இந்த உடலில் இருக்கும் போது தான் அந்தத் தகுதியை வளர்க்க முடியும்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வலைகளைச் சுவாசித்து… சுவாசித்து…
1.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு பேரண்டத்தில் விண்ணிலே சுழன்று
3.தீயதை வீழ்த்தி உணர்வின் ஒளிச் சுடராக மாற்றி நாம் பேரானந்த நிலை பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞான உலகில் ஏற்படுத்தப்பட்ட கொதிகலன்கள் (விஷக் கதிரியக்கங்கள்) சூரியனால் மாற்ற முடியாது. அது எதை எடுத்ததோ சூரியன் அதன் வளர்ச்சியில் அதைத் தான் மாற்றும்.
1.நம் சூரியன் விஷத்தை முறிக்கும் ஆற்றல் முதலிலே பெற்றிருந்தது
2.ஆனால் இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையான கதிரியக்கங்கள் சூரியனுக்குள் கலக்கப்பட்டு
3.அதை மாற்ற முடியாதபடி அந்த விஷத்தையே மீண்டும் உமிழ்த்தும் தன்மை அதிகரித்து விட்டது.

விஷத்தின் தன்மையை நல்லதாக மாற்றும் நிலைகள் அங்கே மாறுபடும்போது விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட கருவிகள் (சூரியனை மையமாக வைத்து வேலை செய்யும் சாதனங்கள்) நாளடைவில் செயலிழந்துவிடும்.
1.இந்தச் சூரியனும் செயலிழந்துவிடும்
2.சூரியனால் ஈர்க்கப்பட்ட மற்ற கோள்களும் அது திசை மாறிவிடும்.

இத்தகைய விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் வெளிப்படும் பொழுது நமது பூமி அதைக் கவர்ந்தாலோ நம் பூமியிலிருக்கும் மனித இனங்களையும் மாற்றிவிடும்.

இவ்வாறு விஷத் தன்மையாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்தே ஆக வேண்டும்.

காரணம் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்திலிருந்து வரும் எத்தகைய விஷத் தன்மையையும் ஒளியாக மாற்றும் ஆற்றல் கொண்டது.

உதாரணமாக பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பலவிதமான ஜந்துக்களை விழுங்கி அதனுடைய விஷமும் இதனுடைய விஷமும் ஒன்றாகும் போது பாம்பின் உடலில் ஒளி கொண்ட நாகரத்தினமாக மிளிரச் செய்கின்றது.

இதைப் போன்றுதான் எத்தனையோ வகையான விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் நமக்குள் இருப்பினும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து
2.நம் உடலுக்குள் அந்த உணர்வின் அறிவாக மாற்றி அறிவின் ஒளியாக மாற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உயிரைப் போன்றே உணர்வுகளை ஒளியாக மாற்றி எத்தகைய விஷமும் நமக்குள் வராதபடி அதைப் பேரருளாக மாற்றி அந்த ஏகாந்த நிலை என்ற முழுமை அடைய முடியும்.

மின்னல்கள் கடலிலே தாக்கப்பட்டாலும் அது மணலாக மாறுவதை அதற்குள் இருப்பதை விஞ்ஞானிகள் வடிகட்டி கதிரியக்கப் பொறிகளாக மாற்றிப் பல விதமான அணு ஆயுதங்களைத் தயார் செய்துவிட்டார்கள்.
1.உடல் ஆசைக்காக வேண்டி… நாட்டாசைக்காக வேண்டி… உலகையே அழிக்கும் தன்மையாக வந்து விட்டது
2.அதிலே வெளி வந்த கதிரியக்கங்கள் இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

பூமியிலிருந்து பரவும் அந்தக் கதிரியக்கங்களைச் சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இதைக் கவர்ந்து நமது பிரபஞ்சமே கதிரியக்கமாக மாறிக் கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த விளைவால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்துவிட்டது சிறுகச் சிறுக சூரியனும் செயலிழந்து கொண்டிருக்கின்றது… அது செயலிழக்க நம் பூமியும் செயலிழக்கும்.

பூமியில் வாழும் மனிதனும் அசுர உணர்வு கொண்டு ஒருவரை ஒருவரை ஒருவர் கொன்று தின்னும் நிலை வருகின்றது.

சூரியன் உருவாக்கும் அந்தப் பாதரசமே (வெயில்) கருகிய விஷத் தன்மையாக மாறும் தன்மை சூரியனுக்குள்ளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சூரியன் செயலிழக்கும் தன்மையினால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் அதே நிலை அடைகின்றது.

நான் (ஞானகுரு) வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வைப் பதிவாக்கி நீங்கள் நினைவின் தன்மை கொண்டு வந்தால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் தெளிவாக உணர முடியும். சூரியனின் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் உணர முடியும்.

ஆனால் இதிலிருந்து தப்பிய துருவ நட்சத்திரம் என்றும் அழிவதில்லை. எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம்.
1.அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்தி
2.நினைவாற்றலை உங்களுக்குள் கொண்டு வரச்செய்து அந்த நினைவைக் கூட்டி
3.நஞ்சை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் திறனாக உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதிலிருந்து மீட்டிக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே பதிவாக்கும் உணர்வுகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். கூட்டுத் தியானங்கள் இருங்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து இதைச் செயல்படுத்துங்கள்.

அதர்வண வேதம்

 

ரிக் வேதம் சாம வேதம் யஜுர் வேதம் அதர்வண வேதம் – ஒரு பொருளின் நிலைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது
1.ஒன்றை விழுங்கி… அப்போது நாதத்தின் சுருதிகள் மாறுகின்றது.
2.அதனுடைய இனப்பெருக்கம் இனச்சேர்க்கை இனத்தை உருவாக்கும் என்ற நிலைகள் வேதங்களில் இப்படிப் பிரிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் விளைவின் தன்மை பெறப்படும் பொழுது அதர்வண வேதத்தைத் தனியாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

ஒரு புலி மானைப் பார்க்கிறது என்றால் அதனுடைய வேகத்துடிப்புகள்… மான் பார்த்த பின் உடனே அஞ்சி நடுங்க வைக்கின்றது. இது அதர்வண வேதத்தைச் சேர்ந்தது.

புலியின் உணர்வு இதற்குள் சேர்ந்த பின் மான் செயலற்றதாகி அதனைப் புலி விழுங்கி விடுகின்றது. மானின் உணர்வுகள் இயங்காது உயிர் அகன்று வந்த பின் புலி கவர்ந்து கொண்ட பின் தன் இனமாகச் சேர்த்து அதனின் உயிரைத் தன் இனமாக வளர்கின்றது. இதைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதர்வண வேதம் என்ற நிலையில்
1.ஒரு உணர்வின் தன்மை ஒன்றைக் குவித்து உணர்வால் மாற்றப்பட்டு இது வளர்ந்த பின்
2.உயிருடன் இணைந்த பின் இதைக் கொண்டு அது இணைத்துக் கொண்ட
3.அதாவது விழுங்கிய உணர்வின் தன்மை கொண்டு எவ்வாறு ரூபங்கள் மாறுகின்றது…? என்ற நிலையை அதர்வண வேதம் காட்டுகிறது.

வேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் இருக்கலாம். ஆனால் வேதத்தின் நுண்ணிய நிலைகளை அன்று மெய் ஞானிகள் சித்தரித்துக் காட்டினார்களே…!
1.அதனின் உண்மைப் பொருளை இன்று காணாது
2.அதர்வண வேதம் என்ற நிலைகளில் யாகத்தைச் செய்து ஒவ்வொரு தெய்வத்திற்கும் சக்தி ஊட்டுகின்றார்கள்.

யாக வேள்விகளை நாம் பரப்பப்படும் பொழுது அந்த மந்திரங்களைச் சொன்ன பின் இந்தத் தெய்வத்திற்குச் சக்தி ஊட்டப் போகின்றோம் என்ற நிலைகளில் 48 நாட்கள் மந்திரங்களை ஓதுகின்றார்கள்.

அந்த தெய்வத்திற்காகப் பல பொருள்களை இட்டு அவர்கள் சொல்லும் மந்திரங்களும் யாகத் தீயில் போடும் பல மணங்களும் இவையெல்லாம் சேர்த்து சோமபானம் (மது) என்பதையும் ஐதீகத்திற்காக என்று சொல்லி ஊற்றுவார்கள்.

அங்கே அவர்கள் சொல்லும் மந்திரங்களை நாம் கேட்டுணர்ந்தால் இதற்குப் பெயர் வசியம். ஆலயத்தில் உள்ள தெய்வத்திற்கு சக்தியைச் செருகேற்றுகின்றார்கள் என்றால் இப்படிச் சொல்லும் பொழுது மனிதன் இந்த தெய்வம் இன்னது செய்யும் என்று காவியங்களைத் தீட்டுகின்றார்கள்… மந்திரங்களைச் சொல்கிறார்கள் நாம் கேட்டறிகின்றோம்.

அவர்கள் சொல்வதெல்லாம் நமது உயிருக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

மந்திரத்தைச் சொன்ன பின் வாத்தியங்களை வைத்து இசைகளை இசைப்பார்கள். ஒவ்வொரு மேளத்திற்கும் ஒவ்வொரு விதமான நாதங்கள் உண்டு ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வாத்தியங்களை வாசிப்பார்கள்.

1.கருப்பண்ணசாமி மாடசாமி இவர்களுக்கெல்லாம் டும்…டும்…டும்… என்று அடிப்பார்கள்.
2.அப்படி அடித்தாலே போதும் தன்னை அறியாமலே ஆட்டங்கள் வந்து விடும்.
3.எதைப் பதிவு செய்து வைத்துள்ளதோ அந்த உறுமி மேளச் சத்தத்தைக் கேட்டாலே போதும்…
4.ஆடாத பேயெல்லாம் ஆட ஆரம்பித்து விடும். இது எல்லாம் சுருதிகள் மந்திரத்தால் ஏற்படுத்தப்பட்ட நிலைகள் தான்.
5.யாக வேள்விகளால் வரக்கூடிய சில தீமைகள் இவைதான்.

பக்தி மார்க்கங்களில் யாகத்தைச் செய்து தெய்வத்திற்கு நெய்வேத்தியம் வைத்து அதன் வழிகளில் நாம் சக்தி பெறுவது என்பது “மந்திர ஒலிகள் தான்…”

மந்திரம் இல்லாத மதங்கள் இல்லை. ஒவ்வொரு மதமும் மந்திரத்தை உருவாக்கித் தான்… உருவத்தின் தன்மை கொண்டு ஒவ்வொரு கோயிலுக்கும் சில நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.

இதைப்போல எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் கேட்டறியும் போது
1.நாதங்கள் சுருதிகள் அவர்கள் சொல்லும் வாக்கியங்கள்… இந்தத் தெய்வம் இன்னது செய்யும் என்று பறைசாற்றி…
2.தெய்வ குணங்களைச் சித்தரித்து அது நமக்கு வாரி வழங்கும் என்று ஆசையை ஊட்டி
3.அதனின் நிலைகள் இவர்கள் ஓதும் மந்திரத்தை நாம் செவிகொண்டு கேட்கப்படும் பொழுது ஒலி அலைகள் நமக்குள் பதிவாகின்றது.

அவர்கள் சொல்லும் உணர்வுகள் வந்து நல்ல குணத்தில் அதர்வண வேதமாக “நல்லதுக்குள் தீமைகளாகப் பதிவாகி விடுகின்றது…”

இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் அல்லவா.

செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனி வரும் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்

 

எண்ணத்தின் உணர்வால் நற்குண சமைப்பான அமிலச் சேர்க்கையின் சமநிலை கொள்ளும் இப் பூமி வாழ்க்கைச் சுழற்சியில் சிக்குண்ட பல குண மோதல் நிலையிலும்… எண்ணத்தின் உணர்வு சமநிலை பெறத்தக்க வழி ஆற்றல் எண்ணம் கொண்டு சூரியனின் அலை சக்தியை காந்த மின் அலை வார்ப்பாக உடல் எலும்புகளின் ஊன் நிலை எடுக்கவல்ல வழிதனை மனித எண்ணத்தால் பெறக்கூடிய ஆத்ம பலத்தின் வலுவைக் கொண்டு…
1.இன்றைய இக்கலியில் சிதறுண்டு சிக்கித் தவிக்கும் மனிதனின் எண்ண உணர்வு வேட்கை
2.மனித ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து ஞான வளர்ச்சி குன்றியுள்ள இக்கலியின் கடைசிக் காலத்தில்
3.மனித ஆத்மா உயரும் ஞான போதனை வழித்தொடர் அற்று
4.மனித எண்ணங்களும் ஆவி உலகில் உள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆவி ஆத்மாக்களும்
5.செயற்கை விஞ்ஞான ஒலி ஈர்ப்பில் உணர்வைச் செலுத்தி இயந்திர அலைத் தொடர்பின் ஒலி மோதலில் மனித ஆத்மா எடுத்து வெளிப்படுத்தும் சுவாச அலையும்
6.இயந்திர அலையில் வெளிப்படும் காந்த சக்தியைச் சமைத்து சமைக்கப்பட்டதின் ஒலி எடுத்து வெளிப்படுத்தும் மனித சுவாச அலை அணுக்கள்
7.அதற்குண்டான அணு வளர்ப்பைத்தான் வளர்க்கும் ஆற்றலைத் தான் பெற்றுள்ளது.

அதனால்… மனித உணர்வின் சுவாசமே இயந்திர கதியின் ஒலி ஈர்ப்பின் உணர்வெடுக்கும் எண்ண சுவாச அணுக்கதிர்கள்தான் சுவாசத்திலிருந்து வளரும்.

இயற்கைத் தாவர நறுமண மூலிகையின் தொடர்பற்ற… இயந்திர ஓட்ட செயற்கை மனித நிலையில் வெளிப்படும் சுவாச அலையின் அணுக்கதிர்களில் இருந்து வளரவல்ல உயிரணுக்களே…
1.கலி மனிதன் வெளிப்படுத்தும் அலைக்குகந்த புதிய புதிய குறுகிய எண்ண வேட்கை ஞானச் செயலற்ற ஜீவ ஜெந்துக்கள் தான்
2.இப்பொழுது வளரும் ஜீவ அணு உயிர் வளர்ப்புகளும் தாவர இன வளர்ப்புகளும்.
3.இத்தொடரிலேயே செல்லும் வழி தான் செல்லும் நிலை தான் “இன்றைய காலமும் இனி வரும் காலமும்…”

பல நூற்றாண்டுகளுக்கு முன் மனித உருவங்களும் மனிதனைக் காட்டிலும் மிருக உருவங்களும் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் உருவத்தில் வளர்ந்து வண்ணமும் பொலிவும் மிக்க ஒளியுடன் மிளிர்ந்தன.

இராமாயண காலத்தில் வால்மீகியார் எழுதிய குணத்தின் அடிப்படைக் கதாபாத்திரமே அந்தந்த குணத்திற்கொப்ப “எண்ணத்தில் குறுகியவருக்குக் கூனி என்றும் சகுனி என்றும்…” எண்ணத்தில் உயர்ந்த இராமருக்கு அவரின் உருவ குண அழகை வழிக்காட்டிப் படைத்த காவியத்திலேயே எண்ணத்தைக் கொண்டு உருவகத்தைச் சித்திரித்துக் காட்டினார் வால்மீகியார்.

வளர்ந்தோடிய இக் கலி ஓட்டத்தில் இயந்திரத் தொடர்பு கொண்ட செயற்கை ஒலி ஈர்ப்பில் வாழக்கூடிய மனித எண்ணங்களின் உணர்வு அதன் தொடர்பில் செலுத்தப்படும் வழித்தொடர் கொண்ட எண்ண வேட்கையின் சுவாசு அலை வீச்சின் சுழற்சிதான்… இக்கலி ஓட்ட பூமி ஜீவ ஜெந்துகளின் உருவக வார்ப்புநிலை வழி கொள்ளும் வளர்ச்சியின் வழிமுறையில் எவ் ஒலி அதிகமாய்க் கேட்டு அவ் ஒலி ஈர்ப்பின் சுழற்சியில் சுழல் கொள்ளும் வார்ப்பக ஞான வளர்ச்சியும் மீண்டும் பிறப்பிற்கு வரும் பொழுது
1.ஞானத்தின் வளர்ச்சி கொண்ட எண்ண உணர்வு மகவு பிறப்பதைக் காட்டிலும்
2.தன் ஞானமற்று விஞ்ஞான வேட்கை வழி தந்த உணர்வு ஈர்ப்பில் கர்ப்பம் கொள்ளும் சிசு நிலையிலேயே
3.விஞ்ஞான செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனிவரும் காலப் பிறப்புகளும் கலிமாற்றப் பிறப்புத் தொடர்புகளும்.

அன்றைய காலங்களில் ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்று பிறக்கும் மகவுகளுக்கே பயில்விக்கும் பயிற்சி ஞான போதனைகள் இன்றைய செயற்கைப் போதனை தன்னைத்தான் நம்பா செயற்கைப் பிடியின் நம்பிக்கை கொண்டு நடைபெறும் காலச் சுழற்சியின் ஓட்ட கதியுடன் மனிதனின் எண்ணம் சென்று கொண்டுள்ளது.

இதிலிருந்து மீண்டிடும் நிலையாக …
1.மனிதனின் ஞானத்தால் ஆத்ம பலத்தின் உயர்வைக் கொண்டு ஜீவ மனித எண்ண உணர்வின் ஞானம் கொண்டு அடையும்
2.இன்ப நிலையின் வழித் தொடரைத்தான் உபதேச போதனையாய் உயரும் வழிகாட்டி
3.ஒவ்வொரு ஆத்மாவும்… மனிதனுக்கடுத்த நிலையான தெய்வநிலை பெறவல்ல வழித் தொடருக்கு இங்கே வழி காட்டுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விநாயகர் தத்துவத்தை ஞானிகள் மக்களுக்குக் காட்டியிருந்தாலும் அவர்களை நாம் “முன்னே பின்னே பார்த்ததில்லை…”

1.அந்த மெய் ஞானி நல்லதைச் செய்து “தன்னையறிந்தான்…” என்ற நினைவை ஊட்டி
2.சிறுகச் சிறுக அவர்கள் பெற்ற சக்தியை நமக்குள் வலுவை ஏற்றுவதற்கு
3.காலையில் எழுந்தவுடன் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
4.வானை நோக்கி எண்ணி ஒவ்வொருவரும் எடுப்பதற்காக விநாயகரை வைத்தார்கள்.

அப்போது… தன் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி மெய் ஒளியைப் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்ற “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று எண்ண வேண்டும்.

எந்த மகா ஞானி உண்மையை அறிந்தானோ…
1.விண்ணிலே ஒளியின் சுடராக இருக்கும் அவனை நினைவு கொள்ளும் பொழுது
2.சூரியனின் காந்த சக்தி அந்த அலைகளைக் கவர்ந்து கொண்டு வரும் அவனின் உணர்வை நாம் சுவாசித்து
3.நமக்குள் அந்த உணர்வின் வலுவை ஏற்ற வேண்டும்.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுகுண்டுகள் செய்து அதை ஹைட்ரஜனைக் (கன நீர் – DUTERIUM) கொண்டு அடக்கி வைக்கின்றனர்.

நீருக்குள் இருக்கக்கூடிய சக்தியை… அதாவது ஒரு அணுவிற்குள் இருக்கும் சக்தியை அணுவின் தன்மை பிளந்தாலும்
1.மற்றதுக்குத் தீமைகளை விளைவிக்காத ஹைட்ரஜன் என்ற கன நீரை
2.அதாவது நீரை வடித்து உப்பின் சக்தியை அதிகமாக்கி வெடிக்க விடாது அதனுடைய ஆற்றலைக் கலந்து கொள்வது.
3.ஏனென்றால் கன நீரின் அழுத்தத்தின் தன்மையால் வெடிக்கும் நிலையைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

உப்பைப் போட்டால் எப்படி ஊறுகின்றதோ அதைப் போல் ஹைட்ரஜன் கதிரியக்கத்திற்குள் இருக்கும் “பசப்பை நீக்கி” தன் உணர்வின் தன்மை கொண்டு அதை அடக்கிவிடும்.

விஞ்ஞானி அணுப் பிளப்பை இவ்வாறு கட்டுப்படுத்துவது போல் மெய் ஞானி என்பவன் விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சினையும் (கதிரியக்கச் சக்திகளை) அடக்கிடும் கன நீராக… ஹைட்ரஜன் ஆனான்.

அந்த மெய் ஞானியின் உணர்வின் ஆற்றலை நாம் விண்ணிலிருந்து எடுத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் அடக்கச் செய்ய வேண்டும் என்பது தான் விநாயகர் தத்துவம்.

இன்றைய வாழ்க்கையில் நல்லதை எண்ணுகின்றோம்… பிறர்பால் இரக்கமும் படுகிறோம். ஆனால் அவர்கள் உடலில் விளைந்த துன்பமும் துயரமும் குறைகளும் நமக்குள் வந்து அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் மாறித் தீய வினைகளாக விளைந்து விடுகிறது.

அதை நீக்க வேண்டுமல்லவா…!

ஆகவே விநாயகரைப் பார்த்ததும் நாம் விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் அந்த ஆற்றலைச் செலுத்த வேண்டும்.

கருவில் இருக்கும் குழந்தைக்குக் கண்ணன் உபதேசித்தான் என்று காவியங்கள் உண்டு. அதாவது நாம் சுவாசித்தது ஒவ்வொன்றுமே உடலுக்குள் கருவாகி அணுவாக விளைகின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
1.அந்த நினைவலைகளைச் சிறுகச் சிறுகக் கூட்டிப் பின்
2.மொத்தமாக உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற நினைவைக் கூட்டி
3.உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் அணுக்களுக்குள் எல்லாம்
4.கண்ணின் நினைவு கொண்டு அந்த ஞானியின் நினைவலைகளை இங்கே உபதேசிக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியின் வீரியத் தன்மை கொண்டு அது நமக்குள் ஓங்கி வளரும். தீமையிலிருந்து “நம்மைக் காக்கும் சக்தியாக வளரும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அடுத்தவருக்கு எல்லா உதவிகளையும் செய்வோம். உதவி செய்த பின்… கடைசியில்
1.இந்தப் பாவிப் பயலுக்கு இப்படியெல்லாம் உதவி செய்தேனே…
2.எனக்கு அவன் ஒன்றும் செய்யவில்லையே…! என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம்.

வேதனைப்பட்டவர்களுக்கு எல்லாம் முதலில் உதவி செய்திருப்போம். கஷ்டங்களை எல்லாம் பரிவுடன் கேட்டு அவர்களிடம் இருக்கும் வேதனைகளை எல்லாம் விலைக்கு வாங்கி விடுவோம்.

வேதனையாகி நோயான பின் என்ன சொல்வோம்…?

நான் இங்கே இவ்வளவு உதவி செய்தேனே… அங்கே அவர்களுக்கு அந்த உதவி செய்தேனே…! எனக்கு இப்படி வந்துவிட்டதே…! என்ற இந்தத் துன்பப்படும் உணர்வுதான் மீண்டும் மீண்டும் வரும்.

காரணம்… உதவி செய்த பின் நாம் நினைத்தவுடன் மற்றவர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் அவர்கள் ஏதாவது ஜோலியாகச் செல்வார்கள்.

அன்றைக்கு நான் எப்படி எல்லாம் உதவி செய்தேன்…! இன்று நான் கூப்பிடுகிறேன்… அவர்கள் வரவில்லையே…! என்று அவர்கள் மீதே எண்ணமே இருக்கும்.

1.உதவி செய்தேன் வரவில்லையே… உதவி செய்தேன் வரவில்லையே… என்று
2.பிறரின் உணர்வைத் தான் எண்ணி வேதனையை இங்கே வளர்த்துக் கொண்டிருப்போம்.

அவர்கள் உணர்வு பூராம் இந்த உடலில் சேர்த்து நோயாகி இறந்தபின் எங்கே செல்வோம்…?

நான் அவனுக்கு உதவி தான் செய்தேன். ஆனால் அவனோ எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தான் பாவி…! என்று எண்ணி வேதனையாகி நோயாக மாறி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு யாருக்கு உதவி செய்தோமோ அந்த உடலுக்குள்ளே தான் போவோம்.

இங்கே வேதனைப்பட்டு எரிச்சல் கொண்டு வெளியேறிய உயிரான்மா அந்த உடலுக்குள் போய் மனிதனாகவும் பிறப்பதில்லை.
1.அங்கே சென்று வேதனையை மீண்டும் உருவாக்கி நோயாக மாற்றி
2.அவனை வீழ்த்தத்தான் செய்யும்… குழந்தையாகப் பிறப்பதில்லை.

அந்த உடலிலும் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டபின் உயிரான்மாவில் விஷம் அதிகமாகி விடுகின்றது.

பாலில் விஷத்தைக் கொஞ்சம் போட்டால் குடித்தால் மயக்கம் வரும். அதிகமான விஷத்தைப் போட்டு விட்டால் சுத்தமாகவே நினைவை இழக்கச் செய்துவிடும்

அது போல் கடைசியில் மனிதனுடைய நினைவுகள் எல்லாம் இழந்த பிற்பாடு எந்த அளவிற்கு விஷத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க விஷம் கொண்ட உயிரினமாகப் பிறக்கச் செய்யும் நம் உயிர்.

புழுவிலிருந்து மிருகமாக வரும் வரையிலும் அவைகளின் உடலில் விஷம் அதிகமாக இருக்கும். பூனை விஷமான உயிரினத்தை அடித்துச் சாப்பிடுகிறது. அது போல் மற்ற உயிரினங்களும் விஷத்தைத் தாராளமாக உட்கொள்கிறது. அந்த உடலுக்குள் ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் சாதாரண ஒரு பல்லியின் எச்சம் நம் மீது பட்டாலே உடலில் கொப்புளம் ஆகிவிடும். விஷம் பட்டவுடனே நம் உடலில் இத்தனை நிலையும் ஏற்படுகிறது.

நாம் விஷத்தை நீக்கும் உடலாகப் பெற்றிருந்தாலும் விஷமான உணர்வு நமக்குள் கலந்து விட்டால் நம்மைச் செயலற்றதாக ஆக்கி விடுகிறது.

ஆனால் மற்ற உயிரினங்கள் விஷத்தைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொண்டால் உடலிலே அது வலுவின் தன்மையாகக் கொண்டு வருகின்றது. அந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை

புழுவிலிருந்து மற்ற எல்லா உயிரினங்களுக்கும் விஷம் உண்டு. தேளுக்கு ஒரு விஷம் பாம்புக்கு ஒரு விஷம் கட்டுவிரியனுக்கு ஒரு விஷம் புலிக்கு ஒரு விஷம் பூனைக்கு ஒரு விஷம் நாய்க்கு ஒரு விஷம் இப்படி எல்லாவற்றிலும் விஷத்தின் வலிமை உண்டு.

ஆனால் மனிதன் எடுத்துக் கொண்ட குணம் அடிக்கடி யாரிடமாவது சள்… சள்… சள்… என்று பேசும் நிலைகள் வந்து விட்டால்
1.“என்னை இப்படிச் செய்து கொண்டே இருக்கின்றான்…” என்று சள்..சள்…சள்… என்று சொல்லச் சொல்ல
2.யாரைக் கண்டாலும் வெறுத்துப் பேசச் செய்யும்.

இப்படிப் பேசி வெறுக்கும் நிலைகள் வளர்ந்தால் அந்த நஞ்சின் தன்மை உடலிலே விளைந்த பின் உடலை விட்டுச் சென்றபின் எங்கே செல்வோம்…?

1.நாயிடம் இருக்கும் விஷமும் இந்த உயிராத்மாவில் வளர்த்துக் கொண்டே விஷமும் ஒன்றாகி
2.உயிர் நம்மை அடுத்து நாயாகப் பிறக்க வைத்துவிடும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

நாம் நினைக்கின்றோம் ஒன்றுமே செய்யவில்லை என்று…! ஆனால் உயிரின் வேலை… நாம் சுவாசித்து எடுத்ததை எல்லாம் உடலாக உருவாக்கி உடலில் விளைந்த சத்தை உயிராத்மாவாக மாற்றி அதிலே எது வலுவோ அதற்குத் தக்க அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்தந்த உடலாக மாற்றிவிடும்.

மனிதனாக இன்று இருக்கும் நாம் அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

அகஸ்தியன் கண்டது அனைத்தையும் “நீங்கள் காணுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”

 

“அகஸ்தியன் என்று சொல்லும் அக்காலத்தில் வாழ்ந்த அந்தச் சிசு” தன் தாயின் கருவில் இருக்கப்படும் பொழுதே பல உன்னதமான சக்திகளைப் பெறுகின்றது. அவை அனைத்தும் அதற்குப் “பூர்வ புண்ணியமாக” அமைகின்றது

பிறந்து… அந்தக் குழந்தை தனிமையிலே கிடந்தாலும் நஞ்சு கொண்ட உயிரினங்களோ பாம்புகளோ மற்ற பூச்சிகளோ இவனைக் கண்டாலே விலகிச் செல்லும் நிலையே ஏற்படுகின்றது.
1.சூரியனை வணங்கி வந்த அக்காலத்தில் இது கடவுளின் பிள்ளை கடவுளால் கொடுக்கப்பட்டது என்று
2.அவருடைய தாய் தந்தையரே அவனைக் கடவுள் என்றே வணங்கத் தொடங்குகின்றார்கள்.

பல அற்புத நிகழ்ச்சிகள் நடக்கின்றது காட்டு விலங்குகள் அனைத்தும் இவனை அணுகாது விலகிச் செல்கின்றது.

ஆனால் அகஸ்தியனுடைய தாய் தந்தையர் மிருக ஜந்துக்களிடமிருந்து தப்பிப்பதற்கு தாவர இனங்களின் விழுதுகளை அரைத்து உடலில் மூலமாகப் பூசினார்கள்.

அந்த முலாமின் உணர்வுகள் தான் கருவிலே உருப்பெற்ற அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைத்தது.
1.சூரியனின் உணர்வின் ஆற்றலே இவனுக்குள் பெருகிப் பெருகி அதை இவன் நேரடியாகப் பார்க்கின்றான்
2.அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளையும் காணுகின்றான்.

விஞ்ஞான அறிவுப்படி வலிமையான தொலைநோக்கிகளை வைத்து விண்வெளியில் தொலை தூரத்தில் இருக்கும் மண்டலங்களைக் காணுவது போன்று
1.அவனின் உணர்வின் செல்களுக்கும் மற்றதை ஒளி கொண்டு வெகு தூரம் நினைவலைகள் பாய்ச்சப்பட்டு
2.அணுவின் ஆற்றலை அறியும் தன்மையும் இவனுக்குத் தாய் தந்தையினுடைய வடிவிலே கருவிலேயே பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.

இது அவனுடைய சந்தர்ப்பம்.

பிறந்து ஐந்தே வயது ஆகும் பொழுது விண்ணை நோக்கிப் பார்ப்பதும் மற்ற விஷம் கொண்ட மிருகங்கள் இவனைக் கண்டு விலகிச் செல்வதும் பல அற்புத நிகழ்ச்சிகளை அணுவின் சிதைவும்… அணுவின் கூட்டமைப்பும்… அணுவின் ஆற்றலையும்… அவன் நேரடியாக்க் கண் கொண்டு அறியத் தொடங்குகின்றான்.

1.ஒரு உயிரினம் முட்டை இடுக்கிறது என்றால் அது என்ன முட்டை என்றும்
2.அதற்குள் அணுவின் தன்மை எப்படி உருப்பெறுகிறது என்பதையும் அவன் கண்டுணர்கின்றான்.

நமது பூமியிலே மணங்களைக் காணும் (நுகர்ந்து) பொழுது இந்தச் செடியில் இருந்து வந்த மணம் என்று அதைப் பிரித்துச் சொல்லும் தன்மை ஐந்து வயதிலேயே அவனுக்கு வருகின்றது.

இது போன்ற வளர்ச்சி வந்தபின் தாய் தந்தையருக்கு பேரானந்த நிலை வருகின்றது.

இருப்பினும் இந்தக் குழந்தை தன்னிச்சையாக எங்கே சென்றாலும் அச்சமின்றி அவன் செல்கின்றான். மற்றவைகள் தான் இவனைக் கண்டு அஞ்சுகின்றது. ஆனால் அவருடைய தாய் தந்தையரோ தாவர இனத்தின் முலாம்களைப் பூசாமல் சென்றால் மிருகங்கள் அவர்களைக் கொன்றுவிடும்.

இப்படி நடக்கப்படும் பொழுது இவர்கள் பூசிய முலாம்கள் உடலில் அதனின் நஞ்சுகள் பெருகி அது அதிகரித்து நோயாகி மடிகின்றார்கள். அவனுக்கு ஐந்து வயது முடிவதற்கு முன் இருவரும் இறந்து விடுகின்றார்கள்.

இரண்டு பேருமே தன் குழந்தை மீது… இளம் பிஞ்சு உள்ளத்தை எண்ணியே காட்டுக்குள் அவனைத் தனித்து விட்டுச் செல்கிறோமே என்ற ஏக்க உணர்வு அதிகரித்து இருவரும் செயலற்ற நிலை வரும் பொழுது
1.குழந்தையை ஏங்கி அந்த உயிரான்மாக்களும் ஒருமித்த நிலைகள் வெளி வருகின்றது.
2.வெளிவந்த பின் எந்தக் குழந்தை மீது பற்று வைத்தார்களோ அகஸ்தியனின் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.
3.அவர்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் வளர்ச்சி பெற்று வந்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல்கள்
4.”இந்தக் குழந்தையைக் காத்திடும் உணர்வாக” அந்த உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

அதற்குப்பின் அந்த குழந்தைக்கோ தன் தாய் தந்தை மடிந்ததை எண்ணி அதுவும் ஏக்கத்தால் எண்ணுகின்றது. “அன்னை தந்தையைப் பார்க்க வேண்டும்” என்ற ஏக்கத்திலேயே சூரியனை உற்றுப் பார்க்கின்றான்.

ஏனென்றால் சூரியனைக் கடவுள் என்று காண்பித்த நிலைகளில் இவன் உற்று நோக்கும் போது விண்ணிலே நடக்கும் அதிசயங்களைக் கண்டுணர்கின்றான்.

1.இவன் உடலில் விளைய வைத்த அவை ஒவ்வொன்றும் அறிவின் தன்மையாக விண்ணின் ஆற்றலை அறியும் நிலையாக
2.இவனின்று உமிழ்த்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்து கொண்டுள்ளது.

அதை எல்லாம் நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகிறேன் என்றால்…
1.என் குருநாதர் அதை எடுக்கும் வழியை உணர்த்தியதனால்
2.அதனின் உணர்வின் துணை கொண்டு தான் அறியும் ஆற்றலைப் பெற்று
3.அறிந்த பின் உங்களுக்கும் அதைச் சொல்ல முடிகிறது.

ஏனென்றால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டதை இன்று நம்மால் பார்க்க முடியும்.
1.நீங்கள் அனைவருமே அதைக் காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
2.எனது குருநாதர் எனக்கு எப்படி அதைக் காண்பித்தாரோ அதைப் போல விண்ணுலக ஆற்றலை நீங்கள் ஒவ்வொருவரும் கண்டுணர முடியும்.

மனிதனான பின் முழுமை அடையும் நிலைகளாக உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் நீங்கள் பெற முடியும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன்.

விண்ணிலிருந்து ஒளி அலைகளை எடுத்து “ஜோதி நிலை பெறுவது எப்படி…?”

 

உந்து விசையின் வேகத்தைக் கொண்டு அதில் செலுத்தும் எரிபொருளின் தன்மைக்கொப்ப அவ்விசையின் எரிபொருள் மோதலிலிருந்து வெளிப்படும் துடிப்பு நிலையைக் கொண்டு வாகனங்களின் ஓட்டத்தை விஞ்ஞானத்தால் வழிப்படுத்துகின்றனர்.

அதைப் போன்றே…
1.உயிரணுவின் ஆத்ம அலையின் வார்ப்புக் கூடான இச்சரீரக் கூட்டு இயந்திரம்
2.சுவாசம் என்ற உந்து விசையைக் கொண்டு உடல் சமைக்கும் ஆத்ம எரிபொருளின் ஜீவத்துடிப்பு நிலை
3.ஒலி ஈர்த்து ஒளி பெற்றுச் சொல்லாற்றி சுவை கண்டு உணருகின்ற எண்ண ஓட்டக்கோளத்தின் வளர்ப்பு நிலையில் அடுத்த நிலை யாது…?

உயிராத்மாவின் வளர்ப்பிற்கு ஜீவ சரீர உணர்வின் எண்ணத்தால் சமைக்கப்படும் வலுவைக் கொண்டுதான்… ஆத்மாவின் வலு நிலை சரீர ஓட்டத்தில் செயல்படும் தன்மை நிலை ஏற்படுகின்றன.

சரீரமற்ற ஆவி ஆத்மாவிற்குச் “சுவாச நிலை இல்லாததனால்” அதனுடைய உண்மைத் துடிப்பு நிலை காற்றின் அலைத் தொடர்புடன் உயிர் ஆத்மாவானது இருக்கின்றது.

அதாவது நாம் எப்படி நட்சத்திரங்களைக் காணும் பொழுது மின்னும் நிலையைக் காணுகின்றோமோ அதைப் போன்றே
1.ஆத்ம அலையின் துடிப்பு நிலையின் செயல் கொண்ட சுழற்சியில் தான்
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா செயல் கொள்கின்றது.

பூமியின் பிடிப்பலை எண்ண உணர்வுடன்… வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ் நாளில் எண்ணத்தின் சுவாசத்தை எடுத்து… அச்சுவாசம் சமைக்கும் தொடர்பு வாழ்க்கையின் வழி முறைப்படி… ஆத்மாவின் உயர் சக்தியை அறியாமல்… வாழ்க்கைப் பிடிப்பில் சிக்கி வாழ்ந்து மடியும் உயிராத்மா… அதன் உயர்வு நிலை பெறாமல்… வளர்ச்சியற்றுப் போய் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலேயேதான் இருக்க முடியும். உயிராத்மா வளர்ச்சி கொள்ள முடியாது…!

ஆகவே…
1.பல கோடி ஆண்டுகளாக வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி கொண்டு வந்த
2.ஆத்ம வளர்ச்சியின் மனிதச் சரீரத்தின் வலுப் பெற்ற வளர்ச்சி நிலையிலிருந்து
3.உயர் நிலை பெற – சுவாசத்தைக் கீழ் நோக்கிய பூமி ஈர்ப்பு எண்ணமுடன் செலுத்தாமல்
4.சூரியனின் சமைப்பின் வழித் தொடர் பல நிலையில் மாறு கொண்டு வளரும் தன்மையில்
5.பூமி சமைத்து வெளிப்படுத்தும் அலையை எடுக்காமல்
6.பூமி சமைப்பினால் சரீரம் பெற்று எண்ணத்தின் உணர்வு நல்ல நினைவு உள்ள காலங்களிலேயே
7.மேல் நோக்கிய சுவாசத்தால் நாம் எடுக்கும் நேரடி காந்த நுண் அலைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அதாவது ஏழு வகை வண்ணத்தில் சமைக்கப்பட்ட ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை… காந்த ஈர்ப்பு நுண் அலையின் தொடர் வளர்ச்சி நிலை எண்ணத்தின் மோதலினால் நேரடியாகப் பெற வேண்டும்.

இப்படிப் பெற்ற வளர்ச்சியைக் கொண்டு பூமியின் பிடிப்பற்ற நிலைக்கு வர முடியும். அதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் வழி முறையிலிருந்து மனிதனுக்கு அடுத்த நிலையான வளர்க்கும் நிலையான “வண்ண ஒளி ஜோதியாகலாம்…!”

மனிதனின் எண்ணத்தால் எடுக்கும் நிலை கொண்ட வார்ப்பு நிலை தான் ஆத்மாவின் வளர்ச்சி நிலை. ஆகவே இவ்வாத்மாவில் சேமிக்கும் வண்ண ஒளியின் வளர்ச்சி நிலையில் தான் மனித நிலையிலிருந்து வளர்ச்சி பெறும் அடுத்த நிலை உருவாகின்றது.

சீப்பை எடுத்து நாம் தலையை வாரும் பொழுது கீழ் நோக்கி வாரும் பொழுது
1.பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியதாக ரோமக்கால்களின் அணு வளர்ச்சியும்
2.கீழ் நோக்கி வளரும் வளர் நிலைக்கொப்ப ஈர்ப்பில் சீவப்படும் நிலையில் எந்நிலையான பாதிப்பும் தெரிவதில்லை.
3.அதே சீப்பைக் கொண்டு மேல் நோக்கி நம் கூந்தலைச் சீவினோம் என்றால்
4.உடல் நிலையே சிலிர்ப்புத் தன்மை இவ்வுணர்வு பெறுகின்றது.

இதை எப்படி அனுபவத்தில் காணுகின்றோமோ அதைப் போன்ற உண்மை நிலையை சுவாச நிலையால் எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தும் பொழுதும்… நேரடி சுவாசத்தை மேல் நோக்கி எடுக்கும் அலையை இந்த உடல் உடனே பெறுகின்றது…!

இத்தொடர் வளர வளர… மனிதச் சக்தியின் வலுச் சக்தியை இந்த ஆத்மா பெற்று… இவ்வாத்மாவின் ஒளி அலைகளைத் தனித்து இயக்கவல்ல வளர்ச்சி வழி கொள்ள முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“மகரிஷிகள்…” அவர்கள் வாழ்ந்த காலத்தில் எதனை இனிமை கொண்டு வளர்த்தார்களோ அதைப் போன்று
1.நம்முடைய இந்த மனித உடல் வாழ்க்கை – முதுமையிலும்
2.அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை உடலிலே வளர்த்திடல் வேண்டும்.
3.ஒளியின் சிகரமாக வளர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்…” என்று அந்த மன உறுதி கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் அத்தகைய நிலைகள் பெற வேண்டும் என்ற அடிப்படையில் கண்ட அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் விளைய வைத்து “ஒளிச் சரீரம் பெறும் அந்த மூச்சலைகளைப் பூமியில் பரவச் செய்வோம்…”

தானியங்களின் வித்தை விளை நிலைங்களில் ஊன்றி பல பல தானியங்களாக விளைய வைத்து எல்லோருடைய பசியைப் போக்குவது போல.. மெய் ஞானிகளின் அருள் ஞான வித்தை நமக்குள் ஊன்றி வளர்த்து அந்த வித்தின் தன்மை பல மகசூலாகப் பெருக்குவோம்.

அதன் மூலம்…
1.பிறருடைய ஆனந்தப் பசியை ஆற்றும் நிலையாக…
2.பேரானந்தப் பசியை ஆற்றும் அருள் வித்தாக நமக்குள் விளைய வைத்து இந்தப் பூமி முழுவதும் பரப்புவோம்.
3.அனைவரும் அதைப் பருகி பேரானந்தப் பெரு நிலை பெறச் செய்வோம்… அதனை வளர்த்திடுவோம்.

முதுமை என்பது உடல் வாழ்க்கையில் வெறும் வயதினால் வரும் முதுமை அல்ல. இந்த உடலின் தன்மை அது முதுமை அடையப்படும் போது… அதாவது ஒரு தானியம் அது முதுமை அடையப்படும் பொழுது வித்தின் தன்மையை அது முதுமையாக்கி அந்த உணர்வினை வித்தாக (பலன்) உருவாக்குகிறது.

அதைப் போல நம் உயிரின் தன்மை மனித உடலை உருவாக்கிய பின்… அறிந்திடும் உணர்வு கொண்ட ஒளியின் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.இந்த உடலை முதுமையாக்கி… (பாம்பு தன் சட்டையைக் கழற்றுவது போல்)
2.உணர்வின் தன்மை என்றும் இளமையாக்கும் நிலைகள் நமக்குள் வளர வேண்டும்.

காரணம்…
1.ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.
2.இளமை பெற்று… அது உடலிலே முதுமை பெறும் போதுதான் முதுமையின் வித்தாக உரு பெற்று
3.உணர்வின் அறிவாக உயிருடன் ஒன்றிய நிலையாக அடுத்த அறிவின் ஞானச் சுடராக உணர்வின் சரீரத்தை வளர்க்கின்றது.

ஆகவே மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு… உயிருடன் ஒன்றி முழுமையின் நிலைகள் பெற்று… முழுமை அடையும் தன்மையாகப் பேரானந்தப் பெரு நிலையை நமக்குள் வளர்த்திடுவோம்.

அனைவரும் பேரானந்த நிலை பெறும் சக்தியாக நமக்குள் விளைவித்த அந்த அருள் உணர்வின் சத்தான வித்துக்களை உலகமெங்கும் பரப்புவோம்.

அதை நுகர்ந்தறிவோர் உணர்வுகளிலும் அந்த வித்துக்கள் படர்ந்து அவருக்குள் பேரானந்தப் பெரு நிலை அடையும் நிலையை அடையட்டும்.

அருள் ஞானிகளின் அரும் பெரும் சக்தியை அனைவரையும் பெறச் செய்வோம் என்று நாம் வாழ்த்தி வளர்த்திடுவோம்… வளர்ந்திடுவோம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் நாட்டிலே தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய எத்தனையோ நிலைகளில் உயர்ந்த சக்திகளை இங்கே படரச் செய்துள்ளனர்.

“தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…” என்பது போல தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியைச் சமப்படுத்தினான்.

பூமியின் துருவத்திலே பனிப் பாறைகள் உறைய உறைய… எடை கூடிக் குடை சாயும் நிலைகளுக்குச் சென்றதை
1.துருவத்தில் உறையும் பனிகளை… வெப்பத்தின் தணல் கொண்டு உருகச் செய்து
2.பூமியிலே நடு மையமாக மனிதனாக உயிர் வாழச் செய்யும் நிலையாக அவன் செயல்படுத்தினான்.

இல்லை என்றால் வியாழன் கோள் பனிப் பாறைகளாக எவ்வாறு பெரிதாக ஆகி இருக்கின்றதோ அதைப் போல சிறிதளவு ஒரு நொடி மாறினாலும் நமது பூமியும் பெரும் பனிப்பாறையாக மாறி உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஆகிவிடும்.

அப்படியே வாழ்ந்தாலும் பனிப் பிரதேசங்களில் மீன் இனங்களும் மற்ற உயிரினங்களும் வாழ்வது போல
1.மனித இனமே அல்லாத மற்ற உயிரினங்களாக மாற்றிவிடும்.
2.பனிக்குள் வாழும் உயிரினமாகத்தான் நாம் திரிய முடியும்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோளும் நம்மைப்போல மனிதர்களாக வாழ்ந்த இடம்தான்.

அங்கே விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியாகி அதற்குண்டான செயற்கைக் கருவிகளை அதிகமாகச் செயல்படுத்தப்பட்டு அதன் வழிகளிலேயே பெரும் பனிப்பாறையாக மாறிச் சுழற்சியின் வேகம் கூடி இன்று ஓடிக் கொண்டுள்ளது.

இப்போது எப்படிப் பனிப்பிரதேசங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவோ அதே போல
1.மனிதனாக இருப்பவரும் வளர்ச்சியற்ற நிலைகள் கொண்டு
2.உயிரினங்களாக இன்றும் வியாழனில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் சில உணர்வலைகள் இன்றும் இந்த பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டு வருகின்றது. பிரபஞ்சத்தில் மிதந்து வந்தாலும் அவ்வாறு வந்த அந்த நிலைதான் நம் பூமியில் உயிர் அணுக்களாக தோன்றி உயிரணுவின் நிலையிலிருந்து மனிதனாக உருப்பெரும் நிலைகளை நாமும் பெற்றிருக்கின்றோம்.

1.இந்தப் பூமியில் மனித இனம் இன்று வந்ததல்ல…
2.வியாழன் கோளின் நிலைகளில் இருந்து நாம் வந்திருக்கின்றோம்.
3.இதை அறிந்து கொள்வதற்குத் தான் நம் பிரபஞ்சத்திலேயே சூரியன் இயக்கச் சக்தியாக இருந்தாலும்
4.வியாழன் கோளைக் “குருவாக…” வைத்தது.
5.உயிரணுவின் ஆற்றலை உயிர் அணுவாக உடலின் தன்மை பெறச் செய்தும் வியாழனின் நிலை தான்.

இங்கே நம் பூமியில் இன்று இருக்கும் விஞ்ஞான அறிவைக் காட்டிலும் “பல கோடி ஆண்டுகளுக்கு முன்” அன்று வியாழன் கோளில் “விஞ்ஞான அறிவின் வளர்ச்சியால் தான்” மனித இனங்கள் முழுமையாக அழிந்தது.

இங்கே இப்போது அணு ஆயுதங்களைச் செய்து வைத்திருப்பது போல பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளில் வாழ்ந்த மனிதர்கள் அதைச் செய்து தான் இருள் சூழச் செய்து விட்டனர். பனிப் பாறைகளாகிக் பெரும் கோளாக மாறி விட்டது.

அங்கிருந்து தான் உயிரினங்கள் கடக்கப்பட்டு இந்தப் பூமியில் மனிதனாக உருவாகி இருக்கின்றோம். அன்று வியாழனில் மனிதர்கள் உருவானாலும் உயிரணுவின் தோற்றங்கள் இதே சூரியனின் இயக்க நிலைகள் கொண்டு வளர்ந்ததனால் மாற்றம் இல்லாதபடி இதே பிரபஞ்சத்தில் பூமியில் இன்று மனிதனாக வாழ்கின்றோம்.

அது போக… நம் பிரபஞ்சத்தில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் போன்ற ஏனைய பல நட்சத்திரங்கள் தனித்தன்மை கொண்டு தனக்கென்று ஒரு பிரபஞ்சமாக இயக்கும் நிலைகளில் சிறுகச் சிறுக (சுமார் 25 வருடங்களுக்குள்) பிரிந்து விட்டது.

பிரிந்ததனால்…
1.இந்தப் பிரபஞ்சத்தில் உருவான மனிதர்களுக்குக் கிடைக்கும் அறிவின் சிந்தனைக்குரிய நிலைகளும்
2.அனைத்தும் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் குறைந்து கொண்டே இருக்கின்றது.

அதனின் விளைவால் விஞ்ஞான அறிவால் இருள் சூழ்ந்த நிலைகளாக மாறி
1.நம்மையே அழித்துக் கொள்ளும் நிலையும்
2.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் உணர்வாக இன்றைய விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது.

குடிபோதையில் உள்ளவர்களை… என்ன தான் அவர்களை அதை நிறுத்தச் சொன்னாலும் அது தான் அவருக்கு ரசனையாக இருக்கும்… கேட்க மாட்டார்கள்.

உடலின் இன்பத்திற்காக மதுவை அருந்துபவர்களும் மற்ற சிந்தனையற்றுத் தன் நிலைகளில் அதையே தான் செய்து கொண்டிருப்பார்கள்.

அதே போல் விஞ்ஞான அறிவிலே சிக்கிய நாமும் இந்த உடலின் சுகத்திற்காக மற்றதை மறந்து தன் செயலை மறக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.

போதைப் பொருளை உபயோகிப்பது போலவே நாமும் விஞ்ஞான உணர்விலே சிக்குண்டு மனித உணர்வின் செயலைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றோம்.

மனித இனமே பூண்டோடு அழிந்திடும் நிலை வளர்ந்து கொண்டிருக்கின்றது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகள் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி ஒளியான வித்துக்களாக விளைய வைத்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி இன்றும் அழியாத நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.

நம் பூமியில் உயிரினம் தோன்றிய நிலைகளிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று மனித வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி ஒளி காணும் நிலைகள் பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகள் இன்றும் இந்தப் பூமியில் படர்ந்துள்ளது. அதை எவ்வாறெல்லாம் பருக வேண்டும்…? என்று மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) உணர்த்தினார்.

அந்த அருள் ஞான வித்தை வளர்ப்பதற்கு
1.எங்கெங்கெல்லாம் அந்த அருள் ஞான சக்தி தொடர்ந்துள்ளதோ
2.அங்கெல்லாம் கால்நடையாகவும் மற்ற வழிகளிலும் செல்லச் செய்து
3.ஆங்காங்கு பூமியிலே அந்த ஞானிகள் உணர்வு பதிந்து இருப்பதையும்
4.அவர்கள் உடலில் விளைந்த சக்திகள் படர்ந்திருப்பதையும் நுகரும்படி செய்தார்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் இந்த உலகம் அனைத்தும் எம்மை அழைத்துச் சென்று அவர் உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்த மெய் ஞானிகள் உணர்வின் ஆற்றலைப் பருகும் முறையைக் காட்டினார்.

அந்த மகரிஷிகளின் உடலில் விளைந்த உணர்வலைகள் பூமியில் பதிந்து இருந்தாலும்
1.அந்த அலைகள் அங்கே படர்ந்திருப்பதை நீ நுகரு
2.அந்த ஆனந்த சக்தியான வித்தை உனக்குள் வளர்த்துக் கொள்…! என்றார்.

குரு காட்டிய நிலைகள் கொண்டு அதனை இந்தப் பூமி முழுவதும் சுழன்று வந்து அந்த அருள் ஞான வித்துக்களை வளர்த்துக் கொண்டேன்.

விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்தில் வெளிப்படுத்திய அந்த அருள் ஞான வித்துக்களைத் தான் குருநாதர் காட்டிய வழிப்படி உங்கள் உள்ளங்களில் இப்போது ஆழமாகப் பதிவு செய்கிறோம்.

1.பதித்த அந்த உணர்வின் சத்தை… குரு வழியில் திரு அருளாக நீங்கள் பெற வேண்டும்
2.அருள் ஞானிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.அருள் ஞானப் பசியை உங்களுக்குள் அது ஆற்றிட வேண்டும்
3.பேரானந்தப் பெருநிலை நீங்கள் பெற்றிட வேண்டும் என்பதற்கே மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

ஒவ்வொரு நிமிடத்திலும் ஞானிகள் அருள் சக்திகளை எடுத்து ஒளியான அணுக்களை உடலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அவர் வாழ்க்கையில் ஒரு பித்தனைப் போன்று
1.இன்னல் என்ற நிலையை அவர் அறியாது
2.இன்னல் எது…? என்றே அறியாத நிலைகள் கொண்டு
3.இன்னல் என்ற நிலையை அவருக்குள் அறியாத நிலையிலே
4.இன்னலைப் போக்கிடும் ஒளியின் சுடராக அவருக்குள் விளைய வைத்து
5.விண்ணின் ஆற்றலை அவருக்குள் ஒளியின் சுடராக மாற்றி
6.ஒளியின் சுடராகப் பெறும் நிலையை அவர் பித்தனாக இருந்து எனக்குள் (ஞானகுரு) ஆழப் பதியச் செய்தார்
7.அருள் ஞான வித்தை வளர்க்கும் முறையையும் வகுத்துக் கொடுத்தார்.

விண்ணின் ஆற்றல் மிக்க நிலையை மகரிஷிகளால் வளர்க்கப்பட்ட அருள் ஞான வித்துக்களை
1.அதை நமக்குள் எவ்வாறு பருகிட வேண்டும்…?
2.அதை நமக்குள் எவ்வாறு வளர்த்திடல் வேண்டும்…?
3.அதை நமக்குள் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்…? என்று உணர்த்தி
4.அந்த ஞான வித்தை எல்லோரும் வளர்க்க வேண்டும் என்றும்
5.அதன் மூலம் அருள் ஞானப் பசியை எல்லோருக்கும் போக்க வேண்டும் என்றும்
6.அதை எனக்குள் உருப் பெறச் செய்து உணர்த்திக் காட்டினார்.

அதை எல்லாம் நான் (ஞானகுரு) அவர் நினைவு கொண்டு… அவருடைய துணை கொண்டு தான் அறிய முடிந்தது… வளர்க்க முடிந்தது.

காரணம்… ஒவ்வொரு மகான்களும் மகரிஷிகளும் தனக்குள் வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகள் தன் இன மக்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் எல்லோரும் மகிழ்ந்திட வேண்டும் என்றும் தனக்குள் விளைய வைத்த அந்த உயர்ந்த உணர்வுகளை ஞான வித்துக்களாக நமக்குள் பதியச் செய்தார்கள்.

ஆனால் காலத்தால் அந்த அருள் ஞானியின் வித்துக்களை அது முளைக்காது தடைப்படுத்தி விட்டோம்.. விரயமாக்கி விட்டோம்.
1.அருள் ஞான வித்துக்கள் அனைத்தும் முளைக்காது சென்ற அந்தக் காரணத்தால்
2.அருள் ஞானிகள் உணர்வுகள் தேங்கி அதற்குண்டான ஊட்டச்சத்து இல்லாது போய்விட்டது.

அப்படிப்பட்ட இந்த நேரத்தில் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளாற்றலால் அதனைப் பெறும் பாக்கியமாக அமைந்தது.

ஆகவே குரு கொடுத்த அந்த அருள் ஞான சக்தியின் துணை கொண்டு
1.எண்ணத்தால் அதை நமக்குள் வளர்த்திடுவோம்
2.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக நமக்குள் வளர்த்திடுவோம்.
3.அருள் ஞானப் பசியைப் போக்கிடுவோம்.
4.அருள் ஞானிகளுடன் ஒன்றிடுவோம்.

அந்த மகரிஷிகள் விளைய வைத்த அந்த அருள் ஞான வித்தை நாம் பருகுவோம்… அது நமக்குள் பெருக வேண்டும்… நாம் பெருக்கிட வேண்டும். அதன் மூலம் எல்லோருடைய அருள் ஞானப் பசியையும் போக்கிட வேண்டும்.

விண்ணின் ஆற்றலைக் கண்ட மெய் ஞானிகளின் நுண்ணிய அறிவினை உங்களையும் பெறச் செய்கின்றோம்

 

விஞ்ஞான அறிவால் ஒரு மனிதனுக்குள் பதிந்த நிலைகளை… இங்கிருந்து இராக்கெட்களைக் கோள்களுக்குள் ஏவி… அதனின் உணர்வை இங்கே தரையில் இருக்கக்கூடிய எந்திரத்தின் துணை கொண்டு கவர்ந்து விஞ்ஞானி படம் எடுக்கின்றான்… அதை அறிகின்றான்.

ஒளி எவ்வளவு தூரம் பாய்கிறதோ… அதாவது இப்பொழுது லைட் போட்டோம் என்றால் அது எவ்வளவு தூரம் சீறிப் பாய்கின்றது என்ற நிலையைக் கணக்கிட்டு… விஞ்ஞானக் கருவிகளின் மூலம் “ஒளி ஆண்டு” என்று கண்டு சொல்வார்கள்.

ஒரு எரி நட்சத்திரம் வியாழன் கோளில் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம்,
1.அதை அங்கிருந்து படம் எடுத்து இங்கே வருவதற்கே அதனுடைய வேகத்துடிப்பு அதிகமாகி நான்கு நாட்களாவது ஆகும்… குறைந்தபட்சம்.
2.அந்த நான்கு நாள்களில்… படம் எடுத்த இந்த உணர்வுகள் அலைகளாக இங்கே அனுப்பச் செய்து
3.இங்கே எந்திரத்தின் துணை கொண்டு அது சிறிதளவு புள்ளியைப் பெரிதளவாக அதைப் பெருக்குகின்றான்.
4.பின் அது விழுந்த இடத்தினையும் அவன் அறிகின்றான்.
5.இவன் அங்கே படம் எடுத்து வந்தாலும் “இந்த உணர்வலைகள்” பின் வரும் பொழுது “எதிர்நிலையான அலைகளாகப் பட்டால் இது பிரிக்கும்…”

ஆனால் அங்கே படம் எடுத்த உணர்வின் தன்மையை… மீண்டும் அவன் எடுப்பான் என்றால் அவனுக்குள் அங்கு அந்த ஒளியின் தன்மை எடுத்து அலைகளாக அனுப்பும் பொழுது “இங்கே மாற்றங்களே ஏற்படும்…”

ஆக இங்கே ஒரு எல்லையைக் குறித்து இதனின் வேகத் துடிப்பு வரும் பொழுது சுழற்சியின் வேகத்தில் கண்டுணரலாம். மலை போன்ற உள்ள அந்த பெரும் பாறையின் தன்மைகள் அது சுழன்று வரப்படும் பொழுது… வியாழன் கோளிலே வந்து மோதும் வேகமும் வியாழன் சுழற்சியின் வேகம் அதிகரிக்கப்படும் பொழுது… அந்த வியாழனிலோ தனது ஈர்ப்பின் சக்தி அதிகமாகும் பொழுது அது பனிப்பாறைகள் தான் அவை.

சுழற்சியின் வேகம் கூடும் பொழுது அதன் ஈர்ப்புக்குள் வந்தவுடனே இது சுக்குநூறாகத் தெறித்துப் பஸ்பம் ஆக மாறும்.

அதைப் போன்ற எரிகற்கள் பூமியின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது பெரும் பாறாங்கல்லாக இருப்பது சிறு கல்லாகத் தேய்ந்து இங்கே விழுகின்றது.
1.அது இங்கே உராய்வின் தன்மையில் “எரியவில்லை” என்றால்
2.மனிதர்கள் இங்கே பூமியில் வாழவே முடியாது.

ஆக இந்த சுழற்சியின் வேகத்திற்கும் சுழற்சியின் வேகத்தில் வரும் காற்று மண்டலத்தில் உராய்ந்து தான் இந்த இதனுடைய நிலைகள் அது குறைந்து வருகின்றது. ஆக இதைப் போன்று பன் மடங்கு சுழலும் நிலைகளில் அது வருகின்றது.

இதை எல்லாம் விஞ்ஞானிகளும் இன்று கண்டு நமக்குச் சொல்கிறார்கள்.

இதே மாதிரித் தான் மெய் ஞானிகள் அன்று அவர்கள் கண்டுணர்ந்தது.
1.தனக்குள் இருக்கும் ஆற்றலின் தன்மை கொண்டு விண்ணிலே தன் எண்ணங்களைப் பாய்ச்சுகின்றான்…. அனைத்தையும் அறிகின்றான்.
2.அந்த மெய் ஞானத்தின் உணர்வின் தன்மையை உங்களில் பதிவு செய்யும் பொழுது
3.இந்த உணர்வைத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப நாம் எண்ணும் போது
4.கோடிக் கணக்கான சரீரத்தில் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அது பெருகி
5.அது எப்படி நமக்குள் மனிதனாக உருவாக்கியது…? என்ற நிலையை நாம் காண முடியும்.

அந்த மெய் ஞானிகளில் “முதன்மையாக…” 2000 சூரியக் குடும்பத்தையும் கண்டறிந்தவன் அகஸ்தியன்
1.அவன் கண்டுணர்ந்த உணர்வுகள்… அவனில் விளைந்த உணர்வுகள் தான் இன்றும் நம் பூமியில் படர்ந்து கொண்டு உள்ளது.
2.அவன் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் அறிந்து… தீமைகளை அகற்றி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி
3.துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டுள்ளான் அகஸ்தியன்.

அவன் அருளை நாம் பெற்றால் அவன் கண்டதை நாமும் முழுமையாகக் காணலாம்… அறியலாம். பிறவியில்லா நிலை அடையலாம்… ஒளியின் சரீரம் பெறலாம்.

மெய் ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்”

 

நிழலுக்காகக் குடை தேடுகின்றோம்… வெய்யிலில் நிரந்தரக் குடில் அமைக்கின்றோம். வாழ்க்கையில். அதைப் போன்று தெய்வத்தின் சக்தி நிலையையும்…
1.அவசரக் காலங்களுக்குத் தெய்வம் வந்து காக்குமென்ற நம்பிக்கைக் குடையைத் தேடுகின்றோமே தவிர
2.நிரந்தரக் குடிலமைப்பைப் போல் ஆத்ம தெய்வத்தைத் தெய்வ சக்தியாக்கிக் கொள்வதில்லை.

“சொல்வாக்கு செல்வாக்கு சகல சக்திகளையும்” ஆத்ம ஞான வளர்ச்சியினால் வழிப்படுத்தும் ஆற்றல் எண்ணத்தின் உணர்வினால் வழியமைத்துக் கொள்ள முடியும்.

ஆலயத்தைக் காட்டி எண்ணத்தைக் குவித்து உயர வழி காட்டிய தொடர் நிலை இன்று, ஆலயமென்ற ஸ்தலத்தில்தான் ஆண்டவன் அருள் நிலையை அடையும் பொக்கிஷமாக உணர்வின் மோதலின் உந்தல் பல ஆயிரம் ஆண்டுகளாக மனித உணர்வின் பிறப்புடன் தொடர்பு கொண்டு பக்தி இயக்க அலைத் தொடர்பின் போற்றித் துதித்து “தன்னைத்தான் தாழ்த்தி… தெய்வத்தின் உயர்வைப் புகழ்ந்து வழித் தொடர் பிறப்பில் தான் வந்துள்ளோம்…”

வழித்தொடர் பிறப்பென்பது
1.பிறப்பெடுத்த ஆத்மா பிறப்பில் வளர்த்த எண்ண வேட்கையின் “அலை சக்தியின் இறப்பில்”
2.ஆவி ஆத்ம நிலையின் வேட்கை அலையின் எண்ணம் அதன் பிறப்பு வாழ்க்கையில் வளர்த்த வீரிய பதிவு நிலையின் பக்தி நிலை
3.பிறப்பில் வாழும் மனித ஆத்மாவின் அலை ஈர்ப்புடன் உணர்வின் எண்ணத்தில் மோதி… அத்தொடர்பில் வெளிப்படுத்தும் உண்மைதனை
4.மனிதன் இன்று தெய்வம் பேசுகின்றது முருகன் வந்து அருள் சொல்கின்றார் என்ற தெய்வங்களின் நாமத்தைக் கொண்டு வளர்ந்த அவர்கள்
5.வளர்த்த கவிநயப் போற்றல் கவிதைகளை வழித்தொடரில் உருப்போட்டு ஜெபித்து
6.பல கோடி கோடி ஒன்றின் தொடர்பில் ஒன்று உருண்டு உருண்டு வளரும் ஆதிசக்தியின் வளர்சக்தியின் வீரியத் தொடர்பினை
7.தன் ஞானத்தின் உயர்வு வழித் தொடரில் செலுத்தாமல் ஏட்டுப்படிப்பில் படிக்கும் போதனையின் அறிவு நிலையின் தொடர் வட்டத்தைப் போன்றுதான்
8.இன்றைய பக்தி முறையின் வழிபாட்டு நிலையும் உள்ளது.

ஒன்றுடன் ஒன்று கூட்டி அதன் மாற்று விகிதத்தில் மாறி வரும் உருப்பெறும் தொடர்பினால் பிறிதொரு நிலையை ஆராயும் தன்மை அடிப்படை ஞானத்தில் மனித எண்ணம் செல்ல வேண்டும்.

மிருகங்களின் தன்மையில் ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பில்…
1,ஓர் ஆட்டின் தொடர்பில் ஆட்டு மந்தையே செல்வதைப்போன்ற நிலை தான்
2.இன்றைய மனிதனின் வழித்தொடரும் உள்ளது.

பல கோடி மனிதர்கள் உள்ளனர் என்றால்… ஒன்றுக்கொன்று மாறு கொண்டு சக்தி நிலை கொண்டுதான் உருப்பெற்றுள்ள மனித நிலை…
1.இவ்வெண்ணத்தின் உணர்வைச் செலுத்தக்கூடிய ஞானக்கூட்டுச் சேர்க்கையால்
2.ஒவ்வொரு மனிதனுமே தன்னுள்ளுள்ள சக்திப் படைப்பினை வளர்ப்பின் வளர்ப்பாய் வழித் தொடர்களாகப் படர்ந்துள்ள அமிலக்கூறின் சத்தெடுத்து
3.ஒவ்வொரு மனிதக் கோளத்திலும் அதைச் சமைத்து சமைப்பின் சுவையை ஆத்ம முலாம் சுவைத்து
4.ஆத்மாவின் உயர்வைக் கொண்டு அகில சக்தியின் உன்னத சக்தியாய்ப் பிரித்து உயர்வுப் படைப்புகளைப் படைக்கலாம்.

மனித எண்ண சக்தியின் வளர்ச்சி கொண்டு… எண்ணத்தின் ஞானத்தால் சாதிக்கவல்ல சக்தித் தன்மை உயர்வு தானப்பா “சூரிய சக்தியும் சகல வளர்ந்த சக்தி நிலைகளுமே…”

1.வாழ அமைக்கும் ஜீவாதார பாதுகாப்பு வேலிதான் உயர்வு என்ற உருவகக் கோபுரங்கள் கட்டி உழன்றுள்ள மனிதன்
2.உணர்வின் எண்ண ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்” என்றுணர்ந்து செயல்பட வேண்டுமப்பா.

நமது எல்லை

 

தேர் என்பது மிகவும் வலிமையானது… பல நூறு பேர் ஒன்று சேர்ந்து இழுத்தால் தான் அது நகர்ந்து ஓடும். ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்தால் தேர் எல்லை வந்து சேராது.

இது போன்றுதான் நமக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான குணங்கள்
1.ஒன்று தீமையின் நிலைகள் இழுத்தால் ஒன்று நன்மையின் நிலைகள் இழுக்கப்படும்போது
2.நம் உணர்வின் தன்மை ஒளியாகும் அறிவின் தன்மைகள்… உயிருடன் ஒன்றி எல்லையைச் சென்றடையாது.

அந்த எல்லையை அடைய… எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்பதுதான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் தெளிவாகப் பதிவு செய்து
1.இந்த உணர்ச்சிகளை உந்தும்படி செய்து அந்த உணர்வின் ஏக்கத்தால்
2.மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதே கூட்டுத் தியானம்.

அதன் வழி கொண்டு நீங்கள் தியானித்த பின் நம் மூதாதையரான குலதெய்வங்களின் உயிரான்மாக்களை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் அவர்களை இணையச் செய்து
1.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்து விசையால் உந்தித் தள்ளினால்
2.சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து ஒளியின் சரீரம் பெறுகின்றனர்.

காரணம் சப்தரிஷிகள் என்பவர்கள் நஞ்சினை வென்றவர்கள் உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் இருளை மாய்த்தவர்கள். அந்த ஒளிக்குள் இந்த உயிரான்மாக்கள் பட்ட பின் இருள் சூழும் உணர்வுகள் கருகி விடுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் அறிவால் தெளிந்த உணர்வுகள் நிலைக்கின்றது… அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்கின்றது
2.இவ்வாறு நாம் செய்தோம் என்றால் சப்தரிஷி மண்டலங்களில் அவரும் ஒன்றாகி விடுகின்றார்கள்… “சப்தரிஷிகளாகின்றார்கள்…”
3.சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் எப்போது எண்ணினாலும்
4.அதைப் பெறக்கூடிய தகுதி நமக்கு அங்கே கிடைக்கின்றது.

அவர்கள் முன் செல்ல வேண்டும்…! காரணம் அவருடைய உணர்வுகள் தான் நமது உடல் அந்த உணர்வினை நினைவு கொண்டு வந்து உந்தித் தள்ளி அந்த உணர்வினை நாம் பெறச் செய்தால்… அவர்கள் முன் சென்றால் நாமும் எளிதில் பின் செல்ல முடியும்.

இந்த மார்க்கத்தைத் தான் விநாயகர் தத்துவத்தில் தெளிந்த நிலைகள் கொண்டு காட்டியுள்ளார்கள். உடலை விட்டுச் சென்றால் ஆறாவது அறிவின் துணை கொண்டு நமது எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

அப்படி இல்லை என்றால் என் பிள்ளை இப்படிச் சொன்னானே… இந்தச் சொத்தெல்லாம் வைத்திருக்கிறேன்… நாளை அவன் அதை என்ன செய்வானோ…? என்று இப்படி எண்ணினால்
1.நம் எல்லை பையன் உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்
2.நாம் பட்ட கஷ்டம் எல்லாம் அவனுக்குள் விளையத் தொடங்கும்.

ஒருவன் என்னைச் சாபமிட்டான்…! இப்படி செய்தானே அவன் குடும்பம் உருப்படுமா…? என்று நினைத்தால் அவனைப் பழி தீர்க்கும் உணர்வாகச் சேர்ந்தால் “நம்முடைய எல்லை சாபமிட்டவன் இடத்திற்குச் சென்றுவிடும்…”

சாகப் போகும் பொழுது நினைவு எங்கெல்லாம் போகின்றது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் நான் சுவையான உணவை ஆக்கிப் போட்டேன் எனக்கு நல்ல கறித் துண்டு (மட்டன்) உண்டா…? என்று நினைத்தால் ஆடாகத்தான் போக வேண்டி வரும்… இது நிச்சயம்.. எல்லை அது தான்…!

ஏனென்றால் அன்று நன்றாக இருக்கும் பொழுது எல்லோருக்கும் சுவையாக ருசியாகச் சமைத்து போட்டேன் ஆனால் இப்பொழுது எனக்கு என் ருசிக்காக ஒரு துண்டு கூட கொடுக்கவில்லை பாருங்கள்… எல்லாவற்றையும் அவர்களே சாப்பிடுகின்றார்கள்.

1.இப்படி எண்ணினால்… எல்லை அந்தக் கறித்துண்டின் மேல் ஞாபகம் வந்தால்… அந்த உயிரினத்திடம் தான் இந்த உயிர் செல்லும்.
2.ஆகவே எதனை கடைசி முடிவாக நினைவின் ஆற்றலைக் கொண்டு வருகின்றமோ… எல்லை அதுவாகவே நிர்ணயிக்கப்படுகிறது.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆத்மாவின் “விழி நிலையின் ஒளி நிலை”

 

பிறவா வரம் கொண்டு ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை உணர்ந்தீரானால் உயர்வு கொண்ட “ஒளி நிலையின் உண்மை புரியும்…”

சகல ஜீவசக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித்தன்மையின் “விழி நிலை” ஜீவராசிகளுக்குத் தான் உண்டு.

பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றையத் தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டிருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில்
1.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாய் மாறி மாறி வரும் வளர்ப்பு, அழிவு, வளர்ப்பு என்ற நிலையில்
2.ஒவ்வொன்றின் வார்ப்பு வளர்ப்பில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு
3.உயிரணு தோன்றி ஒவ்வொன்றிலும் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து, அழிந்து சக்தி கொண்டு பல நிலைகளுக்குப் பிறகு
4.ஜீவ சரீரம் பெறும் விழி நிலையாற்றல் ஊர்வன, நீந்துவன, பறப்பன, நடப்பன
5.இத்தொடர் ஜீவராசிகளில் விழி நிலை ஒளிகாணும் உருவ “எதிர் நிலையை அறியும் ஆற்றல்” வழி வருகின்றது.

பலவில் முதிர்ந்து மனித எண்ண செயல் அங்க அவயவங்களின் ஆற்றல் வளர்ப்புநிலை பல கோடி ஆண்டுகளுக்குப் பின் உயிரணு தோன்றி பல வார்ப்பில் மோதுண்டு வளர்ச்சி கொண்டு முற்றிய நிலையில்
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு… விழியின் பாப்பாவில் படம் பிடித்து
2.உணர்வு கொண்ட எண்ணத்தில் அறியும் வாழ்க்கை நிலையிலிருந்து
3.சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவசக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம்தான் உண்டு.

காற்றலையில் இப்பூமி வளர்ப்பில் ஜீவன் பிரிந்த ஆத்ம அலைகள் சுழன்று கொண்டே காற்றலையில் மிதந்து கொண்டே இப்பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் “விழியால் பார்க்கும் நிலை அவ்வாத்மாவிற்கு இல்லை…” சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் சுழலுகின்றது.

ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்… உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது அவ்வலையின் உணர்வு இவர்களின்மேல் மோதி அத்தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவகாந்த அலைத்தொடர்பு கிட்டியவுடன் அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர்கொண்டு பார்க்க முடிகின்றது.

அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு பார்க்கும் நிலையானது
1.எப்படிப் புகைப்படக் கருவியைக் கொண்டு அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்ப தாள்களை அக்கருவியுடன் பொருத்தி
2.அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்து எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று ஆவி ஆத்மாக்களின் செயல் நிலையுண்டு.

எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலைதான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகை தான் காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக் கண்ணாடியிலோ நீரிலோதான் பார்க்கும் நிலை உண்டு.

ஆத்ம தியான சக்தியைக் கொண்டு ஞான திருஷ்டியால் விழியை மூடிக்கொண்டு ஞானத்தால் பெறும் தியான சக்தியில் ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்… இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித்தொடர் கொண்டு… ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலை காட்சிகளை… எண்ணத்தால் எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித்தன்மை இவ்வாத்ம அலையே பெற்று விட்டால்… ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.

இச் சரீரக் கூட்டின் சமைப்பில்…
1.காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக்கூடுகள் பெறும் தன்மை கொண்டுதான்
2.ஆத்மாவின் விழி நிலையின் ஒளி நிலை பெறும் ஆத்ம ஜோதியான ஜோதி நிலை சக்தியினால்
3.ஏகத்தையும் காணும் ஆத்ம நிலையின் ஜோதி நிலை கொண்டு
4.நம் வளர்ப்பின் தொடருக்கு வழிகாட்டிய ரிஷி சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
5.அவர்களின் வளர்ப்பின் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிமிடமும் நம் குருவான உயிரை ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று எண்ண வேண்டும். காரணம் நம் குருநாதர் பெயரும் அது தான்.
1.அவர் தனக்குள் அந்த உயிரின் நிலைகள் ஒன்றி
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாக்கி
3.குருவின் நிலைகள் கொண்டு மெய் உணர்வின் சக்தியைப் பெற்றார்.

அதனால் ஈஸ்வரா குருதேவா…!

அவர் பெயர் ஈஸ்வரா என்று வரும் பொழுது எனக்கு (ஞானகுரு) அந்த உணர்வின் தன்மையைக் கொடுத்ததனால்
1.ஈஸ்வரா குருதேவா என்று என் உயிரை நான் எண்ணினாலும்
2.என் குருவை நான் எண்ணினாலும் இரண்டும் ஒன்று தான்.

குருவாக இருந்து அந்த உணர்வின் தன்மையைப் படைக்கப்படும் பொழுது அது உடலாக உருவாகின்றது ஆகவே “ஈஸ்வரா குருதேவா” என்பது உயிரின் இயக்கம் ஈசன் ஆகிறது.

நமக்குள் உருவாக்கிக் (சிருஷ்டி) கொண்டிருக்கும் அந்த ஈசனின் துணை கொண்டு நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண் செல்வதே குருநாதர் காட்டிய மெய் வழி.

அவர் காட்டிய அருள் வழியில் இந்த உலகத்திற்கு வழிகாட்டிகளாக நாம் வளர வேண்டும். நாம் விடும் மூச்சின் அலைகள் பிறரின் துன்பத்தை மாய்க்கக்கூடிய நிலைகளாகப் படர வேண்டும்.

1.நம் சொல்லின் நிலைகள் பிறரை இன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சியின் உணர்வாக உருவாக்கி
2.மற்றவரை இருள் சூழச் செய்யும் விஷத்தை மாய்த்து
3,ஒளிச் சுடராகப் பெறும் அந்தத் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும்

எனக்குள் (ஞானகுரு) பல இன்னல்களோ அல்லல்களோ வந்தாலும் அதனின் நிலைகள் எனக்குள் சேராத வண்ணம் மெய் ஒளியின் தன்மையை எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று குருநாதர் உபதேசித்து உணர்த்தினார்.

1.அவர் எனக்கு எப்படி அந்த ஆற்றலைப் பெறும் சந்தர்ப்பமாக அதைப் பதிவு செய்தாரோ
2.அவர் சொன்ன வழியில் அவரைத் தொடர்ந்து அந்த உணர்வின் தன்மையை நான் நினைக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் படைக்கப்படுகிறது.
4.அதிலே விளைந்த உணர்வின் சத்தைத் தான் ஞான வித்தாக உங்களுக்குள் செலுத்துகின்றேன்.

வயலைப் பண்படுத்தி அதற்குள் நல்ல விதைகளை விதைத்த பின் அந்த விதையின் தன்மை காற்றிலிருந்து தன் சக்தியை எடுத்துச் செழித்து வளர்கிறது.

அதைப்போல மெய் ஒளியைப் பெறும் தகுதியை நீங்களும் பெற வேண்டும். குருநாதர் அருளிய அந்த அருள் சக்திகளை நாம் எல்லோரும் பெறுவோமேயானால் விஞ்ஞான அழிவில் இருந்து நாம் மீட்டி மெய் ஞானத்தின் வழிகளில் நாம் செல்ல முடியும்.

எதுவாக இருந்தாலும் இயற்கையின் நிலைகள் இனம் இனத்துடன் தான் சேர்க்கும். மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அந்த இனத்துடன் நாம் இணைந்து… அந்த ஆற்றலைப் பெற்று
2.அவர்கள் எங்கே விண் சென்றார்களோ அங்கே செல்ல முடியும்.

ஆகவே…
1.குருநாதர் அருளிய ஆற்றல்மிக்க சக்தி எனக்கு மட்டும் சொந்தமல்ல. நம் அனைவருக்குமே சொந்தம்.
2.ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் செயல்படுகிறது.

நீர் சிறு துளியாக விழுந்தால் பூமிக்குள் பட்டு ஈர்க்கப்பட்டு விடுகின்றது. ஆனால் பெரும் துளிகள் ஒன்றாகச் சேர்ந்து மழையாகப் பொழியும் பொழுது பெரும் வெள்ளமாகப் பாய்ந்து அனைத்தும் சேர்ந்து வலுக் கொண்டதாகக் குப்பை கூளம் செத்தைகள் அனைத்தையும் அடித்துச் செல்கிறது.

அதைப் போல நாம் அனைவரும் அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு ஒரே உணர்வாக ஓ…ம் ஈஸ்வரா… என்ற உணர்வின் குரலை எழுப்பப்படும் பொழுது பெரும் வெள்ளமாக அருள் சக்திகள் நமக்கு முன் குவியும்.
1.அதன் மூலம் நம்மை அறியாமல் ஆட்டிப்படைக்கும் உணர்வுகளையும்
2.இருள் சூழச் செய்யும் உணர்வின் தன்மைகளையும் மாய்த்திட முடியும்.

மெய் ஞானிகளின் அருள் ஒளிகள் பெரும் வெள்ளமாகப் பாயும் போது மெய் வழியில் மெய் ஒளியைப் பெறும் அந்த ஆற்றல் மிகுந்த சக்தியை நாம் அனைவருமே பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும். நமக்குள் ஆற்றல் மிகுந்த சக்தி உண்டு. இந்த மனித உடலில் இருந்துதான் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.

அத்தகைய நிலைகளை நாம் அனைவரும் நிச்சயம் பெறுவோம்…!

நமக்குள் மறைமுகமாக செயல்படும் இயக்கங்கள்

 

கண்ணுக்குப் புலப்படக்கூடியது அனைத்துமே துவைதம்… அதிலே மறைந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது அத்வைதம்…
1.அந்த உணர்வலைகளை நாம் கவர்ந்து விட்டால் விசிஷ்டாத்வைதம்.
2.எதனின் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோமோ
3.அந்த உணர்வு நம் உடலுக்குள்ளேயே இருந்து மறைந்திருந்து செயல்படுத்துகின்றது.

சந்தர்ப்பத்தில் ஒரு வேதனைப்பட்ட நிலைகளைப் பார்த்தோம்… அது சூட்சமமாக இருக்கின்றது அது.

அவர்கள் வெளிப்படுத்திய அந்த வேதனை உணர்வலைகள் அத்வைதம். அதை நாம் இப்படி செய்கின்றாரே என்று நுகர்ந்தறியப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம். கவர்ந்து கொண்ட உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது.

பின் என்ன செய்கின்றது…?

1.என்னை அறியாமலே அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் வேதனை வருகின்றது.
2.வேதனை வருவது ஏன்…? என்று நமக்குத் தெரிவதில்லை… நம்மை அறியாமலே அப்பொழுது புலம்புகின்றோம்.

ஆகையினால் தான் இதை விசிஷ்டாத்வைதம் என்று காண்பிக்கின்றார்கள்.

1.நீ கவர்ந்து கொண்ட உணர்வு எவ்வாறு உன்னை இயக்குகிறது…? என்பது
2.சாஸ்திர விதிகளில் தெளிவாக இப்படிக் காட்டப்பட்டு இருக்கின்றது.

ஆனால் அத்வைதம் வேறு விசிஷ்டாத்வைதம் வேறு என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொண்டு சண்டை இட்டுக் கொள்கின்றார்கள். இது தான் உண்மை இல்லை இதுதான் உண்மை என்று சொல்கின்றார்கள். மறைமுகமாக இயக்குகிறது என்று சொல்கின்றது… நீங்கள் எப்படி நேரடியாக இயக்கும் என்று சொல்லலாம்…? அவர்களுக்குள் ஒரு போர் முறை.

வியாசகரால் கொடுக்கப்பட்டது தான் இந்த உண்மைகள்…! அதையாவது குறைந்தபட்சம் தெரிந்து கொண்டிருக்கின்றோமா…? என்றால் இல்லை. அதை அறியும் பக்குவமாவது இருக்கிறதா…? என்றால் இல்லை.

மற்றவர்கள் வெளிப்படுத்திய உணர்வலைகள் அத்வைதம்… சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அதை அலைகளாக வைத்துள்ளது. அதே சமயத்தில் அந்த உடலைப் பார்த்து அதே உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம்.

தனக்குள் கவர்ந்து கொண்ட நிலைகள் தன்னை அறியாமலேயே மறைமுகமாக செயல்படுகின்றது… விசிஷ்டாத்வைதம் என்று தெளிவாகவே ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அல்லவா…!

விநாயகர் தத்துவப் பிரகாரம் வணங்கப்படும் பொழுது நம்மை அறியாது இயக்கும் இந்த நிலைகளை மாற்றி அமைக்க
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்ற இந்த உணர்வை
4.தனக்குள் மறைமுகமாகவே தீமைகளை அகற்றும் நிலையாக உருவாக்குவது – விசிஷ்டாத்வைதம்.

ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்த்துத் தீமை வராதபடி இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கும் மார்க்கமாக இதை நீ வினைக்கு நாயகனாக ஆக்கு “விநாயகா…”
1.அருள் உணர்வுகளுக்கு நாயகனாக நீ இரு
2.அந்த உணர்வின் செயலின் எண்ணத்தை உனக்குள் உருவாக்கு…! என்று தெளிவாக ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஆகவே அந்த ஞானிகள் காட்டிய வழியில் அருள் உணர்வுகளை நுகர்ந்தபின்… அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று
1.இப்படி எண்ணும்படி தான் ஆலயங்களைக் கட்டி
2.அதிலே மறைமுகமாகவே நமக்குள் பல உயர்ந்த சக்திகளைப் பெறும்படி செய்தார்கள் ஞானிகள்.

ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி

 

நீங்கள் இருவரும் தியானத்தில் எடுத்த அலைத்தொடர்பு அவரவர்களின் உடல் அமிலச் சேர்க்கை உருவக எண்ணத்தின் சக்திக்குகந்த அலையின் தொடர் காட்சிகளை தியான முறையில் தினசரி பார்க்கவும்… பேசவும்… அவ்வழியைக் கொண்டு உங்கள் ஞானத்தை வளரவும் வழி தெரிகின்றது அல்லவா…!

இதன் தொடரைப் போன்றே அமில சக்தியின் வார்ப்பு ஜீவித உயிரணு தோன்றிய ஒவ்வொரு ஜீவ வளர்ச்சிக்கும் அவையவை பெற்ற சுவை, மணம் குணத்துக்குகந்த தனித்தன்மை உருவான உயர் குணங்கள் பல உண்டு.

பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள பல கோடி அமில குணங்கள் அதனதன் சுழற்சி ஓட்டத்தில் அங்கங்கு உள்ள படர்ந்த அமில குணங்களுக்கொப்ப ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தன் தன் இன வளர்ச்சிக்கொப்ப வளர்ந்த மண்டலமாயும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சியில் சுழன்று கொண்டே வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே வழி கொள்ளும் வளர்முறை உள்ளது.

மணலுண்டு நீருண்டு சுண்ணாம்பும் உண்டு மரம் மண் இவை யாவையும் இருந்தாலும்… அதனை நாம் நமக்கு வேண்டிய பக்குவச் செயலுக்காக சுண்ணாம்பையும் மணலையும் நீரையும் கொண்டு நமக்கு உகந்த இல்லங்கள் அமைத்துப் பாதுகாப்பு இடம் தேடி வாழுகிறோம் அல்லவா…!

அதைப் போன்று பால்வெளியில் நிறைந்துள்ள அமிலச் சுழற்சியில் தன்னிச்சையில் வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே சுழலும் வழித் தொடரிலிருந்து எப்படி வீடமைக்கப் பல பொருட்களை வீட்டிற்கு வேண்டிய நிலைக்கு பக்குவப்படுத்தி வீட்டைக்கட்டி வாழுகின்றோமோ அதைப் போன்றுதான்
1.அமிலச் சுழற்சியின் உயர்வு நிலை சக்தி கொண்ட ஆத்ம நிலை கொண்டு
2.எண்ணத்தின் ஞானம் கொண்டு உயர்ந்த ரிஷிக் கோடிகளின் அமைப்புநிலை உருவகங்கள்தான்
3.ஆதிசக்தியின் சக்தி வழி வந்த… ரிஷி வழி மண்டல அமைப்பின்… ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி வளருகின்றது.

அதது எடுத்து வளர்ந்த நிலைக்கொப்ப வளர்ச்சியின் உயர்ந்த தன்மை கூடும் நிலை வழி பெற…
1.மனித ஞான உயர்வினால் மட்டும்தான்
2.உயர்வின் உருவகத்தையே உருவாக்கும் தன்மை உறுப்பெறும் என்பதனை உணர்த்தியுள்ளேன்.

உண்மையின் உன்னத சக்திதனை உணர்த்தினால் உருவாக்கிடலாம் உலக சிருஷ்டியையே…!

இப்பூமிக்கு மனிதக் கரு வர ஆண் பெண் என்ற இரண்டு ரிஷித்தன்மை கொண்ட ஆத்ம சுழற்சி பூமியான இப்பூமியின் நிலைக்கு சிவசக்தி என்ற ஆத்மக் கரு எங்கிருந்து வந்தது…?

இப்பூமியில் மட்டுமல்ல நம்மைக் காட்டிலும் உயர்ந்த ஞான சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள்… நம் சூரியக் குடும்பமல்லா (நாற்பத்தி எட்டு கோளங்கள்) மண்டலங்களில் ஜீவிக்கின்றனர்.
1.ஞானச் சித்து கொண்டு அவர்கள் நம் பூமியுடனும்
2.மற்றெல்லா பூமித் தொடருடனும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் செயல் கொண்டுள்ளனர்.

இன்று மனித ஆத்மாக்களின் பெருக்கத்திலுள்ள இப்பூமியின் எண்ண உணர்வு செயற்கையின் சுழற்சியில் சிக்காமலும்… விஞ்ஞானத்தை நம்பி வாழும் உருநிலை பெறாமலும் இருந்திருந்தால்… வளர்ந்துள்ள ஜீவ வளர்ச்சியின் சொல் செயல் ஞானம் கொண்ட வழித்தொடரினால் தன் ஞானம் உயரும் நிலை பெற்றிருந்ததென்றால்… இப்பூமி பெற்ற உன்னத உயர்ந்த சக்தியே மிகவும் உன்னத சக்தியாய் இன்னும் பல கோடி கோடி ஆண்டுகளுக்குச் சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்ட மனிதர்களாக இருந்திருப்பார்கள்.

மிக உயர்ந்த குண சக்தியின் ஆனந்த அன்பு கொண்ட இனிமை வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையையே இன்றைய வாழ்க்கை முறை இன்னலின் பிடிப்பில் இறுக்கம் கொண்டு…
1.மனிதனை மனிதனே அழித்து… அழித்து என்பதன் பொருள் இல்லற வாழ்க்கையில் கூடி மனிதப் பிறப்புக்கு வரும் சிசுக்களை
2.சிசுவைக் கருவுக்கே வர விடாமல் பல காலமாய் அவை சேமித்த சக்தி நிலையையே கருவில் வந்து மறைக்கப்பட்ட தன்மையிலேயே
3.இம் மனிதனே மனிதக் கருவை அழித்து அதனை ஞானத்தில் வளர விடாமல் இழிநிலையான சுழற்சியில் அமிழ்த்தி விடுகின்றான்.

தான் படும் வாழ்க்கைச் சுழற்சியில் இன்பங்கள் தனக்குச் சொந்தமானதாகவும் துன்பங்கள் ஆண்டவனின் சோதனையாகவும் எண்ணத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை ஓட்ட அலையில்… எண்ணத்தில் ஏக்கமுடனும் பேராசை எதிர் நிலையிலும்தான்… “மக்களை நடத்திச் செல்லும் மத வழி போதனைகளும் அரசியல் சுழற்சிகளும் சுழன்றுள்ளன…”

தன் ஆத்ம ஞானத்தைக் கொண்டு “உலகத்தையே சிருஷ்டிக்கவல்ல ஆதி முதலாம் விநாயக சக்தி கொண்ட சொல் செயல் ஞானம் கொண்ட மனித ஆத்மாக்களை” இப்பூமி சரீர வாழ்க்கையிலிருந்தே அதை உருவாக்க முடியும்.
1.எப்படி ஆண் பெண் வாழ்க்கை இணைப்புச் செயற்கையில் உருவாகி… சரீரம் பெற்று வாழ்க்கை வழித்தொடருக்கு வந்தோமோ…
2.அதே தொடரில் ஆண் பெண் இணைப்பினால் கருநிலை உருவாகி… பூமி ஈர்ப்பு கரு வளர்க்கின்றோமோ அதைப் போன்றே
3.ஆண் பெண் என்ற இரண்டு ஆத்மாக்களும் தன் ஞான சக்தியினால் சித்து நிலை பெற்று ஒளி நிலைத் தன்மையுடன்
4.உடல் இயக்க உறவு நிலையில் கருத் தோன்றி வளர்வதைப் போல்
5.ஆத்ம இணைப்பில் ஒளி வட்டத்தின் ஆத்மச் சேர்க்கையில் இருந்து பிறக்கும் ஒளி நிலையைக் கொண்டு “ஞானவட்டமாய்”
6.அவ்வலைத் தொடரை எம் மண்டலத்திற்கு அனுப்புகின்றோமோ அம் மண்டலத்தில் எல்லாம் ஜீவச் சிசுவை வளர்க்கவும்
7.ஜீவசக்தியை வளர்க்கவல்ல வழிமுறை ஆத்ம சக்தியை ஆத்ம சேர்க்கையைக் கொண்டு
8.அன்று எப்படி இராமாயணக் காலத்தில் இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் சூட்சுமத்தால்
9.லவ குசா என்ற குழந்தைகளின் படைப்பு நிலையை மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்தியதைப் போன்றும்
10.காந்தர்வன் கன்னி நீரில் வாழும் பொழுது
11.மேகக் கூட்டத்திலிருந்து விந்துக்கள் தோன்றி கன்னி கருத்தரித்து ஞான தெய்வக் குழந்தை பிறந்ததென்றும்,
12.கார்த்திகைப் பெண்கள் முருகனை வளர்த்தனர் என்று கதையில் சொல்லும் உண்மைதனை
13.ஒவ்வொரு மனிதனும் ஞானம் கொண்டு அதிலுள்ள சூட்சுமத்தை உணர்ந்தீர்களானால்
14.சிவசக்தி கருத்தரிக்கவில்லை, சிவன் உருவாக்கிய குழந்தை முருகன் என்று
15.மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவற்றில் அடங்கியுள்ளன.

என்றோ நடந்தவை அவை…! அவற்றின் சக்திதான் இன்று நாம் வாழ்வது என்ற எண்ண உலாத்தான் உள்ளதேயன்றி… “இன்று நடப்பவையும் அத்தன்மைதான்…”

ஜீவக் கரு எத்தனை கோடி கோடி ஆண்டுகள் எம்மண்டலத்தில் வளர்ந்து வாழ்ந்தாலும் இன்று உணர்த்திய இத்தொடரின் உண்மை போன்றுதான்
1.ஜீவ சக்தியின் ஆண் பெண் ஆத்ம சக்தியால்தான் ஜீவ ஆத்மாவில் பெறப்படும் சித்துத் தன்மையும்
2.ரிஷித் தன்மையும் கொண்ட ரிஷிபத்தினி… “ரிஷித்தன்மையைக் கொண்டுதான் உருவாகும் ஜீவனுக்கே ஜீவவித்து விருட்சகம்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் பூமியினுடைய காற்றழுத்த மண்டலத்தில் மோதியபின் நெருப்பாகப் புகையாக மாறுகிறது. அது எந்தப் பக்கம் அதிகமாகப் படர்கிறதோ அந்த இடத்தில் வித்தியாசமான நிலைகள் வரும். அதைத் தான் “வால் நட்சத்திரம்” (COMET) என்று சொல்வது.

இதே மாதிரி நாம் பேசக்கூடிய பேச்சு வெளிப்படுத்தும் மூச்சலைகள் எல்லாமே இங்கே இருக்கிறது. நம் உடலிலும் இருக்கிறது… சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தக் காற்றிலும் இருக்கின்றது.

உதாரணமாக டி.வி. ரேடியாவில் ஒலி/ஒளிபரப்பு செய்தவுடன் எந்த ஸ்டேஷனை நாம் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைகளை இழுக்கின்றது… ஒலியையும் ஒளியையும் காட்டுகின்றது.

அது போல் மனிதன் உயிருடன் வாழும் நிலையில் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்வும் இங்கே சுழன்று கொண்டிருக்கின்றது.
1.இரவிலே நாம் புலனடங்கித் தூங்கினாலும் கூட
2.நாம் பகலில் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அந்த உணர்வுகள் ஆன்மாவில் வந்து சேருகின்றது.

எந்த வேதனையையோ கோபத்தையோ ஆத்திரத்தையோ படுகின்றோமோ அந்த உணர்வெல்லாம் உயிரிலே பட்டுக் கனவுகளாக வருகின்றது.

அந்த உணர்ச்சிகள் திடீரென்று நம்மைத் தூக்கத்திலிருந்து எழும்படி செய்து “என்னை அடிக்க வருகின்றான்…” என்று கத்த வைக்கின்றது. இதையெல்லாம் நாம் பார்க்கின்றோம் அல்லவா.

நமக்குள் இருப்பது… பரமாத்மாவிலிருந்து தான் இதையெல்லாம் இழுக்கின்றது. எதன் வலுவோ அதன் வழி கூடி நம்மை இயக்குகின்றது.

ஆகவே
1.காற்றிலே இது போன்ற நிலைகளை எல்லாம் இல்லாமல் செய்ய வேண்டுமா இல்லையா.
2.அதுதான் விநாயகர் சதுர்த்தி…! தீமை செய்யும் உணர்வுகளை நாம் வராதபடி நிறுத்த வேண்டும்.

நம்முடைய சாஸ்திரங்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாம் யாராவது சிந்திக்கிறோமா…? இல்லை.

நாம் பேசியது இன்னொருவர் உடலிலே ஊழ்வினை என்ற வித்ததாக இருக்கிறது. நாம் பேசியது… நாம் சண்டை போட்டது… அடுத்தவர் சொன்னது… அடுத்தவர் சங்கடப்பட்டது… நோய்வாய்ப்பட்டது எல்லாமே சூரியன் எடுத்து அலைகளாக வைத்திருக்கின்றது.

நம் உடலிலிருக்கும் உணர்ச்சிகள் உந்தியவுடன் அந்த அணுக்களுக்குப் பசிக்கும்போது உயிருக்கு வருகின்றது.. கண் வழி கவர்கின்றோம்… நுகர்கின்றோம்.
1.அதே எண்ணம் வருகின்றது..
2.தீய வினைகளை நம் உடலாக மாற்றுகின்றது… நல்ல உணர்வின் அணுக்கள் ஒடுங்குகின்றது.
3.இதை எல்லாம் கரைக்க வேண்டுமா இல்லையா…?

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணில் பொம்மையைச் செய்து தீயவினைகளைக் கரைக்க வேண்டும் என்று காட்டப்பட்டது. ஆனால் இன்று நாம் வெறும் களிமண்ணில் பொம்மையைச் செய்து நீரிலே கரைக்கின்றோம்.

ஆனால் நம்மை அறியாது உடலிலே சேர்ந்த… நம் உடலுடன் ஒட்டி இருக்கக் கூடிய அந்தத் தீய வினைகளைக் கரைக்க வேண்டும் என்பது தான் ஞானிகள் சொன்னது.

1.சாப்பாடு இல்லாமல் செய்து விட்டாலே எதுவுமே கரைந்துவிடும்.
2.அது போல் தான் நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்குச் சாப்பாடு இல்லை என்றால் தன்னாலே கரைகின்றது.

அதற்குச் சாப்பாடு எங்கிருந்து எடுக்கின்றது…?

நம் பூமி ஒரு பரம். இந்தப் பரமாத்மாவில் தான் எல்லாமே இருக்கின்றது. அதிலிருந்து எடுத்துத் தான் உடலில் இருப்பது வளர்கிறது.

எந்தச் செடியில் வித்து விளைந்ததோ அதை மீண்டும் பூமியில் ஊன்றினோம் என்றால் பரமாத்மாவில் இருக்கும் தாய்ச் செடி வெளியிட்ட அதனின் சத்தைக் கவர்ந்து விளைகிறது.

இது எல்லாம் செடி கொடிகளுக்குச் தெரியாது.. மிருகங்களுக்கும் தெரியாது. எதனின் உணர்வை நுகர்ந்ததோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் அவை இருக்கும்.

ஆனால் மனிதன் இதை எல்லாம் அறியும் ஆற்றல் பெற்றவன். மாற்றி அமைக்கும் சக்தியும் பெற்றவன்.

ஆகையினால் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அதை எல்லாம் ஞானிகள் உணர்வு கொண்டு வேக வைக்க வேண்டும். ஒரு பருப்பை வேக வைத்த பின் மீண்டும் அதை மண்ணிலே விதைத்தால் அது முளைக்காது.

ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணி
3.உள்முகமாக உடலுக்குள் செலுத்தித் தீய வினைகளை வேக வைத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பதிவு எப்படியோ அப்படித்தான் உணர்வின் இயக்கங்கள்

 

இரண்டு நண்பர்கள் பிரியமாக இருக்கின்றார்கள் ஒருவர் தவறு செய்கின்றார் என்று யாராவது சொன்னால்… நான் சும்மா இருக்கும் பொழுது… “அப்படி இப்படி என்று” எல்லாம் என்னைத் தவறாகச் சொல்கின்றார்கள் என்பார்.

1.நாம் பிரியமாக இருப்பதால் இதைக் கேட்டுப் பதிவு செய்து கொள்கின்றோம்.
2.அடுத்து அவர் தவறு செய்து விட்டு “இல்லை” என்று மறுக்கப்படும் பொழுது அதை ஏற்றுக் கொள்கின்றோம்… நண்பர் என்பதால்…!

இவர்தான் தவறு செய்தார் என்று மற்றவர் வந்து சொன்னாலும் அது எல்லாம் எனக்கு தெரியாதங்க…? என் நண்பருடைய சமாச்சாரம்…! என்போம்.

தவறு செய்தார் என்று சொன்னால் கூட… இல்லை நேரடியாக நான் பார்த்தேன் என்று அவர் சொன்னாலும்
1.அப்படி எல்லாம் செய்யக்கூடிய ஆள் இவர் கிடையாது…! தெரியாமல் ஏதாவது நடந்திருக்கும்.
2.நண்பன் மேல் பிரியம் இருக்கும் பொழுது முதலிலே மறுக்கின்றோம்.
3.இல்லைங்க… நான் நேரடியாக கண்ணிலே பார்த்தேன் என்று இன்னொரு நண்பர் சொன்னால்
4.அசந்தர்ப்பமாகத்தான் அப்படி இருக்குமே தவிர “அவர் தவறு செய்யக்கூடிய ஆளே இல்லைங்க…” என்போம்.

ஏனென்றால் அவர் மீது இருக்கக்கூடிய பற்று தவறை கூட நாம் சுட்டிக் காட்டாதபடி “தெரியாமல் தான் நடந்திருக்கும்…” என்று தான் சொல்கின்றோம்.

இதே போன்று ஒரு குடும்பத்தில் இரண்டு பையன்கள் இருக்கின்றார்கள் ஒருவன் மீது தந்தை பிரியமாக இருக்கின்றார்… இன்னொருவன் மீது வெறுப்பாக இருக்கின்றார்.

அந்த வெறுப்பாக இருக்கக்கூடிய பையன் வெளியே சென்று ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றுகிறான்… ஒரு நல்ல காரியத்தை அவன் செய்கின்றான். அதை மெச்சி அவர் என்ன செய்கின்றார்…?

நீ யார் பெத்த பிள்ளையோ…? உன் தந்தையிடம் நான் நன்றி சொல்ல வேண்டும்…! என்று அழைத்து வருகின்றார். கூப்பிட்டு வந்தவுடன் உங்க பையன் தானுங்களா…? எங்கள் குடும்பத்தையே இவன் காத்தான்…! என்று உயர்வாகச் சொல்கின்றார்.

அப்படியா…! நீங்கள் நாளைக்கு வந்து வேறு விதமாகச் சொல்லி விடாதீர்கள் ஐயா…! என்பார் தந்தை. பையன் செய்த நன்றிக்குச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனது இங்கு தந்தையிடம் இல்லை.

ஆனால் அதே சமயத்தில் பிரியமாக இருக்கும் இன்னொரு பையன் ஒரு இடத்தில் சுட்டித்தனம் செய்கின்றான். அங்கிருந்து வந்து தந்தையிடம் அவனைப் பற்றி முறையிடுகின்றார்கள் “இவன் தவறு செய்கின்றான்” என்று.

1.நீங்கள் இன்னொரு பையனைச் சொன்னால் கூடப் பரவாயில்லை
2.இவன் அந்த மாதிரித் தவறு செய்ய மாட்டான் என்று பிரியமானவனை ஏற்றுக் கொள்கின்றார்கள் எனக்கு தெரியாதுங்களா…? என்று கேட்கின்றார்.
3.உங்கள் பையன் தான் ஏதாவது தவறு செய்திருப்பான் என்று தான் சொல்வார்கள்

ஆனால் அவர்கள் போன பிற்பாடு என்ன கேட்பார்கள் ஏன்டா டேய் அவர்கள் என்ன கேட்கின்றார்கள் பார்த்தாயா…? என்று பையனிடம் கேட்பார்கள்.

இன்னொருவன் நல்லது செய்து வந்தான் அல்லவா…! அவனைப் பார்த்து டேய் இங்கே வாடா…! எத்தனை பேரை நீ ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்…? நாளை என் பெயர் கெட்டுப் போவதற்கு நீ என்ன செய்கின்றாய்…? என்று கேட்பார்.

ஏனென்றால் இந்த உணர்வுக்கொப்ப அப்படித்தான் “அந்த அறிவுகள் வேலை செய்யும்…” எதனின் உணர்வின் தன்மையோ அது தான் இயக்கமாகும்.
1.ஒரு செடி எந்த மணத்தின் தன்மை தனக்குள் வைத்துக் கொண்டதோ
2.மற்ற செடிகளின் மணத்தைத் தன் அருகில் விடாது.

இதைப்போல எந்தச் செடியின் மணத்தை நாம் உணவாக உட்கொண்டு பழகினோமோ அந்த மணத்தின் ஞானமே நமக்கும் வரும்… இது வழி தொடர்ந்து வரும்.

ஆகவே அந்த குணத்தின் இயல்பாகத்தான் நம்முடைய உணர்வின் செயல்களும் அமைகின்றது தாவர இனத்தின் நிலைகள் கொண்டு. இதைப் போன்று தான்
1.எதனை எடுத்து எதனின் வழிகளில் நாம் இணைத்து
2.அதனின் உணர்வின் எண்ணங்களாக மாறுகின்றதோ இதனின் உணர்வு தான் இயக்கம்.

இதற்குத் தான் கடவுளின் அவதாரத்தில் இராமனை மூன்றாவது ஸ்தானத்தில் வைத்துள்ளார்கள். இந்த எண்ணம் சீதாராமா…! ஒரு பையன் மீது எவ்வளவு பிரியமாக இருக்கின்றோமா அந்த சுவை சீதா.

அதே சொல்லை நாம் எடுத்துத் திருப்பிச் சொல்லும் பொழுது இராமன்..!. இராமன் அம்பை எய்தான் என்றால் அந்த கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். இதே பதில் தான் மீண்டும் வரும்.
1.யார் மேல் எதன் உணர்வை வைத்தோமோ இந்த உணர்வின் சொல்லை எடுத்து
2.“மோசமானவன்” என்ற பதிவிருந்தால் மீண்டும் அதே குறையான சொல்லைத்தான் சொல்லும்படிச் செய்யும்.

கடவுளின் அவதாரத்தில் சூரியனின் இயக்கங்கள்
1.அந்தக் காந்தச் சக்தி மற்ற பொருளைக் கவர்ந்த பின்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தச் சுவையைக் கவர்ந்தாலும்
3.அதே எண்ணத்தைக் கொண்டு நுகரப்படும் பொழுது சீதா சுவை
4.இந்த உணர்வின் நிலைகள் நம் தசையாகின்றது… நினைவின் சொல்லாக “அந்தந்த எண்ணங்கள் வருகின்றது…”

இந்த இயற்கையின் தன்மையை நாம் புரிந்து கொள்வதற்காக இராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் சிவபுராணம் என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலின் தன்மை உணர்வுகள் கலந்து அது மனிதனாக உருவாக்கப்படும் பொழுது பழமை எவ்வாறு இன்று புதுமையில் இருக்கின்றது…? என்று காட்டியுள்ளார்கள்.

பழமை கலந்ததின் உணர்வின் மாற்றங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்பதைத்தான்
1.ஒரு மனிதனின் இயல்பு எவ்வாறு மாறுகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

“சித்தர்களும் மகரிஷிகளும்” நம்மைப் பக்குவப்படுத்தி வழி நடத்துவார்கள்

 

ஆத்மாவின் செயல் உணர்ந்தீர்களா…?

எங்களின் பதில்: தியானத்தில் அமர்ந்து எங்களுக்கு வழிகாட்டிய ஞானகுரு வேணுகோபால சுவாமிகள் உபதேச நிலைக்கொப்ப அத்தொடரில் அவர் காட்டிய எல்லா நிலைகளையும் அறியாவிட்டாலும் சில உண்மைகளைச் செயலாலும் ஞானத்தாலும் அறியும் வழி பெற்றோம்.

1.இந்த மார்க்கத்தில் தொடர்பு கொண்ட பல ஆத்மாக்கள் தன்னைத்தான் உணர்ந்து தன் வழியில் பல உண்மைகளை அறிந்ததையும் கண்டோம்.
2.இச்சரீர பிம்பம் மயங்கிய நிலையோ தன்னைத்தான் மறந்து செயல்படும் முறையன்றி இத்தியானத்தால் அடைந்த உண்மை நிலைகள் பல உண்டு.

அல்லி மலர் காலை உதயசூரியனைக் கண்டவுடன் மலர்ந்து சூரிய ஒளி மறைந்தவுடன் கூம்பிவிடுகின்றது. இன்னும் சில மலர்கள் சூரிய ஒளியின் அலைபாயும் இடத்தில் எல்லாம் அதன் மலர் முகம் காட்டி மலர்ந்து அதன் ஒளி திக்கிலேயே அதன் ஈர்ப்பும் திரும்பிய நிலையில் வாடி விடுகின்றது.

இவையெல்லாம் இயற்கை என்கின்றான் மனிதன். எல்லா சக்தியைக் காட்டிலும் இனி தன் செயற்கைக்கு உதவப் போவது சூரியசக்தி தான் என்ற உண்மை வழியைச் செயற்கைக்கு பாழ்படுத்தும் மனிதன்
1.அடுப்பான இப்பூமியில் பாத்திரமான இச்சரீரத்தில் ஒளியான ஜீவ சக்தி தரவல்ல சூரிய சக்தியைப் போட்டு
2.இவன் சமைக்கும் சுவையில் எச்சுவையையும் பெறவல்ல சக்தி இச்சரீர ஜீவனில் உள்ளதை மனிதன் அறியவில்லை.

இயந்திரத்தின் துணை கொண்டு சூரிய அலையைச் சில உலோகங்களின் தொடர்பைக் கொண்டு சக்தி பெறும் மனிதன் இவ்வெண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு எதனையும் செயல்படுத்தக்கூடிய செயல் தெய்வமாய்
1.தன்னுள் உள்ள ஆத்ம சக்தியைச் செயல்படுத்தி
2.இவ்வாத்மாவின் தொடர்பலையால் எவ்வலையையும் அதன் தொடர்பு கொண்டு
3.தொடர்புப்படுத்தி செயலாக்கக்கூடிய ஆற்றல் இவ்வாத்ம ஞானத்திற்கு உண்டு.

இவ்வுடலின் செயலுக்கொப்ப இவ்வெண்ண ஈர்ப்பு செல்லும் முறையைச் சிறிது மாற்றி
1.இவ்வுடலை இயக்கும் ஆத்மாவை இவ்வெண்ணத்தில் நாம் செலுத்தும் ஞானத்தால்
2.இச்சரீர இயக்க ஆத்மாவையே இது நாள் வரை உணர்த்திய ஞான உபதேசத்தின் தியான வலுவால்
3.இவ்வாத்மாவை சக்தி வாய்ந்த ரிஷிகளின் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தி
4.அவர்கள் பெற்ற சக்தி நிலையை நாமும் பெறவல்லை இயக்க நிலையை இம்மனித ஞானத்தால் செயல்படுத்துங்கள்.

இச்சரீரக்கூடு ஜீவத்துடிப்புடன் இருந்தால்தான் இவ் இயக்கத்தின் காந்த மின் அலையின் வளர்ப்பைக் கொண்டு ஆத்மபலத்தை நாம் பெருக்க முடியும்.

ஆத்ம பலம் பெற்ற நிலையில் வேறு ஒரு ஈர்ப்புப்பிடிக்கு நாம் சிக்காமலும்… இக்காற்றுடன் கலந்துள்ள பல கோடி நிலைகளில் நம் சரீர சுவாச ஈர்ப்பிற்கு எவ்வலையும் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவானாலும் சரி… உடலுடன் உள்ளவர்களின் எண்ண அலைகள் ஆனாலும் சரி… இவ் ஈர்ப்பு வட்டத்தில் சிக்காமல்
1.எப்படி எரியும் நெருப்பில் எது போட்டாலும் அதுவும் பஸ்பம் ஆகி விடுவதைப் போல்
2.இச்சரீர இயக்கத்தால் நாம் பெற்ற ஆத்ம பலம் கூடக் கூட “இவ்வாத்மாவின் வலுவை நாம் தனித்து காண முடியும்…”

வலுப்பெற்ற ஆத்மாவை நாம் உள்ள இடத்திலிருந்தே எங்கும் அனுப்பி எதனையும் அறிந்து வரச் செயல்படுத்த முடியும். தன்னைத்தான் உணர்ந்து தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல்தான் “சித்து வழியில் முதல் சித்து…”

ஆத்ம பலம் பெற்று வேறு ஒரு ஈர்ப்பலைக்கு இவ்வாத்மா செல்லாத வலுவாக நம் எண்ண ஞானம் வளர்ந்திருக்க வேண்டும்.

வாழ்க்கை பந்தத்தில் சுவைக்கும் மற்ற பொருள் நிலை எவற்றிற்கும்… இவ்வெண்ணமானது பேராசைக்கோ ஏக்கத்திற்கோ சஞ்சல சலிப்பு நிலைக்கோ செல்லும் வழிமுறை சிறிது இருந்தாலும்… இவ்வாத்மாவின் செயல் தனித்து தன்னிச்சைக்கு இயங்க இச்சரீர பிம்பத்தின் உணர்வில் “செயல் நிலை தடைப்படும்…”

ஞானத்தின் வளர்ச்சியானது எவ் ஈர்ப்பலையின் பிடியிலும் இவ்வெண்ண செயலின் உணர்வு நிலை செயல் கொள்ளும் பக்குவம் கொண்டுதான்… இவ்வாத்ம பலம் கூடியுள்ள தருணத்தில்…
1.நாம் ஜெபித்த தியானித்த சித்தர்களின்… வளர்ந்த ரிஷிகளின் தொடர்பு வட்ட அலை ஈர்ப்பு
2.நம் ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் பதம் பார்த்து… நம்மை வழி நடத்துவார்கள்.

“ஆத்ம வலுவை மட்டும்” இச்சரீர பிம்ப வாழ்க்கையில் இருந்து தான் இந்த ஞானத்தால் வளர்ச்சியுறச் செய்ய முடியும். ஆத்ம பலம் பெற்ற ஞானத்தால் இவ்வாத்மாவின் பலம் கொண்டே இச்சித்துத் தொடரின் செயல் சித்துக்களை இவ்வாத்மாவினால் தான் வளர்த்துக் காட்ட முடியும்.

முதல் சித்தான ஆதம் பலம் பெற இச்சரீர பிம்ப இயக்கம் இருந்தால் தான் பெற முடியும். இச்சரீர பிம்ப எண்ணத்தின் அறியும் ஞானத்தைக் கொண்டு ஆத்ம பலத்தால் சித்து நிலைத் தொடர் யாவையும் நாம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் எண்ணத்தின் கூர்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

ரோட்டிலே நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அப்போது நெடு நாள் பார்க்காத ஒரு நண்பரைப் பார்க்கின்றோம். அந்த ஆர்வத்தில் செல்கின்றோம்.

இரண்டு பேரும் சந்திக்கக்கூடிய நேரத்திலே அந்த இடம் அசுத்தமாக இருக்கின்றது.. அசூசையாக இருக்கின்றது. ஆனால் “நண்பன்” என்ற ஆர்வத்தில் எண்ணும் பொழுது அதை நுகர்வது இல்லை.

1.பேச்செல்லாம் முடிந்த பின்பு திரும்பிப் பார்க்கும் போதுதான்
2.ஐய்யய்யோ… இங்கே நின்று கொண்டல்லவா இவ்வளவு நேரம் பேசியிருக்கிறோம் என்று தெரிகிறது… நாற்றமும் அப்போது தான் தெரிகிறது.

அப்பொழுது எது இயக்குகின்றது…? அந்தக் கூர்மையான எண்ணங்கள் தான் அப்படி வருகின்றது.

ஒரு சிலர் என்ன செய்வார்கள்…?

எப்பொழுது பார்த்தாலும் குறைகளையே பேசிக் கொண்டிருப்பார்கள் அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் பார்த்தால் ஐயோ… இங்கே ஏதோ நாற்றம் அடிக்கிறது…! என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் நாற்றத்தை எண்ணாதவர்கள் அங்கே வந்த பின் அவர்களுக்கு அது தெரியாது. ஆனால் இவர்கள் சொன்ன பின் அப்படியா… இப்போது தான் தெரிகிறது…! என்றும் சொல்வார்கள்.

அதே உணர்வை நுகர்ந்த பின் அவர் செய்த நிலையை “ஆமாம்” என்று சொல்வார்கள்.

இது எல்லாம் எது இயக்குகின்றது…? கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய்…! என்பது போன்று அதனின் உணர்வு கொண்டே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே நாம் எதை எண்ண வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று சதா எண்ண வேண்டும். அது தான் தியானம்…!

எப்பொழுது கெட்டதைச் சந்திக்கின்றோமோ அந்தக் கெட்டது நமக்குள் வராதபடி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பையனுக்கு உடம்புச் சரியில்லை என்றால் உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் பையன் உடலில் படர வேண்டும். அவன் உடல் நலமாக வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சி பையனுடைய உணர்வு (உடல் நலக்குறைவான) நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும்.

அவனிடமும் இதைச் சொல்லி… “அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடு… உனக்கு நல்லதாகும்…!” என்று நினைவுபடுத்த வேண்டும். நாம் சொல்லிப் பதிவு செய்ததை அவனும் எண்ணி எடுக்கும் பொழுது அவனைப் பாதுகாத்துக் கொள்கின்றான்.

செடி கொடிகள் தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. அதே போல் மாடு ஆடு எல்லாம் முகர்ந்து பார்க்கிறது. தனக்கு உகந்ததாக இல்லை என்றால் விலகிச் சென்று விடுகின்றது.

ஆனால் மனிதனாக இருக்கும் நாம் கருணைக் கிழங்காக இருந்தாலும் அதை வேக வைத்து விஷத்தை நீக்கி விட்டுப் பலசரக்குகளை அதற்குள் போட்டு நமக்கு உகந்ததாகச் சுவையாக உருவாக்கி உட்கொண்டு மகிழ்கின்றோம்.

அதைப் போன்று தான்
1.தீமை என்ற உணர்வு வந்தாலும் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து
2.இருளை நீக்கி ஒளியான அணுவாக நமக்குள் மாற்ற வேண்டும்.

விஞ்ஞானி ஆடு மாடு மற்ற உயிரினங்களின் செல்களை எடுத்துப் புதிது புதிதாக மாற்றுகின்றான். செடி கொடிகளில் ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து வீரிய விதைகளை உருவாக்குகின்றான்.

அது போல் நாமும்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்த்துத் தீய வினைகளை மாற்றி கொள்ள முடியும்.
2.தீமைகளில் இருந்து நாம் விடுபட முடியும் அருள் ஒளியை நமக்குள் பெருக்கவும் முடியும்.

ஈஸ்வரபட்டர் கண்டுணர்ந்த உணர்வுகளை நாம் பருக வேண்டும்

 

எனது குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது அவருக்குள் கற்றுணர்ந்த அந்த உயர்ந்த உணர்வை எனக்குள் பதிவு செய்தார். அதை நினைவு கொண்டு எடுக்கும்படி சொன்னார்… எடுத்து அதிலே வளர்ச்சி பெற்றேன் (ஞானகுரு).

உடலை விட்டு நான் பிரிந்து சென்ற பின் “எனக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இன்னதுதான்” என்று அவர் சொன்னார்.
1.அருள் ஞானத்தின் உணர்வை எனக்குள் வளர்த்துக் கொண்டதற்கு உயிரான்மா புவியின் ஈர்ப்புக்குள் வராதபடி விண் செல்ல உந்து விசை தேவை.
2.என்னை விண்ணிலே வீசு…!
3.இங்கிருந்து அகன்று சென்றால் தான் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்க முடியும்… ஒளியின் சுடருடன் நான் சுழல முடியும்.

ஞானத்தின் தன்மையை எனக்குள் வளர்த்தாலும் அந்த உணர்வின் தன்மை கொண்டு இங்கே விரிவடைந்து பேசலாம். “தன்னிச்சையாக விண் செல்லும் நிலை எவருக்கும் இல்லை..” வலு கொண்ட பல நிலைகள் உறுதுணை கொண்ட உணர்வின் துணை கொண்டு தான் செல்ல முடியும்.

எடை கூடிய பொருளை ஒரு நூலால் தூக்க வேண்டும் என்றால் கடினம். ஆனால் பல நூல்களை ஒன்றாக்கிக் கயிறாகத் திரிக்கப்படும்பொழுது அதைத் தூக்கும் சக்தி வருகின்றது.

இதைப் போன்று தான்
1.“ஒன்றிய நிலைகள் எங்கே வருகின்றதோ” அந்த வலுவான உணர்வு கொண்டு உந்து விசையால் என்னை உந்தித் தள்ள வேண்டும்.
2.உடல் பெறும் உணர்வுகள் கருகும் எல்லை அதுதான்
3.கருகிய உணர்வு கொண்டு அங்கே நுகர்ந்த உணர்வுகளை ஒளியாக மாற்றும்.
4.அந்த ஒளியின் சுடரே தான் என்றும் நிலைத்து அழியாது கொண்டு இருக்கும்.
5.இங்கே புவியில் வந்தால் உணர்வின் தன்மை மாய்க்கும்.

நஞ்சினை வென்றிடும் உணர்வின் அலைகளுக்குள் செல்லப்படும் பொழுது நஞ்சை வென்றிடும் உணர்வையே நான் பெற முடியும்.

நஞ்சை இந்த வாழ்க்கையில் வென்றாலும் வென்றிடும் உணர்வுகள் பெற்றாலும் இதைக் கடந்து செல்லும் ஈர்ப்பு எனக்கு இல்லை.
1.கடந்து செல்லும் இந்த ஒத்த நிலைகள்
2.இங்கே கீழிருந்து இயக்கப்படும் பொழுதுதான் விண செல்ல முடியும்.

அவர் ஆன்மா வெளியே செல்லும் பொழுது அவர் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை அதற்கென்று என்னென்ன பக்குவத்தைச் செய்தாரோ… அதைப் பக்குவப்படுத்தி “அவர் வழியில் விண் செலுத்திய பின்பு தான் விண்ணுலக ஆற்றலை நான் பருக முடிந்தது…”

விண்ணின் ஆற்றலை எனக்குள் பதிவு செய்திருந்தாலும் நினைவு கொண்டு எடுக்கும் சக்தி அந்தத் திறன் அவரை விண் செலுத்திய பின் தான் எனக்குக் கிடைத்தது.

என் குருவின் இயல்பான நிலைகள் கொண்டு அவர் உணர்த்திய உணர்வின் ஒளி அலைகள் நிலை கொண்டிருக்க அவர் காட்டிய வழிகளில் அவரை விண் செலுத்தினேன்.
1.அதனின் தொடர் கொண்டு தான் அவருடைய தொடர்பும் வருகின்றது
2.இந்த புவியியல் வரக் கூடிய தீமைகளை என்னால் அகற்ற முடிகின்றது.
3.உங்களுக்கும் அந்த ஆற்றலைப் பதிவு செய்ய முடிகின்றது.
4.உங்களுக்குள் விளைந்த தீமைகள் என்னை நாடாத வண்ணம் தப்பித்துக் கொள்ள முடிகின்றது.

இல்லை என்றால் அது முடியாது…! சரியான மார்க்கம் இல்லாதபடி எதையும் செய்ய முடியாது.

சில நேரங்களில் குருநாதர் போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுவார் ஹலோ…! என்பார் நான் போன் செய்கிறேன் என்பார்.

போஸ்ட் கம்பியில் ஏன் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள் சாமி…? என்று நான் கேட்பேன்.

கடவுளுக்கு போன் செய்கிறேன் என்பார். கல்லிலே தட்டுவதை நீதான் ஏன் என்று கேட்டாய்… மற்ற யாரும் கேட்கவில்லை. காரணம் அதிலே வரக்கூடிய நாதங்களைச் சுட்டிக் காட்டி விண்ணிலே நாதங்கள் எப்படி வருகிறது…? என்று பார்…!

விண்ணுலகில் எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றது. மோதியவுடன் சுருதிகள் மாறுகின்றது. அகண்டு சென்ற பின் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “எத்தனையோ உருவங்களாகத் தோற்றம் தருகிறது…” விண்வெளியில் இப்படி உருவாகின்றது.

அத்னுடைய வேகங்கள் வரும் பொழுது நாதங்கள் எப்படி வருகிறது பார் என்றார். அதற்குத் தான் கல்லைக் கொண்டு நான் தட்டிக் காண்பித்தேன்…! என்றார் நாதத்தை நீ பார் என்றார்.

1.இது எல்லாம் அனுபவபூர்வமாக… அவருடைய சக்தி கொண்டு உலகம் எப்படி இருக்கிறது…? என்று
2.அவர் கண்டறிந்த உணர்வு அவருக்குள் இருந்து வருகின்றது.
3.அதை எல்லாம் நாம் பருக வேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துவது.

முன்னோர்களை வணங்க “ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…?”

 

இது நாள் வரை முந்தைய பாடங்களில் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப அமிலங்கள் வளர்கின்றன என்று உணர்த்தினேன்.

இவ்வெண்ண‌ நிலையில் அதிகப்படியான குண நிலைகொண்டு
1.அதே குண எண்ணத்தைக் கொண்ட உடலை விட்டுப் பிரிந்த ஜீவ ஆத்மாக்களும்
2.இன்னும் தன் மகன், மகள் என்ற குடும்பப் பாசத்திலிருந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாவும்
3.இத்தாயின் கருவில்தான் பிறக்க வேண்டுமென்ற பிறப்புத் தொடரில் இருந்தும்
4.முந்தைய காலங்களில் பல ஜென்மங்களாய் விட்ட குறையில் இருக்கும் உயிராத்மாக்களும்
5.இவ் ஆண் பெண் இரு பாலரின் பருவ மாற்ற உடல் வளர்ச்சி ஏற்படும் காலம் தொட்டே
6.அவர்களின் சுவாச அலையுடன் இவ்வாவிகளின் ஈர்ப்பு அவ்வுடலுடன் ஏறிக்கொள்ளுகின்றது.

நம் முன்னோர்கள் பருவம் எய்திய பெண்களை “அதிகமாக வெளியில் செல்லாமல் வைத்திருந்ததற்கு” இதுவும் ஒரு காரணம்.

தன் மண வாழ்க்கையில் தோல்வி கண்ட ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்ற அதே வயதுக்குகந்த அப்பருவநிலை கொண்டோரின் உடலில் ஏறிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் எதிர் நோக்கிப் பல நிலைகளைச் செய்கின்றது.

இதன் சக்தியின் நிலை சூரியனின் ஒளி அலை அதிகமாகப் பாயும் நேரத்தைக் கொண்டு இதன் செயல் நடக்கும் (உச்சி வெய்யிலில்) அதுவுமல்லாமல் இவ்வாவிகள் மற்ற இடங்களில் சுழன்று கொண்டிருப்பதைக் காட்டிலும் “நீர் நிலைகள் உள்ள இடங்களில்தான்” அதன் சுழற்சி அதிகப்பட்டிருக்கும்.

ஜீவனுக்கு வரவேண்டுமென்ற ஆசையிருப்பதினால்
1.தன் உயிரணுவுடன் கூடிய ஆத்ம நிலை சிதறி விடாமல் இருக்க…
2.நீரிலிருந்து சூரிய ஒளிபட்டு அதிகமாக அவ்வொளி அலை உள்ள இடங்களில் இருந்தால்
3.“இவ்வாவிகளுக்கு அதனுடைய ஆத்ம அமிலம் சிதறுபடாமல் காத்திருக்க முடியும்…”
4.முன்னோர்களை வணங்க எதற்காக “ஜீவ நதி உள்ள இடத்திற்குச் செல்லும் பொருள் புரிந்ததா…?”

இப்படிப் பலவாக உள்ள ஆவி ஆத்ம உயிரும், ஜீவ உடல் கொண்ட ஆத்ம உயிருமான மனிதர்களின் நிலையும் கலந்து வாழ்வதினால் தன் பிறப்பின் ஆசைக்காகப் பிறப்பெடுக்கப் பல உடல்களில் “முன் கூட்டியே இவ்வாவி ஆத்மாக்கள் ஏறிக்கொள்கின்றன…”

ஏறிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அவ் உடலிலிருந்து தன் சாதக நிலைக்காக அம்மனிதனின் எண்ணத்தையே இவ்வாவி ஆத்மாக்கள் செயல்புரிகின்றன.

இப்படி உள்ள ஆவி ஆத்மாக்கள் தான் பிறப்பில் வரும் நிலையில் சிலருக்கு ஒன்றுக்கு இரண்டாகவும்… பலவாகவும்… கருவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் மிருகத்தின் சுவாசத்திற்கு மிருக உடலில் பல உயிர் ஆத்மாக்கள் ஏறிவிடுவதால் ஒரே சூலில் பல குட்டிகளை ஈணுகின்றது. மிருகங்களிலேயே ஒரு நிலை கொண்ட சாந்த குணமுடைய சில பிராணிகளுக்கு ஒரு சூலில் ஒரு கன்று ஈணும் நிலை வழி உள்ளது.

இப்பிறப்பில் நடைபெறும் இச்செயல்களும் எண்ணத்திலிருந்துதான் வழித்தொடர் பெற்று அதனதன் இன நிலையின் அமில குணம் தொட்டு பிறப்பிற்கு வருகின்றது.
1.இதன் தன்மையில் உடலில் ஏறிய அத்தனை உயிராத்மாக்களுக்குமே பிறப்பிற்கு வர முடியாமல்
2.அவ்வுடலிலிருந்து ஆவி பிரிந்த பிறகு அதற்கும் விடுதலை கிடைத்து
3.மீண்டும் தன் பிறப்புக்குகந்த இடம் எடுத்து வருவதற்குள் பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன… இவ்வுடலை விட்ட ஆவி ஆத்மாக்களுக்கு.

இவ்வாவி ஆத்மாக்களின் வழித்தொடரில் தான் பிறப்பு வருகின்றதா…? என்று வினா எழும்பலாம். ஒவ்வொன்றின் நிலை மனிதனிலேயே பலவாக வருகின்றது.

ஆகவே… இப்பொழுது உடலுடன் இருக்கும் நாம்
1.இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி
2.இதிலிருந்தே மெய் ஒளி காணும் மெய் ஒளி பெறும் நிலைக்கு நம் எண்ணத்தை உயர்த்தி
3.சித்தர்களுடனும் ஞானிகளுடன் இணைந்து வாழும் உன்னத நிலையைப் பெறுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய உலகத்தின் சூழ்நிலையில் நாம் எங்கே இருக்கிறோம் என்றால் “மரண வாயிலில் இருக்கின்றோம்…”

நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வருவதைக் கவர்ந்து வெளிப்படுத்துவதைச் சூரியன் தன்னுடைய பாதரசத்தால் மோதி எலக்ட்ரிக் ஆக மாற்றுகின்றது.

அதனுடைய உணர்வில் வேறு ஏதாவது எடுத்தால் விஷத் தன்மையான எலக்ட்ரானிக் ஆக மாறுகிறது. மாற்றினாலும் கூட விஷத்தின் தன்மை கொண்ட நட்சத்திரங்களின் உணர்வுகளைப் பிரித்து… அடித்து… மோதியவுடனே புது விதமான உணர்வாக விஷத் தன்மையாக மாறுகிறது… “நியூட்ரான்…”

1.நியூட்ரான் என்ற விஷத் தன்மையாக மாறியபின் அது அதிவேகமாக இயக்கும் சக்தியாக மாறுகிறது
2.எதனையுமே துரித கதியில் அது இயக்குகிறது.

எந்தப் பொருளுக்குள்ளும் அது இணைந்த பின் எதிர்நிலையாகி… புரோட்டான் என்று அதனுடைய சக்திக்கே மாறுகின்றது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

விஞ்ஞானிகள் கதிரியக்கங்களை வைத்து நியூட்ரானைப் பிரிக்கின்றார்கள். பிரித்து அந்த விஷத்தின் தன்மையை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அது பரவும் போது
1.நம் உடல்கள் எல்லாம் அப்படியே இருக்கும்
2.கட்டிடங்களும் அப்படியே இருக்கும்
3.ஆனால் மனிதனுடைய சிந்தனைகள் அனைத்தும் அழிந்துவிடும்

விஷத்தைச் சாப்பிட்டால் எப்படி இருப்போம்…? அந்த மாதிரியான குண்டுகளைச் செய்து வைத்திருக்கின்றார்கள். எல்லா நாடுகளிலுமே இது உண்டு. நம் நாட்டிலும் உண்டு. அமெரிக்காவிலும் சீனாவிலும் ஒவ்வொரு நாட்டிலும் வைத்திருக்கின்றார்கள்.

அவன் வைத்திருக்கின்றான்… நாம் ஏன் செய்யக் கூடாது…! என்று இந்த ரகசியம் எல்லோருக்கும் வெளி வந்துவிட்டது உலக மக்களை அழித்துக் கொள்வதற்குத் தான் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.
1.ஒரு பக்கம் மனிதனை உருவாக்குகின்றான்
2.ஒரு பக்கம் மனிதனையே அழித்துக் கொண்டிருக்கின்றான்.
3.இந்த நிலைதான் இன்று பெருகி வருகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வருவது மின்னல்களாக மோதுகிறது. கடலில் படுகின்றது. மின்னல் தாக்கும்போது மணலாக மாறுகின்றது.

விஞ்ஞானி அந்த அணுவைப் பிரித்து யுரேனியமாக மாற்றுகின்றான். அதிலேயே பல நட்சத்திரங்களின் தனிமங்களைச் சேர்க்கின்றான். அணுகுண்டாக வெடிக்கச் செய்கின்றான்.

மின்னல் எப்படி வெகு தூரத்திற்குப் போகிறதோ அதனின் இயக்கச் சக்தியைக் துரித கதியில் வெப்பத்தின் தன்மை கூட்டி துரித நிலையில் இயக்கக்கூடிய தன்மைக்குக் கொண்டு வருகின்றார்கள். அதை வைத்து இயந்திரங்களை இயக்குகின்றான்.

1.அதில் வரும் விஷக் கழிவுகளைச் சூரியன் கவர்ந்து வைத்திருக்கின்றது.
2.கழிவாக்கிய இந்த விஷத்தின் தன்மையைச் சூரியன் எடுத்து இந்தக் காற்று மண்டலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.

மனிதன் விஷத்தன்மை கொண்ட சத்துகளைக் கடலிலிருந்து பிரித்து எடுக்கின்றான். அதனின் தரத்தை உயர்த்துகின்றான். ஆனால் கழிவுகள் வருகிறது.
1.சூரியன் எடுத்து இங்கே கழிவாகப் பரவச் செய்கின்றது.
2.இப்படித்தான் அசுத்தமான அலைகள் இங்கே பெருகிக் கொண்டிருக்கின்றது.

இதைச் சுத்தப்படுத்தும் நிலை வேண்டுமல்லவா.

மனிதனுக்குள் இத்தகைய தீமையின் உணர்வுகள் வளராது தடுக்க வேண்டுமென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அந்தக் கழிவு நமக்குள் சேராது சுத்தப்படுத்தினால் ஒழிய நம்மை நாம் காக்க முடியாது. “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்தால் தான் தப்ப முடியும்…”

ஆனால் மனிதன் ஈன்று தன்னுடைய சுகத்திற்காக விஷத் தன்மை வாய்ந்த உணர்வுகளைச் சேர்க்கின்றான். புதுப்புது உணர்வுகள் ஆகி புதுப்புது விஷத் தன்மைகள் இங்கே பரவுகின்றது.

நிமோனியா காய்ச்சல் என்று அக்காலத்தில் கொசுக்கள் மூலம் எல்லாம் வந்தது. அப்படி வந்தால் உடனே மரணம் தான். மூளை சிதைவாகும்… மூளைக் காய்ச்சல் வரும்.

அத்தகைய கொசுக்கள் கடிப்பதால் மனிதன் சிந்தனை இழக்கின்றான்… துரித நிலைகள் கொண்டு மடிகின்றான்…! என்று கண்டுபிடிக்கின்றான்.

காரணம் இவன் எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மை காற்றிலே பரவுகின்றது. ஆனால் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்தக் கழிவும் இதுவும் சேர்க்கப்படும் பொழுது
1.இந்த உணர்வு கலந்து விஷப் பூச்சிகளாக மாறுகிறது. விஷ அணுக்களாக மாறுகின்றது
2.இன்று அதிக அளவில் மாட்டின் மாமிசங்களைச் சாப்பிடுகின்றார்கள்.
3.மாட்டிற்குள் இந்தப் பூச்சிகள் குடைந்து மூளைக்குள் சென்று மாட்டையே வீழ்த்தி விடுகின்றது.

இந்த மாதிரித் தான் மனிதனுக்குள் விளைந்த நிலைகள் இன்று ஏராளமாக உண்டு. இதை எப்பொழுது மாற்றுவது…? ஆக மொத்தம் நம்மைக் காக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒரு ரோஜாச் செடி மற்ற செடி கொடிகளின் மணங்கள் தனக்குள் வராதபடி தன் மணத்தின் வலுவால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து தீமையின் உணர்வுகள் நமக்குள் வராதபடி பாதுகாக்க வேண்டும்.

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்துப் பழகி நமக்குள் பெருக்கி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். இந்தக் காற்றிலே தான் அந்த நல்ல சக்தியும் இருக்கின்றது.

துருவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரம் அனைத்துமே அகஸ்தியன் தான்…!

விஞ்ஞான அறிவால் வரப்படும் பொழுது மதத்தின் நிலைகள் கொண்டு தன் இனத்தையே அழித்துவிடும் உணர்வுகள் மனிதனுக்குள் விளைந்து விளைந்து
1.இன்று மனிதனின் உணர்வின் நினைவுகள் இழந்து
2.மனித உணர்வே இல்லாது அழியும் தருணம் வந்து கொண்டிருக்கின்றது.

மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவால் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இந்த விண்ணுலகில் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் பெற்றவர்கள் சப்தரிஷிகள்… “சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்…”

விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் விஜயம் செய்து தன் உணர்வின் தன்மை உயிரைப் போன்று உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

முதல் துருவ மகரிஷி துருவனாக இருந்தாலும் அது துருவ நட்சத்திரமாகி இன்றும் சுழன்று கொண்டிருக்கும் “இந்த வேளை…”

எப்படி நாகம் தன்னுடைய நஞ்சை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சி அவைகளை உணவாக எடுத்தாலும் அந்த உணர்வின் சத்து தனக்குள் விளைந்து விளைந்து “அந்த நஞ்சே வைரமாக விளைகின்றது..”

இதைப் போல அகஸ்தியன் துருவ நட்சத்திரமாகி துருவத்தின் எல்லையை அடைந்து துருவ நட்சத்திரம் ஆகும்பொழுது
1.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அவன் ஆனாலும்
2.உலகிலேயே நஞ்சைத் தனக்குள் உள்ளடக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும்
3.மிக சக்தி வாய்ந்த நட்சத்திரமாக அங்கே அமைந்து விட்டது… அகஸ்தியன் தான்…!
4.அவனைத் துருவ மகரிஷி துருவன் என்றும் சொல்வார்கள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலை அடைந்தவர்கள் சப்தரிஷி… சிருஷ்டித்துக் கொண்ட ரிஷியின் தன்மை அடைகின்றது.

அதனின்றி விளைந்த உணர்வுகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருப்பதை
1.”எவரெவர் அவர்கள் அணுகி அதை நுகர்கின்றார்களோ”
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு உடலில் உள்ள உணர்வுகளைப் பிளந்து ஒளியின் சிகரமாக மாற்றிக் கொண்டார்கள்.
3.உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
4.அது நமக்கு முன் பரவிக் கொண்டுதான் உள்ளது அனுதினமும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன். ஆகவே நாம் அடைய வேண்டிய எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…?

 

குருநாதர்:-
உங்களின் தியான ஈர்ப்பின் அருளினால் உங்களின் ஈர்ப்புக்குகந்த போதனையை உணர்த்தி வருகின்றேனம்மா. நீங்கள் இருவரும் செலுத்திய தியானத்தின் ஈர்ப்பிற்கு உங்களுக்கு இப்பொக்கிஷப் பேழையை அளிக்கின்றேன்.

இதிலிருந்து அருளப்பெறும் உண்மைகளை உமதாகப் போற்றி சிவனடியார்கள் என்று உணர்த்திய சித்தர்களும் நாயன்மார்களும் பல பாடல்கள் பக்தி வழி பெற்று எதை அடைய வேண்டும் என்று அதன் நிலை பெற்று இதனை உமதாகப் பிறருக்கு வெளிப்படுத்தாத பொக்கிஷமாய் வைத்துப் பேரின்பப் பெருநிலை என்று அந்நிலையை அடையலாம்.

இன்றைய தியானத்தில் குருநாதர் (சற்குரு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர்) இந்நிலையில் காட்டித் தந்து அருளியவுடன் பேரானந்தம் கொண்டு அவர் தந்த பேழையை நான் பெற்றவுடன்… என் எண்ணத்தில் சில வினாக்கள் தோன்றி அவரிடமே என்ன பயன்…? என்றெல்லாம் வினா எழுப்பினேன்.

பிறகு அவரிடம் அப்பேரின்பப் பெருநிலையை நீங்கள் தந்த அருள் பொக்கிஷத்தை நான் பெற்றால் சுயநலம் என்ற நிலையில் நான் தனிமையாக்கப்படுவேன். அதனால் பெறக்கூடிய பயன் என்ன…? என்ற வினா எழுப்பினேன்.

குருநாதர்:- நம் பூமியில் அதுவும் இவ் இந்திய கண்டத்தில் பல பொக்கிஷங்கள் அரசர்கள் ஆண்ட காலத்திலிருந்து வைக்கப்பட்டு அப்பொருள் உபயோகமற்று நம் பூமியில் உள்ளது.

இன்று உங்களுக்கு என் அருளினால் உலகத்தில் உள்ள எப்பொருள் எங்குள்ளது…? என்று உணர்த்தினால் அதன் பயனை நீங்கள் பெறவும் அதைப் பிறர் எடுக்கவும் உங்களின் தியான அருள் வழி செய்யும்…! என்று உணர்த்தி குருநாதர் பதிலுரைத்தார்.

இவர் எங்களை எங்களின் அருள் நிலையையும் அவர்பால் வைத்துள்ள பக்திக்கும் “பொருளைக் காட்டிச் சோதனைக்குள்ளாக்குகின்றார்” என்பதனை அறிந்து கொண்டோம்.

ஆரம்பத்தில் நீங்கள்தான் பாடத்தில் உணர்த்தியுள்ளீரே…! அரசர்களாலும், அன்றைய மக்களாலும் பூமிக்கடியில் புதைத்து வைத்துள்ள பொக்கிஷங்களை அவர்களின் ஆவியே அங்குள்ள பொழுது அதனை அடைவது நம் சாதனைக்குடையதா…? என்று சபல எண்ணமுடனும் முதலில் வினா எழும்பியது.

அதற்கும் குருதேவர் ஆவி நிலையில் பூதங்களாய் உள்ளவற்றை சப்தரிஷிகள் துணையுடன் எங்கள் துணை கொண்டு இப்பூமியில் எங்கெங்கு எப்படி எப்படி பொருள்கள் புதைக்கப்பட்டுள்ளன எனச் சிலவற்றைக் காட்டி எங்களைச் சோதனைப்படுத்தினார்.

1.அவர் ஒவ்வொரு நாளும் எங்களுக்குச் சில வினாக்களை எழுப்பி அதன் நிலையில்
2.எங்களை எண்ணத்தினால் பல சோதனைகள் வைத்துத்தான் எங்களின் அருள் நெறி தியானத்திற்கு வழிகாட்டித் தருவார்.

எங்கள் குரு வேணுகோபால சுவாமிகள் அடிக்கடி ஈஸ்வரப்பட்டர் அவர்கள் உடலுடன் உள்ள காலத்திலும் இன்றும் அவருக்கு ஏற்படும் சோதனையின் நிலையெல்லாம் ஒரு சில உணர்த்தியுள்ளார்.

இன்று எங்களையும் அதே சோதனைப்படுத்தினார்.

அப்பொழுது
1.”நான் தந்த அருள் பொக்கிஷத்தை நீ ஏற்கவில்லையா…?
2.எங்களின் அருளால் எங்களால் தான் இந்நிலை ஏற்பட்டது என்ற பெயர் நிலைக்கும்.
3.“நாங்களே அருள் தந்த பிறகு நீ எப்படி மறுக்கலாம்…?” என்ற வினாவும் எழுப்பினார்.

உடனே குருதேவர் “உள் நிலையில் இருந்து மட்டும் பதிலளிக்க வேண்டாம். உன் கணவரிடம் இவ்வினாவை எழுப்பு” என்றார்.

அவர் உடனே
1.”இப்பொழுது குருநாதரின் அருளினால் கிடைக்கப்பட்ட ஆத்மீக வழித்தொடரின்
2.ஞான பொக்கிஷத்தின் அருள் நிலையடையும் பக்குவப்பேற்றைத் தந்தால் போதும். பொருளான பொக்கிஷத்தால் எப்பயன்…?” என்றார்.

உடனே குருநாதர் “இதே வட்டத்தில் இருந்தால் போதுமா…? ஜீவாதாரப் பொருள் இருந்தால்தான் உயர்ந்தவனாக உலகம் மதிக்கும்… வாழ்க்கை நடக்கும்” என்று உணர்த்தினார்.

இப்பொழுது நான் எழுப்பிய வினாவிற்கு குருநாதர் கைதட்டிச் சிரித்துவிட்டுச் சில வழிமுறை பாடங்களைத் தந்தார்.
1.பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இவ்வுடலின் பிம்பத்திற்கு
2.“இவ்வுயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற”
3.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வ சக்தியைப் பெறும் பொக்கிஷத்தைப் பெறும் ஞான அருள் பெறுங்களம்மா…!

உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…? என்பதனைத்தான் இன்று உங்களுக்கு சோதனையாக்கிக் காட்டினேன் என்று கூறி அவரால் இன்னும் சில உபதேசங்களும் எங்களுக்கு அளிக்கப்பட்டன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாமி… சாமியார் சொல்வதை எல்லாம் கேட்கின்றீர்கள் அல்லவா. அதே மாதிரி நல்லதை எண்ணி உங்களால் அதை வளர்க்க முடியாதா…?
1.உங்களுக்கு நான் (ஞானகுரு) பவர் கொடுக்கின்றேன்…!
2.இங்கே உபதேசம் கொடுக்கிறேன் என்றால் அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறுவதற்குண்டான
3.ஊழ்வினை என்ற வித்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) புது வித்தாக எப்படி உருவாக்குகின்றார்களோ அதே மாதிரித்தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

விவசாயப் பண்ணையில் விதைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றார்கள். வாங்கி விதைத்துவிட்டு அதைச் சரியாகக் கவனிக்கவில்லை என்றால் பயிர்கள் பட்டுப் போகின்றது.

விதைகள் கொடுத்தீர்கள்… பட்டுப் போய்விட்டது என்று அங்கே சொல்ல முடியுமா…?

அது போல் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞான வித்தை உற்பத்தி செய்து உங்களுக்குக் கொடுக்கின்றோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்…?

1.அந்த ஆசையை மட்டும் வைத்துக் கொள்கிறீர்கள்
2.செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது இல்லை.
3.எப்படா பலன் கொடுக்கும்…? என்று அதையே எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள்…!

பயிர்களுக்கு அவ்வப்போது தண்ணீர் விட வேண்டும். உரம் கொடுக்க வேண்டும். சாப்பாடு கொடுக்க வேண்டும். அந்தந்தக் காலத்திற்கு அதைச் செயல்படுத்த வேண்டும்.

கஷ்டம் என்று வந்து விட்டாலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
1.இப்படிச் சாப்பாடு கொடுத்தால் கொஞ்சம் ஊக்கமாக இருக்கும்.
2.உங்கள் உணர்வின் எண்ணங்கள் சீராக வரும்
3.அதை வைத்து நீங்கள் நல்லதைச் செயல்படுத்த முடியும்.

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணும் பொழுது தீய வினைகள் நம் உடலுக்குள் செல்லாதபடி சூரியன் அதைக் கவர்ந்து சென்று விடுகின்றது. நம் ஆன்மா தூய்மை அடைகிறது.

தீய வினைகளை இப்படி நிறுத்திப் பழகவேண்டும்.

கஷ்ட நஷ்டங்களை எண்ணாதபடி… “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்று நுகர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் பல பகைமை உணர்வுகளையும் விஷத் தன்மைகளையும் நோய்களையும் உருவாக்கக்கூடிய வினைகள் காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி உள்ளது. அதை எல்லாம் நாம் இழுக்கவில்லை என்றால் சூரியன் எடுத்து மேலே கொண்டு சென்றுவிடும்.

பரமாத்மா தூய்மை அடைகின்றது நமது ஆன்மா தூய்மை அடைகின்றது நம் உடலில் ஜீவான்மா தூய்மை அடைகின்றது. நம்முடைய உணர்வுகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

டிச்சியிலே (சாக்கடை) நாற்றம் வருகிறது. அப்போது அதிலே கொசுக்கள் உண்டாகின்றது. கொசுவை அழிக்க விஷ மருந்துகளை அதிலே தூவிவிட்டுச் சென்று விடுகின்றார்கள். கொசுக்கள் அனைத்தும் இறந்து விடுகின்றது.

ஆனால் கொசுவின் கருவிலிருக்கும் முட்டைகள் அந்த விஷத்தின் தன்மைகளக் கவர்ந்து வெளியே வருகிறது. அப்படி விஷத்தைக் கவர்ந்து வரக்கூடிய கொசு ஒன்று நம்மைக் கடித்தால் போதும். சுரீர்… என்று இருக்கும். அந்த அரிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை.

1.விஷ மருந்தை அடித்துச் சென்றபின் அதற்கப்புறம் உருவாகக்கூடிய கொசுக்கள் இப்படித்தான் வீரியமாக இருக்கும்
2.அரிப்பு அதிகமாக இருக்கும்… உடலில் தடிப்பும் அதிகமாகிறது.

கொசுக்கள் எங்கே சாகின்றது…? இது போன்ற தீமையின் விளைவுகளை நாம் அறிந்திருக்கின்றோமா…?

இதை எல்லாம் மாற்றி அமைக்க
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை மொத்தமாக நாம் எடுத்து
2.அந்த உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது தீமைகளை அகற்றக் கூடிய சக்தி வலுப் பெறுகின்றது…!

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை நாம் அனைவரும் ஏங்கி எடுத்து இந்தப் பூமியில் பரவச் செய்யும் பொழுது பூமியும் தூய்மை அடைகின்றது. ஆகவே இதை நாம் தெளிவாகக் கொண்டு வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் அவன் அருகிலே கொசுவோ தேளோ பூரானோ யானையோ புலியோ நரியோ நாயோ எதுவும் வருவதில்லை.
1.காரணம் அவன் உடலிலிருந்து வரக்கூடிய மணம்
2.அந்த மிருகங்களுக்கு எதிர்நிலையாகிறது… அஞ்சி ஓடுகிறது.

தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் பச்சிலைகள் மூலிகைகளின் மணங்கள் அகஸ்தியன் உடலிலே வினையாகிறது. அந்த மணமே வினைக்கு நாயகனாகி அவன் உடலிலிருந்து வெளிப்படுகிறது.

அந்த மணத்தை மற்ற மிருகங்கள் நுகரப்படும் பொழுது அவைகளின் விஷங்கள் ஒடுங்கி விடுகின்றது. அவைகளின் கவனத்தையும் திசை திருப்பி விடுகின்றது. ஆகையினால் மற்ற உயிரினங்கள் அகஸ்தியன் இருக்கும் பக்கம் வருவதில்லை.

1.ஆனால் இந்தக் குழந்தை அவன் ஒன்றும் மந்திரம் கற்றுக் கொள்ளவில்லை.
2.தாய் கருவில் தான் அதைப் பெற்றது.
3.ஏனென்றால் விஷத்தன்மை கொண்ட அந்தத் தாவர இனத்தின் மணங்களை
4.கருவிலிருக்கக்கூடிய குழந்தை கவர்ந்ததால் அதே மணத்தை நுகரும் அணுத்தன்மை இந்தக் குழந்தையின் உடலில் உருவாகி
5.அதனுடைய மணம் சிவமாகின்றது… அதுவே வினையாகிறது.
6.வினைக்கு நாயகனாகத் தீமையை நீக்கிடும் சக்தி பெருகுகிறது அந்தக் குழந்தையிடம்.

இப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்…!

சந்தர்ப்பம்… அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கும் போது அத்தகைய உண்மைகளை உணர்ந்ததனால்… பிறந்த பின்
1.மற்ற விஷத்தன்மை கொண்ட பச்சிலைகளைத் தேடிச் சென்று
2.அவனுடன் அன்று பழகிய மற்றவர்களுக்கும் இதைக் கொடுத்து
3.விஷத்தன்மையிலிருந்து இருந்து மீட்கும் மார்க்கத்தை அவர்களுக்கும் காட்டி வந்துள்ளான்.

அப்படிப்பட்ட அந்த உண்மையான நிலை பெற்றவன் தான் அகஸ்தியன்.

அவன் காடுகளுக்குள் செல்லப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வரக்கூடிய மணங்கள மற்ற உயிரினங்களோ விஷ ஜெந்துக்களோ நுகரும் போது அதனின் விஷத்தை வலுவிழக்கச் செய்துவிடுகிறது. அதனால் அவைகள் இவன் அருகில் வருவதில்லை.

அதே சமயத்தில் மனிதர்களுக்கு வரும் நோய்களையும் மாற்றும் திறன் பெற்றான் அகஸ்தியன்.
1.நோய்கள் எதுவாக இருப்பினும் பல பச்சிலை மூலிகைகளின் துணை கொண்டு
2.மற்றவர்களின் உடல்களை நலமாக்கும் திறன் பெற்றான்.

இப்படி அவனுடைய அனுபவங்கள் பெற பெற அவன் சந்தர்ப்பத்தால் தாவர இனங்கள் எப்படி உருவானது…? சூரியன் எப்படி உருவானது…? பிரபஞ்சம் எப்படி உருவானது…? என்ற நிலையை அவனால் அறிய முடிகின்றது.

அவனுக்குள் விளைந்த உண்மையின் உணர்வுகள் உலகெங்கிலும் இருப்பினும் அகஸ்தியன் கூறிய அந்த உணர்வுகள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது.

மனிதனுக்குத் தேவைப்படும் நிலைகளுக்கு அந்தச் சட்டங்களை மாற்றி அமைத்து விட்டனர்.
1.மனிதன் திருந்தி வாழ்வதற்கு மாறாக தீவினைகளைச் செய்து
2.அதிகமாகத் தீய செயல்கள் கொண்டவராகத் தான் நாம் மாறிக் கொண்டுள்ளோம்.

இது போன்ற நிலையில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

பல அவஸ்தைகள்… பல இன்னல்கள் பட்டு… “அதிலிருந்து விடுபட்டு விண் சென்றவர்கள் தான் மகரிஷிகள்”

 

நமது பூமியில் மகரிஷிகளும் சாதாரண மனிதனாகத் தோன்றி
1.சாதாரண மனிதனிலிருந்து மகரிஷியாக வளர்ந்து உணர்வின் சத்தை உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாகவும்
2.துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட அந்த உணர்வின் சக்தியைப் பெற்று சப்தரிஷி மண்டலங்களாகவும்
3.மண்ணுலகில் தோன்றிய மனிதன் விண்ணுலகில் இருக்கின்றார்கள் .

சூரியனிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் கோளாக நட்சத்திரமாக மாறி ஓர் பிரபஞ்சமாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்குள் நமது பூமியும் ஒன்று.

பிரபஞ்சத்தில் உருவாகும் அத்தனை உணர்வுகளும் பூமி தனக்குள் கவர்ந்து நீர் சத்து பிராணவாயு இதைப் போன்ற நிலைகளில் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றதால் இங்கே உயிரினங்கள் வாழ்கின்றன.

இவ்வாறு பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய சக்தியை நமது பூமி எடுத்து… உயிரினங்கள் வாழ்வதற்கும் அது வளர்வதற்கும் அது வளர்ச்சி பெறுவதற்கும் மூல காரணமாக இருப்பது நமது பூமி.

அதிலே தோன்றிய உயிரணு தான் எத்தனையோ கோடி ஜீவணுக்களாக மலர்ந்து வளர்ந்து பல கோடிச் சரீரங்களைப் பெற்று…
1.கடைசியில் மனிதனாகப் பிறந்தபின்
2.மனிதர்களில் பல இன்னல்கள் பல கஷ்டங்கள் பல வேதனைகள் பட்டு அவதிப்பட்டு வந்தாலும்
3.சந்தர்ப்பவசத்தால் அத்தகைய விஷத்தின் தன்மைகளை அழித்து ”மனிதரில் மாணிக்கமாக மகரிஷிகள்”
4.தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்கள்.

நமது உடல் நாம் உணவாக உட்கொள்ளும் நல்ல உணவிற்குள் மறைந்துள்ள நஞ்சினை நீக்கி அதை மலமாக மாற்றுவது போல் ஒவ்வொரு பொருளிலும் மறைந்திருக்கும் நஞ்சினை நீக்கும் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி பெற்றவர்கள் மனிதர்கள்.

இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில்… ஈகை இரக்கம் நல்ல உணர்வு அன்பு பாசம் பரிவு பண்புடன் நீங்கள் செயல்படும் இந்த வேளையில் பிறர் உடலில் அவர்கள் சந்தர்ப்பத்தால் அறியாது உருவாக்கப்பட்ட பல தீய விளைவுகளை நீங்களும் சுவாசிக்க நேர்ந்து… உங்கள் நல்ல உணர்வுகள் அதனால் வலு இழக்க நேருகின்றது.

1.அதை தடுக்கத்தான் ஞானிகள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கச் செய்கின்றோம்.
2.அறியாது சேர்ந்த தீய உணர்வின் ஆற்றலைப் பலவீனப்படுத்தி உணர்வை ஒளியாக மாற்ற செய்யப் பழகிக் கொடுக்கின்றோம்.

அந்த மெய் ஞானிகள் நஞ்சினைப் பிளந்து அதைத் தனக்குள் அடக்கி ஒளியின் சிகரமாக இன்றும் விண்ணுலகில் நிலைத்திருக்கின்றார்கள்.
1.அவர்கள் சென்றடைந்த அந்த எல்லையை அடைவதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய வழியில்
2.தியானப் பயிற்சியாக உங்களுக்கு இந்த உபதேச வாயிலாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

வட துருவம் – ஈஸ்வரன் – புருவ மத்தி

 

1.தெய்வ சக்தி பெறுவதும் மனிதன் தான்.
2.பேயாக… புழுவாகச் செல்லுபவனும் மனிதன் தான்.
3.மனித எண்ணத்தில் இருந்து தான் மனிதக் கருவின் வளர்ச்சி வாழ்க்கை மண்டலங்களில் வேரூன்றுகின்றது.

நம் பூமியின் ஈர்ப்புக் குணமும் வளர்ச்சி நிலையும் மனித குணத்தின் எண்ணச் செயலுக்குகந்ததாக உள்ளதினால்தான் மனிதன் இங்கு வாழ்கின்றான்.

மனிதன் காணாத அறியாத பல உயிரினங்கள் இப்பூமியில் வாழ்கின்றதென்றாலும் மனிதனின் தொடரிலிருந்து சென்ற வகைகள்தான் அவைகளும்.

இயற்கையில் பல மாற்றங்கள் இருந்தாலும் ஒன்றை ஒட்டி ஒன்று வளர்ந்து பலவாகிச் செயல்படும் நம் பூமியிலே பூமியின் இயற்கைத் தன்மை பலவாக உள்ளதற்கு இப்பூமி ஈர்க்கும் நிலை கொண்டு மனிதனின் தாவரங்களின் எண்ண சுவாச ஈர்ப்பின் நிலை வளர்ச்சி எப்படி மனிதனுக்கு உட்பட்டு வெளிப்படுகின்றதோ அதைப் போன்றுதான் பூமியின் ஈர்ப்பின் நிலைக்கொப்ப அந்தந்த இடங்களில் ஏற்படும் குண சீதோஷ்ண-தட்ப வெட்ப-நிலை என்று பல தடவை முந்தைய நூல்களில் உணர்த்தியுள்ளேன்.

ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால்
1.கதையாகப் படைக்கப்பட்ட்தன் உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால்
2.“அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வட திசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல் புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்து விட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்…?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

1.மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால்
2.வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”

எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நொடியிலேயும்… எப்பொழுது நமக்குத் தீமை என்று தெரிகிறதோ அது நமக்குள் வராது தடுக்க
1.தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றே ஆக வேண்டும்.
2.அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தோம் என்றால் அதை அடக்கிவிடும்.

பருப்பை வேக வைத்தால் முளைக்காது… சதுர்த்தி…! தீவினையின் உணர்வுகள் நமக்குள் வளராதபடி அப்போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எதைக் (தீமைகளை) கண்ணிலே பார்த்தோமோ அடுத்த நொடியே அதனுடன் சேர்க்கப்படும் பொழுது அதை அடக்கி… துருவ நட்சத்திரத்தின் சக்தி முன்னாடி வரும்.

1.கண் பார்வை ஒன்று தான் (தீமையை நுகர்ந்ததும்… தீமையை நீக்க நுகர்வதும்)…!
2.ஆனால் அடுத்த கணம் கொண்டு வரும் பொழுது அடுத்த வரிசையில் வருகின்றது
3.அடுத்த வரிசையில் வரப்படும்போது எதிலே பதிவானதோ அதிலேயே சேர்த்துப் பதிவாகின்றது.

அதைத்தான் என்று இராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி மறைவுக்குப் பின்… இராமன் காட்டிற்குச் சென்ற பின்… பரதன் தன் தாயிடம் “அன்றே கொன்றிருந்தால்” எங்கள் சாம்ராஜ்யத்தில் இத்தகைய தீமை வந்திருக்காது…! என்று சொல்கின்றார்.

ஆகவே அந்த அருள் உணர்வை நமக்குள் பதிவாக்கித் தீமைகள் வளராதபடி உடனே செயல்படுத்த வேண்டும்.

ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்படுகின்றோம். இன்ன நோய் என்றும் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இரத்தத்தில் அதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்… “அந்த நிமிடமே…!”

இல்லை என்றால் முன் பகுதி போவது (வேதனையும் நோயும்) முன்னாடி போகும்.
1.உடலில் உள்ள மற்ற தீமையான அணுக்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்… அந்த உணர்ச்சிகள் அதிகமாகும்.
2.நல்லதை எண்ண விடாது நம்மைத் தடுத்துக் கொண்டே இருக்கும்.

அதனால் தான் “அடுத்த கணமே… அப்போதே… அன்றே கொன்றிருந்தால்…” என்று பரதன் சொல்வதாக இராமாயணம் காட்டுகின்றது.

சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ கோபமோ ஆத்திரமோ வந்தால்
1.அடுத்த கணமே “பிரேக்…” போட்ட மாதிரி
2.அவைகளை நிறுத்த வேண்டும்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும. அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நோயுற்றவரின் உடலில் படர வேண்டும். அவர்கள் உடல் நோய் நீங்க வேண்டும். அவர் உடல் நலம் பெற வேண்டும். அவர் நல்லவராக வேண்டும். குடும்பத்தில் உயர்ந்த நிலை பெற வேண்டும். மலரைப் போன்ற மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எத்தனை வேண்டுமென்றாலும் அடுத்து நல்லதுகளைச் சொல்லலாம்.

உதாரணமாக ரோட்டில் செல்கிறறோம். இரண்டு பேர் காரசாரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்… சண்டை போடுகிறார்கள்…!

பார்த்தவுடனே நமக்கும் அந்த ஆத்திரம் வருகிறது… “இப்படிப் பேசுகிறார்களே…” என்று கொதிப்பு வருகிறது.

அதை உடனே அப்போதே நிறுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதை எண்ணி எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் அந்த இரண்டு பேரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் அந்த சக்தி அருள் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்
1.அவரிடம் சொல்லக் கூடாது
2.உங்கள் மனதிலே உடலிலே அந்தத் தீமை உருவாகதபடி தடுத்துப் பழக வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் இந்த ஆத்திரம் வரும்.
1.அந்த உணர்வு கருவாகி விட்டது என்றால் அணுவாகிவிடும்
2.அணுவின் தன்மை அடைந்தால் மலமாகிறது… மலம் நம் உடலாக மாறிவிடும்.
3.அதனின் வளர்ச்சி அதிகமானால் இரத்தக் கொதிப்பாக உடலில் மாறும்.

இதை எல்லாம் தடுத்துப் பழக வேண்டும் என்பதற்காகத் தான் உங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

உங்களைக் காக்கும் ஆற்றல்மிக்க சக்தி

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது
1.கூட்டுத் தியானத்தின் மூலமாக மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
2.அதைப் பதிவு செய்வதற்குத் தான் பௌர்ணமி தியானமும் மற்ற அனைத்துமே.

மனிதனின் உணர்வில் கலந்த நஞ்சினை மாற்றி உணர்வுகளை ஒளியாக மாற்றி முதல் மனிதன் அகஸ்தியன் துருவத்தை அடைந்து துருவத்தின் சக்தியைத் தனக்குள் பெற்று ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகம் சென்றது. அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரம் ஆனது

அவர்கள் உடல்களில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட நஞ்சினை வென்றிடும் உணர்வினைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டு உள்ளார்கள்

அங்கிருந்து வெளிப்படும் அந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை நாம் பருக வேண்டும் என்றால்
1.அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நம் உடலில் பதிவு செய்த பின்பு தான்
2.அந்தச் சக்தியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

இப்பொழுது ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டால் அதைப் பத்து வருடம் கழித்து எண்ணினால் கூட நமக்குள் அந்த எண்ணங்கள் உடனே கோபமும் ஆத்திரமும் வெறுப்பும் இந்த உணர்ச்சிகள் உணர்வுகள் தூண்டப்படுகின்றது.

இதைப்போன்று தான் மகரிஷிகளின் அருள் சக்திகள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்ட பின் ஒவ்வொரு நிமிடமும் மனிதன் வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகள் நமக்குள் அழுக்காகச் சேர்வதை நாம் மாற்றி அமைக்க முடியும்.

கூட்டு தியானங்களின் மூலமாக அனைவரும் நலம் பெற வேண்டும் என்று பதிவாக்கிய ஆற்றல்மிக்க சக்திகள் இங்கே பரவி உள்ளது அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணி “வேறு எண்ணங்கள் இல்லாதபடி”
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.என் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்வேன்
3.என்னை அறியாத வந்த இருளை நீக்கச் செய்வேன்
4.மகரிஷிகளின் ஆற்றலால் இந்த மனித வாழ்வில் நலமும் வளமும் பெறுவேன்
5.என் தொழிலில் மன மகிழ்ச்சி அடைவேன்
6.என் சொல் எல்லோரையும் நலம் பெறச் செய்யும்
7.என் பார்வை அனைத்தையும் நலம் பெறச் செய்யும்
8.என்னைப் பார்ப்பவர்களை அது நல்லவராக்கும் என்ற உணர்வுடன் நீங்கள் ஏங்கித் தியானித்தால் போதுமானது.
9.இந்தக் காற்றிலே பரவி உள்ள அந்த அருள் உணர்வுகள் “உங்களைக் காக்கும் உணர்வாக விளையும்…”

ஏனென்றால் அனைவரும் நலம் பெறும் சக்தியாகத் திகழ வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானம் இருக்கின்றேன்… தவம் இருக்கின்றேன்

இதை மனதில் வைத்து நீங்கள் அனைவருமே தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று… அவ்வப்போது ஆத்ம சக்தி செய்து தீமையை நீக்கும்படி… உணர்வுகளை ஒளியாக மாற்றும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

நம் எண்ண ஈர்ப்பைச் சித்தன் பால் தந்தோமானால்… மெய் ஞானம் பெறலாம்

 

சூரியனும் சூரியனில் இருந்து வெளிவரும் சக்தி அலையை நம் பூமியும் எடுக்காவிட்டால் பூமியின் வளர்ச்சி… நிலையாய்த் தோன்றி இருக்காது.

வளர்ந்த பின்னும் அதன் ஈர்ப்பில் பூமி எடுத்துக் கொள்ளும் நிலை தொட்டுத்தான் இன்றளவும் உருண்டோடி பலவான ஒன்றாகி… ஒன்றில் பலவாகி வாழுகின்ற இப்பூமியின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அதனதன் ஈர்க்கும் செயல் முறைக்கொப்ப வளர்ச்சி நிலையும் எண்ண நிலையும் அததுவே தான் எடுத்துக் கொள்கிறது.

மனிதனின் ஈர்ப்பு நிலையின் குண நிலை அமைவதுவும் அவன் எடுத்துக் கொண்ட ஆரம்ப வளர்ச்சி நிலை அமில குணத்தின் தொடரினால் ஒவ்வொருவரின் அறிவு நிலையும் அதற்குகந்த செயலாற்றும் திறமையும் அதன் வடிவ வட்டத்துக்குகந்த எண்ண ஓட்டத்தின் ஈர்ப்பை எதில் அவன் அகிகப்பட்டு வளர்த்துக் கொள்கின்றானோ அதன் வளர்ப்பு அமிலத்தின் கூட்டு நிலையின் எண்ண மோதலுடன் இவன் எண்ண மோதலுக்குகந்த மற்ற ஆவிகளின் எண்ண மோதலையும் வளர்ச்சியுடன் ஈர்க்க வேண்டியுள்ளது.

ஒரு மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல் குணமும், உடல் உறுப்பும், உருவமும் இருந்திடும்.

1.எந்த ஆண்டவனும் எந்த ஒரு தனி மனிதனுக்கும் ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை.
2.எல்லாமும் ஒன்றாக ஒன்றிலே எல்லாமும் உள்ள பொழுது எதன் அடிப்படை சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ
3.அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.

ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது… அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின் வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் ஒரு மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப ஆவிகளின் தொடர்பு நிலையும் ஏற்படுகின்றது.

மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அவ் இயந்திரம் எடுத்து ஓடுகின்றது.

அதைப் போல்
1.எதன் அடிப்படையில் எதன் விகித நிலைக்கொப்ப ஒவ்வொரு ஆத்மாவின் எண்ண சுவாசம் உள்ளதோ
2.அதன் சக்தி நிலையைத் தான் அவன் பெற முடியும்.

அதன் செயலில்தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி ஆண்டவனைப் பல கோயில் ஸ்தலங்களுக்குச் சென்று வணங்கி வந்து பூஜித்து சக்தி பெறுவதல்ல.

எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இக்காற்றின் அமிலத்திலிருந்து நமக்குகந்த அமிலத்தை நாமாக எடுத்துக் கொள்ளலாம்.
1.இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும் இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில்
2.நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த சித்தரின் பால் நம் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்
3.உடலுடன் மனித உலக வாழ்க்கையில் பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும் இவ்வாழ்க்கையில் இருந்து பெற முடியாத ஞானத்தை
4.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை சித்தர்பால் செலுத்தி
5.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
6.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும் வழிமுறைப் பாதை தெரிந்து கொள்ளலாம்.
7.பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய வழியில் எத்தடங்கலும் இருக்காது.

பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி ஓ…ம் என்ற ஒலியுடன்… சித்தன் பால் நம் எண்ண ஈர்ப்பு சக்தியை நாம் தந்தோமானால்… “மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்…”

ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.
1.ஞானிகளும் சப்தரிஷிகளும் தம் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு இருக்காவிட்டால்
2.நம் பூமியில் மனிதன் ஞானம் இன்று, ஞானமும் கண்டிருக்காது… விஞ்ஞானமும் கண்டிருக்காது.
3.இன்றைய காலகட்டத்தில் நம் சித்தர்களின் ஒளி சக்திகள் இவ்வுலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

மனித ஞானம் எல்லாமே ஞானத்தின்பால் செல்லும் வழி முறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தான் வலுவான விந்தை காணத் துடிக்கின்றது.

மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுத்தான் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு மோதி உயிர்ப்பலிகள் அதிகமாகி… ஆவியின் சூழ்ச்சியில் அல்லலுக்குகந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் என்பதனை அறியாமல் அல்லவா வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

தனதாக உள்ளது எது…? என்பதுவும் இம் மனித ஞானத்திற்கு புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை. காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுளுள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து வாழும் மனிதன் தானாக வாழ்கின்றானா…? தனது என்ற பேராசைக்கார மனிதன்?
1.ஒன்றின் துணையில்லாமல் ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்… நான் என்ற நானாக வாழுகின்றானாம்.
2.ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித வாழ்க்கையில் நம்மை இருள் சூழச் செய்யும் பிற உணர்வுகளைத் தாழ் பணியச் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும்.

1.மெய் உணர்வின் தன்மை பெற நம் நினைவை மேலே செலுத்தினால் “இமயமலை…”
2.உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய தகுதி பெற்றது நம் உயிர்.

ஆனால் கீழே நினைவுபடுத்தும் போது அந்தச் செயலின் இயக்கத்தில் வாழ்க்கையை ஓட்டலாம். ஆக வாழ்க்கைக்கு நம் உடலின் உணர்வு கொண்டு செயல்பட்டாலும்
1.இடர்கள் வந்து நம்மை ஆட்டிப் படைக்கும் சந்தர்ப்பம் எல்லாம்
2.ஈஸ்வரா… என்று நமக்குள் உச்சியிலிருக்கும் உயிரை நினைவு கொண்டு
3.அவனின் துணை கொண்டு நினைவை அங்கே செலுத்த வேண்டும்.

இது தான் கீதையின் தத்துவம் குருக்ஷேத்திரப் போர்.

வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள் மகாபாரதப் போராகப் பலருடைய எண்ணங்கள் நம்மிலே மோதுகிறது. அப்போது நம் நல்ல சிந்தனைகள் செயல்படாத நிலையில் நாம் சுவாசித்த உணர்வுகள் பதட்டமாகிறது.

அத்தகைய பதட்டம் ஏற்பட்டால் ஒன்றை அழிக்கக்கூடிய எண்ணம் உருவாகி நல்ல பொருள்களை அழிக்கும் நிலைகள் வருகின்றது.

ஆனால் ஞானிகளோ தீமை செய்யும் உணர்வைத்தான் அழிக்கச் சொன்னார்கள்.
1.நம்மை அறியாமல் வரும் தவறு செய்யும் உணர்வுகளை
2.அதைச் சுவாசிக்கும் நிலையை நாம் மாற்ற வேண்டும்.

பிறர் செய்யும் தவறான உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்து நம்மை அறியாது இழி நிலையான செயல்களைச் செயல்படுத்த வைக்கும் அந்த உணர்வின் தன்மையை மாற்ற ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்.

கண்ணின் புலனறிவு கொண்டு நம் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வின் துணை கொண்டு அந்த உணர்வை நாம் எடுக்கும் பொழுது இது குருக்ஷேத்திரப் போர்.

புற நிலையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது பிறருடைய எண்ணங்கள் நம்மை வெறுப்போ பயமோ ஆத்திரமோ மற்ற நிலைகள் அதனுடைய செயலுக்கு ஆளாக்கிவிடுகிறது.

அக்கணமே ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி இங்கே போர் நடத்த வேண்டும்.

நாம் எவ்வளவு பெரிய வல்லமை கொண்டவராக இருந்தாலும் ஒரு விஷத்தின் ஆற்றல் நம்மை ஆட்டிப் படைத்துவிடும்.

ஒரு சிறு எறும்பு கடித்து விட்டால் உடனே நாம் கை கால்களை உதறுகின்றோம். அதே போன்று அந்தக் கடுகடுப்பான விஷத்தின் ஆற்றல் நம் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் போது உடல் முழுவதும் பதட்டம் ஆகிறது. நல்ல சொல்களைச் சொல்ல முடியாதபடி செயலிழக்கக் கூடிய நிலையும் வந்து விடுகின்றது.

இதைத் தடுப்பதற்கு எந்த நிமிடம் ஆனாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்
2.மெய் ஞானிகளின் அருள் வழி நாங்கள் நடக்க வேண்டும்
3.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
4.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று
5.எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்போதெல்லாம் இத்தகைய குருக்ஷேத்திரப் போராக மாற்றுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் ஆற்றலை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம்.

“தயவு செய்து” உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்

 

நீங்கள் எப்பொழுது தபோவனம் வந்தாலும் சரி…
1.எந்த நன்மைகளை எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தீர்களோ
2.அதை எண்ணி ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி இருந்தால் போதுமானது.

உங்கள் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும்… அவர்களுக்கு நல்ல படிப்பு வர வேண்டும்… எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும்… விவசாயம் செழித்து வளர வேண்டும் என்று எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ ஒரு பத்து நிமிடம் மகரிஷிகளை எண்ணித் தியானித்த பின் இதை எண்ணுங்கள்.

மறுபடியும் ஒரு பத்து நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி…
1.மீண்டும் அந்த நல்லதுகளை எண்ணினீர்கள் என்றால் இந்த உணர்வுகள் விளைந்து
2.உங்கள் நினைவலைகள் உங்கள் கஷ்டங்களை நீக்க இது உதவும்.
3.உங்களுக்கு இதெல்லாம் கிடைக்க வேண்டும் என்று தான்
4.நான் எங்கிருந்தாலும் தியானம் செய்து தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

ஆகவே எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… என் கஷ்டம் என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது… என்று “அதை இறுக்கிப் பிடித்துக் கொள்ளாதீர்கள்…”

எண்ண வேண்டிய சரியான முறை எது என்றால்…
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் கஷ்டம் எல்லாம் நீங்கி தொழில் வளம் பெருக வேண்டும்
2.நாங்கள் மன பலம் பெற வேண்டும் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும்
3.எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும் என்று கேட்டால்
4.இது எல்லாம் உங்களுக்கு நடக்கும் என்று நான் (ஞானகுரு) ஒரு சொல்லிலே உங்களுக்கு ஆசி கொடுக்க முடியும்.

ஆனால் இவ்வளவும் சொல்லி நல்லது நடக்க வேண்டும் என்று நான் கொடுத்தாலும்… அடுத்தாற்போல் என் பேரன் சரியாகப் படிக்கவில்லை அவனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகின்றது என்று “நான் சொன்ன வாக்கை எடுக்காதபடி இதைச் சொல்கின்றார்கள்… “கஷ்டத்தையே பிடித்துக் கொள்கின்றார்கள்…”

போன தடவை உடல் நலம் சரியில்லாதபடி இங்கே வந்திருப்பார்கள் இப்பொழுது முக்கால்வாசி நன்றாக இருக்கும். ஆஅனால் இப்போது அங்கிருந்து வந்த உடனே என் மேல் வலி என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று கேட்கின்றார்கள்

1.சாமி…! போன தடவை வந்த போது நீங்கள் சொன்னபடி தியானம் செய்தேன் இப்போது பரவாயில்லை
2.இன்னும் கொஞ்சம் இருப்பது நீங்க வேண்டும் அந்த நோய் பூரணமாக விலக வேண்டும்
3.நான் நன்றாக வேண்டும் என்று தான் நீங்கள் கேட்டுப் பழக வேண்டும்.

அந்த மனது தான் உங்களுக்கு வரவேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஒளியால் நாங்கள் உடல் நலம் பெற வேண்டும்… உடல் வலி நீங்க வேண்டும் என்று தான் நீங்கள் கேட்டுப் பழக வேண்டும். இதைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் பழக்கிக் கொடுக்கிறோம்.

ஏனென்றால் இதற்கு முன்பு… கோவிலுக்குச் சென்று அழுது புலம்பி கஷ்டத்தைச் சொல்லித் தான் வேண்டிப் பழகி இருக்கிறோம்.

அந்த பழக்கத்தை எல்லாம் விடுத்து விட்டு கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நான் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இப்படி நீங்கள் கேட்டுப் பழகுதல் வேண்டும்.

இங்கே கூட்டுத் தியானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு அரை மணி நேரமாவது நல்லதை எண்ணித் தியானம் செய்யுங்கள் உங்கள் மனதில் அமைதி கிடைக்கும் மன பலம் கிடைக்கும் “நீங்கள் எண்ணிய நல்லது நிச்சயம் நடக்கும்…”
1.இந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும் என்று தான் தியான மண்டபத்தைக் கட்டியது.
2.தயவு செய்து உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

ஞானிகள் சொன்னது நம் உயிர் கடவுளாக இருக்கின்றது… நாம் எண்ணிய எண்ணங்கள் இறையாகின்றது… உடலுக்குள் இறையான பின் அந்த உணர்வுகள் செயலாகும் போது தெய்வமாக இயக்குகின்றது.

எந்தக் குணத்தை எண்ணி எடுக்கின்றோமோ அது எப்படிச் செயலாக்குகிறது என்பதைத் தான் ஆலயங்களில் வைத்துக் காட்டியுள்ளார்கள். அதை எல்லாம் மனதில் வைத்து… அந்த உயர்ந்த நிலைகளை நீங்கள் எண்ணி…
1.நான் கொடுக்கக்கூடிய நல்ல வாக்குகளை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி
2.அருள் வழியிலே அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

குப்பையில் வளர்கின்றது “நல்ல சக்தி மணிகள்”

 

மாற்றத்தின் வளர்ச்சித் தொடர் அலையினால் இக்காற்றுடன் அதன் சக்தி நிலையும் வளர்ச்சியுறும் நிலையிலிருந்து கூடப் போகின்றது.

காற்றிலிருந்துதான் அத் தீய சக்தி அதன் ஈர்ப்பில் வளர்கிறது. அதனால் இனம் தான் அத்துடன் கலக்கப் பெறுகிறது என்று உணர்த்தியுள்ளீரே… “வளர்ச்சியுறும் நிலை” என்றால் என்ன…? என்று அடிப்படை வினா எழும்பலாம்.

சூரியனிலிருந்தும் பால்வெளி மண்டலத்திலிருந்தும் நம் பூமியின் ஈர்ப்புக்கு வரும் குண அமிலமானது பூமியின் சுவாசத்தில் இழுபட்டு அது வெளிப்படுத்தும் நிலையுடன் பூமியுடன் ஐக்கியப்பட்டு அதன் உயிரணுத் தோன்றி அதன் வளர்ச்சியில் வளரும் செழிப்பிலிருந்து வெளிப்படும் அமில குணங்களின் நிலை வேறுபடுகிறது. அழுத்தமான அமில குணங்கள்தான் சூரியனிலும் பால்வெளி மண்டலத்திலும் உள்ளன.

சுவாசத்தில் பட்டு வெளிப்படும் நிலையில் வளரும் இயற்கையிலிருந்து வெளிப்படும் அமிலத்தின் மாற்றம் உண்டு.

1.இப்பொழுது நாம் பலதரப்பட்ட உணவு வகைகளை உண்டு மீதியைக் குப்பையாக்குகின்றோம்.
2.அக்குப்பையில் இருந்து அதன் ஈர்ப்பில் உள்ள சத்துக்களை மட்டும் எடுத்து உன்னத மணிகளைக் காண்கின்றோம்.

இப்படி இது நாள் வரை அமில குணங்களையும் உயிரணுக்கள் சுவாச நிலைகள் மண்டலத் தன்மைகள் ஒவ்வொன்றின் நிலையையும் உணர்த்தி வந்தோம் என்றால் எதன் அடிப்படைப் பொருள் காண…?

1.நம் உடலில் பல வகை அமிலங்கள் கொண்ட பல கோடி உயிரணுக்கள் உள்ளன.
2.இதிலிருந்து எல்லாம் நம் ஞான மணியை ஈர்த்து ஒளி பெறல் வேண்டும்.

குப்பையில் வளர்கின்றது நல்ல சக்தி மணிகள்.
1.இவ்வுடல் என்ற குப்பைக் கூட்டிலிருந்து நம் மணிக்கான உரம் எடுத்துக் கொள்ள வேண்டிய செயல் முறையை
2.இத்தியானம் என்ற வழிபாட்டு முறையினை ஏற்படுத்திக் கொண்டால் பக்குவச் செயல்படுத்தி
3.நம் உடலில் உள்ள பல அமிலங்களில் கலந்துள்ள பல கோடி உயிரணுக்களில் இருந்து நம் ஞானத்தின் வளர்ச்சிக்கு சத்தெடுத்து
4.தெய்வ ஞானம் பெற்று… ஒவ்வொரு மனிதனும் “தான் அடைய வேண்டும் என்று எண்ணும்…” உன்னத நிலை எது…? என்று அறிந்து ஒளி பெறலாம்.

சக்தி நிலை சகலத்திலும் இருந்தாலும் அதற்குகந்த வழி நிலையில்தான் அச்சக்தி நிலை வளர்கின்றது. மாற்றவோ திருத்தவோ மனித ஞானத்திற்கு வழி தெரிகின்றது.

இருந்தாலும்… தன் ஞானத்தைப் பலவற்றிலும் கலக்கவிட்டுள்ள மனிதன் தன்னைத் தானே உணர்வும் ஞான வழிபாட்டினை அறியாமல் வாழுகின்றான். கால நிலையின் குறைவை… இப்பொழுது உள்ள மனித வாழ்க்கையின் சந்தர்ப்ப காலத்தைப் பயன்படுத்தி வாழுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்றாட வாழ்க்கையில் எந்த நிமிடமாக இருந்தாலும் சரி… யாராவது நம்மிடம் சங்கடமாகப் பேசினாலும் சரி… யாம் (ஞானகுரு) சொல்லிக் கொடுத்த ஆத்ம சக்தியை நீங்கள் கடைப்பிடியுங்கள்.
1.ஈஸ்வரா…! என்று வானை நோக்கி எண்ணுங்கள்
2.அந்தச் சங்கடமான உணர்வுகளை அதை வைத்து மறைத்துக் கொள்ளுங்கள்.

“ஈஸ்வரா…’ என்று அதை மறைக்கச் சொல்வது என்ன…?

மனிதனுடைய உணர்வின் அலைகள் “இங்கே இழுக்கின்றது…” கடிகாரம் போன்று இருக்கின்றது. உடல் முழுவதற்கும் இருப்பதை இது முன்னாடி குவித்துக் கொடுக்கும்.

அப்பொழுது ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி… அந்த நினைவை மகரிஷியின் அருள் சக்தி பெற… வானை நோக்கி அங்கே கூட்ட வேண்டும். இல்லை என்றால் இதுவும் கலந்துவிடும். (நல்ல உணர்வுடன் பிறரின் உணர்வும் கலந்துவிடும்)

ஆகையினால் எண்ணத்தை வானிலே செலுத்தி
1.அங்கிருந்து எடுக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் நம் கையிலேயும் பாய்கின்றது.
2.ஈஸ்வரா… என்று ஏங்கி எடுக்கப்படும் போது தீமைகள் இங்கே அமுங்கிவிடுகிறது.
3.ஆகவே அந்த மெய் ஒளியின் தன்மையை “ஈஸ்வரா…” என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரம் மிளகாய் உப்பு கசப்பு இதையெல்லாம் தனித்தனியாக உட்கொண்டால் சுவையற்றதாக இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம் சமமாக இணைத்துச் சுவையாக ஆக்கும் பொழுது நாம் ரசித்துச் சாப்பிடும் நிலை வருகின்றது.

அதைப் போல் தான் எத்தனை பேர்… எவ்வளவு சங்கடமாகப் பேசினாலும்… எதிர்த்துப் பேசினாலும் கூட
1.நிச்சயம் அவர்கள் நல்லது பெறுவார்கள்… நல்லது செய்வார்கள்…
2.”என் எண்ணம் அவர்களுக்கு நல்லதைச் செய்யும்” என்று இந்த உணர்வை ஊட்டிக் கொண்டே வாருங்கள்.

என் கடையில் வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை…! என்று சொல்லாதீர்கள்.

என்னிடம் சரக்கு வாங்குவோர் அனைவரும் நலம் பெற வேண்டும்.. அவர்கள் வளம் பெறுவார்கள்… மகரிஷியின் அருள் ஒளி அவர்களுக்குக் கிடைக்கும். என்னிடம் பொருள் வாங்குவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வாருங்கள்.

உங்கள் வியாபாரம் நன்றாகிக் கொண்டே இருக்கும்.

ஒரு தொழிலே புதிதாகச் செய்கிறோம் என்றால் அங்கே தொழில் செய்பவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும். அவர்கள் எதை உற்பத்தி செய்கின்றார்களோ அதைப் பயன்படுத்துபவர் எல்லோருக்கும் நல்லதாக வேண்டுமென்று இதைத் தியானம் செய்யுங்கள்.

ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு அழகாகக் கட்டுகின்றோம். நம் ஆறாவது அறிவின் தன்மை அழகான கட்டிடங்களைக் கட்டச் செய்கிறது.

ஆகவே அந்த ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கக்கூடிய பிற உணர்வுகளைத் தடைப்படுத்த அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வை உடலுக்குள் செலுத்துங்கள்.

1.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி
2.அந்த ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

நமது குருநாதர் காட்டிய மேல் நோக்கிய சுவாசம் இது தான். அதன் மூலம் நாம் விண்ணின் ஆற்றலைப் பெறலாம் அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

“எனது குருவின் ஆசையை” நீங்களும் பெற வேண்டும்

 

மனிதன் என்ற நல்ல குணங்கள் இல்லாதபடி அரக்க உணர்வுகள் கொண்டு அழித்திடும் உணர்வுகளாக வளர்ந்து வரும் இக்காலங்களில்
1.நான் அறிவில்லாத மூடனாக இருந்தாலும் மகா ஞானிகள் உணர்வுகள் இயக்கப்பட்டு
2.இந்த தத்துவத்தை அந்த ஞானிகளின் உணர்வலைகளே பேசுகின்றது.
3.நான் பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

இயற்கையின் உணர்வின் அலைகளை அன்று வென்று… தனக்குள் ஒளியாக மாற்றிச் சென்ற மெய் ஞானிகள் உணர்வுகளே அது பேசுகின்றது.

எனது குருநாதர் பித்தனைப் போன்று இருந்தாலும்… சாக்கடைக்கு அருகில் எம்மை அமரச் செய்து… இவ்வளவு பெரிய தத்துவங்களையும் எனக்கு உணர்த்தினார்.
1.அதனை நான் கேட்டறிந்த பின் அவரின் உணர்வுகள் பதிவாகி
2.அவனை நினைவு கொள்ளும் போதெல்லாம் இந்த உணர்வின் நினைவாற்றல் வந்து
3.என்னை அறியாத வந்த இருளை நீக்கவும்
4.இதைக் கேட்டுணர்வோர் அவர்களை அறியாத வந்த இருளைப் போக்கும் உணர்வாகவும் அது வெளிப்படுகின்றது.

இந்த மூச்சலைகளை எடுத்து அந்த உணர்வின் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில்
1.என் குருவின் ஆசையை நீங்களும் பெற வேண்டும் என்ற நோக்கிலே
2.அதன் வழியில் தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை… சந்தர்ப்பத்தின் நிலைகள் நாம் பரிவுடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் நமக்குள் அறியாது வரும் அத்தகைய தீமைகளை நீக்க வேண்டும் என்ற நோக்கத்திற்குத் தான் இதைச் சொல்வது.

கையிலே அழுக்குப் பட்டால் கையைக் கழுவி விடுகின்றோம் உடையில் அழுக்குப் பட்டால் துவைத்து விடுகின்றோம்.

இதைப் போன்று மனித வாழ்க்கையில் உயர்ந்த பண்பு கொண்டு பிறருக்குச் செய்த சேவையின் தன்மையை “முழுமையாக அனுபவிக்க வேண்டும்” என்றால்… நமக்குள் கேட்டறிந்த தீமைகள் உடலுக்குள் சேராத வண்ணம் அந்த ஞானிகளின் உணர்வலைகள் சேர்ப்பிக்கப்பட்டு… அந்த உணர்வால் துன்பங்கள் நீங்க வேண்டும் என்று எப்போது நாம் சொல்கின்றோமோ அப்போது மனிதன் என்ற முழுமை அடைகின்றோம்.

1.நம்மை அறியாது பட்ட அழுக்கையும் துடைக்கின்றோம்
2.ஞானிகள் அருளாற்றல் நமக்குள் பெருகுகின்றது
3.நம் எண்ணம் கூர்மையாக விண்ணை நோக்கிச் சென்றடைகின்றது.

அந்த விண்ணின் உணர்வுகள் சேரும் பொழுது கூர்மை அவதாரமாக…
1.எதைக் கூர்மையாக எண்ணி இந்த மனித வாழ்க்கையில் தன்னை இயக்கிய தீமைகளை வென்று ஞானிகள் எவ்வாறு விண் சென்றனரோ
2.அந்த உணர்வுகள் சிறுகச் சிறுக விளைந்து நமது உடலிலிருந்து உயிரான்மா பிரிந்து செல்லும் பொழுது
3.இதிலே விளைந்த உணர்வின் ஆற்றல் கொண்டு “விண்ணுலகில் அவர்கள் இருக்கும் இடத்திலே” நாம் சேர்கின்றோம்.
4.அந்த மெய் ஞானிகளுடைய அருள் வட்டத்தில் நாம் இணையும் பொழுது
5.நஞ்சினை வென்று தனக்குள் படைத்து வெளியிட்ட மூச்சலைகளை நாம் உணவாக எடுத்து
6.ஒளியின் சுடராக அவரின் ஈர்ப்பு வட்டதில் என்றும் நிலையாக இணைந்து வாழ முடியும்.

அதற்குத்தான் இந்த உபதேசம். ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் உணர்வை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

திட்டியவனைப் பதிவு செய்த பின் எண்ணும் பொழுது அவருடைய நினைவாற்றல் வந்து எப்படி உங்களுக்குள் கொதிப்படையச் செய்கிறதோ அதைப் போல உங்களுடைய நினைவுகள் எத்தகைய நிலையில் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது உங்கள் வாழ்க்கையிலே வந்த துன்பங்களை நீக்கி நல்லதைப் பெற வேண்டும் என்று ஏங்கி வந்த உங்களுக்குள் இந்த உணர்வுகளைப் பதியச் செய்கிறேன்.

எந்த ஈர்ப்புடன் இதைப் பதிவு செய்கின்றீர்களோ அந்த உணர்வின் எண்ணம் கொண்டு நீங்கள் நினைக்கும் பொழுது
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் சென்று
2.உங்களுக்குள் இருள் சூழச் செய்யும் தீமைகளை நீக்கிவிட்டுப் பொருள் காணும் உணர்வாக விளைந்து
3.ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காத்திடும் எண்ணமாக விளைந்து நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் ஈசனாக இயக்கி
4.அந்த உணர்வினை உங்கள் உடலுக்குள் வினையாக ஒளி பெறும் தன்மையாக ஒளிச்சரீரமாக மாற்றும் நிலையும்
5.அதுவே ஒளி பெறும் சிவனாக “இந்த உடலை நோயற்ற உடலாக உருவாக்கும் நிலையும்”
6.நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி “பேரண்டத்தின் ஆற்றலுடன் இணையச் செய்து”
7.மனிதனை முழுமை அடையச் செய்யும் “அந்த உயிரின் நிலைகள் கொண்டு நாம் இணைந்து செயல்படுவோம்” என்று வேண்டிக் கொள்கின்றேன்.

துருவப் பகுதியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதிகப்படியான மாற்றங்கள்

 

இது நாள் வரை உள்ள ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பில் உணர்ந்த உண்மைக்கு மேலும் வலுக்கொண்ட பல நிலைகள் இன்று கூடி வருகிறது.

நம் பாட முறையில் யான் உணர்த்திய நிலையில் நம் பூமியின் சுவாச நிலை பெற்று வாழும் உயிர் ஆத்மாக்கள் மற்ற கோள்களில் சென்று வாழ முடியாது… இப்பூமிக்குகந்த ஈர்ப்பு குண அமிலத்தைத்தான் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தி வாழ்கின்றது என்பதனைப் பல இடங்களில் உணர்த்தியுள்ளேன்.

நம் பூமியின் ஓட்டப் பாதை சிறிது மாறு கொண்டுள்ளதாகவும்… மாறு கொண்ட அமிலங்களும் ஓடும் ஓட்டமுடன் நம் பூமியின் ஈர்ப்பு காற்று மண்டல நிலையுடன் சிக்குண்டு மோதிச் சிதறும் நட்சத்திர மண்டலங்களின் அமில குணமும்… “முந்தைய நாட்களைக் காட்டிலும் மாறு கொண்டு வருகின்றது” என்று உணர்த்துகின்றேன்.

மாறு கொண்ட அமிலத்தைத் தான் நம் பூமி ஈர்க்காதே…! அப்படியிருக்க நம் பூமியின் சுவாச நிலை கெடுவதேன்…? என்ற வினா எழும்பலாம்.

1.நம் பூமியின் ஈர்ப்பு வட்டக் காற்று மண்டல நிலைக்கும்
2.நம் பூமியின் வட்டத்திற்கு மேல் காற்று மண்டலத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும்
3.நம் பூமியின் காற்று மண்டல ஈர்ப்பு நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் தான்
4.பல சக்தி நிலைகளும் அமில நிலைகளும் மாறுபட்டு நம் பூமியின் ஈர்ப்பிற்கு வருகின்றன.

நம் பூமி ஈர்த்து விடும் சுவாச அலையும் பால்வெளி மண்டலத்தில் இருந்து நம் பூமிக்கு வரும் (பூமியின் ஈர்ப்பிற்கு வரும்) அமில குணங்களும் இவ்விடைப்பட்ட நிலையில் சுத்திகரிக்கப்பட்டுத் தான் (FILTER) நம் பூமியின் ஈர்ப்பிற்கே வருகிறது.

அப்படி இருக்க மாறு கொண்ட ஓட்ட கதியில் அமில குணங்கள் அதிகப்பட்டு வருகிறது என்றால் அதனின் பொருள் என்ன…?

நாம் சமையல் செய்யும் பொழுது ஒரு வகை மரத்தை கருவேல மரத்தை வைத்து எரிக்கின்றோம். அதனுடன் மற்ற குணவிறகைக் குறைவாக வைக்கும் பொழுது கருவேல மரத்தின் நிலை உயர்ந்ததாக இருக்கும்.

மற்ற விறகைக் கருவேல மரத்தைக் காட்டிலும் அதிகமாக வைத்து எரிக்கும் பொழுது மற்ற விறகின் நிலை அதிகமாகக் கூடி விடுகிறது.

எரிந்து ஆவியாகிக் கலக்கும் நிலையில் அதிகப்படியாக வைத்த விறகின் குண ஆவி நிலையும் கருவேல மரத்தின் ஆவி நிலையும் ஒன்றுடன் ஒன்று கலந்து அதற்குகந்த தனி அமில நிலையாகி மீண்டும் ஒரு நிலையான தன்மை வழிபடுகிறது.

அதைப் போல்
1.நம் பூமியின் ஓட்டக் கதியில் இன்று ஓடும் மாறு கொண்ட ஓட்டத்தினால் ஏற்படும் புதிய அமில குணமானது
2.வழக்கமாக எடுக்கும் நிலையைக் காட்டிலும் அதிகப்பட்டுள்ளதால்
3/நம் பூமியின் ஈர்ப்பு நிலைக்கும் பால்வெளி மண்டலத்திற்கும் இடையிலுள்ள இச்சுத்திகரிப்பு ஆலை
4.”புதிய அமில குணத்தை” நமக்கு அனுப்பி வருகின்றது.

இதன் தன்மை நம் பூமியின் நிலையில் அதிகமாக ஜீவராசியின் சுவாச நிலைக்கு வருவதைக் காட்டிலும் நம் பூமியின் “வட துருவ தென் துருவ” நீர்நிலையின் ஈர்ப்பிற்குத்தான் அதிகமாகச் செல்கின்றது.

முந்தைய பாடத்திலேயே நம் பூமிக்கு உயிர் நாடியாய் வட துருவம் தென் துருவம் அமைந்துள்ளன என்று உணர்த்தினேன். அதுவல்லாமல் நம் பூமிக்குச் சில இடங்களில் சூரியனின் ஒளியே காணாத இடம் உள்ளது என்றும் உணர்த்தினேன்.

ஆனாலும் அங்கு உயிரணுக்கள் உண்டு. சூரியனின் ஒளி படாவிட்டாலும் (நேராக) பூமியின் சுவாச அலையின் வெக்கையும் காற்று மண்டலத்தின் அலையும் அங்கு உள்ளதினால் ஜீவன் உண்டு. ஆனால் கடும் விஷ குணங்கள் நிறைந்துள்ள இடங்களாகத் தான் அவை உள்ளன.

இப்பூமியிலேயே பலதரப்பட்ட வளர்ச்சி நிலைகள் எண்ணிலடங்கா வண்ணம் உள்ளன. அதற்குகந்த நிலையை அவை அவை பிரித்து அவற்றின் வளர்ச்சி நிலை வளர்கின்றது.

இதை உணர்த்தும் நிலை எதற்கு…? என்று எண்ணலாம்.

பூமியின் மாறு கொண்ட ஓட்ட கதியில் இருந்து பூமியின் அலையுடன் அதிகப்பட்டு அவ்வமிலங்கள் நம் பூமியின் ஈர்ப்பிற்கு வந்தாலும்
1.அதன் நிலைக்குகந்த ஈர்ப்பு நிலையான நம் பூமியின் சூரிய ஒளி படாத இருண்ட பகுதியின்
2.அமில குண வர்க்கத்தின் தொடர்புடைய அமில குணமாக அது இருப்பதினால்
3.இருண்ட பகுதியின் ஈர்ப்பிற்கு இப்புதிய நிலை விஷ அமிலம் சென்று விடுகின்றது.

ஆனால் இதன் வளர்ச்சி நிலை அதிகரிப்பினால் இன்றைய காலகட்டத்தில் நம் பூமியின் ஆத்மாக்கள் ஏற்க முடிவதாகத்தான் உள்ளது. காலநிலை கூடக்கூடத் தான் இதன் வளர்ச்சி நிலையில் அதிகரிப்பும் ஏற்படும்.

1.மிளகாய் குறு மிளகு இப்படியுள்ள செடிகள் அதற்குகந்த கார குணத்தையும்
2.கரும்பும் கனிகளும் அதற்குகந்த இனிப்பு குணத்தையும் அதனதன் பழக்கப்பட்ட ஈர்ப்பில் வளர்வதைப் போல்
3.இன்றைய நிலையில் நம் பூமியின் ஓட்ட மாற்றத்தினால் வந்தடைந்த அமிலத்தை எடுக்கக்கூடிய
4.இருண்ட பகுதியில் உள்ள விஷ ஜெந்துக்களுக்கும் தாவரங்களுக்கும் உகந்ததாக உள்ளது.
5.”இதன் வளர்ச்சியினால் தான் மாற்ற நிலை ஏற்படும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்புடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்து நாம் வாழக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் பட்ட வேதனை நமக்குள்ளும் பதிவாகிறது.

அந்த வேதனையை உருவாக்கும் உணர்வுகள் நமக்குள் வலுப் பெற்று விட்டால்
1.அதனின் உணர்வு நம் ஆன்மாவாக மாறும் பொழுது
2.அதிலிருந்து இழுத்து நாம் சுவாசிக்கும் போது
3.அந்த வேதனையான எண்ணங்கள் தான் மீண்டும் மீண்டும் வரும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட இங்கே உபதேசத்தின் வாயிலாகக் காட்டும் வழிகளைச் சீராகக் கடைப்பிடித்து வாருங்கள். ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்,
1.சந்தர்ப்பத்தில் இது உங்கள் நினைவுக்கு வரும்
2.உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவும்.

பள்ளிக்கூடத்திற்குச் சென்று முதலில் படிக்கச் செல்லும் பொழுது எல்லாவற்றையும் உடனடியாக நாம் தெரிந்து கொள்வதில்லை. திரும்பத் திரும்பப் படிக்கும்போதுதான் அந்த நினைவாற்றல் நமக்குள் பெருகுகிறது.

அது போல் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் அருள் உரைகளை…
1.ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பதிவு செய்து விட்டாலும்
2.அதைப் பெற வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்தால் தான்
3.திரும்பத் திரும்ப அதை மனதில் பதியச் செய்வோம்… அதை வளர்க்கவும் செய்வோம்
4.திட்டியவர்களை மீண்டும்…மீண்டும்… மீண்டும்…மீண்டும் எண்ணுவது போல்…!

ஆனால் நாம் எல்லாம் ஆரம்பத்தில் பக்தியிலே ஆலயத்திற்குச் சென்று… விநாயகருக்கு அருகம்புல்லை வைத்துச் சூட தீபாராதனை காட்டி… தேங்காய் பழம் வைத்துக் கும்பிட்டுப் பழகியவர்கள். இருந்தாலும்…
1.எங்கோ இருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.ஒரு நிமிடத்திற்குள் எண்ணி எடுக்கும் சக்தியை… அந்த ஆற்றலை இப்பொழுது பெறுகின்றோம்.

இதைச் சொல்லும் போது முதலிலே சிறிது கடினமாகத் தோன்றும். ஆனால் உடனே பெறக்கூடிய தகுதிக்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். ஞான வித்தாக உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொள்வதில் தான் உங்களுடைய வளர்ச்சி இருக்கின்றது. அதற்குண்டான நீரான அருள் சக்தியை எடுக்கும்போது தான் உங்களுக்குள் அந்த ஞான வித்து ஓங்கி வளரும்.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி காலையில் நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை எடுத்துக் கொள்ளலாம்.
1.அந்த நேரத்தில் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.
2.எழுத்து உட்கார்வதற்குச் சோம்பேறித்தனமாக இருந்தாலும் கூட
3.உங்கள் எண்ணத்தை நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கதிராக வருவதைத் தியானித்து எடுத்துக் கொள்ளலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் வலிமையாக்குங்கள்.

எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை விண்ணில் செலுத்தி… உடல் முழுவதும் படர வேண்டும் என்ற மீண்டும் உடலுக்குள் செலுத்துங்கள். உள்ளுக்குள் செலுத்தச் செலுத்த… தீமைகள் எல்லாம் கரைந்து விடும்

உடல் அழுக்கைப் போக்கத் தினசரி தண்ணீரை விட்டு எப்படிக் குளிக்கின்றீர்களோ அதை போல் அருள் ஞானிகளின் உணர்வை உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

எங்கோ இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… நினைத்தவுடன் உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றோம்.

சோமபானம் என்ற சோகபானம்

 

குடும்பங்களில் கடும் சிரமங்கள் ஏற்பட்டால் இன்று லாகிரி வஸ்துகளை (மது) உபயோகப்படுத்துகிறார்கள். அதைப் போட்டு குடும்பக் கவலையே இல்லாதபடி “பல இம்சைகளைச் செயல்படுத்துகின்றார்கள்…”

ஆரம்பத்திலே அன்றைய அரசர்கள் சோமபானம் என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்துத் துஷ்ட தெய்வங்களையும் உருவாக்கி மந்திரங்களையும் சொல்லிப் பழகி இருந்ததனால்
1.அதையே காவல் தெய்வம் என்று வணங்கி சாராயமும் கறியும் வைத்துக் கும்பிடுபவர்களும் இருக்கின்றார்கள்.
2.இப்படிக் கும்பிட்டு ஏற்றுக் கொண்ட பின் இதை ஒத்த ஆன்மாக்கள் உடலுக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது.

ஆதியிலே அரசன் எந்த அடிப்படையில் (செய்வினை ஏவல் தோஷம்) இதை உருவாக்கி மக்களுக்குள் பதிவு செய்தானோ அதுவே இன்று வேரூன்றி வளர்ந்து விட்டது. அவன் உருவாக்கிய மந்திரங்கள் அனைத்தும் மக்களுக்குள் ஊடுருவி விட்டது.

மது மாமிசம் இவைகளை வைத்து இன்று மந்திரத்தை ஜெபித்தால் போதும்…
1.அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலைகள் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் இங்கே வந்து சேரும்… பல கெடுதலைச் செய்யும்.
2.துன்பங்களை மறக்க மதுவை உபயோகப்படுத்தி எதன் வழி அந்த ஜீவன்கள் பிரிந்ததோ அது இன்னொரு உடலுக்குள் சென்ற பின்
3.அதே மதுவைப் பருகச் செய்யும்… அவனைச் செயலற்றதாக ஆக்கும்… அதன் வழியில் வளர்ச்சி ஆகும்.
4.மீண்டும் அதனால் தொடர்படும் சாபங்கள்… அதனால் கடும் வேதனைகள் அங்கே உருவாகும்.

இப்படி உருவாகி விட்டால் அந்த உடலை விட்டுச் சென்ற பின் உயிரானமா… தன் உடலில் எத்தனை வேதனைகள் பட்டதோ அந்த வேதனையை உருவாக்கும் உணர்வுகள் உயிருடன் ஒன்றித் தொக்கிக் (சுற்றி) கொண்டே இருக்கும்.

இந்த உணர்வுகள் தான் உடல்… உடலில் விளைய வைத்த்து தான் உயிர். உயிரின் தன்மை கொண்டு இந்த ஆத்மா அதில் சேர்த்துக் கொண்ட பின்
1.நிலையான வேதனையாக என்றுமே வேதனைப்படும் நிலையாக அமைத்து விடுகின்றது.
2.மதுவைக் குடித்துக் கஷ்டங்களை மறக்கலாம் என்று செய்தாலும் இது எல்லாம் விடாது.

ஆகவே உடலை விட்டுச் சென்ற பிற்பாடு என்ன நடக்கும்…? என்று சற்று தெரிந்து கொள்ளுங்கள்.

உடலில் இருக்கும் பொழுதாவது சமாளித்துக் கொள்ளலாம்… உடலை விட்டுச் சென்றால் சமாளிக்கும் திறனே கிடையாது… வேதனையை அனுபவித்தே தான் தீர வேண்டும்.

1.மீண்டும் எந்த மனிதனுடைய ஈர்ப்புக்குச் சென்றாலும் அங்கே மனிதனாகப் பிறக்க முடியாது
2.அங்கேயும் வேதனையை உருவாக்கி அவனையும் வீழ்த்தி விட்டு
3.எந்தத் தகாத செயலை இவன் செய்தானோ அதையே செய்யச் செய்யும்.

எந்த வேதனை அனுபவித்தானோ அதை அங்கே உருவாக்கி அதில் விளையும் உணர்வின் சத்தை இது எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொள்ளும்.

அந்த உடலை வீழ்த்திய பின் மனிதனுடைய சிந்தனைகள் முழுமையாக அழிந்து உயிர் பாம்பின் ஈர்ப்புக்குள் தான் கொண்டு போய்ச் சேர்க்கும்.

கீதையிலே சொல்வார்கள் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று.
1.எந்தெந்த வேதனையை உருவாக்கி அதை ரசித்தோமோ அந்த வேதனையின் செயலாக நாம் இருந்தோமோ
2.அதனின் அடிப்படையிலேயே உயிர் அடுத்த உடலுக்குள் கொண்டு சேர்க்கும்.

அதாவது விஷத்தைக் கொட்டி உணவாக உட்கொள்ளும் பாம்பின் ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்றுவிடும் ஏனென்றால் அந்த விஷத்தைத் தான் தன் உடலாக அது மாற்றி வைத்திருக்கின்றது.

மனிதனாகப் பிறந்த பின் கொடூர வேதனைகளை அனுபவித்து அதில் வளர்த்துக் கொண்ட விஷம் எதிலே சென்று ஒடுங்கும்…?

இந்த விஷத்தையே உணவாக உட்கொள்ளும் பாம்பின் ஈர்ப்புக்குள் இந்த உயிரான்மா சென்று விஷத்தைத் தாங்கிக் கொள்ளும் உடலாகப் பெற்று அதிலிருந்து தான் மீண்டும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் மீண்டும் விளைகிறது.

1.மதுவை விரும்பிக் குடிப்பவர்களாக இருந்தாலும் சரி… அல்லது கவலையை மறக்க அதைக் குடித்தாலும் சரி
2.இறந்த பின் கடைசியில் அந்த நிலை தான்…!

இதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

நான் சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!

 

வலுவிழந்து வலு கூட்டிக்கொள்ளப் போகின்றது நம் பூமி என்று உணர்த்தினேன். எதன் அடிப்படைத் தன்மையில்…?

முந்தைய பாடத்தில் நம் பூமியின் ஓட்டமுடன் பூமிக்குகந்த அமில குணங்கள் கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்குகின்றன என்றும் உணர்த்தினேன்.

வலுவிழந்து வலுக்கூடும் நிலை என்பது
1.இன்றைய பூமியின் வலுவிழந்த இந்நிலை…
2.இப்பொழுது பூமியின் மாறு கொண்ட ஓட்டப் பாதையில் சந்திக்கும் நட்சத்திர மண்டலங்களில் சிதறல்களும்…
3.மாறு கொண்ட அமில குணத்தின் சேர்க்கையில் ஏற்படும் நிலையில் ஏற்படும் புதிய அமில வளர்ச்சிக் குணங்களின் அதிகரிப்பும்…
4.நம் பூமியின் ஈர்ப்பில் மோதுண்டு இன்றைய இயற்கைத் தன்மையின் நிலையே
5.மாறு கொண்டு செயல்படும் இன வழிப்பாதை நிலை நம் பூமிக்கு ஏற்பட்டுள்ளது.

வழக்கமான பாதை நிலையிலிருந்து மாறு கொண்டு சுழன்று ஓடும் தன்மையினால் அந்த இடங்களுக்குகந்த அமில குணங்களும் ஏற்கனவே நம் பூமி வளர்த்துக் கொண்ட நம் பூமியின் ஈர்ப்பலையின் காற்று மண்டல அமில குணத்துடன் புதிய அமில குணங்களின் ஈர்ப்பின் நிலை மோதுண்டு இது வெளிப்படுத்தும் அமிலமும் மோதுண்டு ஒன்றுக்கொன்று உராய்ந்து ஏற்கும் நிலை பெறுவதற்கு முன்… ஒளி அலையாகி அதற்குப் பின் தான் பூமியின் ஈர்ப்பலைக்கு… இப்பொழுது ஓடும் பாதையில் சந்திக்கும் “புதிய அமில குணம்” நம் பூமியின் ஈர்ப்பின் காற்று மண்டலத்துடன் கலக்கும் தன்மை பெறுகின்றது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்குள் உள்ள அமில குணத்தின் மாற்ற குணங்கள் மோதிடும் நிலையிலேயே மழை வரும் காலங்களில் இடியும் மின்னலும் ஏற்படுகின்றன.

சுழன்று ஓடும் இப்பெரிய நம் பூமியின் கோளத்தைக் காட்டிலும்…
1.நம் பூமி உறிஞ்சி வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் விகித வட்டம் பெரிதாக உள்ள தன்மையில்
2.இவ் ஓட்ட கதியில் ஏற்படும் அமில மோதலில் ஏற்படும் ஒளி வட்டம் தான் என்று பூமியைச் சுற்றியுள்ள ஒளி வட்டம்.
3.முந்தைய காலங்களைக் காட்டிலும் இன்றைய நிலையில் அவ்வொளிப் பிரகாசம் கூடுதலாகத் தெரிகின்றது.

நம் பூமிக்கு என்று ஏற்பட்டுள்ள இந்நிலையினால் அபரிமிதமான அமில சக்திகள் ஓடும் பாதையில் இருந்தும் நட்சத்திர மண்டலங்களின் வெடிப்பு நிலையில் இருந்தும் கூடிக்கொண்டு அதிகமாக பூமியின் சுவாச நிலைக்கு வருகிறது.

அப்படி வருவதினால் வலுவிழந்து வலு கூடும் தன்மை என்பது இக்கலி காலத்தில் மனிதனால் காற்று மண்டலத்தை நஞ்சாக்கி வலுவிழக்கச் செய்த நிலையை…
1.இம்மாற்ற ஓட்டத்தின் நிலையினால் ஏற்பட்டுள்ள மாறு கொண்ட அமில குணத்தை நம் பூமியின் அலையில் கலக்கச் செய்து
2.நம் பூமியின் பழக்கப்படுத்திக் கொண்ட நிலையிலிருந்து அதிகச் சுமை கலக்கப் பெற்று
3.அதை ஏற்கும் பக்குவத்தன்மையை நம் பூமியின் சுவாச நிலை ஏற்றுக் கொள்ளும் இயற்கை நிலை இல்லாததினால்
4.பூமியின் சுவாச நிலையை மனிதனுக்கு எப்படி அதிகமான உணர்ச்சி நிலை ஏற்படும் பொழுது இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறதோ
5.அதைப் போன்ற நிலையில் நம் பூமி உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் சிறுகச் சிறுக உள்ள இந்நிலை அதிகப்படும் தருணத்தில் பூமியின் சுவாச அலைகள் மாறு கொண்டவுடன்
1.இன்று மனிதனால் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளின் நிலைக்குகந்த பாதுகாப்பும் குறைந்து
2.முந்தைய பாடத்தில் உணர்த்தியுள்ளதைப் போல் இக்கலியின் மாற்ற நிலையை மனிதன் காணப் போகின்றான்.

சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!

காற்று மண்டலத்தின் ஈர்ப்புக்கு வந்துள்ள புதிய குண அமிலத்தின் வளர்ச்சியின் புதிய சக்திகள் உருவாகலாம். இயற்கையில் விஞ்ஞானத்திற்கும் செயற்கையின் வழி வாழ்க்கைக்கும் இன்றைய ஆராய்ச்சியில் இருந்தும்… பல உண்மைக் குண நிலைகளை எடுக்கலாம்.

ஆராய்ச்சிக்குப் புதிய வழித் தொடரில் சென்று பாருங்கள்… இதன் உண்மைக் குணம் புரியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் தன்மையைத் தன்னுள் கண்டுணர்ந்தார்.
1.இந்த மண்ணுலகை வென்று எப்படி விண்ணுலகிற்குச் செல்ல வேண்டும்…? என்று முழுமை பெற்றார்.
2.தான் முழுமை பெறுவதற்குண்டான பாதையைக் கற்றார்.
3.முழுமை பெறுவதற்குத் “தனக்குத் துணை” வேண்டுமென்று எண்ணினார்.

விண்ணுலகம் செல்ல வேண்டும் என்றால் உயிராத்மாவை விண்ணிற்கு உந்தி தள்ளத் தனக்குகந்த ஆதாரங்கள் தேவை.

1.விழுதுகள் இல்லாது எந்த மரமும் வளர்ந்திடாது.
2.ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார்.

தான் பெற்ற சக்திகளை “ஒவ்வொரு உயிரும் பெற வேண்டும்” என்ற நிலையினை அவர் தான் இங்கே செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் இந்த உணர்வலைகள் கொண்டு எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் நமது குரு காட்டிய வழியில் தியானித்து அதைச் செயல்படுத்துவோம்.

1.உங்களுக்கு நான் விழுது… எனக்கு நீங்கள் விழுது…! என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.
2.ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வளர முடியும். ஒன்றில்லாது ஒன்று விளையாது

அனைத்தையும் வெறுத்தேன்… நான் தனித்துச் சக்தி பெறுவேன் என்றால் அது சாத்தியம் இல்லை

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனும் தனக்குள் அனைத்தையும் இணைத்துத் தான் ஒளியாக்கினான். தனக்குள் அரவணைத்தான்… எதற்கும் தீங்கு செய்யாது அடக்கினான்.

ஆகவே தான் எதனையும் ஒளியாக மாற்றும் திறன் பெற்றான். அவன் பெற்ற அந்த உணர்வுகளைத் தியானத்தின் மூலம் நமக்குள் கவரப்படும்போது நிச்சயம் நாமும் அதைப் பெறலாம்.

துணுக்குத் துணுக்காகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். இதை இப்போது உங்களுக்குள் பதிவு செய்கிறேன். சந்தர்ப்பத்தில் நினைவாக்கித் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளையும்… அப்படி விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.

குருநாதர் எனக்கு எப்படி கற்றுக் கொடுத்தாரோ… பெறும்படி செய்தாரோ… அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்களும் பெற வேண்டும்… உங்களால் அதைப் பெற முடியும் என்ற முழு நம்பிக்கையில் சொல்கின்றேன்.

ஆகவே… உங்களுடைய நினைவுகள் கூர்மையாக இருத்தல் வேண்டும். யாம் உபதேசிப்பதை ஆழமாகப் பதிவு செய்தல் வேண்டும். பதிந்ததை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். அந்த நினைவின் ஆற்றல்… அதுவே உங்களை வளர்க்கும். அதாவது
1.முதலில் அதனை நீங்கள் எடுத்து வளர்க்க வேண்டும்
2.பின் அது உங்களை வளர்க்கும்
3.இந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிக்கும்
4.உங்களை அருள் வழியிலே என்றுமே அழைத்துச் செல்லும்.

ஐம்பெரும் பூதங்கள்

 

தாவர இனங்களுக்கு ஐந்தறிவு… ஒரு அணுவிற்கு ஐந்தறிவு. ஒரு அணுவிற்குள்
1.”வெப்பம்: ஆக்கும் சக்தி
2.”காந்தம்” அணைக்கும் சக்தி
3.அந்த அறிவு அது தன்னுடன் எதையுமே இணைத்துக் கொள்ளும் சக்தி வருகின்றது.

வெப்பம் எப்பொருளைப் போட்டாலும் அது படைக்கும் சக்தி. காந்தம் தனக்குள் பட்ட… அல்லது எந்த சக்தியை எடுத்துக் கொள்கிறதோ வெப்பத்துடன் இணைக்கப்படும் பொழுது அதனின் சக்தியாக இயக்கும்.

1.”விஷம்…” எந்த உணர்வின் சத்து இதனுடன் கலக்கின்றதோ அது இயக்கச் சக்தி என்ற நிலையும்
2.எந்த மணத்தை இது நுகர்ந்ததோ அந்த மணத்தின் சக்தியாக அறிந்திடும் நிலை “ஞானம்” (மணம்) சரஸ்வதி.
3.புலனறிவு நான்கானாலும் இவை அனைத்தும் கூட்டாகச் சேர்த்து “உணர்வு”
4.அது இயக்கச் சக்தியாக மாறி ஐந்து அறிவுடன் இயக்குகின்றது.
5.மணத்தால் அறிந்து கொள்கிறது… உணர்வால் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

ஆக ஓர் அணுவை எடுத்துக் கொண்டால் காயத்ரி இதனுடைய சுவை சீதா என்றும் அதனுடைய குணத்தை ஞானம் என்றும் பெயர் வைக்கிறார்கள் ஞானிகள்… அதனின் குணத்திற்கொப்ப எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொள்வதற்காக.
1.புலனறிவு ஐந்து என்றும் ஐந்து பூதங்கள் என்றும் வைக்கின்றார்கள்…
2.ஐந்து நிலைகள் அதைச் செய்யும்.

இதைத் தான் பேரண்டம் ஆகாசம் அது இது என்றெல்லாம் இவர்கள் சொல்கின்றார்களே தவிர அந்த ஆகாசம் எப்படி இதில் இயக்குகின்றது…? என்று தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

இப்படி ஒவ்வொரு சத்தையும் எடுத்துக் கொண்டு கொண்டால் அந்த ஐந்து புலனறிவு கொண்டது தான் உயிரினங்கள் அனைத்தும். எந்த இலையின் சத்தை ஒரு புழு எடுத்துக் கொண்டதோ அந்த மணத்தின் நிலைகள் கொண்டு தான் அந்த அறிவு கொண்டே அதை எடுத்துக் கொள்ளும்.

ஆனால் மாடு எந்தெந்தத் தாவர இனங்களைச் சாப்பிட்டதோ அந்த உணர்வின் சத்தைக் கொண்டு அதனுடைய ஞானம் தான் வரும்… ஐந்து புலனறிவு தான்.

ஒரு பூனை எந்தெந்த மாமிசத்தைச் சாப்பிட்டுப் பழகியதோ அந்த மாமிசத்தின் உணர்வு கொண்டு தான் அதனுடைய ஐந்து புலனறிவு… வேறு எதையும் அது நாடாது.

ஐந்து புலனறிவு கொண்ட மற்ற உயிரினங்களாக இருந்தாலும் மனிதன் உடலில் வரப்படும் பொழுது ஆறாவது அறிவாகின்றது இயற்கையில் விளைந்த நஞ்சினைப் பிரித்து விடுகின்றது
1.அதாவது நம் உடலில் வரக்கூடிய மணம் கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் நிலை பெறுகின்றது.
2.நஞ்சினை நீக்கிடும் உணர்வின் ஆற்றல் பெற்றது தான் இந்த ஆறாவது அறிவு.

இதைக் கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…?

பூமிக்கடியில் ஆழத்தில் இருக்கக்கூடிய பொருளையும் தோண்டி எடுக்கும் திறனைப் பெறுகின்றோம். அணுவைப் பிளந்து அதை அடக்கி ஆளவும் தெரிந்து கொள்கின்றோம்… அதை ஒளி சுடராக மாற்றவும் அதீத சக்தி கொண்டு அழித்திடவும் முடிகின்றது.

இது மனிதனின் ஆறாவது அறிவு நாம் எதையெல்லாம் செய்கின்றோமோ மாற்றி அமைக்கும் சக்தி அதுதான் முருகு. ஆறாவது அறிவு பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய வழியில் இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இங்கே உபதேசிப்பது.
1.ஒவ்வொரு முறை சொல்லும் போதும் ஒவ்வொரு விளக்கவுரையைக் கொடுத்து
2.உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம் (ஞானகுரு)

குருநாதர் முதலிலே இப்படித்தான் எனக்கும் சொல்வார். பின் ஒவ்வொன்றும் விளக்கவுரையாகக் கொடுத்து என்னைத் தெளிவாக்கிக் கொண்டு வருவார்.

எதையோ ஒன்றைச் சொல்வார். நான் அவர் சொன்ன இடத்திற்குப் போவேன். என்ன…? என்று எனக்கு அர்த்தம் தெரியாது. நான் அவர் சொன்னதைப் பார்த்துவிட்டு நான் திரும்ப வந்தவுடன்…
1.நீ பார்த்தது எல்லாம் என்ன…? என்ற நிலையில் கேள்விகளைக் கேட்பார்
2.அவர் கேட்டதற்குண்டான விடைகளைச் சொல்லத் தெரியவில்லை என்றால்
3.அதன் உணர்வுகளை நீ இவ்வாறு பார்…! இண்னென்னெ வழிகளிலே அது தெரியும்…! என்பார்.

இப்படித்தான் நான் கண்டுணர்ந்தது. குருநாதர் என்னைக் காட்டிற்குள் செல்லச் செய்ததும் இதற்குத் தான். ஆனால் நீங்கள் இங்கே அமர்ந்து இதைக் கேட்டுக் கொண்டுள்ளீர்கள்.

அருள் ஞான வித்தாக குருநாதர் எமக்குள் விளைவித்ததை உங்களுக்குள் பதிவு செய்யப்படும் போது இந்த உணர்வினைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் அதை நீங்கள் கவர முடியும்.
1.விண்ணுலக ஆற்றலை அறிய முடியும்.
2.அந்த அருள் ஞானிகள் பெற்றதை நீங்களும் பார்க்க முடியும்.

ஒரு வெளிச்சத்தைப் போட்டால் அங்கே இருக்கும் பொருள்கள் தெரிகிறது. இதைப் போல் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் கவரப்படும் போது உங்களை அறியாது வந்த இருளை மாய்க்க முடிகிறது…. “உங்களை நீங்கள் அறியும் ஆற்றல்கள் பெருகுகின்றது…” அதனின் உணர்வின் வலிமை கொண்டு இந்தக் காற்று மண்டலத்திற்குள் மறைந்துள்ள தீமைகளை அகற்றவும் முடியும்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சிகரமாக மாற்றிய அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து கவரும்படிச் செய்வதற்கு அந்த அருள் ஞான வித்தாக இந்த உபதேச வாயிலாகப் பதியச் செய்கிறேன்.

குருநாதர் எனக்குள் எவ்வாறு அந்த ஞான வித்தைப் பதிவு செய்தாரோ… அந்த அருள் ஞானிகளின் வித்தை விளைவித்தாரோ… அதை நினைவு கொண்டு வளர்க்கப்படும் போது அதை நான் காண முடிந்தது.

1.முதலில் வெறும் வித்தாக இருக்கும் போது புரியவில்லை
2.பின்னால் அவர் உபதேசித்த உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உருவாக்கப்பட்டு அதை நானும் காண முடிகின்றது.
3.கண்ட உணர்வுகளை எனக்குள்ளும் விளைவிக்க முடிகிறது.
4.அதைச் சொல்லாகச் சொல்லும் போது அந்தச் சொல்லின் தன்மை வினையாகிறது.
5.அதை நீங்கள் நுகர்ந்து வரப்படும் போது வினையாக உங்களுக்குள் பதிவாகிறது.
6.மீண்டும் அதை நீங்கள் நினைக்கப்படும் போது வினைக்கு நாயகனாகவும்
7.உங்களுக்குள் இருக்கும் இருளைப் போக்கிடும் நிலையாகவும் ஆற்றலும் பெருகுகிறது.

உதாரணமாக வைத்தீய ரீதியில் ஒரு மருந்தினைச் செய்தால் “அது இந்த நோயைப் போக்கும்” என்று எப்படிச் செய்கிறோமோ இதைப் போல் மெய்ப் பொருளை உணர்ந்த அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வலைகள் அலைகளாகப் படர்ந்திருப்பதை எம்மைக் கவரச் செய்தார் குருநாதர்.

அவருக்குள் அருள் ஞான வித்தாக விளைவித்தார். அதே வித்தினை எனக்குள் பதியச் செய்தார். அந்த மெய்ப் பொருளைக் குருநாதர் வழிகளில் காண முடிகிறது.

அதே போன்று குருநாதர் கொடுத்த அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள் பதியச் செய்யப்படும் போது உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்க முடியும்… என்றுமே ஒளியாக வாழ முடியும்.

சூரியனின் சக்தியை எடுத்துத் தான் தாவரங்கள் செழித்து வளர்கின்றது

 

ஜீவ ஜெந்துக்களுக்குத்தான் உண்டு கழிக்கும் குணமுண்டு. இயற்கைக்கு ஜீவன்களைப்போல் உண்டு கழிக்கும் தன்மையில்லை.
1.எல்லாத் தாவரங்களுமே அதற்குகந்த வளர்ச்சிக்கு வேண்டிய சத்தை மட்டும் சூரியனிலிருந்து நேராக எடுத்து வாழ்கின்றன
2.ஆனால் தாவரங்கள் பிறகுதான் ஜீவசக்தி பெறுகின்றன.

எல்லா மண்டலங்களின் சுழற்சியின் கூட்டுடன் சூரியனின் ஒளி அலையை அமிலத் தன்மையைப் பெறும் ஆரம்ப உயிரணு திடமாய் இப்பூமியின் ஈர்ப்பில் படர்ந்து தாவரமாய் வேர் ஊன்றி அதன் தன்மை மாறுபட்டு ஆவியாய் அமிலம் பெற்று மீண்டும் மீண்டும் அதன் வளர்ச்சி நிலை சுழற்சியில் ஏற்படும் உயிரணுக்கள் அதன் சக்தியைக் கொண்டு பூமியின் ஈர்ப்பிற்குச் செல்ல முடியாமல் மற்ற ஜீவனின் கர்ப்ப நிலையில் உண்டு கழிக்கும் வளர்ச்சிக்குகந்த ஜீவிதத்திற்குத்தான் வருகிறது.

இடியிலும் மின்னலிலும் ஏற்படும் அதிர்வினால் பூமியின் ஈர்ப்புத் தன்மையில் வான மண்டலத்திலுள்ள அமில குணங்கள் படர்ந்து காளானாய் புல் பூண்டாய் இன்னும் எப்பலனும் தராத பல தாவர வர்க்கங்களாய் வளர்கிறது.

அதற்குப் பிறகு அதன் நிலை
1.மாறு கொண்ட அமில குணங்களினால் வளரும் தாவரத்தில் இருந்து புஷ்பம் தரவல்ல நிலை பெற்று
2.அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தின் நிலை மீண்டும் வளர்ச்சியுற்றுப் பல பலன் தரத்தக்கக் கனி மரங்களாகின்றன.

பல தாவரங்கள் எப்பலனும் தராத நிலையில் இவற்றின் வளர்ச்சியினால் எப்பலன் நாம் பெறுகின்றோம் என்று எண்ணுகின்றோம். ஒன்றிலிருந்து ஒன்றாகத் தான் வளர்ச்சி நிலை கூடி ஜீவஜெந்து வந்து… மீண்டும் தாவரங்களின் நிலையிலிருந்தே நம் ஜீவனுக்கு உணவாகவும் எடுத்துக் கொள்கின்றோம்.

காளானாய் புல்லாகி, பூண்டாகி, பூவாகி, கனியாகி ஜீவன் பெற்ற நாம் மீண்டும் நம் ஜீவனுக்கு அதையே உணவாக உண்டு கழித்து… அக்கழிவினால் பல வித இன வர்க்கங்கள் புழுவாய், வண்டுகளாய், கொசுக்களாய் வளர்கிறது.

இவற்றின் தொடர் வட்ட வளர்ச்சியில் மாற்ற குணங்கள் பல ஏற்பட்டு ஏற்பட்டு… ஒன்றிலிருந்து ஒன்றாகி இச்சுழற்சி வட்டத்தில் எண்ணிலடங்கா சக்தியுடன் வாழும் நாம்… நமக்கு இச்சக்தியை அளித்துள்ள சூரியனின் ஒளி அலையை நம் சுவாசத்துடன் எடுக்கும் எண்ணம் கொண்டு ஈர்த்து வாழும் வழி பெற்றால் நம் சக்தியின் நிலை‌ கூடும்.

இல்லங்களில் இருந்து கொண்டும் தன்னிச்சையில் வாழும் பொழுதும் சூரியனின் ஒளி அலை ஒன்றின் மேல் பட்டு அது வெளிப்படுத்தும் எதிரலையில் வாழும் நாம்… எல்லாமில் எல்லாமுமாக வளர்க்கும் சூரியனின் ஒளி அலையை நாம் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசத்தில் ஈர்த்து “நல் சக்தியை நமதாகப் பெறும் சக்தியை எடுக்கலாம்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞானம் எப்படி வளர்ந்தது… ஆனால் ஆதியிலே மெய் ஞானம் எப்படி வந்தது…?

ஒரு எருக்கண் செடி இருக்கிறது என்றால் இரவில் அல்லது இருட்டிலே பார்த்தோம் என்றால் அதில் இருக்கக்கூடிய தோடுகள் பளீர்.. பளீர்… என்று மின்னும்.

அப்படி மின்னுவதைப் பார்க்கும் போது நான் பேயைப் பார்த்தேன்…! என்று ஒருவன் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனிலே அதைப் பதிவு செய்கின்றான்… அடுத்தவனுக்கும் இதைச் சொல்கிறான்.

அது இன்ன உருவமாகக் காட்சி தெரிந்தது என்றால் அங்கே போன பின் இவன் காண்பித்த அந்தக் கற்பனை இவன் உடலிலே உருவாக்கப்பட்டு
1.அந்த எருக்கண் செடி மின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே
2.இங்கே பேய் இருக்கிறது பார்… ஆடுகிறது பார்…! என்று இவனுக்கு அவன் சொன்ன ரூபமே தெரியும்.

அவனுக்குள் பதிவு செய்த உணர்வுகள் இவன் பார்க்கப்படும் பொழுது அவன் பார்த்தது எருக்கண் செடி… ஆனால் இவனுக்குள் கற்பனை செய்து கொண்டது இந்த நிலை.

அதைப் பார்க்கப்படும் போது அதை இவன் சொல்லி அஞ்சி வருகின்றான். இயக்கினாலும் வேறு பக்கம் சென்று விடுகின்றான். ஆனால் அஞ்சிய உணர்வு இவனுக்குள் வளர்த்ததைத் தன் நண்பனுக்கும் சொல்கின்றான்.

அந்த நண்பனும் அந்தப் பக்கம் செல்லும் பொழுது “அவன் சொன்னது உண்மை…” என்று அந்த உணர்வுகள் அவனுக்குள் பதிந்தது… இயக்கத் தொடங்குகிறது.

இதைப் போன்றுதான்…
1.எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அங்கே பதிவாகின்றது
2.அந்த உணர்வின் தன்மை இவனுக்குள் ரூபமாகச் சிருஷ்டிக்கின்றது.

“கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” என்றால் நாம் எண்ணும் எண்ணங்கள் அந்தப் பயத்தின் உணர்வுகள் எண்ணும் பொழுது அதே பயத்தை உருவாக்குகிறது.
1.அதுவாக அவன் மாறுகின்றான்
2.பயத்தின் நிலைகளையே அடைகின்றான்.

அன்று அகஸ்தியன் தனது நிலைகளில் அணுவின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கினாலும் துருவப் பகுதியிலிருந்து புவிக்குள் வரும் உண்மையின் நிலைகளை அறிகின்றான்.

ஏனென்றால் தாயின் கருவிலே இருக்கப்படும் பொழுது “உண்மை எது…?” என்று அறியப்படும் பொழுது அதை அறிய வேண்டுமென்ற நிலையில் பிறந்த பின் விண்ணுலக ஆற்றலை அறிகின்றான்.

ஆனால் நாம் சாதாரணமாக இந்தப் பயத்தின் நிலைகள் வரும் போது இப்படி எண்ணுகின்றோம்.

விஞ்ஞானிகள் அவர்கள் கணக்கின் பிரகாரம் ஆரம்பத்தில் பூமி “தட்டை” என்று தான் சொன்னார்கள். இதுதான் உண்மை என்று அக்காலத்தில் உள்ளோர் ஏற்றுக் கொண்டார்கள்… மறுப்பு கொடுக்கும் பொழுது பின்னாடி வந்தவர்களைப் பைத்தியம் என்றார்கள்

அடுத்து “உருண்டை வடிவம்” என்று சொன்னார்கள் அதற்குப் பின் வந்தவர்கள் “முட்டை வடிவம்” என்று சொன்னார்கள். அவனின் கணக்கின் பிரகாரம் இவன் பதிவு செய்து இவன் கணக்கிற்குள் கொண்டு செல்கின்றான்.

ஆனால் இதே ஆராய்ச்சியில் இருக்கப்படும் போது ஒவ்வொன்றாகத் தெளிவாக்கி அந்த உணர்வின் தன்மையை அவன் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது
1.பூமியின் இயற்கையின் உண்மைகளை இவன் அறியும் தன்மை வருகின்றது
2.அந்த நுண்ணிய அலைகளின் தன்மை கொண்டு விஞ்ஞான அறிவே வளர்கிறது.
3.இப்படித் தான் விஞ்ஞான அறிவு வளர்ந்தது.

மெய் ஞானியான அகஸ்தியனின் நிலைகளோ இளமைப் பருவத்திலே வளர்ந்து அந்த மெய் உணர்வினைக் காணும் நிலைகள் வருகிறது.

ஆனால் தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்குள் எப்படி இயக்க வேண்டும்…? என்ற விஞ்ஞான அறிவைக் காணுகின்றான். மெய் ஞானியோ அவன் மெய் ஞான அறிவினைக் கொண்டு செல்கிறான்.

ஆகவே மெய்யின் உணர்வின் நிலைகள்
1.எப்படி அணுவாக உருவானது…
2.கோளாக எப்படி ஆனது…? நட்சத்திரமாக எப்படி ஆனது…? சூரியனாக எப்படி ஆனது…? என்று
3.மெய் உணர்வின் ஆற்றலைக் கண்டான் அகஸ்தியன்.

சூரியன் ஆன பின் அதன் உணர்வின் இயக்கத்தில் அணுக்களின் தன்மை மற்ற பாறைகளிலும் கற்களிலும் தாவர இனங்களையும் உருவாக்க உதவியது.

ஆனால் இதற்குள் மோதுண்டு வரப்படும் பொழுது உயிரணுக்கள் எப்படித் தோன்றுகின்றது…? என்ற நிலையை அன்று அகஸ்தியன் காண்கின்றான்.

அவன் உணர்வை நாம் பெற்றால் படைக்கும் சக்தி கொண்ட மெய் ஞானியாக நாம் உருவாக முடியும்.

ஓ..ம் நமச்சிவாய என்றால் அபாயம் ஒன்றுமில்லை என்று ஏன் சொன்னார்கள்…?

 

மனித உணர்வில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ மகரிஷியாக விண் சென்ற அவனை நாம் அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பூமியில் வாழும் பொழுது
1.அவன் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த உணர்வின் சக்தி
2.எனக்குள் ஜீவன் பெற்று நாமும் ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.
3.இது தான் ஓம் நமச்சிவாய

ஆனால் அவனின் நினைவலைகளை யாரும் நமக்குச் சொல்லவில்லை. இதை “ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று சொன்னால் உனக்கு அபாயம் ஒன்றும் இல்லை…” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
1.எதைச் சிவமாக்க வேண்டும் என்று அன்று ஞானிகள் சொன்னார்கள்.
2.அதை யாரும் நாம் பெறவில்லை.

தவ யோகிகளும் கொடுத்திருப்பார்கள் சினிமாப் படங்களிலும் கொடுத்திருப்பார்கள் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய. அவன் எதைத் தனதாக… சிவமாக… ஆக்க வேண்டும் என்று சொன்னான்…? என்று யாராவது எண்ணுகின்றார்களா…! என்றால் இல்லை.

சிவனின் அருளைப் பெறப் போகின்றேன் என்றால் அந்தச் சிவன் யார்…? நம் உடல் தான் சிவம்.
1.நாம் எண்ணியதை எல்லாம் உயிர் ஜீவனாக்கிச் சிவமாக மாற்றுகின்றது என்ற நிலையை
2.இந்த உண்மையைக் கண்டு சொல்லி இருந்தாலும் அதை நாம் உணரவே இல்லை
3.யாரும் உணர்த்தவும் இல்லை உணரும்படிச் செய்யவும் இல்லை.

காவியமாகப் படைத்து விட்டார்கள் நாடக மேடையில் வேஷம் போட்ட மாதிரி நம்மை அலைய விட்டு விட்டார்கள்.

உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து மனிதனாக நாம் பரிணாம வளர்ச்சியில் எப்படி வளர்ந்தோம்…? என்று அந்த ஞானிகள் சொன்ன இயற்கையின் உண்மையினை நாம் அறிதல் வேண்டும்.

ஓர் புழு ஒரு உணர்வைச் சுவாசித்தால் ஓ…ம். எந்தச் சத்தை சுவாசித்ததோ அந்த உணர்வின் சத்து அதன் உடலாக மாறுகின்றது ஓம் நமச்சிவாய.

ஆதியிலே ஓர் உயிர் அது தோன்றிய நிலையில் உயிருக்குள் துடிப்பின் இயக்கம் இருந்தால் தன் அருகில் இருக்கக்கூடிய செடியின் சத்தை இந்த உயிருக்குள் துடிப்பின் ஈர்ப்பான காந்தம் இழுத்து அந்த உயிருடன் இணைக்கச் செய்யும்போது ஓ… ம்… ஓம்…! என்கிற பொழுது ம் என்பது பிரம்மம்.

1.சுவாசித்த உணர்வுகள் அதற்குள் ஜீவனாகி அது உடலாகின்றது
2.இந்த உயிரான ஒளி இயக்கப்படும் பொழுது மின்னுகின்றது
3.ஆனால் இழுத்து அந்தச் சத்தான நிலைகள் இதனுடன் இணைக்கப்படும் பொழுது
4.ஒளி மறைக்கப்பட்டு உடலாகின்றது… சிவமாக மாறுகின்றது.

அந்த நந்நாளைத் தான் நாம் சிவன் இராத்திரி என்று சொன்னார்கள். உயிர் முதன் முதலில் தாவர இன சத்தை நுகர்ந்து அது உடலாகி உடலுக்குள் ஒளியின் சிகரமாக இருக்கின்றது.

எந்தத் தாவர இன சத்தை இந்த உயிர் இணைத்து உடல் ஆனதோ அந்த மணம் தான் வினை – விநாயகா. விநாயகன் பிரணவத்திற்கு உரியவன் என்றும் சொல்வார்கள்.

எந்த மணத்தை நாம் சுவாசிக்கிறோமோ அது எனக்குள் பிரணவமாகி இயங்கி ஜீவனாகின்றது. உயிர் இருக்கும் பொழுது தான் எண்ணியது அனைத்தையும் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது… சதா சிவமாக ஆக்கிக் கொண்டே உள்ளது.

1.ஆகவே… அருள் ஞானிகளின் உணர்வை நாம் சதா சிவமாக உடலாக ஆக்கிக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான்
2.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று தெளிவாக ஞானிகள் நமக்கு உணர்த்திச் சென்றார்கள்.

“தன் பலம்” காணுங்கள்

 

1.தன் சக்தி நிலை கூடக்கூட ஆத்ம பலம் வலுவேறி
2.தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றித் தன் பலம் என்னும் உண்மை பலத்தை
3.இம் மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெற வேண்டும்.

தன் பலம் பெறத்தக்க வழிமுறைகளைப் பல உணர்த்தியுள்ளோம். மண் மணலாகி… மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி… பாறையாகி… மலையாகி வாழவில்லையா…?

ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக்கூடி வலுப்பெற்று வளர்ந்து கொண்டேதான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் “எல்லாவற்றின் ஐக்கியமும்…” அறிவாற்றல் கொண்டுள்ள மனிதன்
1.தன் ஞானத்தை இவ்வழித்தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற
2.மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி நிலை வளரப் பெறுகிறது.

உயிரணுவாய் உயிராத்மாவாய் இச்சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம்… ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது இயற்கையின் உயர் சக்தி மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி அவ்வுயிராத்மாவை வளர்க்கக் கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால்… இம் மனிதனின் உண்மையின் “உயர்ந்த பலம் கூடி” உயர் நிலை பெறலாம்.

காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கும் செயலைப்போல்… மனிதனாய் வாழும் நாமும் நம் எண்ணத்தை இவ் இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது… இவ்வெண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால் நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப… அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து நம் உயிராத்மா பலம் கொள்கின்றது.

இக்காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை எடுக்கின்றார்கள்.
1.இவ்வுலகினில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அம்மின் அலை இருந்தால்தான் செயல் கொள்ள முடியும்.

நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.

இப்பூமி பல மண்டலங்களில் இருந்து வரும் ஒளி அலைகளையும் அம் மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கின்றது என்றால் “காந்த அலையின் ஈர்ப்பினால்” ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகிறது.

நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இவ்வுலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும்… ஒவ்வொரு உயிரணுவுமும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் “காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்துதான்” எல்லாமே செயல் கொள்கின்றன.

மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர். இவ்வுடலும் மற்ற எல்லாமுமே மின் அலையின் கூட்டுத்தான்.

மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்மக்கூட்டை இவ்வுடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துதோடு இல்லாமல்… பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சிகளுக்கெல்லாம்… நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.

பல கோடி கோடி உயிரணுக்களின் துணை கொண்டு உயிர் வாழும் நாம் இவ்வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கையை வாழ்ந்து… இம்மனிதனாய் வாழ்ந்த… வாழக்கூடிய செயல் பெற்ற நாம்…
1.இவ்வெண்ணச் சுழற்சியை “எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்…”
2.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலினால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.
3.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதினால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.
4.பயன் கண்டு இச்சுழற்சி வாழ்க்கையில் வாழ்ந்து மட்டும் எப்பயனை எவ்வாத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆத்மா) கண்டது…?

ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை (அடைய) உணர பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.

தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால்… அப்பரம்பொருளின் சக்தி அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று… நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தை நாம் சேமிக்கலாம்.

நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து…
1.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
2.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறை கூட்டி
3.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
4.அதிலிருந்து ஒதுங்கிச் சலிப்புற்றும் வாழாமல்
5.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
6.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத்தொடரில் ஐக்கியம் கொண்டே வாழக்கூடிய பக்குவம் நாம் பெறுவது தான்
7.நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை.

நாக சர்ப்பம் விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாய் இருப்பதினால் அதன் எண்ண நிலை எதன் நிலைக்கும் மாறு கொள்வதில்லை. விஷ ஜெந்துவாய் நாம் காண்கின்றோம். “அவ்விஷத்தையே உரமாக்கி வைரமாக்கி… மாணிக்கமாய் சேமித்து வளர்த்து… ஒரு நிலையில் வாழ்கின்றது‌ அந்நாக சர்ப்பம்…”

பல நினைவலைகள் பலவும் உள்ளவன் தான் மனிதன்.
1.பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைத் தான் பெறல் வேண்டும்
2.பெற்று “தன் பலம் காணுங்கள்” என்று உணர்த்துகின்றோம்.

இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் குண வட்டத்தில்தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்ந்து வாழுகின்றன. ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ் ஜீவ ஜெந்துக்களின் நிலையில்தான் பல மாற்ற குணங்கள் உண்டு.

1.தன் நிலை உணர்ந்து மனிதன் வாழ்ந்தால் உலக ஞானத்தையும்
2.மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும் அப்பரம்பொருளின் உண்மையையும் உணர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கை என்ற குறியைத் தான் வைக்கின்றோமே தவிர சந்தர்ப்பத்தில் நம்மைத் தாக்கும் உணர்வுகளை மறந்துவிட்டோம்.

நாம் ரோட்டில் செல்லும்போது ரோட்டின் அந்தப் பக்கம் தெரியும் ஒரு நல்ல பொருளின் மீது ஆசைப்படுகின்றோம். எடுக்க வேண்டுமென்ற ஆசை தூண்டப்படுகின்றது. ஆனால் இடையிலே வரும் நிலைகளை… அறிய வேண்டும் என்ற சிந்தனையை மறைத்து விடுகின்றது.

1.நினைவை நாம் அங்கே செலுத்தி அந்தப் பொருளை எடுக்கத் தாவப்படும் பொழுது
2.குறுக்கே வரும் வாகனத்தைப் பற்றிச் சிந்திக்காமல் திரும்பிப் பார்க்காதபடி எடுக்கச் சென்றால்
3.வாகனம் மோதி விட்டால் என்ன ஆகும்…? பொருளைப் பெற முடியாது.

ஆசையின் உணர்வுதான் வருகிறது. இந்த உணர்வினை அறியப்படும் பொழுது “கிடைக்கவில்லை…” என்கிற போது அந்த உணர்வினை வளர்த்து விட்டால்… மடிந்து விட்டால்… அதே உணர்வுடன் தான் அந்த ஆன்மா அங்கே சுழன்று கொண்டிருக்கும்.

இதே ஆசை கொண்ட மனிதர்கள் அங்கே நடமாடும் போது அவருக்குள் இந்த ஆன்மா புகுந்து… தன் ஆசையைத் தூண்டி “அதைப் பெற வேண்டும்… இதைப் பெற வேண்டும்…” என்ற உணர்ச்சிகளையே தான் தூண்டும்.

இப்படிப் பல மனிதர்கள் இருப்பதையும் இன்று காணலாம். ஆனால் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த வலிமையைத் தனக்குள் எடுத்து
2.அதே ஆசை கொண்ட மனிதர்களிடம் விளைந்த உணர்வுகள் காற்றிலே இருக்கிறது.
3.அதன் வழிகளிலே நம்மை அழைத்துச் செல்கின்றது.

இத்தகைய தீமைகளிலிருந்து மனிதன் விடுபடுதல் வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீவினைகளை நீங்கள் நிறுத்துதல் வேண்டும். அது தான் விநாயகர் சதுர்த்தி.

உங்கள் உடலுக்குள் ஊடுருவிய தீமை என்ற நிலைகளை நிறுத்துவதற்குக் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானியின் உணர்வை அருள் ஞான வித்தாக ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்களுக்கு முன் காற்றில் இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை நுகர்ந்து தீமைகளை அகற்றும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

என்றென்றும் அதன் வழிகளிலே மெய்ப் பொருளாக இருக்கும் உயிருடன் ஒன்றி நீங்கள் வாழ முடியும்.
1.மெய் என்பது உயிர்… எல்லாவற்றையும் அந்த உண்மையின் உணர்வை நமக்கு அறிவிப்பது மெய் உயிர்.
2.உயிருடன் ஒன்றி எல்லாவற்றையும் மெய்யாக மாற்றும் ஆற்றல் பெற முடியும்.

குருநாதர் எனக்கு இதையெல்லாம் காட்டினார். காட்சிகளாகவும் காண்பித்தார். அதைத் தெளிவாகத் தெரிய முடிந்தது… அதை நுகரவும் முடிந்தது.

எனக்குள் பதிவான அந்த உணர்வின் தன்மையை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது… கடந்த கால நிலைகளை நினைவுபடுத்தி எண்ணங்களாக (உபதேசமாக) வெளி வரப்படும் பொழுது… அந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கப்படும் பொழுது
1.இதே எண்ணம் உங்களைத் தீமைகளிலிருந்து அகற்றச் செய்யும்
2.மெய்ப் பொருள் காணும் நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

உங்களுக்கு யாம் அடிக்கடி உபதேசிப்பதன் உள் கருத்து

 

எமது குருநாதர் எமக்கு உபதேசித்தது போன்று
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் நினைவு கூறச் செய்து
2.நீங்கள் கேட்டுணரும் பொழுது மெய் ஞானிகள் கண்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கே உபதேசிப்பது.
3.பதிவு செய்த எண்ணத்தை ஓங்கி வளர்த்து
4.தியானத்தின் மூலம் காற்றுக்குள் மறைந்துள்ள மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாம் கவரப் பழகுதல் வேண்டும்.

ஆலயத்தில் ஒரு தேரை பல ஆயிரம் பேர் சேர்ந்து வடம் பிடித்து எப்படி இழுக்கின்றோமோ இதைப் போல மகா ஞானிகளுடைய உணர்வுகளைப் பலரும் சேர்ந்து கவர்தல் வேண்டும். ஏனென்றால் அது மிக மிக சக்தி வாய்ந்தது.
1.அதனைக் கவர்ந்து ஈர்ப்பதற்கே இப்படி உபதேசித்து
2.உங்கள் நினைவினை விண்ணை நோக்கி செலுத்தும்படிச் செய்வது.

அந்த மகரிஷியின் அருள் சக்திகளை அதன் மூலம் நீங்கள் பெற்று அதை தியானிக்கும் போது அதை நுகர முடியும்

மகரிஷிகள் அனைவருமே பிறவிக் கடனை அறுத்துச் சென்றவர்கள் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது விண் சென்றவர்கள்
1.அவர்கள் உடலில் விளைய வைத்த அந்த உணர்வை சாதாரண மனிதன் எண்ணத்தால் நெருங்க முடியாது.
2.அவர்கள் ஒத்த உணர்வை உங்களுக்குள் செலுத்தி
3.உங்கள் எண்ணங்களை வலு கூட்டச் செய்து
4.நினைவை விண்ணை நோக்கி ஏகும்படிச் செய்து
5.அந்த ஆற்றலைப் பருகும் நிலைக்கு உற்சாகத்தைத் தூண்டி
6.அந்த உணர்வின் நினைவாற்றலை ஏற்படுத்திய பின் தியானத்தில் நாம் இருப்போமேயானால்
7.அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் வலுப்பெறுகின்றது.

இதனின் துணை கொண்டு எப்பொழுது நீங்கள் எண்ணினாலும் “மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா” என்று எண்ணினால் அந்தத் திறனை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அந்தத் திறன் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம். ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெருக்கி
1.அதன் வழித்தொடர் கொண்டு இந்த வலுவினைச் செருகேற்றிய பின் விண்ணுலக ஆற்றலை எளிதில் பெற முடியும்.
2.எந்த மெய் வழி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி வந்தீர்களோ அவை அனைத்தும் உங்களுக்குள் ஓங்கி வளரும்.

நோய் வராது தடுக்கவும் முடியும்.

உங்கள் நினைவுகள் எல்லாம் இப்போது கூர்மையாக விண்ணை நோக்கிச் செல்லுகின்றது. அதனின் வலுக் கொண்டு உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் இன்னொரு உடல் பெறாதபடி “இந்த உடலிலேயே ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்…”

மகரிஷிகள் கண்ட வழியில் நீங்களும் சென்றடைந்து உங்கள் மூச்சும் பேச்சும்… கூட்டுத் தியானத்தால் வெளிப்படுத்தும் அலைகள் பிறருடைய உணர்வுகளை நல்ல உணர்வுகளாகப் படரச் செய்து… மெய் ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அதன் மூலம் நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாகப் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது”

 

இக்கலியில் பூமியின் நிலையையே நிலை தடுமாற வைப்பவனும் இம் மனிதன்தான். இப்பூமி நிலைக்க கல்கி யுகம் காணச் செயல்படுத்தப் போகிறவனும் இம்மனிதன் தான்.
1.மனிதன் மனித ஞானம் பெற்றால்
2.மனிதனால் மனித ஆத்மாக்களை உயர்ந்த நிலையில் நிறுத்த முடியும்.

இன்று நம் பூமியில் மனிதக் கரு வளர நம் பூமி மனித ஆத்மாக்களை வளர்க்கும் தன்மை கொள்ள “வியாழனிலிருந்து மீண்ட மனித ஆத்மாக்கள் இருந்ததினால் தான்” மீண்டும் நம் பூமி வளர்ந்த பிறகு நம் பூமியில் மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய கருவே வளர்ந்தது.

பல சப்தரிஷிகளும் அவர்களின் வழித்தொடர் பெற்ற பல நிலை கொண்டவர்கள் இருந்தாலும்… இப்பூமியில் வாழ்ந்த மனித ஆத்மாக்களின் சக்தி நிலை உயர்ந்து தன் ஞானம் பெறும் ஆத்மாக்கள் வளர்ந்து… இப்பூமியின் மாற்றக் காலத்தில் இம்மனித வாழ்க்கையில் கொண்டுள்ள ஆசாபாசங்களிலும் நித்தியக் கடன்களிலும் மூழ்கியே… இக்கலியின் மாற்றத்தில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் கலி மாறும் தருணத்திலும்… அதே சுழற்சி ஓட்டத்திலிருந்து… தான் இதிலிருந்து மீள முடியாமல் மீண்டும் அறிவு ஞானம் கொள்ளும் மனிதக் கரு வளர்ந்து… அக்கருவின் செயலில் இருந்து தான் மனித உருவங்களே… இச் சூரியனைச் சுற்றியுள்ள “48 மண்டலங்களின் வளர்ச்சியில் மனித ஆத்மாக்கள் வாழும் நிலை பெறும்…”

நம் சூரியனின் சுழற்சியில் பல மண்டலங்கள் ஓடினாலும் நம் பூமியின் நிலைக்கொப்ப மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய இச்சக்தி மண்டலத்தின் கலி மாறி கல்கி யுகம் பெற்று நம் பூமி சுழலும் தருணத்தில்
1.இன்றைய நிலையில் வாழும் ஆத்மாக்களின் பல கோடி எண்ணங்களை மாற்றிச் செயல் புரிய
2.பல சக்தி நிலைகள் செயல் கொண்டு செயலாற்றித்தான் கல்கி யுகம் வாழ முடியும்.

இவ்வுலக மாற்றத்தினால் இவ்வுலகில் உள்ள மனித ஆத்மாக்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் உயிரணுவும் உயிராத்மாவும் சப்த அலைகளும் சகல எண்ணத்தில் விட்ட சுவாச அலைகளும் பூமியின் சுழற்சியில் சுழன்றுள்ள நிலையில் மீண்டும் கலி பிறந்தால் இவ் எண்ண வளர்ச்சி எங்கு செல்லும்…?

இப்பூமியின் காற்று மண்டலத்தில் கலந்துள்ள இந்நிலைகள் எல்லாமே அடுத்த நிலைக்கு வர ஏதுவாகின்றதா? என்ற வினா எழும்பலாம். இதன் நிலையில் இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் சில நிலைகள் ஏற்படலாம், எந்நிலை கொண்டு…?

இப்பூமியின் மாற்றத்தினால் இப்பூமியில் இன்று வாழும் மனித ஆத்மாக்களும் பல கோடி ஜீவஜெந்துக்கள் தாவரங்கள் இன்று பூமியில் வளர்ந்துள்ள கனி வளங்கள் நீர் நிலைகள் மனித உடலை விட்டுப் பிரிந்து வாழும் அனைத்து உயிராத்மாக்கள் உயிரணுக்கள் இது நாள் வரை நம் பூமியின் காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள சப்த அலைகள் அனைத்து நிலைகளுமே இப்பூமியின் மாற்றம் நிகழும் தருவாயில் பல நிலைகள் மாறி கலியில் இன்றளவும் வளர்ந்து விட்ட நிலையில் மாற்றம் காணப் போகின்றோம்.

பல கோடி ஆண்டுகளாய் மாறாமல் சுழன்றுள்ள பலரின் சுவாச அலைகள் எல்லாம் இன்று நாம் எடுக்க முடியும்.
1.இராமாயண காலத்திலும் கிருஷ்ணாவதார காலத்திலும் மச்சாவதார காலத்திலும் மனித ஆத்மாக்கள் விட்ட சப்த அலையை
2.இக்காற்றிலிருந்து அதன் சுழற்சி வட்டத்தில் ஞானம் பெற்றோரினால் ஈர்த்து எடுக்க முடியும்.

ஆனால் இக்கலியின் மாற்றத்தினால் இந்நிலையும் மாறப் போகின்றது. எந்நிலையில்…?

இன்று இக்காற்று மண்டலத்தில் வாழ்ந்தவரின் சப்த அலைகள் அனைத்துமே உள்ளனவா…? என்ற வினா எழும்பலாம்.

இராமாயண காலத்தில் உள்ள நிலைகளைக் காவியமாய்ப் படைத்து இன்றளவும் அந்த இராமாயண கதை மனித ஆத்மாக்களிடம் கலந்துள்ள நிலையில் இச்சப்த அலையின் ஈர்ப்பும் அதன் நினைவு சக்தி சுழன்று உள்ள ஜீவ ஆத்மாக்கள் உள்ளவரை எச் சப்த அலையும் மாறாது.

பல கோடி ஆண்டுகளானாலும் அதன் தொடர் வட்டத்தில் செயல்படும் சப்த அலையின் நிலை சக்தி மாறாது.

இக்கலியில் மாறுகிறது என்றால் இவ்வுலக மாற்றத்தில் ஏற்படும் அதிர்வினால்
1.சில ஒளி அலைகள் நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல்
2.அனைத்திற்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் கலந்து விடும் நிலை பெறுகின்றது.
3.இன்னும் பல சப்த அலைகள் இப்பூமியின் ஈர்ப்பில் இவ்வதிர்வினால் மோதுண்டு இப்பூமியுடன் கலக்கும் நிலை பெறுகின்றது.
4.பல பல மாற்ற நிலைகள் இக்கலி மாறிக் கல்கியில் காணப் போகின்றீர்கள்.
5.இவ் ஈஸ்வரப்பட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்.
6.மனித ஆத்மாக்களின் எண்ண நிலை இன்னும் தடுமாற்றம் கொள்ளப் போகின்றது.

இன்று உலகின் பல திரையறியச் செயல்படும் கருவிகளும் இக்காற்றிலிருந்து ஈர்த்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒலி அலைகளைப் பரப்பி வாழும் நிலையில்…
1.மனிதனால் செயற்கைக் கோள்களை ஏவி விட்டு அதிலிருந்து உணரும் ஒளி அலைகளும் ஒலி அலைகளும்
2.இவர்கள் இன்று செயலாற்றும் முறைப்படி செயலாகாது.

இயந்திரத்தைத் துணைகொண்டு காற்று மண்டலத்தில் இவர்கள் இன்று பிரித்து எடுக்கும் நிலையெல்லாம் செயல்படுத்தும் முறையில் இன்றுள்ள நிலைக்கொப்ப செயலாக்க முடியாமல் அதற்காக இன்னும் பல புதிய சாதன முறைகளை மனிதன் உருவாக்கப் பார்ப்பான்.

இக்காற்று மண்டலத்தின் விஷத்தன்மைகள் கூடி ஆவி உலகில் வாழும் ஆத்மாக்களின் வெறி உணர்வும் அதிகப்பட்டு… எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது…”

மனித ஆத்மாக்களே…! உங்களை நீங்கள் உணர்ந்து
1.என்றிருந்தாலும் மடியத்தான் போகின்றீர்கள் என்று எண்ணம் கொள்ளாமல்
2.மனித ஆத்மாக்களால்தான் நிகழப் போகும் சக்தியை மனிதன் உணர்ந்து செயல்படப் பல நிலைகளைப் போதிக்கின்றோம்.
3.மனிதனாய் அறிவு கொண்டு அன்பு பட்டு ஞானம் பெற்றிட வாருங்கள்.
4.இம்மனித ஆத்மாவிற்குத்தான் அறிவாற்றலை வளர்க்கும் ஆற்றல் உண்டு.

அறிவு நிலை கொண்ட மிருகங்கள் வாழ்ந்தாலும் மனிதனை ஒத்த ஞான சக்தி பெறும் தன்மையற்ற நிலையில் தான் மிருக இனம் உள்ளது. தேவனாய் வாழக்கூடிய மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள்… சூரியன் பால் நினைவினைச் செலுத்தும் போது அதன் அருகில்… விளிம்பில் வரும் விஷத்தன்மைகளை இவர்கள் உற்றுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.

சூரியனின் இயக்கத்தின் தன்மையை அந்தக் காட்டுவாசிகள் காண முடிந்தது. அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளையும் அந்தச் சிசுவிற்கும் (அகஸ்தியன்) படர்கின்றது.

அதன் தொடர் வரிசையாக நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து எவ்வாறு அதனதன் சக்திகளைக் கவர்கிறது…? என்ற நிலையைக் காண்கின்றார்கள்.

1.ஒரு விஷம் எவ்வளவு தூரம் வேகமாக ஊடுருவிச் செல்கின்றதோ
2.அதைப்போல அவர்கள் தன் எண்ணங்களை விண்ணை நோக்கிச் செலுத்தப்படும் பொழுது
3.கண் ஒளியால் மற்றதை ஈர்க்கும் தன்மையை அவர்கள் பெறுகின்றார்கள்
4.வெகு தொலைவில் இருப்பதையும் காணும் சக்தி பெறுகின்றார்கள்.

அவ்வாறு கண்டுணர்ந்த உணர்வின் தன்மை தான்
1.நட்சத்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்கு உணவை எப்படி எடுத்துக் கொள்கின்றது..?
3.அதை நம் பிரபஞ்சத்திற்குள் எப்படிச் செலுத்துகிறது…?
4.மற்ற கோள்கள் தனக்குள் அதை எடுத்து எப்படி வளர்கின்றது…?
5.அது உமிழ்த்தி வெளிப்படுத்தும் சக்தியை சூரியன் எவ்வாறு கவர்ந்து கொள்கிறது…? என்ற பேருண்மைகளை
6.அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் காணுகின்றார்கள்… கருவில் இருக்கும் அந்தச் சிசுவிற்கும் அது பதிவாகின்றது.

தாய் தந்தையர் கொஞ்சம்தான் கண்டார்கள். ஆனால் கருவிலே வளரும் அகஸ்தியனுக்கோ இது வீரிய சத்தாக உருவாகின்றது.

மற்ற மிருகங்களிடமிருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்திட அகஸ்தியன் தாய் தந்தையர்கள் அவர்கள் தங்கள் உடலிலே விஷம் கொண்ட பல தாவர இனங்களை மேலே பூசும் பொழுது அது உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்கிறது… கொல்லும் ஆற்றல் அந்த உடலிலே வளர்கின்றது. ஆனால்…
1.அந்தக் கருவிலே விளையும் சிசுவிற்கோ விஷத்தை அடக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக வளர்கின்றது.
2.இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

பத்து மாதம் ஆன பின் குழந்தை (அகஸ்தியன்) பிறக்கின்றது. குழந்தைகள் பிறந்தால் பொதுவாக மேலே தான் பார்க்கும். காடுகளில் படுத்திருக்கும்போது வானை நோக்கிப் பார்க்கும் பொழுது சூரியனை உற்று பார்க்கின்றது.

தாய் தந்தையர்கள் எதைப் பெற்று அவர்களுக்குள் பதிவாக்கினார்களோ அந்த நினைவாற்றல் குழந்தையை விண்ணை உற்றுப் பார்க்கவும் வைக்கின்றது.
1.அவர்கள் கண்ட நட்சத்திரங்களை அவன் காண்கின்றான்
2.நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடியதைக் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதும்… துகள்களாக மாற்றுவதையும்
3.கோள்கள் அதைக் கவர்வதையும் அது வெளிப்படுத்துவதைச் சூரியன் கவர்வதையும் இவன் காணுகின்றான்.

அந்த இளம் வயதில் அகஸ்தியனுக்குத் தெரியாது. ஆனாலும் அந்த உணர்வுகளை எல்லாம் காட்சியாகக் காணுகின்றான். அவனுக்குள் அந்த ஆற்றல்கள் வளர்கின்றது.

குருநாதர் இதை எல்லாம் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டினார். அதை எல்லாம் நீங்களும் காண வேண்டும் என்பதற்கே இதைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு நாட்டைச் செர்ந்த தத்துவ ஞானியான நாஸ்டர்டாமஸ் இந்தப் பூமியில் நடக்கப் போகும் சில மாற்றங்களை அன்றே குறிப்பிட்டிருந்தார்.
1.காரணம்… மெய் வழியைக் காணும் ஒரு ஆன்மா அவரிடத்தில் சென்று
2.அவருக்குள் இருந்து வெளிப்படுத்திய நிலைகள் தான் அது.

நம் பூமியின் இயக்கங்களையும் அதனின் உணர்வின் அலைகள் எங்கே மோதுகின்றது… எங்கே இணைகிறது…? ஒவ்வொரு நாட்டின் இயக்கங்கள் எப்படி ஆகின்றது…? உலக மாற்றம் எப்படி ஆகின்றது…? மதத்தின் தன்மைகள் எப்படி உருவாகின்றது…? என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் எல்லாவற்றையும் கூறியிருந்தாலும் இங்கே படித்த வர்க்கங்கள் அதை எடுத்து வைத்துக் கொண்டாலும் அதை மீட்டி உண்மையின் உணர்வை உணர்வதற்கில்லை. விஞ்ஞான அறிவில்தான் எண்ணத்தைச் செலுத்துகின்றார்கள்.

பிற்காலத்தில் விஞ்ஞான அறிவுகள் வளரப்படும்போது…
1.அதனால் இன்னென்ன நாடுகள் அழியும்…
2.இன்னென்ன மதங்கள் அழியும்…
3.இன்னென்ன இனங்கள் அழியும்… என்று நாஸ்டர்டாமஸ் அன்றே சொல்லியிருக்கின்றார்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே அன்று தோன்றிய அகஸ்தியன் தான் பெற்ற மெய் உணர்வின் நிலைகளை எந்நாட்டவர்க்கும் பெறும்படியாகப் பரப்பிச் சென்றுள்ளார்.

“தன்னை அறிதல்” என்ற நிலைகள் கொண்டு உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அதனுடைய செயலாக்கம் எப்படி உயர்கிறது…? என்று நிலைகளையும் அகஸ்தியன் தெளிவாக்கிக் காட்டியுள்ளார்.

அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் தான் உலகம் முழுவதற்கும் பரவியது. ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக அகஸ்தியர் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

ஆக… பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அவருக்குள் விளைந்த உணர்வுகளை யாரெல்லாம் உண்மையின் உணர்வுகளை அறிய வேண்டும் என்று எண்ணி ஏங்குகிறார்களோ… அவர்களுக்குள் அது ஈர்க்கப்பட்டு உணர்வின் அறிவாக மனிதனை வாழச் செய்கின்றது.

உலகத்தின் தன்மையில் விஷத் தன்மைகள் படர்ந்தாலும் தென்னாட்டில் தான் அதை மீட்டிடும் வளர்ச்சியின் தன்மை இருக்கின்றது என்று நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட குறிப்புகளில் உணர்த்திச் சென்றுள்ளார்.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள் என்ற நிலையையும் நாஸ்டர்டாமஸ் தெளிவாகக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த அறிவின் தன்மையை உணர்வதற்குக் கல்வி அறிவால் முடியாது.

ஆகவே
1.அத்தகைய அருள் ஞானி தென்னாட்டிலே தான் தோன்றுகின்றான்.
2.தீமைகளில் இருந்து மீட்டுவதற்கு உலகைக் காக்கும் சித்தனாக வருகின்றான்.

நஞ்சு கொண்ட நிலைகள் இன்று வளர்ந்தாலும் அது அழிந்தே தீரும். தவறான நிலைகள் செய்து கொண்டு இந்த உடலிலே இருப்பினும் கற்றுணர்ந்த உணர்வுகள் ஒரு நாள் அழித்தே தீரும்.

அதே சமயத்தில் அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை தனக்குள் வரும்போது தீமை என்ற நிலைகளை நீக்கியே தீரும். தீமையற்ற உணர்வாக உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறத்தான் செய்யும்.

ஆனால் தீமையின் உணர்வுகள் வரும் பொழுது ஒளி பெறும் உணர்வுகளை அழிக்கும்… நல்ல அணுக்களை அழித்தே தீரும்.
1.பின் அசுர உணர்வுகள் கொண்டு தீமையின் நிலைகளே உருபெறும் என்ற நிலைகளை
2.பல பல குறிப்புகளாக அன்றைய பாஷையிலே நாஸ்டர்டாமஸ் எழுதி இருந்தாலும்
3.அதனுடைய விளக்க உரைகளைக் கொண்டு வருவதற்குச் சில காலம் ஆகும்.

எது எப்படி இருந்தாலும்… தென்னாட்டிலே வாழ்ந்த அகஸ்தியனின் கரு உணர்வுகள் இங்கே வீரியம் பெறுகின்றது. கருவிலே வளரும் சிசுக்களுக்கு உயர்வு பெறுகிறது.

அந்த உணர்வின் ஞானம் நிச்சயம் வெளிப்படும்…!.

எந்த மனித இனத்திலிருந்து அகஸ்தியன் வந்தானோ… அந்த மனித இனத்திற்கே “ஒளி பாய்ச்சிக் கொண்டுள்ளான்”

 

விநாயகர் தத்துவப்படி விநாயகர் அருகில் அரசையும் வேம்பையும் வைத்துக் காட்டி இருப்பார்கள். வேம்பு என்பது வாழ்க்கையில் வரும் கசந்த நிலை. வாழ்க்கையில் வரக்கூடிய அந்தக் கசப்பை வென்றவர்கள் தான் மகரிஷிகள்.

ஒரு பட்சி அரசம் பழத்தை உணவாக எடுத்து அதனுடைய சத்தை உட்கொண்டாலும்… உதாரணமாக ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மீது தன் மலத்தை விடும் பொழுது
1.மலத்திற்குள் சிக்குண்ட இந்த வித்து பாழடைந்த இடத்தில் அது படர்ந்து காற்றில் பரவி இருக்கும் ஈரச்சத்தை நுகர்ந்து
2.தனது சத்தான நிலைகள் கொண்டு கருவுற்று ஜீவனாகி அரசாக (அரச மரமாக) விளைகின்றது.
3.பின் தன் விழுதுகளை ஊன்றி நீரே இல்லாத அந்த இடத்தில் தன் விழுதுகளை ஊன்றி நீர் இருக்கும் பக்கம் தன் விழுதுகளைப் பாய்ச்சுகின்றது.
4.அப்படிப் பாய்ச்சி வளரத் தொடங்குகிறது.

இதைப் போன்று தான் மனிதன் தன் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி பாழடைந்த இடமான பூமியின் வட துருவப் பகுதியில் விண்ணிலே துருவ மகரிஷி “துருவ நட்சத்திரமாக” இருக்கின்றான்.

விண்ணிளிருந்து வரும் நஞ்சினைத் தனக்குள் அடக்கி நஞ்சினை வென்று ஒளியின் சிகரமாக இன்றும் நிலையாக… தன் உணர்வின் அலைகளை முழுதும் பாய்ச்சித் தன் உணர்வின் ஆற்றலால் அதைக் கண்டுணர்ந்த மற்ற மனிதர்களும் அதைப் பின்பற்றி… சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தைச் சுற்றிச் சுழன்று வருகின்றார்கள்.

1.தன் விழுதுகளைப் பாய்ச்சிப் பேரண்டத்திலிருந்து வருவதை தன் உணர்வின் ஆற்றலால் அங்கே பெறும் மனிதன் அவனுக்குள் விளைவதால்
2.அவனைப் பின்பற்றிச் சென்றவரைப் பரிசுத்தப்படுத்தி அவர்களையும் வாழ வைத்து
3.ஒளியின் சரீரமாக இன்றும் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக வாழுகின்றான்.

விண்ணின் ஆற்றலின் நிலைகளை நட்சத்திரங்கள் தனக்குள் அடக்கிப் பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படும் பொழுது கோள்கள் தனது சத்தாக எடுத்து அது உமிழ்த்தும் சத்தைச் சூரியன் கவர்ந்து ஒளியின் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகிறது.

அதைப் போல அகஸ்தியனும் நஞ்சினை ஒடுக்கிடும் ஆற்றல் பெற்று ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக விண்ணிலே வாழுகின்றான்.

சூரியன் எப்படி ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று ஒளியின் சுடராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரம்
1.எந்த மனித இனத்திலிருந்து வந்தானோ அந்த மனித இனத்திற்கே ஒளி பாய்ச்சும் உணர்வினை
2.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதை நாம் நுகர்ந்து
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண் கொண்டு கூர்மையாக எண்ணும் பொழுது
4.அவன் உணர்த்திய உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகுகின்றது… அதனை நாம் பருகுதல் வேண்டும்.

விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ள பேருண்மை இதுதான்.

விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் செலுத்தி… உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கத்தை ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

மனிதனால்தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகின்றது

 

பூமியின் உள் நிலையை நாம் எப்படி விரயப்படுத்துகின்றோம்…? பூமியிலிருந்து எடுக்கப்படும் கனி வளங்களைக் காட்டிலும் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமில சக்தியை மனிதனால் மின்சாரம் காண, காற்று அலையில் உள்ள சக்தியைக் காட்டிலும் பூமியிலிருந்து அதிக மின் அலைகளை எடுக்கின்றோம்.

இப்படி பூமியையே நம் செயற்கையின் சோம்பேறி நிலைக்காகப் பல சக்திகளை விரையப்படுத்துகின்றோம்.

ஆங்காங்குள்ள கனி வளங்களை எடுத்துவிட்டாலும் வளரும் இயற்கை வளர்ந்து கொண்டே இருக்க இன்றைய செயற்கை விஞ்ஞானம் தடைப்படுத்துகின்றது.

பல ஆயிரம் ஆண்டு காலங்களாக பூமியிலிருந்து தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை எடுத்து வந்தே உள்ளார்கள். எடுக்க எடுக்க இவையும் வளர்ந்தன.
1.ஆனால் இக்குறுகிய நூற்றாண்டுகளில் பெட்ரோலிய இன திரவத்தையும்
2.மின்சாரம் காண்பதற்காக காந்த அலையின் அணுசக்தியையும் நாம் உறிஞ்சி எடுத்ததினால்
3.பூமியில் வளர வேண்டிய கனிவளங்களுக்குகந்த ஆகாரமான இவ்வமில குணங்கள் எல்லாம் தடைப்பட்டவுடன் அதன் வளர்ச்சியும் குன்றிவிட்டது,

பொன் முட்டையிடும் வாத்தின் கதையைப் போல. வாத்து தானாக தினசரி இட்ட முட்டைகளை பேராசை கொண்டு ஒரு நாள் அவ்வாத்தை அறுத்துப் பார்த்த நிலையைப் போல “நம் பூமியின் நிலையை நம் மனிதர்கள் சிதறடித்து விட்டனர்…”

1.மனிதனின் எண்ண வளர்ச்சியிலும் அறிவாற்றலிலும் ஞானத்திலும் வேகமில்லை.
2.ஆனால் நினைத்தவுடன் நினைத்தது நடக்க வேண்டுமென்ற பேராசையின் வெறி வேகம்
3.மனிதனுக்கு மிகவும் துரிதப்பட்டதினால் இயற்கையின் பொக்கிஷத்தை அழித்து வாழ்கின்றோம்.

இயற்கையின் சக்தியே ஒன்றுடன் ஒன்று கலந்து கலந்து ஒன்றிலிருந்து வெளிப்படும் அமிலமானது மற்றொன்றில் மோதி மற்றொன்று புதிய உயிர் ஜீவன் கொண்டு அதிலிருந்து வெளிப்படும் அமிலம் அதற்குகந்த தன்மையில் மாறு கொண்டு மாறி மாறியே வளர்ந்து வருகின்றது தொடர் வளர்ச்சியாக.

உங்களின் வினாவை எழுப்பலாம். இப்பூமியின் அமில குணம் இப்பூமியின் காற்று மண்டலத்திலேயே தான் உள்ளதென்கின்றீர். அப்படி இருக்க பூமியிலிருந்து பிரித்தெடுக்கும் சக்தி குணங்கள் மாறுபட்டால் மீண்டும் நம் பூமியின் ஈர்ப்பில் தானே நிலைபெற வேண்டும் என்று.

ஒன்றிலிருந்து பிரிக்கப்படும் அமிலமானது அதன் இன நிலையில் இருந்து ஆவியாய் காற்று மண்டலத்தில் சுழலும் நிலையில் அவ்வமிலத்துடன் மற்றொரு அமில நிலை மோதுண்டு அது ஏற்காத நிலையில் பிரியும் நிலையில் அதிலிருந்து ஒரு வகை அமிலம் வெளிப்படுகின்றது.

அதுவுமல்லாமல் மழை வரும் காலங்களில் ஏற்படும் இடியினால்தான் இவ்வுலகின் பல இயற்கையின் குண அமில வர்க்கங்கள் மாறுபாடு கொண்டு வளர்கின்றன.

இப்படியே மாறு கொண்டே அமில வளர்ச்சியில் சுழன்று ஓடும் நிலையில் மாறுபடும் இயற்கையின் வழித்தொடர் கொண்டு நாம் வாழ்ந்து வருகின்றோம்.

எல்லா வகை இயற்கை வளங்களுமே உருவிலும் சுவையிலும் வண்ணத்திலும் ஒளியிலும் ஒலியிலும் நீரிலும் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டேதான் உள்ளது. நம் நிலைக்கு ஒன்று போல் உள்ளனவாகத் தெரிபவையும் சிறுகச் சிறுக அதன் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே தான் உள்ளது.

இந்நிலை எல்லா மண்டலங்களின் நிலைக்கும் ஒத்ததுதான்.

1.நம் பூமியின் நிலையில் மட்டும் இப்பூமியின் மாறிடும் தன்மை குணத்தில் ஏற்படப்போகும் நிகழ்ச்சிக்கு
2.மனித ஆத்மாவினால் நிகழுகின்றது என்ற குற்ற உணர்வை ஏன் காணல் வேண்டும்…?
3.இயற்கையின் உந்தலினால் மனித எண்ணமே செயற்கை காண வழிபட்டதற்கு மனிதனைக் குற்றம் காணலாமா…? என்ற வினா எழும்பலாம்.

மனிதனால் ஏற்படுத்திக் கொண்ட இத்தீய அமில குணத்தினால்தான் நம் பூமியின் இயற்கை பாழ்பட்டது.

மனிதனால் அரசர்கள் என்றும் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் மனித ஆத்மாவுக்குகந்த குணத்தைப் பிரித்துக் கண்டு ஒருவனை உயர்த்தி ஒருவனை அடிமை கொண்டு வாழ்ந்த எண்ணத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டு பேராசையில் அதிகப் பொருள் சேர்த்து ஒருவனை அழிக்க ஒருவன் வாழ்ந்து வந்ததின் நிலையினால் குண அமிலங்களில் மாறுபட்டு
1.இயற்கையில் இருந்த அணுகுண்டுகளையும் அணுக்கதிர்களையும் காற்று மண்டலத்தில் கலக்கவிட்டு
2.இயற்கையைப் பாழ்படுத்திய மனிதனால்தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாமி (ஞானகுரு) எனக்கு அருள் வாக்கு கொடுத்தார்… நடக்கவில்லையே…! என்று சிலர் எண்ணுவார்கள்.

காரணம் என்ன…?

1.நீங்கள் இதைச் செய்யுங்கள்… உங்களுக்கு நடக்கும்…! என்று யாம் வாக்காகச் சொல்கின்றோம்
2.ஆனால்… தான் எதை எண்ணிக் கேட்டார்களோ அது மேலே மட்டுமே எண்ணம் இருக்கும்… அதே உணர்வுகள் வரும்…
3.யாம் சொல்லும் உபாயத்தை எடுத்து அதைப் பாய்ச்ச வேண்டுமென்றால் அது வராது.

அந்த நேரத்தில் வேதனை உணர்வுகள் அதிகமான பிற்பாடு “நடக்கவில்லையே…. சாமி..! இப்படி இருக்கின்றதே…!” என்ற வேதனையை எடுத்து எனக்குள் பாய்ச்ச முடிகிறது.
1.அந்த வேதனை உணர்வு நல்ல உணர்வுகளை உங்களுக்குள் அழித்துவிடும்.
2.நான் கொடுத்த வாக்கை அங்கேயே மடியச் செய்து விடுகின்றது.

கடும் நோயாக இருந்தாலும் சரி…
1.உங்களுக்கு நோயில்லை போ…! என்ற வித்தைத் தான் யாம் விதைக்கின்றோம்
2.அதை எடுத்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெருகுகிறது
3.மகரிஷிகள் அருள் சக்தி உள்ளே சென்றால் நோய் நீங்குகிறது
4.இதையே திரும்ப எண்ணுங்கள் என்று சொல்கிறோம்

யார் செய்கின்றார்கள்…? ஒருவரும் இல்லை…!

சாமி நீங்கள் வாக்கு கொடுத்தீர்களே…! அது எங்கே சென்று விட்டது…? இன்று இப்படி என்னைத் தான் (ஞானகுரு) நம்ப முடிகின்றதே தவிர உங்களை நம்புவதே இல்லை.

1.ஆனால் நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ…
2.அதை உங்கள் உயிர் உணர்வின் அணுவாக மாற்றும்…!

விநாயகர் சதுர்த்தி என்ற நிலையில் தீமைகளையும்… தீய வினைகளையும் நிறுத்துதல் வேண்டும். ஆனால் ஆசை நிலைகளில் தான் நாம் இன்று அலைந்து கொண்டிருக்கின்றோம்.

தீமைகளை நிறுத்தும் ஆற்றல் “அங்குசபாசவா” என்ற நிலையில் ஆத்ம சுத்தி என்ற கடுமையான ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம். தீமையைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்து வந்த நிலையின் வல்லமையைக் காட்டுவதற்குத் தான் விநாயகர் கையிலே அங்குசத்தைக் கொடுத்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

“மனிதன் எதனையுமே அடக்கி ஆளும் சக்தி பெற்றவன்” என்ற நிலையில் ஏன் இதைச் செய்ய முடியவில்லை…!

எவ்வளவு பெரிய யானையாக இருந்தாலும் சிறு அங்குசத்தை வைத்துதான் அதை அடக்குகிறார்கள். அதே போல் தான்
1.கடும் நிலையாக வாழ்க்கையில் வந்தாலும்
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வை வைத்து அடக்க முடியும்… அடக்குவீர்கள்.

குறுகிய காலமே மனித உடலில் வாழ்கின்றோம் என்பதை உணர்ந்து வரும் தீமைகள் அனைத்தையும் மகரிஷிகள் உணர்வை வைத்து அடக்கப் பழக வேண்டும். அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

அது அல்லாது…
1.மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று இந்த உடலையே நாம் பெரிதாக மதித்தால்
2.இந்த உடல் நமக்குச் சொந்தமானது அல்ல…!
3.இதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே யாம் பதிவு செய்யும் அருள் ஞானத்தை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து எத்தகைய தீய வினைகள் வந்தாலும் அதை நிறுத்தும் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்தல் வேண்டும்.

அகஸ்தியன் மின்னலை நுகர்ந்தான்… துருவ நட்சத்திரமாக ஆனான்

 

அகஸ்தியன் தன் தாய் கருவிலேயே விஷத்தை வெல்லும் சக்தி பெற்றான். பிறந்தபின் அவனை மற்ற மிருகங்கள் பாம்புகளோ நுகர்ந்தால்
1.அதனுடைய விஷத்தன்மைகள் இவனுக்கு முன் ஒடுங்கி விடுகின்றது.
2.விஷத்தன்மைகள் அங்கே ஒடுங்கும் பொழுது இவனுக்குள் சிந்திக்கும் ஆற்றல் பெருகுகின்றது.

விஷத்தை ஒடுக்கிடும் உணர்வுகள் இவனுக்குள் அந்தச் சக்தி இருப்பதனால் மின்னல் வெளிப்படும் பொழுது அதில் விஷத்தன்மை அதிகம் உண்டு
1.அதனையும் நுகர்ந்து அவனுக்குள் அடக்கும் சக்தி வருகின்றது.
2.மின்னலின் ஒளிக் கற்றைகள் எவ்வளவு வீரியமாக இருக்கின்றதோ அதை நுகர்ந்தறிந்து
3.வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி ஒளியாக மாற்றிடும் உணர்வின் அணுக்களாக அவனில் பெருகுகின்றது.
4.மின்னல் தாக்கும் பொழுது அந்த ஒளிக் கற்றைகள் எவ்வளவு தூரம் விரிவடைகின்றதோ
5.அதைப்போல் அவன் எண்ணங்கள் வெகு தூரம் ஊடுருவி இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வாக அறியும் தன்மை பெறுகின்றான்,
6.வான் வீதியின் ஆற்றலையும் மின்னல்களையும் தனக்குள் ஒளிக்கற்றைகளாக மாற்றிக் கொண்டான்
7.அவன் உடலில் உயிரைப் போன்று உணர்வுகள் ஒளியானது.

திருமணமான பின் கணவன் மனைவியாக இணைந்து உயிரும் ஒன்றி துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

அவர்கள் பெற்ற உணர்வினை நாம் நுகர்ந்தால் நம் வாழ்க்கையில் வரும் இருளை வென்று… பேரருளை இயக்கச் சக்தியாக மாற்றி ஒளி என்ற உணர்வுடன் வாழ்ந்து… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை நாமும் பெற முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர நுகர
2.நமது உடலில் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் உயிரை ஒத்த ஒளியாக மாற்றி
3.அந்த உணர்வின் துணை கொண்டு உடலை விட்டுச் சென்றால் நம் உயிர் துருவ நட்சத்திரத்தின் பால் ஈர்க்கப்பட்டு
4.நஞ்சை வென்ற உணர்வாக வெளிப்படுத்தும் அந்த உணர்வினை நாம் உணவாக எடுத்து
5.அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

நம் உடலில் சிருஷ்டித்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இதே உடலை ஒளியாக மாற்றுகின்றது இதற்குப் பின் இன்னொரு உடல் இல்லை.

ஒளியின் சிகரமாகும் போது இருளை மாற்றிப் பேரின்ப நிலை என்று பேரானந்த நிலையாக… ஏகாந்த நிலையாக ஏகாதசி… பத்தாவது நிலையான கல்கி என்ற நிலை அடைய முடியும்.

அந்த மார்க்கத்தைத் தான் நமது ஞானிகள் காட்டினார்கள்.

1.இந்த உண்மையினை நமது குரு அறிந்தார் அதனின் வழியை எனக்கு வழி மொழிந்தார்.
2.அதன் வழி வாழ்க்கையில் நான் பின்பற்றி நடந்தேன்…. காடு மேடெல்லாம் அலைந்தேன்.

மிருகங்கள் எப்படி வாழ்கின்றது தாவரங்கள் எப்படி உருவாகின்றது இதனை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களின் உடல்கள் எப்படி மாறுகின்றது என்று குருநாதர் எம்மை அறியச் செய்தார்.

அதைத் தான் உங்களுக்கு இப்போது உபதேசிக்கின்றேன். இதை நீங்கள் பதிவு செய்து… மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… இருளை அகற்றி நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெறுவீர்கள்.

1.இந்த உடலில் வாழும் காலத்திலேயே அதிகமாக இதைப் பெருக்கி
2.உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டால் என்றும் நிலையான ஒளிச் சரீரம் சரித்திரம் பெற முடியும்.

மனிதனுடைய கடைசி எல்லை இதுதான்.

உலக மாற்றத்திற்குப் பின்…

 

இப்பூமியில் நிகழப்போகும் மாற்றத்தினால் இப்பூமியில் உள்ள இயற்கைக் குண அமிலத்தில், குண அமிலம் என்பது இப்பூமியின் மேல் பகுதியில் உள்ள அனைத்து ஜீவன் கொண்ட நிலைகள் எல்லாம் மாற்றத்தில் உருமாறும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலை இப்பொழுது பூமியின் தன்மை மாறும் பொழுது இதிலுள்ள எல்லா இயற்கை நிலையும் மாறிய பிறகு (இறந்த பிறகு) அதனுடைய அமில குணங்கள் எப்படி வெளிப்படுகின்றன…?

ஒரு கனி அழுகிவிட்டால் அக்கனியில் உள்ள நீர்ச்சத்தெல்லாம் உஷ்ணம் படப்பட வெளிப்படுகின்றது அல்லவா…? பல நாட்கள் நாட்களுக்குப் பிறகு அது காய்ந்து எதுவுமே இல்லாமல் அதனுடைய சக்கையும் மண்ணுடன் மண்ணாய் கலந்துவிடுகிறது.

அதைப் போன்று இவ்வுலக மாற்றத்தில் அழியப்படும் எல்லா இயற்கை ஜீவன்களும் இப்பூமியின் மேல் ஜீவனற்று உள்ள நிலையில்… இப்பூமியின் சுழற்சியினால் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் உஷ்ண அலைகள் அவற்றின் மேல் மோதுண்டு மோதுண்டு…
1.அதிலிருந்து வெளியாகும் ஆவி அமில குணத்தின் நிலையுடன் இப்பூமியிலிருந்து பிரிந்த உயிரணுக்கள் எல்லாம்
2.மீண்டும் உஷ்ண அலைகள் பட்டவுடன் ஜீவன் பெற வருகின்றன மாறு கொண்ட நிலையுடன்.

அதன் தன் நிலையிலேயே மீண்டும் வர முடியாது. ஒன்றிலிருந்து வெளிப்பட்ட அமில குணமே அதன் சுவாசத்தை ஈர்க்கும் உயிரணுவுடன் மோதுண்டு ஜீவனுக்கு வரும் பொழுது உரு மாறப் பெறுகின்றது.

எப்படி…? என்று வினா எழும்பலாம்.

கொசு எதற்காக இரத்தத்தை உறிஞ்ச மனிதனையும் மிருகத்தையும் மட்டும் கடிக்கின்றது…? தாவரத்திலும் பல நிலைகள் உள்ள பொழுது மனிதனின் இரத்தத்தைத்தானே அக்கொசு விரும்புகிறது.

மனிதனிலிருந்து அவன் இறந்து விட்டால் அவ்வுடலைப் புதைத்த நிலையிலிருந்து வெளிப்படும் பல கோடி அணுக்கள் இக்காற்றுடன் படர்ந்துள்ளன.

அந்நிலையில் மனிதன் உண்டு கழித்த சாக்கடை நீர்களிலும் மனித மலத்திலும் மனிதனால் உண்ணப் பெறும் கனிகளின் அழுகிய பழங்களில் இருந்தும் இக்காற்றில் படர்ந்துள்ள இவ்வுயிரணுக்களுக்கு ஆகாரம் எடுக்க அதன் மேல் மோதுண்டவுடன்… அங்குள்ள ஈரத்தின் உஷ்ண அலையில் இஜ்ஜீவ அணு பட்டவுடன் உருவ நிலை கொண்டு கொசுவாகி புழுவாகி உரு அமைப்புப் பெற்றவுடன் அது சுற்றி வாழும் தருவாயில் மனிதனின் இரத்தத்தையே ருசி காண வருகிறது.

நாய் உள்ள இடத்தில் நாய் உண்ணி என்னும் ஒருவகைக் கொசு இருக்கும். அதைப் போன்று ஒவ்வொரு மிருக இனத்திற்கும் அது அது உள்ள இடத்தில் அதன் இன வர்க்க உடலில் இருந்து வெளிப்பட்ட உயிரணுக்களின் அமில குணத்தில் பிறப்பெடுக்கும் அதன் இன வர்க்க சுவாச குணமுடைய பல உயிர்ப்‌‌ பிறப்புக்கள் வளர்ச்சி கொள்கின்றன.

ஓர் உயிராத்மா ஓர் ஜீவ உடல் (மனிதனோ, மிருகமோ) அதன் நிலை மாறும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் உயிரணுக்கள் அதன் நிலைக்கொப்ப அமில குணமுடைய உருக்கொண்டு அந்நிலை (அவ் உருவ நிலை) மாறும் பொழுது… அதிலிருந்து சில நிலைகள் ஏற்பட்டு ஏற்பட்டு பல உருவ நிலைகளும் மாறி மாறி வரும் ஜீவ ஜெந்துக்களின் நிலையும் இன்றைய கால நிலையிலேயே ஏற்பட்டு வருகின்றது.

இவ்வுலகமே மாற்றம் கொள்ளும் தருவாயில் எல்லா ஜீவ ஆத்மாக்களின் நிலையும் மாறு கொள்ளும் பொழுது எந்த நிலையான மாற்றம் ஏற்படும் என்று எண்ண முடிகின்றதா…?

1.இன்றளவும் இவ்வுலகினில் நடந்து வந்த நிலையே இக்கலி மாறி கல்கியுகத்தில் எல்லா நிலைகளுமே மாறித்தான் நடக்கும்.
2.ஒன்றிலிருந்து ஒன்று மாறும் பொழுது ஒன்றைப் போல் ஒன்று இருக்காது. கல்கி என்ற புதிய உலகச் சுழற்சி தான் மீண்டும் ஏற்படும்.

இப்புதிய உலகில் இக்கலியில் மாற்றம் கொண்ட இயற்கைத் தன்மையினால் இவ் இயற்கையின் ஜீவ அணுக்களெல்லாம் கல்கி யுகத்தில் உருவ நிலைக்கு வரும்பொழுது “எண்ணிலடங்கா மாற்ற நிலை கொண்ட வளர்ச்சிகள்” ஏற்படப்போகின்றன.

இப்பூமியின் ஈர்ப்பில் ஜீவிக்கும் ஜெந்துக்களுக்கு மட்டுமா…? பறக்கும் பறவைகளின் நிலை எல்லாம் எந்நிலை…? என்ற வினா எழும்பலாம்.

மாற்றத்தினால் அப்பறவைகளின் நிலையும் மாறப் போகின்றது. இப்பூமியின் ஈர்ப்பு சுற்றளவில் உள்ள மண்டலத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் நிலையும் தான் இம்மாற்றத்தினால் மாறப்போகின்றது.

இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையினால் தான் உள்ளது. அந்நிலையில்
1.இம் மாற்றத்தினால் வெளியிடப் போகும் உஷ்ண அலையின் வெக்கையான அமில குணங்கள் மாறும் பொழுது
2.இப்பூமியின் ஈர்ப்பில் சுழன்று ஓடும் காற்று மண்டலத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு வழக்கமாய்ச் சுவாசித்த காற்றின் குண நிலை மாறும் பொழுது
3.அதன் எண்ண நிலையும் மாறு கொண்டு அதன் சுவாசத்தின் நிலையினால் அதன் ஜீவ உடலும் மாறத்தான் போகின்றது.

இந்நிலையினால் பலப் பல மாற்றங்கள் நிகழத்தான் போகின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் ஒருவருக்கொருவர் எத்தனையோ பேரிடம் பேசினாலும் அவர்களின் உணர்வுகள் நமக்குள் உண்டு. நம்முடைய உணர்வுகள் அவருக்குள் உண்டு. யாரும் பிரிந்து இல்லை.

யாரிடமும் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நாம் தப்பிக்க முடியுமா என்றால் முடியாது.
1.ஒருவர் உங்களைச் சாபமிடுகிறார்…
2.அதைப் பதிவாக்கிக் கொண்டு விட்டீர்கள் அவரிடமிருந்து நீங்கள் விலக முடியாது.

அதே போல் நீங்கள் சாபமிட்டால் அவர்களும் விலக முடியாது. இந்த உணர்வுகள் பதிவாகியிருக்கின்றது
1.உங்களை இணைத்துக் கொண்டே இருக்கும்
2.பாவிப்பயல் இப்படிச் செய்தான்… செய்தான்… செய்தான்… செய்தான்… என்று இணைத்துக் கொண்டே இருக்கும்.

நண்பனாக இருக்கும் பொழுது “எனக்கு உதவி செய்தான்” என்று எண்ணுகின்றோம் அது பதிவாகியிருக்கின்றது. அப்பொழுது இணைந்து தான் இருக்கின்றோம். அந்த நன்மையின் தன்மை வரும் பொழுது இருவருக்குமே அது நல்லதாக விளைகின்றது.

சந்தர்ப்பத்தால் பகைமையாகி… இருவருமே தீமையான உணர்வுகளைப் பதிவு செய்து விட்டால் இரண்டு பேருமே அதிலிருந்து பிரிந்து இல்லை.

இதில் எந்த அடிப்படையில் அதிகமாக அந்த நண்பரின் உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறீர்களோ அந்த உணர்வின் தன்மை வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இதை எல்லாம் மாற்றிட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நமக்குள் வலுவாக்கிக் கொண்ட பின்
1.நாம் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்
3.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
5.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று அவர்கள் குடும்பங்கள் வாழ வேண்டும்
6.நாளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
7.சாவித்திரி போன்ற இரு உயிரும் ஒன்றி இணைந்த நிலைகள் வளர வேண்டும்
8.அவர்கள் குழந்தைகள் உலக ஞானம் பெற வேண்டும்
9.அவர்கள் தொழில்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் நம் தொழிலும் சீராகிறது. அருள் ஞானிகள் உணர்வுகள் இங்கே விளைகின்றது… வளர்கின்றது.

மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் வலுவாக எண்ணும்போது
1.நமக்குள் பதிவான மற்றவரின் தீமையான உணர்வுகளை
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி மறைக்கின்றது.

ஆகவே… நமக்குள் பதிவான பிறருடைய நிலைகளைத் துருவ தியானத்தின் மூலம் குறைத்தல் வேண்டும்… அதைத் தூய்மைப்படுத்துதல் வேண்டும்… பகைமைகளை நிறுத்துதல் வேண்டும்.

தீமை என்ற நிலைகளை எண்ணாது அந்த மகரிஷிகள் சக்தி நாம் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்று அந்த உயர்ந்த நிலைகளை எண்ண வேண்டும். நமக்குள் அது உயர்ந்த நிலைகளாக வளர்கின்றது.

ஒவ்வொரு நாளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி நமக்குள் வரும் தீவினைகளை நிறுத்துதல் வேண்டும்.

இப்படி எல்லோருமே ஏகோபித்த நிலைகள் செயல்பட்டு இந்தப் பூமியில் கலந்துள்ள தீமையின் உணர்வுகளை வளராது நிறுத்துதல் வேண்டும்.

நாம் அனைவரும் இதன் வழி கொண்டு சொல்லப்படும் பொழுது பகைமை உணர்வை உருவாக்கும் அணுக்கள் உருவாவதில்லை. அத்தகைய உணர்வைச் சுவாசிக்கும் தன்மைகளும் அடைபடுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து அதிகாலையில் ஒளியான அலைகள் வருகிறது. அந்த ஆற்றலை நமக்குள் பெருக்குகின்றோம். எல்லோரும் ஏகோபித்த நிலைகள் அதைப் பரவச் செய்யும் போது
1.பகைமையை உருவாக்கும் உணர்வுகளுக்கு… அந்த அணுக்களுக்கு ஆகாரம் இல்லாது துரத்தி விடுகின்றோம்.
2.அஞ்சி ஓடும் நிலை வருகின்றது… சூரியனின் காந்த சக்தி கவர்ந்து சென்று விடுகிறது.

மனித உடலில் எடுத்துக் கொண்ட அத்தகைய பகைமை உணர்வுகள் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் செல்லாது. ஆனால் அந்த உணர்வின் தன்மை அதிலிருந்து தோன்றியது தான்.

பூமியின் சுழற்சியின் நிலைகள் கொண்டு கடல் அலைகள் அதை இழுத்துக் கொள்கிறது. பகைமை உணர்வுகளைத் தனக்குள் அணைத்துக் கொள்வதும் (அமிழ்த்தி) தனக்குள் மோதும் வெப்பத்தால் அதை அடக்கி இந்த உணர்வின் தன்மை ஆவியாக மாற்றிவிடும்.

காற்று மண்டலமான இந்தப் பரமாத்மா தூய்மை அடைகின்றது… நம் ஆன்மாவும் தூய்மை அடைகிறது.

உங்களுக்காக நான் பிரார்த்தித்தால்… உங்கள் கஷ்டம் எனக்குள் வராது

 

சிலர் எனக்காக வேண்டி நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது… எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்பார்கள்.

1.உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்து…
2.”நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று நான் நினைத்தால்
3.நீங்கள் சொன்ன கஷ்டத்தை எனக்குள் வளராதபடி தடுத்து
4.எனக்குள் நல்லதை வளர்த்துக் கொள்ள முடியும்

ஆனால் உங்கள் கஷ்டத்தை மாற்றுவதற்கு நீங்கள் எண்ணினால் தானே நன்றாகும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் இது உங்களுக்குள் நல்லதை உருவாக்கும்.

நிறையப் பேர் எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆக நம்மை இயக்குவது யார்…? நமக்குள் உருவாக்குவது யார்… நம்மை ஆள்வது யார்…?

திருவெங்கடாஜலபதி என்றால் யார்…? “ஏழுகொண்டலவாடா” என்றும் சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு நம்மை ஆள்பவன் வெங்கடாஜலபதி.

திருவெங்கடாஜலபதி – நமது உயிர் தான் நம்மை ஆளுகின்றது. அங்கே தங்க ஆபரணங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்
1.நல்ல மனங்களை கொண்டு இந்த உடலை ஆட்சி புரிய வேண்டும் என்பதற்காகச் சிலையைப் போட்டு வைத்துள்ளார்கள்.
2.நம்மை ஆள்வது நமது உயிர் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

இங்கே ஸ்ரீவில்லிபுத்தூரில் அரங்கநாதனைக் காட்டுகின்றார்கள்.. மனைவி ஆண்டாள். இந்த உயிரின் தன்மை அரங்கநாதனாக இருக்கின்றது எந்த குணங்களை எண்ணுகின்றோமோ அது தான் நம்மை ஆளுகின்றது.

நான் (ஞானகுரு) இப்போது சொல்லக்கூடிய உணர்வுகளை நீங்கள் கேட்டால் இந்த உணர்வின் தன்மை உங்கள் உயிர் அரங்கநாதன் (உடலான அரங்கத்தில் நாதங்களை எழுப்பி) ஆக இயக்கி… நுகர்வதை இசையாக மாற்றுகின்றது… அந்த உணர்வின் சக்தி கொண்டு தான் உங்களை ஆளுகின்றது.

ஆண்டாள் என்று காரணப் பேர் வைத்து
1.நாம் எதை ஆள வேண்டும்…? எப்படி ஆளச் செய்ய வேண்டும்…? என்று சாதாரண நிலைகள் கொண்டு
2.ஒவ்வொன்றிலும் தெளிந்து தெரிந்து எப்படி வாழ வேண்டும்…?
3.தீமைகள் எப்படி அகற்ற வேண்டும்…?
4.வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

ஆண்டாள் திருப்பாவையில் என்ன சொல்கின்றார்கள்…?

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…! இந்த உணர்வின் தன்மை நாம் எடுக்கும் பொழுது
1.அந்த மதியின் உணர்வாக நம்மை ஆளும். அதன் செயலாக நம் செயலும் இருக்கும்.
2.நமக்குள் நம் உணர்வின் தன்மை இங்கே அரங்கத்திற்குள் அமைந்திருக்கும் சக்தியாக
3.அதன் இசையாக அதனின் உணர்வின் செயலாக நம்மை இயக்குவான் என்று பொருள்படும்படி தத்துவங்களை எழுதி இருக்கின்றார்கள்.

மனிதன் புரிந்து தன் வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும்…? உயிரின் இயக்கம் எது…? நாம் நுகர்ந்த உணர்வின் சக்தி எது…? அது எப்படி நம்மை ஆளுகின்றது…? என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
1.அந்த ஞானிகள் உணர்வு மக்களைக் காக்கும்.
2.நம்மைக் காக்க உதவும் உலகைக் காக்க உதவும்
3.உலகை அருள் ஒளியாக மாற்ற உதவும்.

ஆகவே… மகரிஷிகள் காட்டிய அருள் உணர்வு வழிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உணர்வுகளை ஒளியாக்கி… நம் சொல்லின் தன்மை பிறரின் இருளைப் போக்கி… உலக மக்கள் அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தைப் பெறும் தகுதியாக நாம் உருவாக்க வேண்டும்.

பூமி பரிசுத்தமடையும் காலம்

 

மனித ஆத்மாக்களுக்குத் தான் வழிமுறையும் செயல் திறமையும் செய்விக்க உணர்த்துகின்றேன். இவ்வுலக மாற்றத்தில் மிருகங்களின் நிலை என்ன…? மற்ற ஜீவராசிகளின் நிலை என்ன…?
1.இவ்வுலக மாற்றத்தினால் மனிதனின் நிலை மட்டும் மாற்றப்படுவதில்லை.
2.இப்பூமியின் இயற்கைக் குணமே மாற்றம் கொள்ளப் போகின்றது.

நல்ல கனியை அது கெடாத வரைக்கும் சுவை உணர்ந்து உண்ண முடிகின்றது. அதே கனி அழுகிவிட்டால் நாற்றம் அடிக்கின்றது. அதைப் போன்று மாற்றம் கொள்ளும் தருவாயில்… நல் உணர்வு கொண்ட ஆத்மாக்கள் மற்ற ஜீவ ஜெந்துக்கள் இவற்றின் நிலையில் இருந்து “மாறும் அமில குணங்கள் தான்” இவ்வுலகமே கல்கிக்குச் செல்லும் அவதார நிலைப்படுத்துகிறது.

தீய எண்ணத்தை கொண்ட விஷமான அமில குணங்கள் இவ்வுலகினில் இக்கலியுடன் மாறப் போகின்றது. ஜீவராசிகளில் உன்னத சக்தியுடைய
1.நம் மனித ஆத்மாக்கள் காணாத பல கோடி நிலைகள் உண்டு.
2.பல கோடி தாவர வர்க்கங்களுண்டு
3.நாம் கண்டுணரும் பட்சிகளும் மற்ற சாது குணங்கள் கொண்ட பிராணி வர்க்கங்களும் பல உண்டு.

இவ்வுலக மாற்றத்தின் போது அந்தந்த இடங்களின் மாற்ற நிலைக்கொப்ப அங்கங்குள்ள ஜீவன்கள் எல்லாமே இன்றைய நிலை கொண்ட ஜீவநிலை உருமாறி… அவ்வுயிரணுக்கள் அவ்வுருவிலிருந்து பிரிந்தவுடன் அவ்வுருவுக்குண்டான ஆவியான அமில குணங்கள் நற்குணங்கள் எல்லாம் ஆவியான நிலையில் திடப்பட்டுப் பல உன்னத சக்தி கொண்ட பல கனிவளங்கள் இப்பூமியில் தோன்றிட… கலிக்குப் பிறகு கல்கியில் செயல் கொள்ள உதவுகின்றது.

அப்பொழுது அக்கல்கியில் எந்நிலை கொண்ட தன்மையில் உயிரணு வெளிப்பட்டதோ அதன் சக்தி இப்பூமியில் கல்கியில் உருவாக்கும் உயிர்த் துடிப்பின் உன்னத சக்தியில் அவ்வுயிரணுவின் உருவ ஜொலிப்பு இருந்திடும்.

இவ்வுலகம் முழுமைக்கும் இன்றுள்ள உண்மையின் உயிர் ஜீவ நற்சக்திகள் அதிகம். கடலும் மலையும் மடுவும் எல்லாமே. ஜீவத் துடிப்புள்ள சக்திதான்.
1.இத்தீய எண்ணங்களும் தீய செயலும் புரிவதெல்லாம் மனித ஆத்மாக்களின் தொடர் தான்.
2.மனிதனிலிருந்து சென்ற சென்ற மிருகங்களும் சில உள்ளன.
3.இம்மாற்றத்தினால் இத்தீய சக்திகள் மாறப் போகின்றன.

எத்தீய சக்தியும் கல்கிக்கு மருந்தாகச் செல்கின்றது. எந்த நிலையில்?

இப்பொழுது எப்படி இக்காற்றில் உள்ள விஷத்தன்மையை சில விஷச் செடிகள் தன்னுள் ஈர்த்துக் கொண்டு இக்காற்றை சுத்தம் ஆக்குகின்றனவோ அதைப் போல் பல நிலைகளை இன்றுள்ள தீய குணங்களும் இம்மாற்றத்தினால் வளர்ச்சிப் பெறப் போகின்றன கல்கியில்.

இவ்விஷமான காற்று எங்கு செல்லும்…?

இவ்வுலகம் மாற்றம் பெற்றால் எல்லாமே ஆவி நிலையாகி அமில குணப்பட்டு திடப்பட்டு ஒன்றுடன் உராய்ந்து வளர்ந்து கொண்டே தான் உள்ளது. தீய சக்தியையும் அழிக்க முடியாது… நற்சக்திகளையும் அழிக்க முடியாது.

இம்மாற்றத்தினால்…
1.இவ்வுலகத்துடன் கலந்துள்ள காற்று மண்டலத்தின் கரியமில வாயுவின் விஷச் சக்தி
2.இவ்வுலகின் இயற்கைத் தன்மையினால் இவ்வுலகம் மாறும் தருவாயில்
3.இவ் இயற்கைக் குணத்தில் இருந்து வெளிப்படும் ஆவியான அமில சக்தி அதிகப்பட்டு அதன் திடத்தினால்
4.இக்காற்று உலகத்தின் இன்று சுழன்றுள்ள தீய விஷமான அமிலக் குணத்தை இந்நற்சக்திகளின் அமில குணங்கள் மோதுண்ட பொழுது
5.சுழன்று கொண்டுள்ள இக்காற்று மண்டலத் தன்மை மேல் நோக்கி இப்பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் சென்று விடுகின்றது.

இப்பூமியில் ஈர்ப்பின் காற்று குண அமில நிலைக்கு மேல் இத்தீய சக்தி பல நூறு மைல்களுக்கு மேல் நோக்கி உயர்ந்தும் சக்தி பெற்று… பால்வெளி மண்டலத்துடன் பல திசைகளில் பரவி விடுகின்றது. அதன் தொடரில் அந்தந்த குண நிலைக்கொப்ப உள்ள மண்டலங்களில் இந்நிலை சேர்த்து விடுகின்றது.

ஒரு நிலையில் சுழன்று கொண்டுள்ள இச்சக்தி நிலையே பிரிந்து செல்லும் பொழுது அதன் தன்மையிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

கடும் விஷமான வைரம் எப்படி ஜொலிக்கின்றது…? அப்படித்தான் இம்மாற்றத்தினால் பல உன்னதத் தன்மைகள் நிகழப் போகின்றன.
1.இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் புனிதப்படும் பொழுது
2.இப்பூமியில் வளரும் ஜீவனின் நிலை எந்நிலை கொண்ட புனிதத்தன்மை பெறும்…? இதனை உணர்ந்து செயல் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் காட்டிய நிலையில் இந்து என்றோ முஸ்லீம் என்றோ கிறிஸ்தவர் என்றோ எதுவுமே கிடையாது.
1.உணர்வுக்கொப்ப உணர்ச்சியும்
2.உணர்ச்சிக்கொப்ப அதன் இயக்கமும் என்ற நிலைகள் தான் ஞானிகளால் காட்டப்பட்டது.

எங்களுக்கு ஆண்டவன் இப்படிச் சொல்லி இருக்கின்றார் என்று ஒரு மதத்தின் சாரார் சொல்கின்றார்கள். அதை அவர்கள் பதிவு செய்கின்றார்கள்.

இன்னொரு சாரார் எங்களுக்குக் கடவுள் இப்படிச் சொல்கிறார் என்று சொல்கின்றார்கள். அந்த உணர்வை எடுத்துக் கொண்டபின் இந்த உணர்வுக்கும் அந்த உணர்வுக்கும் ஒத்துக் கொள்ளாது.

கர்த்தர் வான்வீதியிலிருந்து கொண்டு வந்தார் என்று சொல்கின்றார்கள். ஞானிகள் சொன்ன உண்மையின் வழிப்படி கர்த்தர் என்றால் “நமது உயிரே கர்த்தராக இருக்கின்றது…” நாம் எண்ணிய வழிப்படி அது இயக்குகின்றது.

இன்னொரு சாரார் “ஆண்டவா…” என்று சொல்கின்றார்கள். நம்மை ஆள்வது யார்…?
1.எதனின் உணர்வை எடுத்தோமோ அது உடலாக மாறுகின்றது
2.அதை ஆள்வது யார்…? நம் உயிர் தான்.
3.உள் நின்று இயக்கும் சக்தி உடலை உருவாக்குவது கடவுள்.
4.உருவாக்குவதால் அவனுக்குப் பெயர் ஈஸ்வரா… என்று சொல்கின்றோம்.

உருவாக்கிய உணர்வுகள் கொண்டு நம்மை ஆளும் ஆண்டவனாக உயிர் இருக்கின்றான். அவன் தான்… நாம் எண்ணிய உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை இறையாக்குகின்றான்.
1.இறையின் உணர்வு உடலாகின்றது
2.இந்த உணர்வின் இயக்கம் செயலாக மாறுகிறது… தெய்வம் ஆகின்றது…! என்று
3.அகஸ்தியன் இதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்… இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை எல்லாம் உங்களுக்கு இடையில் இடையில் இணைத்துக் கொடுக்கின்றோம். அடுத்து உபதேசம் கொடுக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால்… தெளிவாக ஒன்று போல நீங்கள் உண்மைகளை உணர முடியும்.

உதாரணமாக காரின் உறுப்புகளைத் தனித்தனியாகச் செய்து எடுத்து வைத்திருந்தாலும் இது இன்னது தான் செய்யும்… இது இன்னதுதான் செய்யும்… என்று அது எல்லாவற்றையும் சேர்த்து இணைத்து வந்த பிற்பாடு அதனதன் வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறது. கார் முழுமையாகிறது.

அதே போன்று இங்கே நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்றால் மைக் இருக்கின்றது. அது ஒன்றோடு ஒன்று இணைத்து ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்கின்றது. அப்படிப்பட்ட இடத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் கரா…புரா… என்று சப்தம் போடும்.

அதைப் போன்றுதான் இயற்கையின் உண்மை நிலைகளை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம். அந்த இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்…?

1.தெய்வத்தை நாங்கள் இப்படி எல்லாம் கும்பிட்டு வந்தோம்.
2.ஆனால் இவர் இப்படிச் சொல்கிறாரே…! என்று எண்ணினால் கரா… புரா… ஆகிவிடும்.

விநாயகரை எப்படி எல்லாம் நாம் கும்பிட்டோம்…! களிமண்ணால் செய்து வைத்த விநாயகரைக் கரைத்தோமே. எல்லாமே நன்றாக இருந்தது. ஆனால் சாமி இப்படிச் சொல்கிறார்… என்று
1.இரண்டையும் கிராஸ் (இடைமறித்து) செய்து கொண்டிருந்தால்
2.நான் சொல்வதை நீங்கள் கிராஸ் செய்து கொண்டே இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்
3.கரா… புரா… என்று கடைசியில் எதுவுமே அர்த்தமே ஆகாது.

ஆகவே…
1.யாம் உபதேசிப்பதை முதலில் பதிவு (ரெக்கார்ட்) செய்து கொள்ள வேண்டும்
2.பதிவு செய்த பிற்பாடு அப்புறம் வாழ்க்கையில் எது எப்படி இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ள முடியும்.

கரா..புரா… பண்ண விடாதபடி யாம் சொல்வதை அப்படியே கிரகித்துக் கொண்டு வாருங்கள். ரெக்கார்ட் ஆகிக் கொண்டே இருக்கும்
1.அதற்கு அப்புறம் உங்கள் உடலில் இருக்கக்கூடிய நிலைகள்
2.வாழ்க்கையில் ஒவ்வொன்றும் அது எப்படி வந்தது…? என்று எண்ணிப் பார்த்தீர்கள் என்றால்
3.இது நல்லது… இது கெட்டது… என்று அறிய முடியும்
4.உங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன்.

காரணம் இயற்கை எப்படி வளர்ந்தது…? நாம் எப்படி மனிதனாக வந்துள்ளோம்…? இனி அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்வது.

தீமை செய்யும் உணர்வுகளை நம் ஆன்மாவிலிருந்து “ஒரு சாணுக்கு வெளியே” தள்ளிப் பழகுதல் வேண்டும்

 

வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இவை எல்லாவற்றையும் இராமாயணத்தில் வாலியாகக் காட்டுகிறார்கள்… வலிமை மிக்க சக்தி.

அந்த வாலியை இராமன் என்ன செய்தான்…?

1.குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் அடித்து அதை மூடுகின்றான்…
2.வாலியினால் வெளியே வர முடியவில்லை. அவன் திறமைகளைக் காட்ட முடியவில்லை.

ஏனென்றால் வாலி யாரைப் பார்த்தாலும் அவருடைய வலிமையை நுகர்ந்து எல்லாவற்றையும் அடக்கி விடுவான். அவன் நிலைக்குத்தான் நாம் போக வேண்டும் என்பதற்காக “அதை மாற்றியமைக்கும் நிலைக்கு” இதைச் சொல்கின்றார்கள்.

தெளிவாக ரூபமாக்கிக் காவியம் படைத்து இந்த உணர்வை நாம் எண்ணினால் சீதாராமா. இராமன் என்ன செய்கின்றான்…?
1.கெட்டதைப் பார்க்கவில்லை… அதை மூடி விடுகின்றான்.
2.உடலில் உள்ள கெட்ட அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை அது வாடுகின்றது.

இதைப்போல் நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.நம் தலைக்கு மேல் இருப்பதை… பாறை மாதிரி இருப்பது தான் துருவ நட்சத்திரம்
2.அந்த உணர்வை எடுத்து நினைத்து இங்கே புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.

காலையிலிருந்து நாம் எத்தனை பேரைப் பார்க்கின்றோம். எல்லாம் இந்த வழியில் தான் உள்ளே செல்ல வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இங்கே வலுவாகச் சேர்த்துக் கொண்ட பிற்பாடு அதற்கடுத்து கண்ணின் நினைவு உடலுக்குள் செலுத்தி…
1.உடலில் எத்தனை கோடி குணங்கள் உண்டோ அத்தனை குணங்களுக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.பேரொளியாக மாற வேண்டும் என்று நாம் எண்ணங்களைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

இதைத்தான் கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது கண்ணின் நினைவை உடலில் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் அந்த அணுக்களுக்கு உள்ளே நினைவு செலுத்தி தீமைகளை நிறுத்திப் பழகுதல் வேண்டும்.

அப்போது அதை மறைத்துக் கொள்கின்றது. இந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உள்ளே அணுக்கள் இழுக்கக்கூடியது… அதாவது வேதனைப்படுத்துவது கோபப்படுத்துவதோ சஞ்சலப்படுத்துவது பொறாமைப்படுத்துவது என்னை இப்படி பேசினானே என்ற எண்ணங்கள் கொண்ட உணர்வின் அணுக்களை நிறுத்தி விடுகின்றோம்.

அருள் உணர்வைக் கூட்டக் கூட்ட அது வலுப் பெறுகிறது.
1.உயிர் வழி தான் எல்லாமே உள்ளே செல்ல வேண்டும்
2.ஆனால் அங்கே துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் போட்டு நாம் அடைத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்வை வலுப்படுத்துகின்றோம்… அது வலுவான பிற்பாடு மற்றதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

வேப்பமரம் பக்கம் ரோஜாப்பூ மணம் சென்றால் விடுமா…? ரோஜாச் செடியின் அருகிலே வேப்பமரம் மணம் சென்றால் விடுமா…?

இதைப் போன்று அருள் உணர்வின் வலிமையை நாம் அதிகமாக்கிக் கொள்கின்றோம். அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் சேர்த்தவுடனே இங்கே அடைத்து விடுகின்றோம்.

உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களுக்குச் சாப்பாடு இல்லை.
1.இந்த உணர்வின் வலுத்தன்மை ஆகி அழுத்தமான பின் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி வருகிறது.
2.தள்ளும் போது ஒரு சாணுக்கு மேலே ஆன்மாவிலிருந்து விலக்கி விட்டால் சூரியன் இழுத்துக் கொண்டு சென்று விடுகிறது.
3.நம் ஆன்மா தூய்மையாகின்றது.

இந்த பழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் கொண்டு வருதல் வேண்டும்.

மற்றவர்கள் நிலையை… உயர்வு கொண்டும் தாழ்வு கொண்டும் எண்ணிடலாகாது

 

ஞான ஒளி பெறும் பக்குவத்திலும் ஒருவரைப் போல் ஒருவர் நிலை இருந்திடாது. ஒவ்வொரு உடல் அமில குண வளர்ச்சியைக் கொண்ட பக்குவ மேம்பாட்டில் வித்திடும் ஞான வளர்ச்சி தான் அதன் வழித் தொடர் பெறும்.

ஒன்றை ஒத்த விதை நெல்லை இரண்டு தோட்டக்காரர்கள் அவரவர்கள் ஊரில் பயிர் செய்தாலும் அம்மண் நீர் அங்குள்ள சீதோஷ்ண நிலை அதைப் பயிர் செய்யும் மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் வளர்ப்பு முறை இவை கொண்டுதான் அப்பயிர் வளர்ந்து பலன் தரும்.

ஒரு தோட்டத்தில் வளர்ந்த விதை நெல்லையே மாறு கொண்ட ஊரில் பயிர் செய்யும் பொழுது அதன் மகசூலும் சுவையும் வேறு கொண்டுதான் அமைகின்றது. அதைப் போல்
1.ஞானத்தின் ஈர்ப்பும் அதை ஈர்த்துச் செயலாக்கும் முறைப்படித் தான்
2.நம் ஞான ஒளியும் பிரகாசிக்கும்.

ஒருவர் நிலையை வைத்து மற்றவர்கள் நிலையை உயர்வு கொண்டும் தாழ்வு கொண்டும் எண்ணிடலாகாது.

எல்லோரும் (ஞானத்தின் வழித்தொடர் பெற்றவர்கள்) தான் பெற்ற ஞான வளர்ச்சியின் முக்தி நிலை கொண்ட பிறகு… தனித்தனி ஒளிகளாக வளர்ச்சி கொண்ட ஞான ஒளி எல்லாம்… சப்தரிஷிகள் போன்றோரின் நிலை பெற்ற பிறகும் அவரின் வளர்ச்சி நிலை பெற்ற அமில குணத்தின் வட்டச் செயலில் தான் செயல்படுகின்றார்.

1.எல்லோரும் பக்தி கொண்டு வணங்குவதும்… ஒன்றை வைத்து ஒன்று இல்லை
2.ஞான வளர்ச்சி பெறும் நிலையிலும்… ஒன்றை ஒத்த நிலையில் ஒன்று இல்லை.
3.சப்தரிஷியாய் நிலைக்கப் பெற்ற நிலையிலும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை
4.மண்டலங்களாய் உருளும் மண்டலங்களும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை.

ஆனால் ஒன்றின் சக்தி கொண்டு ஒன்றி வாழும் இவ்வெல்லாமில் எல்லாமுமே ஒன்றே சக்தியாக ஆதி சக்தி ஒன்றி உள்ளாள் என்பதனை உணர்ந்து…
1.எவ் ஆத்மாவையும் குறை கண்டும் சலித்தும் வாழாமல்
2.நம் நிலையில் ஏற்பட்டுள்ள அமில குணத்தின் சக்தியின் வீரிய நிலையை
3.எவ்வழியில் அதிகமாகப் பெற்று வழி பெற்றோமோ அதன் வளர்ச்சியில் ஞானத்தை வழிப்படுத்துங்கள்.

நம் முன்னோரின் கூற்றுப்படி விதைத்த விதைத்தானே முளைக்கும் என்பதனை உணர்ந்து ஞானத்தின் வழித்தொடர் பெறுங்கள்.

காட்சி;-
சில கனிகளைப் பறித்து அப்படியே உண்ணுகின்றோம். சில கனிகளைத் தோல் நீக்கப்பட்டு உண்ணுகின்றோம். பலாப்பழம் போன்ற கனிக்கு அதன் முள்ளை அகற்றி அதற்குள் இருக்கும் சதைப் பகுதிகளைப் பிரித்துச் சுவையான பலாச்சுளையை எடுத்து கொட்டை நீக்கித்தான் உண்ணுகின்றோம்.

நம் முன்னோர்களால் “முக்கனியின் சுவையை எடுத்து” என்ற சொல் நாமத்தின் அமுதிசையைக் கேட்டு மகிழ்ந்துள்ளோம். முக்கனியை வைத்து வணங்குகின்றோம்.

மாங்கனியை அப்படியே கடித்துச் சுவைத்து உண்டு அதன் கொட்டையை வீசிவிடுகின்றோம். வாழைப்பழத்தின் தோலை நீக்கி அதை அப்படியே சுவைக்கின்றோம். பலாச்சுளையை எடுக்கப் பல வேலைகளைச் செய்துதான் உண்ண முடிகின்றது.

இதன் உருவ நிலை என்ன…?

விளக்கம்;-
முக்கனிக்கும் சுவை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்குவ நிலை கொண்டு தான் அதனை நாம் உண்ண முடிகின்றது.

அதைப்போல் நம் ஆத்ம ஞானத்தை இவ்வழித்தொடர் எல்லாம் பெறும் நிலைப்படுத்தி
1.மாங்கனியை ஒத்த பூஜை வழிபாட்டைப் பக்தியில் சுவைத்து மற்றவற்றைக் கொட்டையைப் போல் அகற்றி
2.நம் எண்ணத்தைச் சுற்றியுள்ள உலக நிலைகளை வாழைப்பழத்தின் தோலைப் போல் நீக்கி ஞான வழி போல் பழத்தை உண்டு
3.நம்முள் கலந்துள்ள பல அணுக்களின் முட்களை நீக்கிச் சதையான நிலையை எண்ணாமல் நம்முள்ள சுவையான சுளையைச் சுவைத்திட
4.கொட்டை என்ற எதிர்நிலையை நீக்கி சுவைத்திடல் வேண்டும் என்ற பக்குவத்தை உணர்த்த முக்கனியைப் படைத்தார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் உங்களை அறியாது தீமைகளைச் சந்திக்கும் நேரங்கள் எல்லாம் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் அறியாது வந்த தீமைகள் நீங்க வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று எண்ணி
4.ஒவ்வொரு நொடியிலும் நம்மை அறியாது உட்புகுந்த தீமைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் ஆத்ம சுத்தி என்ற நிலை ஆகின்றது. அருள் ஞானியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்குகிறது.

ஆகவே இந்த மனிதப் பிறவியில் நல்லதை வளர்க்கும் நிலைகள் பெற்ற நாம் அடுத்து இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே சென்றால் கல்கி அவதாரம் என்ற நிலையை அடைய வேண்டும். கல்கி என்பது ஒளிச் சரீரம்.

1.எந்த மனிதனின் ஈர்ப்புக்கும் எந்த மிருகத்தின் ஈர்ப்புக்கும் செல்லாது
2.மெய் ஒளி செல்லும் பாதைகளில் நீங்கள் ஒவ்வொருவரும் சென்று
3.என்றும் பதினாறு என்ற ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பது.

உடலை விட்டுச் சென்றால் எவரின் உடலும் நம்மை ஈர்த்திடாது எவரின் உடலுக்குள்ளும் நாம் சிக்க மாட்டோம். எதிலுமே நாம் சிக்காது அந்த அருள் ஞானியின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று பிறவா நிலை என்னும் அழியா ஒளி சரீரமாக பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம்.

அதை நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் பிரார்த்திக்கிறேன்… உங்களை ஆசீர்வதிக்கின்றேன் (ஞானகுரு).

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற வேண்டும்… நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்… அவர்கள் தொழில்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்…! என்ற எண்ணத்துடன் எம்மை அணுகினால் யாம் கொடுக்கும் ஆசீர்வாதம் நல்ல பலனைத் தரும்.

தீய உணர்வுகள் உங்களுக்குள் அடங்கி நிற்க வேண்டும் என்ற நிலையிலே தான் அருள் வாக்குகளை உங்களைப் பார்த்து ஆசியாகக் கொடுக்கின்றோம்.

1.ஆகவே ஆசி கொடுக்கும்போது சீராக நேராகப் பார்க்க வேண்டும்.
2.என் (ஞானகுரு) கையில் ஆசீர்வதிக்கும் போது இந்தக் கையிலிருந்து வெளிப்படும் உணர்வை நீங்கள் சுவாசிக்க நேர்கிறது.
3.அப்போது தீயது விளையாது தடுத்து நிறுத்த உதவும்

அந்த அருள் ஞானியின் சக்திகளை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் எடுத்தால் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் அடிபணிகின்றது.

அதே சமயத்தில்
1.ஞானிகள் உணர்வுகள் மிகச் சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் வளர்ந்து
2.உங்கள் சொல்லும் உங்கள் உடலிலிருந்து வரக்கூடிய மணமும்
3.பிறிதொருவர் உங்களைப் பார்க்கும் போது இந்த உணர்வுகள் அவர் உடலிலே ஊடுருவி
4.உங்களுக்கு நண்பனாகவும் உதவி செய்வதாகவும் அமைந்து
5.பகைமையை நீக்கிடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
6.பகைமையற்ற நிலைகள் கொண்டு மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிலையில் வாழ முடியும்.

ஆகவே…
1.இந்த மனித வாழ்க்கையில் வரும் தீயவினைகள் எதுவானாலும் அது சந்தர்ப்பத்தால் ஏற்படுவது தான்.
2.மனிதனான நாம் அருள் ஞானியின் நிலையை இப்போது நமக்குள் சேர்ப்பதும் ஒரு சந்தர்ப்பம் தான்.

நாம் வாழ்க்கையில் பிறர் சண்டையிடும் போது நாம் அதைக் கூர்ந்து கவனிப்போம் என்றால் அந்தச் சந்தர்ப்பம் நமக்குள் சண்டையை ஊட்டும் உணர்வாக விளைந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு அதைக் கடந்து சென்ற அந்த ஞானிகள் உணர்வுகள் தீமையற்ற உணர்வாக நமக்குள் விளைய வைத்து அகப்பொருளையும் புறப்பொருளையும் நாம் தெரிந்துணர்தல் வேண்டும்.

அப்படி உணரும் உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பெரு வீடு பெரு நிலைகள் அடைந்து என்றும் அழியா ஒளி சரீரத்தைப் பெறும் நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

வேக வைக்காது பச்சையாகச் சாப்பிடுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது

 

சில சாமியார்கள் என்ன சொல்வார்கள்…? என்றால்
1.நான் வேக வைத்து மட்டும் எதையும் சாப்பிடுவதில்லை.
2.அப்படியே பச்சையாகத் தான் சாப்பிடுவேன் என்று சொல்வார்கள்.

பச்சையாகச் சாப்பிட்ட பின் பாருங்கள். கத்திரிக்காயோ முள்ளங்கியோ வெண்டைக்காயோ வெங்காயத்தையோ சாப்பிட்டவர்கள் அருகிலே சென்றோம் என்றால் அதனதன் வாசனை அவர் உடலில் இருந்து நிச்சயம் வரும்.

ஆடு மாடுகள் எல்லாம் என்ன செய்கின்றது…? எந்தத் தழைத் தாம்புகளைத் தின்னுகின்றதோ அதனின் உடலில் அந்தத் தழையின் வாசனை தான் வரும்

செம்மறி ஆட்டுக்கறியைச் சமைத்தால் வெள்ளாட்டுக் கறி மாதிரி வாசனை வராது. மானையும் வெள்ளாட்டுக் கறியும் சமைத்தால் தழைத் தாம்பு வாசனை வரும்.

மனிதனாக இருப்பவர்கள் வேக வைக்காது காய் கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டால் அதனதன் வாசனை தான் உடலில் வரும்
1.இந்த வாசனையுடன் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா இன்னொரு மனித உடலுக்குள் செல்லாது
2.நேராக… அந்த மாடு ஆடுகள் எதையெல்லாம் சாப்பிட்டதோ அதைச் சாப்பிட்டுப் பழகியிருந்தால் அங்கே தான் செல்லும்.
3.நீ அதிலே சென்று பிற என்று உயிர் அழைத்துச் சென்றுவிடும்.
4.அந்த உணர்வுக்குத்தக்க ஆடாக மாற்றிவிடும்

ஆட்டுக்கறியைச் சாப்பிட்டாலும் அந்த ருசி வரப்படும் பொழுது அதைச் சாப்பிட வேண்டும்… அதைச் சாப்பிட வேண்டும்… என்ற எண்ணம் வரும்.

இந்த உணர்வு இங்கே கலந்த பிற்பாடு ஆடு மேய்ந்து கொண்டிருந்தால் ஆட்டின் ஈர்ப்புக்குள் சென்று விடும். கோழிக்கறியை விரும்பிச் சாப்பிட்டிருந்தால் கோழி மேய்ந்து கொண்டிருந்தால்… உயிர் அங்கே தான் நம்மை கொண்டு போய்ச் செலுத்தும்.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாக இயக்கப்பட்டு நாம் அதுவாகத்தான் மாறும் நிலையை உருவாக்குகின்றோம்.

தவறாகச் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
1.நான் (ஞானகுரு) யாரையும் மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை
2.சாப்பிட்டால் இந்த மாதிரி தான் உயிர் அழைத்துச் செல்லும் என்று ஒரு காட்டிய வழியில் உணர்த்துகின்றேன்.

அதைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றால் இதை வென்றவன் துருவ மகரிஷி. அகஸ்தியனாக இருக்கும் பொழுது நஞ்சினை வேன்றான். அவன் துருவனாகித் துருவ மகரிஷி ஆனான். ஆகவே
1.அகஸ்தியன் வழியினை நாம் பின்பற்றினால் தீமைகளை நீக்கலாம்.
2.நமது ஞானிகள் நமக்கு இதைத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

“ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற” உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்

 

வாழ்க்கை என்ற நிலை… அமைதியுடன் செல்லல் வேண்டும். அதுதான் வாழ்க்கையின் முழுமை. ஒருநிலை கொண்ட ஆண்டவனின் ஜெபத்தை மட்டும் ஜெபித்தே ஆண்டவன்பால் செல்வதல்ல வாழ்க்கை. ஒரு நிலை கொள்ள வேண்டும். ஆண்டவனிடம் சென்று ஐக்கியப்பட வேண்டும்.

எங்குள்ளானப்பா நீங்கள் சொல்லும் ஆண்டவன்…?

1.ஒன்றுடன் ஒன்று இணைத்ததுதான் ஆதிசக்தியின் நிலையே
2.காற்றும் நீரும் மோதுண்டால் ஒளி பிறக்கின்றது
3.ஒலியும் ஒளியும் மோதுண்டால் ஜீவன் பிறக்கின்றது
4.ஜீவன் பிறக்கவே இவ் ஒலி நீர் ஒளி ஏறிய பிறகுதான் அஜ்ஜீவனுக்கு சுவாசத் துடிப்பு கொள்ளுகின்றது.
5.சுவாசத் துடிப்பு பெற்றவுடன் அமில குணத்தை அஜ்ஜீவ அணு
6.தன்னுள் மோதுண்டு மோதுண்டு ஈர்க்கும் பக்குவம் பெற்றுச் சுழலுகின்றது.

இப்படியே அதன் ஈர்ப்பின் நிலைக்கொப்ப அது சேமித்த அமில குணத்தின் நிலைக்கொப்பை இப்பூமியில் மோதுண்டு அதன் வளர்ச்சி நிலைக்கு அதன் ஈர்ப்பிற்கொப்ப அதன் சுவாசத்திற்கேற்ற வழித்தொடர் பெறுகின்றது.

எவ்வுயிர் அணு தோன்றி அதன் குண நிலை பெறுவதும் ஒன்றுடன் ஒன்று மோதாத நிலையில் ஜீவனே பெறாது. இரண்டு நிலைகள் கொண்ட நிலையின் மோதலில் மூன்றாகி நான்காகி பலவாகிச் சுழலுவதுதான் ஒவ்வொரு மண்டலமும் மண்டலத்தில் சிக்கியுள்ள எல்லா ஜீவன்களும்.

1.தனித்த ஆண்டவன் எங்குள்ளான்…?
2.அமைதி கொண்ட ஒருநிலை கொண்ட ஆண்டவன் ஜெபம் பெற்று செல்லும் நிலை எதுவப்பா…?
3.முடிவே இல்லாத உண்மையின் ஒளிர் தத்துவ அடக்கமே. இச்சுழலில் தான் உள்ளது.

மோதுண்ட சுழற்சியில் ஜீவன் கொண்ட வளர்ச்சியில் வடிவுகளாகி வழங்கும் மண்டல வளர்ச்சி… “ஜீவ ஆத்மாக்களே…”
1.தனித்த ஆண்டவன் இல்லையப்பா
2.எல்லாமில் எல்லாமாய் ஒளிரும் ஆண்டவன்தான்.

ஞானவழி பெற்றவர்களுக்கு:-
காட்சி:-
ஆட்டுக்கல்லில் அரிசியைப் போட்டு ஆட்டுவதைப் போலவும் ஆட்டும் நிலையில் ஒரே மாதிரி ஆட்டி வந்த நிலையில் ஒரு கல் சிக்குண்டவுடன் ஒலி கிளம்பி “நர நரத்த நிலையுடன்” மீண்டும் முதல் நிலையிலேயே அம்மாவு அரைபடும் பக்குவத்தைக் காட்டுகின்றார்.

விளக்கம்:-
1.ஞானத்தின் வழி பெற்று நாம் சென்றாலும் நம்மை அறியாமல் சில ஊடுருவல்கள் வந்து மோதும்
2.மோதலின் நிலைக்காக நாம் நம் ஞானத்தைச் சஞ்சலப்படுத்தாமல்
3.சுழலும் பொழுது மோதிய நிலையும் நம் ஞானத்துடனே கலந்து தனித்து நிற்காமல்
4.நம் ஞானவழி மீண்டும் செயல் கொள்ளும்.

காட்சி:-
பெரிய ஆலமரம்… அதற்கு அருகில் அடுப்பெரித்து உலை வைத்துச் சமையல் செய்கிறார்கள். அதே சமயத்தில் மற்றோர் இடத்தில் சிறிய ஒரு செடி பகலின் சூரியனின் நேர் உஷ்ணத்தைத் தாங்காமல் வாடி வதங்கி நிற்கின்றது.

விளக்கம்:-
ஆரம்ப ஞானவழிக்குச் சூரியனின் வெப்ப நிலையையே தாக்குப் பெறாத சிறிய செடியின் நிலையில் நாம் இருந்தாலும் ஆலமரத்தின் நிலைக்கொப்ப நம் ஞானத்தின் விழுதுகளை வளர்த்துக் கொண்டால் ஆலமரத்தைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் சூரியனின் இயற்கை ஒளியைக் காட்டிலும் செயற்கையாய் எரிக்கப்படும் இவ் ஏரிகள் ஆலமரத்தை எந்த நிலையிலும் தாக்குவதில்லை.

ஆலமரம் மட்டுமல்ல வளர்ந்த எம்மரமும் தான். அதைப் போல்
1.தன் நிலையில் உயர்ந்த ஞான வழி பெற்ற ஞானிகளை எந்நிலை கொண்ட சஞ்சலங்களோ மற்ற எதிர்படும் எல்லா நிலைகளும்
2.நன்மை தீமை கொண்ட இரண்டு நிலைகளும் அந்த ஞானியின் நிலையில் ஒட்டாமல் அவர் ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கும்.

காட்சி:-
நிலத்திலிருந்து ஓர் ஆத்மலிங்கம் வளர்ந்து வருகிறது. அவ்விலிங்கமே ஓர் மரமாக சப்தரிஷியைப் போல் காட்சியளித்து மேடான நிலையில் நின்று கொண்டு அவர் கையிலிருந்து ஓர் ஒளியான லிங்கத்தைக் காட்டி நிற்கின்றனர்.

மேடான இடத்திற்கு கீழ் பலர் நின்று கொண்டு அவரால் யாருக்கு அவ் ஒளி லிங்கம் அளிக்கப்படும் என்று பலரும் கையேந்தி வேண்டி நிற்கின்றனர்.

இவரோ அவ்வொளி லிங்கத்தை மேலும் கீழும் ஆட்டி ஆட்டி அவ்வொளியைப் பாய்ச்சிக் கொண்டே தான் உள்ளாரேயன்றி “யாருக்கும் தனித்து அவ்வொளி லிங்கம் அளிக்கப்படவில்லை…!”

ஆனால்
1.அவர் உருட்டிய ஒளி அலைகள் பாயப் பெற்ற அவ்வொளியை ஈர்த்து
2.தன் ஒளியை அவ் ஒளியுடன் கலக்கும் நிலைப்படுத்திய ஒளி ஆத்மாக்கள் எல்லாம் அவ் லிங்க ஆத்மாவிடம் சென்று ஐக்கியப்படுகின்றன.
3.மீண்டும் அவர் கையிலிருந்த அவ்வொளியான லிங்கம் முதலில் வீசிய ஒளியைக் காட்டிலும் அதிக ஒளி பரப்பிக் கொண்டே உள்ளது.

அவ்விலிங்கமே கிடைக்கும் என்று கையேந்தி நிற்பவர்கள் நின்று கொண்டே தான் இருக்கிறார்கள். அச்சப்த மகரிஷியும் தான் பெற்ற அவ்வொளி லிங்கத்தைச் சிரித்துக் கொண்டே வளர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்.

விளக்கம்:
ஆண்டவன் அருள் என்பது ஆண்டவனாய் நமக்களிப்பதல்ல. ஆண்டவன் ஒளி வடிவில் எல்லாமில் எல்லாமாய் ஒன்றுபோல் தான் ஒளி வீசுகின்றான்.

1.அவ்வொளி அருளை நாம் பெற்று அவ்வொளியுடன் ஒன்றும் ஒளியாய்த் தான் நம் செயல் இருக்க வேண்டுமே அன்றி
2.ஆண்டவனே வந்து நமக்கு அளிக்கட்டும் என்றால்… ஏங்கி நிற்கும் நாள் வரை காத்துத்தான் இருக்க வேண்டும்.
3.ஏனென்றால் எவ்வளவு காலங்கள் காத்திருந்தாலும் “அவ்வொளியை ஆண்டவனே வந்து நமக்கு அருளப் போவதில்லை”

“அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியப்படுவது தான்” ஞான ஒளி பெறும் ஆண்டவனின் அருள் சக்தி. அவன் ஒளியுடன் நம் ஒளி கலக்கப் பெற்றால் நம் ஒளியைக் கொண்டு பலருக்கு ஒளி பரப்பலாம்.

இதன் நிலையைப் புரிந்து
1.ஆண்டவன் அருளை வேண்டி நிற்காமல்
2.ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சில குடும்பங்களில் தன் பெண்ணிற்கு அந்தந்தக் காலத்தில் திருமணம் நடக்கவில்லை என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
1.அடிக்கடி வீட்டிற்கு வந்து பெண்ணை விசாரித்துக் கேட்டு விட்டு அல்லது
2.பெண்ணைப் பார்த்து விட்டுச் செல்கின்றார்கள் என்று வேதனைப்படுவோர் உண்டு.

அத்தகைய வேதனையான உணர்வுகள் ஆன்மாவில் சேரும் பொழுது அதை மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்திக் கொண்டால் இது “பிராணாயாமம்…”

பிராணாயாமம் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வளரச் செய்து நம் உடலிலிருந்து வெளி வரும் அந்த அருள் சக்திகளை வைத்துக் “குழந்தைக்குத் திருமணம் ஆகவில்லையே…” என்று வேதனைப்பட்ட இந்த உணர்வைப் பிளக்க வேண்டும்.

1.மகரிஷிகளின் அருளால் சீக்கிரம் என் குழந்தைக்குத் திருமணமாக வேண்டும்
2.எந்தக் குடும்பத்திற்கு என் பெண் திருமணமாகிச் சென்றாலும் அந்தக் குடும்பம் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்
3.அருள் வழியில் ஆனந்தமான வாழ்க்கை அங்கே வாழ வேண்டும்
3.அத்தகைய அருள் சக்தி என் பெண்ணிற்குக் கிடைக்க வேண்டுமென்று தாய் தந்தையர்கள் எண்ண வேண்டும்.

ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலுக்குள் பெற வேண்டுமென்று எண்ணும்போது அப்போது நமது உயிர் நரநாராயணன் ஆகிறது.

அதாவது… நம் உயிரான நிலைகள் கொண்டு நரசிம்ம ரூபம் எடுத்து அந்த நஞ்சினைப் பிளந்துவிட்டுத் தன் குழந்தையின் எதிர்காலம் செழிப்புடன் இருக்க வேண்டுமென்று இந்த நினைவினைக் குழந்தை மேல் பாய்ச்சுதல் வேண்டும்.

இப்படிச் சிறிது நாளைக்குப் பாய்ச்சிப் பழகி விட்டால் அந்த குழந்தைக்கு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடப்பதைப் பார்க்கலாம்

அப்பொழுது நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் ஓ… என்று ஜீவன் பெறச் செய்து உங்கள் உடலுக்குள் அது ம்… என்று அணுவாக உருவாக்கத் தொடங்குகிறது.

இப்படி யாம் (ஞானகுரு) கொடுக்கும் அந்த அருள் வாக்கின் பிரகாரம் அந்த நல்லது நடக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளும் போது அந்த மணம் உங்கள் ஆன்மாவாக மாறுகிறது.

அடுத்தவர்கள் உங்களைப் பார்த்தவுடனே உங்கள் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் அந்த அருள் சக்திகளை இந்த அருள் உணர்வுகள் அவர்களுக்குப் பாயும்.

1.உங்கள் பெண் அது எவ்வளவு உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்… வாழ வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.இந்த உணர்வின் தன்மை பெண்ணைக் கேட்போரின் நிலைகள் அது புகுந்து
3.உங்கள் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்பி
4.அவர்கள் ஏங்கித் திருமணம் செய்து கொண்டு செல்வதைப் பார்க்கலாம்.

உங்கள் அனுபவத்தில் நிச்சயம் பார்க்கலாம்.

வேடிக்கையாகப் பார்த்தாலும்… சாப அலைகள் என்பது சாதாரணமானதல்ல

 

உதாரணமாக எல்லோருடனும் நாம் பழகுகின்றோம். ரொம்ப நெருங்கி ஒருவருக்கு உதவி செய்கின்றோம் அவர் குடும்பத்தில் கடுமையான சிக்கல்கள் வருகின்றது என்ன வாழ்க்கை…? என்று தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்தக் குடும்பம் எனக்கு இப்படிச் செய்தது… அது உருப்படுமா…? என்று இந்தச் சொல்களைச் சொல்கிறார். இந்த உணர்வலைகள் அவர்கள் உடலில் சாப அலைகளாக மாறுகின்றது.

எப்படி எல்லாம் இந்தக் குடும்பம் நாசமாக வேண்டும் என்று சொன்னாரோ… அந்த உணர்வுகள் எல்லாம் அங்கே பதிவாகி அந்தக் குடும்பத்தைச் சீரழிக்கின்றது.

இது போன்று சாப அலைகள் பட்ட குடும்பங்களை எல்லாம் பார்க்கலாம்
1.அதிகம் சம்பாதிப்பார்கள் கடைசியில் ஒன்றுமே இருக்காது
2.எதை எடுத்தாலும் எங்கே சென்றாலும் முட்டுக்கட்டையாக இருக்கும்… பல தொல்லைகளை அனுபவிப்பார்கள்.

ஒருவர் சாப அலைகளைச் சொல்லப்படும் போது “குடும்பம் நாசமாக வேண்டும்” என்று சொல்வதை நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் கூட அதை நுகர்கின்றோம்.

இப்படிச் சொல்கின்றார் என்று எண்ணும் பொழுது அதே சாப அலை நமக்குள் அணுவாகி அவன் சொன்ன முறைப்படி நம் உடலிலே தவறுகளாகி நமக்குள்ளும் பகைகள் வரும் “சும்மா பார்த்தாலும் கூட…”

ஒரு சாக்கடைத் தண்ணீரை அள்ளி வீசுகின்றார்கள்
1.அருகிலே நல்லவர் இருந்தாலும் அந்தச் சாக்கடை படாமல் இருக்குமா…?
2.கெட்டவன் மீது அள்ளி ஊற்றினாலும் அருகிலே நல்லவன் இருந்தால் அவன் மீதும் படத்தான் செய்யும்
3.இவன் உடலிலும் நாற்றம் ஆகும் அவன் உடலிலும் நாற்றம் ஆகும்.
4.சாக்கடை நல்லவன் என்று பார்க்குமா…? இல்லை…!

இந்தச் சாக்கடையைத் துடைக்கவில்லை என்றால் நாற்றம் இருக்கத்தானே செய்யும். இதைப் போன்று தான் நாம் நல்லவர்களாக இருந்து ஒருவன் சாபம் இடுவதை வேடிக்கையாகப் பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வு நமக்குள் பதிவாகி உள்ளது.

அவன் சாபம் இடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம் இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் சுழலத் தொடங்குகிறது நம் இரத்தங்களில் தேங்கி விடுகின்றது.

பின் அந்தச் சாப அலைகள்… அவன் ஒவ்வொரு நிமிடம் எப்படி கெட்டுப் போக வேண்டும் என்று சொன்ன உணர்ச்சிகள்… அந்த எண்ணம் தோன்றுகின்றது.
1.யாரைப் பார்த்தாலும் “நீ நாசமாகப் போ” என்று நாமும் சொல்ல ஆரம்பிப்போம்
2.தொலைந்து போறவனே என்று சொல்லும்படி வரும் நாசமாக போகட்டும் என்ற அந்த உணர்வுகளை ஊட்டி
3.அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி நம்மையும் அறியாமலேயே சாப அலைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

தெரிகின்றது நமக்கு கோபப்படுகின்றோம் சாபம் விடுகின்றோம் அவன் சாபம் விட்டான் என்று. நாமும் சாபம் இடுவோம் ஏன் இந்த மாதிரிச் சொல்கின்றாய்…? என்று நம்மைக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்…? அவன் செய்வது அப்படி…! என்று நம்மிடம் நல்லதைச் சொல்பவரிடமும் நாம் வம்புக்குத் தான் செல்வோம்.

ஏனென்றால் அந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது என்று தெரிகின்றது… அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்பதைத்தான் குரு வழியில் உங்களுக்குத் தொடர்ந்து உபதேசித்துக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

இப்படி நமது வாழ்க்கையில் அந்தச் சாப அலைகள் ஆனாலும் அந்த உணர்வுகள் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்குகின்றது… தேடிய செல்வத்தையும் பாதுகாக்க முடியவில்லை.

கல்வி கற்று விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்து எல்லாம் வளர்ச்சி இருக்கலாம் புதுப்புது பொருள்களையும் கண்டுபிடிக்கலாம்… செல்வத்தை அதிகமாகத் தேடக்கூடிய அந்தச் சக்தியும் இருக்கலாம்.

ஆனால் சாபம் இடுவோரைப் நல்ல குணம் கொண்டு பார்த்தபின் அந்த சாப அலையின் உணர்ச்சிகள் நல்ல அணுக்களில் சேர்ந்த பின் இதுவும் அந்த வேலையைச் செய்ய ஆரம்பிக்கும்.

1.நாம் தேடிய செல்வத்தையும் அடுத்து பார்க்க முடியாது
2.யாரோ ஏதோ செய்து விட்டார்கள் நாம் வளர்ந்து வருவது பொறுக்க முடியாமல் ஏதோ செய்து விட்டார்கள்
3.பொறாமையில் எனக்குச் செய்து விட்டார்கள் என்று தான் இந்த உணர்வுகள் அந்தச் சாப அலைக்கு ஜீவன் ஊட்டி
4.நமக்குள் “அந்தச் சாபத்தையும் நிறைவேற்றியே கொடுக்கின்றோம்”. என்று வைத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக மிளகாய் நெடி எந்தப் பொருளிலே பட்டாலும் அதனின் உணர்ச்சியை ஊட்டத்தான் செய்யும். ஒரு விஷம் எதிலே பட்டாலும் அதனுடைய உணர்வின் இயக்கத்திற்குத் தான் மாற்றும்.

அதைப் போன்று நம் உடலில் இத்தகைய உணர்வுகள் மாறுகின்றது.. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

எத்தனையோ கோடிச் சரீரங்களில் பல இம்சைகள் பட்டுத் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்துத்தான் மனிதனாக வந்திருக்கின்றோம். பல உயிரினங்கள் இன்று எத்தனையோ இம்சைகள் படுவதைப் பார்க்கின்றோம் அல்லவா.

ஆக… பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம்
1.அருள் ஞானிகள் உணர்வை எடுத்து இனி வரக்கூடிய எத்தகைய தீமையிலிருந்தும் தப்பும் நிலையாக
2.அதை நமக்குள் பெருக்கிப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.

இப்பிறப்பில் நாம் வந்ததுவே “முன் ஜென்மத்தில் விட்ட குறையினால் தான்…”

 

வீடு கட்ட அதற்கு அஸ்திவாரம் பலம் பெறல் வேண்டும். அதைப்போல் சுவர் எழுப்பவும் அதற்குகந்த கலவைகள் அதற்குகந்த அளவை வைத்துக் கூட்டிச் சுவர் எழுப்பினால்தான் அச்சுவர் உறுதியாய் இருக்கும். அதைப்போல்
1.நம் உடலில் உள்ள அமில நிலைகள் அததற்குகந்த தன்மையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியம் கொள்ளும்
2.இவ்வுடல் ஆரோக்கியம் பெற்றால் “அதுவே எண்ணத்தின் மையக் கோலாகி” ஆத்மீகத்தின் ஆத்ம சக்தியைப் பெற முடியும்.

நாம் சலிப்பு, சங்கடம், கோபம், பேராசை, அதி உல்லாசம் இப்படி உள்ள நிலையில் வாழும் பொழுது “நாம் எடுக்கும் சுவாசமானது கனமாகி”
1.நம் உடலில் சேரும் அமிலத்தன்மைகள் கூடியும் குறைந்தும் அவ்வமில சக்தி சுரப்பி அமிலம் சுரக்கும் பொழுது உடல் நிலையும் பாதிக்கப்பட்டு
2.எண்ண நிலையும் சோர்வு பூண்டு நம் உடல் என்னும் இக் கூடே பல பிணிகளுக்கு ஆளாகின்றது.

சுவர் எழுப்ப அதன் கொள்ளவில் எந்தச் சாமான் அளவு நிலையிலிருந்து மாறுபட்டாலும் அச்சுவருக்குப் பலமில்லை. மணல் அதிகப்பட்டால் உதிரும் நிலையும்… சிமெண்ட் அதிகப்பட்டால் வெடிக்கும் தன்மையும்… நீர் அதிகம் சேர்ந்தால் அதன் பக்குவ முறைக்குச் செயல்படா வண்ணமும்… மனிதனால் எழுப்பப்படும் சுவருக்கே அதன் கலவை குணம் மாறுபடும் பொழுது உரு நிலை கொள்வதில்லை.

இம்மனித உடலுக்கும்… இம் மனிதனின் உடலில் உள்ள “அமில சக்திகள் கூடிக் குறையும் நிலை ஏற்பட்டால்” சக்தி நிலை எப்படி வலுப்பெறும்…? வலுப் பெறாது…!

காட்சி:-
ஆற்றின் கரையும் ஓடமும் துடுப்பும் இருப்பதைப் போலவும் நாங்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல அவ் ஓடத்தில் ஏறி அவ் ஓடக்காரனால் நீரின் போக்குக்குச் செல்லாமல் நீரை எதிர்த்துத் துடுப்புப் போட்டு ஓடத்தை ஓட்டி அக்கரைக்குச் சென்று இறங்குகின்றோம்.

விளக்கம்:-
அதைப் போல் இவ்வுலக பந்தத்தில் பிறந்த நம் ஆத்மாவைக் கரை சேர்க்க இவ்வாழ்க்கை என்ற ஆற்றினைக் கடக்க எதிர்த்து துடுப்புப் போட்டுத் தான் நாம் செல்லும் மார்க்கத்தை இவ்வுலக வாழ்க்கையில் இருந்து மெய் உலக வாழ்க்கைக்குச் செல்ல வேண்டும்.

1.நாம் செல்லும் ஓடமும்… நாம் நம்பி ஏறிய ஓடக்காரனின் திறமையும் நன்றாக அமைந்தால் நாம் செல்லும் வழி எளிதாகின்றது
2.இவ்வுடல் என்ற இக்கூடு ஆரோக்கியமுடன் நல்லெண்ணம் பெற்ற நிலை கொண்ட ஆத்மாவாய் இவ் ஓடம் போல் இருந்தால்
3.அதை ஓட்டுபவனின் திறமையை ஒத்த வாழ்க்கையில் ஒன்றப்பெறும்
4.அவரவர்களுடன் இணையும்… ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அமைதல் வேண்டும்.

நல்ல ஓடமும் திறமை மிக்க ஓடக்காரனும் இருந்தால் செல்லும் வழி எளிதாகின்றது. எதிர்த் துடுப்புச் செலுத்தி நம் வாழ்க்கையில் ஏற்படும் பல நிலைகள் கொண்ட எதிர் நிலைகளை இத்துடுப்புப் போல் “எதிர்த் துடுப்புப் போட்டுத்தான்” அக்கரைக்குச் செல்ல வேண்டும்.

ஓடம் செல்லும் வழியிலும் நாம் செல்ல முடியாது. நீர் தானாக அவ் ஓடத்தை இழுத்துதான் செல்லும்.
1.நடக்கும்படி நடக்கட்டும்… நமக்கு வரும் வினைகள் எல்லாம் ஆண்டவன் அளித்தது அவனே பார்த்துக் கொள்வான் என்ற நிலையில்
2.நீர் போகும் போக்கில் ஓடும் போவதைப் போல் அல்ல.

எந்த ஒரு இன்னலான நிலை ஏற்பட்டாலும் அதன் போக்கில் செல்லாமல்
1.இன்னலிலிருந்து மீளும் வலுவான எதிரான துடுப்பைப் போன்ற வலுக்கொண்ட செயல் செய்தால்தான் இன்னலிலிருந்து மீளவும் முடியும்…
2.நம் வாழ்க்கைப் பாதையும் நன்றாக அமையும்… என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் இஜ் ஜென்மப் பிறப்பில் வந்த பயனை… வாழ்க்கை என்ற வடிவில் முழுமை எய்தி நாம் அடைய வேண்டிய அக்கரையின்… அக்கரையில் என்பதற்குப் பொருள்
1.இப்பிறப்பில் நாம் வந்ததுவே முன் ஜென்மத்தில் விட்ட குறையினால் தான்
2.அதற்காகத்தான் அக்கரை என்னும் ஞான ஒளி மார்க்கத்திற்குச் செல்லும் வழி அறிந்து நாம் செயல்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தேவர்கள் அசுரர்கள்… நெகடிவ் பாசிடிவ்… நேர்நிலை… எதிர்நிலை…

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவில்லாத அந்தக் காலத்தில் அகஸ்தியனின் உணர்வினை வியாசகர் கண்டுணர்ந்து வெளிப்படுத்தினார்.

அதாவது
1.மேரு என்ற மலையை மத்தாக வைத்து
2.வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்துப் பாற் கடலிலே கடைந்து
3.கடைந்தவற்றில் வந்ததை விழுங்கியது அனைத்தையும் தேவர்கள் என்றும்
4.விழுங்கிய பின் மலமாகக் கழித்ததை எல்லாம் அசுரர்கள் என்றும் காட்டினார்.

மனிதர்களாக இருக்கும் நாம் ஒரு பொருளை உணவாக எடுத்து உட்கொண்ட பின் அதில் உள்ள சத்துகள் நம் உடலாக உருப்பெறும் சக்தியாகிறது.

உடலாக உருவானபின் கழிவின் சத்தை மலமாக வெளிப்படும்போது அது நஞ்சின் தன்மை கொண்டதாக வெளி வருகிறது. அந்த நஞ்சின் தன்மையை விழுங்கிய அனைத்தும் மற்றதைக் அழித்திடும் நிலையாக வருகின்றது.

மனிதனாக இருக்கும் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்த நஞ்சினை அகற்றிய பின் அது வெளியே சென்றாலும் அது இன்னொரு தீமையின் நிலையாக வளர்ந்து அதனின் நிலைகள் வளர்ச்சியாகின்றது.

இதைத் தான்
1.தேவர்கள் அசுரர்கள் என்றும்… நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) என்றும் சொல்வது
2.எந்த ஒரு இயக்கத்தின் தன்மையானாலும் அது எதிர்நிலை மறைகள் இருந்தால்தான் இயங்கும். (இல்லை என்றால் சூனியமாகிவிடும்)

அதைப் போலத்தான் மனித உடலுக்குள்ளும் ஒரு உணர்வின் தன்மை எதிர்நிலை ஆனால்தான் நம் உடலின் அணுக்களின் தன்மை இயங்கும்.

ஆனால் அதே சமயம் எதிர்நிலையான உணர்வின் தன்மை அதிகரித்து விட்டால் நல்ல உணர்வின் தன்மைகள் இங்கே ஒடுங்கி விடுகின்றது.

ஆக நல்ல உணர்வுக்குள் எதிர்நிலைகள் ஓங்கி வளர்ந்தால் அந்தத் தீமையின் நிலைகள் நல்லதை ஒடுக்கி விடுகின்றது.

உதாரணமாக…
1.மிகவும் ஒரு காரமான பொருளை நாம் வாயிலே போட்டால் நம் உமிழ் நீர்கள் அனைத்தும் காணாமல் போய் விடுகின்றது.
2.ஆனால் மற்ற பொருளுடன் இந்தக் காரத்தை இணைத்து உட்கொண்டால் உமிழ் நீரை அதிகமாகச் சுரக்கச் செய்து
3.சாப்பிடும் உணவைத் தாராளமாக இழுத்துச் சென்று சுவைமிக்கதாக மாற்றுகின்றது.
4.ஆக… தீமையின் நிலைகளுக்குள் நல்லவைகள் அதிகரித்து விட்டால் தீமைகள் ஒடுங்குகின்றது.

ஆனால் தீமையின் தன்மை சிறிதாக இருப்பினும் நல்லவைகள் பலவாக இருந்தாலும் இது ஒரு நொடியில் அமுக்கிவிடும்.

அது போல் தீமைகளை ஒடுக்கிய
1.அருள் ஞானியின் உணர்வுகள் மிக மிகச் சக்தி வாய்ந்த அணுக்களாக இங்கே உண்டு
2.அதனை நாம் பருகும் நிலைகள் கொண்டு வந்தால் எத்தகைய தீமையாக இருந்தாலும் அதனைச் செயலிழக்கச் செய்துவிடும்.

ஆகவே நம் வாழ்க்கையில் வரும் எந்தத் தீமையாக இருந்தாலும் அந்த அருள் ஞானிகளின் அருள் சக்தி கொண்டு அதை விழுங்கிடல் வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் பழக்கம் வர வேண்டும்.

அக்கினியில் இறங்குவதல்ல… துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள் நாம் இறங்க வேண்டும்

 

மாரியம்மன் கோவிலில் அக்கினி குண்டம் இறங்கும்படி வைத்திருப்பார்கள்.
1.ஒருவருக்கொருவர் வேதனைப்படுவோரை நாம் பார்த்தால்
2.அந்த வேதனை மா(றி)ரி நமக்குள் தாயாக வந்து நோயாக அது வராதபடி நாம் தடுத்தல் வேண்டும்.

அவர்களைப் பார்த்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் (நோயாளிகளைப் பார்த்தால்).

சுத்தப்படுத்தவில்லை என்றால் அவருடைய வேதனை உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து நல்ல அணுக்களுடன் இணைந்து விடுகின்றது

தேள் கொட்டுகின்ற மாதிரி… அல்லது குளவி கொட்டி புழு உருமாறுகிற மாதிரி… விஷத்தின் தன்மை வரும்போது அவர்கள் உடல் நலிகின்றது… அதனால் தான் நோயுடன் இருக்கின்றார்கள்.
1.ஆனால் அதே விஷம் நம் உடலில் பட்டபின் நல்ல அணுக்கள் சுருங்கி விடுகின்றது
2.நம் உடலில் அதற்குப் பின் அழகு இருக்குமா…? நாமும் அந்த வேதனையைச் தான் சொல்வோம்.

அதற்காக வேண்டி ஒவ்வொரு ஊருக்கு மத்தியிலும் மாரியம்மன் ஆலயத்தை வைத்திருப்பார்கள்.

வேதனை வந்துவிட்டால் உடனே ஈஸ்வரா என்று உயிரை வேண்டி அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்

இப்படி நுகர்ந்த உணர்வு என்ன செய்கின்றது…?

இராமாயணத்தில் அது தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான் என்று காட்டுவார்கள். ஏனென்றால் அந்த வேதனையான உணர்வுகள் என்பது அது வாலி.

இராமன் வாலியை நேர்முகமாகப் பார்த்தானா…? இல்லை…! அந்த வாலி வெளியே வர முடியாதபடி மேலே இருக்கும் பாறையைத் தள்ளிக் குகையை மூடி விட்டான்.
1.பாறையாக இருப்பது யார்…?
2.துருவ நட்சத்திரம்…!

எப்போது வேதனைப்படும் உணர்வுகளை நுகர்கின்றோமோ உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இழுத்துக் கொண்டு வந்து விட்டோம் என்றால் அவர்கள் பட்ட வேதனை உள்ளுக்குள் செல்லாதபடி இங்கே நிறுத்தப்படுகின்றது.

நிறுத்திய பின் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணிவிட்டு அடுத்தாற்போல் அந்த அருள் சக்தி அந்த நோயாளி பெற வேண்டும் அவர் உடல் நோய் நீங்க வேண்டும் அவர் உடல் நலமாக வேண்டும் என்று நாம் நுகர்ந்த வேதனையை நிறுத்திவிட்டு அருள் உணர்வுகளை உருவாக்குதல் வேண்டும்.

அவர் உடல் நலமாக வேண்டும் என்று நினைத்து எண்ணினால் நாம் நுகர்வது எதுவோ ஓ…ம் நமச்சிவாய…! அது பிரணவமாகி நம் உடலாக மாற்றுகின்றது.

ஏனென்றால் அந்த அந்த நோய் நமக்குள் வரக்கூடாது.

இதை நிறுத்திவிட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தி அந்த நோயாளி பெற வேண்டும் என்று எண்ணினால் நோயை நீக்கிவிடும்.

1.தீமைகளை வேக வைக்கக்கூடிய (அக்கினி) துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதில் நாம் இறங்கினோம் என்றால்
2.அதனின் பால் நாம் நினைவைக் கொண்டு சென்றால் அந்தத் தீமை நமக்குள் வராது என்று
3.அக்கினி குண்டத்தை மாரியம்மன் கோவிலில் அமைத்துள்ளார்கள்.
4.அக்கினியில் இறங்குவதல்ல… துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள் நாம் இறங்க வேண்டும்.

வரும் எதிர்நிலைக்கு அடிமைப்படாமல்… “நல் ஞானத்தின் வழித் தொடரைப் பெறல் வேண்டும்”

 

ஆவியான இவ்வுலகில் ஒலி, ஒளி, நீர் இவற்றின் சக்தியுடனே சகல திரவியங்கள், பிம்பங்கள் பல கோடி நிலைகள் ஏற்படுகின்றன. அதைப் போல் அவற்றுடனே மனித ஆத்மாக்களின் எண்ண நிலையும் கலந்துறவாடி எடுக்கும் சுவாசம் கொண்டு அனைத்து நிலைகளும் நடக்கின்றன.

ஆவியான ஒலி, ஒளி, நீரில் இருந்து தான் எல்லா ஜீவனுமே.
1.பாலில் நீர் கலந்தாலும் எண்ணெயில் நீர் கலந்தாலும் அந்நீரின் நிலை தன் நிலையைக் காட்டுவதில்லை
2.தனித்து. எதிலும் எதுவாகவும் அந்நீர் எப்படிக் கலக்கின்றதோ அதைப் போல் எல்லாவற்றிலும் எல்லாமாய் ஆண்டவனின் சக்தி கலந்துள்ளது.

நம் எண்ணம் எல்லாவற்றுடனும் கலந்திருந்தாலும் எல்லாமில் எல்லாமாய் இருந்தே நம் ஞானத்தை நாம் பெறல் வேண்டும்.

ஞானம் பெற்று, நான் என்ற நிலை பெற்றுவிட்டால், நம் ஞானமும் செயல்படாது. ஞானம் என்பதுவே நமக்காக மட்டுமல்ல.
1.நம் ஞானத்தைக் கொண்டு பலர் ஞானங்கள் பெறச் செய்ய
2.நமக்கு ஏற்பட்ட நல் ஞானம் என்றுணர்ந்து நீரைப் போல் ஞான சக்தி இருக்க வேண்டும்.

நீர் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை. நீரைப்போல் தான் பெற்ற ஞானத்தை ஞானிகள் வழி நடத்திடல் வேண்டும்.

காட்சி:- இரும்பைப் பழுக்கக் காய்ச்சி தட்டுதல்

விளக்கம்:- எந்த ஒரு பொருளையும் அதனை உருவாக்க எவ்வுருவில் காண உருப்படுத்துகின்றோமோ அதற்குகந்த பக்குவ நிலை ஏற்பட்டால் தான் நாம் காணும் பொருளை நாம் உருவாக்க முடியும்.

அதைப் போல் சக்தியின் அருள் ஞானம் பெறவும்
1.நம் எண்ண ஞானத்தைப் பல நிலைகளில் பக்குவம் கொண்டால் தான்
2.நாம் எண்ணிய ஈசனின் ஞானம் பெற முடியும்.

காட்சி:- சிறிய ஊசியில் அதற்குகந்த நூலைக் கோப்பதைப் போலவும் பெரிய ஊசியில் அதற்குகந்த நூலைக் கோப்பதைப் போலவும் காட்சி.

விளக்கம்:- 1.தன் ஞானம் என்பது குருவின் ஞானத்திலிருந்து
2.எண்ண நிலை வளர்ச்சி கொள்ளும் நிலைப்படி தான் சேர்க்கப்படுகின்றது.

ஊசியில் உள்ள துவார நிலைக்கொப்பத்தான் நூல் கோக்கப்படுமேயன்றி பொருந்தாத நூலைக் கோப்பது எப்படி…?

பக்தி, ஞானம் என்ற வழித்தொடர் பெற்று சத்திய முக்தி நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலை பெற்றே ஈசன்பால் செல்லும் பக்குவத்தை பக்தி மார்க்கத்திலிருந்து நல் ஞானம் பெறும் வழிமுறையை அறிதல் வேண்டும்.
1.எண்ணியவுடன் வந்தடைவதல்ல எல்லா சக்தியும்
2.ஏற்கும் முறைப்படி தான் சக்தி நிலை கூடும்.

குழந்தைக்கு ஆரம்ப பாட அறிவு தாயே புகட்டுகின்றாள். அம்மா, அப்பா, கடவுள் இப்படிப் பேசும் திறனைப் பழக்கிk கல்விச் சாலைக்கு அனுப்புகின்றாள்.

அந்தந்த வயது நிலைக்கொப்ப அறிவின் கல்வி புகட்ட அதற்குகந்த கல்வித்திறன் பெற்ற போதகரினால் அக்குழந்தை போதனைக்குட்பட்டு அதன் வளர்ச்சியின் மூப்பினால் பிறருக்குப் போதிக்கும் பக்குவம் பெற்று விடுகின்றது.

அதைப் போல் பக்தி என்ற வழிப்படுத்தி… பூஜை முறையில் ஆரம்பத் தாயின் கல்வி அறிவைப் போன்றது தான் பக்தி, பூஜை முறை.

பக்தியின் வழித்தொடரில் ஞானம் பெற வேண்டும்.
1.ஞானத்தின் வழியில் சித்தாகி சித்தினால் ரிஷித் தன்மை பெற்றுச் சப்தரிஷி ஆகி
2.அப்பக்தியின் முக்தி கொண்ட நிலை பெற்று மீண்டும் தன் சக்தியைக் கொண்டே பல சக்திகளை ஒளி பெறும் பக்குவம் பெறல் வேண்டும்.

காட்சி:- சாதம் உண்ணுவதைப் போலவும் அதில் ஒரு கல் பட்டு உடம்பு சிலிர்ப்பதைப் போலவும் காட்டுகின்றார்.

விளக்கம்:-
1.நல் நிலையில் நல் உணர்வும் நல்ல ஜெபமும் ஆத்மீக ஞான வழி பெற்றாலும்
2.அமுதான உணவைப்போல் உணவு உண்ணும் பொழுது
3.”கூட வந்த கல்லைப் போல்” நம் நிலையில் நல்ல உணர்வான சக்தி நிலையில் வாழ்ந்தாலும்… நமக்கேற்படும் சில சோதனைகள் வரத்தான் செய்யும்.
4.அந்நிலையில்… உணவுடன் வரும் கல்லுக்காக நாம் உணவையே உண்ணாமல் இருப்பதில்லை.
5.வரும் எதிரான செயலுக்கு நம்மை அடிமைப்படுத்தாமல் “நல் ஞானத் தொடரை வழி பெற்றே” செயல் புரிதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்று சேர்ந்து வாழும் தத்துவம் இல்லை என்றால் இயற்கையில் எதுவுமே வளர்ச்சி அடைய முடியாது

கார்த்திகை நட்சத்திரம் ஒளியின் சுடராக வளர்ந்து தனக்கென்று கோள்களை உருவாக்கிக் கொண்டு தனிச் சூரியக் குடும்பமாகும் பருவம் பெற்று விட்டது.
1.அது தனித்தன்மையாக வாழ ஆரம்பித்து விட்டது.
2.அதனால் நம் பிரபஞ்சத்திற்குக் கிடைக்க வேண்டிய அதனுடைய சக்திகள் கிடைக்காது போய் விட்டது.

ஒரு சூரியக் குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்கள் முதிர்ந்த பின் எப்படித் தனித்துச் சூரியக் குடும்பமாகிறதோ அது போல் மனிதர்கள் குடும்பமாக வாழும் நாமும் ஒரு வெறுப்பின் தன்மையை வளர்த்துக் கொண்டால் பிரித்து வாழும் உணர்வையே நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

இதைப் போல குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் வெறுப்பும் வேதனையும் அதிகமாகி தீய வினையாக வளர்ந்து வருவதை நிறுத்த வேண்டும் அல்லவா.

தொழிலில் வரவு செலவு நடத்துகின்றோம். கடையில் நம்மிடம் வந்து வாங்கிச் செல்வார்கள். பொருளுக்குண்டான பணத்தைக் காலத்திலே வந்து கொடுப்பார்கள்.

ஆனால் ஒருவரின் சந்தர்ப்பம் அவர் குடும்பத்தில் ஏதோ சில சிக்கலாகி விட்டால் வாங்கியதற்குரிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது போய்விடுகிறது.

அது போன்ற ஒரு சந்தர்ப்பத்திலே நாம் என்ன நினைப்போம்…?

1.இதற்கு முன் அவன் யோக்கியனாக இருந்தான்… சரியான முறையிலே பணத்தைக் கொடுத்தான்.
2.இப்பொழுது வர வரக் கெட்டுப் போய்விட்டான்…! என்ற இந்த நிலை வருகின்றது.

இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் நான் அன்றைக்கெல்லாம் உனக்குச் சரியாகக் கொடுத்தேன். நீயும் பணத்தைத் திரும்பக் கொடுத்தாய். ஆனால் இப்போது இருக்க இருக்க நீ கெட்டுப் போய்க் கொண்டே இருக்கிறாய். ஆகையினால் உனக்கு இனிமேல் கடன் இல்லை… போ…! என்ற சொல் வரும்.

ஆனால் அவரோ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்பார்…! “கொடுக்க முடியாது…” என்று சொல்லி விட்டால் கொஞ்சம் முறைப்பார். அந்தச் சமயம் அவரிடமிருந்து வர வேண்டிய பாக்கியும் இருக்கும்.

சரக்கை இவர் என்ன கொடுப்பது…! சரக்கை நாம் அடுத்தவரிடம் வாங்கிச் செல்வோம்…! என்று சென்று விடுவார்.

இதைப் பார்த்தவுடனே… பார்…! அன்று கடன் கொடுத்தேன் என்னிடம் வாங்கினான். இன்று அடுத்தவரிடம் போகின்றான் பார்…! என்று இப்படித்தான் நமக்குள் பகைமை உணர்வு அதிகமாக வளர்ந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் நமக்குள் பகைமையாக உருவாகிவிடுகிறது.

வியாபாரத்திலே நாம் எத்தனையோ பேரிடம் பழகி இருப்போம். சந்தர்ப்பத்தில் யாரிடமாவது வெறுப்பாகி இருப்போம். அவரை நினைக்கும் போதெல்லாம் வேதனைப்படுகின்றோம்.

1.அந்த வேதனைப்படும் உணர்வுகளை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பதிவாக்கிக் கொள்கின்றது.
2.அடுத்தாற்போல் அதை நினைக்கும் போதெல்லாம் நமக்குள் வேதனையைத் தூண்டும்.

உதாரணமாக ஒரு வேப்ப மரத்தின் விதையைப் பூமியிலே போட்டபின் அது அந்தத் தாய் மரம் வெளிபடுத்திய கசப்பான சத்தை எடுத்து வளர்ந்து கொண்டே இருக்கும்.

அதே போன்று தான் மனிதனுக்கு மனிதன் வெறுப்பாகி உடலில் அந்த உணர்வின் சத்து எண்ணமாக ஆனால் அது ஒரு வித்தாகி விடுகின்றது. கேட்டறிந்த பின் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

பதிந்த நிலைகள் கொண்டு அவரை நினைத்தோம் என்றால் அவர் மேலே உண்டான வெறுப்பு நம்மிடமும் வெறுப்பான உணர்வாக வளர்கின்றது. நம்மிடம் இருக்கும் நல்ல உணர்வுடன் சண்டையிடுகின்றது.

உடலுக்குள் அது சண்டையிட ஆரம்பித்த பின்…
இடுப்பு வலிக்கிறது…
மேல் வலிக்கிறது…
நெஞ்சு வலிக்கிறது…
முதுகு வலிக்கிறது…
தலை வலிக்கிறது…
கண் எரிகிறது…! என்று சொல்வதைப் பார்க்கலாம்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நம்முடைய சந்தர்ப்பம் நல்ல உணர்வை இயக்காதபடி தீய வினைகளாக நமக்குள் சேர்கிறது. அதை நிறுத்த வேண்டும் அல்லவா…!

ஆகவே “எப்பொழுதெல்லாம் நம் உணர்வுகள் மாறுகின்றதோ…. அப்பொழுதெல்லாம்…” மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி அந்த உயர்ந்த சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

பின் யார் மேல் வெறுப்பு வந்ததோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதைத் தியானித்துப் பாருங்கள்.
1.உங்களிடம் கெட்டது வராது
2.மன பலம் வரும்.
3.உடல் நலம் பெறும்.
4.சொல்லில் இனிமை பெறும்.
5.உங்கள் பார்வை எல்லோரையும் நல்லதாக்கும்.

மனப்போராட்டமும்… உடலில் வரும் வலி வேதனைகளும்

 

சில குடும்பங்களில் ஒருவருக்கொருவர் தேளும் பாம்புமாக இருப்பார்கள். எவ்வளவு தான் இருந்தாலும் உள்ளே ஒன்றுக்கொன்று வெந்து கொண்டு தான் இருக்கும்… ஒருவருக்கொருவர் போராட்டம் அதிகமாக இருக்கும்.
1.அச்சுறுத்தும் உணர்வுகளும் பயமான உணர்வுகளும் அதிகமாகும் பொழுது உடலுக்குள் போர் நடந்து கொண்டிருக்கும்
2.ஏனென்றால் அதற்குச் சாப்பாடு தேவை.

பையன் மீது வெறுப்படைந்து விட்டால் அத்தகைய அணு உண்டாகிவிட்டால் அந்த வெறுப்பின் உணர்வுகளே அதற்குச் சாப்பாடு. அந்த வெறுப்பு வளரப்படும் பொழுது அத்தகைய அணுக்களே பெருகும்.

அந்த அணுக்கள் பெருகும் பொழுது நாம் நுகர்ந்ததற்கும் உடலுக்கும் வெறுப்பாகி போர் முறையாகி உடல் நலியத் தொடங்கும். ஒன்றுக்கொன்று சண்டை போடும்.
1.இங்கே பளீர்…ர் என்று மின்னுகின்றது… இங்கே குத்துகின்றது
2.தலை வலிக்கின்றது பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது கால் வலிக்கின்றது கை வலிக்கின்றது என்று ஆரம்பித்து விடுவார்கள்.

இது எல்லாம் எங்கிருந்து வருகின்றது…?

நாம் நுகர்ந்த உணர்வுகள் அணுவாகி அதற்கு உணவு அது தேடும் பொழுது அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி இந்த உணர்வின் தன்மையாகும் பொழுது பளீர்…ர்.. என்று உடலில் குத்தினால் ஆ…! என்று சொல்வார்கள்.

இப்படி வலி எடுக்கும் பொழுது அந்த நேரத்தில் நீ சந்தோஷமாக இரு என்று யாராவது சொல்லிப் பாருங்கள்… பார்க்கலாம். ஒன்றுமில்லை… நீ சந்தோஷமாக இரு…! என்று இப்படிச் சொல்லச் சொல்லக் கோபம் அதிகமாகும்.

இன்னும் கொஞ்சம் ஆன பிற்பாடு
1.”இவர்களுக்கு என்ன தெரியும்…” நான் படுகின்ற அவஸ்தை…!” என்று
2.அந்த அவஸ்தையைத் தான் எடுத்துக் கொள்வார்களே தவிர நல்ல சொல்களை எடுக்க முடிவதில்லை.

தாயாகவே இருந்தாலும் சரி குழந்தை வேதனைப்படுகிறது என்று “அட கண்ணு… நீ இதைச் சாப்பிடு…” என்று சொன்னாலும் “நீ சொல்லிக் கொண்டே இருந்தாலும் நான் கேட்க மாட்டேன்” என்று தாய் மீது வெறுப்பு தான் இன்னும் அதிகமாகும்.

ஐயோ… தன் பையன் கெட்டுப் போகின்றானே… இந்த மாதிரி இருக்கின்றான் சும்மா இருடா ராஜா…! என்று சந்தோசமாகச் சொல்லிக் கொஞ்சிப் பாருங்கள். உங்களை எப்படிப் பதிலுக்குக் கொஞ்சுகிறான் என்று பாருங்கள்.

இரண்டு தடவை சாப்பாடு கொடுத்துப் பாருங்கள் சிறிய குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவராக இருந்தாலும் சரி எவ்வளவு கோபம் வருகிறது என்று பார்க்கலாம்…! அந்த உணர்வுக்குத் தக்க குணங்கள் வரும்.
1.அப்பொழுது எது இயக்குகின்றது…? அந்த நல்லதை எடுக்க முடியவில்லை…
2.அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

இதை எல்லாம் சுட்டிக்காட்டுவதற்குத் தான் ஆலயத்தில் காட்டுகின்றார்கள்.
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் அனைவரும் பெற வேண்டும்
3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் தெய்வீக நிலைகள் பெற வேண்டும்.
4.அவர்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்.
5.நான் பார்க்கும் குடும்பம் எல்லாம் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
6.காரணம்… அந்த உலக மக்களுடைய உணர்வுகள் அனைத்தும் நம் உடலில் இருக்கின்றது.

நல்லவர்களையும் பார்த்திருக்கின்றோம். கெட்டவர்களையும் பார்த்திருக்கின்றோம். பார்த்த ஒவ்வொரு குடும்பத்திலும் அந்தத் தெய்வீக நிலைகள் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் புனிதம் பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.

1.இப்படி எண்ணி அந்த அருள் உணர்வுகளை எடுத்தால் தான்
2.நம் உடலுக்குள் வரக்கூடிய போர் முறைகளையும்… ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இயங்கக்கூடிய நிலைகளையும்
3.நாம் நல்லதாக மாற்றி அமைக்க முடியும்.

ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள்

 

காட்சி:– மீனவன் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போலவும் ஒவ்வொரு மீனாகத் தூண்டிலில் பிடித்துப் பையில் எடுத்துச் செல்வதைப் போலவும் தெரிகின்றது.

விளக்கம்:- மீனவனுக்கு வேண்டியது மீன் தான். அவன் தூண்டிலில் போட்டுத் தரும் ஆகாரத்தை எந்த மீன் எடுக்கின்றதோ அதைத்தான் அவன் எடுத்துச் செல்கின்றான்.

அதைப் போல இவ்வுலக ஞானம் பெற தன் ஒளியை இவ்வுலகத்தில் உள்ள ஆத்மாக்களிடம் செலுத்தி அவ்வொளியை எவ்ஆத்மா ஈர்க்கின்றதோ அவ்ஆத்மாக்களைத் தன் ஞானத்துடன் எடுக்கின்றனர் ஒளியின் பால் உள்ள சப்தரிஷிகள்.

1.குறிப்பிட்ட ஆன்மாவைத் தன் சக்தியின் பால் ஈர்க்கவில்லை
2.எல்லா ஆத்மாக்களுக்குமே அந்த ஒளி பாய்ச்சப்படுகின்றது.
3.எந்த ஆத்மா அந்த ஒளியுடன் கலக்கின்றதோ அவ்வாத்மாவின் சக்தியைத் தன் ஒளியான ஞான வட்டத்தில் சுழல விட்டு
4.அவ்வாத்மாவின் ஒளியிலிருந்து பல சக்திகளைத் தன் ஒளி வட்டத்திற்கு ஈர்த்துச் செயல்படுகின்றார்கள் சப்தரிஷிகள்.

அப்படிப்பட்ட நிலை கொண்டவர் தான் ஞானகுரு வேணுகோபால சுவாமி அவர்கள். அவரின் ஒளியைக் கொண்டு நம் மேல் அந்த ஒளி பாயும் பொழுது நாமும் அவர் பெற்ற ஞான ஒளியில் பங்கு ஏற்கின்றோம்.

இதைப் போலத்தான் “பல சித்தர்கள்” நம்முடன் கலந்து விளையாடுகின்றனர். ஔவைப் பிராட்டி நமக்குக் கிடைத்ததும் இந்த நிலைதான்

காட்சி:– ஔவையார் வரும் நிலை

உலக ஆத்மாக்களுடன் சில காலங்களில் கால நிலைகள் மாறு கொண்டு உருமாறும் தருணத்தில்
1.சப்தரிஷிகளின் சக்தி நிலையை உலகம் உணர்வெய்தி விழிப்புறச் செய்ய
2.மனித ஆத்மாக்கள் நிலையிலிருந்து தான் செயல் கொள்ள முடியும்.
3.அந்நிலையில் தூண்டில் போட்டு எடுத்தவர் தான் ஞானகுரு வேணுகோபால சுவாமிகள்

தான் விதைத்ததன் பலனைப் பொறுக்கி எடுக்கின்றாள் ஆதிசக்தி

 

ஞானத்தின் சக்தி பெற்று சித்து நிலை பெற்றிடவே நம்முள் உள்ள அமில சக்தியை எல்லாம்… நம் நிலைக்குகந்த அமில குணத்தை இந்த ஞானத்தின் ஈர்ப்பிற்குச் செல்லும் குண அமிலமாக நாம் செயல்படுத்திட்டால்… எவ்வமிலத்தை நாம் எவ்வழித் தொடருக்கு அதிகப்படுத்தி அதன் ஈர்ப்பில் வளர விடுகின்றோமோ அதன் தன்மையின் ஆணைக்குட்பட்டு… மற்ற அமில குணங்களும் இதன் கட்டுப்பாட்டிற்கே அடங்கிச் செயல்படுத்திட வைத்திடலாம்.
1.அதனதன் குணம் என்றுமே மாறாது.
2.ஆனால் அதனை இதனின் கட்டுப்பாட்டிற்குள் அடக்கி வைத்திட முடியும்.

நல்ல அமிலத்தின் செயலைப் போன்றே தீய அமில குணத்தின் செயல் நிலையும் அதன் செயலிலேயே வழி கொண்டிடும்.
1.நமக்குள் உள்ள இப் பன்னிரண்டு வகை அமிலத்தையும் அதன் போக்கில் நாம் செல்ல விட்டிட்டால்
2.அதனதன் தொடரில் எதன் குணம் அதிகப்படுகின்றதோ அதற்குகந்த ஆவி குண அமிலங்களும்
3.இதன் ஈர்ப்பில் அந்த குணத்துக்குடைய இக்காற்றினில் சுற்றிக் கொண்டிருக்கும் உடலை விட்டுப் பிரிந்த
4.மனித ஆத்மா மிருக ஆத்மா என்ற பாகுபாடு இல்லாமல் இக்குண அமிலதத்துடன் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

இப்படிச் சேரும் ஆவி அமிலங்களில் சில சக்தி வாய்ந்த ஆவி அமிலங்கள் உடலில் ஏறிவிட்டால் அதன் செயல்நிலை அவ் உடலில் உள்ள உயிர் ஆத்மாவைக் காட்டிலும் இதன் தூண்டுதலின் வெறிக்கு உட்பட்டு மென்மேலும் இதன் நிலைக்கே தான் இழுத்துச் சென்று கொண்டே இருக்கும்.

பக்தி ஞானம் சித்து என்ற நல்லுணர்வு அமில சக்தியின் கூட்டு நிலையும் இப்படித்தான். சலிப்பு கோபம் வெறி குரோதம் இப்படிச் செயல்படும் நிலையின் அமில குணமும் அதன் ஈர்ப்பில் தான் இழுத்துச் செல்லும்‌.

இப்படி இத் தீய அணுவின் அமில குணத்திற்குக் கட்டுப்பட்ட ஆத்மாக்களை அத் தீய அமில சக்தி மென்மேலும் அதனை இழுத்துச் சென்று வஞ்சனை குரோதம் கொலை கொள்ளை இப்படிச் செல்லும் அமில உயிர் ஆத்மாக்கள் அதன் வெறி உணர்வினால் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றாலும் இவ்வெறி உணர்வு அடங்காமல் அதே நிலை கொண்ட உடல்களில் ஏறி தன் வெறிக்குகந்த செயலை மென்மேலும் தூண்டி மனித ஆத்மாவைப் பேயாக்கி விடுகின்றது.

இவ் வெறி கொண்ட ஆவி உலக ஆவி மனித ஜீவ உடல் கொண்ட அதே குணநிலையில் உள்ள ஆத்மாவின் உடலில் ஏறி… மென்மேலும் இவ்வெறி உணர்வு அதிகப்பட்டு… உடலில் உள்ள பொழுதே மாமிச உணவுகளை மிக அதிகமாக உண்டு… அதன் வெறியிலேயே உடல் பிரிந்து சென்றாலும் அவ்வாவிகள் தான் தன் வெறிக்குகந்த உணவைப் பெற இரத்தக் காட்டேறிகளாய் அவ் உதிரத்தின் சுவாசத்தை எடுக்க ஆவி உலகில் இருந்து கொண்டு வெறியாட்டம் நடத்துகின்றன.

இன்று உலகில் எல்லா பாகங்களிலுமே அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றால் எந்த நிலையில்…?
1.இரத்தக்காட்டேறிகளாய் ஆவி உலகில் சூழ்ந்துள்ள இவ்வாத்மாக்களுக்கு அதற்குகந்த ஆகாரத்தை எடுக்கத்தான்
2.அவைகள் செய்யும் வெறிச் செயலினால் இன்றைய உலக ஆத்மாக்கள் மாளுகின்றன.

இம் மனிதனே தான் தெய்வமும் ஆகின்றான். இரத்தக்காட்டேறி ஆகவும் ஆகின்றான். எமனாகவும் செயல்படுகின்றான் தேவனாகவும் செயல்படுகின்றான். எண்ணும் எண்ணத்தைக் கொண்டு நல் அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் தெய்வமாகின்றான். தீய அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் பேயாகின்றான்.

1.நம்க்கு எல்லாம் மீறிய அப்பாற்பட்ட சக்தியான அவ்வாதி சக்தி
2.அவள் விதைத்த விதையில் வளரும் நிலை கொண்டு பலனைக் கண்டு அவளே நகைக்கின்றாள்.
3.எல்லா விதையும் ஒன்று போல் விதைத்து அவ்விதையின் பயனைக் கண்டு மென்மேலும் விதைத்துக் கொண்டே உள்ளாள்.
4.விதையின் நற்பயனைத் தன்னுள் எடுத்துக் கொண்டு வேண்டாத பயனை ஒரு காலகட்டத்தில் மாற்றி அமைத்து விடுகின்றாள்.
5.இக்கலியில் பொறுக்கி எடுக்கின்றாள் தான் விதைத்ததன் பயனை எல்லாம்
6.தனக்குகந்தது எது என்று அவளுக்குத் தெரியும்… மற்றவற்றைத் திரும்பவும் உழுது பயிருக்கு அனுப்புவாள்.
7.மாற்றி மாற்றிப் பலனை எடுத்துக் கொண்டேதான் இருக்கிறாள்.

இதனை உணர்ந்து இரத்தக்காட்டேறிகளாய் அலையும் ஈர்ப்பில் நாம் போய்ச் சிக்காமல் அன்பென்னும் பக்தி நெறியில் நம்முள் உள்ள அமில குணங்களை வழிநடத்தி அந்த ஞானத்தின் சித்தடைவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது வெறுப்பின் தன்மையை நாம் அதிகமாக வளர்த்து விட்டால் அது நம் உடலுக்குள் வந்து எத்தனையோ கெடுதலான வேலைகளைச் செய்யும்.

அதை எல்லாம் முழுவதுமாக நான் (ஞானகுரு) உணர்வதற்காக வேண்டி மூன்று இலட்சம் பேருடைய (அந்தக் குடும்பங்கள்) உணர்வுகளை ஏககாலத்தில் ஒவ்வொன்றாகப் படிப்படியாகக் குருநாதர் காண்பித்தார்.

அவர்களையும்… அந்தக் குடும்பத்தின் உணர்வுகளை எல்லாம் நுகர்ந்தபின் அங்கிருக்கும் கெட்டது எல்லாம் உன்னை என்ன செய்கின்றது… உன் உடலில் என்ன செய்கிறது என்று பார்…! என்று சொன்னார் குருநாதர்.

அந்தக் குடும்பங்களில் நடந்ததை எல்லாம் நீ ஜோதிடம் பார்ப்பது போல் பார்த்து விடாதே… ஆனால் நீ தெரிந்து கொள்கின்றாய். யாராவது வந்து கேட்டால்… உன்னிடம் கஷ்டத்தைச் சொன்னால் நீ கேட்பாய். கேட்ட பின்…
1.ஐயா…! நீங்கள் இன்ன மாதிரியான காரணத்தினால் கஷ்டப்படுகிறீர்கள்
2.உங்கள் வீட்டில் உள்ள சண்டையெல்லாம் போய்விடும் என்று கண்டறிந்து நீ சொன்னால்
3.கடவுளே நீ தான்…! என்று உன்னைப் போற்றுவார்கள்
4.ஆனால் அவன் கஷ்டம் எல்லாம் உன்னிடம் வந்துவிடும் “ஜாக்கிரதை…!” என்று சொல்லி விட்டார்.

காரணம் எல்லாவற்றையும் நீ தெளிவாகத் தெரிந்து கொள்கின்றாய் தெரிந்து கொண்ட பின் “உனக்குக் கஷ்டம் இப்படி இருக்கின்றது… தொழில் நஷ்டமாகி விட்டது…!” என்று நீ அவரிடம் சொல்வாய்.

அந்தக் கஷ்டத்தை எல்லாம் நீ வாங்கிய பின் தான் “நல்லதாகும்” என்று நீ சொல்ல முடியும். ஆக… கஷ்டத்தை நுகர்ந்து அவர்களுக்கு மீண்டும் கஷ்டத்தை தான் கொடுக்க முடியுமே தவிர நல்லதைக் கொடுக்க முடியாது.

ஆனால் உன்னைக் கடவுளாக அவன் போற்றுவான். இவரிடம் போனேன்… என் குடும்பத்தைப் பற்றி எல்லாமே சொன்னார்… இவர் கடவுள்…! என்பான்.

1.ஆனால் அவருடைய நோய் எல்லாம் உன்னிடம் வந்துவிடும்
2.அவனுடைய இந்த கஷ்டமெல்லாம் உன்னிடம் வந்துவிடும் “ஜாக்கிரதை…!” என்று சொல்லிவிட்டார் குருநாதர்.

அதையும் சொல்வார்… இதையும் சொல்வார்… நான் தெரிந்து கொள்ளவும் செய்வேன் (ஞானகுரு).

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்
1.அவர்களுடைய அந்தக் கஷ்டமான உணர்வுகள் உனக்குள் வராதபடி நீ நிறுத்த வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் ஜீவாத்மாவிலே அந்த அருள் சக்திகள் பெற வேண்டும் என்று இதை முதலில் நீ எடுக்க வேண்டும்.

எடுத்துக் கொண்ட பின் அவரிடம் என்ன சொல்ல வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்… உங்கள் கஷ்டம் எல்லாம் நீங்கும்…! என்று வாக்கினைப் பதிவு செய்து அந்தக் கஷ்டத்தை நிறுத்த “அவரைப் பழக்கச் செய்ய வேண்டும்…”

கஷ்டம்…! என்று அவர் சொன்னால் ஐயோ… உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்று கேட்டு அதை இழுத்துக் கொள்கிறோம்.

அவருக்குள் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொண்ட பின் “உனக்கு நல்லதாகும்…” என்று நியாயத்தைச் சொல்வாய். ஆனால் அவர்கள் கஷ்டம் எல்லாம் இங்கே வந்துவிடும்.

ரொம்பப் பேர் என்ன செய்வார்கள்…?
1.இரக்க மனமாகப் போய் எல்லோருக்கும் நியாயத்தைச் சொல்வார்கள்
2.ஆனால் தனக்குள் பிறருடைய அந்தக் கஷ்டமான உணர்வுகள் தனக்குள் உட்புகுவதை நிறுத்தத் தெரியாமல் இருப்பார்கள்.

அதை நிறுத்த வேண்டும் என்பது தான் சதுர்த்தி…!

ஏகக்காலத்தில் எல்லோரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஒருவருக்கொருவர் இருக்கும் பகைமை நீங்க வேண்டும் என்று எண்ணிய பின் இந்த அலைகள் போனபின் என்ன செய்கிறது…?
1.மனிதனான நானும் எனக்குள் அந்தப் பிடிப்பை அறுத்து விடுகிறேன்.
2.என் மீது பகைமை கொண்டிருப்பவர்களும் என் மீது வெறுப்பில்லாதபடி அதை அறுத்து விடுகின்றார்கள்.

அப்போது அந்தத் தீமை செய்யும் அலைகள் அனாதையாகப் படர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் முதலிலே ஒருவருக்கொருவர் சண்டை போட்டதெல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது. இருந்தாலும்
1.நாம் இப்போது எண்ணும் இந்த வலுவான உணர்வுகள் என்ன செய்கிறது…?
2.அதைத் துரத்திக் கொண்டு போகிறது.

துரத்திக் கொண்டு சென்றாலும் செடிகள் மரங்கள் இருக்கும் பக்கம் அவைகள் போகாது. நேராகக் கடல் பக்கம் தான் போகும்.

ஏனென்றால் கடல் பக்கம் யாரும் அதிகம் (நடமாட்டம்) போவதில்லை. அங்கே அலைகள் தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கும்.
1.கடல் அலைகள் மாறி மாறி வரும் பொழுது
2.நாம் ஈர்க்க மறுத்த தீய வினைகளை எல்லாம் இழுத்து இழுத்து உள்ளே கொண்டு போய் அமிழ்த்திவிடும்
3.அந்த உப்பு நீர் (ஹைட்ரஜன்) அவைகளைக் கரைத்துவிடும்.

இது எல்லாம் அக்கால மெய் ஞானிகள் கண்டுணர்ந்து நமக்கு வழி காட்டிய பேருண்மைகள். ஞானிகள் காட்டிய வழிப்படி நாம் நடக்க வேண்டும்.

உடலுக்குள் நோய் உருவாகும் விதம்

 

உதாரணமாக வேதனை என்ற உணர்வினை அதிகமாக நாம் எடுத்தால் கோழி… குஞ்சுகளைப் பொரிப்பது போன்று நம் உடலில் இரத்தத்தில் அணுக்கள் உருவாகி விடுகின்றது.

எந்த வேதனைப்பட்டமோ அது தான் அதற்கு உணவு…! நம் உயிரால் கருவாக்கப்பட்டு அந்த அணுத்தன்மை அடைந்தால் பசிக்காக ஏங்கும் பொழுது உயிருக்கே எட்டுகின்றது.

நாம் எந்தக் கண் வழி வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அதன் உணர்வு உயிரின் நிலை கொண்டு அந்த உணர்வால் உணர்ச்சிகளாக நாம் அறிகின்றோம்.

இருந்தாலும் இரத்த நாளங்களில் அது கருவாக உருவாகி விடுகின்றது. கருவாக உருவானதோ அணுவாகி விடுகின்றது அணுவான பின் உணவுக்காக அது அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது உயிருக்கு வருகின்றது.
1.உயிருக்கு வந்தபின் கண்களுக்கே மீண்டும் வருகின்றது.
2.கண் வழி இந்த பூமியில் படர்ந்துள்ள எந்த மனிதனின் உடலில் இருந்து அந்த வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டதோ
3.அதை நமது கண்ணான காந்தப்புலன் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
4.நமது ஆன்மாவாக மாற்றிய பின் நமது உயிரில் உள்ள காந்தம் இழுத்து அந்த உணர்வினை இரத்தங்களில் கலக்கச் செய்கின்றது.

இரத்தங்களில் கலந்த பின் எத்தகைய வேதனை உணர்வு அணுவானதோ அந்த இரத்தத்திலிருந்து வேதனையான உணர்வுகளை உணவாக உட்கொள்கின்றது.

காற்று மண்டலத்தில் எல்லாச் செடி கொடிகளின் சத்துகளும் கலந்துள்ளது ஆனால் அதனதன் வித்துகளை நிலத்தில் ஊன்றும் பொழுது… எப்படி நிலத்தின் துணை கொண்டு அதனதன் செடியின் சத்தைக் கவர்ந்து செடிகள் விளைந்து அதனதன் வித்துக்களை உருவாக்குகின்றதோ இதைப் போன்று தான்
1.நம் உடலுக்குள் அந்த இரத்தங்களில் சுழன்று வருவதை எந்தெந்த குணங்கள் கொண்டோமோ அந்த அணுக்கள் அதை உணவாக உட்கொள்ளும்.
2.அதன் வழி அது தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்… வேதனை என்ற உணர்வை வளர்த்துக் கொண்டே இருக்கும்.

நம் உடலில் நுரையீரல் இருக்கிறது என்றால் வேதனை என்ற உணர்வுகள் அங்கே அந்த முட்டை வெடித்து அணுவாக உருவானால்… அந்த இடத்திலிருந்தே இரத்தத்திலிருந்து வருவதை அந்த அணு உறிஞ்சி தன் இனத்தைப் பெருக்குகின்றது.

தன் இனமான அணுக்களைப் பெருக்கப்படும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நுரையீரல் பழுதடையத் தொடங்கி விடுகிறது.

நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட அந்த நுரையீரல் சசுருங்கத் தொடங்கினால் அதனால் உடலில் உபாதைகளும் சரியாக சீராக இயங்காதபடி நாளடைவில் இந்த அணுக்கள் பெருகப் பெருகப் உடலும் சுருங்கத் தொடங்கிவிடும்.
1.வேதனையான உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க
2.உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்திலும் விஷங்கள் புகுந்து விடுகின்றது. கடும் நோயாகின்றது.

ஞானம் பெறும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்

 

அன்று சில உண்மை நிலைகளைக் காவியங்களாக்கி உணர்த்திய நிலையிலிருந்துதான் (சித்தர்களின் நிலை) இன்று விஞ்ஞானம் காண்கின்றோம்.

இப்பூமியின் ஈர்ப்பிற்கு மூலகாரணமாய் ஆணிவேராய் உள்ள ஓ…ம் என்ற நாதத்தினால் ஈர்க்கப்பட்ட அமில குணங்கள் தான் இவ்வுலகனைத்துமே. ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்து அதன் ஒளி அமிலத்தை இப் பூமியே பல நிலைகளில் வளர்த்துக் கொண்டது.

1.இப்பூமியின் அமில சக்தியான ஈர்ப்பின் அலை கொண்டு தான் அனைத்து நிலைகளும் நடக்கின்றன.
2.எதுவுமே ஒதுக்கப்பட்ட சக்தியற்ற ஜீவனில்லா நிலை இப்பூமியில் இல்லை.
3.ஒவ்வொன்றிற்கும் அதன் ஈர்ப்பிற்கு ஏற்ப அதன் குணநிலையுண்டு.
4.அதன் வளர்ச்சியில் மாற்ற நிலைகளும் உண்டு.

இயற்கையுடன் வளர்ந்திட்ட சக்திதனிலேயே உயர்ந்த ஞானம் கொண்ட மனித ஆத்மாவின் உடலைக் கொண்ட நாம் இவ்வுலகின் உண்மை நிலையை உணர்ந்திடாமல் இருந்திடலாகாது என்பதனை அன்று உணர்ந்த சித்தர்கள்… அந்தந்தக் கால நிலைகளுக்கொப்பக் கவிதைகளாக்கி காவியங்களாக்கி பல அபூர்வ நிலைகளை எல்லாம் புரியும் நிலையில் வடித்துச் சென்றார்கள். சென்றார்கள் என்ன…? வடிவாக்கி நின்றார்கள்.

ஆனால் இக்கலியின் கதையின் ரூபமாய்க் கண்டுணர்ந்து விரயப்படுத்தி விடுகின்றோம். ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு தத்துவக் கோளங்கள் உண்டு. நம் முன்னோர்கள் உணர்த்தி ஏற்படுத்திய அரும் பெரும் பொக்கிஷத்தை நாம் கண்டுணர வேண்டும்.

இவ்வுடல் என்ற மாய பிம்பத்தின் அற்ப ஆசைக்காக ஆத்மாண்டவனின் அறிவு ஞான பொக்கிஷத்தைச் சிதறவிட்டே வாழ்கின்றோம்.

அன்று பல சித்தர்களினால் ஆண்டவனாய்ப் பல ரூபப்படுத்தி அவரவர்கள் எண்ணத்திற்குகந்தபடி எல்லாம் ஆண்டவனின் ரூபத்தைக் கண்டுணர்ந்து அவர்களின் ஞானப்பாலை வெளிப்படுத்தினார்கள்.

1.எங்கும் நிறைந்துள்ள ஆண்டவனை எந்த ரூபத்தில் கண்டால் என்ன…? என்ற தத்துவ நிலையை
2.அவரவர்கள் சிவனாகவும் விஷ்ணுவாகவும் பிரம்மாவாகவும் வடிவமைத்துத் தந்தார்கள்

அன்பு நற்பண்பு சத்திய ஜெபம் இவற்றை நாம் மேற்கொண்டால்… அன்றைய சித்தர்களினால் சிவனாகவும் விஷ்ணுவாகவும் பிரம்மாகவும் படைக்கப்பட்ட “ஆத்மாண்டவனை…” இயற்கையின் எல்லாமில் எல்லாமாய் உள்ள ஒளியுடன் கலக்கச் செய்யலாம்.

1.அன்றைய சித்தர்களிலேயே ஒவ்வொரு சித்தனும் பல நிலைகளில் விளக்கியுள்ளான்.
2.பல பாடல்களை இயற்றி இன்றைய கால நிலைக்கும் பொருந்தும் நிலை ஏற்படுத்தியுள்ளான்.
3.ஆனால் இந்த ஞானத்தின் பொக்கிஷத்தை மனித ஆத்மாக்கள் பயன்படுத்தாமல் செயல் கொண்டு வருகின்றன.

கருவூராரின் கருவூலத்தைக் காண்பாரும் இன்றில்லை. கருவூலத்தின் கருவையே கரியூலமாக்கிக் களிப்படையும் காலமப்பா இது.

ஒவ்வோர் ஆத்மாவும் தான் பிறந்த கருவூலத்தின் மகிமையை உணர்ந்து வாழ்ந்திடுங்கள். கனவூலத்தில் களிப்பெய்திக் காணும் சுகம் என்னவோ என்பதனை உணர்ந்து வாழ்ந்திடுங்கள்.

பக்தியையும் ஞானத்தையும் வளரவிட்டு முக்தி என்னும் பக்தி பெறலாம். பக்தியில் வழி எடுத்து முக்தி என்னும் பக்திக்கே செல்லும் மார்க்கத்தை அடையலாம்.

சிற்றின்பம் பேரின்பம் என்றிட்டே ஞான இன்பத்தை நாசப்படுத்திட்ட நிலை ஏனப்பா…?

1.உண்டாலும் உண்ணாவிட்டாலும் இரவும் பகலும் மாறிக்கொண்டு தான் உள்ளன.
2.நாம் பெறப் போகும் ஞானத்திற்காக நாம் பெறப்படும் வரை எதுவுமே நமக்காக நிறுத்தி வைப்பதில்லை.
3.கருவூலத்தின் கருவாகிய நாம் நம் ஞானத்தை பெறும் சக்தியை அடையும் பக்குவத்தைத் திரும்பவும் திரும்பவும் செப்புகின்றேன்
4.நீங்கள் செயல்படுத்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு வேப்பமரத்தின் கசப்பான உணர்வலைகள் அதிகரித்து விட்டால் அதனருகே ரோஜாச் செடியின் மணங்கள் சிறிதாக இருப்பினும் அதை விரட்டிக் கொண்டே போகும்.

அதே போல் ரோஜாச் செடியின் மணங்கள் அதிகரித்து விட்டால் அதனருகே வேப்பமரத்தின் கசப்பான உணர்வலைகள் சிறிதாக இருந்தால் அதை இது துரத்திக் கொண்டே போகும். ஏனென்றால் ரோஜாவின் மணம் வலு கூடிவிடுகிறது.

இதே மாதிரித் தான் ஒரு விஷச் செடியின் மணங்கள் அதிகரித்து விட்டால் அருகே ரோஜாச் செடியின் மணம் இருந்தால் அதை விரட்டிக்கொண்டு போகும்.

ரோஜாச் செடியின் சத்து அதிகரித்து விட்டால் விஷச் செடியின் மணங்கள் தன்னாலே ஓடிவிடும்.

1.தாவர இனத்தின் மணங்கள் வலு கூடிக் குறையும் போது ஏற்படும் இத்தகைய இயக்கம் போல் தான்
2.மனிதருக்குள் எடுத்துக் கொண்ட அந்தந்த குணங்கள் கொண்ட உணர்வுகளின் இயக்கமும் இருக்கும்.

உதாரணமாக பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. அது நமக்குள் பதிவாகி விட்டால் அந்த உணர்வை இழுத்து இழுத்து நம் ஆன்மாவாகப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.

அதாவது நம் ஆன்மாவில்…
1.முதல் வட்டம்
2.இரண்டாவது வட்டம்
3.மூன்றாவது வட்டம் என்று
4.அந்தந்தக் குணத்தின் உணர்வலைகளாக வரும்.

முதல் வட்டம் நல்லதாக இருக்கின்றது. இரண்டாவது வட்டம் ஒரு வேதனை என்ற கசப்பான உணர்வாக இருக்கின்றது. மூன்றாவது வட்டம் வெறுப்பான உணர்வுகளாக இருக்கிறது.

1.அப்போது வேதனை கோபம் என்று அது தான் முன்னாடி வருகின்றது.
2.அதைக் கடந்துதான் அந்த நல்ல உணர்வு நமக்குள் வரவேண்டும்.
3.இரண்டாவது வட்டம்… மூன்றாவது வட்டத்திற்குள் இருக்கும் வேதனை வெறுப்பு அவைகளுடன் கலந்து நாம் சுவாசித்தோம் என்றால்
4.நல்லதை நம்மால் சீராக இயக்க முடிவதில்லை.

அந்த வெறுப்பும் வேதனையும் கலந்தே பேசத் தொடங்குவோம். யாரிடம் பேசினாலும் என்னத்தைச் சொல்லி… யாருக்கு நல்லதைச் செய்து… என்ன பலன்…? என்ற இந்த உணர்வு முன்னாடி வரும்.

காரணம் நமக்குள் நல்ல குணங்கள் இருந்தாலும்… உள்ளே பதிந்திருந்தாலும்… நம் ஆன்மாவிலிருந்து இழுத்துச் சுவாசிக்கும் போது இடையில் இருக்கும் உணர்வுகளுடன் கலந்து வந்துவிடுகிறது.

1.நம் ஆன்மாவில் இருக்கும் உணர்வலைகளில் ஒரு அடி வித்தியாசத்தில் இபபடி வந்து கொண்டே இருக்கும்.
2.இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது வேதனையும் கோபம் தான் அதிகமாக வரும்.
3.எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் அவைகளைக் கடந்துதான் வர முடியும்.
4.அதைக் கடந்து வரும் பொழுது அதுதான் இயக்குகின்றது.

சூரியன் பல விஷத்தன்மையுள்ள உணர்வுகளை எடுக்கின்றது. அதையெல்லாம் தன் முகப்பிலே மோதி ஒளியாக மாறுகின்றது… காந்தப் புலனாக மாற்றுகின்றது.

சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சைப் பிரித்து விடுகின்றது. ஆனாலும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்தங்கள் அந்த அல்ட்ரா வயலட் என்ற நஞ்சுக்குள் புகுந்து தான் வெளியிலே வருகின்றது.

அந்த உணர்வின் சத்து எதுவோ எந்த மணத்தை இது தாங்கியதோ எதனுடன் தாங்குகிறதோ அந்த உணர்வின் குணம் கொண்டு தான் அதை இயக்கும்.

இதைப் போல தான் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு உள்ளுக்குள் இருந்தாலும் வேதனை வெறுப்பு கோபம் என்ற இந்த குணங்களை எடுத்தால் இது முன்னாடி வந்து விடுகின்றது.

அடுத்து நாம் நல்லதை எண்ணி வந்தாலும் ஆன்மாவில் பட்டு அதனுடன் சேர்த்து அந்த தான் வரும். இது உள்ளே நுழைந்து நமக்குள் எண்ணங்களாக வருவதற்கு முன்னாடி நல்ல குணங்கள் கார குணமாகவே வரும்.

அந்த மாதிரி நேரத்தில் யாராவது நல்லவர்கள் வரட்டும். கொஞ்சம் இனிமையாக அவர் சொன்னால் போதும்.
1.இன்றைக்கு இவர் நல்லது செய்ய வந்து விட்டாராக்கும்…!
2.எந்த எண்ணத்துடன் வந்திருப்பாரோ… யாருக்குத் தெரியும்…? என்ற அந்தக் குறையான எண்ணமே வரும்.

அதே போல் பிரசாதம் கொடுக்கும் இடங்களில் பார்க்கலாம். கொஞ்சம் வெறுப்பாக இருந்தால்… டக்கென்று கையிலே இடித்துத் தான் கொடுக்க வைக்கும். இந்த உணர்வுகளைப் பார்க்கலாம்.

ஒரு பொருளைக் கொடுக்கும் பொழுதே
1.இந்தா…! என்று அழுத்தமாகச் சொல்ல வரும்… கொடுக்கும் பொழுதே பார்க்கலாம்.
2.அந்த உணர்வுகள் எப்படி… அது என்ன எல்லாம் செய்கிறது…? என்று…!
3.நல்ல குணம் நமக்குள் இருந்தாலும் மற்ற உணர்வுடன் சேர்ந்து நம் உடலையே இப்படி இயக்கிக் காட்டும்.

அனுபவத்தில் பார்க்கலாம்.

இதை எல்லாம் நிறுத்துவதற்குத் தான் “சதுர்த்தி…” என்று வைத்தார்கள். தீமைகளை நாம் நிறுத்த வேண்டும்.

யார் மீதெல்லாம் நாம் வெறுப்பைப் பதிவு செய்து வைத்திருந்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… நாங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் வலுவாகத் தியானிக்க வேண்டும்.

1.அப்போது அந்த வெறுப்பான அணுக்களுக்கு நாம் சாப்பாடு கொடுப்பதில்லை.
2.வெறுப்பான எண்ணங்களை நீக்கி விடுகிறோம்.
3.எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கின்றோம்.

நாம் எண்ணிய இந்த உயர்ந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. இந்தக் காற்று மண்டலத்தில்
1.நமக்கு முன்பு இருக்கும் தீமைகளை விரட்டிச் செல்கிறது.
2.நம் ஆன்மாவும் தூய்மை அடைகிறது… பரமாத்மாவும் தூய்மை அடைகிறது.

துருவத்தின் வழி… புருவத்தின் வழி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர வேண்டும்

 

அகஸ்தியன் துருவனாகி பின் திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து துருவ மகரிஷி ஆகித் தனக்குள் சிருஷ்டித்து இரு உயிரும் ஒன்றாக இணைந்து இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக ஒன்றி வாழ்ந்து ஒளியின் சரீரமாகி எந்த துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

அகஸ்தியனும் அவன் மனைவிவும் பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினின்று வெளிப்படும் ஒளி அலைகளைச் சூரியன் கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.நமது பூமி துருவத்தின் வழியாக இழுக்கின்றது. இங்கே படர்கின்றது.
2.அதிகமாகப் பாயும் இந்த அதிகாலை நேரத்தில் துருவத்தை உற்று நோக்கி
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதை நாம் நுகர நேர்கின்றது
4.நம் உடலுக்குள் அது பரவுகின்றது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்கும் அது கிடைக்கின்றது.

அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்துக் கொண்டு வந்தால் இந்த உணர்வுகள் சிறுக சிறுக நல்ல அணுக்களின் பெருக்கமாகி தீமையான அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களாக உருவாக்குகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவினைச் செலுத்தி அதனுடைய அருள் சக்தி பெற வேண்டும் என்று கண்களை மூடி ஏங்கித் தியானியுங்கள்.

ஈஸ்வரா என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். “ஈஸ்வரன் என்றாலே உயிர் தான்…” அவனிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் இப்பொழுது செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி திரும்பத் திரும்ப நுகரும் பொழுது
1.புருவ மத்தி வழிதான் உடலுக்குள் அந்த அலைகள் செல்கின்றது.
2.புருவ மத்தியின் வழி வரும் பொழுது “குறு…குறுப்பும்… சிலருக்கு ஒளியும் நல்ல உணர்ச்சிகளும்” தெரிய வரும்.
3.சிலருக்கு அந்தக் “குறு…குறு…” என்று இருக்கும் பொழுது சிறிது வலியும் கூட இருக்கும்.
4.காரணம் நம் உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும் அந்த அரும்பெரும் சக்தி அங்கே படரும் பொழுது
5.தீய அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.

ஆகவே உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள் “திரும்பத் திரும்ப…”

அந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும். ஏங்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசிக்க நேர்கின்றது “புருவ வழியில்…”

1.நமது உணர்வுகள் நுகரும் அல்லது செல்லும் பாதை அந்தப் புருவம் தான்
2.இரண்டு கண்களுக்கு இடையில் புருவ மத்தியில் உயிரின் இயக்கம்…
3.நம் உயிரின் துணை கொண்டு துருவத்தில் இருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
4.புருவத்தின் வழி நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்கு அந்த உயர்ந்த சக்தியினை நாம் ஊட்டுகின்றோம்.
5.நம் இரத்த நாளங்களில் அதைப் பெருக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவலைகளை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உங்கள் உணர்வலைகள் இரத்த நாளங்களில் கலப்பதும்… “உங்கள் உடலில் உள்ள அணுக்களில் பெருகும் அந்த உணர்ச்சிகளை அறியலாம்…”

உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்று இல்லை

 

இப்படி இப்பூமியில் பல காலமாய் ஏற்பட்டதின் தொடர்ச்சியில் பல பல நிலைகள் நடக்கின்றன. ஒன்றைப் போல் ஒன்றில்லாமல் தான்… ஒன்றை அழித்து ஒன்று சக்தி கொண்டு இவ்வண்டமும் பேரண்டமும் சுழலுகின்றன.

ஆனால் நம் மனித ஆத்மாக்கள் மட்டும் ஒருவரைப் பார்த்து ஒருவர்
1.அவரைப் போல் நாம் வாழ வேண்டும்
2.மற்றவர்களைப் பார்த்து ஆண்டவன் அவர்களுக்கு அபரிமிதமான சக்தியை அளிக்கின்றார் என்ற குறைவான எண்ணம் வேறு.
3.ஒன்றைப் போல் ஒன்றில்லை… ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்ற நிலை இப்பூமிக்கே உள்ள பொழுது (அனைத்திற்குமே)
4.நாம் ஏன் ஒன்றின் எதிரொலியாய் எதிர்ப்பார்க்க வேண்டும்.

ஆதி காலம் தொட்டே ஞானங்கள் உணர்த்தி வந்த நிலையிலும் ஒவ்வொருவரும் அவர்களின் உண்மை நிலையைத்தான் உணர்த்தினார்கள்.

இன்று நம் ஞானத்தின் சக்தி பொதுவானது தான். ஒவ்வொருவருக்கும் அந்த ஞானத்தைப் பெறும் ஆற்றல் உள்ளது என்று உணராமல் “செக்குமாடுகளாய்ப் போல்” சுழன்று கொண்டே உள்ளோம்.

ஞானிகள் வெளிப்படுத்தியதை இப்பூமியில் (இந்தியா) உள்ள பல பாகத்தில் இதன் நிலையை எடுத்து அதில் ஆராயும் நிலையைப் (ஞானோதய நிலை) பெற்று பல விஞ்ஞானத்தைத் தன் ஞானத்துடன் சேர்த்துச் செயலாக்குகின்றார்கள்.

ஆனால் ஞானத்தை வளர்த்த பூமியிலுள்ள ஆத்மாக்கள் இன்று மற்றைய மேலை நாடுகளின் செயற்கையின் வளர்ச்சியில் மயங்கி இங்கிருந்து அங்கு சென்று வந்தால் இவ்வுலக அனுபவம் பெறலாம் என்று அற்ப ஆசையில் ஓடுகின்றார்கள்.

ஞானிகளையே அள்ளி வழங்கிய ஞானச் சுரங்கத்தை எடுக்கும் பக்குவம் இன்றைய காலத்தின் ஜாதியின் அடிப்படையில் சொந்தமாக்கி பக்திக்குப் பொருளைக் கொண்டு ஸ்தானங்கள் அமைக்கப்படும் கோயில்களில் ஏற்படும் இம்மதிப்பு விகிதத்தைக் கொண்டு மங்கச் செய்து விட்டார்கள்.

இராமாயணத்தையும் கீதையையும் இவர்கள் ஜாதியின் அடிப்படையில் சொந்தமாக்கி அதில் உள்ள கருத்துக்களையும் மாற்றிவிட்டனர்.

ஆனால் விக்ரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள வேதாள முனிவர் செப்புவதாக உணர்த்திய அதன் கருத்துக்களை மக்களினால் விளையாட்டாகவும் விரும்பத் தகாத முறையில் பேய் என்ற ஒதுக்கப்பட்ட நிலையிலும் ஒதுக்கிவிட்டவர்கள்…
1.விக்ரமாதித்தன் கதையில் உள்ள கருத்துக்களை ஊன்றி அறிந்தால்
2.இவ்வுலக நடப்பின் உண்மைகளை அன்றே கதையுருவில் ஆவி பேய் என்ற ரூபத்தில் உணர்த்தியுள்ளார்.
3.விக்ரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள நிலைகள் உண்மை நிலைகள்.

ஒவ்வொரு மனிதனின் எண்ணத்திலும் இன்று பல பேயான குணங்களுக்கு இடமளித்துவிட்டு பேய் என்று உருவமில்லாத நம்பப்படாத நிலைக்கு மட்டும்தான் இன்றைய மனிதன் பயப்படுகின்றான்.

உலக நிலை எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா…?

அனைத்துமே ஆவி தான். பக்தி என்று சக்தி மாதா என்று மற்றவர்கள் எழுதி வைத்த மந்திரங்களைப் புரியாமல் உருப்போட்டுப் பல பொருட்களை அச்சக்தி மாதாவுக்குப் படைத்துப் பூஜித்து வணங்கச் சொன்னால் இன்றைய நம் மனிதர்கள் நம்புவார்கள்.

1.“உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஆவி என்றும் பேய் என்றும் சொல்பவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள்…”
2.இன்று இங்குள்ள ஆத்மாக்கள் ஒன்றையே சுற்றிச் செக்கு மாடுகளைப் போல் உழன்று உள்ள நிலையில் மறு சொல் ஏற்படுவது கடினம்தான்.

நம் பூமியின் நிலையே அந்தந்த இடத்திற்குத் தகுந்த அமிலத்தை ஈர்க்கும் குணத்தைக் கொண்டு இப்பூமியின் பல பாகங்களில் அதனதன் இயற்கை வளத்தின் செழிப்புத் தன்மையும் கால நிலைகளும் உருவாகின்றன.

இயற்கைத் தன்மைக்கு மட்டும்தான் அம்மாற்றமா…? இயற்கையின் வளர்ச்சி பெற்ற மனித ஆத்மாவுக்கும் அதுவேதான். அந்தந்தப் பூமியின் காந்த சக்தியைக் கொண்டுதான் மனிதனின் எண்ண ஓட்டம் உருவ வளர்ச்சி உணவு நிலை உறங்கும் நிலை அனைத்துமே இருந்திடும்.

இங்குள்ள மனிதனின் சுறுசுறுப்பிற்கும் மற்ற நாட்டின் சுறுசுறுப்பின் தன்மைக்கும் மாறுபடும். இங்கு காய்க்கும் காய்கறி கனி வளங்களைப் போல் மற்ற நாடுகளில் இருப்பதில்லை.
1.இங்குள்ளவை அங்கு வளர்வதில்லை… அங்குள்ளவை இங்கு வளர்வதில்லை.
2.இதே விதையை அங்கு போட்டாலும் அப்படி அது வளர்ச்சி எய்தினாலும் சுவையில் மாறுபடுகின்றது.

அங்குள்ள மனிதன் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளான். பல நவீன செயற்கையகங்களை உருவாக்கி உள்ளான் என்றால் அது அவன் செயல் மட்டுமல்ல… அவன் பிறந்த பூமியின் அமில குணத்தில் அவன் உருவாக்குகின்றான். அவன் செயல் திறனும் அதன் நிலைக்கொப்பத் தொடருகின்றது.

நம் பூமியில் கலந்துள்ள இந்த ஞான ஒளியை அன்று உணர்ந்த சித்தர்களின் தொடர்பிருந்தும், இன்று நாம் தவற விட்டு சாமான்யர்களாய்ப் பெற முடியாத ஒன்றாக அதனைக் கருத்தில் கொண்டு வாழ்கின்றோம்.

1.இன்னும் சிலர் சித்தும் ஞானமும் எதற்காக…? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா…? என்ற உணர்விலேயே ஞானத்தைத் தவற விட்டு
2.இன்று பக்தி என்ற மமதைப் பிடியிலும் அரசியல் என்ற கோமாளி விளையாட்டிலும் நம் செயலையெல்லாம் விரயமாக்கி வாழ்ந்து வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று எவ்வளவோ ஆர்வத்தில் இங்கே வருகின்றார்கள். ஆனால் இங்கே நானா… நீயா…? என்ற நிலைகளில் ஒரு சிலர் செயல்படுகின்றனர்.

ஞானம் பெற வேண்டும் என்று இங்கே எந்தப் பக்குவத்துடன் வருகின்றார்களோ அவர்கள் மனம் புண்பட்டால் அதனுடைய விளைவுகள் நம்முடைய வளர்ச்சியைக் குன்றச் செய்ததுவிடும்.

ஒரு மனிதன் எந்த ஏக்கத்துடன் வருகின்றானோ… அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் வரும் பொழுது… அதற்குத் தடையாக நாம் இருந்தால் அவன் எண்ணங்கள் எவ்வளவு பெரிய நிலையை நமக்கு உருவாக்கும்…! என்று உங்களுக்கே தெரியாது.

இதையெல்லாம் நாம் நம்மிடம் இருந்து அப்புறப்படுத்துதல் வேண்டும். பிறரை நாம் வாழ்த்த வேண்டும்.
1.பிறரை மதித்துத் தான் பழக வேண்டுமே தவிர
2.அவர்களை நாம் தாழ்த்திப் பழகவே கூடாது

குருநாதர் இதைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். தாயாகவும் நீ இரு… சேயாகவும் நீ இரு…! என்றார்.

1.குழந்தை தாயை ஏசிவிட்டாலும் அந்தத் தாய் “தன் குழந்தை” என்று அரவணைத்துத் தான் செயல்படும்
2.அதே சமயத்தில் குழந்தையைத் தாய் அடித்து விட்டாலும் மீண்டும் அந்தக் குழந்தை தாயை அணுகியே தான் வரும்.

தாயாகவும் சேயாகவும் நாம் ஒருங்கிணைந்த நிலையில் கொண்டு வாழ வேண்டும் என்று குருநாதர் எனக்கு இதைத்தான் முதலில் கொடுத்தார்.

எத்தனையோ பேர் உன்னை ஏசுவார்கள் பேசுவார்கள். ஆனால் தாயாக இருந்து அதை நீ ஏற்று… அவர்களுக்கு… சேய்க்கு உபதேசிப்பது போன்று ஒவ்வொரு நிலைகளிலும் நீ காத்தருள வேண்டும். தாய் தன் குழந்தையை எப்படிக் காக்கின்றதோ அதைப் போல நீ வரவேண்டும்.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் தாயாக மாற வேண்டும். சேயை எப்படி வளர்க்கின்றோமோ அது போலச் செயல்பட வேண்டும்.

குழந்தையிடம் யார் எதைப் பேசினாலும் அல்லது குழந்தையைத் திட்டிவிட்டு அடுத்து ஒரு பிஸ்கட்டைக் கையில் கொடுத்தால் அது வாங்கிக் கொள்ளும்.
1.அந்தக் குழந்தையின் செயலைப் போல
2.நாமும் பகைமையை மறத்தல் வேண்டும்

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் உயர்த்த வேண்டும். இதைப் போன்ற நிலைகளை நாம் பின்பற்றுதலே நலம்.

அதற்குத்தான் இந்தக் கூட்டமைப்பை… ஸ்தாபனத்தை அமைத்திருக்கின்றோம். குருவின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்துள்ள நாம் அனைவரும் அதைச் செம்மையான முறையில் கடைப்பிடித்து வழி நடத்துதல் வேண்டும்.

பல்லாயிரக் கணக்கானோர் நல்வழியினை விரும்ப… இதற்குள் இரு நூறு பேர் தடைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்ற நிலையில் நானும் (ஞானகுரு) காட்டிற்குள் சென்று இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அந்த இடைஞ்சலான இடத்தில் போய் உட்கார்ந்தாலும் அங்கே வருபவர்கள் எத்தனையோ கஷ்டம் என்று ஒரு நான்கு பேர் அந்த “நல்லதைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தில் வருவார்கள்.

அவர்களுக்கு மட்டும் நான் அருள் ஞானத்தைப் பெறச் செய்ய முடியும். கஷ்டப்பட்டு எபப்டியும் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைகளில் வருவோர் நிச்சயம் அதைப் பெறுவார்கள்.

ஆனால் கஷ்டமில்லாமல் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைக்கு வரும் பொழுது எப்படி இருக்கும்…? அது இலேசாகத் தான் தெரியும்.

அது போன்று நீங்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்குத் தான் இதைச் சொல்லி எச்சரிக்கை செய்கிறேன் (ஞானகுரு).

உடல் நலம் பெறுவதற்குத் தான் இந்தத் தியானம் செய்கின்றோமா…? என்றால் இல்லை…!

 

அன்றாட வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாக ஆனான்… ஒளியின் சரீரமாக இருக்கின்றான் உடலை ஒளியாக மாற்றிச் சென்றான். அப்படி ஒளியாக மாறியது தான் துருவ நட்சத்திரம்.

அதிலிருந்து வருவதைத் தான் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டு வருகின்றது… நம் பூமியிலேயே பரவச் செய்து கொண்டிருக்கின்றது.
1.காலையில் நான்கிலிருந்து ஆறரை மணிக்குள் மொத்தமாகக் குவித்து கொண்டு வருகின்றது.
2.வெயில் வருவதற்கு முன் நாம் அதை எடுத்துப் பழகுதல் வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை நீங்கள் செவிகளில் கேட்கப்படும் பொழுது ஏங்குகிறீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்கு எளிதில் கிடைக்கின்றது.

ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது திடீரென்று விபத்து ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டால் அல்லது பேப்பரிலே அதைப் படித்தால் நம் மனது எப்படி ஆகின்றது…? கொஞ்ச நேரமாவது நம் மனது சோர்வடைகிறது.

இதைப் போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சொல்லப்படும் பொழுது
1.என்னைக் கண்களால் பார்க்கின்றீர்கள். கரு விழி உங்களுக்குள் பதிவாக்குகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றது.
3.இப்படிப் பதிவாக்கி துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வை நுகரச் செய்தால்
4.தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் அதற்குள் மறைந்துள்ள செம்பை பித்தளையும் ஆவியாக மாற்றுவது போல் தீமைகளைக் கரைத்துவிடும்.

ஏனென்றால் தீமைகளை வென்றது துருவ நட்சத்திரம். அதிலிருந்து வரக்கூடியதைத் தான் காலை துருவ தியானத்தில் நீங்கள் பெற்றால் உங்களுக்குள் வலுவாக்கி வளர்த்துக் கொள்ள ஏதுவாகும்.

எப்படி வேதனை என்ற விஷமான உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவி நல்ல குணங்களை அது கெடுக்கின்றதோ… நல்ல அணுக்களை மாற்றுகின்றதோ இதைப்போல
1.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் வளர்க்க அதை நீங்கள் விடாப்பிடியாகச் செய்து வர வேண்டும்,.
2.ஒரு நாளைக்கு செய்துவிட்டு என் கஷ்டம் எல்லாம் போகவில்லையே என் உடலில் உள்ள நோய் போகவில்லையே என்று
3.அப்படி எண்ண வேண்டியதில்லை… நோய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

நாம் அந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வந்தால் இந்த உணர்வின் வளர்ச்சி பெருகும் பொழுது… இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

இல்லாமல் போனால் கீழே தான் மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்.
1.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்றால்
2.நான் மேலே சொன்ன முறைப்படி செய்யுங்கள்.

நீங்கள் தேடிய சொத்தும் செல்வமும் கையில் வைத்திருக்கிறீர்களா…? வருகின்றது… வளர்கின்றது… பின் தேய்கின்றது… தேய்ந்த பின் வேதனைப்படுகின்றோம்.

சரி சொத்து தான் போகட்டும் இந்த உடலை நல்ல முறையில் அழகாக வளர்த்து வைத்திருக்கிறீர்கள் ஆனால் கடைசியில் இந்த உடல் எவ்வளவு சுருங்குகின்றது… எவ்வளவு வேதனைப்படுகிறது…?
1.உடலைக் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக அழகாக வைத்திருக்க முடிகின்றதா…?
2.அல்லது இந்த உடல் நிரந்தரமாக நம்முடன் இருக்கின்றதா…?

யோசிக்கின்றோம் சொத்துக்காக எத்தனையோ சண்டைகளையும் போடுகின்றோம்… ஆசையும்படுகின்றோம்.

ஆனால் ஒருவன் வந்து பணத்தை எல்லாம் கொள்ளையடிக்கும் பொழுது “பாவிப் பயல்…! இப்படி எடுத்துச் செல்கின்றானே…” என்று அவன் சாபம் இடுகின்றான்.

இவன் சொத்தை அவன் அபகரித்துச் செல்லும் பொழுது இவன் அவன் உடலுக்குள் சென்று சிறிது நாள் அதை அவன் அனுபவித்தாலும்
1.இவனுடைய சாப அலைகள் அவனுக்குள் ஊடுருவி அவனை நாஸ்தியாக்குகின்றது.
2.இப்படித்தான் தொடர்ந்து நடக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் காலையில் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கின்றோம்.
தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டி “நம் எல்லையை அதுவாக்கி… நாம் அனைவரும் பிறவியில்லா நிலை அடைவோம்…”

முற்பிறவி என்று சொல்லும் “சிலருடைய அமானுஷ்ய செயல்கள்”

 

இன்று இவ்வுலகில்… சில இடங்களில் சில ஆத்மாக்கள் குழந்தைப் பிராயத்திலேயே அதன் வயதுக்கு ஒவ்வாத நிலையில் சில நிலைகளை ஞானோதயம் பெற்று… வயதுக்கு மீறிய சித்தர்களாலும் சப்தரிஷிகளாலும் மட்டுமே உணர்த்தக்கூடிய நிலையில் உணர்த்துகின்றனர் என்றால் அது எந்த நிலையில்…?

அவ்வாத்மாவின் ஒளி அலைகள் அதனுடைய முன் ஜென்மத்தில் சில மகான்களின் தொடர்புடன் வாழ்ந்திருந்து அவர்களின் எண்ணத்திலேயே ஆத்மா பிரிந்து மறு ஜென்மத்திற்கு வரும் பொழுதும் இன்னும் ஒவ்வோர் உடலுக்குள்ளும் பல அணுக்கள் உள்ளன என்று உணர்த்தியுள்ளோம்.

அதைப்போல் பல ஆவிகளும் அவ்வுடலில் ஏறிக் கொண்டுள்ளன.
1.அந்த நிலையில் அம்மகானானவர் அவர் வாழ்ந்து, ஞானம் பெற்றுச் சக்தியின் நிலையில் ஒளியுடன் கலக்கப் பெறும் பொழுது
2.அவர் உடலுடன் உள்ள நிலையிலேயே அவர் எடுத்த ஜெபத்தினால்
3.அவ்வுடலில் இருந்த மற்ற ஆவிகளும் அணுக்களும் (பல கோடி எண்ண அணுக்கள்) அவரின் ஞானத்தினால் இவைகளும் நல்ல நிலை எய்துகிறது.

இம்மகான் உடலை விட்டுச் செயல்படும் நிலையிலேயே இவ்வுடலில் தங்கிய இவ்வாவிகளுக்கும் அவற்றின் எண்ணமெல்லாம் நீங்கி இம்மகானுடன் அவர் உடலில் சாடியதின் பயனால்
1.அவர் பெற்று ஏற்றிய ஞானத்தின் ஒளியில் பங்கு பெற்று மறு ஜென்மத்திற்கு வந்து வாழும் நிலையில்
2.மகானுடன் ஒன்றியதினால் அவ்வொளி அலையை ஈர்க்கும் அமில குணமுடன்
3.இச் சிசு பிறப்பில் வாழும் பொழுது அம் மகானின் சக்தி அலையை இச்சிசுவின் மேல் பாய்ச்சி
4.பல அபூர்வ நிலையெல்லாம் வயதிற்கு மீறிய செயலாக இன்றளவும் நடந்து வருகிறது.

திருஞானசம்பந்தரின் மொழி அமுதை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது இந்த நிலையில் தான்.

இன்று மட்டுமல்ல பல கால கட்டங்களாய் சில சில இடங்களில் இப்படி வியக்கத்தகும் அதிசய நிலைகள் நடந்து வருகின்றன. இதன் வட்ட ஒளியிலேயே ஞானம் பெற்றுச் செயல்பட்டால் “மீண்டும் மீண்டும் சக்தி நிலை பெருகிப் பல நிலைகளைச் செயலாக்கிடலாம்…”

பெற்ற பயனைப் பொருளுக்கும் புகழுக்கும் விரயப்படுத்தி விட்டால் ஞான சக்தியின் வலு குன்றி விடுகின்றது.

திருவையாறு தியாகராஜரின் நிலையும் இந்நிலையில் வந்ததுதான். அவர் தன் உடலை விட்டுப் பிரியும் நாள் வரை அச்சங்கீத ஞானத்துடனே ஐக்கியப்பட்டுத் தான் அடைந்த ஞானத்தின் பொக்கிஷத்தை இம்மியளவும் சிதற விடாமல் செயல் கொண்டதினால் நல் ஒளி பெற்றார்.

இந்த நிலை தெய்வீக நிலையில் மட்டும் ஏற்படுகின்றதா…? மற்ற நிலைகளில் இல்லையா…? என்ற வினா எழும்பலாம்.

இன்று உலகத்தில் பல பாகங்களில் தன் பூர்வ ஜென்மத்தில் இந்த இந்த இடத்தில் வாழ்ந்ததாகவும், இவர் தான் என் தாய், இவர் தான் என் தந்தை என்று சொந்த பந்தங்களை உணர்த்தியும், தன் முந்தைய நாமகரணத்தையும் சொந்த பந்தங்களின் நாமகரணத்தையும் மற்ற எல்லாக் குறிப்புகளையும் மறு ஜென்மம் எய்திய பிறகும் முன் ஜென்மத்தில் நடந்த இடத்தை உணர்த்துகின்றார்களே இவை எந்த நிலையில்…?

ஓர் ஆத்மா வாழுகின்றது. அது வாழும் நிலையில் இன்று பேய் பிடித்து விட்டது, பிசாசு பிடித்து விட்டது என்றெல்லாம் சிலரைச் செப்புகின்றனர்.

எப்பேயும் யாரையும் பிடிப்பதில்லை. ஆனால் இம்மனித ஆத்மாவின் எண்ணச் சிதறலினால்
1.அந்த அந்த எண்ண நிலைக்கொப்ப ஆவி உலக ஆத்மாக்கள் அதன் எண்ணத்தை ஈடேற்றச் சில உடல்களில் ஏறுகின்றன.
2.உடலில் ஏறிய எவ்வாத்மாவுமே அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மா பிரிந்த பிறகுதான் இவ்வாவி ஆத்மாவும் வெளியேற முடிகின்றது.

ஓர் உடலில் இப்படி ஏறிய ஆவி ஆத்மாவானது அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மாவைக் காட்டிலும் சக்தியுடையதாய் ஏறிச் சில செயல்களைப் புரிவதினால் தான்
1.சிலர் (சில உடல் ஆத்மாக்கள்) தன் நிலை பெற முடிந்து தன் எண்ணத்தைக் கொண்டு வாழ்ந்திட முடியாமல்
2.ஆவி ஆத்மாவின் செயலில் வாழ்வதினால்தான் “பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்து விட்டது…” என்கின்றனர்.

இப்படி வீரிய சக்தி கொண்ட ஆவி ஆத்மாக்கள் ஏறிய உடல் ஆத்மாக்கள் நீண்ட நாளும் வாழ்வதில்லை அகால மரணம் எய்துகின்றனர்… தன் நிலை மறந்து.

அந்த நிலையில் அவ்வுடலில் இருந்து உடலுக்குச் சொந்தமான ஆத்மாவும் உடலில் ஏறிய ஆவி ஆத்மாவும் பிரிந்து செல்கின்றது.

இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவிற்கு தன் செயலைச் செயல்படுத்த மற்றோர் உடலில் ஏறியதினால், தன் முந்தைய நிலை மறந்து
1.எவ்வுடலில் ஏறிச் செயல் கொண்டதோ அவ்வுடலின் சொந்த பந்தங்களுடன் தன் எண்ணமும் செயல்பட்டதினால்
2.இவ்வுடலுக்குச் சொந்தமான சொந்த பந்தங்களும் வாழ்ந்த இடங்களையும் தனதாக ஒன்றி விடுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா எவ்வாத்மாவானாலும் சரி… உடனே பிறப்பிற்கு வருவதில்லை. தன் உதிரத் தொடர்புடைய தாய் தந்தையார் மக்கள் இவர்கள் உள்ளவரை பிறப்பிற்கு வருவதில்லை.

அப்படி இருக்க… இக் குறுகிய காலத்தில் பிறப்பெய்தி இவர்கள் தான் என் தாய் தந்தையார் சுற்றத்தார் என்றெல்லாம் முன் ஜென்மத்தின் நிலையை உணர்த்துவது எப்படி…?

அதாவது இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவானது, தாயின் கரு நிலைக்கு வந்தவுடன் அதன் இரண்டு நிலை கொண்டு…
1.இரண்டு நிலை என்பது அதன் முந்தைய ஜென்ம நிலையும் ஆவி ஆத்மாவாய் மற்ற உடலில் சாடியதின் நிலையும் கொண்டு
2.கர்ப்பத்திற்கு வந்தவுடன் இவ்வாத்மாக்களுக்கு பன்னிரண்டு வகையான அமிலத்தை ஈர்க்கும் குணமுடைய சக்தியைக் காட்டிலும்
3.மற்றொரு உடலில் ஏறி வெளிப்பட்டதின் நிலையினால் தாயின் கருவில் அதன் நிலையும் மறக்கப் பெற்று
4.பிறப்பிற்கு வந்த பிறகு அது எடுக்கும் சுவாசத்தினால் மற்றோர் உடலில் ஏறி வெளிப்பட்ட ஆவி ஜென்மத்திற்கு வந்து
5.வாழும் வளர்ச்சி பெற்ற எண்ண நினைவுகள் எல்லாம் நினைவில் சாடும் பருவத்திலேயே அதன் பேசி உறவாடும் காலகட்டத்தில்
6.அவை ஏறிய உடல் ஆத்மாவின் சொந்த பந்தங்கள் வாழ்ந்த நினைவலைகள் எல்லாம் இவ்வாத்மா செப்புகின்றது.

மற்றோர் உடலில் குடியேறி… தன் முந்தைய ஆவி நிலையை மறந்து அவ்வுடலின் எண்ணத்தில் வாழ்ந்து செயல்பட்ட ஆவிகளினால்தான்… இப்படி முந்தைய ஜென்மத்தைச் செப்ப முடியும். ஆனால் இவற்றிலேயே எல்லா ஆவிகளும் இப்படி மற்ற உடலில் ஏறிய பிறகு ஜென்மத்திற்கு வர முடியாது.

1.நல்ல ஆத்மாவின் எண்ணமுடன் ஏறிச் செயல்பட்ட ஆத்மாக்களுக்குத்தான் இப்படிப் பிறப்பு எடுக்கும் நிலை பாக்கியமும் வருகின்றது.
2.ஆனால் முந்தைய ஜென்ம வாழ்க்கையை உணர்த்தி வாழும் ஆத்மாக்களும் நீண்ட நாட்கள் வாழ்ந்திடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டுமென்பதற்காகச் சுலபமாகக் கொடுக்கிறோம். அதை நீங்கள் நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எந்தச் சங்கடமான உணர்வு வந்தாலும் சரி… உடனே ஆத்ம சுத்தி செய்யுங்கள். உங்களிடம் அந்த அழுக்குச் சேராது.

உங்களிடம் அவ்வளவு பவரைக் கொடுக்கிறோம் என்றால் யாம் அனுபவித்து வந்தது.
1.நொடிக்கு நொடி… எம்மை இம்சை பண்ணியே குருநாதர் சக்திகளைக் கொடுத்தார்.
2.உங்களுக்கு இம்சை வரும்போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
3.ஆத்ம சுத்தி மூலம் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

ஆனால்… சாமியை எண்ணிக் கொண்டிருந்தோம்… எனக்கு இப்படி இருக்கிறதே…! என்று (சாமியை) நினைத்துக் கொண்டே ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஏதாவது உடலிலே வலித்தால் போதும். எம்மைத் திட்டத்தான் செய்கிறார்கள். சாமி… இப்படி இருக்கிறதே…! தலை வலிக்கிறதே… மேல் வலிக்கிறதே… என்றுதான் எண்ணுகிறார்களே தவிர ஆத்ம சுத்தி செய்யுங்கள் என்றால் எத்தனையோ பேர் விட்டுவிடுகிறார்கள்.

யாம் (ஞானகுரு) உங்களுக்கு லேசாகச் சொல்கிறோம். ஆனால் கஷ்டப்பட்டுத் தான் எல்லாவற்றையும் பார்த்து வந்தோம்.

உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்..! என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றேன். லேசாகச் சொன்னால் சொன்னால் பெரும்பகுதியானோர் அதைச் செய்வதில்லை.

சாமி மீது ரொம்பப் பற்று இருந்தால் போதும்…!
1.அவர்கள் என்ன தவறு செய்தாலும் சரி…
2.“சாமி இருக்கிறார்…” அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்…! என்ற எண்ணத்தில்
3.தன்னைத் திருத்திக் கொள்ள மாட்டார்கள்.
4.சாமி இருக்கிறார்…! என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர
5.சாமி சொன்னதை எடுத்துத் தன்னிடம் வரக்கூடிய தீமைகளைத் தடுப்பதற்கு இல்லை.

கோபத்தையும் ஆத்திரத்தையும் மற்றதையும் தான் எடுத்துக் கொள்கிறார்கள். சாமியிடம் ரொம்ப நெருங்கிப் பழகியவர்கள் இப்படிச் செய்கிறார்கள். நல்லதை எடுப்பதற்கு அவர்கள் எண்ணமே தடையாகிப் போகிறது.

ஐயா இப்படி இருங்கள்… உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஞானிகளின் அருள் சக்தியை எடுங்கள் என்று சொன்னால் “சாமி தான் இருக்கிறாரே… சாமி செய்வார்…” என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

சாமி என்ன செய்வார்…?

ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்து உங்களை அறியாது ஆட்டிப்படைக்கும் தீமையான உணர்வுகள் மாற வேண்டும் என்று யாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

அந்த அடிப்படையிலே நீங்கள் எண்ணினால் தான் உங்களுக்குள் அந்த ஆற்றல்கள் பெருகும். ஆகவே…
1.சாமி சொன்ன உயர்ந்த சக்தியைத் தனக்குள் ஊன்றி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பற்றிப் பேச வேண்டும்… அதை எடுத்துத் தனக்குள் வளர்க்க வேண்டும்.

November – 2024 உபதேசம்

நம் சுவாசம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… நம் சுவாசத்திற்குத்தான் மோட்சம் வேண்டும்

 

இந்த உடலில் சிறிது காலம் தான் வாழ்கின்றோம். அதற்குள் மனதை எப்படி ஒன்றாக்க வேண்டும்…? என்ற நிலையை ஞானிகள் காட்டுகின்றார்கள். நம்முடைய எண்ணங்களை ஒன்றாக்க வேண்டும்… கல்யாணராமா…!

ஆனால்… மனிதனின் உணர்வுகள்
1.அவன் அப்படிச் செய்கின்றான் இவன் இப்படிச் செய்கின்றான் என்ற நிலைகளை…
2.“தான்… நான்…” என்று நான் செய்வேன்… நான் செய்து கொண்டிருக்கின்றேன்… என்னால்தான் முடியும்…!
3.”நான் இதை அனைத்தும் செய்தேன்” என்று பலருக்குப் பல உபகாரங்கள் செய்வார்கள்.

பல உபகாரம் செய்தவருடைய உணர்வுகள் “நான்” என்ற இந்த உணர்வு வரும் பொழுது கௌரவராகின்றது. கௌரவர் என்று செய்த நிலைகள்… நான் அன்றைக்குச் செய்தேன்… பார் இன்று என்னை மதிக்கின்றானா…? என்று இந்த கௌரவப் போர் வருகின்றது.

தான் எண்ணியபடி செய்யவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது…
1.அவனைப் பார்த்தவுடன் குருக்ஷேத்திரப் போர்
2.அதை மீறி நம் உடலுக்குள் சென்றால் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்.

புலனறிவு ஐந்து உள்ளுக்குள் சென்ற பின் போராகின்றது போர் என்று உடலில் வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் பல அணுக்கள் மகாபாரதப் போராக மாறுகின்றது. உடலுக்குள் கலக்கமும் பல நிலைகளும் மற்றதும் இரத்தத்தில் நடக்கப்படும் போது மகா போராக நடக்கின்றது

ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களுடைய உணர்வுகளும் நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பு உணர்வுகளையும் எடுத்துக் கொண்டுள்ளோம்.

1.நல்லது என்று எண்ணப்படும் பொழுது கௌரவர்கள் அதை உள்ளே விடுவதில்லை.
2.இதைப் போன்ற கௌரவப் போர்கள் எப்படி நடந்து கொண்டுள்ளது…?
3.வீட்டில் பையன் சொல்கிறான் என்றால் பையன் சொல்வதை நான் கேட்பதா…?
4.மனைவி நல்லது சொன்னால் போதும் மனைவி சொல்வதை எல்லாம் கேட்பதா.

அதே போல மனைவி தவறு செய்தாலும் “தப்பு” என்று அதை ஏற்றுக் கொண்டால் “திருப்பி நம்மைக் கணவர் பேசுவார்… திட்டுவார்” என்ற கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.

குழந்தைகள் தவறு செய்தால்… நான் நல்லவன் என்று பெயர் எடுப்பதற்காக “நான் தவறு செய்யவே இல்லை” என்பார்கள்.
1.ஆக… தவறை மறுக்கப்படும் போது என்ன நடக்கின்றது…? கௌரவப் பிரச்சினை வருகிறது.
2.குற்றவாளி என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை மூடி மறைப்பதற்கு என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.

இந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் போது கடைசி முடிவு வேதனை என்ற உணர்வு வந்து மனிதனால் உருவாக்கி இருளை நீக்கிய அந்த உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது… வேதனை என்ற போர் முறை வருகிறது.

நம்முடைய எண்ணங்கள் அடிக்கடி வேதனை என்று வரும் பொழுது கண்ணும் பார்வை இழக்கின்றது.
1.வலுவான உணர்வு என்ற பீமனும் அழிகின்றது.
2.அர்ஜுனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகளும் சோர்வடைகின்றது… தாக்க முடிவதில்லை.

மகாபாரதப் போரின் கடைசியில்… கண்கள் (கண்ணன்) இழந்தபின் அர்ஜுனனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடிக் கொண்டு போகின்றார்கள்.

முதலிலே “நான்” என்ற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியவில்லை என்று காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்

அதாவது அர்ஜுனன் ஆரம்பத்தில் எல்லாவற்றையும் செய்கின்றான் கண்ணின் உணர்வு கொண்டு தான் செயல்படுத்துகின்றான். கண்கள் இழந்த பின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்
1.மோப்பத்தால் (சுவாசம்) அறிந்து கொண்ட உணர்வு தான் எனக்கு வழிகாட்டியது.
2.தீமை நன்மை என்று என்னால் அறிய முடிந்தது…
3.தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை நான் எடுத்தேன் என்று தர்மனைச் சொல்கின்றார்கள்.

அவன் யாருக்கு மோட்சம் கேட்கின்றான்…?

தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு…! என்று கேட்கின்றான்.

1.நாம் சுவாசித்த உணர்வின் தன்மை தான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
2.தீமையை நீக்கும் அந்த உணர்வு தான் வழிகாட்டியாக வந்தது
3.நான் நுகர்ந்த உணர்வின் தன்மை… அதன் வழியே நான் ஒளியாகும் தன்மை வேண்டும் என்று
4.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாக கொடுத்துள்ளார் வியாசர்.
5.நம் சுவாசத்திற்குத் தான் உயர்ந்த நிலை பெற வேண்டும்… அதற்குத்தான் மோட்சம் வேண்டும்.

இது பற்றி நாம் யாராவது சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய பேருண்மையை நமக்குக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்…!

தன் நிலை உணர்வும் பக்குவம் பெற்று விட்டால்… ஞானிகள் எல்லாம் நமக்கு உதவுவர்

 

உயிரணு உதித்து உயிராத்மாவாய் ஆத்ம சக்தியை அவ்வுயிரணு சேமிக்கும் நிலையிலேயே உயிரணுவின் ஆரம்ப உறுப்பாய் இக்கவன நரம்பின் செயல்தான் முதலில் தாயின் வயிற்றில் உதிக்கும் உயிரணுவிற்குச் செயல் கருவியாய் ஆகிறது.

அது ஈர்க்கும் அமில குணமான ஆத்மா என்ற ஆவி அமிலம் திடப்பட்டு அதன் தொடர்ச்சியில் இருந்துதான் ஒவ்வோர் உறுப்புகளும் உருக்கொள்கின்றது.

மனித ஆத்மாவுக்குகந்த பன்னிரண்டு வகையான குண அமிலத்தையும் ஈர்க்கவல்ல சக்தியாய் இக்கவன நரம்பு ஆரம்பகட்டத்திலிருந்தே செயல் கொள்கின்றது.

சாதாரண மனித ஆத்மாக்கள் இதன் தொடர்ச்சி வட்டத்தில்
1.எக்குண அமில சக்தியை அதிகப்படி ஈர்த்துப் பழக்கப்படுத்தி வாழ்ந்தனவோ அதே தொடர் நிலையில் வாழ்நாள் முழுவதும் வாழ்கின்றன.
2.வாழ் நாள் முடிந்த பிறகும் ஆவி உலகிலும் மறு ஜென்மத்திலும் இதன் தொடரில் இருந்து மாறுபடுவதில்லை.

ஆனால் இப்பன்னிரண்டு வகையான அமில வட்டத்தில் வாழும் மனிதன் தன் நிலை உணர்ந்து சமநிலை பெற்று இன்று நாங்கள் உணர்த்தும் இந்த ஞான மார்க்கத்தின் தொடர் நிலை எய்துங்கால்
1.இப்பன்னிரண்டு வகையான குண அமிலத்திற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த குண அமிலமான ஞான அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால்
2.அதன் தொடரினால் ஒவ்வோர் ஆத்மாவும் இவ்வுலகினில் நம்முள் கலந்துள்ள தீய சக்தி எது…? நற்சக்தி எது…? என்ற பாகுபாட்டை அறியலாம்.

ஒருவரைக் காணும் பொழுதே அவரது குணநிலையையும் அவர் எவ்வெண்ணமுடன் நம்மை நாடுகிறார்…? என்ற செயலையும் அவர் சுவாசமுடன் நம் சுவாசம் மோதும் நிலையிலேயே அவரது எண்ண நிலையை நாம் அறியலாம்.

மற்றும் இஞ்ஞானத் தொடர் வழி பெற்ற பின்…
1.தெய்வத்துடன் ஐக்கியமாகி தெய்வமாகிப் பேரானந்தம் அடையலாம் என்ற ஞான மார்க்கம்
2.கொடிய விஷத்தன்மையுடைய நான் என்னும் அகந்தையில் செல்லும் மார்க்கம்.
3.நாம் பிறந்த பூமியில் நம்முடன் கலந்துள்ள ஜீவாத்மாக்களின் நிலையிலிருந்து ஒதுங்கி…
4.தான் மட்டும் ஆண்டவனாகச் செல்லும் ஞான மார்க்கம் உகந்த மார்க்கமல்ல.

நம்முடன் கலந்துள்ள ஜீவாத்மாக்களுக்கு அன்பு என்ற கலசத்தை ஏற்றிக் கலந்து வாழ்ந்து நாம் பிறந்ததின் நலனை நம்முடன் கலந்துள்ளவர்களின் விரோதத்தையும் கோபத்தையும் சாடி வாழ்ந்து… பொருளாசையில் தனக்கே சொந்தமாகப் பொருள் பெற்று நான் என்ற வட்டத்தில் வாழ்வதினால் நம் ஆத்மாவிற்கு என்ன பயன்…?

1.நாம் அறிந்த உண்மையின் ஞானத்தைப் பலருக்குப் போதித்து வாழும் இக்குறுகிய வாழ்நாட்களை அன்பின் அடிப்படையில் வாழும் பக்குவத்தையும்
2.நம் சக்தியைக் கொண்டு சேமிக்கும் பொருளினால் பல ஜீவன்களை வாழ வைக்கும் முறையுணர்ந்தும் செயல்படல் வேண்டும்.

நமக்கு உள்ள பொருளை எடுத்து அவர்களுக்கு தானமளித்துச் சோம்பேறி நிலைப்படுத்திடச் செப்பவில்லை. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் தனக்குகந்த செயல் புரிந்துதான் ஜீவிதம் கொள்ள வேண்டும். அதன் வழித் தொடருக்குப் பொருளிடுங்கள்.

அங்ககீனமுற்ற ஆத்மாக்களுக்கு ஜீவிதம் செய்திடப் பொருள் அளித்திடலாம். பட்சிகளோ மற்ற மிருக இனங்களோ தனக்கு வேண்டிய உணவை எப்படித் தானாகச் சம்பாதித்துக் கொள்கிறதோ அதைப் போன்ற பக்குவ ஆத்மாக்கள் மனித ஆத்மாவில் குறைவு.

பன்னிரண்டு வகையான குண அமிலத்தைப் பெற்ற மனித ஆத்மா தான் இன்று தன் நிலை உணராமல் வாழ்கின்றான். மிருக இனங்கள் மனிதனைக் காட்டிலும் இன்று உயர்ந்ததாகிவிட்டது.

நாம் நம் நிலையை (தன் நிலை) உணரும் பக்குவம் பெற்ற பிறகு ஞானத்தொடரின் ஒளியை ஈர்க்கம் குண நிலை கொண்ட பிறகு ஞானத்தின் வட்டத்தில் உள்ள பல ஒளி ஞானிகள் எல்லாம் நமக்கு உதவுவர்.

ஆரம்ப நாளிலேயே ஏன் அவர்கள் நம்மை ஏற்கவில்லை என்ற வினா எழும்பலாம்.
1.நம் ஆத்மாவைக் கொண்டு நாம் பெறும் சக்தியின் ஞான ஈர்ப்பில் நம் செயல் சென்ற பிறகுதான்
2.அச்செயலின் ஒளியும் நம்முடன் கலக்குமேயன்றி
3.அவர்கள் சக்தியை எல்லாம் தீய ஆத்மாக்களின் வட்டத்தில் செலுத்தி விட்டால் அவர்கள் பெற்ற சக்தியும் குறைந்து விடும்.
4.குறைந்துவிடும் என்பது மட்டுமல்ல வீண் விரயப்பட்டு விடும்.

இதனை உணர்ந்துதான் சில கால கட்டடங்களில் இத்தியான மார்க்கத்தை ஈர்த்து ஞானத்தின் வழிபெறும் ஆத்மாக்களின் நிலையுடன் இவ்வுலகிற்குத் தன் ஒளியை எப்படி எப்படியெல்லாம் பரப்பிடலாம் என்ற “ஆர்வத் துடிப்புடன்” இன்று நாம் எப்படிப் பல சித்தர்களின் நிலையை உணருகின்றோமோ அதைப் போன்று பல காலமாய் இச்செயல் நிலைகள் நடந்து வந்தன.

1.தானாக எந்த நிலையும் செயல் கொள்ளாது.
2.ஒளியுடன் நல் ஒளியாய்க் கலக்கத் தான் செய்யுமே ஒழிய வீண் விரயப்படுத்திச் செயல்படாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே உருவான விஷம்…
1.மற்ற விஷமற்றதைத் தாக்கும் போது அது நகர்ந்து ஓடுகிறது.
2.தாக்கும் போது வெப்பமும்… நகர்ந்து ஓடும் போது ஈர்க்கும் காந்தமும் உருவாகிறது.

அந்த உணர்வின் சக்தியால் அது எதைத் தனக்குள் இணைத்ததோ அதை உருவாக்கச் செய்கின்றது. இதற்கெல்லாம் மூலம் ஆதியிலே உருவான விஷம் தான்.

அந்த விஷத்தின் அளவுகோல் எதுவோ அதனின் இயக்கமாக இயக்கும். அதற்குக் காரணப் பெயர் ஆதிசக்தி. ஆகவே ஆதிசக்தி என்பது கடுமையான விஷம்.

ஆரம்பத்திலே ஈர்க்கும் சக்தியாக வந்தது ஆதிலட்சுமி. ஆதியிலே உருவான அந்த வெப்பம் ஆதிபராசக்தி. சர்வத்தையும் உருவாக்கும் வெப்பமாகின்றது.
1.ஒன்று இயக்கும் சக்தி
2.ஒன்று உருவாக்கும் சக்தி
3,ஒன்று கவரும் சக்தி

விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் உருவாகிறது. அதைப் போன்று தான் நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எதிர்நிலையான உணர்வுகள் மோதலானால் உடலிலே வெப்பமாகிறது.

அடுத்தவர் செய்யும் தவறான உணர்வுகளைக் கூர்மையாக உற்று நோக்கி அதை எடுத்துக் கொண்டால் நமக்குள் கோப உணர்வின் தன்மை அதிகமாகிறது. அவர்கள் செயல்படுத்தும் வேதனை என்ற நஞ்சான உணர்வுகள் நம் மீது மோதுகிறது.

அப்படி மோதும்போது நமக்குள் அந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி அணுவின் தன்மை நம் உடலிலே பெருக்கம் ஆகின்றது… இரத்தக் கொதிப்பு என்று சொல்வார்கள்.

1.நம் உணர்வை இயக்கும் அந்தக் கொதிகலனான சுடு நீர் உடலுக்குள் சென்று
2.கவன நரம்புகளில் தாக்கப்பட்ட பின் அது தாங்காது வெப்பம் அதிகமாகின்றது.

உதாரணமாக ஒரு குக்கரில் கேஸ் அதிகமாக உருவானால் அந்தப் பாத்திரம் எப்படி வெடிக்கின்றதோ அதைப் போன்றுதான் இந்தக் கொதிகலனாகும் விஷத்தின் அழுத்தத்தின் தன்மைகள் நாம் கவன நரம்புகளிலே ஊடுருவுகிறது.

எந்த உணர்வாக இருந்தாலும் சிறு மூளை வழியாகச் சென்றுதான் நம் உடல் உறுப்புகளை இயக்கும். நரம்புகளுக்குள் அமிலமாக (ACID) மாற்றும் தன்மைகளும் வரும்.

1.எந்தப் பாகத்தின் தன்மையிலே இந்தக் கோபமும் விஷமும் கலந்து அதிகமாகச் செல்கிறதோ…
2.அந்த அழுத்த நிலைகள் அங்கே ஏற்படும் பொழுது அந்த இடம் விரிந்துவிடும்.
3.விரியும் தன்மை வரப்படும் போது மனிதனுக்கு மயக்க நிலை (தலை சுற்றல்) வருகின்றது.

ஆனாலும் மயக்கம் வருவதற்கு முன் சிறிதளவு நினைவு இருக்கும் போது எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற எண்ணம் வந்தால் வெடித்துவிடும்.

அதே போன்று
1.“மயக்க நிலைகள் வருகிறதே…!” என்ற எண்ணத்தை மீண்டும் அதிகரித்து விட்டாலும்
2.இந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி சிறு நாளங்கள் வெடித்து இரத்தங்கள் கசிவாகிவிடும்…
3.அடுத்த கணம் மரணம் தான்.

ஏனென்றால் இதை போன்ற உணர்வின் இயக்கங்கள் நம் உடலுக்குள் மோதலாகும் போது போராட்டங்கள் அதிகமாகிக் கொதிகலனாக எப்படி வருகிறது…? என்று ஞானிகள் அன்றே அதைச் சொல்லியுள்ளார்கள்.

சாதாரண மனிதனும் இதை அறிவதற்காக வேண்டி தெய்வச் சிலைகளை உருவம் அமைத்து 1008 குணங்களையும் தனித் தனியாகக் காட்டியுள்ளார்கள்.

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் வளர் பிறையாகி மனிதனாக வளர்வதற்கு மூலம் எது…? என்றும்… மனிதனாக ஆன பின் அவன் எடுத்துக் கொண்ட குணநலன்களின் இயக்கத்தையும்… அதனின் பின் விளைவுகளையும் உணர்த்துவதற்குத் தெய்வச்சிலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி வாகனத்தையும் கொடுத்துள்ளார்கள்.

எதனின்று நல்ல உணர்வுகளைச் சுவாசித்து… அதுவே வாகனமாக அமைந்து வளர்பிறையாக மனிதனாக எப்படி வந்தோம் என்றும்… மனிதனான பின்
1.கோபம் வேதனை ஆத்திரம் போன்ற குணங்களச் சுவாசிக்கும் பொழுது தேய் பிறையாகி
2.மனிதனல்லாத உடல்களுக்கு எப்படிச் செல்கிறோம்…? என்றும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நாம் மீண்டும் இன்னொரு பிறவிக்கு வர மாட்டோம்… அழியாத ஒளி உடல் பெறலாம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

குரு பலம்

 

குருநாதர் காட்டிய வழியில்… காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் செல்லும் போது அங்கே நான் போகும் காரியங்களுக்குப் பயமில்லாதபடி குருநாதர் எத்தனையோ பாதுகாப்பு நிலைகளைச் செய்து கொடுப்பார்.

1.ஒவ்வொரு நிமிடத்திலும் ஏதாவது ஒலிகளை வைத்திருப்பார்.
2/ஏதாவது பயப்படும் நிலைகள் வந்தால் அந்த ஒலிகள் எழும்பும்… சப்தங்கள் வரும்.
3.அப்பொழுது குருநாதருடைய நினைவு வரும்… எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.

இதைப் போல் உங்களுக்கும் சரி… என்னிடம் பழகி இருக்கின்றீர்கள் அல்லவா. ஏதாவது ஒரு சிரமம் இருந்தால் முன்னாடி இந்த உணர்ச்சிகள் வரும்.

பஸ்ஸில் ஏறினால் விபத்தோ வேறு நிலைகளுக்குச் செல்லும் போது ஏதாவது சிக்கல் வந்தால்
1.இந்தத் தியானத்தைச் சீராகக் கடைபிடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை வரும்.
2.அந்த நேரத்தில் நீங்கள் பார்த்துச் சிந்தித்துச் செயல்பட்டால் ஆபத்துக்களிலிருந்து தப்பலாம்.

ஒரு காரியத்திற்குச் செல்கிறீர்கள். அதிலே ஏதோ நஷ்டம் ஆகிறது என்றால் அந்த இடத்திலே மனதில் ஒரு விதமான படபடப்பு வரும்.
1.கொஞ்ச நேரம் அதை நிறுத்திவிட்டு ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகள் அருள் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்தி விட்டு
2/அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்துக் கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம்.
3.சிந்தனை சீராகும் வழிகாட்டக்கூடிய நிலைகளுக்கு இது வரும்.

நான் செய்கிறேன் என்றால் நான் அல்ல…! குருநாதரின் உணர்வுகளை நான் எடுத்தேன்… அதை வளர்த்தேன்…! அதன் வழி தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வந்தது.

1.குருநாதர் எனக்குள் பதித்த அந்த ஞான வித்தை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் மறவாது எண்ணினீர்கள் என்றால்
3.காற்றிலிருந்து இழுத்து உங்கள் தீமைகளை போக்கக்கூடிய அரும்பெரும் சக்தியாக வரும்.

அதை நான் செய்கிறேன் என்றால் நான் எப்படிச் செய்ய முடியும்…? அருளைப் பெருக்குகின்றேன் அந்த வழியைத்தான் நான் உங்களுக்குக் காட்டுகின்றேன்.

இந்த வழியில் நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.

கவன ஈர்ப்பு நரம்பு

 

ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும் அதன் சக்தியை ஈர்க்கும் நிலை எங்குள்ளது…?

மனித ஆத்மாவிற்கு
1.நம் நெற்றியின் மையத்தில் நாம் மஞ்சளும் குங்குமமும் தரித்து “ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்த இடமாக எண்ணி”
2.நம் நெற்றியில் திலகமோ திருநீறோ இட்டுக் கொள்கின்றோமே…
3.அங்குதான் உள்ளது மனிதனை இயக்கும் ஜீவத் துடிப்புள்ள கவன நரம்பு.
4.மனிதனின் எண்ணத்தைச் செயல்படுத்தும் முக்கிய இடம் அக்கவன நரம்பு தான்.
5.இக்கவன நரம்பு செய்யும் வேலை செயல் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனின் உடல் நிலையும் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

இக்கவன நரம்பிலுள்ள ஈர்க்கும் பணி… நாமெடுக்கும் சுவாசமுடன் நம் உயிர் சக்திக்கு ஈர்த்து அவ்வுயிர்த் துடிப்புடன் இக் கவன நரம்பு அதனை ஈர்த்து எந்த வழியில் இக்கவன நரம்பானது எதன் தொடர்பில் இவ்வுடலில் உள்ள உறுப்புகளுக்கு நம் மண்டையின் பின்பாகத்தில் உள்ள சிறு மூளையில் மோதச் செய்து அதன் வழித்தொடரில் இருந்து தான் உடல் உறுப்புகள் அனைத்திற்குமே செயல் நிலை ஏற்படுகின்றது.

1.இக்கவன நரம்பு பாதிக்கப்பட்டாலோ பின்னப்பட்டாலோ
2.உடல் உறுப்புகளின் நிலையும் சரி, நம் உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானாலும் சரி அதன் வழித்தொடர் நிலையைச் செயல்படுத்திட முடியாது.

இதயத்தில்தான் இவ்வுடலுக்குகந்த நிலை உள்ளது என்று இவ்வளவு காலங்கள் நம்முடன் கலந்த ஆத்மாக்கள் நம்பி வந்தனர். இன்று மாற்று இதயம் இணைக்கப் பெற்று வாழும் மனிதர்கள் பெறப்பட்ட இதய எண்ணமுடனா வாழ்கின்றனர்…?

இதயத்தையே இயக்கும் செயல் கவன நரம்பின் மூலமாய் ஈர்க்கப் பெற்று சிறு மூளையின் வழித்தொடரினால் செயல்படுகின்றது.

இவ்வுடலில் உள்ள எந்தப் பாகத்தையும் இவர்களினால் மாற்று உறுப்புகளைப் பொருத்தி உயிர் வாழ வைத்திட முடிந்திடும். ஆனால்
1.இந்நெற்றியில் உள்ள கவன நரம்பிற்கு மேல் ஏற்படும் பின்னத்திலிருந்து பைத்தியம் பிடித்த ஆத்மாவையோ
2.கவன நரம்பில் அடிபட்டு அதனால் தன் நினைவிழந்த ஆத்மாவையோ சரிப்படுத்துவது முடியாத காரியம்.

நம் தலையில் உள்ள பெரு மூளையை மாற்றி அமைத்தாலும் கூட நம் எண்ணமும் மாறாது செயலும் அதே நிலையில் தான் இருந்திடும். ஆனால் இக் கவன நரம்போ இக்கவன நரம்பை ஈர்த்து சிறு மூளையின் உதவி கொண்டு இவ்வுடலையும் ஆத்மாவையும் வளர்க்கும் இதில் பின்னப்பட்டால் “தன் நிலையில் எவ்வாத்மாவும் வாழ்ந்திட முடியாது…”

உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தின் துரித நிலை அதிகப்பட்ட ஆத்மா இக் கவன நரம்பின் தொடர் கொண்ட சிறு மூளைக்குச் செல்லும் நிலையில் வெடித்து விட்டால்தான் நாம் இதய வலியினால் இறந்து விட்டதாகச் சொல்லுகின்றோம்.

இதயத்தில் உள்ள எந்த நரம்புகள் பாதிக்கப்பட்டாலும் இன்றைய அறிவியல் மருத்துவரால் குணப்படுத்திடலாம் இதயத்திற்கும் இரத்த அழுத்த விகிதத்திற்கும் தொடர்பு கொண்டது இக்கவன நரம்புகள் சிறுமூளையும் தான்.

முதலில் செப்பியப்படி இவ்வுடலில் உள்ள எந்த உறுப்பையும் இன்றைய அறிவியல் மருத்துவ ஞானத்தினால் செய்விக்கும் செயல் திறமையுண்டு.
1.இக்கவன நரம்பை மட்டும் படைக்கப் பெற்றவன்
2.இவ்வாத்ம சக்தியைத் தந்த “ஆதிசத்தியின் செயல் சக்தியின் செயல்தான்…”

இவ்வுடலில் எப்பாகங்கள் பின்னப்பட்டு ஆத்மா பிரிந்திருந்தால் கூட அவ்வுடலை ஏற்கச் சில சித்தர்கள் செயல்பட்டாலும் “கவன நிரம்பும் சிறு மூளையும் பின்னப்படாமல் இருந்தால்தான்” அவ்வுடலையும் சித்தர்கள் ஏற்பார்கள்.

ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்ததாகவும் நெற்றிக்கண்ணை வைத்துத் தான் உலகை ஆண்டதாகவும் புராணம் கூறுகின்றது.
1.ஒவ்வோர் ஆத்மாவிற்குமே அந்நெற்றிக்கண் உண்டு.
2.நெற்றிக்கண்ணினால்தான் நம் விழிக்கு ஒளியைக் காணும் நிலை பெற முடிகின்றது.

கவன நரம்பைத் தான் நெற்றிக்கண்ணாகவும் ஞானக் கண்ணாகவும் நம் முன்னோர்கள் புராணக் காலங்களில் இதனை உணர்ந்து… அதற்கு உருவம் தந்து சிவனாக்கி… சிவனுக்கு நெற்றிக்கண்ணைப் படைத்து, அன்றைய கால மனித ஆத்மாக்கள் புரிந்திடும் பக்குவத்தை ஊட்டினார்கள்.

புராணக் கதைகளில் அன்றே பல நிலைகளை புரியாத நிலையில் சூட்சுமமாக ஆண்டவன் வாழ்ந்ததாகவும்… அதற்குகந்த நிலைகளை உணர்த்த ஆண்டவனையே கதையின் நாயகனாக்கி பல நிலைகள் சித்தர்களினால் கதைப்படுத்தி வழங்கப்பட்டன.

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் உள்ள உண்மை நிலைகள் மறைக்கப்படாமல் அதனை அவரவர்கள் எண்ணத்திற்குகந்து திரிக்கப்பட்டு சில நிலைகளை ஏற்றி இராவிட்டால் உண்மைக் காவியமான இராமாயணமும் மகாபாரதக் கதையும் உயர்ந்த பொக்கிஷமாய் அதிலுள்ள கருத்தாற்றலைக் கொண்டு பல நடைமுறை பொக்கிஷ நிலையெல்லாம் இன்று நாம் தவறவிட்டு இருக்கும் நிலையை எய்திருக்க வேண்டியதில்லை.

அன்று போதிக்கப்பட்ட அரும்பெரும் பொக்கிஷம் எல்லாம் இன்று கேலிக்குரிய நடைமுறைச் செயலுக்குப் பொருள் என்ற வியாபார நிலைக்கு வந்துவிட்டது.

1.ஒவ்வோர் ஆத்மாவுக்கும் உகந்த உயர்ந்த ஞான சக்தியையும் அதன் தொடர் சக்தியையும்
2.நமக்குள்ள இக்கவன நரம்பு நல்ல நிலையில் செயல்படுங்கால்
3.நம்மை நாம் இக்கவன நரம்பின் துணையினாலேயே ஒளியின் ஞானத்துடன் செல்லும் பேற்றை அடையலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எப்பொழுது விழிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று குறைந்தபட்சம் பத்து நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரையாவது எடுக்க வேண்டும்.
1.கண் விழித்து இருந்தாலும் சரி… கண்களை மூடி இருந்தாலும் சரி…
2.கண்ணின் நினைவலைகள் புருவ மத்தியில் வரவேண்டும் (முக்கியம்)
3.உயிர் வழி தான் நாம் உடலுக்குள் அனுப்ப வேண்டும்.

காரணம்… நாம் வெளியிலே பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவாக இருக்கின்றது… நல்ல எண்ணங்களை எண்ண விடாது. ஏனென்றால் நாம் எத்தனை பேருடைய தீமைகளைப் பார்த்தோமோ அதற்கெல்லாம் வலு அதிகம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் மற்ற பொருள்களைப் போட்டாலும்… சிறிதளவு விஷத்தைப் போட்டு விட்டால் பாதாமிற்கும் சக்தி இல்லை… பாலுக்கும் சக்தி இல்லை.

அதே போல் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டுவிட்டால் அதனுடைய சுவைகளை அறிய முடியாது. காரத்தின் சுவை தான் முன்னணியில் இருக்கும். உப்பின் தன்மை இணைத்து விட்டால் அந்த உப்பின் தன்மை முன்னணியில் வந்து விடும்.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பிறரிடம் கோபப்பட்டது ஆத்திரப்பட்டது வேதனைப்பட்டது சலிப்புப்பட்டது எல்லாமே நம் ஆன்மாவில் வந்துவிடுகிறது.

அதையெல்லாம் மாற்றி அமைக்க அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும். அந்தச் சக்திகள் கூடிய பின் உடலிலிருந்து வரக்கூடிய மணம் நம் கேட்டறிந்த தீமைகளை ஆன்மாவிலிருந்து அப்புறப்படுத்தும் நிலையாக வரும்.

1.காரணம் மகரிஷிகள் அருள் சக்தியை உடலுக்குள் கூட்டும் போது
2.ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளின் பிடிப்பு அற்றுப் போய்விடும்… ஆன்மாவிலே நிற்காது.
3.அப்போது கஷ்டமான எண்ணங்கள் நமக்குள் வராது

இதை நாம் பழகிக் கொண்டால் மிகவும் நல்லது.

வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கப்படும் போதோ அல்லது விபத்தைப் பற்றி அறிய நேரும் பொழுதோ வேதனைப்பட்டுக் கொண்டிருப்போரை அவர்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுதோ அது எல்லாம் பதிவாகி விடுகிறது.

அது எல்லாம் ஒரு வித்தாக மாறி விடுகிறது. மீண்டும் அதை நுகரப்படும் பொழுது அணுவாக மாறுகின்றது. உடலிலே உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக அதே (விபத்து வேதனை) உணர்வலைகளைத் தனக்குள் கவர்ந்து தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

அது வளரத் தொடங்கி விட்டால் நம் ஆன்மாவாக மாறுகின்றது
1.எத்தகைய உணர்வாக இருந்தாலும் அது நம் உயிரிலே படும் போது தான் நம்மை இயக்கும்.
2.நல்லவனாக்குவதும்… கெட்டவனாக்குவதும்… அல்லது நோயாக மாறுவதும் இது போன்று தான்.

இதைப் போன்ற நிலைகளை நாம் தூய்மைப்படுத்த அதிகாலையில் விழித்தவுடனே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தான் இதைச் செயல்படுத்த வேண்டும் என்று இல்லை
2.எழுந்து உட்கார வசதியாக உள்ளவர்கள் அப்படிச் செய்யலாம்.
3.படுக்கையில் விழிப்பு வந்த பின்… நேராகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
5.புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் உள்முகமாக உடல் முழுமைக்கும் செலுத்துங்கள்.
6.உள்முகமாகச் செலுத்தச் செலுத்த ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அதை நீக்கிக் கொண்டே இருக்கும்.

தினசரி நீரை ஊற்றி உடல் அழுக்கை எப்படிப் போக்குகின்றோமோ அதைப் போல நம் ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்தியை நம் உடலுக்குள் அவ்வப்போது செலுத்த வேண்டும்.

அது வலுப் பெற்றால் தான்… உடலுக்குள் வலுவானால் தான்… தீமைகளை நீக்க முடியும். எப்படியும் உங்களுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

ஆத்ம சுத்தியின் முக்கியத்துவம்

 

உதாரணமாக நல்ல தண்ணீர் குழாய்கள் செல்லும் பாதைக்கு அருகில் சாக்கடைத் தண்ணீர் போகக்கூடிய குழாய்களும் இருந்தால்… சந்தர்ப்பத்தால் அந்தக் குழாய்கள் துருப்பிடித்து ஓட்டையாகி விட்டால் நல்ல தண்ணீருக்குள் அந்தச் சாக்கடை தண்ணீரும் கலந்து தான் வரும்.

இதே போன்று நாம் ரோட்டிலோ மற்ற இடங்களுக்கோ செல்கிறோம் என்றால்
1.மற்றவர்கள் உணர்வுகளை நாம் கவர்ந்து… தெரிந்து தான் செல்கிறோம்… அவரின் உணர்வை இழுத்துத் தான் உணரச் செய்கிறது.
2.நல்ல எண்ணத்தோடு நாம் வேலைக்குச் செல்கிறோம் என்றால் இந்த உணர்வுகளும் அதனுடன் கலந்து விடுகின்றது

நல்லதை நினைத்து அந்தக் காரியத்தை நடத்த வேண்டும் என்று தான் செல்கின்றோம். ஒருவன் தவறு செய்கின்றான்… அதை உற்றுப் பார்க்கும் பொழுது நல்ல தண்ணீருக்குள் சாக்கடை நீர் கலந்தது போன்று ஆகிவிடுகிறது.

அப்பொழுது நம் காரியத்துக்குச் செல்லும் பொழுது
1.அவன் வெறுப்படைந்ததோ தீமை செய்ததோ கோபமாக இருந்ததோ நாம் வேடிக்கை பார்த்தது
2.நல்ல உணர்வுகளுடன் இது மோதிக் கலந்து விடுகின்றது.

இதன் வழி தான் நாம் நல்லதை எண்ணிப் போகின்றோம். அதனுடன் குறுக்கே இந்த உணர்வுகள் வந்து மோதி ஆன்மாவிலே கலந்தபின் இழுத்து உள்ளே கொண்டு போய் சேர்த்து விடுகிறது.

1.அவனுடைய கண்ணின் உணர்வும் நம்முடைய உணர்வுகளும் இழுக்கப்படும் பொழுது உயிரிலே படுகிறது
2.அந்த நல்ல காரியத்தைச் செய்வதை விடுத்து விட்டு இந்த உணர்வு குறுக்கே வந்தபின்
3.ஆபீசிலேயோ கடையிலே உட்கார்ந்து பின் இது கலந்தது முன்னாடி வந்து விடுகின்றது
4.அங்கே நம் நல்ல காரியங்களைத் தடை செய்யும் விதமாகி விடுகிறது.

அப்படி என்றால் அங்கே சென்று அமர்வதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா என்ற உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

நாம் பார்த்த அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நினைத்து அதை மாற்றிவிட வேண்டும். ஏனென்றால்
1.இங்கே அடைத்து விட்டு… அதை மாற்றி அமைத்து… உள்ளுக்குள் நல்ல உணர்வுகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
2.இரத்தத்திலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் கலந்த பின் அந்த உணர்வுகளை நல்லதாக்கச் செய்கின்றது

இதற்குத்தான் உங்களை அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதற்குத் தான் இதைக் கொடுக்கின்றேன் ஏனென்றால் நான் கஷ்டப்பட்டு… அனுபவப்பட்டுத் தெரிந்து கொண்டேன்
1.உங்களுக்குச் சக்தியும் கொடுக்கின்றேன்… அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.நீங்கள் முயற்சி எடுங்கள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்
3.உங்கள் எண்ணம் நிச்சயமாக அதை நிறைவேற்றும்.
4.நல்ல எண்ணங்களை உருவாக்க முடியும்… நல்ல சிந்தனைகளை உருவாக்கி நல்ல நிலை பெற முடியும்.

ஆகவே எங்கு சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உடல் முழுவதும் படரச் செய்து விட்டு என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அந்த நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் செயல்படுத்துங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லாவற்றிலும் இப்படிப் போட்டு
2.இரத்தத்திலே கலந்து இணைத்துக் கொள்ள வேண்டும்.

இதைத்தான் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்று சொல்வது.

சந்தர்ப்பத்தில் தீமையைப் பார்த்தோம் உயிரிலே பட்டு மோதுகின்றது உயிர் உருவாக்குகின்றது. சிவனுக்கே ஓதினான் ஓ…ம் என்ற பிரணவத்தை. உடலில் இருந்து வருவது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா.

எத்தனையோ உடல்களைக் கடந்து இந்த உடலான சிவத்தை உருவாக்கியது உயிர். இதிலிருந்து வளர்ந்தது தான் கார்த்திகேயா.

ரோட்டில் போகும் போது வெறுப்பான காரியங்களைச் செய்வதைப் பார்த்தோம். உயிரிலே பட்ட பின் ஓ என்று பிரணவமாக்கி அவன் செய்த உணர்வை இரத்தத்தில் கலக்கச் செய்து விடுகின்றது.

நம் ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுத்து நிறுத்தி அருள் ஒளியின் உணர்வு கொண்டு மாற்றி அமைக்க வேண்டும். அதுதான் கார்த்திகேயா…!

தீமை என்று வந்தபின் வலுவான உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று இங்கே இடமறித்துத் தீமை உள்ளே போகாது தடைப்படுத்திவிட்டு அதை வெளியே தள்ளி விட்டு விடுகின்றோம்.

ரோட்டிலே பார்த்த அந்த உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெறாது அணுக்களாக உருவாகாதபடி இப்படி நாம் தடுத்துக் கொள்கின்றோம். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

1.இப்படி ஒவ்வொரு நிலைகளிலும் நல் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டே வர முடியும்
2.அருள் உணர்வுகள் நமக்குள் பெருகிக்கொண்டே வரும்
3.இப்படித்தான் நாம் அதை வளர்த்து உயர்ந்த நிலைக்கு நாம் கொண்டு வர முடியும்.

பன்னிரெண்டு முக்கிய குணங்கள் இருந்தாலும் “அதிலே நற்குணங்களை ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்”

 

“பன்னிரண்டு வகையான குண அமிலங்களைச் சேமித்துப் பக்குவ நிலை பெற்ற பிறகுதான்” மனித ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை இப்பூமியில் ஆதி காலத்தில் மனித உயிர் ஆத்மா தோன்றிய நாட்களில் வழி பெற்றது.

அதன் தொடர் நிலையில் இன்று வரை அக்குண அமிலமே வலுக்கொண்ட சக்திகளாய் ஒவ்வொரு வகையான குண அமிலமும் வலுப்பெற்று வழி வந்துள்ளது. இவை எந்நிலையில்…?

நம் நிலையில் அறிவியல் வளர்ச்சி நிலை முந்தைய காலத்தை விட இக்காலத்திற்குக் கூடி உள்ளது. எந்நிலை கொண்டு இது கூடிற்று…?

பன்னிரண்டு வகையான அமில குணம் என்கின்றோம்.
1.இவற்றில் சரி பாதி நல் அறிவை ஈர்க்கும் சக்திகளும்… தீய சக்தியை உடைய குண நலன்களையும் கொண்டவைதான்.
2.அறிவுத் திறமையில் இரண்டு வகையிலுமே இப்பன்னிரண்டு வகையான அமில குணங்கள் இன்றைய கலியில் வலுப்பெற்றுத்தான் உள்ளன.
3.ஒரு மனிதனுக்கு வேண்டப்படும் குணாதிசயங்களைத்தான் இப்பன்னிரண்டு வகையான அமில சக்தி என்று உணர்த்தியுள்ளோம்.

இந்நிலையில் தான் எல்லா ஆத்மாக்களுமே உள்ளனவா…? என்ற வினாவும் எழும்பலாம்.

ஆதியில் மனித உயிரணுவாய்த் தோன்றப் பெறும் தருவாயில் மனிதக் கருவிற்கு வரும் அனைத்து ஆத்மாக்களுமே ஒன்றைப் போன்ற குணநிலையைக் கொண்ட அமில சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் தான் இம்மனித ஆத்மா பிறவிக்கு வருகின்றது.

அதிலிருந்து தனக்களிக்கப்பட்ட சக்தியை எக்குண நிலை கொண்ட அமிலத்தை அவ்வாத்மா வளர்ச்சி நிலை (வலு) ஏற்படுத்திக் கொண்டதோ அதன் தொடரில் தான் அவ்வாத்மாவின் புத்தி எனப்படும் அறிவு நிலை ஒவ்வொரு பிறவியிலும் வெளிப்படுகின்றது.

ஆண்டவனால் ஒருவருக்கு அதிக அறிவுத்திறனும் குறைந்த அறிவும் படைக்கப்படவில்லை.

அவ்வாத்மாவே அதனுடைய எண்ணத்தை எவ்வமிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து வளர்க்கப் பழகிக் கொண்டதோ அதன் தொடர் சுற்றில்தான் அன்பு, பாசம், ஆசை, ஆனந்தம், பக்தி இப்படி ஒவ்வொரு குணநிலையும் சலிப்பு, கோபம், குரோதம், காமம், வெறி, வஞ்சனை இப்படிப்பட்ட நிலைகளைக் கொண்டுள்ளது.

எதன் தொடர் நிலையில் எண்ணச் சுற்றல் அதிகமாக ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டோமோ அதன் குணப் பலனை வைத்து
1.அன்பானவன், பண்பானவன், நாணயஸ்தன், பக்திமான், தர்மவான் என்றும்,
2.சங்கடம் கொண்டவன், கோபக்காரன், குரோதக்காரன், நயவஞ்சகன், வெறி உணர்வு கொண்டவன், காமுகன் என்றும் நாமகரணம்
3.பிறரினால் பெறப்படவில்லை… அவ்வுடலின் வீரிய அமில குணத்தைக் கொண்டுதான் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நாமகரணம் சூட்டப்படுகின்றது.

இம்மனித ஜென்மத்தில் பிறவி எடுக்கும் நாள் வரை ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பன்னிரண்டு வகையான அமில குண வகைகள் உண்டு.

மனிதனாய் உள்ள நிலையிலேயே நாம் இது நாள் வரை எக்குண அமிலத்தை எந்த ஒன்று அதிகப்பட்டுச் செயல்பட்டு வாழ்ந்திருந்தாலும்… நாம் வாழ்ந்திடும் காலத்திலேயே இப்பன்னிரண்டு வகையான அமிலத்தில் உள்ள… ஆறு தீய குணங்களுக்கு எந்நிலையில் அதிகமாய் நம் எண்ணத்தை அதிகப்படுத்தி வளர்த்துக் கொண்டிருந்தாலும்…
1.இவ்வாழும் பக்குவத்தில் நம்மை நாம் உணர்ந்து ஜெபம் என்ற இப்பன்னிரண்டு குணங்களையும் நாம் ஈர்க்க
2.நமக்குத் துணை வந்த நமக்கு மேல் நம் ஆத்மாண்டவனை…
3.ஆத்மாண்டவன் என்பது நம் உயிராத்மாவைத் தான் அவ்வாத்மாவை
4.அவ்வாத்மாவுக்குள் உள்ள ஈசனின் சக்தியைக் கொண்டு நமக்குகந்த நல்ல குணங்களையுடைய
5.மறு பாதியில் உள்ள நற்குணங்களை ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நன்மை என்று விரும்புவதா…! தீமை என்று வெறுப்பதா…?

எப்படித்தான் இருந்தாலும்… காற்று அடிக்கிறது…! மழை பெய்கின்றது…! வெயில் அடிக்கிறது…! குளிர் அடிக்கிறது…! நான்கு காலமே இங்கே மாறி மாறித்தான் வருகின்றது.

இதைப் போன்றுதான் நாம் இன்று மகிழ்ச்சியாகச் சென்றாலும் போகும் போதே ஒருவன் வாகனத்திற்குக் குறுக்கே போகின்றான்… ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான்.
1.அதைப் பார்த்து வேதனைப்படுகின்றோம்
2.பயமாகி நடுக்கம் அடைந்து… குளிர் போல் ஆகி விடுகின்றது.

இரண்டு பேர் சண்டை போடுகின்றனர். எரிச்சலான பேச்சுகளைப் பேசுகின்றனர்.
1.அதை நுகர்ந்த உடனே நமக்கும் எரிச்சல் வருகின்றது
2.வெப்பமாகிறது…!

அதே சமயத்தில் ஒருவருக்கொருவர் பரபரப்பான நிலைகள் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை நாம் பார்க்கப்படும் பொழுது பெரும் புயலாக மாறுகிறது,
1.ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதைப் பார்க்கும் பொழுது
2.பெரும் புயலாக (காற்று) மாறி நம் எண்ணங்களைச் சிதறச் செய்து நம்மை ஓட வைக்கிறது.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வரக்கூடிய நிலைகள் ஒவ்வொன்றும் மாறி மாறிக் “காலங்கள் மாறுவது போல்” வந்து கொண்டே தான் இருக்கின்றது.

குளிர் அடித்தால் நாம் என்ன செய்கின்றோம்…? வெயில் அடித்தால் பரவாயில்லை என்கிறோம்.

அதே சமயத்தில் வெயில் அடிக்கும் பொழுது காற்றே அடிக்கவில்லை என்றால் “காற்று வந்தால் பரவாயில்லை…!” என்று நினைக்கின்றோம்.

காற்று அதிகமாக வந்தபின் “காற்று அதிகமாகி விட்டது… நம்மால் தாங்க முடியவில்லை…!” என்று சொல்கின்றோம்.
1.ஒன்றை நாம் நாம் விரும்புகிறோம்
2.ஆனால் வந்தபின் அதை வெறுக்கின்றோம்.

வெயில் அடிக்கின்றது… பொருளைக் காய வைக்க வேண்டும் என்றால் அந்த வெயில் தேவைப்படுகிறது. ஆனால் பொருளைக் காய வைப்பதற்கு முன் வெயில் அதிகமாகி விட்டால் “அப்பப்பப்பா… உடம்பெல்லாம் எரிகிறது…!” என்று சொல்கின்றோம்.

பொருளும் காய வேண்டும் தான்…! ஆனால் வேதனையும் படுகின்றோம்.
1.ஒன்று நன்மை செய்தாலும்… அதனின் நன்மைக்காக வேண்டி எண்ணுகின்றோம்
2.அடுத்த நிமிடம் அதனாலேயே வேதனைப்படுகின்றோம்.

துணி காய வேண்டும் என்றால் காற்று அடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காற்று அதிகமாகித் துணியைத் தூக்கி எறிந்து விட்டால் இப்படித் தூக்கி எறிந்து விட்டதே…! என்று வேதனைப்படுகின்றோம். ஆக… அதிகமாகக் காற்றடித்தால் எதுவாக இருந்தாலும் தூக்கி எறிந்து விடுகிறது.

இப்படி
1.எல்லாமே நமக்கு நன்மை செய்தாலும்
2.அதிலேயும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றது…!

குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து

 

1.இயற்கையின் உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்வதற்குக் குருநாதர் எம்மை எத்தனையோ இம்சைப்படுத்தினார்.
2.ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப்படுத்தினார்.
3.எப்படி எப்படியெல்லாம் உணர்வுகள் மாறுகின்றது… உருவாகின்றது
4.சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…?
5.அந்த உயிர் எத்தனை நிலைகளைக் கடந்து வந்தது…?
6.அப்படி உருவாக்கிய உயிரை யாரும் மதிக்கவில்லையே உடலைத்தான் மதிக்கின்றார்கள்.
7.நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது…?
8.இதை மக்களுக்கு நீ எடுத்துச் சொல் என்றார் குருநாதர்.

ஆண்டவனுக்கு நீ சேவை செய்கிறாய் என்றால் ஒவ்வொரு உடலையும் அந்த உயிர் ஆளுகின்றது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…? அந்த உடல் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்…!

நான் சொல்வதை இந்த அருள் உபதேசங்களை நீங்கள் நுகரப்படும் போது உங்கள் ஆண்டவனுக்கு இந்த உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.

கோவிலிலே பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால்… அந்த நல்ல தெய்வ குணத்திற்குப் பாலாபிஷேகம் செய்கின்றார்கள்

அது போல உங்கள் நல்ல குணத்தைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அந்தப் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

ஆனால் வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தால் நடக்கின்றது…?

வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வீர்கள்… அப்போது வேதனை தான் முன்னாடி இருக்கும் அந்த நேரத்தில் நான் உங்களுக்குப் பாலாபிஷேகம் செய்தால் எப்படி இருக்கும்…? விஷத்தில் பாலை ஊற்றினால் அந்தப் பாலும் விஷமாகத்தான் மாறும்.

1.அது போல் நான் கொடுக்கும் வாக்கு பயனற்றதாகப் போய்விடும்.
2.நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கின்றேன்.
3.எம்முடைய உபதேசக் கருத்துக்களைப் பயனற்றதாக ஆக்கி விடாதீர்கள் என்று.

ஏனென்றால் குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து. அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழகுதல் வேண்டும்.

உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும் அவனை மதித்து அந்த அருளைப் பெற்றால் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.

உடலிலே உபாதைகள் வந்து உறுப்புகள் கேட்டு… அதற்கு வேண்டிய ஆபரேஷனோ மற்றதை எல்லாம் செய்தாலும் கூட அடுத்து நாம் எங்கே செல்கின்றோம்…?

அந்த வேதனை என்ற விஷத்திற்குத்தக்க அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது.

கார்த்திகேயா… தெரியச் செய்கிறது சேனாதிபதி பாதுகாக்கும் சக்தியையும் இந்த உயிர் கொடுத்தது. அதை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் இன்று மனிதன் நாளை எடுத்துக் கொண்டால் நுகர்ந்த வேதனை உணர்வுக்கொப்ப வேறொரு உருவை மாற்றி விடுகின்றது.

இது போன்று குருநாதர் பல நிலைகளையும் என் உடலிலே பாய்ச்சி…
1.கெட்டதை நுகரப்படும் பொழுது உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…? என்று பல மணி நேரம் காட்டினார்.
2.அவஸ்தைப்பட்டுத் தான் அறிய முடிந்தது.
3.அதை மீண்டும் எப்படிச் சரி செய்து கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்ன நிலைகளைத் தெரிந்து
4.அதை நல்லதாக மாற்றி உங்களிடம் இப்பொழுது சொல்கின்றேன்.

ஆகவே மகரிஷிகளின் அருல் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் நலம் பெற வேண்டும் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று
1.நீங்கள் எண்ணி எடுத்தால்
2.நான் சொல்லக்கூடிய வாக்கு நிச்சயம் உங்களுக்குள் பயனுள்ளதாக வேலை செய்யும்.

“மனித உருப் பெறவே” பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்

 

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனதன் ஜீவ அமில குணங்கள் உண்டு. அக்குணத் தொடர்ச்சியில் எவ் அமிலத்தின் விகித நிலை கூடியுள்ளதோ அதன் சக்தித் தொடரில் அவ்வாத்மாவின் செயல் சென்றிட்டால் அவ்வாத்மாவின் ஒளி பிரகாசிக்கும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் பன்னிரண்டு வகையான அமில குணங்களுண்டு. இவ்வமில குணத்தை எதன் தொடரில் உயிரணு உதித்து உயிராத்மாவான மனித உடல் பெறுகின்றோமோ அதிலிருந்தே இப் பன்னிரண்டு வகையான குணங்களில் ஒன்றை ஒவ்வோர் ஆத்மாவும் அதன் ஈர்ப்பிலேயே வளர்ச்சியை ஈடுபடுத்தி இழுக்கின்றது.

1.ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இப் பன்னிரண்டு வகையான குண அமிலங்கள் இருந்தாலும்
2.ஏதாவது ஒன்றின் வளர்ச்சியின் வட்டத் தொடரில்தான் ஒவ்வோர் ஆத்மாவும் வளர்ந்து கொண்டே செல்கின்றதே ஒழிய
3.தனக்குள் உள்ள மற்றக் குண அமிலத்தை எண்ணுவதோ செயல்படுத்துவதோ இல்லை.

மனித ஆத்மாவாய் வரும் காலத்திலேயே இப் பன்னிரண்டு வகை குண அமில சக்தி பெற்ற பிறகு தான் மனிதனாகவே மனிதக் கருவிற்கு வர முடிகின்றது.

இயற்கையின் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகை நிலை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பொழுதைய செயற்கையிலேயே எப்படி ஒரு தாவரத்திற்கு அளிக்கும் எரு மற்றொரு தாவரம் ஏற்பதில்லையோ அதைப் போல் ஒவ்வோர் இன வளர்ச்சிக்கும் உயிரணுவிலிருந்து அவை ஈர்க்கும் குண வளர்ச்சியின் தொடர்படுத்தித்தான் ஒவ்வோர் இன வளர்ச்சியும் வளர்கின்றது.

இப் 12 வகை குண அமில வளர்ச்சி பெற்ற பிறகு தான் மனித உருப் பெறுகின்றது. இம்மனித உருவில் அக்குண வளர்ச்சியின் சக்தியை அதன் வழித் தொடரிலேயே செயல்படுத்தினால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் தொடர் நிலையினால் ஏழு ஜென்மங்கள் எடுக்கக்கூடிய அளவிற்கு மனித உருப்பெற்ற காலத்திலேயே சக்தி கூடி விடுகிறது. அதன் தொடரில் ஏழு ஜென்மம் எடுக்கக்கூடிய சக்தி ஆற்றல் உண்டு.

1.இச்சக்தியை உபயோகப்படுத்திச் செயல்படும் நல் ஆத்மாக்கள்
2.இவ் ஏழு ஜென்மத்திற்குள் இப் 12 வகையின் குண அமிலத்தை உரமாக்கிச் சூட்சுமம் கொண்டு
3.என்றென்றும் அழியாத வழித்தொடர் பெற்று விடுகின்றனர்.

இதில் சில ஆத்மாக்கள் இவ் ஏழு ஜென்மத்தின் வழித்தொடர் வந்து கரை சேராத நிலையில் உலக மாற்றத்தில் சிக்குண்டு மற்றொரு பிரளயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளின் சுழற்சி வட்டத்திற்குச் செல்கின்றது.

மனித ஆத்மா உடலுடனே மனித வளர்ச்சிக்கு… அடுத்த வளர்ச்சியில் அதி விரைவில் மனித உடல் பெறும் பக்குவத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றது.

சில ஆத்மாக்களின் நிலையில் இவ் 7 ஜென்மத்திற்கு செல்வதற்குள்ளேயே தான் பெற்ற இப்பொக்கிஷ குண சக்தியை உணராதபடி பேராசைக்கும் வெறி உணர்விற்கும் காம இச்சைக்கும் உட்பட்டு அவ்ஆத்மா வெறி உணர்வு கொண்ட மிருக வட்டத்திற்குள் சென்று… அதன் வழித் தொடர்ச்சியில் மிகவும் அல்லல்பட்டு அடுத்த சுழற்சி வட்டத்திலும் மனித இனம் பெற வேண்டிய இப் 12 வகையான குண அமிலம் பெறப் பல நாட்கள் சென்று விடுகின்றன.

இம்மனித ஆன்மாக்களுக்கு மனிதனாக வாழக்கூடிய குண அமிலத்தைப் பெற்ற சக்தியை உணராமல்… தன்னைத்தானே சிதறவிட்டு வாழும் நிலையை உணர்ந்தீரா…?

இப் பல கோடி மண்டலங்கள் இருந்தாலும் எல்லா மண்டலத்திலும் மனித உருப்பெற்ற ஜீவன்கள் இல்லையல்லவா. மனித உருப் பெறவே பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.

பல கோடி வகையான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனைப் போல் அறிவு வளர்ச்சியுற்ற செயல் திறன் மற்றவற்றிற்கு இல்லை. நாம் எதனை உணர்ந்தோம்…?
1.இன்று இருக்கும் நிலை நாளை இல்லை
2.நேற்று நடந்த நிலை இன்று கனவு தான்
3.இன்றைய நடைமுறை நாளைய கனவு என்பதையே மறந்து
4.நம்முள் ஏற்படும் இச்சைக்கெல்லாம் நம்மை நாமே அடிமைப்படுத்தி கால வெள்ளத்தை விரயம் செய்து
5.வீண் சஞ்சலமான வட்டத்திற்குள் நம்மைச் சிக்க வைத்து வாழும் நிலை தான் இன்று நாம் வாழ்ந்திடும் நிலை.

சில தாவரங்கள் எப்படி அதன் ஈர்ப்பின் தன்மையினால் வைரம் வாய்ந்த மரமாய் தன்னையே வளர்த்துக் கொண்டுள்ளனவோ இதைப் போல் “நம் ஆத்மாவை வைரம் வாய்ந்த ஞான வட்டத்தின் சுழற்சியாக்கி…” அச்சழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் வழித் தொடரில் செல்ல வேண்டும்.

அவ்வளர்ச்சியின் வட்டத்திற்குச் சென்று விட்டால் அதன் தொடரில் பல சக்தி நிலையை நாம் உணரலாம். அவ்உணர்வின் சக்தியை உண்மையாக்கித்
1.தன்னடக்கம் பெறும் பக்குவம் கொண்டு செயல்பட்டால்
2.அதன் தொடர்பில் அடையும் பேரானந்தம் உள்ளதே அவ் ஆனந்தத்தில் தான் அகிலமே கலந்துள்ளது.

இந்நிலையில்… தான் பெற்ற நிலையைச் சிதறவிட்ட ஆன்மாக்களும் பல உண்டு. நான் என்ற நிலை ஏற்பட்டு… பெற்ற சக்தியை நானாக்கிக் காட்டினால் அச்சக்தி நிலைத்திடுமா…?

ஞானம் பெறவே பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன. பல காலம் சேமித்த ஞான சக்தியையே நான் எந்த நிலையில் சிதறவிட்ட ஆத்மாக்கள் பலர் உள்ளனர் இன்று நம்முடனே.

சிதறவிட்ட பிறகு அவ்ஆத்மாக்கள் அதன் தொடர்ச்சியில் செல்ல முடியாமல் அதன் கீழ் நிலைக்குத்தான் திரும்பவும் சென்று விடுகின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யதார்த்தமாக நல்லதையே நாம் சொல்லிக் கொண்டு வருகிறோம் என்று சொன்னாலும் நம்மை ஏமாற்றுபவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

வீட்டில் பணமெல்லாம் நிறைய வைத்திருக்கின்றேன்.
1.இரவெல்லாம் கூடக் கதவைத் திறந்து வைத்திருப்பேன்… எதையும் பூட்டுவதில்லை என்று சொல்லி இருந்தால்
2.அடுத்தாற்படி அதைக் கேட்பவர்கள் ஓஹோ… அப்படியா… சரி…! என்று சொல்லிவிட்டு லேசாகத் தாராளமாக வந்து எடுப்பார்கள்.

நாம் யதார்த்தமாகச் சொல்கின்றோம். ஆனால் கபடு சூதில்லாதபடி சொல்கின்றோம். ஆனால் அதை மூடி மறைக்கவில்லை என்கிற போது என்ன செய்யும்…?

அவர்களிடம் நாம் தன்னை அறியாமலேயே…
1.எப்பொழுதெல்லாம் வீட்டில் இல்லாது வெளியிலே இருப்போம் என்றும் சொல்லியிருப்போம்
2.எங்கள் வீட்டிற்குள் யாரும் வந்து திருடுவதில்லை என்றும் நல்லதாகச் சொல்லியிருப்போம்.

அடுத்தாற்படி இதைக் கேட்டவுடனே நேராக வந்து எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.

இதே மாதிரித் தான் நான் பொய்யே சொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

நான் பெரிய சாமியாராக இருக்கின்றேன். காட்டிற்குள் நான் தவம் இருந்து கொண்டிருக்கின்றேன். அந்தப் பாதையில் நல்லவர்களும் கெட்டவர்களும் வந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

திருடன் வருவதும் தெரிகின்றது. மற்றவர்கள் அவரவர்கள் வாழ்க்கைக்குச் செல்வதும் தெரிகிறது. அங்கே “பொய்யே சொல்ல மாட்டேன்…!” என்கிற வைராக்கியத்தில் நான் இருக்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம்,

அந்த வைராக்கியத்துடன் இருக்கும் பொழுது என்ன நடக்கிறது…?

நகை நட்டுகளுடன் குடும்பத்துடன் முன்னாடி வருகின்றார்கள். அவர்கள் வருவதைப் பார்த்தவுடனே “நீங்கள் எந்த ஊருக்குச் செல்கின்றீர்கள்…?” என்று கேட்கின்றேன்.

இன்ன ஊருக்குப் போகிறோம்… இந்தப் பாதையில் தான் போகிறோம் என்றும் சொல்கிறார்கள்.

சரி நல்லபடியாகச் சென்று வாருங்கள்…! என்று நான் ஆசிர்வாதமும் கொடுக்கின்றேன்.

இவர்கள் நகை போட்டு வந்ததைப் பார்த்துவிட்டு அடுத்தாற்படி ஒரு திருடன் வேகமாக வருகின்றான்.

வந்தவுடன் பார்க்கின்றான். நான் உட்கார்ந்திருக்கின்றேன். நான் தான் பொய்யே சொல்ல மாட்டேன் அல்லவா…!

சாமி…! இந்தப் பக்கம் ஒரு நான்கு ஐந்து பேர் போனார்களா…? எங்கே போகின்றார்கள்…? என்று என்னிடம் அவன் கேட்கிறான்.

1.இவன் திருடன் என்று எனக்குத் தெரிகிறது
2.அவன் கேட்பவர்கள் நகைகளை அணிந்து கொண்டு செல்கின்றார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
3.அப்போது… ஆமாம்… இந்தப் பாதையில்தான் செல்கின்றார்கள் என்று நான் சொன்னால் என்ன ஆகும்…?

இந்த இடத்தில் “நான் பொய்யே சொல்லக் கூடாது…” என்ற விரதத்தில் இருந்தேன் என்றால் நல்லவர்களைக் காப்பாற்ற முடியாதபடி ஆகி நேராகத் திருடனுக்கு வழி காட்டியது போல ஆகிவிடும்.

அவன் போனால் என்ன செய்வான்…?

அவர்கள் கழுத்தை அறுத்துவிட்டு போட்டிருக்கும் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய்விடுவான்.

1.நான் என் தர்மத்தைக் காப்பாற்ற நினைத்தாலும் அந்த நல்லவர்களை எப்பொழுது காப்பாற்றுவது…?
2.காப்பாற்ற முடியுமா…? இல்லை.

ஓரு பெரிய கட்டிடத்தை நாம் கட்டும்போது பொய்க்கால் வைத்துத் தான் சிமெண்ட்டைப் போடுகின்றோம். அந்தப் பொய்க்கால் இல்லை என்றால் நம்மால் சிமெண்ட்டை வைக்க முடியாது.

ஆகவே ஒரு நல்லது செய்ய வேண்டும் என்றால் எதிலுமே அந்த வலுவான எண்ணம் வேண்டும். ஆக…
1.விஷம் இல்லை என்றால் சூரியன் இயங்காது.
2.விஷம் இல்லை என்றால் எந்த அணுவும் இயங்காது.

விஷம் இருந்தால் தான் நெகட்டிவ் பாசிட்டிவ் ஒரு இயக்கச் சக்தியாக வரும். “கரண்ட்” அப்படி இல்லையென்றால் அது இயங்காது.

ஆகவே எல்லாவற்றிலுமே இயக்கத்தின் தன்மையை நாம் சமப்படுத்த வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி நடக்க வேண்டும் என்று ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள். இப்பொழுது அதைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

1.இதற்கு முன்னாடி எந்தத் துன்ப நிலைகள் இருந்தாலும் அதையெல்லாம் நீங்கள் நிறுத்திவிட்டு
2.மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஓங்கி வளரச் செய்வதற்குத்தான் இதை எல்லாம் சொல்வது (ஞானகுரு).

“சாமி தான் செய்து தருவார்” என்று எண்ணாதீர்கள்

 

என் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என் தொழில் நலமாக இருக்க வேண்டும் என் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் அவர்கள் கல்வியில் ஞானம் பெற வேண்டும் என்று இந்த உணர்வுடனே எம்மிடம் ஆசி பெற வேண்டும்.
1.அப்படி நீங்கள் ஆசி வாங்கினால்
2.அவ்வழி நடக்கும் என்று நான் (ஞானகுரு) உணர்த்தும் போது அந்த அருள் வழி நிச்சயம் நடக்கும்.

அதை விடுத்து விட்டு “சாமி தான் செய்து தருவார்” என்று எண்ணாதீர்கள்.

1.ஞானகுரு சொன்ன கருத்துக்களை நாம் பெற்றோமென்றால்
2.அந்த உணர்வுகள் நமக்கு நல்வழி காட்டும் என்ற நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.

“சாமி எல்லாமே செய்து தருவார்” என்று மற்ற சாமியார்கள் பூசாரிகள் செய்வது போன்று இந்தச் சாமியும் செய்து செய்வார் என்று எண்ண வேண்டியதில்லை.

உங்களுக்குள் அருள் ஞான வித்தை ஊன்றுகின்றேன். அது உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

காரணம் உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு ஆலயம். ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நீங்களும் அந்தப் புனிதம் பெற வேண்டும் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதை விடுத்து விட்டு என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது எதிர்த்து வீட்டுக்காரன் இடைஞ்சல் செய்து கொண்டிருக்கின்றான் தொழில் இப்படி நசிந்து கொண்டே இருக்கின்றது குழந்தைகள் நன்றாகப் படிக்கவில்லையே என்று எண்ணினால்
1.என்னுடைய பிரார்த்தனையின் உணர்வுகள் உங்களுக்குள் எப்படி வந்து சேரும்…?
2.நீங்கள் எடுக்கும் உணர்வுகள் நான் பாய்ச்சும் உணர்வுகளை ரிமோட் செய்து குப்பைக்குப் போ என்று தள்ளிக் கொண்டே இருக்கும்.

ஆகவே யாம் கொடுக்கும் வாக்குகளை நீங்கள் சரியான முறையில் (யாம் சொல்லும் முறைப்படி) நீங்கள் எடுத்துக் கொண்டால்.
1.ஒரு அதிசயத்தக்க அற்புதமான நிலைகளைக் காணலாம்
2.நோய்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில்… உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி உடலுக்குள் பகைமைகளை மாற்றி அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

உடலுக்குள் எண்ணத்தால் ஒன்று சேர்ந்து வாழும் கல்யாணராமா…! என்ற நிலையைத்தான் உங்களுக்குள் இப்பொழுது உபதேசித்து வருகின்றேன்.

இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஏங்கி இந்தச் சுவாசம் எடுத்தாலே போதுமானது.

நண்பனாகப் பழகி பகைமை ஆகிவிட்டால் “துரோகம் செய்தான் பாவி… உருப்படுவானா…?” என்று அமெரிக்காவில் இருப்பவனை எண்ணினாலும் இந்த உணர்வுகள் இயக்கி அங்கே புரையோடுகின்றது.

அதைப் போன்று
1.அந்த மகரிஷிகளின் அருளைப் பெற வேண்டும் என்று தபோவன குருபீடத்தை எண்ணி நீங்கள் எடுத்தாலே போதுமானது.
2.எல்லோருக்கும் அந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் வெளிப்படுத்திய மூச்சலைகள்
3.உங்களுக்குள் எளிதில் கவரப்பட்டு உங்கள் சிரமங்களைப் போக்க முடியும்.

இது உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

நீங்கள் வெளிவிட்ட மூச்சலைகள் எதுவும் விரயமாவதில்லை. அனைவரும் ஒன்று சேர்த்த உணர்வுகள் வரப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று குரு பீடத்தில் நினைவைச் செலுத்தினால்
2.நீங்கள் ஒவ்வொருவரும் இட்ட மூச்சலைகள் அனைத்தும் உங்களுக்குக் கிடைத்து பலருடைய உணர்வுகள் உறுதுணையாக வரும்
3.பகைமைகளை அகற்றச் செய்யும்… உங்களை நலம் பெறச் செய்யும்.

ஆகவே… நோயைப் பற்றி நீங்கள் எண்ண வேண்டியதில்லை அருளைப் பெற வேண்டும் இருளை நீக்க வேண்டும். தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்தாலே போதுமானது. இதை எல்லாம் நீங்கள் கடைப்பிடியுங்கள்.

இருந்த இடத்திலிருந்து நீங்கள் தபோவன குரு பீடத்தை எண்ணி உயர்ந்த சக்திகளைப் பெற முடியும். உங்கள் உடலிலே அந்த அருள் உணர்வுகள் பாயும்.

ஏனென்றால் என்னுடைய பிரார்த்தனையே
1.நீங்கள் தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்
3.உங்கள் வாழ்க்கை நலமும் வளமும் பெற வேண்டும் என்று தான் என்னுடைய ஆசைகள் எல்லாம்.

உங்கள் உயிர் கடவுள். அவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புகின்றேன் இவ்வாறு நான் பிரார்த்தனை செய்யும்பொழுது உங்கள் நினைவுகளை வேறு பக்கம் செலுத்திக் கதவைப் பூட்டிவிட்டால் என்ன செய்வது…?
1.உங்கள் வீட்டை நான் சுத்தப்படுத்த வேண்டும் என்று வருகின்றேன்
2.கதவை மூடிக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்…?

அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அந்த உயர்ந்த நிலை நிச்சயம் ஏற்படும். அருளைப் பெருக்கி இருளைப் போக்கி இனி பிறவியில்லா நிலை அடைவதே குருநாதர் காட்டிய அருள் வழியின் நோக்கங்கள்.

நாம் தேடி வைத்த எந்தச் செல்வமும் நம்முடன் வருவதில்லை இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை. நமக்குச் சொந்தமாக்கப்பட வேண்டியது
1.உயிருடன் ஒன்றி அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.அந்த அழியாச் சொத்தைச் சேர்த்து வாழ்வதே மனிதனின் கடைசி நிலை.

இதை நாம் அனைவரும் பெறுவோம்… குரு அருள் உறுதுணையாக இருக்கும்.

நம் பூமி ஆத்மாவிற்கே “ஜீவனுண்டு”

 

ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றை ஒன்று பின்னியே அண்டக் கோளங்களும் அனைத்து நிலைகளும் உள்ளன. முந்தைய பாடத்தில் ஓ…ம் என்ற நாதத்தின் நிலையைச் சிறிதளவு விளக்கியுள்ளேன்.
1.ஓ…ம் என்ற நாதத்தின் உண்மை நிலையென்ன…?
2.அவ் ஓம் என்று ஒலி எப்படி ஒலிக்கின்றது…?

விஞ்ஞானத்தினால் கண்டுபிடித்த மின் விசிறிக்கு அதன் சுழலும் நிலை எப்படி வருகின்றது…? மின் விசிறி சுழல மின்சாரத்தை அதில் பாய்ச்சியவுடன் அதன் காந்த சக்தியை ஈர்த்து அம் மின் விசிறி சுழலுகின்றது.

சுழலும் நிலையில் காற்றை நாம் எவ் எண்ணில் வைத்து சுழல விடுகின்றோமோ (அதாவது எம் மீடியத்தில் அக் காந்த மின் அலையைப் பாய்ச்சுகின்றோமோ) அதன் தன்மை கொண்டு அது சுழல்வதற்கு ஏற்ப அது பரப்பிடும் காற்று அந்நிலையில் உள்ளதை உணர்கின்றோம்.

நம் பூமி சுழல… சூரியனிலிருந்து பாயும் காந்த அலையை நம் பூமி இழுத்து…
1.பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியைக் கொண்டு இக்காற்று ஏற்படுகின்றது.
2.காற்றுடன் ஒளியும் நீரும் கலந்துள்ளன
3.நீரின் நிலையுடன்தான் நம் பூமி அவ்வொளியை ஈர்த்து வெளிக்கக்கி
4.அதி காற்றாய் இப்பூமியைச் சுழலவிடும் அவ் ஓசைதான் ஓ…ம் என்ற நிலையில் நமக்குத் தெரிகின்றது.

இவ் ஒலியை ஒவ்வொருவரும் உணரலாம்.

ஏனென்றால் நம் பூமி எதெதையெல்லாம் ஈர்த்து, உண்டு கழிக்கின்றதோ அச்சக்தியெல்லாம் நமக்கும் உண்டு. நீரிலிருந்து மின்சாரத்தைக் காந்த அலையுடன் எடுக்கின்றார்கள். நம் உடலில் உள்ள காந்த மின் அலையை நாம் அறிவதில்லை.

நம் காந்த மின் அலையை நாம் உணரும் பக்குவம் பெற்றோமானால் அதன் தொடரில் நம்மையே அவ்வொளியாகச் செயல்படுத்திட முடிந்திடும்.

இப்பூமி வெளிப்படுத்தும் இக்காற்று மண்டலம்தான் நம் உடலிலும் மோதுண்டு செல்லுகின்றது. சிறு எறும்பையும் பூவையும் இக்காற்றே மோதிச் செல்கின்றது.

1.இக்காற்று மோதும் இடமெல்லாம் ஒலி பெறுகின்றது.
2.அவ் ஒலியுடனே நீரும் சேருவதினால் ஒளியாகின்றது.
3.காற்று இல்லாவிட்டால் மணம் வீசிடாது.
4.அம்‌ மணம் பெறவும் அவ்வொளியும் ஒலியும் சேர்ந்துதான் நம் மணமே வீசுகின்றது.

இக்காற்றில் உள்ள ஜீவனுக்கு இக்காற்றினிலேயே படர்ந்துள்ள “நீர் தான் ஜீவசக்தி…”

இக்காற்று நம் பூமியில் வீசிடும் நிலைக்கும் பால்வெளி மண்டலம் மற்ற மண்டலங்களின் நிலைக்கும் பல கோடி மாறுபாடுகள் உண்டு. “ஜீவனுடன் கூடிய அதிசக்தி வாய்ந்த காற்று மண்டலம் நம் பூமியின் காற்று மண்டலம்…”

மற்ற மண்டலங்களின் தன்மையில் இந்நிலை மாறுகொள்கின்றது. நம் பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலத்தில் அக் காற்றுடன் கலந்துள்ள நீர் அலைகள் நம் பூமியைக் காட்டிலும் அதிகம்.

ஒவ்வொரு மண்டலமும் அதன் சுழற்சியில் அதன் சுவாசம் கொண்டு அவை உண்டு வெளிப்படுத்தும் பக்குவ நிலைக்கொப்பத் தான் அதற்குகந்த காற்று மண்டலம் உண்டு.

சூரியன் வளர்ந்து கொண்டே… சக்தியைப் பெற்றுக் கொண்டே… சுழன்று ஓடிக்கொண்டே… அனைத்து மண்டலங்களைக் காத்துக் கொண்டே இருந்திட்டாலும் “நம் பூமியின் ஜீவசக்தி சூரியனுக்கில்லை…”

அறிவு வளர்ச்சி பெற்ற ஆத்மாக்களைக் கொண்ட பூமி மட்டுமல்ல நம் பூமி.
1.நம் பூமியின் ”ஆத்மாவிற்கே” அறிவின் சக்தி ஜீவ பூமியப்பா நம் பூமி.
2.இப்பூமியின் ஆத்மாக்களின் நிலையை மாற்றி நம் பூமிக்குகந்த நிலையை
3.நம் பூமியின் ஆத்மாவே செயல் கொள்ளத்தான் போகிறது இன்னும் சில காலங்களில்.

நாம் தான் நம் விஞ்ஞானத்திற்காக பூமியின் மட்டத்தை நகரங்கள் ஆக்கி… தார் ரோடுகளாகவும் இல்லங்களை அழகுபடுத்தப் பல நிலைகளைச் செய்தும்… பூமியின் ஆத்மா சுவாசிக்கத் தடைப்படுத்தி தாவரங்களின் இன வளர்ச்சியைக் காடுகளை எல்லாம் அழித்துப் பூமியின் பொக்கிஷங்களை எல்லாம் நம் உல்லாசச் செயற்கைக்காக பாழ்படுத்தி விட்டோமே…!

நம் பூமியின் ஆத்மா ஜீவன் கொண்டது தன்னைத்தானே காத்துக் கொள்ளும். இம்மனித ஆத்மா எப்படி ஒவ்வொரு பிறவியாய் ஓர் உடல் கெட்டு மறு பிறவிக்கு வந்து மறு உடல் எடுத்து வாழ்கின்றனவோ அதைப்போல்
1.நம் பூமியின் ஆத்மாவிற்கும் பூமியின் கோளமென்ற இவ் உருவ உடல் வியாதிப்பட்டுவிட்டது.
2.எத்தருணத்திலும் அதன் நிலை மாறும் கால கட்டத்தில் தான்… நம் பூமியின் ஜீவ ஆத்மாவின் நிலை இன்றுள்ளது.
3.இதனை உணர்ந்து நாமும் நம் ஆத்மாவை இக்குறுகிய கால கட்டத்திற்குள் “சக்தி நிலை பெறும் பக்குவ நிலை எய்திடல் வேண்டும்…”

நம் பூமி ஆத்மாவிற்கே ஜீவனுண்டு. நம் சக்தியையும் “அச் சக்தியே காக்கும் பக்குவத்தை” வழி முறையை நாம் உணரல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பள்ளியிலே ஆசிரியராகப் போவோர் அனைவருமே பாட நிலையை எப்படிப் பிறருக்கு போதிப்பது…? என்றும் அவர்கள் குணங்களை எப்படிச் சீர்படுத்துவது…? என்றும் செயலாக்குவார்கள்.

அதைப் போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண்ணின் ஆற்றலைத் தான் பருகினாலும் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் வழியினை எமக்கு (ஞானகுரு) உபதேசித்து அருளினார்.

1.அந்தப் பண்படுத்தும் பருவம் வரும்போது உயர்ந்த ஞானத்தின் வித்தை அவர்களுக்குள் எப்படி ஊன்றச் செய்வது…?
2.ஞானத்தை வளர்க்கும் நிலைக்கு அவர்கள் நினைவலைகளை எப்படிக் கூட்டச் செய்வது…?
3.ஞானிகளின் அருள் உணர்வுகளை ஊழ் வினையாக அவர்களுக்குள் எப்படிப் பதிவு செய்ய வேண்டும்…? என்று எனக்கு உணர்த்தினார்.

ஆகவே மக்களை இயக்கும் உயிரான ஈசனை நீ வணங்கு…!
1.அவர்களைப் படைப்பதும்…
2.அவர்கள் எண்ணியதை இயக்குவதும்… எண்ணியதை உடலாக்குவதும்
3.உடலில் விளைந்ததை எடுத்துச் செல்வதும்
4.விளைந்த உணர்வுகளுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்குவதும் உயிரே.

பிறர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்… அந்த மெய் ஞானியின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நீ எண்ணும் போது “அதை நீ பெறக் கூடிய தகுதி பெறுகின்றாய்…!”

ஆகவே அந்த ஞானிகளின் உணர்வை நீ பெற்று அதன் பின் அவர்கள் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு கொண்டு உபதேசத்தின் வாயிலாக ஊழ்வினையாகப் பதிவு செய்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் ஆற்றலை அவர்களுக்குள் ஆழமாக ஊன்றி நினைவலைகளை அங்கே அந்த ஞானிகளுடன் அவர்களை ஒன்றச் செய்யும் பொழுது தான் அவர்களும் அதைப் பெறும் தகுதி பெறுகின்றனர்
அவ்வாறு பெறும் தகுதியை நீ ஏற்படுத்தி
1.அவர்கள் பெற வேண்டும் பெற வேண்டும் என்று அவர்களை நீ பிரார்த்திக்கும் போது
2.அவரை வளர்த்த அந்த உயிருக்குள் உயர்ந்த உணர்வுகள் அபிஷேகமாகிறது.

அந்த ஒவ்வொரு உயிரும்… உடலை அமைத்துக் கொண்ட நிலைகளில் தனது அவாவினாலும் ஆசையாலும் எந்த உணர்வின் தன்மை அந்த உடலுக்குள் ஆசை பாசம் என்ற நிலையில் பிறரைக் காக்க வேண்டும் என்ற நல்ல உணர்வை எடுத்தனரோ…
1.அப்படி இரக்க உணர்வு கொண்டோருக்குள் பிறிதொரு தீய உணர்வுகள் சென்று
2.அதே உணர்வுகள் அவர்களுக்குள் மீண்டும் ஆன்மாவாக மாறி
3.அந்த ஆன்மாவிலிருந்து அவர்கள் சதா சுவாசிக்கும் பொழுது
4.அந்த உயிரான ஈசனுக்கு அவர்களை அறியாமலேயே தீய உணர்வுகளை அபிஷேகிக்கின்றனர்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தச் சுடு தண்ணீரை மேலே ஊற்றினால் எப்படியோ… மிளகாயைப் போட்டு நீரைக் காய்ச்சி அதை நம் மேல் ஊற்றினால் எப்படி எரிகின்றதோ… அதைப் போல எந்தெந்தப் பொருள் இருந்தாலும் அதை அரைத்து நீருடன் கலந்து நாம் மேலே ஊற்றும் போது நம் உடல் எப்படி எரிகின்றதோ… எப்படி வேதனைப்படுகின்றோமோ… இதைப் போலத்தான்
1.இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களுக்கு எதிர் நிலையாகும் போது உடலில் எரிவது போல
2.இந்த உடலை இயக்கும் உயிருக்கும் அந்த உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது அங்கே எரிச்சல் ஏற்பட்டு
3.உடல் முழுவதும் எரிச்சலும் நல்ல எண்ணங்களை எண்ண முடியாத நிலையும்
4.அந்த எரிச்சலான உணர்வுகள் உடலான சிவனுக்குள் அந்த எரிச்சலை ஊட்டும் தன்மையாக அந்தச் சக்திகள் மாறுகின்றது.

அவ்வாறு ஆகாதபடி உங்கள் உயிரான ஈசனை மகிழச் செய்ய உடலான சிவனுக்கு அமுதை ஊட்ட… குரு காட்டிய அருள் வழிப்படி நீங்கள் எல்லோரும் அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும். அதை நீங்கள் பெற்று வாழ்க்கையில் அறியாது வந்த அந்தத் தீமைகள் அனைத்தையும் உங்களுக்குள் வளராது நிறுத்த வேண்டும் என்பதற்குத் தான் இந்த உபதேசம்.

உறுப்புகள் தியானம்

 

சிறுகுடல் பெருங்குடல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடல் பெருங்குடல் முழுவதும் படர்ந்து… சிறுகுடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஆசைப்படுங்கள். இப்பொழுது சிறுகுடலும் பெருங்குடலும் வீரியமடைகின்றது.

குடல்களில் வரக்கூடிய உபாதைகளோ ஆகாரத்தை ஜீரணிக்க முடியாத நிலையோ இது போன்ற குறைபாடுகள் இருந்தால் இவ்வாறு நாம் தியானித்தால்
1.நமது குடலில் வளர்ச்சி அடைந்த அணுக்களை வீரியமடையச் செய்து
2.சாப்பிடும் ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

இப்பொழுது சிறுகுடல் பெருங்குடல் உற்சாகமடைவதை உணரலாம்.

கணையங்கள்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கணையங்கள் முழுவதும் படர்ந்து கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சாப்பிடும் ஆகாரத்தை ஆவியாக மாற்றி அமிலமாக மாற்றும் அந்தக் கணயங்கள் ஒவ்வொரு விதமான நிலைகளாகப் பிரித்துச் சீராக்குகின்றது.

சர்க்கரை ஆலைகளில் “கெமிக்கலைப் போட்டு” அழுக்குகளைப் பிரித்து நல்லதாக மாற்றிக் கொண்டு வருவது போன்று நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைப் பிரித்து மூன்று விதமான நிலையில் அது மாற்றுகின்றது.
1.கணையங்களை உருவாக்கிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் வலுவை ஏற்றப்படும் பொழுது…
2.சத்துகளைச் சமமாகப் பிரித்து நல்ல உணர்வை ஊட்டும் நற் சக்தியாக மாற்றுகின்றது.

கல்லீரல் மண்ணீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

பெரிய கல்களையும் அடுத்து சிறு கல்களையும் அடுத்து மணல்களையும் போட்டு அதன் மூலம் அழுக்குத் தண்ணீரை வடிகட்டினோம் என்றால் அழுக்குகள் அங்கே பிரிக்கப்பட்டு நல்ல நீராக அது மாறுகிறது.

அதைப் போன்று கல்லீரலை மண்ணீரலும் அமிலமாக மாற்றுவதைப் பரிசுத்தப்படுத்தி “நல்ல இரத்தமாக” மாற்றும் சக்தி பெறுகின்றது.

நுரையீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஒரு இன்ஜினுக்குள் பெட்ரோல் சென்ற பின் அதை ஆவியாக மாற்றி இன்ஜினை அது எப்படி இயக்குகின்றதோ அதைப் போல்
1.அமிலமாக மாற்றியதை நுரையீரலுக்குள் சென்ற பின் வாய்வாக மாறி அதன் உணர்வு கொண்டு
2.நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் இதன் துணை கொண்டு இயக்கும் சக்தி பெறுகின்றது நமது நுரையீரல்.

வெளியிலிருந்து காற்றை இழுப்பதும் நம் உடலுக்குள் தீமைகளைக் கழிப்பதும்
1.அருள் உணர்வைப் பெறச் செய்வதும் அனைத்துமே இந்த நுரையீரல் தான்.
2.ஆகவே தீமையை நீக்கும் அந்த வலிமையான சக்தியை நுரையீரலை உருவாக்கிய அணுக்களை நாம் பெறச் செய்தல் வேண்டும்.

ஆனால் வேதனை என்ற உணர்வின் நுகர நேர்ந்தால் சளி போன்ற நிலைகளும் ஆஸ்துமா போன்ற நிலைகளும் டிபி போன்ற நிலைகளும் கேன்சர் போன்ற நோய்களும் உருவாகக் காரணமாகி விடுகின்றது.

இதைப் போன்ற தீமைகளை நீக்க நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கினால்
1.உடல் முழுவதுக்கும் நல்ல சுவாசத்தை அனுப்பி
2.நல்ல அணுக்களை இயக்கி நமக்குள் நல்ல உணர்வை உருவாக்கும்.

வேதனையான உணர்வை உடலில் சேர்த்தால் இந்த உடல் முழுவதும் படர்ந்து எல்லாமே சோர்வடைந்துவிடும்… உறுப்புகளும் சோர்வடைந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்ட அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியினை உங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறச் செய்யுங்கள்… வலிமை பெறச் செய்யுங்கள்.

கிட்னி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கிட்னி முழுவதும் படர்ந்து கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே வீரியமடையச் செய்தால்
2.சர்க்கரைச் சத்து உப்புச் சத்து வாத நீர் போன்ற நிலைகளைப் பிரித்து நமது இரத்தத்தைச் சுத்தமாக்கும்.

அவ்வாறு சுத்தமாக்கும் அந்தக் கிட்னிக்கும் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை அங்கே செலுத்தி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யுங்கள்.

அது வலிமை பெற்றால் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து வாத நீர் போன்ற நிலைகள் வராதபடி தடுக்க இது உதவும்.

இருதயம்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.இவ்வாறு செய்தால் சிந்திக்கும் வலிமையும்… வரக்கூடிய தீமைகளை அகற்றிடும் வலிமையும் பெறக்கூடிய தகுதி நாம் பெறுகின்றோம்.
2.உடல் முழுவதற்கும் அந்த வலிமையான உணர்வுகளைச் செலுத்தி நம் உடல் உறுப்புகளைச் சீராக இயக்கும் அந்த அருள் சக்தி பெறுகின்றது.

சிந்திக்கும் ஆற்றலும்… தீமைகளை அகற்றும் வலிமையும்… பொருளறிந்து செயல்படும் திறனும் பெறக்கூடிய சக்தி நம் இருதயம் பெறுகின்றது.

முடிவு நிலையில் உள்ள நாம்… “முதல் நிலைக்குச் செல்லும்” பக்குவப் பாடநிலை தான் இங்கு உணர்த்தப்படுகிறது

 

நம் நிலை சமநிலை பட்டவுடன்… நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் எண்ணத்தை ஒரு நிலையில் குவித்து “எவ்வாண்டவனை வணங்குகின்றோமோ”
1.அந்நிலை கொண்ட அருள் ரிஷியின் ஒளிக் கதிர்கள் நம் உயிராத்மாவுடன் நாம் எடுக்கும் சுவாசமுடன் மோதுண்டு
2.நாம் எடுக்கும் இச்சக்தியின் அருளைக் கூட்டச் செய்கின்றது.

முந்தைய கால புராணங்களிலும் நடைமுறை வாழ்க்கையிலும், ஆண்டவனே வந்து சில நிலைகளைக் கவியாக உணர்த்தியதாக உணர்ந்திருப்பீர்.

பல ஆயிரம் காலங்களாக இம்மனித எண்ண அறிவு வளர்ச்சி கொண்ட நாள் தொட்டே பல ரிஷிகளின் சக்தி நிலை நம் பூமியில் செயல்பட்டு வருகிறது. அந்தந்தக் கால நிலைகளுக்கொப்ப இச்செயல் நிலை கலந்து வந்தது.

இன்றைய மனித ஆத்மாக்களின் எண்ணத்தில் இச்செயற்கை நிலையிலும் ஏட்டு அறிவின் உறவிலும் செயல்படும் நிலையில் பக்தி கொண்டு தன் எண்ணத்தைக் குவித்து… சப்தரிஷிகளின் நிலையுடன் தொடர்பு கொள்ளும் பக்குவ நிலை இக்கலிக்கு வரவில்லை.

இன்றைய நிலையில் கலியின் நிலையில் உணரும் பக்குவமும் இல்லை.

சப்த ரிஷிகளின் நிலையுமே இன்று இக்கலிக்குகந்ததாகத் தான் எவ்வண்ணத்தில் மனித ஆத்மாக்கள் செல்லுகின்றனரோ… அதே வழித்தொடர் கொண்ட சக்தியைத்தான் அவர்களும் நமக்கு உணர்த்துகின்றனர்.

கவியிலும் காவியத்திலும் இன்றைய சக்தி நிலையை உணர்த்தி அதை ஏற்கும் பக்குவ ஆத்மாக்கள் சில தான் உள்ளன என்பதனைப் புரிந்தே “கால நிலைக்கேற்ப அருள் ஒளி தான்” அவ்வாண்டவனின் ஜெபம் கொண்டவர்களின் நிலையிலும் செயல்படுகின்றது.

இன்றைய நிலையில் நம் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி
1.இவ்வுலக வாழ்க்கையுடன் நம் வாழ்க்கையை ஜெயித்துக் காட்டிட வேண்டிய பக்குவ நிலை பெறவும்
2.நமக்கேற்படும் அனைத்து நிலைகளில் இருந்து நம் நிலையை உயர்ந்ததாக்கும் செயல் நிலைதான் நமக்கு இன்று தேவைப்படுகின்றது.

அந்நிலை பெறவும்… இயற்கையின் உண்மை நிலையை அறியவும்… நம் எண்ணத்தை அவனிடம் செலுத்தும் பக்குவத்தைத் தான் இன்றைய நம் நிலை இருந்திடல் வேண்டும்.

எண்ணத்தை ஒருநிலைப்படுத்திக் குவிக்கக் குவிக்க
1.நம் சக்தி அவ் ஆண்டவனிடம் ஐக்கியப்பட்டு
2.உரமாய் அவன் சக்தியை நம்முள் ஊன்றச் செய்து
3.அவனும் நாமும் ஒன்றான நிலையில் நம் உயிராத்மாவும் நம் உடலும் இருந்திடும். இந்நிலையில்
4.நமக்கு ஏற்படும் நம்மைச் சுற்றியுள்ள எந்நிலையும் நம் அருகில் நெருங்காது.

இவ்வுலக மாற்ற நிலை கூடிய விரைவில் ஏற்படப் போவதினால் நம்மை அதி பக்குவப்படுத்தி நாம் செயல் கொண்டிடல் வேண்டும்.

மனித ஆத்மாக்களுக்குத் தான் இந்நிலையில் புகட்டுகின்றீர்; மற்ற ஜீவன்களுக்கு அதன் ஆத்மாவைக் காத்திடும் பக்குவம் எப்படி ஏற்படும்…? என்ற வினாவும் எழலாம்.

இன்றைய நிலையில் எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்பவன் இம்மனிதன் தான். மிருகங்களில் சிலவற்றின் நிலையும் பறவைகளில் சிலவற்றின் நிலையும் சில உயர்ந்த நிலையில் வாழுகின்றன.

இம்மாற்றத்தினால் பறவைகளில் சிலவற்றின் நிலை சிதறுண்ட நிலையில் செயல்படப் போகின்றது. பூமிக்கு மாற்றம் வரும் நிலையில் பறக்கும் பட்சிகளுக்குத் தப்ப முடியாதா…? என்று எண்ணலாம்.

காற்று மண்டலமே மாற்றம் கொண்டுள்ள இந்நிலையில் இப்பொழுதே பறவைகளின் எண்ணச் சிதறலின் வளர்நிலை தொடர்பட்டுவிட்டது. இவ்வுலக மாற்றத்திற்குள்ளேயே பறவைகளின் நிலை மிகவும் குறைந்துவிடும்.

நம் பூமியிலேயே பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பறவைகளின் நிலை இருந்ததைக் காட்டிலும் படிப்படியாய் இன்று குறைந்துவிட்டது.

மற்ற ஜீவராசிகளின் நிலையும் ஒரு சில இன வர்க்கங்கள் மிகவும் குறைந்து விட்டதற்குக் காரணமே தாவரங்களை அழித்ததினால் இக்காற்று மண்டலமே விஷத்தன்மை அதிகப்பட்டதிலிருந்து இம்மாற்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

1.முந்தைய காலங்களில் வயல்களில் விளையும் கதிர்களைப் பட்சிகளிலிருந்து காக்கத் தக்க நடவடிக்கை இருந்திட்டது.
2.இன்றைய நிலையில் தாவரங்களை புழு பூச்சி இவற்றிலிருந்து காக்கும் நிலைதான் அதிகப்பட்டு விட்டது.

காலங்கள் மாற மாற இன வளர்ச்சியின் நிலையும் மாறிக் கொண்டே வருகின்றது. இப்பூமியில் கல்கியில் தொடர்ந்து இக்கலி வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் முடிவு நிலைதான் இன்று நாமுள்ள நிலை.
1.முடிவு நிலையில் உள்ள நாம்
2.முதல் நிலைக்குச் செல்லும் பக்குவப் பாடநிலை தான் இங்கு உணர்த்தும் நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எந்தெந்த எண்ணங்களை எடுக்கிறோமோ அந்த எண்ணமே நமக்குள் தாயாக இருக்கின்றது.

தாயாக இருக்கும் உயிர் தனக்குள் (உடலுக்குள்) வளர்த்திட்ட உணர்வின் அணுக்கள் அனைத்தையும் “காத்திட வேண்டும்…” என்ற உணர்வை தூண்டித் தூண்டி அதனின் நிலைகள் கொண்டு தான் ஒவ்வொரு உடலையும் காத்து… அதாவது தன் குழந்தையைக் காத்திடும் நிலையாக நம்மை வளர்த்தது உயிர் தான்.

உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை தான் நாம்.

தீமையில் இருந்து தன் குழந்தையைக் காத்துக் கொள்ள தாய் படும் அவஸ்தைகளை நாம் பார்க்கின்றோம்.
1.நம்மைக் காத்திடத் “தாய் தந்தையர்கள்” கடந்த காலத்தில் ஞானிகளை எண்ணி ஏங்கினார்கள்.
2.இப்போதுள்ள நமது தாய்மார்கள் தெய்வத்தை எண்ணித் தான் ஏங்குகின்றார்கள்.

இன்றைய மனித வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகளைக் கூட்டுகின்றோமோ… தெய்வங்களை எண்ணி இந்தத் தெய்வம் என்னைக் காக்கும்…! என்ற நிலையும் மனித உடலில் உருவான இந்த ஆசையின் நிலைகள் கொண்டே எண்ணும் பொழுது… மனித உடலின் செயலுக்கே நாம் வந்து விடுகின்றோம்.

ஆகவே நமக்குள் தாயாக ஆக்க வேண்டிய முறை எது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அருள் ஞானியிகள் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை அடைந்தார்கள்.

1.உயிர் ஒளியான அந்த உணர்வின் தன்மையை அதை நாம் தாயாக எண்ணி
2.அந்தத் தாயின் அணைப்பிலேயே நம் உணர்வின் தன்மை ஒளியாக மாற வேண்டும் என்று
3.அதை தாயாகக் கருதி அந்தத் தாயின் அணைப்பிலேயே ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் குழந்தைகளை எப்படிக் காக்கின்றோமோ… நம்முடன் அரவணைப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு நாம் பரிவுடன் எப்படிச் செயல்படுத்துகின்றோமோ… பரிவற்ற குழந்தைகளை நாம் எப்படி ஒதுக்குகின்றோமோ அதைப் போலத் தான்
1.உயிருடன் ஒன்றி பரிவு காட்டும் அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
2.அனைத்தையும் ஒளியாக மாற்றும் உணர்வினைப் பெற்று
3.தாயின் (உயிர்) அணைப்பின் உணர்வுகள் கொண்டு நமக்குள் தெளிந்து பின் தெளிவான உணர்வுளாக அது விளையும்.

நம் உயிரைத் தாயைப் போலவும்… கடவுளாகவும்… நம்மை ஆளும் ஆண்டவனாகவும் எண்ணி… எந்தக் குறைபாடுகள் வந்தாலும் அது நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும்.

எதை வைத்து…?

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இருக்கும் நம் ஆறாவது அறிவின் தன்மையைப் பயன்படுத்திப் பிரம்மாவைச் சிறைபிடித்தான் என்ற நிலைகள் நமக்குள் உருவாக்கிக் கொடுத்த
1.தாயான நம் உயிரின் துணை கொண்டு
2.மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மெய் ஞானிகள்
4.ஒளியின் சரீரமாகி அவர்கள் வெளியிட்ட மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருவதை
5.அதை நாம் கவர்ந்து நமக்குள் வலுவாக்க வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நமது வாழ்க்கையில் எத்தனையோ வேதனைப்படுகிறோம்… சலிப்புப்படுகிறோம்.. வேதனைப்படுவோரையும் பார்க்கின்றோம்.

வேதனைப்பட்டவரைப் பார்த்தாலும்… அதை அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டு உயிரிலே பட்டு ஈசனுக்கு அந்தத் துன்பங்கள் வரும்போது தான் துன்ப்ப்படுகிறான் என்று அறிந்து கொள்கின்றோம்.

அந்தத் துன்பம் இல்லாத நிலைகள் பெற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.நம் உயிரான நிலைகள் கொண்டு அந்தத் தாயை அந்த ஞானிகள் தன் உணர்வின் தன்மை கொண்டு
2.தன் உயிரைத் தாயாக மதித்து… அதையே குருவாக மதித்து… அதையே ஆண்டவனாக மதித்தது போன்று
3.அந்த ஈசனுக்குத் தீங்கிழைக்கும் உணர்வினை நீக்கப் பழகுவோம்.

உயிருடன் ஒன்றி அவனின் அணைப்பிலேயே என்றும் நிலையாக இருக்கும் அந்த அருள் ஞானிகள் வெளியிட்ட தீங்கினை நீக்கும் உணர்வினை நாம் பருகுவோம்… அதைத் தனக்குள் வளர்ப்போம்,

ஆகவே
1.ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம் உயிரைத் தாயாக மதித்து…
2.மெய் ஒளியைப் பெறுவேன்… மெய் வழியைப் பெறுவேன்…
3.என்னை அறியாது வந்த இருளை நீக்குவேன் என்று
4.ஆறாவது அறிவின் துணை கொண்டு உறுதியுடன் நாம் செயல்படுத்துவோம்.

பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் “இராமேஸ்வரத்தில்” காட்டப்பட்டுள்ளது

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நாம் பெற வேண்டும்…!
1.அதைப் பெற வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் இராமேஸ்வரத்தில் பார்க்கலாம்… பார்த்து அந்தச் சக்திகளை எடுக்க முடியும்.
2.27 நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒன்றுக்கொன்று எதிர் நிலை இல்லாதபடி ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.

27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர்நிலையானால் அதைத் தன் பாதரசத்தால் மாற்றி அந்த எதிர்நிலை வரும் பொழுது மோதி… வெப்பம் காந்தம் என்ற உணர்வாக்கி… பிரிந்து செல்லும் உணர்வை எது நுகர்கின்றதோ அதை “இயக்க அணுவாக மாற்றும் சக்தி பெறுகின்றது சூரியன்…”

ஆனால் அகஸ்தியனோ
1.இதை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒளியாக மாற்றி
2.உயிரைப் போல உணர்வை ஒளியாக மாற்றி இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

சூரியனோ அழியும் தன்மை பெற்றது… இந்த உயிரோ அழிவதில்லை. ஒரு மனிதன் தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை… உணர்வுகளும் உடலும் தான் கருகுகின்றது.

கருகிய உணர்வு இணைந்த பின் உயிருடன் இணைந்து செல்லப்படும் பொழுது வேதனை என்று உணர்வே வருகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் உடலிலே இல்லை என்றாலும்… வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டு நரக வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த உணர்ச்சியைத் தூண்டி வேதனைப்படுத்தும் அந்த வேதனை உணர்வைத்தான் அங்கே வளர்த்துக் கொண்டிருக்கும்.

இதை நாம் தெரிந்து கொள்ள… ஞானிகள் காட்டிய அருள் வழியில் இராமேஸ்வரம் என்று வரப்படும் பொழுது “நேரம் ஆகிவிட்டது…!” ஏனென்றால்
1.இந்த மனிதனுடைய வாழ்க்கையில் சிறிது காலமே வாழுகின்றோம்.
2.அந்த நேரத்திற்குள் நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும் பகைமைகளை மறத்தல் வேண்டும்.

அதற்காக… “எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம்” என்ற இந்த உடலில் ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து… இருள் நீக்கி பொருளறிந்து செயல்படும் சக்தி பெறும் திறனைப் பெற வேண்டும்.

நாம் வாழும் ஊரிலே விநாயகரைப் பார்த்தாலும்… அருகில் உள்ள மரங்கள் துருவ நட்சத்திரத்தைக் காண முடியாதபடி மறைத்து விடுகின்றது. ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தை இராமேஸ்வரத்தில் மறைப்பில்லாதபடி நாம் காண முடிகின்றது.

பார்த்து அந்தச் சக்தியைப் பெறுவதற்காகக் கடலோரப் பகுதியாக இப்படித் தேர்ந்தெடுத்து அந்த நட்சத்திரத்தின் இயக்கங்களை காணுவதற்காகத் தேர்ந்தெடுத்தார்கள்.
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இந்த உடலும்
2.எண்ணத்தால் ஒளியின் உடல் பெற்ற நிலையும்
3.அந்த ஒளியின் உணர்வை நமக்குள் பெற்று
4.இருளை நீக்கி அருள் சக்தி பெறும் இடமாக அங்கே மாற்றினார்கள்.

அந்த இடத்திலே ஆலயத்தை அமைத்து குறுகிய காலமே மனிதன் வாழுகின்றான் என்ற நிலையைக் காட்டி எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் என்ற உணர்வைக் காட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும்படி செய்தார்கள் ஞானிகள்.

சிறிது காலமே நாம் வாழுகின்றோம்… அதற்குள் மனிதனாகி நாம் வளர்ச்சி அடைந்து எதைப் பெற வேண்டும்…? என்பதற்காக இப்படிக் காட்டினார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் எண்ணப்படும் பொழுது இந்தக் குறுகிய காலத்திற்குள் நம் உடலுக்குள் பகைமைகளை நீக்கி மனதை ஒன்றாக்கும் நிலையை அது உருவாக்குகின்றது.

உடலுக்குள் பகைமைகள் அனைத்தையும் நீக்கி எல்லா மனங்களும் ஒன்றாக்கப்படும் போது…
1.இருளை நீக்கி ஒளி என்ற உணர்வாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று…
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டது.

நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி “உயிரான ஈசனிடம் அதை விட்டு விடுவோம்”

 

இன்றுள்ள நம் பூமியின் தன்மையிலும் நம் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் தன்மையிலும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி அலைகளிலும் ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் மாறிக் கொண்டே உள்ள நிலையில்
1.நம் பூமியின் தன்மையில் சமீபத்தில் நடந்த இச் சூரிய கிரகண நிலையிலிருந்து
2.நம் பூமிக்குக் கிடைக்கப் பெறும் சூரியனின் ஒளி அலையில் சிறுகச் சிறுக மாற்றத் தன்மையின் நிலையினால்
3.நம் பூமி ஈர்த்தெடுத்த அமிலத்தன்மையில் மாற்றம் கொண்டு
4.பூமிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவ ஆத்மாவிற்கும் இம் மாறுகொண்ட நிலையினால் சில மாற்ற நிலைகள் சிறுகச் சிறுக ஏற்படும்.

நம் உடலிலுள்ள காந்த அமில சக்தி நாமெடுக்கும் சுவாசத்தின் ஈர்ப்பில் நம் செவி வழியில் மோதுண்டு அமிலமாய் அக்காந்த ஈர்ப்பு நிலை உடல் முழுவதற்கும் பரவிய நிலையில்… சிறுகச் சிறுக உடல் தன்மையும் அனைத்து ஜீவ ஆத்மாக்களுக்கும் மாற்றம் கொள்ளும் நாள் இக் குறுகிய கால வட்டத்திற்குள்ளே “மிகச் சமீப எதிர்காலத்தில்” இந்நிலையின் தொடரெல்லாம் நடந்திடும்.

எண்ணத்தைப் பரிசுத்தப்படுத்தி… ஒரு நிலை கொண்ட ஜெப நிலையில் நம் எண்ணம் முழுவதும் படரும் நிலை நாம் ஏற்படுத்திக் கொண்டால்
1.அவ்வொளியுடன் ஐக்கியப்பட்டுள்ள சப்தரிஷிகளின் ஒளியின் ஈர்ப்பு சக்தியில் நம் ஒரு நிலைகொண்ட எண்ண நிலையும் மோதுண்டு
2.அவர்கள் ஈர்ப்பில் அவர்களின் வட்டத்திற்குள் நம் எண்ணச் சக்தி ஐக்கியப்பட்டு நாம் இருக்குங்கால்
3.அவர்களே நம்மைப் பார்த்துக் கொள்வார்கள்.

காற்றிலுள்ள விஷத்தன்மையும் நம்மைச் சார்ந்தவர்களின் மாறு கொண்ட எண்ண நிலையும் நம் ஆத்மாவை வந்து மோதி விலகித்தான் செல்லுமே ஒழிய
1.நாம் ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள அம்மகான்களின் வட்ட சக்தியில் (ஒளி சக்தி)
2.நம்மை அவர்களே ஐக்கியப்படுத்திக் கொண்டு வழி நடத்திடுவர்.

இப்பாட நிலையை உணர்ந்து கொண்டு “எண்ணத்தை ஜெபப்படுத்திய ஆத்மாக்களுக்கு” இதன் தொடர் நிலையின் வழி நிலை புரிந்திடும்.

ஒவ்வொரு மகானும் தான் பெற்ற அந் நல் அமுதை ஆசைப்பட்டுத்
1.தன் வட்டத்திற்குள் பல ஆத்மாக்களை நல்லுணர்வாக்கிட இன்றளவும் அவர்களின் செயல்நிலை செயல்பட்டுக் கொண்டேதான் உள்ளது.
2.அவ்வட்டத்தின் ஈர்ப்பில் நம் நிலை செல்லும் வழி முறையை நாமேதான் பெறல் வேண்டும் என்பதனை உணர்ந்தீரா…?

இன்று வாழும் இவ்வாழ்க்கை தான் நம் காலம் என்பதை மறந்துவிடுங்கள். நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும்… நல் சொத்தை அடையும் பக்குவத்திற்காக நாம் பெற்ற சந்தர்ப்பக் காலம் தான் இது.

இக்குறுகிய காலத்தை தர்க்கவாதத்திலும் பிடிவாத நெறியிலும் “ஆண்டவன் உண்டு… இல்லை…” என்ற ஆராய்ச்சி நிலையெல்லாம் அறிந்திடாமல் நம் முன்னோர்கள் உணர்த்திய நெறியில் உள்ள உன்னத சக்தியை ஈர்த்து நம் சக்தியை நாம் உணரல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவுக்குள்ளும் அவரவர் சேமித்து வைத்தது இவ்வுடலில் உயிரணுவாய் உதித்த காலத்திலேயே சேமித்தது. அதன் தொடரில் வழி வந்த சக்தி நிலையெல்லாம் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் உண்டு.

ஒன்றைப்போல் ஒன்றில்லை… ஆனால் அனைவருக்கும் சக்தியுண்டு. அதை வெளிப்படுத்திட
1.நம்மிடம் உள்ள பல தீய சக்திகளை நமக்கே அடிமைப்படும் நிலைப்படுத்தி
2.நம் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்களும் நம் நிலையில் செயல்படும் நிலையில்
3.நாம் எடுக்கும் எண்ண சுவாசம் இருந்திடல் வேண்டும்.

நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொண்டால் பிறரின் நிலையைக் கண்டு நம் எண்ணத்தில் கலக்கம் தோன்றாது. பிற எதிர்ப்பிற்கும் புகழுக்கும் சமமான நிலை கொள்ளும் பக்குவம் கொண்டு அவ்வாண்டவனின் மந்திரமுடன் ஐக்கியபட்டு அவ்வட்டத்தில் நாம் உள்ள பொழுது… “நம்மைச் சுற்றியுள்ள நிலையையும்… நம்மைக் காக்கும் அவ்வாண்டவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்…”

அதற்காக நம் எண்ணத்தை நாம் மாற்றலாகாது. அனைத்தையும் சமமாக்கி… அனைத்தையும் என்பது
1.நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி அவனிடம் விட்டு விடுவோம்
2.”அவ்வாண்டவனே பார்த்துக் கொள்வான்” என்ற ஒரு நிலை கொண்ட சம நிலை நாம் பெறல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விழித்த நிலையில் புற உலகை மட்டும் தான் பார்க்கின்றோம்.
1.அதனால் காலையிலிருந்து இரவு கண்களை மூடும் வரை பல விதமான உணர்வுகளும் எண்ணங்களும் மோதிக் கொண்டு
2.நம்மைப் பல வகைகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.
3.அதில் சில மோதல்கள் நம்மை ரொம்பவும் பாதிக்கவே செய்கின்றது.

ஆனாலும் அதைச் சமப்படுத்த எந்த அளவிற்கு நாம் முயற்சிக்கின்றோம்…? என்பது கேள்விக்குறி தான்,

பெரும்பகுதி அதற்குத் தீர்வு காணாமல் வேறு வேலைகளையே செய்து கொண்டிருப்போம். ஆனால் எல்லாம் முடிந்து தூங்கப் போகும் சமயம்
1.பாதித்த அத்தனையும் நினைவுக்கு வந்து நம்மைத் தூங்கவே விடாது.
2.அதற்கு மீறித் தூங்கினாலும் நிம்மதியான தூக்கமாகவும் இருக்காது.
3.காலையில் எழும் போது மறுபடியும் அந்த எண்ணம் வரும். உடலும் ஆரோக்கியமாக இருக்காது.
4.எழும் பொழுதே ஒருவிதமான எரிச்சலுடனே தான் ஆரம்பிப்போம்.

இதை எப்படி மாற்றுவது…?

படுக்கப் போகும் முன் அவசியம் ஒரு 10 நிமிடமாவது ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துக்களைப் படித்துப் பதிய வைக்க வேண்டும்.

1.கண்களை மூடியவுடன் நினைவு முழுவதும் வானை நோக்கி இருக்க வேண்டும்…. அந்த மகரிஷிகளின் பால் இருக்க வேண்டும்.
2.அதாவது புற உலகை மறந்து விட்டுக் கண்களை மூடிய நிலையில்
3.மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம் நினைவு செல்ல வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதையே திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கி இருக்க வேண்டும்.

இரவு படுக்கும் போது ஒரு ஐந்து நிமிடமோ அல்லது பத்து நிமிடமோ பூமியின் வடக்குத் திசையில் இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தால் போதும். சப்தரிஷி மண்டலங்களுடன் தொடர்பு ஏற்படும்.

அந்த மகரிஷிகளின் தொடர்பு அலையும் நம் ஈர்ப்புக்கு வரும். அப்படியே ஒவ்வொரு மகரிஷியாக எண்ணலாம். ஒவ்வொருவரையும் எண்ணி அவர்கள் பெற்ற விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

சிறிது நாள் பழகிவிட்டால் போதும்.
1.அப்புறம் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தாலே நம் நினைவுகள் விண்ணுலகம் செல்லும். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
2.காலையில் எழும் பொழுதும் மிகுந்த உற்சாகம் இருக்கும்.
3.அன்றைய நாள் வரும் சிக்கல்களை எப்படியெல்லாம் நீக்கித் தெளிவாக வழி நடத்த வேண்டும் என்ற சிந்தனைகள் படிப்படியாக வரும்.
4.மகரிஷிகள் இருக்கும் இடத்திற்குள் நாம் சஞ்சரித்த உணர்வுகள் தோன்றும்.
5.அந்தப் பழக்கம் அப்புறம் எல்லா நேரத்திலும் சப்தரிஷி மண்டலத்துடன் சஞ்சரிக்க முடியும்.

தூங்கப் போகும் முன் மகரிஷிகளுடன் நம் நினைவுகள் ஒன்றினால் அது நிஜமான தொடர்பை ஏற்படுத்தும்.

நம் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தினை நிலைநிறுத்த வேண்டும்

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.
2.இப்பொழுது கண்ணில் அந்த ஈர்க்கும் சக்தி அதிகரிக்கின்றது.

கண்ணின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள். புருவ மத்தியில் வீற்றிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி “உயிர் வழி” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஆசையுடன் ஏங்கி இருங்கள்

இப்பொழுது புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் பொழுது
1.உயிரைத் தாண்டி உங்கள் உடலுக்குள் தீமையை இயக்கும் உணர்வுகள் உள் புகாது தடுக்கப்படுகின்றது.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நிலை நிறுத்தப்படும் பொழுது அதை ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்
3.உங்கள் உடலில் உள்ள தீமையான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாதபடி தடைப்படுத்தப்படுகிறது.
4.தீமையான அணுக்கள் உடலில் வளராது தடுக்கப்படுகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “திரும்பத் திரும்ப” எண்ணி ஏங்கித் தியாநியுங்கள்.

உங்கள் புருவ மத்தியில் ஈர்க்கும் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உயிரிலே மோதும் பொழுது “ஒரு வெளிச்சம்” உருவாகும்.

உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இரத்த நாளங்களில் கலந்து இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உங்கள் உடலுக்குள் தீய வினைகளை விளைய வைக்கும் அந்த அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்தப்படும் பொழுது
அந்தத் தீய அணுக்களும் அடிபணிந்து நல்ல அணுக்களாக மாறும் திறன் பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர்ந்து அதில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள். இப்பொழுது இரத்த நாளங்களில் உள்ள அந்த அணுக்கள் உற்சாகமடையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி எங்கள் இரத்தங்களில் கலந்து உடல் முழுவதும் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் செலுத்துங்கள்.

அந்த சக்தி அங்கே பெற வேண்டும் என்று ஆசையுடன் ஏங்கித் தியானியுங்கள். உங்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் இப்போது உற்சாகமடையும்.

1.இத்தகைய வலுவை நாம் அடிக்கடி ஏற்படுத்தி இது ஒரு பழக்கத்திற்கு கொண்டு வந்தால்
2.தீமைகள் வரும்பொழுது எல்லாம் உடனுக்குடன் அதை மாற்றிக் கொள்ள முடியும்
3.தீமையிலிருந்து விடுபட முடியும்… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்க முடியும்.

ஆத்மா என்பது என்ன…? அது எங்குள்ளது…?

 

எண்ணத்தை ஒருநிலைப்படுத்தும் பக்குவ நிலைக்கு நம் ஆத்மாவை நாம் செயல்படுத்திட வேண்டும்.

ஆத்மா என்பது எங்குள்ளது…?

நாம் இறந்துவிட்டால் ஆத்மா பிரிந்து விட்டது என்கின்றோம். ஒரு ஜீவ உடல் இறக்கும் பொழுது அவ்வுடலில் இருந்து அவ்வுடலின் உயிரணுதான் முதலில் பிரிகின்றது.

அவ் உயிரணுவிற்கும் அவ்வுடலில் உள்ள ஜீவனற்ற ஆத்மாவிற்கும் தொடர்பு கொண்டுதான்
1.அவ்வுடலில் இருந்து ஓர் அங்குல வட்டத்திற்குள் தான்
2.அவ்வுயிரணு அவ்வுடலின் மேல் பகுதியிலேயே அவ்வாத்மாவுடன் இருக்கும்.

ஆத்மா என்பது என்ன…?

அவ்வுயிரணு சேமித்த அமில சக்திதான் ஆத்மா. அவ்வுடலை எந்நிலைப்படுத்துகின்றோமோ “அதன் பிறகுதான்”
1.அவ்வுடலைச் சுற்றிக் கொண்டே உள்ள அவ்வுடலின் ஆத்மா
2.இவ்வுயிரணுவுடன் கலந்து ஆவி உலகிற்கு வருகின்றது.

எவ்வுடலும் அதன் ஜீவன் பிரிந்த உடனே அதனுடைய செயல்நிலை ஏற்படுத்துவதில்லை. அவ்வுடலை எரிக்கும் நிலையில் அதனுடைய உயிருடன் அவ்வாத்மா சுற்றிக்கொண்டு ஆவி உலகில் கலக்கின்றது.

மற்ற நிலையில் அடக்கம் செய்யும் உடலாத்மா அதன் உயிரணுவுடன் சேர்ந்து உடலில்லாமல் செயல் கொள்ளப் “பல நாட்களாகின்றன…”

1.ஆத்மா என்பது உடலின் அனைத்து உறுப்புகளிலுமே ஆவித் தன்மையில்
2.உடலில் மட்டுமல்லாமல் உடலைச் சுற்றியுள்ள நிலையிலும் படர்ந்துள்ளது.
3.உயிரணுவிற்கும் ஆவி ஆத்மாவிற்கும் ஜீவனுடன் கூடிய ஆத்மாவிற்கும் பொருள் புரிந்ததா…?

ஆவி உலக ஆத்மாவிற்கும் ஜீவ உடல் ஆத்மாவிற்கும் மாறுபட்ட நிலை இது தான்.

ஜீவ உடலை விட்ட ஆத்மாவிற்கு எண்ணத்தின் நிலையைச் செயலாக்கிட பிற எண்ணமுடன் (உடலுடன் கொண்டவருடன்) மோதித்தான் அதன் செயல் நிலை இருந்திடும்.

நம் எண்ணத்தை ஒரு நிலை கொண்டு ஒவ்வோர் ஆத்மாவும் ஆசையுடன் வாழும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அனைத்திற்குமே ஆசை வேண்டும்…
1.அன்பு கொள்ளவும் ஆசை வேண்டும்
2.கோபத்தை விடவும் ஆசை வேண்டும்.
3.எந்நிலை செயல் கொள்ளவும் அவ் ஆசை வேண்டும்.
4.நமக்குகந்த ஆசையை நாம் ஆசைப்பட்டால்தான் எச்செயலும் நடக்கும்.

பேராசைக்குத்தான் நாம் இடந்தரலாகாது.

அமுதான உணவானாலும் நாம் நம் உடலுக்கு வேண்டிய அளவுதான் உண்ணுகின்றோம். எப்படி உண்டாலும் அதிகமாய் நம் உடம்பு ஏற்றுக் கொள்கின்றதா…?

உடலே தனக்குகந்த அளவு உணவைத்தான் செரிக்கும் பொழுது…
1.நம் எண்ணத்தையும் அளவுடன் கூடிய ஆசையை எண்ணியே
2.செரிக்கும் பக்குவத்தை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
1.நாம் சுவாசிக்கும் உணர்வுகள் வினையாக (அணுக்களாக) உடலிலே எப்படிச் சேர்கின்றது…?
2.வினைக்கு நாயகனாக நம் செயலை எல்லாம் எப்படி மாற்றுகின்றது…? என்று இந்த உணர்வின் எண்ணங்களை எல்லாம்
3.நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் விளக்க உரைகளைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஆனால் இதை எல்லாம் கேட்டுவிட்டு
1.சாமி (ஞானகுரு) பிரமாதமாகச் சொல்லி விட்டார் என்ற எண்ணத்தில் வெறுமனே சென்று விடாதீர்கள்
2.ஒவ்வொன்றிலும் நீங்கள் அந்தத் தெளிவுக்கு வர வேண்டும்.

உபதேசத்தை எல்லாம் கேட்ட பின் “சாமி சொன்னார்…” நாம் இந்தத் தவறை எல்லாம் செய்யக் கூடாது என்று நினைப்பீர்கள். பிற்பாடு என்ன சொல்வீர்கள்…?

கடலில் பெருங்காயத்தைக் கொண்டு போய்க் கரைத்தால் சிறிது நேரம் கம…கம… என்று வாசனையாக இருக்கும். கடலுக்குள் பெருங்காயம் மறைந்தபின்… “ஐய்யய்யோ… வாசனையையே காணோம்…” என்று தான் சொல்ல முடியும்.

அதைப் போல இங்கே இந்த உபதேசத்தின் வாயிலாக
1.அந்த அருள் ஞானிகள் பெற்ற ஆற்றல்களை ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
2.அந்த ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் இயங்கக் கூடிய அனைத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.
3.உங்கள் நிலைகளையும் அது என்ன…? என்று உணர்கிறீர்கள்.

ஆனாலும் சிறிது நேரம் சென்றபின் கடலுக்குள் இருக்கும் உப்பின் தன்மை பெருங்காயத்தின் நறுமணத்தை மறைத்து விடுவது போன்று ஆகிவிடுகிறது.

ஏன்…?

உங்கள் வாழ்க்கையில் இதற்கு முந்தி எடுத்துக் கொண்ட விருப்பு வெறுப்பு வேதனை ஆத்திரம் என்ற அந்தக் கைப்பின் (உப்பு) தன்மைகள் அதிகமாகி உண்மையின் நிலைகளைப் புரிந்து கொள்ளாத வண்ணம் அதைத் தடைப்படுத்தும் உணர்வுகளாக வந்துவிடுகிறது.

1.பின்… “சாமி சொல்கிறார்… என்னால் முடியவில்லையே…….!” என்ற இந்த நிலைதான் வரும்.
2.அதை எப்படியும் முடிய வைக்க வேண்டும் என்று நான் உபதேச வாயிலாக வலுப்படுத்துகிறேன்.

ஆனாலும் அதை நீங்கள் வலுப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக என்ன சொல்வீர்கள்…?

1.சாமி…! எத்தனையோ நல்லதை எல்லாம் நீங்கள் சொன்னீர்கள்… கேட்டேன்.
2.நான் திருந்தி விடலாம் என்று நினைத்தேன்…
3.ஆனால் “என்னை விட மாட்டேன் என்கிறதே…!” என்று பெரும்பகுதியானோர் சொல்கின்றார்கள்.
4.செய்ய முடியவில்லையே… செய்ய முடியவில்லையே…! என்று தான் சொல்கிறார்கள்.

செய்ய முடியவில்லை என்று சொல்வதன் காரணம் என்ன…?

கடலில் கலக்கிய பெருங்காயம் போன்றுதான் நீங்கள் எண்ணும் உணர்வுகள் அமைந்து விடுகிறது.

அதாவது நமக்கு ஏதாவது வந்தால் உடனே கோவிலுக்குச் சென்று சாமிக்கு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும். அதிலே மீறி விட்டால் ஜோசியரிடம் சென்று கேட்க வேண்டும். அவர்கள் விவரத்தைச் சொல்வார்கள். தப்பித்துக் கொண்டு வந்துவிடலாம்.

முருகனுக்கோ அல்லது மற்ற தெய்வங்களின் ஆலயத்திற்கோ சென்று சாந்தி செய்து விடு…! என்றும் அங்கே போ… இங்கே போ…! எல்லாம் சரியாகிவிடும்…! என்று சொல்வார்கள்.

உங்களுக்குப் பகைமைகள் நிறைய இருக்கின்றது. அது தீரவேண்டும் என்றால் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று இரண்டு மண்ணை வாரித் தூற்றிவிட்டு வந்து விட்டால் சரியாகிவிடும்…! என்று இப்படித்தான் ஆலோசனை சொல்கிறார்கள்.

ஆகையினால் நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்…? என்றால் சாமியார் செய்து தருவார்… சாமி செய்யும்.. ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்…! என்று இப்படித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றோமே தவிர
1.மனிதனான பின் தனக்குள் நாம் எண்ணியதைச் செயலாக்கும் சக்தி
2.”நம் உயிர் தான்…!” என்பதை மறந்தே இருக்கின்றோம்.

கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் மட்டும் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். நல்லதை மட்டும் எண்ணவே முடியவில்லை…!

காரணம்… ஒரு விஷம் கொண்ட பொருளுக்குள் நல்ல பொருளைப் போட்டால் அந்த நல்ல பொருளும் ஒடுங்கிவிடுகின்றது.

விஷம் கொண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷம் கொண்ட இயக்கமாக இருக்கும் பொழுது இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அந்த உணர்வின் செயலாக்கமே நம் நல்ல உணர்வை அறியவிடாது தடைப்படுத்துகின்றது.

நல்ல உணர்வுகளை அறிய வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் கூறும் உபாயத்தைக் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.அடுத்து உங்களைப் பிறவியில்லா நிலையை நிச்சயம் அடைய முடியும்.
4.இந்த விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்.
5.உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

நல்லவர்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

 

உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றேன் என்றால்…
1.உணர்வின் இயக்கங்கள் மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…?
2.நல்லவன் எப்படிக் கெட்டவனாகினான்…?
3.நல்லது செய்தே பிறருக்குக் கெட்டவனாகின்றான்… நல்லதைச் செய்தே தன் உடல் நலிந்து போகின்றது
4.நல்லவர்கள் குடும்பத்தில் எத்தனை தொல்லைகள் படுகின்றார்கள்…?
5.தவறு செய்யவில்லை… நன்மை செய்தவர்களே பெரும்பகுதி இந்த நிலைக்கு ஆளாகின்றார்கள்.
6.நன்மை செய்தவனுடைய நன்மைகள் வளர வேண்டுமல்லவா..? அதற்கு வேண்டிய உபாயம் தேவையா இல்லையா…?
7.அதன் உணர்வுகளை நீ உணர்த்து… நல்லவரை நல்லவராக்கு
8.தீமைகள் வளரப்படும் பொழுது தீமைகளை அகற்றிடும் வல்லமையால் அவர்களை நல்லவராக்கும் உணர்வினை நீ செயல்படுத்த வேண்டும்
9.இதுவே நீ ஆண்டவனுக்குச் செய்யக்கூடிய சேவை என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் அந்தந்த உடலை ஆளுகின்றது அப்படி ஆளும் அந்த ஆண்டவனுக்கு அந்த உடலில் சிந்தனையுடன் செயல்பட்டு அந்த உயர்ந்த குணங்களை பரப்பும் நிலைகள் பெற வேண்டும்.

அந்த உடலில் உள்ள நல்ல உணர்வுகள் வளர வேண்டும் என்று நீ எண்ணினால் ஒவ்வொரு உயிரான ஆண்டவனுக்கு நீ சேவை செய்கின்றாய்.

ஒவ்வொரு ஈசனுக்கும் உருவாக்கும் தன்மை கொண்டு உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டும் என்றால் உன் உயிரான ஈசன் உனக்குள் அந்த உணர்வினை வளர்க்கின்றது.

இந்த உணர்வினைச் சொல்லும் பொழுது அவர்கள் செவிகளில் விழுந்து இருளை அகற்றும் உணவுர்கள் அங்கே பெருகுகின்றது. ஆகவே உன்னுடைய சேவை எதுவாக இருக்க வேண்டும்…? என்று வினா எழுப்பினார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனின் உயிரையும் ஈசனாக மதி…! அவனால் அமைக்கப்பட்ட உடல் என்பதை ஆலயமாக மதி…! இந்த உணர்வால் நுகரப்பட்ட சிவமென்று அந்த உடலை மதி…!

அந்த உணர்வின் தன்மை கண்கள் வழிகாட்டி மனிதனை உருவாக்கிய கண்களே கண்ணனாகின்றது. வேதனை என்ற உணர்வை அடிக்கடி நுகர்ந்தால் கண்களிலே அது படரப்பட்டுக் கண் நாளடைவில் தெரியாது போகின்றது. கரு விழியில் விஷம் தோயப்படும் போது நல்ல உணர்வை அறியாது போகின்றான்.

கண்கள் பிறக்க எத்தனை உபாயங்களைக் கையாண்டது…? தான் பார்க்க வேண்டும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை எண்ணத்தால் எண்ணி… எண்ணித் தான் முதலிலே கண்கள் உருவானது.

கண்கள் உருவான பின் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் உணர்வினை வேகமாகக் கூட்டுகின்றது. தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினை வலுவாக்கி மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது.

கண்களால் தீமை என்று தெரிந்து கொண்ட பின் அதைத் துடைக்கத் தவறினால் வேதனை என்ற உணர்வுகள் அடிக்கடி கண்ணின் கருவிழிகளிலே பட்டால் அதைக் கவரும் தன்மை ஆகி விடுகின்றது.

அப்போது கருவிழிக்கு இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்கள் விஷத் தன்மையாகி அது பலவீனமானால் கண்கள் தெரியாது போய் விடுகிறது. ஆகவே கண்ணனுக்கே நாம் தீங்கு செய்கின்றோம்.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து உயிரான ஈசன் மனித உடலை உருவாக்கியது
1.நாம் எடுக்கும் உணர்வுகள் சீராகச் செயல்படவில்லை என்றால் இந்த உடலுக்குள் உடலான சிவனுக்கே துன்பம் செய்கின்றோம்.
2.உயிரான ஈசனுக்கும் உடலான சிவனுக்கும் அடிக்கடி வேதனைப்பட்டால் உயிரான ஈசன் வெளியே சென்று விடுகின்றது.

இந்த உடலின் ஆசைக்கு வளர்த்துக் கொண்ட உணர்வுகள்… எதை எதை எல்லாம் எண்ணி வேதனைப்பட்டோமோ விஷத்தின் அணுக்கள் விளைந்து உயிர் வெளியே சென்ற பின் இந்த உடல் சவமாகி விடுகிறது… நீசமாகி விடுகின்றது.

உடல் நீசம் ஆகிவிட்டால் நாற்றமாகிறது… அருகிலே நாம் செல்ல முடிகின்றதா…? செல்வந்தராக இருந்தாலும் பாசத்துடன் வாழ்ந்து இருந்தாலும் உடல் நீசமான பின் அருகிலே நிற்க முடிவதில்லை.

இயற்கையின் உண்மை நிலைகள் இவ்வாறாகும் பொழுது நாம் அணுக வேண்டியது யாரை…?
1.அருள் உணர்வுகள் பெற வேண்டும்
2.இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை “உயிருடன் ஒன்றச் செய்தால்” இருளை அகற்றும்.
3.இருளை அகற்றினால் மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும்.
4.மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தால்
5.நமது வாழ்நாளில் இருளை அகற்றும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறும்.
6.அழியா ஒளிச் சரீரம் பெறலாம்

ஆகவே… மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! மனிதனான பின் தீமைகளை நீக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி நிலை.

பகலிற்கு மேல் “இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது” என்பதனை உணர்ந்திருக்கின்றோமா…?

 

நம் எண்ண நிலையைத் திசை திருப்பிடவும் இவ்வுலகில் பல நிலைகள் பல வழியில் நம்மை வந்து மோதத்தான் செய்யும். நாம்தான் இந்நிலையில் இருந்து நம் எண்ணத்தை அவ் ஓ…ம் என்ற ஜெபத்துடனே சுழல விட்டு நம் ஆத்மாவையே அவ் ஓ…ம் என்ற ஜெபத்துடன் சுழல விட வேண்டும்.

காலையில் துயிலெழுந்து இரவு உறங்கும் காலம் வரை நம் எண்ணத்துடன் பல செயல்கள் மோதுண்டு நம்மைப் பல நிலைகளுக்கு ஆளாக்குவது என்பது மட்டுமல்ல…
1.பகலில் ஏற்படும் செயல்களின் நினைவுடனே நாம் உறக்கம் கொள்வோமானால்
2.அந்நினைவின் தொடரில் அதே நினைவுடன் கூடிய இக்காற்று மண்டலத்தில் கலந்துள்ள பல ஆத்மாக்களின் நினைவலைகளும்
3.நாம் நம் செயலின் நினைவலைகளும் உள்ள நிலையில் அதுவும் இதுவும் மோதுண்டு அதன் எண்ணச் சுழற்சியில் நம் எண்ணம் சிக்குண்டு
4.உறக்கத்தில் உள்ள நிலையில் நம் செயல் எண்ணத்தின் தொடர் எண்ணத்தில் நம்மைச் செல்லவிடாமல்
5.நம் எண்ணத்துடன் மோதுண்ட பிற ஆத்மாவின் எண்ணச் செயல் நிலையின் எண்ண ஓட்டத்திற்கே நம்மை அவ்வாவி ஆத்மா தூண்டி
6.அதன் எண்ணக் கலவையின் ஓட்டமுடனே நாம் செல்லும் நிலையில்தான் நமக்கு ஏற்படும் கனவுகளில்
7.நம் வாழ்க்கைக்கும் எண்ணத்திற்கும் ஒட்டாத செயல் நிலைகள் எல்லாம் நாம் நம் கனவில் காணுகின்றோம்.

உடலை விட்ட ஆத்மாக்களுக்குத் தான் உணவுமில்லை… உறக்கமும் இல்லை. மனித ஆத்மாக்கள் உறங்கிடும் வேளையில் அதனுடைய எண்ண நிலைக்கேற்ப ஆத்மாக்களை இவ்வாவி உலக ஆத்மாக்கள் தன் எண்ணத்தைச் செயல்படுத்த நம் வட்டத்திற்குள் வந்து தன் எண்ணத்தைச் செயல்படுத்த நம் வட்டத்திற்குள் வந்து நம் எண்ணத்தைத் தூண்டுகிறது.

இரவில் நாம் காணும் துர்க்கனவானாலும் ஆனந்த நிலை கொண்ட கனவாய் இருந்தாலும் நாம் உறங்கி எழுந்த பிறகு நம் நினைவில் வருவதை வைத்து அதே எண்ண ஓட்டத்தில்
1.இப்படிக் கனவு கண்டு விட்டோமே… கனவு பலித்திடும்…! என்று செப்புகின்றனரே என்ற எண்ணத்தில் மோதவிட்டு
2.அதே நினைவுத் தொடரில் நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் சப்த அலையுடன் இந்நிலையும் கலந்து
3.அதன் தொடர்ச்சியில் நம் செயல்நிலை இழுக்கப்படுகின்றது.

நல்ல ஆனந்த நிலை கொண்ட கனவும் இந்நிலையே. கனவில் ஏற்படும் நிலையினாலும் நம் வாழ்க்கையில் சில நிலைகள் தொடர்பு கொள்கின்றன.
1.பகலில் மட்டும் நம் செயலின் எண்ணம் கொண்டு நம் நிலை ஏற்படுவதில்லை
2.பகலிற்கு மேல் இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது என்பதனை உணர்ந்தீரா…?

நாம் உறங்குவதற்கு முன் ஒரு நிமிடம் நம்மையே அஜ்ஜெபமுடன் கலக்கும் நிலைப்படுத்தி
1.நம் தாய் தந்தையரை வணங்கி நம் இஷ்ட தெய்வமான எத்தெய்வமாய் இருந்தாலும் சரி
2.அவ் ஓம் என்ற நாதத்துடன் ஓம் ஈஸ்வரா ஓம் இயேசுவே ஓம் முகமது நபியே என்று ஒரே எண்ணத்தில்
3.அவரவர்கள் பக்தி கொண்டு பூஜிக்கும் அவ்வாண்டவனின் ஜெபத்தையே உறங்கும் முன் ஜெபித்துக் கொண்டே உறங்கிடல் வேண்டும்.

அப்படிப்பட்ட உறக்கத்தில் உள்ள நிலையில் நம் உயிரைச் சுற்றியுள்ள நம் ஆத்மாவுடன் நாம் எடுக்கும் சுவாசத்தினால் இவ் ஓ…ம் என்ற ஆண்டவனின் ஜெபமே சுழன்று கொண்டே இருக்கும்.
1.அந்நிலையில் நம் எண்ணமும்… நாம் விழித்துள்ள நிலையில் செய்த செயல் எண்ணமும்… அதன் தொடரில் நாம் காணும் கற்பனை எண்ணங்களும்…
2.இஜ் ஜெப நிலையில் உள்ள ஆத்மாவுடன் வந்து மோதுவதும் இல்லை… பல கனவுகள் சிதறுண்டு நாம் காணவும் முடிந்திடாது.

நம் உயிராத்மாவும் நாம் உறங்கும் நிலையிலும் அமைதி கொண்டு “நம்மைக் காக்கும் இவ்வெண்ணத்தினால்தான்” ஒவ்வோர் உயிராத்மாவின் செயல் நிலை செயல்படுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
1.ஒவ்வொரு அணுவின் ஆற்றலின் நிலையையும்… நஞ்சின் இயக்க நிலையையும்
2.நஞ்சுடன் இணைந்த உணர்வின் அலையையும் அவர் தெளிவுறக் கண்டுணர்ந்து
3.இயற்கை எப்படி விளைந்தது…? என்ற நிலையையும் அறிந்தார்.

அதை எல்லாம் யாமும் (ஞானகுரு) அறிவதற்காக வேண்டிச் சுமார் 15 வருடம் காட்டுக்குள் செல்லச் செய்து அனுபவங்களைப் பெறச் செய்தார்.

பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து அந்த மணங்களை உயிரினங்கள் சுவாசிக்கும் பொழுது
1.அந்த மணம் உயிரினத்திற்குள் எண்ணமாக எப்படி வருகிறது…?
2.அந்த எண்ணத்தின் துணை கொண்டு தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கின்றது…?
3.ஒரு மரமாக இருப்பது தன் மணத்தைக் கொண்டு மற்ற நிலைகள் தன் அருகிலே வராதபடி தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்கிறது…?
4.அதே சமயம் தன் உணர்வால் அதனின் இனத்தின் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறது…? என்ற நிலையையும் காட்டினார்.

அதே போல் செடிகளை எடுத்துக் கொண்டாலும் அந்த செடியில் வரும் மணத்தை உயிரினங்கள் நுகர்ந்தால்… அந்த உணர்வின் சத்து உடலாகி…
1.அதற்குள் இருக்கும் இந்த விஷமும்
2.அதனின் மணமும்
3.அதனின் உணர்வும்
4.எண்ணமாக எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையையும் அதை எல்லாம் நேரடியாகக் கண்டுணரும்படிச் செய்தார்

அவ்வாறு 15 வருடம் காட்டிற்குள் பெற்ற அந்த அனுபவத்தின் பயன் கொண்டு தான் மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார்.

அவ்வாறு சந்திக்கப்படும் பொழுது ஒவ்வொரு மனிதரும் எந்தக் குணத்தை முன்னணியில் வைத்து வளர்த்துள்ளார்களோ அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் பிறிதொரு ஆத்மா அவர்களுக்குள் எப்படி இயங்குகின்றது…? என்றும் காட்டினார்.

அந்த ஆன்மாக்கள்
1.அவர்கள் எண்ணங்களுக்கு ஒத்ததாக இயங்குவதும்
2.எண்ணங்களுக்கு மாறாக இயங்குவதும்
3.ஆசையால் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல் அவர்களுக்குள் வளர்ந்து கொண்ட பின்
4.அதனின் உணர்வுகள் இவர்கள் உடலிலே எவ்வாறு இயங்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரியும்படிச் செய்தார்.

அதை எல்லாம் அறிந்து கொண்ட பின்… அடுத்த கணம்
1.அதை நீக்கிடும் உணர்வின் ஆற்றலை… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீ எப்படிப் பருக வேண்டும்…?
2.அதை உனக்குள் எப்படி வளர்க்க வேண்டும்…?
3.அந்த உணர்வின் எண்ணத்தை மற்றவர்களுக்கு ஒரு நல்ல சக்தி வாய்ந்த வித்தாக எப்படிப் பதிவு செய்ய வேண்டும்..?
4.அத்தகைய ஞான வித்தைப் பதிவு செய்து கொண்ட நிலையில்
5.அந்த அருள் ஞானிகளின் உணர்வினை அவர்கள் எண்ணி அதை நுகர்ந்து
6.அதன் மூலம் வாழ்க்கையில் தனக்குள் அறியாது வந்த தீய வினைகளை எப்படி அவர்களே நீக்கிக் கொள்வது…? என்ற நிலையையும்
7.குருநாதர் எனக்குத் தெளிவாகப் போதித்தார்.
8.அவர் எனக்குப் போதித்த அருள் வழிப்படித் தான் உங்களுக்கும் வழிகாட்டுகின்றேன்.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கினால் அந்த அருள் சக்தி உங்களைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்கு உறுதுணையாக வரும்.

ஆடைகள் மூலமாக நமக்குத் தெரியாமலே நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்திருக்கின்றோமா…?

 

அக்ரிகல்ச்சரில் விவசாய நிலங்களில் களைகள் முளைத்தால் களைக் கொல்லிகளைப் போடுவார்கள். முதலிலே உழுகும் பொழுது களைக்கொல்லிகளை மண்ணிலே தெளித்து விட்டால்… அந்தக் களைகளுக்குக் கிடைக்கும் சக்திகளைக் குறைத்து விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் களைக்கு வரும் விஷம் வேறு பயிரினங்களுக்கு வரும் விஷம் வேறு. இதை மாற்றி அமைத்துத் தடுக்கும் சக்தி கொடுக்கப்படும் பொழுது விஷத்தின் ஆற்றலை அதிகமாகக் கொடுத்துப் பயிரினங்களை வளர்க்கச் செய்கின்றனர்.

பயிரினங்களில் விஷத்தன்மைகளைப் போட்டு வித்துக்களை வளர்க்கப்படும் பொழுது
1.களைகளை அடக்குகின்றது… பயிரைக் காக்கின்றது… ஆனால் அதிலே விளைந்த வித்துக்களில் என்ன செய்கிறது…?
2.விஷம் கலந்த வித்துக்களாக உருவாகின்றது
3.மனிதன் இதைச் சுவாசித்து உணவாக உட்கொள்ளும் பொழுது விஷத்தின் தன்மை இரத்தத்திலே கலந்து
4.உடலில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தன்மை அடைந்து விடுகின்றது.

பயிரைக் காக்க விஞ்ஞானத்தின் மூலம் மருந்துகளை உபயோகப்படுத்துகின்றான். ஆனால் அதே சமயத்தில் மனிதனுக்குள் இந்த நிலை ஆகிவிடுகின்றது.

இதே போல பருத்திச் செடிகளில் தண்டுப்புழு என்று உருவாகும். அதைக் கொல்வதற்காகப் பல விஷங்களை இடுகின்றனர் ஆனால் இப்படிப் போடும் பொழுது அந்த விஷத்தின் தன்மை பருத்திகளிலே கலந்து விடுகின்றது.

அப்படி விஷத்தின் தன்மை தோய்ந்தபின் அதை ஆடையாக உருவாக்கும் நிலைகளில்
1.அந்த ஆடைகளை நாம் அணிந்தால் அந்த விஷத்தினைக் கவரும் நிலையாகின்றது
2.நம்மை அறியாதபடி உடலிலே பல நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.

ஆடைகளிலே விஷத்தன்மை கொண்ட பல கலர்களை இடுகின்றனர். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் அது எத்தகைய விஷமோ காற்றிலே அந்த விஷத்தின் தன்மை ஆவியாகப் பரவிச் செல்வதை இழுத்து நம் சுவாசத்திற்கு கொண்டாருகின்றது.

நம் சுவாசத்தின் வழி உடலுக்குள் சென்று இரத்தங்களிலே கலக்கப்பட்டு உடலில் விஷத்தன்மையாக பரவுகின்றது.

சிலர் கருப்பு நீலம் இதைப் போன்ற நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிந்து சுவாசித்தார்கள் என்றால்
1.அவர்களுக்குக் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்…
2.மனநோய் பிடித்த மாதிரி அடிக்கடி சஞ்சலமாகக் கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.

அந்த ஆடைகளில் இருக்கக்கூடிய நிலைகள் இவ்வாறு செய்து விடுகின்றன. ஆனால் அவர்களுக்கு அந்த ஆடை தான் பிடிக்கும். வெண்மையான ஆடையாக இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது.

விஷம் கொண்ட நிறங்களாகச் சேர்க்கப்படும் பொழுது அந்த நிறத்தை உருவாக்கும் ஆவியின் தன்மை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது

நம் உடலில் ஆடையாக அணிந்த நிலையில் காந்த்த்தால் ஈர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றி விடுகின்றது. சுவாசித்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வலைகள் இரத்தத்தில் கலந்து உடலிலே பெருகத் தொடங்குகின்றது.

அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சேலையைத்தான் அவர்கள் எடுப்பார்கள் நல்ல சேலைகளை ஒதுக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த உணர்வு பெற்றபின் அதே உடைகளைத் தான் எடுப்போம் அந்த உணர்வுக்கொப்பதான் அது செயல்படுகின்றது.

கடந்த காலங்களில் அன்றைய ஞானிகள் இயற்கையின் உணர்வின் தன்மையை தாவர இனங்களில் இருந்து
1.விஷத்தை நீக்கும் தாவர இனங்களாக
2.ஒன்றுடன் ஒன்று இணைந்தால் விஷத்தினை நீக்கும் தன்மை பெற்று ஆடைகளுக்கு நிறத்தைக் கொடுத்தார்கள்.

தாவர இனங்களின் விஷத்தின் தன்மை
1.அந்த மணத்தைக் கண்ட பின் யானையோ, புலியோ நரியோ கொசுவோ அவைகள் விலகிச் செல்கின்றனவோ
2.அதைப் போன்ற நிலைகளை ஆடைகளிலே கலந்துவிட்டால் “விஷத் தன்மை கொண்ட கொசுக்கள் நம் அருகில் வருவதில்லை…”

ஏனென்றால் அனுபவரீதியிலே அந்தப் பச்சிலைகளைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வினைக் கலக்கச் செய்து சாயத்தை உடையிலே ஏற்றுவார்கள்.

இதே போன்று பண்டைய கால ஆலயங்களிலே பார்த்தோம் என்றால் பச்சிலைகளைக் கொண்டுதான் அங்கே வர்ணங்களைத் தீட்டியிருப்பார்கள். அதிலே கெமிக்கல் கலந்த சாயங்கள் கிடையாது.

கடந்த கால கோவில்களில் இதைப் போல வர்ணங்களைத் தீட்டப்படும் பொழுது அதை நாம் கண்ணுற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை பதிவாகின்றது.

1.அந்தப் பச்சிலை விஷத்தின் தன்மைகளை எப்படி நீக்கியதோ அதைப் போல அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆன பின்
2.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை நீக்கிடும் உணர்வைச் சுவாசித்து அதைக் கவரும் சக்தியாக நம் உடலில் உருவாகின்றது.

இது எல்லாம் மெய் ஞானிகள் செய்த நிலைகள்.

பண்டைய கால கோவில்களுக்கும் இன்றைய ஆலயங்களுக்கும் இந்த வித்தியாசங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

இது எல்லாம் எதைக் குறிக்கின்றது…? விஞ்ஞானம் வளர வளர அஞ்ஞானமாக வாழ்கின்றோம்.
1.ஆனால் மெய்ஞானத்தால் அஞ்ஞானம் அகற்றப்படுகின்றது.
2.இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

“நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழ வேண்டும்

 

காட்சி: பாட்டிலில் புனல் வைத்து திரவத்தை ஊற்றும் நிலை காட்டல்.

1.முந்தைய காலங்களில் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ஜெப அருளினால் மட்டும்தான் ஞான நிலை பெற முடிந்தது.
2.“எழுதி வைத்துப் படிக்கும் நிலை அன்றில்லை…”

குப்பியில் புனல் வைத்துத் திரவத்தை ஊற்றுவதைக் கண்டாய். அக்குப்பிக்குப் புனல் உள்ளதினால் அதில் ஊற்றும் திரவம் சிந்தாமல் ஊற்ற முடிந்தது. புனல் இல்லாவிட்டால் எண்ணத்தைச் சிறிது மாற்றினாலும் அத்திரவம் சிந்தி விடுகின்றது.

இன்றைய ஏட்டு நிலை கொண்டு ஆரம்ப நிலையிலேயே அறியும் பக்குவத்தை நாம் உணரப் பல நிலைகள் எழுத்து வடிவினில் தரப்படுகின்றன.
1.புனலைப்போல். நம் ஆத்மாவுக்குகந்த ஈர்ப்பு நிலையை நாம் உணராமல் வாழுகின்றோம்
2.இம்மனித ஆத்மாவுக்கு மட்டும்தான் காந்த அமில சக்தியுடைய ஈர்ப்பு சக்தி அதிகம்.

இவ்வுலகின் ஈர்ப்பு நிலைக்குகந்த அமில சக்தியில் தாவர வர்க்கங்களும் மற்ற உலோகங்களும் அதற்குகந்த அமிலத்தைத் தான் ஈர்க்கும்.

மற்ற ஜீவ ஜெந்துக்கள் அதன் எண்ண வளர்ச்சியில் எச்சத்தியில் ஜீவன் பெற்றதோ அதன் வளர்ச்சித் தொடரில் தான் அனைத்து நிலைகளையும் உணரும் சக்தி சில ஜீவராசிகளுக்கு இருந்திட்டாலும்… செயல்படத்தக்க இயற்கை நிலை இல்லாததினால் மனித ஆத்மாவை ஒத்த செயல் நிலை அவற்றிற்கும் இல்லை.

இம் மனித ஆத்மா ஒன்றுக்கு மட்டும் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி அமில நிலையினில் தனக்கு வேண்டியதைப் பிரித்தெடுக்கும் ஆற்றல் உண்டு.

இம்மனித ஆத்மா ஒரு நிலை கொண்ட ஜெப அருள் பெற்று விட்டால்
1.அவ்வெண்ண சக்தியை ஒரு நிலையில் எண்ணி எடுக்கும் சுவாசத்திலிருந்து
2.அவ்வெண்ண சக்தியின் தொடர்நிலை கொண்ட அமிலத்தின் ஈர்ப்பினால்
3.எதை எண்ணி நம் ஜெபக் குறி உள்ளதோ அந்நிலையை நாம் எடுக்கும் சுவாசத்தின் அலையுடன்
4.நம் உயிராத்மா அவ் ஈர்ப்பு காந்த அமிலத்தை நமக்கு ஈர்த்தெடுத்து அளிக்கின்றது.

நம் விழியை மூடிக்கொண்டே நாம் எடுக்கும் சுவாசத்திலிருந்து நமக்கு எவ்வெண்ணத்தைப் பாய்ச்சி நம் தியானம் உள்ளதோ அதன் தொடர்நிலை அனைத்தும் விழியுடன் காண்பதைப் போலவே நாம் காணலாம்.

இக்காற்றில் உள்ள ஜீவ அணுக்களை நமக்குகந்த அமிலத்தை நம் சுவாசம் எடுக்கும் நிலை பெறல் வேண்டும்.
1.காற்று மண்டலமே இன்றைய நிலையில் விஷத்தன்மை கூடி வருகிறது என்றாலும்
2.நம் சுவாசத்திற்கு வேண்டிய நல் அணுக்களை நாம் சுவாசிக்கும் ஈர்ப்பு நிலை பெற வேண்டும்.

இத்தொடர் நிலை ஜெபத்தினால் நம் ஜெப சக்தியில் எவ் அமிலத்தையும் நாம் நமதாக எடுத்திடாமல் எம் மண்டலத்தில் இருந்தாலும்… “நம் உயிர் ஆத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழும் பக்குவத்தை அறியலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் செயற்கைக் கோளைக் கொண்டு நம் மண்டலத்திலிருந்து பிற மண்டலம் செல்ல நம் பூமியின் அமிலக்காற்றை அதில் செல்லும் ஜீவ ஆத்மாவிற்கு எடுத்துச் சென்றும்… பல பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தியும்… பிற கருவியின் உதவி கொண்டு அங்குள்ள நிலைகளைப் புகைப்படமாக்கி இப்பூமிக்கு அறியும் நிலையை ஏற்படுத்தி வர ஏவுகின்றனர்.

ஜெப நிலை கொண்டு தன் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை இக்காற்று மண்டலத்தில் எக் கோளத்தில் இருந்தாலும் ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால் இவர்கள் அனுப்பும் செயற்கைக் கோளில் எப்பாதுகாப்புச் சாதனமும் இன்றி ஆகாரம் எடுத்துச் செல்லாமல் இவ்வுடலுடனே குறிப்பிட்ட காலங்களுக்குச் சென்று வர முடிந்திடும்.

1.எண்ணத்தில் ஜெப நிலை பெறல் வேண்டும்… அச் சாதனை நிலைபெற்ற ஆத்மாவினால் இச்செயல் நிலை கொள்ள முடியும்
2.பயமும் திகிலும் கொள்ளும் சிறு எண்ணப் பிசிறு உள்ள நிலையிலும் இச்செயல் நிலை சாத்தியமல்ல.

இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நிலையிலேயே சப்தரிஷியின் நிலை பெறும் ஆத்மாவினால் தான் அந்நிலை பெறல் முடியும்.

சூட்சுமத்தில் உள்ளோரின் நிலை வேறு. இவ்வுடலுடன் கொண்ட சூட்சும நிலை கொள்ளும் ஆத்மாவினால் இச்செயல் நிலை செயல்படுத்திட முடிந்திடும்.

இம் மனித ஆத்மா ஒவ்வொன்றிற்கும் “இச்சக்தி நிலையுண்டு” என்பதனை உணர்த்தத்தான் இந்நிலை விளக்கப்பட்டதேயன்றி நம் வாழ்க்கையின் நம் ஆத்மாவின் குறிக்கோளுக்காகச் செப்பவில்லை.

இவ்வாத்மாவிற்கு உகந்த சக்தியை உணர்த்திடத் தான் இந்நிலை உணர்த்தப்பட்டது.

இக்கால நிலையுடன் கலந்து வரும் பூகம்பத்தையும் இடி மின்னலையும் எரிமலை கக்கும் நிலையையும் பனிமலை உறையும் காலத்தையும் கடல் கொந்தளிக்கும் நிலையையும் இவ்வுடல் மண்டலத்தில் ஈர்க்கும் நிலைப்படுத்தி உணர்ந்திடலாம்.

1.பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே உடலுடன் இருந்த பல ஆத்மாக்கள்
2.பல நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நிலைகளை எல்லாம் அறியும் பக்குவம் பெற்று இப்பூமியிலேயே தான் வாழ்ந்தார்கள்.

இன்று நாம் நமக்குகந்த உண்மை நிலையை உணராமல் செயற்கையில் மகிழ்ந்து வாழ்கின்றோம்.
1.நம் ஆத்மாவையே செயற்கையுடன் ஒன்றி
2.நமக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்தென்ன பயன்..?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பத்திரிக்கைகளைப் படிக்கும் போது “எங்கெங்கோ அசம்பாவிதங்கள் நடக்கிறது…” என்று பார்க்கின்றோம்.

பட்டப்பகலில் கொள்ளை அடித்தனர். ஆட்கள் நடமாட்டம் இருந்த இடத்திலேயே நடந்தது. கைகளில் ஆயுதங்களை ஏந்தி அதைச் செயல்ப்படுத்தும் போது மற்றவர்கள் சிதறி ஓடினர். இருக்கும் பணத்தை எல்லாம் பறித்துச் சென்றார்கள்.

அவ்வளவு கூட்டத்திலே இது நடந்தது. போலீஸ் இருந்தும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பத்திரிக்கை வாயிலாகப் படிக்கும் பொழுது பய உணர்வுகள் ஊடுருவி நமக்குள் அதிகமாகப் பதிவாகி விடுகிறது.

உதாரணமாக… அந்த நேரம் நாம் பஸ்ஸிலே பிராயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் செல்லும் பொழுது ஒரு பத்துப் பேர் இது சம்பந்தமாகப் படித்து அந்தப் பய உணர்வுடன் பஸ்ஸிலே பயணம் செய்தால் போதும்.

1.டிரைவர் அங்கே ஓட்டிக் கொண்டிருந்தாலும் இந்தப் பய உணர்வலைகள் அவருக்குள்ளும் பாயப்பட்டு
2.அவரையும் சிந்தனையற்றதாக்கி விபத்தாக வைத்துவிடும்.

காரணம் நாம் படித்த இந்த உணர்வுகள் அடுத்தவர்களுக்குச் சொல்லாகச் சொல்லப்படும்போது சொல்லின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து படரச் செய்கிறது. அது டிரைவரையும் இயக்கிவிடுகிறது.

ஆக… நாம் வண்டிக்குள் அமர்ந்து சாதாரணமாகச் சென்று கொண்டிருந்தாலும் அங்கே நமக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையாக உருவாக்கி விடுகின்றது.

இவ்வாறு தான் மனித வாழ்க்கையில் பத்திரிக்கையைப் பார்த்த உணர்வுகள்…
1.எங்கோ நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து கவனிப்போமேயானால்
2.அந்த உணர்வின் தன்மை எங்கே படர்ந்திருந்தாலும் அது நம் ஈப்பிற்குள் வந்து
3.நமக்குள் பய உணர்ச்சிகளைத் தூண்டி விடுகின்றது.

அதே போல் வீட்டிற்குள் படுத்திருக்கும் பொழுது கொள்ளையன் கதவை உடைத்து நொறுக்கி விட்டுப் பணத்தை எடுத்துச் சென்றான் என்று பத்திரிக்கை வாயிலாகப் படித்து அதைப் பதிவாக்கினால் போதும்.
1.அந்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறி நம் ஆறாவது அறிவில் உள்ள வலுவை இழக்கச் செய்து
2.நாம் தூங்கும் போது காற்றுக்கு ஒரு கதவு டப்… டப்… என்று அடித்தாலோ
3.அல்லது பகலிலேயே டம்… என்று ஒரு கதவின் சப்தம் கேட்டாலோ
4.”உடனே எவனோ கதவை உடைக்கின்றான்…” என்று திடுக்கிடச் செய்து நாம் திரும்பிப் பார்க்கும் நிலை வருகின்றது

அப்படித் திரும்பிப் பார்க்கும் நிலை வரும் போது நம்மை அறியாமலேயே காற்றிலே மறைந்துள்ள இந்த பயமான உணர்வை நுகர நேர்கிறது.

பத்திரிக்கை வாயிலாக அதைப் படிக்கப்படும் போது…
1.எங்கே அசம்பாவிதமாக வெளியிடப்பட்டதோ
2.அந்தச் சம்பவம் நடந்ததை யார் அதைக் கண்ணுற்று வெளிப்ப்படுத்துகின்றனரோ
3.அதே உணர்வுகளை நாம் சுவாசிக்க நேருகின்றது.

ரேடியோ டிவி.யில் ஒலி/ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் அந்தந்த ஸ்டசனைத் திருப்பி வைக்கும் போது அதனதன் நிலைகளை நம் வீட்டில் உள்ள ரேடியோ டி.வி ஈர்க்கிறது… நாம் பார்க்கின்றோம்… கேட்கின்றோம்.

இயற்கையிலே ஒரு வேப்பமரம் தன் கசப்பான சத்தினை மணமாக வெளிப்படுத்துகிறது. அதே சமயத்தில் அதிலே விளைந்த வித்தினை எடுத்துப் பல நூறு மைல்களுக்கு அந்தப் பக்கம் நாம் பதியச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

இங்கே பதிவான வித்து பூமியின் ஈர்ப்புக்குள் நின்று அது சரியான பருவத்தில் முளைக்கத் தொடங்கினால்
1.தாய் வேப்ப மரம் வெளிப்படுத்தும் அந்தக் கசப்பான சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்
2.நூறு மைலுக்கு அப்பால் இருந்து அதை இழுத்துக் கவர்ந்து அதே இனமாகத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் பத்திரிக்கையைப் படிக்கிறோம் என்று இருந்தாலும் அதிலே சம்பந்தப்பட்ட மனிதனின் எண்ண அலைகள் நம் உணர்வுடன் கலந்து உடலுடன் இணைக்கப்பட்டு நம் உடலிலே ஊழ்வினையாகப் பதிவாகி ஒரு வித்தின் தன்மை அடைந்து விடுகின்றது.

வித்தின் தன்மை அடைந்த பின் அது தன் இனத்தைப் பெருக்கி நம்மை அறியாமல் அதே தீமையின் விளைவுகளையே இயக்கிவிடுகிறது. விபத்தினால் வேதனைப்படும் நிலைகள் வருகின்றது.

மனிதனின் வாழ்க்கையில் அடிக்கடி வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதனின் செயலாக்கமாக அந்த உணர்வுகள் நம்மை வேதனைப்படும் செயலுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

நமது உயிருடைய வேலை என்ன…?
1.நாம் கவர்ந்த உணர்வினை நமக்குள் ஆழப்பதியச் செய்வதும்
2.பதிந்த உணர்வுகள் கவரும் நிலைகள் ஆன்மாவாக மாற்றுவதும்
3.ஆன்மாவிலிருந்து நுகர்ந்தறிந்து இயக்கிக் காட்டுவதும் தான் உயிரின் வேலை.

இயக்கிக் காட்டிய உணர்வின் அலைகள் கண்ணின் புலனறிவிலே படப்படும் பொழுது
1.நேர்முகமாக இருப்பதை அறிந்து விடுகின்றோம்.
2.மறைமுகமாக சூட்சமத்தில் இருப்பதை அறிய முடிவதில்லை.

சூட்சமமாக இருப்பதை நாம் எப்படி அறிய முடிகின்றது..?

அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து அதன் வழியில் இந்த உடலை அழைத்துச் செல்வதும் அங்கு நடக்கும் நிகழ்ச்சி “உடலிலே அனுபவித்தபின் தான்… அதை அறிய முடியும்”.

ஆனால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்திருந்தால்
1.எதிர் கொண்டு அலைகள் வந்தால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக
2.நம்மைக் காத்திடும் “ரிமோட் கன்ட்ரோல்…” போன்று செயல்படும்.

ஆகவே நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி “எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தியானிக்க வேண்டும், தவமிருக்க வேண்டும்.
1.இந்த உணர்வுகள் வலுப் பெறும் பொழுது
2.விபத்துக்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து “நம்மைக் காத்திடும் சந்தர்ப்பங்கள்” உண்டு.

ஆகவே… உலகில் அன்றாடம் நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்த்தோ படித்தோ நமக்குள் பதிவாக்கி விடக் கூடாது.

“துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் கொண்டு” தீமைகளை மாற்றியமைத்து விடலாம்

 

நம்முடைய மனித வாழ்க்கையில் பிறர்படும் கோப குணத்தினால் வரும் கார உணர்ச்சிகளையும்… வேதனை உணர்ச்சிகளையும் சுவாசிக்கப்படும் பொழுது எதிர் நிலையாகி…
1.நம்முடைய மன நிலைகள் அதனால் மாறுகின்றது.
2.அப்போது உடலிலும்… நாம் உணவாக உட்கொண்டதை ஜீரணிக்கும் சக்தி இழக்கப்படுகின்றது.
3.நம் உடலில் எது அதிகமோ அதற்கும் இதற்கும் இந்தப் போராட்டங்கள் வருகின்றது.

இதைப் போன்று இயற்கை நியதிகள் வருவதனால் இதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் வேதனைப்படும் சொல்களையோ வேதனைப்படும் உணர்ச்சிகளையோ சுவாசிக்க நேரும் போதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்… அந்த உணர்வுகள் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

என் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கண்ணின் நினைவு எவரை உற்றுப் பார்த்து அது பதிவானதோ அந்த உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று இணைத்து விட்டு அடுத்து
1.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மையானால்
2.அவன் செய்த வேதனை உணர்வை அடக்கி அந்த வேதனையைத் தனக்குள் வளர்க்காதபடி
3.பகைமை நமக்குள் வளர்க்காதபடி அந்த வீரிய உணர்வு தடுக்கப்பட்டு நல்ல உணர்வுகளாக நமக்குள் மாற்றிவிடலாம்.

ஆக இது எல்லாம் ஞானிகள் காட்டியது. சிறிது காலம் சிரமமாக இருக்கும்.. பழகிக் கொண்டால் எளிதில் கிடைக்கும்.

உதாரணமாக… ஒரு தையல் மிஷினில் தைப்பவர் போன்று நாமும் இலேசாகத் தைத்து விடலாம் என்று எண்ணினால்… உடனே முடியுமா…?

அவர் நம்மிடம் பேசிக் கொண்டே நேராக அழகாகத் தைத்து விடுவார் இந்த உணர்வின் இயக்கம் சீராக இருக்கும். நாம் கூர்மையாகப் பார்த்து செயல் செய்தாலும் அது எங்கே கோணல் மணலாக நெளிந்து போகும்.

ஆகவே தியானத்தைச் சிறிது காலம் சீராகப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் எதிர் நிலை வந்தால் டக்… என்று அதை மாற்றிவிடும்.

இன்று கம்ப்யூட்டர் மூலமாகப் பல நிலைகளை இயக்குகின்றார்கள். அதிலே தவறு வந்துவிட்டால்
1.அது ஏன் வந்தது…? என்று உடனே அதை சரி செய்வதற்காக “மாற்று அழுத்தங்களை” அங்கே கொடுத்து வைத்திருக்கின்றார்கள்.
2.இந்த மாற்று அழுத்தம் வந்தவுடன் அந்தத் தவறை மாற்றி விட்டு மறுபடியும் அதைச் சீராக்குகின்றது.
3.அதாவது… அதைக் காட்டிலும் அழுத்தமான உணர்வு கொண்டு அழித்துவிட்டு அந்தத் தவறை மாற்றி நல்லதைப் பதிவு செய்கின்றார்கள்,

நாம் பேப்பரிலே எழுதும் போது தவறானால் அதை அழிக்கின்றோம். ஆனால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் எனும் முறைப்படி கம்ப்யூட்டர் இயங்குகின்றது ஒரு பொருளின் ரூபம் வரும்பொழுது அழுத்தத்தின் தன்மை கொண்டு சீராக வரவில்லை என்றால் உடனே அழுத்தத்தை மாற்றி… வேண்டிய உணர்வுக்கொப்பச் சீராகக் கொண்டு வருகின்றார்கள்.

கெமிக்கல் கலந்த உணர்வுகளில் அந்த உணர்வின் தன்மை அழுத்தம் எதுவோ மாற்றுகின்றது. விளக்குகள் எப்படிச் சிறிதாகவும் பெரிதாகவும் எரிகின்றதோ அதைப் போல் அந்த எலக்ட்ரானிக்காக மாற்றி இந்த ஒளியின் நிலைகளை உருவாக்குகின்றார். அப்போது எழுத்தின் வடிவம் வருகின்றது விஞ்ஞானி இப்படிச் செய்கின்றான்.

இதைப் போன்று தான் நாம் கண் கொண்டு பார்த்த வேதனை உணர்வுகள் நல்ல உணர்வுகளுடன் அது கலந்து எலக்ட்ரானிக்காக மாற்றி இதை அழித்து அதன் உணர்வைக் கொண்டு வருகிறது.
1.ஆனால் நம்முடைய நினைவைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி அந்த அழுத்தத்தைக் கொண்டு வந்தால்
2.அவன் செய்த வேதனையை மாற்றி தெளிந்த உணர்வு கொண்டு நம்மைத் தெளிவாக்கும்.

நம் உயிரும் எலக்ட்ரிக் தான்… நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக் விஞ்ஞானிகள் இதை நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.

அன்று அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை அண்டத்திலே பாய்ச்சினன் தன் உடலின் உணர்வுகளை அறிந்தான். அந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தை வளர்த்தான். அதன் உனர்வின் ஆக்கங்கள் கோள்களின் நிலையும் அகண்ட அண்டத்தையும் அறிந்தான் அகஸ்தியன்.

அந்த உணர்வின் தன்மை அவனுக்குள் விளைந்தது நமக்கு முன் அந்தச் சக்திகள் காற்றிலே பரவி உள்ளது.
1.நமது குருநாதர் அதைக் கண்டார்… தனக்குள் பெற்றார்.
2.அதை எனக்குள் பதிவாக்கினார் இதை நினைவு கொள் என்றார் அதன் வழி நீ கடைப்பிடி என்று சொன்னார்
3.அதன் வழி அறிந்து தான் உங்களிடம் இப்பொழுது பேசுகின்றேன்.
4.கல்வியால் கற்றுணரவில்லை எழுத்து வடிவில் நான் பார்க்கவில்லை
5.குரு காட்டிய உணர்வைப் பதிவாக்கினேன் நினைவு கொண்டேன் அறிய முடிகின்றது அதைத்தான் இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன்.

இந்த உணர்வினை நீங்கள் பதிவாக்கி விட்டால் நினைவு கொண்டால் அருள் ஞானிகள் பெற்ற உணர்வை நீங்களும் பெறலாம்… உங்களுக்குள் வரும் இருளை மாற்றி அமைக்கும் சக்தி பெறுவீர்கள்.

இவ்வாறு எதை நீங்கள் மாற்றி அமைக்கின்றீர்களோ
1.அந்த உயர்ந்த சக்தி உள் நின்று கடவுளாக
2.தீமைகளை நீக்கிடும் உணர்ச்சிகளை அது ஊட்டுகின்றது.

ஒரு நிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா

 

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பத்தை எச்செயலுக்கும் உகந்ததென உட்படுத்தலாம். எண்ணத்தை ஒரு நிலைகொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பமும் இக்காற்றுடன் காற்றாய் படர்ந்திடும் சக்தியைப் பெறலாம்.

உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒரு நிலைப்பட வேண்டும்.
1.அந்நிலையில் இவ்வுடலை எந்நிலையில் வருத்தினாலும் அவ்வுடலுக்கு உணர்வு இராது
2.எல்லா உயிரணுக்களும் ஒருநிலைப்பட்டுத் “தியானத்தில் உள்ள நிலையில்” இவ்வுடல் என்ற பிம்பம் ஜீவனற்ற பிம்ப நிலை கொள்கின்றது.

அந்நிலையில் அவ்வுடலுக்கு உணரும் சக்தி தடைப்பட்டுவிடுகின்றது. ஒரு நிலைகொண்ட ஜெப நிலையுடன் உள்ள உடலை, அவ் உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எவ் அறுவை சிகிச்சைகளையும் போதை நிலைப்படுத்திச் செயலாக்காமல் செய்திடலாம்.

அவ்வுடலில் இருந்தே நீரிலும் நடக்கலாம்.. அமரலாம்.. உறங்கலாம், நாம் கனவில் காணும் நிலை போன்று பறக்கவும் செய்யலாம். அவ்வுடலில் பின்னப்படாவண்ணம் எச்செயலையும் அவ்வுடல் தாங்கிடும்.

இவ்வுடல் என்ற பிம்பம் அவ்வுயிராத்மாவிற்குச் சொந்தம்.
1.அவ்வுயிராத்மாவின் ஆணைப்படித்தான் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் செயல் கொள்கின்றன.
2.அவ்வுயிராத்மாவின் ஜீவனே இவ்வெண்ணத்தில்தான் செயல் கொள்கின்றது.
3.இவ்வெண்ணமே நாம் எடுக்கும் சுவாசத்தினால்தான்… நம் உயிராத்மாவை நிலைக்கச் செய்கின்றது என்பதனை உணர்ந்து
4.நம் எண்ணத்தினால் ஒரு நிலை கொண்டு ஜெபம் பெறும் நிலையில் நாம் எடுக்கும் சுவாசம் இருந்திடல் வேண்டும்.

எம் மோதலின் நிலையையும் நம் எண்ணத்தில் பற்றாமல் எண்ணத்தைப் பற்றற்றதாக்கி ஒரு நிலை கொண்ட ஜெபம் எடுத்திடல் வேண்டும். நம்மை எதிர்நோக்கி வரும் எவ்வெண்ணத்தின் பற்றுதலையும் நம் எண்ணமுடன் ஒரு நிலை கொண்டிடல் வேண்டும்.

தியானத்தில் ஒரு நிலை கொண்டவரின் இல்லத்தையும்… அவர்களின் உடலையும்… அவர்கள் சார்ந்து செய்யும் எத்தொழிலையும்… எத்தடங்கலும் இன்றி நல் நிலையாய்ச் செயல் கொண்டிடும்.

எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்ந்திடுங்கால் நமக்கு நடக்கும் எந்நிலையும் சிதறுண்ட நிலையில்தான் நம்மைத் தாக்கும்.

அன்பு தியானத்தை ஒரு நிலையுடன் வழி பெற்று இன்றைய காலநிலையில் தெரிந்தோ தெரியாமலோ இவ் உலகம் முழுவதுமே ஆத்மீக நெறி உணர்த்தவும் ஆண்டவனை இவர்களின் செயலுக்கு உகந்த பொருளாக்கி இன்றைய அரசியலும் சரி ஆலயங்களும் சரி… பல ஆவிகளின் வசியத் தொடர்பு கொண்டு இவ்வுலகமே ஆடிக்கொண்டுள்ளது.

இவ்வுலகினில் மேலை நாட்டில் ஆயிரம் உடல் ஆத்மாக்களை ஒரு மனித ஆத்மா வசியப்படுத்திச் செயல்படுத்தி வந்த நிலையில்… இதன் நிலை வெளியுலகிற்கு அறியப்பட்டவுடன் அனைத்து ஆத்மாக்களையும் உடலுடன் வசியப்படுத்திட எண்ணியவன்… அவ்வாத்மாவுடன் தன் ஆத்மாவைச் செயல்படுத்திட அனைத்து உடல்களையும் தன் உடலுடன் அழித்து இன்று அவ் ஓர் ஆத்மாவே அதன் வசியத்தில் அது அழித்த அனைத்து ஆத்மாக்களையும் வசியப்படுத்தி… இவ்வுலகத்திலே அதன் நிலையைச் செயல்படுத்திக் கொண்டுள்ளது அவ்வாத்மா.

தலைவனாய் வசியப்படுத்திய அவ்வாத்மா உடலுடன் இருந்திருந்தால் அவன் அழித்த‌ மற்ற உடல் ஆத்மாக்கள் இவன் வசியத்திற்கு வந்திருக்காது.

இன்னும் நமது நாட்டிலேயே உண்மை நிலை வழி நாமம் கொண்ட சில நிலைகள் நடக்கின்றன. ஆவிகளை வசியப்படுத்தி…
1.அதிகார வர்க்கமுள்ளவர்களையும் பொருட்செல்வம் கொண்டவர்களையும் தன் வசியத்திற்கு ஈர்த்து
2.“உண்மை வழி” என்ற போர்வையில் வாழுகின்றனர்.

இந்நிலையெல்லாம் இக்கலியில் வந்தது மட்டுமல்ல. அரசர்கள் ஆண்ட கால நிலை தொட்டே இவ் ஆவி ஆத்மாவின் வசிய நிலை கொண்டுதான் பல ஊடுருவல் வேலையெல்லாம் செய்வித்து… ஒரு நாட்டுடன் பிற நாடு சண்டையிட்டுப் போர்க்களம் கொண்டு அவ்வாவிகளுக்கு மற்ற ஆத்மாவின் குருதிகளை உணவாக்கிப் பல தேசங்களைப் பிடித்தார்கள்.

அவ்வாவிகளின் எண்ணமும் வெறி உணர்வு கொண்ட ஆக்ரோஷ நிலைப்பட்டு… வழி வழியாய் எத்தீய செயலுக்கும் எண்ணத்தில் பயமில்லாமல் இன்றைய பல ஆத்மாக்கள் செயல் கொள்கின்றன.

எவ்வுயிரணுவும் தான் அழிவதில்லையே..! இன்றைய உலகமும் இவ்வுலகினில் உள்ள அரசியல் நிலைகளும் ஆவியின் பிடியில் சிக்குண்ட நிலையில்
1.நமது ஆத்மாவை நாம் ஒரு நிலை கொண்ட ஜெப சக்தியில் சலிப்பு, கோபம், குரோதம் இப்படி எண்ணத்தை வளர்க்காமல்
2.நமது ஆத்மாவை ஒருநிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அடுக்கடுக்காக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்த இயக்க நிலை கொண்டு
1.“அகஸ்தியர் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்…”
2.அகஸ்தியனை நினைவுக்குக் கொண்டு வந்து அவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
2.மீண்டும் மீண்டும் இந்த நினைவினை ஒரு சக்கரம் சுழல்வது போன்ற திரும்பத் திரும்ப இணைத்து
3.இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை
4.அதன் அடிப்படையிலேயே சுழல விடுங்கள்… உங்கள் இரத்த நாளங்களில் அந்த ஆற்றலைப் பெருக்குங்கள்.

இப்படி ஒரு ஐந்து முறையாவது திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துச் செயல்படுத்துங்கள். உங்கள் உடலில் எந்த உறுப்புகளில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கொண்டு அங்கே உள்ளே செலுத்துங்கள்.

இதே மாதிரி சுவாசத்தை எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.
1.எத்தகைய நோயாக இருப்பினும்… நோய்க்குக் காரணமாக எத்தகைய அணுக்கள் இருப்பினும்
2.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று அந்தச் சக்திகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்துங்கள்.

இந்த அருள் சக்தி உயரும் பொழுது நோயை உருவாக்கும் அணுக்களின் செயலாக்கங்கள் சிறுகச் சிறுகத் தணியும். இதற்கு முன் உடலில் அறியாது சேர்ந்த நோய்களை உருவாக்கும் அந்த அணுக்களின் வீரிய சக்திகளைக் குறையச் செய்யும். நோயை உருவாக்கும் அணுக்கள் பலவீனமடையும்.

ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடனே உறங்கச் செல்லுங்கள்.

1.இந்த நினைவாற்றல் உங்களுக்கு அரும் பெரும் சக்தியாக வளரும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்கள் உணர்வலைகளை அழைத்துச் செல்லும்
3.இயற்கையின் உண்மையின் உணர்வினை உங்களுக்குள் உணரச் செய்யும்.
4.அகண்ட அண்டத்தின் ஆற்றல்… உடலான நம் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகிறது…? என்ற உணர்வினை அறிய முடியும்.

அந்தச் சக்தி இந்த உபதேசத்தைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உங்களுக்காக நானும் (ஞானகுரு) இரவில் பிரார்த்திக்கப் போகிறேன்… தியானிக்கப் போகின்றேன்.

நீங்களும் அதே நிலையில் அந்த உணர்வின் சக்தியை எடுத்து தியானனத்தின் மூலம் உங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நினைவாற்றலைப் பெருக்கி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

மனிதனின் வாழ்க்கையில் இனி எங்கே செல்வது…?

 

அகஸ்தியன் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல் உறுப்புகள் மாறியது… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்றான்… துருவ நட்சத்திரமாக உள்ளான்.

மின்னல்கள் வருகிறது என்றால்
1.வெள்ளிக்கோள் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றதோ அதைப் போல்
2.மின் கதிர்களானால் அந்த ஒளியின் தன்மையை அகஸ்தியன் கவரும் போது
3.அவன்ன் உடலில் உள்ள அணுக்களை உயிரைப் போல பரிமணம் ஆகின்றது.
4.அணுக்கள் பரிமாணமாகப்படும் பொழுது விஷத்தின் தன்மை உமிழ்த்தி விஷத்தையே ஒளியாக மாற்றம் திறன் வருகின்றது.

பாம்பு தனக்குள் விஷத்தின் தன்மை எடுத்துக் கொள்கின்றது. அந்த விஷம் சேமிப்பாகும் போது நாளடைவில் வைரமாக மாறுகின்றது… நாகரத்தினமாக மாறுகின்றது.

ஆக… விஷத்தின் ஆற்றலானாலும் அந்த வைரத்தைத் தட்டிச் சாப்பிட்டால் ஆளை உடனே கொன்றுவிடும். ஆனால் வெளிச்சம் தருகின்றது.

இதைப்போல தான் விஷத்தை ஒடுக்கும் உணர்வு பெற்ற ஒளியின் தன்மை ஆன பின்
1.துருவ நட்சத்திரம் எத்தகைய விஷத்தின் தன்மை வந்தாலும் தனக்குள் அதை ஒளியாக மாற்றுகின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தில் “ஒரு துளி அளவு நாம் நுகரும் தன்மை வந்தால்” விஷத்தினைக் கொல்கிறது.
3.அந்த விஷத்தின் தன்மையைக் கொல்லும் நிலை வரும் போது தீமையை அடக்கித் தனக்குள் ஒளியின் உணர்வாக மாற்றுகின்றது.

இந்தக் காற்றிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகாலை நீங்கள் கவர்ந்தால் உங்களுக்குள் வரும் விஷத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்… அதை ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கும்.

விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் பாம்பினம் அந்த விஷம் அதிகரித்து உறையப்படும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப்போல தான் அகஸ்தியன் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆனது. அந்த நிலையை நாமும் பெறச் செய்தல் வேண்டும்.

உங்களுக்கு யாம் இதை உபதேசித்தது வீண் அல்ல…!

எனக்குத் துரோகம் செய்தான்… அவன் உருப்படுவானா பாவி…! என்று அமெரிக்காவில் இருந்து நினைத்தாலும்… இங்கே கார் ஓட்டிக் கொண்டிருந்தால் சிந்தனை இழந்து… விபத்து ஆகின்றது.

உணவு உட்கொண்டு கொண்டிருந்தால் துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் புரை ஓடுகின்றது. ஒரு பருக்கை சுவாசிக்கும் சுவாசப் பையிற்குள் சென்றால் மரணமே ஏற்பட்டு விடும்.

இதைப்போல நாமும் துரோகம் செய்தான் என்று எண்ணினால் நமக்கும் நல்லது செய்யவிடாதபடி தடையாகிறது. அங்கேயும் இடைஞ்சலாகிறது. ஒருவருக்கொருவர் இப்படி இரண்டு பேருமே பாழாகும் நிலை வருகின்றது.

அதைப் போன்று தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
1.நான் பதிவு செய்ததை நீங்கள் எண்ணி ஏங்கி .எடுத்தால்
2.உங்களுக்குள் அந்தச் சக்தி… இயக்கச் சக்தியாக மாறி
3.உங்களையும் ஒளியின் சிலராக மாற்றும்.

“அழுக்குப்படிகிறதே” என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது… அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்

 

நம் உடலைத் தினமும் நீர் விட்டுக் குளித்துத் தூய்மைப்படுத்துகின்றோம். நம் உடல் தூய்மையாய் உள்ளதென்று நாம் வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா…?
1.வெளி உலகில் கலந்துள்ள காற்றும் மண்ணும் நம் மேல் படத்தான் செய்யும்
2.மீண்டும் மீண்டும் இவ்வுடலைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

புற உலகின் அழுக்கு நம் மீது வேண்டும் என்றே படிகிறதென்று நாம் வெளியில் செல்லாமலே இருக்க முடியுமா…?

அதைப்போல் நம் எண்ணம் ஒரு நேர்கோடான சத்தியச் செயலைச் சார்ந்துள்ள நிலையில்… நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஆத்மாக்களின் நிலையும் நம்மை ஒத்திருந்தால்தான் நாம் அதனுடன் கலந்து வாழ்ந்திட முடியும்.

1.தீய பழக்க வழக்கம் கொண்டவனை விட்டு நாம் விலகித்தான் வாழ வேண்டும் என்று நம் எண்ணத்தில் எண்ணினோமானால்
2.நம் எண்ணத்தில் உள்ள அச் சத்திய நேர்கோட்டின் பிடிக்கு நாம் அடிமைப்பட்டு
3.”நான்” (நான் ஒழுக்கமானவன்) என்ற வைராக்கிய ஆத்மாவாகத்தான் நாம் இருந்திட முடியும்.

நாம் பெற்ற சக்தியை நமக்கே சொந்தமாக்கி நம் ஆத்மாவிற்கு எத்தனை செல்வங்கள் சேமித்தாலும் அதுவும் “நான்” என்ற சக்தியாகத்தான் இருந்திடுமப்பா.

1.நான்… எனது… என்ற அணுவளவு எண்ணத்தில் பிற பேராசை பற்று இருந்தாலும்
2.ஆண்டவனைப் பூஜிக்கும் பற்றானாலும் சரி
3.தான் கற்ற வித்தையின் பலனை எண்ணினாலும் சரி… அந்த நிலை “அந்த நானாகிவிடுகின்றது…”

பல ஆத்மாக்கள் இயற்கையிலேயே பல உன்னத சக்தியைப் பெற்று வாழ்கின்றனர்… மருத்துவம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், ஓவியம், விவசாயம் எல்லாவற்றிற்கும் மேன்மையான சமையல் திறன்.

இப்படி ஒவ்வோர் ஆத்மாவும் இயற்கையிலேயே உன்னத சக்தி பெற்றிருந்தாலும் அச் சக்தியைத் தன் நலம் நாடாமல் பொருள் ஆசையின் நிலையில் அத் திறனை வளரவிட்டால் “நான் என்ற நிலையில்தான்… அவர்கள் பெற்ற பயன் சிக்குண்டு விடுகின்றது…!”

பொருள் இல்லாவிட்டால் எப்படி ஜீவிதம் கொள்ள முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

பொதுவான நிலைப்படுத்தி அவரவர்கள் பெற்ற பயனைச் செயலாக்கித் தேவை என்ற அடிப்படையில் ஜீவிதத்திற்குகந்த பொருள் நிலை பெற்றுத்தான் அஜ்ஜீவன் நடக்கும்… உண்மைதான்…!

ஆனால்… அதற்காக ஆண்டவன் அருளில் பெற்ற அதி பொக்கிஷ செயல் திறமையை நாம் பேராசைக்கு அடிமைப்பட்டு உழலும் காலமாய் இன்றைய கால நிலை உள்ளது.

தேவை என்ற அடிப்படையில் பொருள் சேமிக்கலாம்.
1.அதி தேவையாக்கி நம்மையே நாம் அதற்கு அடிமைப்பட்டு சேமிக்கும் பொருளினால்தான்
2.இன்றைய இவ்வுலகமே இப்பேராசைப் பிடிக்கு அடிமை கொண்டு வாழ்கின்றது.

ஆத்மீக நெறிக்கு வருபவர்களும் இச் சந்நியாசிக் கோலத்தை மனிதர்களுக்கு உணர்த்திக் குடும்பப் பற்றையும் மற்ற எல்லா ஆசை நிலையையும் துறந்துதான் ஆத்மீக நெறிக்கு வர வேண்டும் என்பதனை ஒரு சாரார் உணர்த்திவிட்டனர்.

இன்னும் ஒரு சாரார் அப்பக்தியை பொருளாக்கி வளரவிட்டு விட்டனர்.

இன்னும் ஒரு சாரார் தனக்கு அனைத்து நிலைகளும் தெரிந்துள்ளதாகவும் அவ் ஆண்டவனே இவர்களின் மூலமாய்த்தான் பிறருக்கு அச்சக்தியை அளிப்பதாகவும் எண்ணத்தில் கொண்டு மடாலயம் கட்டி மதகுருக்களாய் அனைவரையும் வணங்கச் செய்கின்றனர்.

எல்லா மதத்திலும் இந்நிலை தான்.

உலகுடன் பல காலமாய் எண்ணத்துடனே வளர்ச்சியின் பல நிலைகள் வந்துவிட்டன. இதிலிருந்து எல்லாம் நமது ஆத்மாவை…
1.எல்லாமில் எல்லாமாய் அவன் அருள் எப்படிக் கலந்துள்ளதோ அதைப் போன்றே
2.எல்லாவற்றுடனும் எல்லாமாய்த் தான் நாம் நம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்திடல் வேண்டும்.
3.அழுக்குப்படிகிறதே என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது. அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

மண்ணில் இருந்து கரும்பை எடுத்து அதனைச் சாறாக்கும் நிலையில் அதன் நிறமும் அதன் மணமும் கண்ணுற்றால் “இதையா” நாம் உண்ணுகின்றோம் என்று எண்ணுகின்றோம்.

அச்சாறே அதனுடன் சில கலவையை ஏற்றிய பிறகு தூய கற்கண்டாய் உள்ள நிலையில் அதன் வெண்மையும் சுவையும் கண்டு நாம் அருவருப்பதில்லை.

அதைப்போல் உலகத்துடன் ஒன்றியுள்ள நாம் பிற ஆத்மாக்களின் தீய எண்ணத்தைக் கண்டு ஒதுங்கிடலாகாது. கரும்புச்சாறு பார்க்க அருவருப்பாய் உள்ளது என்று ஒதுக்கிவிட்டால் கற்கண்டு கிடைக்குமா…?

மற்ற ஆத்மாக்களையும் நம் நிலையினால் தூய்மைப்படுத்த வேண்டுமேயன்றி எதையுமே வெறுத்து ஒதுக்குதலாகாது.

ஆதவனுடன் ஆதவனாய் ஜோதி நிலை பெற்றுக் கலந்திட
1.அவ்வாதவன் எப்படி நன்மை தீமை கொண்டு அவ்வொளியைப் பாய்ச்சவில்லையோ அதைப்போல்
2.உலகுடன் கலந்துள்ள பல நிலை கொண்ட எல்லாமில் எல்லாமாய்த்தான் நம் ஒளியையும் நாம் பெறல் வேண்டும்.

வாழ்க்கையுடன் இருந்திட்ட பெரியோர்கள் தான் இன்று அவ்வொளியுடன் ஒளியாய்க் கலந்து ஆண்டவனாய் உள்ளார்கள் என்பதனை யார் வினா எழுப்பினாலும் அவர்களுக்கு விடையளிக்கப்படும்.

குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகி இமயமலைச் சாரலுக்குச் சென்று ஜெபம் இருக்கும் ஆத்மாவானாலும் சரி…
1.அவ் ஆத்மாவும் உடலைவிட்டுப் பிரிந்த பிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறந்து வாழத்தான் வேண்டும்.
2.சித்தனாகவும் முனிவனாகவும் சப்தரிஷியாகவும் எந்நிலையும் பெற முடிந்திடாது என்பதனை இங்கே வெளிப்படுத்துகிறேன்.

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்… நம் எண்ணமுடன் கூடிய சுவாசத்தை எடுக்கும் முறையில் இருந்து தான்… நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் அமில சக்தி கூடுகின்றது.

ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட எண்ணத்தின் மோதலில் இருந்தும் நாம் தப்பி நல் உணர்வையே நம் ஆத்மா சேமிக்கும் அமிலமாக நம்மை நாம் பக்குவப்படுத்திப் பல ஆத்மாக்களை அப்பக்குவ ஜெபத்திற்கு ஈர்த்துச் செயல்படுத்திட வேண்டும்.

இதை உணர்ந்து…
1.நான் என்ற தனித்த நிலையை விட்டு
2.எல்லாமுடனும் எல்லாமாய் நம் ஆத்மாவும் ஒளிரும் வழிமுறை பெற்று எல்லாமே ஒளிரச் செய்ய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எதையெல்லாம் எண்ணினோமோ… எதையெல்லாம் கேட்டோமோ… எவையெல்லாம் நுகர்ந்தோமோ… உயிரால் நுகரப்பட்டது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று உடலாக மாறுகின்றது,

1.இப்போது இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது நீங்கள் கேட்டறிந்த உணர்வுகள்…
2.நீங்கள் எண்ணிய உணர்வின் குணங்களை உயிரான ஈசன் உருவாக்கி…
3.உடலில் இந்திரலோகமாக மாற்றி… உடலுக்குள் அந்த குணங்களை உருவாக்கும்
4.“பிரம்மமாக்கும்” உணர்வினை உருவாக்குகின்றது.

ஆகவே சிந்தித்துச் செயல்படும் ஞானிகள் உணர்வினை நாம் அறிந்தால் இதே உணர்வுகள் சிந்தித்துச் செயல்படும் சக்தியின் உணர்வாக நம் உடலில் அணுவாக… பிரம்மமாக… உருவாக்கும்.

அதனின் உணர்வு உடலாகச் சேர்க்கப்படும் பொழுது அணுவின் மலம் சிவமாக மாறுகின்றது. அதைத் தான் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய என்று சொல்வது.

அதாவது நாம் எண்ணிய உணர்வுகளை உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது உயிர். உடலில் சதாசிவமாக ஆக்கிக் கொண்டே உளளது நமது உயிர்.

எதை எண்ணுகின்றோமோ… எதைக் கேட்கின்றோமோ… அது எத்தகைய குணமாக இருந்தாலும்… அதை எல்லாம் சதாசிவமாக… உடலாக… நம் உயிர் மாற்றிக் கொண்டே இருக்கின்றது என்பது தான் இதனின் பொருள்.

தீமையை அகற்றும்… சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானிகள் உணர்வினை
1.நீங்கள் உபதேச வாயிலாக இப்பொழுது நுகர்கின்றீர்கள்
2.அது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றும் இந்திரலோகமாக உங்களுக்குள் மாறுகின்றது.

அதனின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதை அணுவாக உருவாக்கும் கருவின் தன்மை அடைந்து பிரம்மலோகமாக மாறுகின்றது.

உபதேசிக்கும் உணர்வைக் கேட்டறிந்த பின் அந்த உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரலோகமாகி… மகிழ்ச்சிக்குரிய உணர்வுகளாக உங்களுக்குள் தோற்றுவிக்கின்றது.

மகிழ்ந்திடும் இந்த உணர்வுகளைத் திரும்பத் திரும்ப வளர்த்துக் கொண்டே சென்றோம் என்றால் குறித்த காலத்திற்குள் அணுக்களாக உருவாகின்றது.

அணுக்களாக உருவான பின் அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும் தன்மை அடைகிறது… இது பிரம்மலோகம்.

எதனின் உணர்வை நமக்குள் எடுத்தோமோ அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் அமைந்து… தீமைகளிலிருந்து விடுபடும் உணர்ச்சிகள் நமக்குள் வளர்ந்து ஞானிகள் வழியிலே நம்மை வாழச் செய்யும்.

ஆகவே… பிரம்மலோகம் எதுவாக எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கப்படும் போது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது.

எதன் வழி மாற்றுகின்றது…? நம் உயிர் வழி…!

1.நம் நெற்றி பாகம்… உருவாக்குமிடம் ஈஸ்வரலோகம் என்றும்
2.பிரம்மலோகமாகி… இந்திரலோகம் என்று உடலாக அமைகின்றது என்றும்
3.உயர்ந்த குணங்களை வளர்க்கப்படும் பொழுது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது என்பதையும் சாஸ்திரங்கள் கூறுகிறது.

ஆகவே சொர்க்க வாசல் என்பது உயிர் இருக்கும் இடமே…!
1.அந்த வாசல் வழி தான் வந்தது
2.அதன் வாசல் வழியிலே தான் நாம் வெளியிலே செல்ல வேண்டும்.

ஆனால் வேதனை என்ற உணர்வை வாழ்க்கையில் எடுத்தால் நரகலோகம். அந்த நரகலோகத்தைச் சிருஷ்டிப்பது எது…?
1.நம் உயிரான நிலைகளிலிருந்து தான்
2.நாம் சுவாசித்த நிலைகள் இருந்துதான்.

இதை உருவாக்குவது எது…?

ஈஸ்வரலோகத்தில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வேதனைகளாக அமைந்து விட்டால் நரகலோகமாக மாற்றி விடுகின்றது.
1.கடும் வேதனையாகும் போதுதான் உடலுக்குள் நரகலோகமாக மாறுகின்றது
2.நரகத்திற்குச் செல்லும் வாசலாகவும் இது அமைந்து விடுகிறது.
3.எதன் வழி சென்றோமோ உயிர் வேதனைப்படும் உடல்களுக்குள் அழைத்துச் செல்கிறது.

பாம்பு மற்ற உயிரினங்கள் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி ரசிக்கின்றது… தன் உணவாக்கிக் கொள்கிறது. அது போன்று மனிதனின் வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வுடனே வாழ்ந்து அதே உணர்வுடன் உடலை விட்டுச் சென்றால் பாம்பாகப் பிறந்த பின் தான் அது அடங்குகின்றது.

கோபமும் கொதித்தெழும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் புலியின் ரூபமாகப் பெற்று அதில் சென்று ஒடுங்குகின்றது. பின் புலியின் ரூபமாக உயிர் நம்மை மாற்றி விடுகின்றது.

இப்படித்தான்…
1.மனிதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
2.நரகமும் சொர்க்கமும் நமக்குள்ளே தான் உருவாகின்றது.

சொர்க்கவாசல் என்ற உயிரின் உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சொர்க்கலோகமாக நாம் மாற்றுதல் வேண்டும்.

ஆகவே
1.சொர்க்க வாசல் என்ற உயிர் வழி சென்று துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
2.பிறவியில்லா நிலை என்றும்… பகைமையே இல்லாது ஏகாந்த நிலை என்றும்… சொர்க்கம் என்றும்… அங்கே அடைய முடிகின்றது.

மெய் ஞானத்தின் வழிப்படித் தான் எதையுமே நல்லதாக்க முடியும்

 

சிலர் கடுமையான மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் வழியில் “சுவாசிக்கின்றேன்…” என்று உயர் அழுத்தத்தைக் கொடுத்தால் என்ன ஆகும்…?
1.சுவாசப் பையில் காற்று நிரப்பப்படுகிறது.
2.அங்கே வடிகட்டத் தவறும் உணர்வுகள் சுவாசப் பையில் சேர்ந்தால் என்ன நடக்கும்…?
3.ஆதிலே அழுக்குகள் சேரும். நாளடைவில்… இருமல் வரும்.

அதே அழுத்தத்தின் உணர்வு கொண்டு அடுத்து நரம்பு மண்டலங்களில் சரம் என்று சொல்வார்கள். உணர்வை அடக்கி நரம்புகளில் பாய்ச்சுவார்கள் சரத்தைப் போட்டு உடலிலே பழகியவர்களிடம் பார்த்தோம் என்றால் தம் கட்டி நரம்புகளில் ஏற்றுவார்கள்… பார்த்தால் வீரியமாக இருக்கும்.

சரம் என்ற நிலையில் மற்றதை அறியப் பயன்படுத்துவார்கள் அதே சமயத்தில் என்ன செய்யும்…?
1.நரம்புகளில் எடுத்துப் பழகிய பின் கடைசியில்
2.நரம்பெல்லாம் வலிக்கின்றது… கை கால் வலிக்கின்றது குடைகின்றது என்று சொல்வார்கள்.

இது எல்லாம் சரத்தைப் போட்டுத் தனக்குள் கற்றுக் கொண்டேன் என்று பெருமை பேசுவார்கள். சில அசுர உணர்வின் தன்மை வரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஆகி “வாய்வு” என்ற நிலைகள் உருவாகும்.

வாய்வு என்ற நிலைகள் உருவாக்கப்படும் பொழுது தன் எண்ணத்தின் அழுத்தம் வரும்பொழுது ஏரோபிளேன் எப்படி உணர்வின் அழுத்தம் கொண்டு மற்றதுடன் மோதி அதை எப்படி மேலே மிதக்கச் செய்கின்றதோ மிதப்பார்கள். இந்த உணர்வின் தன்மைக்குச் சில ஆவியின் உணர்வுகள் அதற்கு உண்டு.

அந்த உணர்வின் தன்மை அழுத்தமாகி அதைப் பெருக்கப்படும் பொழுது
1.சம்மணம் கட்டி இருப்பார்கள்… அப்படியே மிதக்க ஆரம்பிப்பார்கள்… இதை ஒரு பெரிய வித்தையாகக் காட்டுவார்கள்.
2.சில வேலைகளைச் செய்து பெரிய அற்புதத்தைக் கண்டேன் என்றும் அவர்கள் சொல்வார்கள். மேலே வரையும் மிதந்து காட்டுவார்கள்.

இத்தகைய ஆவியின் தன்மை பெறுவதற்கு ஒரு மந்திரம் உண்டு அந்த மந்திரத்தை நுகர்ந்தால் உணர்வின் தன்மை அழுத்தமாகும் பொழுது தன் உடலில் இருந்து வரக்கூடியதற்கும் இதற்கும் மாற்றமாகித் “தூக்கி நிறுத்தும்…”

ஆஹா… மிதக்கின்றார்… பறக்கின்றார்… என்ற நிலை வரும். இது போன்ற பல அற்புதங்களையும் செய்யலாம்

இந்த உடலிலே இப்படிப் பல நிலைகள் செய்தாலும் நாம் எந்த உணர்வின் தன்மை சேர்த்துக் கொண்டோமோ இதையெல்லாம் விளைய வைத்து வந்தபின் என்ன செய்யும்…?

ஆவியின் தன்மைய அடையச் செய்து மற்றொன்றுக்குள் ஊடுருவி இதே தீமைகளைச் செய்யச் செய்யும். அதே போன்று வரிசைப்படுத்திச் செல்லும்.

மனிதனாகப் பிறந்த பின் உடலில் உள்ள உறுப்புகள் வைத்திய ரீதியிலும் சரி மற்ற எந்த நிலைகளிலும் இதைக் கண்டு கொண்டு பல நிலைகளை விஞ்ஞான அறிவால் செயல்படுத்துகின்றனர்.

மெய்ஞான அறிவால்… ஓர் தாவர இனம் விஷத்தை முறிக்கின்றது நல்ல உணர்வை ஊட்டுகின்றது என்று காண்கின்றனர்.

அதைக் கண்டுணர்ந்து கலவைகளாக மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய சில அணுக்களை மாற்றி இரத்தத்தில் கலந்த பின் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு நல்ல வீரியம் ஊட்டுகின்றது… நல்ம் பெறச் செய்கிறது.

அதனுடைய உணர்வுகள் மீண்டும் அதற்குள் சேர்த்து மாற்றிக் கொண்டே இருக்கலாம்.

உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைக் கண் கொண்டு உற்றுப் பார்த்தால் அந்த உணர்வு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகி விடுகின்றது.

வயலிலே களைகள் முளைத்தால்… நீக்கினால் மீண்டும் அந்தக் களைகள் வருகின்றது. இதைப் போன்று நமது வாழ்க்கையில் தீமை என்று உணர்வை உற்றுப் பார்க்கும் பொழுது ஊழ்வினையாக வித்தாகி விடுகிறது.

வித்தாக ஆன பின் அதன் உணர்ச்சியைத் தூண்டிச் சுவாசிக்க நேரும். அந்த உணர்ச்சிக்கொப்ப எண்ணங்கள் வருகின்றது.
1.இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கப்படுகிறது.
2.கலந்த பின் மீண்டும் அந்த அணுக்களுக்குள் சேர்க்கப்பட்டு தீய விளைவுகள் விளைகின்றது.

இதை மாற்றுவதற்காக வைத்திய ரீதியிலே ஆங்கில மருத்துவத்தில் இதற்கு இரண்டையும் கலவை ஆக்கி உணவு வழி மாத்திரைகளாகச் செலுத்துகின்றனர். இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்திலும் கலக்கச் செய்கின்றனர். நல்ல சத்துக்களை அணுக்களுக்குக் கிடைக்கச் செய்து மாற்றியமைக்கின்றனர்

அந்த மருந்து ஊசி மூலமாகச் செலுத்தப்பட்டு இரத்தத்திலே கலந்த அளவிற்குத் தான் சிறிது நேரம் சரியாக இருக்கிறது. அது இல்லை என்றால் மீண்டும் அதனுடைய வேலை அதிகமாகிவிடும்.
1.நோய் தீர்ந்துவிட்டது என்று எண்ணலாம்… சில காலமான பின் அந்த விஷத் தன்மை வேறு ஒரு நோயாக வருகின்றது.
2.பின் அந்த நோய்க்கு மீண்டும் மாற்றுக் கொடுத்து இந்த உடல் இருக்கும் மாற்றிக் கொண்டே வர வேண்டியது தான்…!

முழுமையாகத் தப்ப முடியாது.

தியானமும் ஞானமும் நாம் பெறுவது “நமது ஆத்மாவிற்குத்தான்…”

 

இவ்வுலகமே வேடிக்கையான உலகம்தான். உலகம் என்பது இவ்வுலகின் ஜீவ ஆத்மாக்கள் தான். இக்காற்றைச் சுவாசமாய் ஈர்க்கும் ஒவ்வோர் ஆத்மாவுக்குமே இக்காற்று எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் சுவாசத்தினாலேயே அங்குள்ள நிலையினை உணர்த்திட முடியும்.

சுழலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அம் மண்டலத்தின் உருவ அளவைக் கொண்டு அம்மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் காற்று மண்டலம் (அடர்ந்த காற்று மண்டலம்) அம் மண்டலத்தின் அளவைப் பொறுத்து உள்ளது.

நட்சத்திர மண்டலங்களுக்கும் அதன் சுழற்சியைக் கொண்டுள்ள அதனைச் சுற்றியுள்ள அதன் சுவாச நிலை கொண்ட காலம் உண்டு. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் அதன் அமிலக் காற்று மண்டலமுண்டு.

நம் பூமியிலிருந்து பத்து மைல் சுற்றளவில் கொண்டுள்ள கூடவும் குறையவும் நம் பூமிக்குகந்த காற்று மண்டலமும் உண்டு. அனைத்திற்கும் பொதுவான சூனிய மண்டலம் என்று உணர்த்துகிறார்களே அங்கும் உண்டு காற்று… அதன் தன்மை வேறு.

மண்டலங்கள் வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் தன்மை வேறு. இப்பூமியில் பல இயற்கைத் தாதுப் பொருட்கள் தானாகவே வளர்கின்றன. இத்தாதுப்பொருள் வளர அதற்கு மூலப்பொருளாய் இரசமணி ஒன்று வளர்ந்தால்தான் பல தாதுப்பொருள்கள் வளர முடியும்.

இவ் இரசமணியின் சக்தி நிலை மனித ஜீவ ஆத்மாக்களுக்கும் சிங்கத்திற்கும், நாய், நரி, பூனை இவற்றிற்கும் வாழை மரத்திற்கும் இந்நிலை அதிகம்.

இம் மனித ஆத்மாவினால் இயற்கையில் வளரும் தாதுப் பொருளையே செயற்கையில் இவ் இரசமணியின் சேர்க்கையில் சில குறிப்பிட்ட தாவரங்களின் இலையின் சாறு எடுத்து இவ் இரசமணியின் கலவையுடன் இவ் எண்ணத்தை அவ்வமில சக்தியுடன் ஜெபப்படுத்தினால் எவ்வுலோகத்தையும் பூமியிலிருந்து எடுக்காமலும் பணம் தந்து வாங்காமலும் செய்விக்க முடியும்.

தாவரங்களின் நாமம் மறைக்கப்பட்டதின் நிலை மனித ஆத்மாக்கள் இப்பேராசையில் சிக்கிடாமல் தன் ஆத்மாவையே தன் ஆத்மாவுடன் உடலுடன் கலந்துள்ள இரசமணியின் ஈர்ப்பினால் நம் எண்ணம் தங்கமாகவும் நம் செயல் வைரமாகவும் ஆக்கிடலாம்.
1.நம்முள்ளையே அனைத்துப் புதையலும் உள்ளன.
2.அழியாச் செல்வ புதையல் இச்சக்தியை உணர்ந்து நம் சக்தியை வளர விடும் சத்தியமாக வாழ்ந்திடுங்களப்பா.

தியான முறையும் ஞான முறையும் பெற்றிட நம்மை நாம் பல பக்குவ நிலைப்படுத்தி செயல் கொண்டு “தியானமும், ஞானமும் நாம் பெறுவது நமது ஆத்மாவிற்குத்தான்…”

1.நம் எண்ணம் செயல் எல்லாமே நமக்குச் சாதகமாக
2.மற்றைய நிலையிலிருந்து தப்பி ஒதுங்கிப் பெறுவதல்ல தியானமும் ஞானமும்.
3.நம் எண்ணம் செயல் உடல் அனைத்துமே சத்தியம் கொண்டு தூய்மையுடன் நாம் உள்ளோம்
4.மற்றவர்களுக்கு அந்நிலை தெரியவில்லை என்று எண்ணினாலும் நமக்கு அந் ‘நான்’ என்ற நிலை வந்து விடுகிறது.

நம்முள் பல நற்சக்திகளையே ஈர்த்துச் செயலாக்கி வருகின்றோம் என்ற நிலையில் நாம் இருந்தாலும்
1.நம்மைச் சுற்றியுள்ள ஆத்மாக்களின் நிலையுடன்
2.நம்மை நாம் ஒன்றித்தான் செயல் கொண்டிடல் முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சரஸ்வதி பூஜையை நாம் கொண்டாடுகின்றோம். சரஸ்வதி என்றால் ஞானம். அன்றைய நாள் முழுமைக்குமே ஞானத்தை வளர்த்திடும் நாளாக நாம் அமைக்க வேண்டும்.

அதற்காக நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்…1

1.என் குடும்பத்தில் நான் என்ன செய்தேன்…?
2.கல்வியில் நான் எதை எதைத் தவற விட்டேன்…?
3.தொழிலில் நான் என்னென்ன செய்தேன்…? அதிலே எந்தெந்தக் குற்றங்கள் வந்தது…? அதனால் தொழில் எப்படி மந்தமானது…?

இதைப் போன்று ஒவ்வொரு நிலையிலும் சிந்திக்கும் நாள் தான் ஆயுத பூஜை நந்நாள் என்பது.

நமது வாழ்க்கையில்
1.இந்த வருடம் முழுவதுமே நாம் என்ன செய்தோம்..?
2.குடும்பத்தில் எப்படி ஒற்றுமையாக இருந்தோம்…?
3.நம் சொல்லால் குடும்பம் எப்படி ஒற்றுமையானது…? என்ற நிலையில் இந்த ஞானத்தை அறிதல் வேண்டும்.

ஆனால் சந்தர்ப்பத்தால் அந்த ஞானம் குறையப்படும் போது… அந்தக் குறைந்த நிலைகள் எப்படி இயக்குகின்றது…? ஞானம் குறைந்ததன் காரணமாக
1.வாழ்க்கையில் சிரமங்கள் எப்படி வந்தது…? துன்பங்கள் எப்படி வந்தது…? தொழில் எப்படி நஷ்டமானது…?
2.ஞானம் தவறி நுகர்ந்த உணர்வால் நம் உடலில் நோய்கள் எப்படி வந்தது…? என்று
3.அதை எல்லாம் விசாரணை செய்து நம்மை நாமே சிந்திக்கக் கூடிய நாள் தான் இது.

ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம்மை நாமே தூய்மைப்படுத்தி இந்த அருள் ஞான சக்தியை வளர்க்க வேண்டும்.

உதாரணமாக… கடையிலே நஷ்டமாகி இருந்தால் அந்த நஷ்டம் எதனால் ஆனது…? என்று சிந்தனை செய்ய வேண்டும். ஆனால் சிந்தனைக்கே வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அழுக்குப்பட்டுப் பட்டு ஒரு பொருள் அங்கே மறைந்திருந்தால் அதைத் துடைத்தால் தான் மீண்டும் உள்ளிருக்கும் அந்தப் பொருள் தெரிகிறது… தெளிவாகத் தெரிகின்றது.

அதைப் போன்று…
1.வாழ்க்கையில் அப்படித் தெரியப்படுத்தும் உணர்வுகளை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் தூய்மைப் படுத்தும் பொழுது
3.எது நம் நல்ல குணங்களை மறைத்தது…? எதனால் வியாபாரம் நஷ்டமானது…?
4.ஒற்றுமையாக இருந்த நம் குடும்பம் எதனால் பிரிந்து செல்லும் நிலை வந்தது…?
5.பிரிந்து வாழ்ந்ததனால் நமக்குள் நல்ல சொல்கள் எப்படி இழக்கப்பட்டது…?
6.நல்ல சொல்கள் இழந்த நிலையினால் நம் தொழில்கள் எப்படிக் குன்றியது…?

இது எல்லாம் சீர்கெடும் போது நம் உடலில் நல்ல உணர்வுகள் மாறி ஒருவருக்கொருவர் கடும் சொல் சொல்லும் போது
1.அன்னை தந்தையைப் பிரிந்து வாழும் நிலை எப்படி வருகின்றது…?
2.சகோதர உணர்வுகள் எப்படி மறைகிறது…? சகோதரர்களுக்குள் போர் செய்யும் முறைகள் எப்படி வருகின்றது…?
3.எந்தெந்தக் குற்றங்களால் நன்றாக வாழ்ந்தவரின் நிலைகள் மாறுகிறது…?
4.ஒற்றுமையாக இருந்த நண்பர்கள் எல்லாம் எப்படிப் பகைமையானார்கள்…? என்று
5.மேலே சொன்ன தீமைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடும் முறைகள் எது…? என்று
6.நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்.

ஆகவே சரஸ்வதி பூஜை என்றால் அந்த அருள் ஞானத்தை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நாளாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய வழியில் அந்த அருள் ஞானத்தை எடுத்து அருள் சக்திகளை வளர்த்து தீமைகளிலிருந்து மீட்கும் உபாயத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

எது எது அழுக்குகள் இருந்தததோ அதை எல்லாம் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
1.நம் நல்ல எண்ணங்களைக் கூர்மையாக்கி… அதனுடன் ஞானிகள் உணர்வை இணைத்து வலிமை பெறச் செய்து
2.நம் சொல்லால் செயலால் மூச்சால் எல்லோருக்கும் நன்மை பெறச் செய்யும் சக்தியாக நாம் மாற வேண்டும்.

பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான் இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன

 

ஒரு நொடியில் ஜீவிதம் பெற்றுச் சில நிமிடங்கள் வாழ்ந்து மறையும் விட்டில் பூச்சிகளும் உயிராத்மாதான். பல கோடி ஆண்டுகளாய் வாழும் மண்டலமும் (சூரியனும்) ஜீவன் பெற்ற ஜீவ ஆத்மாதான்.

அதனதன் வளர்ச்சியில் அது அது எடுக்கும் சுவாச நிலை கொண்டுதான் நீடித்து வாழும் பக்குவம் கொள்கின்றது.

பல நாட்களாய் நம் உலகம் கலியின் பிடியில் சிக்குண்டிருக்க சத்தியத்தின் சக்தியை உணர்த்தி இன்றைய நிலையில் மீளச்சொல்வதின் பொருளென்ன…? என்ற வினாவும் எழும்பலாம்.

இவ்வுலகிற்காக இப்பூமி நிலைத்துச் செயல் கொண்டிட நல் ஆத்மாக்களின் சக்தி நிலை இருந்தால்தான் இப்பூமி வாழ முடியும்.

இப்பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் நற்சக்தியை ஈர்த்து ஞானம் பெற்று
1.இன்று சூட்சுமத்தில் உள்ள அனைத்துச் சித்தர்களுமே
2.இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் அவர்களின் சக்தி நிலையை உயிராத்மாக்களின் நிலையில் உணர்த்தி…
3.நம் பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான் இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன.

இக்கலி முடிவதற்குள் இங்குள்ள உயிராத்மாக்களைப் பக்தி என்னும் ஞானப்படுத்தத்தான் இன்று உலகெங்கும் எழுப்பப்படும் கோயில்கள் எல்லாம்.

எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி
1.ஓ…ம் என்ற நாதத்தை உயிரணுவில் கலக்கவிடும் சத்திய நிலையை
2.பக்தி நெறியில் உயிராத்மாக்களுக்கு உணர்த்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்கு நற்பயன் தேட எவ்வாத்மாவும் செயல் கொண்டிடவில்லை. கொண்டிடவில்லை என்பதன் பொருள் புரியாமல் உள்ளதின் நிலை… பக்தியையே ஜாதகத்தின் வழியில் காணுகின்றனர்.

எதிர்காலம் என்பதனையே இவ்வுலகில் வாழும் இக்குறுகிய கால நிலைக்காகத் தாமடைந்த இவ்வுடல் கொண்ட ஜீவ நிலையைச் சிதறவிட்டு பொருளுக்கும் பதவிக்கும் போற்றலுக்கும் சிக்கித் தனக்குக் கிடைத்த இவ்வாய்ப்பினை நழுவ விட்டே வாழ்கின்றனர்.

நமக்குக் கிடைத்துள்ள இக்கால சந்தர்ப்பம் நம் ஆத்மாவை நற்கதியுடன் கலக்கவிடும் பக்குவ நிலைக்காகத்தான். இன்று நம் உலகினில் பல அரசியலின் தலைவர்கள் தோன்றித் தோன்றிப் பெரும் புகழும் அழிவும் கொண்டெல்லாம் வளர்ந்து வாழ்ந்தனர்.

உலகையே அடிமைப்படுத்தும் அதிகாரப் பதவியில் இருந்து வாழ்ந்தாலும் அவ்வாத்மாவிற்குப் பேராசை நிலையின் அதி பற்றிருந்ததினால்… உடலை விட்டு அவா் அவ்வாத்மா பிரிந்தும் மீண்டும் மீண்டும் பல பிறவிக்குத் தன் ஆசையைப் பூர்த்தி செய்யப் பிறந்து கொண்டே உள்ளது.

திருவள்ளுவர் அரசனாகவும் வாழவில்லை. தன் ஆத்மாவையே கவியாக்கி ஞானசக்திச் சொற்களை உலகிற்கு உணர்த்த ஆசைப்பட்டுச் செயல் கொண்டார்.
1.அவர் ஆத்மா இன்றளவும் அவரின் மனையாளின் ஆத்மாவுடன் ஒன்றியே சூட்சுமம் கொண்டு
2.இன்றும் உலகமே போற்றும் அத் திருக்குறளில் உள்ளார்.
3.அவரின் குறட்பாக்களைப் படிக்கும் ஆத்மாக்களின் எண்ணமுடனே அவரின் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

காற்றேதான் கடவுள். காற்றையே தெய்வமாக்கி நாம் எடுக்கும் சுவாசத்தில் கலக்கவிடுங்கள் என்றெல்லாம் இப்பாடநிலை உணர்த்திய நாள் தொட்டே செப்பி வருகின்றோம்.
1.ஆனால் மனித ஆத்மாக்களுக்கு மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதையும்
2.சர்க்கஸில் ஆடும் கோமாளியின் லீலையில் மகிழவும் தான் பேராவல் உள்ளது.

மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதை மந்திரக்காரன் செய்கிறானே, அதில் உள்ள உண்மை என்ன…? என்று அறியும் நிலை கொண்ட எண்ணமுடையோர் மிகச் சிலர் தான்.

சக்தி கொடுத்தாலும்… ஞானம் கொண்டு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

 

குருநாதர் எம்மைப் பல இன்னல்களைப் படச் செய்தார்… எப்படி எல்லாம் சந்தர்ப்பங்கள் உருவாகிறது…? என்று.

சில இடங்களில் மிருகங்கள் வருகிறது என்றால் நான் கையை நீட்டினால் போதும்… அவைகள் கீழே விழுந்து விடும். எனக்குச் சக்தி இருக்கிறது என்று நான் நினைக்க முடியுமா…?

ஒரு பாதையில் என்னைப் போகச் சொல்கின்றார் குருநாதர். யானை வருகின்றது… பார்த்தவுடன் பயம் வருகின்றது… யானை என்னைத் தாக்கிவிடும் என்று நினைக்கின்றேன்.

யானையை நீ தோஸ்து (நண்பன்) பண்ணுடா என்று குருநாதர் சொல்கின்றார். தோஸ்த் பண்ணுவது என்றால் எப்படி…? என்று குருநாதர் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.

ஆனால் யானையை பார்த்ததும் பயம் தான் வருகின்றது. எங்கே நான் தோஸ்த் செய்வது…? காதை விடைத்துவிட்டது என்றால் நிச்சயம் அடிக்கும்

ஏனென்றால் நான் வேட்டைக்குப் போய்ப் பழக்கப்பட்டவன். காதை மட்டும் யானை விடைத்து விட்டால் எவ்வளவு தூரத்தில் எப்படி இருந்தாலும் யானை விடாது.

பார்த்துக் கொண்டே இருக்கும்… நாம் நகர்ந்தோம் என்றால் ஓடி வந்து லபக்கு என்று நம்மைப் பிடித்துவிடும்.

இந்த மாதிரி நிலை இருந்ததால்… “யானை என்னை அடித்து விடும்” என்ற பயம் தான் அப்பொழுது எனக்கு வந்தது. குருநாதரை நினைக்கின்றேன்… சாமி…! என்று சொல்கின்றேன்.

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதே…! என்று சொல்கின்றார்.

எங்கே சாமி என்றேன்…! சத்தம் போட்டால் அடித்து விடும். மனதில் தான் நான் நினைக்கின்றேன்.

தோஸ்து செய்டா… சரியாகப் போய்விடும் என்று சொல்லுகின்றார். நான் கொடுத்த சக்தியை வைத்து யானை உடலிலிருந்து வரக்கூடிய வாசனையை உன் உடலிலே ஏற்றுடா என்று சொல்கிறார்.

1.ஒருவன் நம்மைப் பயமுறுத்துகிறான் என்ற உணர்வு வந்தால் அந்த வாசனை நமக்குள் வரும்.
2.எதிரி என்ற நிலையில் நம்மைத் தாக்க வருகிறார் என்றால் பார்த்தவுடன் அந்தப் பயமுறுத்தக் கூடிய உணர்வு வரும்.
3.யார் பார்த்தாலும் அந்த பயம் நடுக்கம் வரும். அதைப் பற்றிக் கேட்டவரும் ஏன் பயப்படுகிறாய்…? என்று கேட்பார்கள்.
4.இதே மாதிரி யானையின் உணர்வை நீ நுகரு என்று சொல்கிறார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி அதை எடுத்து எனக்குள் கொஞ்சம் ஏற்றிக்கொண்ட பின் காதை விடைப்பதை யானை விட்டு விட்டது.

ஏனென்றால் அந்த இடம் கொப்பங்கள் கட்டி யானைகளைப் பிடிக்கக்கூடிய இடம். முன்னாடி ஆண் யானை குச்சியை வைத்துத் தரையில் ஊன்றி அதைப் பார்த்துக் கொண்டே வருகின்றது பின்னாடி மற்ற யானைகள் வரிசையாக வருகின்றது. அந்த நேரத்தில் மனிதனைக் கண்டால் எப்படி இருக்கும்…?

ஆனால் குருநாதர் சொன்ன முறைப்படி யானையின் மணத்தை நான் ஏற்றுக் கொண்டதால் அவைகள் பேசாமல் நகர்ந்து செல்லுகின்றது எல்லா யானைகளும்.

ஆனால் அதிலே ஒரு குட்டி யானை என்ன செய்கின்றது…?

அது சும்மா செல்லாதபடி என்னை வந்து உடலில் தட்டுகின்றது. உடனே திரும்பி மற்ற யானைகள் முறைத்துப் பார்க்கின்றன.

பயத்தால் நான் ஏதாவது கையையோ காலையோ நீட்டினேன் என்றால் போச்சு…! ஆனால் யானை அது என்னிடம் விளையாடுகின்றது… முட்டிப் பார்க்கின்றது. மற்ற யானைகள் கொஞ்ச நேரம் நின்று பார்க்கின்றது.

குருநாதர் அனுபவத்திற்கு இப்படிக் காட்டுகின்றார்.

1.ஈஸ்வரா என்று குருநாதரை நினைத்து அந்தக் குட்டி யானை விலகிச் செல்ல வேண்டும்
2.அதற்குண்டான புத்தி வர வேண்டும் என்று நான் நினைத்தேன்.

ஆனால் பயந்திருந்தேன் என்றால் நிச்சயம் யானை என்னை விரட்டிவிடும்.

இப்படித்தான் சந்தர்ப்பத்தில் என்னை அங்கே சிக்க வைத்தார். சக்தி கொடுத்தாலும் ஞானம் கொண்டு எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்று காட்டுகின்றார்.

ஆனால் அடுத்தாற்போல் குருநாதர் “கெக்கெக்கே…” என்று சிரிக்கின்றார். ஒன்றுமே தெரியாதவன் என்று சொல்லுகின்றாய். என்னடா…? யானையெல்லாம் மடக்குகின்றாய்..! பயந்தேன்…! என்று சொன்னாய் ஆனால் இப்பொழுது யானையை மடக்குகின்றாயே…! என்றார்.

இந்த மாதிரி இதையும் செய்யச் சொல்வார் எல்லா அனுபவத்தையும் கொடுக்கின்றார்.

ஆகவே குருநாதர் காட்டிய வழியில் நாம் தெளிந்த மனம் கொண்டு
1.ஒளியின் சரீரமாகப் பெற்ற அருள் ஞானிகள் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் நுகர்ந்து
2.இருள் சூழா நிலைகளாக எப்பொழுது கொண்டு வருகின்றமோ அப்போது நாம் முழுமை அடைகின்றோம்.
3.நீங்கள் முழுமை அடைய அந்த அருளைப் பெற வேண்டும் என்பதுதான் எம்முடைய உபதேசம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நண்பராகப் பழகுகின்றோம்… அவருக்குத் தக்க சமயத்தில் உதவியும் செய்கின்றோம். சந்தர்ப்பத்ததில் நாம் ரோட்டில் செல்லும் போது அந்த நண்பர் எதிரே வருகின்றார்.

ஆனால் அவரோ அவசரமாகச் சென்று கொண்டிருக்கின்றார் அது நமக்குத் தெரியவில்லை.

அவரை பார்த்தவுடன் இங்கே வாப்பா…! என்று கூறுகின்றோம்.

கூப்பிட்டவுடனே அவர் “இருங்கள்… நான் வருகிறேன்…” என்று சொல்லி விட்டுச் சென்று விடுகின்றார்.

அட… இங்கே வந்து விட்டுப் போப்பா…! என்று இரண்டாம் முறையும் கூப்பிடுகின்றோம். அவர் அப்படியே சென்று விடுகிறார்.

இவனுக்கு வந்த கிராக்கியைப் பார்…! அன்றைக்குத் தேவைக்கு நம்மிடம் வந்தான். இன்றைக்குக் கவனிக்கவே இல்லை. நாம் கூப்பிட்டால் வர மாட்டேன் என்கிறான்.

ஆனால் தேவை என்று அவன் கேட்கும்போது அவனுக்கு நாம் கொடுத்தோமே…! என்று இப்படி அந்த உதவி செய்த நிலைகள் தான் வருகின்றதே தவிர “அவருடைய சந்தர்ப்பத்தைப் பற்றிச் சிந்திக்கும் தன்மை வருவதில்லை…”

1.அவர் எந்த அவசரத்தில் போகின்றாரோ…!
2.போகும் வேகத்தைப் பார்த்த பின் அந்த உணர்வுகள்… அந்த ஞானம்…
3.சரி போகட்டும் ஏதாவது அவசர வேலையாக இருக்கும் போல் தெரிகின்றது என்று
4.அந்த நேரத்தில் நம் மனதைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5.அவன் போகக்கூடிய காரியத்தைத் தடைப்படுத்திவிட்டோமோ…? என்னமோ…!
6.அவன் போகும் காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்று நாம் எண்ணிவிட வேண்டும்.

இப்படி எண்ணினால் நம் மனதும் அமைதிப்படும்.

அடுத்ததாக ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்றாலும் கூட சிந்தனைக்குத் தகுந்த மாதிரி நாமே சென்று அதைச் சீராக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

இப்படி எண்ணவில்லை என்றால் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும்…
1.அந்த ஒரு நிமிடம் அல்லது அந்த ஒரு நொடியானால்
2.நமக்குள் மனதைக் கெடுக்கக்கூடிய நிலை ஆகி நம் நல்ல குணங்களை மாற்றி அமைத்து விடுகின்றோம்.

நல்ல குணங்களை நமக்குள்ளும் செயலற்றதாக மாற்றுகின்றோம். அதே போல் அந்த நண்பருக்குள்ளும் செயலற்றதாக ஆக்குகின்றோம். அப்பொழுது இரண்டு பேருடைய நல்ல மனமும் கெடுகின்றது.

ஆக… எதன் உணர்வைச் சேர்க்கின்றோமோ அதன் ஞானமாகத்தான் உயிர் நம்மை இயக்குகிறது. எதன் உணர்ச்சியோ அதை நுகரப்படும் பொழுது அதன் வழிதான் நம்மை இயக்குகின்றது.

எதன் உணர்வு நம் நம் உடலில் சேர்கின்றதோ அந்த இணைந்த உணர்வு கொண்டு தான் பிரம்மமாகி அதனின் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

இணைந்த நிலைகள் நம் உடலில் இருக்கும் பொழுது
1.உயிர்… வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட உணர்வுகள் உடலாகிறது.
2.அதனின் சக்தியாகவே அது இயக்குகிறது.

அதாவது மனித உடலுக்குள் உயிரின் தன்மை ஈசன் என்றாலும் உணர்வின் தன்மை உடலாகின்றது பிரம்மம் என்பதை இப்படிக் காவியங்களில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

நன்றாகப் படித்து பாருங்கள். நான் மனிதன் வாழ எத்தனையோ வழிகளை ஞானிகள் காட்டி உள்ளார்கள்.

விஜயதசமி என்று சொல்லும் பொழுது தீமைகளை அகற்றிப் பழக வேண்டும். நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்றுத் தான் மனிதனாக இன்று நம்மை உருவாக்கி உள்ளது.

1.ஒருவன் தீமை செய்வதைச் சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்தால்
2.அல்லது நாம் சந்திக்கும் உணர்வுகள் தீமையாக இருந்தால்…
3.அதை எல்லாம் ஒவ்வொரு நொடிகளிலும் நாம் சுத்தப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

சுத்தப்படுத்தத் தவறினால் பத்தாவது நிலையை (தசமி) அடையக்கூடிய தருணம் தடைபட்டு மீண்டும் புவியின் ஈர்ப்புக்கே வந்து விடுகின்றோம்.

காரணம் நல்ல குணங்கள் கொண்டு வேதனைப்படுவோரை நுகர்ந்தால் நம் நல்ல குணத்திற்குள் விஷத்தின் தன்மை பட்டு… விஷத்தின் ஆற்றல் வலுவான பின் நல்ல குணங்கள் மடிகின்றது.

அதை மாற்ற மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம்முடைய எண்ணங்கள் கூர்மையானால் தீமைகளை விலக்கும் நிலை வருகின்றது.

1.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நாம் அவ்வப்போது நுகர்ந்தால்
2.எந்தத் தீமையும் அணுகாதபடி நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்…
3.நம் நல்ல குணங்களையும் காக்க முடியும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிரமமான நேரத்தில் குருநாதர் எனக்குக் கொடுத்த உபதேசங்கள்

 

குருநாதர் எம்மை இமயமலை… சைனா பார்டர் வரையிலும் போகச் சொன்னார்…!

அன்று சக்தி கொடுத்தார்.
1.அதை வைத்து அந்த நேரத்தில் எதைப் பயன்படுத்த வேண்டுமோ பயன்படுத்த வேண்டும்.
2.ஒருத்தரைக் கொல்லவோ துன்புறுத்தவோ அதைப் பயன்படுத்தக்கூடாது
3.உன்னைக் காத்துக் கொள்வதற்கு எந்த நிலையோ அதை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லித் தான் கொடுத்தார்.

வெறும் கோவணத் துணியுடன் அங்கே இமயமலைக்குச் சென்றேன். ஒரு பாதையைக் கடந்து செல்லும் பொழுது பனிபாறைகள் திடு… திடு… என்று இடிந்து விழுகின்றது. பார்த்தவுடனே… நாம் எப்படித் திரும்பப் போகப் போகின்றோம்…? என்று சிந்தனை வருகிறது.

அப்போது என் வீட்டின் நிலைகள் காட்சியாகத் தெரிகின்றது. என் கடைசிப் பையன் தண்டபாணி “நானா… நானா…” என்று சொல்லிக் கொண்டு தெரு வாசல்படியில் அமர்ந்திருக்கின்றான்.

என் மீது அவனுக்கு ஏக்கம் அதிகமாகி இரத்த இரத்தமாக வெளியே சென்று கொண்டிருக்கிறது. இந்த எண்ணம் அங்கே சென்றவுடன் நாம் எப்படித் திரும்பச் செல்லப் போகின்றோம்…? பிள்ளைகள் எல்லாம் என்ன ஆவார்கள்…? என்று இங்கிருந்து இது எல்லாம் சிந்தனை ஓடுகின்றது.

எல்லாம் காட்சியாகத் தெரிகின்றது என்னுடைய மனைவியோ விறகுக் கடையில் “விறகே இல்லை” என்று தவித்துக் கொண்டிருக்கிறது.

என் பையனுக்கு இரத்த இரத்தமாகப் போகிறது என்று தெரிந்த உடனே… ஐயோ…! அவனை எப்படிக் காப்பாற்றுவது…? என்ற இந்த நினைப்பு எனக்குள் வருகின்றது.

உடனே என் உடலுக்குள் “அடித்தது பாருங்கள்…!” கிர்…ர்ர்ர்… என்று இருதயமே துடிக்க ஆரம்பிக்கின்றது. சிறிது நேரத்தில் உயிர் பிரிந்து விடும் போல் தெரிகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் அடிக்கடி குருநாதர் ஒரு பாடலைப் பாடுவார்

மனமே இனி ஆகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் சுகமா
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

மின்னலைப் போல் இப்பொழுது நீ உடலை விட்டுப் போய் விட்டாய் என்றால் எதை நீ பார்க்கப் போகின்றாய்…? என்று கேட்கின்றார்.

நெற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ…? இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமா…? நீ சிந்தித்துப் பார்…! என்று சொல்கின்றார். நீ சென்று விட்டால் உன் பிள்ளையை எப்படிக் காக்கப் போகின்றாய்…?
1.நான் உனக்குச் சக்தி கொடுத்தேன்
2.இங்கிருந்து அவன் காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் காக்கலாம்.

தூரத்தில் இருக்கும் ஒருவனை இங்கிருந்து நீ திட்டினால் அவனுக்குப் புரை ஓடுகின்றது. பிள்ளை மீது பாசமாக இருந்து அவனை எண்ணி வேதனைப்பட்டால் அவனுக்கு நோய் தான் அதிகமாகும்.

அந்த நோயிலிருந்து அவனைக் காக்க வேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்…? என்ற உபதேசத்தை தான் அந்த மாதிரி நேரங்களில் எனக்கு குருநாதர் கொடுக்கின்றார்.

சக்தி வைத்திருந்தாலும்…
1.இவ்வளவு சிரமமான நேரத்தில் அவர் கொடுக்கும் உபதேசங்கள் நமக்குப் பயனுள்ளதாக
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உருவாக்கப்பட்டு… குருநாதர் கொடுத்து உதவுகின்றார்.

இப்படித்தான் அனுபவப்பட்டு நான் வந்தேன். நீங்கள் அமர்ந்து ஆசுவாசமாக இதைக் கேட்கின்றீர்கள். உங்களுக்கு இது போன்ற சோதனைகளைக் கொடுத்தால் என்ன சொல்வீர்கள்…?

ஆசைப்பட்டது நடக்கவில்லை என்றால் “சாமி என்னைச் சோதிக்கின்றார்” என்று தான் சொல்வீர்கள். ஒரு சிலர் என்ன செய்கிறார்கள்…?

வாழ்க்கையின் ஆசை நிமித்தம் செல்லும் பொழுது… ஒரு பொருளை எண்ணுகிறார்கள்… அது கிடைக்கவில்லை என்றால் என்றால் “சாமி நிறைய என்னைச் சோதிக்கின்றார்” என்று இப்படிச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் நான் இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்குக் குருநாதர் எத்தனையோ சோதனைகளை வைத்தார். அதன் வழி தான் ஒவ்வொன்றையும் அறிந்து கொண்டேன்.

சரியான உணவு இல்லை… வீடு வயல்கள் எல்லாம் சென்று விட்டது குழந்தைகள் அனைவரும் அனாதையாக இருக்கின்றார்கள். எல்லா நிலங்களும் விற்று விட்டாயிற்று. சரியான காரணம் இல்லாமலே சொத்துக்கள் அழிந்தது.

இவ்வளவு நிலை வந்த பிற்பாடு இப்படி எல்லாம் செய்யப்பட்ட பிற்பாடு இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டு வருகின்றேன். ஒவ்வொரு குடும்பத்திலும் இத்தகைய நிலைகள் உண்டு.

1.ஆக அந்த குடும்பத்தில் எப்படி அறியாது இயக்குகின்றது…?
2.அவர்களை மீட்டுவதற்கு என்ன வழி…? என்ற நிலையில் தான் அனுபவமே கொடுத்தார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக நீ மதி அவர்கள் உடலைக் கோவிலாக மதி சந்தர்ப்பத்தால் அவருக்குள் வரும் நிலையை…
1.ஈசனால் கட்டப்பட்ட அந்த ஆலயம் இடிந்திடாது இந்தக் கட்டிடத்திற்குள் இருந்து உணர்வின் தன்மை ஒளியாகப் பெருக்கும் மார்க்கம் என்ன…?
2.அவர்களைக் காக்க வேண்டும் என்றால் நீ எப்படிக் காக்கப்படுகின்றாய்…?
3.இந்த உடலுக்குப் பின் நீ எப்படி ஒளியாகின்றாய்…?
4.அவர்களை ஒளியாக்கும் உணர்வை அந்த உபாயத்தைச் சொன்னால் அது உனக்குள் வளர்கின்றது
5.அந்த உணர்வே உனக்குள் தெளிவாகின்றது
6.அதை வைத்து நீ அவர்களையும் காக்க முடியும்.

இப்படித்தான் குருநாதர் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார்.

சகலத்திலும் சகலமாய் உள்ள “ஆதி சக்தியுடனே நாம் ஒன்றிவிடலாம்”

 

உலக சக்தி என்பதே… தனித்து எதனைச் செப்புவது…?

இன்றைய உலகமே பிம்பத்தைத்தான் உலகமாகக் காண்கின்றது. எப்பிம்பமும் நிலைத்த பிம்பமல்ல; இன்றைய பிம்பம் மாறிவிட்டால் காற்றுத்தான். அன்றைய காற்று இன்றைய காற்றில் தான்‌ அனைத்தும் உள்ளன. நீரும் காற்றுத் தான் நெருப்பும் காற்றுத் தான்.

நீரும் ஆவியாகிக் காற்றுடன் கலக்கின்றது. நெருப்புக் கோளங்களும் எரிந்து ஆவியாகிக் காற்றுடன்தான் கலக்கின்றன. அனைத்து பிம்பமும் காற்றுத்தான்.
1.காற்றேதான் கடவுள்…
2.அக்காற்றிலிருந்து ஜீவன் கொண்ட அனைத்துமே கடவுள்தான்.

பால்வெளி மண்டலத்தைக் காற்றாய்க் காண்கின்றோம். அப்பால்வெளி மண்டலத்தில் இருந்து தான் ஆதவனாய் உள்ள சூரியனும் பிறந்தான். பூமித்தாயும் வளர்ந்தாள். மற்ற அனைத்துக் கோளங்களும்மே பிறந்து வளர்ந்து வாழ்கின்றன.

இப்பால்வெளி மண்டலத்தில் உள்ள காற்றில் கலந்துள்ள அமிலமே நீராயும் நெருப்பாயும் ஒன்றை ஒன்று பற்றியே சுழன்று கொண்டு உள்ளது.
1.இவ்வமிலமே திடமாகி அத்திடத்தில் இக்காற்றுப்பட்டு அதை ஈர்த்து அது வெளிப்படுத்தி அந்நிலையிலேயே வளர்ந்து
2.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றின் அமிலம் மற்றொன்றில் கலந்து அது ஈர்த்து சமைத்து வெளிக் கக்கும் அமிலம்
3.மற்றொரு கலவையுடன் சேர்ந்து அவை எடுத்து அவை வெளிப்படுத்தி இப்படியே மோதுண்டு மோதுண்டு
4.ஒன்று உண்டு அதன் கழிவு வெளிப்பட்டு அக்கழிவு அதன் இனமுடன் சேர்ந்து அவை உண்டு அவை சமைத்து வெளிப்படுத்தும் அமிலம் படர்ந்தே
5.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஜீவன் கொண்டு ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டு மண்டலமாய் உருப்பெற்று
6.அம்மண்டலம் எடுக்கும் உணவு (சுவாசத்தை) கொண்டு அதன் சக்தி நிலை வளர்ந்து அது வெளிப்படுத்தும் அமிலத்திலிருந்து பல நிலை பெற்று,
7.பால்வெளி மண்டலத்தை இக்காற்று மண்டலத்தை மையமாய்க் கொண்டு சுழலுவதுதான் அனைத்து மண்டலங்களும் நாமும் எல்லாமுமே.
ஆவிதானப்பா அனைத்துமே…!

ஆவியான இக்காற்றில் நிறைந்துள்ள அமில சக்தியைக் கொண்டு
1.“நம் ஆத்மாவிற்கு உகந்த அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து…”
2.உயர்ந்த ஞான நிலைபெறும் பக்குவ அமிலத்தை உணரும் சக்தி பெறல் வேண்டும்.

இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்களெல்லாம் தனக்குகந்த அமிலத்தையே ஈர்த்து வளரும் பக்குவ நிலை உள்ள பொழுது நாமும் அனைத்துமே ஆவிதான்.

நாமும் ஆவிதான் நம் உடலில் உள்ள அனைத்துமே ஆவிதான் என்பதனை உணர்ந்து நமக்குகந்த ஆவி அமிலத்தை எண்ணத்திலேயே ஒரு நிலை கொண்டிடும் பக்குவ நிலைப்படுத்தி ஞானத்தின் வழித்தொடர் பெற்றிட வேண்டும்.

ஆவியாய்ப் பிரியப் போகும் பிம்பத்தைப் பேராசைப் பொருளாய் எண்ணிடாமல் அனைத்தும் ஆவிதான் என்பதனை உணர்ந்து ஒவ்வோர் உடல் கொண்டு வாழ்ந்து பல எண்ணத்தை ஈர்த்து பல கோடி ஆண்டுகளுக்கு ஜீவன் கொண்ட பல பிம்ப உடல்களை ஏற்று ஏற்று வந்த நம் ஆத்மாவைப் பெரும் இன்னல் படுத்திடலாகாது.

1.உயர்ஞானம் பெறும் நல் உபதேசம் பெற்று
2.இக்காற்றில் தான் கலந்துள்ளார்கள் சித்தாதி சித்தர்களும் சத்திய ஞானம் பெற்ற சப்தரிஷிகளும் என்ற எண்ணம் கொண்டு இவ்வுண்மையை உணர்ந்து
3.ஆண்டவனுக்கு மத வேறுபாடு இல்லை… “எவ்வாண்டவனை வணங்கினாலும் ஒன்றே” என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு
4.உம்மின் அன்பை ஆண்டவனாய் ஒருநிலைப்படுத்தி
5.உம் எண்ணத்தில் ஆண்டவனாய் வரித்து உள்ளவரையே ஆண்டவனாக்கி
6.உம் எண்ணத்தில் செயல்படுத்தி நீர் எடுக்கும் சுவாசம் எல்லாம்
7.உம் உயிர் ஆத்மாவின் அமில வட்டத்தில் ஞானத்தின் சக்தித் தொடரை ஈர்க்கும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.

ஞானத்தின் வழித்தொடர் பெற்று விட்டால் நம் எண்ணமும் செயலும் ஞானமாகி அதன் தொடர்பிலேயே பல நிலைகளை நாமும் உணர்த்திடலாம். இத்தொடரின் வழியினால் நம் ஆத்மா நம் நிலையில் அக்காற்றுடன் காற்றாய்ச் செயல் கொள்ளும் பக்குவத்தை நம் எண்ணத்தினால்தான் செயல்படுத்திட முடியும்.

உயிரணுவாய்த் தோன்றிய நிலையிலே ஈர்க்கும் நிலைப்படுத்தி அவ்வுயிரணு தோன்றிச் சேமித்துச் சேமித்துப் பழக்கப்படுத்திப் பல நிலைகளை ஈர்த்த பின்னும்… மனித ஆத்மாவாய்ப் பல நாள் சேமிப்பின் அமிலத்தை வளர்த்துக் கொண்டுள்ள மனித ஆத்மாக்களை…
1.தன் ஆத்மாவைக் காற்றுடன் கலக்கவிடும் பக்குவத்தை உணர்ந்து செயல்படுத்தினால்
2.ஞானம் என்ன…? சித்தென்ன…? சப்தரிஷிதான் என்ன…? சகலத்திலும் சகலமாய் உள்ள ஆதி சக்தியுடனே ஒன்றிவிடலாம்.

பேரானந்த நிலை… தெய்வீக நிலை… என்பதெல்லாம் இன்று வாழ்க்கையில் நாம் காணும் “இம் மாயக் கனவு வாழ்க்கையில் இல்லை” என்பதனை நாம் உணரல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே உருவான உயிர் பல கோடிச் சரீரங்களை எடுத்துத் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன் முதல் மனிதன் அகஸ்தியன். அவனுக்கு எப்படிப் பேராற்றல்கள் கிடைத்தது…? என்று பார்ப்போம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் விஷம் கொண்ட மிருகங்களிடமிருந்தும் கொடூரமான பாம்பினங்களிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக
1.விஷங்களை வென்றிடும் தாவர இனங்களையும் பச்சிலைகளையும் மூலிகைகளையும்
2.தன் அருகிலே பரப்பியும் தன் உடலில் பூசிக்கொண்டும் வாழ்ந்து வந்தனர்
3.சந்தர்ப்பத்தால் அந்தத் தாய் கருவுறுகிறது… அகஸ்தியன் என்று சிசு உருவாகிறது.

கருவுற்ற தாயின் உடலில் பூசிய மணங்கள் உடல் வெப்பத்தால் வெளிப்படும் பொழுது அந்தத் தாய் அதை நுகர்கின்றது கருவில் இருக்கும் குழந்தையும் அதை நுகர்கிறது. விஷத்தை முறிக்கும் ஆற்றலாக அதற்குக் கிடைக்கின்றது.

தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைந்த குழந்தைக்குள் உருவாகி… உருவாகி…
1.தீமைகளை அகற்றும் நிலையும்
2.நஞ்சை அடக்கும் உணர்வுகளும்
3.ஒரு பொருளை அறிந்துணர்ந்து செயல்படும் ஞானமும் அங்கே வருகின்றது

உதாரணமாக… விஷம் தாக்கி விட்டால் சிந்தனை போய்விடும். ஆனால் விஷத்தை அடக்கும் பொழுது அதனின் செயலாக்கங்களை அறியும் ஆற்றலாக வரும்.

ஆகையினால் விஷங்களை நீக்கும் உணர்வுகளை அகஸ்தியனின் தாய் நுகரப்படும் பொழுது… அது இரத்தத்தில் கலந்து அதன் மூலம் சிசுவிற்குக் கிடைத்து
1.நஞ்சை அடக்கிடும் அரும் பெரும் சக்தியாக
2.வாழ்க்கையில் சிந்தித்து செயல்படும் உணர்ச்சிகளாக அகஸ்தியனுக்குள் அங்கே உருப்பெறுகின்றது.

அகஸ்தியன் என்று அவனுக்குப் பெயர் வரக் காரணமே அணுவின் இயக்கங்களை அறிந்துணர்ந்து அதனின் ஆக்கச் செயல்கள் எது…? என்றும் அவன் உணர்ந்தவன் என்பதனால் தான்..!

சாதாரணமாக ஒரு பச்சிலையின் மணத்தை நாம் நுகர்ந்தால் அந்த ஞானவழிப்படி தான் நாம் செயல்படுவோம். அதே போன்று ஒரு நறுமணமான பூவை நுகர்ந்தால் அதன் மணம் அதனின் ஞானத்தின் வழி நம்மை மகிழ்ச்சி பெறச் செய்கின்றது.

மற்றவரிடம் ரோஜாவின் மணம் எப்படி இருக்கிறது தெரியுமா…? என்று இந்த மகிழ்ச்சியான உணர்வைச் சொன்னபின் கேட்போர் உணர்வுகளிலும் அதே மகிழ்ச்சி வருகின்றது. அவருக்குள்ளும் அந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.

காரணம்… இந்த ஞானம் “ஆயுதமாக…” அவருக்குள் இயக்கப்படுகின்றது.

அதே போல் ஒரு மிளகாயிற்குள் காரம் மறைந்திருக்கின்றது. ஆனால் தெரியாமல் கடித்தவுடன் “ஆ…” என்று அலறுகின்றனர்.

இந்த உணர்வின் ஒலியைக் கேட்டவுடனே அடுத்தவருக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அவர் மீது இவருக்குப் பரிவு இருந்தால் உடனே தண்ணீரை எடுத்துக் கொடுக்கச் சொல்லி அதைத் தணிக்கச் செய்கிறது.

தவறான நிலைகள் கொண்டு ஆசையில் எடுத்து அவர் மிளகாயைக் கடித்து விட்டாலும் கூட… ஏம்ப்பா…! பார்த்துச் சாப்பிடக் கூடாதா..? என்று சொல்லச் செய்கின்றது.

காரணம் இந்த உணர்வுகள் அங்கு எதிர் நிலையாகப் படும் பொழுது இந்த உணர்ச்சியின் தன்மை பெறுகின்றது.

அவன் அறியாது உட்கொண்டாலும் பார்த்துச் செய்யப்பா…! என்று சொல்லி உடனே தண்ணீரை எடுத்துக் கொடுப்பது… ஞானம் “சரஸ்வதி…” பாசத்தால் இப்படி அவனை அமைதிப்படுத்தும் நிலைகளுக்கு உதவுகின்றது இந்த உணர்வின் ஞானம்.

இப்படிப் பல கோடித் தீமைகளை அகற்றிடும் ஞானம் பெற்றுத் தான் நாம் ஒவ்வொருவரும் மனிதனாக இன்று வளர்ச்சி அடைந்து வந்துள்ளோம்.

உதாரணமாக…
1.வான்வீதியில் மின்னல்கள் பாயும் பொழுது அங்கே இருள் மறைகின்றது.
2.பளீர்…ர்ர்… என்று ஒளி தெரிகின்றது. ஆனால் அந்த மின்னலும் விஷமே…!

அந்த மின்னல் ஊடுருவி மற்றொன்றோடு தாக்கப்படும் போது
1.அதையும் ஒளிக் கற்றையாக… ஒளியாக மாற்றுகின்றது.
2.அதிலிருக்கும் விஷத்தை அடக்கி தனக்குள் அந்த ஒளியின் அணுவாக மாற்றுகிறது.

விஷத்தை அடக்கும் சக்தியைத் தாய் கருவிலேயே அகஸ்தியன் பெற்றதனால் அந்த உணர்வின் வலிமை கொண்டு மின்னலிலிருந்து வரக்கூடிய விஷத்தைத் தனக்குள் அடக்கி உடலில் இருக்கும் அணுக்களை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றான்.

உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்தாலும்… சந்தர்ப்பம் தாய் கருவிலேயே விஷத்தை அடக்கும் சக்தியை அகஸ்தியன் பெற்ற நிலையில்
1.அந்த வினைக்கு நாயகனாகத் தீமையை அடக்கும் உணர்வின் ஒளியாக அது செயல்படுகின்றது…
2.அதனின் ஞானமாக அது இயக்குகின்றது… அவ்வாறு பெற்று வளர்ந்தவன் தான் அகஸ்தியன்.
3.இன்றும் அவன் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமையை அகற்றும்… எதையுமே ஒளியாக மாற்றும்…! என்று தெரிந்து கொண்டோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுக்கப் பழகிக் கொண்டால் அகஸ்தியன் ஒளியாக ஆனது போன்று நாமும் ஆக முடியும்.

மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்

 

ஒருவன் தவறு செய்கின்றான் என்று பார்க்கின்றோம். ஆனால் தவறை அவன் நமக்குச் செய்யவில்லை. பிறருக்குத் தவறு செய்கின்றான் என்ற உணர்வினை நுகரப்படும் பொழுது அந்தத் தவறின் உணர்ச்சிகள் நமக்குள் வந்து தவறு செய்கின்றான் என்பதை உணரச் செய்தாலும் அந்தத் தவறின் உணர்ச்சிகளை ஊட்டினாலும் அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கும் அதே உணர்ச்சிகளை ஊட்டித் தவறு செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக நம் அணுக்களை மாற்றி விடுகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள். விஞ்ஞான உலகில் தான் இன்று வாழ்கின்றோம் நாம் எப்படி வாழ வேண்டும்…?

1.ஒருவரை நாம் பார்க்கப்படும் பொழுது அவருடைய தீமை நமக்குள் வந்தால் அதை எப்படி மாற்ற வேண்டும்…?
2.தவறு என்ற அந்தச் சிறு திரையை நாம் நீக்க வேண்டும்… திரையை நீக்கித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்
3.நம்முடைய ஆன்மாவில் அத்தகைய தீமைகள் பட்டால் மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்.

முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டால் “துடைத்த பின் தான்” முகம் தெரிகின்றது.

அழுக்குப் படும்போது நம்முடைய மனது பிறருடைய மனதை அறிய முடியாதபடி நம்மை அறியாமலே வேதனைப் படும் பொழுது என்ன செய்வது…? என்று அறியாதபடி அந்த வேதனைகள் தூண்டப்பட்டு தீமையைத் துடைப்பதற்கு மாறாகக் கண்ணாடியை உடைக்கும் தன்மை வந்து விடுகின்றது.

கண்ணாடியை உடைத்து விட்டால் என்ன செய்யும்…? முகத்தைப் பார்க்க முடியுமா…? இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நமது வாழ்க்கையில் சதா இது நடந்து கொண்டே இருக்கின்றது.

இதை அவ்வப்பொழுது நாம் மாற்றிப் பழக வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி இத்தகைய இருளை எல்லாம் வென்ற ஒரு நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வினை உடலுக்குள் சேர்த்து நம் ரத்தங்களிலே கலக்கச் செய்து இருளை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இதைச் செய்து பழகுதல் வேண்டும்

ரோட்டிலே செல்லுகின்றோம்… உடையில் தூசி படுகின்றது… துணியைத் துவைத்து விடுகின்றோம். ஏதோ ஒரு பொருளைத் தொடுகின்றோம் அழுக்காகி விடுகின்றது… சாப்பிடுவதற்கு முன் நம் கையைக் கழுவிக் கொள்கின்றோம்.

ரோட்டிலே ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் பார்க்கின்றோம். அதை நுகர்ந்த பின் இரத்த்த்தில் அழுக்காகப் படுகின்றது. அந்த வேதனையைத் துடைக்க வேண்டும் அல்லவா.

நல்ல உணர்வுகள் இருந்தாலும் பிறருடைய உணர்வுகள் அந்த நல்ல குணங்களிலே சித்திரையாக அதை மாற்றி விடுகின்றது.. சிறு திரையாக மூடுகின்றது.

அந்த வேதனை உணர்ச்சி தான் முன்னணியில் வருகின்றது. ஆனால்
1.அதை நீக்க வேண்டும் என்று நிலைகள் தான் வரவேண்டும்.
2.அதை நீக்க வேண்டும் என்றால் வேதனைகளை எல்லாம் நீக்கியது துருவ நட்சத்திரம்
3.அதை நுகர்ந்து இரத்தத்தில் கலந்து தீமைகளைப் பிரித்தல் வேண்டும்.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலை

 

ஒவ்வொரு மதத்தவரும் ஆண்டவனை அவரவர்கள் உணர்ந்த நிலையில் உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். அனைத்து ஆத்மாக்களுக்குமே நல்லுணர்வு பெற வேண்டும் என்று அவர்களை அறியாமலே அவர்களுக்குள்ளும் ஓர் எண்ண நிலை ஓடிக்கொண்டுதான் உள்ளது. ஆனால் அவரவர்கள் வளர்ந்த நிலையினால் செயல்படுத்த முடியவில்லை நல்லுணர்வுகளை.

பல காலமாய் நல்லுணர்வு கொண்ட சப்தரிஷிகளும் பல மகான்களும் இவ்வாத்மாக்களை நல்லுணர்வு படுத்திடப் பல உடல்களை ஏற்றும் பல எண்ணங்களில் பக்தியைச் செலுத்தியும் இன்றளவும் செயல் கொண்டுள்ளார்கள்.

ஆனால் இம் மகான்கள் எல்லாம் ஏன் பிறப்பில் வந்து செயலாக்குவதில்லை…?

1.சப்தரிஷியாய்… சகலத்துடன் கலந்திட்ட ஒளி பிம்ப சக்தி பூண்ட ஆண்டவன்களெல்லாம் பிறப்பில் வருவதில்லை.
2.பிறப்பில் வரும்பொழுதே இவ் ஆண் பெண் என்ற இச்சையில், ஆசையில் உட்பட்டால் அவர்கள் பெற்ற சக்தி தடைபடுகிறது.
3.ஒவ்வோர் ஆத்மாவும் பிறப்பிற்கு வரும்பொழுது முன் பிறப்பு நிலை மறைக்கப்படுவது இவ் இச்சை நிலையினால் தான்.

பிறப்பிற்கு வந்துவிட்டால் முன் ஜென்மத்தில் முந்தைய நாட்களில் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும்
1.இப்பிறப்பு என்று ஆசைப்பட்டவுடனே பெற்ற பலன் சிதறுண்டு இவ்வுலக ஆசையில் சிக்குண்டு விடுகிறது.
2.அதனால் தான் எம் மகான்களும் பிறப்பில் வந்து பிறப்பதில்லை.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன். பதினாறாவது வயதில் ஈஸ்வரப்பட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல் கொண்டார்.

அந்நிலையில் அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை வெளிப்படுத்தினார், பைத்திய கோலம் பூண்டு. பல அன்பர்களின் இல்லத்தில் வைத்திய முறையை உணர்த்தியும் சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச் செய்வித்தும் அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.

அந்நிலையில் அவர்களுக்கும் பல ஆசை நிலைகளையூட்டி இவ் உலக மக்களின் பேராசையான தங்கம் என்ற உலோகத்தைச் செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின் மூலமாய் உணர்த்தி அவர்களின் ஆத்மா இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு அல்லல்படுவதையும் உணர்த்திட்டேன்.

1.எம்மை ஒரு கருவியாக்கி எம் சக்தியில் உள்ள பொருள் சக்தியைத்தான் அவ்வாத்மாக்கள் விரும்பினவே அன்றே
2.அழியாப் பொருளான ஆத்மச் செல்வத்தை யாரும் அங்கு விரும்பவில்லை.

பல இல்லங்களில் ஈஸ்வரப்பட்டரின் உடல் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தி ஞானத்தைப் போதிக்க முயன்றோம்.
1.எம்மிடம் உள்ள வித்தை என்ன…?
2.அதனால் பெறப்போகும் பயன் என்ன…?
3.பயன் என்பதையே அழுகிப் போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா…!

அந்நிலையில்தான் வேணுகோபால நாயகனையும் பிடித்தேன்.

முன் ஜென்மத்தில், அவனது முன் ஜென்மத்தில் பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான். அஜ்ஜென்ம ஆசையில் இருந்து விடுபடாமல் வேணுகோபால பிம்ப உடலைக் கொண்ட ஜென்மத்திற்கும் வந்தான்.
1.அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே பல இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.
2.மற்ற ஆத்மாக்களாய் இருந்தால் இன்றைய இக்கலியில் மீளுவது கடினம்.
3.பல இன்னல்களைத் தந்துதான் அவனை ஞானத்தின் வழித்தொடர் அறிய வைத்தேன்.
4.பல காலமாய் இவ் இன்னலில் இருந்த பிறகுதான்… அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன்.

பல ஆசை நிலைகளையும் ஊட்டிவிட்டேன். இவ்வாத்மாவையே முடித்துக் கொள்ளலாம் என்னும் சங்கட நிலையையும் ஊட்டிவிட்டேன்.

பல ஊர்களுக்கு அலையவிட்டு ஒவ்வோர் ஆத்மாக்களின் எண்ண நிலை ஆசை நிலை அனைத்தையும் அறியச் செய்து… அவ் வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கிப் பல சக்திகளை வெளிப்படுத்திப் பல ஆத்மாக்களுக்கு ஞான வழித்தொடர் பெறும் நிலையை எல்லாம் செயலாக்கினேன்.

அந்நிலையில்தான் எமக்குச் சிஷ்யனாக்கி “அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம்” என்பதனை உணர்ந்து ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலேயே விட்டுப் பிரிந்தேன்.

அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது. ஈஸ்வரப்பட்டரின் உடலில் இருந்து பிரிந்து வேணுகோபாலின் மூலமாய் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை உணர்த்தி வருகின்றேன்.
1.எம்மைப் போலுள்ளவர்களின் நிலையெல்லாம் இவ்வாத்மாக்கள் எங்கெங்கு உள்ளனவோ
2.அங்கெல்லாம் ஒவ்வொரு ரூபத்தில் மனித ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்க பல செய்திகளைச் செய்விக்கின்றோம்.

வேணுகோபாலனைக் கருவியாக்கித்தான் ஞானத்தின் வழித்தொடரைச் செயலாக்கும் ஆத்மாவாய் உணர்ந்தே அவரால் இவ்வுலகிற்குச் செயல்படுத்துகின்றேன்.

பல ஆத்மாக்களை இவ்வுலகில் உள்ள பொழுது அவரை ஏன் செயல்படுத்தினீர்…? என்ற வினாவும் எழலாம்.

அவரது எண்ணமே எம் எண்ணத்தின் தொடர்பு கொண்டதாயும் அவர் செயலாற்றும் வழியும் சத்திய நெறியும்தான் அவ்வாத்மாவை யான் ஏற்று அவ்வாத்மாவின் சக்தியினால் இவ்வுலகத்தை சக்தி நெறியில் ஈர்க்கச் செயல் கொள்கின்றேன்.

அனைத்து ஆத்மாக்களுமே எமக்கு ஒன்றுதான். எம் செயலை வெளிப்படுத்திட உடல் ஆத்மா ஒன்று தேவை.
1.எம் செயலை ஈர்க்கும் ஞானத்தின் சக்தியைத்தான் எம் செயலுக்குகந்த சக்தியாய் ஏற்க முடிந்தது
2.அவ்வாத்மா வேறல்ல யான் வேறல்ல…! என்ற நிலையில் ஐக்கியப்பட்டே “எம் செயல் நிலை இனி இவ்வுலகினில் நடந்திடும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு பேர் நீங்கள் சண்டை போடுகிறீர்கள் என்றால் அந்தச் சண்டையிட்ட உணர்வுகள் இருவர் உடலிலும் இருக்கின்றது. இருந்தாலும் அவர் மீது நீங்கள் வெறுப்பாக இருக்கின்றார்கள்.

அவருக்கும் உங்களுக்கும் சேர்த்த நண்பர் இங்கே வருகிறார். இவர் எதிர்பாராதபடி அந்தப் பழைய நண்பரைச் சந்திக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நான் ஊருக்குப் போயிருந்தேன். உங்களை இந்த மாதிரி மோசம் செய்துவிட்டுப் போன நண்பன் இப்பொழுது அங்கே நன்றாக இருக்கின்றான்…! என்று சொன்னால் போதும்.

உடனே உணரச்சி வசப்படுவீர்கள். பாவிப்பயல்… அவனெல்லாம் உருப்பட மாட்டான்…! என்ற இந்த உணர்வு தோன்றியவுடன் எதிர்நிலையாகிறது.

தூண்டியவுடன் இந்த உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?

1.இதே உணர்வு கண்ணின் நினைவு அங்கே ஓடுகின்றது.
2.ஏனென்றால் சொன்னவுடன் பார்க்கலாம்… அந்த உருவம் தெரியும்.
3.உணர்ச்சிகள் (அலைகள்) அங்கே போகும்… திடீரென்று அவனுக்கும் உணர்ச்சிகள் தாக்கிய உடனே
4.எதிர்பாராத இந்த நினைவு அவனுக்கும் வரும்… பார்க்கலாம்.

அதனின் நினைவு வரப்படும் போது நம் உருவம் அங்கே தெரியும். இந்த உணர்ச்சிகள் அங்கே சென்ற பின் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்றால் உள்ளே சாப்பாடு போகாது.

ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை குறைந்து ஓரத்தில் போய்க் கொண்டிருப்பவன் திடீரென்று நடுரோட்டுக்குச் செல்வான்… விபத்து ஆகிவிடும்.

காரை ஓட்டிச் சென்றால் விபத்து ஆகிவிடும். ஒரு எலக்ட்ரிகல் வேலை செய்து கொண்டிருந்தான் என்றால் சிந்தனை இழந்து ஷாக் அடித்துவிடும்.

இது எல்லாம் “புரை” என்ற நிலையின் இயக்கங்கள். வெறுப்பின் தன்மையால் மட்டும் தான் இது போன்ற கெடுதல் செய்யவில்லை.

பாசத்துடன் இருக்கின்றோம்… வெளி ஊரிலிருந்து பையன் தகவல் கொடுக்கவில்லை… அவன் பேசவில்லையே… என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

இந்த உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அவன் சாப்பிடும் பொழுது இதே உணர்வு புரை ஓடும்.
1.பாசத்தினால் உணர்வின் வேகங்கள் கொண்டு
2.வேதனை என்ற உணர்வு கலக்கப்படும் போது உறுப்புகளின் இயக்கச் சக்தியும் குறையும்.

பிள்ளையை எண்ணி வேதனைப்படும் சமயத்தில் ஒரு கணக்கை நீங்கள் எழுதிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…? கணக்கைத் தவற விட்டு விடுவோம்… ஆபீசில் குற்றவாளி ஆகி விடுவோம்.

தினசரி தகவல் கொடுக்கக் கூடிய பையன் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆச்சோ…? ஏது ஆச்சோ…? என்று எண்ணினால்
1.அந்தச் சந்தர்ப்பம் அவன் மீது இருக்கும் பிரியத்திலே வேதனைப் படும்போது
2.பாசத்திலே கலந்து இது தாக்கப்பட்ட உடனே
3.நாம் பார்த்துக் கொண்டிருந்த கணக்கே தவறாகி விடுகிறது.
4.அங்கே அவனுடைய செயலையும் குன்றச் செய்கின்றது.

இந்த மாதிரி இயக்குகிறது. ஐயோ நான் நினைத்தேனே… நான் நினைத்த மாதிரி என் பையனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்கிறோம் அல்லவா..!

குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிள்ளை படிப்பிலே ஒரு மக்காக இருக்கின்றானே. இவன் என்றைக்குத் தான் நன்றாகப் படிக்கப் போகின்றானோ…? என்று இந்த வேதனைப்படும் நிலைகளைச் செயல்படுத்தினால் இந்த உணர்வுகள் பாய்ந்து அவனுடைய நல்ல சிந்தனையை அது குறைக்குமே தவிர நல்லதாக ஆக்காது.

1.அவன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்… உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று
3.நாம் யாராவது சொல்கிறோமா என்றால் இல்லை…!

இப்படியே இருக்கின்றான்… சரியான ஞாபகசக்தி வர மாட்டேன் என்கிறது என்ற இந்த உணர்வை எடுத்துப் பாய்ச்சும்போது கொஞ்ச நஞ்சம் இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளின் இயக்கமும் தடைபட்டுப் பாடம் சுத்தமாக வருவதில்லை.

பள்ளிக்கூடம் போகச் சொன்னால் போகவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான். காரணம்…
1.நம்முடைய ஆசை உணர்வின் வேகம் இந்த மாதிரிப் பாய்ச்சுகிறது.
2.நம் உடலில் விளைந்தது எதுவோ இந்தப் பாசத்தினால் தவறாகிவிடுகிறது.

பையன் படிக்கவில்லை என்று அவனை நாம் வெறுத்தோம் என்றால் “பள்ளிக்கூடமே நான் போகவில்லை…!” என்பான். ஆக மேலும் மேலும் படிப்பு குறையும்.

இது எல்லாம் ஒருவருக்கொருவர் இணைந்து வாழும் நிலையில் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் தாக்கப்பட்டுக் கெடுதலாக மீண்டும் நமக்கே எப்படி வருகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.

ஈஸ்வரமங்கலம்

 

ஈஸ்வரபட்டர் என்ற நாமமுடைய உங்களினால் குருவின் குருவாய் சூட்சும நிலை கொண்டு காணும் எம் நிலையை அறிய…
1.எம் நிலை என்பது “ஈஸ்வரப்பட்டர்” என்ற நாமகரணம் கொண்ட அவ்வுடல் ஆத்மாவில் யாம் செயல் கொண்டதையும்
2.எம் சக்தி நிலையை எந்நிலையில் உணர்த்தி வந்தோம்…? என்பதனை அறியவும் அனைத்து ஆத்மாக்களுக்குமே ஆசை உண்டு.

இன்று கர்நாடக மாநிலம் ஆகியுள்ள அம் மாநிலத்தில் மங்களூருக்கு அருகில் கன்னட பிராமண குடும்பத்தில் பல நாள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தில் முதல் மகனாய் ஜெனனம் பெற்றேன்.

ஈஸ்வரமங்கலம் என்ற ஊரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள கிராமத்தில்… பாக்குத் தோட்டங்கள் விவசாயத்தில் முக்கியத்துவம் உள்ள கிராமத்தில் அவ்வூரின் நாமம்… அவ் ஊரில் உள்ள கோவிலின் நாமம்… அங்குள்ள குடும்பங்களின் நாமம்… எல்லாமே “ஈஸ்வர நாமத்தை” முதன்மை பெற்ற உள்ள சிற்றூர் அது.

பல காலம் புத்திர பாக்கியம் இல்லாமல் பிறந்த ஈஸ்வரப்பட்டன் யான். யான் பிறந்து சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட்டார். தாயினால் வளர்க்கப் பெற்று தாயின் ஜீவிதம் கொண்டு சிறு கல்வியறிவும் பெற்று வளரும் பக்குவத்தில் தாயும் இறந்தார். சகோதர சகோதரிகளின் பாக்கியமும் பெறாமல் தனித்து விடப்பட்டேன் கோவிலில்…!

ஈஸ்வரர் கோவிலில் “அவ்வாண்டவனே அனைத்தும்…” என்ற நிலையில் எண்ணம் குன்றி… ஜீவிதத்திற்கு வழி அறியாமல் அவ்வாண்டவனை பூஜிப்பதிலேயே எம் ஜீவன் பிரிந்தது.

எம் ஜீவன் பிரிந்த நிலையில்
1.என் உடலை… ஒரு மகான் ஏற்றுக் கொண்டே
2.என்னையும்… என்னையும் என்பது பிரிந்த என் உயிராத்மாவை அம்மகான் அவ்வுடலைச் செயல்படுத்த ஏற்றுக் கொண்ட நிலையில்
3.அவ்வுடலில் நான் விட்டுப் பிரிந்த உடலில் அம் மகானினால் அவ்வுடலுக்கு ஈர்க்கப் பெற்று
4.அம்மகானே எம் உயிரையும் எம் உடலையும் வழி நடத்தி எம்மை… எம்மை என்பது ஈஸ்வரப்பட்டர் என்ற உடலைச் செயலாக்கினார்.

பதினாறாவது வயதில் பழனிக்கு வந்தோம்…! “வந்தோம்” என்பதின் பொருள் புரிந்ததா…? எம் உடலை ஏற்ற அம்மகானின் செயல்நிலை வெளிப்படும் நிலையிலிருந்து
1.நான் வேறல்ல அம்மகான் வேறல்ல என்ற நிலையில்
2.அம்மகானே தான் எல்லாமில் எல்லாமாய் செயல் கொண்டார்.

மகான் என்பது ஒளியுடனே ஒளியாய் அனைத்திலும் கலந்துள்ள அவ்வாதவனான சூரிய மகான்தான்… இவ் உடலை ஏற்றுச் செயல் கொண்டார்.

இனி யான் என்று ஈஸ்வரப்பட்டரின் எம் நாமத்தை எனதாக்கிச் செப்பிட யாதுள்ளது…?
1.அவ்வாதவனுக்கே அர்ப்பணித்த உடல்
2.அவ்வாதவனிடம் ஐக்கியப்பட்டுவிட்டது எம் உயிராத்மாவும்.

மகான்களின் நிலை எல்லாம் பிற உடலை ஏற்றுத்தான் சில நிலைகளை அவர்களின் ஒளி வட்டத்திற்குள் மற்ற உயிரணுக்களையும் சேர்த்திடச் செயல் கொள்ளும்.

இப்பூமியில்… இப்பூமி உயிராத்மாக்களை வளரவிட்ட காலம் தொட்டே மகான்களாய் சக்தி பெற்ற பல ஆத்மாக்கள் உள்ளன.

அவ்வாத்மாக்களின் நிலை பெற்ற மகான்கள் எல்லாம்
1.அவர்கள் பெற்ற சக்தியை இவ்வுலகினில் “ஒவ்வொரு ரூபத்தில்” இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டேதான் உள்ளனர்
2.மற்ற ஜீவ ஆத்மாக்களின் மூலமாய்த்தான் அவர்களின் செயல் நிலையெல்லாம் கலந்திருக்கும்.

போகர் எப்படி முருகா என்ற பிரணவ நாமத்தையும் இன்னும் இவ்வுலகினில் அங்கங்கு இப்பக்தி நிலைக்கு தனக்குகந்த நாம சக்தியைச் சுழலவிட்டே எண்ணங்களுக்கு பக்தி நிலையூட்டி… அப்பக்தி நிலையில் ஈர்ப்பு நிலை கொண்ட நல்ல ஆத்மாக்களையெல்லாம் அவ்வாத்மாக்கள் ஜீவன் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை நிலையிலேயே… இவரின் ஒளி வட்டத்தைப் பாய்ச்சி இவரின் ஈர்ப்புக்குள் பல ஆத்மாக்களை ஒளியாக்கிக் கலக்கச் செய்து கொள்கின்றார்.

“ஓம் முருகா…” என்ற அந் நாமத்திலேயே அவரின் ஒளியைப் பாய்ச்சி ஒளியை ஈர்த்து ஒன்றைப் பலவாக்கி பலவற்றை நிறைவாக்கிக் காண்கின்றார்.

ஒவ்வொரு மகானும் இந்நிலையில்தான் அவர்களின் நல் உணர்வை நலமாகப் பரப்பிட ஒவ்வொரு நாமத்தை ஆண்டவனாய் வெளிப்படுத்தி இம் மனித ஆத்மாக்களை நல்லுணர்வாக்கினார்களேயன்றி… இன்று நாஸ்திக வாதத்தில் கேட்கப்படும் இந்து மதத்திற்கு ஏன் இவ்வளவு ஆண்டவன்கள்…? என்ற வினா எழுப்பப்படும் நிலைக்காக அல்ல.

இந்து மதத்தின் உண்மை நிலை இதுதான்.

1.ஒவ்வோர் உயிராத்மாவும் நல் நிலை பெற்று
2,அந் நல்லதையே அனைவருக்கும் உணர்த்திடத் தன்னையே ஒளியாக்கி
3.அவ்வொளியையே அனைத்திலும் காணப் பல ரூபங்களைக் கல்லிலும் மண்ணிலும் வடித்து
4.இம் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை அவ்வொளி வட்டமுடன் நல்லுணர்வு பெற வேண்டும் என்ற நிலைப்படுத்தி வந்த நிலைதான்
5.இந்து மதத்திலுள்ள “இப் பல ஆண்டவங்களின் நிலை…”

“நம் உயிரை…” குருவாக மதித்து ஈசனாக மதித்து நாம் வாழ்தல் வேண்டும்

 

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி… உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் உங்கள் உயிரை குருவாக இருக்கிறது என்று எண்ணி உங்கள் உயிரை “குருவாக மதித்து… ஈசனாக மதித்து…” வாழ்தல் வேண்டும்.

ஆலயங்களில் ஈசனுக்கு எப்படி அடிபணிகின்றோமோ இதைப்போல
1.நம் உயிருக்குத் தீமை என்றோ தீமையான சொல் என்றோ இவையெல்லாம் நாம் நுகர்ந்தால்
2.நம் உயிரிலே பட்டு உயிரான ஈசனுக்குத் தீமையின் உணர்ச்சிகளை ஊட்டப்படும் பொழுது
3.ஈசனுக்கே தவறு செய்கின்றோம் என்ற பொருளாகின்றது.

அதே சமயத்தில் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது. ஆகவே குருவுக்கு இன்னலோ சலிப்போ சங்கடமோ ஏற்படும் நிலைகளை நாம் செய்தல் ஆகாது.

ஆகவே நமது உயிரை ஈசனாகவும் குருவாகவும் மதித்து நடத்தல் வேண்டும்.

சஞ்சலத்தையோ சங்கடத்தையோ கோபத்தையோ குரோதத்தையோ பகைமையோ இதைப் போன்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1.உயிரான ஈசனை அசுத்தப்படுத்துகிறோம் என்று பொருள்.
2.உடலில் உள்ள அனைத்து குணங்களுக்கும் உயிர் உருவாக இருப்பதனால் “குருவுக்குத் துரோகம் செய்கிறோம்” என்று பொருள்.

ஏனென்றால் இதே உயிர் தான் பல கோடிச் சரீரங்களைக் கடந்து கடந்து ஒவ்வொரு சரீரத்திலும் தான் எடுத்துக் கொண்ட உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து… நுகர்ந்த உணர்வுகளை அதற்குத் தக்க உறுப்புகளை மாற்றி… உடல்களை மாற்றி… குணங்களை மாற்றி… மனிதனாகும் பொழுது இவையெல்லாம் தீமை என்று நினைத்துத் தீமையை அகற்றக் கூடிய வல்லமை பெற்றது “ஆறாவது அறிவு…”

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிடும் உணர்வினை உயிர் தான் உருவாக்கியது.

நஞ்சினை மலமாக மாற்றப்படும் பொழுது நஞ்சு என்ற நிலையோ தீமை என்ற நிலையோ நாம் நுகர்ந்தறிந்தால் அந்தத் தீமைகள் உயிரான ஈசனுக்குப் படும்பொழுது அந்த நஞ்சினையும் அந்த உணர்வுக்கொப்ப அது உருவாக்கிவிடும்.

1.ஆகவே ஈசனாக மதிக்கத் தெரிந்த நாம் தீமை என்ற உணர்வுகளை நுகராது
2.அவ்வப்பொழுது மகரிஷிகள் உணர்வுகளை எடுத்து மனத்தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நம்மைக் கோபித்தவனின் உணர்வை நாம் பதிவாக்கினால் அது ஒரு ஸ்டேசனாக அமைகின்றது
1.அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் அங்கு இருக்கின்றது… நமது உணர்வும் அவனிடம் இருக்கின்றது.
2.என்னை இப்படி மோசம் செய்தான்…! என்று அவனை எண்ணினால் அந்த அலைகள் வரும்.

அதே நேரத்தில் அந்த உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?

அந்த உணர்ச்சிகள் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. நம்மை அறியாமலேயே தவறு செய்ய ஆரம்பித்து விடுகின்றோம் இதைப் போன்று உலகில் எத்தனையோ உணர்வுகள் நம்மை ஒவ்வொரு நிமிடமும் இயக்குகின்றது.

1.ஒரு விபத்தை நேரடியாகப் பார்க்கின்றோம்… அது ஒரு ஸ்டேஷன் ஆக அமைந்து விடுகின்றது
2.இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்… ஆத்திரமாக அது பதிவாகி ஒரு ஸ்டேஷன் ஆகிவிடுகிறது
3.ஒருவன் ஒருவனைக் கடுமையாக மிரட்டிச் செல்கின்றான்… அந்த அலைகள் இங்கே இருக்கின்றது… பதிவாகி ஒரு ஸ்டேஷனாக அமைகின்றது
4அந்த உடலிலிருந்து வந்த அலைகள் இங்கே இருக்கின்றது… அழிவதில்லை.

அவனுக்குள் விளைந்திருக்கின்றது… அவரிடம் இருந்து வெளிவருகிறது. நமக்குள்ளும் பதிவு இருக்கிறது. அந்த அலைகளை நுகரச் செய்கிறது அது அழிவதில்லை.

ஆனால் அதை அழிக்க வேண்டுமா இல்லையா…!

இது எல்லாம் நமக்குள் இருக்கும் போது என்ன செய்கின்றது…? நாம் சோர்வடையும் நேரத்தில் எல்லாம் காரமான உணர்ச்சி கொண்டு நம்மை இயக்குகின்றது.

1.திடீரென்று நமக்குக் கோபம் வரும்.
2.அந்த நேரத்தில் எதை எடுத்தாலும் அந்த வேகம் வரும்.

பெண்கள் வேலை செய்யும் போது பார்க்கலாம். காயை நறுக்கி மெதுவாகப் போட்டுக் கொண்டிருப்பார்கள். சோர்வடைந்த நேரத்திலே காயைத் தூக்கி எறிவார்கள்.

அதே போன்று பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தால் வித்தியாசமான உணர்வுகள் வந்தது என்றால் வடையைச் சட்டியிலே மெதுவாகப் போடுவதற்கு பதில் டப்… என்று போடுவார்கள்.

எண்ணெய் மேலே தெறித்துவிடும்.

இதை எல்லாம் செய்வது எது…? நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாம் அதை அடக்கப் பழக வேண்டும் அப்போது அந்த உணர்வுகள் அது நம்மை இயக்காது.

ரேடியோ டிவி ஸ்டேஷன்களில் சந்தோஷமாகப் பேசியதை ஒலி பரப்பு செய்கிறார்கள் என்றால் அதைக் கேட்கின்றோம்… பார்க்கின்றோம்.

ஒரு சில நேரங்களில் காரசாரமான உணர்வின் உணர்ச்சிகள் இன்னொரு அலைவரிசையில் வருகிறது என்றால் இதே அலைவரிசையில் சேர்ந்து வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

ஏரியல் அல்லது ஆண்டென்னா மூலம் தான் வருகின்றது.

அலைவரிசை அதிகமாக வந்து விட்டதென்றால்… வரக்கூடிய அதிர்வு அதிகமான பின் ஜிர்… என்று சத்தம் போடும். அலைவரிசையில் வரும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் வந்தாலும்
1.எலக்ட்ரிகல் என்று அந்த உணர்வலைகள் வரும்பொழுது எலக்ட்ரிக்கின் (நம் வீட்டில்) துணை கொண்டு தான் இயங்குகின்றது.
2.அதன் தொடர்புடைய ஏரியலின் நிலைகளில் வந்தாலும் இதனுடன் எர்த் (EARTH) ஆனபின்
3.இன்னொரு ஸ்டேசன் வலுவான நிலைகள் ஆன பின் அதை இழுத்து அந்த அதிர்வுகளையே (கர்… புர்… என்ற சப்தமாக) காட்டுகின்றது.

அதே போல் தான் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயக்கினாலும் ஒரு எதிர் உணர்வான எலக்ட்ரிக்கை அந்த எலக்ட்ரானிக் ஆக (உணர்ச்சியாக) மாற்றப்படும் போது
1.நம்முடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து
2.நம்மை அறியாமலே தவறான சொற்களை இயக்கி
3.தவறான செயல்களைச் செய்ய வைக்கிறது… நம்மை இயக்க வைக்கின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

துருவ தியானம்

 

தியானம் இருப்பவர் அனைவரும் காலையில் நான்கிலிருந்து ஆறரைக்குள் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானித்தோம் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள ஜீவ அணுக்களில் அதைப் பெறச் செய்யும் போது… ஏற்கனவே நமக்குள் சங்கடமான சலிப்பான வெறுப்பான வேதனையான பகைமையான எத்தனையோ வகையான கொடிய நோய்களை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் “நம் சுவாசத்தின் வழி உள்ளே செல்லாதபடி” அந்தத் தீமையான உணர்வுகளை தடுத்துக் கொள்ள முடிகின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இவ்வாறு வலுப்படுத்தும் போது
1.காலையில் 6 மணிக்கு எல்லாம் சூரியன் வெளிப்படும் பொழுது
2.நாம் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகள் ஒடுங்கி சூரியனின் ஈர்ப்பு வட்டதிற்குள் சென்றுவிடும்.
3.சூரியன் அதைக் கவர்ந்து தன் அருகில் கொண்டு சென்று அந்தத் தீமையான உணர்வுகளை அங்கே கருக்கி விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் வலுக் கொண்டு நம் மூதாதையர்களான முன்னோர்களின் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்தால்… உடலில் பெற்ற நஞ்சால் ஏற்பட்ட நோயை உருவாக்கும் நிலைகளை அங்கே கரைக்கச் செய்து விடுகின்றது.

உயிருடன் ஒன்றிய நல்ல உணர்வுகளை துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை அடையச் செய்கின்றது.

அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற உணவினை அடிக்கடி எண்ணினோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்
2.சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும் நம் உடலில் அவை எளிதில் பெறப்பட்டு
3.பரம்பரை நோய் பரம்பரைக் குணம் இது போன்ற தீமைகள் வராது தடுக்க முடிகின்றது.

அருள் மகரிஷிகள் உணர்வினை நமக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை அடையும் முழுமை அடைய இது உதவும்.

ஆகவே ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தை அனுதினமும் செயல்படுத்துங்கள். இந்த வாழ்க்கையில் பாக்கி எந்த நேரம் வேண்டுமென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் நம் உடலில் இரத்தத்தில் கலக்கச் செய்து தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ சங்கடமோ கோபமோ வேதனையோ, பயமோ இது போன்ற உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கி நம் ஆன்மாவை வலுப்படுத்தி
1.பயத்தையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் போக்கி சிந்தித்துச் செயல்படும் மன வலிமை பெற்று
2.பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளலாம்.
3.மன பலத்துடன் வாழலாம் பொருளறிந்து செயல்படும் திறனும் பெறலாம்.

இவ்வாறு செய்து வந்தால் தொழிலையும் சீராகப் பார்க்க முடியும் உடலையும் குடும்பத்தையும் பண்புடன் பார்த்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கையில் நிம்மதியும் இந்த உடலுக்குப் பின் என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவியில்லா நிலையும் இன்னொரு உடல் பெறாத நிலையும் அடைய முடியும்.

எல்லாம் அவனே…!

 

சுகம் துக்கம் சஞ்சலம் சாந்தம் சகலமும் கலந்த நிலை தான் ஒவ்வொரு மனித ஆத்மாவின் வாழ்க்கையிலும் நடைபெறுகின்றது. நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் நம் உடலுக்குகந்த அமிலத்தன்மை பெற்றுள்ளோம் என்பதல்ல.

ஒவ்வொரு மனிதனுக்கும் அம்மனித ஆத்மா பெற்ற நிலையில் இருந்தே… அவ் ஆத்மாவுக்குகந்த எண்ண சக்தியின் சுவாசத்திலிருந்துதான் அம்மனிதனின் உடல் உறுப்புகளும் அவ்வுடலின் பிம்பமும் அவ்வுடலின் வண்ணமும் அமைகின்றன.
1.எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாச நிலைக்கொப்பத் தான் உடலின் பிம்ப நிலையும்
2.அதற்குகந்த அமில சக்தியின் செயல் கொண்டு சேமித்த எண்ணத் தொடரின் நிலைகளும் அவ் உடல் பெறுகின்றது.

மேல் நோக்கிய சுவாசம் கொண்ட தாவர இனங்கள் அவற்றுக்குகந்த ஆகாரத்தைச் சுவாசமாய் மேல் நோக்கியே சூரிய வெப்பத்திலிருந்து இக்காற்றினில் கலந்துள்ள தனக்குகந்த ஆகாரத்தை ஈர்க்கும் தருவாயிலேயே ஒரு நிலை கொண்ட தனக்கு வேண்டிய ஆகாரத்தை மேல் நோக்கிச் சுவாசித்து ஆவியாக்கி ஈர்த்து அவ்ஆணிவேரின் நிலைக்குப் படர விட்டு பூமியில் வேரினுள் சேமித்துக் கொள்கின்றது.

மேல் நோக்கிய சுவாசம் பெற்ற தாவரங்களின் நிலைக்கொப்ப சக்தி நிலை ஜீவ ஆத்மாக்களுக்கு இல்லை.

நாம் உண்ணும் உணவில் இருந்து அவ்வுணவே அமிலமாகி, அவ்வமிலமே நம்மை வளர்க்கின்றது. நம் எண்ணமும் இவ் அமிலத்துடன் கலந்து செயல் கொள்கின்றது.

நம் மனித ஆத்மாவை நம் செயலுக்குகந்த நிலை கொள்ளும் பக்குவம் மேற்கொள்ள நமக்கு என்று நம் சக்தியை எவ்வெண்ணத்தின் சக்தியுடைய ஞானம் பெறும் நிலை எய்துகின்றோமோ அத்தொடர் பெற்றிட “நம் எண்ணத்தைச் சமமாக்கினாலன்றி” எந்நற்சக்தியின் வழித்தொடரை அடைவதும் சிரமம் கொள்கின்றது.

நம் ஆத்மாவை நாம் நற் ஜெப சக்தியின் வழி பெற்றிட நம் ஆத்மாவும் அப்பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலை எய்திட நாம் பக்குவ நிலை கொள்ளும் தருவாயில் நம் நிலையைக் கண்டு ஏளனம் செய்பவரின் எண்ணத்தையும் புகழ்பவரின் எண்ணத்தையும் நம் எண்ணத்துடன் மோதி விடலாகாது.

ஞானத்தின் வழித்தொடர் பெற்ற பின்…
1.சலிப்பு நிலையையும் சங்கட நிலையையும் பேராசை நிலையையும் நம்மை நாமே ஆட்படுத்திக் கொண்டிடலாகாது.
2.”பலருடன் கலந்து வாழ்ந்திட முடியவில்லையே” என்று ஏக்கப் பெருமூச்சம் நாம் சென்றிடும் சத்தியத்தின் வழிக்கு உகந்ததல்ல.

ஞானம் பெற்று நற் சக்தியை ஈர்த்தே சித்து நிலை பெறுவதற்கு
1.இவ்வெண்ணச் சிதறலை மாற்றியே சமமெய்திடும் முறை பெற்றே
2.நம் ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே…! என்னும் உணர்வு பெற வேண்டும்.

இவ் வாழ்ந்திடும் குறுகிய காலத்திற்காக நம் ஆத்மாவுக்கு உகந்த சக்தியைப் பெறாமல் சிதறவிட்டு வாழ்ந்திடாமல் நம் ஆத்மாவிற்குத் தான் நல் ஞானத் தொடர் பெற்று சத்தியத்துடன் கலக்கப் போகின்றோமே என்ற “நான்” என்ற நினைப்பும் சத்திய நிலைக்கு உகந்ததல்ல.

அனைத்து ஆத்மாவுடன் கலந்தே மற்ற ஆத்மாவிடமிருந்து ஒதுங்கிய நிலை பெறாமல் நம் ஆத்மாவிற்கு நற்சக்தியை சேமித்திடல் வேண்டுமப்பா.
1.உண்ணும் உணவும் அவனே
2.உணரும் உணர்வும் அவனே
3.எண்ணக் கலவையும் அவனே.
4.எடுக்கும் ஞானமும் அவனே
5.ஞானத்தின் சத்தியமும் அவனே
6.இவ்வுடலும் நம் உணர்வும் இவ்வுலகமும் மற்ற எதுவுமே நமக்குச் சொந்தமல்ல என்பதனை உணர்ந்து
7.அனைத்திலும் அனைத்தாக உள்ள அவ்வனைத்தாண்டவனுடன் ஒன்றிடும் பக்குவத்தை நாம் பெற்று
8.நம் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் நல்லெண்ணம் பெறும் சக்தி ஆக்கிட நம் சக்தியை வளர விடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) ஏட்டைப் படித்து இதைப் பேசவில்லை. குருநாதர் இந்த உலகின் நிலைகள் அக்காலங்களில் என்ன செய்தார்கள்…? என்று உணர்த்தினார். அதன் வழிகளில் தான் வெளிப்படுத்துகின்றேன்.

அன்றைய அரசர்களும் சரி… அதற்குப் பின் மக்களாட்சி என்று வந்தாலும் சரி… மதத்தின் பேரால் “உலகைக் காக்க…” என்று சொல்லி அவரவர் சுயநலன்களுக்கு என்ன செய்தார்கள்…? அப்படிச் செய்த அரசர்களோ அல்லது அந்த அரசியல் தலைவர்களோ இன்று வாழ்கின்றாரா…? இல்லை…!

1.எத்தகைய விஞ்ஞான நிலைகள் முன்னேற்றம் பெற்றாலும்
2.அல்லது வேறு எந்தத் துறையில் அறிவு பெற்றாலும்
3.இந்த உடலிலேயே எவரும் வாழ்ந்ததில்லை.

இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப… எந்த மதத்தின் அடிப்படையில் இங்கே வாழ்ந்தனரோ… அதே மதத்தின் எண்ணத்தால் இந்த ஆன்மா மற்றவர் உடலுக்குள் ஈர்க்க்கப்பட்டு எவ்வாறு செல்கிறது…? என்று நீ தெளிவாகத் தெரிந்து கொள்…! என்று குருநாதர் காட்டினார்.

ஆனால் இந்தப் பூமியில் தோன்றிய மனித உடல் பெற்றவர்கள்… உடலை விட்டு நீங்கியவர்கள் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விண்ணிலே இருக்கின்றார்கள். அப்படி விண் சென்றவர்கள் அக்காலத்தில் நிறைய உண்டு.

ஆகவே உனக்குள் நீ பெற வேண்டியது எது…? அதை எவ்வாறு பெற முடியும்…? என்று அந்த மெய் வழியினை உணர்த்தினார் குருநாதர்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்ற நிலைகளில் நாம் இன்றும் சொல்கிறோம்.

1.முதல் மனிதனாகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்
2.தன் சந்தர்ப்பத்தால் விண்ணுலகை எட்டிப் பிடித்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
3.துருவத்தில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக ஆனவன்
4.“இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான்” என்பதற்கே அவ்வாறு சொல்கிறோம்.

அவனில் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை தான் வான இயலின் தன்மையில் அவன் பறக்கும் நிலை கொண்டு செல்லும்போது எகிப்து என்ற நாட்டில் இதனின் உணர்வின் அலைகள் அங்கே அதிகமாகப் பரப்பச் செய்தான். விண் அறிவின் தன்மையை அங்கே தான் முதன் முதலிலே வருகிறது.

1.விண்ணுலக சாஸ்திரமும்… மணிக்கணைக்கைப் பார்ப்பதும் நம் தென்னாட்டில் இல்லை
2.ஆனால் எகிப்து என்ற நாட்டில் தான் இது உருவாக்கப்பட்டது.

ஆண்டுகளை… மாதங்களை… நாள்களை வடிவமைத்து… அந்தக் கணக்குகள் எல்லாம் அந்த நாட்டில் தான் ஆரம்பத்தில் செயல்பட்டது. அழியா நிலை பெற வேண்டும் என்று இவருடைய தத்துவமும் அங்கே வெளிப்பட்டது.

சூரியன் ஒளிக்கதிர்கள் படப்படும் போது அந்த ஒளியின் தன்மையைப் பிரித்தெடுத்து இந்த உடல்கள் அழுகிடாதபடி… இன்று எப்படி ஐஸ் பெட்டியில் (REFRIGERATOR) வைத்து நாம் பாதுகாத்துக் கொள்கின்றோமோ இதைப் போல
1.சூரியனின் கதிரியக்கங்கள் அது தாக்காமல் அது இடைப்படும் போது
2.அந்த உணர்வின் தன்மை பிரித்துக் கொண்டு பூமியின் நிலைகள்
3.நீர் நிலை கொண்டு குளிர்ச்சியின் தன்மை அடைந்து அந்தப் பொருள்கள் கெடாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையைச் செய்தனர்.

அதாவது அக்கால மெய் ஞான அறிவால் காட்டப்பட்ட நிலைகளை அரசர்கள் பிரமிட்டுகளாக உருவாக்கிக் கொண்டனர்.

சூரியனின் ஒளி இத்தனை டிகிரி இத்தனை சாயலில் வருகிறது என்றும்… இதனின் உணர்வின் தன்மை கொண்டு தான் மணிக்கணக்கை அறிந்ததும்… அதைப் போன்று சூரியனின் இயக்கங்களை அங்கே ஆரம்ப நிலைகளில் கண்டுணரப்பட்டது என்று ஈஸ்வரபட்டர் எமக்குக் காட்டினார்.

நான் (ஞானகுரு) சரித்திரப் பாட நிலைக்குச் செல்லவில்லை. குருநாதர் காட்டிய நிலைகளில்தான் நான் இதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு விஞ்ஞான அறிவும் இப்படித் தான் தொடர்ந்தது.

ஆனால் அதே சமயத்தில் நம் தென்னாட்டில் தோன்றிய மெய் ஞான ஆறிவின் தன்மை தான் உலகெங்கிலும் பரவி அங்கே தொடர்ந்த நிலை மீண்டும் இங்கே வருகிறது.

இதை எல்லாம் குரு காட்டிய வழியில் தொட்டுக் (SAMPLE) காண்பிக்கின்றேன்.
1.ஏனென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதை இணை சேர்த்துச் சொல்லும் போது தான்
2.உங்களுக்கு அதனின் காலத்திற்கு இது உகந்ததாக இருக்கும்.

அதற்குண்டான விளக்கங்கள் பதிந்த பின் உங்களுக்குள் இணைத்து வரும் போது “உலக அறிவுடன் ஒன்றி… இன்றைய இயக்கத்தின் நிலைகளைத் தெளிந்து கொள்வதற்கு இது உதவும்…!”

நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம்… “நம் வசப்படுத்தி” நல் அணுக்களாக்கிட வேண்டும்

 

மண்டலமாய்ச் சுழன்றாலும் மண்டலத்திற்கும் எண்ணமுண்டு சப்தரிஷிக்கும் எண்ணமுண்டு.

பரமாத்மாவின் நிலையுடன் ஐக்கியப்படும் நிலையென்ன…? சப்தரிஷியாய் சகலத்திலும் ஒளிந்து ஒளியாய்ச் செயல் கொண்டு சூரியனாய் ஒளி பெற்றாலும் அச்சூரியனக்கும் “தான்” என்ற நிலை வந்துவிட்டால் கோடி கோடி கோடி ஆண்டாய் பெற்ற சக்தியும் இழக்க நேரிடும்.

1.மனித ஆத்மாவாய் இருந்துதான் ஒளியுடன் கலந்திட முடியும்.
2.அவ்வொளியின் ஈர்ப்பினால் மண்டலமாய்ச் சுழன்று செயல் கொண்டிட முடியும்.
3.செயலிலேயே வழித்தொடர் பெற்றுச் சூரியனாயும் சூரியனுக்கு மேல் சக்தி பெற்ற பல சூரியனாயும் சுழன்றிட முடியும்.

அனைத்தையுமே செயல்படுத்திடும் அப்பரம்பொருளிடம் ஐக்கியப்படும் சக்தியைப் பெற்றிடும் சக்தியை அப்பரம்பொருளான அவ் ஆதிசக்திக்குதான் தெரிந்திடும் அனைத்துமே.

அவரவர்களுக்கு அளிக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டு “பல கோடி ஆண்டுகள்” வளர்ச்சியுறல் வேண்டும். இம்மனித ஆத்ம உடலிலேயே வளர்ச்சி பெற்றால் தான் நம் ஆத்மா ஒளியுடன் கலக்க முடியும்.

இச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் மிருக ஜெந்துவாகி மிருகத்திலிருந்து கொசுவாய்… புழுவாய் பிறிதொரு உலக மாற்றத்திலிருந்து இவ்வுயிரணுக்கள் உயிராத்மா நிலை பெற எண்ணிலடங்கா ஆண்டுகளாகி அச்சந்தர்ப்பத்தில் நம் ஆத்மா எய்தும் நிலையைக் கொண்டுதான், நம் நிலை உயர்ந்திட முடியும்.

இதனை உணர்ந்தே…
1.பரம்பொருள் என்பது யாது…?
2.அப்பரம்பொருளுக்கு என்ன ஏற்றத்தாழ்வு…?
3.ஆண்டவன் அளித்த கஷ்டம் என்று வாழ்க்கையை எண்ணாமல்
4.இன்று வாழும் நம் ஆத்மாவை நல்ஞானம் பெறும் நிலையை எய்திட நம் ஆத்ம நிலை எப்படிச் செயல் கொண்டிடல் வேண்டும்…?
5.எப்படி எப்படி நம் வாழ்க்கை முறை அமைய வேண்டும்…? என்பதனை உணர்ந்து
6.நம் சுவாசம் சத்தியத்துடன் கலக்கும் நிலையினை முதல் பாடமாய்ப் பெறும் வழியினை உணர்த்திடுவேன்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் அவ்வாத்மாவின் உடலில் பல உயிரணுக்கள் உள்ளன. எவ்வாத்மாவும் தனித்து வாழவில்லை என்பதனை முதல் பாடமாய் உணரல் வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் உள்ள உயிரணுக்கள் அவ்வாத்மாவின் எண்ணத்தைப் பல திசைகளில் மாற்றிச் சென்று வாழச் செயல்படுத்துகின்றது.

அவ்வுயிர் அணுக்களின் ஆசைக்கும் அதனுடைய தூண்டுதலின் சோர்வுக்கும் நம்மை அறியாமலே, நமக்குத் தெரியாமலே அடிமைப்பட்டு சிக்குண்டுள்ளோம்.

நம் ஆத்மா ஞானம் பெற்று ஒளி பெறும் நிலையினால் நம் உடலில் குடி புகுந்துள்ள பிற உயிரணுக்களுக்கும் நம்மால் விமோசனம் கிட்டும்,

1.நம் உடலில் உள்ள அமிலத்தை ஞானத்தின் அமிலம் ஆக்கி
2.பரமாத்மாவின் சொத்துதான் நாம் என்பதனை உணர்த்து
3.தீய எண்ணப் பேய்க்கு அடிமை கொண்டிடாமல் நம் ஆத்மா செயல்படுவதினால்
4.நம்முள் உள்ள பல கோடி உயிரணுக்களும் இவ்வெண்ணத் தொடரின் சக்தியினால் ஒளிர்ந்திடும்.

ஒவ்வோர் உடலில் இருந்தும் ஒவ்வோர் ஆத்மா பிரியும் பொழுதும் அவ்வுடலுடன் கூடிய உயிரணுக்களுக்கு அவ்வுடலில் எடுத்த சுவாசத்தின் வழித்தொடர் கொண்டே இக்காற்றினில் படர்ந்து சுற்றுகின்றது.

இப்பொழுது நாம் வாழும் இவ்வாழ்க்கை உடலில் உள்ள உயிரணுக்கள் இவ்வுடல் காலத்தில் மட்டும் நம் உடலில் ஏறவில்லை.

ஒவ்வோர் உயிரணுக்களுக்கும் எண்ணமுண்டு சுவாசமுண்டு அமில சக்தியுமுண்டு மனித ஆத்மாவின் உடலில் உள்ள இவ்வுயிரணுக்களினால் இம்மனிதனின் எண்ணத்தை அதற்குகந்த ஆசையின் நிலைக்கொப்பத் திசை திருப்பிட முடிந்திடும்.
1.நம் ஆத்மா செயல் கொள்ள முதலில்
2.நம் உடலில் உள்ள உயிரணுக்களைத் தான் “நம் வசப்படுத்திடல் வேண்டும்…”
3.நல் அணுக்களாய்ச் செயல் கொள்ளப் பக்குவம் பெறல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பெரும்பகுதியானவர்கள் எனக்கு வயதாகி விட்டது. அதனால் என் உடலில் நோய் வந்து விட்டது என்பார்கள். இப்பொழுது செய்ததனால் வந்ததல்ல அந்த உடல் நோய்.

இளமையிலிருந்தே ஏங்கிப் பெற்ற… சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்த தீமைகள் அதிலிருந்து விடுபட…
1.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் போது விதி என்ற நிலையாகி
3.விதிப்படி வினைகள் விளைந்து நோயாகி… வேதனையாக நமக்குள் வளர்க்கின்றது.

அப்படிப்பட்ட விதிப்படி விளைந்த உணர்வுகளை அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து “அந்த விதி என்ற இருளை நீக்கி அருள் ஞானியுடன் ஒன்றச் செய்வதே மதி…!” . மகரிஷிகளின் அருள் சக்தி என்ற மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.

தன் மதி கொண்டு தான் மனிதருக்குள் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது… எத்தனையோ அருள் ஞானம் உருப்பெற்றது.

ஆகவே… அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்துவோம். நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்… அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

ஏனென்றால் ஒவ்வொரு நோடியிலேயும் நம் வாழ்க்கையில் முன்பு செய்து கொண்ட வினையே (விதியாக) இது வருகின்றது.

ஒருவர் விபத்தில் சிக்கினாலோ அல்லது அதைக் கேட்டுணர்ந்தாலோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற்றால் நம் நல்ல குணங்களையும் அது இருள் சூழச் செய்து விடுகிறது.

அந்த விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… அதே நிலைகள் நம்மை இயக்கி நம்மை அறியாமலே சில நோய்கள் வந்து விடுகின்றது… விபத்தும் ஏற்பட்டு விடுகின்றது.

இதைப் போல் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று… அந்த வினைகளுக்கு ஆளாக்கி… அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகின்றது.

இதைப் போன்ற தீயவினைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

சுத்தப்படுத்திய பின்பு நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாம் எண்ணும் இந்த நல் உணர்வுகளை உயிர் நமக்குள் விளையச் செய்கின்றது. அந்த வலுவாக வளரச் செய்கின்றது.

எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறுவதற்குண்டான தகுதியை நாம் பெற வேண்டும்.

அதற்கு… நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

இந்த வாழ்க்கையில் வந்த இருளை வென்று அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து அறிவின் ஒளியாக நம் முன்னோர்களை நிலைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி நிலைக்கச் செய்து… அந்த அறிவின் ஒளியின் தன்மையை நமக்குள் பெறும் போது…
1.நம்மை அறியாது வரும் இருளை நீக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.
2.பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையும் நாம் அடையும் தன்மை பெறுகின்றோம்.

ஆகவே குருநாதர் நமக்குக் காட்டிய இந்த அருள் ஞான வழியில் செல்வோம்.

அகஸ்தியன் உணர்வை உனக்குள் நீ அணுவாக மாற்று…! என்று கூறினார் குருநாதர்

 

நம்மை மனிதனாக உருவாக்கியது நம்முடைய தாய் தந்தையர் தான். அவர்கள் தான் கடவுள். நம்மை தெய்வமாகக் காத்தருளியது அம்மா அப்பா தான் அவர்களே நமக்கு முதல் தெய்வம்…!

குருவாக இருந்து நமக்கு நல் வழி காட்டிய முதல் குரு தாய் தந்தையர் தான். ஆகவே அம்மா அப்பா அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.அகஸ்தியன் தாய் கருவிலே நஞ்சினை வென்று இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.
2.அவன் உடலில் விளைந்த இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்திகள் இங்கே உண்டு.

அதைப் பெறச் செய்யத்தான் என் குரு எனக்குள் பதிவாக்கினார்.

காடு மேடெல்லாம் சென்றேன்.
1.அகஸ்தியன் சென்ற இடத்திற்கெல்லாம் அலைந்து அந்த உணர்வினை நுகரச் செய்து அவன் அறிந்த அறிவை எனக்குள்ளும் அறியச் செய்தார்.
2.அகஸ்தியன் உணர்வை நீ அணுவாக மாற்று…! என்று கூறினார்.

காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… அந்த உணர்வுகளை அறிந்தேன் அதை வளர்த்தேன்… ஆனால் இப்பொழுது நீங்கள் இங்கிருந்து அதைப் பெறும்படி உங்களுக்குள் ஞான வித்தாக ஊன்றுகின்றேன்.

அகஸ்தியன் அருள் ஒளியைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது சேரும் இருளை அகற்றி மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்து வாழச் செய்யும்… “அப்படி வாழ்ந்திடும் அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்” என்று தான் இதை உபதேசிக்கின்றேன்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினை உயிருடன் ஒன்றி… “அகஸ்தியன் பெற்று இருளை அகற்றிய அந்த அருள் ஞானைம் என்னிலே விளைய வேண்டும்” என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி
1.உங்கள் நினைவனைத்தையும் அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்குச் செலுத்தி
2.அகஸ்தியன் பெற்ற அரும்பெரும் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானங்கள்.

அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது நஞ்சினை வென்று இருளை அகற்றி மெய் உணர்வை அறிந்து… தனது வாழ்க்கையில் மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.

அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வலைகள் இந்தப் பூமியிலே பரவி உள்ளது… அதை நாம் பெற வேண்டும். அகஸ்தியன் பெற்ற அவனில் விளைந்த அந்த அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.அவனின் வளர்ச்சியில் துருவனாகி அனைத்தையும் அறிந்து அணுவின் இயக்கத்தை உணர்ந்து
2.துருவத்தை உற்று நோக்கி துருவத்திலிருந்து நம் பூமிக்கு வரும் அரும் பெரும் சக்தியை அவன் நுகர்ந்து
3.அதன் உணர்வின் தன்மை தனக்குள் உணர்த்தித் தனக்குள் வளர்த்துக் கொண்டதை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஒவ்வொரு உயிரணுவும் “அது எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே”

 

எல்லாவற்றுடனும் எல்லாமாய்க் கலந்துள்ள அவ் எம்பெருமானின் நிலையில்
1.ஏன்…! எல்லாச் செயலும் அவனால் நடக்கப் பெற்றுச் செயல் கொள்ளக் கூடாதா…?
2.இவ் ஏற்றத்தாழ்வும் எண்ண மாற்றமும் எதற்கப்பா…?
3.எல்லாமும் அவனே என்றிருக்க எண்ணிய நிலை ஏன் நடப்பதில்லை…?
4.எண்ணமும் அவனே செயலும் அவனே…! எண்ணமும் செயலும் அவனாய் இருக்க
5.“அவனே ஏன் செயல் கொள்ளலாகாது…?” என்ற எண்ணமும் நமக்குள்ளே.

அனைத்துமே பரம்பொருள்தான். அப்பரம்பொருளின் பொருளாய் உள்ள அனைத்திற்கும் ஏற்றத்தாழ்வு நிலை ஏன்…?

1.அன்பாயும் ஆசையுடனும் அறநெறியுடனும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.
2.வாழ்க்கையையே இன்னலில் மூழ்கவிட்டு நரகமாகவும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.

எல்லாரும் எல்லாமுமாய்க் கலந்துள்ள அப்பரம்பொருளுக்கு ஏன் இம்மாற்ற நிலை…?

பரம்பொருளினால் படைக்கப் பெற்ற எல்லாப் பரம்பொருளுமே அவன் படைப்பில் சக்தி பெறச் செய்கிறான். அப்பரம்பொருளின் சக்தியில் சக்தி பெற்று வழித்தொடர் பெறும் பரம் பொருள்கள் அப்பரம்பொருளிடமே ஐக்கியப்பட்டு அதன் தொடர்ச்சியில் பல பரம்பொருள்கள் சுழன்று கொண்டே செயல் கொள்கின்றன.

உயிரணுவாய் உதித்துப் பல மாற்றங்களில் அவ்வுயிரணு செயல்பட்டு அதன் தொடர்ச்சியில் இருந்து உயிர் ஜீவிதம் பெற்று… இஜ்ஜீவிதத்தின் தொடரினால் ஜீவ ஆத்மாவாய் ஜீவ சக்தியுற்று இவ் ஆத்மா நிலை பெற்று…
1.ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவ்வாத்ம நிலையில் “ஏழு சந்தர்ப்பங்களில்தான்”
2.அவ்ஆத்மாவினால் நற் சக்தியான சூட்சுமம் கொள்ளும் வழித் தொடரை அடைய முடியும்.

உயிர் ஆத்மா பெற்ற நிலையிலிருந்து சேமிக்கும் அமிலத்தின் தொடர் இவ் ஏழு சந்தர்ப்பத்தைப் பெறும் வழித் தொடர் கொள்ளும் அமில சக்தியை இவ் ஏழு தொடரில் ஞானத்தொடர் வழியை அறிந்து… அத்தொடரையே தொடராக்கி சக்தி கொண்டிட்டால்… அந்நிலையில் சித்துநிலை பெற்று…
1.இவ்வாத்மாவைச் செயலாக்கும் சக்தியாய் மண்டல உருப்பெறும் நிலை கொண்டு…
2.ஒவ்வோர் உயிர் ஆத்மாவின் வட்டத்திலும் ஒவ்வொரு மண்டலமாகிடும் பக்குவம் பெற்று
3.மண்டலத்துடனே வளர்ச்சியுற்று அம்மண்டலமே உலகாய்ச் சுழன்று
4.பல உயிரணுக்களை ஈர்த்து வளர விட்டுச் செயல் கொண்டிட முடியும்.

இவ்வுலகில் மட்டுமல்ல பல கோடி மண்டலங்களும் இப்பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள எண்ணிலடங்கா ஜீவசக்திகளும் அப்பரம்பொருளினால் படர விட்டவைதான்.

கொசுவாயும் சாக்கடைத் திரவமாயும் உள்ளவையும் அப்பரம்பொருளின் ஐக்கியம் தான். ஜோதியுடன் ஜோதியாய் எரிந்திடும் கற்பூரமும் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான்.

அப்பரம்பொருளான அவ் ஆதிசக்தி அனுப்பிடும் உயிரணுக்களில் “அவையவை எடுக்கும் சுவாச சக்தியைக் கொண்டுதான்” அவரவர்களுக்கு அமையும் வாழ்க்கை நிலையும் செயல்முறையும் வந்திடும்.

விருந்தில் போஜனம் படைக்கிறார்கள். பல பதார்த்தங்கள் இருந்தாலும் நம் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசம் எதை ஈர்த்து நம் நாக்கு ருசிப் படுத்துகின்றதோ அவ்வுணவைத் தான் நம் எண்ணம் விரும்பிகிறது.

அதைப் போல்
1.நாம் எடுக்கும் அமில சக்திக்குகந்த சுவாசத்தைக் கொண்டு தான்
2.ஒவ்வோர் உயிராத்மாவிற்கும் அப்பரம்பொருளின் ஆசியும் கிட்டுகின்றது.

மண்டலமாயும் சுழல்வது உயிராத்மா தான்; புழுவாய் நெளிதுவும் இவ்வுயிராத்மா தான். பரமாத்மாவின் வழி பெற்று வந்த இவ்வுயிரணு எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஷத் தன்மையால் உருவாகும் தன்மையை நம் பூமியின் துருவத்தின் ஆற்றல் அது எப்படி…? என்று அகஸ்தியன் அறிந்து அந்தத் துருவத்தின் ஆற்றலைப் பெற்று தன் உடலில் வந்த விஷத்தை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அதாவது நாகரத்தினம் என்று சொல்கிறோம் அல்லவா…! ஒரு நாகம்… தன் உடலில் இருக்கும் விஷத்தை வைரமாக மாற்றுகின்றது.
1.பல விஷத்தின் தன்மை கொண்ட உயிரணுவை ஜீவ அணுவாக மாற்றும் திறன் பெற்றது தான் அத்தகைய பாம்புகள்
2.அந்த விஷம் பாம்பின் உடலிலே உறையும் போது வைரமாகின்றது..

இது இயற்கையிலே நாகரத்தினமாக மாறுகின்றது. அதற்கு ஜீவனில்லை. ஆனால் “இருளில் ஒளி…!” என்ற நிலையில் தான் அது இருக்கும்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பெயிண்டைத் தயார் செய்கின்றனர். அதைப் பூசிய பின் அதிலே வெளிச்சம் பட்டால் அதில் உள்ள எதிர் ஒளியை (FLUORESCENT) நமக்குக் கொடுக்கின்றது.

ஆனால் அதிலே சூரியனின் ஒளி பட்டால் அது சாதாரண பெயிண்டாகத் தான் தெரியும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா. இதே மாதிரித் தான் இந்த இயற்கையின் நியதிகள்.

1.எதையோ புரியாததைச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்…!
2.முதலில் பதிந்தால் தான்… பிறகு எண்ணினால் புரிகிறது.

புரிய வைப்பது என்றால் எப்படி…?

குழந்தைகள் ஆரம்பத்தில் பள்ளிக்குச் செல்லும் போது எழுத்துக்களைப் பார்த்தால் அதை என்ன சொல்வது…? என்று தெரியாது. ஆ… ஊ… ஏ… என்று அந்த ஒலிகளை எழுப்புவதற்கு எழுத்தைச் சொல்லி ஆசிரியர் உணர்த்துகின்றார்.

ஊ.. என்பதை ஆ… என்று சொன்னால் சரியாகுமா…? அப்படிச் சொன்னால் அந்த எழுத்திற்கும் ஒலிக்கும் வித்தியாசம் ஆகிவிடும் அல்லவா…?

எந்த மொழியை எடுத்தாலும் முதலில் ஒலியின் சப்தங்களைக் கூட்டுகின்றனர். அடுத்து அந்த நாதங்களை எழுப்புகின்றனர். அப்பொழுது அந்தச் சொல்லின் வன்மை எப்படி இயங்குகிறது…?

சொல்லால் சொன்ன பின் புரிந்து (தாய் தன் குழந்தைக்குச் சொல்வது போல்) கொள்ளும் நிலை வருகின்றது. இதன் வழி கொண்டு அன்று தத்துவ ஞானிகள் இந்த எழுத்து வடிவினைக் கொண்டு வந்தனர்.

1.இதைப் போன்று தான் இயற்கையின் நியதிகளை அகஸ்தியன் அன்று கண்டு இந்த உணர்வினை வெளிப்படுத்தினான்
2.ஆனால் அவன் காலத்தில் எழுத்து வடிவில்லை.. திருப்பிப் பார்ப்பதற்கு (REFERENCE).

அவன் காலத்தில் “உணர்வின் ஒலியைப் பதிவாக்கி… மற்றவர்களை ஈர்க்கச் செய்து…
1.“உன் உடல் நலமாகும் போ…!” என்று சொல்லப்படும் போது
2.அவன் எடுத்துக் கொண்ட உணர்வு பதிவான பின் அது நல்லதாகின்றது.
3.விஷத்தை முறித்த நிலைகள் – அவன் சொல் அதற்குள் சென்று அந்த நோயை நீக்கும் வல்லமை பெறுகின்றது.

ஏனென்றால்… “அவன் சொல்லைக் கேட்டு உணர்ந்திருந்தால் தான்…” அது வருகின்றது. ஆகையினால் நஞ்சை வெல்லும் உணர்வு அங்கே வருகிறது.

ஏனென்றால் அகஸ்தியன் தன் தாய் கருவிலிருக்கும் போது பெற்ற சக்தியின் துணை கொண்டு விஷத்தை வென்று பழகியவன்.
1.அக்காலத்தில் அவன் பார்வையில் பலருடைய நோய்கள் இப்படித் தான் நீங்கியது.
2.அதே உணர்வுகளைத் தான் இங்கே உங்களுக்கும் வாக்காகக் கொடுக்கின்றோம்.

ஆகவே அகஸ்தியன் உணர்வைப் பெற்று நஞ்சினை ஒளிச் சுடராக மாற்றும் பழக்கத்திற்கு வாருங்கள்.

ஒளிச் சரீரம் பெறும் மார்க்கம்

 

மெய் ஞானிகள் சொன்னதை இன்று இழந்தே தான் நாம் வாழுகின்றோம். ஆனால் அகஸ்தியன் உண்மையை வளர்த்து… மனித உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைந்திருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.
1.அவன் வளர்த்த உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.
2.அதை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவன் ஈர்ப்புக்குள் சென்று பிறவியில்லா நிலை அடைந்திட முடியும்.

இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது. அந்த உணர்வைப் பெறக்கூடிய தகுதிக்கு அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆனான்.

அவன் கண்டுணர்ந்த நிலைகள்… எல்லா நட்சத்திரங்களின் இயல்புகளைத் தனக்குள் எடுத்து ஒளியாக மாற்றுகின்றான்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று சொல்லும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான்
1.இயற்கையின் உண்மைகளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவன்.
2.அவன் தெரிந்து அவனுக்குள் உணர்ந்து உணர்வின் அலைகளைப் பெருக்கியதை நாமும் நுகரலாம்.

ஒரு செடியில் வளர்ந்த உணர்வின் தன்மை அதனின் கசப்பை நுகர்ந்தால் ஓய் என்று வாந்தி வருகின்றது. ஒரு கோபக்காரன் உணர்வினை நுகர்ந்தால் நமக்கும் அந்த உணர்ச்சியின் வீரியங்கள் வருகின்றது.

ஒரு வேதனைப்பட்ட மனித உடலில் இருந்து வெளி வரும் உணர்வைச் சூரியன் கவர்ந்து கொண்டால் அதை நாம் நுகரப்படும் பொழுது நமக்கும் வேதனையான உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

இதைப் போல் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அகஸ்தியன்…
1.தனக்குள் வளர்த்து கொண்ட உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது
2.அதை நாம் நுகர்ந்தால் அவன் எப்படி விஷத்தை வென்றானோ அதைப்போல
3.நமக்குள் விஷத்தின் தன்மையை மாற்றிப் பேரொளி ஆக முடியும்.
4.உயிர் எப்படி ஒளியானதோ ஒரு நட்சத்திரத்தின் இயக்கமாக இயக்கியதோ அதைப் போல நாம் ஒளியாக முடியும்.

நம் உடலிலே பல விதமான நட்சத்திரங்களின் தன்மை கொண்டுதான் அணுக்கள் ஆனது.

ஆனால் அதை ஒன்று சேர்த்து இணைத்து
1.27 நட்சத்திரங்களைத் தனக்குள் உணர்வாக்கி
2.27 நட்சத்திரத்தினையும் துருவ நட்சத்திரம் எடுத்து இணைத்து ஒளியாக மாற்றிய அந்த உணர்வும்
2.பிரபஞ்சத்தில் பரவும் மற்ற உணர்வையும் இணைத்து நமக்குள் சேர்க்கப்படும் பொழுது உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.

ஆகவே… உயிரை ஒளியாக மாற்ற முடியும் என்று மாற்றிய நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அகஸ்தியன்.

அதனை நீங்கள் பெறும்படி தான் இங்கே உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

 

இந்நூலின் வாயிலாய் இப்பாட நிலை புகட்டிய நாள் தொட்டே யான் உணர்த்திய… “உயிர் ஜீவன் சுவாசத்தின் வழி பெற்ற எண்ண ஜெபத்தைத்தான்” மையப்படுத்தி உணர்த்தி வருகின்றேன்.

இவ்வெண்ணம் செயல்பட அன்பு சத்தியம் இவற்றில் நியதி பெறல் வேண்டும். சத்திய நிலை பெறப் பல ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த வழியில் இருந்து
1.இச் சத்தியத்தை நிலைநிறுத்தச் சில கடின நிலைகளை ஏற்க வரும் இத்தருணத்தில் “அன்பெனும்” ஆயுதத்தினால் தான் செயல்படும்.
2.இவ் அன்பினாலே தான் எச்செயலையும் நிலை நாட்ட முடியும். அன்பிற்கு அடிமைப்பட்டதுதான் அனைத்துமே.
3.நம்மை அன்பாகி அவ் அன்பையே எல்லா நிலையிலும் செயல்படுத்திடல் வேண்டும்.

நம் அன்பிற்குப் பிரதிபலனை எதிர்பார்த்துச் செயல் கொள்ளும் நிலைதனை அகற்றல் வேண்டும். நாம் அன்பு செலுத்துகின்றோமே… அவ்வன்பின் பிரதிபலிப்பிற்காக ஏங்கிடும் எண்ணத்திற்கு நாம் செலுத்திய அன்பும் விரயம் கொள்கின்றது.

பிறரின் அன்பிற்காக ஏங்காதீர். நம்மையே அன்பாக்கி அவ்வன்பின் சக்தியை அனைத்திலும் செயல்படுத்திடுங்கள். இவ்வன்பு வழியைப் பெற்று விட்டால் சத்திய நிலை ஏற்பட்டுவிடும். பிற அன்பிற்கு அடிமை கொண்டும் விடாதீர்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்…’ என்ற சத்திய நியதியைத்தான் இவ்வுலகமே செப்புகின்றது. ஆனால் அதனைக் கடைபிடிக்கும் ஆத்மாக்கள் இப்பரந்த உலகில் கோடியில் சிலர் தான்.

மதங்கள் என்ற ரூபப்படுத்தி ஒரே குலத்தைத் தான் அனைவரும் போதிக்கின்றனர். ஆனால் இவர்களே எம்மதம் சிறந்தது…? என்ற வினாவினையும் எழுப்புகின்றனர்.

எம்மதமாயினும் எச்செயலாயினும் அவர்கள் வகுத்த சத்திய நியதியைச் செயல் கொள்ளும் சிறந்த நிலையுடையதுதான் சிறந்த மதம்‌.

இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும்தான் இவ்வுலகினில் தனித்தனி நிலையாய்ச் செயல் கொள்கின்றன. இதன் தழுவலில் பல மதங்கள் ஜாதிகள் என்ற ரூபங்கள் வழி பெற்றுவிட்டன.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நெறி முறைகள் உண்டு. அதற்குகந்த தத்துவத்தையும் உணர்த்துகின்றனர்… அவரவர்கள் மதம் சிறந்தது என்று.

எம் மதத்தவரும் தம் மதத்தின் நிலையைத்தான் பெரிதாகப் போற்றி வருகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் அம் மதம் பிறந்த கால கட்டத்தை உணர்த்துகின்றனர்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நிலையினைப் பிரித்துத் தனக்குச் சாதகமான வழிமுறைகளை வகுத்துக் கொண்டவன் அவனுக்குகந்த தன்மையில் தன் மதத்தை வளர விடுகின்றான்.

இந்து மதத்தில் ஒரே நிலையையே பலவாக்கி வணங்குகின்றனர்.

இஸ்லாமிய மதத்தில் அவ் அல்லா என்ற ஒன்றே ஆண்டவன் என்ற சத்திய நிலைப்படி… அவ்வழி நிலை செயல் கொள்கின்றது. அவர்கள் வழியில் வந்த குர்ஆனின் வேத வாக்குப்படி இன்றளவும் மாறு கொண்ட ஆண்டவனின் ரூபத்தைக் காணாமல்… அல்லா என்ற ஒரே கடவுளைக் காண்கின்றனர்.

கிறிஸ்து மதத்தில் பரம பிதா என்ற ஜெபத்தை ஜெபித்து அவ்வழித் தொடர் பெற்றாலும் அதனையே சிலர் இரண்டு நிலைப்படுத்தி விட்டனர். அதிலும் தடங்கல் ஏற்பட்டுவிட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை.

நம் இந்து மத வழிபாட்டில் தான் இராமரின் நிலையை ஆண்டவனாக்கி இராமருக்கு ஒரு மனைவி, ஏக பத்தினி விரதம் கொண்டவர் இராமர் என்று ஒரு காலத்திலும்… கிருஷ்ணருக்குப் பல மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… முருகருக்கு இரண்டு மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… இந்து மதச் சட்டத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையினையும் உணர்த்திப் பல வழிகளைச் செயல் கொள்கின்றோம்.

தன் செயலுக்குகந்த சாதகப்படி நம் சட்டத்திலேயே பல ஓட்டைகள் வைத்து மனைவி தாம்பத்ய நிலைக்கு உகந்தவளல்ல என்ற நிலையிருந்தால் மறுமணம் புரியலாம் என்றெல்லாம் சாதகப்படுத்தி நமக்குகந்த சத்திய நிலையைக் காலப் போக்கிற்குத் தகுந்த நிலையில் நாம் வாழ்கின்றோம்.

இந்து மதத்தின் பிறப்பு நிலை அறிந்தார் இல்லை. ஒன்றே குலம் என்ற நிலையில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து பிரிந்து சென்று மதமானது தான் கிறிஸ்து மதமும் இஸ்லாமிய மதமும்.

1.இந்து மதத்தின் நெறிமுறை என்ற வழி நிலை சத்திய நிலையில் உணர்த்துவாரும் இன்று இல்லை
2.இந்து மதத்தின் நிலையிலிருந்து தான் பல சித்தர்கள் வெளிப்பட்டார்கள்.
3.ஆனால் சித்தர்கள் உணர்த்தியதை உணர்ந்து செயல் கொள்ள இந்து மதத்தாரின் எண்ணங்கள் கூடிச் செயல்படுத்தவில்லை.

மதங்களில் சிறந்தது எது…? என்பதை எம்மதமாயினும் அச்சத்தியை நியதியைக் கடைபிடித்துச் செயல்படுமாயின்… அதுவே சிறந்தது…!

மதம் என்ற பிரிந்த எண்ணத்திற்கே எண்ணத்தை அடிமை கொள்ளாமல் எல்லாம் ஒன்றே… ஒருவனே தேவன்… அத் தேவனின் சக்தி புத்தர்களாய் சகலத்துடனும் கலந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக இரண்டு பேர் கோபத்துடன் சண்டை போடுகின்றார்கள். அவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே ஈஸ்வரா… என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளை நம் உடலில் திருப்பி விட வேண்டும்.

இப்படிச் செய்யும் போது அவர்கள் சண்டையிட்ட உணர்வுகளைச் சுவாசித்து நம் உடலுக்குள் அந்தக் கார உணர்வுகள் செல்வதைத் தடுத்து விடுகின்றோம்.

ஏனென்றால் அங்கே உற்றுப் பார்க்கும்போது இங்கே ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது நம் கருவிழி.

ஆனால் துருவ நட்த்திரத்தின் சக்தியை எடுத்து
1.நம் கண்ணின் நினைவினை உள்ளே செலுத்தும் போது இங்கேயும் அடைத்து விடுகின்றது
2.நம் உயிரிலே மோதும் நிலையையும் தடுத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் பரவும் போது அந்தக் கார உணர்ச்சிகள் அனாதையாகின்றது… உள்ளே புகாதபடி..!

இப்படி ஒரு சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணிச் சுவாசித்தோம் என்றால் அந்தத் தீமையான உணர்வுகளைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து சென்று விடுகின்றது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.

சுத்தமான பின்… சண்டை போட்டவர்கள் இருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ணி அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தத் நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலந்து துருவ நம் உடலுக்குள் பரவுகின்றது. இரத்தத்தின் வழி எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பாய்கிறது.

1.ஆகவே நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும்
2.தீமைகளை நீக்கும் உணர்வுகளை இவ்வாறு கிடைக்கச் செய்ய வேண்டும்.

இது தான் ஆத்ம சுத்தி என்பது…!

என்றுமே ஏகாந்தமான நிலைகளில் மகிழ்ச்சியாக நாம் வாழ வேண்டும் என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நம் உடலில் உள்ள இரத்தங்களில் அதிகமாக இப்படிச் சேர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.

எத்தனையோ எட்டாக் காலத்தில் அகஸ்தியன் வெளியிட்ட உணர்வுகளை நீங்கள் எளிதாகப் பெற முடியும்

 

அன்று மெய்ஞானி தெளிவான நிலைகளில் சகலத்தையும் தெளிவாக எடுத்துரைத்தான். அவன் உடலிலே விளைந்த அந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாற்றப்பட்டுள்ளது.
1.அதைத்தான் என் குரு வழி துணை கொண்டு நுகர்கின்றேன்
2.அந்த உணர்வின் இயக்கத்தை என் உணர்வால் அறிகின்றேன்
3.உணர்வின் இயக்கத்தை எனக்குள் இயக்குவதைக் காணுகின்றேன்.
4.அந்த உணர்வினைச் செவி வழி உங்கள் உணர்வுகளை உந்தப்படும் பொழுது கண் வழி உங்களை நுகரச் செய்கின்றேன்.

பேரண்டத்தின் உண்மையை உணர்ந்து இயற்கை எப்படி விளைந்தது என்ற நிலைகளை
1.உயிரால் நீங்கள் எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்வின் அணுவின் தன்மையாக விளைந்து அதை நுகரப்படும் பொழுது
2.அருள் ஞானத்தின் நிலைகள் நீங்கள் பெற வேண்டும் பெறுவீர்கள் பெற முடியும் என்பதனைத் தான்
3.எமது குருநாதர் எனக்கு ஊட்டிய அந்த உணர்வின் தன்மையை இன்று உங்களுக்குள்ளும் விளையச் செய்கின்றேன்.

அகண்ட அண்டத்தில் பெருகி வருவதை ஒருக்கிணைந்த உணர்வின் தன்மையை நாம் பெற்றோமென்றால் மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து… இனிப் பிறவியில்லா நிலை அடைய இது பேருதவியாக இருக்கும்.

உங்களிலே இது விளைந்து அதை நான் கண்டு மகிழ்ந்தால் எனக்குள் பேரின்பம் வளர்கின்றது. நீங்களும் இந்த உணர்வின் தன்மையைப் பிறர் செய்யும்படி இந்த உணர்வுகளை ஊட்டி அங்கே இது விளைந்து அதை நீங்கள் கண்டு பெருமைப்பட்டால் நன்றாக இருக்கும்

ஆகவே உயிர் எப்படி ஒளியானதோ அதைப் போல
1.27 நட்சத்திரங்களின் உணர்வை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தான் நீங்கள் பெற வேண்டும்.

அந்த உணர்வுகளை அகஸ்தியன் அறிந்த அறிவையும் குருநாதர் கண்ட உணர்வும் எம்மைப் பெறச் செய்த இந்த உணர்வுகள் அறிந்த உணர்வுகள் எமக்குள் பெற்றதை உணர்வலைகளாக மாற்றப்படும் பொழுது ஒலி எழுப்பும் பொழுது உங்கள் செவிகளில் இந்த உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது.

1.உயிருடன் இந்த உணர்வுகள் பட்டபின் உங்கள் கண்ணிலே பதிவாக்குகின்றது
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ எத்தனையோ எட்டாக் காலத்தில் அகஸ்தியன் வெளியிட்ட உணர்வலைகள் இங்கே இருப்பதை இழுக்கின்றது.
3.அவன் வளர்ந்து இருளை அகற்றி ஒளி என்ற உணர்வு பெற்ற அவனின் ஆற்றலை நீங்கள் எளிதாகப் பெற்று
4.விஞ்ஞான அறிவில் வரும் இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வு நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
5.இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்… வளர்த்துக் கொள்ளுங்கள்.

சத்திய ஜெபம் பெற்று விட்டால் எந்தத் தீய சக்தியையும் நற்சக்தி ஆக்கிடலாம்

 

எல்லாம் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான் என்ற எண்ண நிலை செயல்பட்டு… அவ் வழித்தொடரில் வாழ்ந்திடும் பக்குவத்தை மனித ஆத்மாக்கள் பெற்று அதன் வழித்தொடரினைச் செயல்படுத்திட
1.நல்லுபதேசங்களை ஏற்றிடல் வேண்டும்.
2.அந்நல்லுபதேசத்தையே நற்செயலாக்கிடல் வேண்டும்
3.வயது வரம்பு இதற்கு வேண்டியதில்லை.

பக்தியினால் மட்டும்தான் உபதேசிக்க முடிந்திடும் என்ற காலநிலை மாறிவிட்டது.

தீயோரைக் காண்பதுவும் தீதே
தீயோர் சொல் கேட்பதும் தீதே
தீயோருடன் இணங்கி இருப்பதுவும் தீதே என்றெல்லாம்
முந்தைய காலத்தில் செய்யுள்படுத்தி உபதேசித்தனர்.

விஷமாய் தீய சக்தி படர்ந்துள்ள நிலையில் நற்சக்தியை சத்தியத்தை நிலை நாட்டுபவர் “கோடியில் ஒருவர் கூட இவ்வுலகினில் மிஞ்சவில்லை…”

இவ்வுலகமே இப்பொருளாசை என்ற பேய்க்கு அடிமைப்பட்டு விட்டது.

ஆலயங்களுக்குச் சென்றாலும் இப்பொருள் உள்ளவனுக்குத்தான் முதலிடம். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று எப்பொருளை வைத்து இவ்வாக்கியத்தை அமைத்தார்களோ அதுவே நிலைத்துப் பொருளுக்கே (பணம்) அடிமைப்பட்டு விட்டது இவ்வுலகம்.

பொருள் வைத்துத்தான் எச்சக்தியும் செயல் கொள்கின்றது இன்று இப்பூமியில்.

பல மடாலயங்கள் அமைத்து அங்கு செயல் புரியும் மடாதிபதிகளே இப்பொருள் உதவி புரிபவரின் நிலைக்கொப்பத்தான் அவர்களை நடத்திடும் நடைமுறை உள்ளது.

காரணம்… அவர்களின் சத்தியத்தை நிலைநிறுத்தப் பொருள் வேண்டுமாம்…!

பஜனைகள் பாடிட ஆண்டவனின் அடிமை நாமம் பூண்டு ஒவ்வொரு திரு ஸ்தலங்களுக்கும் சென்று அவ்வாண்டவனை எண்ணித் துதி பாடப் பொருள் உதவி அளித்துத் தான் “அவ்வாண்டவனுக்கும் துதி பாடுகின்றான் அப்பாடகன்…”

அவனுக்கு இட்டிருப்பது ஆண்டவனின் நாமம் ஆண்டவனின் அடிமையாம் அவன். ஆனால் அவன் ஆண்டவனிடம் அவனைத் துதித்துப் பாடக் கூலி பெற்றுக் கொள்கின்றான். ஆண்டவனை மனமுருக அன்புருக பக்திப் பாடலை இவன் பாடுகின்றானாம்.

பக்தியே விலை பேசிப் பாடுகின்றனர். அவனைத் துதிபாட இப்பக்கமேள மனித ஆன்மாக்கள் வேறு.
1.ஆண்டவனின் துதி பாடப் பொருள் வாங்குபவன் பக்தியினால்
2.ஆண்டவனின் அருள் எப்படிக் கிட்டும்…?

தான் பிழைக்க வேண்டாமா…? தன் சுற்றத்தாரை எப்படிக் காப்பாற்றுவது…? என்று வாதங்கள் புரிவார்கள். சோம்பேறி வாழ்க்கையாகப் பிறரின் உழைப்பில் இருந்து கிடைக்கப் பெறும் ஊதியத்தை ஏற்று இப்பஜனை பாடித் திரிபவனின் ஆன்மாவெல்லாம் எந்த நிலை பெறும்…?

எங்கு உள்ளான் அந்த ஆண்டவன்…?

பொருள் வாங்கி இசைத்திடும் இசைப்பவனின் இசையும் அப்பொருளுக்காகத்தான் அடிமைப்பட்டதேயன்றி ஆண்டவனுக்கு அடிமைப்படவில்லை.

1.தன்னுள்ளே உள்ள ஆண்டவனை அன்பாக்கி
2.தன்னை ஒத்த அனைத்து உயிர் ஆண்டவ ஆத்மாக்களிடம் அன்பு கொண்டு
3.தன்னையே அவ்விசையின் இசையாகப் பக்தி கமழச் செய்து
4.தன்னைச் சார்ந்தோரையும் இப்பக்தி இசையில் வழிநடத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நிலைக்கும் உம்மால் மாறு கொண்ட வாதம் உள்ளதே…! சாதாரண நடைமுறை கொண்ட மனித ஆத்மாவினால் இச்சக்தி நிலை எல்லாம் பெற முடியுமா…? என்று எண்ணுவீர்.

ஒவ்வொரு ஆத்மாவும்
1.அச்சத்தியம் என்ற நேர்கோட்டைச் செயல்படுத்தினால் எத்தீய சக்தியும் நம்மை அண்டாது.
2.தீயது என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் தீயவர் நல்லவர் என்ற பாகுபாடு எண்ணம் கொள்ளாமல்
3.நம் சத்தியக் கோடு நேராக இருந்து விட்டால் எச் சஞ்சலத்திற்கும் இடமில்லை.
4.தீயோரையும் காணலாம். தீயோர் சொல்லும் கேட்கலாம் தீயோருடனும் வாழலாம்
5.தீயது என்று ஒதுங்கி ஏனப்பா செல்ல வேண்டும்…?
6.நம் சத்தியத்தின் நேர்வழியினால் நாமும் இவ்வுலகினில் உதித்த உயிரணுதான்.
7.தீயோன் என்று ஒதுக்கப்பட்டவனும் நம்மை ஒத்த உயிரணுதான்.
8.நம்மால் தீயவனையும் நல் உணர்வு படுத்திடலாம் என்ற ஜெப நிலை கொள்ள வேண்டும்.

ஒதுங்கி வாழ்வதல்ல வாழ்க்கை.

பல காலங்களுக்கு முன்னே போகரினால் ஸ்தாபிதம் செய்து வைத்த திரு முருகன் சிலையை நவபாஷாணத்தைக் கொண்டு செய்விக்கப் பெற்றது.

விஷத்தையே ஆண்டவனின் உருவமாக்கி அபிஷேக ஆராதனை செய்து இம்மனிதர்களை உண்ணச் செய்தான் அப்போகநாதன்

இது எதை உணர்த்துகின்றது…?

விஷமென்று ஒதுங்கிச் செல்வதினால் நம்மையும் விஷமாக்கிக் கொள்கின்றோம்… பயந்த நிலையில்.

1.ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அச்சத்திய ஜெபம் ஓங்கல் வேண்டும்
2.சத்திய ஜெபம் பெற்று விட்டால் எந்தத் தீய சக்தியையும் நற்சக்தி ஆக்கிடலாம்.
3.நம் உடலில் பல கோடி அணுக்களையும் நம் நிலைக்குக் கட்டுப்படுத்தலாம்.
4.இந்நிலை பெற்றவனின் ஜெபத்தினால் அனைத்துச் சித்து நிலைகளையும் கண்டிடலாம்
5.சித்தனுடனே கலந்திடலாம் சிவபதம் எய்திடலாம்.

மனித எண்ணங்களின் தடுமாற்றத்தினால் இவ்வுலகமே இம்மனிதனால் தான் விஷம் கொண்டுள்ளது. சஞ்சலம் கொள்ளா அமைதி வாழ்க்கை வாழ்பவனுக்கு அவனின் ஆரோக்கியம் நிலையும் பாதிப்பதில்லை. அதன் வழித் தொடரில் எச்சிக்கலும் ஏற்படுவதில்லை.

மனச் சஞ்சலத்துடனும் கோபத்துடனும் உள்ளவன் புசிக்கும் உணவு அவனுக்குச் செரிப்பதில்லை.

உணவே விஷமாக ஆவியான அமில நிலை கொண்டு இவ் உடலுக்கு வாய்வு என்ற நிலை ஏற்படுத்தி அங்கங்கு உடல் உறுப்புகளில் தங்கி விடுகின்றது.

சீராய் இவை வெளியேறா விட்டால் ஆங்காங்கு தங்கி உள்ள இக்காற்றின் அமிலமே அங்கு உறைந்து மேலும் உண்ணும் உணவைச் செரிக்க விடாமல் இத்தங்கிய வாய்வு அமிலங்கள் உறைந்து கோழையாகக் கட்டி நிலை பெற்று சளி பிடித்து தும்மல் எய்தி இருமல் ஆகி இக்கோழை வெளி வரும் வரை இந்த உடல் மண்டலமே அவஸ்தையுற்று அதன் தொடர்ச்சியில் பல நிலைகள் ஏற்படுகின்றது.

ஆங்காங்கு தங்கிடும் அவ்வமிலத்தினால் சில உறுப்புகளும் கெடும் நிலை எய்துகின்றது. இதன் தொடர்ச்சியில் பல வியாதிகள் மனிதனுக்கு வருகின்றன.

நாமே சம்பாதித்துக் கொள்வது தான் இவ்வியாதியே அன்றி உண்ணும் உணவில் இருந்து மட்டுமல்ல மற்ற நிலையில் இருந்து மட்டுமல்ல நம்மைத் தொற்றிக் கொள்வது என்பதல்ல இந்த வியாதி.

வியாதியில் அடிபட்டவனின் சுவாசக் காற்றினிலே இந்நிலை கொண்ட அணுவைத்தான் வெளியிடுகின்றான். இவனைச் சார்ந்தவரின் நிலையையும் இவனின் வட்டத்தில் ஈர்த்துக் கொள்கின்றான்.

இவ்வெண்ணத்தின் நிலையை மாற்றுவதால் ஏற்படும் நிலையிலிருந்து “நம் ஆத்மா தப்பும் நிலை பெற வேண்டும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி வருகின்றது. ஆனால் ஒரு பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்த ஒருவனை நினைத்தே குடும்பம் சிக்குண்டு சுக்குநூறாகத் தெறித்து விடுகின்றது. எவ்வளவு கோடிச் செல்வம் இருப்பினும் இதைப் போல் நிகழந்துவிடுகிறது

சூரியனை மையமாக வைத்து ஒரு பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றதோ நம் உயிர் சூரியனாக இருந்து இந்த உடலை இயக்குகிறது.

பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்ததிரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி… அது உமிழ்த்துவதைக் கோள்கள் உணவாகக் கவர்ந்து… கோள்களிலிருந்து வருவதைச் சூரியன் தனக்கு உணவாக எடுத்து உட்கொள்கின்றது,

இதைப் போல் பிறருடைய உணர்வுகள் வெளி வருவதை நம் எண்ணத்தால் (நட்சத்திரம் போல்) கவர்கின்றோம். கவர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் உடலாக (கோள்கள் போல்) அந்தச் சத்தாக விளைகின்றது. உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை உயிருடன் சேர்த்து உயிராத்மாவாக (சூரியனைப் போல்) விளைகின்றது.

ஆகவே…
1.பிறரிடம் இருந்து வரும் உணர்வுகளை ஒன்று சேர்த்துக் கவர்ந்து
2.அந்த உணர்வுகள் நம் உடலாக ஆக்கப்படும் போது
3..நமக்குள் தெளிந்திடும் உணர்வாக உயிருடன் ஒன்றி…
4.அந்த ஞானியின் உணர்வுடன் நாம் இணைப்போம் என்றால்
5.அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றது போன்று நாமும் பெற முடியும் என்பது தான் ஆலயங்களின் தத்துவம்.

ஆனால் அந்த ஆலயத்தில் இப்பொழுது நாம் எப்படிப் போகின்றோம்…?

வெளியில் கடைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்கின்றனர் காசுக்காக. ஆனால் அவர்களும் இந்தத் தெய்வத்தை வணங்கக்கூடியவர்கள் தான்.

சாமி பேரைச் சொல்லி ஏமாற்றுகின்றான். அதே சமயத்தில் அர்ச்சனை என்று இங்கே காசைக் கொடுத்து ஏமாற்றச் செய்கின்றான்.

அதை எல்லாம் செய்தால்…
1.ஆண்டவன் நமக்கு அதைச் செய்வான் இதைச் செய்வான் என்று
2.நம் ஆசைக்குகந்தபடி தான் நாமும் அங்கே நடக்கின்றோம்.

ஆனால் ஆலயம் என்பது நம்மைப் புனிதமாக்கும் இடமாகும்…!

பெரும்பகுதியான ஆலயங்களுக்கு முன்னாடி பார்க்கலாம்… தெய்வத்தின் பேரைச் சொல்லி நமக்கு நாமே ஏமாற்றும் நிலை தான் அதிகமாக இருக்கின்றதே தவிர… “ஆலயம் வரும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நிலைகள் இல்லை…!”

1.சாமிக்காக அபிஷேகம் ஆராதனை என்றெல்லாம் காட்டி
2.அந்த உணர்வினை நுகர்ந்தால் (ஐந்து புலனறிவாலும்) நமக்குள் பஞ்ச அமிர்தமாக அந்தச் சக்திகள் இணையும் என்று
3.ஆறாவது அறிவினைத் தெளிவுற எடுத்துரைத்த அந்த போகனின் நிலையை எடுத்துக் கொள்ளாது…
4.போகன் காட்டிய அறவுரைகளை அழித்துவிட்டு மனிதனின் நல்ல எண்ணங்களை அழித்திடும் நிலையாக
5.வியாபார ஸ்தலமாகத் தான் ஆக்கி விட்டார்கள்.

இங்கிருந்து நாம் அருள் ஒளி பெறவேண்டும் என்று சென்றாலும் புனிதத் தன்மை இழக்கும் நிலைகளைத் தான் அங்கே காணுகின்றோம். அங்கே நிர்வகிப்பவர்களும் அப்படித்தான் உள்ளனர். ஆலயத்தின் மறைவில் தனக்குப் பொருள் தேட வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்கள்.

1.அந்த மெய் ஞானிகள் காட்டிய தத்துவங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.ஒவ்வொரு மனிதனும் முழுமை பெறவேண்டும்…
3.இந்தப் பூமியில் இருளைப் போக்க வேண்டும்… தீமைகள் அகல வேண்டும்… என்ற நிலைகளை வழி காட்டவில்லை.

அந்த மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை நாம் யாரும் பெறவில்லை. இன்று யாம் (ஞானகுரு) அதை எல்லாம் சொன்னாலும்
1.இதை ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாது
2.இதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைகளில் தான் உள்ளனர்.

ஒரு மது குடிப்பவரிடம் போய்… “நீ குடிக்காதே…!’ என்றால் ஐயா… உங்களுக்கு என்ன தெரியும்…? இதைக் கொஞ்சம் போட்டால் சொர்க்கமே வரும்… நீங்களும் கொஞ்சம் குடித்துப் பாருங்கள்…! என்று நம்மிடமே திரும்பச் சொல்வார்கள்.

அதைப் போன்று தான் அநாகரீகமான நிலைகளில் அதர்வண வேதத்தின்படி இந்த நிலைகள் உருவாக்கப்பட்ட நிலைகளே இன்றும் உள்ளது.

இன்னென்ன மந்திரங்களைச் சொல்லி விட்டால் அந்த இறைவன் இறங்கி வந்து உனக்கு எல்லாம் செய்வான்..! என்ற நிலைகளில் மந்திர உச்சாடணங்களை அங்கே சொல்லி அதை ஆழமாக நமக்குள் பதிவு செய்து விட்டனர்.

அந்த உணர்வின் சக்திக்கு நாம் வந்த பின் ஒரு போதை ஏற்றியது போன்று இதிலிருந்து மீளாது சிக்கிக் கொண்டு…
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் அழிவில் இருந்து தப்ப முடியாதபடி
2.இருள் சூழ்ந்த நிலைகளாகப் போகும் நிலையே அதிகமாக உருவாகிக் கொண்டுள்ளது

ஆக ஐதீகம் என்றும் சாஸ்திரம் என்றும் மனிதனுடைய நிலைகளில் ஆசைகளைத் தான் வளர்க்கப்பட்டுள்ளது.

மனிதன் என்றால் ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால்…
1.அதைத் தணியச் செய்யும் சக்தியான அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து
2.நமக்குள் இருள் சூழும் அந்த நிலைகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று
4.அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் செல்வோம் என்றால் இனி தப்பலாம்…!

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கத் தவமிருக்கின்றேன்

 

அகஸ்தியன் தாய் கருவிலே நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று அவன் வாழ்க்கையில் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.
1.அணுவின் இயக்கத்தை அறிந்தான்… அகஸ்தியன் என்று புகழ் பெற்றான். `
2.அணுவின் இயக்கத்தை அறிந்தான்… விண்ணின் ஆற்றலை உணர்ந்தான் நுகர்ந்தான்… துருவன் ஆனான்.

அகஸ்தியன் திருமணமாகும் பொழுது இரு மனமும் ஒன்றாகித் துருவ மகரிஷி ஆகின்றான். தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவிக்குச் சொல்லிக் கணவனும் மனைவியும் இருவரும் ஒன்றாக இணைந்து பூமியின் துருவப் பகுதியை நுகர்ந்து… அதன் உணர்வைத் தனக்குள் உருவாக்கி துருவ மகரிஷி ஆகின்றார்கள்.

அவர்கள் இருவருமே ஒன்றி வாழ்ந்து உடலை விட்டுச் சென்ற பின் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து இரு உயிர் ஒன்றாகி நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்றிடும் பேரருள் பேரொளி பெற்றுத் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறுவோம்.
2.அதை ஏங்கித் தியானிக்கும் பொழுது நம் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக உருவாகும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி துருவத்தின் எல்லையில் குடி கொண்டு நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக வான் வீதியில் பரவச் செய்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
1.உங்கள் உடலுக்குள் பேரருளை உருவாக்குங்கள் பேரொளியாக உங்கள் உணர்வினை மாற்றுங்கள்.
2.தியானத்தில் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் ஒளியான அணுக்களாக உருவாகும்.

அகஸ்தியமா மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெற்று… உங்கள் இல்லற வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருளை நீக்கி… நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று… உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலை அடைந்து… தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் வாழ்ந்து… பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று…
1.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
2.பிறவி இல்லா நிலை அடையும் அருள் சக்தி பெற்று
3.பிறவியில்லா நிலை அடையும் அருள் வாழ்க்கை வாழ்ந்து
4.பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையில் வாழ்ந்து
5.என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் சக்தி உங்களில் பெற்று என்றும் ஏகாந்த வாழ்க்கையாக வாழ்ந்து
6.ஏகாதசி என்ற பத்தாவது நிலையான நிலையில் முழுமையாகிப் பேரருளுடன் வாழ்ந்து
7.அருள் சக்தி பெற்றிட அருள் வாழ்க்கை வாழ்ந்திட மகரிஷிகளின் அருள் சக்தி உங்களில் பேரருளாக உருவாகி
8.பேரின்பம் பெறச் செய்யும் அருள் சக்தி பெற்றிட “எமது குரு அருள்” உங்களுக்குள் பதிவாகும்.

எமது தியானமே அதுவாகி அதையெல்லாம் நீங்கள் பெற தவம் இருக்கின்றேன்… தவத்தின் பலனை நீங்கள் அனைவரும் பெறுவீர்கள்.

பேரின்ப நிலைகளை நீங்கள் பெற்று அனைவருக்கும் பேரின்பம் பெறச் செய்யும் உணர்வுகள் உங்களில் விளைந்து உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை நன்மை பெறச் செய்யவும்… உங்கள் பேச்சும் மூச்சும் உங்கள் குடும்பத்தில் அனைவரையும் மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி என்றும் பேரொளி என்ற நிலைகள் அடைந்து பேரின்ப நிலை பெற்று… மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகள் உங்களில் விளைந்து… இருளை அகற்றி மெய்ப்பொருள் கண்டு விஞ்ஞான உலகில் வரும் நஞ்சினை வென்று அருள் உணர்வுகள் உங்களில் விளைந்து… நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று… பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து…
1.பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைந்து முழுமை அடையும் அருள் சக்தி பெற்று
2.எல்லா மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குள் உறுதுணையாக இருந்து
3.மகரிஷியின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ்ந்திட தவமிருக்கின்றேன் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

யாருக்கு யாரும் மூத்தவருமல்ல… இளையவருமல்ல…!

 

ஒவ்வோர் உயிரணுவையும் தனதாக எண்ணி
1.அவ்வுயிர் ஆத்மாக்கள் படும் வியாதியின் சங்கடத்தை இவ்இறை பக்தி கொண்ட இறை ஆத்மாக்களினால் ஏற்கப் பொறுக்காமல்
2.அவ்வாத்மா வேறல்ல தனது ஆத்மா வேறல்ல என்ற நிலைப்படுத்தி
3.ஒவ்வொரு சிறு உயிரணுவும் அதன் துடிப்பில் வேதனை உறுவதை தன் உயிராத்மாவுடன் கலக்கவிட்டு…
4.தானே அவ்வேதனைக்கு உடையவனாகி அதை அகற்றிடல் வேண்டும்.
5.மற்ற உயிரணுக்கள் எல்லாமே இன்புறல் வேண்டும் என்று
6.இறை ஆத்மாவின் அன்பு கொண்ட பக்தி ஜெபம் பெற்றவர்கள் அவ்விறைவனாகவே செயல்படுகின்றனர்.

ஆனால்… அது செய்த பாவத்திற்கு அது அனுபவிக்கின்றது. நாம் ஏன் வேதனையுறல் வேண்டும்…? என்று சுயநலமிக்க ஆத்மாக்களினால் நற்செயலையே செய்து… நல்லொழுக்கமே கொண்டு வாழ்ந்து வழி வந்தாலும் மற்ற ஜீவ அணுக்களையும் தனதாக ஏற்காமல் செயல்படுபவன் “சுயநலமிக்கவன்” ஆகின்றான்.

எல்லா உயிரணுக்களுமே ஒன்றுதான் என்ற எண்ணம் கொண்ட உயிர் ஆத்மாக்கள்தான் ஞான ஒளி ஆகின்றார்களே அன்றி சுயநலமிக்க ஆத்மாக்களினால் பக்தி நிலை பெறுவது கடினம்.

சிறு எறும்பு நம்மை வந்து கடிக்கின்றது. அக்கடி நிலை பொறுக்காமல் அதை நசுக்கி எறிகின்றோம். அவ் எறும்பின் ஜீவன் பிரிந்து விடுகின்றது. அதன் உருவம் நசுக்கப்படுகின்றது என்று எண்ணுகின்றோம்.

அதன் ஜீவன் எங்கு செல்கின்றது…?

1.அதை நசுக்குபவரின் எண்ணத்திலேயே அவ்எறும்பு சேமித்த எண்ணத்தையும் அமிலத்தையும் அதை நசுக்குபவனே ஏற்றிக் கொள்கின்றான்.
2.பல உயிர்களை உணவாக்கி உண்ணுகின்றோம்
3.அதனால் அவைகளுக்கு இம் மனிதர்களின் கையினால் பாவ விமோசனம் கிடைத்து
4.நம் உடலிலேயே அவற்றின் சக்தியையெல்லாம் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை அறியாமல்
5.நம் நாவின் சுவைக்காக நம்மை அறியாமல் நாம் பலி படுகின்றோம்.

எல்லா உயிரணுக்களுக்குமே எண்ணம் உண்டு. இவ்வெண்ணத்தில் சேமித்த அமிலத்தின் நன்மை தீமை கொண்ட குண நிலையும் உண்டு. ஓர் உயிர் ஜெந்துவை அழித்து உண்ணும் நாம் அஜ்ஜெந்துவின் நிலையையும் “நம்முள் ஏற்றிக் கொள்கின்றோம்” என்பதனை உணரல் வேண்டும்.

முந்தைய பாடங்களில் உணர்த்தியுள்ளேன் மனிதர்களில் இருந்து தான் மிருக ஜெந்துவும் பறவைகளும் ஊர்வனவும் வருகின்றன என்று. மிருகங்கள் மற்றப் பறவைகளிலிருந்து மனித இனம் வருவதில்லையா…? என்று எண்ணிடலாம்.

இம்மனிதர்களால் மற்ற ஜெந்துக்களைப் புசிக்கும் நிலையில் அதன் சப்த அலையும் உயிரணுவும் அதன் உடலைப் புசித்தவனின் உடலுக்குள் ஏறிக் கொள்கின்றது.

அறிவு வளர்ச்சி நிலை கொண்ட மனித ஆத்மாவில் ஏறிக்கொள்ளும் மிருக ஜெந்திற்கு
1.அம்மனிதக் கூட்டில் இருந்து அம்மனித ஆத்மா பிரிந்த பிறகு
2.மனிதனின் உடலில் ஏறிய இஜ்ஜீவனுக்கும் மனித உருவாய்ப் பிறந்திடும் பக்குவ நிலை பெற்றுப் பிறப்பிற்கு வருகின்றது.
3.அஜ்ஜெந்திற்கு இம் மனிதனால் விமோசனம் கிடைக்கின்றது.
4.இம் மனிதனுக்குத்தான் மற்ற ஜீவனை உண்ட நிலையினால் அதன் குண நிலையின் வழித்தொடர் பெறுகின்றான்.

இந்நிலையை உணர்ந்து நாம் எல்லா ஜீவ ஆத்மாக்களிடமும் உயிரணுக்களிடமும்
1.அவை வேறல்ல நாம் வேறல்ல என்ற நிலையில் நம்மையே அவையாக்கி அவையே நாமாகி
2.அன்பெனும் நிலைதனை கனிவாகப் படர விடல் வேண்டும்.

இன்று அவை கொசுவாகவும் குருவியாகவும் ஆடாகவும் இருந்திடலாம். அவையும் நம்மைப் போல் ஜீவன் கொண்டவை தான். “எல்லா உயிரணுக்களையும் நமதாக எண்ணிக் கனிவு நிலையில் வழி நடந்திடுங்கள்…”

இவ்வுலகிற்கும் எண்ணமுண்டு ஜீவ காந்த அமில சக்தியுண்டு. இவ்வுலகினில் வாழும் அனைத்திற்குமே மனிதன் முதல் எறும்பு வரை உள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே எண்ணமும் உண்டு அதற்குகந்த காந்த அமில சக்தியும் உண்டு.
1.யாருக்கு யாரும் மூத்தவருமல்ல இளையவருமல்ல.
2.எல்லாம் அப்பரம்பொருளின் ஐக்கியம் கொண்ட ஆத்மாக்கள் தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அக்காலங்களில் எழுத்தறிவே இல்லை என்றாலும் ஞானிகள் தனக்குள் விளைய வைத்த உணர்வுகள் இன்றும் இந்தக் காற்றிலே உண்டு.

தன் உணர்வால் இயக்கப்பட்டு… இயக்கச் சக்திகளைத் தனக்குள் கவர்ந்து… உண்மையின் உணர்வலைகள் அவர்கள் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் இன்றும் அழியாச் சக்தியாகப் பரவிக் கொண்டுள்ளது.

அன்று ஞானிகள் வெளிப்படுத்தியதை உங்களுக்குள் நினைவுபடுத்தி இப்பொழுது கூர்மையாகப் பதிவு செய்யும் பொழுது அந்தப் பதிந்ததை நீங்கள் எடுக்க முடியும்.

ஒரு மரத்தில் விளைந்த வித்தினை மற்ற எந்த இடத்தில் கொண்டு போய் அதை ஊன்றினாலும்… புவி ஈர்ப்பின் துணை கொண்டு தாய் மரத்தின் உணர்வை அது நுகர்ந்து… செடியாகி மரமாகி தன் இனத்தை விருத்தி செய்கின்றது “வித்தாக…”

இதைப் போன்றுதான்
1.மெய் ஞானிகள் விண்ணுலக ஆற்றலை அறிந்து…
2.உணர்வின் எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்த உணர்வுகள்
3.அவருக்குள் விளைந்த நிலைகள் அனைத்தும் ஆற்றல் மிக்க சக்திகளாக அலைகளாக இன்றும் படர்ந்துள்ளது.

அதனை நுகர்வதற்கு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் கண்டுணர்ந்த உணர்வினை நினைவுபடுத்தி உங்களைக் கூர்மையாக கேட்கும்படி செய்கிறோம். இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாகின்றது.

ஒரு மரத்தின் வித்து அதற்குள் இருக்கும் உணர்வின் துணை கொண்டு தான் அதனின் இனமான சத்தைக் கவர்ந்து அது விளைகிறது.

அதே போல்
1.ஞானிகள் பெற்ற அறிவின் ஞானத்தினை உங்களுக்குள் ஊன்றும் பொழுது
2.அதைக் கூர்மையாகக் கவனித்து நீங்கள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டாலே போதுமானது.

அந்த வித்தின் தன்மை விளையத் தொடங்கி விட்டால் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வின் தன்மை நிச்சயம் நீங்கள் உங்களுக்குள் விளையும்… “அப்படி விளைய வேண்டும்…” என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

நான் (ஞானகுரு) கல்வி கற்றவன் தான். இருப்பினும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் அறிந்த உணர்வின் தன்மையை எனக்குள் பதிவு செய்தார்.

அவரைக் கூர்ந்து கவனிக்கும் அளவில் அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று விலகினாலும்…
1.மீண்டும் அதை நான் புரியும்படி செய்வதற்காக வேண்டி என்னை உதைப்பார்…
2.திருப்பி அவருடன் என் எண்ணங்கள் கொண்டு எண்ணும் பொழுது… என்ன…? என்று கேட்கும்படி வைப்பார்
3.அந்தந்த நிலைகளில் அவர் எண்ணிய உணர்வுகளைத் திரும்ப எண்ணும் பொழுது
4.அவர் எதைக் கற்றுணர்ந்தாரோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் வருகின்றது

என்னை அடித்துத்தான் குருநாதர் ஒவ்வொன்றையும் உபதேசித்தார். ஆனால் அதை எல்லாம் உங்களுக்கு இப்பொழுது சொல்லாக… வாக்காகப் பதிவு செய்கின்றேன்.

கவனங்களை வேறு பக்கம் நீங்கள் திருப்பி இருப்பினும்
1.இடைமறித்து உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.ஞானிகள் உணர்வின் இயக்கமாக நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

உபதேச வாயிலாக உணர்வின் வித்தாக ஆழமாக உங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்… வளர்த்துக் கொள்ளுங்கள்.

தீமைகளை எரிபொருளாக மாற்றி ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்

 

சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வு தான் இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.
1.மனிதனான பின் தீமை என்று உணர்ந்த பின் அதை நீக்க
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் உருவாக்கினால் இது வலுப்பெற
3.தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வராது “அதை எரிபொருளாக” மாற்றியமைத்துவிடும்.

இன்று விறகை எரித்த பின் அது கருகி விடுகின்றது. எண்ணெய் ஊற்றி நெருப்பினை வைத்த பின் ஒளியைத் தருகின்றது, எண்ணெய் தீர்ந்தால் இதுவும் தீர்ந்து விடுகின்றது.

இதைப் போலத் தான்
1.நம் உடலில் உள்ள உணர்வுகளை எரிபொருளாக மாற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சக்தி பெறக்கூடிய தகுதி பெற்றது இந்த ஆறாவது அறிவு.

இப்படி ஒளியாக மாற்றும் தன்மை பெற்ற
1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை உங்களை நுகரச் செய்வதற்கும்
2.அதைக் கவரச் செய்வதற்கும் இந்த உண்மையின் உணர்வைப் பதிவாக்குகின்றேன்.

உங்களை ஒருவர் திட்டி விட்டார் என்றால் அதைப் பதிவாக்கி விட்டால் “என்னை இப்படித் திட்டினானே…” என்று எண்ணினால் அப்போது உங்களுக்குக் கோபம் வருகின்றது.

அந்த கோபமான நிலைகள் வரப்படும் பொழுது… பெண்கள் சமையல் செய்து கொண்டிருந்தால் மிளகாயை ஜாஸ்தி போட்டு அதைச் சாப்பிட விடாமல் செய்து விடுவார்கள்.

ஆண்கள் இதே மாதிரி திட்டியவனின் நினைவு வந்தால் அங்கே கணக்கு சீராக எழுத மாட்டார்கள். ஒரு இயந்திரத்தை இயக்கினாலும் அதைச் சீராக இயக்குவதற்கு மாறாக அந்த உணர்வின் தன்மை தவறு செய்யும் நிலைக்கு இயக்கி விடுவார்கள்.‌ இதைப் போல “பதிவான அந்த உணர்வுகள்” அங்கே அதை இயக்கி விடுகின்றது.

நீங்கள் தியானத்தில் இருக்கும் பொழுது நமது குரு அருளை உங்களுக்குள் பதியச் செய்து
1.துருவ நட்சத்திரத்தின் இயக்கத்தின் சக்தியை அது துருவ நட்சத்திரமாக எப்படி ஆனது…? என்ற உண்மையினை உணர்ந்து
2.அதை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது “ஊழ்வினை” என்ற வித்தாகப் பதிவாகின்றது.

ஒரு கோபிப்போன் உணர்வை உற்று நோக்கினால் அது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது. மீண்டும் அந்தக் கோபிப்போனை நினைக்கும் பொழுது அது நமக்குள் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது… உடலிலே கடும் நோயாக மாறுகின்றது.

இதைப் போல இவை அனைத்தையும் நீக்கியவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆனது. அந்த உணர்வினை நுகர்ந்தால் தீமை என்ற நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

“ஈஸ்வர நாமத்தை” ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை

 

இந்தப் போதனையின் வாயிலாக உலக மக்களுக்கு உணர்த்திடும் நிலையினால்
1.ஒவ்வோர் உயிராத்மாவும் விஷமாய்க் கலந்துள்ள காற்றின் சக்தியிலிருந்து உன்னத நிலை பெறல் வேண்டும்
2.நம் உயிர் ஆத்மாவிற்கு வேண்டிய அழியாச் சொத்தைச் சேமித்திடல் வேண்டும்.

நம் உயிராத்மாவை உன்னதப் பொக்கிஷமாக்கி அவ்வொளியுடனே ஒளியாய்க் கலந்திடல் வேண்டும். ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் இன்று வாழும் நிலையில் விஷத்தன்மை வாய்ந்த காற்று அலையில் சிக்குண்டு இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள இம்மனித உடல் வாழ்க்கையை, ஏக்கத்தினாலும், பேராசை வெறியினாலும், சலிப்பினாலும் ஆத்மா பிரிந்து சென்று, அவ்வெண்ண அலையுடனே, ஈன ஜெந்துவாய் அதன் ஈர்ப்பலையில் சிக்கி அதன் வட்டத்திற்குள் நம் உயிராத்மா சென்று வாழும் பிடியிலிருந்து மீண்டு செயல் கொள்ளல் வேண்டும் என்றால் நம் வாழ்க்கையைப் புனிதமாக்கி ஜெபம் கொண்டிடல் வேண்டும்.

1.ஈஸ்வர நாமத்தை ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை
2.நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்னலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.

பக்தி என்ற நிலையில் நம் எண்ணத்தில் அப்பரந்தாமணையே எண்ணிப் பல நாள் பூஜித்து வணங்கி நாம் முக்தி எய்திட… அப்பரந்தாமனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும் பக்தி ஜெபத்தில் ஈடுபட்டு வழி வந்திடும் நிலையில்…
1.நம் வாழ்க்கையில் ஏற்படும் நம்மைச் சார்ந்தவரின் நிலையினாலும் மற்றவர்களின் நிலையினாலும்
2.நம் பூஜையில் குறுக்கிடும் நிலையோ அல்லது அவர்களினால் நம் ஜெபம் தடைபடுகின்றதே என்ற ஏக்கத்தினாலும்
3.நம் எண்ணத்தைச் செலுத்தினாலும் நம் ஜெபம் நமக்குக் கை கூடாது.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஒவ்வொரு சக்தி நிலை உண்டு. அச்சக்தி நிலையை வெளிப்படுத்திடப் பக்குவ நிலை வேண்டும்.

உதாரணமாய் நம் இல்லத்தில் நாம் சமைக்கும் பதார்த்தத்தில் எப்பதார்த்தத்தை மையப்படுத்திச் சமைக்கின்றோமோ அதன் நிலையில் உப்போ புளிப்போ காரமோ எச்சுவை அதிகப்படுகின்றதோ அந்நாமம்தானே அப்பாதார்த்தம் பெறுகிறது. நீர் செய்த பதார்த்த நாமம் மாறி “ஒரே உப்பு” என்று நாமம் பெறுகிறது.

இப்பக்குவ நிலை மாறு கொண்டால் நம் உயிர் ஆத்மாவிற்கு “நாம் சேமிக்கும் சொத்து” நம் எண்ண நிலை மாறு கொண்ட ஏக்கத்தில் நம் உயிராத்மா பிரிந்து விஷமாய்க் கலந்துள்ள இக்காற்றினில் நம் ஆத்மா தத்தளிக்க… நாமே நம் ஆத்ம சக்தியைச் சிதற விடுகின்றோம்.

நாம் செய்யாத ஒரு செயலுக்கு மற்றவரினால் கடும் சொல்லோ எதிர்ப்பு நிலையோ ஏற்படும் தருவாயில்… நாம் சத்தியவானாய் உள்ளோம், நம்மை ஏன் வீண் இகழ்ச்சி செய்கின்றனர்…? ஆண்டவா… அவனைப் பார்த்துக்கொள். அவனைச் சும்மா விடலாகாது.

நம் சத்தியத்தை அவன் மீறி நம்மை துவேஷகக்கிறான் என்ற எண்ண நிலையில் நம் எண்ணத்தைச் செலுத்தி அவ்வாண்டவனை வணங்கி, அவன் செய்த பாவத்திற்கு… நாம் எண்ணும் நிலையிலேயே “நம்மையே நாம் தண்டனைப்படுத்திக் கொள்கின்றோம்…”

இவ்வுணர்வின் நிலையினால் நம் உடல் நிலையும் பாதித்து அதன் வழித்தொடரில் பல இன்னல்களை நாம் அடைகின்றோம்.

நம்மை ஏமாற்றி வஞ்சனைப்படுத்தி வாழ்கின்றாரே அந்நிலையைப் பார்த்து நாம் எப்படிச் சும்மா இருத்தல் முடியும் என்று எண்ணத்தில் சலிப்பு தோன்றலாம்.

நம்மை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு ஏமாற்றுபவர்கள் எல்லாம்
1.நம்மை ஏமாற்றவில்லை.
2.அவர்களையே அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

ஒருவரின் மேல் குரோதத்தை வளர்ப்பவனும் பொறாமை கொண்டு ஏக்கப் பெருமூச்சு விடுபவனும்
1.நம்மைப் பார்த்து பொறாமை கொள்ளவில்லை… ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.
2.அவனையே தான் அவன் பொறாமைப் படுத்துகின்றான், ஏக்கப்படுத்திக் கொள்கின்றான்.

அத்தகைய நிலையை நாம் உணர்ந்து கொண்டு… நம் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி…
1.ஓம் ஈஸ்வரா…! எனக்கு நல்ல மனத்தைத் தா
2.அவனுக்கும் நல்லுணர்வு கொண்ட நற்சக்தியை வளரவிட்டு நல்லவனாய் ஆக்கிடுங்கள் என்ற ஜெபத்தைத்தான் நாம் பெற வேண்டும்.

அவர்கள் செய்யும் வினை அல்ல அது. அவர்களை ஆட்டி வைக்கும் துர் சக்திதான் அதுவேயன்றி “ஆண்டவனின் அருளில் உதித்த அனைத்து உயிராத்மாவுமே ஒன்றுதானப்பா….”

இக்காற்றினில் தான் அனைத்துமே கலந்துள்ளன. தீயவனாய் எவனும் பிறந்திடவில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலையினால் ஏற்படும் இத்தீய சக்தியின் பிடியிலிருந்து மீள முடியவில்லை.

இன்று வந்த நிலையல்ல இது. பல காலமாய் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியில் குரோத வெறி உணர்வினால் அரசர்கள் ஆண்ட காலத்தில், பேராசையில் அவர்கள் நாடு பிடிக்கப் போர் என்ற நிலையில் பல ஆத்மாக்களை இக்குரோத எண்ணத்தில் போர்க்களத்தில் உயிர் நீத்த ஆத்மாக்களின் நிலையின் வழித் தொடரினால் வந்த வினைதானேயன்றி “இன்று வாழும் நம் மனித ஆத்மாக்களினால் வந்த நிலையல்ல இந்நிலை…”

இதிலிருந்து மீளுவதற்குத் தான்
1.நம் ஆத்மாவை எப்படிச் செயல்படுத்திடல் வேண்டும்…? என்பதனை உணர்ந்து
2.நம் எண்ணத்தைக் கொண்டு நம் உயிராத்துமா அடையப் போகும் நிலைதனை உணர்ந்து
3.சத்தியத்தின் சக்திவானாய் சக்தி பெற்றிடல் வேண்டும்.

தீயவர்கள் என்று ஒதுங்கி வாழ்ந்திடல் ஆகாது. நாம் எடுக்கும் நல்லுணர்வின் ஜெபத்தினால் நம் எண்ணத்தின் சுவாசத்தைப் பல மைல்களுக்கு அப்பால் இருந்திட்டாலும் “அன்பான சுவாசத்தை அவர் எண்ணமுடன் நம் எண்ணம் கலக்கச் செய்து… அவரையே நம் எண்ணத்தினால் புனிதம் அடையச் செய்திடலாம்…”

நம் எண்ண சக்திக்கு உகந்த நிலைதனை நாம் உணர்ந்திடல் வேண்டும்.

பல மகான்களும் சப்தரிஷிகளும் இவ்வெண்ண சக்தியில் உயர்வு பெற்று மகான்கள் ஆனார்களேயன்றி, கடும் ஜெபத்தினாலோ விரதத்தினாலோ யாக குண்டங்கள் வளர்த்து பூஜித்ததினாலோ அம்மகான் நிலை பெறவில்லை.

எண்ணத்தில் உயர்ந்த ஞான சக்தி பெற்றவன் தான் ஞானியாகவும் சித்தன் ஆகவும் ரிஷியாகவும் ஆனானே அன்றி பக்தியைக் கொண்டு ஆண்டவனை வணங்கி பூஜித்து நற்சக்தியைப் பெறவில்லை.

1.அவரவர்களுக்குள் உள்ள ஆத்மாண்டவனே இவ்வெண்ணத்தினால் பூஜித்து புனிதப்படுத்தி பக்குவநிலை பெற வேண்டுமே அன்றி
2.பஜனை பாடிக் கோவிந்தனை அழைத்து எவ்வாண்டவனின் ஜெபத்தையும் பெற முடிந்திடாது.
3.ஒவ்வோர் ஊர்களுக்கும் சென்று மக்களுக்கெல்லாம் நல்லுணர்வு பெற அக்கோவிந்த ஜெபம் பாடினால் மட்டும் நல்லுணர்வு பெற முடிந்திடாது.
4.எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன்… “தானே ஆண்டவன் ஆகலாமேயன்றி”
5.அவ்வாண்டவனின் சக்தியைப் பெற எப்பூஜையும் பஜனையும் வழி நடந்திடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்றாட வாழ்க்கையில் நாம் பல பல கஷ்டங்களைக் கேட்டு உணர்ந்தாலும் அவை எல்லாம் நம் ஆன்மாவில் முன் வந்து விடுகின்றது. சுவாசிக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை சங்கடமோ சலிப்போ வெறுப்போ கோபமோ வேதனையோ அனைத்தும் வருகின்றது.

இதையெல்லாம் மாற்றி அமைக்கும் தன்மை தான் ஒன்பதாவது நிலையான… கடவுளின் அவதாரம் நரசிம்மா என்பது.

எதையுமே சிருஷ்டிக்கும் பண்பு பெற்றது தான் மனிதனின் ஆறாவது அறிவு.
1.உருவாக்கும் தன்மை பெற்ற இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து
3.நாம் உள் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் புகுத்தி
4.நமக்குள் தீமை புகாது பிளத்தல் வேண்டும்… நரசிம்மா…!

தனது வலிமையின் தன்மை கொண்டு சாக்கடையை “வராகன்” எப்படிப் பிளந்ததோ நல்ல உணர்வை எப்படி உணவாக எடுத்ததோ அதைப் போல ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையைப் பிளந்து தனக்குள் ஒளியாகச் சிருஷ்டித்துக் கொண்ட அந்த மகரிஷியின் உணர்வுகளை நாம் நுகர்ந்திடல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி… “உள் நுகர்ந்து”
2.அதனின் துணை கொண்டு தீமைகள் புகாது தடுத்து
3.நமக்குள் புகக் காத்திருக்கும் அந்தத் தீமையான உணர்வைப் பிளந்து
4.முந்திய நிலையில் புகுந்த தீமைகளையும் அகற்ற வேண்டும்
5.தீமை அகற்றிடும் உணர்வின் தன்மையாக நமக்குள் விளைந்திடல் வேண்டும்.

இந்த உடலை விட்டு நாம் எப்போது… எந்த நேரம் அகன்றாலும்
1.எந்த உடலும் நம்மை இழுத்து விடாது… எதிலும் சிக்காது…
2.எந்த ஞானியின் பால் நம்முடைய கூர்மை சென்றதோ… அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாம் அங்கே நிலை கொள்ள முடியும்.

இது தான் பத்தாவது நிலை தசமி.

வாழும்போது நாம் பிறருக்குத் தீங்கு செய்யவில்லை என்றாலும் கேட்டுணர்ந்த தீமைகள் அதிகமாகி… அதிகமாகி… அதே சமயத்தில் அதிகமான பின்… அதிலிருந்து விடுபட நமக்கு எவர் ஒருவர் உதவி செய்கின்றாரோ அவரின் நினைவே கடைசியில் வரும்.

மகராசன்…! நான் துயரப்படும் நேரத்தில் எல்லாம் எனக்கு நல்லதைச் செய்தான். அவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்…? என்று அவரின் எண்ணத்தைக் கூர்மையாக எண்ணி அதனின் வலுவை நமக்குள் சேர்த்து விட்டால் அவர் இறந்த பின் அவர் உடலுக்குள் தான் புக முடியும்.

1.இந்த உடலில் உருவான நோயான உணர்வின் துணை கொண்டு
2.அவரின் ஈர்ப்புக்குள் சென்று அந்த இனமாக இணைத்து
3.அந்த எல்லைக்குள் நம் உடலில் வந்த தீமைகளை உருவாக்கி
4.நமக்கு உதவி செய்தவரையும் தீமையின் நிலைகளிலேயே அழித்து
5.நமக்கு நல்ல இருப்பிடம் இல்லாதபடி நஞ்சின் தன்மையை வளர்த்து
6.பரிணாம வளர்ச்சியில் கீழிருந்து எப்படி மேலே வளர்ந்து வந்தோமோ
7.அதை மாற்றி மீண்டும் கீழான பிறவிக்கே சென்று விடுகிறோம்… தேய்பிறையாகின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் “தசமி…” பத்தாவது நிலையை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் மீண்டும் மீண்டும் உள் செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் வந்த வேதனையோ கஷ்டமோ துயரமோ எதையெல்லாம் கேட்டறிந்தோமோ… நம் ஆன்மாவில் அவ்வாறு படர்ந்து கொண்டிருக்கும் தீமைகளை எல்லாம் பிளத்தல் வேண்டும்.

அது தான் நரசிம்மா…!

பேரருள் பேரொளி

 

மனித வாழ்க்கையில் வெறுப்பு வேதனை என்று வரப்படும் பொழுது மனிதனையே சீர்குலையச் செய்யும் உணர்வுகளாக அது வளர்ந்து விடுகின்றது இதிலிருந்து நம்மைப் பாதுகாத்தல் வேண்டும்.

ஆனால் அதிகமாக வளர்த்து விட்டால் உடலைப் விட்டு பிரிந்து சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அங்கேயும் இந்த விஷத்தை உருவாக்கி… அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலைத் தான் உயிர் உருவாக்கி விடும்… தப்பவே முடியாது.
1,இந்த உடலில் வேதனைகளை வளர்த்து விட்டோம் என்றால்
2.இந்த உடலுக்குப் பின் மீண்டும் நரக வேதனைப்படும் உடலைத்தான் நாம் பார்க்க முடியும்.

உயிரான ஈசன் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக உருவாக்கி இருக்கின்றான். அத்தகைய நிலையில் பிறவியில்லா நிலையைத்தான் நாம் அடைதல் வேண்டும்.

1.ஆனால் மனிதன் தீயிலே குதித்தால் உயிர் வேகுகின்றதா…? இல்லை.
2.இதே மாதிரி இந்தப் பிரபஞ்சத்தில் எந்த விஷத்தின் தன்மையோ அது நம்மை ஆட்சி புரியாதபடி தடுத்தல் வேண்டும்.

விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் ஆகின்றது. ஆனால் வெப்பம் அதிகமான பின் விஷத்தைப் பிரித்து விடுகிறது.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் விஷத்தைத் தான் ஆதாரமாக வைத்து உடலை வளர்த்து வந்தது. பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சித் தன் உடலை வளர்க்கின்றது. மாட்டு இனங்களோ விஷத்தின் வலிமை கொண்டு தான் இயக்கத்தின் சக்தியாகி அதைக் கொண்டு தான் தன் உணவைக் கரைக்கின்றது.

இப்படி மனிதனாக வளர்ந்த நிலையில் பல விஷத்தன்மைகளை மாற்றி மாற்றி மாற்றி மாற்றி… இந்த உடல் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றிவிடுகிறது.
1.நஞ்சினை நீக்கிடும் அருள் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் தோற்றுவிக்கின்றது
2.இந்த எண்ணத்தை நாம் சீராக்கவில்லை என்றால் மீண்டும் விஷத் தன்மைகள் கூடிவிடும்.
3.கூடிவிட்டால் எத்தகைய விஷத்தின் தன்மை கூடுகின்றதோ அதற்குத் தக்க மனிதனல்லாத உடலை உருவாக்கி விடும்.

மீண்டும் பிறவிக் கடனுக்கே வருகின்றோம்

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும் என்பதற்குத்தான் பரமபதத்தை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அருள் சக்தியைக் கூட்ட முடியும். வைகுண்ட ஏகாதசி என்று நம்மை நாம் எப்படிப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள்.

1.உலகில் உள்ள அனைவருக்கும் பேரொளி கிடைக்க வேண்டும் பேரருள் கிடைக்க வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்
3.உலகில் உள்ள அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும்
4.என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும்
5.நான் பார்க்கும் குடும்பம் அனைத்திலும் அந்த அருள் சக்தி படர வேண்டும்
6.எல்லோரும் பேரொளி ஆக வேண்டும் என்று உணர்வினை எடுத்தால் பகைமைகளை நாம் மாற்றியமைக்கின்றோம்.

இவைகள் எல்லாம் நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது ஆகவே இந்த உடலுக்குப் பின் முழுமையடைதல் வேண்டும்.

மரத்தில் பூ பூத்துக் காய் காய்த்துக் கனியாகின்றது. கனியாகி விட்டால் மூடி மறைத்து (விதையை) விடுகின்றது. திறந்து விட்டால் வித்து தன் இனத்தை உருவாக்குகின்றது.

ஆக எப்படிக் கனியாகின்றதோ இதைப் போன்று
1.நமது உயிரின் தன்மையை இந்த உடலுக்குப் பின் வாழ்க்கையில் வந்த இருள் சூழும் தீமையான உணர்வுகளை மாற்றி விட்டு
2.”பேரொளி என்ற உணர்வாகும்” பௌர்ணமி போன்று
3.தீமைகளை நீக்கி உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பேரொளி என்ற நிலை உருவாகி
4.பேரருள் என்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் நமது சாஸ்திரங்கள் காட்டியுள்ளது.

அந்த நிலையை ஒவ்வொருவரும் நாம் பெறுதல் வேண்டும்.

நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம்…? என்று பார்க்கத்தான் “படைத்தவன் நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளான்”

 

சூரியனிலிருந்து கிடைக்கப்பெறும் காந்த அமில சக்தியினால் மட்டும் நம் உலகிற்கு ஒளி பாய்வதில்லை. நம் உலகமும் அதன் ஈர்ப்பின் நிலைதனைப் பெறுதல் வேண்டும்.

அக்காந்த அலைகளை நம் பூமி ஈர்த்து அதன் வட்டத்திற்குள் சுழல விட்டு அச்சுழற்சியில் இருந்து சூரியனின் ஒளி அமிலத்தை மென்மேலும் ஈர்த்துச் செயல் கொள்ளாவிட்டால் நம் உலகிற்குச் சக்தி ஏது…?

சூரியனின் படைப்பில் சக்தியை அளித்தாலும் நம் பூமி ஈர்த்துச் செயல் கொள்ளாவிடில் நம் பூமிக்கு ஜீவன் இல்லை. அதைப்போல் ஒவ்வொரு உயிராத்மாவும் ஆண்டவன் படைப்பில் அதனதன் சுழற்சியில் ஏற்படுத்திக் கொண்ட அமில சக்தியின் வட்டத்தின் வளர்ச்சியில் வாழ்க்கை நிலை அமைகின்றது.

பல பிறப்புகளை ஏற்கும் நம் உயிராத்மா
1.ஒவ்வொரு பிறப்பிலும் சேமிக்கும் அமில சக்தியில் நற் சக்தியும் தீய சக்தியும் கலந்தே வழி வருகின்றோம்.
2.ஒவ்வொரு பிறப்பிலும் இந்நிலையின் ஒரு பிறப்பில் சேமித்த நற்பயனும் தீய பயனும் மற்றொரு பிறப்பில் ஏற்றத்தாழ்வு கொள்கின்றது.

இதன் நிலையில் தொடர்பு கொண்டு நாம் செய்திடும் நிலையல்ல இது.

நாம் வளர்ந்த எண்ண நிலை நம்முள் கலந்துள்ள தொடர்நிலை என்ற வழியிலேயே வழி பெற்றால்… நாமெல்லாம் இன்று மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திடும் இப்பொக்கிஷமான வாழ்க்கைதனை ஈன நிலைக்கு நாமே அடகு வைக்கின்றோம்.
1.அடகு என்றவுடன் திரும்பவும் பெறும் நிலைக்கல்லவா செப்புகின்றார் என்று உணருவீர்…?
2.ஆம்…! இன்று இக்கலியில் நம் உயிராத்மா கொண்ட இப்பொக்கிஷ வாழ்க்கையை அடகு வைத்துவிட்டால்
3.நாம் அதனைப் பெறும் காலம் பல நூறு கோடி ஆண்டுகள் ஆகலாம்.

பல காலமாய்ச் சேமித்து உயிர் ஆத்மாவாய் மனித உடல் கொண்ட எண்ண வளர்ச்சியில் அறிவுப் பொக்கிஷ வாழ்க்கைதனைப் பெற்ற நம் ஆத்மாவின் நிலைதனை உணர்ந்து… வாழ்க்கைதனில் ஏற்படும் சஞ்சலங்களுக்கு அடிபடாமல் நம்முடன் (நம் எண்ணமுடன்) மோதிடும் பல நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் சமநிலைப்படுத்தும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.

இம்மனித ஆத்மாக்களினால் மட்டும்தான் ஜீவசக்தியை ஒளி பெறும் சக்தி ஆக்கிடல் முடிந்திடும். மனித ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று… அஜ் ஜோதியுடன் ஐக்கியமாகி… அஜ் ஜோதியின் வட்டத்தை வளரவிட்டே மண்டலமாய் ஜீவன் கொண்டு வளர்ச்சி பெற்று… வளர்ச்சியின் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியிலேயே அமில நிலை பல பெற்று மண்டலமாய் உருளும் சக்தியும், உயிராத்மாவாய் வாழும் நிலையும் அதன் தொடர்நிலை அனைத்துமே “இம் மனித ஆத்மாக்களுக்குத் தான் உண்டு…”

மண்டலமாய் சுழல்வதும் இவ்வாத்மாக்களே… கொசுவாய் கழிவின் சுவாசத்தை ஈர்த்து வாழ்வதும் இம்மனித உயிராத்மாவே…! இவ்வெண்ண சக்தியில் நிலைகொண்டு அமைவதுவே அனைத்துமே.

1.நாம் பிறப்பெடுத்து வாழ்வதெல்லாம் நம்மை அவன் அனுப்பி வைத்து
2.நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம்…? என்று பார்க்கத்தான்…! என்ற எண்ணமும் வேண்டும்.

அன்றைய நாளில் மனித ஆத்மாக்களைப் பக்தியின் நிலையில் தான் உயர்வு படுத்திட முடியும் என்ற தத்துவத்தை உணர்த்தி ஆலயத்தை அமைத்தார்களே அன்றி ஆலயத்திற்குச் சென்றால் தான் அவன் அருள் கிட்டும் என்ற நிலையல்ல.

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரவர்களுக்குகந்த அமில சக்தியையே ஒளி சக்தியாக்கி வழி பெறல் வேண்டும்.

1.ஆசையும் அன்பும் அளவுடனே இருந்திடட்டும்.
2.அதி ஆசைக்கும் அதி அன்பிற்கும் வழிப்பட்டால்தான் பேராசைக்குப் பிடிபடும் நிலையில் சலிப்பும் சஞ்சலமும் வெறுப்பும் கொண்டே
3.இதன் வழித் தொடரினால் ஏற்படும் கோபங்களும் அதிலிருந்து ஏற்படும் வைராக்கியத்தின் உறுதியும்
4.எச் சிரமப்பட்டாலும் அடைந்தே தீருவேன் என்ற வெறியின் உந்தலினால் நம்மையே நாம் சிதறவிட்டு வாழ்கின்றோம்.

அன்பும் ஆசையும் இல்லாவிட்டால் உலகமே இல்லை. நற்சக்தியின் பொக்கிஷ சக்தியே இவைதான். இவற்றிற்கே அடிமைப்பட்டுப் பேராசை நிலையில் செல்லும் எவையுமே அவ்வன்பிற்கும் ஆசைக்கும் எதிர்சக்திதான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது…! யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் தான் அந்த நிலையை உருவாக்கி விடுன்றது.
1.அந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையில் இருந்து விடுபடவே
2.மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை அடிக்கடி அடிக்கடி பெறச் செய்கின்றோம்.

இதை உறுதுணையாகக் கொண்டு வாழ்க்கையில் அறியாத வந்த தீமைகளை அகற்றிட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

உலகம் காக்கப்பட வேண்டும்… உலக மக்கள் காக்கப்பட வேண்டும். வரும் எதிர்காலக் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வாக விளைய வேண்டும் என்று அந்தந்தக் குடும்பத்தில் இதைக் கடைப்பிடியுங்கள். விஜயதசமி… கல்கி என்ற பத்தாவது நிலையை அடையுங்கள்.

ஒவ்வொரு மாதம் தசமி என்று இருப்பினும் சதுர்த்தி என்று இருப்பினும் அதை எல்லாம் தீமைகளை அகற்றும் நாளாக மாற்றி ஒவ்வொரு மாதத்திலும் இதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளில் முழுமையான நிலைகள் கொண்டு
1.உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்
2.இந்த உணர்வுகளை வலுப் பெறச் செய்து இந்த வாழ்க்கையை வாழ்வோம்… வளர்வோம்.
3.யாரையும் பகைமை கொண்டு பார்க்க வேண்டாம்
4.பகைமைகளைத் தனக்குள் புக விடவும் வேண்டாம்.

மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு நாம் இணைந்திடும் உணர்வை வளர்ப்போம்… உலகைக் காத்திடும் நிலைகள் பெறுவோம்.

கருவில் வளர்ந்து வரக்கூடிய குழந்தைகள் தான் உலகில் வரும் நஞ்சினை அடக்கி உயர்ந்த ஒளியின் சரீரம் பெறும் தகுதியை இனி பெறுவார்கள்.

ஒவ்வொருவரும் நீங்கள் இதைச் செய்யுங்கள் உலகைக் காத்திடுங்கள்… உங்களைக் காத்திடுங்கள். பிறவா நிலை என்ற நிலையை அடையுங்கள். பிறவி இல்லா நிலை அடைந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

என்றென்றும் உயிருடன் ஒன்றி வாழும் அந்த மகரிஷிகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன். அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

நம்மைப் பலவீனப்படுத்தும் உணர்வுகளைத் “துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அடக்க வேண்டும்”

 

நாம் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அகண்ட அண்டம் அனைத்தையும் அறிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்ற மனித உடல் பெற்ற பின்… “இந்த உடலின் பற்று கொண்டு நாம் சந்தர்ப்பத்தில் என்ன செய்கின்றோம்…?”

ஒருவர் தன்னை மதிக்கவில்லை என்று வந்து விட்டால் அவர் வீட்டுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்…? என்ற எண்ணம் வருகிறது.

நாம் வீட்டுக்குச் செல்வோம்… அவர் வேறு ஒரு கவனத்தில் இருப்பார். காரியத்தை முடித்துவிட்டு அவர் திரும்பிப் பார்க்கும் பொழுது சங்கடமாக இருந்திருக்கும்.

சங்கடத்தில் திரும்பிப் பார்த்த பொழுது அங்கே வந்த நம்மை “வாருங்கள்” என்று கூப்பிடாமல் விட்டுவிட்டால் போதும்.

நான் வீடு தேடி வந்திருக்கின்றேன்… என்னை அவன் கொஞ்சமாக மதித்தானா…? என்ற வெறுப்பு உணர்வுகளைஸ் சுவாசிக்க நேர்கின்றது. தன்னை மதிக்கவில்லை என்று எண்ணும் பொழுது அந்த வேதனை வந்து விடுகின்றது.

எந்த மனிதன்… சந்தர்ப்பத்தால் இதை அறிய முடியவில்லை வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையோ
1.அவன் மீது இருக்கக்கூடிய நல்ல குணத்தையும் நல்ல பண்புகளையும் அறிய முடியாதபடி
2.நமக்குள்ளே நாம் அதை மறைத்து விடுகின்றது.
3.நண்பனாகப் பழகிய அந்த நண்பனின் நிலையும் அவருடன் அன்புடன் பழகிய உணர்வுகளும்
4.நம்மை அறியாமலே சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது… நல்ல மனமும் குறைந்து கொண்டே வருகின்றது

இப்படி நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் கடந்து தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் விடுபட வேண்டும் என்ற உணர்வை எடுத்து எடுத்து… அகண்ட அண்டத்தையும் அறிந்து கொண்டு செயல்படும் திறன் பெற்ற இந்த மனித உடலிற்குள் இருக்கும் “ஆறாவது அறிவை” அதனின் ஆற்றலை நாளுக்கு நாள் தேய்பிறையாக மாற்றி மனித உடலை இழக்கும் சந்தர்ப்பத்தைத் தான் அதிகமாக நமக்குள் சேர்க்கின்றோம்.

ஆகவே எத்தகைய சிரமங்கள் வந்தாலும்
1.அதைப் போன்ற சந்தர்ப்பங்களிலிருந்து விடுபட
2.மன உறுதி கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
3.இந்த உணர்வினை உடலுக்குள் அதிகமாகச் சேர்த்தால்
4.நம்மைப் பல வகைகளிலும் பலவீனப்படுத்தும் அந்த உணர்வுகளை… அந்த விஷத்தை
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அடக்கி விடுகின்றது.

இதை நாம் செய்து பழகுதல் வேண்டும்.

வாழ்க்கைக்கு “இசையமுதம் பெரும் சொத்தப்பா”

 

இன்று நம்மில் பல மகான்கள் தோன்றி வாழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவர் அவர்களின் அறிவு சக்தியை உலகிற்காக உணர்த்தினார்கள். பல துறைகளில் மாமேதைகள் வழி பெற்று வந்தார்கள்… இன்றும் வருகின்றார்கள்.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா என்ற விழாவினை அவரின் ஞாபகமாக இன்று நடத்துகின்றனர். அவரின் நிலை என்ன..?

1.இசைக்காகவே பிறந்தார்… இசையுடனே கலந்தார்.
2.அவர் உடலில் செயல் கொண்டவர் அவரின் இசை பக்தியில் அவரையே இசையாக்கி இன்புறும் பக்குவப்படுத்தி
3.அவ்விசையுடனே அவரின் ஆத்மாவைச் செயல்பட வைத்தார் “அவர் உடலில் செயல்படுத்திய ஒரு சப்தரிஷி”

அத் தியாகராஜரின் உயிரான்மாவே இசையுடன் கலந்து அவ்விசைஞானம் பொழிந்திடும் இசை உள்ளங்களில் தன் இசை ஒளியைக் காண்கின்றார்.

பல மகான்கள் இசையைப் பக்தியாக்கி அப்பக்தியையே ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அந்த இசையுடனே ஒன்றிவிடுகின்றார்கள். இசைஞானம் பெற்று உள்ளத்தையே அமுதிசைப்படுத்தி ஆண்டவனை வணங்குவதாக எண்ணி வணங்குகிறார்கள்.

இசைஞானம் பெற்று இசையுடன் ஒன்றிய ஆத்மாக்களின் நிலையில் எல்லாம் அவர்கள் இசைக்கும் இசையே
1.அவர்களின் உயிர் ஆத்மாவையே இசை அமுதின் அமில சக்தியை அவ்ஆத்மாவுடன் ஒன்றச் செய்து
2.அவ்வுயிராத்மாவிற்குப் பேரானந்த நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றார்.
3.இசைக்கும் இசை எல்லாம் ஈசனின் இசையாக்கித் தன் உயிராத்மாவையே ஈசனாக்கி
4.இன்பமுடன் அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கிடைக்கப் பெறுகின்றது.

வாழ்க்கைக்கு இவ்விசையமுதம் பெரும் சொத்தப்பா.

இசைக்கும் இசையிலேயே ஒவ்வொரு உடலிலும் உள்ள உயிரணுக்கள் அனைத்தையும் அவ்விசைக்கு அடிமைப்படுகின்றது. நம் உலகமே ஓம் என்ற இசையில் தான் உருளுகின்றது. இசைக்கு மயங்காத எவ்வுயிரணுவும் இல்லை.

வாழ்க்கையையே அமுதிசையாக்கி அப்பக்திச் சுரங்களைப் பாடி நற்பயனைப் பெறத்தான் காலம் காலமாக இவ்வுலகமே இசையின் வழியில் வருகின்றது. பக்தி மனம் பெற அவ் இசையமுதம் நம் உயிராத்மாவுக்கு மிகவும் அவசியமாகின்றது.

இந்நிலை உணர்ந்த பல மகான்கள் இசையுடனே கலந்து இன்றளவும் தன் செயல் கொள்கின்றார்கள்.

1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் எண்ணத்தில் ஏற்படுத்தி வழிநடத்தும் செயல் நிலைக்கு உகந்த ஞான சக்தியை அந்நிலையை வளரவிட்டால்
2.அவ்வளர்ச்சிக்குகந்த சக்தி நிலை கொண்டவரின் உதவியுடன் நம் சக்தியை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதற்குகந்த அமில சக்தியின் கூட்டு நிலை உயிர் பிறப்பிலேயே வழி பெற்று வருகின்றது. ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவரின் சாதனை செயல் கொள்கின்றது.

இதற்கெல்லாம் உயிரணுவிலேயே சேமித்த அமில சக்தியின் தொடர் நிலைப்படி தான் வளர்நிலை கொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் நிலையில் தான் செயல் கொண்டு வருகின்றனர். ஆனால் இவ்வமில சக்தியையே உயிர் பிறப்பில் வளர்ச்சி கொண்டு இன்றளவும் ஒவ்வொரு ஆத்மாவும் வழிவந்த நிலையிலேயே ‘நம் ஜெப சக்தியினால் ஜெயம் கொண்டிட முடியும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நேராக நின்று கைகளை மேலே தூக்கிப் பின் கீழே இறக்கிச் சாதாரணமாகத் தொங்க விட்டு உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணிச் சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
1.இது தீயவினைகளைத் தடுக்கவும்
2.கலக்க உணர்வுகள் வராது தடுக்கவும் உதவும்.

மகரிஷிகளை எண்ணி இதனின் சுவாசத்தை எடுக்க எடுக்க இதனின் உணர்வுகள் வளர வளர… நோயை உருவாக்கும் அணுக்கள் தணியத் தொடங்கும்.

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளையும்
2.துருவ மகரிஷியின் அருள் சக்திகளையும்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளையும்
4.இந்த மூன்று நிலைகளையும் எண்ணி
5.அந்தச் சுவாசத்தை உடலுக்குள் அடுக்கடுக்காகக் கொண்டு வரவேண்டும்.

இடுப்பிலே பிடிப்பு இருந்தால்… கையை மேலே உயர்த்தி மாறு கால் மாறு கை தொட்டுவிட்டு… மீண்டும் மேலே கொண்டு வந்து சமப்படுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சகதி பெற வேண்டும் என்று சுவாசத்தை இழுத்து உள் செலுத்த வேண்டும்.

இப்படிச் செய்தால் கை கால் குடைச்சலோ… உடலில் உள்ள மற்ற பிடிப்புகளோ எல்லாம் அகன்றுவிடும். வாத நோய்கள் குறையத் தொடங்கும்.

வாத நோயால் கை கால்களைச் சீராக இயக்க முடியவில்லை என்றாலும் கூட
1.கீழே அமர்ந்து கைகளை உயர்த்தி இந்தப் பயிற்சியைக் கூடுமானவரை செய்ய முற்படுங்கள்.
2.ஒரு நான்கைந்து முறை செய்ய முற்படுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி அந்தச் சுவாசத்தை எடுத்து உடல் முழுவதும் அந்த உணர்வுகளை உள் செலுத்துங்கள். அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற சுவாசத்தை எடுத்து எடுத்து அந்த மூச்சலைகளை உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள.

இரத்தக் கொதிப்பினாலோ வாதத்தாலோ கை கால்கள் முடங்கி இருந்தால் தரையிலே சீராகப் படுங்கள். கூடுமான வரையிலும் அந்த மகரிஷிகளை எண்ணிச் சுவாசித்து உங்கள் கையையும் காலையும் தூக்கிப் பாருங்கள்… மெதுவாக…!

சிறிது நேரம் பயிற்சி செய்துவிட்டு மறுபடியும் அந்த மாதிரி சக்தி பெற வேண்டும் என்று அந்த மூச்சுகளை எடுத்து உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி…
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து
2.இரத்தக்கொதிப்பு நீங்கி நரம்பு மண்டலங்களில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி
3.உடல் நலம் பெற வேண்டும் என்ற நினைவுகளைக் கொண்டு வாருங்கள்.

இப்படி எண்ணி விட்டு மீண்டும் கை கால்களைத் தூக்கிப் பாருங்கள். மேலே தூக்கி பின் கீழே இறக்கிப் பாருங்கள்.

மறுபடி நிமிர்ந்து உட்கார்ந்த பின் உடலில் அந்த இயக்கங்கள் சீராக வருவதற்குண்டான நிலைகள் ஏற்படுகின்றதா…? என்று முயற்சி செய்து பாருங்கள்.

அதிகமாகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி மூச்சுகளை இழுத்து இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து பாருங்கள். எத்தகைய நோயாக இருப்பினும்
1.நரம்பு மண்டலங்களுக்கு அந்த மகரிஷியின் அருள் உணர்வினை
2.இயக்க ஓட்டங்களாகக் கொடுத்துப் பயிற்சி செய்து வந்தால் எல்லாம் சீராகும்.

முடக்குவாதம் இருந்தாலும் இந்தப் பயிற்சிகளைச் சிறுகச் சிறுக செய்து வரலாம்.

நரம்பு மண்டலங்களுக்கு இத்தகைய பயிற்சி மூலம் வேலையைக் கொடுத்து அந்த மகரிஷிகள் சக்திகளை உடலில் ஓட்டங்களாக கொடுக்கப்படும் பொழுது ஓரளவுக்கு உடல் வலிமை பெறுவதற்கும் உடல் முழுவதும் நல்ல சக்திகளைப் பரப்புவதற்கும் தீமையான உணர்வின் அணுக்களை மாற்றியமைக்கவும் இது உதவியாக இருக்கும்.

எந்த அளவிற்கு அதை எடுத்து நமக்குள் சேர்க்கின்றோமோ அந்த அளவுக்குத் தீமையை உருவாக்கும் சக்திகளை மாற்றி அமைக்க முடியும்.
1.அகஸ்தியமாமகரிஷிகளை எண்ணி இந்தப் பயிற்சி செய்யும் பொழுது
2.அவர் பெற்ற மூலிகை மணங்களும் பச்சிலை வாசனைகளும் நிச்சயம் கிடைக்கும்.

துருவ மகரிஷியையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணும் போது அது உடலில் மிகவும் வலிமை மிக்கதாக சக்தி வாய்ந்ததாக மாறும். மனச் சோர்வையும் மனச் சஞ்சலத்தையும் நீக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.

கூடுமானவரை வயிற்றில் ஆகாரம் இல்லாத பொழுது இந்த முயற்சிகளை எடுங்கள். நல்ல பலனைத் தரும்.

அதே போல் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு ஞாபகமறதி இருந்தாலும் இந்தப் பயிற்சிகளைச் செய்தால் நல்ல ஞாபக சக்தி கிடைக்கும். கல்வி சீராக இருக்கும்… மன வலிமை கிடைக்கும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணினால் உங்கள் எண்ணச் சிதறல்களை மாற்றி உங்கள் எண்ணம் வலு பெறும்.

ஆஸ்த்மாவோ சளித் தொல்லைகளோ இருந்தாலும் அதுவும் தணியும்.

தொடர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்கச் சேர்க்க
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகள் ஒளியாகும்
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து பிறவியில்லா நிலை அடைய முடியும்.

October – 2024 உபதேசம்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்

 

காலையில் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாக வளர்க்க நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடைப்படுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்துன் சக்தியை முன்னணியில் வைத்தால்…
1.தீமையான அணுக்களை நம் உடலுக்கு ஓர் அடிக்கு உள்ளே வராதபடி தடுத்துவிடலாம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் தியானித்து வலுப்பெற வலுப்பெற
3.நமது ஈர்ப்பு வட்டத்தில் இருந்து அந்தத் தீமைகள் கடந்து பரமாத்மாவிலே கலந்து விடுகின்றது.

நம் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள நல்ல அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க அது வலுப்பெற்று தீமைகளை மாற்றிவிடும்.

இவ்வாறு மாற்றி அமைத்தால் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் வலுப் பெறுகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்கின்றோம்.

ஆனால் பிறிதொரு உணர்வுக்குள் சிக்கிவிட்டால் அந்த உடலுக்குள் சென்று நோயை உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தத்தான் செய்யும். அந்த உடலை விட்டு வந்தபின் பரமாத்மாவிலே கலந்து எந்த விஷத்தன்மையுடன் வந்ததோ அதனுடைய ஈர்ப்புக்கு அழைத்துச் சென்று மனிதனல்லாத உருவை உருவாக்கி விடும் நமது உயிர்.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும். ஆகவே
1.அடிக்கடி துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை சேர்த்துக் கொண்டே வந்தால்
2.பற்று கொண்ட மற்றவர்களின் தீமையான உணர்வுகளும் நமக்குள் நோயாக மாறாது.

அந்த ஆன்மாக்களை விண் செலுத்தி விட்டால் அந்தத் தீமை நமக்குள் இயங்காது மாறி விடுகின்றது. உடல் ஈர்ப்புக்குள் வராதபடி நம் ஆன்மாவிலிருந்து தள்ளிப் பழகுதல் வேண்டும்.

அதற்குத் தான் ஆத்ம சுத்தி அந்த ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். எப்பொழுது மனக்கலக்கமோ சோர்வோ சலிப்போ சஞ்சலமோ வேதனையோ நம்மை அறியாமலே வரும் அந்த மாதிரி நேரங்களில் அதை நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

1.தீய அணுக்கள் கண் வழி அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது.
2.இழுத்து ஆன்மாவாக மாற்றிச் சுவாசிக்கும்படி செய்து… அப்போது அந்த எண்ணங்கள் வருகின்றது.
3.இரத்த நாளங்களில் கலந்து நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைத்து அதன் படி தீமைகளை உருவாக்கி விடுகின்றது.

இது போன்று எப்பொழுதெல்லாம் தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். துருவ நட்சத்திரத்தின் பால் நினைவச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் வலுப்படுத்துங்கள்.

இந்த உணர்வுகள் வலுப்பெற்ற பின் சோர்வடையச் செய்யும் சஞ்சலப்படச் செய்யும் கவலைப்படச் செய்யும் வெறுப்படையச் செய்யும் அணுக்களுக்கு ஆகாரம் செல்லாதபடி இந்தத் துருவ நட்சத்திரத்தின் அவைகளைத் தள்ளி விடுகின்றது.

1.நாம் ஆன்மாவை விட்டுத் தீமைகள் கடக்கப்பட்டு பரமாத்மாவிலே கலந்து விடுகின்றது.
2.அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் வலுப்பெறும் போது நல்ல அணுக்களுக்கு இது உணவாகச் சென்று
3.உடலுக்குள் நல்ல அணுக்களாக வளரத் தொடங்குகிறது.

மனிதனாக இருப்பவர் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

தீமை செய்யும் அணுவாகிவிட்டால் அது உந்தி தன் உணவை எடுக்கின்றது… அறியாதபடி நோய்களும் வந்து விடுகிறது… நம் மனநிலையும் வித்தியாசமாகி விடுகின்றது.

அன்பு கொண்டு மற்றவரிடம் பழகினாலும் அந்த அன்பு மறைந்து விடுகிறது… பகைமையை ஊட்டுகின்றது. பகைமையான அணுக்கள் உடலுக்குள் உருவாகும் பொழுது உடலுக்குள்ளேயே பகைமை உணர்ச்சிகள் வளர்ச்சி அடைந்து விடுகின்றது.

இதைப்போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒவ்வொரு நாளும் வாழ்க்கையையே தியானம் ஆக்குங்கள்.

சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு போன்ற செயலற்ற நிலைகள் வரப்படும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் வலுப்படுத்தினால் தீமைகளைத் தள்ளி விடுகின்றது… ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது… மன வலிமை பெறச் செய்கின்றது.

வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தீமையிலிருந்து விடுபடும் சக்தியும் பெறுகின்றோம். அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றுகின்றோம். ஆகவே
1.இந்த வாழ்க்கையில் பிறவி இல்லா நிலை அடைய முயற்சி எடுங்கள். 2.இந்த உடலுக்குப் பின் நாம் இன்னொரு உடல் பெறக் கூடாது.

சப்தரிஷிகளின் செயல் நிலை

 

ஆதி சக்தியின் ஜீவ சக்தி தான் அனத்துமே. அஜ்ஜீவ சக்தியை அவ் ஆதி சக்தி வளர விடுகின்றாள். அவ்வளரும் பக்குவத்தில் அவை அவை எடுக்கும் சுவாச நிலை கொண்டு தான் பலவும் உருப்பெறுகின்றன. ஆதி சக்தியின் அருள் சக்தியின் அச்சக்தியுடனே ஐக்கியப்படும் நிலை பெற வேண்டும்.

இன்று நம் உலகினில் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை ஒருவருக்கொருவர் மாறு கொண்டுள்ளது.
1.நல்லவர் தீயவர் என்பதெல்லாம் ஆண்டவன் படைப்பு அல்ல,
2.அவரவர் எடுத்து சுவாச நிலை ஒன்று அமையப்பெற்றது.

நல்லவரின் எண்ணத்தை அச்சக்தியின் நிலையுடன் சக்தியை ஈர்த்து அந்நிலையில் மென்மேலும் நற்பயனைச் செயல்படுத்தி அதன் வழித் தொடரிலேயே ஆத்மாவிற்கு நற்சக்தி கூடி பரம்பொருளான ஆதி சக்தியுடன் ஐக்கியப்பட்டு ஆண்டவனின் அருள் பெற்றவனாய் ஆண்டவனாய் இன்று சப்தரிஷி நிலை பெற்ற பக்குவம் பெற்ற மகான்கள்.

இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களையும் நல் உணர்வு பெற்று நல் ஆத்மாக்களாக தன் வட்டத்திற்குள் அச்சக்தியை ஈர்ப்பதற்காக மனித ஆத்மாக்களின் அவ்ஈர்ப்பு நிலை கொண்ட எண்ணங்களுடன் கலந்து மற்ற மனித ஆன்மாக்களை நற்பயன் பெறச் செய்யும் பக்குவ சக்தியை ஊட்டி நல் உணர்வுகளைப் பக்தி என்னும் நிலையில் வளர விடுகின்றனர்.

அந்நிலை பெற்று வழி வந்த பல மனித ஆன்மாக்கள் எந்நிலை கொண்டு பிறகு செயல்படுகின்றன…?

முந்தைய பாடங்களில்
1.இயேசுநாதரும் முகமது நபியும் ஐயப்பனும் இந்நிலையில் பக்தி கொண்டு வெளி வந்தவர்களின் நிலை எல்லாம் உணர்ச்சி வந்தேன்.
2.இவர்களின் உடலை ஒரு சப்தரிஷி கொண்ட முனிவரின் ஆத்மாவின் செயலினால் வழி நடத்தப்பட்டவர்கள் என்று.

பிற உடலில் அவ்ஆதி சக்தியின் அருள் பெற்ற சப்தரிஷியின் நிலையினால் இவ்வுலகிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடல் கொண்ட ஆத்மாவை அச்சப்தரிஷி வழி நடத்தி அருள் புரிந்த பிறகு அந்த உடலின் ஆத்மாவின் நிலை என்ன…?

ஒவ்வொரு உடலுக்கும் உகந்த உயிரணுவும் உயிராத்மாவும் உள்ள நிலையில் ஒரு சில உடல்களை அவ்உடலில் இருந்து அந்த உயிராத்மா பிரிந்த பிறகு கட்டையான ஜீவனற்ற உடலுக்கு அந்த ரிஷிகளின் ஆத்மா செயல் கொண்டு சில நிலைகள் நடக்க வைக்கின்றனர்.

உயிராத்மாவுடன் உள்ள உடலில் அந்த ரிஷிகளின் நிலை செயல்படும் நிலையில் அந்த உடலில் உள்ள ஆத்மாவின் நிலை எந்நிலை கொள்கின்றது…?

இராமகிருஷ்ண பரமஹம்சர் உயிருடன் உள்ள நிலையிலேயே அவரைத் தன் செயலுக்கு உகந்த ஆத்மாவாகத் தேர்ந்தெடுத்து அவர் வழியில் இவ்வுலகிற்குப் பல வழிகளைப் புகட்டிய அந்த ரிஷியின் அருள் இவருக்கு எப்படிச் செயல்பட்டது…?

அதற்குப் பிறகு இவரின் உயிர் ஆத்மாவின் நிலை என்ன…?

இவரின் உடலில் இருந்து அந்த உடல்நிலை கெட்ட பிறகு அந்த உடலில் இருந்து கொண்டு அவர் உயிராத்மா செயல்படாது என்ற நிலையில்
1.அவர் உயிருடன் உடல் பெற்று வாழ்ந்த காலத்தில் அவர் நிலையிலிருந்து செயல்படுத்திய அந்த ரிஷியின் சக்தி
2.அவர் உடலில் உள்ள அனைத்து அமிலத்தையும் புனிதமாக்கும் பக்குவத்தை அவர் சுவாசமுடனும் எண்ணமுடனும் கலக்கச் செய்து
3.அவ்ஆத்மாவுக்கும் அந்த ரிஷியின் ஆத்மாவுடன் கலக்கும் பக்குவத்தை அந்த உயிராத்மாவே ஏற்படுத்திக் கொண்டு
4.அந்த ரிஷியின் சக்தி வட்டத்திற்குள் இவரின் சக்தியும் ஒன்றி விடுகின்றது.
5.இவர் வேறல்ல அந்த ரிஷி வேற இல்லை என்ற நிலையில் ஐக்கியப்பட்டுச் செயல்நிலை கொள்கின்றது.

இப்படித்தான் இச்சப்தரிஷி நிலை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தன் வட்டத்திற்குள் சேமிக்கும் சக்தியாய்ப் பலரை ஈர்த்துச் செயல்படுத்துகின்றனர்

போகருக்குக் குருவாக அருள் பெற்ற காளிங்கராயச் சித்தரின் நிலையும் இன்று அவரின் வட்டத்திற்குள் அவரின் ஒளியுடனே ஒளியாகக் கலக்க போகருக்கு தீட்சை தந்து அவர் நிலையில் முருகா என்ற மந்திரத்துடன் அவருடன் ஐக்கியப்படும் ஆத்மாக்களை ஒளிவட்டமாகத் தனதாகப் பல சக்தியை ஈர்த்து “இன்று ஒரு மண்டலமாகும் நிலையுடன் ஒளிக்கதிர்களைச் சேமித்து செயல் கொண்டு வருகின்றார்…”

மனித ஆத்மாக்களில் மட்டும் எண்ண நிலை மாறு கொண்டு செயல்படவில்லை.
1.சப்தரிஷியின் நிலையிலும் மாறு கொண்ட நிலை உண்டு.
2.ஆனால் அவர்களின் நிலையில் நற்பயனைப் போதிக்கும் நற்சக்தி நிலைதான் கூடிச் செயல்படுகின்றது.

மனித ஆத்மாக்களுக்குத் தான் இப்பேராசையின் நிலையிலிருந்து விடுபடத் தெரியவில்லை. நல் உணர்வை ஊட்டினாலும் ஏற்பதற்கு எண்ணத்தில் ஆசை இல்லை. அன்பென்னும் நிலையைச் சிதற விட்டு வாழுகின்றனர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

உதாரணமாக இங்கே தியான மண்டபம் இருக்கிறது என்றால் அடிக்கடி இதில் குப்பைகளும் தூசிகளும் வரத்தான் செய்கின்றது அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்தித் துடைத்தால் தான் மண்டபம் தூய்மையாக இருக்கும்.

அது போன்று நம்முடைய உடலில் ஏற்கனவே பதிவான அழுக்குகள் எத்தனையோ உண்டு.
1.நம் உடலில் உள்ள அணுக்கள் அதனதன் உணவுக்காக ஏங்கும் பொழுது
2.அந்த மணம் குவிந்து அதைச் சுவாசிக்கும் பொழுது அத்தகைய குணங்களே நமக்குள் வரும்.

தியானம் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை… என்னால் தியானிக்க முடியவில்லை என்ற நிலையை எண்ணாது
1.எப்படியும் அருள் ஒளியை நான் பெறுவேன்…
2.வலு கொண்டு நான் தியானிப்பேன்…
3.தியானித்து அருள் சக்தியை எனக்குள் சேர்ப்பேன்… என்று
4.வலுக்கட்டாயமாகத் தனக்குள் உள் செலுத்திக் கொண்டே வர வேண்டும்.

எப்படி இந்தத் தியான மண்டபத்தை அடிக்கடி தூய்மைப்படுத்துகின்றோமோ அதைப் போல நாம் திரும்பத் திரும்ப எண்ணி அருள் சக்திகளைச் சேர்த்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காரணம்… நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு தான் வாழுகிறோம். பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து அவர்களைப் பண்புடன் அணுகிக் கேட்டறியும் போது அவர்படும் வேதனைகளை நாம் நுகர்ந்தறிந்தாலும் நம் உடலில் அவை “அணுக்கருக்களாக…” மாறி விடுகின்றது.

குடும்பத்திற்குத் தேவையான செல்வத்தையும் சொத்தையும் சேர்த்தோமே… நோயினால் உடலை விட்டுப் பிரியப் போகிறோமே… என்ற ஏக்கத்துடன் அவர்கள் கடைசியில் வாழ்ந்தாலும் அவரின் உணர்வைக் கேட்டறிந்த நமக்குள் அந்த அணுவின் தன்மை வளர்ந்திருந்தால் அவர் இறந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி மன வேதனையைக் கொடுக்கும் நிலையாக மாறிவிடும்.

அதே சமயத்தில் அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்து மீண்டும் மீண்டும் அதே வேதனையான உணர்வை உணவாக எடுத்து அதன் இனங்களை நம் உடலிலே பெருக்கிவிடும்.

1.ஞானிகளைப் பற்றி இங்கே யாம் (ஞானகுரு) சொல்லும் போது நல்ல உணர்வுகளை நுகர விடாது அது தடுக்கும்.
2.தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.
3.தியானத்தில் அமர்ந்தாலும் எழுந்து ஓட வைக்கும்.

காரணம் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதால் அதன் படியே வெளிப்படுத்தும். நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அதை அதை அடக்கப் பழகுவதே யாம் சொல்லும் தியானம்.

அதை நாம் அடக்கப் பழகவில்லை என்றால் அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையாகப் பெறச் செய்துவிடும்.

உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் மன வேதனை வரும் பொழுது மன நோயாக வருகின்றது. பின் உடல் நோயாக மாறி மனித உடலையே மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

எத்தகைய நிலைகள் இருந்தாலும் சரி… நல்லதை எண்ண விடவில்லை என்றாலும்
1.கண்களைத் திறந்து நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும்
3.இருள் மறைய வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்
4.மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும் என்று இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1.என் உடலில் உள்ள ஆத்மாக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று…
2.அது அடங்கி… உயர்ந்த நிலைகளை என்னுள் இருந்து பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

இதனால் நம் உடலில் உள்ள அந்த ஆன்மாக்களுக்கும் ஒரு நற்பயன் ஏற்படுகின்றது. நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒளியாக மாறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இதை மறவாது நாம் செய்து பழக வேண்டும்.

தியானத்தில் உட்கார்ந்தால் என்னால் முடியவில்லை… வெறுப்பாக இருக்கின்றது… எங்கெங்கோ நினைவுகள் போகின்றது…! என்று நிறையப் பேர் சொல்வார்கள்.

தியானத்தில் கண்ணை மூடிய பின் இப்படிப் பல உணர்வு வந்தால் உடனே கண்ணைத் திறந்து விண்ணிலே நினைவைச் செலுத்தி மகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால்
1.தன்னிச்சையாகவே நம் கண்களை மூட வைக்கும்.
2.நம் நினைவுகளைத் தன்னிச்சையாகத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்லும்.
3.அப்பொழுது துருவ மகரிஷியின் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் வழி வருவதை
3.துருவப் பகுதி வழியாகப் பூமிக்குள் வருவதை நாம் நுகரும் பருவத்தைப் பெறுகின்றோம்.

தொடர்ந்து இதை வழிப்படுத்தி வாருங்கள்… நல்லதாக அமையும்.

எம்முடைய உபதேசத்தின் சாரம்

 

இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வெல்லாம்
1.துருவ நட்சத்திரத்துடன் உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்து
2.இந்த உணர்வினை நீங்கள் நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் கருவாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பது.
3.இதை நீங்கள் ஏங்கி சுவாசித்தாலே போதுமானது
4.ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

நமது வாழ்க்கையில் தவறு செய்தவரையும் தீமை செய்பவரையும் உற்று நோக்கி… அவர்கள் பேசும் உணர்வைச் செவிகளிலே கேட்கப்படும் பொழுது அதே உணர்வு கொண்டு “இப்படிப் பேசுகின்றார்கள்” என்று நுகர்ந்தால் அதுவும் தியானம்தான்.

இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் தீமை செய்யும் நிலையாக அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் அணுவாக மாற்றிவிடும்.

ஆனால் இந்த உபதேச வாயிலாக உங்களைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினைச் சொல்லாகச் சொல்லும் பொழுது
1.செவிகளில் இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண் வழி அதைக் கவர்ந்து
2.கண்ணின் காந்தப் புலனறிவு கொண்டு அதை நம் ஆன்மாவாக மாற்றி உயிரான ஈசனிடம் கொடுக்கப்படும் பொழுது
3.இந்த உணர்வின் தன்மை அதாவது பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா ஆக நமக்குள் மாறி அதன் உணர்வு கொண்டு நம் உடலாகிறது.

இதனின் உணர்வை வளர்த்துக் கொண்டால் உயிரான்மாவுடன் சேர்த்து அருள் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மை பேரருள் என்ற உணர்வின் ஆன்மாவாக அந்த உணர்வின் அணுத் தன்மை அடைகின்றது.

அவ்வாறு அடையச் செய்யத்தான் இந்த உபதேசத்தை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு எப்படிக் காட்டினாரோ… அதே வழிப்படிதான் உங்களுக்குள் அது பெருகவும் அதே உணர்வினைச் செவி வழி உணர்ச்சிகளை உந்தும்படி செய்து கண் வழி அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரச்செய்து ஜீவான்மாவாக மாற்றி அதன் உணவுக்காக அதே உணர்வுகள் தூண்டப்படும் பொழுது அதை ஏங்கி வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி நஞ்சினை வென்று பேரருள் பெற வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வாகச் சொல்கின்றேன்.

செவி வழி உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண் வழி அந்த அரும்பெரும் சக்தி அதை நீங்கள் நுகர்ந்து பேரானந்த நிலை பெறும் அந்த ஆற்றல் பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன்.
1.கருத்தினைக் கூர்ந்து கவனித்து அந்த உணர்வுகளை நுகர்ந்தறிந்து அறிவதோடு மட்டுமல்லாதபடி
2.அறியச் செய்யும் மகரிஷிகளின் பேராற்றல் மிக்க உணர்வினை உங்களுக்குள் உருவாக்கவே இந்த உபதேசம்.

தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

 

கேள்வி:-
சர்வ ஜீவ ஜெந்துக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை. மனிதனும் அவ்வண்ணமே படைக்கப்பட்ட பொருள்களில் ஒருவன். மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கிறார் என்பது சான்றோர்கள் வாக்கு.

அந்நிலையை நாம் அனுசரித்து வருகிறோம். அப்படி இருக்கத் தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

எண்ணத்தை வைத்துத் தான் செயல்படுகிறோம். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களே ஏற்படுமானால் நற்செயல்களே செய்வார்கள் அல்லவா…? தீய செயல்களுக்கு இடமில்லாமல் போய்விடும் அல்லவா…? ஏன் அப்படி நடப்பதில்லை…?

ஈஸ்வரபட்டரின் விளக்கம்:-
இறைவன் படைத்த படைப்பே நாம்… நாம் மட்டுமல்ல சகலமுமே ஐக்கியப்படும். இந்நிலையில் இயற்கையிலேயே பல மாற்றங்கள் உண்டு.
1.நீர் மனிதராய்ப் பிறந்துள்ளீர். நாயுமுள்ளது, பாம்பும் உள்ளது, மாங்கனியும் வளர்கின்றது. நச்சுச் செடியும் வளர்கின்றது.
2.மனித ஆத்மாக்களின் நிலையை மட்டும் கேள்வியாக்கினீர்…?
3.இவ்வுலகில் உதித்த உயிரணுக்கள் யாவுமே ஏன் ஒன்றைப்போல் ஒன்றில்லை. எண்ண நிலையும் மாறு கொள்கிறது.
4.உருவ நிலை மற்ற எல்லா நிலைகளுமே தான் மாறு கொண்டுள்ளது.
5.ஒன்றைப் போல் ஒன்றில்லை ஆண்டவன் படைப்பில் ஏன் இவ் ஏற்றத்தாழ்வு…? என்ற எண்ணம் தானே உம் எண்ணம்…?

சூரியனிலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் நம் பூமியின் மேல் படும் நிலையில் ஒவ்வொரு நொடிக்குமே மாறு கொண்ட அணுக்கதிர்கள் தான் நம் பூமியில் வீசுகிறது.

நம் பூமிக்கும் மேல், நம் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள காற்று மண்டலத்திற்கும் மேல் உள்ள பால்வெளி மண்டலத்திற்கும் ஜீவனுண்டு, இயற்கைத் தன்மை உண்டு. பால்வெளி மண்டலத்தில் பல நிலை கொண்ட அமிலங்கள் உண்டு.

எல்லாவற்றுக்கும் பொது மண்டலம் பால்வெளி மண்டலம். சுழலும் நிலையில் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலங்கள் பல நிலை கொண்டதாகப் படர்ந்து சுழன்று அதன் ஜீவ சக்தியில் விளையாடுகின்றது.

நம் பூமி சுழலும் வேகத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலத்தில் பட்டுப் பூமியின் காற்று மண்டலத்திற்கு வருகிறது.

1.இக்காற்று மண்டலம் சுழலும் நிலையில் பூமியின் ஈர்ப்பு சக்திக்குகந்த அமிலத்தன்மை அவ்வொளிக்கதிர்கள் வீசிப் படர்ந்தவுடன்
2.அந்தந்த நிலையில் அந்நிலைக்குகந்த அமிலங்கள் படர்ந்து அதைப் பூமி ஈர்த்து பூமி விடும் சுவாசத்தைக் கொண்டு, அந்நிலையின் உயிர் அணு பிறக்கின்றது.
3.அதன் தன்மையில் ஏற்படும் அமில சக்தி நிலை கொண்டுதான் பூமியின் இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்கள் மற்றக் கனிவளங்கள் எல்லாமுமே.
4.எவ்வமிலத்தை பூமி ஈர்த்ததோ அந்நிலைக்கொப்ப சக்தி நிலை வெளிப்படுகிறது.

பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மா நிலை பெறுவதற்குள் மனித ஆத்மாக்களுக்குப் பல எண்ண நிலைகள் கூடி விடுகின்றன. எவ்வெண்ணத்தை அச்சுவாச நிலையுடன் ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டதோ அந்நிலை கொண்ட அமிலத்தையே ஒவ்வோர் உடலுமே சேமித்துக் கொள்கின்றது.

1.பல ஜென்மங்கள் எடுத்தாலும் உயிரணுவாய் உதித்து உயிர் ஆத்மாவாய் உருப்பெறும் நிலையில்
2.அமில சக்தியைக் கொண்ட தொடர்பின் எண்ணமும் அதன் தொடர்ச்சியின் குண நிலையும் தான் அவ்வாத்மாவுக்கு உண்டே ஒழிய
3.அப்பரம் பொருளான ஆண்டவன் அனுப்புவதல்ல “நல்லவளையும் கெட்டவளையும்…”
இயற்கையின் ஆதி சக்தியின் நிலை பொதுவான சக்தி தான். அவளிலிருந்து உதித்த உயிரணுக்கள் எடுக்கும் வளர்ச்சி நிலை எல்லாம் அதனதன் சக்திதான்.

பரம்பொருள் ஒன்றே அப்பரம்பொருளின் பொருட்கள் தான் நாமெல்லாம். அப்பரம்பொருளின் நிலையுடனே ஐக்கியப்பட்டு ஜெபப்படுத்தும் நிலையினால் நம்மையே அப்பரம்பொருளாக்கிடலாம்.

“அவரவர்கள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டுதான் வாழ்க்கை…”

இக்காற்றுடன் பல நிலைகளும் கலந்துள்ளன.
1.நல்லெண்ணத்தின் சுவாசமும் இக்காற்றினால் தான்
2.துவேஷ எண்ணத்தின் மூச்சுக் காற்றும் இக்காற்றினால் தான்.

நம் வாழ்க்கையுடன் மோதுண்டு வாழும் நிலையில் பல செயல்கள் நடக்கின்றன. அந்நிலையில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு பல நிலைகள் நடக்கின்றன.

நம் ஆத்மாவுடன் நாம் மட்டும் வாழவில்லை பல கோடி உயிரணுக்கள் வாழ்கின்றன. ஆனால் நமக்குத் தான் நம் ஆத்மா சொந்தம். நம் உடலில் தான் மற்ற உயிரணுக்களும் இருந்தாலும் அதற்கு நம் உடலும், நம் ஆத்மாவும் சொந்தமல்ல.

அதைப்போல் நாம் எடுக்கும் எண்ணமுடன் இக்காற்றில் உள்ள பல அலைகளும் நம் எண்ணமுடன் மோதுகின்றன. இதனால் நம்மை அறியாமலேயே நம்முள் பல எண்ணங்கள் மோதுண்ட நிலையில் பல செயல்கள் நடக்கின்றன.

1.மனித ஆத்மாவாய் வாழ்வதுவே பெரும் பொக்கிஷம்.
2.நம்மையே நாம் மற்றத் தீய அணுக்களுக்கு அடிமைப்பட்டு வாழ்வதினால் தான் நல்லவன் கெட்டவன் என்று நிலை வருவது.

ஐந்தறிவு ஆறறிவு என்பதெல்லாம் நம்மால் ஏற்படுத்திய நிலைதான். மனிதனிலிருந்து நம் அறிவின் நிலையைச் சிதறவிடுவதினால் மிருக ஜென்திற்குச் செல்கின்றோம். நம்மைக் காட்டிலும் நுண்ணிய அறிவு மிருகங்களுக்கு உண்டு.

ஆறறிவு ஐந்தறிவு என்பதல்ல வாழ்க்கையே…!

அருள் ஞான வித்து என்ற “மதுரம்”

 

நாம் ஒரு செடியை வைத்து விட்டால் அது செழித்து வளர்ந்து அதிலே மலர்கள் உருவாகின்றது.
1.மலருக்குப் பின் அதிலே மதுவான இனிமை கொண்ட தேன் இணைந்து
2.அதற்குள் மதுரத்தைத் தனக்குள் நுகர்ந்து… அதனின் நிலை கொண்டு கருவுற்று
3.கருவுற்ற நிலைகள் கொண்டு அது தன் வித்துக்களை உருவாக்குகின்றது.

இதைப் போல
1.நாம் எடுத்து வளர்த்துக் கொண்ட மெய் உணர்வுகளின் தன்மை மலர்ந்து
2.அதனின் மணத்தைத் தனக்குள் நுகர்ந்தறியும் உணர்வின் தன்மை “மதுரம்”
3.மகிழ்ச்சியான அலைகளாக… நம் ஆன்மாவாக அது மாறுகின்றது.
4.அப்படி மாறும் உணர்வுகளை நாம் சுவாசித்து “அந்த அருள் ஞான ஒளியின் வித்தாக”
5.முழுமை பெறும் தன்மையை நாம் அவசியம் அடைதல் வேண்டும்… அடைய முடியும்.

ஆகவே ஏனோ தானோ என்று “எமது உபதேசங்களை” அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என் குருவின் அருளை “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை” நீங்கள் பெற வேண்டும். அவரின் அருளால் நீங்கள் தெளிந்திடும் நிலை பெற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் உங்களுக்குள் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று தான் உங்களை எண்ணி நான் பிரார்த்திக்கிறேன்.

என் குருவை உங்களிடம் நான் பார்க்க விரும்புகின்றேன்.

ஆகவே உங்களை அறியாது வந்த இருளை நீங்கள் போக்கிடல் வேண்டும் அதிலே மகிழ்ந்து பேரானந்த நிலை பெற வேண்டும்.
1.உங்களில் வரும் அந்த உணர்ச்சிகள் எனக்குள் மதுரமாகி அதை நுகரும் பொழுது
2.உயிரான ஒளியுடன் ஒன்றி என்றும் நிலைத்திருக்கும் நிலையாக நான் பெறுகின்றேன்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தனக்குள் வரும் நஞ்சினைப் பிரித்து உணர்வின் ஒளியாக எப்படி மாற்றுகின்றதோ இதைப் போன்று தான் நமது குருநாதர் ஆற்றலைப் பெருக்கினார்.
1.அவர் வழிகளிலே நானும் பெற முடிகின்றது,
2.அதன் வழிகளில் நீங்கள் அனைவரும் பெற முடியும்… இதில் கடினம் எதுவும் இல்லை.
3.உங்களைப் பார்க்கும் அனைவரும் இந்த நிலை பெறுதல் வேண்டும்… அந்த நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.

துயர்படுவோரைக் கண்டாலோ அல்லது அதைக் கேட்டறிந்தாலோ அடுத்த கணம் ஒரு 50 முறையாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அவர் உடலில் பட்ட இருள் உங்களை மறைத்திடாது துடைத்துப் பழகுங்கள்.

பின் அவரிடம்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள் உங்கள் பிணிகள் அகலும் மகரிஷியின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வீர்கள் உங்கள் நோய்கள் நீங்கும் உங்கள் குடும்பம் நலமாக இருக்கும் உங்கள் தொழில்கள் வளமாக இருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளரும் என்று
1.இது போன்ற அருள் ஞான வித்தாக வாக்காக அவருக்குள் பதிவு செய்யுங்கள்.
2.இதைப் போன்று வழி தொடர்ந்து வழி தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள்
3.தீமைகள் அகன்று தீமை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைந்து அலைகளாகப் படரும்.
4.அதை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் படரச் செய்யும்.

அப்பொழுது அந்த தீமைகளை அகற்றும் அலையின் தொடர்கள் நாம் எண்ணியவுடன் உடனடியாகக் கிடைக்கப் பெற்றுத் “தீமைகளை அகற்றும் அந்தக் கடவுளாக… அந்த மகரிஷியின் உணர்வுகள்” நமக்குள் சிருஷ்டிக்கும் தன்மையாக வரும்.

ஆனால் இன்றைய மக்கள் பரமாத்மாவிலே எதைப் பரவச் செய்து கொண்டிருக்கின்றார்கள்…? பயத்தையும் வேதனையையும் தான்…!

பஸ்ஸிலே சென்றால் பயம் வீட்டில் இருந்தால் பயம் காசைக் கொண்டு சென்றால் பயம் எதையாவது சத்தமாகப் பேசினால் பயம் என்று அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் இந்த காற்றிலே அலைகளாகப் படர்ந்து கொண்டுள்ளது.

அந்த உணர்வுகள் மகரிஷிகள் உணர்வலைகளைப் பெறாது தடைப்படுத்துகின்ற நிலையாகவே வளர்ந்து கொண்டுள்ளது.

சூரியனின் காந்த சக்தி அதையெல்லாம் கவர்ந்து பரவச் செய்யும் பொழுது நமக்குள் அச்சுறுத்தும் நிலையே வருகின்றது. அத்தகைய கடவுளாகத்தான் இன்று மாற்றி வைத்திருக்கின்றோம்… பரமாத்மாவாக அதைத் தான் மாற்றுகின்றோம்.

அதிலிருந்து நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் சென்ற பின் நம்முள் நின்று அதுவே இயக்கச் செய்கின்றது

இதைப் போன்ற நிலைகளை அகற்ற
1.உலகம் உயர்ந்த நிலைகள் பெற அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து
2.இனி வரக்கூடிய காலங்களில் பூரண பௌர்ணமி போன்று உலக மக்கள் அனைவரும் ஒளியின் சுடராக மாறி
3.தெளிந்த நிலைகள் கொண்டு எல்லோரும் மனிதன் என்ற முழுமை அடைந்து
4.இந்த உடலை விட்டு அகன்றால் நிலை கொண்ட ஒளியான சரீரம் பெற வேண்டும் என்று
5.ஏகோபித்த நிலையில் எண்ணி நாம் வாழ்வோம்… வளர்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அணுவின் ஆற்றலை அறிந்து துருவத்தின் ஆற்றலைப் பெற்று அகஸ்தியன் ஒளியின் சரீரமாககித் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டுள்ளான்.

அவனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் அவன் உணர்வைக் கவர்ந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக ஒளியாக வாழுகின்றனர்.

இதை எல்லாம் கேட்கும் நீங்கள்… சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கிறார் அர்த்தமாகவில்லை…! எதை எதையோ பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.

காரணம்… படிக்காதவன் தான் இத்தனையும் நான் பேசுகிறேன். எம்முடைய பேச்சைக் கேட்பவர்களில்…
1.படித்தவர்கள் சிந்திக்கும்போது அவர்கள் படித்ததை வைத்து… “சாமி என்னமோ சொல்கிறார்…!” என்ற நிலைகளில் விட்டு விடுகின்றார்கள்
2.மிகவும் படிக்காதவர்கள் “சாமி என்ன சொல்கிறார்…?” என்று கூர்மையாக உற்றுக் கவனிக்கின்றார்கள்.

படிக்காதவர்களுக்குள் யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால்
1.தன்னையும் அறிகின்றனர்… அண்டத்தையும் அறிகின்றனர்… அகண்ட அண்டத்தையும் அறிகின்றனர்.
2.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆகி
3.எப்படி ஒளியின் தன்மையாக மாற்றுகின்றானோ அந்த நிலையை அவர்கள் அடைகின்றார்கள்.

உதாரணமாக ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று கண்டறிந்த பின் அந்த உணர்வின் தன்மை நமக்குள் கருவாக உருவாகி விட்டால் அதே நோயின் தன்மை நமக்குள் உருவாகின்றது.

நோயாளியைப் பார்த்துத் திரும்பத் திரும்ப அவனை எண்ணும் பொழுது
1.கோழி கேறுவது போன்று அந்த உணர்வின் தன்மையாகி
2.நோயை உருவாக்கும் கரு முட்டையாகி அந்தக் குஞ்சாக ஆன பின் அதே நோயின் தன்மையை ஊட்டி
3.இரத்த நாளங்களில் கலந்து உயிருக்கு எட்டி
4.அந்த நோயின் உணர்வைக் கண் காது மூக்கு என்று அனைத்திற்கும் இழுத்துக் கொண்டு வரும்.

வேதனையாக இருக்கும் பொழுது உங்கள் மேலே யாராவது தொட்டால் உடனே சுருக்… என்று கோபம் வரும். வேதனையாக இருக்கும் பொழுது ஒருவர் நம்மிடம் மகிழ்ச்சியாக ஒரு சொல்லைச் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது… அந்த மணம் நம்மைத் தடுத்துவிடும்.

ஆனால் வேதனையைப் பற்றிச் சொன்னால் இந்த உடல் மிகவும் ரசிக்கும். ஆகவே… வேதனையாக இருக்கும் பொழுது
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் ஆன்மாவிலிருந்து இதைத்தான் பிரித்தெடுத்து உயிருக்குக் கொடுக்கும்.
2.அந்த உணர்வின் தன்மை தான் உடலுக்குள் சென்று அந்த அணுவிற்கு ஆகாரமாகப் போய்ச் சேரும்.

இதைப் போன்று…
1.நோயை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அதைத் திரும்பத் திரும்ப நீங்கள் எண்ணினால் போதும்
3அந்தக் கரு முட்டை உங்களுக்குள் வளர்ச்சி அடைந்து அணுக்களாகப் பெருக்கப்படும் பொழுது அது உணவுக்காக உந்தும்.
4.அந்த உணர்வின் தன்மை உந்தும் போது அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் பெருகும்.

ஞானிகளின் உனர்வை இப்படித்தான் நமக்குள் பெருக்கிக் கோண்டு வர முடியும்..

அதிகக் கோபம் நமக்கு ஆகாது

 

நாம் எண்ணியபடி வாழ்க்கையில் நடக்கவில்லை என்றால் கோபம் வருகிறது.
1.அந்தக் கோபத்தினால் உண்டாகும் ஆத்திரமான வெறி உணர்வு,
2திலிருந்து விடும் சுவாசத்தினால் ஏற்படும் உடலின் அமில சக்தி மாறுபட்டு
3.அதிலிருந்து பல உபாதைகள் நாமே நம் உடலுக்கு ஏற்றிக் கொள்கிறோம்.
4.கோபம் ஏற்பட்டவுடன் நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் துரிதம் கொள்கிறது.
5.அந்நிலையில் நாம் எடுக்கும் சுவாசமே கடினமாய் நம் உடலில் ஏறுகிறது
6.இக்கனமான சுவாசத்தை ஈர்க்க ஈர்க்க, நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களும் ஒரு நிலைப்படாமல் துடிக்கும் நிலை கொள்கிறது.
7.அந்நிலையில் இருந்து, நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் துரிதமாகச் செயல்பட்டு
8.மனிதனின் உடல் நிலைக்கே மூலகாரண வித்தாய், பல வியாதிகள் ஏற்படும் நிலைக்கு ஆளாக வேண்டி உள்ளது.

மனச் சஞ்சலத்திலிருந்து நாம் ஏற்றிக் கொள்ளும் நிலைதான் நமக்கு ஏற்படும் இத் தொடர் நிலையெல்லாம்.

சஞ்சல நிலை ஏற்பட்டவுடன் மனநிலையை அமைதிப்படுத்தி… அதனால் ஒரு நிலை கொண்ட சுவாசத்தை ஈர்த்தால் இச்சஞ்சலத்திற்குத் தெளிவு பெறலாம்.

தெளிவை நாமேதான் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

நம்மையே நாம் செய்யாத தவறுக்காக ஏசும்பொழுதும்…
1.அடுத்தவர் ஏசலைக் கொண்டு இப்படிச் செய்கின்றாரே… நாம் என்ன தவறு செய்தோம்…?
2.நம்மிடம் தவறில்லாத பொழுது… நம்மை ஏசுபவனை அவனே தண்டனை அனுபவிக்கட்டும் என்று அவன் தவறை என்றெல்லாம் எண்ணி
3.தவறு செய்பவன் இருக்க நம்மையே நாம் தவறாக்கிக் கொள்கின்றோம்.

நம் எண்ணத்தில் அவ் ஏசும் சொல்லை ஏன் அண்டவிட வேண்டும்…?

1.அவர்கள் நல்லுணர்வு பெறட்டும் நல்வழி படட்டும் என்ற எண்ணத்தில்
2.நம்முடன் அச்செயலை மோதவிடாமல் எண்ணும் பொழுது நம் உணர்வே நலம் பெற்று
3.நம் எண்ணத்தில் பிறரின் தீட்சண்ய சொல் தாக்காமல் நம்மைப் புனிதப்படுத்திக் கொண்டால்
4.நம்மையே நாம் பல இன்னல்களில் இருந்து காத்துக் கொள்கின்றோம்.

வினை செய்தவன் இருக்க வினை பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…? பிறரை ஏமாற்றியோ வஞ்சனை செய்தோ, துவேஷித்தோ வருபவன் எல்லாம் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். பிறரை ஏமாற்றுவதாக எண்ணி தன்னையே நான் ஏமாற்றி வாழ்கின்றான்.

மன நிலையை ஒருநிலைப்படுத்திச் சமமான வரையறை கொண்ட வாழ்க்கைதனை வாழும் பக்குவத்திற்குப் “பல நெறி முறைகள் உண்டப்பா…!”

பேய் ஓட்டுகிறார்கள் என்றால் “இன்னொரு பேயை உள்ளே ஏற்றுகின்றார்கள்” என்று தான் பொருள்

 

எண்ணற்ற காலம் முதற்கொண்டே இவ்வாவிகளை வசியப்படுத்தி செயல்படுத்திடும் பல நிலைகள், பல ஆயிரம் காலங்களாகவே இருந்து வருகின்றன. நற்காரியங்களுக்காகவும் தன் பேராசையின் நிலைக்காகவும் இந்நிலையைச் செயல்படுத்தி வந்தார்கள்.

மந்திரம் மாயம் செய்வதெல்லாம் ஒரு கலையாகவும் வம்ச வழியாகவும் நிலைப்படுத்தி செயல் கொண்டு வருகின்றனர். நம் நாட்டில்தான் பேய் ஓட்டுதல், மந்திரித்தல் என்பன போன்ற பல நிலைகள் நடக்கின்றன.

1.எண்ணத்தில் சோர்வு கொண்டவரின் உடலில் அவர்கள் எந்த எண்ணத்தைக் கொண்டு உள்ளனரோ
2.அவ்வெண்ண நிலைக்கொப்ப ஆவிகள் அவர்கள் உடலில் ஏறி விடுகின்றன.

உதாரணமாக பல ஆசை நிலையுடன் வாழும் ஒருவன் தன் இல்லத்தில் குழந்தைகளின் பற்றைக் கொண்டு, பல நினைவுகளுடன் இல்லத்தில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் நிலையிலும், இல்லத்தில் இருந்த நிலையின் எண்ண ஆசையுடன், தன் குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் வாங்கும் ஆசையில், அதே எண்ண நிலையில் செல்லும் பொழுது அவ்வாசை நிலை கொண்ட நிலையில், மற்ற போக்குவரத்து இடையூறுகள் கவனிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டு, அந்நிலையில் அகால மரணம் எய்தி குருதி (இரத்த) வெள்ளத்தில் அடிபட்டு ஆத்மா பிரிந்த பிறகு
1.அவ்வாத்மா அவ்வாசை நிலையுடன் அங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
2.அதே நிலை கொண்ட எண்ண நிலை உடையவன் அந்நிலைக்குச் செல்லும் பொழுது
3.இவ்விரண்டு எண்ணங்களும் ஒரு நிலைப் பட்டவுடன் இவன் உடலில் அவ்வாவி ஏறிக்கொள்கின்றது.

இவனுடைய செயலுடன் அவ்வாவியின் செயலும் ஒன்றுபட்ட பிறகு இவன் உடல் நிலையில்… அவ்வுடலில் அவ்வாவி மனிதனாய் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையெல்லாம் “இவன் உடலிலும் ஏறிக்கொள்கின்றது…”

தன் நிலையே, தான் மறந்து உடலில் உள்ள ஆவிக்குத் தன்னை அறியாமல் அடிமைப்பட்டு வாழும் நிலை ஏற்பட்ட நிலையில்… சோர்வு கொண்ட நிலையுணர்ந்து உள்ளவர்கள் மந்திரவாதிகளிடம் செல்லும் நிலை மிகுந்து விட்டது.

இந்நிலை கொண்டவன் மந்திரவாதியிடம் சென்றால்…
1.அவனுக்கு இவன் உடலில் ஏறியுள்ள மற்றொர் ஆவி ஆத்மாவின் நிலை புரிந்து பேய் ஓட்டுவதாகச் சொல்லி
2.மீண்டும் இதற்கு மேல் சக்தி கொண்ட மற்றும் ஒரு குட்டிச்சாத்தானை இவன் உடலில் ஏற்றி
3.அதன் சக்தியைச் செயல்படாமல் செய்து “பேய் ஓட்டுவதாய் அவ்வாத்மாவைப் பல இம்சைகள் செய்து” அவன் பொருளீட்டிக் கொள்கின்றான்.

இவன் உடலில் ஏறிய குட்டிச்சாத்தான் ஏவலிலிருந்து, “இவன் உடல் அழியும் வரை தப்புவது இயலாக் காரியம்…” இப்பேயோட்டும் நிலையினால் ஒவ்வொருவரையும் என்றென்றைக்கும் அதற்கே அடிமைப்படுத்துகின்றனர்.

இந்நிலையிலிருந்து தப்புவதற்கு நம் உடலில் எவ்வாத்மா எவ்வாவி நிலைகள் ஏறி இருந்தாலும்
1.அதன் பாதிப்பால் வரும் சஞ்சலம், சோர்வு, சோர்வில் இருந்து விடுபட
2.எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி மகரிஷிகள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி
3.அந்தச் சக்தியை அந்த ஆன்மாவுக்கும் அன்பு கலந்த நிலையில் பெறச் செய்ய வேண்டும்.

அப்படித் தான் அதன் செயலைக் கட்டுப்படுத்த முடியும்.

மெய் ஞானிகளின் அறிவை நாம் பெறுதல் வேண்டும்

 

டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட வகையில் இன்ஜினியராகப் போக வேண்டும் என்றால் அதனைப் படித்தவுடன் “இஞ்சினை எப்படி ஓட்டுவது…?” என்று நீங்கள் படித்துக் கொள்கின்றீர்கள்.

விஞ்ஞானி ஒவ்வொரு பொருளின் உணர்வையும்…
1.அதனதன் இயக்கத்திற்கு எதை எதை இணைக்க வேண்டும்…? என்று அவர் கண்டுபிடித்துச் சொல்கின்றார்.
2.இன்ஜினியரோ அதற்குத் தகுந்த சாதனங்களை உருவாக்கி அதனதனைச் செய்கின்றான்.
3.மெக்கானிக்கலோ இதனை இந்த வலுவில் செய்தால் இதனுடைய எடை கூட இப்படி இருக்கும் என்று.

இப்படி அவரவர்கள் உணர்வுக்கொப்பதான் அதைச் செய்கின்றோம்.

அதைப் போல் தான் “மெய் ஞானிகள் அன்று சொன்னதை” உங்களுக்குப் பாட நிலையாக இப்போது கொடுக்கின்றோம்.

பள்ளியில் சென்று நீங்கள் எதனெதன் வழிகளில் பாடங்களைப் பதிவு செய்கின்றீர்களோ அது நினைவு வரப்படும் பொழுது இப்படி வருகின்றது.

இதைப்போல விஞ்ஞான அறிவுப்படி… தான் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை எதிலே எண்ணங்கள் செல்கின்றதோ அது பதிவாகின்றது.

வக்கீல் என்று வைத்துக் கொண்டால் “பதிந்த பின்” சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்கின்றோம். இதிலே சட்டத்தின் நுணுக்கங்களை அறிந்து கொண்டாலும் “பிழைகள் எது…?” என்ற நிலைகளை அறிந்து நீக்கக் கற்றுக் கொள்ளுகிறோம்.

ஆனால் கற்றுக் கொண்டாலும்
1.தனது நிலைகளில் “தன் நண்பன்” என்று வந்து விட்டால், அவன் தவறு செய்தால் கூட
2.சட்டத்தில் எங்கே குறை இருக்கின்றது…? என்று நண்பனைக் காக்கத் “தவறும் செய்கின்றோம்…”
3.(கோபித்துக் கொள்ளாதீர்கள்… இப்படிச் சொல்கின்றேன் என்று…!) சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகளில் இப்படி…!

அதே மாதிரி ஆடிட் (AUDIT) அதன் வழியிலே கற்றுணர்ந்தாலும் அவர் கற்றுணர்ந்த நிலைகள் “தன் வாடிக்கையாளரை” எப்படிக் காப்பாற்றுவது…? என்பது தான் அவர்களுடைய தத்துவம்.

ஆக தனக்குள் பற்றிக் கொண்ட… சர்க்கார் நிலைகளில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை தான் இங்கு வருகின்றதே தவிர
1.பொது விதியான நிலைகள் நம் தவறும் இங்கே வரக்கூடாது.
2.இங்கேயும் நாம் தவறான நிலைகள் செய்யக்கூடாது என்ற நிலைகளில்
3.அதிலே எது மையமாக இருக்கின்றதோ அதை உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டு செயல்படும் இந்த நிலையும் இல்லை,

அப்படிப் போனால் “அவர்களுக்குப் பிழைக்கத் தெரியாது” என்று பட்டமே வந்துவிடும்.

இந்த ஆறாவது அறிவால் வரக்கூடிய நிலைகள். இவர் எதற்கும் லாயக்கே இல்லை இவர் எதற்கு இங்கே வந்தார்…? என்று சொல்வார்கள். நியாயத்திற்காகப் போராடினால் அவரைப் பைத்தியக்கார வக்கீல் என்று சொல்வார்கள். நியாயத்திற்காக வேண்டி ஆடிட்டர் சொன்னால் “இவர் பிழைக்கத் தெரியாதவர்” என்று சொல்வார்கள்.

தவறு செய்தவரின் நிலைகள் “நான் தவறு செய்து விட்டேன்” என்றால் அந்தத் தவறைச் சாதகமாக வைத்து… சட்டத்தில் எங்கே ஓட்டை இருக்கிறது என்று அதைப் பிடித்துக் கெட்டிக்காரராகும் நிலை தான். அப்பொழுது “எங்கள் வக்கீல் கெட்டிக்காரர்” என்று சொல்வார்கள்.

குற்றவாளி ஆக்குவதில் முதன்மையாக வந்து விடுகின்றான்.
1.இவர் செய்யக்கூடிய தப்பை வக்கீல் ஏற்றுக் கொண்டு அவர் குற்றவாளியாக ஆக வேண்டும்.
2.இவர் குற்றத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைகளில் வாதிடுகின்றார்.

இன்றைய கல்வியின் ஞானங்கள் வரப்படும் பொழுது இதுதான் வருகின்றது. இந்த விஞ்ஞான அறிவால் மனிதனால் கற்றுணர்ந்த நிலைகள்.

ஆனால் மெய்ஞானியின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு சமயமும் நமக்குச் சரியான பாதையை அது காட்டும். ஏனென்றால் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்,

1.இயற்கை உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.அந்த உணர்வின் ஆற்றல் மனிதனை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை மெய் ஞானிகள் அறிந்து காலத்தால்
3.சந்தர்ப்பத்தால் இணைந்த அந்த நிலைகளை இதை எவ்வாறு முறியடிப்பது…? என்று செயலாக்கியவர்கள்.
4.மெய் ஞானிகள் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை. (ஆனால் இண்றைய கல்வியறிவு மற்றவர்களைக் குற்றவாளியாக்கும்)

சந்தர்ப்பத்தால் தான் குற்றங்கள் ஏற்படுகின்றது. அதை மாற்றும் வழிக்குத் தான் மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குத் தொடர்ந்து போதித்துக் கொண்ட வருகின்றேன் (ஞானகுரு).

நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது

 

ஏவல், குட்டிச்சாத்தான், மையிட்டு மந்திரம் செய்து பிறரை வசப்படுத்தி நம் ஆத்மாவை நாம் இந்நிலையிலிருந்து செயல்படா வண்ணம் நம்மைக் காத்திடும் நிலையை அறிந்து வாழ்ந்திடல் வேண்டும்.

அழியாச் சக்தியுள்ள நம் சக்தியை
1.நம்முள் ஊன்றியுள்ள நம் சக்தியை பல எண்ணங்களின் நிலையிலிருந்து காத்திடல் வேண்டும்.
2.சோதனை கொண்ட காலங்களில் சோர்வு நிலை கொண்டு முடங்கிடல் ஆகாது.
3.ஏவல்களின் தன்மை எல்லாம் சோர்ந்தவர்களை அதிவிரைவில் அண்டிக் கொள்ளும்.

இத்துர் ஆவிகள் நடமாட்டத்தைப் பல மிருக ஜெந்துக்கள் எப்படி உணர்கின்றன…?

ஏவலும் சூனியமும் மிருக ஜெந்திற்குச் செயல் கொள்ளாது. அதன் உடலிலேயே உணரும் தன்மை கலந்துள்ளது. இச்சுவாச சக்தி நாய்க்கு அதிகம். புலிக்குத் தன் பார்வையிலேயே கண்டிடும் சக்தி உண்டு.

இவ் ஏவலின் நடமாட்டம் உள்ள இடங்களை எல்லாம்… இவற்றை அறியும் தன்மை கொண்ட மிருகங்கள் உணர்ந்துவிடும்.

முந்தைய காலங்களில் வீடுகளில் நாய், பூனை இவற்றைத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக மட்டும் வளர்க்கவில்லை….
1.துர் ஆவிகளிடமிருந்து அவற்றின் ஏவல் இல்லங்களில் உட்சென்று செயல்படாமல் காக்கவும் இம் மிருகங்களை வளர்த்தனர்.
2.ஏவல்காரனையும் குட்டிச்சாத்தான் செயல் உடையவனையும் கண்டால் இந்நாய், நரி, பூனைகள் குரைத்துச் சப்தமிட்டு உணர்த்திவிடும்.

அக்கால இல்லங்களில் இல்லத்தின் முன் வாயிலுக்கு மேல் “நிலைக் கண்ணாடியைப் பதித்திருப்பார்கள்…” நாம் சாதாரண நிலையில் இருக்கும் நிலையில்… நம் கண்ணிற்குத் துர் ஆவிகளின் நடமாட்டம் தெரிந்திடாது.

நிலைக் கண்ணாடியில் தெரியும் நிலை என்ன…?

நிலைக் கண்ணாடியில் பூசி உள்ள அவ்வமில சக்தி இத் துர் ஆவிகளின் சக்திக்கு எதிர்கொண்டது. நாயின் உடலில் உள்ள அமில சக்திக்கும் நிலைக் கண்ணாடியில் உள்ள அமிலத்திற்கும் தொடர்பு உண்டு.

இத்துர் ஆவியின் நிலையைப் பலர் காண்கின்றனர். பேயின் நடமாட்டத்தைக் கண்டேன் என்பவர் பலர். பேயல்ல… குட்டிச்சாத்தானின் உருவ நிலை அது.

சிலருக்கு மட்டும் புலப்படும் நிலை என்ன…?

ஒவ்வோர் உடலுக்கும் அவரவர்களின் அமிலத்தன்மை ஒன்று உண்டு என்று உணர்த்தினேன் அல்லவா…? இவற்றைக் காணும் அமிலத்தன்மை கூடியவர்கள் உடல் இந்நிலையை அறியலாம்.

சிலரின் நிலையில் அவர்களின் உடலில் உள்ள அமிலத் தன்மையே அபூர்வத் தன்மையில் இயற்கையிலேயே கூடிப் பிறந்திருப்பர்.

எண்ணத்தில் ஞானசக்தி நிறைவு கொண்ட அபூர்வப் பிறவி எடுத்தவர் பலர் உள்ளனரே. அவர்களுக்கு இயற்கையின் அமிலமே தன்னுள் கூடி பிறவி எடுத்து பிறந்து வளர்பவர்கள்.

பல பிறவியில் சேமித்த அமிலத்தின் கூட்டு நிலையினால் பல ஞானிகள் மற்ற ஏவலின் சக்தி இல்லாமல் வாழ்கின்றனர்.

1.நம்முள் உள்ள நிலையையே நாம் நல் நிலையில் வளரும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்
2.நமக்காக ஏவாமல் பிறருக்காகச் செய்த மந்திர நிலையும் தாக்கும் நிலையும் நமக்கு உண்டு.
3.இருந்தாலும்… நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது.

தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வை வளர்ப்பதற்குத் தான் “சாஸ்திரங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்”

 

மனித வாழ்க்கையில் நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வுகளையும் சித்திரை (சிறு திரை) மறைத்துக் கொள்கின்றது. புது வருடத்தில் (வெளிச்சத்தை மறைக்கும் இருளைப் பிளந்து ஆறாவது அறிவின் துணை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காண வேண்டும் என்பது

புது வருடம் தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் விசேஷத்தை வைத்ததின் நோக்கங்கள் 12 ராசி என்றும் வைப்பார்கள்.
1.இந்தப் 12 மாதத்திலும் ஒவ்வொரு உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…?
2.ராசியின் தன்மை எவ்வாறு விளைய வேண்டும் என்று நான் 12 மாதத்திலும் 12 ராசிகள் என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு மாதத்திலும் நாம் எதை எதைச் செய்ய வேண்டும்…? என்ற நிலையில் சித்திரை பிறக்கும் பொழுது நாம் எதைச் செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

வருடம் பிறந்து விட்டது… நமது வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறைக் கண்டுனர்ந்தாலும் அச்சித்திரையை…
1.உத்தராயணம் என்ற இந்த ஒளி கொண்டு இருளைப் போக்கிப் பொருள் கண்டு
2.புது வருடம் நாம் நடக்க வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி நமக்குத் தத்துவத்தைக் கொடுத்தார்கள் மாதங்களையும் அமைத்தார்கள்.

ஆனால் அதை எல்லாம் யாரும் நமக்கு விளக்கமாகச் சொல்வதற்கு இன்று இல்லை. யாம் இப்பொழுது இதைச் சொன்னால் “புதிதாக ஏதோ சொல்கிறார்…” என்று எம்மைச் சொல்கின்றார்கள்.

ஏனென்றால் இன்று ஒவ்வொரு மாதத்திலும் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று எத்தனையோ ஐதீகங்களையும் சாங்கியங்களையும் தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

காரணம்… காலத்தால் இந்த உண்மைகள் மறைந்து விட்டது… மறைத்து விட்டார்கள்.

சித்திரை – ஒரு கனி விளைந்த பின் அது எப்படித் தன் வித்தாக ஆகின்றதோ இதைப் போன்று
1.பல கோடி உணர்வின் தன்மை தனக்குள் கனியாகும் பொழுது
2.அதனின் வித்து ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வாக விளைந்தது.

இதைப்போல்
1.ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வே விளைந்தது
2.அந்த விளைந்த நிலைகள் கொண்டு உயிரான நிலைகள் மனிதனின் நிலைகள் வரும் பொழுது கனியாகின்றது.

ஒரு மாங்கனி தன் இனத்தின் வித்தை அது உருவாக்கிக் கொள்கிறது. இதைப் போல் தான் உயிரான நிலைகள் கொண்டு பல கோடி உணவை உணவாக உட்கொண்டாலும்… அவை அனைத்திலும் ஒருக்கிணைந்து “ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வாக வந்த… இந்த ஒளியின் சுடராக ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விளைந்த நிலைகள் “கார்த்திகேயா…”

அதனின் உணர்வு கொண்டு மனித வாழ்க்கையில் வரும் சித்திரையை (குறைகளை) புது வருடம் நீக்க வேண்டும்
1.இருளை நீக்கி மறைந்த பொருளைக் காண வேண்டும்…
2.எவ்வாறு தீமையிலிருந்து மீள வேண்டும்…?
3.எவ்வாறு ஒளியாக மாற வேண்டும்…? என்ற தத்துவத்தைத் தான் மெய் ஞானிகள் நமக்குத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனைப் பற்றி இங்கே உபதேசிக்கும் பொழுது… அவன் கண்ட உணர்வுகளை நீங்கள் நுகர நுகர… அந்த அணுக்கருக்களாகப் படிப்படியாக உங்கள் உடலுக்குள் மாற்றம் ஆகும்.

அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வின் சத்தாக உங்களுக்குள் மாறி அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றிடும் அணுக்கள் பெருகும்.

அத்தகைய அணுக்கள் பெருகினால்…
1.பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியரிடம் அழைத்துச் செல்லும்
2,அடுத்து நாம் பிறவியில்லா நிலையை அடையலாம்.

உதாரணமாக ஒரு நண்பர் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம். அந்த வேதனையை அதிகமாக நாம் நேசித்து விட்டால் அவரின் உனர்வு நமக்குள் விளையத் தொடங்குகிரது.

ஆனால் நண்பர் உடலில் வேதனை அணுக்கள் பெருகி வளர்ந்த நிலையில் நோயை விளைய வைத்த அந்த உயிரான்மா வெளி வந்துவிடுகிறது.

வெளி வந்தபின் நம் உடலில் புகுந்து விடும். ஏனென்றால் அவருடைய உணர்வு நம் உடல் வலிமையாக இருக்கும் பொழுது நமக்குள் வந்துவிடுகின்றது

உதாரணமாக ஒரு ஆடு நரியைப் பார்த்து அதனுடைய வேக உணர்வைக் கண்டு அஞ்சி… அதையே சுவாசித்தது என்றால் நரியின் உணர்வை ஆடு நுகர… நுகர… அந்த நரியின் வலுவான உணர்வு ஆட்டின் உடலுக்குள் வந்த பின் நோயாக மாறுகின்றது.

பின் நரியை எண்ணி எண்ணி இந்த உடலின் தன்மை வலுப் பெற்று விட்டால் ஆடு மடிந்த பின் உடலை விட்டு வெளி வரும் ஆட்டின் உயிரான்மா நரியின் உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சியில் நரியாக விளைகின்றது.

இப்படித் தான் நாம் பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களைப் பெற்று மனிதனாக இன்று வந்துள்ளோம். ஆனால் நோயுற்றவரின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகப் பெருக்கிய பின் அதே நோயின் தன்மை நமக்குள்ளும் வளர்கிறது.

நோயினால்…
1.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றி… விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகி
2.எந்த மனிதன் பாசத்துடன் நம்மை அதிகமாக நேசித்தானோ
3.நாம் இறந்தபின் அந்த உடலுக்குள் தான் செல்வோம்… நம் இருப்பிடம் அதுதான்.

ஆனால் இந்த மனிதனின் வாழ்க்கையில் முழுமை பெற்ற ஞானிகளும் மகரிஷிகளும் பிறவியில்லா நிலையை அடைந்து அகண்ட அண்டத்தில் இன்றும் ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை என்று முடிவடைந்த அந்த உயிர்கள்
2.அகண்ட அண்டத்தில் எங்கே… எது… உருவானாலும்
3.அதனின் உணர்வை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
3.இப்படி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒளியாக ஆனவர்கள் உண்டு.

நம் சூரியக் குடும்பம் மட்டும் இந்த அண்டத்தில் வாழவில்லை. எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள் உண்டு ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் நம் பூமியைப் போன்று ஒரு பூமி உண்டு.

அதிலே வடித்த உணர்வுகள்… அதிலே உருவான உயிர்களுக்கு ஒளியாக மாறும் ஆற்றலும் உண்டு, அத்தகைய நிலையை நாமும் பெறுவதற்குத் தான் இந்த உபதேசம்.

உத்தராயணம்

 

உயிரணுவாகத் தோன்றிய பின்… ஒரு உணர்வின் சத்து உயிருடன் ஒன்றிச் சிவம் ஆகின்றது. இவ்வாறு பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றது.

பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டது… இருந்தாலும் அதனுடைய தசைகளை மற்றொன்று கொன்று புசிக்கிறது. அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் உணர்வின் தன்மை வருகின்றது.
1.தன்னைத் தெளிந்து கொள்ளும்… தன்னைக் காத்திடும் உணர்வின் அறிவின் தன்மை அதற்குள் வந்து
2.இவ்வாறு தான் ஒவ்வொரு உடலிலும் இணைத்து இணைத்து
3.நமது உயிர் மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலைகளில் மகா சிவன் ராத்திரி…!

உடலில் இருந்து வரக்கூடியதை ஆறாவது அறிவின் தன்மை ஒன்றிலிருந்து ஒன்றை மீட்டிடும் நிலைகள் கொண்டு அறிந்திடும் ஆற்றல் பெற்றது கார்த்திகேயா.

ஒரு வெளிச்சத்தைப் போட்ட பின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் தெரிகின்றது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காணும் நிலைகள் வரும் பொழுது “கார்த்திகேயா” என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

1.முதலிலே வரக்கூடியது அனைத்தும் தட்சிணாயணம்
2.இந்த உடலின் நிலைகளிலிருந்து அறியும் ஆற்றல் வரப்படும் பொழுது மகா சிவன் ராத்திரி என்றும்
3.பங்குனி மாதம் வரப்படும் பொழுது உத்தராயணம்.
4.இதற்கு முன் மாசி மாதம் வரையிலும் தட்சிணாயணம் நடக்கின்றது… உடலுக்குள் இருள்
5.ஆறாவது அறிவு கொண்டு தட்சிணாயணம் திசை மாறி வெளிச்சம் அதிகமாகின்றது – அது உத்தராயணம்

அறிவின் ஆற்றல் அறிந்திடும் உணர்வு கொண்டு ஆறாவது அறிவால் உத்தராயணம் தேரை வைத்து இழுப்பார்கள்… பல ஆயிரம் பேர் சேர்ந்து முருகனை வலம் வரும்படி செய்வார்கள்.

நாம் அனைவரும் எண்ணி
1.இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்
2.உத்தராயணம் இன்னொரு பிறவிக்கு வந்து விடக்கூடாது என்ற நிலைகளும்
3.எதை எடுத்தாலும் உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாக அவனுடன் இணைய வேண்டும் மாற வேண்டும் என்பதற்குத்தான்
4.நமது சாஸ்திர விதிகள் இப்படிக் காட்டுகின்றது.

பங்குனி உத்திரம் அன்று உத்தராயணம் என்ற நிலைகளை வைத்து ஆறாவது அறிவை வளர்த்துப் “பிறவா நிலை பெறும்” வழியைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே “சூனியக்காரர்களினால் வந்த நிலை தான்”

 

குருவி ஜோதிடம், எலி, அணில் இப்படிப் பல நிலைகளைச் செப்புவது எந்நிலை கொண்டு…? என்பதனை விளக்கிடுவேன்.

இவை எல்லாமே கரு வித்தையின் செயல்தான்.

அப்பிராணிகளின் உடலில் (மந்திரவாதிகள்) கருவின் மையை ஏற்றி விடுவார்கள். அந்நிலையில் இவர்கள் சொல்லும் பெயர் நாமத்தைக் கேட்டு, இப்பிராணிகளை வைத்து ஜோதிடம் செப்பிடும் நிலையில் உள்ளவர்களுக்கு, அவரின் பழக்கப்பட்ட பரிபாஷைகள் இப்பிராணிகளுக்குத் தெரிந்திடும்.

இப்பிராணியின் உடலில் உள்ள இக்குட்டிச்சாத்தான் தான்… நாமகரணத்திற்குகந்த செயல் கொண்ட எந்நிலை பெற்ற குண நிலைக்குகந்த ஏடுகளை ஓதிட வேண்டுமோ அதனையே சரியாக எடுத்துத் தரும் இவர்கள் மனநிலைக்குகந்த சொல்வாக்கே அதிலும் காணப்படும்.

அவ்வெண்ணமுடனே இவர்கள் செயல்பட்டால் அதன் தொடர்ச்சி நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் இருந்திடும்.
1.இவ்வுலகினில் பல பாகங்களில் இச்சூனிய வேலை நடக்கின்றது
2.பிறரைத் தன் வசியப்படுத்தவே இக்கரு வித்தை வேலையெல்லாம் செய்யப்படுகின்றன.
3.ஆவியின் தொடர்புபடுத்தி தன் உடலிலேயே பல ஆவிகளை துர் ஆவிகளை ஏற்றுக் கொண்டு அதனை ஏவிச் சூனியம் செய்வார்கள்.

சூனியத்திற்கு அடிமைப்பட்டவன் அச்சூனியத்தினால் தான் அவனுடைய ஆத்மாவும் பிரியும்.

1.பிற இடத்தில் ஜெபம் செய்து பல பொருட்களை வைத்து விட்டு
2.இக்குட்டிச்சாத்தானின் தொடர்புடைய நாமத்தை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜெபித்தால்
3.அவ்வாவியான குட்டிச்சாத்தானே அப்பொருளை இவர்கள் “வா…” என்றவுடன்
4.இவர்களின் கையில் அப்பொருள் கிடைக்கும் நிலையில் அக்குட்டிச்சாத்தான் செய்து தரும்.
5.இவர்கள் வைத்த பொருள் தான் அங்கிருந்து வருமே ஒழிய
6.ஆகாயத்தில் இருந்து ஆண்டவனால் செய்விக்கப் பெற்ற உருவச் சிலையோ விபூதியோ, புஷ்பமோ எவையுமே
7.இவர்களிடத்திற்கு மாறுபட்டு வராது.

இந்நிலையில் உள்ள எச்சாமியார்கள் ஆகட்டும் மந்திரவாதிகள் ஆகட்டும் அவர்கள் தன் புகழ் உயர தன் நாமத்தினால் பொருள் ஈட்டி இச்செயலையெல்லாம் செய்வித்து… மக்களை மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை, “தன் ஆத்மாவையே… தானே ஏமாற்றி வாழ்கின்றார்கள்…”

சொந்தமில்லா இவ்வுடலின் வாழ்க்கை எத்தனை நாட்களுக்குச் சொந்தம்…?

இருக்கும் ஒரே சொந்தம் நம் ஆத்ம சக்தியை இயற்கை என்னும் சொந்தமுடன் சொந்தமாக்கி, நம் ஆத்மாண்டவனை நல்வழியில் செயலாக்குவதை விட்டு சாமியார்கள் என்ற நாமத்தில் ஏன் ஆண்டவனின் நாமத்தையே அடிமைப்படுத்திடல் வேண்டும்…?

இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே இச்சூனியக்காரர்களினால் வந்த நிலை தான். நம் பூமியில் நாம் வாழும் இக் கண்டத்தில் நம்மை அறியாமலே நம்மில் பலர் இதற்கு அடிமை கொண்டு வாழ்கின்றனர்.

நமக்கும் மேல் சீனாவிலும் ஜப்பானிலும் இன்னும் சில ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் அரேபிய நாடுகளிலும் இந்நிலை அதிகம். ஒவ்வோர் இடத்திலும் வாழும் மனிதர்களின் எண்ண நிலைக்கொப்ப அங்கு வாழும் கருவித்தை வேலைகளும் நடக்கின்றன.

1.நம் பூமியில் இவ் இந்திய தேசத்தில்தான் பல ரிஷிகள் சப்தரிஷி பெறும் நிலையெய்திட வாழ்ந்த பூமி இது
2.அவர்களின் எண்ண ஓட்டமும் (சப்த அலைகள்) அவர்கள் விட்ட சுவாசத்தின் சப்த அலையையும் தாங்கி வாழும் நிலைதான் இப்பூமியின் நிலை.

இக் கரு வித்தையின் குட்டிச்சாத்தான் ஏவலில் உள்ளவர்கள் இதை உணர்ந்து நல் ஆத்மாவாய் இப்பொருள் என்னும் பேய்க்கு அடிமைப்படாமல் வாழ்ந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய விஞ்ஞான உலகம் மிகவும் விஷத்தன்மையாகச் சென்று கொண்டிருக்கின்றது. எவ்வளவுதான் சம்பாதித்து வைத்து இருந்தாலும் கூட… அதை என் பணம் என்று உறுதியாகச் சொல்வதற்கு முடியவில்லை.

1.ஏதோ ஒரு வகையில் வலு கொண்டவன்
2.நம் பணத்தைத் தட்டிப் பறிக்கும் நிலையில் தான் உலகமே இன்று உள்ளது.

ஓரளவுக்கு பணம் வசதியாக இருப்பவர்கள் வசதி இல்லாதவர்களை ஏமாற்றிக் கொஞ்சம் தள்ளி விட்டு விடுவார்கள். ஏதாவது ரொம்பவும் மீறி விட்டால் அடுத்து சண்டைக்குச் செல்கின்றார்கள். இன்னும் கொஞ்சம் சிக்கலாகின்றது.

உன்னால் என்ன செய்ய முடியும்…? என்று கடைசியில் கோர்ட்டுக்குச் செல்கின்றார்கள். அங்கே சென்றால் வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் பண வசதி உள்ளவர்கள் காசைக் கொடுப்பார்கள்.
1.காசு தான் அங்கே வேலை செய்யும்… நீதி இப்படித்தான் இருக்கின்றது
2.வலு இருக்கும் பக்கம் தான் அந்த நீதி செல்லுபடியாகும்.
3.இல்லாதவர்கள் வேதனைப்படத்தான் செய்வார்கள்.

வசதியும் அதிகாரமும் உள்ளவர்கள் மற்றவரை அடித்துப் பறிக்கும் அந்த ராட்சஸ உணர்வாகத் தான் செயல்படுகிறது. அவர்களுக்கே அது சாதகமாகப் போய்ச் சேருகின்றது.

பொருளை இழந்தவர்களோ…
1.இப்படிச் செய்கின்றார்களே… இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணப்படும் பொழுது
2.அதே ராட்சஸ உணர்வு அவர்களை அழித்துவிட வேண்டும் என்று கூறுகின்றது.

கடைசியில் எல்லை கடந்தது என்றால் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்…! என்று வருகின்றது.

நீ வா…! நானும் உன்னை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்…! என்று இந்த அசுர குணங்கள் தான் ஓங்குகிறது. அழித்துவிடும் நிலையே வருகின்றது.

1.இந்த உணர்வுகள் உடலிலே விளைந்ததும் ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்… என்று
2.”அழிக்க வேண்டும்” என்ற உணர்வுகள் இருவருக்குமே மாற்றி விடுகின்றது.

இதையெல்லாம் அன்றே ஞானிகள் மிகவும் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

காரணம்… யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வுகள் இத்தகைய தீமையின் விளைவுக்குக் கொண்டு செல்கிறது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா. அந்தத் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்தத் தியானம் அவசியம் தேவைப்படுகிறது.

1.இந்த மனித உடலை வைத்துத் தான் அந்த மெய் ஒளியை நாம் பெற முடியும்.
2.அந்த மெய் வழியைப் பெறுவதற்குத் தான் மகரிஷிகளும் ஞானிகளும் எத்தனையோ முயற்சி செய்தார்கள்.

அந்த அருள் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் இந்த வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் ஓரளவுக்கு நமக்கு வந்து சேரும். மனமும் அமைதி பெறும்… குடும்பமும் நலமாக இருக்கும்.

நோயோ துன்பமோ வந்தால் அந்தத் துன்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்…
1.அது பாட்டுக்கு வரும் போகும்…
2.அது வந்து விட்டது என்றால் அது பாட்டுக்குப் போகும்
3.நாம் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும்
4.என் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்
5.எனக்குள் அந்த அழுக்கு சேராத நிலையில் நிற்க வேண்டும்.
6.என் சொல்லைக் கேட்பவர்களுக்கு அந்த இனிமையான நிலை வரவேண்டும்
7.என் பார்வை அனைவருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
8.இந்த சக்தி எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று
9.உங்கள் உயிரிடம் சொல்லி முறையிடுங்கள்.
10.அவன் அதைப் பதிவு செய்து அதையே இயக்குவான்.

எப்படி ஒரு செடி அதனுடைய சத்தைச் சேர்க்கின்றதோ… அதை இழுத்து வளர்க்கிறதோ… அதைப் போன்று இந்த மனித வாழ்க்கையில் நாம் இருந்தாலும் அந்த ஞானிகளை எண்ணி நம் ஆன்மாவை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

இந்த மாதிரியே எண்ணிக் கொண்டிருந்தால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உணர்வுகளிலும் விளையும்.
2.உடலை விட்டுச் சென்றால் அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் செல்கின்றோம்.

மகரிஷிகளை… “எண்ணத்தால்” நாம் எண்ணி எடுக்க வேண்டிய சரியான முறை

 

இயற்கையின் உண்மை நிலைகளை எல்லாம் உணர்த்தியது யார்…? அந்த மகரிஷிகள் தான். அவர்கள் அறிந்துணர்ந்த அறிவின் ஆற்றலை அவரில் விளைந்ததை தங்களுக்குள் உருவாக்கி அதை வெளிப்படுத்துகின்றார்கள் இந்த உண்மைகளை.

அவருக்குள் விளைந்த உணர்வின் எண்ண அலைகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியில் படர வைத்துள்ளது
1.எதையெல்லாம் அவர்கள் உணர்த்தினார்களோ
2.அந்த மகரிஷிகளை நாம் எண்ணி அவரிலிருந்து விளைந்த உணர்வை நுகர வேண்டும் என்றால்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும்.

ஏன் அவனிடம் வேண்ட வேண்டும்…? எப்படி வேண்ட வேண்டும்…?

கண்ணின் நினைவு கொண்டு அந்த சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தை நம் கண்ணிலே கொண்டு வருகின்றோம்.
1.முதலில் கண்ணிலே பார்த்து… பின் சொல்வதை எல்லாம் காதிலே கேட்டாலும்
2.நினைவை… கண்ணின் நினைவுக்குக் கொண்டு வருகின்றோம்… அப்போது அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகின்றது.

பதிவானதை மீண்டும் நாம் எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாக நினைவினைச் செலுத்தி நம் உயிரிடம் வேண்டிடல் வேண்டும்.

உயிர் தான் ஈசன்… அவனை நாம் மதித்தல் வேண்டும். நாம் எண்ணியது எதுவோ அதை இயக்குகின்றான்

ஆகவே நாம் உயிரை “ஈஸ்வரா…!” என்று வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவு கொண்டு இந்த நினைவினை உயிருடன் ஒன்ற வேண்டும் ஈஸ்வரா என்று…!
2.இப்படி இணைத்துப் பழகுதல் வேண்டும்.

உதாரணமாக மேக்னட் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதற்குத் தகுந்த சுழற்சி ஆகும் பொழுது மோட்டார் ஓடுகின்றது ஆனால் மோட்டாருக்கு ஓடக்கூடிய கரண்டை வீட்டில் உபயோகிக்கும் ஃபேனுக்கு செலுத்தினோம் என்றால் ஃபேனில் உள்ள காயில் எரிந்து விடும். இதைப் போல
1.மிக சக்தி வாய்ந்த அந்த மகரிஷிகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டும் என்றால்
2.அதற்குத் தகுந்த காந்த புலனறிவு தேவை… ஈர்க்கும் சக்தி,

அப்பொழுது… முதலிலே நாம் எதைப் பதிவு செய்து உள்ளடக்கமாக வைத்திருக்கின்றோமோ அதனை நினைவு கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
1.நினைவினை அவனிடம் ஒன்றி… அவன் மூலமாக நாம் அறிய வேண்டும்.
2.அப்படி நாம் எடுக்கப்படும் பொழுது இந்த உணர்வின் இயக்கங்கள் வேகமாக இயக்கப்பட்டு
3.நம் உடலுக்குள் மீண்டும் அது சுழல்கின்றது.

உடலுக்குள் செலுத்திய பின் என்ன நடக்கிறது…?

தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பு வெள்ளி இவைகளைப் பிரிக்க திரவகத்தை ஊற்றினால் எவ்வாறு அதைப் பிரித்து விடுகின்றதோ இதைப் போல நமது வாழ்க்கையில் தீமைகளைக் கண்டு உணர்ந்தாலும் அந்த ஞானியின் உணர்வின் தன்மையை நாம் எண்ணும் பொழுது உடலுக்குள் சென்று நம் நல்ல எண்ணங்களில் கலந்த அந்தத் தீமைகளை அகற்றுகின்றது.

ஆகவே… எந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கினாலும் இதை முறைப்படி நீங்கள் எண்ணினால்தான் நல்லது நடக்கும்.

இந்த உண்மையை உணர்த்திய அந்த மகரிஷிகள் “அவர்கள் யார்…?” என்று தெரியவில்லை என்றாலும் மகரிஷிகள் என்பவர்கள் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தங்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள். அவர்கள் அறிந்தது தான் இந்த உண்மைகள்.

அதை எண்ணாமல் எந்த ஆலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தாலும் நல்லதாகும் நிலைகள் இல்லை.

அங்கிருக்கக்கூடிய பூசாரியோ அல்லது வழிகாட்டுவர்கள் யாரோ அவர்களை எண்ணினால் “அந்த மந்திரம் தான்” நினைவுக்கு வரும்.

கோவிலில் யாகம் செய்து இன்னார் சக்தி ஏற்றுகிறார் என்று அவர்களை எண்ணினால்
1.அவர்கள் என்னென்ன மந்திரம் செய்து பதிவு செய்து வைத்திருக்கின்றார்களோ
2.அந்த மந்திரங்களைக் கேட்டு யார் யாரெல்லாம் இறந்தார்களோ
3.அந்த மந்திர உணர்வு கொண்டு அதை மீண்டும் எண்ணப்படும் பொழுது
4.அந்த மந்திரத்தை அதிகமாக ஜெபித்தவரின் உயிரான்மா தான் இங்கே (நமக்குள்) வரும்.
5.பின் அவருடைய ஆசை எதுவோ அதைத்தான் நமக்குள் இயக்கும்

இதெல்லாம் இயற்கையின் உண்மை நிலைகள். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே
1.இயற்கையின் உண்மைகளை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.தெய்வீக நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

அதற்குத் தான் இவ்வளவு விளக்கமாக உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).

மாரியம்மனோ காளியம்மனோ “எனக்கு ஆடு கொடு…!” என்று கேட்கிறதா…?

 

இவ்வுலகினில் பில்லி, சூனியம், ஏவல், மையிடுதல், கருவித்தை இப்படிப் பல நிலைகள் உள்ளன. இவற்றில் இருந்து நம் நிலை மீளும் நிலையை அறிந்திடல் வேண்டும்.

பல காலமாய் சூனியம் செய்தவர்களின் நிலையையும் மற்றத் தீய சக்தியின் செயலைத் தன் பிழைப்பிற்காக ஏவியதின் நிலையையும் வரும் பாடங்களில் உணர்த்திடுவேன்.

மலைப் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மந்திரவாதிகள் பல மண்டை ஓடுகளை வைத்து பூஜிப்பர். அதுவும் அல்லாமல் அம் மண்டை ஓட்டின் சொந்தம் கொண்ட உடலின் நிலையிலிருந்து, மை எடுத்து அதனையும் இம்மண்டை ஓட்டையும் வைத்து, பூஜித்து இம்மையை யார் யாருக்கெல்லாம் தாயத்துகளாய்த் தருகின்றார்களோ அவர்களின் நிலையும் மந்திரவாதியின் நிலைக்கும் தொடர்பு பட்டு, சில நிலைகளை அறிந்திடத் தான் இவர்கள் பூஜையில் அம்மண்டை ஓட்டை வைப்பது.

இவர்கள் மை தயாரிப்பது எந்நிலையில்…?

மயானத்தில் அர்த்த ஜாமத்தில் சில உடல்களைk கூடியவரை கருச் சிசுக்களைத் தான் (இறந்த சிசுக்களை) இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். வளர்ந்து ஆசைப்பட்டு குடும்பப் பற்றுடன் நீத்தாரின் உடல்கள் இவர்கள் செயலுக்கு செயல்பட்டு வராது.

அவர்களின் ஆத்ம எண்ணமே தன் குடும்ப நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் தான் இக்கருவித்தை மந்திரவாதிகள் எல்லாரும் தாயின் கர்ப்பத்தில் தோன்றும் முதல் சிசுவை அது இறந்துவிட்டால் (தலைச்சன்) அதனுடைய உடலைப் புதைத்துச் சென்ற பிறகு அதைத் தோண்டி எடுத்து இவர்களின் செயலுக்காக அவ்வுடலை ஈடுபடுத்துகின்றனர்.

நம் மூதாதையர் காலத்தில் முதல் தலைச்சன் சிசுக் காலமானால் அதன் உடலை சிறிது பின்னப்படுத்தித் தான் அடக்கம் செய்வார்கள். பின்னப்படுத்திய அச்சிறு சதையை இவர்கள் தாயத்தாக்கி பூஜிப்பார்கள்.

அந்நிலையில் அச்சிசுவின் ஆவி இங்கு செயல் கொள்ளும் ஏவலின் நிலைக்கு ஒத்து வராது. இப் பின்னப்பட்ட இறந்த சிசுவை எடுத்துச் சென்று பெரிய மண் பானையில் அச் சிசுவின் உடலை இட்டு அப்பானைக்கும் கீழ் இரண்டொரு பானைகளை வைத்து பெரும் நெருப்பிட்டு எரியவிட்டு கீழ் எரியும் நிலையிலிருந்து மேல் பானைக்கு அவ்வுஷ்ணம் பட்டு அச்சிசுவின் உடலில் இருந்து கசியும் அதன் அமில நீர் சக்தி எல்லாம் எரிய எரிய வடிந்து இக்கீழ்ப் பானையில் மெழுகு போன்ற மை பதத்தில் ஒட்டிக் கொள்ளும்.

சிசுவை இட்டுள்ள பானைகளில் துவாரம் வைத்திருப்பார்கள். இச் சிசுவின் மைக்கு வேண்டிய அமில நீர் சக்தியெல்லாம் ஈர்த்த பிறகு அச் சிசுவின் சக்கை உடலை அதே நெருப்பிலிட்டு அதன் அவயவங்களையும் சேகரித்து அதன் அவயவத்தை வெந்த நிலையில் வைத்து மண்டை ஓடுகளுடன் அங்கங்களையும் சேர்த்துப் பூஜிப்பார்கள்.

இவ்வமில நீரில் அவ்வுடலின் வெந்த சாம்பலையும் சேர்த்து மை போல் மசிய வைத்து பூஜித்து இப் பில்லி, சூனியம், ஏவல், மையிடுதல் போன்ற நிலைக்கெல்லாம் இச் சிசுவின் நிலையை ஏவுவார்கள்.

இக்கருப்பு நிறம் கொண்ட இம் மையையே தன் நெற்றியில் இட்டுக் கொண்டும் தாயத்துகள் செய்து இம்மையை அதனில் வைத்து தன் உடலிலும் அணிந்து கொள்வார்கள்.

இவர்களின் பொருள் ஆசைக்குகந்த நிலைப்படுத்திட இக்குட்டி சாத்தானை ஏவுவார்கள். ஒவ்வொரு மந்திரவாதியும் ஒரு சிசுவில் இருந்து மட்டும் ஏன் தன் ஏவலைச் செயல்படுத்துவதில்லை. பல சிசுக்களையும் இந்நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.

இவர்கள் ஏவிய நிலைக்கெல்லாம் அக் குட்டிச்சாத்தான்கள் ஆவி உருவில் சென்று பல உண்மைகளை அறிந்து வரும்.

1.மாரியம்மாள், காளியம்மாள் என்று மனிதர்கள் மத்தியில் இச்சக்தியின் நாமத்தைச் செப்பியே பேய் ஓட்டுவதைப் போலவும்
2.மாரியாத்தா ஆடு கேட்கிறாள், கோழி, முட்டை கேட்கின்றாள் என்றெல்லாம் சொல்லி
3.இக்குட்டி சாத்தான்களின் ஆசைக்கு உகந்த உணவுகளைப் படைத்து இவர்களின் செயலை முடித்துக் கொள்கின்றனர்.

இவர்களிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் விலகி இருக்க வேண்டும்… விடுபடவும் வேண்டும்… நாம் சிக்கி விடக் கூடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரை ஈசனாக வணங்குங்கள். உடலைச் சிவனாக மதியுங்கள். கண்ணைக் கண்ணனாக மதியுங்கள்.

காரணம்… நல்லது கெட்டதைக் கண்ணன் உணர்த்துகின்றான். அவன் காட்டிய நெறியின் படி கெட்டது என்று வரும் பொழுது புறப்பொருளை நீக்கும் வழிகள் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே
1.நம்மை அறியாது புகும் தீமைகளைப் புறப் பொருளை அகற்றுவது போன்று
2.அந்த மகரிஷியின் அருள் ஒளியால் துடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… துடைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உடலான சிவத்திற்குள் தீய குணங்கள் பட்டபின் நோயாக மாறுகின்றது. அதைத் துடைப்பதற்கு… சிவனுக்கு அந்தத் தீமைகள் வராத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.யாரோ உடல்…! என்று எண்ண வேண்டாம்
2.உங்களுடைய உடல் என்றும் எண்ண வேண்டாம்
3.நம் உயிரான நிலைகள் தான் இத்தனையும் படைத்திருக்கின்றான்
4.நமக்குள் செயலாற்றும் நிலைகள் கொண்டு அதை இயக்கும் சக்தியாக அதுவே இருக்கின்றது.

அதை உணர்ந்து இந்தப் பொறுப்பினை நீங்கள் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் புனிதத் தன்மையை அடையலாம்.

1.தான் யார்… நான் யார்…? இந்தப் பிள்ளை யார்…? என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டிய நிலைகளை
2.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு எல்லாம் நாயகனாக மனித உடலைக் கொடுத்து
3.உடலில் இருக்கக்கூடிய கணங்களுக்கெல்லாம் ஈசனாக உயிரே இயக்குகின்றது என்ற நிலைகளை உணர்ந்து கொள்ளுங்கள்.

மூஷிகவாகனா…! எந்தெந்த குணங்களை நாம் சுவாசித்தோமோ இந்த உணர்வின் தன்மை கொண்டு அதே வாகனமாக அன்றைய செயலும் இன்றைய சரீரமாக வைத்திருக்கின்றது உயிரான ஈசன்.

கணங்களுக்கு அதிபதி கணபதி ஆகவும் அவனே இருக்கின்றான். நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கச் செய்து அதன் வழியே மற்றதை ஒடுக்கும் நிலைகளைக் கொண்டு வருகின்றது.

1.உயிரான ஈசனிடம் ஒன்றி ஒளியாகப் பெறுவோம்…
2.என்றும் நிலையாக இருக்கக்கூடிய அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று
3.அதைப் பெறும் நிலையாகச் சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில்
1.எந்தத் துன்பங்கள் வந்தாலும் நோய்கள் வந்தாலும் அதை எல்லாம் நீக்க
2.மகரிஷிகளின் அருள் ஒளி சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நான் வெறும் வாக்காகச் சொல்லவில்லை… வெறும் சொல்லாகச் சொல்லவில்லை… அருமருந்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

நீங்கள் எண்ணி எடுத்து உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். குருநாதர் எனக்கு இப்படித்தான் அருளினார். உங்களுக்கும் அதே உணர்வின் தன்மையைத் தான் பதிவு செய்கின்றேன்.

பதிவை மீண்டும் எண்ணி
1.வாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளை நீக்குவேன்
3.மெய் ஒளியைக் காண்பேன்… மெய் வழி செல்வேன்
4.அந்த மகரிஷியின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான அழியாத பெரு வீடு பெறுவேன்
5.பத்தாவது நிலையான ஒளி நிலை பெறுவேன் என்று
6.உங்கள் எண்ணத்தில் அதை எல்லாம் எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் அதுவாக ஆகின்றீர்கள்.

அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) பிரார்த்திக்கிறேன்.

நம் உடல் உறுப்புகளுக்குச் சக்தி கொடுக்கும் சரியான முறை

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அவர் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.அதனின்றி வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது கண்ணின் கருமணிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அதை ஈர்க்கும் சக்தி பெறும் பொழுது “கருமணிகளில் கனமான உணர்வுகள்” வரும்.

இப்பொழுது உங்களுக்குள் புருவ மத்தியில் ஈசனாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும்
1.“உயிரை எண்ணி” அங்கே கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்… கண்களை மூடுங்கள்.
2.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் பொழுது
1.உயிரின் இயக்கம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைப் பெறும் போது உங்களில் ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் புருவ மத்தியில் மோதும் பொழுது உணர்ச்சிகள் அழுத்தமும் ஒளிக் கற்றைகளும் தெரிய வரும் “வெளிச்சமாக…”

இவ்வாறு ஏங்கித் தியானித்தால் நம் உடலில் தீமை விளைவிக்கும் அணுக்களுக்குத் தீய உணர்வுகள் உள் புகாது தடைப்படுத்துகின்றோம். உடலுக்குள் தீய உணர்வுகள் சென்று தீய அணுக்களாக வளராது தடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது கண்களால் இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது
1.இரத்தங்களில் உள்ள கருமுட்டைகளோ தீய அணுக்களோ எது இருப்பினும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் பொழுது “நல்ல அணுக்களாக” மாறும் சக்தி பெறுகின்றது நம் இரத்தத்தில்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவரும்படி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உடல் உறுப்புகளில் உள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளி பெறும் பொழுது உங்கள் உடல் முழுவதற்கும் “ஒரு புது நல்ல உணர்ச்சிகள் ஏற்படும்… இதை நீங்கள் உணரலாம்…”
1.உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களில்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை நீங்கள் இப்பொழுது உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்

இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் உணர்வை இரத்தத்தின் வழி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில்… படிப்படியாக எல்லா உறுப்புகளிலும் தசை மண்டலம் தோல் மண்டலம் வரை பெறச் செய்யும்போது… அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான சக்தி காற்று மண்டலத்தில் படர்ந்துள்ளதைக் கவர்ந்து… “நம் ஆன்மா வலுப்பெறுவதற்கும் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெறுவதற்கும்” இது ஏதுவாக இருக்கும்.

காலையில் ஒரு ஆறு மணிக்குள் “ஒரு அரை மணி நேரமாவது” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலில் உள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியைக் காலையில் எடுத்துப் பழகுங்கள்.
1.“அந்த வலுவின் துணை கொண்டு” அன்றாட வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் போக்கிக் கொள்ள முடியும்
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றிக் கொள்ள முடியும்.

பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.

எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட ஆதி சக்தியின் சக்திக்குத் தான் முடியும்

 

ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்கிக் கொண்டு ஓடும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் அதற்குகந்த ஈர்ப்புத் தன்மையுடன் ஓடுகின்றது மண்டலங்கள்.

சூரியனை மையம் கொண்டு ஏழு பெரிய கோளங்கள் உள்ளன. இவ் ஏழின் ஈர்ப்பில் இவ் ஏழிற்கும் தாண்டிய நிலையில் இவ் ஏழிற்கும் சிறிய கோளங்கள் 48 மண்டலத்தில் சூரியனும் நாம் நம் பூமியைச் சேர்த்து ஏழு கோளமும் இவ் எட்டும் போக பாக்கி 40 கோளங்களும் இவ் ஏழின் ஈர்ப்புடன் சுழலுகின்றன.

ஒவ்வொன்றின் அமில சக்தியும் மாறு கொண்டுள்ளது. சூரியனை மையப்படுத்தி அதன் ஈர்ப்பின் வட்டத்துக்குள் வந்துள்ள மண்டலங்கள் தான் இந் நாற்பத்தி ஏழும்.

அவற்றிற்கு இச்சிறிய கோளங்களுக்கு நம் இன்றைய விஞ்ஞானிகள் நாமகரணம் சூட்டவில்லை. தெய்வீக அருள் நெறியில் சித்தர்களினால் உணரப் பெற்று அவர்கள் இட்ட நாமகரணங்கள் இவற்றுக்கு உண்டு.

ராகுவும் கேதுவும் சுக்கிரனும் சனியும் குருவும் இவர்கள் பிடியில் சிக்குண்ட மண்டலங்கள். மற்ற மண்டலங்களை நட்சத்திர மண்டலமாக்கி அதன் நாமகரணத்தைச் சூட்டினார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்…
1.நம் சித்தர்களால் இயற்றப்பட்ட எண்ணத்தில் பதிவு செய்த இக்கோளங்களின் நிலையே
2.பல நிலையில் உருமாறி வெளி உலகிற்குச் செப்பிடும் நிலையே அற்று விட்டது.
3.அக்காலத்தில் எழுத்து வடிவங்களோ கற்பாறையில் ஓலைகளில் உணர்த்தச் செய்யும் வழி முறையோ இல்லை.

சித்தர்களால் மனித ஆத்மாவுக்கு வளர்ச்சியூட்டி அவ்வளர்ச்சியின் தொடரில் இவ்வுலக மனித ஆத்மாக்கள் வளர்ந்த நிலையில் சிறுகச் சிறுகத்தான் இவ்வாத்மாக்களின் அறிவு வளர்ச்சியைப் பெருகச் செய்து அதன் வழித் தொடரில் எண்ணத்தைப் பதித்திடும் நிலை வந்தது.

அதற்குப் பிற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் இப்பதிவு செய்யும் “எழுத்து நிலையே” உதயம் பெற்றுச் செயலாக்கிட முடிந்தது.

இந்நிலை வளர்வதற்குள் மனித ஆத்மாவின் அறிவு நிலை வளர்வதற்குள் மண்டலங்களின் வளர்ச்சி நிலை பெருகிவிட்டது.
1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்றுணர்த்திய சித்தர்களின் சக்தி நிலைக்கும்
2.இன்றைய இயற்கையின் சக்தி நிலைக்குமே பெரும் மாற்றம் உள்ளது.

ஒவ்வொரு கோளமுமே அதன் ஈர்ப்பில் பல சக்திகளைச் சேர்த்துக் கொள்கின்றது. சில நாட்களில் சந்திர மண்டலத்திற்கு அருகாமையில் நட்சத்திர மண்டலங்களைக் காண்பீர்கள். ஒரு நாள் காணும் நிலை மற்றொரு நாளும் காண முடிந்திடாது.

அதன் ஈர்ப்பில் சிக்குண்டு அதன் செயலுடன் ஆவியான அமிலமாய்ச் செயல் கொண்டாலும் செயல் கொண்டிடும் இதன் ஓட்டத்தினால் இதன் வேக நிலை கொண்டு சந்திரனின் ஈர்ப்பில் சிக்காமலும் தப்பிவிடும்.

நம் பூமியே ஒவ்வொரு நாளும் பல நட்சத்திர மண்டலத்தைத் தன்னுள் ஈர்த்தே சுழன்று ஓடுகிறது.
1.சில நாட்களில் வானத்தில் எரி நட்சத்திரமாய் எரிந்து விழுவதைப் போல் காண்பீர்கள்.
2.சுழற்சியில் சிக்கி ஆவியான அமிலமாய் நம் பூமியின் ஈர்ப்பில் பல நட்சத்திர மண்டலங்கள் கலப்பதைப் போல்
3.ஒவ்வொரு மண்டலத்திலும் அதற்குகந்த அமில சக்தியுடைய மண்டலங்கள் கலக்கின்றன.

வளர்ச்சியும் பல கொள்கின்றன…! சில நாட்களில் வான மண்டலத்தில் நம் பார்வைக்கு மிக அதிகமான நட்சத்திர மண்டலங்கள் தெரிவதைக் காண்பீர்கள். சில நாட்களில்… “ஒன்றிரண்டு காண்பது கூட அரிதாக இருந்திடும்…”

இம்மண்டலங்களின் ஈர்ப்பிலும் நம் பூமி ஓடும் நிலையில் நாம் சந்திக்கும் நிலை கொண்டு நிகழ்பவைதான் இவையெல்லாம்.

எம்மண்டலமும் ஓரிடத்தில் இருந்து சுழல்வதில்லை.
1.ஓடிக்கொண்டே உள்ள நிலையில்
2.நம் பூமி காணும் நிலை கொண்டு தெரிபவை தான் இந் நட்சத்திர மண்டலங்கள் எல்லாம்.

நம் பூமி ஓடும் நிலையில் நம் பூமியின் ஈர்ப்புடனும் பூமியில் சிக்காமலும் நம் பூமியுடனே ஓடி வரும் நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன. அங்கங்கு நம் பூமியின் ஓட்டத் துரித நிலையுடன் ஓட முடியாத குறுகிய ஓட்ட நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன.

எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட அவ்வாதி சக்தியின் சக்திக்குத் தானப்பா செயல் சக்தியுண்டு.

சக்தியின் செயல் வேண்டியே நாம் அறிந்தே “எழுத்தின் வடிவிற்கு வருவோம்…”

எழுத்தின் வடிவமைக்கும் அறிவு சக்தி வளர்ந்தே நம் ஆத்மாவின் சக்தியையே எச்சத்திக்கும் நம் சக்தியைச் செயல் ஆக்கிட முடியும் என்ற வளர்ப்பு எண்ணம் கொண்டு… நம் எண்ணத்தையே சகல சித்து நிலைகளை அறிந்திடும் பக்குவப்படுத்தியே நம் செயல் இருந்திட வேண்டும்.

1.நம் எண்ண சக்தியைச் செயலாக்கிட எந்நிலைக்கும் நம்மை அடிமைப்படுத்திடாமல்
2.இவ்வுலகில் இம்மனித ஆத்மாக்களினால் காலம் காலமாய் அடிமை கொண்ட ஜாதி வேறுபாட்டில் சிக்குண்டு இருந்திடாமலும்
3.ஆண்டவனை ரூபப்படுத்தி தான் வாழ பிறரை ஏமாற்றும் நிலையில் சிக்கிடாமலும்
4.எண்ணத்தையே சூதாக்கி பிறரை வஞ்சிக்கும் எண்ணக் கடலில் அமிழ்ந்திடாமலும்
5.நம் ஆத்ம பொக்கிஷத்தைப் பிற சூனிய நிலையில் மாட்டிக் கொள்ளாமலும் செயல் கொண்டு
6.எண்ணத்தையே ஜெபமாக்கித் தப்பும் வழியை நாம் அறிந்து வாழ்ந்திடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஷ்ணு நரசிம்ம அவதாரமாக எடுத்து இரண்யனை மடி மீது வைத்து அவனைப் பிளந்தான் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்..
1.விஷ்ணு என்பது நம் உயிர்
2.மடி என்பது நம் இருதயம்
3.இரண்யன் என்பது தீமை செய்யும் உணர்வுகள்.

இருதய வாயிலில் இருக்கும் “மேக்னட்…” புறத்தால் ஒரு பொருளைப் பார்க்கப்படும் போது அவர்கள் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வலைகளை இழுத்து அலையாகக் குவிக்கும் இடம் அது.

அது தான் மடியாகின்றது.

இங்கே தேங்கி நிற்கும் நிலைகளில் கெட்டவரின் நினைவுகளை எடுத்து இங்கிருந்து மறுபடியும் சுவாசித்து உயிரிலே பட்ட பின் எதுவோ அது இயக்குகின்றது.

ஒரு நாடாவிலே எதைப் பதிவு செய்கின்றோமோ அதை மீண்டும் ஓட்டப்படும் போது அந்த நாடாவில் உள்ளதைத்தான் ரேடியோவோ மற்ற இயந்திரங்களோ பேசுகின்றது. ட்ரான்சிஸ்டர் அந்த அலைகளை எடுத்துக் கொடுக்கின்றது.

இதைப் போல்
1.கூர்ந்து பார்க்கும் போது நம் கண்கள் அதை எடுத்து
2.அந்த உணர்வின் அலைகளை நமக்குள் அலைகளாகக் குவித்துக் கொடுப்பதைச் சுவாசித்து
3.அந்த அலைகளுக்குள் இருக்கும் உணர்வைத் தான் சொல்லாகவும் செயலாகவும் அது நம்மைப் பேசச் செய்கிறது.

ஆகவே இந்த உணர்வின் சக்தியை நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தான் என்றால் நம் உயிர் இங்கே நரசிம்மனாக மாறி அதன் வழியில் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்று காவியங்களில் காட்டப்பட்டது.

ஒருவன் கெடுதல் செய்கிறான் என்று எண்ணும் போது அந்த உணர்வின் சக்தியை நாம் எடுத்து அவர்களைக் கவரப்படும் போது அந்த உடலிலிருந்து வந்த எண்ணங்கள் எல்லாம் நமக்குள் தெரிகின்றது.

அந்த உணர்வு நமக்குள் இயக்கி அவனை உதைக்க வேண்டும் என்று சொல்கிறது.
1.அதே உணர்வு என் உடலுக்குள் சென்றவுடனே என் நல்ல குணத்துடன் சண்டையிடுகின்றது.
2.நீ இரு நான் பார்த்துக் கொள்கிறேன்… என்று.

என் உடலுக்குள் நல்ல குணங்களுடன் கலந்தவுடனே நீ இரு… நான் பார்த்துக் கொள்கிறேன்..! என்று சொல்லப்படும் போது நல்ல குணங்கள் இந்த உணர்வைத் தாங்காது
1.மேல் வலிக்கிறது தலை வலிக்கிறது
2.கை குடைகிறது கால் குடைகிறது
3.நெஞ்சு வலிக்கிறது இரத்தக் கொதிப்பு வருகிறது வாத நோய் வருகிறது என்று
4.சீராக இயக்கக்கூடிய நிலைகள் அனைத்தையுமே நிறுத்தி விடுகின்றது.

இதை மாற்றுவதற்குத் தான் நரசிம்மா…!

கெடுதல் செய்தவர்களை எண்ணும் போது என்னை அந்தத் தீமை எப்படி இயக்குகிறதோ அதைத் துடைப்பதற்குத் துடைத்துப் பழகிய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் மனித உடலில் உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டான்.

துருவத்தை அறிந்தான்… துருவத்தை அடைந்தான்… துருவத்தின் உணர்வைத் தனக்குள் சேர்த்தான்… துருவ மகரிஷியானான். சிருஷ்டிக்கும் நிலை பெற்றான்… அந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் ஒளியாக உள்ளான்…!

அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் ஏழாவது அறிவு கொண்டு சப்தரிஷிகளாக ஒளியாக மாறிச் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

அந்த அருள் சக்திகளைப் பெற்றால் நரசிம்மா..! தீமைகளை நீக்கி விட்டு ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். இந்த உடலிலிருந்து தான் அதை நாம் பெற வேண்டும்.

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் போய்க் கொண்டிருக்கின்றது

 

விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம்… ஆனால் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நாட்டில் மாட்டு வண்டியிலே சாமான்களை ஏற்றிச் செல்கின்றார்கள் சந்தர்ப்பத்தில் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டால் மாடுகள் இறந்து விடுகின்றது.
1.ஆனால் அங்கே அருகில் இருக்கக்கூடிய மக்கள் ஓடிச்சென்று
2.உணவுக்காக அந்த மாட்டினுடைய தசைகளை இரக்கமற்று அறுத்து எடுத்துச் செல்கின்றார்கள்
3.அதிலே அடிபட்ட மனிதனின் தசைகளையும் கூட அறுத்து எடுத்துச் சாப்பிடச் செல்கின்றார்கள்.

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் இப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது,.

இத்தகைய நேரத்தில் இராமாயணத்தில் கூறியது போல நாம் சிறிது காலமே வாழ்க்கை வாழ்கின்றோம்.

1.இதற்குள் நாம் மனதை ஒன்றாக்கி உடலுக்குள் ஒன்றென இயக்கி
2.இந்த உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தி
3.உயிருடன் ஒன்றும் உணர்வை ஒன்றாக சேர்த்து
4.அந்த உண்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தும் போது நமக்குள்ளும் வளர்கின்றது… தீமைகளை அகற்றும் சக்தி இந்தப் பூமியிலும் பரவுகின்றது… நம் உடலுக்குள்ளும் அது பெருகுகின்றது.

கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படித் தீமைகளைப் பிளந்ததோ அதே போன்று மனிதர்களாக இருக்கக்கூடிய நாம்
1.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இந்தப் பூமியில் கலந்திருப்பதை அந்த உணர்வைப் பெருக்கி
2.தீமையை நீக்கும் அந்தச் சக்தியை நாம் சுவாசித்து
3.நமக்குள் தீமை புகாது தடுத்து உணர்வின் தன்மை ஒளியாக்கி
4.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.

விஷ உலகமாக மாறிவரும் வேளையில் இன்று இருக்கக்கூடிய மனிதர்கள் இனிமேல் எப்படி எல்லாம் செயல்படுத்துவார்கள்…? என்று சொல்ல முடியாது.

இந்த உலகையே அழிக்கக்கூடிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார்கள் எதிர்பாராதபடி ஒருவருக்கொருவர் ஏவினால்
1.அந்தக் குண்டுகள் வெடித்தால் இந்தப் பூமியில் பரவத்தான் போகின்றது
2.விஷக் கதிரியக்கங்கள் அதிகமாகப்படும் பொழுது சூரியனின் ஒளிக்கதிர்களைத் தடுக்கத்தான் போகின்றது.

அப்படித் தடுத்து நிறுத்தி விட்டால் சூரியனின் ஒளிக்கதிர்கள் பரவவில்லை என்றால் துருவத்தில் எப்படிப் பனிப்பாறைகள் உறைகின்றதோ அதைப் போன்று
1.நாம் இருக்கும் இடங்களில் பனிப் பாறைகள் உறைந்து
2.உயிரினங்களே அனைத்தும் மறைந்து போகும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

அப்போது பூமி சூரியனைக் கடந்து விலகிச் சென்றுவிடும். இயக்கச் சக்தி கடந்தால் இந்தப் பிரபஞ்சமே சுக்குநூறாகிவிடும்… பின் பிரபஞ்சம் இல்லை

ஆனால் இங்கே உயிரணுவாகத் தோன்றி
1.வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழும் நிலை பெற்றவர்கள்
2.எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் அழிவில்லாதபடி அவர்கள் வாழுகின்றார்கள்.

அதை நீங்கள் பெற விரும்பினால் அது எளிதில் பெறக்கூடிய சக்தி தான் கடினமில்லை கடும் தவம் இருக்க வேண்டிய அவசியமில்லை
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டே வந்தால் போதுமானது.
2.அதன்படி வாழ்க்கையே நீங்கள் தியானம் ஆக்கிக் கொள்ளுங்கள்.

பூமியிலிருந்து சூரியனுக்குச் செல்லவும் முடியும்

 

சூரிய மண்டலத்திற்குச் சென்றிட முடியாது. உஷ்ணக் கோளம் என்று விஞ்ஞானத்தில் உணர்த்துகின்றனர்.

சூரியனின் கோளம் பெரியது. அதில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையும் எம் மோதும் அமிலத்தையும் தன்னுள் ஈர்க்கும் நிலை உடையது. உருவ நிலையிலும் வளர்ந்து கொண்டே சுழன்று ஓடும் பெரிய மண்டலமாம் நம் சூரிய மண்டலம்.

முந்தைய ஆராய்ச்சியில் சூரியன் மையம் கொண்டு ஒரே இடத்தில் சுழன்று கொண்டுள்ளதாகவும் அதனைச் சுற்றியுள்ள சூரியக் குழந்தைகள் தான் அதனைச் சுற்றி ஓடுவதாகவும் உணர்த்தினர்.

சூரியனின் யாம் அறிந்த உண்மை நிலை…
1.அது தன்னைத்தானே சுற்றி ஓடிக்கொண்டு அதன் ஈர்ப்பில் உள்ள இந்த 47 மண்டலங்களையும் தன்னுடனே தன் ஈர்ப்பில்
2.அது அது சுழன்று கொண்டும் ஓடிக்கொண்டே உள்ளன.
3.இவ்வண்டமும் மற்ற எல்லா அண்டங்களுமே ஓடிக்கொண்டே தான் உள்ளன. எதுவும் நிற்பதில்லை

ஒரு நிலையில். ஜீவன் பெற்று திடப்பொருள் கொண்ட பிறகுதான் ஓடும் நிலை ஒவ்வொன்றிற்கும் வருகின்றது.

இம்மனித மண்டலமே ஓடிக்கொண்டே தான் உள்ளது. பிம்ப உடல்தான் ஒரு நிலையில் எண்ணம் கொண்டு செயல் கொள்கின்றது. மனித மண்டலத்திற்குள்ள எல்லா அவயங்களுமே தன்னிச்சை நிலையில் செயல்பட்டுக் கொண்டேதான் உள்ளன.

இதே போல் ஜீவனுள்ள எல்லா ஜீவராசிகளும் மண், கல், நீர் அனைத்திற்கும் ஜீவத் துடிப்பின் ஓட்டம் இருந்து கொண்டே உள்ளது.

பல பல ஆராய்ச்சிகளைச் செய்விக்கின்றனர். மனிதனுக்கும் ஜீவராசிகளுக்கும் உயிர்த்துடிப்பு நிலையை உணருகின்றனர்.
1.ஆனால் கல்லிற்கும் மண்ணிற்கும் உயிர்த்துடிப்பும் ஜீவன் உண்டு.
2.ஜீவன் இல்லாவிட்டால் கல்லிற்கும் மண்ணிற்கும் வளர்ச்சி இல்லை.
3.அததற்குகந்த உஷ்ண அலையும் உண்டு.

மண்ணாய் உள்ள நிலையிலிருந்து மணலாகி, உருண்டு கல்லாகி, பெரும் பாறையாய் உருப் பெறுகிறது. அந்தந்தப் பூமியின் நிலைக்கொப்ப மண்ணின் நிறங்கள் மாற்றம் கொள்கிறது அல்லவா…?

நீர் நிலைகள் பாய்ந்து வரும் வேகத்தில் எவ்விடத்தில் அந்நதி உற்பத்தியாய் பாய்ந்து வந்தாலும் அந்தந்த நிலைக்கொப்ப பூமியின் மேல் படும்பொழுது இப்பூமியின் சுவை குணத்தை ஈர்த்தே ஓடுகிறது. இந்நீருக்கு ஜீவன் பூமியின் நிலையில் இருந்து பெற்ற ஓடுகிறது.

நம் பூமியிலேயே பல பாகத்தில் பல நிலைகள் உண்டு. ஒன்றின் கலப்புடன்தான் தொடர்நிலை கொண்ட அமில சக்தியை வளர்த்த நிலை கொண்டு வாழ்கின்றது நம் பூமியே.

1.நம் பூமியிலிருந்து வெளிப்படும் மணம் ரம்மியமான ஆனந்தமான மணமாய்ப் பரிமளித்த காலம் ஒன்றிருந்தது.
2.இன்று நம் பூமியின் மணமே மாறு கொண்டு விட்டது.
3.இந்நிலையில் விஷத்தன்மை பரவிடும் நிலையும் வந்துள்ளது.
4.பல காலம் வாழ்ந்த பெரியோர்கள் இம் மணத்தின் மாறுபட்ட நிலையை அறிவர்.

நம் பூமியில் உறையும் தன்மை உப்புக் கலந்ததாய் உள்ளதினால் கரையும் நிலையும் துரிதமாய்ச் செயல் கொள்கின்றது. நம் பூமியைக் காட்டிலும் சூரியனின் சக்தி மிகவும் அதிகம் கொண்டது.

சூரியனின் நிலைத்தன்மையை முன் பாடத்திலேயே உணர்த்தியுள்ளேன்.

1.இன்று சூரியனுக்குச் செல்லவும் முடியும்
2.சூட்சுமத்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்தாலும் சூரியனுக்குச் சென்றிடலாம்.

நம் பூமிக்கும் நம் பூமியைக் காட்டிலும் சிறிய மண்டலமான சந்திரனுக்கும் உஷ்ண அலையை ஆராய்ந்து நம் பூமியிலிருந்து காற்று மண்டலத்தைத் தாண்டி உஷ்ண அலைப் பகுதியைத் தாண்டி அதைப் போலவே சந்திரனுக்குச் செல்லும் ஏவுகணையை அனுப்பி உள்ளார்கள்‌‌.

நம் பூமியில் இருந்து இக்காற்று மண்டலத்தைத் தாண்டி உஷ்ண அலை மண்டலத்தைத் தாண்டி பிறகு இவர்களுக்கு வேறு செலவினங்கள் இல்லாமல் எவ்அலையை வைத்து சந்திரனின் உஷ்ண அலை வரை தானாகவே இவ் ஏவுகணை ஓடுகின்றது…?

1.இவ் உஷ்ண அலை மண்டலம் (சந்திரனுக்குச் சொந்தமானது) வந்த பிறகுதான்
2.இவர்கள் ஏவுகணையை இயக்கச் செய்யும் சாதனத்தின் ஜீவன் செயல்திறன் கொள்கின்றது.

பொதுவானது பால்வெளி மண்டலத்தின் உஷ்ண அலை. இந்நிலை இருக்க நம் பூமியிலிருந்து சந்திரனுக்கு ஏவுகணையை அனுப்பியவர்கள்… நம் சூரிய மண்டலத்திற்கு… நமக்கு அருகாமையில் உள்ள அந்த மண்டலத்திற்கு அருகில் சென்று இவர்கள் விஞ்ஞானத்தை ஏன் செயலாக்கவில்லை…?

சூரியன் நம் பூமியைக் காட்டிலும் இரண்டு மடங்கு சுழற்சி சக்தி கொண்டது. இங்கு ஒரு நாள் 24 மணி நேரம்; அங்கு 12 மணி நேர விகித நிலையில் தன்னைத்தானே சுழன்று ஓடுகிறது.

விகித நிலை என்பது கூட அதன் சுழலும் சக்தி கொண்டு யாம் அறிந்த நிலை தானே ஒழிய அதற்கு இரவு பகல் என்ற மாறுபட்ட நிலை இல்லை.

அதைச் சுற்றி ஓடும் 47 மண்டலங்களின் ஈர்ப்பின் சக்தியையும் தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்திச் சுழன்றிடும் நிலையில் அதன் உஷ்ண அலையின் (47 மண்டலங்களின்) நிலை பெற்றுச் சுழலுகின்றது.

இந்த 47 மண்டலமுமே சூரியனைச் சுற்றி வட்டமாய்த் துரித கதியில் ஓடவில்லை. இவற்றிலுமே ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று பங்கு பெற்று அச்சக்தியின் அமிலத் தொடர் அதற்குச் சென்றடைகிறது.

உதாரணமாய்:-
இங்கு இந்நிலையில் காட்டியுள்ள நிலைப்படுத்தி இம்மண்டலங்களின் தன்மை உள்ளது. இதற்கும் தாண்டிய நிலையில் இவ் ஆறு மண்டலம் அல்லாமல் 48 மண்டலத்திலேயே பாக்கியுள்ள மண்டலங்கள் இதற்கும் சிறியவை…. உஷ்ண அலைகளைக் குறைவாய் பெற்றுள்ள மண்டலங்கள்.

இவர்கள் நாமகரணத்தில் உள்ள சனி மண்டலத்திற்குக் குளிரும் நிலை அதிகம். உறையும் தன்மை கொண்ட அமிலத்தை வளர்த்துள்ள மண்டலம் சனி மண்டலம்.

சனியின் நிலையில் இவ்வமில சக்தி நிறைந்துள்ளதினால் அது சுழலும் நிலை கொண்டு அதன் பக்கத்திற்கு இப் பெரிய மண்டலம் செல்லும் காலங்களில் அதன் அமில நிலையின் சக்தி இவற்றிற்கு அதிகமாய்க் கிடைக்கின்றது.

நம் பூமியில் இக்கால நிலை மாற்றம் கொண்டு
1.கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் குளிர் அதிகமாய்க் கிடைக்கப் பெறுவதும்
2.நம் பூமி சனியின் கோளத்திற்கு அதன் ஈர்ப்பின் நிலையில் வரும் கால நிலையில்தான் இக்குளிர் அமில சக்தியும் நம் பூமிக்கும் கூடுகின்றது.

இதைப்போல் தான்
1.பங்குனி, சித்திரை மாதங்களில் கடும் வெயிலைக் காணுகின்றோம்.
2.சூரியனின் உஷ்ண அலையுடன் நமக்கு அருகாமையில் நம் பூமியின் ஈர்ப்பிற்கு ராகுவின் நிலைக்குச் செல்கின்றது.

ஒரு வருடத்திற்குள் சூரியனை மையப்படுத்தி ஓடிடும் நிலையில் நம் மண்டலத்துடன் ஈர்ப்பிற்கு வரும் இந்த 48 மண்டலங்களின் தொடர்பைக் கொண்டு நம் பூமிக்குக் காலநிலை உருவாகிறது.

அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்திற்குமே இக்கால நிலையும் செயல்படுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானியுங்கள்.
1.கண்களைத் திறந்து ஒரு நிமிடம் எண்ணுங்கள்
2.கண்களை மூடி ஒரு நிமிடம் அந்தச் சக்திகளை உடலுக்குள் செலுத்துங்கள்.

இங்கே யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாயிலாகப் மகரிஷிகளின் அருள் சக்திகளை இங்கே பதிவு செய்து வைத்திருக்கின்றோம்… காற்றிலேயும் பரப்பி வைத்திருக்கின்றோம்.

அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணி எடுக்கும் பொழுது உங்கள் உடலுக்குள் தன்னாலே வந்து சேருகிறது.
1.கண்களை மூடி… பின் திறந்து
2.மறுபடி கண்களை மூடி… திறந்து அந்தச் சக்திகளை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
3.கண்களைத் திறந்த பின் “வீட்டில் கஷ்டம்…” என்று சொல்வதை விட்டு விடுங்கள்
4.உங்கள் வார்த்தையில் கஷ்டம் என்ற சொல்லை நீக்கி விட்டு
5.அதனை நீக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். சகோதர உணர்வுகள் வளர வேண்டும் நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று இப்படித் தொடர்ந்து எண்ணுங்கள்.

இதைத் தான் நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றேன். “சாமியார் சொன்னார்” என்றால் அதை மட்டும் நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நீங்கள் எண்ணி எடுக்கலாம் அல்லவா…!

மிகவும் கஷ்டமாக இருக்கிறது… என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… தொழில் சீராக இல்லை… என்று இங்கே வந்து இப்படித்தான் என்னிடம் கேட்கின்றார்கள்.

காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பரவியுள்ளது. வீட்டில் அமர்ந்தபடியே அந்த அருள் சக்திகளைப் பெற்று நீங்களே எடுத்து உங்கள் வீட்டிலே பரப்பிக் கொள்ள முடியும்.

இதை நீங்களே செய்யலாம்.

1.என்னை நம்பி என்னிடம் எதிர்பார்க்கின்றார்கள்.
2.ஆனால் தன்னை நம்பி நான் சொன்ன உணர்வுகளை நீங்களே எண்ணி எடுக்க முடியும்.
3.அதற்குத் தான் இங்கே தியான மண்டபம் அமைத்தது.

உயர்ந்த சக்திகளை அவரவர் எண்ணி எடுப்பதற்குத் தான் இந்த மண்டபமே தவிர அது எனக்காக அல்ல. இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்…?

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணி எடுக்கும்போது நான் அங்கே செல்கின்றேன்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தியைப் பெறுகின்றேன். என்னை நாடி வருபவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக நீ ஆகின்றாய் என்று கீதையிலே சொல்வது போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணும் போது “நான் அதுவாக ஆகின்றேன்…”

ஆகவே…
1.உங்களை அறியாது இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப் பொருள் காணும் திறன் நீங்கள் பெற வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
4.தொழில் நன்றாக இருக்க வேண்டும்… செல்வச் செழிப்பாக வாழ வேண்டும்
5.உங்களுடைய மூச்சுகள் எல்லாம் பரமாத்மாவில் கலந்து அனைவரையும் நலமுடன் வாழச் செய்ய வேண்டும் என்று
6.நான் உங்களுக்குச் செய்வது போல் நீங்களும் மற்றவர்களுக்கு இப்படி எண்ணினால் நீங்களும் ஞானியாக முடியும்.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று முதலில் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்…
1.எங்கள் வீடு முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3,எங்கள் தாய் தந்தையின் அருளாசி எங்களுக்குக் கிடைக்க வேண்டும்
4.எங்கள் மூதாதையர்களின் நல்லாசி கிடைக்க வேண்டும்
5.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்
6.எங்களுக்கு நல்ல மனதும் எங்களைப் பார்ப்பவர்களுக்கு நல்ல மனதும் வர வேண்டும் என்று
7.உங்கள் உயிரிடம் கேட்டால் அவன் அதை எல்லாம் உருவாக்கித் தருவான்…!

இதை நீங்கள் கேட்டுப் பெறலாம் அல்லவா.

அகஸ்தியன் காட்டிய வழிப்படி “வேதம்”

 

வேப்பமரம் என்றால் ரிக்… வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் மணம் சாம இசை…
1.அந்த மணத்தை நுகர்ந்தால் ஓய்… என்ற இசை வருகின்றது
2.வாந்தியாக வருகின்றது.

ஒரு ரோஜா பூ ரிக் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாம
1.அந்த மணத்தை நுகர்ந்தால் ஆகா…கா என்று
2.ஆனந்த உணர்ச்சிகளை எழுப்புகின்றது நாதங்களை.

ஒரு விஷச்செடி ரிக் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாம இசை.
1.அந்த மணத்தை நாம் நுகர்ந்தால் உச்… உச்… என்று
2.அரிப்புத் தாளாது அந்த ஓசையை எழுப்புகின்றோம்.

இதைத் தான் ரிக் சாம என்று காட்டுகின்றார்கள்.

சந்தர்ப்பவசத்தால் வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நம்முடைய சாந்தமான உணர்வுக்குள் புகுந்து விட்டால் அந்த அணுக்கள் அதர்வண… சாந்தத்தை அடக்கி விடுகின்றது… ரிக் சாம.

விஷத்தின் தன்மை சாந்தமான அணுக்களுக்குள் சேர்ந்து விட்டால் அதை அடக்கி விஷத்தின் தன்மையாக மாற்றி அதை ஓங்கச் செய்து அதர்வண… யஜூர்… விஷத்தன்மை கொண்ட அணுவின் உடலாக மாற்றும் திறன் பெறுகின்றது என்று காட்டுகின்றான் அகஸ்தியன்.

இப்படி… மனித உடலில் உருவான வேதனை என்ற நாதத்தை உணர்கின்றான் அகஸ்தியன்.
1.அதை அடக்கும் தாவர இனத்தின் உணர்வை அவன் நுகர்ந்து அதைத் தனக்குள் விளைய வைத்து
2.அந்த மனித உடலில் விளைந்த வேதனையான நாதத்தை தணிக்கும்படி…
3.வேதனைப்பட்டவருக்கு அந்த ஆற்றலை நுகரும்படி செய்கின்றான் அன்றைய அகஸ்தியன்.

விஷத் தன்மையான அணுக்கள் இதைச் சுவாசித்த பின் ஒடுங்கி… இதனுடைய வலிமை கூடி
1.அந்த உடலில் தீமையை நீக்கும் அணுக்களை உருவாக்குகின்றான்…
2.இயற்கையில் விளைந்ததை வைத்து அன்றைய மெய்ஞானியான அகஸ்தியன்.

விஞ்ஞானியோ மற்ற பொருள்களைக் கலந்து இணைத்து புறப்பொருளின் நிலையின் இயக்கத்தை அந்த அணுக்களாகத்தான் மாற்றுகின்றான்.

ஆனால் அகஸ்தியன் இயற்கையின் உண்மையின் உணர்வு சாகாது… மற்ற மனித உடலுக்குள் அந்த இயக்க அணுவாக ஜீவ அணுக்களாக மாற்றுகின்றான்.

இப்படி…
1.மனித உடலில் தீமைகளை நீக்கும் உணர்வுகளை வளர்த்து
2.எதுவும் வெல்ல முடியாத நிலைகள் வேகா நிலை என்று முழுமை பெற்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்த மெய்ஞானி இந்த உண்மையைப் பெற்றான் என்பதை நாம் அறிவதற்காகத் தான் விநாயகத் தத்துவத்தைக் கொடுத்தார்கள்.

சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் 48 மண்டலங்களுக்கும் “தனித்தனித் தன்மையுண்டு”

 

ஓடிக்கொண்டே உள்ள இம் மண்டலங்களின், ஒன்றின் ஈர்ப்பும் அதன் அமில சக்தியும் மற்றொன்றின் நிலைக்கு மோதுவதால் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவ் ஈர்ப்பின் சக்தி நிலை கூடுகின்றது.
1.அனைத்து மண்டலங்களுமே சுழன்றே ஓடிக்கொண்டுள்ளன
2.ஒன்றுக்கு உகந்த சக்தி மற்றொன்றுக்கில்லை
3.சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் இந்த 48 மண்டலங்களுக்கும் தனித்தனித் தன்மையுண்டு.

நம் பூமியில் இன்றுள்ள சப்த அலைகளும், சுவையும் மற்ற இயற்கையில் தோன்றிடும் தாவரம், கனிவளம் இப்படிப் பல நிலைகள் வேறு மண்டலங்களில் மாற்றம் கொண்டுள்ளன.

நம் பூமியின் சக்தி நிலை போன்ற அதிக சக்தி கொண்ட மண்டலம் சூரியனை மையப்படுத்திச் சுழன்றிடும் இந்த 48 மண்டலங்களுக்குமே இல்லை.

நம் பூமிக்கு வியாழனிலிருந்து இன்று எப்படி நீர் நிலைகள் வந்திடும் சக்தி கிடைத்தது…?
1.வியாழனிலிருந்து அதன் சுழலும் வேகமும், சூரியனின் சுழலும் வேகத்திற்கும்
2.இரண்டின் ஈர்ப்பில் ஏற்படும் நிலை அதன் நேர் நிலை கொண்ட நம் பூமிக்குக் கிடைக்கின்றது.
3.வியாழனின் நிலை இல்லாவிட்டால் நம் பூமிக்கு நீரில்லை.

இதே நிலைபோல் செவ்வாயின் சக்தி நம் பூமிக்கு எந்நிலையில் பாய்கின்றது…?

நம் பூமியிலிருந்து செவ்வாய் மண்டலமும், வியாழன் மண்டலமும் காணுவதற்கு நட்சத்திர மண்டலம் போல் இன்றும் தெரிந்து கொண்டுள்ளன.

பல கோடி நட்சத்திரங்களில் ஒன்றாய்க் காண்கிறோம். செவ்வாயில் நிறைந்துள்ள சக்தி நம் பூமிக்கு “சப்த அலைகளைப் பாய்ச்சும் சக்தி…”

உம் சப்தமே வெளிவராத நிலைக்கான காற்றில்லா அடைப்பில் இருந்தால் கேட்டிடுமா…? அதைப் போல் பூமிக்கும் மையமான சூரியனுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள செவ்வாயின் நிலையினால் செவ்வாயின் சக்தியையும் நேர்படுத்தி நம் பூமி பெறுகிறது.

அதே சமயம் சூரியனின் சக்தியினால் செவ்வாயின் சக்தியும் மோதுண்டு அதன் ஒளி அலையையும் நாம் பெறுகின்றோம்.

செவ்வாயின் சுழலும் தன்மை கொண்டு அதன் அமிலத் தன்மையும் சூரியன் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத் தன்மையும் கலவை பெறும் இடத்திலிருந்துதான் சப்த ஒலி பிறக்கின்றது.

இதே நிலை கொண்டு நம் பூமிக்குத் தொடர்பு கொண்ட சந்திரனின் ஈர்ப்பு நிலை அமில நிலை வேறு. சந்திரனின் நிலையில்லா விட்டால் “நாம் காணும் இவ்வண்ணங்களே இல்லை…”

பல சக்தியை நம் பூமி ஈர்த்து, நம் பூமியின் சக்தியைச் சந்திரன் பெறுவதினால் சந்திரனுக்கும் நம் பூமிக்கும் அதிகத் தொடர்பு உள்ளதினால் நம் பூமியின் நிலையைக் காட்டிலும் சந்திர மண்டலம் உருவில் சிறிதாகவும் அதே நிலையில் பல சக்திகளைத் தன்னுள் அடக்கிய வளரும் தருவாயில் உள்ள மண்டலம்.

இம் மாற்ற நிலையினால் சந்திரனுக்குச் சப்த அலையும் இன்று ஒரே நிலையில் இரவு பகல் என்ற மாறுபட்ட குண நிலை பெறாமல் சுழன்றிடும் சந்திர மண்டலத்தில் இந்நீர்நிலை சப்த ஒளியின் நிலையும் ஏற்பட்ட பிறகுதான் பல வளர்ச்சி நிலை ஏற்பட்டு… பல நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியையும் சந்திரன் பெற்ற பிறகு… அதன் வளர்ச்சியில் ஊரும் உயிரினங்கள் உள்ள சந்திரனின் தன்மையே… “ஜீவ உடல் கொண்ட உயிராத்மாக்கள் தோன்றிடும் காலம் வரும்…”

வரப்போகும் இக் கிரகண கால நிலைக்குப் பிறகு
1.நம் சூரிய கிரகமுடன் பல நிலைகள் மாற்றம் கொண்டு நடக்கப் போகின்றது
2.சூரிய கிரகணம், சூரிய கிரகணம் என்று பல முறை கிரகணம் பிடிக்கின்றது சூரியனை.
3.ஒவ்வொரு நிலையிலும் இதனால் சூரியனுக்கும் சூரியனை நேர் கொண்டு
4.எம்மண்டலத்தை எக்கிரகணம் தாண்டிச் செல்கின்றதோ அம்மண்டலத்திற்கும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

வட்டமிட்டுக் கொண்டே உள்ள இம்மண்டலங்களும் நட்சத்திர மண்டலங்களும் இப்பால்வெளி மண்டலத்தில் வளர்ச்சி கொண்டுள்ள சில நிலைகளும் ஒன்றைத் தாண்டி ஒன்று ஓடும் நிலைக்கும் “ஜீவன் வேண்டும்…”

அதே போல்
1.உஷ்ண அலைகளைக் கொண்ட நிலையில்தான் அது அதற்கு உயிர்த் துடிப்பே வருகின்றது
2.அதி உஷ்ணத்தை எதுவும் ஏற்பதில்லை… அதி குளிர்ச்சி… பனிக்கட்டி போன்ற நிலையிலும் தாவர வளர்ச்சி வளர்வதில்லை.

இன்று நம் பூமியின் நிலை எந்நிலையில் அது சூழலும் தன்மை கொண்டு, காற்று மண்டல வட்டத்திற்கு மேல் உஷ்ண அலைகளை நம் பூமி வெளிப்படுத்துகிறதோ… அந்நிலையில் தான் ஒவ்வொரு கோளங்களுக்கும், அதன் சுழற்சியில் காற்று மண்டலமும், அம்மண்டலம் கக்கும் உஷ்ண அலையும் செயல் கொள்கின்றது.

1.இம்மனித உடலுக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் அதனைச் சுற்றி சப்த அலை உண்டு
2.சப்த அலைக்குச் சிறிது தள்ளி உஷ்ண அலையும் உண்டு
3.எல்லா ஜீவன்களுக்குமே மனிதனின் உடல் வெப்பநிலையும் அம்மனிதனைச் சப்த அலையின் வெப்பக் காற்றும் ஒன்றாய்த் தான் இருந்திடும்.

தாவரங்களுக்கும் இந்நிலை உண்டு. இதைப்போல் இவ்வுலகம் மற்ற எல்லா மண்டலங்களுக்குமே இந்நிலை கொண்ட உஷ்ண அலைகள் உண்டு.

சந்திரனின் நிலை குளிர்ந்த நிலை என்று உணர்த்தினேன். ஒவ்வொன்றிற்கும் அதனதன் சுழலும் வேகம் கொண்டு இவ்வுஷ்ண அலைகள் மாறுபடுகின்றன.
1.இவ்வுஷ்ண அலை கக்கும் நிலையே எம் மண்டலத்திற்கும் ஓர் இடத்தில் இருக்கும் நிலை மற்றோரு இடத்தில் இருந்திடாது
2.எல்லா ஜீவராசிகள் தாவரங்களின் நிலைக்கும் இந்நிலை உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்திய மாமகரிஷி தனக்குள் ஒளியான உணர்வின் ஆற்றல் பெற்று விண்ணிலே சென்றபின் அங்கிருந்து வெளிப்படும் அலைகள் வானிலே மிதந்து கொண்டிருக்கின்றது.

பிரபஞ்சத்துக்குள் மிதந்து கொண்டிருக்கக் கூடிய, அந்த உணர்வின் சக்தியை நாம் நினைவு கொள்ளும் பொழுது…
1.அன்று அகஸ்திய மாமகரிஷி மனிதனாக வாழ்ந்த காலத்தில்
2.அவர் உடலில் விளைவித்த மூச்சின் உணர்வு அலைகள்
3.எண்ண ஒலிகளாக ஒலிபரப்பப்பட்டிருப்பதை நாம் அனைவரும் பெற முடியும்.

இப்பொழுது நாம் எந்தக் குணத்தை எண்ணிப் பேசுகின்றோமோ இதைப் போன்று அகஸ்திய மாமகரிஷி
1.தன் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளை வெளிப்படுத்திய நிலையும்,
2.வளர்ந்த நிலையும்… தான் வளர்ந்து கொண்ட நிலையும்… வளர வேண்டிய நிலையும்,
3.தன் உணர்வாற்றலால் வெளிப்படுத்திய அந்த நிலைகள்
4.இங்கே நமக்கு முன் பரவிக் கொண்டிருக்கின்றது.

அந்த வளர்ந்த நிலை… வளர வேண்டிய நிலை… இவை அனைத்துமே எவ்வாறு…? என்ற நிலைகளைத் தான் விநாயகத் தத்துவத்தில் கேள்விக் குறியாகப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.

விநாயகனைப் பார்க்கும் பொழுது… மேற்கே பார்த்து அந்த விநாயகனை வைத்திருப்பார்கள். நீர் நிலை இருக்கும் பக்கம்தான்,

ஏனென்றால்… அது ஜீவ நீர், ஆக அந்த ஜீவ நீர் நிலைகள் பக்கம் அதை நிலை நிறுத்தி நாம் நீரிலே மூழ்கி வந்தபின் இந்த விநாயகரைப் பார்த்ததும் நம் கண்ணுக்குள் இந்தக் கதையாக உணர்த்திய நினைவலைகள் வருகின்றது.

நாம் இந்த உடலை… மிருகத்திலிருந்து வளர்ச்சியாகி மனிதனாகப் பெற்றோம் என்ற உண்மையை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷியின் எண்ணத்தை நாம் எண்ணி வானை நோக்கி எண்ணி ஏங்கும்படி செய்கிறார்கள்.

அப்படி எண்ணும் பொழுது… கிழக்கிலிருந்து வரும் அந்தச் சூரியனின் கதிர் அலைகள் நமக்குள் காந்த அலைகளாகப் பட்டபின் அந்த உணர்வின் அலைகள் நமக்குள் ஈர்க்கப்பட்டு எந்த மகரிஷி உணர்த்தினாரோ, அவரின் உணர்வின் ஆற்றலைப் பெறும் நிலைகள் பெறப்படுகின்றது.

அப்பொழுது
1.அகஸ்திய மாமகரிஷி உணர்த்திய உணர்வின் ஆற்றல்
2.அவர் வெளிப்படுத்திய உணர்வின் தன்மைகள் இந்த பூமியிலே மிதந்து கொண்டிருப்பதினால்
3.அந்த உணர்வின் ஆற்றல் ஈர்க்கப்படுகின்றது.

அப்பொழுது அந்தச் சந்தர்ப்பம் நமக்குள் உயர்ந்த ஒளியின் தன்மையைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகின்றது.

ஆக… எந்த மனிதன் (அகஸ்திய மாமகரிஷி) தன் ஒளியின் தன்மையிலே விண் சென்றானோ அவன் வழியைத் தான் உணர்த்தியிருக்கின்றான்.
1.அவன் வழியை நாம் பின்பற்றிச் செல்லும் பொழுது
2.அவன் சென்ற இடமே நாம் போய்ச் சேர முடியும்.

ஆகவே… நாம் அனைவரும் அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் நடந்து… அருள் வாழ்க்கை வாழ்ந்து… இந்தப் பிறவியிலேயே பிறவியில்லா நிலை என்னும் நிலையாக அழியா ஒளிசரீரம் பெற்று… மகிழ்ந்து வாழ்ந்து… என்றும் பதினாறு என்ற நிலையை அடைவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

27 நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய சக்திதான் விண்வெளியில் இருந்து வரும் நஞ்சினை வென்று நம் பூமிக்குள்ளும் அந்தச் சக்திகள் பரவிக் கொண்டு வருகின்றது.

27 நட்சத்திரங்களின் உணர்வுகளைப் போன்றது தான் மனிதனுடைய எண்ணங்களும். மனிதனின் எண்ணங்கள் அனைத்துமே நட்சத்திரம்தான்.

நட்சத்திரங்களுடைய ஆற்றல்கள் மற்ற பாறைக்குள் புகுந்து தாவர இன சத்தாக அது விளைகின்றது. அந்தக் கதிரியக்கம் தான் மற்ற மணத்தைத் தூண்டி இயக்கச் செய்கின்றது.

அந்த 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு குணங்கள் கொண்டது. ஒவ்வொன்றுடன் அவை இணையும் பொழுது பல கோடிப் பிரிவுகளாக அது பிரிகின்றது.

1.அந்த 27 நட்சத்திரங்கள் எத்தகைய ஆற்றல் பெற்றதோ அதைப் போல அந்த உணர்வின் சக்தி நமக்குள் பெற வேண்டும் என்று
2.அந்த மெய் ஞானிகளின் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

நம் உடல் அனைத்தும் கோள்தான். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டுகிறோம்… உயிர் சூரியன்.

உயிர் வழி அந்த ஞானியின் உணர்வை எண்ணும் பொழுது அந்த எண்ணம் வலுப் பெறுகின்றது. மகரிஷிகளின் அருள் சக்தி நம் ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உணர்வின் துணை கொண்டு தான் நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

ஆகையினால்தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எண்ணி அந்த 27 நட்சத்திரங்களைப் பற்றி எண்ணச் சொல்கிறோம்.

1.அந்த 27 நட்சத்திரங்களைப் பற்றி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டி
2.அதை எப்படி நீ தொட வேண்டும் என்ற பக்குவத்தைக் கொடுத்துள்ளார்.
3.அந்த 27 நட்சத்திரங்களின் சக்திகளை எதனுடன் இணைக்க வேண்டும்…?
4.அதை எடுத்தால் உன்னை எப்படி அது சுடாது இருக்கும்…?
5.அந்தக் கதிரியக்கங்கள் உன்னைப் பாதிக்காது எப்படி இருக்கும்…? என்ற நிலையைக் காட்டினார்.

ஆகவே குருவின் துணை கொண்டு அதனை நான் (ஞானகுரு) கவர்கின்றேன். அப்படிக் கவர்ந்த நிலைகள் கொண்டு
1.27 நட்சத்திரங்ளின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று உங்களை எண்ணச் சொல்லி விட்டு
2.இந்த இணைப்புடன் ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றேன்.

சிறுகச் சிறுகப் அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கிடைக்கப் பெறச் செய்கிறோம். அந்த 27 நட்சத்திரங்கள் சக்தி கொண்டு சமப்படுத்தும் நிலையை நீங்கள் முழுமையாகப் பெற முடியும்.

1.அந்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகளை எடுத்துத்தான் மகரிஷிகள் அனைத்தும் தனக்குள் ஒன்றாக்கி
2.உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியுள்ளார்கள்.

அதாவது
1.எதுவுமே இயக்கம் அல்லாது அதனின் உணர்வின் இயக்கமாக மாற்றி
2.நெகடிவ் பாசிடிவ் என்று கரண்ட் எப்படி உண்டாகின்றதோ இதைப்போல சமநிலைப்படுத்தி…
3.ஒரு நிலை கொண்டு ஒன்றைத் தனக்குள் இரையாக்கி… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.

அந்த மகரிஷிகள் பெற்றது போன்று நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இருபத்தியேழு நட்சத்திரத்தையும் நவக்கோளின் சக்தியையும் பெறச் சொல்வது.

மகரிஷிகள் இதையெல்லாம் வடித்துக் கொண்டவர்கள். அதனால்
1.அந்த உணர்வின் சத்தை இதனுடன் கலந்து புது எண்ணங்களாக உருவாக்கி
2.அதனை நீங்கள் பருகும் நிலைக்குத் தான் இதைச் செய்வது.

எதை எண்ணினாலும்…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நீங்கள் இருப்பீர்கள் என்றால்
2.அது ஊழ்வினையாகப் பதிவாகி அதனின் செயலாக உங்கள் உணர்வுகள் இயங்கி
3.மெய்ஞானியின் உணர்வை ஒளியாக நீங்கள் பெறக்கூடிய தகுதி பெறுவீர்கள்.

ஆகவே அடிக்கடி உங்கள் உயிரை ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று எண்ணி மேலே சொன்ன மாதிரி நினைவுக்குக் கொண்டு வந்து அந்த ஆற்றல்களைச் செயல்படுத்த வேண்டும். எமது அருளாசிகள்.

உயிரினங்கள் வாழ… சந்திர மண்டலத்தில் நீர் உள்ளது

 

விஞ்ஞானத்தில் தான்… அவர்களின் கண்டுபிடிப்பில் இருந்து சந்திர மண்டலத்தில் உயிரணு இல்லை… நீர் நிலையும் இல்லை. நீர் இருந்தால் அல்லவா உயிரினம் வாழ…? என்ற வினா எழுப்பப்பட்டது.

அதன் விடை.

1.காற்றுடன் நீர் இல்லாவிட்டால் அம்மண்டலத்தின் சுழற்சியில் ஒளி ஏது…?
2.உயிரணு இல்லாவிட்டால் மண்டலத்திற்கு வளர்ச்சி ஏது…?
3.அம்மண்டலமே உருப்பெற உயிரணுக்களை உண்டல்லவா அதன் கழிவை உஷ்ண அலையாய் வெளிப்படுத்தி
4.அதன் வழியில் தொடர் கொண்டு, வளர்ச்சி கொண்டு வளர்கின்றது.

பால்வெளி மண்டலத்தில் காற்றுமுண்டு நீருமுண்டு உயிரணுக்களும் உண்டு.
1.வானமாய்ப் பரந்துள்ள பால்வெளி மண்டலத்திற்கே ஜீவன் உண்டு என்ற நிலையில்
2.சந்திரனுக்கு ஏனப்பா நீரும் உயிரணுவும் இல்லை என்று விஞ்ஞானத்தில் செப்புகின்றனர்…?
3.காற்றுடன் கலந்துள்ள ஜீவனான நீர் இல்லாவிட்டால் அம் மண்டலத்திற்கு சுழற்சி ஏது…?
4.அதிலிருந்து பௌர்ணமி நிலவாய்க் காண்கின்றோமே அவ் ஒளியும் ஏது…?

நம் பூமியைப் போல் அடர்ந்த கடல் நிலைகள் நிறைந்த நீர் நிலை இல்லை. நீர் நிலையில் இருந்து வெளிப்படும் அமில சக்தியினால் இப்பூமி முழுவதுமே செயல் கொண்டு ஆங்காங்கு பெய்திடும் பருவ மழையினால் உண்டான நீர் நிலைகள், ஆறு, ஏரி, குளம், குட்டைகள் இப்படி உள்ள நீர் நிலைகளும் அங்கில்லை.

விஞ்ஞானத்தில், சந்திரனில் கண்டுபிடித்த நிலை போல் நம் சூரியனிலும் எந்நிலையில் நீர்நிலை உள்ளது…? என்று உணர்த்தினரா…?

இவ் வரப்போகும் மாற்றத்திலிருந்து, அடர்ந்த நீர்நிலைச் சக்தி சந்திரனுக்குக் கூடப் போகின்றது. நம் பூமியைப்போல் பருவ மழைகளைக் காணாத மண்டலம் அது. சந்திரனில் இன்றளவும் மழை பெய்ததில்லை.

சந்திரனில் நீர் இல்லாவிட்டால் சந்திரனிலிருந்து தோண்டி எடுத்து வந்தார்களே அக்கல் எப்படி வளர்ந்தது…?

பனியான நிலை என்றுமே சந்திரனுக்குண்டு… குளிர்த்த மண்டலம் அது. அதன் சுற்றலில் பனித்துளி போன்ற நீர் நிலைகள் படிந்து அதன் கசிவில் உறைந்து பிறகு அப்பனி நிலை தொடர்பு கொண்டு நசநசப்புத் தன்மையில் சுழன்று கொண்டுள்ள குளிர்ந்த மண்டலம்தான் சந்திரனின் இன்றைய நிலை.

நம் பூமியில் கிணறுகள் தோண்டி நீரை எடுப்பதைப் போல் சந்திரனுக்கு சக்தி நிலையில்லை. நீர்நிலை அடர்ந்து உள்ள மண்டலத்தில்தான் அம் மண்டலத்துடன் கூடிய எந்த இடத்திலும் நீரைக் கண்டிட முடியும்.
1.நம் பூமியிலிருந்து விண்கலத்தை ஏவி இம்மனித சுவாசத்தை அங்கு விட்டு வந்துள்ளானே…
2.அச்சுவாச நிலையின் வெக்கையில் தோன்றிடும் உயிரணுவிற்கு இப்பூமியில் இருந்து சென்ற சக்தி நிலைதானே வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை “நாம் ஏங்கிப் பெற வேண்டும்”

 

உங்களுக்குள் அரும்பெரும் சக்தியான துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறும்படி செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

1.அகஸ்தியன் எப்படித் தாய் கருவிலிருந்தே தீமைகளை நீக்கினானோ அதை நுகர்ந்தறியப்படும் பொழுது
2.நீங்கள் நுகரும் உணர்வுகள் உங்கள் இரத்தத்திலே கருத்தன்மையாக உருவாகி உடல் முழுவதற்கும் பரவச் செய்து
3.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இருளை நீக்கும் அருள் ஒளியைப் பெருக்குவது தான் இது.

அடிக்கடி நாம் சேர்த்து இதைப் பெருக்கிக் கொண்டு வந்தோம் என்றால் எல்லா உறுப்புகளிலும் தீமையை நீக்கும் உணர்வுகள் “அந்த ஒளி என்ற உணர்வின் அறிவுகள்” பெருகுகின்றது.

இந்தத் தியானத்தை கற்றுக் கொண்டவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் கஷ்டப்படுவரையோ சங்கடப்படுபவரையோ வேதனைப்படுவரையோ அவர்கள் உணர்வு நம்மை இயக்காதபடி தடைப்படுத்த வேண்டும். உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

காரம் புளிப்பு உப்பு அதையெல்லாம் சேர்த்துச் சமைத்துச் சுவையாக எப்படி மாற்றிக் கொள்கின்றோமோ அதைப் போன்று சமப்படுத்திக் கொள்ள முடியும்.

நமக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும்… ஒருவர் கோபப்படுகிறார் என்று பார்த்தோம் என்றால் நமக்கும் அதே உணர்வு தோன்றுகின்றது அவன் மேல் வெறுப்பு வருகின்றது… ஆத்திரம் வருகின்றது.

அந்தக் கோபத்தால் வேதனைப்படுபவரைப் பார்க்கும் பொழுது அந்த வேதனையும் கலந்து வருகின்றது. அந்தக் கோபமும் வேதனையும் நம் இரத்தத்திலே கலக்கப்படும் பொழுது அத்தகைய உணர்வின் அணுக்கள் உருவாகி விடுகின்றது.

இது உடல் முழுவதும் பரவப்படும் பொழுது நம் உறுப்புகளையும் வீணாக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப் பழகிக் கொண்டால்
2.உங்கள் இரத்தங்களிலே விளைந்து வரும் அந்தத் தீமையான நிலைகளை அடக்க முடியும்.

ஏனென்றால் வேதனைப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ நுகர்ந்தால் அவைகள் எல்லாம் இரத்தத்தில் முதலில் கருவாகி முட்டையாகின்றது.

தொடர்ந்து அவர்களை நினைவுக்குக் கொண்டு வந்தால் பருவம் அடைந்து வெடித்துக் குஞ்சாக மாறுகின்றது அதற்குண்டான கருத்தன்மை இல்லை என்றாலும் கூட அந்த விஷத்தின் தன்மை ரத்தத்துடன் கலந்து மற்ற உறுப்புகளுக்குச் சென்று அதை வீணாக்குகின்றது.

1.அணுவாக ஆனாலும் சரி அணுவாக ஆகாதபடி அந்த முட்டை அழுகிச் சென்றாலும்
2.அழுகிய உணர்வு ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எந்த உறுப்புகளில் அது சேர்கின்றதோ அதைப் பாழாக்குகின்றது.
3.இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் பல விதமான தொல்லைகளைக் கொடுக்கும் அணுக்களாக விளைந்து விடுகின்றது.

அதிலிருந்து விடுபடுவதற்கு உங்களுக்கு துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசித்து அதை உடல் முழுவதும் பரவச் செய்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்து உணர்வினை நினைவூட்டி அதை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு இப்போது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

உங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும்
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகளை நேரடியாகச் செலுத்தும் பொழுது உடலுக்குள் அந்த சக்திகள் செல்கின்றது
2.கண் வழி அந்த நரம்பு மண்டலங்கள் வழி சென்று உடல் உறுப்புகளை இயக்குகின்றது
3.அதன் வழி துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை நமக்குள் பெருக்கிக் கொள்வதற்குப் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.

தீமைகள் எப்படி உடலுக்குள் ஊடுருவி இயக்குகின்றதோ இதைப் போன்று “கண்ணின் நினைவு கொண்டு அருள் உணர்வுகளை நமக்குள் எல்லா அணுக்களுக்குள்ளும் ஊடுருவச் செய்து” அதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.

1.எந்த அளவிற்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ
2.நிச்சயம் உங்கள் உடலிலே தீமையை நீக்கும் உணர்வின் அணுக்களாக விளைந்து
3.இந்த வாழ்க்கையில் தீமையை நீக்கும் ஞானத்தின் வழி கொண்டு அருள் உணர்வைப் பெருக்கி
4.இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை நிச்சயம் அடைய முடியும்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கொடும் செயல்கள் நடப்பதையும்… கொடும் தவறு செய்பவர் உணர்வுகளையும்… கேட்டுக் கொண்டே இருந்தால் அதை நுகர்ந்து அறிந்தபின்
1.ஒரு பத்து நாளைக்குத் தொடர்ந்து கேட்டால் நம் உடலுக்குள் அந்தக் கொடூர உணர்வுகள் விளைந்து விடுகிறது.
2.நம்மையும் அந்தத் தவறு செய்யும் நிலைகளுக்கே இயக்கி நம்மையும் தவறுள்ளவர்களாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து மனிதர்கள் நாம் விடுபட வேண்டும் என்று செயல்பட்டவர் தான் நம் காலத்தில் வாழ்ந்த மகான் காந்திஜி.

அவர் பெற்ற ஞானத்தை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம். அவருடைய வழிகளை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.

1.தீமை இல்லாத உடலாக நாம் உருவாக்க வேண்டும்
2.தீமை செய்யும் எண்ணங்கள் நமக்குள் உருவாக்காதபடி தடுக்க வேண்டும்
3.தீமையற்ற உலகம் உருவாக வேண்டும்
4.தீமையற்ற நாடாக உருவாக வேண்டும் என்று
5.தீமையற்ற மக்கள் உருவாக வேண்டும் என்று அவரை நாம் நினைவு கொண்டு
6.காந்திஜி வழியில் அரும்பெரும் சக்திகளைப் பெறும் நிலையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்

அவருக்குள் பிறக்கச் செய்த ஞானத்தின் நிலைகளை அந்த அருள் உணர்வுகளை நமக்குள்ளும் உருவாக்குவோம்… அதைப் பிறக்கச் செய்வோம்… அருள் ஞானச் செல்வத்தை வளர்ப்போம்.

ஏனென்றால் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத நிலையை நாம் பெற வேண்டும். எதை வைத்து..?

சாந்தமான குணத்தை வைத்து…!

கோபத்தால் உடனடியாக ஒன்றைச் செய்து விடலாம்.
1.ஆனால் அதே உணர்வின் வேகம் நம்மை இயக்காது நிறுத்த வேண்டும் என்றால்
2.மன பலம் தேவை… சாந்தம் அவசியம் தேவை.

அத்தகைய சாந்தத்திற்குண்டான வலிமை வேறு எதற்கும் இல்லை. சாந்தத்தின் வலிமை கொண்டு தான் எதையும் சாதிக்க முடியும். சாந்தத்தால் சாதித்தவர் காந்திஜி. அவருடைய வலிமை எவருக்கும் இல்லை.

எல்லோரும் சொல்வார்கள்…
1.வீர தீரத்துடன் ஒருவரை அழித்து விடலாம்… நான் அழித்து விட்டேன்… அழித்துவிடுவேன்… என்று
2.ஆனால் அது வலிமை அல்ல… கோழைத்தனம் தான்
3.ஒருவரை ஏசிவிடலாம்… இதுவும் கோழைத்தனம் தான்
4.ஒருவருக்குத் தீங்கு செய்யலாம்… இதுவும் கோழைத்தனம் தான்.

மன வலிமை வேண்டும் என்றால் அந்தச் சாந்தம் நமக்கு வேண்டும். வரும் தீமைகளை அறிந்து அந்தத் தீமைகளை அகற்றும் வலிமை பெறுவதே சாந்தம் என்பது.

எத்தகைய தீமையும் தன்னைச் சாராது காந்திஜி அந்தச் சாந்தத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார். காந்திஜி தான் சாந்தத்தால் வலிமை பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை நாம் அனைவரும் பெற்றோம் என்றால் நம் குடும்பத்திலும் சரி… தொழிலிலும் சரி… வரும் சிறு குறைகளையும் மாற்றி அமைக்க முடியும்.

அந்த வலிமை கொண்ட சாந்தத்தை வைத்து நம்மை இயக்கும் தீமையான உணர்வின் வலிமையை அடக்க முடியும். குடும்பப் பற்றும் வரும்.

காந்திஜி நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் இதைச் செயல்படுத்தியவர். அவர் மக்களுக்காக அரசியல் நிலைகளை எடுத்தாலும் அரசு என்ற நிலைகளுக்குச் செல்லவில்லை.

அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்தார். அந்த அருள் உணர்வுகளைத் தான் அனைவரும் பெற வேண்டும் என்று அரசியலில் புகுத்தினார்… அதை அவர் செயல்படுத்தினார்.

ஆகவே இத்தகைய சாந்தமே மிகவும் வலிமை கொண்டது.
1.சாந்தத்தின் உணர்வு கொண்டே நமக்குள் வரும் தீமையை அடக்கி
2.ஞானத்தின் வழியில் செல்லும் பொழுது நல் ஒழுக்கங்கள் நமக்குள் ஓங்கி வளரும்.
3.தீமைகளை அடக்கி ஆட்சி புரியும் சாந்த நிலைக்கு ஒவ்வொருவரும் வந்தால் இனி வரும் சமுதாயமும் சீர்படும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகளை யாம் (ஞானகுரு) மீண்டும் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
1.அதுவே அந்த உணர்வின் இயக்கமாக இங்கே என்னைப் பேச வைப்பதும்… பேசுவதும்…!
2.உணர்வலைகளை ஒலி பரப்புவதும்… அதை நீங்கள் கேட்டு உணர்வதும்
3.அந்த குரு அருள் உங்களுக்குள் பதிந்து கொண்டிருப்பதும்…!

நஞ்சு பரவிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் யார் எதுவாக இருப்பினும் இந்த உடல் எவ்வாறு ஆனாலும் உடல் நமக்குச் சொந்தமல்ல… இந்தப் பூமியும் சொந்தமல்ல.

1.குரு காட்டிய வழியில் நாம் நடக்கும் போது விண்ணுலக ஆற்றல் நமக்குச் சொந்தம் ஆகின்றது…
2.இந்தப் பூமியும் சொந்தமாகிறது… இந்த உடலும் நமக்கு இன்று சொந்தமாக இருக்கின்றது.

ஆகவே… மனிதனான பின் சொந்தமாக்க வேண்டியது எது என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

என்றுமே “அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குச் சொந்தமாக்கி” அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகி
1.அவர் விண்ணுலகம் சென்றது போன்று நாமும் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்று
2.ஒளியின் உணர்வாக மாற்றுவதே நமக்குச் சொந்தம்.

பேரின்பப் பெரு வாழ்வாக என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுவதே நமது கடைசி நிலை. அதன் வழிகளில் “குரு காட்டிய பேரன்பை” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இது அனைத்தும் நான் பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் உரு செய்து பதிவாக்கினார். அவர் தனக்குள் எதைப் பெற்றாரோ அதைப் பெறும் பாக்கியத்தை எனக்கும் ஏற்படுத்தினார்.

அவர் காட்டிய உணர்வு வழி செல்லப்படும் பொழுது அந்த அருள் உணர்வினை உணர முடிகின்றது.
1.அதே உணர்வின் ஒலிகள் தான் இங்கே எழுப்பப்படுகின்றது
2.உணர்வின் அலைகள் உங்களுக்குள் படுகின்றது
3.அந்த அலையின் தன்மையை நீங்கள் ஈர்க்கின்றீர்கள்
4.குரு அருளின் உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாகின்றது
5.அந்தப் பதிவின் நிலைகள் உங்களுக்குள் குருவாகின்றது
6.குருவின் தன்மை நினைவாக்கப்படும் பொழுது அந்த அலையின் தொடர் கொண்டு
7.பேரின்பப் பெரு வாழ்வு வாழும் நிலையை நீங்களும் அடைகிறீர்கள்.

நீங்கள் அதை அடைய வேண்டும் என்று தான் எனது பிரார்த்தனையே. அந்த எண்ணத்துடன் தான் குருவை வேண்டுகின்றேன். அவரை வேண்டி அந்த உணர்வுகளை எடுக்கப்படும் போது நீங்களும் அதைப் பெற்றால் உங்களுக்குள் மகிழ்ச்சி தோன்றும்.

நீங்கள் மகிழ்ச்சியானால் எனக்கும் அந்தப் பேரின்ப வாழ்வு கிடைக்கும்.

ஆகவே குருநாதர் பெற்ற நிலைகளைத் தியானித்து அந்த அருள் உணர்வுகளை எனக்குள் சேமித்து நீங்கள் எல்லாம் அதைப் பெற வேண்டும் என்பதற்காக நான் (ஞானகுரு) சதா தவமிருக்கின்றேன்.

அந்த தவத்தின் பலனை நீங்கள் பெற்று
1.மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது
2.அது எனக்கும் சொந்தம் ஆகின்றது உங்களுக்கும் சொந்தமாகிறது.
3.நாம் அனைவரும் அந்த மகரிஷிகள் வாழும் அருள் வட்டத்திற்குள் செல்வோம்.

அவர்களின் அருள் வட்டத்திற்குள் நாம் செல்ல வேண்டுமென்றால் நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண்ணில் செலுத்த வேண்டும்… செலுத்துவோம்…!

வரப் போகும் மாற்றத்திலிருந்து மீளுவதற்கும் வழி உண்டு

 

சக்தியின் சக்தி பெற்று இப்பூமியில் மனித ஆத்மா அறிவு நிலை பெற்று… ஆக்கத்தின் செழிப்பினால் அகிலத்தையும் ஆளும் செழிப்பை இப்பூமியில் பிறப்பெடுத்து வாழ்ந்து வழி பெற்ற சக்தி மட்டுமல்ல… இன்றுள்ள எண்ண வளர்ச்சியின் மனித ஆத்மாவாய் வாழும் பக்குவம் பெற்று… உயிரணுவிற்குத் தொடர்நிலை கொண்ட அமில சக்தி கூடப் “பல கோடி ஆண்டுகள் ஆயிற்று…”

பெரும் பாக்கிய சக்தி மனிதனாய் வாழும் சக்தியே…!

இயற்கையின் செழிப்பில் அன்பு கொண்ட இதயமாய் வாழ்ந்திட்ட நிலையையே அறிவில் மிஞ்சிய நிலை என்ற கணிப்பில் ஒவ்வோர் இடத்தில் வாழ்பவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் ஒருவரைத் தலைவனாக்கி… அரசாளும் நிலைப்படுத்தி, அவ்வட்டத்தின் வழியிலேயே சேர்ந்த இனத்தவரை எல்லாம் தனி ஓர் இனமாய்ப் பிரித்து ஜாதி வெறியூட்டி… ஒருவரின் உயர்வில் ஒருவர் பொறாமை கொண்டு இதன் தொடர்ச்சி நிலையிலேயே இன்றளவும் மனிதனின் எண்ண வளர்ச்சியுடனே இக்கலப்பான சக்தி நிலையை ஊட்டி,
1.இன்றைய மனிதன் ஒவ்வொருவனும் தனக்குள் உள்ள ஆண்டவனை மறந்து
2.தானும் இந்நாட்டின் மன்னன் என்றும் ஒவ்வொருவரின் மனப்பாங்கே இம்மதிப்பின் பேராசை வெறியில் வழி வந்துவிட்டது.

இன்று நம்முடன் வாழ்ந்திடும் மனிதர்களால் ஏற்படவில்லை இன்றைய இந்நிலை.

அன்றாண்ட 2000 ஆண்டுகளுக்கு முதலே ஆட்சி என்னும் வித்திட்டு “அழிவிற்கு மனித எண்ணங்களுக்குப் பாதை வகுத்துத் தந்தவர்கள் அன்றாண்ட அரசர்கள் தான்…”

இன்றைய செயற்கையில் இம்மனித எண்ணங்களின் நிலையே இன்று பிறப்பில் வந்திட்ட நிலை அல்ல. நற் சக்தியின் பயனும் சொல்லில் செயலும் மாறிவிட்டது.

இச் செயற்கையில் நம் பூமியின் பொக்கிஷத்தை உறிஞ்சி எடுத்ததல்லாமல் இப்பூமியிலிருந்து ஏவிவிட்ட விஷத்தன்மை கொண்ட ஊசிகளும் (இராக்கெட் – செயற்கைக் கோள்கள்) இன்றல்ல நேற்றல்ல இவ் ஏவுகணை அனுப்பும் நிலையே இப்பூமியில் பல நூறு ஆண்டுகளாகச் செயல்படுத்தி நம் பூமியின் வட்டத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற கிரகங்களுக்கும் அனுப்புவித்த ஏவுகணைகள் எல்லாம் இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தினால் ஒவ்வொரு மண்டலத்திற்கும் இதன் தொடர்பினால் மாற்றம் ஏற்படப் போகின்றது என்பதனை உணர்த்தினேன்.

1.பால்வெளி மண்டலத்தில் ஏவச் செய்த விஷ ஊசிகளும் ஏவுகணைகளின் நிலையில் நிறைந்துள்ள அணுவிசை சக்திகளும்
2.இம்மாற்றத்தினால் அங்கங்கு செயலிழந்து அதனின் சுற்றலுக்குகந்த அருகாமை கொண்ட மண்டலங்களில் மோதி
3.அவற்றின் நிலையிலிருந்தும் பல தீய சக்திகள் ஏற்படப் போகின்றன.

இம்மனித ஆத்மாக்களின் சக்தியினால் இயற்கையின் சக்தியே மாற்றம் கொள்ளும் சீற்றம் கொள்ளும் நிலையெல்லாம் இம்மனித ஆத்மாவினால்தான் நடக்கப் போகின்றன.

1.இம்மனித ஆத்மாவினால் மண்டலமாய் உருக்கொண்டு சுழன்றிடவும் முடியும்
2.சுழற்சியின் சக்தியில் பல கோடி மண்டலங்களை வளர்த்திடவும் முடியும்.

ஆக்கத்தின் அறிவு சத்தியாய் ஒளிரும் ஆத்மாவையே அழிவின் சக்திக்கு அடிகோலும் பேராசைப் பேயின் நிலையில் சிக்குண்டு… தன் சக்தியைத் தானே இழந்து… கலியின் மாற்றத்தில் படப்போகும் இன்னலை உணர்ந்து “இங்கே உணர்த்திடும் இச்சக்தி நிலையை உணர்ந்து… உங்கள் ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கிடுங்கள்…”

நம் ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கினால் எந்நிலை பெறுவோம்…? சந்திரனின் நிலையை அன்று கேள்விக்குறியாக்கி நிறுத்தியுள்ளோம்.

இக்கலியின் மாற்றத்தினால் சந்திரனுக்கு நம் பூமியின் தொடர்பும் ஈர்ப்பு சக்தியும் பழக்கப்பட்டு வந்திட்ட நிலையினால் “இவ்வரப்போகும் சூரிய கிரகண நாளிலிருந்து சந்திரனுக்குச் சில சக்திகள் கூடப்போகின்றன…”

எந்நிலை…? என்ற வினா எழும்பலாம்.

சூரியனைத் தாண்டிக் கேது செல்லும் நிலையில் நம் பூமிக்குக் கேதுவின் விஷ அணுக்கள் கூடும் தருவாயிலும் நம் பூமி இன்று சுழன்று ஓடும் வட்டத்திலிருந்து கீழ் இறங்கிச் செல்லும் நிலையில்
1.நம் பூமியின் ஈர்ப்பு சக்தி நம் பூமியின் பொக்கிஷ அமில சக்தியின் இயற்கைத் தன்மை
2.சந்திரனின் வட்டத்திற்கு அதிகமாகச் செல்லும் நிலையில்,
3.இவ்வரப்போகும் சிறிய மாற்றத்தின் நாளிலிருந்தே
4.சந்திரனில் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் நீர்நிலைகள் அதிகரிக்கும் தன்மை கூடுகின்றது.

நம் பூமியின் பொக்கிஷ சக்தியே இந் நீர்நிலைகள் தான். சந்திரனும் நம் பூமியின் ஈர்ப்பால், இச்சக்தி நிலை கூடி, அதன் ஈர்ப்பில் அதன் சுவாசத்திற்கும், இதன் ஈர்ப்பின் சக்தியினால் அது ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்து, “ஒவ்வொரு நொடிக்கும் சந்திரனுக்கு வளர்ச்சி சக்தி கூடப்போகின்றது…”

இந்நிலையின் தொடர் வளர்ச்சி நிலை சந்திரனுக்கு உண்டு. மனித ஆத்மாவினால் மாறப் போகும் தன்மை நிலையிலிருந்து மீளுவதற்கும் இயற்கையில் சக்தி உண்டு.

நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்

 

மனிதனால் விடப்பட்ட தீய அணுக்களின் தன்மை தாவர இனங்களில் பட்டிருந்தால் அதிலே விஷ கிருமிகள் உருவாகித் தாவர இனங்களைத் தின்றுவிடும்.

ஆனால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் மேகங்களில் கலக்கச் செய்து அது மழையாகப் பொழிந்து
2.அந்த நீர் பூமியிலே பொழிந்து செடிகளில் பட்டால் செடியில் வரும் மணத்தை நுகர்ந்து அணுவாகி
3.அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்து அதனுடைய மலம் செடிகளில் படும்பொழுது உரமாகும்.

ஆகவே அடிக்கடி நாம் மகரிஷியின் அருள் சக்திகளை மேகங்களுடன் கலக்கச் செய்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நாம் தியானித்து வருதல் வேண்டும்.

தியான வழிகளில் எடுத்து நாம் இதைச் செய்தோம் என்றால் மற்ற விஷக் கிருமிகள் தாவர இனங்களுடன் படரப் படும்பொழுது அதைச் செயலற்றதாக்க முடியும்.

ஏனென்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவிரவாதம் சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகள் தொடர்ந்து இந்தக் காற்றிலே படரப்படும் போது தான் அத்தகைய கிருமிகள் உருவாகின்றது.
1.நீங்கள் வேதனையுடன் ஒரு செடிக்கு நீரை ஊற்றிப் பாருங்கள்… இந்தச் செடி கருகிவிடும்
2.நீங்கள் வேதனையுடன் தொழில் செய்தால் அது வீணாகிவிடும்.

ஆனால் வேதனை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும் மேகங்களில் கலக்கச் செய்து மழை நீராகப் பொழியச் செய்தோம் என்றால் இந்தக் காற்றில் உள்ள நச்சுத் தன்மைகள் குறையும்.

தாவர இனங்களில் படும் பொழுது நல்ல அணுக்களாக உருவாகும் தாவர இனங்கள் செழித்து வளரும் அதனுடைய மலங்கள் செடிகளுக்கு நல்ல உரமாகும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். அப்படி வந்துவிட்டால் நம் நாடும் செழிக்கும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது போன்று
1.தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் பெற்ற அருள்
2.இன்று துருவ நட்சத்திரமாக இருப்பதை நாமும் பெற்று நமக்குள் வரும் இருளை நீக்கி
3.நமது மூச்சும் பேச்சும் புவியில் உள்ள இருளை நீக்கி கேட்போர் உணர்வுகளில் இருளை நீக்கி
4.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வுகள் பெறச் செய்ய முடியும்.

அந்த அருள் ஞான சக்தி நீங்கள் பெற குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெற்று இருளை நீக்கி உலக இருளை நீக்கி… அருள் வழி வாழச் செய்யும் அருள் ஞான உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக “உங்கள் மூச்சலைகள் படரட்டும்…”

உங்கள் குடும்பத்தில் வளரும் குழந்தைகள் அந்த அருள் வழி வளரட்டும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் உலகமாக சிருஷ்டியுங்கள்.

1.இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான நிலையாக இருள் சூழச் செய்யும் நஞ்சிலிருந்து விடுபட்டு
2.அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்து மெய் ஞானத்தின் உணர்வின் தன்மை பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
3.நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்.

இந்த உடலுக்குப்பின் நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைவோம்.

அகஸ்தியரின் அருளைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி தாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் தன் வாழ்நாளில்…
1.நஞ்சினை வென்று இருளினை அகற்றி உண்மையின் உணர்வை அறிந்து
2.அவனில் விளைந்து வெளிப்படுத்திய அந்த உணர்வினைப் பெற வேண்டும் என்று
3.புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்டி
4.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்களை மூடி கண்ணின் நினைவை புருவ மத்தியில் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி அகஸ்தியன் அவன் வாழ்நாளில் நஞ்சை வென்று இருளை அகற்றி உண்மையின் உணர்வை அறிந்த… “அந்த அரும்பெரும் சக்தியைப் பெற வேண்டும்” என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.அந்த அரும்பெரும் சக்தியைப் பெறவேண்டும் என்று
2.“இப்பொழுது எத்தனை நேரம் இதை எண்ணுகின்றீர்களோ”
3.ஓ…ம் நமச்சிவாய என்று அதை உங்களுக்குள் சிவமாக்குகின்றது உயிர்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப உங்கள் நினைவாற்றலை உயிரான ஈசனிடம் ஒன்றி… ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.நாங்கள் என்றால் நம் உடலுக்குள் இருக்கும் அனைத்தும் சேர்த்து நாங்கள் என்று ஆகின்றது
2.நாம் என்ற நிலையில் ஒன்றிணைந்து அந்தச் சக்தியைப் பெற வேண்டும்.

நஞ்சினை வென்ற இருளை அகற்றிய அந்த அரும் பெரும் சக்தியை நுகரப்படும் பொழுது உங்கள் உடலில் நோய் இருந்தாலும் மன நோய் இருந்தாலும் வேதனைப்படும் நிலையோ நுகர்ந்தது இப்படிப் பல விதமான விஷத்தன்மையாக இருந்தால்
1.அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது
2.உங்கள் உடலில் உள்ள அந்த நஞ்சின் தன்மை பலவீனமடையும்… இந்த உணர்வினை நீங்களும் அறியலாம்.
3.இப்பொழுது நல்ல சிந்தனையின் உணர்வுகள் உங்களில் உருவாகும்.
4.உடலில் மகிழ்ச்சி என்ற உணர்வுகளை ஊட்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்களில் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

காவியத் தொகுப்பில் “கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று காட்டியிருப்பார்கள். அதாவது…
1.இப்பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
2.நம் உடலுக்குள் உருப்பெறுகின்றது குழந்தைகளாக.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குப் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு பாய்ச்சப்படும் பொழுது அருள் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் இந்த உணர்வினை அது பெறுகின்றது… இந்த உணர்ச்சி உடலுக்குள் அது உருப்பெறுகின்றது.

அது தான் கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்பது.

கண்ணின் நினைவை அகஸ்திய மாமகரிஷியின் பால் செலுத்தி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தநாளங்களில் கலந்து உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் திருமணம் ஆகி கணவன் மனைவி இரு மனமும் ஒன்றெனெ இணைந்து… பேரருள் பெற்று இருளை அகற்றி நஞ்சினை வென்றிடும் அந்தப் பேரருள் பெற்ற… “இருவரில் விளைந்த அருள் உணர்வுகளை” நாமும் நுகர்ந்தறிந்து நம் உடலில் உருவாக்குவோம்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி உயிரான ஈசனிடம் வேண்டி “துருவ மகரிஷி பெற்ற அந்த அரும்பெரும் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று… கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி துருவ மகரிஷி பெற்ற அருள் சக்தி உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியனும் அவர் மனைவியும் துருவத்தையே எல்லையாக வைத்து இருவரும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றித் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைப் புருவ மத்தியில் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி உயிருடன் இணைந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.

அதனின்று வரும் உணர்வுகளை ஏங்கி நீங்கள் தியானியுங்கள்.

1.நுகர்ந்த உணர்வுகளை உங்கள் உயிர் ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலுக்குள்
2.தீமைகளை அகற்றிடும் பேரருள் பெறும் அருள் ஞானத்தை உங்களுக்குள் அணுவாக உருவாகச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி… “உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தில் இணைத்து” அதனின்று வரும் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துவிட்டு
2.அதன் உணர்வை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி இதைத் தியானியுங்கள்

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மகரிஷிகளுக்கும் ஆசை உண்டு

 

ஒன்றின் துணையுடன் ஒன்றியே மற்றொன்றின் செயல் உள்ளது‌. தொடர் நிலை இல்லாத செயல் எதுவுமே இல்லை. பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற சக்தியை ஈர்த்துச் செயலாக்கும் சக்தி உண்டு.

வானமும் பூமியும் எதுவுமே ஒன்றின் தொடரில்லாமல் ஒன்றில்லை. வியாழனின் நிலையை அன்று கேள்விக்குறியாக்கி… வியாழனில் இருந்து நம் பூமிக்கு எப்படி அணுக்கள் வந்து தோன்றின…? என்பதனை உணர்த்தத் தொடர் கொண்டு நிறுத்தியுள்ளேன்.

1.நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் வாழ்ந்த பூமிதான் வியாழன் மண்டலம்.
2.ஆனால் இன்று மனித உடல் கொண்ட அறிவு நிலையும் செயல் திறமையும்
3.எண்ணத்தின் வளர்ச்சி சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள் அங்கில்லை.
4.ஆனால் அங்கிருந்து வந்தவர்கள்தான் நாம் எல்லோரும்.

இம்மனித உடல் எய்தி வாழ்ந்திடும் ஆத்மாக்களில் முதலில் தோன்றிய உயிரணுக்களின் தொடர் சக்தி வியாழனிலிருந்து வந்ததுதான்.

நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் அங்கு வாழ்ந்த காலத்திலேயே… தன் அறிவினால் எண்ணத்தில் ஜெயம் கொண்டு சூட்சுமம் கொண்டோரின் சக்தியினால் வியாழனின் சக்தித் திறனை நம் பூமி ஈர்த்து வாழப் பழகிக் கொண்டவுடன்
1.சூட்சுமத்தில் உள்ளோரால் (வியாழனிலிருந்து சூட்சுமம் கொண்டவர்கள்) நம் பூமியின் இயற்கையின் வியாழனின் சக்தித் தன்மை கூடி
2.நீர்நிலைகள் பெருக்கம் கொண்டு மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் பக்குவ நிலை வந்தடைந்த பிறகு
3.இச் சூட்சுமத்தில் அங்கிருந்து வாழ்ந்து வந்தவர்களால் அவர்களின் தொடர் சக்தியை இப் பூமியில் வளர விட்டு
4.அதன் தொடர் நிலையிலிருந்து வந்ததுதான் இக் கலிகாலம் வரை.

இச்சூட்சுமம் கொண்டு செயல்படுபவர்களிலும் தன் இனப் பெருக்கத்தைச் செயலாக்கும் ஆசை நிலையுண்டு.

எப்படி இன்று நம் பூமியில் வந்து வாழ்ந்து சூட்சுமம் கொண்ட முருக ஜெபத்துடன் ஒன்றிய போகரினால் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது செயலைக் கொண்டு பல மருத்துவ நிலைகளையும் பக்தி நூலையும் ஏடுகளையும் இப் பூமியில் பதியச் செய்தார்.

தன் நிலை உணரவும் தன் சக்தியின் சக்தியைப் பலருக்கும் பரப்பும் ஆசையுடன் செய்திட்ட நிலை போகரின் நிலை.

முருகரின் பக்தி கொண்டு முருகருடன் ஒன்றிய எண்ணம் கொண்டோருக்கெல்லாம் போகரின் சக்தியில் ஈர்த்து செயல்படுத்தி அவ்வட்டத்தின் வளர்ச்சியையே ஓங்கச் செய்கின்றார்.
1.மனித ஆத்மாக்களுக்கு மட்டுமல்ல ஆசை நிலை… ரிஷிகளுக்கும் அவ் ஆசை உண்டு… ஆசையில்லா விட்டால் எதுவுமே இல்லை
2.பேராசைப் பிடியில் சிக்குண்டு அடிமைப்படாமல் அன்பான ஆசையில் தான் அனைத்துமே செயல் கொள்கின்றது
3.வியாழனில் வாழ்ந்தவரின் ஆசையினால் நம் பூமி சக்தி பெற்றது.
4.நம் பூமியில் வாழ்ந்து செயல் கொண்டு சூட்சுமம் கொண்டோரினால் சந்திரனில் சக்தி நிலை கூடப் போகின்றது
5.சந்திரனுக்கு நம்மை ஒத்த உயிராத்மாக்கள் சென்று வாழ்வதற்கே இச் சூட்சுமம் கொள்வோரின் சக்தியினால் தான் செயல்படுத்திட முடிந்திடும்.

இப்பொழுது செப்பிடும் சந்திரனில் மனித ஆத்மாக்கள் வாழப்போகும் நாட்களின் நிலை, ஒரு வருடம் அல்ல… இரண்டு வருடம் அல்ல… ஆயிரம் ஆண்டு காலம் ஆனாலும் ஆகலாம்.

பல கோடி ஆண்டுகளாய் பல நற் சக்திகளை ஈர்த்து இயற்கையிலே பல பொக்கிஷங்களைப் பெற்றிட்ட நம் பூமியே… இக்கலியினால் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களினால் மாற்றம் கொள்ளப் போகின்றது.

நம் பூமியின் மாற்றத்தினால் இக்கலியினால் வந்த மனித ஆத்மாவினால் நிகழப் போகும் இயற்கையின் கொடுமையான மாற்றத்தினால் நம் பூமி மட்டுமல்ல… இதன் தொடர்பினால்
1.ஒவ்வொரு மண்டலத்திற்கும் இம்மாற்ற நிலை ஏற்பட்டு
2.பால்வெளி மண்டலமும் நம் சூரியனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்
3.எழுத்திலும் எண்ணத்திலும் எண்ணத்தகா மாற்ற நிலை இக்குறுகிய காலத்தில் நிகழத்தான் போகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்யன் தனக்கு எதிலேயும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்றுதான் வரம் கேட்டான்.
1.ஆகையினால் அவனைக் கொல்லவில்லை.
2.ஆனால் தீமைகளையும் பகைமைகளையும் உள்ளே போகாதபடி தள்ளி விடுகின்றது… (நரசிம்மா) தீமைகளை வளர்க்கவில்லை.

நன்றாக இதைக் கவனித்துப் பாருங்கள். காவியத்தை ஞானிகள் எப்படிப் படைத்துள்ளார்கள்…? தெளிவாக நமக்கு எப்படிக் காட்டி இருக்கிறார்கள்…? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

விஷ்ணு அவனைக் கொன்றானா… இல்லை…! மடி மீது வைத்து இங்கே உள்ளே வராதபடி தடுத்து விட்டான். “இரண்யனைப் பிளந்தான்…” என்றால் தனக்குள் இருக்கக்கூடிய பல விதமான தீமை செய்யும் உணர்வுகளை விலக்கித் தள்ளி விடுகின்றது.

1.அருள் உணர்வுகள் எதை நாம் அரவணைத்தோமோ அதை உயிருடன் சேர்த்துக் கொள்கிறது.
2.அந்த அறிவின் தன்மை நமக்குள் பெருகுகின்றது.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஒவ்வொரு நாளும் நாம் வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த தீமைகளைச் சூரியன் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடுகிறது

ஏனென்றால் நம் கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றி அங்கே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது பகைமை உணர்வுகளை எல்லாம் அகற்றி விடுகின்றது.

வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிக்கும் நாங்கள் எல்லோரும் பெற வேண்டும். எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று எல்லோரும் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணும் பொழுது அந்தப் பகைமைகளையும் அசுர குணங்களையும் தள்ளிவிட்டு விடுகின்றது. நாம் யாரும் அதை ஈர்க்கவில்லை என்கிற போது சூரியன் காலையில் ஆறு மணிக்கெல்லாம் கவர்ந்து மேலே இழுத்துச் சென்று விடுகின்றது.

அது இறப்பதில்லை… அதனால் தான் எனக்கு எதிலுமே இறப்பில்லை என்று இரண்யன் கேட்டான் என்று சொல்வது. ஆக… வெளியிலே வந்தபின் நாராயணன் (சூரியன்) அவனைக் கவர்ந்து கொள்கின்றான்.

காரணம் அவன் கொடுத்த வரம் தானே அது.
1.இந்த விஷம் இல்லையென்றால் அந்த்ச் சூரியனே இயங்காது.
2.ஒவ்வொரு அணுவிலும் இந்த விஷம் இல்லை என்றால் அதனின் உணர்ச்சிகள் இயங்காது… எந்தக் குணமும் அது இயங்காது.

எல்லாவற்றையும் இயக்குவதற்கு நானே தான் மூலம்… அதே சமயத்தில் அதை அடக்குவதற்கும் நானே தான் மூலம்… “என்னால்தான்…” என்று இரண்யன் சொல்கின்றான்.

விஷத்திற்கு வலு கூட்டக் கூடாது என்று தான் அந்த அசுர சக்திகளைக் கண்ணன் வீழ்த்தினான் என்று தீப ஒளித் திருநாளாகக் காட்டுகின்றார்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் ஆன்மாவில் புத்தாடையாக அணிய வேண்டும்.

ஒளியை எடுத்த பின் வேதனைப்படுத்தும் உணர்வுகள் உள்ளே செல்லாதபடி நீக்கி விடுகிறோம். நமக்குள் அதை வளர விடுவதிலலை.

1.விஷ்ணு இதைச் செய்கிறான்… இரண்யனோ அங்கே நாராயணனிடம் சேர்ந்து விடுகின்றான்.
2.அவன் கேட்டபடி வரப்படி அவனைக் கொல்லவில்லை… அழிக்கவில்லை.
3.ஆனாலும் அந்த தீமையை வளர்க்க விடாதபடி தள்ளி விடுகின்றான் – நரசிம்மா…!

துருவ நட்சத்திரம் ஆகும்போது தனது பங்காக ஒளியாக மாற்றுகின்றது. பாசிட்டிவ் நெகட்டிவ் பாசிடிவ்…! சுழற்சியின் மோதலில் தான் ஒளியே வருகிறது சூரியனுக்கு. அதே உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கும் போது ஒளியாக மாற்றுகின்றது.

விஷம் இல்லை என்றால் அந்த உணர்ச்சியின் ஒளி அலைகள் பரவாது. இருளுக்குள் அடங்கி ஒளியாகப் பரவும். காரணம்…
1.ஒரு பொருளுக்குள் அந்த விஷத்தின் தன்மை இல்லை என்றால்
2.அந்தப் பொருளின் சக்தியை ஒளியாகக் காட்டாது… அந்த அறிவால் இயக்காது.
3.எந்தப் பொருளில் விஷம் கலக்கிறதோ அந்தப் பொருளின் மணத்தை வீரியமாக அதனின் உணர்ச்சியை ஊட்டுகிறது.

இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அந்த ஞானிகள் கண்ட மூலங்களை உங்களுக்குப் பிரித்துக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

போகாப்புனல்

 

நாம் எடுக்கும் தியானத்தின் வலுகொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் அனைத்தையும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடலில் பெற்ற நஞ்சினை கரைக்கச் செய்து பிறவில்லா நிலையை அடையச் செய்வோம்.

உடலை விட்டுச் சென்ற அந்த ஆன்மாக்கள் துயர்படும் உணர்வினைக் கரைத்து விட்டு துயரற்ற உணர்வாக என்றும் ஏகாந்த நிலை வாழ முடியும். இது மனிதனின் கடைசி நிலை பிறவி இல்லா நிலை.

1.எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவித்தோம்… மனிதனான பின் துன்பத்தை அகற்றிடும் அருள் சக்தி பெற்றோம்
2.துன்பத்தை அகற்றி நஞ்சினை வென்று உணர்வினைப் பேரருளாக மாற்றிய
3.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருளை நாம் பெற்று நமக்குள் உருவாக்கிக் கொண்டால் ஏகாந்த நிலை அடையலாம்…
4.இருளை மாற்றி ஒளியின் உணர்வாக நமக்குள் உருவாக்குதலே மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை.

அது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான்.

தீமை அகற்றிய அருள் ஞானிகள் உணர்வை நுகந்து பகைமை என்ற உணர்வோ நஞ்சு என்ற உணர்வோ இருள் என்ற உணர்வோ அறியாமை போன்ற நிலைகளையோ மாற்றிப் பேரருள் உணர்வுகளை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

வாழ்க்கையில் நமது ஆசைகள் எவ்வாறு பக்தி கொண்டோ மற்றவர் அன்பு கொண்டோ நமக்குள் வளர்த்தாலும் பக்தியின் நிலைகள் கொண்டு வேதனை என்ற உணர்வுகள் கலந்தால் அன்பு கொண்டு அந்த உணர்வின் தன்மை அரவணைத்தாலும் அதனுடன் இணைந்து அந்த உணர்வின் தன்மை விஷத்தன்மையாக வரப்படும் பொழுது சாகாக் கலை.

இந்த உடலில் எதனை வளர்த்தோமோ இந்த உணர்வின் தன்மை மற்ற மனிதனின் உடலுக்குள் சென்று சாகாக்கலையாக இதையே உருவாக்கும்.

ஒரு மனிதன் நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகின்றது உயிர் வேகுவதில்லை. ஆகவே
1.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் வலுவாகத்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் நாம் ஒன்றிவிட்டால் வேகாநிலை அடைகின்றது.
3.பிரபஞ்சத்திலும் அகண்ட அண்டத்திலும் வரும் நஞ்சு இதை அழித்து விட முடியாது.

இதைத் தான் சாகாக்கலை வேகாநிலை போகாப்புனல் என்று அன்று வள்ளலார் பாடியது.

இந்த வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சாகாக் கலையாக மாறுகின்றது அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றினால் வேகாநிலை என்ற நிலை பெறுகின்றது.

போகாப்புனல்…! பேரருள் என்ற உணர்வின் தன்மை நமக்குள் பெருக்கிக் கொண்டால் இன்னொரு உடலுக்குள் புகுவதில்லை நாம் பிறவியிலா நிலை அடைய முடியும்.

இந்த வாழ்க்கையில் சாகாக்கலை என்ற நிலையிலிருந்து
1.உணர்வுகளை உயிருடன் ஒன்றி வேகாநிலை அடைந்தால்
2.இன்னொரு உடலுக்குள் போக முடியாது என்று அன்று வள்ளலார் தெளிவாகப் பாடியுள்ளார்.

அவர் சொன்ன மூலக்கூறை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அருள் பெறும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை… நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த அருளைப் பெறுகின்றது உயிர். அது தனிப் பெரும் கருணையாக வளர்கின்றது

நாம் எண்ணியது எதுவோ அதன் உணர்வின் அறிவாக நம்மை இயக்குகின்றது என்ற நிலையினை தெளிவாக அவர் கூறியுள்ளார் இராமலிங்க அடிகள்.

1.அவர் பெற்ற உண்மையின் உணர்வுகளும் அவர் வெளிப்படுத்திய நிலைகளும் இங்கே உண்டு
2.அவர்கள் பெற்ற அருள் ஞானத்தைப் உணர்வினை நாமும் நுகர்ந்தறிய முடியும்.
3.வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும் என்றும் பேரானந்த நிலை கொண்டு வாழ முடியும்.

அந்த நிலையை நாம் அனைவரும் பெறுவோம்.

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை

 

இவ்வுலகமே…
1.இக்காற்றுடன் பால்வெளி மண்டலத்தில் உள்ள அமில சக்தியையும்
2.இப்பூமியின் மேல் மட்டத்தில் இப்பூமி சுழலும் வேகத்தில் அதன் ஈர்ப்பில் சூரியனிலிருந்து வெளிப்படும் அமில சக்தியையும்
3.மற்ற மண்டலங்களின் சக்தியையும் தன் சுவாசமுடன் உணவாய் ஈர்த்து
4.அதன் சக்தியைத் தன் மண்டலத்திற்கு வேண்டிய அமிலத்தைச் சேமித்துத் தான்
5.பூமியின் கழிவான உஷ்ண அலைகள் வெளிப்பட்டுப் பல நிலைகள் ஏற்படுகின்றன.

இம்மனித உடலுக்கு நாம் உண்ணும் உணவு எப்படி அமிலமாய், ஆவி நிலை கொண்டு நம் உடம்பில் உள்ள இரத்த நாளங்களில் அச்சக்தி மோதி இவ் ஆவியான அமில உணவே உதிரமாய் உருப்பெற்று நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களின் செயலுக்கும் அவ் உதிரமே பல அணுக்களாய் அவற்றிலிருந்து எடுக்கும் சக்தியைக் கொண்டுதான் நம் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் அததற்கு வேண்டிய அமில உணவை உண்டு எலும்பாகவும் மயிர்க்கால்களாகவும் நகங்களாகவும் வளர்ந்து கொண்டே உள்ளன.

எலும்பின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தால் நம் உருவ அமைப்பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா…? ஆனால் குறிப்பிட்ட கால வயதுக்குப் பிறகு இவ்வளர்ச்சியின் நிலை மாறு கொள்ளுகின்றது.

குழந்தையின் எலும்பின் உறுதித் தன்மைக்கும் வளர வளர முதியோர்களான பிறகு உள்ள எலும்பின் உறுதிக்கும் மாற்றம் உள்ளது.
1.எப்படி யானையின் தந்தம் வயதான பிறகு அதனுடைய உறுதி கூடுகிறதோ
2.அந்நிலை போன்று தான் எலும்பின் வளர்ச்சி நிலையும்.

குறிப்பிட்ட வயது வரம்பிற்குப் பிறகு உடல் வளர்ச்சி மாற்றம் கொள்ளும் நாளிலிருந்து வெளி வளர்ச்சிக்கு மேல் நம் (மனிதனின்) உள் உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சியில் மாற்றங்கள் உண்டு.

நாம் உண்ணும் உணவிலிருந்து சுரக்கும் “அமில சக்தியின் ஆவி நிலைதான்” நம் உடலிற்கு சக்தி தரும் நிலை.

நம் பழக்க வழக்கப்படி நம் உடலை எந்நிலையின் உணவை உண்டு பழகியுள்ளோமோ அவ்வமில சக்தியின் வளர்ச்சியின் நிலைகொண்ட நிலையைத் தான் நம் உடல் ஏற்கிறது.

பட்டுப்புழு முசுக்கொட்டைத் தளையை மட்டும் உண்டு அதிலிருந்து எடுத்த ஆவியின் அமிலத்தினால் எப்படிப் பட்டை எடுக்கின்றோம்…?
1.அப்பட்டுப்புழுவிற்கே முசுக்கொட்டைத் தளையைத் தவிர வேறு உணவை உண்டால் அதன் நிலையில் இப்பட்டை நாம் எடுத்திட முடிந்திடாது.
2.அதைப்போல் தான் ஒவ்வொன்றின் நிலைக்கும் செயல்நிலை நடக்கின்றது.
3.மனிதனின் நிலையும் அதுவே… மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் அதுவே.

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை.

ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவில் இருந்து மற்றொன்றின் வளர்ச்சி ஏற்படுகின்றது.

இவ் உடல் கோளத்திலேயே பல உயிரணுக்கள் வாழ்கின்றன. அவை அவை உண்டு வெளிப்படுத்தும் அமிலத்தில் இருந்து தான் மற்ற நிலைகள் ஏற்படுகின்றன.

நாம் உண்ணும் உணவு ஆவியாய் அமிலமாய் உதிர சக்தி பெறுகின்றது. அவ்வாவியான பிறகு நாம் உண்ட உணவின் தன்மை அதன் சக்கை மலமாய் வெளிப்படுகின்றது.

இவ்வாவி அமில உதிர சக்திதான் அதில் வளரும் உயிரணுக்களின் நிலையைக் கொண்டு நம் உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் வளர்ச்சி பெறுகின்றன.

ஒவ்வொரு முடியும் வளர்வதற்கே அவ் உயிரணுக்களின் நிலையில் இருந்தால்தான் வளர்ந்திடும்.
1.இந்நிலையை வைத்துத் தான் முன் பாடத்தில் நம் ஆத்மாவுடன் நம் உயிர் மட்டுமல்ல
2.பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமையை அகற்றும் வல்லமையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
1.ஒவ்வொருவரும் நம் குருநாதரைப் போன்று ஆகவேண்டும்… குருநாதராக மாற வேண்டும்.
2.சாமி (ஞானகுரு) தான் பக்கத்திலிருந்து கொடுப்பார்… என்று எண்ணாதீர்கள்.

குருநாதர் கொடுத்த ஞான வித்தை உங்களிடம் விதைக்கின்றேன். நீங்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். “சாமி செய்வார்…” என்று எண்ணி அதை வளர்தது விடாதீர்கள்.

எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார்… எல்லாமே சாமி செய்வார்… நாங்கள் வளர்ந்து விடுவோம்…! என்று எண்ணினால் அது எப்படி வளர முடியும்…?

எல்லாமே சாமி பார்த்துக் கொள்வார் என்று உங்களுக்குப் பதிலாக நான் சாப்பிட்டால்… நீங்கள் பட்டினியாக இருந்தால் யார் பார்ப்பது…?

1.நம்பிக்கை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2.தன்னை நம்புவதில்லை… சாமியைத் (ஞானகுரு) தான் நம்புகிறார்கள்.

ஆனால் “சாமி சொன்ன அருளை நமக்குள் வளர்த்துக் கொண்டோம்…” என்றால்
1.அது எவ்வளவு பெரிய வேலை செய்யும்…? என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொல்லும் அருள் ஞானிகளைப் பற்றிய உபதேசங்களை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
3.அப்போது தான் உங்களுக்குள் இது பெருகி விளையும்.

உதாரணமாக ஒருவரைப் பார்த்து “அவர் மோசமான ஆள்… ரொம்பவும் மோசமான ஆள்…!” என்று பேசிக் கொண்டே இருங்கள். உங்களுக்குள் அது அதிகமாக விளையும்… பார்க்கலாம் நீங்கள்.

வீட்டிற்குள் நுழைந்தால் சண்டை நிச்சயம் வரும்… உங்கள் வியாபாரம் மந்தமாகும்… இப்படிச் செய்கிறார் என்று யாருடனாவது வம்புக்கு இழுத்துக் கொண்டு போகும்.

ஆக எதைப் பேசுகின்றோம்…? குறைகளைத் தான் பேசுகின்றோம்.

1.அதை எல்லாம் நீக்குவதற்குண்டான மார்க்கங்களை நீங்கள் பேசிப் பாருங்கள்.
2.யாம் சொல்லும் இந்தப் பேருண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

குறை என்று தெரிகின்றது. அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் எடுத்து அவர்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்களை அறியாது சேர்ந்த இருளை நீக்க வேண்டும்..! என்று இதனைக் கலந்து நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறை நமக்குள் வளரவே வளராது…! அவர்களுக்குள்ளும் வளராது தடுத்துவிடும்.

அருள் வழியில் இப்படி நடக்க வேண்டும் என்று இதனை எடுத்துச் சொல்லுங்கள். தீமைகள் பாதிக்காது என்றும் எடுத்துச் சொல்லுங்கள். இதை எல்லாம் தெளிவாகவே ஞானிகள் நமக்குக் கொடுக்கின்றார்கள்.

ஆனால் குறைகளைச் சொல்லிச் சொல்லி அதையே ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் போது அது என்னையும் தாக்குகின்றது. என்னை நான் பாதுகாத்துக் கொள்ளவே பெரிய கோட்டை கட்ட வேண்டி இருக்கின்றது. அமைதியாக உட்கார வேண்டி இருக்கின்றது.

உங்களுக்குச் சக்தியும் கொடுத்து அதே சமயத்தில் நீங்கள் அறியாது ஏதாவது செய்தாலும் அந்தத் தீமை வராது காக்கக்கூடிய சக்தியாகவும் நான் இருக்கின்றேன்.

“குருநாதர் ஒளியாகி விட்டார்…” என்று அவரை விட்டுவிட்டு நான் தனியாக இருந்தால் என்ன ஆகும்…?
1.அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னால்…
2.அவர் சொன்னபடி அந்த எண்ணத்தை எடுத்தால் என்னைக் காப்பாற்றும்.

கடையிலிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு வந்தாலும் அதை சமைத்துச் சாப்பிட்டால் தானே சரியாக இருக்கும். சமைக்காமல் சாப்பிட முடியுமா…?

ஆகவே அந்த அருள் ஒளியை எடுத்து நமக்குள் சமைக்க வேண்டும். உயர்ந்த சக்திகளை எடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

குருநாதர் எனக்குக் கொடுத்த அதே வழியில் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்

 

அகஸ்தியன் தான் கண்ட உண்மைகள் அனைத்தையும் தன் மனைவி பெற வேண்டும் என்று தன் மனைவிக்குச் சொல்கிறான். அதன் வழி கொண்டு
1.இருவருமே துருவத்தை உற்று நோக்கி அந்த ஆற்றலை நுகரும் பொழுது துருவ மகரிஷியாகின்றார்கள்.
2.துருவத்திலிருந்து வரக்கூடிய உணர்வை தங்களுக்குள் உருவாக்கும் சக்தி பெறுகின்றார்கள்.

துருவத்தின் வழியாக நுகரும் தன்மை வரும் போது 27 நட்சத்திரங்களின் மின்னணுக்களை அது பரப்புகின்றது. அதை உற்று நோக்குகின்றனர். அந்த மின் கதிர்களைத் தங்களுக்குள் அடங்கச் செய்கின்றனர் அவர் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைப் பெறுகின்றது.

ஒரு நட்சத்திரமும் இன்னொரு எதிர்நிலையான நட்சத்திர உணர்வும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது தான் அதனுடன் சேர்ந்து வியாழன் கோளின் கதிரியக்கப் பொறி தாக்கப்பட்ட பின் அனைத்தும் ஒன்றாகக் கலந்து துடிக்கும் நிலை வருகின்றது. அப்போது தான் உயிரணு என்ற நிலை வருகின்றது.

ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின் கதிரியக்கங்களை உருவாக்குகின்றது உயிர் எதனை நுகர்கின்றதோ உணர்வுக்கொப்ப கதிரியக்கங்களாக மாற்றுகின்றது அந்த உணர்வை உடலாக மாற்றுகின்றது.

அந்த உணர்வின் தன்மை உறையும் தன்மை பெற்று ஜீவ அணுவாகி அந்த அணுவின் மலம் அந்தந்த உணர்வுக்கொப்ப உடலின் அமைப்புகளாக உருவாகின்றது.

இதை எல்லாம் கண்டுணர்ந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி தனக்குள் உருவாக்கும் தன்மை பெறுகின்றான். உண்மையின் இயக்கத்தை அறிந்தான். இந்த உணர்வின் ஆற்றலைக் கணவன் மனைவி இருவருமே தங்களுக்குள் பெருக்கிக் கொண்டார்கள்.

எந்தத் துருவத்தில் இருந்து வருகின்றதோ
1.அதன் வழி வரும் நட்சத்திரங்களின் உணர்வனைத்தும் நுகர்ந்து
2.தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களை இந்த உயிரைப் போன்றே
3.எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் உணர்வின் அணுக்களாக ஒன்றாக இணைத்தான்.

(மின்னல்) மின் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அளவில்லாத தூரங்களுக்குப் பரவிச் செல்கின்றது. பல லட்சம் மைல்களுக்கு அப்பால் கூடச் செல்கிறது. அந்த ஒளிக்கற்றைகளை நாம் காண நேருகின்றது உலகம் முழுவதும் பரவுகின்றது.

அதை எல்லாம் வானளாவிய நிலைகள் கொண்டு இருளை நீக்கி பொருள் காணும் நிலையாகக் காணுகின்றனர் அகஸ்தியனும் அவன் மனைவியும். அகண்ட அண்டம் அது எப்படி உருவானது…? என்பதையும் கண்டறிகின்றனர்.

1.நஞ்சினை நீக்கி ஒளியாக மாற்றிடும் அந்த சக்தி இருவரும் பெற்றபின்
2.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போன்று
3,ஒத்த நிலைகள் கொண்டு ஒன்றாக ஒளியாக இணைக்கின்றனர்.

சூரியன் பல மண்டலங்களில் இருந்து எடுக்கும் விஷத்தன்மைகளை உணவாக எடுத்துக் கொண்டாலும் தனக்குள் உருவாகும் பாதரசத்தால் மோதப்பட்டு விஷத்தின் தன்மையைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்கச் செய்கின்றது.

இதைப் போன்று தான் மனிதனான பின் ஆறாவது அறிவு கொண்டு விஷம் என்ற உணர்வு தனக்குள் சாடாது தீமைகளை நீக்கி விட்டால்… உயிர் என்ற நிலையில் ஒளி என்ற நிலையை அடையும் பொழுது… இருள் என்ற நிலை வராது தடுத்து ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது.

அப்படிப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கலந்து அலைகளாக மாற்றிப் படரச் செய்கின்றது. “அதை மனிதர்கள் நுகர்ந்தால்” இருளை நீக்கி விட்டுப் பொருள் காணும் அருள் சக்தி பெறுகின்றார்கள்.

அந்த அகஸ்தியனைப் போன்ற இவர்களும் வளர்ச்சி பெற்றுப் பிறவி இல்லாத நிலை அடைகின்றார்கள்.

துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட்டது. அதிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தான் உபதேசத்தின் வாயிலாக
1.உங்கள் நினைவாற்றலைத் துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்வதும்
2.உணர்வின் ஒலிகள் உங்கள் செவிக்குள் உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது
3.கண் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களை நுகரச் செய்வதும்
4.நுகர்ந்த உணர்வை உங்கள் உயிர் அத்தகைய உணர்வைப் பெற்று அதைக் கவரும் அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான்
5.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை நுகரச் செய்து கொண்டுள்ளேன் (ஞானகுரு).

அவ்வாறு நீங்க: நுகரும் உணர்வை உங்கள் உயிர் ஓம் நமச்சிவாய என்று இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக மாற்றும் தகுதி பெறுகின்றது.

துருவ நட்சத்திரம். எத்தகைய மின்னல்கள் வந்தாலும் ஒளியின் கதிராக அது மாற்றிக் கொள்கின்றது… இருளை அகற்றுகின்றது.

சூரியன் ஒரு காலம் மங்கினாலும் துருவ நட்சத்திரம் என்றுமே மங்காது சூரியன் அழிந்தாலும் அதே சமயத்தில் துருவ நட்சத்திரம் அழியாது… அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழியாது.

அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிக் கொண்டு வேகாநிலை கொண்டு எதிலும் அழியாத நிலை கொண்டு ஒளியின் சரீரமாக இருக்கின்றது.

இவை எல்லாம் பல கோடி உணர்வுகளைக் கலந்து கலந்து மனிதன் ஆன பின் இருளை அகற்றி ஒளி என்ற நிலைகள் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி உள்ளான்.

அதை நாம் நுகர்ந்து வளர்த்துக் கொண்டால்
1.அகஸ்தியன் கண்ட உணர்வு நமக்குள் இனணந்து
2.இருள் சூழா நிலைகள் கொண்டு நம்மை நாம் காத்து
3.இந்த உடலுக்குப் பின் அதைப் பற்றுடன் பற்றி நாம் அங்கே செல்கின்றோம்… பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

ஏற்கனவே இரண்டு பிரளயங்களை நம் பூமி சந்தித்துள்ளது

 

நம் பூமியில் முதல் பிரளயத்தில் ஏற்பட்ட நீர் நிலைகளின் வளர்ச்சி… நம் பூமி சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பிலிருந்து “நாம் பெற்ற பொக்கிஷம்…”

முதல் பிரளய காலத்திற்கு முன் இன்று எப்படி சூரியனைக் கேது கிரகணம் பிடிக்கின்றதோ அதைப் போன்றே சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் “வியாழனின் கிரகணம்” பிடித்தது.

நம் பூமிக்கு மேல் வியாழன் மண்டலம் பெரியது. சூரியனின் நிலை மிகவும் பெரியது. இந்நிலையில் சூரியனை வியாழனின் கிரகணம் பிடித்தவுடன் சூரியனைத் தாண்டி வியாழன் செல்லும் நிலையில்
1.நம் பூமிக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட நிலையில் பால்வெளி மண்டலத்தில்
2.வியாழனின் சக்தி நம் பூமியின் மேல் நேர் பார்வையில் பட்டவுடன் பால்வெளி மண்டலத்தில் உள்ள அமில சக்திகள் உறைந்து
3.வியாழனின் இயற்கைக் குணமான அதிக நீரைக் கொண்ட சக்தியுடைய அமில உப்பு
4.இப்பால்வெளி மண்டலத்தில் கலந்து வேகமாய்ப் படர்ந்து உறையும் தன்மை கொண்டு இவ்வியாழன் சூரிய கிரகணத்தைத் தாண்டிய நிலையில்
5.உப்புக் கலந்த உறைந்த அமில சக்தியானது சூரியனின் ஒளி பட்டவுடன் கரைந்து
6.நம் பூமிக்கு எப்பொழுதும் இருந்த இயற்கை நிலையுடன் அதிக சக்தி கொண்ட இவ்உப்புக் கலந்த அமில நிலை மோதுண்டவுடன்
7.நம் பூமியின் நிலை ஏற்காமல் பிரளய நிலை ஏற்பட்டு
8.அதன் சுழற்சி வட்டத்தில் சிக்கிக் கொண்ட நீர்நிலைகள்தான் நம் பூமிக்கு இரண்டு பக்கமும் வட துருவ தென் துருவ நீர்நிலைகள் அடர்ந்த கடல்களே.

அதன் தொடர்ச்சியில் இருந்து சுழன்ற நிலை கொண்டு நம் பூமி முதலில் சேமித்துப் பழக்கப்படுத்திய இயற்கைத் தன்மை மாறி… இத்தாவர வர்க்கங்களும் முதல் பிரளயத்திற்கும் பிறகு நீருடனே நீர்நிலைகள் உள்ள இடத்தில், நீருக்கடியில் ஆரம்ப காலத்தில் வளர ஆரம்பித்தன.

அதன் தொடர்ச்சியில் இருந்து ஏற்பட்ட இன வர்க்கங்கள் தான் “கொசுக்களைப் போன்று நுண்ணிய உடல்களைக் கொண்ட உயிரணுக்கள்” இந்நீர் நிலைகளில் தோன்றி நீர்நிலைகளின் மேல் படர்ந்து வந்த்து,

அதன் தொடர்ச்சியில் அதன் சுவாசத்தில் அதன் கழிவின் உஷ்ண நிலையிலிருந்து சிறு சிறு முட்டைகள் தோன்றி அதிலிருந்து எறும்பின் தலையை ஒத்த தலையுடைய “சிறு வால்” நீண்ட உயிரணுக்கள் வளர்ச்சி கொண்டன.

அந்நிலையின் தொடரிலிருந்து நீரிலிருந்து வளர்ந்த இவ்வுயிரணுவே… சிறு சிறு மாற்றம் கொண்ட நிலையில் ஜீவ உடல் கொண்ட உயிர்ப் பிராணி வர்க்கத்திற்கு வந்ததின் தொடர் நிலையில் இருந்து தான் பல நிலைகள் மாறி… பல ஆயிரம் கோடி ஆண்டுகள் அந்நிலையின் வளர்ச்சிக்குப் பிறகு “மற்றும் ஒரு பிரளயம் ஏற்பட்டது…”

அந்த மாற்றத்திற்குப் பிறகுதான் இவ்வளர்ச்சி நிலையில் உயிரணுவாய் ஜீவ உடல்களைக் கொண்ட ஜீவன்களின் நிலை அதன் வளர்ச்சியில் அது சேமித்த சக்தியின் நிலை கொண்டு அடுத்த பிரளயத்தில் அவ்வுயிரணுக்களே தோன்றிய நிலையில் தான்…
1.இம்மனித உடல் கொண்ட அறிவு வளர்ச்சியுற்ற ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை வந்தது.
2.இவ்விரண்டாவது பிரளயத்தினால் நம் உலகிற்கு எந்நிலை கொண்ட மாற்றம் வந்தது…?
3.இவ் இரண்டாவது பிரளயத்திற்கும் வியாழனிலிருந்து தான் நம் பூமிக்கு மனிதர்கள் வாழும் நிலையின் தொடர் வந்தது.

நம் பூமியில் இன்று எப்படி நமது நிலை உள்ளதோ அதைப் போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வியாழனிலும் நம்மை ஒத்த மனித இன வர்க்கமும் அடர்ந்த நீர் நிலைகளும் இருந்தன.

அறிவின் வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் ஆசையின் நிலையினால்…
1.அன்று வியாழனில் ஏற்பட்ட பிரளயத்தினால் இன்று வியாழனில் மனித ஆத்மாக்கள் இல்லாத நிலை.
2.ஆனால் நம் பூமிக்கு வியாழனிலிருந்து தான் அதன் தொடர் சக்தியின் உருவிலிருந்துதான்
3.உயிர் ஆத்மாக்கள் தோன்றி இன்று இங்கு நாம் வாழும் நிலை உள்ளது.

இராமாவதார காலத்தில் இருந்து இக்கலி வரை ஏழு ஜென்மங்களில் இன்று மனிதராய் வாழ்பவரில் பலர் உள்ளனர். இக்கால நிலையிலேயே மனித உடல்களில் இருந்து மாறு கொண்ட மிருக வர்க்கத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளாகவே பல உயிர் ஆத்மாக்கள் சென்றுவிட்டன.

மிருக உடலில் இருந்தும் மாறிக் கொசுவாகவும், ஈ எறும்பு புழு பூச்சியாகவும் பல ஆத்மாக்களின் நிலை சென்றுவிட்டன.

இம்மண்டலத்தில் வந்து வாழக் குடியேறிய உயிராத்மாக்களுக்கு வந்த சக்தி ஏழு உடல்களை ஏற்கும் சக்தி தான் உண்டு. அதிலிருந்து மாறுபட்டுத் தோன்றிப் பல நிலைகள் கொண்ட உடல்களை ஏற்று எண்ணிலடங்கா உயிரணுக்கள் வாழ்கின்றன.

ஓர் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியில் உயிராத்மாவாய் பல ஜென்மங்கள் மாறு கொண்டு பல நிலைகளைப் பெற்று வாழும் தருவாயில் ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் “பல உயிரணுக்களை உண்டு பண்ணியே தான் வாழ்கின்றது…”

எவ்வுயிரணுவும் உணவில்லாமல் வாழ்ந்திட முடியாது. அது எடுக்கும் ஆகாரத்தில் அதன் சக்தியை வளர்த்த பிறகு அது வெளிப்படுத்தும் மலத்திலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுகின்றன.
1.உண்டு கழித்து வாழ்ந்திடும் உயிராத்மாக்களினால் எண்ணிலடங்கா உயிரணுக்கள் தோன்றி
2.அவை அவை தோன்றிய நிலைக்கொப்பப் பல நிலைகளில் வளர்ச்சி கொள்கின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நம் மீது தெரிந்தோ தெரியாமலோ சாக்கடையைப் பூசிக்கொண்டு இருந்தால் அந்த நேரத்தில் அடுத்தவர்கள் நம்மைப் பார்த்தால் யாராக இருந்தாலும் விலகித் தான் சென்று கொண்டிருப்பார்கள.

அதைப் போல் சங்கடத்தையும் வெறுப்பையும் எடுத்து அடுத்தவரிடம் அதே எண்ணத்துடன் பேசிக் கொண்டிருந்தால் நம் மீது அவர்களுக்கு “வெறுப்பு” தான் வரும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் புத்தாடையாக அணியும் பழக்கத்திற்கு வரவேண்டும்…
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் ஆன்மாவாக மாற்ற வேண்டும் அது தான் தீப வழி (தீபாவளி).

ஒருவர் மட்டும் செய்வதல்ல. எல்லோரும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி எடுக்கும் பழக்கம் வரவேண்டும்.

அதிகாலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணி எடுக்க வேண்டும்.

அடுத்து வெளியில் எங்கே சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் தொழில் முழுவதும் படர வேண்டும்… நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்று அவசியம் எண்ண வேண்டும்.

வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் வாடிக்கையாளர் அனைவரது வாழ்க்கையும் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும்… எங்கள் வியாபாரம் செழிக்க வேண்டும் என்று இப்படி எண்ணி நாம் செயல்பட வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் அழுக்குத் துணியை மாற்றி விட்டு நல்ல உடையை மாற்றுக் கொள்கிறோம் அல்லவா. அது போல் நம் ஆன்மாவில் படும் அழுக்கைத் துடைக்கும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

உதாரணமாக மான் இருக்கின்றது. புலியைப் பார்த்தபின் தப்ப எண்ணுகின்றது. ஆனால் புலியின் உணர்வை நுகர்ந்தபின் உடலை விட்டுச் சென்ற பின் அடுத்துப் புலியாகப் பிறக்கின்றது.

மான் என்ற அந்தச் சட்டையைக் கழட்டிவிட்டு புலியின் உணர்வை ஆடையாக மாற்றுகிறது… புலியாக மாறுகிறது.

அது போல் ஒவ்வொரு நிமிடமும்…
1.நமக்குள் அந்த அருள் சக்தியைப் பெருக்கினால் இருளை நீக்கும் அணுக்கள் உடலிலே விளைகின்றது.
2.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

மற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று பார்த்தால் அதை நுகர்ந்தால் நம் உணர்வுகள் அழுக்காகி விடுகின்றது. சாக்கடை நம் ஆடையில் பட்டு விட்டால் உடனே அந்தச் சட்டையை கழட்டி விடுகின்றோம் அல்லவா.

அழுக்கான அந்தச் சட்டையைத் துவைக்காமல் மீண்டும் போடுவோமா…?

அதைப் போன்று தான் பிறிதொருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அடுத்த கணம்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்தி
2.சட்டையை மாற்றுவது போன்று உடனே அந்த அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்படி மாற்றினாலும் கூட மீண்டும் அழுக்கு சேரத்தான் செய்யும்.
1.தினமும் எப்படி அழுக்குச் சட்டையை கழட்டிவிட்டுத் தூய்மையான ஆடையாக மாற்றிக் கொண்டிருக்கின்றோமோ
2.அதே போன்று நம் வாழ்க்கையில எத்தகைய தீமை வந்தாலும்
3.உடனுக்குடன் நாம் மாற்றிக் கொண்டே இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுவது தான் தீபாவளி.

உதாரணமாக வேதனைப்படுகிறார்கள் என்றும் தெரிகின்றது வேதனைப்படுத்துகிறார்கள் என்றும் தெரிகிறது.
1.வேதனைப்படுபவர்கள் வேதனைப்படுத்துபவர்கள் இரண்டு பேர் உணர்வையும் நாம் நுகர்கின்றோம்
2.வேதனைப்படுபவர் மீது நான் பிரியமாக இருந்தால் இப்படிச் செய்கிறான் பார்… என்று அவரின் வேதனையை நுகர்கின்றோம்
3.வேதனைப்படுத்துவோரைப் பார்த்தபின் உலகத்திற்கே தீங்கு விளைவிக்கின்றான் என்று
4.இந்த இரண்டையுமே நமக்குள் வளர்க்கின்றோம்.

இரண்டையும் நுகர்ந்து நம் எண்ணத்துடன் சேர்த்து உடலுக்குள் சேர்க்கும் பொழுது இது ஒரு பகுதியில் வளரும் அது ஒரு பகுதியில் வளரும்.

அவர்களுக்குள் அங்கே எப்படிப் பகைமையானதோ அதே போன்று பகைமை ஊட்டும் அணுக்களே நம் உடலில் விளையும். எதிரிகளைப் போன்று உடலுக்குள் அந்த இரண்டும் சண்டை போட ஆரம்பிக்கும்.

1.வீட்டிற்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா…? சமையல் செய்ய முடியுமா…?
2.வேறு எந்த வேலையையும் சீராகச் செய்ய முடியுமா…?
3.அந்த மாதிரி நம் உடலுக்குள் சண்டை நடக்கும்.

இப்படி எல்லாம் ஆனால் நமக்குள் வேதனையும் நோயும் வருகின்றது என்று தெரிகிறது. இத்தகைய இருளை எல்லாம் நீக்கியது அந்தத் துருவ நட்சத்திரம். அந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…! – “என்னை நீ ஏற்றுக் கொள்…!”

 

ஓம் ஈஸ்வரா என்றால் நமது உயிர் ‘ஓ’ என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் நுகர்வது அனைத்தையும் ‘ஓ’ என்று ஜீவ அணுவாகக் “கருவாக” உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆகவே நாம் எதைக் கேட்கின்றோமோ… எதைப் பார்க்கின்றோமோ… எதை நுகர்கின்றோமோ… இவை அனைத்தையும் நாம் நுகரப் படும்போது நாம் அந்தந்தக் குணங்களை அறிய முடிகின்றது.

அதை எல்லாம்
1.நமது உயிரோ ஓ… என்று ஜீவ அணுவாக கருவாக மாற்றி விடுகின்றது.
2.அவ்வாறு கருவாக மாற்றி விட்டால் நம் ரத்த நாளங்களில் அது கலந்து விடுகின்றது
3.இதற்கு இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைத்துள்ளார்கள்.

ஏனென்றால் இந்திரலோகம் என்றால் இந்திரீகம்… “ஒரு அணுவின் கருவாக” உருவாக்கும் தன்மை பெற்றது ஆகவே இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

அதே சமயம் நம் உடலுக்குள் அது இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
1.கோழி எவ்வாறு முட்டையை அடைகாத்துக் குஞ்சினை வெளிப்படுத்துகின்றதோ இதைப் போல
2.நாம் நுகர்ந்த உணர்வுகளை நம் உடலுக்குள் நமது உயிர் அடைகாக்கின்றது.
3.அதனுடைய பருவம் வரும் பொழுது அந்த முட்டையை விட்டு வெளி வருகின்றது.

நாம் எந்தக் குணத்தின் தன்மையை நுகர்ந்தறிந்தோமோ அந்த அணுவின் தன்மை வெளிப்படும்போது நமது உயிர் ஈசனாக இருந்து இயக்குவதனால் உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்… இயக்கத்தால் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்றும்… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும்… அதனதன் சந்தர்ப்பத்திற்க்கொப்ப நாம் அறிந்துணர்வதற்கு இவ்வாறு காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் நுகரும் உணர்வுகள் கருத்தன்மை அடைவதனால் அதை இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

1.அந்தக் கருமுட்டைக்குள் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு கருவானதோ அது அணுவாக மாறுகின்றது.
2.எந்த குணத்தின் தன்மையோ அதனுடைய அணுவாக உருவாக்கப்படும் போது அதனுடைய இயக்கம் ஈசனே.
3.அதில் துடிப்பின் நிலை வரும் பொழுது வெப்பம் விஷ்ணுவே
4.அதே சமயத்தில் ஈர்க்கும் காந்தம் வரும் பொழுது லட்சுமி.
5.எக் குணத்தின் தன்மை கொண்டு அந்த அணுவின் தன்மை பெற்றதோ அது பிரம்மம்.
6.அதனின்று வரக்கூடிய உணர்வின் மணங்கள் ஞானம் சரஸ்வதி.

ஆகவே எந்தக் குணத்தின் தன்மையால் அந்த அணு உருவானதோ ஆக அது பிரம்மமாக இருந்து தன் இனத்தை அது உருவாக்கும் என்று பொருள். பிரம்மா உருவாக்குகின்றான், விஷ்ணு வரம் கொடுக்கின்றான், சிவன் அரவணைக்கின்றான்.

ஆக நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இந்த உடலுக்குள் அது அணுவின் மலமாகும் போது சிவலோகம் ஆகின்றது.

உயிர் உருவாக்கப்படும் பொழுது ஈஸ்வரலோகம். அணு கருவாகும் பொழுது இந்திரலோகம் அணுவாகும் போது பிரம்மலோகம் அது தன் இனத்தை உருவாக்கும் என்று பொருள்படும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள். அதன் உணர்வின் மலம் உடலாகும் போது சிவலோகம்.

இதுதான் “ஓம் ஈஸ்வரா குருதேவா…! கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டருள்வாய் குருதேவா…!”

நீ எப்படி ஒளியாக நின்று உணர்வின் தன்மை அணுவாக மாற்றுகின்றாயோ இதைப் போன்று
1.நீ உயிராக நின்று ஒளியாக இருப்பது போல் என் உணர்வின் தன்மை தெளிவான ஒளியான நிலைகளில் எனக்குள் உருவாக வேண்டும்.
2அந்தக் கருணை உன்னில் வர வேண்டும் என்பதைத்தான் நமது உயிரான ஈசனிடம் வேண்டிப் பாடுவது.

அது தான் “ஓம் ஈஸ்வரா…” எடுப்பது (சுவாசிப்பது) எல்லாவற்றையும் உருவாக்குகின்றாய் “கருணைஸ்வரூபா…”
1.என்னை கருணை கொண்டு ஏற்றுக் கொண்டு
2.நான் எடுக்கும் நல்ல எண்ணங்களை அந்த அணுவின் தன்மையாக உருவாக்குகின்றாய்
3.ஆகவே நீ என்னை ஏற்றுக் கொள்…! என்று தான் பொருள்.

ஓம் ஈஸ்வரா குருதேவா… கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டு அருள்வாய் குருதேவா.

அப்படி என்றால் இந்த உடலுக்குள் அது உருவாக்கிவிட்டால், எந்தக் குணத்தின் தன்மை உருவாக்கியதோ இவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது…. ஈசனாகவும் இருக்கின்றது. குருவாகவும் இருக்கின்றது.

பூமி வலு இழந்ததற்குக் காரணம்

 

நம் பூமி வளர்ந்த தொடர் நிலையின் பாடத்தில் நம் பூமியில் தோன்றிய உயிரணுவின் தாவர வர்க்க நிலையையும் அதிலிருந்து ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தோன்றிய தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன்.

அந்நிலையில் ஓடுகள் கனத்து நத்தை போன்றும் ஆமை போன்றும் தோன்றிய ஜீவ அணுக்களின் வளர்ச்சி நிலை பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனது.

அதன் பிறகு இப்பூமியின் முதல் பிரளய நிலையில் இருந்து ஜீவ உயிரணுக்கள் விட்ட நிலையில் இருந்து தொடர் நிலையாய் அவற்றின் அமில சக்தியிலிருந்து தோன்றிய உயிரணுக்களின் தன்மையையும்… முதல் பிரளய நிலைக்குப் பிறகு தான் நம் பூமிக்கு இன்று பொக்கிஷமாய் உள்ள வட துருவ தென் துருவ நீர்நிலைகள் பெறும் சக்தி கொண்ட நிலையையும் இதன் தொடர் நிலையிலேயே விளக்கிடுவேன்.

இப்பூமி ஒரு மண்டலம். இப்பூமியில் தோன்றி வளர்ந்திடும் உயிரணுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மண்டலம்.

நம் உடலுக்கு நம் பழக்க வழக்கப்படி ஒரே மாதிரியான உணவு நிலைகளை உண்டு வாழ்ந்திடும் பக்குவத்தில்… நாம் உண்ணும் உணவில் மாற்றம் கொண்டால் நம் உடல் என்னும் இம்மண்டலம் ஏற்காமல்… எப்படி வாந்தியாகவோ அல்லது வாயுவாகவோ மற்ற நிலையில் பல இன்னல்களை இம் இண்டலத்தின் மையமான நம் வயிற்றில் வலியும் மற்றத் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

அதிலிருந்து நம் உடல் மண்டலம் சரிப்பட்டுப் பழைய நிலையில் வருவதற்குச் சில நாட்கள் ஆகின்றன… அல்லது அதன் தொடர் நிலையில் ஒவ்வொரு தொந்தரவுகளும் ஏற்பட்டு நம் ஆரோக்கிய நிலையே மாறு கொள்கின்றது.

இந்நிலை போன்றுதான் மண்டலங்களின் ஒவ்வொரு நிலைக்கும் அதன் மாற்ற நிலை வருகின்றது.

பிரளயம் ஏற்படுவதுவும் இச்சுழற்சியின் நம் மண்டலத்துடன் எம் மண்டலத்தின் தாக்குதல் ஏற்படுகின்றதோ அதன் நிலை ஏற்காமல்… அதிலிருந்து பல மாற்றங்கள் ஏற்படும்.

1.நம் உடல் மண்டல நிலையில் ஆரோக்கிய நிலை கல்லைத் தின்றாலும் ஜீரணிக்கும் நிலை போலவும்
2.எதைச் சாப்பிட்டாலும் ஜீரணித்து விடும் நிலையும் கொண்ட ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட மண்டல மனிதனாய் உள்ள நிலையில்
3.உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியினால் மற்றத் தீய அணுக்கள் வந்து நம் ஆரோக்கியத்தை தாக்கிடாது.
4.அந்நிலை போல் நம் பூமி மண்டலத்தின் ஆரோக்கிய நிலை இருந்திட்டால் இப்பிரளய நிலையிலும் சக்தி கூடும்.

சூரியனைத் தாண்டிக் கேது செல்லும் நிலையிலும் நம் பூமியின் நிலை ஆரோக்கியமாய் இருந்திட்டால் அவற்றின் தாக்குதலை நம் பூமி ஏற்காது.

நம் பூமியில்தான் இன்று நம் செயற்கைக்காக பூமியின் பொக்கிஷத்தையே பிரித்தெடுத்து ஆரோக்கியம் குன்றிய பூமியாக நாம் செய்து வைத்துள்ளோமே…!

இந்நிலையில் ஏற்படும் இயற்கைக்கு நாம் தான் பொறுப்பு ஆகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
1.துருவத்தின் ஆற்றலைப் பெற்று ஒளியின் சரீரமாக இருப்பவன் அகஸ்தியன்.
2.இருளை நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வை எடுத்து ஒளியாக மாறிவன் தான் அவன்.

அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வுகளை உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கப்படும் போது உங்களுக்குள் என்னென்ன வாசனைகள் எல்லாம் வருகிறது…? என்று பாருங்கள்.

ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி
1.பச்சிலை வாசனைகள் வரும்… ரோஜாப்பூ மணம் வரும்
2.தீமை நீக்கிய… விஷத்தை நீக்கிய… மூலிகைகள் வாசனைகள் வரும்.

ஏனென்றால் அந்த அகஸ்தியனைப் பற்றிச் சொல்லப்படும் போது உங்கள் நினைவாற்றல் அவன்பால் செல்லும் போது காற்றிலிருக்கக்கூடிய பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த உணர்வலைகள் உங்களுக்குள் வந்து சேரும்.

சிலரால் அந்த மணத்தை அறிய முடியவில்லை என்றாலும் கூட அதை நுகரும்போது உணர்ச்சிகளால் அறிய முடியும். புது விதமான உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலப்பதும் உடலில் ஊடுருவுவதையும் காணலாம்.

1.சிலர் மணத்தால் அறியலாம்
2.சிலர் உணர்வால் அறியலாம்
3.சிலர் உணர்ச்சிகளால் அறியலாம்

இது போன்ற அகஸ்தியனின் உணர்ச்சிகளை நம் உடலில் உள்ள இரத்தத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுது அது இயக்கச் சக்தியாக மாறும். அதைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளும் மீண்டும் மீண்டும் வரும்.

உதாரணமாக ஜாதகக்காரனோ ஜோசியம் பார்ப்பவன் சொல்வதையோ நாம் கேட்டுப் பதிவாக்கி விட்டால் மீண்டும் அது தான் இயக்குகின்றது.

அதே போல் தீமையை நீக்கிய அந்த மெய் ஞானி தன் உணர்வை ஒளியாக மாற்றிய அந்த உணர்வுகளை நாம் பதிவாக்கி ஒவ்வொரு நிமிடமும் அதை மீண்டும் மீண்டும் எண்ணினால் அது நமக்குள் இயக்கத் தொடங்கும்.

கஷ்டத்தையோ நஷ்டத்தையோ பார்க்கும்போதெல்லாம் இது போல் எண்ணும் பழக்கம் வந்துவிட வேண்டும்.
1.கஷ்டத்தைக் கேட்டு முடிந்ததும் ஈஸ்வரா… என்று
2.நம் புருவ மத்தியில் எண்ணி உடனே அதை நிறுத்திவிட வேண்டும்.

மற்றவர்களிடம் “என்னிடம் கஷ்டத்தைச் சொல்லாதே…” என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அப்படி வேகமாகச் சொல்லி விட்டால் இந்த உணர்வுகள் அவருக்குள் இயக்கப்பட்டு நமக்கு எதிர்மறையாக வரும்.

இவர் எதையோ செய்து கொண்டிருக்கின்றார்… ஏதாவது சொன்னால் கேட்க மாட்டார்…! இவருக்கு மட்டும் என்ன…? ஒரு காலத்தில் அவருக்குக் கஷ்டம் எதுவும் வராதா…? என்று நம்மைப் பற்றிக் கூடிப் பேசுவார்கள்.

இப்படி நான்கு பேர் கூடிப் பேசினால் அது நமக்குள் பகைமை ஊட்டும் உணர்வாக ஊடுருவி நம் நல்ல உணர்வுகளை மாற்றிவிடும். ஆகவே மற்றவர் கஷ்டத்தைச் சொன்னாலும் நம் செவியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலிமையாக்கி உடலுக்குள் போகாமல் தடுக்க வேண்டும். அது தான் முக்கியம்.

பின்… அவர்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி
1.துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியால் நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்
2.உங்கள் வியாபாரம் செழிக்கும் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நலமும் வளமும் பெறுவீர்கள் என்று
3.அவர்கள் உணர்வு நமக்குள் வராதபடி மாற்றியமைத்துச் சொல்லாகச் சொல்லப்படும் போது
4.அவர் கஷ்டத்தை நீக்கும் நிலை ஆகிவிடுகின்றது.

ஜோதிடம் சொல்பவன் உங்களுக்கு ஏழரை நாட்டான் பிடித்திருக்கின்றான் என்று சொன்னால் அதைப் பிடித்துக் கொள்கிறீர்கள்.

அதன் பின் நீங்கள் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் “போகும் போதே இந்தச் சந்தேகம் வரும்…” வியாபாரம் செய்தால் நஷ்டம் ஆகி விடுமே…! என்ன செய்வது…? பணத்தை பேசாமல் வைத்துக் கொள்வோம்.

மாமன் மச்சானைப் பார்க்கக் கூடாது… நல்ல நண்பர்களாக இருந்தாலும் கூட ஏமாற்றி விடுவார்கள்… ஏழரை நாட்டான் பிடித்திருப்பதால் ஒதுங்கி நில்…! என்று இப்படிப்பட்ட பதிவு தான் நம்மை இயக்குகிறது.

தக்க நேரத்தில் உதவிக்கு வரக்கூடிய நல்ல நண்பனாக இருந்தாலும் கூட அதைப் பார்க்க விடாதபடி இப்படித் தடையாகி விடும்.

ஆக மொத்தம் ஜாதகக்காரர்கள் சொல்வதைப் பதிவாக்கி அந்த பதிவின் நிலைகளிலேயே தான் இயங்கி நாம் வாழ்கின்றோம். இது போன்ற சாஸ்திர நிலைகள் மனிதனுக்கு இல்லை.

1.ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளை நமக்குள் பெறும் பொழுது தான் இருளை நாம் போக்க முடியும்.
2.வெறும் வான இயல் சாஸ்திரத்தைப் (ஜாதகம்) பார்த்து என்ன பலன்…?

மனிதனில் உயர்ந்த அந்த அகஸ்தியன் இருளை நீக்கி ஒளியாக இருக்கின்றான். பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தான்… ஒளியாகப் பெருக்கும் உணர்வுகளை வளர்த்தான். பேரருளைப் பெற்றுப் பேரொளியாக மாறி இன்றும் ஒளியாக இருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் வானிலிருந்து பருகினால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும் அடக்க முடியும்… ஒளியாக ஆக்கவும் முடியும்.

“கேதுவின் கிரகணத்திற்குப் பின்” பூமியில் மாற்றம் ஆரம்பித்தது

 

16.1.1980 ஆம் தேதியில் ஏற்படும் சூரிய கிரகணத்தில் நம் சூரியனைத் தாண்டி “கேதுவின் ஓட்டம் செல்வதினால்” கேது மண்டலத்தில் உள்ள விஷ அணுக்கதிரின் தாக்குதல் நம் பூமிக்குத் தாக்கப் போகின்றது. கேதுவின் தன்மையில் விஷத்தன்மை அதிகம்.

நம் பூமியில் எப்படி சில தாவரங்கள் விஷத்தன்மை கொண்டதாகவும் சில நல்ல தாவரங்களாகவும் வளர்கின்றனவோ அவை போல் இம்மண்டலங்களின் வளர்ச்சியிலும் ஒவ்வொரு தன்மையில் வளர்கின்றது என்றேன் அல்லவா…?

கேது மண்டலம் இல்லாமல் இருந்திருந்தால் பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையில் இவ்விஷ அமிலமும் நிறைந்தே சுற்றிக் கொண்டிருக்கும்.

நட்சத்திர மண்டலங்களிலும் இவ்விஷமான அமில சக்தி கொண்ட பல நட்சத்திர மண்டலங்கள் உண்டு.

எண்ணத்தில் கூடக் கேதுவின் சக்தியை எண்ணிலடங்கா வண்ணம் நச்சுத்தன்மை கொண்ட அமில சக்தி நிறைந்த மண்டலமாய் கேது மண்டலம் வளர்ந்துள்ளது.

சூரியனின் ஈர்ப்பிற்கு இந்த 48 மண்டலங்களின் சுழற்சியுடன் கூடிய மண்டலம் தான் கேது மண்டலமும்.
1.கேதுவின் கிரகணம் பிடிப்பதினால் நம் பூமியின் மேல் இதன் அதன் ஈர்ப்பு சக்தி தாக்கி
2.நம் பூமியின் இயற்கையுடன் இவ்விஷ அணுக்களின் தாக்குதல் பட்டு
3.அத்தாக்குதலினால் நம் பூமியின் நிலையே சிறிது இறக்கம் (கீழ்) இறங்கப் போகின்றது.
4.அந்நிலையில் இருந்து சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட தூர விகிதமும் அதிகப்படப் போகின்றது.
5.இதிலிருந்து இன்று இப்பூமிக்குக் கிடைக்கும் சூரியனின் உஷ்ண அலையின் சக்தி குறைவு கொண்டு குளிர்ந்த நிலை அதிகப்பட போகின்றது.

இந்நிலையின் தொடர் நிலையாலும் நம் பூமியின் “மாற்ற நிலை ஏற்படப்போகும் நிலைக்கு” இக்கேதுவின் நிலை சாதகப்படுத்தி செல்கின்றது.

நல்வழியின் சாதகமல்ல கேதுவின் கிரகணத்தினால்.

நம் முன்னோர்கள்‌ எக் கிரகணம் பிடித்ததோ இந்நிலையில் வாழ என்று தெரிந்தோ தெரியாமலோ செபினர்.
1.நம் பூமி பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு
2.இக்கேதுவின் கிரகணத்தினால் சில தன்மைகளில் மாற்றம் கொள்ளப் போகின்றது.

சுழன்று கொண்டே உள்ள இம்மண்டலங்களின் ஓட்டத்தில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையிலும்… ஒன்றுக்கொன்று ஒன்றின் சக்தியை ஒன்று அதன் ஓடும் நிலையில் பார்த்துக் கொண்டே செல்லும் நிலையிலும்… இப்பாடத் தொடர்ச்சியின் ஒவ்வொரு மண்டலத்தின் வளர்ச்சியின் நிலையில்… பல ஆண்டுகள் ஒன்று போல் உள்ள இயற்கையின் நிலையில் மாற்றம் கொண்டு…
1.இயற்கையில் உள்ள அம்மண்டலத்தின் சக்தியே
2.மற்ற மண்டலத்திலிருந்து அதன் ஈர்ப்புப் பட்டவுடன் மாறும் நிலை கொள்கின்றது.

எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஈஸ்வரா…!

 

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா.

இந்த உயிர் உடலில் இல்லை என்றால் நாம் இருக்க முடியுமா இந்த உயிர் இல்லை என்றால் இந்த உடலில் நாம் இல்லை. “உயிரின் இயக்கமாகத் தான் நாம் இருக்கின்றோம்…”

உயிர் பூமியிலே தோன்றி புழுவில் இருந்து பல கோடிச் சரீரங்களில் பட்சியாக பறவையாக மிருகமாக பாம்பாக தேளாக யானையாக புலியாக நரியாக நாயாக எத்தனையோ உடல்கள் பெற்ற நிலையில்
1.ஒவ்வொன்றிலும் தன்னைக் காத்துக் கொள்ள அதன் வழி கொண்டது… காத்திடும் உணர்வே விளைந்தது.
2.அந்தக் காத்திடும் உணர்வு கொண்டு மனிதனாக உருவாக்கியது உயிர்.

ஆகவே எத்தகைய தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்றும்
1.தீமையிலிருந்து விடுபடும் நிலையாக என் உடலாக எப்படி ஆக்கினாயோ
2.இந்தத் தீமையை நீக்கிய உணர்வின் நினைவெல்லாம் எனக்குள் வர வேண்டும்.

நான் எத்தனை துன்பங்களை பட்டேனோ… “துன்பங்களிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றேனோ” இதைப் போல எனது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள்
1.எனக்குள் துன்பத்தையும் துயரத்தையும் வேதனையும் வெறுப்பையும் ஊட்டாது
2.அந்த நினைவெல்லாம் எனக்குள் துன்பத்தை நீக்கிய உணர்வின் சக்தியாக நான் பெற வேண்டும்.

அதைத் தான் “எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று சொல்வது…”

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ துன்பத்தைக் கடந்து என்னை மனிதனாக உருவாக்கினாயோ “அந்த நினைவெல்லாம் எனக்குள் வரவேண்டும்” என்று தான் நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் என்று பாடலைப் பாடுவது.

அதாவது
1.தீமைகளை நீக்கிடும் இந்த உடலான நிலைகள் இருந்து அந்த நினைவெல்லாம்
2.தீமைகளை நீக்கிடும் அந்த அருள் சக்தியாக என்னிலே வளர வேண்டும் என்று நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும்

உலகை எல்லாம் அறியக்கூடிய சக்தியை நீ எப்படிக் கொடுக்கின்றாயோ நான் நுகர்ந்த உணர்வை எனக்குள் அறிவிக்கின்றாயோ இதைப்போல
1.உன் உணர்வின் தன்மை எதுவோ உன் ஒளியின் தன்மை எதுவோ
2.என் உடலின் அணுக்களும் அவ்வழியே ஆக வேண்டும் என்று
3.எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் என்று உயிரிடம் வேண்டி கேட்கின்றோம்

நான் அதைச் செய்வேன். இதைச் செய்வேன் என்ற நிலையில் எண்ணம் கொண்டு உண்மைகளை உணராது பல எண்ணங்களில் தனது ஆசையைக் கூட்டினால் அதன் வழி வளரப்படும்பொழுது
1.எனக்குள் தீமை வராது தடுத்துக் கொள்ள ப
2.ல நினைவுகள் நமக்குள் வராதபடி நீயே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதைத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாத பரிபக்குவமான நிலைகளை நான் பெற எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா…! என்று நாம் வேண்டுகின்றோம்.

இவ்வாறு எண்ணும்பொழுது நமது உயிர் ஓம் நமச்சிவாய இத்தகைய நிலைகளை நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

நாம் பக்குவ நிலை பெற வேண்டும் என்று ஏங்கினால் அந்த உணர்வின் அணுவாக்கி அதன் உணர்வை உணவாக்கி அந்த உணர்வின் தன்மை நாம் நுகரப்படும் பொழுது
1.சிந்தித்துச் செயல்படும் திறனும்
2.தீமையிலிருந்து விடுபடும் உணர்வும்
3.நாம் பக்குவப்படும் நிலையும் நமக்குள் உருவாகின்றது.

ஆகவே தான் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய். ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டச் சொல்கிறோம்.

நாம் எண்ணும் உணர்வின் தன்மை ஓம் நமச்சிவாய என்று உடலாக்கினாலும் அதன் உணர்வின் தன்மை அணுவின் கருவாக அணுவாகும் போது… அது உணவுக்காக உந்தப்படும் பொழுது… அந்த நினைவு பக்குவப்படும் உணர்வின் எண்ணங்கள் எனக்குள் உருவாகி… அதன் வழி “என்னைக் காத்திடும் அந்த அருள் நிலை பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று நாம் எதை எண்ணுகின்றோமா அதை நமது உயிர் உருவாக்குகின்றது என்று நாம் அறிவதற்குத் தான் ஈசனிடம் இந்த உணர்வினை வேண்டுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்ற எண்ணத்துடன் தான் நாம் தியானம் செய்கின்றோம்.

அம்மா அப்பா அருளால் என்கிற பொழுது தாய் தந்தையரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும்.

ஏனென்றால் தாய் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையையே எண்ணி நம்மை வளர்த்தது. குழந்தையாகப் பிறந்த பின் அந்த அறியாப் பருவத்தில்
1.தெரியாமல் அசிங்கமான பொருளைத் தொடச் சென்றாலோ
2.நெருப்பு என்று அறியாமல் தொடச் சென்றாலோ
3.அதிலிருந்து காப்பாற்றக்கூடிய எண்ணமாக அவர்கள் உணர்வுகளைப் பதிவு செய்து நம்மைக் காக்கின்றார்கள்.

அதே போன்று கல்வியில் நாம் சிறந்து இருக்க வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் நமக்குள் பதிவு செய்கின்றார்கள்.

அவர்கள் பேசிய பேச்சுகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் அலைகளாகப் பரவி வைத்துள்ளது. அதே சமயத்தில் அவர்கள் எண்ணிய எண்ணம் நமக்குள் பதிவாகி ஊழ் வினையாகவும் இருக்கின்றது.

நாம் என்ன குறும்புத்தனம் செய்திருந்தாலும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு
1.என் குழந்தை நன்றாக இருக்கவேண்டும்
2.அவன் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணிய
3.இந்த உணர்வுகள் அவர்கள் உடலிலும் ஆழமாகப் பதிந்து இருக்கின்றது.
4.அந்த உணர்வலைகள் பூமியிலும் படர்ந்து கொண்டிருக்கின்றது
5.அதே சமயத்தில் நமக்குள்ளும் அது பதிந்து இருக்கின்றது

இப்படிப் பதிந்துள்ளதைத் தான் நாம் அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். இப்படி எண்ணினால் உடனே அந்தச் சக்திகளை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகிறது.

எப்படி…?

1.நம் உடலில் இருக்கக்கூடிய விலா எலும்பு பக்கம் இருக்கக்கூடிய காந்த சக்தி (மேக்னட்) அந்த அலைகளைக் குவித்துக் கொடுக்கின்றது.
2.அதைக் குவித்தவுடன் நமது உயிரான மேக்னட் இழுக்கின்றது.

உயிருக்குள் பட்ட உடனே நாம் எதை எண்ணினமோ அந்த உணர்வு ஓ…ம் பிரணவம் ஜீவன் உண்டாகின்றது. அது தான் ஓ… என்பது. அந்த உணர்வின் சத்து நம் உடலாக இணைந்து விடுகின்றது… ஓம் நமச்சிவாய.

நாம் எண்ணக்கூடியது அனைத்தும் நமக்குள் ஜீவனாகி அந்த சக்தி நம் உடலாகின்றது. ஏற்கனவே அம்மா அப்பா பதிவு செய்த இந்த உணர்வுகள் உடலில் இருப்பதால் அது உடலுடன் ஐக்கியமாகச் செய்கிறது.

நலம் பெற வேண்டும் என்று சொன்ன அவர்களின் உணர்வின் சக்தி நமக்குள் வலு கூடுகின்றது. அம்மா அப்பா அருளால் என்று எண்ணி அதைச் சொல்லும் பொழுது அந்தத் தகுதி நமக்குக் கிடைக்கின்றது.

அதே போன்று ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்கிற போது வாழ்க்கையில் எதையெல்லாம் நாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ஓ… என்று பிரணவமாகி ம்… என்று உடலாக மாறுகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து எண்ணங்களுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

1.நம் தாய் தந்தையர் நாம் நலம் பெறுவதற்காக எத்தனை உணர்வுகளை எடுத்தார்களோ
2.ஊழ் வினையாக நமக்குள் பதிவு செய்த அந்த உணர்வுகளை மீண்டும் நாம் எண்ணும் பொழுது
3.அந்த வலுவான சக்தியை நாம் பெறுகின்றோம்.

அதே போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நோக்கத்தில்தான் நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகின்றேன்.

அந்த மகரிஷிகளை எண்ணி குரு வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் முதலில் எண்ணுகின்றேன். அது உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நினைவுடனே பேசுகின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று உயிரை எண்ணி… அம்மா அப்பாவை எண்ணி… அவர்கள் நாம் நலம் பெற வேண்டும் என்று சொன்ன அந்த உணர்வின் தன்மையை முன்னணியில் கொண்டு வந்து அவர்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.நாம் நன்மை பெற வேண்டும் என்று உளளப்பூர்வமாக அவர்களுக்குள்
2.இந்த உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து ஜீவனூட்டி
3.அவர்கள் பெற்ற அருள் ஞான நிலை பெற வேண்டும் என்று எண்ணும்போது
4.நம் ஆன்மாவை அது வலுக் கொண்டதாக மாற்றுகின்றது

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண உணர்வைக் கூட்டும் போதெல்லாம் அதை நாம் பருகுவதற்கு நம் அன்னை தந்தையின் அருள் உறுதுணையாக இருக்கும்.

அதற்குத் தான் இதைச் சொல்லிக் கொடுப்பது.

“துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபணுவை” நாம் பெற வேண்டும்

 

விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் செல்லும் பொழுது கடவுளை இப்பொழுது நீ காட்ட வேண்டும் என்று கேட்கின்றார்,

கடவுளைக் காட்ட முடியாது… நீ உணரலாம் என்று தான் அப்போது இராமகிருஷ்ணர் சொன்னார்…!
1.நீ நுகர்வது உன் உடலுக்குள் நின்று… அது உள் நின்று இயக்கும் கடவுள்தான்
2.அந்த உணர்ச்சியை ஊட்டுவது கடவுள்.
3.கடவுளை நீ உணர்ச்சி மூலமாகத் தான் பார்க்க முடியும்… நீ கண்ணில் பார்க்க முடியாது என்றார்.

அப்பொழுதுதான் விவேகானந்தர் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய பாடத்தையே திருப்பி எடுத்து இவர்களுடைய சுகபோகங்களுக்கு இப்பொழுது மாற்றிக் கொண்டு உள்ளார்கள்.

ஒவ்வொரு ஞானிகளும் தத்துவத்தை உரைக்கின்றனர்.
1.ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக எண்ணு
2.பண்பு கொண்ட நிலைகள் உயர வேண்டும் என்று எண்ணு அந்த உணர்வே உனக்கு வழிகாட்டும்
3.அதன் வழியில் உனக்கு நல்வழி காட்டி அன்பை வளர்க்கச் செய்யும்… கடவுளை நீ அங்கே பார்க்கலாம்.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அதே உணர்வு உனக்குள் உள் நின்று இயக்குகின்றது. அது கடவுளாக உன் எண்ணத்தைச் சீர்படுத்துகின்றது… நல்வழி காட்டுகின்றது பகைமை உணர்வுகளை மாற்றுகின்றது… பகைமையற்ற வாழ்க்கையை வாழுகின்றது.

தன் குடும்பத்தில் எப்படிப் பற்று வைக்க வேண்டும் என்றும் அரசியல் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் பக்தி மார்க்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் ஆலயத்தில் நீ எப்படி பண்புகளை சேர்க்க வேண்டும் என்றும் விவேகான்ந்தர் சொன்னார்.

அதையெல்லாம் படிக்கின்றார்கள் ஆனால் மூலையில் போட்டு வைத்து விடுகின்றார்கள்.

1.கோயிலுக்குச் சென்றால் கடவுளை நீ எப்படி வணங்க வேண்டும்…?
2.தெய்வத்தை நீ எப்படிப் பார்க்கின்றாய்…?
3.கடவுளை ஏப்படி நேசிக்கின்றாய்…?
4.எதன் வழி கடவுள் உன்னை இயக்குகின்றார்…? என்று தெளிவுறக் கூறியுள்ளார் விவேகானந்தர்.

அதையாவது நாம் இன்று எடுத்துள்ளோமா என்றால் இல்லை…!

அவரைப் பற்றிய புத்தகங்கள் பல வரும்… அதன் வழி பிழைப்புக்கு. விவேகானந்தரைப் பற்றிப் பெருமையான பேச்சுகளைப் பேசுவோம் ஆனால் உண்மை நிலைகளில் நாம் கடைபிடிக்கும் தன்மையை இழந்துள்ளோம்.

ஆகவே விஞ்ஞான உலகில் இன்று எங்கோ சென்று விட்டது. மரபு அணுக்களை வைத்து எப்படி எப்படிப் புதிது புதிதாக உருவாக்கலாம் என்று.

ஆனால் தீமையை அகற்றிய உணர்வின் தன்மை
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபின் அணுவை நாம் நுகர்ந்தால்
2.அந்த உணர்வினை நமக்குள் உருவாக்கிப் பகைமையை மாற்றி
3.பிறவியில்லா நிலைகள் அடைய முடியும் என்று விநாயகர் தத்துவத்தைக் கூட்டினான் அன்று அகஸ்தியன்.

அந்த மரபணுவை நாம் பெற முடியும்… ஏன் உங்களுக்கு இந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது…?

இந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் இந்த பௌர்ணமி நாளன்று ஆன்மாக்களை மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்படி சொல்கிறோம்.
1.மூதாதையர்கள் அங்கே செல்லப்படும் பொழுது “நம்மைக் காத்திட வேண்டும் என்ற மரபணு” நம் தீமையை அகற்றி நம்மைக் காக்கும்.
2.ஒளி நிலை அடைந்த நிலைகள்… பாசத்துடன் பற்றுடன் வளர்ந்த இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

ஆனால்… சுட்ட சாம்பலைக் கரைத்து விட்டு மோட்சத்திற்கு அனுப்பிவிட்டேன் என்று விநாயகர் கோயிலுக்குச் சென்று மோட்ச தீபம் காட்டிவிட்டு வருவது அல்ல.‌

மனித உடலுக்குள் வந்த பகைமை உணர்வை மாற்றிவிட்டு ஒளி என்ற உணர்வினை உருவாக்கி அந்த ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளான் துருவ நட்சத்திரமாக…!
1.அனைவரும் இதை எளிதில் பெற முடியும்
2.அருள் ஞானத்தை நமக்குள் பெற முடியும்
3.மனிதனுக்குள் வரும் இருளை அகற்ற முடியும்
4.மெய்ப்பொருள் காண முடியும்… இந்த உடலுக்கு பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

ஏதோ சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்.

உணர்வின் அழுத்தத்தால் நுகரச்செய்து உணர்வின் அணுக்களை உங்களுக்குள் உருவாக்கிய நிலை கொண்டு அதை வளர்த்துக் கொண்டால் உங்களில் வரும் பகைமையை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை ஊட்டி, இனி பிறவியில்லா நிலை அடையலாம்,

குடும்பத்தில் பற்றும் பண்பும் ஓங்கி வளர்க்கச் செய்யலாம். பரிவுடன் ஒன்றி வாழச் செய்யலாம். பரிவான நிலைகளில் வாழவும் முடியும். பரிவால் வரும் தீமை அகற்றும் வல்லமையும் பெறுகின்றீர்கள்.

ஆகவே…
1.அந்த அகஸ்தியனின் மரபு அணுக்களைப் பெறுவதற்குத் தான்
2.அன்று விநாயக தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.

கிரகணம்

 

மண்டலத்தில் ஜீவன் தோன்றி வாழ்ந்திடும் கால நிலைக்கு இச்சக்திகள் உருப்பெறவே பல கோடி ஆண்டுகள் ஆகி விடுகின்றன.

இஜ்ஜீவராசிகள் ஊரும் பக்குவம் எம் மண்டலத்தில் தோன்றியதோ அம்மண்டலத்தின் வளர்ச்சியுடனே இதே நிலையில் தான் பல ஆயிரம் கோடி ஆண்டுகளானாலும் சுழன்று கொண்டே இருக்கும்.

இம்மண்டலத்துடன் இதன் ஈர்ப்பு சக்தியின் அமில சக்தி கூடும் நிலையில் தான் இம்மண்டலத்தில் வளர்ந்திடும் மற்ற சக்திகளும் கூடுகின்றன.

இந்நிலையில் சுழலும் மண்டலத்திற்கு “மாறிக் கிடைக்கும் சக்தி” எப்பொழுது எல்லாம் ஏற்படுகின்றது…?

இன்று நம் சூரியனைச் சுற்றிச் சுழன்றிடும் 48 மண்டலமுமே சூரியனைச் சுற்றிவரச் சில காலங்கள் கொள்கின்றன. இந்நிலையில் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்றெல்லாம் சூரியனைச் சுற்றி வரும் இக்கோளங்கள் சூரியனுக்கும் நம் பூமிக்கும் மத்தியில் ஓடும் பொழுது குறுக்கே வருகின்றது.

அந்தச் சமயத்தில்
1.சூரியனின் ஒளிக்கதிர் வீச்சுகள் நம் பூமிக்கு நேராய்த் தாக்கிடாமல்
2.சூரியனைத் தாண்டி எக்கோளம் செல்கின்றதோ அந்தக் கால நிலைக்கொப்ப
3.நம் பூமிக்கு எப்பொழுதும் கிடைத்திடும் ஒளி அலையின் மாற்றத்தினால்
4.சூரியனைத் தாண்டிச் செல்லும் அக்கோளத்தின் மறைப்பினால்
5.நம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் கலந்துள்ள இவ்வொளி அலைகளை
6.இரவில் உள்ள நிலை போல் குளிர்ச்சி கொண்டு மேகங்களாய் கனம் பெற்று
7.எம்மண்டலம் தாண்டிச் செல்கிறதோ அதிலிருந்து வீசிடும் அணுக்களின் சக்தி நிலை கொண்டு
8.பூமியின் சக்தி நிலை இரண்டு நிமிடம் ஒரு நிமிடம் அக்காலக் கெடு நிலையிலேயே “பூமியின் சக்தி நிலையிலும் மாற்றம் கொள்கின்றது…”

நம் பூமிக்கு மட்டும் கிரகணம் பிடித்துத் தாக்கும் நிலை வருவது என்பதல்ல, எல்லா மண்டலங்களுக்குமே இந்நிலையின் தாக்குதலில் “வளர்ச்சியும் உண்டு… வீழ்ச்சியும் உண்டு…!”

ஒவ்வொரு மண்டலத்திலும் அது அது சேமித்த தனித்தனி சக்தி நிலை உண்டு.

1.ஒரு மண்டலத்தைத் தாண்டி ஒரு மண்டலம் செல்லும் நிலையிலும்
2.அது அது சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பு மற்ற மண்டலத்தின் செயலுடன் தாக்கும் நிலையிலும்
3.ஒவ்வொரு மண்டலத்திற்குமே பல காலங்கள் ஒரு நிலையில் சேமித்த சக்தியின் தன்மை
4.இம்மண்டலங்களின் சுழற்சியில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையில் அது நிமிடக் கணக்காய் இருந்திட்டாலும்…
5.அதன் ஈர்ப்பில் இதன் ஈர்ப்பின் நிலையும் மோதுண்ட நிலையில்
6.இவ்விரண்டிற்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி மண்டலத்திலும் அதன் அமிலத்தன்மை மாறு கொள்கின்றது.
7.அதிலிருந்து ஒவ்வொரு மண்டலத்திற்குமே அதனுடைய இயற்கைக் குணத்தில் சில மாற்றங்கள் வருகின்றன.

சூரியனைத் தாண்டி ஓடும் மற்ற மண்டலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் தாண்டி ஓடும் சக்தியினால்… “எம்மண்டலம் சூரியனைத் தாண்டி ஓடுகின்றதோ” அம்மண்டலத்தின் குண நிலை கொண்ட இயற்கை நிலையின் தாக்குதல் “நம் பூமிக்கு ஏற்பட்ட அதிலிருந்து” இயற்கையிலேயே நற் சக்திகளும் வளர்கின்றன… பல தீய அணுக்களும் வளர்கின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மிருக நிலையிலிருந்து என்று மனிதனாக ஆனோமோ அன்றே “முழு முதற் கடவுள் என்று மனிதனைப் பாடியுள்ளார்கள்…” சிருஷ்டிக்கும் வன்மை கொண்டது தான் மனித உணர்வின் எண்ணம்.

அத்தகைய ஆற்றல் பெற்ற நாம்… நம் நினைவை இழந்து விடாதபடி இதன் எண்ணத்தைக் கொண்டு ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நமக்குள் தியானத்தின் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

ஞானிகள் அருள் வாக்குடன் கலந்து அவர்களுடைய அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்த்து
1.நம்மை அறியாது சுவாசித்த சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் பயம் வேதனை இதைப் போன்ற குணங்கள்
2.நமக்குள் நோயாக உருவாக்கச் செய்யும்… சிந்தனைகளைக் குறைக்கச் செய்து கொண்டிருக்கும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி தியானத்தை மேற்கொண்டு இருளை நீக்கி ஒளியின் சரீரம் பெறுவோம். ஞானிகள் காட்டிய அந்த நிலையை நாம் எல்லோரும் அடைவோம்.

விண்ணிலே தோன்றியது தான் உயிர்.
1.அருள் ஒளியின் சுடராக தீப வழிப்படி விண்ணுக்குச் செல்லும் தகுதி பெற்ற நாம்
2.இந்த உடலில் இருக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு
3.அந்த மெய் ஒளியுடன் ஒளியாக… உயிருக்குள் உணர்வு அனைத்தையும் ஒளியாகச் சேர்த்து
4.அழியா ஒளிச் சரீரமாக அதனுடன் இணைந்து விஜயதசமி…
5.பத்தாவது அவதாரமான கல்கி என்ற நிலையை நாம் அடைதல் வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்ட நாம் “ஏழாவது நிலையான” ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணைக்கும் திறன் பெற்றவர்கள்.

ஒருவன் திட்டி விட்டால் தியான வலு கொண்டவர்கள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது
1.அந்த இடைஞ்சல் செய்தவனின் உணர்வுகள் தனக்குள் இயக்காதபடி
2.அதைத் தடுத்து நிறுத்தச் செய்யும்… சிந்திக்கச் செய்யும்.

இவ்வாறு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைச் சேர்த்து நம் உடலுக்குள் விளையச் செய்யும் போது “எட்டாவது நிலை…” உடலுக்குள் விளைந்த பின் உயிருடன் அது சேரும் போது “ஒன்பதாவது நிலை” ஆகின்றது.

ஒருவன் நமக்கு இடைஞ்சல் செய்தான் என்று மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அவன் பேசிய பேச்செல்லாம் நாமும் பேசுவோம். அவருடைய பேச்சு நமக்குள் இயங்காத வண்ணம் தடைப்படுத்துவதற்குத் தான் ஞானியின் அருள் சக்தி இதனுடன் இணத்துச் சேர்க்க வேண்டும் என்று சொல்வது.

அந்த இருளான உணர்வுகளைத் தடைப்படுத்தி அந்த உணர்வை ஞானமாக்கி அந்த ஒளிச் சுடராக ஒளி பெறும் நிலைக்கு இட்டுச் செல்வதால் உயிர் ஒளியாக இருப்பது போன்று அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியாகி உடலை விட்டுச் சென்றபின் தசமி “பத்தாவது நிலை…” கல்கி.

1.உடலுடன் வாழும் போது செடி கொடி தாவரங்கள் விளைய வைத்ததைத் தான் உணவாக உட்கொள்கிறோம்.
2.ஆனால் இந்தப் பூமியிலிருந்து நாம் விண் சென்ற பின்
3.நம் சூரிய குடும்பமான பிரபஞ்சத்திற்கு வெளியே தான் நம் உயிராத்மா செல்கின்றது.

இந்தச் சூரிய குடும்பத்திற்குள் விளைந்த அனைத்தையும் ஒளியின் உணர்வாக எடுத்துக் கொண்டு பிரபஞ்சத்தின் ஈர்ப்பை விட்டு வெளியில் என்றும் பதினாறு என்று செல்லும் நிலையில்
1.மற்ற பேரண்டத்தில் இருவரும் சக்திகளை அந்த விஷத்தன்மையைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக்கி
2.எந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து இதை எல்லாம் பெற்றோமோ
3.அந்த ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் உயர்ந்த சக்திகளை அனுப்பி
4.இந்த சூரிய குடும்பத்திற்கே ஒளி காட்டும் வழியாகவும்
5.பேரண்டத்திலிருந்து வரக்கூடிய உணர்வின் சக்திகளையும் ஒளியாக்கி
6.அந்தப் பேரண்டத்திற்கே வழி காட்டும் உணர்வின் ஒளி அலைகளாக நாம் வளர முடியும்.

அந்த தீபத்தின் வழி செல்வோமேயானால் இது தான் மனிதனின் கடைசி நிலை…! தீப வழி… தீப ஒளி. உயிர் விண்ணிலே தோன்றினாலும் மீண்டும் விண்ணுக்கே ஒளியாகச் செல்கின்றது.

ஞானிகளின் ஆற்றல்கள் காலத்தால் எப்படி மாற்றி அமைக்கப்பட்டது…?

 

காட்டுக்குச் சென்று தவம் இருக்கச் செல்வோரை எல்லாம் வாதாபி என்ற அரக்கனும் அவருடைய சகோதரனும் சேர்ந்து விருந்து கொடுப்பதாகச் சொல்லிக் கொன்று புசித்தவர்கள்.

“விருந்து கொடுப்பது” எங்களுடைய வழக்கம் என்று சொல்வார்கள். அதிலே ஒருவன் ஆடாக மாறி விடுவான். அடுத்தவன் அதை அறுத்துச் சமைத்து இந்த மாமிசத்தைச் சாப்பிட வேண்டும் என்று வந்தவருக்குக் கொடுப்பார்கள்.

சாப்பிட்டு முடிந்த பின் “வாடா வாதாபி” என்றால் வயிற்றைப் பிளந்து வெளி வருவான். இப்படிக் கொன்று… வருவோரை எல்லாம் அவர்கள் சாப்பிட்டுப் பழகியவர்கள்..

அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் போது இதே முறைப்படி அவர்கள் வரவேற்கிறார்கள். அகஸ்தியனோ, “நான் மாமிசத்தை சாப்பிடுவதில்லை” என்கிறான்.

இல்லை…! எங்கள் முறைப்படி விருந்தில் நீங்கள் அதைஸ் சாப்பிட்டுதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றான்.

நாங்கள் வருபவருக்கு மரியாதை செலுத்துகின்றோம், நீங்கள் சாப்பிடுங்கள்…! என்று கூறி வாதாபி ஆடாகப் போய்விட்டான். அறுத்துச் சமைத்து இவனுக்கு கொடுத்தான்.

அகஸ்தியனும் நன்றாக ருசித்து சாப்பிட்டான்…! அகஸ்தியனுக்குத் தெரியும்… தெரிந்ததனால் சாப்பிட்டான்…!

“வாடா வாதாபி” என்கின்றான் அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிப் போய்விட்டான் என்கின்றான் அகஸ்தியன்.

ஆகா… அப்படி ஆகிவிட்டதா…? பாருடா… உன்னைக் கொன்று நான் விழுங்கப் போகின்றேன் என்றான்.

அப்பொழுது அகஸ்தியன் கண்ணிலே பார்த்தான்… அவனை எரித்து விட்டான்.

ஆனால் அதற்கு முன்னாடி தவ யோகிகள் தவம் செய்தவர்களை எல்லாம் இரையாக்கி ரொம்ப பேரைத் தின்றுவிட்டார்கள்.

அப்பொழுது இதற்காக வேண்டி இராமாயணம் மகாபாரதம் எழுதுபவர்கள் சொல்கின்றார்கள், “அகஸ்தியன் கணபதியைத் தொழுது கொண்டு இருந்தான்…” அதனால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று…!

கணபதி என்றால் எது…?
1.இந்த பிரபஞ்சத்தின் உணர்வுகள் அனைத்தையும் கணங்களுக்கு அதிபதி ஆக்கி
2,அவன் எண்ணத்தைக் கொண்டு ஆட்சி செய்து தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்று
3.அதற்குக் “கணபதி” என்று காரணப் பெயரை வைக்கின்றான்.

ராஜாஜி எழுதிய நூலிலும்… கணபதியை வணங்கிக் கொண்டிருப்பதனால், அகஸ்தியனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார்.

கண ஹோமம் செய்தோம் என்றால் உங்களுக்கு எல்லாச் சக்தியும் கிடைக்கும். கண ஹோமம் செய்தால் உங்களுக்கு வல்லமை கிடைக்கும் உங்கள் பாவம் அனைத்தும் நீங்கும். யாரும் ஒன்றும் தீங்கு செய்ய முடியாது என்று “இதற்குக் காரணம் காட்டுவதற்காக” இப்படி எழுதுகிறார்கள். ராஜாஜி படித்தவர் அரசியல்வாதி தான் உலக ஞானத்தைப் பெற்றவர் தான்.

ஆனால் அதே சமயத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பல நூல்களில் வடிவமைத்து உலக ஞானத்தைக் கற்றவர் நேரு.

பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் தான் நேரு. அந்த நிலைகளில் வளர்ந்தாலும் இந்த உலக உண்மையின் உணர்வின் தன்மையை அறிந்தவன்.
1.இது எல்லாம் பொய்… இப்படிச் செயல்படுத்த கூடியது அனைத்தும் பொய்யானது
2.இவையெல்லாம் தவறான செயல் என்று சுட்டிக்காட்டினார் நேரு.

ஆனால் ராஜாஜி ரொம்ப சாணக்கியமாகச் சொல்கின்றார். ராமாயணத்திற்கும் மகாபாரத்திற்கும் ஜீவன் ஊட்டி மக்கள் இதைப் பின்பற்றினால் இப்படி இருக்கும் என்று ஜீவன் கொடுத்தவர் ராஜாஜி… ஆனால் வக்கீல்… வல்லமை பெற்றவர்.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால் இயற்கையின் உண்மையின் நிலைகளைத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

அறியாமை என்ற நிலையில் தன் இனம் என்ற நிலைகள் கொண்டு…
1.இனத்தை பிரித்து வாழும் தன்மை தான் வந்ததே தவிர தன் உயிரை மதித்து நடக்கும்…
2.அருள் ஞானிகள் கூட்டிய நிலைகள் இங்கே வருவதில்லை.
3.அதைத்தான் அன்று சொன்னான் நேரு.

கடவுள் எப்படி இருக்கின்றான் என்ற நிலைகள் கொண்டு… என்னை யாரும் வணங்கிட வேண்டாம் இறந்த பின் என் சாம்பலைத் தூவி… விழிப்புணர்வு வர வேண்டும் என்ற நிலைகளில் விமானத்தில் கொண்டு போய் இதையெல்லாம் தெளிக்கச் சொன்னார்.

ஏன்…?

1.கங்கையில் கொண்டு போய்க் கரைத்தால் அங்கு பாவம் சேர்ந்து விடும்…
2.அங்கே கரைக்க வேண்டாம்..
3.மாணவர் படிக்கக் கூடிய இடங்களில் நீங்கள் தூவினீர்கள் என்றால் இந்த அருள் ஞானமாவது அவர்களுக்குக் கிடைக்கும் என்பதை
4.“கற்றுணர்ந்தவன்… தெரிந்து கொண்டவன்…” இதைச் சொன்னான்.

நேரு தன் சாம்பலைக் கங்கையில் கரைக்கச் சொல்லவில்லை. அங்கே கரைத்தால் பாவம் வந்துவிடும் என்று சொன்னார். சாம்பலை வயல் வெளியில் தூவப்படும் போது உரமாகி அந்த உணர்வு கொண்டு மற்றவர்களுக்கு ஞானம் வரட்டும்… வயல் வெளியில் தூவுங்கள் என்று கூறுகின்றார்.

நேரு அரசியல் பண்புகளைக் கற்று உணர்ந்தாலும் நாட்டினை மீட்டு தன் சொத்தை இழந்தவன் தான்.
1.கடவுள் என்ற நிலையில் உண்மையை உணர்ந்தான்
2.ஒருவருக்கொருவர் நேசிக்கும் பண்பு வரவேண்டும் என்றான்.

பஞ்சசீலக் கொள்கையில் கம்யூனிசத்தை மாற்றி அமைத்தார். ஏனென்றால் அதிலே இராஜ தந்திரமாகச் செய்யப்படும் பொழுது “தப்பான நிலைகளில் வருகின்றார்கள்” என்று உணர்ச்சியின் வேகப்பட்டு கை கால் அங்கங்கள் இழக்கப்பட்டான்… மடிந்தான்.

அவனைப் பற்றி சிந்திப்போர் யாருமில்லை. அவன் பெயரையே எடுக்க வேண்டும் என்கின்றார்கள் இன்று.

பண்டிட் மோதிலால் நேரு அவ்வளவு பெரிய சொத்தை வைத்திருந்தார். அப்பா கூடச் சண்டை போட்டான். நீங்கள் செய்வதெல்லாம் அதர்மம் என்று. யார்..? நேரு. நீ கோடி கோடி சொத்துக்களை கொள்ளை அடிக்கின்றாய்… இது எல்லாம் ஆகாது என்றார்.

நாட்டிற்கு செய்யக்கூடிய சேவைக்காகத் சகல சொத்தையும் இழந்தார்.

அன்று விவேகானந்தர் சொன்னது போல்
1.கடவுளை நீ எங்கேயும் பார்க்க வேண்டாம்
2.ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக மதி
3.அவன் அமர்ந்திருக்கும் அந்த ஆலயம் என்று நீ எண்ணு… ஆகவே நீ அவனை மதி என்று நேரு சொன்னார்.

அவர் சொல்லை யாரும் மதிக்கவில்லை.

மண்டல வளர்ச்சி

 

மண்டல வளர்ச்சி நிலை தோன்றிய நிலையை ஆரம்ப பாட வரிசையில் உணர்த்திட்டால்தான் இன்றளவு உணர்த்திய பாட நிலைக்கு ஜீவன் அளித்த நிலை தோன்றிடும்.

1.எறும்பைக் காட்டிலும் சிறிய நுண்ணிய உயிரணு கொண்ட உயிராத்மா
2.அவ்வுயிரணுவுடன் மற்றோர் உயிராத்மாவின் சேர்க்கையில் ஒன்றுடன் ஒன்று ஜீவ சக்தி பின்னிய நிலையில் இரண்டும் ஐக்கியப்பட்டு
3.தன் ஆவி நிலையுடன் பால்வெளி மண்டலத்தின் பல நிலைகள் கொண்ட ஆவியான அமில சக்திகள்
4.இவ்விரண்டு ஆத்மாவுடன் இதன் சேர்க்கையுடன் ஆவியாய் மோதுண்டு
5.இதன் ஈர்ப்பு நிலையுடன் இதன் வட்டத்திலேயே இவ்வாத்ம அமிலமுடன் பல சக்தி நிலைகள் கூடி
6.இவ் ஆவியான அமிலமே உறைந்த நிலையில் திடப்பொருளாய்ச் செயல்படுவதற்கு முன்
7.இவ்வாத்மாவின் ஈர்ப்பில் அமிலமுடன் கலந்து வந்த உயிர்த்துடிப்புக் கொண்ட மற்ற உயிரணுக்களின் இவ் ஈர்ப்பு நிலையில் சிக்கி
8.இதன் வட்டத்திற்குள் வந்த பிறகு இதன் ஆவி அமிலமும் இச் சுழற்சியில் காற்றும் நீரும் படும் நிலையில்
9.திடப்பொருளாய் கெட்டிப்பட்ட உயிர்த்துடிப்புக் கொண்ட திடமாய் ஆகின்றது.

இதன் வளர்ச்சியே அமிலத்தின் ஈர்ப்பாய் அதிகப்படுகின்றது. அமிலத்தை ஈர்க்கும் சக்தி இவ்விரண்டு ஆத்மாவின் உயிர் சக்தியுடன் உட்சென்ற உயிரணுக்களின் பெருக்கமும் இச்சிறிய கோளமாய் உருப்பெற்ற இதன் ஈர்ப்பின் வட்டத்தில்… இதற்கு உணவாய் “இவ்வுயிரணுக்களின் சக்தி தான்” இது வளரும் நிலைக்கு உதவுகின்றது.

உயிரணு இவ்வட்டத்திற்குள் வந்தவுடன் அதன் சக்தியை உணவாய் ஈர்த்து அதன் சக்தியை உண்டு அதில் வெளிப்பட்ட அழிவு நிலை ஆவியாய் இச்சிறிய மண்டலமாய் வளரப் பெறும் மண்டலம் வெளிப்படுகிறது.

இதன் தொடர்ச்சியிலேயே ஆரம்பத்தில் எவ்வுயிரணுவின் சக்தியை உண்டு மலமாக்கி அதன் ஆவியை வெளிப்படுத்திப் பழக்கப்பட்டு வாழ்ந்ததோ அதே நிலையில் இம்மண்டலம் கக்கும் உஷ்ண அலையைப் பொறுத்த அமிலங்களை ஈர்த்து ஈர்த்து அதன் தொடர்ச்சியிலேயே சிறுகச் சிறுக வளர்ச்சி கொள்கிறது.

வளர்ச்சியில் தன் சுழலும் வேகத்தினால் பால்வெளி மண்டலத்தில் இச்சேமித்த அமில கோளமுடன் இது சுழலும் வேகத்தில் இதன் ஈர்ப்பில்
1.இதன் அமிலத்தன்மையுடைய இதன் வர்க்க அமிலமும் மோதி மோதி
2.ஆவியாய் அமிலமாய் திடமாக வளர்ந்து கொண்டே கோளமாய் உருக்கொள்கின்றது.

இதன் நிலையில் உயிரணுக்களின் சேர்க்கையும் ஏற்பட்ட நிலையில் இவ்வுயிரணுக்களின் நிலையும் மற்ற அமில சக்தியின் நிலையும் இதனுடன் மோதுண்டு வளர்ச்சி பெறும் நிலையில் “இக்கோளத்தின் துடிப்பு நிலை துரிதம் கொள்கின்றது…”

இக்கோளம் உண்டு கழிக்கும் கழிவின் உஷ்ணத்தினால் ஒன்று நூறாய் நூறு ஆயிரமாய் ஆயிரம் கோடியாய் பல கோடி உயிரணுக்கள் இக்கோளம் பந்து நிலைக்கு வருவதற்குள் வளர்ச்சியில் பெருகி விடுகின்றன.

ஒன்றிற்கு உணவு ஒன்று அளிக்கும் சக்தியின் கூட்டினால் இக்கோளத்துடன் உயிரணுக்களின் வளர்ச்சியினால் தான்… அதனதன் ஆகாரத்தை அது அது எடுத்து உண்டு வெளிப்படுத்தும் சுழலில் இருந்து… அதன் உஷ்ண அலையில் அதன் சுவாச நிலைக்கொப்ப அக்கழிவிலிருந்தே பல உயிரணுக்கள் தோன்றி… இந்நிலையின் தொடர் வளர்ச்சியினால் இக்காற்றுடன் கலந்த நீரும் இவற்றிற்கு உரமாய் அமைய… இதன் தொடர்ச்சியிலேயே இக்கோளம் இன்று நாம் காண்கின்றோமே நட்சத்திர மண்டலமாய்… அவற்றிற்கும் மேல் பெரிய கோளமாய் உருப்பெற்ற பின்பே “தாவர வளர்ச்சி” நிலை இக்கோளங்களில் வளர்கின்றது.

இன்றைய விஞ்ஞானத்தில் கண்டுணர்ந்த நிலைபோல் தான் ஆரம்ப கதியில் இக்கோளத்திற்கு மேல் “பாசி படிந்த நிலைபோல் பச்சையான அமிலத்தில்” இக்கோளத்துடன் ஆங்காங்கு படர்ந்து அந்நிலையின் வளர்ச்சித் தொடரில் அதன் சக்தி உருப்பெறும் மண்டலத்திற்கு உணவாய்ச் சென்று… அதிலிருந்து வெளிப்படும் கழிவின் நிலையிலிருந்து “மாறு கொண்ட காளான் நிலைக்கு” வளர்ச்சி பெறுகிறது.

அந்நிலையின் தொடரில் அதனின் நிலையும் மாறு கொண்டு உள்ள தாவர நிலை அழுகிய நிலையில் அக்கோளத்துடன் படிந்து அதிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையினால் மற்ற தாவர இன வர்க்கமான புல் பூண்டு தோன்றி… இதன் வளர்ச்சி நிலையிலேயே இதன் ஆவியின் சுவாச நிலைக்கொப்ப மாறு கொண்ட… ஒவ்வொரு தாவர வர்க்கங்கள் வளரும் பக்குவ நிலையை அக்கோளம் பெறுகின்றது.

இந்நிலைக்கு வருவதற்குள் இக்கோளத்தின் சுழற்சி வேகம் உயிரணுக்களின் பெருக்கத்தினால் சேமிக்கும் அமில சக்தியின் உறையும் நிலையும் கூடிக்கூடி… இக்கோளத்தின் வளர்ச்சியை சக்தி கொண்ட மண்டலத் தன்மைக்கு உருப்பெற்று விடுகின்றது.

இன்று சந்திரனாய் நாம் காணும் சந்திர மண்டலத்தின் அளவு விகித நிலைப்படி உருக்கொள்கின்றது.

1.இந்நிலையில் உருப் பெறவே பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆகின்றன.
2.இந்நிலையின் வளர்ச்சிக்குப் பின் தான் ஜீவராசிகள் தோன்றும் நிலை பெறுகின்றது.

ஜீவராசிகள் தோன்றி வாழ்ந்திட தாவர வர்க்கங்களின் சுவாச நிலைக்கு வேண்டிய நீரின் சக்திக்கு மேல் “ஜீவராசிகளுக்கு அதிக சக்தி தேவை…”

இத்தாவர வளர்ச்சியின் நிலையிலுள்ள மண்டலமே பல உரு நிலைகள் மாறி மாறிப் பல ஆயிரம் காலங்கள் சென்ற பிறகுதான் அதன் இன வர்க்கத் தொடர்ச்சியில்
1.ஒவ்வொரு தாவரம் தோன்றி அது வளர்ந்து வாழ்ந்து அழுகிய நிலையில் பூமியில் படிந்து
2.அதன் வெக்கையில் தோன்றிய மற்ற உயிரணுவின் சக்தியினால் மாறு கொண்ட தாவர வர்க்கம் உருப் பெறுகின்றது.

ஓர் இன வர்க்க வளர்ச்சியிலிருந்து அது வளர்ந்து அதன் சக்தி மக்கி அதையே உணவாய் இப்பூமி ஈர்த்து அது கக்கும் கழிவிலிருந்து அதன் சுவாச நிலையில் பல காலம் அதே இன வர்க்கத் தொடர்தான் வளர்ச்சி கொண்ட நிலையில் வாழ்ந்த பிறகு…
1.இத்தொடருடன் மற்ற உயிர் அணுக்களின் சக்தி அம் மண்டலத்தின் காற்றுடன் மோதுண்ட பிறகு
2.மாறு கொண்ட வளர்ச்சி நிலை பெற்ற தாவரம் மற்ற இடத்தில் தோன்றுகின்றது.

இதே தொடரில் தோன்றும் நிலையில்தான் தாவர வர்க்கத்திலிருந்து உயிரினமாய் இக்கோளமுடன் கோளம் சேமிக்கும் அமிலத்தினால் கல்லும் மண்ணும் வளர்ச்சியுற்ற நிலையில் இருந்து
1.கல்லாய் உருப்பெற்ற திடப்பொருளாய் உறைந்த அமிலம் கொண்ட அதன் உஷ்ண நிலை அலையும்
2.தாவரத்தின் உஷ்ண அலையும் மோதுண்ட சக்தி நிலையில்
3.உருப்பெறும் உயிரணுவான ஜீவத்துடிப்புக் கொண்ட ஜீவராசியாய் ஓடுகள் போன்ற நிலை கொண்ட
4.நத்தை ஆமை இந்நிலை கொண்ட ஜீவராசிகள்தான் இப்பூமியில் முதலில் தோன்றிய ஜீவராசிகள்.

கல்லில் இருந்தும் மண்ணிலிருந்தும் அதன் உஷ்ண அலையின் வெக்கையில் இஜ்ஜீவராசிகள் தோன்றிச் சில தாவர நிலைகளை உணவாய் உண்டு… இவை கழித்த மலத்தில் இருந்து பல உயிரணுக்கள் ஜீவன் கொண்ட நிலையில் தவளையாய் மற்றும் சில நிலை கொண்ட ஜீவராசிகள் தோன்றின.

ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவிலிருந்து பல உயிரணுக்கள் அதன் சுவாச நிலைக்கொப்பப் பல ஆயிரம் ஆண்டுகள் ஒத்த நிலையின் வளர்ச்சியிலேயே வளர்ந்து கொண்டே வருகின்றது.

இதன் தொடர்தான் எல்லாமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாமி (ஞானகுரு) இந்நேரம் வரை உபதேசம் செய்தார்…
1.எனக்கு அர்த்தம் தெரியவில்லையே…! என்று இருக்கவே வேண்டாம்.
2.”என்ன உபதேசிக்கிறார்…” என்று கேட்டுப் பதிவாக்கிக் கொண்டிருந்தால் மட்டும் போதும்.

ஒரு டேப்பிற்கு ஒன்றுமே தெரியாது. அதில் உள்ள நாடாவில் தான் முலாம் பூசப்பட்டு இருக்கின்றது. ஆனால் பேசுவது எல்லாம் அதிலே பதிவாகின்றது. வேறு எண்ணம் அதற்கு இல்லை.

உதாரணமாக சிறிய குழந்தைகளுக்கு “அங்கே செல்ல வேண்டும்… இங்கே போக வேண்டும்…” என்ற எண்ணங்கள் இல்லை.

ஒரு பாடல் நன்றாக இருக்கிறது என்றால் குழந்தை அதைச் சும்மா கவனித்துக் கொண்டே இருந்தால் போதும். அதே பாட்டை அதே மெட்டில் அந்தக் குழந்தை பாடத் தொடங்கும்

ஆனால் பெரியவர்கள் ஆயிரம் தடவை கேட்டாலும்… அந்தப் பாடலை அதே மெட்டைப் பாட முடிகிறதா…? என்றால் இல்லை. ஏனென்றால் பல எண்ணங்கள் நமக்குள் இருக்கின்றது.

பல ஆயிரம் புத்தகங்களைப் படித்துக் கொண்டு வந்து
1.நாம் இத்தனை புத்தகங்களைப் படித்து இருக்கின்றோம்… சாமி சொல்வது அர்த்தமில்லை…! என்று
2.படித்த நிலைக்கு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகாது.

ஆகவே அந்த மெய் ஒளியின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்து… நாம் அந்த வழியில் பெற வேண்டுமென்று ஏக்கத்துடன் இருந்தால் இது பதிவாகும்.

அந்தப் பதிவான நிலைகள் கொண்டு மீண்டும் தியானத்தில் எண்ணி எடுத்தால்
1.படித்துக் கொண்டு வந்த அனைத்திற்கும் விடைகளை உங்கள் உள்ளத்திலிருந்து கொடுக்கும்
2.இந்த தியானத்தை முறைப்படி எடுத்தால் படித்தது அனைத்தையும் நீங்கள் அர்த்தம் தெரிந்து கொள்வீர்கள்.

காவியங்களைப் பற்றி எல்லாம் உங்களுக்குச் சிறுகச் சிறுகத் தான் பதிவு செய்து கொண்டு வருகின்றேன். சில நேரம் முழுவதும் சொல்கின்றேன்…. சில நேரம் சுருக்கமாகச் சொல்கிறேன்.

முழுவதும் சொன்னாலும் கிரகிக்கும் சக்தி உங்களிடம் இல்லை… கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னாலும் கிரகிக்கும் சக்தி இல்லை.

இராமாயணமும் மகாபாரதமும் பல மொழிகளில் பாடல்களாகத் தான் எழுதி வைத்திருக்கின்றார்கள். திருவள்ளுவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

அவர்கள் சொல்வதெல்லாம் படித்துவிட்டு “அர்த்தமாகிறது” என்று எப்படிச் சொல்கிறார்கள்…! என்று தெரியவில்லை. அர்த்தம் தெரிந்து எல்லோருக்கும் தெரிவதில்லை.

குழந்தைப் பருவத்தில் ஒன்றாம் வகுப்பில் பாடம் படிக்கிறோம். தெரிந்து கொண்ட பாடத்தை அங்கே பள்ளியில் சொல்லிக் கொடுப்பதில்லை.

அந்த வகுப்பில் படித்த பின்பு அடுத்த வகுப்பிற்குச் என்றால் ஏற்கனவே தெரிந்த ஒன்றாவது வகுப்புப் பாடத்தை அவர்கள் சொல்லித் தருவதில்லை.

இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் கற்றுக் கொடுத்துத் தேர்ந்த பின்புதான் அடுத்த நிலைக்குப் போகின்றோம். இப்படி வரிசையாகப் போய்ப் பனிரெண்டாம் கிளாஸ் வரை போகின்றோம்.

அத்தனையும் படித்தாலும் அதற்குப் பின் இன்ஜினியருக்கு போகிறாயா…? மருத்துவத்திற்குப் போகிறாயா…? என்று கேட்கின்றார்கள். படித்ததற்குத் தகுந்த மாதிரித் தேர்வு வைத்து டாக்டராகவோ இன்ஜினியராகவோ செல்லலாம் என்று அங்கே பிரிக்கின்றார்கள்.

பிரித்த பிற்பாடு அப்புறம் படித்துத் தான் கல்லூரியில் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர படிக்காமல் அதைத் தெரிந்து கொள்ள முடியாது.

1.நான் பல புத்தகங்களை ஏற்கனவே படித்திருக்கிறேன் என்று படித்த நிலையைச் சொல்லிக் கொண்டு
2.கல்லூரிப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்று இல்லாதபடி
3.“இச்ச்….” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டால் அந்தப் பாட நிலை ஏறாது.

கல்லூரிப் படிப்பைச் சீராகப் படித்துப் பதிவாக்கி அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அங்கே தேர்வாக முடியும்.

சிலர் நிறையப் படித்து விட்டு வந்து…
1.என்னமோ இந்தச் சாமி சொல்கிறார்…
2.வேண்டுமென்றால் கேட்டு விட்டுப் போவோம் என்ற நிலையில் இருக்கின்றனர்.
3.படித்த நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்படித்தான் வரும்.

ஏனென்றால் இந்த வாழ்க்கை… இந்த இயற்கை… எப்படி நிகழ்ந்து கொடுக்கிறது…? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தான் முக்கியம்.

ஆகவே…
1.“குழந்தை உள்ளங்களாக” இருந்து
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருந்தால்
3.யாம் உபதேசிக்கும் அனைத்தும் நிச்சயம் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.

“ஞானிகள் காட்டிய தத்துவப்படி” அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் சேர்த்து அதைக் கணங்களுக்கு அதிபதியாக மாற்றிப் பழகுதல் வேண்டும். இது மனிதன் ஒருவனால் தான் முடியும்.
1.அதிகாலையில் நாம் படுக்கையிலிருந்து அதை எண்ணி எடுத்தாலே போதுமானது.
2.குளித்துவிட்டு நான் பூஜை அறையில் போய் உட்கார்ந்து என்னமோ எடுக்கப் போகிறேன் என்று எல்லாம் நினைக்க வேண்டியது இல்லை.
3.கண் விழித்தவுடனே தியானத்தைச் செய்யுங்கள்.

முடிந்த பிற்பாடு… அப்புறம் வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்துக்கு நீங்கள் பூஜை அறையில் உட்கார்ந்து பழகுங்கள். அங்கே நல்ல நல்ல படங்களை வைத்திருப்போம். அந்தக் குணத்தின் சிறப்புகளை எண்ணிப் பாருங்கள்.

1.இலட்சுமி என்றால் எல்லாவற்றையும் வளர்க்கக்கூடிய நிலைகள்
2.காளி என்றால் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றது
3.சரஸ்வதி என்றால் சர்வ ஞானத்தையும் பெருக்கக்கூடியது,
4.முருகன் என்றால் தீமையை அகற்றி மெய்ப்பொருளை காணும் வல்லமை பெற்றது.

இந்த மாதிரி நற்குணங்களை எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஆனால் பூஜை செய்து சூட தீப ஆராதனை எல்லாம் காட்டிவிட்டு… நான் உனக்குத் தினமும் சூட தீபாராதனை காட்டுகின்றேன்… என்னை ஏன் நீ இப்படி சோதிக்கின்றாய்…? என்று உங்கள் கஷ்டத்தை எல்லாம் சொன்னால் எது உருவாகும்…?

சாமி படங்கள் எதற்காக வீட்டில் வைத்திருக்கின்றோம்…?
1.அந்த தெய்வ குணங்களின் உணர்வை நாம் நுகர்வதற்குத் தான்.
2.அங்கு போய் சூட தீப ஆராதனையைக் காட்டி விட்டு இப்படி எல்லாம் இருக்கின்றது என்று வேதனைப்படுவதற்கல்ல.

அதே சமயத்தில் சிறு குறைகள் வந்துவிட்டால் போதும் கர்ப்பிணிகளுக்கு. அந்த படத்தை பார்த்து இதே போல் அரும்பெரும் சக்தி என் கருவில் இருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்று நினைப்பதற்கு மாறாக… நான் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து என் குழந்தை என்னை இப்படிப் பேசுகின்றான்… எங்கள் மாமியார் இப்படி பேசுகின்றார்… என் கணவர் இப்படி பேசுகின்றார்… இப்படி எல்லாம் தொல்லையாக இருக்கின்றதே…! என்று அழுது கொண்டு இருப்பார்கள் படத்தைப் பார்த்து.

அப்பொழுது அந்த கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு எப்படி இருக்கும்…? படம் எதற்காக வேண்டி வைக்கின்றீர்கள்…?

ஆக மறைமுகமாக இயக்கும் குணங்களின் சிறப்புகளைக் காவியமாகப் படைத்து சரஸ்வதியின் நிலை இப்படி… இலட்சுமியின் நிலை இப்படி… முருகனின் நிலை இப்படி… கணபதியின் நிலை இப்படி… சிவனின் நிலை இப்படி…! என்று கதைகளாக எழுதி வைத்துள்ளார்கள்.

அதையெல்லாம் படித்துவிட்டு நீங்கள் அங்கே போய் அழுது வரம் கேட்டால் என்ன செய்யும்…?
1.அழுகும் உணர்வே இங்கே வரும்…
2.எல்லோரையும் அழுக வைத்துக் கொண்டுதான் இருப்பீர்கள். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதைத்தான் உயிர் உருவாக்கும். ஆகவே நாம் எதை செய்ய வேண்டும்…?

நமது ஞானிகள் கொடுத்த தத்துவத்தின் முறைப்படி நாம் நுகர்ந்தால் அத்தகைய உணர்வின் அணுக்களாகி நமக்குள் தெளிவான நிலையும் அடுத்து… பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.

இந்த நம்பிக்கைகள் வரவேண்டும்.

இன்றைய பழக்கத்தில் நாம் எதற்கெடுத்தாலும் சாமியாரைப் பார்க்க ஓடுகின்றோம், ஜோசியம் பார்க்க ஓடுகின்றோம்… ஜாதகத்தைப் பார்க்க ஓடுகின்றோம்.

ஜாதகமும் ஜோசியமும் மனிதருக்கு அல்ல.

ஆகவே
1.மதி கொண்டு விதியை மாற்றி அமைக்க வேண்டும்
2.நாம் வேதனை வேதனை என்று பார்த்துக் கொண்டு அதை விதியாக மாற்றிடாதபடி,…
3.அருள் ஞானியின் உணர்வைக் கொண்டு அந்த மதி கொண்டு விதியை மாற்றி அமைக்கலாம்.

எல்லோரும் அருள் ஞானம் பெற்று “ஒற்றுமையுடன் வாழ்வார்கள்” என்ற உணர்வினை நாம் நமக்குள் வளர்த்துப் பழக வேண்டுமே தவிர தீமைகளை வளர்த்துவிடக் கூடாது.

மெய்ஞானச் சுடர்

 

“மனதின் சக்தியே” பல கோடி ரிஷிகளின் மெய்ஞானச் சுடராக இன்று இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காச் செயல் திறன் செய்விக்கும் ஆற்றல் கொண்ட “மாமகரிஷிகளின் மெய்ஞானச் சுடரொளியாகும்…”

மலர் மலர்ந்து மணம் பரப்புகின்றது… காய் கனிந்து மணம் வீசுகின்றது. மலர்ந்த நாள் மலருக்கு மணம்… அடுத்த நாள் வாடிய மலரின் துர்வாடை வீசுகின்றது… கனியின் நிலையும் அதுவே.

செயல்பாட்டின் தன்மையில் ஒவ்வொரு செயலிலும் பருவம் பக்குவமாகி மணமாகவும் அடுத்து அதன் கதி துர்நாற்றமாகவும் ஆகிவிடுகின்றது.

1.நமது மனம் மலரின் நறுமணத்தை ஏற்கின்றது… துர்நாற்றத்தை வெறுக்கின்றது
2.நிகழும் செயல் யாவும் இரு நிலை கொண்ட செயல்பாடு தான்.

என்றாலும்… ஏற்கும் நிலைக்காக மனிதன் பக்குவமாக மலரின் வாசனைகளைத் திரவமாகச் (ESSENCE) செயல்பாட்டிற்கு எடுத்துப் பக்குவ கதிக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

மனித ஆற்றலின் செயல்பாட்டில்… தனக்கொத்ததைச் செய்விக்கும் திறன் ஆய்வின் மூலக்கருவே தன் “ஆத்மாவின் விழிப்பின் சுடர்தான்…”

1.மனித சக்தியின் உண்மையை உணர்ந்து
2.மகரிஷிகளின் விழிப்பின் சுடர் ஒளிச் சுடர்களாக மண்டல இயக்கத்தில் செயலாகும் ஒளி சக்தி
3.எப்படி பூமியின் இயக்கத்திற்குச் செயலுக்கு வருகின்றது என்பதை
4.மெய்ஞானச் சுடரிலிருந்து ஒவ்வொரு ஆத்மாவும் விழிப்பெய்தல் வேண்டும்.

சில வகை மீன்கள் அதனுடைய உயிர் சக்தியின் அமைப்பில் மூலத் தொடரிலேயே ஒவ்வொரு செதிலிலும் “மின் காந்த ஒளியை வெளிப்படுத்தும் ஒளி மீன்களாக” பல வகையில் சில இடங்களில் உண்டு.

நீரிலிருந்து மின்சாரம் எப்படிப் பெறப்படுகின்றதோ அதைப் போன்றே
1.இம்மீன்களின் உயிரணுக்கள் பெற்ற ஒளி காந்த மிகுதியால்
2.மின் ஒளியைப் போன்று மின்னக்கூடிய தன்மை அதற்கு ஏற்படுகின்றது.

அதைப் போன்று மனித உணர்வின் எண்ணத்தில் நறுமணத்தை மனம் ஏற்பது போன்று
1.நற்குணமான நற்சக்தியை மட்டும் எண்ணத்தின் செயல் ஏற்று
2.தீய உணர்வு எண்ணத்தை இச்சரீர உணர்வு எண்ணத்தில் இருந்து அகற்றி
3.கோள்களின் தொடர்புடன் தெய்வ குணமுடன் ஞானத்தின் ஒளியை மனதின் எண்ணம் செலுத்தும் பொழுது தான்
4.எண்ணத்திற்கொப்ப ஈர்ப்பின் அமிலம் சரீரத்தில் பாயும்.

உணர்வின் எண்ணத்தைச் செலுத்தும் “மெய் ஞான குணமுடன்” தன் ஞானத்தை வெளிப்படுத்தும் ஆற்றலாக “விழிப்பெய்திட” இங்கே கொடுக்கும் பாடநிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.

பல ரிஷிகளின் செயல் தன்மை தான் “மெய்ஞானச் சுடராக” இங்கே சுடர்ந்து கொண்டிருக்கின்றது.
1.இத்தத்துவத்தின் உண்மை அறிந்து அந்த மகரிஷிகளுக்கு ஏற்பட்ட அனுபவ வளர்ச்சியை
2.மகரிஷிகளின் ஒளிச்சுடர் கொண்டு அவர்கள் ஒளிபெற்ற உண்மைதனை ஒவ்வொரு
3.மனித அறிவின் விவேகத்தால் ஜெபம் கொண்ட தியானத்தால் ஒளிச்சுடர் பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஜோசியரிடம் சென்று கேட்கின்றோம்.. மந்திரக்காரனிடம் கேட்கின்றோம்… என்னிடமும் (ஞானகுரு) வந்து கேட்கிறீர்கள் அல்லவா.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி
1.ஞானிகள் கொடுத்த வாக்கினைப் பயன்படுத்திப் பாருங்கள்.
2.கணவன் மனைவி உங்கள் இருவருடைய சக்திகளையும் ஒன்று சேர்க்கும்.

ஒரு உயிர் விண்ணிலே ஒளியாகத் தோன்றுகின்றது. சந்தர்ப்பத்தில் புவியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின் என்ன செய்கிறது…?

உதாரணமாக நம் புவிக்குள் இருக்கும் மரங்கள் வெளிப்படுத்தும் சத்துகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கிறது. அது எல்லாம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

1.ஆனால் விண்ணிலிருந்து வந்த உயிர் இதிலே மோதி
2.இரண்டும் சேர்ந்து உறைந்த பின் கவர்ந்த சத்தை உயிர் உடலாக மாற்றுகின்றது
3.சக்தி சிவம் ஆகின்றது.

ஆண் பெண் இருவரும் சேரும் போது உருவாகுவதுதான் குழந்தைகள். அதைப் போல் இருவருடைய எண்ணங்களும் ஒன்று சேர்த்து உயர்ந்த எண்ணங்களை எண்ணி ஒருவருக்கொருவர் அந்த அருள் உணர்வைப் பரப்பிக் கொண்டால் அது வலுக் கொண்டதாக மாறுகிறது.

1.அப்படி வலுக் கொண்டதாக மாற்றி விட்டால் பிறிதொருவரின் எண்ணங்கள் நம்மைப் பாதிப்பதில்லை.
2.அவசியம் இதைச் செய்து பாருங்கள்.
3.இது இருவருக்குமே ஒரு பாதுகாப்புக் கவசமாக ஆகின்றது.

உதாரணமாக ஒரு இராக்கெட்டை ரஷ்யாவில் இருந்து விடுகின்றார்கள். அமெரிக்காவிலும் இராக்கெட்டை விடுகின்றார்கள்
1.ரஷ்யாவில் இராக்கெட் வெளியிலே கிளம்பிய உடனே
2.சூரியனுடைய காந்தப் புலனுக்குள் உராய்ந்த உடனே அமெரிக்காவில் இருப்பது இதை அறிந்து கொள்கின்றது
3.அது அந்த வேக அலையினை எடுத்துக் கொள்கிறது.

அதைப் போல கணவனும் மனைவியும் யாம் சொன்ன முறைப்படி இந்தத் தியானத்தை எடுத்து இருவரும் சேர்ந்து அந்த உயர்ந்த சக்தியினைப் பரப்பிக் கொண்டீர்கள் என்றால் பாதுகாப்பாக வரும்.

1.ஒரு சங்கடமான நிலையோ அல்லது
2.நீங்கள் போகும் பாதையில் ஒன்றைக் குறி வைத்துச் செல்லும் பொழுது ஏதாவது விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை இருந்தது என்றால்
3.கணவன் மனைவி உங்கள் எண்ணத்தை ஊடுருவி அங்கே பாய்ச்சும்போது இது உராய்ந்தவுடனே
4.அங்கே எதிர்ப்பு சக்தி இருந்தது என்றால் உடனே டக்… என்று கம்ப்யூட்டர் மாதிரி உங்களை அங்கே போக விடாதபடி தடுத்துவிடும்

ரேடாரை (RADAR) வைத்தவுடன் எப்படி அதிலே மற்ற நிலைகள் தெரிகின்றதோ அதே மாதிரித் தெரிய வரும். விபத்துக்களிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள இது உதவுகிறது.

கணவன் மனைவி இரண்டு பேரும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு காரியத்திற்குச் சென்றீர்கள் என்றால்
1.உங்களுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாராவது வந்திருந்தாலும்…
2.இந்த உணர்வு அங்கே பட்டு அந்த நிமிஷத்தில் எண்ணத்தை மாற்றி விட்டு
3.உங்கள் பாதையில் நீங்கள் சீராகச் சென்று கொண்டிருப்பீர்கள்…
4.அவர்கள் எண்ணம் மாறிப் போகும்… அவர்களை ஏதாவது ஒரு பக்கம் திசை திருப்பும்
5.அல்லது உங்களை வேறு பக்கம் அழைத்துச் சென்றுவிடும்

இதை எல்லாம் உங்கள் அனுபவத்திலே பார்க்கலாம்.

அகஸ்தியன் நுகர்ந்த மின்னலின் ஆற்றல்கள்

 

நஞ்சினை முறித்திடும் பல பல தாவர இனச் சத்துக்களைத் தாய் தன் உடலில் பூசிக் கொண்டதால் அந்தத் தாய் கருவில் இருக்கக்கூடிய குழந்தை (அகஸ்தியன்) நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றது.
1.அது பிறந்த பின் சூரியனைப் பார்த்து அந்த உணர்வினை நுகர்கின்றது.
2.சூரியனிலிருந்து வரக்கூடிய விஷத்தன்மை இந்தக் குழந்தையைப் பாதிப்பதில்லை.

அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது. ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அந்தத் தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது மின்னலாக மாறுகின்றது.

அந்த மின்னலின் தன்மை வேகமாக வந்தாலும்
1.அந்தக் குழந்தை கண்களுக்கு அது அடங்கி மகிழ்ச்சியூட்டும் நிலைகளாக அமைகிறது
2,மேலும் அந்த மின்னலின் செயலாக்கங்களைப் பற்றியும்
3.எந்த நட்சத்திரம் எது எதிலிருந்து வருகின்றது…? எது எதனுடன் மோதுகின்றது என்ற நிலையையும்
3.அறியும் தன்மை பெறுகின்றான் குழந்தைப் பருவத்திலேயே அகஸ்தியன்.

உதாரணமாக… குளவி ஒரு புழுவை எடுத்துத் தீண்டி தன் இனம் என்ற நிலையில் அதைப் பெருக்கச் செய்கின்றது. தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கூட்டி மண்ணை எடுத்து வந்து ஒரு கூட்டை அமைக்கின்றது.

ஒரு புழுவை எடுக்கின்றது தன் விஷத்தைப் பாய்ச்சுகின்றது, கூட்டுக்குள் அடைத்து விடுகின்றது.
1.இந்த உணர்வின் தன்மை தாக்கிய பின்
2.புழுவின் “உயிரின் துடிப்பு” அதிகரிக்கின்றது.

புழுவின் உணர்வுகள் அது துடிப்பின் தன்மை கம்மி ஆனது. ஆனால்
1.குளவி கொட்டிப் புழுவின் உயிர் துடிப்பு அதிகமாகப்படும் போது
2.அந்த விஷத்தன்மை புழுவின் அணுக்களை அதிகமாகத் துடிக்கச் செய்யும் பொழுது சுருங்கி விடுகின்றது.
3.சுருங்கிய உணர்வு கொண்டு (விஷத்தைக் கொடிய குளவி எப்படி முதலில் உருவானதோ) அந்தக் குளவியின் ரூபமாக மாற்றி விடுகின்றது
4.குளவியின் விஷத்தின் தன்மை இதனுடைய கலவையை இப்படி மாற்றி விடுகின்றது.

இதைப் போல தான் விஷத்தின் தன்மை கொண்டு தனக்குள் அடக்கிடும் நிலை பெற்ற இந்த அகஸ்தியன்
1.மின்னலின் ஒளிக் கற்றைகளை அவன் நுகர்கின்றான்
2.ந்த உணர்வின் தன்மை தனக்குள் வரப்படும் பொழுது இந்த உடல் பெறும் உணர்வுகளைச் சுருக்குகின்றது… உணர்வின் தன்மை வளர்க்கின்றது.

ஆகையினால் தான் அந்த அகஸ்தியனை மிகவும் குள்ளமாகப் போட்டு‌ காட்டி இருப்பார்கள்…!
1.தசைகள் வளர்ச்சி கம்மி…
2.”உணர்வின் அணுக்களின் சக்தி வீரியமடைந்தது…!” என்ற நிலையை இங்கே தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.

ஆகவே நட்சத்திரங்களிலிருந்து மின்னல்கள் வருவதைத் தனக்குள் நுகரப்படும் பொழுது… அந்தச் சக்தியால் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் வீரியத் தன்மை பெறுகின்றது.

எதனை நுகர்ந்தால் அதை மாற்றி அமைக்கும் சக்தி கிடைக்கின்றது என்பதை அறிந்து கொள்கின்றான். இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.

(தாய் கருவிலிருக்கும் போது) அவன் எத்தகைய விஷத்தன்மையை எந்தத் தாவர இனங்களிலிருந்து நுகர்ந்தானோ அதனின் இயக்கச் சக்திகளை எல்லாம் அறிந்துணர்ந்தவன் ஆகின்றான்.

அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை எல்லாம் நாமும் பெற வேண்டும்.

நம் பூமியில் இன்றுள்ள மூல சக்தியே நம் பூமிக்குள்ள கடலும் நீரும்தான்

 

நம் பூமிக்கு இரண்டு பக்கமும் வடதுருவ, தென்துருவக் கடல்களின் நிலையினால் இப்பூமி முழுவதற்குமே ஆங்காங்குள்ள நீர்நிலைகளும், ஆறு குளங்களும் இப்பூமியில் பெய்திடும் மழையின் நிலையும் கடல்களினால் தான் இப்பூமி முழுவதற்குமே நீர் நிலை பெறும் சக்தி வந்தது.
1.காற்றுடன் நீர் இல்லா விட்டால் தாவரங்கள் மட்டுமல்ல
2.இப்பூமியில் வளர்ந்திடும் எக்கனி வளங்களும் எவ்வுயிரணுவும் இன்றைய நிலை கொண்ட வளர்ச்சிக்கு வந்திருக்க முடியாது.

எவ்வமிலமும் இந்நீருடன் தன் சக்தியைச் சேமிக்கும் சக்தி கொண்ட பூமி இது. இன்று நம் பூமியில் கடல்கள் உள்ள இடங்களில் கடல்களில் உள்ள நீர் பகலில் குறைந்தும் இரவில் அதிகப்பட்டும் உள்ளது.

அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களிலும் மற்ற நாட்களைவிட இந்நீர் அதிகமாகப் பொங்கி வரக் காண்கின்றோம்.

பகலில் சூரியனின் நேர் ஒளி படும் நிலையில் பூமியின் கோளத்தின் அக்கடலின் நீர் உள்ள நிலையில் நேராய் சூரியனின் ஒளி பட்டவுடன் அந் நீரிலிருந்து ஆவியான அமிலங்கள் காற்றுடன் கலந்துவிடுகிறடு.

பின் பூமி சுழலும் நிலைகொண்டு இரவில் சூரியனின் ஒளிக்கதிர் அந்நீர் நிலையில் படாமல் அக்கடல் நிலையுள்ள இடமும் இச்சுழலும் தன்மையில், நம் பூமியின் அசைவைக் கொண்டு இக்கடல் நீரும் வட துருவமோ அல்லது தென் துருவமோ இந்நிலையில் இரவு நேரத்தில் அக்கடல் நீர் அந்நிலையில் மோதி,
1.பூமியின் சுழலும் வேகத்தில் இரவின் அசைவினால் வட துருவத்தில் மோதப்பட்டு
2.பகலில் ஆவியான இவ்வமிலமும் குளிர்ச்சி கொண்டு வட துருவ பூமியில்
3.படிவமாய்க் குளிர்ந்த நிலையில் பனிக்கட்டியாய் உறைந்து விடுகின்றது.

இப்பூமியின் வட துருவத்திலும் தென் துருவத்திலும் பாறை போல் உறைந்து குளிர்ச்சியான உப்புக் கலந்த அமில சக்தியைக் கொண்ட நீராய் உறைந்துள்ளது.

சூரியனின் ஒளி இரவில் இல்லாததினாலும், அவ்வுஷ்ண அலைகள் இக்கடலில் தாக்காததினாலும்
1.பகலில் ஈர்த்து ஆவியான நீர்களே
2.இரவில் அவ்வுறைந்த நிலை கொண்ட பகுதியில் இக்காற்றாலைகள் மோதி நீராய் வடியப் பெற்று
3.இரவில் கடல்களில் நீர் நிலைகளின் பெருக்கத்தைக் காண்கின்றோம்.
4.வட துருவம் தென் துருவம் இரண்டு பக்கத்திலுமே இந்நிலை கொண்ட சக்திதான் உள்ளது.

அமாவாசை அன்றும் பௌர்ணமி அன்றும் ஏற்படும் இவ்வணுக்களின் மாற்றத்தினால் இக்காற்று மண்டலத்தின் சக்தியில் சந்திரனிலிருந்து கிடைக்கப் பெறும்
1.குறைந்த அமாவாசையின் அணு சக்தியும் பௌர்ணமியில் கிடைத்திடும் அதிக அணு சக்தியும்
2.இவ்விரண்டு பக்கத்திலும் உறைந்துள்ள நீரின் அமில சக்தி மாற்றம் கொள்ளும் நிலையில் இக்கடல் நீர் “பொங்குகின்றது…”

இன்று இப்பூமிக்கு ஜீவனாய் பொக்கிஷமாய் அமைந்துள்ள இந் நீர் நிலைகள் வட துருவமாயும் தென் துருவமாயும் இப்பூமி சுழல்வதற்கே சக்தி கொடுத்து நிறைந்திருக்கா விட்டால் :நம் பூமிக்கு இம்மழையும் மற்ற நீர் நிலைகள் எவையுமே கிடைத்திருக்காது…”

ஜீவனாய் இப்பூமிக்கு இருக்கும் இச்சக்தி ஒவ்வொரு மண்டலத்திலும் மாறு கொள்ளுகின்றது.

சந்திரனில் நம் பூமியில் பெய்யும் மழையும் மற்ற நீர் நிலைகளும் இங்கு தேங்கியுள்ளதைப் போல் அங்கு மாறு கொண்ட நிலையில் சந்திரனின் நிலை கொண்டு இன்றுள்ளது.

இதுவே இப்பூமியின் மாற்றத்தினால் நம் பூமியின் சக்தியைப் போல் நம் பூமிக்கு அருகாமையில் பூமியுடன் அதிகத் தொடர்பு கொண்ட சந்திர மண்டலம் இருப்பதினால் “இப்பூமியின் நிலையைப்போல் சக்தியை வளர்க்கப் போகிறது…”
1.நம் பூமியைக் காட்டிலும் சுழலும் வேகம் குறைவு
2.ஆனால் மாற்றத்தில் சந்திரனின் சக்தி கூடி துரித வேகம் அதிகபடப்படுகின்றது.

துரித சக்தியின் வளர்ச்சியினால்… ஈர்ப்பு சக்தியின் இன்று செழித்து வளரும் நிலையில்லாமல் காற்றும் மழையும் குறைந்துள்ள நிலையில்… மழையென்றால்… நம் பூமியில் பெய்வதைப் போல் பூமி ஈர்த்து ஆங்காங்கு வெளிப்படுத்தும் பருவ மழைகளும் இக்கடலில் புயலால் ஏற்பட்டு உருக்கொண்டு வீசிடும் காற்றில் இருந்து… இங்கு பெய்யும் மழையின் நிலையும் இரவு பகல் என்ற மாற்றம் கொண்ட நிலையும் சந்திரனில் இல்லாமல் உள்ள இன்றைய நிலையே… இக்கலியின் மாற்றத்தினால்…
1.இப்பூமியின் சக்தியின் நிலையே
2.சந்திரனின் சக்தி நிலையுடன் செயல் கொள்ளப் போகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை அறியாமலே எத்தனையோ வேதனைகளை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அன்றாட வாழ்க்கையில் வருகிறது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.

நம் உடலுக்குள் அவை புகாதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றுகின்றோம். அசுர சக்திகள் நம்மை அணுகாது மாய்க்கின்றோம்.

இதைக் கணவன் மனைவி இருவருமே தனக்குள் வளர்க்கப்படும் போது தீயது வராதபடி தடுக்கவும் செய்கின்றது.

கருணைக் கிழங்கை வேக வைத்த பின் அதில் உள்ள விஷம் நீங்குவது போன்று… தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியபின் செம்பும் வெள்ளியும் ஆவியாக மாறுவது போல்… தீமைகளை அகன்று செல்ல வைக்க வேண்டும்.
1.தீமைகள் என்பது அறிவதற்கு நமக்கு உதவியது.
2.ஆனாலும் அது அணுவாக நமக்குள் உருவாகி விடக் கூடாது.

உதாரணமாக வெள்ளியும் செம்பும் தங்கத்துடன் சேர்த்துச் சூட்டிலே காண்பித்தவுடன் உடனே அவைகள் உருகி நகையாக ஒட்டிக் கொள்கின்றது
1.ஆனால் தங்கம் உருக வெகு நேரமாகும்
2.இதைப் போன்றுதான் நல்ல குணம் உடனடியாக இயங்காது.

ஒரு பாலைக் குடித்தோம் என்றால் நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்துத் தான் உடலுக்குள் அதனின் சத்து கூடுகின்றது. ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்றால் மெதுவாகத்தான் பேசுகின்றோம். ஆனால் ஒரு கோபம் வருவது உடனே இயக்குகின்றது.

ஒருவர் ஏதாவது சொல்லி விட்டார் என்றால்
1.ஒரு நொடிக்குள் நாம் கோபப்பட்டுப் பேசி விடுகின்றோம்… உடனே அதை அழுத்தி விடலாம்
2.ஆனால் அடுத்துச் சாந்தமாக பேச வேண்டுமென்றால் வெகு நேரமாகிறது.

அதாவது சாந்தமாகச் சொல்லி ஒருவருக்கு அந்த அர்த்தத்தைப் புரிய வைக்க வேண்டுமென்றால் வெகு நேரமாகிறது.

சுருக்… என்று சொல்லி விட்டால் உடனே அங்கே கோபத்தை உண்டு பண்ணிவிடலாம்.
1.என்ன சொன்னாய்…?
2.பார்… உன்னை என்ன செய்கிறேன் என்று… உடனே எதிர்த்துப் பேச வந்துவிடும்.

ஆனால் அதற்குப் பதிலாக ஒரு நல்லதைச் சொல்வதற்குக் கேட்பதற்கு ரொம்ப நேரம் ஆகிவிடும்.

ஆகவே நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் அந்தச் சக்தியை நாம் தடைப்படுத்த வேண்டுமல்லவா. ஒரு நொடிக்குள் நம்மை உணர்ச்சிவசப்படச் செய்ததை மாற்ற
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.கணவன் மனைவியும் இருவரும் சேர்ந்து இந்த ஆத்ம சக்தியை
3.சிறிது நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டோம் என்றால் அதைச் சுத்தப்படுத்த உதவும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

உயிர் ஒளி பெற்றது… அது ஒளியாக இருப்பது போல்
1.உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த மெய் ஞானிகள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால்
2.வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இருளையும் நாம் மாற்றி விடலாம்.
3.அந்தத் தீப வழியாக அருள் உணர்வுகள் வரும்.

தொழிலும் சீராக இருக்கும் உங்கள் வாழ்க்கையும் சீராக இருக்கும். கணவன் மனைவி இதே மாதிரி செய்து பாருங்கள்.
1.சரியில்லை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்…
2.சரியாக வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

விண் சென்றவர்களின் “நினைவு நாளை” எப்படிக் கொண்டாட வேண்டும்…?

 

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்தவர்களை குருநாதர் காட்டிய அருள் வழியில் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.

இணையச் செய்தாலும் அடுத்து நினைவு நாள் கொண்டாடுகின்றோம். அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒளி நிலை பெற்ற அந்த நினைவு நாள் தான் இன்று என்றால்…!
1.நாம் கூட்டுத் தியானத்திலிருந்து அவருடைய உயிரான்மாவை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.
2.அந்த உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் கரைந்து விட்டது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
4.என்றும் அவர்கள் பேரருளாக இருத்தல் வேண்டும்.
5.எங்கள் குடும்பத்தில் இருளை அகற்றும் அருள் சக்தியாகப் படர்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர் ஒளியின் சரீரமான நாள். இன்றைய தினம் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பங்களில் படர்தல் வேண்டும்.

அந்தந்த குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கொண்ட பின் அந்த உணர்வை எடுத்து
1.நம் குடும்பத்தில் எங்களை அறியாத தீய வினைகள் நீங்கிட வேண்டும்.
2.குடும்பத்தில் பற்றும் பாசமும் வளர்த்திட வேண்டும்.
3.எங்கள் குலதெய்வங்களாக என்றும் நிலைத்திருந்து இருளினை அகற்றி நஞ்சினை வென்று
4.உணர்வினை பேரருளாக மாற்றிடும் அருள் சக்தியாக அது வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே சமயத்தில் அவர்கள் நம்முடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் பற்று கொண்ட நாம்… அவரின் உணர்வுகள் நமக்குள் பங்கு உண்டு.

விண் செலுத்தத் தவறினால் அவரின் நோய் இங்கே வளர்கின்றது. அப்படி நமக்குள் வளராது தடுக்க இம்முறைப்படி தான் அந்த நினைவு நாளைக் கொண்டாட வேண்டும். இதை
1.அவர்கள் பேரொளி பெற்ற நாள்
2.என்றும் இருளை அகற்றிய நாள்.
3.சப்தரிஷிகளாக ஆன நந்நாள்.
4.சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்று சேர்த்த அந்த உணர்வின் தன்மை எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
5.குடும்பத்தில் தெளிவான நிலைகளை எங்களுக்கு ஊட்ட வேண்டும்.

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் அவர்கள் வீட்டில் வாழ்ந்த உணர்வலைகள் நம் உடலில் அது பதிவாகி இருப்பினும் ஆக நாம் குடியிருக்கும் வீட்டில் பதிவாகி இருப்பினும் மேலே சொன்னபடி நாம் செய்தோம் என்றால் அந்த்த் தீமைகள் மறைகின்றது.
1.அருள் ஒளி என்ற நிலைகள் நமக்குள் பெருக்கப்படுகின்றது.
2.நாம் நினைவு நாள் இப்படித் தான் கொண்டாட வேண்டும்.

மாறாக… அமாவாசையன்று அவர்களுக்கு உணவுகள் கொடுத்து அவர்களை அழைத்தோம் என்றால் ஆவியின் நிலை அடைந்து விடும். பின் இது சில தீமையின் நிலைகளுக்குத் தான் செல்லும். மீண்டும் பிறவிக்கே நாம் அழைக்கின்றோம் என்று பொருள்.

ஆகவே… உடலை விட்டுப் பிரிந்டு சென்றவர்களை நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பேரொளி என்ற உணர்வினை ஆக்கிய பின்
1.அவர் விண் சென்ற அந்த அருள் ஒளி என்ற நிலைகள் நம் வீட்டிலே படர்ந்து
2.அறியாத இருளை அகற்றிடல் வேண்டும் என்ற உணர்வினில் தான் நாம் வாழ்ந்திட வேண்டும்.

என்றுமே ஏகாந்த நிலைகள் கொண்டு பத்தாவது நிலை அடைந்த அந்த அருள் உணர்வுகள்…
1.குடும்பத்தில் இருளை அகற்றி அனைவருக்கும் தெளிந்த மனம் கொண்டு வாழும் அருள் சக்தியை எங்களில் என்றும் பரப்புதல் வேண்டும்.
2.நம் குடும்பத்தை நீங்கள் காத்திடல் வேண்டும்
3.இருளை அகற்றிடும் அருள் சக்தியாக எங்களில் வளர்த்திட வேண்டும்.
4.உங்கள் அருள் என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று
5.அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் இத்தகைய நிலைகள் எண்ணுதல் வேண்டும்.

இதனை எண்ணினால் அவர் உடலில் வாழ்ந்த காலத்தில் நாம் கேட்டறிந்த நோயின் தன்மை வராதபடி மாற்ற முடிகின்றது. ஆகவே நமக்குள் அருள் ஒளியாக மாற்றியமைத்தல் வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நமது மூதாதையர்களை இந்த முறைப்படி பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்… பேரின்பம் பெறச் செய்வோம்.

சந்திரனில் “இனி” ஏற்படப் போகும் மாற்றங்கள்

 

கலியின் மாற்றம் கொண்டு நம் பூமியின் நிலை மாற்றம் கொள்ளப் போகிறது என்று உணர்த்தினேன். அந்நிலை கொண்டு அனைத்து மண்டலங்களின் நிலையும் மாறுவதை உணர்த்தியுள்ளேன்.

இன்று நம் பூமியின் இயற்கை சக்தியைப் போல் சந்திரனின் இயற்கை வளமும் கூடப் போகின்றது. நம் பூமியில் கடல்கள் உள்ளதைப் போல் ஆழ்ந்த நீர் நிலை அங்கு இல்லை.

பூமியில் வட துருவ, தென் துருவ நீர் நிலையின் சக்தியினால்
1.இப்பூமி சுழலும் நிலையில் காற்று மண்டலம் இந் நீர் நிலையிலிருந்து வருவதினால்
2.இவ்விரண்டு பக்க நீர் நிலையில் ஒன்றை ஒன்று உலகம் சுழலும் நிலையில் ஈர்க்கும் சக்தியும் ஏற்படுவதினால்
3.நம் பூமிக்குக் காற்று மண்டல சக்தியுடன் நான்கு நிலை கொண்ட கால நிலையினால்
4.இங்கு ஏற்படும் மழையும் மற்றச் சீதோஷ்ண நிலைகளின் மாறு கொண்ட சக்தியும் நம் பூமியின் பொக்கிஷமாய் உள்ளது.

அதைப் போல்… இக்கலி மாறும் தருணத்தில் சந்திரனின் ஈர்ப்புடன், சந்திரனுக்கு அருகாமையில் நீரை ஏற்படுத்தும் அமில நிலை கொண்ட உப்புக் கலந்த அமில சக்தி கொண்ட நட்சத்திர மண்டலங்கள் அதிகமாய் உள்ளன.

1.மாறும் தருவாயில் இன்று இம்மனிதன் சந்திரனுக்குச் சென்று அவனது சுவாச அலையை அங்கு விட்ட நிலையிலும்
2.இப்பூமியிலிருந்து ஆத்மாக்களில்லா ஏவுகணைகள் பல அந்நிலைக்குச் சென்று, இப்பூமியின் சக்தி சந்திரனில் இன்று செயல்படும் நிலையிலும்
3.நம் பூமியின் பார்வை நிலையில் நம் பூமியின் ஈர்ப்பு சக்தியும் சந்திரனில் நிறைந்துள்ள நிலையிலும்
4.தெரிந்தோ தெரியாமலோ சந்திர நிலவை, அப்பௌர்ணமி நாளை நம் ஆத்மாக்களில் பலர் ஆண்டவனாய் வழிபட்டதின் நிலையில்
5.நம் பூமியின் ஆத்மாக்களின் எண்ண சக்தியின் அலையும் சந்திரனில் இன்று குடி கொண்டுள்ள நிலையில்
6.நம் பூமியில் இருந்து ஈர்த்து அமிலப்படுத்திய நீர் நிலை கொண்ட அமில சக்திகளெல்லாம் சந்திரனுடன் சேரும் நிலையில்
7.இன்று சந்திரனில் நாம் காணும் அப்பள்ள நிலைகளே நம் பூமியின் நிலை போல் சந்திரனில் இரண்டு பக்கங்களிலும் நீர்நிலை கூடப் போகின்றது.

நம் பூமியில் உள்ளதைப் போல் தாவர வளர்ச்சி நிலையும் செயல் கொண்டு… நம் பூமியின் சக்தி நிலைகொப்ப வளரும் நிலை சந்திரனுக்குக் கூடப் போகிறது.

அந்நிலையில் இருந்து நம் பூமியில் உள்ள ஆத்மாக்கள் நம் பூமியின் இக்கலி மாற்றத்தில்… நம் பூமியின் சுவாச நிலையின் சக்தி கொண்ட சந்திரனில் வாழப் போகின்றார்கள்.

எந்நிலை கொண்டு…?

நம் பாட நிலையில்தான் இப்பூமியில் வாழ்ந்த ஆத்மாக்கள் மாறு கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்திட முடியாது என்று உணர்த்தியுள்ளோம்.

இப்பூமியின் ஆத்மாக்கள் எப்படிச் சந்திரனுக்குச் சென்று வாழ்ந்திடும்…? என்ற எண்ணம் இதைப் படிப்பவருக்குத் தோன்றிடலாம். தொடர் நாளை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக… ஒரு பெரும் பாறையாக இருக்கிறது என்றால் கடப்பாரையை வைத்தோ அல்லது உளியைக் கொண்டோ சம்மட்டியால் அடித்து நாம் அந்தப் பாறைகளைப் பிளக்கின்றோம். அவ்வளவு வலு இருக்கின்றது அந்த இரும்பிற்கு…!

ஆனால் மனித உணர்வுக்குள் அதே இரும்பின் சத்து அதிகமாகச் சேர்ந்து விட்டால் அந்த வலுவின் தன்மை அதிகமாகி…
1.இரும்பு எப்படி மற்றொன்றைப் பிளக்கின்றதோ
2.மனித உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல உணர்வின் சத்துகளைப் பிளக்கும்.
3.இடி மின்னல்களைப் போல உடலிலே வலியும் பல நோய்களும் ஏற்படுகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு தாவர இனங்களுமே ஒவ்வொரு உலோகத்தின் தன்மையை அதிகமாகக் கொண்டு வளர்ந்து வந்தது தான்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் அந்தத் தாவர இனச் சத்துக்களை நுகர்ந்து… உணவாக எடுத்து… அந்த உணர்வின் மணத்தால் மனிதனுடைய எண்ணங்கள் ஓங்கி வளர்ந்து… இன்று மனிதனாக நம்மை உருவாக்கி இருக்கின்றது

சந்தர்ப்பவசத்தால்…
1.இரும்பு சத்து அதிகமாகக் கொண்ட காய்கறிகளையோ அல்லது எண்ணத்தால் பல நிலைகளை அதைப் போன்று சுவாசிக்கும் பொழுதோ
2.அந்த இரும்பின் சக்தி நம் நல்ல குணங்களுக்குள் கலந்து விட்டால் கடுமையான நோய்களாக வந்துவிடுகின்றது.

மனித உடலில் இப்படிப்பட்ட நோய்களாகித் தொல்லை கொடுக்கும் நிலைகளை “அதை எப்படி நீக்குவது…?” என்று அன்றைய சித்தர்கள் என்பவர்கள் சிந்திக்கின்றனர்.

அதற்குண்டான உபாயத்தை அவன் சிந்தித்து அதன் வழி தான் நுகர்ந்து எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு இதை நீக்க முடியும் என்ற உணர்வுகள் அது அவனுக்குள் வலு பெறுகிறது.

அப்படி வலுப் பெற்ற நிலைகள் கொண்டு பல தாவரங்களைப் பறித்து அந்த இரும்புடன் அதைக் கலந்து புடம் போடுகிறான். புடம் போடும் போது
1.இரும்புக்குள் இருக்கும் அந்தக் கடினமான பாறையை உடைக்கச் செய்யும் கடுமையான சத்தின் வலு இழந்து
2.அந்த இரும்பே கரைந்து போகும் நிலைகளை உருவாக்குகின்றான் சித்தன்.

அப்படி உருவாக்கிப் பஸ்பமாக்கிய அந்த உணர்வின் சத்தை ஒரு மனித உடலுக்குள் கொடுக்கப்படும் போது
1.உடலிலே கடினமான வேதனைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த சக்தி நீங்கி அதைக் கரைத்து விடுகின்றது
2.உடல் நலம் பெறும் சக்தியாக அது வருகின்றது.

ஒரு மனிதனின் உடலில் இப்படித் துன்பங்களை ஊட்டும் இந்த உணர்வின் சத்தைத் தன் எண்ணத்தால் இதையெல்லாம் கலந்து இதை நீக்க முடியும் என்று செயல்படுத்தியவர்கள் தான் அன்றைய சித்தர்கள்.

“புடமிட்டுப் பஸ்பமாக்கும் உணர்வுகள்” சித்தனின் உடலில் சக்தி வாய்ந்த உணர்வாக விளைகின்றது. அவர் கண்டறிந்த மருந்தோ மனித உடலில் இருக்கும் நோயை மாற்றுகின்றது.

அதே சமயத்தில் மனித உடலிலே சாடும் அந்தக் கடுமையான வேதனைகள் தனக்குள் வளரவிடாத நிலைகளிலே அந்தச் சித்தன் எடுத்துக் கொண்ட ஞானம் அவன் உடலிலே அணுக்களாகப் பெருகுகின்றது.

1.இப்படிக் கடின சக்திகளை வென்ற அந்த உணர்வின் ஆற்றல் அவன் உடலில் விளைந்து
2.எந்தக் கடினமான நிலைகள் வந்தாலும் அவனுடைய சிந்தனைகள் அனைத்தும்
3.அதை நிவர்த்திக்கும் உணர்வின் ஞானமாக அங்கே உருவாகின்றது.

“நஞ்சினை வென்றிடும் அணுக்களை” அகஸ்தியரிடமிருந்து நாம் பெற வேண்டும்

 

மனிதனான பின் அகஸ்தியன் “நஞ்சினை வென்று” இருளினை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியைப் பெற்றான். அவன் வளர்ச்சியில் அவன் பருவ நிலை வரும்பொழுது திருமணம் ஆனது.

அவன் கண்ட உண்மையைத் தன் மனைவிக்கு எடுத்துப் போதித்தான். மனைவியும் அதன் கணவனின் சொல் படி உணர்வை நுகர்ந்தறிந்து அதுவும் நஞ்சினை வென்றிடும்… இருளை அகற்றிடும்… மெய்ப்பொருள் காணும் சக்தியினைப் பெற்றது.

அவர்கள் இரு மனமும் ஒன்றி வாழ்ந்தது
1.இருவருமே “நஞ்சினை வென்றிடும் உணர்வினை” அவர்கள் நுகர்ந்து
2.நஞ்சினை வென்றிடும் அரும்பெரும் சக்தி… பேரருள் என்ற ஒளியின் உணர்வினை அவர்களுக்குள் இருவருமே வளர்த்தனர்
3.இரு உடலிலும் ஒன்றென இணைத்தனர்.

எந்தத் துருவப் பகுதியின் வழியாக நுகர்ந்து அந்த உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இருக்கின்றனரோ…
1.அதனின்று வரும் உணர்வினை யாம் இப்போது சொல்லும் போது உங்கள் காதிலே அந்த உணர்வுகளைக் கேட்கின்றீர்கள்.
2.கண்ணிற்கே அந்த நினைவு வருகின்றது
3.இந்த நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நீங்கள் நுகர நேர்ந்தால்
4.அந்த உணர்வு உங்கள் உடலுக்குள் சென்று நஞ்சினை வென்றிடும் அந்த அணுவின் கருவாக உயிர் உருவாக்குகின்றது
5.அது நாளடைவில் நஞ்சினை வென்றிடும் அணுவாக உருப்பெறுகின்றது.
6.அடிக்கடி இந்த நிலையை நாம் அதிகமாகப் பெருக்கிக் கொண்டால்
7.நமது உடலில் அறியாது சேர்ந்த “நஞ்சினை அடக்கிடும்” அணுக்களின் பெருக்கமாகின்றது.

இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா சென்றால் “நஞ்சினை வென்றிடும் அரும்பெரும் சக்தியாக” இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல முடியும்.

நமது உயிர் எதனை உற்று நோக்கி உணர்வினை நமக்குள் வலுப்பெறச் செய்கின்றதோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் அங்கே அடைய முடிகின்றது.

ஆகவே நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலே சிவலோகமாக இருப்பினும் “சொர்க்கலோகமாக” மாற்றுகின்றது.

“உயிரின் வழி” இந்த உடலிலே மகிழ்ச்சி என்ற உணர்வுகளை உருவாக்கப்படும் பொழுது
1.நாம் இந்த உயிரின் வழியே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தறிந்ததனால்
2.உயிர் வழி நாம் சொர்க்கத்தை அடைய முடியும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

அதுதான் சொர்க்கவாசல் என்பது நமது உயிரின் இயக்கத்தை இப்படித் தெளிவாக உணர்த்துகின்றனர் ஞானிகள்.

“நஞ்சினை வென்று” உணர்வினைப் பேரருளாக மாற்றிய இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து இதை அலைகளாக மாற்றுகின்றது.

நமது குரு காட்டிய அருள் வழிப்படி அதனைத்தான் நாம் பெற இப்போது ஏங்கித் தியானிக்கின்றோம். நாம் எண்ணி ஏங்கும் உணர்வுகள் அனைத்தையும் நமது உயிர் அது ஈசனாக நின்று “ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…” என்று நமது உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

இப்படி இந்த உடலில் சொர்க்க லோகமாக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் மாற்றுதல் வேண்டும். இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்.
1.உயிரான ஈசன் வழி நாம் கேட்கும் போது அந்த உயிரான ஈசனின் வழி தான் சொர்க்கவாசல் அமைகின்றது.
2.ஆகவே நாம் இதனை இப்போது ஏங்கிப் பெறுவோம்.

பூமியில் உயிரணுக்களின் தோற்றம் எங்கிருந்து வந்தது…?

 

இப்பாட நிலைக்கொப்ப இந்நிலையில் உணர்த்தி வரும் இம்மண்டலங்களின் சக்தி நிலையும் இன்றுள்ள இம்மண்டலங்களின் சுழற்சியின் வேகத்தைக் காட்டிலும் இப்பூமியின் சுழற்சி சக்தி அதிகபப்டுவதாகவும் இந்நிலை ஒத்தே மற்ற மண்டலங்களின் துரித நிலையும் அதனதன் விகித நிலைப்படி அதிகப்படுவதாக உணர்த்தியுள்ளேன்.

இன்று இப்பூமியின் ஈர்ப்பு சக்தி நிலையும் ஓட்ட நிலையும் இந்த 24 மணி நேரம் 18 மணிக்கணக்கில் வரும் நிலையில் இன்று இப்பூமியில் திடப்பொருளாய் உள்ளவற்றின் நிலை எல்லாம் எந்நிலையில் செயல்படும்…?

இன்றுள்ள மலைகளும் நீர் நிலைகளும் இயற்கை சக்திகள் அனைத்துமே இப்பூமியின் அசைவின் தொடர்நிலை கொண்டு மாற்றம் கொள்ளப் போகின்றன. அந்நிலையில்
1.இப்பூமியில் இவ்வசைவின்போது ஏற்படும் இயற்கையின் தாக்குதலின் நிலையில்லாமல் தப்பிவிடும் பூமியில் வாழ்ந்திடும் உயிரினங்களின் நிலையும்…
2.இப்பூமியின் சுவாச சக்தியே மாறு கொண்ட பிறகு தப்பி வாழ்ந்திடும் ஜீவராசிகளின் சுவாசத்தின் நிலையும் மாறு கொள்வதால்…
3.இவ் இயற்கையில் இருந்து தப்பிடும் எந்த ஜீவராசிகளும் பல காலங்கள் வாழ்ந்திட முடிந்திடாது.
4.ஆக… இப்பூமியின் இயற்கை சக்தியே மாற்றம் கொள்ளப் போகின்றது.

இப்பூமியில் இப்பூமி தோன்றிய நாள் தொட்டே உதித்த உயிரணுக்கள் எவையுமே… உயிரணு அழிந்திடாது மாற்றம் தான் பிம்ப நிலையில் மாறும் என்று உணர்த்தியுள்ளேன்.

அதே சமயத்தில் இப்பூமியில் தோன்றி… இப்பூமியின் சுவாசத்தையே சுவாசித்துப் பழக்கப்பட்ட எவ்வுயிராத்மாவும் இப்பூமியில் இருந்து… மற்ற மண்டலத்திற்கு “மாறு கொண்ட சுவாச நிலையில்” சென்று வாழ்ந்திட முடியாது என்றும் உணர்த்தியுள்ளேன்.

இக்கலி மாறி கல்கியில் சுவாச நிலை மாறிக்கொண்ட இப்பூமியில் கலியின் காலம் வரை வந்திட்ட உயிர் ஆத்மாக்களின் பிறப்பிடம் எதுவாய் இருந்திடும்…?

இக்கேள்வியின் நிலை இந்நிலையிலேயே இருந்திடட்டும்.

1.நம் பூமிக்கு உயிரணுக்கள் தோன்றி உயிராத்மாவாய் அறிவு நிலை பெற்ற மனிதர்களாய் வாழும் சக்தி எந்நிலையில் வந்திட்டது…?
2.இன்று நம் சந்திரனின் நிலை என்ன…?
3.நம் பூமியில் மனித உயிரணுக்கள் தோன்றிடும் வித்து எங்கிருந்து ஆரம்பித்தது…?

நம் சூரியனின் ஈர்ப்புடன் கூடிய 48 மண்டலங்களில் நம் பூமியைக் காட்டிலும் வியாழன் மண்டலத்தின் அளவு விகித நிலை அதிகம்.

ஆனால் இன்று வியாழன் மண்டலத்தின் சக்தி நிலை கூடியிருந்தாலும் உயிராத்மா பிம்ப நிலை கொண்ட மனித இனங்களில் இல்லை. அங்கும் இன்றும் உயிரணுக்களுண்டு. நம் பூமியைக் காட்டிலும் செழிப்பும் பல நிலைகொண்ட கனி வளங்கள் அனைத்தும் உண்டு.

ஆனால் நம் பூமி இன்றுள்ள மனித ஆத்மாக்களை வளர்க்கும் நிலை நம்மை விட சக்தி கொண்ட வியாழனிலும் இல்லை. ஆனால் நம் பூமிக்கு உயிராத்மாவின் நிலைபெறும் சக்தி வியாழனிலிருந்து தான் வந்தது.

1.ஒரு கோடி இரண்டு கோடி நிலையிலல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்
2.நம் நிலைக்கொப்ப அறிவு நிலைப்பட்டு வாழ்ந்த ஆத்மாக்களைக் கொண்ட மண்டலம்தான் வியாழன் மண்டலம்.

இன்று நம் அறிவின் வளர்ச்சியில் மற்ற மண்டலத்திற்குச் செல்லும் ஆசை நிலையின் செயற்கை நிலைக்கொப்ப நம் பூமியிலிருந்து சந்திரன் செவ்வாய் இப்படியுள்ள மண்டலங்களுக்கு ஏவுகணையின் மூலமாய்ச் சென்ற ஆத்மாக்களின் சுவாச நிலை அங்கு இவர்கள் இருந்து வாழாவிட்டாலும் இவர்கள் விட்டு வந்த சுவாச நிலையின் சக்தியிலிருந்து தோன்றிடும் உயிரணுக்களின் வளர்ச்சி நிலையில் வித்திட்டு வந்துள்ளார்கள்.

அந்நிலை போன்றே
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழனில் தோன்றிய உயிராத்மாக்கள் நம் பூமிக்கு வந்து சென்ற நிலையினால்
2.நம் பூமியில் உயிராத்மாக்களின் தொடர்நிலை கொண்டது.
3.இங்கு எப்படி இக்கலியில் ஏற்படும் பிரளயத்தைச் செப்புகின்றோமோ அந்நிலை போன்றே
3.அன்று வியாழனில் ஏற்பட்ட பிரளையத்தினால் நம் பூமிக்கு உயிராத்மாக்கள் தோன்றும் நிலை வந்தது.

வரப்போகும் இப்பிரளய நிலையினால் நம் பூமியின் விகித அளவு நிலை கூடுவதைப் போல் சந்திரனின் நிலையும் கூடப்போகின்றது.

இன்று சந்திரனில் நம் பூமியைப் போல் மழையும் இங்குள்ள காலை பகல் இரவு என்று சூரியனின் ஒளி வீச்சில் கிடைத்திடும் மாற்ற நிலை அங்கில்லை.

சந்திரனில் சூரியனின் ஒளிக்கதிர் வீச்சின் நிலை ஒரே நிலையில் ஒளி பாய்ச்சிடும் சக்தி நிலையாய்ச் சுழற்சி கொண்டு… இம்மூன்று குமிழ் நிலை கொண்ட சக்தியில் சந்திரனின் நிலை உள்ளதினால்… மையப் பகுதியில் உள்ள இப்பள்ளத்தின் நிலையினால் ஒரே நிலையில் சூரியனின் அணுவீச்சுகள் இருந்தாலும் “மையப் பகுதியின் பள்ளத்தினால்” சந்திரனின் நிலை சிதறாமல் சுழன்று கொண்டுள்ளது.

இக்கலியின் மாற்றத்தில் சந்திரனின் நிலையென்ன…? என்பதனை அடுத்து விளக்கிடுவேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஈஸ்வரபட்டாய குருதேவர் எம்மைப் (ஞானகுரு) பதினான்கு வருடம் பல காடு மேடெல்லாம் அலையச் செய்தார். என்னை அறியாது எனக்குப் பல துன்பங்களை அங்கே ஊட்டினார்.

அந்தத் துன்பத்தை நான் நுகர்ந்து பார்க்கும் போது அது எல்லாம் எனக்குள் வந்து விடுகின்றது. அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று அனுபவபூர்வமாக நான் தெரிந்து கொள்வதற்காகவே அதை எல்லாம் கொடுத்தார்.

அதற்காக வேண்டி மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படியும் செய்தார். அதை நான் வேடிக்கை பார்க்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
1.ஒருவருக்கொருவர் சண்டை போடுவது… ஒருவருக்கொருவர் தகாத நிலையில் பேசுவது…
2.இது போன்ற எத்தனையோ உணர்வின் தன்மைகளை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது
3.சுவாசித்தது உயிருடன் மோதும் பொழுது ஏற்கனவே நான் எடுத்துக் கொண்ட நல்ல குணங்களுக்குள் இது கலந்து
4.அந்த விஷத்தின் தன்மை எனக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் செயலாக்க விடாதபடி
5.என் எண்ணங்கள் எப்படி எல்லாம் மாறுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும்
6.என்னை அறியாமலே உடலுக்குள் பல கவலையும் பல சஞ்சலமும் ஏற்படச் செய்து
7.எவ்வளவு திடசாலியாக இருந்தாலும் பலவீனப்படுத்துவதையும் குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வைக் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே பதிவாகி விடுகின்றது.

அந்த அலைகள் உடலுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் இரவில் படுத்திருக்கும் போது
1.அந்த உணர்வுகள் தன்னை அறியாமலேயே சுவாசிக்கச் செய்து
2.“பயப்படச் செய்வதையும்… தூங்கவிடாமல் எப்படிச் செய்கிறது…? என்பதையும்”
3.நேரடியாக அனுபவபூர்வமாக குருநாதர் காணும்படி செய்தார்.

அங்கே பார்த்த உணர்வுகள் உடலுக்குள் அது எதுவாக இணைகின்றது…? அது மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக உணர்ச்சிகளை ஊட்டி உடலில் அணுக்களாக வளரச் செய்து நோய்களாக எப்படி உருவாகிறது…?

காரணம்…
1.ஒவ்வொரு நாளும் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ…
2.அந்தக் குணங்களுக்குத் தக்கவாறு… ஒவ்வொரு உணர்வுக்குத் தக்கவாறு தான் உடலும் உடல் உறுப்புகளும் அமைந்தது.
3.ஈரல் கல்லீரல் மண்ணீரல் கிட்னி சிறுகுடல் பெருங்குடல் இருதய வால்வுகள் சிறு மூளை பெரு மூளை என்று
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு எதனெதனை அது சேர்த்ததோ
5.அந்த மிருதுத் தன்மைக்குத் தக்கவாறு தான் அதனுடைய செயல்களும் இருக்கின்றது.

அந்த உறுப்புகளின் இயக்கங்களையும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலிகளுக்கொப்ப அது எப்படி இயங்குகிறது..? என்ற நிலையையும் உடலுக்குள்ளேயே வைத்துக் காட்டினார் குருநாதர்.

மருத்துவம் படிப்பவர்கள் படிப்பு (PRACTICAL) மூலமாகத் தெரிந்து கொள்வதற்காக பிறருடைய உடல்களை எப்படி எடுத்துப் பரீட்சித்துப் பார்ப்பார்களோ அதே போல
1.எத்தகைய உணர்வை நீ சுவாசிக்கின்றாய்…?
2.எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும் உடல் உறுப்புகளை எப்படித் தாக்குகின்றது…?
3.அந்த உணர்வின் வேகத் துடிப்பு இரத்தத்துடன் கலந்து சுழன்று வரப்படும் போது
4.ஒவ்வொரு உறுப்புகளிலும் இது எதிர்மாறாகும் போது அது எப்படி எரிச்சலாகின்றது…
5.அது எந்தெந்த வேதனையாக உருவாக்குகின்றது…? என்று காட்டினார்.

உடலிலே சர்க்கரைச் சத்து அதிகமாகி விட்டால் எந்த அளவிற்குச் சர்க்கரை அதிகமாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி சிறு நீரின் கலர் மாறுகின்றது… பார்க்கலாம்…!

அதைப் போல் பிறருடைய செயல்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும்… இந்த உணர்வுகள் அது சுவாசித்து உடலுக்குள் செல்லும் போது இரத்தமாக மாறி… உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளுக்குள் ஊடுருவி… இதற்கும் அதற்கும் எதிர்மறையாகும் போது
1.அந்த உறுப்புகள் எப்படிப் பின்னமாகின்றது…?
2.உனக்குள் வலி எப்படி வருகிறது…? என்ற நிலையையும்
3.”என்னையே முன்னிறுத்தி” என் உடலின் இயக்கங்களைப் பார்க்கச் சொல்கிறார்.

எக்ஸ்ரே படங்களிலும் மற்ற ஸ்கேன் படங்களிலும் பார்ப்பது போல் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அது எவ்வாறெல்லாம் உன் உடலில் விளைகிறது…? என்பதை குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் இதைக் காட்டினார்.

பின் அதை எல்லாம் மாற்றும் உபாயமாக “மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டிய முறைகளையும்” கொடுக்கின்றார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின் தான் உங்களுக்குள் இதை உபதேசிக்கின்றேன்.

1.நீங்கள் சாதாரண நிலையில் இருந்தாலும்
2.சிறு குழந்தையாக இருந்தாலும் அல்லது படிக்காதவர்களாக இருந்தாலும்
3.யாம் உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவு செய்யப்படும் போது
4.குருநாதர் காட்டிய அருள் ஞானிகளின் சக்திகளை நீங்களும் பெற முடியும்.

அந்த மெய் ஞானிகள் தீமையை நீக்கும் ஆற்றல்களைப் பெற்று எவ்வாறு விண்ணுலகம் சென்றார்களோ அந்த உணர்வின் சத்தை உங்களுக்குள் நினைவு கூர்ந்து இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது உற்றுக் கவனித்தால் அது உங்களுக்குள் பதிவாகிவிடுகின்றது.

அந்தப் பதிவை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அவர்கள் பெற்ற சக்தியை நீங்களும் பெற முடியும்… விண் செல்லவும் முடியும்…!

தியானம் எடுக்க வேண்டிய முறை

 

நமது கண் ஒரு ஆண்டனா…! ஏரியல்…! அதைப் பயன்படுத்தித் தியானத்தில் வெளியிலிருந்து எடுக்கின்றோம்…
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது அந்த அலைகள்.
2.உங்களிடம் இந்நேரம் வரையிலும் அதைப் பதிவு செய்துள்ளேன் (ஞானகுரு)
3.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் பொழுது கண்ணான ஆண்டனா மூலமாக உங்கள் உடலுக்குள் அதைச் சேர்த்துப் பதிவாக்குகின்றது.

மீண்டும் இதே மாதிரி இந்த எண்ணத்தை எண்ணி வரப்படும் பொழுது அந்தக் காற்றில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து நமது கண் ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.

இந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உமிழ் நீராக மாறி நம் உடலில் இந்தச் சத்தைச் சேர்க்க வேண்டும்.
1.இப்படி ஒவ்வொரு உடலிலும் உள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்குத்
2.தனித்து இயக்கச் செய்வது தான் இப்பொழுது நம்முடைய வழி.

ஏனென்றால் இன்றைக்கு இருக்கும் விஷத்தன்மையான உலகில் சீக்கிரம் இதைக் பெற்றுக் கொண்டீர்கள் என்றால்… உங்கள் உடலும் நன்றாக இருக்கும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கும்… உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்… உலகமும் நலம் பெறும்.

உலகமே என்றால்… அந்த உணர்வுகள் எல்லாமே நம் உடலுக்குள் அடங்கி இருக்கின்றது… யாரும் பிரிந்து இல்லை…!
1.அந்த உலக இயல்பு நமக்குள் கேட்டறிந்த உணர்வு பதிவாகி மீண்டும் நமக்குள் இயக்கிக் கொண்டிருப்பதனால்
2.அதை மாற்றுவதற்காக என் குருநாதர் எப்படி எனக்குச் செய்தாரோ அதே மாதிரி உங்களுக்குச் செய்கின்றேன்.

உங்களைக் கட்டுப்பாட்டுடன் கொண்டு வரவில்லை. நீங்கள் எல்லாம் தெளிவாக வேண்டும் என்று தான் கொண்டு வருகின்றோம். அதை நீங்கள் நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும்.

நல்ல வழியில் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி இனி பிறவியில்லா நிலையை அடையலாம்.

ஆனால் ஆசையை எங்கேயோ வைத்து என் தொழில் இப்படி இருக்க வேண்டும் நான் இப்படி இருக்க வேண்டும் நான் பேரும் புகழும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் அந்த ஆசை எங்கேயோ போய்விடும்…!
1.அது ஒன்றிலேயே போகும்… நமக்குள் சிந்திக்கும் ஆற்றலை இழந்து விடுவோம்.
2.கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆவாய் சொன்னது போன்று
3.எதன் மேல் ஆசைப்படுகின்றோமோ அதன் வழியில் “படுபாதாளத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்…”

ஆகவே… நமது ஆசையினுடைய உணர்வுகள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு சென்றால் அங்கே இணைந்து இருளை நீக்கி ஒளியின் உணர்வாக மாற்றிவிடும்.

அந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லி வருகின்றேன்.

முதலில் உங்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணுங்கள். அம்மா அப்பாவின் அருளால் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் பெற வேண்டும்” என்று அடுத்து ஏங்குங்கள். (என் குரு தான் எனக்கு இந்த வழியைக் காட்டினார்).

அன்னை தந்தை என் உடலை உருவாக்கியது… எனக்கு ஒரு நல்ல வழியையும் உணர்த்தியது… அது குருவாகவும் இருக்கின்றது. அதனால் அவர்களை முதலில் எண்ண வேண்டும்.

அதே சமயத்தில்
1.இந்த மனித உடலுக்குப் பின் எங்கே என்ற நிலையில் இருளை நீக்கி ஒளி பெறும் உணர்வுகளை உபதேசித்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
2.அந்த உணர்வை அவர் சொன்ன வழியில் நாம் பின்பற்றினோம்.
3.அவர் நுகரச் சொன்னதை நுகர்ந்தேன்… அந்த உணர்வு என் உடலில் என்ன செய்தது…? என்று அறிந்தேன்.
4.அதைப் போல் நுகர்ந்த உணர்வுகள் என்ன செய்யும்…? என்று உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.
5.இதை உணர்ந்தால் உங்கள் தீமையை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

பன்றி எப்படிச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்ததோ அதைப் போல் சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அந்த அருள் ஞானியின் உணர்வை நீங்கள் சுவாசித்து “உயிரை ஒளிமயமான நிலைகள் பெற முடியும்….”

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியும் நீங்கள் தெய்வீகப் பண்பும் தெய்வீக அன்பும் தெய்வீக சக்தியும் பெற வேண்டும். உங்கள் சொல்லிலே வைரத்தைப் போன்று ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும்.

தங்கம் எப்படி மங்குவதில்லையோ அதை போன்று மனது மங்காத நிலைகளை நாம் கொண்டு வர வேண்டும். மலர் எப்படி நன்றாக நறுமணங்கள் கொடுக்கின்றதோ உங்கள் சொல் மற்றவரை நல்ல மணங்களாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

அந்தச் சக்தி பெறுவதற்குத் தான் இப்பொழுது நாம் இதைச் செய்கின்றோம். ஆகையினால் நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருங்கள். இது பேராசையும் கூட…!

1.உங்கள் உடலில் உள்ள எல்லாவற்றிற்கும் பெற வேண்டும்…
2.எல்லோருக்கும் இந்த மாதிரிச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பேராசையாக மாறுகின்றது.
3.நானும் பெறுகின்றேன்… நீங்களும் பெறுவீர்கள்.
4.எல்லோரும் பெற வேண்டும் என்ற பொழுது இந்தப் அந்தப் பேராசை நமக்குள் வளரும்.

ஆனால் நான் சொல்லிவிட்டு உங்களை ஏமாற்றினேன் என்றால் அது பேயாசை‌. சாமி பெயரைச் சொல்லி அடுத்தவரை ஏமாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்றால் அது பேயாசை. அவர்களையும் கெடுத்து நீங்களும் கெட்டு மற்றவர் பெறக்கூடிய நல்ல உணர்வைத் தடுக்கும் நிலை வந்துவிடும்.

ஏனென்றால் ஒவ்வொரு உடலில் ஒவ்வொரு விதமான தீமைகள் உண்டு.

1.அந்தத் தீமைக்கு நாம் சிறிது இடம் கொடுத்தால் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விடும்.
2.நாம் செல்லும் நல்ல பாதையைத் திசை திருப்பி வேறொரு வழிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
3.முதலில் தெரியாது… பின் சிக்கலான பிற்பாடு… அந்த வேதனை வந்த பின் தான் நாம் உணர முடியும்.

இதைப் போன்ற தீமைகள் சந்தர்ப்பத்தால் எத்தனையோ வகையில் உருவாகின்றது. அதிலிருந்து நாம் தப்புவதற்காக வேண்டி மீண்டும் மீண்டும் இதை “எச்சரிக்கை செய்கின்றேன்…”

உங்கள் உணர்வனைத்தையும் உங்கள் அம்மா அப்பாவின் மேல் செலுத்துங்கள். அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்.
1.குருதேவர் அறிந்துணர்ந்த சக்தியான துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டுமென்று
2.உங்கள் ஏக்கத்தைக் கண்ணான கருமணியில் செலுத்துங்கள்.

ஏனென்றால் எதுவாக இருந்தாலும் கருமணியில் தான் படமாகின்றது. அந்த உணர்வு தான் நரம்பு வழி எல்லாவற்றிற்கும் உணர்த்துகின்றது.

ஆகையினால் இதைக் கருமணியில் எடுத்து கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றினால்
1.இந்த உணர்வுகள் உயிர் வழி இழுக்கச் செய்து அந்த உணர்வை நம் உடலுக்குள் பரப்ப முடியும்.
2.கொஞ்ச நாட்கள் இப்படிப் பழகி விட்டால் எல்லா அணுக்களுக்கும் இந்த வீரிய சக்தியை ஊட்டும் பொழுது நமக்குள் தீய சக்தி குறையும்.

மனித வாழ்க்கையில் தீயவர்களைப் பார்த்து அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல சக்திகள் தணிந்து தீய சக்தியே நமக்குள் விளைகின்றது.
1.அந்தத் தீய சக்தியை நீக்கி அதைக் குறைத்து நல்ல சக்தியை வளர்ப்பது தான் நம் தியானத்தின் நோக்கம்.
2.ஆக உங்களுடைய மனதை இதைப் போல் தெளிவாக்கித் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்.

பிரளய மாற்றம்

 

பூமி சுழலும் வேகத்தை… ஒரு நாளைக் குறிக்க 24 மணி நேர விகிதப்படுத்தி இவ்வுலகம் முழுவதுமே அக்கணக்குப்படி ஒரு நாள் என்று நிலைப்படுத்தி உள்ளார்கள்.

இந்த 24 மணி நேர விகிதக் காலம் குறித்து… பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவும் அந்நிலையை வைத்தே அந்நிலையின் செயலுக்கொப்பக் கால நிலை குறிக்கும் அளவைச் செயலாக்குகின்றனர்.

இந்த 24 மணி நேரம் குறித்த காலத்திற்கும்… “இன்று” இப்பூமி சுழலும் நிலை துரிதம் கொண்டுள்ளது… வினாடி விகிதத்தில். ஆனால் பல நூறு கோடி ஆண்டுகளில் சில வினாடி நேரம்தான் அதிகத் துரிதத்துடன் இன்று நம் பூமி சுழல்கின்றது.

ஆனால்
1.இக்கலி முடிந்து கல்கியில் இவ்வுலகப் “பிரளயம் தோன்றி” இவ்வுலக நிலை மாறிச் சுழலும் தருவாயில்
2.நம் பூமி சுழலும் வேகம் இப்போதைய நேரத்தில் நான்கில் ஒரு பாகம் எடுத்த நிலையில் மூன்று பாகங்கள் கொண்ட துரித கதியில்
3.இன்று 24 என்பது 18 மணி விகிதத்தில் சுழலப் போகின்றது.

நம் பூமியில் இவ் அசைவின் பிரளயத்தின் போது நம் பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களும் சேரப் போகின்றன. நம் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் சக்தி நிலையும்… அளவு நிலையும் அதிகப்படப் போகின்றன.

நம் சூரியனின் விகித நிலையும் கூடப் போகின்றது.

சூரியனும் 48 மண்டலக் கோளங்களும் ஒரே சமயத்தில் வளர்ச்சி கொள்ள… இவற்றிற்குச் சக்தி நிலை கூடும் அமிலங்கள் யாவும் நம் கண்ணிற்குத் தெரியாத நிலை கொண்டு… பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியே இம்மாற்றம் கொள்ளும் தருவாயில் மண்டலங்களின் ஈர்ப்பில் வந்து சேர்ந்து… மண்டலங்களின் வளர்ச்சி நிலை கூடப் போகின்றது.

இன்று நம் பூமியில் வட துருவம் தென் துருவ நிலை கொண்டு பூமியின் சுழற்சியில் பகலும் இரவும் இக்கால நிலைகள் நான்கும் ஒத்த நிலையில் உள்ளன.

ஆனால் மழைக்காலம் மற்றும் அந்தந்தப் பிரதேசங்களின் பூமி ஈர்த்து அப்பூமி கக்கும் உஷ்ண அலைகளுக்கொப்ப மழையின் நிலை அந்தந்த நிலைகளில் மாறு கொண்டு வருகின்றது.

ஆனால் நம் பூமியின் மாற்றம் கொள்ளும் கல்கியின் காலத்தில் இன்று இவர்கள் குறித்துள்ள 365 நாள் விகிதக் கணக்கு வருடச் சுற்றலில் குறைவுபடப்போகிறது.

சூரியனைச் சுற்றியுள்ள அனைத்துக் கோளங்களின் சுற்றலின் நிலையும் துரிதப்படுவதினால் சூரியனின் நிலையும் துரிதம் கொள்ளப் போகின்றது.

நம் சூரியனுடன் தொடர்பு கொண்ட மண்டலங்களின் விகித நிலை கூடும் பொழுது பால்வெளி மண்டலத்தின் ஈர்ப்பு சக்தியில் அமில சக்தியை எல்லாம் இம்மண்டலங்கள் உறிஞ்சிய பிறகு நம்மைச் சார்ந்துள்ள இம்மண்டலங்களின் நிலையில்லா மற்ற மண்டலங்கள்
1.நம் சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட சூரியனின் சுழற்சியின் ஈர்ப்பிலுள்ள ஒரு மண்டலம்
2.ஆவியாய்ப் பிரியும் நிலை கொண்டு தன் ஜீவனை இழக்கப் போகின்றது.
3.பல நூறு கோடி ஆண்டுகளாய் வாழ்ந்த மண்டலம் அது.
4.நம் பூமிக்கு மட்டும் மாற்ற நிலை வரப்போகின்றது என்பது அல்ல.
5.இவ்வண்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களின் நிலையிலுமே இந்நிலை செயல்படப் போகின்றது.

அதிகாலையில் நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டிய “சார்ஜ்”

 

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் காலையில் எடுத்து
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்காகச் சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்… அதாவது பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும்.

ஒரு இன்ஜினை முதலில் ஓட்ட வேண்டும் என்றால் என்ன செய்கின்றார்கள் என்று தெரியுமா…?

மோட்டாரில் பேட்டரியை வைத்துள்ளார்கள் அதை வைத்து “எர்த்” ஐக் கொடுத்த உடனே ஓட ஆரம்பிகிறது. அடுத்து இஞ்சின் பெட்ரோலை எடுத்து ஆவியாக மாற்றித் தன்னிச்சையாக ஓடுகிறது.

இதே மாதிரிக் காலையில் எழுந்தவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் போட்டுச் சார்ஜ் செய்து
2.அந்த நல்ல உயர்ந்த உணர்வுகளை எடுத்து உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு எல்லாம்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று யாம் (ஞானகுரு) சொன்ன பிரகாரம் நன்றாகச் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும்‌.

அதற்குப் பின் இந்த்த் தினசரி வாழ்க்கை நடப்பில்… ஒருவன் அந்தத் தவறு செய்கின்றான் இந்தத் தவறு செய்கின்றான் என்று நாம் இதை எல்லாம் கேட்க நேர்கின்றது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நல்ல அறிவு மங்கிக் கொண்டே வருகின்றது.

அப்போது அதை மங்காமல் தடுப்பதற்கு…
1.காலையில் சார்ஜ் செய்த அந்தச் சக்தியின் துனை கொண்டு
2.அந்தந்த நிமிடத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று “சுருக்கமாக எண்ணி முடித்து விட்டால்” அப்படியே ஒடுங்கிவிடும்.
5.அவர்களுடைய கஷ்டமோ துன்பமோ தீமைகளோ நமக்குள் வராது.

அதற்குப் பின்… அவர்கள் சிந்தித்துச் செயல்படும் அந்த திறன் பெற வேண்டும்… அவர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… அவர்கள் நோய் நீங்க வேண்டும்… அவர்கள் பிள்ளை நல்லவனாக இருக்க வேண்டும் என்று “இதைத்தான்” நாம் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லிவிட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

நாம் சொல்கின்றோம் அவர்கள் காதுகளில் கேட்கின்றது. நாம் வெளியிட்ட உணர்வு அவர்கள் கண்கள் பதிவாக்குகின்றது. திருப்பி எண்ணினார்கள் என்றால் அவர்களுக்கு லாபம். இல்லையென்றால்… அவர்கள் சொன்ன அந்தக் கஷ்டம் நமக்குள் வராமல் துடைத்துக் கொள்ளலாம்.

மற்றவர்கள் கஷ்டம் என்று சொல்லும் பொழுது நீங்கள் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்காமல்… கஷ்டத்தைச் சொல்லாதீர்கள் என்று சொன்னால்..
1.என்ன…! பெரிய இவர் மாதிரி நடக்கின்றார்…! என்று நம்மைக் குற்றமாகச் சொல்லிக் கொண்டு வருவார்கள்.
2.ரொம்ப அகராதி பிடித்தவர்… ஏதோ சாமியார் சொன்னாராம்… எதையும் கேட்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்று
3.என்னையும் சேர்த்து இரண்டு திட்டு இழுத்து விட்டுப் போய் விடுவார்கள். இதுதான் நடக்கும்.

அதனால் அதைக் கேட்டு உணர்ந்து நல்ல வழி சொல்ல வேண்டும்…!

நீங்கள் நன்றாக இருப்பீர்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உங்கள் தொழில் நன்றாக இருக்கும். மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள் ஒன்றுபட்டு வாழ்வீர்கள் என்று “நம் சொல்” அங்கே சென்று அவர்களை நல்லதாக்க வேண்டும்.

இப்படிச் செய்யவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் வரும் பொழுது நம்மை இயக்கி விடுகின்றது. அது உமிழ் நீராக மாறுகின்றது நல்ல குணங்களை மயங்கச் செய்கின்றது… நம் சிந்தனையைக் குறைக்கச் செய்கின்றது.

ஆகவே அது ஒரு சந்தர்ப்பம்…!

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் தான் மனிதனாக வரும் வரையிலும் தீமையை நீக்கும் உணர்வு கொண்டு பன்றியாகப் பிறந்து சுத்தமாக தீமையை நீக்கி நல்ல அணுக்களை உருவாக்கி வந்தது.

பன்றியின் உடலில் இருந்து தான் நாம் மனித உடலைப் பெற்றோம்.

இந்த மனித உடலில் நாம் நஞ்சினை மலமாக மாற்றி நல்லதை உடலாக மாற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய அறிவாக நமது ஆறாவது அறிவு உள்ளது.

அதைச் சீராகப் பயன்படுத்தி… ஞானியர் கண்ட அந்த உண்மையை நமக்குள் செலுத்தி இந்த உடலுக்கு பின் நாம் பிறவில்லா நிலை அடைய வேண்டும். இதை நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் உடலுக்குள் செலுத்திப் பாதுகாக்க முடியும்.

எப்படித்தான் இருந்தாலும் தேடிய செல்வம் நம்முடன் வருகின்றதா…?

இத்தனை ஞானத்தை பேசும் ஞானிகள் உயிரோடு இருக்கின்றார்களா…?
1.ஆனால் உயிரோடு இருக்கின்றார்கள் “ஒளியின் உடலாக” இருக்கின்றார்கள்
2.அதாவது உயிரோடு சேர்ந்து ஒளியாக விண்ணிலே நிலையாக இருக்கின்றார்கள்.

இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால்… அடுத்து என்ன ஆகும்…?

இங்கே இப்பொழுது நமக்குள் எடுத்துக் கொண்ட வேதனை, வெறுப்பு, சங்கடம், எந்தெந்தக் குணங்களோ அதற்குத் தகுந்த மாதிரி நமது உயிர் உடலை அமைத்து மாற்றிக் கொள்கின்றது.

அப்புறம்… வலுவானது தாக்கும் போது அதைக் காட்டிலும் வலுவான உணர்வைக் கொண்டு தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகிப் பரிணாம வளர்ச்சி அடையும்.

இருந்தாலும்
1.இதற்கு முதலில் எப்படி நாம் வேதனைபட்டோமோ அந்த வேதனைப் பட்டு மனிதனாக மீண்டும் வருவதற்குக் காலம் இல்லை
2.அதற்குள் நம் பூமி எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது… அந்த அளவிற்குப் பூமியினுடைய மாற்றங்கள் போய்க் கொண்டுள்ளது.

பூமியில் ஏற்படும் பகல் இரவு… நான்கு பருவ கால மாற்றங்கள்

 

இப்பூமியும் இப்பூமியைப் போன்ற இப்பூமியைச் சார்ந்த 48 மண்டலங்களும் நம் சூரியனின் குழந்தைகளான நம் மண்டலங்கள் சுற்றி ஓடும் விகித நிலைப்படுத்தி ஒரு வருடம் என்ற நிலையில் 365 நாள் விகிதக் கணக்குப்படுத்தியும் நான்கு வருடத்திற்கு ஒரு நாள் அதிகப்படுத்தி லீஃப் வருஷம் என்றும் சூரியனைச் சுற்றி ஓடும் நிலை உணர்ந்து இவ்வான சாஸ்திரத்தில் வருடம், நாள், வாரம் இப்படி நிலையுணர்ந்திடப் பல நிலைகளை இவ்வுலகின் நிலையில் உணர்த்தியுள்ளார்கள்.

இப்பூமிக்கும் நம் சூரியனுக்கும் உள்ள தொடர்பு நிலை எந்நிலை கொண்டுள்ளது…? காலங்களில் நான்கு வகைக் காலங்களும் ஒரு நாளில் காலை, பகல், இரவு என்ற மூன்று நிலைகளும் ஒவ்வொரு நொடியும் ஒரு நொடியைப் போலில்லாமல் இவ்வுலக ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் சுழன்று கொண்டே உள்ளன.

உதய காலத்தில் நாம் காணும் சூரியனின் விகித நிலை உருவமே பெரிதாகவும், பகல் ஏற ஏற நம் பூமிக்கு நேர் மையத்தில் சூரியனின் நிலையைக் காணும் பொழுது உதய காலத்தில் கண்டிட்ட சூரியனின் உருவ அமைப்பைவிட உச்சிக் காலத்தில் சிறிய கோளமாகவும் பகல் மாறி மாலை சூரியனின் அஸ்தமத்தில் உதய காலத்தில் கண்ட நிலைப்படி உருவ அமைப்புப் பெரிதாகவும் காண்கின்றோம்.

எந்நிலை கொண்டு…?

உதய காலத்தில் சூரியனின் நிலை நம் பூமியின் நிலைக்கும் இடைப்பட்ட தூரம் குறைவு. நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை உள்ளது.

ஒவ்வொரு நொடியும் உச்சிப்பகல் வருவதற்குள்
1.நம் பூமியின் ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் ஓடும் நிலையில்
2.“நாம் உள்ள இடத்தில்…” சூரியனின் நிலை நமக்கும் நேர் மேலே வரும் பொழுது
3.உதய காலத்திற்கும் பகல் உச்சி நேரத்திற்கும் “நம் பூமிக்குச் சூரியனின் தூர விகிதம் மிகவும் அதிகமாகி விடுகிறது…”

உதய கால தூர விகிதப்படி உச்சிக் காலத்தில் இருந்திட்டால்… நம் பூமி சுழற்சி வேகமும் சூரியனின் சுழற்சி வேகமும் சூரியனிலிருந்து வந்திடும் ஒளிக்கதிர்களின் வெப்பநிலை நம் பூமியின் நேர் மையத்தில் பட்டுப் “பூமியே வெடிப்பு நிலையில் சிதறுண்டிருக்கும்…”

உச்சி நிலையில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் அதிகப்படுவதினால் சூரியக் கோளின் உருவ அமைப்பைச் சிறிதாகக் காண்கின்றோம்.

பகல் மாறி மாலை வர வர நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை வருவதினால் மாலையிலும் இந்நிலை போன்ற சூரியனின் உருவ நிலையைப் பெரிதாகக் காண்கின்றோம்.

ஆனால் உதய காலத்தில் நமக்கு அருகாமையில் உள்ள சூரியனின் வெப்பநிலை நமக்குக் குறைந்தும் பகல் நேரத்தில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் நீண்டுள்ள நிலையில் வெப்பத்தை அதிகமாக எடுக்கின்றோம்/ எந்நிலை கொண்டு…?

நம் பூமிக்கு உள்ள நான்கு திசைகளில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்ற நிலையில்
1.வட துருவத்திலும் தென் துருவத்திலும் நம் பூமியின் அச்சாய் நிறைந்துள்ள
2.நம் பூமியின் பொக்கிஷக் கடல்களான அந் நீர்நிலைகளின் மேல் இவ்வுதய கால சூரிய அலைகளின் வெப்பம் பட்டு
3.அவ்வொளிக் கதிர்களின் எதிர் வீச்சின் சக்தி தான் காலையும் மாலையும் உள்ள கால நிலைகள்.

நம் பூமியின் இவ்வட துருவ தென் துருவ நிலைகளில் அமைந்துள்ள இக் கடல்களின் சக்தியினால்தான் நம் பூமியின் சக்தியே இந்நிலையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒவ்வொரு தன்மை கொண்ட சக்தி நிலையில் உருப்பெற்ற மண்டலமாய்ச் சுழல்கின்றது.

நம் பூமியின் இயற்கை தந்த பொக்கிஷ நிலைதான் இன்று நான்கு வகைக் காலங்களை அடைந்த நிலை.

சூரியனின் விகித தூரத்திற்கும் மற்ற மண்டலங்களில் இருந்தும் நம் பூமிக்கு ஏற்படும் ஈர்ப்பு சக்தியின் நிலைக்கொப்பத்தான் கோடை காலம், வசந்த காலம், இளவேனிற் காலம், குளிர் காலம் இப்படி நிலை பிரித்து நாமமிட்டு நாம் அழைக்கும் இக்காலங்கள்.

நம் பூமியின் வட துருவ தென் துருவ நீர்நிலைகளின் மேல் சூரியனின் தூர விகிதமும் நம் பூமிக்கு அருகாமையில் உள்ள சந்திரனின் தூர விகிதமும் உள்ள நிலையில் வட துருவ, தென் துருவ நீர்நிலைகளின் மேல் அம்மண்டலங்களில் இருந்து தாக்கிடும் அணு சக்திகளின் நிலை கொண்டுதான் இப்பூமிக்கு ஏற்படும் காற்று மண்டலங்களின் சக்தி நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறு கொள்ளுகின்றன.

ஒவ்வொரு நொடியும், இப்பூமி தோன்றிய நாள் தொட்டே மாற்றம் கொண்டேதான் சுழன்று கொண்டுள்ளது.

1.நொடிக்கும் குறைவான நிலையிலேயே ஒவ்வொரு நிலையும் மாறி மாறியேதான் இன்றளவும்
2.இனி நடந்திடும் பல ஆயிரம் கோடி ஆண்டுகளும்
3.இப்பூமியின் நிலையும் மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் சுழன்றே ஓடிடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய வழியில் பல அதிசயங்களைச் செயல்படுத்தலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இது எல்லாம் எதற்கு உதவும்…?

1.இந்த உடலுக்குப்பின் என்ன…? என்பதை இங்கே உடைத்துச் சொல்கின்றேன் (ஞானகுரு).
2.பிறவியில்லா நிலை அடையும் அதற்குண்டான சக்தியை நாம் பெற வேண்டும். அது தான் முக்கியம்.

உடலை விட்டுப் பிரிந்தால் நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது…? அந்த அருள் ஒளியின் தன்மையை நீங்கள் பெற வேண்டும். நீங்கள் தயாராக வேண்டும்… அதன் வழி தான் எல்லோரும் தயாராக முடியும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நீங்கள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.
2.அதை நீங்கள் வலுவாகப் பெற்றால்தான் மற்றவர்களுக்கும் அதைப் பாய்ச்ச முடியும்.
3.அவர்கள் இந்த உணர்வைப் பெற… ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் மூலமாக… மற்ற எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.

ஒரு நோயாளியைப் பார்த்தபின் அவருடைய நோயைக் கேட்டறிகின்றோம். அதை விசாரித்த பின் அதே நோய் எப்படி வருகின்றதோ இதைப்போல
1.அருள் உணர்வைக் கேட்டபின்
2.அருள் உணர்வைப் பெறச் செய்யக்கூடிய தகுதி
3.நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

எல்லோரும் மகிழ வேண்டும் என்ற உணர்வை நான் எண்ணும் பொழுது அந்த மகிழ்ந்த உணர்வுகள் எனக்குள் விளைகின்றது. அதே போன்று நீங்களும் செயல்படுத்தி அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்குள்ளும் தோற்றுவிக்க வேண்டும்.

ஆகவே எது பதிவோ அது மீண்டும் நினைவுக்கு வரும். அதன் வழி இந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டால் இதை நீங்கள் வளர்க்க முடியும்.

உதாரணமாக ஒரு வித்தை உருவாக்குகின்றனர். எந்த வித்தை உருவாக்குகின்றார்களோ அதன் ஊன்றப்படும் போது அது விளைச்சலாகிப் பல வித்துகளாக வரும்.

அதைப் போன்று தான் இந்த ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதை நீங்கள் பெற வேண்டும்… வளர்க்க வேண்டும்.

ஆனால் தொழிலுக்கும் குடும்பத்திற்கும் இதைச் செய்தேன்… கஷ்டம் நஷ்டம்…! என்று சொல்வதை விடுத்து விட்டு
1.நாங்கள் அந்த அருள் சக்திகளைப் பெறுகிறோம்
2.அதை வைத்துச் சீர்டுத்துவோம் என்று இந்த உணர்வை வலுப் பெறுங்கள்.
3.இந்த வாழ்க்கையை உங்களால் செம்மைப்படுத்த முடியும்.

ஆசை ஒரு பக்கம்… எண்ணம் ஒரு பக்கமாகச் சென்றால் நிறைவேறுவது கஷ்டமாகி விடுகிறது.

அதே சமயத்தில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பதிலும் ஒரு சிலர் குறை காணுவதிலேயே இருப்பார்கள். குறையை ஊன்றும் தன்மை தான் அவர்களுக்கு வருகின்றது.

குறையிலிருந்து மீட்க வேண்டும் என்ற உணர்வு வருவதில்லை அப்போது அந்த வளர்ச்சியும் குன்றுகின்றது.

இதைப் போன்ற நிலையெல்லாம் மாற்றி அருள் வழியில் நாம் வளர்த்துக் காட்டும் தன்மைக்கு வரவேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்திகளைப் பெற வேண்டும். அருள் வழியில் நாம் வாழ வேண்டும்.

இந்த உணர்வை நாம் வளர்த்தால் நிச்சயம் அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

1.குறை கூறுவது எளிது
2.குறையை நிவர்த்தி செய்வது மிக மிகக் கடினம்
3.அது நம்மை அடிமையாக்கக் கூடாது… அதை அடிமையாக்கி அந்த அருள் உணர்வைப் பெருக்குதல் வேண்டும்.

நம்முடைய மோப்பம் எதிலே இருக்கிறது…?

 

அதை யாராவது நாம் சிந்திக்கின்றோமா என்றால் இல்லை. நன்றாக யோசனை செய்து பாருங்கள். கோவில் என்பது எவ்வளவு பெரிய புனிதமான இடம் அதே சமயத்தில்

கருப்பணசாமியைக் காட்டி அதன் பக்கத்தில் மோப்ப நாயை வைத்துள்ளார்கள். மோப்ப நாயை வைத்ததன் பொருள் என்ன…?

“எனக்கு இப்படி தவறு செய்தார்…” என்று மோப்பத்தைப் பிடிக்கின்றோம். அப்பொழுது தவறு செய்தான் என்று சொன்னவுடனே…
1.உதாரணமாக நாய் என்ன செய்கின்றது…? யார் வளர்க்கின்றார்களோ அவர்களைத் தான் பாதுகாக்கின்றது,
2.நாம் மோப்பம் பிடிப்பதே… “எனக்குத் தீங்கு செய்வார்கள்” என்று நினைத்து நுகர்ந்தவுடன் என்ன செய்கின்றது…?
3.நம் நல்ல குணங்கள் இருண்டு போகின்றது.

அந்த நேரத்தில் அவனுக்கு எப்படியும் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். தீங்கு செய்யக்கூடிய அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது..
1.அவன் நன்றாக இருந்தால் நமக்கு எப்படியும் கெடுதல் செய்வான் என்ற வகையில் நாம் நினைக்கின்றோம்… ஆயுதத்தை கையிலே கொடுக்கின்றார்கள்.
2.எதை…? அரிவாளைக் காட்டுகின்றார்கள்.
3.எங்கே…? எப்படியும் அவனிடம் இருந்து தப்புவதற்குத் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று அரிவாளை எடுக்கின்றான்.

ஆனால் அவன் செய்த தீங்கான உணர்வை நுகர்ந்து கொண்ட பின் என்ன செய்கின்றது…? எதை மோப்பம் பிடித்தோமோ அது நம் உடலுக்குள் வந்து அவன் செய்த தீங்கான எண்ணங்கள் நமக்குள் விளைகிறது. அது நம் நல்ல குணங்களைக் கொல்கின்றது.

நாம் நுகர்ந்தது நம் உடலுக்குள் சென்று நமக்குள் என்ன செய்கின்றது? அதற்கு நீ எப்படி நுகர வேண்டும்…? என்பதற்காக வேண்டி இப்படிப்பட்ட உருவங்களை வைத்துக் காட்டுகின்றார்கள்… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொல்கின்றது என்று…!

ஏனென்றால் நாம் சுவாசித்த அந்த விஷமான உணர்வுகள் நம் நல்ல குணங்களைக் கொல்கிறது. அந்த இடத்தில் நாம் எதை எண்ண வேண்டும்…?

துருவ நட்சத்திரம் இந்த விஷத்தை நீக்கியது. இப்பொழுது உங்களிடம் அதைத்தான் பதிவு செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நாம் நுகர வேண்டும்
2.அதை ஆசைப்பட்டு நுகர்ந்தவுடன் உயிரிலே படுகின்றதுல்… அருள் உணர்வுகள் தோன்றுகின்றது.
3.இரத்தத்தில் கலந்த பின் தீங்கு செய்வதை அது குறைக்கின்றது.
(தங்கத்தில் திரவகத்தை ஊற்றியவுடன் இரண்டற இணைந்திருக்கும் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுவது போல்).

நாம் இதற்கு முன்னாடி வேதனை என்ற உணர்வுகள் இரத்தத்தில் கலந்திருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் அது வீரியத் தன்மையைக் குறைத்து நல்லதாக மாற்றக்கூடிய சக்தி பெறுகின்றது. இதை உருவம் அமைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.

கருப்பணசாமி கோவிலுக்குப் போய்… விவசாயத்தில் நல்ல வெள்ளாமை வந்தால் நான் உனக்கு ஆட்டைக் கொடுக்கின்றேன் கோழியைக் கொடுக்கின்றேன் என்று நேர்த்திக்கடன் வைத்து அதை வைத்துக் கும்பிட்டவுடன் ஜெயித்து விட்டால் கொடுக்கின்றார்கள்

ஜெயிக்கவில்லை என்றால் நேர்த்திக் கடனை மனதில் ஏற்றுக் கொண்டாய். ஆனால் நீ செய்யவில்லை அதனால் சாமி உனக்குத் தண்டனை கொடுக்கின்றது. என்று சொல்வார்கள்.

வியாபாரம் ஆரம்பித்தேன்… அவன் எனக்குத் தொல்லை கொடுத்து கொண்டு இருக்கிறான். நான் கடன் கொடுத்தேன் அவன் கொடுக்காமல் என்னை ஏமாற்றிக் கொண்டுள்ளான்…! என்று இந்த உணர்வுகளை எல்லாம் சாமியை நினைத்து என்ன செய்கின்றோம்…? நான் உனக்கு காணிக்கை கொடுக்கின்றேன், எனக்குப் பணம் வர வேண்டும் என்று.
1.பணம் வரவில்லை என்றால் கடைசியில் வேதனையைத் தான் எண்ணுகின்றோம்.
2.அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்…? நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொல்கின்றோம்.

ஆனால் நல்ல குணங்களைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும், அவர்கள் சொல் வைரத்தைப் போன்று சொல் ஜொலிக்க வேண்டும், அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும். நல்ல தெய்வப் பண்பும் தெய்வீக குணமும் அவர்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் இந்த நல்ல சக்திகள் உங்கள் உடலில் விளைகிறது.

பிறரின் செயலைப் பார்க்கும் போது தீயது என்று காட்டுகின்றது இங்கே கோவிலுக்கு வந்தால் இந்த தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டுகின்றார்கள்.
1.எனவே அந்த நல்லதை எண்ணி நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.தெய்வ குணமும் நல்ல செயலும் நாம் பெற வேண்டும் என்று கோவிலில் எண்ணி எடுக்கச் சொல்கின்றார்கள்.

அதாவது கெட்டது வருவதையும் அதை நல்லதாக்க வேண்டிய வழியையும் காட்டி நமக்கு உண்மையை உணர்த்துகின்றார்கள்.

நம் தியானமே “ஈசனின் நினைவுடன் இருந்திட்டால்” மற்றத் தீய சக்திகள் நம்மை எப்படித் தாக்கும்…?

 

பாம்பின் விஷத்தையும் போக்கிடலாம்.. மற்றத் தீய சக்திகளையும் நம்முள் அண்டவிடாமல் போக்கிடலாம்…! ஆனால்
1.நம்முள்ளே நாம் ஏற்றிக் கொண்ட இவ்வெண்ணத்தின் சுமையை
2.ஒருநிலைப்படுத்தி ஜெபம் பெறுவதுதான் நம் சக்திக்கும் மேம்பட்ட சக்தி.

இவ்வுலகச் சூழ்ச்சியிலிருந்தும் மற்றவர்களின் நிலையின் தாக்குதலில் இருந்தும் இன்றுள்ள இவ்விஷமான இவ்வுலக நிலையில் இருந்து மீண்டு செயல் கொள்ளுவது மிகவும் கடினம்.

1.ஆத்மீக நெறியின் வழிமுறைக்கு நம் வழி அமைந்த பிறகு
2.நாமேதான் நமக்குகந்த நெறி முறையை அமைத்துக் கொண்டு செயல்படல் வேண்டும்
3.அச்செயல் வழியில்தான் நம் சக்தி நிலையே கூடி வழி வந்திடும்.

இந்நிலையின் தொடர் நிலை வந்த பிறகு பிறரின் எண்ண நிலையை நம்முடன் மோதவிட்டு ஆத்மீக நெறி முறையில் செல்லுவதும் அழகல்ல. போற்றலும் தூற்றலும் ஒருநிலை போன்ற சம நெறியின் வழியாக்கிடல் வேண்டும்.

இவ்வண்ணத் தொடரின் வழி பெற்ற பிறகு ஞானத்தின் சக்தி நிலை கூடும் நிலையில் நம் உடலில் உள்ள முன்பு வாழ்ந்த வாழ்க்கையில் உள்ள தீய சக்திகளும் செயலற்றதாய் நற்சக்திகளின் நிலை வளர்ந்து விடும்.

ஆனால் வாழ்க்கையுடன் உள்ள நிலையில் ஏற்படும் சிக்கலை நம் எண்ணத்தில் ஏற்றி அந்நிலை கொண்ட கவலையை வளரவிடும் பொழுது நம் உடலில் உள்ள தீய சக்திகளுக்கு நாம் உரம் இட்ட நிலை போல் வளர்ந்திடும்.

1.நற்சக்தியின் நிலை கூடுவதற்குப் பல காலம் ஜெபம் பெற்று ஞானத் தொடரை வழி பெற்ற பிறகு
2.ஒரு சில நொடியில் இவ்வெண்ண மோதலினால் விரையப் படுத்திடலாகாது.

பக்திமானாய் சக்திமானாய் ஆண்டவனின் சக்தியாய் ஒளிர ஒரு நாளில் இரண்டு நாளில் அந்த ஞானத் தொடரும் சக்தித் தொடரும் வந்திடாது.

உயிரணுவாய் உயராத்மாவாய் பிறப்பெடுத்து நாம் நம் உடலுடன் சேமிக்கும் அமில சக்தி அனைத்துமே நற்சக்தியாய்க் கலந்து ஒளி பெறும் நிலையில்தான் நம் நிலையும் உயர்ந்திடும்.

இவ்வாத்மீக நெறிக்கு வழி பெற்றிட
1.தீய சக்திக்கு நாம் அடிபணியாமல் நம்மள் தீய சக்தியை விட்டகற்றினாலன்றி
2.நூறாண்டு காலம் அல்ல 100 கோடி ஆண்டானாலும் நம் ஆத்மாவை ஆண்டவனின் சக்தியின் சக்தியாய் ஒளிரச் செய்வது கடினமே.

சொத்தும் சுகமும் அல்ல சக்தியின் செல்வம். இவ் அல்ப ஆசைகளுக்கு நம் எண்ண சக்தியில் துறக்கும் நிலை பெற வேண்டும். துறவியாய் ஆண்டிக் கோலம் பூண்டு செல்வது துறவறம் அல்ல.

ஒன்றை எண்ணிய நிலையில்
1.அடைந்தே தீருவோம் என்ற பேராசையின் பிடியில் சிக்கிடாமல்
2.வாழ்க்கைக்குகந்த அன்புச் செல்வங்களைத் தன் நிறைவு பெற ஆசையுடன் செயல் கொள்ளுங்கள்.

உண்ணும் எவ்வுணவையும் அமுதாய் உண்டிடும் பக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள். உண்ணும் உணவே ஒவ்வோர் உடலையும் எண்ண நிலைக்கொப்பை அமில சக்தியின் சேமிப்பையும் நம் உடல் பெறுகின்றது.

எண்ணத்தையே அமுதமாக்கி உண்டிடுங்கள்.

எவ்வுணவை உண்டாலும் அமிர்தமாய் நம் உடலில் செயல் கொள்ளும் வழிமுறையும் செயல் நிலையும் நாமாய் வழி வகுத்துத்தான் நம் ஆத்மா செயல் கொண்டிடும்.

நாம் வாழ்ந்திடும் இனி வரப் போகும் ஒவ்வொரு நொடியையுமே இவ்வழித் தொடரின் ஜெப சக்தியை வளரவிட்டே
1.நம்முள்… நம் ஆத்மாவாய் அவ் ஈஸ்வரனே குடி கொண்டுள்ளான் என்பதனை உணர்ந்து
2.நாம் எடுத்திடும் நாம் விட்டிடும் சுவாசமே அவ் ஈஸ்வரனின் ஜெபத்துடனே
3.ஓம் ஈஸ்வரா என்ற நிலையிலேயே எந் நிலையில் எச் செயலில் இருந்திட்டாலும்
4.நம் எண்ண ஜெபம் முழுவதுமே அவ் ஈசனின் நினைவுடன் இருந்திட்டால் மற்றத் தீய சக்தியின் நிலை நம்மை எப்படித் தாக்கும்…?
5.நம்மை அத்தீய சக்தியிலிருந்து காக்கத்தான் அவ் ஈசனே ஜெபம் கொண்டு நம்முள் உள்ளானே‌.
6.நம் ஆத்மாவே ஈசன் தான்
7.ஈசனின் சக்தி இல்லாமல் எச் சக்தியும் இல்லை.
8.ஈசனே குடி கொண்டுள்ள நம் ஆலய ஆத்மா கொண்ட நம் உடலை
9.ஈசனின் சக்தியாய் வாழ்ந்திடும் நெறிமுறையின் வழித்தொடர் கொண்டே வாழ்ந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் கொடுக்கும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் உயிரையும் துருவ நட்சத்திரத்தையும் இணைக்கும்படி செய்கிறோம். துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். துருவ தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சுத்தி மூலமாகவும் அந்த அருள் சக்திகளைப் பெறும்படி செய்கிறோம்.

இருந்தாலும்…
1.இத்தனை நாள் தியானம் செய்தேன்… என் தொழில் சீராகவில்லையே…
2.நான் இவ்வளவு தியானம் செய்கின்றேன்… என் குடும்பத்தில் இப்படி இருக்கிறதே…! என்று
3.இப்படித்தான் கலந்து கொண்டு போகின்றோம்.

ஆக பல கேள்விகளை எண்ணிக் கொண்டு “நான் தியானம் செய்தேன்… என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லையே…!” என்று மீண்டும் கலந்து கொண்டே வருகிறோம்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிய பின்பு அதே நஞ்சை மீண்டும் சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்ட மாதிரித்தான் பெரும்பகுதியானவர்கள் இருக்கின்றார்கள்.
1.நஞ்சைக் கழிக்கின்றோம்.
2.ஆனால் மீண்டும் எண்ணத்தால் நஞ்சைச் சேர்க்கின்றோம்.

பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நிலையில் நம் உடல் தன்னிச்சையாக நஞ்சை நீக்குகின்றது. ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…?

வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று இந்த வாழ்க்கையில் வருவதை எண்ணி மீண்டும் இந்த உடலில் நஞ்சாக அதை எல்லாம் சேர்த்துக் கொள்கிறோம். இந்த உடல் எத்தனை நஞ்சைத்தான் கழிக்கும்…?

சொல்வது அர்த்தம் ஆகிறதல்லவா…!

நல்ல உணவுடன் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து நல்ல உணர்வுகள் எல்லாம் பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக ஆன நிலையில் நம் உடல் நஞ்சை மலமாக மாற்றுகின்றது. ஆனால் நாம் நல்ல உணர்வுகளை இன்று நஞ்சாக மாற்றுகின்றோம்.

ஏனென்றால் ஆசையின் நிமித்தம்… உடல் பற்று என்று வரப்படும் பொழுது
1.இது கிடைக்கவில்லையே… அது கிடைக்கவில்லையே…! எல்லாம் செய்தேனே…
2.என் பையனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன்…
3.அவன் சொன்னபடி கேட்கவில்லையே…! காசையெல்லாம் செலவழித்து விட்டானே…! என்ற இந்த உணர்வுகளை வளர்த்து
2.வேதனையைக் கூட்டி நஞ்சாகச் சேர்த்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் மாற்றி விடுகின்றோம்.

விஞ்ஞானிகள் சொல்கிற மாதிரி எத்தனை வகையான வேதனைகளை இணைத்தோமோ வைரஸ் என்ற கிருமியாகத் தான் நமக்குள் மாற்றுகிறோம்.

மூஷிகவாகனா…! நாம் சுவாசித்த உணர்வுகள் தான் வாகனமாக அமைகிறது. அதன் வழிப்படித் தான் இந்த வாழ்க்கை நடத்துகின்றது. அடிக்கடி கோபப்படுகிறோம் என்றால் நம்மைக் கோபக்காரராக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி ஆகி நம்மைக் கோபக்காரனாக மாற்றுகின்றது.

1.கோபக்காரனாக மாற்றினாலும் பரவாயில்லை.
2.கடைசியில் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
3.எதன் வழியில் கோப உணர்வுகளை நாம் சேர்த்தோமோ அதன் வழி இந்த உடலை மாற்றுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்புடன் சாகிறவர்கள் எல்லாம் பெரும்பகுதி அடுத்துப் புலியாகத்தான் பிறப்பார்கள். வேறு எங்கும் போக முடியாது. அல்லது இன்னொரு மனித உடலுக்குள் சென்றாலும் அங்கேயும் இரத்தக் கொதிப்பாக மாற்றி அவனை வீழ்த்தி விட்டு வெளி வந்துவிடும்.

அதாவது கொஞ்ச நஞ்சம் தொக்கி இருந்தது என்றாலும் இன்னனொரு மனித உடலில் யார் கோபமாக இருக்கின்றார்களோ அந்த உடலுக்குள் சென்று அங்கேயும் கோபத்தை உண்டாக்கி… எல்லாவற்றையும் முழுமையாக்கி உயிர் வெளியில் வந்த பிற்பாடு புலியின் ஈர்ப்புக்குள் சென்று புலியாகப் பிறக்கச் செய்யும்.

நாம் ஏதாவது ஒன்றை எண்ணுகின்றோம். அது நடக்கவில்லை என்றால் இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே…! என்று வேதனையைத் தான் அடைகிறோம்.

எந்தெந்த வேதனை உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த வேதனைக்குத் தக்க அடுத்த உடலை உயிர் அமைத்துவிடும்.

கை கால் குடைச்சல் வரும் மூட்டு வாதம் கீழ் வாதம் வரும். இது எல்லாம் நமக்குள் சேர்த்துக் கொண்ட வினைகள் தான் இந்த வினைக்கு நாயகனாக நம்மை இயக்கிய தீரும்.

இப்படி ஆகிவிட்டால் அது சொன்னபடி தான் (நடக்க முடியவில்லை… அசைக்க முடியவில்லை… வலிக்கிறது) நாம் கேட்க வேண்டும் வேதனை அதிகமாகி உடலிலே அனைத்தையும் முழுமையாக்கிவிடும்.

ஆனால் இப்படி நோயாக ஆன பின்பும் கூட மருத்துவரிடம் சென்று நோயை நீக்கினாலும் ஆசை (உடல்) யாரை விட்டது…?

இவன் இப்படிச் செய்கின்றான்… அவனுக்குப் பணம் கொடுத்தேனே…! அவன் ஒன்றும் செய்யவில்லையே…! என்று வேதனை உணர்வை எடுத்து மீண்டும் உடலுக்குள் பல மாற்றங்கள் ஆகின்றது.

கடைசியில் எந்த மருந்து கொடுத்தாலும் அடுத்து ஒன்றுமே வேலை ஆகாது. இதையும் பார்க்கலாம்.

அதற்குத் தான் ஞானிகளைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம்.
1.அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து…
2.அதை வலுக் கூட்டினால் இந்த உணர்வின் தன்மை நம்மை வாழ வழிவகுக்கும்…. அமைதி பெறச் செய்யும்.
3.மன வலிமை கிடைக்கும்… சிந்திக்கும் ஆற்றல் கொடுக்கும்… சிந்தித்து செயல்படும் தன்மையும் வரும்.

தியானம் செய்யும் போது “உயிரின் காந்தத்தைப் பயன்படுத்த வேண்டிய” சரியான முறை

 

அகஸ்தியனும் அவன் மனைவியும் பூமியின் துருவத்தின் எல்லையை கடந்து அதிலிருந்து ஒளியாக மாற்றும் சக்தியைப் பெற்றனர்.

ஒளியான பின் இரு உயிரும் ஒன்றி அங்கே துருவ நட்சத்திரமாக நிலையாக இருக்கின்றனர். நம் பூமிக்கு வருவதை எல்லாம் ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.
1.இது எல்லாம் வேத நூல்களில் நாதங்கள் என்ற நிலைகளில் எழுதியுள்ளார்கள்.
2.ஆனால் சிற்றரசர்களுக்குள் போர்கள் வரும் பொழுது காலத்தால் மறைந்து விட்டது… கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால் இந்தக் காற்றில் இருக்கின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் நமது குருநாதர் அனுபவரீதியாக 20 வருடம் காடு மேடு நகரம் எல்லாம் எம்மை அலையச் செய்து
1.நீ நுகர்ந்த உணர்வுகள் உன் உடலில் என்ன செய்கின்றது…?
2.நீ அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று பக்குவப்படுத்தி
3.எனக்குள் துன்பத்தை உண்டாக்கி… எது துன்பத்தை உண்டாக்குகின்றது…?
4.எந்த சந்தர்ப்பத்தில் உண்டாகிறது…? அதை நீ எப்படி மாற்ற வேண்டும்…? என்ற உபாயத்தைக் கண்டறிந்து
5.அந்த இருபது வருட அனுபவத்தைத் தான் இப்பொழுது நான் உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு).

ஒருவருக்கொருவர் சண்டை போடுகின்றார்கள். அதைக் கேட்டவுடன் அந்தச் சந்தர்ப்பத்தில் அது உங்கள் உடலில் அது விளைகின்றது. ஆனால் இப்பொழுது உங்களுடைய சந்தர்ப்பம்
1.எனக்கு குருநாதர் காட்டியதை எல்லாம் தெரிந்து உங்களிடம் சொல்கின்றேன் நீங்கள் கேட்கின்றீர்கள்… இது நல்ல சந்தர்ப்பம்.
2.என்னை நீங்கள் கண்ணால் பார்க்கின்றீர்கள்… இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகின்றது
3.நுகர்கின்றீர்கள்… உங்கள் உயிரில் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. நான் சொல்லும் உணர்வை எல்லாம் தெரியச் செய்கின்றது.

நீங்கள் அதை நுகரப்படும் போது உங்கள் உமிழ் நீர் மாறும். அப்பொழுது உங்கள் சாப்பாட்டுடன் கலந்து சிறு குடலுக்குப் போய்ச் சேரும்… இப்படி சிறுகச் சிறுக பெருங்குடலுக்குப் போய்ச் சேரும்.

இப்பொழுது நீங்கள் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது வாயில் உள்ள ருசியெல்லாம் வித்தியாசமாக மாறும்.
1.உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது உங்கள் உடலுக்குள் அப்படியே ஜிலு…ஜிலு…வென்று இருக்கும்
2.விஷத்தன்மை இருந்தால் அதெல்லாம் குறைந்து போவதை உங்களால் உணர முடியும்.

ஏனென்றால் மணிக்கணக்கில் உட்கார வைத்து எப்படியும் இந்த நல்ல சத்தை உங்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்கின்றேன்.

சண்டை போடுவதை வேடிக்கை பார்த்தீர்கள் என்றால் அந்த உணர்வெல்லாம் உமிழ் நீராக மாறி உடலுக்குள் குடல் உபாதைகள் கல்லீரல் மண்ணீரலில் வலி நெஞ்சு வலி என்று இதெல்லாம் வந்துவிடும்.

ஆனால் இப்போது இந்த உபதேசங்களைக் கேட்கும் போது இந்த சந்தர்ப்பம் ஞானிகள் உணர்வை நீங்கள் நுகர நேருகின்றது… அந்தச் சத்து உங்கள் சிறுகுடல் பெருங்குடலுக்குப் போய்ச் சேருகின்றது, ஆகாரத்துடன் கலந்து நல்ல இரத்தமாக மாற்றிக் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றது.

இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் நல்ல உணர்வுகள் பதிவாகின்றது. என்னுள் விளைந்தது உங்கள் உடலில் பதிவாகிறது.
1.ஆனால் காற்றிலேயும் இருக்கிறது
2.எந்தக் கண் வழி பதிவு செய்தீர்களோ உடனே இழுத்து உங்களுக்குள் கவர்ந்து கொள்ள முடியும்.

உதாரணமாக சங்கடமாக இருக்கின்றார்கள்… கஷ்ட்த்தைச் சொல்கின்றார்கள் நீங்கள் கேட்கின்றீர்கள். கேட்கும்போது அதே உணர்வுகள் நமக்குள் என்ன செய்கின்றது…? அவர் மேல் பற்று இருந்தால் நமக்குள் ஏதோ தலை சுற்றுவது போல் வரும்… நல்ல மனிதருக்கு இப்படி ஆகிவிட்டது…! என்று.

இப்பொழுது இந்த மாதிரி நேரத்தில் அவர்கள் உணர்வு நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்…?

இப்பொழுது நீங்கள் கேட்டுக் கொண்ட முறைப்படி
1.ஈஸ்வரா…! என்று சொல்லிவிட்டு கண்ணிலே ஏங்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வந்தது இந்தப் பூமியில் இருக்கின்றது.
3.அதை நமது கண்ணில் இருக்கக்கூடிய கருமணிகள் இழுக்கின்றது
4.கண்ணின் நினைவை உயிரோடு கொண்டு விட்டவுடன் இதிலே கொண்டு பாய்ச்சி விடுகிறது.
5.அப்போது அந்த உயிரான காந்தம் என்ன செய்கின்றது…?
6.இங்கே மூக்கு வழியில் செல்வதை நிறுத்தி விடுகின்றது… புருவ மத்தி வழி கூடி இழுக்கிறது.
7.அப்பொழுது கெட்டதை எல்லாம் நிறுத்திவிடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் என் உடல் முழுவதற்கும் படர்ந்து என் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று சொல்லிக் கட்டளையிட்டால் இங்கே வந்துவிடுகிறது.

அப்பொழுது முன்னாடி உஷாராகிக் கொள்கின்றது, கெட்டதை உள்ளே போக விடாமல் தடுக்கின்றது,
1.உடலுக்குள் வலிமையாகி அழுத்தமான பின்பு ஆன்மாவில் இருப்பதைத் தள்ளி விடுகின்றது
2.தள்ளி விட்டவுடன் பிறகு நமக்கு சங்கடம் என்று எதுவும் வராது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் அங்கே வரும்…!

இந்த முறைப்படி செய்ய வேண்டும்.

திட்டியவர்களை எண்ணும் பொழுது எப்படி உங்கள் வாழ்க்கையில் குறை நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றதோ… அதைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் அது உங்களுக்குள் வராமல் இப்படித் தடுத்துப் பழக வேண்டும்.

இன்னல்கள் பல மோதினாலும் “தெளிவு பெறும் ஞான வளர்ச்சியை” நீங்கள் பெறுவீர்கள்

 

நம் உடலை விட்டு நம் ஆத்மா பிரிந்து செல்வதைச் சிவபதவி அடைந்து விட்டார் தெய்வீக பதவிக்குச் சென்றிட்டார் என்றெல்லாம் நம் ஆத்மா பிரிந்த பிறகு… நம்முடன் வாழ்ந்தவர்கள் நமக்களிக்கும் பதவிதானே தவிர… எப்பதவியும் அச்சிவனால் நமக்கு அளிக்கப்படுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் நாம் இருக்கும் நிலையைக் காட்டிலும் ஆவி உலகில் அல்லல்படும் நிலை “மிக மிகக் கொடிய நிலை…”

நல் ஆத்மாவாய் நற்செயலைச் செய்வித்து நல்லுணர்வு கொண்டு அமைதி கொண்டு இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பற்று, பாசம், ஆசை அனைத்து நிலைகளையுமே வாழ்ந்த நிலை கொண்டு பூரிப்பில் சஞ்சலத்தில் விட்டுச் செல்வதைப் போல் எண்ணாமல்
1.அமைதியுடனே இவ்வுலகப் பற்றற்றுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களினால் தான்
2.ஆண்டவனாயும் அக்குடும்பத்தின் தெய்வமாயும் தான் வாழ்ந்த குடும்பத்தைச் செழிக்கச் செய்திடல் முடிந்திடும்.

குடும்பத்தில் உள்ளோரும் அக்குடும்பத்தில் வாழ்ந்திடும் பெரியோர்களை அன்புடன் வணங்கியே அவர் வாழ்ந்த காலத்தில் நாம் செய்யும் சேவைதான், அவர் ஆத்மா பிரிந்த பிறகு நம் குடும்பத் தெய்வமாய் நம்மைக் காப்பார்.
1.அவ்வழியின் தொடர் தான் குடும்பத் தொடராக…
2.பெரியோரை தாய் தந்தையரை பக்தி கொண்டு வணங்கிடும் பக்குவ நிலை என்பதனை உணர்ந்து
3.ஒவ்வொரு குடும்பத்தையும் அக்குடும்பங்களே கோயில்களாய்த் திகழும் வண்ணம் வாழ்ந்து வழி நடந்திடல் வேண்டும்.

பல கோயில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனை செய்வித்துப் பக்தியை வளர்த்து வேண்டும் முறையைக் காட்டிலும்… நம் இல்லக் கோயிலை அன்பு கொண்டதாய் இனிமையை வளர்க்கும் இன்ப இல்லமாய்… இல்லத்தில் உள்ளோர் அனைவரின் எண்ணக் கலப்பும் ஒன்றுபட்டதாய் வாழ்ந்திடும் வழி பெறுங்கள்.
1.வாழ்க்கையுடன் மோதிடும் பல இன்னல்களுக்கும்
2.தெளிவு பெறும் பக்குவத்தில் நம் ஞான வளர்ச்சியின் தொடர்பினை வளர விடுங்கள்.

செல்வமும், செழிப்பும் தானாய் வளரும். பக்தி என்னும் அன்பு கொண்ட வாழ்க்கையின் நெறியறிந்து ஞான வழியின் தொடரைப் பின்பற்றி வழி நடந்து வாழ்ந்திட்டாலும் நம் எண்ணத்தில் நம் வாழ்வின் நிறைவில்
1.”நான்” என்ற எண்ண நிலையை என்றென்றும் மோத விடாமல்,
2.செழிப்பின் வழியிலே தான் நம் எண்ணத் தொடர் சென்றிடல் வேண்டும்.

நல்லோருடனே பழகியும் நற்பயன் கொண்ட காரியத்தைச் செய்தும் பக்திமானாய் அன்பு கொண்ட வாழ்க்கை வாழ்ந்தும் இவ்வாழ்ந்திடும் வழித்தொடரில் நம்மைக் காட்டிலும் நம் வழித் தொடர் பெறாமல்
1.பிறரின் வாழ்க்கை நிலை, நெறிமுறை இவற்றின் தன்மை நம்முடன் ஒட்டாமல் சத்துரு மித்திரு கொண்டவரின்
2.தீய சக்தியின் பிடியில் சிக்கி அப்பழக்கத்திற்கு அடிமை கொண்டவரின் நிலையையும் நம் நிலையையும் ஒப்பிட்டு
3.நம் நிலையின் பெருமையை நாம் எண்ணினால் நான் என்ற நிலையினால் நாம் வளர்ந்த இந் நற் சக்தியிலேயே கரைபடுகின்றது.

பல தீய வழிகளில் அடிமை கொண்டு அந்நிலையிலிருந்து மீள வழியில்லாமல்… நல்லுணர்வு கொண்டோரை தீய நிலையில் உள்ளவரின் எண்ணம் அன்புப்படுத்தி பக்திப்படுத்தி
1.நமக்கு அப்பாக்கிய வழி சென்றிடும் வழித்தொடர் இல்லாமல் இந்நிலையில் உள்ளோம் என்ற எண்ணத்திலேயே
2.அவர்களின் ஆத்மாவில் நற்சக்தி பெற்றோரை எண்ணத்தில் ஈர்த்த சக்தி கூடி வலுப் பெறுகின்றது அவ்வாத்மாக்களுக்குமே.

நாம் வாழ்ந்திடும் நம் நினைவுடன் கலந்திடும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவற்றுக்குண்டான சக்தி நிலை நம்முள் சேமிக்கப்படுகின்றது.

இவற்றை உணர்ந்திடாமல் வாழ்ந்தோம் என்ற நிலை கொண்ட சாதாரண நிலையில் வாழ்ந்து… நாம் இம்மனித ஆத்மா கொண்ட உடலைப் பெற்று வாழ்ந்திடும் இப்பாக்கியத்தைச் சிதற விடாதீர்கள்.

இன்றளவும் நம்மில் தோன்றி சப்தரிஷி நிலைகொண்ட ஜோதிகளும் இன்னும் பக்தியென்ற தொடர் நிலை கொண்ட தனக்கு மேல் உள்ள உயர்ந்த சக்தியான இயற்கையின் ஆதி சக்தியையே ஒவ்வொரு சப்தரிஷிகளும் ஜெபப்படுத்தி பூஜைப்படுத்தி “நான் என்ற நிலைப்படாமல்” மென்மேலும் அவ் இயற்கை ஜெபத்துடன்தான் செயலாற்றுகின்றார்கள்.

அனைவருக்கும் முருகனாய் ஜெபப்படுத்தி வணங்கிடும் அப்போகநாதரே அச்சிவசக்தியின் ரூப ஜெபத்தை இன்றளவும் அம்முருகரின் விக்கிரகத்தை ஜெபப்படுத்திக் கொண்டே உள்ளார்.

முருக ஸ்தலமே… அம் முருகரின் அச்சிலையே அவர் ஜெபிக்கும் ஜெபத்தை ஈர்த்து சக்தியை வளர்த்துக் கொண்டே அருள் புரிகின்றது.

நம் பாட நிலையில் இவ்வுலகில் வளர்ந்த கனி வளங்களை இப்பூமியிலிருந்து பிரித்த பிறகு ஜீவனற்றுப் போகின்றது என்று உணர்த்தியுள்ளோம்.

ஆனால் போகர் ஸ்தாபிதம் செய்த முருகரின் சிலைக்கு அப்போகர் ஜெபித்த ஜெபத்தினால் அம்முருகரின் சிலையே ஜீவன் கொண்ட நிலையில், அம்மலையில் ஐக்கியப்பட்டுவிட்டது.

1.ரிஷிகளும் சப்தரிஷிகளும் அவர்களின் நிலையினால் நட்ட கல்லையும் ஜீவன் கொண்டிட முடிந்திடும்.
2.சப்தரிஷியின் நிலை எவ்வண்டத்தையும் எப்பிண்டத்தையும் சுழலிலிருந்து நிறுத்திடவும் முடியும்
3.பிண்டத்தையே அண்டமாக்கிச் செயல்படுத்திடவும் முடியும்.

சப்தரிஷியின் சக்தியில் அனைத்து உலக சக்தியையுமே செயலாக்கிடும் நிலை கொண்டு தான் செயல் புரிகின்றனர்.

உயிரணுவாய் உயிராத்மாவாய் வளர்ச்சி கொண்டவர்களே சப்தரிஷியாய் சகலத்தையும் அறிந்திடும் சக்தி கொண்ட நிலையிலும் இயற்கையின் சக்தியை பூஜித்தே “அவ் ஆதிசக்தியின் சக்திக்கு அடிபணிந்தே செயல் ஆக்குகின்றனர்…”

நாம் வாழ்ந்திடும் இக்குறுகிய கால வாழ்க்கையை நம் சக்தியின் ஞானத்தொடர் வழியைச் செயல்படுத்தி வழி வந்து
1.நம் சக்திக்கும் அனைத்துச் சக்தியையும் ஈர்க்கும் சக்தி உண்டு என்ற
2.ஒரு நிலை கொண்ட எண்ண நிலை கொண்ட வழித்தொடர் பெற்றிடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பால் சத்தானது தான்… அதிலே விஷத்தைக் கலந்தால் என்ன செய்யும்…? குடிப்போரை மாய்த்துவிடும்.

இதைப் போல எவ்வளவு அழகான நிலைகளில் எவ்வளவு பரிமாணம் எடுத்துக் கொண்டாலும் வேதனை வேதனை என்ற நிலைகள் வந்தாலே அந்த அழகே போய்விடுகிறது.

பெரிய குடும்பமாக இருக்கின்றது… தொழில் செய்கின்றோம்… எல்லாச் செல்வங்களும் வந்துவிட்டது. பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்.

ஆனால் அவன் ஏதாவது தவறு செய்தாலோ… “இப்படிச் செய்கின்றானே… இப்படி இருக்கின்றானே…” என்று எண்ணும் பொழுது வேதனை.

வேதனை என்றாலே விஷம்…!

1.தொழில் செய்கின்றோம்… அதில் நஷ்டம் வந்தால் வேதனை.
2.ஒருவருக்கு உதவி செய்கின்றோம்… கேட்கவில்லை என்றால் வேதனை.

இப்படி இந்த விஷமான சத்துக்கள் நம் உடலில் இருக்கும் நல்ல குணங்களுக்குள் பட்டு விட்டது என்றால் நம் உடலிலே அது நோயாக மாறிவிடுகிறது.

எவ்வளவு உயர்ந்ததற்குக் கொண்டு போக வேண்டும் என்று எண்ணினோமோ அங்கே போகாதபடி
1.வேதனை என்ற நிலையைக் கொண்டு வந்து சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
2.மனித உடலை இழக்கச் செய்து இழிநிலையான சரீரத்திற்குக் கொண்டு விட்டு விடுகின்றது.

அப்படி வந்தாலும் மீண்டும் அந்தக் கெட்டதை நீக்கி விட்டு நல்லதைப் பெறும் நிலைகள் வந்தால்தான் உயர்வு பெற முடியும் என்ற நிலைகளை வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் முழித்துக் கொண்டிருக்கும்படி ஞானிகள் அதைச் சாஸ்திரத்தில் காட்டுகிறார்கள்.

“விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தன்மை என்ன…?

ஒரு சூரியனின் தன்மையே என்றுமே விழித்த (பிரகாசமான) நிலை கொண்டது. அதைப் போன்று சப்தரிஷி மண்டலம் தனக்குள் என்றுமே அது ஒளி கொண்டது.

1.என்றைக்குமே விழித்த உணர்வு கொண்டு தான் பெற வேண்டுமென்று
2.விழித்திருந்தே பொருளறிந்து தனக்குள் செயல்படும் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
3.பரமபதத்தின் தத்துவத்தை “வைகுண்ட ஏகாதசி – சொர்க்கம்…” என்று காட்டி
4.உடலை விட்டுச் சென்றபின் நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று என்ற தெளிவைக் காட்டுகின்றார்கள்.

கருவுற்ற தாய் “அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது”

 

ஒரு சமயம் ஒரு குடும்பத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார்கள் அங்கே மாமனாருக்கும் மகனுக்கும் சண்டை.

வீட்டிற்கு வந்த மருமகளோ அது கர்ப்பமாக இருக்கக்கூடிய காலத்தில் இதையெல்லாம் கேட்டு “மாமனாரே பாவம்” என்று சொல்லிவிட்டு எல்லா உதவிகளையும் பணிவிடைகளையும் செய்து வந்தது… முறைப்படி அந்த மாமனாரைக் கவனித்து வந்துள்ளது.

கணவனோ… யார் என் அப்பாவிற்குச் சோறு போடச் சொன்னது…? என்று கேட்கின்றான். கணவன் தன் மனைவியைச் சத்தம் போட்டுக் கடுமையாகப் பேசி உள்ளார். இது நடந்த நிகழ்ச்சி.
1.அப்பொழுது நான் (ஞானகுரு) அந்தப் பெண்ணிடம் சொன்னேன் இதை எல்லாம் சுவாசிக்காதே நல்லதையே எண்ணு என்று…!
2.எங்கேங்கே நல்லதை நினைக்க விடுகின்றார்கள்…?
3.மாமனாரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இங்கே கணவர் விரட்டிக் கொண்டு உள்ளார்…! என்று சொல்லி
4.வேதனைப்பட்டு வேதனைப்பட்டு அந்த அழுகையிலிருந்து மாறவே இல்லை.

நான்கு ஐந்து மாதம் ஆகிவிட்டது. கருவிலிருக்கும் குழந்தையை ஸ்கேன் எடுத்துப் பார்த்துக் கொண்டு வருகின்றார்கள். இப்பொழுதுதான் நவீன கருவிகள் உள்ளனவே…! கை கால் எல்லாம் சரியான வளர்ச்சி இல்லை… குறுகி விட்டது. பிறகு அபார்ஷன் செய்து அந்தக் குழந்தையை எடுத்துள்ளார்கள்.

ஆனால் மருமகள் தவறு செய்யவில்லை சந்தர்ப்பம் இரக்கப்பட்டு நல்லது தான் செய்தது. ஆனால் கணவரும் மற்றவர்களும் உனக்கு என்ன அக்கறை..? என்று திட்டுகிறார்கள்.
1.இந்த உணர்வைக் கேட்டு நல்லது செய்ய முடியாமல் அந்த வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கின்றது
2.அந்தக் கருவிலே இருக்கக்கூடிய குழந்தையை அது பாதிக்கின்றது.
3.கருவில் இருக்கக்கூடிய குழந்தை தவறு செய்ததா…? அல்லது இந்தத் தாய் தான் தவறு செய்ததா…?
4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகிறது.

காரணம்… இன்று டிவி பெட்டி வீட்டிற்குள் வந்துவிட்டது. எங்கோ நடக்கும் சமாச்சாரம்… தலையை வெட்டுவது போன்று டிவியிலே காட்டுகின்றார்கள். அந்த கர்ப்பிணி அதனைப் பார்த்தால்… குழந்தை பிறந்தவுடன் அந்த வேலையைச் செய்வான்.

அசுர உணர்வை நீக்குவதற்கு அந்தக் காலத்தில் வளர்ச்சி பெற்று வளர்ந்து வந்தார்கள். ஆனால் இன்றோ… மனிதருக்குள் அசுர உணர்வு தான் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

மனிதனுடைய ஆசை இந்த உடல் இச்சை வரப்படும் பொழுது… கொடூர மிருகங்கள் மற்ற ஆடு மாடுகளை எப்படிக் கொன்று சாப்பிட்டதோ இதே மாதிரி மற்றதைத் துன்புறுத்தியே வாழும் உணர்வுகள் நாடு முழுவதும் நாளடைவில் வளர்ந்து விட்டது.

நாட்டிலே நிலவும் சண்டையும் சச்சரவும் வெளியில் நடப்பதைக் கேட்ட உடனே அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தை பிறந்தவுடன் என்ன செய்கின்றது…?

அம்மா அப்பாவை உதைக்கின்றது… இருப்பதையெல்லாம் ரகளை செய்கின்றது… திருடப் போகின்றது, எந்தெந்த குணங்களோ அதற்கு தகுந்தாற்போல் குழந்தைகள் மாறிக்கொண்டே இருக்கின்றது.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாக எது கிடைத்த்து…?

கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு (அகஸ்தியனுக்கு)
1.மின்னல்கள் தாக்கினாலும் அந்த மின்னலுடைய வேகத்தைத் தணித்து
2.அதைச் சுவாசித்துத் தனக்குள் ஒரு ஒளிமயமான உணர்ச்சிகளை தூண்டும் சந்தர்ப்பமாக
3.கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.

அவன் பிறந்த பிற்பாடு அவன் பக்கத்தில் எந்த விதமான விஷத்தன்மைகள் வந்தாலும் அவனைத் தாக்குவதில்லை… யானைகளோ புலிகளோ போன்ற எந்த மிருகங்களும் வரவில்லை.

அப்பொழுது இவன் உடலில் நடந்தது யாருக்கும் தெரியாது. “கடவுளின் அவதாரம்” போல் இருக்கிறது என்று மற்றவர்கள் எண்ணுகிறார்கள்.

இந்தக் குழந்தையைக் கண்டால் மற்றதெல்லாம் விலகிச் செல்கின்றது. ஈ, எறும்பு கொசு போன்ற எதுவும் வரவில்லை. அவனை சுற்றியே பக்கத்தில் வரவில்லை என்கிற போது அவன் கடவுளின் பிள்ளை என்றே நேசிக்க ஆரம்பிக்கின்றார்கள்.

அவன் வளர்ச்சியில் இதைப் போன்று செடி கொடியின் மணங்களை எளிதில் நுகர்ந்தற்கின்றான்.
1.ஒன்று அல்லது ஒன்றரை வயது ஆனவுடன் எதிர் நிலையான செடி கொடிகளின் மணங்களை நுகர்ந்து என்ன செய்கிறான்…?
2.யாருக்காவது தலைவலி வருகிறது என்றால் ஒரு செடியின் இலையைக் கொடுத்து நுகரச் செய்தால் தலைவலி போகின்றது.
3.அகஸ்தியன் இளமையிலே இப்படி எதையாவது பறித்து கொண்டு வந்து கொடுத்து
4.அந்த வாசனையை நுகரச் செய்தால் நோய்கள் அனைத்தும் அகன்று விடுகின்றது.

இப்பொழுதும் கூட தியானத்தில் இருப்பவர்கள் அந்த முறைப்படி செய்யும் பொழுது வீட்டில் உள்ள குழந்தை ஓரளவுக்கு விவரம் தெரிந்து சிரித்து நம்மிடம் பேசினாலே உங்கள் நோய் போகும்…!

தலைவலியே இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்
1.அந்தக் குழந்தையின் கையில் சிறிதளவு விபூதியைக் கொடுத்து
2.”நன்றாகிவிடும் என்று சொல்லப்பா…” என்று சொல்லி அந்த குழந்தையிடம் கொடுத்து வாங்கி நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள்…
3.தலைவலி குறைகின்றதா இல்லையா என்று தெரியும்.

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் பாதம் இரண்டாம் பாதம்

ஆதியில் இருந்து இன்றளவும் நமக்குக் கதைகளாகவும் பாடல்களாகவும் போதனை நிலைகளாகவும் இத்தெய்வீக நிலைகளை நமக்கு உணர்த்தியவர்கள் எல்லாம், சூட்சுமப்படுத்தி மறைக்கப்பட்டு அதிலுள்ள ஜீவநிலையை மக்களுக்குப் புரியும் நிலையில் கதைகள் ரூபத்திற்காக அன்று வெளியிட்ட முனிவர்களின் ரிஷிகளின் நிலையையே காலப்போக்கில் பல வடிவங்களைச் சேர்த்து “இன்றைய நிலைக்கு நம்பா நிலைப்படுத்தி விட்டார்கள்…”

அவரவர்கள் வாழும் நிலைப்படுத்தி அவரவர்களின் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதமுண்டு.

முதல் பாதம் இரண்டாம் பாதம் இப்படி வரிசைப்படுத்தி எல்லாவற்றிற்கும் மேல்பாதம் சென்ற பிறகுதான் அவ் ஆண்டவனுடன் ஐக்கியப்பட்டிடலாம் என்ற நிலையில் உணர்த்தி வருகின்றனர்.

இப்பாத நிலைபெறும் நிலையென்ன…?

ஒவ்வொரு பாதத்தில் இருந்தும் முதல் படி, இரண்டாம் படி, மூன்றாம் படி இப்படிப் பள்ளியில் படித்திடும் நிலைக்கொப்ப கடைசிப் படியில் பட்டம் வாங்குவதைப் போலல்ல அவ்வாண்டவனிடம் ஐக்கியப்படும் நிலை.

எங்கும் நிறைந்துள்ள நம்முள்ளும் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனின் சக்தியை நமக்கு அளித்த இவ்வேழு பிறவியில் நாம் வாழ்ந்த நிலை கொண்டுதான்… நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு நமக்குகந்த அபிலாஷைப்படி இவ் ஏழு பிறப்புகளை நம் எண்ண நிலையில் நாம் மேம்படுத்திடாவிட்டால்… நம் ஆத்மாவிற்கு இம்மனித உடலை ஏற்கும் சக்தியிழந்து விடுகிறோம்.

இவ்வேழு பிறப்பிலும் நம் எண்ண நிலைக்கொப்ப நாம் சேமித்துச் செயல்படுத்திட்ட பல தீய சக்திகளின் அமில சக்தியின் நிலை, இவ் ஏழாம் பிறப்பில் அதன் துரித சக்தியினால் இவ் ஏழு பிறப்பில் சேமித்த நற்சக்திகளையும் இத்துரிதம் கொண்ட தீய சக்தியின் நிலையுடன் கலந்து, இவ் ஏழாம் பிறப்பில் நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு,
1.நம் எண்ண சக்தியை தீய சக்திக்கு அடிபணிந்திட்ட நிலையில் நாம் ஆவி உலகில் பல காலம் சஞ்சரிப்பதினால்
2.அந்நிலையில், அந்நிலையின் குண நிலைக்கொப்ப மிருகங்கள் உடலில் ஏறியும் அங்ககீனமுற்ற குண நிலையிலும் பிறப்பிற்கு வருகின்றோம்.

நாமாய்ச் சேமித்து வழி சென்றிடும் நிலைதான் இந்நிலை. முதல் பாதம் இரண்டாம் பாதம் என்பது எல்லாம் ஒவ்வோர் உடலை ஏற்று அவ் உடல்களில் நாம் ஏற்படுத்திடும் சக்தி நிலைக்கொப்பத்தான் பிறவி நிலை பெறுகின்றோம்.

சூட்சும நிலைக்குச் சென்ற நிலையில் இந்த ஞான சக்தியின் தொடர்பு நிலை கொண்டு
1/இவ்வுலக நிலையில் “பற்றற்ற நிலைப்படுத்தி…
2.பக்தி நிலையின் சித்து நிலை பெற்ற பிறகுதான்” சூட்சம நிலைக்கே சென்றிட முடியும்.

இவ்வாத்மாவுடன் கூடிய இவ்வுடலில் வாழும் காலத்திலேயே நம் எண்ணத்தில் தீய அணுக்களின் சக்தி நிலையை நாம் அடக்கிப் பழகிடல் வேண்டும்.

கோபத்தையும் குரோதத்தையும் சஞ்சலத்தையும் சலிப்பையும் நம் எண்ணத்தில் வளர விட்டு ஜெபம் கொண்டால் அப்பக்தியில் எப்பலனும் நம் ஆத்மாவிற்குக் கூடுவதில்லை.

நம் ஆத்மாவுடன் அன்பு கொண்ட நல்லுணர்வையே வளரவிட்டால் அன்றி ஞான சக்தியின் தொடர் அறிவதும் கடினமே.
1.முதலில் நம்மையே நாம் உணர்ந்து நற்சக்திகளின் வழித்தொடர் பெற்று
2.ஞான வழியின் தொடரினால் அத்தொடர் நிலை கொண்டோரின் தொடர் சக்தியையும் பெற்று
3.இவ்வழியிலேயே இவ்வழித் தொடரினை அறிந்து சப்தரிஷியின் நிலை பெற்று
4.ஒளியின் ஒளியாய்க் கலந்து செயல்படும் நிலைதான் அவ் ஆண்டவன் நிலை பெறுவது.

இந்நிலையை உணர்ந்திடத்தான் முதல் பாதம் இரண்டாம் பாதம் என்றெல்லாம் வழிப்படுத்தி உணர்த்தி உள்ளனர்.
1.ஆண்டவனேதான் நாம்; அவனே தான் மற்ற எல்லாமுமே.
2.யாரும் நமக்கு அப்பதவி நிலையை அளிப்பதல்ல.
3.நாமேதான் நம் பதவியை அடைந்திடல் வேண்டும்.

ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களினால்… தன் அறிவு நிலையை வளர்ச்சியில் செயல்படுத்திட முடிந்திடாது. ஆசை நிலை நல்லுணர்வுக்குத் தோன்றினாலும் பிறப்பெடுத்து இவ்வுடல் கொண்ட ஆத்ம வழியில் தான் எச்சக்தியின் தொடரையும் நாம் அறிந்திடல் முடிந்திடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு எடுக்கின்றோமோ இவை அனைத்துமே இராமன் தான்.

இலங்கையைத் தாண்டுவதற்கு “ஒரு அணில் இராமனுக்கு உதவி செய்தது…” என்றும் அதனுடைய கடமையாக சிறு கல்களைப் போட்டுப் அந்தப் பாலத்தைக் கட்ட உதவியதாகக் காவியத்திலே காட்டியிருப்பார்கள்.

அதாவது புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சியில் வந்த நிலையினை அவ்வாறு சூட்சமமாகக் காட்டுகின்றார்கள்.

நாம் ஒரு அணிலாக உருப்பெற்றிருந்த போது… “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியாக” அந்த உடலிலிருக்கும் போது சேர்த்துக் கொண்ட அந்த வினைகள் தான் மனிதனாக வளர்வதற்குக் காரணமாக அமைந்தது.

அதே சமயத்தில்…
1.மெய் உணர்வின் தன்மையை அந்த மெய் ஒளியைப் பெறக்கூடிய தகுதிக்கும்
2.நல்ல சிந்தனையின் நிலைகள் வளர்வதற்கும்
3.அணிலின் உடலாக நாம் இருக்கும் போது பெற்ற நல்ல உணர்வின் சக்தியின் பங்கும்
4.அதிலே உண்டு என்று காட்டுவதற்குத் தான் காவியத்தில் அதைக் காட்டப்பட்டது.

சீதாவை இராவணனிடமிருந்து மீட்க இலங்கைக்குள் இராமன் போவதற்கு அணிலும் சிறு கல்களைப் போட்டுப் பாதை அமைத்துக் கொடுத்து உதவி செய்தது என்று அந்தக் குட்டிக் கதையின் மூலம் நமக்குத் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

இதைக் கவனத்தில் கொண்டால்
1.இராவணனிடமிருந்து சீதாவை மீட்டிக் கொள்ள அணில் உதவி செய்ததென்றால்
2.இந்த உடலான ஆக்கிரமிப்பு சக்திகளிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள
3.அந்த அணிலின் உடலில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் எண்ணங்களாக விளைந்து
4.உயிரின் தன்மை கொண்டு அந்த இராமன் என்று சொல்லுக்கு
5.“ஒரு இயக்கப் பொருளுக்குள் அந்த உணர்வின் சத்துக்கள் அது எப்படி உதவியது…?” என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களை எடுத்து நாம் மனிதனாக வந்தாலும் ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் ஆற்றலை வளர்த்துத் தான் அது ஒரு குணமாக ஆனது.

குழம்பை வைக்கும் போது பல பொருள்களைப் போட்டு ஒரு சுவையாக அதை மாற்றிக் கொண்டு வருகின்றோம். அதைப் போன்று இந்த மனித உடல் பெறுவதற்கு 1008 குணங்களின் சக்தி தேவை.

சிந்திக்கும் தன்மை கொண்ட படைக்கும் சக்தியான மனிதனை உருவாக்கச் செய்வதும்… எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு நாம் பேசும் போது அந்த உணர்வின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய நிலைகளையும்… மற்றவர்களுக்குள் அது இயக்கக்கூடிய சக்தியாகப் பெற்றது என்றும் ஞானிகள் காட்டினார்கள்.

1.அதைத் தான் 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு – ஊன் உடம்பு ஆலயம் என்ற நிலையில்
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ஊனாக மாறி… உடம்பாக மாறி… இந்த உடம்பு தான் ஆலயம் என்றும்
3.நாம் எடுத்துக் கொண்ட குணங்கள் நமக்குள் சக்தியாக இயங்குவதை
4.ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு பெயரை வைத்து 1008 தெய்வ சக்திகள் என்று வைத்தார்கள்.

இவை அனைத்தையும் உருவாக்கியது யார்…? நம் உயிர் தான். அவன் தான் கடவுள்.

“நல்ல மழை பெய்ய வேண்டும்” என்று தினமும் நாம் தியானிக்க வேண்டும்

 

இப்பொழுது நாம் “மழை இல்லை… மழை இல்லை…” என்று தான் சொல்லிப் பழகுகின்றோம். காரணம்… பூமிக்கு அடியில் உள்ள நீர் எல்லாம் போய்விட்டது. உறிஞ்சி எடுத்து எடுத்து எல்லாம் போய்விட்டது… “சில பகுதிகளில்…”

ஆயிரம் அடி ஆழத்திற்குப் போர் போட்டாலும் கூட தண்ணீர் காணாமல் போகின்றது. அந்த அளவிற்கு வந்து விட்டது.. இனி இருக்கக்கூடிய காலமோ அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லாது போகலாம். அதுவும் இன்னும் கொஞ்சம் இரண்டு மூன்று மாதங்கள் போனால் எப்படியோ தெரியவில்லை.

மாடு கன்றுகளுக்குக் கூட சில இடங்களில் தண்ணீர் இல்லை. நமக்கே தண்ணீர் இல்லை. ஆகவே
1.எது எப்படி இருந்தாலும் மனதை நன்றாக வலுப்படுத்தித் தியானிப்போம்.
2.இதற்காக இரவு படுக்கும் பொழுது ஒரு பத்து நிமிடம் நல்ல மழை பெய்ய வேண்டும் நாடு செழிக்க வேண்டும் என்று சிறிது நேரம் தியானியுங்கள்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் கலந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சொல்லி உங்கள் கண்ணின் நினைவை இதே மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர வேண்டும் மேகங்கள் கூடி நல்ல மழை பெய்யக்கூடிய அந்தச் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் நினைவனைத்தும் அந்த மேகத்தில் செலுத்துங்கள்
2.இந்த மாதிரி செலுத்தும் பொழுது உங்கள் உடலில் “ஒரு குளிர்ந்த காற்று வரும்…” வந்தது என்றால் ரொம்ப நல்லது.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் நினைவெல்லாம் வான் வீதியில் செலுத்தி…
1.மேகக் கூட்டங்கள் கூட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
2.அதிலே அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இந்த மாதிரி நாம் வெளியிடக்கூடிய உணர்வுகள் எல்லாமே ரேடியோக்களில் எப்படி ஒலி அலைகளைப் பரப்புகின்றார்களோ இதே மாதிரி நாம் வெளியிடும் அலைகளைச் சூரியன் கவர்கின்றது.

இதே உணர்வு கூடக் கூட எதிலே செலுத்துகின்றோமோ… அதிலே பதிவாகிவிடும். மழை நீரில் இருந்து தான் எல்லாம் விளைகின்றது.
1.அதனால் இதை அங்கே தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.
2.நாம் இந்த மூச்சுலைகளை விடப்படும் பொழுது நாம் எதை நினைத்தோமோ அந்த அலைகள் கூடி
3.மழை பெய்யும் பொழுது தாவர இனங்களில் பட்டு நல்ல தாவர இனங்களாக விளைகின்றது.

நம்முடைய உணர்வுகள் மோதி நாம் எந்த இடத்தில் எடுத்துச் செயல்படுத்துகின்றோமோ அங்கே மழை வரும். இதே மாதிரி உங்களுடைய மூச்சும் பேச்சும் நாடு செழிக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

சும்மா இதைக் கேட்டு விட்டுப் போனது என்று இல்லாமல்… “இரவு படுக்கும் போது” ஒரு ஐந்து நிமிடமாவது இதே மாதிரி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வானில் பரவி மேகங்கள் கூட வேண்டும் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று எண்ணுங்கள்.

முந்திக் காலத்தில் எல்லாம் காடுகளுக்குச் செல்வார்கள். தண்ணீரைக் குட்த்தில் கொண்டு போய் ஊற்றிவிட்டுத் திரும்ப வரும்பொழுது மழையைக் கூட்டிக் கொண்டு வருவார்கள்.
1.முன்னாடி வந்து கொண்டிருப்பார்கள் மழை பெய்யும்.
2.இந்த மாதிரி ஒரு தெய்வீகப் பண்பு கொண்ட நமது நாடு தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,

அந்தக் காலம் எல்லாம் கடந்து போய்விட்டது.

வரக்கூடிய விஷக்காலங்களில் இனியாவது நாம்
1.நமது வீடு நன்றாக இருக்க நமது ஊர் நன்றாக இருக்க நமது உலகம் நன்றாக இருக்க
2.தினம்தோறும் சிறிது நேரம் பிராத்தனை செய்தால் மிகவும் நல்லது.

வீடும் ஊரும் உலகமும் எல்லாம் நமக்குள் இருக்கின்றது. எல்லாருடைய உணர்வும் நமக்குள் இருக்கின்றது. ஊரில் இருக்கக்கூடிய மக்களின் உணர்வு அனைத்தும் நம் உடலுக்குள் இருக்கின்றது… யாரும் பிரிந்து செல்லவில்லை.

ஆகவே எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக மழைக்காக தியானமிருங்கள். இந்த நாடு நலமாக இருக்க வேண்டும் என்று அ;லைகளைப் பாய்ச்சுங்கள். உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
1.அருளைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்.
2.அகஸ்தியன் கண்ட வழியில் நாம் உலகைத் தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்வோம்
3.உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம் தவமிருப்போம்.

அபிராமிபட்டர்

இவ்வுலக நியதியே இக்கலியின் இக்காலத்தில் மாற்றம் கொள்ளப் போகும் உண்மை நிலையை நம் தியான முறைப்படி உணர்த்துகின்றோம்.
1.ஒளியாய் ஒவ்வோர் ஆத்மாவும் எந்நிலையில் ஒளிர்ந்திடலாம்…? என்பதனை
2.ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படும் வழிமுறைகளை நாம் அறிந்த வழியில் உணர்த்துகின்றோம்.

இப்பூமியிலே உயிரணுவாய்த் தோன்றி உயிராத்மாவான இன்றும் தன் உடலை அழியா வண்ணம் ஒளியுடனே நினைத்த நேரத்தில் கலந்து செயல் கொள்ளும் கொங்கணவரும் போகரும் இவ்வழி தொடரை எந்நிலையில் பெற்றார்கள்…?

இப்பூமியில் அபிராமிப்பட்டராய் அபிராமி அந்தாதி இயற்றிய அவ் அபிராமிபட்டர் அம்மாவாசை நாளில் பௌர்ணமி நிலவைக் காண முடியும் என்று உணர்த்தி பூரணச் சந்திரனைக் காணச் செய்தது எந்நிலையில்…?

சந்திர நிலவா அன்று காட்சி அளித்தது…?

அபிராமிப்பட்டராய் வாழ்ந்த அவ்வாத்மா
1.தன் எண்ணத்தைத் தன் உடலில் உள்ள ஒவ்வோர் அணுவையும் அச்சக்தி மாதாவின் செயல் சக்தியின் உண்மைக்கே அடிபணியச் செய்து
2.அவ்வுண்மையின் சக்தியையே அன்பு கொண்டு பூஜித்து,
3.தன் எண்ணத்திலும் உணர்விலும் எவ்வணுவின் சக்திக்கும் அடிபணிய வைத்திடாமல் ஒரே சக்தி ஜெபத்தை ஈர்த்து வழி வந்த நிலையில்
4.அமாவாசையில் பௌர்ணமி நிலவைக் காண முடியும் என்று அவ்வரசரின் எண்ண நிலையில்
5.தெய்வ சக்தியை ஓங்கிக் காட்டிடல் வேண்டும் என்று ஒரு நிலை கொண்ட தீவிர ஜெப சக்தியினால்
6.அவ்அபிராமியின் மேல் அவர் துதித்துப் பாடிய அவரின் ஒரு நிலை கொண்ட எண்ண சக்தியே
7.அவர் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் பிரிந்து ஒளியாகிக் கூடி “பௌர்ணமி நிலவாய் அனைவரும் காணும் சந்திர பிம்பமாய்க் காட்சி தந்தது…”

அபிராமிப்பட்டரின் ஆத்மா பெற்ற சக்திதான் அவ்வாத்மாவே நிலவாய் ஒளிர்ந்தது. அவரின் கூடுதான் அங்கு பிம்ப நிலையில் இருந்தது.

சக்தியின் தேவியையே தன் ஆத்மாவில் ஐக்கியப்படுத்தி செயல்படுத்திக் காட்டினார்.

1.போகரின் நிலை ஒளியுடன் முருகா என்ற உள்ளமுருக ஒலிக்கும் நிலைக்கெல்லாம் ஒளியாய் நல்லருளைச் செலுத்தும் நிலையும் இதுவே.
2.கொங்கணவரின் நிலையும் இந்நிலைக்குகந்ததே…!
3.தன் ஆத்மாவின் சக்தியையே ஒளியுடன் கலந்து ஒளிரும் சக்தி இவர்களுக்கு எல்லாம் உண்டு.

ரிஷிகளும் முனிவர்களும் மந்திரம் செய்யவும் தந்திரம் செய்யவும் தன் நிலையில் சக்தி கொண்டு செயலின் பயனைப் பெறுவதாகவும் மக்களின் எண்ணத்தில் உள்ளது.

ஆனால்… அச்சப்தரிஷிகளின் நிலையினால்தான் இப்பூமியின் சக்தி நிலையே பெருகி வருகிறது.
1.இன்றளவும் மனித ஆத்மாக்கள் இந்நிலை கொண்டு வாழ்வதற்கே நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இப்பூமியின் நிலையே இன்றுள்ளது.
2.அவர்களும் நம்மைப் போல் வாழ்ந்தவர்கள் தான்.
3.நாமும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தொடர்பு கொண்டு வாழ்ந்தவர்கள் தான்.
4.நம் நிலையில் வழி வந்த நிலைதான் இன்று வாழ்ந்திடும் நிலை… அவர்களின் தொடர்பை ஏற்றே இனி வழி வந்திடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவனைத் தொலைந்து போக வேண்டும் என்று சொன்னால் போதும். அதை அவர் கூர்ந்து கவனித்தால் ஊழ்வினை என்ற வித்தாக அவருக்குள் பதிவாகி விடுகின்றது.

என்னை இப்படிச் சொன்னான் என்ற நிலையில்…
1.அவனைப் பார்… நான் என்ன செய்கிறேன்…? என்று என்ற உணர்வுகள் அங்கே விளைந்து
2.அவன் நல்ல செயல்களை எல்லாம் ஒடுக்கிவிட்டு இவனைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளே வந்துவிடும்.

அவருடைய உடலுக்குள் இருக்கும் நல்ல உணர்வையும் வளர்ப்பது இல்லை. இவன் சொன்ன நிலையை வேதனையாக எண்ணி
1.”இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்” என்ற உணர்வை அங்கே ஊட்டி
2.அவனுக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை எல்லாம் இரண்டில் ஒன்று பார்த்துவிடும்.

ஒருவன் “தீங்கே விளைவிக்கின்றான்…” என்றால் இந்த மனித உடலுக்குள் விளைய வைத்த இந்த எண்ணம் அங்கே நுழைந்து விடுகின்றது.

பின்… இவன் உடலிலே விளைந்தது திருப்பி அங்கிருந்து வந்தவுடனே…
1.அவ்வளவு திமிரா…? இரு நான் பார்க்கின்றேன்… என்ற இந்தத் தீய உணர்வலைகளை விளைய வைத்து
2.இந்த உணர்வின் நிலைகள் உடலுக்குள் ஜீவான்மாவாக மாறுகின்றது.
3.சொல்லாக அது வரப்படும் பொழுது பரமாத்மாவாக மாறுகின்றது.

பரம் என்பது பூமி. சூரியனின் காந்த சக்தி… நாம் சொன்ன உணர்வலைகளைக் கவர்ந்து இப்படிப் பரமாத்மாவாக மாற்றுகின்றது.

பரமாத்மாவாக மாற்றிய நிலையில் இது சிறுகச் சிறுக விளைந்து மழை பெய்யும் மேகத்திற்குள் கொண்டு சென்ற உடனே நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தையும் அழிக்கின்றது.

தொலைந்து போகும் மழை இந்த நேரத்தில் தானா வர வேண்டும் என்று மழையைச் சொல்கின்றோம். இதைச் சாதாரணமாக வேடிக்கையாகச் சொல்லலாம். ஆனால் மழை பெய்வதைத் தடுக்கும் சக்தியாக அது மாறுகிறது.

ஏனென்றால் மனிதன் என்பவன் முழு முதற்கடவுள் என்று அதற்குத் தான் விநாயகனைப் போட்டுக் காட்டியுள்ளனர் ஞானிகள்.

1.யானையின் தலையைப் பொருத்தி மனித உடலைப் போட்டு
2.நாம் புழுவிலிருந்து மிருகமாகி மிருகத்திலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வின் எண்ண வலுவாகி
3.அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு மனித உருவை உருவாக்கியது நமது உயிர் என்ற நிலையை
4.எண்ண வலு கொண்டு எதையும் சாதிக்கும் அவ்வளவு வல்லமை பெற்ற இந்த நிலையை
5.அதனின் வலு துணை கொண்டு மனிதனைக் காட்டிலும் மிக சக்தி வாய்ந்த உணர்வை ஈர்த்து
6.நம் உடலுக்குள் இணைக்கும் சந்தர்ப்பம் மனித உடல் பெற்ற நிலையில் நம் ஆறாவது அறிவிற்கு உண்டு.

அதனின் துணை கொண்டு மெய் ஞானிகள் இந்த வாழ்க்கையில் வென்று சென்ற அந்த உணர்வை நாம் கவர்ந்து நம் உடலுக்குள் அதை இணைப்போம் என்றால் அந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை நீக்கும் நிலை வருகின்றது.

நஞ்சின நீக்கும் உணர்வின் ஆற்றலாக நாம் வெளிப்படுத்துவதை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமாத்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஜீவாத்மாவாக விளைந்து அதனின் உணர்வு பெருக அந்த ஆற்றலின் வலிமை கொண்டு
1.நாம் எதைப் பரமாத்மாவில் கலக்கச் செய்தோமோ
2.அதிலே பெருகுவதை எடுத்துத் தனது ஆத்மாவாக மாற்றுகின்றது.

நாம் எண்ணிய உணர்வின் சத்து நம் உடலுக்குள் விளைந்து உயிராத்மாவில் விளைந்து ஒளியாக மாறுகிறது. நாம் ஒளி உடல் பெறுகின்றோம்.

September – 2024 உபதேசம்

அகஸ்தியரின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்து “எவ்வளவு தூரத்துக்கு அனுப்ப முடியுமோ” அதைப் பரவச் செய்யுங்கள்

 

இந்தக் காற்றிலே மகரிஷிகளின் அருள் சக்தி நிறைய இருக்கின்றது
1.நீங்கள் எண்ணியவுடன் அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்குமளவிற்குத் தான் தயார் செய்து கொடுத்துள்ளேன்
3.அதை எடுத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு தான்.

காலையில் கண் விழித்த உடன் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள். “கஷ்டம்” என்ற வார்த்தைகளை விட்டுத் தள்ளுங்கள்… அது புகாதபடி தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்காக வேண்டி
1.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
2.உங்கள் தாய் தந்தையரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று குருதேவரை நினைத்து
4.எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
5.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் உள்ளே செலுத்துங்கள்.

உங்களுக்கு அந்த அமைதி கிடைக்கும். அமைதிப்படுத்திய பின் இன்னது தான்… நல்லது தான் நடக்க வேண்டும் என்று நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் அதற்குண்டான வழி கிடைக்கும்.

உதாரணமாக உடம்பிலே வலி இருக்கிறது என்றால் அங்கே நினைவைச் செலுத்தி இரண்டு தடவை மூன்று தடவை கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அங்கே பாய்ச்சுங்கள்.

உடலிலே எங்கே வலி இருக்கின்றதோ அந்த இடத்திலேயே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று பாய்ச்சுங்கள். அந்த உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சிறிது நேரம் நினைவைச் செலுத்துங்கள்.
1.முதலில் சிறிது வலி அதிகமாகும்
2.சிறிது நேரம் ஆனால் வலி குறையும் அமைதி கிடைக்கும்
3.உடலில் உள்ள வாத நீர் பித்த நீர் எல்லாம் நீங்கி உடல் நன்றாக வேண்டும் என்று தியானித்துக் கொள்ளுங்கள்.
4.இதைச் சுவாசித்தால் அந்த எண்ணங்கள் அங்கே செல்லும்… வேதனை துரிதமாகக் குறையும்.

உங்கள் அனுபவத்தில் அதைக் கொண்டு வரலாம்.

சில பேருக்கு உடலில் ரொம்ப முடியாமல் இருக்கும். அதற்கு மருந்து போட்டு தணித்துக் கொண்டு தியானத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்படி அனுபவப்பட்டுத் தெரிந்து கொண்ட பின் “காற்றிலே உயர்ந்த சக்தி இருக்கின்றது” என்று எண்ணி அதை எடுத்து நம் உடலுக்குள் பெருக்கிக் கொள்ள முடியும்

குடும்பத்திற்குள் நல்ல ஒற்றுமை ஏற்படும் எல்லாம் சீராக இருக்கும் எதையுமே சிந்தித்து செயல்படக்கூடிய சக்தி அந்த இடத்தில் வருகின்றது.

டாக்டர்கள் எப்படி… நோய்களுக்கு உண்டான மருந்துகளை பக்குவப்படுத்திக் கொடுக்கின்றார்களோ அது போல் “உங்கள் ஆறாவது அறிவை டாக்டராகப் பயன்படுத்தி” அவ்வப்பொழுது இப்படிச் சீராக்கிக் கொள்ள முடியும்.

அதே சமயத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது…
1.இந்த உடல் நமக்கு சொந்தமில்லை… சொந்தமில்லாததை நாம் சொந்தமாக்க் கொண்டாட வேண்டாம்
2.நாம் சொந்தம் கொண்டாட வேண்டியது எல்லாம் உயிரான நல்ல உணர்வு…
3.ஆறாவது அறிவு கார்த்திகேயா அதை நீங்கள் சொந்தம் கொண்டாடுங்கள் வாழ்க்கையில் இதுதான் நிலையானது.

காரணம்… இந்த உடல் மண்ணுக்குத் தான் செல்கின்றது. மண்ணுக்குச் செல்லும் இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றோம். ஆனால் என்றுமே நிலையாக இருக்கும் உயிருக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆகவே உயிரைப் போன்றே உணர்வுகள் ஒளியாக மாற வேண்டும் என்ற அந்த ஆசை… எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய ஆசை எல்லாவற்றையும் தெரிந்திடும் அருள் ஒளியாக நாம் கொண்டு வந்தால் என்றுமே பிறவியில்லா நிலை அடைய முடியும்.

நாம் ஒவ்வொருவரும்…
1.அகஸ்தியன் எடுத்த அருளை நமக்குள் பதிவு செய்து
2.அந்த அலைகளை உங்களால் எவ்வளவு தூரம் எடுத்து அனுப்ப முடியுமா அனுப்புங்கள்.
3.அது உங்களுக்கும் நல்லது உடலுக்கும் நல்லது இந்த நாட்டுக்கும் நல்லது இந்த உலகிற்கே நல்லது.

இன்றைய உலகம் கடும் விஷத்தன்மையாக இருப்பதால் உங்கள் உடல் உறுப்புகள் அனைத்துக்குமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சச் சொல்கின்றோம்.

காலையில் எழுந்து ஒரு ஆறு மணிக்குள் முடிந்த அளவு அந்த உயர்ந்த சக்தியை எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள் ஒரு அரை மணி நேரமாக உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அதைப் பாய்ச்சுங்கள்.

ஒரு நல்ல பலனைத் தரும்.

நாகரீகமில்லாது… ஆயிரம் காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் நம் பூமியில் உண்டு

 

இன்றளவும் இப்பூமியின் நியதியையும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையையும் ஆவி உலக ஆத்மாக்களின் செயல் நிலையையும் இப்பூமியுடன் தொடர்பு கொண்ட மற்ற மண்டலங்களின் நிலையின் வழித்தொடரையும் சிறுகச் சிறுக உணர்த்தி வந்துள்ளேன்.

இனி நாம் எந்நிலை கொண்ட ஜெபத்தினால் இக்கலியின் பிடியிலிருந்து மீள முடியும்…? என்ற சக்தித் தொடரைத்தான் செயலாக்கிடல் வேண்டும்.

இப்பூமியில் நாம் இம்மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திட நம் ஆத்மாவுடன் பெற்ற சக்தியின் ஜெயத்தினால் தான் இன்று இந்நிலையில் வாழ்ந்திடும் இப்பாக்கியமே.

இப்பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான்…
1.இப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித ஆத்மாவாய்
2.மனித உடல் கொண்ட ஜீவன்கள் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட முடிந்தது.

இவ்வளர்ச்சி கொண்ட இம்மனித ஆத்மாக்களின் எண்ண செயல் நிலையும் இப்பூமியில் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இல்லாமல்… இந்த ஞான வளர்ச்சி ஜீவ ஆத்மாக்களில் வாழ்ந்த ஆத்மாக்களே… இப்பூமியில் ஆயிரத்தில் ஒன்றிரண்டு விகித நிலைகளை விடக் குறைவுதான்.

நாகரீக வளர்ச்சி கொண்ட ஆத்மாக்கள் வாழ்ந்திடும் நிலைகள்தான் நமக்குத் தெரிகின்றது. இவ்வெண்ண நிலைக்கொப்ப ஆயுட்காலமும் இம்மனித ஆத்மாக்களின் நிலையில் ஒத்துள்ளன.

1.நாம் அறிந்திடாமல் “நமக்கும் மேல் நீடித்த ஆயுள் காலங்கள் கொண்ட” ஆத்ம உடல் கொண்ட மனிதர்கள் இப்பூமியில் பலர் உள்ளனர்.
2.ஆயிரம் காலங்களும் மாற்றுடல் ஏறாமல், ஒரே உடம்பில் வாழ்ந்திடும், எண்ண வளர்ச்சி நிலையில்லாத
3.ஒரே நிலை கொண்ட குறுகிய எண்ணத் தொடரில் ஆத்ம உடல் பிம்பங்கள் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.
4.இந்நாகரீக வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் உடல் நிலையின் வளர்ச்சி நிலை அங்கில்லை.

இவ்வெண்ண வளர்ச்சியின் நிலையினால்தான் இம்மனித ஆத்மாக்களின் பெருக்கமே கூடிவிட்டது.

ஆனால் நாம் அறிந்திடாமல் இப் பூமியில் வாழ்ந்திடும் நாகரீக அறிவு வளர்ச்சியற்ற ஆத்ம உடல் கொண்ட மனிதர்களின் நிலை
1.நம் நிலைக்கு மாறுகொண்டதாக உள்ளது… மிருகங்களின் நிலைக்கொப்ப
2.ஆனால் அவ்வுடல்களில் எவ்விஷத்தன்மையும் பாய்ந்திடாது.

காடுகளில் பாம்பு, நரி இப்படி உள்ள மிருக இனங்கள் எப்படி வாழ்கின்றனவோ அப்படியே தன் இன வர்க்கத்தை “இவ்வெளியுலக பிடிக்குச் சிக்கா வண்ணம்” அவ்வுடல் ஆத்மாக்கள் கொண்டவர்கள் வாழ்கின்றனர்.

ஆனால் இவ்வெண்ணத் தொடரின் வழித்தொடரில் வந்த நம் மனித உடல்கள்தான் இக்கலியின் மாற்றத்தில் எண்ணச் சிதறல் பட்டும்… இவ்வியற்கையின் சீற்றத்திற்கு அடிபட்டும் மாளப்போகின்றன.

இவ்வெளி உலகப் பார்வையில் சிக்காமல் இப்பூமியில் மனித ஆத்மாவாய் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள மனித இன வர்க்கம் எல்லாம்… இக்கலியிலும் ஜீவன் பிரியாமல் வரப்போகும் கல்கியிலும் வழித்தொடர் பிடித்தேதான் வாழப் போகின்றனர்.
1.அவர்களின் எண்ணத்தில் இம்மாற்றமும் இவ்வியற்கையின் சீற்றத்தின் பயமும் எதுவும் தாக்கிடாது.
2.இன்றைய செயற்கையினால் ஏற்படுத்திய வெடிகுண்டுகளைப் பாய்ச்சினாலும் அவ் உடல்களை பாதிக்காது.

எண்ண நிலையேயில்லாமல் குறுகிய நோக்கில் தன்னைக் காத்து வழிவந்த ஆத்மாக்களுக்கு நம்மைக் காட்டிலும் வீரிய சக்தி பெற்றுள்ளபோது ஞான சக்தியின் செயலாக்கும் அறிவு வளர்ச்சி பெற்ற நாம்… நம் ஆத்மாவை விஷக்காற்றிலிருந்தும் விஷமாய் இவ்வுலக நிலையையே மாற்றம் கொள்ளும் இவ்வெண்ண நிலையின் தாக்குதலில் இருந்தும்…
1.எவ் அணு வெடிகள் நம் மேல் பாய்ந்தாலும் நம் உடலில் உள்ள அத்தீய சக்தியை ஏற்கா வண்ணமும்
2.நம்மை நாம் இவ்வொளி ஒளியாய் ஒளிர்ந்திடும் சக்தியில் நம் உடல் பிம்பத்தையும் நம் ஆத்மாவையும் செயலாக்கிடல் வேண்டும்.

இப்பூமியிலே நம்மைப் போன்ற ஆத்ம உடல் கொண்டு வாழ்ந்து வாழ்க்கையின் உன்னத சக்தி உணர்ந்து சூட்சும நிலை கொண்ட பல கோடி நற்பெரியோர்களின் ஆசையின் தொடர் நிலையை நம் ஆத்மாவின் சக்தியில் செயலாக்கிட… “அவர்களின் வழித்தொடர் நமக்கும் கிட்டும்…”

1.இவ்வுலகில் தோன்றிய ஆசை நிலையினால் இவ்வுலகைக் காத்திடும் ஆசையிள்
2.பல ஆத்மாக்களை இப்பக்தியின் ஈர்ப்பில் பல சித்தர்களும் பல ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர்.

நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இவ் ஓங்கார நாதம் கொண்ட ஒலியுடனே கலந்து… ஒளிபெறும் சக்தி நிலையை நாம் அடைந்திடும் வழித்தொடர் நிலையை அறிந்தே வாழ்ந்திடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆற்றில் வெள்ளம் செல்கிறது என்றால் அந்த வெள்ள நீரை நாம் வயல்களிலே அப்படியே பாய்ச்சினால் பயிர் பச்சைகளை எல்லாம் அது அடித்துச் சென்றுவிடும்.

அதைப் போன்று இந்த வாழ்க்கையின் நிமித்தம்…
1.நாம் அதிக ஆசையின் உணர்வுகளைக் கொண்டு சென்றால்
2.வெள்ள நீர் செல்வது போல் மற்றது சிந்தனை இல்லாது ஒருநிலைப்படுத்திக் கொண்டு போகும்.
3.வேறு செயல்களைச் சீராகச் செயல்படுத்தவிடாது

ஆனால் அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் கொண்டு வரப்படும் போது நமக்குள் இருக்கும் தீமைகளை எல்லாம் அது அடித்துச் செல்லும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் வெள்ளத்தை நமக்குள் பாய்ச்சி நம்மை அறியாது வந்த தீமையான வினைகளைப் போக்கி மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெருகச் செய்வதே “பதினெட்டாம் பெருக்கு…”

பதினெட்டு என்றால்…
1.உலகை அறியும் தன்மை பெற்றவன் மனிதன்… அந்த உயிரின் தன்மை பத்தாவது நிலை அடையும் தருணம் பெற்றது.
2.எட்டு என்பது அஷ்டதிக்கும் “எட்டி” அதை எல்லாம் உணரும் நிலையைத் தெரிந்தவன் மனிதன்.

அனைத்தையும் அறியச் செய்யும் மனிதனின் ஆறாவது அறிவால் மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் பெருக்கி
1.அஷ்டதிக்கிலேயும் தன் ஒளியின் சுடரைப் பாய்ச்சி
2.எந்தத் திக்கில் எது வந்தாலும் அந்த இருளை மாய்க்கும் நிலைகள் பெற்றது.

அஷ்டதிக்கிலும் தீமை என்ற நிலையில் இருள் சூழ்ந்தாலும் சப்தரிஷி மண்டலம் ஒளியாகப் பெருக்கிக் காட்டுகிறது. துருவ நட்சத்திரமும் தன் அருகிலே வரும் இருளை எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை அடக்கி ஒளியாகத் தனக்குள் வீசுகின்றது.

இது தான் அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகள்.

“விஞ்ஞான முறைப்படி” யாம் கொடுக்கும் தியானப் பயிற்சி

 

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும் சுத்தப்படுத்துவதற்குத் தான் இந்தத் தியானமே.

உங்கள் உடலில் உள்ள உறுப்புகளுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்ய வேண்டும்.
1.இதை நீங்கள் வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் கூடுமானவரையிலும் உடலில் வரக்கூடிய சங்கடங்களை உங்களால் நிவர்த்தி செய்ய முடியும்
2.அந்த ஞானத்தை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.

யாம் (ஞானகுரு) சொல்வதைப் போன்று நீங்கள் ஆசைப்பட வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்.
3.எங்கள் சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற
4.அந்த ஆசையோடு ஏங்கி நீங்கள் எடுக்க வேண்டும்.
5.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு வர வேண்டும்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்…?

கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு கொண்டு வர வேண்டும்.

அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும்…?

நம் இரத்தத்தில் இருக்கக்கூடிய நீரையும் விஷத்தன்மையையும் பிரித்து எடுக்கும் கிட்னிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

பாலைக் காய்ச்சி எடுத்துத் தான் நாம் வெண்ணெயைப் பிரித்து எடுப்போம். ஆனால் இப்போது மிஷினை வைத்து என்ன செய்கின்றார்கள்…? மிஷினைச் சுற்றவிட்டு இந்த வெண்ணெயை பிரித்து எடுத்து வைத்து விடுகின்றார்கள்.

இது மாதிரி நம் உடலுக்குள் அறியாது புகும் விஷத்தன்மையை நீக்குவதற்கு…
1.மிஷின் மூலம் வெண்ணையைப் பிரிக்கும் சக்தியைக் கொண்டு வருகிற மாதிரி
2.நாம் அந்த சக்தியை நம் இரத்தத்தில் கலக்கச் செய்து நமது சிறுகுடல் பெருங்குடலிற்கு உருவாக்கிய அந்த அணுக்களுக்கு இதைப் பெறச் செய்து
3.எல்லாம் வரிசையில் வரப்படும் போது சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் வலுவாகிவிட்டால் விஷத்தைச் சுத்தமாக பிரிக்கும்.
4.அப்படிப் பிரித்தால் (சிறுநீராக வடித்து விட்டு) நல்ல இரத்தம் இருதயத்திற்கு வருகின்றது
5.இருதயம் நன்றாக சுத்திகரிக்கப்பட்ட அந்த இரத்தத்தைத் தான் நம் உடல் முழுவதற்கும் பரப்புகின்றது… நமது சிறுமூளைக்குப் போவது முதற்கொண்டு.

உதாரணமாக வேதனையோ விஷமோ ஏதாவது வந்தால்… மேலே சென்றவுடன் தலையில் நீர் கோர்த்து விட்டது… “தலை கிண்” என்று இருக்கின்றது… விஷமான நிலையைப் பார்த்தால் நல்ல சிந்தனை வருவதில்லை.

அதாவது அசுத்த இரத்தம் சிரசு பாகம் போய்விட்டது என்றால் மூளை பாகங்கள் செயலிழந்து விடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை. ஆனால் இப்படி எல்லாம் போய்விடுகின்றது.

ஆகவே…
1.இருதயத்திற்கு நல்ல ரத்தத்தைக் கொண்டுவர வேண்டும்… அது உங்களால் முடியும்.
2.யாம் சொன்னபடி அந்தந்த உறுப்புகளைத் தைரியப்படுத்த வேண்டும்.
3.அதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை சேர்த்து பழக வேண்டும்.

இது எல்லாம் உங்களுக்கு கஷ்டமான காரியம் இல்லை.

திட்டுபவர்களைத் திருப்பி எண்ணுகின்றீர்கள். அவனுடைய உணர்வு உள்ளே வராமல் தடுப்பதற்குத் துருவ நட்சத்திரத்தை எண்ணினால் போதும். இது வலுவாகி உங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வரும்.

அதற்குத்தான் இப்பொழுது கண்ணின் கருமணிகள்… நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள்… எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள்… எலும்புக்குள் உள்ள ஊன்… இது எல்லாவற்றிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ரெக்கார்ட் செய்வது.

தசை மண்டலங்களுக்குள்ளும் அதைப் படி படியாக்க் கொண்டு வந்து தோல் மண்டலத்தில் உள்ள அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுவேற்றிக் கொண்டால்
1.இந்தக் காற்றில் தீமைகள் இருந்தாலும் கூட நம் பக்கத்தில் வராது கொஞ்சம் தள்ளிவிட்டு கொண்டே இருக்கும்.
2.நம் சிந்தனைகள் நன்றாக இருக்கும்.

நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய உலகிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்

 

உயிரணுவாய் உதித்திட்ட இவ்வுயிர் அணுக்களே வளர்ச்சியின் வழி சக்தி நிலைகொண்ட உயிராத்மாவால் இம் மனித உடல் பெற்று, எண்ண நிலையின் வளர்ச்சித் தொடர் கொண்டு, அவ்வெண்ணத்தின் ஞான சக்தியினால் பல நிலைகளைக் கண்டுணர்ந்து, ஆத்ம சக்தியை எண்ண சக்தியுடனே வளர்ச்சி கொண்டு வந்த நிலையில், இக்கலியின் முற்பட்ட அவதார காலங்களில் எல்லாம் வந்த ஞானத்தின் வழித்தொடர் சக்தி நிலையை கிருஷ்ணாவதார கால முதற்கொண்டு, இக்கலியின் காலத்திலும் நாகரிக வளர்ச்சி என்ற வளர்ச்சி நிலை பெற்று, வழி வந்திடும் நிலையில் “ஞான வளர்ச்சி நிலை குன்றிவிட்டது…”
1.நல்லொழுக்கம், நல் ஞானம், சத்தியம், தர்மம், நியாயம் என்ற நற்சக்திகளின் வழித்தொடரில் சென்றிட…
2.இன்று இக்கலியில் பிறப்பெய்தி வாழும் இம்மனித ஆத்ம சக்தியிலேயே தொடர் நிலை இல்லை.

இக்கலியில் மனிதர்களாய் இன்று வாழ்பவர் எல்லோருடைய நிலையிலும், இக்கலிக்கும் முற்பட்ட காலத்திலேயே வாழ்ந்தவரின் எண்ண சக்தி நிலையில் வந்திட்ட ஆத்மாக்களாய்… இக்கலியில் பிறப்பெடுத்து வாழ்வதினால்… இன்று வாழும் அனைத்து ஆத்மாக்களின் எண்ண சக்தியே… அன்று வாழ்ந்தவரின் தொடர் நிலையினால் வந்த வினைதான்.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களின் எண்ணம் முன் ஜென்மத் தொடருடன் செயல்பட்டு வழி வந்த வினை இன்றைய இக்கலியின் பேராசை நிலை.
1.நாமாய் இந்நிலையை வளரவிடவில்லை… வளர்ச்சியின் தொடர்நிலை தான் இந்நிலை.
2.ஒவ்வோர் உடலுக்குள்ளும் அவ்வுடலுக்குகந்த ஆத்மா ஒன்றுதான்.
3.ஆனால் ஒவ்வோர் உடலுக்குள்ளும் இருந்து செயல்படும் மற்ற அணுக்களின் நிலை அதிகம்.

தோன்றிக் கொண்டே உள்ள உயிரணுக்கள் இப்பூமியில் உதித்து வளர்ச்சி கொண்ட எல்லா உயிர்த் துடிப்புக் கொண்ட கோளத்திலும் அன்றன்று உயிர் பெற்றுக் கொண்டே வளர்ந்து வருகிறது.

தாவரங்களில் எப்படி அதன் சுவாசத்துடன் கூடிய புழுக்கள், பூச்சிகள், வண்டுகள் வளர்கின்றனவோ அந்நிலை போன்றே இப்பூமியில் கழிவிடங்களில், நிலத்தில், நீரில் இப்பால்வெளி மண்டலத்தில் மற்றப் பிராணிகள், பட்சிகள், மனிதர்கள் எல்லாவற்றிலுமே இவ்வுயிர் அணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன.

அந்நிலையில் நம் உடலுடன் சூரியனின் ஒளிக்கதிரிலிருந்து வந்திடும் உயிரணுக்களின் நிலை பல வளர்ந்து கொண்டே ஒவ்வொரு நாளும் உள்ளன. ஒவ்வொரு நாள் என்பது மட்டுமல்ல… நம் சுவாச நிலை செயல் கொண்டிடும் நிலையிலெல்லாம் “பல உயிரணுக்களின் நிலை நம் உடம்பிலும் ஏறுகின்றது…”

இப்புதிய உயிரணுக்கள் மட்டுமல்லாமல் இக்காற்றினில் படர்ந்துள்ள ஏற்கனவே பல நிலைகளில் வாழ்ந்து பல உடல் நிலைகளை மாற்றிக் கொண்ட “பல எண்ணக் கலப்புக் கொண்ட உயிரணுக்களும்” நம் சுவாசத்துடன் நம் உடலுடன் ஏறுகின்றன.

நம் உயிராத்மாவும் உயிரணுவாய்த் தோன்றிப் பல நிலைகள் பெற்று…
1.பெற்ற பிறகு இம்மனித ஆத்மாவாய் உடல் கொண்ட எண்ணக் கலப்பு கொண்ட
2.வாழ்க்கையின் ஏழு ஜென்ம நிலை கொண்ட சக்தி நிலை தொடர்பும் கொண்டு
3.இன்று வாழ்ந்திடும் இவ்வுடலுடன் கூடிய ஆத்மாவை
4.இவ்வெண்ணச் சிதறலில் இருந்தும் இன்றைய வாழ்க்கை நெறி முறையில் இருந்தும் தப்பி ஞான சக்தியின் வழித்தொடரை அறிய
5.நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய இப்பிடியிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்.

இன்றுள்ள இவ்வளர்ச்சியின் தொடரிலேயே மனித ஆத்மாக்கள் சென்றிட்டால் இச்செயற்கையின் ஆசையினாலும் இவ்விஞ்ஞான எண்ண வளர்ச்சியினாலும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையை “சூனிய நிலை போல் சக்தியிழந்து” செயலற்ற நிலையில் செல்லும் நிலைக்குத்தான்… இக்கலியின் பிடியில் நம் ஆத்மாக்கள் சிக்குண்டுள்ளன.

இவ்வணுக்கதிர்களை ஆராயும் நிலைக்காக இப்பூமியில் இருந்தும் வான மண்டலத்திலிருந்தும் பல அணுக்கதிர்கள் ஒன்றுபடுத்தி இவ்விஞ்ஞானத்தில் செயல்படுத்திடும் நிலையினால்
1.இவ்வணுவின் வெடிப்பு (விஷமான குண்டுகள்) அடிக்கடி ஏற்படுத்துவதினாலும் இக்காற்று மண்டலமே செயலற்றதாகி
2.மனித ஆத்மாக்களின் சுவாச நிலையும் மாறு கொண்டு இவ்வெண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு
3.சூனிய நிலைகொண்ட பைத்தியங்களாய்த் தான் இம்மனித ஆத்மாக்களின் நிலையும் செயல்படப் போகின்றது.

அறிவு நிலை கொண்ட ஆத்மாக்களுக்கே இந்நிலை என்றால் இம்மனிதனிலிருந்து மாறு கொண்ட மிருகங்கள் பட்சிகள் இவற்றின் நிலை எப்படி இருந்திடும்…?
1.எண்ண வளர்ச்சியை ஞானத்தின் சக்தி நிலை தொடர்பு படுத்தி
2.சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தினால் அன்றி இக்கலியின் பிடியிலிருந்து தப்புவது கடினம்தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்குள் யாம் (ஞானகுரு) இப்போது ஆழமாகப் பதிவு செய்யும் மெய் ஞானிகளின் உணர்வினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதனை நீங்கள் பெருக்கிக் கொண்டால்
1.உங்கள் நினைவின் ஆற்றலைக் கொண்டு
2.விண்ணின் அதிர்வலைகளை நுகர்ந்தறிந்து
3.விஞ்ஞானிகள் கருவியின் துணை கொண்டு வான இயல் புவியியலில் அளந்தறியும் செயல்களை
4.அந்தக் கருவிகள் இல்லாமலே அதன் உணர்வலைகளை நீங்கள் அறிந்து
5.இத்தனை மணிக்கு இன்னது நடக்கும்…! என்று சொல்ல முடியும்.

அதே சமயத்தில் மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் எண்ண அலைகளைப் பாய்ச்சி
1.விண்ணிலிருந்து வரும் ஒரு கல்லோ பாறையோ (ASTEROIDS) பூமியிலே மோதாதபடி
2.அது திசை திரும்ப வேண்டும் என்று பலர் சேர்ந்து எண்ணினால்
3.இந்த ஒலி அலைகள் கொண்டு குறுக்காட்டி அவைகளைத் திசை மாற்றவும் உங்களால் முடியும்.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டோர் அணு ஆயுதங்களைத் எடுத்து அணு விசை கொண்டு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி அந்தப் பாறைகளையோ கல்களிலோ செலுத்தி அவைகளை நொறுக்கலாம்.

1.நொறுக்கிய பின் அதிலே கலந்த நஞ்சு பிரபஞ்சத்தில் பரவி மீண்டும் நம் பூமிக்குள் தான் வரும்.
2.பூமியிலே மோதாது அதைத் தாக்க முடியும்… ஆனால் நம்மைக் (மனிதர்களை) காக்க முடியாது.

ஏனென்றால் இவர்கள் வெடிக்கும் தன்மை கொண்டு அது நொறுங்கிய பின் அந்த நஞ்சான உணர்வின் தன்மை நம் பூமியில் படரப்பட்டு நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன்” என்ற திரையைக் கிழித்து அந்த நஞ்சின் தன்மைகளை இங்கே பெருக்கிவிடும்.

சாதாரணமாக… விண்ணிலிருந்து வரும் நஞ்சுகளை எல்லாம் ஒடுக்கும் தன்மையாக அது பெருகி வரும் போது தான் அது ஓசான் திரை. பூமிக்குள் ஒளியின் தன்மை பெருக்கி இங்கிருக்கும் மற்றதனைத்தையும் காக்கும் நிலைகளாக அந்த ஓசோன் திரை இங்கே வருகிறது.

ஆனால் விஞ்ஞான அறிவின் செயலால் ஓட்டை விழுந்து விட்டால் நஞ்சு உள்ளே புகுந்துவிடும். விண் கற்களைத் (ASTEROIDS) தெறிக்கச் செய்தாலும் நம் பூமிக்குள் அது வருமே என்றால் நஞ்சினைத் தான் அது பரப்பச் செய்யும்.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கிறோம். ரோட்டிற்கு அந்தப் பக்கம் ஒரு பொருளின் தன்மை இருக்கின்றது. நாம் எடுக்கச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றோம். அந்த ஆசையே துணிவாக அங்கே நம்மைச் செல்லச் செய்கிறது.

ஆனால் இடைமறித்து பஸ் வருகிறதா…? அல்லது வேறு என்ன வருகிறது…? என்று நாம் பார்த்துச் சென்றோம் என்றால் அந்த எல்லையை அடைய முடியும்.

அப்படித் திரும்பிப் பார்க்காது நாம் சென்றால் அந்தப் பொருளையும் பெற முடியாது… நமக்கும் ஆபத்தாகிவிடும். அதைப் போன்று தான்
1.மனிதன் இந்த விஞ்ஞான அறிவால் நாட்டைக் காக்க எண்ணினாலும்
2.அதனால் விளைந்த நஞ்சு நாட்டு மக்களை அழித்துவிடும்.

இன்று நாம் பார்க்கும் விஞ்ஞானத்தின் விளைவுகள் இது தான்.

யாம் கொடுக்கும் தியானப் பயிற்சியின் முக்கியத்துவம்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செயல்பட்டால் நம்முடைய சிந்தனைகள் தெளிவாக இருக்கும்
1.அதன் வழி நல்ல சுவாசத்தை நாம் கொண்டு வர வேண்டும்.
2.அதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன்… சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் (ஞானகுரு).

இதெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் பல நிலைகளைப் பார்த்துத் தான் மற்றவர்கள் கொடுப்பார்கள்.

யாம் சாதாரணமாகக் கொடுத்த பின்… ஆரம்பத்தில் ஒரு சிலர் நிறையத் தவறு செய்து விட்டார்கள். ஆனால் அதே சமயத்தில் அப்படிப்பட்ட ஒருத்தர் இருவருக்காக நான் எல்லாவற்றையும் சொல்லாமலும் இருக்க முடியாது.

சில இடங்களில் மிகவும் கட்டுப்பாடாக இருப்பார்கள் ஆனால் இங்கே வருபவர்கள் எல்லோருக்கும் அது கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன்.

இவ்வளவு பெரிய விஷயங்களை யாரும் பப்ளிக்காகச் சொல்ல மாட்டார்கள்…!

நான் சொல்வதை எல்லாம் கேட்கின்றாயா…? அல்லது என்ன செய்கின்றாய் ஏது செய்கின்றாய்…? என்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்பு அவரை அனுமதித்து அதற்குபின் அங்கே வர முடியும்.

எல்லோருக்கும் தாராளமாக கிடைக்க வேண்டும் என்று தான் நான் செய்கின்றேன்.
1.ஏதோ நூறு பேர் வருகின்றார்கள் என்றால் அதிலே நான்கு பேராவது தேர்ந்தெடுத்து
2.இது போன்று அந்த நான்கு பேர் நான்கு நான்காகச் சேர்த்து நூறு பேருக்கு மாற்ற முடியும் என்ற
3.அந்த நம்பிக்கையில் தான் நான் இதை சொல்லிக் கொண்டு வருகிறேன்

ஏனென்றால் உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் கோவில். கடவுள் வீற்றிருக்கக்கூடிய அந்த இடம் பரிசுத்தமாக வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.

ஆகையினால் அதற்குண்டான பயிற்சியாக உங்களுக்குள் இதை கிடைக்கச் செய்வதற்கு தான் செய்கின்றேன் இல்லையென்றால் எனக்கு வேண்டிய ஆட்களுக்கு… “நான் சொன்னபடி கேட்பவர்களுக்கு” மட்டும் செய்யலாம்.

தெரிந்தவர்களும் இருக்கின்றார்கள்… தெரியாதவர்களும் இருக்கின்றார்கள்
1.என்னவென்ற விபரமே தெரியாது…
2.ஆனால் நீங்கள் பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்
3.நீங்கள் எல்லோரும் பெற்றால் தான் எல்லோருடைய தீமைகளை அகற்ற முடியும்

வீட்டில் ஒருத்தர் இதைச் சீராகக் கடைப்பிடித்தால் கூட நல்ல காற்றலை வரப்படும் பொழுது வீட்டில் உள்ள மற்றவர்களும் நன்றாக இருப்பார்கள்.

எல்லோருக்கும் இந்த சக்தி பெற வேண்டும் என்ற இந்த ஆசையில் தான் நான் செய்கின்றேன்…
1.இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடாதீர்கள்
2.சாமி (ஞானகுரு) லேசாகச் சொல்கின்றார் என்று…!

இங்கு சாமியை வந்து பார்க்க வேண்டும் என்றால் வாசலுக்கு முன்னாடி யார்…? எந்த ஊர்…? என்று கேட்டு… பிறகு அங்கு உட்காந்து “எப்பொழுது சந்திக்கலாம்…?” என்று மணியைக் கேட்டு… ஆர்வத்தை எல்லாம் தூண்டி இங்கே கொஞ்ச நேரம் உட்காருங்கள் என்று சொந்னோம் என்றால்… இத்தனை தடைகள் வரும் பொழுது “ஏதோ பெரிதாக என்று நினைக்கின்றார்கள்…”

ஆனால் நான் அப்படி எதுவுமே செய்யவில்லை. தாராளமாக இங்கே வரலாம். அதே போல் இங்கே வெளிப்படுத்தியுள்ள புத்தகங்கள் நிறைய இருக்கின்றது என்று வாங்குவார்கள்.
1.கடைசியில் கிழித்துப் போட்டுப் போய்விடுவார்கள்
2.படிக்கக்கூட மாட்டார்கள்… அலட்சியமாகப் போட்டு விடுவார்கள்
3.அதனால் தான் இப்பொழுது ஓசியாக புத்தகம் கூட ஜாஸ்தி கொடுப்பதில்லை
4.கொடுத்தோம் என்றால் வாங்கி படிக்க மாட்டார்கள்… கீழே போட்டு விடுவார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… உங்களை மனிதனாகப் பிறக்கச் செய்த ஆறாவது அறிவு கார்த்திகேயா…! அந்த அறிவைத் தெளிவாக்க வேண்டும்.

1.உயிர் அறிவாக்கிய அந்த அறிவைத் தெளிவாக்கி உயிரோடு சேர்த்து ஒளி ஆக்க வேண்டும்… இதுதான் இப்பொழுது நமது குருநாதர் காட்டிய அருள் வழி.
2.அதை நாம் செய்தோம் என்றால் நமது வாழ்க்கையிலே இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற முழுமை அடையலாம்.

ஆனால் இந்த உடலுக்காக இச்சைப்பட்டோம் என்றால் அடுத்த உடல் நிச்சயம் உண்டு. அதிலிருந்து தப்ப முடியாது. நாம் எந்த குணமோ அதற்குத்தக்க இந்த உயிர் ரூபத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்.

ஆரம்பத்திலிருந்து பார்க்கின்றோம் அல்லவா…? எத்தனையோ இம்சைப் பட்டு இந்த இம்சையிலிருந்து தப்பிக் கொள்ள முடியும் என்று இந்த உடல் பெற்ற பிற்பாடு மீண்டும் அதே உணர்வை எடுத்தோம் என்றால் இது சாகாக்கலையாக போகின்றது.

இப்பொழுது நம் குருநாதரைப் பார்த்தால் வேகாநிலை…! தீயில் குதித்தால் உயிர் வேகாது. உயிரைப் போல் ஒளியாகிக் விட்டால் இந்த அகண்ட அண்டத்தில் எதிலும் வேகாது அப்பொழுது ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும். “அந்தச் சக்தியை நாம் பெற வேண்டும்…”

இதையெல்லாம் நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தித் தயாராகிக் கொள்ள வேண்டும். காற்று மண்டலம் விஷத்தன்மையாக இருக்கின்றது.

இப்பொழுதே சில பேருடைய நிலைகள் எங்கெங்கோ இழுத்துக் கொண்டு செல்கின்றது. இனி வரும் காலம் ரொம்ப மோசமான காலமாக இருக்கின்றது.
1.அதற்குள் நீங்கள் தயாராகி நல்ல சக்திகளைப் பெருக்கி உங்களையும் காத்து
2.உங்கள் ஊரையும் வீட்டையும் இந்த உலகையும் காத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு நீங்கள் தயாராக வேண்டும்.

ஒருத்தர் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் எவ்வளவு பெரிய சக்தி இருந்தாலும் ஒரு அரிசியைப் போட்டு சாப்பாடு செய்து எல்லாத்தையும் சாப்பிடு என்று சொன்னால் முடியுமா…?
1.நாமெல்லாம் அந்த அரிசியாக மாற வேண்டும்.
2.ஒன்று சேர்த்து விளைந்து வந்தால் எல்லாருடைய பசியும் தீரும்.., அது தான் முக்கியம்.

ஒன்று என்பது எதுவுமே இருந்து… என்றுமே ஒன்றும் செய்வதில்லை.

இந்த உயிர் ஒன்றுதான் அப்படி இருந்தாலும் மூன்று நிலைகளில் (வெப்பம் காந்தம் விஷம்) வேலை செய்கின்றது. ஆனால் இந்த உடலுக்கு எத்தனை வகையான உணர்வுகள் வந்து உடலை உருவாக்குகின்றது…?

ஆனால் நல்ல உணர்வுகள் குறையக் குறைய இந்த உடலைச் சிறுக்கின்றது, இப்பொழுது நாம் வேதனையை வெறுப்பை நுகரும் பொழுது இந்த அழகான உடலும் சிறுத்துப் போகின்றது.

அப்போது இந்த உடலைச் சிறுக்கச் செய்த உணர்வுகள் என்ன செய்கின்றது…? இந்த உயிர் அதற்குத் தகுந்த உடலைத் தான் உருவாக்குகின்றது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

1.நமக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்…
2.குருநாதர் காட்டிய வழியில் நாம் இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியும்
3.பிறவியில்லா நிலையைப் பெறக்கூடிய சந்தர்ப்பமாக நாம் இப்பொழுது உட்கார்ந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

பூமிக்கு அடுத்து மனிதன் எங்கே வாழப் போகின்றான்…?

 

கிறிஸ்து பிறந்தநாளில் வான மண்டலத்திலிருந்து “புதிய நட்சத்திரங்கள் தோன்றிப் பிரகாசமான ஒளி தந்ததை” அன்று வாழ்ந்து வந்தவர்களில் பலர் பார்த்ததாகவும் செப்புகின்றனர்.

வான மண்டலத்தில் தோன்றிய அந்நட்சத்திரத்தின் பிரகாசமான ஒளி எந்நிலையில் வந்தது…? அவற்றின் நிலை இப்பூமியின் மேல் எப்படிப் படிந்தது…? என்ற நிலையென்ன…?

இப்பூமி சுழலும் வேகத்தில், பால்வெளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள எண்ணிலடங்கா பல நட்சத்திரங்களை இப்பூமி ஓடும் ஓட்டத்தில் காண்கின்றது.

இப்பூமி சுழன்று ஓடும் வேகத்தில் அங்கங்குள்ள அமில நிலையினால் உருப்பெற்ற இந்நட்சத்திர மண்டலங்கள் இப்பூமியின் ஈர்ப்பில் சிக்கி இப்பூமியுடன் வந்து சேருகின்றது.

நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் கரையும் தன்மை கொண்ட அமில சக்தியினால் மின்னுவதுதான்.

1.நட்சத்திர மண்டலத்திற்கும், பால்வெளி மண்டலத்திற்கும், நம் பூமியின் சக்திக்கும்
2.நம் பூமி தொடர்புபடுத்தி நம் பூமி சுழன்று ஓடும் வேகத்தில் பால்வெளி மண்டலத்தில் நம் பூமியின் சக்தி மோதும் ஈர்ப்புத் தன்மை கொண்டு,
3.இப்பூமிக்குகந்த அமில சக்தியுடைய நட்சத்திர மண்டலமாய் இருந்திட்டால்
4.இப்பூமியின் பிடிப்புடன், அந்நட்சத்திர மண்டலத்தை இப்பால்வெளி மண்டலத்திலுள்ள காற்று மண்டலம் அதன் மேல் மோதி
5.இவ் ஈர்ப்பு சக்தியில் அந்நட்சத்திர மண்டலம், இச் சூழலும் வேகத்தில் பட்டு,
6.ஒன்றுக்கொன்று திடமாய் உறைந்த அமில சக்தியைக் கொண்ட அந்நட்சத்திர மண்டலமே
7.இப் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்கியவுடன், கரைந்த அமிலமாய், இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றது.

இந்நிலைப்போல்தான் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்‌.

இப்பெரிய கோளங்கள் சுழன்று ஓடும் ஈர்ப்பில் அதனதன் அமில சக்தியின் தொடர் நிலைகொண்ட நட்சத்திர மண்டலங்களெல்லாம்… அது ஈர்த்து, செயல் கொண்ட சக்தியிழந்து, அந்நட்சத்திர மண்டலத்தின் ஆத்மாவும் பிரிந்து அதன் சக்தி அமிலம் மற்றப் பெரிய மண்டலங்களின் அமிலமுடன் அமிலமாய்க் கலந்து விடுகின்றது.

இப்பெரிய மண்டலங்களின் ஈர்ப்பில் சிக்காமல் இம் மண்டலத்துடன் தொடர்பு கொண்டே பல நட்சத்திர மண்டலங்கள் சுழன்று கொண்டே ஓடி வருகின்றன.

இன்னும் சில நட்சத்திர மண்டலங்கள்…
1.இப்பெரிய மண்டலங்கள் ஓடும் நிலையில் இவ்வமிலத்திற்கும்
2.நட்சத்திர மண்டலத்தின் அமிலத்திற்கும் சத்ரு மித்ரு நிலையாய் இருந்தால்
3.இம்மோதுண்ட நிலையில் எரி நட்சத்திரமாய் எரிந்து அந்நிலையிலேயே கருகிய நிலையில் செயலற்றதாகி விடுகின்றன.

இவ்வான மண்டலத்தில் இப்பால்வெளி மண்டலத்தில் நடந்திடும் சக்தி நிலை எண்ணிலடங்கா நிலை கொண்டவைகளாக உள்ளன.

இப்பூமியில் இருந்து வாழ்ந்து சாதாரண நிலையில் ஆயுள் பிரிந்த ஆத்மாக்கள் அனைத்துமே… இப்பூமியிலிருந்து இப்பூமியைச் சுற்றி படர்ந்துள்ள இக்காற்று மண்டலத்தில் ஒட்டிய நிலையிலேயே தான் இவ்வனைத்து ஆவி ஆத்மாக்களும் சுற்றிக்கொண்டே உள்ளன.

இப்பூமியில் சுவாசித்து வாழ்ந்ததின் நிலைக்கொப்ப உள்ள காற்று மண்டலத்துடனே தான் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் சுவாச நிலையும் கலந்துள்ளது.

மற்ற மண்டலத்திற்குச் செல்லவோ… இப்பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள இயற்கை நிலையுடனோ.. இப்பூமியில் உயிரணுவாய் உருப்பெற்று வாழ்ந்து ஆவி உலகிற்கு வந்த உயிரணு உயிராத்மா எல்லாம் இவற்றின் நிலையில் படர்ந்தே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.

வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாய் மின்னும் சக்திக்குக்கூட இப்பூமியில் உதித்த உயிரணுக்களினால் சுவாச நிலை மாறி வளர்ச்சி நிலை பெறும் நட்சத்திரமாய் மின்ன முடியாது.
ஆனால் இப்பூமியிலேயே பிறப்பில் வந்து இப்பிறப்பின் பயனைப் பெற்று சூட்சம நிலைகொண்ட ஆத்மாக்கள் பல இன்று நட்சத்திர மண்டலமாய் ஒளிர்ந்து வாழ்கின்றன.

இன்று இப்பூமியில் உள்ள நிலைபோல் மனித ஆத்மாக்களாய் வாழும் நிலை கொண்ட ஆத்மாக்கள் இப்பூமியைச் சார்ந்த இந்த 48 மண்டலங்களிலும் இல்லை என்று உணர்த்தினேன்.

இதுவே
1.இன்னும் இருபது முப்பது ஆண்டிற்குள் இப்பூமியில் உடலுடன் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களே
2.இன்று செயற்கையுடன் ஆசை கொண்டு சந்திர மண்டலத்திற்குக் குடியேறும் நிலைக்காக ஆராயும் மனிதர்களே
3.வரப்போகும் இக்கலியின் மாற்றத்தினால்
4.இன்று இப்பூமியிலுள்ள சக்தியின் தொடர் சக்தியின் வளர்ச்சி நிலை பெற்ற சந்திரனில் வாழத்தான் போகின்றான்.

இன்று நாம் வாழும் இப்பூமியின் சக்தி நிலையின் வளர்ச்சி நிலையினால் வரப்போகும் கல்கியில் பெரும் மாற்றம் கொண்டதாக இயற்கை சக்தியே செயல் கொள்ளப் போகின்றது.

இம்மாற்றத்தின் அசைவினால் இப்பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களின் குவிப்பு சக்தி சேரப் போகின்றது.

1.மனித ஆத்மாக்களினால் இக்கலியின் கொடுமையினால் “இவ்வியற்கையின் சக்தி கொண்ட இப்பூமியின் ஆத்மாவே”
2.இம்மனித ஆத்மாக்களின் அழிக்கும் எண்ண சக்தி கொண்ட ஆத்மாக்களைச் சீற்றம் கொண்டே மாற்றி
3.இன்னும் சக்தி கொண்ட பூமியாகத் தான் நம் பூமி சுழலப் போகின்றது.

இப்பூமியில் உதித்த மனித ஆத்மாவினால் தான் இக்கலியின் நிலையும் மாற்றம் கொள்ளப் போகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆடி மாதங்களில் பெரும்பகுதி கேரளா கர்நாடகா உத்தரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் இந்த பகுதிகள் எல்லாம் நல்ல மழை பெய்கின்றது… நீர் அங்கே பெருகுகின்றது.

1.அங்கே பெய்யும் மழை நீரின் அழுத்தம் அதிகரிக்கப்படும் பொழுது
2.அதிலிருந்து மோதும் காற்று அலைகள்
3.மழை இல்லாத இடங்களுக்குக் காற்றாகத் தள்ளி வருகின்றது.

அதாவது அங்கே மழை பெய்தாலும் இதனின் உணர்வின் காந்த அலைகள் ஈர்ப்பாகி இங்கே தள்ளிக் கொண்டு காற்றாக வருகிறது.

உதாரணமாக நாம் அடுப்பிலே பாத்திரத்தை வைத்து அதிலே பொருளைப் போட்டுக் கொதிக்க வைக்கும்போது ஆவியாக நகர்ந்து மேலே செல்வது போன்று…
1.சூரியனின் வெப்பத் தணலால் அந்தக் குளிர்ச்சியின் வேகம் அழுத்தத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது
2.இந்த வெப்பத்தின் தன்மையால் காற்றின் சக்தி அதிகமாகப் படுகின்றது.

ஒரு கேஸ் (GAS) அதிக அழுத்தமானால் அது மூடியை எப்படித் தள்ளிக் கொண்டு செல்கின்றதோ இதைப்போல ஒரு பகுதியில் பெய்யும் மழை தனக்குள் வரும் வெப்பத்தின் தணலைக் கவர்ந்து அலைகளாக வரும் பொழுது வேகம் அதிகரிக்கின்றது. பெரும் காற்றாக வீசத் தொடங்குகிறது.

அது வரும் பாதையில் மற்ற தாவர இனங்கள் அதன் வித்துகள் அங்கே படர்ந்து இருப்பினும் அதை அடித்துச் சென்று மற்ற இடங்களில் அதைப் பெருக்கச் செய்கின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அங்கே ஒரு இடத்தில் மழை பெய்கின்றது அதிலிருந்து வரும் அழுத்தத்தின் தன்மை அங்கே நிலைப்பதில்லை… இங்கே வருகின்றது.
1.அது நீரைக் கவர்ந்து வந்த நேரத்தில்
2.வெப்பத்தின் தணல் தாக்கப்படும் போது காற்றின் அழுத்தம் அதிகரிக்கின்றது.

வேகத்தின் தொடர் அதிகரிக்கப்படும் பொழுது மற்ற தாவர இனங்களில் உள்ள வித்துகளைப் பரவச் செய்கின்றது. மற்றொரு பக்கம் விளைந்திடும் சத்தின் தன்மையை தாவர இனத்தில் இணையச் செய்யும் பொழுது அந்தத் தாவர இனங்களில் நஞ்சான அணுக்கள் உருவாவதை இது அப்புறப்படுத்துகின்றது.

ஆகவே இந்த ஆடிக் காற்று அது மிகவும் சிறந்தது.

எதைப் பெருக்குகின்றது…? தீமையை அகற்றும் சக்தியாகப் பெருகுகிறது. ஒரு பக்கம் பெய்யும் மழை நீரின் சத்தைத் தனக்குள் கவர்ந்து நீர் இல்லாத இடத்தில் அதைப் பெருக்கும் தன்மையை அடைகின்றது.
1.அங்கே நீரின் தன்மை பெருகுகின்றது
2.இங்கே காற்றின் தன்மை பெருகுகின்றது

அதனால் தீமைகளை அகற்றும் சக்தியும் மற்ற தாவர இனங்களில் மோதும் பொழுது அதில் இருக்கும் நஞ்சினை நீக்கும் வல்லமையும் பெறுகின்றது.

இது வழி தொடர்ந்து… ஒன்றின் பின் ஒன்று தொடராக… அது இணைந்திடும் சக்தியாக… அந்த இயல்பின் தன்மையாக… இயற்கையின் நிலையாக… ஒன்று ஒன்றுடன் இணைக்கப்படும் பொழுது இது செயல்படுகின்றது.

உதாரணமாக
1.நாம் கோபப்படுவோரைக் கண்டால் அந்தக் கோப உணர்வு நமக்குள் பெருகுகின்றது
2.ஒருவன் வேதனைப்படுகிறான் என்று அறிந்தால் அந்த வேதனையான சக்தி நமக்குள் பெருகுகின்றது
3.ஒருவன் நோயினால் அவதிப்படுகிறான் என்று அவனை உற்றுப் பார்த்தால் நமக்குள் வலியும் வேதனையும் பெருகுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் பெருக்கிக் கொண்டால் அது நமக்குள் தீமையை நீக்கும் சக்தியாகப் பெருகும்.

அங்கே நீரின் சக்தியில் விளைந்து அதன் உணர்வின் தன்மை ஆவியாக மாறி இங்கே தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகி நல்ல வித்தின் தன்மை பெருகும் தன்மை வருகின்றது.

அதே போல்
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கித் தீமையை அகற்றும் சக்தியைப் பெருக்கி
3.அனைவருக்கும் இந்தத் தீமையை நீக்கும் சக்தியைப் பெருக்க வேண்டும்.

இதை நினைவுபடுத்தும் நாள் தான் ஆடிப்பெருக்கு…!

குறை (கூறும்) காணும் உணர்வு நம்மை இயக்கவிடாது தடைப்படுத்தியே ஆக வேண்டும்

 

வீட்டில் பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்… அவன் நல்லவனாக வேண்டும் என்று விரும்புகின்றோம் ஆனால் மற்ற பையன்களோடு சேர்ந்து (வேகமான உணர்வு கொண்டு) விளையாடிக் கொண்டிருக்கின்றான்… அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றான்.

அவன் நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் அவனோ விளையாட்டுப் புத்தியில் இருக்கின்றான்.

அப்பொழுது அதைப் பார்த்த பின்…
1.“இந்த மாதிரி அவன் சுற்றிக் கொண்டிருக்கிறானே…” என்று சிறிதளவு வேதனைப்படுகின்றீர்கள். அந்த வேதனை என்பது விஷம்.
2.விஷத்தன்மையான பின் சிந்திக்க இடமில்லாது போய் விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. பிள்ளை நல்ல முறையில் வளர வேண்டும் என்று தான் நாம் விரும்புகின்றோம். அவன் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டு இந்த மாதிரி இருக்கின்றானே என்று வேதனைப்பட்டால் என்ன ஆகும்…?

விஷம் (வேதனை) முதலிலே கண்ணுக்குத் தான் வருகின்றது. அதே உணர்வு உமிழ் நீராக மாறுகின்றது ஆகாரத்துடன் சேருகின்றது

நம்முடைய ஆசை நல்ல ஆசை தான். ஆனால்
1.மற்றவருடன் சேர்ந்து விளையாடுகின்றான் என்று எண்ணினால் வேதனை கூடுகின்றது
2.அந்த வேதனையோடு அவனிடம் திரும்பச் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது.

அவனுக்கு அவன் செய்யும் தவறு தெரியாது. ஆனால் அவன் உணர்வை நுகர்ந்து ஏண்டா இப்படிச் செய்கின்றாய்…? உன் எதிர்காலம் என்ன ஆகும்…? என்று நாம் பேசுவோம்.

அவன் கண்ணிலே நம்மைக் கூர்ந்து கவனிப்பான்.

ஏனென்றால்
1.”அவன் செய்த தவறை நாம் எடுத்து” இரண்டாவது சமைத்து அவனிடம் சொல்லப்படும் பொழுது
2.நம் உடலிலிருந்து வருவதைப் பார்த்தவுடனே
3.என் அப்பா இப்படித்தான் பேசுவார்…! என்று அவனுக்குப் பார்த்தவுடனே கோபம் வந்துவிடும்.

நாம் சொன்னால் அவன் காது கொடுத்துக் கேட்க மாட்டான். ஆனால் மற்றவர்கள் சொன்னால் காது கொடுத்துக் கேட்பான்.

அடுத்தவர் சொன்னால் கேட்கின்றான் நாம் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான் என்று நாம் சொல்வோம்.

காரணம்… “சொன்னபடி கேட்கவில்லை” என்ற அந்த வெறுப்பான உணர்வு கொண்டு நாம் சொல்வது… அவனைக் கேட்க விடாது அது தடுத்து விடுகின்றது. அடுத்து நாம் எதைச் சொன்னாலும் இவன் இப்படித்தான் இருப்பான் என்று சொல்வோம்.

1.மற்றவர் வெறுப்பாக எண்ணுவதில்லை… அந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அங்கே ஒன்றும் இல்லை.
2.ஆனால் நான் பாசத்தோடு சேர்த்து இப்படிப் பண்ணுகின்றானே என்று எண்ணி எடுத்து வேகமான சொல்லைச் சொல்லும் பொழுது
3.நமக்குள்ளே அதை விளைய வைத்துச் சமைத்து அவன் காதிலே இதைக் கேட்கப்படும் பொழுது
4.அவன் பதிவாக்கி நாம் பேசிய உணர்வை நுகர்ந்து அவன் உயிரிலே பட்டபின் “நம் மீது அவனுக்கு வெறுப்பு தான் வருகின்றது…”.

சில குடும்பங்களில் ஆசையோடு பாசத்தோடு குழந்தைகளை வளர்ப்பார்கள் பையன் நல்லவன் தான் ஆனால் அந்த இடத்தில் இப்படி ஆகிவிடுகிறது.

அதற்குத்தான் ஆலயத்திலே தெய்வத்திற்குத் தங்கத்திலே ஆபரணங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
2.பையன் சேட்டை செய்வதைப் பார்த்தாலும் நம் மனது மங்காதபடி இருக்க வேண்டும்…
3.அதற்கு உபாயத்தைக் காட்டுகின்றார்கள்.

அப்படி என்றால் அவனுக்கு நாம் எப்படி எண்ண வேண்டும்…?

1.இன்னன்ன வழிகளில் அவன் இப்படி இப்படி இருக்க வேண்டும்
2.அவன் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
3.பார்ப்பவர்களை மதிக்கும் பண்புகள் வளர வேண்டும்
4.தெளிவானவனாக அவன் வரவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணிய பின் நம் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் உமிழ் நீராக ஆகிவிடுகிறது.
1.அவன் செய்த தப்பைப் பார்த்து அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் வருவதில்லை.
2.அவனுடைய உணர்வுகளும் நம்மை இயக்குவது இல்லை.

அதற்குப் பின் அவனிடம் திருப்பிச் சொல்லப்படும் பொழுது… “தம்பி நீ இந்த மாதிரிச் செய்கின்றாய்… அதனால் உன்னுடைய உடையெல்லாம் அழுக்காகின்றது நோய் வரக் காரணமாகின்றது… அதனால் நீ பார்த்து நடந்து கொள்…!” என்று விபரத்தைச் சொன்னமென்றால்… அவன் அதைத் தெரிந்து கொள்வதற்கு வழி இருக்கின்றது.

ஆனால் முதலில் நாம் ஆசைப்பட்டோம் வழிகாட்டத் தெரியவில்லை. ஆனால் ஆலயத்திலே ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்தினோம் என்றால் நமக்குள்ளும் வேதனை வருவதில்லை… அவனையும் சரியான பாதையில் கொண்டு செல்ல முடிகின்றது.

பள்ளிகளிலே பார்த்தோம் என்றால் ஆசிரியர்களும் பாடத்தை சொல்லிக் கொடுப்பதில் குறியாக இருப்பார்கள். ஆனால் தன்னிடம் படிப்பவன் சிறிதளவு தவறு செய்து விட்டான் என்றாலும் அவனை மிரட்டுவார்கள்.

அந்த மிரட்டல் பதிவான பின் வாத்தியாரை நினைக்கும்போது அவனுக்கு ஞாபக சக்தி குறைந்துவிடும்
1.ஒரு சிறு தவறுக்கு ஒரு தடவை மிரட்டி இருந்தால்
2.அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் மறதி வரும்… சொல்லிக் கொடுப்பது எல்லாம் மறந்து விடும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் விளைந்து மறுபடியும் இப்படி மாறிக் கொண்டே போகும் இதையெல்லாம் நாம் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா

நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகள் உணர்வை உடனுக்குடன் எடுத்துத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும் அதற்குத்தான் உங்களுக்கு திரும்பத் திரும்ப பல வகைகளிலும் சொல்லி உண்மைகளை எல்லாம் உணர்த்தி வருகின்றேன் (ஞானகுரு).

மண்டலங்களுக்கு “உயிர் நாடியே” பால்வெளி மண்டலம் தான்

 

பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின்… அமில சக்தி மட்டுமல்ல “ஜீவசக்தியினால் உராயும் நிலை கொண்டு தான்” ஒவ்வொரு கோளங்களுமே செல்கின்றது.

ஒவ்வொரு கோளமும்…
1.தான் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலை இப்பால்வெளி மண்டலத்துடன் மோதுண்டவுடன் தான் ஒலி பிறக்கின்றது
2.இவ் ஒலியினால் தான் ஒவ்வொரு மண்டலமும் சுழல்கின்றது.

பால்வெளி மண்டலமாக ஜீவனுடன் உள்ள வான மண்டலத்தையே நாம் பரந்த வெளியாகக் காணுகின்றோம். இப்பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள இவ்வமில சக்தியே அனைத்து மண்டலங்களுக்கும் “உயிர் நாடி…”

இப் பூமியிலிருந்து நாம் காணும் பால்வெளி மண்டலமான இவ்வாண மண்டலத்தில்
1.படர்ந்த மேகக் கூட்டங்கள் ஓடுவதைப் போல் காண்கின்றோம்.
2.மேகக் கூட்டங்கள் மட்டும் ஓடவில்லை… நாமும் தான் ஓடுகின்றோம்
3.அனைத்து மண்டலங்களும்தான் ஒரு நிலையில் நிலைத்து நில்லாமல் ஓடிக்கொண்டே உள்ளன.

இப்பூமி சுழலும் வேகத்தைப் பொறுத்து பூமியில் நடக்கும் சீதோஷ்ண நிலைகள் உள்ளன. பூமியிலேயே பல பாகங்களில் பல சீதோஷ்ண நிலை கலந்துள்ளது.

இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களில் உள்ள நிலை அறிய நம் சக்தியைச் செயலாற்றுகின்றோம். இப்பூமியிலேயே பூமியின் பூமத்திய ரேகையான மையப் பகுதியில் உள்ள நிலை என்ன…?

இப் பூமியில் பூமி சுழலும் 24 மணி நேரக் கணக்கு விகிதப்படி ஒரு நாளையும் இரவு பகல் நிலை ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் நிலை எல்லாம் இப் பூமி சுழலும் வேகத்தையும் அங்கங்கு உள்ள நிலையையும் அறிகின்றோம்.

ஆனால் இப்பூமியின் மையப் பகுதியில் என்றுமே சூரியனின் நேர் ஒளிக் கதிர்கள் தாக்குவதில்லை என்பதனை அறிந்துள்ளோமா…?

இப்பூமத்திய ரேகையின் மையத்திற்கு சற்றுத் தள்ளிய இடத்தில் தான் பகலும் இரவும் சில காலங்கள் மாறி மாறி வருகின்றன. மையப் பகுதி என்றுமே இருண்ட நிலை தான்.

1.ஆனால் அம்மையத்தினால் தான் இப் பூமியில் நிறைந்துள்ள கடலின் நீர் நிலைகள் எல்லாம் உள்ளது.
2.இப்பூமி சுழலும் வேகத்தில் மற்ற இடத்தில் படும் இவ்வொளிக் கதிரின் அமில சக்தியின் நிலையை
3.இம்மையப் பகுதி ஈர்த்துப் படிவங்களாக பாறையைப் போன்று அடர்ந்து பதிந்துள்ளன.

இச்சூழலும் நிலையிலேயே மென்மேலும் ஈர்த்து அப்படிவங்களுடன் அவ்வமில நிலை வளர்ந்து கொண்டே உள்ளன.

எந்நிலையில் உப்பு அமில சக்திப் படிவங்கள் வளர்ச்சி கொண்டுள்ளனவோ அந்நிலை போன்ற விகிதத்திலேயே இப்பூமி சுழலும் வேகத்தில் பால்வெளி மண்டலங்களில் நிறைந்துள்ள அமில சக்தி மோதுண்டு உருகும் நிலையில்
1.ஆவியான உப்புக் கலந்த நீராக வடிகொண்டு தான்
2.இன்று கடலாக வற்றாத நிலையில் பொங்கிக் கொண்டுள்ளது.

இப்பூமத்திய ரேகையின் சிறிது தள்ளி உள்ள நிலையில் சில காலம் ஒளியும் இருட்டும் உள்ள நிலைப்படுத்தித் தான் அந்நிலையின் தொடர்பு நிலை கொண்ட பூமிகளில் உள்ள கடலில் நீர்நிலை பொங்கி வருவதைக் கண்டிடுவீர்.

இவ்வுப்புக் கலந்த அமிலத்தின் படிவத்தில் இருந்து உற்பத்தியாகி வருவதுவே கடல் நீர் உப்புக் கரிக்கும் நிலை.

ஆனால் கடற்கரை ஓரங்களில் மற்ற கிணறுகளில் உள்ள நீரெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியுடன் இப் பூமியின் நிலைக்கொப்ப சுவை தருகின்றது.

இன்று கடலாகப் பொங்கி உள்ள இடத்திலேயே இக்கடல் நீரின் மட்டத்திற்கு கீழ் அப்பூமியின் நிலையில் இருந்து தோண்டி எடுக்கும் நீரின் சுவை இக்கடல் நீரின் சுவைக்கு மாறு கொண்டதாகத்தான் இருந்திடும்.

நம் பூமியின் இயற்கைச் சக்தியின் தெய்வமான சூரியனின் சக்தியிலிருந்து பல சக்தியை நாம் நேராகவும் மற்ற மண்டலத்தில் மோதி அம் மண்டலத்திலிருந்தும் ஒன்றின் துணையுடன் ஒன்றாகச் செயல்படவே “இப்பால்வெளி மண்டலத்தின் சக்தியின் துணையினால் செயல் கொண்டுள்ளோம்…”

இவ்இயற்கையின் ஒவ்வொரு நிலையையும் உணர்ந்திட்டால்
1.அவ்வாண்டவனின் சக்தி நிலை ஒன்றுடன் ஒன்று செயல்படும் நிலையை அறிந்திட்டால்
2.அவ்வாண்டவன் என்ற சக்தியே தனித்து இல்லாமல் செயல்படுவதாக உணர்கின்றோம்.
3.அனைத்து சக்தியுமே ஒன்றுடன் ஒன்று கலந்து சக்தியாகத்தான் அவ்வாண்டவனின் சக்தி உள்ளது

ஒரே சக்தியான நிறைந்த தனித்த சக்தி… அச்சக்தியின் கலந்த சக்தி தான் “நம் அனைத்து சக்தியுமே…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீர் ஓடும் இடங்களில் பார்க்கலாம். ஒரு பக்கம் செம்மண்ணாக இருக்கும். இன்னொரு பக்கம் வண்டல் மண்ணாக இருக்கும். இன்னொரு பக்கம் எந்த நிறமும் இல்லாது நன்னீராக இருக்கும்.

1.இந்த மூன்று நீரும் கூடுதுறை என்ற நிலையில் கலக்கப்படும் பொழுது
2.சிறிது தூரமே இதன் கலர்கள் அங்கே தெரியும்.
3.பின் அந்த மூன்றும் ஒன்றாகக் கலந்து சங்கமமாகி வேறு ஒரு நிலையாக மாறும்.

இதைப் போன்றுதான் நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் “நமக்குள் கூடுதுறை போன்று ஆகி… உடலுக்குள் சங்கமம் ஆகின்றது…!
1.அதிலே எதனின் குண நிலை அதிகரிக்கின்றதோ
2.அதன் வழி கொண்டு தனக்குள் பெருகுகின்றது.

இதனை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

காரணம் நாம் அனறாடம் பலருடன் பழகுகிறோம். அவர்கள் தீமைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் பார்க்க நேர்கின்றது… நுகர நேர்கிறது. நுகர்ந்த பின் அவர்களுக்குப் பண்புடன் உதவி செய்கின்றோம்… பரிவுடன் அவர்களைக் கவனிக்கிறோம்.

ஆக அந்தப் பரிவும் பண்பும்
1.அவர் உடலிலிருந்து வரும் கஷ்டங்களையும் சங்கடங்களையும் நுகரச் செய்து
2.அவர் வேதனைப்படுகிறார் என்று உணர்த்துகின்றது
3.இருந்தாலும் அது நமக்குள் சங்கமம் ஆகி விடுகின்றது.

அவர்கள் மேல் உள்ள பற்று நமக்குள் சங்கமமாகி அவர்களைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அதே உணர்வு நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

அப்போது அவர்களைப் பாதுகாக்க நாம் முற்படுகிறோம். ஆனால் அந்த மனித உடலில் விஷத்தன்மையான உணர்வுகள் பட்டுத் தான் அவரைத் துடிக்கச் செய்கின்றது. அதனை நாம் நுகரப்படும் பொழுது அந்த வலிமை நமக்குள் வந்து நம் நல்ல அணுக்களைச் சீர்கெடச் செய்கின்றது.

அவர் எப்படி அம்மா… அப்பா… என்று அலறினாரோ அதே உணர்வு நமக்குள் சங்கமமான நிலைகள் கொண்டு அதன் வழியில் அதைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

இப்படித்தான் மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே தீமைகள் வந்து சேர்கிறது.

1.பரிவுடன் பண்புடன் ஒருவரை நாம் காக்க வேண்டும் என்று செயல்படும் பொழுது
2.நுகர்ந்ததை உயிர் இயக்கி நம் உடலுக்குள் சங்கமமாக்கி விடுகின்றது
3.அதன் உணர்வின் அணுக்களாக நமக்குள் அதை வளர்க்கச் செய்கின்றது.

அது வளரும் பருவத்தில் அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் போது எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ
1.நம் உடலில் வந்து அணுக்களாக உருவாகி அதற்கு இதை உணவாகக் கொடுக்கின்றது.
2.அது தன் இனத்தைப் பெருக்குகின்றது… அதன் உணர்வாக நம்மை இயக்குகின்றது.

இதனை நினைவுபடுத்துவது தான் ஆடிப்பெருக்கு. ஆகவே ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம் என்று சற்று சிந்திக்க வேண்டும்.

தீமையை வென்ற ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கினால் அது கூடுதுறையாகி நமக்குள் அருள் ஒளியின் உணர்வுகள் சங்கமமாகும். தீமையை நீக்கும் சக்தியாக இப்படிப் பெருக்க வேண்டும்.

அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

எல்லாவற்றுக்கும் காரணம் சந்தர்ப்பம் தான் (“தலைவிதி” அல்ல)

 

உதாரணமாக “ஒரு வேலையின் காரணமாக” நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்போது…
1.அதே உணர்வை எடுத்துச் செல்லப்படும் போது
2.அதிகமான நேரத்தைச் செலுத்திச் சென்றால் போகும் பாதையில் கீழே போகும் வாய்க்கால் தெரிவதில்லை.

காரணம்…
1.உங்கள் நினைவு அங்கிருக்கிறது… பரந்த மனதுடன் பார்ப்பதில்லை.
2.குறி ஒன்றாகச் செல்லப்படும் பொழுது தவறி அந்த பள்ளம் தெரியாது இடறிக் கீழே விழுந்து விடுகின்றோம்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை சந்தர்ப்பம் அந்தச் சூழ்நிலையை நமக்கு உருவாக்கி விடுகின்றது. அதைத் “தலைவிதி” என்று சொல்வதற்கு இல்லை.

சந்தர்ப்பம் சூழ்நிலையை அது இப்படி மாற்றுகின்றது
1.இதனால் தோஷம் வந்தது அதனால் தோஷம் வந்தது என்று இல்லாதபடி
2.நாம் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் (அது தான் தோஷம்) இப்படி ஆகிவிடுகிறது.

இதை விடுத்து விட்டு தோஷத்தை நிவர்த்தி செய்ய எதை எதையோ செய்ய வேண்டும் என்பது இல்லை. “எல்லாம் சந்தர்ப்பம் தான்…”

ஒரு சமயம் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் பதிவாகி விடுகின்றது.
1.அப்புறம் எங்கே சென்றாலும் அதற்குப் பின் கீழே பார்த்துத் தான் நடக்கச் சொல்லும்.
2.ஏனென்றால் அந்த அதிர்ச்சி அந்த உணர்ச்சிகளை ஊட்டும்.

அதே சமயத்தில் வீடுகளில் உள்ள தரைகள் எல்லாம் டைல்ஸ் போட்டு பாலிஷ் செய்து வைத்திருக்கின்றோம். கொஞ்சம் போல் ஈரமான காலாக இருந்தால் சறுக்… என்று வழுக்கி விடுகின்றது.

காரணம்… குளித்து விட்டு வரும் போது வேறு எண்ணத்துடன் தான் வருகின்றோம். வழுக்கும் பொழுது சுதாரித்துக் கொண்டால் கீழே அடிபடாது தப்பிக்கலாம் வழுக்கிய பின் அப்படியே உட்கார்ந்து பழகி விட்டால் ஒன்றும் இல்லை.

வழுக்கும் போது அதைக் கண்ட்ரோல் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் “டப்…” என்று கீழே விழுந்து பின்னாடி அல்லது தலையில் அடிபட்டு விடுகின்றது. முடியாதவர்களாக இருந்தால் எலும்பு கூட நொறுங்கி விடுகின்றது.

இதுவும் சந்தர்ப்பம் தான்… எல்லாமே சந்தர்ப்பத்தால் நிகழக் கூடியது தான்.

இந்த மாதிரி ஒருவர் கீழே விழுகிறார் என்று பார்த்து விட்டோம் என்றால்… நம்மை அறியாமலே அடுத்து அது வேலை செய்யும். உங்கள் உணர்வுகள் ஒன்றைப் பார்த்து விட்டால் அது பதிவாகி அதன் நிலையிலேயே நம்மை இயக்கும்.

ஆகவே…
1.எல்லாமே சந்தர்ப்பத்தால் தான் என்ற நிலையை நாம் உணர்தல் வேண்டும்.
2.உலகம் உருவானதும் சந்தர்ப்பம் தான்… உலகம் மாற்றமடைவதும் சந்தர்ப்பம் தான்
3.மனிதனாவதும் மனிதன் மீண்டும் அடுத்த ரூபமாக உடல் மாறுவதும் எல்லாம் உயிரால் தான் நடக்கிறது என்பதை
4.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

இது மெய் ஞானம்…!

“ஞான மகசூலாக நீங்கள் இருக்கின்றீர்கள்” என்பதை உணர்ந்து செயல்படுங்கள்

 

இன்று இந்தப் பூமியில் மனிதனின் “தேவையின் வேகம்” விஞ்ஞானத்தின் அலையால் விஞ்ஞானத்துடனே ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் எண்ணச் சுழற்சியே விஞ்ஞானத்துடன் ஒன்றிய நிலையில்
1.தன் ஞானத்தை வளர்க்கக்கூடிய உணர்வு குண சித்து நிலையின் செயலுக்கு
2.நம் பூமியின் மனித ஆத்மாக்களின் ஈர்ப்பை எடுக்கக்கூடிய நிலையும்
3.சப்தரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் பெற்ற சக்திகளை மெய் ஞான விளைச்சலாக
4.இப்பூமியில் விளைய வைத்து அதன் மகசூலைப் பெருக்கச் செயல் கொல்கிறது.

ஆனால் இன்று இப்பூமியில் விஞ்ஞானத்தால் வாழ்ந்திட்ட செயற்கையின் செயல் குண உணர்வுடன் உள்ள நிலைகளை மெய் ஞானம் கொண்டு
1.எண்ணத்தால் மனித குணங்களைப் பக்தி ஞானம் என்ற உயர் குண உணர்வு எண்ண சுவாசம் எடுத்து
2.நல்ல உணர்வில் தான் (சப்தரிஷிகள்) பெற்ற சக்தி அலையைப் பயிர் செய்ய
3.அவ்வுணர்விற்கே மனித எண்ணங்களைத் திருப்ப முடியாமல் உள்ளது
4.விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இந்தப் பூமி உள்ளது.

காந்த மின் அலையைப் பலவாகப் பல ரூபங்களில் பிரித்தெடுத்து விட்டான்… இன்னும் பிரித்து எடுக்கின்றான். உலகையே நிலை தடுமாற நிகழப் போகும் மாற்றத்தின் வித்தையும் ஊன்றிவிட்டான்.

இன்று இப்பூமியில் நடக்கும் சில இடங்களின் மாற்ற நிலைகளும்… போர்களும்…
1.இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே முழுமையாக விஷமாக்கி விட்டது.
2.அதனால் உணவாக உட்கொள்ளும் பல பொருள்கள் விஷத் தன்மையில் கூடப் போகின்றன.

வரப் போகும் எதிர்கால முறை எல்லாமே விஞ்ஞான வளர்ச்சியில் பூமியின் இயற்கைச் சக்தியை உறிஞ்சி எடுத்ததனால் பூமியின் வலுக் குன்றி “தன் வலுவைத் தான் பெருக்க…” நிகழப் போகும் மாற்ற குணம் நெருங்கிவிட்டது.

சப்தரிஷிகளும் பல கோடிச் சித்தர்களும் தன் சக்தி உணர்வின் செயலைக் குன்றவிடாமல் வளர்த்துக் கொண்டிருந்தால் தான்
1.ஞானக் கரு உரு மனிதனை உண்டாக்கி
2.ஞானத்தால் வளரக்கூடிய சக்திகளின் வளர்ச்சிக்கே சக்தி கூடும்.

ஊரே உலகமே மாறு கொண்டு அழியும் தருவாயில் நம் உயிராத்மா மேலா…? நாம் மட்டும் இருந்தென்ன பயன்…? எல்லாமே விஷமாக உள்ள பொழுது ஜெப முறையில் எப்படித் தான் நாம் இருந்தாலும் விஷத்தின் சுழற்சியில் சிக்க்த்தானே வேண்டும்…! என்ற வினா எழும்பலாம்.

இம்மனித ஜீவ உடலில் உணர்வின் எண்ண அலையை நல்ல உரமான சக்தி உரத்தை இட்டு ஆத்ம பலம் என்னும் ஞான பலத்தைக் கூட்டி
1.ஒவ்வொரு அணுவையும் உணர்வின் எண்ணத்தால் ஒளியின் அணுவாக உணர்வாக்கி விட்டால்
2.விஷமுடன் நாம் இருந்தாலும் அந்த விஷம் நம் உடலில் பாயாது.

அதற்குகந்த பக்குவத்தைத்தான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இங்கே வெளிப்படுத்தும் தன்மையில் பக்குவப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

1.ஓர் ஆத்மா சக்தி கொண்டு வந்தால்
2.அச்சக்தியைக் கொண்டு பல சக்தியை வளரச் செய்யத்தான்
3.இந்தத் தியானத்தின் மூலம் என்ற ஆத்ம பலம் கொள்ளுங்கள் என்று உணர்த்துகின்றோம்.

எல்லாம் போகும் பொழுது நாமிருந்து என்ன பயன்…? என்று எண்ணாமல் ஓர் ஏக்கர் நிலத்தில் பத்து மூடை நெல் வந்தால் எல்லாமே உணவாகி விட்டால் விதை நெல் வேண்டுமல்லவா…!

விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் பயிர் செய்ய முடியும். குண வம்சமே அழிந்து விட்டால் அதன் குண வளர்ச்சியின் விதை வேண்டாமா…?

அதைப் போல் உணர்வால் எடுக்கும் தியானம் கொண்டு ஆத்ம பலம் என்ற ஞான வளர்ச்சியின் வழிக்கு வாருங்கள்.

1.உற்றார் உறவினர் என்ற சுழற்சியில் உணர்வின் எண்ணத்தைப் பதியச் செய்து
2.அதே சுழற்சி வலையில் சிக்குண்டு சிதறாமல்
3.உணர்வின் எண்ணத்தை உயர் தியானத்தால் ஞானம் கொண்டு
2.ஒவ்வொரு ஜீவ பிம்ப உடல்களையும் உம் எண்ண உணர்வால்
3.நல் உணர்வின் அலையைப் பாய்ச்சி உம் உணர்விற்குப் பலம் கூட்டுங்கள்.

இந்தப் பூமியில் பயிராகியுள்ள “மனித மகசூலின் விதையாக நீங்கள் இருக்க…” உணர்வின் எண்ணத்தை ஒவ்வொருவரும் நற்குணத் தியானமாக வழியமைத்துக் கொள்வீர்களாக..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உபதேசித்தார். அவரின் துணை கொண்டு நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும். உங்களுக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

1.உங்கள் மூச்சால் பேச்சால் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தோரையும் அவர்களை அறியாது வந்த இருள்களிலிருந்து மீட்க முடியும்.
2.உங்கள் அருகிலே வருவோர் உணர்வுகளையும் தெளிவாக்க முடியும்.
3.தொழில் செய்யும் பகுதிகளிலும் அறியாது சேரும் இருள்களிலிருந்து அவர்களை உங்கள் பார்வையால் மீட்ட முடியும்.
4.அதே சமயத்தில் அவர்களின் தீமையின் நிலைகள் தனக்குள் புகாது தனக்குள் இருக்கும் நல்ல அணுக்களைக் காக்க முடியும்.

இந்த உணர்வின் துணை கொண்டு நாம் வாழ்வில் தெளிந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்திடும் உணர்வுகளை நமக்குள் வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.

இனி வரக்கூடிய காலங்களில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம்… அந்தந்த நாட்டில் அவரவர்கள் சேமித்து வைத்த கதிரியக்கங்களை விஷக் கிடங்குகளில் வெடிக்கச் செய்கின்றனர்.

அத்தகைய அணுக்கதிர்களை வீசப்படும் போது ஆங்காங்கு மனிதன் கதிரியக்கத்தால் (கதிர்வீச்சு) துடிக்கும் நிலை வருகிறது.

துடித்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில்…
1.டாக்டரானாலும் விஞ்ஞான அறிவு கொண்டு செயல்படுத்தி
2.எல்லோரையும் காத்திடுவேன்…! என்ற நிலையைச் சொன்னாலும்
3.இந்த விஷக் கதிரியக்கங்கள் தாக்கப்படும் போது அவனுக்குள்ளும் இந்தத் தீமையின் உணர்வே விளையும்.

அப்போது அவனும் துடிக்கின்றான்… அவனால் செயலாக்க முடியாத போது
1.வேதனையில்லாது இந்த உடலை விட்டு அந்த உயிர்கள் வேளியேற வேண்டும் என்று
2.விஷத் தன்மைகளை வெடிக்கச் செய்யும் போது நாடு முழுவதும் விஷங்கள் பரவுகின்றது.
3.மனிதன் மூச்சுத் திணறுகின்றான்… உடலை விட்டு இந்த உயிரான்மா செல்கிறது.
4.இந்த உயிரான்மாவுடன் சேர்ந்த விஷ அணுக்கள் காற்றிலே பெருகுகின்றது.
5.பின் மனிதன் என்ற நிலைகள் இங்கே மறைகின்றது.

மீண்டும் ஆரம்பக் காலத்தில் எவ்வாறு ஒன்றை ஒன்று விழுங்கி மனிதனாக உருவாக்கியதோ அதைப் போல் ஒன்றை ஒன்று விழுங்கி மனிதனாக உருப்பெரும் காலங்கள் “வெகு காலம்” ஆகும்.

மிஞ்சி உள்ள நிலையில் ஆன்மீக வழியில் உள்ள ஒரு சிலரே தப்பினாலும்… நஞ்சினை வென்றிட இந்த உணர்வுகளைப் பெற்றாலும்..
1.அவர்கள் வாழ் நாளில் பெற்ற இந்த உணர்வுகள் தான் அந்த இன மக்கள் தொக்கி நிற்பதும்
2.அதன் வழி மனிதன் என்ற நிலைகளில் சிதைந்த மனிதனின் உணர்வுகளில் அருள் ஞானிகளின் உணர்வை இங்கே பெற முடியும்.

அதன் வழி நடக்கப் பல காலம்… பல நிலைகள் ஆகும்.

விஷத்திலே சிக்கியவர்கள் அத்தகைய மனிதனின் ஈர்ப்புக்குள் கொசுவாகச் செல்வோம். விஷத்தின் தன்மை தாக்கும் போது அவன் நசுக்கினால் அவன் உடலுக்குள் சென்று நாம் மனிதனாகப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

1.அதைப் போன்ற நிலைகள் பல காலம் அல்லல்படும் நிலையிலிருந்து விடுபட்டு
2.நாம் இனி பிறவியில்லா நிலைகள் அடைதல் வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு நாம் உருவாக்க வேண்டிய “அருள் வட்டம்”

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்கின்றது.

அகஸ்தியன் தன்னுடைய வாழ்நாளில் எப்படிப் பல தீமைகளை நீக்கினானோ அந்த இயக்க அணுவை சூரியன் கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்து வைத்திருக்கின்றது.
1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) அந்தப் பவரைக் கொடுத்து அதை எடுத்துக் காண்பித்தார்…
2.அந்த வித்தினை ஊன்றினார்… அத்தகைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார்… அதை நான் எடுத்து வளர்த்துக் கொண்டேன்.

அதே போன்ற சந்தர்ப்பத்தைத் தான் உங்களுக்கும் ஏற்படுத்துகின்றோம். நீங்கள் நுகர்ந்தறியப்படும் பொழுது உங்களுடைய ஒவ்வொரு அணுக்களுக்கும் கிடைக்கும்படி செய்கின்றேன்.
1.ஆனால் உங்களுக்கு அதைப் பெற வேண்டும் என்ற ஆசை வேண்டும்.
2.தீமைகளை நீக்கக்கூடிய சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அந்த அருளைப் பெற வேண்டும்… இருளை நீக்கும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற இந்த ஆசையுடன் இருந்தால் “அது நல்ல பலனைத் தரும்…”

ஆசையை வேறு எங்கேயோ வைத்துக் கொண்டு உடலுக்கும் தலைவலிக்கும் இதை எண்ணி எடுக்க வேண்டாம்… அப்படி எண்ணி எடுக்கவே கூடாது.

நாம் அந்த அருளைப் பெற வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தியானத்தின் மூலம்
1.உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அதை இயக்கக்கூடிய அணுக்களுக்கும்
2.குறி வைத்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளைத் தூண்டும்படி செய்கின்றேன்.

நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டுக் காற்றில் இருப்பதை இழுத்துச் சுவாசித்து எல்லா அணுக்களுக்கும் பெறச் செய்ய வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் தன்னாலே அந்த அணுக்கள் அந்தச் சக்தியை ஈர்க்கத் தொடங்கும். அதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுப்பது.

காற்று மண்டலம் இன்று மிகவும் விஷத்தன்மையாகப் போய்விட்டது. பிறிதொருவரை பார்த்து அவர் தவறு செய்கிறார் என்று நுகர்ந்தாலும் அடுத்தடுத்து “அவர் தவறு செய்பவர்” என்று வரக்கூடிய எண்ணத்தை அந்த இடத்திலேயே மாற்றிட
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அதை நேராகக் குறி வைத்து
2.உள்ளே பதிவாக்கும் இடத்திலேயே கொண்டு போய் மாற்றி விட வேண்டும்.
3.அப்போது இணைக்கப்படும் பொழுது அந்தச் சிறு புள்ளிகளில் இந்த வட்டங்கள் மாறும்.
4.ஒவ்வொன்றாக கூடிக் கூடி அந்தக் கேட்டதை நல்லதாக மாற்றிக் கொண்டே வரும்.

அந்த நிலை உங்களுக்குள் ஏற்படுத்துவதற்குத் தான் இதைச் செய்வது.

இப்பொழுது பேசிக் கொண்டே இருக்கப்படும் பொழுது உங்களுக்குள் பதிவாகி… “ரெக்கார்ட்” ஆகிக்கொண்டே இருக்க்கும்… “பெற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால்…!”

அந்தப் பதிவு மீண்டும் நினைவுக்கு வரும்பொழுது அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் நீங்கள் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.

ஒரு வேதனைப்படுபவரை எண்ணும் பொழுது அது நமக்குள்ளும் உருவாகின்றது. திருப்பி எண்ணும் போது அதே வேதனை மீண்டும் வருகின்றது.

இது எல்லாமே சந்தர்ப்பம் தான்…!

ஆனால் இப்பொழுது வேதனைகளை எல்லாம் நீக்கிடும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை தியானத்தின் மூலம் உருவாக்கிக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் ஆற்றலும் உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைப் பெறச் செய்வதற்கும் இதை உபதேசிக்கின்றேன்.

எம்மைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கிய பிற்பாடு
1.மீண்டும் எண்ணினால் உங்கள் கண்கள் ஆண்டென்னாவாக மாறுகின்றது.
2.எந்தத் துருவ நட்சத்திரத்தினை உங்களுக்குள் பதிவாக்கினேனோ
3.காற்றிலிருந்து அதைப் பிரித்துச் சுவாசித்து உங்களுக்குள் ஒரு நல்ல சிந்தனை உள்ளதாக மாற்றுகின்றது.

நீங்கள் “எவ்வளவு கவலையாக இருந்தாலும் கூட” அதை மாற்றிவிடும்… செய்து பாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் இன்றைய விஷமான உலகிலிருந்து தப்ப முடியும்

 

பக்தி கொண்டு எத்தனையோ கடவுள்களை நாம் வணங்குகின்றோம்… நல்ல ஒழுக்கங்களையும் நாம் கடைப்பிடித்திருப்போம்.

ஆக நல்ல ஒழுக்கம் கொண்டு இருப்பினும் எதிர்பாராதபடி தீமையான நிகழ்ச்சியோ சம்பவங்களோ நடந்தால்…
1.அது நம் நல்ல பண்புகளை நல்ல ஒழுக்கங்களைக் கெடுத்து விடுகின்றது…
2.அந்த நேரத்தில் நல்ல குணங்கள் பாழடைந்து விடுகின்றது.
3.அத்தகைய தீங்குகள் நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால்
4.நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தே ஆக வேண்டும்.
5.அதை எடுத்துக் கொண்டால் உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்… பிறவி இல்லா நிலை அடையலாம்.

உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

இந்தச் சாமி செய்வார்… அவர் செய்வார்… அந்தக் கடவுள் செய்யும்… மந்திரம் செய்யும்…! என்பதையெல்லாம் விடுத்துவிடுங்கள். காரணம் உங்கள் உயிரே ஈசனாக இருக்கின்றான் ஆண்டவனாகவும் இருக்கின்றான். கர்த்தராகவும் இருக்கின்றான் கடவுளாகவும் இருக்கின்றான்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை வைத்துத் தான் இந்த உயிரை அழைக்கின்றார்கள். கடவுள் என்று ஒரு உருவத்தை எண்ணியே நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

நாம் நுகரும் உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின்
1.உள் நின்று அதை இயக்கச் சக்தியாக மாற்றுவதே கடவுள் என்றும்
2.அந்த உணர்வு தன் இனத்தை மீண்டும் உருவாக்க அது முற்படும் பொழுது அது ஈசன் என்றும்
3.அவ்வாறு இயக்கிய பின் அணுக்களாக உருவாக்கும் பொழுது பிரம்மன் என்றும்
4.அந்த உணர்வின் தன்மை உடலாக்கப்படும் பொழுது சிவம் என்றும்
5.இப்படி தெளிவான நிலைகளில் உண்மைகளை நம் சாஸ்திரங்கள் காட்டியுள்ளன.

அதை நாம் கடவுள் என்று எண்ண வேண்டாம்…!

நம் உட;லுக்குள் இயக்கும் உயிர் தான் கடவுள். உள் நின்று இயக்கும் உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் நம்மைச் செயல்படுத்துகின்றது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

விஞ்ஞானத்தினால் உலகமெங்கிலும் எத்தனையோ கொடிய விளைவுகள் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியது என்ன…?

1.உங்களால் எந்த நேரமும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் சக்திகளைப் பெற முடியும்
2.அதற்குண்டான சந்தர்ப்பத்தைத்தான் இந்த உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்
3.ஆகவே அதை நீங்கள் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் ஆற்றலைப் பெறுவீர்கள்…!

 

சித்தன் எப்படி வெளிப்படுவான்…?

 

பல காலங்களாக மக்கள் மனதில் எல்லாம் உலகம் அழியப் போகின்றது என்ற ஒரு பீதி நிலை உள்ளது.
1.உலகம் எப்படி அழியப் போகிறது…?
2.மனிதர்கள் எல்லாம் எந்த நிலையில் தப்புவார்கள் என்ற கேள்விக்குறியும் உள்ளது.
3.ஜெப நிலையில் உள்ளவன் தப்புவான் என்றும் நல்லோர்கள் நிலைத்து இருப்பார்கள் என்றும்
4.தர்மம் ஜெயிக்கும் தெய்வப் பற்றுடையவன் நிலைப்பான் என்னும் நம்பிக்கை ஒரு சாராருக்கும் உள்ளது.

இப்படிப் பல நிலைகளில் எண்ணத்தைச் சிதற விட்டுள்ள இவ்வுலகின் சுழற்சியில் மாறுபட்ட நிலை என்ன…? என்பதனை நாமும் நம் ஜெப நிலையில் உணர்ந்ததை உணர விடுகின்றோம்.

இவ்வுலகம் எப்படிக் கால நிலையை மாற்றிக் கொள்ளப் போகின்றது…? இப்பொழுதே சில நிலைகளில் நடந்து விட்டது… நடக்கின்றது பல மாறுதல்கள்.

இவ்வுலகம் ஒரு நொடியில் அசைவினால் பெரும் மாறுதல்கள் நடக்கப் போகின்றன என்று உணர்த்தினேன் அல்லவா. ஒரு ஊரில் உள்ள ஜனத்தொகையில் அங்கு வரும் வெள்ளத்தில்… வெள்ளம் வரும் பொழுது நல்லவர் கெட்டவர் என்று பாகுபடுத்தி ஆள் பார்த்து அடித்துச் செல்வதில்லை அவ்வெள்ளம்.

1.இயற்கை பார்த்து நல்லவன் கெட்டவன் என்று எப்படிப் பிரித்து எனது ஜெனனத்திற்கு அனுப்பவில்லையோ
2.அதைப் போலவே இயற்கை பார்த்து நல்லவன் கெட்டவன் என்று அது நம்மை நிலை நிறுத்தப் போவதில்லை.

சாமி சொன்னபடி சில பாகங்கள் நிலை மாறப்போகிறது சில பாகங்கள் நிலைத்து நிற்கும் என்றும் கேட்டிருப்பாய். சில பாகங்கள் என்னும் பொழுது அப்பாகத்தில் ஒரு சிலராவது நல்லவர்கள் இருக்க மாட்டார்களா…? எல்லோருமே கெட்டவராக அழியத்தான் போகிறார்களா…?
1.சித்தன் வெளிப்படுவான் சித்தன் வெளிப்படுவான் என்றெல்லாம் உணர்த்தி உள்ளேன்
2.எப்படி அச்சித்தன் வெளிப்படுகின்றான்…?

இக்கலியின் கடைசியிலிருந்து கல்கிக்கு எந்நிலைக்குச் செல்லலாம்…? என்பதனை உணர்ந்து
1.இங்கு மட்டுமல்ல… இதை உணரும்…
2.இதை உணர்ந்தவர்களின் சொல்லைக் கேட்பவரும்…
3.இதை உணராமலே நல்நிலையில் உள்ளவர்களும்… கல்கியில் கலக்கப்போவது எந்நிலையில்…?

இவ்வுடலுடன் உள்ள எல்லா ஆத்மாக்களுமே காலம் காலமாக நம்மில் தோன்றிய பல ஞானிகள் ரிஷிகள் முனிவர்களின் நற்சொற்கள் எல்லாம் தெய்வீகத் தன்மையைத் தன்னுள் வளர்த்து… அன்பு கொண்ட தெய்வமாக வாழுங்கள் என்ற உபதேச போதனை பெற்று அவ்வுபதேசப்படி நடந்து…
1.தன் எண்ணத்திலும் செயலிலும் பயத்தை அண்ட விடாமல் அழியும் காலத்தை எண்ணாமல்
2.ஒவ்வொரு நாளும் புத்துயிர் கொண்டே நல் உபதேசத்தை ஏற்று ஜெபம் பெற்று
3.ஜெபத்தின் வழி நடந்து உணர்ந்த நிலை கொண்டு வாழும் தன்மையில் – இக்கலி முடிந்து கல்கி வரும்.

இவ்வுலகச் சுற்றலில் ஏற்படும் சிறு அசைவு நிலை கொண்டு காலம் மாறுதலின் நிலையில்… எப்படி இந்நிலையில் உள்ளவர்கள் எல்லாம் தப்புகிறார்கள் என்றால்…
1.அவரவர்கள் செய்த ஜென்மப் பலனினால்
2.அவர்களுக்குப் புதிய சக்தியான பறக்கும் சக்தியை ஏற்படுத்தத் தான்
3.நமக்கு முன் தோன்றிய நமக்கு இப்பொழுது ஆண்டவனாக அருள் புரியும் பல ரிஷிகளின் ஜெபநிலையின் சக்தி எல்லாம் நம்மைப் பறக்கச் செய்து
4.இப்பொழுது சூட்சம உலகத்தில் வாழ்ந்திடும் நல்லோருடன் கலப்பது தானே தவிர ஒரு குடும்பத்தில் அறுவர் இருந்து ஒருவர் தப்பும் நிலை அல்ல.

இவ்வுலக அனைத்துக்குமே இந்நிலை தான்…! இவ்வுலக மாறுதலின் போது அனைத்து ஜீவராசிகளுமே ஆரம்ப அணுவின் நிலைக்கே வந்து விடுகின்றன.

அதிலிருந்து தப்புபவர்கள் தான் பறக்கும் நிலை கொண்டு… பிறகு வாழும் நிலைக்குப் புதிய வாழ்க்கைக்கு வந்து புதிய உலகம் படைக்கிறார்கள் கல்கியிலே.

இதற்கு முன் தோன்றிய கல்கிக்கும் கலிக்கும் கொண்ட சுற்றலின் நடந்த நிலைகளுக்கும் இனிச் சுற்றப் போகும் கல்கிக்கும் கலிக்கும் உள்ள சுற்று… தப்பிய அனைத்து உயிரினங்களுமே “உன்னதமாக இருந்திடும்…”

ஆரம்ப நிலை பெற்று இனியும் சுற்றத்தான் வேண்டும். உலகமே சிறு அசைவினால் ஏற்படும் மாறுதலைக் கொண்டு ஒவ்வொரு மண்டலத்தின் தன்மையும் மாறும் தன்மையில் உள்ளது என்றால் இவ்வுலகின் உயிர்நிலைகள் இப்பொழுது உள்ளது போல் உள்ளன என்பதுமல்ல.

சூட்சும உலகத்திற்குச் சென்றவர்கள் எல்லோரும் இவ்வுலகத்திலேயே வருகிறோம் என்பது அல்ல.
1.பறக்கும் சக்தி கொண்டு விட்டால்
2.நாம் ஏற்கும் நிலையே அன்றுதான் நமக்குப் புரியும்.

இந்நிலையை இதற்கு மேல் உணர்த்துவது உத்தமுமல்ல. ஒவ்வொருவரும் புரிந்து வாழ்ந்திடவே இப்பாட நிலை. அவரவர்கள் செய்த நற்பலனை அவரவர்கள் எடுக்கலாம்.

நம் முன்னோர்கள் சொல்லியபடி தன் நிழல் தன் கூடத்தான் வரும் என்றதன் உள்ள அர்த்தத்தைப் புரிந்தால் வாழ்ந்திடலாம் கல்கியில்.

கலி முடிந்து “கல்கி வரும் நேரம்”

 

ஜென்மத் தொடருடனே ஒவ்வொருவரும் வாழ்வது பலரும் சொல்லும் உண்மை நிலை தான். சொந்தம் என்பது எதுவப்பா…?

பந்தங்களுடன் வாழ்கின்றோம். இவ் வாழ்க்கையில். ஆதியில் மனித உயிரணு மற்ற ஜீவராசிகளின் உயிரணு தோன்றியதை ஒரே நாளில் தோன்றியதாகவும் ஒரே நாளில் அனைத்து ஜீவராசிகளும் மடியப்போவதாகவும் உபதேசம் செய்கின்றார்கள்.

1.அனைத்து உயிரினங்களும் ஒரே நாளில் தோன்றியனவா…?
2.ஒரே நாளில் தோன்றியிருந்தால் சுற்றிக்கொண்டே உள்ள மண்டலங்களிலிருந்து பெறும் சக்திக்கெல்லாம்
3.ஒரு நாள் மட்டும் தான் படைக்கும் வேலையா…? பாக்கி காலங்களில் அதை வளர்த்துக் காக்கின்றதா…?

ஒவ்வொரு நாளும் பல மண்டலங்களின் தொடர்புடன் ஒன்றுக்கொன்று ஈர்த்துப் பல சக்திகளைப் பெற்ற சூரியன் அதன் ஒளிக்கதிரிலிருந்து தினமும் தினமும் என்பது மட்டுமல்ல ஒவ்வொரு நொடி… நொடிக்கும் குறைவான நேரத்திலும் பல உயிரினங்கள் தோன்றித் தோன்றி வளர்கின்றன.

இந்நிலை உள்ள பொழுது ஒரு நாளில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாமே என்பதன் பொருள் என்ன…? ஆரம்பக் காலத்தில் இருந்த ஜீவராசிகளும் இப்போதைய ஜீவராசிகளும் ஒரே அளவுடனா உள்ளன…?

புதிய புதிய உயிரணுக்கள் வளர்ந்து கொண்டே தான் உள்ளன.

1.இவ்வுலகம் எந்த நிலையில் தோன்றிற்று…?
2.வருடக் கணக்கும் நாள் கணக்கும் என்னிட முடியுமாப்பா…?
3.இவ்வுலகம் மட்டும் தனியாக தானாகவா வளர்ந்தது…?
4.என்று தோன்றியது…? என்று அழிகின்றது…? என்று சொல்லும் சக்தி யாராலும் முடிந்திடாது.

அழியா உலகம் என்றேன். ஆனால் காலங்கள் தான் மாறி மாறி வருகின்றன. நாம் அதற்குச் சூட்டிய பெயர் தான் கல்கி கலி இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் மச்சாவதாரம் இப்படிப் பல நாமங்கள்.

எல்லா மண்டலங்களிலுமே உயிரினங்கள் உண்டு என்றிட்டேன் முதலில். ஒவ்வொரு மண்டலத்தின் தன்மையும் இது போல் தான் சுற்றிக் கொண்டுள்ளது

இன்று ஒரு நாட்டில் பனி பெய்கின்றது… ஒரு நாட்டில் அதி வெப்பமும்… சமமான நிலை ஒரு இடத்திலும்… அதி மழை பெய்து கொண்டே உள்ள இடமும்… குளிர்ந்த நிலை கொண்ட இடமும்… இப்படிப் பல நிலைகளைக் கொண்ட இவ்வுலகினில் பாலைவனம் நீர் நிலை இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளதன் விளக்கத்தை முதலிலேயே சொல்லி உள்ளேன்.

இந்நிலைகள் எல்லாம் இப்பொழுது உள்ள உயிரினங்களின் நிலையும் இப்படியே இருக்கப் போவதில்லை. கலி கடைசியில் உயிரினங்கள் எப்படி மாறிக் கல்கிக்கு வருகின்றன…? என்பதனைத் தான் நாம் அறிய வேண்டும்.

உலகமே அழிகின்றது என்றாய்…! எப்படி அழியும் இவ்வுலகம்…? இவ்வுலகம் அழிந்து மற்ற மண்டலத்தின் மேல் போய் விழுமா…? இவ்வுலகம் இல்லாவிட்டால் சந்திரனும் செவ்வாயும் உயிர் வாழ முடியுமா…? செவ்வாயும் சந்திரனும் இல்லாவிட்டால் அதன் தொடர்புடைய மண்டலங்களின் நிலை என்ன…?

1.இவ்வுலகம் அழிகிறது என்றால்
2.சக்தியின் சொரூப நிலையே அழிய வேண்டும்.

சக்தியின் சொரூப நிலை அழிந்தாலும் சக்தியின் உயிர் பெற்ற மண்டலங்கள் எல்லாமே… மண்டலங்கள் எல்லாமே என்பது அனைத்து மண்டலங்களும் ஜீவன் இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து ஜீவனில்லாமல் இருக்கும் நாள் எதுவப்பா…?

அனைத்து மண்டலங்களும் ஜீவன் இல்லாமல் விழுந்தாலும் இப்பொழுது உள்ள உலகின் ஜடப்பொருள்கள் எல்லாம் எங்கப்பா செல்லும்…? அழிவு என்பதற்கே அர்த்தம் இல்லையப்பா…! காலங்கள் மாறுபடுகின்றன.

இப்பொழுது இக்கலி முடிகிறது என்கின்றோம். இக்கலி எப்படி முடிகின்றது என்பீர்…? இக்கலியில் உள்ள நிலை மாறுபடத்தான் சில இடங்களில் நில அதிர்வும் நெருப்புக் கோளங்களும் அதி மழையினால் வரும் சேதங்களும்.

இப்புமி ஈர்த்து வெளியில் கக்கும் நிலையில் இருந்துதான் ஒவ்வொன்றும் நடக்கின்றது.

இக்கலியில் வந்த மனிதர்களினால் அவர்கள் எண்ணத்தைக் கொண்டு வாழும் சுகத்திற்காகச் “செய்த வினையான இச்செயற்கை என்னும் நிலை பல ஏற்படுத்தி” விஞ்ஞானம் கொண்டே தன்னைத்தானே அழிக்கச் செய்த வினையப்பா.

இவ்வினையெல்லாம்… பூமித்தாயின் உன்னத பொக்கிஷங்களைச் செயற்கைக்கு எடுத்து விட்டானப்பா திரவங்களாகவும் உலோகங்களாகவும்.

இவன் செயற்கைக்கும் இயற்கையை அழித்துத் தான் உண்டு பண்ணுகின்றான். முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன் ஒன்றை அழித்து ஒன்று சக்தி பெறுகிறது என்று.

இந்நிலை புரிந்ததா…?

பூமியில் உள்ள பொக்கிஷத்தை இவன் எடுத்ததினால் வந்ததின் வினை தான் இந்நிலையெல்லாம்.

முன் காலத்தில் கால நிலை ஒன்று போல் இருந்தது ஆடி மாதத்தில் காற்றும் ஐப்பசியில் மழையும் மார்கழியில் குளிரும் சித்திரையில் வெப்பமும் இப்படிக் காலநிலை ஒன்று போல் இருந்ததப்பா.

மனநிலை மாறுபடுகின்றது மனநிலை மாறிபடுகின்றது என்பதெல்லாம் இச்செயற்கைக்கு ஏங்கும் மனிதர்களின் ஆசைக்காக பூமித்தாயின் சக்தியைத் தோண்டி எடுத்ததின் வினையைச் செப்புகின்றேன்.

இவன் பூமியிலிருந்து செயற்கையாகப் பல சக்திகளை எடுத்ததினால் இப்பூமியின் தன்மையே மாறுபட்டு இப்பொழுது கடலாக உள்ள இடமெல்லாம் பாலைவனமாகி… பாலைவனமாக உள்ள இடமெல்லாம் கடலாகிச் சுற்றிக் கொண்டே உள்ள பூமித்தாய்
1.ஒரு நொடியில் ஏற்படுத்தும் சிறு அசைவினால் உண்டாகும் நிலையால் இக்கால நிலை மாறி கலி முடிந்து கல்கி வரும் நிலை.
2.அதன் ஆரம்ப நிலை நான் இப்பொழுது சில இடங்களில் நடந்திடும் இக்கோர நிலையெல்லாம்.
3.இவ்வினையெல்லாம் ஆண்டவன் செய்யவில்லை அவனவனே செய்ததுதான்.
4.இனியும் வருவது இதன் தொடர்ச்சி தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நந்தீஸ்வரா…! என்று சிவனுக்கு முன் நந்தியைப் போட்டுள்ளார்கள்…! நம் உயிர் ஈசனாகின்றது. நாம் எண்ணிய உணர்வுகள் உருவாக்கப்படும் போது அதுவும் ஈசனாக இருந்து உருவாகின்றது. அதை “நந்தீஸ்வரன்” என்று காட்டுகிறார்கள்.

1.நான் எண்ணியது எனக்குள் சென்று எனக்குள்ளேயே உருவாக்கும் நிலை வருகின்றது
2.எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அணுவாக உருவாகப்படும் போது அந்த உணர்வின் தன்மை உடலாகிச் சிவமாகின்றது.
3.அது தான் நந்தீஸ்வரன்… சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.

கண்களால் ஒன்றை உற்றுப் பார்க்கின்றோம்… அது சித்திரம்…! அந்த உணர்வு உடலுக்குள் அதனால் புத்திரனாக (அணுவாக) உருவாகிறது.

அதாவது நாம் பார்ப்பதை எல்லாம் அது எந்தெந்த வழிகளில் அதற்கு இடம் கொடுக்கின்றோமோ
1.என்னை அவன் இப்படித் திட்டினான்
2.எனக்கு அவன் துரோகம் செய்தான்
3.இவன் என்னைத் தொல்லை செய்தான்
4.அவனால் தான் நான் தொழில் செய்ய முடியவில்லை… நஷ்டம் வருகிறது என்று
5.இப்படிப்பட்ட கணக்குகள் அதிகமாகி விட்டால் நாம் செயல்படுத்தும் நல்ல உணர்வின் கணக்குகள் குறையும்.
6.தீமையின் கணக்குகள் அதிகரிக்கப்படும் போது நம் நல்ல உணர்வுகள் செயலற்றதாக மாறும்.

இதைப் போன்று மனிதனை உருவாக்கிய உணர்வுகளில் எந்த அளவுகோலில் நஞ்சினை வளர்த்துக் கொண்டோமோ அந்த உணர்வுக்குத் தக்க உடலில் நோயாக மாறும்.

இது எல்லாம் சாஸ்திரப் பிரகாரம் தப்பு இல்லை. அதிலே வளர்ந்தவர்கள் நாம் இதைப் புரிந்து கொண்டால் போதும்.

தெய்வத்தின் உருவங்களைப் பார்க்கப்படும் போது துவைதம். அதில் காட்டப்பட்ட உண்மைகளை அந்த ஞானிகள் உணர்வுடன் ஒன்றி அந்த நல் வழி காட்டியதை நாம் நுகர்ந்தோம் (அத்வைதம்) என்றால் “தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் வரும்…”

ஏனென்றால் குருநாதர் கொடுத்த அருள் வழிகளைத் தான் இங்கே பதிவு செய்கிறோம்.

உங்களுக்கு (ஞானகுருவிற்கு) ஈஸ்வரபட்டர் எல்லாச் சக்தியும் கொடுத்திருக்கின்றார். நாங்கள் எந்த வழியில் சக்தி பெறுவது…? என்று கேட்கின்றார்கள்.
1.உங்களுக்குத் தான் அவர் கொடுத்தார்… எங்களுக்குக் கொடுக்கவில்லையே…
2.நீங்கள் பெற்று விட்டீர்கள்… எங்களுக்கு நீங்கள் எப்படிக் கொடுக்கின்றீர்கள்…? என்று
3.அந்த விசாலத்தை நீங்கள் கொண்டு வந்தால் தள்ளித் தான் நிற்கும்.

ஒரு கம்ப்யூட்டரில் எந்த அளவுகோலைக் கொடுத்து ஒரு இயந்திரத்தையோ மற்ற வேலைகளையோ இயக்கப்படும் போது சந்தேக உணர்வு வந்தால் அது சரியாக வேலை செய்யாது.

ஆணைகளை இடப்பட்டு அதைச் சீராக இணைத்து “இப்படித்தான் இயக்க வேண்டும்… (PROGRAM)” என்று இணைக்கும் போது தான் அது எலெக்ட்ரானிக்காக மாறுகிறது. மோதிய பின் இயக்குகிறது.

அதைப் போன்று தான்
1.இப்பொழுது யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகக் கொடுக்கும் உணர்வின் தன்மையை நீங்கள் தள்ளி வைத்து விட்டால்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாவது கஷ்டம்.

அதனால் தான் உபதேசிக்கும் உணர்வுகளை உற்று நோக்கி… ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்து கொள்ளுங்கள்…! என்று யாம் திரும்பத் திரும்பச் சொல்வது.

தனக்குள் இயங்கும் நுண்ணிய நிலைகளைத் தெரிந்திடும் “எண்ண வலு கொண்டவர்கள்” ஞானியாகின்றார்கள்

 

வைத்திய ரீதியிலே சிலர் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். நோயுடன் வருபவர்களின் நாடித் துடிப்புகளை எண்ணித் தான் பரிசீலனை செய்வார்கள்.

இவர்களுடைய (வைத்தியர்) வாழ்க்கையில்
1.மற்றவர்களின் உணர்வுகளை வேகமாக நுகர்ந்தால் துடிப்பின் வேகம் ஜாஸ்தியாக இருக்கும்
2.இவருடைய வேகத்துடிப்பு இப்படி ஆனால் அவரின் (நோயாளியின்) நாடியினுடைய துடிப்பை அது அடக்கிவிடும்.
3.அங்கே இருக்கும் உண்மை நிலைகளை அறியாதபடி துடிப்பு அடங்கிய பின் அதற்குத்தக்க தான் மருந்து கொடுப்பார்
4.பித்தம் சிலேத்துமம் இப்படி இருக்கிறது என்று.

உதாரணமாக தெர்மாமீட்டரையே வைத்துப் பாருங்கள். அது வைக்கப்படும் பொழுது அங்கேயும் மேக்னட் அதிலே உள்ள பாதரசம் இந்த உணர்வின் அழுத்தத்தைக் கொண்டு மாற்றி அமைக்கும் தன்மை கொடுக்கின்றது. அதிலேயும் காந்தப்புலன் உண்டு… துடிப்பின் உணர்வுகள் உண்டு.

கோபமாக வெறுப்பாகவோ அல்லது அதிகமான நிலைகளிலே வேலை செய்து களைப்பின் தன்மை கொண்டு எரிச்சல் ஊட்டும் நிலைகள் வந்தால்
1.அந்த உணர்வுடன் அந்த தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்த உடனே உற்றுப் பார்க்கும் நிலைகளில் கண் எரிச்சலாகி விடும்.
2.என்ன…! ஒரு பாயிண்ட் ஜாஸ்தியாக இருக்கிறது… சரியாகப் போகும் போ…! என்று அளவுகோலை மாற்றி விட்டு மருந்தையும் கொடுத்து விடுவார்கள்

ஏனென்றால் இயற்கையின் நிலைகளில்… கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்… கீதா உபதேசம் கொடுப்பது யார்…? கண்கள்.

கண் நுகர்ந்ததைத்தான் காட்டும்… அதாவது எதை எண்ணிப் பார்க்கின்றோமோ அதைச் செயல்படுத்தும்.

நாம் சலிப்பும் சஞ்சலமும் கொண்ட பின் ஒரு பொருளைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சலிப்பினால் உண்மையை அறிய முடியாது போய் விடுகின்றது.

ஆகவே…
1.மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் நுண்ணிய நிலைகள் உண்டு
2.இதைத் தெளிந்து கொண்ட பின் “வலுவான எண்ணம் கொண்டவர்கள் ஞானியாகி விடுகின்றார்கள்…”
3.சந்தர்ப்பத்தில் உணர்வின் வலுக் கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் வருகின்றது.

தியான வழியில் உள்ளவர்கள் சில சந்தர்ப்பங்களில்…
1.இவையெல்லாம் கொஞ்சம் எண்ண வலுவைக் கூட்டினோம் என்றால்
2.உண்மை நிலைகள் “வாழ்க்கையில் எது வந்தது…?” என்று சிந்திக்க முடியும்…
3.உணர்ச்சிவசப்படுவதில்லை…!

இதை ஏன் சொல்கிறேன் என்றால் பள்ளிகளில் பாடங்களைப் படித்தாலும் அனுபவ ரீதியில் வருவதற்காக அளவுகோலைக் காட்டி அனுபவத்தைக் கொண்டு வருகின்றார்கள். பாட நிலையை வைத்து மட்டும் வைத்துக் கல்வியைச் செயல்படுத்துவதில்லை.

அது போன்று தான் உங்களுக்கு அனுபவங்களைப் பெறச் செய்கின்றோம் அந்தச் சக்திகளைப் பெறுவதற்குத் தான் மணிக்கணக்கில் உபதேசித்துக் கொண்டே இருக்கின்றோம் (ஞானகுரு).

ஆக… இந்த வாழ்க்கையில் நம் வலிமை எதிலே இருக்கின்றது…?

நஞ்சின் உணர்வின் வேகத்திலிருக்கும் பொழுது நற்குணங்களின் தன்மையை அது செயலற்றதாக மாற்றி விடுகின்றது.
அந்த நஞ்சின் தன்மையைச் செயலற்றதாக ஆக்கும் அருள் ஒளியினை உங்களுக்குள் கூட்டி
2.அருள் ஒளியினால் காலப்பருவம் கொண்டு அதை அடக்கும் வல்லமை உங்களுக்குள் வர வேண்டும்.

யாம் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் சென்று அதைப் பதிவு செய்யும் பொழுது “ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய” என்ற அழுத்தத்தின் தன்மை அது உங்களுக்குள் பெருகுகின்றது.

ஓரு அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை ஊற்றப்படும் பொழுது முதலில் கலங்கலாகத் தெரியும் ஆனால் நல்ல தண்ணீரை அதிகமாக ஊற்ற ஊற்ற அந்த கலங்கல்கள் குறைந்து “சிறிது தெளியும்…”

இதைப் போல்
1.எத்தனையோ உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில் அழுக்கின் நிலையாக இருப்பினும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்க உங்களுக்குள் மனம் சிறிது தெளியும் நிலை வருகின்றது

அதனால் தான் உபதேசிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றேன்…!

அழிவு என்னும் சொல்லே வேண்டாம்

 

ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் உடல் அமைப்பு வண்ணம் சரீரம் இவை மாறுபட்டுத் தான் இருக்கும்
1.ஒன்று போல் எதுவுமே இருப்பதில்லை.
2.ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை.
3.ஒரே இடத்தில் விதை விதைக்கும் பயிர்களிலும் செடி, கொடி மரங்களும் ஒன்றைப் போல் ஒன்று இருப்பதில்லை.
4.நம் சக்தியிலிருந்து தீட்டும் ஓவியமும் பாடும் பாடலும் சமைக்கும் சமையலும் எதுவுமே ஒன்று போல் இருப்பதில்லை.
5.ஒரு தடவைக்கு மறு முறை செய்யும் பொழுது மாறித்தான் வரும்.

அன்றன்று எடுக்கும் சுவாச நிலையைக் கொண்டு தான் அதனுடைய அழகு அதில் உள்ளது. சாதாரண வாழ்க்கை முறையில் நடப்பவைகளுக்கே இந்நிலை என்றால் இவ்வாத்மா எடுக்கும் பிம்பத்திற்கு எந்த நிலையப்பா…?

ஆத்மா எடுக்கும் பிம்பம் எல்லாம் அது சுவாசித்த பல ஜென்மங்களில் சுவாசித்த சப்த அலைகள் எந்நிலைகொண்டு பெற்றனவோ… அந்நிலையிலே தான் தாயின் கருவிற்கு வந்த பிறகும் அச்சப்த அலைகளின் தொடர்புடன்… தாயெடுக்கும் சப்த அலைகளின் நிலையும் கலப்பதினால் அமைவதுவே இவ்ஆத்ம உருவம்.

உடலில் இருந்து ஆத்மா பிரியும் பொழுது அவ்உடலில் உள்ள பொழுது எடுத்த சப்த அலைகள் எல்லாமே அவ்ஆத்மாவுடன் செல்கின்றது என்று சொல்கின்றோம்.

ஆத்மா எந்நிலையில் செல்கின்றது…?

இவ்உடலைப் புதைத்தோ எரித்தோ கல்லறையில் வைத்தோ அழித்து விடுகின்றோம் என்பீர்.

அழிவது எதுவப்பா…? உடல் எங்கே அழிகிறது…? அவ்வுடலை எரிக்கும் பொழுது அவ்வுடலில் உள்ள நீர் சத்து எல்லாமே ஆவியாகி அது விட்ட சப்த அலைகளுடன் கலந்து உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவுடன் இந்த நீர்ச்சத்தும் சப்த அலைகளும் தன் ஆத்மாவுடனே தான் கலக்கின்றன.

ஒவ்வொரு உடல் மாறும் பொழுதும் உடல் அழிவதில்லை… சப்த அலைகளும் அழிவதில்லை.
1.இவ் உடல் எனும் மாய ரூபம் தான் மண்ணுடன் மண்ணாகி
2.இவ் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி ஆத்மாவுடன் கலக்கும் பொழுது இவ்உடல் எங்கு அழிகின்றது…?
3.உடலும் அழிவதில்லை… ஆத்மாவும் அழிவதில்லை…! ஆண்டவன் சக்தியில் எதுவுமே அழிவதில்லை.

விஞ்ஞானத்தில் எதையும் ஆக்கிடலாம்… அழித்திடுவானா…? இயற்கையை வளரவிட்டுச் செயற்கை ஆக்குவான்.

செயற்கை அழிந்தால் எங்கப்பா செல்கின்றது…? சந்திரனின் எடை குறைகின்றது சூரியனின் எடை குறைகின்றது பூமியின் எடை குறைகின்றது என்றெல்லாம் செப்புகின்றான்.

சூரியனிலிருந்து பல அணுக்கதிர்கள் மற்ற மண்டலத்திலிருந்து பூமியில் படிந்து கொண்டே உள்ள பொழுது எப்படியப்பா குறையும்…? இப்பூமி… தான் ஈர்த்து வெளியிடும் சக்தியில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ள பொழுது வளரும் நிலை தான் உள்ளது. குறையும் நிலை எங்குள்ளது…?

அழியா நிலை பெற்று வளருவதுவே எல்லாமே.

ஒன்றில் இருந்து ஒன்று மாறுபடும் தன்மை தான் உள்ளதுவே தவிர எதுவுமே அழிவதில்லை.
1.அழிவு என்னும் சொல்லே வேண்டாம்.
2.வளரும் நிலையாக வருவது தான் சொல்லிலும் செயலிலும் அழகப்பா.

ஆத்மா எடுக்கும் உடல் பிம்பத்தை வைத்து வம்ச வழியில் வருகிறது நிறம் உருவம் அழகு எல்லாம் என்கிறோம். வம்ச வழியில் வருவதல்ல. அவரவர் எடுத்த சுவாச நிலை கொண்டு சப்த அலைகளும்… முதல் ஜென்மத்தில் இருந்த உடலின் தன்மை கொண்ட சத்து நிலையும் கலந்தே தான்… ஒவ்வொரு ஜென்மத்தில் நாம் எடுக்கும் பிறவியிலும் நம்முடன் கலந்தே வருகின்றது.

இஜ்ஜென்த்தில் வந்தது மட்டுமல்ல இவ்வுடலின் தன்மை என்பதன் பொருள் விளங்கியதா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.ஒரு தீமை செய்யும் உணர்வை நாம் நுகர்ந்தாலே
2.அடுத்த கணம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ண வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இந்த உணர்வை ஆன்மாவிலிருந்து நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

அதற்குப் பின்… யார் எதைச் சொன்னாரோ மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

நமக்குள் இதைப் போன்று மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் குழம்பு ருசி இல்லை என்றால் என்ன செய்கிறோம்..? அதிலே பல சரக்குகளைப் போட்டு மீண்டும் அதை ருசியாக மாற்றிக் கொண்டு வருகின்றோம் அல்லவா.

அதைப் போன்று தான் மற்றவர்கள் பட்ட வேதனையை எடுக்கப்படும் போது இரவிலே தூங்கும் போது அதே அறிவு தான் நமக்குள் வருகிறது. ஏனென்றால்
1.யாம் (ஞானகுரு) சொல்லும் தியான முறைப்படி எடுத்தால் அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு நீங்கள் உணர முடிகின்றது.
2.இது சாதாரணமாக எல்லோருக்கும் தெரியாது.

இப்படி அதைத் தெரிந்து கொண்டாலும் உடனே ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனிடம் உணர்வைச் செலுத்தும் போது இது உடலுக்குள் செல்கிறது.
2.எப்போதுமே இந்த உயிரில் எண்ணி உணர்வை இப்படிக் கொண்டு போக வேண்டும்… அதைப் பழக வேண்டும்.

அதாவது வழக்கமாக மூக்கு வழி சுவாசித்து உயிரிலே பட்டு உடலுக்குள்ளே போகும். அப்படி இல்லாதபடி கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அதன் வழி உடலுக்குள் செலுத்த வேண்டும்

இது தான் கண்ணன் காட்டிய திருட்டு வழி என்பது…!

சாதாரணமாக “எதிரி இருக்கின்றான்” என்று சொன்னவுடனே பார்க்கின்றோம். பார்த்த பின்… எங்கே இடம் இருக்கின்றது என்று ஒளிவதற்கு இடத்தைத் தேடி உணர்வை வெளியிலே செலுத்துகின்றோம்.

அந்த உணர்வு வந்த பிற்பாடு அதற்கு வேண்டிய வேலையைச் செய்கிறோம்.

ஒரு எதிரி நமக்குத் தொந்திரவு செய்கிறான் என்றால் அதைப் பார்க்கின்றோம். அதற்கு யார் “மூலகர்த்தா…?” எப்படி அவனை அடக்குவது…? என்ற எண்ணத்தை எண்ணுகின்றோம்.

அப்போது இந்தக் கண் வழி காட்டுகிறது. பழகியவர்களின் வலு கிடைக்கின்றது. அங்கே போய் இதைப் பற்ற வைத்தால் இவருக்குச் சரியான தண்டனை கிடைக்கின்றது என்று அதைச் செய்கிறோம்.

இந்த உணர்வு இயக்க்கப்பட்டுத் தான் நாம் இதைச் செயல்படுத்துகின்றோம். மனித வாழ்க்கையில் இந்த வழியில் தான் செயல்படுத்துகின்றோம்.

ஆனால் நமது குருநாதர் காட்டிய வழிகளில் தீமையை நீக்க
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணச் சொல்கிறோம்
2.அதே சமயத்தில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கச் சக்தியும் கொடுக்கின்றோம்.

நீங்கள் எடுத்துப் பழக வேண்டுமல்லவா…!

இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் வரும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று இங்கே வேண்டி அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இது வலுபெற்ற பின் தீமைகளைப் பிளக்கின்றது. உங்களுக்கு மன பலம் கிடைக்கின்றது..

ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதமான அணுக்கள் நமக்குள் உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். அதைத் தான் பிரம்மா உருவாக்குகின்றான் என்பது.

அதாவது விஷ்ணுவின் மகன் பிரம்மா…
1.உயிரால் (துடிப்பால் ஏற்படும் வெப்பத்தால்) உருவாக்கப்பட்ட அந்த அணு
2.மீண்டும் தன் இனத்தை விருத்தி செய்ய அந்தந்த ஆகாரத்தைக் கேட்கும்.
3.பின் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டே இருக்கும்.

இந்த உணர்வுகள் எது அதிகமோ சிவத்திற்குள் இருந்து அந்த உணர்வின் செயலாகவே இது மாற்றும். ஆனால் சிவத்திற்குள் அது சக்தியாக இருந்து அந்தச் சக்தியின் செயல் ரூபம் எதுவோ அதன் செயலாகத் தான் இது மாறும்.

அது தான் சக்தி சிவமாகின்றது. சிவத்திற்குள் சக்தியாக இயக்குகின்றது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை… சிவம் இல்லையேல் சக்தி இல்லை…!

இந்தச் சிவம் உருவாகவில்லை என்றால் சக்தியின் செயல் இல்லை. அதனால் தான் நம் சாஸ்திரங்களில் இது முறைப்படி தெளிவாக்கப்பட்டிருக்கின்றது.

யாம் உபதேசிக்கும் போது எங்கே (தியானத்திற்குச்) சென்றீர்கள்…?

 

நான் (ஞானகுரு) சொல்வதெல்லாம்
1.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் உங்கள் உணர்வினை இணைத்து நினைவாற்றலைக் கொண்டு சென்று
2.ஒவ்வொரு அணுக்களிலும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் அது எப்படி இயங்குகின்றது என்றும்
3.அந்த நினைவுடன் அருள் ஞானிகள் உணர்வைக் கலந்து உடலில் நீங்கள் பெற்ற உணர்வுடன் இணைக்கின்றேன்.

இந்தக் காலப்பருவம்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி – அது வெளிப்படும் நேரம் (அதிகாலை)
2.நுகரும்… ஈர்க்கும் சக்தி… உங்களின் உணர்வுகள் தொடர்பு கொள்ளப்படும் பொழுது
3.உங்களுக்குள் அறியாது சேர்ந்த சிந்தனையை அடக்கச் செய்யும் நிலைகளில் இருந்து
4.அதனை அடக்கும் அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்யும் சூழ்நிலையை உருவாக்கும் நேரம் தான் இவை.

நேற்று பேசியது வேறு விதம்… அதற்கு முன் துருவ தியானத்தில் பேசியது வேறு விதம்… அதற்கு முந்தைய நாள் துருவ தியானத்தில் வேறு விதம்… இன்றைக்கு இந்தத் துருவ தியானத்தில் எதைச் செய்கின்றோம்…?

நினைவினை அங்கே துருவ நட்சத்திரத்திற்குள் கொண்டு செல்கின்றோம்.

இருந்தாலும் உங்கள் நினைவுகள் அவசரமாக ஊருக்குப் போக வேண்டும் என்ற நினைவுகள் இருந்தால் இந்தத் தியானம் என்ன செய்யும்…?

எப்படா சாமி முடிப்பார் என்று அதைத் தியானிக்கும் நிலையாகிவிடும் சாமி எப்படா விடுவார் நாம் வீட்டுக்குப் போகலாம் போக வேண்டுமே போக வேண்டுமே என்று…! எவ்வளவு பெரிய தத்துவத்தை எடுத்துச் சொன்னாலும் அப்போது எடுக்காது

ஆனால் இப்போது யாம் உங்களை இழுத்து உட்கார வைத்து எமது உபதேசத்தைக் கேட்கும்படி செய்கின்றோம்.
1.இந்த உணர்வின் வலுப்பெறும் போது இதை பெறுவோம் என்ற நிலை வருகிறது.
2.ஒரு மணி நேரம் தானே போகட்டும்…! அப்புறம் சென்று பார்த்துக் கொள்ளலாம் போ…!
3.அட அப்படியே ஒரு நாளைக்கு வேலைக்குப் போகவில்லை என்றால் நாளைக்குச் சென்று சரி செய்து கொண்டால் பரவாயில்லை என்று
4.அதை நீக்கிவிட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்க்கும்படி வருகின்றது.

இந்த உணர்வுகள் வலுவானால் அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் இதை நீக்கிடும் உணர்வுகள் அங்கே வலுப்பெறுகின்றது. ஆகவே தான்
1.மிக மிக நுண்ணிய உணர்வுகள்
2.நம்மை அது எப்படி இயக்குகின்றது…? என்று தெளிவாகக் காட்டுகின்றோம்.

கம்ப்யூட்டரில் கணக்கீடுகளைச் செயல்படுத்தும் பொழுது அதனுடைய அழுத்தத்திற்குத் தக்கவாறு அது இயக்கிக் காட்டுகின்றது. பாதரசத்தை ஊற்றி வெப்பத்தின் தணல் கூடுவதற்கொப்ப காலமணியையும் இயக்கிக் காட்டுகின்றது… அழுத்தத்திற்கொப்ப அது காட்டுகின்றது

1.இதைப் போன்று தான் உங்களுடைய அழுத்த நிலைகள் ஒவ்வொன்றிலும் “அளவுகோலை வைத்து (துருவ நட்சத்திரத்தின் சக்தி)”
2.சந்திக்கும் ஒவ்வொரு உணர்வுகளையும்… அதாவது வாழ்க்கையில் எதிர்நிலை வருகிறது என்றால் காலத்தை அளக்கும்.
3.இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தனை வரும்
4.பருவம் வரும் பொழுது சொல்வோம் அல்லது செய்வோம் என்று விலகிச் செல்லச் செய்யும்… காலத்தை விரயமாக்காது.

அருள் வழியில் அனைவரையும் அழைத்துச் செல்லும்…! மகிழ்ந்து வாழச் செய்யும்.

ஆத்மாவைச் சுகமாக வைத்துக் கொள்ளுங்களப்பா…!

 

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தை தானே காணும் நிலை அறிந்துள்ளீர். இம்மாயக்கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம் தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அக்கண்ணாடியில் காண்கின்றார்கள்.

அன்றே கண்டான் அச்சித்தன் தன் கண்ணால் எல்லாமுமே…!

உலக நிலையையும் மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்…? என்று சிலர் எண்ணிடலாம்.
1.இப்பாட நிலைக்கு வந்தவர்களுக்கு
2.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான் இப்பாட நிலை.

மனித சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது என்று அறிந்திடவும்… இப்பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்கு அளிக்கின்றாளோ பூமித்தாய்… அந்நிலையான சக்தி எல்லாமே பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் அவ்ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன.

சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்து விடலாம்.
1.நம் உடலில் உள்ள பிணிக்கும் அச்சூரிய சக்தியிலிருந்து “பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை” நம் உடலுக்கும் நாம் ஈர்த்திடலாம்.
2.நம் செவிக்கு நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் கேட்பதைப் போல் நம் காணா இடத்தில் உள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நம் சக்தியில் நாம் எடுக்கும் சுவாசத்தில் அவ்ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு… அவ்வொளியின் பிம்பம் படும் நிலையில் உள்ளவை எல்லாவற்றையுமே இருந்த நிலையிலையே கண்டிடலாம்.

இம்மனித சக்திக்குத் தான் கால நிலை பூகம்ப நிலை பெரும் மழை வரும் நிலை எல்லாவற்றையும் உணரும் தன்மை இவ் உடலில் இருக்கின்றது நம் நினைவை மாற்றி விடுவதினால் அதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல்
1.பூமியில் உதித்த உயிரணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
2.மனித உடலில் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையும் அறிந்திடும் சக்தி உள்ளது.
3.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

இம்மனிதன் உண்டு உடுத்தி உறங்குவது தான் சுக வாழ்க்கை என்று சுகத்தை எண்ணுகின்றான்.

இச்சுகம் எத்தனை நாளைக்கு…? தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல் இவ் உடல் சுகத்தைத் தான் எண்ணி வாழ்கின்றான்.

இவ் உடல் என்னும் கூட்டிற்கு அனைத்து சக்திகளையும் அறிந்தே வாழும் சக்தி உள்ளது… அதை ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்களப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தொழில் செய்து அல்லது வேலை செய்து சொத்தைச் சேமிக்க வேண்டும் என்று எண்ணுகிற போது
1.அது அழியக் கூடிய சொத்து தான்… இந்த உடல் வாழ்க்கைக்கு உதவும்.
2.ஆனால் அதுவும் நாம் சீரான நிலைகள் இல்லை என்றால் அதைக் காக்க முடியாது.

சொத்தைச் சம்பாரித்து வைத்திருப்போம். வேதனை… வேதனை… என்று சந்தர்ப்பத்தால் ஏதாவது வந்தால் அடுத்தாற்போல் இந்தச் சொத்தைக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்தால் இது எதற்கப்பா…? என்பார்கள்.

எல்லாம் சம்பாரித்து வைத்திருப்பார்கள்…! அதை விரிவாக்கி இது அங்கே இவ்வளவு இருக்கிறது… இந்த இடத்தில் உள்ள சொத்துகள் இந்த மாதிரி இருக்கிறது… இதை எல்லாம் என்ன செய்கிறது…? என்று கேட்டால்
1.எங்கேயோ தொலைந்து போகட்டும்
2.இதை ஏம்ப்பா என்னிடம் சொல்கிறீர்கள்…! என்பார்கள்.

சம்பாரிக்கும் போது எல்லாம் வாங்கி இருப்பார்கள். ஆனால் இந்த வேதனை வந்த பின் இந்தச் சொத்துக் கணக்கைச் சொல்லும் போது என்ன ஆகிறது…?

எங்கேயாவது கொண்டு விடுங்கள்…! என்ற நிலை தான் வருகிறது.

காரணம் செல்வத்தின் தன்மை சேர்த்துக் கொண்டிருக்கும் போது “எனக்கு இப்படி வந்துவிட்டதே…” என்று வேதனை எடுக்கும் போது இந்த உடலின் பற்று தான் வருகிறது.

உடலின் பற்று வரும் போது யார் மீது (தன் குழந்தையோ… நண்பரோ…) நமக்குப் பற்று வருகின்றதோ அவரைப் பற்றிக் கொள்கிறோம். அந்த உடலை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். உடலுக்குப் பின் அங்கே வந்து விடுகிறோம்.

அந்த உடலுக்குள் சென்ற பின் குழந்தையாகப் பிறப்பதில்லை.
1.தன் உடலில் விளைந்த உணர்வை அங்கே சாகாக்கலையாக உருவாக்கி
2.அந்த ஆசையைத் தூண்டி அதன் வழிகளிலே அங்கே அவர்களையும் மடியச் செய்கிறோம்.

அதன் உணர்வுகள் அங்கே பேய் மணமாக வளர்ச்சியாகி… பூதகணமாக விளைகிறது… அது தான் பூதங்கள் என்று சொல்வது. ஆனால் உணர்வின் தன்மை விளைவித்த பின் எதனை அடக்கி அதற்குள் வந்ததோ அந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.

அந்த உடலிலிருந்து வெளி வந்தபின் இந்த உணர்வை ஒத்த உயிரினங்கள் எது வளர்ச்சிக்கு வருகிறதோ… அங்கே போய் இந்தப் பூதகணங்கள் அதுவாக உருவாக்கி அதன் செயலாகவே உருவாக்கிவிடும்.

புலியோ நரியோ பாம்போ இவைகள் எல்லாம் தன் இரை தேடும் போது மற்ற உயிரினங்களை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. தன் உணர்வு கொண்டு தாக்கித் தான் அதை உணவாக எடுக்கும்.

இந்த மனித வாழ்க்கையில் இது போன்ற நிலையைச் செய்வோர் எவரோ அப்படிப்பட்ட மிருகமாகத் தான் உயிர் உருவாக்கும். அதனால் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய்..! என்று சொல்வது.

பிறர்படும் வேதனையான உணர்வை எடுத்துக் கொண்டால் அதைத் தூய்மைப்படுத்தத் தெரியவில்லை என்றால் இந்த நிலை வருகிறது.

நம் குழந்தை சிரமப்பட்டால் அதைப் பார்த்துப் பாசத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். ஆனால் நமக்குப் பிடிக்காதவர் ஏதோ ஒரு செயலால் வேதனைப்பட்டார் என்றால் வெறுப்பால் என்ன செய்கிறோம்…?

அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… என்று அதை ரசிக்கின்றோம்.

1.தன் குழந்தைக்கு உடல் சரியில்லை என்றால் நாம் வேதனைப்படுகின்றோம்.
2.ஆனால் நமக்குப் பிடிக்காதவருக்கு என்றால் நான் நினைத்தேன்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…! என்ற
3.இந்த விஷத்தை நமக்குள் உருவாக்குகின்றோம்.

ஏனென்றால் எது இந்த உடலில் அதிகமோ அதனின் உணர்வின் வளர்ச்சியைத் தான் நமக்குள் காட்டும். அந்த உணர்வின் செயலாக்கம் தான் நமக்குள் உருவாகும்.

ஆக
1.எதைச் சிருஷ்டித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ
2.அது அவதார புருஷனாக மாற்றி விடுகின்றது.
3.கலியா… கல்கியா…? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் இங்கே உண்டு. அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களில் பதிவு செய்யும் போது நீங்கள் எப்போது எண்ணினாலும் அதைப் பெற முடியும்.

உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் உணர்வுகளைப் பிளந்து காற்றிலிருக்கும் அந்தத் தீமையைப் பிளக்கவும்… நல்ல உணர்வை நுகரவும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் தீமை என்ற நிலைகளைப் பற்றற்றதாக மாற்றவும் முடியும்.

பற்றற்றது என்றால் வெறுப்பு வேதனை கோபம் பாசம் போன்ற உணர்வுகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் அதாவது…
1.பாசத்தாலும் கூட வேதனையைத் தான் நாம் அதிகமாக நுகர்கின்றோம்.
2.பாசம் எவர் மேல் அதிகமாகிறதோ வேதனை என்ற அந்த நஞ்சு கூடவே வந்து நல்ல குணங்களைச் சாப்பிடும்.

எப்படி…?

நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் தனக்குள் கலந்து விடுகிறது.

இப்படி இருக்கின்றானே…! என்று அவனை எண்ணியே நமக்குள் வேதனையை எடுக்கும் போது நம் உடலே கிறங்கிப் போகிறது. விஷத்தைச் சாப்பிட்டால் எப்படியோ அந்த உணர்வு நோயாக மாறுகிறது. நோயின் தன்மை பேயாகவே மாறுகிறது.

இப்படிச் செய்கிறானே… இப்படிச் செய்கிறானே… என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் பேயாகப் போய் அடுத்த உடலுக்குள் சென்று மீண்டும் நோயாகவே அங்கேயும் உருவாக்குகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு எந்த நிமிடமானாலும் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் ஒன்றினால் போதும்.
1.அப்போது அந்தச் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.இதை விரயமில்லாது எந்த நிமிடத்திலும் எடுக்கலாம்.
3.அதற்குத்தான் ஆழமாக இதைப் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு)

இங்கே கொடுக்கக் கூடிய சக்தியை இந்த வாழ்க்கையிலேயே நீங்கள் பெற்று உங்களைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

1.உங்கள் பார்வை… உங்கள் சொல்… உங்கள் மூச்சு… அனைத்தும் புனிதம் பெற்று
2அந்த மூச்சலைகள் காற்றிலே பரவினாலும்
3.நீங்கள் யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று
4.இந்த எண்ணத்தை எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.

ஒரு செடிக்குப் பக்கம் களை இல்லாது இருந்தால் “தன் இனத்தின் சக்தி பெருகி” அந்தக் குவிந்த சக்தி கொண்டு அந்தச் செடி செழிப்பாக ஓங்கி வளரும். இது எல்லாத் தாவர இனங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் களைகள் முளைத்து விட்டால் அது வளர்வதில்லை.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் அந்தத் தீமை என்ற களைகள் முளைக்காது இருக்க வேண்டுமென்றால் நாம் யாரைப் பார்த்தாலும்…
1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் தொழில் வளம் பெற வேண்டும்
5.அவர்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று எண்ணி
6.அவர்களுக்கு இந்த உணர்வின் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

இதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அப்போது அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எடுக்கும் அந்த உணர்வின் சக்தி நமக்குள்ளும் வருகின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை முதலில் நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்

 

இன்று விஞ்ஞான உலகில் வாழுகின்றோம் ஆனால் அஞ்ஞான வாழ்க்கையே நாம் வாழ்கின்றோம்.
1.நமது வாழ்க்கையில் வரும் துன்பங்களை எவ்வாறு நீக்குவது…?
2.மனிதனான பின் மகரிஷிகளின் அருள் உணர்வை எப்படிப் பெருக்குவது…?
3.இந்த வாழ்க்கையில் தீமை இல்லாத வாழ்க்கை எவ்வாறு வாழ்வது…? என்பதனை
4.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளது.

அதன்படி நாம் ஒவ்வொருவரும் காலையில் தவறாது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி நம் உடலுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்,

திருமணமானவர்கள் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அந்த உயர்ந்த உணர்வைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அடிக்கடி பதிவாக்கிக் கொண்டபின்
2.27 நட்சத்திரங்கள் சக்தியைப் பெற முடியும்.

அதாவது 27 நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று தாக்கும் பொழுது மின்னலாகப் பாய்கின்றது. ஒளிக் கற்றைகள் பலவும் பரவுகின்றது. துருவ நட்சத்திரம் இத்தகைய மின்னல்களை நுகர்ந்து விஷத்தன்மைகளை அடக்கிப் பழகியது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் முதலில் வளர்த்து வலுவாக்கிக் கொண்ட பின்
1.அந்த மின்னலின் உணர்வுகளை நாமும் அடக்கும் பழக்கம் வந்து விட்டால்
2.மின்னல் வரும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து
3.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்கள் மிகவும் வீரியமடைகின்றது.
4.அப்படி வீரியமடைந்தால் தீமையான உணர்வுகள் உள்புகாது நம்மைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

அந்த தீமையை நீக்கக் கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை “ஆழமாகப் பதிவு செய்து விட்டால்”
1.மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் உணர்வுகளை எளிதில் நுகர்ந்து
2.நம் உடலுக்குள் அந்த ஒளிக் கற்றைகள் வரும் பொழுது தீமை வராது தடுக்கவும் இது உதவும்.

அத்தகைய வலுவான உணர்வை நமக்குள் உருவாக்கி விட்டால்… அது மீண்டும் தன்னிச்சையாக நல் மணங்களைக் கொண்டு வருவதும் தீமையிலிருந்து விடுபடுவதுமாக அதை நம்மைச் செயலாக்கும்.

நமக்கு முன் இருக்கும் காற்று மண்டலத்திலிருந்து தான் சகல சக்திளையும் நாம் பெறுகின்றோம்

 

பூமிக்குக் கிடைத்துள்ள இம்மனித ஜீவாத்மா முதல் நாம் விரும்பி எடுத்திடும் பல உலோகங்கள் நாம் சுவைக்கும் உணவு வகைகள் நாம் பெறும் மணங்கள் நாம் காணும் காட்சிகள் இன்னும் இயற்கையிலேயே கலந்துள்ள எல்லா நிலைகளுமே… நம்மைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் உதவியுடன்… நம் பூமிக்கு இன்று நாம் வாழும் வாழ்க்கைக்குப் பல உன்னத நிலைகளைப் பெற்று வருகின்றோம்.

ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் அதனுடைய தன்மைக்கு ஏற்ப சக்தி வாய்ந்த அணுக்கதிர்களை சூரியன் ஈர்த்து எடுத்து அவ்வொளியின் மூலமாக நமக்குப் பாய்ச்சுகின்றது.

அச்சூரியனிலிருந்து வரும் ஒளி ஒளி காற்று தண்ணீர் இப்படிப் பல நிலைகளை அச்சூரியன் ஈர்த்து நமக்கு அளிக்கின்றது.
1.இச்சுற்றிக் கொண்டே உள்ள இவ்வுலகத்தின் ஆரம்ப நாள் எது என்று கேட்பீர்
2.இவ்வுலகிற்கு ஆரம்ப நாளும் முடிவு நாளும் எப்பொழுதுமே இல்லையப்பா.

ஒவ்வொரு காலமும் மாறி கலி மாறி கல்கி வருகிறது என்கின்றோம் அல்லவா. அந்நாளில் பூமி சுற்றிக் கொண்டுள்ள நிலையில் இப்பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள பல மண்டலங்களிலிருந்து ஈர்த்து எடுத்த பொக்கிஷத்தை… சூரியனிலிருந்து பாயும் ஒளிக்கதிர்கள் எந்தெந்த இடத்தில் அதிகமாக ஈர்த்து எடுத்ததோ… இப்பூமி அந்நிலை கொண்டு தான் அந்தந்த இடங்களில் விளையும் தாதுப் பொருள்களின் நிலையும்… தாவர வர்க்கங்களின் நிலையும் மற்ற இனங்களின் தன்மைகளும் அதே நிலை கொண்டே… பூமி தனக்கு ஏற்ற ஆகாரத்தை ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டே நிகழ்பவை தாம் எல்லாமே.

1.நம்மைச் சுற்றியுள்ள இக்காற்றினிலே தான் கலந்துள்ளன நாம் இன்று உயிர் வாழ்வதற்கு வேண்டிய எல்லா நிலைகள் கொண்ட பொக்கிஷங்களும்.
2.ஆனால் அவரவர்களுக்கு வேண்டிய நிலையைத் தான் இக்காற்றிலிருந்து நாம் ஈர்த்து எடுத்து உயிர் வாழ்கின்றோம்.

சப்த அலைகளும் ஒலி அலைகளும் பல தாது பொருட்கள் விளையும் அணுக்களும் எல்லாமே இக்காற்றில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் நாம் அறிந்தோ அறியாமலோ “நமக்கு வேண்டிய நிலையை மட்டும் நாம் ஈர்த்து எடுத்து வாழ்கின்றோம்…”

இவ்வுலகைச் சுற்றியுள்ள இவ்வுலகுடன் ஒன்றி உள்ள ஜீவன் பெற்ற எல்லாமே அதனதற்கு வேண்டிய நிலையுள்ள அக்காற்றில் கலந்துள்ள தன்மையை ஈர்த்து எடுத்து ஜீவனுடன் உள்ள எல்லாமே வாழ்கின்றன.

நாம் இன்று விஞ்ஞானத்தில் கண்டுள்ள வானொலியின் மூலமாக்க் கேட்கும் ஒலிப் பதிவுகளையும் இன்று நாம் காணும் ஒளிக் காட்சிகளையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பேசும் தொலைபேசிகளையும் எந்த நிலை கொண்டு நம் விஞ்ஞானிகள் கண்டுணர்ந்தார்கள்…?

இக்காற்றினிலே பல நிலை கொண்ட சப்த அலைகள் கலந்துள்ளன. முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். நாம் நுகரும் தன்மையும் அவ்வாசனை பெறுவதற்கும் “சப்த அலைகளைத் தான் கொண்டுள்ளன” என்று.

இன்று இவ்விஞ்ஞானத்தில் ஒலியும் ஒளிக்காட்சியும் கண்டுணர்ந்து எப்படி உணர்த்தினார்களோ அதைப்போல இக்காற்றினில் கலந்துள்ள பல வகை மணங்களையும் கண்டுணர்ந்து மணம் பரப்பிடலாம்.

இக்காற்றினிலே சகல நிலைகளும் கலந்துள்ளன. அன்று நம் ரிஷிகளும் ஞானிகளும் எந்த நிலை கொண்டு இவ்வுலகிலும் மற்ற மண்டலங்களிலும் நடக்கும் தன்மைகளை அமர்ந்த நிலை கொண்டே தியானம் பெற்றுப் பல நிலைகளை அறிந்தனர்…?

தியானத்தில் அமர்ந்து அவர்கள் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி
1.ஒன்றை எண்ணும் நிலையில் ஒரே நிலையில் அவர்கள் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு
2.எதை எண்ணித் தியானத்தில் உள்ளார்களோ அதை எல்லாம்
3.இக்காற்றினில் கலந்துள்ள ஒளி அலைகளின் தன்மையினால் அமர்ந்த நிலையிலேயே அறிந்திடும் பக்குவம் பெற்றார்கள்.

இக்காற்றினில் தான் ஒவ்வொருவர் பேசும் சப்த அலைகளும் நாம் காணும் ஒளியுடன் கூடிய ஒலி அலைகளும் கலந்துள்ளன.

1.இன்றும் நேற்றும் நடந்தவை மட்டுமல்ல.
2.இப் பூமி தோன்றிய நாள் முதலே இப் பூமி ஈர்த்து வெளியிட்ட சப்த அலைகள் முதற்கொண்டு
3.இப்பூமியில் தோன்றிய உயிரணுக்களின் சப்த அலைகளும் இக்காற்றினிலே தான் கலந்துள்ளன.
4.எவையுமே அழியாத் தன்மையில் தான் கலந்துள்ளன.

இன்று ஒலிபரப்புவதை ஒலிபரப்பும் நிலையில் தான் அன்றே அப்பொழுதே அச்சப்த அலைகள் நாம் எந்த நிலையத்தை வைத்துக் கேட்கின்றோமோ அந்த நிலையில் நாம் கேட்டுணர விஞ்ஞானிகள் கண்டுணர்த்தியுள்ளார்கள்.

இன்றுள்ள விஞ்ஞானிகள் அவர்கள் ஈர்த்தெடுக்கும் தன்மை கொண்டு விஞ்ஞானத்தை வளர்த்துக் கொண்டால் மெய் ஞானத்தில் சித்தர்கள் கண்டறிந்த இக்காற்றினில் கலந்துள்ள சப்த அலைகளில் இருந்து ஆயிரம் காலங்களுக்கு முதலில் ஆயிரம் காலம் என்பது கணக்கல்ல பல ஆண்டுகளுக்கு முதலிலேயே வெளியிட்ட சப்த அலைகளை எல்லாம் நாம் ஈர்த்து எடுத்து வெளியிடலாம்.

இவ்வுலகைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள சப்த அலைகள் எதுவுமே சிதறிப் போய்விடவில்லை.

நாம் ஆத்மாவிற்கு மட்டும் அழிவில்லை என்கின்றோம். இவ்வாத்மாவிலிருந்து இவ்வாத்மா எத்தனை கூடு பெற்று சப்த அலைகள் எல்லாம் வெளியிட்டனவோ எல்லாமே இக்காற்றினில் தான் அழியாமல் சுற்றிக் கொண்டுள்ளன.

உலகமும் ஜீவாத்மாக்களும் அழிவில்லாதன. ஜீவாத்மாவும் இவ்வுலகமும் வெளிப்படுத்தும் சப்த அலைகளும் அழிவில்லாதவை தாம்.
1.இவ்வுடல் எனும் கூடு மட்டும் மாறி மாறி
2.நாம் பெறும் நிலையில்லாக் கூடு அழியாச் செல்வமான அவ்வாண்டவனின் சக்தி உள்ளவரை
3.அழியா நிலை கொண்டே வாழ்கின்றோம் நாம் எல்லோருமே.

ஓசோன் திரை கிழிந்ததை நாம் அடைக்க முடியும்

 

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பூமியில் ஓசோன் திரை கிழிந்ததை… அந்த ஓட்டையை அடைக்க முடியும்.
1.நமது குருநாதர் வழியில் தியானத்தை ஒருங்கிணைத்து ஓசோன் திரை அடைபட வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர வேண்டும் என்று முறைப்படி தியானித்து ஆணையிடும் பொழுது
3.தொடர்ந்து அதைச் செய்து வந்தால் அடைக்க முடியும்… அந்த நம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்
4.நிச்சயம் ஓசோன் திரை அடைபடும்… நம்மால் அடைக்க முடியும்… அந்தத் திறன் உண்டு என்று நம்பிப் பழக வேண்டும்
5.விஞ்ஞானிகளால் முடியாது…! மெய் ஞானிகளின் அருளைப் பெற்று நாம் இதைச் செயல்படுத்த முடியும்.

காரணம் துருவத்தின் வழி விஷக் கதிரியக்கங்கள் புகுந்து தான் பூமியின் ஓசோன் திரை கிழிந்தது.

ஆகவே அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து பூமிக்குள் வரும் தீமைகளை அடக்கிப் பேரருள் பேரொளி என்று பெறும் உணர்வு அனைத்து மக்களுக்கும் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.

பேரருளைப் பெறலாம்… பேரின்பத்தைப் பெறலாம்… பேரின்பப் பெரு வாழ்வு வாழும் அந்தச் சக்தி உங்களுக்குள் உருவாக்குங்கள்

1.அனைத்து மக்களும் நோயற்ற வாழ்க்கை வாழ உங்களுடைய பிரார்த்தனைகள்… தியானம்… தவம் அமையட்டும்.
2.அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள்.

அது நல்ல பலனைத் தரும்…!

அந்த அருள் சக்தி உங்களிலே பெருகும்… பேரின்பப் பெரு வாழ்வு வாழ்வீர்கள்… மகிழ்ச்சி பெறும் சக்தியாக உங்களுக்குள் வளரும்… மலரைப் போன்ற மணம் பெறுவீர்கள்… தெளிந்த மனமும் தெரிந்து வாழும் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

1.உங்களுக்குள் அந்தச் சக்தி உருவாகி உலகம் அனைத்தும் அந்த அருள் வழியிலே உருவாகும்.
2.நமது பரந்த மனம் “மகிழ்ந்திடும் உணர்வாக நமக்குள் விளைந்து”
3.குரு அருள் உலக மக்களைத் தெளிந்த மனம் கொள்ளச் செய்திட உங்களுக்குள் அருள் ஞானம் பெருகி
4.நீங்கள் என்றென்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட
5.மகரிஷிகளின் அருள் துணை உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

மழை

 

இப்பூமியில் காற்று வீசுவதும் மழை பெய்வதும் பனி பெய்வதும் எரிமலை கக்குவதும் எல்லாமே… பூமியின் ஈர்ப்புத் தன்மையிலிருந்து பூமி ஈர்த்து அது வெளிப்படுத்தும் நிலை கொண்டு… அந்தந்த நிலையில் வருவது தான் மழை காற்று பனி உஷ்ணம் எல்லாமே என்று முதலிலேயே உணர்த்தி உள்ளேன்.

அதனின் விளக்கம் இன்று தருகின்றேன்.

மழை பெய்வதற்கு முதல் பூமி ஈர்த்து அது வெளிப்படுத்தும் உஷ்ண நிலைகள் ஆவியாகி மேகமாகச் சூழ்ந்து மழை வருகிறது என்றேன்.

இம்மழை பெய்வதற்கு பூமியிலிருந்து எந்த நிலை கொண்டு உஷ்ணம் வெளிப்படுத்துகிறதோ அது வெளிப்படுத்தும் நிலை போலவே உயிரினங்கள் எல்லாமே தன்னுள் உள்ள உஷ்ணத்தை வெளிப்படுத்துகின்றன.

1.மழை வருவதற்கு முதலிலேயே உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே அந்நிலை தெரிந்திடும்.
2.ஒவ்வொருவரும் அவரவர் உடல் நிலையில் இருந்தும் அறிந்திடலாம் மழை வரும் தன்மையை.

பூமி வெளிப்படுத்தும் உஷ்ண அலைகளைக் கொண்டு மேல் நோக்கி ஆவி நிலைக்குச் செல்லும் பொழுது இவ்வுலகில் உள்ள ஜீவனுடன் ஒன்றிய எல்லா நிலைகளுக்குமே மனித உடல் முதற்கொண்டு அந்நிலை தெரிந்திடும்.

மழை வருவதற்கு முதலிலேயே நம் உடல் நிலையில் பெரும் புழுக்கத்தை நாம் உணர்கின்றோம். அந்நிலை போலவே எல்லா ஜீவராசிகளும் தாவர வர்க்கங்களும் அந்நிலையைப் பெறுகின்றன.

பூமி வெளிப்படுத்தும் உஷ்ண நிலையில் இருந்து மற்ற உயிரினங்களுக்கும் அது தாக்கப்பட்டு அவ்வுஷ்ணம் வெளிப்பட்டு ஆவியாகி மேகமாக மழை பெய்கிறது.

நீர் நிலையில் உள்ள நீர் மட்டும் ஆவியாகி மேகம் கொண்டு மழை பெய்கிறது என்கின்றோம். எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்கிறதோ அந்த இடங்களில் உள்ள அப்பூமியில் உள்ள நீர் நிலைகள் நிலங்கள் ஜீவனுள்ள மலைகள் கல் மண் மற்ற உயிரினங்கள் மனித உடல் முதற்கொண்டு ஜீவனுள்ள எல்லாவற்றின் நிலையிலிருந்தும் தான் பூமி வெளிப்படுத்தும் உஷ்ண நிலை கொண்டு நாம் மழை வரும் பாக்கியத்தை அடைகின்றோம்.

1.நம் உடலுக்கு மற்றவற்றில் தொடர்பு இல்லை என்ற எண்ணம் வேண்டாம்.
2.எல்லாவற்றிலுமே நாமும் கலந்துள்ளோம் என்று உணர்ந்து வாழ்ந்திடுங்கள்.

ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இப்பூமியின் சுற்றலில் கலந்துள்ள நாம் ஒவ்வொன்றையும் அறிந்து நம் வாழ்க்கைக்கு என்ன பயன் என்று எண்ண வேண்டாம்.

நம் வாழ்க்கை என்பது தனித்த வாழ்க்கை அல்ல. ஒளியும் ஒலியும் காற்றும் நீரும் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை என்பதற்கே பொருள் இல்லை.
1.ஒவ்வொன்றின் நிலையையும் அறிந்து வாழ்வதின் அர்த்தம் கொண்டே வாழ்வதற்குத் தான்
2.இப்பாட நிலையின் மூலமாகச் சில உண்மைகளை விளக்கி வருகின்றேன்.

பனிமழை பெய்யும் ஊர்களிலும் இங்கு எப்படி நாம் மழையை நம்முடன் ஒன்றியதாகப் பெய்கிறது என்கின்றோமோ அந்நிலை போலத் தான் அங்கங்கு வாழ்ந்திடும் ஜீவாத்மாக்களின் தொடர்பு கொண்டு… அங்குள்ள பூமி எந்த நிலை கொண்டு அப்பனிக்காற்றை வெளிப்படுத்துகின்றதோ அதைக் கொண்டு தான் பனிமழையும் பெய்கிறது.

பூமியில் நில அதிர்வும் நில வெடிப்பும் வருவதும் இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் தன்மை கொண்டு தான் நில அதிர்வு நில வெடிப்பு எல்லாம் ஏற்படுகின்றன.

இப்பூமித் தாய் ஆரம்ப காலத்தில் இவ்அவதாரம் என்று நாம் செப்பிடும் காலத்திலேயே பல பொக்கிஷங்களை ஈர்த்துப் பெற்ற நிலையை நாளை விளங்கிடுவேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டு தியானித்தவர் அனைவருமே “நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன…?” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு நான்கு பேர் சேர்ந்து கூட்டமைப்பாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வலுவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.அந்தந்தக் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தியானம் செய்ய வேண்டும்.
2.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் இதைச் செய்து பழக வேண்டும்.

அதே போல் ஒரு குடும்பத்திற்கு எதிரியாக இருந்து பல பேர் பல நிலைகளைச் செய்கின்றார்கள் என்றால்
1.அடுத்த நிமிடம் கூட்டாக அந்த வீட்டிலே இந்தத் தியானத்தைச் செய்து
2.அவர்களை அறியாது இயக்கும் இருள்கள் நீங்க வேண்டும்.
3.அவர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் வளர்க்க வேண்டும்.

இதை ஒவ்வொரு நாளும் நாம் செய்து வர வேண்டும். இதை நாம் செய்தோம் என்றால் அந்த ஞானிகளின் உணர்வை நாம் பெறுகின்றோம். தியானமும் தவமும் என்பது இது தான்.

ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக எடுக்கின்றோம்… நமக்குள் வளர்க்கின்றோம். எல்லோரும் பெற வேண்டும் என்று தவத்தைச் செய்கின்றோம்.

எங்களைப் பார்க்கின்றவர்கள் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அந்தக் குடும்பங்கள் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்று தவமிருக்க வேண்டும்.

அதாவது
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிக்கின்றோம்… அதை வளர்க்கின்றோம்.
2.நீங்கள் அதைப் பெற வேண்டும்… நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தவமிருக்கும் போது
3.உங்களைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்… இது தான் தவம்.

தவத்திற்கு இலக்கணம் வேண்டுமல்லவா…! அந்த ஆண்டவனின் அருளைப் பெறுவதற்காகத் தவமிருக்கின்றோம் வேண்டும் என்றால் அந்த ஆண்டவன் எங்கே இருக்கின்றான்…?
1.உங்கள் உயிர் தான் ஆண்டவனாக இருக்கின்றது
2.அந்த ஆண்டவன் இருக்கும் ஆலயத்திற்குள் தீமையின் உணர்வுகள் வாட்டுகின்றது.
3.அந்தத் தீமையிலிருந்து விடுபட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.மகரிஷிகளின் அருளைத் தியானித்து அந்த வலுவை ஏற்றி
5.நீங்கள் பெற வேண்டும் என்று தவம் இருக்கின்றேன்.
6.அப்பொழுது உங்கள் உயிரான ஆண்டவனிடத்திலிருந்து மகிழ்ந்திடும் உணர்வுகள் விளைந்து வருகின்றது.
7.அந்தத் தவத்தின் பலனை நான் பெற முடிகிறது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

இந்த மூலக்கூறை நாம் தெரிந்து கொள்ளாது ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றான் என்றால் நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் தான் உயிர்.
1.அருள் சக்திகளைத் தியானித்து அதை எல்லோரும் பெற வேண்டும் என்ற தவத்தினைச் செய்தால்
2.அதனின் பயனாக நல்ல விளைவின் நிலைகளை… அந்த உயர்ந்த உணர்வினை நாம் நுகர முடியும்.

உயிரின் துடிப்பு அதிகரிக்கும் போது மனிதன் அசுரனாகி விடுவான்

 

நட்சத்திரங்களின் மின் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எதிர்மறையாகி மின்னலாகக் கடலில் பாய்ந்தால் கடல் உப்பின் தன்மை அதை அடக்கி மணலாக மாற்றுகின்றது.

அதையே மனிதன் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றான். அணுவைப் பிளந்து அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி அணு உலைகளை உருவாக்கி இயந்திரங்களைத் துரித கதியில் வெப்பமாக்கும் நிலைக்குச் செயல்படுத்துகின்றார்கள்.

“மின்னல் தாக்கும் பொழுது… எவ்வளவு தூரம் விரிவடைந்து அது செயல்படுகின்றதோ” அதைப் போன்று
1.மனிதன் அணுவைப் பிளந்து அதன் உணர்வைச் சேமித்து
2.ஹைட்ரஜன் என்ற நீரின் அழுத்தத்தைக் கொண்டு அதை அடக்கி
3.மற்ற இயந்திரங்களை உருவாக்கி விஷத்தன்மை ஊட்டி இயக்கினாலும்
4.அதனின் கசிவுகள் வெளிவரும் பொழுது “சூரியனுடைய காந்த சக்தி” ஆதைக் கவர்ந்து தான் தீரும்.

இது பரவப் பரவ நச்சுத்தன்மைகளாக மாறி… சிந்திக்கும் தன்மை இழக்கச் செய்து விடும்.

அது மட்டுமல்ல…! அணுக்கதிரியக்கத்தின் தன்மை துரிதப்படுத்தி இயக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவச் செய்த பின்
1.அது சூரியனால் மீண்டும் ஈர்க்கப்பட்டு அதனுள் சென்ற பின் கொதிகலனாக மாறி அது வெடிக்கின்றது.
2.பூமிக்குள் எப்படி நிலநடுக்கம் ஆகின்றதோ அது போன்று சூரியனுக்குள் இத்தகைய நிலைகள் வெளிப்படுத்தும் நிலைகளும் வந்துவிட்டது.

காரணம்… சூரியன் இயற்கையாகக் கவரும் விஷத் தன்மைகளும் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள் இரண்டும் மோதும் போது
1.எலக்ட்ரிக் அதிகமாகி… பொறிகளாக உருவாகி
2.கொதிகலனாகிக் காந்தப் புயல்களாக வீசுகின்றது.

ஒரு மேக்னட்டை அதிகமாக்கிச் சுழற்றும் போது காந்தம் அதிகமாகி மின் உற்பத்தி அதிகமானால் அது அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வயர்களைக் கருக்குகின்றது… அதில் இயக்கக்கூடிய மோட்டார்களையும் ஃபுயூஸ் ஆக்கிவிடுகின்றது.

இதைப் போன்று நம்மை இயக்கக்கூடிய உயிரின் தன்மையும்
1.எலக்ட்ரானிக்காக உற்பத்தி ஆகி கொண்டிருக்கும் உயிரின் துடிப்பு அதிகமானால்
2.நம் உடலுக்குள் அதன் தொடர் கொண்டு இயக்கும் அணுக்களின் நிலையும் பாய்ச்சலாகிச் சிந்தனைகள் இழக்கப்பட்டு
3.இந்த உணர்வின் தன்மை அதீத நிலைகள் கொண்டு நாம் சிந்திக்கும் செயலிழக்கப்பட்டு
4.ஆதிகாலத்தில் ஒன்றை ஒன்று கொன்று எப்படிப் புசித்து வாழ்ந்தார்களோ
5.இதைப் போன்று அசுர உணர் கொண்டு செயல்படும் நிலையாக வந்துவிடும்.

ஆப்பிரிக்கா நாடுகளில் இன்றும் மனிதனுக்கு மனிதன் கொன்று புசித்திடும் நிலையும்… இறந்த மனிதனை உணவாக உட்கொள்ளும் அநாகரீக நிலைகளாக அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையும் உண்டு.

அது போல் மக்கள் வாழும் காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளில் சில இடங்களில் இத்தகைய மனிதனைப் புசிக்கும் நிலைகள் உண்டு.
1.நகரப் பகுதிகளில் விஞ்ஞான அறிவு வளர்ந்து இருந்தாலும் இதனுடைய வளர்ச்சி அங்கே சுருங்கி இருந்தாலும்
2.உலகம் முழுவதும் பரவும் நிலை மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் நிலை வந்துவிட்டது.

உணர்வின் அதிர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக் என்ற எர்த் நிலையில் வரப்படும் பொழுது எலக்ட்ரானிக் என்று நமக்குள் இயக்கும் “உணர்வுகள்” செயலிழக்கத் தொடங்கிவிடும்.

அதே போல் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட எலக்ட்ரானிக் கருவிகளும் திசை மாறிக் கணக்கீடுகளை தப்பாக இயக்கும்.

அதாவது… ஒவ்வொரு நாட்டிலும் அணுகுண்டுகளையும் மற்ற ஆயுதங்களையும் கம்ப்யூட்டரால் கண்கானிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

வெப்பங்கள் தாக்காது இருப்பதற்காக கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள் மின்னலோ மற்ற இயற்கையினுடைய சீற்றங்களும் தாக்காதபடி பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

கால நிலைகள் உணர்ந்து அத்தனை வெடிகுண்டுகளையும் பாதுகாக்கும் கம்ப்யூட்டரும்
1.மாறுபட்ட நிலை கொண்டு சிதைவுண்டால் புதைத்து வைத்திருக்கும் குண்டெல்லாம் வெடிக்கும் நிலைக்கு வந்துவிடும்.
2.வெடித்து விட்டால் உலகம் முழுமைக்குமே விஷத்தின் தன்மைகள் பரவிவிடும்.
3.மனிதர்களுக்குள் இது ஊடுருவினால் உருவம் இருக்கும் ஆனால் அவருடைய சிந்தனைகள் குலைந்து விடும் உடலை மாற்றிவிடும்

அது பரிசுத்தமாக எண்ணிலடங்காத வருடங்கள் ஆகிவிடும்.

அத்தகைய சூழ்நிலையில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த உடலில் நல்ல நினைவிருக்கும் பொழுதே நாம் எதைப் பெற வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் சொல்வது வெறும் சொல்லாகவோ எளிதாகவோ தெரியலாம். யாம் ஏற்கனவே சொன்னது அனைத்துமே என்று விஞ்ஞானிகள் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.

சூரியனுக்குள் எரிமலைகள் உருவாகும் என்று முன்பே சொல்லியிருந்தோம். இப்போது அடிக்கடி எரிமலைகள் சூரியனில் உருவாகி அது கக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இது பரவப் பரவ பூமியில் இயங்கக்கூடிய கம்ப்யூட்டர்கள் இயங்காத நிலையில் ஆகிவிடும்.
1.அதைப் போன்று தான் மனிதனுடைய உணர்வின் எண்ணங்கள்.
2.உணர்வுகள் அழுத்தம் அதிகமானால் மனிதனுடைய செயல்கள் மாற்றம் அடைந்து விடும்.

உயிர் எலக்ட்ரிக் நாம் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் எலக்ட்ரானிக் ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது… அந்த உணர்வின் செயலாகத் தான் கம்ப்யூட்டர் இயந்திரம் இயக்குகின்றது உணர்வின் உணர்ச்சிகள் அதன் வழியே இயக்குகின்றது

ஆகவே சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

1.நல்ல நினைவு இருக்கும் போதே அருள் மகரிஷிகள் உணர்வைப் பற்று கொள்ளுங்கள்.
2.பகைமை உணர்வுகளை அகற்றிப் பழகுங்கள்
3.அசுர உணர்வுகள் பரவாது அருள் ஞானிகள் உணர்வு கொண்டு நம்மை பாதுகாத்திடும் நிலையாகச் செயல்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரம் இதையெல்லாம் வென்றது. அதை எடுத்து நமக்குள் வளர்த்து இந்த உலகம் முழுவதும் பரவச் செய்து எல்லோரையும் காக்கக்கூடிய சக்தியாக நாம் செயல்படுத்துவோம்.

ஆரம்பத்திலே சூரியனைப் பார்த்து தியானிக்கும்படி சொல்லி இருந்தோம். ஆனால் சூரியன் பாழடைந்து அதற்குள் எரிமலைகள் உருவாகத் தொடங்கும் பொழுது அதை நிறுத்தி… யாரும் சூரியனைப் பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்

ஏனென்றால் அதில் உருவாக்கும் கசிவுகளை நாம் நுகர்ந்தால் அசுர உணர்வு நம்மையும் இயக்கிவிடும். ஆனால் இதையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்
1.அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் இப்பொழுது எடுக்க உங்களுக்கு பயிற்சி கொடுக்கின்றோம்
2.அதை எடுத்து வளர்த்து அனைவரையும் காத்திடும் சக்தியாக நீங்கள் செயல்படுத்துங்கள்.

ஐயப்பன்

 

சப்தரிஷிகள் சகலமும் அறிந்த முனிவர்கள் ஞானநிலை பெற்ற சித்தர்கள் இப்படி நம்மில் கலந்துள்ள பல பெரியவர்களின் நிலையெல்லாம் தாயின் வயிற்றில் கர்ப்பத்திலேயே வந்து பிறப்பதில்லை.

நிலையறிந்து புனிதத்தைப் போற்றும் தன்மையில் புனிதமாக்கும் எண்ணம் கொண்ட இப்பெரியவர்கள்
1.“எவ்வுடலையும் தன் உடலாக ஏற்றுத் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட முடிந்திடும்….”
2.நாம் அனைவரும் சரணம் கொண்டே வணங்கிடும் “ஐயப்ப சாமியின்” நிலையும் இந்நிலை போன்றதே.

ஒவ்வொரு முனிவரும் இம்மனித உடல் பெற்று முதல் பிறவியிலேயே சப்தரிஷி நிலைக்குத் தன் நிலையை உயர்த்தி வராத நிலையில் தான் தன் எண்ணத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு உடலுக்கும் வந்து புனிதத்தை நிலை நிறுத்தி வைக்கின்றார்கள்.

புனிதத் தன்மையின் ஜெபத்தைக் கொண்டு அவர்கள் எடுக்கும் ஜெப நிலைக்கும் அவர்கள் சக்தி நிலையும் பெரும் நிலையை அடைகிறது.

சப்தரிஷியும் முனிவர்களும் வந்த நிலையெல்லாம் பிறவியிலேயே அந்நிலை பெற்று வரவில்லை. பிறவி எடுத்து பிறவிப் பயனை அறிந்து வாழ்ந்து சிறுகச் சிறுக வந்ததுதான் அவர்கள் நிலையும்.

இம்மனித ஆத்மாவை நாம் பெறுவதற்கே புண்ணியம் கொண்ட நிலையில் தான் இப்பூவுலகுக்கே வந்துள்ளோம்.
1.இப்பூவுலகின் பல பிறவிகளைக் கடத்தியுள்ள நாம்
2.நாமெடுத்த இந்தப் பிறவியிலாவது உண்மை நிலைகளை அறிந்து நம் பிறவிப் பயனைக் காத்து வாழ்ந்திடலாம்.

காத்து வாழ்வதற்கே இந்நிலையில் உள்ள பல பெரியவர்களையும் சப்தரிஷிகள் ஞானிகள் ஞான சித்தர்கள் இப்படி ஒவ்வொருவரின் நிலையையும் இம்மனித ஆத்மா எடுத்த ஒவ்வொருவருக்கும் போதிக்கின்றேன்.

இன்று நாம் எல்லோரும் வணங்கிடும் ஐயப்பனின் நிலையும் இதுதான். அவர் பிறவி எடுத்துப் பிறக்கவில்லை.

பிறந்த ஒரு சிசுவை அது இறந்த பிறகு அதன் தாய் தந்தை அதை ஒரு பேழையிலே வைத்து அடக்கம் செய்து புதைத்த நிலையில் அந்நிலையில் ஆற்றுப் படுகையில் அது இருந்ததினால் அன்று வந்த பெரும் மழையும் காற்றும் பெரும் வெள்ளமும் அந்த ஆற்றுப்படுகையில் இருந்த மரப்பேழையை அடித்து வந்ததில் குழந்தைப் பாக்கியம் பெறாத அன்று ஆண்ட ஒரு அரசனின் கையில் அப்பேழை கிடைக்கும் தருவாயில் அவ்வரசன் அப்பேழையைத் திறக்கும் பொழுது உயிரற்ற நிலையில் இருந்த சிசுவின் உடலில் ஒரு முனிவரின் நிலை உடலுக்கு வந்ததினால் அவ் உடல் உயிர் பெற்றது.

அந்நிலையில் இருந்து அவ்வரசன் வளர்த்த நிலை கொண்டு நடந்தவை தான் பலவும். சிறு குழந்தையின் உடலில் சகலமும் அறிந்த முனிவரின் ஆத்மா குடி கொண்டவுடன் குழந்தை மழலையா பேசிற்று…?

சகலமும் அறிந்த ஞான முனிவரே அவ்வுடலில் குடிவந்த பிறகு அக்குழந்தையின் தன்மையில் இருந்தே அன்று வாழ்ந்த பல மக்களின் எண்ணத்தை புனிதமாக்கிடப் பல வழிகளைச் செய்தாரப்பா.

ஐயப்பன் என்ற நாமம் சூட்டிக்கொண்ட சகல நிலையும் அறிந்த அம்மாமுனிவர். அவர் இன்றும் உள்ளார் அன்றும் இருந்தார்.

வரும் இன்னல்களைப் போக்கி மனிதர்களின் மனதில் பக்தி நிலையை வளர விட்டால்தான் புனிதத் தன்மை பெற்று புனித ஆத்மாக்கள் ஆக முடியும் என்ற நல்ல ஆசீர்வாதம் தந்தே நடத்திச் செல்கின்றார்.

அவர் ஈர்க்கும் நிலையில் தான் பல பக்தர்களின் நிலை எல்லாம் புனிதம் பெற்று புண்ணியம் எய்தும் நிலையில் உள்ளதப்பா.

கடும் ஜெப நிலையில் உள்ளவரப்பா ஐயப்ப சுவாமிகள்…! இவர்கள் வணங்கும் படியிலும் கல் என்று வைத்து ஐயப்பன் என்று வணங்கும் நிலையிலும் பக்தி கொண்ட நிலையில் வணங்கிடும் இதயத்திலும் நல்வழியில் செல்வோரைத் தன் வழியில் ஜெபம் கொண்டே நல்லாசி வழங்குகின்றார் ஐயப்ப சுவாமிகள்.

எந்த நிலைகொண்டெல்லாம் அவரை எண்ணி வணங்குகின்றார்களோ அந்நிலையின் புனிதத்திற்கு என்றுமே அவர் அருளும் ஆசியும் உண்டப்பா.

ஆண்டவன் என்று நாம் வணங்கிடும் ஆண்டவர்கள் எல்லாம் இந்நிலை பெற்று… தன் ஜெபத்தினால் அருள்வதுதான் நாம் ஆண்டவனாக வணங்கிடும் ஆண்டவன்களின் நிலை எல்லாம்.

ஆண்டவன் என்று யார் உள்ளார் என்று கேட்டேன். ஆண்டவன் தான் நாமெல்லாம்.
1.ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனாக உதித்த நாம்
2.நம்மைப் பேயாக்கி ஆவி உலகில் அல்லல் பட்டு அலைந்து திரியும் நிலைக்கு வந்திடாமல் “நம்மை நாம் காக்க வேண்டும்…”

அந்நிலையில் இருந்து நாம் தப்புவதற்குத் தான் இப்படிப் பல நிலைகளை உணர்த்துகின்றேன். இப்பொழுது மனிதப் பிறவியில் உள்ள நமக்கு மட்டுமல்ல இஜ்ஜெப நிலை.

நம்மைச் சுற்றிக் கொண்டுள்ள எல்லா ஆத்மாக்களுமே நல் ஜெபம் பெற வேண்டும்.
1.ஆவி உலகில் உள்ள தன்னைத்தானே துஷ்டன் ஆக்கி பேயாக அலைந்து கொண்டுள்ள எல்லா ஆத்மாக்களுமே
2.தன் எண்ணத்தையும் குரோதத்தையும் நல் நிலை ஆக்கி ஜெபம் பெற்று
3.நல்ல தாய் தந்தையரின் கர்ப்பத்தில் பிறந்து இப்பிறவியின் பயனை முடித்திட வேண்டும்.
4.உங்கள் ஜெப நிலையில் இருந்து அவர்களுக்கும் நல்ல நிலை தா…! என்றே வணங்கிடுங்களப்பா.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் எம்மைப் பல பரிசீலனைகள் செய்து அதிலே பட்ட அவஸ்தைகள் எத்தனையோ. ஏனென்றால் பல சக்திகளையும் கொடுத்து என்னைப் பரிசீலனை செய்கிறார்.

அவர் கொடுத்த அவஸ்தைக்கெல்லாம் ஆளாகித் தான் உங்களிடம் இந்த உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஏனென்றால் கஷ்டத்திலிருந்து தான் எல்லா உண்மைகளையும் எனக்கு உணர்த்தினார். ஆனால் உங்களுக்குக் கஷ்டம் வரும் போது அதை நிவர்த்தி செய்வதற்குச் சக்தி கொடுக்கின்றேன்.

1.உங்களுக்குக் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தார் கஷ்டப்பட்டு…
2.நீங்கள் எங்களுக்கு எப்படிக் கொடுக்கின்றீர்கள்…? என்று கேட்டால் எப்படி…!

ஏனென்றால் இந்த இயற்கையின் உண்மையின் நிலைகளில் பல சக்திகளை குருநாதர் கொடுத்தார். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பல பரீட்சைகளுக்கும் ஆளாக்கினார்.

இப்பொழுது வரையிலும் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. யாராவது ஒருத்தர் இரண்டு பேர் வந்து நம் பவரைச் சோதிப்பதற்கு அது போல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

ஆனால் இது போன்று வரும்.
1.அதை எல்லாம் அந்த ஞானிகளின் உணர்வை வைத்துத் தான் தீமைகளை அழிக்க வேண்டுமே தவிர
2.தீமைகளிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் வளர்க்க வேண்டுமே தவிர
3.அவனை எப்படியாவது அடக்க வேண்டும் என்று “தீமையை வைத்துத் தீமையை அழிப்பது அல்ல…”

எத்தனையோ நிலைகள் வருகிறது… எத்தனையோ தவறுகள் நடக்கிறது. தவறு நடக்கும் போது அந்தத் தவறைத் திருத்துவதற்குத் தான் நாம் வழியைக் காட்ட வேண்டுமே தவிர அதைச் சுட்டிக் காட்ட வேண்டும்… ஞானிகள் வழியில் அதைச் செயல்படுத்த வேண்டும்.

அதைத் தான் இப்பொழுது யாம் (ஞானகுரு) இங்கே உபதேச வாயிலாகத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறோம். ஆனால்
1.ஒரு நிமிடம் அந்த குரு உணர்வை விட்டு விலகிவிட்டோம் என்றால்
2.அந்தக் குரு அருள் இல்லை என்றால் இருள் சூழும் நிலைக்கே நாம் செல்ல நேரும்.
3.உலகில் பேரும் புகழும் பெற முடியும்… புகழ் தேடி வரும்… அந்த நேரத்தில் இருள் சூழும்.
4.குரு கொடுத்த சக்தியை நாம் பெற முடியாது.

குருநாதர் கொடுத்த அளவுப்படி இந்த உலகில் எத்தனை தீமை இருந்தாலும் அந்த உண்மையின் நிலைகளைத் தெரிந்து கொண்டதனால்
1.மகரிஷிகளின் உணர்வை விளையச் செய்வதற்குத்தான்
2.இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம்.

பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்டது தான் பத்தாவது நிலை அடையும் உடல்

 

இந்த மனித உடலில் நம்மை அறியாது தீமை என்ற உணர்வுகளை வளர்த்து விட்டால் அந்த அசுர குணங்கள் கொண்டு மற்றவர்களைத் தாக்கும் நிலையே வருகின்றது

1.இந்த உடலின் இச்சை கொண்டு
2.பாசத்தால் தனக்குள் வளர்க்கும் பல தீமைகளை உணர்ந்து அதிலிருந்து விடுபடும் நிலைகள் வந்தாலும்
3.அசுர உணர்வு கொண்டு அது விளைந்த பின் மற்றவர்களை அழித்திடும் உணர்வுகள் இங்கே வருகின்றது.
4.இதை இராமாயணத்தில் (பத்தாவது நிலை) அடையும் இராவணனாகக் காட்டுகின்றார்கள்.

தான் கற்றுணர்ந்தோம் என்ற நிலையில் சர்வத்தையும் அறியும் நிலையும்… சர்வ இசைகளையும் கண்டுணர்ந்த அவன் அதன் வழி அவன் வளர்ச்சி வரும் பொழுது… சர்வ கலா சக்திகளையும் பெற்றவன் இராவணன் பத்தாவது நிலை அடையக் கூடியவன்…!

உயிரோ தசரத சக்கரவர்த்தி…! பத்தாவது நிலை அடையும் இந்த உயிர் சக்கரவர்த்தியாக மாறுகின்றது என்ற நிலையும்
1.இந்தப் பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்ட்து தான் பத்தாவது நிலை அடையும் உடல்.
2.இந்த உடலுக்கும் இந்த உயிருக்கும் உண்டான வித்தியாசத்தைத் தெளிவாக வான்மீகி காட்டுகின்றார் “நம்மை நாம் அறிவதற்காக..”

நமது உயிர் எத்தனையோ கோடிச் சரீரங்கள் நடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு சரீரத்திலும் புல்லைத் தின்றோம் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம் மனிதனான பின் சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் “இந்த மனித உடலைப் பெற்றோம்…! இந்தப் பிள்ளை யார்…?” என்று தன்னைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயத்தில்
1.உயிரால் வளர்க்கப்பட்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் தன் உணர்வுக்கொப்ப உடலை அமைத்து
2.அந்த உணர்வுக்கொப்ப உடலைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து
3.அதிலே வளர்ச்சி பெற்றவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.

அவன் நிலைகளை நாம் எண்ணிப் பார்ப்பதற்குக் காவியத்தை அப்படிப் படைத்துக் காட்டுகின்றனர். அதாவது…
1.நஞ்சை வென்று விண்ணுலகம் சென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்
2.அகஸ்தியன் துருவனாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அருள் ஒளி பெற்று அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து
3.இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி ஒளியாக இன்றும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும்
4.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நம்மை எண்ணி ஏங்கும்படிச் செய்கின்றார்கள்.

அதை யாராவது நாம் இப்பொழுது எண்ணுகிறோமா…? என்றால் இல்லை.

சித்தர்கள் கடும் தவமிருந்த “மண்டலக் கணக்கு”

 

நம் முன்னோர்கள் ஜெபித்த நிலை பூஜை முறை எல்லாமே அன்று இருந்த சித்தர்களின் ஜெப நிலையில் இருந்து அறிந்து வெளியிட்ட சக்தி நிலைகளை வைத்துத் தான்… நம் முன்னோர்கள் ஆண்டவனை நாம் ஜெபிப்பதற்குக் கோவில்கள்… பூஜை முறை என்று பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.
1.48 மண்டலங்களின் தொடர்புடைய இப்பூமியின் ஈர்ப்பு நிலையை உணர்ந்து
2.48 மண்டலங்களில் இருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.

இப்பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இப்பூமியில் உள்ளதைப் போல் இப்பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது.

இம்மனித ஜீவாத்மாக்கள் இந்த 48 மண்டலங்களிலும் இல்லை. இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான் பூமியில் உள்ள மனிதர்களின் நிலை எல்லாம் உள்ளன.

இப் பூமியின் நிலையே இக்கலி முடிந்து கல்கி வந்த பிறகு பெறக்கூடிய உயிர் நிலைகளின் உருவ அமைப்புகள் மாறுபட்ட தன்மையில் தான் புதிய உயிரணுக்கள் எல்லாம் தோன்றும் நிலையில் உள்ளது.

1.மனிதன் பெண் ஆண் என்ற இன வேறுபாட்டுடன் வாழும் தன்மையில் இன்றுள்ள நிலை
2.அடுத்து வரும் கல்கி நிலையில் மாறுபட்ட நிலையில் தான் வருகின்றது.
3.வரும் உண்மைகளை இன்றே நாம் பகர்ந்து விட்டால் பல சித்தர்களின் கோபத்திற்கு ஆளாகும் நிலை நமக்கு எதற்கு…?

இந்நூலில் நாம் அறிந்த பல உண்மைகளை சிறுக சிறுகத்தான் அருளி உள்ளோம். இந்நிலையில் இன்னும் “பல உண்மை நிலைகள்” உள்ளன. அவரவர் எடுக்கும் ஜெப நிலையை கொண்டு அறிந்திடலாம்.

அனைத்தையுமே. ஒரு மண்டலம் – 48 நாள் என்ற ஜெப நிலையை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியதும்…
1.நமக்கு முதலில் இருந்த சித்தர்கள் கடும் தவம் இருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மண்டலம் என்ற 48 நாளை ஜெபத்திற்கு உகந்ததாக எடுத்து ஜெபம் பெற்று அறிந்தனர் பல உண்மைகளை.
4.அதன் வழியில் வந்தது தான்… இன்று ஒரு மண்டலம் 48 நாள் என்னும் முறையயெல்லாம்.

நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்கு புரிந்துவிடும்

நம் கண்ணிற்கு நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுது கணக்கில் அடங்க நட்சத்திரங்களைக் காணுகின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியை காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன.

1.இம் மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இம்ம மனித உடலை பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.
2.நம்மைக் காட்டிலும் திறம் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன பல மண்டலங்களில்.

ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை.

நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்கள் உள்ளன. இவ்வுலகிலே நாம் இப்பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தை ஜெபம் பெற்று எண்ணத்தையும் நினைவையும் என்றும் நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தி ஆக்கி
1.இக்கலி எனும் காலத்தில் மீண்டும் கல்கியுடன் கலந்து வாழும் பக்குவ நிலைக்கு
2.நம்மை நாம் பக்குவப்படுத்தும் நிலைக்கு வந்திடவே
3.இப்பாட நிலைக்கு ஈஸ்வரபட்டனாகிய நான் ஆசை என்னும் நிலை கொண்டே இந்நிலையில் வந்து அருளியுள்ளேன்.
4.ஒவ்வொருவரும் கால நிலையை கடத்திடாமல் அருள் பெறுங்கள்

இவ்வுலகில் பல நிலைகளை இன்னும் உங்களுக்கு விளக்குவேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்… என்று பல சரீரங்களில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான்
1.துவாரகா – உடலுக்குள் ஒளிக்கற்றைகள் பெருகி
2.சிறுகச் சிறுக மின் அணுவாக மாறி
3.அதன் உணர்வுகள் அணுக்களாகிக் கற்களாக மாறுகின்றது.

கற்களாகி உறையும் தன்மை வரும் போது “கருவிழி” என்ற உணர்வுகள் அது அணுத் தன்மை அடைந்து நரம்பு மண்டலத்தின் வழி கூடி ஒளிப்படலமாகப் பார்க்கும் தன்மை வருகின்றது.

ஆனால் இந்த ஒளிப் பிளம்பு கருவிழி மறைந்து விட்டால் ஒளிப்படலம் தெரியவே தெரியாது.

ஆனால் பார்க்கும் சக்தியாக அந்த அணுக் கருக்கள் எப்படி உருவானது..? கண்கள் எப்படி உருவானது..?

1.வாசு தேவன் நாம் சுவாசிப்பதை உருவாக்கக் கூடியவன் உயிர்.
2.தேவகி… நாம் பார்க்க வேண்டும் என்ற தேவைக்கு வரும் போது அது வருகிறது.

வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் பிறந்தான் கண்ணன் (கண்கள்) என்று நம் கண்கள் எப்படி உருவானது…? என்று இதைத்தான் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகிறது.

அதே சமயத்தில் மனித உடல் பெற்ற பின் ஒவ்வொரு நாளும் நாளை என்ன செய்வது…? என்று கற்பனை செய்கின்றோம். அதன் உணர்வின் தன்மை வடிவமைக்கின்றோம். அந்த வடிவமைப்பின் தன்மை தனக்குள் பதிவாகின்றது.

ஆக துவாரகா…! அந்த உணர்ச்சியின் தன்மை என்ன செய்கிறது…?

1.புறத்தால் கண்களானாலும்… அகத்திற்குள் உணர்வின் தன்மை முதலில் படமாக்குகிறது (நாம் எண்ணிப் பார்க்கும் நிலைகள்)
2.படமாக்கிய பின் புறத்தின் தன்மை கொண்டு நாம் எழுதுகின்றோம்.
3.இந்த உடலுக்குள் பதிவாகவில்லை என்றால் எதையும் எழுதவே முடியாது.

ஆகவே உணர்வின் தன்மை பதிவாகும் போது பதிவின் நினைவுகளை நாம் நினைவாக்குகின்றோம். துவாரகா – இந்த உடலுக்குள் சிந்தனை செய்து அந்த உணர்வுகளை எடுத்துத் தான் அடுத்து நாம் செயல்படுத்த வேண்டும்.

இது எல்லாம் நம் வாழ்க்கையில் எது எப்படி இயக்குகிறது என்ற நிலையைத் தெரிந்து கொள்வதற்குத்தான் இதைக் கொடுக்கின்றோம். ஆகவே இதன் உணர்ச்சிகளை நாம் வடிவமைத்து அப்புறம் என்ன செய்கிறோம்…?

புறத்தால் எழுதப்படும் போது அதிலே குறை என்று வரும் போது திருத்துகின்றோம். உள்ளுக்குள் மனதானாலும் பதிவான பின் அதை எழுத்திலே கொண்டு வருகின்றோம். எழுத்து என்று வரும் போது தவறு வந்தால் திருத்திப் பழக வேண்டும்.

இதைப் போல் தான் துவாரகா யுகத்தில் தீமைகளிலிருந்து மீண்டிடும் சக்தியாகத் தன்னுடைய நிலைகள் வருகிறது… கண்களாகின்றது. (சிறைச்சாலைக்குள் இருக்கும் தன் அன்னை தந்தையரைத் தவறிலிருந்து மீட்கக் கண்கள் வருகிறது)

ஒரு படத்தை (சித்திரம்) பார்க்கின்றோம்… பிழை என்ற நிலை வருகிறது. ஒருவன் தவறு செய்கிறான் என்ற நிலைகளில் கண்கள் அதைப் பார்க்கின்றது. ஆனால் அவனின் அந்தத் தவறுகள் நமக்குள் பதிவாகக் கூடாது.

தவறு செய்பவன் உடல் கிரேதா. அவன் செய்யும் தவறை நாம் நுகரும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வு திரேதா யுகத்தில் நம் உடலுக்குள் செல்கிறது.

அப்போது அந்தந்த உணர்வின் உணர்ச்சிக்கொப்ப வைரஸ் (கிருமி) என்று சொல்கிறோமே அத்தகைய அணுக்கள் உருவாகின்றது.

அந்த அணுக்களின் உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகிறது. அதன் மலத்தின் தன்மை கொண்டு இரத்தத்தில் வருகின்றது. தீமையின் விளைவாக நோயாகிறது.

ஆனால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நம் இரத்தத்திலே கலக்கப்படும் போது நம் உடலில் உள்ள உறுப்புகளை அது சீராக்குகிறது. அப்போது அந்த ஞானிகளின் உணர்ச்சியின் எண்ணங்கள் நமக்குள் வரும்.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே கிரேதா திரேதா துவாரகா என்ற நிலையில் நம் உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு நிலையையும் வேதங்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

உணர்வுகளின் கலவைகளையும் அது நம்மை இயக்குவதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்

 

உதாரணமாக ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால்… அவனுக்குள் விளைந்த கோபமான உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருமே என்றால் அதன் உணர்வின் தன்மையை மற்றொரு மனிதன் நுகர்ந்தால்… அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வந்து பெண் சக்தி என்ற நிலைகள் “காளியாக” மாறுகின்றது.

உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் உணர்ச்சியின் வேகங்கள் வரும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது.

ஆக… கண் கொண்டு ஒருவர் தவறு செய்யும் உணர்வினைக் கண் கருவிழி பதிவாக்கித் தன் உடலுக்குள் வைத்துக் கொண்ட பின் இந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் இந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்த எண்ணங்கள் வரும் பொழுது தான்
1.கோபத்தின் நிலை கொண்டு இந்த உணர்வுகள் இவன் எப்படிக் கோபப்பட்டானோ
2.அதே மாதிரி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அந்த உணர்வின் அறிவாக அங்கே இயக்குகின்றது.

ஆனால் அவன் நுகர்ந்த உணர்வுகள் காளியாகி உடலான “சிவன் ருத்ர தாண்டவமாக” அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் அங்கங்களும் அசைவுகளும் வருகின்றது.

அதே சமயத்தில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து அரவணைக்கும் தன்மை வருகின்றது.

மகிழ்ச்சி பெறும் உணர்வை ஒரு மனிதன் வெளிப்படுத்துகின்றான் என்றால்… கண்ணில் உள்ள கருவிழி அந்த மகிழ்ச்சி பெறும் மனிதனைப் பதிவாக்கி விட்டால்
1.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா அவன் மகிழ்ச்சி பெறும் உணர்வினை நாம் நுகரப்படும் பொழுது
2.உயிரிலே பட்டபின் இனிமையான நாதங்களாக வாசிக்கின்றது.

உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாய் தனது நிலைகளுக்கொப்ப குரைக்கப்படும் பொழுது “இடைமறித்தால்” எப்படி வருகின்றது…?

1.உபதேசத்தைக் கூர்ந்து கேட்க வேண்டும் என்ற எண்ணமும்
2.நாய் குரைத்து அதைக் கேட்க விடாது இப்போது தடைப்படுத்துகிறதே…! என்ற உணர்வும் இந்த இரண்டும் கலந்த எண்ணங்களாக நமக்கு வருகின்றது.

ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ இது கலவையின் உணர்வின் தன்மையாக அணுவாக உருவாக்குவது இந்திரீகம் என்பது. ஆகவே இந்த உடலில் இந்திரலோகம் என்று அதைக் காரணப் பேர் வைத்து அழைத்தார்கள்.

நல்ல உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு எதிர்மறையான உணர்வு இரண்டும் கலக்கப்படும் பொழுது
1.நமது உயிர் இதனை நன்மை என்று கருதினாலும் இந்த உணர்ச்சிகள் நமக்குள் அதன் மீது “வெறுப்பான உணர்வுகளும்” கலக்கின்றது.
2.வெறுப்பு கலந்த பின் நம் உடலுக்குள் அது இந்திரீகமாக மாறுகின்றது
3.சாமி நன்றாக பேசிக் கொண்டிருந்தார்… இந்த நாய் குரைத்தது கேட்க முடியாமல் போய்விட்டது…! என்று திரும்பத் திரும்ப எண்ணினால்
4.இந்த உணர்வின் “அதிர்வுகள்” அடுத்தாற் போல் அந்த அணுவின் தன்மை அடைகின்றது.

நாம் நல்ல நிலைகளைச் செயல்படுத்தி வந்தாலும் இதே குணங்கள் என்ன செய்யும்…?

கண்ணால் பார்க்கப்பட்டது ஹரி கிருஷ்ணா. சூரியன் ஹரி…! அந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிவாகிய நிலைகள் வந்தாலும்… செவி வழி கொண்டு உணர்வின் தன்மை வரும் பொழுது… நினைவு அதன் பால் கவர்ந்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து “இரண்டும் கலந்து” அது இந்திரீகமாக மாறுகின்றது.

அவ்வாறு இந்திரீகமாக மாறினால் அதன் உணர்வின் தன்மை மீண்டும்… “சாமி அன்றைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்… அதைக் கேட்க விடாது நாய் குரைத்துக் கொண்டே இருந்தது…” என்ற அந்த உணர்வும் கலந்து கலந்து இதன் அணுவின் தன்மையாக விளையும் தன்மை வந்து விடுகின்றது.

அப்படிப்பட்ட அணுத்தன்மை அடைந்து விட்டால் பிரம்மா…! நான் சொன்ன உணர்வும் நாய் குரைத்த உணர்வுகளும் கலக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக அணுவின் தன்மை அதையே உணவாக எடுத்து நமக்குள் இந்திரலோகத்தில் சேர்கின்றது.
1.நல்ல கருத்துக்களைக் கேட்க விரும்பினோம்
2.இடைமறித்து நாய் குரைத்துத் தடுத்தது என்ற எண்ணங்களும் வரும்.

இதே போன்று நீங்கள் யாரிடமும் எடுத்து இதைச் சொல்லும் பொழுது நல்ல செயல்களை செய்தாலும் அடுத்து எவராவது இடைமறித்தால் தாங்கும் நிலை இல்லாது “அவர் மீது வெறுப்பின் உணர்வு கொண்டு” நல்ல வார்த்தை இல்லாதபடி நம்முடைய சொல்லும் சொல்ல வேண்டி வரும்.

ஆக மையமாக இருந்து… சொல்வதைக் கேட்டாலும் அவருக்குள் என்ன இப்படிப் பேசுகின்றார்…? என்று வெறுப்பின் தன்மை வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சந்தர்ப்பம்…!
1.உணர்ச்சியின் தன்மை செவி வழி உந்தி
2.கண் வழி அந்த உணர்வினை நுகரும் தன்மையும்
3.நுகர்ந்த உணர்வு உயிரின் தன்மை கொண்டு உணர்ச்சிகளின் தன்மை உடலை இயக்குவதும்
4.அதற்குள் எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளை எப்படி உருவாக்குகின்றது…? என்பதனை
5.நமது குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் அனுபவரீதியிலே எம்மை அறியும்படி செய்தார்.

தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் “அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?”

 

ஜீவனுள்ள மண்டலம் ஜீவனற்ற மண்டலம் என்று இரண்டு நிலை பெற்ற மண்டலங்கள் பல சுற்றி கொண்டுள்ளன. ஜீவனுள்ள மண்டலங்களைப் பகர்ந்துள்ளேன் பல நிலையில்.

ஜீவனற்ற மண்டலம் எந்நிலையில் வந்தது…? அஜ்ஜீவனற்ற மண்டலங்களில் ஒலி ஒளி காற்று நீர் மற்ற ஜீவராசிகள் எவையுமே அந்நிலையில் இல்லை.

வெறும் கல்லும் மண்ணும் கலந்த பெரும் பெரும் கோளங்களாக இருண்ட நிலைகள் கொண்டு அந்தரத்தில் அப்படியே நிற்கும் நிலையில் பல மண்டலங்கள் உள்ளன.
1.அம்மண்டலங்கள் மற்ற மண்டலங்களுடன் மோதும் தன்மையும் இல்லை
2.சூரியன் தன்னுள் அதை ஈர்க்கும் தன்மையும் அதற்கு இல்லை… ஜீவனே இல்லாமல் உள்ளன அம்மண்டலங்கள்.
3.வளர்ச்சியும் இல்லை குறைவும் இல்லை…
4.எந்த நிலையில் அது பிற மண்டலத்தில் இருந்து ஜீவன் இல்லாத நிலையில் உதிர்ந்ததுவோ
5.அதே நிலையில் அந்த நிலை கொண்டே அது உள்ளது… அம் மண்டலங்களுக்கு ஒலியும் இல்லை.

இப்பொழுது பூமி சுற்றும் வேகத்தில் ஓ…ம் ஓ…ம் என்ற ஒரு நிலை கொண்ட நாதத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. அந்நாதத்திற்குத் தகுந்த மணங்களைத் தான் நாம் பெறுகின்றோம்.

நம் பூமிக்கு மேல் பெரிய பூமியான வியாழனின் நாதம் வேறுபடுகின்றது. நம்மைக் காட்டிலும் சிறிய மண்டலமான சந்திரன் செவ்வாய் இப்படிப் பல மண்டலங்களின் நாதமும் வேறுபட்டுத் தான் உள்ளது.

அதனதன் ஈர்ப்புத் தன்மையைக் கொண்டும் அவை சுற்றும் நிலையைக் கொண்டும் அவற்றின் நாதம் வேறுபடுகின்றது.
1.சூரியனின் வேகம் வெகு துரிதமாக உள்ளதால் அதனுடைய வேகத்தைக் கொண்டு
2.அதனுடைய ஓங்கார இசை பெரும் ஓசையான “ஓ-ஓ…” என்றே தான் அதுவும் சுற்றுகின்றது.

இம்மண்டலங்களின் ஒவ்வொன்றின் நிலையையும் ஊன்றிப் பார்த்தால் பல உண்மை நிலைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது இப்பாடநிலையில் வரும் மண்டலங்களின் தன்மையை வைத்து இதைப் படித்திடும் ஒவ்வொருவரின் நிலைக்கும்
1.அவரவர்களின் நிலைக்கு ஏற்ப எண்ணங்கள் தோன்றி இந்நிலையின் தத்துவம் உண்மையா…? என்ற வினாவும் எழுந்திடலாம்.
2.இந்நிலை கொண்ட வினா எழும்பத்தான் இப்பாட நிலையே வந்துள்ளது.

கண்டார் விண்டதில்லை விண்டார் கண்டதில்லை என்று உரைப்பர் நம் முன்னோர். நாம் நம் ஜெப அருளினால் கண்டுள்ளோம் இவ்வுண்மையை. நாம் அறியா உண்மை பலவும் உள்ளன.

இவ்வுலகினில் உதித்துள்ள மனித உயிரணுக்கள் எல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையால்
1.நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல இவ்வுலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல. தனித்து நிற்பவை எவையும் இல்லை.
2.எல்லாவற்றிலுமே எல்லாமாகக் கலந்துள்ள நாம்… நம் உயிராத்மாவை பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி… சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
3.இவ்வுலகத்தின் உண்மை மட்டுமல்ல பல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.

ஆனால் இன்று நம்மில் இருந்து நம்முடன் கலந்து பிறந்த பல ஜீவாத்மாக்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டு தன்னைத்தானே அழிக்கும் நிலையில் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்குச் செல்லும் நிலைக்காகப் பல நிலைகளை விஞ்ஞானத்தில் சென்று காண பல முயற்சிகளைச் செய்கிறார்கள்.

நல்வழிக்குச் செய்திடலாம். ஆனால் ஒருவர் செய்வதை ஒருவன் அழிப்பதற்காக இவ்வுலகின் காற்று மண்டலத்தில்… காற்று மண்டலத்திற்கு மேலும் பல நிலை கொண்ட விஷ ஊசிகளை (இராக்கெட்டுகளை) ஏவி விட்டிருக்கின்றார்கள்.

அவன் செய்து அனுப்பிய விஷ ஊசிகள் அவனைத் தாக்காத நிலை கொண்டு அவன் அனுப்பும் கூடுகளை அவ்விஷ ஊசிகள் வந்து தாக்கினாலும் பாதிக்காத தன்மையில் பல நிலைகளில் பறக்க விட்டுள்ளான்.

பிற மண்டலங்களின் நிலையை அறிந்திட தன்னைத்தானே அழித்து ஒருவனுக்கு மேல் பொறாமை கொண்டு விஞ்ஞானம் என்ற நிலையில் காலத்தைக் கடத்திக் கொண்டு ஏனப்பா அந்த நிலை பெற வேண்டும்…?

அன்றிலிருந்து இன்று வரை பல சித்தர்கள் பல உண்மை நிலைகளைத் தன் எண்ணத்திலும் தன் ஜெபத்திலும் ஈர்த்து எடுத்துத் தன் உடலுடனே பறந்து பல மண்டலங்களுக்குச் சென்று… பல ஆற்றல்களை அறிந்து அவர்கள் எழுதிய பல நூல்கள் தானப்பா… இன்றைய விஞ்ஞானிகள் ஆராயும் தன்மை கொண்டு நடத்தி வரும் நாடகங்கள் எல்லாம்.

அந்நாடகத்தின் நிலையினால் தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?

உண்மை நிலைதனை ஜெப நிலை கொண்டு அறிந்திடத் தான் நாம் அறிந்த உண்மைகளை இந்த நூல் வழியில் ஒவ்வொருவரும் அறிந்து நல் ஜெபம் பெற்று நடத்திடத் தான் இப்பாட நிலை.

இப்பாட நிலையில் உள்ள கருத்துக்களின் உண்மையை அறிந்திட ஒவ்வொருவருமே ஜெபத்தில் இருந்து கண்டிடலாம்.
1.எல்லோருமே அச்சக்தியின் சக்திகள் தான்
2.ஜெபம் பெறும் நிலையில் இது உண்மைகளை எல்லோரும் அறிந்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) வேலையை விட்டு நின்று… சரியான சாப்பாடு இல்லாது… நண்பர்களும் மற்றவர்களும் கேவலமாகப் பேசி மனம் மிகவும் சோர்ந்த நிலையில் படுத்திருக்கின்றேன். அந்த நேரத்தில் என்னை ஒரு உணர்வு இழுத்து “பழனி மலைக்கு மீதாவது போய்ப் பார்க்கலாம்…” என்று இயக்குகிறது.

அங்கே போகத் தொடங்கியதும் குருநாதர் இங்கிருந்து குறுக்காட்டுகிறார்.

1.டேய்……. பணம் வேண்டும்… செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொல்வாக்கு வேண்டும்…
2.இந்த மூன்றும் வேண்டும்…! அது இல்லை என்றால் பிழைக்க முடியாது.
3.போகிறாய் அல்லவா… அவனிடம் கேளுடா…! என்று சப்தமிடுகிறார்.

யாரிடம்..?

இந்தப் பக்தியில் (ஆரம்பத்தில்) நான் இருப்பதால் “முருகனிடம் கேளுடா…!” என்கிறார் குருநாதர்.

ஏற்கனவே குரு பல உண்மைகளை எனக்கு உணர்த்தியிருக்கின்றார். உலகத்தில் இருக்கும் மந்திரவாதிககள் செயல்களிலிருந்து… மற்ற உலக நடப்புகள் அனைத்தையும் சொன்ன பிற்பாடு “நீ முருகனிடம் சென்று பணத்தைக் கேள்…” என்று சொன்னால் எப்படி இருக்கும்…!

அங்கே பசியுடன் தான் மேலே போகிறேன். ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்கிறோம் ஏது பண்ணுகிறோம் என்று தெரியாதபடி படி மேல் கிடு… கிடு… என்று ஏறிப் போகின்றேன்.

உள்ளே முருகன் சிலை இருக்கும் சந்நிதிக்கே சென்றுவிட்டேன். முன்னேப் பின்னே முருகனை நேரடியாகப் பார்த்ததில்லை. “சிரித்த முகமாக முருகனே வருகிறார்…!”

இதைத் தான் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது குருநாதர்.. முருகன் வந்ததும் கேளுடா என்று… இந்த நினைவு வருகிறது. சிலையிலிருந்து அப்படியே முருகன் வருகிறது.

அந்த நேரத்தில் அங்கே கூட்டமும் இல்லை. யாரோ கொடுத்த மாலையை என் கழுத்தில் கொண்டு வந்து போடுகிறார்கள். ஏனென்றால் அங்கே தெரிந்தவர்கள் இருப்பதால் நான் டிக்கெட்டும் எடுக்கவில்லை உள்ளேயே போய்விட்டேன்.

மொத்தம் அங்கே இரண்டே பேர் தான் இருக்கிறோம். மாலை எனக்கு விழுகிறது. முருகன் சிரித்துக் கொண்டே வருகிறார்.

பார்த்ததும் குருநாதர் சொன்ன ஆசையெல்லாம் விட்டுவிட்டது. அங்கே முருகனிடம் என்ன கேட்கிறேன்…?

1.முருகனே காட்சி கொடுத்துவிட்டான் இனி நமக்கு வேறு என்ன வேண்டும்…?
2.எல்லாம் அவனே பார்த்துக் கொள்கிறான்…! என்ற இந்த எண்ணம் தான் வந்தது.

குருநாதர் இதற்கு முன்னாடி காட்டிய நிலை எல்லாம் இருக்கிறது அல்லவா. இவ்வளவு பெரிய சக்தி நமக்குக் கிடைக்கிறது என்று சொன்னால் முதலில் “நம் புத்தி சரியாக இருக்க வேண்டும்…”

கோபம் வந்து ஏதாவது செய்து விட்டால்… இவ்வளவு பெரிய சக்தியைத் தவறாகப் பயன்படுத்தினால் என்னென்ன கேடுகள் வரும் என்று குருநாதர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒரு கையைக் நீட்டினால்
1.வேருடன் மரம் கீழே சாய்கிறது
2.காக்காயைக் காட்டினால் காகத்தின் இறக்கை பிய்ந்து விழுகிறது.
3.பாம்பைக் காட்டினால் பாம்பு அப்படியே ஒடுங்குகிறது
4.மாட்டைக் காட்டினால் அது செயலற்றதாகிறது
5.மனிதனைக் காட்டும் போது கை கால் நின்று போகிறது
6.ரோட்டில் போகிறவனைக் கை கால் வராது ஆக்குகிறது

இத்தனையும் செய்து காட்டியவுடன் இந்தப் பவர்கள் இருப்பதால் நீ எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை… என்று சொல்லி குருநாதர் என்னென்னமோ காட்டுகிறார். இதை எல்லாம் சொல்லிச் செய்து பார்க்கவும் சொல்கிறார்… முதலில்…!

அந்தச் சக்தி எல்லாம் வந்தவுடன் திமிரும் கூட ஏறுகிறது.

முருகனை இதற்கு முன்னாடிப் பார்த்ததில்லை அல்லவா…! முருகனின் காட்சி கிடைத்தவுடன் இந்த எண்ணம் எல்லாம் ஓடுகிறது.

மேலே சொன்ன சக்தியெல்லாம் அடுத்தவர் மீது பாய்ச்சிச் செயல்படுத்தினால் அவர்கள் வேதனைப்படுவார்கள். அவர்களின் வேதனை எல்லாம் உன்னிடம் வந்து சேரும்….
1.கடைசியில் ஒட்டு மொத்தமாக எல்லா வேதனையும் நீ அனுபவிக்க வேண்டும் என்று குருநாதர் சொல்கிறார்.
2.இவ்வளவு தெரிந்த பிற்பாடு இது நமக்கு எதற்கு…?

இது எல்லாம் உன்னைக் காப்பாற்றுவதற்கு உதவும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு இதையும் சொல்லி எச்சரிக்கை செய்கிறார் குருநாதர்.

ஆரம்பத்தில் நாயெல்லாம் என்னைக் கடிக்க வரும். அந்த நேரத்தில் குருநாதர் சொன்னபடி விரலை நீட்டினால் வாயைக் கட்ட முடிகிறது.

இந்த உணர்வின் தன்மையை எண்ணும் போது அந்த நாய் எவ்வளவு வேதனைப்படுகிறதோ உன்னை எண்ணியே தான் அது வேதனைப்படும். கடைசியில் அது எதையும் சாப்பிட முடியாதபடி ஆனது போல் நீயும் சோறு சாப்பிட முடியாமல் நீயும் வேதனைப்படுவாய். இதையும் குருநாதர் காட்டி இருக்கின்றார்.

அப்புறம் நமக்கு எப்படி அது மேல் ஆசை வரும்…? சாட்சாத் முருகனே சிலையிலிருந்து எழுந்து வருகிறார் என்றால் எனக்கு எப்படி இருக்கும்…?

நான் என்ன செய்தேன்…!

செல்வம் செல்வாக்கு சொல்வாக்கு வேண்டும் என்று கேட்பதை விட்டுவிட்டேன்.
1.நான் நல்லவனாக இருக்க வேண்டும்
2.நான் பார்ப்பது எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்
3.என்னை அறியாது ஏதாவது தீங்கான செயல் வந்தது என்றால்
4.அது வராது தடுக்க வேண்டும்… எனக்கு ஒன்றுமே தெரியாது.
5.நான் யாருக்காவது கெட்டதைச் சொல்லி விட்டேன் என்றால் அவர்களிடமிருந்து கெட்டது தான் போக வேண்டுமே தவிர
6.“என்னால் அவர்களுக்குக் கெட்டது ஆகிவிடக் கூடாது…!” என்று இதைக் கேட்டேன்.

அங்கிருந்து கீழே வந்த பின் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் காத்துக் கொண்டிருக்கின்றார் குருநாதர். என் குடுமியைப் பிடித்தார். வாயில் வராத பேச்சுக்களைப் பேசினார். வார்த்தைகள் இன்னது தான் என்று இல்லாத அளவுக்குப் பேசுகின்றார். அடி… அடி… என்று அடிக்கின்றார். சட்டை எல்லாம் கிழித்து விட்டார்.

அங்கிருந்து சந்தோசமாகக் கீழே இறங்கி வந்தேன், அங்கே என்னென்னமோ காட்சி கிடைத்தது. இங்கே வந்தால் உதை விழுகிறது. குருநாதர் முகத்தையும் பல்லையும் கண்களையும் பார்த்தால் பயங்கரமாக இருக்கின்றார்.

இங்கே வாடா……. என்று சட்டையைப் பிடித்து இழுத்தார்.

நீ நல்லவன் தான்…! நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உன்னிடம் பணம் இல்லை என்றால் ஒருவரும் மதிக்க மாட்டான். செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொல்வாக்கு வேண்டும்… இந்த மூன்றும் வேண்டும்…! இது இல்லை என்றால் மனிதனுக்கு வழி இல்லை என்று சொல்கிறார். அதையே மீண்டும் சொல்கிறார்.

1.குருநாதராக இருந்து முருகனையே காண்பித்துக் கொடுக்கின்றீர்கள்
2.இங்கே முருகனும் இருக்கின்றார்… நீங்களும் இருக்கின்றீர்கள்…!
3.எனக்கு வேறு என்ன வேண்டும்…? இதைக் காட்டிலும் வேறு என்ன சொத்து வேண்டியிருக்கிறது…?
4.நான் இப்படியே கேட்டேன்… வேண்டியதில்லை…! என்று சொன்னேன்.

இது நடந்த நிகழ்ச்சி.

அகஸ்தியன் வெளிப்படுத்திய எண்ணங்களையும் உணர்வுகளையும் மூச்சலைகளையும் நாம் நுகரப் பழக வேண்டும்

 

பிறந்த பருவத்திலிருந்து அகஸ்தியன் வானை நோக்கி உற்றுப் பார்த்த்துப் பல பல நிகழ்ச்சிகளைக் காணுகின்றான் அவனை அறியாமலே.

அதாவது… சூரியனின் இயக்கத்தின் நிகழ்ச்சிகளும்… அது நஞ்சைப் பிரிக்கும் நிலையும் தனக்குள் ஒளியின் சக்தியாக மாற்றிக் கொள்வதும்… மாற்றியது தனக்குள் பாதரசங்களாக மாறுவதும்… சுழற்சியிலே வெளிப்படும் இந்தப் பாதரசங்கள் பிற நட்சத்திரங்களிலிருந்தும் மற்ற கோள்களிலிருந்தும் தன் ஈர்ப்புக்குள் வரும் அந்தச் சக்திகளை மோதி… விஷத்தைப் பிரித்துத் தனக்குகந்ததாக இப்படி மாற்றிக் கொண்டே வருகின்றது சூரியன்.

இதையெல்லாம் அகஸ்தியன் கண்டுணர்ந்து தனக்குள் விளையச் செய்தபின்
1.அவனுக்குள் அதனின் எண்ணத் தோற்றங்கள் வருகின்றது
2.மனிதனான பின் இந்த உணர்வின் எண்ணங்கள் வருகின்றது… அந்த மூச்சலைகள் வெளிப்படுகின்றது
3.சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.
4.வளரும் பருவத்தில் “நஞ்சை வென்றிடும் உணர்வாக” அகஸ்தியன் நுகரப்படும் பொழுது அவனுக்குள் அந்தச் சக்தி வளர்கின்றது.

27 நட்சத்திரங்களும் கடுமையான விஷத்தன்மை வாய்ந்தது. ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி ஒன்றுடன் ஒன்று மோதும் போது தான் “மின்னலாக மாறுகின்றது…. அந்த மின் பொறிகள் வீரியமாக வெளி செல்கிறது…”

விஞ்ஞான அறிவு கொண்டு கரண்டை உற்பத்தி செய்யும் பொழுது இரண்டு கரண்ட் வயர்களை இணைத்தால் எப்படிப் பொறிகள் கிளம்புகின்றதோ இதைப் போன்று தான் அந்த மின்னலின் இயக்கப் பொறிகள் கிளம்பி ஒளி அலைகளாக மாறுகின்றது.

1.அந்த விஷத்தினை அகஸ்தியன் நுகர்வதால் இவனுக்குள் அடங்குகிறது.
2.அதாவது அவன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதை ஒடுக்கி ஒளியின் உணர்வாக மாற்றிடும் சக்தியாகப் பெறுகின்றான்.

ஆரம்ப நிலைகள் மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில் இத்தகைய தன்மை அவனுக்குள் விளைகின்றது.
1.அவனில் விளைந்த அத்தகைய உணர்வுகளும்
2.நஞ்சை ஒடுக்கிய சக்திகளும்
3.அதை ஒளியாக மாற்றிய உணர்வுகளும்
4.சூரியனுடைய காந்த சக்தி கலந்து இன்றும் நம் பூமியில் படரச் செய்துள்ளது.

சூரியனின் இயக்கத்தையும் அதே சமயத்தில் நட்சத்திரத்தின் செயலாக்கங்களையும்… மின்னலாகத் தாக்கப்பட்டு அதனுடைய நிலைகள் பிரிக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஆவியாகச் செல்வதும்… வான மண்டலங்களில் மேகமாகச் செல்வதையும்… அந்த மேகத்தின் தன்மையை சனிக்கோள் தன் சுழற்சி வட்டத்தில் கவர்ந்து உறை பனியாக மாற்றுவதும்… அந்தச் சுழற்சியின் தன்மை அதனுடைய காலப்பருவம் சூரியனின் ஒளிக் கதிர்கள் அதிலே தாக்கப்படும் பொழுது கரைந்து ஆவியாகச் செல்வதும்… இந்த ஒளிக் கதிருக்குள் அது கவரப்பட்டு மற்ற கோள்களின் உணர்வைத் தனக்குள் கவர்ந்து வரும் பொழுது அந்த அணுக்களாக வளர்ச்சி பெறும் சக்தியாக வருவதையும்… “அது எவ்வாறு…?” என்று துருவன் காணுகின்றான்.

சிறு பருவத்தில் இதை எல்லாம் அகஸ்தியன் கண்டுணர்ந்தாலும்
1.வளர்ச்சியின் பருவத்தில் அவன் கவர்ந்த உணர்வுகள் அதை வெளிப்படுத்தும் போது எண்ணங்களாகவும்
2.வடிவமைத்து செயல்படும் உணர்வின் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றான்.
3.அவ்வாறு வெளிப்படுத்தும் போது சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும்
4.அகஸ்தியனுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் மூச்சலைகளையும் நாம் நுகர்ந்தால்
5.அதே எண்ணங்கள் அதே உணர்வுகள் நமக்குள் வந்து அவன் அறிந்தது போன்று
6.நாமும் அறியக்கூடிய ஆற்றலாக அறியும் தன்மையாக வருகின்றது

ஒலி(ளி)மயமான உலகம்

 

இவ்வுலகிற்கு “காற்று தண்ணீர் ஒலி” இம்மூன்றும் எப்படி முக்கியமோ அதைப் போல் தான்
1.இம்மூன்றையும் பெறுவதற்கு ஆதி முதலாம் “ஓம்” என்ற நாதத்தை எழுப்பும் சப்த அலையும் மிகவும் முக்கியம்.
2.”சப்த அலை” இல்லாவிட்டால் காற்று வீசிட முடிந்திடாது.
3.அக்காற்று இல்லாவிட்டால் ஒளி பெற்றிட முடியாது.
4.அவ்வொளிக் கதிர்களிலிருந்து வரும் நீரின் நிலையும் நாம் பெற்றிருக்க முடியாது.

இம்மூன்றிற்கும் மூலமான அச்சப்த அலைகள் நாம் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை நமக்கு அருளும் நிலை “வியாழன் மண்டலத்திற்குத் தான்” கிடைத்துள்ளது.

வியாழன் மண்டலம் இப் பூமியை விட பத்தில் ஒரு மடங்கு அளவு தான் சுற்றலின் வேகம் உள்ளது. நாம் இங்கு பத்து நாள் என்று கணக்கிடும் நாள் வியாழனில் ஒரு நாள் தான். நீண்ட பகலும் நீண்ட இரவும் கொண்டதுமே வியாழன் மண்டலத்தின் நிலை.

இப்பூமிக்கு மேல் பெரிய மண்டலம் அது. பெரிய மண்டலம் என்பது வியாழன் மண்டலத்தில் மூன்றில் ஒரு பகுதி தான் பூமியின் நிலை உள்ளது

அந்த வியாழன் மண்டலத்திலிருந்து தான் “சப்த அலைகள்” காற்றுடன் கலந்து அச்சூரியனின் அதிவேகச் சுற்றலில் அவ்வியாழன் மண்டலத்திலிருந்து வரும் சப்த ஒளிக்கதிர்களை ஈர்த்து இப்பூமிக்கும் மற்ற மண்டலங்களுக்கும் இச்சூரியனிலிருந்து சூரியனின் ஒளிக்கதிர்களைப் பெறும் எல்லா மண்டலங்களுக்குமே இச்சப்த அலைகளைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் உள்ளது.

இச்சப்த அலைகளிலிருந்துதான் நாம் நுகரும் தன்மையும் வருகின்றது. முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். அவ்ஒலியிலிருந்து கலந்து தான் நமக்கு மணமும் பெற முடிகின்றது என்று.

அம்மணம் எல்லா வகை மணம் பெறுவதற்கும் அச்சப்த அலைகளினால் தான் நாம் பெற முடியும்.
1.வியாழன் நிலை இல்லாவிட்டால் இச்சப்த அலைகளும் இல்லை.
2.சப்தத்திலிருந்து ஒளியும் காற்றும் நீரும் பெறும் நிலையும் இல்லை.

இச்சூரியனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒவ்வொரு நிலை கொண்ட அணுக்கதிர்களை அச்சூரியன் பெற்றுத் தான் நமக்கு அளிக்கின்றது எல்லா நிலைகளையுமே.

மழை வருவதற்கும் நீர்நிலை பெறுவதற்கும் செவ்வாய் மண்டலத்தின் நிலையைப் பற்றி விளக்கினேன். அச்செவ்வாய் மண்டலத்திற்கு வியாழனிலிருந்து அணுக்கதிர் சூரியனின் மேல் பட்டு… அச்சூரியனிலிருந்து பாயும் தன்மையில் செவ்வாய் மண்டலம் ஈர்த்து வெளியிடும் நிலையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே இப்பூமி பெறுகின்றது.

இப்பூமியைப் போல ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு நிலை உள்ளது. இப்பூமியிலிருந்து சில நிலைகள் இவ் பூமியை நேர்கொண்டுள்ள மண்டலங்களுக்குப் பெற்றுக் கொள்ளும் தன்மையும் உள்ளது.

நாம் இங்கிருந்து பார்க்கும் பொழுது சந்திரனின் நிலை எப்படிக் குளிர்ந்து காணப்படுகின்றதோ அதே நிலை கொண்டுதான் பூமியின் நிலையையும் சந்திரனிலிருந்து கண்டிடலாம்.

சூரியனிலிருந்து சூரியனை மையமாக வைத்துச் சுற்றி கொண்டுள்ள எல்லா மண்டலங்களின் நிலையும் இந்த நிலை கொண்டு தான் நாம் சந்திரனைக் காணும் நிலை கொண்டு தான் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றது.

1.எல்லா மண்டலங்களின் அணு சக்தியை ஈர்த்துச் சுற்றும் தன்மை உள்ளதால் தான் சூரியனின் வேகம் துரிதப்படுகின்றது.
2.சூரியனின் வேகம் துரிதமாகச் சுற்றுவதால் தான் அதன் ஒளியும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதிகமாகப் பெறும் பாக்கியம் பெற்றுள்ளது.

சூரியனை மையமாக வைத்துச் சுற்றி கொண்டுள்ள மண்டலங்களைப் போல பல சூரியன்களும் பல மண்டலங்களும் ஜீவனுள்ள மண்டலங்களும் ஜீவன் பெறாத மண்டலங்களும் கணக்கில் அடங்கா நிலை கொண்டு சுற்றி கொண்டுள்ளன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உலகம் முழுவதற்குமே விஷத் தன்மை பரவிக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நாம் ஒவ்வொருவருமே மீள வேண்டும்.

சாக்கடைக்குள்
1.எப்படிப் பன்றி நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ
2.இதைப் போல் அதன் உணர்வை நுகர்ந்து மனிதனானதோ
3.மனிதனாக ஆன பின் இருளை வென்று உணர்வின் தன்மை ஒளியாக ஆனானோ
4.அதன் உணர்வை (துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம்) உங்களைப் பெறச் செய்கின்றோம்.

அதை உங்களைப் பெறச் செய்து அந்த உணர்வினை வலுவாக்கச் செய்கின்றோம். அந்த வலுக் கொண்ட பின் வராகன் எப்படி நாற்றத்தைப் பிளந்ததோ காற்று மண்டல விஷத் தன்மையைப் பிரித்து உடலுக்குப் பின் நீங்கள் அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலம் சென்றடைய முடியும்.

இந்த உடலிலே ஒவ்வொரு நிமிடமும் அதைப் பெற்றால்
1.அந்தக் கடைசிக் காலத் தன்மைகள் உங்களுக்குத் தெரியும்
2.அந்தத் தெரிந்த நிலைகள் கொண்டு எங்கே போகிறோம்…? என்ற நிலையும் தெரியும்.
3.வெளியிலே சென்ற பின் இந்த உணர்வுகள் எங்கே பதிவாகி இருக்கிறதோ அந்த விண் சென்ற நினைவை நிச்சயம் ஊட்டும்.

நாம் போன பிற்பாடு இது யாருக்குத் தெரியும்… இங்கே எவருக்குத் தெரியும் என்ற வகையில் சிலர் நினைக்கலாம்…!

இதெல்லாம் அந்த உணர்வின் இயக்கங்களை அறியும் பருவம் உண்டு. நான் (ஞானகுரு) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு தான் இருக்கின்றேன். நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

ஆக நாம் நினைவைக் கூட்டினால் தானே…!

வசிஷ்டர் – நாம் எதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு எண்ணுகின்றோமோ நமக்குள் அது பிரம்மமாகின்றது. நம் எண்ணங்கள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்றும் ஒவ்வொரு நொடியும் விரும்பினால் அது வசிஷ்டர்.

அந்த உணர்வின் சக்தியை நமக்குள் பெறப்படும் போது அது பிரம்மமாகின்றது. பிரம்மகுருவின் மனைவி யார்…? அருந்ததி. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்முடன் இணையச் செய்யப்படும் போது தீமைகளை அகற்றும் சக்தியைப் பெறுகின்றோம்.

1.இந்த மனித வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்தீர்கள் என்றால் அது மறக்கும்
3.தீமைகள் சிறுக்கும்… சிந்தனைகள் வலுப் பெறும்… சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும்.

குருநாதர் காட்டிய வழியில் நாம் தியானிப்போம்

 

நல்வழி காட்டும் குருவை அடைவோம்… குரு காட்டும் வழியை மதிப்போம்… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிப்போம்…!
1.இருளை அகற்றி அருள் ஒளி பெறும்… அருளானந்தத்தைப் பெறச் செய்யும் வழிகளை உபதேசிக்கின்றார் நமது குரு.
2.அதனை நாம் மதித்து அவர் வழியில் அதை நுகர்ந்து
3.அந்த அருளைப் பெற நாம் வேண்டும் பொழுது
4.நமது உயிரே அந்த அருள் வழியில் நம்மை இயக்குகின்றது.

ஆகவே குருவின் துணையால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ்க்கையில் அணுவின் ஆற்றலை அறிந்து அகத்தின் தன்மை உணர்ந்து இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் சக்தி பெற்றானோ அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

குருவின் துணையால்… அகஸ்தியன் துருவனாகி அகண்ட அண்டத்தின் அறிவின் ஒளியைப் பெற்ற “துருவ மகரிஷிகளின் அருள் சக்தி” நாங்கள் ஆனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

குருவின் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

உணர்வின் தன்மை ஒளியாக்கி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி
1.உலகில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றி என்றும் நிலையாக நின்று ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும்
2.வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து
3.சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி ஒளியின் உணர்வாக
4.துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் ஒளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் எண்ணிலடங்காதவர்கள் அருள் ஒளி பெற்று – சப்தரிஷி மண்டலம்
2.சிருஷ்டிக்கும் உணர்வு கொண்ட மண்டலமாக இணைந்து அருள் ஒளியை உருவாக்கிக் கொண்டு
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் ஒளியைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம்… அருள் ஞானத்தைப் பெறுவோம்… என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…! ஓம் என்று எனக்குள் இயங்கி நான் எண்ணியதை உருவாக்கி ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் உயிரை ஈசனாக மதிப்போம்… “அவனிடமே வேண்டுவோம்….!”

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களிலே அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

என் இசையில் நீ இசைப்பாய் என்றால் அருள் ஒளியின் உணர்வை நாம் எண்ணி அந்த உணர்வின் தன்மை அருள் ஞானி பெற்ற உணர்வின் இயக்கமாக நம்முடைய எண்ணங்களும் நம் உணர்வுகளும் நம் செயல்களும் நம் பார்வையும் அமைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படரச் செய்து உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அருள் ஒளி பெறும் அருள் சக்தி பெற எங்கித் தியானிப்போம்.

1.நினைவினைப் புருவ மத்தியில் கொண்டு வந்து அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.அதன் வழி (உயிர் வழி) இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.நினைவு அனைத்தும் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.

ஜீவான்மா என்பது ஒரு எறும்பை நசுக்கி இருந்தாலும் அல்லது மற்றவர்கள் மேல் பாசமாக இருந்து ஆன்மா நோய்வாய்ப்பட்டு வெளி வந்தால் அந்த நோயின் உணர்வை நாம் நுகர்ந்து இருந்தால்… அந்த ஆன்மா நமக்குள் வந்திருந்தால்… அது ஜீவான்மாவாகின்றது.

நாம் நுகரும் உணர்வுகள் எல்லாம் ஜீவணுக்களாக மாறுகின்றது நம் உடலுக்குள் பற்றுடன் எண்ணிய நோயின் தன்மை கொண்டு அந்த ஆன்மா வந்தாலும்
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அந்த ஜீவான்மாவும் ஜீவ அணுக்களும் பெற்று
2.பகைமையற்ற நிலையும் நோயற்ற நிலையும் பெறக்கூடிய அந்தத் தகுதி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.உடலில் உள்ள ஜீவான்மாக்களும் பிறவி இல்லா நிலை பெற வேண்டும்
4.என்னுடன் உறுதுணையாக இருந்து அருள் ஞானம் பெறும் தகுதி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் அருள் ஒளி பெரும் சக்தியாக இப்பொழுது மாறுகின்றது… ஒளியாக மாற்ற ஏங்கித் தியானியுங்கள்.

1.திரும்பத் திரும்ப அதே எண்ணத்தில் அதே உணர்வை உயிருடன் நினைவு கொண்டு
2.நாம் எண்ணும் அந்த உணர்வின் இசையாக அருள் உணர்வுகளை உடலுக்குள் பரப்பி
3.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மகிழச் செய்யும் உணர்வாக விளையச் செய்வோம்.

அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் பிறவி இல்லாத நிலை அடைவோம் நமது குருநாதர் காட்டிய வழியில் நாம் அனைவரும் செயல்படுத்துவோம்.

பூமியில் மழை வருவதற்கு “மூலமே வியாழன் கோள் தான்”

 

சிறு பிராயம் முதல் கொண்டு பள்ளிகளில் போதிக்கும் முறையில் மழை எந்த நிலை கொண்டு வருகிறது…? என்று போதிக்கின்றார்கள்.

இம்மழையை நாம் பெறுவதற்கு நம்மைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையிலிருந்து மூலமாக உள்ளது “வியாழன் மண்டலம் தான்…”

சூரியனிலிருந்து பாயும் ஒளிக் கதிர்களைக் கொண்டு
1.அவ்வியாழன் மண்டலம் ஒளிக்கதிரைத் தன்னுள் ஈர்த்து அது பாயும் தன்மையைக் கொண்டு (பூமி ஈர்க்கும் தன்மையைக் கொண்டு)
2.இப்பூமியின் மேல் அவ்வொளிக்கதிர்கள் பட்டு… அப்பூமி ஈர்த்து… அப்பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் வெளிப்படுவதைக் கொண்டு
3.புதன் மண்டலத்தில் இருந்து வரும் நாம் பெறும் காற்று மண்டலம்… காற்று மண்டலம் என்னும் பொழுது
4.புதனிலிருந்து வரும் காற்றை அளிக்கும் அணுக்கதிர்கள் பூமியிலிருந்து கிளம்பும் உஷ்ண மண்டலத்தைக் குளிர விடும் தன்மையில்
5.அந்தந்த நிலைகளில் மேகங்கள் படர்ந்து உள்ள நிலையில்
6.அதன் மேல் செவ்வாய் மண்டலத்தினுடைய சப்த அலைகள் மோதும் பொழுது வருவதே “மழை மேகங்கள் எல்லாமே…”

பூமியில் உள்ள மழை நிலை மற்ற மண்டலங்களில் மாறுபடுகின்றது. சந்திரனில் இந்நிலை கொண்ட பெரும் மழை இல்லை. ஈரப்பசை உண்டு… மழை நிலை மாறுபடுகிறது.

பூமியின் நிலையை எண்ணிப் பார்த்தால் பல நிலைகளில் ஒரே மாதிரி இல்லாமல் மாறுபட்ட நிலைகளில் உள்ளதின் நிலையில் எப்படி உள்ளன…? என்று எண்ணிடலாம்.

சில இடங்களில் மாறுபட்ட உலோகத் தன்மையும் நேற்றைய பாடத்தில் சொன்னபடி பல நிலைகள் உள்ள நிலை எல்லாம் ஆரம்பக் காலத்தில் எப்படி வந்தன…?

இவ்வுலகம் இவ்அழியா உலகம் ஆரம்ப நிலையில்… ஆரம்ப நிலை என்பது உலக ஆரம்ப நிலை அல்ல. கலி முடிந்து கல்கி வருகின்றது என்கின்றோம் அல்லவா.

அதைப்போல யுகம் என்று சொல்லும் வழியில் இவ்வுலகம் மாறுபட்டு வரும் தன்மை கொண்டு அந்த நிலையில் சூரியனிலிருந்தும் மற்ற மண்டலங்களில் இருந்தும்… இப்பூமியின் மேல் வந்து தாக்கும் அணுக்கதிர்கள் எந்த நிலையில் வந்து தாக்குகின்றனவோ… அந்த நிலை கொண்டே அந்தந்த நிலைகளில் உள்ளன நிலைகள் எல்லாம்.

மனிதனுக்கு மட்டும் இல்லையப்பா கரு தோன்றி வளரும் தன்மை. இவ் உலகுக்கே உள்ளது கரு நிலை. இவ்வுலகினில் சில நிலைகளில் பயிர்கள் வளராத நிலையிலும் உள்ளன… சில இடங்களில் பூரித்து வளரும் தன்மையும் உள்ளது.

1.வளராத கல் வளராத வைரம் வளராத தங்கம் இப்படிப் பல நிலைகளைச் சொல்லிக் கேட்டிருக்கலாம்
2.அவ்வளராத இடத்தில் இப்பூமியின் தன்மை ஜீவனற்ற நிலையில் உள்ளது.

உயிரினங்களுக்கு மட்டும் ஜீவன் பெற்றுப் போகும் நிலை எப்படி உள்ளனவோ அதைப் போல் தான் இப்பூமியின் நிலைக்கும் உள்ளது.

இப்பூமியில் கடலில் உள்ள தண்ணீர் உப்பு உடையதாகவும் ஆற்றுப்படுகையின் தண்ணீர் சுவையுடன் உள்ளதாகவும்… கடலின் அருகிலேயே உள்ள கிணறுகளில் உள்ள தண்ணீர் சுவை உள்ளதாகவும் கடலுக்கு வெகு தூரத்தில் உள்ள சில ஊர்களில் உள்ள கிணற்றின் தண்ணீர் உப்புக் கரிப்பதாகவும் உள்ளது.

இந்நிலை எல்லாம் எந்த நிலை கொண்டு வந்தன…?

சூரியனிலிருந்து வரும் பாயும் ஒளியைக் கொண்டு அந்தந்த இடத்தில் அப்படியே இந்நிலை பெறுவதல்ல.

இப்பூமி சுழலும் வேகத்தில் பூமித்தாய் தன்னுள் ஈர்த்துள்ள சக்தியைக் கொண்டு
1.பூமியின் “உள்நிலையின் நிலை” என்று முதலிலேயே உணர்த்தியுள்ளேன்.
2.அந்நிலை கொண்டு அதை ஈர்த்து அது வெளிக் கக்கும் நிலையைக் கொண்டு
3.அந்தந்த இடங்களில் உள்ள வடிகால்களின் மூலமாக அது வெளிப்படும் தன்மையில் வளர்வது தான்
4.மண்ணின் நிலையும்… அம்மண்ணிற்குத் தகுந்த சுவையும் அத்தண்ணீரில் நமக்குக் கிட்டுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கேள்வி:
ஈஸ்வரபட்டர் உங்களுக்கு எல்லாச் சக்திகளும் கொடுத்தார்… நீங்கள் அதை எல்லாம் பெற்றீர்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கொடுக்கவில்லையே… உபதேசமாகத் தான் சொல்லிக் கொண்டே போகிறீர்கள்…!

யாருக்காவது நீங்கள் கொடுத்து அதைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நாங்களும் ஆர்வமாகச் செய்வோம். இது எங்களுக்குச் சந்தேகமாகவும் ஒரு யோசனையாகவும் இருக்கிறது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் சாமி.

ஞானகுருவின் பதில்:
1.இப்பொழுது என்ன தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுத்தாலும்
2.நீங்கள் “எடுத்துக் கொள்ளும் முறையில்தான்” அது இருக்கின்றது.

உங்களுக்குத் தெரியாமலே எவ்வளவோ மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு அது தெரியாது.

ஆனால் அது எப்படி இருக்கிறது…? என்று உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? “ஜீபூம்பா…” வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

அப்படி நடந்ததுதான் முந்திய கால நிலைகள்.
1.எனக்கே சக்தி இருக்கின்றது…
2.”சாமி” தயவு என்ன வேண்டிக் கிடக்கிறது…? என்று
3.பிய்த்துக் கொண்டு போனவர்கள் தான் பெரும்பகுதியான நிலைகள்.

குருநாதர் மூலம் பெற்ற அரும் பெரும் சக்திகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த அற்புதமான நிலைகளைத் தெரிந்து கொண்டால் “உலகத்திற்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…” என்றும் நினைத்தேன்.

கடைசியில் எல்லோருக்கும் அது ஆசையைத் தூண்டி விடும் நிலையில் தான் முடிந்துவிட்டது. ஆக மொத்தம்
1.ஒருவருக்கு புரியக் கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அடுத்தவர்கள் புரிந்து விடக் கூடாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
3.எல்லாம் தெரிந்த பின் அவர்கள் குருவாகவே மாறி விட்டார்கள்.

ஆகையினால்… தியானத்தின் மூலம் பலனைப் பெற்றால் தான் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் உணர முடியும்.

உதாரணமாக… நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். “நன்றாகத்தான் இருக்கின்றது…” என்று நான் சொல்லி விட்டால் மட்டும் போறுமா…?

நல்ல சுவையான சாப்பாடை நான் சாப்பிட்டால்தான் எனக்கு நல்லது. ஆகையினால் போடும் சாப்பாட்டைச் சரியான முறையில் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் அந்த ருசியின் தன்மை தெரியும்

1.இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருந்தது” என்று சொல்கிறார்.
2.எப்படி இருந்தது…? என்று கேட்கும் போது “நன்றாக இருந்தது… நன்றாக இருந்தது…” என்றே சொன்னால்
3.அது எப்படி நன்றாக இருந்தது…? என்று திரும்பவும் கேட்டால் சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்…!

உதாரணமாக… உடலில் ஒரு இடத்தில் புண்ணாகி விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது நம்மை வேதனைப்படுத்தினாலும் மருந்தைப் போட்டு குணப்படுத்த விரும்புகின்றோம்.

ஆனால் அப்போதும் சிறிது வேதனை இருக்கிறது. ஆற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தால் புண்ணுக்கு அந்த மருந்தை போட்டுக் கொள்கிறோம்.

ஆனால் மருந்தைப் போட்டுக் கடுகடுப்பாகி விட்டால்… “என்ன…! இப்படி ஆகி விட்டதே…?” என்று மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமா…?

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிலையில் நமக்குள் எத்தனையோ விதமான வேதனைகளைத் தோற்றுவிக்கும்.
1.எத்தனை விதமான வேதனைகளைத் தோற்றுவித்தாலும்
2.அதை மாற்றியமைத்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் அடிக்கடி நுகர்தல் வேண்டும்.

அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது.

எதையுமே ஒளியாக மாற்றத் தெரிந்து கொண்ட “அகஸ்தியனின் உணர்வுகளை” நாம் பெறுதல் வேண்டும்

 

துவாரகா யுகத்தில் “நாராயணன்” வாசு தேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணணாகப் (கண்கள்) பிறந்தான் என்று சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

கண்கள் தோன்றிய பின் கூர்மையாக ஒவ்வொன்றையும் பார்த்து அந்த உடல் எப்படியோ இந்த உணர்வுகளை நுகர்ந்து தனக்குள் விளைய வைத்து அதன் அவதாரமாக அதன் உடலுக்குள் புகுந்து பரிணாம வளர்ச்சியில் வளர்ச்சியாகி இன்று எப்படி நாம் மனிதனாக வளர்ந்தோம்…? என்று காட்டுகின்றார்கள்.

பல கலவைகளைச் சேர்த்து ஒன்றை ஒன்று வென்றிடும் உணர்வுகள் பெற்று உணர்வுகள் இரண்டறக் கலந்து உடல்கள் ரூபங்கள் எப்படி ஆனது…? என்ற நிலையும் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளது. இராமாயணத்தில் இது கூறப்பட்டுள்ளது.

1.பலராமன் என்று எண்ணும் பொழுது கண்ணனின் (கண்கள்) சகோதரன்.
2.பலருடைய உணர்வுகளை நாம் நுகர்ந்து பல எண்ணங்கள் வருகின்றது.

ஆகவே
1.கண்ணின் நிலைகள் கொண்டு நமக்குள் எண்ணத்தால் உருவாக்கப்படும் பொழுது பல உணர்வுகளும் பல செயல்களும்
2.தனக்குள் அவ்வப்போது உணர்த்தும் நிலையும் தீமை நன்மை என்ற உணர்வுகளை உணர்வதும்
3.நன்மை என்ற நிலை வரப்படும் பொழுது அந்த நன்மையைக் காப்பதும்
4.அதே சமயத்தில் தீமை என்றால் அதை எப்படி நீக்குகின்றோம்…? என்ற நிலையையும்
5.அதை பலராம்… என்று எட்டாவது நிலை… அஷ்டதிக்கு என்ற நிலையில் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் தீமை என்று உணர்ந்த பின் “அதை வென்றவன்… அதை எல்லாம் கண்டுணர்ந்தவன்… நஞ்சை வென்றவன்… “துருவ மகரிஷி…!” அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வினை நாம் நுகர்ந்தால் ஓன்பதாவது நிலை “நரசிம்மா…!”

1.அந்தத் துருவ மகரிஷியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.நமக்குத் தீங்கு விளைவிக்கும் பகைமையான உணர்வினை உள்புகாது
3.இங்கே மடி மீது வைத்து அதை நீக்கிடும் சக்தி வருகின்றது.

வேம்பின் பக்கம் நல்ல ரோஜாப் பூவின் நறுமணம் சென்றால் விடுவதில்லை ரோஜாச் செடியின் அருகிலே வேம்பின் மணம் சென்றால் விடுவதில்லை.

அதை போன்று தான் ஒரு மனிதன் வேதனையுடன் இருக்கும் பொழுது நல்லதைச் சொன்னால் கேட்க மாட்டான். அந்த வேதனை ஒன்றே தான் அங்கே வரும்.

ஆக… வேதனை ஆட்கொண்டால் நல்ல எண்ணங்கள் கொண்டு இயக்க முடியாது போகின்றது ஆனால்
1.நஞ்சை வென்றிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் வலிமை நமக்குள் வரப்படும் பொழுது
2.நஞ்சு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மா பக்கம் வந்தபின் அதை நீக்குகின்றது.

நஞ்சினை நீக்கிய அருளின் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அந்த வலுவின் துணை கொண்டு தீமைகள் புகாது நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று வென்று மனிதனான பின் அனைத்தையும் அறிந்திடும் நிலை வருகின்றது கார்த்திகேயா… சேனாதிபதி…!

தீமை உட்புகாது தடுத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது தான் நமது ஆறாவது அறிவு. இதன் துணை கொண்டு நமக்குள் அதை வளர்ந்திடும் நிலை கொண்டால் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான்.

ஆகவே ஒவ்வொரு தீமைகளை வென்று ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கும் அகஸ்தியன் உணர்வினை நாம் பெறுதல் வேண்டும்.
1.அணுவின் ஆற்றலை அறிந்தவன்
2.துருவத்தின் ஆற்றலைப் பெருக்கியவன்
3.ஒளியின் உணர்வாகப் பெற்றவன்
4.கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாக இணைத்துக் கொண்டவன்
5.எதையுமே ஒளியாக உருவாக்கத் தெரிந்து கொண்டவன் தான் அந்த அகஸ்தியன்.

அவனின்று வெளிப்பட்ட உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால் தீமை புகாது நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது.

இதை எவர் ஒருவர் செய்கின்றனரோ அவரே இந்த மனித வாழ்க்கையில் இருந்து பிறவி இல்லா நிலை அடைகின்றனர்…!

பூமிக்கும் சுவாச நிலையுண்டு

 

இவ்வுலகம் இவ்வுலகைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் ஈர்ப்புத் தன்மைகளைக் கொண்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே சுற்றும் இவ்வுலகினில்… எல்லா இடங்களும் ஒன்று போல் இல்லாமல் இடத்திற்கு இடம் மாறுபட்டு… மழை காற்று உஷ்ணம் இப்படிப் பல நிலைகளில் மேடு பள்ளம் சமதரை கடல் இப்படியும் ஒன்று போல் இல்லாமல் ஒரே நிலையில் சூரியனிலிருந்து சக்தியைப் பெறும் நிலைகளில் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபட்ட நிலை இவ்வுலகினிலே உள்ளதல்லவா.

இவ்வுலகம் சுழலும் தன்மையில்
1.அங்கங்கு வசிக்கின்ற உயிரணுக்களின் நிலையைக் கொண்டு அங்குள்ள பூமியின் நிலை உள்ளது…
2.அங்கங்கு வளரும் தாவரங்களின் நிலையும் உள்ளது.
3.அந்நிலை கொண்டே அச்சூரியனின் சக்தியை எந்த நிலை கொண்டு பூமி ஈர்த்து வெளிப்படுத்துகின்றதோ
4.அந்த நிலையில் தான் உள்ளன அங்கங்கு உள்ள நிலை எல்லாம்.

சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் பூமியில் படும்பொழுது பூமி அச்சக்தியை தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றது. ஈர்த்த நிலை கொண்டு இப்பூமி விடும் சுவாச நிலை கொண்டு தான் அந்தந்த நிலையில் உள்ள இயற்கைத் தன்மை எல்லாம்.
1.உயிரணுக்களுக்கு மட்டுமல்ல சுவாச நிலை
2.இப்பூமித் தாயும் ஈர்த்து எடுத்துச் சுவாசிக்கும் தன்மை பெற்றவள் தான்.

அவள் ஈர்த்து எடுத்த நிலையில் வளர்வதுதான் உயிர் அணுக்களும் மற்ற தாது பொருளும் தாவர வர்க்கங்களும் மனிதனிலிருந்து எல்லா உயிரணுக்களும் தான்.

1.மழையும் எரிமலையும் பனிமலையும் குளம் ஆறு கடல் எல்லாமே உயிரணுக்கள் தான்.
2.ஜீவன் உள்ள ஜீவன்கள் தான் எல்லாமே.

சில இடங்களில் வளர்ந்திடும் பனி மலையும் எரிமலையும் எந்த நிலை கொண்டு வந்ததப்பா இப்பூமியில்…?

இப்பூமியில் உள்ளது போல் கலந்த நிலை எரிமலை பனிமலை சமநிலை இப்படிப் பல கலந்த நிலை ஒவ்வொரு மண்டலத்திற்கும் மாறுபடும் தன்மையில் உள்ளது.

எரிமலை எப்படித் தோன்றுகிறது…? ஆகாயத்திலிருந்து அக்கினிப் பிழம்பு வந்து அத்தரையில் மோதி வளர்ந்ததுவா எரிமலை…? இல்லையப்பா…!

இப்பூமியின் மேல் ஒவ்வொரு நிலை கொண்டு இப் பூமி சுழலும் வேகத்தில் மழை பனி காற்று இப்படி எல்லா நிலைகளும் மோதும் பொழுது இப்பூமி ஈர்த்து அப்பூமியின் உள்நிலையில் பெரும் காற்று மண்டலம் உள்ளது.

அப்பூமி ஈர்க்கும் தன்மையில்
1.உள் நிலையில் உள்ள உஷ்ணமான காற்றும் குளிர்ந்த காற்றும் ஒன்றை ஒன்று மோதும் நிலை கொண்டு
2.பல நிலை கொண்ட தன்மையில் பூமி ஈர்ப்பதினால் அந்த நிலையிலேயே அத்தன்மை வெளிப்பட்டுத் தான்
3.அப்பூமியிலிருந்து பொங்கி வருவது தான் எரிமலைகளும் பனி மலைகளும்.

இப் பூமியின் மேல் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு நிலை கொண்ட தன்மை உள்ளதெல்லாம் இந்த நிலை கொண்டு தான். நில அதிர்வு வருவதும் நில வெடிப்பு வருவதும் சூரியனிலிருந்து வரும் தாக்கும் நிலையில் வருவது அல்ல.

சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையில்தான் வருகின்றன இந்நிலைகள் எல்லாம்.

இப்பூமியில் மழை நிலை அதிகம் உள்ளது.
1.பூமிக்கு எந்த நிலை கொண்டு மழை வருகின்றது…?
2.எந்த நிலை கொண்டு ஒலி வருகிறது…?
3.எந்த நிலை கொண்டு ஒளி வருகிறது…?
4.இப்படி மணம் சுவை காற்று இப்படிப் பல நிலைகளையும் இப் பூமி எப்படிப் பெறுகிறது…? என்பதனையும் விளக்கிடுவேன்.
5.இப்பூமி பல நிலைகளைப் பெறுவதற்கு பல மண்டலங்களின் தொடர்புடன் தான் எல்லாமே உள்ளன இப் பூமிக்கு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கேள்வி:
சாமிகள் உபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம் சிலருக்குக் கிறக்க நிலைகள் ஏற்படுகிறது. தூக்கம் வருகிறது. அந்த நேரத்தில் சாமிகள் கூறும் உபதேசக் கருத்துகள் அவர்களுக்குள் பதிவாகிறதா என்பது பற்றிய விளக்கம் வேண்டும்.

ஞானகுருவின் பதில்:
உதாரணமாக நல்லதாக நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். அந்த நேரத்தில் ஒருவர் வந்து வேதனைப்படும் சொல்லைச் சொன்னவுடனே என்ன ஆகிறது…?

நல்ல அணுக்கள் சோர்வடைகிறது அல்லவா…!

இதே மாதிரித் தான்
1.அந்த வேதனையை நீக்கிய ஞானிகளின் உணர்வை நுகரப்படும் போது
2.உண்மையிலே அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் போது வசிஷ்டர்… (கவர்ந்து கொண்ட சக்தி) உள்ளுக்குள் போகிறது.
3.இதற்கு முன்னாடி எத்தனையோ கஷ்டங்கள் சங்கடங்கள் எது எல்லாம் இருந்ததோ அதை அடக்கி இந்த உணர்வுகள் மேலோங்கும்.

நன்றாக இருக்கின்றீர்கள்.. ஒருவர் வந்து திடீரென்று வேதனையாகச் சொல்லப்படும் போது என்ன ஆகிறது…? நல்ல மனது எல்லாம் ஒடுங்கி விடுகிறது.

அந்த நல்ல மனதை “வேதனை” என்ற உணர்வு ஒடுங்கச் செய்கிறது. வேதனை நீக்கிய ஞானிகளின் உணர்வைக் கேட்கும் போது என்ன ஆகிறது…?

1.இந்த உணர்வு ஆன பின் உடல் ஆசை எல்லாம் மாற்றிவிடுகிறது.
2.ஒரே நினைவுடன் உங்களைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கிறது.
3.அந்த உணர்வு உங்களுக்குத் தூங்குகிற மாதிரித் தெரியும்.

ஏனென்றால் மற்ற தீமைகளை எண்ணாதபடி ஒரே நினைவாக உங்கள் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறுகிறது.

அப்படிப் பெருகிய நிலையில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சொன்னால் அங்கே கொண்டு போகிறது.

உங்களை மேலே தூக்குகிற மாதிரி இருக்கும்…!

இங்கே உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது இந்தப் புவியின் கனம் இருக்காது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் போது உடல் எடை இல்லாது இருக்கும். சங்கடம் சலிப்பு என்ற நிலைகள் இருக்காது.

தூங்காமல் தூங்கும் காலம் எக்காலம்…? என்று சொல்வார்கள். ஆக தீமை என்ற உணர்வு வராதபடி… அந்த அருள் உணர்வுடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

1.தூக்கம் வருகிறது… மயக்கம் வருகிறது… சாமி சொல்வதைக் கேட்க முடியவில்லை.
2.சாமி சொல்கிறார்… பெரியவர் என்னமோ சொல்கிறார்… என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது.

இதை எல்லாம் கேள்வியாகச் சாமியிடம் கேட்கலாமா…? என்று இருக்கக்கூடாது. கேட்டால் தான் தெளிவு வரும். மற்றவர்களுக்கும் தெளிவு வரும்.

ஏனென்றால் நாளைக்கு அந்த மெய் உலகம் வர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் எப்படி ஒளியாக ஆனானோ அந்த உணர்வுகள் பெருகும் காலம் வரும்.

காரணம்…
1.என்றைக்குமே ஒரு துன்பத்தின் நிலை அது எல்லை கடந்து வரப்படும் போது தான்
2.அதிலிருந்து மீண்டிடும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெருக்க முடிகின்றது… வளர்க்கவும் முடிகின்றது.

இப்போழுது நான் சொல்வது உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியும்.
1.பின்னாடி போகப் போகப் போகத் தான்
2.இந்த அருள் உணர்வுகள் உலகம் முழுவதற்குமே தெரியக்கூடிய தன்மை வரும்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மைகளை “நீ உற்றுப் பார்…” என்றார் குருநாதர்

 

தாயின் கருவிலே விளையும் குழந்தையை இன்று விஞ்ஞான அறிவு கொண்டு எந்திரத்தின் துணை கொண்டு உற்றுப் பார்த்து இந்தக் குழந்தை பலவீனமாக இருக்கின்றதா…? ஆரோக்கியமாக வளர்கின்றதா…? என்று காணுகின்றார்கள்.

பலவீனமாக இருந்தால் அதற்குண்டான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்துக் குழந்தையை நல்ல முறையில் இப்படி வளர்த்து விடலாம் என்றும் செயல்படுத்துகின்றார்கள்.

அதே சமயத்தில் கருவில் வளரும் பொழுதே அதை ஆணா பெண்ணா என்ற நிலைகளும் இந்த உணர்வின் சத்துக்களைக் காணுகின்றான் விஞ்ஞான அறிவில்.

அன்று மெய் ஞானத்தின் தன்மை கொண்டு சந்தர்ப்பத்தால் தாய் நுகர்ந்த உணர்வு விஷத்தின் தன்மையை முறித்திடும் சக்திகளை கருவிலேயே பெறுகின்றான் அகஸ்தியன்.

கருவிலேயே அப்படி அவனுக்குள் விளைந்து பிறந்த பின்
1.விஷத்தை முறித்திடும் ஆற்றலும் அதை நுகர்ந்தறியக்கூடிய உணர்வின் ஆற்றலும்
2.இதனுடைய செயலாக்கங்களையும் கண்டு கொண்டவன் தான் அந்த அகஸ்தியன்.

அவன் வாழ்ந்த காலங்களில்
1.அவன் உடலிலே விளைந்த அந்த விஷத்தை முறித்திடும் சக்திகள் அவனுடைய மூச்சலைகளாக இங்கே படர்ந்துள்ளது.
2.அதே சமயத்தில் அவன் நடந்து சென்ற பாதச் சுவடிகளில்
3.அவன் ஈர்க்கும் வட்டத்தில் பதிந்த ஆற்றல்களும் “இங்கே உள்ளது” என்று அதை குருநாதர் காட்டுகின்றார்.

அகஸ்தியன் கண்டறிந்த உணர்வுகள்
1.அவன் அறிவுகளில் எதை எதைத் தீமை என்று “உணர்ந்த உணர்வுகளை… நீ உற்றுப் பார்” என்று சில குறிப்பிட்ட இடங்களைக் காட்டுகின்றார்.
2.அதைக் கண் கொண்டு கூர்ந்து கவனி…! என்றார்.

பாறை மீது அவர் அமர்ந்திருந்து பல செயல்களைச் செயல்பட்ட நிலைகளையும்… தன் இருப்பிடத்திலிருந்து அதைத் தனக்குள் கவர்ந்து தனது அறிவாக தனக்குள் அந்த அறிவின் தன்மை வளர்த்துக் கொண்ட நிலையையும்… அறியும் ஆற்றலும் பெற்றதைப் பார்…! என்றார் குருநாதர்.

அவன் கடும் மின்னலையும் உற்று நோக்குகின்றான். ஒரு நட்சத்திரத்திற்கு இன்னொரு நட்சத்திரத்திற்கு மோதல் ஆகும் போது மின் கதிர்களாக மின்னலாகப் பாய்கிறது.

மின்னல் பூமிக்குள் மற்றவர்கள் மீது தாக்கியவுடன் அந்த உடலைக் கருக்குவதும்… மின்னல்கள் வான் வீதியில் தாவர இனங்கள் இல்லாத பொழுது அது எப்படிப் பரவுகின்றது…? என்ற நிலையையும் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

1.அகஸ்தியன் தாய் கருவில் இருக்கப்படும் பொழுது விஷத்தை அடக்கிடும் சக்தி பெற்றான்.
2.அதன் மூலம் மின்னலுக்குள் இருக்கும் ஆற்றலை எவ்வாறு உணர்ந்தான்…? அதை நுகர்ந்தான்…? என்று பார்க்கும்படி சொல்கிறார் குருநாதர்.

அதில் இருக்கக்கூடிய சக்தி… இன்று நாம் அணுகுண்டு என்று சொல்கின்றோமே அத்தகைய “கதிரியக்கச் சக்தி” கொண்டது.

மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கதிரியக்கப் பொறிகள் உருவானாலும் மின் கதிர்கள் பரவப்படும் பொழுது மற்ற கோள்கள் உமிழ்த்தும் அலைகளுக்குள் ஊடுருவி அதை ஒரு இயக்கச் சக்தியாக எப்படி மாற்றுகின்றது என்ற நிலையை அகஸ்தியன் உணர்ந்து கொள்கின்றான்,

அப்போது
1.அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட அந்த ஆற்றல்மிக்க உணர்வின் எண்ண அலைகள்
2.அது எப்படி இருக்கின்றது…? என்ற நிலையையும் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

அனைத்திலுமே வெளிப்படும் உணர்வுகளைச் சூரியன் தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொள்கிறது. ஒரு கொடூர மிருகத்தின் உணர்வை நுகர்ந்தால் “காளி” என்றும் அசுர குணங்கள் என்றும்… அசுர சக்தி கொண்டது…! என்றும் இப்படி ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைக்கின்றார்.

ஆனால் ஒரு சாந்தமான மானின் தன்மை வரப்படும் பொழுது அதைச் சீதா – சுவை என்றும் அது எப்படி மகிழச் செய்கிறது…? என்பதையும் இதைச் சூரியன் எவ்வாறு எடுத்து வைத்துக் கொள்கின்றது…? என்றும் சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் எப்படி வளர்கிறது…? என்றும் காட்டுகின்றார் குருநாதர்.

அதே போல் சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் வளரும் தாவர இனங்களும் அதைத் தொடர்ந்து வரும் மனிதனின் உணர்வுகளும்…
1.எதை நுகர்ந்து உடலுக்குள் பதிவாகின்றதோ இந்த உயிரின் துணை கொண்டு அந்த உணர்வுகள் அணுவாகி
2.அணுவின் தன்மை கொண்டு உணர்ச்சிகளின் எண்ணங்களாக ஆகி… எண்ணத்தின் தன்மை கொண்டு
3.அதனுடைய வாழ்க்கையும் அதனுடைய செயலாக்கங்களும் எப்படி உருவாகிறது…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மையின் இயக்கங்களை காடுகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று இப்படித்தான் எனக்குத் தெளிவாக்கினார் குருநாதர்.

பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே

 

இவ்வுலக நிலையினிலே நாம் பெறும் சக்தி நிலை கொண்டே ஒவ்வொரு உயிரணுவின் நிலையும் மனிதர்களின் நிலையும் உள்ளதுவே.

1.நாம் எந்த நிலையில் வசிக்கின்றோமோ அந்த நிலை கொண்ட பழக்க வழக்கங்களும் இந்நிலை கொண்ட சுவாச நிலையும்
2.ஒவ்வொரு தன்மையில் கூடி வசிக்கின்ற மனிதர்களின்
3/எண்ண நிலைகளும் உருவ அமைப்புகளும் எப்படி ஏறக்குறைய ஒன்று போல் உள்ளனவோ
4.அவற்றை ஒத்துத் தான் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலையும் சுவாச நிலையும் உள்ளன.

இன்று உலகில் ஒவ்வொரு பாகத்திலும் வசிக்கின்ற மக்களின் எண்ணம் வாழ்க்கை முறை இதைப் பொறுத்து அங்காங்கு வாழும் மக்களின் வாழும் வாழ்ந்திட்ட காலத்தில்
1.அவர்கள் எந்த நிலை கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்தார்களோ அந்த நிலைகொண்டே
2.அவர்கள் ஆவி பிரிந்து அந்தந்த நிலையில் அவ்வாவிகள் சுற்றிக் கொண்டே உள்ளன.

இந்தியா என்று பெயர் வைத்துள்ள இந்தத் தேசத்தில் தெய்வப்பற்றும் ஒற்றுமைப் பற்றும் கொண்ட கூட்டு நிலை கொண்ட குடும்ப நிலைகளும்… அன்று வாழ்ந்த சித்தர்களின் நிலையினால் இங்கு ஆண்டவன் என்ற பக்தியை மக்களின் மனதில் பல ரூபம் கொண்ட கல்களிலே வடித்து உணர்த்திச் சென்ற நிலைதனிலே… இங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் எல்லாம் ஏறக்குறைய ஒன்றுபோல் சுற்றிக் கொண்டுள்ளதினால்… அத்தெய்வத்தையே கல்லின் ரூபத்தில் பக்தி கொண்டு வணங்கிய நிலை கொண்டு… இங்கு வாழ்ந்த மக்கள் அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்த சுவாசத்தையும் எண்ணத்தையும் கொண்டே… அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்து சென்ற பிறகும் அந்நிலையிலேயே அவ்வாவிகள் சுற்றிக் கொண்டுள்ளன.

தன் சுவாச நிலைக்கு ஏற்ப அந்த நிலை கொண்டு தான் இங்குள்ள மக்களின் மனோநிலையும் தெய்வ பக்தியும்… தன் எண்ணத்திற்கு உகந்த நிலை கொண்டு இங்கு சுற்றியுள்ள ஆவிகள் கோவிலுக்குச் சென்று வணங்கிடும் நிலையில் உள்ளவர்களின் நிலையில்… நிலையில் என்னும் பொழுது
1.அவ்வாவி அவர்களின் உடலுக்குள் சென்று சில நிலைகளைச் சொல்லுவதும்
2.சாமி வந்து வாக்குச் சொல்கிறது என்பதும் அருள் வந்து ஆடுவதும் எல்லாம் இந்நிலை கொண்ட இந்நாட்டில் தான்.

நம்மை நம் முன்னோர்கள் நடத்திச் சென்ற பாஷையில் வந்ததுவே இந்நிலை இந்நாட்டினிலே. இந்த நிலை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்ட நிலையில் உள்ளது.

அங்குள்ள மக்களின் எண்ண நிலைகளும் வாழ்ந்த நிலைகளும் எத்தன்மையில் அங்குள்ளனவோ தன் நிலை கொண்ட வாழ்க்கை வாழ்ந்த நாட்டில்… பக்தி தெய்வப்பற்று என்ற நிலைகளை எல்லாம் எந்தெந்த நிலை கொண்டு அங்குள்ள மக்கள் வழி நடத்திச் சென்றார்களோ… அந்தந்த நிலை கொண்டு தான் அங்கு வாழ்ந்தவர்களின் ஆத்மாக்கள் அவர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்றன.

அந்த நிலைகொண்டே அது சுற்றிக் கொண்டுள்ள நிலையில் தன் எண்ணத்திற்கும் செயலுக்கும் உடைய உடல்களை ஏற்று வருகின்றது அங்கங்கு உள்ள நிலை.

பக்தி என்னும் நிலையில் இங்கு ஏன் இந்த நிலை…? இங்கு மட்டும்தான் ஆண்டவன் உள்ளானா…? இங்கு தான் அருள் வருமா…? ஆண்டவன் எந்த நிலையில் இங்கு அருள் தருகின்றான்…? என்றெல்லாம் இங்கு மற்ற பாகங்களின் உள்ளவர்களின் எண்ணத்திலே.

இங்கு ஆண்டவனின் நிலை நம் சித்தர்கள் நமக்கு உணர்த்திய நிலையை நாம் ஏற்றுக் கொண்ட நிலை கொண்டு வந்ததுவே இந்நிலை.

இன்னும் பல பாகங்களில் பல நிலை கொண்டு ஆண்டவனை எண்ணி பல வழிகளில் வணங்குகிறார்கள்.
1.அவர்களெல்லாம் எந்த நிலையில் நம் ஆண்டவனின் அருள் வருகிறது…? என்ற
2.புரியாத நிலை கொண்டு வணங்குகிறார்கள்.

இன்று இவ்வுலகினில் எல்லாப் பாகங்களிலுமே தன்னைத்தான் நம்பாமல் ஜோசியம் என்ற நிலையில் நம்பி வாழுகின்றார்கள். அந்த நிலையில் எல்லாம் யார் வந்து சொல்கிறார்கள் என்று உணராமல் “பல ஆவிகளின் தொடர்புடன்” தன்னைத்தான் நம்பாமல் பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே.

ஆவியின் நிலை எந்த நிலையில் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளலாம் என்று சுற்றிக் கொண்டுள்ளது.
1.அந்நிலைக்கே அடிபணிகின்றான் ஆண்டவனின் ரூபமாக
2.அவ்வாவியையே வணங்கி இன்றைய மனிதன் வாழுகின்றான்.

எந்த நிலையில் வாழ்ந்தால் என்ன…? அவ்வாவியே வந்து நமக்கு நல் உபதேசம் அளிக்கும் பொழுது பல நன்மைகளை நமக்கு அது செய்யும் பொழுது நாம் ஏன் அதை ஏற்கக் கூடாது…? என்று எண்ணிடலாம் எல்லோரும்.

ஆவிகளின் நிலை எல்லாம் எம் மனிதன் மேல் சென்று அதன் காரியத்தைச் செலுத்துகின்றதோ அதே நிலையில் அம் மனிதன் உள்ள நாள் வரை தான் அது மனிதனுக்கு உதவி செய்திடும்.

அதன் எண்ணமும் அது ஏற்றிருக்கும் மனிதனின் எண்ணமும் மாறுபடும் பொழுது… எந்த நிலை கொண்டெல்லாம் அது மனிதனுக்கு உதவி வந்ததோ அதற்கு மேல் தீமை செய்ய வல்லது அவ்வாவிகளின் நிலை எல்லாம்.

இதிலிருந்து மனிதன் மீள்வதற்கு…
1.தன் எண்ணத்தையும் தன் செயலையும் தன்னைத்தான் நம்பும் நிலையையும்
2.தன்னுள் எந்தத் தீய சக்திகளுக்கும் இடம் தந்திடாமல்
3.தன் உணர்வின் கோபத்தையும் அச்சத்தையும் அகற்றித் தன் நிலையைச் சமமாக்கி வாழ்ந்திடும் நிலையில்
4.அவன் எடுக்கும் எண்ணத்தையும் சுவாசத்தையும் கொண்டே நல் நிலை பெற்று வாழ்ந்திட வேண்டும்.

பூமியில் மனிதராகப் பிறவி எடுத்த உயிராத்மாக்களின் நிலையெல்லாம் ஒரே ஆத்மாவைக் கொண்டு இவ் உடலில் வாழ்ந்திடவில்லை. பல அணுக்களின் நிலை எல்லாம் மனிதர்களின் நிலைக்கு வந்து தாக்கித்தான் இம்மனிதன் வாழ்கின்றான்.

ஆகவே… நல் உணர்வை எடுங்கள்…!

இவ்வுலகுடனே மட்டும் நாம் வாழவில்லை. இவ்வுலகைச் சுற்றியுள்ள இவ்வுலகில் தொடர்புடைய 48 மண்டலங்களுடன் அம்மண்டலங்களுக்குத் தொடர்புடைய பல நிலை கொண்ட மண்டலங்களின் தொடர்புடனும் வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்து…
1.நாம் இந்நிலை கொண்டு வாழ்வதற்கு
2.எந்தெந்த நிலையில் இருந்தெல்லாம் நமக்குச் சக்தி கிடைக்கிறது…? என்பதனை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.கண் வழி தான் நாம் கவர்கின்றோம்… அது தான் பதிவாக்குகின்றது.
2.கண்ணின் காந்தப் புலன் கவர்வது நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.இந்த உடலுடன் இணைந்தது எதுவோ அது பதிவான பின் உயிர் அந்த உணர்வின் தன்மையை இழுக்கின்றது.

அதாவது… நமக்குள் எத்தனையோ உணர்வுகள் அணுக்களாக இருப்பினும் கண் கொண்டு பதிவாகி உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அதைக் காற்றிலிருந்து பிரித்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

மாற்றியபின் சுவாசித்து உயிரால் தான் அது இயக்கப்படுகின்றது… நவமி.
1.எதன் உணர்ச்சிகளை எண்ணுகின்றோமோ அந்த எண்ணம் நவமி,
2.ஆனால் அதே சமயம் அஷ்டமி…! கண்களின் வழி நாம் நுகர்ந்தாலும் ஆன்மாவாகிறது… (தானாக) இயக்கும் சக்தி இல்லை.

நுகர்ந்து உயிரிலே பட்ட பின் அஷ்டமி என்றாலும் உயிருடன் ஒன்றிய பின் அந்த உணர்வின் அறிவாக நாம் தெரிந்து கொள்வது தான்.

அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகள். அந்த இருளிலே எதையும் செய்யாதீர்கள் என்பார்கள். ஆக… அஷ்டமியிலும் நவமியிலும் நல்லது எதையும் செய்யாதீர்கள் என்பார்கள்.

எதன் உணர்வின் தன்மை சேர்த்து அந்த உணர்வை அறிகின்றோமோ அறிந்து கொண்ட உணர்வு அதை அறியச் செய்வது இந்தக் கண்கள் தான்.

1.அறிந்து கொள்ளும் அறிவின் தன்மை கொண்டு நாம் எந்த நல்லதை எண்ணுகின்றோமோ
2.அதன் அறிவாக நம் உயிர் இயக்கும் என்பதைத்தான் அஷ்டமி நவமி… எதன் தெளிவின் தன்மை வருகின்றதோ ஈர்க்கும்.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று பார்க்கின்றோம். இந்த உணர்வின் தன்மை இது அஷ்டமி என்றாலும் அந்த உணர்வுகள் இருள் சூழ்கிறது.
1.வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி இருள் சூழ்ந்தால்
2.அந்தத் தீமையை எண்ணாதே என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறதே தவிர
3.இவர்கள் சொல்வது மாதிரி சாங்கிய சாஸ்திரம் அல்ல.

வேதனை என்ற உணர்வுகள் உயிரில் பட்ட பின் அது இருள் சூழ்ந்து விடுகின்றது. ஒன்பதாவது நிலையில் நவமி என்றாலும் வேதனை என்ற உணர்வுகள் தான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.

ஆகவே அந்த வேதனையை நவமிக் காலங்களில் எண்ணக்கூடாது என்று காட்டுகிறார்கள். அதே மாதிரித் தான் அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகளை எடுக்கக்கூடாது என்று காட்டுகிறார்கள்.

1.அதாவது தீமை என்று தெரிந்து கொண்ட பின் அந்தத் தீமையை நீக்கும் உணர்வுகளை
2.நாம் நுகர்ந்தறிவதற்குத் தான் இந்தக் கண்களைக் காட்டுகின்றார்கள்.

அன்றைக்கு நாம் நல்லது செய்ய வேண்டும்… நல்லவர்களாக வேண்டும்… நல்ல பயன்களை அடைய வேண்டும்…! என்று இப்படி எண்ணினால் அதன் உணர்வின் தன்மையே நமக்குள் அறிவாக அது இயக்குகின்றது.

சாஸ்திரங்களிலும் வேத நூல்களிலும் மூலங்களை இப்படிக் கொடுத்துள்ளனர்.
1.ஆனால் அந்த மூலத்தை மற்றவர் யாரும் அறிந்து கொள்ளாத நிலைகளில்
2.அஷ்டமி நவமி என்ற அந்த இரண்டு நாளும் நல்லதையே எண்ணி விடாதே என்று மாற்றிவிட்டார்கள்.

ஒரு நல்ல காரியத்தை முழுமையாகச் செய்து சந்தோஷப்பட்டு அதை எண்ணினோம் என்றால் நம் உயிர் அதன் உணர்வின் உணர்ச்சியாக இயக்குகின்றது.

1.ஒருவர் வேதனைப்படுகிறார் என்று கண் கொண்டு பார்த்தால்
2.அந்த வேதனையை நுகராதபடி எப்படி அவரை நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வின் தன்மை எடுக்க வேண்டும்.
3.தீமை வரும் நேரத்தில் எப்படி எண்ண வேண்டும்…? என்று தான் ஞானிகள் காட்டியுள்ளனர்.

இப்படி அந்த அஷ்டமி காலங்களிலும் நவமி காலங்களிலும் நாம் நல்ல காரியங்களைச் செய்து அந்த உணர்வின் தன்மை தெளிவாக்க வேண்டும் என்பதையே வேத பாட நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று உள்முகமாக நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

அதன் பின் எந்த நல்ல காரியமோ அது நடை பெற வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் அது நிச்சயம் நல்லதாகும்.

உணர்வின் ஒலிகளையும் அதனின் இயக்கங்களையும் குருநாதர் எனக்குக் காட்டிய விதம்

 

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் செல்கின்றார் ஒரு மரத்தின் சக்தி எவ்வாறு இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

ஆனால் அந்த மரத்தில் வாழும் புழுக்கள் எப்படி இருக்கின்றது…? என்பதனைக் காட்டுவதற்காக மரத்தை உற்றுப் பார்க்கும்படி சொல்கின்றார். ஒரு கையை அதன் மேல் வைத்து உற்றுப் பார்க்கும்படி சொல்கின்றார்.

அவர் கையில் இருக்கக்கூடிய ஒரு ஆயுதத்தை வைத்து மரத்தின் தாவை (மரத்தின் கொப்பு) வெட்டுகின்றார். அந்தத் தாவு நிறைய புழுக்கள் உண்டு. அதில் இருக்கக்கூடிய சத்தை அது உணவாக உட்கொள்கின்றது.

1.ஆனால் வெட்டும் பொழுது அந்தப் புழுக்கள் கத்துகின்றது தன் இரை போய்விடுமே என்று…!
2.மரத்தின் கொப்பு கீழே முறிந்த பின் அதிலிருக்கக்கூடிய புழுக்கள் கத்தக்கூடிய நிலையும் ஒன்றுடன் ஒன்று ஓலமிடக்கூடிய நிலையும்
3.அதன் உணர்வு ஏங்கி வெட்டுபவரைப் பார்ப்பதையும் உற்று நோக்கும்படி செய்தார்.

உயிரணு தோன்றிய பின் புழுவாக உடல் பெற்ற நிலையில் தன் வாழ்க்கைக்கு எந்த மரத்தின் தழையை உணவாக உட்கொள்கின்றதோ அதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையைப் பார்க்கின்றது.

1.அதனுடைய சப்தங்கள் பயங்கரமாக இருக்கின்றது…!
2.அதை பன்மடங்கு பெருக்கி அதனுடைய ஒலிகளை எடுக்கும்படி செய்கின்றார்.

அதே சமயத்தில் மரத்தையும் உற்றுப் பார்த்து கை வைத்துப் பார்க்கப்படும் பொழுது
1.மனிதனை அடித்தால் எப்படி நாம் துடிக்கின்றோமோ
2.கை, கால் அங்கங்களை இழந்தால் எப்படி வேதனைப்படுகின்றோமோ
3.அதை வெட்டும் பொழுது அதனுடைய சோர்வலைகள் எப்படி ஊடுருவுகின்றது…?
4.மரத்தின் உணர்ச்சிகள் எவ்வாறு தடைப்படுகின்றது…? என்பதையும் காட்டுகின்றார்.

அந்த மரம் தன் இலைகளின் நுனிகளிலிருந்து தன் இனமான சத்தை… இதற்கு முன் தாய் மரம் விளைய வைத்த சத்தினை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி இருப்பதைக் கவர்ந்து தான் உணவாக உட்கொள்கின்றது. அதை வைத்துத் தான் அந்த மரம் வளர்கின்றது.

நமக்கு எப்படி மூட்டைப் பூச்சி கடித்தாலோ கொசு கடித்தாலோ உணர்ச்சியின் தன்மை படுகின்றோமா இதைப் போல
1.இந்தப் புழுக்கள் மரத்தின் இலை நுனிகளை உணவாக உட்கொள்ளும் பொழுது
2.அதைக் கடிக்க அந்த உணர்வின் தன்மை நெளிந்து கொடுப்பதும்
3.இதைப்போல அதனின் உணர்வின் உணர்ச்சிகள் ஒரு விதமான ஓசைகளை எழுப்புகின்றது.

தாவு வெட்டிக் கீழே விழுந்த பின் இதனுடைய துடிப்பும் மனிதன் ஒரு கையை இழந்தால் நாம் எப்படி வாடுகின்றோமோ வேதனைப்படுகின்றோமோ “அந்த உணர்வின் ஒலி அதிர்வுகள்” அங்கே வருவதைக் காட்டுகின்றார்.

இதையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தால் அதை நாம் நுகர்ந்தால் அந்த மரம் வெட்டுண்ட நிலையைப் பார்க்கும் பொழுது “உங்கள் உணர்வுகளும் சோர்வடைவதைப் பார்க்கலாம்…”

ஒரு மரத்தை வெட்டுகின்றீர்கள்
1.அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நீங்கள் ஆனந்தமாகச் சுவாசித்தாலும்
2.வெட்டியபின் உடலில் சோர்வின் தன்மை நிச்சயம் உணர முடியும் என்று இதைத் தெளிவாக்குகின்றார்.

வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் வரப்பப்படும் பொழுது எதன் உணர்வை அது கவர்ந்து கொள்கின்றதோ அந்த கவர்ந்து கொண்ட உணர்வுகள் இந்தச் செடியின் தன்மை போகும் பொழுது இன்னொரு செடி அதைக் கவருகின்றது.

ஈர்க்கும் சக்தி குறையப்படும் பொழுது உணவு இல்லை என்றால் அதன் பகுதி எடுக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகள் என்ன…? என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

ஏனென்றால்
1.இயற்கையில் எப்படி ஜீவன் கிடைத்தது…?
2.உணர்வுக்கொப்ப உடல் எப்படி அமைந்தது…? என்பதை
3.காடுகளுக்கு அழைத்துச் சென்று முதலில் இதைத்தான் குருநாதர் காட்டினார்.

மற்ற சூரியக் குடும்பத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் மேலான வளர்ச்சியாக நாம் வளர்ந்து காட்டிடல் வேண்டும்

 

சூரியனின் சக்தியை மட்டும் நாம் பெறவில்லை நமக்கு சூரியன் பல மண்டலங்களின் சக்தியை ஈர்த்து எடுத்து அளிக்கின்றது. நம் பூமியின் நிலையின் சக்தியும் நம் பூமியைப் போல் உள்ள மற்ற பூமி ஈர்த்து எடுத்துச் சுழல்கின்றது.

அச்சூரியனிலிருந்து ஒளிக்கதிர்களை நாம் பெறும் பொழுதே பல உயிரணுக்களை… பல சக்தி நிலையை நாம் பெற்றுக் கொண்டே உள்ளோம். சூரியனைக் காணும் நாம் அச்சூரியனின் உள் நிலையை உணர்ந்து வாழும் தன்மையை பெற்றிடலாம் நாம் எடுக்கும் ஜெப அருளைக் கொண்டு.

சூரியனைச் சுற்றி உள்ள ஒளிக்கதிர்களைப் பெரும் உஷ்ணமாகக் கக்கும் நிலையில் உள்ளது என்று எண்ணுகின்றோம். மற்ற மண்டலங்களில் இருந்து வரும் ஒளியின் தன்மையும் சூரியனின் ஒளிக்கதிர்களும் இச்சூரியன் சுற்றும் வேகத்தைக் கொண்டு இச்சூரியன் மேல் ஒளிக்கதிர்கள் பட்டு அச்சக்தியைத் தன்னுள் ஈர்த்து அச்சூரியன் நமக்கு ஒளி தருகின்றது.

ஒளிக்கதிர்கள் வந்து இப்பூமியில் படர்கிறது.
1.அவ்வொளிக் கதிர்களிலே பல வித நிலை கொண்ட கதிர்கள் உள்ளன.
2.ஒவ்வொரு மண்டலங்களைப் பொறுத்தும் ஒவ்வொரு வித ஒளிக் கதிர்கள் அச்சூரியனில் பட்டு இப்பூமியை வந்து தாக்குகின்றன.
3.ஒரே நிலையான காற்றும் ஒளியும் படர்வதாக நாம் எண்ணுகின்றோம்.
4.அவ்வொளிதனிலே பல விதத் தாதுப் பொருட்களை அளிக்கும் தன்மை உள்ள ஒளிக்கதிர்கள் உள்ளன.

இப்பூமியில் வளரும் தாதுப் பொருள்கள் எல்லாம் அவ்வொளியிலிருந்து எந்த நிலை கொண்ட தாதுப் பொருளை உடைய ஒளிக் கதிர்கள் இப்பூமியின் மேல் படர்கின்றனவோ… அந்த நிலையில் உள்ள நீர்ச்சத்தைக் கொண்டு அந்நிலையில் அது வளரும்… ஜீவன் பெற்று வளரும் தன்மை கொண்டே தான்… இன்று நாம் தோண்டி எடுக்கும் பல வகை உலோகங்களும்… வளரும் நிலைக்கு அவ்வுலோகம் வந்ததும்… அந்நிலையில் உள்ள பூமியின் மேல் சூரிய ஒளியின் ஒளிக்கதிர்களில் இருந்து தத்தம் நிலைக்கு உகந்த ஒளிக்கதிர்களை ஈர்த்து… தன்னைத்தானே வளர்க்கும் தன்மைக்கு உலோகங்களின் நிலை எல்லாம் உள்ளது.

இம்மண்டலங்களிலே ஜீவன் இல்லாத மண்டலங்களும் உயிர் சக்தி இல்லாத மண்டலங்களும் எதுவுமே இல்லை. ஜீவன் பெற்றே ஜீவனுடனே ஆண்டவன் என்ற ஆண்டவன்கள் தாம் எல்லாமே.

ஒவ்வொரு மண்டலமும் தத்தம் ஈர்ப்பு நிலைக்கு ஏற்பத் தமக்குள் பல வகை நிலை கொண்ட உலோகத்தன்மையை ஈர்த்து வளர்த்து வாழுகின்றது.

1.இம்மண்டலத்தில் உள்ள நிலை கொண்ட உலோகங்கள் பிற மண்டலத்தில் மாறுபட்ட தன்மையில் உள்ளன.
2.இம்மண்டலத்தில் நாம் காணும் வண்ணங்கள் பிற மண்டலத்தில் மாறுபடும் தன்மையில் உள்ளன.
3.அம்மண்டலத்திற்குச் சென்று பார்த்தால் தான் அம்மண்டலத்தின் அழகைக் கண்டிடலாம்.
4.அழகுடனே மணத்துடனே சுழல்கின்றன எல்லா மண்டலங்களுமே.

வாழும் வாழ்க்கையை அன்புடனும் அழகுடனும் அறிவுடனும் மகரிஷிகளின் சக்தி பெற்று வாழ்ந்திடும் நாம் கால நிலையை வீண் விரயம் செய்திடாமல்
1.நமக்கு மேல் உள்ள “பல மண்டலங்களில் வாழ்ந்திடும் உயிரணுக்களுக்கு மேல் சக்தி பெற்று வாழும் தன்மைக்கு” நம்மை நாம் பக்குவப்படுத்தி
2.இக்காற்றுடன் கலந்துள்ள அச்சூரியனின் ஒளி கதிர்களிலிருந்து நாம் நம் சுவாச நிலைக்கு உகந்த சக்தி கொண்ட ஒளிக்கதிர்களை ஈர்த்தெடுத்து
3.இவ் உடலைப் பெரும் பொக்கிஷமாக வைரமாக்கி வாழ்ந்திடும் தன்மை கொண்டே
4.நம் உயிராத்மாவை நமக்குகந்த எல்லா சக்தி நிலைகளும் பெறும் தன்மைக்கு
5.நம் எண்ணமும் சுவாசமும் எடுக்கும் தன்மையை நாம் பெற்று வாழ்ந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விநாயகர் தத்துவத்தில் முழு முதல் கடவுள் என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள். அதனின் உட்பொருள் என்ன..?

இந்த மனித உடலை நாம் என்று பெற்றோமோ… மிருக நிலையிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையை…
1.வினை எல்லாம் தீர்ப்பவனே விநாயகனே என்று
2.இந்த மனித உடலைக் காட்டினார்கள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்ற நாம் தான் “முழு முதல் கடவுள்…” சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது நம்முடைய நிலைகள் என்ற இந்த நிலையை அன்று ஞானிகள் உணர்த்திச் சென்றார்கள்.

ஆகவே அதை நாம் பெறுவதற்கு நாம் என்னென்ன நிலைகள் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடிக்கும் நம் எண்ணத்தை நல்வழியில் நல்ல வினைகளைச் சேர்ப்பதாகச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

எண்ணம் எங்கிருந்து தோன்றுகிறது..?

1.நாம் கண் கொண்டு பார்க்கப்படும் போது
2.ஒரு உணர்வை ஈர்த்து நமக்குள் செலுத்தப்படும் போது தான் அந்த எண்ணங்கள் தோன்றுகிறது.
3.அந்த எண்ணத்தின் உணர்வின் தன்மை நமக்குள் இயக்கப்படுகிறது… அதை மீண்டும் நுகர்கின்றோம்.

பின் எதை நாம் கூர்ந்து கவனித்தோமோ அது நமக்குள் பதிவாகிறது, மீண்டும் நினைவாகும் போது “அதே அலைகள்” எடுக்கின்றது. எண்ணமே இல்லாத நிலைகளில் அந்த எண்ணத்தை உருவாக்குகின்றது.

பள்ளியில் படிக்கச் செல்கிறோம். முதலில் அதைப் பற்றிய எண்ணமே அற்றவர்கள் தான். அங்கே சென்ற பின் பாட நூல்களைப் படிக்கின்றோம். படிப்பின் கவனைத்தைச் செலுத்தப்படும் போது அந்த எண்ணங்கள் உருவாகின்றது… தோன்றுகிறது

அந்த எண்ணத்தை மீண்டும் நாம் எண்ணும் போது அது வலிமை வருகின்றது. ஆனால் பாடத்தைப் படிக்கும் போது…
1.பாட நிலைகளிலே நினைவுகள் (சிந்தனை) வேறு விதமாக இருந்தால்
2.பதிவாகவில்லை என்றால் நமக்கு ஞாபக சக்தி இல்லை என்று பொருள்.

அடுத்து அதனின் ஞாபகம் வருவதில்லை. தானாகவும் வருவதில்லை… மீண்டும் எண்ணினாலும் நமக்குள் வருவதில்லை.

எதை நம் எண்ணத்தில் “கருத்தில் கொண்டு…” அதை நாம் எடுக்கின்றோமோ அது பதிவான பின்
1.மீண்டும் அந்த நினைவுகளை எடுக்கும் போது
2.அந்த அலைகளை நாம் சுவாசித்து
3.அந்த உணர்வின் தன்மையை அறியச் செய்யும்.

ஆனால் நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அங்கே பதிவாகவில்லை என்றால்… அந்த எண்ணம்… அதை நாம் திருப்பி எண்ணினாலும் வராது.

பள்ளியில் படிப்பவர்கள் சிலர் எனக்கு ஞாபக சக்தியே வரமாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா…!

இதே மாதிரித் தான் நாம் இந்த வாழ்க்கையில் நாம் நேரடியாகப் பார்க்கப்படும் போது
1.ஒருவரைப் பார்க்கின்றோம்… அவர்கள் செயலைப் பார்க்கின்றோம். அந்த உருவத்தின் தன்மை படமாகின்றது.
2.அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் அலைகளாக மாறுகின்றது.
3.நம் கண் படமெடுக்கின்றது… அந்த உணர்வின் அலைகளை நமக்குள் ஈர்க்கின்றது.
4.நாம் சுவாசித்த பின் நம் உடலுக்குள் அந்த நினைவு பதிவாகின்றது.
5.அந்த அலையின் தொடர்கள் அதனுடைய நிலைகள் வித்தாக (வினை) ஊன்றுகின்றது.
6.அந்த வித்தின் நிலைகள் மீண்டும் அதை எண்ணப்படும் போது அந்தச் செயலின் தன்மைக்கு மீண்டும் நாம் இயக்கப்படுகின்றோம்.
7.ஆகவே நமக்குள் எந்த எண்ணங்களைப் பதிவு செய்கின்றோமோ அந்த எண்ணங்கள் தான் மீண்டும் நம்மை அதன் வழிக்கு இயக்குகிறது.

இப்படித் தான் மதங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலைகள் அனைத்தும்
“அது ஒவ்வொன்றும் இன்னென்னது…” என்று நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.

அந்தப் பதிவின் நிலைகளிலேயே தான் நாம் நடக்கின்றோம். அதன் வழியில் இது கெட்டது… இது நல்லது… என்று அறிந்து நாம் நடக்கின்றோம்.

துன்பங்களைப் பற்றி ஒரு போதும் சிந்திக்காதீர்கள்…!

 

குருநாதர் ஒரு சக்தியைக் கொடுத்த பின்
1.அந்தச் சக்தியை நான் எப்படிப் பயன்படுத்துகின்றேன்…? என்கிற வகையில்
2.பல பரிட்சைகள் செய்துதான் அதைக் கொடுக்கின்றார்.

அவர் காட்டிய உண்மைகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று தான் இப்போது உபதேசித்து வருகின்றேன்.

காரணம் ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை அவஸ்தைகள் படுகின்றார்கள் அவர்களுக்கு அருள் உணர்வை எப்படி ஊட்ட வேண்டும்…? என்று கூடுமான வரையிலும் முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றேன்.

இன்று வரையிலும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றேன்.

அரும் பெரும் சக்திகளைக் கொடுத்திருக்கின்றார். கஷ்ட நஷ்டங்களைப் நீக்கி அந்த அருள் சக்திகளை எவ்வாறு பெறுவது…? என்கிற வகையில் இதைk கொடுத்து அதைச் செயல்படுத்த வேண்டும் என்று செய்து கொண்டு வருகின்றேன்.

ஆனால்…
1.நோய் எல்லாம் நீங்கி விட்டது என்றால் அருள் சக்திகளை எடுப்பதை மறந்து விடுகின்றார்கள்
2.அர்ச்சனை அபிஷேகம் மந்திரவாதியிடம் செல்வது தாயத்தைக் கட்டுவது என்று போய் விடுகின்றார்கள்.
3.காரணம் அடிக்கடி அவர்களை நான் சந்திக்க முடியாது அல்லவா.
4.அவர்கள் நிலைக்குத்தான் செல்கின்றார்களே தவிர சிந்திக்கும் தன்மை இல்லாது போய்விட்டது.

உலகம் முழுவதும் கால்நடையாகச் சென்று ஒவ்வொருவரும் எப்படி அவஸ்தைப்படுகின்றார்கள்…? ஒருவருக்கொருவர் எப்படி சாபம் விடுகின்றார்கள் சாபமிட்ட வரும் சாபத்தை கேட்டுக் கொண்டவரும் உடல்களிலும் எப்படி தீமைகள் வருகின்றது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்பதற்காகத்தான் எத்தனையோ வழிமுறைகளை இன்றும் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

பிறருடைய எண்ணங்களை நாம் எண்ணுகின்றோம் சுவாசிக்கின்றோம் அந்த உணர்வு நமக்குள் வந்தபின் நோயாக மாறுகின்றது.
1,இந்த நோயை எல்லாம் நீக்கியவன் துருவன்.
2.அதை நாம் நுகர்ந்து கொண்டே வந்தால் இந்த தீமைகளை நீக்கும்
3.நோய்களை நீக்குவதற்குண்டான வழியும் கிடைக்கும்.

ஏனென்றால் பல தீமைகள் நமக்குள் இருக்கின்றது. இருந்தாலும் துருவ மகரிஷியின் அருள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். இதை நினைவு கொண்டு நீங்கள் வளர்த்துக் கொண்டு வந்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களைச் சமாளிக்கக் கூடிய நிலை வரும்.

நாம் பார்த்த உணர்வுகளை எல்லாம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி இருக்கின்றது. அதிலே எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த வளர்ச்சியை அது பெறுகின்றது.

செடியை ஊன்றி நாம் அதை எப்படிப் பராமரிக்கின்றோமோ அதற்குத் தக்க நன்றாக வளருகின்றது. இதைப் போன்று தான் நமக்குள் இருக்கக்கூடிய குணங்களுக்குள் வெறுப்பு அதிகமாகி விட்டால் அது வளர்ச்சியான பின் அதற்குத் தகுந்த நோயாக மாறி விடுகின்றது.

ஒருவர் மீது பாசத்தை வைத்து விட்டோம் என்றால் அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் வேதனை வந்து விடுகின்றது. பாசத்தால் நன்மையும் செய்ய முடியவில்லை என்றால் வேதனை அதிகரித்து நோய் தான் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மீள்வது எப்படி…?

அதற்குத் தான்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியையும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும்
3.அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியையும்
4.நீங்கள் நினைத்தவுடன் அதைக் கிடைக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

திட்டியவர்களை எண்ணினால் புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கல் ஆகிறது. இதே போல் அருள் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று துன்பங்களை நீக்குவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே துன்பங்களைப் பற்றிச் சிந்திக்காதீர்கள்…!

மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்… நலமும் வளமும் பெறுவேன்… நான் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்…! என்று “மன உறுதி” கொண்டால் எல்லாம் சரியாக இருக்கும்.

ஆகவே உங்கள் எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகருங்கள். இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை வெல்லுங்கள். அருள் ஒளி கொண்டு இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

அருள் ஒளியை வளர்த்திடும் நிலையாக பிறவி இல்லாத நிலைக்கு அழைத்துச் செல்ல “நீங்கள் எதை எண்ணுகின்றீர்களா” அதை உங்கள் உயிர் உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான்… உடலுக்குள் அது இந்திரீகமாக மாறுகின்றது… பிரம்மம் ஆகின்றது… அடுத்து சிவமாக ஒளியின் சரீரமாக மாற்றுகின்றது.
1.நீங்கள் எண்ணியதைத் தான் உங்கள் உயிர் படைக்கின்றது
2.எண்ணிய உணர்வுப்படி தான் உங்கள் வாழ்க்கை அமைகின்றது
3.எண்ணிய உணர்வின் செயலாகத்தான் இந்த வாழ்க்கை வாழ்கின்றோம் என்ற நிலையினை எண்ணி
4.இந்த உடல் சதமானது அல்ல… நமக்கு என்றும் நிலையான சதமான உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி
5.அழியாத நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை நமக்குள் வளர்ப்போம்.

அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் இந்த மனித உடலில் பெறத் தவறினால்… இனிமேல் இன்னொரு உடலுக்குள் சென்று அதைப் பெற முடியாது.

ஆகவே அருள் வாழ்க்கை வாழ்வோம்… இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுவோம்… நஞ்சை வென்றிடும் உணர்வைப் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கண் தெரிந்த பிற்பாடு ஒரு புழு என்ன செய்கின்றது…?

புழு பாறையின் மீது நகர்ந்து செல்கிறது. அந்தப் பாறையிலே வெயில் படுகின்றது. ஆனால் அதிலே முதலில் வெயில் இல்லை.

புழு அதன் மீது நகர்ந்து செல்லப்படும் போது கொஞ்சம் நேரமாகின்றது. ஆனால் அதற்குள் வெயிலின் கடுமையாகிப் பாறை சூடாகின்றது.

சூடாகும் போது தாங்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

1.அந்த நேரத்தில் தன் கண் கொண்டு தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வு கொண்டு நாலாபுறமும் பார்க்கின்றது.
2.அப்போது அங்கே சுற்றி இருக்கும் செடிகளும் அதனின் நிழலும் புழுவிற்குத் தெரிகின்றது.

அதே சமயத்தில் அந்த வெயில் செடியிலே பட்டு அந்த மணம் வெளி வருகிறது. அதை இந்தப் புழு கண் கொண்டு கூர்மையாகப் பார்க்கின்றது.

அதிலிருந்து வரக்கூடிய அந்த மணத்தைக் புழுவின் கண்ணில் உள்ள காந்தப் புலனறிவு… சத்தியபாமா கவர்கின்றது.
1.அந்தச் செடியின் நிழலையும் மணத்தையும் சுவாசித்த பின் சத்தியபாமா உணர்த்துகின்றது.
2.அதாவது அங்கே நிழல் இருக்கின்றது என்ற நினைவை ஊட்டுகின்றது.

அந்த மணத்தின் தன்மை கொண்டு நிழல் இருக்கிறது என்று காட்டப்படும் போது மூஷிகவாகனா கூர்மையாகக் கவனித்து அதைச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை எண்ணம் கொண்டு அந்த நிழலுக்கு இந்த உடலை அழைத்துச் செல்கிறது.

அப்படி அழைத்துச் சென்றாலும்
1.இங்கே அடித்த வெப்பமும்
2.இது ஏற்கனவே உணவாக உட்கொண்ட நிலையும்
3.அங்கே செடியின் நிழல் வேறு.

இருந்தாலும் அந்த நிழலுக்காக வேண்டி அதை எண்ணுகிறது தன்னைக் காக்க…!

ஆனால் அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தது. இந்த உணர்வின் தன்மை அதற்குள் வினையாகச் சேர்கின்றது. மூஷிகவாகனா. ஆனால் தப்பித்து விட்டது.

செடியைக் கண் கொண்டு படம் எடுத்தது. அந்தச் செடியிலிருந்து உணர்வின் தன்மையைச் சத்தியபாமா உணர்த்துகின்றது. உள்ளுக்குள் போனவுடனே இந்த உடலுக்குள் உணர்வுகள் எதிர் நிலை ஆகிறது.

ஆனால் இந்த உடலைக் காத்துக் கொள்ளச் சென்றது. அதை நுகர்ந்து பார்த்த உணர்வின் சத்து உள்ளே சேர்ந்து விடுகிறது.

நாம் நல்லவராக இருக்கின்றோம். ஒருவர் கஷ்டப்பட்டால் என்ன செய்கிறோம்…? ஐயோ… பாவமே…! என்று அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டு வைத்துக் கொள்கிறோம்.

அந்த வினை எல்லாம் இங்கே சேர்த்த பிற்பாடு மாரி…! மாரியம்மனை ஏன் வைத்திருக்கின்றார்கள்…? அந்தச் சக்தி என்ன செய்கிறது..?

கஷ்டப்படுவதைப் பார்த்து நாமும் அங்கே வேதனைப்பட்டோம் இங்கே நமக்குள்ளும் அதே வேதனையாக வந்துவிடுகிறது. அது தான் மாரி. (அங்கிருப்பது நமக்குள்ளும் மாறி வருகிறது)

அதே போல் தான் இந்தப் புழு அங்கே வேதனைப்பட்டது.
1.அதிலிருந்து தப்பித்துக் கொள்ளக் கூர்மையாக எண்ணியது.
2.அந்த உணர்வின் தன்மை அந்தச் சத்தைத் தனக்குள் எடுத்து மாரி…
3.இதற்குள் வந்து அது வினையாகச் சேர்கிறது.

முதலிலே தன் உணர்வுக்குள் வேதனையாகச் சேர்ந்தது. காரணம் அதனின் சத்து வெப்பம்… சூடு அதிகம். ஆனால் செடியின் மணத்தின் சத்தை “அந்த நிழலைப் படம் எடுத்தது…” இந்த உணர்வின் சத்து உடலில் விளைகின்றது. இதற்குள் எதிர்நிலையாகிறது.

ஒரு எலி வீட்டிற்குள் வங்கு போட்ட மாதிரி புழுவின் உடலில் அது வங்கு போடுகிறது. வங்கு போட்டு அந்த வினையின் சத்தாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக அடுத்த சரீரம் ஆமையாகப் பிறக்கிறது.

ஆமையை நெருப்பில் தூக்கிப் போட்டால் ஒன்றும் ஆகாது. அது சூட்டைத் தாங்கும் சக்தி கொண்டது. காரணம்
1.அந்த வெயிலின் கொடுமையான சக்தியை இதற்குள் தாங்கி
2.அதனின்று காத்துக் கொள்ள வேண்டும் என்று படமெடுத்து
3.அந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து இதனுடன் இணைத்து
4.அந்த உணர்வின் தன்மை கனத்த ஓடு கொண்ட ஆமையாகிறது.. அந்த ஓட்டிலே பார்த்தால் “வரி வரியாக” இருக்கும்.

பரிணாம வளர்ச்சியில் நாம் எப்படி வளர்ந்து வந்தோம் என்பதைக் காட்டுவதற்குத் தான் ஆமையைப் போட்டு ஞானிகள் காட்டியுள்ளார்கள். எதைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்குகின்றோமோ அதற்குத் தக்க அடுத்த உடல் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

ஆனால் கடவுளின் அவதாரத்தில் ஆமையை ஏன் போட்டார்கள்…? என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாத நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.

ஜீவன் இல்லாத நிலையில் எதுவுமே இல்லை

 

உயிரணுக்கள் இம்மண்டலம் மட்டுமல்ல பல கோடி மண்டலங்களிலும் கணக்கிலடங்கா மண்டலங்களிலும் உயிரணுக்களும் ஜீவராசிகளும் வாழ்கின்றன.

ஒன்றை ஒன்று பின்னியே வாழும் உயிரணுக்கள்
1.அவ்வுயிரணுக்கள் வாழ ஒன்றை ஒன்று அழித்தே ஒன்றின் சக்தியை ஒன்று பெற்றே
2.அழித்த நிலையிலும் மற்றொன்றின் சக்தியைத் தான் பெற்றே
3.ஒன்றில் ஒன்று பின்னியுள்ள உயிரணுக்கள் ஒன்றை ஒன்று அழித்துத் தான் ஒன்றிலிருந்து ஒன்று சக்தி பெற்று
4.இம்மண்டலம் பிற மண்டலங்கள் எல்லாமே சுழல்கின்றன.

இப்பூமி (மட்டும்) என்று எப்படிச் சொல்வது…?
1.மற்ற எல்லா நிலைகளிலும் உள்ள எதுவுமே அழிவதில்லை.
2.அழிவு என்ற நிலை “ஒன்றில் இருந்து ஒன்று மாறுபடும் நிலையாகத் தான்” அழியும் நிலை என்ற நிலையும் உள்ளது.

எல்லாமே எங்கு செல்கின்றன…?

இம்மனித உயிரணு உயிர் ஆத்மா இவ்வுடலை விட்டு மறு உடல் எடுக்கும் பொழுது அதன் நிலைக்கு வேண்டிய உயிர்ச்சத்தை எடுப்பதற்கு… இக்காற்றினுள் கலந்துள்ள பல கோடி ஜீவ அணுக்களின் சத்தைத் தன்னுள் ஈர்த்துத் தன் நிலைக்கு ஏற்ப உடலுக்கு வருகின்றது.

உடலை விட்டுப் பிரியும் ஆத்மாக்களும் அவ்வாத்மாவிற்கு வேண்டிய சத்தை இக்காற்றினிலிருந்து ஈர்த்துச் சுற்றிக் கொண்டே உள்ளது… மறு உடல் எடுக்கும் வரை.

இம்மண்டலங்கள் அனைத்திற்கும் உயிர் உண்டு. கல் மண் காற்று தண்ணீர் எல்லாவற்றிற்குமே ஜீவன் உண்டு. இவ்வுலகினிலே… இவ்வுலகம் மட்டுமல்ல
1.இம்மண்டலங்களிலே ஜீவன் இல்லாத நிலையில் எதுவுமே இல்லை.
2.பூமித்தாயும் ஜீவனுடன் தான் சுற்றுகின்றாள்.
3.இப்பூமியில் விளையும் எல்லா தாதுப் பொருள்களுக்குமே ஜீவன் உண்டு.

பல வகை உலோகங்களை பூமியிலிருந்து பிரித்து எடுக்கின்றோம். நாம் அதைப் பிரித்து எடுக்கும் நாள் வரை அந்த உலகத்திற்கு ஜீவன் உண்டு. தாமிரம் தங்கம் வைரம் என்று பல உலோகங்களை நாம் இவ்வுலகில் இருந்து பிரித்து எடுக்கும் நாள் வரை அதற்கு ஜீவன் உண்டு.

உதாரணமாக… மண்ணுக்குள் விலையும் வைரம் சூரியனில் இருந்து வரும் ஒளிக் கதிர்களில் இருந்து தனக்குகந்த நிலை கொண்ட சத்தைப் பிரித்து எடுத்து ஈர்த்தெடுத்து விளைகிறது.
1.அதை நாம் பிரித்து எடுக்கும் நாள் வரை அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
2.அதை வெட்டிய பிறகு தான் அது வளரும் தன்மையை இழக்கின்றது.

மற்ற உலோகங்களும்… நிலக்கரி… பூமியிலிருந்து ஊற்றாக எடுத்திடும் ரசாயன முறை கொண்ட பல வகைத் திரவ வஸ்துக்களும்… பூமியிலிருந்து கிடைக்கும் எல்லாவற்றின் நிலைகளும் உயிர் என்னும் ஜீவனுடன் தான் உள்ளது.

நாம் வாழும் பூமியை போல் உள்ள எல்லா மண்டலங்களிலுமே இதே நிலையில் தான் ஜீவனுடன் தான் சுற்றுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உடலில் நாம் இருக்கப்படும் போது ஒவ்வொரு நொடியிலும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து வளர்க்கச் செய்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றுவது தான் நரசிம்ம அவதாரம்… அடுத்து கல்கி.
1.இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.ஒளியின் சரீரமாக என்றும் நிலையான சரீரமாக அது வருகின்றது.

அதற்குத் தான் “மார்க்கண்டேயன்” கதையைக் காட்டினார்கள் ஞானிகள். என்றும் பதினாறு என்ற நிலையில்
1.எமனையே அவன் சிறைப்பிடித்தான்… எமனை வீழ்த்தினான்…! எமனை சம்ஹாரம் செய்தான் என்று
2.திருக்கடையூர் அமுதகணேஸ்வரர்…! ஆலயத்தில் காட்டியுள்ளார்கள்.

அதாவது… இந்த உயிர் பூமிக்குள் வந்த நிலைகளில்
1.சுவைமிக்க அமுதமாகக் கணேஸ்வரனாகத் தனக்குள் சேர்த்து
2.அந்த ஒளியின் சரீரமாக அசுத்தத்தை நீக்கி என்றும் பதினாறாக ஒளியின் தன்மையாக அது சேர்ந்தது.

அங்கே ஸ்தல விருட்சம் எது..?

பிஞ்சிளம் கொடி…! உயிரின் தன்மை கொண்டு அது எப்படி இளமைப் பருவமாக என்றும் பதினாறு என்ற நிலை அடைகின்றதோ அதைக் காட்டுகின்றனர்.

அந்தக் கொடியை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிலும் பட்டு… அதை ஒட்டியே தழுவிப் படரும்.

கொடி ஒன்றை ஒன்று படர்ந்து அது எப்படித் தன் சத்தை எடுத்து வளர்கின்றதோ… அது படர்வது போல் நமக்குள் அந்த உணர்வின் சத்தாக…
1.எல்லோரின் உணர்வுகளையும்
2.அருள் ஞான வழியில் வளர்க்க வேண்டும்.
3.அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் கூட்டுத் தியானம் என்பது.

நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும் என்றால்… என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும் என்றால் இந்தத் தியானத்தை எடுக்க வேண்டும்.

அதை விடுத்து விட்டு அந்தச் சாமி செய்யும்… இந்தச் சாமி செய்வார்… யாகம் செய்யும்… மந்திரம் செய்யும்… தந்திரம் செய்யும்… என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

உங்களை நீங்கள் நம்புங்கள்.. உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலை ஆலயத்தை மதித்து அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலிலே விளையச் செய்யுங்கள். அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யுங்கள்…!

இரண்யன் “மூன்று லோகத்தையும் கைப்பற்றுகின்றான்” என்றால் அதனின் பொருள் என்ன…?

 

உதாரணமாக… ஒருவரைப் பழி தீர்க்கும் உணர்வுகளையோ… அல்லது அவனைக் கொன்றிடும் நிலையோ… துன்பப்படுத்தும் உணர்வோ… நமக்குள் அதிகமாகி விட்டால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களை அது துன்புறுத்தி அதை மடியச் செய்துவிடும்.

பின் அதனால் உருவான உறுப்புகள் அனைத்தையும் சுருங்கச் செய்வதும் உடலின் தன்மை நலியச் செய்வதும் எண்ணத்தின் செயலும் அசுர உணர்வு கொண்டு சாபங்கள் இடுவதும்… “உன் குடும்பம் தொலைந்தது… உன் குடும்பத்தை அழித்தே தீருவேன்…!” என்ற சாப அலைகள் இங்கே வருகின்றது.

இப்படி விளைந்த இந்த உணர்வுகள் கொண்டு உடலை விட்டு அகன்றால் அடுத்து புலியாகத் தான் பிறக்க நேரும்.

தன் பசியைத் தீர்க்கும் உணர்வு கொண்ட ஒரு புலி மற்றதை அடித்து இரக்கமற்றுக் கொன்று புசித்துத் துன்புறுத்தும் நிலைகள் கொண்டு அச்சுறுத்தும் உணர்வு கொண்டு தான் அதன் உணர்வுகள் செயல்படும்.

அதைப் போன்றே
1.மற்றவரை ஈவு இரக்கமற்றுப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்படும் போது…
2.இவன் கேட்ட வரப்படி மனிதனான இந்திரலோகத்தை மாற்றி அமைத்து இவன் உயிர் புலியாக மாற்றும்.

அப்போது புலியின் உயிரும் விஷ்ணுவே…! அது எடுக்கும் அசுர உணர்வுகள் இந்திரலோகமாகி… அதன் உணர்வு கொண்டு அடுத்ததைக் கொன்று புசிக்க வேண்டும் என்று “பிரம்மனின் நிலைகளும்” அதை உருவாக்குகின்றது.

புலி அசுர குணங்கள் கொண்டு தாக்கும் போது மகிழ்ச்சி பெறும் சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது. எப்போதும் கொடூர உணர்வு கொண்டே வாழுகின்றது.

அதே சமயத்தில்
1.புலியான உடலும் சிவமே… அந்தச் சிவத்திற்குள் அசுர உணர்வின் சக்திகள் கூடி
2.இந்திரலோகத்தில் மகிழ்ச்சி என்ற நிலையே இல்லாதபடி ஆகிவிடுகிறது.
3.தன் இனத்தின் நிலைகளில் கூடப் போர் செய்ய செய்யும் முறையே வருகின்றது
4.”தன் குட்டிகளின் அரவணைப்பு” ஒன்றே அதற்குள் மிஞ்சும்.

ஆதாவது “தன் இனம்” என்ற நிலைகள் இருந்தாலும் சிறிது நேரமே ஒன்றி வாழுகின்றது அடுத்து… பகைமை உணர்வு கொண்டு தாக்கிடும் உணர்வுகளே அதற்குள் பெருகுகின்றது.

ஆகவே மனிதனான பின் இத்தகைய அசுர உணர்வுகளை எடுத்தால் நம்முடைய அந்த எண்ணப்படி இந்திரலோகத்தை மாற்றி அமைத்து அதை ஆட்சி புரியும் தன்மை வருகின்றது.

அதைத்தான் மூன்று லோகத்தையும் இரண்யன் தனக்குள் அடிமைப்படுத்தினான்… இந்திரலோகத்தில் உள்ள அனைவரையும் அடிமைப்படுத்தினான் என்று சொல்வது. காற்றுப் பகுதியில் உள்ள உணர்வுகளையும்… உடலான இந்திரலோகத்தையும் அடக்கி ஆளுகின்றான்.

அதாவது காற்று மண்டலத்தையும் அதுவாக (தன் உணர்வாக) மாற்றுகின்றான். அதே சமயத்தில் சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வினை அதிலேயும் (தன் உணர்வின் தன்மை கொண்டு) மற்றொரு நிலைகளில் அது அடக்கிடும் உணர்வின் சக்தியை எவ்வாறு பரப்புகின்றது…? என்ற நிலையைத் தான் “மூன்று லோகம்” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றார்கள்.
1.உடலான ஒரு லோகமும்…
2.புறத்தால் வரும் தன் சுற்றுப்புறச் சூழ்நிலையில் உள்ள நிலையும்
3.சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷத்திலும் இவன் இடும் உணர்வே அதனின் செயலாகவும் செயல்படுகிறது என்று காட்டுகின்றார்கள்.

அசுர குணங்கள் கொண்டு பேசினால் சுற்றுப்புறச் சூழ்நிலையான (காற்று மண்டலம்) அந்த லோகத்தையும் கவர்ந்து விடுகின்றது. அதற்குள் வாழும் மக்களும் சிறிதளவு அதை நுகர்ந்த பின் அந்த உடலையும் அடக்குகின்றது… அச்சுறுத்தி வாழும் நிலைகள் வருகின்றது.

உதாரணமாக ஒரு இடத்திலே போக்கிரி கடுமையாகப் பேசினால் அவன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை அடக்குகின்றான்.

நல்ல உணர்வின் தன்மை அடங்கிடும் உணர்வுகள் வெளிப்படுத்தும் போது கேட்போர் உணர்வுகளில் அவர்களுக்குள் புகுந்து அங்கே அச்சுறுத்தும் உணர்வு வருகின்றது.

அதே சமயத்தில் சூரியனால் வெளிப்படும் உணர்வின் தன்மையை அது மற்றதுடன் இணைந்து உணர்வின் அலைகளாக படரப்படும் பொழுது சூரியனின் சக்தியையும் இவனுக்குள் ஆட்சி புரிந்து கொள்கின்றான்.

இப்படி ஆக்கிரமிப்புத் தன்மையே அனைத்திலும் வரப்படும் பொழுது அவனின்று விளையும் தன்மை
1.உடலையும்
2.காற்று மண்டலத்தையும்
3.சூரியனுடைய உணர்வுகளையும்
4.இந்த மூன்று மண்டலங்களையும் அவனுடைய வீரியத் தன்மை கொண்டு ஆட்சி புரியத் தொடங்கி விடுகின்றது.
5.இதை நுகந்தோர் அனைவரும் மடியும் உணர்வும் அசுர உணர்வு கொள்ளும் நிலையை வருகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்காகத் தான் சாஸ்திரங்களில் இப்படிக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

சூரியனின் இயக்கம்

 

இன்று இப்பூமியில் நாம் உயிர் வாழ்ந்திட… நாம் மட்டுமல்ல இப்புவியில் உள்ள எல்லா உயிரணுக்களும் உயிர் வாழ்ந்திட… “காற்றும் நீரும் அவ்வொளியும்…” ஒளி என்பது சூரியனின் சக்தியிலிருந்து ஒளிக்கதிர்கள் இவ் பூமியில் வந்து தாக்கும் நிலையைக் குறிப்பிடுகின்றேன்.
1.இந்நிலை எல்லாம் இல்லாவிட்டால்
2.இப்புவிதனிலே உயிர் அணுக்கள் இல்லை.

அச்சூரியனுக்கு இந்நிலைகளைப் பூமிக்கு அளிக்க அச்சூரியனின் சக்தி எந்நிலையில் உள்ளது…?

இப்பூமி ஒரு முறை சுற்றிவர தன்னைத்தானே 24 மணி நேரம் ஆகின்றது என்று இந்தக் குறிப்பிட்ட கால நிலைகளை வைத்து ஒரு நாளைக் குறிப்பிடுகின்றோம்.

இங்கு எப்படி நாம் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்று சொல்கின்றோமோ அதைப்போல் இல்லாமல்… அச்சூரியனின் சுற்று அதி விரைவாக உள்ளது. அதாவது 12 மணி நேரம் என்னும் நிலையில் நாம் இங்கு ஒரு நாள் என்று குறிப்பிடும் நிலை அச்சூரியனின் சுற்றில் இரண்டு நாளாக உள்ளது.

அச்சூரியனிலிருந்து எப்படி நமக்கு ஒளி கிடைக்கின்றது…? அச்சூரியனின் தன்மை என்ன…?

சூரியனில் சரி பாதி நிலமும் சரி பாதி நீரும் உள்ள நிலையில் பல உயிரினங்களும் உள்ளன.
1.சூரியனைப் போல் உள்ள பல சூரியன்களின் ஒளியின் கதிர்கள் நம் சூரியனில் அவ்வொளிக்கதிர்கள் படும் நிலை கொண்டு
2.மற்ற மண்டலங்களில் உள்ள ஈர்ப்பு தன்மையைத் தன்னில் ஈர்த்து அச்சூரிய மண்டலம் வெகு விரைவில் சுற்றுகிறது.

சூரியன் சுருங்கி விட்டது என்று இன்றைய நிலையில் சொல்கின்றார்கள். அச்சூரியனின் சக்தியும் எடையும் சுருங்கவில்லை. முதலில்… என்பது நாளும் வருடமும் குறிப்பிடாத நிலையில் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.

பூமி எப்படி மற்ற மண்டலங்களின் நிலையை ஈர்த்துச் சுழல்கின்றதோ அதைப் போல் அச்சூரியன் மற்ற மண்டலங்களில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை ஈர்த்துச் சுழன்று கொண்டே உள்ள நிலையில் அதன் எடை எப்படிக் குறையும்…? ஈர்ப்பு நிலை பெறப் பெற அதன் சக்தி நிலை தான் அதிகம் பெற்றுச் சுழல்கின்றது.

1.சூரிய மண்டலத்திற்குச் செல்ல முடியாது. பெரும் நெருப்புக் கோள் போல் உள்ளது என்று நினைக்கின்றோம்.
2.அச்சூரியமண்டலமும் நாம் வாழ்ந்திடும் நாம் வாழும் பூமியின் நிலை போல் தான் நீருடனும் நிலத்துடனும் காற்றுடன் சுற்றிக் கொண்டுள்ளது.

சூரியனிலிருந்து நாம் பார்க்கும் ஒளி அது தன்னைத்தானே சுற்றும் வேகத்தில் அக்காற்றும் அக்காற்றுடன் கூடிய அணுக்கதிர்களும் அதிவேகத்தில் சுற்றும் பொழுது இவ்வொளியின் தன்மை நாம் பெறக்கூடிய பாக்கியத்தைப் பெற்றுப் இப்பூமியில் வந்து தாக்கி இப் பூமியையே சுழல வைக்கின்றது.

ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒன்றிலிருந்து ஒன்று அவ்வொளியின் சக்தியைப் பெற்றுச் சுழன்று கொண்டே தான் உள்ளது. நம் பூமிக்குச் சூரியனின் ஒளி மட்டுமல்ல… சந்திரனின் ஒளி மட்டுமல்ல… மற்ற எல்லா மண்டலங்களில் உள்ள அணுக்களின் தன்மையும் பெறுகின்றோம்.

சூரிய மண்டலத்திற்கு மேல் உள்ள மண்டலங்களின் நிலை கொண்டே அச்சூரியன் ஈர்த்து நமக்கு அளிக்கின்றது. அதைப்போல இப்பூமியின் சுழற்சியின் நிலை கொண்டு சந்திரனுக்கும் ஏன் சூரியனுக்கே கூட பூமியின் அணுக்கதிர்கள் செல்கின்றன.

இப்பூமி தனியாக இயங்கவில்லை 48 மண்டலங்கள் என்று உரைத்தேன். ஒவ்வொரு மண்டலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு சுற்றிக்கொண்டே உள்ளன.

நெருப்புக் கோளங்கள் என்ற நிலை எங்குமே இல்லை. ஒவ்வொரு மண்டலமும் சுழலும் வேகம் கொண்டு தான் ஒளியும் ஒலியும் நாம் பெறுகின்றோம்.

1.எல்லா மண்டலங்களிலுமே நீரும் நிலமும் உண்டு… உயிரணுக்கள் உண்டு
2.ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு நிலை கொண்ட உயிரணுக்கள் உயிர் வாழ்கின்றன.

எல்லா மண்டலங்களும் ஒன்று போல் உருண்டை வடிவத்தில் இல்லை… என் நம் பூமியே இல்லை…! உருளும் தன்மையை வைத்துப் பந்து போல் உருண்டையாக உள்ளது என்கின்றார்கள்.

இமயமலையும் பனிமலையிலும் உள்ள நிலைகளில் எப்படியப்பா உள்ளது பந்து போன்ற நிலை…? ஒவ்வொரு இடத்திலும் இந்நிலையே ஒவ்வொரு நிலை கொண்ட ஏற்றத்தாழ்வுடன் உள்ள பொழுது உலகம் பந்து போல் உருண்டையாக இருக்கிறது என்கின்றார்கள்.

பந்து போல் இருந்திட்டால் அச்சூரியனிலிருந்து விழும் ஒளிக் கதிர்கள் காலை மாலை என்ற நிலை இவ்வுலகனைத்திலும் ஒன்று போல் அல்லவா இருக்க வேண்டும்.

சில நிலைகளில் அச்சூரியனின் ஒளியே படாத நிலையான இடம் இருக்கின்றதல்லவா. உலகத்தை உருண்டையாகவும் தட்டையாகவும் கால நிலைக்கு ஏற்ப மனிதர்கள் யூகம் கொண்டு பல விஞ்ஞான நிலையில் பார்க்கும் பொழுது உருண்டை வடிவம் என்றும் தட்டையான நிலை என்றும் இன்றளவும் ஆராய்ந்து கொண்டே உள்ளனர்.

எந்த ஒரு பொருளும் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது உருண்டை வடிவமாகவோ நீண்ட வடிவமாகவோ தான் தெரியும். இந்நிலை வைத்து நம் யூகத்தில் தெரிந்ததாக நாம் எண்ணிக் கொண்டே வாழ்கின்றோம்.

சந்திர மண்டலத்தின் நிலை முக்கோண வடிவினிலே குமிழ் வடிவினிலே மேலும் பள்ளம் கொண்ட நிலையாகத் தான் உள்ளது.

1.ஒவ்வொரு மண்டலமும் ஒன்றைப் போல் ஒன்று இல்லை.
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே சுற்றிக் கொண்டு நிலையான நிலையில் தான் உள்ளது.
3.இப்பூமி தனி பூமியும் அல்ல. இவ் பூமியில் உள்ள உயிரணுக்கள் எதுவுமே தனி அல்ல
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்திடும் “நாம் இணையில்லா வாழ்வு பெற்று” என்றும் நிலைத்து வாழ்ந்திடவே இப்பாட நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எதை எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டதும் ஜீவன் பெறுகிறது… அது பிராணாயாமம். அந்த உணர்வின் சக்தி எனக்குள் பட்டவுடனே ஜீவன் பெறுகின்றது. இதற்குப் பெயர் பிராணாயாமம்.

ஆனால் ஒரு பக்கம் மூக்கை அடைத்துக் காற்றை இழுத்து உள்ளுக்குள் கொண்டு போய்ச் சேர்த்து மீண்டும் வெளிவிட்டால் இது பிராணாயாமம் என்று இவர்கள் கொண்டு போகிறார்கள்.

அன்று கீதையில் ஞானிகள் சொன்னது வேறு. இவர்கள் சொல்லும் நிலைகள் வேறு.

குண்டலினியைத் தட்டி எழுப்புவது என்று முதுகுத் தண்டில் இருக்கிறது என்று மூலாதாரத்தைத் தட்டி எழுப்புகிறார்கள்.
1.மூலம் என்பது உயிர்
2.ஆதாரம் என்பது உணர்வு.
3.நமக்குள் இருக்கும் நல்ல உணர்வைத் தட்டி எழுப்பி
4.”மெய் உணர்வைத் தனக்குள் சேர்க்க வேண்டும்” என்று அன்று சொன்னார்கள்.

இவர்கள் சொன்ன மாதிரி முதுகுத் தண்டில் தட்டி எழுப்பினால்… எவன் சொன்னானோ அவன் எண்ணத்தைக் கொண்டு இந்த ஆதாரத்தைத் தட்டியெழுப்பினால்… அவனுக்குள் வசப்படுத்துவது தான் இந்த முறை. இப்படித் தான் இவர்கள் செய்கின்றனர்.

மூலம் என்பது தன் உயிர். ஆதாரம் என்பது தனக்குள் இருக்கும் உணர்வைத் தட்டி எழுப்புவது தான் அது.

அன்று ஞானிகள் சொன்னதை எல்லாம் விட்டுவிட்டு இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு பெயரை வைத்துக் கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் பிறரைக் குறை கூறுகிறேன் (ஞானகுரு) என்று யாரும் எண்ண வேண்டாம். புத்தகங்களில் ஒருவர் பிராணாயாமம் செய்வது எப்படி…? என்று எழுதி வைக்கிறார் என்றால் அதைக் காட்டிலும் நான் ஒன்றைச் சேர்த்து புதிதாகக் கண்டு பிடித்துச் சொல்கிறேன் என்று இப்படி நிறைய வந்து விட்டது.

அன்று ஞானிகளால் கொடுக்கப்பட்ட உயர்ந்த தத்துவங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு விட்டது. அந்த உணர்வுகள் அழிக்கப்பட்டது.
1.இருந்தாலும் இன்றைய கடைசித் தருணத்தில் இது வெளிப்படுகின்றது…!
2.நான் (ஞானகுரு) வெளிப்படுத்துகிறேன் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
3.எனக்கு ஒன்றும் தெரியாது… மூன்றாம் வகுப்பு தான் படித்திருக்கிறேன்.

ஏனென்றால் உங்களை மாதிரி புத்தகத்தைப் படிக்க எனக்குத் தெரியாது. அந்தத் திறனும் இல்லை. அந்த விளக்கமும் எனக்குத் தெரியாது.

இதை எல்லாம் காட்டிய அந்த மெய் ஞானிகளின் அருள் வாக்குகள் தான் இங்கே செயல்படுகின்றது.

நீங்கள் எல்லாம் அந்த அருளைப் பெற வேண்டும் எண்ணி வரப்படும் போது
1.உங்கள் பாக்கியத்தில் நான் எண்ணி எண்ணி எடுக்கப்படும் போது
2.அந்த ஞானத்தின் சக்தி முதலில் எனக்குள் விளைகிறது.
3.இந்த உணர்வின் தன்மை இங்கே வெளி வரப்படும் போது யார் இதைக் கேட்கின்றனரோ அவருக்குள்ளும் விளைகிறது.

ஒரு செடியின் மணம் அடுத்தடுத்து வித்தை ஊன்றும் போது அதற்குள் ஈர்க்கப்பட்டு மீண்டும் அதே செடியாக விளைவது போல் தான் அதே மணத்தின் தன்மை இங்கே விளைகிறது.

1.நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.உங்களை அறியாத இருள் நீங்க வேண்டும்
3.மெய் ஒளி உங்களுக்குள் படர வேண்டும்
4.உங்கள் பேச்சும் மூச்சும் பிறரின் இருளை நீக்க வேண்டும்.
5.கேட்போர் உள்ளங்களை மகிழ்விக்க வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
6.அந்த உணர்வின் தன்மை எனக்குள் படைக்கின்றது… என் குரு காட்டிய நெறிகள் கொண்டு.

அவர் சொன்ன வலு கொண்டு நான் அதைப் பெற முடிகின்றது. இந்த உணர்வின் வித்தை விளைவிக்கவும் முடிகிறது. அந்த வித்தை எல்லோருக்குள்ளும் படரச் செய்ய முடிகிறது. உங்கள் உள்ளத்திலே பதியச் செய்ய முடிகிறது.

இதையே நீங்கள் எண்ணும் போது அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் விளைகிறது. அதன் மூலம் மற்றவருக்குள்ளும் அருள் ஞானத்தை விளையச் செய்ய முடியும். அருளானந்தம் பெற முடியும்.

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்

 

ஒரு செடியில் விளைந்த வித்தை நிலத்திலே ஊன்றினால் நிலத்தின் துணை கொண்டு தன் தாய்ச் செடியின் சத்தினைக் கவர்ந்து செடியாக அது வளர்கின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதன் வேதனைப்படுவதை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை உடலில் பதிவாகும் பொழுது வேதனை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகிவிடுகிறது.

எந்த மனிதன் அந்த வேதனையை நமக்குள் உருவாக்கினானோ அவன் மடிந்தால் அவன் உயிரான்மா நமக்குள் வந்து வேதனைப்படும் அணுக்களாக நமக்குள் நோயாக மாற்றிவிடும்.

பின் வேதனைப்படும் புழுக்களாக பூச்சிகளாக பாம்பாக உயிர் உருவாக்கி விடும்.
1.இதைப் போன்ற நிலையில் இருந்து ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும்.
2.காரணம் கடும் தீமைகளை எல்லாம் வென்றவன் துருவ மகரிஷி… அந்த உணர்வை நாம் பருக வேண்டும்,

ஆகவே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டுங்கள்.

அவன் தான் எண்ணியைதை உருவாக்குகின்றான் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அதைப் பெறுவதற்கு
1.எம்முடைய உபதேசங்களை இப்போது கூர்மையாகப் பதிவாக்குவதும்…
2.செவிப்புலனிலே இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டதும்… அந்த உணர்ச்சிகளை நீங்கள் நுகர்ந்ததும்
3.அது அனைத்தையுமே உயிர் அணுவாக உங்களுக்குள் மாற்றியதும்
4,மெய்ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் அணுக்களாக அதிகமாகப் பெருக்குவதற்கும் தான்
5.இந்த உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

இதை நீங்கள் பெற்ற பின் நினைவு கொண்டு வந்து மீண்டும் எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் அருளாற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

அந்த தகுதியைப் பெறும் சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்… உபதேச வாயிலாகப் போதித்தது.

நீங்கள் இதை நுகர நுகர உங்களுக்குள் அணுத் தன்மையாக அது விளைகின்றது. விஞ்ஞான உலகில் வாழ்ந்தாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற அருள் உணர்வை நீங்கள் சேர்த்துக் கொண்டே வந்தால்
2.அதைப் பற்றுடன் பற்றும் நிலை உங்களுக்குள் வருகின்றது.
3.இந்த உடலை விட்டுச் சென்றால் “நம் பற்று அங்கே இருப்பதால்” உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்று விடுகிறது.

ஆனால் அதற்கு மாறாக “நான் நன்மை செய்தேனே… எனக்கு இவன் தீமை செய்கிறானே…” என்று இங்கே பற்றிக் கொண்டால் இங்கே தான் மீண்டும் சுழல வேண்டி வரும்.

பழி தீர்க்கும் உணர்வுடன் அவன் உடலுக்குள் தான் செல்ல வேண்டும் அல்லது அந்த உணர்வு நம்மை அழித்துப் பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாக கீழான நிலைகளுக்குச் சென்று விடுவோம்.

இது போன்ற நிலைகளில் இருந்து மீள்தல் வேண்டும்
1.அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும்
2.எமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக எப்பொழுதும் இருக்க வேண்டும்.
3.அவர் கற்றுணர்ந்த உணர்வின் அலைகள் இங்கே பரவிப் படர்ந்துள்ளது.
4.குருநாதர் மெய் ஒளி பெற்ற அந்த அருள் உணர்வுகளும் இங்கே படர்ந்துள்ளது…!
5.அதை நீங்கள் பெற வேண்டும்… பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடல் வேண்டும். இருவரும் ஒன்றாக அருள் ஒளியைத் தனக்குள் அணுக்களாகப் பெருக்குதல் வேண்டும். அந்த எண்ணத்தைக் கொண்டு நல்வினைகளாக மாற்ற வேண்டும்

ஒவ்வொருவரும் நீங்கள் அதை பெற வேண்டும்

இதன் வழிகொண்டு உங்கள் வாழ்க்கையில் வந்த இருளை மாய்த்துக் கொள்ளுங்கள்… மெய்ப் பொருள் காணுங்கள்… “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்…! என்று எல்லா மகரிஷிகளையும் நான் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு)”

“ஜெகஜ்ஜோதியான” வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே நல்வாழ்த்து அருளுகின்றேன் – ஈஸ்வரபட்டர்

 

அன்புருவம் கொண்ட அன்னை தந்தையின் அருளில் அருள் பெற்ற சக்தியின் “சத்தியச் செல்வங்களே…!”
1.இப்பாடத்தைப் படித்திடும் நீங்கள் எல்லோருமே
2.அன்பே தெய்வமான அந்த இராம நாமத்தை ஒத்த அன்புடன் கூடிய குணவானாகவும்
3.ஸ்ரீமுருகனின் அழகென்னும் அருள் செல்வச் சொல்லாற்றல் உடைய சிங்கார வடிவனின் வடிவழகுக் குமாரர்களைப் போலவும்
4.கலைமகளின் கல்வி அருள் பெற்று மகாலட்சுமியின் செல்வத்திறன் பெற்று வீர குணமுடைய ஆஞ்சநேயரைப் போலவும்
5.விளையாட்டின் வடிவத்திலே மன நிலையைக் களிப்புடன் களித்தாட்டும் கிருஷ்ணனின் குணநிலையைப் போலவும்
6.இப்படி ஒவ்வொரு சித்தர்களுக்கும் தகுந்த நிலையில் நமக்குக் குண நிலைகளைப் போதித்த “நம்மை ஆண்டவனாக எண்ணி வணங்குவதற்கு”
7.நாம் எந்தெந்த குணநிலைகளைப் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்திடலாம் என்பதற்குகந்த குண நிலைகளைப் போதித்து
8.நமக்கு வழிகாட்டிய சகல ரிஷிகளுக்கும் பல நிலை பெற்ற அன்பே தெய்வமான பல பெரியோர்களுக்கும் ஞானிகளுக்கும்
9.நம்முடனே கலந்துள்ள நமக்காக வாழ்ந்திடும் பல சித்தர்களுக்கும்
10.நாம் இன்று இந்நூலின் வடிவத்தில் சொல்லி வரும் பல உண்மைகளுக்கு நம்முடைய அன்பைக் காட்டி
11.”நமக்கு நல்ல ஆசி வழங்கிட வேண்டிக் கொண்டே” இந்த நூலைப் படிப்போமாக.

சக்தியின் நிலை இவ்வுலகில் உதித்த இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரணுக்களுக்கும் “ஒவ்வொரு திறமையில் திறமை பெற்றுத் தான்” இப்பூவுலகில் வந்து பிறக்கின்றன.

மனிதன் மிருகங்கள் பட்சிகள் செடி, கொடி, புழு பூச்சி எல்லாவற்றிற்குமே இச்சக்தியின் அருளில் “ஒவ்வொரு திறன் கொண்டு தான்” சக்தி பெற்றே இப்பூமண்டலத்தில் வந்து பிறக்கின்றன.

இந்நிலையில் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம் நம் சக்தியை நம் திறனை நம் எண்ணத்தைப் பல வழிகளில் சிதற விட்டு நாம் பெற்ற பாக்கியத்தை இழந்து வாழும் நிலையில் தான் இன்று இவ்வுலகினிலே வாழ்கின்றோம்.

இச்சக்தியின் அருளில் ஒவ்வொருவருக்கும் செயலாற்றும் தன்மையிலே ஒவ்வொரு திறனும் உண்டு. மனிதனாகப் பிறவி எடுத்த நமக்கு அச்சக்தியின் அருளில் மற்ற மிருக ஜந்துகளுக்கு இல்லாத நிலையான செயலாற்றும் தன்மையில்…
1.நமக்கு இரண்டு கைகளையும் சொல்லாற்றல் உடைய சொற்களைப் பேசும் திறன் உள்ள நாம்
2.நமக்கு அளித்த அத்திறனை ஒரே நிலை கொண்டு நம் எண்ணங்களைச் சிதறவிடாமல்
3.அவ்வெண்ணத்தை ஒரே நிலைப்படுத்தி செயலாற்றல் உடையவனாக இருந்திடல் வேண்டும்.

பெரும் உன்னத நிலை அடையும் பொக்கிஷத்தை மறந்து வாழும் வாழ்க்கையை “நாம் இனி மாற்றி வாழ வேண்டும் என்ற ஆவலினால்…” நமக்குள் இருக்கும் ஈசனின் சக்தியைக் கண்டு வாழ்வதற்காக ஒவ்வொருவரும் ஜெபம் பெற்று… இப்புண்ணிய பூமியையே புனிதமாக்கும் தன்மையில் அன்பு கொண்டே நல்வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்… ஜெப நிலையில் இருந்திடுங்கள்.

1.இப்பாடங்கள் படித்து வரும் ஒவ்வொருவரும் அச்சக்தியின் அருள் பெற்று
2.சகல சித்தர்களும் நமக்குள் வந்து அருள் புரியும் தன்மையில் அருள் பெற்றே அன்பு கொண்டே வாழ்ந்திடுங்கள்.
3.நல்வாழ்த்து அருளுகின்றேன்… அஜ்ஜெகஜ்ஜோதி வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ கொடிய நிலைகளிலிருந்து மீண்டு “எல்லாவற்றிலிருந்தும் மீள வேண்டும் என்ற சக்தி பெற்றவன் தான் மனிதன்…!”

மற்ற உயிரினங்கள்… உதாரணமாக தவளையோ பாம்போ பதுங்கியிருந்து தான் தனக்கு வேண்டிய உணவைப் பிடிக்கிறது. தவளை தப்பித்துக் கொள்ள எண்ணுகிறது. பாம்போ அதைக் குறி வைத்து அப்படியே பார்க்கிறது… பாய்ந்து அதைப் பிடிக்கிறது.
1.தவளையின் தசைகள் பாம்பிற்கு இரையாகிறது
2.ஆனால் தவளையின் உயிரோ பாம்பின் உணர்வைக் கவர்ந்து
3.பாம்பின் கருவிற்குள் சென்று பாம்பாக அடுத்து உருவம் பெறுகிறது.

இதைப் போன்று தான் பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று தாக்கித் தன்னை வளர்ச்சி பெறச் செய்கிறது.

இப்படி ஒவ்வொரு உடலிலேயும் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுகளை வளர்த்து… வளர்த்து… வளர்த்து… எல்லாவற்றையும் நாம் பாதுகாக்கும் நிலையாக மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனாக ஆன பின் நாம் என்ன செய்கிறோம்…? எதிரியை வீழ்த்தி விட்டு நாம் நன்றாக வாழ வேண்டும் என்று தான் எண்ணி வாழ்கிறோம்.

கடையை வைத்து வியாபாரம் செய்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த கடையை அதை எப்படி எப்படி எல்லாம் “சரியில்லை…” என்று சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் செய்வோம்.

1.நம்மை அறியாமலே அவர்கள் சரக்கை மோசம் என்று சொல்வோம். ஆனால் சரக்கு நன்றாக இருக்கும்.
2.அவர் மீது நமக்கு வெறுப்பு இருக்கும்… அதனால் சரக்கை மோசம் என்று தான் சொல்வோம்.

இங்கே இவ்வளவு உயர்ந்ததாகப் பேசினாலும்…
1.மனம் ஒத்திருந்தால் அவர் சரக்கு மட்டமாக இருந்தாலும் கூட…
2.பரவாயில்லை… அவர் சரக்கு நன்றாக இருக்கிறது…! என்று தான் சொல்வோம்.

இந்த உண்மையை எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடும் கூட இந்த உணர்வு வரும்.

காரணம்…
1.அவர் மீது பற்று இருக்கும் போது அவர் கொண்டு வந்த சரக்கையும் நல்லதாகக் காட்டிவிடும்.
2.ஆனால் அவர் மீது பற்று இல்லை என்றால் அவர் எடுத்துக் கொண்டு வந்த சரக்கையும் மட்டமாகக் காண்பிக்கும்.

இதே உணர்வை அங்கே அடுத்தவரிடமும் பதிவு செய்து விட்டோம் என்றால் அதே நோக்கத்தில் பார்த்தால் “நீங்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது…!” இந்த உணர்வுகள் தான் அங்கே வந்து பாயும்.

எதிரிக்கு இந்த உணர்வின் அலைகளை மாற்றப்படும் போது இந்த உணர்ச்சிகளை அது மாற்றும். இதன் மேல் பற்று கொண்ட உணர்வு கொண்டு “நம் வார்த்தையைக் கேட்டார்கள்” என்றால் அவர்களுக்கும் அது தான்.

உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சும் போது அதை மற்றவர்கள் பதிவு செய்து கொண்டார்கள் என்றால் அந்த உயர்ந்த நிலைக்கு அவர்களும் வருகிறார்கள்.

ஆனால் நாம் சொல்வதை…
1.சரியான நிலைகளில் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா… ஏற்றுக் கொள்ள மாட்டார்களா…? என்று இதைக் கலந்து விட்டு
2.அடுத்து நீங்கள் சொன்னீர்கள் என்றால் அங்கே அதை ஏற்றுக் கொள்ளாத உணர்வே வரும்.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் நோய் நீக்கும் அரும் பெரும் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

 

மகரிஷிகளின் அருள் ஒளி பெற எனக்கருள்வாய் ஈஸ்வரா… என் உடலில் அறியாது சேர்ந்த “தீய வினைகள் அகன்றிட” அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து கடும் நோய்கள் நீங்கி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது குடும்பங்களில் அறியாது சேர்ந்த சாப வினைகள் அகன்று அவர்களது குடும்பங்களில் அருள் ஒளி படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று அவர்களது குடும்பங்கள் மகிழ்ந்து வாழ அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடலில் அறியாது சேர்ந்த வாத நோய்கள் நீங்கி அருள் ஒளியால் அருள் ஞானம் பெற்று அவர்களின் உடல் நலம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடல்களில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த சர்க்கரைச் சத்து நீங்கி அருள் சுரபிகள் உருவாகி அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் அணுக்கள் உருவாகி அவர்களது உடல் நலம் பெற்று உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலை பெற்று அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா

இவ்வாறு எண்ணும்போதெல்லாம் உடலில் உள்ள நோய்கள் அது அகன்று செல்வதை உங்களால் உணர முடியும். கடும் நோய்களை நீக்க அனைவரது ஒலிகளும் கேட்ணர்ந்தோர் உணர்வுகளில் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள கடும் நோய்களும் சர்க்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் வாத நோயால் உருவான நிலைகளும் விஷத்தால் தாக்கப்பட்டு விஷ உணர்வுகளால் உருவான அணுக்களும் இப்போது அகலும்.

அனைவரும் சேர்ந்து ஓதும் இந்த உணர்வுகள் அனைத்தும் அனைவரது உடல்களிலும் படர்ந்து கடும் நோய்களை நீக்க இது உதவும்.

ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இரத்தக் கொதிப்பு அகன்று மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களது உடல்களில் சாந்த உணர்வும் மலரைப் போன்ற மணம் பெற்றிடும் அணுக்கள் வளர்ந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இருதயங்களில் உள்ள அடைப்புகள் நீங்கி இருதயங்கள் சீராக இயங்கி அருள் ஞான ஒளி படர்ந்து தெளிந்திடும் தெரிந்திடும் மனம் பெற்று மகிழ்ந்திடும் உணர்வு பெற்று அவர்களது வாழ்க்கையில் மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நச்சுத்தன்மைகள் அனைத்தும் அகன்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து மகிழ்ச்சி பெறும் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்து மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் உடல் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்து வாத பித்த நோய்கள் அகன்று அருள் ஒளி அவர்கள் உடலிலே படர்ந்து அருள் ஞான அணுக்கள் விளைந்து மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களது வாழ்க்கையில் மலரைப் போன்ற மணம் பெற்று அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த முடக்கு வாதம் முழங்கால் வாதம் செவி வாதம் மன வாதம் அனைத்தும் அகன்று மகரிஷிகளின் அருள் சக்தி உடல்களில் படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ்ந்து தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய அணுக்கள் மறைந்து அருள் ஞான அணுக்கள் வளர்ந்து அருள் வழியில் அருள் ஞானம் பெற்று வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடல்களில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் வந்த வயிற்று வலி நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் ஆற்றல் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது குடும்பங்களில் அறியாது சேர்ந்த சாப வினைகள் நீங்கி தீயவினைகள் நீங்கி அவர்களது குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானமும் உலகைக் காத்திடும் உலக ஞானம் பெற்று உலகில் தீமைகளை மாற்றிடும் அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

இந்நேரம் வரை உபதேசித்த உணர்வை
1.உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.
2.உங்களுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர்ந்து
3.இங்கே வந்தோர் உடல்களில் உள்ள கடும் நோய்கள் நீங்கி அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறும் சக்தியாக உங்களில் விளையும்.

நீங்கள் எத்தகைய வேதனையுடன் வந்திருந்தாலும் இப்போது நாம் பாடிய
1.இந்த அருள் உணர்வுகள் அனைவரது உடல்களிலும் கருவுற்று தீய வினைகள் அகன்று
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அந்த சக்தி படர்ந்து
3.உங்கள் உடலிலே மகிழ்ச்சி பெறும் நிலையாக நோய்கள் அகன்று
4.உங்களில் அந்த அருள் ஞான சக்தி இப்பொழுது பெருகும்.
5.நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களில் விளையும்.
6.நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்பொழுது நீங்கள் உணரலாம்.

கை கால் குடைச்சலோ சர்க்கரை சத்தோ ரத்தக் கொதிப்போ வாத நீரோ மன நோயோ இவை அனைத்தும் அகலும். அருள் ஒளி உங்களில் பெருகும்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் வளர்ந்து உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் வளர்ந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வு உங்களில் விளையும்.

மகிழச் செய்யும் அணுக்கள் உங்களுக்குள் விளையும்… அருள் ஒளி வளரும்… மெய்ப் பொருளைக் காணும் திறன் பெறுவீர்கள். உங்களுடைய பார்வையால் உங்களுடைய நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.
1.பிறருடைய துன்பங்களைப் போக்கும் அந்த அருள் சக்தி வலுப் பெற்றால்
2.பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடுத்துக் கொள்ள முடியும் “உங்கள் உணர்வால்…”

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் பெருகி மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று உங்கள் மூச்சும் பேச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாக வளர சகோதர உணர்வை வளர்த்திட மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி வாழ்ந்திட அருள் சக்திகள் உங்கள் மூச்சலைகளாகப் படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தி உங்களிலே விளைந்திட எமது குரு அருளைப் பிரார்த்திக்கின்றேன்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்களில் படர்ந்திட
2.மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்திட
3.இந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.இந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி
5.மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் கண்ணின் பார்வையிலே வெளிப்பட்டு
6.மகிழ்ச்சி பெறும் சொல்லாக அந்த சீதா ராமனாக எண்ணங்கள் தோற்றுவிக்கவும்
7.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்து
8.நல்ல அரண் உங்களுக்கு உடலாக அமைந்து
9.இந்தப் பிறவியிலேயே அருள் ஞான வழியில் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு பெறும் நிலையாக
10.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கி உங்கள் உடலைச் சொர்க்கலோகமாக்கி
11.உங்கள் உயிரே சொர்க்கவாசலாக அமைத்திட
12.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களில் படர்ந்திட
13.எமது அருளாசி உறுதுணையாக இருந்திட பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்திட
14.எமது அருளாசியும் குரு அருளும் உங்களுக்குள் உறுதுணையாக விளைந்திட
15.உங்கள் பார்வை தீமைகளை அகற்றிட
16.மெய் வழியைப் பரப்பிடும் ஆற்றல் மிக்கவர்களாக வளர்ந்திட
17.பேரின்ப வாழ்க்கை வாழ்ந்திட
18.இந்த வாழ்க்கையில் என்றும் அழிவில்லா வாழ்க்கை வாழ்ந்திட மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள் ஒளி உங்களிலே படர்ந்து
19.உங்கள் மூச்சும் பேச்சும் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகளாக விளைந்திட
20.அருள் மகரிஷிகள் உணர்வுகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து அதை வளர்த்திட வளர்ந்திட குரு அருள் உறுதுணையாக என்றுமே இருக்கும்

அருள் வழியில் அருள் ஞான குருவாக… அருள் வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தி உங்களில் வளர்ந்திடப் பிரார்த்திக்கிறேன்… தியானிக்கின்றேன்.

இதைப் படித்துணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் இப்போது குறைந்திருப்பதைக் காணலாம்… சர்க்கரைச் சத்து நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் நல்ல ரத்தங்கள் உருவாக வேண்டும் அருள் ஞானம் வளர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இதை அதிகாலையில் துருவ தியானத்தில் ஏங்கிப் பெறுங்கள்

“இப்பொழுது உருவாக்கிய அருள் ஞான வித்தை…” நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் நினைவால் எண்ணும் பொழுது
1.”உங்கள் உயிரே” அதை அணுக்களாக வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உங்களுக்குள் வளர்ந்து மன பலம் பெறச் செய்து
3.அருள் ஒளி பெறும்… அருள் ஞான வழியில் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் “உங்கள் உயிர்”

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
1.எண்ணியதை உருவாக்குவது உயிரே (ஈசன்)
2.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே
3.எண்ணியதைக் காத்தருள்வதும் உயிரே
4.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
5.நம்மை அரண் போல் காத்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் உயிரே.

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!

ரிஷிகளுடன் இணைந்த நிலையில் சூட்சும உலகத்திற்குச் செல்லும் தன்மைக்கு வருவதற்குத் தான் இந்தப் போதனைகள் எல்லாம் இங்கே கொடுக்கப்படுகிறது.

மனிதச் சரீரத்தில் உள்ள பொழுது கோபம் குரோதம் கடும் விஷம் கலந்த சூட்சுமத்தன்மை இந்நிலை எல்லாம் மனதினைச் செலுத்திய மனிதர்கள் அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்த நிலையில்
1.அவர்கள் உடலுடன் உள்ள பொழுது எந்த நிலையில் சுவாசம் பெற்று சப்த அலைகளை வெளியிட்டார்களோ
2.அந்த நிலையிலேயே அவர்களின் ஆவியைச் சுற்றி அவர்கள் வெளியிட்ட சப்த அலைகளும் சுற்றிக் கொண்டே உள்ள தன்மையில்
3.அந்நிலையில் உள்ள மிருகத்தின் நிலையும் அம்மிருகம் எடுக்கும் சுவாச அலையும்
4.அம்மிருகத்தைச் சுற்றிக் கொண்டே உள்ள மிருகத்தின் சப்த அலையும் ஒரே தன்மையில் உள்ள பொழுது
5.ஒன்றை ஒன்று எதிர்ப்படும் தன்மையில் இரு சப்த அலைகளும் ஒன்றுபட்டு இம்மனிதனின் உயிரணு அந்த மிருகத்தின் உடலுடன் செல்கின்றது.

இந்நிலையில் அம்மிருகத்தின் ரத்த நாளங்களில் கலந்து மிருகத்தின் ஜனனத்திற்கும் இம்மனிதன் வருகின்றான். மிருகமாகப் பிறக்கும் தன்மைக்கு வந்து… மனிதன் மிருக நிலைக்கும் வருகின்றான் என்பதின் பொருள் இதுவே.

சில ஆவிகளின் நிலை மிருக உடலுக்கு வந்த பிறகு அம்மிருகத்தின் ஆயுட்காலம் முடிந்து அந்த மிருகம் இறக்கும் வரை அவ்வுடலில் இருந்து வெளிப்படும் நிலையில் பிற ஒரு ஜென்மத்திற்கு மனிதச் சரீரம் எடுக்கும் தன்மை அற்று மிருக ஜனனத்திற்குத் தான் வரமுடிகிறது அவ்வாவியினால்.

ஆனால் மிருக உடலுக்குச் சென்ற உயிரணு ஏன் அந்த உடலில் இருந்து வெளிப்பட முடிந்திடாதா…? என்று எண்ணிடலாம்.

மிருக உடலுக்குச் சென்ற பிறகு மிருகத்தின் சுவாச நிலை மாறுபட்டால் தான் அவ்வாறு வெளிவர முடிந்திடும்.
1.மிருகத்தின் எண்ணம் ஒரே நிலையில் இருக்கும் போது
2.இந்த மனித உயிரணு எப்படி மீண்டும் வெளிவர முடிந்திடும்…?

ஆக்ரோஷம் கொண்ட இம்மனித ஆவிகள் எல்லாம் மிருகமாகவே தான் மிருகத்தின் சப்த அலையுடன் கலந்து மிருகமாகவே செல்கிறது என்பதல்ல.

மிருக சரீரத்திற்குள் சென்ற உயிரணுக்கள் அதே சரீரத்தில் அம்மிருகம் எடுத்த சுவாச நிலையையே தானும் பெறுவதால் அம்மிருகத்தின் உடல் பழுதுபட்டவுடன் இவ் உயிரணுக்களின் நிலை எல்லாம் புழுவாகின்றன.

சில உயிரணுக்கள் வெளிப்பட்டு அம்மிருகத்தின் உடலுடன் உள்ள நிலையில் எந்த நிலை கொண்ட சுவாச அலைகளைப் பெற்றதோ அதே நிலையில் தான் மிருக ஜனனத்திற்கு வருகிறது.

மனிதனின் உயிரணுக்கள் மட்டும் மிருகத்தின் சுவாச நிலைக்குச் செல்கிறது என்பதல்ல. மிருகத்தின் உயிரணுவும் மனிதனின் சரீரத்தில் வந்து தாக்கும் தன்மை உள்ளது.

இம்மனிதன் எடுக்கும் சுவாச நிலையில் மிருகத்தின் குணங்கள் பெற்று கோபம் வெறி குரோதம் இந்நிலை கொண்ட உணர்வுகளைப் பெற்ற மனிதர்களின் உடலில்
1.இவன் எடுக்கும் சுவாச நிலைக்கும் அம்மிருகத்தின் சுவாச நிலைக்கும் ஒன்று படும்பொழுது
2.மிருகத்தின் உயிரணு மனிதனின் உடலில் செல்லும் நிலையில் அம்மனிதனையே அவ்வுயிரணு மிருகமாக்கும் தன்மையில்
3.மனித உடலில் மிருக உயிரணுக்களின் தாக்குதலைப் பெற்று… மிருகத்தின் குணநிலைக்கு அம்மனிதனின் நிலையும் செல்வதனால்
4.அம்மனிதனின் நிலை மிருகத்தின் குணத்திலிருந்து மாறுபட முடியாமல்
5.மென்மேலும் விரோதத்தையும் வெறியையும் அதிகமாக்கி வாழும் நிலைக்குத்தான் மனிதனின் தன்மையும் வருகிறது.

அந்நிலையில் இருந்து மீண்டு… மனிதன் மனிதனாகவே வாழும் தன்மைக்கு வர அன்பு பாசம் என்ற சாந்தமான நிலையில்…
1.கோபம் துவேஷம் வஞ்சம் இப்படிப் பல கெட்ட குண நிலைகளைத் தன்னை விட்டகற்றி…
2.தனக்குள் அவ்வன்பே தெய்வமான… அன்பென்னும் தெய்வ சக்தியைப் பெற்று வாழ்ந்திடும் நிலையில்தான் மீண்டு வந்திட முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அம்மா அப்பா இறந்தால்… சுட்ட சாம்பலை எடுத்துக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைத்து… அதற்காக வேண்டி சில மந்திர ஒலிகளைச் சொல்லி சாங்கியத்தைச் செய்தால்… “மோட்சத்திற்கு அனுப்பி விடலாம்” என்று செய்கிறார்கள்.

காரியம் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடனே… எண்ணெய் தேய்த்துத் தலை முழுகிவிட்டு… மாவிளக்கைச் செய்து நெய் தீபம் இட்டு… அணையாது அதை விநாயகர் கோவிலில் கொண்டு போய் அர்ச்சனை செய்தால் மோட்சத்திற்குச் சென்றுவிடுகிறார்கள் என்கிறார்கள்.

மோட்சம் எங்கே…? என்று தெரியாதபடி மோட்சத்திற்கு அனுப்புகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் மோட்சம் எங்கே இருக்கிறது…? அந்தச் சொர்க்கம் எங்கே இருக்கிறது…?

அப்பா அம்மாவின் உணர்வுகள் பூராம் பிள்ளைகள் உடலில் இருக்கிறது. வீட்டிலே அல்லது ரோட்டிலே நடந்து செல்வார்கள்…
1.பாதம் பட்ட மண் இருக்கும்… ஆபீஸில் வேலை செய்யும் இடத்திலும் அது இருக்கும்.
2.இவர்கள் அங்கே வேலை செய்யும் போது எப்பொழுது இவர்கள் தலை முடி கீழே உதிரும்…? என்று பார்ப்பார்கள்.
3.தலை முடி உதிர்ந்ததை எடுத்துக் கொள்வார்கள்
4.உடுத்திய சேலையில் இரண்டு மூன்று நூலை எடுத்துக் கொள்வார்கள்.
5.அவர்கள் நடந்து சென்ற பாதையில் வீட்டு வாசல் மண்ணைக் கூட்டி எடுத்துக் கொள்வார்கள்.

ஒருவருக்கொருவர் ஆகவில்லை என்றால் செய்வினை தோஷம் செய்பவர்கள் இந்த வேலையைச் செய்வார்கள்.

இதை எல்லாம் கொண்டு போய் அதற்குண்டான மந்திரம் தந்திரம் செய்பவர்களிடம் கொடுப்பார்கள். அதை வைத்து என்ன செய்வார்கள்…? அம்மா அப்பாவை (ஆன்மாகளை) அவர்கள் கூப்பிட்டு இழுத்துக் கொள்வார்கள்.

எப்படி…?

அமாவாசை அன்று சாப்பாட்டைப் போட்டு எங்கள் அப்பா அம்மாவிற்காக வேண்டி “நினைவு நாள் இருக்கிறோம்” என்று இங்கே கொண்டாடுவார்கள்.

1.கடவுள் பக்தியிலே எந்தெந்த மந்திரத்தைச் சொல்லி உச்சரித்து
2.நம் உடலுக்குள் வாழ் நாள் முழுவதும் அந்த மந்திரங்களை உருவாக்கியிருக்கின்றோமோ
3.எந்தத் தெய்வத்தின் மீது பக்தியை அதிகமாகச் செலுத்தியிருக்கின்றோமோ
4.அந்த உணர்வுகள் இறந்தவர் ஆன்மாவிலே பதிவாகியிருக்கும்.

மந்திரத்தைச் சொன்னால் கடவுள் காப்பாற்றுவார்…! என்று எண்ணித் தான் அதைப் பதிவாக்கியிருப்போம். இந்த உணர்வுகள் இங்கே இருக்கும்.

உடலை விட்டுப் போன பிற்பாடு நாம் இங்கே இறந்தவர்களுக்குச் சாங்கியம் செய்கிறோம். அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் கொண்டு தான் நாம் மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை எல்லாம் நம் பாதம் பட்ட மண்ணிலே பதிந்திருக்கும். அமாவாசை அன்று இங்கே சாப்பாட்டைப் போட்டு அவர்களை நினைவுக்குக் கொண்டு கூப்பிடுவோம். நம் ஈர்ப்புக்கு அந்த அலைகள் வரும்.

அங்கே மந்திரம் செய்பவர்கள் பாத மண்ணை வைத்து மந்திரத்தைச் சொன்னால்
1.அபபா அம்மாவின் ஆன்மா அவர்கள் கையில் குவியும்.
2.குவிந்த பின்னாடி வீட்டில் அம்மா அப்பா என்னென்ன செய்தார்கள்…?
3.எந்தெந்த வகையில் அவர்கள் சாபங்களில் சிக்கினார்கள்…?
4.எந்த நோயினால் செத்தார்கள்…? என்ற இந்த உணர்வெல்லாம் அங்கே அவர்களுக்குக் கிடைக்கும்.

இறந்த உடலில் இருந்தது எல்லாவற்றையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். இறந்து 48 நாளுக்குள் இந்த மாதிரிச் செய்தால் அவர்கள் கைவல்யம் ஆகின்றது. அதற்குப் பின் அந்த ஆன்மாக்களை ஆட்டிப் படைக்கிற ஆள் தான் அவர்கள்…!

1.அம்மாவையும் அப்பாவையும் மோட்சத்திற்கு அனுப்பிவிட்டோம்…! என்று நாம் நினைக்க வேண்டியது தான்.
2.ஆனால் இங்கே மோட்சம் என்ற நிலை இப்படித்தான் இருக்கும்.

இங்கே மட்டுமல்ல… இந்த உலகில் மதங்களால் உருவாக்கப்பட்ட அனைத்திலுமே இந்த நிலை தான். அரசர்கள் அன்று உருவாக்கிய இது போன்ற தீமையான வழிகள் தான் இன்றும் வழி நடந்து கொண்டுள்ளது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஒரு பாதுகாப்புக் கவசத்தை நாம் உருவாக்க வேண்டும்

 

உபதேசங்களை நான் (ஞானகுரு)
1.“வேகமாகச் சொல்கிறேன்…” என்றால்
2.யார் அதைக் கூர்மையாக்க் கவனித்துப் பின்பற்றி வருகின்றார்களோ அவர்களுக்கு இது கிடைக்கும்.

“என்னமோ” சாமி சொல்கின்றார். அவரிடம் தலைவலிக்கும் மேல் வலிக்கும் ஆசீர்வாதம் வாங்கினால் போதும் என்று ஒரு சிலர் இருக்கலாம். சரி அதுவெல்லாம் நீங்கிவிடும் என்று சொன்னால் இப்பொழுது நீங்கி விடுகின்றது ஆனால் இரவு படுக்கப் போகும் பொழுது எனக்குத் தூக்கமே வரவில்லை என்று கேட்பார்கள்.

வேதனை இருக்கும் பொழுது தான் தூக்கம் வரவில்லை நன்றாகிப் போகும் தூக்கம் வந்துவிடும் என்று சொன்னால்
1.இப்பொழுது சரிங்க…! இராத்திரிக்குத் தூங்கப் போகும் பொழுது தூக்கம் வராது என்று
2.மறுபடியும் இழுத்துக் கொள்வார்கள்… இப்படியும் உள்ளார்கள்.

உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே தபோவன மண்டபத்திலே படரப்பட்டுள்ளது. தியானித்த பின் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற நிலையைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு “இங்கேயே படுத்திருந்து” அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்திட ஏதுவாக இருக்க வேண்டும் என்று தான் நேரத்தையும் காலத்தையும் கடத்திச் சென்று எப்படியும் இங்கே முடங்கிப் படுத்துவிட்டு… “காலையில் செல்லலாம்” என்ற எண்ணத்தை தோற்றுவிக்கத் தான் இவ்வாறு செயல்படுத்துவது.

இங்கே இருக்கப்படும் பொழுது
1.அருள் உணர்வுகளை “ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்” என்று உடலாக ஆக்கி
2.அருள் உணர்வின் சக்திகளை உங்களுக்குள் கூட்டிக் கொள்வதற்கே இதைச் செய்கின்றேன்.

மணிக்கணக்கில் பேசி அந்த உணர்வின் அணுக் கருக்களாக மாற்றுவதற்குத் தான் இதைச் செய்வது. உங்களிடம் பேசிச் சொல்லும் போது
1.எனக்குள்ளும் அணு கருக்களாக விளைகின்றது… நுகர்ந்தவர் உணர்வுக்குள்ளும் அந்த அணுக்கள் விளைகின்றது.
2.தீமை அகற்றும் சக்திகளாக நமக்குள் பெருகுகின்றது
3.நாம் விடும் மூச்சலைகள் அனைத்தும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகப் பரவுகின்றது.

விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷமான கதிரியக்கப் பொறிகளை விண்ணிலே செலுத்தி விட்டதால்… அவ்வாறு பரவப்பட்ட அந்தக் கதிரியக்கங்களினால்… விஷத்தைத் தடுத்து நிறுத்தும்… நம் பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரையும் கிழிந்து விட்டது…”

ஆகையினால் விண்ணிலிருந்து வரும் விஷங்கள் அதிலே வடிக்காதபடி நேரடியாக இங்கே வந்து கொண்டிருக்கின்றது… நம்முடைய காற்று மண்டலத்தில் படர்கின்றது.

எங்கெங்கெல்லாம் இது படர்கின்றதோ விஷத்தன்மை கொண்ட எண்ணங்கள் கொண்டோர் உணர்வுகளிலும் துரித கதியில் பரவுகின்றது… அவர் உடல்கள் பாதிக்கப்படுகின்றது.

ஓசோன் திரை கிழிந்திருந்தாலும்
1.நாம் கூட்டு தியானங்கள் இருந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரப்பி விட்டால்
2.நம் உணர்வுகள் வலுப்பெறும் போது ஒதுக்கித் தள்ளி தீமைகள் வராது தடுக்கும் தன்மை வரும்.

தனி ஒரு மனிதனால் முடியாது…! நாம் பலரும் சேர்த்து ஆங்காங்கு கூட்டு தியானங்கள் நடத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை பரப்பிக் கொண்டால் “நமக்கு ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறுகின்றது…”

நஞ்சின் தன்மை வந்தாலும் அந்த அருள் ஒளியைப் பெறும் தகுதி பெறுகின்றோம். அதை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குள் சொல்வது.

விஞ்ஞான அறிவு கொண்டு பல நிலைகள் செயல்பட்டு இருந்தாலும் மெய் ஞான அறிவு கொண்டு அதை வெல்ல முடியும் அந்த மெய்ஞான அறிவை உங்களுக்குள் வளர்க்கலாம்.
1.நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குள் விளைந்து
2.அதை எல்லாம் நீங்கள் பெறும் தகுதியாக இப்போது உருவாக்குகின்றோம்.

ஆகவே எண்ணிய உணர்வை “ஓ” என்று ஜீவனாகி “ம்” என்று அணுவாக உருவாக்கும் ஈசனை மதிப்போம். அவனே நமக்குள் இருந்து இயக்குகின்றான் என்ற நிலையில் அவன் நாமத்தைச் சொல்வோம்.

நாம் எண்ணிய உணர்வுகள் கடவுளாக இயக்குகின்றது. ஆகவே
1.அருள் ஒளியை எண்ணும் பொழுது “ஓ – ம்” என்று ஜீவ அணுவாக மாற்றி
2.அதுவே கடவுளாக இருந்து தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

மனிதனாகப் பிறந்ததைப் பெரும் பாக்கியமாக எண்ணி இதற்கடுத்த நிலை அடைய முயற்சிக்க வேண்டும்

 

பல நிலைகளில் பல உயிரணுக்கள் காற்றிலும் பூமியிலும் பூமி மட்டத்திற்குக் கீழ் நிலையிலும் உள்ளன. ஜீவன் பெற்றும் உள்ளன.

பல உயிரணுக்கள் அச்சூரியனின் சக்தி பெற்று இவ்வுலகைச் சுற்றிப் பறந்த நிலையிலும் பறந்து கொண்டே தன் எண்ணத்தையும் செயலையும் ஈடுபடுத்தும் நிலை பெற ஆவல் கொண்டு சுற்றிக் கொண்டுள்ளன.

இவ்வுலகில் இப்புண்ணிய பூமியில் மனிதர்களாக வாழும் நாம்… நாம் பெற்ற பாக்கியமாக இதைக் கருதி நல்லுணர்வு பெற்று நாம் பெற்ற பாக்கியத்தைப் போற்றி வாழ்ந்திட வேண்டும்.

இம்மனித சக்திக்கு…
1.இவ்வுலகம் இவ்வுலகைப் போல் உள்ள மற்ற உலகங்கள் மற்ற மண்டலங்கள்
2.எல்லாவற்றையுமே அறிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றுள்ளார்கள்.

தான் பெற்ற பாக்கியத்தை அறிந்து வாழ்ந்திடாமல் ஆண்டவன் என்பவனையே பல வழிகளில் எண்ணி ஏற்கின்றார்கள். எவ்வழி எண்ணி ஏற்றாலும் நல்வழியில் நம் வழியைத் தவறுக்கு அடிபணிய வைத்திடாமல் ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் பெற வேண்டும்.

மந்திரம் மாயம் பில்லி சூனியம் ஏவல் வித்தைகள் ஜாதகம் ஜோதிடம் ஆருடம் இப்படிப் பல வழிகளை நம்பி தன்னையே அதற்கு அடிமையாக்கி தன்னுள் பல ஆசை நிலைகளை வளர்த்துக் கொண்டு பல அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்ந்து என்ன பயன்…?

1.பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலை ஏன் நமக்கு…?
2.அச்சக்தி நம்முள் இல்லையா…? என்ற எண்ணம் கொண்டு நம்மை நாமே பிறருக்கு அடிமைப்படுத்திடாமல்
3.பயம் கொண்ட வாழ்க்கை வாழ்ந்திடாமல் நம் எண்ணத்தை நாம் சுத்தமாக்கிக் கொண்டு
4.மகரிஷிகளின் சக்தியை நாம் பெற்று வாழும் வாழ்க்கையை விட்டு
5.ஏன் பல நிலைகளை எண்ணி நம்மை நாமே அடிமைப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்…?

மனித சக்திக்கு எல்லா உயிரினங்களையும் அறிந்து வாழும் நிலை உள்ளது. அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு நன்மையும் தீமையும்… நன்மை தீமை என்பன நல்ல அணுக்களையும் தீய அணுக்களையும் நம்முள் ஈர்த்து எடுக்க முடியும்…. பல ஆவிகளின் தொடர்பையும் நாம் பெற முடியும்.

நல்ல ஆவிகளும் துர் ஆவிகளும் சுற்றிக்கொண்டே உள்ள இந்த உலகில் நாம் எடுக்கும் நினைவைக் கொண்டு… எந்த ஆவியினுடைய தொடர்பையும் நம்மில் ஈர்த்து அவ்வாவியின் நிலை அறிந்து அவ்வாவிக்கு உகந்த மணங்களை அதற்கு நாம் அளித்து… அவைகளை நம் ஏவலுக்கு நாம் கட்டுப்படுத்திப் பல நிலைகளை அறிந்து கொள்ள அதனுடைய தொடர்பை நாம் வைத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் நாம் வைத்துக் கொண்டால் அதனுடைய செயல் திறன் நாம் அதை ஏற்கும் நிலை கொண்டு… அவை நமக்கு எல்லா நிலைகளையும் உணர்த்திக் கொண்டே வரும்.

அதன் நிலைக்கும் நம் நிலைக்கும் சிறு மாற்றம் கண்டால் அதன் நிலை மாறுபட்டு அது நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்ததோ அந்த நிலை கொண்டே தீங்கும் செய்து விடும்.

பில்லி சூனியம் ஏவல் இப்படிப் பல நிலைகள் எல்லாம் பல ஆவிகளின் வசியத்தால் வருபவைகள் தாம்.
1.இந்த நிலையில் அடிமைப்பட்டு வாழ்பவர்களுக்குத் தன் ஆத்மாவிற்கு உகந்த நிலையைச் சேமிக்கும் தன்மை அற்றுப் போகின்றது.
2.தான் செய்யும் வினையே தன்னை வந்து தாக்கும் என்று அறியாமல் செய்யும் நிலை தான் இவைகள் எல்லாம்.

ஒவ்வொரு மனிதரும் இவ்வுலகில் வந்து பிறக்கவே பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.

காரணம்… ஆவி உலகில் பல நாட்கள் பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே தன் எண்ணத்தையும் செயலையும் ஈடேற்ற எத்தனையோ காலங்கள் தவம் பெற்று இவ்வுலகில் பிறக்க ஆவல் கொண்டு விட்ட குறையை முடிக்க வந்து பிறக்கும் தாம்… தாம் பிறந்த பயனையே எண்ணிப் பார்க்காமல் பிறகும் பல இன்னல்களுடன் பல ஆசை நிலையில் இப்பிறவியில் தான் பெற்ற பாக்கியத்தை எண்ணி…
1.இப்புவியில் தான் பிறக்க இப்புவியாளும் ஈசனின் சக்தியைப் பெற்றுப் பிறந்துள்ளோம் என்று உணர்ந்து
2.தாம் எடுத்த பிறவியை எந்த நிலை கொண்டு நாம் போற்றி வணங்கிட வேண்டும் என்று உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாதாரணமாக ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு தடவை கோபமாகப் பேசியிருப்போம். அந்த உணர்வு பட்டவுடனே பாவிப் பயல்… இப்படிப் பேசுகின்றானே…! என்று அந்த உணர்வுகள் அவரிடமிருந்து வெளிப்படும்…!

அப்போது
1.நாம் கேட்கும் போது நமக்குள் பதிவாகிறது… அணுவாகிறது.
2.எவ்வளவு வேதனைப்பட்டார்களோ அதனுடைய உணர்வின் அணுக்களை
3.அது தன் ஆகாரத்திற்காக எடுக்கப்படும் போது போது பளீர்… பளீர்… என்று நம் உடலில் மின்னும்.

நாம் நினைப்போம்… நாம் ஒன்றும் சொல்லவில்லையே. அவர்கள் தவறு செய்ததனால் தானே நாம் கோபித்தோம்…! என்போம்.

ஆனால் அதிலே உருவான அந்த வேதனையான உணர்வின் அணுக்கள் நமக்குள் இங்கே விளைந்த பின்
1.அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது கிளர்ச்சிகளைச் செய்யும்.
2.அந்த நேரத்தில் பளீர்…ர்ர்.. என்று மின்னல் தாக்குகிற மாதிரி (ஊசி குத்துவது போல்) இருக்கும்.

காரணம் இந்த அணுவின் தனமை தனக்குள் ஆகாரத்திற்காகப் பளீர் என்று மின்னும். அதற்குப் பின்
1.நினைவு அந்த இடத்திற்கே வரும்.
2.நினைவு வரப்படும் போது உள்ளுக்குள் எடுத்து அந்த ஆகாரத்தை விஷத்தைப் பரப்பும்.

அதே போல் சந்தர்ப்பவசத்தால் நாம் அடிக்கடி வேதனைப்படுகின்றோம் என்றால் அந்த வேதனையின் அணுக்கள் டி.பி. நோயாக மாறுகிறது.

நல்ல உணர்வின் அணுக்களாக இருந்தால் அதனின் மலம் பட்டால் நம் எலும்புகள் சீராக இருக்கும். ஆனால் வேதனையால் உருவான அணுகக்ளின் மலம் பட்டால் எலும்புகளை அது அரிக்கத் தொடங்கும்.

நம் சுவாச நாளங்களில் இத்தகைய விஷமான அணுக்கள் பட்டால் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நுரையீரலை இது சாப்பிட ஆரம்பிக்கும். ஓட்டை ஓட்டையாக விழுந்துவிடும்.

இதைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டாலோ…
1.அதனுடைய கிளர்ச்சியைச் செய்த பின் அம்மம்மா…! என்போம்
2.அந்த வலி எடுக்கும் போது இப்படிக் கூடி
3.அந்த உணர்வைத் தூண்டி அது தன் சாப்பாடை எடுத்துக் கொள்ளும்.

ஆனால் கிளர்ச்சியைத் தூண்டும் போது கண்ணுக்கு நினைவு வரும்.
1.கண்ணில் உள்ள கருமணி இங்கே பதிவு செய்கிறது.
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ “யாரைப் பார்த்து வேதனையைப் பதிவு செய்ததோ…”
3.அந்த மனித உடலிலிருந்து வந்ததை இது (மீண்டும்) எடுக்கும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

நாம் ஒருவரைக் கோபித்துப் பேசினாலும் அல்லது ஒருவரைச் சாபமிட்டுப் பேசினாலும் அது வேறு.

ஆனால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரை நாம் இரக்க உணர்வுடன் பார்த்தாலும் அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் வந்துவிட்டால் மேலே சொன்ன அதே கிளர்ச்சியைச் செய்யும்.

ஆக… நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்ற நிலையில் அதை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது அதே உணர்வின் அணுக்கள் நமக்குள் விளையும்.
1.அப்பொழுது அதற்குச் சாப்பாடு வேண்டும்
2.இந்த உயிரின் மூலமாகத்தான் அது எடுத்துக் கொள்ளும்.

சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சப்படும் போது ஒரு செடியில் தாக்கி அந்தச் செடியை இயக்கச் செய்து அந்த உணர்வின் தன்மையை அதே காந்தத்தால் அதனின் உணர்வை இழுக்கச் செய்கிறது.

இருந்தாலும் செடி தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. இதைப் போல் நாம் அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவான பின் அதே உணர்வின் தன்மை இங்கே கிளரும்.

1.ஸ்ஸ்…ஸ்ஸ்… அப்பா……! என்று இந்த நினைவு எண்ணியவுடனே கண்ணுக்குத் தான் வரும்.
2.நேராக அந்த அணுக்களுக்குச் சாப்பாடாகப் போய்ச் சேரும்.
3.எம்மா……! என்று நினையுங்கள்… இந்தச் சாப்பாடு போனவுடனே கொஞ்சம் அடங்கும்.

அந்த நேரத்தில் யாராவது சந்தோஷமாக நம்மிடம் வந்து சிரித்துக் கொண்டே ஏதாவது சொன்னால் கோபம் வரும். சொல்பவர்கள் மீது வெறுப்பு அதிகமாக வரும். நமக்குள் வேதனை அதிகமாகும்.

நாம் தவறு செய்ததனால் இது வரவில்லை.
1.நாம் தவறு செய்தவர்களைப் பார்க்கப்படும் போது
2.அந்த உணர்வின் அணுக்கள் உடலிலே விளையப்படும் போது
3.அதனின் உணர்வுக்கு இரைகளை எடுக்கக் கிளர்ச்சிகளைத் தூண்டுகிறது.
4.ஆன்மாவில் வந்த பின் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் சத்தை எடுக்கிறது.

இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலையில் குருநாதர் காட்டிய வழியில் அவ்வப்போது ஆத்ம சுத்தி செய்தால் அதை எல்லாம் மாற்றி நல்ல அணுக்களாக நம் உடலில் விளையச் செய்ய முடியும். தீமை செய்யும் அணுக்களின் விளைச்சலைத் தடைப்படுத்தவும் முடியும்.

நரசிம்மா

 

உதாரணமாக நாம் ஒரு ஆசையில் வலிமையாகச் சிக்கி விட்டால் அதை அடக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. அப்போது நாம் நுகரும் உணர்வுகள் அசுத்த அணுக்களாகப் பெருகி மீண்டும் இழிநிலையான சரீரத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.

சீதாராம் பரசுராம் என்றால் இந்த எண்ணங்கள் தான். ஆக எந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ சூரியன் அதைச் சீதாலட்சுமியாக மாற்றுகின்றது. அதை நுகர்ந்தால் திரேதா யுகத்தில் நாராயணன் சீதாராமனாகத் தோன்றுகின்றான்… “எண்ணம்…”

இப்படி மனிதனான பின்
1.பல உணர்வுகளைச் சேமித்து அந்த உணர்வின் அறிவாக இயக்கக்கூடிய நிலைகள் கொண்டு
2.மனித உடலில் பல எண்ணங்களை வைத்து இயக்கும் சக்தி வருகின்றது.

பல பல சரீரங்களைச் சேர்த்துக் கொண்டு மனிதன் முழுமையாகும் உணர்வும் நஞ்சினை வென்றிடும் உணர்வும் நமக்குள் சேமித்து மனிதனாக உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.

இது தான் பலராம் பல எண்ணங்கள் வைத்து நாம் இயக்கும் தன்மை வருகின்றது. ஆனால்
1.இவை அனைத்தும் தீமைகளை அகற்றிடும் நரசிம்மனாக மாற வேண்டும்.
2.அதாவது பலவற்றையும் நாம் உணர்ந்தாலும் தீமையை அககற்றும் நரசிம்மனாக மாறினால் தான்
3.நாம் அழியாத நிலைகள் பெற முடியும்.

நமது உயிர் பலவற்றை உருவாக்கினாலும் தீமைகளை வென்றிடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்… நம் உயிரிலே அந்த உணர்வுகள் மோதப்பட்டு… இந்த உணர்வுகள் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது தீமைகள் அடைபடுகிறது… “அத்தகைய நஞ்சு அடக்கப்பட வேண்டும்…”

நாம் நுகர்ந்த உணர்வுகள் முதலில் நம் ஆன்மாவாக மாறுகின்றது பிறருடைய தீமைகள் ஆன்மாவாக அவ்வாறு மாறுவதை…
1.நரநாராயணன் – நம் உயிர் நரசிம்மனாக மடி மீது இரண்யனை வைத்து
2.வாசல்படி மீது உயிர் இங்கே அமர்ந்து தீமைகளைப் பிளந்தான்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகள் உணர்வை நுகர்ந்து அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி விட்டால் விஷம் கொண்ட நிலையை அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அடக்குகின்றது.
1.அடக்கப்படும் பொழுது அந்த அணுக்கள் உணவு கிடைக்காது தவிக்கின்றது
2.அதற்கு ஈர்க்கும் சக்தி அப்பொழுது குறைகின்றது.
3.அப்போது தீமையைப் பிளக்கும் நிலையாக அது அமைந்து அந்த்த் தீமைகள் பிரிக்கப்படுகிறது.
4.தீமைகள் பிரிக்கப்பட்டு அகன்று செல்கின்றது… ஒளியான உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.

இதைத்தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன் பிளந்தான் என்று காட்டுகின்றார்கள். அதாவது…
1.நாம் கை கால் அங்கங்கள் கொண்டு மற்ற வேலைகளைச் செய்வது போன்று
2.ஞானிகளின் நினைவு கொண்டு அருள் உணர்வுகளை நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அதனுடைய வலிமை கொண்டு அடக்கப்படும் பொழுது தீமைகளை ஈர்க்கும் தன்மை இழக்கப்படுகிறது.

ஆகவே வேதனைப் படுவோரைப் பார்த்தால் அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிடல் வேண்டும்.

காரணம் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்தால் கருவிழி ஊழ்வினை என்று வித்தாகப் பதிவாக்குகின்றது. ஊழ்வினையாகப் பதிவானால் மீண்டும் அதைத்தான் நுகர வேண்டி வரும். உயிரிலே பட்டு அதன் உணர்வின் அறிவாக இயக்கி விடுகின்றது அதுவே உடலுக்குள் வேதனைப்படச் செய்யும் அணுவாக மாறி விடுகின்றது.

நாம் இதை மாற்றி அமைக்க முடியும்… மாற்றி அமைக்க வேண்டும். அகஸ்தியன் இதையெல்லாம் மாற்றி அமைத்தவன். அதை நீங்கள் எல்லோரும் பெற முடியும்… பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

இனி வரக்கூடிய காலங்கள் மோசமாக இருக்கும் நேரத்தில் உங்களைக் காத்திடும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை மீண்டும் மீண்டும் பல கோணங்களில் உபதேசிப்பது.

இந்த உணர்வின் வலிமையை நீங்கள் சேர்ப்பித்து தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்/ இந்த உடலை விட்டு அகன்றால் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்பதற்கே இதைத் தெளிவாக்குகின்றேன்.

ஆறாவது அறிவால் தீமைகளை அகற்றிடும் எண்ணங்களை எண்ணினால் கண்ணின் நினைவுக்கே வருகின்றது
1.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணை நோக்கி ஏகும் பொழுது
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் ஈர்ப்புக்குள் வருகிறது
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வாறு உடலுக்குள் பெருக்கி தீமைகளைப் பிளப்பது தான் நரசிம்மா…!

பல ரிஷிகளும் ஞானிகளும் இன்றும் இந்தப் பூமிக்குள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்

 

ஒரு இயேசுநாதரும் வால்மீகி முனிவரும் திருவள்ளுவரும் திருஞானசம்பந்தரும் நயம்பட உரைத்த ஔவையாரும் இப்படி மக்களுக்கு உபதேசிக்க நல்வழி புகட்ட ஒவ்வொருவர் தோன்றியதாகத் தான் நாம் அறிகின்றோம்.

அவர்கள் பிறவி எடுத்து பல உன்னத நூல்களை நமக்கு உணர்த்திவிட்டுத் தன் நிலையில் ஜெபம் பெற்று… மறு உடலை எடுக்காமல் சூட்சும உலகில் சுழன்று கொண்டே உள்ளனர் என்பது மட்டும் உண்மையல்ல.
1.அவர்கள் எடுத்த பிறவிப் பயனால் இன்றும் பல உடல்களை ஏற்று
2.மக்களுக்காகப் பல நல்ல உபதேசங்களையும் பல அருளாசிகளையும் வழங்குகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து
3.நமக்கு முன் தோன்றிய பல ரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து
4.நாமும் அந்த ஜெப அருள் பெற்று நம் ஜென்மத்தில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
5.அச்சூட்சும உலகில் கலந்துள்ள பெரியோர்கள் நம்முள் வந்து நமக்குப் பல வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நம் உயிராத்மாவிற்கு நாம் சேர்க்கும் நல் சொத்தாக அதை நாம் ஏற்று நாமும் இவ்வுடலை விட்டுப் பிரிந்து சூட்சும உலகிற்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வது இப்பெரியோர்களின் அருளைப் பெற்று வாழ்வதுவே.

பிறரின் எண்ணமும் பிறரின் தூண்டுதலும் நம்மை வந்து அண்டாமல் நம் அறிவில் நம் உணர்வில் நாம் பல உண்மைகளைப் பெற்று அறிந்திட வேண்டுவது தான் நம்மை நாமே எண்ணி வாழ்வதுதான் என்ற நிலை கொண்ட நிலைக்கு ஒன்றுடன் ஒன்று கலந்துள்ள இவ்வுலகினிலே ஒன்றி
1/நாம் நல்லோரின் ஆசி பெறுவது என்பது
2.சூட்சும நிலை பெற்ற பெரியோர்களின் ஆசி பெறுவதே.

பால் புகட்டத் தாய் பாடம் புகட்ட குரு வாழ்ந்திட மனைவி வளர்த்திட மக்கள் என்று… ஒன்றுடன் ஒன்று நம்மை நாம் பிணைத்து வாழும் நிலையில்… நான் என்ற தனி நிலையில் இல்லாத நாம்… “அப்பெரியோர்களின் அருளாசி பெற்று வாழ்வதே” நம் உயிரணுவிற்கு நாம் பெறும் பெரும் சொத்து தான்.
1.நம்மை இயக்கிச் செல்வதுவே அப்பெரியோர்களின் ஆசி தான் என்று உணர்ந்து
2.நான் என்று நிலைப்படுத்தி வாழ்ந்திடாமல் நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் அங்கே சாங்கியப் பிரகாரம் தான் காரியங்கள் செய்ய வேண்டும் என்பார்கள்.

ஆனால் தியான வழியைக் கடைப்பிடிப்பவர்கள் சாமி (ஞானகுரு) என்ன சொன்னார்…? இவர்கள் இப்படிச் செய்கிறார்களே…! என்று எண்ணுவார்கள்.

சொந்தக்காரர்கள் அங்கிருந்து வருகிறார்கள். நீங்கள் அழுகக்கூடாது என்று சொன்னால்
1.”அப்பா” இறந்ததற்கு அழுக வேண்டாம் என்று சொல்கிறான் பார்…
2.இவன் எல்லாம் நரகலோகத்திற்குப் போவான் என்பார்கள்.
3.சொர்க்கலோகத்திற்கு அழுது அனுப்புபவர்கள் இப்படிச் சொல்வார்கள்.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?

தாய் தந்தையரின் உணர்வு கொண்டு தான் இந்த உடலை நாம் பெற்றிருக்கின்றோம். அவர்கள் அழியா நிலை பெறுவதற்கு என்ன வழியோ அதை நாம் செய்ய வேண்டும்.

விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி விண்ணை நோக்கி ஏகி இந்த உண்மையை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏகி அந்த உணர்வைச் சீராகப் பயன்படுத்திடல் வேண்டும்.

1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
3.ஞானிகள் சாஸ்திரப்படி காட்டிய நிலைகள் இது தான்.

அதாவது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் உடனே அவர்களைச் சார்ந்தவர்கள் உணர்வு வலுப் பெற்று
1.எங்களுடன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்
2.இனி நீங்கள் என்றுமே இன்பமான வாழ்க்கை வாழ வேண்டும்
3.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து என்றும் ஒளி பெறும் சரீரமாக பேரானந்தப் பெரு நிலை பெற வேண்டும்
4.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பெரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று
5.எல்லோரும் சேர்ந்து அந்த விண்ணுக்கு உந்தித் தள்ள வேண்டும்.

ஆனால் இங்கே வழக்கத்தில் என்ன செய்கிறோம்…? பாசத்தால் கீழே தான் இழுப்போம்…!
1.என்னைக் காப்பாற்றினாயே… என்னை விட்டுப் போய்விட்டாயே ஜர்…ர்ர்ர் என்று இழுப்போம்.
2.அவருடைய நண்பர்… எனக்கு இவ்வளவு தூரம் உதவி செய்தாயே போய்விட்டாயே…! என்று அவரும் இழுப்பார்
3.நாலா பக்கமும் இந்தப் பாசக் கயிறால் இங்கே இழுத்து விடுவோம்.

ஆக… நம்முடைய எண்ணங்கள் அங்கே எமனாக வந்து அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த நிலையில் நம்முடைய துயரத்திற்குத் தக்கவாறு தண்டனையைத் தான் கொடுக்கின்றோமே தவிர சொர்க்கத்திற்கு அனுப்புவதில்லை.

எமன் எங்கே இருக்கிறான்…?

நாம அனைவரும் அவர்கள் மீது பாசத்தால் எண்ணத்தை வைத்திருக்கும் போது அந்த எண்ணம் தான் புவியின் ஈர்ப்புக்குள் எமனாக வருகின்றது.

அதற்குத் தான் எருமையைப் போட்டுக் காண்பிக்கின்றான்…!

சிந்தனை இல்லாத நிலைகள் கொண்டு எதன் மேல் நாம் செயல்படுகின்றோமோ
1.அது அவருக்கும் எமனாகின்றது
2.நமக்கும் அந்த எண்ணமே எமனாகின்றது.

காரணம்… அவர் துயர்படும் உணர்வின் தன்மை எண்ணம் வலு கொண்டால் அந்த ஆன்மா நமக்குள்ளேயே வந்து விடுகின்றது.
1.அப்பொழுது அதற்கும் தண்டனை கொடுக்கின்றோம்
2.அதன் வழி நமக்குள் அந்த எமன் இங்கே வாட்டி வதைப்பான்.
3.எந்தெந்த நோயில் கடைசியில் அவஸ்தைப் பட்டாரோ அது எல்லாம் நமக்குள் வந்து வாட்டும்.

இது தான் இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை நிலைகள்.

அகஸ்தியனின் துணையால் பேரண்டத்துடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்

 

அகஸ்தியன் கற்றுணர்ந்து வரவில்லை. நஞ்சிடமிருந்து தாய் தப்பிக்கும் உணர்வை நுகர்ந்தது…
1.கருவிலே வளரும் அகஸ்தியனுக்குள் அந்தச் சக்திகள் இணைகின்றது.
2.நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் பெறுகின்றது.

பிறந்த பின் தரையிலே மல்லாந்து படுத்திருக்கும் பொழுது அறிவில்லாத நிலையில் வானியலை உற்றுப் பார்த்தாலும்… அதை அறியும் அறிவே அவனுக்கு இல்லை ஆனால் (அவன் உடலில் நஞ்சை முறித்திடும் சக்தி இருப்பதால்)
1.கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் கருவிழியின் வழியாக அந்தச் சக்திகள் ஊடுருவுகின்றது.
2.சூரியனிலே ஏற்படும் மோதல்களைப் பார்க்கின்றது
3.மோதலால் ஏற்படும் உணர்வின் தன்மை அகஸ்தியனுக்குள் மோதப்பட்டு உணர்வின் அறிவாக இவனை இயக்குகின்றது.
4.சூரியனின் இயக்கத்தையும் அவன் காணும் சக்தி பெறுகின்றான்.

இது எல்லாம் இயற்கை… சந்தர்ப்பத்தால் தான் அவனுக்குள் உருவான நிலைகள்.

நஞ்சு கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் உணர்வுகளை அவருடைய தாய் தந்தையர் புலனறிவால் அறிந்த பின் அவர்கள் நுகர்ந்த பச்சிலை மூலிகைகளின் விஷத்தின் தன்மைகள் கருவிலே வளரப்படும் போது அது இணைந்து “நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்களாக” அகஸ்தியனுக்குள் விளைகின்றது.

இதைப் போன்று தான்
1.உங்களுக்குள் உருவாகும் உணர்வின் தன்மையும்
2.அருள் ஒளியின் தன்மையை உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது
3.அந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றலை நீங்களும் பெற முடியும்.

அந்த நோக்குடன் தான் எமது (ஞானகுரு) உபதேசத்தை உங்களை உற்று நோக்கும்படி செய்து உணர்வின் தன்மை நுகரும்படி செய்து
1.நுகர்ந்த உணர்வுகளை ஜீவணுக்களாக மாற்றும்படி செய்வதற்கே
2.எமது குரு இட்ட கட்டளைப்படி இதைச் செயலாக்குகின்றேன்… தெளிந்து கொள்ளுங்கள்.

பிற சக்திகளைச் சூரியன் எவ்வாறு கவர்கின்றது…? என்ற நிலையையும் அண்டங்கள் எவ்வாறு உறுப்பெற்றது என்ற அதன் தொடர்வரிசையையும் அகஸ்தியன் காணுகின்றான்.

விஞ்ஞானி ஒரு பொருளைப் பிளந்து அணுவைப் பிளந்து அணுவிற்குள் இயக்கத்தின் தன்மை அறியப்படும் போது எங்கிருந்து விளைந்தது…? அதனுடைய உணர்வின் தொடர் எங்கிருந்து வந்தது…? என்று காணுகின்றாண்.

ஆனால் மெய்யை உணரும் ஆற்றல்… விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலாகத் தாயின் கருவிலே உருவாக்கப்படும் பொழுது
1.தனக்குள் விளைந்த நிலையுடன் மோதப்படும் பொழுது
2.விண்ணின் ஆற்றல் எவ்வாறு உருவானது…? என்று அறிவை அகஸ்தியனுக்குள் ஊட்டுகின்றது
3.ஒவ்வொன்றும் எவ்வாறு உருவாகிறது…? என்று உணர்வின் எண்ணங்கள் அவனுக்குள் தோற்றுவிக்கின்றது

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளைய விஞ்ஞானத்தினால் வரும் விஷத்தினை வென்று… நஞ்சற்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்து… இந்த உடலில் இருந்து செல்லப்படும் பொழுது அருள் ஞானிகளுடன் ஒன்றி மரணமில்லாப் பெரு வாழ்வு என்ற “என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறுவதற்குத் தான்…”

அந்த நிலையை அடைந்தது தான் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும். இதைப் போன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் “ஏனைய மண்டலங்கள் எத்தனையோ அகண்ட அண்டத்தில் உண்டு…!”

1.அதிலே இணைந்த உணர்வுகள்
2.அவர்கள் உமிழ்த்தும் நிலைகளை இணை சேர்த்து உணர்வின் தன்மை ஒளியாக்கி
3.ஒளியின் சரீரமாக அழியாத வல்லமை பெறச் செய்யும் இந்த உயிரை நாம் கடவுளாக மதித்து
4.நமக்குள் எண்ணியதை உருவாக்கும் அதனைத் தெளிவாக்குதல் வேண்டும்.
5.அந்தப் பேரண்ட மகரிஷிகளின் அருள் வட்டத்திலே நாம் இணைய வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் பதிவு செய்கின்றேன். பதிந்து கொண்ட பின் நினைவு கொண்டு அதை நீங்கள் கவர்ந்து செயலாக்க முடியும்.

“நல்லோரின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்களப்பா”

 

நல்வினை தீவினை என்பதெல்லாம் நாமாக எடுக்கும் வினை அல்ல. நம்முள் இயங்கும் இறைவனின் சக்தியைக் கொண்டு நடப்பவைகள் தான் நல்வினை தீவினை எல்லாமே என்று உணர்ந்து கொள்ள வேண்டும்,
1.இவ்வுடல் என்னும் கூட்டில் உள்ள ஆத்மாவை நம்முள் இருக்கும் இறைவன் சக்தியைக் கொண்டு
2.நாம் எடுக்கும் முறையில் இருந்து இவ்வாத்மாவை
3.நாம் இவ்வுடலென்னும் கூட்டை விட்டுப் பிரிந்து சென்ற பிறகும்
4.எந்த நிலைக்கும் அவ்வாத்மா நம் எண்ணத்திற்கு உகந்தபடி செயல்படும் தன்மை பெறும்.

நமக்கு இயேசு மகான் எப்படிக் கிடைத்தார்…? ஆழ்வார்கள் பலர் நமக்கு எப்படிக் கிடைத்தார்கள்…? சூட்சும நிலை கொண்ட இவ்வாத்மா பெரியோர்கள் எல்லோரும் தன் நிலைக்கு உகந்த உடல்களை எப்படி எப்படி எடுத்துப் பிறவி எடுக்காமலேயே இவ்வுலகில் வாழ்கின்றார்கள்…? என்ற நிலை புரிந்து நாம் வாழ வேண்டும்.

பல ஆழ்வார்கள் நாயன்மார்கள் எல்லாம் பிறவியிலிருந்து அந்நிலை பெற்று வரவில்லை சில உடல்கள் அவ்வுடலில் இருந்து ஆவி பிரிந்து சென்ற பிறகு “அவ்வுடல்களை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்…”

ஏன் அந்த உடலில் இருந்து சென்ற ஆவிக்கு அவ்வுடலில் திரும்பவும் வந்து செயல்பட முடிந்திடாதா…? என்ற எண்ணம் கொள்ளலாம்.

அவ்வுடலுடன் இருக்கும் பொழுது அவ்வாவிக்கு எந்த நிலையில் சக்தி பெற்றதோ அந்த நிலையில் தான் அது செயல்பட முடிந்திடும்.
1.பயத்துடனும் இவ் உடலில் உள்ள வலியின் கொடுமையினாலும்
2.உடலை விட்டுப் பிரியும் ஆவியினால் திரும்பவும் அந்த உடலை ஏற்றுச் செயல்படுத்திட முடிந்திடாது.

அந்த நிலையில் வருவது தான்… பல ஞானங்கள் பெற்ற “இவ்வுலகுக்கு இன்னும் தொண்டு செய்ய வேண்டும்…” என்ற நிலையில் உள்ள “பெரியோர்களின் ஆவி” இவ் உடலில் வந்து செயல்படுகிறது.

சாதாரண ஆட்டு இடையனாக இருந்த இயேசு பிரான் ஆடு மேய்க்கும் நிலையில் அவர் உடலை ஒரு கருநாகம் தீண்டியதால் அவர் ஆவி பிரிந்தது.

அந்த நிலையில் உடல் கெடாத நிலையில் இருந்ததால் அவர் சிறுவனாக அன்பு கொண்டிருந்த அவரின் தாய், தந்தையின் நிலை அறிந்து அந்த உடலை “ஒரு மாபெரும் ரிஷி” ஏற்றுக் கொண்டார்.

மக்களுக்கு நல் வழி புகட்ட அந்த உடலில் இருந்து கொண்டே அந்த ரிஷி தன் நிலையில் தன் வழியில் மக்களுக்குப் புகட்டிச் சென்றார்.

அவ்வேசுபிரான் இன்னும் எங்கும் செல்லவில்லை. எவ்வுடலை ஏற்று எந்த நாட்டில் வாழ்ந்தாரோ அந்த நிலைக்கு எல்லாம் வந்து செல்கின்றார். எண்ணி ஏற்று ஈர்க்கும் நிலை இல்லை அங்கு இன்று.

ஜெபம் பெற்று அறிந்திட்டால் “அவரின் நிலையை” அறிந்திடலாம்.
1.பல ரிஷிகளும் தவ முனிவர்களும் ஆதி நாளிலேயே தோன்றிய நாடப்பா இந்நாடு.
2.அதனால் தான் இன்றும் இங்கு இன்னும் தெய்வ நம்பிக்கை என்று ஒரு பயமாவது உள்ளதப்பா.

அவ்வாண்டவனின் சக்தியை ஈர்த்து ஏற்கும் நிலையை இவ்வுடலுடன் நாம் உள்ள நிலை கொண்டே ஒவ்வொருவரும் அறிந்து வாழ்ந்தால் பல ஜென்மங்கள் எடுத்து ஆவி உலகில் அல்லல்பட வேண்டியது இல்லை.

இந்த உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டு நம்முள் உள்ள இறைவனின் சக்தியால் ஊட்டம் பெற்று நம் உயிராத்மாவை உன்னத நிலை கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

இவ்வுடலை எந்த அணுவும் ஏற்கும் நிலையில் உள்ளதால்…
1.நாம் நம் உடலைத் தீய அணுக்களின் ஏவலுக்கு ஆளாக்காமல் நல்லோரின் ஆசி பெறத்தான்
2.நாம் நம் ஜெபத்தையும் நம் எண்ணத்தையும் செயல்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாடிய மரத்திற்கு உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிற மாதிரித் தான் குருநாதர் எனக்கு (ஞானகுரு) சக்தி கொடுத்தார்.

காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் பல அனுபவங்களைக் கொடுத்தார்.
1.காட்டிலே இடைஞ்சல்கள் வரும் போது அந்த ஞானிகளின் சக்திகளை நீ சேர்த்துக் கொண்டால் அந்தக் கெடுதல் நீங்கும்.
2.நான் சொல்லும் முறைப்படி எடுத்தால் அந்தத் தீமை நீங்கும்
3.வரும் துன்பங்களிலிருந்து விடுபடும் சக்தியை உனக்குள் பதிய வைக்க வேண்டும் அல்லவா…
4.அதற்காகத் தான் “இதை எல்லாம் செய்கிறேன்” என்று சொல்வார்.

ஏனென்றால் குருநாதர் என்னைத் திட்டுவார்… உதைப்பார்… எல்லாம் செய்வார். ஏண்டா நமக்கு இப்படித் தொல்லை கொடுக்கிறார்…? என்று அவர் மீது வெறுப்பு வரும். அவரை விட்டு ஓடிப் போகலாமா…! என்ற எண்ணம் தான் வரும்.

எங்கேடா நீ தப்பப் போகிறாய் என்பார்…! இப்படி எல்லாம் பல கஷ்டங்களைக் கொடுத்துத் தான் எனக்கு உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.

ஒரு பாறை வழுக்கலாக இருக்கும். கவனம் இல்லை என்றால் விழுந்து பல் எல்லாம் போய்விடும். அங்கே ஒரு பொருளைக் காட்டுவார். போய் எடுக்கச் சொல்வார்.

காட்டிலேயும் மலைகளிலேயும் இப்படிப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

ஒரு சமயம் இமயமலைக்குச் செல்லும் போது அங்கே பனியாக இருக்கிறது. கிடு… கிடு… என்று நடுக்கமாக இருக்கிறது. வெறும் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு அங்கே போகச் சொல்கிறார்.

அங்கே போனால் எல்லாம் “பாதை” மாதிரித் தெரியும். மரத்தின் மீது பனி… கட்டியாக உறைந்திருக்கும். ஏமாந்து கையையோ காலையோ வைத்தோம் என்றால் “டபக்…” என்று படுபாதாளத்திற்குப் போய்விடுவோம்.

போடா…! என்பார். அதையும் காட்டுவார்… இதையும் செய்யச் சொல்வார். ஆனால்…
1.இந்த இடத்தில் உன்னைக் காப்பாற்ற வலு வேண்டுமல்லவா…
2.அந்த வலுவை எப்படி எடுக்க வேண்டும்…? என்று சொல்வார்.
3.நான் சொன்னபடி நினைக்கவில்லை என்றால் கீழே போய்விடுவாய்
4.நான் சொன்ன உணர்வை எடுத்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வாய்…! என்பார்.

ஆபத்து வரும் நேரத்தில் இந்த மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என்பார் குருநாதர்.

அவர் சொன்னபடி போகும் போது ஒரு இடத்தில் மேலே மரத்தின் மீது பனி இருக்கிறது. அந்தப் பக்கம் திடு… திடு… திடு… திடு… என்று பனி உடைந்து கீழே விழுந்து கொண்டுள்ளது (AVALANCHE).

அங்கே காலை வைத்தவுடன் பொரு…பொரு… என்று இருந்தது “டபக்” என்று ஒரு கால் இறங்கிவிட்டது. கால் உள்ளே இறங்கிய பின் எந்த எண்ணம் வருகிறது…? ஐய்யய்யோ… செத்துப் போய்விடுவோமே…! என்ற எண்ணம் தான் வருகிறது.

1.நான் என்னடா சொன்னேன்…?
2.நீ என்னடா பண்ணுகின்றாய்…! என்று குருநாதர் கேட்கிறார்.

ஏனென்றால் அந்த உணர்வு என்ன செய்கிறது…? குருநாதர் கொடுத்த அந்தச் சக்தியைப் பயன்படுத்த முடியவில்லை.

மனிதன் நாம் இந்தப் “புவியின் ஈர்ப்பில்” இருக்கும் போது நமக்குள் உணர்வு இது தான் உடனடியாக வருகிறது. நல்லதை நினைக்க முடியவில்லை.

இதை எல்லாம் நீங்களும் கேட்கின்றீர்கள். தியானத்தில் உட்கார்ந்து ஈஸ்வரா…! என்று எண்ணினால்
1.மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை
2.எண்ணத்தை நிலை நிறுத்த முடியவில்லை என்று சொல்வீர்கள்.

அப்படி எல்லாம் ஒன்றும் நிறுத்த முடியாது. ஏனென்றால் பல அலைகள் ஓடிக் கொண்டிருக்கும்.

இங்கே யாம் உபதேசிக்கும் உணர்வின் அலைகளைக் கேட்டால் உங்களுக்குள் நல்லதாகும். இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிய வைத்து நீங்கள் மீண்டும் எண்ணி “அந்த உயர்ந்த சக்தியை…” மகரிஷிகளின் ஆற்றலை எடுக்கப் பழக வேண்டும்.

மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றலை குருநாதர் எனக்கு இப்படித்தான் கொடுத்தார்.

இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன் ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும்

 

நாராயணன் என்று சூரியனைச் சொன்னாலும் லட்சுமி நாராயணா…! அதாவது
1.காந்தத்தால் ஈர்க்கப்பட்டு மோதலில் ஏற்படுவது வெப்பமும்
2.தான் நுகர்ந்து கொண்ட உணர்வின் தன்மை அணுத்தன்மையாக மாறி அது இயற்கையில் இணைந்து வாழும் சூரியனாக வாழ்கின்றது.

ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டான் நாராயணன் என்றும் இங்கே கூறப்படுகின்றது. ஆதிசேஷன் என்பது விஷம். ஆதியிலே நாளடைவில் விஷம் ஆகும் பொழுது விஷமற்றதை அது தாக்கி அதிலே வெப்பத்தை உருவாக்குகின்றது.

1.வெப்பம் உருவானால் தான் இரண்டறக் கலக்கும் தன்மை வரும்
2.விஷம் எதிலேயும் ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது.
3.விஷம் விஷமற்றதைத் தாக்கி ஊடுருவும் பொழுது வெப்பத்தின் தணல் கூடுகின்றது
4.ஊடுருவும் தன்மை வரும் பொழுது ஈர்க்கும் சக்தியும் அங்கே வருகின்றது.
5.ஈர்க்கும் சக்தியும் வெப்பத்தை உருவாக்கும் சக்தியும் இந்த விஷத்திற்குத் தான் உண்டு.

வெப்பத்தால் உருவான நிலைகள் விஷத்தின் தன்மை அடைந்தாலும் அதே அணுவின் தன்மை மோதப்படும் பொழுது… இயக்கச் சக்திக்கு உறுதுணையாக இருக்கின்றது.

ஏனென்றால் பௌதீக முறைப்படி விளக்கம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

நான் படிக்காதவன் தான்… நமது குருவும் படித்தவரல்ல. உணர்ந்தறிந்து நுகரும் ஆற்றலைப் பெற்றவர். அகஸ்தியன் படித்தவன் அல்ல…! அகண்ட அண்டத்தினுடைய சக்தியும் தனக்குள் வளர்த்து விளைய வைத்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டவன்.

1.அவனின்று வரும் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.இருண்ட உலகமாக மாறும் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து ஒளியின் சுடராக என்றும் நிலை கொண்டு வாழ முடியும்
3.நம்பிக்கை உள்ளோர்கள் இந்தச் சக்தியைப் பெறலாம்.

அல்லது இந்த உடலின் வாழ்க்கை தான் சதம் என்று நிலையில் சென்றால் இந்த உணர்வின் தன்மை கொண்டு இருள் சூழும் நிலைக்கே அழைத்துச் சென்று மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் உயிர்.

அதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் விடுபட வேண்டும்.

இதற்கு முன் நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும்… அருள் ஒளியின் உணர்வுகளை இப்பொழுது பதிவாக்கப்படும் பொழுது அதனுடைய நினைவாற்றல் வந்தால்… இந்த உணர்வின் இயக்கமாக மாற்றி உங்களில் உள்ள தீமைகளை மாற்றிடும் வல்லமை பெறுகின்றீர்கள்…! அத்தகைய வல்லமை பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

ஏனென்றால் கற்காதவன் (என்னுடைய) உணர்வுக்குள் குருநாதர் அதைப் பதியச் செய்யும் போது அதை நுகர்ந்து… உணர்வின் அறிவாக எனக்குள் அதனின் இயக்கச் சக்தி வந்தது.

அதே உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி அதனுடைய செயலாக்கங்களாக உங்களுக்குள்ளும் உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

நான் வெறும் வார்த்தையாகப் பேசவில்லை குரு அருளின் உணர்வுகள் உங்களுக்குள் அதைப் பதிவு செய்கிறது. அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றி ஒளி பெறும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.
1.அருள் ஒளியைப் பற்றுடன் பற்றி பிறவி இல்லாத நிலை அடைந்து
2.ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும் – இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன்.

வேதனை உணர்வு கொண்டால் மனிதனல்லாத ரூபத்தை மாற்றி நரக வேதனைப்படும் உயிரினங்களாக உயிர் மாற்றிவிடும்… மனித உடலை இழந்து விடுவோம்.

அப்படிப் பிறந்தாலும் அசுர செயல்களை செயல்படும் உணர்வாகத் தான் மாற்றும். ஆகவே இன்றைய விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்… “எமது குரு அருளால் நஞ்சிலிருந்து நீங்கள் மீட்கப்பட வேண்டும்…”

ஒவ்வொரு உணர்வுகளிலும் பல கோடி விஷத்தன்மை கொண்டு கவர்ந்து வந்தாலும் விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் செலுத்தப்படும் பொழுது ஒவ்வொரு நினைவாற்றலும் நீங்கள் நுகரும் பொழுதே அதை ஜீவ அணுவாக “ஒளியாக” மாற்றும் தன்மை வருகின்றது.

அருள் ஒளி பாய்ச்சி உணர்வின் தன்மையை இணைக்கப்படும் பொழுது அது வலு இழக்கும் தன்மை வருகின்றது
1.அதனால் தான் இணைத்தே உங்களுக்குள் அருள் உணர்வை நுகரச் செய்கின்றேன்.
2.ஒளியான வீரிய அணுவாக உங்களுக்குள் விளைய வேண்டும்
3.தீமைகளை அடக்கும் வல்லமை நீங்கள் பெற வேண்டும்
4.தீமையற்ற உடலை உருவாக்க வேண்டும்
5.பிறவி இல்லா நிலை அடைந்த அருள் ஒளியை உங்களுக்குள் பெருக்க வேண்டும்
6.அருள் வழியில் நீங்கள் இதைக் கடந்து செல்ல வேண்டும்
7.விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அரவணைப்பில் நீங்கள் செல்ல வேண்டும்.

அப்போது நச்சுத் தன்மைகள் அங்கே கரைக்கப்படுகின்றது. உங்களுக்குள் மோதும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுவீர்கள். அந்த நிலை உருவாக்கத்தான் இதைத் தெளிவாகக் கூறுகின்றேன் (ஞானகுரு).

நாம் பறக்கும் நிலை பெற வேண்டும்… அதற்குண்டான வளர்ச்சியைக் கூட்டுங்கள்

 

பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… மடிந்தோம்…! என்ற சாதாரண நிலையில் மிருகங்களின் வாழ்க்கை நிலை போலத் தான் “நம் எண்ணத்தின் சக்தியை…” நாம் எண்ணிப் பார்க்காமல் வாழ்கின்றோம்.

1.இந்த எண்ணம்…
2.இந்தச் சக்தி…
3.உடல் என்னும் கூட்டில் ஆத்மா உள்ள வரை “செயல்படும் தன்மை…!”
4.உடலை விட்டுப் பிரிந்த பின்னாடி ஆவி உலகத்தில் அறிந்திட முடியாது.
5.தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள ஆவி உலகில் உள்ள ஆத்மாவினால் முடிந்திடாது. (இது மிகவும் முக்கியம்)

பல ஜென்மங்களில் நாம் எடுத்த எண்ணங்களும் செயல்களும்தான் இந்த உடலை விட்டுச் சென்ற அந்த ஆவிகளால் அறிந்து கொள்ள முடியும்.

உடலில் உள்ள பொழுது எந்தெந்த நிலையை அந்த ஆத்மா பெற்றதோ… எந்த நிலை கொண்ட அறிவாற்றல் அந்த ஆன்மாவிலே இருந்ததோ… அதே நிலையில் தான் அந்த ஆத்மா சுற்றிக் கொண்டேயிருக்கும்.

1.இந்த உலகையும்…
2.தான் எந்தெந்த நிலையில் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்ட மனிதர்களையும்…
3.அதே நிலை கொண்ட இடத்திலும்தான்.. அந்த ஆன்மா மறு ஜென்மம் பெற்று
4.“தன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்து கொள்ளலாம்…!” என்ற ஆவலுடன்
5.பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மறு ஜென்மம் பெற்று இன்று இந்த உலகில் வாழ்ந்திடும் உடலுடன் கூடிய ஆத்மாக்கள் எல்லாம் “தன் நிலை உணர்ந்து வாழும் நிலையும் ஈர்க்கும் நிலையும் இல்லாமல்” பிறரின் நிலை கொண்டே தன் எண்ண சக்தியை விரயமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் நாம் வாழும் இந்த உலகம்.. மற்ற மண்டலங்கள்… அண்டசராசரங்கள்… எல்லாவற்றையுமே அறிந்து கொள்ள மனிதர்களால் மட்டும் தான் முடிந்திடும்.
1.இன்று ஆத்ம உடலுடன் உள்ள மனிதனால் மட்டும் தான்
2.எல்லா நிலையையும் ஈர்த்து
3.எல்லா உண்மைகளையும் கண்டுணர முடியும்.

அத்தகைய சக்தியைப் பெறும் தகுதி என்பது ஆண்… பெண்… குழந்தைகள்… முதியவர்கள்… என்ற நிலை கொண்டு வயது வரம்பில்லாமல் எல்லோருக்குமே அந்தச் சக்தியுள்ளது. நாம் ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டு தான் அந்தச் சக்தி நமக்கு உதவுகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஒரு கடுகளவு வெளிச்சத்தையும் அதிதீவிர வெளிச்சத்தையும் உண்டாக்குகின்றோம். அந்தந்தச் சாதனத்திற்குள் எந்த அளவிற்கு மின்சாரத்தைப் பாய்ச்சுகின்றோமோ அந்த நிலையில் நாம் அதனின் ஒளியைப் பெறுகின்றோம். அதைப் போல
1.மனிதனின் சக்தி என்பது
2.அந்த மின்சாரத்தின் சக்தியைவிட அதிவிரைவு கொண்ட சக்தியாக உள்ளது.
3.ஆனால் இன்றைய மனிதர்கள் தன் சக்தியைத் தானே உணர்ந்து எடுக்கும் நிலை இல்லை.

படிப்பு என்ற நிலையில் பல நூல்களையும் பல கல்வி ஸ்தாபனங்களுக்குச் சென்று படிப்பதுவும் தன் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இருந்தாலும் அறிவு வளர வேண்டும்…
1.தன் எண்ணத்தில் வீரிய சக்தி பெற வேண்டும்
2.தன் நிலையில் பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற
3.இப்படிப்பட்ட எண்ணத்தில் படிப்பை வளர்த்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.

படிப்பதனால் தன் வாழ்க்கை நிலைக்குகந்த செல்வம் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
1.உயர்ந்த உத்தியோகம் கிடைக்கும்
2.உன்னத நிலை பெற்று புகழ்ந்த நிலையில் வாழலாம் என்ற
3.இந்த ஆசாபாசத்துடன் தான் இன்றைய பாட நிலையும் படிக்கும் நிலையும்
4.கல்வி கற்பவருக்கும்… கல்வி புகட்டுபவருக்குமே… உள்ளது.

அப்படி வாழ்ந்திடாமல் அச்சக்தியின் அருளை ஏற்று வாழும் வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுங்கள்.

இந்த உடல் என்னும் கூட்டை… ஆத்மாவின் நிலை கொண்டு… நம் எண்ணம் என்ற செயலினால்…! இந்த உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களை ஆற்றல் மிக்கதாக ஆக்கி
1.இந்த உலகம் அனைத்திலும் உள்ள சக்தியைக் கண்டறியும் ஆற்றலும்
2.இந்த உடலையே நாம் பறக்கும் நிலைப்படுத்திடவும்
3.எந்த நிலைக்கும் இந்த உடலை நாம் ஈர்த்து அச்சக்தியின் அருளைப் பெற்று
4.இந்த உலகில் உள்ள மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்திட முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கூட்டுத் தியானம் செய்கிறோம் என்றால் ஒவ்வொருவரும் எத்தனையோ எண்ணத்திலே தான் அதிலே வந்து கலந்து கொள்கின்றோம். ஒவ்வொருவரின் வீட்டிலும் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கிறது.

ஒரு குழம்பை வைக்கும் போது புளிப்பு காரம் உப்பு எல்லாவற்றையும் சேர்த்துத் தான் அதை ஒரு ருசியாகக் கொண்டு வருகின்றோம்.

அதே போல் கூட்டுத் தியானத்தில்
1.“எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று
2.கூட்டமைப்பாக எண்ணி ஒரே குரலில் எழுப்பும் போது காந்த அலைகள் அது கவர்கிறது.
3.நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் போது அந்த உணர்வுகள் செவிகளில் படுகிறது
4.உணரச்சிகள் உந்தப்பட்டு எல்லோருடைய உணர்வுகளிலும் அது இணைகிறது.

27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோளின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் இணைத்து அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பெற வேண்டும்… என்று அதன் மூலம் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று இந்த உணர்வை ஈர்க்கச் செய்கிறோம்.

1.மனித உடலுக்குள் 1008 நல்ல குணங்கள் உண்டு
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரே குரலில் ஒலியை எழுப்பும் போது
3.அந்த நல்ல குணங்கள் அனைத்திலுமே இந்த உயர்ந்த உணர்வுகள் செருகப்படுகிறது.

அத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானம் இருக்கின்றோம். நம்மால் சம்பாரிக்க முடியாததை… அந்த அருள் சொத்தைக் கூட்டாக எண்ணித் தியானிக்கும் போது… கிடைக்கச் செய்ய முடிகிறது.

மிளகாயைக் குழம்பில் போட்டவுடன் அதிலே எப்படி ருசி வருகிறதோ அதைப் போல் சுவை கொண்ட உணர்வாக மாற்றிக் கொள்ள முடிகிறது.

வீட்டில் சங்கடமும் சலிப்பும் மற்றதுகளும் வந்தாலும் கூட… அந்த உணர்வை மறந்து விட்டு மெய் ஒளியைக் கலந்து “எல்லோரும் நலம் பெற வேண்டும்” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்பும் போது “சூரியனின் காந்தப் புலன் அது கவர்கிறது…”

பல வகையான சரக்குகளைப் போட்டுத் தான் குழம்பு வைக்கின்றோம். அவை ஒவ்வொன்றும் தனி சுவைதான். இருந்தாலும் எல்லாவற்றையும் போட்டு வேக வைத்து ஒன்றாகக் குழம்பாகும் போது அதிலிருந்து வெளி வரும் மணத்தைச் சூரியனின் காந்தம் அதைக் கவர்ந்து கொள்கிறது.

அதனின் மணத்தை நுகரும் போது அதனின் சுவையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த மணத்தின் குணத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதைப் போன்று தான் நாம் படைக்கும் இந்த அருள் ஞானிகளின் சக்தியை…
1.எல்லோருக்குள்ளும் அந்தச் சக்தியைப் பரப்பச் செய்து
2.காந்தப் புலனின் நிலைகள் கொண்டு மோதச் செய்து
3.அதே உணர்வின் தன்மை ஈர்க்கச் செய்து
4.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு இணைக்கச் செய்யும் முறை தான்
5.யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தக் கூட்டுத் தியானத்தின் நிலை.

அதாவது
1.பரவிக் கிடக்கக்கூடியது அனைத்தும் நமக்குள் குரு பரம்.
2.ஒவ்வொரு நிலைகளிலும் அதை எடுத்து விளைய வைத்த அந்தந்த உயிரின் நிலைகள் இது பரமாகி
3.தனக்குள் (அனைவருக்குள்ளும்) அருள் உணர்வாக அது சேரும் நிலை.

ஏனென்றால் இது குரு பலன் குரு பரன்…!

சூரியனுக்குள் பரவிய நஞ்சினால் “இரு மடங்கு கரண்டை” அது உருவாக்கப் போகிறது

 

இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் நுகரும் விஷத்தன்மையை சூரியன் தனக்கு அருகில் கொண்டு வரப்படும் பொழுது தனக்குள் விளைய வைத்த உணர்வின் வலுவால் எதிர்த்துத் தாக்கி வெப்பமாக்கி விஷத்தைப் பிரித்து அதற்குள் உண்டான சத்தை ஒளிக்கதிர்களாக மாற்றும் நிலை பெறுகின்றது.
1.விஷத்தைப் பிரித்து வெப்பமும் காந்தமும் உருவாக்கப்படுகிறது.
2.ஆனால் நகர்ந்து செல்லும் பொழுது முதலிலே நுகர்வது விஷத்தன்மையைத்தான்.
3.காரணம் அந்த விஷம் இயக்கச் சக்தியாக வருகின்றது
4.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும் வருகின்றது வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும் உருவாக்குகின்றது.
5.அதன் வழியில் இந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியனால் உருவாக்கப்பட்ட மனிதர்கள் தான் நாம்.
6.ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட நஞ்சுகள் அனைத்தும் சூரியனுக்குள்ளும் இன்று பரவிக் கொண்டுள்ளது.

காரணம்… மிக சக்தி வாய்ந்த விஷத்தன்மைகளை உருவாக்கத் தெரிந்து கொண்டான் மனிதன். அதை வைத்து மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற உள்நோக்குடன் தான் அதைச் செயல்படுத்துகின்றான். “மற்றவர்களை அடிமைப்படுத்த வேண்டும்” என்று தான் விஞ்ஞான அறிவு கூறுகின்றது.

ஆனால் மெய்ஞான அறிவு விஷத்தை ஒடுக்கித் “தனக்குள் ஒளியின் அறிவாக வளர்க்க வேண்டும்…” என்று கூறுகின்றது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.ஆக இன்று உலக நாடுகள் அனைத்துமே தன் நாட்டைக் காக்க வேண்டும் என்று செய்தாலும்
2.அவர்கள் நாட்டையும் அவரால் இன்று காக்க முடியவில்லை

உலகத்தையே அடிமையாக்கி தன் சொல்லுக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இன்றும் அமெரிக்கா சில செயல்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றது.

மற்றவர்கள் யாரும் அவனை மீறி எதுவும் செய்யக்கூடாது. தானே அனைத்தும் செய்ய வேண்டும் என்று “வான மண்டலத்தையே நச்சுத் தன்மையாக்கி விட்டார்கள் அமெரிக்காவும் ரஷ்யாவும்…”

அவர்களைப் பின் தொடர்ந்த மற்ற நாடுகளும் வான மண்டலத்தை விஷத்தன்மை ஆக்கிக் கொண்டுள்ளார்கள்

1.அதனால் சூரியன் ஜீரணிக்கும் சக்தி இழந்து அந்த விஷத்தன்மைகளை சிறிதளவு தான் இப்போது மாற்றிக் கொண்டுள்ளது
2.விஷக் கதிர்கள் அதற்குள் தாக்கப்பட்டு நல்ல சக்திகளை உருவாக்கும் தகுதியை சூரியன் இழந்து கொண்டுள்ளது.

குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இப்படி உலகின் நிலைகள் இன்று எத்தனையோ வளர்ந்து விட்டது வளர்ந்து கொண்டே உள்ளது சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கின்றது… தன்னம்பிக்கை இழக்கச் செய்யும் பக்தி மார்க்கங்கள் ஏராளமாக வந்துவிட்டது.

அரசர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ளது போன்று… மனிதனை மனிதனாக வாழ விடாது ஆசையின் உணர்வுகள் தூண்டப்பட்டு அவ்வழியிலேயே வாழ்வோம் என்று உருவாக்கப்பட்டு விட்டது.

தான் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனைப்பட்டு அந்த நஞ்சை வளர்த்து நஞ்சு கொண்ட உணர்வின் அணுக்களாக மாற்றி மனிதனல்லாத உருவைப் பெறும் நிலையாக இன்று உருவாகிக் கொண்டுள்ளது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.இதிலிருந்து விடுபட குரு காட்டிய அருள் வழியில்
2.தெளிந்த மனம் கொண்டு ஒவ்வொருவரும் அருள் வழியில் வளர வேண்டும்.

அருள் ஒளியின் உணர்வை வளர்த்துக் கொண்டால்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து… அங்கே நிலை கொண்டு பேரண்ட அகண்ட உலகில் உருப் பெறும் உணர்வினை ஒளியாக மாற்றி… என்றும் பேரின்ப்ப் பெரு வாழ்வாகவும்… மரணமில்லாப் பெருவாழ்வாகவும் வாழ்ந்திடவும் முடியும்

1.இதை நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்
2.இந்த உடலை விட்டு அகன்றால் அடுத்து மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையே இருக்கக் கூடாது

அப்படி நிலை பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்
1.அதனுடைய எல்லையை அடைவது தான்
2.நம்முடைய வாழ்க்கையின் லட்சியமாக இருத்தல் வேண்டும்.

எல்லாமே ஒரே சொந்தம் தான்… நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை

 

ஒவ்வொரு மனிதனும் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும்.

எப்படி நாம் உண்ணும் உணவு நான் சந்தோஷ நிலை கொண்டு இருக்கும் பொழுது நல்ல மணமும் நல்ல சுவையும் கூடியதாக நம் நாவிற்கும் மனதிற்கும் தெரிகிறது

அந்நிலையில் உண்ணும் உணவு நம் உடம்பிற்கு அமிழ்தமாக அரும்பெரும் சுவை கூடியதாக நம் உள்ளமும் உடலும் ஏற்கிறது.

நாம் நம்மில் உள்ள பல கலக்கங்கள்… பல கஷ்ட நிலைகள் சோர்ந்த நிலை கொண்டு மனச்சங்கடத்துடன் உள்ள பொழுது… நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலும் மனமும் பெரும் சங்கடத்துடனே ஏற்று… அதில் உள்ள சுவையும் நம் நாவிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாமல் நம் உடல் நிலையும் அதனால் பாதிக்கப்படுகிறது.
1.ஒன்று போல் உள்ள உணவை உண்டாலும்
2.நம் மனநிலையைப் பொறுத்துத் தான் உடல் ஆகாரத்தை எடுத்து நாம் ஆத்மாவிற்கு அளிக்கிறது.
3.ஒவ்வொருவரும் தன் சுவாச நிலையும் எண்ண அலைகளும் கொண்டு தான் இவ் உயிர் உடலை இயக்கி வாழ்கின்றோம்.

எப்படி ஒரு பொருளையோ நாம் சமைக்கும் சமையலையோ நம் எண்ணத்தை அதன் மேல் செலுத்திப் பக்குவப்படுத்திப் பதம் பார்த்துச் செய்கின்றோமோ… எந்த ஒரு பொருளுக்கும் நாம் செய்யும் பொழுது “அதன் பதம் அறிந்து செய்தால்தான்” அது முழுமை அடைகிறது.

அதைப் போல் தான் இவ்வுடல் எனும் கூட்டை
1.இவ்வுள்ளத்தினாலும் இச்சுவாசத்தினாலும் தான் இவ்வுடலுக்குப் பதமறிந்து
2.சந்தோச நிலை கோப நிலை என்ற நிலையில் நாம் நம்மைச் சமமாக நிலைப்படுத்திக் கொண்டு இவ் உடலையே பக்குவப்படுத்திப் பதமறிந்து
3.நாம் நம் ஆத்மாவை வணங்கி வாழும் நிலைக்கு நம்மை நாம் பதப்படுத்தி வாழ்ந்திட வேண்டுமப்பா.
4.நம்மில் நம்மைச் சுற்றிப் பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் அடிபணிந்து வாழ்ந்திடாமல் “நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்…”

நாம் எடுத்திடும் சுவாச நிலைகள் எல்லாம் நம் உடலுக்கு எந்தெந்த நிலையில் நாம் எடுக்கின்றோமோ அதைக் கொண்டுதான் “நன்மையும் தீமையும் அமைகின்றது” என்பதனை உணர்ந்து நம்மை நாம் பக்குவப்படுத்திச் சமப்படுத்தி வாழ வேண்டும்.

இப்பாட முறை கொண்டு நீங்கள் பகுத்தறிந்து உணர்ந்து… நமக்கு முன் உபதேசித்த பல பெரியோர்களின் வழியில் நடந்து ஏற்றமுடன் நல் எண்ணம் கொண்டே பதப்படுத்தி வாழ்ந்திடுங்கள் “பக்குவ நிலையில்…”

நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல இவ்வுலக அனைத்திலும் உள்ள உயிரணுக்கள் வேறல்ல அச்சக்தியின் அருளில் உருளும் இவ்வுலகத்தில் உதித்துள்ள உயிரணுக்கள் எல்லாமே… “எல்லாமே ஒரே சொந்தம் தான்…”
1.நம்மை நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை. நம்முள் கலந்தது தான் எல்லாமே.
2.அவ் எல்லாவற்றிலும் கலந்து உள்ளவர்தான் நாமுமே.
3.நான் என்ற தனி நிலை இல்லாத நாம்…
4.இந்த உருளுகின்ற உலகுடன் உலகமாகச் சுற்றி நாம் பெற்ற அருளை நம்முள் ஈர்த்து வாழ்ந்திடுவோம்
5..நல் மனத்துடனும் அன்பு கொண்டு வாழ்ந்திடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் எத்தனையோ கோவில்களுக்குப் போகின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) சதா உங்களைத் தான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன்.

1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி
2.உங்கள் உடலை எல்லாம் கோவில்களாக எண்ணி
3.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்களை எல்லாம் தெய்வமாக எண்ணி
4.அந்தக் கோவிலில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.
5.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு “எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்” என்று தியானிக்கின்றேன்.

நான் பார்த்த கோவில்கள் அத்தனையுமே (எம்மைச் சந்தித்தவர்கள்) ஒவ்வொருவரையும் தியானம் செய்து அதிகாலை 4-30 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும். இந்த உபதேசத்தைப் பதிவு செய்தோர் அனைவருக்கும் அந்த நேரத்தில் முழிப்பு வரும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகளை மாற்றி… நல்லது செய்யும் அந்த ஆற்றலாகப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

அதனாலே எல்லோரும் முழு நம்பிக்கையாக உங்களை நீங்கள் நம்புங்கள். மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை.
1.சாமி சொன்னார் என்று சொல்லி
2.சாமி சொன்ன சக்தியை நாம் பெற வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

சாமி செய்து கொடுப்பார் என்பதல்ல. உங்களை நான் பிரார்த்திக்கின்றேன். உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனின் காந்த அலைகள் படுகிறது. பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் பூமிக்குச் சக்தி கிடைக்கும். பிரபஞ்சத்தில் காற்றில் பல சக்திகள் படர்கிறது. பூமி போகும் பாதையில்… தான் ஈர்த்துக் கொண்டால் தான் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

அதைப் போன்று தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திகின்றேன்.
2.அந்த அருள் ஒளியை நீங்கள் ஈர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆகையினால் இங்கே சொல்லக்கூடியதெல்லாம் உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று தகுதியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த ஒவ்வொருவரும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தேன்… நான் நன்றாக இருக்கின்றேன்
2.எங்கள் குடும்பம் நலமாக இருக்கின்றது எங்கள் உடல் நலமாக இருக்கிறது
3.காற்றிலிருந்து அருள் சக்திகளை எடுக்க முடிகிறது
4.எங்கள் உடலில் உள்ள நோய்கள் அகன்றது என்ற
5.இத்தகைய சந்தோஷமான செய்திகளைச் சொல்ல வேண்டும்

ஆகவே “நாங்கள் நன்றாக இருக்கின்றோம்…!” என்று சொல்லும் போது தான் எனக்கு அது மகிழ்ச்சி. அதைக் கேட்க வேண்டும் என்று எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்களிடம் இதைத் தான் நான் விரும்புகின்றேன்… ஞானகுரு.

அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.

உலக மக்களை அருள் ஞான வழியில் வளரச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா

 

அகஸ்திய மாமகரிஷிகளை அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உடலிலே இடுப்பு வலி உள்ளவர்களோ தலைவலி உள்ளவர்களோ நெஞ்சுவலி உள்ளவர்களோ வயிற்றுவலி உள்ளவர்களோ “அனைவரும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று… எங்கள் உடலில் இருக்கக்கூடிய வலிகள் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது
1.மின்சாரம் பாய்வது போன்று அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களிலும் பாய்ந்து
2.உணர்வுகள் மகிழ்ச்சி பெறும் சக்தியாக இப்பொழுது தோற்றுவிக்கும்.
3.உங்கள் உடலிலே இப்பொழுது இடுப்பு வலி தலைவலி நெஞ்சுவலி குறைவதைக் காணலாம்…
4.உடலில் ஒரு விதமான மகிழ்ச்சி தோன்றுவதையும் காணலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த சர்வ நோய்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அவரவர்கள் உடலில் உள்ள நோய்கள் பலவீனமடைந்து அருள் ஒளி உங்களுக்குள் வளரும் ஆற்றல் பெருகும். அதை நீங்கள் இப்போது உணரலாம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து
அவர்களது உடல்களில் இருள்கள் மறைந்து… அருள் ஒளி படர்ந்து
அவர்களது வாழ்க்கையில் மலரைப் போன்ற மனம் மகிழ்ந்து… மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி படர்ந்து
அருள் ஞான வழியினிலே அருள் ஒளி படர்ந்து… உலக இருளை மறைத்திடும் அருள் சக்திகள் படர்ந்து
உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனைந்து வாழ்ந்து
விஞ்ஞான உலகில் பரவிக் கொண்டிருக்கும் இருள்கள் மறைந்து
அருள் ஒளி பெருகி வளர்ந்து… அருள் ஞான வழி படர்ந்து… மெய் ஒளி பெரும் சக்தி பெற்று
மனிதன் என்ற தன் நிலை அடைந்து
தன்னை உருவாக்கிய உயிரை ஈசன் என்று மதித்து
உயிரால் உருவாக்கப்பட்ட கண்களை மதித்து
அருள் ஒளி பெறும் அருள் ஞானம் பெறும் நிலையை எண்ணி… அருள் வழியில் வளர்ந்து
அதன் வழி மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ந்திடும் உணர்வின் அணுக்கள் பெருகி
அதன் வழி உடல் நலம் பெற்று அதில் வளரும் அருள் மணங்கள் வெளிப்பட்டு
உலக மக்களை அருள் ஞான வழியில் வளரச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

மனிதன் தன் நிலை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்

 

தெய்வப் பிறவி மனிதப் பிறவி என்ற பாகுபாடு பிறவியில் இல்லை
1.தேவனுக்கு அடுத்தது மனிதப் பிறவி என்கிறார்கள். தேவப் பிறவியாக யாரும் பிறப்பதில்லை.
2.வம்சவழி ராஜயோகம் என்ற நிலை கொண்டெல்லாம் பிறப்பது அடுத்த நிலை தான்.

உயிர் அணுக்கள் தோன்றிய நாள் முதலே சமமான நிலையில் தான் எல்லா உயிரணுக்களுமே ஜீவன் பெற்றன.

ஆண்டவனாகவும் மனிதனாகவும் பேயாகவும் மிருகமாகவும் மற்ற எல்லா ஜீவ ஜந்துக்களாகவும் ஆனதெல்லாமே
1.அச்சக்தியின் அருளில் சமமான நிலையில் வந்த உயிரணுக்கள் எல்லாம்
2.அதனதன் சுவாச நிலை கொண்டு தான் பல நிலை கொண்ட ரூபமெடுத்து ஜீவன் பெற்று வாழ்கின்றது.

சக்தியின் அருளில் சமமான நிலை கொண்டு உலக ஆரம்பத்தில் உயிர் பெற்ற நாம் எல்லோருமே… இன்று ஆண்டவனாகவும் மனிதனாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இன்றைய உலகில் ஜீவன் பெற்று வாழ்வதெல்லாம்…
1.“நாம் அன்று எடுத்த… இன்று எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.நமக்கு நாமே தேடிக் கொண்ட நிலை தான் இன்றுள்ள எல்லா நிலைகளுமே.
3.நாம் இன்றுள்ள நிலையையாவது நிலை நிறுத்தி வாழ்வதற்கே இப்பாட நிலைகள் எல்லாம்.

ஆக… ஆண்டவன் பிறப்பு வேறு மனிதன் பிறப்பு வேறு என்ற மாறுபட்ட நிலை அச்சக்தியின் அருளிலிருந்து நாம் பெறவில்லை.

நாம் இன்று இந்நிலை பெற்று வாழ்வதுவே உண்மையை ஊன்றிப் பார்த்தால்
1.தெய்வ நிலையில் இருந்து மனித நிலைக்கு வந்தது தான்.
2.மனிதனின் நிலை கொண்டு நம் நிலையை நாம் உணர்ந்து “நாம் விட்டு வந்த தெய்வப் பிறவியை நாம் ஏற்கும் நிலை நமக்குள்ளது…”
3.தெய்வத்தின் தெய்வமாகக் கலந்துறவாடும் நிலையை ஏற்ற நாம் இந்த மனிதப் பிறவியிலேயே அப்பாக்கியத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.

மனிதனின் நிலை அறிந்து வாழ்ந்திட வேண்டும்.

காலமும் நேரமும் பார்த்து வருவது அல்ல. தன் நிலை உணர்ந்துதான் வாழ்ந்திட வேண்டும் வாழ்க்கையை.

மனிதன் தன் நிலையில் தன் சுவாசத்தையும் எண்ணத்தையும் கெடுத்துக் கொள்வதால் தான்… ஆண்டவனாகும் நிலையை மாற்றி ஆவி உலகில் அல்லல் பட்டு… பல ஜென்மங்கள்… பல ஜீவராசிகளின் ஜென்மங்களைப் பெற்றுச் சுற்றிக் கொண்டே உள்ள நிலை வருகிறது.

அந்நிலையை நாம் ஏன் பெற வேண்டும்…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எதை எண்ணி ஏங்கி நீங்கள் வந்தீர்களோ அந்த ஏக்கத்திற்கொப்ப உயர்ந்த ஞானிகளின் அருள் உங்களுக்குள் படரும். துன்பத்தை விளைவிக்கும் நோயோ துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ அது எல்லாம் நீங்க வேண்டும் என்று தான் உங்களுக்கு நான் (ஞானகுரு) அருளாசி கொடுக்கின்றேன். அதே உணர்வுடன் நீங்கள் எண்ணி அதைப் பெற்றால் அந்த பலனைப் பெற முடியும்.

மாம்பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதை வாங்கக் கடைக்கு அந்த உணர்வு உங்களை அழைத்துச் செல்கிறது.

அதே போல்
1.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலுக்குள் படர வேண்டும்
2.எங்கள் உடல் நோய் மன நோய் நீங்க வேண்டும்
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
4.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
5.நான் கொடுக்கும் அந்த அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

அதை விட்டுவிட்டு சாமி…..! என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறதே… நீங்கள் தான் கடவுளாக இருக்கிறீர்கள்… என்று என் காலில் விழுந்தீர்கள் (அடிபணிந்தீர்கள்) என்றால்
1.உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்கள்
2.நான் உபதேசித்ததை வீணாக்குகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

பெரியவர் என்று எண்ணி சாமியை (ஞானகுரு) உயர்த்தி விட்டு உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள். உங்கள் உணர்வின் உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்தச் சக்தியைத் தாழ் பணியச் செய்யுங்கள்.
3.இது தான் ஆசீர்வாதம்…! எனக்குக் குருநாதர் காட்டிய நிலைகள் அது தான்.

மெய் ஒளியின் தன்மையை நமக்குள் கூட்டி நம் எண்ணம் சொல் செயல் அனைத்தையும் புனிதம் பெறச் செய்ய வேண்டும்.

ஒருவர் தீயதின் நிலைகளினால் துன்பப்படுகின்றார் என்றால் நம் சொல் அந்தத் தீயதிலிருந்து அவரை மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

இந்த இயற்கையின் தன்மை நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நிச்சயம் வேலை செய்யும்.

ஆகையினால் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்கள் பொறுமையும் பொறுப்பு கொண்டு “மற்றவர்களை முந்தி விட்டு நாம் முதலில் ஆசி பெற வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வராமல் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறுத்தி வாருங்கள்.

எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து…
1.மற்றவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அந்த அத்தனை ஆற்றலையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்தத் தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அவசரப்பட்டோ… வேகமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்றோ… அந்த வேக உணர்வில் இல்லாதபடி இந்த அருளைப் பெற வேண்டும் என்று இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த அருள் உணர்வைப் பெறும் தகுதியைக் கூட்டி எல்லோரும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணுவதே நல்லது.

ஏனென்றால்… பிறர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நாம் முதலில் நலமாகின்றோம்
3.அத்தகைய மெய் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நம் சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது.

நம் சொல்லைப் பிறர் கேட்டாலும் அவர்கள் உள்ளங்களிலும் மகிழச் செய்கிறது. அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர் நம்முடன் இணைந்து செயல்படும் தன்மையும்
1.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிப்படுத்துவதற்கும்
2.தடையின்றி வியாபாரம் நடத்துவதற்கும்… நம் காரியங்களை நடத்துவதற்கும்
3.தடையற்ற நிலையில் நாம் என்றுமே மகிழ்ச்சியுடன் வாழ உதவியாகிறது.

ஆகையினால் ஆசீர்வாதம் வாங்கும் போது இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குத் துன்பம் வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் நலமும் வளமும் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும். வியாபாரத்திலேயோ குடும்பத்திலேயோ நல்லதை எண்ணி எங்கே போனாலும் இந்த முறைப்படி செய்யுங்கள்.


“தன்னை அறிதல்” என்ற நிலைக்கே இதை உபதேசிக்கின்றேன்

 

முதலில் மனிதனாகும் பொழுது சமப்படுத்தும் எண்ணங்கள் தோன்றுகின்றது… பரசுராம்.

மனிதனான பின்… உண்மையின் உணர்வைத் தனக்குள் அறிந்து கொள்ளும் நிலையாக “பலராம்” பல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் நிலை வந்தது ஆகவே… பல எண்ணங்கள் உருப்பெறும் தன்மையும்… அறிந்திடும் நிலையும் வருகின்றது
1.பல தீமைகள் வந்தாலும் தீமைகளை அடக்கும் முறைகளைக் கற்றுக் கொள்கின்றான்… நரசிம்மா…!
2.தீமை என்று உணர்ந்த பின் அது தனக்குள் நுழையாதபடி தடுத்துக் கொள்ளும் நிலை மனிதனுக்கு வருகிறது.
3.அப்படி நரசிம்ம அவதாரமாகச் செயல்பட்டவர்கள் இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருக்கின்றார்கள்.

நமது வாழ்க்கையில் தீமை வரும் நிலையில் அது நம் ஆன்மாவாக மாறுகிறது. அதிலிருந்து சுவாசித்து உயிரிலே பட்டுத் தான் அந்த உணர்வுகள் நமக்குள் செயலாக்கங்களாகி… தீய அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்கின்றது.

அவ்வாறு விளைந்து விட்டால் ஜீவான்மாவிற்கும் அந்தத் தீமையின் நிலைகளை வளர்க்கத் தொடங்கி விடுகின்றது. ஜீவ ஆன்மாவில் வேதனைப்படும் உணர்வுகள் பெருகி அணுக்கள் பெருகத் தொடங்கி விட்டால் சாந்த அணுக்கள் கொண்ட இந்தச் சரீரமும் மாற்றமடைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடச் செய்வது தான் நரசிம்மா… விஷத்தை ஒடுக்கிடும் சக்தி…!

நம் பூமியிலே முதலிலே விஷத்தை ஒடுக்கக் கற்றுக் கொண்ட அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக இன்றும் ஒளியின் சரீரமாக இருக்கின்றான்.

அதனின்று வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்கிறது.
1.அதை நாம் கவர்ந்து அந்த உணர்வின் சத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அதை வளர்த்துக் கொண்டால் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்
3.துருவ மகரிஷியினைப் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்களுடன் நாமும் இணைந்து
4.அகண்ட பேரண்டத்தில் விளையும் விஷத்தை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றிடும் சக்தி பெறுகின்றோம்.

உதாரணமாக நாம் சாந்த குணத்துடன் இருக்கும் பொழுது ஒரு துன்பப்படுபவரைப் பார்த்து அதை நுகர நேர்ந்தால் நம் நல்ல அணுக்களுக்குள் இதுவும் ஊடுருவி “ஓ…” என்று இயங்கத் தொடங்கிவிடும்.
1.அது தான் ஓமுக்குள் ஓம் என்று இதை அடக்கி அது ஆட்சி புரியத் தொடங்கிவிடும்
2.பல கோடிச் சரீரங்களில் அடுக்கடுக்காக இப்படி ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் என்ற நிலைகள் கொண்டு
3.எல்லாவற்றையும் ஜீவ அணுவாக மாற்றிக் கடைசியிலே மனித உருவை உருவாக்கியது நமது உயிர்.

ஒளியின் சரீரமாக மாற்றும் வல்லமை பெற்ற அத்தகைய மனிதச் சரீரத்தை இப்போது அலட்சியப்படுத்தினால்… உயிரை மறந்தால்… நாம் மீண்டும் கீழான பிறவிக்கே செல்ல வேண்டி வரும்.

காரணம் உயிர் தான் ஈசனாக இருந்து இயக்குகின்றது. ஓ என்று ஜீவ அணுவாக இயக்கியது. நாம் எண்ணியது அனைத்தும் கடவுளாக நிலை நிறுத்தி அதன் வழியே நம்மை வளர்க்கின்றது.

நம்முடைய எண்ணமே நின்று உள் நின்று அது அணுவாக இயங்கத் தொடங்கி விட்டால் அதே உணர்வின் எண்ணங்களையே அது இயக்குகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சீதா… அந்த உணர்வின் சத்து அணுக்களாக மாறுகின்றது. அந்த உணர்வின் எண்ணங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை இயக்கத் தொடங்குகின்றது.

1.”தன்னை அறிதல்” என்ற நிலைக்கே இதை உபதேசிக்கின்றேன்.
2.இது எல்லாம் உங்களுக்குப் புரிந்தாலும் சரி அல்லது புரியா விட்டாலும் சரி… பதிவாக்கிக் கொண்டால்
3.சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டு உங்களைத் தாக்கும் உணர்வுகளிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி
4.உங்களைக் காக்க வல்லமை பெறும் அந்த ஆற்றலாகத் தான் உங்களுக்குள் இதை எல்லாம் பதிவாக்குகின்றேன்.

அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த எண்ணம் (உங்கள் எண்ணம்) உங்களைக் காக்கும்.

ஆண்டவனைப் பற்றி முழுமையாக அறிந்திட “அந்த ஆண்டவனால் தான் முடியும்”

 

கோவில் என்ற புண்ணிய ஸ்தலத்தை அரசனும் சென்று வணங்கினான்… ஆண்டியும் சென்று வணங்கினான்.

கோவில் என்னும் இடத்தைப் புனிதம் ஆக்கி… அந்த நிலை கொண்டு மனிதர்களின் எண்ணம் எல்லாம் ஒரே பக்தி நிலையாக… ஆண்டவன் என்ற அவ்வாண்டவனைத் துதிப்பதற்கு ஒரே நிலை கொண்டு செல்வதற்காக… அன்று சித்தர்களால் மனிதர்கள் நிலைக்கெல்லாம் புரிவதற்காக அமைத்து வைத்த புண்ணிய ஸ்தலங்கள் தான்… இன்று இந்நாட்டில “நாம் வாழும் நாட்டில் அமைந்துள்ள பல கோவில்கள்…”

கோவில் என்னும் இடத்திற்குச் செல்ல செல்வந்தன் செல்வம் இல்லாதவன் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரும் ஒரே பக்தி நிலை கொண்டு வணங்குவதற்காகத் தான் பல சித்தர்கள் அக்கோவிலில் உருவ வழிபாடு வைத்துள்ளார்கள்.
1.நமக்கு மேல் ஒருவன் உள்ளான் அவன் நம்மைப் பார்த்துக் கொள்வான் என்று பல நிலைகளை மக்களுக்கு உணர்த்துவதற்காக
2.தன் நிலையில் பெரும் தவமிருந்து அச்சக்தியிலிருந்து சகல அருளையும் தான் பெற்று
3.கோவில் உள்ள இடத்தில் தானே கோவில் கொண்டு வரும் பக்தர்களின் எண்ணத்தை எல்லாம் தன் நிலையில் ஈர்த்து
4.அவரவர்கள் வேண்டும் நிலைக்கு உகந்த செயல்களை எல்லாம் செய்வது
5.அச்சகல அருள் பெற்ற மகரிஷிகளும் சப்தரிஷிகளும் ஞான ரிஷிகளும் தான்.

இந்த நாட்டில் தோன்றிய ரிஷிகளும் ஞானிகளும் அவர்கள் கோவில் கொண்ட இடத்திலேயே இன்றும் அமர்ந்து… அழியா உடலும் அழியா ஆத்மாவும் பெற்றுச் செய்யும் செயலினால் தான்… இத்தேசத்தில் இன்று மக்களின் மனதில் “ஒரு ஒற்றுமை நிலையும் தவறுக்குப் பயப்படும் நிலையும் இருந்து வருகின்றது…”

அக்கோவில் இல்லாத நிலையும் ஆண்டவன் இல்லாத நிலையும் இருந்திருந்தால் இன்றுள்ளளவும் பக்தியும் இன்று உள்ளளவும் நியாயமும் இருப்பதற்கு வழியில்லாமல் தான் நாமெல்லாம் இருந்திருப்போம்.

1.”நாம் செய்த பாக்கியம்” அன்று தோன்றிய நம்முடனே கலந்துள்ள நம்மையெல்லாம் காக்கும் தெய்வங்களாக
2.இன்றும் தெய்வத்தின் தெய்வமாக நம் ரிஷிகள் தாம் கலந்துள்ளனர்.

நம்மில் நாமே ஆண்டவனாக உள்ள பொழுது நமக்கு உயர்ந்தவர் நமக்குத் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு ஏற்படுத்தி ஏன் பார்க்க வேண்டும்…? என்று எண்ணம் கொள்ளலாம்.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் பொருளினாலேயோ… ஜாதி மத வேறுபாட்டினாலேயோ வருவதல்ல.

நமக்கு மேல் உயர்ந்த எண்ணம் கொண்டு அவ்வீஸ்வரனின் சக்தியைப் பெற்று சகல நிலைக்கும் நம்முள் கலந்துள்ள நாம் எண்ணும் நிலைக்கெல்லாம் நம்முள் வந்து நமக்கு அருள் புரியும் நமக்கும் உயர்ந்த ஞானம் பெற்ற “அத்தேவர்களை வணங்குவது தான்” நம் ஆத்மாவிற்கு நாம் சாந்தி பெறும் நிலையாக இன்றுள்ளது.

ஆண்டவனின் ரூபத்தையும் ஆண்டவனின் நிலையையும் அறிந்து சொல்லவோ உருவம் பார்த்து உணர்ந்து சொல்லவோ யாராலும் முடிந்திடாது.

யாராலும் என்பது…
1.ஆண்டவன் என்பவன் எங்கிருக்கிறான்…? அச்சக்தியின் ரூபமென்ன…? சிவனின் ரூபம் என்ன…? என்று கண்டறிய
2.இன்று ஆண்டவன் என்ற ரூபம் கொண்டு நாம் வணங்கிடும் நமக்கு ரூபம் அளித்து இன்று பல நிலைகளை நமக்கு உணர்த்தி
3.நம்முள் எல்லாம் கலந்து சூட்சும நிலை கொண்டு வாழும் பல பெரியோர்களைக் கேட்டாலும்
4.எந்த ரிஷித் தன்மை பெற்றவர்களானாலும் எந்த ஞான நிலை பெற்றவரினாலும்
5.ஆண்டவன் என்ற ரூபத்தைக் கண்டறிய முடியாது… கேட்டறிய முடியாது.
6.சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவன் என்பவனை அறிந்து காண “அவ்வாண்டவனால் தான் முடிந்திடும்…”

சக்தியின் அருள் பெற்று ஜீவ உடலுடன் வாழ்ந்திடும் எல்லோருமே… தன் நிலையில் அவரவர்கள் ஏற்கும் நிலை கொண்டு… அவரவர்களும் தன் நிலையை உயர்த்திக் கொள்ள உணர்ந்து கொள்ள… இவ் ஆத்மாவை அழியா நிலை கொண்டு
1.சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலையைத் தான் பெற முடியுமே தவிர
2.ஆண்டவன் என்ற ரூபத்தையும் ஆண்டவனின் சொல்லையோ பார்த்தறிந்தவர் யார் உள்ளார்…?

ஆண்டவன் என்பவருக்கு ரூபமே இல்லை… இல்லை… இல்லை… என்று சொல்வதற்கும் நம் சக்தியில் பொருள் இல்லை. நம் எண்ணம் கொண்டு தான் நம் சுவாச நிலையின் அருளினால்… நாம் உயர்ந்து வாழ்ந்திட முடியும்.

நம் எண்ணத்திற்குத் தகுந்த சக்தியை ஈர்த்து எடுக்கத்தான் இப்பாட நிலைகளும் இவ்வாண்டவன் என்ற வழிபாடுகளும். எண்ணும்
1.எண்ணத்திற்கு உகந்த நிலையில் உள்ளவன் அவ்வாண்டவன்.
2.அச்சக்தி நிலையை ஈர்த்து நல்வாழ்க்கை வாழ்ந்து சகல அருளையும் பெற்றிடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் இங்கே வந்திருப்பீர்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும்… பிள்ளை சொன்னபடி கேட்காதிருக்கும்… நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… உதவி செய்தும் கஷ்டமாக இருந்திருக்கும்… தொழிலில் நஷ்டம் இருந்திருக்கும்… வியாபாரத்தில் மந்தமாக இருக்கும்… இப்படி எத்தனையோ சிக்கல் இருக்கும்.

இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்தந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்கு உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான்
3.அருள் உபதேசத்தைக் கொடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் ஊடுருவச் செய்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).

உங்கள் உடலில் உள்ள எல்லாக் குணங்களிலும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் ஈர்க்கும்படித் தூண்டி… இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து… எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெறச் செய்கிறோம்.

உதாரணமாக… குழம்பிலே புளிப்பு உப்பு காரம் துவர்ப்பு எல்லாம் போட்டு ஒரு ருசியாக எப்படிக் கொண்டு வருகின்றோமோ இதே போல் எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

ஞானிகளைப் பற்றி உபதேசித்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்யும்போது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது.

அப்படிக் கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளில் படும்படி செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் குணங்களுக்குள் இது ஆழமாக ஊடுருவச் செய்து “1008 குணங்களிலும்…” பதியச் செய்கின்றோம்.

1.ஏனென்றால் எனக்கு குருநாதர் எப்படி இராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ
2.அதைப் போல் தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி… உணர்வின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.உங்களுக்குள் துன்பத்தை ஊட்டி கொண்டிருக்கும் வேதனைகள் நீங்குவதற்கு இதைச் செய்கிறோம்.

அந்த உணர்வின் தொடரை நீங்கள் மீண்டும் இதே போல் எண்ணி எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைப் பெற முடியும். உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

1.குருநாதர் எனக்குத் துன்பத்தைக் கொடுத்து அந்த ஆற்றலைத் தெரிய வைத்தார்.
2.உங்களுக்குத் துன்பம் வரப்போகும் போது இந்த முறையைக் கையாண்டால் அதனின் இயக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
3.தியானத்தில் இந்தச் சக்தியை எடுத்ததால் இந்தத் துன்பம் போனது…! என்று நீங்கள் அறியலாம்.

ஆக… கஷ்டம் இல்லாமல் நீங்கள் பெறுகின்றீர்கள். “சாமி இலேசாகச் சொல்கிறார்…” என்று அலட்சியமாக இதை விட்டுவிடாதீர்கள். காரணம்…
1.வாக்கினால் யாம் சொல்லும் போது
2.இதை எண்ணி எடுப்பவர்களுக்குச் சீக்கிரம் நல்லதாகிறது.

நீ உருப்படுவாயா…? என்று ஒருவர் நம்மைச் சொன்னால் நீ அப்படியா சொல்கிறாய்… என்று அதே வார்த்தையை நாம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகிறது…!

நம் வியாபாரத்தில் மந்தம்… கை கால் குடைச்சல்… தலை வலி,,, மேல் வலி என்று உங்களை இப்படிக் கீழே கொண்டு போகிறது.

அதே போல் துன்பத்தைத் துடைப்பதற்குச் “சாமி சொன்னாரே…” என்று நினைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தீர்கள் என்றால் இந்தக் காற்றிலிருந்து வரும் அந்தச் சக்தி உதவி செய்யும்.

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் சேர வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கும் போது…
1.சில நேரங்களில் விண்…விண்.. என்று
2.உங்கள் நெற்றியிலோ உடலிலோ இந்த உணர்வுகள் ஏற்படும்.
3.எம்முடைய வாக்கினைப் பதிவு செய்தவர்களுக்கு நிச்சயம் இந்த உள் உணர்வுகள் வரும்.

உங்கள் உடலில் இருக்கும் துன்பங்கள் நீங்க வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை. உங்கள் உயிரான ஈசனைத் தான் நான் பிரார்த்தனை செய்கிறேன். உயிர் தான் இந்த உடலை உருவாக்கிய ஆற்றல்மிக்க சக்தி.

AUGUST – 2024 உபதேசம்

ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்.. ஓமுக்குள் ஓம் என்றால் பொருள் என்ன…?

 

உதாரணமாக மிளகாயை அரைத்து சப் என்று இருக்கும் மாவிற்குள் இணைத்து விட்டோம் என்றால் மாவின் சுவை காரமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான்
1.ஒரு புலி மானின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்த சாந்த உணர்வுகள் இதற்குள் அடங்கி விடுகின்றது.
2.ஆனால் சாந்த குணம் கொண்ட மானோ புலியின் உணர்வை நுகரப்படும் பொழுது
3.மானின் சாந்த உணர்வுகள் அந்தப் புலியின் கடுமையான கார குணத்திற்குள் ஒடுங்கி விடுகின்றது அதன் வழியே அது அடக்கம் ஆகின்றது.

அது தான் மூஷிக வாகனா…!

மானோ புல்லைப் பார்த்து அதன் மணத்தை நுகர்ந்து… அதனின் உணர்வு கொண்டு அதே மணம் இதற்கு வாகனமாக அமைந்து புல் இருக்கும் இடத்திற்கு இந்த உடலை நகர்த்திச் செல்கின்றது.

புலியோ கடினமான உணர்வு கொண்ட நிலையில் மானை நுகர்ந்த பின் மானின் சாந்த உணர்வு இதற்குள் ஒடுங்கினாலும்… மான் புலியை நுகரப்படும் பொழுது இதனுடைய கடுமை மானின் சாந்த உணர்வுக்குள் சேர்த்துக் கொண்ட பின் கணங்களுக்கு அதிபதியாகி அதை அடக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.

ஏனென்றால்
1.சாந்த உணர்வின் தன்மை அணுவாக “ஓ…” என்று இயக்கினாலும்
2.ஓமுக்குள் ஓம் – புலியின் உணர்வுகள் அது கடுமையாக்கப்படும் பொழுது சாந்த உணர்வுக்குள் நின்று
3.அதன் அணுவின் தன்மையை இது இயக்கி இதை அடக்கும் போர் முறை கொண்டு
4.இந்த அணுத் தன்மை அதற்குள் துடிப்பின் வேகத்தை அதிகமாகக் கூட்டுகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தவர்களை டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்தால் “துடிப்பு நிலையும்… கொதிப்பின் நிலையும்” அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்.

காரணம்… சாந்த குணங்கள் கொண்ட நாம் பிறரைக் கோபிக்கும் உணர்வு கொண்டு அவர்கள் செயல்படும் நிலையோ அல்லது நாம் செயல்படும் எண்ணத்தை சீராக அமைக்கவில்லை என்றால் எதிர்மறையாக தாக்கப்பட்டு விடுகிறது (ஒரு பொருளுடன் ஒரு பொருள் தாக்கப்படுவது போல்)

1.சாந்த உணர்வு கொண்டு மிருதுவான பொருள் மற்றொன்றுடன் மோதினால் அதனில் வேகத்தடிப்பு வருவதில்லை.
2.ஆனால் கடினமான பொருள் மற்றதுடன் தாக்கப்படும் பொழுது துடிப்பாகி வெப்பம் உருவாகின்றது

அதைப் போல் மனிதருக்குள் கடினமான உணர்வு மோதினால் அதனால் உணர்ச்சியின் வேகமும் (துடிப்பு வெப்பம்)… வலியும் வேதனையும் அதிகரிக்கிறது.
1.வேக உணர்வு கொண்டு தாக்கப்படும் பொழுது அந்த அணுக்களுக்குள் ஊடுருவி
2.அணுவின் தன்மை அடைந்து இதை அடக்கும் வல்லமை பெறுகின்றது.
3.அதாவது அந்த அணுவிற்குள் ஓமுக்குள் ஓமாக மாறி இதனை அது அடக்கிடும்… அதற்குள் இது அடங்கி இதனின் செயலாக்கத்தைக் குறைக்கின்றது.

“சாந்த குணமும் சாந்த எண்ணங்களும் அதை வளர்க்கும் தன்மை இழந்து” இந்தக் கோபமான (காரத்தின்) உணர்வை வளர்க்கப்படும் பொழுது… அதற்குள் நாம் பார்க்கும் மற்ற நல்ல குணத்தை எல்லாம் அடக்கிவிடும்.

1.ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்…! என்ற நிலைகளில்
2.இந்தக் கார உணர்வுகள் அதற்குள் ஒடுக்கி விடுகின்றது
3.நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

நல்ல மனத்தை உருவாக்காத நிலையினைக் கொண்டு வரப்படும் பொழுது மனிதனுக்கு “இரத்தக் கொதிப்பாக” வருகிறது.

ஆசைகளை நிறைவேற்றத் தான் ஆண்டவனை எண்ணுகின்றோம்… “அவனுடைய அருளைப் பெற” ஆசைப்படுகின்றோமா…?

 

இன்றுள்ள உலக நிலை அனைத்திலுமே
1.தன் புகழ் உயர வேண்டும்
2.புகழ் உயரச் செல்வம் வேண்டும்
3.செல்வம் சம்பாதிக்க இவ்வுடல் எனும் கூடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற
4.ஆசை நிலைக்காகத் தான் அநேகம் பேர் பல வழிகளில் ஆண்டவனை வணங்குவதுவே.

ஆண்டவனிடம் தன் ஆசைக்கும் தன் புகழுக்கும் வேண்டக்கூடாது என்பவர்களை எல்லாம் இன்றைய உலகம் “பெரும் பைத்தியமாக” எண்ணுகின்றது.

ஆண்டவன் எங்குள்ளான்…? என்ற கேள்விக்கும் இன்றைய உலகில் அறிந்து பார்க்கும் தன்மை இல்லையப்பா. ஆண்டவனிடம் வேண்டிக் கேட்காவிட்டால் இவ் உடலுக்கு ஆகாரம் வேண்டியதில்லையா…?

ஆண்டவன் தான் பசி என்ற பெரும் பசியை இவ் உடலுக்கு அளித்துள்ளானே. அப்பசியே அடக்க நாம் உண்டு வாழ்வதற்கு அவ்வாண்டவனை வேண்ட வேண்டாமா…? என்றெல்லாம் பல நிலைகளில் எண்ணுகிறார்கள்.
1.இவ்வெண்ணப் பசியை பேராசை கொண்ட பசியாக அலையவிட்டு
2.அதனால் வரும் பல இன்னல்களுக்கு நாம் அடிபணிகிறோம் என்பதை
3.நம் எண்ணப் பசியில் எண்ணிப் பார்த்தால் புரிந்துவிடும்.

இவ்வாத்ம பசியை யாரும் எண்ணுவதில்லை. இவ்வுடல் பசிக்குத் தான் இவ்வுலகமே இன்றுள்ளது இவ்வுடல் பசியினால் தான் வரும் நிலைகள் எல்லாமே நமக்கு நடப்பவை.

இவ் உடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவும் பிற நிலைகளும் நம் ஆத்மாவிற்கு எந்த நிலையில் ஏற்கிறது…? என்று எண்ணி இவ்வுடல் என்னும் பசியை “மனம் எனும் பசியால்” அடக்கி ஆண்டிட முடியுமப்பா.

இவ்வுலகில் உதித்த எல்லோருமே ரிஷிகளைப் போலவும் ஞானிகளைப் போலவும் இவ் உடலுக்கு உணவு உண்ணாமல்… உடல் பசியை அடக்கி ஆளுங்கள் என்று சொல்லவில்லையப்பா.

என் வழியில் இயற்கையில் நம் உடலின் தன்மையைத்தான் நம் உடல் எந்தெந்த நிலையை ஏற்கிறது…? எந்த நிலையில் உண்டு வாழ்ந்திடலாம்…? என்பதுதான் எல்லோரும் அறிந்ததுவே.

அன்ன ஆகாரம் இல்லாமல் வாழ்ந்திடுங்கள். என்று சொல்லவில்லை.
1.இவ்வுடல் என்னும் கூட்டை
2.”எண்ணம் என்ற ஏவலனால்” எந்த நிலைக்கும் வைத்திருக்க முடியுமப்பா.

உண்ணும் உணவிலிருந்து இவ்வுடலுக்கு எப்படிப் பல நிலைகள் கிடைக்கின்றதோ அதே போலத்தான் அவ்வாத்மாவிற்கும் கிடைக்கின்றது.

நாம் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்ந்திடத் தான் வேண்டும் ஆனால் அந்நிலைக்காகப் பேராசை நிலை கொண்டு “தன் தேவைக்கு மேல் சேமித்து வைப்பவன் ஒவ்வொருவனும்… தனக்குத்தானே எதிரியாகின்றான்…”

இன்று இவ்வுலகில் பெருகி உள்ள மக்கள் நிலையில் அன்பும் ஆதரவும் காட்டி வாழும் நிலைமை மறைந்து விட்டது. தன் உடல் பசி ஒன்றுதான் ஓங்கி நிற்கிறது.

நல்ல உபதேசங்களைக் கேட்பதும் நல்லோர் வழி சொல்வதும் நம் ஆத்மாவிற்குச் செய்யும் நற்பணிகளை நாம் இன்று ஏற்று நடக்கவில்லை. நம் எண்ணங்கள் எல்லாம் இவ்வுடல் என்னும் பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆண்டவனை எண்ணுவதாகவே உள்ளது.

தன் எண்ணமும் செயலும் அமைதி கொண்டு தன் ஆத்மாவை அடக்கி ஆள்பவனுக்கு தன் நிலையில் பதட்டத்தை வளர விடாமல்… தான் என்ற எண்ணம் கொள்ளாமல்… நல்லுணர்வுடன் நம் வாழ்க்கையை நாம் அமைதியுடனும் அன்புடனும் நடத்திச் செல்லும் மனப்பக்குவம் பெற்று… நாம் வாழத்தான் “இன்று நாம் செய்யும் ஜெபமும் தியானமும் இவ்வுபதேசச் சொற்களும்…”

1.இவ் உடல் வேறு என் ஆத்மா வேறு
2.இவ்வுடலில் இவ்வாத்மா தங்கி இருப்பதுவே நாம் பெற்ற பாக்கியமாகக் கொண்டு
3.இவ்வுலக நிலையில் இவ்வியற்கையில் கலந்துள்ள உண்மைகளை அறிந்தே மகரிஷிகளின் சக்தி பெற்று வாழ்ந்திட வேண்டும்.

அச்சத்தி நிலை ஒரே நிலையில் தான் உள்ளது. நாம் எந்த நிலை கொண்டு ஏற்கின்றோமோ அந்த நிலைக்குத்தான் அச்சத்தி நிலை நம்முடன் வரும்.

இன்று வீசும் இக்காற்றையே நாம் எண்ணிப் பார்த்தால் நம் நிலைக்கு எல்லாம் விளங்கும்.
1.கொதிக்க வைத்த தண்ணீரை ஆற்றுவதும் இக்காற்றுதான்
2.அனல் கொண்டு எரியும் விறகை எரிய விடுவதும் அக்காற்று தான்.

ஒரே நிலை கொண்டு வீசும் காற்று தான் இவ்வனலையும் எரிக்க உதவுகின்றது. கொதிக்கும் நீரையும் குளிர வைக்கின்றது அச்சக்தி நிலையும் நம் நிலைக்கு அப்படித்தான் வருகிறது.

1.எந்த நிலை கொண்டு நாம் எங்கு செல்கின்றோமோ அந்த நிலை கொண்டு தான் அச்சக்தி நமக்கு உதவி புரிகின்றது
2.நம் எண்ணத்திற்கு உகந்தபடி தான் ஆண்டவனின் சக்தியையும் நாம் பெற முடியும்.

ஆனால் இவ்வுலகமே இவ் எண்ணம் என்ற பசி நிலையைக் கொண்டு தான் இன்று சுற்றி வருகின்றது

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா என்று சொல்லும் போது பிரணவம்… நாம் எண்ணியதை உயிர் ஜீவன் பெறச் செய்கின்றது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும் அது எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள்.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருங்கள்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உணர்வு
2.அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியைப் பெறச் செய்யும்.

இந்நேரம் வரை உபதேசித்த அந்த ஆற்றல் மிக்க சக்தியை “நீங்கள் எண்ணும் போதெல்லாம் எண்ணியவுடனே அதைக் கிடைக்கச் செய்து…” உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் அனைத்தையும் தாழ் பணியச் செய்வதே “எமது ஆசி” (ஞானகுரு).

ஆகையினால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி” உயிரிடம் வேண்டித் தியானியுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.

எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்…! என்று இதே மாதிரி நான் சொன்னதை நீங்கள் எண்ணி எடுத்துப் பாருங்கள்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.அது தாள் பணிந்து… உங்களுக்குள் அது ஒத்துழைத்து… உயர்வான எண்ணங்களுக்கு வழி காட்டியாக அது அமையட்டும்.
2.எதுவும் கெட்டதல்ல… உங்களுக்கு அது வலுவூட்டும்… வழி காட்டியாகவும் அது இருக்கும்
3.கெட்டது என்று அது தான் காட்டுகின்றது… அதை நீக்கிவிட்டு நாம் செல்ல வேண்டும்.

கெட்டது என்று வழி காட்டினாலும் அந்த உணர்வின் தன்மை அது எனக்குள் சேர்ந்து விடுகிறது. ஆனால் வழி காட்டிய நிலைகள்
1.எனக்குள் பணிந்து அந்த நல் வழி காட்டியாக இருக்க வேண்டும்.
2.அந்த நல் வழி காட்டிய விஷம்… “என்னை ஆட்கொள்ளக் கூடாது…”

மெய் ஒளி பெறும் அந்தத் தகுதி கொண்டு நாம் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஆசி வாங்குவது. ஆகையினால் இதை மீண்டும் மீண்டும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

1.அரசனுக்குக் கீழ்படிதல் என்பது கௌரவத்திற்காகத் தான்…!
2.ஒரு பெரியவரைக் கண்டால் அடிபணிதல் வேறு.
3.ஆனால் நமக்குள் துன்பங்களைப் பணியச் செய்வது என்பது வேறு.

ஆகவே நாம் பணிய வைக்க வேண்டியது எதை…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

உயிரிலே பட்ட பின் “உணர்வின் ஒலிகள்” எப்படி எழும்புகிறது…?

 

உதாரணமாக ஒரு கடலைச் செடியில் விழுந்த உயிரணு அதனின் உணர்வின் சத்தை நுகர்ந்தால் அந்தச் சாந்த குணத்தின் அணுக்களாக உருவாகும்… மற்றொன்றைக் கொல்லும் தன்மை இழந்து விடுகின்றது.
1.அணு செல்களாக இருப்பதை ஜீவணுக்களாக இந்த உயிரணு மாற்றப்படும் பொழுது
2.அதனின் அணுவின் மலமாக புழுவின் உடலாக வளர்கின்றது
3.உணர்வின் எண்ணங்களாகத் தோற்றுவிக்கும் நிலை வருகின்றது.

இப்பொழுது மைக் இல்லாமல் நான் (ஞானகுரு) பேசினால் உங்களால் கேட்க முடியுமா…? சப்தம் வராது. மைக் ஆக “எது” அமைகின்றது…?

சூரியணிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் அதற்குள் (செடிக்குள்) வளர்கின்றது அதே வெப்பத்தையும் காந்தத்தையும் ஈர்த்து எந்த மணத்தின் தன்மை வருகின்றதோ செடிக்குள் வருகின்றது.

இந்தச் செடியின் மணம் (சத்து) வெளிவரப்படும் பொழுது
1.சூரியனுடைய காந்த சக்தி அதை எடுத்துக் கொண்டால் தான்
2.இதில் உள்ள விஷத்தின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டவும்
3.வெப்பம் அதனின் உணர்வின் மணத்தைக் கூட்டவும் அது செயல்படும்.

அப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு மைக்கிலே காந்தப் புலனறிவு இல்லை என்றால் ஓசை கேட்குமா…?
1.அந்த காந்த அலைகளின் தன்மைகள்
2.அந்த மேக்னட் இரும்பால் இருந்தாலும்
3.அதிர்வின் ஒலி அலைகளை எளிதாக மெதுவாக (ஒலிகளை வெளிக்கொண்டு வருவதற்காக) ஊட்டுவதற்காக
4.அந்த ஸ்பீக்கரில் காகிதத்தை வைப்பார்கள் அல்லது மெலிதான தகடை வைப்பார்கள்.
5.அந்த காந்தப் புலனை இழுத்து ஒலியின் ஓசையைத் தெளிவாக்குவதற்கு

இது விஞ்ஞான அறிவால் செயல்படும் நிலை.

இதைப் போன்றுதான் இயற்கையின் நியதிகளில் அது எடுத்து வைத்த பின்
1.இந்த உணர்வின் தன்மை (கடலையின் மணத்தை) உயிரணு நுகர்ந்தால் “ஓசையின்” உணர்வாக இயக்கத் தொடங்குகின்றது.
2.செடியாக இருந்தால் இந்த உணர்வின் தன்மைக்கொப்ப அந்த ரூபத்தை அமைக்கும் தன்மை வருகின்றது.
3.ஆனால் மணத்தின் தன்மை கொண்டு அது வெளிப்படும் தன்மை வருகின்றது.

இப்படிப் பல பல உணர்வின் சத்தை எது நுகர்ந்ததோ அதற்குத் தக்கவாறு அதனுடைய சுவைகளும் மாறும். ஆகவே அதனின் மணங்கள் வரும் போது
1.உயிரனங்கள் நுகரும் பொழுது எண்ணங்கள் சீதாராமா
2.அந்த எண்ணங்கள் தோன்றி அதனதன் தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.

இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக்கிப் பதிவாக்கிக் கொடுக்கின்றேன் குருநாதர் எனக்குள் எவ்வாறு பதிவாக்கினாரோ அதனின் உணர்வின் செயலாக்கங்களை அறியும் ஆற்றல் பெற்றேன்.

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில்… தீமை என்று உணர்ந்து அறிந்தாலும்
1.அதிலிருந்து விடுபடும் வல்லமையை அதை அடக்கும் வல்லமை கொண்ட அருள் மகரிஷிகள் உணர்வுகளை நுகர்கின்றேன்.
2.அது வளர தீமைகள் அதற்குள் அடங்குகின்றது

விஷம் என்பது வலுக் கொண்டது அந்த விஷத்தை அடக்கியவன் அருள் ஞானி. விஷத்தை ஒளியாக மாற்றிக் கொண்டவன் துருவ மகரிஷி

அவன் வழியைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவினை ஏழாவது நிலையாக உருப் பெற்று ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் வருகின்றார்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பமும் நிகழ்ந்த சந்தர்ப்பத்திற்கொப்ப உணர்வின் தன்மை வரப்படும் போது
1.பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி பெற்று மனிதனாக எப்படியெல்லாம் வந்தோம்…? என்ற நிலைகளை தெளிவாக்கி உள்ளார்கள் ஞானிகள்.
2.அதைத்தான் உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.

நமக்கு நல்லது செய்யப் “பல பெரியோர்கள் உள்ளனரப்பா…!”

 

இவ்வுலக வாழ்க்கையிலே நமக்கு எஞ்சி நிற்பது எதுவப்பா…? இவ்வுலகம் என்ற மாயையையே எண்ணி “மயங்கி வாழும் வாழ்க்கை தான் வாழ்கின்றோம்…”

1.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா…? சொத்தும் சுகமும் ஆளுவது யாரப்பா…?
2.இவ்வுலகில் பிறந்தால் நிலைத்திருப்பது பொருளல்ல. நாம் விட்டுச் செல்லும் நம்முடைய மக்கள் தான் (குழந்தைகள்) என்ற எண்ணம் பலருக்குண்டு.
3.நம் பெயர் சொல்ல மக்களின் நிலை எத்தனை காலங்களுக்கு…?
4.அக்குழந்தைக்குக் குழந்தை என்று இப்படி சுற்றிக் கொண்டு வரும் நிலையினிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்…?

“பிறவிப் பயன்… பிறவிப் பயன்…” என்பதைப் புரிந்து வாழ எண்ணிடாமல் இப்புவியில் பிறந்த நாம் எல்லாம் புரிந்து நாம் வாழும் நாட்கள் எங்குள்ளது…? என்று புரிந்து வாழ்ந்திட வேண்டும்.

பூமியில் தோன்றிய “பல புண்ணியவான்கள்”
1.இன்றும் அவர்களுடைய பெயர்கள் நிலைத்திருக்க வாழும் நிலையை
2.நாமும் புரிந்து வாழ்ந்திட வேண்டும்.

இச் சுவாச நிலையில் இருந்து நாம் பெறும் பாக்கியங்களை நாம் பெறும் செல்வங்களை அழியாப் பொக்கிஷமான அச்செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திடப் “பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றார்கள் பல சித்தர்கள்…”

ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல சித்து நிலைகளைப் பெற்று இன்றும் நிலைத்திருக்கவில்லையா…? அவர்கள் பிறந்த பூமியில் பிறந்த நாம் நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றார்கள்.
1.அன்று சித்து பெற்றவர்கள் இவ்வுடலை ஒரு கூடாக வைத்துத் தான்
2.தன் ஆன்மாவை உலகமெங்கும் இம்மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.

இந்நிலையில் வந்தவர் தான் பைரவர் என்னும் ராஜாவும். அவ் அரசர் தான் ஆளும் காலத்தில் தன் உடலை ஒரு கூடாக இருக்கும் நிலையை… தன் சித்து நிலையில் பெற்று அந்நிலையிலேயே பல உடல்களுக்குத் தன் ஆத்மாவைச் செலுத்தி அந்நிலை கொண்டு பல நன்மைகளைத் தன் நாட்டு மக்களுக்காகச் செய்து வந்தார்.

அந்த நிலை கொண்டு அவர் செய்த சித்து நிலை தான் அவர் உடலில் இருந்த ஆத்மா ஒரு நாயின் நிலைக்குச் சென்று அந்நாட்டைக் காவல் காக்கும் நிலையில் செயல்பட்டார்.

இருந்தாலும் அவர் இருந்த நிலையை அறிந்து அவர் உடல் என்னும் கூட்டை அன்று நயவஞ்சகம் படைத்தவர்கள் அழித்த நிலை கொண்டே நாயின் உருவிற்கு ஆத்மா வந்த அப்பைரவ மகாராஜா… இன்றும் அந்நிலை கொண்டே தன் ஆத்மாவை அழியா நிலை பெற்றுப் பிற ஜென்மம் எடுத்திடாமல் “சூட்சும உலகம் சென்று இன்றும் நிலைத்துள்ளாரப்பா…”

அவ் உடல் என்னும் மாயக் கூடு மறைந்தாலும் அவ்உயிர் ஆத்மாவைப் பிற ஜென்மம் எடுத்திடாத நிலை கொண்டு இன்றும் உலகினிலே பல உருவில் வந்து பல நிலையில் மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வருகின்றார்.

நாம் இவ்வுலகினில் கலந்துள்ள பல சித்தர்களின் நிலையை அறிந்து… நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்துதவி… நம் எண்ணத்திற்கும் செயலுக்கும் நல்லணுவாக “நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் பல பெரியோர்கள் உள்ள பொழுது” நம் எண்ணமும் செயலும் பல ஆசை நிலை கொண்ட சுகபோகங்களுக்குத்தான் அடிமைப்பட்டு வாழும் நிலையில் உள்ளது இன்று இவ்வுலகமே.

1.அன்பென்னும் ஆசை வேண்டும்
2.அழியாச் செல்வமான இவ்வாத்மாவை அழித்தே நாம் வாழ்ந்திடாமல்
3.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி அடிபணிந்து வாழ்வதற்கு
4.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தியைக் கொண்டு
5.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே நம் வாழ்க்கை.

ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்… அன்புடன் வாழ்ந்திடுங்கள்… ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாராவது கடுமையாக உங்களிடம் பேசிக் கொண்டே இருந்தால் வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம்.

“உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். திட்டிக் கொண்டே இருந்தால் ஆமாம்… ஆமாம்… என்று சொல்லுங்கள்.

ஒரு சிலர் ரொம்பவும் வசனம் பேசிக் கொண்டே இருப்பார்கள்… மோசமான பேச்சுகளையும்… வாயிலே வராத வார்த்தைகளை எல்லாமும் பேசுவார்கள். அவர்கள் சொல்லச் சொல்ல…
ஆமாம்…
ஆமாம்…
சரி…
ஆமாம்..
சரி…! என்றே சொல்லுங்கள்.

உனக்கு அறிவு இருக்கிறதா… கண் இருக்கிறதா..? மூளை இருக்கிறதா…! என்று என்னென்னமோ பேசுவார்கள்.

அது அத்தனையும் நீயே வைத்துக் கொள்… கண் மூக்கு எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… “போ……!” என்று சொல்லிவிடுங்கள்.

மயக்கப்பட்டு அப்படியே சொத்… என்று கீழே விழுவார்கள்.

நீங்கள் அவர்களைத் திட்டவே வேண்டாம்.
1.எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
2.எனக்கு வேண்டாம்… நீங்களே அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லிவிடுங்கள்.

அவர்கள் பேசுவதைக் கேட்டு நீங்கள் வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் உடலில் உள்ள ஆவி இந்த மாதிரி வேலை செய்யும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் “ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருந்து விட்டு…” எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…! என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவி அப்படியே மயக்கப்பட்டுக் கீழே விழுவதைப் பார்க்கலாம்.

இந்த வாக்கினைச் சொன்னவுடனே அது செயலிழக்கும். இப்படிச் சொல்லும் போது
1.அதற்கு நாம் ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று அர்த்தம்.
2.நாம் தீமை செய்யவில்லை… (சாபம் இடவில்லை)

நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் அங்கே பட்டவுடன் அவர்கள் உடலில் அறியாமல் இருக்கக்கூடிய அந்த ஆவி சோர்வடைந்து கீழே விழுந்து எழுந்தால் அவர்கள் “சுய நினைவு” வரும். அப்பொழுது அவர்களை நாம் காக்கிறோம் என்று அர்த்தம்.

உங்களுக்கு இதை வாக்குடன் நான் (ஞானகுரு) சொல்லிக் கொடுக்கின்றேன்.

ஆனால் வழக்கமான நிலைகளில் “இப்படித் திட்டுகிறாரே… தாங்க முடியவில்லை… பொறுக்க முடியவில்லை…!” என்றால் அவர்கள் எண்ணத்தைத் தான் உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஏனென்றால் விஷம் எதிலே வேண்டுமென்றாலும் ஊடுருவிச் செல்லும். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே அதிகமாகத் திட்டுகிறார்கள் என்றால்
1.“நீயே அதை வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே
2.அந்த உடலில் இருக்கும் ஆவிக்கு இது பலவீனமாகும்… மயக்கமாகும்.

ஆனால் இவர்களுடைய நல்ல சிந்தனை நினைவுக்கு வரும். அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்களையும் காக்கின்றோம்.

ஆனால் இந்த வாக்கின் தன்மை அங்கே இயக்கி அவர்கள் உடலில் வயிற்றால் போகும்… உண்மையை உணர்த்தும்.

இது நடந்த நிகழ்ச்சி. என்னுடைய (ஞானகுரு) பெரிய பிள்ளையை மைசூரிலே கட்டிக் கொடுத்திருந்தது. மாப்பிள்ளையின் தம்பியை வேறொரு இடத்தில் கல்யாணம் செய்திருந்தார்கள்.

அந்தக் குடும்பம் கொஞ்சம் போக்கிரித்தனமாக ரௌடித்தனம் செய்யக் கூடியவர்கள். யார்… என்ன… ஏது…? என்று ஒரு முறை இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள்.

என் பிள்ளையை ரொம்பவும் விரட்டிக் கொண்டே இருந்தார்கள். வாயிலே வராத வார்த்தையைப் பேசித் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

மாமனாரை ஏமாற்றிச் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டாய்…! என்று எது ஏதோ சொல்லிப் பேசினார்கள். ஆனால் இவர்களோ கஷ்டப்பட்டுச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதை எல்லாம் கேட்டுத் தாங்காதபடி என் பிள்ளை என்னிடம் “ஓ…” என்று அழுது கொண்டு வந்து இந்த விஷயங்களை எல்லாம் சொன்னது.

பின் நான் மேலே சொன்னபடி சொல்லி “இந்த மாதிரிச் சொல்லம்மா…” என்று அனுப்பினேன்.
1.திட்டுவதை எல்லாம் உம்… கொடுத்துக் கேள்… சந்தோஷமாகக் கேள்…
2.கடைசியில் இப்பொழுது சொன்னதை எல்லாம் நீயே வைத்துக் கொள் என்று சொல்லிவிடம்மா…! என்று சொன்னேன்.

அதே மாதிரி இங்கிருந்து போனவுடனே நீ நாசமாகப் போவாய்… உனக்குப் பேதியாகும்… நீ அப்படிப் போவாய்… இப்படிப் போவாய்… என்று அங்கே அந்த அம்மா (மாமியார்) திட்டிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள்.

என் பிள்ளை அவர்கள் திட்டத் திட்ட சிரித்துக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…! என்று சொல்லிவிட்டதும் அங்கே தாங்காது பேதியாகி விட்டது. உடல் எல்லாம் வலி ஆகியது. எழுந்திரிக்க முடியவில்லை.

ஆஸ்பத்திரிக்குச் சென்று எல்லாம் ஆனதும்… “கொஞ்சம் விபூதி இருந்தால் கொடு…” என்று அந்த அம்மா என் பிள்ளையிடம் கேட்கிறது.
1.நான் சொன்னதை நானே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னதும் எனக்கு இப்படி ஆகிவிட்டது
2.இனிமேல் நான் யாரையும் இந்த மாதிரித் திட்ட மாட்டேன்… தப்பாகப் பேச மாட்டேன்…! என்று சொன்னது.

பிறகு என்னிடமும் தேடி வந்தார்கள். உங்கள் பிள்ளையை எல்லாப் பேச்சும் பேசினேன். நான் எதை எல்லாம் சொல்லி அவர்களைத் திட்டினேனோ அது எனக்கே வந்து விட்டது. நீங்கள் விபூதி கொடுங்கள்… எனக்கு ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று கேட்டார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி நல்ல வாக்கினைக் கொடுத்தால்… அங்கே நன்மை ஏற்படும். அவர்களும் உண்மையை அறியும் தன்மை வரும்.

“பேசியது அனைத்தையும் நீயே வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே
1.அந்த உணர்வுகள் எல்லாம் அவர்களுக்குள்ளேயே சுழன்று
2.தானே அதை அறியப்படும் போது குற்றத்தை உணர்ந்து கொள்வார்கள்.

இதன்படி நடந்தால் யாம் கொடுக்கும் இந்த உயர்ந்த வாக்கின் வன்மை உங்களுக்குள் கூடுகிறது. அதே சமயத்தில் மற்றவர்களும் அறியாமையிலிருந்து விடுபட இது உதவுகிறது.

“பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்

 

அருள் ஞானிகள் உணர்வைப் பருகுவதற்குத் தான் ஆலயங்களில் விநாயகரை வைத்துக் காட்டினார்கள்.

உடலில் பட்ட அழுக்கினைத் துடைக்க நீரை ஊற்றிக் குளிக்கின்றோம். அதே சமயத்தில்
1.ஆன்மாவிலே பட்ட அழுக்கினைத் துடைப்பதற்கு “விண்ணை நோக்கி ஏகி”
2.உயர்ந்த சக்திகளை எடுக்கப் பழக்கினான் அன்று ஞானி.

அதற்குப்பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று “எந்த நேரம் நினைத்தாலும்” அந்தச் சக்திகள் கிடைக்கின்றது.

ஆலயத்தில் தீப ஆராதனை காட்டப்படும் பொழுதெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற நாங்கள் வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள். அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி அந்தச் சிலையை உற்றுப் பாருங்கள்.

அந்தச் சிலையில் காட்டப்பட்ட குணங்களை… காவியங்களாகத் தீட்டிய அந்த நற்குணங்கள் நாங்கள் பெற வேண்டும்… இதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எங்குங்கள்.

தெய்வத்தின் மேல் போட்டிருக்கும் மலரின் மணம் நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் அந்த முழுவதும் நறுமணங்கள் படர வேண்டும். என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த நறுமணங்கள் படர்ந்து அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும்.

கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும். என் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெற வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் எல்லாம் தெய்வ நிலைகள் பெற வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் அங்கே ஒற்றுமை ஏற்பட வேண்டும் அவர்கள் தொழில் வளர வேண்டும் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.
1.பிறரை நாம் வாழ வைக்க இவ்வாறு எண்ணும் பொழுது
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் வாழ்கின்றன.
3.அப்போது தீமையை அறிவிக்கும் உணர்வுகள் ஒடுங்குகின்றது… அந்தத் தீமையை அறிந்ததோடு அதை நிறுத்திடல் வேண்டும்.

ஆக “பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்.

குழம்பு வைக்கப்படும் பொழுது காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு என்று பல நிலைகளை சேர்த்துத் தான் அதைச் சுவை மிக்கதாக உருவாக்கி உட்கொண்டு மகிழ்கின்றோம்.

இதைப் போன்றே மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். இது தான் ஆலயம்… நம் உடலே ஆலயம்.

நமக்குள் இருக்கும் நன்மை செய்விக்கும் நற்குணங்கள்… காலத்தால் நல்லதைக் காப்பதற்காக நாம் கேட்டறிந்த உணர்வால் தீமைகள் பல சேர்ந்து
1.நல்ல தெய்வமாக இருந்த நிலைகளை மாறுபடச் செய்யாது
2.நல்ல குணங்கள் இருண்டு விடாது… நஞ்சுக்குள் சிக்காது அதைத் துடைக்கும் மார்க்கமாகத்தான் ஆலயங்களிலே காட்டப்பட்டது.

நம் உடலை ஆலயமாக்கி
1.அந்த ஆலயத்திற்குள் ஈசனாக இருந்து உயிர் இயக்கும் நிலைகளையும்
2.எண்ணியதைப் பிரம்மமாக உயிர் படைத்துக் கொண்டிருப்பதையும்
3.அதைச் சிவமாக உருவாக்கி சிவத்திற்குள் சக்தியாக நம்மை இயக்கிக் கொண்டிருப்பதையும்
4.நம் உயிரை நாம் மதித்து நடக்க வேண்டும்.

காரணம்… நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உயிரே. நாம் எண்ணியதை இயக்கும் ஈசனாக இருப்பதும் உயிரே.

தீமைகளைக் கேட்டறிந்தால் தீமைகள் நுகரா வண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து தீமைகளை அப்புறப்படுத்திப் பழக வேண்டும். அதற்குத்தான் ஆலயம்.
1.ஆலயத்திற்குச் சென்றால் “பிறர் வாழ வேண்டும்” என்று எண்ணுங்கள்.
2.கீதையிலே இதைத்தான் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைக் காட்டினார்கள்.

ஞானிகள் உணர்வுகள் அனைத்தும் நமக்கு முன் இங்கே படர்ந்துள்ளது அவர்கள் சொன்ன முறைப்படி நாம் சென்றால் அவர்கள் வாழும் எல்லையை அடைகின்றோம்.

ஈஸ்வரபட்டரின் அருள் வாக்குகள்

 

அகத்தினை அன்பு கொண்டால்
ஜெகத்தினை வென்று வாழ்ந்திடலாம்

தங்க வந்த கூட்டினில்
தரணி ஆண்ட வாழ்க்கையில்
தரணிதனில் நிலைத்திட
தவமிருந்தே வாழ்ந்திடுவோம்

ஆண்டவன் என்ற ஆத்மாவை
அடக்கி ஆளப் பார்க்காமல்
ஆத்ம லிங்க தேவனை
அறிந்தே நாம் வாழ்ந்திடுவோம்

பகவான் படைத்த படைப்பே நாம்
பகவான் எங்கு உள்ளான் என்று
பகுத்தறியும் ஆற்றலைத் தான்
பகவான் அருளிலே பெற்றுள்ளோமே

உடல் அழுக்கைப் போக்கத் தண்ணீர்
உள்ள அழுக்கை போக்க எந்நீர்…?

திருமானின் எண்ணத்தை எண்ணுவீர்
திருநீறு அணிந்தே

ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாக
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்

நம்மை ஈன்றவர்… படைத்தவர் யார்…?
நம் முற்பிறவி… இப்பிறவி… மறுபிறவியில் யார்…?
நம்மில் பலரும் உள்ள பொழுது
நான் என்பது யார்…?

ஒன்றில்லாமல் ஒன்றில்லை
ஒன்றில் இருந்து ஒன்றாக
ஓங்கி நிற்கும் சக்தியிலே
ஒன்றியே நாம் வாழ்ந்திடுவோம்

பல ஆசை நிலைகளிலே
பல நிலை அடைவதற்கே
பயம் என்ற பேய்க்கு நாம்
பயந்து வாழ்வது எதற்காக…?

நிலையில்லா வாழ்வினிலே
நித்திய நிலை பெற்றிடவே
நிலையான அன்பைக் காட்டி
நிலை பெற்று வாழ்ந்திடுவோம்

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்
ஏற்றமும் தாழ்வும் அமைவதுவே

எண்ணும் எண்ணக் கூட்டினையே
எண்ணும் எண்ண வடிவினிலே
எண்ணப் பேயாய் அலையவிட்டும்
எண்ணத் தெய்வமாய் எண்ணுவதும் எண்ணமே தான்

வஞ்சனை என்ற உலகமென்று
வஞ்சனை என்று எண்ணிப் பார்த்தால்
வஞ்சனை வாழ்வே நமக்குக் கிட்டும்
வஞ்சம் கொண்டே வாழ்ந்திட்டால்…!

வாழ்க்கைப் பாதை வழியினிலே
வழியறிந்து செல்வதுவே
வழியனுப்பி வைத்தவனுக்கு
வழங்கிடும் வாழ்த்ததுவே

வண்டி என்ற கூடிருக்க
வரும் மழைக்குக் குடை எதற்கு
வழங்கியவன் அவன் இருக்க
வரும் வினையை எண்ணலாமோ…?

வல்லினம் மெல்லினம் கொண்டு பிறக்கவில்லை
வரும் வினைக்கு அஞ்சாதே…!

வரும் இடியும் மழையும்
வரும் காற்றும் மணமும்
வழங்கியவன் அவன்தானே

வழங்கியவன் அவனிருக்க
வரும் வினையை எண்ணலாமோ
வழியறிந்தே நீ வாழ்ந்திட்டால்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நல்ல நேரம் பார்த்துத் தான் நாம் செயல்பட வேண்டும் என்று ஜாதகரீதியாக நம்மைக் கட்டுப்படச் செய்து விட்டார்கள். அதன்படித்தான் இன்று பெரும்பகுதியானவர்கள் வாழ்கிறார்கள்.

ஜாதகங்களை நாம் பார்க்கப்படும் போது
1.அதிலே நல்லது எதுவுமே நடக்காது
2.ஆனால் அவர்கள் சொல்லும் கெட்டது அனைத்துமே நடக்கும்.

உதாரணமாக… பால் சத்தானதாக இருந்தாலும் அதிலே விஷம் பட்டுவிட்டால் அந்த விஷத்தின் தன்மை குடிப்போரை உடனடியாக மாய்த்துவிடும்.

ஜாதகத்தில் நல்லது இருந்தாலும்… எவ்வளவு சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டவராக நாம் இருந்தாலும்…
1.ஒரு வேதனை வந்துவிட்டால் நல்லதைச் சிந்திக்கும் செயல் இழந்து விடுகிறோம்…
2.அந்த வேதனையே நம்மை ஆட்கொண்டு விடுகிறது.

அது போல் தான்… ஜாதகத்தில் சில நிலைகள் கெடுதலைப் பற்றிச் சொல்லும் போது இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் வந்து கொண்டே இருக்கும். அந்த நல்லதும் கெட்டதும் கலந்து கொண்டே இருக்கும்.

நல்லதை அவர்கள் அதிகமாகச் சொல்லியிருந்தாலும்
1.ஒரு வக்கிரம் (புத்தி – திசை) வந்து உங்கள் நல்லதைச் செயல்படவிடாது தடுக்கின்றது
2.அது உங்களுக்குத் துன்பத்தை ஊட்டும் என்று சொல்வார்கள்.

இது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

எல்லாமே சரியாக இருக்கிறது. ஆனால் “ஏழரை நாட்டான் சனியன்” வந்து உங்களுக்குள் எல்லாவற்றையும் மடக்கிக் கொண்டிருக்கின்றான் என்று ஜாதகக்காரன் சொன்னால் போதும். “இந்தச் சனியனை” நாம் நன்றாகப் பதியச் செய்து கொள்கிறோம்.

அடுத்து எந்த நல்ல குணம் நமக்குள் வந்தாலும் அதற்குள் இந்த உணர்வை மீண்டும் மீண்டும் சேர்த்து… நாம் பேசும் போதெல்லாம் ஜாதகக்காரன் பதிவு செய்த உணர்வு… இந்த விஷத்தின் தன்மை கொண்டு இது முன்னணியிலே வந்துவிடும்.

அந்தச் சனியிலிருந்து மீட்டுவதற்காக வேண்டி இந்த ஆலயத்திற்குப் போ… அந்த ஆலயத்திற்குப் போ…! இவ்வளவு பணத்தை நீ செலவழி… யாகத்தை வளர்த்து மந்திரத்தை ஜெபித்தால் நல்லதாக இருக்கும்… என்று சொல்வார்கள்.

அதன் படி நாம் செய்வோம். அந்த எண்ணத்தைச் சிறிதளவு கட்டுப்படுத்தும்.

ஏனென்றால் ஏழரை நாட்டான் பிடித்துவிட்டான் என்று காதிலே கேட்டோம். அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அதனால் கொஞ்சம் குறைக்க முடிந்தது.

இது அல்லாதபடி இன்னொன்றும் சொல்வார்கள்…! உங்கள் இரண்டாவது பிள்ளைக்கு “ஒரு கண்டம் இருக்கிறது…! அவனைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்…” என்று சொல்லி வைத்துவிடுவார்கள்.

இரண்டாவது பிள்ளைக்கு நான்காவது வயது வரப்படும் போது பஸ்ஸிலேயோ வாகனத்திலேயோ விபத்து இருக்கிறது என்று பதிவு செய்து விடுவார்கள். குழந்தை பிறந்த பிற்பாடு ஏழரை நாட்டான் சனியன் பிடித்ததனால் இப்படிச் சொல்வார்கள்.

அதற்கப்புறம் பார்த்தால் வியாபாரமோ தொழிலோ மற்ற காரியங்களோ எல்லாமே மந்தமாகிவிடும். பஸ்ஸிலே விபத்து வரும் என்ற நினைவு மனதிலே டுக்… டுக்… டுக்.. என்று ஓடிக் கொண்டே இருக்கும்.

பிள்ளை ரோட்டிலே விளையாடப் போனால் போதும்.
1.ஜோசியக்காரன் சொல்லியிருக்கின்றானே… என்ன ஆகுமோ…?
2.அவன் சொன்னது எப்பொழுது நடக்குமோ…? என்று பிள்ளைப் பாசத்தால் தாய் பதறும்.
3.துடுக்.. துடுக்… என்ற பயத்தால் தாயிடமிருந்து இந்த அலைகள் போனவுடனே அவனை ஞாபகமறதியாகச் செல்லச் செய்யும்.

ரோட்டிலே பஸ் போய்க் கொண்டிருக்கும்.
1.தாயின் எண்ணம் பாய்ந்து கவனம் இல்லாது அவன் ரோட்டைக் கடப்பான்… அடிபடுவான்.
2.நான் நினைத்தேன்… கரெக்டாக நடக்கிறது…! என்பார்கள்.

ஏழரை நாட்டான் சனி பிடித்தால் இப்படி நடக்கும் என்று சொன்னான் அல்லவா…! என்று அந்தக் கெட்டது இப்படித் தான் நடக்கும்.

இதுகள் எல்லாம் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது…? என்று நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல…! எல்லாம் வக்கிரத்தில் இருக்கிறது அதனால் “உனக்குக் குழந்தை இல்லை…” என்று விஷத்தை ஊட்டிவிடுவார்கள். அதற்கு இன்னென்ன சாஸ்திரம் செய்தால் சரியாகும்…! என்பார்கள்.
1.”குழந்தை இல்லை” என்று இந்த உணர்வை ஊட்டிய பின்
2.அதையே எண்ணத்தில் வளர்த்தால்… பிறகு எங்கே போவது…?

அதை நிவர்த்தி செய்ய இந்தக் கோவிலுக்குப் போ… அங்கே போ… அதைச் செய்… இதைச் செய்… என்று எதை எதையோ சொல்லி அதைச் செய்தால் சரியாகும்…! என்று அவர்கள் சொன்னபடி சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

காரணம் நம் எண்ணத்திற்குள் எதைப் பதிவு செய்கிறோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்த்து விடுகிறோம். அது தான் நம்மை இயக்குகிறது.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை.. நேரமும் இல்லை… காலமும் இல்லை…! இதை உணர்ந்து கொள்ளுங்கள்…!

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொள்ள வேண்டிய “சரியான நேரம்”

 

பல வகையிலும் இம்சைப்பட்டுத் தான் இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் தெரிந்து கொண்டேன் (ஞானகுரு). ஏனென்றால் இது அனுபவம்.

ஒவ்வொரு நேரத்திலும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை எனக்கு உருவாக்கினார் குருநாதர்… சிருஷ்டித்துக் கொடுத்தார்.
1.அந்தத் துன்பங்கள் வரப்படும் பொழுது உன் உடலுக்குள் அது என்ன செய்கின்றது…?
2.பின் விளைவு ஒரு வாரத்திற்குள் உன் உடலில் என்னென்ன வேலைகள் செய்கிறது…?
3.அடுத்து அதை நிவர்த்திப்பதற்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்.

தனித்து அழைத்துச் சென்று எனக்குக் கஷ்டங்களை உண்டு பண்ணி… அந்தக் கஷ்டம் எப்படி வேலை செய்கிறது…? அதை எப்படி மாற்ற வேண்டும்…? என்று தெரிந்து கொண்டு வந்தேன்.

அதே சமயத்தில்… உங்களுக்குக் கஷ்டம் சந்தர்ப்பத்திலே உண்டாகின்றது. அந்தக் கஷ்டத்தை உண்டாக்கக்கூடிய நிலைகளை நிவர்த்தி செய்வதற்கு உடனே கையிலே ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாகக் கொடுக்கின்றோம்.

காரணம்…
1.நாம் எதையுமே மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள் தான்
2.இந்த மனித உடலில் இருந்து நாம் அருள் ஒளியைப் பெருக்குதல் வேண்டும்.
3.இந்த உடலிலிருந்து இன்னொரு சரீரம் பெற்று விடக்கூடாது.
4.அது ஒளிச் சரீரமாகத் தான் இருக்க வேண்டும்.

ஆகவே முடிவாக “அந்த ஒளிச் சரீரம் பெற வேண்டும்” என்ற எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகள் அருள் ஒளியைப் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த உணர்வை நீங்கள் ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது நம்முடைய உணர்வின் எண்ணங்கள் இந்தப் பூமிக்குள் சுழலாது.
1.அடிக்கடி இவ்வாறு எண்ணினோம் என்றால்
2.விண்ணின் சப்தரிஷி மண்டலங்களினுடைய உணர்வுகள் நமக்கு அதிகமாகக் கிடைக்கும்.

இதற்காக வேண்டி மணிக் கணக்கில் உட்கார்ந்து ஜெபமிருந்து… “சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்வேன்” என்ற நாள் கணக்கில் அமர்வது அல்ல.

இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் எப்பொழுது… எது… எதிர் கொண்டு
1.நம்மைக் கடுமையான எண்ணங்கள் கொண்டு தாக்குகின்றதோ அப்பொழுது
2.நாம் எடுத்துக் கொண்ட தியானத்தின் வலுக் கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன் என்ற வலுவைக் கூட்ட வேண்டும்.

காரணம் கோபம் வந்து விட்டால் இப்படி ஆகி விட்டதே…! என்று வேக உணர்வு நம்மை இயக்குகிறது. “அதே உணர்ச்சியைத் தூண்டி” அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உணர்வைக் கூட்டுங்கள்.

ஏனென்றால் காரத்தின் உணர்வு நமக்குள் கோபத்தை உண்டாக்கப்படும் பொழுது
1.ஈஸ்வரா…! என்று இந்த வேகத்தைக் கூட்டுங்கள்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
3.இந்த உணர்ச்சி அந்த உயர்ந்த சக்தியை எடுக்க உதவும்.

மற்றவர் திட்டிய உணர்வுகள் உணர்ச்சியைத் தூண்டிய உடனே துருவ நட்சத்திரத்தின் பால் நம் எண்ணங்களைச் செலுத்தப்படும் பொழுது அதை வேகமாக இழுத்துக் கோபத்தை “டபக்…” என்று அடக்கி உங்களுக்குள் ஞானத்தைச் செயலாக்கும் நிலைகள் வரும்.

எங்கிருந்து அந்தக் கோபத்தை யார் தோற்றுவிக்கின்றார்களோ உங்கள் சொல்லாலே சொல்லும் போது அங்கேயும் அடங்கும். இதை நீங்கள் அனுபவத்திலே தெளிவாகப் பார்க்கலாம்.

ஆகவே மனிதனாக உருப்பெற்ற இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாத நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காக்க உங்கள் எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் வலுக் கூட்டுங்கள்.
2.அதற்கு எம்முடைய இந்த உபதேசத்தின் வாக்கினை நீங்கள் பதிவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சகல தேவர்களுடனும் ஐக்கியப்படுங்களப்பா…!

 

சமமான நிலை நிலைக்க வாழும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள். சமமான நிலையின் வாழ்க்கை ஏன் நமக்கு ஆண்டவன் அருளவில்லை…? என்று எண்ணி வாழ்ந்திடாமல்
1.நாம் இப்புவியில் இப்புண்ணிய பூமியில் அச்சக்தியின் அருள் பெற்று
2.நமக்குத் தந்த இச்சந்தர்ப்பங்கள் எல்லாம் நம் நிலையை நாம் சமமாக்கி வாழ்ந்திடலாம்
3.சகல தேவரையும் கண்டிடலாம் என்ற பேராவலுடன் நாம் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு பிறவியிலும் அடுத்த பிறவியிலாவது நம் வாழ்க்கையைச் சமமாக்கி நல் நிலை பெறலாம் என்று இருந்தாலும்… பிறவி எடுத்து நிறைவு பெற்ற சமமான வாழ்க்கையை எடுத்திட முடியாமல் தான் “இன்று இவ்வுலகில் உள்ள பாமரர்களின் வாழ்க்கை உள்ளது…”

பிறவி எடுத்த நாளிலேயே ஏழு பிறவிக்கு நம் ஆத்மாவை அலைய விட்டிடாமல்
1.“ஒரே பிறவியிலேயே தன் நிலை உணர்ந்து… சமமான நிலை எய்தி”
2.சகல தேவனாக சூட்சும உலகத்திற்குச் சென்று கற்றுணர்ந்த ஞானிகளும்
3.தன் நிலையைத் தெய்வமாக்கி வாழ்ந்தவர்களும் இன்றும் தெய்வமாக உள்ளார்கள்.

நாம் எடுத்துள்ளோம் இப்படிப் பல பிறவிகளை. இந்தப் பிறவிலும் நிறைவு இல்லாமலே வாழ்கின்றோம்.

சமமான நிலை நிலைக்க அவ்ஆண்டவனின் அருள் கிட்ட நம்முள் இருக்கும் ஆண்டவனைப் புரிந்து கொண்டால் தான் “நான்” என்ற நிலையை “நம்மை ஈசன் இயக்குகின்றான்…!” என்ற உண்மையை உணர்ந்து
1.இவ்வுலக வாழ்க்கையிலே சலிப்பும் சங்கடமும் மேற்கொள்ளாமல்
2.நம்மை நாம் சமமாக நிலைப்படுத்தி வாழ்ந்திடும் வாழ்க்கை தான்
3.அச்சகல தேவர்களுடன் நாமும் ஒருவராக வாழப் போகிறோம் எனும் நிலையை எய்திட முடியும்.

சகல தேவர்கள் யார்…? என்ற கேள்விக்குறி எழுந்திட முடியும்…!

ஈசன் ஒருவன் தான் சகலத்திலும் கலந்துள்ளவன். அவ்ஈசன் தான் என்னும் பொழுது சகல தேவர்கள் என்று பிரித்துக் கூறும் நிலையில் உள்ளவர்கள் யார்…? என்று நம் மனதிற்கு விடை காண எண்ணிடலாம்.

சகல ரூபங்கள் கொண்டு ஒவ்வொரு ரூபத்தின் வடிவினிலும் எண்ணி ஏங்குபவர்களுக்கு ஆண்டவனாக வந்து அருள் புரியும் அந்த ஞான நிலை பெற்ற “சித்தர்களும் ரிஷிகளும் தானப்பா அச்சகல தேவர்கள்…”

அன்று ஆண்ட அரசர்களின் பலர் அன்றே “நான்” என்ற மமதையை… அரசை ஆண்டு கொண்டு இருந்தாலும் நான் என்றால் யார்…? என்பதைப் புரிந்து கொண்டு அன்றே அவ்வரசர்கள் தன் நிலையைச் சமமான நிலை நிலைக்கக் கடும் தவம் இருந்து சகல வித்தைகளையும் பெற்று… அச்சூட்சம நிலை கொண்டு வாழும் நிலையை அறிந்து வாழ்ந்தார்கள்.

நாம் இன்று நம் குழந்தைகளுக்கும் நாமே கேட்பதற்கும் பல நூல்களின் வாயிலாக அன்று ஆண்ட விக்கிரமாதித்த மகாராஜாவின் கதைகளைப் பல கோணங்களில் பல ரூபத்தில் அறிவுக்கு உகந்த வழியில் கேட்டும் படித்தும் வருகின்றோம்.

அன்று ஆண்ட அந்த விக்கிரமாதித்தன் எந்த அரச சபையில் ஆண்டானோ அதே நிலையில் தான் இன்றும் அவ்வுடலுடனே பல மாயாஜாலங்களை இன்று வாழும் மனிதர்களின் மமதையைப் போக்க பல ரூபங்கள் எடுத்து உணர்த்திக் கொண்டும்… பல நன்மைகளைச் செய்து கொண்டும்… இன்றும் அவ்வுடலுடனே சித்தி பெற்ற நிலையில் சூட்சம உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளான்.

அன்று அரசாளும் நிலையிலேயே தன் நிலையைச் சமமான நிலை நிறுத்திச் சகல நிலையையும் தானே உணர்ந்து ஏற்கும் சக்தி பெற்ற நிலையைத் தான் ஏற்றுக் கொண்டான் கடும் தவமிருந்து.

அவன் தவத்தைக் கலைக்கத்தான் அவ் வேதாளம் என்னும் பேய் இவனைத் தூங்கவிடாமல் இவனுக்குப் பல கதைகள் சொன்னதாக ஆயிரத்து ஒரு கதைகள் ஆயிரத்து ஒரு இரவு சொன்னதாகச் சொல்வதெல்லாம் என்னப்பா…?

வேதாளமா வந்து கதை சொன்னது…? வேதாளம் என்னும் உருவத்தில் வந்து கதை புகட்டியவர் வேதாள முனிவரப்பா. வேதத்தையே ஆளும் அம்முனிவர் விக்கிரமாதித்த ராஜாவின் நிலை அறிந்து அவரின் நிலை எத்தன்மையில் அச்சக்தியின் அருளை ஈர்க்கிறது என்று சகல நிலையை அறிந்து தான் விக்கிரமாதித்த ராஜாவுக்கு வேதாள முனிவர் பல கதைகளைச் சொல்லி அவர் மனதில் இருந்து விடை காண ஒவ்வொரு இரவும் அவரைத் தூங்க விடாமல் அக்கதை என்ற ரூபத்தில் பல உண்மை உள்ள கதைகளை எல்லாமே உணர்த்தி அவரின் நிலையை வேதாள மாமுனிவரின் ஆசியால் சகல நிலையையும் அறிந்து சமமான நிலை நிலைத்திடும் பக்குவத்தைப் பெற்றாரப்பா அந்த விக்கிரமாதித்த மகாராஜா.

அன்று அரசாண்ட அந்த ராஜாவிற்கு இந்த நிலைகளை எல்லாம் பெற்றுத்தான் தன் நிலையைச் சமமாக்கி வாழ்ந்திடும் நிலையைப் பெற்று வாழ்ந்திட முடிந்ததப்பா.

இவ்வுலகில் நாம் மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை.
1.நம்மைச் சுற்றிப் பல கோடி ஆன்மாக்கள் உடலில்லாமல் ஆத்மாவுடன் இவ்வுலகில் நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு
2.தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்… தான் தன் ஆன்மா வந்து பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்…
3.எவ்உடலில் ஏறினால் அவ் உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற தன் எண்ணத்தை
4.நன்மையையோ துவேஷத்தையோ பூர்த்தி செய்து கொண்டிட முடியும் என்ற நிலை கொண்டும்
5.இப்படித் தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று ஆத்மாவுடன் வாழும் மனிதர்கள் நிலையுடனே
6.உடலில்லா ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டே உள்ளன.

நாம் நினைக்கின்றோம் நம் எண்ணம் நம் உடல் நம் ஆத்மா என்று. நம் உடலில் நாம் மட்டும் வாழவில்லையப்பா…!
1.நம் மன நிலை எந்தெந்த நிலை கொண்டு மாறுகிறதோ அந்தந்த நிலை கொண்ட ஆவி அணுக்கள்
2.நம் உடலில் எந்தத் திசையிலும் ஏறிக்கொண்டு நம்மையே ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக தான் குடியிருக்கும் கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.

நாம் எண்ணுவதைப் போல் நாம் மட்டும் வாழவில்லை. நம் நிலையை மாற்றிக் கொண்டால்… நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப் “பல அணுக்கள் நம்மைச் சுற்றிக்கொண்டு தான் உள்ளன…” என்று உணர்ந்து
1.நம்முள் அவ் ஆண்டவன் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட முடியும் என்ற உண்மையை உணர்ந்து
2.பல ஆவி உலக அணுக்களுக்கு நாம் அடிமையாகாமல் இவ்வுலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நழுவ விட்டு
3.இக்கடைசி நிலை கொண்ட உடலுக்கு நாம் நம் உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி
4.”அச்சகல தேவர்களுடன் ஐக்கியப்படுத்துவது ஒன்றுதான்… இப்பாட நிலையில் உணர்த்திடும் உத்தம நிலையப்பா…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே அகஸ்தியன் நம் பூமியின் துருவத்தை நுகர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி பெற்றவன். அதன் உணர்வே அவனுக்குள் ஒளியாக மாறும் நிலை பெறுகின்றது.

குருநாதர் அகஸ்தியனைப் பற்றி எனக்கு (ஞானகுரு) படிப்படியாக என்னென்ன சொன்னாரோ… அதே வழியில் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றேன். தியானிக்கும் போது அந்தச் சக்திகளை நீங்கள் பெற ஏதுவாகும்.

1.வானுலக ஆற்றலை துருவத்தின் வழியாக நம் பூமி பெறுவதை அகஸ்தியன் இடைமறித்து அந்த உணர்வின் தன்மை நுகர்கின்றான்
2.துருவ மகரிஷி தனக்குள் நுகர்ந்து உருவாக்கிய அந்த உணர்வுகளைப் பெற வேண்டும்…
3.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி
4.பூமியின் துருவப் பகுதியின் வழியாக நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நம் பூமி சுழல்வது தெரியும். பிரபஞ்சத்தில் உருவாகும் சக்திகள் நம் பூமி செல்லும் பாதையில் அது அணுக்களாக இருப்பதையும்… நம் பூமி அதை எவ்வாறு ஈர்க்கிறது…? என்பதும் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.

இந்த உணர்வின் தன்மைகளை எல்லாம்
1.கண்கள் வழி கொண்டு… நினைவின் ஆற்றலை உயிருடன் ஒன்றி
2.அந்த அகக்கண் ஒளி கொண்டு உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

புறக்கண்களால் ஒரு பொருளைப் பார்க்கின்றோம். இருந்தாலும் அருள் ஞானியின் உணர்வுகளை குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். பதியச் செய்வதை நீங்கள் உங்கள் உயிருடன் ஒன்றி அகக்கண்ணுடன் இணைத்து ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

1.பூமி துருவப் பகுதியின் வழி கவரும் இடத்தில் நினைவைச் செலுத்தும் போது
2.அந்த எல்லையிலிருந்து அடுத்து… வானுலகப் பகுதியிலிருந்து பூமி கவரும் சத்து எப்படிப் பூமிக்குள் வருகிறது…? என்ற நிலையும் காட்சியாக வரும்.

பூமி சுழலும் பாதையில்… மற்ற நட்சத்திரங்களும் கோள்களும் உமிழ்த்தும் அந்த உணர்வலைகள் ஒவ்வொரு பகுதிக்கும் அது பரவி வருவதையும்… அது மின்னிக் கொண்டு பல கலர்களாக மாறுவதையும்… நம் பூமியின் துருவ ஈர்ப்புக்குள் அது வருவதையும் உங்களால் நுகர முடியும்.

1.நுகரும் போது புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலிலே பரவும்
2.சில நொடிகளில் நெடி கலந்த நிலைகளும் சில நொடிகளில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்
3.நறுமணம் கொண்ட நிலைகளும் உங்களுக்குள் வந்து கொண்டே இருக்கும்.

உணர்வுகள் உயிருடன் ஒன்றி உள் செல்லும் போது… உடலில் உள்ள குணங்கள் ஒவ்வொன்றிலும் மோதி… உடலுக்குள் பல அதிசயங்களும்… பல பல மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்… ஆனந்த ஒளியும் உடலுக்குள் வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்… மாறிக் கொண்டே இருக்கும்.

சாதாரண எண்ணையில் ஒரு திரியைப் போட்டு எரிக்கும் போது அதிலே எரிச்சல் கலந்த நிலை வருகிறது. ஒரு பெட்ரமாக்ஸ் லைட்டை எரிக்கும் போது… அது எண்ணையின் சத்தினை மாற்றிவிட்டு ஆவியின் தன்மை கொண்டு ஒளியாக மாற்றுகின்றது.

அதைப் போல் இந்நேரம் வரை உபதேசித்த உணர்வுகள்…
1.அந்தத் துருவ மகரிஷி உணர்வுகளுடன் உங்கள் உணர்வுகள் படப்பட்டு
2.எண்ணையின் வாசனையை மாற்றிவிட்டு குளிர்ந்த ஒளியாகக் காணுவது போல்
3.மகிழ்ச்சி பெறும் ஒளியின் சுடராக உங்கள் உடலுக்குள் பரவும்.

ஒவ்வொரு அணுக்களிலும் இது மோதி… அந்த ஞானியின் உணர்வுகள் ஒவ்வொன்றும் உடலுக்குள் “பளீர்… பளீர்…” என்று மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக மாற்றிக் கொண்டே வரும்.

வெல்டிங் வைக்கும் போது பளீர்…பளீர்… என்று மின் ஒளிகள் வருகின்றது. அதே சமயத்தில் அதைக் கண்களால் பார்க்கும்போது அதிலே ஒரு எரிச்சல் கலந்ததாகவும் இருக்கும்.

1.ஆனால் பெட்ரமாக்ஸ் லைட்டை எரிக்கப்படும் போது அது கண்ணுக்கு எப்படிக் குளிர்ந்ததாகப் புலப்படுகின்றதோ
2.அதைப் போன்று உங்கள் உடலுக்குள் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் கலந்து
3.மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக உங்கள் உடலில் ஒளித் தன்மை பெறுவதைக் காணலாம்… உணரலாம்.

புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி உயிருடன் ஒன்றி… கண்ணின் நினைவைத் துருவ மகரிஷியின் பால் செலுத்தி… அவரின் ஆற்றல்கள் அனைத்தும் எங்கள் உடலில் பரவ வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்துங்கள்.

அப்படிச் செலுத்தும் போது…
1.ஒரு ஒளி விளக்கைக் காட்டினால் அதன் மூலம் பொருள்களைக் காண்பது போன்று
2.உங்கள் உடலுக்குள் அந்த வெளிச்சங்கள் ஊடுருவுவதையும்
3.அந்த உணர்வலைகள் மோதும் போது மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்களிலே தோன்றுவதும்
4.ஒளி கண்டபின் இருள் மறைவது போன்று உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இது இணையும்…
5.உட்பொருள் தெளிவாகும்…. ஆற்றல்மிக்க சக்தியாக வளரும்.

துருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் உயிருடன் மோதும் போது
1.மெர்க்குரி போன்று புருவ மத்தியில் வெளிச்சம் வரும்
2.இளம் நீலமாகப் புருவ மத்தியில் ஒளி அலைகள் வரும்.

இந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நினைவைச் செலுத்தும் போது உங்கள் உடலில் மகிழ்ச்சி பெறும் உணர்ச்சிகள் வரும்.

இதற்கு முன் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் அனைத்தும் நீங்க இது உதவும். துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் கலந்து மன பலம்… மன நலம்… பெறுவீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற நாம் தியானிக்க வேண்டிய சரியான முறை இது தான்.

பரிணாம வளர்ச்சியில் உடல் பெறும் உணர்வுகள் “உயிரால் எப்படி மாற்றப்படுகின்றது…?”

 

பரிணாம வளர்ச்சியில் தாவர இனங்கள் எப்படி உருமாறி குணங்கள் மாறியதோ இதைப்போல தான் ஒரு உயிரணு தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு மற்ற உடலிலே விளைந்த அந்த உணர்வின் சத்தை நுகர்ந்து அதனிடமிருந்து காத்துக் கொள்ளும் நிலைகள் வந்தது.

அப்படி வந்தாலும்…
1.இந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து உயிர் அதனின் உணர்வாக விளையச் செய்து
2.முதலிலே பெற்ற உணர்வுக்கும் இரண்டாவது மற்றொன்று இதற்குள் சேர்த்தவுடனே நோயாக வந்து
3.சுழிக் காற்று அடிப்பது போல இதனுடைய மணங்கள் பெருகச் செய்து
4.கவர்ந்த உணர்வுகள் ஒன்றாகி… உயிருடன் ஒன்றும் பொழுது
5.முதலிலே உருப் பெற்ற உடலைப் பிரித்துவிட்டு
6.இணைந்து கொண்ட உணர்வுகள் தனியாக விளைந்து அதனின் நிலைகளில் வந்த உணர்வு கொண்டு தான்
7.இந்த உயிர் மற்ற மற்ற உடல்களை உருவாக்கியது என்பதனை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

அகஸ்தியன் இதைத் தெளிவாக எடுத்துரைத்தான். அதாவது இந்தப் பிள்ளை யார்…? என்று அவன் கேள்விக்குறி போட்டு நம்மைத் தெளிவாகச் சிந்திக்கும்படி செய்துள்ளான்.

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நாம் எவ்வாறு மனித உடல் பெற்றோம்…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் வலிமை பெற்றது தான் மிருகங்கள். மிருகங்களாக இருக்கும் போது தன்னைக் காத்திடும் உணர்வுகள் பெற்றுப் பெற்று… அந்த உணர்வால் ஈர்க்கப்பட்டு நமது உயிர் மனிதனாக உருவாக்கியுள்ளது.

தன்னைக் காத்திடும் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு
1.தன்னைக் காத்திடும் அங்கங்களும் தன்னைக் காத்திடும் உணர்வின் எண்ணங்களும் அது விளையச் செய்து
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உயிர் ஒளியாக எப்படி ஆனதோ
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது தான் இந்த மனித உடல்.

நமது உயிரே அதை உருவாக்குகின்றது.

1.ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட எண்ணங்களை இந்த உயிரே அது இணைக்கின்றது
2.எடுத்துக் கொண்ட எண்ணத்தை நமது கண்களே வழிகாட்டி
3.அதனின்றி தப்பித்துக் கொள்ளும் நோக்குடன் அதைக் கவர்ந்து அதனின் வலுவை இதற்கு உணர்த்தி
4.அதனின் நிலைகளிலேயே உணர்வுகள் மாறி உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து
5.உடலின் தன்மை மாற்றமானது என்ற நிலையை தெளிவாக எடுத்துரைத்தான் அந்த அகஸ்தியன்.

இவ்வளவு பெரிய தத்துவத்தை மகரிஷிகள் சாதாரண நிலைகளில் விநாயகர் தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

நாம் எதை எதை எல்லாம் சேர்த்துக் கொண்டோமோ அந்த வினைக்கு நாயகனாக… ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட உணர்வு “எது அதிகமோ” அதற்கு நாயகனாக அந்த உணர்வுகள் நம்மை இயக்கி… அந்த உடலை உருவாக்கி… அந்த எண்ணத்தால் தன்னை எவ்வாறு காத்துக் கொள்கின்றது…? என்பதைத்தான் அன்று அகஸ்தியன் “விநாயகர் தத்துவத்தில்” எடுத்துக் காட்டினார்.

அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்

 

சக்தியின் அருளில் சக்தி பெற்ற சகல ஜீவராசிகளும் ஜீவன் பெறும் நிலையில் ஒரே நிலையில் தான் ஜீவன் மறுபிறப்பு எடுத்து அப்பிறப்பில் நிறைவு பெற்றிட வேண்டும் என்ற நிலையில் தான் பிறப்பெடுகின்றன… நல்ல ஜீவன்கள் எல்லாம்.
1.நல்ல ஜீவன்கள் எல்லாம் தாம் பிறவி எடுத்ததின் குறிக்கோள்…
2.தான் பிறப்பு எடுத்து அடுத்த பிறப்பு இல்லாத நிலையில் எடுக்கும் பிறப்பில் வாழ்ந்திட வேண்டுமென்ற ஆர்வம் கொண்டு பிறக்கின்றன.

ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பு எனும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது.

எல்லா ஆத்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இவ்உடலுடனே வாழ்கின்றன. அவ் அன்பிற்காகத் தான் அவ்அன்பெனும் நிலை கிடைக்காத நிலையில்
1.எண்ணும் மனம் என்றும் நிறைவைப் பெற்றிடாமல்… பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
2.அம்மனமென்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்கள் ஆக்கி வாழ்ந்திடுகின்றார்கள் மனிதர்கள்.

பரலோகம் எமலோகம் நரகலோகம் பூலோகம் இப்படி பல லோகங்களைச் சொல்லும் லோகங்கள் எல்லாம் எந்த லோகங்களப்பா…?

மனம் என்னும் அன்பு லோகத்தை அவ் அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அவ்ஆத்ம லோகத்திற்கு நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத் தான் நாம் அழிக்கின்றோம்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இவ்வுலகத்தை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. எந்த நிலை கொண்டும் இன்று இக்கலியின் நிலை கொண்டு
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்.

அன்பினால் நாம் பல நிலைகளை நம் உடலுக்கும் நம் மனதிற்கும் கொடுக்கப்படும் போது… “நம் ஆத்மா பூத்தொளிர் பெற்று வாழ்கிறது” என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு நம் முன்னோர்கள் உணர்த்தியது என்ன…?

1.நம் மனம் என்ற பல சஞ்சலக் கூடு நிறைந்த இம்மனத்தை
2.அன்பு என்னும் நிலையில்தான் அவ்ஆத்மாவை அமைதிப்படுத்திட முடியும் என்பதற்காகத் தான் ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தி
3.அவ்ஆண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து
4.நம் மனம் என்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட
5.ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழிகாட்டி வந்தார்கள்.

ஆண்டவன் என்னும் ரூபத்தில் நம் அன்பை எதில் மட்டும் செலுத்தி வணங்கிடலாம்…?

அன்பு கொண்டு நாம் வணங்குவது எல்லாமே ஆண்டவன் தான். எல்லா உயிரினங்களிலுமே அவ ஆண்டவன் உள்ளான்.

உன் அன்பை உயிரினங்கள் மட்டுமல்ல…
1.இவ்வானமும் பூமியும் மரம் செடி கொடிகள் மழை காற்று சூரியன் சந்திரன், நட்சத்திர மண்டலங்கள் இப்படி எந்நிலைகொண்டும்
2.உன் மனம் எனும் அன்பைச் செலுத்தி எண்ணி வணங்கிட்டாலே
3.எந்த ரூபத்திலும் உன் உயிராத்மாவிற்கு நீ சேர்க்கும் உன்னதப் பொக்கிஷம் கிட்டுகின்றது.

அவ்அன்பினால் மட்டும் தான் இவ் உயிராத்மாவிற்குக் குளிர்ந்த நிலையை நாம் அளிக்க முடியும்.

இவ் உடல் முழுவதுமே ஒருநிலை கொண்ட வெப்பத்துடன் தான் உள்ளது. ஆனால் இவ் உடலில் உள்ள நம் உயிரணு ஒன்று மட்டும் தான் குளிர்ந்த நிலையில் உள்ளது.

மனம் என்னும் நிலையை நாம் அமைதிப்படுத்தி அன்புடன் வாழும் பொழுது அவ் உயிராத்மா ஒரே நிலை கொண்டு அமைதியுடன் அன்பு கொண்ட நிலையில் ஆனந்த நிலையில் உள்ளது.

ஆனால்
1.இம்மனம் என்னும் நிலையை நாம் பல நிலை கொண்டு அலையவிடும் பொழுது
2.இவ் உடல் நிலையில் அதி உஷ்ண நிலை ஏற்பட்டு
3.உயிராத்மாவிற்குப் தீங்குகளைத் தான் நம்மால் சேர்த்திட முடிகின்றது.

நம்மில் பல பெரியோர் இவ்வன்பையே பல வழிகளில் நமக்கு உணர்த்திட அன்றிலிருந்து இன்று வரை போதித்துச் சென்றார்கள்.
1.அன்பிலார்க்கு இவ்வுலகமே இல்லை என்ற உண்மையை உணர்த்திச் சென்றார்கள்
2.அன்பே தான் கடவுள் என்றார்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் மனிதர்களின் நிலையில் ஒரே குறிக்கோள் “தான் செல்வந்தனாகச் செழித்து வாழ்ந்திட வேண்டும்” என்ற குறிக்கோள்தான்.

அந்த நிலைக்காகத் தன்னைத்தானே தன் இனத்தை துவேஷிக்கும் நிலையில் மனிதன் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். அன்பிற்கு மேல் துவேஷத்தினால் தான் இன்று உலகமே உள்ளது. இந்நிலையில் இவ்வுலகில் கலந்துள்ள இக்காற்று மண்டலமே விஷமுடன் உள்ளது.

இனி வாழ்ந்திடும் வாழ்நாட்களை வீண் விரயம் செய்திடாமல்…
1.அன்பு கொண்ட வாழ் நாட்களாக வாழ்ந்து
2.அன்பு என்னும் பொக்கிஷத்தை ஆண்டு வாழ்ந்திடுங்கள் அன்புடனே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பாலில் நஞ்சு கலந்தால் அதைக் குடித்தால் நம் சிந்திக்கும் தன்மையை எப்படி இழக்கின்றோமோ… அதைப் போலத் தான் இன்றைய உலகில் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் நஞ்சுகள் அதிகரித்துள்ளதால் நல்ல சிந்தனைகளும் குறைந்து கொண்டே வருகிறது.

காரணம்…
1.பூச்சிக் கொல்லி மருந்துகளையும் இரசாயண உரங்களையும் விவசாயப் பயிர்களில் சேர்த்துச் சேர்த்து
2.பெரும்பகுதியான வித்துகளில் அந்த நஞ்சு இணைந்தே உள்ளது
3.அது நம் உடலுடன் இணையும் போது நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்திலும் கலக்ககப்படுகின்றது…
4.அத்தகைய நஞ்சால் நம் சிந்தனை இழக்கப்படுகின்றது… நாம் சிந்தித்தாலும் கூட அது தெரிவதில்லை.

நாம் எண்ணும் கோபமோ வெறுப்போ வேதனையோ இவை எல்லாம் விஷத்தால் இயக்கப்படுவது. உடலில் விஷம் கூடக் கூட “அத்தகைய தீமை செய்யும் சிந்தனையும்… அதனுடைய ஞானமும் தான் அதிகமாகப் பெருகும்…”

உதாரணமாக ஒருவரை நாம் எதிர்பாராது திட்டி விடுகிறோம் அல்லது அவருக்குக் கோபம் வரும்படியாகப் பேசி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அதனால் அவர் மனது புண்பட்டிருந்தாலும் கூட
2.“தான் பேசியது நியாயம் தான்…” என்று வாதிக்கும் திறன் அந்த விஷத்திற்கு உண்டு.

அந்த விஷத்தின் வலுக் கொண்டு செயல்படுத்தும் போது நாம் திட்டியதால் அவர்கள் மனம் புண்பட்டுவிட்டது என்ற சிந்தனையற்ற நிலையும் உருவாக்கிவிடும்.

அவர்கள் தவறு செய்யவில்லை… சந்தர்ப்பவசத்தால் அவர்களைத் திட்டி விட்டோம்…! என்று எண்ணினாலும் அவர்களைத் திட்டியதால் வேதனைப்படுகின்றனர் என்று சிந்தித்து அதைச் சீர்படுத்த முடியாது.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் எதுவாக இருந்தாலும் இது போன்ற விஷத் தன்மைகள் பெருகி சிந்தனையில்லாத செயல்களும் இன்று அதிக அளவில் பெருகிக் கொண்டே உள்ளது.

ஆனால்… நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினைப் பிரித்து விட்டு நல்ல உணர்வை உடலாக ஆக்கும் மணமாக மனித உடலில் ஆறாவது அறிவு இருக்கின்றது.

கடந்த காலங்களில் மனித வாழ்க்கையில் எத்தகைய வேதனையான நிலைகள் வந்தாலும் தன் ஆறாவது அறிவின் திறமை கொண்டு அந்த வேதனையை உருவாக்கிடும் செயல்களை நீக்கிடும் ஆற்றல்கள் உண்டு. அதிலே முதன்மை பெற்றவன் அகஸ்தியன்.

ஏனென்றால் மனிதனின் உணர்வுக்குள் ஆறாவது அறிவை ஏழாவதாக மாற்றுவது ஒளி.
1.ஒரு பொருளுக்குள் இருக்கும் நஞ்சினை நீக்கத் தெரிந்து கொள்வது…
2.தீயதை நீக்கி நல்லதை உருவாக்கும் ஆற்றல் பெற்றது நம் ஆறாவது அறிவு.

அதனை அடிப்படை ஆதாரமாக வைத்துப் பண்டைய காலத்தில் வாழ்ந்த அந்த மெய் ஞானி நஞ்சினை நீக்கி உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றினான். ஆக அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்த மகரிஷியின் ஒளிச் சரீரத்திலிருந்து வெளிப்படும் மிகச் சக்தி வாய்ந்த உணர்வலைகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நம் பூமி வட துருவத்தின் வழியாக அதைக் கவர்கிறது.

அப்படி வரும் வந்த உணர்வுகளைக் கவர்ந்தோர் அனைவரும் அந்த அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை நீக்கினானோ… உணர்வை ஒளியாக மாற்றினானோ… அதைப் போல் ஒளியாக மாற்றிக் கொண்டு… முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில் வேகா நிலை கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றி சப்தரிஷி என்ற நிலை அடைந்து
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் தனக்குள் ஒளியாகச் சிருஷ்டித்து ஏழாவது நிலையை அடைந்து சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

அந்த எல்லையை நாம் அனைவரும் அடைய வேண்டும்.

“எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை…!” என்று இரண்யன் சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

இரண்யன் சாகா வரம் பெற்றவன். ஈரேழு 14 லோகத்திலும் எதிலும் எனக்கு இறப்பு இல்லை என்று நாராயணனிடம் வரம் வாங்கிக் கொண்டான். நாராயணன் என்பது சூரியன்.

1.வெப்பமும் காந்தமும் கலந்து விஷத்தின் தன்மை அதனுடன் கவர்ந்து வரப்படும் பொழுது ஒரு அணுவை இயக்கும் சக்தி கொண்டு செயல்படுகின்றது.
2.விஷத்தின் துடிப்பு இல்லை என்றால் “எதனையுமே இயக்க முடியாது”
3.விஷத்தின் துடிப்பு அதிகமாக இருப்பதினால் தான் சூரியனின் சுழற்சியின் வேகமும் அதிகமாகின்றது.

சூரியனின் சுழற்சி வேகம் அதிகமாகி அதிலே உருவான நஞ்சினைப் பிரித்துத் தள்ளினாலும் வெப்பமும் காந்தமும் என்று அணுக்களை உருவாக்கி காந்த புயலாக வெளிக் கக்கினாலும்
1.காந்தப் புயலாக வருவது அந்த விஷத்தினைக் கவர்ந்து வரப்படும் பொழுது அது இறப்பதில்லை.
2.ஆனால் அது இறந்து விட்டால் எதுவுமே இயக்கமில்லை
3.ஆகவே “நான் இல்லாது எதுவுமே இயங்காது” என்று பிரகலாதன் கதையிலே அவ்வாறு காட்டுகின்றார்கள்.

உலக சிருஷ்டிக்கு நான் தான் மூல காரணம் என்று இரண்யன் சொல்கின்றான். சூரியனோ இந்த உலக அனைத்தையும் ரட்சிக்கிறேன் என்று இயக்குகிறது.
1.இரு பிரிவுகளையும் அதாவது விஷத்திற்கும்… ஒன்று சேர்த்து இயக்கக்கூடிய நிலைகளுக்கும்… நாம் கண்டுணர
.இத்தகைய நிலைகளைத் தெளிவாகக் காவியங்களாகப் படைத்துக் கொடுத்துள்ளார்கள்.

இரண்யன் தன் மகனான பிரகலாதனிடம் என் பெயரைத் தான் நீ சொல்ல வேண்டும் என்று கேட்கின்றான். பிரகலாதன் என்றால் இந்த இரு உணர்வும் சேர்த்து உருவான நிலைகள் தான்.

ஒரு ஜீவ அணு உண்டாக வேண்டும் என்றால் இந்த விஷத்தின் துடிப்பு கொண்டு தான் இயங்குகிறது என்றும் அதே சமயத்தில் சூரியனுடைய நிலைகள் வெப்பமும் காந்தமும் மற்றொன்றைக் கவர்ந்து உலகை இரட்சிக்கும் நிலையாக மற்றதை உருவாக்கும் நிலை என்று இதனின் செயல்களை நாம் கண்டுணரக் காவியங்களாகத் தீட்டினார்கள் ஞானிகள்.

சாதாரண பாமர மகனும் அறிந்திடும் நிலையாக… இந்த உலக இயற்கையின் சிருஷ்டியும் அணுவின் இயக்கமும் என்ற தலைப்பில் காவியமாகப் படைத்துச் சூரியனை நாராயணனாக மையமாக வைத்து… அதனின்று வெளிப்படும் உணர்வின் அலைகளைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் மகரிஷிகள்.

இதைப் போன்று அது அது நஞ்சைக் கடந்து வந்தாலும் உலகிலே எனக்கு இறப்பு இல்லை என்று வரம் வாங்கிக் கொண்டான் இரண்யன்.

பாலுக்குள் விஷம் பட்டால் அந்தச் சத்தை அது தனக்குள் அடிமை ஆக்கிக் கொள்கிறது. ஒரு வெப்ப காந்தம் ரோஜாப் பூவின் மணத்தைக் கவர்ந்து கொண்டால் விஷத்தின் துடிப்பால் அந்த மணத்தை வீரிய உணர்வாக (மணம்) உண்டாக்கும்.

அதே சமயத்தில் ஒரு காரமான உணர்வை வெப்ப காந்தம் எடுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அதனுடைய வேகத்துடிப்பாக இயக்கிக் காட்டும். ஆகவே
1.இயக்கத்திற்கு மூலமாக இருப்பது
2.இந்த நஞ்சின் தன்மை தான்…!

ஆதியிலே அணுவின் தன்மை உருவாவதற்கு… ஆவியாகப் படர்ந்துள்ள நிலையில் விஷத்தின் தாக்குதலால் அது தாங்காது… அது பிரிந்து அணுக்களாக நகர்ந்து சென்று… “வெப்பமும் காந்தமும்” என்ற நிலைகள் அடைந்தது.

விஷத்தின் இயக்கம் இல்லை என்றால்
1.பேரண்டத்தில் படர்ந்து கிடந்த நிலைகள் இயக்கமே இல்லாத சூனியமாகத்தான் இருக்கும்
2.விஷம் இதில் தாக்கப்படும் பொழுது தான் “சூனியத்தின் நிலை மாறி… இயக்க நிலையாக மாறுகின்றது…”

ஆகவே தான் இரண்யன் எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை என்ற நிலையில் “அவன் வாதிடுகின்றான்” என்று காட்டுகின்றார்கள்.

எமது உபதேசங்களைப் பதிவாக்கி உங்கள் உயிரான ஈசனிடம் அதை அனுப்புங்கள்

 

இதற்கு முன் ஐதீகம் ஐதீகம் என்ற நிலையில் நம்மை அறியாமலே செயல்பட்ட சாங்கிய உணர்வுகளிலிருந்து… அதனின் விளைவுகளிலிருந்து விடுபட்டு
1.அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் நேரடியாகப் பற்றி அதனின் உணர்வின் துணை கொண்டு
2.எந்த நிமிடமும் ஒளியின் சரீரமாகி அழியா சரீரமாகி வேக நிலையாக நிச்சயம் நாம் விண்ணுலகம் செல்ல முடியும்.

அந்த நிலைகள் பெறுவதற்குத் தான் இதை உபதேசிப்பது.

எமது உபதேசங்கள் அனைத்தும் புத்தகங்களாகவும் ஒலி நாடாக்களாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் காலத்தைப் போக்க ஒவ்வொரு நாளும் அதைப் படித்து கேட்டு சிறுகச் சிறுக உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

யாம் உபதேசித்த உணர்வுகளையும் அருள் மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளையும் நிச்சயம் நீங்கள் பெற முடியும். உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் படைக்கின்றது… உடலாக ஆக்குகின்றது… உணர்வின் இயக்கமாக உங்களைச் செயல்பட வைக்கின்றது.

ஆகவே… உயிரே கடவுள் என்று மதித்து எண்ணுங்கள் அவன் படைத்த ஆலயமான உங்கள் உடலை வணங்குங்கள் அதே சமயத்தில்
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் கோடிக்கணக்கான குணங்களை இந்த உயிரே தெய்வங்களாக அமைத்தது.
2.அந்த நல்ல குணத்தின் நன்மை கொண்டே இந்த மனித உருவை உருவாக்கியது
3.அவன் உருவாக்கிய அந்த நல்ல குணத்தைக் காக்க “அவனுடன் ஒன்றுவோம்…”

மெய் ஒளி கண்டுணர்ந்த மெய் ஞானியின் அருள் சக்திகளை நாம் பெறுவோம். அவன் வழியில் என்றென்றும் அழியா நிலைகளாக மனிதன் முழுமை என்ற நிலை அடைவோம்.

உபதேச வாயிலாக உங்களுக்குள் அருள் உணர்வுகள் பதிவாகின்றது பதிவானதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுகின்றீர்கள்.
1.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த அருள் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்…
3.துரித கதியில் நீங்கள் சக்திகளைப் பெற முடியும்.

குடும்பத்தில் சிக்கல்கள் இருந்தால்… மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் தொழில் வளம் பெருக வேண்டும்… அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இந்தச் சக்தி உங்களுக்குள் செயலாக்கும்…
1.உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்த உங்கள் எண்ணமே உதவும்… அந்த வலிமை பெறுவீர்கள்.
2.சிக்கலைத் தீர்க்கும் ஞானமும் மன உறுதியும் கிடைக்கும் சிக்கலைத் தீர்க்கும் மனமும் வரும்.

அதே சமயத்தில் உடலில் வந்த நோய்களை நீக்க அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம். நோய் நீக்கும் சக்திகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய்கள் நீங்க வேண்டும் என்று அது என்னென்ன நோயோ அதை நீங்க வேண்டுமென்று அடிக்கடி எண்ணும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியைப் பற்றுடன் பற்றுகின்றீர்கள்… அது அதிகமாக விளைகின்றது.

பாலிலே ஒரு துளி விஷம் பட்டால் நஞ்சாகி விடுகின்றது அதில் ஆயிரம் கூட பாலை விட்டால்… நஞ்சின் தன்மை குறைந்து பாலுக்கே அது ஊட்டசக்தி கொடுக்கின்றது.

இதைப் போன்று தான்
1.அருள் ஞானிகள் என்பவர்கள் பல ஆயிரமாயிரம் குடம் பாலைச் சம்பாதித்தவர்கள்… நஞ்சினை நீக்கும் சக்தி பெற்றவர்கள்.
2.ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் அதை ஆத்ம சுத்தி மூலம் எடுக்கப்படும் பொழுது
3.வாழ்க்கையில் வந்த நோய்களை நீக்க பல ஆயிரம் குடம் பாலின் சக்தியாக நமக்குள் சேர்க்கப்படுகின்றது.

ஆகவே நீங்கள் தியானத்தில் அந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று தியானியுங்கள்… அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று தியானியுங்கள்.

இது தான் வாழ்க்கையை தியானம் என்று சொல்வது. இதை நீங்கள் கடைப்பிடித்துப் பாருங்கள் அனைத்தும் நன்றாகும்.

இந்த உபதேசங்களை உங்களுக்குள் ஆழமாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்
1.அதை உங்கள் உயிரான ஈசனிடம் அனுப்புங்கள்
2.அவன் அந்த உணர்வுகளை வித்தாக விளையயச் செய்வான் அது உங்களுக்குள் விளைகின்றது.
3.விளைந்த நிலைகள் கொண்டு உங்களுக்கு ஆறுதலான மன பலமும் மனவளமும் பெறுவீர்கள்
4.மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் உங்களை அவனே அரவணைத்து அழைத்துச் செல்கின்றான்… தன்னுடன் அணைத்துக் கொள்கின்றான்.

இதைச் செயல்படுத்துங்கள்.

“பறக்கும் நிலை” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சப்தரிஷிகள் தான் பூமியின் வளர்ச்சியில் மனிதக் கரு தோன்றி மனித ஞானம் பெற வழி வகுத்தனரே…!
1.இக்கலி மாறி கல்கியில் மனிதக் கரு வளரவும் மனித ஞானம் வளரவும்
2.சப்தரிஷிகளே ஏன் மீண்டும் அவர்களின் செயலைச் செயலாக்கிடக் கூடாது..? என்ற வினா எழும்பலாம்.

செடி சிறிதாக உள்ள பொழுது அதற்குகந்த ஆகாரத்தைச் செலுத்தினால் போதும். வளர வளர வளர்ச்சிக்குகந்த ஆகாரம் தேவைப்படுகிறது. வளர்ந்து முதிர்ந்த மரமாக ஆன பிறகு தன் உணவைத் தானாகவே எடுத்துக் கொள்ளும் வளர்ச்சியில் மரமுள்ளது.

சிறிய பயிர்களுக்கு நீர் ஊற்றித் தான் வளர்க்க வேண்டும். முற்றிய மரத்திற்கு அதன் உணவை அதுவே எடுத்துக் கொள்ளும்

அதைப் போன்று சப்தரிஷிகள் அவர்களின் சக்தியைப் பூமியின் கரு வளர்த்துச் செயல்படுத்த ஆரம்ப வளர்ச்சிக்கு ஆரம்ப நிலைக்குகந்த உணவு படைத்தால் போதும்.

வளர்ச்சியின் பெருக்கம் கொண்ட பிறகு வளர்ச்சிக்குகந்த உணர்வலைகளை அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று பலவாகப் பெருகியுள்ள மனித எண்ணங்களின் ஈர்ப்பு நிலைக்கும் கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் காலங்களின் (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) எண்ண ஈர்ப்பிற்கும் பல மாற்றங்கள் உண்டு.

1.பெருகியுள்ள இன வளர்ச்சியின் அழிவு நிலை நெருங்கிவிட்டது.
2.மனித ஆத்மாக்களுக்குத் தன் உணர்வைத் தான் அறியும் பக்குவ முறைகள் எல்லாம் மாறிவிட்டது
3.உலகப் பொது எண்ணச் சுழற்சி ஈர்ப்பே நாகரீகம் என்ற உணர்வின் பேராசைப் பிடிப்பில் செயல்பட்டு விட்டது
4.ஆகவே அவ்வாறு பெருகிய மனித இனக்கரு இக்கலி மாற்றத்தில் மாறப் போகின்றது.

இந்த மாற்றக் காலத்திற்குள் சப்தரிஷிகளினால் இவ்வளவு காலங்களும் அங்கங்கு செடியாக உள்ள பயிருக்குகந்த உணவளித்த நிலையில்… அந்தப் பயிரே மரமாகித் தன் உணவை எடுத்துக் கொள்ளக்கூடிய ஞான நெறி முறைக்கு ஈர்த்துச் செல்கின்றனரப்பா…!

பஞ்சாக உள்ள எண்ணங்களை பஞ்சைப் பக்குவப்படுத்தி பதம் பிரித்து அதனதன் குணத்திற்கொப்ப நூற்பு நிலை ஏற்படுத்தி இந்தப் பஞ்சுடன் கலக்கும் அமில வண்ணத்தை ஏற்றி ஆடை நெய்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று பஞ்சாக உள்ள பக்தி நெறி முறை உணர்த்தி அந்தந்தக் கால நிலைகளுக்கு ஒப்ப சப்தரிஷிகளின் உணர்வலையால் அவர்களின் உணர்வுக்குகந்த பக்குவ முறைகளை ஏற்றித் தன் ஈர்ப்பின் ஞானச் சுழற்சியுடன் சுழல விட்டுக் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளின் நிலையை… சப்தரிஷி தான் ஆண்டவன் என்று உணர்த்துகின்றீரே…!
1அப்பொழுது இந்தப் பூமியின் சக்திகளை எல்லாம் தந்தது அவர்கள் தானா…? என்ற வினா எழும்பலாம்.
2.இவ்வினாவிற்கு விடை ஆம் என்பது ஒன்றே தான்.

சப்தரிஷியினால் ஏற்படுத்திக் கொண்ட மண்டலங்களின் நிலையினால் தான் ஒவ்வொரு மண்டலத்தின் தொடர்பைக் கொண்டு… அதனதன் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு… அது வெளிப்படுத்தும் உணர்வு குணத்தினால் தான் மணமும்… மணத்திற்குகந்த சுவையும் வண்ணங்களும் நம் பூமியில் தோன்றின.

பல சக்தி அலைகள் நிறையப் பெற்ற நம் பூமியில் மனித இன ஞானங்கள் வளர்ந்தோட வளர்த்தியதே “பல மண்டலங்களின் ஈர்ப்பு உணர்வினால் தான்…!”

1.ஒவ்வொரு ஞானியும் அவனவன் எடுத்த உணர்வின் குண அமிலத்தை வளர்த்த ஞானத்தால் மண்டல நிலை எய்தி
2.இம்மண்டல வளர்ச்சி ஞானத்தால் இன்றைய இந்நிலை உருப்பெற்றுள்ளது.

அத்தகைய ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பல ஆத்மாக்கள் நிலை என்ன…?

இக்கலி மாறி கல்கி தோன்றி இச்சுழற்சி வட்டத்திலிருந்தே மாறி இம்மனிதக் கரு ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் பிறிதோரு மண்டல வளர்ச்சிக் கருவுடன் பிறப்பில் மனிதக் கரு வளரும் நிலையில்
1.மனிதனின் உருவ அழகுப் பொலிவு பெற்று
2.இன்று பூமியின் ஈர்ப்பில் நடக்கும் மனிதன்
3.நாளை “பறக்கும் நிலை” கொண்ட வளர்ச்சி ஞானம் பெறுகின்றான்.

சப்தரிஷியின் உணர்வின் வட்டத்திலுள்ள மனிதக் கருக்கள் எல்லாம் இந்நிலை பெறுகின்றன. இன்று சித்து நிலையில் சுழன்று ஓடும் பல ஆத்மாக்களும் இவ்வுணர்வின் கூட்டத்துடன் செல்கின்றன.

சப்தரிஷியின் உணர்வின் சுழற்சி ஈர்ப்பில் உள்ளவர்களுக்கே இந்நிலை என்றால்…!
1.சப்தரிஷியின் உணர்வுடனே சப்தரிஷியின் செயலாகச் சுழலப்பெறும் ஆத்மாக்கள்
2.இன்றெப்படி சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றனரோ அந்நிலையின் ஒளி ஞானம் பெற்று
3.ஒவ்வொரு மண்டலத்துக்குமே தன் ஈர்ப்பின் உணர்வு சக்தியைப் பரப்பித் தன் உணர்வின் இன்பத்தை உணர முடியும்.

மனித வாழ்க்கையில் வாழும் இந்தக் குறுகிய காலத்தை “இவ்வாழ்க்கை என்ற… கூட்டுக் குடும்பப் பொருள் சேர்க்கையில் தான் அந்த இன்பம் உண்டு…!” என்பது மனிதனின் எண்ணம்.

1.இந்த மனித வாழ்க்கையில் காணும் இன்பம் சிற்றின்பம் தான்.
2.பேரானந்தப் பெரு நிலை என்னும் உணர்வு ஞான வளர்ச்சி இன்பம் தானப்பா அழியா இன்பம்.
3.ஆனாலும் எவ்வின்பம் பெறவும் இந்த மனித வாழ்க்கை நிலையின் சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலையில் தான் பெற முடியும்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் “சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும்”

 

போகரின் காலத்திற்குப் பிறகு போகரால் வழிப்படுத்திச் சென்ற பண்டிகை தான் தீபாவளிப் பண்டிகை.
1.நம்முள் உள்ள அசுர குணங்களை அழித்து நற்குணங்களின் ஒளியைப் பெறத் தான்
2.தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் முறை உணர்த்தப்பட்டது.

ஆனால் இன்றைய எண்ண ஓட்டத்தில் அசுரனையே வணங்கும் முறைப்படுத்திச் செயல்படும் வழியில் எண்ண ஓட்டங்கள் வளர்ந்து விட்டன.

தீய குணங்களை அகற்ற வேண்டிய அந்த நந்நாளில் சமமான எண்ணத்தைச் சாந்தமுடன் புத்தாடை புனைந்து… மகிழ்ந்து… தீபமேற்றி… உற்றார் சுற்றமுடன் இனிமையுடன் கலந்துறவாட ஏற்படுத்திய தினத்தைச் “சந்தோஷமுடன் எந்த ஆத்மா எந்த வழியில் கொண்டாடுகிறது…?”

1.இன்றைய சமுதாய இனப் பிடிப்பாக “அந்த நாள்”
2.பல இன்னல்களுக்கு மனித ஆத்மாக்கள் செல்லக்கூடிய உணர்வு ஓட்டத்தில் சுழன்று கொண்டுள்ளது.
3.அன்று சித்தர்களினால் ஒவ்வொன்றையும் உணர்த்திச் சென்றதன் பொருள் வேறு
4.இன்றைய மனித ஆத்மாக்கள் செயலாக்கும் பொருள் வேறு…!

ஒவ்வொரு காலத்திலும் சப்தரிஷிகள் சில உடல்களை ஏற்று எதற்காக அவர்களின் உணர்வலைகளை வெளிப்படுத்திச் செல்கின்றனர்…?

1.படைப்பின் படைப்பையே
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக்க…
3.அவர்களின் செயல் முறை செயலாக்குகின்றதப்பா…!

ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிச் சுழலும் வளர்ச்சியில்
1.சுழற்சி நிலைக்கொப்ப வழி நிலை செல்லாமல்
2.சுழற்சியின் சக்தியைப் படைக்கப்பட்டவனிடம் சமர்ப்பிக்கும் செயலுக்குத் துணை செய்கின்றார்கள் சப்தரிஷிகள்.

நீரில் ஓட்டத்தை நாம் அதன் இச்சையில் (போக்கில்) விடாமல் அந்த நீரைத் தேக்கி வைத்து “அணையைக் கட்டி” அந்த நீரின் சக்தியைப் பல ரூபங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

அதைப் போல்… பால்வெளி மண்டலத்தில் படர்ந்து சுழன்று நிறைந்துள்ள அமில குணங்களின் ஈர்ப்பை
1.உருவான உலகமாக்கி
2.உலகினிலே கருவைக் கொண்டு உருவாக்கி
3.உருவின் உருக்களாகப் பல உருக்களை வளரச் செய்து
4.தன் ஞானத்தின் சக்தி அலைக்குச் சக்தி எடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்

நாம் பலன் காணத்தான் பலவற்றையும் செய்கிறோம். ஒவ்வொரு மனிதனும் அவன் எண்ணத்திற்குகந்த நிறைவைக் காண நித்தமும் செயலாற்றுகின்றான்.

இருந்தாலும்… எண்ணியோ எண்ணாமலோ எல்லா ஆத்மாக்களும் தன் உணர்வில் வழி பெறுவது எதனை…?

வாழ்க்கையில் தன் உணர்வுக்குகந்த எண்ணச் செயல் நிறைவுறாதவன் விரக்தி என்ற வீண் சலிப்புடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை என்ற நிலைக்கும் தன் உணர்வைச் செயலாக்குகின்றான்.

வெறுப்பு விரக்தி என்ற நிலை மனிதனுக்கு எப்படி ஏற்படுகின்றது..?

தன் உணர்வின் எண்ணத்திற்கொப்ப எண்ணச் செயல் நிறைவுறாத தருணத்தில் சலிப்பும் சோம்பலும் விரக்தியும் உட்பட்டுத் தன் ஆத்மாவையே மாய்த்துக் கொள்ளும் வழிக்குச் செல்கின்றான்.

உணர்வாலும் உருவாலும் தன் நிலையை எண்ணுபவன்…
1.உருவ எண்ணத்தின் சுழற்சியிலேயே சிக்குண்ட வாழ்க்கை உணர்வை மாற்றி
2.எண்ணத்தால் உணரும் ஞான வழிபாட்டில் தன் உணர்வைச் செலுத்தினால்
3.விரக்தியும் சலிப்பும் அற்று விவேகம் பெறலாம்.

இவ்விவேக உணர்வலையின் ஞானத்தை உணர்ந்து வாழ்க்கையில் எண்ணும் நிறைவைப் பல ஆத்மாக்கள் பெறுகின்றனர்.

ஆனால் இன்றைய காலத்தில் மனிதனின் உணர்வலை அனைத்தையுமே அரசர்கள் ஆண்ட காலத்தில் தன் உயர்வை வெளிக்காட்ட
1.“கதைகளையும்… கற்பனைக் காவியங்களையும்…” உண்மை போல் வெளிப்படுத்தியதை…
2.அந்த மாய உணர்வுகளையே உண்மை என்ற வாழ்க்கையின் நெறியில் கலந்து விட்ட
3.அத்தகைய உணர்வலையின் சுழற்சியில் சிக்கி (SOCIAL MEDIA) உழன்று கொண்டுள்ளது.

இந்த நிலை மாறிச் சப்தரிஷிகளின் செயல் வட்டத்திற்குள் சென்றால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே அவர்களின் உணர்வின் உணவு கிடைக்கப் பெறும்.

அதன் வழியில் அவர்களுக்கும் அவர்களின் சக்தி அமிலத்தைக் கூட்டிடல் முடியும். அதன் மூலம்
1.மீண்டும் மனிதக் கரு தோன்றினால் தான்
2.மனிதக் கருவின் பிம்ப உடல் ஞானத்தை வைத்துத்தான் மீண்டும் மனித சமுதாயம் காண முடியும்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும். உணவு இல்லாவிட்டால் அவர்களின் உணர்விற்கு உருவில்லை.

சப்தரிஷிகளின் செயல் அந்தந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்படுகின்றதென்றால் இந்த அடிப்படையில் தான்…!

இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் இன்றுள்ள எண்ண உருவ சுவாச மக்கள் இதே உணர்வலையில் இந்தப் பிம்பங்களை மாற்றி மீண்டும் மனித அமில ஜீவன் தோன்றினால்… இன்றுள்ள ஞானத்தைக் காட்டினாலும்… உருவ பிம்ப அழகைக் காட்டிலும்.. முற்றும் மாறுபட்ட உருவ அமைப்பு ஞான உருவங்கள் தான் அமையப் பெறும்.

அதுவும் கலி மாறி கல்கி மனித ஜீவன் கொள்ளப் பல பல ஆண்டுகள் ஆகிவிடும்.
1.காற்று மண்டலத்தில் உருளும் அமில உயிர்களுக்கெல்லாம்
2.மீண்டும் ஜீவன் கொள்ளும் காலத்திற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

அதனால் இன்றைய ஞான சக்திகளைச் செயலாக்கக்கூடிய பிம்ப ஜீவன்களான நாம் நம் சப்தரிஷிகளின் உணர்வலையின் சக்தியுடன் ஜெபம் கொண்டால்
1.அவர்களின் செயலின் சக்திக்கு
2.நம் சக்தியும் கூடிச் செயல் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நாளும் நமக்குள் தீமை சாடாதபடி… அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து அந்த உணர்வை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதன் வழியில் நாம் இடும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இங்கே பூமியில் படரச் செய்யப்படும் போது
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளை எல்லாம் அடக்க முடியும்…
2.நாம் வாழும் பகுதியிலிருந்து அவைகளை அகலச் செய்யவும் முடியும்.

அதே சமயத்தில் கடந்த காலத்தில் மனிதனுக்கு மனிதன் அரசின் நிலைகள் கொண்டு மத பேதம் இன பேதம் என்ற நிலைகளில் அழித்திட்ட உணர்வுகள் நம் முன் படர்ந்து கொண்டிருந்தாலும்
1.அதனைச் செயலற்றதாக்க…
2.யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம்
3.நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை மூச்சலைகளாக வெளியிடுவீர்கள் என்றால்
4.கடந்த காலத்தில் வெளியிட்ட மனிதனுக்கு மனிதன் பழி தீர்க்கும் உணர்வுகள் இங்கே நிற்காது… அவைகளும் நகர்ந்து சென்றுவிடும்.

மேலும் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும் போது… உங்களிடமிருந்து வெளிப்படும் அந்த உணர்வின் எண்ணங்கள் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு… இந்தக் காற்று மண்டலத்தில் அது ஊடுருவி… அதனின் வலுவாற்றல் கொண்டு தீமையை விளைவிக்கும் தீய உணர்வின் தன்மைகளை எல்லாம் “கடலுக்கே துரத்தியடிக்க முடியும்…”

ஆகவே… தவறே செய்யவில்லை என்றாலும்… ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளாக இருந்தாலும்… மத வெறியால் அவர்களை அழித்திடும் நோக்கத்தில் இரக்கமற்ற செயலாகச் செயல்படும் அந்த உணர்வுகளை நீக்கிட அருள் ஞானிகளின் உணர்வை இந்த உலகம் முழுவதும் நீங்கள் பரவச் செய்யுங்கள்.

அப்படிப் பரவச் செய்தால் தீமையான உணர்வுகளை மற்றவர்கள் நுகரும் தன்மைக்கே இடம் கொடுக்காது “மனிதர்கள் வாழும் இடத்தை விட்டு நகர்ந்து செல்லச் செய்யலாம்…”

இவ்வாறு அதனின் செயலாக்கத்தைக் குறைத்து
1.மக்களுக்குள் அறியாது வரும் தீமையான உணர்வுகளை எண்ண விடாது தடுக்க
2.உங்கள் உணர்வுகள் பயன்பட வேண்டும் என்பதற்குத் தான்
2.இதை உங்களுக்குள் உபதேசிப்பதும்… தியானத்தால் வளர்க்கச் சொல்வதும் (ஞானகுரு).

காரணம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வின் அலையாக யாம் பதிவு செய்யும் போது…
1.உங்கள் நினைவின் ஆற்றலைக் கண்ணுக்குக் கொண்டு வந்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கினால்
3.கண்ணுக்கு எட்டாத தூரத்தில் பல இலட்சம் மைல்களுக்கு அந்தப் பக்கம் இருந்தாலும்
4.துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளி வரும் அந்த உணர்வுகளை எளிதில் கவர முடியும்.

ஆண்டென்னாவின் பவரைக் கூட்டிக் கொண்டு விஞ்ஞான அறிவால் சேடிலைட் டி.வி. என்று தெளிவாக எப்படிக் காணுகின்றனரோ இதைப் போல் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் செலுத்தி ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.

பதிவு செய்த அருள் ஞானியின் உணர்வை நினைவுக்குக் கொண்டு வந்து அருள் உணர்வுகளை நீங்கள் பெற்று வாழ்க்கையில் வரும் அறியாத இருளை நீக்கி விட்டு… மெய்ப் பொருள் காணும் நிலையைப் பெற வேண்டும்.

இதன் மூலம்… தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக மகிழ்ந்து வாழும் ஆற்றலாகப் பெறுவீர்கள்… எப்படியும் அதை உங்களுக்குள் பெறச் செய்ய வேண்டும்… என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்குத் தெரியாமலே நம் உடலில் கோபமும் வெறுப்பும் அதிகமாகச் சேர்ந்து விட்டது என்றால் எந்த வேலையைச் செய்தாலும் வெறுப்பாகவே வரும்.

கோபம் வரும் சமயங்களில்… குடும்பத்திலோ அல்லது தொழிலிலோ யாரைப் பார்த்தாலும்
1.ஏதாவது வேலை சொல்லிக் கொண்டிருக்கும்போது திருப்பிக் கேட்டால் உடனே கோபம் வரும்
2.இப்படி அடிக்கடி செய்தோம் என்றால் இரத்தக் கொதிப்பாக மாறும்.

அதே சமயத்தில் இந்தக் கோபமும் வெறுப்பும் வரப்படும் போது ஒருவர் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து… அவர்கள் சிரிப்பதைப் பார்த்தால் உடனே அது எதிர்நிலையாகும்.

எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்…? என்று அடிக்கடி அதைப் பார்த்து அவர்கள் சந்தோஷத்தைக் கண்டு வெறுத்தோம் என்றால் நம் உடலில் சர்க்கரைச் சத்து உண்டாகும். இந்த இனிப்பு பிரிந்துவிடும்.

1.அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்ற அந்த உணர்வை எடுத்து
2.எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்…? என்று இந்த வெறுப்பு வரப்படும் போது
3.மற்ற உணர்வுகள் இங்கே சேர்த்தவுடனே சர்க்கரை பிரிந்துவிடும்.

பொதுவாக… நமக்குள் ஒரு மகிழ்ச்சியை ஊட்டுவதும் ஒரு இயக்கச் சக்தியாக இருக்கக்கூடியதற்கு அந்த (சந்தோஷம்) உணர்வு வந்து தான் சுவை கொடுக்கும்.

ஆனால் மேலே சொன்னபடி நாம் வெறுக்கும் போது
1.அந்தச் சுவை பிரிந்து சென்றால் சர்க்கரைச் சத்து வந்துவிடும்.
2.இந்தக் காரமும் அதுவும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இரண்டும் சண்டை போடும்.
3.சண்டை போடுவதற்கே நேரம் பத்தாது.

இது பெருகினால் உடலில் நிச்சயம் இரத்தக் கொதிப்பு வரும். சர்க்கரைச் சத்துடன் இந்த இரத்தக் கொதிப்பும் சேர்ந்தால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது இருதயம் பலவீனமாகும்.

சண்டை போட்டோம் என்றால் இருதயத்தில் இரத்தம் செல்லும் வால்வுகள் வீக்கமாகி விடும். அப்புறம் அது எடுத்துத் தள்ள முடியாதபடி அந்த வால்வுகள் கெட்டுப் போகும்… இருதய சம்பந்தப்பட்ட நோய் வரும்.

நாம் தவறு செய்யாமலே இப்படி எல்லாம் வரும்.

பெண்கள் நிறையப் பேருக்கு இருதய வலி உண்டு…! நெஞ்சு வலி நெஞ்சு வலி என்று இருதயங்களில் இரத்த வால்வுகளில் பலவீனம் அடையப்படும் போது அது சரியாக வேலை செய்யாது.

1.டாக்டரிடம் சென்றால் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பார்
2.படி மேல் ஏறினால் மூச்சுத் திணறலாகும்… அது ஆகும்… இது ஆகும்…! என்று பயத்தை ஊட்டிவிடுவார்கள்.

இந்த எண்ணங்களைக் கொஞ்சம் வேகமாக எண்ணினால் “இப்படி ஆகிவிட்டதே… பிள்ளை குட்டிகள் இருக்கின்றதே… தொழில் இருக்கிறதே…! என்று வேதனையை வளர்த்துக் கொள்கிறோம். நாம் தவறு செய்யாமலே நமக்குள் இத்தகைய எண்ணங்கள் வந்து விடுகிறது.

டாக்டர்கள் உடலை முழுமையாகப் பரிசீலனை செய்த பின்பு… ஹார்ட் அட்டாக் வரலாம்… மூளையைப் பாதிக்கும்… கை கால் வராது…! என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போவார்கள். இந்தெந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் இல்லை என்றால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள்.

எல்லாவற்றையும் சொன்னவுடன் இன்னும் கொஞ்சம் வேகமாக அதை வளர்க்க ஆரம்பித்துவிடுவோம்.

உதாரணமாக இது எதுவுமே தெரியவில்லை… டாக்டரிடம் செல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். உடலில் மேல் வலி..! கிறு…கிறு… இருக்கிறது என்று சொல்லி சுக்கையோ மிளகையோ எதையாவது எடுத்துச் சாப்பிட்டு விட்டு ஒரு சிலர் பேசாமல் இருப்பார்கள்.

ஆனால் டாக்டரிடம் சென்று இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்த பின் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது… படி மீது ஏறினால் இன்னும் பாதிக்கும் என்று சொன்னால் போதும்.

1.முதலில் சிறிதளவு அதிகமாக இருந்த இரத்த அழுத்தத்தை “இரண்டு பங்காக்கி விடும்…”
2.200… 250க்கு மேல் சென்றுவிடும்… அதற்குப் பின் அவர்கள் சொல்லும் மருத்துவத்தைச் செய்யாமல் இருக்க முடியாது.
3.நம் எண்ணங்கள் பலவீனம் அடைந்தால் இது எல்லாம் ஆகத்தான் செய்யும்.

இப்படித்தான் நம்மை அறியாமல் நம் ஆன்மாவில் எத்தனையோ அழுக்குகள் சேர்கிறது. இதை நாம் துடைக்க வேண்டுமல்லவா… துடைப்பதற்கு என்ன வழி வைத்திருக்கின்றோம்…?

ஈசனுக்குச் செய்யும் தொண்டு

 

இன்றைய உலக சூழ்நிலையில் மனிதனல்லாது வேறு ஒரு சரீரத்தை உருவாக்கும் செயல் நமக்கு வேண்டாம். ஆகையினால் யாம் உபதேசிப்பதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்து சொர்க்க பூமியான இந்த மனித உடல் கிடைத்த பின் அசுத்த பூமியாக இதை மாற்ற வேண்டாம்.

சொர்க்க பூமியான இந்த மனித சரீரத்தை நாம் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்… சொர்க்கலோகமாக நாம் மாற்றலாம். உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியாக மாற்றும் பொழுது இந்த உடலை விட்டுச் செல்லும் போது ஒளியின் தன்மை பெறலாம்.
1.தியானம் எடுத்த அனைவருக்கும் இருட்டிலே கண்களை விழித்துப் பார்த்தால்
2.நம் உடலில் இருந்து பளீர்…ர்… பளீர்…ர்… என்று வெளிச்சங்ள் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
3.நாம் எந்த அளவிற்குத் தியானம் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் சக்தி நமக்குள் வளர்கின்றது… ஒவ்வொருவரும் இதை உணர முடியும்

சுலபத்தில் கிடைக்கிறது என்று அலட்சியப்படுத்தி விட வேண்டாம்.

எத்தனையோ கடினத்திற்கு பின் தான் இது வருகின்றது. புதுத் துணிகளை நாம் எடுத்து அதைச் சட்டையாகத் தைக்க தெரியாதபடி “நானும் தைப்பேன்” என்று கத்திரித்து வீணாக்கி விடாதபடி நாம் செயல்பட வேண்டும். அதாவது நாம் பயன்படும் நிலைகளுக்கு நம் உணர்வின் ஆற்றலை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

1.நீங்கள் அனைவருமே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
2.அவர் அருள் துணை கொண்டு மெய்ஞானிகள் அருள் ஒளியைப் பெற்று
3.நம்மை அறியாது இருள் சூழச் செய்யும் இருளை நீக்கி இந்த ஒளியின் நிலைகள் வழியறிந்து செயல்படும் ஆற்றலை நாம் பெற்று
4.நம் பேச்சு மூச்சும் நம்மைப் பார்ப்போர் அனைவருக்கும் நன்மை பயக்கட்டும்.
5.அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது நமக்குள் நல்ல உணர்வாகச் சென்று ஒளியின் சுடராகச் செல்லட்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நேரமும் வீண் விரயமாக்காதபடி நம்மை அறியாது இருளச் செய்து கொண்டிருக்கும் சில துன்பங்களை ஊட்டும் உணர்வுகளை நமக்குள் புகாதபடி அந்த உணர்வுகளைத் தடைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு உட்புகந்தாலும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கடுமைப்படுத்தி அந்த அசுத்தங்களை நீக்கி உங்கள் உடலுக்குள் புனித சக்தியாக மாற்றுங்கள். ஏனென்றால்
1.நம்மை உருவாக்கிய ஈசனின் வீடு இந்த உடல் அவனுடைய ஆலயம் அது.
2.ஆகையினால் அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்
3.எந்த அளவிற்கு நாம் சுத்தப்படுத்துகின்றோமோ “அதற்குண்டான கூலி” கிடைக்கும்.

நமக்குள் வீற்றிருந்து நம்மை உருவாக்கி நல்ல நிலைகளை ஊட்டி நம்மை இயக்கச் செய்யும் அந்த ஈசனுக்குச் செய்யும் தொண்டாகக் கருதி நாம் செயல்பட வேண்டும்.

உங்களுக்குள் யாரும் துன்பத்தை ஊட்டும் எண்ணங்களை உருவாக்கினாலும்
1.அது எனக்கல்ல… அது என்னைச் சாராது.
2.அந்த ஈசனின் அருள் ஒளியை நான் பெறுவேன்
3.அவன் எனக்குள் இருக்க… நல்ல உணர்வை அவன் எனக்கு ஊட்டுவான்
4.”அவன் வழிகளிலே நான் செல்வேன்” என்று இந்த எண்ணங்களை நீங்கள் மாற்றிச் செயல்படுத்திப் பாருங்கள்.

உங்களுக்குள் தெளிவான நிலையாக வரும்.

“தானாக உணர்ந்து செயல்படும் நிலை” இன்றுள்ள மனிதர்களுக்குக் குறைவுபட்டு விட்டது

 

அறியாதவர்க்கு அரிய எண்ணத்துடனே அறிந்து வாழ வேண்டும் என்ற நிலையை எண்ணிடாமலே வாழ்கின்றார்கள். அறிந்தவர்களோ அந்தமும் ஆதியும் அறிய வேண்டும் என்ற அதிக ஆசையுடன் வாழ்கிறார்கள்.

கற்றவர் கல்லாதவர் அறிந்தவர் அறியாதவர் ஏழை செல்வந்தன் இப்படிப் பல தரப்புள்ள மேடு பள்ளம் கொண்ட உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொண்டு இவ்வுலகமே சுழல்கின்றது.

கற்றவருக்குத் தான் கற்ற வித்தையும் கர்வமும் கல்லாதவருக்குத் தான் கல்லாத நிலை கொண்டு தாழ்வு எண்ணமும் தன் மனதிலுள்ளேயே உலக மக்கள் ஏற்றம் தாழ்வு என்ற இரு நிலை படைத்த மாய ரூபத்தையே மனதினில் எல்லாம் கலக்கவிட்டு வாழ்கின்றார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற உண்மையைத் திருவள்ளுவர் ஆதி காலத்திலேயே உணர்த்தி உள்ளார். இன்றுள்ள நம் மக்களின் மனதில் ஏட்டுப் படிப்பின் எண்ணத்துடன் தான் எண்ணி வாழ்கின்றார்கள்.

ஏட்டுப் படிப்பிற்கு பதவி பணம் என்ற போர்வையைப் போர்த்தி உள்ளதால் அந்நிலைக்காக ஏங்குபவர் பலர் உள்ளனர். படிப்பும் பட்டமும் இன்று அளித்த மாய ரூபங்கள் தான் இவை.

1.தன் எண்ணத்தினால் தன் ஜெபத்தினால் தன்னுள்ளேயே உலக உண்மைகளை ஈர்க்கும் சக்தியைப் பெற்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு
2.எந்தப் பள்ளியில் படித்து யாரால் பட்டமளிக்கப்பட்டதப்பா…?
3.அன்று கம்பர் எழுதிய கவிதை எல்லாம் எந்தப் பட்டிமன்றத்தில் ஏற்று படிக்கப்பட்டதப்பா…?

கம்பரும் திருவள்ளுவரும் வியாசரும் வால்மீகியும் சேக்ஸ்பியரும் இப்படி எண்ணிலடங்காப் பல ஞானிகளும் ரிஷிகளும் எழுதிய நூல்கள் எல்லாம் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று எழுதினார்களப்பா…?

அன்று நமக்குத் தம் சக்தியை உபயோகப்படுத்தி உன்னத நூல்களை அவர்கள் அளித்த நிலை கொண்டு தான் இன்றும் பல போதனா மொழிகளில் பள்ளியிலும் கல்லூரியிலும் சொல்லி வருகிறார்கள்.

அப்படிப்பைக் குழந்தைகள் நிலைக்கு இன்றுள்ள உபாத்தியாயார்கள் மதிப்பெண்ணும் தருகின்றார்கள். இன்றுள்ள இக்கலியுகமே தானாக உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றி வருகிறது.

உலகில் ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய சக்தி நிலை தோன்றிக் கொண்டே வரும் பொழுது இம்மமனிதனின் எண்ணத்தில் மட்டும்தான்… தான் உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றிக் கொண்டு பெரும் பேராசையின் நிலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு வாழுகின்றான் இன்றுள்ள மனிதன்.

1.மனிதர்களின் மனம் எல்லாம் ஏட்டுப் படிப்புடனும்
2.பிறர் சொல்லிய உண்மைகளை ஆராய்ந்து பார்க்கும் நிலையுடனும்
3.அந்த நிலையைக் கொண்டு விவாத நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.
4.இன்று மனிதர்கள் உயிர் வாழும் நிலையே செயற்கையினால் தான் நடந்து வருகின்றது.

ஏன் அச்சூரிய சக்தியின் நிலை ஒரே நிலையில் உள்ள பொழுது நம் உணர்வின் நிலையும் உயிரணுவின் நிலையும் மாறுபட்டுள்ளன என்று மனநிலையில் நீங்கள் எல்லோரும் எண்ணிடலாம்.

நாம் உண்ணும் உணவிலும் தாவரங்களிலும் அதனதன் தன்மை கொண்டு அவைகள் உற்பத்தியாக இன்றுள்ள பூமி நிலை இல்லையப்பா.

இன்று இப்பூமியில் வீசிடும் காற்றே பெரும் விஷத்துடன் வீசும் போது
1.அந்தத் தாவரங்கள் எந்த நிலை கொண்டு வளருமப்பா…?
2.தாவரங்கள் மட்டுமல்ல இன்று வளரும் குழந்தைகளின் நிலையும் எப்படியப்பா இருந்திடும்…?

விஷமான காற்றைச் சுவாசிக்கும் மனிதனின் மனநிலையும்… தாவர நிலைக்கும்… இன்றைய மனிதர்களின் ஆராய்ச்சியில் வந்த “பல வகை மருந்துகளின் நிலை கொண்டு தான்” மனிதனும் தாவரங்களும் வாழ்கின்றதப்பா.

பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் எந்த நிலை கொண்டு வீசுகின்றதோ அந்த நிலை கொண்டு தான் அச்சூரியனின் ஒளி காற்றில் பட்டவுடன் தாவரங்களின் தன்மையும் வளரும் நிலையில் உள்ளது.

இக்காற்றையே நம் செயற்கைக்காக நம்முடைய எண்ணத்தில் எண்ணும் சுகபோகங்களுக்காக நாம் உற்பத்தி செய்திடும் பல செயற்கையின் தன்மையினால் இப்பூமியிலிருந்து எடுத்த பல உன்னதத் திரவியங்களை (பெட்ரோல்) நம் செயற்கைக்காக உபயோகப்படுத்தி… அதை விஷமாக இக்காற்றிலே கலக்க விட்டு அவ்விஷத்தன்மையுள்ள காற்றையே இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் சுவாசிக்கும் நிலையினால் தான்… இன்றைய மனிதர்களின் நிலையும் மற்ற ஜீவராசிகளின் நிலையும் உள்ளதப்பா.

இப்பூமியில் விளைந்திடும் பலவித நறுமணங்கள் கொண்ட நல் மணத்தை நம் சுவாச நிலைக்கு நாம் ஏற்றுக் கொள்ளும் நிலையை நாம் மாற்றிக் கொண்டு வாழ்கின்றோம்.

பல வகைத் தாவரங்களிலிருந்து நம் உடலுக்கும் மனதிற்கும் எந்தெந்த நிலையில் அவை நன்மை அளிக்கின்றன…? அதனால் நம் உடலுக்கும் எண்ணத்திற்கும் எந்த நிலை பெறுகிறது…? என்று உணர்ந்து
1.இன்று பல தாவரங்களை மரம் செடி கொடிகளை நம் தேவைக்காக அழித்து வாழ்ந்திடும் நாம் ஒன்றை அழிக்கும் பொழுது
2.இரண்டை உற்பத்தி செய்யும் நிலைக்கு ஏனப்பா நாம் வரக்கூடாது…?

தாவரங்களினால் தான் இக்காற்றி கலந்துள்ள விஷத் தன்மையை ஈர்த்து இக்காற்றைச் சுத்தமாக்கும் நிலை உள்ளதப்பா. இத்தத் தாவரங்களின் உற்பத்தியை உணர்ந்து ஒவ்வொரு மனிதரும் இச்செயற்கையின் சொரூபத்திற்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாமல் இயற்கையைப் போற்றி வணங்கிடுங்களப்பா.

இயற்கையின் உன்னத அழகைக் கண்டு சுவாசித்து மகிழ்ந்தாலே நம் உயிரணுவிற்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றதப்பா.

ஒவ்வொரு மனிதரும் தன் நிலைக்கும் அச்சக்தியின் நிலை உண்டு. தன்னாலும் இயற்கையின் உண்மையை உணர்ந்து நடந்திட முடியும். தானும் ஒரு திருவள்ளுவராகவும் வான்மீகியாகவும் இயேசு பிரானாகவும் இப்படிப் பல நிலை கொண்ட ஞானிகளைப் போல் தானும் ஆகலாம் என்ற உண்மையை உணர்ந்து ஒன்றிலிருந்து ஒன்றைக் கூட்டி வாழ்ந்திடுங்கள்.

இருந்த உண்மையையே விவாதத்திற்கு ஏற்கும் தன்மையை மாற்றி
1.தான் கற்கும் கல்வி தன் உணர்வினால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஈர்த்து
2.இவ்வுலக நன்மைக்காக இவ்வுயிரணுக்களின் நன்மைக்காக இவ்விஷமான கலியின் கடைசி நிலையை மாற்றி
3.கல்கி எனும் புத்தொளிர் கொண்ட இயற்கைத் தேவனின் இயற்கைச் சக்தியைப் பெற்றிட
4.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம்மையே நாம் அச்சக்திக்காக அடிபணிந்து வாழ்ந்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சந்தர்ப்பவசத்தால் உடலில் சேர்த்துக் கொண்ட தீய உணர்வின் தன்மைகளால் மனிதனுக்குச் சில கடுமையான நோய்கள் வருகின்றது.

சாமியார்களோ அல்லது மந்திரவாதிகளோ மந்திரத்தால் மந்திரத்து சில வேலைகளைச் செய்து அந்த நோயினால் ஏற்பட்ட வலிகளை வேண்டும் என்றால் போக்கலாம். ஆனால் உடலில் விளைந்த நோய்களை மாற்ற முடியாது.

அதே போல் தான் டாக்டர்களால் மருந்து கொடுத்து வேதனைகளை நீக்கினாலும் உடலில் விளைந்த தீய விளைவுகளிலிருந்து மீள முடியாது. காரணம்… மீள வேண்டும் என்று சொன்னாலும் உடலுடன்… உணர்வுடன்… அது கலந்திருக்கும்.

நோயிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால்
1.நம் நினைவின் எண்ண அலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர வேண்டும்.

ஒரு பன்றி சாக்கடைக்குள் அது நாற்றமாக இருந்தாலும் அதைப் பிளந்துவிட்டு அதில் உள்ள நல்ல பருப்பினை (உணவுப் பொருளை) எப்படி எடுக்கின்றதோ அதைப் போல்
1.சாக்கடையாக இருக்கும் இன்றைய காற்று மண்டலத்திலிருந்து
2.அதற்குள் இருக்கும் அருள் ஞானிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை நாம் எண்ணி எடுக்க வேண்டும்.
3.அதை எடுத்து நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நீங்கள் எண்ணும் போது அந்த ஞானிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசமும் கூட்டுத் தியானமும். கூட்டுத் தியானத்தில் மகரிஷிகள் உணர்த்திய இந்த ஆற்றல் மிக்க நினைவலைகளை உங்கள் உடலில் ஆழமாகப் பதியச் செய்கிறோம் (ஞானகுரு).

பதியச் செய்ததை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கும் போது இந்தக் காற்றிலிருக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

உங்கள் வீட்டில் இருக்கும் டி.வி.யில் சாதாரண ஆண்டென்னா மூலம் பக்கத்தில் (LOCAL) ஒளி பரப்பாவதை எடுக்க முடியும்.

அதே சமயத்தில் சேடிலைட்டில் அனுப்பக்கூடியதை… அமெரிக்காவில் ஒளி பரப்பு செய்கிறார்கள் என்றால் அதை எடுக்கச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா தேவைப்படுகிறது. அதைக் கொண்டு தான் அங்கிருந்து ஒளிபரப்பு செய்வதை இங்கே தெளிவாகக் காண முடிகின்றது.

அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் உணர்வலைகளை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியை உங்கள் எண்ணத்தால் எண்ணி ஏங்க வைக்கின்றோம்.

இதைக் கேட்டுணரும் போது
1.இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள எலும்புகளுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
2.அப்படிப் பதிவான நிலைகள் கொண்டு கூட்டாகத் தியானிக்கும் போது அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

சாதாரணமாக ஒரு நூலினை வைத்து ஒரு பொருளைக் கட்டித் தூக்கினால் நூல் அறுந்துவிடும். பல நூல்களை ஒன்றாகத் திரித்தால் தான் அந்தப் பொருளைத் தூக்க முடியும்.

அது போல் தான் தனிப்பட்ட மனிதன் ஒருவர் அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுக்க வேண்டும் என்றால் சாதாரணமாக அது முடியாது.

1.காரணம்… அவர்கள் பிறவா நிலை பெற்று விண்ணுலகம் சென்றவர்கள்
2.பிறப்பின் மேல் ஆசை வைத்த நாம் அந்த உணர்வை அணுகினால் அது நம்மை அறுத்துவிடும்… கிட்டத்திலே நெருங்கவிடாது.

இருப்பினும் அந்த அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண உணர்வின் வேட்கையில் உங்கள் அனைவருக்குள்ளும் ஆழமாக அதைப் பதிவு செய்கின்றோம்.

இங்கே கூட்டுத் தியானத்தில் அதை உபதேசிக்கும் போது
1.அந்த அருள் ஞானிகளின் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு
2.உங்கள் கவனங்கள் அனைத்தையும் ஒருக்கச் சேர்த்து ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றோம்.
3.எல்லோரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் போது வலுவாகிறது
4.அந்த வலு கொண்டு காற்றிலே மறைந்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் சக்தியை
5.நாம் அமர்ந்திருக்கும் (தியானிக்கும்) இடங்களுக்கு அழைத்து வருகின்றோம்.

ஆக பரவலாக அது வரும் நிலைகள் கொண்டு இங்கே குவியப்படும் போது… உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்களை எண்ணி நான் தியானிக்கின்றேன்.

அது சமயம் குரு துணை கொண்டு உங்களால் அந்த மகா ஞானிகளின் பேராற்றல்மிக்க சக்திகளை உங்களால் பெற முடிகிறது. உங்கள் உடலில் அது சக்திவாய்ந்ததாக மாறுகிறது.

துன்பமோ துயரமோ நோயோ எதுவாக இருந்தாலும் அது வலு இழக்கிறது. உங்கள் ஆன்மாவும் மனமும் தூய்மை ஆகிறது. உயிரான்மா ஒளியாக மாறுகிறது.

மகா ஞானிகளின் அருகாமையை உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம் (ஞானகுரு). இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையுங்கள்

 

அருள் ஞானிகள் காட்டியதை… உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டச் செய்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றோம். அந்த உணர்வின் துணை கொண்டு உங்கள் எண்ணத்தால் பதிவு செய்த நிலைகளை
1.அந்த மகா ஞானியின் உணர்வலைகள்
2.நீங்கள் எண்ணிய உடனே அது கிடைக்கும்.

அந்த உணர்வின் சத்து கொண்டு உங்களை அறியாது வந்து தீமைகளை அகற்றுவதற்கும் கூர்மை அவதாரம் போன்று மனித வாழ்க்கையில் வரும் நிலையை அகற்றுவதற்கும் விண்ணை நோக்கி ஏங்குங்கள். அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றுங்கள்..

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் கண்டுணர்ந்த இரக்கத்தால் ஈகையால் பரிவால் பண்பால் நாம் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆழப் பதிந்து அதைப் பற்றிடாதபடி… பற்றற்தாக ஆக்கிட அந்த மெய் ஞானி உணர்வுகளைப் பற்றிக் கொள்ளுங்கள்.

தீமைகளைக் கண்டாலும் அந்த அருள் ஞானி அதைச் சுட்டுப் பொசுக்கியது போல நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடல் வேண்டும்.

மெய் உணர்வின் தன்மை வளர்ப்பதற்காக அவன் சுட்டிக்காட்டிய அந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் தான் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்வது.
1.இதை ஊழ் வினையாக்கி வினைக்கு நாயகனாக உங்கள் எண்ணத்தின் வலு கொண்டு எடுப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையலாம்.

அவனின் உணர்வை நீங்கள் பற்றி அவனுடன் இணைந்த நிலைகள் கொண்டு ஒளியின் சுடராக நாமும் வாழ முடியும் என்பதற்குத் தான் இதை உபதேசிப்பது.

1.இந்த மனித வாழ்க்கையில் எந்த ஈகை கொண்டு இருந்தாலும் அந்தப் பற்று உனக்குள் ஊழ்வினையாக விளைந்திடாது
2.அருள் ஞானிகள் உணர்வுகள் கூர்மையாக உனக்குள் விளைந்து
3.அவன் தீமையை அகற்றியது போல உன்னுடைய உணர்வின் எண்ணங்கள் ஒவ்வொரு நொடியும் உன்னைக் காத்திடும் நிலையாக
4.அந்த மகரிஷிகளை எண்ணும் பொழுது என்ன செய்ய வேண்டும்…?
5.அருள் உணர்வினை எவ்வாறு பற்ற வேண்டும் என்று குருநாதர் எனக்குக் காட்டினார்

ஆகவே குருநாதர் என்னை எதைப் பற்றும் படி செய்தாரோ அதை நீங்களும் பற்ற முடியும்.

உங்கள் வாழ்க்கையில் நன்மை செய்யும் நிலையாக பிறருடைய தீமைகளைக் கூர்மையாக எண்ணி அதன் உண்மைகளை அறிந்து தீமைகளை நீக்கினாலும்
1.உங்களுக்குள் அந்தத் தீமை விளையாதபடி காத்திட
2.அந்த அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பற்றிடவும் அந்த பற்றுடனே வாழ்ந்திடஅ செய்திடவும்
3.எமது குருநாதர் காட்டிய நிலையினை நீங்களும் பெற வேண்டும் என்று இதைச் செய்கின்றேன்

மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும் அறியாது சேர்ந்த தீமைகள் நோய்கள் அனைத்தும் அகன்று மகரிஷியின் அருள் வட்டத்தில் என்றென்றும் நாங்கள் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற வேண்டும்.

இவ்வாறு அடிக்கடி கூர்மையாக எண்ணினால் அந்த உணர்வின் சத்து நமக்குள் வந்து வேதனைப்பட்ட உணர்வுகளைப் பற்றற்றதாக ஆக்கச் செய்யும். அருள் ஞானி உணர்வைப் பற்றிக் கொண்டால் நமது வாழ்க்கையும் அடுத்து பிறவா நிலை அடைகின்றது.

1.இங்கே பற்றிக் கொண்டால் புவிக்குள் தான் செல்கிறோம்…
2.அங்கே அருள் ஞானிகளைப் பற்றிக் கொண்டால் அங்கே செல்கிறோம்.

அது தான் பிள்ளையாருக்கு முன் கேள்விக்குறி போட்டுக் காட்டி இந்த வாழ்க்கையில் கண்டுணர்ந்த
1.நஞ்சின் நிலைகளில் சிக்குன்டு இதைப் பற்றி மீண்டும் உடலுக்குச் செல்கின்றாயா…?
2.அல்லது இதைப் பற்றற்றதாக ஆக்கி அருள் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி அங்கே செல்கின்றாயா…? என்று காட்டினார்கள்.

காரணம் நாம் எதை எண்ணுகின்றோமோ நமக்குள் ஆண்டு கொண்டிருப்பது உயிரே. எண்ணியதை ஓ… என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தினை உடலாக்குவது உயிரே.

எந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து விளைய வைத்தோமோ உடலை விட்டு அகன்ற பின்
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அவன் உருவாக்கிய பிள்ளையாக
2.ஒளியின் சுடராக நாம் மகரிஷியுடன் இணைந்து வாழ முடியும்… வேகாநிலை அடைய முடியும்

நம்மை நாமே சரியான பாதையில் பக்குவப்படுத்திக் கொள்ளும் ஞான வழி

 

ஆசையிலிருந்து வருவது தான் பிறப்பும் வளர்ப்பும் வாழ்வும். அவ்ஆசையிலிருந்தே தான் வேதனையும் வருகின்றது. ஆசையின் உந்தலுக்கு நாம் அடிபணியலாகாது.

1.ஆசையில் எவன் ஒருவன் அவ்வாசைக்கே அடிமையாகிடாமல் நிறைவு பெற்று வாழ்கிறானோ
2.அந்த வாழ்க்கை தான் நிறைவு பெற்ற வாழ்க்கை… நிர்மலமான வாழ்க்கை…!

வாழ்க்கையின் முதல் பாகம் என்னும் அப்பிறப்பின் போதே ஆசையினால் தான் அந்த ஆவி அவ்வுயிரணு அத்தாயின் கருவிற்கே வருகின்றது.

அக்கருவின் நிலையில் வளரும் நிலை கொண்டே அக்கருவிற்கு எல்லாச் சுவாச நிலையும் அறிந்து ஆசை நிலையும் உள்ளது. ஆசை நிலையினால் தான் அக்கரு அத்தாயின் வயிற்றிலேயே… அத்தாயின் எண்ணத்தின் மூலமாகத் தன் சுவாச நிலைக்கு உகந்த… தன் ஆசையை அத்தாயின் மூலமாக எடுத்துக் கொள்கிறது.

கருவில் உள்ள நிலையிலேயே அதனால் தன் நிலைக்கு உகந்தபடி அதன் ஆசைக்கு ஏற்ற எல்லா நிலையையும் எடுத்துக் கொள்ள அத்தாயின் சுவாச நிலைக்கும் உந்தப்படுகின்றது.

ஒவ்வொரு பெண்ணிற்கும்
1.தாய்மை நிலை அடைவதற்கு முதலிலும்
2.தாய்மை நிலை அடைந்திருக்கும் பொழுதும்
3.தாயான பின்னும் அப் பெண்ணின் மனநிலை மாறுபட்டு வருகிறது.
4.அப் பெண்ணின் பிறவியில் வந்த எண்ண அலைகளும்
5.தாய்மைப் பேறில் வந்த எண்ண அலைகளும்
6.அத்தாயான பிறகு வரும் எண்ண அலைகளும் மாறுபடுகின்றன.

ஒவ்வொரு தாய்மைப் பேறிலும் சூலுண்ட நிலையில் அத்தாயின் வயிற்றில் உள்ள கருவிற்கு கருவின் எண்ணத்திற்கு தாய் உந்தப்படுவதால்… அது தாயின் சொல் சுவை இவை எல்லாம் மாறுபடுகின்றன.

அக்கருவின் ஆசை நிலையை அக்கரு ஏற்றுக் கொள்வதால் அத் தாயின் நிலைக்கும் சில ஆசை நிலைகள் உந்தப்படுகின்றன.

அக்குழந்தை பிறந்த பிறகு… எப்படி அக்கரு தாய் வயிற்றில் இருக்கும் பொழுது தன் ஆசையைத் தாயின் மூலமாகப் பெற்றுக் கொண்டதோ… அதைப்போல தாய் அப்பிள்ளை பிறந்த பிறகு அக்குழந்தைக்கு எந்த நிலை கொண்டு எந்த எண்ணமுடன் தாய்ப்பால் தந்து வளர்க்கின்றாளோ… அந்த நிலையெல்லாம் அக்குழந்தையின் எண்ணத்திற்கும் ஊட்டப்படுகிறது.

1.தாயின் எண்ண நிலை அக்குழந்தைக்குப் பால் தரும் பொழுது எந்தெந்த நிலையில் செல்கின்றதோ
2.அந்த ஆசை நிலைகளை எல்லாம் அக்குழந்தைக்கும் தானாகவே வளர்கிறது.

சூலுண்ட நிலையிலும் அத்தாயின் எண்ணங்களும் ஆசை நிலைகளும் வேதனை நிலைகளும் அக்கருவிலேயே கருவின் எண்ண நிலையுடன் அத்தாயின் எண்ண நிலைகளும் கலந்து விடுகின்றன.

தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பு இதுதான்…!

தாய் என்பவள் இந்த நிலை கொண்டு தான் பிள்ளைகளின் நிலைக்கு ஒத்துச் செல்வதெல்லாம். தன் சுவாச நிலைக்கு ஏற்ற உடலைத்தான் அவ் உயிரணுவே தான் உதிக்கும் இடமாக வந்து உதிக்கின்றது.
1.தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள ஒற்றுமை நிலை இது ஒன்று தானப்பா.
2.நம் உடலுக்கும் நம் ஆத்மாவிற்கும் உள்ள சொந்தம் போல் தான் இச்சொந்தமும்.

எண்ணம் என்பதின் வேகம் இவ்வுலகில் உள்ள எல்லா வேகங்களுக்கும் மேல் துரிதமான வேகம் என்று முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். நம் எண்ணத்தைப் பிறரின் எண்ணத்தில் மோத விடும் பொழுது பிறரின் நிலையும் மாறுபட்டுச் செயல்படும் தன்மை வலுக்கிறது.

இவ்வெண்ணத்தை வைத்துத்தான் உலக நிலையும்… உயிர் உதிக்கும் நிலையும்… உடலை விட்டு ஆத்மா பிரியும் நிலையும்… எல்லாமே வருகின்றன. இவ்வெண்ணத்தில் நாம் எந்த நிலையில் ஆசைப்படுகிறோமோ அந்த நிலை கொண்டு தான் வேதனையும் மகிழ்ச்சியும் வருகின்றன.

எண்ணத்தின் ஆசையை வளர விடுவதினால் பல வேதனையான நிலைகளை நம் வாழ்க்கை நிலையில் கண்டு வேதனைப்படுகிறோம்.

இவ்வெண்ணத்தினால் தான் எல்லா நிலைகளுமே வருகின்றன என்றேன். இவ்வண்ணத்தை வைத்து ஒவ்வொரு ஆத்மாவும் அவ்வுடலில் இருக்கும் நிலை கொண்டு
1.அவ்வெண்ணத்தை ஓம் என்ற நாதம் கொண்டு ஒரே நிலையில் ஜெபித்து ஆண்டவனின் சக்தியை நம்முள் எடுத்து
2.இவ்வுடல் வேறு அவ்வாத்மா வேறு என்ற நிலையை நாம் கண்கூடாகக் கண்டிடலாம்.
3.நம் ஆத்மாவின் நிலையை நாம் போற்றிப் பாதுகாத்தால் நாம் வாழ்க்கை நிலையில் பல சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டியதில்லை.

நம்மையே நாம் உணராத நிலையில் பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது பிறரின் அன்புக்கும் நம் ஆத்மாவை அடிமையாக்கிக் கொள்கின்றோம். அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசையின் நிலைதான்.

ஆண்டவனையே ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். அவ்ஆண்டவன் நமக்கு எப்படி அன்பு பொழிவான்…?

1.நம்மையே நாம் வெறுக்காமல்
2.நம்முள் ஆதி ஆசையை வளர விட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
3.நம்முள்ளையே சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
4.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
5.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் ஆத்மா அமைதியுற்று அவ்ஆண்டவனின் சக்தியே நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.

நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடல் ஆகாது.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆண்டவனா பொறுப்பாளி…?

1.நம்மில் நாம் ஆண்டவனைக் கண்டிட…
2.நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்வது தான்
3.அவ்வாண்டவனின் ஜெபத்திற்கும் ஆண்டவனின் ஆசிக்கும் உகந்தவர்கள் ஆகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ குழந்தைகளை அனுப்புகிறோம் என்றால் ஆயிரக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்… டாக்டருக்கோ இஞ்சினியருக்கோ என்றால் இலட்சக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்.

தாய் தந்தையர்கள் எப்படியோ அந்தப் பணத்தைக் கட்டிப் படிக்க வைத்து “பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற நிலையில் வீடு வாசல் எல்லாம் வைத்துச் சம்பாரித்து வைத்திருந்தாலும் அதை ஒத்திக்குக் கொடுத்தோ அல்லது விற்றோ தன் பிள்ளைகளை வளர்க்க விரும்புகின்றார்கள்.

ஆனால் டாக்டருக்குப் படிக்கப் போகும் போது பெயிலாகி விட்டான் என்றால் ஐயோ… இவ்வளவு பணம் கொடுத்துப் படிக்க வைத்தேனே… இந்த மாதிரி ஆகி விட்டானே…! தாய் தந்தை வேதனைப்படுகிறார்கள்.

இருபது இலட்சம் ஐம்பது இலட்சம் கொடுத்து டாக்டர் படிப்புக்குச் சேர்த்த பின் தன் பையன் உயர்ந்தவனாக இருப்பான் எதிர்காலத்தில் நன்றாக இருப்பான் நன்றாகச் சம்பாரிப்பான் என்று தாய் தந்தையர் நினைக்கின்றார்கள்.

1.ஆனால் அவன் அங்கே கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுத்தனமாகச் சுற்றுவதும்
2.அங்கே எதாவது பிரச்சினை என்றால் ஸ்ட்ரைக் செய்வதும்
3.அங்கே நல்ல ஒழுக்கங்கள் இல்லாதபடி என்னென்ன கெட்ட பழக்கங்கள் வளர வேண்டுமோ
4.அதை எல்லாம் கற்றுக் கொண்டு வந்து விடுவான்.

பல இலட்சம் கொடுத்துப் படிக்கப் போவோர் நல்ல பழக்கங்கள் அங்கே பெரும்பகுதி இருப்பதில்லை. தன் விருப்பத்தின்படி அங்கே நடப்பதும் ஏம்ப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று தட்டிக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்…? அறிவு கெட்டதனமாகக் கேட்கிறாய்..? என்று தாய் தந்தையரைக் கேட்பதற்கு வந்துவிடுகின்றனர்.

இப்படித் தான் தாய் தந்தையரை ஏசவும் பேசவும் போன்ற நிலைகளுக்குப் பிள்ளைகள் ஆளாக்குகின்றனர். ஆனால் இதைக் கண்டு வேதனைப்பட்டு இறந்து போன பிற்பாடு அவர்கள் ஆன்மா எங்கே போகும்…?

விஷத்தின் தன்மை எல்லை கடந்து சென்று பாம்பாகவோ தேளாகவோ தான் பிறக்க நேரும்.

1.என் பையன் இப்படிச் செய்துவிட்டானே… பேசுகின்றானே…! என்ற
2.சாப அலைகளுடன் அந்த எண்ண அலைகளப் பரப்பினால்
3.பையன் டாக்டராக ஆனாலும் கைராசி டாக்டராக இருக்க முடியாது…
4.அவன் பார்க்கும் வைத்தியங்களும் சீராக வராது… பின் ஒன்றும் செய்ய முடியாது.

ஏனென்றால் தாய் தந்தையரின் “அருள் வாக்கு” இல்லை என்றால் அதைத் தெளிவாகச் செயல்படுத்த முடியாது.

ஒரு இஞ்சினியருக்குப் படிக்க வைக்க எத்தனையோ இலஞ்சம் கொடுத்து அல்லும் பகலும் பாடுபட்டு பட்டினியாக இருந்து இஞ்சினியராகப் படிக்க வைத்த பின் பையன் எல்லாவற்றையும் கற்று உணர்ந்து கொள்வார்.

ஆனால் அதே சமயத்தில் தன் உணர்வின் தன்மையைச் சீராக்காதபடித் தன்னுடைய இஷ்டத்திற்குப் பல நிலைகளைச் செய்வார்.

அதைக் கண்டு தாய் தந்தையர் வேதனைப்படும் போது இந்தத் தீய வினைகள் இவருக்குள் சேர்ந்து அதே தீய வினையால அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை கூட வருகிறது.

1.தன் பையனை எண்ணி வேதனையைச் சேர்த்து உடல் உணர்வுகள் அனைத்திலும் நஞ்சு கலந்து
2.அடுத்து இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த நஞ்சையே அங்கேயும் உருவாக்கி
3.புகுந்த உடலையும் நோயாக்கி அவரையும் விழுத்தாட்டி விடும்.

எந்தப் பையன் தாய் தந்தையருக்குத் துரோகம் செய்தானோ… சொன்னபடி கேட்கவில்லையோ… அதே எண்ணத்தில் போனால் பையன் உடலுக்குள் ஆன்மா போய்விடும்.

அல்லது… குடும்பத்தில் பையன் திருமணமாகிப் போனாலும்
1.“இப்படிச் செய்கின்றானே…” என்ற எண்ணத்தில் தாய் தந்தையர் ஆன்மா பிரிந்தால்
2.அந்த உணர்வுகள் பாய்ந்து… எவ்வளவு பொருள் ஈட்டினாலும் பையனை வாழ விடாத நிலைகள் ஆக்கிவிடும்.

அல்லது… பையன் திருமணமான பின் சம்பாரித்துச் செல்வச் செழிப்போடு இருந்தாலும் அவன் மனைவி கர்ப்பமுற்றிருக்கும் போது அவன் தாய் தந்தையர் எங்களை எப்படி எல்லாம் செய்தாய்…! இடைஞ்சல் செய்துவிட்டு இன்று இப்படி இருக்கின்றாயே…! என்று எண்ணினால் போதும்

1.கர்ப்பமுற்ற தாய்க்கு இந்த உணர்வுகள் சாடப்படும் போது
2.அந்தக் குழந்தைகளின் நிலை சூனியமாகிவிடும்… அறிவற்றதாகவும் வளர்வதைக் காணலாம்.

இதைப் போல் மனிதர்களுக்குள் ஒன்றுக்கொன்று சந்தர்ப்பபேதத்தால் ஏற்படும் நிலைகளால் பல தீய விளைவுகளாகி அவர்கள் எதிர்காலமே இருள் சூழ்ந்த நிலைகளாகி மனித நினைவே இழந்திடும் நிலை வருகிறது.

இதை எல்லாம் அகற்றுவதற்குத்தான் “விநாயகர் சதுர்த்தி” என்று வைத்தார்கள் ஞானிகள். பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று “அருள் ஞானம் பெற வேண்டும்…” என்று தாய் தந்தையர் அன்றைக்கு எண்ண வேண்டும்.

தன் பிள்ளைகள் “இப்படி இருக்கிறார்களே… உன்னை நான் வணங்கினேனே…!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் அந்த வேதனை தான் வளரும்.

ஆகையினாலே
1.பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும்.
2.மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.

பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்…?

எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.

குடும்பத்தில் சந்தர்ப்பத்தால் மேலே சொன்ன பகைமைகள் உண்டானாலும்
1.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
2.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.

பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.

அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.

1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது. இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.

1.களிமண்ணால் செய்த விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்…!

ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் தீய வினைகளைக் கரைக்கலாம்.

காந்த சக்திகளைக் (MAGNET POWER) உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்

 

மகரிஷிகளுடைய அருளாற்றல் மிக்க சக்தியை நாம் நுகர்ந்து எடுக்க வேண்டும் என்றால் “அதற்குத் தகுந்த காந்த சக்தி” நமக்கு முக்கியமாகத் தேவை.

27 நட்சத்திரங்களையும் மற்ற கோள்களையும் ஏன் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அவைகள் விஷத்தினுடைய ஆற்றல் கொண்டது

27 நட்சத்திரங்களும் நவக்கோளின் சக்திகளும் மற்ற அதனுடன் சேர்த்துக் கொண்ட பல சக்திகளும் நம் உடலிலே அந்த சத்தெல்லாம் இருக்கின்றது.

நம்முடைய மனித வாழ்க்கையில் பல எண்ண உணர்வுகளுடன் நாம் இருக்கின்றோம்
1.அந்த உணர்வுகளை எல்லாம் மாற்றுவதற்கு
2.27 நட்சத்திரங்களையும் நவக்கோள்களையும் இந்த விஷமான அந்தச் சத்துக்களை எண்ணும்பொழுது
3.நேரடியாக அந்தச் சக்திகளைப் பெற்று
4.சாதாரண வாழ்க்கையிலே இயக்கச் சக்தியாக இருக்கும் உணர்வலைகளை அது அடக்கும்
5.அதனால்தான் 27 நட்சத்திரங்களையும் நவக் கோளின் சக்திகளையும் எண்ணி எடுக்கும்படி சொல்வது.
6.அதாவது அந்த உணர்வலைகள் நம் உடலுக்கு முன் பரவி இருப்பதை (ஆன்மாவில் இருப்பதை) அது அடக்கும்.

27 நட்சத்திரங்களையும் நவக்கோள்களையும் சூரியன் எடுத்து ஒளிகாந்த சக்தியாக மாற்றி உணர்வலைகளாக வெளிப்படுகின்றது. அதைப்போல
1.நாம் இந்த உணர்வின் எண்ணங்களைத் தூண்டச் செய்து நம் குருநாதரின் உணர்வுடன் கலந்து
2.கலந்த பின் உயிரை எண்ணி உயிருக்குண்டான காந்த சக்தியின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்க்கின்றோம்.
3.அப்படி ஈர்க்கப்படும் பொழுது நமக்குள் காந்த சக்திகள் கூடுகின்றது

சூரியன் எவ்வாறு 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோள்களின் சக்தியையும் அது ஒளி காந்தமாக எப்படி மாற்றுகின்றதோ இதைப் போல நம் உணர்வுக்குள் அதை எடுத்து நாமும் ஒளியாக்க முடியும்.

ஆனால்… சாதாரணமாக நம் உடலில் இருந்து வெளிப்படும் சுவாசம் உயிரிலே படும் பொழுது
1.நாம் எந்தெந்த எண்ணங்கள் கொண்டு எண்ணினோமோ அந்த உணர்வுகள் நம்மை இயக்கிக் கொண்டு
2.மகரிஷிகளையோ துருவ நட்சத்திரத்தையோ எண்ண விடாது.
3.கண்களை மூடி தியானத்திலிருந்தால் மகரிஷிகள் என்று நினைத்துக் கொண்டிருப்போம் அதை நினைத்து நம்மால் இழுக்க முடியாது.

திடீரென்று வருத்தமாக இருக்கும் பொழுது பாருங்கள். நாம் யாரிடம் சண்டையிட்டோமோ அவருடைய உருவம் எல்லாம் தெரியும்

உதாரணமாக நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் “இந்த மாதிரி ஆகிவிட்டது என்று அங்கிருந்து யாராவது சொன்னால்” அடுத்து தியானத்தில் அமர்ந்தால் உடனே அதுதான் முன்னாடி நிற்கும் அந்த இடங்கள் எல்லாம் தெரியவரும் அங்கு என்ன குழப்பங்கள் இருக்கின்றதோ அது எல்லாம் தெரிய வரும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை அந்த நேரத்தில் பெற வேண்டும் என்றால் அது எண்ண விடாது
1.அதனுடைய ஆற்றலை மங்கச் செய்வதற்கு தான் 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோளின் சக்திகளையும் பெற வேண்டும் என்று
2.உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அலைகளை உங்களுக்குள் பரப்புகின்றோம்.
3.ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகளை அது அடக்கவல்லது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு உடனடியாக இப்படி அடங்கச் செய்ய முடியும்.

27 நட்சத்திரங்களும் கதிரியக்கச் சக்திகள் கொண்டது. அந்தச் சக்திகளை உங்களுக்குப் பெற வேண்டும் என்று செயல்படுத்துகின்றோம்.

உங்கள் உடலுக்குள் 27 நட்சத்திரங்களின் சக்தியும் உண்டு நவக்கோளின் சக்தியும் உண்டு.
1.இந்த உணர்ச்சிகளைத் தூண்டி எடுத்து அதனுடைய அலைகளைத் தணித்து…
2.இன்னொன்றுடன் இது கலப்பதற்கு முன்னாடி உங்களைப் பெறும்படி செய்கிறோம் (ஞானகுரு).

தியானத்தின் மூலமாக சிறுகச் சிறுக நீங்கள் எடுக்கப்படும் பொழுது இந்த சக்திகள் நமக்குள் மனித எண்ணங்களை இயக்கச் செய்யும் மற்ற நிலைகளை அடக்குகின்றது.

சூரியன் எவ்வாறு நஞ்சை அடக்கி ஒளியாக மாற்றுகின்றதோ அதைப்போல நம் உயிரின் சுவாசத்திற்குள் செல்லும் போது
1.இந்த உணர்ச்சிகளைத் தூண்டி மெய் ஒளியுடன் நாம் பிரகாசிக்கச் செய்ய முடியும்.
2.நம் உயிரை ஒட்டி இருக்கக்கூடிய காந்த சக்திகளுக்குள்… அதாவது எலும்புக்குள் காந்தங்களாக அடர்த்தி ஆகிவிடும்.
3.ஓ….ம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துடிப்பால் எண்ணி எடுக்கப்படும் பொழுது “அதிகக் காந்தத்தை ஈர்க்கும்…”

ஒரு மோட்டாரில் மேக்னட் அதிகமாக இருந்தால் அதற்குத் தகுந்த மாதிரி ஒரே மாதிரி சுற்றினாலும் அந்தக் காந்தச் சக்திக்கு தக்கவாறு மின்சாரத்தை அது உற்பத்தி செய்யும்.

அதைப்போல நம் உயிரின் துடிப்பு ஒரே சீரான நிலையில் இருந்தாலும் நாம் எடுத்துக் கொண்ட காந்த சக்திகள் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய எழும்புகளின் சில பாகங்களில்
1.உயிரை அணுகி உள்ள இடங்கள்
2.செவி ஓரங்களிலும்
3.கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள்ளும் இந்தக் காந்த சக்திகள் உண்டு.

யாம் இப்பொழுது உபதேசிக்கும் பொழுது புலனறிவுகளில் முக்கியமாக… கண் செவி உயிர் இருக்கும் பாகங்களுக்குக் காந்த சக்திகள் பெருகுகின்றது. எந்த நினைவின் தன்மை பெறுகின்றோமோ கண் விழிகளினுடைய நிலைகளும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்தி கண்ணுக்கு உண்டு.

அதே போல உயிரை அணுகி உள்ள இடத்திலும் காந்த சக்தி அதிகமாகக் கூடும் பொழுது… உயிரின் துடிப்பு லேசாக இருந்தாலும்
1.காந்தத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் பொழுது
2.நாம் எந்த மகரிஷியினுடைய சக்திகளை எண்ணி இருக்கின்றோமோ அதைப் பெற முடியும்.
3.காரணம்… அவர்கள் மிகவும் ஆற்றல் பெற்றவர்கள்… இவ்வாறு காந்தத்தை அதிகமாகக் கூட்டித்தான் அந்த ஆற்றல்களை நாம் பெற முடியும்.

அந்த மகரிஷிகள் அனைவரும் “அதீத காந்த சக்திகளைப் பெற்றுத் தான்… விண் வெளியின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து… உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்…”

அத்தகைய ஆற்றலை நாமும் பெறுதல் வேண்டும்.

பூமியைத் தவிர மற்ற மண்டலத்தில் மனிதர்கள் வாழும் வாய்ப்பே இல்லை

 

இப்பூவுலகில் நாம் நம் ஜீவ உடலுடன் நம் ஆத்மா எந்த நிலை கொண்டு சுவாசம் எடுத்ததோ… அந்த நிலை கொண்டெல்லாம் சப்த அலைகள் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளனவோ… அதே நிலை கொண்டு தான் இவ் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் “ஆத்மாவைச் சுற்றிச் சப்த அலைகள் சுற்றிக் கொண்டே உள்ளன…”

உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு எந்த நிலையில் அந்த ஆன்மா சுற்றிக் கொண்டுள்ளது…? என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது.

இந்நிலையை வைத்துப் பலர் பல ரூபங்களிலும் பல வித கதைகளிலும் நம் முன்னோர் வாயிலாகவும் கேட்கப் பெறுகின்றோம்.
1.அறிந்த உண்மையை அறிந்த நிலையில் செப்புவதற்கு இன்று யாரும் இல்லை.
2.அன்றைய பெரியோர்கள் தான் அறிந்து செப்பினார்கள். அந்நிலை நமக்கு எதற்கு…?

நம் உடலை விட்டுச் செல்லும் ஆத்மாவிற்கு சுவாசநிலை உடலுடன் இருந்த பொழுது எந்த நிலை கொண்டிருந்ததோ அந்த நிலையிலே தான் அவ்ஆத்மா சுற்றிக் கொண்டே உள்ளது.

1.இவ்ஆத்மா இந்த மண்டலங்களிலேயே சுற்றிக் கொண்டிருந்து இந்நிலை கொண்டே தான் பிறகொரு ஜீவ உடலும் பெற்று ஜென்மம் எடுக்கின்றதா…?
2.இந்நிலையில் இருந்து பிற மண்டலங்களுக்குச் சென்று ஜீவன் எடுப்பது இல்லையா…? என்ற எண்ணம் உள்ளது.

அச்சக்தியின் அருள் பெற்று எந்த நிலையில் அவ் உயிரணு உருவம் பெற்று… எந்த மண்டலத்தில் சுவாச நிலை கொண்டு ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்ததோ… அந்த நிலை கொண்டே தான் அவ் உயிரணுவின் சுவாச நிலைகள் உள்ளன.

1.உடலுடன் அஜ்ஜீவாத்மா இருக்கும் நிலையும்
2.உடலை விட்டு ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையும்
3.பிறகு ஒவ்வொரு ஜென்மங்கள் எடுத்தும்
4.ஒவ்வொரு நிலைகொண்டும் எத்தனை ஜென்மங்கள் எடுத்து அவ்ஆத்மா வாழ்ந்தாலும்
5.அதன் தாய் சக்தியான எந்தச் சக்தி நிலைபெற்று அவ்உயிரணுவிற்கு சுவாச நிலை கிடைத்ததோ அதே நிலை பெற்று
6.மீண்டும் மீண்டும் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்க முடியும் அவ்வ்யிரணு எனும் ஆத்மா எல்லாமே.

அவ்ஆத்மாவின் சுவாசத்தால் எப்பூமியில் அவ் உயிரணுவிற்கு ஊட்டம் தந்ததோ அந்நிலை கொண்டே தான் அவ் உயிரணு எத்தனை காலமானாலும் சுற்றிச் சுற்றிப் பிறவி எடுத்துக் கொண்டே வாழ்ந்திடும் இந்தப் பேருண்மை நிலையை எந்த நிலை கொண்டும் யாரும் செப்பிட முடிந்திடாதப்பா.

பிற மண்டலத்திற்கு சென்று வாழ்ந்திட இன்று விஞ்ஞானத்தில் பல ரூபங்களைச் செய்து சென்றாலும் இவன் தாய் சக்தி தந்த சுவாச நிலையை மாற்றிப் பிற மண்டலத்தில் எப்படி ஜீவிதம் நடந்திட முடியுமப்பா…?
1.இம்மண்டலத்தில் தோன்றியவர் பிற மண்டலத்தில் பிறந்து உயிர் வாழ்ந்திட முடிந்திடாது
2.காரணம் பிற மண்டலங்களின் உயிர் நிலை இம்மண்டலத்திற்கும் அம் மண்டலத்திற்கும் மாறுபடுகின்றது.

அம்மண்டலத்தின் சுவாச நிலை கொண்டே தான் அங்கு தோன்றிய ஜீவணுக்கள் எல்லாமே ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்திட முடியும்.

அங்கு இருப்பவர் இங்கும் இங்கு இருப்பவர் அங்கும் ஜென்மம் மாறிப் பிறந்தாலும் பிறக்கவும் முடிந்திடாது… வாழ்ந்திடவும் முடிந்திடாது,

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தாய் என்பவள் யார் என்று இப்பொழுது புரிகிறதா…? நம் சுவாச நிலைக்கு உயிர் தந்த அச்சக்தித் தாய்தான் நம் முதல் தாயப்பா.

பிற மண்டலங்களில் வாழ்ந்து… பிற மண்டலங்களுக்குச் சென்று… அந்நிலையில் இருக்கும் உண்மையைக் கண்டறிய “இச்செயற்கை நிலை எதற்கப்பா…?”

பிற மண்டலங்களின் நிலையை அறிய
1.நம் சுவாச நிலை அளித்த அச்சக்தித் தாயின் ஜெபத்தை எண்ணி
2.நம் உயிரணுவின் உண்மை நிலையை அறிந்து
3.நாம் நம்முள் இருக்கும் அவ்ஈஸ்வர சக்தியை எண்ணி
4.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று நாம் ஜெபிக்கும் பொழுது
5.அவ்ஆண்டவனின் ரூபத்தில் நமக்குப் பல உண்மைகளைப் புகட்டிட அப்பெரியோர்கள் உதவிக்கு வருவார்கள்.

அந்நிலையில் நாம் நம் ஜெப நிலையிலேயே எல்லா மண்டலங்களின் நிலையையும் அறிந்து இம்மண்டலத்தில் வாழ்ந்திடலாம். எம்மண்டலத்திற்கும் சென்று வரும் பாக்கியம் பெற்ற நிலை எய்துபவர்கள் எல்லாம் யார் என்று இப்பொழுது புரிகிறதா…?

இருந்த நிலையிலேயே ஜெப நிலையில் அமர்ந்து எல்லா மண்டலங்களின் தன்மையையும் தன் நிலைக்கு உணர்ந்து கொண்ட பல கோடிச் சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள்… இப்படித் தெய்வத்தன்மை வாய்ந்த நம்மில் பல முன்னோர்கள் சூட்சும உலகம் என்னும் உலகத்தில் “அன்றும்… இன்றும்…” வாழ்ந்து வருகிறார்கள்.

பேராசை என்னும் நிலையில்தான் இன்று கண்டிடும் விஞ்ஞானம் எல்லாம்
1.அங்கிருக்கும் பொக்கிஷத்தை எடுத்து வந்து இன்று தன் நாடு வாழ தன் நிலை உயர
2.தன் நிலையை… சக்தி நிலையைச் சிதறவிட்டு வாழ்ந்து என்ன பயன்…?
3.அவ்ஆத்மாவின் நிலைக்கு அழியாக் கஷ்டத்தைத் தான் அளித்து வாழ்கிறார்கள் இன்றைய விஞ்ஞானம் என்னும் ரூபத்தில்.

தெய்வீகத் தன்மையில் தேவனின் சக்தியை ஜெயித்து வாழ்ந்திட “ஜெபம் (தியானம்) ஒன்றுதான் இஜென்மத்தில் உள்ளது” என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டுமப்பா.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதர்களாக உருவான பின் வாழ்ந்து… கடைசியில் இறந்த பின் அந்த உடலைப் புதைத்தால் அது கரைந்து விடுகிறது… மற்றொன்றுக்கு இரையாகின்றது. (உடலை மண் தின்கிறது என்று சொல்வோம்).

1.இதைப் போல் தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நம் சூரியன் தன் செயலை இழந்தால் கரைந்துவிடும்.
2.காரணம் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் தனித் தனியாக ஒரு சூரியக் குடும்பமாக மாறும் தருணம் வந்துவிட்டது (உபதேசம் செய்த வருடம் 1992).

கார்த்திகை நட்சத்திரம் நம் சூரியனைப் போல் அதுவும் வளர்ச்சிக்கு வருகிறது. ரேவதி நட்சத்திரமும் அதே போல் சூரியனாக மாறுகிறது. அதே போல் இன்னும் இரண்டு மூன்று நட்சத்திரங்கள் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

இப்படி மாறி விட்டால் நாம் வாழும் இந்தச் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கிறது. இது முதுமை அடைகிறது.

ஆக இப்படி நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களில் சரி பகுதி தனித் தனி சூரியக் குடும்பமாக மாறி விட்டால்
1.நம் சூரியனுக்கு இரையில்லை.
2.இந்தச் சுழற்சியின் தன்மை இதனின் (சூரியனின்) ஈர்ப்பு வட்டம் குறையும்.

இந்த ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் நம் பூமியோ இதைப் போல் அந்த சுழலுக்குள் சிக்கி இதுவும் சுழற்சியான பின் அதற்குள் போய்க் கரைந்துவிடும்… ஆவியாக மாறும்.

மற்ற இந்த 27 நட்சத்திரங்கள் இருக்கிறதல்லவா… இதிலே ஒவ்வொன்றும் சூரியக் குடும்பமாக மாறிப் போகும் உணர்வுகளுக்கு இது உணவாகிவிடும்.

இப்படித் தான் அகண்ட அண்டத்தில் உள்ள இந்த 2000 சூரியக் குடும்பங்களும் ஓர் குடும்பமாக மாறி வளர்ந்து வந்துள்ளது.

அதே சமயத்தில் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் 27 சூரியக் குடும்பமாக மாறிவிட்டால் இது ஒரு வட்டமாகின்றது… பேரண்டம் ஆகிறது.

இதன் வளர்ச்சியில் இதைப் போல் மாறி மாறித் தன் பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளரும்.

ஆகையினால் எமது குருநாதர் கொடுத்த அந்த மெய் உணர்வின் தன்மைகளை நீங்கள் பெற்று அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்து
1.அகண்ட அண்டத்தையும் அறியலாம்
2.இந்தப் பிண்டத்திற்குள் அதனின் ஆற்றலை எடுத்து வளர்க்கவும் செய்யலாம்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையையும் நீங்கள் அடையலாம்.

அதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.

குரு இட்ட கட்டளைப்படி நாட்டைக் காத்திடும் சக்தி பெற வேண்டும் என்று இதை உங்களுக்குள் வினையாகச் சேருங்கள்

 

ஆலயத்திற்குச் சென்று விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற வினையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆலயம் வருபவர் எல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும். என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
1.நாட்டை ஆட்சி புரிபவர்கள் அனைவருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் இந்த உலகுடன் ஒத்து வாழ வேண்டும்… மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாட்டை வழி நடத்த வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நாட்டை உருவாக்க இது பயன்படும்… மதங்கள் அல்லாதபடி உருவாக்க இது பயன்படும்.

இந்த அரசாங்கத்தில் நிர்வாகம் செய்யும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும் ஒருங்கிணைந்து செயல்படும் அந்தச் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள். அப்போது இங்கே பகைமைகள் வராது. இதைப் போன்று செய்தால்
1.எனக்குச் செய்யவில்லை
2.உனக்குச் செய்யவில்லை என்ற அந்த உணர்வுகள் வராது.
3.அனைவருக்கும் தொழில் வாய்ப்பு உருவாகும் செவ்வனச் செய்யும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஆலயங்களிலே வணங்குங்கள்..

அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.நாட்டில் அரசியல் நடத்துபவர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.அரசாங்கத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.இந்த நாட்டைக் காத்திடும் சக்தியாக அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அந்த ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வ குணங்கள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அரசாட்சி செய்வதை நமது அரசு என்று எண்ணி அங்கே நிர்வாகம் செய்பவர்கள் அனைவரும் தெய்வ குணம் பெற வேண்டும் உலகைக் காத்திடும் சக்தியாக அந்த மன பலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும். பேதங்கள் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆலயங்களில் எண்ணுங்கள். நம் அனைவரையும் ஒருங்கிணைக்க இது உதவும்.

சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… என்னைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அந்தச் சந்தனத்தின் நறுமணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.நாட்டைக் காத்திடும் அனைவருக்கும் (அரசியல்வாதி… அதிகாரிகள்… படை வீர்ர்கள்) இந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும்
2.அங்கே அது வளர வேண்டும் என்று நீங்கள் வேண்டுங்கள்.
3.ஏனென்றால் நாம் அங்கே சென்றாலும் இந்த நிலைதான்… யார் சென்றாலும் இந்த நிலை தான்.

ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கும் பொழுது எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் வருகின்றது. இதையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. அப்பொழுது குடும்ப ஒற்றுமை வர வேண்டும் என்று நாம் எண்ணுவது போல
1.நமது நாட்டைக் காத்திடும் நிர்வாகிகள் அனைவருக்கும் அந்த ஒருங்கிணைக்கும் சக்தி பெற வேண்டும் என்று
2.நாம் அனைவரும் எண்ணும் பொழுது அந்த ஆலய நிர்வாகிகளும் அந்த ஆலயத்திற்கு வருகின்றார்கள்
3.அவர்களும் இதே போன்று எண்ணும் பொழுது மனிதன் என்ற தன்னிலை அடையும் சக்தி வருகின்றது

அதற்குத்தான் தத்துவ ஞானிகள் ஆலயத்தை வைத்தார்கள்…!

பாலைப் போன்ற தூய்மையான மனம் நாங்கள் பெற வேண்டும் என்னைப் பார்ப்போர் எல்லாம் அந்தப் பாலைப் போன்ற தூய்மையான மனம் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவார் எல்லாம் இந்த நிலை பெற வேண்டும்.
1.அரசாங்க நிர்வாகத்தில் உள்ளோர் அனைவரும் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்.
2.அவர்கள் மன பலம் பெற வேண்டும் மக்களுக்கு நல் உணர்வு காட்டும் அந்தச் சக்தி அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நம்முடைய எண்ணம் அவர்களுக்கு வழி காட்டவும் சகோதர உணர்வுடன் வாழவும் இது உதவும்.

ஆகவே மகரிஷியில் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்று இந்த உடலுக்குள் நல்லவைகளும் கெட்டவைகளும் குணங்கள் கலந்து தான் இருக்கின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை நாம் வளர்த்துக் கொள்ள இது உதவும்.

இதே உணர்வின் நிலைகள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று ஒருங்கிணைந்த நிலைகள் நாம் எண்ணும் பொழுது
1.நமது அரசே உலகிற்கு எடுத்துக்காட்டும் அரசாக வளர்ந்து வரும்
2.அதன் கீழ் வாழ்ந்து வரும் மக்களாகிய நாமும் உயர்ந்த நிலை பெற முடியும்.

ஏனென்றால் மன பேதத்தாலும் இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் உலகில் மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் இத்தருணத்தில் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி… எந்த ஆலயத்திற்கு நாம் சென்றாலும் இந்த முறைப்படி ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலையும்… ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் அரசும் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி ஒருங்கிணைந்தால் கட்சி பேதமும் வராது இன பேதங்கள் வராது மத பேதங்கள் வராது.
1.நாம் அனைவரும் இந்த ஆட்சி சீராக வளர வேண்டும் என்று எண்ணி அப்படி நடந்தால் நமக்குத் தொல்லை இல்லை.
2.அதற்குப் பதிலாக என்னுடைய வழியில் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் அதற்கடுத்துத் தொல்லைகள் தான் வருகின்றது.

ஆகவே இத்தகைய எண்ணங்கள் நமக்குள் வளராதபடி ஆலயங்களில் அரசை ஒத்தே நாம் பிரார்த்திக்க வேண்டும்.

நமது சக்தி எல்லாம் ஒருங்கிணைந்து சேர்ந்து ஓட்டு போட்டு தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் நல்ல நிலையில் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னால்
1.அவர்களுக்குள் நம்மை காக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.பின் நாம் எண்ணும் எண்ணங்கள் பகைமை இல்லாத உணர்வாக வளர்கின்றது.

இதை நாம் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்து அடுத்தடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நமது நாட்டு மக்கள் அனைவரும் மன பேதமின்றி இன பேதம் இன்றி ஒருங்கிணைந்து வாழ வேண்டும். ஆட்சி புரியும் நிர்வாகிகள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தலையாயக் கடமையாக எண்ணுதல் வேண்டும்.

நம் உடலுக்குள் நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் எப்படிக் கலந்திருக்கின்றதோ இதைப் போன்று
1.நமது நாட்டுக்குள் இருக்கும் எல்லாம் ஒருங்கிணைந்தால் தான்
2.நாடு நலம் பெறும்… மக்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும்.

இதைப் போன்ற தீமைகள் விளைவித்து மக்களை தவறான வழியில் செயல்படச் செய்யும் உணர்வுகளை மாற்ற ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம்… இந்த நாட்டில் பிறந்த மக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் அறியாது செய்யும் தவறுகளில் இருந்து விடுபட வேண்டும்… மக்கள் பேரானந்தப் பெரு நிலை பெற வேண்டும்… அந்த மகரிஷிகள் அருள் வட்டத்திலே மனிதனாகப் பிறந்த முழுமையின் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்துங்கள்.

கட்சி பேதமின்றி மன பேதமின்றி இன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி உலகைச் சிருஷ்டிக்க “நாம் எண்ணும் எண்ணமே தான்” இந்த உலகைச் சிருஷ்டிக்கின்றது.

மத பேதங்களால் போர் எப்படி நடக்கின்றதோ அதைப் போல் கட்சி பேதத்தால் உண்மை நிலைகள் அறியாது பேத உணர்வுகளே வளர்க்கப்பட்டு சீராகச் செயல்படும் தன்மைகள் இந்த உலகெங்கிலும் இப்போது மறைந்து கொண்டே வருகின்றது.
1.அதை போன்ற நிலைகள் நம் நாட்டிலே விளையாது கட்சி என்ற பெயரை அகற்றிவிட்டு
2.நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சி நிலைகள் சீராக வரவேண்டும் என்று ஒருக்கிணைந்து எண்ணினால்
3.எல்லோரும் நல்லவரே…! எல்லோரும் நல்லாட்சியைப் பெற முடியும்.

ஆனால் அரசாங்கத்தைக் குறையாக எண்ணி அதை வளர்த்து விட்டால் அவர்கள் எதைச் செய்தாலும் நாம் குறை கூறிக் கொண்டே தான் இருப்போம். குறைய நிவர்த்திக்கும் எண்ணம் நமக்குள் வராது. குறையைச் சொல்லிவிட்டு நாமும் குறையைத் தான் செய்து கொண்டிருப்போம்.

ஆகையினால் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்ன நிலைகளில்… நமது நாட்டில் ஆட்சி புரியும் அந்த நிலைகளுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து… நமது நாடு சீராக வளர்ந்திடும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் ஒருங்கிணைந்து நினைப்போம்.

பக்தி கொண்ட நிலையில் இருந்து மாந்திரீகம் தாந்திரீகம் என்று சில பேர் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

கடவுளின் பெயரால் மக்களின் மதியை மாற்றிக் கொண்டிருக்கும் அறியாத நிலையில் தீமையை விளைவிக்கும் சாதுக்கள் என்ற பெயர்களால்ம் பல தவறுகள் செய்து கொண்டிருக்கும்
1.அவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவ்வாறு செயல்படும் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று
3.நாம் ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் எண்ண வேண்டும்.

மாயாஜாலத்தாலும் மாந்திரீகத்தாலும் மக்களை மதி மயங்கச் செய்யும் எவராக இருப்பினும் “அவருடைய தீய எண்ணங்கள் மறைந்து…” மக்களைக் காத்திடும் உணர்வுகளும்… ஞானிகள் காட்டிய வழியில் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நல்ல எண்ணங்களும் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஞானிகள் காட்டிய நிலைகளைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு…
1.நான் கடவுளைக் கண்டேன்… கடவுளின் அவதார புருஷன் என்று சொல்லிக் கொண்டு
2.அவர் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று இதைத் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர்ந்தால்தான் இது எல்லாம் சாத்தியமாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடல் பாடிக் கொண்டிருக்கும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் உலகம் அனைத்திற்கும் மெய் ஞானத்தை உணர்த்திச் சென்றான்… ஞானத்தைப் போதித்தான்.

தென்னாட்டிலே வாழும் நாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் ஆற்றலை மதபேதமற்ற நிலையிலும் இனபேதமற்ற நிலையிலும் மொழி பேதமற்ற நிலைகளிலும் இந்த உலக மக்கள் வாழ வேண்டும் என்று
1.தமிழ்நாட்டில் பிறந்த நாம் ஒருங்கிணைந்த நிலை கொண்டு
2.கட்சி பேதமின்றி நாம் செயல்பட வேண்டும்.

ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பார்… ஒருவர் கடவுள் இல்லை என்பார்…! ஒருவருக்கொருவர் போர் செய்து பிழைகள் செய்து கொண்டு குறைகளை உருவாக்க முடிகின்றதே தவிர அதை நீக்கும் நிலை இல்லை.

அது போன்ற நிலைகளை மறந்து விட்டு ஆட்சி பீடங்கள் சீராக இயங்க வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்து இந்த உணர்வின் வலுவை நாம் கூட்டினோம் என்றால் “நமது ஆட்சி நலமாக இருக்கும்… உலகுக்கு எடுத்துக்காட்டாகவும் வரும்.

1.அவர்கள் உயர்ந்த ஆட்சி புரிய வேண்டும் என்று நாமும் ஒத்துழைக்க வேண்டும்
2.குறைகளை மட்டும் கூறிக் கொண்டிருந்தால் குறைகள் தான் வளர்ந்து கொண்டிருக்கும்… அதைத்தான் வளர்க்க முடியுமே தவிர நீக்க முடியாது.

நீங்களே அந்த ஆட்சி பீடத்தில் உட்கார்ந்து பார்த்தால் ஒரு நண்பன் எனக்கு இதைச் செய்து கொடு…! என்று கேட்பான் இன்னொருவன் அவனுக்குச் செய்கின்றான்… எனக்கு செய்ய மாட்டேன் என்கிறான் என்பான்.

ஒருவருக்குச் செய்யும் பொழுது மற்றவர் குறை சொல்லத்தான் வருவார்கள்.

இது போன்ற நிலைகள் இல்லாதபடி அரசியல் பேதம் இல்லாதபடி எத்தகைய பேதம் இல்லாதபடி நாம் அனைவரும் ஒன்று சேர்த்துச் செயல்பட வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னது போன்று இந்த உலக மக்களுக்கு எடுத்துக்காட்டாக வளரச் செய்யும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நாம் அனைவரும் பெற்று இந்த ஒருங்கிணைந்த ஆட்சியாக பேதமற்ற நிலைகளில் சிருஷ்டித்து உலக அரங்கிலே அருள் ஞானத்தைப் பரவச் செய்வோம்.
1.உலகைக் காத்திடும் சக்தியாகக் கொண்டு வருவோம் என்று
2.இதைப் பிரதிக்ஞையாக எடுத்துக் கொள்வோம்.

யார் எந்தக் குறையைக் கூறினாலும் குறைகள் இல்லாத நிலையாக உருவாக வேண்டும்… குற்றமற்ற நிலையாக தமிழ்நாடு உருவாக வேண்டும்.

தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே ஓங்கி வளர வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள். எத்தகைய பேதமும் இல்லாத பேதமற்ற வாழ்க்கையாக நாம் வாழ்ந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வுகள் இங்கே வளர வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்வோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உலகில் வாழும் மக்கள் அனைவரும் முழு முதல் கடவுள் என்று ஞானிகள் உணர்த்திய அருள் வழிப்படி உலகைச் சிருஷ்டிக்கும் மனித உடல் பெற்ற நாம் “பல நன்மைகளை நாம் அனைவருக்கும் உருவாக்குவோம்…”

உடலை விட்டுப் பிரிந்தால் என்றும் பிறவியில்லா நிலை அடைவோம் பகைமையை வளர்த்து புவியின் ஈர்ப்புக்குள் சிக்கிடும் நிலையாக இல்லாதபடி பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்று உறுதிப்படுத்துவோம்.

இதை நாம் அனைவரும் பெற்று உலகிற்கு எடுத்துக்காட்டாக வருவோம்

எவர் எத்தொழில் செய்தாலும் அந்தக் குறைகளைப் பதிவு செய்யாது அவர் அறியாது குறை உணர்வுகள் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் செயல்படுத்துவோம்.

குருநாதர் பித்தரைப் போன்று இருந்துதான் இந்தப் பேருண்மைகளை எல்லாம் அறிந்து உணர்த்திச் சென்றார். சந்தர்ப்ப பேதங்களால் மக்கள் அனைவரும் மன வேதனைப்பட்டு கொடிய நோய்களுக்கும் கொடிய செயல்களுக்கும் ஆளான நிலையில் இருந்து விடுபட வேண்டும். ஆகையினால்…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதித்து
2.ஈசன் கட்டிய உடலான ஆலயத்திற்குள் அருள் ஞான சக்திகளை நீ புகுத்தி விடு என்றார்.
3.அங்கே அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றிடும் நிலையாக அருள் உணர்வு கிடைக்க வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய் என்றார் குருநாதர்.

அதைத்தான் யாம் (ஞானகுரு) செய்கின்றோம்.

இதைக் கேட்டுணர்ந்த அனைவரும் இதை வளர்த்து நமது நாடு என்ற நிலைகளிலும் “உலகம் காக்கப்பட வேண்டும்” என்ற நிலைகளில்
1.அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் பேதமற்ற நிலைகளாக வாழ்வோம்
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழ்வோம்.
3.மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வோம்
4.நாட்டுக்குள் ஒற்றுமையை வளர்ப்போம்
5.தீமையற்ற நாடாக நம் தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
6.இங்கிருந்து உலகைக் காத்திடும் நிலையாக எல்லா நாட்டிற்கும் நாம் அருள் சேவை செய்யும் அந்தப் பண்பினை ஊட்டுவோம்
7.நாம் அனைவரும் சகோதரர் என்ற நிலையைக் கூட்டுவோம்.

ஆகவே இந்த உலகம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற்றால் நாமும் நலம் பெறுவோம் உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்தத் தத்துவம் எந்தத் தென்னாட்டில் இருந்து உலகம் முழுவதும் பரவியதோ மீண்டும் இங்கிருந்து
1,மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவரின் அருளால் உலக மக்களை ஒன்று சேர்த்திடும் நிலையாக
2.மக்களைக் காத்திடும் நிலையாக குரு அருள் உங்கள் அனைவருக்குள்ளும் ஆழமாகப் பதிந்து
3.உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களில் விளைந்து
4.இந்த உலகைக் காப்பீர் உங்களைக் காப்பீர் உங்கள் ஊரைக் காப்பீர் உலக மக்களைக் காப்பீர்கள்.

நிறைந்த மனதுடன் நாம் வாழ்வோம் எல்லோரையும் நிறைவான நிலைகள் பெறச் செய்வோம் அவர்கள் நிறைவடைவதைக் கண்டு நாம மகிழ்வோம். அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கண்டு நாமும் பேரானந்த பேரு நிலை இந்த வாழ்க்கையிலே அடைவோம் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலைகள் இந்த உடலிலேயே வளர்ப்போம் என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

நாட்டு அரசுக்கு நல்ல உணர்வை நாம் எடுத்துக் காட்டினோம் என்றால் அதுவே நம் அரசாகின்றது நாமே அரசாகின்றோம் அரசே நாம் ஆகின்றோம்.

இந்த உயர்ந்த நிலையில் கொண்டு “நாம் எல்லோரும் வாழ வேண்டும்” என்ற நினைவைச் செலுத்தினால்
1.அந்த அரசும் நலமாக இருக்கும் அந்த அரசால் நாமும் நலமாகின்றோம்.
2.நாம் தான் அரசு அரசுதான் நாம் என்ற நிலையில் கட்சி பேதமின்றி இந்த நாட்டிற்குள் உயர்ந்த ஞானத்தை வளர்ப்போம்.

பேதமற்ற வாழ்க்கை நாம் வாழ்வோம் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு உலகிற்கே எடுத்துக்காட்டாக வரவேண்டும் உலக பேதமற்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்று தெற்கிலே வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வுகளை உலகிலே பரப்புவோம்.

அந்த மெய் ஞானியின் உணர்வுகளை ஒருங்கிணைந்து நமக்குள் வளர்ப்போம். உலகம் நலம் பெற வேண்டும் என்று நமது உணர்வுகளை பரப்புவோம். சகோதர உணர்வுடன் நாம் வாழ்வோம்… பகைமையற்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்

எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டி இதை நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).

இன்றைய கலியுகத்தை “நாம் தான் கல்கியாக்க வேண்டும்…” ஆண்டவன் வந்து ஆக்குவதல்ல…!

 

இயேசுபிரான் மக்களுக்கு உணர்த்திய மகத்துவமான உண்மைகளை எண்ணிப் பார்ப்பதற்கே இன்று யாரும் இல்லை.
1.அன்பே கடவுள்
2.அன்பே ஒற்றுமை
3.அன்பே எல்லாம் என்ற நிலையில்
4.எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று பேரானந்த நிலையை ஏற்படுத்தி
5.அன்று வாழ்ந்த எல்லா மக்களுக்குமே அன்பையே தெய்வமாக எண்ணி வணங்கிட நல் உபதேசங்களை உபதேசித்து
6.அன்று வாழ்ந்த மக்களின் மனதை எல்லாம் அன்புடனே நடத்திச் சென்றார் இயேசுபிரான்.

அந்நிலையை மாற்றியவர்கள் அவரின் உடலை அழித்துவிட்டு அவர்கள் தம் புகழுக்காக இயேசுபிரான் என்ற போர்வையைத் தான் எடுத்துப் போர்த்திக் கொண்டு பலர் பல நிலையில் அவ் ஏசுபிரான் பெயரிலேயே வாழுகின்றார்கள்.

அகிம்சா மூர்த்தியான இயேசுபிரானின் போதனை மொழியையே இம்சைப்படுத்தி விட்டார்கள். ஆண்டவனின் அருளையே தன் தன் நிலைக்கு ஏற்ப சாதகமாக்கிக் கொண்டு வாழ்பவர்கள் தான் இயேசுபிரான் காலத்திலிருந்து இன்று வரை உள்ளார்கள்.

இந்நிலை போல் தான் சில நாடுகளில் முகமது நபியின் நிலையும் அவர் எடுத்துச் சொன்ன உண்மை நிலையையும் மாற்றி அவரவர்கள் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டு விட்டனர்.

முகமது நபி வாழ்ந்த காலத்தில் அவர் அருளிய அருள் செல்வம் மக்கள் மனதில் பதியும் தருவாயில்… பலர் பல நிலை கொண்டு அவரின் மேல் பல துவேஷச் சொற்களையும் கற்களையும் வீசி… அவரையே துவேஷப்படுத்தி துவேஷித்து
1.அவர் நற்போதனைகளை உடலுடன் இருந்த பொழுது ஏற்று நடந்திடாமல்
2.இன்று அவர் நாமத்தை வைத்துப் பலர் ஓதுகின்றார்கள்.

பல உன்னத மனிதர்களின் பல மகான்களின் நிலைகள் எல்லாம் அவர்கள் போதித்த காலத்தில் மனிதர்கள் ஏற்று நடக்கவில்லை. அன்றும் இன்றும் மனிதர்களின் நிலை எல்லாம் ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதுவும்… நல் உபதேசத்தை ஏற்கும் மனநிலையையும் மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றனர்.

பல நாளேடுகளிலும் உணர்ச்சியைத் தூண்டும் வகைகளில் ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் கதைகளையும் இப்படிப் பல நிலைகள் கொண்டு மக்களின் மனதையே பெரும் உந்தலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கின்றார்கள்.

அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆளுபவர்களும் உள்ளார்கள்.

காலத்தினால் பல கோடி நன்மைகள் நமக்கு காத்திருப்பதையே மறந்து நாம் பயத்துடன் தான் வாழ்கின்றோம்.

இப்பூமியிலே தோன்றி வாழ்ந்து…
1.உடலுடனும் உயிருடனும் இன்றும் சூட்சம நிலை கொண்டு வாழ்ந்திடும்
2.பல மகரிஷிகளின் ஆசியுடன் நாம் வாழ்கின்றோம் என்ற பேருண்மையே
3.ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலையெல்லாம் மறந்து
4.ஒவ்வொரு மனிதரும் தாம் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழ்ந்திடுங்கள்.

இனி வாழும் காலங்கள் கல்கியுடன் வாழ்ந்திடலாம் கல்கி என்ற பேரானந்தக் காலத்தில் கலந்து வாழ்ந்திடலாம்.

செய்த பாவத்தை மறந்து விட்டு… நடந்தவைகளை நடந்தவையாக விட்டுவிட்டு… நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன் நம் உயிரான்மாவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து…
1.நமக்காக மட்டும் வாழாமல்
2.நம்முடன் தோன்றிய எல்லா உயிராத்மாக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.

அன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள். எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலரும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள்.

கலியை ஆண்டவன் வந்து கல்கி ஆக்குவது இல்லை இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன் எல்லோருமே… ஆண்டவர்கள் என்பது யார் என்று புரிந்ததா…?
1.இக்கலியில் உள்ள உயிராத்மாக்கள் நாம் எல்லோருமே தான்
2.கலியைக் கல்கி ஆக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.

ஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை மனிதர்கள் மனநிலையை வைத்துத்தான் காலநிலையும் மாறுகின்றது. ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்த மனிதரின் மனநிலையை வைத்துத்தான் மாறுபடுகிறது.

இன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இம் மனநிலை மாறுவதற்காகத் தான்.
1.நம் மகரிஷிகள் நிலை கொண்டே நடத்திடும் பெரும் நாடகம்.
2.நாடகத்தின் தொடரினை இனி கண்டு வாழ்ந்திடலாம்
3.இந்நிலையில் இருந்து மக்களின் மனநிலையில் பெரும் மாறுதல் வந்திடுமப்பா.

அந்நிலை நடப்பதற்காகத்தான்… சூட்சும நிலையில் உள்ளவர்கள் “மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி” மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.

இன்றைய செயற்கையின் கோளத்தை அந்நிலையின் உண்மைகளை நாமும் பார்த்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்பது உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உங்கள் உயிரே.

நாம் எண்ணியது அனைத்தையும் நமக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து… மீண்டும் நினைக்கும் போது “அது குருவாக இருந்து” நமக்குள் அந்த ஒவ்வொரு குணமும் செயல்படுகின்றது.

உதாரணமாக குழந்தை மேல் பாசமாக இருக்கின்றேன். அது உயிரிலே பட்ட பின் ஓ… என்று பிரணவமாகிறது. அடுத்து அது ம்… என்று உடலாகிறது.

மீண்டும் அதே குணத்தை நான் எண்ணும் போது அந்தப் பாசத்தால் அவனுக்குச் செய்ய வேண்டிய “குரு நிலையாக” அவனுக்கு வழி காட்டுகிறது.
1.இப்படித்தான் நாம் எண்ணிய குணங்கள் எதுவோ அது குருவாக நமக்குள் இயங்குகிறது.
2.ஆனால் நாம் எதைக் குருவாக ஆக்க வேண்டும்…?

மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த அரும் பெரும் சக்தியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

அந்த உணர்வின் சக்தியைத் தான் இங்கே உபதேசிக்கின்றோம். நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.

1.பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவு கூறும் போது
2.அந்த ஞானிகள் உணர்வு குருவாக நின்று உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் நிலையாகப் பெறச் செய்யும்.
4.ஞானிகளின் உணர்வைக் கண் புலனறிவால் ஏகி அதனின் உணர்வைப் பருகி
5.அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்றவர்கள் உணர்வை நமக்குள் எடுக்கப்படும் போது
6.அவர்கள் உணர்வைக் கவர்ந்து கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு உயர்ந்த வித்தை நிலத்தில் ஊன்றி அதற்கு நீரை ஊற்றினால் பூமியின் ஈர்ப்புத் துணை கொண்டு காற்றிலிருக்கும் தன் இனச் சக்தியை எடுத்து நல்ல வித்தினைக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அது ஜீவன் பெற உங்கள் நினைவை மீண்டும் கூட்டினால் அந்த உணர்வின் சத்தை காற்றிலிருந்து கவர முடியும்.

அவ்வாறு கவர்ந்து அதனின் உணர்வைத் தனக்குள் வளர்த்து வரும் நஞ்சு கொண்ட உணர்வின் அணுவைப் பிளந்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மெய் ஒளி காணும் மெய் சரீரத்தைக் காண முடியும்.

அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் தான் இதை நான் (ஞானகுரு) உபதேசிக்கின்றேன்.
1.நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்கள் மூச்சு இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கும்.

உங்கள் உணர்வுகள் அனைத்தும் நலமும் வளமும் பெற்று உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அனைவரையும் இருளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுகளாக வளர்ச்சி பெறும்.

அதற்காக வேண்டித் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்… தியானிக்கின்றேன். அந்த உணர்வின் தன்மை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.

அதை மீண்டும் நான் நினைக்கும் போது
1.உங்களுக்கு என்னென்ன உதவி செய்ய வேண்டும்…?
2.நீங்கள் எப்படி மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும்…?
3.உங்களை அறியாது சேர்ந்த இருளை எப்படி நீக்க வேண்டும்…? என்ற
4.அந்த குரு வழிப்படி உங்களுக்கு உபதேசிக்க வேண்டி வருகிறது.

இது “எனக்குள் குருவாக வந்து” என்னை இப்படி இயக்குகிறது. குருநாதர் அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றேன்.

ஒவ்வொரு நேரத்திலும் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறைகள்

 

படுக்கைக்கு முன்பாக;-
1.இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
2.உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் அருளாற்றலை வலுவேற்றிச் செருகேற்றிக் கொள்ளுங்கள்.

அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் மன பலம் பெறவும் உடல் நலம் பெறவும் தொழில் வளம் பெருகவும் இதன் வழி உங்களை அறியாது சேர்ந்த தீமைகளீலிருந்து விடுபடவும் மன மகிழ்ச்சி பெறவும் இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.இரவு படுக்கைக்குச் செல்லும் போதெல்லாம் கண்களை மூடி நூறு முறை இவ்வாறு சொல்லுங்கள்.
2.வெறுமனே வாயால் புற நிலையில் சொல்லக் கூடாது
3.அகநிலைகளுக்கு உங்கள் உடலுக்குள் நினைவினைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடல் முழுவதும் நினைவினைச் செலுத்துங்கள். உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப வரிசைப்படுத்தி
2.உங்கள் நினைவினை “அலை அலையாக” உடலுக்குள் செலுத்துங்கள்.

குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ;-
உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வீடு முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது உணர்வுகளிலும் கலந்து எங்களை அறியாத சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் மன பலத்துடன் மன வளத்துடன் தொழில் வளத்துடன் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று 10 முறை இவ்வாறு நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று இதைப் ;போல் ஒரு பத்து முறை “குடும்பத்திற்குள் ஒற்றுமை வளர வேண்டும்” என்று எண்ணி ஏங்குங்கள்.

பகைமைகள் அகல:-
சகோதர சகோதரிக்குள் கலக்கம் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சகோதர சகோதரிகள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் மன பலம் மன வளம் பெற வேண்டும்.

குடும்பத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழும் அந்த மன பலம் பெற வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த கலக்கங்கள் நீங்கி குடும்பத்தில் பற்றும் பாசமும் வளர்ந்திடும் அச்சக்தி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.
1.உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பகைமை இருப்பினும்
2.அதை நீங்கள் உங்கள் நினைவில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

சகோதர சகோதரிகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு என்னைப் பார்க்கும் போதெல்லாம் அன்பும் பரிவும் பாசமும் அவர்களுக்குள் ஏற்பட வேண்டும் எங்கள் பார்வையில் அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் பாசப்பிணைப்புடன் நாங்கள் ஒன்றி வாழ்ந்திட வேண்டும் என்று இந்த நிலையை நீங்கள் நினைவில் கொண்டு வாருங்கள்.

நம் குழந்தைகளுக்கு;-
குடும்பத்தில் குழந்தைகள் கல்வியில் குறைபாடோ அல்லது உடல் நலக் குறைவோ இருப்பினும் அதை நினைவில் கொள்ளாதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் குழந்தைகள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்
1.அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தியும் நல்ல ஞான சக்தியும் பெற வேண்டும்
2.கல்வியில் சிறந்தவர்களாக வளர வேண்டும்
3.உலகம் போற்றும் உத்தமர்களாக எங்கள் குழந்தைகள் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும்
4.உலகைக் காத்திடும் சக்தி எங்கள் குழந்தைகள் பெற வேண்டும்
5.உலகை அறிந்து வாழும் திறன் எங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்று இவ்வாறு நினைவினைச் செலுத்துங்கள்
6.நீ கல்வியிலே சிறந்த ஞானம் பெறுவாய் உயர்ந்த நிலை பெறுவாய் என்று நல்லதைச் சொல்லி நாம் செயல்படுத்த வேண்டும்.

பேரன்பு கொண்ட நிலைகளில் அந்த குழந்தைகளுக்கு இப்படித்தான் நாம் அருள் வழியைக் காட்ட வேண்டும்

தொழில் செய்யும் இடங்களில்;-
அடுத்து நீங்கள் தொழில் செய்யும் இடங்களை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
1.அங்கு ஏதாவது சிக்கலோ அல்லது மந்தமோ கொடுக்கல் வாங்கலில் ஏதாவது தடைகளோ இருந்தால்
2.அந்தத் தடைகளைக் கருத்தில் வைக்காதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படர்ந்து எங்களிடம் தொழில் செய்யும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அவர்கள் மன பலம் பெற்று அவர்கள் தொழில் சீராக வளர்ச்சி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஒரு பத்து முறை தொழில் செய்யும் இடங்களை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அடுத்து உங்கள் வாடிக்கையாளர்களை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பத்து முறை நினைவைச் செலுத்துங்கள்.

அவர்கள் குடும்பங்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதைப் போன்று நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

கொடுக்கல் வாங்கலில் ஏதாவது தடைகள் இருந்தால்… எவரால் அந்தத் தடை வந்ததோ ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் தொழில் முழுவதும் படர வேண்டும்
2.அவர்கள் தொழில் சீராகி அவர்களுக்குச் செல்வம் வர வேண்டும்
3.எங்களுக்குக் கொடுக்க வேண்டிய வேண்டிய பணத்தைச் சீராகக் கொடுக்கும் திறன் அவர்களுக்கு வர வேண்டும் என்று
4.இந்த முறைப்படி எண்ணி நினைவினைச் செலுத்துங்கள்.

இவ்வாறு செய்யச் செய்ய அவர்களுக்கும் அந்த நிலைகள் உயர்வு ஏற்படும் உங்கள் பணமும் தடை இல்லாது வந்து சேரும். உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம்.

ஆண்டவன் என்பவன் யார்…?

 

1.நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத
2.இப்புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலும் கலந்துள்ள சக்தியை
3.யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் நிலைப்படுத்திச் சொல்லிடும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்…?
4.ஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து “அவரவர்கள் வழிக்கு வணங்குகிறார்கள்…”

இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.

இங்கு ஆண்டவனை வணங்கும் முறையே பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து… பொருள் உள்ளவர்கள் மட்டும்தான் ஆண்டவனின் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி…
1.ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை
2.சாஸ்திரங்களின் பெயரால் புரியாத நிலைப்படுத்தி வணங்குகிறார்கள்.

ஏசுபிரானை வணங்கும் நாட்டிலே இயேசு பிறந்தார். பிறக்கும் பொழுதே வானமண்டலத்தில் பல கோடி நட்சத்திரங்கள் தோன்றின. அவ் ஆண்டவனே தான் வந்து அவதரித்தார் என்ற நிலையில் ஆண்டவனே வந்து பிறந்ததாகப் போதிக்கின்றார்கள்.

உலகில் உள்ள எல்லா உயிரணுக்களும் ஆண்டவன் தான். அவ் ஆண்டவனின் சக்தியில் இருந்து பிறந்தவர்தான் அவ் இயேசு பிரானும். நம்மைப் போல் ஒருவராகத் தான் வந்து பிறந்து வளர்ந்தார்.

ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம்.
1.எல்லோருமே ஆண்டவன் தான்…!
2.எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.

இயேசுபிரான் எப்படி ஆண்டவன் அருள் பெற்றார்…? என்ற உண்மையினை நாம் எண்ணிப் போற்றி வணங்கிடல் வேண்டும்.

சாதாரண ஆட்டிடையனாகத் தான் அவரும் வளரும் காலத்தில் வளர்ந்தார். குழந்தை நிலையிலேயே அவரது நிலை எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பைப் பூண்டு அகிம்சையைக் கொண்டு அன்புடனே பழகி வந்தார்.

அன்பையே தெய்வமாக எண்ணி வாழ்ந்தார். அந்த நிலையில் எப்படி அவர் அன்பு காட்டி வாழ்ந்தாரோ அந்த நிலை கொண்டு அச்சக்தியின் நிலையினால் அவரின் நிலையில் அவருக்கு முன் தோன்றிய “ஒரு மாபெரும் முனிவர்” அவரின் நிலையில் தோன்றி… அவரின் நிலையில் தோன்றி என்பது ரிஷிகள் முனிவர்களின் நிலையைத்தான் முதலிலேயே பாடத்தில் சொல்லி உள்ளேன்.

அந்நிலை கொண்டு இவர் சிறு வயது முதற்கொண்டே அன்பு கொண்டு வாழ்ந்த நிலையில்…
1.அம் முனிவரின் சக்தி இவர் உடலில் செயல்பட வந்து இவர் உடலில் சேர்ந்து இவர் உடலிலேயே இருந்து கொண்டு
2.இவ்வுலக மக்களுக்கு இயேசுவின் வாயிலாக பல உன்னதக் கருத்துக்களை மக்களுக்குப் போதித்தும்
3.பல வைத்திய முறைகளை அளித்தும் மக்களுக்கு பல நன்மைகளை எல்லாம் செய்தும் காட்டினார்.

இயேசு பிரானின் ஒரே எண்ணம் அவ்அன்பே தெய்வம் என்ற எண்ணம் தான். மக்களுக்கு நல்வழி புகட்டி… செய்த பாவங்களை மறந்து நல்ல நிலைக்கு வருவதற்காகப் பாவங்களை மறந்து விட்டு “இனி வாழும் நாட்களில் நன்மையுடன் வாழ வேண்டும்” என்பதற்காகப் பல நல்ல உபதேசங்களை எடுத்துரைத்தார்.

இப்படி அவர் நல்வழி நடத்திச் செல்லும் பொழுது மக்களின் நிலை எல்லாம் அவர் நிலையை உணர்ந்து அவரையே ஆண்டவனாக வணங்கி அவர் நிலைக்கு வரும் நிலை வந்தது.

அப்பொழுது அன்று அங்கு ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களின் நிலையில் தன் நிலைக்குப் பணியாமல் “ஆண்டவன் ரூபத்தில் மக்கள் அங்கு செல்வதைப் பார்த்து” அவ் இயேசு பிரானுக்குப் பல இன்னல்களையும் பல கஷ்டங்களையும் தந்து… பல கொடுமைகளை எல்லாம்படுத்தி அவரை அழிக்கின்றேன் என்று அவர் உடலை அழித்தார்கள்.

இவர்கள் மூன்று நாட்கள் கல்லறையில் உடலை வைத்துப் பார்த்ததின் நிலை என்ன…?

இயேசுபிரான் தான் அம் மாபெரும் முனிவரின் அருளைப் பெற்று அழியாச் செல்வமுடன் அனைத்து உலகத்திலும் என்றும் வாழும் சூட்சும நிலையில் வாழும் பாக்கியம் பெற்றவர் ஆயிற்றே.

அவர் உடலை இவர்கள் அழித்தால் மூன்று நாட்கள் என்ன 3000 ஆண்டுகள் என்ன…? இம்மூவுலகத்திலுமே கலந்துள்ள உத்தம நிலை பெற்றவரை அவர் உடலை அழித்தால் அவரையே அழித்த நிலையாக எண்ணி… அன்று ஆண்ட ஆட்சியாளர்கள் பல நிலைகளைச் செய்தார்கள்.

அவர் உடலை அழித்த பிறகு தன் நிலைக்குச் சாதகமாக அவரின் நிலையை வைத்தே பிறகு பல ஆண்டுகள் ஆண்டார்கள்.

செய்த பாவங்களுக்கெல்லாம் அவர்கள் சாமியார்கள் என்ற நிலையில் வைத்திருப்பவர்களிடம் பொருள் தந்து… நம் பாவங்களை எல்லாம் அவர்களிடம் சொல்லிவிட்டால் அவர்கள் ஆண்டவனிடம் நமக்குப் பாவ விமோசனம் வாங்கி பாவத்தை நாம் கழித்திட நமக்கு நல்லாசி வாங்கித் தருகிறார்களாம்.

தினசரி நாம் செய்யும் பாவங்களைக் கழித்திட நமக்கு ஒரு தூதுவனாம். எப்படி இருக்கிறது ஆண்டவனின் நிலை…?
1.”ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்டவன் உள்ளான்” என்ற உண்மை நிலையைப் போதிக்கவோ
2.அவ் இயேசுபிரானின் உண்மை அறிந்து செயல்படவோ இன்றைய மனிதர்களுக்குக் காலமும் நேரமும் இல்லை.

செயற்கையுடன் கலந்துவிட்ட செயற்கையான மனிதர்கள் இயற்கையின் சக்தியை எண்ணுவதற்கே நேரமில்லை. இவர்கள் எண்ணி வாழ்வதற்குள் இவர்களுக்குக் காலமும் இல்லை. காலத்தையே விரயம் பண்ணாமல் செயற்கையுடன் செயல்படுகின்றார்களாம்.

இவ் இயற்கையின் சக்தியை ஒவ்வொருவரும் புரிந்து அன்றைய உலகில் எப்படிப் பல சித்தர்கள் ஞானிகள் ஆண்டவன் நிலை பெற்றுச் சூட்சும உலகத்தில் செயல்படுகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவருமே ஆண்டவனின் நிலை கொண்டு வாழலாம் என்ற நிலையில் வாழ்ந்திட வேண்டுமப்பா.
1.எல்லாமே ஆண்டவனின் சக்தி தான்
2.அந்த ஆண்டவனின் சக்தியைத்தான் நாம் இன்று சிதறவிட்டு வாழுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டுப் பிரிந்து தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்.

1.அதாவது இந்த உடலிலிருந்தே உயிராத்மா எப்படி ஒளியாக மாறி வெளியிலே செல்கிறது…?
2.வெளியிலே சென்ற பின் மற்ற மனிதர்களின் உணர்வுகள் எப்படி எல்லாம் கவர்கிறது…?
3.அப்படிக் கவரும் போது குருநாதரின் உயிராத்மா சுழற்சியின் நிலைகள் என்ன செய்கிறது…?
4.தன்னை அணுக விடாதபடி எப்படி விலகிச் செல்கிறது…? என்று அதை எனக்குக் (ஞானகுரு) காட்டி உணர்த்தவும் செய்தார்.

வெறும் துண்டு தான் குருநாதர் கட்டி இருப்பார். பெரும்பகுதி டிச்சிலேயே (DITCH) தான் படுத்திருப்பார். குளிர் காலம் என்று நல்ல ஒரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்தோம் என்றால் அதைக் கிழித்துக் காலிலேயும் கையிலேயும் கட்டிக் கொண்டு “பாருடா… எவனோ கிழித்து விட்டான்…!” என்பார்.

என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…! என்று கேட்டால் கிழித்து விட்டுப் போய்விட்டான்… நான் என்ன செய்வது…? என்பார். படுத்திருந்தேன் கிழித்து விட்டான்…! என்பார்.

அவர் அசூசையைப் பற்றி நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் சிந்தித்தார்.

பைத்தியம் போன்ற அவரின் செயல்களைக் காணும் போதெல்லாம் “ஐயோ… இவரிடம் சிக்கிக் கொண்டோமே… பெரிய தொல்லையாக இருக்கின்றதே…!” என்று தான் எண்ணினேன்.

1.உடலை விட்டுப் போன பிற்பாடு பளீர்… பளீர்… என்று ஒளியின் தன்மை கொண்டு
2.மற்றதைத் தள்ளிக் கொண்டு அவருடைய ஆன்மா விண்ணுக்குப் போகிறது.
3.அப்படிப் போனாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிராத்மா என்ன செய்கிறது பார்…? என்று
4,எல்லாவற்றையுமே எனக்கு முதலில் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

அன்றைக்கு ஞானிகளும் மகரிஷிகளும் எந்தெந்த நிலைகளில் செயல்பட்டார்கள்…? என்று அதையும் காட்டினார் குருநாதர்.

அதாவது உயிராத்மா வெளியிலே போனாலும்… தன் வலுவின் தன்மை கொண்டு பூமியின் ஈர்ப்புக்குள் வராது தடுத்தாலும்… அந்த உணர்வுக்கொத்த விழுதாக இருந்து பூமியிலிருந்து உயிராத்மாவை உந்தித் தள்ள வேண்டும்.
1.அதற்காக வேண்டித் தான் அவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றாலும்
2.சாதாரண மனிதரைத் தேடி ஞானிகள் வருகின்றனர்.

அவனுக்குள் வரும் இருளான துன்பத்தை நீக்கி விட்டு உடலிலே மகிழ்ச்சியை ஊட்டி… அவனிடமிருந்து வரும் நல்ல மூச்சைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றனர்.

ஒருவர் துன்பப்படுகின்றார் என்றால் இவன் (ஞானி) கஷ்டப்பட்டு பச்சிலைகளையும் மூலிகைகளையும் எடுத்து அவனுக்குக் கொடுத்து நோய்களை நீக்கி அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று செய்தார்கள்.

அன்று இதற்கெல்லாம் காசும் வாங்கவில்லை… ஒன்றும் வாங்கவில்லை.

ஒருவன் துன்பப்படுகின்றான் என்றால்
1.உடனே அவனுக்குள் நிவராணமாகும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சி
2.அந்தத் துன்பமான உணர்வுகளை நீக்கி விட்டு மெய் ஒளியின் சுடராகப் பெருக்கச் செய்து
3.அவனுக்குள் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கச் செய்து
4.மருந்தைக் கொடுத்து நோயை நீக்கி அன்று சந்தோஷப்படுத்தினார்கள்.

“இந்த மகான் நல்லது செய்தார்” என்ற எண்ணத்தை ஏங்க வைத்து அதை ரசித்துத் தனக்குள் எடுத்து விண் சென்றார்கள்.

இன்று சகஜ வாழ்க்கையில் துன்பப்பட்டவரைப் பார்த்தோம் என்றால்
1.நாம் பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வேதனையின் தன்மை இங்கே வருகிறது.
2.ஒரு அசுரத்தனமான உணர்வு கொண்டு “அவன் கிடக்கட்டும்…” என்று எண்ணினால்
3.அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து அதே முரட்டுத் தனமான நிலைகள் கொண்டு சிக்கி அடிபடுகின்றான்.

ஆனால் அந்த மெய் ஞானியோ துன்பப்பட்டவனுக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையை நீக்கி… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து… அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி… அந்த உணர்வின் நிலையாகத் தனக்குள் வளர்த்துக் கொண்டவன்.

அதைத் தான் நாம் நமக்குள் வளர்க்க வேண்டும்.

எத்தகைய சூழ்நிலையிலும் நாம் வேதனையை வளர்த்து விடக் கூடாது

 

இன்று பெரும்பகுதியானவர்கள் குடும்பத்திலே சிறு சிறு சிக்கல்கள் ஏற்பட்டு அதனால் இனம் புரியாத வேதனைகள் பட்டு அடிக்கடி வேதனைகளையே படுவார்கள் என்றால் “என்ன நடக்கிறது…?”

கர்ப்பமான பெண் அந்த வீட்டிலே இருந்தால் அதனின் கருவிலே விளையும் அந்த சிசுவிற்குள் மேலே சொன்ன வேதனை என்ற நஞ்சுகள் விளைந்து விடுகிறது.

பாவிகள்…! ஏனக்கு இப்படி எல்லாம் தொல்லைகள் செய்தார்களே என்று மற்றவர்களை அந்தத் தாய் எண்ணினால் தாய்க்குக் கை கால் குடைச்சல் எரிச்சல் வாத நோய் இரத்த கொதிப்பு எல்லாம் வருகிறது.

1.ஆனால் கருவிலே விளையக்கூடிய குழந்தைக்கு வேதனை விளைந்து
2.அது பிறந்த பின் எடுத்துக் கொண்டால் அதனுடைய பருவம் வரப்படும் போது
3.ஒரு விஷ வித்து எவ்வாறு வளர்ந்து முழுமை அடைகின்றதோ இதைப்போல
4.அந்தச் சிறு குழந்தைக்குக் கூட “இரத்தக் கேன்சர்” என்று வருகின்றது.

தன் வாழ்க்கைச் சூழ்நிலையில் அந்த வேதனையான நிலைகளை எடுத்து வேதனையையே பார்த்து அது தாய்க்கு ஊழ்வினையாகப் பதிவானாலும் தாயின் கருவிலே விளையும் குழந்தைக்கோ இரத்தக் கேன்சராக மாறுகின்றது சில காலங்களில் அணுக்களின் செல்களில் இந்த உணர்வின் தன்மை அதிகமானால் கேன்சர் ஆகிவிடுகிறது.

இன்று பெரும்பகுதியான நிலைகள் எடுத்துக் கொண்டால் கேன்சர் நோய் அதிகமாக வருகின்றது
1.எங்கே திரும்பினாலும் எத்திசையில் திரும்பினாலும் நாம் காணும் பக்கம் எல்லாம் வேதனை வேதனை என்றே நேருகின்றது.
2.ஆனால் மனிதன் கரு இல்லாத பொழுது அது உடலில் நோயாக மாறுகின்றது.

வேதனைகளை அதிகமாக எடுக்கப்படும் பொழுது… அந்த விஷத்தின் தன்மை…
1.இயல்பாக இருக்கும் நரம்புகளில் இயக்கப்படுமே என்றால் விஷத்தன்மைகள் பாய்ந்து
2.நரம்புகளில் இருக்கும் ஆசிட் என்ற பவரை உறிஞ்சி விடும் நிலை வருகின்றது.

இன்று நாம் மனிதனாக இருக்கப்படும் பொழுது உடலிலே திடீரென்று “இரத்தத்தைக் காணோம்” என்று சொல்வார்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கும் ;பொழுது…!

காரணம்…
1.சில எதிர்மறையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்திலே எடுத்துக் கொண்டால்
2.பாலிலே உப்பு பட்டால் எவ்வாறு பிருத்து விடுகின்றதோ இதைப் போன்று
3.இரத்தத்திற்குள் சில உணர்வின் தன்மை மாறுபட்டால் கெட்டியாக இருக்கும் இரத்தம் நீராக மாறிவிடும்… சிறுநீராகப் பிரிந்துவிடும்.

மனித வாழ்க்கையில் தன்னை அறியாது எத்தனையோ நிலைகள் மாறி “சாகாக்கலையாக” இப்படி எல்லாம் வந்து கொண்டிருக்கின்றது

ஆனால் வேகாநிலை பெற்றவன் அகஸ்தியன். தாயின் கருவிலே ஆற்றல்மிக்க சக்திகளைப் பூர்வ புண்ணியமாகப் பெற்று அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையால்
1.விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சினை வென்றிடும் அந்த நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்று
2.எதனையுமே ஒளியாக மாற்றிக் கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வருகின்றான்… அவனுருடைய சந்தர்ப்பம்.

அந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் மேலே சொன்ன கொடுமையான நோய்களிலிருந்து தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

பிறருடைய வேதனையான எண்ணங்களைப் பதிவு செய்து கொண்டால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் கவரப்பட்டு எப்படி உடலில் நோயாக மாறுகின்றதோ இதைப் போல
1.தீமைகள் அகற்றி விண்ணுலகம் சென்ற அகஸ்தியனின் உணர்வை
2.நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆகவே… அகஸ்தியனுடைய பேராற்றலை நமக்குள் வளர்த்துக் கொள்வோம். நோய் நெகெகும் சக்தி பெற்று உடல் நலத்துடன் வாழ்வோம் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் வழி

 

உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இது… ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!

“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.

எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி
1.”நம் எண்ணத்தை”
2.அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்.

அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுது உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம் சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்கு இந்த உடல் சொந்தமா…? நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் நமக்குச் சொந்தமா…? ஆகவே இனி நாம் சேமிக்க வேண்டிய அழியாச் சொத்து எது…? என்பதை முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.இனி இருப்பதாவது நல்லதாக இருக்க வேண்டும்.
3.மற்றவர்களுக்கு ஒரு நல்ல அறிவும் ஞானமும் வர வேண்டும்
4.அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் எல்லாமே செய்கிறோம். ஆனால் இந்த உடலை விட்டு உயிரான ஈசன் போய்விட்டால் என்ன செய்கிறது…? உடல் நீசமாகிறது. முதலில் சிவம் என்று சொல்கிறோம். கடைசியில் இதைச் “சவம்” என்று தான் சொல்கிறோம்.

அப்படி என்றால் நாம் எதை மதிக்க வேண்டும்…?

நம் உயிரை நாம் மதித்தாக வேண்டும்…! அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அதை வலுவாக்கிய பின் இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும்
1.நாம் எப்பொழுதும் அவனுடன் நிலையாக இருக்கலாம்.
2.அவனுடன் அவனாகவும்… “அவனாகவும்” நாம் வாழலாம்.
3.ஏனென்றால் உயிரால் உணர்வால் எடுத்துக் கொண்ட ஒளியின் நிலைகள் அது.

ஆனால் இப்பொழுதும் நாம் அவனுடன் அவனாகத் தான் வாழ்கிறோம். எப்படி…!

அன்றாட வாழ்க்கையில் நாம் எதை எதை எல்லாம் எடுக்கின்றோமோ “அந்த இம்சை எல்லாம்…” இந்த உடலில் இருக்கிறது. எம்மம்மா… ஐய்யய்யோ… அப்பப்பா…! இதுவும் அவனுடன் தான் வாழ்கிறோம்.

ஆகவே இருளை நீக்கிப் பொருள் காணும் உணர்வை உயிருடன் ஒன்றச் செய்யும் போது ஒளியின் சரீரமாகி நிலையான நிலைகள் பெறுகின்றோம்.

நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக இருக்கலாம்.

அது தான் கல்கி…!

1.உயிர் ஒளியாகின்றது… பல நிலைகளை வெல்கிறது.
2.மனிதனாக ஆன பின் நரசிம்மா… தீமைகளைப் பிளக்கின்றது.
3.தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை விளைய வைக்கின்றது.
4.விளைந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி என்றும் நிலைக்கின்றது – கல்கி.

ஆனால் கல்கி எங்கேயோ இருக்கின்றான் என்று நாம் நினைக்கின்றோம்.

நம் உயிர் தான் கல்கியாக… அதிலே உணர்வுகள் வளர்ந்தது போல் எதனை இணைக்கின்றோமோ அதன் நிலை கொண்டு அதுவாகிறது. கார்த்திகேயா (வெளிச்சம்) தெளிந்திடும் அறிவு வருகிறது.

இந்த உடலில் அதைப் பெற்ற பின் இன்பத்தின் உணர்வின் தன்மை கொண்டு அவனுடன் இணைக்கும் போது என்றும் பேரின்பப் பெரு நிலை அடைகின்றது.

இந்த வாழ்க்கையில் கஷ்டம்… நஷ்டம்… துன்பம்… எல்லாம் வரும்.
1.கஷ்டம் வந்தாலும் உயிரின் பிடிப்பை விட்டு விடக் கூடாது.
2.அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அதைச் செயல்படுத்த வேண்டும்.

இன்பமும் துன்பமும் கலந்தே வரும்…! வந்ததை எண்ணியோ… வருவதை எண்ணிக் கொண்டோ இருந்து என்ன பயன்…?

 

ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லா சக்திகளையும் அளித்துள்ளான் சக்தி தேவன்
1.அந்நிலையை எப்படி ஈர்த்து வாழ்வது…? என்ற நிலையை
2.நாம் தான் வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

நம் ஞானக் கண்ணினால் நாம் இருந்த நிலை கொண்டே உலக அனைத்திலும் உள்ள நிலைகளை அறிந்து செயல்பட முடியும். நம் ஞானக்கண்ணினால் “நாம் நம்மை மறந்து தியான நிலையில் அமர்ந்து காண்பது அல்ல அந்த ஞானக்கண்ணின் நிலை…”

நாம் சகல நிலை கொண்டும் வாழ்க்கை முறையில் வாழும் பொழுது கோப நிலையில் சாந்த நிலையில் துவேஷ நிலையில் பிறரைப் போற்றும் நிலையில் சோர்வு நிலையில் மகிழ்வு நிலையில் இப்படிப் பல நிலை கொண்ட வாழ்க்கை நிலையில் ஒவ்வொரு நிலைகொண்டும் நாம் இருக்கும் பொழுது நம் சுவாச நிலை நம் உயிரணுவிற்கு எந்த நிலையை ஏற்றுத் தருகின்றதோ அந்நிலையில் இருந்து தான் நம் அகம் புறம் ஞானம் செயல்படுகிறது.

1.நடைமுறையில் சஞ்சலங்களும் இன்பங்களும் நம் வாழ்க்கையுடனே கலந்து தான் வரும்.
2.வந்ததை எண்ணியோ வருவதை எண்ணிக்கொண்டோ இருந்து என்ன பயன்…?

ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு அச்சக்தியில் இருந்து கிடைத்த அந்த ஞானக் கண்ணின் நிலையைப் பெற்று ஆத்மாவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் ஆத்மாவை நம் உடலும் நம் எண்ணமும் காத்துக் கொண்டிருக்கவில்லை.
1.நாம் எடுக்கும் சுவாச நிலையினால் தான் சகலமும் நடக்கிறது.
2.சுவாசம் என்பதனை ஒரு பெரும் பொக்கிஷமாக யாரும் எண்ணுவதில்லை.

நம் உடலில் உள்ள எல்லாப் பாகங்களுமே அச்சுவாச நிலையை ஈர்த்து வெளியிடும் தன்மை உள்ளது. இந்நிலையின் உண்மை எல்லாம் அன்றைய சித்தர்கள் தன் ஞான நிலையால் அறிந்து வெளியிட்டார்கள்.

தாவரங்கள் எல்லாவற்றுக்குமே “உயிர் நிலையும்… சுவாச நிலையும் உண்டு…” எல்லாமே அதனதன் தன்மையுடன் தான் இயங்கி ஜீவிக்கின்றன.

பல வகை தாவரங்கள் இவ் ஆறறிவு என்னும் மனிதனால் அழிக்கப்பட்டு விட்டன. அத்தாவரங்களின் மகத்துவத்தை எல்லாம் பல சித்தர்கள் கண்டுணர்ந்து அவற்றை வைத்திய முறைக்கும் வாழ்க்கை முறைக்கும் பயன்படும் நிலையில் எடுத்துரைத்துச் சென்றுள்ளார்கள்.

தாவரங்களிலே உள்ள நிலை கொண்டு தான் “உயிர் காக்கும் மருந்துகளாகப் பயன்படும் எல்லாமே நமக்குக் கிடைத்தன…”

பல கொடிய விஷம் வாய்ந்த தாவரங்களும் உள்ளன. சில வகைப் பச்சிலைகள் கொண்டு நம் சுவாச நிலைக்கு ஈர்க்கும் பொழுது நம்மையே மறக்கச் செய்யும் மயக்க நிலைக்குச் செல்லலாம். இன்னும் சில தாவரங்கள் நாம் காணும் பொழுதே நம்மை ஈர்த்து அந்த நிலைக்கு நம்மைச் சுற்றிக் கொண்டு மனிதன் உடலையே எலும்புக் கூடாக்கி வெளியிடும் தன்மையில் உள்ளன.

இன்னும் சில தாவரங்களின் நிலையைக் கொண்டு அதை அரைத்து நம் உடலில் பூசிக் கொண்டால் இவ் உடல் எந்த நிலையிலும் வயது வித்தியாசம் தெரியாமல்… எந்த வயதில் நாம் பூசிக் கொள்கின்றோமோ அந்த வயதில் இருந்த நிலை போல் என்றும் இருக்க வல்லமை தன்மையுடையது.

இந்நிலை கொண்ட பல வித மூலிகைகளும் நம் உலகிலேயே கலந்து செழித்து வளர்கின்றன. அம் மூலிகையின் உன்னதத் தத்துவத்தை முற்றும் அறிந்தவர் இதுவரை யாரும் இல்லை. அறிந்த நிலையையும் முற்றும் வெளியிட்டவரும் யாரும் இல்லை.

நாமே இந்த பாடத்தில் பல மூலிகைகளின் தன்மையைத் தான் எடுத்துரைத்தோம். அந்த மூலிகையின் பெயரைச் சொல்லவில்லை.
1.முற்றும் சொல்லிவிட்டால் பல சித்தர்களின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டி வரும்.
2.நாம் தனித்த நிலையில் எதையும் வெளியிடவும் முடியாது.

இந்த நிலை போலத் தான் இவ்வுலக நிலை முதற்கண்டு இவ்வுலகில் நடக்கும் எல்லா நிலைகளும் சந்திரனிலிருந்து சூரியன் முதற்கொண்டு மற்ற எல்லாக் கிரகங்களும் சூரியனுக்கு மேல் பல சூரியன்களும் எல்லா நிலைகளுமே…! தனித்த நிலையில் “நான்” என்ற நிலையில் ஒன்றுமே இயங்கவில்லை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளைப் பிளந்து தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து நம் உணர்வின் அறிவால் தெளிந்திட்ட அந்த ஞானிகளின் உணர்வைச் சேர்க்க வேண்டும்.

அப்படிச் சேர்க்கப்படும்போது தீமையான உடலைப் பிளந்துவிட்டு தீமையைப் பிளந்திடும் உணர்வின் சக்தியாக ஒளியின் சரீரம் பெற முடியும்.
1.பரிணாம வளர்ச்சியில் நாம் வளர்ந்து வந்த முறை இது.
2.அதன் வழியில் நாம் எளிதில் விண் செல்ல முடியும்

அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.

1.எல்லோருக்கும் கிடைக்கும்படியாக ஒருக்கிணைந்து சக்தி பெறும் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.
2.இந்த முறைப்படி எல்லோரும் செய்யுங்கள்.
3.எல்லோரையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள்.

எந்தத் தீமையைக் கண்டாலும்…
1.”தீமை…” என்ற வார்த்தையைச் சொல்லாது (இது முக்கியம்)
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

தீமையிலிருந்து மீளவேண்டும் என்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று சொன்னால் போதும்…!

காரணம்… மற்றவர்கள் செய்யும் தீமைகளைத் “தீமை… தீமை” என்று அதை நாம் பதிவு செய்து கொண்டால் அதன் பின் அந்த தீமையின் உணர்வே நமக்குள் விளைந்து இது முன்னாடி வந்துவிடும்… நல்ல குணங்களுக்குள் இது கலந்துவிடும்.

1.ஆகையினால் இதை (தீமைகளை) மறந்து அருள் சக்திகளை எடுத்து
2.அதனின் உணர்வுகளைப் பாய்ச்சக் கற்றுக் கொள்ள வேண்டும்.
3.சிறிது நாளைக்கு இப்படிப் பழகிக் கொண்டால் அது தீமைகளை அகற்றும்… நமக்கு மிகவும் நல்லதாகும்.

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அலைந்து அதிலே கண்டறிந்ததைத் துணுக்குத் துணுக்காக உங்களுக்குள் சொல்லிக் கொண்டே வருகின்றேன். உயர்ந்த சக்திகளை நீங்கள் பெறுவதற்கு இணைத்து இணைத்துக் கொடுக்கின்றேன்.

நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதி பெற்று எதிர்காலத்தில் எல்லோரையும் காக்கக்கூடிய உணர்வாக உங்களுக்குள் வளர்க்க வேண்டும்.

எங்கே… யாருடைய… கஷ்டங்களைப் பார்த்தாலும் உடனே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் “தியானிக்க வேண்டும்…” மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று கஷ்டங்கள் நீங்கி அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று “தவமிருக்க வேண்டும்…”

நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று “நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்…!” என்ற இந்தத் தவத்தை எடுத்தால் நமக்கு நல்லதாகின்றது… அவர்களும் நலம் அடைகிறார்கள். இந்த முறையை நாம் கடைப்பிடிப்போம்.

வியாபாரம் குறைவாக இருந்தாலும் எப்படியும் இதைச் சீர்படுத்த வேண்டும் என்ற உணர்விலே நாட்டத்தைச் செலுத்தினால் அதற்குண்டான வழி கிடைக்கும்… வியாபாரம் சீராகும்.

ஒருவருக்கு நோய் வந்து விட்டால்
1.மகரிஷிகள் அருள் சக்தியால் சீக்கிரம் அவர் நலம் பெற வேண்டும்… குணமாக வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
2.நோயைப் பற்றி எண்ணி… அதனின் வலுவைக் கூட்டக் கூடாது.
3.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை எல்லாம் ஒவ்வொரு நாளும் நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் கெட்டதை அழுத்தமாகச் சொல்லாதபடி… “நல்லது பெற வேண்டும்” என்பதற்கே அந்த அழுத்தத்தைக் கூட்ட வேண்டும்.

தீமையை அடக்கி ஆளும் சக்தியை நீங்கள் பெறுங்கள்

 

இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்துணர்ந்து அதனின் செயலை அறிந்து கொண்ட பின் மக்களுக்கு நீ ஓது என்றார் குருநாதர்
1.நாம் அல்ல…! நாம் நுகர்ந்த உணர்வுகள் எப்படி எல்லாம் இயக்குகின்றது…? பார்…! என்று குருநாதர் எனக்குத் தெளிவாக்கினார்
2.அதைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.

கண்ட அனுபவங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் கொண்டே வருகின்றேன். எப்படியோ அருள் உண₹சிகளைத் தூண்டித் தூண்டித் தூண்டித் தூண்டி உங்களுக்குள் அந்தச் சக்தியைப் பெறச் செய்கின்றேன்.

கூர்மையாக உங்களைப் பார்க்க வைக்கின்றேன்.
1.நாளை ஏதாவது சந்தர்ப்பத்தால் ஏற்பட்டால் “உடனே ரிமோட் செய்து”
2.எப்படி இருக்கின்றது…? என்ன செய்கின்றது…? என்பதை உணர்ந்து
3.நீங்கள் திருந்தி வாழ்வதற்கு இது உதவி செய்ய வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறேன்.

உங்களை இயக்காதபடி “அந்தத் தீமையை அடக்கி ஆளும் சக்தி நீங்கள் பெற வேண்டும்” என்பதற்குத்தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பது

குரு அருளைப் பெற முயற்சிப்போம். இந்தச் சக்தி பெற்ற பின் அதன் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்… உடல் பெற்ற நஞ்சுகளைக் கரைப்போம்.

அவர்கள் ஒளியாக மாறினால்… அவர்களை மீண்டும் நாம் எண்ணும் பொழுது நம்முடைய பாதை சீராகச் செல்லும் அதனுடைய உணர்வைப் பெற்று நாம் தீமையிலிருந்து விடுபட முடியும்.

அவர்கள் முன்னாடி விண் சென்றால் நாம் அவர்கள் வழியில் பின்னாடி செல்வது எளிதாகும். அவர்கள் ஒளியான உணர்வை நாம் எடுத்து நாமும் ஒளிச் சரீரமாக முடியும். ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம்.

1.இதை எல்லாம் உருவாக்கிப் பேச வைத்தது… உணர்த்துவது யார்…? உயிரான ஈசன் தான்.
2.இந்நேரம் வரை கேட்டறிந்த உணர்வுகளைக் உடலாக உருவாக்குவது யார்…? உங்கள் உயிர் தான்.
நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி “உங்களை அந்த ஞானிகள் உணர்வு வழி நடத்த வேண்டும்” என்ற உணர்வை வைத்துத் தான் பேசினேன் (ஞானகுரு).

நுகர்ந்த உணர்வுகள் எந்த அளவுக்குப் பதிவாகின்றதோ வசிஷ்டர்…! யாம் உபதேசிப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.

ஏதோ சொல்கின்றார் சாமியிடம் விபூதி வாங்கிச் சென்றால் போதும் என்றால் கவனம் அதிலே தான் இருக்கும். அந்த அறிவின் ஞானம் நமக்குள் வளராது.

ஆகவே உண்மையின் உணர்வின் தன்மையை உணர்ந்து பிறவியில்லா நிலை அடைவோம். இன்னொரு பிறப்பு இல்லாத நிலை அடைய வேண்டும்.
1.எப்படியும் இந்த உடலை விட்டுச் செல்ல வேண்டி வரும்
2.அதற்கு முன் இருளை நீக்கும் அருள் ஒளி என்ற உணர்வை நாம் பெற முற்பட வேண்டும்.

மனிதனின் கடைசி நிலை… அது தான் இராமேஸ்வரத்தில் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தனுசுக்கோடி. தீமைகளை நீக்கி நம் மனதை ஒன்றாக்க வேண்டும் என்ற நிலையில் “இராமன் மனதைக் குவித்து தியானித்தான்” என்று அங்கே காட்டியிருப்பார்கள்.

இன்று நாம் வாழ்வது அனைத்துமே “கனவு தான்…!”

 

நம் வாழ்க்கையையே நாம் பெரும் கனவாக்கித் தான் வாழ்கின்றோம். கனவும் நினைவும் கலந்த வாழ்க்கையில் வாழ்கின்றோம். நம்மின் நிழல் நம்மையே சுற்றிக் கொண்டுதான் உள்ளது. நம்மை நாம் நிழலில் தான் காண்கின்றோம்.

நம்மை நாம் நம்முடைய சுய ரூபத்தில் என்று காண்கின்றோம்…?

1.நாம் உறங்கும் நிலையில் காணும் கனவும்
2.நாம் இன்று இருக்கும் நிலை நாளை நினைத்துப் பார்க்கும் நிலையும்
3.நாளை நமக்கு நடக்கப் போகும் நிலையை இன்று காண்பதுவும்… பெரும் கனவுதான்.

நம்மில் ஒளிபடும் பொழுது நம் நிழலை நாம் காண்பதுவும் கனவு தான். நாம் வாழ்ந்த காலம் முடிந்து முடிந்தும் முடியாமலும் நம் உடலை விட்டு ஆத்மா பிரிந்த பிறகும் நடந்தது யாவுமே கனவுதான்.

நிலைத்து நிற்பது எதுவப்பா..?

எல்லாமே கனவாக உள்ள பொழுது நிலைத்து உள்ளது ஒன்றே ஒன்றுதான். அவ்வொன்றுக்காக அவ்வொன்று இருப்பதையே நாம் மறந்து விட்டுக் கனவில் தான் வாழ்கின்றோம்.

1.ஆத்மா என்ற பேரானந்த அந்த ஒரே சொத்தை நாம் மறந்து விட்டு
2.இந்தக் கனவுலகத்தில் இன்னும் நம்மை அறியாமல் நாம்… நம் காலத்தையும் நம் சக்தியையும் சிதறவிட்டு
3.நம் ஆத்மாவிற்கு அதிகத் துன்பத்தை மேன்மேலும் சுமக்கச் செய்து
4.நம் காலத்தையும் நமக்குச் சக்தி அளித்த சகல தேவனின் சக்தியையும் சிதறடித்துத் தான் வாழ்ந்து கொண்டுள்ளோம்.

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் இந்நிலையின் உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இந்நிலையில் இக்காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் கண்டிடும் வண்ணம் “நம் சுவாச நிலையை நாம் ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகைய எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அந்நிலை கொண்டே தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது. அந்நிலையிலிருந்து…
1.நாம் இதை எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு சமயத்திலும் குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படி ஞானத்தைப் போதித்தாரோ… அதை அப்படியே உங்களுக்கும் போதிக்கின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்தால்…
1.வாழ்க்கையில் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அதுவே உங்களுக்கு வழி காட்டும்
2.அருள் ஞானத்தைப் பெறச் செய்யும்
3.இருளைப் பிளக்கச் செய்யும்… பொருளைக் காணச் செய்யும்.

அறியாது தவறு செய்கிறார்கள் என்றாலும் அதிலே உள்ள பொருளைக் காண முடியும். இருளைப் பிளந்து காட்டும்… உண்மையின் தன்மையை அறிய முடியும்.

அப்பொழுது அருள் ஞானத்தின் சக்திகள் நமக்குள் பெருகுகிறது. நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் தீமைகளை அது பிளக்கிறது. பொருள் காணும் திறனை நாம் பெறுகின்றோம்.

சிறிது காலத்திற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் அனுபவம் பேசும்.

ஏனென்றால் காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாக உள்ளது.

இருந்தாலும் அதை நாம் ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் அதைச் சீக்கிரம் நமக்குள் இழுக்கும். “ஐயோ… நச்சுத் தன்மையாக இருக்கிறது…” என்று அதைப் பதிவு செய்து விட்டால் அடுத்து அந்த நச்சுத் தன்மை தான் நமக்குள் வரும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்
2.எல்லோருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் உயர்வு கிடைக்க வேண்டும் என்ற
4.இந்த உணர்வை எண்ணி எடுத்துக் கவர்ந்து அதை இங்கே பரப்பினால் போதும்.

ஆனால்…
1.நச்சுத் தன்மை… நச்சுத் தன்மை… என்ற அந்த உணர்வையே நுகர்ந்து கொண்டிருந்தால்
2.அதை இழுக்கின்றது… நம் ஆன்மாவாக மாற்றுகின்றது… நம்மையும் நஞ்சாக மாற்றத் தொடங்குகிறது.

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு மெய்ப் பொருளைக் காணும் நிலைகளுக்கு நாம் வர வேண்டும். நம்மைக் காத்து மற்றவரையும் காக்கும் சக்தியாக அந்த ஞானத்தின் வழித் தொடரில் நாம் செயல்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டித் தான் நமது குரு அருளைத் திரு அருளாக உங்களுக்குள் மாற்றும் நிலைகளுக்கு இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு). உங்களை நீங்கள் காத்துக் கொள்ள “குரு அருளை… திரு அருளாகக் கொடுக்கின்றோம்…!”

ஒவ்வொருவருக்குள்ளும் “குருசேத்திரப் போர்” நடந்து கொண்டே இருக்கின்றது

 

நாம் தொழில் செய்து கொண்டிருக்கின்றோம்… அந்த இடத்தில் ஒருவன் தவறு செய்கிறான். பார்த்த பின் என்ன ஆகிறது…? “கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் குருசேத்திரப் போர்…!”

1.தப்பு செய்தவனைப் பார்த்த உடனே இந்த உணர்வை நுகருகின்றோம்.
2.கண்கள் பார்க்கின்றது… கருவிழி பதிவாக்குகின்றது.
3.அவன் செய்த தவறான உணர்வுகள் சத்தியபாமா உயிரிலே மோதச் செய்கின்றது.

அவன் மிகவும் மோசமானவன் என்று பார்த்தவுடனே குருச்சேத்திரப் போர் நடக்கின்றது உடலுக்குள் ஆனபின் அவனைக் கெட்டவனாகச் சொல்லித் திட்டும்படி செய்கின்றது… வெளியிலே போகச் சொல்கின்றது. குருசேத்திரப் போர் நடக்கின்றது.

1.வெளியில் போடா…! என்று சொல்லி வேதனைப்படுத்தும் போது அதை ரசிக்கின்றோம்.
2.அந்த ரசிக்கும் தன்மை வந்து விட்டால் நமக்குள் வேதனை வருகின்றது.

நாம் தவறு செய்தோமா…? இல்லையே…! ஆனால் சந்தர்ப்பத்தில் இப்படி வந்ததைத் துடைக்க என்ன வைத்திருக்கின்றோம்…?

அடுத்தாற்போல் அவனை திரும்பப் பார்த்த உடனே அவன் செய்த தவறு நமக்குள் பதிவானது மீண்டும் அந்தத் தவறை உணர்த்தி குருசேத்திரப் போர் ஆரம்பிக்கின்றது.
1.நாளை ஏதாவது செய்து விடுவானா…? என்ற இந்த உணர்வுகள் வருகிறது.
2.ஆகாதவனைக் கண்டாலே இப்படித் தான் இந்த உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது

வீட்டில் சிறிது கலக்கமாக இருந்தால் சந்தேக உணர்வு வந்து கொண்டே இருக்கும். ஆகவே குருசேத்திரப் போர் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

பையன் மீது நம்பிக்கையுடன் இருந்து சொத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றீர்கள். அவன் கொஞ்சம் தவறாக நடக்கின்றான் என்றால் அவனை எண்ணும் போதெல்லாம் குருச்சேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

அப்பொழுது அரக்கன் என்ற அந்த உணர்வு “சீதா” என்ற நல்லதைச் செய்ய விடாதபடி தடுத்துக் கொண்டே இருக்கின்றது வேதனை என்று வந்தபின் மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்கள் அடக்கப்படுகின்றது.

கலி…! தீமைகளைத் தான் வளர்க்க முடிகின்றது நல்லதை வளர்க்க முடியவில்லை. ஆகவே கலியுகமாக இருக்கின்றது.

ஆனால் அந்த உணர்வின் தன்மைகளைத் தெரிந்து கொண்ட பின் கார்த்திகேயா. தீமை புகாது தடுத்துக் கொள்வது சேனாதிபதி. நமது ஞானிகள் இந்தத் தத்துவங்களைக் கொடுத்துள்ளார்கள் சிறிதளவாவது அதை நாம் பின்பற்றுகின்றோமா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

1.உங்களிடம் உபதேசங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவாக்கிப் பதிவாக்கி…
2.அதை நீங்கள் புரிந்து அந்த உணர்வின் தன்மை வளர்ச்சியாகி
3.உங்களை அறியாது ஏதாவது தவறுகள் வந்தாலும் உடனே ரிமோட் செய்து
4.உடனே நல்லதாக மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி வர வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பப் பதிவாக்குவது.

தவறு செய்வதைப் பார்த்தால் கோபமான உணர்ச்சிகள் தோன்றுகின்றது. அந்த உணர்வு நம்மை இயக்காதபடி ரிமோட் செய்து விட்டால் நமக்குள் புகாதபடி தடுக்கப்படும். “அவனுக்கு நல்ல அறிவு வரட்டும்” என்று அந்தத் தீமை நமக்குள் புகாது தடுத்திடும் சேனாதிபதி.

ஆகவே குரு வழி என்ன…? நாம் கவர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வுகள் வலுப்பெறுகின்றது அது தான் வசிஷ்டர் பிரம்மகுரு.

மற்றவர்கள் செய்யும் உபதேசங்களை இவ்வளவு நேரம் உங்களால் கேட்க முடியுமா…? அவர்கள் என்ன பேசுகின்றார்கள்…! இவர்கள் என்ன பேசுகின்றார்கள்…? திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.

இப்போது உங்களுக்குள் எப்படியும் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று குரு காட்டிய வழியிலே “ரெக்கார்ட்” செய்கின்றேன்.
1.அதன் பின் சிறிது நேரம் சிந்தித்தீர்கள் என்றால்
2.ஞானிகள் பெற்ற உணர்வு உங்களுக்குள் அந்த ஞானத்தைப் பேசும்.

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டு சென்றால்… அங்கிருந்து திருடனே வந்தாலும் கூட உடனே அதைத் தெரிந்து கொள்ள முடியும். அந்தச் சுதாரிப்பைக் கொடுக்கும்.

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு வர வேண்டும் என்பதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அதனின் வலிமையைக் காட்டி விடுகின்றது.
1.ஆக மொத்தம் அதைக் காட்டிலும் வலிமையான துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்
2.இதன் வலிமையைக் காட்டும் பொழுது தீமையிலிருந்து விடுபட்டு நீங்கள் தெளிந்து வாழ முடியும்.

வேதனை என்ற உணர்வு வந்து விட்டால் கலி. ஆனால் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் கல்கி.

உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி வர வேண்டும் அதைப் பெறச் செய்வதற்கு தான் யாம் உபதேசிப்பது (ஞானகுரு).

ஒரே நிலை கொண்ட ஈர்க்கும் சக்தி பெற வேண்டும்

 

மிருகங்கள் தன் ஆகாரத்தைத் தேடிச் செல்லும் பொழுது ஆகாரம் இருக்கும் இடத்தைத் “தன் சுவாச நிலையால் உணர்ந்து” அந்த இடத்தை அணுகி ஆகாரத்தை எடுத்துக் கொள்கின்றது.

அதே நிலையில் அது செல்லும் பொழுது “தன் எதிரி உள்ளது” என்பதையும் தன் சுவாச நிலையில் உணர்ந்துதான் தப்பிச் செல்கின்றது. அதே போல… தன் கூட்டமும் எதிரிகளிடமிருந்து விலகிச் சென்று விடுகின்றது.

இந்நிலை மனிதர்களுக்கு இல்லை.

இதைப் போலவே தன்னுடைய ஆகாரத்தைத் தேடிப் போகும் பொழுது தன்னுடைய சுவாச அலைகளைக் கொண்டு தன் ஆகாரம் இருக்கும் இடம் ஈர்த்து அந்த இடத்தை நோக்கிச் செல்கின்றது.

அதே சமயம் அது தான் ஆகாரத்தை எடுக்கச் செல்லும் பொழுது
1.தன் எதிரி வருகிறான் என்று உணரும் பொழுது
2.தான் நாடிச் சென்ற ஆகாரத்தையும் எடுக்காமல் அது திரும்பிச் செல்கின்றது.

பட்சியின் தன்மையில் அதன் ஒளியை கொண்டே அது தன் ஆகாரத்தை எடுக்கும் சக்தி நிலை பெற்றது. அந்த ஒளி ஆகாரத்தின் மேல் பாய்ச்சும் பொழுது
1.அந்த இடத்தில் உள்ள சப்த அலைகளைக் கொண்டு உணரும் தன்மை பெற்று
2.அங்கு எதிரி வரும் தன்மையை அப்பார்வையின் ஒளியினாலேயே அவ்வெதிரியின் சுவாச நிலை அறிந்து
3.ஆகாரத்தை எடுக்காமல் பறந்து செல்கின்றது.

மற்ற ஜெந்துக்களுக்கு மிருகங்கள் பட்சிகள் (ஊரும் ஜந்துக்கள் அல்ல) முன்கூட்டியே மழை இடி பூகம்பம் போன்ற பல ஆபத்தான நிலைகளின் சப்த அலைகளைப் பூமியின் ஈர்ப்பு நிலை கொண்டு அதன் சுவாச நிலைக்கு ஈர்க்கும் தன்மை பெற்று “முன்கூட்டியே” இந்நிலையை அறியும் நிலை அதற்கு உள்ளது.

1.மனிதனுக்கு உள்ள அறிவு சக்தியை விட மிருகங்களுக்கு இயற்கையிலேயே “ஒரே நிலை கொண்ட ஈர்க்கும் சக்தி உள்ளது…”
2.அந்நிலையை மனிதன் பெற வேண்டும் என்றால் தியானத்தால் தான் பெற முடியும்.

இயற்கையிலேயே ஒவ்வொரு மிருகத்திற்கும் இப்படிப்பட்ட சக்தி இருந்தாலும் அதைச் செயல்படுத்த அதற்கான அங்கங்கள் கருவிகள் அதனிடத்தில் இல்லை. எழுதி வைத்தோ செயல்படுத்தவோ முடியாத உடலமைப்பைக் கொண்டது.

மனிதன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தன் எண்ண அலைகள் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு மூன்று மாத காலம் பேசாமல் இருந்துவிட்டு பிறகு பேச முயற்சிக்கும் பொழுது சில சமயம் பேச முடியாத நிலையில் சைகை மூலமாகச் சொல்லும் பொழுது அதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

தனக்கு எவ்வளவோ எண்ண அலைகள் வந்தாலும் கூட தன்னால் சொல்ல முடியாத நிலையில் மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

மிருகங்களுக்கோ பட்சிகளுக்கோ எண்ண உணர்வுகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமலும் செயல்படுத்த முடியாமலும் போய்விடுவதினால் அதற்கு நம்மை ஒத்த அறிவு இல்லை என்று சொல்லிவிட முடியாது.

நம்மைக் காட்டிலும் மேலான அறிவு நிலை பெற்ற பல மிருக ஜந்துக்களும் பட்சிகளும் உள்ளன. அது உண்ணும் உணவிலே தனக்குத் தேவைக்கு மேல் ஒரு அணுவையும் அதிகமாக எடுத்துக் கொள்ளாது.

மனிதனுக்கு அறிவு மிருகத்தை விட அதிகம் என்று சொல்கின்றோம்.
1.ஆனால் உண்மையில் மிருகத்தின் அளவு மனிதனுக்கு அறிவு உண்டா…? என்பதுதான் சந்தேகம்.
2.மனிதனை விட மிருகத்துக்கே அறிவு அதிகம் என்று கூடச் சொல்லலாம் “இன்று மனிதன் இருக்கும் நிலையை வைத்து…”

அன்றைய சித்தர்கள் எந்த நிலை கொண்டெல்லாம் பல உண்மை நிலைகளை அறிந்தார்களோ அந்நிலை கொண்டெல்லாம் சில மிருகங்கள் நாய் நரி பறவைகள் இன்னும் பல மிருகங்கள் பல ஆவி நிலைகளை அறிந்திடும் நிலையில் உள்ளன.

ஒரு வீட்டில் ஏதாவது உடலை விட்டு ஆவி பிரியும் நாள் வருவதற்கு முதலிலேயே… மிருக நிலைக்கு அதன் சுவாச நிலை கொண்டு அதை அறியும் நிலை உள்ளது.

அந்நிலையில் தான் நாயும் நரியும் பூனைகளும் உள்ளன.
1.ஆவி பிரியும் நிலையில் பூனைகள் அங்கும் இங்கும் ஓடுவதைப் பார்த்திடலாம்.
2.ஆவி பிரியும் நிலையில் பூனைகள் அங்கு இருக்காது. அதன் சுவாச நிலைக்கே அது தெரிந்திடும்.

ஆவி நிலை மட்டுமல்ல பெரும் வெள்ளம் வருகிறது என்றாலும் பூனை நாய் நரி இப்படிக் கூரிய அறிவுடைய மிருக ஜந்துகளுக்கு சுவாச நிலையில் எல்லா நிலையுமே அறியும் தன்மை உள்ளது.

இம்மாதிரி மிருகத்தின் நிலைக்குத் தான் கடந்த கால சரீரங்களின் இன்ப துன்ப நிலைகளும் தன்னைச் சுற்றியுள்ள ஆவி நிலைகளும் மனிதனின் எண்ணமும் சுவாச நிலையும் ஒவ்வொன்றும் அறியும் தன்மை மிருகங்களுக்கும் சில பட்சிகள் நிலைக்கும் உள்ளன.

இந்நிலையில் இருந்து எல்லாம் மாறுபட்டு வாழும் நிலை கொண்டவன் தான் மனிதன். இருந்தாலும்
1.மனிதனுக்கு அச்சக்தி நிலை கொண்டு கிடைத்த பாக்கியத்தைச் சிதறவிட்டு
2.மனிதனுக்கு ஆறு அறிவு என்ற அளவை வைத்துப் பிறரிடம் ஜோசியம் கேட்டு
3.அந்த ஜோசியத்தின் நிலை கொண்டே தன் எண்ணத்தை மாற்றிப் பல நூல்களைப் படித்து
4.பல எண்ணத்தைத் தன்னுள் சிதறவிட்டுத் தனக்குள்ள சக்தி நிலையையே மாற்றிக் கொண்டு
5.தன்னைத்தானே நரகமாக்கி வாழுகின்றான் ஆறறிவு படைத்த இன்றைய மனிதன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி
2.“மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்…” என்று
3.நம் கண்ணின் நினைவினை விண்ணிலே செலுத்தி அதைக் கவர்ந்து
4.உள்முகமாக உயிர் வழியாகக் கொண்டு வந்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
5.இப்படிச் செய்தால் இது “நல்லதைச் சிந்திக்க இடம் கொடுக்கும்…”

ஆனால் சிந்தனையற்ற செயலை ஒருவன் செய்கிறான்… நாம் பார்க்க்கின்றோம். அதனால் வரும் எதிர்ப்பு உணர்வையோ வேதனைப்படும் செயலையோ நாம் நுகர்ந்து விட்டால் அடுத்து ஒரு வேலையைச் செய்தால் என்ன ஆகும்…?

ஒரு கணக்கைப் பார்த்தோம் என்றால் கிடக்குது போ…! என்று இந்த உணர்வு தான் வரும்… சரியாக வராது. அந்த வேலையை வெறுக்கும் நிலை தான் வரும்.

அதே சமயத்தில் வெறுப்பால் அந்த வேலையைச் செய்யவில்லை என்றால் மேலதிகாரி வந்தவுடனே “ஏம்பா…? இந்த வேலையைச் செய்யவில்லை…!” என்று சொன்னவுடனே வேதனையான உணர்வு நமக்குள் வரும்.

காரணம்… சந்தர்ப்பம் இவ்வாறு இயக்குகிறது.

இதைப் போன்ற நிலைகளை
1.நாம் உடனுக்குடன் தூய்மைப்படுத்தினால் தான் சிந்தனையும் நிலைக்கும்
2.நம் செயல்களும் சீராக இருக்கும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் எந்தத் தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று இங்கே புருவ மத்தியில் வேண்ட வேண்டும்.
1.மனிதால் மட்டும் தான் இப்படி எண்ண முடியும்.
2.மற்ற உயிரினங்கள் எதிரிகளைப் பார்த்தால் அதனின்று தப்பிக் கொள்ளத் தான் எண்ணும்
3.விண்ணை நோக்கி எண்ணும் நிலை இல்லை.

உயிரினங்களில் தன்னைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி… அதிலே விளைந்த உணர்வு தான் “ஒட்டு மொத்தமாக” நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது நம் உயிர்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்து இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அகற்றுதல் வேண்டும்.

இதைத் தான் கார்த்திகேயா…! என்று சாஸ்திரப்படி காட்டுகிறார்கள். சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்கு வள்ளி திருமணத்தையும் காட்டுகின்றனர்

ஏனென்றால் வள்ளியை முருகன் காதலிக்கின்றான்.
1.இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.வலிமைமிக்க சக்தியான அந்தப் “பாதுகாக்கும் சக்தியை” தனக்குள் நேசிக்க வேண்டும்.

முருகு… மாற்றி அமைக்கும் உடல் பெற்றவர்கள் நாம்.
1.நம் ஆறாவது அறிவைத் தான் முருகன் என்றும்
2..தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்றும் காவியப் படைப்பு வருகின்றது.

நம்மைப் பாதுகாக்கும் உணர்வை நாம் நேசித்தோம் என்றால் மனிதனாக வளர்ந்த நிலையில் அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோம் என்று பொருள்.

நம்மை ஏசுவோரையோ கேவலப்படுத்துவோரையோ நாம் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைந்து நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை அது தின்றுவிடும்.

வேதனைப்படும்படி ஒருவர் சொன்னார் என்றால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது தின்றுவிடும். பார்க்கலாம் டி.பி. வந்தால் எலும்புகளை எல்லாம் அது தின்கிறது.

அதை எல்லாம் மாற்றுவதற்குத் தான் நம்மைப் பாதுகாக்கும் உணர்வினை எடுக்கும்படி காவியப் படைப்புகள் உணர்த்துகின்றது.

1.மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்தால் அது நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வருகிறது.
2.அந்த அருள் உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் உயிர் அதைத் தெய்வ ஆணையாக
3.நமக்குள் அந்தக் காத்திடும் தெய்வமாக… தெய்வச் செயலாக நம் உடலை இயக்கும்.

தீமைகளிலிருந்து விடுபடுகிறோம்.. அருள் சக்திகளையும் பெறுகின்றோம்… அது பெருகப் பெருக பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு அடுத்த நிலையான ஒளிச் சரீரமும் பெறுகின்றோம்.

ஆத்ம சுத்தி செய்வதன் முக்கியத்துவம்

 

இராமனைக் கூப்பிட்டு… “நீ காட்டுக்குச் செல்…” உன்னுடைய சகோதரனுக்குப் பட்டம் சூட்ட வேண்டி உன் தந்தை விரும்புகின்றார். உன்னை எப்படிக் காட்டிற்குப் போகச் சொல்வது…? என்று தயங்கிக் கொண்டிருக்கின்றார் நீ காட்டுக்குச் செல்…! என்று கைகேயி சொல்கின்றது.

தந்தை சொல் தட்டாத நிலையில் இராமனும் காட்டுக்குச் செல்கின்றார். காரணம்…
1.தசரதச் சக்கரவர்த்தி அன்று எத்தனை பேரைப் போரில் கொன்றாரோ
2.திட்டமிட்டு அடுத்த நாட்டைத் தான் அபகரிக்க வேண்டும் என்று எத்தனை பேரைக் கொன்றானோ
3.தான் எடுத்துக் கொண்ட எண்ணம் (அந்தச் சக்திகள்) “கைகேயி” பதிவாகி அங்கே இரக்கமற்றுக் கொன்றது.

அப்படிக் கொன்ற உணர்வுகள் இந்த உடலில் விளைந்த பின் என்ன செய்கின்றது…? நல்லது செய்ய முடியவில்லை… நல்லவனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று நினைத்தால் அது முடியவில்லை.

இங்கே இராவணன் சீதாவைச் சிறைப்பிடித்தான் நல்லதைச் செய்ய விடாதபடி உடலின் இச்சை கொண்டு தடுக்கின்றான்.

இங்கே இந்த உணர்வுகள் இயக்கப்படும் பொழுது இவன் உடலுக்குள் அந்த இயக்கம் எப்படி இயங்குகின்றது…?
1.எதை வளர்த்துக் கொண்டோமோ நல்லது இவனால் செய்யவே முடியவில்லை
2.கைகேயிக்குக் கொடுத்த வாக்கின் பிரகாரம் செயல்பட வேண்டி வருகின்றது.

அப்பொழுது தசரதன் வேதனைப்படுகின்றான்.

பிறரை வேதனைப்படுத்திப் போரில் மற்றவரைக் கொன்றான். ஆனால் தனக்குள் வரும்பொழுது நல்லவனுக்குப் பட்டம் சூட்ட முடியவில்லை என்று வேதனைப்படுகின்றான்… வேதனை தாங்காதபடி ஜீவன் பிரிகின்றது.

கண்ணுக்கு முன்னாடி நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகின்றான். ஆனால்
1.உடலுக்குள் இருக்கும் போர் முறை நல்லதைப் பேச விடாதபடி
2.இந்த உணர்வின் தன்மை அவனை இப்படிச் செயல்படுத்த வைத்து விடுகிறது என்பதைக் காட்டுகின்றார்கள்
3.வேதனை உணர்வுகள் இவனை ஒடுக்கி விடுகின்றது.

தாயார் வீட்டுக்கு அனுப்பிய பரதனை மீண்டும் வரச் சொல்லிச் சொல்கின்றார்கள்.

பரதன் வந்து பார்க்கும் பொழுது சாம்ராஜ்யமே சூனியமாகத் தெரிகின்றது தந்தையையும் இராமனையும் காணவில்லை. தந்தையைப் பற்றியும் இராமனைப் பற்றியும் எல்லோரிடம் கேட்கின்றான்… ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை எல்லோரும் சோகமாக இருக்கின்றார்கள்.

கடைசியில் தன் தாயாரிடமே கேட்கின்றான். போர்க்களத்தில் ஜெயிப்பதற்கு நான் தான் காரணமாக இருந்தேன். அதற்கு இரண்டு வரம் கொடுத்தார். அந்த வரத்தைத் தான் நான் கேட்டேன்.

வரப்படி இராமனைக் காட்டிற்குச் செல்லும்படி சொல்லி விட்டார் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று சொன்னேன்… அதற்குள் மனம் தாங்காது இறந்து விட்டார். என்னுடைய குறை இல்லை என்று சொல்கின்றது

பரதன் அப்போது சொல்கிறான்… உன் தாயார் வீட்டிலும் இதே தான் நடந்தது. அதே வழிகளில் தான் இன்று இங்கே வந்திருக்கின்றது.

எந்தக் கோபத்தின் வழியோ அதன் வழி தான் இங்கே நடக்கும் என்ற நிலையை அங்கே காட்டித் தெளிவாக்குகின்றார்கள்
1.அன்றே உன்னைக் கொன்று இருந்தால்
2.எங்களுடைய சாம்ராஜ்யத்திற்கு இந்த நிலை வந்திருக்காது…! என்று பரதன் சொல்கிறான்

அதாவது…
1.எப்பொழுது பிறரை துன்பப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் வருகின்றதோ அதை உடனே… அப்போதே அழித்து விட்டால்
2.நம் உடலில் நோய்களோ மற்ற தீய வினைகளோ தீமைகளோ வராது என்பதைத்தான் அங்கே காட்டுகின்றார்கள்.

பாசத்தால் இருக்கின்றோம்…! நாம் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனை. இந்த உணர்வின் தன்மை உணர்ச்சியான பின் வேதனைப்படும் செயலே வருகின்றது.

இவை எல்லாம் நாம் எடுக்கும் எண்ணங்கள் கொண்டு நடக்க்கூடிய செயல்கள் தான். அதிலிருந்து தப்ப வேண்டும் அல்லவா…!

பத்தாவது நிலை அடையக் கூடிய (தசரதச் சக்கரவர்த்தி) நாம் எந்த வகையில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றோம்.
1.வேதனை என்ற உணர்வும் வரும் போது அந்த விஷம் கலந்து விட்டால்
2.மனிதனல்லாத நிலைக்குத்தான் செல்ல வேண்டி வரும் என்று இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

அதற்குத்தான் அடிக்கடி உங்களை ஆத்ம சுத்தி செய்யும்படி கட்டாயப்படுத்துகின்றோம். தீமை என்று பார்த்தாலே
1.அடுத்த கணம் அது தனக்குள் வளராதபடி
2.மகரிஷியின் உணர்வு கொண்டு ஆரம்பத்திலேயே அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நல்ல குணங்களை அப்பொழுது தான் நம்மால் காக்க முடியும்.

தேவர்களுடன் தேவர்களாக நாம் ஐக்கியப்பட வேண்டும்

 

இன்றைய உலகம் பெரும் விஷத்தன்மை வாய்ந்த உலகமாக மாறிக் கொண்டு வருகின்றது… நல்ல பாம்பின் விஷம் கொடும் விஷம் என்கிறார்கள்,

அந்த நல்ல பாம்பிற்கு… அந்த நாக தேவனுக்கு அவ்விஷம் எங்கிருந்தப்பா வந்தது…?
1.இக்காற்றினில் கலந்திருக்கும் கடுமையான விஷ நிலையை…
2.தன் சுவாச நிலைக்குk கடும் விஷத்தை ஈர்த்துத் தன் ஆகாரமாக ஏற்று… அவ்விஷத்தையே உண்டு…
3.பல நூறு ஆண்டு கணக்குகள் தான் சுவாசித்த விஷ அணுக்களைத் தன்னுள்ளையே பல ஆண்டுகள் அடக்கி
4.விஷத்தையே மேலும் மேலும் ஈர்த்து அவ்விஷத்தைக் கொண்டு பெரும் மாணிக்கமாக
5.அதைத் தன் ஜீவன் முடியும் காலத்தில் கக்கி வெளிப்படுத்துகின்றது.

நல்ல பாம்பு… விஷத்தைத் தன் தொண்டைக்குழி இடத்தில் சிறுகச் சிறுகப் பல ஆண்டுகள் சேமிக்கிறது. அச்சூரியனின் சக்தி அந்த நல்ல பாம்பின் மேல் படும்பொழுது அதன் பார்வையைக் கொண்டு தன் நிலைக்கு நேராக ஈர்த்து…
1.தான் எடுக்கும் சுவாச நிலை… மேல் நோக்கி…
2.அச்சூரியனின் சக்தியிலிருந்து தன்னுள் ஈர்ப்பதாக இருக்கின்றது.

இந்நிலை கொண்டு அப்பாம்பு இக்காற்றில் கலந்துள்ள விஷமான காற்றைத் தன் சுவாசத்திற்கு ஈர்த்துக் கொடிய விஷத்தைக் கொண்டே தான் சேமித்து வைத்திடும் விஷத்தையே மாணிக்கக் கல்லாகப் பெறும் பாக்கியத்தைப் பெற்றுள்ளது அந்த நல்ல பாம்பு.

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன.
1.தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி
2.அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…! இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி… எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாம் வாழும் இந்த மனித வாழ்க்கைக் காலங்களில் வேதனை என்ற அணுக்கள் நம் உடலில் வளர்ச்சி அடைந்தால் கடுமையான நோய்களும் அதனால் மேலும் மேலும் வேதனை அதிகரிக்கின்றது.

1.தேடிய செல்வம் எத்தனையோ இருப்பினும்…
2.வைத்தியத்திற்குச் செலவழித்து உடலைப் பாதுகாத்தாலும்
3.உடலில் விளைந்த உணர்வுகள் கடைசி நிலை எதுவோ
4.அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறொரு உடலாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்துப் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி எல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அதை எண்ணி எண்ணி வேதனைப்படுவதோ… அல்லது தன்னைச் சார்ந்தோர் வேதனைப்படுவதை அடிக்கடி நுகர்ந்தாலோ… அதை எல்லாம் தூய்மைப்படுத்தவில்லை என்றால் தீய அணுக்களாக மாறி உடலில் நோய்களாக மாறிவிடும்.

ஆகவே ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் இதைப் போன்ற கஷ்டங்களோ நஷ்டங்களோ அது எது வந்தாலும்… உடலுக்குள் அதை வளர விடாது தடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

தடுக்க வேண்டும் என்றால் கார்த்திகேயா… என்ற ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைப் புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரில் அடிக்கடி இணைக்க வேண்டும்.

1.கண் வழியாக அந்த அரும் பெரும் சக்திகளைக் கவர்ந்தாலும்
2.கண்ணின் நினைவை உயிரிலே இணைக்கப்படும் போது
3.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் திறன் வருகிறது
4.அப்பொழுது மூக்கின் வழி செல்லும் தீய உணர்வுகளை அது தடைப்படுத்துகின்றது.

அதற்குப்பின் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைச் செலுத்தப்படும் போது அதுவும் வலுப் பெறுகிறது.
1.அப்பொழுது நம் உடலுக்கு முன் முகப்பில் உள்ள
2.விஷத் தன்மைகளைத் தூர ஒதுக்கிச் செல்ல… அங்கிருந்து வெளியே தள்ளி விடுகின்றது.
3.நமது ஆன்மா தூய்மை ஆகிறது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா… ஒரு வட்டம் உண்டு. அந்த ஜீவான்மாக்களும் அப்போது சுத்தமாகிறது.

இப்படி ஒரு பயிற்சி நமக்குள் வளர்ந்துவிட்டால்…
1.உயிரைப் போன்றே நாம் நுகரும் உணர்வின் தன்மைகளும்
2.ஒளியின் அறிவாக அந்த அணுக்கள் வளர்ச்சி பெறும் சக்தி பெறுகின்றது.

அதாவது… உயிருடன் இணைந்து ஒளி என்ற அறிவு எப்படி இருந்ததோ… அதன் அறிவின் தன்மை பெற்ற அணுக்களை இப்படிச் சிறுகச் சிறுக மாற்றி… இந்த உடலுக்குப் பின் நாம் ஒளியின் சரீரமாக மாறுவதே கடைசி நிலை.

“மகரிஷிகள் உணர்வு கொண்டு தான்” எதையுமே நல்லதாக மாற்றி அமைக்க முடியும்

 

இன்று மனிதனாக இருக்கின்றோம் வேதனை உணர்வுகள் உடலுக்குள் மிகவும் அதிகமானால் இடுப்பு வலிக்கின்றது மேல் வலிக்கின்றது கால் வலிக்கின்றது என்று வந்து விடுகிறது. வேதனையைத் தவிர வேறு நல்லதைச் சுவாசிக்கின்றோமா…?

நம் உடலில் உள்ள மற்ற அணுக்களிலும் வேதனையைச் சேர்த்து விடுகின்றோம். நல்ல உறுப்புகளாக உருவாகி… நஞ்சினை மலமாக மாற்றும் திறன் பெற்று இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு உடல் உறுப்புகளைப் பாழாக்குகின்றோம்.

1.தீமையை மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்
2.வேதனை என்ற உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் இணைந்து சிறுகச் சிறுக அவைகளை மாற்றத் தொடங்குகிறது.

இரத்தம் கல்லீரலுக்கு வந்தால் அதை வடிகட்டும் திறனும் நுரையீரல் மற்றதை வடிகட்டும் திறனும் எல்லாமே சுத்திகரித்து வரப்படும் பொழுது அது சரியாக இயங்கவில்லை என்றால் விஷம் என்ற உணர்வு சென்று அதற்குள் இணைந்து விடுகின்றது.
1.விஷம் ஆகிவிட்டால் நுரையீரல் சரியாக வேலை செய்யாது
2.கல்லீரலுக்குச் சென்றால் வீக்கமாகி விடுகின்றது வடிகட்டும் தன்மை இல்லை.
3.மண்ணீரலுக்குச் சென்றால் இதே மாதிரி ஆகிவிடுகின்றது
4.இதை எல்லாம் கடந்து வரப்படும் பொழுது நுரையீரல் இரத்தத்தை இழுக்கும் திறன் இழந்து “வெறும் காற்று” தான் வருகிறது.

கல்லீரல் தான் இரத்தத்தை வடிகட்டிக் கொடுப்பது அதனுடைய திறன் இழந்துவிட்டால் நுரையீரல் இழுக்கும் பொழுது வெறும் கேஸ் (GAS) தான் செல்லும். அப்போது…
1.நெஞ்சு எப்படியோ எரிகின்றது மூச்சுத் திணறல் ஆகின்றது
2.கல்லீரல் வீங்கி விட்டால் அடுத்து நடந்தால் போதும் மூச்சுத் திணறல் ஆகும்
3.காரணம் அதற்குண்டான இரத்தம் இல்லை.
4.பெட்ரோல் இல்லை என்றால் ஒரு இன்ஜின் லோடை (LOAD) இழுத்து ஓடுமா…?

நுரையீரல் இழுத்து இரத்தத்தை உடல் முழுவதும் சப்ளை செய்து வடிகட்டி சுத்திகரித்து இருதயத்திற்குச் சென்று எல்லாவற்றுக்கும் ஆசிடாக மாற்றி எது எது உணர்வோ அவைகளுக்கு இயக்கச் சக்திக்குக் கொடுக்கும். அது தான் நம் உறுப்புகளின் இயக்கம்.

மருத்துவர்களும் இன்று எத்தனையோ கண்டுபிடிக்கின்றார்கள் சொல்கின்றார்கள்… ஆனால் அவர்களும் ஓரளவுக்கு மேல் தெரிவதில்லை
1.கடவுளைத்தான் நான் வணங்குகிறேன்… அவன் பேரைச் சொல்லி தான் நான் மருத்துவம் செய்கிறேன்
2.விதி இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்பார்கள்
3.பழக்கப்பட்ட முறையைத்தான் சொல்கின்றோமே தவிர ஞானிகள் காட்டிய உணர்வை நாம் பின்பற்றவில்லை.

மருத்துவர்களும் முயற்சி எடுக்கின்றார்கள். இருந்தாலும் விஞ்ஞான அறிவு கொண்டு என்னதான் உடலுக்குள் எலும்பை மாற்றினாலும் உறுப்புகளை மாற்றினாலும் எத்தனை காலம் நாம் நன்றாக வாழ முடிகின்றது…?

முதலிலே நன்றாக இருந்தது இப்பொழுது வலுவான பொருள்களைத் தூக்குவதற்குக் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. அப்போது அங்கே வேதனை வருகின்றது.

இருதயத்தை மாற்றி வைத்திருப்பார்கள் மருத்துவர் சூதானமாக இருக்க வேண்டும் என்பார் ஏதாவது பார்த்தால் சாப்பிட முடிவதில்லை அதற்கு ஒரு மருந்து.

மற்ற மனிதர்களுடைய கிட்னியை எடுத்து மாற்றம் செய்தவர்கள் அது சீராக இயங்குவதற்கு ஒரு மருந்தை கொடுத்துச் சமப்படுத்துவார்கள். மாற்றுவார்கள் ஒரு நாளைக்கு மருந்து கொடுக்கவில்லை என்றால் மரணம் ஆகிவிடும்.

சம்பாதித்த காசை வைத்துச் சிறிது நாட்கள் கூட வாழலாம். பின் சாப்பிட்ட மருந்தின் விஷங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து…
நான் எப்படி எல்லாம் இருந்தேன் கடைசியில் என்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று
2.விஷத்தின் உணர்வு கொண்டு உயிர் வெளியே சென்றால் விஷத்தைச் சேமித்த உணர்வு கொண்டு பாம்பினத்திற்குள் அடுத்து செல்கின்றது.

கோபம் குரோதம் என்ற நிலையில் அடுத்தவரை வேதனைப்படுத்தி அதை ரசித்து வாழ்ந்தால் அடுத்துப் புலியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல வேண்டி வரும். மற்றொன்றைக் கொன்று சாப்பிடும் நிலை தான் வரும்.

இவையெல்லாம் இயற்கையின் சில நியதிகள்…!

இது போன்ற கொடுமைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான்
1.உங்களுக்குத் தொடர்ந்து ஞானிகள் உணர்வை உபதேச வாயிலாகக் கொடுத்து
2.விஷத்தன்மையான உணர்வுகள் உடலுக்குள் சேராத வண்ணம் மாற்றி அமைக்கும் பயிற்சியாக
3.தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் உனர்வுகளைப் பெறும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்துகின்றோம்.

உயிரணுக்கள் சரீரமாக உருவாக்க “உஷ்ண அலைகள்” அவசியம் தேவை

 

சூரியனிலிருந்து வெளிவரும் ஈஸ்வர சக்தியின் கதிர்ப் பிழம்பினை பூமித்தாய் தன் ஈர்ப்பு சக்தியினால் ஈர்த்துப் பூமியின் உயிரணுக்களாகக் காற்றுடன் கலந்து விடுகிறது.

அந்த உயிரணுக்கள் என்ன செய்கிறது…?

பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள்… ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றவாறு
1.மண்ணின் நிலை… மரம்… செடி… கொடி… நீர் நிலைகள் கழிவுப் பொருட்கள் நிலைக்கு ஏற்றவாறு உஷ்ணக் காற்றலைகளை…
2.நஞ்சான அலைகளையோ அல்லது நறுமணம் கொண்ட அலைகளையோ அந்த உயிரணுக்கள் சுவாசிக்கின்றனவோ
3.அதனையே சுவாசித்துச் சுற்றி வருகின்றன.

எந்த அலைகளை முதலில் இவ் உயிரணு சுவாசிக்கின்றதோ அந்த நச்சு அல்லது நறுமணம் கொண்ட அலைகளையே தொடர்ந்து சுவாசித்து பூமித்தாயைச் சுற்றி வந்து கொண்டே இருக்கும் அவ்வுயிரணு.

உதாரணமாக…
1.முதல் நாள் மாலை வரை பூச்சி புழுக்கள் இல்லாத கடலைச் செடியில்
2.மறுநாள் காலையில் பல கோடிக்கணக்கான புழுக்கள் செடியின் இலைகளை உண்டு அழித்திருப்பதைக் காண்கின்றோம்.

அந்தப் புழுக்கள் எப்படி ஜீவன் பெற்றன…?

மேற்கூறிய காற்றுடன் சுற்றிக் கொண்டே இருக்கும் அந்த உயிரணுக்கள் கடலைச் செடியின் மீது படர்கின்றன.
1.கால நிலைக்கு ஏற்ப பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் செடியின் மீது தாக்கும் பொழுது
2.அச்செடியின் இலையில் உள்ள சத்து கலந்த உஷ்ண அலைகள் வெளிப்படும் பொழுது…
3.இவ்வுயிரணுக்கள் அதைச் சுவாசிக்கும் பொழுது புழுக்களாகச் சரீரம் பெறுகின்றன.

புழுக்களாகச் சரீரம் பெற்ற பின் எந்த மணம்… சத்து… கொண்ட இலையின் உஷ்ண அலைகளைக் கொண்டு சுவாசித்துச் சரீரம் பெற்றதோ… அந்த இலைகளையே அது உணவாக உட்கொள்ளத் தொடங்குகிறது.

இதைப் போலவே எந்தெந்தச் செடி கொடி மரம் முதலியவைகளின் இலைகளில் உள்ள உஷ்ண அலைகளைச் சுவாசித்து… சரீரம் பெறும் உயிரணுக்கள் யாவும் உடல் பெற்ற பின்… அந்தந்தத் தாவர இலைகளையே உணவாக உட்கொள்கின்றன.

பூமித்தாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் மேற்கூறிய உயிரணுக்கள் அசுத்த நீர் அல்லது கழிவுப் பொருளின் மேல் படர்ந்து இருக்கும் பொழுது… பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் அந்த அசுத்தத்தில் படரும் பொழுது
1.அந்த அசுத்த சத்துள்ள ஆவி வெளிப்படும் பொழுது
2.அதை உட்கொண்டு கொசு பூச்சி புழுக்கள் போன்ற சரீரம் பெறுகின்றன.

எந்தச் சுவாச நிலையில் சரீரம் பெற்றதோ அந்தச் சுவாச நிலையிலேயே ஜீவிக்கின்றது… உணவையும் உட்கொள்கின்றது.

எப்படி ஒரு கோழி தான் இடும் முட்டையை அடைகாத்து 21 நாட்களில் குஞ்சு பொரிக்கின்றதோ… அந்த நிலையை இன்றைய விஞ்ஞானத்தில் அதே 21 நாட்களில் கொடுக்கக்கூடிய உஷ்ண சக்தியைக் கருவில் கொடுத்து குஞ்சுகளாக வளர்ச்சி பெற்றுச் சரீரம் பெறச் செய்கின்றனரோ… அதே நிலையில் தான்
1.பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகளைச் சுவாசித்து
2.மேற்கூறிய உயிரணுக்கள் குறுகிய காலத்தில் சரீரம் பெறுகின்றன.

ஒவ்வொரு உயிரினமும் அது அது எடுத்திடும் சுவாச நிலை கொண்டே… அதனுடைய சரீர நிலை பெறுகின்றது. இது போன்று தான்
1.நாம் ஈர்க்கும் சுவாச நிலைக் காற்றுடன் கலந்துள்ள பல கோடி உயிரணுக்கள்
2.நமது சுவாசத்துடன் சென்று நமது உடலில் நிலை கொள்ளுகின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்திய மாமகரிஷியை நினைவு கொள்ளுங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகளையும் அவன் பிறந்த பின் அவன் பெற்ற சக்திகளையும் பெற வேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணித் தியானியுங்கள்.

1.அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்த உணர்வின் அறிவாகத் தனக்குள் உருபெற்றதை
3.விண்ணிலிருந்து வந்த உணர்வலைகளைத் தனக்குள் வளர்ச்சி பெறச் செய்த அந்த முதல் நிலைகளை எண்ணி
4.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியர் தாயின் கருவிலே பெற்ற சக்தி கொண்டு குழந்தைப் பருவத்தில் முதன் முதலில் விண்ணை நோக்கிப் பார்க்கும் போது சூரியனின் இயக்கத்தைப் பார்க்கின்றார்… கோள்களையும் நட்சத்திரங்களையும் பார்க்கின்றார்… அதை எல்லாம் தனக்குள் உணர்கின்றார்.

அன்று அந்த அகஸ்தியன் பார்த்த இந்தப் பிரபஞ்சத்தின் அதிசயங்களை நாமும் காண வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் அந்தக் குழந்தைப் பருவத்தில் விண்ணின் ஆற்றலைக் கண்டு மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக வெளிப்படுத்துகின்றான். அதை நீங்கள் நுகரும் போது
1.உங்கள் உடலிலே உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு புத்துயிர் பெற்றது போன்று ஆகிறது
2.மகிழ்ச்சியான உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.அதே சமயத்தில் அந்த அகஸ்தியனின் அருளாற்றல்கள் உங்கள் உடலில் ஊடுருவி
4.உங்கள் நெற்றியில் ஒளியின் சுடராகத் தெரிய வரும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அகஸ்தியன் உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து அந்த உணர்வின் அலையை எமக்குள் (ஞானகுரு) பாய்ச்சினார்.

அகஸ்தியன் பார்த்த விண்ணுலக ஆற்றலை எல்லாம் நம் குருநாதர் நுகர்ந்து இன்றும் அவர் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்,
1.அந்தக் குரு அருளின் துணையால்…
2.அகஸ்தியனின் உணர்வுகளை நீங்களும் பெறும் தகுதியை இப்பொழுது பெறுகின்றீர்கள்.
3.உங்கள் உடலுக்குள் அதை எல்லாம் உணரும் அறிவாகப் பதிவாகிறது.
4.அதனின் நினைவாக நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியையும்… சக்தியும் பெறுகின்றீர்கள்.
5.உங்கள் புருவ மத்தியிலும் சரி… உடலுக்குள்ளும் சரி ஒளிக் கதிர்கள் பரவுவதை உங்களால் உணர முடியும்
6.நீங்கள் ஒளியின் சரீரம் ஆவது போன்று உணர்வீர்கள்.

அகஸ்தியன் குழந்தையாக இருக்கும் போது தன் தாய் தந்தையை உற்றுப் பார்க்கின்றான். தாய் தந்தையர் உடலில் அவர்கள் பூசிய அந்தப் பச்சிலை வாசனைகள் வருவதை அகஸ்தியன் நுகர்கின்றான்.
1.அதை இப்பொழுது நீங்களும் நுகர்ந்து இழுத்துச் சுவாசியுங்கள்.
2.உங்களுக்குள் அந்த மணங்கள் பரவி உங்கள் உடலில் உள்ள பிணிகளைப் போக்கச் செய்யும்.

அகஸ்தியன் அவன் நினைவைத் தன் தாய் தந்தையரின் பால் செலுத்தும் போது அவர்கள் உடலிலிருந்து வந்த மணங்களை நுகரும் போது அவன் மகிழ்ச்சியுற்ற உணர்வுகள் எவ்வாறோ அதைப் போன்று
1.உங்களுக்குள்ளும் அந்த மணங்கள் அனைத்தும் சென்று
2.உங்கள் உடலில் அறியாது சேர்ந்த கடும் தீமைகளை அடக்கும்
3.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்கள் உடலில் பரவும்… அதைப் பார்க்கலாம்… உணரலாம்…!

ஆகவே…
1.அண்டத்தின் அறிவைக் கண்டுணர்ந்து
2.அதன் அறிவின் தொடராக அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த அறிந்துணரும் சக்திகளை அனைவரும் பெற்று
3.அகஸ்தியன் வழியில் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.

முதல் தடவையாக இந்த உணர்வுகள் உங்களுக்குள் கொடுக்கப்படுகிறது (ஞானகுரு). அகஸ்தியன் அருள் மணங்களை நுகர்ந்தால் எத்தகைய நஞ்சினையும் அடக்க முடியும்.

வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம்

 

பள்ளியில் பாடம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பாசம் கொண்டு சினேகித சினேகிதிகளாகப் பழகி இருப்பார்கள்.

இருந்தாலும்… கல்வியில் சீர்பட வில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை தனக்குள் பெற்ற பின் அவர்கள் ஒருவருக்கொருவர் பழகிய உணர்வு கொண்டு
1.காசைச் செலவழிக்கின்றேன் மற்றவர்களைப் போன்று படிக்காதபடி நீ மக்காக இருக்கின்றாயே என்ற நிலை வருவதும்
2.சிந்திக்கும் திறன் இல்லை என்றால் மற்றவர்கள் இணைத்துப் பார்த்து தன்னையே தான் வெறுக்கும் நிலையும் வருகின்றது.

காரணம் குடும்பத்தில் ஒரு சில நேரங்களில் பணத்திற்காக அவஸ்தைப்படுவார்கள். அந்த மாணவி அல்லது மாணவன் இந்த உணர்வைத் தன் மனதில் எடுத்துக் கொண்டால்
1.அந்த வேதனை உணர்வு கலந்த பின்
2.பள்ளியில் சென்று பாடத்தைப் படித்தாலும்
3.அங்கே சொல்லிக் கொடுப்பதைப் பதிவாக்கிச் சிந்தித்து “மீண்டும் நினைவாக்குவது என்பது” கடினமாகி விடுகின்றது.

அதே சமயத்தில் பள்ளியிலே பிறர் குறும்புத்தனம் செய்வோரையோ தவறு செய்வதையோ உற்றுப் பார்த்தால் அந்த வலிமையான உணர்வுகள் இங்கே அணுவாகி விடுகிறது.

அந்த அணு தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் போது அதையே நுகரப்படும் பொழுது இந்த உணர்வின் வலிமை பெற்ற பின் பாட நிலைகளில் சரியானபடி படித்தாலும்… குறும்புத்தனம் செய்யும் உணர்வு கலந்து அது திரை மறைவாக்கிவிடும். இதுதான் சித்திரை (சிறு திரை) என்பது.

சந்தர்ப்பத்தினால் ஒரு தீமையான உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின்
1.நல்ல ஒழுக்கத்தின் தன்மையை அந்த உணர்வுகள் மறைத்து விடுகின்றது
2.படிப்பைப் பற்றிய நினைவாற்றல்கள் வருவதில்லை.

ஏனென்றால் பாலிலே ஜீனியை போட்டு காஃபியைப் போடும் பொழுது ருசியாக இருக்கின்றது. ஆனால் சிறிது காரத்தை இணைத்து விட்டால் சுவை வருகின்றதோ…? இல்லை.

இதைப் போன்று தான் குழந்தைகள் விளையாடும் பொழுது ஒருவருக்கொருவர் குறும்புத்தனமான செயல்களைச் செய்யும் பொழுது அந்த உணர்வுகள் கலந்து விட்டால் நினைவுகள் அதிலே வலிமையாகச் சென்று விடுகின்றது.

பின் அவர் படிக்கும் பாடங்களை உற்றுப் பார்த்தால் அவருடைய நினைவாற்றல் இங்கே வருவதில்லை ஆகவே அறியாது இவ்வாறு பார்த்துணர்ந்த கேட்டுணர்ந்த தீமைகள் இவன் அறிவின் தன்மையை சித்திரையாக “சிறு திரையாக” மறைத்து விடுகின்றது.

இதை போன்ற நிலைகளை மாற்றுவதற்கு யாம் சொல்லிக் கொடுக்கும் தியானத்தின் மூலம்
1.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு இருளைப் போக்கிப் பொருளைக் காண முடியும்
2.இந்தத் தியானம் அதற்கு உதவும்.

ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ நாம் பார்த்தால் அடுத்த கணமே… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி நம் நல்ல குணத்தை மறைத்திருக்கும் அந்தச் சிறு திரைகளை நீக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இதைப் போல் நீக்கி வந்தால் நம் உடலுக்குள் இருக்கும் அறிவுகள் அனைத்தும் மெய் ஒளியைப் பெறும் தன்மையாக நமக்குள் வளர்ச்சி பெறும்… பூரண நிலவாக மாறுகின்றது.

என்றும் ஒளியின் சரீரமாக பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழும் தன்மை பெறுகின்றது. மனித வாழ்க்கையில் நாம் இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ உடல்களில்
1.தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வைப் பெற்றோம்
2.உயிரின் துணை கொண்டு தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்
3.இதிலிருந்து நாம் அடுத்து எந்த நிலையை பெற வேண்டும் என்பதைத்தான் நமது சாஸ்திரங்கள் காட்டுகின்றது

அதனைக் காட்டுவதற்குத் தான் ஆலயங்களில் சொர்க்க வாசலைக் காட்டுகின்றார்கள். உடலை விட்டுப் பிரிந்த பின் பிறவியில்லா நிலை அடைவது தான் கடைசி எல்லை

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள் “வைகுண்ட ஏகாதசி…!” அன்றைய தினம் சொர்க்கவாசலைத் திறப்பதாகக் காட்டுவார்கள்… அதிகாலையில் திறப்பார்கள்.

வழக்கமாக நேர் வாசலில் சென்றால் அன்றைய தினம் வடக்கு வாசலைத்தான் திறப்பார்கள்.
1.காரணம் நாம் வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம் என்பதனை அவ்வாறு காட்டுகின்றார்கள்
2.வடக்கில் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் சுழன்று கொண்டுள்ளது
3.அந்த ஈர்ப்பு வட்டத்தில் இணைய வேண்டும் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

குருவை நினைத்து நாம் தியானிக்கும் போது “குருவிற்கு அது தெரிந்து” நமக்கு ஆசி வழங்குகின்றார்

 

பல நாள் தவம் இருந்து தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம்
5.அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.

இப்படிப் பல நிலைகள் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.

வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.

ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?

என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது – நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.

பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தை அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!

ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது
1.உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..!
2.அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.
3.ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும்.
4.உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது… நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.
5.அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது.
6.அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.
7.அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகளை அடிக்கடி அந்தச் சுவாச நிலையில் நம் உயிரணுவிற்கு உயிருக்குக் கிடைக்கப் பெறுகின்றது.

இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.

1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.

இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!

ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.
3.எண்ணத்திலும் செயலிலும் உண்மை நிலையைக் கடைப்பிடியுங்கள்
4.காலத்துடன் கலந்திடுங்கள் கூட்டு நிலையில் கூடித் தியானியுங்கள்.
5.தன் வழிக்கு தெரிந்த உண்மைகளை உன்னத உண்மைகளைப் பிறருக்கு நல்வழி புகட்டித் தியான நிலைக்கு அழைத்திடுங்கள்.
6.நாம் ஜெபிப்பதின் பொருளை உணர்ந்து அச்சக்தியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

அவ்வீஸ்வர சக்தியின் அருளை மாலையில் குறிப்பிடப்பட்ட காலநிலையில் அமர்ந்து தியானம் இருங்கள் என்பதைப் பலர் பல நிலையில் எடுத்துக் கொண்டு இதில் எல்லாம் ஏதோ சித்து வேலைகள் உள்ளன என்ற சில பல எண்ணங்களை எண்ணிக் கொள்கிறார்கள்.

வாழ்க்கை நிலையில் அன்றைய நம் செயல்களை எல்லாம் முடித்துவிட்டு நாம் அமர்வதற்கு அதுதான் உகந்த நேரம். நம் சுவாச நிலைக்கு ஏற்ற நேரமும் அதுதான்.

நாம் ஜெபிக்கும் பொழுது நாம் எண்ணிடும் சித்தர்களின் நிலையில் இருந்து… சித்தர்களின் நிலை மட்டுமல்ல… தியான நிலையில் உள்ள எல்லோருக்குமே நாம் ஒருவரை ஒருவர் எண்ணித் தியானிக்கும் பொழுது அவர்கள் நமக்காக ஜெபித்திட முடியுமப்பா.

ஜெப நிலை ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது நமக்கு குரு வேண்டுமல்லவா. குருவின் நிலையை நாம் எங்கிருந்து தியானம் இருந்தாலும் அவரின் நிலையிலிருந்து நாம் ஆசி பெறத் தான் இந்த நிலை.

எப்படி நாம் நம் வீட்டில் இருக்கும் பொழுது விக்கல் எடுத்திட்டால் யாரோ நம்மை எண்ணுகிறார்கள் என்று எண்ணுகின்றோம். எண்ணுபவர்கள் நினைத்திட்டால் இருவரும் ஒரே நிலையில் எண்ணும் பொழுது அந்த விக்கல் நின்று விடுகின்றது என்கிறோம்.

அதே போல் தான் தியான நிலையிலும் நாம் நினைத்து தியானிக்கும் பொழுது
1.நாம் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்நிலை உடனே அவர்களுக்குத் தெரிந்து
2.அவர்களின் ஆசியை நாம் பெறுகின்றோம்.

ஆகவே இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் தியான நிலையில் இருந்திடுங்கள். ஓம் ஈஸ்வரா என்ற ஒரே நிலையில் சுவாச நிலையை எடுத்து நீங்கள் தியானிக்கும் பொழுது உங்கள் ஜெபத்திற்கு உயர்ந்த சக்திகள் கிடைக்கும்

1.தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும்
2.உங்கள் தியானத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.

நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் போதெல்லாம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.
1.ஈஸ்வரா… என்று சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணி
2.நாம் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ…
3.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அதை ஏங்கிப் பெற வேண்டும்…
4.அப்படி ஏங்கினால் நல்ல முறையில் அது பதிவாகும்.

அகஸ்தியர் பிறந்த பின்… குழந்தைப் பருவத்தில் மல்லாந்து படுத்திருக்கும் போது விண்ணை நோக்கிப் பார்த்து எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்தாரோ… “அதை எல்லாம் பெற வேண்டும்…” என்று நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.

அவர் கருவிலே இருக்கும் போது… தாய் தந்தையர்கள் எதை எதை எல்லாம் எண்ணிப் பெற்றனரோ அது அனைத்தும் அவருக்குள் வளர்ச்சி பெறுகிறது.

அவருடைய தாய் தந்தையர்கள் விஷமான அணுக்கள் தங்களை அணுகாதபடி பாதுகாத்துக் கொள்ள அவர்கள் உடலில் பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் அரைத்துப் பூசிக் கொண்டனர்.

1.அவர்கள் உடலிலிருந்து அந்த மணம் வெளிப்படும் போது
2.நுகர்ந்து தன் உணவுக்காகத் தேடி வரும் மற்ற உயிரினங்களோ கொசுவோ விஷ ஜெந்துக்களோ
3.அவை அனைத்தும் அவர்களை அணுகாது இருந்தது.

அவர்கள் சூரியனைக் கண் கூசாது உற்றுப் பார்க்கின்றனர். சூரியன் தன் முகப்பில் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்களைப் பிரித்து உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு ஒளிக் கதிர்களாக வீசுகிறது.

பிரிக்கப்பட்ட அந்த விஷத் தன்மைகளை சூரியனின் வெப்ப காந்தங்கள் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் உடலிலே விஷ முலாம்களைப் பூசியதால் அதைக் காண்கிறார்கள்.

1.அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் உடல்களில் பதிவானாலும்
2.கருவில் வளரும் அகஸ்தியனுக்குத் தாய் ரூபத்தில் அது பதிவாகிறது.

இவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்தச் சிசுவோ பிறந்த பின் தாய் கண்ட உணர்வுகள் அனைத்தையும் மல்லாந்து படுத்திருக்கப்படும் போது அந்தச் சூரியனின் இயக்கங்களைப் பார்க்கின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவதை மற்ற கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் போது சூரியன் அதை எல்லாம் தனக்குள் கவர்ந்து முகப்பில் அந்த விஷத்தைப் பிரித்துவிட்டுத் தனக்குள் ஒளிக்கதிராக மாற்றி அமைக்கிறது.
1.பிறந்த குழந்தையும் அதைப் பார்க்கின்றது… ஆனால் சொல்ல முடியவில்லை.
2.தனக்குள் கவர்ந்து கொண்ட இந்த உணர்வுகளைச் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில்…!

அதே சமயத்தில் பிறந்த குழந்தை தனியாக இருந்தாலும் கொசுக்களோ விஷ வண்டுகளோ இவன் அருகில் வருவதில்லை.
1.இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது அந்த வண்டுகளும் பூச்சிகளும் மயங்கி விழுகிறது.
2.விஷ ஜெந்துக்களோ மற்ற மிருகங்களோ அப்பால் விலகிச் சென்று விடுகிறது.
3.மயக்கத்திற்கு அஞ்சி எல்லாமே விலகி ஓடுகிறது.

குழந்தை உடலிலிருந்து நிகழ்த்தக் கூடிய இந்த நிலைகளை அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் பார்த்தபின் அவனைக் கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…! என்றே எண்ணுகின்றனர்.

அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியே தான் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன் (ஞானகுரு). இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகும்.
1.இந்த நினைவுடன் மீண்டும் தியானிக்கும் போது அவர் கண்டதை…
2.நம் பூமியில் பதிந்துள்ள அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நுகர்ந்து அதைப் பார்க்க முடியும்
3.அகஸ்தியனின் அருள் ஆற்றல்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இது உதவும்.

இலட்சக் கணக்கான ஞானிகளை நாம் உருவாக்குவோம்

 

வீட்டிலே கர்ப்பம் என்று தெரிந்தாலே குடும்பத்தில் உள்ள அனைவரும் “விரதம்” போன்று இருக்க வேண்டும். சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ கோபமோ வராதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

1.கருவில் வளரும் குழந்தை அகஸ்தியன் பெற்ற அருளைப் பெற வேண்டும்
2.அவன் துருவனான அந்தப் பேரருளைப் பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரமான பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
4.உலக இருளை அகற்றிடும் அருள் ஞானியாக வளர வேண்டும்
5.அவன் பார்வையில் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
6.அவன் சொல்லும் செயலும் மற்றவரைப் புனிதமாக்கும் நிலை பெற வேண்டும்
7.அந்த அருள் ஒளி பெறும் அருள் ஞானி உருவாக வேண்டும் என்று பத்து மாதமும் மற்றதெல்லாம் விட்டு விட்டு இதை எண்ணிப் பழகுங்கள்.

காலையில் ஐந்தரையிலிருந்து ஆறரைக்குள் இந்த மாதிரி எண்ணுங்கள் எல்லோரும் ஒரு விரதமாக இருந்து நாம் கோபிக்கக் கூடாது வெறுப்படையக் கூடாது சலிப்படையக் கூடாது சங்கடப்படக் கூடாது என்ற இந்த உணர்வை எடுத்து… மற்ற தீமையான உணர்வு வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

என் குழந்தை அருள் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணினால் பிறப்பிலிருந்தே அவனுடைய பார்வையால் உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய சர்வ தோஷங்களும் போய்விடும்… உலகையும் காப்பான்.

1.அன்று ஒரு அகஸ்தியன் இந்தப் பூமியைத் திருப்பிச் சமப்படுத்தினான்… அதனால்தான் நாமும் இன்று சுகமாக வாழ முடிகின்றது.
2.அதைப் போன்று இப்பொழுது நாம் பல லட்சம் அகஸ்தியர்களைத் தோன்ற வைக்க வேண்டும்.

அவனைப் போன்று ஞானக் குழந்தைகளை உருவாக்கினால் தான் விஞ்ஞான அறிவால் வரும் கடும் விஷத்தன்மைகளை மாற்றும் தன்மை வரும்.

தங்கத்தில் திரவகத்தை விட்டால் செம்பும் பித்தளையும் எப்படி ஆவியாகப் பிரிகின்றதோ இதைப் போல நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நஞ்சினைப் பிரிக்க வேண்டும்.

ஏனென்றால் அது நஞ்சினை வென்றது அந்த உணர்வுகளைக் குழந்தைகள் உடலிலே பெருகச் செய்து “ஆயிரக்கணக்கான குழந்தைகளை” நாம் இப்படி உருவாக்குதல் வேண்டும்.

அத்தகைய ஆற்றல்மிக்க உணர்வுகள் இந்தப் பூமியிலே படர்ந்தால் தான்
1.விஞ்ஞானத்தினால் வந்த விஷத்தன்மைகளையும்
2.மனிதனுக்குள் ஆசை நிமித்தம் உடலை விட்டுச் சென்று தீய விளைவுகளாகப் பேயாக ஆட்டிப்படைக்கும் நிலைகளையும்
3.சிந்தனையற்ற நிலையில் இயக்கும் தீய நிலைகளையும் மாற்றி அமைக்கும் சக்தி பெற முடியும்.

இதை நீங்கள் அலட்சியப்படுத்தாதபடி செய்து பாருங்கள்.

உங்கள் குடும்பத்தில் அறியாது வந்து சேரும்
1.சாப அலைகள் தீய அலைகள் பூர்வ ஜென்ம அலைகள்
2.கஷ்டம் நஷ்டம் நோய் துன்பம் துயரம் பரம்பரை நோய்கள் எல்லாம் அடியோடு அற்றுப் போய்விடும்.
3.உங்கள் குழந்தை குடும்பத்தைக் காக்க்க் கூடிய சக்தியாக அவன் வருவான்.

“எங்கெங்கோ அலைவதற்குப் பதில்” கர்ப்பிணிக்கு இந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று ஏல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் அந்தக் கருவிலே விளையத் தொடங்கும்.

குழந்தை வளர வளர குடும்பத்தில் பல அதிசயங்களும் நடக்கும்… விவசாயம் செழிக்கும். உங்கள் குடும்பத்தில் செல்வச் செழிப்புடன் நீங்கள் வாழ முடியும் ஞானத்தை எல்லோருக்கும் போதிப்பவனாக அவன் வருவான் அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லும் அருள்ஞானியாக அவன் வளர்ந்து வருவான்

குருநாதர் இட்ட கட்டளைப்படி இத்தகைய நிலைகளை நாம் இன்று செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

செயலாற்றலிலும் எண்ணத்திலும் சொல்லிலும் உயர்ந்தவனாக வரவேண்டுமப்பா…!

 

நல்லோரின் சக்தி நிலைக்கு… நல்ல எண்ணத்திற்கு… நல்ல மனம் உடையோருக்கு…
1.“அவர்கள் சுவாச நிலையிலேயே ஆண்டவனின் அருளைப் பெறுகிறார்கள்…”
2.அவர்கள் பார்க்கும் பார்வையில் அவர்கள் சொல்லிடும் சொல்லில் அவர்கள் எண்ணத்தில் எல்லாமே அஜ்ஜெப அருள் கலந்துள்ளதினால்
3.அவர்கள் நிலைக்கு எத்தீய சொல்லும் வந்து அண்டுவதில்லை.

அச்சக்தியின் அருள் பெற்றதினால்… பிறரின் நிலைக்கு எண்ண… ஒரு நற்காரியத்திற்கு இவர்கள் ஆசிர்வாதத்தின் மூலமாகத்தான் நடந்திடும் அப்பா.

ஆண்டவன் என்பது யார்…? என்றே இம் மனிதர்களுக்கு இன்னும் புரியவில்லை.
1.தான் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரம் தேடும் இடமாகத்தான் ஆண்டவனை எண்ணுகிறார்கள்.
2.கஷ்ட நிலைக்கு ஆண்டவனை எண்ணுகிறார்கள்.

நம்முடைய குணங்களில் லட்சுமியைப் பார்த்தவுடன் செல்வத்துக்கு உடையவள் சரஸ்வதியைப் பற்றிச் சொல்லும் பொழுது கல்விக்கு உரியவள் பராசக்தியை எண்ணும் பொழுது வீரத்திற்கு உரியவள் என்ற நற்குணங்களை வைத்து இப்படிப் பல ஆலயங்கள் அமைக்கப்பட்டன.

ஆலயங்களுக்கு மக்கள் செல்வதெல்லாம் தன் மனச் சாந்திக்காக. தன் கஷ்டங்களை நீக்கிடவும்… தான் உயர்ந்து வாழ வேண்டும்… உயர்ந்த என்னும் பொழுது “செல்வத்தில் உயர்ந்தவனாக வாழ வேண்டும்” என்ற எண்ணம் தான் இன்றைய மக்களிடம் உள்ளது.

1.செயலாற்றலில் உயர்ந்தவனாக
2.எண்ணத்தால் உயர்ந்தவனாக
3.சொல்லில் உயர்ந்தவனாக
4.தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவனாக ஆலயத்திற்குச் செல்பவன் அரிதிலும் அரிதப்பா.

தன் குறைகளைத் தீர்ப்பதற்கு ஆண்டவன் அக்குறைகளை ஆண்டவன் தீர்த்தால் ஆண்டவனுக்குப் பல காணிக்கைகளை அளிக்கின்றார்கள். வேண்டுதல் என்ற பெயரில் “பல தேங்காய்களை உடைத்து” அங்குள்ள அர்ச்சகருக்கு இவர்களின் செல்வ நிலையைக் காட்டிட… ஆண்டவனை வணங்குகிறார்கள்

இன்றைய மக்களுக்கு நன்மை தீமைகளை வழி வகுத்துச் சென்றிட புரியாத நிலையில் தான் இன்றைய மதங்களும் மக்களும் உள்ளார்கள்.

ஆதியில் மனித ஆரம்ப காலத்திலிருந்தே… உதயத்திலிருந்து வந்த பல சித்தர்கள் சொன்ன பல உண்மை நிலைகளை எல்லாம் அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பிரித்தும் சேர்த்தும் சிதற விட்டு விட்டார்கள்.

பல உண்மை நிலைகளை மதம் என்ற அடிப்படையில் உலகின் பல பாகங்களில் பல சித்தர்களால் வெளியிடப்பட்டதை… அந்தந்த நிலையில் உள்ள மக்களுக்குப் புரியும்படி வெளியிட்டதை… காலத்தின் செயலால் ஒரே அடிப்படையில் ஒவ்வொருவரும் “தன் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள்…”

ஆனால் எல்லோரும் சொல்லும் அடிப்படைக் கருத்து ஒன்றே தான். நம் ஆத்மாவிற்கு நாம் சேமித்து வைத்திடும் நிலை என்ன…? என்பதைத் தான்.

அதை வைத்தே தான் பல பல வழிகளில் பல கதைகளைக்கட்டி உண்மை ரகசியத்தை எல்லாமே மக்களுக்கு உண்மையாகப் போதிக்காமல் கதை வடிவில் அதை வடித்துக் கதையையே கடவுளாகக் காட்டி மக்களுக்குக் கடவுள் என்றாலே கதையில் வடித்த உருவம் தான் என்ற எண்ணம் வரும்படி செய்து விட்டார்கள்.

எல்லா மக்களுமே தான் உயர வேண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு தான் வாழ்கின்றார்கள். அவ்வாழ்க்கையில் வரும் பேராசை நிலையில்தான் பல பாவங்களுக்கு உட்படுகின்றார்கள்.

நல்வழியில் நடத்திச் சென்றிடத் தான் அன்றைய சித்தர்கள் அரும்பாடு பட்டுத் தவம் இருந்து தான் பெற்ற சக்தி நிலைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இராமாவதாரத்தில் வந்த வால்மீகி முனிவரினால் எழுதப்பட்ட இராமாயணம் என்ற காவியத்தையே அதில் உள்ள உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் அதில் உள்ள குணா அம்சங்களை
1.ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி குணா அம்சங்கள் அமைகிறது…? என்ற தத்துவ உண்மைகளை உணர்த்திடாமல்
2.அக்கதையையே தன் தன் நிலைக்கு உகந்தபடி மாற்றியும் மறுத்தும்
3.இது தான் உண்மை இது எல்லாம் தவறு என்று சுட்டிக் காட்டும் நிலையத்தான் அன்றே சிலர் திருத்தி விட்டார்கள்.

அன்று எழுதிய இராமரின் கதை தான் இன்றும் பல கோணங்களில் திரித்துச் சிதறடித்தாலும் அந்த இராமரின் கதையே தான் உலவிக் கொண்டுள்ளது

இராமாயணத்தின் மகத்துவத்தை மட்டும் இன்றைய உலகில் உள்ள மக்கள் எல்லோரும் அதிலுள்ள உண்மை நிலையைப் புரிந்து கொண்டால்…
1.இன்று நாட்டில் நடந்திடும் குழப்ப நிலைகளும்
2.மனிதனை மனிதன் ஏமாற்றி வாழும் நிலையும் இருந்திடாதப்பா.

எல்லோரும் எல்லோரும் என்னும் பொழுது ஒரு நற்செயலைச் செய்பவரும் நல்ல காரியத்தைச் செய்பவர்களும் இப்பொழுது மதங்களின் வழியில் தன் தன் மதத்துக்கு உகந்தபடி சிதறடித்து விட்டார்கள் பல நல்ல நிலைகளை எல்லாம்.

ஆனால் எல்லோரும் சொல்வது இப்பொழுது உலகெங்குமே ஒரே நிலையில் கூடி வருகின்றது. இந்நிலையே கூடி வந்து
1.ஒருவனே தேவன் ஒன்றே குலம் அத்தேவனில் இருந்து பிரிந்து வந்த பிம்பங்கள் தான் நாம் எல்லோருமே…
2.எந்த மதத்திற்கு யாரும் அடிமை இல்லை…! என்ற சொல்லெல்லாம் இப்பொழுது எந்த மனிதனின் மனதிலும் ஏறவில்லை.
3.ஏட்டிற்கும் எழுத்திற்கும் தான் இந்நிலை எல்லாம் உகந்ததாக உள்ளது இப்பொழுது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருதய வலி (நெஞ்சு வலி) போன்ற உபாதைகள் வந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்து சிறிது பின்னுக்கே சாய்ந்து சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவின் ஆற்றலைச் விண்ணிலிருந்து இழுத்துச் சுவாசியுங்கள். (ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக் கூடாது…)

1.மெதுவாக மூச்சை அடக்கி மறுபடியும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற அந்த மூச்சை எடுங்கள்.
2.இரண்டு நொடி உடலுக்குள் நிறுத்துங்கள்… மறுபடியும் மெதுவாக விடுங்கள்.

காரணம் நம் சுவாச நாளங்களில் இரத்தங்கள் போகும் பாதையில் அடைப்புகள் இருக்கும்.
1.நாம் சுவாசிக்கும் நிலைகளில் புகையிலையோ அல்லது
2.பீடி சிகரெட் பிடிப்பவர்கள் புகை விடுவதை நுகர்ந்திருந்தாலோ
3.நாம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த மாதிரிப் பிடிக்கிறார்கள் என்று எண்ணினால் போதும்.
4.அது நம் சுவாசத்தின் வழியாகச் சுவாசப் பைக்குள் சென்று இரத்தங்கள் போகும் பாதைகளில் உறைந்து விடுகின்றது.

உறைந்து விட்டால் இருதத்திலிருந்து இரத்தம் ஒரு பகுதி வழியாகப் போகவில்லை என்றால் அடுத்த பகுதி வழியாகப் போகும்.

நுரையீரலுக்கோ மற்றதுக்கோ இரத்தம் பாயும் நிலைகளைத் தடைப்படுத்தும். இந்தப் பாதையும் அடைபட்டு விட்டால் இதே போல் அடுத்த பக்கமும் அடைபடும்.

மூன்று பாதைகளில் ஏதாவது ஒன்று வழியாகப் போனால் தான்.

இல்லை என்றால் அந்தப் பாதைகள் அடைபட்டு விட்டால் இருதயம் சீராக இயங்காதபடி இருதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்) வந்துவிடும். நெஞ்சு வலி அதிகமாகி மனிதனை மடியச் செய்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இடுப்பிலே கையை வைத்து அந்தச் சுவாசத்தை மேலே சொன்னபடி அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும். அந்த அடைப்புகளை நீக்கிவிடும்.

ஒன்றும் செய்ய முடியவில்லை… மிகவும் தொல்லை கொடுக்கிறது என்றால் தியான வழியில் இருப்பவர்கள் ஒரு ஐந்தாறு பேர் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டமைப்பாக எண்ணுங்கள். அவருக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சுங்கள்.

இங்கே கொடுத்த விபூதியையோ அல்லது தண்ணீரையோ தியானத்திற்கு முன்னாடி வைத்து அதற்குப் பின் அந்தத் தீர்த்தத்தை அவரை அருந்தச் செய்யுங்கள்.
1.அவர் உடலில் உள்ள இருதய வலி நீங்கி… இருதயம் சீராக இயங்கி உடல் நலம் பெறவேண்டும் என்று இந்த எண்ணத்தில் நீங்கள் கொடுங்கள்.
2.அவர் குடிக்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நீங்கள் சீர்படுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அவர்களுக்குள் இதைப் பாய்ச்சப்படும் போது இது நல்லதாகும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

கோவிலைக் கோவிலாக நாம் மதிக்கின்றோமா…?

 

1.தெய்வீகப் பண்புகளை வளர்க்கக் கூடியது தான் நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே…!
2.அந்த எண்ணத்துடன் நாம் அங்கே செல்கிறோமா…? என்றால் இல்லை.

ஆனால் கல்லைக் கும்பிடுகின்றார்கள் பிசாசைக் கும்பிடுகின்றார்கள் என்று ஒருவன் சொல்கின்றான்.

தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னால் உடனே அங்கே சென்று விடுகின்றார்கள். ஆவியை ஏவி விட்டு அதன் வழி செயல்படுவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

குழந்தைகள் அங்கே படிப்புக்காகச் சென்றாலும் கூட “நீ பொட்டு வைக்காதே… கோலம் போடாதே…” என்று சொல்கின்றார்கள்.

1.அனைவருடைய மனதையும் ஒன்று சேர்த்து என் குடும்பம் ஒன்றாக வாழ வேண்டும் என்று காலையில் பெண்கள் நெற்றியில் திலகத்தை வைத்து
2.ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் வர வேண்டும் என்று புள்ளிகளை இட்டு அதை இணைத்து
3.குடும்பத்தில் அனைவரையும் இணைத்திடும் நிலையாகத் தான் கோலமிடச் சொன்னார்கள் நம்முடைய ஞானிகள்.

நீ கோலமிடாதே என்று அவ்வாறு சொல்பவர்கள் பின்னாடி செல்லக்கூடிய கூட்டங்களும் இருக்கின்றது. நம் சாஸ்திரங்களைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மனிதன் எப்படிப் பண்பட வேண்டும் என்று ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை மதம் என்ற நிலையில் பிரிக்கின்றார்கள். உயிர் கடவுள் என்று சொன்ன நிலைகளையும் மாற்றி அமைக்கின்றார்கள்.

இன்னொன்று என்ன செய்கிறார்கள் தெரியுமா…!

இந்தப் பள்ளியில் பிள்ளைகள் நன்றாக படிக்கிறது என்று தான் சேர்த்து விடுகின்றார்கள். அங்கே பிக்னிக் போக என்று பஸ்ஸில் அழைத்துச் செல்கின்றார்கள். போய்க் கொண்டிருக்கும் பஸ் திடீரென்று ரிப்பேர் ஆகி நின்று விடுகின்றது.

டிரைவரை “சும்மா” அது இது என்று பார்க்கச் சொல்லி விடுகின்றார்கள்… ஒன்றும் வேலை செய்யவில்லை.

உடனே… எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் “அவரவர் இஷ்ட தெய்வங்களை எண்ணி வணங்கிக் கும்பிடுங்கள்” என்று சொல்கின்றார்கள். பஸ் சரியாகி ஓட வேண்டும் என்று எண்ணுங்கள்…! என்று சொல்கின்றார்கள்

அடுத்து பஸ்ஸை ஓட்டிப் பார்க்கின்றார்கள்… பஸ் ஓடவில்லை.!

இப்பொழுது இயேசு கிறிஸ்துவை எண்ணிப் பார்க்கலாம் ஏல்லோரும் அவரைத் தியானியுங்கள் என்று சொல்கின்றார்கள். அதற்குப்பின் பஸ்ஸை ஓட்டிப் பார்த்தால் பஸ் ஓடுகின்றது.
1.ஆஹா…! கர்த்தர் வந்து இந்த பஸ்ஸை இயக்குகின்றார் ஓடாத பஸ்ஸை ஓடச் செய்கின்றார் என்று இ
2.வ்வாறெல்லாம் மனிதனுடைய எண்ணங்களைத் திசை திருப்பிக் கலாச்சாரங்களையே மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
3.இது போன்ற சம்பவங்களும் இந்த உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது… இது போன்ற நிலையிலிருந்து நாம் எப்பொழுது தப்புவது…?

நம்முடைய ஆலய பண்புகள் எவ்வளவு தெளிவானது…?

1.யாருக்குமே அங்கே வேற்றுமை இல்லை
2.ஆலயம் வருவோர் அனைவரும் தெய்வீக நிலை பெற வேண்டும்
3.மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டு வாழச் செய்ய வேண்டும் என்பதற்கே ஆலயம்.

ஆனால் அந்த ஆலயத்தை இன்று நாம் அவமதித்துத் தான் நடக்கின்றோம். ஏனென்றால் தன் கஷ்டத்தை எல்லாம் அங்கே அங்கே சொல்வது… பணம் கிடைக்கவில்லை என்றால் அந்த தெய்வத்தையே பழிப்பது. இந்த நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.

கோவிலைக் கோவிலாக நாம் மதிக்கின்றோமா…?

நம் உடலே ஒரு கோவில்… அருள் ஞானிகள் உணர்வை இங்கே வளர்க்க வேண்டும். தெய்வ குணத்தை வளர்க்க வேண்டும்.

இதைக் கேட்டறிந்தவர்கள் ஒவ்வொருவரும் இனியாவது
1.அங்கே சென்று அருளைப் பெருக்குவதற்கு
2.தெய்வீகப் பண்புகளைத் தங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கு
3.மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டு வாழச் செய்வதற்கு அந்த ஆலயத்தில் வேண்டுங்கள்.

நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத்தான் ஆலயத்தைக் கட்டினார்கள்.

1.பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
2.எங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் ஈஸ்வரா
3.அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா
4.நாங்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் ஈஸ்வரா
5.அந்த அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நாம் வணங்கினால்
6.மற்றவர்களும் அவ்வாறு அங்கே கும்பிடுகின்றார்கள்.

இங்கே தனித்து இருக்கும் போது அதை எடுக்க முடியவில்லை…! ஆனால்
1.கூட்டாக ஆலயத்திற்குச் சென்று அந்த்த் தெய்வ குணத்தை எண்ணி எடுக்கும்படி செய்கின்றார்கள்
2.இதை நாம் யாராவது செய்கின்றோமா…?

மனிதனுடைய ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலையாக ஒளியாகத் தெளிந்து… தெரிந்து… தெளிவான வாழ்க்கை வாழ்வதற்கு… ஆலயத்தை அமைத்தார்கள் ஞானிகள்.

அதை நாம் புரிந்து நடக்க வேண்டும்.

சுவாச நிலையில் நறுமணங்களைப் பெறுபவன் ஆண்டவனின் ஆசி பெற்றவனாகின்றான்

 

முதல் பாடத்திலேயே ஆண்டவனுக்கு அறுசுவை உணவு படைப்பது பற்றிச் சில நிலைகளைச் சொல்லி உள்ளேன்… அதன் விளக்கத்தை இன்று தருகின்றேன்.

என்பவர் யார்…? என்று முதலிலேயே சொல்லி உள்ளேன். ஆண்டவனுக்கு அறுசுவை உணவைப் படைக்கும் பொழுது ஆண்டவன் சக்தி பெற்ற முருகனாக உள்ளவரும் வெங்கடாஜலபதியாக உள்ளவரும் இப்படிப் பல ஆண்டவனின் நாமத்தைப் பெற்றுள்ள ரிஷிகள் எல்லாம் அங்கே வருகிறார்கள். எந்த வகையில்…?

நீ ஆண்டவனை வணங்கி அமுது படைக்கும் பொழுது அந்நிலைக்கு அவர்கள் வந்து அம்மணத்தின் ஈர்ப்பு தன்மைக்காக (பதார்த்தங்கள் பல வகை பழங்கள் புஷ்பங்கள் ஊதுபத்தியின் வாசனை கற்பூர சாம்பிராணி வாசனைகள்) அம்மணத்தின்…
1.நாம் படைத்த படையலின் மணத்திற்கு நாம் எண்ணி வணங்கும் பொழுது
2.யாரை நினைத்து எண்ணி வணங்குகின்றோமோ அவர்கள் அந்த நிலைக்கு வந்து
3.நம் சுவாச நிலைக்கு நம் உயிரணுவிற்கு வேண்டிய சில நிலைகளை அவர்கள் அதை எடுத்து நமக்கு அளிக்கிறார்கள்… புரிகிறதா…?

அவர்கள் எடுத்து என்று சொல்லும் பொழுது நாம் படைக்கும் பல வகைப் பதார்த்தங்களை அந்த நல்ல நறுமணங்களை நமக்கு அவர்கள் அளிக்கின்றார்கள்
1.நம் சுவாச நிலைக்கு அதை அளிக்கின்றார்கள்.
2.நம் சுவாச நிலையும் ஒருநிலைப்படுகிறது
3.நம் உயிரணுவும் ஊட்டம் பெறுகிறது.

ஆண்டவனின் நாமத்தைச் சொல்லிப் படைக்கும் உணவெல்லாம் அவ்வாண்டவனின் நாமத்தில் உள்ளவர்களா எடுத்து அள்ளி அள்ளி உண்ணுகிறார்கள்…?

இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி நல்ல மணங்களைத் தன் சுவாச நிலைக்குத் தன் உயிரணுவிக்கு ஊட்டமாக எடுத்துக் கொள்ள அச்சித்தர்களினாலும் ரிஷிகளினாலும் ஞானிகளினாலும் தான் முடியுமப்பா.

இம் மனித உடலில் உள்ள நமக்கு நாம் பூஜை நிலையில் படைக்கும் உணவின் மணத்தை எல்லாம் நறுமணங்களை எல்லாம் நமக்கே தான் அளிக்கிறார்கள் “அவ்வாண்டவனின் நாமத்தில் உள்ள அருட்பெருஞ்ஜோதிகள் எல்லாம்…”

1.நான் எல்லோருக்குமே பொதுவானவன்… சமய வேறுபாடு எனக்கில்லை
2.சகலத்தையும் ஒன்றாக எடுப்பவன் தானப்பா நான்.

இந்துமத முறைப்படி இப்படிப் பல முறைகளில் வணங்குகிறோம். ஆண்டவனை இந்நிலையில் வணங்கும் பொழுது அச்சித்தர்கள் ரிஷிகள் நாம் வணங்கும் முறைக்கு நம் நிலைக்கு நல் உணர்வு தருகின்றார்கள்.

ஆனால் பல கோவில்களில் பலியிட்டு அந்நிலையில் ஆடு கோழி இவைகளை உணவாகப் படைத்து ஆண்டவனை வணங்குகின்றார்கள். அவர்கள் வணங்கும் நிலைக்கும் வருகிறார்கள்… அவர்கள் வணங்கும் தெய்வமான ஆவிகளான நாட்டராயன் முனியப்பன் பேச்சியம்மன் அங்காளி அம்மன் இன்னும் பல நாமங்களுடைய அந்நிலையில் அருள் பெற்ற ஆவிகள்.

ஆண்டவன் சக்தியிலிருந்து அவரவர்கள் நிலைக்குப் பெற்றார்கள் சில சக்திகளை ரிஷிகளும் தவசு முனிவர்களும் என்றேனல்லவா. அவர்கள் பெற்ற சுவாச நிலைக்குத் தகுந்தபடி தான் அவர்கள் நல் சக்தியின் அருளைப் பெறுகின்றார்கள்.

அச்சக்தியின் அருளைப் பெற்றவர்கள் எல்லாம் அவர்கள் சுவாச நிலைக்கு எங்கு ஆகாரம் கிடைக்கிறதோ அங்கு வந்து அருள் தருகிறார்கள் ஆண்டவனாக.

அவர்கள் பெற்ற அருள்… நாட்டராயன் முனியப்பன் பேச்சியம்மன் அங்காளி அம்மன் என்னும் நாமங்களுடைய தேவதைகள் எல்லாம் வந்து அவர்களுக்குகந்த ஆகாரம் கிடைக்கும் பொழுது அவர்கள் சுவாச நிலைக்குகந்த ஆகாரம் கிடைக்கும் பொழுது அந்நிலைக்கு அவர்கள் அருள் புரிகின்றார்கள் அம்மக்களுக்கு.

இன்னும் பல இடத்தில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பலவித வாசனைத் திரவியங்களை தன் மேலே பூசிக்கொண்டு அவர்கள் வணங்கும் ஆண்டவனின் ஆலயத்திற்குச் செல்கிறார்கள்.

அந்நிலையில் அவர்கள் வணங்கும் அல்லாவும் இயேசுவும் வருகிறார்கள் அவரவர்கள் நிலைக்கு தகுந்தபடி ஆசீர்வாதம் அளிக்கிறார்கள்.

1.சுவாச நிலையில் எவன் ஒருவன் நல்ல மணங்களைப் பெறுகின்றானோ
2.அவன் ஆண்டவன் அருளைப் பெற்ற ஆண்டவனின் ஆசியைப் பெற்றவனாகின்றான்.
3.ஆண்டவனின் அருளெல்லாம் இச்சுவாச நிலையிலிருந்து தான் உயிரணுவிற்குக் கிடைத்து மனிதனின் நிலையையே நடத்திச் செல்கிறது.

சுவாச நிலையிலிருந்து வருவது தான் எல்லாமே…!

மனநிலை சோர்வுற்றவனும் மனநிலையில் குழப்பத்துடன் உள்ளவனும் இவ்வாண்டவனை எண்ணி அவ்வாண்டவனுக்குகந்த நிலையில் நறுமணம் உள்ள புஷ்பத்தைச் சூட்டி வணங்கும் பொழுதே மனநிலையில் சில மாற்றங்களைக் காணலாம்.

1.சுவாச நிலையில் இருந்து தானப்பா இவ்வுலக நிலையே உள்ளது
2.இவ்வுலக நிலைக்கு ஊன்றுகோலே சுவாச நிலைதானப்பா.

நீராவியில் எப்படி ரயில் செல்கின்றது என்று சொல்கின்றாயோ அந்நிலையே தானப்பா இவ்வுலகச் சுற்றலும். அச்சக்தியின் சொரூப நிலை மனிதனை மட்டும் தாங்கிக் கொண்டில்லையப்பா.

அவன் படைத்த படைப்பில் எல்லாவற்றிலுமே கலந்துள்ளவனப்பா அவன். அச்சக்தியின் சொரூப நிலையைக் கண்டிடவும் முடியாது சொல்லிடவும் முடியாது.

போற்றிப் போற்றி வணங்கிடத் தானப்பா வேண்டும் இந்த மானிட உடலைப் பெறும் பாக்கியம் பெற்ற நாம் எல்லோருமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக காரமான ஒரு பொருளைத் தனித்து உணவாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சியே முன்னணியில் நிற்கும்.

ஆனால் அந்தக் காரத்தை அடக்க “சப்…” என்று இருக்கும் காரம் இல்லாத பொருள்களை அதனுடன் இணைத்து உட்கொண்டால் அந்தக் காரத்தின் தன்மை குறைந்து சுவைமிக்க நிலைகளாக உருவாகின்றது

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது
1.உயிர் இருக்கும் ஈஸ்வரலோகத்தில் அது உருவாக்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் தான் முன்னணியில் இயக்கும்.
3.மற்ற நல்ல குணங்களின் வலு குறைகிறது.

காரணம் மற்றவர்களுடைய குறைகளையும் துன்பங்களையும் கேட்டறிந்து நுகர்ந்து தான் உதவி செய்கிறோம். நுகரும் போது தான் உயிரும் அதை இயக்குகிறது.

இருந்தாலும் அதைக் கேட்டறிந்த நிமிடத்திலேயே…
1.அவர்கள் கஷ்டங்களைச் சொல்வதற்கு முன் “ஈஸ்வரா…!” என்று நம் உயிரான ஈசனிடமே கேட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
3.அந்த உணர்வை அப்பொழுதே உயிரிலே இணைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

குழம்பு வைக்கும் போது பல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போல் நாம் கேட்டு… நுகர்ந்த மற்றவரின் உணர்வுக்குள் அந்த அருள் ஞானிகளின் உணர்வைக் கூட்டிவிட்டால் அதைத் தணித்து அருள் உணர்வின் அணுக்களாக மாற்ற முடியும்.

நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும்… சந்தர்ப்பத்தில் ஒருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை நமக்குள் அதிகரிக்கப்படும் போது நல்ல குணத்தின் தன்மைகள் குறைந்து விடுகிறது.

1.அப்பொழுது அந்த நல்ல குணத்தின் தன்மையை அதிகமாக்க…
2.அதை வலிமை பெறச் செய்ய வேண்டும் என்றால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அதனின் உணர்வின் கருக்களாக மாறுகிறது. வேதனையை வலுவிழக்கச் செய்கிறது.

“பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலையில் நம்முடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து அந்த உணர்வை நுகர்தல் வேண்டும்…
2.இரத்தத்தில் கலக்கச் செய்தல் வேண்டும்…
3.உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் அதை இணைத்தல் வேண்டும்.

அத்தகைய நிலைகளை நாம் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை வலுப் பெறப்படும் போது வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி விடுகிறது.

உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கிறது…!
1.உடல் பெறும் விஷத் தன்மைகளை அங்கே கரைத்து விடுகின்றது.
2.ஒளியின் சரீரமாக… நம்மை ஒளியாக மாற்றுகின்றது.

சுருங்கச் சொல்லி யாம் பதிவாக்குவதை வளர்த்துக் கொண்டால் “அதன் விரிவாக்கங்களை நீங்கள் உணரலாம்”

 

ஆதியிலே அகஸ்தியன் தன் வாழ் நாளில் இளமைப் பருவத்திலேயே வானஇயில் புவியியல் தாவரவியல் உயிரியல் ஆற்றலை உணர்ந்தான்.

அணுவின் ஆற்றலை அறிந்ததால் தான் அவனுக்குக் காரணப்பெயர் அகஸ்தியன் உண்மையின் இயக்கத்தை கண்டறிகின்றான் உண்மைகளை உணர்கின்றான்.

தாவர இனங்களுக்கு எங்கிருந்து சத்து வருகிறது…? என்று பார்க்கின்றான் நமது பூமி துருவத்தின் வழியாகக் கவருகிறது (சுவாசம்) என்று காணுகின்றான்.
1.ஃபேன் அது சுழலும் பொழுது பரந்து கிடக்கக்கூடிய காற்றை இழுத்து மொத்தமாகக் குவித்து நமக்கு முன் கொடுக்கின்றது.
2.அதைப் போன்று தான் நமது பூமி சுற்றும் பொழுது அதற்கு நேர் துருவப் பகுதியில் இருப்பதை இழுத்துக் கொண்டு வருகின்றது…
3.பூமிக்குள் படரச் செய்கின்றது என்பதை உணர்ந்தான்.

வானவியல் புவிஇயலாக மாறும்போது தாவர இயலாக மாறுகின்றது. இங்கே பூமிக்குள் உற்பத்தியாகவில்லை… “வானிலிருந்து வந்து உற்பத்தி ஆகின்றது…”

அதிலிருந்து கவர்ந்த உணர்வுகள் தான் மற்ற நிலைகள் ஆனாலும் இதை உணவாக உட்கொண்டு உயிரியல் வளர்கின்றது. வானியல் புவியியல் தாவரவியல் பின் கடைசியில் உயிரியல்.
1.உங்களுக்கு சுருக்கமாகச் சொல்லி அகஸ்தியன் கண்ட உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

என்னால் முடிந்த அளவுக்கு உங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிப்பது. இந்த நினைவு உங்களைக் காக்கும்… உங்களைக் காக்க வேண்டும் என்பதற்குத்தான் சொல்வது.

நான் காப்பேன் என்றால் நான் யார்…? இந்த உணர்வை பதிவு செய்து நீங்கள் மீண்டும் எண்ணினால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும். அருள் உனர்வை வளர்க்க இது உதவும்.

என்னைத் திட்டினார் என்று மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வு உங்களுக்குக் கெடுதல் செய்கின்றது.
1.சாமி சொன்னார்… அவர் சொன்ன வழியில் இப்படிச் செய்தால் நமக்கு நன்மை என்று எண்ணினால் அது உங்களைக் காக்கின்றது…
2.அதாவது அந்த எண்ணம் தான் உங்களைக் காக்கிறது.
3.அத்தகைய எண்ணங்களை உருவாக்குவதற்கு தான் பதிவாக்குவது பதிவை நினைவாக்கினால்
4.உங்களுக்குள் அது நன்மை செய்யக்கூடிய சக்தியாக வரும்.

ஆகையினால் எமது உபதேசங்களைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து
1.வேறு எந்த ஞாபகம் இல்லாதபடி நேரம் ஆகிவிட்டது என்றெல்லாம் எண்ணாதபடி
2.அருள் உணர்வுகளை நீங்கள் பதிவாக்கி நல்ல நிலையில் வளர வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்வது.

வசி…வசி…! என்று வசியம் செய்யும் மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளிடமிருந்து விடுபடுங்களப்பா…!

 

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே மும்மூர்த்தியின் வடிவம் என்ன…? என்று வசிய மந்திரம் ஜெபித்த ஒரு அன்பரின் கேள்விக்கு ஈஸ்வரபட்டர் அளித்த பதில் இது.

“வசி… வசி… வசி…” என்று எட்டுத் திசையை நோக்கி எட்டுத் திசையிலும் உள்ள பாலரை வசியம் செய்து உன்னுள் ஈர்க்கப் பார்க்கின்றாய்.
1.”ஈஸ்வர சக்தி” உன்னுள் இருப்பதை அறியாமல்
2.பல பாலரை ஏனப்பா உன் வசியத்தில் ஈர்க்கிறாய்…?

இது ஆவியின் நிலையில் மந்திரவாதிகள் மந்திரிக்கும் ஜெபமப்பா…! ஆவிகளை எல்லாம் தன் வசம் இழுப்பதற்காக இந்த நிலையில் வசியப்படுத்துவான்.
1.உன்னையே நீ யார்…? என்று புரிந்து கொள்ளாமல்
2.பல ஆவிகளை ஏன் இழுக்கின்றாய் உன் வசியத்திற்கு…?

ஆவிகளின் நிலை எல்லாம் தன் எண்ணத்திற்கு… தன் பசிக்கு… எங்கு அதற்கு ஆகாரம் கிடைக்கின்றதோ அந்த நிலைக்கு வந்துவிடும். ஆவிகளை வசியப்படுத்திக் கொண்டு தான் மந்திரவாதிகளின் வேலை எல்லாம் நடக்கின்றதப்பா.

நடுத் தெருவிலும் நடுஜாமத்திலும் அவர்கள் செய்யும் வேலை எல்லாம் இது தானப்பா..!

குடுகுடுப்பை அடித்துக் கொண்டு வருபவன் நடுஜாமத்தில் மயானக் காட்டில் அமர்ந்து தன் வசியத்திற்கு ஆவிகளை அழைப்பான். இந்நிலையில் ஜெபித்துத்தான் அந்நிலையில் அந்த ஆவிகளுக்குப் பிடித்த ஆகாரத்தை அளிப்பான். பல உண்மைகளை அந்த ஆவிகள் இவனுக்கு உணர்த்திடும்.

நடுநிசியிலே அந்தக் குடுகுடுப்பாண்டி நடந்து வீதி உலா வந்திடுவான். அவன் நடப்பதுவும் அவன் சொல்வதும் அவனுக்கு ஒன்றும் தெரியாதப்பா. அந்த ஆவிகள் தான் அவன் உடலில் அவன் வசியப்படுத்திய வழியில் வந்து ஒவ்வொரு இல்லத்திற்கும் சொல்லிக் கொண்டே செல்கிறது.

1.ஆனால் ஈஸ்வர சக்தியின் அருளைப் பெற்றவர்களின் இல்லத்திற்கு
2.இந்த ஆவிகள் சொல்லும் வாக்கெல்லாம் வந்து தாக்காதப்பா…!

நீ வசிய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த ஆவிகளின் நிலையிலிருந்து எப்பொழுது தான் மீளப் போகின்றாய்..? ஜெப நிலையே இன்னும் நீ புரிந்து கொள்ளவே இல்லையப்பா..!

மந்திரக்காரர்ளும் மாந்திரீகம் செய்பவர்களும் அவர்கள் ஜெபிக்கும் இடத்தில் பல வாசனைத் திரவியங்களைப் போட்டுப் புகை மண்டலத்தை எழுப்பிப் பல வகை உணவுப் பதார்த்தங்களையும் ஜீவராசிகளின் உணவுகளையும் வைத்து மந்திரம் ஜெபிக்கின்றார்கள்.

அந்த மந்திரத் தன்மையில் ஜெபிக்கும் பொழுது அதன் நிலைக்குகந்த ஆவிகள்… தீட்சண்ய ஆவிகள்… அகால மரணமடைந்த ஆவேச ஆவிகள்… தற்கொலை செய்த ஆவிகள்… பிறரினால் கொலை செய்யப்பட்ட ஆவிகள்… இந்த நிலையில் உள்ள ஆவிகள் எல்லாம் இவர்கள் படைக்கும் உணவுக்காக வரும்.

இவர்கள் ஜெபிக்கும் ஜெபத்தில் “ஜெபம் என்றால் என்ன…?” என்று எண்ணுகிறாய்…?

ஆவிகளுக்குண்டான உணவை எல்லாம் படைத்துப் புகை மண்டலங்களை எழுப்பி வசி…வசி…! என்று அந்த ஒலியின் நாமத்தை துர்மரண ஆவியின் நாமத்தை வைத்து வசி…வசி…! என்று வசியப்படுத்திக் கொள்கின்றார்கள்.

1.மந்திரம் சொல்வதும் தகட்டில் எழுதுவதும் ஓலையில் எழுதுவதும் எல்லாமே அந்த ஆவிகளின் வசியத்தின் மூலமாகத் தான்.
2.தன் பிழைப்புக்காக தன் உயிர் நிலையையே மாற்றிக் கொண்டு பல ஏவல்கள் செய்வதெல்லாம் அந்த ஆவிகள் தான்.

மாந்திரீகர்களின் மண்டை ஓட்டை வைத்து ஜெபிப்பது என்ன…? என்றால் எந்த ஆவியைத் தான் வசியம் செய்து வைத்துள்ளானோ அந்த ஆவியை தன் உடல் பின்னமாகி எந்த நிலையில் எங்கு அதனின் உடலின் மண்டை ஓடு உறுப்புகள் உள்ளது என்ற நிலையைச் சொல்லிவிடுகிறது.

அதை எடுத்துக் கொண்டு வந்து அவன் ஜெபிக்கும் பொழுது இன்னும் பன்மடங்கு அவனுக்கு அந்த ஆவிகளின் ஒத்துழைப்பு கிடைக்கிறது.
1.மாந்திரீகர்கள் அவர்கள் செய்யும் வேலைகளும்
2.இந்த மண்டை ஓடுகளும் மற்ற எலும்பு உறுப்புகளும்
3.பிறருக்குத் தெரியாத நிலையில் இருக்குமப்பா…!

மன நிலையில் சோர்வுள்ளவர்கள் “மகான்” என்று எண்ணி அவன் போட்டிருக்கும் சாமியார் வேஷத்தை நம்பி அவனை அணுகுகின்றார்கள்.

மனச் சோர்வடைந்த மக்கள் அவனை நாடிச் செல்லும் பொழுது
1.விபூதி வரவழைத்தோ புஷ்பம் வரவழைத்தோ இப்படிப் பல பல பொருள்களை வரவழைத்துக் கொடுப்பான்
2.மக்கள் அவன் அளிப்பதை நம்பி வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலே வைக்கின்றார்கள்.

இல்லத்திற்குள் வைத்தவுடன் முதலில் எல்லாமே நல்லதாகத்தான் நடப்பதாகத் தெரியும். ஆனால் அதன் வேலை எல்லாம் இவன் உடலில் உள்ள அணுக்களை தன் நிலைக்குத் திசை திருப்பி அவன் உடலில் உள்ள அணுக்களைத் தன் வசப்படுத்த அவன் மன நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.

அந்த ஆவி தன் நிலைக்குகந்த ஆகாரத்தையோ தன் நிலைக்குகந்த எண்ணத்தையோ அவனை எண்ண வைத்துக் கொண்டே இருக்கும்.

இந்த ஆவிகளின் நிலை எல்லாம்
1.அவன் உயிரணுவுக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்து அவன் நிலையில் அவனை இருக்க விடாமல்
2.அவனையே தன் வசப்படுத்திக் கொண்டு அவனுக்குள் வந்து குடி அமர்கிறது அந்த ஆவி.

தன்னுள் இருக்கும் சக்தியைப் புரியாமல் மாந்திரீகரிடம் சென்று பல தீட்சண்ய ஆவிகளுக்குத் தன் நிலையையே விற்று விடுகின்றார்கள் புரியாத பாமர மக்கள்.

1.தேவர்களின் தேவனப்பா மனிதர்கள் எல்லாம்.
2.இந்த மனித உடலைப் பெறுவதே பெரும் பாக்கியமப்பா…! என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திடுங்களப்பா…!
3.மந்திர மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளின் இயக்கத்திலிருந்து விடுபடுங்களப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகத்துடன் ஒத்துத் தான் வாழுகிறோம். இதிலே பிரிந்து வாழ முடியாது.

1.நன்மை தீமைகளைக் கேட்டுணர்ந்து தான் செயல்படுகின்றோம்.
2.தீமையை நுகர்ந்து தீமை என்று அறிந்து கொள்கின்றோம்… ஆனால் அந்தத் தீமை நமக்குள் விளையாது தடுக்க வேண்டும்.

உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்து அந்தத் தீமையை நமக்குள் குறைத்துப் பழக வேண்டும்.

மிளகாயைத் தனியாகக் கடித்தால் காரமாகத் தான் இருக்கின்றது. விஷத்தைத் தனியாக உட்கொண்டால் மயக்கம் வருகிறது.
1.ஆனால் அந்த விஷமான சக்தியை ஒரு மருந்துடன் சேர்த்து
2.அதனின் கலவையைச் சிறுக்கப் போகும் போது அந்த உணர்வுகள் மருந்தை நன்மையாக்குகின்றது.
3.உடலுக்குள் வேகமாக மருந்தை எடுத்துச் சென்று நோயை நீக்குகிறது.

இதைப் போன்று தான் தீமைகளை நாம் பார்த்தாலும் அல்லது கேட்டுணர்ந்தாலும் நுகர்ந்த பின் அது நம்மை இயக்குகின்றது.
1.அந்த நேரத்தில் “அதை இடைமறித்து”
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைக்க வேண்டும்…
3.அருள் சக்தி கலந்த அணுவாக அப்போது மாறும்.

இப்படி.. மகரிஷிகளின் அருள் சக்தி கலந்த அணுவாக மாறும் போது நமக்குள் அது தீமையை அடக்கும் சக்தியாக உருப் பெறுகின்றது… அப்படி வலுப் பெறும் போது தீமைகளைப் பிளக்கின்றது.

பார்த்துணர்ந்த உணர்வுகளைக் (எதுவாக இருந்தாலும்) கண்ணின் கரு விழி நமக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ ஆன்மாவாக மாற்றி அந்த உண்மையைச் சொல்லும். ஏனென்றால்…
1.நம் கண்கள் அது வழி காட்டும்.
2.நம் உயிரோ அதை இயக்கிக் காட்டும்.
3.உடலோ தனக்குள் இணைத்துக் காட்டும்.
4.மீண்டும் அதனின் நினைவு வரப்படும் போது அந்த அலைகளே நமக்கு உணர்த்தும்.

இப்படி மற்ற தீமைகளை நாம் எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதே போன்று தான் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்துப் பதிவாக்க வேண்டும். உடலில் உள்ள எல்லாவற்றிலும் இதைக் கலக்க வேண்டும்.

அதாவது தீமைகள் வந்து மோதும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும்.

இதற்கு முன்னாடி இந்த மாதிரி நமக்குத் தூய்மைப்படுத்தத் தெரியாது. ஆகையினால் எத்தனையோ உணர்வுகள் பதிவாகி இருக்கின்றது.

ஒரு எதிரி நமக்கு எப்பொழுதோ இடைஞ்சல் செய்திருப்பான். திடீரென்று அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரும். பார்த்தவுடன் என்ன நடக்கிறது…?
1.அவனைப் பற்றிய பதிவு ஏற்கனவே நமக்குள் இருக்கிறது.
2.அந்த நினைவு வந்த பின் “அயோக்கியப் பயல்… போகின்றான் பார்…! என்ற எண்ணம் டக்… என்று அங்கே வரும்.

அந்தச் சமயத்தில் அவன் மீது வரும் வெறுப்போ கோபமோ பயமோ அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் விளையும். உடலில் ஏற்கனவே இதன் வழியில் ஏற்பட்ட அணுக்கள் தனக்கு வேண்டிய இரையை எடுக்கும்.

அதே போல் அடுத்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் அவர்கள் செய்த தவறின் உணர்வை நினைக்கும் போது அந்தத் தவறின் உணர்வை இந்த அணு சாப்பிட்டு வளர ஆரம்பிக்கும்.

1.இப்படி எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் இது வளரத் தொடங்கினாலும்
2.நாம் அவ்வப்போது ஈஸ்வரா… என்று உயிரிடமே வேண்ட வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் எதைப் பார்த்தோமோ அது ஆன்மாவாகி சுவாசித்து அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அணுவாக அது வளர்க்கப்பட்ட பின் அதற்கு இது உணவாகக் கொடுப்பது உயிரின் வேலை தான். நாம் எண்ணியதை ஜீவ அணுவாக மாற்றுவதும் உயிரின் வேலை தான்.

தாவர இனங்களுக்குச் சூரியன் எப்படி அதனதன் சத்துகளைக் கொடுத்துச் செழித்து வளரச் செய்கிறதோ அதே மாதிரித் தான்
1.நம் உயிரும் சூரியனாக இருந்து உடலில் அணுக்களை உருவாக்குவதும்
2.அதற்கு வேண்டிய இரைகளைக் கொடுப்பதும்
3.அந்த நினைவைக் கவர்ந்து தனக்குள் அதைச் செயலாக்குவதும் போன்ற வேலையைச் செய்கிறது.

ஆனால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றிய உணர்வுகள் விளைந்து மனித உடலுக்குள் வரும் போது ஆறாவது அறிவாக வருகிறது… கார்த்திகேயா.

ஒவ்வொரு சரீரத்திலும் தனக்குள் அறிந்து உணர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்கள் மாற்றி இன்று மனித உடலாக உருவாக்கியது இந்த உயிர்.

நம் ஆறாவது அறிவால் எதனையும் அறிந்திடும் நிலைகள் வருகின்றது. ஆகவே அதை வைத்து இருளைப் போக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் என்னைச் சமாதியாக்க முயற்சித்தார்கள்

 

இங்கே எம்மை… (ஞானகுரு) ஆளைக் காணவில்லை என்று சொன்னதும் சாமியம்மா (என் மனைவி) எம்மை தேடிக் கொண்டிருந்தது. நான் பாபநாசம் சென்று விட்டேன் என்று அங்கே சென்று விட்டது. அது மலைக்காடு தண்ணீராக இருக்கின்றது… தனியாகத்தான் சென்றது. அங்கே ஒருவரும் இல்லை என்பதால் அடுத்த பஸ்ஸில் ஏறித் திரும்பிவிட்டது.

ஆக
1.அன்றைக்குச் சரியான நேரத்தில் அந்தம்மா தேடி வந்து எம்மைக் கூட்டிக் கொண்டு வந்ததால் ஆவியாக வந்து எம்மைப் பிடிக்கவில்லை.
2.இல்லையென்றால் இப்பொழுது உங்களிடம் இந்த உபதேசக் கருத்துக்களை நான் பேச முடியாது… நிச்சயமாகப் பேச முடியாது.

காரணம்… ஆரம்பத்தில் நான் பவானியில் (சத்தியத்தின் சக்தி நிலை) இருந்தேன்… பல உண்மைகளை அங்கே அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தேன்.

ஆனால் அவர்களோ எமக்குப் பல பல வகைகளிலும் இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தார்கள். எல்லாம் முடிந்த பிற்பாடு “என்னைச் சமாதியாக்க வேண்டும்” என்று முயற்சித்தார்கள். காரணம்…
1.அவர்கள் தனித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள்.
2.என்னைக் கொன்று விட்டு அவர்கள் தனித்து அதையெல்லாம் அனுபவிக்கலாம் என்று…!

இயற்கையின் உண்மை நிலைகளை எல்லாம் அங்கே தான் வெளி முதலில் உலகத்திற்குத் தெரியப்படுத்தியது. அங்கே தான் சாமியம்மா என்னைத் தேடி வந்தது.

ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சாமியம்மாவிடம்… அங்கே சமாதியாக்கி விடுவார்கள் நீ போ…! என்று சொல்லி இருக்கின்றார். நடந்த நிகழ்ச்சி இது…!

ஏனென்றால் பவானியில் உள்ளவர்களின் திட்டம் இதுதான். அருகிலே மலை ஒன்று இருக்கிறது… அருகிலே இடமும் வாங்கி இருந்தார்கள். அதிலே கட்டடத்தைக் கட்டி விட்டு அங்கேயே என்னைச் சமாதியாக்கி விடலாம் என்று.

இங்கே வந்தார்… திடீரென்று சொர்க்கம் சென்று விட்டார்…! என்று சொல்லி அதை வைத்துச் சம்பாதித்துக் கொள்ளலாம். யாம் கொடுத்த பாட நிலைகள் உலகில் யாருக்கும் சொல்லாது தாங்களே அதை மறைத்துக் கொள்ளலாம் என்று செயல்பட்டார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் அன்று இருந்தார்கள்… ஏனென்றால் குருவை மறந்து விட்டார்கள். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! அங்கே நடந்த சில உண்மைகளை இப்பொழுது தான் உங்களுக்குச் சொல்கின்றேன்.

ஆகையினால்
1.என் மனைவி அங்கே வந்து “அவசியம் நீ என்னுடன் வந்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது…:
2.நான் சிறிது நாள் இங்கே இருந்து விட்டு வருகின்றேன் என்று சொன்னேன்
3.இல்லை இப்போதே… உடனடியாக வரவேண்டும் என்று சொல்லிவிட்டது

அந்த நேரத்தில் நான் இருந்த இடத்திலே அவர்களுடைய செயல்களும் அதற்குத் தகுந்த மாதிரியே இருந்து விட்டது. பவானியில் எம்மைச் சமாதியாக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள்.

யார்…? எஸ்.எஸ்.எம் என்பவர்…! அங்கே ஆரம்பத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் இது எல்லாம் தெரியும் பணம் இருந்தும் கொடுத்த ஞானத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக… ஆசை கொண்டு என்னைக் கொலை செய்யும் அளவிற்குச் சென்று விட்டார்கள்.

இது வரையில் இதை எங்கேயும் வெளிப்படுத்தவில்லை.
1.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம் சந்தர்ப்பங்கள் வரும் என்பதை
2.நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்

அதற்கப்புறம் தான் இங்கே வந்து தபோவனத்தை ஆரம்பித்தது. என்னுடைய மனைவி அப்பொழுது என்னை இழுத்துக் கொண்டு வரவில்லை என்றால் என்னைச் சமாதியாக்கி இருப்பார்கள்.
1.குருநாதர் அந்தம்மாவின் உடலில் வந்து எல்லாவற்றையும் சரி செய்து என்னை இழுத்து வந்தது
2.காரணம் அன்றைக்கு குருநாதர் யார்…? என்பது அவர்களுக்குத் தெரியாது
3.ஆனால் அவருடைய செயலை யாரும் மறைக்க முடியாது
4.அவர் இட்ட கட்டளையைத் தான் செய்ய வேண்டுமே தவிர சுதந்திரம் எனக்கு இல்லை
5.அவர் இட்ட வேலையை நான் (ஞானகுரு) வேலைக்காரனாகச் செய்து கொண்டிருக்கின்றேன்… அவ்வளவுதான்
6.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும்… உடலைக் கோவிலாக மதிக்க வேண்டும் என்று சொன்னார்
7.அந்த அருள் உணர்வைப் பெற செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்
8.ஆக… நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று உங்களிடம் தான் என் வரம் கேட்கின்றோம்
9.அருள் உணர்வுகளை யாம் பாய்ச்சப்படும் பொழுது நீங்கள் அந்த அருளைப் பெருக்கினால் தான் எனக்கும் அந்த அருள் கிடைக்கின்றது
10.நீங்கள் வளர்ந்தால் தான் நான் வளர முடியும்.

அதாவது… விவசாயம் செய்யும் போது நிலத்தில் நல்ல வித்துக்களைப் போட்டு விளையச் செய்தால் மகசூல் எப்படிக் கிடைக்கின்றதோ அந்த வித்து தான் மற்றவர்களுக்குக் கிடைக்கும்.

ஆகையினால் என் மனைவி தேடி வந்து என்னை அழைத்துக் கொண்டது. நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனம் ஆகி… நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து கொண்டு வருகின்றோம்
1.இதே நிலை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான்
2.நாங்கள் இருவரும் அருள் சேவை செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆண்டவனின் அருளைப் பெற்று “நீ ஆண்டவனாக இருந்துவிடப்பா…!”

 

பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல்… என்று பாடுகின்றாய் “பரிபக்குவ நிலையை வேண்டுகின்றாய்…”

1.பல நாட்கள் பாடம் கேட்டு உங்கள் மூவரின் நிலை என்னப்பா…?
2.பாரினில் பல கோடி மக்கள் உள்ள நிலையிலும் பூர்வ ஜென்மத்தின் தொடர்பினால்
3.சிலரை (உங்களை) மட்டும் பாட நிலைக்கு ஏனப்பா நான் அழைக்கின்றேன்…!

இராமர் கதையை கேட்டிருப்பாய் இராமர் கதையில் உள்ள தத்துவத்தை எல்லாம் “மறந்துவிட்டு” விடிந்தபின் கேட்ட நிலைதானப்பா உங்கள் மூவரின் நிலையும்.

ஆனாலும் உங்கள் நினைவிலும் எண்ணத்திலும் என் நினைவு கலந்து உள்ளதால் உங்களின் நிலை சிதறிடாமல் காத்திட்டேன். சாமியும் பாடுகின்றார் நீங்களும் பாடுகின்றீர் நீங்களும் ஜெபிக்கின்றீர். உன் எண்ணமும் என்னுள்ளே கலந்தது.
1.எல்லோர் நிலையும் ஒரே சமயத்தில் எப்படி என் நிலைக்கு அந்த எண்ணம் மோதுகிறது…?
2.எல்லோர் நிலைக்கும் எப்படி ஆசீர்வாதம் அளிக்கிறேன்…? என்பது புரிந்ததா…!

சில தியானக் கூடங்களில் ஆயிரம் பேர் அமர்ந்திருந்தாலும் எல்லோரும் ஆண்டவனையே நினைக்கின்றார்கள். அவரவர்களின் நிலைக்கு அந்தக் கடவுளை நினைத்தாலும்… எல்லோர் நிலைக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப தியானக் கூடத்தில் உள்ளவர்களின் எண்ணம் ஆண்டவனை ஜெபிப்பதில் உள்ளது.

ஆனால் அவரவர்களுக்கு வேண்டியதை நினைத்துத் தான் ஜெபிக்கிறார்கள். உடல் நிலைக்கு… தொழில் நிலைக்கு… இப்படிப் பல நிலைகளில் அவரவர்களின் எண்ணத்திற்கு உகந்தபடி தியானக் கூடத்தில்… “அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை ஜெபிக்கிறார்கள்…”

எல்லோருடைய எண்ணத்திற்கு ஒப்ப அவர்கள் எண்ணும் ஆண்டவனால் எப்படி ஆசீர்வதிக்க முடிகின்றது…? இந்த நிலை புரிந்ததா…?

ஆண்டவர் ரூபத்தில் உள்ள எல்லோருமே எப்படியப்பா ஒரே நேரத்தில் அவரவர்கள் எண்ணத்திற்கு ரூபத்திற்கு அருள் புரிகின்றார்கள்.

பழனி மலைக்குப் பல கோடி பக்தர்கள் வருகிறார்கள் முருகா… முருகா… என்று காவடி ஆடிக்கொண்டு பல பல வழிகளில் அவ்ஆண்டவனை அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.

அந்நிலையில் “போகரினால்” எப்படியப்பா எல்லோருக்கும் அருள் புரிய முடிகிறது…?

சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள்… தாம் பெற்ற சூரியனின் சக்தியிலிருந்து ஜோதி ரூபத்தில்… அவர்களுடைய நினைவில்… எல்லோருடைய எண்ணத்தையும் ஈர்த்துக் கொள்கிறார்கள்.

ஈர்த்த நிலையில்
1.அவர்கள் பாய்ச்சும் ஒளிக் கதிர்கள் அவர்கள் நினைக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒலிகள் அவர்களின் உயிர் நிலைக்கே பாய்கிறது.
2.ஒளியைப் பெற்றவர்களுக்கெல்லாம் அவர்கள் எண்ணி வந்த நிலைக்கு அவ்ஒளியின் தன்மையினால் அவ்வாண்டவனின் அருள் கிடைக்கிறது.
3.ஆண்டவன் என்று இப்பொழுது நான் சொல்லியது “என் நிலையில் உள்ள” பல கோடிச் சித்தர்களையும் ஞானிகளையும் ரிஷிகளையும் தான்…!

ஆண்டவன் என்று எண்ணும்பொழுது மக்களுக்கு ஆண்டவன் என்பது யார்…? என்று புரிவதில்லை…!

தன்னையே புரிந்து கொள்ளாத இந்த மக்களுக்கு ஆண்டவன் என்று ஒருவன் இருக்கின்றான் என்ற எண்ணம் இருந்தால்தான் தர்மம் நியாயம் என்ற… இப்பொழுது இருக்கும் சில தன்மைகளாவது… ஆண்டவன் என்ற “ஒரு பயமாவது” இருக்குமப்பா.

அதுவும் சிலரின் மனதில் தான் இருக்கிறது.

இந்நிலை காலம் காலமாக வந்திடும் என்ற நிலையைப் புரிந்து தான் இப்பொழுது சூட்சும உலகத்தில் உள்ள எல்லா ரிஷிகளும் ஞானிகளும் தவம் செய்து
1.அவ்வாண்டவனின் சக்தியைத் தன்னுள் ஈர்த்து அவர்களின் நிலையை ஒருநிலைப்படுத்தி
2.சூட்சம உலகத்தில் இருந்து கொண்டே எல்லா நிலைகளையும் செய்கிறார்கள் இம் மக்களின் தன்மைக்கு.

புத்தனும் இயேசுவும் நபியும் போகரும் கொங்கணவரும் ஐயப்பனும் பெற்ற அருளை எல்லாம் இம்மானிட உலகில் பிறந்த எல்லோருமே பெற்றிடலாம்.

இந்நிலையை ஏன் பெற வேண்டும் என்று எண்ணத்தை இனி எண்ணி விடாதீர்கள்…! இப்பொழுது சொல்லும் பாடம் மிகவும் முக்கியம்
1.சுழன்று கொண்டே உள்ள உலகத்தின் சுழற்சியில் சிக்கிப் பல பல அவதாரங்களை எடுத்து பல உடல்களை எடுத்து
2.உலக ஆரம்ப நிலையில் அல்ல கல்கியில் ஆரம்பித்து கலியில் முடிந்து…
3.திரும்பவும் கல்கிக்கு வந்து திரும்பவும் கலியில் முடிந்து பல பல உடல்களை எடுத்து
4.ஏனப்பா இவ்வுலகத்தில் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.

ஜென்மங்கள் வருவது எதனால் என்பது தெரிந்து விட்டது முதலிலேயே உங்களுக்கு…!

இப்பொழுது பெற்றிருக்கும் இவ்வுடலைக் “கடைசி உடல்…!” என்ற எண்ணம் வைத்து இவ்வுடலிலேயே உன்னுள் இருக்கும் ஆண்டவனை நீ புரிந்து கொண்டு
1.மறு ஜென்மம் எடுத்திடும் நிலைக்கு வந்திடாமல்
2.இக்கலியிலேயே உன் நிலையை ஒரு நிலைப்படுத்தி அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
3.சூட்சும உலகத்திற்கு வந்துவிட்டால் அடுத்த கல்கி பிறந்து கலி வந்து முடியும் வரை பல ஜென்மங்கள் எடுத்து அவதிப்பட வேண்டியதில்லை.

சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே எவ்வுடலையும் உன் நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவ்வுடலில் உன் நிலைக்குச் செய்யும் சேவையை முடித்துக் கொண்டு மறு உடலையும் எடுத்துக் கொள்ளலாம்.
1.பிறந்து வளர்ந்து பல நிலைகளில் மாறுபட வேண்டியதில்லை.
2.அந்நிலைக்கு வந்து வாழ்வது… “என்ன சோம்பேறி வாழ்க்கையா…?” என்று எண்ணிவிடாதே…!

அந்த வாழ்க்கை நிலையில் இம்மனித உடலுக்கு… இம்மானிட மக்களுக்கு… நல் வழி புகட்டி நல்லாசியை அளித்திடத்தான்
1.அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
2.நீ ஆண்டவனாக இருந்திடு…! என்று சொல்வதெல்லாம்.

திரும்பவும் சொல்கின்றேன்……! இக்கலியில் இப்பொழுது பெற்றிருக்கும் கடைசி உடல் தான் உங்களுடைய உடல்கள். இந்நிலையில் இருந்து நீங்கள் மாறுபட்டால்
1.வந்திடும் எதிர்ப்பையும் எண்ணத்தின் மாற்றத்தையும் வைத்து மாறுபட்டால்
2.அடுத்த மானிட உடல் இல்லையப்பா… மனித உடல் இல்லையப்பா…!
3.மிருக உடலுக்குத்தான் செல்ல முடியும்.

உமக்கு ஆண்டவர் எடுத்து கொடுத்த சந்தர்ப்பத்தில் கடைசிச் சந்தர்ப்பம். இது… இந்நிலையை மாற்றி விடாதீர்கள்.

நான் பயமுறுத்துகிறேன்…! என்று எண்ணிடாதீர்கள். உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்துங்கள் நல் வழியில். அழியாத நிலை பெற்றுக் கல்கியில் கலந்திடுங்கள்…!

இந்த ஒரு வாரத்தில் உங்களுடைய எண்ணச் சிதறல்களை வைத்துத் தான் என்றும் வெளியிடாத இரகசியத்தை இன்று வெளியிட்டேன்.
1.”புரிந்ததா… புரிந்ததா… புரிந்ததா…” என்று பல பாடங்களைப் புரிய வைத்தும் எண்ணத்தைஸ் சிதற விட்டீர்கள்
2.இனி சுவாச நிலையை ஒருநிலைப்படுத்துங்கள் உம் வழிக்கு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து உலகில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுங்கள்

உலகம் முழுவதும் நஞ்சாகப் பரவி இருக்கும் இந்த வேளையில்
1.எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை
2.அந்தக் கலாச்சாரத்தை இங்கே கொண்டு வர வேண்டும்.

சகோதர உணர்வுடன் வாழ வேண்டும்… எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… என்ற அந்த மகரிஷிகளின் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்.

காரணம்… சிந்தனையற்ற நிலையில் மனிதன் இன்று அசுரனாகின்றான். அந்த அசுர சக்தியை மாற்றுவதற்கு நாம் நம் குருநாதர் காட்டிய நிலைகளில் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்துப் பரப்பியே ஆக வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..! என்று நாம் சொல்லும் அந்த அகஸ்தியன் நமது நாட்டில் ஆதியிலே தோன்றிய மனிதன் தான் முதன் முதலிலே விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தவன்.

அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி நம் பூமியின் வடக்குத் திசையில் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.

1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றுமே வாழச் செய்யும் கலாச்சாரம்
2.தென்னாட்டிலே தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானது
3.நம் தென்னாட்டில் மீண்டும் இது தழைக்கின்றது… வேறு எந்த நாட்டிலும் இல்லை.

தெற்கிலே உருவான அந்தக் கலாச்சார அடிப்படையில்தான் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அகஸ்தியன் உணர்வை இப்பொழுது உணர்த்துவதும் உணரச் செய்வதும்.

அத்தகைய சிசுக்கள் வளர்ந்தால் மெய்ப் பொருளின் ஆற்றலை நாமும் பெறலாம். அந்த உணர்வின் தன்மையை எடுத்து உலகம் முழுவதற்கும் பரவும்படிச் செய்யலாம். அதை நாம் வளர்த்தல் வேண்டும்.

தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டாலும் அந்தக் குடும்பத்திலே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவிலிருக்கும் குழந்தைகள் அந்த அகஸ்தியன் உணர்வுகளைப் பெற்று ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவிலேயே விளைய வேண்டும்
3.இருளைப் போக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
4.உலகம் ஒன்றி வாழும் அந்த உணர்வின் சக்தி இந்த கருவிலேயே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.

அகஸ்தியன் உணர்வைப் பெற்றுத் தென்னாட்டிலே வளரும் அத்தகைய குழந்தைகள் எந்த நாட்டவரையும் காத்திடும் சக்தியாக வளரும்.

விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் என்று கண்டுணர்ந்தானோ அதைப் போல எந்நாட்டவரும் விண்ணுலகை ஆற்றலைப் பெறும் தன்மையும்… மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
1.நாம் முன் செல்கின்றோம்.
2.பின் வருவோருடைய நிலைகளும் அதன் வழி செல்லும்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும். எதை எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கிறது. தன் இனத்தின் சக்தியைத் தன் வித்திற்கே கொடுக்கின்றது.

இதைப் போலத் தான் தீமையான வினைகள் மனிதனுக்குள் விளைய வைத்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதை ஊட்டி அந்தத் தீமையின் விளைவையே மனிதனுக்குள் இயக்கச் செய்கின்றது “இன்றைய நிலைக்குக் காரணம் இது தான்…!”.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்… மக்களை மீட்டுதல் வேண்டும். சிறிது பேர் தான் இருக்கிறோம் என்று எண்ண வேண்டாம். இது வளர வளர பல லட்சங்கள் ஆகும்.. பல கோடிகளாகவும் உருவாக்க முடியும்.

ஆகவே… யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகளைக் கருத்தில் கொள்ளுங்கள். அதைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றுங்கள்.

எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள். அந்த அருளை உலகெங்கிலும் பாய்ச்சுங்கள்.

“மிக உயர்ந்த சக்திகளை” உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்

 

அகஸ்தியன் உருவத்தைக் கூழையாகப் போட்டுக் காண்பித்திருப்பார்கள் பின்னாடி வந்த ஞானியர்கள். காரணம்… “இளமையிலேயே முதுமையானவர்கள் செயல்படுத்தும் செயலைச் செய்தவன்…” என்று காட்டுகின்றார்கள். தனது ஐந்தாவது வயதிலேயே வான இயலின் தத்துவத்தை அறிந்தவன் தான் அகஸ்தியன்

இன்றும் விஞ்ஞான உலகில் நாம் பார்க்கலாம் ஐந்து வயதுக் குழந்தை கம்ப்யூட்டர் கால்குலேட்டர் இல்லாமல் எல்லா வேலையும் செய்கிறது… உடனே கணக்குகளைச் சொல்கிறது…! என்று சொல்கின்றோம்.

1.சிறு வயதில் இதையெல்லாம் நன்றாகச் செயல்படுத்தும்
2.ஆனால் வளர்ச்சியில் ஆசையின் நிலை வரப்படும் பொழுது பின்னாட்களில் அந்தத் திறமை முடியாது போகிறது…
3.கடைசிலே ஒன்றும் முடிவதில்லை.

பெரிய தொழிற்சாலையில் கூட முதலில் அவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் இளம் வயதில் செய்த்து போன்று செய்திகள் பின் நாட்களில் வருவதில்லை. காரணம் உலக ஆசையின் நிலைகளைச் சேர்க்கப்படும் பொழுது அதனுடன் மறைந்து விடுகின்றது

தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது
1.எடுத்துக் கொண்ட சிந்தனைகளுக்கொப்ப சில அணுக்களின் தன்மை நுகர நேர்ந்தால்
2.ஞானத்தின் தன்மையாக அறியும் நிலை வருகின்றது.

நாளடைவில் ஆசை அதிகமாகும் போது மறைந்து விடுகின்றது. உங்கள் அனுபவத்தில் நீங்கள் இதையெல்லாம் பத்திரிக்கையில் பார்த்து இருப்பீர்கள்.

ஒரு உடலுக்குள் விளைந்தது அந்த ஆன்மா இந்த உடலுக்குள் புகுந்த நிலையில் அதனுடைய இயக்கமாக இப்படி இயக்கும்.

பின் வயது வளர்ச்சியாக…
1.இவனுக்குள் மாற்று உணர்வுகளோ தீமைகளோ அதிகரிக்கப்படும் பொழுது கஷ்டங்களைக் கேட்டுக் கேட்டுக் கேட்டு
2.மற்றவர்களுக்கு இவன் நல்ல விடைகளைச் சொன்னாலும் அந்த ஆன்மாவும் கடைசியிலே நாசமாகிவிடும்.
3.இவனுடைய நல்லதும் கேட்டு… உடலில் நோயாகி மடிந்து விடுவான்.

எல்லோருக்கும் அவன் ஜோசியம் சொன்னான்… நல்லதெல்லாம் சொன்னான் என்று முதலில் பெரிதாகச் சொன்னாலும் அவரும் கடைசியில் இந்த மண்ணுக்குள் தான் போகின்றார் (மடிந்து போகின்றார்).

இப்பொழுது என்னை (ஞானகுரு) எடுத்துக் கொண்டால் உங்கள் எல்லோருக்கும் நல்லதைத் தான் சொல்கின்றேன். ஆனால் ஆயிரக்கணக்கானோர் வந்து “எனக்கு இப்படிக் கஷ்டம்… அப்படிக் கஷ்டம்… நோயாக இருக்கின்றது…!” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தால் எனக்குள் என்ன ஆகும்…?

என்னால் முடிந்த அளவு துடைக்கின்றேன். ஆட்கள் எண்ணிக்கை கூடக் கூட கஷ்டம் என்று கூறுவதைத் துடைக்கத் தவறினால் நானும் அந்த நிலைக்குத் தான் போக வேண்டி வரும். வேறு வழி இல்லை…!

இரவும் பகலும் நான் விழித்திருந்து மகரிஷிகளின் அருள் உணர்வினை எடுத்து… கேட்டறிந்த தீமையின் உணர்களைத் துடைத்துக் கொள்கின்றேன்.

குருநாதர் காட்டிய வழியில்
1.மிக உயர்ந்த சக்திகளை உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்
2.ஆனால் அந்த உயர்ந்த சக்தி எங்களுக்கு வேண்டும் என்று யார் கேட்கின்றார்கள்…?

என்னைப் பார்த்ததுமே… கோவிலிலே அழுவது போன்று தான் கஷ்டத்தைச் சொல்லி அழுக ஆரம்பிக்கின்றார்கள். நான் நல்லது செய்ய வந்தாலும் கூட இப்படி ஆகிவிடுகின்றது.

1.என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
2.என் பிள்ளைகள் ஞானமாக இருக்க வேண்டும்
3.தொழில் சீராக இருக்க வேண்டும்
4.என் வாடிக்கையாளர் அனைவரும் செல்வாக்குடன் வாழ வேண்டும் கடன் பாக்கி எல்லாம் கொடுக்க வேண்டும்
5.அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இப்படி யாராவது கேட்கின்றீர்களா…? இல்லையே…!

வரக்கூடிய தீமைகளிலிருந்து மாற்றி அமைப்பதற்குத் தானே இத்தனையும் சொல்லிக் கொடுக்கின்றோம்.. நான் சொல்வதை நீங்கள் கேட்டு… விரும்பிச் செய்ய வேண்டும்.

ஆனால் இதை எல்லாம் கேட்டாலும் கூட… மறுபடியும் அதற்குத் தானே வந்தேன் என்று “மீண்டும் கஷ்டத்தைச் சொல்வார்கள்…” எத்தனையோ வழிகளில் யாம் அதை மாற்றி அமைப்பதற்குப் பிரயத்தனம் செய்தாலும் எடுத்துக் கொள்வதில்லை.

காட்டிற்குள் செல்லும் போது பல அவஸ்தைகளைக் கொடுத்தார் குருநாதர். அகஸ்தியன் எவ்வாறு சக்தி பெற்றான் என்பதை அறியச் செய்தார். ஆனால்
1.நாட்டிற்குள் வந்து “அகத்திற்குள் இயங்கும் இயக்கங்கள் எவ்வாறு…?” என்பதை உங்களிடம் சொல்லி
2.சக்தி வாய்ந்த வாக்குகளை கொடுக்கின்றோம் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா…!

ஒருவன் திட்டுகிறான் என்றால் அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம். என்னைத் திட்டினான்… அவன் மோசமானவன்… அவன் உருப்படுவானா…? என்று சொன்னால் அங்கே வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவனுக்குப் புரையோடுகின்றது… உணர்வுகள் இப்படி இடைமறிக்கின்றது.

உணர்வின் இயக்கங்கள் இவ்வாறு தான் இருக்கின்றது.

1.தீமையிலிருந்து விடுபடக்கூடிய சக்தி வேண்டும்
2.துன்பங்களை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி வேண்டும்
3.இருளைப் போக்கும் சக்தி வேண்டும் என்று என்னிடம் கேட்டால் “எமக்குத் தெளிவாக இருக்கும்…”

ஆனால் அதை விட்டுவிட்டு… சாமி…! நீங்கள் சொன்னீர்கள் எனக்குச் சரியாகவில்லையே…! என்று தான் சொல்லத் தொடங்குகின்றார்கள். அது எண்னை எப்படித் தாக்கும்…?

ஏனென்றால் ஒவ்வொருவரும் தொடர்பு கொண்ட நிலையில் தான் இயங்குகின்றோம்.

காரணம் உண்மையின் உணர்வுகளை அறிய முடியாத நிலையில் இருப்பதனால் யாம் நன்மைகள் செய்ய வந்தாலும் கூட இன்னொரு ஆன்மா (ஊங்கள்) உடலுக்குள் சென்ற பின் இந்த நிலை ஆகிவிடுகிறது.

இதையெல்லாம் மாற்றிப் பழக வேண்டும் அதற்குத்தான் தொடர்ந்து தொடர்ந்து உங்களுக்கு இந்த உபதேச வாயிலாக ஞாபகப்படுத்தி ஞானிகள் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.
1.யாம் கொடுக்கக்கூடிய வாக்குகளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தினால்
2.அதனுடைய பலன்களை நிச்சயம் நீங்கள் உணர முடியும்.

பூமியைக் காக்கும் சந்திர சூரியர்கள் (மகரிஷிகள்)

 

இவ்வுலகத்திலே கலந்துள்ள பல விஞ்ஞானிகளும் பல ஜோதிடர்களும் எண்ணத்தாலும் எழுத்தாலும் எண்ணிப் பல நாட்கள் ஆராய்ச்சி செய்து வான மண்டலத்தின் தன்மையை வழிக்குக் கொண்டு வரச் செய்யும் வேலையையே நாமும் செய்யலாம் இன்றைய பாடத்தில்.

இவ்வுலகத் தன்மைக்கு ஒலி ஒளி நீர் இந்நிலைகளை எப்படி அவசியமோ அந்நிலையில் இருந்து எப்படி உலகம் சுழல்கிறதோ அச்சுழலும் தன்மைக்கு இம்மூன்றின் தன்மையுடன் “மற்றொரு தன்மையும் உள்ளதப்பா…”

இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் உயிர் வாழ்ந்திட சூரிய மண்டலத்தில் இருந்து வந்திடும் ஒளிக்கதிர்களினால் இப்பூமியின் தன்மை ஈர்க்கும் நிலையில் உலகம் சுற்றுகிறது என்று சொன்னேன் அல்லவா.

இச்சூரிய மண்டலத்தினைச் சுற்றியுள்ள கிரக நிலைகள் 9 என்று விஞ்ஞானிகள் கணக்கெடுத்து உள்ளார்கள். ஒன்பது மண்டலங்களுமே இந்நிலையில் தான் சுற்றுகிறது என்கின்றனர்.

அப்படி என்றால் இப்பூமியின் நிலையில் உள்ளது போலவே தான் எல்லா மண்டலங்களிலும் ஜீவராசிகள் உள்ளனவா…? ஜீவராசிகளில் மனிதரின் நிலை உள்ளதுவா…?

பூமியின் நிலை போல் அந்நிலைகளும் சுற்றிக்கொண்டு இருந்தால் அந்நிலையில் ஏனப்பா மனித இனம் இல்லை…?
1.நம் பூமியை தவிர வேறு எந்த மண்டலத்திலும் இந்த மனித இனம் இல்லையப்பா.
2.அந்நிலையில் எந்த ஜீவராசிகளும் இருந்திட முடியாதப்பா.

பூமியின் தன்மையில் பெரும் பொக்கிஷம் என்ன என்றால் பூமிக்கு இரண்டு பக்கங்களில்
1.பூமிக்கு மேல் தந்தையை போன்று சூரியனும்
2.மறு பக்கத்தில் தாயைப் போல் சந்திரனும் உள்ளதால்
3.இப்பூமியின் தன்மை குழந்தையைப் போல் சுற்றிச் சுற்றி விளையாடுகிறது.

சூரியன் — பூமி — சந்திரன்

சூரியனைச் சுற்றி இந்த உலகம் உருளும் பொழுது இவ்வுலகத்திற்கு எதிர் நிலையில் உள்ள சந்திரனின் ஒளியும் ஈர்ப்பு நிலையும் இப்பூமிக்குப் பாய்கின்றது.

பூமி எப்படித் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளதோ அந்நிலையில் தான் சந்திரனும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது. சூரியனின் நிலை ஒரு நிலையில் தான் உள்ளது.

பூமி தன்னைத்தானே சுற்றும் பொழுது பகலும் இரவும் வருகிறது அல்லவா சூரிய ஒளி படும்போது பகலாகவும் சூரிய ஒளி படாத பொழுது இரவாகவும் உள்ளதல்லவா.

இந்நிலையில் மாறுதல் இல்லாமல் ஒன்று போலவே உள்ளது. ஆனால் சந்திரனை நாம் மாதத்திற்கு ஒரு தடவை தான் முழு நிலவாகக் காண்கின்றோம் மற்ற நாட்களில் வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் அமாவாசையாகவும் இருக்கின்றது.

இந்நிலை எப்படியப்பா வந்தது…?

உலகைப் போலவே இச்சந்திரனும் சுற்றுவதால் உலகச் சுற்றை விட சந்திரனின் சுற்றல் துரிதமாக உள்ளது. அந்நிலையில் தான் உலகின் மறு பக்கத்தில் அது சுற்றும் பொழுது அதன் நிலையை மாறி மாறிக் காண்கின்றோம்.

இந்த உலகிற்குச் சூரியனின் ஒளி மட்டும் இருந்து விட்டால் ஜீவராசிகள் உயிர் வாழ்ந்திட முடியுமா…? இவ்வுலக நிலையில் உள்ள பல பல வண்ணங்களும் பல கோடி வாசனைகளும் எப்படியப்பா வந்திடும்…?

1.இவ்வுலகில் உள்ள ஜீவராசிகளின் நிலைக்கு
2.”சூரியனின் தன்மையும்… சந்திரனின் தன்மையும்…” கலந்து தான் இருக்கின்றது

சுவாச நிலையில் இருந்து தான் இவ்வுலகமே… இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாமே உள்ளது என்று செப்பிட்டேன் பல முறை.

இவ்வுலக நிலையில் இருந்து பார்க்கும் பொழுது நம் கண்ணுக்குச் சூரியனும் சந்திரனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களையும் தான் பார்த்திட முடிகின்றது.

விஞ்ஞானிகள் சொன்ன வியாழன் புதன் சனி செவ்வாய் ராகு கேது சுக்கிரன் என்ற மற்ற கிரகங்களை நம்மால் பார்த்திட முடிகின்றதா…?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது.
1.நம் பூமிக்கு நேர் பார்வை சந்திரன்
2.அந்நிலையைப் போலத்தான் சந்திரனுக்கு நேர் பார்வை செவ்வாய்.
3.எல்லா மண்டலத்துக்கும் சூரியனின் பார்வை ஒன்றே தான். சூரியப் பார்வை என்பது சூரிய சக்தி ஒன்றே தான்.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் இச்சக்கி நிலை மாறுபடுகின்றது. சூரிய சக்தி ஒன்றே போல் எல்லா மண்டலத்திற்கும் படிந்தாலும்
1.அம்மண்டலத்தின் எதிர் நிலையில் உள்ள மண்டலத்தின் தன்மை மாறுபடுவதால்
2.அந்நிலையில் நடக்கும் நிலைகள் வேறாக உள்ளன.

சந்திரனுக்கு எதிர் நிலை பூமி தான். சூரிய சக்தியையும் பூமியின் சக்தியையும் சந்திரன் பெறுவதனால் சந்திர மண்டலத்தில் சில உயிரினங்கள் உள்ளன. ஆனாலும் அவைகள் “உருளும்” நிலையில்தான் உள்ளன.

சந்திரனில் பூரண சந்திரனில் “தியானத்தில்… பல ரிஷிகளின் உருவங்கள் தெரிவதெல்லாம்”
1.இப் பூமிக்கு நேர் எதிரில் இருக்கும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் பூமியில் படுவதால்
2.பல ரிஷிகளும் பல ஞானிகளும் அவர்களுடைய தவப்பயனை வைத்துப் பூரண சந்திரனிலிருந்து அவர்கள் பிறந்து வளர்ந்த பூமிக்கு
3.அந்நிலையில் இருந்து அந்தப் பூரண சந்திரனின் ஒளியில் “பல கோடி நறுமணங்களையும்… நல்ல எண்ணங்களையும் பாய்ச்சுகின்றார்கள்…”

அந்நிலையில் இருந்து வந்து தாக்கும் அணுக் கதிர்கள்
1.இம்மானிட உலகில் உள்ள மனிதர்களுக்குப் பெரும் பொக்கிஷம் போன்ற
2.உயிர் காக்கும் அணுக்களப்பா.

சூரியனின் ஒளி மட்டும் இருந்தால் பூமிக்கு உயிர் தன்மைக்கு வாழ்ந்திட முடியாதப்பா… மற்ற மண்டலங்களைப் போலத்தான் இப் பூமியின் நிலையும் இருந்திருக்கும்.

பூமியின் தன்மையை சூரிய ஒளி மட்டும் இருந்திருந்தால் பல பல பாளங்களாக வெடித்து பூமியின் நிலையே சிதறி இருக்கும்.

இப்பூமியின் நிலையைக் காக்கத்தான் எதிர் நிலையில் சந்திர மண்டலம் உள்ளது. சந்திர மண்டலத்தின் நிலை மட்டும் இருந்திருந்தாலும் சூரியனின் நிலை இல்லாமல் இயங்கிட முடியாதப்பா.

இந்நிலையை வைத்துத்தான் தாய் தந்தையரைப் போல என்று பகர்ந்திட்டேன் “சந்திரனையும் சூரியனையும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.
1.இப்படிச் செய்தால் அது உண்மையான தவமாக மாறுகின்றது
2.ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.

வெளியிலே எல்லோருக்கும் சொல்லி விடலாம். “தன் குடும்பம்” என்று வரும் போது தான் இதிலே பெரிய சிக்கலே வரும்.

ஏனென்றால்
1.அடிக்கடி சந்திக்கும் நிலையும்… வெறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்வதாலும்…
2.உடனே அந்த உணர்வைத் தூண்டிக் கோபமாகப் பேசச் சொல்லும்.

ஆகவே…. முதலில் வாரத்தில் ஒரு நாளாவது நம் குடும்பத்தில் எல்லோரும் ஒருங்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எண்ணிக் கூட்டுக் குடும்ப தியானம் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும். எங்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும். எங்கள் பார்வையால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். பொருளறிந்து செயல்படும் திறன் அனைவரும் பெற வேண்டும் என்ற இந்த எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது வளர வளர குடும்பத்திலே மகிழ்ச்சி பெருகும். நம் பார்வையும் சொல்லும் உலக மக்களின் தீமைகளை அகற்றும். நாம் இவ்வாறு எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் நாம் வாழும் பூமியிலேயும் படருகின்றது.

ஆகவே மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகள் அனைத்தும் இங்கே சுழன்று கொண்டுள்ளது… அதைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.

எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்…
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக அணுக்களாக இருப்பினும்
2.அதைப் பருகித் தனக்குள் வளர்க்கும் நிலை இல்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு தான் இப்பொழுது அதைக் கவர்ந்து வளர்ப்பதற்குண்டான வழிகளை ஏற்படுத்துகின்றோம்.

அன்று அகஸ்தியனும் அவரைப் பின்பற்றிய வியாசகரும் மற்ற ஏனைய ரிஷிகளும் எடுத்து அவர்கள் விளைய வைத்த ஒளியான உணர்வுகள் இங்கே மறைந்துள்ளது.

அதை நுகர்ந்து நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் மீண்டும் அதைப் பெருக்கும் நிலை வருகின்றது.
1.ஆனால் இதற்கு முன் அதைப் பெருக்கும் நிலை இல்லை
2.மகரிஷிகள் விண்ணிலே ஒளியின் சரீரமாக இருந்தாலும் அவர்கள் உமிழ்த்தும் உணர்வின் தன்மையை இங்கே பருகும் நிலை இல்லை

நாம் விண்ணை நோக்கி ஏங்கித் தியானித்து அந்த மகரிஷிகளின் அருளைப் பருகி எல்லோருக்குள்ளும் அது பெருக வேண்டும் என்று அந்த அலைகளை நாம் பரப்ப வேண்டும்.
1.முன்னாடி அந்த நிலை இல்லை
2.ஆனால் அதை இப்பொழுது நாம் உருவாக்குகின்றோம்
3.உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உணர்வுகளிலும் அதைப் பதிவு செய்கிறோம்.
4.நீங்கள் அதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

“பச்சிலை மிரட்டி” உருவாகும் விதம்

 

பச்சிலைகளைக் கண்டபின் மற்ற மிருகங்கள் ஏன் எப்படி எதனால் அஞ்சி ஓடுகிறது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார். உடல் பெற்ற பின் ஆந்த மணங்கள் கண்டு அதனால் விலகிச் செல்கிறது.

கீரிப்பிள்ளையும் பாம்பும் சண்டையிடுகின்றது. அதற்கும் ஒரு பச்சிலை உண்டு. பாம்பு கடித்து விட்டது என்றால் கீரி அந்தப் பச்சிலையில் போய்ப் பிரண்டு கொள்ளும்… அதனின் விஷங்கள் தணிந்து விடும்.

விஷத்தைத் தணித்தபின் மீண்டும் வந்து பாம்பைச் சண்டையிட்டு அது கத்திரித்து விடுகிறது. இதை நேரடியாக என்னிடம் காட்டுகின்றார்.

கீரியும் பாம்பும் சண்டையிடும் போது பக்கத்தில் நின்று தான் நான் (ஞானகுரு) வேடிக்கை பார்க்கின்றேன். இரண்டும் மனிதனைக் கண்டு பயப்படவில்லை.

ஏமாந்து திரும்பி பார்த்தால் அடுத்தது அடித்து விடும் என்ற நிலையில் இந்த முசிடில் தான் இருக்கின்றது.

இதனுடைய எதிர்ப்பு உணர்வுகள் எப்படி இருக்கின்றது…? அந்த மூச்சலைகள் வெளி வரும் போது சூரியனுடைய காந்த சக்தி எப்படிக் கவர்கிறது…?

1.கீரிக்கும் பாம்புக்கும் போர் முறையில் உடலில் விளைந்த உணர்வுகள் இந்த உணர்ச்சிகளை எடுத்து
2.மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்துக்களுடன் இது ஊடுருவி
3.ஒன்றை ஒன்று அஞ்சி ஓடி ஒன்றுடன் மோதி ஒரு சுழல் காற்று போலப் பரவி எடை கூடியது மீண்டும் மண்ணிலே பதிந்து விடுகிறது.
4.அதிலே மின்னல் தாக்கப்படும் பொழுது துடித்து வீரியமாக எழுந்து ஒரு புது விதமான செடியாக உருவாகின்றது
5.செடியாக அது உருவான பின் பாம்பின் அருகில் கொண்டு போய் அதைக் காண்பித்தால் பாம்பு பயந்து விலகிச் சென்று விடுகிறது.

கீரிப்பிள்ளை நஞ்சை முறிக்கும் பச்சிலைக்குச் செல்கின்றது… தப்பி விடுகின்றது ஆனால் அந்தச் செடியைப் பாம்பின் அருகில் வைத்தால் பாம்பு பயப்படுவதில்லை.

எப்படி எல்லாம் கலவை ஏற்பட்டு இந்தச் செடிகள் புதிது புதிதாக உருவாகின்றது என்பதை மலைப்பகுதிகளில் அழைத்துச் சென்று 20 வருடம் குருநாதர் எனக்கு அனுபவத்தைக் கொடுக்கின்றார்.
1.அத்தகைய செடிகள் எப்படி உருவாகின்றது
2.விஷத்தின் தன்மைகள் எப்படி மாறுகின்றது…?
3.ஒன்றை ஒன்று எப்படி மாற்றிக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றார்.

காட்டிற்குள் இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்றார்.

அங்கே பார்த்தால் ஒரு புலி செத்துக் கிடக்கின்றது. உயிர் போனவுடனே புலியினுடைய உடல் அழுகிக் கிடக்கின்றது. புழுக்களாக அரிந்து கொண்டிருக்கின்றது.

அழுகிய அந்தப் புலியின் உடலுக்குப் பக்கத்திலே போய் “உட்காருடா…! என்றார். நாற்றமோ சகிக்க முடியவில்லை.

சாமி… ஒரே நாற்றமாக இருக்கின்றது…! என்று சொன்னேன்.

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! அதனாலே “உட்கார்ந்து பார்…!” என்று சொல்கிறார்.

உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். எத்தனை நாள்…? ஒரு நாளா… இரண்டு நாட்களா…! ஒரு பத்துப் பதினைந்து நாட்கள் உட்கார்ந்து பார்த்தேன்.

பத்துப் பதினைந்து நாட்கள் வேறு எதுவும் சாப்பிடவே முடியவில்லை. இரண்டு பச்சிலையைக் கொடுத்தார். அதை மென்று சாப்பிட்டுக் கொள் என்றார்.

அதையெல்லாம் எனக்கு விபரமாகக் கணக்குச் சொல்ல வேண்டும் என்கிறார். நான் எந்தக் கணக்கைச் சொல்லட்டும்….?

புலியின் உடலில் உள்ள புழுக்கள் அந்த உடல் முழுவதையும் சாப்பிட்டு விடுகின்றது. கடைசியில் எலும்பும் தோலாகவும் தான் இருக்கிறது.

புலி உயிருடன் இருக்கும்போது எத்தனை வகையான உயிரினங்களைக் கொன்றதோ அந்த உணர்வெல்லாம் உடலுக்குள் அணுக்களாக இது புலியாக உருவாகின்றது.

இந்தப் புலியின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் முதலில் ஜீவ அணுக்களாக இருந்தது. புலியின் உயிர் வெளியே சென்ற பின் ஜீவஅணுக்கள் உயிரணுக்களாக மாறுகின்றது. புழுக்களாக ஆகின்றது.

புழுக்களாக இருந்ததெல்லாம் புலி உடலைத் தின்றவுடன் அடுத்து ஆகாரம் இல்லை என்றால் மடிந்து விடுகின்றது. அந்தப் புழுக்களின் உயிர்களும் வெளி வருகின்றது.

புலி தன் பசிக்காக மாட்டையோ மற்ற எதை எதை அடித்துச் சாப்பிட்டதோ அதன் உடலுக்குள் இந்தப் புழுவின் உயிர்கள் உயிரணுக்களாக விளைகின்றது.

அதாவது உயிரணுக்கள் என்றால் புலியின் உடலில் முதலில் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. பின் உயிரணுக்களாக மாறுகின்றது.

உயிரணுக்களாக மாறியவுடனே மாடு ஆடு மற்ற உயிரினங்களில் பட்டபின் “உண்ணி… ஈ…” போன்ற நிலைகளில் உருவாக்கி அந்த உடலிலுள்ள இரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மை வருகின்றது.

இரத்தத்தை உறிஞ்சி உடல் வளர்த்த அந்தப் புலியின் உணர்வுகள் உயிர் சென்ற பின் அதே அணுக்கள் உயிரணுவாக மாறி மீண்டும் மற்ற உடல்களில் என்னென்ன செய்கின்றது…? என்பதனை உற்றுப் பார்க்கச் சொல்லுகின்றார்.

அதே சமயத்தில் புலி ஒரு உயிரினத்தைக் கடித்துக் குதறும் போது இரத்தங்கள் சிந்துகின்றது. இரத்தங்கள் சிந்தியபின் இரத்தத்திலே மின்னல்கள் தாக்கப்படும் போது இதில் ஜீவக்கருக்கள் உருவாகி அதன் நிலைகள் “அட்டைகளாக…” வளர்கின்றது.

நாம் நடந்து போனால் போதும். அந்த அட்டை தவ்வி நம் உடலிலே அமர்ந்து நம் இரத்தத்தைக் குடிக்கின்றது.

இதைப்போல ஒரு உடலிலிருந்து எத்தனை வகையான நிலைகள் அது உருவாகிறதென்று குருநாதர் காட்டுகின்றார்.

அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிப்படும் அழுகிய ஆவிகள் காற்றிலே போகின்றது. இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்ளுகின்றது. அது அலைகளாக மாறுகின்றது.

அதே சமயத்தில் விஷச் செடியில் இருந்தும் பல மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்தையும் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிப் பரமாத்வில் சுற்றிக் கொண்டிருக்கின்றது.

அழுகிய புலியின் உணர்வைக் கவர்ந்த அலைகளைக் கண்ட பின் மற்ற செடி கொடிகளின் சத்துக்களை கவர்ந்து கொண்ட அலைகள் ஓடுகின்றது.

இவ்வாறு அது ஓடும் பாதையில் இன்னொரு பக்கம் பிற விஷச் செடியில் இருந்து உமிழ்த்தும் உணர்வுகள் மோதிய பின் “கிறு..கிறு..” என்று சுற்றுகின்றது.

அது சுற்றி ஒன்றோடொன்று மோதி அந்த மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மூன்றும் இரண்டறக் கலந்த உணர்வுகள் பூமியில் படர்கின்றது.
1.புலி ரிக். அழுகிய புலி உடலில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை. இந்த நாற்றம் நமக்கு வருகின்றது.
2.செடி கொடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை.
3.ஒரு விஷச் செடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணங்கள் சாம இசை.
4.இது மூன்றும் ஒன்றுக்கொன்று மோதல் ஏற்பட்ட பின் மோதலில் ஒன்றாகக் கலக்கப்படும் போது அதர்வண.
5.ஒன்றோடொன்று மோதி அதன் உணர்வுகள் ஒன்றாக இணைந்த பின் யஜூர். ஒரு வித்தாகி விடுகின்றது.

பல விதமான உணர்வுகளைச் சேர்த்து நாம் ஒரு பலகாரத்தை வேக வைத்தால் அது ஒன்றாகி ஒரு சுவையாக மாறுகின்றது.

இதைப் போல பல உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அது ஒன்றாக அமைகின்றது. மோதியதால் ஏற்படும் ஆவியாக மேலே செல்லுகின்றது.

இரண்டறக் கலந்தது தரையிலே படுகின்றது. தரையிலே பட்டபின் எதிர் நிலையான நட்சத்திரங்களிலிருந்து துகள்கள் நம் பூமிக்குள் மின்னலாகத் தாக்கப்படும் போது
1.இதில் கலந்த நிலைக்கு எதிர் நிலையாக வரும் போது
2.அதிலே தாக்கப்பட்டு இழுக்கும் சக்தியாக வருகின்றது
3.அப்போது அது செடியாக வளர்கின்றது.
4.அவ்வாறு அது செடியாக வெளியில் வரையிலும் என்னைக் குருநாதர் அங்கே உட்கார வைத்துக்கொண்டு இருந்தார்.

இந்த இயற்கை எப்படி மாறுபடுகின்றது…? என்பதனைத் தெரியச் செய்கின்றார். பின் அந்தச் செடி முளைத்து வந்தது. அந்தச் செடியின் அருகில் அடையாளம் தெரிவதற்காகக் கோடு போடச் சொல்கின்றார்.

அந்த இடத்தை விட்டுப் போய் விட்டு ஒரு இரண்டு மாதம் கழித்து வருகிறோம். அந்தச் செடி கொடியாக வளர்ந்திருக்கிறது. கையில் நீ் கத்தியை எடுத்துக் கொண்டு போடா என்றார். கத்தி எதற்கு சாமி…? என்றேன். கத்தியைக் கொண்டு போ என்றார்.

அங்கே மரம் அருகில் அந்தக் கொடி விளைந்திருக்கிறது. அத்ற்கு எதிரிலே உட்கார் என்றார். நான் உட்கார்ந்தவுடனே என்னை நோக்கி அந்தக் கொடி நைசாக நகர்ந்து இருக்கின்றது.

அந்தக் கொடி நகர்ந்து வந்து உன்னைத் தொட்டுவிட்டது என்றால் எப்படிக் கரண்ட் பாய்கின்றதோ அதே மாதிரி பாய்ந்து புத்தியில்லாமல் போய்விடும். உன் இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்றார் குருநாதர்.

கொடி உன்னைத் தொடும் பொழுது “சுரீர்…” என்று வரும். உடனே கத்தியால் அதை “வெட்டுடா…” என்றார்.

நான்கைந்து தரம் வெட்டிய பிற்பாடு அப்புறமும் நீண்டு வருகிறது. வெட்டியபின் அது எட்டாத நிலை ஆகும் போது அடுத்து ஒன்றும் செய்யவில்லை.

பார்த்தயா…! அன்றைக்கு அந்தப் புலி எந்தெந்த உயிரினங்களின் இரத்தத்தை உறிஞ்சியதோ அதனின் உணர்வு செடியுடன் கலந்தது. கொடியாக விளைந்தது.

இப்பொழுது மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை அந்தக் கொடிக்கு வந்துவிட்டது என்று காட்டுகிறார்.

1.நம் மனித வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் எடுத்துக் கொண்ட பின்
2.உடலில் விஷமான அணுக்கள் பெருகியபின் நல்ல அணுக்களைக் கொன்றுவிடும்.
3.விஷமான அந்த அணுக்கள் பெருகி விட்டால் அதைத்தான் கேன்சர் நோய் என்று சொல்கிறோம்
4.மற்ற அணுக்களுக்குள் இருக்கும் இயக்கச் சக்தியையும் அது கவர்ந்து கொள்ளும்.
5.உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்காது. இந்தக் கேன்சர் என்ற நிலை வந்துவிட்டால் எதுவுமே செயல்படுத்த முடியாது போய்விடும்.

அதைக் கொல்ல வேண்டும் என்றால் இதற்கு மருந்து இல்லை.
ஏனெனில் அதைக் கொல்ல வேண்டும் என்றால் வீரியத் தன்மை மருந்தை ஊட்ட வேண்டும்.

வீரியமான மருந்தை ஊட்டினால் நம் உடலிலுள்ள சாந்தமாக இருக்கக்கூடிய அணுக்களெல்லாம் மடிந்து விடும். மருந்து கொடுத்தும் பயன் இல்லை.

கேன்சர் போன்ற நிலைகளுக்கு
1.இந்தக் கொடியை எடுத்து அதில் வேறு சில பச்சிலைகளை இணைத்துப் பக்குவப்படுத்திக் கொடுத்தால்
2.அந்தக் கேன்சர் விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிவிடும்.
3.கேன்சர் நோயை இந்தக் கொடியை வைத்து நீக்கி விடலாம் என்று காட்டுகிறார் குருநாதர்.

காடுகளில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையாக மடிந்த பின் மடிந்த உடலிலிருந்து வரக்கூடிய ஆவிகளும் மற்ற தாவர இனத்தில் ஒன்றோடொன்று மோதும் போதும் புதுப் புது விதமான செடிகள் எப்படி உருவாகின்றது…?

செடிகளைத் தின்று ஒன்று வளர்ந்தாலும் அந்த உயிரினங்களைக் கொன்று வாழ்ந்த இந்த உடல்கள் அது மடிந்து விட்டால் அந்த உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது…?

மீண்டும் ஜீவ அணுக்களாக மாற்றி அது மனிதனுக்கு மருந்தாக உபயோகப்படுத்தும் தன்மை எப்படி வருகின்றது…?

ஏனென்றால் பல உயிரினங்களின் தன்மையானால் இதே மருந்தைச் சேர்க்கப்படும்போது
1.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை அது மாற்றி
2.நம் உடலை எப்படி நலமாக்குகின்றது…? என்பதனைக் குருநாதர் அங்கே காட்டுகின்றார்.

இயற்கையின் உண்மைகள் எப்படியெல்லாம் செயல்படுகின்றது…? இதிலிருந்தெல்லாம் மனிதன் எப்படித் தப்ப வேண்டும்…? என்ற நிலையைக் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்று இவ்வாறு பல உண்மைகளைக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஈசனின் சக்தி

 

ஆடும் ஆட்டத்தைப் பார்த்தாயா…? எல்லா உயிரினங்களின் உடலிலும் இந்நிலை உள்ளதப்பா. “அருள் வருவதும்… மருள் வருவதும்” இதுவேதானப்பா… இந்நிலையே தானப்பா.

இந்நிலையை இன்று உனக்கு உணர்த்திடவே பாட நிலையில் இருந்து செயல் நிலையில் காட்டிட்டேன் பார்த்தாயா…! இந்நிலையில் உள்ள பொழுது ஓங்கார இசையை எழுப்பும் பொழுது பல பல வாசனைகளை… வாசனைப் புகைகளை எழுப்பும் பொழுது அவ் உடலில் உள்ள ஆவிக்கு நாம் ஆகாரம் கொடுத்த நிலை வருகின்றது.

இந்நிலை நீடித்தால்… தான் பார்த்த நிலையை தன் எண்ணத்தில் மறைத்து வைத்திருக்கும் நிலையை எல்லாமே செப்பிடுவார்கள்… இந்நிலை வந்தவர்கள்.

இவர்களின் நிலையை வைத்துத் தான்
1.பல பல சாமியார்கள் எல்லாம் ஆண்டவனின் பெயரை வைத்து மனிதர்களை மயக்குகின்றார்கள்.
2.இன்று பார்த்தாயல்லவா மறைந்த உண்மை வெளி வந்ததை.
3.இவ்வாவிகள் தான் வருகின்றது அருள் என்ற வடிவினிலே…
4.இனி சிறிது நேரம் இருந்திருந்தால் அவ்ருளின் தன்மை உன் மகளுக்கும் வந்திருக்கும்.

ஆண்டவன் என்பது யார் என்று புரிந்ததா…? இப்பொழுது எல்லா உடல்களிலும் இவ்வணுவின் வேலை உள்ளது.
1.பக்தி கொண்ட ஒருவரின் “ஆவி”
2.அக்குழந்தையின் மேல் உள்ளதால் “ஆண்டவன்” என்று செப்புகிறது.

இந்நிலையில் வந்த சாமியார் ஒருவர் “நானே கடவுள்… நானே தெய்வம்” என்கின்றான். அவ்விடம் உள்ள கருவின் வேலை இருக்கும் வரை தான் அவன் வேலையெல்லாம்.

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனை கடவுள்…” என்று சொல்லுகின்றான்.
1.ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது.
2.அக்கருவையே அவன் ஆண்டவன் என்கிறான்.

நேற்று இங்கு நடந்த நிலைதான் அவன் நிலையும். இந்நிலையை நீடிக்க வைத்துப் பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்கள் கடந்த கால நிலையும் கண்டிடலாம்.

இந்நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள்… கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது… எல்லாமே. இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவையெல்லாம்.

மை போட்டுக் கேட்கின்றார்கள் ஆண்டவனிடம் பூ கேட்கின்றார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? “இவ்வாவிகளின் வேலைதான் அது எல்லாம்…” அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாம் இந்நிலைக்கு வருகின்றது.

இவ் எல்லா ஆவிகளுமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில். ஆயிரத்தில் கோடியில் ஒன்றுதான் உடனே மறு ஜென்மம் எடுக்கின்றது.

அவசரத்தில் எடுக்கும் மறு ஜென்மத்தினால் அங்கயீனமுடன் குறையாகப் பிறப்பது… குறைப் பிரசவம்… குறையுடன் பிறக்கும் குழந்தைகள்… எல்லாமே இவைகளின் நிலை எல்லாம் அதுதான்.
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை ஆவி உலகில் இருந்தும்
2.அறிந்திட அவகாசம் இல்லாமல் வந்து பிறக்கின்றது குறையுடன்.

நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத் தான் பிறக்கின்றது.

முதலிலேயே செப்பி உள்ளேன் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி… “எந்நிலையில் எப்படிப் பிறக்கின்றன…?” என்று. குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகத்தில் உள்ள வரை அவ்வாவிகளுக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.

ஆவி உலகில் உள்ள பொழுது “எந்நிலையில் பிறக்கலாம்…?” என்று தான் தெரியும்.
1.பிறந்த பின் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்திடாது.
2.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகின்றது.
3.இந்நிலையில் தான் ஈசனின் சக்தி விளையாடுகிறது.
4.பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை.

இன்று பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகின்றான் மனிதன்.

இவ் ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அச்சக்தியின் நிலை தெரிந்திருந்தால்… இக்கலியில் வந்த மனிதர்கள் அதையும் தன் வழிக்கு உண்ணக் காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் ரிஷிகள் நிலையில் தன்னையே… தன் உடலையே அச்சத்தின் அருளுக்கு அடிபணிய வைத்து
1.அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…?
2.எந்நிலையில் சக்தி அருளைப் பெற்றிடலாம்…?
3.எந்நிலையில் அச்சக்தியின் அருளைப் பெற்று இம்மக்களுக்கு அருளிடலாம்…? என்று செயல்படுகிறார்கள்.

நம் போகரின் நிலை எல்லாம் அப்படி வந்தது தானப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் கூட அடுத்தவர்கள் நம் மீது ஏதாவது குறையாகச் சொல்லி விட்டால் அவர்கள் உணர்வுக்கொப்ப அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.

நமக்குள் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… செய்தானே…!” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் எதிரியை வளர்த்துக் கொண்டே இருக்கின்றது. அப்பொழுது
1.நம் நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை
2.நம் நல்ல குணங்களை ஒடுக்க நாமே காரணமாகின்றோம்

அந்த நல்லதைக் காப்பதற்காகச் சாதாரண நிலைகளில் கொடுக்கப்பட்டது தான் விநாயகர் தத்துவம். அன்று மெய் ஞானியான அகஸ்தியனால் இது உருவாக்கப்பட்டது.

அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்தான்.
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அவனின் ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
2.எத்தகைய தீமைகளையும் அகற்ற முடியும்… ஒடுக்க முடியும்… அதைப் பழக்கப்படுத்த வேண்டும்.

உதாரணமாக ஒருவர் நம்மைத் திட்டி விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை உற்றுப் பார்த்த பின் நமது உயிர் அதை இழுத்து அந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றது.

அடுத்து உடலுக்குள் அதை அணுவாகவும் இதே உயிர் தான் உருவாக்குகின்றது. எவ்வளவு வேதனைப்படும்படி அவன் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது.

இதைத்தான் உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. விஷ்ணுவுக்குப் பிறந்த குழந்தை (பிரம்மா) அந்த விஷத்தின் தன்மையாக உருவாகி விடுகின்றது.

ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான்… அது மீண்டும் தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… அந்த ஞானமாக வேதனையாக இயக்கும்.

எந்த வேதனையை உருவாக்கும்படி முதலிலே சொன்னானோ அதனால் உருவான அந்த உணர்வுகள் பிரம்மமாகத் தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது.

1.வேதனைப்படச் செய்த அந்த அணு மீண்டும் அதே வேதனையை இங்கே உருவாக்குகிறது.
2.அந்த ஞானத்தின் வழிகளிலேயே அது செயல்படும் என்று
3.இவ்வளவு கருத்துடன் அந்த இயற்கையின் நிலைகளை நாம் கண்டுணர இதைக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.

ஒரு விஷமான வித்து காற்றில் இருந்து தன் விஷமான உணர்வின் சத்தை நுகர்ந்து தான் அது விஷச் செடியாக வளர்கின்றது. அதே போல் தான்
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படச் செய்தானோ
2.அவனின்று வரும் இந்த உணர்வை அந்த அணு நமக்குள் அது கிளர்ந்து… சுவாசித்து
3.அதனின் மலத்தை உடலிலே இடும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்த வேதனை தாங்காது
4.அதனுடய செயலைக் குறைக்கச் செய்கின்றது..
5.நம் உடலில் அது நோயாக வருகின்றது

ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்…!

நம்மை வேதனைப்படச் செய்தான்… அவனைச் சும்மா விடுவேனா…? என்று கோபத்துடன் எண்ணும் போது இந்த விஷத் தன்மையான அணுக்கள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது.

மீண்டும் அவர்களை எண்ண… எண்ண… நமக்குள் நோயாகவே விளைகின்றது… எதிரியாகின்றது…!
1.எதிரிக்கு நாம் இடம் கொடுத்து விடுகிறோம்…
2.நம்மை நாம் மறந்து விட்டோம்…! என்ற நிலைதான் இங்கே வருகின்றது.

வெளியிலிருக்கும் எதிரிகளைக் காட்டிலும் நமக்குள் உருவாகும் எதிரிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் இதை எல்லாம் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார். அவர் கொடுத்த அதே வழியில் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளும் அந்த ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆகவே அந்த மெய் ஞானியின் உணர்வைப் பெற நாம் தியானித்தல் வேண்டும்.

புலனறிவின் இயக்கங்கள் சாதாரணமானதல்ல…!

 

உதாரணமாக… “இந்த இடத்திற்குச் சென்றால் ஆபத்து” என்று சொன்னார்கள் என்றால் அதை எப்படியாவது “கொஞ்சம் பார்ப்போமே…” என்று நம்மைப் பார்க்கும்படி செய்கிறது.

சிறுவர்கள் அங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் பெரியவர்களாக இருக்கக்கூடிய நாம் “அது என்ன…? ஏது…?” என்று வேடிக்கை பார்த்து நுகர்ந்து அதற்குப் பின் தான் ஐய்யய்யோ…! என்று விலகிச் செல்கிறோம்.

சண்டையிடுகின்றார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் வருகின்றது.
1.சரி அது நடக்கிறது…
2.நாம் ஏன் அங்கே செல்ல வேண்டும்…? என்று யாரும் நினைப்பதில்லை.

ரோட்டிலே செல்கின்றோம் ஒரு விபத்து நடக்கின்றது அடிபட்டுக் கீழே விழுகின்றார்கள் உடல்கள் நசுங்கிக் கிடக்கின்றது…! அங்கே என்ன ஒரே கூட்டமாக இருக்கின்றது…? என்று கேட்கின்றோம்.

விபத்தாகி விட்டது அடிபட்டுக் கிடக்கின்றார்கள் என்று சொன்னால்… “அது என்ன…?” என்று தான் பார்த்துவிட்டு வந்து விடுவோமே என்று செல்வோம்.

பய உணர்வுடன் உற்றுப் பார்ப்பார்கள்.
1.அந்த உடல் எப்படி நசுங்கியதோ அந்த உணர்வு இங்கே வந்து விடுகின்றது
2.இரவு தூக்கத்தில் பார்த்தால் எங்கேயோ வண்டியில் போகிற மாதிரி இருக்கிறது… என்னை நசுக்கி அமுக்குகின்ற மாதிரி இருக்கின்றது.
3.அன்றைக்குப் பின் என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றெல்லாம் புலம்புவார்கள்

நான்கு நாளைக்கு இப்படி இருக்கின்றது இது எல்லாம் தெரிகிறது என்றாலும் இப்படித்தான் நம்மை இயக்குகின்றது.

அதே உணர்வு அதிகமான பின் அந்த பயத்தினால் மனிதன் சிந்தனை இழந்தவர்களாக ஆகிவிடுகின்றார்கள் ஏனென்றால் “புலனறிவால் அறிந்தும் கூட… பலவீனமான நிலைகள் இங்கே இயக்கப்படுகிறது….”

அடிபட்டான் என்ற உணர்வை நுகர்ந்தால்
1.அது நமக்குத் தீங்கு என்று நினைத்தாலும் அதை விடுவதில்லை
2.அதை நுகர்ந்து பார்க்கும்படித் தான் செய்கின்றது.

“நம்மை அறியாமலே” இந்த உணர்வுகள் அதை நுகர்ந்து பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளக்கூடிய விருப்பம் தான் வருகின்றது. தெரிந்தாலும் அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் தான் தெரிய முடிகின்றது.

அவன் பயத்தால் எப்படித் துடித்தானோ நுகர்ந்த உணர்வுகள் பய உணர்ச்சிகளை நம் இரத்தத்தில் கலந்து மற்ற உடல் அணுக்களுக்குள் சேர்த்த பின் அந்த மனிதன் எப்படிப் பதட்டம் அடைந்தானோ அதுவும் நம் நல்ல அணுக்களில் கலந்து கண்ட பின் பய உணர்ச்சிகள் ஆகிவிடுகின்றது

மீண்டும் அந்தப் பய அலைகள் வந்தால்
1.யாராவது ஒருவர் சும்மா படுத்து இருந்தாலும் கூட
2.அதைப் பார்த்தால் ஒரு பிரேதமோ என்று பயம் வரும் செத்துப் போய் விட்டானா…? என்ற பயம் வரும்.

வீட்டிற்குள்ளே இருந்தாலும் கூட பார்த்தால் அந்த நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் படுத்திருந்தாலும் இந்த நினைவுகள் வரும்.

ஆக நாம் எதை அறிந்து கொண்டோம்…?

1.இந்த உடலில் நாம் எதைப் பதிவு செய்தோமோ
2.இந்தப் புலனறிவு தான் நம்மை இப்படிச் செயல்படுத்துகின்றது.

இதையெல்லாம் நாம் உடனுக்குடன் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும் மகரிஷிகள் உணர்வை எடுத்து வலுவாக்கி ஆத்ம சுத்தி செய்து தடுத்துப் பழகுதல் வேண்டும்.

உலக நடப்புகளைத் தெரிய வேண்டும் என்று விரும்பினாலும் அதை நாம் உடனுக்குடன் அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு தூய்மைப்படுத்தினால் தான்
1.நம்முடைய நல்ல குணங்களும் காக்கப்படும்
2.நம்முடைய உடல் உறுப்புகளும் காக்கப்படும்
3.நம்முடைய மனதும் அமைதிப்படும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு… தெளிந்த நிலைகள் கொண்டு இனி வழி நடப்பதே நல்லது.

“மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்

 

ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?

இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர ஒரு சக்தி தேவை.

அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.

தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால்
1.மீண்டும் பயிர் செய்ய விதை நெல் தேவைப்படுகின்றது.
2.அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும்.
3.இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு
4.அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”

இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.

இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.

தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் “பல மகான்கள்” தோன்றிய நிலை எல்லாம்.

அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து “ஜீவனை வளர்க்க முடியும்…”

சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் “மீண்டும் மனித ஜனனம் தேவை…”

காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.

உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?

ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!

பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.

சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.

அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேண்டாதவரைப் பார்க்கும் பொழுது எதிரி என்ற நிலையில் அவர் செய்வது தப்பு என்று நினைக்கின்றோம்… அடுத்தவரிடத்திலும் அதைத் தான் சொல்வோம்.

அவன் நல்லதையே செய்தாலும் கூட…
1.அவனை எந்தக் குறிக்கோளுடன் நாம் முதலில் பதிவு செய்திருக்கின்றோமோ
2.பார்த்தவுடனே ஊரை “ஏமாற்றுவதற்கு என்னவோ… அதைச் செய்கின்றான்…” என்று சொல்கிறோம்.

அவன் நல்லதைச் செய்வான். அவன் செய்வதை நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை. அவனைப் பற்றிய தவறான உணர்வுகளையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அதே சமயம் நமக்கு வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தப்பு செய்து விட்டால்… அது எப்படியோ தெரியாமல் நடந்து விட்டது… “அவர் தப்பே செய்ய மாட்டார்…!” என்று தான் நாம் சொல்கிறோம்.
1.இங்கே பாசத்தால் தவறை மறைக்கின்றோம்… தப்பை வளர்க்கின்றோம்
2.அங்கே வெறுப்பால் நியாயத்தையே மறைக்கின்றோம்… ஆனால் தவறை வளர்க்கின்றோம்

இதைப் போன்று நம்மை அறியாது வரக்கூடிய உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வந்து நமக்குள் இயக்குவதைத் தான் கூனி என்றும் சகுனி என்றும் காவியங்களில் காட்டுகிறார்கள்.

ஒருவர் மீது பற்று இல்லை என்றால் அந்த வெறுப்பின் தன்மை வரும் பொழுது கூனி… பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அது இணைத்து விடுகின்றது.

இவ்வாறு நமக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட…
1.என்ன பெரிதாகச் செய்து விட்டார்…!
2.ஏமாற்றுவதற்குத் தான் இதைச் செய்கிறார்..! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றோம்

இராமாயணத்தில் கூனி என்ன செய்கிறது…?

இராமன் உயர்ந்தவனாக இருந்தாலும் அது பிடிக்காதபடி அவனைப் பகைமையாக ஊட்டுவதற்கு சிற்றன்னையான கைகேயியிடம் அதை உருவாக்குகின்றது.

தசரதன் உன்னுடைய கணவன் தானே… அவனுக்குப் பிறந்த மகன் தானே பரதனும்…! அவனுக்கு ஏன் அந்த அரசில் உரிமை கிடையாது…? என்ற உணர்வை ஊட்டுகிறது.

இராமன் இருந்தால்தான் சாம்ராஜ்யத்தை ஆள முடியும். இங்கிருந்து அவனை அனுப்பி விட்டால் “பரதன் எளிதாக ஆட்சிக்கு வரலாம்…” என்று இந்த ஆசையின் உணர்வுகளைத் தூண்டுகிறது கூனி.

இராமனைப் பிடிக்கவில்லை… அதனால் பகைமையை ஊட்டி அவ்வாறு செயல்படுகிறது. ஏனென்றால்
1.நமக்குள் எதிரியான உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உடலுக்குள் அணுக்களாக விளைந்து விட்டால் அது எதைச் செய்கிறது..?
2.ஆசையினால் குற்றவாளிகளை எப்படி உருவாக்குகின்றது…? என்ற உணர்வைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

காவியங்களில் மகரிஷிகளால் காட்டப்பட்ட மூலக் கருத்துக்களை நாம் உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எளிதில் விடுபட முடியும்.

பகைமைகளை அகற்றி ஒன்றி வாழும் உணர்வை நமக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி என்றும் ஏகாந்தமாக வாழும் வழியைத் தான் காவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டு…! என்றார் குருநாதர்

 

விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்ட நிலையில் இன்று நம் சூரியனே பாழடையும் தன்மையில் இருக்கின்றது அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் தான் வாழுகின்றோம். இதிலே வளர்ந்த மனிதன் அணுகுண்டுகளை நான்கு திசையிலும் செலுத்தினான் என்றால் இந்த சூரியனே அழிந்துவிடலாம்.

மற்ற பிரபஞ்சம் சிதைந்து அதிலிருந்து விலகி வரும் கோள் நம் பிரபஞ்சத்திற்குள் வந்தால்… பூமிக்குள் வந்து தாக்கி விடாதபடி இராக்கெட்டுகளைத் தயார் நிலையில் வைத்து… அணுகுண்டுகளையும் வைத்து… அதன் வீரிய உணர்வு சுக்கு நூறாகத் தெறிக்கச் செய்வதற்காக விஞ்ஞானிகள் வைத்திருந்தார்கள்.

ஆனால் அப்படி வந்த அந்தச் சிதைந்த கோள் வியாழன் கோள் ஈர்ப்பு வட்டத்திற்குள் இணைந்ததால் அங்கே விழுந்து… அதனின் சுழற்சியில் கவரப்பட்டு… வெப்பத்தால் கரைந்து ஆவிகளாக மாறி… அந்த ஆவியின் தன்மை உறைபனியாக மாற்றி வைத்துக் கொண்டது.

பூமியை விடப் பெரிதான கோள் தான் வந்தது நம் பூமியிலே அது விழுந்தால் எந்தப் பகுதியில் விழுகின்றதோ மக்கள் தங்கள் அழிக்கப்படுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து விட்டால் பெரிய கோளாக மாறும். இரண்டு மடங்கு ஆகிவிட்டால் சுழற்சியின் வேகம் கூடி ஈர்ப்பின் தன்மை அதிகரித்துவிடும்.

அதிகரித்தால் வியாழன் கோள் போலவே நம் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் மடியும் தன்மை உருவாகிவிடும்.
1.இப்படி பிரபஞ்சங்கள் பலவாறு பல வகைகளிலும் மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
2.நாம் எதைச் செயல்படுத்த வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதையெல்லாம் அடித்து நொறுக்கும் சக்தி பெற்றிருந்தாலும் மக்களைக் காக்கும் நிலை இல்லை.

அன்று ஒரு காலம் அகஸ்தியன் தன்னுடைய பார்வையால் தனது உணர்வின் சக்தி கொண்டு…
1.பூமி நீளமாக வளர்ந்து கொண்டே செல்வதைக் குறைப்பதற்காகத் திசை திருப்பி
2.வட துருவத்தில் உருப் பெற்ற பனிப்பாறைகள் தென் துருவத்தின் வெப்பத்தால் கரைந்து கடல் நீராகப் பெருகச் செய்து சமப்படுத்தினான்
3.இன்று வரை சீராக ஓடிக் கொண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞானத்தின் நிலையில் பூமியிலே ஒரு பக்கம் அணுகுண்டுகளை வெடித்தார்கள் என்றால் சூரியனுடைய பிடிப்பு… அந்தக் காந்த அலைகளைத் தடுத்து நிறுத்தப்படும் பொழுது ஒரு பக்கம் ஈர்க்கும் தன்மை அதிகரித்துப் பூமி குடை சாயும் நிலை வரும்.

ஆக காலம் கடந்த நிலைகள் கொண்டு
1.இப்போதாவது இந்த உண்மைகளை அறிந்து கொண்டோம்… தவறவிட்டால் தப்பும் மார்க்கம் ஏது…?
2.இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இத்தகைய உண்மைகளை எல்லாம் அறிவதற்காக வேண்டிக் காடு மலைகளை எல்லாம் குருநாதர் எம்மை (ஞானகுரு) அலைய வைத்தார். பல உணர்வுகளைப் பதிவாக்கினார்.

குருநாதர் காட்டிய அந்தப் பதிவின் நிலைகள் அனைத்தும் அறிந்து கொண்ட பின் நீங்களும் அதைப் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம். குருநாதர் சொன்னது
1.மறைந்த நிலையினை மக்களுக்கு மீண்டும் எடுத்துக்காட்டு.
2.இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும்
3.மக்களின் உணர்வுகள் உனக்குள் உண்டு அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை நீ எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற உணர்வு வருகிறது.
4.நீயும் ஒளியாக ஆகின்றாய் கேட்பவர் உணர்வுகளிலும் ஒளியாகின்றது
5.பிறவி என்ற நிலையை அகற்றுகின்றாய் அருள் ஒளி என்ற நிலையில் வாழ்கின்றாய்.
6.உன்னுடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமைகின்றது.
7.பேரருளை உனக்குள் வளர்த்துவிடு… எல்லோரையும் பேரின்பம் பெறச் செய்.
8.அதுவே உனக்குப் பேரானந்த நிலையில் ஏகாந்த நிலை பெற உனக்கு உதவும் என்று கூறினார்.

அதன் வழி தான் உங்களுக்குள் இருளை அகற்றும் அருள் ஒளியைப் பாய்ச்சி… உங்கள் நினைவு கொண்டு மாற்றிக் கொள்ளும் சக்தியாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

அருள் ஒளியை நீங்கள் பெற்று இருளை அகற்றிடும் ஞானிகளாக நீங்கள் வளர வேண்டும்… விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து அனைவரையும் மீட்டிட வேண்டும்.

ஜீவனுள்ள கனி “எலுமிச்சங்கனி”

 

1.ஈர்க்கும் கனி…
2.ஈசனின் சக்தியையே ஈர்க்கும் கனி…
3.ஈசனின் கனி எலுமிச்சங்கனி.

இக்கனியின் தன்மையை வைத்துப் பூஜைக்கும் உணவிற்கும் உபயோகப்படுத்துகிறார்கள். நற்காரியங்களுக்கு இக்கனியைத் தருகின்றார்கள்.

பல வழிச் சாமியார்களும் இக்கனியைப் பூஜை செய்து இக்கனியில் மந்திரித்து மக்களுக்கு அளிக்கின்றார்கள். இக்கனியின் தன்மை என்ன…?

இவ் ஈசனின் எலுமிச்சங்கனியின் தன்மை “பெரும் ஈர்க்கும் சக்தி உள்ள கனியப்பா…” இக்கனியைக் கையில் வைத்து நீ சில நிலைகளை நினைக்கும்போது உன் சுவாச நிலையைக் கனி ஈர்க்கிறது.

அந்நிலையில் அக்கனியை நீ முகர்ந்திட்டால் அக்கனியின் மணத்தை வைத்து உன் நிலை என்ன…? என்பதைக் கனியின் மணத்திலிருந்து உன் மன நிலையை நீ அறிந்திடலாம்.

இவ் ஈசனின் கனியைக் கையில் ஏந்தி
1.உன் மன நிலையைச் சந்தோசமாக்கி வேண்டிக் கொண்டால் நீ நினைக்கும் எந்தக் காரியத்தையும் அக்கனி ஈர்க்கிறது.
2.காரியம் முடியும் வரை தன் சக்தியின் அருளை உனக்கு அருள்கின்றது.

ஒரு எலுமிச்சங்கனியை உன் இல்லத்திற்கு வாங்கி வந்து உன் கையில் வைத்து அவ்வாண்டவனை வணங்கி அக்கனிக்குக் கற்பூர ஆராதனை காட்டி… அந்நிலையில் ஒரு காரியத்தை எண்ணிக் கொண்டு நீ வணங்கிடும் தெய்வ நிலையில் உள்ளவர்களை அழைத்திட்டால்… அந்நிலைக்கு அவர்கள் வருகின்றார்கள்.

அவ்வீர்ப்புத்தன்மை அந்தக் கனிக்கு உள்ளது. “காந்தத்தின்” ஈர்ப்பு நிலை போல் அக்கனிக்கும் ஈர்ப்பு நிலை உள்ளது.
பல சாமியார்களைப் பற்றிச் சொன்னேன் அல்லவா…! அவர்கள் நிலையில் எல்லோரும் எலுமிச்சங்கனியை வைத்திருப்பார்கள். அவர்கள் ஜெபத்திற்கும் அக்கருவித்து வேலைக்கும் இந்த எலுமிச்சங்ககனியைத்தான் தன் வசத்திற்கு வைத்துக் கொள்கின்றார்கள். இக்கனியின் தன்மையைப் பற்றி பல பல செப்பிடலாம்.

இக்கனி ஈர்க்கும் நிலையில் தன்னுள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொள்கின்றது.
1.இக்கனிக்குச் சுவாச நிலை உள்ளது
2.இக்கனியைக் கையில் வைத்தால் இவ்வுலக சுற்றலையே அறிந்திடலாம்.

இக்கனியை வீட்டின் முகப்பில் கட்டுவது இக்கனியைக் காண்பவர்கள் எண்ணத்தைத் தன்னுள் ஈர்க்கிறது இக்கனி. அவர்கள் எண்ணம் நம்மை வந்து தாக்குவதில்லை. புரிகிறதா…?

கனியின் தன்மையிலேயே அவர்கள் எண்ணம் அந்த இடத்தில் அடிபடுகிறது. நம்மை வந்து அது அண்டுவதில்லை.

திருஷ்டி என்ற பெயரில் நீ கட்டுகின்றாய்… என்ன என்று புரியாமல்…! ஏன் மற்ற கனிகளை அந்நிலைக்குக் கட்டக்கூடாதா…? இக்கனிதான் சக்திக்கனி. இதனுடைய நிலை எக்கனிக்கும் இல்லை இவ்வுலகம் முழுவதுமே.

இக்கனியை வைத்துதான் பிழைக்கின்றார்கள் பல பல சாமியார்கள் எல்லாம் புரிந்ததா…?

1.இக்கனியின் சாறு எடுத்து மஞ்சளைக் கலந்து புருவத்தின் மத்தியில் இடுவதும் அவ்வீர்ப்பு நிலைக்குத்தான்.
2.நல்ல எண்ணத்துடன் இக்கனியில் செய்த குங்குமத்தை வைத்துக் கொண்டால்
3.தீய துர் ஆவிகள் வந்து அண்டிடாது என்பதெல்லாம் இதன் பொருளே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குருவின் (ஈஸ்வரபட்டர்) அனுபவங்களையும் அவர் எனக்குக் கொடுத்த அனுபவங்களையும் தொடர்ந்து இந்த உபதேச வாயிலாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி… நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் அது எனக்குள் நல்லதாகிறது.

ஆகவே… நமக்குள் உள்ள தீமைகள் போக வேண்டும் என்றால் யார் நமக்குத் தீமை செய்தார்களோ… “அவர்களுக்கு நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் வர வேண்டும்…” என்று சொன்னால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராது.

எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். என்று சொன்னோம் என்றால் அவர்களைப் பற்றி வெறுப்பான உணர்வுகள் நம் உடலுக்குள் வளர்வதில்லை.

1.ஆனால் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சும்மா சொன்னால் அந்தக் கெட்டது தான் நல்லதாகும்.
2.அவர் செய்யக்கூடிய கெட்டதற்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகும்.

ஆகையினால்… நல்லது செய்யக் கூடிய எண்ணங்கள் அவருக்குள் வர வேண்டும்… எல்லோருக்கும் பண்பும் பரிவும் காட்டக்கூடிய அருள் ஞானம் அவருக்குள் வர வேண்டும் என்று சொன்னால் அந்தக் கெட்டதை வளர விடுவதில்லை. ஆக அதை வெறுமனே சொல்ல முடியாது.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நம் உடலில் அது படர வேண்டும் என்று இதைக் கலந்து
3.நம் எண்ணங்களுக்கு நல்ல வலு கொடுக்க வேண்டும்.

அந்த வலுவின் துணை கொண்டு அந்த அருள் உணர்வுகளை மற்றவருக்குப் பாய்ச்ச வேண்டும். இப்படிச் செய்தால் குடும்பத்தில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் மாற்றி விடலாம்.

திடீரென்று எதிர்பாராது விபத்துக்களோ மற்றதுகளோ உற்றுப் பார்த்தால்… “அடப் பாவமே… இப்படி ஆகிவிட்டதே…!” என்று எண்ணக்கூடாது.

உடனே ஈஸ்வரா… என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று நமக்குள் இந்த வலுவைக் கூட்ட வேண்டும்.

விபத்தில் ஆன்மா பிரிந்திருந்தால் அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அவர் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை உந்தித் தள்ளி அங்கே விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.

உடலில் அடிபட்டிருந்தால் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று பூரண குணமாகி அவர்கள் சீக்கிரம் எழுந்து நடக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் இப்படித் தான் நினைக்க வேண்டும்.

பொதுவாக நம் செயல்கள் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் போகிறது.
1.ஆனால் மேலே சொன்னபடி எண்ணாமல் அவர்களின் வேதனையை எடுத்தால்
2.கிடு கிடு… என்று உடலில் நமக்கு நடுக்கமாகும்.
3.நம் நல்ல குணங்கள் செயல் இழந்து… அவர்கள் அடிபட்ட உணர்வுகள் இரண்யனாகி அதைக் கொல்லும்.

அதனால் தான் அத்தகைய நஞ்சான உணர்வுகளுக்கு இரண்யன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று தான் அதை எல்லாம் காவியங்களாகப் படைத்தனர். ஏனென்றால் இது இயற்கை.

அதை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி இப்படிக் கருத்தினைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்கள் ஞானிகள்.

அந்த இரண்யனைப் பிளக்க வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற பயிற்சி கொடுக்கின்றோம். அதை எடுத்து உங்கள் நல்ல குணங்களைக் காத்து மற்றவருக்கும் அதே நல் உணர்வை ஊட்ட முடியும்.

மனித வாழ்க்கையில் செல்வம் நம்மைக் காக்காது… “அருள் செல்வமே நம்மைக் காக்கும்”

 

கொசுக்களாகி மனிதனின் இரத்தத்தைக் குடித்துக் கருமுட்டைகளாகி மனிதனாகப் பிறவிக்கு வந்தால் அந்தக் குழந்தைகளின் உணர்வுகளைப் பார்த்தோம் என்றால் மிகவும் மோசமாக இருக்கும்.

இப்படி எத்தனையோ வகையான உயிரணுக்களின் தோற்றத்திலிருந்து சேர்த்துக் கொண்ட நிலையில் இருந்து உரு மாறிக்கொண்டே இருக்கின்றது.

பன்றியாக இருந்து நஞ்சினை நீக்கி மனிதனாக உருவாக்கிய பின்
1.நஞ்சை நீக்கும் சக்தி பெற்ற நிலையில்
2.இந்த மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை துடைக்கத் தவறினால்
3.மீண்டும் பிறவிக் கடனில் தான் உழல்வோம்.

இன்று மனிதனாக இருக்கின்றோம் சமாளிக்கின்றோம்… செல்வத்தையும் தேடி வைத்திருக்கின்றோம். இருந்தாலும் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இலட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்தால் உடனே இதயத்தை மாற்றிக் கொடுத்து விடுகின்றார்கள் சிறிது காலத்திற்கு வாழும்படி செய்கின்றார்கள். பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்…?

என்னுடைய (ஞானகுரு) பற்கள் விழுந்துவிட்டது. பல் செட்டைக் கட்டி நிஜப்பல் இருக்கின்ற மாதிரி நான் சாப்பிடுகின்றேன்… விஞ்ஞான அறிவு கொண்டு செய்து கொடுத்து விடுகின்றார்கள்.

பல் இல்லாதவர்கள் சரியாக மென்று சாப்பிடவில்லை என்றால் சத்தை சரி வர நல்ல இரத்தமாக மாற்ற முடியாது. அதனால் உடல் பலவீனம் அடைந்து விடும்.

ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்த உபாயங்ககளைக் கண்டுபிடித்துக் கொண்டு வருகின்றார்கள். ஆனால்
1.இப்போது இந்த மெய்ஞான அறிவைத் தெரிந்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறத் தவறினால்
2.வரும் தீமைகளை அதை வைத்துத் துடைக்கத் தவறினால் நோயாகி
3.மீண்டும் கீழான சரீரங்களுக்குத் தான் செல்ல வேண்டி வரும்.

அதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் அடிக்கடி தியானப் பயிற்சியை உங்களுக்குப் பல வகைகளிலும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

பௌர்ணமி தியானங்களை அமைத்து அந்தத் தியானத்தின் வலுக் கொண்டு குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சூட்சும சரீரத்தைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் போது உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நாம் தியானித்த உணர்வுகள் அங்கே அதற்குள் தொக்கி நிற்கின்றது
2.அதை வைத்து அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

அதே சமயத்தில் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோரும் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது அதிலே விளைந்த உணர்வுகள் எளிதில் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றார்கள்… வரக்கூடிய நோயிலிருந்து விடுபடவும் முடிகின்றது… வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. எப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணையும் பருவம் பெறுகின்றனர்.

விஞ்ஞானிகள் இன்றைக்கு எத்தனையோ புதுப்புது உயிரணுக்களை உருவாக்குகின்றார்கள் உடல்களை மாற்றுகின்றார்கள்.

ஆனால் இறந்த பின் தன் உயிரான்மாவைப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய முடியுமா…? என்றால் அது முடிவதில்லை. கண்டுபிடித்த உணர்வின் தன்மை கொண்டு தன் சீடனுக்குக் கற்பித்திருந்தால் இறந்த பின் சீடனின் உடலுக்குள் தான் போக முடியும். தான் கற்ற ஞானத்தை வேண்டுமென்றால் அவனுக்குப் போதிக்கலாம்.

ஆனால் சந்தர்ப்பத்தில் வேதனையும் துன்பங்களும் வந்தால் ஞானிகள் காட்டிய முறைப்படி காலை துருவ தியானத்தினை எடுத்துக் கொண்ட பின்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தூய்மைப்படுத்திக் கொண்டு
2.நோயற்றவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த உணர்வைப் பதிவு செய்து
3.நோய் நீங்கி நீங்கள் நன்றாக வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கும் நம் வாக்கு நல்லதாகின்றது
4.நமக்குள்ளும் தீமை புகாது தடுத்துக் கொள்கின்றோம்.

இப்பொழுது எதன் மீது அதிகமாகப் பற்று கொள்கின்றோம்…? நோயை நீக்கும் அருள் ஞானிகள் உணர்வைப் பற்று கொள்கின்றோம். நோயின் உணர்வைப் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.

பற்று… பற்றற்று இரு…!

ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதன் மீது நாம் பற்று கொள்ளலாகாது. அதைப் பற்றற்றதாக ஆக்க வேண்டும் என்றால் அடுத்த நிமிடமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்த உணர்வினை நமக்குள் எடுத்து அதைப் பற்றுடன் பற்றிட வேண்டும்.

வேதனை உணர்வுகள் நம்மைப் பற்றிடாது பற்றற்றதாக மாற்றி… மற்றவர்களுக்கும் தீமையை நீக்கும் உணர்வுகளை இயக்கும் சக்தியாக அவர்களை அதைப் பற்ற வைத்து… பலவீனத்திலிருந்து மீட்டும் சக்தியாகக் கொண்டு வர வேண்டும். இதை வழிப்படுத்தி நாம் நடக்க வேண்டும்.

1.இந்த மனித வாழ்க்கையில் நம்மைச் செல்வம் காக்காது… அருள் செல்வமே நம்மைக் காக்கும்.
2.எத்தனையோ செல்வத்தை வைத்திருப்பவர்கள்… அவர்கள் குடும்பம் எல்லாம் துயரத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுங்கள்.

நல் மூச்சே விட்டிடுங்கள்

 

ஓம் என்னும் பதத்திற்கு ஓ…ம் என்ற ஓங்கார இசையில் கலந்திருப்பாய் என்று பாடுகின்றாய். அப்பாடலின் ஆணிவேர் என்னப்பா…?

ஒரு நிமிடம் உன் நிலையில் பகர்கின்றேன்… ஒரு சொல்லில் பகர்ந்திடப்பா…! உதய வழியை அளிக்கத்தான் இந்த நாள் முதல் உன் மனதிற்கு அளிக்கின்றேன்.

உன் வழியில் வந்த எண்ணம் ஒரே எண்ணம் உணர்ந்து விட்டாய் உன் உதயத்திலேயே.

1.தாவரங்களின் உயிர் அவ்வாணி வேரில் உள்ளது… அதன் ஈர்ப்புத் தன்மை சூரிய ஒளி பட்டுக் கீழ் நோக்கி இழுக்கின்றது.
2.மனிதனின் ஆணிவேர் உயிர் சிரசின் முன் பகுதியில் உள்ளது… மனிதனின் சுவாச நிலை சூரிய ஒளி பட்டவுடன் தன்னைத்தானே சுற்றுகின்றது.
3.இவ்வுலகத்தின் ஆணிவேர் அவ்ஓம் என்ற ஓங்கார இசையினிலே சுழல்கின்றது.

உன் உதயத்தில்… உன் ஜெப நிலையில்… அவ்வுலகச் சுழற்சியில் “ஓ…ம்” என்ற ஓங்கார நாதத்தை உணர்ந்திடலாம்.

ஒரு நிமிடம் ஜெப நிலையில் இருந்திட்டால் உன்னைச் சுற்றி உள்ள ஒலிகள் எல்லாம் அடங்கும். ஓ…ம் என்ற ஓங்கார இசையை ஜெப நிலையின் பொருள் நம்மைச் சுற்றியுள்ள ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தை அருளச் செய்யத்தான் இந்த நிலையை உண்டாக்கினேன். வழியமைத்துப் பாடம் புகட்டுகின்றேன்.

ஏட்டுப்படிப்பு மட்டும் தான் ஏற்கின்றாய். செயலில் வரவேண்டுமப்பா. ஓ…ம் என்ற ஒலியின் ஓங்கார இசையில் கலந்திடத்தான் இந்த உண்மைகளை உணர்த்திட்டேன்.
1.ஓ..ம் சக்தி என்ற பாடலை அமைத்திட்டேன்.
2.உருளுகின்ற சக்தியே… உயிரணுவின் சக்தியே… உயர்ந்து நிற்கும் சக்தியே…! பாடலின் பொருளும் பாடத்தின் பொருளும் ஒன்றுதான்.

ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி
சிங்கார இசையினிலும் இருந்திடுவாள் ஓம் சக்தி
சினமெல்லாம் தவிர்த்திடுவாள் ஓம் சக்தி
உலகெல்லாம் ஓங்கி நிற்கும் ஓம் சக்தி
உலகாளும் சக்தியே
உருளுகின்ற சக்தியே
உயர்ந்து நிற்கும் சக்தியே
உயிரணுவின் சக்தியே
உலகாளும் ஈசனின் சக்தியாய்
பூ மழையாகப் பொழிந்திடுவாய் சக்தியே…
பரிபூரணமாக என் மனதில் கலந்திடுவாய் சக்தியே
மனமெல்லாம் மணக்கச் செய்வாய் சக்தியே
ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி.

தியான நிலையில் நினைவெல்லாம் இன்னும் பரிபக்குவ நிலை வர வேண்டும். சுவாச நிலையில் “வாழ்க்கை முறையிலேயே” கலந்து வர வேண்டும் அத்தியான நிலை.

அந்நிலையில் தான் நீ அமரும் தியான நிலையில் இரண்டும் கலந்தால் தான் தியான நிலை கைகூடும்.
1.சுவாச நிலையின் எண்ணம் தான் முதல் படியில் வந்துள்ளது.
2.அடுத்த முதல் படியில் வந்துவிடும் ஓங்கார இசையின் நாதம் உன் செவிக்கு.
3.அத்தியான நிலைக்கு முதல் படி சுவாச நிலை அதைப் புரிந்திட்டாய்.

வரும் முதல் நிலை “ஓங்கார ஒலியைக் கேட்பது தான்…!” அந்நிலையில் நீ விடும் சுவாச நிலையே மறந்துவிடும். ஓங்கார ஒலி தான் உன் செவிக்குள்ளே ஒலித்து வரும்.

உலகத்தன்மையே ஓ…ம் என்ற ஒலியினால் தான் இயங்குகின்றது இவ்வொலிதான் உலகத்துக்கு ஆணிவேர். அவ்வொலியின் மேல் அவ்ஒளி பட்டவுடன் தான் இந்த ஜீவராசிகளின் ஜீவனெவல்லாம் தோன்றுகிறது.

இவ்ஒலியிலிருந்து நல் மனத்தைப் பெற்றிடுங்கள்… நல் மூச்சே விட்டிடுங்கள் என்பதெல்லாம் எந்த நிலையில்…?

நல் மூச்சே விட்டிடுங்கள் என்னும் பொழுது அந்நிலையில் உள்ள புஷ்பங்களையும் நறுமணம் கொண்ட பொருள்களையும் தேடுகின்றாய். அந்நிலையில் வருவதல்ல நல் மூச்சு.

நல் மூச்சு என்பதன் பொருள்…
1.உன் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலிருந்து வருவது தான்.
2.உன் மனநிலையில் மகிழ்ச்சியாக உள்ள நாளில் அவ்விடத்தில் உள்ள அசுத்தக் காற்றுகளும் உன்னை வந்து அடையாது.
3.அந்நிலையில் உன் சுவாச நிலையம் அந்தத் தீய மணத்தை ஏற்றுக் கொள்ளாது.

ஆனால்… உன் மனமும் சுவாச நிலையும் உன் மன நிலையில் சோர்வு வந்துவிட்டால் உன் சுவாச நிலைக்கு எந்த நறுமணங்களும் வந்து அடையாது… புரிந்ததா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அதற்கு மத்தியிலே இடைப்பட்ட நிலைகள் வரப்படும் பொழுது ஒருவர் வந்து அவன் மோசமான ஆள்… உதவி செய்யாதீர்கள்…!” என்று நம்மிடம் சொல்கிறார்.

அப்போது நமக்கு வெறுப்பின் தன்மை வருகிறது.

1.ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எண்ணும் போது மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று சொன்னால்
2.நாம் எண்ணிய எண்ணங்களுக்கு அது எதிரியாகிறது. நமக்குள்ளே போர் வருகிறது.

சந்தர்ப்பத்தில் இதைப் போன்று தான் நமக்குள் அந்த எதிரியின் தன்மைகள் உருவாகி விடுகிறது. இப்படி உருவாகும் அந்தச் சக்திகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.

கைகேயி இராமன் மீது வெறுப்பு காட்டுகிறது… ஏனென்றால்
1.தன் பையன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி
2.இது தன்னிலே வளர்ந்த உணர்வு…. அந்த அணுக்கள் அதை எண்ணுகின்றது
3.அந்த உணர்வின் தன்மை இங்கே உருவாக்குகின்றது

தசரதனுடைய ஆசையோ இராமன் மீது இருக்கின்றது. அதே சமயத்தில் தனக்குள் இருக்கும் சக்தி (தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவி) அதனுடைய பாசத்தால் ஓங்கி வளர்க்கப்படும் பொழுது அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அதாவது தசரதன் அவன் மனைவியின் நிலையை மீற முடியவில்லை.

அன்பு கொண்ட மனைவி கோசலை தியாகம் செய்கிறது…! மூத்த மகன் இராமன்… சீதாராமா ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைகள் இருக்கின்றான்.

சுவைக்கொப்பத் தான் எண்ணங்கள் (சீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணம்) என்று அவனுடைய எண்ண அலைகள் இருப்பினும் தூண்டிய உணர்ச்சிகள் தன் சகோதரனாக இலட்சுமணனாக இருக்கின்றான்.

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு எந்த உணர்வின் தன்மை எண்ணி எடுக்கின்றோமோ அதன் சக்தியாக இயக்குகிறது. ஆனால் அதிலே இந்த விஷத்தின் தன்மை கலந்தால் எதிலே இது கலக்கின்றதோ அந்த வேகத்தின் தன்மை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

இது எல்லாம்
1.ஒரு அணுவுக்குள் இருக்கும் நிலையும்… அது கவர்ந்து கொண்ட உணர்வின் சக்தியும்
2.அது எவ்வாறு இயக்குகிறது…? என்று தான் இராமாயணம் காட்டுகிறது.

இராமன் காட்டிற்குள் செல்கின்றான். அங்கே புலியும் இருக்கிறது கரடியும் இருக்கிறது. இருந்தாலும் அதைச் சீராக்கிக் கொண்டு வரும் நிலையாக இராமன் என்ன செய்கிறான்…?
1.இந்த உடலுக்குள் வரும் மற்ற ஆசைகளை விடுத்து அமைதியாகச் செல்கிறான்…
2.எல்லாவற்றையும் இவன் சகோதரனாக ஆக்குகின்றான் என்று காட்டுகிறார்கள்.
3.மகிழ்ந்து வாழும் சக்தியாகத் தனக்குள் அரவணைத்துக் கொள்கிறான் என்று காட்டுகின்றார்கள்.

ஒலி நாடாக்கள் மூலம் யாம் (ஞானகுரு) உபதேசித்து வெளிப்படுத்திய கருத்துக்களின்படி நீங்கள் தியானியுங்கள்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகள் உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் உணர்வு நமக்குள் இருப்பதால் “அவர்கள் பெற வேண்டும்” என்று நாம் எண்ணும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கும் அது கிடைக்கின்றது. நமக்குள் அகந்தை என்ற உணர்வு செயல்படாது ஒடுங்குகின்றது.

அன்று துருவன் (அகஸ்தியன்) காட்டிற்குள் செல்லப்படும் பொழுது துஷ்ட மிருகங்கள் மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை கொண்டு வந்தாலும்…
1.அவன் உடலில் இருந்து வெளிப்படும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் அதை ஒடுங்கச் செய்வது போன்று
2.விஷமான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்து… மற்றொன்றைக் கொன்று புசிக்கும் கடும் நோயாக உருவாக்கும் அந்த உணர்வுகளை
3.நாம் அந்த துருவ மகரிஷிகளின் அருள் ஒளியின் உணர்வைச் சேர்த்து அந்த உணர்வுகளை ஒடுங்கச் செய்ய வேண்டும்.
4.ஆக அதை நுகர்கின்றோம்…! இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைகின்றது.
5.அந்த அணுக்களின் பெருக்கங்களைக் கொண்டு வரும்போது கணங்களுக்கு அதிபதி ஆகிப் பிறவியில்லாப் பெரு நிலை அடைய செய்யும்

“பிரம்மாவைச் சிறை பிடித்தான்…” என்ற நிலையில் அந்த அருள் ஒளியைத் தான் நாம் பெறச் செய்ய வேண்டும்.

ஒருவனை அடிமையாக்க வேண்டும் என்று அகம் கொண்டு… துர்மார்க்க வழியில் அடித்து அவனைக் கைவல்யப்படுத்தி இன்னொருவர் மீது பாய்ச்சி அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் தான் இன்றைய உலகில் வந்து கொண்டிருக்கின்றது.

கடந்த கால நிலைகளில் மந்திர ஒலிகள் கொண்டிருந்தாலும்… உலோக உணர்வுகளை அறியச் செய்தாலும் அதனின் வளர்ச்சியில் அணுக் கதிரியக்கங்களையும் கண்டு கொண்ட பின் “இன்று மீண்டும்” ஆவியின் நிலைகளே தொடர்பு கொள்கின்றது.

அரச உணர்வு பெற்று விஞ்ஞான அறிவு கொண்டாலும் பேயாசை கொண்டு ராட்சச உணர்வு கொண்டு… மனிதன் தான் பெற வேண்டும் என்ற கௌரவ உணர்வு கொண்டு “நான்” என்ற நிலை உருவாக்கப்பட்டு அழித்திடும் உணர்வாகப் பெருகி… மனிதனே அசுரனாக மாறிடும் நிலையாக ஒருவரை ஒருவர் கொன்று புசித்து… அதை ரசித்திடும் நிலைகள் தான் இன்றைய உலகில் பெருகிக் கொண்டுள்ளது.

இது போன்ற உணர்வுகள் நமக்குள் சேர்ந்தாலும் “நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை அடக்கிடல் வேண்டும்…”

நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வைப் பெருக்கி… நம் மூச்சும் பேச்சும் உலக மக்களை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் அதில் அமிழ்ந்திருக்கும் அத்தகைய நிலையில் இருந்து அவர்களை விடுபடச் செய்யும் அருள் சக்தியைப் பெற நாம் தியானிப்போம்.

அனைவருடைய நிலைகளிலும் இருள் நீங்கி… மெய்ப் பொருள் என்ற தேவாதி தேவர்கள் என்ற மனித உரு பெற்ற நிலையினை… அருள் ஒளியின் உணர்வாக மாற்றிடும் நிலைபெறச் செய்வோம்… அருள் ஒளிச் சுடராகப் பெருக்குவோம்.

1.யாம் (ஞானகுரு) உபதேசித்த ஒலி நாடாக்களை ஆங்காங்கே வெளிப்படுத்தி
2.அதன் வழி நீங்கள் தியானியுங்கள்… உங்களுக்குள் இதை மனப்பாடமும் செய்து கொள்ளுங்கள்.
3..உபதேச ஒலி நாடாக்களைப் போட்டு அடிக்கடி அதைக் கேட்டுப் பதிவாக்குங்கள்… அனைவரையும் கேட்கச் செய்யுங்கள்.
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகளை உந்தச் செய்து நினைவை விண்ணிலே செலுத்தி
5.அருள் ஒளியின் உணர்வை உருவாக்கும் உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யுங்கள்.

அறியாது ஆட்டிப் படைக்கும் அசுர உணர்வுகளிலிருந்து உலக மக்களை மீளச் செய்யுங்கள்… அருள் ஞான சக்தியை ஊட்டச் செய்யுங்கள்.

தேவாதி தேவர் என்ற சர்வ வல்லமை பெற்ற அவர்கள் உடலில் நன்மையை ஊட்டும் அருள் ஒளியின் உணர்வை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கச் செய்யுங்கள்.

ஆகவே குறுகிய காலமே இந்த உடலில் வாழும் நாம் அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்திடல் வேண்டும்.
1.மற்றவரிடத்திலிருந்து வரும் தீமைகளை நுகர்ந்தாலும் அதை நாம் அருள் ஒளியாக மாற்றிடும் உணர்வாகப் பெற முடியும்
2.அருள் வழி வாழ்வோம் அனைவரும் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

 

கண்டார் விண்டதில்லை… விண்டார் கண்டதில்லை…! இதன் பொருள் என்ன…?

கண்டார்..! என்பதற்கு…
1.இந்த உலகின் உண்மை ஞானத்தைக் கண்டவர்கள் விண்டு…
2.வீண் விரய நிலையில் புரளிகளாக எந்த உண்மையையும் சொல்ல மாட்டார்.

விண்டார் கண்டதில்லை… என்பதன் பொருள்
1.விண்டவன் தன் எண்ணத்தில் ஏற்றிக் கொண்ட செயலைத்தான் விண்டு புகட்டுகின்றான்.
2.இவன் கண்டது எவற்றை…?
3.ஞானப் போர்வையைப் புகழ்படுத்திக் காண்பவன் விண்டு உணர்த்தும் நிலையாகத் தான் அது இருக்கும்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஆக…
1.தன் ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் தியானம் வேண்டும்..
2.தியானம் பெற ஞானம் வேண்டும்.

ஞானம் என்பது மனிதனுக்கு எப்படி வளருகின்றது..?

பல குண நிலையில் வாழும் மனிதன்
1.தன் எண்ண கதியிலேயே… தன் குணமுடனே…
2.ஞானம் பெறல் வேண்டும் என்றால் எந்த ஞானமும் வளராது.
3.பல குணங்களுடன் உள்ளவனால் தியானத்தின் செயல் முறைக்கே வர முடியாது.

தியானம் என்பது… மனிதனின் குணத்தைச் சமமான சாந்த நிலை பெற்ற பிறகு
1.சாந்தத்தினால் இவ்வெண்ணத்தை ஓ…ம் என்ற நாதமுடன் எடுக்கும் முறைப்படுத்தி
2.தன் கவன நிலையை அதன் வழி செலுத்தும் பொழுது தான் ஞானம் பிறக்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் இப்படியெல்லாம் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்வது இயற்கையே.

இருந்தாலும்… அந்த இயற்கையின் கதியில்… அதே வேகத்தில்… நம் எண்ணத்தைப் பாய்ச்சி விட்டால் வளரும் நிலையற்று அழிக்கும் நிலைக்குச் செல்கின்றான் மனிதன்.

நம் ஆடையில் ஏற்படும் கறையை…
1.எப்படி அகற்றினால் அது போகும் என்று “பாங்காக…” (பக்குவமாக)
2.மற்ற இடத்தில் கறைபடியாமல்…
3.படிந்த இந்தக் கறையைப் போக்க நம் செயல்கள் இருந்தால்…
4.துணி பாழ்படாமல் சுத்தமாக அகற்றி விடலாம்.

கறை படிந்து விட்டதே…! என்று சலிப்புப் பட்டு அதை அடித்துத் தோய்த்துச் செயல்பட்டால் அந்தக் கறையும் போகாது… துணி தான் நைந்து போகும்.

மின்சாரத்தைப் பாய்ச்சி ஒளியைக் காண்கின்றோம். எந்த அளவு விகிதம் செலுத்தப்படுகின்றதோ அதற்குகந்த வெளிச்சத்தைத் தான் அந்த மின் ஒளி ஏற்றித் தருகின்றது.

அதைப் போல்… இவ்வெண்ணத்தை எந்த ஒரு செயல்முறைக்கும்
1.சாந்தமாக ஞானத்தைக் கொண்டு ஆராய்ந்து செயல்பட்டால்
2.வாழ்க்கையில் ஏற்படும் குறைகளுக்கு வழி முறை அமைத்துக் கொள்ளலாம்.

சலிப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் கோபமும் அழுகையும் தான் ஏற்படும்.

எந்த ஒரு சூழ்நிலையானாலும்…
1.எண்ணத்தால் ஞானத்தைப் பாய்ச்சி அதிலுள்ள சிக்கலை அகற்றிவிட்டால் சாந்தமான சமநிலை பெற முடியும்
2.மேன்மேலும் நம் எண்ணத்தின் சாந்த நிலை கூடக் கூட… நம் எண்ணமே சாந்தமாகி
3.ஞானத்தால் எடுக்கும் வழித் தொடருக்குச் “சக்தி நிலை கூடுகிறது…”

“சாந்தமான நிலை பெற” ஞானத்தால் நம் வாழ்க்கையை வழிப்படுத்திக் கொண்டோமானால் தான்… நாம் எடுக்கும் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு சிக்கலுக்கும் எண்ணத்தைத் தெளிவுபடுத்தும் ஆத்மாவினால்… சாந்த நிலை பெறுவது என்பது கடினமல்ல.
1.பல சிக்கல்கள் வந்தாலும்…
2.தன் எண்ணத்தைக் கொண்டு அவர்கள் தெளிவு ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களின் குண அமிலத்தில் அவர்கள் வளர்த்துக் கொண்ட “அவர்களுக்குச் சொந்தமான வளர்ச்சி நிலை தான்…” மேலோங்கி நிற்கும்.

எண்ணத்தைச் சாந்தப்படுத்தி சமநிலை பெறும் ஆத்மாவினால் நிச்சயம் ஞான ஒளி ஈர்ப்பின் வழியில் செல்ல முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் அதில் உள்ள சத்துகள் எல்லாம் நம் உடலிலே முதலில் அமிலமாகத்தான் மாறும்.

விஷத்தன்மை கொண்ட நம் பித்த சுரபி…
1.அதனுடைய சுரப்புக்குத் தக்கவாறு சாப்பிடும் ஆகாரத்திற்குள் கலந்து
2.அந்த அமிலத்தன்மையை குளுக்கோஸாக மாற்றுகிறது.

குளுக்கோசாக மாற்றி வரப்படும் பொழுது இரத்தங்களிலே இருக்கக்கூடிய செல்கள்
1.இந்த உணர்வின் தன்மையைச் சுழலச் செய்து சுழலச் செய்து
2.அதைச் சிவப்பணுக்களாக மாற்றி விடுகின்றது.

அப்படி மாற்றும் தன்மை அங்கே இல்லை என்றால் விஷத்தின் தன்மையால் அந்தக் குளுக்கோஸ் சர்க்கரையாக மாற்றி விடுகின்றது. இப்படி அந்தக் குளுக்கோஸ் அதிகமானால் சர்க்கரைச் சத்து இரத்தத்திலே அதிகமாகிவிடும்.

காரணம்… அடிக்கடி வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அல்லது வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது அல்லது வேதனையான உணர்வுகளை எடுக்கும் போது உடலில் விஷத் தன்மைகள் அதிகமாகிறது.

உதாரணமாக ஒருவர் செய்யும் தவறான செயலைப் பார்த்து நம்மால் அதைத் தாங்க முடியவில்லை என்றால் சோர்வான உணர்வைத்தான் நுகர்கின்றோம். அதை நுகரப்படும் பொழுது கோபமான உணர்வுகளைக் கலந்து நாம் சுவாசிக்க நேருகின்றது.

இது நமக்குள் கூடியபின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டு குளுக்கோஸை சிவப்பணுக்களாக மாற்றும் தன்மைக்கு மாறாக இதனுடைய உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பு நோயாக மாறும்.

1.சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கு ரொம்பச் சீக்கிரம் இந்த இரத்தக் கொதிப்பும் வரும்.
2.காரணம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப (சோர்வு வேதனை கோபம்) அணுக்களின் தன்மை வீரியம் அடைகின்றது.

வைத்திய ரீதியில் எடுத்துக் கொண்டாலும் கூட இரத்தத்தைப் பரிசோதித்துத் தான் இரத்தக் கொதிப்பு இருக்கிறது… சர்க்கரைச் சத்து இருக்கின்றது என்பார்கள்.

அதே சமயத்தில் இந்த இரண்டும் மோதும் பொழுது சலிப்புத் தன்மை அடைந்து பிரிக்கப்படும் பொழுது… ஆஸ்த்மா போன்ற சளித் தன்மையும் அதிகமாகின்றது.

சர்க்கரை அதிகமாகும் போது சளி உருவாகி எல்லா இடத்திலும் அது உறைந்து அந்த அமிலங்கள் மாறுகின்றது. உடலுக்குள் ஒவ்வொன்றையும் இப்படி மாற்றுகின்றது.

சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு உப்புச் சத்து மூச்சுத் திணறல் இது எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது தான்…!

பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ காலமாகப் பல சரீரங்கள் பெற்று இன்று மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும்…
1.நாம் இன்று சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மூலம் உடலில் அணுத் தன்மைகள் மாறி
2.கடைசியில் வேதனை என்ற உணர்வே மிஞ்சுகின்றது…
3.மனிதனின் ரூபத்தையே மாற்றும் தன்மைக்கு வந்து விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும் என்பதற்குத் தான் அருள் உணர்வுகளை உபதேசமாக்கக் கொடுக்கின்றோம்.

கொடிய நஞ்சினையும் கொடிய நோயையும் ஒடுங்கச் செய்யும் துருவனின் அருள் ஆற்றல்கள் – ஒரு பயிற்சி

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று
1.சர்வ நோய்களும் நீக்கிடும் அருள் ஒளி எங்களுக்குள் பெருகி இருளை அகற்றி
2.எங்கள் பேச்சு மூச்சும் சர்வ நோய்களை நீக்கிடும் அருள் சக்தி பெற்று
3.அனைவரையும் ஆனந்தப்படச் செய்யும் அருள் ஒளி எங்களுக்குள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

வேதனையான உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்தால் கண்களில் படும் போது கண் ஒளி மங்கும். உற்றுப் பார்த்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் கலந்து வரப்படும் போது கிட்னி அந்த விஷத்தின் தன்மையால் பாதிக்கப்படுகின்றது.

விஷம் கலந்த அந்த இரத்தம் இருதய வாயில் செல்லும் பொழுது அங்கே அடைப்புகள் போன்ற துன்பங்களை ஏற்படுத்தும். அந்த விஷம் கலந்த இரத்தம் நுரையீரல் கல்லீரல் போன்ற உறுப்புகளில் படரப்படும் போது இந்த விஷத்தின் தன்மையால் அதனை இயக்கும் நல்ல உணர்வுகள் நல்ல அணுக்கள் மடிகின்றது. பின் அதிலே கடும் நோயாக உருவாகும்.

இதைப் போன்ற ஏற்படும் தீமைகளிலிருந்து மீள…
1.நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடலில் எங்கே நோவு காணுகின்றதோ
2.“அந்தப் பகுதிக்கு”
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று உணர்ச்சிகளை
4.”அங்கே” உந்தச் செய்யுங்கள்… அருள் உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.
5.நஞ்சு கொண்ட அந்த உணர்வின் தன்மையை ஒடுங்கச் செய்யுங்கள்.

அருள் மகரிஷிகளின் உணர்வை உங்கள் உடலில் பரவச் செய்து… தீமை செய்யும் அணுக்களைத் தணியச் செய்யுங்கள்.

துருவன் காட்டிற்குள் செல்லும் பொழுது “அவனைக் கண்டு” மற்ற கொடூர உணர்வுகளும் மிருகங்களும் விஷம் கொண்ட விஷ ஜெந்துக்களும்
1.அதனுடைய விஷத்தை முறித்து எப்படிப் பதும்பி இருந்ததோ இதைப்போல
2.அந்தத் துருவனின் உணர்வுகளை துருவ மகரிஷியான உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.”அகஸ்தியன்… துருவன்… துருவ நட்சத்திரம்…” என்ற இந்த மூன்றையும் உங்கள் உணர்வுக்குள் கலக்கச் செய்து
4.உங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்கச் செய்யுங்கள்.

அப்போது…
1.ஒடுங்கும் தன்மை கொண்டு “உங்களிடம் அடங்கி”
2.உங்களில் மன மகிழ்ச்சியை ஓங்கச் செய்யும்
3.அருள் ஒளியின் உணர்வின் தன்மை பெறச் செய்யும்… அருளானந்தம் பெறச் செய்யும்.

ஆகவே… அருள் ஞானத்தை வளர்த்திடும் அந்த அருள் ஞானத்தைப் பெற அகஸ்தியனுடைய உணர்வுகளையும் துருவனின் உணர்வுகளையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற எண்ணத்தில்
1.எங்கே வலி என்ற உணர்ச்சிகளை உந்துகின்றதோ
2.”அவ்விடத்தில்” அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளைப் பாய்ச்சுங்கள்.

அந்த வலியைத் தணியச் செய்யுங்கள் இருளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

சந்தர்ப்பத்தால் உங்களை அறியாது எண்ணத்தால் நுகர்ந்த உணர்வுகள்… நஞ்சின் உணர்வு கொண்டு… உடலுக்குள் தேங்கியிருக்கும் இடத்தில் வேதனையக் கொடுக்கும்.

அதே எண்ணத்தால்… உங்கள் உடலில் எங்கே நோவு வருகின்றதோ அந்த இடத்திலே அகஸ்தியன் துருவன் துருவ நட்சத்திரம் என்ற இந்த மூன்று உணர்வுகளையும் உங்கள் நினவாற்றல் கொண்டு பாய்ச்சுங்கள்.

அதனுடைய வீரியத்தைத் தணித்துப் பழகுங்கள்…! அருள் ஒளியைப் பெருக்குங்கள். இப்போது உங்கள் உடலில் அருள் ஒளி படர்ந்து
1.உடலில் எத்தகைய பிணி இருக்கின்றதோ அது ஒடுங்கும்…
2.ஒடுங்கும் உணர்ச்சிகளை நீங்கள் உணரலாம்… அதை ஒடுக்கச் செய்யுங்கள்

அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்து அதை ஒடுங்கச் செய்யுங்கள். உங்களால் முடியும்…!

தியானத்தில் நாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலை”

 

எண்ணத்தைக் கொண்டு தான் உணர்வை அறிகின்றோம். உணர்வைக் கொண்டு தான் எண்ணம் செயல்படுகின்றது.

இவ்வெண்ணமும் உணர்வும் இயங்க… இந்தப் பன்னிரெண்டு வகை குண அமிலங்களின் நிலையினால்
1.எண்ணத்தைக் கொண்டு உணர்வும்…
2.உணர்வைக் கொண்டு எண்ணமும்… இயங்கி வாழும் ஜீவாத்மாக்கள் எல்லாம்
3.இக்குண அமிலத்தையே ஒருநிலைப்படுத்தி எண்ணத்தைச் செயல்படுத்த வழி பெற்றால் தான்
4.இஜ்ஜீவ உடலுக்குள் உள்ள காந்த மின் அலையின் ஈர்ப்பை அதிகமாகச் சேமிக்க முடியும்.

காற்றிலும்… நீரிலும்… ஒளியிலும்… இக்காந்த மின் அலையின் சக்தி இருப்பதனால் தான் பூமியின் ஜீவித சக்தியே சுழன்று ஓடுகின்றது.

மின்சாரம் காண… “இச்சக்தி அலையை அதிகமாகக் குவித்து” அதனை ஒளியாக்கித் தருகின்றனர் செயலுக்குகந்தபடி எல்லாம். அதே காந்த மின் அலையின் சக்தி தான் ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் உள்ளது.

நம் ஜீவ உடலுக்குள் உள்ள மின் அலையைக் காட்டிலும் மின் அலையைக் குவித்து மின்சாரமாகச் செயலாக்க அந்தக் காந்த மின் அலை உடலில் ஏறும் பொழுது (CURRENT SHOCK) அந்த ஜீவ உடலில் உள்ள அலையையும் எடுத்துக் கொண்டு உடலை ஜீவனற்றதாக்கி விடுகின்றது.

காந்த மின் அலை இல்லாவிட்டால் ஜீவத் துடிப்பே இல்லை.

எந்த வீரிய சக்தி கொண்ட மின் அலையும் உலர்ந்த மரத்திலும் ஜீவ சக்தியைப் பிரித்துப் பல உஷ்ணங்களை ஏற்றி வடிவமைத்த கண்ணாடிகளிலும் பாய்வதில்லை.

இதுவே சிறிது ஈரச்சத்து அதிலிருந்தாலும் உடனே அம்மின் அலை பாய்கிறது. இம்மின் அலையின் சக்தி எல்லா ஜீவ சக்தியிலும் அதனதன் வளர்ச்சிக்கொப்பக் கூடியும் குறைந்தும் உள்ளது.

1.இம்மின் அலையை எடுக்கும் முறையைக் கொண்டு
2.நம் எண்ணத்தை ஞானத்தில் செலுத்தினால் தான்
3.ஞானத்தின் ஈர்ப்பு நமக்கு ஜீவ சக்தியின் சுவாச அலையில் தாக்கி
4.சுவாச அலையினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்டெல்லாம் நம் உயிரணுவுடன் மோதி
5.நாம் எடுக்க வேண்டிய ஞான சக்தியின் ஒளி காந்த மின் அலையை
6.நம் ஜீவ உயிரும் இந்த உடலின் பல கோடி அணுக்களும் எடுக்க முடியும். (இது முக்கியமானது)

இதன் தொடர்ச்சியை மேன்மேலும் கூட்டிச் செயல்பட்டு இந்த உடல் என்ற கூட்டை அழியா உடலாகக் காயகல்பத்தை உண்டு தான் போகனும்… கொங்கணவனும்… இவர்களின் நிலையை ஒத்த பலரும் செயல்பட்டனர்.

இச்சக்தி மின் அலையைப் பெறவே சித்து நிலை பெற்ற சப்தரிஷிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் சென்ற வழி முறையின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் இருந்தாலும்
1.அவ்வழித் தொடர் ஞானத்தில் சுழன்ற பிறகு ஒரே நிலையில் தான்
2.”ஒரே நிலையில் தான்” என்பது ஒரு நிலையான காந்த மின் அலையின் தொடர்ச்சியுடன் தான் கலந்தார்கள்.

ஆண்டவனின் சக்தியை ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…! என்றும் அவ்வாண்டவனுடன் கலப்பதற்கு ஜோதி நிலை கண்டால் அச்சக்தியைப் பெறலாம் என்றும் அன்று உணர்த்தினார்கள்.

அஜ்ஜோதி நிலை பெறும் வழித் தொடர் என்னப்பா…? ஜோதி நிலை பெற்று விட்டால் ஆண்டவனாகி ஆண்டவனுடன் கலந்து நின்று முற்றுப் பெறுவதுவா…?

ஆண்டவனின் சக்தி ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் இக்காந்த மின் அலையின் சக்தியுண்டு. ஆனால் அச்சக்தியை உணர்ந்து நம் ஜீவாத்மா உயிர்ச் சக்தியை நாம் எடுக்கும் எண்ண ஜெபத்தால் கூட்டி இந்த உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் (பன்னிரெண்டு குண அமிலங்களும்) அச்சக்தி அணுவை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

ஆனால் நம்முள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தை அதனதன் குணத்தின் செயலுக்கே நம் உணர்வையும் எண்ணத்தையும் செலுத்தினோம் ஆனால் இதே சுழற்சி வட்ட வாழ்க்கையில் தான் சுழல முடியுமே அன்றி பூமியின் ஈர்ப்பிலிருந்து மீளும் வழி இல்லை.

ஆக.. இந்த உலக ஆத்மாக்களின் குன்றிய எண்ணச் சுழற்சி பேராசை வாழ்க்கையில் தன்னையே மரித்துக் கொள்வதோடு அல்லாமல்…
1.மெய் ஞானத்தை உணர்த்தி உலகாயும் ஒளியாயும் நீராயும் காற்றாயும் நாம் வாழ வழி அமைத்த சப்தரிஷிகளின் சக்திக்கே…
2.தன்னை வளர்த்துப் படைத்த சக்திக்கே… ஊறு விளைவிக்கின்றான் இன்றைய மனிதன்.

தன் ஞானத்தை இக்காந்த மின் அலையின் ஈர்ப்பைப் பெற வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முடியும். ஆனால் ஞானத்தை வளர்க்கவும் செயலாற்றவும் முடியாத இயற்கையிலே பல சக்திகளை அறிந்த மிருக ஜெந்துக்களுக்கு நமக்குள்ள (மனிதன்) சந்தர்ப்பம் இல்லை.

ஆனால்….
1.நம்மில் நாம் எந்த ஆண்டவனைக் காணத் துடிக்கின்றோமோ
2.அவ்வாண்டவனால் நமக்குள் பல சக்தி அலைகளை படைக்கப் பெற்று வழி வந்த நாம்
3.நம் நிலையை உணராமல் இன்று வாழ்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாம் வேதனைப்படுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். உயிரால் நுகரப்பட்டு அந்த உணர்வுகள் ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. என்று நம் உடலாக (அணுக்களாக) உருவாகின்றது.

1.ஆனால் அந்த வேதனை என்ற உணர்வு அணுவாக (உடலாக) ஆவதற்கு முன்
2.வேதனையை நுகர்ந்த அடுத்த கணமே அதற்கு ஜீவன் கொடுக்காதபடி அணு உருவாகாதபடி தடுக்க வேண்டும்.

ஏனென்றால் வேதனைப்படுகிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த உணர்வின் தன்மை இரத்தத்தில் கருவாகி விடுகின்றது.

அப்படிக் கருவாகி “ஒரு 48 நாட்கள்” ஆனால் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும்போது வேதனை உருவாக்கும் அணுவாக உருவாகின்றது.

1.எந்த உறுப்பில் அது ஒட்டிக் கொள்கின்றதோ அங்கே அந்த அணு ஜீவன் பெற்ற நிலையில்
2.அதே இரத்தத்தின் வழியாகத்தான் தன் ஆகாரத்தை (வேதனையை) எடுக்கும்.

பூமியில் விளையும் ஒவ்வொரு தாவர இனச் சத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.

ஒரு செடியில் விளைந்த வித்தை மண்ணிலே ஊனறினோம் என்றால் காற்றுடன் காற்றாகக் கலந்து வரும் சூரியன் கவர்ந்து வைத்துள்ள தன் இனமான உணர்வினை அது பிரித்தெடுத்துத் தான் அந்தச் செடி மீண்டும் விளையும்.

இன்று டி.வி. ரேடியோக்களில் ஒளி ஒலி அலைகளாக எண்ணிலடங்காத ஒளிபரப்புகளைச் செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் சாதனத்தை வைத்து
1.அந்தந்த அலை வரிசைகளில் வருவதைத் திருப்பி நமக்கு வேண்டிய ஸ்டேஷனை வைத்தால்
2.அதை மட்டும் கவர்ந்து நாம் பார்க்கின்றோம் அல்லது கேட்கின்றோம்
3.மற்ற அலைகள் வந்தாலும் அதைக் கவர்வதில்லை.

இதைப் போன்று தான் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது… அதை அந்த அணுக்கள் இழுத்தே கவர்கின்றது.

அதாவது…
1.எந்த எண்ணத்தை நாம் கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மையாக
2.நமக்குள் ஒரு கரு முட்டையாக உருவாகின்றது.
3.இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகத்தில் இது இணைந்து விடுகின்றதோ
4.அதனின் பருவமாகும் போது முட்டை வெடித்து அணுவாக மாறுகின்றது… கூட்டை விட்டு வெளியே வந்து விடுகின்றது.

உதாரணமாக நத்தை ஓட்டுடன் ஒட்டி இருந்து பாதுகாப்பாக இருப்பது போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் அணுக்கரு உடலின் உறுப்போடு ஒட்டி
2.எந்த உணர்வின் சத்தை அதை எடுத்ததோ இரத்தத்தில் வருவதை உறிஞ்சி
3.உணவாக எடுத்து வளர்ந்து தன் இனத்தைப் பெருக்கும்.

அந்த அணுவின் (வேதனை) மலம் தசையாகி உறுப்புகளில் சேர்க்கும் பொழுது ஏற்கனவே உருவான நல்ல அணுக்களால் உருவான உறுப்பைச் செயலிழக்கச் செய்யும்.

முதலில் உறுப்புகள் அழகாக இருக்கும். இந்த வேதனை என்ற உணர்வுகள் சேர்ந்து அதனின் அணு வெடித்து நுரையீரலிலோ அல்லது கல்லீரலிலோ இது போன்ற அணுக்கள் தேங்கி விட்டால் விஷத்தின் தன்மை பாய்ந்து விடும். பின் அந்த உறுப்புகளில் எல்லாம் வலி எடுக்க ஆரம்பிக்கும்.

இரத்தங்களை உடல் முழுவதும் பிரித்து அனுப்பும் இருதயத்தில் இது போன்ற வேதனை அணுக்கள் உருவானால் அது இரத்தம் போகும் பாதையே அடைத்துவிடும் (ஹார்ட் அட்டாக்).

நம் இதயத்தில் இயற்கையாகவே மூன்று பிரிவுகள் வழியாக இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது. மேலே சொன்ன வேதனையான அணுக்கள் இதயத்தில் உருவானால் அடைப்பாகி… இரண்டு பாதை வழியாகப் போகும். அதிலும் அடைப்பானால் ஒன்றின் வழியாகப் போகும்.

ஒன்றின் வழியாகப் போகும் போது திணறலாகும். அதுவும் அடைபட்டால் நின்றுவிடும்.

இது எல்லாம் நாம் சந்தர்ப்பத்தால் எடுக்கும் எண்ணங்கள் உணர்வுகளுக்குத் தக்க நம் உடலில் அணுக்கள் உருவாகி அதனால் ஏற்படும் விளைவுகள்.

இதை மாற்ற வேண்டும் என்றால்…
1.நம் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
2.ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
3.தீமையான அணுக்கள் உடலுக்குள் உருவாகாத வண்ணம் தடைப்படுத்தியே ஆக வேண்டும்.

உதயம்

 

உயிரின் உண்மை நிலை எங்கிருக்கின்றது…? உயிரின் துடிப்பு துடிப்பதற்குச் சுவாச நிலை வேண்டுமப்பா. உயிர் எப்படிச் சுவாச நிலையில் உள்ளதோ அந்தத் தன்மைதான் இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருள்களும்.
1.”நட்ட கல் பேசுமோ.. நாதன் உள் இருக்கையில்…!” என்று படித்திருந்தாலும்
2.அக்கல்லுக்கும் மண்ணிற்கும் உயிர்த் துடிப்பு உள்ளது.

எப்படி மனிதன் சுவாசத்தில் உயிர்த் துடிப்பு உள்ளதோ அதுபோல்தான் மண்ணிற்கும் கல்லிற்கும் மடுவிற்கும் மலைக்கும் பூமியில் இருந்து எடுத்திடும் திரவத் தன்மையில் உள்ள நீர் மற்ற திரவங்களுக்கும் உலோகங்களுக்கும் எல்லா இயற்கைத் தன்மையுள்ள மரம் செடி ஜீவராசிகள் எல்லாவற்றுக்குமே உயிர்த் துடிப்பு உள்ளதப்பா.

அடுப்பு எரிந்து ஆவி செல்லும் பொழுது அந்நிலையிலும் உயிர்த் துடிப்பு உள்ளதப்பா. உயிர்த் துடிப்பு என்பது ஜீவ அணுக்கள்தான்.
1.அவ்வணுக்களின் தன்மையிலே சூரியனின் ஒளியை ஈர்த்து
2.இயற்கைத் தன்மையினால் வந்த எல்லாமே
3.மனிதன் எப்படிச் சுவாச நிலையை இழுத்து விடுகின்றானோ
4.அந்நிலையில்தான் எல்லாமே சுவாச நிலையில் உள்ளதப்பா.

உலோகங்களின் தன்மையெல்லாம் எந்நிலையில் வந்ததப்பா…?

மண்ணில் இருந்து காந்தத்தையும் செம்பு வெள்ளி என்ற பதம் பிரித்தும் நிலக்கரியையும் எப்படி எடுக்கின்றான்..? நிலக்கரிக்கு இவன் சொல்லும் காரணங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலத்துடன் படிந்த (மடிந்த) மரங்கள்தான் நிலக்கரி ஆகிவிட்டது என்று.

அந்த நிலை இல்லையப்பா…!

அந்நிலையில் உள்ள மண்ணின் உயிரணுவின் ஈர்ப்புத் தன்மையினால் அச்சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மண்ணில் தாக்கும் பொழுது அந்நிலையில் உள்ள உயிரணுக்களை அம்மண் ஈர்க்கின்றது.

பல கோடி ஆண்டுகளாக ஈர்த்ததன் விளைவால் நிலக்கரிப் படிவங்கள் அந்நிலையில் உள்ளதப்பா. அப்படிவங்கள் தன்மையில் இயற்கை அப்படியே இருந்து விட்டால் அந்நிலையில் அப்படியே இருந்தால்
1.அந்நிலையில் வளரும் மண் வளங்கள் தாவரங்களின் நிலையில் பெரும் பூரிப்பை அடைந்திருக்கலாம்.
2.அங்கே வளரும் பயிர்கள் பெரும் அமிழ்தமாக இருந்திருக்கும்.

இயற்கையின் தன்மையை உணர்ந்திடாமல் இச்செயற்கை ஆவலின் உந்தலில் மனிதன் வைத்த வினையப்பா… “சுரங்கம் வெட்டுவதெல்லாம்…!”

உன் அறிவிற்கே விடுகின்றேன். இப்பொழுது நிலக்கரி எடுக்கும் இடத்தில் எல்லாம் தாவரங்கள் நிலை அன்று எப்படி இருந்தது…? என்று எண்ணிப்பார்…! நெய்வேலியில் விளைந்த பழங்கள் பலா முந்திரி ருசியின் தன்மை அன்று எப்படி இருந்தது…! இன்று எப்படி உள்ளது…?

சோலைவனத்தை அழிக்கின்றான். பூமியில் உள்ள உலோகத்தை எல்லாம் தோண்டி எடுக்கின்றான்.
1.அவ்வுலோகத்தின் தன்மையிலே மின்சாரம் எடுத்து பூமியைச் சோலையாக்குகின்றானாம்.
2.சுற்றுகின்றான் பார்த்தாயா…… உலகம் போலவே மனிதனும்…!

உலோகத் தன்மையெல்லாம் அந்தந்த இடத்திற்குத் தகுந்த மண் சுவையில் படிவதுதான். தங்கச் சுரங்கம் என்கிறான்.
1.அந்தத் தங்கச் சுரங்கம் உள்ள பூமியில் வளரும் பயிர் அதனுடைய ருசியில்தான் இருந்திடும்.
2.இப்பூமியின் தன்மையிலே இம்மனிதனுக்கு அறிவில் வராத பொக்கிஷங்கள் பல உள்ளன.
3.அப்படிவங்கள் உள்ள நிலையில் தான் அந்நிலையில் வளரும் பயிர்களும் அதனுடைய ருசியும்…! சொல்வது அர்த்தமாகின்றதா…?

மனிதன் சொல்கின்றான் அந்தந்த ஊரில் உள்ள தட்ப வெப்ப நிலை என்று…! அது அல்ல…! இந்த மெய் ஞானப் பாடத்தின் தொடரைச் சிறிதளவு புகட்டிவிட்டால்
1.உன் உதய எண்ணம் அதில் எப்படிச் செல்கின்றது…?
2.அந்நிலையையே ஈர்த்துக் கொள்…! “உதயம்…” கிடைத்து விட்டால் உண்மை நிலை எல்லாம் புரிந்துவிடும்.

ஆகவே தியானம் எடுப்பதெல்லாம் உன்னுள் இருக்கும் அணு உன்னுள் சுற்றிக் கொண்டே இருக்கும் பொழுது உன் நிலையில் கவன ஈர்ப்பு மண்டலத்தின் (புருவ மத்தியில்) தன்மையில் பாய்கிறது.
1.உன் சுவாச நிலையை அங்கே ஒரு நிலைப்படுத்திடும் போது
2.அந்நிலையில் நீ எண்ணும் எண்ணத்திற்கு உதயம் கிடைத்துவிடுகின்றது.
3.உன் வழியில் உண்மை நிலைகள் உணரும் தன்மை உன் உயிரணுவிற்கு
4.அவ்வொளியின் கதிர்கள் ஒளிக்கற்றைகள் அதீதமாகப் பாய்கின்றது.

தியான நிலையின் முறை புரிந்ததா…?

ஒருநிலைப்படுத்தி உன்னுள் இருக்கும் எண்ணத்தில் ஒன்றல்ல இரண்டல்ல உன் பிறப்பிலிருந்து இன்று வரை உன் ஞாபகத்தில் எப்படி வருகின்றது…?

சிறு குழந்தையில் வளர்ந்த நிலையும் படிப்படியாக உனக்குள் வளர்ந்த நிலைகளும் உனக்கு எப்படிப் புரிகின்றதோ… மூளையில் சுற்றி வைத்திருக்கின்றாயோ… அந்நிலைகளை எல்லாம் ஒரு சிறிதளவு சொல்லு பார்க்கலாம்…!

அந்த எண்ணம் உன் எண்ணத்தில் இருப்பதைப் புரிந்து தான் மிக முக்கியமான பாடத்தில் வந்து நிறுத்தி இருக்கின்றேன் “உன் உதயத்திற்கு…”

சுவாச நிலைகள் நாம் இடும் எந்த எண்ண அலைகள்… நாம் வெளிவிடும் சுவாசத்தைக் கொண்டு தான் சிறு குழந்தையில் நீ செய்த ஒரு வேலை உன் ஞாபகத்துக்கு இப்பொழுது வருகிறது.

அவ்வேலை செய்யும் போது நீ விடும் சுவாசம் உன்னைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமான ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அன்று நடந்த நேரம் தேதி இருந்த ஆட்கள் எல்லாம் நினைவுகளும் எப்படி இப்பொழுது நினைவிற்கு வருகிறது…?
1.அன்று நீ விட்ட சுவாச நிலையில் உள்ள அழுத்தத்தில் தங்கி விடுகிறது அந்நிலையெல்லாம்
2.உன்னுள் இருக்கும் அணுவின் சுழற்சியும் நீ விடும் சுவாசத்தில் உன்னுள்ளே நான் சுற்றிக் கொண்டே இருக்கிறது… உன் எண்ண அலைகள்.

நீ நினைக்கிறாய் உன்னைச் சுற்றி இருப்பது இப்பொழுது இருக்கும் பிறவி கொண்டு தான் என்று. இல்லையப்பா… உன் முதல் பிறவியில் நீ வெளியிட்ட எண்ண மூச்சலைகள் எல்லாமே உன்னைச் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

இப்பிறவி மட்டும்தான் இப்பிறவி அணுக்களுடன் கலந்திருப்பதால் இப்பிறவியில் விட்ட சுவாசங்கள் அவ்வணுக்களில் கலந்துள்ளன. உன் நினைவோட்டத்தில் இப்பிறவியில் நடந்ததைத் தெரிந்து கொள்கிறாய்.

1.இந்த ஜெப அலையின் தன்மையில் உன்னைச் சுற்றி உள்ள அணுக்களில்
2.உன் முன் ஜென்மங்களையும் தெரிந்திடலாம்…! பாட நிலை புரிந்ததா…?

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்

 

உங்கள் நினைவினைச் சப்தரிஷி மண்டலங்களின் பால் செலுத்துங்கள்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் அக்காலத்தில் சென்ற
2.அனைவரது அருள் உணர்வுகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது.
3.உங்களுக்குள் இருக்கும் முப்பத்து முக்கோடி அணுக்கள்… அதன் முழுமைகளை… அதனதன் இயக்கமாக இருக்கும் நிலையை
4.அவர்கள் அருள் ஒளிச் சுடராக மாற்றிய அருள் ஒளியின் தன்மையை
5.முப்பத்து முக்கோடி அணுக்களின் திறன்களையும் “ஒளியின் உணர்வாக மாற்றிட்ட அந்த அருள் ஒளியை”
6.உங்களுக்குள் அருள் ஒளி பெறும் அணுக்களாக மாற்றும் நிலையாக சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வினை ஒன்றிடச் செய்யுங்கள்.
7.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வாழ்ந்திட ஓர் இருப்பிடமாக இதனை நாம் செயல்படுத்துவோம்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
1.எங்கள் உடலில் உள்ள சர்வ அணுக்களும் அருள் ஒளியைச் சிருஷ்டிக்கும் அருள் ஞானம் பெற்று
2.ஒளியின் உணர்வாக உருவாக்கும் அணுக்களாக மாற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் அருள் ஒளிச் சுடராக… எங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒளியின் உணர்வாக உருப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உயிர் உடலில் இருக்கும் பொழுது நான்
2.அதுவே ஒளியின் உணர்வாக நமக்குள் நானாக மாற்றுதல் வேண்டும்.
3.உயிர் நானாகின்றது… இப்போது உணர்வை நானாக… “இரண்டையும் கலந்து நானாவதே நான்…”

நான் என்ற நிலைகள் வரும் போது “உயிருடன் ஒன்றினால்” உணர்வை ஒளியாக மாற்றிடும் பிரம்மத்தை அடைகின்றோம் எதனையுமே மாற்றி அமைக்கும் நிலையை நமது உயிரின் தன்மை பிரம்மத்தின் நிலையை அடைவதே அது.

எதை உற்று நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கினோமோ… இந்த உணர்வை நம் உயிர் உருவாக்கி ஒளியின் அணுவாக மாற்றிவிடும். ஆகவே
1.உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
2.பிறவியில்லா நிலை என்னும் ஒளிச் சரீரமாக உயிர் உருவாக்கிவிடும்.

இந்தச் சூரியன் அழிந்தாலும் நமது உயிர் அழிவதில்லை… ஒளியின் உணர்வாக வானுலகில் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றது.

பல சூரியக் குடும்பங்கள் அழிந்தாலும் உயிர் மனிதனான பின் ஒளியின் உணர்வாக மாற்றி விட்டால் எதனின்றும் அழிவதில்லை. எதற்கும் அடிமையாவதில்லை.

அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் அத்தகைய உயிரின் நிலை அடைகின்றது (நாம் ஆகின்றோம்).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

செடி கொடிகள் வெளிப்படுத்தும் சத்தினை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. செடியிலே விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் தன்மை கொண்டு காற்றிலிருந்து தன் இனச் சத்தை எடுத்துத் தன் வித்தாக வளர்க்கும். அதற்கு ஈரப்பதம் இருந்தால் போதும்.

இது போன்று தான் நம் உடலுக்குள் பல குணங்களின் சத்துக்கள் இருக்கின்றது. அதிலே வேதனைப்படும் உணர்வின் அணுவாக வளர்ந்து விட்டால் உடனே அதனின் உணர்ச்சிகளைத் தூண்டும். இரத்த நாளங்கள் வழி தன் உணவை எடுக்கும்.

காற்று மண்டலத்தில் எப்படி அனைத்துச் சத்துக்களும் இருக்கின்றதோ அதிலிருந்து எடுத்து செடி கொடிகள் எடுத்து வளர்வது போல் தான் நம் உடலில் உருவான அணுவும் வளரும்.

1.அதாவது நம் உடலில் நுகரும் பொழுது (சுவாசிக்கும் போது) வெப்ப மண்டலங்கள் வரும்.
2.பின் 48 நாட்களில் சுவாசித்தது கருவாகி முட்டை ஆகிறது.
3.உடல் முழுவதும் சுற்றும்போது அந்தந்த உறுப்புகளில் போய் ஒட்டிக் கொள்ளும்.
4.முட்டை வெடித்து அணுவாக ஆனபின் தன் உணர்ச்சியைத் தூண்டும்
5.இரத்தத்தின் வழி கூடி சிறு மூளைக்கு (அந்த உணர்வு) வரும். ஏனென்றால் அதனுடைய பசிக்கு அந்தச் சாப்பாடு கேட்கும்.

இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் நம் உயிர் என்ன செய்யும்…?

1.நம் கண் காது மூக்கு நிலைகளுக்கு ஆணையிடும்.
2.எந்த மனித உடலில் இருந்தது தீமைகள் வந்ததோ அதை இழுக்கும்.
3.அதைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த மனிதனின் எண்ணங்கள் நமக்கு வரும்.

பாவிப்பயல்…! அன்றைக்கு இப்படிச் செய்தான் என்று நாம் எண்ணும் பொழுது அதே உணர்வு நமக்குள் வந்து தீமை விளைவிக்கக் கூடிய சந்தர்ப்பமாக அமையும்.

இதை எல்லாம் நமக்குள் அனுபவபூர்வமாகப் பார்க்கலாம் இந்த எண்ணங்கள் எப்படிக் கிளர்ந்து எழுகிறது என்று…! ஆக இத்தகைய எண்ணங்கள் வந்து விட்டால் அந்த நேரத்தில் நம் வியாபாரங்கள் கெடும்.

நம் பையனாக இருந்தாலும் கூட… “இப்படிச் செய்கிறானே” என்று வேதனைப்படுகின்றோம். அது வேதனையை உருவாக்கும் அணுக்களாக விளைகின்றது… நம் உடலாக மாறுகிறது.

இப்படி எல்லாம் நினைத்துவிட்டு ஒரு காரியத்திற்குச் சென்றால் நல்லதாகாது. எந்த வேலையைச் செய்தாலும் நிச்சயம் எதிரியாகி விடும். ஏனென்றால் அந்த வேதனையான உணர்வு வரும் பொழுது நமக்குள் சரியாக இயங்காது.

தொழில் செய்யும் இடங்களில் பகைமை வந்து விடுகின்றது… வியாபாரம் செய்தாலும் வேதனை உணர்வு வந்தபின் நாம் சொல்வதைக் கேட்டால் “சரக்கை வேண்டாம்…” என்று ஒதுக்கி விடுவார்கள்.

இது எல்லாம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள். இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

அதற்காகத்தான் துருவ தியானத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று காலையில் எண்ண வேண்டும். கணவன் மனைவிக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று கண்டிப்பாக எண்ண வேண்டும். காலை துருவ தியானத்தில் இதை அவசியம் செய்ய வேண்டும்.

சகஜ வாழ்க்கையில் யாராவது நமக்குத் தீமை செய்தால்
1.பாவிப்பயல் எனக்கு இப்படிச் செய்தானே…! என்று எண்ணுகின்றோம்.
2.அப்போது யாருடைய உதவியுமா கேட்கின்றது…? இல்லையே…!
3.நேராக அவனுடைய உடலுக்குள் தான் இந்த ஆன்மா செல்கின்றது

இங்கே பட்ட வேதனையை அங்கே உருவாக்குகிறது. பழி தீர்க்கும் நிலையாகச் செயல்படுத்துகின்றது.

அதைப் போன்று தான்
1.துருவ தியானத்தின் மூலம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக்கிக் கொண்டால்
2.நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே போய்த் தான் நிற்போம்…!

ஆகவே கணவன் மனைவி அவசியம் இந்த உயர்ந்த சக்திகளை எடுத்தே ஆகவேண்டும்.