யாம் உபதேசிக்கும் வழியில் செல்வதைக் “கடினம்…” என்று யாரும் எண்ணாதீர்கள்

யாம் உபதேசிக்கும் வழியில் செல்வதைக் “கடினம்…” என்று யாரும் எண்ணாதீர்கள்

 

கல்வி கற்றுக் கொண்ட ஒருவர் புதிதாக ஒரு சாதனத்தை உருவாக்குகிறார் என்றால்…
1.எந்தெந்த அளவில் சேர்த்து அந்தப் பொருளை உருவாக்கினால்
2.இயக்கச் சக்தி… இந்த இடம்… “இது வலுவை தாங்கக் கூடியது…” என்று உணர்கின்றார் விஞ்ஞானி
3.அதன் வழியில் தான் புதிய சாதனத்தை உருவாக்குகின்றார்கள்.

இப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு அவர் கற்றுணர்ந்ததை யார் அவரிடம் சீடராக வருகின்றாரோ அவருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர்.

முதலில் கல்வியைக் கற்பிக்கின்றார்கள். அவர் கற்றுணர்ந்த வழியிலேயே சீடருக்கும் காட்டப்படும்போது அதைக் கற்றுணர்ந்து வருகின்றார்.

கற்றுணர்ந்து அதன் வழிகளிலே வந்தாலும்… போதித்தவரின் வழியிலே சீராக அவர் செயல்படுவார்…! என்றால் அவர் அதில் வெற்றி பெறுகின்றார்.

ஆனால் கற்றுக் கொடுக்கப்படும் பொழுதே
1.“கடினம்…” என்று எண்ணி அந்தக் கல்வியை அவர் கற்க நேர்ந்தால்
2.அவர் எண்ணங்களிலும் கடுமை வந்துவிடும்
3.அவருடைய சிந்திக்கும் திறனும் வலு இழக்கப்படும்.

அவர் இன்ஜினியராக வரும் நிலையில்… “எப்படியோ” பாட நிலைகளை எண்ணி உயர்வுக்கு வந்தாலும்… அந்தப் பாட நிலைதான் அவருக்கு மீண்டும் மீண்டும் வரும். “மூலக்கூறுகளை அவர் அறிய முடியாது…”

ஆகவே அவரவர்கள் எடுத்த உணர்வு கொண்டு தான் அது இயக்கும்.

இதைப் போன்று யாம் கொடுக்கும் உபதேசங்கள் வாயிலாக அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம். உங்கள் உணர்வுடன் இணைந்து விட்டால் அந்த உணர்வை நீங்கள் நுகரும் போது… அறிவின் ஞானமாக வருகின்றது.

அது ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதற்குத்தான் ஒவ்வொரு குணங்கள் உருவாவதும்… அதனின் சிறப்பின் தன்மையை நினைவு கூறும் பொழுது அதனதன் கருக்களாக உங்களுக்குள் உருவாகின்றது.

1.ஞானிகளைப் பற்றிய நினைவின் தன்மை உங்களுக்குள் வருவதற்கு
2.ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் உடலுக்குள் இருக்கும் ஊனுக்குள் இதைப் பதிவாக்குகின்றோம்.

அந்தப் பதிவினை நினைவாக்கப்படும்பொழுது அவ்வப்பொழுது இந்த வாழ்க்கையில் வரும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.

யாம் பதிவாக்கியதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது வாழ்க்கையில் வரும் இருளை மாற்றச் செய்யும் சக்தியாக அது நிச்சயம் வரும்.

1.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை எப்போதுமே இணைத்துக் கொண்டு வந்தால்
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து நீங்கள் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

இல்லை என்றால் இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் மற்ற உணர்வுகள் வளர்ச்சி அடைந்தால் மீண்டும் இதனுடைய நிலைகள் இன்னொரு பிறவியைத் தான் உருவாக்கும்.

மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை…!

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் பாவத்தைத் தான் இன்று கட்டிக் கொண்டு வருகின்றோம் – ஈஸ்வரபட்டர்

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் பாவத்தைத் தான் இன்று கட்டிக் கொண்டு வருகின்றோம் – ஈஸ்வரபட்டர்

 

நம் பாட நிலையில் உடலில்லாத ஆத்மாவுடன் கூடிய ஆவிகளின் நற்செயல்கள்… தீமைகள்… இவற்றையே பல நிலைகளில் சொல்லி வருகின்றேன்.

1.வாழ்பவரின் நிலையைக் காட்டிலும்… அவர்களின் எண்ண சக்தியை
2.இவ்வாவிகளின் செயல்தான் இவ்வுலக நிலையையே நடத்திச் செல்லும் தன்மை கொண்டதாக உள்ளது.

இன்று புனித கங்கை என்ற நிலையில் காசிக்குச் சென்று நம் பாவங்களைக் கழிக்கப் பல மைல்களுக்கப்பால் இருந்தும் அப்புண்ணிய நதியில் நீராடி வந்தால் பாவங்கள் குறையும் என்ற எண்ணத்தில் பக்தி கொண்டு பல கஷ்டங்களுடன் பாவத்தைப் போக்க காசிக்குச் செல்கிறார்கள். அதே போல் இராமேஸ்வரம் என்று புண்ணிய ஸ்தலத்தையும் நாடி மக்கள் செல்கிறார்கள்.

அக்காசி கோவிலில் உள்ள அத் தபசு ரிஷியான காசி விஸ்வநாதரின் அருளைப் பெற்றிட அப்புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்கின்றார்கள்.

ஆனால் அங்கும் நடக்கும் நிலை என்ன…?

அப்புண்ணிய ஸ்தலத்தில் வாழும் மக்களின் எண்ணமெல்லாம் புண்ணியாத்மாக்களாக புண்ணிய பூமியாக்கிடவா செயல்கள் நடக்கின்றன…?

பாவத்தைக் கழிக்கும் இடமாக எண்ணிச் சென்று புண்ணியத்தை வாங்கியா வருகின்றார்கள்…? கொலையும் கொள்ளையும் மலிந்து அப்புனித கங்கையில் புனித நீரைக் குருதி நீராக்கிக் கலக்க விட்டுள்ளார்கள்.

பல மைல்களுக்கப்பால் இறந்தோரை எல்லாம் அவ்வுடல்களை இக்கங்கையில் செலுத்தினால் “இறந்தவருக்குப் புண்ணியம்…” என்ற நிலையில் இந்நிலையில் கொண்டு வந்து விடுகின்றார்கள்.

பாவத்தின் பிறப்பிடமாக இன்று உள்ளது புனித கங்கையும் காசியின் திருத்தலமும். அங்கு செயற்கொண்டு இருக்கும் ஆண்டவனின் அஜ்ஜோதி மகான் இன்றும் அங்கு தான் உள்ளார்.

அனைத்துப் பாவங்களையும் அவரும் பார்த்துக் கொண்டே தான் உள்ளார். எண்ணத்திற்குகந்த அருளைத்தான் அவர் அளிக்கின்றார். பாவத்திற்கு அவர் என்ன செய்ய முடியும்…?

1.பாவத்தின் எண்ணம் கொண்டவன் அவன் செய்யும் பாவங்களின் அணுவையே மீண்டும் மீண்டும் தன்னுள் ஏற்றிக்கொண்டு
2.எப்பாவத்திற்கும் துணிந்தவனாகப் பல பாவங்களுக்கு உகந்தவனாகத் தன்னை ஏற்படுத்திக் கொண்டு
3.அப்புண்ணியக் கரையிலேயே பலர் இன்று வாழ்கிறார்கள்.

ஏன் அவ்வாண்டவன் இவர்களுக்கு நல்வழி புகட்டக் கூடாதா…? என்று கேட்பவர் பலர். ஆண்டவன் நிலையையும் ஆவியின் நிலையையும்தான் நாம் பிரித்துப் பிரித்துப் பல நிலைகளில் சொல்லியுள்ளோம்.

1.எண்ணத்தின் பேய்க்கு அடிமைப்பட்டவனை எவ்வாண்டவனும் வந்து நல்வழியில் செலுத்திட முடியாது
2.அவன் உடலைவிட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
3.அவ்வாத்மாவின் நிலை அடையும் அதிகாட்டத்திலிருந்துதான் அவன் உணர்ந்திட முடியும்.

அந்நிலையில் வாழ்ந்தவனுக்கு உணரும் தன்மையும் உடலை விட்டு ஆத்மா பிரிந்த பிறகும் அறிந்திட முடியாது. நரகலோகம் என்னும் அதி அவஸ்தை கொண்ட அழுகும் ஆவியாகத்தான் மிகவும் அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

அவ்வாவி பிறப்பெடுத்தாலும் நாயாகவும் அதற்கும் ஈன நிலையில் உள்ள மற்ற ஜெந்துக்களின் நிலைக்குத்தான் வந்திட முடியும்.

வாழும் காலத்தில் வாழ்க்கையின் சுகம் என்ற நிலையில் பல சுமைகளை ஏற்றிக் கொண்டு வஞ்சகம் குரோதம் ஆத்திரம் வெறி காமம் இப்படி பல வெறி கொண்ட நிலையை வாழ்க்கையின் சுகமாக எண்ணி வாழ்ந்து என்ன பயன்…?

வாழும் காலம் ஒரு மனிதனுக்கு 60, 70 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதில்லை. இக் குறுகிய காலத்தின் ஆசைக்குத் தன் ஆத்மாவை அடிபணிய வைத்து வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

அழிவில்லா இவ்வாத்மா மனித வாழ்க்கையில் வாழும் காலம் மிகவும் குறுகிய காலம். என்றுமே அழியாத ஆத்மாவை இம்மனித உடலில் உள்ள பொழுதினில் மட்டும் தான் கரை சேர்த்து என்றும் அல்லல் இல்லா வாழ்க்கை பெறும் சூட்சுமம் கொண்ட வாழ்க்கைக்குச் செல்லும் பொக்கிஷம் இம்மனித வாழ்க்கையில்தான் உண்டு.

1.அறியாமல் செய்திடும் பிழைதான் இன்று வாழும் வாழ்க்கை நிலை
2.கரை சேர்ந்திடும் நிலைக்கு நம்மைப் பக்குவப்படுத்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் பல மனிதர்களுக்கு இல்லை.

அன்று நம் முன்னோர் புண்ணிய ஸ்தலமாக்கி ஆண்டவன் சக்தி பெற்றுப் பல கோவில்களை அமைத்து நமக்கு வழிகாட்டிட ஏற்படுத்திய நிலையை எல்லாம் இன்று நாம் நம் வேடிக்கைக்காகவும் உல்லாசப் பயணங்களுக்காகவும் பொழுது போக்கும் நிலைக்காகவும் நமக்கு உகந்த ஆசைப்படி எல்லாம் ஏற்படுத்தி விட்டோம்.

அதனால் இன்று அந்தப் புண்ணிய ஸ்தலங்களும் பல புண்ணிய நதிகளும்
1.ஆவிகளின் அட்டுழியங்கள் நடக்கும் நிலையாக மாறி
2.இன்று புண்ணியம் வாங்கச் செல்பவர்களின் உடல்களில் எல்லாம் பல உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
3.அடங்கா ஆசையுடன் உள்ள ஆவிகள்தான் உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
4.தன் ஆசைக்குகந்த செயல்களையும் நடத்துகின்றன.

தன் செயலின் நிலை ஈடுபடுத்தாவிட்டாலும் அவ்வுடலில் இருந்து வெளிவர முடியாத நிலையில் பல உடல்களை இவ்வாவிகளினால் அவ்வாவிகளின் உந்தலுக்கு உட்படுத்திவிட்டன.

1.நாம் செல்வது புண்ணியம் வாங்க…
2.அப்புண்ணிய ஸ்தலத்தில் உள்ள இவ்வெண்ண மூச்சுக்கள் எல்லாம் நாம் சென்றதும் நம் எண்ணத்தில் கலந்து (நம் சுவாசத்தில்)
3.நம்மையே நம் செயலில் செயல்படாத நிலை ஏற்டுத்தி விடுகின்றன.

புண்ணிய ஸ்தலத்திற்குச் சென்று “பாவ மூட்டையைத்தான் சுமந்து வருகின்றோம்…!” இன்றைய நிலை இது தான்…!

ஏதிரி என்றும் எதிர்நிலை என்றும் நமக்குள் வளர விடக் கூடாது

ஏதிரி என்றும் எதிர்நிலை என்றும் நமக்குள் வளர விடக் கூடாது

 

1.மனிதனின் வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே மறைமுகமாகத் தீங்குகள் எப்படி விளைகிறது…?
2.நம்மை அறியாமல் தீமைகள் எப்படி விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகள் எப்படித் தூண்டுகின்றது…?
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிகளுக்கும் தூண்டப்பட்டு இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…? என்று
5.இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் நமக்கு அடிக்கடி தொந்தரவு செய்கிறார் என்று எண்ணுகின்றோம். அவ்வாறு எண்ணும் பொழுது அந்த உணர்வு
1.நம் உடலுக்குள்ளும் இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.அதே சமயத்தில் எதிரிகளின் உடல்களிலும் இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது
3.நாம் வெறுக்கும் உணர்வுகளைத் தூண்டுகின்றோம்… அங்கேயும் வெறுக்கும் உணர்ச்சிகளைத் தான் தோற்றுவிக்கின்றது.

ஆகவே அதனதன் உணர்வுக்கு அது அது போராடும். அங்கேயும் அதனதன் உணர்வுக்காகப் போராடும்.
1.எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்
2.அங்கேயும் எதிரிகளை வளர்த்திடும் சக்தியே வருகின்றது.

ஆனால் இதை எல்லாம் வென்றவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக உள்ளான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சக்தியைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் நாரதனாக இயக்கத் தொடங்குகிறது. நாரதனாக நமக்குள் வந்தபின்… “நாம் எதைப் பிடிவாதமாக வைத்திருக்கிறோமோ…” அந்த உணர்வைத் தணிக்கச் செய்கிறது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை வலுப்படுத்திக் கொண்டு அங்கே யார் மீது வெறுப்படைந்தோமோ நம் கண்ணின் நினைவலைகளை அவர் பால் செலுத்தப்படும் பொழுது
1.நமது கண்கள்… (அதாவது) கண்ணனும் அந்த நாரதனுக்குண்டான நிலைகளை இங்கே சொல்லி
2.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது
3.எதிரியின் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அந்த “நாரதன் வேலையைச் செய்வான்…”

நம்முடைய உணர்வுகள் அங்கே பகைமையாக்கும் உணர்வாக முதலிலே சென்றது. அடுத்து இந்த அருள் ஞானியின் உணர்வுகள் அங்கே சென்றபின் அங்கே சற்று சிந்திக்கச் செய்யும் சக்தி வருகின்றது.

1.நாரதன் கண்ணனிடம் (கண்கள் வழி) இவ்வாறு செயலாக்கிய பின்
2.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
3.கண்களுக்கும் நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு செய்கிறது…? என்று
4.வியாசகர் எவ்வளவு தெளிவாக எழுதி இருக்கிறார் என்ற நிலையை நாம் தெரிந்து கொண்டால் போதும்

எப்போதுமே “எதிரிகளை…” எதிரிகள் என்று எண்ணாதபடி… அந்த எதிரியின் உணர்வு நமக்குள் வளராதபடி முதலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் துருவ தியானத்தில் கொடுக்கப்படும் சக்தி கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை நீங்கள் வளர்க்க வளர்க்க… அதே சமயத்தில் யார் நமக்குத் தீங்கு செய்கின்றார்களோ…
1.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும் என்றும்
2.தவறு செய்ததை அவர் சிந்திக்கும் தன்மை வரவேண்டும் என்றும்
3.இந்த உணர்வினை நமக்குள் பதிவாக்கிக் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அதாவது… “அவர் எனக்குத் தீங்கு செய்தார்…” என்ற அந்த உணர்வை நமக்குள் வளர்த்து நம்மை பலவீனப்படுத்துவதற்குப் பதில்
1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து
2.அந்த உணர்வினைக் கண் கொண்டு செலுத்தப்படும் போது நாரதனாக அங்கே செல்லும்.

அங்கே சென்ற பின் அவர் செய்த தீங்கினையும் அங்கே வெளிப்படுத்திக் காட்டும். அப்போது நம் மீது வரக்கூடிய உணர்வுகளைப் பலவீனப்படுத்துகின்றது.

இதைப் போன்று அடிக்கடி அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் எண்ணங்கள் கொண்டு நம் இரத்தநாளங்களில் பெருக்கப்படும் போது தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர்கின்றது.

இதற்கு முன்னாடி அறியாமல் நாம் எடுத்துக் கொண்ட சலிப்போ சங்கடமோ சஞ்சலமோ வெறுப்போ வேதனை போன்ற உணர்வுகளால்… இரத்த நாளங்களில் உருப்பெற்ற இந்தக் கருக்கள் அனைத்தும் அடைகாத்து அணுவாக ஆன பின் நம் உறுப்புகளில் தீங்கு விளைவிக்கச் செய்கின்றது.

அதைத் தடுக்கத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள்ம் இதைக் கருக்களாக உருவாக்கப்படும் போது இரத்த நாளங்களில் இது பெருகுகின்றது.

1.ஏனென்றால் உடலுக்குள் இரத்தம் போகாத இடமே இல்லை
2.அருள் உணர்வுகளை இப்படி எண்ணி எடுத்துக் கொண்டால்
3.பாதுகாப்பான நிலைகளுக்கு நம்மை அழைத்துச் சென்று பகைமை உருவாகாதபடி தடுக்கும்.

அதைத் தான் காட்டிலே “இராமனுக்குக் குகன் உதவி செய்கிறான்…” என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. (இராமன் – எண்ணங்கள்; குகன் – இரத்தநாளங்கள்)

நம்முள் ஈஸ்வரனே உள்ளான் என்பதை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்

நம்முள் ஈஸ்வரனே உள்ளான் என்பதை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்

 

நமக்கு வழி காட்டிய நம் முன்னோரும்… நம்மில் கலந்து வாழ்ந்த சப்தரிஷி நிலை பெற்றவர்கள் முதற்கொண்டு இயற்கையின் நிலையைத்தான் போற்றி வழி நடந்து வந்தார்கள்.

இன்றும் அவர்களின் செயல் பல ரூபத்தில் செயல் கொண்டு வழி நடத்தியும் வருகின்றார்கள். எந்நிலையில்…?

இன்று நீங்கள் பல இடங்களில் அகஸ்தியர் நாடி போகர் நாடி பிருகு மகரிஷியின் நாடி இன்னும் இப்படிப் பல நிலை கொண்ட நாடிகள் சில இடங்களில் உள்ளதாக அந்நிலைக்குச் சென்று அதை ஒதுபவர்களின் வாயிலாக அறிந்து வருகிறீர்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்நாடிக்கும் இன்றைய நிலைக்கும் பெயர் நாமம் முதற்கொண்டு ஒத்து வரும் தன்மை என்ன…?

அந்நாடியை ஓதுபவரின் ஜெபமும் எண்ணமும்… எப்பெரியோரின் நாடியைத் தெய்வ நிலை கொண்டு ஜெபம் கொண்டு அவர் ஏற்கும் பக்தி நெறியின் நிலைக்கு… அந்நாடியை எழுதிய பெரியோரை… அதை வணங்கி ஓதுபவரின் சப்த அலையுடன் வந்து கலந்து… ஓதச் செய்வதுதான் அந்நாடியில் உள்ள நிலை.

இன்று படிப்பவரின் அறிவுக்கு எட்டாத இன்றைய கல்வித் திறனும் அதை எழுதி வைத்த காலத்தின் கல்வித் திறனும் மிகவும் வேறுபட்ட நிலையில் இருக்கும் நிலை கொண்டு இன்று ஓதுபவருக்கு அச்சொல்லின் நயமும் அழகும் அவரால் ஈர்த்துப் படித்திடவும் முடியாது.

சில குறிப்புகள் மட்டும் இவரால் அறிந்திட முடியும். அந்நிலையில் வந்து சொல்வதெல்லாம் அந்நாடிகளை எழுதியவர்களே தான் வந்து உணர்த்துகிறார்கள்.

காமாட்சி நாடி மீனாட்சி நாடி என்றெல்லாம் சொல்லும் நிலையிலும் அந்நிலையிலுள்ள சித்து நிலை கொண்ட காமாட்சி அம்மனும் மீனாட்சி அம்மனுமே வந்து இவர்கள் நிலையில் உணர்த்துவதுதான்.

சிலருக்கு நாடியில் வந்ததை அதன் சொல்லிய வாக்குப்படி எந்நிலையில் நம்புகின்றார்களோ அந்நிலையின் பரிபூரண அருளாசி பெறுகின்றார்கள்.

நம்பிக்கையில் நடப்பதுதான் இவ்வுலகமே…!

நாடியில் கேட்டதையே மனச் சஞ்சலத்துடன் வளர விடுபவனுக்கு அனைத்து நிலைகளுமே தவறாகத்தான் நடந்திடும்.

ஆண்டவனே… ஆண்டவனே…! என்பது நாம் ஆண்டவனாக வணங்கும் பெரியோரின் நிலையையே சஞ்சலப்படுத்தும் நிலைதான் இவையெல்லாம்.

நம் பாட நிலையில் தான் ஆண்டவன் என்றால் யார்…? என்பதனைப் பல நிலைதனில் விளக்கியுள்ளோம். ஞான வழியின் பக்குவ நிலைக்கு நாம் பெறும் சொத்து தான் ஆண்டவனின் அருள் சொத்து.

ஆவி உலகின் சூழ்ச்சியினால் இவ்வுலக நிலையே தத்தளித்த நிலையில் உள்ளது. ஆவி உலகில் அல்லல்பட்டு…
1.பல செயல்களை அதி கஷ்டத்துடன் செயலாற்றும் பல நிலை கொண்ட ஆவிகளுடன் நாம் கலந்து வாழ்வதினால்
2.நம்மில் தியான நிலை கொண்ட செயலை வளரவிடுவது ஒன்றுதான் இன்று இவ்வுலகினில் உள்ள நிலையிலிருந்து நாம் தப்பும் வழி.

ஏனென்றால் இப்படர்ந்த உலகினில் நம் எண்ணத்தில் சிறு சலிப்புக்கும் கோபதாப குரோதத்திற்கும் இடம் அளித்திட்டாலும் இவ்வாவியின் நிலையிலிருந்து தப்புவது கடினம்.

நம்முள் உள்ள இறை சக்தியை உணர்ந்தே அவ் ஈஸ்வர ஜெபத்தை எந்நிலையிலும் நம் நினைவில் கொண்டிடல் வேண்டும்.

1.நம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடாமல்
2.ஒவ்வொருவரும் இதன் வழி பெற்று வாழ்ந்தால்தான்
3.இவ்வாவி உலகிலுள்ள ஜீவ ஆத்மாக்கள் அனைத்தின் செயலிலிருந்தும் நாம் தப்ப முடியும்.

பகைமை என்பது நல்லதா… கெட்டதா…!

பகைமை என்பது நல்லதா… கெட்டதா…!

 

பகைமை இல்லாது எதுவுமே நடப்பதில்லை.
1.ஒரு பகைமை என்று வந்து விட்டால்
2.“உஷார் தன்மை கொண்டு”
3.நல்லதைக் காக்கும் உணர்வை வளர்த்து விட வேண்டும்.

பகைமை உணர்வுகள் வந்தால் எனக்கு இப்படி நடக்கிறதே…! என்று எண்ணத்தை வளர்த்து விட்டால் அந்த உணர்வின் அணுக்கருக்கள் நமக்குள் வளர்ந்து நோயாகவும் மாறுகின்றது… நமது எண்ணங்களும் சீர் கெடுகின்றது.

அதை மாற்ற வேண்டுமென்றால் துருவ தியானத்தில் கொடுத்த ஆற்றலைp பருகி அதை வலுப் பெறச் செய்ய வேண்டும்.

எப்பொழுது நம் மனம் சோர்வடைகிறதோ அந்தச் சோர்வை நமக்குள் விடாதபடி தடைப்படுத்த ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருக வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இதைத் தான் கண்ணன் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது.

கர்ப்பமான தாயின் கருவிலே சிசு இருக்கப்படும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கருவிலே இந்த நினைவைச் செலுத்தினால் அந்த உணர்வின் தன்மை அங்கே குழந்தைக்குள் வளர்ச்சியடைகின்றது.

அதே போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைகின்றது. கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தான் நமக்குள் அணுவின் தன்மையாக உருவாகின்றது.

அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கினாலும் அருள் மகரிஷிகளின் அருள் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி எண்ணி அந்த உணர்வினை உயிருடன் ஒன்றி மீண்டும் உடலுக்குள் செலுத்தும் போது
1.இரத்த நாளங்களில் அந்தக் கருக்கள் உருவாக வேண்டும் என்றும்
2.அது எங்கள் உடல் முழுவதும் பரவி உடல் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்றும்
3.வெறும் வாயால் சொல்லக் கூடாது.
4.இந்த நினைவினை உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அது பெற வேண்டுமென்று நினைவினை “உள் பாய்ச்ச வேண்டும்…” (3 & 4 முக்கியம்)

வெளியிலேயே பார்க்கும் பொழுது வேண்டாதவர்கள் யாராவது இருந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் “எனக்கு இப்படிச் செய்தார்கள்…” என்று எண்ணினால் போதும்.

இந்த நினைவலைகள்… கண்ணின் நினைவாற்றல்…
1.அவர் உடலில் நம் உணர்வுகள் பதிவாகி இருப்பதால்
2.அங்கே (அதைப்) போய் உடனே தாக்கச் செய்யும் (EARTH).

எப்படி இராக்கெட்டை விண்ணில் செலுத்தி அதனுடன் தொடர்பு கொண்ட நிலையில் இங்கே தரையிலிருந்து இயக்குகின்றனரோ இதைப் போல “வேண்டாதவர்களை எண்ணும் பொழுது…”
1.உடனே அவர்களை அது இயக்குகின்றது.
2.அவர் செயலாக்கங்களை இடைமறிக்கின்றது
3.அவருக்கு இடையூறு வருகின்றது
4.அந்த அணுக்களின் தன்மை அங்கே வளர்ச்சி பெறுகின்றது… அதன் வழி அங்கே தடைப்படுத்துகின்றது.

இதைப் போன்றுதான் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்து விட்டால் இந்த நினைவு உடனே அங்கே செல்கின்றது. இது நமக்குள் இங்கே வலுப்பெறுகின்றது. வேண்டாதவர் என்ற நிலையில் அவர் உணர்வின் சக்தியைத் தடைபடுத்துகிறது.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அருள் ஒளியை நமக்குள் பெருக்கப் பெருக்க… நமகு யார் தீமை செய்தாலும் “என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்…” என்று எண்ணினால் போதும்.

நாம் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள்…
1.அவர்கள் நமக்குத் தீமை எண்ணும் பொழுதெல்லாம்
2.சிறுகச் சிறுக சிறுகச் சிறுக அவர்களுக்குள் இது ஊடுருவப்பட்டு
3.அங்கிருக்கும் நமக்குத் தீமை செய்யும் அணுக்களைத் தணியச் செய்யும்.

இது போன்ற நிலைகள் வளர்ந்து விட்டால் தீமையான அணுக்கள் நமக்குள் வளராது… நமக்கு நோய் வராது… நம் காரியங்களைத் தடைத்தும் நிலைகளும் வராது.

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மனிதன் தனக்குள் இருக்கும் ஆற்றல்களை ஆக்கபூர்வமான காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மனிதன் தனக்குள் இருக்கும் ஆற்றல்களை ஆக்கபூர்வமான காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

அச்சு ஒன்று பதித்து உருவம் ஒன்று ஆவதில்லை. எந்த விதையைப் போடுகின்றோமோ அந்தச் செடிதான் வளரும்.

நம் எண்ணத்தை எந்த நிலையில் செயல்படுத்துகின்றோமோ அந்த நிலையின் தொடரின் வழி நிலையின் வாழ்க்கைதான் வந்தமையும் நமக்கெல்லாம்.
1.எண்ணப்படிதான் வாழ்க்கை…
2.உன் எண்ணம் போல் வாழ்ந்திடு…! என்ற பெரியோரின் வாழ்த்தைத்தான் நாம் பெறுகின்றோம்.

ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் பல குழந்தைகளின் குண நிலை ஒன்று போல் இருப்பதில்லை. குண நிலை மட்டுமல்ல மன நிலையும் ஒவ்வோர் உடலுக்கும் ஒவ்வொரு வித மனம் உண்டு.

இப்பூமியில் உதித்த ஜீவன் பெற்ற அனைத்திற்குமே ஒவ்வொரு மணம் உண்டு. மணத்தைப் போலவே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலை உண்டு.

ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் அவரவர்கள் எந்நிலை கொண்ட குண நிலையையும் சக்தி நிலையையும் வளர்த்துக் கொள்கின்றார்களோ அந்நிலையின் வளர்ச்சிக்கு அந்நிலைக்கு ஒத்த குண நிலைகளில் உள்ள ஆவி உலகிலுள்ள ஆத்மாக்களின் தொடர்பு நிலையும் இவர்களுக்கு வந்தடைகின்றது.

இன்று இந்நிலத்தில் நீர் எங்குள்ளது..? எந்நிலையில் ஊற்று நிலை உண்டு…? என்பதனையறிய சிலரின் உடல் நிலையிலேயே அச்சக்தி நிலையுண்டு.

அவர் உடலிலேயே அச்சக்தி நிலையும் அந்நிலைக்கு ஒத்த அவர் நிலையில் உள்ள மற்ற ஆத்மாவின் தொடர்பும் அவர் உடலில் இருந்தால் தான் நீர் உள்ள நிலைகளைக் கண்டறிந்திட முடிந்திடும்.

நம் முன்னோரின் வழியில் வந்தது தான் இந்நிலையின் வழி. இவை போலவே இப்பூமியில் உள்ள உலோக நிலையையும் கண்டறியலாம்.

இவ்வுடலில் இப்பூமி எச்சக்தியெல்லாம் எடுத்து வெளிப்படுத்துகின்றதோ அந்நிலைக்குகந்த சக்தி நம் உடல்களிலும் உள்ளது. இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் கலந்துள்ளன.

எப்படி இப்பூமியில் பல நிலை கொண்ட உலோகங்கள் வளர்கின்றனவோ அந்நிலைபோல் ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் பல நிலைகள் கொண்ட சக்தி நிலைகள் உண்டு.

நமக்குகந்த சக்தி நிலையை வளர விட்டு அவற்றின் நிலையை அறிந்து அதன் வழிக்குச் செல்லும் பக்குவ நிலை புரியாமல் வாழ்கின்றோம்.

இன்று பல இடங்களில் மனோவசிய நிலை (மெஸ்மரிஸம்) என்னும் நிலையைச் சிலர் அறிந்து ஒருவரது நிலை அனைத்தையும் கட்டுப்படுத்தி இவர்கள் எச்சக்தியைப் பாய்ச்சுகின்றார்களோ அச்சக்தியின் நிலை கொண்டெல்லாம் மனோவசியத்திற்கு உட்பட்டவர் நடப்பதாகப் பார்த்தும் கேட்டும் இருப்பீர்.

இவற்றின் நிலையென்ன…?

அறிந்து… கல்வி அறிவில் வந்த நிலை என்பர் பலரும். கல்வி அறிவில் மட்டும் வந்த நிலையல்ல அந்நிலை.

அவர்கள் நிலையும் இன்று பல நிலை கொண்ட சாமியார்கள் மந்திரம் செய்து பல பொருட்களை விபூதி புஷ்பம் இப்படிச் செய்யும் நிலைக்கும் இம்மனோவசியம் செய்யும் நிலைக்கும் ஒத்த நிலைதான்.

ஆவியின் தொடர்பு கொண்டு மனோவசியத்தால் யாரை அந்நிலைக்கு வசியப்படுத்துகிறார்களோ அவர்களின் எண்ணத்துடன் இவ்வாவியின் எண்ண அலையும் சப்த அலையும் கலக்கவிட்டு வசியப்பட்டவரின் நிலையை அடக்கி இவர்கள் ஏவிய ஆவியின் நிலைப்படியெல்லாம் அவ்வசியப்பட்டவர்கள் நடக்கும் நிலைதான் இம்மனோவசிய நிலை.

யார் இம்மனோவசியம் செய்கிறாரோ அவரது சொல்லும் அவரது எண்ணமும் இவ்வசியப்பட்டவரின் நினைவில் கலந்துள்ள ஆவியின் நிலைக்கும் தொடர்பு கொண்டு இவ்வசியப்படுத்தியவர் சொற்படியெல்லாம் அவ்வாவி அவ்வசியப்பட்டவரின் உடலில் இருந்து செயல்படுத்துகிறது.

1.அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழை இது
2.வசியப்பட்டவரின் சக்தியும் பாதிக்கப்படுகிறது
3.வசியம் செய்தவரின் சக்தியும் இதனால் பாதிக்கப்படுகிறது.

இதன் நிலையில் அடையும் நல் நிலை என்ன..? கால நிலையும் விரயமாகிறது.

ஆண்டவன் அருளிய சக்திதனை அன்பென்னும் பொக்கிஷமாக்கி அச்சக்தியான ஜெபத்தைக் கொண்டு பல உன்னத அறிவுச் செல்வத்தை நாம் பெற்று இவ்வுலகினைச் செழிப்பான உலகமாக்கி செழித்து வாழ்ந்திடும் இயற்கையின் செழிப்பிற்கு நம் சக்திதனை ஒன்றச் செய்தல் வேண்டும்.

அப்படிச் செய்தால் இவ்வுலகமே செழித்து…
1.இன்று இக்காற்றே கடும் விஷமாகச் சுற்றியுள்ள நிலையை மாற்றி
2.ஆனந்தமான மண நிலையைப் பரவச் செய்யத் தாவரங்களின் நிலையைத் துரிதப்படுத்தி… தாவரங்களை வளரச் செய்து
3.நற்கனிகளையும் நல் தானியங்களையும் நாம் பெற்றே
4.நற்சுவையுடன் நாம் உண்டே நல் மணத்துடன் நாம் வாழும் நிலை ஏற்படுத்திட முடியும்.

அதற்கு நாமெல்லாம் ஒன்றுபட்டு நம் சக்தியின் ஜெபத்தால் அந்த இயற்கைக்கே அடிபணிவோம்.

நம் உயிர் கொடுக்கும் தீர்ப்பு

நம் உயிர் கொடுக்கும் தீர்ப்பு

 

நம் உயிரை மதித்துப் பழகுதல் வேண்டும். காரணம்… நாம் எதை எண்ணுகின்றோமோ
1.அதைத்தான் இயக்குகின்றது
2.அதைத்தான் உடலாக்குகின்றது
3.அதைத் தான் ஆளுகின்றது.

அதை எண்ணும் பொழுது அதன் வழி வருகின்றது. உடலான மணமே நமக்குள் எண்ணமாகி இந்த எண்ணத்தின் உணர்ச்சியே நம் வாழ்க்கையின் செயலாகவும் மாறிக் கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இயக்கி அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய உலக நிலைகளில் இருக்கும் விஷத் தன்மைகளை நமக்குள் கவராது ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

பத்திரிக்கையைப் படித்தாலும் டி.வி.யைப் பார்த்தாலும் பிறருடைய குறைகளைக் கேட்டு அறிந்து கொண்டாலும் அந்த அறிந்து கொண்ட தீமைகள் நமக்குள் வளராது ஒவ்வொரு நொடிக்கும் நாம் மனத் தூய்மை செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.

அப்படிச் செய்தோம் என்றால்… நமது வாழ்க்கையில் இந்தக் கணக்கு கூடினால்…
1.அதற்குத் தக்க நமது உயிர் ஜட்ஜ்மெண்ட் கொடுக்கும்
2.பிறவியில்லா நிலையாக அடுத்த பிறவி இல்லை என்று உயிர் தீர்ப்பளிக்கும்.

அதிலே சிறிது தவறினால் உயிரான்மாவில் விஷத்தின் தன்மையே வலிமையாகும். அந்த உணர்வின் அடிப்படை நமக்குள் வளர்ந்து விட்டால் அதன் தீர்ப்பாக உயிர் மீண்டும் நம்மைப் பிறவிக் கடலில் அமிழ்த்திவிடும்.

மனிதனாக வரக்கூடிய காலம் எப்போது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இப்போது இருக்கக்கூடிய விஞ்ஞான உலகத்தில் மனிதன் இறந்தால் மீண்டும் மனிதனாக வருவதற்குப் பல காலமாகும்.

மனிதனே மிருக உணர்வு கொண்டு மாறும் நிலையாகிக் கொண்டிருக்கிறது.
1.பண்டைய கால மக்களோ தங்கள் அனுபவத்தால் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு வந்தார்கள்.
2.இன்றோ விஞ்ஞான அறிவால் கடும் விஷத்தின் தன்மையாக மாறி மனிதனல்லாத உருவையே உருவாக்கிடும் நிலை வளர்ந்து விட்டது.

ஆக விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் கூடிக்கொண்டே வந்தாலும் இந்த உடலை ஆனந்தப்படுத்துவதற்காக “இரவு நேரக் கேளிக்கைகள்” என்ற பேரில் எத்தனையோ தவறான பாதையில் மதுவையும் தன்னை மறந்து… அதிலே ஆனந்த நிலைகள் பெற வேண்டுமென்று நகரங்களில் ஆனந்தக் கூத்தாடும் நிலைகளாக வைத்து விட்டார்கள். அரசும் இதை அனுமதிக்கிறது.
1.இந்த உடலில் இது போன்று இன்று காணும் சொர்க்கம்
2.அடுத்து நம்மை நரகத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை மறந்து விட்டார்கள்.

இந்த உலகமே துரித நிலைகள் கொண்டு மனிதன் மிருகமாக மாறும் நிலை வருகிறது. இந்த பூமியே நிலை தடுமாறப் போகின்றது, தடுமாறி விட்டால் அதை உணரப் போவதில்லை.
1.இந்தத் தியானத்தில் வலுப்பெற்றால் அதையும் உணர முடியும்.
2.அதிலிருந்து விடுபடும் ஞானமும் நமக்குக் கிடைக்கும்.

உலகில் அணுகுண்டுகள் வெடிக்கத் தொடங்கினால் கதிர் இயக்கங்கள் மேக மண்டலங்களாக மாறி சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியிலே படாதபடி தடைப்படுத்தினால் பூமி பனிப்பாறையாக மாறிவிடும்.

இப்போது இருக்கும் பூமி தன் திசை மாறும்… நாம் எல்லாம் கடலுக்குள் போகும் நிலை வந்துவிடும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்போது இருந்தே அந்த அருள் உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் தான் தப்ப முடியும்.

அமாவாசை தினத்தின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

அமாவாசை தினத்தின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய ஒவ்வொரு வழியிலும் உள்ள உண்மையினை அறியாமல் நாம் அவற்றைக் குடும்பங்களில் வந்த குடும்பச் சடங்கு… சாங்கியம்… என்று வழிப்படுத்தி விட்டோம்.

1.அதன் நிலையில் மாறுபடும் பொழுது மனச் சஞ்சலம் கொண்டு
2.நாம் தெய்வக் குற்றம் செய்து விட்டோம்… பாவத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற பயந்த நிலையில்
3.இன்றும் பல குடும்பங்களில் பல நிலைகள் நடக்கின்றன.

பக்தி நிலை வளர்வதற்காக நம் முன்னோர்கள் பல வழிகளில் அவர்களின் சந்ததியார் வர வேண்டுமென்பதற்காகக் காட்டிச் சென்ற வழிதான் அந்தப் பல வழிகளும்.

1.அமாவாசை அன்று அவரவர்களின் முன்னோர்களை நினைத்து வணங்குவது…!
2.அமாவாசையில் வைத்தியம் செய்து கொண்டால் நற்பயன் அடையலாம்…!
3.அமாவாசையன்று எந்தக் நற்காரியங்களுக்கும் நல்ல நாள்…!
4.அமாவாசையன்று சேமித்து வைத்த தானியத்தைச் சூரியனின் ஒளி படும்படி வைத்தால் பல நாட்கள் அவற்றில் பூச்சி புழுக்கள் அண்டாது…!
5.அமாவாசையன்று தொழில்களுக்குச் செல்லலாகாது…! என்றெல்லாம்
6.பல நிலைகளை நமக்கு உணர்த்திச் சென்றார்கள் நம் முன்னோர்கள்..

அமாவாசையின் நிலையென்ன…?

அன்று நமக்கு இப்பூமியின் மேல் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் அனைத்தும் அப்படியே வந்து தாக்குகின்றன. தாக்கும் நிலை கொண்டு இப்பூமியும் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

அமாவாசையன்று கடல் பொங்குகின்றது என்கின்றோம். கடலும் பொங்குகிறது. அமாவாசையன்று மட்டும் கடல் நீர் அதிகரிப்பதன் நிலையென்ன…?

இப்பூமித்தாய் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையில் அதிசக்தி வெளிப்படுத்துகிறது. கடல் நீர் எப்படி பொங்குகிறதோ அதைப் போலத்தான் ஜீவராசிகளின் நிலையும் தாவரங்களின் நிலையும் பனிமலையின் நிலையும் எரிமலையின் நிலையும் மற்றுமுள்ள பல இவ்வுலகில் இப்பூமியிலிருந்து இப்பூமித்தாய் வளர்க்கும் அனைத்து ஜீவ நிலை கொண்ட யாவுமே அமாவாசை அன்று சூரியனிலிருந்து கிடைக்கும் சக்தியின் மாற்றத்தினால் இந்நிலை பெறுகின்றது.

மனிதர்களுக்கு அமாவாசையன்று உடல் கனம் தெரியும். ஒரு வித சோர்வும் என்றும் இல்லாத நிலையில் சிறு தளர்ச்சியும் ஏற்படும்.

நாம் அன்று சுவாசிக்கும் காற்றில் கனமான அணு நிலை கொண்ட சூரியனிலிருந்து வெளிப்படும் சக்தியின் துரிதத்தினால் அக்காற்றை நாம் சுவாசிப்பதினால் நம் உடல் நிலையில் மாற்றம் தெரிந்திடும்.

1.ஆரோக்கியமுடன் வாழ்பவர்க்கே இந்நிலை ஏற்படும் பொழுது
2.நலிவுற்றோரின் நிலைக்கு அவர்கள் எடுக்கும் சுவாசம் கனம் பெறுவதால்
3.அவர்களின் உடல் நிலைக்கு முதலில் இருந்த நிலைக்கும் அவ்வமாவாசை நாளுக்கும் முன்னேற்றத்தை விட நலிவுத் தன்மை கூடிவிடுகின்றது.

நம் முன்னோர்கள் அதிக நலிவுற்றோர்களைக் காணும் பொழுது அமாவாசை தாண்ட வேண்டும் என்று சொல்வதன் நிலையும் இதுதான்.

நலிவுற்ற நிலையில்… இக்கனமான சுவாச நிலையை நலிவுற்றோர் ஈர்த்து சுவாசிப்பது கடினமாவதினால்தான் இந்நிலை நடக்கின்றது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் இவ்வமாவாசையன்று அவர்கள் மன நிலை அதிகமாக மாறுபடும் நிலைக்கு வருகின்றது.

அமாவாசையன்று சந்திரனில் இருந்து நாம் பெறும் பல நிலைகள் நமக்குக் கிடைக்காமல் போகின்றது. நமக்கு எப்பொழுதும் பாதுகாப்பு போல் உள்ள சந்திரனின் அன்பான அரவணைப்பு இல்லாததினால் இந்நிலை ஏற்படுகின்றது.

விண் சென்ற முன்னோரைப் பக்தி கொண்டு நாம் வணங்கும் பொழுது நம் எண்ணம் அனைத்தும் அவர்களின்பால் பக்தி கொண்டு செல்வதினால் அவர்கள் காக்கும் நிலைக்கு நம்மை நாம் நிலைப்படுத்துகின்றோம்.

அப்பொழுது நமக்கு அமாவாசையன்று கனமான சுவாசத்தை ஈர்த்துச் சுவாசித்தாலும் அந்நிலையில் அவர்களின் ஆசி பெறுவதினால் இந்நிலையில் சோர்வு நமக்குத் தெரிவதில்லை.

அமாவாசையன்று நம் முன்னோர் விரதம் இருக்கும் நிலை ஏற்படுத்தியது எந்த நிலையில்…?

நாம் எடுக்கும் சுவாசத்திலேயே அமாவாசை தினத்தில் பல சக்திகள் அதிகரித்து ஏற்பதினால் இவ்வுடல் நிலைக்கு அன்று பசியின் நிலையும் குறைவு.
1.அதன் நிலையை அறிந்துதான் நம் முன்னோர்கள் “விரதம்” என்னும் பக்தி நிலையை
2.அந்நிலையில் காட்டி நமக்கு வழிப்படுத்தித் தந்தார்கள்.

எந்த ஒரு சிறிய நிலையையும் நம் முன்னோர்கள் நமக்குப் பக்தி நிலையிலேயேதான் உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

ஆண்டவன் என்ற பக்தி நிலை ஒன்றினால் மட்டும்தான்… என்றும் இவ்வுலக மக்களின் நிலையை நல்வழிப்படுத்திட முடியும் என்ற உண்மை நிலையில் தான்… பல நிலைகள் கொண்ட செயல்களையெல்லாம் நமக்கு உணர்த்திச் சென்றார்கள். பல ஏடு நிலைகளில் எழுதி வைத்தும் சென்றுள்ளார்கள்.

எந்நிலையிலும் நம்பிக்கை என்ற ஆண்டவனை நம்பினால் அனைத்து சக்திகளின் ஆண்டவனையே ஆண்டவனின் அருளையே அந்நம்பிக்கையில் நாம் பெறலாம்.

நல்லோரின் வாயிலிருந்து வரும் சொற்கள் எல்லாமே ஆண்டவனின் நாமச் சொற்கள் என்ற நம்பிக்கையுடன்
1.நாம் நம் முன்னோரையும் நம் பெரியோர்களின் வாழ்த்தையும்
2.நம்பிக்கையுடன் ஆண்டவனின் சொற்களாக நம்பி வரம் பெற்றால் நடப்பவை யாவும் நல் நிலைகளாக நடந்திடும்.

நம் முன்னோரையும்.. நம்மில் பெரியோரையும்… அவர்கள் ஆசி பெற நாம் வணங்குவது ஆண்டவனின் அருள் சொற்களை அவர்களின் நிலையில் இருந்து பெறுகின்றோம் என்ற நம்பிக்கையில் நலம் பெறப் “பெரியோர்களின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்…!”

அகஸ்தியன் சென்ற ஞானப் பாதையிலேயே நாமும் செல்ல வேண்டும்

அகஸ்தியன் சென்ற ஞானப் பாதையிலேயே நாமும் செல்ல வேண்டும்

 

குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானிகளின் ஞான வித்தை உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். அதைக் கூர்ந்து பதிவாக்கினாலே போதுமானது.

ஞானிகளின் அருளாற்றலைப் பெறக்கூடிய தகுதியாக யாம் உபதேசிக்கும் இந்த அருள் உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கரு வளர்ச்சியாகி பின் அணுக்களாகப் பெருகும்.

முதலில் கரு என்பது முட்டை. பின் யாம் பதிவு செய்த உணர்வின் தன்மையை நீங்கள் மீண்டும் எண்ண எண்ண அந்த அணுக்கள் வளர்ச்சி அடைந்து விடுகின்றது.

1.கோழி தான் இட்ட முட்டைகளை எப்படி அடைகாக்கின்றதோ
2.அதனின் உணர்வின் தன்மை உடலில் வெப்பம் ஆகின்றதோ
3.அதன்பின் அந்த அணுவின் தன்மை வெப்பத்தின் துடிப்பு கொண்டு
4.கருவின் துணை கொண்டு அது குஞ்சுகளாக விளைகின்றது.

குஞ்சுகள் வெளி வந்த பின் தாய்க் கோழி எந்த உணவினை உட்கொண்டதோ அதே உணவைக் குஞ்சுகளும் உட்கொள்ளத் தொடங்குகிறது.

அதே போன்றுதான் இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்கள் இரத்தங்களில் கருவாக உருவாகின்றது.
1.அதனை மீண்டும் நினைவு கூற கூற முட்டையின் வளர்ச்சி பெறுகின்றது
2.சாமி சொன்னார்… என்று அடிக்கடி எண்ணும் பொழுது அதை அடை காத்தது போல் ஆகின்றது.

கோழி எங்கே இரை தேடிச் சென்றாலும் தன் குஞ்சின் நினைவு கொண்டு தன் முட்டைகளை எப்படி அடைகாக்கின்றதோ அதைப் போன்று
1.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி உங்களுக்குள் விளைய அடிக்கடி இந்த நினைவுகளை எடுத்து
2.நீங்கள் எத்தொழிலைச் செய்தாலும் இவ்வாறு எண்ணிப் பாருங்கள்.

முதலில் நாம் பதிவு செய்து கொண்ட அந்த உணர்வுகளை நினைவுபடுத்த நினைவுபடுத்த அதை அடைகாப்பது போன்று ஆகி ஞானிகளின் அரும் பெரும் சக்திகள் நமக்குள் விளைகின்றது.

கோழி இரை தேடும் பொழுது கூவி… தன் குஞ்சுகளைக் கூப்பிட்டு அதற்கு எப்படி இரை கொடுக்கின்றதோ இதைப் போல
1.யாம் பதிவு செய்த ஞான வித்து உங்களுக்குள் அந்த அணுவின் கருவாகி விட்டால்
2.இந்த உணர்ச்சியின் கிளர்ச்சிகள் இரத்த நாளங்களில் கிளம்பும்போது
3.உங்கள் உயிர் அந்த உணர்வின் ஒலிகளை வெளிப்படுத்தி
4.காற்றில் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
5.கண் வழியும்… காது வழியும்… உடல் வழியும்… சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் உங்களுக்குள் கொண்டு வந்து
6.சுவாசத்தின் மூலம் உடலுக்குள் பரவச் செய்து அந்தக் கருக்களை உருவாக்குகின்றது.

இந்த வழியில் நடந்து அதனின் வளர்ச்சி பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் “அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்லும்…”

மகரிஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் – ஈஸ்வரபட்டர்

மகரிஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் – ஈஸ்வரபட்டர் 

 

இவ்வுலக மக்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவர்கள் அறியாமலே அவர்களை இப்பேராசை என்னும் செயற்கைப் பேய் ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.

1.அன்றாண்ட அரசர்களின் ஆவேச உணர்ச்சிகள் அன்றைய மக்களின் எண்ணங்களிலெல்லாம் கலக்கவிட்டு
2.இன்றும் அதே வழி வழியாய் வந்த அவ்வாவேச நிலை கொண்ட உணர்ச்சியினால்
3.இவ்வுலக நிலையே செயற்கைக்கு அடிபணிந்து வாழும் நிலையில் உள்ளது.

இன்றுள்ள மனிதர்களில் பெரும்பாலோரின் எண்ணங்கள் பெரும் பேராசை கொண்ட பணத்திற்கு அடிமைப்பட்டு வாழும் நிலை தான்…! செல்வத்தை ஈட்ட எவ்வழியையும் நாடலாம் என்று தான் உள்ளார்கள்.

இவ்வுலகில் வாழப் பணச் செல்வம் ஒன்றைத்தான் பொக்கிஷத்தின் பொக்கிஷமாகக் கருதி… அதற்கே அடிமையாகி… இவ்வுலகத்தையே செயற்கையின் கோளமாக்க இந்நூற்றாண்டில் அறிவு வளர்ச்சி பெற்ற மனிதர்கள் இவ்வுலக நிலையை நடத்திச் செல்கின்றார்கள்.

ஆண்டவனையே பல ஜாதி நிலை கொண்டு பிரித்து வைத்துள்ளார்கள். ஜாதி என்னும் வழியை உண்டு பண்ணியவர்களும் அதன் வெறி நிலையில் இன்று தன்னைத் தானே தன் ஜாதிக்குத்தானே அடிமைப்பட்டு உழன்று வாழ்கின்றார்கள் என்று எண்ணுவதில்லை.

தன் ஜாதிக்குத் தான் மதிப்பளிப்பதாக எண்ணுகிறார்கள் அச் ஜாதிக்கு அடிமைப்பட்டவர்களெல்லாம்…!

இவ்வுலக நிலையை இவ்வரசர்கள் ஆண்ட காலம் முதல் இப்பொழுது அரசாட்சி நிலை கொண்டும் ஆட்சியில் உள்ளவர்கள் நடத்திடும் நாடகத்தினால் வந்த வினைச் செயல்தான் இன்று இவ்வுலக நிலையில் உள்ளன.

சூழ்ச்சியான நிலையில் பேராசையின் பேயை வளர விட்டுத்தான் இன்று இவ்வுலக நிலையே உள்ளது.

அனைவரின் எண்ணமும் ஒன்றுபட்டுச் செயல்படும் நிலையாகக் கூடி வரும் நிலையை ஏற்படுத்திட
1.இன்றுள்ள பல மத வழிகளில் உள்ள பெரியோர்கள் எல்லாம் ஒரு நிலைப்பட்டு
2.இவ்வுலக நிலையை இவ்வுலக மக்களின் எண்ண நிலையை ஒன்றுபடுத்திட
3.பக்தி என்னும் நிலையை வளரவிட்டு அன்பு பாசம் என்ற பிணைப்பு நிலையை மக்களின் எண்ணத்தில் சுழல விட்டு
4.இப்பேராசையிலிருந்து விடுபட்டு ஆசையான அமுதை ஊட்டி தெய்வீக நிலையில் ஈர்த்து
5.இன்றுள்ள மக்களின் ஜன நெருக்கத்தை மிகத் துரித நிலையில் பெருகும் நிலையைச் சமப்படுத்தி
6.தாவர வர்க்கங்களை ஓங்கச் செய்து இவ்வுலகை நிலைப்படுத்தும் தன்மைக்கு
7.பல நூறு வருடங்களுக்கு முன் நம்மைப் போல் இவ்வுலகினில் பிறந்து நமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்த
8.இவ்வுலகின் ஞானச்சுடரான மகரிஷி ஒருவர் எழுதி வைத்த பெரும் பொக்கிஷம் ஒன்று
9.அவரால் பாதுகாக்கப்பட்டு அந்நிலையிலேயே ஜெபம் கொண்டும் காத்துள்ளார்.

அவருக்கு ஜாதி மதம் ஒன்றுமில்லை. இன்று இவ்வுலகிலுள்ள சக்தியின் செல்வங்களான சக்தி பெற்ற நம் மக்களில் யாவரும் அறிந்திடலாம் அதை.

அவரவர்களின் நிலையில் நடக்கும் நிலை கொண்டு ஜெபத்தின் அருளைப் பெற்றால் அந்த ஞானச் சுடரின்… அம்மகரிஷியின் அருளைப் பெற்று… அவ்வுலகப் பொக்கிஷத்தை எடுத்து அனைவருக்கும் அதிலுள்ள உண்மையை உணரும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்திடலாம்.

இம்மதம் என்ற நிலையை மாறுபடுத்தி இன்று இவ்வுலக நிலையைக் காத்து ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனின் ஜோதிகளை…
1.பல ஞான நிலைகளை மக்களுக்கு உணர்த்திடும் நல் பெரியோர்கள் அனைவரும் ஒன்றுபட்டால்
2.இவ்வுலகில் உதித்த சக்தியின் செல்வக் குழந்தைகளை
3.இச்செயற்கையின் பேராசைப் பேயிலிருந்து விடுபடும் நிலைக்கு அழைத்திடலாம்.

இஜ்ஜாதி மதப் பேயின் வழி நடந்திடாமல் ஒன்றுபட்டுச் செயல் கொண்டு தன்னைத்தானே அடிமைப்பட்டு வாழும் நிலையிலிருந்து மீண்டு அருள் வழி நடந்திடுங்கள்.