நம்மைத் திட்டிக் கொண்டே இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது…?

நம்மைத் திட்டிக் கொண்டே இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது…?

 

நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் நினைவைச் செலுத்திவிட்டு உங்களைத் திட்டியவர்கள் அவர்கள் எங்களைப் பார்க்கும் பொழுது நல்ல சொல்லாகச் சொல்லும் ஆற்றல் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர்கள் எதையெல்லாம் பேசி எதையெல்லாம் உங்களுக்குச் சங்கடமாக எண்ணுகின்றனரோ அதே சமயம் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனரோ அது அவர்களுக்கு நடந்து
2.அவர்கள் உணரும் ஆற்றல் பெறட்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

இப்பொழுது உங்களை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னால் நாம் சுத்தமாக அதைக் கேட்டுக் கொண்டேயிருந்த பின்
1.திட்டியது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
2.எனக்கு அது வேண்டாம்…! என்று நாம் அவரிடம் சொல்லி விட்டால் அது நம்மைப் பாதிக்காது.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்து விட்டுத் திட்டியவரிடம் நீங்கள் எப்படி எப்படியெல்லாம் திட்டினீர்களோ அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம் என்று சிரித்த முகத்துடன் சொல்லுங்கள்.

அந்த உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காது.

நாம் ஆத்ம சுத்தி செய்து இவ்வாறு சொன்னவுடன் “ஆ…” என்று அவர்கள் இழுத்தால் போதும்.
1.அவர்கள் அறியாமல் செய்த தவறை
2.நாம் விட்ட மூச்சலைகள் அவருக்குள் ஊடுருவிச் சென்று அவர்கள் செய்த தவறை உணர்த்தும்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இதைப் போன்று குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ ஒவ்வொருவரும் தம்மையறியாத நிலைகளில் இப்படி அடிக்கடி பேசுகின்றனர். அவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துக்கள் அவர்கள் உடலில் வேலை செய்து விடுகின்றது. அதை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றாலும் முடியவில்லை.

ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் பார்க்கலாம். பையன் மேல் நாம் வெறுப்பாக இருப்போம். அவன் நல்லது செய்துவிட்டு வந்தாலும் கூட லேட்டாகி விட்டது என்கிற போது அவனை நினைத்தவுடன் “அவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கிறான்…” என்போம்.

பையன் ஒரு காரியத்திற்குப் போனால் லேட்டாகி அந்தக் காரியத்தை முடித்து விட்டு வருவான். ஜெயித்துவிட்டு வந்தால் கூட நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
1.அவன் சென்று வந்த காரியம் என்ன…? என்று கேட்டறியாதபடி
2.“அவன் இப்படித்தான் எப்பொழுது சென்றாலும் லேட்டாக வருவான்…!” என்று அவனைத் திட்டவும் பேசவும் ஏசவும் செய்வோம்.

அவன் உண்மையைச் சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மாட்டோம். “பொய் சொல்கின்றான்” என்ற எண்ணம் தான் தோன்றும். அதைக் கேட்டறிவதற்குத் தாமதமாகும்.

1.நாம் நல்லது நினைத்தாலும் கூட நம்மையறியாமல் அந்த உணர்வுகளை நிற்கச் செய்யும்.
2.அந்த உணர்வின் தன்மை அவனைக் கெட்டவனாக மாற்றச் செய்யும்.

இதைப் போன்று ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவர்பால் கெடுதலான எண்ணங்களை வைத்து விட்டால் அந்த உணர்வின் பார்வையிலே பேசும் பொழுது நாம் எத்தனை நல்லது செய்தாலும் அந்த எண்ணங்களுக்குத் தப்பாகத்தான் தெரியும்.

ஆகையினால இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.

நாம் ஆத்ம சுத்தி செய்து முடித்தவுடன் நம்மைத் திட்டியவர்கள் பேசிய முறைகள் செய்த முறைகள் அனைத்தையும் அவர்கள் உணர்ந்து அவர்களே அதை அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெறட்டும் என்ற இந்த உணர்வின் நிலைகளை நீங்கள் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்.

வாயிலே சொல்லிவிடாதீர்கள்… சொன்னால் வம்பு வந்துவிடும். உங்கள் எண்ணத்தால் வளர்க்கச் செய்யும் பொழுது அந்த உண்மையின் தன்மையை அவர்களும் அறியும் தன்மை வந்துவிடும்.

ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சோர்வோ மனச் சஞ்சலமோ வெறுப்போ அடைந்தால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதிக்காது. நாம் எடுக்கும் இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள் அறியாமையிலிருந்து மீட்க நமக்கு அந்தச் சக்தி உதவும்.

குடும்பத்திற்குள் இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.
1.மாமியாருக்கும் மருமகளுக்கும் பிடிக்காது.
2.மகனுக்கு அப்பாவைக் கூடப் பிடிக்காது.
3.அந்த அளவுக்கு இன்று பெரும் பகுதி ஆகிவிட்டது.
4.இன்றைக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த நிலைதான்.

நம் உணர்வலைகள் மாறாமல் இருப்பதற்கு, ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

யாம் “வெறும் வார்த்தையிலே சொல்கிறோம்…” என்று எண்ணி விடாதீர்கள்.
1.உங்களுக்குள் வரக்கூடிய எத்தகைய துன்பத்தையும் போக்குவதற்கு
2.ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகக் கொடுத்து உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

ஒவ்வொரு குணத்திலும்… உணர்விலும்… செயலிலும்… துருவ நட்சத்திரத்தை இணைக்க வேண்டும்

ஒவ்வொரு குணத்திலும்… உணர்விலும்… செயலிலும்… துருவ நட்சத்திரத்தை இணைக்க வேண்டும்

 

வீட்டில் ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்து விட்டால் “ஈஸ்வரா…” (நமது உயிரை) என்று சொல்லுங்கள். அந்த உணர்வை மாற்றுங்கள். என் பிள்ளை ஞானியாக வேண்டும். அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும், உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள் என்றால் உடனே “ஈஸ்வரா…” என்று எண்ணி அதைத் தடுத்து விடுங்கள். அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் செய்வது யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெற வேண்டும். அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள். இவ்வாறு நாம் எண்ணும் பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

ஏனென்றால்
1.“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தும் போது
2.நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் இரத்தத்தில் கலந்து செல்லும்… இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது.
3.அப்பொழுது நம்மை எவர் திட்டினாரோ இது கொஞ்சம் கொஞ்சமாக அங்கே போய்ச் சேரும்… அவர் திருந்தும் நிலை வரும்.

அவன் எடுத்துக் கொண்ட உணர்வு திருந்த எண்ணினால் வருகின்றது. ஆனால் நம்மைத் திட்டும்போது நம் உடலுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

இதே மாதிரி வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும்…
1.ஒவ்வொரு குணங்களிலும்
2.ஒவ்வொரு உணர்விலும்
3.ஒவ்வொரு செயல்களிலும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.

பல விதமான குழம்பு வைக்கிறோம்… பல விதமான பலகாரம் செய்கின்றோம். இதே மாதிரி நமக்குள் அந்தத் தீமை செய்யும் உணர்வை மாற்றிச் சுவை மிக்கதாக மாற்றி விடுகிறோம். இப்படி நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது நம் உடலிலுள்ள அணுக்களுக்கு எல்லாம் சேர்கின்றது.

கொஞ்சம் இதில் பொறுமை தேவை.

ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால் ரோட்டில் போகும் பொழுது பார்த்தால் “போகின்றான் பார்…” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.

இதே மாதிரி ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்க்கின்றோம். பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அவன் உணர்வை எடுத்துத் தவறு செய்யும் அணுக்களைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

ஒருவன் சாபம் விடுகின்றான்… அவனைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம். அவன் எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். சாப அலைகள் என்று நமக்குள் எதை எடுத்தாலும் அந்தத் தீமை செய்யும் அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றது.

1.அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் அந்தக் கணமே
2.“ஈஸ்வரா…” என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் வாழ்க்கையில் இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு செய்து… அந்தத் தீமையான உணர்வுகளை “நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து வெளியே தள்ளிப் பழக வேண்டும்…” எமது அருளாசிகள்.

தியானத்தில் வளர்ச்சி பெற்றோர் அவசியம் தெரிய வேண்டியது

தியானத்தில் வளர்ச்சி பெற்றோர் அவசியம் தெரிய வேண்டியது

 

நாம் குரு காட்டிய வழியில் தியானத்தைக் கடைப்பிடித்து வாழ்கின்றோம். அப்படிச் சீராகக் கடைப்பிடிக்கும் பொழுது பிறருடைய கஷ்டமான உணர்வுகளைப் பிரித்துக் காட்டும்.

1.மகரிஷிகள் உணர்வை எடுத்து அதை நமக்குள் நீக்கிய பின் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டி விட்டோம் என்றால்
2.வாழ்க்கையில் தீமைகள் வராதபடி தடுத்துக் கொள்ளலாம்.

இதை நீக்காமல் இருந்துவிட்டு இந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டால் அதுவும் இதுவும் கலந்திருக்கும். இந்த ஆன்மாவில் உள்ளதை நாம் சுவாசித்தவுடன் உயிரில் கலக்கும்.
1.இரவில் புலனடங்கித் தூங்கும் போது இதெல்லாம் காட்சிப் பொருளாகவும் கெட்ட கனவுகளாகவும் வரும்.
2.இதைப் புரிந்து கொண்டோம் என்றால் நன்றாக இருக்கும்

ஒரு வெளிச்சத்தைப் போட்டு அதிலே எந்தக் கலர் சுற்றுகின்றோமோ அது தான் தெரியும். அது போல அறிவின் ஞானத்தை ஊட்டி இந்த உணர்வின் தன்மை வரப்படும் போது அந்த உணர்வு தான் நமக்குத் தெரியும்.

அப்பொழுது பிறருடைய குறைகளை உணர முடியும். “இப்படி நடக்கின்றது… அவருக்கு இடையூறு வருகின்றது” என்று தெரியும்.

பிறர் தவறு செய்திருப்பார்கள். அவருடைய இன்னலான நிலைகள் தெரிய வந்திருக்கும். எனக்குக் காட்சி கிடைத்தது. அவரைப் பார்த்தேன். இந்த மாதிரிக் கஷ்டமாக வந்துவிட்டது.. எனக்கு முதலிலேயே தெரிந்தது என்று சொல்வோம்.

ஏனென்றால அவருடைய தவறின் உணர்வுகளை அறிய முடிகின்றது. இதைத்தான் நாம் நுகர்ந்து சொல்கின்றோம். அப்பொழுது அந்த மாதிரி நேரங்களில் காட்சிகளைக் கொடுத்தவுடனே இதை எப்படிச் செய்ய வேண்டும்…?

1.அருள் வழியில் பற்றுடன் ஆத்ம சுத்தி செய்து விட்டோம் என்றால் ஒருவரது நிலைகளைச் சொன்னாலும்
2.அவர் நஞ்சு கொண்ட வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவில் கலக்காது.

ஆனால் இரவில் நம் வாழ்க்கையில் ஆத்ம சுத்தி செய்யாமலோ… அல்லது செய்திருந்தாலும் அந்த ஆத்ம சுத்தியில் குறை இருந்தாலோ என்ன ஆகும்…?

ஒரு பாத்திரத்தில் அழுக்கு சிறிது ஒட்டியிருந்தால் அது சீக்கிரம் போய் விடுகின்றது. அதோடு ஒன்றிய நிலைகள் இருக்கும் போது இரண்டு தரம் தேய்த்துக் கழுவினாலும் போகாது. இதே மாதிரி நம் ஆத்ம சுத்தியிலும் ஏற்படும். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் ஆத்ம சுத்தி செய்கிறேன்… “இப்படித் தெரிகிறதே…!” என்று ஏங்கக்கூடாது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.நாம் போகும் மார்க்கங்கள் மனிதனின் முழுமை அடையும் நிலைகள்
2.பிறருடைய இருளைப் போக்கும் தகுதி பெற்றவர்கள் நாம்.
3.அதனால் அந்தத் தகுதியை நமக்குள் வளர்த்துக் கொள்வது நல்லது.

மற்றவர்களுடைய தவறைக் கண்ணால் பார்க்கின்றோம். நமக்குள் பதிவு செய்து விடுகின்றோம். நாம் ஆத்ம சுத்தி என்ற வலு சேர்த்திருந்தாலும் அந்த நிமிடம்தான் அந்த வலு.

அதிலே துடைப்பு அதிகம் இருக்காது. தூங்கப்போகும் போது இது வந்துவிடும்.

வெறுப்பின் உணர்வுகள் இங்கு வரப்படும் பொழுது தூக்கம் வராது. என்னதான் ஆத்ம சுத்தி செய்தாலும் தூக்கம் வரவில்லை என்போம். ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கங்களே நமக்குள் இருக்கும்.

அப்பொழுது நாம் ஆத்ம சுத்தி செய்த பின்பும் அந்தக் கடினமான நிலைகள் விலகவில்லை என்று பொருள். இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.நம் நினைவைத் துருவ மகரிஷியோடு இணைக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தோடு சப்தரிஷி மண்டலத்தோடு இணைக்க வேண்டும்.
3.இதைக் கூட்டிக் கொண்டே இருந்தோமென்றால் அந்த உணர்வுகள் நமக்குள் வர வர இது ஒடுங்கும்.

இந்த ஆன்மாவைச் அது சுத்தப்படுத்தும்.

அதே சமயத்தில் நம் உடலில் நாம் கேட்டறிந்த தீமையான அணுக்களுக்குச் சாப்பாடு போய்ச் சேராது. நம் வாழ்க்கையில் தொடர்ந்து அதிலே இருக்க வேண்டும்.
1.நம் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்து இந்த உடலென்ற சட்டியில் சமைக்க வேண்டும்.

நாம் எந்தெந்தக் காய்களை குழம்பில் போட்டுச் சமைக்கின்றோமோ அந்த வாசனைதான் வரும். நாம் உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும் காரமோ உப்பின் தன்மையோ கூடிவிட்டால் அந்தக் குழம்பின் சுவை கெட்டுவிடும்.

இந்தக் குழம்பைப் போன்றுதான் நம் வாழ்க்கையின் நிலைகளில் எதைச் செயல்படுத்துகின்றோமோ அந்த மணம் நமக்குள் சுவை கொண்ட சொல்லாகவும் செயலாகவும் வரும். அந்தச் சுவை கொண்ட உணர்ச்சிகளைத் தூண்டும்.

குழம்பில் சிறிது வித்தியாசமாகிப் போய்விட்டது என்றால் உள்ளுக்குள் இழுக்காது. சுவை கெட்டுவிடும். ஆனால் உணவு எவ்வளவு சத்தான நிலைகளில் இருந்தாலும் உள்ளே ஏற்றுக் கொள்ளாது மறுக்கின்றது.

சாப்பாட்டில் அதிலே போட்டிருக்கின்ற மணம் தான் முலாம். மணத்தின் உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்படும் பொழுது உள்ளுக்குள் இழுக்காது. வெளியில் தள்ளி விடுகின்றது. ஆனால் பசி எடுக்கும். இந்த மணத்தை நுகரும் உணர்ச்சிகள் நம்மை இயக்கினால் தான் இது உள்ளே போகும்.

ஆகையால்
1.நாம் நமது வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழியில்
2.“மகரிஷிகளின் அருள் மணங்களை” ஒவ்வொரு நொடிப் பொழுதும் நுகர்ந்து பழக வேண்டும்.

சும்மா இருக்கும் பொழுது ஒருவரை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்றால் அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு திடீரென்று நினைவு ஓட்டம் ஓடும்,

ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன் அங்கு இருக்கும் பொருள் தெரிய வரும். அதைப் போல ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது அந்த உண்மைகளை நாம் உணர முடியும். தொழிலில் இருப்போம். இந்த உணர்வுகள் அங்கே பிரித்துக் காட்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்டவுடன்… உதாரணமாக எழுத்து வடிவிலே ஆங்கிலமோ தமிழோ கொடுக்கிறார்கள். அதனதன் அழுத்தத்தைக் கொடுத்தவுடன் மற்றதைப் பிரித்துக் காட்டுகின்றது.

இதைப் போல நமது உயிர் சூரியனின் காந்த சக்தி கவர்ந்த இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
1.அதனுடைய செறிவினுடைய அளவுகோல் எதுவோ அதற்குத் தகுந்த மாதிரி நம் உடலை இயக்குகின்றது.
2.அதன் அளவுகோல் எதுவோ அதற்குத்தகுந்த மாதிரி நமது உயிர் அந்தக் காந்தத்தை இழுக்கின்றது.
3.அதில் வந்த உணர்வின் அழுத்தம் எவ்வளவு இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
4.மாற்றிய உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது அதற்குத் தகுந்த அதிர்வுகளைக் கொடுத்து உடலை இயக்குகின்றது.
5.அதற்குத் தகுந்த சிந்தனைகளைக் கொடுத்து அதற்குண்டான செயல்களையும் செய்கின்றது.

இதைப் போலத்தான் நமக்குள் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உண்டு.

அது வெளிப்படும் பொழுது எந்தெந்த அளவுகோல் இருக்கின்றதோ அதற்குத் தக்கவாறுதான் புலனடங்கித் தூங்கும் பொழுது அதிலே இந்த வாழ்க்கையில் நாம் எந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்களின் உணர்ச்சிகள் அதிகமாகத் தூண்டும்… அது ஆன்மாவாக மாறும்.

இது இரண்டும் கலந்து உயிரிலே படும் பொழுதுதான் எலக்ட்ரானிக்காக மாற்றிப் பல நிலைகளை நாம் தெரிந்து கொள்கின்றோம்.
1.தியான வழிகளில் இது ரொம்பத் தெளிவாகத் தெரியும்.
2.தூக்கத்தில் இருந்தாலும் சும்மா படுத்திருந்தாலும் நாம் அமைதியாக இருக்கும் பொழுது
3.இந்த ஆன்மாவில் உள்ளபடி நம் மனநிலையில் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
4.அந்த மாதிரி நேரங்களில் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி ஆத்ம சுத்தி செய்து அகற்ற வேண்டும்.

இதுதான் ஆத்ம சுத்தியில் உள்ள மூலக்கூறு.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் முலாமாகப் பூச வேண்டும்

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் முலாமாகப் பூச வேண்டும்

 

தியானமிருந்து பழகிக் கொண்டவர்கள் கேட்டுணர்ந்தவர்கள் இந்த ஆத்ம சுத்தி என்ற நிலைகளில் செயல்பட வேண்டும். எப்பொழுது நாம் வீட்டை விட்டு வெளியில் போகும் பொழுதும் கண்டிப்பாக ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

உதாரணமாக நம்முடைய நண்பர் ஒருவர் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது நமது உடல் சுருங்குகின்றது. நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது.

அவ்வாறு அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அது உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள் கலந்து விடுகின்றது.

1.அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும் கூட
2.அவருடைய துன்பமான அந்த உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்பட்டு நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து செல்லும் போது
3.நமது (நுரையீரல்) சுவாசப்பை எடுக்கப்படும் பொழுது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது
4.அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உறுப்புகளிலும் முதலில் ஏற்படும்.
5.அந்த இரத்தத்தைச் சுத்தப்படுத்தப் போகும் போது கிட்னி சரியாகச் சுத்தப்படுத்தாது.
6.சுத்தப்படுத்தாமல் நம் உடல் முழுவதற்கும் இரத்தங்கள் செல்லும் பொழுது நமது உடலுக்குள் அது வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.
7.வேதனையான உணர்வுகள் செல்லும்போது நாம் எந்த நல்ல குணங்களைக் கொண்டு எடுத்தோமோ
8.அந்த நல்ல குணத்துடன் இது இரண்டறக் கலந்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு தொட்டியில் நீரை ஊற்றி ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு நீருக்குள் போட்டு விடுவார்கள். அதே சமயம் ஒரு செம்புக் கட்டியுடன் எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து அந்த நீருக்குள் போட்டு விடுவார்கள்.

1.செம்பில் எலக்ட்ரானிக்கை அதிகமாகக் கூட்டி தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும் பொழுது
2.தங்கத்திலிருக்கக்கூடிய சக்திகள் கரைந்து அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக் தங்கத்தைக் கவர்ந்து செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும்.

உள்ளே இருக்கக்கூடிய செம்பு கறுப்பதை விடுத்து இந்தத் தங்கத்தின் முலாமாக ஆகி அது தெளிவாகின்றது.

ஆனால் அதே சமயம்
1.தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்து செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்தால்
2.செம்பின் சக்தி தங்கத்திற்குள் முலாமாகப் பூசப்பட்டு செம்பு எப்படிக் கறுக்கின்றதோ அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.

உங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டு நீங்கள் ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து அது உடலுக்குள் செல்லும் போது நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ அந்த நல்ல குணத்தில் இது முலாம் பூசிவிடும்.

ஏனென்றால் நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும்
1.அவர் படும் துன்பத்தின் மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி… “உனக்கு எப்படி வந்தது…?” என்று கேட்கப்படும் போது
2.அந்த நல்ல உணர்வுகளுடன் அவரிடம் இருந்த நோயான உணர்வுகள் முலாம் பூசிவிடும்.

முதலில் நமக்குள் நல்ல உணர்வான நல்ல குணங்கள் நோயற்ற நிலையும் தெளிவான நிலைகளும் உடலில் தெம்பாக இருந்தது.

ஏனென்றால் தங்கம் எப்படி பளப்பளப்பாக இருந்ததோ அதைப் போல நமது தெளிவான எண்ணங்களினுடைய நிலைகளில் அவருடைய குணங்கள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலேயே இப்படிச் சோர்வின் தன்மை அடைந்து இது நாளாக நாளாக, நமக்குள் நோயாக வந்து சேர்ந்து விடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது.

நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம். அதைத் துடைக்க வேண்டுமல்லவா…?

செம்பும் வெள்ளியும் கலந்து ஒரு நகையைப் பற்ற வைக்கின்றோம். நெருப்பிலே காட்டும் போது தங்கம் இளகுவதற்கு நேரமாகும். ஆனால் செம்பையும் வெள்ளியையும் கலந்து கொஞ்சம் பொடியாக வைத்தபின் அது சீக்கிரம் உருகி விடுகின்றது. அதே சமயம் தங்கத்துடன் ஒட்டிக் கொள்கின்றது.

இதைப் போலத்தான்
1.ஒருவர் துன்பமான நிலையைச் சொல்லும் போது அது உடனடியாக நமக்குள் இயக்கச் சக்தியாகி
2.அந்தச் செம்பான நிலைகள் உருகுவது போல நமக்குள் அவருடைய கஷ்டமான நிலைகள் சீக்கிரம் வந்து நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றது.

தங்க நகை செய்யும் போது ஒட்ட வைத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் நகை ஆகின்றது.

இதைப் போல ஒரு மனிதனுக்குத் துன்பம் ஏற்படும் போது அதை மற்றவர்களிடம் சொல்லும் பொழுது நாம் கேட்டுணர்ந்துதான் ஆக வேண்டியதிருக்கிறது.

அவருக்கு வாழ்க்கையின் நிலைகளில் நாம் நன்மை செய்தால்தான் மனிதனின் நிலையும் ஆகும். நன்மையினுடைய நிலைகளை நாம் செய்தாலும் இந்த வாழ்க்கையில்
1.இன்று ஒருவருக்கு நாம் உதவி செய்தால்தான் நாளைக்கு நமக்கு ஒருவர் உதவி செய்வார்.
2.இன்று உதவி இல்லை என்று சொன்னால் அவர் நாளைக்கு நமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்.

அவருடைய துன்பத்தை நாம் கேட்டறியவில்லை என்றால் நம்முடைய துன்பத்தையும் அவர் கேட்டறிய மாட்டார். கேட்டறிந்தாலும் எப்படி நகை செய்யும் போது, செம்பும் வெள்ளியும் வைத்து நாம் பற்ற வைக்கின்றோமோ அதைப் போல வாழ்க்கையில் இந்தக் குறைகள் நிச்சயம் வரத்தான் செய்யும்.

ஆனால் இந்த வாழ்க்கை என்ற நிலைகளில் நாம் ஓட்டினாலும் அடுத்த நகை செய்யும் போது தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றி அதைச் சுத்தப்படுத்தி விட்டு அடுத்த நகையைச் செய்கின்றனர்.

அதைப் போல ஒரு நண்பன் அவருடைய கஷ்டத்தைச் சொல்லும் போது நாம் கேட்டறியும் போது அதைக் கேட்டுணர்ந்து அவருக்கு உதவி செய்து விடுகின்றோம்.

தங்கத்துடன் செம்பும் வெள்ளியும் சேர்ந்து கொண்டபின் எல்லாமே ஒன்றாகி விடுகிறது. அடிக்கடி இதே நகையை அழித்து அழித்துச் செய்யும்போது செம்பும் வெள்ளியும் அடிக்கடி சேர்ந்தால் என்னாகும்…?

அந்த செம்பின் தன்மை கூடித் தங்கத்தின் தன்மை குறைந்துவிடும்.

இதைப்போல நாம் அடிக்கடி கவலையையும், சஞ்சலத்தையும் கேட்டுக் கொண்டேயிருந்தால் நமக்குள் நல்ல குணம் எல்லாம் குறைந்து நமக்குள் அது நோயாக விளைந்து
1.நமக்குள் நல்ல குணமெல்லாம் கெடுவதோடு மட்டுமல்லாதபடி நல்ல உடலும் கெட்டு விடுகின்றது.
2.நமது நல்ல சொல்லும் கெட்டு விடுகின்றது… நமது சொல்லும்கூட நமக்கு வெறுப்பாகத் தோன்றும்.

கஷ்டமாக இருப்பவர்கள் பிறரிடம் போய்ச் சொல்லும் போது அந்த வேதனை கொண்டே சொல்வார்கள். எப்பொழுது பார்த்தாலும் நச்சு நச்சென்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் சொல்ல வந்தாலே நாம் ஓடுவோம். ஆனால் அந்தச் சங்கடமான உணர்வுகள் நோயாகவும் மாறிவிடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை கேட்டுணர்கிறோம். ஒவ்வொரு நிமிடத்திலும் பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம். அவருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம்… பார்க்கின்றோம்.

இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும் பொழுது அடிக்கடி நம்மையறியாமலேயே வேதனையும் துயரமும் பயமும் உங்களுக்குள் வந்து சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இதை எப்படிப் போக்கிக் கொள்வது…? ஏதாவது வழி இருக்கிறதா…?

அதற்குத்தான் அந்த ஞானிகள் சொன்ன அந்த உண்மையின் சக்தியை உங்களுக்குள் இந்நேரம் வரையிலும் யாம் உபதேசித்தது. கூட்டுத் தியானத்தில் எல்லோருடைய அருள் வாக்கும் யாம் மட்டுமல்ல… உங்கள் அனைவருடைய அருள் வாக்கும் சேர்க்கப்படும் பொழுதுதான் அந்த வலு கூடுகின்றது என்று நமது குருநாதர் சொன்னார்.

ஆத்ம சுத்தி என்ற அந்த ஆயுதத்தை எடுத்து
1.“ஓம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை வேண்டித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற ஏக்கத்துடன் நமக்குள் சேர்க்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் கண்களைத் திறந்து ஒரு நிமிடமும் கண்களை மூடி இரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கண்களைத் திறந்து கஷ்டப்படுபவர்களிடம் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கும்” என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்கவும் முடிகின்றது. நாம் அடுத்த நகை செய்யும் பொழுது, செம்பையும் வெள்ளியையும் சுத்தப்படுத்திக் கொள்வது போல அடுத்த நிமிடமே இதைச் சுத்தப்படுத்திக் கொண்டு நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுதான் தியானம் என்பது.

நமக்குள் தீயது சேராது தடுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு நமக்குள் தியானமிருக்க வேண்டும்..
1.தியானம் என்பது எது…? கெட்டது நமக்குள் சேர விடாது, வைராக்கியமான நிலைகள் பெற வேண்டும், இதுதான் தியானம் என்பது.
2.பக்தியில் நல்லதை நினைத்துக் கொண்டிரு என்பார்கள்.
3.ஆனால், தியானம் என்பது “நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை” வளர்த்துக் கொள்வது.
4.பக்தி என்பது நல்லதை நினைப்பது… தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்தி கொண்டு நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது.

ஆகவே… அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற ஒவ்வொரு நிமிடமும் தியானிப்போம்.

சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்

சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்

 

ஒரு நண்பன் நம்மிடம் துன்பம் என்று சொல்லும் பொழுது அதைக் கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர்வுகள் உங்களுக்குள் சேராத வண்ணம் தடுக்க வேண்டும்.

1.இரும்பைப் புடம் போட்டு எப்படிப் பஸ்பமாக்குகின்றோமோ
2.அதனின் வலுவான சத்தை இழக்கச் செய்யாமல் அதனின் ஆற்றலை ஆக்கச் சக்தியாக மாற்றுவது போல
3.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டறிந்த துன்ப உணர்வுகள் உங்களுக்குள் தீய விளைவுகளை உருவாக்காதபடி
4.இருளைப் போக்கி விஷத்தைப் புடமிட்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கிய மாமகரிஷிகளின் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் சேர்த்த உடனே
5.புடம் போட்டு எடுத்தது போன்று உங்களைப் பரிசுத்தப்படுத்துகின்றது.
6.நீங்கள் எண்ணிய பொழுதெல்லாம் அந்தச் சக்தியை பெற முடியும்.

ஆண்டனாக்களைச் சரியான முறையில் பொருத்தி வைத்த பின் வெகு தொலைவில் இருந்து வரும் அலைகளை டிவி கவர்ந்து தெளிவாகக் காட்டுகிறது.

அதைப் போன்று உங்கள் நினைவால் மகரிஷிகளை எண்ணி ஏங்கும் பொழுது அந்த உணர்வின் சக்தியை நீங்கள் கவர்ந்து நீங்கள் செய்த நன்மையின் சக்தியை “என்றுமே நிலைத்திருக்கச் செய்ய முடியும்…”

1.உங்களை அறியாது புகுந்த விஷத்தின் தன்மை அதனுடைய தீய விளைவுகளை இயக்காது உங்களுடன் ஒத்துழைத்து
2.மெய் உணர்வுகள் மெய் ஞானிகளின் அருள் உணர்வுடன் இயக்கச் செய்யும் நிலையே இந்த ஆத்ம சுத்தி.

ஆகவே ஒவ்வொருவரும் கெட்டதைக் கேட்டாலும் கெட்டதைப் பார்த்தாலும் கெட்டதை எண்ணினாலும் கெட்டதைப் பேசினாலும் அடுத்த கணமே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்துங்கள்.

1.ஒரு நிமிடம் கண்களிலே அவ்வாறு ஏங்கிப் பெறுவதும்
2.அதற்குப்பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒரு நிமிடம் உங்கள் உடலுக்குள் செலுத்தித் தியானிக்கும் போது
3.இதற்கு ஆத்ம சுத்தி என்று பெயர்.

வீட்டை விட்டு வெளியே எங்கு சென்றாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள்.

எந்தக் காரியத்திற்குச் செல்கின்றோமோ அவர்களை எண்ணி என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என் சொல் இனிமை பெற வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுது “நன்மை செய்யக்கூடிய எண்ணங்கள்” அவர்களுக்கு வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உங்கள் கடைக்குச் செல்கிறீர்கள் என்றால் ஆத்ம சுத்தி செய்து விட்டு என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.இதைப்போல் ஆத்ம சுத்தி செய்து அந்த உணர்வோடு கடையில் இருக்கும் பொருள்களைப் பார்த்து
2.இதைப் பயன்படுத்துவர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் மன வளமும் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணிக் கடை வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.

தொழில் செய்யும் இடத்திலும் அங்கே அமர்ந்து ஆத்ம சுத்தி செய்துவிட்டு நம்மிடம் வேலை செய்பவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் பார்வையால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் செய்யும் தொழிலைத் திறம்படச் செய்யும் சக்தியாகவும் என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும். என் சொல் அவர்களை இனிமை பெறச் செய்ய வேண்டும்… அவர்களைப் புனிதப்படுத்தும் செயலாக அமைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேல் அதிகாரிகளுக்கும் இதே போன்று எண்ணும் பொழுது என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என் செயல் அவரைப் போற்றும் நிலையாக வர வேண்டும். என் சொல் அவருக்கு இனிமை பெற வேண்டும் அவர் என்னைப் பார்க்கும் பொழுது நல்ல செயல்கள் செய்து தர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு நாம் தொழிலைச் செயல் படுத்த வேண்டும்.

நோயாளிகளைப் பார்த்தால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்… மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் நோய் நீங்கும் நலம் பெறுவீர்கள் என்ற இந்த வாக்கினை அங்கே பதிவு செய்யுங்கள்.

குழந்தைகள் செயலைப் பார்த்து வெறுப்பு வரும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி குழந்தைகள் பெற்று அதன் வழி அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்கும்
2.கல்வியில் சிறந்த குழந்தைகளாக வளர்வார்கள்
3.என் பார்வை அவர்களை அந்த நிலைக்கு உயர்த்தும் என்று எண்ணிச் செயல்படுத்துங்கள்.
4.இந்த உணர்வோடு குழந்தைகளிடம் பேச முற்படுங்கள்.

கணவனும் மனைவியும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒருவருக்கொருவர் பாய்ச்சுங்கள்.

பெண்கள் சமையல் செய்யும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு நான் சமைக்கும் ஆகாரம் அதை உணவாக உட்கொள்ளும் அனைவருக்கும் உடல் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும் என்று எண்ணிச் செயல்படுத்துங்கள்.

ஆகாரத்தைப் பரிமாறும் பொழுதும் நான் பரிமாறும் இந்த ஆகாரத்தை உட்கொள்ளும் அனைவரும் மன பலம் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பரிமாறுங்கள்.

சாப்பிடுபவர்களும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு நான் சாப்பிடும் ஆகாரம் என் உடலில் நலம் பெறும் சக்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியாக அது மலர வேண்டும் என்று எண்ணி உட்கொள்ளுங்கள்.

இரவிலே படுக்கச் செல்லும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு எதையெல்லாம் நல்லதாகப் பெற வேண்டுமா
1.உங்கள் உணர்வின் வட்டம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும்.
2.சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்.
3.என்றுமே அந்த உணர்வின் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று எண்ணிவிட்டுப் படுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் பொழுது ஆத்ம சுத்தி செய்து என் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும் என் சொல் கேட்போர் அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். என் பேச்சைக் கேட்போர் மெய் ஒளியாகப் படர வேண்டும் நாம் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் எண்ணி அந்த உணர்வோடு எழுந்து வேலைகளைச் செய்யுங்கள்.

நம்மிடம் பொருள் வாங்கிச் சென்றவர்கள் பாக்கியைத் திரும்பத் தரவில்லை என்றால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் வியாபாரம் செழித்து வளர வேண்டும் அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும் நமக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் பால் செலுத்துங்கள்.

இது போன்று வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைச் சந்தித்தாலும் கோபமோ வெறுப்போ வந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளராது தடுக்க ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

பின் யார் மேல் கோபமோ வெறுப்போ வருகின்றதோ என் பார்வை அவரை நல்லதாக வேண்டும் அவர் செயல்கள் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.ஆத்ம சுத்தி என்ற நிலையில் அடிக்கடி நாம் விண்ணை நோக்கி ஏங்கி வரும் பொழுது
2.இந்த வாழ்க்கையில் சப்தரிஷி மண்டல உணர்வுடன் நாம் கலக்கின்றோம்… அதை நம் உடலுக்குள் சேர்க்கின்றோம்.

நம் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் அந்த நோயை மறந்து விடுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும் உடல் நோய் நீங்க வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்னைப் பார்ப்பவர் எல்லாம் நலம் பெற வேண்டும் அந்தச் சக்தி எனக்குள் ஓங்கி வளர வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி என்றுமே என்னுள் நிலைத்திருக்க வேண்டும் நோய்கள் அனைத்தும் நீங்கிட வேண்டும் என்று எண்ணுங்கள்.

எந்த இடத்தில் உடலில் அந்தப் பாதிப்புகள் இருக்கின்றதோ அங்கே நினைவைச் செலுத்தி “நோய் நீங்க வேண்டும்… நீங்க வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் உடல் நலம் பெறும் சக்தியாக வளர்கின்றது
2.இப்பொழுது நான் நலம் பெற்று வருகிறேன்
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என் எண்ணங்கள் சுழல்கின்றது
4.என் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறுவேன்
4.என் உடலில் மகிழ்ச்சி பெறுவேன் என்று இது போன்று எண்ணங்களை அடிக்கடி எண்ணிப் பாருங்கள்.

இவ்வாறு நாம் எண்ணிக் கொடுப்பது அனைத்தையும் இந்த உயிர் படைக்கின்றது இயக்குகின்றது உடலாக்குகின்றது விளைய வைக்கின்றது… இந்த உணர்வையே தன்னுள் இணைத்துக் கொள்கின்றது. அதனுடைய வளர்ச்சியில் நம்மை ஒளிச் சரீரமாக நிலைக்கச் செய்கின்றது.

ஒவ்வொரு நிமிடமும் நாம் வெளிப்படுத்தும் இத்தகைய மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. இந்தக் காற்று மண்டலத்தில் அது பெருகுகின்றது. அனைவருக்கும் நன்மை பெறும் சக்தியாக அமைகின்றது.

இதைத் தொடர்ந்து செய்து வர சப்தரிஷி மண்டல அலைகள் நமக்குள் பெருகிக் கொண்டே வருகின்றது.

1.இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது வெளியில் செல்வோம் என்று தெரியாது.
2.ஆகவே உடலில் இருக்கும் பொழுதே நம் வாழ்க்கையைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டால்
3.இந்த நினைவுடனே நாம் அங்கே செல்ல முடியும்.

எனது சுயநலம்

எனது சுயநலம்

 

தங்கத்திலே செம்பும் பித்தளையும் வைத்து பற்ற வைத்துத் தான் நகையாகச் செய்கின்றோம். அதற்குப்பின் அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தை ஊற்றி அதைப் புடம் போட்டு நீக்கி விட்டு அதைச் சுத்தத் தங்கமாக்கி மீண்டும் நகை செய்கின்றோம்.

இதைப் போன்று
1.இந்த வாழ்க்கையில் கெட்டது எதைப் பார்த்தாலும் அந்த அழுக்குகளை நீக்கிவிட்டு அதைப் புடம் போட்டு
2.ஞானிகள் சக்தியை நமக்குள் போட்டு தீய விளைவுகளைப் புடம் போட்டு
3.மனிதனாகப் பிறந்த நாம் அந்த மகரிஷிகளின் வாழும் எல்லைக்குச் செல்ல வேண்டும்.

பௌர்ணமி முதலில் பிரகாசிக்கின்றது. அது போல் மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது. அடுத்து உடலை விட்டுச் சென்றபின் ஜீவன் போகின்றது… எல்லாம் மறைந்து விடுகின்றது.

அதற்கு பின் அந்த நிலவிலே சிறிதளவு வெளிச்சம் தெரியும். இந்த உயிரின் தன்மை வரும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் கூடிப் பௌர்ணமியாக வரும். இப்படித்தான் நாம் தேய்ந்து தேய்ந்து வளர்ச்சிக்கு வருகின்றோம்.

அது பௌர்ணமி ஆகி உயிர் ஒளியாக முழுமை பெறக்கூடிய நிலை எப்படி ஆனமோ எல்லாவற்றையும் தெரிந்து கொண்டோமோ அதை நிலையாக்கு.
1.நிலையான அவனின் உணர்வை எடு என்பதற்காக வேண்டித்தான் எனது குருநாதர் இதை எல்லாம் ஞாபகப்படுத்தி
2.எல்லோரும் அதைப் பெற வேண்டுமென்று எண்ணு… நீ அதுவாகு என்று சொன்னார்.

இது என் சுயநலம்.

நீங்கள் எல்லோரும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் அதுவாகின்றேன்… என்னுடைய சுயநலமாகின்றது…! என் குருநாதர் அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்.

மக்கள் அவர்களை அறியாது வந்த இருள்கள் மாய வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணினால் நீ அதுவாகின்றாய்.

ஆகையினால்
1.இந்தச் சக்தியை உனக்கு நான் கொடுக்கிறேன் என்றால் அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணு.
2.அவர்கள் மகிழ்வதைப் பார்த்து நீயும் மகிழ்ச்சியாக இரு.
3.அவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்து நீயும் சந்தோஷமாக இரு என்ற நிலையைத் தான் சொன்னார்.

இருந்தாலும்… சிலர் திடீரென்று என்னிடம் கேள்வியும் கேட்பார்கள். சாமி என்னைக் கோவிக்கின்றாரே… ஏன் என்று…?

காரணம் உங்கள் கஷ்டம் எனக்குள் வராதபடி நரசிம்ம அவதாரமாக வந்து விடுகின்றது.
1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று வானை நோக்கி எண்ணும் பொழுது
2.என் உடலுக்குள் அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் வந்து பாய்கின்றது.
3.அப்பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் வீரியமாகப் பார்த்தீர்கள் என்றால் அந்த நல்ல வாசனை வரும்.
4.நீங்கள் துன்பப்பட்டுச் சொல்லும் வார்த்தை இங்கே வராது.
5.டபார்…! என்று அதைப் பிளந்து விட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி ஊடுருவும்.

ஆகவே திடீரென்று யாம் உங்களைக் கோபித்தாலும் இந்த வார்த்தை உங்களுக்குள் போய் உங்கள் துன்ப அலைகளைப் போக்கிவிடும். இந்த உணர்வுகள் ஊடுருவிய பின் கவலையாகச் சொல்லக் கூடாது என்ற நினைப்பு வரும்.

அதற்காக வேண்டித் தான் “இந்த உணர்ச்சியைத் தூண்டும் நிலைகளாக வெளிப்படுத்துவது…”

பிறருடைய இருளை நமக்குச் சொந்தமாக்காமல் அருளை நமக்குச் சொந்தமாக்க வேண்டும்

பிறருடைய இருளை நமக்குச் சொந்தமாக்காமல் அருளை நமக்குச் சொந்தமாக்க வேண்டும்

 

சகஜ வாழ்க்கையில் நாம் என்ன செய்கின்றோம்..? எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவுக்குச் சென்று விடுகின்றோம்.

உடல் ஆசை… பிள்ளை இப்படிச் செய்கின்றான்… அவன் இப்படி இருக்கின்றான்… கடன் வாங்கியவன் ஏமாற்றுகிறான்… பணம் தரவில்லை…! என்று நினைவுகளை எல்லாம் பலவாறு இப்படி மாற்றி விட்டால் என்ன ஆகும்…?

ஆக… இத்தகைய நிலைகளை எண்ணினால் நமது உயிர் என்ன செய்யும்…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான்… பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் “பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…” என்று பாடுகின்றோம்.

காரணம்…
1.பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் நாம் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தாலும்
2.அந்த உணர்வை நாம் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.

உதாரணமாக… கருணைக்கிழங்கு என்றாலும் அதை வேக வைத்து அதில் உள்ள விஷத்தை நீக்குகின்றோம்… காரமாக இருக்கும் மிளகாயை மற்ற பொருள்களுடன் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோம். உப்பை மற்ற பொருள்களுடன் இணைத்துச் சுவையாக மாற்றுகின்றோம்.

இதைப் போன்று… இந்த வாழ்க்கையில் தீமை என்று வந்தாலும் அந்தத் தீமை நமக்குள் வளராதபடி அருள் ஒளி என்ற உணர்வைச் சேர்த்துப் பக்குவமான நிலைகள் கொண்டு வளர வேண்டும் என்று உணர்த்தி அனைவரும் நல்ல நிலைகள் அடைய வேண்டும் என்று எண்ணினால் பிறர் குறைகளோ துன்பங்களோ நமக்குள் வராது… நமக்கு நல்லதாக மாறும்.

ஒருவன் நமக்குக் கெடுதல் செய்கின்றான் இருந்தாலும் அந்தக் கெடுதலை எண்ணாமல் ஈஸ்வரா…! என்ற உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அவனை அறியாது இயக்கும் இருளிலிருந்து விடுபட்டுப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்தால் பரிபக்குவம் ஆகின்றது.

அவன் செய்யும் கெடுதல் நமக்குள் வராது.

அவன் ஏமாற்றுகின்றான் தொல்லை கொடுக்கின்றான் நம்மைக் கேவலப்படுத்துகின்றான் என்று இதை எண்ணி எடுத்தால் அது எல்லாம் நமக்குள் விளைகின்றது.

ஆனால்
1.ஏமாற்றுபவன் உண்மையை உணர வேண்டும் அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணினால்
2.நாம் எண்ணிய இந்த அந்த உணர்வு நமக்குள் சேர்ந்து நல்ல உணர்வாக “அத்தகைய அணுவாக…” உயிர் கருத்தன்மையை அடையச் செய்கின்றது.
3.நமக்குள் பக்குவம் பெறும் தன்மையும் தீமை விளையாது தடுக்கும் நிலையும் வருகிறது.

இந்தப் பக்குவ நிலையை நாம் பெற வேண்டும்.

ஆனால் அவன் தவறு செய்கிறான் என்றால் அவன் எதை எண்ணிச் செயல்படுத்துகின்றானோ… அந்த ஈசன் வீற்றிருக்கும் உடலான ஆலயத்திற்குள் அந்த உயிர் அதை உருவாக்கி “அதையே அவனை அனுபவிக்கும்படிச் செய்யும்…”

அவன் திருந்த வேண்டும் என்று நாம் எண்ணினால் அந்த உணர்வு நமக்குள்ளாகி அவன் தீமையாக எண்ணினாலும் “நம்முடைய உணர்வுகள் அவனைத் திருந்தும் வழியாக இயக்கும்…”

திருந்தாத நிலை இருந்தாலும்
1.அந்தக் கெடுதலான உணர்வுகள் அவனுக்குத் தான் சொந்தம்,,,
2.ஆனால் நமக்கு அருள் சொந்தமாகின்றது… அவனுக்கு இருள் சொந்தமாகின்றது.

ஆகையினால் பிறர் படும் உணர்வுகளையும் அந்த இருளான உணர்வுகளை நமக்குள் விடாதபடி நாம் அந்தப் பக்குவ நிலை பெற வேண்டும்.

பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.நம் உயிரான ஈசனிடமே அந்தப் பரிபக்குவ நிலை பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் அதையே உயிர் உருவாக்குகின்றது.
2.நம்மை அந்தப் பக்குவ நிலையைப் பெறச் செய்யும்.

கிரகணம்

கிரகணம்

 

இந்த வாழ்க்கையில் பிறிதொரு தீமையான உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு நம் ரத்தங்களிலே கலந்து விடுகின்றது.
1.அப்படிக் கலந்த உணர்வுகள் நம் நல்ல அணுக்களின் செயலை… அது நல்லதை நுகர விடாது தடுத்து விடுகின்றது.
2.அந்தத் தீமை பெறுகப் பெறுக நல்ல அணுக்களும் கெட்டதாக மாறத் தொடங்குகிறது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சிறுகச் சிறுகத் தெரிந்திடும் நிலையாக அனைத்தையும் தெரிந்திடும் நிலையாக மனிதனாக இப்பொழுது வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

அப்படி வந்தாலும் மனிதன் தன்னுடைய அன்பால் பண்பால் பரிவால் பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தால்… அந்தத் துயர உணர்வுகள் அனைத்துமே நம் ரத்த நாளங்களிலே கலந்து விஷத்தின் தன்மையாகி உடலில் உள்ள நல்ல அணுவின் செயலை மறைத்து விடுகின்றது.

சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டு வெளிச்சமாகத் தெரிந்தாலும் மற்ற மற்ற கோள்கள் அதை மறைக்கத் தொடங்குகிறது. பூரண நிலவாக இருப்பது பூமி மறைக்கத் தொடங்கியபின் சிறுக சிறு இருளாகின்றது. அதே சமயத்தில்
1.இன்னொரு கோளின் தன்மை மறைத்து சந்திரனின் ஒளி பூமிக்குக் கிடைக்காது இருக்கும் பொழுது அதைக் “கிரகணம்” என்று சொல்கின்றோம்.
2.இப்படி ஒரு கோளின் தன்மை இடைமறித்தால் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பெறாதபடி விஷத்தின் தன்மை கலந்து விடுகின்றது.

அத்தகைய கிரகண காலங்களில் அதை நாம் நேரடியாக உற்றுப் பார்த்தால் கண் கருவிழிகளில் விஷம் பாய்ந்து விடுகின்றது. அது பதிந்து விட்டால் கண்களில் கோளாறும் வருகின்றது.

அந்த விஷம் நுகரப்பாட்டு நம் ரத்தங்களிலே கலந்து அணுக்களிலும் சேர்ந்து கொள்கிறது. கிரகணம் அன்று அவ்வாறு சாப்பிட்டால் ஜீரணிக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

1.காரணம் இன்னொரு விஷமான கோளின் தன்மை மறைக்கப்படும் பொழுது
2.சந்திரனின் குளிர்ச்சி ஊட்டும் சக்தி அது நமக்குக் கிடைக்காதபடி தடுக்கப்படுகின்றது.

அது அந்த விஷமான கோள் மறைவாகும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை சந்திரனுடன் கலந்து நாம் பார்க்கப்படும் பொழுது சுவாசித்து உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது. நம்மை அறியாமல் விஷத்தன்மைகள் பாய்ந்து விடுகின்றது.

இது போன்று நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ கிரகணங்கள்… அதாவது மற்ற மனிதர்களின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது. அந்த உணர்வுகள் நம் ரத்தங்களிலே கலக்கக் கலக்க அது மாசுபடுகின்றது.

இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் ஞானிகள் எத்தனையோ வழிகளைக் காட்டி உள்ளார்கள்.

அகஸ்தியன்… அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு “நஞ்சினை வென்று விஷத்தை முறிக்கும் ஆற்றலாக வளர்ந்து” அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக உள்ளான்.

1.அதனின்று வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்து நம் இரத்தங்களில் அடிக்கடி கலக்கக்கச் செய்தோம் என்றால்
2.நம்மை அறியாது இப்படி உள் புகும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

உடல் உறுப்புகள் சீராக இயங்க அடிக்கடி ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

உடல் உறுப்புகள் சீராக இயங்க அடிக்கடி ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி சஞ்சலம் சலிப்பு சங்கடம் என்ற உணர்வுகளை நுகர நேர்ந்தால் ரத்தங்களில் அத்தகைய தீமைகள் அதிகரித்து விடுகின்றது. சலிப்பு சஞ்சலம் என்று வரும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

1.சிறிது நேரத்தில் புளிப்படைந்து உடல் வலு குறைந்து எண்ணங்கள் குறைந்து நமது செயலும் சீராகச் செயல்படுத்த முடியாது போய் விடுகின்றது.
2.புளிப்பின் தன்மை அதிகரிக்கும் பொழுது வாயுவின் தன்மை உருவாகி சோர்வடைகின்றோம்… சிந்திக்கும் தன்மையும் குறைகின்றது
3.தொழில் செய்ய வேண்டும் என்றாலோ மற்ற வேலை செய்ய வேண்டும் என்றாலோ ஒரு கணக்கைப் பார்க்க வேண்டும் என்றாலோ நம்மால் முடியாது போய் விடுகின்றது.

இப்படி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாதபடி உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினைப் பிரித்துப் பரிசுத்தமாக்கும் நிலையை ரத்தம் சுத்தமாவது இழந்து விடுகின்றது.

பாலில் சிறிதளவு உப்புப் பட்டால் எப்படிப் பிருத்து விடுகின்றதோ கெட்டுப் போய் விடுகின்றதோ இதைப் போல ரத்தங்களில் தீமையின் நிலைகள் அதிகரிக்க சுத்திகரிக்கும் சிறுநீரகங்கள் பாழடைந்து விடுகிறது.

அதே சமயத்தில் உணவுக்குள் கலந்து வரும் பித்த சுரபி விஷத்தின் தன்மையை அதிகரித்து விட்டால் வாந்தி மயக்கம் தலை சுற்றல் போன்று அதிகரித்து விடுகின்றது.

காரணம் விஷத்தைப் பிரிக்கும் நிலை இழந்து பித்தம் அதிகமாகி ரத்தத்துடன் அதிகமாகக் கலந்து விட்டால் மயக்கம் வருகின்றது.
1.பித்தத்தை உறிஞ்சும் அந்த உறுப்புகளுக்கு கவலை சோர்வு என்ற நிலை அதிகரிக்கப்படும் பொழுது
2.பித்த சுரப்பி சரியாக இயங்கும் நிலை குறைந்து விடுகின்றது. ரத்தங்கள் மாசுபடத் தொடங்குகிறது.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் வேதனை கோபம் வெறுப்பு ஆத்திரம் போன்ற உணர்வுகளை அடிக்கடி நுகர நேர்ந்தால் கல்லீரல் வீக்கம் அடைகின்றது. பல உணர்வுகளை வடித்துத் தெளிவாக்கும் விரிவாக்கம் தன்மை இழக்கப்படுகிறது.

இதே போன்று உடலில் உள்ள உறுப்புகளில் விஷத்தின் தன்மை அதிகரிக்கும் போது உடல் உறுப்புகள் சீராக இயங்காத நிலை ஆகிறது. நஞ்சினைப் பிரிக்கும் செயலை இழந்து விடுகின்றது.

அப்பொழுது நல்ல ஆகாரங்களை உட்கொண்டாலும் உயர்ந்த சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும்
1.அந்தச் சத்தை நஞ்சாகத்தான் மாற்றுகின்றதே தவிர அந்த சத்தினை உடலுக்குள் நல்லதாக மாற்றுவதில்லை.
2.காரணம் அதை ஜீரணிக்கும் திறன் கொண்ட நல்ல அமிலங்கள் இயங்கது போவதால் ஜீரணிக்கும் இயல்புகளை மாறி விடுகின்றது.
3.உடல் உறுப்புகள் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.

இதைப் போன்ற நிலைகள் வராது தடுக்க உடனுக்குடன் நாம ஆத்ம சுத்தி செய்ய வேன்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நிறுத்த வேண்டும். அடுத்து கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று “இப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட வேண்டும்…”

நம் உடல் உறுப்புகளை இப்படி வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் உடனே ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி
2.துருவ நட்சத்திர்த்தின் வலுவை ஏற்றித் தீமை உள்ளே போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

பிறருக்கு உதவி செய்தாலும்… அவரிடமிருந்து வரும் இருளான உணர்வுகள் நம்மை இயக்கி விடக் கூடாது

பிறருக்கு உதவி செய்தாலும்… அவரிடமிருந்து வரும் இருளான உணர்வுகள் நம்மை இயக்கி விடக் கூடாது

 

பெரும்பகுதியான மக்கள்… மகான்களை நேரடியாகச் சந்திக்கும் பொழுது தங்களுக்குப் பொருள் வேண்டும் செல்வம் வேண்டும் என்று தான் அணுகுகிறார்கள். மகான்கள் கூறும் உண்மையின் உணர்வைப் பெறுவதில்லை… அதைக் கடைப்பிடிப்பதில்லை.

தன் வாழ்க்கைத் தேவைக்குத் தான் மகான்களைச் சந்தித்தார்கள். தன் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்குமா…? என்று பார்க்கிறார்கள்.

இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது.

பிழைப்புக்குக் கிடைக்க வேண்டும் என்றாலும் ஞானம் இல்லை என்றால் அப்படி வந்த பணத்தைச் சீராகப் பாதுகாக்க முடியாது.
1.செல்வங்கள் வந்தாலும் அந்த ஞானம் இல்லை என்கிற பொழுது ஆசையினால் “கடைசியில் இப்படி ஆகிவிட்டதே…” என்று வந்துவிடும்.
2.காரணம் ஒன்று கிடைத்தாலும் கூட அந்த ஆசை அதோடு திருப்தி அடைவதில்லை.
3.இதைப் பெற்றால் பரவாயில்லை என்று முதலில் நினைப்போம்.
4.நன்றாக வந்தது என்று அதை வைத்து இன்னொன்றைப் பெருக்கலாம் என்று ஆசை வரும்.
5.அதில் நஷ்டமாகி விட்டால் வேதனை…!
6.வேதனை வந்தபின் முதலில் வந்து கொண்டிருந்ததும் போய் விடுகின்றது… அடுத்து வளர்வதும் போய் விடுகின்றது.
7.இரண்டும் சேர்த்து வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்து உடலில் நோயாக உருவாக்கத்தான் தயாராகின்றது.
8.நோயான பின்… “நான் இப்படி எல்லாம் செய்தேனே… நன்றாக முயற்சி செய்தேனே…” என்று சொல்வார்கள்.

பணம் அதிகமாக இருந்தால் தாராளமாகச் செலவழிப்பார்கள். பிறருக்கு உதவியும் செய்வார்கள். ஆனால் அந்தக் கஷ்டப்பட்டவர்கள் வேதனை எல்லாம் நுகர்ந்து விடுவார்கள். அதைத் துடைக்கத் தெரிவதில்லை.

நான் எல்லாம் செய்தேன்… ஆண்டவன் கடைசியில் என்னை இப்படி ஆக்கிவிட்டான்…! என்று புலம்புவார்கள்.

ஆலயங்களுக்குச் சென்றால் “தர்மம் செய்ய வேண்டும்… ஆண்டவன் அப்போது தான் மெச்சுவான்” என்று எல்லா மதங்களுமே சொல்லுகின்றது. அதன் வழி நாமும் தர்மம் செய்கின்றோம்.

ஆனால் அப்படிச் செய்யும் பொழுது என்ன நடக்கிறது…?

அவனோ பாவத்தின் எல்லையில் இருக்கின்றான்… தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
1.ஆனால் நம்மிடம் உதவி பெற்ற பின் ஆ…! “ஆஹா…!” இன்று அந்த ஆசையிலே அவன் உணர்ச்சிகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றான்.
2.அவனை உற்று நோக்கி அவன் ஏங்கிப் பெறும் உணர்வுகளை நாமும் நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.

நல்லது தான் செய்கின்றோம்… ஆனால் அவருடைய உணர்வுகள் இங்கே வந்து “அவனுடைய தரித்திரத்தை” இங்கே கொண்டு வந்து விடுகிறது. அதை நீக்கத் தெரிவதில்லை.

இதைப் போன்று பிறரது இருள் சூழும் உணர்வுகள் நமக்குள் வருவதைத் தூய்மைப்படுத்தாதபடி “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்” என்று தான் எண்ணுகின்றோம்.

ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன்…? நமது உயிர் தான்.

1.ஈகை பண்புடன் தான் உதவி செய்தோம்
2.ஆனால் அவருடைய இருள் சூழ்ந்த உணர்வுகள் இங்கே நமக்குள் விடுகின்றது.
3.அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.

உதாரணமாக எத்தனையோ உணவுப் பொருள்களைச் செய்கின்றோம் அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி மற்ற அசுத்தங்கள் படத்தான் செய்யும்.

அப்போது அதை மூடி வைக்க வேண்டும் அல்லவா.

மூடி வைக்காதபடி நான் நன்றாகத் தான் செய்தேன். அதிலே மண் தூசி எல்லாம் வந்து விட்டதே…! என்று சொன்னால் எப்படிச் சரியாகும்…?

இதைப் போன்று தான்
1.அந்தப் பாதுகாப்பு நிலை இல்லை என்றால் நம் ஆன்மாவில் மற்றவருடைய இருளான உணர்வுகள் புகுந்து
2.உடலுக்குள் அணுக்களாக விளைந்து கடும் விளைவுகளை உண்டாக்கி விடும்.

அதனால் தான் அடிக்கடி ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து ஞாபகப்படுத்துகின்றோம்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும் காரியத்தைச் செய்வதற்கு முன்பும் பின்பும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று இதை உடலுக்குள் வலுவாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

1.நம் பார்வை சொல் செயல் அனைத்தும் அந்த மகரிஷிகள் உணர்வின் தன்மையாகவே நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.எத்தகைய நிலையிலும் பிறரின் உணர்வு நம்மை இயக்கி விடக்கூடாது… அது உடலுக்குள் அணுக்களாக விளைந்து விடக்கூடாது.