கிரகணம்

கிரகணம்

 

இந்த வாழ்க்கையில் பிறிதொரு தீமையான உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு நம் ரத்தங்களிலே கலந்து விடுகின்றது.
1.அப்படிக் கலந்த உணர்வுகள் நம் நல்ல அணுக்களின் செயலை… அது நல்லதை நுகர விடாது தடுத்து விடுகின்றது.
2.அந்தத் தீமை பெறுகப் பெறுக நல்ல அணுக்களும் கெட்டதாக மாறத் தொடங்குகிறது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சிறுகச் சிறுகத் தெரிந்திடும் நிலையாக அனைத்தையும் தெரிந்திடும் நிலையாக மனிதனாக இப்பொழுது வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

அப்படி வந்தாலும் மனிதன் தன்னுடைய அன்பால் பண்பால் பரிவால் பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தால்… அந்தத் துயர உணர்வுகள் அனைத்துமே நம் ரத்த நாளங்களிலே கலந்து விஷத்தின் தன்மையாகி உடலில் உள்ள நல்ல அணுவின் செயலை மறைத்து விடுகின்றது.

சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டு வெளிச்சமாகத் தெரிந்தாலும் மற்ற மற்ற கோள்கள் அதை மறைக்கத் தொடங்குகிறது. பூரண நிலவாக இருப்பது பூமி மறைக்கத் தொடங்கியபின் சிறுக சிறு இருளாகின்றது. அதே சமயத்தில்
1.இன்னொரு கோளின் தன்மை மறைத்து சந்திரனின் ஒளி பூமிக்குக் கிடைக்காது இருக்கும் பொழுது அதைக் “கிரகணம்” என்று சொல்கின்றோம்.
2.இப்படி ஒரு கோளின் தன்மை இடைமறித்தால் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பெறாதபடி விஷத்தின் தன்மை கலந்து விடுகின்றது.

அத்தகைய கிரகண காலங்களில் அதை நாம் நேரடியாக உற்றுப் பார்த்தால் கண் கருவிழிகளில் விஷம் பாய்ந்து விடுகின்றது. அது பதிந்து விட்டால் கண்களில் கோளாறும் வருகின்றது.

அந்த விஷம் நுகரப்பாட்டு நம் ரத்தங்களிலே கலந்து அணுக்களிலும் சேர்ந்து கொள்கிறது. கிரகணம் அன்று அவ்வாறு சாப்பிட்டால் ஜீரணிக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

1.காரணம் இன்னொரு விஷமான கோளின் தன்மை மறைக்கப்படும் பொழுது
2.சந்திரனின் குளிர்ச்சி ஊட்டும் சக்தி அது நமக்குக் கிடைக்காதபடி தடுக்கப்படுகின்றது.

அது அந்த விஷமான கோள் மறைவாகும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை சந்திரனுடன் கலந்து நாம் பார்க்கப்படும் பொழுது சுவாசித்து உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது. நம்மை அறியாமல் விஷத்தன்மைகள் பாய்ந்து விடுகின்றது.

இது போன்று நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ கிரகணங்கள்… அதாவது மற்ற மனிதர்களின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது. அந்த உணர்வுகள் நம் ரத்தங்களிலே கலக்கக் கலக்க அது மாசுபடுகின்றது.

இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் ஞானிகள் எத்தனையோ வழிகளைக் காட்டி உள்ளார்கள்.

அகஸ்தியன்… அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு “நஞ்சினை வென்று விஷத்தை முறிக்கும் ஆற்றலாக வளர்ந்து” அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக உள்ளான்.

1.அதனின்று வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்து நம் இரத்தங்களில் அடிக்கடி கலக்கக்கச் செய்தோம் என்றால்
2.நம்மை அறியாது இப்படி உள் புகும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

உடல் உறுப்புகள் சீராக இயங்க அடிக்கடி ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

உடல் உறுப்புகள் சீராக இயங்க அடிக்கடி ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி சஞ்சலம் சலிப்பு சங்கடம் என்ற உணர்வுகளை நுகர நேர்ந்தால் ரத்தங்களில் அத்தகைய தீமைகள் அதிகரித்து விடுகின்றது. சலிப்பு சஞ்சலம் என்று வரும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

1.சிறிது நேரத்தில் புளிப்படைந்து உடல் வலு குறைந்து எண்ணங்கள் குறைந்து நமது செயலும் சீராகச் செயல்படுத்த முடியாது போய் விடுகின்றது.
2.புளிப்பின் தன்மை அதிகரிக்கும் பொழுது வாயுவின் தன்மை உருவாகி சோர்வடைகின்றோம்… சிந்திக்கும் தன்மையும் குறைகின்றது
3.தொழில் செய்ய வேண்டும் என்றாலோ மற்ற வேலை செய்ய வேண்டும் என்றாலோ ஒரு கணக்கைப் பார்க்க வேண்டும் என்றாலோ நம்மால் முடியாது போய் விடுகின்றது.

இப்படி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாதபடி உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினைப் பிரித்துப் பரிசுத்தமாக்கும் நிலையை ரத்தம் சுத்தமாவது இழந்து விடுகின்றது.

பாலில் சிறிதளவு உப்புப் பட்டால் எப்படிப் பிருத்து விடுகின்றதோ கெட்டுப் போய் விடுகின்றதோ இதைப் போல ரத்தங்களில் தீமையின் நிலைகள் அதிகரிக்க சுத்திகரிக்கும் சிறுநீரகங்கள் பாழடைந்து விடுகிறது.

அதே சமயத்தில் உணவுக்குள் கலந்து வரும் பித்த சுரபி விஷத்தின் தன்மையை அதிகரித்து விட்டால் வாந்தி மயக்கம் தலை சுற்றல் போன்று அதிகரித்து விடுகின்றது.

காரணம் விஷத்தைப் பிரிக்கும் நிலை இழந்து பித்தம் அதிகமாகி ரத்தத்துடன் அதிகமாகக் கலந்து விட்டால் மயக்கம் வருகின்றது.
1.பித்தத்தை உறிஞ்சும் அந்த உறுப்புகளுக்கு கவலை சோர்வு என்ற நிலை அதிகரிக்கப்படும் பொழுது
2.பித்த சுரப்பி சரியாக இயங்கும் நிலை குறைந்து விடுகின்றது. ரத்தங்கள் மாசுபடத் தொடங்குகிறது.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் வேதனை கோபம் வெறுப்பு ஆத்திரம் போன்ற உணர்வுகளை அடிக்கடி நுகர நேர்ந்தால் கல்லீரல் வீக்கம் அடைகின்றது. பல உணர்வுகளை வடித்துத் தெளிவாக்கும் விரிவாக்கம் தன்மை இழக்கப்படுகிறது.

இதே போன்று உடலில் உள்ள உறுப்புகளில் விஷத்தின் தன்மை அதிகரிக்கும் போது உடல் உறுப்புகள் சீராக இயங்காத நிலை ஆகிறது. நஞ்சினைப் பிரிக்கும் செயலை இழந்து விடுகின்றது.

அப்பொழுது நல்ல ஆகாரங்களை உட்கொண்டாலும் உயர்ந்த சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும்
1.அந்தச் சத்தை நஞ்சாகத்தான் மாற்றுகின்றதே தவிர அந்த சத்தினை உடலுக்குள் நல்லதாக மாற்றுவதில்லை.
2.காரணம் அதை ஜீரணிக்கும் திறன் கொண்ட நல்ல அமிலங்கள் இயங்கது போவதால் ஜீரணிக்கும் இயல்புகளை மாறி விடுகின்றது.
3.உடல் உறுப்புகள் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.

இதைப் போன்ற நிலைகள் வராது தடுக்க உடனுக்குடன் நாம ஆத்ம சுத்தி செய்ய வேன்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நிறுத்த வேண்டும். அடுத்து கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று “இப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட வேண்டும்…”

நம் உடல் உறுப்புகளை இப்படி வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் உடனே ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி
2.துருவ நட்சத்திர்த்தின் வலுவை ஏற்றித் தீமை உள்ளே போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

பிறருக்கு உதவி செய்தாலும்… அவரிடமிருந்து வரும் இருளான உணர்வுகள் நம்மை இயக்கி விடக் கூடாது

பிறருக்கு உதவி செய்தாலும்… அவரிடமிருந்து வரும் இருளான உணர்வுகள் நம்மை இயக்கி விடக் கூடாது

 

பெரும்பகுதியான மக்கள்… மகான்களை நேரடியாகச் சந்திக்கும் பொழுது தங்களுக்குப் பொருள் வேண்டும் செல்வம் வேண்டும் என்று தான் அணுகுகிறார்கள். மகான்கள் கூறும் உண்மையின் உணர்வைப் பெறுவதில்லை… அதைக் கடைப்பிடிப்பதில்லை.

தன் வாழ்க்கைத் தேவைக்குத் தான் மகான்களைச் சந்தித்தார்கள். தன் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்குமா…? என்று பார்க்கிறார்கள்.

இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது.

பிழைப்புக்குக் கிடைக்க வேண்டும் என்றாலும் ஞானம் இல்லை என்றால் அப்படி வந்த பணத்தைச் சீராகப் பாதுகாக்க முடியாது.
1.செல்வங்கள் வந்தாலும் அந்த ஞானம் இல்லை என்கிற பொழுது ஆசையினால் “கடைசியில் இப்படி ஆகிவிட்டதே…” என்று வந்துவிடும்.
2.காரணம் ஒன்று கிடைத்தாலும் கூட அந்த ஆசை அதோடு திருப்தி அடைவதில்லை.
3.இதைப் பெற்றால் பரவாயில்லை என்று முதலில் நினைப்போம்.
4.நன்றாக வந்தது என்று அதை வைத்து இன்னொன்றைப் பெருக்கலாம் என்று ஆசை வரும்.
5.அதில் நஷ்டமாகி விட்டால் வேதனை…!
6.வேதனை வந்தபின் முதலில் வந்து கொண்டிருந்ததும் போய் விடுகின்றது… அடுத்து வளர்வதும் போய் விடுகின்றது.
7.இரண்டும் சேர்த்து வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்து உடலில் நோயாக உருவாக்கத்தான் தயாராகின்றது.
8.நோயான பின்… “நான் இப்படி எல்லாம் செய்தேனே… நன்றாக முயற்சி செய்தேனே…” என்று சொல்வார்கள்.

பணம் அதிகமாக இருந்தால் தாராளமாகச் செலவழிப்பார்கள். பிறருக்கு உதவியும் செய்வார்கள். ஆனால் அந்தக் கஷ்டப்பட்டவர்கள் வேதனை எல்லாம் நுகர்ந்து விடுவார்கள். அதைத் துடைக்கத் தெரிவதில்லை.

நான் எல்லாம் செய்தேன்… ஆண்டவன் கடைசியில் என்னை இப்படி ஆக்கிவிட்டான்…! என்று புலம்புவார்கள்.

ஆலயங்களுக்குச் சென்றால் “தர்மம் செய்ய வேண்டும்… ஆண்டவன் அப்போது தான் மெச்சுவான்” என்று எல்லா மதங்களுமே சொல்லுகின்றது. அதன் வழி நாமும் தர்மம் செய்கின்றோம்.

ஆனால் அப்படிச் செய்யும் பொழுது என்ன நடக்கிறது…?

அவனோ பாவத்தின் எல்லையில் இருக்கின்றான்… தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
1.ஆனால் நம்மிடம் உதவி பெற்ற பின் ஆ…! “ஆஹா…!” இன்று அந்த ஆசையிலே அவன் உணர்ச்சிகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றான்.
2.அவனை உற்று நோக்கி அவன் ஏங்கிப் பெறும் உணர்வுகளை நாமும் நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.

நல்லது தான் செய்கின்றோம்… ஆனால் அவருடைய உணர்வுகள் இங்கே வந்து “அவனுடைய தரித்திரத்தை” இங்கே கொண்டு வந்து விடுகிறது. அதை நீக்கத் தெரிவதில்லை.

இதைப் போன்று பிறரது இருள் சூழும் உணர்வுகள் நமக்குள் வருவதைத் தூய்மைப்படுத்தாதபடி “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்” என்று தான் எண்ணுகின்றோம்.

ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன்…? நமது உயிர் தான்.

1.ஈகை பண்புடன் தான் உதவி செய்தோம்
2.ஆனால் அவருடைய இருள் சூழ்ந்த உணர்வுகள் இங்கே நமக்குள் விடுகின்றது.
3.அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.

உதாரணமாக எத்தனையோ உணவுப் பொருள்களைச் செய்கின்றோம் அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி மற்ற அசுத்தங்கள் படத்தான் செய்யும்.

அப்போது அதை மூடி வைக்க வேண்டும் அல்லவா.

மூடி வைக்காதபடி நான் நன்றாகத் தான் செய்தேன். அதிலே மண் தூசி எல்லாம் வந்து விட்டதே…! என்று சொன்னால் எப்படிச் சரியாகும்…?

இதைப் போன்று தான்
1.அந்தப் பாதுகாப்பு நிலை இல்லை என்றால் நம் ஆன்மாவில் மற்றவருடைய இருளான உணர்வுகள் புகுந்து
2.உடலுக்குள் அணுக்களாக விளைந்து கடும் விளைவுகளை உண்டாக்கி விடும்.

அதனால் தான் அடிக்கடி ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து ஞாபகப்படுத்துகின்றோம்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும் காரியத்தைச் செய்வதற்கு முன்பும் பின்பும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று இதை உடலுக்குள் வலுவாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

1.நம் பார்வை சொல் செயல் அனைத்தும் அந்த மகரிஷிகள் உணர்வின் தன்மையாகவே நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.எத்தகைய நிலையிலும் பிறரின் உணர்வு நம்மை இயக்கி விடக்கூடாது… அது உடலுக்குள் அணுக்களாக விளைந்து விடக்கூடாது.

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்

 

விஞ்ஞான உலகில் இருக்கின்றோம்… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையை உருவாக்குகின்றனர்.

உதாரணமாக நாம் ரோட்டில செல்லப்படும் போது… அந்தப் பக்கம் அழுத்தமாக மிளகாய் நெடி வந்தால் நுகர்ந்தவுடனே அந்த உணர்ச்சிகள் (அதுதான் எலக்ட்ரானிக்)
1.நாம் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நம் நல்ல குணங்களை மாற்றி அந்த நெடி நம்மைத் தும்ம வைக்கின்றது.
2.சிந்திக்கும் தன்மையைக் கூட அந்த இடத்தில் இழக்கச் செய்து விடுகின்றது.

அது எலக்ட்ரானிக்காக மாறுகின்றது. எதன் உணர்வை இந்தச் சூரியனின் “இயக்க அணுக்கள்” கவர்கிறதோ அதை நுகரப்படும் போது அதன் உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்குகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு தான் அவ்வாறு இயக்குகின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். அந்த உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.

1.சில சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனைப் பார்த்தால் இனம் புரியாது அவர் மேல் வெறுப்பு வரும்… அல்லது சோர்வு வரும்
2.ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது இனம் தெரியாத சிந்தனைகள் வரும்.
3.ஏன்… எதற்கு அவ்வாறு நம் மனம் மாறுகிறது…? என்ற நிலை கூட வந்துவிடும்.

காரணம் மனித உடலிலிருந்து வரக்கூடிய அந்த உணர்வினை நாம் சுவாசிக்கப்படும் பொழுது… “நம்மை அறியாமலே இயக்குவதை நாம் அறியவில்லை…” ஆனால் அது நம்மை இயக்கத் தான் செய்கிறது.

விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்குகின்றார்கள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பேழையில் உருவாக்கி
1.அதிலே காந்தப்புலனும் கெமிக்கலும் கலந்த பின்
2.மோதலின்… அதிர்வு ஒலி அலைகள் எப்படி வருகின்றதோ…? அதற்குத் தக்கவாறு அந்த இயந்திரத்தை இயக்கி
3.அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எதிர் நிலை வரும் பொழுது எலக்ட்ரானிக்காக மாற்றி
4.மற்ற அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்களை எல்லாம் இயக்கத் தொடங்குகிறது.

இதைப் போன்று தான் இந்த உடலான இயந்திரத்தை… பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நாம் நுகரும் பொழுது அதே உணர்வு இயக்கப்பட்டு இனம் புரியாதபடி சோர்வடைகின்றோம்… காண முடியவில்லை.

ஜோதிடம் ஜாதகம் பார்ப்போர் மனிதனைப் பார்த்துப் பார்த்து ஒரு வார்த்தையை வெளிவிட்டு… அடுத்து நம்மிடமிருந்து என்ன வருகிறது…? என்று தெரிந்து கொண்டு அதை வைத்துக் கொண்டு “ஒஹோ… நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்…” என்று சொல்வார்கள்.

அதையே குறிக்கோளாக இருப்பதால் அவ்வாறு அறிய முடிகின்றது. பிறருடைய உணர்வின் அதிர்வுகளை வைத்துச் சொல்லலாம்.

ஆனால் கஷ்டங்களையும் குறைகளையும் நுகர்ந்து சொல்லப்படும் போது அவர்கள் வாழ்க்கையும் பாழாகும். மந்திரங்களை வைத்துச் சொல்வோரும் இதே நிலையாகி அவர்களும் பாழாகும் நிலைக்கே செல்வார்கள்.

இருந்தாலும்… இந்த மனித உடலில் குறுகிய காலமே வாழ்கிறோம். நேரம் ஆகிவிட்டது என்று இராமன் மணலைக் குவித்துப் பூஜிக்கத் தொடங்கினான் என்று இராமாயணத்தில் அதைக் காட்டுகின்றார்கள்.

1.நாம் வளர வளர ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது… உடலின் தரமும் குறைகிறது.
2.அதற்குள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்..

உலக இருளை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக என்றுமே ஏகாந்த நிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.அதற்கு நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்
2.பகைமைகள் வந்தாலும் அது நம்மை இயக்காது (முதலில் சொன்னது போல்) நமக்குள் பகைமையாகாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வுகளை மாற்றி
3.நம் பார்வையால் மற்றவருடைய தீமைகள் அகன்று செல்லும் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

மற்றவரை நல்வழியில் இயக்கும் அந்த எலக்ட்ரானிக்காக நமக்குள் வலிமை பெற்று இந்த உணர்வு அவர்கள் உடலுக்குள் சென்று அவருடைய தீமையை அகற்றி நல் உணர்வாக மாற்றிடும் அந்த உயர்ந்த சக்தியாக நாம் பெறுதல் வேண்டும்.

அதாவது நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி நம் ஈர்ப்பு வட்டத்தில் இந்த உணர்வுகளை வலுவாக்கி அதைப் “பாதுகாப்புக் கவசமாக” நாம் அமைத்திட வேண்டும்.

தீமை செய்யும் நிலைகள் எதுவாக இருந்தாலும்… அதனுடன் நேரடியாக நாம் மோதக் கூடாது

தீமை செய்யும் நிலைகள் எதுவாக இருந்தாலும்… அதனுடன் நேரடியாக நாம் மோதக் கூடாது

 

இந்த உலகில் யாரையெல்லாம் நாம் சந்தித்திருந்தாலும்… அவர்கள் உணர்வை எதன் வழி நுகர்ந்திருந்தாலும்… நுகர்ந்த உணர்வை நமது உயிர் அணுவாக மாற்றி உடலுக்குள் இணைத்து விடுகின்றது.

அனைவரது உணர்வுகளும் நமக்குள் இப்படி வரப்படும் பொழுது
1.அதிலே இருக்கும் தீமைகளிலிருந்து விடுபட…
2.நமக்குள் அறியாது விளையும் அத்தகைய அணுக்களை வலு இழக்கச் செய்ய…
3.அருள் மகரிஷிகள் உணர்வு கொண்டு இருளை அகற்றிடும் சக்தியாக… அந்த வாலியை வென்றிட வேண்டும்.

ஒரு நோயாளியின் உணர்வை நாம் அடிக்கடி பதிவாக்கிக் கொண்டால் அல்லது ஒருவன் நமக்குத் தீங்கு செய்கின்றான் என்று அவனை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் அது வாலியாகிறது.

இராமன் வாலியை மறைந்திருந்து தான் தாக்குகின்றான் என்று காட்டியுள்ளார்கள்.
1.பிறருடைய எண்ணங்களை நாம் நேரடியாக எண்ணப்படும் பொழுது அந்த உணர்வுகள் வருகின்றது.
2.அவ்வாறு வரும் போதெல்லாம்… கஷ்டமோ… தொழிலிலே நஷ்டமோ வந்தால் அல்லது உடலிலே நோயோ வந்தால்
3.அது நமக்குள் வராது மாற்றி அமைக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இருளை அகற்றிய அந்த அருள் ஒளியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரணம் இராமன் வாலியை நேரடியாகப் பார்க்கவில்லை. மறைந்திருந்தே தாக்கினான். இந்த வழியினை நமக்குள் எடுத்து அருள் உணர்வினை நமக்குள் சேர்த்து அதாவது
1.தீமை செய்யும் உணர்வுகளுடன் நாம் மோதிக் கொண்டே இருக்காமல்
2.நஞ்சான வாலியைச் செயலிழக்கச் செய்ய வேண்டும்.

நாம் எடுக்கும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உயிரிலே பட்டபின் உணர்வின் ஒளியாக எண்ணங்கள் நமக்குள் வருவதும் இந்த உணர்ச்சிகள் உடலை இயக்குவதும் என்ற நிலைகள் கொண்டு… மகரிஷிகளின் உணர்வை எதனுடன் கலக்கச் செய்கின்றோமோ அதுவாக மாற்றுகின்றது.

உதாரணமாக… சாயங்களை எடுத்துக் கொண்டாலும் பல கலவைகள் உருவாக்கப்படும் பொழுது அதனதன் சக்தியை இழக்கின்றது. எதனின் உணர்வு மாறுகின்றதோ அதற்குத் தக்க நிறங்கள் மாறுகின்றது.

இதைப் போன்று தான்
1.நமக்குள் பலருடைய எண்ணங்களும் குவிந்திருப்பினும்
2.அந்த எண்ணங்களை உருவாக்கும் அணுக்கள் அத்தகைய இயக்கங்களை உடலில் செய்து கொண்டிருந்தாலும்
3.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்து அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினைக் கலந்து விட்டால்
4.நமக்குள் இருக்கும் தீமை செய்யும் அணுக்கள் பலவீனம் அடைகின்றது… வாலி என்ற நிலை வலு இழக்கப்படுகின்றது.

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து விழ்த்தினான் என்று காட்டினார்கள். இராமாயணக் காவியத்திலே இராமனைக் கடவுள் என்று சித்தரித்தாலும் “அவன் ஏன் மறைந்திருந்து தாக்க வேண்டும்…?” என்று இப்படியும் வாதம் செய்வார்கள்.

ஏனென்றால்
1.தீமையான உணர்வை நேரடியாகக் காணும் பொழுது அந்த உணர்ச்சிகள் நம்மைத் தூண்டுகின்றது.
2.ஆனால் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அதை மறைத்துவிடுகிறது…
3.அதனின் செயலாக்கங்களைக் குறைத்து விடுகின்றது.

காவியத் தொகுப்பின் மூலம் மனித வாழ்க்கையில் எண்ணங்கள் எப்படி உருவாகிறது…? எது வலிமை பெறுகின்றது…? எதன் வலிமையில் மனிதன் இயங்குகின்றான்…? மனிதன் என்ற நிலையில் அது எந்த வலிமை கொண்டு அவனை மாற்றுகின்றது…? என்று தான் நமக்குக் காட்டினார்கள்.

இத்தகைய பேருண்மையை உணர்த்தப்படும் நிலை தான் கார்த்திகை தீபம்… அண்ணாமலையார் தீபம்…!

1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் உடலின் உச்சியிலே… நம் உயிரிலே…
2.அருள் உணர்வினை ஏற்றி வைக்க வேண்டும்… அதை இயக்கச் சக்தியாக மாற்ற வேண்டும்.

இன்றைய உலகம் போகும் போக்கில் நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும்

இன்றைய உலகம் போகும் போக்கில் நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும்

 

யாம் சொன்ன ஆத்ம சுத்தியை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி எடுத்து உங்களுக்குள் வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகள்) மாற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றிட முடியும்.
2.குறைபாடுகள் வந்தால் அது இயக்காதபடி சிந்தித்துச் செயல்படும் மன வலிமையும் வரும்.

உங்கள் அனுபவத்தில் பெறலாம்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் உலக நடப்புகளை இன்று டி.வி. வாயிலாகவோ மற்ற வேறு வகைகளிலோ பார்த்தாலும் அல்லது காதிலே கேட்க நேர்ந்தாலும் அது அனைத்தும் “நம் கண்களுக்குத் தான் வருகின்றது…”

காற்றிலிருக்கக்கூடிய அலைகளை ஆண்டனாக்கள் எப்படிக் கவர்கின்றதோ அதைப் போன்று தான்
1.இன்றைய உலக நடப்புகளையும் நமது கண் ஆண்டனா போன்று கவர்ந்து நம் ஆன்மாவாக்கிச் சுவாசிக்கச் செய்கின்றது.
2.அது உயிரின் காந்தத்தால் கவரப்பட்டு உயிரிலே பட்டு உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

ஆண்டனா கவரும் அலைகளை டி.வி. கவர்ந்து டி.வி.க்குள் நுழைந்த பின் அதற்குள் இருக்கக்கூடிய உறுப்புகள் (PARTS) இயக்கி எப்படிப் படமாகச் சப்தமாகக் காட்டுகின்றதோ அதே போல நம் உடல் உறுப்புகளிலும் அத்தகைய உணர்ச்சிகள் ஊட்டப்பட்டு நாம் பார்த்ததைச் செய்ல்படுத்தத் தொடங்கி விடுகிறது.

இதை உடனுக்குடன் நாம் மாற்ற வேண்டும். அதை எப்படியும் நீங்கள் மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் நினைவுபடுத்தித் தியான பயிற்சியாக உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

1.என் குரு அந்தச் சக்தியைப் பெறச் செய்தார்.
2.காரணம் நல்லவர்களுக்குத் தான் எல்லாத் தொல்லைகளும் வருகின்றது.
3.நல்லவர்களைக் காக்க வேண்டுமல்லவா…!

ஆகவே உலக நடப்புகளைக் கேட்க நேர்ந்தால் நமக்குள் எத்தனையோ பதட்டமும் பயமும் வருகின்றது. “தியானம் இருந்தேன்…” என்று சொன்னாலும் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வருவதை உடனுக்குடன் சுத்தப்படுத்தவில்லை என்றால்
1.அது உமிழ் நீராக மாறி உடலுக்குள்ளும் சேருகின்றது. எலும்புக்குள் பதிவும் அதிகமாகி விடுகிறது.
2.அதற்குப் பின் உடல் நோயாகவோ மன நோயாகவோ மாறுகிறது.

ஆகவே உலக நடப்புகளைக் கேட்டாலும் அதனை உடனே நமக்குள் மாற்றிப் பழக வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றிய “குறிப்புகளை…” அதிகமாக நாம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

மற்ற உணர்வுகள் பதிவாகாதபடி… அது உமிழ் நீராக உடலுக்குள் செல்லாதபடி மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

ஆத்ம சுத்தியின் முக்கியமான மூலக்கூறு இது தான்…!

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்

 

இரண்டு நண்பர்கள் சேர்ந்திருக்கும் நிலையில் அதிலே ஒரு நண்பன் தவறு செய்தாலும் அதைப் பற்றி நாம் சொல்லப்படும் பொழுது… “கூட இருக்கும் அந்த நண்பன்” அதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

காரணம்…
1.அவருடைய உணர்வு அவனுக்குள் அது முன் பகுதியில் வலுவாகச் சேர்ந்திருக்கப்படும் பொழுது
2.நம் உணர்வை நுகர்ந்தவுடனே குற்றப் பெருக்குகளைக் கூட்டி நம்மைத் தான் குற்றவாளியாகச் சொல்லச் செய்யும்.

அப்போது நாம் நுகர்ந்த உணர்வு… அவன் உணர்வை வலு சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வுகள் அதை ஏற்பதில்லை. இருந்தாலும் நம் ரத்தங்களில் இதைப் போன்ற உணர்வுகள் இணைந்து விடுகின்றது.

இதனால் நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுக்களுக்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து ஒடுங்குகின்றது.
1.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தி இழக்கின்றது.
2.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் பொழுது ஒடுங்குகிறது… அதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஏற்கவில்லை என்றாலும் உணர்வின் அழுத்தம் அதிகமாகும் பொழுது… கூட கொஞ்ச நேரம் நிலைநிறுத்தி விட்டால் அதற்குச் சாப்பாடு தேவை.

நாம் எப்படிச் சுவாசத்தின் மூலம் “மூச்சு விடுகின்றோமோ…” அதே மாதிரி
1.அந்த இயக்கத் தொடருக்கு பிரணவம்… அந்த இயக்கம் வேண்டும் என்றால்
2.உடலில் ஏற்படும் உஷ்ணத்தினால் வாயு உண்டாகின்றது… அதனுடைய அழுத்தம் உண்டாகிறது.

சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனைகள் வருகிறது…? எந்தெந்தப் பொருளை அதிகமாகப் போடுகின்றோமோ அந்த மாதிரி வாசனைகள் அதிலிருந்து வருகின்றது.

அது போலத் தான்
1.உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் நெளிகிறது… உடலில் மாறுபட்ட உணர்ச்சிகள் தோன்றும்… இதையெல்லாம் எது இயக்குகின்றது…?
2.நம் உயிர் எலெக்ட்ரிக்காக இருக்கிறது. நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்காக எதிர்நிலையான அந்த உணர்ச்சியை ஊட்டுகின்றது.

இப்படி எதன் உணர்வை நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் ஆகின்றதோ… ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் நம் ரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பல விதமான அணுக்களின் மாற்றங்கள் ஆவதும் நிகழ்கிறது.

நல்லவரிடம் பேசப்படும் பொழுது அதற்குத்த நிலையில் அமைதியாகிறது. ஆனால் அடுத்து ஒரு சண்டை போடுபவர்… வெறுப்பாகத் தாக்குபவர்… திட்டிப் பேசியவர்களின் உணர்வை நுகர்ந்தால்
1.மிகவும் இக்கட்டான நிலைகள் ஆகி இந்த உடலுக்குள் ஒன்றுக்கொன்று போர் முறையாகின்றது.
2.நம் உடலிலே சலனங்களும் சஞ்சலங்களும் ஏற்படுகிரது.

ஆக… நல்ல அணுக்கள் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படும் பொழுது உடல் சோர்வடைகின்றது… உணர்ச்சிகள் மாறுவதையும் பார்க்கலாம்.

எந்த உணர்ச்சியின் தன்மையைக் கூட்டுகின்றோமோ… கண் வழி எந்த உணர்வை அதிகமாக்குகின்றமோ… கண்கள் நுகர்ந்து உயிரிலே மீண்டும் அநத உணர்ச்சிகள் அதிகமாக ரத்த நாளங்களில் சேர்க்கப்படுகின்றது.
1.அதனால் பதட்டமும் பயமும் வருகின்றது… அவர்கள் இருவருக்குள்ளும் எப்படிச் சண்டை போட்டுக் கொள்ளப் போகின்றார்களோ என்று…!
2.சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இந்தப் பதட்டம் வரும்.

நல்லதைச் சொல்லத் துணிவு வந்தாலும் அவர்களைச் சிந்திக்கும்படிச் செய்யும் பதிலைச் சொல்லத் தெரியாது. அப்போது நம்மை அறியாதபடி பகைமை உணர்ச்சிகள் உடலிலே வந்து விடுகின்றது.

இது அனைத்துமே இரத்தங்களில் தான் முதலில் கலக்கின்றது.

நாம் நுகரும் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவி அதன் வழியே நம்மை வாழச் செய்து… அந்த உணர்வுகளே நம்மை ஆளுகின்றது என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு என்ன செய்ய வேண்டும்…?
1.நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்.
2.நம் உடல் முழுவதும் இந்த உணர்ச்சிகளைப் பரவச் செய்யப்படும் பொழுது
3.நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு நிம்மதியும் சாந்தமும் இயக்க முடிகின்றது.

அந்த உணர்வுகள் உணர்ச்சிகளை உயிர் உடலுக்குள் பரவச் செய்து தீமையான உணர்வுகளை அமைதிப்படச் செய்கின்றது.

ஆனால் “சாதாரண மனிதனின் உணர்வை வைத்து…” அதை அமைதிப்படுத்த முடியாது.

உங்களுக்குள் பதிவு செய்த அந்த மகரிஷிகள் உணர்வை எண்ணி எடுத்து ஈஸ்வரா என்று உயிரிடம் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் கண்ணின் நினைவு உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது…
1.ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை என்ற அந்த வித்திலே (தீமையான வித்தில்) இணைக்கப்படும் பொழுது
2.கொஞ்சம் கொஞ்சமாக இதனுடைய வலு கூடும் பொழுது அதை அடக்கக் கூடிய சக்தியாக அது மாறுகின்றது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குணத்திலும் உணர்விலும்… மகரிஷிகள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குணத்திலும் உணர்விலும்… மகரிஷிகள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்

 

நீங்கள் ஏதேனும் வேலையாக வீட்டிலிருந்து வெளியே செல்கின்றீர்கள் அல்லது ஒரு தொழிலைத் தொடங்குகின்றீர்கள் என்றால்… அது சமயம்
1.அகஸ்திய மாமகரிஷிகளையும்
2.அவர் துருவ மகரிஷியான நிலையையும்
3.துருவ நட்சத்திரமான நிலையையும் இந்த மூன்று நிலைகளையும் ஏங்கி எண்ணுங்கள்.

அதனின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணியபின் உங்கள் தொழிலைச் செய்யத் தொடங்குங்கள்.

இந்த முறையில் நீங்கள் பதிவு செய்யும் ஞான வித்துக்கள் உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கருவாக வளர்ச்சி பெற்று… நீங்கள் எதை எண்ணிப் பதிவு செய்தீர்களோ அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை… அத்தகைய உணர்வின் அணுக்களை இரத்த நாளங்களில் பெருக்குகின்றது.

1.முதலில் கரு முட்டையாகின்றது.
2.பின் அதனின் உணர்வின் தன்மையை எண்ண எண்ண அவைகள் அணுக்களாக வளர்ச்சி அடைகின்றது.

உதாரணமாக… கோழி முட்டையிட்ட பின் அதை அடைகாத்து அதன் உணர்வின் தன்மை கொண்டு அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின் அந்த வெப்பத்தின் துடிப்பு கொண்டு கருவின் துணை கொண்டு குஞ்சாக விளைகின்றது.

குஞ்சாக வெளி வந்த பின் தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது.

இதைப் போன்று
1.இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களை நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும் உங்களிடத்தில் கருவாக உருவாகின்றது.
2.அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களில் நினைவுபடுத்தும் பொழுது அந்த உணர்வின் அணுக் கருமுட்டைகள் வளர்ச்சி பெறுகின்றது.

அதாவது… நீங்கள் இதே எண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… அது உங்களுக்குள் “அடைகாக்கப்படுவது…” போன்றதாகி விடுகின்றது.

கோழி தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும் தன் குஞ்சின் நினைவு கொண்டு தான் முட்டையிட்ட அதே இடத்திற்கு வந்து அடைகாக்கின்றது.

அதைப் போன்று நீங்கள் எந்தத் தொழிலுக்குப் போவதாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால்
1.அடிக்கடி நினைவுபடுத்தி அந்தச் சக்தியை நீங்கள் பெறும் போது அடைகாப்பது போன்று ஆகி
2. மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வளர்க்கும் திறந் பெறுகின்றீர்கள்.

கோழி தான் இரை தேடும் பொழுது தன் குஞ்சுகளைக் கூவி அழைத்துத்தான் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுக்கிறது.

அதைப் போன்று நமக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் அணுக் கருவாகி விட்டால்
1.இதனின் உணரச்சியின் கிளர்ச்சிகள் நமது இரத்த நாளங்களில் கிளம்பும் பொழுது
2.நமது உயிர் அந்த உணர்வுகளை இயக்கி காற்றில் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
3.கண்கள் வழியும் காதுகள் வழியும் உடல் வழியும் நாம் சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் கவர்ந்து
4.நமது உடலுக்குள் பரவச் செய்து அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.

நாம் அருள் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் நடந்தால் அது நமக்குள் வளர்ச்சி பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் “மாமகரிஷி அகஸ்தியன்…” சென்ற பாதையில் செல்லும்.

நமது வாழ்க்கையில் எத்தகைய விருப்பு வெறுப்புகளை நுகர்கின்றோமோ அது நமக்குள் கருவாகி விடுகின்றது. உதாரணத்திற்கு நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம்.

ஒருவர் தாக்கப்படுவதை உற்று நோக்கி அதனின் அச்ச உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அச்சத்தின் உணர்வுகள் நமது உடலில் “ஊழ்வினை…” என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கருவாக உருப்பெற்றுவிடுகின்றது. இப்படிப் பதிவாகி… பதிவானதை மீண்டும் நினைவுபடுத்தினால் அதனின் உணர்வுகளை நாம் நுகரும் சக்தி பெறுகின்றோம்.

அப்படி நுகரும் சக்தி பெற்றபின் அந்த உணர்வுகளை நமது உயிர் உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது.

அந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது அணுக்கருக்களின் தன்மையினை அடைகின்றது. நமது உடலில் கருவான அணுக்களுக்கு வீரியம் ஊட்டுகின்றது.

1.வேதனைப்படுவோர் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் முதலில் சில காலம் தெரியாது.
2.இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நுகர்ந்தது அடைகாப்பது போன்று அந்த அணுக்கருக்கள் வளர்ந்து விட்டால்
3.குஞ்சு தன் இரைக்காக கத்தும் பொழுது தாய் கோழி கூற்று பரப்பித் தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போன்று
4.நமது உயிர் உணர்வின் ஒலி அலைகளை எழுப்பிச் நமது சிறுமூளை பாகத்திற்கு எட்டச் செய்கின்றது.

பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு கண்களுக்கும் செவிகளுக்கும் மூக்கிற்கும் உடலுக்கும் கிளர்ச்சிகளை உந்தி அதன் வழி சுவாசிக்கச் செய்து அதனின் எண்ணத்தை நமக்குள் பெறச் செய்து நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்து நமது உடலில் உள்ள அணுக்கருக்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்து உதவுகின்றது.

காலையில் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுதோ தொழில் ஆரம்பிக்கும் பொழுதோ அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி கூட்டினோம் என்றால் அதை அடைகாத்தது போன்றதாகின்றது.

அவ்வாறு அடைகாத்து அந்த உணர்வின் தன்மை குஞ்சாகப்படும் பொழுது
1.நம்மையறியாமலே நமக்குள் அந்த மகரிஷிகள் பால் எண்ணங்கள் செல்லும்.
2.இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து விட்டால் நாம் எண்ணுவதற்கு முன்பே அந்த உணர்வைக் கூட்டி
3.அருள் உணர்வுகளைப் பெறும் அந்த உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ண எண்ண அதனின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அடைகாப்பது போன்று காத்து (திரும்பத் திரும்ப நுகரும் உணர்வுகள்) அந்தக் கருக்கள் நமக்குள் விளைந்து கொண்டேயிருக்கும்.

ஏனென்றால் நாம் நுகரும் உணர்வுகள் நம்முள் குஞ்சுகளானாலும்
1.அடுத்தடுத்து நாம் தியானத்தில் எடுக்கும் போது இவைகளெல்லாம் கருக்களாகின்றன.
2.பின் நினைவாக்கப்படும் பொழுது அது வளர்ச்சி அடைந்து கொண்டே, இருக்கும்.

இப்படி நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்… ஒவ்வொரு குணத்திலும்… ஒவ்வொரு உணர்விலும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும் (இது முக்கியமானது).

அந்த மகரிஷிகள் எவ்வாறு உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி இன்று சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்களோ அந்த அரும் பெரும் சக்திகளை நமக்குள் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதற்குத்தான் இதை உபதேசிப்பது
2.அந்த நிலைகளை அனைவரும் அடைவதற்கு எமது அருளாசிகள்.

தீமைகளைத் தடைப்படுத்தும் வழி

தீமைகளைத் தடைப்படுத்தும் வழி

 

தீய உணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது நம்மிடத்தில் சிந்தித்துச் செயல்படும் தன்மை வருகின்றது. அப்படிச் சிந்திக்கும் தன்மை இல்லையென்றால் பிழை என்ற நிலை உருவாகும்.

பிழை என்ற நிலையில் நண்பர்களுக்குள் சிறிது குறையாகி விட்டதென்றால் பிறகு நீங்கள் குறையத்தான் வளர்க்க முடியுமே தவிர அங்கே நல் உணர்வை எடுக்க முடியாது.

நண்பர்களுக்குள் தவறு என்று யார் செய்திருந்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.சந்தர்ப்பங்களால் நம்மை பிறிதொரு தீமை இயக்கி விடாதபடி
2.நாம் நம்மை முதலில் பாதுகாக்கும் நிலை பெற வேண்டும்.

எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வினை எண்ணி நுகர்ந்து தீமைகளைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

யாம் நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அருள் உணர்வுகளை எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும்…? எப்படித் தீமைகளைத் தடுக்க வேண்டும்…? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கின்றோம்.

1.“சாமி சொன்னார்கள்… மறந்து விட்டது” என்று இருக்கக்கூடாது.
2.அருள் உணர்வுகளை உங்களுக்குள் “ஆழமாகப் பதிவு” செய்து கொள்ள வேண்டும்.
3.இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால் ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அவைகளை நம்முள் சேர்க்கின்றோம். நம்மிடம் ஒருவர் கஷ்டத்தைக் கூறும் பொழுது அதை நாம் உற்றுக் கேட்கும் பொழுது அவ்வுணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.

ஆனால் பிறர் தான் சொல்லும் கஷ்டத்தைக் கேட்கவில்லை என்றால்
1.“என்னவோ பெரிய பிகு பண்ணுகின்றான் பார்…!
2.நாம் சொல்கிறோம்… காது கூடக் கேட்க மாட்டேன் என்கிறது” என்று நம்மைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள்.

ஆகையினால் வேதனையின் உணர்வுகளைக் கேட்டால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அதனைச் செவியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்… உள்ளே கவரும் தன்மையாக எடுக்கக் கூடாது.

நம்முடைய எண்ணங்கள் துருவ நட்சத்திரத்தின்பால் சேர்க்கப்படும் பொழுது பிறர் சொல்லும் வேதனை உணர்வுகளைத் தன்னுள்ளே கவராது.

இப்பொழுது யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம் நீங்கள்
1.“நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய வேலை என்ன…?
2.வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ…?
3.ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்…?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால்
4.யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.

ஆகையால் ஒருவர் நம்மிடம் தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போம் என்றால் அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.

அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்… ஆனால் ஈர்க்காது. இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள். அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம் அதை ஈர்ப்பதில்லை.
1.யாம் எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால்
2.அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.
3.அதன் பிறகு யாம் கோபமாக “போங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…” என்று சொல்வோம்.

அப்படி யாம் சொன்னால் “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே…!” என்று எண்ணினால் என்னவாகும். ஏனென்றால் அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை உடனே தாங்கி மடக்கி அனுப்புகின்றோம்.

சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று நீங்கள் சொன்னால், யாம் என்ன பண்ணுவது…? அப்படியானால் அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வெண்டுமா…?

யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.

அதைப் போல் மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம் நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்…? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக… இரத்தத்தில் அணுவின் கருவாக மாறும்.

ஆகையால் இந்தத் தீய உணர்வுகளை நீங்கள் உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு தீமைகள் தமக்குள் வராது தடைப்படுத்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

தீமைகள் வராது தடுக்க ஞானகுரு நமக்குக் கொடுக்கும் பாதுகாப்புக் கவசம்

தீமைகள் வராது தடுக்க ஞானகுரு நமக்குக் கொடுக்கும் பாதுகாப்புக் கவசம்

 

மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைத் தம்முள் கவர்ந்து வலுவாக்கும் பொழுது நம்மிடத்தில் தீமை என்ற நிலைகள் அணுகுவதைத் தடுத்து விலக்கிவிடும்.

1.நாம் கவராது விட்டுவிட்ட தீமையின் உணர்வுகள் அனைத்தையும்
2.காலையில் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும்.
3.இதனால் நமது பூமியில் பரமாத்மாவாக இருப்பது சுத்தமாகின்றது… நமது ஆன்மாவும் சுத்தமாகின்றது.
4.நமது ஆன்மா சுத்தமாகும் பொழுது நமது உடலில் உள்ள ஜீவான்மாவும் சுத்தமாகின்றது.
5.நமது உயிரான்மா அது ஒளியின் தன்மை பெறுகின்றது.

மெய் ஞானிகளின் அருள் உணர்வைப் பெறுகின்ற பொழுது அது நமக்கு சொர்க்கவாசலாக அமைகின்றது. இதை விடுத்துக் கோவிலுக்குச் சென்று தெய்வத்தைத் தரிசிக்கின்றேன் என்று சொல்லி ஒருவர் மீது ஒருவர் விழுந்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு செல்லும் பொழுது நமக்கு வெறுப்பு தான் வரும்.

ஆகவே இது மனிதருக்குகந்த நிலையல்ல… அசுர உணர்வுதான் வரும்.

அதே போன்று கோவிலில் பிரசாதம் கொடுக்கும் பொழுது பாருங்கள். நான் முதலில் பெற வேண்டும் என்று தான் எண்ணுவார்களே தவிர அனைவரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு மனதைக் கட்டுப்படுத்தி அங்கே நிற்கிறார்களா என்றால் இல்லை.

மற்றவர்கள் முதலில் பெறட்டும் என்று நாம் எண்ணும் பொழுது நமது மனம் கொண்டு நாம் இருந்த இடத்திலிருந்தே பெற முடியும்.

அவர்கள் அருகிலே சென்று பெறுகின்றனர். ஆனால்
1.அவர்கள் அருகில் செல்வதற்கு முன்னால் நாம் இருந்த இடத்திலிருந்து உடனடியாகப் பெறுகின்றோம்.
2.இந்த உண்மையை அறிந்து கொள்தல் வேண்டும்.

ஆகவே நமது மனம் பண்பட்டால்தான் நமது குணங்கள் பண்படும். நமது குணங்கள் பண்பட்டால்தான் நமது வாழ்க்கையினைப் பண்படுத்தும் நிலை வரும்.

இவைகளை எல்லாம் யாம் பெற வேண்டும் என்றுதான் எமது குருநாதர் மலை காடு என்று பல இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்றார்.

அப்படி அழைத்துச் செல்லும் காலத்தில் ஒரு முறை எமக்கு ஒரு பச்சிலையைக் காண்பித்துக் கொடுத்தார். அந்தப் பச்சிலையைக் கையில் கொடுத்து
1.“அதில் உன் உணர்வின் மணத்தை ஓது…
2.எண்ணத்தால் எண்ணி அங்கே போட்டு விட்டு வா…!” என்றார் குருநாதர்.

குருநாதர் சொன்ன முறைப்படி உணர்வின் மணத்தை ஓதிப் போட்டு விட்டு வந்த பின் அந்த பக்கம் புலி ஒன்று வருகின்றது. யாம் அங்கு போட்டிருந்த பச்சிலையை அந்தப் புலி நுகர்ந்த பின் அப்படியே அசையாமல் நிற்கின்றது.

அதே சமயத்தில் மலைக் காட்டுக்குள் “மறதிப் பூடு” என்பதை குருநாதர் எமக்கு காண்பித்தார்.

இந்த மறதிப் பூட்டினை இலேசாகக் கிள்ளி யாராவது ஒருவரது வீட்டில் போட்டு விட்டு வந்து விட்டால் அல்லது அவர்களது வீட்டின் கதவிடுக்குகளில் வைத்து விட்டாலோ போதும்.

அவர்கள் வீட்டிற்கு வெளியே என்னென்ன செயல்கள் வேலைகள் செய்து விட்டு வீட்டிற்கு வந்தாலும் அவைகளெல்லாம் ஞாபகத்தில் இருக்காது.

இந்நிலையை நாம் ஒருவருக்குச் செய்தால் என்னவாகும்…? நாம் பெரிய மனிதர் ஆகிவிடலாம். இது போன்ற நிலைகள் நாட்டில் நிறைய உண்டு.

குருநாதர் இன்னும் சில வேர்களைக் காண்பித்தார். அந்த வேர்களைக் கையில் வைத்துக் கொண்டால் விஷப் பூச்சிகள் மட்டுமல்ல… புலியும் கூட ஒடுங்கி நிற்கின்றது.

ஏனென்றால் மனித உடலுக்குள் அந்த மணத்தின் தன்மை கொண்டபின் விஷம் கொண்டவைகள் பயப்படுகின்றன. அவைகளுடைய விஷம் ஒடுங்குவதினால் அவைகள் தங்களுடைய வலுவையும் இழந்து விடுகின்றன.

குருநாதர் ஒவ்வொன்றாகக் காண்பித்து இயற்கையின் உண்மையின் நிலைகளை உணர்த்தி எமக்குச் சில ஆசைகளை ஊட்டுகின்றார்.

இவைகளைக் காணும் பொழுது எமக்குள் உடனே அகந்தை வருகின்றது. எவராவது வம்புக்கு வரட்டும்… அவர்களை ஒரு கை பார்ப்போம்…! என்ற எண்ணம்தான் வருகின்றது.

ஆனால் தீமைகள் நமக்குள் வராது தடுக்கும் பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொள்வோம் என்ற எண்ணம் இல்லை.

அப்பொழுது குருநாதர் தீமைகள் உடலுக்குள் புகாது தடுக்கும் நிலைகள் கொண்டு நல்லுணர்வின் தன்மையை உனக்குள் வலுவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.பிறரை வீழ்த்துவது எளிது.
2.வீழ்த்தும் உணர்வு, திருட்டுத்தனமாக உனக்குள் சென்று விடுகின்றது.
3.வீழ்த்தும் உணர்வை உனக்குள் எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் உள் நின்று என்ன செய்யும்…?
4.அதே தவறைத்தான் செய்ய வைக்கும்.
5.ஆகவே “நான் கொடுத்த சக்தியை நீ இழக்கத்தான் நேருமே தவிர அதை வளர்க்க முடியாது.

ஒருவர் தீமை செய்கிறார் என்றால் அவரைத் தீமையின் உணர்வுகளிலிருந்து மீள வைக்க வேண்டும். அவருக்குத் தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்

“நீ ஏன் அவர்களுக்கு தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்…?” என்று குருநாதர் கேட்டார்.

1.“ஓ…ம் நமச்சிவாய” என்று அவருக்குள் தவறின் உணர்வுகள் இயங்குகின்றது.
2.அவர் செய்யும் தவறின் உணர்வுகளை நீ நுகர்ந்தால் “சிவாய நம ஓ…ம்” என்று அவருடைய தவறின் உணர்வுகள் உனக்குள் வந்து
3.அவர் செய்த தவறையே உன்னையும் செய்யத் தூண்டும் என்று தெளிவாக்கினார்.

ஒவ்வொரு மனிதருடைய உயிரையும் கடவுளாக மதித்தால் அவர்களுடைய உடலைக் கோவிலாக மதித்தால் அவர்கள் செய்யும் தவறின் உணர்வுகள் உனக்குள் வராது என்று எனக்கு உபதேசித்தார்.

இதன் வழி கொண்டு
1.உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் தவம் இருப்போம்.
2.அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

இந்த உடலுக்குப்பின் “பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம்” நாம் அனைவரும் பெறுவோம்.