மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் வளர்க்கச் செய்வது தான் ஆத்ம சுத்தி

மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் வளர்க்கச் செய்வது தான் ஆத்ம சுத்தி

 

மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஏங்கி எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நான் எடுத்தேன்… ஆனால் மீண்டும் வரவில்லை என்று எண்ண வேண்டாம்.

துணிகளில் அழுக்குப் பிடித்து விட்டது என்றால் சோப்பைப் போட்டு அதை நீக்குகின்றோம். அதைப் போல் ஒரு பொருளைச் செய்யும் போது சரியாக வரவில்லை என்றால் அதைச் சீர்படுத்துகின்றோம்.

உதாரணமாக ஒரு உலோகத்தை உருக்கிக் கொண்டு வரும் பொழுது சரியாக அது வரவில்லை என்றால் மீண்டும் அதை உருக்கிச் சரியான பருவத்திற்குக் கொண்டு வருகின்றான் மனிதன்.

இதைப் போலத் தான்
1.அந்த மெய் ஞானிகள் உணர்வைத் திரும்பத் திரும்ப எடுத்து ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு உடலுக்குள் செலுத்தி
2.அதைச் சீராக வளர்த்திடும் அந்த எண்ண வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் கூட்டுத் தியானங்களை ஏற்படுத்துகின்றோம். அதன் வலு கொண்டு எண்ணிக் “காற்றிலிருந்து அந்தச் சக்திகளை எடுக்கப் பழகுவதற்கு ஆத்ம சுத்தி…”

தையல் கலையைக் கற்றுக் கொள்கின்றார்கள். அப்படிக் கற்றுக் கொண்டவர்கள் மற்றவர்களுடன் பேசிக் கொண்டே சீராகத் தைக்கின்றார்கள். ஆனால் புதிதாகக் கற்றுக் கொள்ள நாம் அதைக் கூர்ந்து கவனித்தாலும் நம்மால் நேராகத் தைக்க முடியாது.

ஆனால்…
1.நம்முடைய கூர்மையான உணர்வை அதற்குள் செலுத்தி
2.அது சீராக வைக்கும்படி நம் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
3.அந்த வேலை செய்யும் எண்ணமே அதைச் சீராக நம்மைச் செயல்படுத்தும்படி செய்துவிடும்.

உதாரணமாக கண் பார்வை இழந்தவர்கள் தன் உணர்வின் ஆற்றலால் பிளாஸ்டிக் வயர்களை வைத்துப் பின்னிப் பழகுகின்றார்கள். அந்த உணர்வின் இயக்கமே அளவுகோலைக் குறித்து…
1.கண் தெரிந்தவர்கள் நாம் அதைப் பின்னுவதைக் காட்டிலும்
2.கண்ணற்றவர்கள் பழகி அழகாகக் கலரையும் இணைக்கின்றார்கள்… பின்னலையும் தெளிவாக உருவாக்குகின்றார்கள்.

கண்ணற்றவன் தடவிப் பார்த்துக் கலரைப் பார்க்கின்றான்.

இதைப் போல நமது உணர்வின் ஆற்றலைத் தெளிவாக்கிப் பெருக்கிக் கொள்வதற்குத் தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்று பழகிக் கொடுக்கிறோம்.

உங்கள் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் அதை நீக்க உங்கள் எண்ணத்தால் கவர்ந்து உங்கள் உயிருடன் இணைக்கச் செய்யும் பொழுது அதைப் பாய்ச்சி ஜீவன் பெறச் செய்து அந்தச் சக்தியை வளர்த்து விடுகின்றது.

ஒவ்வொரு நொடியிலும்
1.உங்களுக்குள் குறை உணர்வோ அல்லது பலவீனமான எண்ணங்களோ வந்தால் அதை மனதில் ஏற்றுக் கொள்ளாது
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம சுத்தி செய்து
3.உங்களுக்குள் இணைந்த தீமை விளைவிக்கும் உணர்வுகளைத் தணித்து
4.மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் வளர்க்கச் செய்வது தான் ஆத்ம சுத்தி.

இதுதான் உண்மையான தியானம்.

பிறருக்கு உதவி செய்தாலும்… மறைமுகமாக வரும் தீமையிலிருந்து நம்மைக் காக்க வேண்டும்

பிறருக்கு உதவி செய்தாலும்… மறைமுகமாக வரும் தீமையிலிருந்து நம்மைக் காக்க வேண்டும்

 

குருநாதர் எமக்குச் சொன்னது…! வாழ்க்கையில் நீ நல்லதை எண்ணி ஏங்கினாலும் பிறர் செய்யும் தவறைப் பார்க்கப்படும் பொழுது
1.அதற்காக இரக்கப்பட்டோ… பரிவு கொண்டோ ஏங்கி அதைச் சுவாசித்து
2.ஏராளமான பணங்களைக் கொடுத்து… உடலைக் காக்க பொருளைக் கொடுத்து நீ உதவி செய்தாலும்
3.உனக்குள் வந்த அவரின் வேதனையான உணர்வின் தன்மையைத் துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…?

இந்த மனித வாழ்க்கையில் புகழ் கிடைக்கும் பேர் கிடைக்கும் இரக்கமானவர் நல்லவர் என்று போற்றுவார்கள்.
1.ஆனால் அதே சமயத்தில் நலிந்து போகும் பொழுது யாரும் நம்மைப் பார்க்க மாட்டார்கள்.
2.பின்… வேதனையான நிலைகள் கொண்டு நான் நல்லதைச் செய்தேன் எனக்கு இப்படி ஆகிவிட்டது…! என்று
3.வேதனைக் குரலைத் தான் எழுப்ப முடியுமே தவிர நல்லதைச் சிந்திக்க முடியாது.

இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் மனித இனத்தையே வெறுக்கும் நிலை வந்துவிடும்.

ஆனால் மனித உடலுக்குள் மீண்டும் சென்றாலும் அந்த உடலையும் அழித்து விட்டு வேதனை என்ற விஷத்தை அதிகமாகக் கூட்டி உடலை விட்டுச் சென்ற பின்… பரிணாம வளர்ச்சியில் வந்த விஷத்தைத் தாங்கிடும் மற்ற உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று அந்த உடலாக உயிர் மாற்றிவிடும்.

இதையெல்லாம் குரு இயற்கையாக எனக்குக் காட்டினார். அதையெல்லாம் கண்டு தான் இந்த உண்மைகளை உங்களுக்கு உணர்த்துகிறோம்.

நீங்கள் செய்த நன்மையின் நிலைகள்… உங்களைக் காக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டுத் தியானங்களை வலுப்படுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.

பின் தியானத்தில் அமர்ந்திருக்கக்கூடிய அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
1.அவர்கள் உடல் முழுவதும் அந்த அருள் சக்தி படர வேண்டும்
2.அவர்கள் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெற வேண்டும்
5.என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உங்களுக்குள் செலுத்தினீர்கள் என்றால்
6.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பாய்ச்சப்படுகின்றது.

இந்தச் சொல்லின் வாக்கும் உங்களுக்குள் விளைகின்றது. உங்கள் மூச்சு அவரை நலம் பெறச் செய்கின்றது. இதைத்தான் மனிதர்களுக்குள் பொறுமையாக இருந்து செயல்படுத்த வேண்டும்.

வயலிலே காய்கறிகளை விதைத்த பின் உடனடியாக அதைச் சமைக்க முடிவதில்லை. அது விளைந்த பின் பறிப்பவர் ஒருவர்… கடையில் வியாபாரம் செய்பவர் ஒருவர்… கடைசியில் நாம் கடைக்குச் சென்று அதை வாங்கிச் சமைக்கும் நிலையாக இருக்கின்றது.

இதைப் போல அந்த உணவைப் பக்குவமாகச் சமைத்துச் சாப்பிடுவது போன்று நாம் எண்ணியதைக் கொண்டு அந்த உணர்வுகளை எல்லாம் சீர்படுத்திக் கொண்டு வருவது தான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.

1.அதற்கு அந்த மெய்ஞானிகள் அருள் சக்திகளைப் பெற்று அதை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அதுவே நம்மைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக அமையும்.

வாலி என்ற விஷமான உணர்வை சுக்ரீவன் துணை கொண்டு தான் அடக்க முடியும்

வாலி என்ற விஷமான உணர்வை சுக்ரீவன் துணை கொண்டு தான் அடக்க முடியும்

 

நாம் இரக்கம் ஈகை அன்பு கொண்டு வாழும் பொழுது நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நமது மகன் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று எண்ணி வருகின்ற பொழுது அதற்கு மாறாக அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.

இதனால் வேதனையின் உணர்ச்சியாகி “அவன் இப்படி இருக்கிறானே, சரியாகப் படிக்கவில்லையே அவனின் எதிர்காலம் என்னாவது..?” என்று எண்ணி இதனைச் சமைத்து நமது உடலையும் கெடுத்துக் கொள்கின்றோம்.

மேலும் அவனிடத்திலும் கோபப்பட்டு வேதனைப்பட்டு “ஏன்டா இப்படி இருந்தால் என்னாவது…?” என்று சொல்லும் பொழுது இதனின் உணர்வுகள் அவனுடைய உடலில் பாயும். இதனால் அவன் இன்னும் அதிகமாகப் படிப்பிலும் செயலிலும் மந்தமாவான்.

1.அவன் படிக்கவில்லை… இப்படிச் செய்கிறான்…! என்று எண்ணும் பொழுது என்ன செய்கின்றது…?
2.வாலி என்ற உணர்வுகள் நமக்குள் போய் நமது உடலில் அவன் மீது இருக்கும் பிரியத்தை எல்லாம் கெடுத்து
3.“அவனை உதைத்தால்தான் சரிப்பட்டு வரும்… அவன் தொலைந்தால் பரவாயில்லை…” என்ற உணர்வு கொண்டு இதை அடிக்கடி சொல்ல
4.நாம் எதை எண்ணுகின்றோமோ அது அவனை அங்கே வழிநடத்தச் செய்கின்றது.

தந்தையான நாம், மகனைப் பார்த்து “டேய் இங்கே வாடா…” என்று முறைத்துப் பார்த்துக் கொண்டே அழைப்போம்.

அதற்கு மகன் “அன்று என்னைத் திட்டினாய்… இன்று என்னை நீ ஏன் கூப்பிடுகிறாய்…?” என்பான். இதைத் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி நமது உடலில் எழும் வேதனையின் உணர்வுகளை முதலில் அடக்க வேண்டும்.

1.பின் தன் மகன் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்,
2.அவன் அருள் ஞானிகளைப் போன்று சிந்திக்கும் தன்மை பெற வேண்டும் என்று
3.இதனின் உணர்வுகளைச் சமைத்துவிட்டுப் பின் இதனின் நிலை கொண்டு நல் அறிவுரைகளை அவனுக்குச் சொல்ல வேண்டும்.

இராமாயணத்தில் என்ன சொல்கிறார்கள்…? வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது நமக்குள் வாலியாகின்றது. நமது உடலிலுள்ள நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது. சுக்ரீவன் எல்லோருக்கும் உதவிகள் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

மனிதரில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானவர். எத்தகைய கொடிய தீமைகளையும் நீக்கும் வல்லமை பெற்றவர். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வுகளைத் தான் சுக்ரீவன் என்று அழைத்தார்கள் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வலிமையாக்கினால் என்னவாகின்றது…?

1.மகனால் வேதனைப்பட்ட உணர்வுகள் இங்கே நமக்கு முன்னாடி நமது ஆன்மாவில் இருக்கின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வுகள் நமக்குள் வலிமையானபின்
3.வேதனையால் வந்த தீமையின் உணர்வுகளை நமது ஆன்மாவிலிருந்து ஒதுக்கித் தள்ளி விட்டு விடும்.

இப்படி நமது ஈர்ப்பு வட்டத்திலிருந்து விலகும் பொழுது அந்த வேதனையான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டு மேலே சென்று விடுகின்றது.

இதன் மூலம் நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

இப்படிச் சுத்தப்படுத்திக் கொண்டபின் அவன் கல்வியில் ஞானம் பெற வேண்டும், அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை எண்ணி இதனின் உணர்வுகளை அவனுள் பாய்ச்ச வேண்டும்.

பின் அவனிடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டியதைப் பற்றிச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது சீதா. இதைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பகாந்தம் கவர்ந்து கொள்கின்றது. ஆகவே இது பரப்பிரம்மம்…. எந்தச் சுவை இணைந்ததோ அதன் மணம் வரும் பொழுது ஞானம்.

1.அப்பொழுது தன் மகனைக் கண் கொண்டு பார்த்து அவன் அருள் ஞானம் பெற வேண்டும் என்று சொல்லால் சொல்கின்றோம்.
2.அவன் இதைக் காதால் கேட்கின்றான்… அவனின் கண் கவர்கின்றது
3.உயிரால் நுகரப்படும் பொழுது நுகர்ந்த உணர்வின் உணர்ச்சி அவனை ஆளச் செய்கின்றது ஆண்டாள்.

நாம் இப்படிச் சமைத்துச் சொல்லக் கூடிய சொல்லைச் சூரியன் எடுத்துக் கொண்டால் சீதாராமன். இதனின் சுவைக்கொப்ப உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

இப்படி இதனின் உணர்வுகள் அவனுக்குள் பதிவானதால் வெளியூருக்கு எங்கேனும் சென்றால் அங்கிருக்கும் பொழுது தன் மகனின் மீதான ஞாபகத்துடன் இருந்தால் அதனின் உணர்ச்சிகள் அவனைத் தூண்டச் செய்கின்றது. சுவையின் உணர்ச்சியை அறியும் தன்மை வருகின்றது.

1.இப்படி நாம் சொன்னவுடனே வாயு புத்திரன் ஆஞ்சநேயன் இராமனின் பக்தன் அவன் ஒரு மந்திரி.
2.இதனால் மகன் சோர்விலிருந்து விடுப்பட்டுச் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
3.அவனை நாம் சரியான வழியில் வழி நடத்தும் நிலை உருவாகின்றது.

வளரும் பிள்ளைகளை அருள் வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்

வளரும் பிள்ளைகளை அருள் வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்

நம் பிள்ளை படித்து நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணுவோம். அவன் படிக்கவில்லை என்றால் “இப்படிப் பண்ணுகிறானே… இப்படிப் பண்ணுகிறானே” என்று ஜெபம் பண்ண ஆரம்பித்து விடுகிறோம்.

வீட்டுக்காரர் வந்தவுடன் பிள்ளைகளை நீங்கள் இப்படி வளர்த்துக் கெடுத்து விட்டீர்களே…! என்று ஜெபம். அவர்களையும் திட்டுவதற்கு ஆரம்பித்து விடுவார்கள். போனபின் தியானம்… என்ன தியானம்…?
1.அவன் இப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான்… இவன் அப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான்… படிக்க மாட்டேன் என்கிறான்.
2.இவரும் கேட்க மாட்டேன் என்கிறார்…! என்று மனதிலே எண்ணித் தியானம்.

அந்த நேரத்தில் அவரது பேரப்பிள்ளை யாராவது வந்தால் “தொலைந்து போ…” என்று அவனையும் சாபமிட ஆரம்பித்துவிடும். இந்த ஜெபம் என்ன செய்யும்…?

அந்தச் சாபம் வந்தவுடன் கோபம் வந்துவிடும். இரவு நேரத்தில் கை கால் குடைச்சல் மேல் வலி உடல் வலி என்று எல்லாமே வந்துவிடும்… சகிக்க முடியாது. ஏனென்றால் அவன் செயலையும் அதனால் வேதனையையும் எடுத்தவுடன் கை கால் குடைச்சல் வரும். இந்தத் தியானம் செய்கிறோம்.

ஆனால் இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

இரவில் படுக்கப்படும்போது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என் ஜீவாத்மா பெற வேண்டும் என்று “ஆத்ம சுத்தி” செய்யுங்கள்.

நீங்கள் யாம் கொடுத்த சக்திக்காக வேண்டித் தியானமிருக்கும் போது
1.ஒரு நாளில் பத்து நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள்.
2.அந்தச் சக்தியை எடுக்கும் போது அந்த ஞானியரின் சக்தியைப் பிரித்துக் கொடுக்கும்.
3.அதை உங்களுக்குச் செய்து கொடுக்கிறோம்.

சாமி வந்தவுடன் எல்லாம் நன்றாகி விட்டது… நன்றாகி விட்டது என்கிறோம். அடுத்ததாக இரண்டு தரம் வந்து நல்லதாக ஆகிவிட்டது என்பார்கள். மூன்றாவது தடவை என்ன செய்கிறார்கள்…?

யாம் எத்தனை தடவை செய்து கொடுப்பது…? ஒரு தரம் இரண்டு தரம் மூன்று தரம் கூடச் செய்து கொடுக்கலாம். நான்காவது தரமும் யாமே செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

ஒன்றும் பலனில்லையென்றால் “சாமி என்னத்தைச் செய்துவிட்டார்…?” என்று உடனே ஜோசியக்காரனிடம் சென்று நல்ல நேரம் வருகிறதா…? கெட்ட நேரம் வருகிறதா…? என்று பார்த்து அதற்கு யாகத்தைச் செய்து விட்டால் அல்லது எந்திரத்தைக் கொண்டு வைத்தால் நல்ல நேரம் வருமா…? என்றிருப்பார்கள்.

உங்கள் எண்ணத்திற்குள் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்றால் செயல்படுத்த மாட்டார்கள். ஆகையினால்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுப்பது.

மனித வாழ்க்கையில் இன்று குடும்பத்தில் ஒரு பிரச்சனையால் பையன் தவறு செய்கிறான் என்றால்
1.அவன் செய்த தவறின் உணர்வுகள் நமக்குள் பட்டவுடன் நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்.
2.ஆனால் அதே கோபத்தால் நாம் சாபமிடும் நிலைகளுக்கெல்லாம் நாம் வாக்கைக் கொடுத்து விடுவோம்.
3.அந்தக் கெட்டது உடனடியாக வேலை செய்யும்.

நாம் குழந்தை மேல் பாசமாக இருப்போம். நம்மையறியாமலே இந்த உணர்வைப் பாய்ச்சியவுடன் நம் எண்ணமே துரித நிலைகளில் வேலை செய்து அவர்களுக்கு இடைஞ்சலாகும். அதனால் அவர்கள் சங்கடப்படும் போது அதை எண்ணி மீண்டும் வேதனைப்படுவோம்.

இதைப் போன்று
1.நம்மை அறியாமலேயே பின்னிப் பிணைத்துத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான் தக்க ஆயுதத்தை
2.“மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்.

அதைப் பயன்படுத்தினால் இருள் சூழும் நிலையை நிச்சயம் மாற்றியமைக்க முடியும்.

உயிரின் துடிப்பைக் கூட்டித் தீமைகளை நீக்க வேண்டும்

உயிரின் துடிப்பைக் கூட்டித் தீமைகளை நீக்க வேண்டும்

 

நமக்குக் கஷ்டகாலமாக இருந்தால் கோவிலுக்குப் போய் காசைக் கொடுத்து அர்ச்சனை செய்து விட்டால் கஷ்டம் தீர்ந்து போகும் என்று சந்தோசப்படுகிறோம்.

பணம் கொடுத்தால் அர்ச்சகர் முதலில் கூப்பிட்டு விபூதி கொடுப்பார். கொடுக்கவில்லை என்றால் தட்டே இந்தப் பக்கம் திரும்பாது. ஆக ஆண்டவனுக்குக் காசு கொடுத்தால்தான் அவனுடைய வாக்கு இங்கே வரும். அந்த நிமிடத்தில் உங்களை ஆள்பவன் யார்…? நம் உயிர்.

இப்பொழுது உதாரணமாக குழந்தை என்ன செய்கிறது…? கீழே விழுந்து அவஸ்தைப் பட்டுத் துன்பப்படுகின்றது. நீங்கள் காக்கின்றீர்கள். அடுத்த நிமிடம் நீங்கள் என்ன செய்ய வேண்டும்…?

ஓ…ம் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை நினையுங்கள். உங்களை ஆள்பவன் அவனாக இருக்கிறான்.
1.அப்பொழுது “ஓ…ம்” என்று சுவாசிக்கும்போது காந்தம் அதிகமாகின்றது. அப்போது உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.
2.ஈஸ்வரா என்று எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி அந்தச் சுவாசத்தைக் கொண்டு வாருங்கள்.

அவன் கீழே விழுந்தான்… வேதனையான எண்ணம் வந்துவிட்டது. ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று சுவாசிக்கிறீர்கள்.
1.உயிரான ஈசன் என்ன செய்கின்றது…?
2.அந்த மகரிஷிகள் எப்படி மகிழ்ந்து உறவாடி அந்த உணர்வை எடுத்தார்களோ அங்கு பட்டவுடன் ஈசனுக்கு அப்படியே மகிழ்ச்சியாகின்றது.

நீங்கள் இந்தக் குழந்தை மேல் பாசம் கொண்டு இப்படி விழுந்துவிட்டானே என்ற வேதனையை உணரச் செய்து அந்த வேதனை உணரக்கூடிய நிலை இருந்தாலும் ஈசனுக்கு வேதனையாகிறது.

இந்த உணர்வின் தன்மை அங்கு பட்டவுடன் உடலுக்குள் இருக்கும் சக்திகளெல்லாம் சிவமாகி விடுகின்றது. உடலான சிவம் என்ன செய்கின்றது…? உடல் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகின்றது.

நீங்கள் ஆடவில்லை என்றாலும் சிவன் நர்த்தனமாட ஆரம்பித்து விடுகின்றான். கை கால் எல்லாம் ஆடும். உடல் சிவம்… சிவ நடனத்தைப் பற்றிக் காட்டியிருக்கிறார்கள்.

வாசுகி நீ சுவாசித்த உணர்வின் சக்தியே அது உனக்குள் சக்தியாக இருந்து ஆட்டிப் படைக்கின்றது என்ற தத்துவத்தைத் தெளிவாக எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். யார் படித்திருக்கின்றோம்…? அதை யாரும் படிப்பதில்லை தெரிந்து கொள்வதுமில்லை.

ஆகையினால் நாம் ஒவ்வொருவரும் இந்த நிலையை எடுத்து
1.எப்பொழுதெல்லாம் நமக்கு அந்தக் கஷ்டமான நிலைகள் வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிர் வழி கவர்ந்து
3.உள்முகமாக நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்த சக்தியைப் பாய்ச்சி சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட வேண்டும்.

இன்றைய நிலையில் சாதாரண மக்களினுடைய நிலைகள் வியாபரத்திலேயோ மற்ற நிலைகளிலோ பல உணர்வுடன் கஷ்டப்பட்டுக் கொண்டும் அவர்கள் எடுத்த சுவாசத்தாலோ எத்தனையோ இன்னல்கள் பட்டுக் கொண்டு இருப்பார்கள்.

அவர்களைச் சந்தித்தால் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன…?

அவர்கள் மேல் இரக்கப்பட்டு அந்த இரக்க உணர்வுடன் மட்டும் இருந்துவிடக் கூடாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் தியானித்துவிட்டு “இனி உங்களுக்குத் துன்பங்கள் இல்லை… நன்றாக இருப்பீர்கள்…!” என்று சொல்லுங்கள்.

1.ஆனால் இதை வெளியிலே இருப்பவர்களுக்குச் சொல்லிவிடுவார்கள்.
2.குடும்பத்திற்குள் இந்தச் சிக்கல் வந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் ஆத்திரம்தான் ஜாஸ்தி வரும்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் பழகியிருக்கிறோம். பார்த்தவுடன் ஆத்திரம்தான் சீறி எழும். சந்தோசமாக இருந்திருப்போம். ஏதாவது எண்ணியிருப்போம். ஏதாவது சந்தர்ப்பங்களில் இதே மாதிரி நிகழ்ச்சிகள் நிகழ்ந்து விட்டால் நாம் நம்மையறியாமலேயே இந்த நிலைகளைப் பேசி குடும்பத்திற்குள்ளே ஒவ்வொரு உடலிலும் வெறுப்புணர்வுகளை வளர்த்து விடுகின்றோம்.

அப்படி அந்த வெறுப்பாலே நாம் சுவாசிக்கும் இந்த உணர்வுகள் நோயாக மாறி நம்மையே நாம் வெறுக்கும் நிலையையும் இந்த உணர்வலைகள் ஏற்படுத்தி விடுகின்றன.

இதைப் போன்ற சந்தர்ப்பங்களிலிருந்து தியானமெடுக்கும் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் சிறிதளவு பிழைகள் ஏற்பட்டாலும் உடனே நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
2.தீமை செய்பவர்கள் நாளை செய்வது எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பாய்ச்சிப் பழகுங்கள்.

நம்மைத் திட்டிக் கொண்டே இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது…?

நம்மைத் திட்டிக் கொண்டே இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது…?

 

நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் நினைவைச் செலுத்திவிட்டு உங்களைத் திட்டியவர்கள் அவர்கள் எங்களைப் பார்க்கும் பொழுது நல்ல சொல்லாகச் சொல்லும் ஆற்றல் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர்கள் எதையெல்லாம் பேசி எதையெல்லாம் உங்களுக்குச் சங்கடமாக எண்ணுகின்றனரோ அதே சமயம் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனரோ அது அவர்களுக்கு நடந்து
2.அவர்கள் உணரும் ஆற்றல் பெறட்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

இப்பொழுது உங்களை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னால் நாம் சுத்தமாக அதைக் கேட்டுக் கொண்டேயிருந்த பின்
1.திட்டியது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
2.எனக்கு அது வேண்டாம்…! என்று நாம் அவரிடம் சொல்லி விட்டால் அது நம்மைப் பாதிக்காது.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்து விட்டுத் திட்டியவரிடம் நீங்கள் எப்படி எப்படியெல்லாம் திட்டினீர்களோ அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம் என்று சிரித்த முகத்துடன் சொல்லுங்கள்.

அந்த உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காது.

நாம் ஆத்ம சுத்தி செய்து இவ்வாறு சொன்னவுடன் “ஆ…” என்று அவர்கள் இழுத்தால் போதும்.
1.அவர்கள் அறியாமல் செய்த தவறை
2.நாம் விட்ட மூச்சலைகள் அவருக்குள் ஊடுருவிச் சென்று அவர்கள் செய்த தவறை உணர்த்தும்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இதைப் போன்று குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ ஒவ்வொருவரும் தம்மையறியாத நிலைகளில் இப்படி அடிக்கடி பேசுகின்றனர். அவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துக்கள் அவர்கள் உடலில் வேலை செய்து விடுகின்றது. அதை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றாலும் முடியவில்லை.

ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் பார்க்கலாம். பையன் மேல் நாம் வெறுப்பாக இருப்போம். அவன் நல்லது செய்துவிட்டு வந்தாலும் கூட லேட்டாகி விட்டது என்கிற போது அவனை நினைத்தவுடன் “அவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கிறான்…” என்போம்.

பையன் ஒரு காரியத்திற்குப் போனால் லேட்டாகி அந்தக் காரியத்தை முடித்து விட்டு வருவான். ஜெயித்துவிட்டு வந்தால் கூட நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
1.அவன் சென்று வந்த காரியம் என்ன…? என்று கேட்டறியாதபடி
2.“அவன் இப்படித்தான் எப்பொழுது சென்றாலும் லேட்டாக வருவான்…!” என்று அவனைத் திட்டவும் பேசவும் ஏசவும் செய்வோம்.

அவன் உண்மையைச் சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மாட்டோம். “பொய் சொல்கின்றான்” என்ற எண்ணம் தான் தோன்றும். அதைக் கேட்டறிவதற்குத் தாமதமாகும்.

1.நாம் நல்லது நினைத்தாலும் கூட நம்மையறியாமல் அந்த உணர்வுகளை நிற்கச் செய்யும்.
2.அந்த உணர்வின் தன்மை அவனைக் கெட்டவனாக மாற்றச் செய்யும்.

இதைப் போன்று ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவர்பால் கெடுதலான எண்ணங்களை வைத்து விட்டால் அந்த உணர்வின் பார்வையிலே பேசும் பொழுது நாம் எத்தனை நல்லது செய்தாலும் அந்த எண்ணங்களுக்குத் தப்பாகத்தான் தெரியும்.

ஆகையினால இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.

நாம் ஆத்ம சுத்தி செய்து முடித்தவுடன் நம்மைத் திட்டியவர்கள் பேசிய முறைகள் செய்த முறைகள் அனைத்தையும் அவர்கள் உணர்ந்து அவர்களே அதை அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெறட்டும் என்ற இந்த உணர்வின் நிலைகளை நீங்கள் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்.

வாயிலே சொல்லிவிடாதீர்கள்… சொன்னால் வம்பு வந்துவிடும். உங்கள் எண்ணத்தால் வளர்க்கச் செய்யும் பொழுது அந்த உண்மையின் தன்மையை அவர்களும் அறியும் தன்மை வந்துவிடும்.

ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சோர்வோ மனச் சஞ்சலமோ வெறுப்போ அடைந்தால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதிக்காது. நாம் எடுக்கும் இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள் அறியாமையிலிருந்து மீட்க நமக்கு அந்தச் சக்தி உதவும்.

குடும்பத்திற்குள் இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.
1.மாமியாருக்கும் மருமகளுக்கும் பிடிக்காது.
2.மகனுக்கு அப்பாவைக் கூடப் பிடிக்காது.
3.அந்த அளவுக்கு இன்று பெரும் பகுதி ஆகிவிட்டது.
4.இன்றைக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த நிலைதான்.

நம் உணர்வலைகள் மாறாமல் இருப்பதற்கு, ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

யாம் “வெறும் வார்த்தையிலே சொல்கிறோம்…” என்று எண்ணி விடாதீர்கள்.
1.உங்களுக்குள் வரக்கூடிய எத்தகைய துன்பத்தையும் போக்குவதற்கு
2.ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகக் கொடுத்து உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

ஒவ்வொரு குணத்திலும்… உணர்விலும்… செயலிலும்… துருவ நட்சத்திரத்தை இணைக்க வேண்டும்

ஒவ்வொரு குணத்திலும்… உணர்விலும்… செயலிலும்… துருவ நட்சத்திரத்தை இணைக்க வேண்டும்

 

வீட்டில் ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்து விட்டால் “ஈஸ்வரா…” (நமது உயிரை) என்று சொல்லுங்கள். அந்த உணர்வை மாற்றுங்கள். என் பிள்ளை ஞானியாக வேண்டும். அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும், உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள் என்றால் உடனே “ஈஸ்வரா…” என்று எண்ணி அதைத் தடுத்து விடுங்கள். அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் செய்வது யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெற வேண்டும். அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள். இவ்வாறு நாம் எண்ணும் பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

ஏனென்றால்
1.“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தும் போது
2.நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் இரத்தத்தில் கலந்து செல்லும்… இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது.
3.அப்பொழுது நம்மை எவர் திட்டினாரோ இது கொஞ்சம் கொஞ்சமாக அங்கே போய்ச் சேரும்… அவர் திருந்தும் நிலை வரும்.

அவன் எடுத்துக் கொண்ட உணர்வு திருந்த எண்ணினால் வருகின்றது. ஆனால் நம்மைத் திட்டும்போது நம் உடலுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

இதே மாதிரி வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும்…
1.ஒவ்வொரு குணங்களிலும்
2.ஒவ்வொரு உணர்விலும்
3.ஒவ்வொரு செயல்களிலும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.

பல விதமான குழம்பு வைக்கிறோம்… பல விதமான பலகாரம் செய்கின்றோம். இதே மாதிரி நமக்குள் அந்தத் தீமை செய்யும் உணர்வை மாற்றிச் சுவை மிக்கதாக மாற்றி விடுகிறோம். இப்படி நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது நம் உடலிலுள்ள அணுக்களுக்கு எல்லாம் சேர்கின்றது.

கொஞ்சம் இதில் பொறுமை தேவை.

ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால் ரோட்டில் போகும் பொழுது பார்த்தால் “போகின்றான் பார்…” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.

இதே மாதிரி ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்க்கின்றோம். பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அவன் உணர்வை எடுத்துத் தவறு செய்யும் அணுக்களைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

ஒருவன் சாபம் விடுகின்றான்… அவனைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம். அவன் எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். சாப அலைகள் என்று நமக்குள் எதை எடுத்தாலும் அந்தத் தீமை செய்யும் அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றது.

1.அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் அந்தக் கணமே
2.“ஈஸ்வரா…” என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் வாழ்க்கையில் இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு செய்து… அந்தத் தீமையான உணர்வுகளை “நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து வெளியே தள்ளிப் பழக வேண்டும்…” எமது அருளாசிகள்.

தியானத்தில் வளர்ச்சி பெற்றோர் அவசியம் தெரிய வேண்டியது

தியானத்தில் வளர்ச்சி பெற்றோர் அவசியம் தெரிய வேண்டியது

 

நாம் குரு காட்டிய வழியில் தியானத்தைக் கடைப்பிடித்து வாழ்கின்றோம். அப்படிச் சீராகக் கடைப்பிடிக்கும் பொழுது பிறருடைய கஷ்டமான உணர்வுகளைப் பிரித்துக் காட்டும்.

1.மகரிஷிகள் உணர்வை எடுத்து அதை நமக்குள் நீக்கிய பின் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டி விட்டோம் என்றால்
2.வாழ்க்கையில் தீமைகள் வராதபடி தடுத்துக் கொள்ளலாம்.

இதை நீக்காமல் இருந்துவிட்டு இந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டால் அதுவும் இதுவும் கலந்திருக்கும். இந்த ஆன்மாவில் உள்ளதை நாம் சுவாசித்தவுடன் உயிரில் கலக்கும்.
1.இரவில் புலனடங்கித் தூங்கும் போது இதெல்லாம் காட்சிப் பொருளாகவும் கெட்ட கனவுகளாகவும் வரும்.
2.இதைப் புரிந்து கொண்டோம் என்றால் நன்றாக இருக்கும்

ஒரு வெளிச்சத்தைப் போட்டு அதிலே எந்தக் கலர் சுற்றுகின்றோமோ அது தான் தெரியும். அது போல அறிவின் ஞானத்தை ஊட்டி இந்த உணர்வின் தன்மை வரப்படும் போது அந்த உணர்வு தான் நமக்குத் தெரியும்.

அப்பொழுது பிறருடைய குறைகளை உணர முடியும். “இப்படி நடக்கின்றது… அவருக்கு இடையூறு வருகின்றது” என்று தெரியும்.

பிறர் தவறு செய்திருப்பார்கள். அவருடைய இன்னலான நிலைகள் தெரிய வந்திருக்கும். எனக்குக் காட்சி கிடைத்தது. அவரைப் பார்த்தேன். இந்த மாதிரிக் கஷ்டமாக வந்துவிட்டது.. எனக்கு முதலிலேயே தெரிந்தது என்று சொல்வோம்.

ஏனென்றால அவருடைய தவறின் உணர்வுகளை அறிய முடிகின்றது. இதைத்தான் நாம் நுகர்ந்து சொல்கின்றோம். அப்பொழுது அந்த மாதிரி நேரங்களில் காட்சிகளைக் கொடுத்தவுடனே இதை எப்படிச் செய்ய வேண்டும்…?

1.அருள் வழியில் பற்றுடன் ஆத்ம சுத்தி செய்து விட்டோம் என்றால் ஒருவரது நிலைகளைச் சொன்னாலும்
2.அவர் நஞ்சு கொண்ட வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவில் கலக்காது.

ஆனால் இரவில் நம் வாழ்க்கையில் ஆத்ம சுத்தி செய்யாமலோ… அல்லது செய்திருந்தாலும் அந்த ஆத்ம சுத்தியில் குறை இருந்தாலோ என்ன ஆகும்…?

ஒரு பாத்திரத்தில் அழுக்கு சிறிது ஒட்டியிருந்தால் அது சீக்கிரம் போய் விடுகின்றது. அதோடு ஒன்றிய நிலைகள் இருக்கும் போது இரண்டு தரம் தேய்த்துக் கழுவினாலும் போகாது. இதே மாதிரி நம் ஆத்ம சுத்தியிலும் ஏற்படும். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் ஆத்ம சுத்தி செய்கிறேன்… “இப்படித் தெரிகிறதே…!” என்று ஏங்கக்கூடாது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.நாம் போகும் மார்க்கங்கள் மனிதனின் முழுமை அடையும் நிலைகள்
2.பிறருடைய இருளைப் போக்கும் தகுதி பெற்றவர்கள் நாம்.
3.அதனால் அந்தத் தகுதியை நமக்குள் வளர்த்துக் கொள்வது நல்லது.

மற்றவர்களுடைய தவறைக் கண்ணால் பார்க்கின்றோம். நமக்குள் பதிவு செய்து விடுகின்றோம். நாம் ஆத்ம சுத்தி என்ற வலு சேர்த்திருந்தாலும் அந்த நிமிடம்தான் அந்த வலு.

அதிலே துடைப்பு அதிகம் இருக்காது. தூங்கப்போகும் போது இது வந்துவிடும்.

வெறுப்பின் உணர்வுகள் இங்கு வரப்படும் பொழுது தூக்கம் வராது. என்னதான் ஆத்ம சுத்தி செய்தாலும் தூக்கம் வரவில்லை என்போம். ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கங்களே நமக்குள் இருக்கும்.

அப்பொழுது நாம் ஆத்ம சுத்தி செய்த பின்பும் அந்தக் கடினமான நிலைகள் விலகவில்லை என்று பொருள். இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.நம் நினைவைத் துருவ மகரிஷியோடு இணைக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தோடு சப்தரிஷி மண்டலத்தோடு இணைக்க வேண்டும்.
3.இதைக் கூட்டிக் கொண்டே இருந்தோமென்றால் அந்த உணர்வுகள் நமக்குள் வர வர இது ஒடுங்கும்.

இந்த ஆன்மாவைச் அது சுத்தப்படுத்தும்.

அதே சமயத்தில் நம் உடலில் நாம் கேட்டறிந்த தீமையான அணுக்களுக்குச் சாப்பாடு போய்ச் சேராது. நம் வாழ்க்கையில் தொடர்ந்து அதிலே இருக்க வேண்டும்.
1.நம் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்து இந்த உடலென்ற சட்டியில் சமைக்க வேண்டும்.

நாம் எந்தெந்தக் காய்களை குழம்பில் போட்டுச் சமைக்கின்றோமோ அந்த வாசனைதான் வரும். நாம் உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும் காரமோ உப்பின் தன்மையோ கூடிவிட்டால் அந்தக் குழம்பின் சுவை கெட்டுவிடும்.

இந்தக் குழம்பைப் போன்றுதான் நம் வாழ்க்கையின் நிலைகளில் எதைச் செயல்படுத்துகின்றோமோ அந்த மணம் நமக்குள் சுவை கொண்ட சொல்லாகவும் செயலாகவும் வரும். அந்தச் சுவை கொண்ட உணர்ச்சிகளைத் தூண்டும்.

குழம்பில் சிறிது வித்தியாசமாகிப் போய்விட்டது என்றால் உள்ளுக்குள் இழுக்காது. சுவை கெட்டுவிடும். ஆனால் உணவு எவ்வளவு சத்தான நிலைகளில் இருந்தாலும் உள்ளே ஏற்றுக் கொள்ளாது மறுக்கின்றது.

சாப்பாட்டில் அதிலே போட்டிருக்கின்ற மணம் தான் முலாம். மணத்தின் உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்படும் பொழுது உள்ளுக்குள் இழுக்காது. வெளியில் தள்ளி விடுகின்றது. ஆனால் பசி எடுக்கும். இந்த மணத்தை நுகரும் உணர்ச்சிகள் நம்மை இயக்கினால் தான் இது உள்ளே போகும்.

ஆகையால்
1.நாம் நமது வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழியில்
2.“மகரிஷிகளின் அருள் மணங்களை” ஒவ்வொரு நொடிப் பொழுதும் நுகர்ந்து பழக வேண்டும்.

சும்மா இருக்கும் பொழுது ஒருவரை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்றால் அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு திடீரென்று நினைவு ஓட்டம் ஓடும்,

ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன் அங்கு இருக்கும் பொருள் தெரிய வரும். அதைப் போல ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது அந்த உண்மைகளை நாம் உணர முடியும். தொழிலில் இருப்போம். இந்த உணர்வுகள் அங்கே பிரித்துக் காட்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்டவுடன்… உதாரணமாக எழுத்து வடிவிலே ஆங்கிலமோ தமிழோ கொடுக்கிறார்கள். அதனதன் அழுத்தத்தைக் கொடுத்தவுடன் மற்றதைப் பிரித்துக் காட்டுகின்றது.

இதைப் போல நமது உயிர் சூரியனின் காந்த சக்தி கவர்ந்த இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
1.அதனுடைய செறிவினுடைய அளவுகோல் எதுவோ அதற்குத் தகுந்த மாதிரி நம் உடலை இயக்குகின்றது.
2.அதன் அளவுகோல் எதுவோ அதற்குத்தகுந்த மாதிரி நமது உயிர் அந்தக் காந்தத்தை இழுக்கின்றது.
3.அதில் வந்த உணர்வின் அழுத்தம் எவ்வளவு இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
4.மாற்றிய உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது அதற்குத் தகுந்த அதிர்வுகளைக் கொடுத்து உடலை இயக்குகின்றது.
5.அதற்குத் தகுந்த சிந்தனைகளைக் கொடுத்து அதற்குண்டான செயல்களையும் செய்கின்றது.

இதைப் போலத்தான் நமக்குள் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உண்டு.

அது வெளிப்படும் பொழுது எந்தெந்த அளவுகோல் இருக்கின்றதோ அதற்குத் தக்கவாறுதான் புலனடங்கித் தூங்கும் பொழுது அதிலே இந்த வாழ்க்கையில் நாம் எந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்களின் உணர்ச்சிகள் அதிகமாகத் தூண்டும்… அது ஆன்மாவாக மாறும்.

இது இரண்டும் கலந்து உயிரிலே படும் பொழுதுதான் எலக்ட்ரானிக்காக மாற்றிப் பல நிலைகளை நாம் தெரிந்து கொள்கின்றோம்.
1.தியான வழிகளில் இது ரொம்பத் தெளிவாகத் தெரியும்.
2.தூக்கத்தில் இருந்தாலும் சும்மா படுத்திருந்தாலும் நாம் அமைதியாக இருக்கும் பொழுது
3.இந்த ஆன்மாவில் உள்ளபடி நம் மனநிலையில் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
4.அந்த மாதிரி நேரங்களில் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி ஆத்ம சுத்தி செய்து அகற்ற வேண்டும்.

இதுதான் ஆத்ம சுத்தியில் உள்ள மூலக்கூறு.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் முலாமாகப் பூச வேண்டும்

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் முலாமாகப் பூச வேண்டும்

 

தியானமிருந்து பழகிக் கொண்டவர்கள் கேட்டுணர்ந்தவர்கள் இந்த ஆத்ம சுத்தி என்ற நிலைகளில் செயல்பட வேண்டும். எப்பொழுது நாம் வீட்டை விட்டு வெளியில் போகும் பொழுதும் கண்டிப்பாக ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

உதாரணமாக நம்முடைய நண்பர் ஒருவர் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது நமது உடல் சுருங்குகின்றது. நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது.

அவ்வாறு அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அது உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள் கலந்து விடுகின்றது.

1.அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும் கூட
2.அவருடைய துன்பமான அந்த உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்பட்டு நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து செல்லும் போது
3.நமது (நுரையீரல்) சுவாசப்பை எடுக்கப்படும் பொழுது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது
4.அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உறுப்புகளிலும் முதலில் ஏற்படும்.
5.அந்த இரத்தத்தைச் சுத்தப்படுத்தப் போகும் போது கிட்னி சரியாகச் சுத்தப்படுத்தாது.
6.சுத்தப்படுத்தாமல் நம் உடல் முழுவதற்கும் இரத்தங்கள் செல்லும் பொழுது நமது உடலுக்குள் அது வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.
7.வேதனையான உணர்வுகள் செல்லும்போது நாம் எந்த நல்ல குணங்களைக் கொண்டு எடுத்தோமோ
8.அந்த நல்ல குணத்துடன் இது இரண்டறக் கலந்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு தொட்டியில் நீரை ஊற்றி ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு நீருக்குள் போட்டு விடுவார்கள். அதே சமயம் ஒரு செம்புக் கட்டியுடன் எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து அந்த நீருக்குள் போட்டு விடுவார்கள்.

1.செம்பில் எலக்ட்ரானிக்கை அதிகமாகக் கூட்டி தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும் பொழுது
2.தங்கத்திலிருக்கக்கூடிய சக்திகள் கரைந்து அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக் தங்கத்தைக் கவர்ந்து செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும்.

உள்ளே இருக்கக்கூடிய செம்பு கறுப்பதை விடுத்து இந்தத் தங்கத்தின் முலாமாக ஆகி அது தெளிவாகின்றது.

ஆனால் அதே சமயம்
1.தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்து செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்தால்
2.செம்பின் சக்தி தங்கத்திற்குள் முலாமாகப் பூசப்பட்டு செம்பு எப்படிக் கறுக்கின்றதோ அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.

உங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டு நீங்கள் ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து அது உடலுக்குள் செல்லும் போது நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ அந்த நல்ல குணத்தில் இது முலாம் பூசிவிடும்.

ஏனென்றால் நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும்
1.அவர் படும் துன்பத்தின் மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி… “உனக்கு எப்படி வந்தது…?” என்று கேட்கப்படும் போது
2.அந்த நல்ல உணர்வுகளுடன் அவரிடம் இருந்த நோயான உணர்வுகள் முலாம் பூசிவிடும்.

முதலில் நமக்குள் நல்ல உணர்வான நல்ல குணங்கள் நோயற்ற நிலையும் தெளிவான நிலைகளும் உடலில் தெம்பாக இருந்தது.

ஏனென்றால் தங்கம் எப்படி பளப்பளப்பாக இருந்ததோ அதைப் போல நமது தெளிவான எண்ணங்களினுடைய நிலைகளில் அவருடைய குணங்கள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலேயே இப்படிச் சோர்வின் தன்மை அடைந்து இது நாளாக நாளாக, நமக்குள் நோயாக வந்து சேர்ந்து விடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது.

நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம். அதைத் துடைக்க வேண்டுமல்லவா…?

செம்பும் வெள்ளியும் கலந்து ஒரு நகையைப் பற்ற வைக்கின்றோம். நெருப்பிலே காட்டும் போது தங்கம் இளகுவதற்கு நேரமாகும். ஆனால் செம்பையும் வெள்ளியையும் கலந்து கொஞ்சம் பொடியாக வைத்தபின் அது சீக்கிரம் உருகி விடுகின்றது. அதே சமயம் தங்கத்துடன் ஒட்டிக் கொள்கின்றது.

இதைப் போலத்தான்
1.ஒருவர் துன்பமான நிலையைச் சொல்லும் போது அது உடனடியாக நமக்குள் இயக்கச் சக்தியாகி
2.அந்தச் செம்பான நிலைகள் உருகுவது போல நமக்குள் அவருடைய கஷ்டமான நிலைகள் சீக்கிரம் வந்து நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றது.

தங்க நகை செய்யும் போது ஒட்ட வைத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் நகை ஆகின்றது.

இதைப் போல ஒரு மனிதனுக்குத் துன்பம் ஏற்படும் போது அதை மற்றவர்களிடம் சொல்லும் பொழுது நாம் கேட்டுணர்ந்துதான் ஆக வேண்டியதிருக்கிறது.

அவருக்கு வாழ்க்கையின் நிலைகளில் நாம் நன்மை செய்தால்தான் மனிதனின் நிலையும் ஆகும். நன்மையினுடைய நிலைகளை நாம் செய்தாலும் இந்த வாழ்க்கையில்
1.இன்று ஒருவருக்கு நாம் உதவி செய்தால்தான் நாளைக்கு நமக்கு ஒருவர் உதவி செய்வார்.
2.இன்று உதவி இல்லை என்று சொன்னால் அவர் நாளைக்கு நமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்.

அவருடைய துன்பத்தை நாம் கேட்டறியவில்லை என்றால் நம்முடைய துன்பத்தையும் அவர் கேட்டறிய மாட்டார். கேட்டறிந்தாலும் எப்படி நகை செய்யும் போது, செம்பும் வெள்ளியும் வைத்து நாம் பற்ற வைக்கின்றோமோ அதைப் போல வாழ்க்கையில் இந்தக் குறைகள் நிச்சயம் வரத்தான் செய்யும்.

ஆனால் இந்த வாழ்க்கை என்ற நிலைகளில் நாம் ஓட்டினாலும் அடுத்த நகை செய்யும் போது தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றி அதைச் சுத்தப்படுத்தி விட்டு அடுத்த நகையைச் செய்கின்றனர்.

அதைப் போல ஒரு நண்பன் அவருடைய கஷ்டத்தைச் சொல்லும் போது நாம் கேட்டறியும் போது அதைக் கேட்டுணர்ந்து அவருக்கு உதவி செய்து விடுகின்றோம்.

தங்கத்துடன் செம்பும் வெள்ளியும் சேர்ந்து கொண்டபின் எல்லாமே ஒன்றாகி விடுகிறது. அடிக்கடி இதே நகையை அழித்து அழித்துச் செய்யும்போது செம்பும் வெள்ளியும் அடிக்கடி சேர்ந்தால் என்னாகும்…?

அந்த செம்பின் தன்மை கூடித் தங்கத்தின் தன்மை குறைந்துவிடும்.

இதைப்போல நாம் அடிக்கடி கவலையையும், சஞ்சலத்தையும் கேட்டுக் கொண்டேயிருந்தால் நமக்குள் நல்ல குணம் எல்லாம் குறைந்து நமக்குள் அது நோயாக விளைந்து
1.நமக்குள் நல்ல குணமெல்லாம் கெடுவதோடு மட்டுமல்லாதபடி நல்ல உடலும் கெட்டு விடுகின்றது.
2.நமது நல்ல சொல்லும் கெட்டு விடுகின்றது… நமது சொல்லும்கூட நமக்கு வெறுப்பாகத் தோன்றும்.

கஷ்டமாக இருப்பவர்கள் பிறரிடம் போய்ச் சொல்லும் போது அந்த வேதனை கொண்டே சொல்வார்கள். எப்பொழுது பார்த்தாலும் நச்சு நச்சென்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் சொல்ல வந்தாலே நாம் ஓடுவோம். ஆனால் அந்தச் சங்கடமான உணர்வுகள் நோயாகவும் மாறிவிடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை கேட்டுணர்கிறோம். ஒவ்வொரு நிமிடத்திலும் பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம். அவருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம்… பார்க்கின்றோம்.

இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும் பொழுது அடிக்கடி நம்மையறியாமலேயே வேதனையும் துயரமும் பயமும் உங்களுக்குள் வந்து சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இதை எப்படிப் போக்கிக் கொள்வது…? ஏதாவது வழி இருக்கிறதா…?

அதற்குத்தான் அந்த ஞானிகள் சொன்ன அந்த உண்மையின் சக்தியை உங்களுக்குள் இந்நேரம் வரையிலும் யாம் உபதேசித்தது. கூட்டுத் தியானத்தில் எல்லோருடைய அருள் வாக்கும் யாம் மட்டுமல்ல… உங்கள் அனைவருடைய அருள் வாக்கும் சேர்க்கப்படும் பொழுதுதான் அந்த வலு கூடுகின்றது என்று நமது குருநாதர் சொன்னார்.

ஆத்ம சுத்தி என்ற அந்த ஆயுதத்தை எடுத்து
1.“ஓம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை வேண்டித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற ஏக்கத்துடன் நமக்குள் சேர்க்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் கண்களைத் திறந்து ஒரு நிமிடமும் கண்களை மூடி இரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கண்களைத் திறந்து கஷ்டப்படுபவர்களிடம் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கும்” என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்கவும் முடிகின்றது. நாம் அடுத்த நகை செய்யும் பொழுது, செம்பையும் வெள்ளியையும் சுத்தப்படுத்திக் கொள்வது போல அடுத்த நிமிடமே இதைச் சுத்தப்படுத்திக் கொண்டு நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுதான் தியானம் என்பது.

நமக்குள் தீயது சேராது தடுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு நமக்குள் தியானமிருக்க வேண்டும்..
1.தியானம் என்பது எது…? கெட்டது நமக்குள் சேர விடாது, வைராக்கியமான நிலைகள் பெற வேண்டும், இதுதான் தியானம் என்பது.
2.பக்தியில் நல்லதை நினைத்துக் கொண்டிரு என்பார்கள்.
3.ஆனால், தியானம் என்பது “நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை” வளர்த்துக் கொள்வது.
4.பக்தி என்பது நல்லதை நினைப்பது… தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்தி கொண்டு நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது.

ஆகவே… அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற ஒவ்வொரு நிமிடமும் தியானிப்போம்.

சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்

சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்

 

ஒரு நண்பன் நம்மிடம் துன்பம் என்று சொல்லும் பொழுது அதைக் கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர்வுகள் உங்களுக்குள் சேராத வண்ணம் தடுக்க வேண்டும்.

1.இரும்பைப் புடம் போட்டு எப்படிப் பஸ்பமாக்குகின்றோமோ
2.அதனின் வலுவான சத்தை இழக்கச் செய்யாமல் அதனின் ஆற்றலை ஆக்கச் சக்தியாக மாற்றுவது போல
3.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டறிந்த துன்ப உணர்வுகள் உங்களுக்குள் தீய விளைவுகளை உருவாக்காதபடி
4.இருளைப் போக்கி விஷத்தைப் புடமிட்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கிய மாமகரிஷிகளின் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் சேர்த்த உடனே
5.புடம் போட்டு எடுத்தது போன்று உங்களைப் பரிசுத்தப்படுத்துகின்றது.
6.நீங்கள் எண்ணிய பொழுதெல்லாம் அந்தச் சக்தியை பெற முடியும்.

ஆண்டனாக்களைச் சரியான முறையில் பொருத்தி வைத்த பின் வெகு தொலைவில் இருந்து வரும் அலைகளை டிவி கவர்ந்து தெளிவாகக் காட்டுகிறது.

அதைப் போன்று உங்கள் நினைவால் மகரிஷிகளை எண்ணி ஏங்கும் பொழுது அந்த உணர்வின் சக்தியை நீங்கள் கவர்ந்து நீங்கள் செய்த நன்மையின் சக்தியை “என்றுமே நிலைத்திருக்கச் செய்ய முடியும்…”

1.உங்களை அறியாது புகுந்த விஷத்தின் தன்மை அதனுடைய தீய விளைவுகளை இயக்காது உங்களுடன் ஒத்துழைத்து
2.மெய் உணர்வுகள் மெய் ஞானிகளின் அருள் உணர்வுடன் இயக்கச் செய்யும் நிலையே இந்த ஆத்ம சுத்தி.

ஆகவே ஒவ்வொருவரும் கெட்டதைக் கேட்டாலும் கெட்டதைப் பார்த்தாலும் கெட்டதை எண்ணினாலும் கெட்டதைப் பேசினாலும் அடுத்த கணமே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்துங்கள்.

1.ஒரு நிமிடம் கண்களிலே அவ்வாறு ஏங்கிப் பெறுவதும்
2.அதற்குப்பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒரு நிமிடம் உங்கள் உடலுக்குள் செலுத்தித் தியானிக்கும் போது
3.இதற்கு ஆத்ம சுத்தி என்று பெயர்.

வீட்டை விட்டு வெளியே எங்கு சென்றாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள்.

எந்தக் காரியத்திற்குச் செல்கின்றோமோ அவர்களை எண்ணி என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என் சொல் இனிமை பெற வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுது “நன்மை செய்யக்கூடிய எண்ணங்கள்” அவர்களுக்கு வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உங்கள் கடைக்குச் செல்கிறீர்கள் என்றால் ஆத்ம சுத்தி செய்து விட்டு என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.இதைப்போல் ஆத்ம சுத்தி செய்து அந்த உணர்வோடு கடையில் இருக்கும் பொருள்களைப் பார்த்து
2.இதைப் பயன்படுத்துவர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் மன வளமும் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணிக் கடை வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.

தொழில் செய்யும் இடத்திலும் அங்கே அமர்ந்து ஆத்ம சுத்தி செய்துவிட்டு நம்மிடம் வேலை செய்பவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் பார்வையால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் செய்யும் தொழிலைத் திறம்படச் செய்யும் சக்தியாகவும் என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும். என் சொல் அவர்களை இனிமை பெறச் செய்ய வேண்டும்… அவர்களைப் புனிதப்படுத்தும் செயலாக அமைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேல் அதிகாரிகளுக்கும் இதே போன்று எண்ணும் பொழுது என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என் செயல் அவரைப் போற்றும் நிலையாக வர வேண்டும். என் சொல் அவருக்கு இனிமை பெற வேண்டும் அவர் என்னைப் பார்க்கும் பொழுது நல்ல செயல்கள் செய்து தர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு நாம் தொழிலைச் செயல் படுத்த வேண்டும்.

நோயாளிகளைப் பார்த்தால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்… மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் நோய் நீங்கும் நலம் பெறுவீர்கள் என்ற இந்த வாக்கினை அங்கே பதிவு செய்யுங்கள்.

குழந்தைகள் செயலைப் பார்த்து வெறுப்பு வரும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி குழந்தைகள் பெற்று அதன் வழி அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்கும்
2.கல்வியில் சிறந்த குழந்தைகளாக வளர்வார்கள்
3.என் பார்வை அவர்களை அந்த நிலைக்கு உயர்த்தும் என்று எண்ணிச் செயல்படுத்துங்கள்.
4.இந்த உணர்வோடு குழந்தைகளிடம் பேச முற்படுங்கள்.

கணவனும் மனைவியும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒருவருக்கொருவர் பாய்ச்சுங்கள்.

பெண்கள் சமையல் செய்யும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு நான் சமைக்கும் ஆகாரம் அதை உணவாக உட்கொள்ளும் அனைவருக்கும் உடல் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும் என்று எண்ணிச் செயல்படுத்துங்கள்.

ஆகாரத்தைப் பரிமாறும் பொழுதும் நான் பரிமாறும் இந்த ஆகாரத்தை உட்கொள்ளும் அனைவரும் மன பலம் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பரிமாறுங்கள்.

சாப்பிடுபவர்களும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு நான் சாப்பிடும் ஆகாரம் என் உடலில் நலம் பெறும் சக்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியாக அது மலர வேண்டும் என்று எண்ணி உட்கொள்ளுங்கள்.

இரவிலே படுக்கச் செல்லும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு எதையெல்லாம் நல்லதாகப் பெற வேண்டுமா
1.உங்கள் உணர்வின் வட்டம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும்.
2.சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்.
3.என்றுமே அந்த உணர்வின் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று எண்ணிவிட்டுப் படுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் பொழுது ஆத்ம சுத்தி செய்து என் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும் என் சொல் கேட்போர் அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். என் பேச்சைக் கேட்போர் மெய் ஒளியாகப் படர வேண்டும் நாம் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் எண்ணி அந்த உணர்வோடு எழுந்து வேலைகளைச் செய்யுங்கள்.

நம்மிடம் பொருள் வாங்கிச் சென்றவர்கள் பாக்கியைத் திரும்பத் தரவில்லை என்றால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் வியாபாரம் செழித்து வளர வேண்டும் அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும் நமக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் பால் செலுத்துங்கள்.

இது போன்று வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைச் சந்தித்தாலும் கோபமோ வெறுப்போ வந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளராது தடுக்க ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

பின் யார் மேல் கோபமோ வெறுப்போ வருகின்றதோ என் பார்வை அவரை நல்லதாக வேண்டும் அவர் செயல்கள் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.ஆத்ம சுத்தி என்ற நிலையில் அடிக்கடி நாம் விண்ணை நோக்கி ஏங்கி வரும் பொழுது
2.இந்த வாழ்க்கையில் சப்தரிஷி மண்டல உணர்வுடன் நாம் கலக்கின்றோம்… அதை நம் உடலுக்குள் சேர்க்கின்றோம்.

நம் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் அந்த நோயை மறந்து விடுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும் உடல் நோய் நீங்க வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்னைப் பார்ப்பவர் எல்லாம் நலம் பெற வேண்டும் அந்தச் சக்தி எனக்குள் ஓங்கி வளர வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி என்றுமே என்னுள் நிலைத்திருக்க வேண்டும் நோய்கள் அனைத்தும் நீங்கிட வேண்டும் என்று எண்ணுங்கள்.

எந்த இடத்தில் உடலில் அந்தப் பாதிப்புகள் இருக்கின்றதோ அங்கே நினைவைச் செலுத்தி “நோய் நீங்க வேண்டும்… நீங்க வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் உடல் நலம் பெறும் சக்தியாக வளர்கின்றது
2.இப்பொழுது நான் நலம் பெற்று வருகிறேன்
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என் எண்ணங்கள் சுழல்கின்றது
4.என் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறுவேன்
4.என் உடலில் மகிழ்ச்சி பெறுவேன் என்று இது போன்று எண்ணங்களை அடிக்கடி எண்ணிப் பாருங்கள்.

இவ்வாறு நாம் எண்ணிக் கொடுப்பது அனைத்தையும் இந்த உயிர் படைக்கின்றது இயக்குகின்றது உடலாக்குகின்றது விளைய வைக்கின்றது… இந்த உணர்வையே தன்னுள் இணைத்துக் கொள்கின்றது. அதனுடைய வளர்ச்சியில் நம்மை ஒளிச் சரீரமாக நிலைக்கச் செய்கின்றது.

ஒவ்வொரு நிமிடமும் நாம் வெளிப்படுத்தும் இத்தகைய மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. இந்தக் காற்று மண்டலத்தில் அது பெருகுகின்றது. அனைவருக்கும் நன்மை பெறும் சக்தியாக அமைகின்றது.

இதைத் தொடர்ந்து செய்து வர சப்தரிஷி மண்டல அலைகள் நமக்குள் பெருகிக் கொண்டே வருகின்றது.

1.இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது வெளியில் செல்வோம் என்று தெரியாது.
2.ஆகவே உடலில் இருக்கும் பொழுதே நம் வாழ்க்கையைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டால்
3.இந்த நினைவுடனே நாம் அங்கே செல்ல முடியும்.