YouTube VIDEOS – தியானம்

சூட்சம சக்திகளைப் பெறச் செய்யும் தியானம் – ஆதிசங்கரரும் வியாசரும் உணர்த்தியது

மேல் நோக்கிய சுவாசத்தின் மூலம் மகரிஷிகளை அணுகும் முறை – வாசி

மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டால் கிடைக்கும் பலன்கள்

தியானம் இருக்க வேண்டிய சரியான முறை

தபோவன தியானம்

எந்த நேரத்திலும் துருவ நட்சத்திரம் நம் நினைவுக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும்

திருமூலர் வள்ளலார் அருணகிரி இராமகிருஷ்ண விவேகானந்தர் இராகவேந்திரர் அபிராமிபட்டர் – தியானம்

புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டிய முறையும்… அதனின் அவசியமும்…

ஈஸ்வரபட்டரின் அலைத் தொடர்பைப் பெறும் வழி

கல்கி யுகத்திற்குச் செல்லும் வழி

ஈஸ்வரபட்டரை எப்போதெல்லாம் நாம் நினைக்க வேண்டும்…?

தீமை வரும் சமயம் அதைத் தடுக்க… ஞானிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் தியானம்

ஞானகுருவின் அருள் சக்தியையும் ஈஸ்வரபட்டரின் அருள் சக்தியையும் பெறச் செய்யும் தியானம்

அகஸ்தியன் பெற்ற நஞ்சினை வென்றிடும் மூலிகைகளின் மணங்களை நுகரச் செய்யும் தியானம்

கனவில் தெரியும் நிலைக்கும்… நினைவில் நடக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசம்

மின் மயமாக ஒளி மயமாக நம்மை மாற்றும் தியானம்

ஈஸ்வரபட்டர் சொன்ன இரவு தியானம்

நம்மை உருவாக்கிய தாய் உயிர்… அந்த உயிரால் உருவாக்கப்பட்ட பிள்ளை தான் நாம்

மனமே இனியாகிலும் மயங்காதே… என்ற பாடலை ஈஸ்வரபட்டர் அடிக்கடி பாடுவதன் நோக்கம்

அத்திரி மாமகரிஷியை எண்ணித் தியானிக்க வேண்டிய முறை

ஆத்ம சுத்தி செய்யும் பயிற்சியைப் பெற விரும்புவோருக்கு…

பரமாத்மாவை உணர்த்தும் வியாசக பகவானை எண்ணித் தியானிக்க வேண்டிய முறை https://youtu.be/235LXKz2Upg

ஈஸ்வரபட்டர் உணர்த்தும் பிடர் வழி கண் திறப்பு

மன பலம் பெற நாம் தியானிக்க வேண்டிய முறை

அருள் ஞானச் சக்கரத்தை எண்ணித் தியானிக்கும் முறை

உடல் நலமில்லாதவருக்கு நாம் பாய்ச்ச வேண்டிய அருள் சக்திகள் – தியானிக்கும் முறை

கொங்கணவ மகரிஷியை எண்ணித் தியானிக்க வேண்டிய முறை

நான் பொய் சொல்லவே மாட்டேன் என்பது சரியான தர்மம் ஆகுமா…?

இனி ஏற்பட இருக்கும் உலக மாற்றம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உடல் உறுப்புகள் தியானம் – முக்கியமான பயிற்சி

ஈஸ்வரபட்டரை நாம் கூப்பிட வேண்டிய முறை

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தன்னுடைய பூர்வாங்கத்தைப் பற்றிச் சொன்ன உண்மைகள்

குரு வழியில் நாம் செய்ய வேண்டிய தவம்

சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்லும் சரியான பாதை

ஞானகுருவின் உபதேசத்தைக் கூர்ந்து கவனித்து… ஆழமாகப் பதிவு செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்

இரத்த சம்பந்த பாசம் நம்மை எப்படிப் பலவீனப்படுத்துகிறது…? தியானத்தில் அதை எப்படிச் சீராக்குவது…?

ஒரு நிமிடத்தில் சக்தியைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி

தம்… கட்டித் தியானம் எடுக்கும் பயிற்சி

நாம் எளிதில் பெற வேண்டிய துருவ நட்சத்திரத்தின் சக்தி – பயிற்சி

நோய் நீக்கும் பயிற்சி தியானம்

சப்தரிஷி மண்டலத்திற்குப் போகும் ரூட்…

அகஸ்தியன் அமர்ந்து தவம் இருந்த இடங்கள்

ஆயுத பூஜை – சரஸ்வதி பூஜை சிறப்பு தியானம்

சாந்தத்தால் அனைத்தையுமே சாதித்தவர்கள் தான் ஞானிகள்

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்களைப் பெற நாம் தியானிக்க வேண்டிய முறை

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியைப் பெறும் வழி

உயிரான ஈசனை எண்ணித் தியானிக்க வேண்டிய முறை

நோயுற்றவருக்குத் தியானம் செய்து நோயைப் போக்கும் முறை

போகரை எண்ணித் தியானிக்க வேண்டிய முறை

வாழ்க்கையே தியானம் – பயிற்சி

சப்தரிஷி மண்டலத்துடன் இணைய இரவு படுக்கையில் செய்ய வேண்டிய தியானம்

விண்ணில் உள்ள மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் தியானம்

அகக்கண் சிறப்பு தியானப்பயிற்சி

எங்கள் முன்னோர்கள் ஒளிச் சரீரம் பெற அருள்வாய் ஈஸ்வரா

குரு அருளை தியானத்தின் மூலம் வளர்த்துக் காட்டும் வழி முறை

தினமும் அதிகாலையில் நாம் இருக்க வேண்டிய விரதம்

உடனடியாகச் சக்தி பெறச் செய்யும் ஆத்ம சுத்தி பயிற்சி

ஞானகுரு நினைவு நாள் தியானம்

மனிதனுக்கு வலு கொடுப்பது அவன் எண்ணங்களே…!

ஞானகுரு ஈஸ்வரபட்டரிடம் பெற்ற அனுபவங்களை நாம் பயன்படுத்தும் தியானப் பயிற்சி

Tension ஆகும் பொழுது தியானத்தில் எடுக்க வேண்டிய அகஸ்தியர் உணர்வுகள்

கல்கி நிலைக்குச் செல்லச் செய்யும் தியானம்

உயிருடன் ஒன்றி நாம் தியானிக்க வேண்டிய முறை

தினசரி தியானம் செய்பவர்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் சக்தியைப் பெறும் தியானம்

நம் உடலில் உள்ள விலா எலும்புகளுக்கும் ஊனுக்கும் தியானிக்க வேண்டியதன் முக்கியத்துவம்

அகஸ்தியனின் மரபணுக்களைப் பெறும் தியானப் பயிற்சி

டிவி பத்திரிக்கை செய்திகள் மூலமாக நமக்குள் பரவும் அச்ச உணர்வுகள்

ஆடி மாதம் நல்ல காரியங்களைச் செய்யலாமா…. ஞானிகள் சொன்னது என்ன…?

எண்ணியது(ம்…) நடக்குமா…!

மழை பெய்தாலே இன்று கடுமையான நோய்கள் வரக் காரணம் என்ன…?

ஆடிப்பெருக்கு என்றால் நாம் எதைப் பெருக்க வேண்டும்…?

ஆத்ம சுத்தி செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று வெறுமனே சொல்லாது உயிரோடு ஒன்றி நாம் அவனுடன் இணைய வேண்டும்

மாந்திரீகம் செய்பவர்களிடமிருந்து விடுபடுங்கள்

கொடுக்கல் வாங்கல் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது…?

அகஸ்தியன் பாதம் பட்ட இடங்களில் பதிவாகியுள்ள அதிசயமான ஆற்றல்கள்

விஷக் காய்ச்சல் பரவுவதை நீக்கும்படி செய்தார் குருநாதர்

உலகுக்கு வழிகாட்டிய மகான்களை எல்லாம் விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர்

குரு பிரம்மா… குரு விஷ்ணு‌‌… சாட்சாத் மகேஸ்வரா…!

ஏறு சிங்..‌ இறங்கு சிங்… பார்த்திருக்கின்றாயா…? என்றார் குருநாதர்

27 நட்சத்திரங்களுக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் உண்டான முக்கியமான தொடர்பு

சத்ரிய தர்மத்தின் உண்மை நிலைகள்

குலதெய்வம் வந்து அருளாடுகிறது என்றால் அதனின் உண்மை நிலை என்ன…?

அகஸ்தியன் பெற்ற மகா சித்து…!

காசி கங்கைக் கரையில் அகோரிகளிடம் பெற்ற அனுபவம்

ஈஸ்வரபட்டர் எனக்கு சக்தி கொடுத்த விதம் – ஞானகுரு

குருநாதர் எமக்கு வைத்த பரிசோதனைகள்

பழனியம்பதியில் ஈஸ்வரபட்டர் கொடுத்த நேரடியான அனுபவங்கள்

ஆரம்பத்தில் யாம் கொடுத்த அற்புத சக்திகள் – ஞானகுரு

இறந்தவர்களைப் பாசத்துடன் அடிக்கடி நினைக்கலாமா…?

மகரிஷிகள் என்ற பாதுகாப்பு அரணை நாம் உபயோகப்படுத்த வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறச் செய்கின்றோம்

மற்ற மண்டலங்களுக்குச் சென்று மனிதன் வாழ முடியுமா…!

தியான வழியில் சரியான வளர்ச்சி அடைய நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்

ஈஸ்வரபட்டர் கொடுத்த மிக முக்கியமான உபதேசம்

தாகத்திற்குத் தண்ணீர் குடிப்பது போன்று துருவ நட்சத்திரத்தைப் பருகித் துன்பத்தைப் போக்க வேண்டும்

மகரிஷிகளை நாம் எண்ண வேண்டிய சரியான முறை

நம்முடைய பக்தி எப்படி இருக்க வேண்டும்…?

அக்னி குண்டம் எதிலே இறங்க வேண்டும்…?

கண் பட்டு விட்டது என்று சொல்வதில் உள்ள உண்மை நிலை என்ன…?

மனித வாழ்க்கையில் சொர்க்கலோகத்தை எப்படி உருவாக்குவது…?

நான் கண்டறிந்த அத்தனை உண்மைகளையும் நீங்களும் காண முடியும் – ஞானகுரு

இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளைக் கொடுக்கின்றோம்

ஞானகுருவின் அருளையும் ஈஸ்வரபட்டரின் அருளையும் பெறுங்கள்

நீங்கள் மகிழ்ந்து வாழ குரு அருள் என்றென்றும் உறுதுணையாக இருக்கும்

விபத்து என்று கேள்விப்பட்டதும் நமக்குப் பதட்டம் வருவது ஏன்…?

வாழ்க்கையில் வேதனைப்பட்டு நொந்து போனவர்களுக்கு எப்படி ஊக்கம் கொடுக்க வேண்டும்…?

வாழ்க்கையில் எது வந்தாலும் தாங்கக்கூடிய மன பலம் கொடுக்கின்றோம் – ஞானகுரு

நம்முடைய முன்னோர்களுக்குக் கொடுக்க வேண்டிய திதி…

ஆயுள் ஹோமம்

குடுகுடுப்புக்காரன் மண்ணையும்… முடியையும்… பழைய துணியையும்… ஏன் கேட்கின்றான்…?

நம்மை அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி

ஒளியின் சொரூபம் பெறுவது எப்படி…?

தியானம் செய்ய வேண்டிய சரியான முறை

இன்றைய உலகில் உண்மையான கடவுள் எங்கே எப்படி இருக்கின்றான்…?

நோய் நீக்கும் தியானம்

நம்முடைய கடைசி நினைவு எங்கே இருக்க வேண்டும்…?

உடலை விட்டுப் பிரிந்த ஆவி மனித உடலுக்குள் வந்தால் எப்படி ஆட்டிப்படைக்கிறது….?

சப்தரிஷி மண்டலங்களில் உள்ள ஒளியான உயிரான்மாக்கள்

குருநாதர் எனக்குச சக்தி கொடுத்த முறை – ஞானகுரு

முருகனின் காட்சி
https://youtu.be/7WTjYjrIQWI

திருப்பதி மலைக் குகையில் குரு கொடுத்த நேரடி அனுபவம்

திண்டுக்கல் இரயில் விபத்தின் மூலம் குரு உணர்த்திய பேருண்மை
https://youtu.be/62CcSy2MKoo

இந்த வாழ்க்கையில் நம்முடன் வரக்கூடிய சொந்தம் எது…?

அகக்கண் திறப்பு
https://youtu.be/HnxisbuJ43A

நெருப்பின் சக்தி கொண்டது தான் உயிர்

வெள்ளிக் கோளின் சக்தியும் வியாழன் கோளின் சக்தியும் பெற்றவன் அகஸ்தியன்
https://youtu.be/dszbMC6PgmE

இறந்த பின் எங்கே செல்கிறோம் என்பதை நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்

இந்தத் தியானத்தின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் அற்புதமான சக்திகள

திருமூலர் சொன்ன சிதம்பர ரகசியம்


எல்லாவற்றிலும் தப்பிடும் சக்தி நமக்கு வேண்டும்

கண்களைத் திறந்து தியானிக்க வேண்டியதன் அவசியம்

என்றும் பதினாறு

மரணம் அடைவதற்கு முன்னாடி அரிதாக சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்.. எப்படி…?

நம்மிடமிருந்து உதவி பெற்றவர் நமக்குத் தீமை செய்தால் என்ன செய்ய வேண்டும்…?

உதவி செய்வது போல் வந்து நம்மை ஏமாற்றுபவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

பௌர்ணமி தியானம் செய்தால் கிடைக்கும் பலன்கள்

லாட்டரியில் எதிர்பாராது பணம் கிடைத்தால் உணர்ச்சி வசப்படுகிறோம்… பரிசு விழுகவில்லை என்றாலும் உணர்ச்சி வசப்படுகின்றோம்… ஏன்…?

பைத்தியமாக இருந்த ஈஸ்வரபட்டரின் ரகசியம்

முந்தைய வேதனைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்…?

அண்ணன் தம்பி சாப அலைகள்

மனைவி மூலமாகத்தான் எனக்கு சக்தி கிடைத்தது

நேர்கோட்டில் தியானம் செய்ய வேண்டும்

ஆவி பிடித்த ஒரு அம்மாவைக் குணப்படுத்தியது

துருவ நட்சத்திரத்தின் பேரருள் சக்தி

எதைப் போட்டு யாகம் நடத்த வேண்டும்…?

நரபலி….

குரு அருளைப் பயன்படுத்த வேண்டிய முறை

நம்மைக் காக்கும் சக்தி துருவ நட்சத்திரம் தான்….!

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

ஈஸ்வரபட்டர் எம்மை ஆட்கொண்ட முறை – ஞானகுரு

இந்தத் தியானத்தின் மூலம் ஆன்மாவில் உள்ள தீமைகளைத் தூசி தட்டுவது போல் தட்டி விட முடியும்


யாருக்கு முதலில் மோட்சம் கேட்க வேண்டும்…?

25 சதவீத மக்கள் ஞானம் பெற்றாலே போதும்…

பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

நம் வேண்டுதலை நிறைவேற்றித் தரும் சக்தி எது…?

நொச்சி இலையின் மருத்துவ குணங்கள்

மாதந்தோறும் வரும் சதுர்த்தியின் முக்கியத்துவம்

கெட்டது போக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் திட்ட வேண்டும்…!

நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் பற்றிய உண்மைகள்
https://youtu.be/BhXVSpjAG_Y

உடலை ஒளியாக மாற்றும் தியானம்

சப்தரிஷி மண்டலத்தில் உள்ள ஒளியான ஆன்மாக்கள்
https://youtu.be/tKJ1zoNc75s

காரியசித்தி என்றால் என்ன….?

துருவ நட்சத்திரத்தின் நீல ஒளிக்கற்றைகள் எப்படிப்பட்டது…?

கல்லைக் கொண்டு தட்டி… ஆண்டவனுக்குப் ஃபோன் செய்யும் ஈஸ்வரபட்டரின் வினோதமான செயல்

புலஸ்தியரும் அகஸ்தியரும்

120 வயதுக்கு மேல் வாழ்பவர்கள்…!

தீமைகளையும்… துன்பங்களையும்… மறக்கும் வழி

அகஸ்தியன் பெற்ற ஆற்றலை நாம் எப்படிக் கவர வேண்டும்…?

தியானப் பயிற்சியும்… ஆத்ம சுத்தி பயிற்சியும்...

நாம் ஏன் உணர்ச்சி வசப்படுகின்றோம்…?

இவர் நல்லவரா…! அல்லது கெட்டவரா…? என்று பிறரை ஆராய்ச்சி செய்தால் வரும் விளைவுகள்

உங்கள் மன உறுதியைக் கூட்டிக் கொள்ளுங்கள் – நடந்த நிகழ்ச்சி

நோயாளிக்கும் கடனாளிக்கும் தியானிக்க வேண்டிய முறை

ஈஸ்வரபட்டரிடம் பெற்ற மிக முக்கியமான அனுபவம்

நம் குலதெய்வங்கள் பற்றித் தெரியாத விஷயங்கள்

எதிர்காலத்தை எண்ணிக் கொண்டு நிகழ்காலத்தை வீணாக்கி விடக்கூடாது

அருளைத் தேடினால் எல்லாமே நம்மைத் தேடி வரும்

கோர்ட்டில் நமக்கு நியாயம் கிடைக்கச் செய்யும் வழி

நம் உடல் உறுப்புகளுக்குச் செய்ய வேண்டிய பயிற்சி

ஈஸ்வரபட்டர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன…?

உயிரை மதிக்க வேண்டியதன் அவசியம்

மின்சாரம் போல் சக்திகள் பாய்ந்து உங்கள் நோயை அது அகற்றும்

தியானத்தில் எண்ண வேண்டிய வாசகங்கள்

கஷ்டத்துடன் வருபவர்களுக்கு மகிழ்ச்சியை எப்படிக் கொடுக்க வேண்டும்…?

கடும் விஷத் தன்மையாக மாறிக் கொண்டிருக்கிறது இந்த உலகம்

தமிழ் நாடு உலகுக்கே எடுத்துக்காட்டாக வரும்…

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவரின் அனுபவங்கள் எப்படி இருக்கும்…?

தியானத்தின் மூலம் சக்திகளைக் கூட்ட வேண்டிய முறை 

அதர்வண வேதம்
ttps://youtu.be/NmJ_w3uVa7A

மனதை ஒன்று சேர்த்தால் மகிழ்ச்சி தன்னாலே வரும்…!

மணிக் கணக்கில் உட்கார்ந்து செய்வது தியானம் ஆகாது… ஏன்…?

நோய் நீக்கும் பயிற்சியும் தியானமும்

சாப வினை தீய வினை பாவ வினை பூர்வ ஜென்ம வினை அகல என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரபட்டரின்  அருள் பிரசாதம்
https://youtu.be/Ev1klltqWQQ

ரசமணி சித்தர்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறும் பயிற்சி

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறும் பயிற்சி

இரவு படுக்கும் முன்னும்… காலை எழுந்ததும்… செய்ய வேண்டிய பிரார்த்தனை

மகரிஷிகளின் விசித்திரமான சக்திகள்

மூலாதாரம்

உயிரில் ஏற்ற வேண்டிய தீபம்

“இலட்ச தீபம்… கார்த்திகை ஜோதி…” ஞானிகள் கொடுத்த தத்துவம் என்ன..?
https://wp.me/p3UBkg-Os

அமாவாசை அன்று முன்னோர்களைக் கூப்பிடலாமா…?

மனு நீதி சாஸ்திரம்

தான் செய்த குற்றத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்…

தியானத்தில் நாம் வைக்க வேண்டிய குறி…!

முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை

காற்றிலே பரவிப் படர்ந்துள்ள அகஸ்தியன் மூச்சலைகளை நுகர… “குருநாதர் எனக்குக் கொடுத்த பயிற்சி”

நம்மை அறியாது தவறு செய்தால் வேதனைப்படலாமா…?

உயிரின் இயக்க இரகசியம்

நல்லது பெற முடியாதவர்களுக்கு வழி காட்டு என்றார் குருநாதர்

ரிஷிகேஷில் 1000 வருடம் தவமிருந்தவர்

தியானம்

கண் திருஷ்டி

நல்லவரைக் காக்கும் சக்தி

துன்பத்தில் இன்பம் காண்பது எப்படி…?

புருவ மத்தி இரகசியம் – பயிற்சி

உங்களைத் தேடி வந்து யாம் கொடுக்கும் ஞானப் பொக்கிஷம்

கேன்சர் நோய் வரக் காரணம்

அகஸ்தியன்… துருவ மகரிஷி… “துருவ நட்சத்திர தியானம்”

காலையிலும் இரவிலும் தியானிக்க வேண்டிய முறை

மகரிஷிகள் சக்தி தான் இங்கே செயல்படுகிறது

துருவ நட்சத்திர ஒளி

இன்று கத்தி முனையில் இருக்கின்றோம்

இந்த உடலை விட்டு உயிர் எப்பொழுது போகும் என்று சொல்ல முடியாது…!

தியானத்தில் முன்னணியில் வைக்க வேண்டிய ஆசை

தியானத்தில் ஒரு நிலைப்படுத்துவது எப்படி…?

யாம் கொடுக்கும் சக்தியைக் கையாளும் முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர ஞானகுரு கொடுக்கும் தியானப் பயிற்சி

தவறு செய்யாமலே தண்டனை எப்படி வருகிறது…? – அனுபவங்கள்

தீமைகளை நீக்கப் புருவ மத்தியில் கட்டளை இட வேண்டும்

நம் உயிர் ஒரு டாக்டர்

“நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக மாற முடியும்…” – குரு வாக்கினைக் கொடுக்கின்றோம்

நம் அன்றாடக் காரியங்கள் சீராக இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் நீல நிற ஒளி சக்தியை எடுக்க விரும்புபவர்களுக்கு…
நீல நிற ஒளிக்கற்றைகள் புருவ மத்தியில் அலை அலையாக இணைவதையும் இணைந்த பின் புருவ மத்தியில் ஜோதியாக ஒளிர்வதையும் காணலாம். மேலும் உடலில் இருந்து பளீர் பளீர் என்று (வெல்டிங் வெளிச்சம் போல்) ஒளிகள் வெளியிலே பாய்வதையும் காணலாம்.
https://wp.me/s3UBkg-24015

ஈஸ்வராய குருதேவரின் தரிசனம்

அபிராமிப்பட்டர் அன்று சொன்னது மனிதனுக்குத் “திதி” கிடையாது

ஊன் உடம்பு ஆலயமடா…! என்று சொன்ன திருமூலர் வழியில் அனைத்துலக மக்களையும் மகிழச் செய்வோம்

உடல் சூட்டினால் வரும் நோய்கள்

வீட்டிற்குள் இருந்தே ஆற்றல்மிக்க சக்திகளை எப்படிப் பெறுவது…?

இராமாயணத்தில் பரதன் மூலம் வான்மீகி உணர்த்தும் முக்கியமான உண்மை

மூச்சுப் பயிற்சி செய்தால் ஏற்படும் விளைவுகள்

தியானத்தின் மூலம் நாம் பெற வேண்டிய சக்தி

மனித வாழ்க்கையின் இரகசியம்

நல்லதைக் காக்க உதவும் சரியான எண்ணம்

காலக் கடிகாரம் போன்ற (TIME MACHINE) அறியும் ஆற்றல்

மின்னலைப் பாருடா… பாருடா…! என்பார் குருநாதர்

அருளைத் தேடினால் பொருள் வரும்… மகிழ்ச்சி தேடி வரும். ஆனால் பொருளைத் தேடினால் வேதனைதான் வரும்…!

விளக்க உரையுடன் “தியானமும் பயிற்சியும்”

போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாணச் சிலையிலிருந்து வரும் வாசனை

சந்தேகப்படுவதை விடுத்துவிட்டு… தெளிவு பெறுவதற்கே நாம் வர வேண்டும்

குரு அருளால் நடந்த நிகழ்ச்சி

நோய் நீக்கும் மருத்துவம் எது…?

பித்தம் உடலுக்குள் எப்படி அதிகரிக்கின்றது…?

இன்றைய கால கட்டத்தில் நாம் பெற வேண்டிய முக்கியமான சக்தி

வடக்கு வாசல்

நாம் தேடிக் கொண்டிருக்கும் கடவுள் எங்கே… எப்படி இருக்கின்றான்…?

நாம் சுவாசிக்கும் இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக மாறக் காரணம் என்ன…? https://youtu.be/dOKa8kNlJHU

உணவை அமிர்தமாக உட்கொள்ளும் முறை – உபதேசமும் விளக்க உரையும்

காற்று மண்டல நஞ்சு நமக்குள் புகாதபடி தடுக்கும் உயிர் வழி சுவாசம்

நான் அவனாக வேண்டும்… அவன் நானாக வேண்டும்…

அக்கால அகஸ்தியனின் அதிசயமான சக்திகளைப் பெறச் செய்யும் முறையும் விளக்க உரையும்

தியானத்தில் சக்தி எடுக்க வேண்டிய முறை
உபதேசமும்… தியானம் செய்ய வேண்டிய முழுமையான விளக்கமும்.

நம் கவனம் சிதறக் காரணம் – குரு உபதேசம் – விளக்கம்

வியாபாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும்…?

தியான விளக்கமும்… பயிற்சியும்

பிரதோஷம்

செய்வினையிலிருந்து விடுபடும் வழி

சாமி கும்பிட வேண்டிய முறை

ஓ ம் ஈஸ்வரா குருதேவா – உயிரின் இயக்க விளக்கம்

பித்தன் சித்தன் எத்தன்

இராமேஸ்வரத்தின் பொக்கிஷம்

படிக்காத மேதைகள்

உமதருளால் எமது உயிர் உயர்வடைய அருள்வீரே… குருவே… ஞானகுருவே…! – பாடல்

பேரண்ட மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்

நம் சக்தியைக் கூட்டும் சரியான வழி

சர்க்கரைச் சத்து… ஆஸ்த்மா… வாத நோய்… நீக்கும் பயிற்சி

மனிதனின் கடைசி எல்லை

அழகான சாமி படங்களை வீட்டிலே மாட்டச் சொன்னதன் நோக்கம்

என் உணர்வுகள் அனைத்தும் உன்னை மறவாதிருக்க… அருள்வாய் குருதேவா…! – பாடல்

ராஜ கணபதி வஜ்ர கணபதி சங்கட கணபதி

ஈஸ்வரபட்டர் பூர்வீகம்

தீமையை நீக்கும் புரோகிராமை நாம் அதிகாலையிலேயே போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்

தியானிக்க வேண்டிய முறை

தீமையை நீக்கும் கூட்டமைப்பு

சாப அலையின் இயக்கங்கள் – அண்ணன் தம்பி முன்னோர்கள்

உங்களிடம் என் குருவைக் காண விரும்புகின்றேன்

விமான விபத்தைத் தடுத்த நிகழ்ச்சி

நல்ல நேரம் கெட்ட நேரம்

சூரிய கலை சந்திர கலை பிராணாயாமம்

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் தியானம்

பழனியில் பித்தராகச் செயல்பட்ட ஈஸ்வரபட்டர்

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… பாடல்

சப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…!

நஞ்சை ஒளியாக மாற்றும் அகஸ்தியனின் அரும் பெரும் சக்திகள்

கணவன் மனைவி ஒன்றி வாழ்ந்தால் சொர்க்கம்

பௌர்ணமி தியானத்தில் அதிகமான சக்தி உங்களுக்குக் கிடைக்கும்

அகஸ்தியன் பெற்ற நட்சத்திரங்களின் சக்திகளை நாம் பெறுவது மாமருந்து

கண் திருஷ்டி

உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது…?

தாயின் கருவில் தான் நம் விதியே (ஜாதகம்) நிர்ணயமாகின்றது

மகா சித்து பெற்ற அகஸ்தியன்

தெற்கிலே வளர்ந்த அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வுகளை இந்த உலகிலே பரப்புவோம்

என்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்

துருவ நட்சத்திரமே அனைத்திற்கும் வழிகாட்டி

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர்க்கின்றோம்

குருவை நாம் நினைக்க வேண்டிய முறை

சந்தர்ப்பம் தான் எல்லாவற்றுக்கும் காரணம்

குலதெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய சாஸ்திரம்

சிவனுக்கு முந்தியவன் விநாயகன் என்றால் எப்படி..?

மனித சுவாச நிலையின் மகத்துவம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய முறை

குருவின் செயல் எது…? நாம் செய்ய வேண்டியது எது…?

அகஸ்தியன் சரித்திரம்

தீமையைப் பிளக்கும் ஆத்ம சுத்தி

சப்தரிஷி மண்டலம் இங்கிருந்து பார்த்தால் கேள்விக்குறி போன்று தெரிவதன் காரணம் என்ன…?

உபதேசத்தைப் பதிவாக்க வேண்டியதன் அவசியம்

முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை

“அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உருவான மரபணுவை” நாம் எல்லோரும் பெற வேண்டும்

வசியம்.. கைவல்யம்… ஏவல்…!

உயிரான ஈசனுடன் நாம் ஒன்ற வேண்டியதன் அவசியம்

உலகையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் உருவான விதம்

அகஸ்தியன் அன்று கண்டுணர்ந்த முக்கியமான 21 பச்சிலைகளை உறையும் தன்மையாக்கி வேராகக் கொண்டு வரும்படி செய்தேன்

விண் செல்லும் மார்க்கம்

மரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…?

உலகப் பேரழிவு வரப்படும்போது அகஸ்தியன் ஆற்றல் இங்கே பெருக வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம்மைக் காக்க வேண்டும்

உடலில் நோய் வரக் காரணமும் நோய் வராது தடுக்கும் வழிகளும்

விஷத்தை அடக்கி ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா

கோபத்தின் உணர்ச்சிகள் நமக்குள் சிறுகச் சிறுக அதிகமானால் உடல் உறுப்புகளின் இயக்கத்தைத் தடைப்படுத்தும்

குருநாதருடன் யாம் சுற்றப்படும்போது சிலருக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு உடல் நோய் எல்லாம் நீங்கியது

இந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகள் தீமைகள் புகாது தடுக்க உதவும் 

எது எப்படி இருந்தாலும்… “துருவ நட்சத்திரத்தின் நினைவிற்கு” நாம் வந்து கொண்டே இருக்க வேண்டும்

கூட்டம் தேவை இல்லை

நான் கொடுப்பதை எண்ணி ஏங்கி எடுத்தால் தான் அந்தச் சக்தியை உங்கள் உயிர் உருவாக்கிக் கொடுக்கும்

புருவ மத்தியில் நாம் நிலை நிறுத்த வேண்டியது எதை…?

உங்களால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்…!

பத்து வருடத்தில் கொடுக்க வேண்டிய உபதேசத்தைப் பத்து நாளில் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்

புருவ மத்தி தான் மனிதனுக்குச் சொர்க்கவாசல்

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளிக் கற்றைகளை எப்படிப் பெறுவது…?

துருவ தியானத்தில் எடுக்க வேண்டிய சக்தி

உடலை விட்டுப் பிரிந்தால் சப்தரிஷி மண்டலம் அடைவோம்

உயிருடன் ஒன்றி ஏகாந்தமாக வாழும் நிலை

மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்துப் பாற்கடலைக் கடைந்தனர்

அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்த வான்மீகி மகரிஷியும்… இராமாயணக் காவியமும்…!

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் செல்கின்றான்

அகஸ்தியர் அருளிய விநாயகர் தத்துவம்

அகஸ்தியன் ஒளியாக ஆன உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்

தீமைகளை நீக்கும் வலுவான பயிற்சி

நோய்த் தொற்று எப்படி ஏற்படுகிறது…?

நாம் வாகனத்தில் சரியாகச் சென்றாலும்… எதிர்பாராது விபத்து ஏற்படக் காரணம் என்ன…?

நம் உணர்வின் இயக்கம் – நாம் ஏன் உணர்ச்சி வசப்படுகின்றோம்…?

அகஸ்தியன் இளமையில் பெற்ற அரும் பெரும் சக்திகள்

நம்மை அறியாமல் பிடிக்கும் தோஷங்கள் (பிரதோஷம்)

நீங்கள் எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்பதே என்னுடைய பேராசை

உபதேசம் கேட்கும் போது ஞானக் கதவைத் திறந்து வையுங்கள்

துன்பத்தில் தான் நான் இன்பத்தைக் கண்டேன் என்றார் ஈஸ்வரபட்டர்

காற்று மண்டலத்தில் பரவி இருக்கும் நச்சுத் தன்மையிலிருந்து எப்படி விடுபட வேண்டும்…? என்று உபதேசித்தார் குரு

நீங்கள் ஒவ்வொருவரும் ஞானம் பெறும் சந்தர்ப்பம்

மனிதனுடைய எண்ண வலு சாதாரணமானதல்ல

மனித வாழ்க்கையில் எதை நாம் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்…?

காற்று மண்டலத்தின் விஷத் தன்மையிலிருந்து விடுபடச் செய்யும் வழி

அகஸ்தியன் பெற்ற ஆற்றலைக் கவரும் பயிற்சி

வான்மீகி – அகஸ்தியர் உணர்வைப் பெற்ற சந்தர்ப்பம்

தவமும்… குருவின் ஆசியும்…!

தியானமும்… முன்னோர்களை விண் செலுத்தும் பயிற்சியும்

இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…!

கணவன் மனைவியாக சப்தரிஷி மண்டலத்தில் ஒளியாக வாழும் ஈஸ்வரபட்டரின் உயிரான்மா

உலக மாற்றத்திலிருந்து நாம் தப்பியே ஆக வேண்டும்

சித்திரகுப்தனின் கணக்கு

அந்த மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட அருள் சக்திகளை உங்களுக்குள் அதிகமாகப் பதியச் செய்து உங்கள் சிந்தனையைத் தூண்டச் செய்கிறோம். தீமைகள் உங்களை அணுகாது மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றச் செய்து இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் இணைக்கச் செய்து “சித்திரம்” அந்த மகரிஷிகளின் உணர்வின் எண்ணங்களைக் கூட்டச் செய்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெருக்கப் பெருக்க அந்தக் கணக்கின் பிரகாரம் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுடன் நாம் இணைந்து வாழ முடியும். நம்மால் நிச்சயம் இது முடியும். மனிதர்களால் சாத்தியமானதுதான்.

சத்தியவான் சாவித்திரி

இந்த உயிர் சத்தியமாகின்றது. தன்னுள் இணைந்து கொண்ட சக்தி உண்மையின் உணர்வாக ஒளியாக மாறுகின்றது. இதுதான் சத்தியவான் சாவித்திரி எமனிடமிருந்து கணவனை மீட்டினாள்.

நஞ்சின் இயக்கமும் நஞ்சை வென்றிடும் இயக்கமும்

இந்தப் பிரபஞ்சத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் நிலை பெற்றது துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்கள் பெற்ற அருள் ஒளியின் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டித் தியானிக்க வேண்டும்.

உங்கள் நினைவு துருவத்தை நோக்கிச் செல்லட்டும். துருவ நட்சத்திரத்துடன் உங்கள் நினைவாற்றல் இணையட்டும்.

சூரியனின் கதிரியக்கங்கள் கவர்ந்து பரப்பும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உயிருடன் இணைத்து உங்கள் உடலிலே பரவச் செய்யுங்கள்.

உங்கள் இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள். உங்கள் உடலிலுள்ள அணுக்களை அவ்வழியில் பெறும்படிச் செய்யுங்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை உங்கள் உடலுக்குள் ஒன்றிடச் செய்யுங்கள். ஒவ்வொரு அணுக்களிலும் ஒன்றிடச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்துடன் ஒன்றிட வேண்டும் என்று உயிரான ஈசனிடம் உணர்வைச் செலுத்தி ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.

நஞ்சு மோதி ஈர்க்கும் சக்தி பெற்றது. இதைப் போன்று நமது துருவப் பகுதி வழியாக பூமிக்குள் வரும் உணர்வினை துருவ நட்சத்திரம் அந்த நஞ்சுடன் மோதி அதை ஒளியாக்குகின்றது.

தனக்குள் மோதும் நஞ்சினை துருவ நட்சத்திரம் ஒளியாக்குவது போன்று உங்கள் உணர்வின் தன்மையும் இன்று உங்களில் மோதும் நஞ்சினை ஒளியின் உணர்வாக ஒளியின் சிகரமாக மாற்றும் நிலைக்கு வரும்.

உபதேச வாயிலாகக் கொடுக்கப்படும் அகஸ்தியரின் அரும் பெரும் சக்தி

இந்த உபதேசத்தைக் கேட்கும் பொழுதும்… நீங்கள் இதைப் படிக்கும் பொழுதும்… உங்களுக்குள் அற்புதமான மணங்கள் வந்து கொண்டே இருக்கும். உங்கள் உடலில் உள்ள இரத்தநாளங்களில் அந்த அருள் சக்தியான நிலைகள் வரும்.உங்களுக்குள் ஒரு குளிர்ச்சி ஏற்படும் உணர்வின் தன்மையையும் ஊட்டிக் கொண்டே இருக்கும். உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு வீரியமான சக்தியும் கிடைக்கும்.

இந்நேரம் வரை உபதேசித்தது அருள் ஞானத்தின் உணர்வை நீங்கள் பெறவேண்டும் என்பதற்கே….!

இதை நீங்கள் நுகர நுகர மகிழ்ச்சியை ஊட்டும் அருள் ஞானத்தின் உணர்வுகளை நினைவுபடுத்தும் அருள் வழியில் உங்களை வாழ வைக்கும்.

இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் ஆழப் பதிந்த பின் நீங்கள் எங்கே சென்றாலும் மேலே சொன்ன அத்தனையும் நுகர முடியும். அருள் ஆற்றலைப் பெற முடியும்.

ஆகவே இந்த உலகைக் காத்திட அந்த அருள் ஞானம் வேண்டும் என்று உணருங்கள். உலக மக்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற உணர்வுடன் தியானியுங்கள்.

அந்த அருள் ஞானம் உங்களுக்குள் விளையும். அரும் பெரும் சக்தியாக உங்கள் உடலைச் சுற்றி நறுமணங்கள் பரவும். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர நல்ல அணுக்களின் தன்மை விளையும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் மகரிஷிகளின் சக்தியும்… துருவ நட்சத்திரத்தின் சக்தியும் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி இருங்கள்.

செடியிலிருந்து வித்தா…? வித்திலிருந்து செடியா…?

வேப்ப மரம் அந்தக் கசப்பான உணர்ச்சியின் தன்மை கொண்டு தன் வித்தை உண்டாக்குகின்றது. அதை நிலத்தில் ஊன்றினோம் என்றால் அதன் சத்தை மட்டும் கவர்ந்து வேப்ப மரமாக விளைகின்றது.

ஒரு ரோஜாச் செடி – வித்து இல்லை என்றாலும் கூட வித்திற்குக் காரணமான அந்தக் கொடியை எடுத்து வைத்தால் தன் உணர்வை எடுத்து அதே போல நறுமணம் கொண்ட செடியாக மாறுகின்றது.

விஷச் செடியின் வித்தினை நிலத்தில் ஊன்றினால் அது தன் இனத்தைக் கவர்ந்து விஷச் செடியாக வளர்கின்றது.

வேப்ப மரத்தின் சத்தையும் ரோஜாப்பூவின் சத்தையும் விஷச் செடியின் சத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொண்டதனால் (பரமாத்மாவாக – காற்று மண்டலம்) அந்தந்த வித்துக்களை நிலத்தில் ஊன்றும் போது நிலத்தின் ஈர்ப்பு சக்தியின் துணை கொண்டு அந்தந்தச் செடிகள் விளைகின்றது.

இதை நாம் பார்க்கின்றோம்.

விஷச் செடியில் இருந்து வரக்கூடிய சத்தை வேப்ப மரத்தின் அருகிலே வந்தால் வேப்ப மரத்தின் உந்து விசை கொண்டு தன் அருகில் வராதபடி அதைத் தள்ளி விட்டுவிடும். அதை இழுப்பதிலை.

அதே போன்று தான் வேம்பின் உணர்வின் சத்து விஷச் செடியின் பக்கம் போனதேன்றால் இதை அது விடுவதில்லை. அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

ரோஜாச் செடியும் இதே மாதிரித்தான். அது இரண்டும் இது பக்கத்தில் வந்தால் அவைகளை இது தள்ளி விட்டு விடுகிறது. ரோஜாச் செடி தன் நறுமணத்தை மட்டும் நுகர்ந்து கொள்கிறது.

ஏனென்றால் இதையெல்லாம் பூமியின் காற்ற மண்டலத்தில் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது. அதனதன் வலு கொண்டு அதனதன் நிலைகள் எடுத்து விளைகின்றது.

வேப்ப மரம் இருக்கக் கூடிய பக்கம் விஷச் செடியின் சத்துக்கள் அதிகமானால் வேப்ப மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். அதை இழுக்கக்கூடிய தன்மை வந்தால் வேப்ப மரம் குறையும்.

அதே போல் விஷச் செடியின் சத்து அதிகமாக நிலைகள் பரவப் போகும் போது ரோஜாப்பூ செடியின் வளர்ச்சி குன்றி விடும்.

வேப்ப மரத்தின் உணர்வு அதிகமானால் விஷச் செடியின் அந்த வளர்ச்சி அது குறையும். இது அடர்த்தி அதிகமாகும்பொழுது இதற்கு வேண்டிய ஆகாரம் குறைந்து சிறுத்துப் போகும்.

வேப்ப மரத்திலிருந்து வரும் உணர்வின் சத்துக்களை சூரியன் கவர்ந்து அலைகளாகப் பரவி வரும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தைக் கண்டு ரோஜாப்பூ செடியிலிருந்து வெளி வந்த உணர்வலைகள் நகர்ந்து ஓடுகின்றது.

ஏனென்றால் இது பிடிக்க வில்லை. அதனால் நகர்ந்து ஓடுகின்றது. அதனுடைய அழுத்தம் தாங்காது ஓடும் போது ஒரு விஷச் செடியில் வெளிப்படும் உணர்வுடன் மோதிவிட்டால் அப்படியே “கிறு…கிறு…” என்று சுற்ற ஆரம்பித்து விடும்.

அவ்வாறு சுற்றும் போது விரட்டி வந்த வேப்ப மரத்தின் உணர்வின் அலைகளைத் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. இழுத்தவுடனே மூன்றும் மோதுகின்றது.

இதைத்தான் வேதங்கள் கூறுகிறது. வேப்ப மரமும் ரிக். ரோஜாப்பூச் செடியும் ரிக். விஷச் செடியும் ரிக்.

வேப்ப மரத்தில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை. பேப்ப மரத்தின் கசப்பான சத்தை நாம் நுகர்ந்தவுடனே
1.“ஐய்யய்ய.. வாந்தி வர மாதிரி இருக்கிறது என்று சொல்கிறோம்.
2.“ஓ…ய்..” என்று வெளியே தள்ளிவிடுகின்றது.

ரோஜாப்பூவின் மணத்தை நாம் நுகர்ந்தவுடனே “ஆஹாஹா…” என்று நம்மை அறியாமலே அந்த இசைகள் இயக்குகின்றது. நல்ல நறுமணமாக இருக்கின்றது. சந்தோஷமாக இருக்கின்றது என்று சொல்கிறோம்.

விஷச் செடியின் சத்தை நுகர்ந்தால் “உச்..உச்..உச்…” என்று அரிப்பு எடுக்கின்றதே…! என்ற நிலைகள் தான் உருவாகும்.

அதனால் தான் ஞானிகள் அதனதன் மணத்தின் நிலையை “சாம இசை” என்று சொல்கின்றார்கள்.

உதாரணமாக ஒரு பத்து சதவிகிதம் வேம்பும் மூன்று சதவிகிதம் ரோஜாப்பூவும் ஒரு சதவிகிதம் இந்த விஷத்தின் தன்மையும் இந்த அணுக்கள் ஒன்றுக்கொன்று மோதிச் சுழன்று கவர்ந்து கொண்டால் அதற்குப் பெயர் அதர்வண.

வேம்பின் சத்தை அது இழந்துவிடுகின்றது. ரோஜாப்பூவின் நறுமணத்தின் சத்தை அது குறைந்து விடுகின்றது. விஷச் செடியின் அரிப்பின் தன்மையும் குறைந்து விடுகின்றது.

மூன்றும் சேர்த்து ஒன்றோடொன்று மோதுகின்றது. மோதலில் இரண்டறக் கலந்து விடுகின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் மூன்றும் ஒன்று சேர்ந்து தான் அணுத்தன்மைகள் விளைகின்றது.

இருபத்தேழு நட்சத்திரங்களின் நிலைகள் கடும் விஷமானது. அதைச் சூரியன் உணவிற்காகக் கவர்கின்றது.

கவர்ந்து கொண்ட பின் தன் உடலிலே உருவான பாதரசத்தால் அருகிலே வந்ததும் மோதுகின்றது. மோதியவுடனே வெப்பமாகின்றது. வெப்பமான பின் இந்த விஷம் பிரிந்து செல்லுகின்றது.

நெருப்பில் ஒரு விஷத்தைப் போட்டால் ஆவியாக மாறும். இதே போல் தான் சூரியன் பிரிக்கின்றது. பிரிந்து போகும் போது வெப்பத்தால் ஈர்க்கும் நிலை ஏற்படுகின்றது.

ஒரு கிளாசில் தண்ணீர் வைத்துக்கொண்டு சுற்றிப் பாருங்கள். தண்ணீர் சிந்தாது. அது சுற்றும் வேகத்திற்குள் ஈர்த்துத் தன்னுடன் அரவணைத்துக் கொள்ளும்.

இதே போல் தான் பாதரசத்தால் மோதப்படும் போது ஈர்த்துக் கொள்ளும்.
1.இயற்கை எப்படி நம்மை இயக்குகின்றது?
2.இயற்கை எப்படி இயங்குகிறது?
3.இயற்கையில் எப்படி நாம் வாழுகின்றோம்? என்ற நிலையை நாம் புரிந்து நடத்தல் வேண்டும்.

தியானம் செய்வோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

தியான வழியில் உள்ளோர் அனைவரும், தபோவனத்தில் வெளியிட்ட நூல்களை, நாம் அடிக்கடி எடுத்துப் படித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். யாம் கொடுக்கும் இந்த நூல்களை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில்தான் இருக்கவேண்டும். படித்தபின் மீண்டும் பூஜை அறைக்கே சென்றிட வேண்டும்.

வெளியிட்ட நூல்கள் அனைத்தையும், ஒவ்வொரு நாளும் அடிக்கடி நாம் படித்து, ஒரு பாரா அல்லது இரண்டு பாரா படித்துவிட்டுத் தியானத்திற்குச் செல்ல வேண்டும்.

அதை நாம் அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும் நிலையும், கேட்கும் நிலையும் அவர்களுக்குள், அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை நாம் ஊட்டப் பழக வேண்டும். இதை எல்லாம் நீங்கள் பெறுவதற்காக, உங்கள் உயிரை ஈசனாக மதித்து, உங்கள் உடலைச் சிவனாக மதித்து இந்த உடலுக்குள், நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள், மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று தியானிக்கச் சொல்லுகின்றோம்.

அவ்வழியே தியானிக்கும்போது, குரு காட்டிய அருள் வழியில் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் போரொளியும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

நம் தியானவழி அன்பர்கள், அடிக்கடி கூட்டுத்தியானங்கள் அமைத்திட வேண்டும். அந்தந்தக் குடும்பங்களில் இரண்டு பேர் சேர்த்தால் போதும். நாம் தியானம் செய்து, குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிப் பழகுதல் வேண்டும்.

இந்த மாதிரி ஒற்றுமையை வளர்ப்பதற்கு, குடும்பங்களில் தெளிவான நிலை வருவதற்கு, இதைப் போன்று அவசியம் கூட்டுத் தியானங்கள் செய்ய வேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு குடுமபத்திலும் எடுத்துக் காட்டாக இந்த தியானத்தைக் கடைப்பிடித்து, உங்கள் அருகில் உள்ளவர்களையும், அந்த உயர்வடையச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

தியானவழி அன்பர்கள் என்று நம்மை எடுத்துக்கொண்டால், எல்லாரும் போற்றும் நிலைகளுக்கு நம்மைப் பார்த்தாலே எப்பொழுதும் மற்றவர்களுக்கு அவர்களுக்கு நல்வழி காட்டும் நிலை அடைந்திடல் வேண்டும். நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒருவருகொருவர் இந்தப் பண்புகளை வளர்த்து, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் – மற்றும் அதைச் சேர்ந்த மெம்பர்கள் என்றாலே உங்களுக்கு ஒரு தனி மரியாதை கொடுக்கச் செய்ய வேண்டும்.

அந்த அளவிற்கு நாம் வளர்ந்தால்தான், அது வரும். அதனால் அதை நீங்கள் பெறுவீர்கள் என்று நினனைக்கிறேன். அதைப் பெறவேண்டும் என்று தியானிக்கிறேன், பெறவேண்டும் என்று தவம் இருக்கிறேன்.

அதை நீங்கள் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். இதை எடுத்துக்காட்டாக வளரவேண்டும். அதை நான் சொல்வதற்குப் பதில் அந்த உயர்வை நீங்கள் உயர்த்திக்காட்டி, செயலிலே நீங்கள் வரவேண்டும் பிரார்த்திக்கின்றேன்.

தியான வழியில் வரும் அன்பர்கள் அனைவரும் குரு காட்டிய அருள்வழியைக் கடைப்பிடித்து, உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்றி, அனைவரும் அறிந்திடும் நிலையாக அருள்ஞான சக்தி போதித்து, உலக மக்களை, தெளிந்த மனதுடன், மகிழ்ந்திடும் உணர்வுடன், வாழ வைக்கும் அந்தத் திறன் அனைவரும் பெறுதல் வேண்டும்.

நாம் அனைவரும் மாமகரிஷிகளின் அருள்சக்தியை நமக்குள் வளர்த்து, நம் தொழிலும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும், நம்மிடம் தொழில் செய்பவர்கள், அதாவது, நம்மிடம் வாடிக்கையாளராக வரும் போது, அவர்களுக்கும் நன்மை பயக்கும் சக்தியாக வருகிறது. அப்படி நன்மை ஏற்படும் பொழுது, நம் தொழிலும் சீரடையும்.ஒரு தாவர இனத்தின் “மணம்” இன்னொரு தாவர இனத்தின் மணத்தை “விலக்கித் தள்ளுவது போல்” நாம் தீமைகளை நம்மிடமிருந்து விலக்கித் தள்ள வேண்டும் என்றால் தீமைகளை அகற்றிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் அதிகமாகச் சேர்ப்பித்துக் கொள்ள வேண்டும்.

கூட்டுத் தியானத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் வலுக் கொண்டு அந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து நாம் விடும் மூச்சலைகள் கொண்டு தீமையை விளைவிக்கும் உணர்வுகளை நம்மிடமிருந்து விலகிச் செல்லச் செய்ய முடியும்.

நாம் அந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பருகும் நிலையாக நாம் அனைவரும் ஒருக்கிணைந்து எடுக்கும் இந்த எண்ண வலுவின் துணை கொண்டு தான் நாம் இவ்வாறு செய்ய முடியும்.

ஒரு நெல்லை வைத்து ஒருவர் உணவாக உட்கொள்ள முடியாது. நாம் எல்லோரும் சேர்ந்து எடுக்கும் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு அது பல நெல்களாகக் குவிகின்றது. அதைச் சமைத்துச் சாப்பிட்டால் அவரவர் பசி தீர்ப்பது போல் நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணைந்து அந்த வலுவின் தன்மை கொண்டு உயர்ந்த ஞானியின் உணர்வை நமக்குள் சமைத்து அருள் ஞான உணர்வை நமக்குள் விளையச் செய்ய முடியும்.

ஒரு பொருளுக்குள் இருக்கும் நஞ்சினை வேக வைத்து நீக்குவது போல் அருள் ஞானிகளின் உணர்வை நம் நற்குணங்களுடன் இணைத்து நம்மை அறியாது வந்த தீமையை அகற்றிடல் வேண்டும்.

அருள் ஞானிகள் உணர்வை… “நாம் இரசித்து உணவாக உட்கொள்ளும் அந்த உணர்வின் சத்தை… இணைத்து இணைத்து” நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிட முடியும். அனைவரும் இதைப் பெறவேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் பிரார்த்திக்கின்றேன்.

கூட்டுத் தியானம்

ஒரு தாவர இனத்தின் “மணம்” இன்னொரு தாவர இனத்தின் மணத்தை “விலக்கித் தள்ளுவது போல்” நாம் தீமைகளை நம்மிடமிருந்து விலக்கித் தள்ள வேண்டும் என்றால் தீமைகளை அகற்றிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் அதிகமாகச் சேர்ப்பித்துக் கொள்ள வேண்டும்.

கூட்டுத் தியானத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் வலுக் கொண்டு அந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து நாம் விடும் மூச்சலைகள் கொண்டு தீமையை விளைவிக்கும் உணர்வுகளை நம்மிடமிருந்து விலகிச் செல்லச் செய்ய முடியும்.

நாம் அந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பருகும் நிலையாக நாம் அனைவரும் ஒருக்கிணைந்து எடுக்கும் இந்த எண்ண வலுவின் துணை கொண்டு தான் நாம் இவ்வாறு செய்ய முடியும்.

ஒரு நெல்லை வைத்து ஒருவர் உணவாக உட்கொள்ள முடியாது. நாம் எல்லோரும் சேர்ந்து எடுக்கும் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு அது பல நெல்களாகக் குவிகின்றது. அதைச் சமைத்துச் சாப்பிட்டால் அவரவர் பசி தீர்ப்பது போல் நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணைந்து அந்த வலுவின் தன்மை கொண்டு உயர்ந்த ஞானியின் உணர்வை நமக்குள் சமைத்து அருள் ஞான உணர்வை நமக்குள் விளையச் செய்ய முடியும்.

ஒரு பொருளுக்குள் இருக்கும் நஞ்சினை வேக வைத்து நீக்குவது போல் அருள் ஞானிகளின் உணர்வை நம் நற்குணங்களுடன் இணைத்து நம்மை அறியாது வந்த தீமையை அகற்றிடல் வேண்டும்.

அருள் ஞானிகள் உணர்வை… “நாம் இரசித்து உணவாக உட்கொள்ளும் அந்த உணர்வின் சத்தை… இணைத்து இணைத்து” நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிட முடியும். அனைவரும் இதைப் பெறவேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் பிரார்த்திக்கின்றேன்.

ஞானிகளின் உணர்வைச் சுவாசித்தாலே தீமையை நீக்கும் ச்க்தியாகத் தான் வரும்

அதோ வருகின்றான் நாரதன்…! என்ற நிலையில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றால் வாழ்க்கையில் தொடர்ந்து வரும் தீமைகளை எல்லாம் நாம் அகற்ற முடியும்.

விநாயகருக்குப் பக்கத்தில் அரச மரமும் வேப்ப மரமும் வைத்ததன் உட்பொருள்

துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் நாலா பக்கமும் தன் உணர்வலைகளைப் பாய்ச்சி விஷத்தை மாற்றி ஒளியின் சரீரமாகப் பெற்றது. அதனால்தான் விநாயகர் பக்கம் அரசமரத்தை வைத்துள்ளார்கள்..

அதே சமயத்தில் அருகில் வேப்பமரத்தை வைத்துள்ளார்கள். வேதனைப்படுபவர்கள், கஷ்டப்படுபவர்கள், இவர்களை நாம் சந்திக்கும்போது நமது வாழ்க்கையும் “கசக்க” ஆரம்பித்து விடுகின்றது.

அதே வேதனையோடு நாம் ஒருவரிடம் சொல்லப்படும்போது அவர்கள் வாழ்க்கையும் கசக்க ஆரம்பித்துவிடுகின்றது. இந்த உண்மையை உணர்த்துவதற்குத் தான் வேம்பை அங்கே வைத்தார்கள்.

அப்படி வளர்ந்த கசப்பான நிலைகளிலிருந்து நாம் மீளவேண்டும் என்ற உணர்வினை ஊட்டுவதற்குத்தான் அரச மரத்தை வைத்துள்ளார்கள்.

அந்த சூட்சம நிலைகளில் விண் சென்ற அருள் ஞானியை துருவ மகரிஷியை நினைவு கூர்ந்து நமக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்யவும் நம் நினவாற்றலை சக்தி வாய்ந்தாக மாற்றும்படி செய்தார்கள்.

தீமைகளை வாளால் வீசி வீழ்த்துபவன் விண்ணுலகம் செல்கிறான்…

இந்த உயிரின் தன்மையில் உணர்வின் தன்மையாகும்போது தான் விண்ணுலக ஆற்றலால்… மண்ணுலகில் “வாளால் வீசி” குதிரையில் “பறக்கிறான்”. ஏனென்றால்.., “மேல் நோக்கிச் செல்கிறான்”.

வாளைக் கையில் வைத்தான் என்று கல்கியைக் காட்டுகிறார்கள் ஞானிகள். இந்த புவியின் ஈர்ப்பை வீழ்த்திவிட்டு அந்த உணர்வின் தன்மை கொண்டு அங்கே செல்கிறான் என்று உருவமாக்கிக் காட்டுகிறார்கள்.

நாம் எண்ணக் கூடியதை நமது உயிர் இயக்குகின்றது. அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்? இந்த புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்ற ஞானிகளின் உணர்வை நமக்குள் இணைத்தல் வேண்டும் அதை நமக்குள் பெருக்க வேண்டும். இதைத்தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய், என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

இதை விட சாஸ்திரங்கள் உங்களுக்குக் கூறவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அத்தனை தெளிவாகக் கொடுத்திருக்கின்றது நமது சாஸ்திரம்.

இது பொய்யல்ல…, நாம் பொய்யாக்கி வைத்திருக்கிறோம். உண்மையை நாம் உணர முடியாது மறைக்கப்பட்டு.., இன்று மறைந்தே போய்விட்டது.

நமக்குள் அது தெளிவாக்கப்பட வேண்டும். இதை ஒவ்வொருவரும். நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இந்தத் தெளிவின் தன்மையில் நீங்கள் எல்லோரும் வளர வேண்டும்.

”நம் பார்வை” இப்படித் தெளிவாக்க வேண்டும். தெளிவாக்கும் உணர்வுகள்” உங்களுக்குள் விளைய வேண்டும். உங்கள் பார்வை “பிறரைத் தெளிவாக்கும் நிலையாக… தெளிந்த சிந்தனைகள் பெறும் சக்தியாக” வரவேண்டும்

உங்களைப் பார்த்தாலே மற்றவர்கள் தெளிந்திடும் மனம் பெறவேண்டும். அந்தச் சக்தி பெறவேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

வள்ளி திருமணத்தின் சூட்சமம்

சேனாதிபதி…! பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…! என்றால் தீமைகளை வென்றவன். அந்த அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கும் பொழுது வலிமை பெருகுகின்றது. அது தான் வள்ளி.

நம் உடலிலிருந்து வரக்கூடிய வலிமையான சக்தி வள்ளி (வல்லி). திணைக்காட்டில் காவல் இருக்கின்றாள் வள்ளி. தான் விளைய வைத்ததை மற்ற பட்சிகள் கொத்தித் தின்றுவிடாமல் கவண் கொண்டு கல்லை வீசிப் பாதுகாக்கின்றாள். அதாவது உடலை வளர்த்த நிலையில் நம் உடலுக்குள் தீமை வராதபடி அதை எதிர்த்துத் தாக்குதல் வேண்டும்.

அந்த வலுவான சக்தியை நமக்குக் காட்டுவதற்காக வேண்டி வள்ளி திருமணத்தைக் காட்டுகின்றார்கள்.

இந்த உடலைக் காத்திடும் வினையாகச் சேர்த்து அதை இச்சையாகி இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…! தன் உடலைக் காக்கும் உணர்வின் தன்மை இச்சைப்பட்டு அந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் கிரியை ஆகி அந்த ஞானப்படித்தான் இந்த உடல் இயங்கும்.

ஆகவே எதை இச்சைப்பட வேண்டும்…? அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வலு சேர்க்க வேண்டும். நம் உடலில் அந்த ஒளியான அணுக்களைப் பெருக்கி உயிராத்மாவை ஒளியாக ஆக்க வேண்டும்.

வள்ளி… அந்த வலிமை மிக்க சக்தியை நாம் நுகரப்படும் பொழுது நம் உயிரிலே பட்ட பின் தெய்வ ஆணை அந்த உணர்வு எதுவோ அது செயல்படும். அதன் வழியே இந்த உடல் இயங்கும்.

இவ்வளவு பெரிய விஷயத்தைக் காவியமாகச் சுருக்கமாக மக்களுக்குப் புரிய வைக்கின்றார்கள் ஞானிகள்.

கடவுள் என்று தனித்த ஒரு சக்தி இல்லை

சாங்கிய வழிகளில் சிக்காது நாம் நுகரும் உணர்வை உயிரான ஈசன் எப்படி இயக்குகிறது என்பதை உணர்ந்து கொள்வதே நல்லது. ஏனென்றால் தீமையை நீக்கும் சக்தியே நமக்கு அழியாச் சொத்து. அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளை எடுத்து “உயிர் வழி சுவாசித்தால் நரசிம்மா…!”

இருளுக்குப் பின் தான் ஒளி

விஷத்தை ஒடுக்கும் பொழுது ஒளியாகின்றது என்று வாலியையும் சுக்ரீவனையும் சகோதரர்களாகக் காட்டி துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு தீமை என்ற வாலியை அடக்கி அதை நன்மை செய்யும் சக்தியாக மாற்ற வேண்டும். என்று வான்மீகி காட்டுகின்றார்

பிருகுவின் சரித்திரம்

இருபத்தியேழு நட்சத்திரத்தின் ஓட்டங்களையும் அதனுடைய இயக்கங்களையும் அதனின் உணர்வுகளைப் பற்றியும் வியாசகன் கூறிய உணர்வுகளை அவனுப்பின் வந்த பிருகு தன் நினைவின் ஆற்றலால் பதிவு செய்து கொண்டான்.

நட்சத்திரங்களின் இயக்கங்களைப் பற்றித் தான் அறிந்து கொண்டவைகளைத் தன் குழந்தைகளுக்குக் கருவில் இருக்கும் போதே உபதேசித்து அந்த உணர்வுகளைப் பதியச் செய்தான்.

தன் சாம்ராஜ்யம் தழைத்திருக்க வேண்டும் என்ற ஆசையில் பிரபாகரன் பார்கவன் என்ற இரு குழந்தைகளுக்கும் தான் கற்றுணர்ந்த வியாசகரின் தத்துவத்தைக் கருவிலேயே உருவாக்கினான். என்றென்றும் இந்தச் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்ற பேராசை கொண்டு அந்த ஆசையினால் தான் கண்டுணர்ந்த உணர்வுகளை தன் இனத்திற்குள் (குழந்தைகளுக்குள்) பாய்ச்சிப் பதிவாக்கினான்.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகும் பொழுதுதான் அதன் உணர்வுகள் மின்னலாகப் பாய்கின்றது. இதைப் போன்ற உணர்வுகளையும் தன் எண்ணத்தால் பாய்ச்சி அதை அடக்கும் நிலைகள் பெற்றவர் தான் பிருகு. பிருகு என்பவர் கடுமையான தவத்தின் தன்மை பெற்றவர்.

பிருகு மற்ற நாடுகளை இப்படி அடக்கிக் கொண்டிருந்தாலும் இங்கே தன் சாம்ராஜ்யத்தில் அவன் குழந்தைகள் ரூபமாகப் போர் வருகின்றது. அதாவது மூத்த மகனும் இளைய மகனும் சகல வித்தைகளையும் நாங்கள் கற்றுக் கொண்டோம். தனித் தனியே எங்களுக்குல் இந்த சாம்ராஜ்யத்தில் பங்குகள் வேண்டும் என்று தந்தையிடமே மோதுகின்றார்கள்.

அரச சட்ட நியதிப்படி மூத்தவன் தான் ஆட்சி புரிய வேண்டும். இளையவன் அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இருந்தாலும் அது பார்க்கவனுக்குக் கோபத்தை அதிகமாகக் கிளரச் செய்தது.

சகோதரர் ஒருவருக்கொருவர் போர் முறை கொண்டு கடைசியில் கற்றுணர்ந்த உணர்வு கொண்டு இந்தப் பிருகுவையே ஒளி கொண்டு பாய்ச்சி அவருடைய சக்தியை இழக்கச் செய்தார்கள்… சூனியமாக்கினார்கள்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா… பன்றியிலிருந்து மனிதன் பிறந்தானா…?

பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கி அதனுள் உள்ள நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் நுகர்ந்து, சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக அடுத்து மனிதனாக, “பரசுராம்” அவதாரமாக உருப்பெறும் நிலை பெறுகின்றது.

மனிதனானபின் நமது உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள நஞ்சினை மாற்றிவிட்டு “நல்ல உணர்வைச் சமப்படுத்துகின்றது” என்ற நிலையே பரசுராம் அவதாரம்.

கடவுளின் அவதாரத்தில் ஒரு பொருளைத் தன்னுள் இணைத்து.., “நன்மை என்றும்.., தீமை என்றும்.., அறிந்து சமப்படுத்தும் நிலைக்குப் பரசுராம்” என்று காரணப் பெயர் சூட்டினார்கள் ஞானிகள்.

தீமைகளை ஒடுக்கிடும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கணவன் மனைவி இரண்டு பேரும் கவர்ந்து தமக்குள் உருப்பெறச் செய்யப்படும் பொழுதுதான் சமப்படுத்த முடியும். இது பரசுராம்.

பாம்பாகப் போ… பேயாகப் போ… சாபத்தின் விளக்கம்

ஞானிகள். “நீ பாம்பாகப் போ…!” என்று ஒரு ரிஷி சாபம் கொடுத்தார் என்று கதையைச் சொல்வார்கள்.

ஏனென்றால் வீட்டில் வேதனைப்படுவார்கள். “என் வீட்டில் அப்படி இருக்கின்றது… இப்படி இருக்கின்றதே… அது இருக்கின்றதே… இது இருக்கின்றதே…! என்று வேதனைப்படுகின்றார்கள். இதெல்லாம் விஷத்தை வளர்த்துக் கொள்வது தான்

நம் உயிர் எத்தனையோ கோடிச் சரீரங்களில் நஞ்சினை வென்று நம்மை மனிதனாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது. நஞ்சினை வென்றிடும் சக்தியாக வளர்த்து வந்தது. ஆனால் நம் ஆசையை வைத்துக் கொண்டு “அவன் அப்படிச் செய்கின்றானே… இவன் இப்படிச் செய்கின்றானே… இதைச் செய்கின்றானே…!” என்று வேதனையை அதிகமாக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் தன்மை எல்லாம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

அதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” என்று சொல்லப்பட்டது. அந்த வேதனை உணர்வுகள் உடலிலே விளைந்து உயிராத்மாவில் விஷம் அதிகமான பின் உடலை விட்டுச் சென்ற பின் பாம்பாகப் பிறக்கின்றது. பாம்பு விஷத்தை உமிழ்த்தி அதை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றது.

உயிர் எத்தனையோ தரம் காப்பாற்றியது. இப்படி வேதனையை வளர்த்த பின் “நீ பாம்பாகப் போ…!” என்று உயிர் அந்த அளவுக்கு வளர்த்து விடுகின்றது… அந்த ரிஷி சாபமிடுகின்றான்…! என்று காட்டுகின்றார்கள்.

உயிர் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது. அதனால் உயிரை ரிஷி என்றார்கள் ஞானிகள். (நீ பாம்பாய் போ என்று உயிர் சொல்வதாகத் தெளிவாகக் காட்டுகின்றனர்) அப்பொழுது “ஐயனே என்னை அறியாத இந்தப் பிழையிலிருந்து நான் விடுபடும் உபாயத்தை நீங்கள் காட்ட வேண்டும்.” ”நான் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும்” என்று கேட்கின்றார்.

நமக்குத் தெளிவாக்குவதற்கு இந்தக் குட்டிக் கதையைப் போடுகின்றார்கள். சரி… “நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய்… அவன் கை படும்… நீ மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்….!

பாம்பு கடிக்க வந்தவுடனே நாம் என்ன செய்வோம்..? அடிப்போம். அப்போது அந்த மனித உடலுக்குள் பாம்பின் உயிர் போகின்றது. பாம்பு மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.

கொடூரமான ஒரு புலி பாம்பின் வாயில் சிக்கி இறந்த பின் பாம்பாகப் பிறக்கின்றது

ஒரு சமயம் காட்டுக்குள் செல்லும் போது கொடூரமாகத் தாக்கும் சக்தி கொண்ட புலி என்னை அடிக்க முற்பட்டு வந்தாலும் அதனின் பாதைய்ல் சந்தர்ப்பத்தால் ஒரு பாம்பின் வாயில் சிக்கிக் கொண்டது.

அவவளவு பெரிய புலி பாம்பின் வாயில் மாட்டிக் கொண்டு தவிப்பதைப் பார்க்கும்படி செய்தார். அதை அப்படியே முழுவதும் பாம்பு விழுங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து உடலுக்குள் செல்கிற்து. பின் அந்தப் புலி பாம்பின் நினைவு கொண்டு பாம்பாக அடுத்துப் பிறக்கிறது என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

கூர்மை அவதாரம்

கண்ணன் காட்டிய உபதேசம் என்பது, “ஒன்றைக் கூர்ந்து.., கவனித்து.., கூர்ம அவதாரமாக.., அதுவாக நீ மாறு”. ஒன்றின் வலுவை உனக்குள் சேர்த்தால், இப்பொழுதுள்ள உடல் இழக்கப்பட்டால் எதனின் உணர்வை வலுவாகச் சேர்த்தாயோ அதனின் உடலை நீ பெறமுடியும்” என்று கீதையிலே ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு போர் முறையின் மூலம், உணர்வின் செயல்களைப் பற்றி எடுத்துக் காட்டப்பட்டன.

உணர்வுகள் மறைகின்றது.
உணர்வுகள் வளர்கின்றது.
உடல்கள் மடிகின்றன.
உணர்வுகள் கலக்கின்றன. பின் விளைகின்றன.

உணர்வின் வலுகொண்டு எதனை நுகர்ந்ததோ, அதனின் உணர்வின் துணைகொண்டு, “இன்னொரு உடலுக்குள் போகின்றது..,” என்ற நிலைகள் நமக்கு ஞானிகள் காண்பித்த பேருண்மைகள்.

கடவுளின் அவதாரம்

உயிரணுவின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும், மனித சரீரத்தையும் மனிதர் தம் உயிராத்மா பெறவேண்டிய நிலை எது? என்பதையும் நமக்கு உணர்த்துவதற்காக ஒரு உயிரணுவின் உள் நின்று இயக்கும் வெப்பத்தைக் கடவுள் என்று பெயரிட்டார்கள்.

உயிரணு தம்முள் உள்ள வெப்பத்தின் தன்மை கொண்டு, உணர்வினைக் கவர்ந்து தன்னுள் இணைத்துக் கொண்ட உணர்வுக்கேற்ப எவ்வாறு தன் வளர்ச்சி பெறுகின்றது என்பதை ஞானிகள் நமக்குத் தெளிவாக்கினர்.

பண்டிகைகள் மூலம் நாம் பெற வேண்டிய உயர்ந்த சக்தி

மனிதனுக்கு மத்தியில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்குவதற்காக பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நிலைகளைக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்தப் பன்னிரண்டு மாதங்களுக்கும் முப்பது நாளைக்கு ஒரு தரம் தீமைகளைக் கழித்துச் சுத்தப்படுத்தும் முறைகளைக் காட்டுகின்றார்கள்.

பொங்கல்… சிவன் இராத்திரி… சித்திரைக்கனி… ஆடிப் பெருக்கு.. விநாயகர் சதுர்த்தி.. விஜய தசமி… தீபாவளி.., கார்த்திகை தீபம்… வைகுண்ட ஏகாதசி… என்று ஒவ்வொரு மாதத்திலும் விழாவை வைத்து ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக்கிக் கொள்ளும் முறைகளைக் கொடுக்கின்றார்கள்.

விஜயதசமி – நம் உயிர் விண்ணிலிருந்து இங்கே பூமிக்குள் வந்த பின் பத்தாவது நிலை அடையக்கூடிய முறையைக் கொடுக்கின்றார்கள்.

கார்த்திகை ஜோதி. என்றால் ஆறாவது அறிவு கார்த்திகேயா. விளக்கை நம் வீட்டு வாசற்படியில் வைத்து வீட்டுக்குள் வருகின்ற இருளை நீக்குகின்றோம். ஆகவே கார்த்திகை தீபம் ஏற்றி இருளை நீக்குவது போல் எல்லாக் குடும்பமும் ஒளியாக வேண்டும் என்று எண்ணும்படி செய்கிறார்கள்.

பழனி முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் மணங்கள்

போகரால் உருவாக்கிய நவபாஷாண முருகன் சிலைக்குள் பார்க்கலாம். அந்தச் சிலையின் மேல் நீரை விட்டவுடன் அந்த இருட்டறைக்குள் வைக்கப்படும் பொழுது ஏற்படும் பூமியின் வெப்பத்தால் மலையின் வெப்பத்தை அது எடுக்கும் பொழுது ஒரு சொட்டு நீர் பட்டால் அதற்குள்ளிருந்து வரும் மூச்சலைகள் நாம் எந்த ஏக்கத்துடன் செல்கின்றோமோ நாம் அதைச் சுவாசித்தவுடன் நமக்குள் இருக்கக்கூடிய பல விஷத் தன்மைகளை மாய்க்கக் கூடிய சக்தியை அது பெறுகின்றது.

ஆலயப் பண்புகளை நாம் கடைப்பிடிக்கின்றோமா…?

கோயிலைச் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் நம்முடைய ஒழுக்கப் பண்பாடுகளை வளர்ப்பதற்கு எவ்வளவு தெளிவாகச் செய்துள்ளார்கள் ஞானிகள்.

“சாதாரண மனிதர்களும் பிறவியில்லா நிலை பெறவேண்டும்…!” அகஸ்தியர் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வைப் பெறவேண்டும் என்ற நிலைக்காக வேண்டி ஞானிகள் காவியங்களையும் ஆலயங்களையும் படைத்தார்கள்.

தீமையைப் பிளக்கும் உயிர் வழி சுவாசம்

ஏற்கனவே சுவாசித்த பாதையை விட்டுவிட்டு நம் உயிர் நம்மை இயக்கும் இந்த வழி கொண்டு… நம் உயிரை ஈசனாக மதித்து அந்த வாசலின் வழியாகச் சென்று… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்… எங்கள் உடலில் உ:ள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தப் பழக வேண்டும்.

சொர்க்கவாசல் – புருவ மத்தி வழி… உயிர் வழி

பரமபதம் என்று ஒரு விளையாட்டை ஞானிகள் உருவாக்கி மனிதன் விண்ணுலகம் செல்லும் மார்க்கத்தைத் தான் அதிலே காட்டினார்கள். சொர்க்க வாசல் என்பது அது நம் புருவ மத்தி வழி தான்.

ஒவ்வொரு ஆலயங்களுக்குச் செல்லும் பொழுதும், நேர் வாசல் மூலம்தான் செல்கின்றோம். ஆனால், வைகுண்ட ஏகாதசி அன்று, “சொர்க்கவாசல்” என்று மற்றொரு வாசல் மூலம், உள்ளே வரும்படிச் செய்கின்றார்கள்.

அதாவது நாம் ஏற்கனவே சுவாசித்த பாதையை விட்டுவிட்டு, நம்மை இயக்கும் உயிரான ஈசனை மதிக்கும் நிலையாக, இந்த ஆலயங்களில் செல்லும்படிச் செய்கின்றார்கள்.

அந்த வாசல் வழியாகச் சென்று, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, நாம் பெறவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நம் உடல் முழுவதும் படர்ந்து, நம் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும், என்று இதனின் உணர்வை நமக்குள் செலுத்தி, இந்த ஆலயம் வருவோர் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து, அவர்களது உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று ஆலயம் வருவோர் அனைவரையும் எண்ணும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

அவர்கள் உணர்த்திய உணர்வின்படி ஆலயங்களை அமைத்து, “மூக்குவழி சுவாசிப்பதைக் காட்டிலும், புருவ மத்தியில் நல்லுணர்வை ஈர்த்துப் பருகும் நிலையை நாம் பெறவேண்டும்” என ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

இப்படி நாம் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று நமக்குள் உயிர் வழி சேர்த்து, வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது, இந்த “ஆலயம் வருவோர் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், தெய்வ குணங்கள் பெறவேண்டும், தெய்வ நிலைகள் பெறவேண்டும், அவர்கள் குடும்பங்களில் அமைதி பெறவேண்டும், அருள் ஒளி படரவேண்டும்” என்று நாமும், மற்றும் அனைவரும் எண்ணும்பொழுது, நம்முள்ளும், மற்றும் ஆலயம் வருவோர் அனைவரிடத்திலும், நல்ல உணர்வுகள் விளைகின்றன.

நமது உணர்வின் தன்மை நம்முள் விளைந்து, ஒளியின் சரீரம் பெறும் தகுதி, நாம் அனைவரும் பெறுகின்றோம். ஞானிகள், மகரிஷிகள் சென்ற எல்லையை நாம் அனைவரும் அடைகின்றோம். இதுதான் வைகுண்ட ஏகாதசி.

எனது தியானமும் தவமும் (ஞானகுரு)

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்றும் எம்மை எண்ணுவோருக்குக் குருவின் அருளைப் பெறச் செய்வதும் தான். நீங்கள் மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும் இருளை நீக்கி ஒளியின் தனமை பெற வேண்டும். இதே தவத்தை நீங்களும் மேற்கொள்ளுங்கள். குரு அருள் உறு துணையாக இருக்கும்.

தியானப் பயிற்சி

தியான வாசகங்கள்… அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் பாடல்… தியானம்… தவம். நினைக்கும் பொழுதெல்லாம் உங்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும். குரு அருள் உறுதுணையாக இருக்கும்.

கணவன் மனைவி ஒன்றி வாழும் நிலை

ஜாதகம் ஜோதிடம் எல்லாம் பார்த்துத் தான் திருமணம் செய்கின்றோம். ஆனாலும் கல்யாணம் ஆன சிறிது நாளிலேயே பிரிந்து விடுகின்றார்கள். கேட்டால் விதி என்பார்கள்.

அது போன்றில்லாதபடி வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து வாழ்வது போல் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றாகி என்றுமே வாழ முடியும்.

நம்மையும் இந்தப் பூமியையும் பரிசுத்தப்படுத்த வேண்டும்

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும் நாம் பெறுதல் வேண்டும். வென்ற உணர்வை நுகர வேண்டும். ஏனென்றால் விண் செல்ல பலர் முயற்சித்தாலும் அதிலே தோல்வி ஆன நிலைகளும் உண்டு. அதை நாம் கவர்ந்து விடக் கூடாது.

களிமண்ணால் செய்த விநாயகரைக் கடலில் கரைப்பதன் காரணம்

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த உணர்வினை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்ந்து வருகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணத்தால் பதிவு செய்திருந்தால் இந்த நினைவு கொண்டு காலை சூரிய உதய நேரத்தில் அதை எடுத்து நம் உடல் முழுவதும் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவையும் ஜீவான்மாவையும் பரிசுத்தப்படுத்த வேண்டும்

பின் நம் வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். நம் வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் இந்த நிலைகள் பெறவேண்டும் என்று இந்தப் பகைமை உணர்வை சதுர்த்தி செய்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது நாம அனைவரும் ஈர்க்க மறுக்கும் அந்தத் தீமைகளை விளையவைக்கும் உணர்வுகள் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் செல்வதில்லை.

அதே சமயம் சூரியனின் காந்தப் புலனறிவு வெளிவரும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் தீமை செய்யும் உணர்வுகள் சிக்கி, தாவர இனங்கள் வளரும் நிலைகளுக்கு அப்பால் அது சென்றுவிடுகின்றது.

பின், பூமியின் மைய வட்டத்திற்குத் தரை மார்க்கத்திற்கு வருவதில்லை. அவ்வாறு அது அலைகளாகச் செல்லும் பொழுது கடலின் ஈர்ப்பலைக்குள் சிக்கிவிடும்.

அதிலுள்ள ஹைட்ரஜன் அந்த வலுக் கொண்ட உணர்வின் அலைகள் கொண்டது, ஹைட்ரஜன் என்றால் தீமைகளை விளைய வைக்கும் உணர்வின் சத்து கொண்டது.

அதற்குள் உள்ள காந்தப் புலனறிவு அது தன் இனத்தை அதாவது நாம் அனைவரும் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான அலைகளை அது கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்திவிடுகின்றது.

அதனால், இந்தப் பரமான பூமியும் பரிசுத்தமாகின்றது. நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்களும் அது பரிசுத்த அணுக்களை விளையவைக்கும் தன்மை உருவாகின்றது.

பயத்தை அடக்கி மன பலம் பெறுங்கள்

பதிவான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகினறது என்று தெளிவாகத் தெரிந்து கொண்டால் எத்தகைய தீமையையும் நீக்க முடியும். நம் நல்ல குணங்களைக் காக்க முடியும். மன பலத்துடன் ஞானிகள் சென்ற பாதையில் சீராகச் செல்ல முடியும். அதற்கே ஞானிகள் கண்ட பல பல உண்மைகளை உபதேசமாகக் கூறுகின்றோம் (ஞானகுரு).

தீமை உருவாகக் காரணம்

வேதனையாக உள்ளோருக்கு உயர்ந்த உணர்வுகளைச் சொன்னால் அதை அவர்களால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் வேதனைப்படும் சம்பவங்களைச் சொல்ல ஆரம்பித்தால் ரசித்துக் கேட்பார்கள். தன் வேதனை தெரியாது.

ஏனென்றால் எதை நுகர்ந்து ஆழமாகப் பதிவாக்குகின்றோமோ அதுவே நமக்குள் அதிபதியாகி அதனின் இயக்கமாகவே நம்மை ஆக்குகின்றது. கையிலே அழுக்குப் பட்டால் நல்ல நீரைக் கொண்டு தான் அந்த அழுக்கை அகற்றுகின்றோம். அது போல் தீமை என்று வந்தாலே அதை நீக்கிய ஞானிகளின் உணர்வைப் பெற்றுப் பழக வேண்டும்.

விஞ்ஞான அறிவால் உன் மனைவியைக் காக்க முடிந்ததா…? என்றார் குருநாதர்

உன் மனைவி எப்படி நோயினால் துயரப்பட்டது…? மருத்துவத்தால் மீட்க முடிந்ததா…! ஆனால் மரண வாயிலிருந்து நான் மீட்டேன் என்றார் குருநாதர்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாகி விட்டது. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருளை எடுத்து அதை மக்களைப் பெறச் செய்ய வேண்டும் என்றார் ஈஸ்வரபட்டர்.

ரிக் சாம அதர்வண யஜூர் வேதங்கள்

திடப் பொருள் – ரிக்
வெளிப்படும் மணம் – சாம
ஒன்றுடன் ஒன்று கலந்து மாறுவது – அதர்வணம்
புதிதாக உருவான பொருள் – யஜூர் (வித்து)
மீண்டும் அதிலிருந்து வெளிப்படும் மணம் – சாம

நான்கு வேதங்களுக்குள் தான் இந்த உலகமே அடங்கி உள்ளது என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றது

சிவனுக்கு முந்தியவன் விநாயகன்

சிவனுக்கு முந்தியவன் வினை தான். அந்த உணர்வின் தன்மை “ஓ…!” என்று பிரணவமாகி இந்த உடலாகும் போது சிவன். உடலாகும் போது சிவன். சிவனின் பிள்ளை விநாயகன். ஆகவே பிரணவத்திற்குரியவன். எது…? இந்த வினை.

ஒரு உயிரணுவிற்குள் எந்தச் செடியின் சத்து மோதுகிறதோ அது பிரணவம். ஜீவ அணுவாக மாற்றும் சக்தி பெற்றது உயிர். (உயிரணுவிற்குள் துடிப்பும் அதனால் வெப்பமும் உருவாகிறது). செடியின் சத்தை அந்த உயிரணு நுகர்ந்தால் பிரணவமாகிறது. ஆகவே அந்தச் சத்து வினையாகிறது. அதனால்தான் அந்த வினை உயிருடன் சேர்க்கப்படும் போது “விநாயகா…!” என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள். இந்த மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு செடியின் சத்தை நுகர்ந்தால் அது வினை. அதனால் தான் சிவனுக்கு முந்தியவன் விநாயகன். செடியின் சத்தை அது நுகர்ந்தபின் “ஓ…!” என்று பிரணவமாகி “ம்…!” என்று உடலாகும் போது விநாயகன். (சிவம் என்பது திடப்பொருள்)

எந்தச் செடியின் சத்தை உயிரணு நுகர்ந்ததோ மூஷிக வாகனா…! அதாவது அந்த மணமே இயக்கி அந்தச் செடி இருக்கும் பக்கம் நகர்ந்து செல்லும் இயக்கச் சக்தியாக மாறுகிறது. இது தான் விநாயகன்.

தீமைகளை வென்று விண் சென்ற ஈஸ்வரபட்டரின் சக்தியைப் பெறுவோம்

காற்றில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகளைப் பிளக்கும் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் சென்றால் அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும். இந்த வாழ்க்கையில் பேரானந்த நிலையை அடைய முடியும்.

நம் முன்னோர்கள் குலதெய்வங்களையும் விண்ணுக்குச் செலுத்த முடியும். தாய் தந்தையர் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அவர்களையும் விண் செலுத்த முடியும். நாமும் இந்த வாழ்க்கையில் முழுமை அடைந்து நம் குருநாதர் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடையலாம்.

உபதேசத்தை உற்று நோக்கிப் பதிவாக்கினாலே போதும்

யாம் (ஞானகுரு) சொல்வது புரியவில்லை…! என்று யாரும் எண்ணவே வேண்டாம். இந்தப் பதிவு உங்களுக்கு அவ்வப்பொழுது சரியான ஞானத்தைக் கொடுக்கும். நோயை நீக்கலாம்… சாபங்களை நீக்கலாம்.. பகைமைகளை நீக்கலாம்… குடும்பத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். உங்கள் அனுபவம் பேசும்.

ஞான உலகம் உருவாகும் காலம்

தீவிரவாதங்கள் எல்லாம் ஒடுங்கும். கருவில் உருவாகும் ஞானக் குழந்தைகள் மெய் ஞானத்தை வளர்த்து இந்த உலகை ஞான உலகமாக உருவாக்கும் சந்தர்ப்பம் வரும். வாழ்க்கையில் வந்த சாப அலைகள் தீய அலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட முடியும். நீங்கள் ஒவ்வொருவருமே ஞானியாக வளர்வீர்கள்.

வீட்டிலிருந்தே நோய் நீக்கும் சக்தியைப் பெற முடியும்

காட்டுக்குச் சென்று… அலைந்து திரிந்து நான் (ஞானகுரு) உயர்ந்த சக்தி பெற்றேன். நீங்கள் இருந்த இடத்திலேயே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடியும். உங்கள் உடல் நோயை நீக்க முடியும் மன நோயையும் நீக்க முடியும். உங்களால் முடியும்.

நச்சுத் தன்மையிலிருந்து நம்மைக் காக்கும் சக்தி

அழியாச் சொத்தான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கொடுக்கும் அருள் பிரசாதத்தைச் சீராகப் பயன்படுத்துங்கள். எங்கே சென்றாலும் அதை எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.

திருப்பதி கோவில் மலையில் குருநாதர் கொடுத்த பயனுள்ள் அனுபவங்கள்

மலை மேலே உள்ள சில குகைகளின் சூட்சமங்களைக் குருநாதர் காட்டினார். பின் அங்கே தியானமிருக்கும் பொழுது கரடிக் கூட்டம் வருகிறது. பின் குரங்குக் கூட்டம் வருகின்றது. அதைப் பார்த்ததும் என் குடும்பத்தின் ஞாபகம் எல்லாம் வருகின்றது. அமர்ந்திருந்த இடத்திற்கு அடியில் தங்கக் காசு வருகின்றது.

திருத்தணிக்கு நடந்து வரும் வழியில் வெயில் கடுமையில் தாகம் எடுக்கின்றது. பின் அதைத் தாண்டி வந்தேன். திருத்தணியில் ஒரு தம்பதியினர் எம்மைச் சந்தித்து ஈஸ்வரபட்டர் கனவில் வந்து நீங்கள் வரப் போவதைச் சொன்னார் என்று எம்மிடம் சொன்னார்கள்.

திருவேங்கடாசலபதி

“ஏழு கொண்டலவாடா…” என்று சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக “ஒளியாக மாற்ற வேண்டும்” என்று பொருள். ஏனென்றால் இந்த ஆறாவது அறிவை இயக்குவது உயிர்… இந்த உடலை ஆள்வது “பெருமாள்…”

திருவேங்கடாசலபதி…! இங்கே இந்த உடலில் இருப்பது எல்லாவற்றையும் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றான் என்ற தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

அதை நாம் யாராவது புரிந்து கொண்டோமோ…? தத்துவத்தை நமக்குத் தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்… யாரும் அதை மதிப்பதில்லை.

தங்கம் செய்யும் வித்தை

தங்கம் எப்படிச் செய்ய முடியும் என்று காட்டுக்குள் கூட்டிக் கொண்டு குருநாதர் காட்டினார். அதை வைத்து என் (ஞானகுரு) பின்னாடி சுற்றிக் கொண்டு வந்தவர்கள் நிறையப் பேர். ஆனால் அதன் மூலம் ஈஸ்வரபட்டர் உன் மனதைத் தான் தங்கமாக்க வேண்டும் என்று எனக்கு உணர்த்தினார்.

உயிரை மணியாக்க வேண்டும்

பாதரசத்தை வைத்துச் சிலர் பல வேலைகளைச் செய்வார்கள். நம் குருநாதர் ஈஸ்வரபட்டரும் அதை வைத்துச் சில உண்மைகளை மக்களுக்கு உணர்த்தி அதன் மூலம் நம் உயிரை எப்படி மணியாக (ரசமணியாக – ஒளியாக) மாற்ற வேண்டும் என்று உணர்த்தினர்.

இராமாயணக் காவியத்தை அடிக்கடி சொல்வதன் உட்பொருள் என்ன…?

ஈஸ்வரபட்டர் எனக்குள் உண்மையை எப்படி உணர்த்திக் கொண்டு வந்தாரோ அதே வழியில் தான் எல்லாவற்றையும் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றேன். (ஞானகுரு)

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறும் பயிற்சி

செல் ஃபோனில் பதிவு செய்வது போல் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்கின்றேன். மிக மிக எளிதாக நீங்கள் எடுக்க முடியும்.

ஏனென்றால் அந்தப் பதிவு இருந்தால் எடுக்க முடியும். அதற்குத்தான் பதிவு செய்து வேண்டும் என்று சொல்வது.

இரவு படுக்கும் முன்… காலை எழுந்ததும் செய்யும் பிரார்த்தனை

நம் உடலுக்குள் எத்தனையோ கோடி உணர்வுகள் உண்டு… அதிலே அறியாது வந்த தீமைகளும் உண்டு. அத்தகைய தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு கோணங்களிலும் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். (ஞானகுரு)’

காலை எழுந்ததும் (கண் முழித்ததும்) துருவ தியானத்திலும் இரவு படுக்கும் முன்னும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்…. காற்று மண்டலத்தில் வரும் நச்சுத் தன்மையிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

உடலுக்குள் ஆன்மா (ஆவி) எப்படி வருகிறது…?

நண்பர்களுக்குள் அல்லது சிநேகிதிக்குள் அதிகமாகப் பழகுகின்றார்கள். ஆனால் தன் குடும்பத்தில் தான் எண்ணியது நடக்கவில்லை என்றால் தற்கொலை செய்து விடுகின்றார்கள்.

கூடப் பழகிய நண்பனோ அல்லது தோழியோ இறந்து விட்டார்… “ஆ…!” என்று எண்ணினால் பாசத்தால் உள்ளுக்குள் வந்து விடுகின்றது. வந்த பின் பல தொல்லைகளை ஏற்படுத்தத் தொடங்குகின்றது.

இன்றைய விஞ்ஞானத்தின் விளைவுகளை முன்னரே வெளிப்படுத்தியிருந்தார் குருநாதர்

பூமிக்கடியில் குகைகளுக்கு அடியில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த தீவிரவாதிகளை விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் வானிலிருந்தே கண்டார்கள்.. அங்கிருந்தே வீழ்த்தினார்கள். மேலும் மனிதனையே உருவாக்க முடியும் என்று செயல்படுத்திக் காட்டினார்கள் (CLONING). தாய்லாந்து சீனா போன்ற நாடுகளில் கரு சிதைந்த குழந்தைகளை மிருகத்தனமாக அன்றே உணவாக உட்கொண்டார்கள். அதனால் விளைந்த விளைவுகளை இன்று நாம் காண முடிகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் “தன்னைத் தான் அறிதல்”

குரு அருளைப் பெற்று வாழ்க்கையில் வந்த இருளைப் போக்க முடியும். ஒன்றுமறியாத மீணவன் வியாசகன் அவன் சந்தர்ப்பத்தில் வானை நோக்கி ஏகி அகஸ்தியன் உணர்வை… அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நுகர்ந்தான்…! உயர்ந்த ஞானியாக ஆனான்.

கேன்சர் நோயை நீக்கும் மூலிகை எப்படி உருவாகிறது என்று காட்டுக்குள் அனுபவம்

காட்டிலே செத்துக் கிடந்த ஒரு புலிக்கு முன்னாடி குருநாதர் என்னைப் பத்து பதினைந்து நாள் உட்காரச் சொன்னார். அந்த அழுகிய உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளும் காற்றில் சில தாவரங்களும் கலந்து ஒரு வித்தாகி மின்னல் பாயும் பொழுது கொடியாக உருவாகிறது. அதை அடையாளம் போடச் சொன்னார். அது வளர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பின் அங்கே மீண்டும் வந்து அந்தக் கொடி என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார். ஒரு கத்தியையும் கொண்டு போகச் சொன்னார்….

நேரம்… காலம்… மனிதனுக்கு உண்டா…?

“நாம் பதிவு செய்த எண்ணம் தான்” நம்மை வழி நடத்துகின்றதே தவிர நல்ல நேரம் என்றோ… கெட்ட நேரம் என்றோ… அப்படி ஒன்றும் இல்லை. ஏனென்றால் இன்று இதை எல்லாம் விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. மனிதர்கள் செய்யாமல் போகும் அல்லது ஏமாற்ற நினைக்கும் ஒரு வேலையை ஒரு ரோபோ மூலம் இயக்கிக் காட்டுகின்றனர்.

12 மாதங்களிலும் ராசிகளை வைத்துத் தீமைகளை நீக்கச் சொன்னார்கள் ஞானிகள்

ஒவ்வொரு வருடத்திலும் பனிரெண்டு மாதம் என்றால் ஒவ்வொரு மாதத்திலும் சூரியனிலிருந்து வெளிப்படும் உணர்வின் கதிர் இயக்கங்களும் மற்ற கோள்களில் இருந்து வெளிப்படுத்தும் உணர்வுகளும் மற்ற நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படுத்தும் உணர்வுகளும் இந்த மூன்றும் கலவைகள் ஆவதை “ராசிகள்” என்று காட்டினார்கள்.

ஒவ்வொரு நட்சத்திரத்தின் தொகுப்பிலிருந்தும் பனிரண்டு மாதங்களிலும் அது கவர்ந்து எந்தெந்த நட்சத்திரங்கள் இந்த மாதங்களில் மூன்றும் ஒன்றாக அருகிலே கலந்து அது கவர்ந்து கொண்ட சக்திகளை மற்ற கோள்கள் கவர்ந்து அது எவ்வாறு நமது பூமிக்குக் கிடைக்கின்றதென்ற நிலையையும் அதே உணர்வின் சத்தை எவ்வாறு பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்படுத்துவதற்குத் தான் மாதங்களைப் பனிரண்டு ராசிகளாகப் பிரித்தார்கள்.

ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு மாதத்திலும் மனிதன் எவ்வாறு தனக்குள் நல்ல நினைவுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும்…? தன் உயிரான்மாவை எப்படி உயர்த்திக் கொள்ள வேண்டும்…? உயர் ஞானத்தை எப்படித் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று சிந்திக்கும்படி செய்தார்கள்

தன்னை அறிந்து செயல்படும் நிலையே விநாயகர் தத்துவம்

அக்காலங்களில் ஆற்றங்கரையில் தான் விநயகர் கோவில் இருக்கும். கோயிலுக்கு அருகில் இருக்கும் ஆற்று நீரில் குளித்து உடலையும் உடைகளையும் தூய்மையாக்குகின்ற மாதிரி நம் மனதை… நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் தத்துவத்தைத்தான் விநாயகர் தத்துவமாக ஞானிகள் அழகாகக் கொடுத்து இருக்கின்றார்கள். மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதன் மீது பற்று அதிகமானால் நாம் அங்கே போகின்றோம்.

அப்படி இல்லாதபடி… விநாயகரைப் பார்த்து எல்லோருக்கும் உதவி செய்தேன்…! கடனை வாங்கியவன் திரும்பக் கொடுக்கவில்லை நீ பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றாய்…! நான் உதவி செய்தவனே எனக்கு இடைஞ்சல் செய்து கொண்டு இருக்கின்றான்… உனக்கு எல்லா நைவேத்யமும் செய்தேன்… கண ஹோமம் எல்லாம் செய்தேன்…! என்று எண்ணினால் இங்கே தான் சுழன்று கொண்டிருக்க வேண்டும்…!

எங்கே…? யார் மேலே வருத்தப்படுகின்றீர்களோ… யாரை எண்ணிக் கோபப்பட்டீர்களோ அந்த உணர்வை எடுத்து அந்த உடலுக்குள் தான் போகும். அந்த உடலுக்குள் சென்று நோயை மீண்டும் உருவாக்கி அவனையும் வீழ்த்திவிட்டு மனிதன் அல்லாத உருவைத் தான் அங்கே உருவாக்கும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலேயும் குறைகளைக் கண்டால் கணவனும் மனைவியும் அந்த உணர்வை உள்ளே விடாதபடி “ஈஸ்வரா…!” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஊட்டி இங்கே அடைத்திடல் வேண்டும்.

குடும்பத்திற்குள் இருந்தாலும் சரி நமது கர்ம காரியங்கள் செய்யும் போது அத்தகைய நிலை ஏற்பட்டாலும் சரி துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தடுத்து நிறுத்திப் பழகவேண்டும்.

ஏனென்றால் மனிதனுக்குத்தான் தெய்வ சக்தியைப் பெறக்கூடிய அந்தத் தகுதி உண்டு. கணவன் மனைவி இரண்டு உயிரும் ஒன்றாக இணைந்தால் அதற்குப் பின் பிறவியில்லை…! விநாயகர் தத்துவத்தின் மூலம்…!

ஹார்ட் அட்டாக் (HERT ATTACK) எப்படி வருகின்றது…?

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் சந்தர்ப்பத்தால் தவறு செய்பவர்களை உற்றுப் பார்த்து வேதனையுடன் அதை நுகர்ந்தறிந்தால் உமிழ் நீராகி உணவுடன் கலந்து இரத்தங்களில் அது மாசு படுகின்றது. சுத்தப்படுத்தாத அந்த விஷ அணுக்கள் சிறுநீரகங்கள்… இதயம்… சிறு மூளை பாகம்,,, சென்றால் அடைப்பு போன்று ஆகி இரத்தம் போவதைத் தடைப்படுத்தத் தொடங்குகின்றது.

பார்வதி பஜே ஹரஹரா சம்போ மகாதேவா

காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பார்த்து எண்ணிக் கவர்ந்து கொண்ட உணர்வின் சக்திகள் அனைத்தும் நமது உடலாகின்றது என்பதை உணர்த்தும் விதமாக “பார்வதி பஜே.., ஹரஹரா சம்போ மகாதேவா..,” என்று சிவ தத்துவத்தில் தெளிவாக்கியுள்ளார்கள்.

பார்வதி பஜே – பார்த்த உணர்வின் உணர்ச்சிகளை உயிரானது நமது உடலுக்குள் ஊட்டி
ஹரஹரா – அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி
சம்போ – நாம் பார்த்த இந்த சந்தர்ப்பம்
மகாதேவா – நாம் பார்த்த உணர்வுகளையெல்லாம் நமக்குள் உருவாக்கக்கூடியதாக நம் உயிர் இருக்கிறது.

“பார்வதி பஜே நமச்சிவாய” என்று பாடினார்கள். அதாவது கண்களால் “பார்க்கப்படும் உணர்வுகள்” நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் உயிரில் மோதும் பொழுது உணர்வின் தன்மை இயக்கப்படுகின்றது.

உயிரில் பட்டு அந்த உணர்வின் இயக்கமாக.., “பஜே நமச்சிவாய” இந்த உடலுக்குள் அதனின் உணர்வை இயக்கும் “உணர்வின் ஒலிகளை எழுப்பும் உடலாக.., அமைந்துவிடுகின்றது” என்பதை உணர்த்துவதற்காக பாடல்களாகப் பாடினார்கள்.

நாம் எதையெல்லாம் பார்த்தோமோ அவை அனைத்தும் நம்முள் சதாசிவமாக ஆக்கிக் கொண்டேயுள்ளது (நம் உடலாக) என்பதைச் சிவ தத்துவம் நமக்குத் தெளிவாக்குகின்றது.

வாழ்க்கையில் நாம் நம்மிடத்தில் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சேர்த்து மன உறுதியை மன வலிமையைப் பெருக்கினோம் என்றால் நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கித் தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறமுடியும்.

இந்த உடலில் அருள் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க உடலில் விளைந்த உணர்வுகள் உயிருடன் ஈஸ்வரனுடன் ஒன்றி “அவனுடன் அவனாக..,” நாம் அழியா நிலைகள் கொண்டு என்றுமே பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்பதே நம் சாஸ்திரங்களில் கூறப்பட்ட உண்மைகள்.

புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானி உருவாக்குவது போல் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும்

செத்த பிற்பாடு… “கொள்ளி வைக்கக் குழந்தை வேண்டும்” என்ற சாங்கிய சாஸ்திரப்படி குழந்தை இல்லாதவர்கள் கூட தத்து எடுத்துக் குழந்தையை வளர்க்கின்றனர். ஆனால் ஞானிகள் சொன்ன மூலத்தை மாற்றி விட்டோம். அவர்கள் சொன்ன முறைப்படி ஞானக் குழந்தைகளை உருவாக்கினால் அவன் நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வான்.. ஏகாந்தமாக நம்மை வாழச் செய்வான்.

ஆற்றல்மிக்க சக்திகளை எலெக்ட்ரானிக் முறைப்படி அழுத்தமாகக் கொடுக்கின்றோம்

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் இயக்கம் போல் உயர்ந்த அழுத்தம் கொண்ட மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

தையல் வேலையை நன்கு பழகிக் கொண்டவர்கள் பேசிக் கொண்டே சரியானபடி தங்கள் வேலையைச் செய்வார்கள். அவர்கள் கை தன்னாலே வேலை செய்யும். அது போல் குருநாதர் காட்டிய வழியில் அருள் உணர்வுகளைப் பெற்றுப் பழகிக் கொண்டால் எளிதில் தீமையை நீக்கலாம். உயிருடன் ஒன்றிய ஒளி நிலை பெறலாம்.

அஞ்சனை… ஆஞ்சநேயன் – சுக்ரீவனின் மந்திரி

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் இது ஒரு பெரிய குளம். அதிலே நாம் பிறர் படும் கஷ்டங்களையோ வேதனைகளையோ நுகரப்படும் போது நாம் அதிலே விழுந்து விடுகின்றோம் என்பதனை உணர்த்துவதற்காக காவியத் தொகுப்புகளைத் தெளிவாக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

நமது பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் இத்தகைய விஷத் தன்மை பெரும் குளமாக இருக்கின்றது. அந்த உண்மைக்கு மாறான நிலைகள் நடப்பவைகளைப் பார்த்து நாம் விழுந்து விட்டால் எப்படி மாற்றம் அடைகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக ஒரு காவியமாகப் படைத்தனர் ஞானியர்கள்.

நம்மை அறியாமலே பிறருடைய நிலைகளைப் பார்த்து அந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் “இப்படி வேதனைப்படுகின்றானே..,” என்று (குளத்தில் பட்டால்) அவன் உணர்வை நாம் எடுத்தால் இந்த உடலுக்குள் என்ன ஆகின்றது? நாம் பல வேதனைகள் படுகின்றோம் என்பதனைக் காட்டுகின்றனர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று இணைத்தால் அந்த வேதனைகளைத் தடுத்து விடுகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்துகின்றது.

இப்படி நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேருளைப் பெறவேண்டும் என்று செலுத்தப்படும் போது இங்கே புருவ மத்தியில் அந்த உயிரின் நிலைகளில் உள்ளே செல்லாது தடுப்பதும் நம் உடலுக்குள் இரத்தத்தில் கலந்தபின் அந்த விஷத்தின் தன்மை நுகராது தடுப்பது தான் இந்த உண்மையான நிலைகள். தியானம் என்பது முறைப்படி இது தான்.

நம்முடைய பழைய ஊழ்வினைகளை (விதியை) எப்படி மாற்றவேண்டும்…?

வயலில் களைகள் முளைக்க யாரும் விதை போடுவதில்லை. ஆனால் களைகளைப் பிடுங்கவில்லை என்றால் நல்ல பயிர் வளராது.

அந்த வயலில் களை முளைப்பது போல் தான் அறியாமலே தீமைகள் நமக்குள் வருகிறது. ஆக மனிதனுக்குள் ஊழ் வினையாகப் பல வித்துகள் உண்டு.

அவைகளை அவ்வப்பொழுது வளரவிடாது தடுக்கவில்லை என்றால் மனிதன் செயல் இழந்து விடுவான். அதைத் தடுக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் வித்துக்களாக அதே ஊழ் வினைக்குள் ஊன்றிப் பழக வேண்டும்

இது வளர அது குறையும். மனிதன் நாம் ஞானியாக முடியும்.

வடக்குவாசல்

நாம் நேரடியாகச் சக்தி பெறும் வழியே வடக்குவாசல்…!

உலக மாற்றத்தைப் பற்றி அன்றே குருநாதர் உணர்த்தியுள்ளார்

இன்று இந்த உடலை இழந்தால் மீண்டும் மனிதாக உருப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் மனிதனாக இன்று இருந்தாலும் வேதனைப்படும் உணர்வையே நுகர நேர்ந்தால் உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றி அதை அனுபவிக்க நேரும். விஞ்ஞான அறிவின் வீரியத்தால் நம் பிரபஞ்சமே செயலிழக்கும் தருணம் வந்து கொண்டிருக்கின்றது. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பே குருநாதர் இதைக் காட்டினார்.

கஷ்டம் என்று சொல்லாதீர்கள்.. நிவர்த்திக்கும் சக்தி வேண்டும் என்று கேளுங்கள்

தியானம் செய்யும் பொழுது தீமைகள் அகல வேண்டும் என்றே எண்ணுங்கள். துன்பங்களையும் துயரங்களையும் எண்ணாதீர்கள்…!

ஈஸ்வரபட்டரின் அருள் ஆசி – அருள் பிரசாதம்

அகஸ்தியன் இருக்கும் இடத்திற்குச் சென்றவர் ஈஸ்வரபட்டர். குரு அருளின் வரப்பிரசாதம் உங்களுக்குள் ஊடுருவட்டும். உங்களுக்குள் ஈஸ்வரபட்டரின் அருள் பரவி வருவதை உணர முடியும். உங்களைச் சுற்றி ஒளி வட்டம் வருவதை உணரலாம்.

எலும்புக்குள் இருக்கும் ஊனை மாற்ற விஞ்ஞானத்தால் மாற்ற முடியாது

ஊசி மருந்தைச் செலுத்தித் தசைகளில் உள்ள நோய்களை விஞ்ஞானம் நீக்கினாலும் எலும்புக்குள் இருக்கும் ஊழ்வினையை மாற்ற முடியாது. அதை மாற்றினால் தான் நம் பிறப்பின் பலனை அடைய முடியும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வை வலுப்படுத்திக் கொண்டால் அந்த ஊழ்வினையை மாற்றலாம்.

உடல் உறுப்புகள் தியானப் பயிற்சி

உடலில் உள்ள உறுப்புக்களான சிறு குடல் பெரும் குடல்… கணையங்கள்… கல்லீரல் மண்ணீரல்… நுரையீரல்… சிறுநீரகங்கள்.. இருதயம்… கண்களில் உள்ள கருமணிகள்… நரம்பு மண்டலம்… எலும்பு மண்டலம்… நெஞ்சின் பாகம் உள்ள விலா எலும்புகள்… எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன்… தசை மண்டலம்… தோல் மண்டலம்… போன்ற எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி இணைக்க வேண்டும் என்ற தியானப் பயிற்சி.

குடியிருந்த கோவில் எது…?

அசாம் காட்டுக்குள்ளும் பழனி பாப்பம்பட்டி மலையிலும் நடந்த நிகழ்ச்சிகள்

குரு வழியில் உலகுக்கே எடுத்துக் காட்டும் அருள் ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்

மெய் ஞான உலகிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். நீங்கள் பண்பட வேண்டும்.

உலகைக் காக்கும் சக்தி எது…?

தமிழ் நாடு உலகுக்கே எடுத்துக்காட்டாக வரும்

நாம் எல்லாம் ஞானிகளாக உருவானால் உலகிலேயே ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக நம் தமிழ் நாடு அந்த உயர்ந்த நிலைகளாகப் பெறும். இந்த உலகைக் காக்கும் அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வை நாம் மீண்டும் வளர்த்து உலக மக்களுக்குத் தெளிவான நிலைகளை ஊட்டும் நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

ஈஸ்வரபட்டரின் அருளையும் துருவ நட்சத்திரத்தின் அருளையும் பெறச் செய்யும் தியானம்

“சரியான குரு யார்…?” என்று உங்களுக்குக் காட்டுகின்றோம். அவரின் காட்சியும் உங்களுக்கு நிழற்படமாகத் தெரியலாம். உங்கள் உடலில் அது புது உணர்வாகப் படரும்… மகிழ்ச்சியான உணர்வையும் ஊட்டும். உலகையே காக்கும் ஞானிகளாக உங்களை இந்தத் தியானம் உருவாக்கும்.

தவமிருக்கும் தபோவனம் – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தியான மண்டபத்தை அமைத்திருக்கிறோம். அங்கே அமர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்களை உலகம் முழுவதற்கும் படரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உலகத்தையே அழித்துக் கொண்டு இருக்கும் விஷத் தன்மை ஒரு பக்கம் படர்ந்து மனிதனுடைய எண்ணத்தையும் அது அழித்துக் கொண்டு இருந்தாலும் அந்த விஷத் தன்மையிலிருந்து எல்லோரையும் மீட்ட வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகள் கற்பித்த நிலைகள் நான்கு திசைகளிலும் பரவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உலக மக்கள் அனைவரும் பெறும் தகுதியாக இப்போது அதுவும் வளர்ச்சியாகிக் கொண்டே வருகிறது.

தியானத்தை நாம் மட்டும் செய்யவில்லை…! உலகில் எல்லாப் பாகங்களிலும் இதைப் போன்ற தியானத்தின் உண்மைகளை உணர்ந்து “உலகைக் காக்கும் சக்தியாகத் திசை திரும்புகிறது…!” அந்த மாமகரிஷிகள் ஒவ்வொரு பாகங்களிலேயுமே இதைப்போல அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

நமது மனதை வலு பெறச் செய்யும் சக்தியாக நமது எல்லையில் நம்மை அணுகி உள்ளவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் செயல்படுத்தியது.

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்குள் வந்தாலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற்று நீங்கள் இடும் மூச்சுகள் அனைத்தும் உலக நன்மை பயக்கும் அருள் சக்தியாகவும் மற்றவர்களின் தீமையை அகற்றி அவர்களுக்குள் நல் உணர்வின் சக்தி விளையும் தன்மையாகவும் அதைச் செயல்படுத்தும் நிலையாகத் தான் இங்கே அமைத்திருக்கின்றோம்.

இந்தத் தபோவனத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டாலே மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஆத்மசுத்தி செய்து விட்டு அடுத்து உங்களுக்கு எது எல்லாம் நல்லதாக வேண்டுமோ அதை எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு அந்தச் சக்தி கிடைத்து நல்லதே நடக்கும்.

சீதா கடைசியில் மண்ணுக்குள் போகிறது – நம் உடலும் கடைசியில் மண்ணுக்குள் தான் போகிறது…!

சீதா என்ற நிலை இராமனிடம் பட்ட துன்பங்களும் அது எண்ணாதபடி அதன் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது எத்தனையோ இன்னல்களை இராவணனிடத்தில் பட்டது.

சீதா பட்ட இன்னல்கள் இன்னது என்று சொல்ல முடியாது.

அத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக் கொண்டு உயிரின் உணர்வின் தன்மையை உண்மையை நிலைப்படுத்திய அந்த உணர்வுகள் இந்த உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா சொர்க்கத்தை அடைந்தது.

இந்த உடல் என்ற சீதா பூமிக்குள் மண்ணைப் பிளந்து மீண்டும் மண்ணுடன் மண்ணாக மற்றவைகளுக்கு உணவாக மக்கியே விட்டது.

இதை இராமாயாணத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

மனித உடலின் கடைசி முடிவையும்… உயிராத்மா அடைய வேண்டிய எல்லையையும்… இராமாயணத்தில் வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார். உடல் அழியக்கூடியது. உடல் நமக்குச் சொந்தமல்ல.உயிர் என்றும் அழிவதில்லை. உயிர் தான் நமக்குச் சொந்தமானது.

விண்ணிலிருந்து வந்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சத்துகளை எடுத்து பல உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகின்றது.

மனிதனான பின்பு அனைத்தையும் அறியும் அறிவாக ஒளியின் உணர்வாக வளர்ந்து நான் “விண் செல்ல வேண்டும்”

இராமன் என்பது நம் எண்ணங்கள். சீதா என்பது சுவை (உடல்). சுவைக்கொப்ப நமக்குள் எண்ணங்கள் தோன்றுகின்றது. சீதாராமன் தான். இராமாசீதா அல்ல.

இராவணன் என்பது நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட ஒலிகள் (நாதங்கள்).

லவ குச என்பது நஞ்சை வென்று உயிருடன் ஒன்றி ஒளியான “விண்ணுலக ஆற்றல்”

வான்மீகி மகரிஷி தான் கண்டறிந்த பேருண்மைகளை சீதாவின் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஓதினார் என்று காவியப் படைப்பு உண்டு.

அதாவது மனித உடல் பெற்ற நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று நுகர்ந்தால் “லவ குசா…!” ஒளியான அணுக்களாக நமக்குள் உருப்பெறும்.

லவ குசா வளர்ந்த பின் இராம காவியைத்தைப் பாடுகின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்…?

நாம் எடுக்கும் மெய் உணர்வுகள் உடலுக்குள் (சீதாவிற்குள்) விளைந்தபின் நம்மைப் பற்றியும் நமக்குள் இயங்கும் அனைத்தையும் அறிந்து அது வெளிப்படுத்திக் காட்டும்.

தன்னைத் தான் அறியும் நிலையாக நாம் நம்மை அறிய முடியும்.

மனித உடலுக்குப் பின் ஒளியின் சரீரம் பெற்று அந்த மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்பதை வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார்.

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஏமாற்றுபவன் தான் இன்று நன்மை பெறுகின்றான்

நாடு நலம் பெறவேண்டும் என்றால் நாம் எல்லாம் ஞானிகளாக வேண்டும். நல்ல உணர்வுகளைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும். நல்லவர்களை உருவாக்கிப் பழகுதல் வேண்டும். நல்ல நிர்வாகத்தை உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

நல்லது என்றால் மற்றவர்களைக் குறை கூறுவதல்ல…!

திருடு போன பொருளை மீட்கும் வழி

பணத்தையோ பொருளையோ எடுத்துச் சென்றவன் போலீஸிடம் சிக்க வேண்டும். நம் பொருள் கிடைக்க வேண்டும் என்று எண்ணித் தியானித்துப் பாருங்கள். உங்கள் பொருள் நிச்சயம் திரும்பக் கிடைக்கும். உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்…!

ஈஸ்வரபட்டரைப் போல நீங்களும் ஞானியாக வேண்டும்

அருள் உணர்வைப் பெற்றேன் என் பார்வையால் சொல்லால் செயலால் மற்றவர்களின் தீமைகள் அகன்றது. அவர்கள் நல்லவர்களாக ஆனார்கள் என்ற நிலைக்கு வளர வேண்டும்.

நான்கு வேதங்களின் இரகசியம்

மற்றவருடைய வேதனைகளையும் குறைகளையும் நாம் உற்றுப் பார்த்து அதை நுகர்ந்தால் உயிரிலே பட்ட பின் நம் நல்ல குணங்களை மறையச செய்கின்றது… அதர்வண…! திரும்பத் திரும்ப எண்ணினால் அது நமக்குள் ஒரு வித்தாகின்றது… யஜூர்.

நமக்குள் வித்தாக உருவான பின் அதே கோப உணர்ச்சியோ வேதனை உணர்ச்சிகளையோ தூண்டி நம்மையும் அதே வழியில் பேசச் செய்கின்றது… சாம…!

அதே சமயத்தில் தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அது நம் இரத்தநாளங்களில் கலந்து தீமைகளை அடக்குகின்றது.. அதர்வண…! அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்கள் நமக்குள் விளைந்தால் யஜூர்…!

அதன் பின் நாம் வெளிப்படுத்தும் சொல் செயல் எல்லாம் நல்லாதாகின்றது… சாம…!

உயிர் நெருப்பு… அதிலே எதைப் போட்டு யாகம் நடத்த வேண்டும்…?

உண்மையான நெருப்பில் அந்த அருள் ஞானிகளின் உணர்வு பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.

மற்றவர்கள் தீமைகளையோ குறைகளையோ துன்பங்களையோ எண்ணாது அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள். உங்கள் உயிரிலே (புருவ மத்தியிலே) செலுத்துங்கள்.

அவர்கள் அனைவரும் தெளிவானவர்களாகவும் இந்த உலகுக்கே நன்மைச் செய்பவர்களாகவும் வர வேண்டும் என்று எண்ணுங்கள். உலக மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை உங்களுக்கு வளர்த்துக் கொள்ளுங்கள்.

மற்றவர்கள் உணர்வு நம்மை இயக்காது நமக்குள் பக்குவப்படுத்திக் கொள்ள முடியும். ஆக தீமைகள் வந்தாலும் அதை நமக்கு வேண்டியதாக மாற்றிக் கொள்ளலாம் இந்த உயிரான நெருப்பிலே…!

ஆகவே ஒவ்வொருவரும் இந்த உண்மையான யாகத்தை நடத்துங்கள். உயிர் நெருப்பு அதிலே நல்ல உணர்வைச் செலுத்துங்கள்.

தீமையை நீக்கிப் பழகிய குரு உணர்வு மீது நாம் இச்சைப்பட வேண்டும்

குருநாதர் பேரொளியாக மாறியது போல் நாமும் ஆக வேண்டும்…! என்று ஆசைப்படுங்கள். தீமையை நீக்கிய குருவின் உணர்வில் இச்சைப்பட்டு அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு அது கிரியையாகும். பின் அந்தக் குருவின் ஞான வழிப்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

மணிக் கணக்கில் உட்கார்ந்து செய்வது தியானம் அல்ல…!

நாம் உட்கார்ந்து மணிக்கணக்கில் ஜெபம் இருந்து ஆண்டவனை அடைவேன் அந்தச் சக்தியைப் பெறுவேன் என்றால் அது முடியாது.

அப்படி மணிக்கணக்கில் ஜெபமிருந்து முடிந்தாலும் முடிந்த பின் வாழ்க்கைக்கு வரும் பொழுது தீமைகள் வரும். அப்படி ஜெபமிருந்து பல நிலைகளைப் பெற்றாலும் அது “முனி” என்ற நிலையாகத்தான் வரும். ஒரே வைராக்கிய நிலைகள் கொண்டு “மற்றதைச் சிந்திக்கவிடாது” செயல்படுத்தும் நிலைகள் தான் வரும்.

ஆகவே, அருள் ஞானத்தை வளர்த்து மெய்ப்பொருள் காணும் நிலையை இந்த உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த உபதேசங்களை ஒவ்வொரு நாளூம் திரும்பத் திரும்பப் படியுங்கள். வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்தால் ஒரு 10 நிமிடமாவது இதைப் படியுங்கள்.

இதுவே ஒரு தியானமாகின்றது. இதைப் படித்து முடித்த பின்பு “எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்” என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள். அப்பொழுது இந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மற்றவர்களை நலமாக்க இது உதவும்.

அருள் ஒளி பெறுவோம். இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக என்றும் எகாந்த நிலை என்ற நிலையில் வாழும் அந்த அருள் சக்தியைப் பெறுவோம்.

அருள் உணர்வின் சக்தியை நமக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றியே நிலைத்தே வாழ்வோம். அவனுடன் நாம் ஒன்றியே வாழ்வோம். என்றும் எதனையும் அறிந்திடும் உணர்வுடன் வாழ்வோம். எல்லாம் ஏகாந்தம் என்ற நிலையில் வாழ்வோம்.

பகைமையற்ற உணர்வுடன் வாழ்வோம். பகைமையான உணர்வுகள் சேராது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குவோம். நம் பார்வையில் பகைமை உணர்வு ஓடவேண்டும்.., நஞ்சு கொண்டோர் உணர்வுகள் நீங்க வேண்டும்,

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற்றோம் என்றால் நம் பார்வை பிறருடைய நஞ்சை போக்கும். அவருடைய நஞ்சின் தன்மை நமக்குள் வராது காக்கும்.

ஏனென்றால் நாம் இந்த மனித உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் ஒரு பிறவிக்கு வரக்கூடாது. இன்னொரு உடல் பெறக்கூடாது.

கடும் விஷத் தன்மையாக மாறிக் கொண்டிருக்கிறது இந்த உலகம்

நீர் நிலம் எல்லாம் ஏற்கனவே மாசடைந்த நிலையில் இன்று இந்தக் காற்று மண்டலமும் மிகவும் நச்சுத் தன்மையாக மாறிக் கொண்டுள்ளது. தப்பும் வழியில்லை. உயிர் இருக்கும்… ஆனால் மனிதனுடைய சிந்தனைகள் அழியும் தருணம் வந்து விட்டது. அருள் உணர்வை எடுத்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறும் பக்குவத்திற்கு வாருங்கள்.

மனதை ஒன்று சேர்த்தால் தன்னாலே மகிழ்ச்சி வரும்.. கல்யாணராமா…!

தீமை செய்யும் உணர்வுகளை அகற்றினால் உங்களுக்குள் எண்ணங்கள் ஒன்றாகிச் சந்தோஷம் வரும். எண்ணங்களை எல்லாம் ஒன்று சேர்த்து வாழக்கூடிய வாழ வைக்கக் கூடிய இடம் ஆலயம் என்ற நிலைகளைத்தான் ஞானிகள் காட்டினார்கள்.

சிலைக்குள் மறைந்துள்ள உண்மைகளை அறிந்திருக்கின்றோமா…?

இந்தத் தெய்வ குணத்தைப் பின்பற்றினால் உன் குடும்பம் நலமாக இருக்கும் உன் குணங்கள் எல்லாம் நலமாக இருக்கும் என்று புராணங்கள் காட்டியிருந்தாலும் அந்த மகரிஷிகளைப் பின்ன்பற்றாது அந்தச் சிலை தான் நமக்கு எல்லாம் செய்கிறது என்ற எண்ணத்தில் ஆராதனை அபிஷேகம் செய்கின்றோம். மேலும் அங்கே வேதனையைத்தான் கொட்டுகின்றோம். தீமையை அகற்றத் தெரிவதில்லை.

நீங்கள் எல்லோரும் ஞானிகளாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்

நீங்கள் செய்த நன்மை நன்மையாகவே இருக்கும். உங்களுக்குள் தீமைகள் வராது எப்பொழுதும் தடுத்துக் கொள்ள முடியும். அத்தகைய அதிகாரத்தைக் கொடுக்கின்றோம்.

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவரின் அனுபவங்கள் எப்படி இருக்கும்…?

யாம் உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கிச் சீராகத் தியானிப்பவர்களுக்குத் தீமையை நுகரும் உணர்வை மாற்றி அதிலிருந்து விடுபடும் உணர்ச்சிகள் வரும். உங்கள் அனுபவத்தில் நிச்சயம் அது வரும். அந்த உயர்ந்த ஆயுதம் உங்களுக்குப் பயனுள்ளதாகக் கிடைக்கும்.

போஸ்ட் கம்பியில் ஈஸ்வரபட்டர் தட்டுவதன் ரகசியம்

ரோட்டிலே செல்லும்போது பைத்தியக்காரர் மாதிரி டெலிஃபோன் போஸ்ட் கம்பியில் தட்டுவார் குருநாதர்.

போஸ்ட் கம்பியில் தட்டும்போது “என் சாமி தட்டுகிறீர்கள்..?” என்று கேட்டேன்.

நீ தான்டா… கேட்கிறாய்.. வேறு எவன் கேட்கிறான்…? என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள். “நீ… ஏன்…?! என்று கேட்பதால் உனக்கு விளக்கம் சொல்கிறேன்… என்பார் குருநாதர்.

நமது குருநாதர் அவர் பைத்தியக்காரராக இருந்தார். அவர் இந்த உடலுக்கு இச்சைப்படவில்லை.

ஒவ்வொரு உயிருக்கும் டெலிஃபோன் கம்பியை அடித்து அவர்களுக்கு ஞானத்தை கொடு. நல் வழியைக் கொடு என்று சொன்னேன், அதற்காக வேண்டித்தான் டெலிஃபோன் அடித்தேன்.

ஒவ்வொரு உயிரும் அவன் கடவுள் அவனுக்கு இதைச் செய்து… ஏன்டா…! இந்த உடலில் வீற்றிருக்கும் “நீ…” அந்தக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்ற உணர்வை ”ஏன் நீ கொடுக்கவில்லை…?” என்று அவனிடம் முறையிடுகிறேன்.

அவனிடம் (ஒவ்வொரு உயிரிடமும்) முறையிடுகின்றேன். அதே சமயத்தில் என்னை இயக்கிக் கொண்டிக்கின்ற இவனிடமும் (என் உயிரிடமும்) முறையிடுகின்றேன்.

அப்படி என்றால் என்ன அர்த்தம் ஆகின்றது?

நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னால் எனக்கு நல்லதாகின்றது. நீங்கள் உயர வேண்டும் என்று சொன்னால் (என் உயிர்) எனக்கு நல்லதைச் செய்வான்.

அதற்குத் தான் இப்படிச் சொன்னேன் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார். இப்படி சூட்சம நிலையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார். அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நாம் நுகர்ந்த உணர்வின் இயக்கமே எல்லாவற்றுக்கும் காரணம்

நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அந்த உணர்ச்சியின் எண்ணங்களாக நமக்குள் வரவைத்து அந்த எண்ணத்தின் வழிதான் நாம் இயங்குகின்றோம், வாழுகின்றோம்.

ஒருவன் கோபப்படுகின்றான் என்பதை கண் தெரியப்படுத்துகின்றது. ஆனால், உயிரில் பட்டவுடன் அந்த உணர்வுகள் அந்தக் கார உணர்ச்சிகள் நரம்பெல்லாம் “டைட்” ஆகிவிடுகின்றது.

நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள். கோபப்படுவர்களைப் பார்த்தவுடன் உங்கள் நரம்புகளெல்லாம் “டைட்” ஆகின்றது. நீங்கள் “டைட்” செய்கின்றீர்களா? அல்லது நீங்கள் நுகர்ந்த உணர்வு அந்த மாதிரி மாற்றுகிறதா?

அப்பொழுது நம் வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகளே உணர்ச்சிகளைத் தூண்டி இரத்த நாளங்களில் கலந்துவிடுகின்றது. அதிக நேரம் கோப உணர்வை எடுத்துவிட்டோம் என்றால் அந்த எதிர்ப்பு சக்தியைக் குறைத்து விடுகிறது.

அந்தக் கார உணர்வு வரும்போது அதைத்தான் நமக்குள் அதிகமாக எடுக்க நேருகிறது. யாரைப் பார்த்தாலும் நமக்குத் திடீரென்று கோபம் வரும். எதைச் சொன்னாலும் இந்த உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவோம்.

சில பேரைப் பாருங்கள்… எதை எடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். சொல்வதற்கு முன்னாடி முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக் கொண்டு அதைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

அந்த உணர்ச்சிகள் இதைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். அப்பொழுது எது இயக்குகின்றது? நாம் நுகரும் உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது. இதையெல்லாம் நாம் நமது வாழ்க்கையில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறு வயதில் செய்யும் தவறின் விளைவுகள் பின்னாடி எப்படி வருகிறது…?

என்னுடைய சிறு வயதில் நான் (ஞானகுரு) அறியாமல் ஒரு குருவியை உயிருடன் எரித்தேன். பின்னாளில் அதனுடைய தீய வினை எப்படி வருகிறது…? அந்தக் குருவி எரியும் பொழுது என்னென்ன எரிச்சல் பட்டிருக்குமோ அதே எரிச்சல் எனக்குள்ளும் வந்து என்னையும் அழிக்கும் உணர்ச்சிகளை எப்படித் தூண்டுகிறது..? என்று நேரடி அனுபவம் கொடுத்தார் குருநாதர்.

மனிதனின் உயர்ந்த பண்புகள் எது…?
தீமைகளையும் துன்பங்களையும் போக்கும் உயர்ந்த சக்தியைப் பெறுவதும் அதை மற்றவர்களையும் பெறச் செய்வதும் தான் உயர்ந்த பண்பாகும்

தீமைகளைச் சுட்டுப் பொசுக்க ஆத்ம சுத்தி என்ற துப்பாக்கியைக் கொடுக்கின்றோம்
கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டு… ‘’புலி வருது… புலி வருது’’ என்று சொன்னால் துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்…?

துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம் சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம். ‘’ஐய்யய்யோ…! புலி வருது… புலி வருது…!’’ என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடாமல் இருந்தால் என்ன பண்ணும்…? அது நம்மைத் தாக்கிவிடும்.

இதைப் போலத்தான் “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். சந்தர்ப்பத்தில் நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும், ‘’நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்’’.

உதவி செய்தாலும் அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள், உங்களுக்குள் ஆட்டிப்படைக்காதபடி ‘’ஆத்மசுத்தி’’ என்ற இந்த ஆயுதத்தை எடுத்து ‘’ஈஸ்வரா’’ என்று புருவ மத்தியில் உள்ள உங்கள் உயிரை வேண்டி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, உடல் முழுவதும் படர்ந்து, இரத்தங்களில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன், கண் திறந்து ஒரு நிமிடமும், கண்ணை மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக் கொண்டபின் கண்ணைத் திறந்து துன்பப்பட்டவர்களிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று சொல்லிவிட்டு அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்க முடிகின்றது,

நாம் நகை வாங்கியபின் அடுத்த நகை செய்யும்போது, அதில் உள்ள வெள்ளியையும், செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல அடுத்த நிமிடமே கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது.

நமக்குள் தீயது சேராது தடுக்கும் இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு நமக்குள் தியானமிருக்க வேண்டும்.

‘’தியானம்’’ என்பது எது…?

நமக்குள் கெட்டதைச் சேரவிடாது வைராக்கியமான நிலைகள் பெறவேண்டும். இதுதான் தியானம் என்பது.

பக்தியில் என்ன செய்கின்றோம்…?

நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள், ஆனால் தியானம் என்பது, நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வது.

பக்தி என்பது நல்லதை நினைப்பது.

தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்திகொண்டு, நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது. இந்த சக்தி இல்லையென்றால் செயல்படுத்த முடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை இந்த ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகளில் வலு கொண்டு உங்களுக்குள் பெறச் செய்து, வாக்கின் நிலையாக ஆத்ம சுத்தியை கடும் ஆயுதமாக யாம் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

நீங்கள் எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகளில் துன்பம் என்று பார்க்கின்றீர்களோ… நுகர்கின்றீர்களோ… கேட்கின்றீர்களோ… அவைகளையெல்லாம் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான்… இந்த ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகள்.

எண்ணியவுடனே உயர்ந்த சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்கின்றோம்
இந்த உபதேசத்தைப் புதிதாகக் கேட்பவர்கள் “சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கின்றார்…!” என்ற எண்ணங்கள் இல்லாதபடி “சாமி சொன்ன சக்தியை நாங்கள் பெறவேண்டும்” என்ற எண்ணத்தை எண்ணினாலே அந்த நிமிடத்தில் அச்சக்தி ஊடுருவி உங்களுக்குள் தீமையை நீக்கி நன்மையைப் பெறக்கூடிய தகுதி, உங்கள் எண்ணத்திற்குள் பெறச் செய்வதற்கே, அந்த மகரிஷிகளின் உயர்ந்த சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

இனி எண்ணத்தால் சக்தி பெறுவது, உங்களிடம்தான் உள்ளது. ஒவ்வொரு நாளும், அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை யாம் உங்களுக்குள் உரமேற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

அப்படி உரமேற்றப்பட்டு, அதன் வழிகளிலே மெய்ஞானியைக் காணும் சக்தியையும் மெய் ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டுமென்றும் அதைத் திரும்பத் திரும்ப யாம் உபதேசிப்பதும் உங்களுக்குள் பதிவின் நிலைகளை ஏற்படுத்துவதற்ககுத்தான்.

இந்தப் பதிவுகளின் மூலம், நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியை, நீங்கள் எளிதில் பெற முடியும். அதைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய கொடிய தீமைகளிலிருந்தும் விடுபடமுடியும். எமது அருளாசிகள்.

ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை
“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று, புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும். பின் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

அடுத்து இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், நமது ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.

பின், ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள, அருள் ஞானிகளின் அருள் உணர்வை, எண்ணி ஏங்கி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.

இவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்தி, நமது கண்களின் காந்தப் புலனறிவால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து, ஈர்த்து, உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து, உயிர் வழி சுவாசிக்கவேண்டும்.

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என எண்ணி, நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும். இதுவே “ஆத்மசுத்தி”.

நம்மை அறியாமலே நம்மைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான், தக்க ஆயுதமாக ”மிஷின் கண்” (Machine Gun) போன்று உங்களுக்கு ‘’ஆத்மசுத்தி’’ என்ற ஆயுதத்தை கையில் கொடுக்கிறோம்.

“ஓம் ஈஸ்வரா” என்று, அந்த உணர்வின் ஆற்றலான ஆயுதத்தை எடுத்து, மகரிஷிகளின் அருள் சக்திகளை, உங்கள் உடலுக்குள் செலுத்தி (ஆத்ம சுத்தி செய்து), உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும், வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும், அந்த உணர்வின் தன்மைகளை, அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே, அடக்கச் செய்யுங்கள். அப்போதுதான் அடங்கும்.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெற முடியும்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும், உணவாகக் கொடுக்கும் பொழுது, எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளியின் சுடராக மாற்றிவிடும்.

இந்த ஆத்ம சுத்தியை, நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பொழுது, வாழ்க்கையில் வரும் அனைத்துத் தீமைகளையும், நாம் அகற்ற முடியும். பேரின்பப் பெரு வாழ்வை எண்ணி எடுக்கின்ற உணர்வுகளால், நம்முடைய சொல், செயல் புனிதம் பெறும்.