துப்பாக்கியால் சுடப்பட்ட பின் “காந்திஜி சொன்ன உண்மைகள் என்ன…?”

Image

mahatma-gandhi

துப்பாக்கியால் சுடப்பட்ட பின் காந்திஜி சொன்ன உண்மைகள் என்ன…?

 

யாரையும் நாம் பகைமையாக்கக் கூடாது. பகைமை இல்லாதவர்களாக நாம் மாறுதல் வேண்டும் என்று காந்திஜி பேசினாலும் மதம் இனம் என்ற உணர்வு கொண்டவர்கள் அவரைத் தாக்கப்படும் போது என்ன செய்தார்…?

ஹரே ராம்… ஹரே ராம்… ஹரே ராம்…! என்று தான் அவர் கூறினார்.

அப்பொழுது தன்னைச் சுட்டவரை மற்றவர்கள் தாக்குவார்கள்…! தண்டனை கொடுப்பார்கள்…! என்று முன் அறிவிப்பாக இருந்து தன்னைச் சுட்டவுடன்…,
1.அறியாமல் செய்துவிட்டார்கள்…
2.அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்…!
3.(இதைப் போன்ற) அந்தத் தவறு செய்வோரின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று
4.எல்லோரிடமும் தெளிவாகக் கூறினார் காந்திஜி.

அவன் அறியாது செய்த அந்தச் செயல் மற்றோருக்கு அவன் செய்த செயலை நாம் எண்ணும் போது
1.அதே உணர்வுகள் நமக்குள் வந்து
2.நமக்குள்ளும் அந்தத் தவறு செய்யும் உணர்வுகளை வளர்க்கும் என்றார் காந்திஜி.

இத்தகைய செயலை மற்ற யாரும் செய்யக் கூடாது என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காகக் காந்திஜி அவனை (கோட்சேயை) அங்கே பகைமையாக்கவில்லை.

கோட்சே இவரைச் சுடும் போது “அவனைப் பகைவன்…!” என்று அவர் சொல்லவில்லை. பகைமையாக்கும் உணர்வில் இருந்து நாம் விடுபட வேண்டும். “சுதந்திரம் அடைய வேண்டும்” என்ற நிலையைத் தான் அன்று காந்திஜி சொன்னார்.

இதையெல்லாம் நாம் பின்பற்றினால் மனிதன் என்ற சுதந்திரத்தை அடைகின்றோம்.

1.அந்நியர் ஆட்சி என்று வந்தாலும்
2.அந்நியர் என்ற நிலைக்குப் பிரிக்காதபடி
3.ஒன்று சேர்த்து வாழும் போது சகோதரர்களாக வாழுகின்றோம்.
4.அவன் அடிமைப்படுத்திச் செயல்படும் நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்று அவர் சொல்லவில்லை.
5.நாம் நம்முடைய சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உணர்ச்சியைத்தான் ஊட்டினார்.
6.அவர்களைப் பகைவர்கள் என்று இவர் சொல்லவில்லை.

நாமெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். காந்திஜியின் வாழ்க்கையை நாம் ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்துதல் வேண்டும்.

இன்று ஒவ்வொரு குடும்பத்திலேயும் பார்த்தோம் என்றால்
1.மகன் தாய் தந்தையைக் கொன்று விடுவேன் என்று சொல்வதும்
2.நான் கேட்டதைக் கொடுக்கவில்லை என்றால் பழிக்கு பழியாக
3.உன்னைத் தீயை வைத்துக் கொளுத்தி விடுவேன் இல்லாவிட்டால் சுட்டுப் பொசுக்குவேன் என்ற நிலைகளில் செயல்படுகின்றார்கள்

அமெரிக்காவில் நடந்தது. இப்போது அது நம் நாட்டிலும் வந்துவிட்டது.

ஒன்றைப் பிடிக்கவில்லை என்றால் உடனே ஒரு இனமாக மாறிவிடுகின்றது. தன்னை வளர்த்த தாயையும் தந்தையும் கூட அழிக்கும்படி வந்து விடுகின்றது. தன்னுடன் கூடப் பிறந்த சகோதரனையும் கூட எதிரியாக்கி விடுகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

காந்திஜியை நினைவு கொள்தல் வேண்டும். அவர் சாதாரண மனிதன் தான். பட்டினியாக இருந்து நாமெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கடும் தவம் இருந்தார்,

எதற்காக…?

பிறிதொருவர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வந்து அது வீரியம் அடைந்து விடக்கூடாது. சமத்துவ நிலைகள் வர வேண்டும் என்று சாந்தத்தை உருவாக்கும் நிலைகள் கொண்டு பட்டினியாக இருந்தார். நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழக் கடும் தவம் இருந்தார்.

அனைவரும் பகைமையை மறந்து ஒன்றுபட்டு வாழ்வோம் என்ற நிலை வந்தால் தான் உண்ணாவிரதத்தைக் கை விடுவேன்… உணவை உட்கொள்வேன்…! என்று நமக்காகத் தவம் இருந்தார் காந்திஜி.
1.அவர் எப்படி அந்தத் தவத்தின் வலிமை கொண்டு இருந்தாரோ
2.அதைப் போல அவரின் ஆற்றலை நாமும் எடுப்போம்
3.ஒவ்வொரு குடும்பத்திலும் பகைமையே வராது நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம்.

தவறு செய்வோரின் உணர்வை நாம் நுகராது அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து பழகுவோம். மகரிஷிகளின் உணர்வை அவர்களுக்கும் பெறச் செய்வோம்.

மகரிஷிகளின் துணை கொண்டு தவறற்றவர்களாக நாம் எல்லோரையும் உருவாக்குவோம்.

“தாழ்ந்தவர்கள்…!” என்று மற்றவரை நாம் இழிவாக எண்ணினால் வரும் விளைவுகள்

Image

Thought power

“தாழ்ந்தவர்கள்…!” என்று மற்றவரை நாம் இழிவாக எண்ணினால் வரும் விளைவுகள்

 

“தாழ்ந்தவர்… உயர்ந்தவர்…!” என்று நாம் தான் வைத்துக்கொண்டமே தவிர தாழ்ந்தவர் என்றோ உயர்ந்தவர் என்றோ இயற்கைக்குக் கிடையாது.

தாழ்ந்ததை எண்ணும் போது தாழ்ந்ததைத் தான் உயிர் உருவாக்குகின்றது.
1.“தாழ்ந்தவர்கள்…!” என்று மற்றோரை நாம் எண்ணும் போது
2.அந்த உணர்வுகள் நம்மைத் தாழ்த்தப்பட்டவனாக ஆக்குகின்றது.
3.நம்மைத் தாழ்த்தப்படும் நிலையே வருகின்றது

எதன் வழியில்…?

நல்ல குணங்கள் இருப்பதால் தான் நாம் மனிதனாக உருவாகியுள்ளோம். ஆனால்
1.மற்றவர்களைப் பார்த்து அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று
2.அசுர உணர்வுகள் கொண்டு நாம் எண்ணுவோமென்றால்
3.அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தாழ்த்தி விடுகின்றது.
4.நம்மைத் தாழ்த்தப்பட்டவனாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாகக் கூறினார் காந்திஜி.

ஒருவரைத் தாழ்த்தப்பட்டவர் என்று எண்ணப்படும்போது அந்தத் தாழ்த்தப்பட்ட உணர்வே நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் சுதந்திரமாக வாழ விடாதபடி நல்ல குணங்களை என் உடலிலே இயக்காதபடி இந்த மனித உடலை உருவாக்கிய உயிரையே தாழ்த்தப்படும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.

உயிரினங்களில் ஒன்றை ஒன்று தாக்கித் தன் உணர்வை வளர்த்துக் கொள்ளும் நிலை பெற்ற
1.அந்தத் தாழ்த்தப்பட்ட உணர்வுகள் நமக்குள் வரப்படும் போது
2.மனிதன் என்ற நல்ல நிலை இல்லாதபடி
3.நம் எண்ணமே நம்மைத் தாழ்த்தப்பட்ட உயிரினமாக மாற்றுகின்றது

ஆகவே தாழ்த்தப்பட்டவர் யார்…? அப்படிப்பட்டவர் எவர் இருக்கின்றார்கள்…? தாழ்த்தப்பட்டவராக நம்மை யார் உருவாக்குகின்றார்…?

நம்முடைய எண்ணம் தான்…! நாம் எண்ணியது எதுவோ நமது உயிர் அதை அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றிவிடுகின்றது.

எல்லோரையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் மனித உடல் பெற்ற பின் இத்தகைய பகைமை உணர்வு வந்த பின் நமக்குள் என்ன செய்கின்றது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

பகைமை உள்ளவன் என்று நாம் எண்ணினால் அந்தப் பகைமை உணர்வே நமக்குள் வருகின்றது. “ஒரு தாழ்த்தப்பட்டவன்…” என்னை இப்படிப் பேசிவிட்டான் என்ற அந்த வெறி உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

என்னைத் தாழ்ந்தவன் என்று பேசக்கூடிய நிலைகள் வந்து விட்டதா…? என்று அந்த உடலுக்குள் வெறி உணர்வைத் தூற்றும் உணர்வு போகும் போது
1.இதைத்தான் அவர்களும் வளர்க்க முடிகின்றது.
2.அதைத்தான் நாமும் வளர்க்க முடிகின்றது.

மனிதனாக வாழ்கின்றோம் என்ற நிலைகளில் நாம் சுதந்திரமாக வாழ முடிகின்றதா…? இல்லை…!

நாம் எல்லோரும் அரவணைப்புடன் வாழ்ந்தால் நமக்குப் பரிபூரண சுதந்திரம் கிடைக்கின்றது என்று தான் காந்திஜி சொன்னார்.

ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள கடும் நோயாளிகளையும் காந்திஜி சந்தித்தார். கைகள் உடல் எல்லாம் அழுகி அது அருவருப்பாக இருந்தாலும் அங்கே சென்றார்.

அவர்களைப் பார்த்துக் காந்திஜி இரக்கப்படவில்லை. இரக்கமும் ஈகையும் அங்கு கொண்டு வரவில்லை.
1.மாறாக அவர்கள் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ணினார்.
2.அவர்கள் உயர வேண்டும் என்ற உணர்வைத் தான் தனக்குள் வளர்த்துக்கொண்டார்.
3.அந்த நோயைப் பற்றி எண்ணவில்லை.

ஆரோக்கியமான உடலாக அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளிலே உயிரிலே எண்ணப்படும் போது அது கடவுளாக இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் சுகமாக வேண்டும் என்று தான் காந்திஜி எண்ணினார்.

“அன்னை தெரஸா” என்பவரும் இதைப்போலத் தான் ஏழ்மைகளில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். இனங்கள் இல்லை. பேதங்கள் இல்லை என்று காந்திஜியின் வழியில் செயல்பட்டார்,

இனம் என்று இருப்பது நமக்குள் நோயின் தன்மை வரப்போகும் போது நமது நல்ல குணங்களைத் தாக்குகின்றது.

இத்தகைய நாம் இனங்களைப் பிரித்து குறை கூறும் போது அந்தக் குறையின் உணர்வு நமக்குள் வரும் போது நல்ல குணங்களைத் தாக்குகின்றது.

நாம் பார்க்கும் அனைவரையும் மதித்துப் பழக வேண்டும். உயிரைக் கடவுள் என்றும் அந்த ஈசன் வீற்றிருக்கும் உடலை ஆலயம் என்று நாம் மதித்துப் பழக வேண்டும்.

இது தான் ஞானிகள் சொன்னது. அந்த ஞானிகள் சொன்ன வழியைப் பின்பற்றி ஒவ்வொருவரும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று நாம் தியானிப்போம் தவமிருப்போம்.

மாடு மேய்ப்பவன் மூலம் பதஞ்சலி அறிந்து கொண்ட பேருண்மைகள்

 

thirumoolars

மாடு மேய்ப்பவன் மூலம் பதஞ்சலி அறிந்து கொண்ட பேருண்மைகள்

பதஞ்சலி முனிவர் தனக்குள் அந்த விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் காட்டிய இந்த முறைகளை மாற்றி கூடு விட்டுக் கூடு பாயும் நிலைகளைச் செய்தவர்

அதாவது விஷத்தின் தன்மை தனக்குள் செருகேற்றி பாம்பின் உடலுக்குள் புகுந்த பின் பாம்பின் உடலிலுள்ள நஞ்சை இன்னோர் உடலுக்குள் பாய்ச்சி அந்த உடலின் வலிமையை இழக்கச் செய்து அந்த உடலுக்குள் புகுந்து அந்த உடலை ஆட்கொண்டு தன் செயலாக்கங்களுக்குப் பயன்படுத்தும் முறைகள் தான் அது.

அந்த அரசனுக்குத் தான் முனிவர் என்று பெயர் வைத்துப் பதஞ்சலி முனிவர் என்றார்கள்.

மந்திர ஒலியைத் தன் மக்களுக்குள் பதியச் செய்து தன் மதத்தின் கீழ் மடிந்த மக்களின் உணர்வைத் தனக்குள் கவர்ந்து… கவர்ந்து… மிக சக்தி வாய்ந்தவர்களாக மாறுவார்கள்.

யாரைக் கண் கொண்டு பார்த்தாலும் தன் ஆற்றலைப் பாய்ச்சி அவர்களை அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்களைத் தான் முனிவர் என்று சொல்வார்கள்.

1.இன்றும் அந்த மந்திர ஒலிகள் பெற்று இறந்தவர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றால்
2.புகுந்த உடலிலுள்ளோர் ஒரு மனிதனை அறியாது கண் கொண்டு பார்த்தாலும்
3.அந்த மனிதனுடைய உடல் கருகும்.
4.இரும்பைக் காட்டினால் உருகும். ஆனால் அவனுக்கே தெரியாது.

இதை நேரடியாக நான் (ஞானகுரு) கண்டுணர்வதற்காக ஒரு சமயம் பம்பாய் நகருக்கு அருகில் ஒரு குக்கிராமத்திற்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

அங்கே உள்ள ஒரு பையனுக்கு அது ஒன்றும் தெரியாது. அவன் உடலுக்குள் புகுந்த அந்த ஆவியால்
1.யாரையாவது அவன் பார்த்தான் என்றால் அல்லது நினைத்தான் என்றால்
2.அந்த உடலில் ஓட்டையே போட்டு விடும்.
3.ஒரு இரும்பைப் பார்க்கிறான் என்றால் கரைந்து அப்படியே தொங்கும்.
4.அந்த அளவிற்கு வெப்பக் கனல் அவன் உடலிலிருந்து வருகிறது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் மந்திர ஒலிளைப் பாய்ச்சி ஒரு மனிதனின் உடலில் உருவாக்கப்பட்ட உணர்வின் துணை கொண்டு பல மாயாஜாலங்களைச் செய்து காட்டிவிட்டு ஆண்டவனையே நான் கைவல்யப்படுத்துகிறேன் என்று சொல்கிறார்கள்.

அதனின் உண்மை நிலைகளையும் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். மாயாஜாலத்தில் என்னை அங்கே அழைத்துக் கொண்டு போய்க் காட்டினார்.
1.குருநாதர் என்னைக் கட்டி அரவணைத்தார்
2.அவருடன் சேர்ந்தபின் என்னையும் ஆவியாக மாற்றுகிறார்.
3.கண நேரத்தில் அங்கே (பம்பாய்) செல்லும் போது அந்தப் பையனின் நிலையைக் காட்டுகின்றார்.

இது நடந்த நிகழ்ச்சி. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்…!

இதைப் போன்று தான் அன்று பதஞ்சலி முனிவர் (அந்த அரசன்) அதர்வண வேதத்தைத் தனக்குள் கடைப்பிடித்து அதிலே வளர்ச்சி பெற்றவன்

மாற்று அரசர்கள் போர் முனைக்கு வரும் போது அவர்களிடமிருந்து எப்படித் தப்ப வேண்டும்…? எப்படித் தாக்க வேண்டும்…? என்று இதைப் பரிட்சாந்தரமாகச் செய்து பார்ப்பதற்காகத் தான் கற்றுணர்ந்த உணர்வினை தன் சேனாதிபதியிடம் சொல்கிறான்.

நான் பாம்பின் ரூபமாக மாறுகின்றேன், இந்த உடலை விட்டு நான் வெளியேறிய பின் என்னுடைய மனித உடலை நீ பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக வைத்திரு…! என்று சொல்கிறான்.

“சரி” என்று சொன்னான் அந்தச் சேனாதிபதி.

போர் முரசு கொட்டி வரும் மாற்று அரசனிடமிருந்து எப்படி நாம் தப்பிக்க வேண்டும் என்று பதஞ்சலி பரீட்சாந்திரமாகப் பார்ப்பதற்காகப் பாம்பின் உடலில் சென்ற பின் அந்தச் சேனாதிபதி என்ன செய்கின்றான்…!

இது தான் நமக்கு உகந்த தருணம் என்ற நிலைகளில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த பதஞ்சலி முனிவரின் உடலைச் சிதைத்து எரித்து விட்டான்.

எதிரி அரசனிடம் சரணடைந்து இந்த சாம்ராஜ்யத்தை எனக்குக் கொடுத்தால் போதும் என்று அந்தச் சேனாதிபதி சொன்னான்.

அவன் ஆட்சி புரிவதற்காக வேண்டி இவனை வீழ்த்தினான் அந்தச் சேனாதிபதி. அவன் உணர்வின் சூழ்ச்சியில் சிக்கிய பதஞ்சலியோ காடு மேடெல்லாம் பாம்பாக ஊர்ந்து செல்கின்றான்.

எந்தப் பகுதியில் அந்தக் காடு மேடுகளில் பதஞ்சலி முனிவர் அலைந்தார் என்று அறிந்து கொள்ள வெறும் வேஷ்டி துண்டுடன் ஒரு கிராமத்துக்காரன் போல் சிதம்பரம் பகுதிக்குச் சென்று அவர் போன பாதைகளை எல்லாம் போய்ப் பார்த்து வந்தேன்.

அன்று நடந்த நிகழ்ச்சிகள்… அந்த உணர்வலைகள்… அது எப்படிப் பூமியில் படர்ந்துள்ளது. அதைச் சூரியனின் காந்த சக்தியை எவ்வாறு கவர்ந்துள்ளது…? என்ற நிலையை உணர்த்துகின்றார் குருநாதர்.

(இன்று இருக்கும்) சிதம்பரம் கோவிலுக்கு முன் தெப்பக்குளம் ஒன்று உண்டு. அந்த இடத்தில் விநாயகர் கோவில் ஒன்று உண்டு. அங்கே அக்காலத்தில் ஒரு பாம்புப் புற்று உண்டு.

அந்தப் புற்றுக்குள் தான் பதஞ்சலி நுழைந்து சுழன்று வந்தார். தான் செய்து கொண்ட உணர்வின் தன்மையால் அங்கே சிந்திக்கும் திறன் இல்லை.

ஆனாலும் தன் செயல்களைச் செயல்படுத்த அதற்குகந்த உடலைத் தேர்ந்தெடுப்பதற்காக வேண்டி ஊர்ந்து சென்று காடு மேடு சுற்றினார்.

அப்பொழுதுதான் சூதுவாதற்ற ஒரு மாடு மேய்ப்பவனின் அருகில் சென்று இவனைத் தீண்டி இந்த விஷத் தன்மையை அந்த உடலுக்குள் பாய்ச்சி அந்த விஷத்தின் துணை கொண்டு அவன் உடலுக்குள் சென்று அவன் உணர்வை அடக்கி அந்த உடலைச் செயல்படுத்தத் தொடங்கினான் பதஞ்சலி.

சாயங்காலம் மாடுகளுடன் சேர்ந்து அந்த உடலின் (மாடு மேய்ப்பவன்) வீட்டுக்குச் செல்லுகின்றான்.

அப்போது அவனின் மனைவி கணவன் காட்டில் மாட்டை மேய்த்து விட்டு வந்திருக்கின்றான் என்று சொல்லிப் பல பணிவிடைகள் செய்கிறாள்.

அவனுக்குத் தண்ணீர் கொடுப்பதும்… தண்னீரை மேலே ஊற்றிக் குளிப்பாட்டுவதும்…! இப்படி தொடரப்படும் போது இவனுக்குக் “கூச்சம்” வருகிறது.

ஏனென்றால் மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் புகுந்த நிலைகளில் அந்த உணர்வுகளைப் பார்க்கப்படும் போது விலகி விலகிச் செல்லுகின்றான்.

அப்போது தன் மனைவி சந்தேகிக்கும் நிலைகள் வருகிறது. ஏனென்றால் தன் கணவனை வரவேற்பதும் அவனை மகிழச் செய்வதும் ஒரு மனைவியின் கடமை என்று அவள் அவ்வாறு செய்கிறாள்.

அப்பொழுது தான் பதஞ்சலி சிந்திக்கத் தொடங்குகின்றான்…!

அரசனாக இருக்கும் போது மாற்று அரசனின் மகளைத் திருமணம் செய்து கொண்டேன்.
1.ஆனாலும் அந்த அரசிக்கு நான் அஞ்சியே வாழ வேண்டியிருந்தது
2.தான் இட்ட சட்டத்தின்படி மக்களுக்கு அஞ்சியே நான் வாழ வேண்டியிருந்தது
3.நாட்டைக் காத்திடும் தன் சேனாதிபதிக்கு அஞ்சி வாழ வேண்டியிருந்தது. (ஏனென்றால்) அவனுக்குக் கொடுத்த அதிகாரத்தின் துணை கொண்டு தன்னைத் தாக்கிடாது அவன் என்ன செய்கிறான் என்று அதற்கு உளவாளிகளை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

இத்தனை நிலைகளுக்கும் மத்தியில் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து எவ்வளவு பெரிய சக்தியைக் கற்றுணர்ந்திருந்தாலும் இந்த நாட்டைக் காக்கும் காவலாளியான சேனாதிபதியே “தன்னை வீழ்த்தி விட்டானே…!” என்று சிந்திக்கின்றான் பதஞ்சலி.

ஆனால் ஒரு சாதாரண மாடு மேய்ப்பவனுடைய வீட்டில் அவனுக்கு அவன் மனைவி செய்யும் சேவைகளைக் கண்ட பின் உண்மையின் உணர்வினை அறியத் தொடங்குகின்றான்.

தான் அரசனாக இருக்கும் போது கற்றுணர்ந்த ஞானிகளால் காட்டப்பட்ட வேதங்கள் ரிக் வேதம் சாம வேதம் அதர்வண வேதம் யஜுர் வேதம் என்ற நான்கு மறைகளின் பேருண்மையை அப்பொழுது உணரத் தொடங்குகின்றான்.

(திருமூலரின் உண்மை நிலைகளை அறிவதற்காக “அன்றைய காலத்திற்கே…” குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்)

அவனின் உணர்வின் நினைவாற்றலில் எதை எதை இந்த உலகம் எவ்வாறு பெறுகிறது என்ற நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் வருகின்றது.

“தில்லை” – பூமி ஒரு எல்லையாக நின்று வான் வெளியில் சுழன்று கொண்டு நிற்காமல் தன் சுழற்சியின் வேகத்தால் ஈர்ப்பதும் சுழற்சியால் தனக்குள் வெப்பமாவதும் தான் கவர்ந்து கொண்ட உணர்வுகள் விளைவதும் எப்படி…? என்ற பேருண்மைகளை அறிகின்றான்.

அதற்குத் “தில்லை நடராஜா…!’ என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றான். இந்தப் பூமி நின்று விட்டால் நாம் என்ன கதியாவோம்,,,? என்று இந்த உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் போது தான் “திருமூலர்” என்ற பெயர் அவருக்கு வருகிறது.

பூமியின் செயலாக்கத்திருந்து உரு பெறும் உணர்வின் அணுக்களின் செயல்கள் விண்ணுலக ஆற்றலால் எவ்வாறு பெற்றது என்றும் அங்கே வெளிப்படுத்துகின்றான்.

உலகம் உருவாவதற்கு முன் பேரண்டத்தில் இலகுவான வெப்பத்தின் தன்மை தான் ஆதியிலே மூலமாக இருக்கிறது.

அந்த வெப்பத்தில் ஆவியாக உரு பெற்று அமைதி கொண்ட ஆவியாக அது வளர்ச்சி பெறப்படும் போது நாளாக ஆக அதனின் தன்மை விஷத் தன்மையாக மாறுகிறது.

அந்த விஷத்தன்மை அடைந்த பின் புதிதாக உருவாகும் ஆவியின் தன்மையைத் தாக்கி வெப்பமாக மாற்றுகிறது. வெப்பமாக மாற்றிய பின் அணுவாக மாறுகிறது.

1.விஷத்தின் தாக்குதலை ஆதிசக்தி என்றும்
2.தாக்குதலால் உருவாகும் வெப்பத்தைப் ஆதிபராசக்தி – எல்லாவற்றையும் உருவாக்கும் நிலை என்றும்
3.வெப்பத்தின் தன்மை கூடும் போது ஈர்க்கும் காந்தம் உருவாவதை ஆதிலட்சுமி என்றும்
4.ஆதிபராசக்தி என்றும் ஆதிசக்தி என்றும் ஓர் அணுவின் தன்மையை
5.அந்த இயக்கத் தொடரை திருமூலர் உணர்த்துகின்றார்.
(ஆதியிலே உருவான நிலை எப்படி என்பதைத்தான் அவர் வெளிப்படுத்தினர் – தில்லை இரகசியம் என்பது)

இவ்வழியில் அணுக்களின் சேர்க்கையால் இந்த பூமி உருவானது உணர்வுக்குத்தக்க அணுக்கள் மாற்றமானது என்ற பேருண்மையைப் பாடுகிறார்.

1.பற்பல உணர்வுகள் மோதுண்டு மோதுண்டு
2.அதில் அணுக்களின் தன்மை பெருகப் பெருக
3.அணுக்கள் ஒவ்வொன்றும் தனக்குள் கவர்ந்த உணர்வுகள் மாற மாற
4.ஒன்றைக் கண்டு மற்றொன்று அஞ்சி ஓடுவதும் மற்றொன்றோடு மோதுவதும்
5.மோதலில் ஏற்படும் இணைந்து வெப்பமாவதும் இரண்டு சத்தும் இரண்டறக் கலப்பதும்
6.அணுக்களின் வளர்ச்சியும் அணுக்களில் மாற்றம் எவ்வாறு உருவாகிறது என்ற நிலைகள் அங்கே உணர்த்துகின்றான்.

அதிலே தோன்றிய அந்த அணுக்களின் தன்மை தான் ஆவியாகி மேகமான பின் மேகத்துக்குள் இந்த அணுக்களுக்குள் போர் முறை ஆகப்படும் போது தான் நீராக மாறுகின்றது. நெருப்பிலிருந்து தான் “நீர் தோன்றியது…!” என்று உணர்த்துகின்றார் திருமூலர்.

அந்த நீருக்குள் அணுக்கள் சிக்கி எடை கூடிய நிலையில் ஓடும் போது அதனுடைய உராய்வில் மீண்டும் இந்த நீர் ஆவியாக மாறி இணைந்து கொண்ட உணர்வுகள் ஒன்றாகச் சேர்த்து ஒரு பரமாகிறது. “பரம்பொருள்” ஆனதென்று உணர்த்தினார் திருமூலர்.

ஒரு அமைதி கொண்ட மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்தபின் தான் கற்றுணர்ந்த அனுபவத்தை அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்து பேருண்மைகளை வெளிப்படுத்துகின்றான்.

மனித வாழ்க்கையில் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அகஸ்தியன் துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமான நிலையும் அதன் வழியில் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையையும் திருமூலர் வெளிப்படுத்திக் காட்டுகின்றார்.

அவர் வெளிப்படுத்தியதை மாற்றித் விட்டு திருமூல மந்திரம் என்று இவர்களுக்கு உகந்த நிலைகள் கொண்டு “மந்திர ஒலியிலே…” சாடி விட்டார்கள்.

அந்தத் திருமூலரின் சமாதியைத் தான் தில்லையம்பதியில் சிதம்பர ரகசியம் என்று இன்றும் காட்டிக் கொண்டு பொருள் தேடுகிறார்கள். பணத்திற்காகத் தில்லை ரகசியம் என்று காட்டுகிறார்கள்.

சுதந்திரம் என்பது எது…? நல்ல குணங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

Image

Seetha Kalyanam

சுதந்திரம் என்பது எது…? நல்ல குணங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

 

நாடு சுதந்திரம் அடைந்து ஐம்பது வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

எதற்காகப் போராடிப் போராடிச் சுதந்திரம் பெற வேண்டும் என்று எண்ணினோமோ நாம் எண்ணிய சுதந்திரம் யாருக்குமே கிடைக்கவில்லை.

1.இன்று கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் சரி…
2.அரசி்யலில் முன்னணியில் இருந்தாலும் சரி…
3.அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களாக இருந்தாலும் சரி…
4.நிம்மதியாக இருப்பவர்கள் யாரும் இல்லை…!

உலகம் முழுவதற்கும் அரசியலில் வாழ்க்கை நடத்துவோர் அனைவரும் அவர்கள் நிம்மதியற்ற வாழ்க்கை தான் வாழ்கின்றார்கள். அவருக்குச் சுதந்திரம் என்ற நிலைகள் இல்லை.

வெளியே வர வேண்டும் என்றால் அவர்களும் அஞ்சுகின்றார்கள். அவர்களுக்கு என்று தனிப் பாதுகாப்புடன் தான் வருகின்றார்கள்.

அதே போல் இன்று நாமும் வெளியே செல்ல வேண்டும் என்றால் பஸ்ஸில் சென்றாலும் சரி… ட்ரெயினில் சென்றாலும் சரி… அல்லது ரோட்டில் நடந்து சென்றாலும் கூடச் சரி… நமக்கும் அந்தச் சுதந்திரம் இல்லை.

எவன் பறிப்பானோ…! எவன் அழிப்பானோ…! நம்மை எவன் கொல்வானோ என்ற உணர்வுகள் தான் அது வருகின்றது. சுதந்திரம் என்ற நிலையில் யாருக்கும் வரவில்லை.
1.அரசியலிலும் செல்வத்திலும் அவர்கள் ஓங்கி வளர்ந்திருந்தாலும்
2.இந்த உடலில் சுதந்திரமான வாழ்க்கை இல்லை.
3.ஆனால் சுதந்திர வாழ்க்கை வர வேண்டும் என்றால்
4.”காந்திஜியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்”

எத்தகைய தீமையும் அவர் தனக்குள் புகாது “அனைவரும் சகோதரர்களே…!” என்ற உணர்வைத் தன் உடலுக்குள் ஊட்டிக் கொண்டார். அதையே சகோதரத்தத்துவமாக அவருக்குள் வளர்த்துக் கொண்டார்.

இந்தியாவில் மதக் கலவரங்களும் இனக் கலவரங்களும் ஏற்பட்டு மக்கள் மடிவதை
1.அசுர சக்திகள் மக்களை மாய்க்கின்றது என்று கூட அவர் எண்ணவில்லை
2.”அசுர சக்தி…” என்றே அவர் எண்ணத்திற்குள் வரவில்லை
3.அனைவரும் ஒன்றென்ற நிலைகளை அவர் அறிந்துணர்ந்தார்
4.அதைப் போன்ற சாந்த நிலைகளே நம்மை வாழ வைக்கும் என்றார்
5.அப்போது தான் இந்த உடலுக்குள் (நமக்கு) சுதந்திரம் கிடைக்கின்றது என்று தெளிவாக உணர்ந்து கொண்டார்.

இன்று எடுத்துக் கொண்டால் மனிதன் அழகாக இருப்பான். செல்வமும் இருக்கும். செருக்கும் இருக்கும். ஆனால் அவனுக்குச் சுதந்திரம் இல்லை.

அம்மம்மா…! நான் எல்லோரையும் போல சாப்பிட முடியவில்லையே… படுக்க முடியவில்லையே… தூங்க முடியவில்லை…! என்று
1.தூக்கமின்மையால் அவனுக்குச் சுதந்திரமாகத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை.
2.செல்வம் இருக்கின்றது… சுதந்திர வாழ்க்கை வாழ முடியவில்லை.
3.ஆகவே சுதந்திரம் எது…?

ஒரு நண்பன் “நல்ல உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…” என்று எண்ணத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவர்கள் வளர வளர அந்த வளர்ச்சி மிகவும் உயர்ந்ததாக நமக்குள்ளும் வளரும்.

அதே சமயத்தில் “எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கின்றானே பாவி…!” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நமது அந்த நல்ல மனம் சுதந்திரத்தை இழந்து விடுகின்றது.

அதே சமயம் அந்தப் பகைமை உணர்வை நமக்குள் வளர்க்க வளர்க்க நம் உடலுக்குள்ளே எதிரியாக வந்து அது நல்ல செயல்களை அழித்துக் கொண்டேயுள்ளது. அப்போது நாம் சுதந்திரமாக வாழும் தன்மை இல்லை.

நல்ல குணங்களைச் சுதந்திரமாக இயங்கச் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

தன் அருகிலே இருக்கக்கூடியவர்கள்… தன் சார்புடையவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். நாம் பார்க்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த அரவணைப்பு இருக்க வேண்டும்.

அதற்குப் பெயர் தான் “கல்யாணராமா”

அதாவது நம்முடைய எண்ணங்கள் ஒன்று சேர்த்து வாழப்படும் போது தான் நமக்குள் மகிழ்ச்சியான எண்ணங்கள் மலர்கின்றது. அப்பொழுது கல்யாணராமன் ஆகின்றோம்.

கல்யாணராமன் என்றால் எப்படித் திருமணமானால் நாம் மகிழ்ச்சி பெறுகின்றோமோ இதைப்போல எண்ணங்கள் ஒன்று சேர்த்திடும் போது நமக்குள் அந்த மகிழ்ச்சி பொங்குகின்றது.
1.பகைமை அற்ற நிலையாக இருக்கின்றது.
2.மகிழ்ச்சியின் நிலைகள் நமக்குள் அந்த ஆனந்தத்தை நமக்குள் ஊட்டுகின்றது.
3.இதைக் காந்திஜி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். அவர் மடியவில்லை. அவர் உடல் தான் மடிந்தது.

அவருக்குள் விளைய வைத்த அரும் பெரும் சக்தி உலகில் பரவி உள்ளது. அவருடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் உறவாடிய உணர்வுகள் கொண்ட அந்த மக்கள் மத்தியிலும் பதிவாகி உள்ளது.

அவர் உடலில் விளைய வைத்த அந்த உயர்ந்த ஞான வித்தை நாம் வளர்த்துக் கொண்டால் அது நமக்குள் பெரும் சக்தியாக மாறும்.

நாம் சுதந்திரமாக வாழ முடியும்…!

மதங்களைப் பற்றிய தெளிவான விளக்கம்

Image

religion

மதங்களைப் பற்றிய தெளிவான விளக்கம்

 

மதத்தின் அடிப்படையில் எல்லோரும் வளர்ந்து வந்தாலும் மதங்களுக்குள் “தான்… எனது…!”என்ற நிலைகள் வரும் பொழுது அதற்குள் பல இனங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது.

எந்த ஞானியும் மதத்தை உருவாக்கவும் இல்லை… உருவாக்கச் சொல்லவும் இல்லை…! மதங்கள் அனைத்துமே அன்று ஆண்ட அரசர் காலங்களில் உருவானது தான்.

அரசர்கள் உருவாக்கிய மதமும் இனமும் குறுகிய வட்டத்திற்குள் தான் வளரும்.

ஒரு மதம் மற்றொரு மதத்தை நேர்முகமாகப் பார்க்கப்படும் போது ஒன்றுக்கொன்று போர் செய்து அதனால்
1.இரு மதங்களும் மன நிம்மதி இழக்கின்றது.
2.இரு மதத்தவர்களும் மகிழ்ச்சி பெறுவது இல்லை.

ஏனென்றால் மதத்தை உருவாக்கியது மனிதன் தான். கடவுள் அல்ல.

மதத்தை உருவாக்கியது மனிதன் என்றாலும் நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை அனைத்தையும்
1.நமது உயிர் “ஓ…” என்று இயக்கி
2.”ம்…” என்று உடலுக்குள் உருவாக்கப்படும் போது
3.உள் நின்று அது கடவுளாக உருபெறச் செய்கின்றது.

மாற்று மதத்தை நாம் குறை கூறிப் பேசுவோம் என்றால் அந்த உணர்வுகளை உயிர் நமக்குள் அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

நம் உடலுடன் அதைச் சேர்க்கப்படும் போது
1.உள் நின்று கடவுளாக அவனை “எதிரி” என்றே தாக்கச் செய்கின்றது.
2.அவனை வீழ்த்தினால்… தன்னைக் காக்க முடியும்…! என்று
3.இப்படித்தான் எண்ணச் செய்கின்றது.

மனிதர்களான நாம் நமது மதத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து “பிற மதங்கள் தீமையானவை…!” என்று நமது எண்ணங்களை நினைவலைகளை இந்தக் காற்று மண்டலத்தில் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்.

இதை நிறுத்திப் பழக வேண்டும்.

1.உலக மக்கள் அனைவரும் ஓரினம்
2.நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்
3.நாம் உயிரான ஈசனின் இயக்கத்தால் இயங்குகின்றோம் என்பதை உணர்தல் வேண்டும்.

ஆகவே நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் மதத்தின் பெயராலோ குலத்தின் பெயராலோ வெறுப்பையோ குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.

உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒன்றிணைந்து வாழ வேண்டும். எல்லோரும் மகிழ்ந்த நிலை பெறவேண்டும்.

எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை நமக்குள் வலுக் கொண்டதாக இணைக்க வேண்டும்.
1.அது நமக்குள் உருவான அனைத்துப் பேதங்களையும் அகற்றச் செய்யும்.
2.மற்றவர் மேல் உள்ள பகைமைகளை மறக்கச் செய்யும்.
3.மகிழ்ந்து வாழச் செய்யும்.

சுவாசிக்கும் காற்று நம் உடலுக்குள் அணுக்களாக எப்படி உருவாகின்றது…?

Body cells formation

சுவாசிக்கும் காற்று நம் உடலுக்குள் அணுக்களாக எப்படி உருவாகின்றது…?

உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்றால் அந்த அவதிப்படும் வேதனையின் உணர்வலைகள் அவன் உடலிலிருந்து வெளிப்படுகிறது.

அப்படி வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

அதே சமயத்தில் அவர் அவதிப்படுகின்றார் என்பதை நாம் உற்றுப் பார்க்கப்படும் பொழுது நம் கண்களில் உள்ள கரு விழி அவரின் ரூபத்தை நம் எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாக்கி விடுகின்றது.

ஊழ்வினை என்பது வித்து,

பதிவாக்கிய பின் கண்ணின் காந்தப் புலனறிவோ எந்த மனிதன் உடலிலிருந்து வேதனைப்பட்ட உணர்வுகள் வந்ததோ சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும் அந்த வேதனைப்பட்ட உணர்வலைகளைக் கவர்கின்றது.

கவர்ந்த பின் ஆன்மாவாக மாறி நம் சுவாசத்திற்குள் வந்து உயிரில் பட்டு உணர்ச்சிகளாகி வாயிலே உமிழ் நீராக மாறி உடலுக்குள் நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலக்கின்றது.

ஆகாரத்துடன் கலந்த வேதனையான உணர்வுகள் இரத்தமாக மாறி இரத்தநாளங்களில் இணையும் பொழுது அந்த வேதனையை அணுவை உருவாக்கும் கருவாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

அதாவது அந்த வேதனைப்பட்ட உணர்வை நாம் நுகரப்படும் பொழுது நம் உயிரிலே பட்டபின் “ஓ…”என்று அந்த உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றது.

அப்பொழுது அந்த உணர்வலைகள் நம் உடல் முழுவதற்கும் படருகின்றது. நம் உடலில் சுழன்று வருகின்றது. உடலுக்குள் “ம்…” என்று ஐக்கியமாகி விடுகின்றது

நம் உயிரிலே பட்டபின் இரத்த நாளங்களில் அது கலந்து விடுகின்றது.

இரத்த நாளங்களில் கலந்த பின் அவர் வேதனைப்படும் உணர்வைத் திரும்பத் திரும்ப எண்ணினோம் என்றால் அது கருவாக உருவாகி விடுகின்றது.

நாம் இப்பொழுது ரோட்டில் நடந்து போகின்றோம். எல்லாவற்றையும் கூர்ந்து பார்ப்பதில்லை. ஆனால் சாதாரணமாகப் பார்க்கும் பொழுது சிறிது நேரம் போனது என்றால் நாம் பார்த்ததை மறந்து விடுகின்றோம்.

ஆகவே சாதாரணமாக அப்படிப் பார்க்கும் நிலைகள் எல்லாமே நம் உடலுக்குள் வந்து இரத்த நாளங்களில் கருத்தன்மை அடைவதில்லை.

நாம் பற்றுடன் ஒரு வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை ஊழ் வினை என்ற வித்தாகி விடுகின்றது.

ஒரு நண்பனோ அல்லது சொந்தமோ அல்லது பந்தமோ அந்தப் பாச உணர்வுகளால் நுகர்ந்து விட்டால் அந்த உணர்வுகள் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அது கருவாக உருவாகின்றது.

உதாரணமாக ஒரு கோழி “கருவுற்றால்…”
1.அது எந்தெந்தச் சேவலுடன் இணைந்ததோ
2.அந்தச் சேவலை எண்ணி அது “கேரும்…!”

நாட்டுக் கோழி எல்லாம் எடுத்துக் கொண்டால் எந்தெந்தச் சேவலுடன் இணைந்திருந்ததோ அதிலே கருவுற்ற குஞ்சுகளைப் பார்த்தோம் என்றால் குஞ்சுகளில் நிறங்கள் வித்தியாசமாகவே இருக்கும்.

அப்போது இந்த உணர்வின் கேருதல் (பல சேவல்களை எண்ணுவதால்) அந்தந்த உணர்வின் கருவை முழுமையாக்குகின்றது. அதனால் பல நிறத்தில் குஞ்சுகள் உருவாகின்றது. இதைப் போலத்தான்
1.வேதனைப்படுவோரை நாம் திரும்ப திரும்ப எண்ணினோம் என்றால்
2.அது கேருதலுக்குண்டான உணர்வின் நிலை தான்,

வேதனைப்பட்டோரைத் திரும்ப திரும்ப எண்ணும் பொழுது அது நமக்குள் கருவாகின்றது.
சில நாட்களில்… அந்த வேதனைப்பட்டோரின் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் சத்தை
1.அக்குணத்தை அம்மணத்தை நாம் நுகர்ந்தோம் என்றால்
2.அந்த உணர்வின் சத்தாக நமக்குள் இயக்கும்.

இப்படி நம் உடலில் இரண்டற இணைந்து கொண்டால் அதன் ஞானமாக அந்த அணு இயங்க தொடங்கி விடுகின்றது. அதற்குப் பின் நம்மால் சிறிய விஷயமாக இருந்தாலும் வேதனைப்படாமல் இருக்க முடியாது.

ஏனென்றால் வேதனையால் கருவாகி உருவான அணுக்களுக்கு வேதனைப்படும் உணர்வுகளே ஆகாரமாகச் செல்கின்றது. அது வளர்ந்தால் கடைசியில் நோயாகி வேதனைப்பட்டு வாழும் உயிரினங்களாக நம்மை மாற்றிவிடும் நம் உயிர்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகளே உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகி அதனின் பெருக்கமாகி நம் உடலுக்குள் அதனதன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.வானை உற்று நோக்கிப் பார்த்து
2.மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசித்தால்
3.அதற்குத்தக்க அந்த ஒளியான அணுக்கள் உடலுக்குள் பெருகும்.
4.அது பெருகப் பெருக நம்மை அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலே அழைத்துச் செல்லும்.
5.மகரிஷிகளுடன் ஒன்றி வாழச் செய்யும்…!

மன அழுத்தத்தை (TENSION) அகற்றும் வழி

Image

lord-shiva-tandav

மன அழுத்தத்தை (TENSION) அகற்றும் வழி

 

ஒருவர் மேலே வெறுப்பாக இருக்கிறோம் என்று சொன்னால் அந்தக் குணத்திற்குத் தக்கவாறு தான் நம் ஞானம் பேசும்.
1.அவர்களைக் குறை சொல்லுவோம்…!
2.நாம் குறை செய்திருந்தாலும் “குறை செய்யவில்லை…!” என்று தான் சொல்வோம்.
3.அதை ஏற்றுக் கொள்ள மனது வராது.
4.குறை இருந்தாலும் அவர்கள் “அப்படிச் சொன்னதால் தான்” இப்படிச் செய்தேன் என்று
5.இந்த உணர்வைத் தான் வலுக் கூட்டிக் கொண்டு வரும்.
6.வேற்றுமை உண்டானதை மாற்றாதபடி நம் உடலில் இந்த உணர்வுகள் விளைந்து கொண்டேயிருக்கும்.

‘’நீ குறை செய்கிறாய்’’ என்று நாம் சொல்லுகிறோம். ஆனால் அந்தக் குறையான உணர்வு வரப்படும்போது அது நம்மை ஆட்டிப் படைக்காதபடி ஆத்திரம் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்படித் தடுத்து நிறுத்துவதற்கு நமக்கு நாமே நம்மைக் கோபப்படச் செய்யும் குரோதப்படச் செய்யும் வேதனைப்படச் செய்யும் சோர்வடையச் செய்யும் இந்தக் குறைகளை நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும். நல்ல சக்தியைப் பெறுவதற்கு நம் எண்ணத்தை மாற்ற வேண்டும்.

அந்தக் கெட்டதை முதலில் நாம் அறிந்து கொள்கின்றோம். அதாவது
1.கருணைக் கிழங்கிலே விஷம் இருக்கின்றது என்று அறிந்து கொள்கின்றோம்.
2.ஆனல் அதை வேக வைத்து நீக்குகின்றோம்,

அதே போன்று தான் ஒருவர் கெட்டவர் என்று நாம் எண்ணுகின்றோம். அவருடைய எண்ணங்களை நாம் மனதிலே எண்ணும் பொழுது அவர் செய்கையினுடய உணர்வுகள் நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வுகள் வந்து அவரைக் குறையாகப் பேச வைக்கின்றது.

அப்படிக் குறையாகப் பேசும் பொழுது அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி நம் உடலுக்குள்ளும் விஷத்தைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

கருணைக் கிழங்கில் விஷம் இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பின் அதை அப்படியே சாப்பிடாமல் வேக வைத்துத்தான் சாப்பிடுகின்றோம். அதைப் போல
1.ஒருவரிடத்தில் நாம் குறை காணும் பொழுது
2.அந்தக் குறையான உணர்வின் விஷத்தை
3.நாம் நேரடியாக உட்கொள்ளாதபடி ஆத்ம சுத்தி செய்து தடுத்து நிறுத்த வேண்டும்.

அந்தக் குறையான உணர்வுகளை நாம் எங்கே காணுகின்றோமோ யார் மேலே காணுகின்றோமோ அந்த நேரத்தில் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அதைப் பார்த்தோம் என்றால் அதன் வீரியம் நம்மைப் பாதிக்காது.

‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் தியானிக்கப்படும் போது இந்தக் காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

இது தான் “ஆத்ம சுத்தி”

நமக்கு எந்தச் சந்தர்ப்பத்தில் துன்பங்கள் நேர்ந்தாலும் அடுத்த கணமே நீங்கள் இப்படி ஆத்ம சுத்தி செய்தால்
1.உடனடியாக மன பலம் கிடைக்கும்.
2.மன அழுத்தம் (TENSION) அகலும்
3.பின்னால் வரக்கூடிய துன்பத்தை முன்னாடியே நாம் தடுத்து நிறுத்திவிடலாம்.

நம் வாழ்க்கையில் வரும் அலைகள்… சுழல்கள்… சூறாவளிகளிலிருந்து மீளும் அனுபவம்

Tsunami - Polaris

நம் வாழ்க்கையில் வரும் அலைகள்… சுழல்கள்… சூறாவளிகளிலிருந்து மீளும் அனுபவம் 

உதாரணமாகக் கடலுக்குள் படகில் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

எத்தனையோ சிற்றலைகள் வருகின்றது. அப்புறம் பெரிய அலைகள் வந்து மோதுகின்றது. அதில் துடுப்பை நாம் ஒழுங்காகத் தள்ளவில்லை என்றால் என்ன செய்யும்…? படகு கவிழ்ந்துவிடும்.

ஒரு பெரிய அலை அலை வருகின்றது என்றால் அதற்குத் தகுந்த மாதிரித் திருப்பி வைக்க வேண்டும். திருப்பாமல் அப்படியே போய்க் கொண்டிருந்தால் படகை ஒரு பிரட்டுப் பிரட்டி விடும்.

அந்த அலைகள் மோதினால் எதிர்த்து இப்படி நிற்க வேண்டும். அப்பொழுது வேகமாகத் தள்ளி கொண்டு போகும். அப்போது அது தள்ளி விட்டுப் போனவுடனே வேகமாக முன்னாடி போவோம். ஆனால்
1.அந்த அலைகள் பிந்தியவுடனே திருப்பி என்ன செய்யும்…?
2.எவ்வளவு தூரம் தள்ளி விட்டதோ திருப்பி அதே அலை இழுக்கும்.
3.இந்த அலைகள் மீண்டும் இழுத்து ஓடுவதற்கு முன்னாடித் திருப்பி இங்கே கொண்டு போக வேண்டும்.

இந்த அனுபவத்தை நேரடியாகப் பெறச் செய்வதற்குக் குருநாதர் என்னைத் (ஞானகுரு) திருச்செந்தூரில் கடலில் இறங்கச் சொன்னார்.

எனக்குச் சாதாரணமான நீச்சல் தான் தெரியும். ஆனால் திருச்செந்தூரில் கடலில் போய் மிதக்க வைத்தார் குருநாதர்

அவர் சொன்னபடி ஆசனத்தைப் போட்டேன். படுத்துத் தலையணை மாதிரிக் கைகளை வைடா…! என்றார் குருநாதர். வைத்தேன்.

இங்கே இப்படிப் படுடா…! என்றார் படுத்தேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் கடலில் “மிதக்க ஆரம்பித்து விட்டேன்…!”

மிதந்து கொண்டு இருக்கும் போதே அலைகள் வருகின்றது. இரண்டு பெரிய அலை வந்தது. அவ்வளவு தான்…! என்னை நடுக் கடலுக்கே கொண்டு போய்விட்டது.

நடுக்கடலில் போனவுடனே அவர் எடுக்கச் சொன்ன ஜெபம் எப்படி இருக்கும்…!

இங்கே படுடா என்றார். படுத்தேன். அது உள்ளே கொண்டு விட்டு போய்விட்டது. நடுக்கடலுக்குச் சென்றவுடன் அந்த இடத்தில் என் ஆசைகள் எல்லாம் எங்கெங்கோ போகின்றது…!

அப்போது எத்தனையோ எண்ணிக் கொண்டு இருக்கின்றேன். திடீரென்று முதலை வந்து விழுங்கி விடுமோ…? அல்லது பெரிய மீன் வந்து விழுங்கி விடுமோ…! என்ற இந்த எண்ணம் தான் எனக்கு வருகின்றது.

அந்த கடலின் அலைகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் பொழுது இப்படிப்பட்ட எண்ணம் தான் தோன்றுகின்றது.

இப்படி இருந்தால் நீ கரை சேர்வது எங்கே என்று கேட்கிறார் குருநாதர்…?

அவர் சொல்லிக் கொடுத்த ஆசனத்தை விட்டு விட்டோம் என்றால் என்னால் மிதக்க முடியவில்லை. தண்ணீர் என்னை இழுக்கின்றது.

காலைக் கழற்றியவுடனே “லபக்…” என்று கடலுக்கடியில் இழுக்கின்றது. இழுத்தவுடனே இந்த அலைகள் மோதி உள்ளே அப்படியே அமுக்குகின்றது. எங்கே தப்பிக்கிறது…?

தண்ணீரைக் குடித்து விட்டேன். புரை ஓடியது. அப்பறம் என்ன செய்வது…! மறுபடியும் இந்த ஆசனத்தைப் போட்டுப் படுத்து புரையை நிவர்த்தி செய்தேன்.

அந்தக் குறுகிய நேரத்தில்
1.நீ எண்ணிய எண்ணங்கள் என்ன?
2.நீ எதைப் பெற வேண்டும்?
2.நீ இங்கே கடலுக்குள் வந்துவிட்டாய் என்றால் மறுபடியும் மீண்டு கரை சேர வேண்டுமல்லவா…!
4.அதற்குண்டான முயற்சியை எடுத்தயா…? என்கிறார்.

இதெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இயற்கையாக எனக்கு அனுபவத்தில் கொடுத்தது.

கடல் அலைகள் இப்படி இருக்கிறது…! அப்படி இருக்கின்றது….! என்று கரையில் உட்கார்ந்து கொண்டு சும்மா வாயில் பேசுவது அல்ல. அனுபவமாகப் பெற்றதைத்தான் உங்களிடத்தில் சொல்கிறேன்.

உள்ளே இழுத்துக் கொண்டு போனவுடனே
1.என்ன தான் சக்தி கொடுத்தாலும் உன் நினைவு எப்படி வருகின்றது?
2.அப்போது உடல் பலவீனமாகும் போது உன்னை எப்படிக் கீழே இழுக்கின்றது?
3.கீழே இழுத்தவுடனே அந்தப் பெரு மூச்சாகித் தண்ணீர் உள்ளுக்குள் எப்படிப் போகின்றது?
4.எப்படிப் புரையேறுகின்றது…? அப்போது நீ எங்கே தப்பிப்பது…? என்று கேட்கிறார் குருநாதர்.

எவ்வளவு பெரிய திறமையான நீச்சல்காரரும் திடீரென்று கொஞ்சம் பயமாகி “ஆ…!” என்றால் போதும். குபுக்… என்று தண்ணீர் உள்ளுக்குள் போய்விடும். அப்புறம் நீச்சல் எல்லாம் “தத்தக்கா தான்…!”

அந்த மாதிரி இடைவெளியில் விட்டு என்னை அப்படியே தவிக்க வைக்கின்றார் குருநாதர்.

1.கடலுக்குள் சிற்றலைகள் எப்படி வருகின்றது?
2.பெரும் அலைகள் எப்படிப் போகின்றது?
3.உள்ளுக்குள் தூக்கி முங்கியவுடனே அலைகள் எப்படி மேலே போகின்றது.
4.இது போனவுடனே உள்ளுக்குள் (கடலுக்கடியில்) ஒன்று எப்படி இழுத்துக் கொண்டு போகின்றது.

நான் மிதந்து கொண்டு இருக்கும் போது உள்ளுக்குள் கூடி ஒன்று “கிர்…!” என்று போகின்றது. என்னையும் இழுத்துக் கொண்டு போகிறது.

எழுந்து பார்த்தால் வெகு தூரத்திற்கு அப்பால் போயிருக்கின்றேன். எங்கே தப்பிப்பது? அப்பறம் ஆசனத்தைச் சரி செய்து படுத்துப் பார்க்கின்றேன்.

இப்படி எல்லாம் பல நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

இதெல்லாம் உங்களிடம் சொன்னால் லேசாகத் தெரியும். சாமி இவ்வளவு கஷ்டப்பட்டார்…! நாம் என்றைக்குக் கஷ்டப்பட்டு இதை எப்படி வாங்கப் போகின்றோம்…? என்று தான் நினைப்பு வரும்.

இது எதற்காகச் சொல்கிறோம் என்றால் இப்படித்தான் சிற்றலைகள்… பெரும் அலைகள்… சுழல்கள்… என்று நம் வாழ்க்கையில் மாறி மாறித் திடீரென்று வருகின்றது.

நீங்கள் எல்லோரும் நன்றாக இருப்பீர்கள். ஒரு ஒன்றுக்கும் ஆகாதவன் வருகின்றான். வந்தவுடன் “நீ பெரிய… என்னை என்னய்யா செய்து விடுவாய்…?” என்று நம்மை மிரட்டுகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த அலை தாக்கியவுடனே நாம் என்ன செய்வோம்…? இவனைத் தொலைத்துக்கட்டி விடவேண்டும் என்ற எண்ணம் தான் வரும்.

இவன் செய்யும் குசும்பைப் பார்…! என்னை மிரட்டுவதற்கு இவன் யார்…? என்ற இந்த அகம் என்ற அலைகளில் நாம் சிக்கி இவனை அழித்தே விட வேண்டும் என்று நினைப்பு தான் வரும்.

அதற்குண்டான முயற்சி எல்லாம் எடுத்துக் கொண்டிருப்போம். அவனை அழித்திடும் எண்ணம் நமக்குள் வந்து நம்மை அழித்து விடும். நாம் சம்பாரித்து வைத்த செல்வத்திற்கு வேலை வந்து விடும்.

அப்போது இது என்ன செய்கின்றது?

செல்வத்தைச் சம்பாரித்து வளர்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் இப்படிச் சண்டையாகிப் பிரச்னை ஆன பின் கோர்ட்டு கேசு இதற்கெல்லாம் போய்ப் பணமெல்லாம் கரையத் தொடங்கும்.

இவர்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் அதற்கு வேண்டிய உதவி (SUPPORT) செய்வார்கள். அடுத்துப் பணத்தைக் கொடுத்து விட்டு “என்றைக்குத்தான் இதிலிருந்து விடுபட போகின்றோமோ தெரியவில்லை…!” என்று சொல்வார்கள்.

ஆகவே இந்த அலைகளில் சிக்கினால் பணமெல்லாம் காணமால் போய்விடும்.

அதே மாதிரி குடும்பத்தில் எல்லாம் நன்றாக இருப்பார்கள். வீட்டில் பையன் ஏதாவது சொன்னபடி கேட்கவில்லை… தவறான வழிகளில் போகிறான் என்றால்… தாய் தகப்பனார் “இவனை இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்” என்று எண்ணுவார்கள்.

அவனுக்குச் சொத்தே கொடுக்கக் கூடாது என்று மனதில் பதிய வைத்து விடுவார்கள். எங்கேயோ போடா…! உனக்கு ஒரு காசும் கிடையாது என்பார்கள். இந்த அலைகளில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருப்பார்கள்.

பையன் மேல் பாசம் அலையாக இருக்கின்றோம். திடீரென்று வெறுப்பு அலை வந்து விட்டது என்றால் இதில் இப்படி மூழ்கி விடுகின்றோம்.

இவனை எண்ணி அந்த வெறுப்பிலே மூழ்கும் போதே மற்ற பிள்ளைகளிடமும் இதைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருப்போம்.

“டேய்…! அவனை மாதிரி எல்லாம் யாரும் ஆகி விடாதீர்கள்…! என்று இந்த அலை அங்கே மற்ற பிள்ளைகளிடமும் போய் மோதுகின்றது.

என்னடா இது…? எப்போது பார்த்தாலும் என் அப்பா அவனை வைத்துக் கொண்டு நம்மையும் சும்மா ஜாடையாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றார் என்று அங்கேயும் அது வருகின்றது.

அந்த வெறுப்பு அலையில் சிக்கி விட்டால் அதிலே மூழ்கி அதனின் இயக்கமாக இயக்கத் தொடங்குகின்றது.

எப்படி எப்படியோ சம்பாதிக்கின்றோம்…! பிள்ளைகள் எல்லாம் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டுமே. அவர்கள் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்களாக வர வேண்டுமே…! எல்லோரும் என்னைக் கௌரவமாக மதிக்க வேண்டும்… போற்ற வேண்டும்..! என்ற இந்த எண்ணத்தில் இந்த அலையில் போய் சிக்கி கொண்டு அப்படியே தத்தளித்துக் கொண்டு இருப்பார்கள்.

என்ன சம்பாரித்து என்ன செய்வது…? என் பிள்ளைகளை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை…! இப்படித்தான் எண்ணுவார்கள்.

வருகின்றவர்களிடம் எல்லாம் இந்தக் கதையைச் சொல்வார்கள். இப்படி இந்த அலைகளில் தான் மூழ்கி கொண்டு இருப்பார்களே தவிர மீட்க வழியே இருக்காது.

நிறையக் குடும்பங்களில் பாருங்கள். இந்த மாதிரித்தான் இருக்கும்.

அதே மாதிரி பெண் குழந்தைகளைப் பாசமாக வளர்த்துக் கொண்டு இருக்கும் போது திருமணத்திற்காக மாப்பிள்ளை வந்து வந்து போவார்கள்.

ஐயோ…! மாப்பிள்ளை வந்து விட்டு வந்து விட்டுப் போய்க் கொண்டு இருக்கின்றார்களே. என் பிள்ளையின் எதிர்காலம் இப்படி ஆகி விட்டதே, அது எதிர் காலம் என்ன ஆகுமோ… வயதாகி விட்டதே..! என்று இந்த பாச அலையில் சிக்கிக் கொள்வார்கள்

அந்தப் பிள்ளையை நினைக்கும் போதெல்லாம் கவலை… வேதனை. இந்த அலையில் சிக்கிக் கொண்ட பின் குடும்பத் தொழிலும் போய்விடுகின்றது. யாரிடம் சொன்னாலும் சோகம் தான்.

இந்த ஜோசியக்காரன்… அந்த நாடிக்காரன்… அங்கே… இங்கே… என்று போய்… “ஏதாவது வழி வராதா…!” என்று தான் நாம் சுற்றப் பழகியிருக்கின்றோமே தவிர மகரிஷிகள் காட்டிய வழியை எண்ணிப் பார்க்கவே இல்லை.

ஏனென்றால் இந்த அலைகள் அடித்துக் கொண்டு இருக்கும் போது இங்கே இப்படி இருக்கின்றதே… அந்தப் பிள்ளை இப்படி இருக்கின்றதே… என்ற இந்தச் சங்கடம் வரப்போகும் போது சொந்தத்திற்குள்ளேயும் பகைமை வரும்.

என்னப்பா…! நீ வருகிற மாப்பிள்ளை எல்லாம் இந்த மாதிரி சொல்லிச் கொண்டு இருக்கின்றாய் என்று அவர்கள் சொல்வார்கள். இந்த அலைகள் என்ன செய்யும்?

எல்லா இடத்திலயும் மோதி நம்மை அந்தச் சுழலில் கொண்டு போய்ச் சிக்க வைத்து விடும்.
1.ஒன்றுக்கொன்று மோதினால் என்ன செய்யும்?
2.சுழலில் சிக்கித் தவித்து கொண்டு இருக்க வேண்டியது தான்
3.பிறகு எங்கிருந்து தப்பிப்பது…!
4.சொந்தக்காரர்கள் மேல் வெறுப்பு வந்துவிடுகின்றது.

அவர்கள் என்ன சொல்வார்கள்? ஏதோ நல்லதைச் செய்யலாம் என்று போனால் நம்மிடம் சீறிச் சீறி விழுகின்றான் ஐயா. “அறிவு கெட்டதனமாகச் செய்து கொண்டு இருக்கின்றான்…!” என்று சொல்வார்கள்.

இந்த அலைகள் இப்படி வந்து உங்களைச் சுற்றி கொண்டு இருக்கும். உங்கள் குடும்பத்தில் பார்க்கலாம். ஆனால் நாம் யாரும் தவறே செய்யவில்லை.

இதைப் போன்ற அலைகளில் சிக்கி
1.அந்தக் குழந்தையையும் காப்பாற்ற முடியவில்லை.
2.நம்மையும் நம் நல்ல குணத்தையும் காப்பாற்ற முடியவில்லை.
3.கஷ்டப்பட்டுக் சம்பாதித்த சொத்தையும் காப்பாற்ற முடியவில்லை.
4.எல்லோரிடமும் நல்ல நிலையில் பழகினோம் இதையும் காப்பாற்ற முடியவில்லை.
5.இந்த சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்போம்.

இந்த மாதிரி அலைகளில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

என் பிள்ளை அது எப்படியும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஓங்கி இந்த எண்ணத்தைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து மன பலத்தைக் கொண்டு வர வேண்டும்.

மகரிஷிகள் உண்ர்வின் வலு கொண்டு நமக்குள் அந்த அருள் ஞான வித்தை வளர்த்து
1.குழந்தையைப் பார்த்து எப்போதும் நீ நன்றாக இருப்பாய் என்று சொல்லி
2.அந்த மன வலுவைப் பெற்று விட்டோம் என்றால் அந்த அலையில் நாம் சிக்க மாட்டோம்.

பெண்ணைப் பார்க்க வருகின்றவர்கள் என்ன செய்வார்கள்…? பார்த்தவுடனே பிடித்துக் கொள்ளும்.

இதை அப்படியே அனுபவமாக திருச்செந்தூர் கடலில் என்னை வழி நடத்தி கடலுக்குள் வைத்துக் காட்டுகின்றார் குருநாதர்.

கடலில் பெரிய அலைகள் வரப்போகும் போது ஒவ்வொரு சமயத்திலும் முங்கி அடிக்கும் போது மூக்கில் தண்ணீர் ஏறிவிடும். சில நேரங்களில் படுத்துக் கொண்டு இருக்கும் போது வாயில் தண்ணீர் ஏறிவிடும்.

இப்படிச் சிக்கப்போகும் போது நாம் மறுபடி தப்பித்துப் போவோமா…! என்ற இந்த எண்ணங்கள் தான் வருகிறது.

அந்த நேரத்தில் இதிலிருந்து நீ மீள வேண்டும் என்று எண்ணத்தை “நீ எப்போது கூட்டினாய்…?” என்று மறுபடியும் வினா எழுப்புகின்றார் குருநாதர்.

ஒவ்வொரு நிமிடத்திலும் உள்ளே இழுத்துக் கொண்டே போகிறது. கலைத்துப் போய்விடுகின்றேன். மீண்டும் முயற்சி செய்து நீச்சலடித்து வெளியில் வர வேண்டும் என்றாலும் அது இழுத்துக் கொண்டு மறுபடியும் உள்ளுக்குள் போகின்றது.

மனிதன் வாழ்க்கையில் பாச அலை வெறுப்பு அலை வேதனை அலை அன்பு அலை கோப அலை எல்லாம் எப்படி மோதுகின்றது..? சுவாசித்தவுடனே நம்மை எப்படியெல்லாம் திசை திருப்புகின்றது..? என்று அலைகள் வரிசையில் இது தெள்ளத் தெளிவாகக் காட்டினார்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் போதும்.

உங்களுக்குத் துருவ நட்சத்திரம் என்ற துடுப்பைக் கொடுக்கின்றோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் அலைகளை எல்லாம் பிளந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஏகாந்தமாக இணைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு அதைத் தான் காட்டினார்…!

உங்கள் உயிரான ஈசனுக்கு யாம் (ஞானகுரு) செய்யும் சேவை எப்படிப்பட்டது…?

Image

Om eswara gurudeva

உங்கள் உயிரான ஈசனுக்கு யாம் (ஞானகுரு) செய்யும் சேவை எப்படிப்பட்டது…?

 

மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பழகுங்கள்… உங்கள் கஷ்டம் எல்லாம் போகும்…! என்று யாம் (ஞானகுரு) சொல்கின்றோம். கஷ்டத்தை நீக்கும் வழி முறைகளையும் ஆற்றல்களையும் கொடுக்கின்றோம்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அடுத்தாற்போல் என்ன சொல்கிறார்கள்…?

அதை ஏன் கேட்கின்றீர்கள்…? என் பையன் எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான். எப்போது பார்த்தாலும் இப்படி இருக்கின்றான். பக்கத்து வீட்டுக்காரன் இடைஞ்சல் செய்கின்றான். நான் கொடுத்த கடன் பாக்கி பணம் வரவில்லை என்று இப்படியே சொல்கின்றார்கள்.

பையன் நல்லவனாக வேண்டும். கடன் பாக்கி பணம் திரும்ப வர வேண்டும் என்று “இப்படிக் கேளுங்கள்” என்று சொன்னாலும் அதற்குத் தானே வந்தேன் என்பார்கள்.

அப்பறம் திருப்பி இரண்டாவது தரம் மறுபடியும் அந்தக் கஷ்டத்தையே சொல்வார்கள்.

யாம் எத்தனை தரம் ஞானிகளின் உணர்வை இணைத்து நல்ல வாக்காகக் கொடுத்தாலும்
1.என் கஷ்டம் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது என்று
2.நான் சொன்ன நல்லதைத் திருப்பி என்னிடமே விட்டு விட்டு
3.மீண்டும் கஷ்டத்தை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.

துன்பங்களைப் போக்கும் நல்ல வாக்கை என்னிடமே விட்டு விட்டு கஷ்டத்தைச் சொல்லிக் கஷ்டத்தைத் தான் எடுத்துக் கொண்டு போகின்றார்கள்.

ஏனென்றால் அது அவருடைய குறை இல்லை. காரணம் சாப அலைகளே இதற்கு மூலமாகிவிட்டது.

ஒரு வீட்டில் ஒரு பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்றால் உங்கள் மனது எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறது…!

உங்கள் நண்பருக்கு அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒன்றைச் செய்து கொடுத்து அது சரியான நிலையில் வரவில்லை… அவர் சரியாகச் செய்யவில்லை… உங்கள் மனம் எப்படிப் புண்படுகிறது…?

“நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று நான் பல ஆயிரம் பேரிடம் சொல்கிறோம். அப்படி நான் கொடுக்கும் நல்ல வாக்குகளைச் சரி வரப் பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

ஏனென்றால் குருநாதர் எத்தனையோ ஆபத்தான நிலைகளில் எம்மைச் சிக்க வைத்து அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்குள் எப்படி இயங்குகின்றது என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளச் செய்தார்.

அதே சமயத்தில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அது எப்படி இயக்குகின்றது என்று மூன்று இலட்சம் பேரைக் காண்பித்தார்.

அவர்கள் ஆரம்பத்தில் நன்றாக இருப்பதும் பின்னாடி நல்லதை இயக்க முடியாமல் எந்த நிலையில் அல்லல்படுகிறார்கள் என்று காட்டி
1.இப்படிப்பட்ட மாய வாழ்வாக இருக்கின்றது…,
2.இதில் நீ எதைக் காணப் போகின்றாய்…?
3. நம்முடைய கடைசி எல்லை எது? என்று வினா எழுப்புகின்றார்.

என்றும் நிலையான நிலைகள் கொண்டு அழியாமல் இருப்பவர்கள் மகரிஷிகள்.
1.ஒளிச் சரீரம் பெற்ற அந்த மகரிஷிகளினுடைய அருள் சக்தியை எடுத்து
2.நாம் அவர்களைப் பின்பற்றி
3.அவர்களுடன் தான் நாம் ஐக்கியமாக வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர்.

“எல்லோரும் நல்லவரே” ஆனாலும் ஒவ்வொரு மனிதரும் சந்தர்ப்ப பேதத்தால் குடும்பத்தில்கள் சிக்கல்களாகி பல இன்னல் படுகின்றார்கள்.

அந்தத் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று நல்ல வாக்கைப் பதிவு செய்தாலும் ஒரு நூறு பேர் வருகின்றனர் என்றால் அதில் இரண்டு பேர் தப்புவது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

எம்மிடம் நல்ல வாக்கை வாங்கிய பின் அடுத்தவர் கூப்பிட்டு சாமி (ஞானகுரு) உங்களுக்கு என்ன சொன்னார்…? என்று கேட்டால்
1.நன்றாக இருப்பாய் என்று தான் சாமி சொல்கின்றார்.
2.என் கஷ்டத்தைப் பார்த்தால் பெரிய தொல்லையாக இருக்கின்றது என்கிறார்கள்.
3.சாமி நல்ல வாக்கு கொடுக்கின்றார் – வாஸ்தவம் தான்.
4.ஆனால் என் காலம் நல்லதை எங்கே ஒட்டி வருகின்றது…? என்று
4.கொடுத்த வாக்கை நினைவில் வைக்காதபடி இப்படிச் செய்து விடுகின்றார்கள்.

சாமி கொடுத்த அருள் வாக்கினால் நான் நன்றாக இருக்க வேண்டும். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். நான் பார்க்கின்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படிச் சொல்கிறார்களா…? என்றால் இல்லை.

குருநாதர் காட்டிய வழியில் துன்பத்தை நீக்கும் அந்த அருள் ஞான விதையை முளைக்க வைத்து விளையச் செய்து மறுபடியும் பல வித்துகளாக உருவாக்கி ஒவ்வொருவருக்கும் குடும்ப வாழ்க்கையில் வந்த இன்னலைப் போக்குவதற்குகாக வேண்டி பதியச் செய்கின்றோம்.
1.நான் அதை முளைக்க வைக்க
2.அந்த வித்தை உருவாக்குவதற்கு “என்ன பாடுபட்டேன்…!” என்று எனக்குத்தான் தெரியும்.

நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் அந்த நல்ல வித்தை ஊன்றுகின்றோம்.
1.அதை முளைக்க வைக்காமல் விட்டால் என்ன செய்யும்?
2.இங்கேயே உதறிவிட்டுப் போய்விடுகின்றார்கள்…!
3.அப்போது என் மனது எப்படி இருக்கும்…?

நாம் சொல்லி அது முளைக்க வைக்காமல் சிதறவிட்டார்கள் என்றால் அதைப் போக்குவதற்காக நான் கடுமையான தியானம் இருக்கின்றேன்.

உங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு உயிரையும் நான் வேண்டுகின்றேன்.
1.இந்த உடல்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனே…!
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாமல் இயக்கிக் கொண்டிருக்கும் தீமைகள் அகல வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்
4.மகிழ்ச்சியான உணர்வுகள் அங்கே தோன்ற வேண்டும்
5.அந்த நிலையை நீ அவர்களுக்குக் கொடு என்று
6.உங்கள் உயிரை (ஈஸ்வரனை) வேண்டிச் சதா நான் தியானமிருக்கின்றேன்… தவமிருக்கின்றேன்…!

காரணம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் உங்கள் கஷ்டமான உணர்வுகளை நான் கேட்டறிந்தேன் என்றால் என் உயிர் சும்மா இருக்காது.
1.உங்கள் கஷ்டத்தின் பால் என் நினைவுகள் சென்றால்
2.அதை உயிர் அறியச் செய்து அணுவாக மாற்றி
3.என் உடலாகவே ஆக்கி விடுகின்றது.

ஏனென்றால் உயிரின் வேலை அதுவாக இருக்கின்றது.

ஆகவே ஆறாவது அறிவின் ஞானமாக சேனாதிபதி என்ற நிலையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு வரும் தீமைகளை என்னால் அகற்ற முடிகின்றது. உங்களுக்கு மீண்டும் மீண்டும் அதை உபதேசிக்கவும் முடிகின்றது.

அதை போன்று நீங்களும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையில் எதைச் செய்தாலும் யாம் கொடுத்த ஞானிகளின் அருள் ஞான வித்தை உங்களுக்குள் விளைய வைக்க வேண்டும்.

நிச்சயம் அதனின் பலனைப் பெற முடியும்…!

“கால் பாதங்களை மட்டும்… வைக்கும் உயரமான பாறையில் நிற்கச் செய்து…” குருநாதர் எமக்குக் கொடுத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

Image

 

Curse rays

“கால் பாதங்களை மட்டும் வைக்கும் உயரமான பாறையில் நிற்கச் செய்து…” குருநாதர் எமக்குக் கொடுத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

 

மந்திரவாதிகள் தன் பிழைப்பிற்காக எவ்வாறு மக்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று குருநாதர் எம்மிடம் (ஞானகுரு) நிறையச் சொல்லியிருந்தார்.

அப்பொழுது ஒரு சமயம் குருநாதர் காட்டிய வழியில் தனித்து ஒரு இடத்திற்கு நான் செல்லப்படும் போது திடீரென்று என்னை அறியாது ஒரு உயரமான பாறையில் தூக்கிக் கொண்டு அடக்கமாக வைத்து விடுகிறார்கள்.

ஒரு சிறு பாறை தான். ஆனால் உயரமாக இருக்கின்றது. கீழே பார்த்தால் “கிறு…கிறு.. என்று வருகிறது. அவ்வளவு உயரம். திரும்பிப் பார்க்ககூட இடம் இல்லை.

அந்த பாறை என் பாதம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்குத்தான் உள்ளது. இறங்குவதற்கு வழி தெரியவில்லை.

எந்த மகரிஷிகளை எண்ணினாலும் இங்கே வழி இல்லை. அப்பொழுது நான் நினைக்கிறேன் (ஏற்கனவே குருநாதர் சொன்ன மாதிரி மந்திரவாதிகள் தான் யாரோ நம்மை இவ்வாறு செய்து விட்டார்கள் என்று நான் தத்தளித்துக் கொண்டிருக்கின்றேன்,

எந்தத் திசை திருப்பினாலும் தலை சுற்றுகின்றது. கீழே விழுந்தால் எலும்பு சுக்கு நூறாகிப் போய்விடும். ஒரு உருப்படி கூட இருக்காது. அந்த அளவுக்கு உயரமான பாறை. எதுவுமே பிடிமானம் இல்லை. விழுந்தால் அப்படியே நொறுங்கவேண்டியது தான்.

குருநாதர் சொன்ன ஆற்றலை என்னால் எடுக்க முடியாதபடி அந்த மாதிரி நேரத்தில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் ஏதோ மந்திரவாதிகளின் நிலைகளில் யாரோ செய்து விட்டார்கள் என்று தான் எண்ணுகின்றேன்.

ஏனென்றால் குருநாதர் என்னுடைய உணர்வுகள் எவ்வாறு இயங்குகிறது ஒவ்வொரு நொடிக்கும் என் எண்ணங்கள் எப்படி அலை மோதுகின்றது என்று அங்கே என்னை பார்க்கின்றார்.

1.என் மனைவி பிள்ளைகள் மீது பற்றும் அதே சமயத்தில் சொந்த பந்தங்கள் மீது பற்றும்
2.வாழ்க்கையில் எவ்வளவு சுகங்களை அனுபவித்தோம் என்ற நிலையும்
3.கீழே விழுந்தால் சுக்கு நூறாக ஆகிவிடுவோம் என்ற நிலையும்
4.யாரோ ஒரு மந்திரக்காரன் என்னை இப்படிச் செய்து விட்டானே என்ற நிலையும்
5.இப்படித்தான் என் உணர்வுகள் சுழன்று கொண்டிருந்ததே தவிர
6.குருநாதர் கொடுத்த அருள் சக்தியைப் பயன்படுத்த என்னை அந்த உணர்வுகள் விடவில்லை.

கடைசியில் மனக்கலக்கத்துடன் இனி இது தான் முடிவு போல இருக்கின்றது. நம்மால் இதிலிருந்து மீள்வதற்கு முடியவில்லையே என்ற நினைவு வருகின்றது.
1.அப்பொழுதுதான் குருநாதர் மேல் திருப்பமாகி
2.இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களிலிருந்து மீள்வதற்கு
3.குருநாதர் ஒன்றும் சொல்லிக் கொடுக்கவில்லையே என்று நான் எண்ணுகின்றேன்.

குருவின் நினைவு வரப்படும் பொழுது தான் அப்பொழுது எனக்கு காட்சி கொடுக்கிறார். நான் மிகவும் இன்னல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
மனமே…! இனியாகிலும் மயங்காதே…
பொல்லா… மானிட வாழ்க்கையில் தயங்காதே…
பொன்னடி பொருளும் இப்பூமியில் சுகமோ…!
“மின்னலைப் போலே” மறைவதைப் பாராய்…!
நேற்று இருந்தார் இன்று… இருப்பது நிஜமோ…?
இந்த நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா…? என்று குருநாதர் இந்தப் பாடலைப் பாடி வினாக்களை எழுப்புகின்றார்.

இந்த உடலின் வாழ்க்கைக்காக என்னுடைய எண்ணங்கள் எங்கெல்லாம் செல்லுகின்றது.

1.குடும்பத்தில் எதை எல்லாம் எண்ணினேனோ எல்லாம் அழியப் போகிறது
2.உடலில் பதிந்த உணர்வுகள் இயக்கி என்னை எப்படிப் பலவீனப்படுத்துகின்றது.
3.தெளிந்த நிலைகள் எடுக்கவிடாது எவ்வாறு தடைப்படுத்துகின்றது என்று
4.அந்தப் பாறை மீது அமர்த்தி தனித்து இருக்கச் செய்து
5.மரண வாயிலில் நிற்கும் போது அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.

இதைப் போன்று தான் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அறியாது எத்தனையோ துன்ப நிலைகள் படுகின்றார்கள்.
1.நன்மையை எண்ணிச் செயல்படும் செயல்களுக்கு எப்படி வலு கொடுக்க வேண்டும்?
2.அவர்கள் உடலில் அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்றால்
3.உன்னுடைய உடைய சக்திகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்ற நிலையை உணர்த்துவதற்கு
4.மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அனுபவம் பெறச் செய்தார்.

அந்த மூன்று லட்சம் பேருடைய வாழ்க்கையில் அங்கே குடும்பத்தில் யாரும் தவறே செய்யவில்லை…! ஆனால் சாபமிட்ட நிலைகளால் அவர்கள் குடும்பத்தில் எவ்வாறு அல்லல்படுகின்றனர் என்று காட்டுகின்றார்.

ஒரு விருப்பு வெறுப்பால் மந்திரங்களைச் செய்து அந்தக் குடும்பத்தில் பதியச் செய்கின்றனர். அது பரம்பரையாக அந்த மந்திர ஒலிகள் புகுந்து பின் வரும் சந்ததியினைரை எவ்வாறு இயங்குகிறது…? எப்படிப் பாதிப்பாக்குகின்றது?

இதே போல் வறுமையில் வாடுபவர்கள் இடும் சாபங்கள் எந்தெந்த நிலைகளில் அவர்களுக்குள் பதிவாகின்றது?

இரண்டு தலைமுறைக்கு முன்னாடி இப்படிப் பதிந்த உணர்வுகள்
1.இப்பொழுது வாழ்பவர்கள் நல்லவைகளையே செய்தாலும்
2.நல்ல பொருளுக்குள் விஷத்தைக் கலந்தால் நல்லதும் நஞ்சாகுவது போல
3.இவர்கள் செய்யும் நல்லவை நஞ்சின் செயலாக எவ்வாறு மாறுகின்றது என்பதையும் குருநாதர் உணர்த்துகின்றார்.

பல நன்மைகளைச் செய்வார்கள். நல்லதைச் செய்து விட்டுக் கடைசியில் அவரே சலித்துக் கொண்டும் வெறுத்துக் கொண்டும் இருக்கும் நிலையை அவர்களை அறியாத நிலைகள் கொண்டு இயக்கிவிடுகின்றது இந்தச் சாப அலைகள்.

உதாரணமாக நண்பர்களாக இரண்டு பேர் இருக்கிறார்கள். எனக்கு இப்படி மோசம் செய்தான் என்றால் ஒருவருக்கொருவர் பகைமை ஆகி சாபம் இட்டால் அது பதிந்த பின் அதே உணர்வு வேலை செய்கிறது.

சாபம் இல்லாதவர் யாருமே இல்லை என்று கூடச் சொல்லலாம். ஏனென்றால் மூதாதையர்களில் குடும்பத்தில் பற்றுடன் வளர்ந்து வருவார்கள்.

தொழிலில் சில நிலைகளில் பின்னமாகி (குறைபாடு) விட்டால் ஒருவருக்கொருவர்
1.அவன் உருப்படுவானா…?
2.அவன் நல்லபடியாக வாழ்ந்திடுவானா…! என்ற
3.இந்த நிலைகள் தான் வருகிறது.

காரணம் இந்த உணர்வின் சத்து எவ்வாறு இயக்குகின்றது? எவ்வாறு உடலுக்குள் விளைகின்றது. ஆக ஒருவன் நமக்குச் செய்யும் தீமையான உணர்வுகள் எவ்வாறு இருக்கிறது.
1.அந்த நேரத்தில் அந்தத் தீமை நமக்குள் வராது
2.மனதை எவ்வாறு கொண்டு வரவேண்டும் என்று அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

அன்றைய ஞானிகள் காட்டிய அற நெறிகள் எவ்வாறு மறைந்தது? அந்த மகரிஷிகளின் அருளாற்றலை எடுத்து இந்த வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து எவ்வாறு மீள வேண்டும்? என்று எமக்குத் தெளிவாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.