அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

 

ஆத்ம சக்தியின் வளர்ச்சிக்கு வானியலாக வழி வகுத்துத் தந்திட்ட “மகரிஷிகள்…” ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வாழ்வின் உண்மை நிலை உணரும் பொருட்டு…
1.நான் என்பது யார்…? என்ற ஞான முகிழ்விப்பு உதயம் காட்டிட
2.ஆத்ம விழிப்பால் பூரணத்துவ நிறைவைத் தன்னுள் கண்டு… தெளிந்து…
3.அன்பெனும் வித்தை ஊன்றி… ஞான நீரை மனமெனும் நெடு வயல் பாய்ச்சி எதிர் மோதல் களைய
4.பலன் எனும் செழுமை வளர்ப்பை ஆகாரமாகப் புசித்து உலக நலன் நாடும் வழிகாட்டியது
5.அளவுகோல் காணா… “பரிவின் வழி பாசமப்பா…”

உம்மை நீ உணர்ந்து கொண்டிட அளவில் சிறிதாகினும் பிடிப்பின் (உலகப்பற்று) நிலை விலக்கிடப்பா…!

முழுமையாக உம்மை ஆட்கொண்டிட்ட பிறகு… உம்மையே இயக்கும் செயல் சித்தம் தொடர்ந்த பிறகு… ஞானக்கண் திறந்திடவில்லை என்றிட்ட எண்ண (உன்னுடைய) உணர்வே எதிர் மோதல் அமில குணங்களாக வாயு பித்த சிலேத்துமம் என்பதில் ஒன்றின் பிரிவே கிளையாகக் கிளைத்து எழுந்தது உடல் நலிவின் காரணம்.

காயத்தைக் கல்வப்படுத்திடும் மூலிகை அன்றோ அருந்தினாய். காயத்திற்கு ஏது நலிவு…? எண்ணத்தின் சோர்வன்றோ விளையாடியது. “பஞ்சமுக ஒளியின்” பாடம்தான்… எண்ணியதை எண்ணியாங்கு நடத்துகின்ற ஆற்றலன்றோ நீ படைத்திட்டது.

பிரம்மனின் ஐந்து முகத்துள் சிரசின் முகம் உச்சியில் ஈஸ்வரரால் களையப்பட்டதாகப் படித்திருப்பாய். உன்னைச் சுற்றிச் சுழன்றோடும் ஒலி நாதத்தில் கலந்திருக்கும் ஒளியின் ஊடாக ஒலி ஒளியை ஈர்த்தே ஒளியில் கலந்தது என்ற சூட்சும உரையின் பதம்.

உரையின் தெளிவை உயர் ஞான வலுவால் அறிந்திடும் சிறு முயற்சி பதத்தின் உரையைக் காட்டும்…! விரித்தே உரைக்கின்றேன்.

பெற்றுக் கொண்டிட்ட சக்தியின் வளர்ச்சி அளவீடு சித்தன் காட்டிட்ட சித்தின் நிகழ்வாக (உலக நலனுக்காக) மழை வேண்டும் என்று எண்ணத்தை உரைத்திட்டானப்பா. உரையைச் செயலில் விளக்கி விட்டாய்.

மனதின் கூறு மேம்பட… ஈர்த்து வெளிக்காட்டிட தொடர்பு என்ன…? சொல்வது அனைத்தும் பாடம் தான். உன்னில் ஊன்றிப் பார். ஞானவழிச் செல்வங்கள் யாராக இருந்தாலும் அவர்களும் காணட்டும்.

உனது எதிர்புறமும் நேர்புறமும் இடது வலது பக்கங்களிலும் ஜோதியாகக் காண்ப்பது உயிராத்ம சக்தியின் வளர்ப்பு. எண்ணத்தில் உன்னையே நீ ஜோதியாகக் காண்கின்றாய்.

பஞ்சமுக ஜோதியாக விளங்கி விட்டால் பிறப்பின் நிலை ஏது…? அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

ஐம்முகத் தொழிலில் அறிந்து உணர்ந்து செயல் கொள்ளுதல் எல்லாம் விளக்கவொண்ணா ஆனந்த இலயத்தின் பேரருள் செல்வ நிலையில்
1.பிரம்ம சாயுஜ்யம் என்ற உண்மையை உணர்வோன்
2.முத்தொழில் புரியும் படைத்தல் காத்தல் அளித்தல் பிரம்மா விஷ்ணு சிவன் அனைத்தும் தன்னுள்ளே தன்னையே காண்பான்.
3.எண்ணுகின்ற எண்ணம் ஈடேறுதல் சிருஷ்டி – அதுவே படைப்பு
4.எண்ணம் கொண்டு அனுபவித்தல் – காத்தல்
5.தன்னுள் அனைத்தையும் கட்டுக்குள் நிலை நிறுத்தி மோனத்தில் லயித்தல் – அழித்தல்.
6.பின்பு நிலை நிற்பது என்ன…? அதுவே அருளல் என்னும் “ஆதிசக்தியின் சக்தியாகக் கலத்தல் என்பதே… மறைத்தல் தத்துவம்…”

அண்டவெளியின் இயக்க கதியில் ஞானச் செல்வங்கள் உணர்ந்து அனுபவிக்கும் நிலைக்கு வித்திட்டேன்.
1.உயர்ந்து காட்டிடல் வேண்டும் என்ற
2.உமது செயற்பாடே… எமது ஆனந்தக் களி நடனம்.

சொல்லில் மறைபொருள் காட்டுவது… சித்தன் வல்லமை காட்டிய அனுபவித்தல் என்ற எட்டா நிலையை எட்டி விடவே இந்தப் பாடங்கள் அனைத்தும்.

இயற்கை என்பது… உருவாகின்றதா…? உருவாக்கப்படுகின்றதா…?

இயற்கை என்பது… உருவாகின்றதா…? உருவாக்கப்படுகின்றதா…?

 

ஐம்பூதத் தத்துவங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பல்கிப் பெருகிடும் செயல் நிலைகள்… வளர்ப்பின் செயலாக்கம் வளர்ச்சியின் முதிர்வாக… மறைபொருள் சக்தி உறை பொருள் உருக்கோலம் கொள்ளும் வளர்ப்பாக… உறை பொருளின் பரிணாம முதிர்வு வினை செயலுருவது…
1.விடா சிந்தனை (முயற்சி) என்றே கதியுற்றுச் செயலுருங்கால்…
2.மதி என்ற தோன்றா நின்ற அறிவை ஞானத்தின் ஆக்கமாக…
3.எண்ணத்தின் வழி நாதத்தை உண்டு பண்ணி…
4.வினை செயல் அறிவுறுத்தும் அறிவு எதுவோ அந்த அறிவால் நிலை நின்று
5.முன்… பின்… நடு… என்றே கால நியமனங்களைக் கருத்தில் காட்டும்
6.சாயுஜ்யப் (தெய்வத்துள் புகும் நிலை) பெரு நிலையை… அறிவை அறிவால் அறிவர் ஞானியர்.

“ஊழ்” என்று முன் கடந்த வினைப் பயன்…
1.செய்யப்பட்ட வினையாக “எது பதிவின் நிலையோ”
2.அப்பதிவைச் செயல் நடத்தும் தொடருக்கு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிட்ட மனித உடல் இயக்க கதியில்…
3.செய்த வினையாகின்ற வளர்ச்சியின் வளர்ப்பில் காந்தம் செயலுருங்கால்
4.வீரிய மின் சக்தியாக இயற்கையின் சக்தியே வெளிப்படும் வேகமாகச் செயல்படுகின்ற செயல்பாட்டில்
5.சரீரத்தின் எலும்பினுள் ஊண் “செய்யப்பட்ட வினையாகச் செயல்படும் சூட்சுமம்” உண்டு.

“புதிதாக” உதிக்கின்ற உயிரணு, ஜீவன் கொண்ட உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்தபின்… “செய்யப்பட்ட வினை இதில் எது…?” என்ற வினா எழும்பலாம்.

ஆகாயம் நீர் காற்று நெருப்பு நிலம் என்றே உரைத்திடும் ஐம்பூதங்கள் ஒன்றினில் ஒன்று பொருந்தி… ஆகாயமாய் வியாபித்துள்ள மறைபொருள் செயல்பாட்டின் தன்மைகள் செயல்படுங்கால்… பிரதிவித் (பூமி-உலகம்) தத்துவம்… ஆக்கம் தத்துவம்… அதே தன்மையாக ஜீவன் உருக் கோலம் கொள்ளும் செயலிலும் உண்டு.

கோடானு கோடி நிறங்கள் கோடான கோடி மணங்கள் கோடான கோடி குணங்கள் நீரமில சக்தியுடன் கலந்து…
1.பிறிதொன்றை உருவாக்கும் காந்தமாக உள் நிறைந்தே உதிக்கும் உயிரணுவின் செயலில்
2.உருப்பெறுவது எண்ணம் கொண்ட ஆத்மா என்றே உரைத்து வந்தோம்.

இங்கு எண்ணம் எதுவப்பா…?

செயல்பாட்டின் மூல சக்தியே… தனக்கொத்ததை வளர்க்கும் ஈர்ப்பில் “உறை பொருள் ஆக்கும் செயலுக்கே” செயல்படும் செயலை ஊன்றிப் பார்.

எண்ணியது எண்ணியாங்கு நடைபெறும் செயலில்… ஜீவன் கொள்ளும் கருத்து நடைமுறைச் செயலில… நாம் ஏற்படுத்திக் கொண்ட சுற்றுச்சூழலில் அப்படியே நடைபெறும் நிகழ்வுகளுக்கு எது காரணம்…?

எண்ணம் என்பாய்.

முழுவதும் விளக்கி விட்டால் அறிவின் சுடர் பிரகாசிக்க அதுவே தூண்டுகோலாகுமப்பா.

தியான வழியில் பெறும் அனுபவத்தால் மட்டுமே மெய்யை அறிந்துணர முடியும்

தியான வழியில் பெறும் அனுபவத்தால் மட்டுமே மெய்யை அறிந்துணர முடியும்

 

ஜீவாத்மா பரமாத்மாவாகும் செயல் நிலைகளை நிரூபணம் ஆக்கிக் காட்டு என்கின்ற வினாவிற்கு எளிமையாகப் பதில் உரைத்திட்டாலும்…
1.அறிவதை உணர்த்தலும் உணர்ந்ததைத் தெளிதலும்
2.தெளிந்த பின் நிலை நிற்றல் என்று செயல்படும் செயலை
3.”தியான வழி அனுபவத்தால்” மட்டுமே உணர்ந்து கொண்டிட முடிந்திடும்.

சூரியனின் சுழற்சி வேகத்தால் ஏற்படும் வெப்பத்தினால்… அதை நெருங்க முடியாத வெப்ப நிலை என்று பௌதீகப் பொருள் விளக்கம் கூறும் விஞ்ஞான நிரூபணங்கள் அறுதியிட்டு உறுதியாக விளக்கங்கள் கூறினாலும்… அனுபவம்… மெய் ஞானம் கொண்டு அகப்பொருள் தெளிதல் என்ற நோக்கில் “சூரியன் குளிர்ந்திட்டது என்று இயம்புகின்றது…”

வினாக்கள் தொடுக்கின்றவன் அனுபவத்தால் உணரட்டும்.

தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் மனிதன் கைக்கொள்ள வேண்டிய மனோசக்தியால் சிந்தனையை வலுக்கூட்டும் ஆத்ம பலம் பெற்றிடும் எளிய முறை தியானத்தின் வழியில் தான்…!

1.ஆத்ம நிலை பெற்றே பிறப்பிற்கு வந்திடும் “உயிர் சக்தி”
2.மனிதன் என்ற ஜீவ பிம்பத்தில் தான் யார்…? என்கின்ற சிந்தனை தொட்டு
3.தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் விழிப்பு நிலையே ஆத்ம விழிப்பு.

அதுவே ஜீவன் கொண்ட செயலாக… ஈர்ப்பின் செயலின் “உயரிய மின் நுண் காந்த அலைகள்” ஈர்க்கப்பட்டு… ஆத்மா ஜீவன் கொண்ட ஜீவாத்மா நிலை பெறுவதெல்லாம்.

மேல் நோக்கிய சுவாசம் எடுத்து விண்ணின் சக்திகள் ஈர்த்திடும் வளர்ப்பில் சூரிய சக்தியாக… அதே தொடரில் மின் நுண்காந்த அலைகள் மேலும் ஈர்ப்பில் சேர்க்கப்பட்டு… பரவெளியில் படர்ந்துள்ள பால்வெளி சூட்சும சக்திகள் அனைத்தையும்…
1.அனைத்திலும் கலந்து செயலுரும் பரமாத்மாவாக
2.”தன்னிலை உயர்த்தும் ஜீவாத்மா…” பரமாத்மா பௌருஷமாகச் செயல் கொள்கிறது.

எண்ணத்தின் உயர்வு என்பது… வலுக் கொண்டு எடுக்கும் நற்சுவாச தியானத்தால் மனத்தின் பக்குவமாக…
1.வான்நோக்கும் உயர்வாக ஆத்மா எங்கெங்கிலும் சஞ்சரித்து
2.தனக்கொத்ததை ஈர்த்து வளர்ச்சியின் வளர்ப்பாக்கும் (மகரிஷிகளின் செயல்).

“மேல் நோக்கிய சுவாசத்தால்” மட்டும் தான் உயர் நிலை பெற முடியும்

“மேல் நோக்கிய சுவாசத்தால்” மட்டும் தான் உயர் நிலை பெற முடியும்

 

பரமாத்மா என்று உரைத்திட்ட உரையின் உட்பொருள் என்ன…?

“நிலைபெற்ற நித்திய நிலை எதுவோ” அதுவே பரவிப் படர்ந்த… எங்கும் நிறைந்த மின் காந்தமாக… ஒளி காந்த சக்தியாக வியாபித்து… நிறம் மணம் குணம் என்ற வகையில் உதிக்கும் கோடான கோடி உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து…
1.பிறிதொன்றை உருவாக்கிச் செயல்படும் சூட்சமத்துள்
2.மூலம் எதுவோ அதுவே பரமாத்ம தத்துவம்.

செயல்படும் செயலைப் பிரம்மம் என்று ஒளியின் ஊடே பரவிப் படரும் “உஷ்ணம்” செயலுரும் தன்மையால் ஆத்ம நிலை பெறும் உயிரணு… தன் எண்ணம் கொண்ட சுழற்சியில் “உயிராத்மாவாகின்றது…”

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள நுண் மின்காந்த சக்தியில் “தன் இச்சையாகப் பெற்றிடும்…” ஈர்ப்பின் நிலை கொண்டு பெற்றிடுவது ஆத்மா.

அதுவே பேரருள் செல்வம் என்றிட்ட ஆத்மாவின் “மூலம்…!”

உயிரணு தன் சுழற்சியின் செயல் நிலையால் எண்ணம் கொண்டிட்ட சுவாசமாக… தான் எவ்வித அமில குணங்களில் உதித்ததுவோ அதற்கொத்த அமிலக் கூறுகள் சுவாசம் கொண்டு ஈர்த்து… எண்ணம் கொண்ட சுழற்சியில் வலுப்பெற்று… அவ்வலுவின் வலுவால் உயரிய ஜீவன் கொண்ட ஜீவாத்மாவாக… தன் எண்ணத்திற்கொப்ப பிறப்பிற்கு வருகின்றது.

பிறப்பின் ஜீவித பரிணாம முதிர்வு கொண்டிட்ட பஞ்சபூத இயற்கை தத்துவ வளம் பெற்றிட்ட நம் சூரியக் குடும்பத்தில்
1.இந்தப் பூவுலகில் ஜீவாத்மாவாகப் பிறப்பிற்கு வரும் தொடரில்தான்
2.ஆத்மா அனுபவ விசேஷ காரிய நிலைகளுக்கு உட்பட்டு
3.அலசிப் பிழிந்த தன் எண்ணத்தின் உயர்வால்
4.பிறப்பிற்கு வந்திட்ட புவியீர்ப்பின் பிடிப்பிலிருந்து விடுபடும் பயன்
5.மேல் நோக்கிய சுவாசத்தால் நன்னிலை பெறுவதே.

“ஆதிசக்தி எனும் பேரருள் செல்வத்தில் கலந்து பிறவாமை பெறுவது…” உதித்திட்ட ஜீவனின் ஆக்கம்.
1.மனிதன் என்ற பிறப்பின் தொடருக்கு வந்திடும் உயிரணு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிட்டு
2.தன் வளர்ச்சியின் செயலில் தன்னைத்தான் உணர்ந்திடும் பக்குவம் பெற்று
3.தன்னை உணர்ந்திடும் தியானத்தின் மூலம்.. ஒழுக்க நன்நெறியாக வாழ்வியலில் பண்பு நிலை கொண்டு
4.மனம் பக்குவப்படுத்தப்பட… தூண்டப்படும் அறிவின் ஆற்றல் கொண்டு “சுவாச கதியில்” அறிந்திடுவது முதல் படி.

பச்சை வண்ண நாடிகள்

பச்சை வண்ண நாடிகள்

 

“சிந்தனைச் சிற்பி” என்பவன் அறிவின் ஆற்றலை மனோ சக்தியாகக் கண்டு கைகொள்ளும் காரியார்த்த செயல் நிலைகளாகக் கருத்தோன்றி தெளிந்து… மற்ற உயிராத்மாக்கள்
1.குறிப்பாக மனித குலம் மெய் சக்தியாக வளர்ச்சியுற ஏதாகிலும் ஓர் வழியாக மனம் உவந்து ஈர்த்தளிட்ட உபதேசக் காவியங்களை
2.ஓதி உணர்வோர் அந்த நுண்பொருள் தத்துவங்களை நற்கனியின் சாறு போல் ஞான தாகத்தால் அருந்திடுவீர்.

ககன மார்க்கமாகச் சென்றிட “ககனமணி சூட்சுமம் கொண்டு” இச்சரீரம் கொண்டே உலகெங்கிலும் சென்று… இயற்கையின் படைப்பில் இயற்கையுடன் மனம் ஒன்றி உயிராத்ம வளர்ச்சிக்கே அவ்வனுபவங்கள் கொண்டு “என்றும் நிலைபெறும் பேறு பெற்றனரப்பா…”

ஆழ் கடலும் கண்டான்… அடர் வனமும் கண்டான்… பாலையின் தன்மைக்குப் பின் பனி மலைகளின் ஊடே வாழ்ந்தான்…! பூமியின் தன்மை நினைத்து “உள் சென்று” விண்ணின் உயர்வாம் வேத வேதாந்த ஒலி நாதப் பொருளும் கண்டான்.

கண்டு… பெற்ற… அந்த முயற்சி கடினமப்பா…!

இன்றோ…
1.சகல மகரிஷிகளின் அருளாசி எனும் அமுது உண்டு
2.அரண் எனும் இல்வாழ்க்கையில் தவ நெறி நின்று
3.இருந்த இடத்திலிருந்து சக்தியின் வலு கூட்டுகின்றாய்.

கடினம் என்று ஒன்றுமில்லை கடினமாம் மனநிலை என்றால் கடினத்தையும் எளிதாகக் கடந்து பேரருள் செல்வமாக வாழ்ந்திடலாம்.

கண்ணனுக்கு உருவைக் கொடுத்த காவிய ரிஷி கண்டது நீர்க்கரையின் பசும்கொடி மலரையப்பா. மலர் என்றால் எளிதாக எண்ணி விடாதே.

“சீதை வனம்” உண்மை என ஸ்வரூபங்கள் கூறுகின்றன. சத்தியத்தின் சக்திக்கு என்றும் அழகுண்டு மணமுண்டு பண்புண்டு… “நன்னெறி வழிகாட்டும் வழியுமுண்டு…”

ஆதவனை மேகம் மறைத்து விட்டதாக எண்ணிவிடாதே. கரங்கள் கொண்டு கண்களைப் பொத்தி விட்டால் ஜோதிச் சுடர் மறைந்து விடுமா…? ஒளியின் வெள்ளத்திற்கு அணையிடவும் முடிந்திடுமா…?

இயற்கையின் சிருஷ்டிகளில் அனைத்திலும் “ஈஸ்வரனைப் பார்…”

வியாசக பகவான் அன்று கண்ட அற்புதம் “அவ்வனத்தில் இன்றும் உண்டு…” கண்ணனின் உருவைப் பசும்கொடு மலர் மேல் கண்டான். பச்சை வண்ணக் கொடியும் அந்தக் கொடியில் பச்சை வண்ண மலரும் அந்த மலரின் மகரந்தம் கண்ணனின் உருவாக வளர்ச்சியுற்று… ஒரு பாதம் வளைத்துப் புல்லாங்குழல் ஊதும் பாவனையாகப் பச்சை வண்ணப் பட்டுடுத்தி… பவளநிற உதடுகளும் கரிய நிற கண்களும் பொன் நிற வேய்குழலும் கொண்டு மலரும் அற்புதத்தை…
1.அண்டத்தில் கண்டதைப் பிண்டத்திலும் கண்டு
2.அந்தக் கண்ணனின் உருவைத் தன்னுள் உணர்ந்திட்ட மாயம்தான் அந்த “மாயக்கண்ணன்…”

வனத்தின் பாங்குக்கு விளக்கமும் வேண்டுமா…? தங்கத்தைச் சுத்தி செய்து அணிகலன்கள் ஆக்குவது போல் எண்ணத்தின் செயலும் உயர்வு கொண்டிடல் வேண்டும்.

பஞ்சபூதங்களைத் தன்னுள் உணர்ந்தது அதுவும் “ஓர் மலர்” காட்டிய விந்தை. செந்நிறம் கலந்த கரிய நிறமும் ஐந்து தலைகளுடன் படமெடுத்தாடி பாம்புடன் இணைந்து ஈரடி நீளமாக வால் பகுதி பூமியை நோக்கி நின்று காற்றினில் ஆடிடும் பொழுது தூரத்தில் காண்பவர் கடின சித்தமும் கலங்குமப்பா.
1.அச்சர்ப்பக் கொடி மலரில் சிவலிங்கமும் உண்டு…
2.சித்தன் கண்டிட்ட அனுபவங்கள் அளவிட முடிந்திடாது.

வியாசகனும் கண்ணனும்

வியாசகனும் கண்ணனும்

 

நீர் சக்தியை முதன்மைப்படுத்திடும் “கணபதி இராசாயணம்” என்பதே அகஸ்திய குரு முனிவரின் தொடர்பு பெற்றிட்ட பொழுது… தாகவிடாய் கொண்டு நீர் தேடி அலைந்த பொழுது
1.அகஸ்தியர் தொடர்பினால் பெற்றுக் கொண்ட அனுபவமே
2.“தருமபுத்திரனுக்கு… தர்ம தேவதை அருளிட்ட உபதேசங்கள்…!”

தாய்மையின் பேறு என்ற மாளப்பெரிய பூமியின் மாண்பு ஒலி காட்டும் வேகம் அறிவின் சமத்துவ பாவனை என்றே… பண்பின் வழி நாடும் ஆத்மாக்கள் உயர்வு கொண்டிட்ட எண்ணத்தால்… மனித ஜீவித வாழ்க்கையிலும் வேண்டுவது ஒன்று உண்டு.

அது… அரிதாகிய மானிடப் பிறவி… உயர் ஞானத்தால் தான் பிறவா நிலை பெறல் வேண்டும் என்பதே.

“காவிய ரிஷி” (வியாசர்) கண்டு தெளிந்த அனுபவ ஞானம். இமயத்தில் மெய் ஒலி கேட்கும் நிசப்த ஏகாந்தத்தில் அறிந்து கொண்டிட்டது என்ன…?
1.அரிதாகிய மானிடப் பிறவி
2.சுயநோக்கின் (சுயநலம்) செயல்வழிப் போக்கால் கடமை கொண்ட மனத்தின் பாங்கு…
3.தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் என்பதே,

விட்டில் பூச்சி எனத் தோன்றி மறையும் பிறப்பாக… அதைக் கௌரவர்களாகச் சுட்டிக்காட்டி… அதன் நோக்கில் மாமகான் பெற்றிட்ட அனுபவ ஞான அனுபவத்தை… இன்றும் இமயத்தின் சாரல் செல்வோர் கண்டு உணரலாம்.

மெய் ஞான விழிப்பிற்கே அது விருந்து (வியாசர் விருந்து).

மாலைப் பொழுதில் தோன்றிடும் ஏராளமான பனி லிங்கங்கள் புலர் காலைப் பொழுதிற்குள் மறைந்துவிடும் இயற்கையை… இயற்கையின் செயலில் உயர் ஞானத்தால் அன்று தெளிந்தான் வியாசக மாமகான்.

கண்ணனையும் கண்டான்…! கிருஷ்ணா என்ற ஜெபத்தைக் காட்டிடும் உருவை… (தான் கண்டதை) விண்டு கூறிடும் அனுபவத்தின் முன் உருவமாகக் காட்டி
1.மனத்தின் வளத்தை நன்னெறிப்படுத்த உயர் நோக்கால் அன்று காட்டியது…
2.இன்றோ உருவ வழிபாட்டின் வியாபாரக் கூடமாக்கியது… அது மனித மனத்தின் விந்தை.

“பச்சை வண்ண நீரமில சுவாச நாபிக் கொடியைப் பிண்டத்தில் கண்ட பொழுது…” ககன மார்க்க வழி செல்லும் வியாசக பகவான்… அண்டத்திலும் ஓர் இடத்தில்… நீர்க் கரையில் இயற்கையாகக் கண்ணன் உருக் கண்டு… அவ்வுருவைக் காட்டித் தத்துவ விளக்கங்கள் அளித்திட்ட செயலை அறிந்து கொண்டிட வேண்டும்.

“அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டும்

“அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டும்

 

வியாசக பகவான் பார்த்தனுக்குத் தத்துவப் பொருளாகக் கீதையை உபதேசித்து… கண்ணன் என்று பாரத இதிகாசத்தை உலகினுக்கீந்த சூத்திரதாரியாகச் செயல்பட்ட அந்த மாமுனிவர் யாரப்பா…?

இயங்கும் இயக்கம் என்று தத்துவப் பொருள் காட்டிய எத்தனை எத்தனையோ வாழ்க்கை நடைமுறைகள்… அவற்றின் சம்பவங்கள்…
1.ஆத்மா ஐக்கிய நிலை
2.நீதியை நிலைநாட்டும் வேகம்… வேகம் கொண்டிட்ட விவேகம்…
3.இயங்கும் இயக்கமான சம்பவங்களில் நீதியை நிலைநாட்டும் போராட்டம்
4.வாழ்க்கை மோதல் சம்பவங்களின் நன்மை தீமைகளில் இருவினைப் பயனால் செயல்படுத்திடும் தாந்திரீகங்கள்
5.தாந்திரீகத்தால் வெற்றிக்கு வழி தேடும் போராட்டங்கள்
6.ஒலி உச்சாடனங்கள் என்று கைக்கொள்ளும் வாழ்க்கை நிலைகளில் நடைபெறும் செயலாக
7.வேத விளக்கங்கள் காட்டி “உண்மையின் சக்தியே வெற்றி பெறும்…” என்றும்
8.சத்தியத்திற்கு ஏற்படும் சோதனையில் வென்று காட்டிடும் வழியாக
9.பேரருள் பெறும் மனத்தின் பக்குவமே “வானவியல் ஞான திருஷ்டி…!”

சத்தியமே விஸ்வரூபம் காட்டி வினைப் பயன் களைந்திட்ட உபதேசமும்… சத்திய நியாய தர்மத்தை வெறுத்திடும் கலியில் “குருவே (உயிர்) தர்மத்தை நிலை நாட்டும் தர்ம தேவனாக…” மனப்போராட்டத்தையே வென்று காட்டிடும் ஜீவன் முக்தனாக… ஒவ்வொரு ஆத்மாவும் நன்னிலை பெற்று விட்டால்… மனித எண்ணத்தின் உயர்வைக் கைக்கொள்ளும் காரியமாக… நன்னெறி வழிகாட்டிய மகரிஷிகளின் உயர் தத்துவத்தால் ஆத்ம வலு பெற்றிட வேண்டுமப்பா.

கிருஷ்ண லீலைகள் என்று காட்டியவற்றை இன்ப ரசம் என்று எண்ணுகின்றான். அனைத்துமே இன்பம் தான். “ஈஸ்வரரின் சொரூபத்தில்”
1.அனைத்து உயிர்களையும் ஒரே பாவனையாகக் காட்டுபவனவற்றில்,
2.எண்ணத்தால் ஆத்ம ஐக்கியம் பெற்றிடும் சம்பவங்களின் கோவையே கோபியர்கள் கொஞ்சிட்ட லீலைகள்.

“இறை சக்தி” தன்னுள் ஒன்றான தனி சக்தி என்றே…
1.அன்பு மனத்தினோடு நாயகன் நாயகி பாவனையாக
2.ஒன்று கலந்திடும் உயிர் ஆத்ம கலப்பே உயர் ஞானப் பொக்கிஷம்.

கோபியர்களுக்குத் தீங்கிழைக்க வந்துற்ற எத்தனை அசுரர்களைக் கண்ணன் மாய்த்தான்…? என்று காட்டியவற்றில் மனிதன் பெற்று உயர வேண்டிய ஒளி காந்த சக்தி… ஆத்மாவின் அருள்…
1.பேரருள் செல்வத்திடம் பற்று வைத்திடும் உள்ளமாக
2.காக்கப்பட வேண்டிய நிலைகள்… காக்கும் தன்மைகள் அனைத்தும் உணர வேண்டும்.

உயர் ஞான வளர்ப்பின் சித்து… சித்தன் கண்ட செயலாகக் கொண்ட எண்ணத்தின் லட்சியம் எதுவோ… அந்த லட்சியத்தை வென்றுவிடும் திட மனத்தின் சித்தம் எவ்வகையில் செயல் கொண்டிட வேண்டும்…? என்று விளக்கிட்ட காவிய படைப்பின் ஓர் அங்கமாக…
1.ஞானப்பயிர் வளர்க்க மகான்கள் உபதேசமாக மொழிந்த நிலைகளில் எல்லாம்
2.மனிதன் பஞ்சேந்திரியங்கள் கொண்டு செய்யும் தொழில் “கர்மா” என்று சூட்சுமப் பொருள்படுத்தி
3.செய்கின்ற வினைகளுக்கு உரிய நாயகன் எனும் உயர் சக்தி முயற்சி என்ற
4.ஆய்வில் கருத்தினைச் செலுத்திடும் பாங்கில் கண்ட இலச்சினை (அடையாளம் – LANDMARK)
5.அதுவே லட்சியமாகக் கொள்ளும் மனத்தின் திறன் வளர்க்க
5.மனத்திறன் ஈர்ப்பில் ஆத்ம ஒளிப்பயிர் வளர்க்க
6.வியாச பகவான் பெற்று உயர்ந்த அனுபவ ஞானமே… “அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டுமப்பா.

அர்ஜுனன் கைக் கொண்ட “காண்டீபம்” (கூர்மை) லட்சியத்தை அடைந்திட… கருவின் திருவாக உள்ளத்தில் விளைந்தது என்ன…? மரம் தெரிந்ததா…? மரக் கிளைகள் தெரிந்ததா…? கிளைகளில் ஆடும் இலைகள் தெரிந்ததா…?
1.இலை மறைவு… காய் மறைவு… அன்றோ அவன் கண்டது…!
2.மகரிஷி புகட்டிடும் உண்மைத் தத்துவம் இலச்சினை கண்டான்… அடைந்திடும் லட்சியம் கொண்டான்.

லட்சியம் மறைந்திடாத் தன்மையாக அடைய வேண்டிய குறிக்கோள்… அதுவே “உயர் ஞான விழிப்பின் பின் சாந்தம் குடிகொள்ளும் அமைதி…” காப்பிய ரிஷியின் ஒவ்வொரு அனுபவமே “ஆரம் கொண்ட முத்துக்களப்பா…”

நீர் தேடிப் பாலையில் அல்லலுற்ற பேய்த்தேர் என்றும் அலகைத் தேர் என்றும்… அன்று காட்டிட்ட கானல் நீரைக் கண்ட பொழுது… உயிர் வாழப் பதைபதைட்ட “பீமன்” என்னும் பலவான் ஆகும் மனித மனத்தின் பாங்கு… நீர் பருகிடும் அதி அவசரத்தால்… “பாலையின் நீரைப் பருகிட முடிந்திடுமோ…?”

1.நகுல மன உத்தியால் நீர் அருந்த… நீரைச் சுவைத்திட
2.சகாதேவனும் துவர் (துறவியின் ஆடை) ஆடை கொண்டு ஞான நீர் அருந்த
3.வென்றது தர்மம் என்று மனத்தின் பாங்கு பலம் பெறுவதே “ஆத்ம பலம் பெற்றிடும் சீரிய சிந்தனை…”

ஆடையில் நனைத்த நீரினைப் பருகிப் பின்னர் ஆடையை உதறிவிட்டால் பாலையின் ஏடென்ற துர் மணல் நீங்குமப்பா. “ஞானத்தைக் கூட்டி இதைத் தெரிந்து கொள்…!

செம்பான்

செம்பான்

 

பரமேஸ்வரர் மாமகரிஷியின் வாசஸ்தலமாக விளங்கும் கோகர்ணக் கடற்கரையை ஒட்டி மீனவர் குப்பம் தென்படுகின்றது. கடல் ஓடும் மீன்பிடி நாவாய்கள் கூடுதலாக வைத்திருப்பவன் எவனோ அவனே அந்த இனத் தலைவனாக அந்த இனத்தையே ஆளும் தகுதியை பெறுவான்.

வாய்ச் சொல்லின் கட்டளைக்கு ஏற்பக் கட்டுப்பட்டு ஒழுகும் வைராக்கிய இன மக்களின் பிறப்பில் வந்தவன்தான் நாவாய்கள் உடைய “செம்பான்…”

அந்த இனத்தின் முக்கிய குல வழக்கம் கடல் ஓடும் மரக்கலங்களை மறித்து கொள்ளை ஆடிப்பது தான். இருந்தாலும்… கொள்ளையடிக்க விருப்பம் காட்டும் அந்த மக்களில் தெய்வீக நம்பிக்கை கொண்டே வாழ்ந்தவன் செம்பான்.

இனத்தாரின் வற்புறுத்தல்களை ஏற்றுக்கொண்டு கொள்ளையிடச் சென்றாலும்… மீன் பிடித்தே வாழ்க்கை நடத்தும் லட்சியமாக ஒதுங்கி வாழ்ந்த செம்பானை ஆட்கொள்ளப்பட்ட சக்தி தான் என்ன…?

கொள்ளை இடச் சென்ற சமயத்தில்… ஆயுதம் கொண்டு போர் புரியும் காலத்தே… உடைமைகளைக் காத்திடல் வேண்டும் என்றே போர் புரிந்திடும் இரு குழுக்களின் தன்மைகளை விடுத்து ஒதுங்கி இருந்தான் செம்பான்.

அப்போது தெறித்து வந்த ஒரு ஆயுதம் செம்பான் உடலில் தைத்து சரீரம் மரண காயப்பட்டது. சிறிய படகொன்றில் தப்பிச் சென்றிட முனைந்த பொழுது சூறாவளி ஏற்பட்ட்து.

அங்குள்ள அனைவருமே கடல் கொந்தளிப்பில் மாய்ந்துவிட அந்தச் சூறாவளியில் சிக்கி உயிருக்காக போராடும் அச்செம்பானின் உடலில் செயல்பட வந்திட்ட ரிஷியை நீ அறிவாயப்பா…!

அலை கடலின் சூறாவளியில் சிக்குண்ட செம்பான்… உடல் துன்பமுற ஜீவன் பிரிந்து விடும் அந்தக் காலகட்டத்தில்… இவன் புசித்திட விழைந்த மீன் இனத்தால் அலை கடலில் கரையில் ஒதுக்கப்பட்டான்.

அப்போது
1.அந்தச் சரீரத்தை “சூட்சும முனிவனால்” இயக்கப்பெறும் பேறு பெற்று எழுந்து
2.உயிரின் ஆதி மூலமாகத் தன்னுள்ளே உபதேசம் பெற்று
3.தான் வேறல்ல தன்னுள் இயங்கும் அந்த மாமகான் வேறல்ல என்கின்ற நிலையின் கருத்தொருமித்த கூட்டாகி…
4.தன்னை இயக்க வந்த சக்தியையே உபாசிக்கும் பரமாத்மாவாக உபதேசம் ஏற்ற செம்பான் (ஜீவாத்மா)
5.தான் ஏற்றுக் கொண்ட பக்குவத்தால் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்று சேரக்கூடிய சந்தர்ப்பமாக அது அமைந்த்து.

கடமையைச் செய்தலின் பிரதிபலன் எதிர் நோக்கா மனத்தின் பக்குவம்… ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்திடும் லயத்தின் மெய்யொலி மெய் ஞானமாக… கீதையின் ரசமாக வடித்துத் தந்தவர் யார்…? என்ற உண்மையை… இன்று உம்மை இயக்கிடும் சூட்சமத்தால் தெரிந்து கொள்.

கிருஷ்ணாவதாரக் காலம் நிகழப் பெற்ற சம்பவங்களின் கோர்வையில்… பக்தி ரசம் சொட்டும் லீலைகளாகக் காட்டிடும் கோபியர்கள் என்றிட்ட ஆனந்த லயமாகும் மனத்தின் செயல் காட்டி… அசுர குணத்தன்மைகளை மாய்த்திட்ட உயிர் சக்தி… ஆத்ம பலம் காட்டும் அர்ஜுன உபதேச கீதையில் உணர்த்த வந்திட்டது எது…?

கலியில் உழன்றிடும் மனிதனின் மன நிலை அதி பேராசை உணர்வுகளும்… வினைப் பயன் கூட்டும் விந்தைகளும்… மகாபாரதக் கதை முழுக்க வியாசரின் அனுபவங்கள் பேசுகின்றனவப்பா.

1.சரீரம் கொண்டு வாழும் உலகியல் நிலையில் மனத்தின் கண் எழும் மாபெரும் போராட்டமும்
2.பஞ்சேந்திரியங்கள் அடங்கும் நிலையும்… துர்க்குண சம்காரம் நிகழ்த்தப் பெறும் நிலையில்
3.கலியின் செயல் சூட்சுமம் காட்டிடும் பண்பு நெறி விலக்கிடும் அதர்ம காரியங்கள் நிகழப் பெற்று உயிராத்மா வதைபடும் நிலை உணர்ந்தால்
4.சாதுர்ய அறிவின் ஆற்றலாகத் தன்னைக் காத்துக் கொள்ளும் முழுமையை விளக்குவதில்
5.மகாபாரத வியாசர் பெற்றிட்ட அனுபவங்கள் விரிவாக அறிய வேண்டிய ஒன்று.

கணையாழியும் சூடாமணியும்

கணையாழியும் சூடாமணியும்

 

மனிதன் பெற்றிட வேண்டியது… சிந்தனைத் தெளிவு… பௌருஷம்… மனோதிடம்… உயர்வைக் கூட்டிக் கொண்டிடும் சித்தன் நிலை ஆகும்.

நன்மை பெறத்தக்க காரியங்களில் வெற்றி… அறிவின் சாதுரியம்… அனைத்தும் கொண்டு,
1.”ஆத்ம பலவான் என்ற ஆஞ்சநேயன்” பெற்று வளர்த்துக் காட்டிய அனுபவ சாரங்களை
2.கொள்கின்றவன் (கடைப்பிடிப்பவன்) ஜெபமாக உணர்ந்து கொண்டிட
3.வாயுபுத்திரன் துணை கொண்டு இராமன் “சூடாமணி பெற்றான்” என்றே மாமகரிஷி மறைபொருள் காட்டியவற்றுள்
4.மனித ஞானம் உயர் ஞான வளர்ப்பின் ஆக்கத்தில்
5.மெய்ஞான விழிப்பால்… மெய் அறிவாம் வாலறிவன் (தெய்வ சக்தி) தன்மையாகச் சுடர்தல் எனும் ஜோதித்துவ பூரணமாக
6.தன்னைத்தான் வளர்த்துக் கொள்ளுதல் தன் அனுபவ ஞான வளர்ப்பால்… மெய்யின் முழுமை பெற்றிட
7.சூட்சுமப் பொருள்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

வெட்டன மறத்தல் (உடனுக்குடன் மாற்ற வேண்டியது) கோபத்தின் குணங்களே. மீண்டும் மீண்டும் புவி ஈர்ப்பின் பிடிப்பில் உழன்றிடவே மனிதன் தனக்குத்தானே விரித்துக் கொள்கின்ற “மாய வலையப்பா” அது.

விண் ஏகும் செயல் சூட்சுமம் காட்டிய வான்மீகி மாமகரிஷி… வாயுபுத்திரனாகத் தன்னையே காவியப் படைப்பாக்கி… ஆஞ்சநேயன் கொண்டிட்ட வலு வீரியச் செயலை விளக்குவதே… ககன வழி மார்க்கம் உடல் கொண்டு பிறந்த நிலை.

1.இராமனாகிய உய(யி)ர் சக்தி அளித்திட்டதோ கணையாழியாகக் காட்டப்படும்
2.சூரிய ஜோதியாகத் துலங்கும் ககனமணி (விண்ணில் ஒளிச் சுடராக மிதக்கும் தன்மை).

இக்கலியின் மனிதன் கொண்ட பேராவல் நிலையினால் மெய்யைப் பொருள் உரைப்பதிலும் தாமதம் நாம் சுட்டிக் காட்டிடும் இந்த எளிய தியானத்தின் வழியாக…
1.உயிர் சக்தி வலுக்கூட்டும் செயலில்
2.விண் ஏகும் சூட்சுமம் உள்ளடக்கி
3.ஆத்ம பலம் எனும் “சூடாமணி” பெற்றிடவே உரைக்கின்றோம்.

ஸ்ரீராம ஜெயம் உரைக்கும் இடமமெங்கும் உயர்வைக் கொண்டு உயர்வைக் காட்டும் வான்மீகியாரின் பதிவு செயல் நிலை… “சப்த நாதங்களாக ஈர்ப்பின் வலுக் கூட்டிடுமப்பா…”

ஆஞ்சநேயர் கொண்ட விஸ்வரூபத்தில் ஜெபத்தின் அளவீடு காட்டிட முடிந்திடுமோ…? எண்ணத்தின் அளவீடு கொண்டு ண்ஹீ உணர்ந்திடப்பார்.

உணர்வுகள் மாற்றிக் கொண்டிட்டே… அந்த வினையின் வழி ஏகல் என்பதில்…
1.இராம காவியத்தில் நாம் கொடியது என உரைத்திடாவிட்டாலும்
2.விளக்கத்தின் பொருள் மோகமும்… கோபமும் குலத்தின் நாசம் (இராவணன்) என்று போதனையை அறிந்து கொண்டிடல் வேண்டும்.

சந்தர்ப்பவசமும் சாப விமோசனமும்

சந்தர்ப்பவசமும் சாப விமோசனமும்

 

ஒன்றினுள் இயங்குகின்ற இயக்கம்… அந்த இயக்கமாகச் செயலுறும் சக்தி… உயிர்த் தொகைகள் எதுவாயினும்… பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட மனிதனாகினும் சரி… “சந்தர்ப்பவசம் என்பது”
1.உயிரணுக்கள் உதித்திட
2.இணைந்து கொண்டிடும் உருவாக்கச் செயல் நிகழ்வுகள் ஒன்றினுள் மற்றொன்று ஒன்றி…
3.தத்தமது குண இயல்பு நீங்கப் பெற்றுப் புதிதென உருக்கொள்ளும் செயல் கூறுகள்.

வான் தொடர்பின் சூட்சமங்களை… ஞானம் பெற விழையும் ஞானச் செல்வங்கள் தாம் பெற்று உயர்ந்து கொண்டிட… தம்முள் விளங்கிக் கொள்வதே சந்தர்ப்பவசம்.

உலகோதய நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்களின் “வித்தியாசங்களைக் காட்டவல்லவையப்பா சந்தர்ப்பவசம்…!”

பால்வெளியில் கலந்து இயங்கும் இயக்க கதிகள்… செயல்படுநிலையை படைப்பின் படைப்பாக வளர்ச்சியுறும் ஆக்கமும்… அந்த ஆக்கமே மறைபொருளாகின் இவ்வாழ்க்கை சாகரத்தில் ஜீவன் கொண்ட உயிர் நிலைகள்…
1.சரீர நிலை விடுத்த இயக்கத்தில் ஓடி (இறப்பு)
2.தமக்கொத்த எண்ணத் தொடர்பு கொண்டிட்ட சரீர இயக்க கதி ஜீவனுடன் ஒன்றி விடுவது
3.புவி ஈர்ப்பில் செயலுறும் உயிர்த்தொகைகளின் மறைபொருள் இயக்க சந்தர்ப்பவசம்.

வான் இயக்கம் புவி இயக்கம் இந்த இரண்டு தொடர்களில்… புவி ஈர்ப்பின் இயக்க வான் தொடர்பு… சந்தர்ப்பவசம் ஆக்கும் உயிர் நிலைகாட்டும்.

மாமகரிஷிகள் இந்நிலையை விளக்குவதே “சாப விமோசனம்…”

தாய்மை என்ற அன்பு குணம் வளர்க்கும் மனத்தின் திறன் கொள்ளும் ஜெபம் எதுவோ “அதுவே மந்திரம்…” சகலத்திற்கும் மனத்தின் திறன் விளக்கிக் கொள்ளவே அனுபவ ஞான உதய மெய்ஞான விழிப்பால் வளர்வது.. சுடர்தல் எனும் ஆத்ம பலம் பெற்றிடும் ஒளி நிலையப்பா.

இராம காவியத்தில் நடைமுறை சந்தர்ப்பவச சாபங்கள் என்று
1.இராவணன் பெற்றுக் கொண்டிட்ட சாபம்
2.தசரதன் பெற்றிட்ட சாபம்
3.வாலி பெற்றிட்ட சாபம்
4.கந்தர்வன் பெற்றிட்ட சாபம் என்று
5.பல இடங்கள் சந்தர்ப்பவசம் நிகழ்த்தும் முன் வினைத் தொடர் என்று உணர்த்தினாலும்
6.விமோசனம் என்பதன் பொருள் காண வேண்டுமப்பா.