தியான வழியில் பெறும் அனுபவத்தால் மட்டுமே மெய்யை அறிந்துணர முடியும்

தியான வழியில் பெறும் அனுபவத்தால் மட்டுமே மெய்யை அறிந்துணர முடியும்

 

ஜீவாத்மா பரமாத்மாவாகும் செயல் நிலைகளை நிரூபணம் ஆக்கிக் காட்டு என்கின்ற வினாவிற்கு எளிமையாகப் பதில் உரைத்திட்டாலும்…
1.அறிவதை உணர்த்தலும் உணர்ந்ததைத் தெளிதலும்
2.தெளிந்த பின் நிலை நிற்றல் என்று செயல்படும் செயலை
3.”தியான வழி அனுபவத்தால்” மட்டுமே உணர்ந்து கொண்டிட முடிந்திடும்.

சூரியனின் சுழற்சி வேகத்தால் ஏற்படும் வெப்பத்தினால்… அதை நெருங்க முடியாத வெப்ப நிலை என்று பௌதீகப் பொருள் விளக்கம் கூறும் விஞ்ஞான நிரூபணங்கள் அறுதியிட்டு உறுதியாக விளக்கங்கள் கூறினாலும்… அனுபவம்… மெய் ஞானம் கொண்டு அகப்பொருள் தெளிதல் என்ற நோக்கில் “சூரியன் குளிர்ந்திட்டது என்று இயம்புகின்றது…”

வினாக்கள் தொடுக்கின்றவன் அனுபவத்தால் உணரட்டும்.

தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் மனிதன் கைக்கொள்ள வேண்டிய மனோசக்தியால் சிந்தனையை வலுக்கூட்டும் ஆத்ம பலம் பெற்றிடும் எளிய முறை தியானத்தின் வழியில் தான்…!

1.ஆத்ம நிலை பெற்றே பிறப்பிற்கு வந்திடும் “உயிர் சக்தி”
2.மனிதன் என்ற ஜீவ பிம்பத்தில் தான் யார்…? என்கின்ற சிந்தனை தொட்டு
3.தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் விழிப்பு நிலையே ஆத்ம விழிப்பு.

அதுவே ஜீவன் கொண்ட செயலாக… ஈர்ப்பின் செயலின் “உயரிய மின் நுண் காந்த அலைகள்” ஈர்க்கப்பட்டு… ஆத்மா ஜீவன் கொண்ட ஜீவாத்மா நிலை பெறுவதெல்லாம்.

மேல் நோக்கிய சுவாசம் எடுத்து விண்ணின் சக்திகள் ஈர்த்திடும் வளர்ப்பில் சூரிய சக்தியாக… அதே தொடரில் மின் நுண்காந்த அலைகள் மேலும் ஈர்ப்பில் சேர்க்கப்பட்டு… பரவெளியில் படர்ந்துள்ள பால்வெளி சூட்சும சக்திகள் அனைத்தையும்…
1.அனைத்திலும் கலந்து செயலுரும் பரமாத்மாவாக
2.”தன்னிலை உயர்த்தும் ஜீவாத்மா…” பரமாத்மா பௌருஷமாகச் செயல் கொள்கிறது.

எண்ணத்தின் உயர்வு என்பது… வலுக் கொண்டு எடுக்கும் நற்சுவாச தியானத்தால் மனத்தின் பக்குவமாக…
1.வான்நோக்கும் உயர்வாக ஆத்மா எங்கெங்கிலும் சஞ்சரித்து
2.தனக்கொத்ததை ஈர்த்து வளர்ச்சியின் வளர்ப்பாக்கும் (மகரிஷிகளின் செயல்).


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply