நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்

நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்

 

ஞானத்தின் வழித்தொடரை நமக்குள் விளைய வைத்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு அகன்றால்
1.பேரண்டத்தில் எத்தகைய கடும் நஞ்சாக இருப்பினும்
2.அது தன்னை அணுகாது அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.

அப்படி ஆனவர்கள்தான் இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள் சப்தரிஷிகள். இந்தப் பூமியின் தொடர் கொண்டு வாழுகின்றார்கள்.

இந்தப் பிரபஞ்சம் செயலிழந்தாலும் இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டுத் தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும்
1.உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.
2.இந்த அகண்ட பேரண்டத்தில் இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு.
3.மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.

மனிதனின் நிலைகள் நாம் இன்று அதிலே இணைந்தால்தான் நல்லது.

பேரண்டம் முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது, ஒன்றுடன் ஒன்று மோதி சுழற்சி வேகம் கொண்டு சூரியன்களாக விளைந்து நட்சத்திரங்களாக விளைந்து அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து உயிரணுக்களாக விளைந்தது.

உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து நுகர்ந்து உணர்வின் தன்மை உடல் பெற்று
1.எண்ணத்தின் நிலைகள் கொண்டு இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு
2.தன்னைக் காத்திடும் காத்திடும் நிலைகள் கொண்டு வந்தது.
3.இப்படி இந்த உயிரின் நிலைகள் உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்
4.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள்தான் மகரிஷிகள்.

ஆகவே அது அனைத்தும் நாம் பெற முடியும்.

நமக்குள் இருக்கும் இந்தப் பாதுகாப்பு நிலையைப் பிளக்காது… அதிலே இந்த மகரிஷிகளின் உணர்வுடன் பாதுகாக்கும் அரணாக நாம் அமைத்திடல் வேண்டும்.

நமக்குள் நம் ஆறாவது அறிவை இந்த ஓசோன் திரையைக் கிழித்திடாது மற்ற தீமைகள் நமக்குள் படர்ந்திடாது
1.அருள் மகரிஷிகளின் நிலைகளை நாம் ஓசோன் திரையாக அமைத்திடல் வேண்டும்… அமைக்க முடியும்.
2.அத்தகைய நிலைகளைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி
3.விண்ணின் ஆற்றலைக் காண அந்த உணர்வைப் பெற
4.அவர் அருளியதைப் பெறும் பாக்கியத்தை நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். நம்மால் நிச்சயம் முடியும். எமது அருளாசிகள்…!

குரு பீடம்

குரு பீடம்

 

துன்பத்தைக் கேட்டறிந்தால் அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “துன்பத்தை மாற்றி அமைத்த உணர்வினை” உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் அதை மாற்றலாம்.

1.முன் செய்த வினையின் தன்மைதான் இன்று நமக்குள் வினையாக விளைந்து
2.இந்த வாழ்க்கையைச் சீர்கெடச் செய்கின்றது… இது விதி ஆகிறது.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு குணத்தை எடுத்து வளர்த்திருப்போம். வேதனைப்படுவோரைப் பார்த்திருப்போம்… நண்பன் என்ற நிலையில் இதையெல்லாம் கேட்டறிந்து இருப்போம்… அல்லது சொன்னதைக் கேட்டிருப்போம்.

இதையெல்லாம் நாம் நுகர்ந்த பின்
1.அதை உயிர் உடலுக்குள் அணுவாக மாற்றி… நண்பன் சொன்ன சொல்லையே உணவாக எடுத்து வளரும்.
2.இவ்வாறு மனித உடலில் விளைந்து விட்டால் அது விதி ஆகிறது.

உதாரணமாக ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது செடியாகிறது. வளர்ச்சியில் வித்துக்களாக விளைந்த பின் செடி பட்டு விடுகின்றது.

இருந்தாலும் அதனுடைய இனங்களாக வந்த பின் அதனுடைய வித்திற்கே மீண்டும் அந்தச் செடியின் சத்து உணவாகின்றது… செடியாக வளர்கின்றது,

இதைப் போன்று தான் நாம் மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ கோபமோ வேதனையோ உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் வித்தாகின்றது. இதுவே விதியாகவும் வளர்ந்து விடுகின்றது.
1.ஒவ்வொரு குணமும் விதியாக வளர்ந்து அந்தந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது
2.கடும் நோயாகவும் நாம் அவஸ்தைப்பட நேருகின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் நம்முடைய மதியைச் செலுத்துதல் வேண்டும். அதற்கு அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் உடல் நலம் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்… அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.

1.தபோவன குரு பீடத்தில் உள்ள சூரியனைப் உற்றுப் பார்த்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்.
3.இதற்கு முன் அறியாது சேர்ந்த தீவினைகள் அனைத்தும் அகன்று உடல் நலம் பெற வேண்டும் என்று உற்றுப் பாருங்கள்.

அந்த மகரிஷிகள் உணர்வுகள் உங்களுக்குள் பாய்ந்து முன் சேர்த்துக் கொண்ட வினைகளை அகற்றும் சக்தியாக அருள் ஒளி படர்ந்து எந்த வலி வேதனை இருந்தாலும் மற்ற குறைகள் இருந்தாலும்… அனைத்தும் குறைந்து மன பலத்தையும் மன வளத்தையும் பெருக்கும்.

மனக் கவலையோ சோர்வோ இருந்தால் மன பலம் பெறுவீர்கள் அந்தத் திறன் கிடைக்கும். ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்… மெய் ஞானிகள் உணர்வு எனக்குள் வளர வேண்டும்… என் பார்வையால் நான் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி இருங்கள்.

1.இப்பொழுது உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் ஊடுருவுவதையும் உடலில் ஆற்றல் பெருகுவதையும் உணர முடியும்.
2.அன்று வாழ்ந்த அந்த மகரிஷிகள் உருவங்களும் சிலருக்குக் காட்சியாகத் தெரிய வரலாம்.
3.சப்தரிஷி மண்டலங்களை நீங்கள் காணலாம்.

சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகும் “கூட்டமைப்பு…”

சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகும் “கூட்டமைப்பு…”

 

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி நாம் எடுத்து வளர்க்கின்றோம். அதே சமயத்தில் குல வழிகளில் தான் (முன்னோர்கள்) நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

கூட்டுத் தியானங்களின் மூலமாக எல்லோருடைய எண்ணங்களும் பதிந்து இருப்பதால் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்கின்றோம்.

1.இந்த வலுவைச் சேர்த்துக் கொண்ட பின் முன்னோர்கள் ஆன்மாக்களின் முகப்பில் இந்தச் சக்தியை இணைக்கின்றோம்.
2.காரணம் அவருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றது… அவரின் எண்ணங்கள் கலந்தே உறவாடுகின்றோம்.
3.அதன் துணை கொண்டு அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டர் அலைவரிசையை வைத்து ஒவ்வொரு கோளின் செயலாக்கங்களையும் இன்று கண்டுணர்கின்றார்கள்… அதைக் கவர்கின்றார்கள்.

வெறும் ராக்கெட்டை முதலிலே விண்ணுக்கு அனுப்பி ஒவ்வொரு கோளுடைய சுழற்சிகளையும் அதனுடைய திசைகளையும் எடுத்துக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றார்கள்.

அப்படிப் பதிவு செய்து கொண்ட பின் அதை வைத்துக் கொண்டு அடுத்து அந்தக் கோளுக்கு ராக்கெட்டை அனுப்புகின்றார்கள். கோளின் உணர்வை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.
1.ராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின்… கம்ப்யூட்டர் பதிவு செய்த உணர்வின் மோதலில் திசை திருப்பி அந்தக் கோளுக்கே அழைத்துச் செல்கிறது.

அங்கே சென்றாலும் உள்ளே விழுந்து விடாதபடி அந்தக் கோளின் வட்டப்பாதையை நிர்ணயிக்கின்றார்கள். அந்த ஈர்ப்பின் தன்மை கொண்டு வட்டப் பாதையில் சுழலும்படிச் செய்கின்றார்கள்… தரையில் இருந்து கொண்டே…!

அதே போல்…
1.மெய் ஞானிகள் உணர்வை எடுத்து நமக்குள் அதைப் பெருக்கி
2.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களில் அதை இணைத்து
3.அங்கே செல்ல வேண்டும் என்று உந்தித் தள்ளும் பொழுது அந்த இடம் போய்ச் சேருகின்றது.

உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றது… சுட்டுப் பொசுக்குகின்றது. ஏனென்றால் அவர்கள் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி அமைத்தவர்கள்.

உயிருடன் ஒன்றியிருக்கும் உடல் பெறும் உணர்வுகள் கறுக்கப்படுகிறது. நமக்குள் அறிவு என்ற ஒளி இருக்கின்றது. அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் சுழலத் தொடங்குகின்றனர்.

கணவனோ மனைவியோ முதலிலே யார் பிரிந்தாலும் அங்கே அனுப்புகின்றோம். உதாரணமாக மனைவி அங்கே செல்கிறது. உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மா அங்கே அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று கணவன் அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.

அங்கே மனைவி இணைந்து கொண்ட நிலையில்
1.இவர் அடிக்கடி இதை எண்ண எண்ண உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் சென்றடைவார்கள்.
2.இந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக அங்கே இழுத்துச் செல்லும்.

அதைப் பெருக்குவதற்காகத் தான் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அந்தப் பதிவு இல்லை என்றால் யாரையும் அங்கே அனுப்ப முடியாது… விண் செல்ல முடியாது.

மனைவி முன் சென்ற நிலையில் கணவன் அதை எண்ண எண்ண எப்பொழுது பிரிந்தாலும் அங்கே சென்று இணைந்து விடுகின்றார்கள்.

முதலில் அவர்களை அனுப்பி விடுகின்றோம்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கின்றது. அங்கே இணைந்த பின் அவர் உணர்வு இங்கே இருக்கின்றது…
1.அந்த ஒளியின் உணர்வை இங்கே பெருக்குகின்றோம்.
2.அடுத்து வேறு ஒன்றும் தேவையில்லை…. உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் கணவன் ஆன்மா சென்றடையும்.

நண்பன் மீது பாசமாக இருக்கின்றோம். நன்மை செய்தேன்… இப்பொழுது விட்டு விட்டுச் செல்கின்றேனே…! என்று எண்ணினால் உடலுடன் இருக்கும் நண்பர் உடலுக்குள் தான் ஈந்த ஆன்மா புகும்.

முந்தி நாம் யாரையும் விண் செலுத்தப் பழகவில்லை. இப்பொழுது அந்த ஞானிகள் காட்டிய வழியிலே உடலை விட்டுப் பிரிந்தவர்களை அங்கே இணைக்கச் சொல்கிறோம்.

சப்தரிஷிகள் என்பவர்கள் பிறவா நிலை அடைந்தவர்கள். ஆக அந்தக் காலத்தில் விண் சென்றவர்கள் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது.
1.சப்தரிஷி மண்டலத்தில் கண்ணுக்குப் புலப்படாது கோடிக்கணக்கானோர் அங்கே மின்னிக் கொண்டுள்ளார்கள்.
2.அவர்கள் எத்தனையோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கே சென்று அடைந்தவர்கள்… என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்கின்றார்கள்.

இந்தச் சூரிய குடும்பம் அழிந்தாலும் பிற மண்டலங்களிலிருந்து அவர்கள் சக்தி பெற்றதால்… எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்ற நிலையில்… என்றும் பதினாறு என்று அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லக்கூடியவர்கள்.

இந்த எல்லையில் இருந்து அந்த ஆற்றலை வளர்த்தவர்கள். இப்பொழுது எப்படி இங்கே இந்தச் சூரிய குடும்பத்தில் அவர்கள் வட திசையில் சுழன்று கொண்டு வருகின்றார்களோ அந்த வட்டத்தில் இருந்தே அதையெல்லாம் வளர்த்துக் கொள்கின்றார்கள்.

ஆக மனிதனாக பிறந்து தனித்தன்மை வாய்ந்ததாக அந்த நிலை அடைகின்றார்கள்.

அகண்ட பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது தான். பல கோடி ஆண்டுகளாகச் சுழல்வது தான். முதலில் அணுவாகிக் கோளாகி நட்சத்திரமாகி சூரியன் ஆகின்றது. பின் நட்சத்திரமாகி கோளாக வளர்ந்த நிலைகள் பல.

1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும்…
2.அந்தச் சப்தரிஷிகள் வேறு சூரியக் குடும்பங்களுக்குச் சென்று அழியாத நிலைகள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

ஒரு சூரியக் குடும்பமே எத்தனையோ கோடி மையில் பரப்பளவு கொண்டது. இது போல 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்தே துணை கொண்டே அவை வாழ்கின்றது.

இந்த 2000 சூரியக் குடும்பங்களும் வேறு 2000 சூரியக் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு வாழ்கின்றது. இப்படி ஒவ்வொன்றிலும் மனிதனாக உருவானவன் ஒளியாக மாற்றிய பின் தனித்தன்மையாகப் பிரிகின்றது. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் போகின்றது.

ஆனால் இந்த எல்லையில் இருக்கின்றார்கள். என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அனைவரும் அடைய வேண்டும். அப்படி அடையவில்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.

1.நம் முன்னோர்கள் பலரை இப்பொழுது அங்கே அனுப்பியிருக்கின்றோம்.
2.அந்த நிலையில் நாம் உடலை விட்டு பிரிந்து சென்றால் யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை… நாமும் அங்கே சென்றடைய முடியும்.

அடிக்கடி காலை துருவ தியானத்தில் அந்தச் சக்தியை ஏற்றிக் கொண்டு மூதாதையரின் ஆன்மாக்கள் அங்கே அழியா ஒளிச்சரீரரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

அந்த உணர்வுகள் நமக்குள் பெருகப் பெருக அங்கே தான் நம்மையும் அழைத்துச் செல்லுமே தவிர இங்கே இருக்க விடாது.

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்…! ஆக முதலில் அந்தத் தொடர்பு வேண்டும். அதற்குத்தான் கூட்டுத் தியானங்களில் ஒன்று சேர்ந்து அந்த ஆன்மாக்களை அங்கே விண்ணுக்குச் செலுத்தச் சொல்கின்றோம்.
1.இங்கே எப்படி ஐக்கியமாகச் செயல்படுகின்றோமோ
2.அதே போல் அங்கே சப்தரிஷி மண்டலத்திலும் ஐக்கியமாகின்றது.

கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி

கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி

 

விஷமான உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி…! என்றார்.

அதாவது எங்கேயோ தோன்றிய… பேரண்டத்தில் இருந்த நிலைகள் கோடிக் கோடியாக மாறுகின்றது.
1.பல கோடிக்குள் மற்ற உணர்வின் அணுக்கள் சேர்த்து
2.மனிதனாக வருவதற்குக் கோடியில் கோடி… எத்தனையோ கோடியில் கோடி… கோடியில் கோடி… கோடி கோடி…!

நான் எண்ணமாகப் பேசுகிறேன் என்றால் வான் வீதியில் இருக்கக்கூடிய உணர்வுகள் இங்கே வருகின்றது. இதைத்தான் மனித உணர்வுக்குள் இது பட்டபின் அதனின் நிலை தனக்கொத்ததாக மாறுகின்றது.

1.இதை உணர்த்துவதற்குத் தான் குருநாதர் எனக்கு அடியைக் கொடுத்து
2.பிரமை பிடித்த மாதிரிச் செயல்படுத்தி விண்ணை நோக்கி ஏகும்படிச் சொன்னார்.

குருநாதர் எனக்கு அடி கொடுத்தார்… உங்களுக்கு சொல்லடி கொடுக்கின்றேன். இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிகின்றது… சீதாராமா. அந்த ஞானியின் உணர்வுகள் அம்பாகப் பாய்கின்றது.

கோபத்தால் சொல்லும் பொழுது இந்தச் சொல் உங்கள் உணர்வுகளைத் தூண்டுகின்றது. எதிர் பதிலாக அதுவே வருகின்றது.

இதைப் போல் தான் கோடியில் கோடி என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் உணர்வினை ஒளியாக மாற்றி… குருநாதர் கண்டுணர்ந்த உணர்வை அடியால் கொடுத்து… உணர்வின் தன்மை அங்கே உந்தச் செய்து உணர்வின் அளவுகோலை அறியும்படிச் செய்தார்.

1.எனக்கு அடி கொடுக்கும் பொழுது அவருடைய சக்தி எப்படி எனக்குள் உறைகின்றதோ இதைப் போன்று தான்
2.அந்த விண்ணின் ஆற்றலும் அது உருவாகும் மாற்றமும்
3.மண்ணுலகில் வரப்படும் பொழுது “கோடி கோடி கோடி கோடி…” என்ற இந்த நிலையைக் கொண்டாருகின்றார் குருநாதர்.

விண்ணின் ஆற்றலை எனக்குள் அவர் பதிவு செய்த பின்… உடல் எங்கே இருக்கின்றது… உதைத்த உணர்வுகள் அவருடன் ஒன்றும்… ஒன்றிய உணர்வுகளை விண்ணிலே பறக்கச் செய்வார்…!

பரவிய உணர்வுகள் அங்கே அடையும்.
1.அடைந்த உணர்வுகளும் இங்கே அடித்த உணர்வுகளும் இழுக்கும்… இழுத்த உணர்வு கொண்டு தான் எனக்கு அறிவித்தார்.
2.நீ யார்…? எப்படி வந்தாய்…? எந்தெந்த வழிகள் எல்லாம் வந்தாய்…? என்று கனா காண்பது போன்று
3.அணுவாகத் தோன்றி உயிரணுவாக… உன் உயிரே எப்படி உண்டானது…? என்று அறியச் செய்தார்.

விண்ணிலே உயிர் உண்டாவதற்கும் இதிலேயும் பல கோடி கோடி கோடி கோடி. பார்த்தால் உயிரின் துடிப்பு ஒன்றாக இருக்கும். ஆனால் எத்தனை கோடி உணர்வுகள் கலந்து உயிரின் துடிப்புக்குள் இணைந்து அது இயக்கமாக உருவாகின்றது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார்.

ஒரு அணுவின் தன்மை மற்ற கோளின் தன்மை வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை கோடி… கோடி கோடி… கோடி கோடி.

காரத்தின் தன்மையோ கசப்பின் தன்மையோ அதுஎப்படி வந்தது…? எத்தனை கோடி சேர்ந்து கசப்பானது…? காரமானது…? என்று சுவையின் உணர்வுகளும் மணத்தின் நிலைகள் எது இணைந்ததோ அது மணமாக எப்படி மாற்றுகின்றது…?

இவையெல்லாம் சேர்த்துத் தான் கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி.

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்

 

இந்த வாழ்க்கையில் பித்தனைப் போல் தான் இருந்தார் நமது குருநாதர்.

“இந்த உலகமே பித்து நிலையில் இருக்கின்றது” என்பதை உணர்த்துவதற்கு இந்த உலகில் உள்ளோர்க்கு அவரைப் பார்த்தால் பித்தனாகத்தான் தெரியும்.

ஆனால் இந்த உலக மக்கள் பித்துப்பிடித்துப் பித்தனாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கின்றேன் என்றார். இந்த உண்மையின் உணர்வின் இயக்கத்தை அவர் தெளிவாகப் பதிவு செய்து கொண்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஆகையினால்
1.மற்றவர்கள்… யார் தவறு செய்கின்றார்கள்…?
2.எப்படிச் செய்கின்றார்கள்…? என்பதைச் சிந்திப்பதில்லை.
3.அதை அவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற வழி

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற வழி

 

துருவ மகரிஷி எவ்வாறு… எதன் வழியில் விண்ணுலகம் சென்றார்…? என்பதை “நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர்…” அவருள் அறியும் ஆற்றல் பெற்றபின் அந்த வழியினை… “விண் செல்லும் மார்க்கங்களை…” எமக்கு உபதேசித்தார்.

அவர் உடலை விட்டுப் பிரிந்த பின்… நான் அவரை உற்றுப் பார்க்கப்படும்போது
1.சப்தரிஷி மண்டலத்துடன் அவர் இணையும் ஆற்றலும்
2.அவர் உடலிலிருந்து… இந்த உடல் பெற்ற நிலையை உடல் பெறா நிலைகள் கரைவதையும் காட்டுகின்றார்

இவர் தற்காலத்தில் விண் சென்றவர் தான். அதாவது 1970 என்று எண்ணுகின்றேன். ஆனால் சரியாக நினைவில் இல்லை.

1970ல் உடலை விட்டுச் சென்றபின் அவர் உயிரான்மா எவ்வாறு விண் செல்கிறது…? என்றும்
1.விண் செல்வதற்கு… அவரை விண் செலுத்துவதற்கு என்ன உபாயங்கள் செய்ய வேண்டும்…? என்றும்
2.அவரைப் பின் தொடர்ந்து செல்லும் நிலையினை… எனக்குள் எப்படிப் பெருக்க வேண்டும்…? என்றும்
3.அவர் காட்டிய அருள் வழிப்படித் தான் அதைச் செய்தது.

பின் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து சக்திகளைப் பெறும் தன்மையையும் எமக்கு உபதேசித்தருளினார்.

அன்று அகஸ்தியன் துருவனாகும் போது பெற்ற “விண்ணுலக ஆற்றல்கள்…” அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு.

அதை எப்படிப் பெற வேண்டும்…? என்று குருநாதர் கூறிய அந்த அருள் வழிப்படி அதை நுகர்ந்தறிந்து… எமக்குள் அது விளையச் செய்து… அதன் உணர்வின் எண்ண அலைகளை உங்களுக்குள்ளும் இப்பொழுது பதியச் செய்கின்றேன்.

உங்கள் செவிப்புலனறிவில் அது ஈர்க்கப்பட்டு… அதன் துணையால்
1.உங்களுக்கும் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவது தான் இந்த நிலை.
2.குருநாதர் விண் சென்ற உணர்வுகள் தான் இப்பொழுது உங்களுக்குள் நுகரும் இந்த ஆற்றல் அனைத்தும்…!

என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது… உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்றார் குருநாதர்

என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது… உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்றார் குருநாதர்

 

இன்று நமது வாழ்க்கையில் எத்தகைய நிலையில் இருப்பினும் அதை நாம் சீர்படுத்துவதற்குப் பல பல முயற்சிகளை மேற்கொள்கின்றோம். மந்திரம்… எந்திரம்… யாகங்கள்… ஆலயங்களுக்குச் செல்வது… என்று இப்படி எத்தனையோ நிலைகளைச் செய்து “அதை எல்லாம் நிவர்த்தி செய்து விடலாம்…” என்ற எண்ணத்தில் தான் நாம் செல்கின்றோம்.

ஆனால் பண்டைய கால ஞானிகள் எவ்வாறு உயர்ந்த சக்திகள் பெற்றார்கள்…? என்பதை
1.நீங்களே உங்களுக்குள் உணர்ந்து…
2.அறியாது புகுந்து தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகளை நீக்கிட முடியும் என்ற நிலையை
3.பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தான் இதையெல்லாம் உணர்த்துகின்றார்.

ஆனால் நான் அவரை அணுகிச் செல்லவில்லை. அவரே தான் எம்மை அடிக்கடி அணுகி வந்து கொண்டிருந்தார். அவர் அணுகப்படும் போது அவரிடமிருந்து விலகிச் செல்லும் நிலையே ஏற்பட்டது. அப்படி நான் விலகிச் சென்றாலும் அவரிடம் இருந்து என்னால் தப்ப முடியாத நிலையில் என்னை அணுகியே சில நிலைகளைச் சொல்வார்.

அதை எல்லாம் நான் கேட்ட பின் பித்தன் என்ற நிலையில் மந்திரங்கள் தந்திரங்கள் செய்து அதில் சிக்குண்டு தவிக்கின்றார்.
1.ஆக அவரிடம் நாம் சிக்கிவிட்டால் நமக்கும் இந்தக் கதி வந்துவிடும் என்று
2.அவரை அணுகாது நான் விடுபட்டுச் சென்று கொண்டிருந்தேன்.

இருப்பினும் அவர் விட்ட பாடில்லை.

அது சமயம் என் மனைவிக்குக் கடுமையான எலும்புருக்கி நோய் வந்தது. வந்தபின் ஒட்டன்சத்திரம் ஹாஸ்பிடல் சேர்த்தோம். ஆனால் அங்கே டாக்டர்களால் ஒன்றும் முடியாத நிலை ஏற்பட்டு அவர்கள் கூட்டிச் சென்று விடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

காரணம் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் கொடுத்த மயக்க மருந்து வேலை செய்யவில்லை. ஆகையினால் “ஒன்றும் செய்ய முடியாது” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

என்னுடைய மாமனாருக்கு ஒரே பெண் குழந்தை. வீட்டுக்கு மனைவியை நான் கூப்பிட்டு வந்த நிலையில் “இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற பின் மூர்ச்சையாகி” அவர் மரணமடைந்து விட்டார்.

பின் அதற்கு வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்தேன். என் மனைவி இன்றோ நாளையோ என்று ஜீவன் பிரியும் நிலையில் இருக்கின்றது. இத்தருணத்தில் பித்தரைப் போன்று இருந்த குருநாதர் இங்கே வருகின்றார்.

அவருடைய உணர்வுகள் என்னைக் கடுமையாகச் சாடுகின்றது. “இங்கே வா” என்று என்னைக் கூப்பிடுகின்றார்… நான் மறுக்கின்றேன்.

ஏனென்றால் மாமனார் இறந்த சூழ்நிலை வேறு விதமாக இருப்பதால் நான் அவரிடம் செல்ல மறுக்கின்றேன். ஆனால் அவரோ “நீ வந்து தான் ஆக வேண்டும்…” என்று போர் செய்யும் முறையில் வருகின்றார்.

சுற்றத்தார் அனைவரும் அங்கே இருக்கப்படும் பொழுது இவருடன் அடிக்கடி தகராறு செய்தால் மற்றவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசுவார்களே என்ற நிலையில் “சரி” என்று அணுகி அவருடன் சென்றேன்.

காபி வாங்கிக் கொடுத்தார் குடித்தேன் குடித்த பின்பு… இன்று உன்னை விடவே மாட்டேன் என்று கட்டாயப்படுத்துகின்றார். பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கும் நீர் இல்லாத தெப்பக்குளத்திற்குள் அழைத்துச் செல்கின்றார்.

அங்கே என்னுடைய வாழ்க்கை வரலாறு… என் இளமைப் பருவம்… சிறு வயதில் இருந்து நடந்த நிகழ்ச்சிகளை எல்லாவற்றையும் சொல்கின்றார்.
1.நான் உன்னைப் பல காலமாகப் பின் தொடர்ந்தே வருகின்றேன்.
2.என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது… உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்று சொல்கின்றார்.

என் வாழ்க்கையை முழுவதும் சொல்லி உன் மனைவி இறந்துவிடும் நிலையில் இருக்கின்றது. ஆகையினால் நான் கொடுக்கும் இந்த விபூதியையும் எலுமிச்சம் பழத்தையும் உன் மனைவிக்குக் கொடு… எழுந்து நடப்பாள் நலமடைவள்…! என்று சொல்கின்றார்.

அவர் சொன்னது போன்று செய்த பின் என் மனைவி அதிலிருந்து மீண்டது. இரண்டு நாட்களில்… இடுப்புக்குக் கீழ் அசைவில்லாது இருந்த கால்களில் அசைவுகள் கிடைத்தது. அடுத்து எழுந்து உட்காரும் நிலையும் வந்தது… உணவு உட்கொள்ளும் நிலையும் வந்தது… அதன் நடமாடும் நிலைகள் வந்தது.

ஒரு மாதம் கழித்து குருநாதர் மீண்டும் எம்மைச் சந்திக்கின்றார் அவரைச் சந்தித்த பின் அவருடன் சென்றேன்.

இப்பொழுது எனக்கு டீ வாங்கிக் கொடு என்று என்னிடம் கேட்கின்றார். வாங்கிக் கொடுத்த பின் என்னை அழைத்துச் சென்று பல உண்மைகளை உணர்த்துகின்றார்.

ஒரு சமயம் என்னைச் சாக்கடை அருகிலே அமரும்படி சொல்கின்றார். கடைக்குச் சென்று காபி டீ வாங்கி வா என்று சொன்னார். அதை வாங்கிக் கொண்டு வந்து வைத்த பின் அங்கிருக்கக்கூடிய சாக்கடையில் இருந்து அள்ளிப்போட்ட குப்பைகளை அதிலே போடுகின்றார்.

அவர் டீ குடிப்பார் நான் காபி குடிப்பேன். சாக்கடையை அள்ளிப்போட்டு என்னை குடிக்கச் சொல்கிறார். நான் மறுக்கின்றேன்…! அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

நான் சொல்வதை எல்லாம் செய்கின்றேன் என்று சொன்னாயே இப்பொழுது ஏன் மறுக்கின்றாய்…? என்று மீண்டும் கேள்வி எழுப்புகின்றார்.

இருப்பினும் எனக்கு அந்த இடத்திலே சிரமம் ஏற்படுகின்றது அங்கே வருவோர் போவோரை எல்லாம் உற்றுப் பார்க்கின்றேன். இவரையும் பார்க்கின்றேன்… மற்றவர்களையும் பார்க்கின்றேன்.

சாக்கடை அருகில் அமரச் செய்து சாக்கடையும் அள்ளிப் போட்டுக் குடிக்கச் சொல்கின்றார்… வசமாகச் சிக்கிக் கொண்டேனே…! என்று தவிக்கின்றேன்.

காரணம்…
1.என் மனைவியை எழுப்பிய பின்… நான் சொல்வதை எல்லாம் செய்கின்றாயா…! என்று
2.சரி செய்கிறேன் என்று என்னிடம் வாக்கை வாங்கிக் கொண்ட பின் இப்படிச் செயல்படுத்துகின்றனர்.

சரி அதைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வா. வரும் பொழுது முறுக்கு கடலைப்பருப்பு பொரிகடலை வாங்கி வா என்று சொன்னார்.

வாங்கி வந்த பின் சாக்கடைக்குள் கோடுகளைப் போடச் சொல்கின்றார். அவர் சொன்ன முறைப்படி கோடு போட்ட இடங்களில் முருக்கையும் கடலைப் பருப்பையும் பொரிகடலையும் போட்டேன்.

பன்றி அங்கே வருகின்றது. சாக்கடைக்குள் அமிழ்ந்திருக்கும் கடலைப் பருப்பை நுகர்ந்து எடுத்து முதலிலே உட்கொள்கின்றது. அடுத்து முறுக்கைச் சாப்பிடுகின்றது. கடைசியில் பொரிகடலையும் சாப்பிடுகின்றது.

சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை எண்ணாது
1.பன்றி எவ்வாறு அதிலிருக்கும் நல்ல உணவுகளை எடுத்துக் கொள்கின்றது…?
2.அதற்கு அந்த நுகரும் சக்தி எப்படி வந்தது…?
3.நல்லவைகளை எப்படி நுகர்கின்றது…? தீமைகளை எப்படிப் பிளக்கின்றது…?
4.அதனுடைய வலிமை எப்படிப்பட்டது…? என்பதை இங்கே உணர்த்துகின்றார்.

கடவுளின் அவதாரத்தை அங்கு அமர்ந்தே உபதேசிக்கின்றார். வராக அவதாரம் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய் என்று சொன்னார்.

ஓர் உயிரணுவின் தோற்றமும் பல நிலைகளிருந்து மீண்டு காத்திடும் உணர்வுகளை ஒவ்வொரு சரீரத்திலும் நுகர்ந்து நுகர்ந்து… பரிணாம வளர்ச்சியில் பன்றியாகப் பிறந்து மற்ற தீமைகளை பிளந்திடும் உணர்வாக அந்த சக்தியைப் பெற்றுப் பெற்று… கெட்டதை நீக்கிடும் வலிமை கொண்டு நல்லதை நுகரும் சக்தியும் வலுவான நிலை கொண்டு அதைப் பெற்று வளர்த்து எவ்வாறு இத்தகைய செயல்களைச் செயல்படுத்துகிறது…? என்று உணர்த்துகின்றார்.

1.பின் நல்லவைகள் அதற்குள் அதிகமாக நாற்றமான உணர்வுகள் தணிய
2.நாற்றமான உணர்வுகளுக்குள் நல்ல உணர்வின் வலிமை அதிகமாக
3.அந்த நாற்றம் தணிந்து இந்த நாற்றத்தை நீக்கிடும் அந்த உணர்வின் சத்து அதிகமாக விளைந்து உடலைப் பிளந்து
4.அதில் விளைந்த வித்தின் உணர்வின் சத்தை அது கவர்ந்து வெளிவந்த பின் பரசுராம் என்று
5.அந்தத் தத்துவப் பிரகாரம் சமப்படுத்தும் உடலாக மனிதனாக உருவாக்கியது நமது உயிர் என்ற நிலையை
6.இதைத் தான் கடவுள் என்ற நிலையில் புழுவிலிருந்து மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார்.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

கல்வி அறிவு அற்றவனாக நான் இருந்தாலும் குருநாதர் பதிவு செய்த உணர்வின் சக்தி அதை நான் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அன்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சி… கணக்கிலடங்காத நிலைகளையும் அவர் உணர்த்திதை மீண்டும் நினைவு கூறும் பொழுது அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நாமும் கவர முடிகின்றது.

உங்களுக்கு அதை உபதேசிக்கும் பொழுது நீங்கள் நுகர்ந்தாலும் எனக்குள் அது விளைகின்றது. சூரியனின் காந்த சக்தி கவரு போது கேட்போர் உணர்வுகளிலும் இது பதிவாகின்றது.

பதிவை மீண்டும் நினைவு கூர்ந்து எண்ணும் பொழுது அந்த மெய்ஞானிகள் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை எப்படி அகற்றினார்களோ அதைப் போன்று
1.தனக்குள் விளையும் இந்த உயர்ந்த உணர்வு கொண்டு தீமையை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குக் கிடைக்கும்
2.கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டு வருவது.

ஆகவே பொறுமையான நிலைகள் கொண்டு மகரிஷிகள் அருள் உணர்வலைகளை எண்ணி எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொள்ளுமாறு எல்லோரையும் வேண்டுகின்றேன்.

வழி நடத்த நான் இருக்கின்றேன்… சங்கடத்தை விட்டிடப்பா…!

வழி நடத்த நான் இருக்கின்றேன்… சங்கடத்தை விட்டிடப்பா…!

 

கடலில் சதா சர்வ காலமும் கரைதனில் அலை வீசி மீண்டும் அதன் செயல் நடைபெறுதல் போலவே… சூட்சும நுண் அலைகள் நீல வண்ணம் காட்டிடும் அன்பாகக் கருணை என்னும் நிலையில்… நீ அன்பு என்னும் அலைக்கரத்தை நீட்டியே மெய் வழி அறிவாய்…!

யாம் சொல்லும் தியானத்தின் மூலம் எடுக்கும் நுண் மின் காந்த அலைகளால் இருளான இந்த உடலுக்குள் “ஒளி பெற்றிடும் உயிரணுக்கள் தோன்றிடும்…”
1.அப்படி ஒளி மண்டலமாகும் ஆக்கத்தில் திகழும் மூலக்கனல் பெறும் கந்தன்
2.தாய் மூச்சு நாடியின் (குறுதெலும்பு பாகம்) துணையுடன் மேல் எழுந்தே ஆறு ஆதார நிலைகளில்
3.நன்மை என்னும் உறுதி மலை மேல் ஏறி… ஆகாயக் கூறு என்றே அழைக்கப் பெற்றிடும் சிரசின் உச்சியில்
4.ஒளி பொருந்திய வேல் போல் தோற்றம் தந்திடும் அமைப்பினில் கிளர்ந்து எழுகின்ற பொழுது…
5.தாய் மூச்சு நாடியின்… சக்தி ஒளி மண்டல சுவாச அலைகளை
6.கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கரைதனையில் வந்து மோதுவதைப் போல்
7.சிரசினில் மோதிடும் இடைவிடா காந்தப்புலன் மெய் ஒலி/ஒளி காட்டித் தடைப்படாத ஆனந்தத்தை உமக்கு அளித்திட… இனி தடை ஏது…?

ஆகவே… எத்தகைய சங்கட அலைகளையும் எண்ணியே ஈர்த்துக் கொண்டிடுதல் “இனி உன் நிலைக்குத் தகாதப்பா…”

சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு இயற்கையில் பூத்திடும் புஷ்பங்கள் அனைத்துமா விரிந்து மனம் வீசுகின்றது…? பக்குவப்பட்ட மலர்களையே கதிரவனின் கதிர் ஒளி அரவணைத்துப் பூக்கச் செய்கின்ற அன்பினை உணர்ந்து கொண்டாயா…?

1.ஓர் முறை வழி நடந்த என் பயணத்தில் என் தலைச்சுமையை இறக்கி வைத்து… இளைப்பாற்றி…
2.மேல் உத்தரியத்தினால் காற்றினை வீசி அரவணைத்த உனது உள்ளம் தான் இன்னும் உன்னை நாடியே வந்தடையச் செய்கின்றது.
3.சிவத்தின் தன்மை சிவாயத்துள் உன் மனநிலையை அறிந்து கொண்டிடவே தொடங்கிய பயணம் தொடர்கின்றது.

சகடம் போல் சுற்றுகின்ற வாழ்க்கைதான்… எண்ணத் தேர் மனமாம் மனதில்… அசைந்து அசைந்து ஏறுகின்ற செயலிலும் சகடம் சுழல்கின்றது.

தேரின் மையம் எது தெரியுமா…?

“தனித்துவ சக்தி” செயலுறுகின்ற மூகமோ (மௌனம்) அன்றி நிதானமோ…
1.சுழலுகின்ற சகடத்தையும் அந்தச் சுழற்சியின் ஓட்டத்தில் சுழலச் செய்யும் நிலை பெற்ற தேரின் அமைப்பை
2.அந்நிலையில் நிலைக்கச் செய்து… சாஸ்வதக் காட்சியாக வெளித் தோன்றாது.

சிறு பாகமான “அச்சாணி” விசை சேர்த்துக் கொள்கின்ற மையமாம் தனி சக்தி விசையாக்கும்.
1.வாழ்வினுக்கும் வழித் துணை என்றாலும்
2.செலுத்துபவனாய் நாமிருக்க… பஞ்சபூதங்கள் அமைவு பெறும் அனைத்தும் ஆகாயம் என்ற பால் வெளி.

வேதாள மாமகரிஷி அன்று உரைத்த “இந்த உரையில்” மறைபொருள் இரகசியங்கள் பல உண்டு.

“மாமகரிஷி ஈஸ்வரர்” தன இன மக்கள் பால் கொண்டுள்ள ஆசை

“மாமகரிஷி ஈஸ்வரர்” தன இன மக்கள் பால் கொண்டுள்ள ஆசை

 

விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம் அதிலே அஞ்ஞான வாழ்க்கையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்தின் துணை கொண்டு வாழ்ந்தாலும் அஞ்ஞானத்தின் வளர்ச்சியே அதிகரிக்கிறது… மெய்ஞானத்தின் நிலைகள் மறைகின்றது…!

இதைப் போன்ற நிலையில் இருந்து மனிதர்கள் மீள வேண்டும் என்பதற்கே
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரர் தனது வாழ்க்கையில் கண்டறிந்த பேருண்மைகளை
2.மனிதனான தன் இன மக்கள் அறிதல் வேண்டும்… அருள் ஞானம் பெறுதல் வேண்டும்
3.தன்னை அறியாது வரும் இருளை நீக்கிடும் அந்த ஆற்றல் பெற வேண்டும் என்ற இந்த ஆசையில்
4.தனக்குள் பெற்ற அருள் சக்தியை மக்கள் பெற வேண்டும் என்று அதற்கு வேண்டிய உணர்வுகளை வழி நடத்தினார்.
5.அதற்காக எம்மை அனுப்பினார்.. அவருடைய உணர்வுகளுடன் என்னை ஒன்றாக இணையச் செய்தார்.
6.உணர்வுகளை ஆழமாகப் பதியச் செய்தார்… அவர் கண்ட பேருண்மைகளை எம்மையும் அறியும் படி செய்தார்.
7.அறிந்த உணர்வின் தன்மையை மக்களுக்கு நீ எடுத்துக்காட்டு என்று சொன்னார்.

அந்த உணர்வினை மக்களுக்கு எடுத்துக்காட்டு என்று சொன்னாலும் “ஊழ்வினை என்ற வித்துக்களாக” முதலிலே அவர்களுக்குள் பதியச் செய். அவர்கள் மீண்டும் அதை எண்ணும் பொழுது அந்த அருள் வழியில் அந்த எண்ணமே அவர்களை மீட்ட உதவ வேண்டும்.
1.உன்னை நீ நம்புகின்றாய்…!
2.அதைப் போன்று அவர்கள்… “அவர்களை நம்ப வேண்டும்…”

அருள் உணர்வின் சக்தி எதையெல்லாம் உன்னிடமிருந்து அவர்கள் கேட்டு உணர்கின்றார்களோ… “நல்லது என்று உணர்ந்த பின்” அந்த நல்லதையே கவரும் உணர்வுகளை நீ ஊட்ட வேண்டும்.

அதைக் கவர்ந்தால் அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் பெருகும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெறுகின்றார்கள்.
1.அதனை நீ செய்வாயாக…! என்று அருள் வாக்கினை வாங்கிக் கொண்டுதான்
2.எமக்குப் பல உண்மையின் உணர்வுகளை உபதேசித்தார்… உணர்வின் ஆற்றலைப் பெறும்படி செய்தார்.

உலக மக்கள் அனைவரும் நல்லவரே…! இன்று உலகெங்கிலும் மதம் இனம் என்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலையில் இருந்து மக்களை மீட்டிட வேண்டும் என்பதற்காக இதைச் சொன்னார் குருநாதர்.

அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு

ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு

 

மான் இனம் தனது குட்டிக்கு ஊட்டுகின்ற பாலானது அது ஊட்டுகின்ற செயலை… மாற்று குணம் பொருந்திய எதிரி விலங்கினங்களைக் கண்டுவிட்டால்… ஈர்ப்பின் அலை செயல் புரிந்திடும் விதமாக…
1.அந்த அலையானது மானின் சுவாசத்திலே பட்டவுடன்
2.பால் ஊட்டுகின்ற சுரப்பைச் சட்டென நிறுத்தித்
3.தன்னைக் காத்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றுவிடும்.

அதே போன்றது தான் நீங்கள் தியானத்தில் எடுக்கும் சக்தியும்… அதை உங்களுக்குக் கொடுக்கும் நிலையும்.

அதாவது… மகரிஷிகளின் பேரருள் பேரொளி சக்தி உங்களுக்குள் பாயப் பெற்றிடும் நிலையில்… அந்த மகான்களின் சப்த அலைகள் நுண் ஒலி காந்த அலைகளாகப் பரவ விட்டுச் சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் ஓட்ட கதியில்
1.ஈஸ்வரராய் அளிக்கப்படும் (உயிர் வழி சுவாசம்) சுரக்கும் அமுதமாகிய அருளாசி கொண்டு உரைக்கப் பெறும் அருள் உபதேசங்கள்
2.எண்ணத்தின் கூர்மை மாற்று அலையின் சிந்தனையில் சிறிது மோதியவுடன் (சந்தர்ப்பத்தில் தீமைகள் மோதும் போது)
3.காட்சியின் ஒளிப்பதிவு நிலைகள்… ஒலி அலைகளாக மாறு கொண்டிடும் நிகழ்விற்கே “சற்று தடங்கலும் காட்டி…”
4.இப்படியும் நிகழ்ந்தனவா…? என்ற அதிசயப் பொருளாக வினா தொடுத்தால் (ஞானத்தின் வழியில் அறியும் எண்ணம் கொண்டால்)
5.காட்சிப் புலனறிவு பதிவு பெற்ற ஒலி அலைகளை நேரிடையாக உணர்ந்து கொண்டிடும்
6.ஞான திருஷ்டி எனும் விழிப்பார்வை கொண்டு “காலத்தின் நிகழ்வுகளை” எம்மால் உணர்த்தப்படும். (ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு).

எமது (ஈஸ்வரபட்டர்) சர்வ ஆக்ஞையில் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஞானச் செல்வங்களுக்காகக் (உங்களுக்காக) காரண காரிய செயல்முறைகள் இதிலே காட்டப்பட்டுள்ளது.