குருநாதரை ஒரு பைத்தியக்காரர் என்று தான் நானும் ஆரம்பத்தில் எண்ணினேன்

குருநாதரை ஒரு பைத்தியக்காரர் என்று தான் நானும் ஆரம்பத்தில் எண்ணினேன்

 

நம் மீது அழுக்குப்பட்டாலோ தூசி பட்டாலோ மற்றது பட்டாலோ அதை உடனே தூய்மைப்படுத்துகின்றோம். அதைப் போன்று அந்தந்த நிமிடம் நம் ஆன்மாவில் அறியாது புகும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும். நம் இரத்த நாளங்களையும்த் தூய்மைப் படுத்த வேண்டும்.
1.அப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு நல்ல சக்தி வேண்டும்.
2.நல்ல சக்தி வேண்டுமென்றால் நல்ல சக்தி பெற்ற குரு தேவை.
3.குரு வழியில் அருளை நமக்குள் பதிவு செய்து கொண்டு… குரு காட்டிய வழியினை நினைக்கப்படும்போது நாம் அதைப் பெற முடியும்.

வான்மீகி வியாசக பகவான் போன்ற மகரிஷிகள் கண்டுணர்ந்தது போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும்… அவருடைய சந்தர்ப்பம் அகஸ்தியன் பெற்ற அருளையும் அவன் துருவ நட்சத்திரமான உண்மையும் அறிந்தவர்.

அவர் வழியில்… அறிந்த உணர்வு கொண்டு மற்றவர்களுக்கு அவர் எடுத்துச் சொல்லச் சென்றாலும் கூட அவரை அலட்சியப்படுத்திய மக்கள்தான் உண்டு.
1.சில உண்மைகளை அவர் சொல்லும் பொழுது பித்தன்… என்றும் பைத்தியக்காரன்…! என்றும் அவரை எண்ணினார்கள்.
2.என்னிடம் அவர் பழகும் பொழுதும் நானும் (ஞானகுரு) அவ்வாறு தான் எண்ணினேன்… பைத்தியம் பிடித்தவர் என்று.

ஆனால் எம்மை அடிக்கடி அணுகி இந்த வித்தைகளை எல்லாம் நீ கற்றுக் கொள் உனக்கு நல்லதாக இருக்கும் என்பார்.

வித்தை என்றால் “மந்திரவாதிகள் செய்வது போல்” ஏதோ செய்து கோளாறாகி அதனால் இப்படிப் பைத்தியமாக இருக்கின்றார்…! என்று தான் என்னுடைய எண்ணங்கள் இருந்தது முதலில்.

இருந்தாலும் அடிக்கடி ஆவர் எம்மைச் சந்திப்பதும் டீ வாங்கிக் கொடுப்பதும் நான் குடிக்கவில்லை என்றால் திட்டுவதும்… குடித்தால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்பதும்… இந்த நிலை தான் நடந்து கொண்டிருந்தது. குருவை ஆரம்பத்தில் சந்தித்த பின் நடந்தது இது தான்.

அவருக்குத் தெரியாதபடி நான் ரோட்டுக்கு அந்தப் பக்கம் சென்றாலும் அங்கே வந்து பிடித்து விடுவார், எங்கே ஒளிந்து செல்கின்றாய்…? நான் பார்க்கிறேன்…! என்பார்.

எப்படி விலகிச் சென்றாலும் கூட அவர் என்னை விட்ட பாடு இல்லை…!

அந்தச் சந்தர்ப்பத்தில் என் மனைவிக்கு உடல் நலம் குறைவானது. ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்… டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள்…! கடைசியில் “தேறாது…” என்று கூறி விட்டார்கள்.

வீட்டிற்கு அழைத்து வந்த பின்… அதைக் கண்டு மாமனார் இறந்து விட்டார் காரணம் ஒரே பெண். அந்த சமயத்தில் குருநாதர் வந்து “நீ வா…“ என்று என்னைக் கூப்பிடுகின்றார்.

குருநாதர் கூட்டத்தில் சத்தம் போடுகின்றார் இதற்குப் பயந்து அவர் பின்னாடி சென்றேன்.

அப்பொழுதுதான் எனது வாழ்க்கை முழுவதையும் சிறு குழந்தையாக நான் இருந்ததிலிருந்து விவரம் தெரிந்த காலம் வரை நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்துகின்றார்… அத்தனையும் அப்படியே சொல்கின்றார்.

அப்பொழுதுதான்… “அவர் பைத்தியம் இல்லை” என்று நான் தெரிந்து கொள்கின்றேன்.

ஆஸ்பத்திரியில் என் மனைவிக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று டாக்டர்கள் முயற்சித்தாலும் மயக்க மருந்து கொடுக்கும் பொழுது மனைவிக்கு எடுக்கவில்லை. அதனால் ஆபரேஷன் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள் குருநாதர் அதையும் என்னிடம் சொல்கின்றார்

உண்மைகளை அறிந்து கொண்ட பின் பைத்தியம் இல்லை…! என்று உணர்கின்றேன்.

பின்… ஒரு எலுமிச்சம் பழத்தையும் விபூதியும் என்னிடம் கொடுக்கின்றார் உன் மனைவிக்கு இதைக் கொடு… நன்றாக ஆகிவிடுவார் …!என்று சொல்கின்றார்.

இங்கே மாமனார் இறந்து விட்டார்… நான் குருவுடன் சென்று விட்டேன். ஆனால் வீட்டிற்கு மாமனார் இறந்ததைக் கேட்க வந்தவர்கள் எல்லாம்
1.மனைவி இப்படி இருக்கின்றது
2.மாமனாரோ இறந்து விட்டார்
3.அவருடைய மருமகன் பைத்தியம் போல சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்று என்னைப் பேசுகின்றார்கள்.

ஏனென்றல் என் மனைவி இடுப்புக்குக் கீழ் சுத்தமாகக் கால் வரவில்லை படுக்கையில் இருந்ததால் புண்ணும் வந்துவிட்டது.. ஒரு விரல் கூட காலிலே அசையாது.

குருநாதர் சொன்னபடி எலுமிச்சையையும் விபூதியையும் கொடுத்தேன்…! மறுநாள் பார்த்தால் விரல்கள் மற்ற எல்லாம் அசைய ஆரம்பிக்கின்றது.

மனைவி ஆஸ்பத்திரியில் இருந்த போது உடலில் பேண்டேஜ் ஒன்று போட்டிருந்தார்கள். உள்ளுக்குள் பார்த்தால் மூட்டைப் பூச்சிகள் ஏராளம் உடலிலே சொரணை இல்லை இரத்தத்தைக் குடிக்கின்றது. என் மனைவி எழுந்த பின்… பேண்டேஜ் கழட்டும் போது தான் மூட்டைப்பூச்சிகள் உள்ளே இருப்பது தெரிந்தது.

குருநாதர் சக்தி வாய்ந்தவர் என்ற நிலைகளை நான் நம்புகின்றேன். அதற்கப்புறம் குருநாதர் என்னைக் கூப்பிட்டு
1.என்னை நம்புகின்றாய் அல்லவா என்று கேட்கின்றார்
2.கேட்கின்றேன்… நம்புகிறேன் என்று சொன்னேன்.

உன் உயிர் எத்தனையோ கோடி உடல்களை உருவாக்கிய நிலையில் இப்பொழுது நீ மனிதனாக வந்திருக்கிறாய் என்பதை குரு உபதேசிக்கின்றார். பல கோயில்களுக்கு அழைத்துச் சென்றார்.

ஒவ்வொன்றாக்க் காண்பித்து இது எந்த தெய்வம்…? இது என்ன தெய்வம்…? என்று கேள்வி கேட்கின்றார். பின் விளக்கம் கொடுக்கின்றார்.

அதே போல் எறும்பு பூச்சிகள் இவைகளுக்கெல்லாம் சாப்பாடு யார் போடுவது…? என்று கேட்கின்றார். மரம் செடி கொடிகளுக்கு யார் சாப்பாடு கொடுப்பது…? அது எப்படி…? என்று கேட்கின்றார். பின் அதற்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டு வருகின்றார்.

இப்படி அவருடன் நான் சேர்ந்து சுற்றி வரும் பொழுது எல்லோருமே “என்னைப் பைத்தியக்காரன்…” என்று சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

அதே போன்று இரவிலே நகரங்களிலே சுற்றச் சொல்வதும் “சில மோசமான பகுதிகளுக்கு” எல்லாம் கூட குருநாதர் கூப்பிட்டுச் செல்வார்.

துர்மரணம் அடையும் மனிதன் அவன் இறந்தபின் (அவன் இறக்கும் தருணத்தில்) மண்ணிற்குள் பதிந்த இரத்தம் அந்த உணர்வலைகள் பதிவாகியது என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார்.
1.துர்மரணம் அடைந்த அந்த இடத்தில் மீண்டும் அவன் வெளிப்படுத்தும் ஓசைகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த ஆன்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றது…?
3.இன்னொரு உடலுக்குள் எப்படி வருகிறது…? என்று உணர்த்துகின்றார்.

அதே சமயத்தில் மனிதன் மற்ற உயிரினங்களைக் கொல்லும் பொழுது அந்த உயிர்கள் மனிதனின் ஈர்ப்புக்குள் எப்படி வருகிறது…? வந்த பின் மனிதனாகப் பிறக்கும் தகுதி எப்படி வருகின்றது…? என்று காட்டுகின்றார்.

மனிதன் ஒருவனைக் கொலை செய்கின்றான்… துன்புறுத்துகின்றான் என்றால்… அதன் வழியில் அந்த ஆன்மா எவன் துன்புறுத்துகின்றானோ அவன் உடலுக்குள் சென்று… அதே உணர்ச்சிகளை மீண்டும் இங்கே எப்படி இயக்குகின்றது…?

துன்புறுத்தாதபடி நோய்வாய்ப்பட்டு ஒருவன் இறந்தால் அவனிடத்தில் பாசமாக இருக்கும் பொழுது அந்த ஆன்மா பாசம் கொண்டவருடைய உடலில் எப்படிச் சேர்கின்றது…? என்று இதையெல்லாம் எனக்குள் தெரியப்படுத்துகின்றார்.
1.எத்தனையோ கோடி உடல்களை மாற்றி மாற்றி மனிதனாக வந்தபின் நாம் எந்த நிலை பெறுகின்றோம்…?
2.ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் எந்த நிலை பெற வேண்டும்…? என்பதை
3.இப்படித்தான் ஒவ்வொன்றாகப் பல அனுபவங்களை எனக்குக் கொடுத்து உண்மைகளை எல்லாம் தெரியும்படி செய்தார் குருநாதர்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது

 

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது…” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்…” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை…” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்… “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன…?”

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.
4.இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்…?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு…” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.

இன்றைய மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று
2.வாழ்க்கை நிலையும் கூட உயர்வு பெற முடியும்.

இரகசியங்களை யாம் வெளிப்படுத்துவதன் உண்மையான நோக்கம்

இரகசியங்களை யாம் வெளிப்படுத்துவதன் உண்மையான நோக்கம்

 

1.எண்ணிலடங்காத பிறவிகள் எடுத்து எடுத்து இளைக்கலுற்றேன் இறைவா…! என்று கவி புனைந்தவனும்
2.ஏழு பிறப்பின் வினைகளும் அகல வேண்டும் என்றே உரைத்த வகையிலும்
3.எண்ணிலடங்காத பிறவிகளைப் பற்றியும் ஏழு பிறவிகளைப் பற்றியும் அந்த உண்மை நிலைகளை யாரப்பா அறிந்து கொண்டார்கள்…?

ஏனென்றால் இது விவாதம் கொண்டு உரையாட வேண்டிய விஷயம் அல்ல…! சிந்தனையில் கொள்ள வேண்டிய தனித்துவ நிலையப்பா இது.

உயிராத்மா தன் எண்ணம் கொண்டு பிறப்பிற்கு வரும் செயலில் தனக்குள் சேர்த்துக் கொண்ட அமிலத் தன்மைகளில் குணங்களால் அதனுள் எழுந்திட்ட வீரிய நிலைக்கொப்ப சுவாசம் கொண்டே தனக்கொத்த தன்மைகளில் பிறப்பிற்கு வருகின்றது.

மனிதனாகப் பிறப்பிற்கு வரும் உயிராத்மா பிறவி என்ற மாயையில் தன் உண்மை நிலை மறக்கப்பட்டே பிறந்து வருகின்றது.

பூமி சமைத்து வெளிப்படுத்தும் சக்திகளைச் சுவாசமாக்கி அதன் வழி அறிவின் ஞானம் பெற்று அனுபவமாகப் பெறும் செயல்களில் மனித எண்ணத்தின் செயல்பாடே…
1.தனக்குத் தேவையான காரியங்களைச் செயல்படுத்தும் அனைத்திலும்
2.“நான்…!” என்ற உணர்வைக் கூட்டிக் கொண்டே வினை செயல் புரிகின்றது.
3.எந்த எண்ணம் வலுவோ அந்த எண்ணத்தின் வட்டச் சுழற்சியில் முதிர்வு நிலை பெற்று
4.புவி ஈர்ப்பின் பிடிப்பில் தான் வலுக் கொண்டிட்ட குணங்களுக்கொப்ப “மீண்டும்…மீண்டும்…” பிறப்பிற்கு வருகின்றது.

பிறவி எடுத்திட்டதனின் பயன் என்ன..? என்ற வினா எழும்பினால்… தியான வழியில் அறிவின் ஞானம் உயர் ஞானமாக்கும் சிந்தனை கொண்டு… தெளிவு கொண்டிட முயற்சிக்கும் பக்குவத்தில் “அனைத்துமே சித்திக்குமப்பா…!”

ஞானத்திற்குத் தேவை ஒன்று உண்டு. அதுவே உயர் ஞானம் பெற்றிட முயலும் “முயற்சி…!”

1.தன் உயிராத்ம வலுவின் முலாமைக் கூட்டிக் கொண்டு
2.எண்ணத்தின் செயலுக்கு எது தேவையோ அதையே முயற்சித்து… அந்தப் பேரருளைக் கூட்டி
3.இதற்கு முன் எடுத்துக் கொண்ட வினைப் பயனை மாற்றிடும் நல்லாக்கத்தின் செயலே
4.மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால் அது திருவினையாக்கும்.

தெய்வத் தன்மை பெறுவதுவும் ஒரு பிறவியப்பா…!

1.என் (ஈஸ்வரபட்டர்) நிலைக்கு ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) உயர்ந்திட வேண்டும் என்பதற்காக
2.சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் கூறி வருகின்றேன்.
3.அது அனைத்தையும் நீங்கள் பெற்று “என்னையும் முந்திச் செல்லவே ஆசி கூறுகின்றேன்…!”

மனிதன் என்ற பிறப்பில் தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு தன்னுள் உள்ள இறைச் சக்தியை வலுக் கூட்டும் முயற்சிக்குச் சங்கட அலைகளை வாழும் வாழ்க்கை மோதலிலிருந்து அறவே விலக்கிடல் வேண்டும்.

எண்ணத்தில் கடுமையும் சொல்லில் உபதேசமும் உரைத்திடும் எத்தகைய சக்தி பெற்ற ஞானவான்கள் யாராக இருந்தாலும்
1.சத்தியம் என்ற நேர் பாதை காட்டிடும் உண்மை நிலைக்கு
2.தனக்குள் இருக்கும் எண்ணத்தின் கடுமையை மாற்றிக் கொண்டால்
3.அவர்களும் நல் நிலை பெற்றிட முடிந்திடும்.

ஆகவே எல்லா உயிர்களையும் சமமாக… கடவுளாக மதிக்கும் உயர் ஞானத் தன்மையின் வலுவைக் கூட்டிக் கொண்டால் இந்த மனிதப் பிறவியிலேயே தெய்வப் பிறவி நிலை பெற்று விடலாமப்பா…! எனது ஆசி உங்களுக்கு உறுதுணையாக இருக்குமப்பா…!

சாக்கடையில் அமரச் செய்து குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தது

சாக்கடையில் அமரச் செய்து குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தது

 

கடவுள் யார்…? உன் உயிரே உள் நின்று இயக்குகின்றது… நுகர்ந்த உணர்வே அது உள் நின்று கடவுளாக இயக்கும்… அது கடவுள் தான். உள் நின்று நுகர்ந்ததை எல்லாம் உணர்த்துவது “உயிர் தான் கடவுள்…”

உணர்ந்த பின்… ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை நீக்கத் தெரியவில்லை என்றால் “எது வலுவோ அதன் வழி தான் உன் வாழ்க்கை அமையும்…”

இன்றைய செயல் அடுத்த சரீரம். சாக்கடையில் அமரச் செய்து குருநாதர் இதைச் சொல்லிக் கொடுக்கின்றார்.
1.அவர் சொல்லச் சொல்ல அந்த சாக்கடை நாற்றமே பூராம் போய் விட்டது.
2.அந்தச் சாக்கடை நாற்றத்தைக் காணோம்… எங்கேயோ போகின்றது.

அப்போது தான் வான மண்டல உணர்வுகளை எடுத்து… ஒன்றை ஒன்று வென்று ஒன்றின் உணர்வுகள் ஒன்றுக்குள் ஆகி விஷத்தின் தன்மை தணிந்து ஞானத்தின் உணர்வுகள் ஒளியாகி எப்படி மாறுகின்றது…? என்று உணர்த்துகின்றார்.

வான மண்டலத்தில் உள்ளது எல்லாம் இந்த உடலுக்குள் உண்டு. இந்தப் பிரபஞ்சம் எப்படியோ உயிர் இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி உள்ளது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்தெந்த உறுப்புகளின் வலுப்பெற்று தீமைகளை நீக்கும் சக்தியாகப் பெற்றதோ… அந்த வடிகட்டும் தன்மை நமக்குள் இல்லை என்றால் மீண்டும் கீழான நிலைகளுக்குச் சென்று விடுவோம்.
1.அதற்குத்தான் அந்த குரு பலம் வேண்டும் என்று சொல்வது
2.அருள் உணர்வுகளைச் சேர்த்து. அதன் துணை கொண்டு தான் தீமைகளை வடிகட்டுதல் வேண்டும்.

உயிரின் வலு கொண்டு.. குரு என்ற நிலைகள் கொண்டு அருள் ஒளியைக் குருவாக்கினால் அது குரு என்ற நிலைகள் கொண்டு இருளை நீக்கிப் பொருளைக் காணும் அந்த சக்தியை நீ பெறுவாய்.

அதே சமயத்தில் குருநாதர் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டுவார்…!

ஏன் சாமி தட்டுகிறீர்கள் என்று கேட்டேன்..?

வேறு எவன்டா கேட்டான்…? நீ தான்டா கேட்கின்றாய்…! என்றார். ஏன் தட்டுகின்றேன்…? என்று கேட்கின்றாய்.
1.நான் டெலிஃபோன் செய்கின்றேன்… ஆண்டவனுக்குத் தந்தி கொடுக்கின்றேன்…!
2.இங்கே தட்டுகின்றேன்… காதில் படுகிறது உனக்குள் ஒளியாகின்றது,
3.அந்த உணர்வு இருளை நீக்குகின்றது என்று சொல்வார்.

போஸ்டில் தட்டுவதற்கு இப்படித்தான் விளக்கம் கொடுக்கின்றார்.

நாம் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நஞ்சினை நம் உடல் பிரித்து அதை மலமாக மாற்றுகின்றது. இது எப்படி வந்தது…?

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அத்தகைய சக்தி பெற்ற பன்றியின் உடலை உருவாக்கியது இந்த உயிர். பன்றியாகப் பிறந்தபின் தீமையைச் சுத்தமாகவே நீக்கிவிட்டு தீமை நீக்கக்கூடிய வல்லமை பெற்ற மனித உடலை உருவாக்கியது.

மனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா. அதை நாம் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்…?

ஒருவர் திட்டுகிறார் என்றால்… திட்டியவனை விடுவேனா…? நான் என்ன செய்கிறேன் பார்…! என்று சொன்னால்
1.இந்த உணர்வின் தன்மை நம் ஆன்மாவிலே வலு சேர்ந்துவிடும்
2.வலு சேர்ந்த பின் தீமைகளாக உருவாகிவிடும்.

ஆகவே தீமைகளைப் பிளக்கக்கூடிய ஒரு சக்தி வேண்டுமல்லவா. அதற்குத்தான் குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வை “ஆழமாகப் பதிவு செய்தார்…”
1.இதை நினைவு கொள்… அதிலிருந்து அருள் ஒளிகள் வருகின்றது
2.அதை நீ எப்பொழுதெல்லாம் நினைக்கின்றாயோ அதை வைத்துத் தீமைகளை நீக்கப் பழகிக் கொள் என்றார்.

நான் வந்து துடைக்க முடியாது… நீ தான் துடைக்க வேண்டும் நான் இங்கே வாழ்ந்த நிலையில் தீமைகளை நீக்கி விட்டு நான் சென்று விடுகின்றேன். நாளைக்கு வரக்கூடிய தீமைகளை யார் துடைப்பது…? என்று உடலோடு இருக்கும் பொழுது குருநாதர் கேட்கின்றார்.

இந்த உடலில் நான் சிறிது நாள் வாழுகின்றேன்…. இந்த உடல் எனக்குச் சதம் இல்லையே.
1,உயிரோடு ஒன்றி சதமாக இருப்பதற்கு நான் போகின்றேன்
2.நீ இங்கே இருந்து என்ன செய்யப் போகின்றாய்…?
3.நான் அங்கிருந்து வந்து உன் தீமையைத் துடைப்பேனா…?
4.அந்த உணர்வுகள் விளைந்தது நான் அழிவதில்லை
5.இருளை ஒளியாக்கினேன்… அந்த ஒளியின் உணர்வு இங்கே பரவி உள்ளது… அதை நீ எடுக்கப் பழகிக் கொள்.

குருநாதர் அவர் வழிக்கு என்னைத் திருப்பிய விதம்

குருநாதர் அவர் வழிக்கு என்னைத் திருப்பிய விதம்

 

இரண்டு பேர் இருக்கின்றார்கள் அங்கே கிழங்கு இருக்கின்றது… இதைச் சாப்பிட்டால் “நன்றாக இருக்கும்…!” என்று ஒருவர் அடுத்தவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அங்கே வருகின்றார். ஐய்யய்யோ…! இந்தக் கிழங்கை அன்றைக்கு ஒருவர் சாப்பிட்டார்… அதனால் அவருக்கு வயிற்று வலியே வந்து விட்டது…! என்று சொல்கின்றார்.

ஆனால் அவர் சாப்பிட்ட நேரம் எது…?

1.கிழங்கு… சத்து அதிகமுள்ளது
2.உடலில் நோய் இருக்கும் போது… ஜீரணிக்க முடியாத அந்த நேரத்தில் கிழங்கைச் சாப்பிடும் பொழுது வயிற்று வலியானது.
3.அன்றைக்கு அவர் பட்ட அவஸ்தை அதிகமாகி விட்டது.
4.அந்த உணர்வை இங்கே ஊட்டியவுடன் என்ன செய்யும்…?

கிழங்கைப் பார்த்தவுடனே இவருக்கும் இங்கே அதே பலவீனமாகிவிடும். சாப்பிட்டால் அடுத்து என்ன செய்யும்…? அதே உணர்வுகள் அந்த உமிழ் நீரைக் கூட்டி இயக்கிவிடும்… வயிற்று வலியாகிவிடும்.

அந்த ஆள் சொன்னார்.. சொன்னது சரியாகப் போய்விட்டது என்று நாம் சொல்ல ஆரம்பிப்போம். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

1.உணர்வின் இயக்கங்கள்… நம் உயிர் எப்படி இயக்குகின்றது…?
2.எதை எண்ணுகின்றோமோ அதுவே… அந்த எண்ணமே நம்மை ஆட்சி புரிகின்றது.
3.நன்றாக யோசனை செய்து பாருங்கள்… சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் இது தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்று தான் இங்கே சாக்கடை உபதேசமாகக் கொடுக்கப்படும் போது அந்தப் பன்றி வந்த பின் சாக்கடைக்குள் இருக்கும் நல்லதை அது எப்படி நுகர்ந்து சாப்பிடுகின்றது பார்த்தாயா…? என்று கேட்கிறார் குருநாதர்

ஆனால் குருநாதருடன் சுற்றிக் கொண்டிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் நான் வேலைக்கும் சரியாகச் செல்வதில்லை. வீட்டில் என் மனைவி அப்போது தான் நோயிலிருந்து மீண்டு எழுந்து வந்திருக்கிறது.

ஏனென்றால் இயற்கையிலேயே ஒவ்வொரு சந்தர்ப்பமும் மனிதனுக்கு எப்படி எல்லாம் வருகின்றது என்று தெரிந்து கொள்வதற்கே இதைச் சொல்கிறேன்.

குருநாதர் என் மனைவியைக் காப்பாற்றினார் என்ற நிலையில்
1.வாக்கு வாங்கியவுடன் நான் அவரிடம் போய்ச் சிக்கிக் கொள்கின்றேன்.
2.சாக்கடை அருகே அமரச் செய்து இத்தனை வேஷத்தையும் அங்கே போடச் சொல்கின்றார் குருநாதர்.

சாக்கடை அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்கின்றார்கள். நையினாவிற்குப் (ஞானகுரு) பைத்தியம் பிடித்து விட்டது என்கிறார்கள்.

காதில் இதை எல்லாம் கேட்டால் என் மனம் எப்படி இருக்கும்…? ஆனால்
1.என் மனதை உறுதியாக்குவதற்காக வேண்டி
2.அந்த இடத்திலே குருநாதர் பரீட்சை வைக்கின்றார்.

மனைவியைக் காப்பாற்றிய உடன் நான் சொல்வதைச் செய்கிறாயா…? என்றார்.

நான் செய்கிறேன் என்று சொன்னேன் (மனைவியை அவர் எழுப்பி விட்டதால்)

காரணம் டி.பி. நோயால் என் மனைவி அவதிப்பட்ட போது டாக்டர்கள் எல்லாம் கைவிட்ட நிலை. குருநாதர் வந்த பின் என் மனைவி பிழைத்து எழுந்து விட்டது. அப்போது என்னிடம் வாக்கு வாங்குகின்றார்.

என்னை நம்புகின்றாய் அல்லவா…! நம்புகிறேன் என்று சொன்னேன் சொல்வதைக் கேட்பாய் அல்லவா…! கேட்கிறேன் என்று சொன்னேன். இதை எல்லாம் கொடுத்த பின் சாக்கடை அருகே உட்கார வைத்து “என்னை வாட்டுகிறார்… வறுத்து எடுக்கின்றார்…”

எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள்… என் மாமியார் காதிற்கும் செய்தி போகிறது.

“தொலைந்து போகிறவன்…” என் பிள்ளையை இங்கே படுக்க வைத்துவிட்டுப் பைத்தியத்தோடு இவன் சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்று என்னைச் சாடிப் பேசுகின்றது.

எப்படி இருக்கும் பாருங்கள்…? இயற்கையின் உணர்வுகள் நம்மை எப்படி எல்லாம் இயக்குகின்றது…? என்று அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்கு கொடுக்கின்றார் குருநாதர்.

அப்போது தான் கேட்கிறார்…. கடவுளின் அவதாரம் யார் தெரியுமாடா…? வராகன் (பன்றி) என்று சொன்னார்.

வராகன் கடவுள்… என்று சொன்னால் அவதாரங்கள் பற்றிய கதைகளை எல்லாம் நான் அதிகமாகப் படித்தவன் இல்லையே… எனக்குத் தெரியாது.

வராகன்… அது தான்டா கடவுள்…! என்றார் குருநாதர்.

என்ன சாமி…? பன்றியைப் பார்த்துக் கடவுள் என்று சொல்கின்றீர்கள் சாக்கடைக்குள் சுற்றுகிறது… கடவுள் இப்படியா இருக்கும்…! என்று குருநாதரிடம் நான் கேட்கின்றேன்.

பன்றி என்ன செய்யும் தெரியுமாடா என்று கேட்டார்…? உன் காபியிலே சாக்கடையை அள்ளிப் போட்டதும் ஓய்… என்று நீ வாந்தி எடுத்தாய். ஆனால் பன்றி சாக்கடைக்குள் உள்ள நாற்றத்தைப் பிளக்கின்றது. நாற்றத்தைப் பிளந்து விட்டு நல்லதையே அது நுகருகின்றது.
1.தீமையை நீக்கி நல்லதை உருவாக்கக்கூடிய நிலைகள் வராகன் என்று
2.பன்றித் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டுகின்றான் ஞானி…!
3.மனிதர்கள் நாம் புரிந்து கொள்வதற்கு.

கண்களிலே பார்க்கிறோம் அல்லவா. குழந்தை வெளிக்குச் சென்றால் பன்றி வேகமாக அங்கே செல்லும் முட்டித் தள்ளிவிட்டு அதற்குள் ஜீரணமாகாத பருப்பு இருந்தால் அதைச் சாப்பிடும்.

ஆனால் நன்றாக ஜீரணித்து மாவாக வெளியில் போயிருந்தால் அதை நுகர்ந்து பார்த்து… விட்டு விட்டு வந்துவிடுகிறது. ஆனால் ஜீரணிக்காத நிலையாகி அதில் பருப்பு இருந்தால் அதைக் கிளைந்து எடுத்துச் சாப்பிடுகின்றது.

இத்தனையும் நான் பார்க்க வேண்டும்.. குருநாதர் கட்டாயப்படுத்தி இதை எல்லாம் பார்க்க வைக்கின்றார். இப்படி எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…? என்னை அப்படித்தான் அந்தந்த இடங்களுக்கு குருநாதர் இழுத்துக் கொண்டு செல்கிறார்.

எல்லாரும் இதைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். ஆனால் இதுதான்டா கடவுள் என்று சொல்கின்றார். அந்தப் பன்றி தான் உன்னை மனிதனாக உருவாக்கியது என்று சொல்கின்றார். அதற்கு என்ன சொல்வது…?

பன்றி தான் உங்களை மனிதனாக உருவாக்கியது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா…!

பன்றி தான்டா உன்னை மனிதனாக உருவாக்கியது… வேறு யாருடா உன்னை உருவாக்கியது…? அவன் தான்டா கடவுளின் அவதாரம்…! என்று சொல்கின்றார்.

குருநாதர் சொல்லச் சொல்ல நான் மறுக்க… அடுத்தாற்படி எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் வந்து விட்டது. கன்னா…பின்னா… என்று என்னைத் திட்டுகின்றார்.

டேய் தெலுங்கு இராஜ்யம்… உன்னைக் கொன்றுவிடுவேன்டா…! என்று சொல்கின்றார். என்னை எதிர்க்கின்றாயா…? அந்த அகத்தை அடக்கி விடுவேன்டா என்றார்.

ஏனென்றால் நாம் இந்த அறியாமையில் இருக்கக்கூடிய அந்த அகத்தை அழித்து விடுவேன் என்று அவர் சொல்கிறார்.

தெலுங்கு இராஜ்யத்தைத் திட்டுவார்… என்னைத் திட்ட மாட்டார். நான் தெலுங்கு பேசுகின்றேன் அல்லவா… அந்தத் தெலுங்கு இராஜ்யத்தை அப்படிச் சொல்கிறார் குருநாதர்.

தெலுங்கு இராஜ்யம் என்றால் வெங்கடாஜலபதி படுத்து இருக்கின்றார் அவருக்குச் செல்வம் தான் தேவை என்று இங்கிருந்து கொண்டு போய்க் கொட்டுகின்றார்கள்.

1.உனக்கு வேண்டியது மரியாதையும் செல்வமும் தான்
2.மரியாதையை வைத்துச் செல்வத்தை நீ தேடுகின்றாய் அதிலே இருக்கின்றதடா தெலுங்கு இராஜ்யம்.
3.பார்… உன் அகந்தையைக் கொன்று விடுவேன் என்று சொல்கின்றார்… “மறைமுகமாகச் சொல்கிறார்…”

கொன்று விடுவேன் என்று அவர் சொன்னவுடன் நான் திருப்பிக் கேட்டேன். ஏன் சாமி…? கொன்று விட்டால் உங்களுடைய வார்த்தையை நான் எப்படிக் கேட்பேன்…? என்றேன்.

உன்னை யாருடா கொல்வேன் என்று சொன்னது…! அந்தத் தெலுங்கு இராஜ்யம் அவனைத் தான் நான் கொல்வேன் என்று சொல்கிறார்.
1.ஒவ்வொன்றுக்கும் அழுத்தங்கள் கொடுத்து என்னை அவர் வழியில் அது கேட்கும்படி செய்து பல அர்த்தங்களைக் காட்டுகின்றார்.
2.அப்படி தெரிந்து வந்து தான் உங்களிடம் இதை எல்லாம் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

நாம் பிடிக்க வேண்டிய “பித்து”

நாம் பிடிக்க வேண்டிய “பித்து”

 

அன்று குருநாதர் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டி… ஒலிகளை எழுப்பி அது எப்படி வருகிறது…? எதற்காக அதைச் செய்கிறேன்…? என்று எனக்கு உணர்த்தினார்.

போஸ்டில் நான் கல்லைத் தட்டுவதைப் பார்த்து என்னைப் பித்தன் என்று சொல்கின்றார்கள். ஆனால் பித்தன் யார்…? என்று நீ சிந்தித்துப் பார் என்ற நிலையைத் தெளிவாக்கினார்.

ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
1.எண்ணியபடி அந்தக் காரியம் நடக்கவில்லை… அதைத் தடைப்படுத்துகிறார்கள் என்றால் எத்தனாகவே மாறிவிடுகின்றோம்… எதிரிகளாக மாற்றுகின்றோம்.
2.உன்னால் என்ன செய்ய முடியுமோ… செய்து பார்…! என்று வீம்பின் தன்மை பேசுகின்றோம்…!

அப்பொழுது எத்தனாகவே மாறிவிடுகின்றோம்.

அங்கே அப்படி மாற்றியது யார்…? சந்தர்ப்பம் தான் அப்படி மாற்றுகின்றது
1.சிந்திக்கின்றோம்… தவறு செய்யக்கூடாது என்றும் எண்ணுகின்றோம்.
2.ஆனால் சந்தர்ப்பம் நம்மைச் செய்ய வைக்கின்றது… அதிலிருந்து மீள வேண்டும் அல்லவா.

அதற்குத்தான் அதிகாலை துருவ தியானத்தின் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளி… சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

அங்கே இணைத்து இந்த உடலில் பெற்ற நஞ்சுகள் கரைய வேண்டும் என்று செயல்படுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் கரைக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் எல்லோரிடமும் அன்புடன் பண்புடன் தான் நாம் பழகி இருக்கின்றோம்
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களை யார் யார்…? என்று நாம் தனித்து எண்ண வேண்டியதில்லை.
2.அவர்களுடன் ஒரு நாள் பழகி இருந்தாலும் அவருடைய உணர்வு நம்முடன் கலந்து தான் உள்ளது.
3.இதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களையும் நாம் விண் செலுத்த முடியும்.

குருநாதர் இதைத்தான் எனக்குக் காட்டினார்

அறியாது செய்த தவறினால் நோயின் தன்மை ஆகி இறந்தால் அவர்கள் மீண்டும் பிறவிக்கு இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி விண் செலுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுக் கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

அந்த உடலில் உருவான இருள்களை அங்கே கரைக்கப்படும் போது சூரியனின் காந்த சக்தியினால் கவரப்பட்டால்… அதன் உணர்வை மாற்றி… மாற்றுப் பொருளாக உருமாற்றி விடுகின்றது.

இது போன்ற நிலைகளை நாம் செய்து பழகினோம் என்றால் “கூட்டுப் பிரார்த்தனை” என்பது இதுதான்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து “மொத்தமாகவே…” எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள்… சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து… பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியாத ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் விண் செலுத்த வேண்டும்.

உடலுடன் இருக்கக்கூடிய நண்பனும் நாமும் ஒருவருக்கொருவர் அன்புடன் கலந்து உறவாடினால் “எனக்கு நன்மை செய்தான்” என்று எண்ணும் போது விக்கலாகிறது. “தீமை செய்தான் பாவி…!” என்று எண்ணினால் அங்கே புரையோடுகிறது.

இந்த மனித உடலையே இப்படி இயக்கிடும் நிலை வரும் பொழுது மனிதனுடன் பழகி இருக்கும் உணர்வு கொண்டு அந்த உயிரான்மாக்களை அங்கே விண் செலுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளிச் சரீரம் பெறும்.

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து விளைகின்றது… அந்த உணர்வுகளும் இந்தப் பூமியில் பரவுகின்றது

அதன் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினால் அவர் வாழ்ந்த காலத்தில் எத்தனை கஷ்டப்பட்டாரோ அதையெல்லாம் நீக்கி அவரால் நமக்குள் உருவான பரம்பரை நோய்களை… பரம்பரை குணங்களை… மாற்றி நாமும் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

இதைத்தான் நமது குருநாதர் அருள் வழியாகக் காட்டினார்.

நான் தட்டியது வெறும் போஸ்ட் அல்ல…!
1.அங்கே தட்டி “என் உயிரான ஈசனிடம் வேண்டினேன்”
2.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று எண்ணினேன்
3.அந்தப் பித்து பிடித்து அதைச் செய்தேன்.

ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் கடவுளே.. அவன் தான் அந்த உடலை ஆளுகின்றான். உயிர் எப்படி ஒளியாக இருந்து இந்த உலகை அறிவிக்கின்றதோ “அதன் உணர்வு நான் பெற வேண்டும் என்று இந்தப் பித்து தான் என்னிடம் உள்ளது…” என்றார் குருநாதர்.

அதைத் தான் நானும் (ஞானகுரு) இன்று உங்களுக்குச் சொல்வது

எனது குருநாதர் சொன்னது போல நானும் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உணர்வுகள் ஒளியாக மாற வேண்டும்… உங்கள் உடலில் அறியாது சேர்ந்து தீமைகள் அகல வேண்டும்… அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று
1.என் குரு வழியில் “நானும் பித்தனாக இருக்கின்றேன்…”
2.நீங்கள் அந்த அருள் ஒளி பெற வேண்டும் அந்த ஏக்கத்தில் இருந்தாலே போதுமானது

இப்படி நாம் ஒவ்வொருவரும் அந்த அருளைப் பெற்றால் இந்தப் பூமிக்குள் வரும் இருள்களை நீக்க முடியும்.
1.அருள் வழி நாம் வாழ முடியும்
2.மற்றவரை நாம் வாழ வைக்கவும் முடியும்.

ஆஅகையினால் உங்கள் உயிரான ஈசனை மதித்துப் பழகுங்கள் உடலை ஆலயமாக உங்கள் மதியுங்கள். உங்களை உருவாக்கிய தாய் தந்தையைக் கடவுளாக மதியுங்கள். தெய்வமாகக் காத்த தாய் தந்தையரை மதித்து நடங்கள். நம்மைக் காத்த முதல் தெய்வங்களும் அவர்கள் தான்.

நமக்கு நல் வழி காட்டிய அந்த நல் உணர்வுகளைப் பதிவாக்கிக் குருவாக மதியுங்கள். நல்ல உணர்வை எப்போதுமே நம் தாய் நமக்குள் பதிவாக்கியிருக்கின்றது. ஆகவே… எந்த நிமிடத்திலும்
1.அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த நல்ல உணர்வுகளை எளிதில் பெற முடியும்… நமக்குள் அறியாது சேர்ந்த இருளை நீக்க முடியும்
3.அந்தப் பேரருளைப் பெற முடியும்… நாம் பேரொளியாக மாற முடியும்.

தியானத்தில் இருந்தாலும் குரு வழியில் ஆயுள் மெம்பராக நாம் சேர வேண்டும்

தியானத்தில் இருந்தாலும் குரு வழியில் ஆயுள் மெம்பராக நாம் சேர வேண்டும்

உடல் ஆசையை (முதன்மையாக) வைத்து “ரெக்ரியேசன் கிளப்” ( என்று அதில் ஆயுள் மெம்பராகச் சேர்வார்கள். தண்ணீ குடிப்பது (மது) போன்று எத்தனையோ பல தீய பழக்க வழக்கங்களை வைத்து அதிலே நாங்கள் ஒவ்வொருவரும் மெம்பராக இருக்கிறோம் என்கிறார்கள்.

வியாபாரமும் மற்றதுகளையும் அங்கே பேசுவார்கள். ஆனால் அதிலே ஏதாவது நஷ்டமாகிவிட்டால் என்ன ஆகும்…?

தவறான வழியில் சென்று… “எனக்குக் கெடுதல் செய்தான்… எனக்குத் துரோகம் செய்தான்…” என்று ஒருவருக்கொருவர் பகைமைகளை உருவாக்கி வெறுப்பையும் வேதனையையும் (அந்த ஆயுள் மெம்பர்கள்) வளர்த்துக் கொள்வார்கள்.

வேதனையை வளர்த்துக் கடைசியில் உடலை விட்டுப் பிரிந்த பின் ஆவியாக யார் கெடுதல் செய்தானோ அந்த உடலுக்குள் சென்று அவனையும் வீழ்த்தும்.. அதற்குப் பின் நாயோ நரியோ பாம்போ தேளோ அத்தகைய உடலைத் தான் பெற முடியும்.

இத்தகைய ஆயுள் மெம்பர் நமக்குத் தேவையில்லை…!

1.எப்பொழுதும் குருவுடன் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) நாம் இணைந்தே வாழ வேண்டும் என்ற நிலையில்
2.குரு காட்டிய அந்த அருள் வழியைப் பின்பற்றி
3.இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் உடலுக்குள் உட்புகுந்த தீமைகள் இயக்காது தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆயுள் கால மெம்பர்கள் இதை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும்.

1.குருவுடன் ஆயுள் கால மெம்பராக நான் (ஞானகுரு) இருக்கின்றேன்
2.அவர் எதையெல்லாம் பெற்றாரோ அவர் வழியினைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
3.குரு எனக்கு எதையெல்லாம் போதித்தாரோ… எவ்வாறு எனக்குள் அதைப் பதிவு செய்தாரோ.. அதைக் கடைப்பிடித்து வருகின்றேன்.

குருவுடன் இணைந்து ஆயுள் மெம்பராக இருக்கின்றேன் நீங்களும் என்னைப் போல் அவருடன் இணைந்து ஆயுள் மெம்பராக இணைதல் வேண்டும்.

குடும்பத்துடன் தான் நாங்கள் குருவுடன் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தோம். நீங்களும் குடும்பத்துடன் குருவுடன் இணைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழிகளை குறைந்த காலமாவது உபதேசங்களைக் கேட்டிருப்பீர்கள். குருவின் அருள் வழியைக் கடைப்பிடிப்பதை நீங்கள் ஒரு கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மெய் ஞானத் திருச்சபையின் அங்கத்தினர்களாக நாம் இருக்கின்றோம். நம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை நீக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாக வேண்டும் அதற்குத் தான் அருள் ஞானச் சக்கரத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

மாமாகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு… பேரருள் பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் அதில் ஆயுள் மெம்பராக நாம் சேர வேண்டும்.

அருள் ஞானச் சக்கரத்தைப் பார்க்கும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதன் பின் உங்களுக்கு எதுவெல்லாம் நல்லதாக வேண்டுமோ…
1.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்; நண்பர்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.நோய்கள் நீங்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்;
3.தொழில் செய்யும் இடத்தில் குற்றம் குறைகள் நீங்க வேண்டும்;
4.துருவ நட்சத்திரத்தின் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்;
5.பொருளறிந்து செயல்படும் திறன் எல்லோரும் பெற வேண்டும்
6.உண்மையை உணர்ந்து… தெளிந்த நிலை எல்லோரும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
7.புருவ மத்தியில் உயிரை வேண்டி சக்கரத்திற்கு முன் இப்படி எண்ணும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தி என் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று தியானித்தால் நோய் நீங்கும்.

நோய் நீக்கும் சக்தியை எடுத்து நமக்குள் விளைய வைத்து அதன் வழி செயல்பட்டால் எல்லாம் நல்லதாகும். உங்களால் அடுத்தவருடைய நோய் போகும்… ஆனால் அவருடைய நோய் உங்களுக்கு வராது.

1.ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக “அருள் ஞானச் சக்கரம்” கொடுக்கின்றோம்.
2.உலகில் படர்ந்து கொண்டிருக்கக்கூடிய நச்சுத்தன்மையிலிருந்து உங்களை மீட்டிடும் சக்தியாக வரும்.

ஆகவே துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக என்றுமே நாம் இணைந்து இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதை ஒரு தலையாகக் கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து அதிலே நாம் ஆயுள் மெம்பராகச் சேரும் போது “நம்முடைய ஆயுள்” (வாழ்க்கை) அங்கே செல்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் பவர்”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் பவர்”

 

திடீரென்று ஒருவர் உடல் நலக் குறைவால் அவதிப்படுகிறார் என்றால் அவரைச் சீராக்க
1.இந்தத் தியான வழியில் உள்ளோர் ஆத்ம சுத்தி செய்து குருவினுடைய உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால்
2.நோயாளியின் உணர்வுக்கும் நமக்கும் “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்ற அழுத்தத்தை உணர்த்தும்… அந்த அறிவாக இயக்கும்
3.குரு வழியில் இதை முறைப்படி செய்தால் நம்முடைய எண்ணத்தில் அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று காட்டும்.

வைத்தியத்திற்கு என்று அந்த நோயாளியை டாக்டரிடம் அனுப்பினாலும்
1.அந்த நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது டாக்டருக்கு உண்மையான நிலைகள் தெரிய வர வேண்டும் என்று
2.நாம் இங்கிருந்து பிரார்த்தனை செய்து இந்த உணர்வைப் பாய்ச்சினோம் என்றால்
3.இதே அலைகள் அங்கே (டாக்டருக்கு) உண்மையை உணர்த்தி
4.நோய்க்குண்டான மருந்தை உடனடியாகக் கொடுத்து அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

அதாவது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த டாக்டர் கொடுக்கக்கூடிய மருந்துடன் ஊடுருவிய பின் அந்த இயக்கத்தைச் சீராக்குகின்றது. உங்கள் எண்ண வலு கொண்டு சமாளிக்க முடியும்… நோயாளியைக் காக்க முடியும்.

அதற்குப் பதில்
1.இப்படி ஆகிவிட்டதே… அவருக்கு என்ன ஆகுமோ…? என்று பதறி இருந்தால் இந்த நிலை வராது
2.மருத்துவரைத்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டு வர வேண்டும்
3.டாக்டரைக் காட்டிலும் குருவினுடைய அருள் உணர்வுகள் ஊடுருவி அந்த நோயாளியை நாம் சரியான முறையில் காக்க முடியும்.

ஆகவே… சந்தர்ப்பத்தில் சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் நலக்குறைவோ இது போன்ற நிலை ஏற்பட்டால் சரியான முறையில் தியானம் எடுத்திருந்தால் “அதற்குண்டான ஞானமும்… அது எப்படி வழி நடத்த வேண்டும்…?” என்ற சிந்தனையும் வரும்.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டால் “சஞ்சலம்… சலனம்…” இதையெல்லாம் நீக்கிவிடும்.

எது உண்மையின் உணர்வோ அதை உணர்ந்து அதற்குத்தக்க நம்முடைய எண்ணங்கள் சீராகும்… அதற்குத்தக்க நல்ல செயல்களைச் செயல்படுத்த முடியும்.

1.ஒரு சிலருக்கு என்ன ஏது…? என்று சொல்ல முடியாது
2.அப்படி இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது
2.எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! என்ற உணர்வின் தன்மையாக அந்த நோயாளிக்குள் ஊடுருவி இயக்கச் சக்தியாக மாற்றும்
3.துடிப்பு நின்றாலும் கூட இருதயத்திற்கு மேலே கையை வைத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சினால்
4.மீண்டும் துடிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறு மூளை நரம்புகளில் அது பழுதானால் அதை ஒன்றும் செய்ய முடியாது.

திடீரென்று எதிர்பாராத நிலையாக இருந்தால் அதை இயக்க வைக்க முடியும். துடிப்புகளில் ஏதாவது பிசாகனால் கையை வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சினோம் என்றால் அது சீராக இயங்கும்.

ஆக ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனால் எதுவாக இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் வலுவான நிலைகள் எண்ணி
2.நமது பார்வையை செலுத்தி இந்த உணர்வுடன் கையை அங்கே வைத்தால் உடனடியாக வேலை செய்யும்
3.நோயாளியால் பேச முடியாது என்று இருந்தாலும் இவ்வாறு செய்ய முடியும்.

இவ்வாறு தியானத்தில் நாம் வலிமை பெற்று எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்த வேண்டும்.

யார் உடல் நலக் குறைவாக இருக்கின்றார்களோ இந்த உணர்வலைகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களையும் சீராக்க முடியும் அருள் உணர்வுகளை அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆகவே நம்முடைய மன உறுதி… நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் நோயிலிருந்து விடுபடச் செய்ய முடியும்… அதை நிரூபிக்க முடியும் எல்லோருக்குமே இந்த சந்தர்ப்பங்கள் உண்டு…!

தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் இது போன்ற நோய்களை மாற்றி அமைக்க முடியும் ஆது போல் ஒவ்வொரு காரியத்திற்கும் இதைச் செயல்படுத்தலாம்.

உதாரணமாக நாம் வேலை பார்க்கும் ஆபீசில் குறை இருந்தாலும்
1.அந்தக் குறையை நமக்குள் விடாதபடி ஆத்ம சுத்தி செய்துவிட்டு
2.மேலதிகாரிக்குச் சிந்திக்கும் ஆற்றலும் நம் மீது நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வுகள் அங்கே ஊடுருவும்.

ஆனால் நாம் தவறு செய்துவிட்டு மேலதிகாரி நம் வழிக்கு வர வேண்டும் என்றால் அது நடக்காத காரியம்…! நமக்குள் தப்பில்லாத நிலைகள் கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உண்மை என்று தெரிந்து கொண்ட பின் ஆத்ம சுத்தி செய்து
1.மேலதிகாரி என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப “எனக்கு உதவி செய்ய வேண்டும்…” என்று எண்ணினால் நிச்சயம் நடக்கும்.

தவறு செய்துவிட்டு தவறுக்கு ரைட் மார்க் கொடுக்க வேண்டும் என்றால் அது தவறான நிலை.

பல காலம் மறைத்து வைத்த உண்மை…!

பல காலம் மறைத்து வைத்த உண்மை…!

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய நிலைகள்…
1.நான் சொன்ன முறைப்படி நீ அருள் ஞானிகள் உணர்வுகளை உனக்குள் எடுத்து அதை விளைய வைத்து
2அந்த உணர்வின் வித்தை மற்றவர்களுக்குள் நீ பதிவு செய்ய வேண்டும்.
3.யாரெல்லாம் கவர்ந்து அதைப் பதிவாக்குகின்றார்களோ… விளையும் பருவத்தை அவர்களுக்குள் ஊட்டி
4.ஞானியின் வித்து அங்கே விளையும்படி என்று நீ உருவாக்குகின்றாயோ
5.அந்த உணர்வின் துணை கொண்டே அவர்களுக்குள் “என்னை நீ காண முடியும்…!” என்றார்.

உங்களை எப்போது எங்கே பார்ப்பது…? என்று நான் (ஞானகுரு) வினா அவரிடம் எழுப்பும் போதெல்லாம்
1.எங்கும் எதிலும் என்னை நீ பார்க்கலாம்…
2.நான் கொடுத்த அருள் உணர்வின் தன்மை பிறரில் இயக்கச் செய்து
3.அதன் வழி தீமைகள் அகன்று எங்கெல்லாம் அது மகிழ்ந்த உணர்வாக வருகின்றதோ
4.அங்கே நான் வருவேன்…! என்றார் குருநாதர்.

குருநாதர் காட்டிய வழியில் யாம் உபதேசிப்பதை நினைவு கொண்டு யாரெல்லாம் அதன் படி செயல்படுத்துகின்றீர்களோ
1.உங்கள் பார்வையால் பிறருடைய கஷ்டங்களும் நோய்களும் என்று அது நீங்குகின்றதோ
2.நான் பார்த்தேன்… சொன்னேன்… அதன் வழி கடைப்பிடித்தார்கள்…
3.இப்போது நாங்கள் நலமாக இருக்கின்றோம் என்று மற்றவர் எப்பொழுது சொல்லுகின்றனரோ
4.அதிலே தான் என் குருவை உங்களில் நான் காண முடியும்.

மணிக்கணக்காக உங்களிடம் நான் பேசினாலும் உங்களில்… குருவைக் காணும் நிலையாக… உங்கள் மகிழ்ச்சியால் பேரானந்த நிலை பெறும் பாக்கியசாலியாக நான் ஆகின்றேன்.

1.உங்களிடம் இருந்து தான் அவரின் சக்தியை என்னைப் பெறும்படி செய்தாரே தவிர
2.தனித்து “நான் மகான் என்று காண்பித்து… மற்றதை அடக்கு…!” என்று அவர் சொல்லவில்லை.

ஆகவே குருநாதர் உணர்த்தியபடி ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம் என்றால்… உண்மையின் உணர்வின் தன்மை கொண்டு மனிதனில் முழுமை அடைந்து… உயிருடன் ஒன்றி என்றும் நிலையான ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இதைத் தெளிந்து கொள்ளுங்கள்… தெரிந்து கொள்ளுங்கள்… அறிந்து கொள்ளுங்கள்…!
1.பல காலம் இதை மறைத்து வைத்திருந்தேன்.
2.விஞ்ஞான அழிவுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்த உண்மையினுடைய நிலைகளை வெளிப்படுத்துகின்றேன்.

இதைக் கேட்டு உணர்ந்தோர் உங்களை அறியாத வந்த தீமைகள் நீங்க வேண்டும். தீமை உங்களை அணுகாது தடுக்கும் சக்தி பெற வேண்டும்.

1.தீமையை நீக்கிட்ட உங்கள் சொல்லின் உணர்வுகள் பிறரின் செவிகளில் உந்தப்பட்டு
2.உங்களை அவர்கள் உற்றுப் பார்க்கும் போது தீமையை அகற்றும் உணர்வுகள் அவர்களுக்குள் புகுந்து
3.அவரில் அறியாது சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்…
4.அந்தச் சக்தி எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே தான் இதை உபதேசிக்கின்றேன்.

உபதேசிக்கும் பொழுதெல்லாம் குருவின் நினைவு எனக்குள் வருகின்றது… அவரின் ஆற்றல் எனக்குள் பெருகுகின்றது… அவர் உணர்வின் அலைகள் இங்கே படர்கின்றது… கேட்டுணர்ந்தோர் உங்கள் உடலிலும் பதிவாகின்றது.

பதிந்த குருவின் ஆற்றல் உங்களுக்குள் நிச்சயம் செயல்படும்…! என்ற நம்பிக்கையிலே உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… மெய் உணர்வின் ஆற்றல் உங்களில் விளைய வேண்டும் என்ற ஆசையில் இதைச் செயல்படுத்துகின்றேன்.

அதன் வழி உங்களுக்குள் மகிழ்ச்சி பெருக வேண்டும். அதுவே எனக்குள் பேரானந்தப் பெரு நிலையை உருவாக்கும்.

தீமை அகற்றிடும் சக்தி பெற்றவரை நான் (ஞானகுரு) காணும் பொழுதெல்லாம்
1.எனக்குள் தீமை அகற்றிடும் சக்தியாக அது விளைந்து
2.குருவின் அருள் எனக்குள் விளைந்து அவருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.என்றும் நிலையான பிறவா நிலை வேகாநிலை என்ற நிலையை நான் உங்களிடமிருந்து பெற முடியும்.

அதைப் போன்று நீங்களும்… பிறருடைய தீமைகளைக் கண்டபின் அதை அவர்கள் நீக்கிடும் நிலையாக நீங்கள் செயல்பட்டு… அவர்கள் தீமைகளை நீக்கி மகிழும் போது… நீங்கள் அதைக் கண்டு பேரானந்த நிலை பெற வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய இந்த வழியில் அனைவரும் செயல்பட வேண்டும் என்பற்கே இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

பரமபதத்தின் இரகசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

பரமபதத்தின் இரகசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

 

1.எதிலேயும் யாரிடமும் வெறுப்பு விருப்பு என்ற உணர்வுகள் இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று
2.அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் நாம் செல்வதுதான் ஏகாதசி என்பது.

அன்று தான் பரமபதம் அடையும் நாள் என்றும்… சொர்க்கவாசல் என்றும் கோயில்களில் வடக்கு வாசலைத் திறந்து வைப்பார்கள்.

வாழ்க்கையில் நாம் எல்லாம் நல்லதைத்தான் செய்வோம். ஆனால் நம்மை அறியாதபடியே வேதனை என்று வரப்படும் பொழுது அந்த விஷமான நிலை தாக்கப்பட்ட பின் (“பரமபத விளையாட்டில் பாம்புகள் கொத்துவது போல்”) நம் உடலுக்குள் பல விதமான நோய்களாகி விடுகிறது

1.நோய்கள் ஆன பின் மனித சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரங்களைப் பெற்று
2.அதிலிருந்து மீண்டு… மீண்டும் மனித நிலைக்கு வந்து மீண்டும் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி…
3.இப்படிப் பல கோடிச் சரீரங்களை நாம் எடுத்து இழந்து… எடுத்து இழந்து…
4.இந்தச் சுற்றிலேயே தான் இன்று இருக்கின்றோம்.

மெய் வழியின் தன்மையை அடையும் மார்க்கம் இல்லாது நாம் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறோம்

அந்த மெய் வழியில் நாம் செல்வதற்கு என்ன வழி…? என்ற நிலையைத்தான் குருநாதர் அன்று ஏனக்கு (ஞானகுரு) உணர்த்தினார்.

இந்த மார்கழி மாதம் ஏகாதசி அன்று தான் உடலை விட்டுக் குருநாதர் விண் சென்றார். விண் சென்றபின் முதல் நிலையாக என்னை இயக்கியதும் பேசச் செய்ததும் அவருடைய ஆன்மாவின் உணர்வின் நிலைகள் தான்.

பல உண்மைகளை உணர்வதற்கு அவர் உணர்வின் தொடர் வழி கொண்டு நான் செல்ல 12 வருட காலம் பல அனுபவங்களைக் கொடுத்துக் கொடுத்து அவர் எப்படிச் சூட்சும நிலைகள் கொண்டு இருக்கின்றாரோ அந்த சூட்சும நிலையைக் கண்டுணரும்படிச் செய்தார்.

1.அவர் ஒளி முன் செல்ல நான் பின் சென்று அவர் காட்டிய அருள் நெறியின் நிலைகள் கொண்டு
2.ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு உடலின் உறுப்புகளும் அது எவ்வாறு உருவானது…?
3.இயற்கையின் நிலைகள் கொண்டு என்பதை இது எல்லாம் எவ்வாறு ஆனது என்ற மெய் உணர்வைக் காட்டி
4.அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய ஆற்றல்மிக்க சக்திகளை எவ்வாறு பெற வேண்டும்…? என்று எனக்குக் காட்டினார்.

அவர் எனக்கு அருளிய அந்த ஆற்றல்மிக்க நிலைகளை நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதை இன்று உபதேசிப்பது. ஆக… மார்கழி மாதம் இந்தப் பௌர்ணமி மிக முக்கியமான நாள்.

ஈஸ்வரபட்டர் என்ற நாமம் கொண்ட உடலிலிருந்து குருநாதர் விண் சென்றாலும்
1.இதற்கு முந்தி எத்தனையோ கோடி லட்சம் ஆண்டுகள் முன்னாடி விண் சென்று சப்தரிஷி மண்டலங்களாக அடைந்தது
2.அவருடைய (ஈஸ்வராய குருதேவர்) உணர்வின் தன்மை அந்த அலைகள் வரும் பொழுது தான்
3.பூமிக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதர்களின் உள்ளத்திலும் இது பட்டு
4.அதன் வழி இந்த மெய் உணர்வின் ஒளிகள் வளர்ந்து வளர்ந்து இன்றும் பரப்பிக் கொண்டிருக்கின்றது
4.இந்த பூமி என்ற நிலையில் பல பாகங்களிலும் இது பரவிக் கொண்டிருக்கின்றது.

உடலை விட்டு சென்ற ஒரு உயிரான்மா… பூமியின் பிடிப்பில் இருப்பதை… அதை எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்ற பேருண்மையை எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

தாய் தந்தையர்கள் எண்ணத்தால் தான் நாம் கருவானோம்.. உடல் பெற்றோம்.. ஆகவே நம்மை ஈன்றெடுத்த முதல் தெய்வங்கள் அவர்கள் தான். உடலை விட்டுச் சென்ற பின் அந்த ஆன்மாக்களை எவ்வாறு விண் செலுத்துவது என்றும்… அவர்களை விண் செலுத்தினால் தான் விண்ணில் இருக்கக்கூடிய சப்தரிஷி மண்டலத்துடன் நாமும் இணைய முடியும் என்றும் குருநாதர் உணர்த்தினார்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்தியை நாம் தாய் தந்தையரின் உயிரான்மாக்களுக்கு உணவாக ஊட்டச் செய்து
1.அந்த உனர்வின் சத்து கொண்டு ஒளி சரீரமாக அங்கே வளர்க்கச் செய்ய வேண்டும்
2.அவ்வாறு வளர்க்கச் செய்ய்யும் போது தான் “நம்முடைய எண்ண அலைகள் விண்ணை நோக்கிச் செல்லும்…” என்ற இந்த உண்மை நிலைகளை உணர்த்தினார்.

அதே சமயத்தில் சப்தரிஷிகளாக ஆவதற்கு முன் இந்த மனித உடலிலிருந்து எவ்வாறு அந்த நிலையைப் பெற்றார்கள்…? என்று ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் அந்தப் பேருண்மைகளை எமக்கு வழிகாட்டினார்.

குருநாதர் அவர் வழி காட்டிய அறநெறிகள் கொண்டு… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையையும் எனக்கு எப்படிக் காட்டினாரோ இந்த உபதேச வாயிலாக உங்களுக்கும் அதை ஊட்டுகின்றோம்.