நம் இச்சையை எங்கே வைக்க வேண்டும்…?

நம் இச்சையை எங்கே வைக்க வேண்டும்

 

தசரதச் சக்கரவர்த்தி கங்கணமே கழட்டவில்லை…!
1.திருமணம் ஆகிக் கொண்டே உள்ளது
2.அவருக்கு எண்ணிலடங்காத மனைவி…! என்று கூறுகின்றனர்.

அதனின் உட்பொருள் என்ன…?

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ சம்பவங்களைப் பார்க்கின்றோம்… கேட்கின்றோம்.

உதாரணமாக ஒருவன் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம் அவன் சண்டையிடும் உணர்வை நுகருகின்றோம்
1.நாம் கவர்ந்து கொண்டது அது வசிஷ்டர்…
2.சண்டையைப் பற்றித் தெரிந்து கொள்ளப்படும் பொழுது நம் உடலில் அது பிரம்மமாகின்றது.

அதே போன்று ஒருவன் நோயுடன் வேதனைப்படுகின்றான். அவன் ஏன் வேதனைப்படுகின்றான்…? என்று ஏங்கிப் பார்க்கும் போது உயிரிலே பட்டுத் தான் அதை அறிய முடிகின்றது.

இருந்தாலும் அவன் உடலில் விளைந்த தீய உணர்வுகள் நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது. பிரம்ம குருவாக அருந்ததியாக இணைந்து செயல்படுகின்றது… வேதனைப்படும் நிலைகளுக்கு நம்மையும் இயக்கி விடுகிறது.

சங்கடப்பட்டது சலிப்புப் பட்டது ஆத்திரப்பட்டது என்று இப்படி எத்தனையோ உணர்வுகளை மாறி மாறி நாம் சுவாசித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.

அதை உணர்த்துவதற்குத் தான் எண்ணிலடங்காத மனைவியைத் திருமணம் செய்து கொள்கிறான்…! என்று காட்டுகின்றார்கள்.
1.நம் உயிர் தான் அந்தத் தசரதச் சக்கரவர்த்தி…!
2.காரணப் பெயராக இப்படி வைக்கின்றார்கள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய நாம் எதை எதையெல்லாம் ஆசைப்படுகின்றோமோ “அதை எல்லாம் கவர்ந்து கொள்கின்றோம்… அது தான் வசிஷ்டர்…!”

தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றேன். ஆனால் எண்ணியது நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றேன்.
1.வேதனையை நுகரும் பொழுது கவர்ந்து கொண்ட உணர்வுகள் நல்லது செய்வதற்கு மாறாக
2.வேதனையை உருவாக்கும் அணுவாக என்னுடன் இணைந்து அது சக்தியாக இயங்கத் தொடங்கி விடுகின்றது
3.இந்த உயிருடன் மனைவியாக அது இயக்கத் தொடங்கி விடுகிறது

ஆகவே… நாம் எதை ஏங்கிப் பெற வேண்டும் என்று விரும்புகின்றோமோ உயிரிலே பட்டு இந்த உணர்ச்சியின் இயக்கமாக
1.அந்த நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது
2.நுகர்ந்ததைத்தான் நமது உயிர் இயக்குகின்றது
3.நுகர்ந்ததைத்தான் நம் உடலாக மாற்றுகின்றது என்பதை இராமாயணக் காவியம் தெளிவாகக் கூறுகிறது.

ஆகவே நாம் எதைக் கவர வேண்டும்…? எதன் மீது நாம் இச்சைப்பட வேண்டும்…?

நம் இச்சையை உயிர் மீது வைக்க வேண்டும். இருளை நீக்கும் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்.

பத்தாவது நிலை அடையக் கூடிய உயிர் நமக்குச் சக்கரவர்த்தியாக இருக்கின்றது. எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் எடுக்கின்றது
1.நாம் எதைக் கவர்கின்றோமோ வசிஷ்டர்.
2.இப்போது யாம் (ஞானகுரு) உபதேசிக்கக்கூடிய அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் இது வசிஷ்டர்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அணுவாகும் பொழுது பிரம்மம்
4.பிரம்மமாக ஆனபின் அணுவின் தன்மை அடைகின்றது
5.பிரம்மகுருவின் மனைவி அருந்ததி…!

எந்தக் குணத்தின் தன்மை உடலுக்குள் அணுவாக ஆனதோ அந்தச் சக்தியாக அந்த அணு இயக்கும் என்பதை இராமாயணத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அதாவது “பத்தாவது நிலையான ஒளியை நாம் எவ்வாறு அடைவது…?” என்பதைத் தான் சாஸ்திரங்கள் நமக்குக் காட்டுகிறது..

ஆத்மாவிற்குத் தேவை ஞானப்பால்

ஆத்மாவிற்குத் தேவை ஞானப்பால்

 

ஆத்மாவின் இயக்கம் தான் இச்சரீரக் கூடு…!

1.ஆத்மாவின் பதிவு நிலை கொண்டு
2.ஆத்மாவின் உந்துதலுக்குகந்த எண்ண மோதலினால் சரீர இயக்கம் உட்பட்டு
3.சரீரத்தின் செயலைக் கொண்டு ஆத்மா சத்தெடுத்து
4.ஆத்மா எண்ணத்தை உருவாக்கி…
5.சரீரத்தின் செயலால் தன் சத்தெடுக்கும் சுழற்சியில் சுழன்று வாழுகிறது…! என்று
6.முந்தைய பாடங்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

அப்படிப்பட்ட எண்ணத்தின் உணர்வுக்கொப்ப… காற்றலையில் கலந்துள்ள சத்துத் தன்மையை உரமாகப் பெறும் சுழற்சி ஓட்டத்திலிருந்து… உண்மைச் சக்தியான உயிராத்மாவை… இக்கர்ம உடலை… உடலில் கர்ம எண்ணங்களிலேயே செலுத்தக்கூடிய வழி முறையை… எண்ணத்தின் பால்… மேல் நோக்கிய சுவாசமாக… இது வரை வழிப்படுத்திய வழி காட்டிய தன்மை கொண்டு…
1.நம் எண்ணத்தின் செயலைக் கொண்டு
2.நம் ஆத்மா ஞானப்பால் கொள்ளும் சுவையாக வளர்ப்படுத்துங்கள்.

புஷ்பங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அப்புஷ்பத்திலேயே அணுவாக வளர்ந்து புழுவாகிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் எந்த அமில முலாமின் அணுப் பெற்று ஜீவன் கொண்டு சத்தெடுத்து வளர்ந்ததோ… அச்சத்தின் வண்ணக் கோர்வையை வண்ணத்துப் பூச்சியின் அழகு நிலை பெறுகின்றது.

அதே போல் பூவில் பிறந்த வண்டு தேன் சுவையைப் பெறுகின்றது. இவைகளைப் போன்று தான்
1.எச்சத்து நிலையில் எத்தன்மை வளர்ச்சி கொள்கின்றதோ அதன் வளர்ச்சி நிலைக்கொப்ப
2.எதில் எதில் எல்லாம் இவ்வெண்ண நிலை மோதி சத்தெடுக்கின்றோமோ
3.அதன் முலாம் வார்ப்பைத்தான் ஆத்மா பெறுகிறது என்பதை உணர்ந்து
4.ஆத்ம பலத்தின் உணர்வைக் கொண்டு அடைய முடியாப் பெரு நிலையை
5.இவ்வெண்ணத்தைச் செலுத்தும் உயர் ஞானத்தால் பெறலாம்.

இது நாள் வரை தெரிந்தோ தெரியாமலோ ஜெப வழியில் பல கோடி ஆத்மாக்கள் தனக்குத் தெரிந்த பாதை வழியில்… உயர்வைக் காண ஜெபம் கொண்டு செல்கின்றனர்.

அவர்களுக்கும்…
1.இந்தத் தியான மார்க்கத்தின் மூலம் இந்த ஞானத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும்
2.மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் வாழும் தன்மைக்கும்
3.நாம் பெறும் போதனை ஞான வளர்ச்சியைக் கொண்டு
4.நம் ஈர்ப்பலையின் வட்டத்தில் ஆத்ம ஐக்கிய இயக்கத் தொடர்பு கொண்டு செயல் கொள்ள வேண்டும்.

“உங்களுக்குப் புது சக்தியாகக் கொடுக்கின்றோம்…”

“உங்களுக்குப் புது சக்தியாகக் கொடுக்கின்றோம்…”

 

இன்றைய உலகில் நாம் என்ன தான் ஆட்டம் போட்டாலும் தேடிய செல்வங்கள் நம்மிடம் இருக்கின்றதா…? அழகான உடலும் இருக்கின்றதா…! இல்லையே…!

பின் எதற்காக ஏன் நாம் இந்த வாழ்க்கையில் போர் செய்ய வேண்டும்…?

ஆகவே நாம் ஒரு செயல் செய்யப்படும் பொழுது நல்ல உணர்வாக எடுத்து மற்றவர்களையும் நல் வழியில் நடத்தும் நிலையாகத் தூண்டச் செய்ய வேண்டும்.

நாம் சும்மாதான் இருக்கின்றோம். இருந்தாலும் ஒருவர் வேண்டாத ஒரு பொருளை எடுத்து அதை ரோட்டிலே அனாவசியமாகப் போடுகிறார்..! என்று வைத்துக் கொள்வோம். நாம் அதை உற்றுப் பார்க்கின்றோம்.

அப்பொழுது… “பார் அங்கே இருப்பதை எடுத்து ரோட்டில் போடுகிறான்…”
1.தேவையில்லாத பொருளை மக்கள் நடக்கிற பாதையில் போடுகிறான் என்று
2.அவனை நாம் வெறுக்கின்றோம்… நம் மனம் வெறுப்பாகி விடுகிறது.

ஆக மொத்தம் நம் உணர்வுகள் அடுத்தவர் செயலைப் பார்க்கப்படும் பொழுது இந்த நிலை அடைகின்றது. ஆனாலும் நாம் செய்ய வேண்டியது என்ன…?
1.மற்றவர் தவறான செயலைச் செய்தாலும் “அவர் நல்லதைச் செய்ய வேண்டும்…” என்ற உணர்வை நாம் தோற்றுவித்தல் வேண்டும்.
2.நம் சொல்லும் செயலும் பிறர் வாழ்க்கையைப் புனிதப்படுத்தக்கூடிய சக்தியாக வருதல் வேண்டும்.
4.அத்தகைய உணர்வினை எடுத்துக் கொண்டால் நம் உடலும் புனிதம் ஆகின்றது.

அதே சமயத்தில் நாம் ஒரு நண்பரிடம் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தில் அவர் உடல் நலக் குறைவாகி… காய்ச்சலோ மற்றதோ வந்து விடுகிறது.

வந்தவுடன் அவரைப் பார்க்கின்றோம். என்னப்பா…? என்று கேட்கிறோம்.

காய்ச்சல் இரண்டு நாளாக இருக்கின்றது என்று சொல்கின்றார். அதைக் கேட்டவுடன் அப்பொழுது அவர் (உடல் நலமில்லாத) உணர்வுகளைத் தான் நாம் சுவாசித்துக் கொள்கிறோம். அதைத் தடுக்கின்றோமா…?

ஆனால் ஒரு நோயாளியைப் பார்த்தால்… அடுத்த நிமிடம் அந்த நோயின் உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை
1.நாம் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.அங்கே சொன்னால் நடக்காது…!

நமக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் அந்த நோய் நமக்கு வராது. அதே சமயத்தில்
1.அவர் நலமாக வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சினால் அவரை நாம் காக்க முடியும்
2.சீக்கிரம் உடல் நலமாகிவிடும் என்ற சொல்லை… நம்மைச் சொல்லும்படி. வைக்கும்.

நம் உயிர் ஒளியாக இருக்கின்றது அந்த ஒளியான உணர்வின் தன்மையைப் பெறச் செய்வதற்குத் தான் குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பதிவாக்கி அதை உங்களைப் பெறும்படி செய்கின்றோம்.

ஆனால் உங்கள் எண்ணம் எப்படியோ அதன்படி தான் நடக்கும்.

ஏனென்றால் நான் (ஞானகுரு) சொல்கிறேன். காடு மேடெல்லாம் அலைந்து குரு காட்டிய வழியில் பல அனுபவங்களைப் பெற்றேன்
1.கஷ்டம் எப்படி எதனால் வருகின்றது…?
2.அதை எப்படி நிவர்த்திக்க வேண்டும்…? என்ற சக்திகளையும் கொடுக்கின்றேன்.

சக்தி கொடுத்து அதை எடுக்கத் தெரியவில்லை என்றால் அது என்னுடைய குறையாக வராது.
1.என்னமோ சாமி சொல்கின்றார்…! நம்மால் முடியுமா…? என்றால் அது முடியாது போய்விடும்
2.சாமி சொன்னதை நான் கடைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால்
3.வரும் தீமைகளை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்
4.சாமி தான் செய்து தருவார் என்று நீங்கள் நம்பினால் “அது ஏமாற்றம் தான்…”
5.நான் செய்து தருகிறேன் என்று சொன்னால் “நான் எப்படிச் செய்து தர முடியும்…!”
6.ஒரு விதையைக் கொடுத்தால் அதை முளைக்க வைத்து அதனுடைய பலனை எடுப்பது நீங்களாகத்தான் இருக்க முடியும்
7.உங்களுக்காக நான் உட்கொண்டால் என் பசி தான் தீரும்… உங்கள் பசி எப்படித் தீரும்…?

சில பேர் எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்கின்றார்கள். அப்படி யாருக்கும் யாரும் செய்ய முடியாது.
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று அருள் உணர்வுகளை யாம் பாய்ச்சினாலும்
2.அதை நீங்கள் எடுக்க வேண்டும் அல்லவா…!

ரேடியோ டிவி அலைகளை ஒலி/ஒளி பரப்புகின்றார்கள். நம் வீட்டில் உள்ள ரேடியோ டி.வி.யைத் திருப்பி வைத்தால் தானே அது வேலை செய்யும்.

அது போன்று தான் யாம் பதிவு செய்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த அருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அது உங்களுக்குள் பாய்ந்து நல்லதாகும்..

ஆனால் சங்கடம் வரும் போது… “பாவிப்பயல்…! எனக்கு இடைஞ்சல் செய்தான்… உருப்படுவானா…?” என்று பிறரை எண்ணினால் அவன் உணர்வு வந்து அது தான் நம்மை இயக்கும்.

1.ஏனென்றால் எல்லாமே காற்றில் இருக்கின்றது நமக்குள்ளும் பதிவாகி இருக்கின்றது ஆக யாரிடத்திலிருந்தும் நாம் பிரிந்து இல்லை.
2.அந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கின்றதோ அது போன்றுதான் யாம் சொல்லும் சக்திகளும்.

இயற்கையின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? அகஸ்தியன் இருளை அகற்றி ஒளியாக மாறி துருவ நட்சத்திரமாக எப்படி ஆனான்…? என்பதை உங்களுக்குச் சிறுகச் சிறுகப் பதிவு செய்கின்றோம்.

அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் உங்களுக்குள் நிச்சயம் அது வளரும்.

தன்னுள் உள்ள தெய்வச் செயலை அறிய விரும்புவோர் “அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்…!”

தன்னுள் உள்ள தெய்வச் செயலை அறிய விரும்புவோர் “அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்…!”

 

இயற்கையில் வளரும் தாவர இன வளர்ச்சியில்… அதன் பலனின் தரவல்ல வித்துக்களும் மற்றைய கனிகளும் அதன் சுவை மணம் அழகு எல்லாமே அதற்கு உண்டு.

அது அல்லாமல் நாம் பயிர் செய்யும் தானியங்களில் அவை பலன் தரவல்ல காலங்களில்… உதாரணமாக நெல் மணியில் அதன் சத்து நிலை தரவல்ல காலங்களில் பூத்து… பின் நெல் மணிகள் அழகு பெற்று வளர்ந்து குலுங்குகின்றது.

அந்தந்தக் காலங்களில் இவைகளின் மணத்தைக் கொண்டு உணவைத் தேடி வரும் பட்சிகளின் ரோமத்தின் மிருதுத் தன்மையும் அவற்றின் வண்ண அழகுகளும் எத்தனையோ உள்ளது.

1.அது அது எடுத்து வளரத்தக்க அமில வார்ப்பின் வளர்ப்பின் வளர் நிலையில்
2.அதன் பலன் தரும் வளர்ச்சி அழகை… “இயற்கை…” என்ற நியதியுடன் கண்ணுற்றுப் பார்க்கும்
3.செயற்கையுடன் ஒன்றி வாழும் நாம் அது வளரும் உண்மையை அறியாமல்
4.ஆனந்த ரசிப்பில் இயற்கையாக எண்ணித்தான் அதனைக் காண்கின்றோம்.

ஆனால் ஒவ்வொரு வளர்ப்பிலுமே “அதன் பலன் ஒன்று…” வளரும் தன்மையில்தான் சகல சக்திகளும் வளர்கின்றன.

கடல் வழியில் பல கோடி வளர்ப்புகள் கடல் நீரில் சத்தெடுக்கின்றன. நீரின் நிலைகளில் ஆற்றுப் படுகைகளில் நீர் நிலை உருளும் தனமையிலேயே பல வளர்ச்சி நிலைகள் நிறைந்துள்ளன.

1.எல்லாவற்றிலும் மோதுண்டு மோதுண்டு பல வளர்ச்சியில் முலாம் கொண்ட உயிரணு
2.மோதுண்ட வளர்ச்சி நிலைக்கொப்ப ஆத்ம நிலை கொண்டு
3.சக்தி நிலை பெறவல்ல எண்ணச் செயல் பூண்டு
4.ஜீவ ஆத்மாவாகக் கரு தோன்றி கரு வளரும் அமில முலாமாக
5.எண்ணத்தின் ஞானத்தால் ஞானப்பாலின் சத்தெடுத்து
6.ஆத்ம முலாம் மனித வித்தின் ஜீவிதத்தில் வளர்ச்சியுறும் காலத் தன்மையில்
7.ஆத்மாவின் ஒளி நிலை பெறும் வளர் நிலை தான் மனித வித்தின் ஜீவ வளர்ச்சியின் அடுத்த நிலை.

மாமரம் மாங்கனிகளைத் தன்னுடைய சத்தாக வெளிப்படுத்துகின்றது. ஆனால் மனிதன் தன்னுடைய பிறப்பின் வளர்ச்சி என்பது… “தான் பெறும் மக்கள் செல்வம்தான்…” என்ற எண்ணத்திலேயே உள்ளான்.

ஆக…
1.தன் பெயர் சொல்லும் வாரிசு நிலையைத்தான் உயர்வு கண்டு வாழ்கின்றனரேயன்றி
2.தான் பெற வேண்டிய முதிர்வு நிலையைப் பற்றி எண்ணவில்லை.

அன்றைய போகமகரிஷிக்கும் கொங்கண தேவருக்கும் கோலமாமகரிஷிக்கும் கிடைத்த வாரிசு நிலை அவர்களின் நிலையுணர்ந்த ஞானவான்களுக்குத் தெரியும்.

1.பிறவியுடன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் செல்வம் மட்டும் தான் செல்வம்…! என்று எண்ணாமல்
2.”பிறவா வரம்…” என்ற முத்தாகும் “ஒளி நிலை” பெறுவது தானப்பா உண்மையான உயர்வு நிலை….!

இன்றைய கால நிலையில் இத்தகைய ஆத்ம ஞானத்தால் பெறும் தியான வழி முறையையோ தன்னுள் உள்ள தெய்வச் செயலையோ அறிய விரும்புவோர் அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்.

குருநாதர் எம்மை அரவணைத்துச் செய்த நிகழ்ச்சி

குருநாதர் எம்மை அரவணைத்துச் செய்த நிகழ்ச்சி

 

ஒரு சமயம் நான் (ஞானகுரு) பழனியில் இருக்கின்றேன்… கல்கத்தா செல்வதற்கு டிக்கெட் எடுடா…! என்று குருநாதர் சொல்கின்றார்.

எதற்கு சாமி…? என்று கேட்டேன்.

டிக்கெட் எடுடா…! என்றார்.

குருநாதர் பணத்தையும் கொடுக்கின்றார். ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்தேன்.

ஒரு குதிரை வண்டியைப் பிடிடா… என்று சொன்னார். வண்டி வந்தது.

ஆனால் கொடைக்கானல் பக்கம் காட்டுப் பக்கமாக வண்டியைப் போகச் சொல்கிறார்.

சாமி… நாம் இந்தப் பக்கம் செல்ல வேண்டும்…! என்று சொன்னேன்.

கல்கத்தா செல்ல டிக்கெட் எடுத்து விட்டாய் அல்லவா…! குதிரை வண்டியில் ஏறு… வண்டியைப் போகச் சொல்…! என்று சொல்கின்றார்.

வண்டியில் ஏறிய பின்… கல்கத்தாவில் குருநாதர் அங்கே சுற்றி வந்த பல நிகழ்ச்சிகளைச் சொல்கிறார். கல்கத்தா காளி எவ்வாறு இருக்கின்றது…? எப்படி எப்படி உருவானது…? எந்தெந்த நிலை…! என்று சொல்லிக் கொண்டு வருகின்றார்.

அதை எல்லாம் சொன்ன பின்… இப்பொழுது எதற்காக உன்னை அங்கே அழைத்துப் போகின்றேன் தெரியுமா…! என்று கேட்டார்.

அவர் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நன்றாகப் பதம் பார்த்துவிட்டு என் கழுத்தைப் பிடிக்கின்றார்.
1.இங்கே குத்தி இந்த இரத்தத்தை அங்கே கொண்டு போய்க் காளிக்குக் கொடுத்துவிட்டு
2.“நான் மந்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகின்றேன்…!”
3.அதற்குத்தான் கல்கத்தாவிற்கு உன்னை அழைத்துப் போகின்றேன் என்றார்.

எனக்கு எப்படி இருக்கும்…? காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின் இப்படிச் சொல்கிறார்.

நான் என்ன சொன்னேன்…?

என் மனைவியை நோயிலிருந்து காப்பாற்றி எழுப்பிக் கொடுத்தீர்கள். நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ அதன்படி…
1.என்னைக் கொன்றாலும் சரி… அல்லது மற்ற எப்படி வேண்டுமானாலும்
2.எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்து கொள்ளுங்கள்…! என்று சொன்னேன்.

குருநாதர் “கெக்கெக்க….கெக்க….” என்று பலமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் மறுபடியும் என் கழுத்தைப் பிடித்துக் கத்தியை எடுத்துக் குத்த வருகின்றனர்.

மீண்டும் என்னை மிரட்டுகின்றார்…! பார்க்க வேண்டிய எல்லா பரீட்சைகளையும் செய்து பார்க்கின்றார்.

சிறிது நேரம் கழித்து
1.”என்னை அரவணைத்து…” கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
2.நானும் இப்படித்தான் அங்கே சென்று வந்தேன் என்று சொல்கின்றார்

உன்னை அங்கே பலி கொடுத்து நான் சக்தி பெற போகின்றேன்… நான் உலகத்திலேயே மிகச் சக்தி வாய்ந்தவனாக மாறப் போகின்றேன் என்று சொல்கின்றார்.

அரசர்கள் காளில் கோவிலை எப்படி உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்…? பலி பீடங்களை அமைத்து எதிரிகளை வீழ்த்துவதற்கு என்ன செய்கின்றார்கள்…? அதே சமயத்தில் எந்தெந்தக் காலங்களில் எதைச் செய்கின்றார்கள்…?

ஆடு மாடு அனைத்தையும் பலி கொடுத்துவிட்டுக் கடைசியில் மனிதனையும் பலி கொடுக்கின்றார்கள். படிப்படியாக அசுவமேதை யாகம் செய்வது போன்று கடைசியில் மனிதனை நரபலி கொடுக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமான சக்திகளை0ப் பெறுவதற்காக மனிதனுக்குள் விளைந்த உணவு உணர்வுகளை எடுத்து இந்த உடலைப் பலி கொடுத்து எப்படிச் சக்தி பெறுகின்றார்…? என்று காட்டுகின்றார்.

முருகன் ஆலயத்தில் பாலாபிஷேகம் தேனாஅபிஷேகம் செய்கின்றார்கள். கருப்பணசாமி மாடசாமி கோவில்களில் கோழியோ ஆட்டையோ அறுத்து இரத்தத்தை அங்கே அபிஷேகம் செய்கின்றார்கள்.

இதே போன்று மனிதனுடைய இரத்தத்தையே காளிக்குக் கொண்டு போய்க் கொடுக்கின்றார்கள். மந்திர ஒலி கொண்டு அங்கே என்ன செய்கின்றனர்…? என்று நேரடியாகக் காண்பிக்கின்றார்.

என்னை அங்கு அழைத்துக் கொண்டு சென்று இந்த உண்மைகளை எல்லாம் காட்டுகின்றார்.

இங்கே வருவதற்கு முதலில்… உடல்களைச் சரியான இடத்திலே கொண்டு போய் மறைத்து வைக்கின்றார்.

ஏனென்றால் நாம் இருவரும் இங்கே வந்து விட்டோம் அங்கே மனிதர்கள் இந்த உடலைப் பார்த்தார்கள் என்றால் “எல்லாம் தீர்ந்து போகும்டா…” என்கிறார்.

நாம் வருவதற்கு நேரமாகி விட்டது என்றால்
1.“செத்து விட்டோம் என்று என்று சொல்லி உடலை எரித்துப் பொசுக்கி விடுவார்கள்…
2.கடைசியில் நாம் இருவரும் ரோட்டிலே தான் அலைய வேண்டியிருக்கும்…! என்று அதையும் சொல்கின்றார்.

கல்கத்தா காளி கோவில் நடக்கக்கூடிய பல உண்மைகளை இப்படித்தான் குருநாதர் எம்மை அறியும்படி செய்தார்.

உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”

உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”

 

நீர் சக்தி இல்லை என்றால்… நெருப்பு எரிய சக்தி இல்லை. நெருப்பாக ஆவி கொண்டு (உஷ்ண அலை) நீர் நிலை பெறாவிட்டால்… நீருக்கும் வளர்ச்சி இல்லை.

தனித்த சக்தி.. தனி அணு… தனித்த ஒன்றுக்கு… எப்படிச் செயல் இல்லையோ அதைப் போன்று ஆத்ம சக்தியின் சித்து வளர்ப்பிற்கு ஆண் பெண் இயக்கத் தொடர்பு ஆத்மக் கூட்டு நிலை செயல் கொள்ளும் வளர்ப்பு நிலை அவசியம் வேண்டும்.

ரிஷிபத்தினி… ரிஷி சக்தி… என்ற கூட்டு ஐக்கிய ஆத்ம தொடர் சித்து பெறும் தம்பதியின் வழித் தொடரினால் தான்
1.உணர்வின் எண்ணத்தால் செயல் கொள்ளும் படைப்புத் தொடர் ஆத்ம அணு வளர்ப்பின் தொடர் அலையை
2.இன்று நம் பூமியில் உள்ள மனித சக்தியைப் போன்ற தொடர் அலையை வழிப்படுத்தும் வளர் நிலைக்கு
3.பிறிதொரு மண்டலத்தில் இதைப் போன்று வளர வேண்டிய நிலை ஏற்பட வேண்டிய தொடருக்கே
4.இத்தொடர் நிலை கொண்ட சக்தி நிலை ரிஷித் தன்மை செயல்பட வேண்டும்.

படர்ந்து கொண்டேயுள்ள ஆவி அமிலம் திடம் கொண்டு அண்டசராசர அனைத்துக் கோடி சுழற்சியிலும் மாறிக் கொண்டே வழித் தொடர் கொள்ளும் ஒவ்வொன்றின் நிலை அனைத்திற்குமே வளர்நிலை தொடர் வளர்ச்சிக்கு “ரிஷித் தன்மை கொண்ட அலைத் தொடர் வளர்ப்பு தேவை…!”

அந்த வளர்ப்பைக் கொண்டு எச்சக்தி நிலையையும் உயர்வுபடுத்திச் செயலாக்கும் வளர் சக்தியின் சக்தியே ஆண் பெண் என்ற எண்ண சக்தியில் மனித வளர்ப்பு வார்ப்பில் உருவாக்கும் தொடர் அலையில் தான்

நாம் வாழும் இந்தப் பூமியே “சிவ சக்தி” என்ற இரண்டு ஆத்மாக்களின் தொடர்பில் உருவாகிப் பல கோடி ஆண்டுகளாகத் தன் உருவின் உருக்களை வளர்த்துக் கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட உருவின் உருவைக் கொள்ளும்
1.உயர் ஆத்ம தொடர்பு – ஆண் பெண் ரிஷித் தன்மையின்
2.வழித் தொடர் ஆத்மாக்களை வளர் கொள்ளும் செயல் தன்மை
3.அரிதிலும் அரிதாகத்தான் இன்று வரை செயல்பட்டுள்ளது.

இதைப் படிப்போர் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பெண் தொடர்பு ஆத்ம தியான சித்தைப் பெற்று… வாழ்க்கையுடன் ஒன்றிய கூட்டு ஐக்கிய தியான வளர்ச்சியால்…. இந்தப் பூமியின் சக்தியைப் போன்று.. நம் சூரியக் குடும்பத்தின் சுழல் கொண்டு மிதந்து ஓடும் மண்டல சுழற்சி ஒவ்வொன்றிலுமே… அதன் சக்தி நிலைக்கொப்ப “அதன் வளர் சக்தியின் வளர்ப்பிற்கு வழி செய்யலாம்…!”

நம் பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தில் வளர்ந்த மற்ற மண்டலங்கள் விஷத் தன்மை கொண்டதாகத்தான் இன்றைய நிலையில் உள்ளது.

இதே சுழற்சி நீடித்து நம் பூமியும் இன்றுள்ள விஷத் தன்மையில் (செயற்கை என்ற காந்த மின் சக்தியைப் பிரித்தெடுத்ததன் விஷத்தால்) சுழன்றது என்றால்
1.இக்கலி மாற்றத்தில் வரப் போகும் கல்கியில்
2.தன் ஞானம் மிஞ்சாது விஞ்ஞானம் எஞ்சி நிற்கும்.

ஆகவே ஒவ்வொரு ஆத்மாவுமே தன்னுள் உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”

“ஒன்று இரண்டு பேர் தான்…!” பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தொக்கி வருகின்றார்கள்

“ஒன்று இரண்டு பேர் தான்…!” பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தொக்கி வருகின்றார்கள்

 

இன்றைய சூழ்நிலையில்…
1.எந்தச் சாமியாரும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை…
2.எந்தச் சாமியும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை…!

நான் தான் கடவுள்…! என்று ஒருவன் பறைசாற்றுகின்றான் என்றால் அவன் ஆசை எதைத் தெரிந்து கொண்டானோ அந்த உணர்வின் ஆசை எல்லோருக்கும் வருகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று… செத்தைகளையும் குப்பைகளையும் எடுத்துக் கொண்டு வந்து போடச் சொன்னார். ஈயக் கட்டியை வாங்கி வரச் சொன்னார். எல்லாவற்றையும் வைத்து எரிக்கச் சொல்லி தங்கமாக உருவாக்கினார்.

இப்படி முதலில் அவர் செய்து காட்டினார்… பின் அவருக்குத் தெரியாமல் நானும் (ஞானகுரு) செய்து பார்த்தேன்… தங்கம் வந்துவிட்டது.

அதை எனக்குத் தெரிந்தவரிடம் கொடுத்து விற்கப்படும் பொழுது ஆஹா…! என்று சொல்லி
1.நீ எவ்வளவு வேண்டும் என்றாலும் செய்து கொண்டு வா… விற்றுத் தருகிறேன் என்கிறார்
2.இதிலே இன்னும் கொஞ்சம் செம்பைச் சேர்த்தால் “ஜம்…” என்று இருக்கும் என்கிறார்.
3.உங்களுக்கு எந்தக் கோவில் வேண்டும் என்றாலும் கட்டித் தருகின்றோம்
4.நீ தவறு செய்ய வேண்டாம்… நான் தவறு செய்து கொள்கின்றேன்
5.உனக்கு வேண்டிய உதவிகளை நாங்கள் செய்கிறோம்… தங்கம் செய்வதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள்…! என்றார்.

இப்படி நிறையப் பேர் என்னிடம் வந்தார்கள்.

ஒரு வாத்தியார் அவர் செய்யும் வேலையை விட்டுவிட்டு என்னைச் சுற்றிக் கொண்டே இருந்தார். ஒரு சிறு வேலை…! ஒரே நிமிடம் தான்…! தங்கம் எப்படிச் செய்வது…? என்று சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கு எவ்வளவு பணம் வரும் தெரியுமா…!

அத்தனையும் உங்களுக்கு நான் செய்து தருகின்றேன். என்னை ஒரு வேலைக்காரனாக மட்டும் வைத்துக் கொண்டால் போதும். தங்கம் செய்வதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள் என்று என்னைத் துரத்திக் கொண்டே வந்தார்.

ஆனால் ஞானிகள் உணர்வுகளைச் சேர்த்து மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னால் யாரும் வருவதில்லை.
1.நான் தங்கம் செய்து கொடுக்கின்றேன் என்று சொன்னால் எனக்குப் பின்னாடி கூட்டம் இங்கே நிறைய கூடிவிடும்
2.ஆனால் மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னால் யார் வருகின்றார்கள்…?
3.ஒன்று இரண்டு பேர் தான்…! பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று வருபவர்கள் தான் தொக்கி வருகின்றார்கள்

இல்லையென்றால் அதுவும் வரமாட்டார்கள்…!

1.நாளைக்கு எதுவும் நடந்து விட்டுப் போகின்றது
2.இன்றைக்குச் சம்பாதித்தால் அது போதும்… சுகமாக இருக்கலாம்…! என்று தான் நினைக்கின்றார்கள்

ஆனால் கோடிக்கணக்கில் சம்பாரித்து எண்ணிலடங்காத சொத்து வைத்திருப்பவருடைய கதி எப்படி இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.

என்னை இவன் மோசம் செய்தான் அவன் அப்படிச் செய்தான் என்று இவன் எண்ணினால் இறந்த பின் அந்த உடலுக்குள் பேயாகத்தான் போக முடியும்…!. “இன்று கோடீஸ்வரனாக இருந்தாலும்… அடுத்து பேயாகத் தான் ஆக முடியும்…!”

எத்தனையோ பேரை இன்று நாம் பார்க்கின்றோம் அல்லவா…!

ஏனென்றால் நமது ஞானிகள் காட்டியது உண்மையின் இயக்கம்
1.உயிரோடு ஒன்றி ஒளியாக மாறுதல் வேண்டும்
2.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ அந்த வேகா நிலையை நாம் அடைதல் வேண்டும்.

ஒரு மனிதன் தீயிலே குதித்து இறந்து விட்டால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் கருகுவதில்லை. எரிந்த உணர்வு கொண்டு உயிராத்மா வெளியிலே செல்கின்றது.

ஆனால் நண்பனாக இருப்பவன் இதைக் கேள்விப்பட்டு “அட… நேற்று வரை நன்றாக இருந்தானே… இப்பொழுது தீயை வைத்து இறந்து விட்டானே ஆ…!” என்று சொன்னால் போதும்.

1.இல்லைப்பா…! உனக்குள் நான் வந்து விட்டேன் என்று அந்த ஆன்மா இங்கே வந்து விடும்.
2.சிறிது நேரத்தில் பார்த்தால் ஐய்யய்யோ… எரிகின்றதே… எரிகின்றதே…! என்று சொல்ல ஆரம்பிப்பான்.

காரணம் என்ன…? என்று கேட்டால் ஒன்றுமே தெரியாது.

நான் சும்மாதான் இருந்தேன் திடீரென்று என் உடலில் எரிகின்றது எங்கேயோ தீயிலே குதிக்கின்ற மாதிரி இருக்கின்றது யாரோ என்னமோ செய்து விட்டார்கள் என்று ஜோசியக்காரிடம் செல்வான்.

அவன் இங்கே அங்கே என்று சுற்றச் சொல்லி அந்தச் சாமிக்கு இதைச் செய்ய வேண்டும்… இதற்கு இதைச் செய்ய வேண்டும் என்று காசுகளை அவன் வாங்கிக் கொண்டே இருப்பான் காசைச் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.கடைசியில் “என்னால் தாங்க முடியவில்லை…” என்று இவனும் தீயிலே குதித்துச் சாவான்
2.இறந்த பிற்பாடி எத்தனை நிலை ஆகிறது என்று பார்க்கலாம்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆத்மாவுக்குத் தேவையான உணவு

ஆத்மாவுக்குத் தேவையான உணவு

 

ஜீவன் கொண்ட ஒவ்வொரு செயலுமே தன் ஜீவித உணவை எடுத்து எப்படி வளர்கின்றதோ அதைப் போன்றே இவ் ஆத்ம வலுத் தன்மைக்கு வலுக்கூடிய பிறகு… அதுவே ஒளிரும் தன்மையில் தனித்து இயங்கக்கூடிய வழித் தொடருக்கு “உணவு நிலை தேவை…!”

அதைப் பெறும் வழி முறை எப்படி…?

கல் மண் தாவரங்கள் உலோகங்கள் திரவகங்கள் ஜீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஜீவ சக்தியுடன் வாழும் காலத்தில் அது அதற்குகந்த உணவு நிலையை உட்கொண்டு ஜீவத் துடிப்புடன் வாழ்கின்றது.

கல்லும் மண்ணும் உலோகமும் திரவகமும் தாவர இன வர்க்கங்கள் எல்லாமே வளரும் பிடிப்பிலிருந்து எடுத்தவுடன் அதனுடைய வளர்ச்சி நிலை நின்று விடுகின்றது.

இப்படி அதனை உருமாற்றிச் செயல்படுத்தும் ஜீவனற்ற மாற்று நிலைக்கு உட்படுத்தியவுடன் அதன் வளர்ப்பு நின்று ஜட பிம்பப் பொருளாக கரையும் ஆவி நிலைக்கு உட்படும் வழித் தொடருக்குச் சென்று விடுகின்றது.
1.இதே போல் தான் ஜீவராசிகளின் உயிர்ச் சக்தியும் உயிர் ஆத்மா பிரிந்தவுடன்
2.திடப் பொருளாகி உணவு உட்கொள்ளும் நிலை மாறி ஆத்மா பிரிந்து செல்கிறது.

ஜீவ சக்தி கொண்ட ஒவ்வொன்றுமே தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு உணவை உட்கொண்டு வாழ்வதைப் போன்று அழியாத நிலை என்னும் பிறவி இல்லா நிலை பெறும் சக்திக்கும் அதன் வளர்ச்சி வளர் கொள்ள உட்கொள்ளும் (உணவு) வழித் தொடர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

வளர் தன்மைக்கு ஆண் பெண் அமிலச் சேர்க்கை ஜீவத் துடிப்பு எப்படி அவசியமோ அதைப் போன்றே
1.ஆத்மாவைச் சரீரத்திலிருந்து பிரித்துச் செயல்படுத்தும் வழி முறைக்கு
2.உடலுக்கு வேண்டிய உணவை உட்கொள்வது போன்றே
3.ஆத்மாவிற்கான உணவைச் செயல்படுத்தும் வழி முறை செயல். தான் “அஷ்டமா சித்து” கொண்ட வளர் நிலை.

பலவற்றில் இருந்து விளைந்து உயர்வின் முற்றிய தன்மையான மனித சக்தியின் எண்ண உணர்வு சொல் செயல் ஆற்றல் கொண்ட ஆத்ம சரீர சக்தியில் இருந்து தான் மனித சக்திக்கு அடுத்த வளர்ப்பு சக்தியான தன் ஆத்மாவைப் பிரித்துச் செயல்படுத்தும் வழி முறை வளர்ச்சி நிலைக்குச் செல்ல முடியும்.

அதற்குரிய ஆரம்பத் தொடர் உணவு நிலையாக… ஆத்மா பெறும் நிலை எண்ணத்தைச் செலுத்திக் காற்றலையின் தொடர்பிலிருந்து தன் சுவாச ஈர்ப்பிற்கு நறுமண அலைத் தொடர்பையும் கனிகளின் சுவை அலையையும் பெற்று அச்சுவைகளை உணவாக எடுக்கும் வழித் தொடரை ஆத்மா பெறுகின்றது.

1.காந்த மின் அலையின் வார்ப்பு சக்தியை ஜெபத்தால் எடுக்கும் ஞான சக்தியில்
2.தன் ஆத்மாவைத் தானே காணக்கூடிய வழி முறை பெற்றவுடன்
3.சரீர இயக்கத்திலிருந்தே உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி உணவு எடுக்கும் வழி முறை பெற்று
4.அவ்வழி முறைத் தொடர்பில் இருந்து ஆத்மா தனித்து இயங்க
5.ஆத்மாவுக்கந்த ஆத்ம அலைத் தொடரில் தொடர்பு கொண்டு
6.ஆத்மாவிற்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பலையின் ஈர்ப்பலையின் ஈர்ப்பிலிருந்தே தன் ஆத்மாவிற்கு உணவெடுத்துக் கொள்கின்றது.

வலுக் கொண்ட நிலையில் தனித்து இயங்கும் ஆத்மாவின் செயல் ஒன்றை அறிய… அணுவுக்குள் அணுவாக… இச்சரீர பிம்ப இயக்கத் தொடர்புடன்…
1.சரீரத்தில் இருந்து எண்ணத்தை வெளிப்படுத்திய ஆத்மா செயல் கொள்ளும் வழித் தொடரில் மோதும் பொழுது…
2.இச்சரீர சுவாச ஈர்ப்பிற்கு அவ் அணு அலை வளர்ச்சி கொண்ட
3.சேமித காந்த நுண் அலை சுவாசத்தின் உணர்வில் சமைத்து
4.எலும்புகளின் உராய்வு கொண்டு – ஆத்மாவின் செயலுடன் ஒன்றுகின்றது… “உணவாக…!”

இத்தகைய நிலை பெற்றால் ரிஷிகளின் தொடர்பலையுடன் ஒன்றிட முடியும். அவர்கள் பெற்ற வளர்ச்சியையும் பெற முடியும்.

சரியான முகூர்த்த நேரம்

சரியான முகூர்த்த நேரம்

 

இயற்கையின் நியதிகள் வளர்ந்து கொண்டே வரப்படும் பொழுது “நாம் எப்படி வாழ வேண்டும்…?” என்பதை உங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் வழியிலே தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டுக் காண்பித்துக் கொண்டே வருகின்றேன்.

1.முழுமையாக உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால் பத்து வருடம் நீங்கள் அமர்ந்து கேட்க வேண்டும்.
2.ஒரு நாய் எப்படி இறந்தது…? நாய் எப்படி மனிதனாக உருவாகின்றது என்றும்
3.அதே சமயத்தில் ஒரு மனிதன் இறந்தால் அடுத்த உடலுக்குள் அது எப்படி ஆவியாகச் செல்கின்றது…? அந்த உடலை எப்படி மாற்றியது…? என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

நீங்கள் இதை எல்லாம் சாதாரணமாகக் கேட்கின்றீர்கள். என்னை குருநாதர் இரவு பகல் என்று பாராதபடி தூங்க விடாது செய்தார். சரியான சாப்பாடும் கிடையாது.

இப்படித்தான் இந்த உண்மைகளை எல்லாம் நேரடியாக உணர்த்திக் காட்டினார் தெரியும்படி செய்தார் ஏனென்றால்
1;.அனைத்தும் காற்றிலே இருக்கின்றது… அதை நீ எடுக்க வேண்டும்…! என்று சொல்வார்.
2.நீங்களும் இந்தக் காற்றிலிருந்து உயர்ந்த உணர்வுகளை எடுக்கச் செய்வதற்குத் தான் இத்தனையும் பதிவு செய்கிறேன்.

எனக்கு குருநாதர் எப்படிச் செயல்படுத்தினாரோ அதே போல உங்களுக்கும் அவ்வப்போது பயிற்சியாகக் கொடுத்து அருள் உணர்வுகளைப் பதிவு செய்கிறேன்.

1.யாம் பதிவு செய்தைதை எல்லாம் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.நல்லது எது…? கெட்டது எது…? என்று நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்குத் தான் தீமையை நீக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன். எப்பொழுது கேட்டது என்று வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் எடுத்தீர்கள் என்றால்
1.அதைப் பிளந்து காட்டி இந்த உட்பொருளை அறியும்படி செய்யும்.
2.தீமையை நீக்கி உங்களைக் காத்துக் கொள்ள அது உதவும்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் உங்களிடம் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டே வருகிறேன். இயற்கையின் உண்மையின் உணர்வை அறியும்படி செய்வதற்குத் தான் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்… உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வுகளை அதிகாலையில் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.நமது பூமி துருவத்தின் வழியாக அதை இழுக்கின்றது
2.மனிதனாகப் பிறந்து தீமைகளை வென்ற இந்த உணர்வுகளை நுகரப்படும் அந்த நேரம் தான் “பிரம்ம முகூர்த்தம்…”

சகஜ வாழ்க்கையில் நாம் எதைப் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ… நுகர்ந்ததை எல்லாம் நமது உயிர் பிரம்மம் ஆக்குகின்றது… உடலுக்குள் உருவாக்குகின்றது.

உயிர் உருவாக்குவது போன்று துருவ நட்சத்திரம் ஒளியான உணர்வை உருவாக்கும் திறன் பெற்றது. அந்த ஒளியான துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது உயிரைப் போன்றே உணர்வின் தன்மை இணைந்து வாழும்… ஒளியாக மாறும் நிலையாக அமைகின்றது. அதனால் தான் “பிரம்ம முகூர்த்தம்…” என்று சொல்வது.

பிரம்ம முகூர்த்தத்திற்கு இத்தனை அர்த்தங்களும் உண்டு…!

ஏனென்றால் நாம் நுகர்வதை உயிர் எவ்வாறு பிரம்மமாக ஆக்குகின்றதோ அதே போன்று தீமைகளை நீக்கும் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம்.

துருவப் பகுதி வழி வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் பூமி கவரும் அந்த நேரத்திலே நாம் நுகர்ந்து நம் உயிரோடு இணைத்தால் அது பிரம்ம முகூர்த்தம்.

உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற அந்த நேரத்தைத் தான் பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் எண்ணத்தைப் புருவ மத்தியில் வைத்த பின் தீமைகள் உள்ளே செல்லாதபடி தடுக்கப்படுகிறது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டால்
2.எத்தகைய விஷத்தையும் நாம் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

எது உயர்ந்த எண்ணம்…?

எது உயர்ந்த எண்ணம்…?

 

நம் எண்ணத்தின் உயர்வினால் பெற்ற ஆத்ம பலம் கொண்டு நாம் செலுத்துவது எல்லாமே… நாம் எடுத்த ஜெப உணர்வின் நற்குண எண்ண அலை வெளிப்படும் பொழுது…
1.எவ்வளவு கொடிய எண்ணம் கொண்ட குரோதம் கொண்டவனாக ஒருவன் நம்மைச் சந்தித்து எதிர்பட்டாலும்
2.அந்தக் கொடிய எண்ணத்தைக் கொண்டவனின் குரோத நிலை
3.நாம் வெளிப்படுத்தும் சாந்தத் தன்மையினால் அண்ட முடியாது.

பதட்டம் சோர்வு சங்கடம் சலிப்பு போன்ற உணர்வு நிலைக்கே இடம் தரா ஆத்மாவாக நம் ஆத்மா வலுப் பெற்ற தன்மையாக இருந்தால் எதிர் நிலை கொண்ட எந்த உணர்வு எண்ணமும் நம்மைப் பாதிக்காது.

குரோதத்தாலும் வஞ்சனையினாலும் பதட்டம் கொண்ட சோம்பல் கொண்ட எச்சுழற்சி வட்ட ஈர்ப்பில் உள்ளவராக இருப்பினும் அவைகளும் நம்மைப் பாதிக்காது.

நாம் பெற்ற அந்த நற்குண வலுத் தன்மையினால்
1.எந்த ஆத்மாவின் மேல் எண்ணத்தின் பார்வையின் ஒளியை
2.எதை எண்ணிச் செலுத்துகின்றோமோ அந்நிலை அங்கே நடக்கும்.

ஆனால் அதே சமயத்தில் கொடிய குரோத எண்ணம் கொண்டவனாக இருந்தாலும்… தெய்வ சக்தியின் உயர்வு ஆத்ம சித்துவை நாம் பெற்றிருந்தாலும்… நாம் செலுத்தும் சக்தி அங்கு நடக்கும்…! என்ற உண்மை தெரிந்தாலும்…
1.தீய சக்தியை… அந்தத் தீயதை அழிக்க வேண்டும்…! என்று நம்மை உயர்த்தி எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால்
2.அவன் பெற்ற தீய அலைத் தொடர்பின் ஈர்ப்பில் நாமும் மீண்டும் சிக்கி
3.அவன் பால் செலுத்தும் எண்ணத்திலேயே மனிதனுக்கு மனிதன் விடும் சுவாசத்தின் மோதலினால்
3.காந்த நுண் அலையின் தொடர்பு ஈர்ப்பு அணு வளர்ப்பின் செயலுக்கு நம் உடலும் உட்படுகின்றது.

ஆகவே எண்ணத்தை உயர்த்தி நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ சக்தி கொண்டதாக எண்ணத்தில் கொண்ட ஆத்மத் தொடர்பினால் தான் நம் ஆத்மா வலுக் கொள்ள முடியும்.

அதாவது…
1.நாம் செலுத்தும் எதிர் அலையின் உணர்வலை தான்
2.நாமும் திரும்பப் பெற முடியும்.

எந்நிலை எக்குண வழித் தொடரில் இருந்தாலும் அவ் ஈர்ப்புப் பிடியில் நாம் சிக்காமல் எண்ணத்தின் உயர்வைக் கொண்டு உயர்ந்த ஒலி அலைகளையே பிறர்பால் செலுத்தி எண்ணத்தில் ஒவ்வொரு ஆத்மாவையும் நாம் உயர்த்தி நமக்கு வேண்டிய நல் சத்தை நாம் பெறலாம்.

1.தீயது… நல்லது…! என்ற பாகுபாட்டுடன் நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தாமல்
2.நம் உயர்வின் உயர்விற்கு உயர்ந்த எண்ணத்தால் சக்தி பெறலாம்.