கூட்டுத் தியானத்தை யாம் அமைத்ததன் முக்கியமான நோக்கம்

கூட்டுத் தியானத்தை யாம் அமைத்ததன் முக்கியமான நோக்கம்

 

ஒவ்வொரு நொடியிலும் நமது வாழ்க்கையில் நாம் நல்லோரைச் சந்தித்தாலும் சரி… அவருடன் உறவாடினாலும் சரி… ஆனால் அவர் உடலிலே அதற்கு முன் அவர் அறியாது வந்த நோய்கள் பல உண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்நிலைப் பட்ட அந்த உணர்வின் தன்மைகள் உண்டு. உதாரணமாக இவர்கள் தவறு செய்யவில்லை என்றாலும்
1.ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நிலைகள் பெற்றது.
2.மற்றொரு உணர்வின் தன்மை எதிர் நிலையாகி அது துடிப்பின் இயக்கமாக உயிராக உண்டாகி
3.அதனின் துடிப்பின் இயக்கத்திற்குள் அது எடுத்துக் கொண்ட உணர்வினை ஜீவணுக்களாக மாற்றும் நிலைகள் பெற்றது “ஒவ்வொரு உயிரும்…”

கார்த்திகை நட்சத்திரம் என்பது அறிந்திடும் அறிவாற்றல் மிக்க நிலைகளையும்… ஒளி கண்டு உணர்ந்திடும் உணர்வின் அலைகளாக அது பெருகினும்… மற்ற மற்ற 27 நட்சத்திரங்களும் ஒவ்வொருவிதமான நிலைகள் கொண்ட்து.

வைரங்களில் எத்தனை விதமான கலர்கள் இருக்கின்றதோ அவை அனைத்துமே ஒவ்வொரு நட்சத்திரத்தின் வலுவின் தன்மை பெற்றது.
1.27 விதமான வைரக் கற்கள் உண்டு.
2.இதைப் போல தான் உணர்வின் இயக்கங்களும் இருக்கும்.

இந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் இயக்கமும் இருப்பினும் பிறிதொரு உடலில் விளைய வைத்த கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர்கள் அவர் உடலில் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு அவருக்கு ஒத்ததாக விளைந்த எண்ணங்கள் வெளிப்படுத்தினும் அவர்கள் நல்லவராகத் தோன்றினும் அதே சமயத்தில் அது எதிர்மறையான நட்சத்திரம் கொண்ட நான் அவருடன் நட்புடன் இருப்பினும் நாம் பேசிடும் உணர்வு கொண்டு அவர் உணவாக உட்கொண்ட மற்ற அந்த நட்சத்திரத்துடன் ஒத்துக் கொண்ட மற்ற உணர்வின் நிலைகள் கொண்டு எதிர்நிலையாக இயக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கத்தால் தான் ஒவ்வொரு உணர்வின் எதிர் நிலையின் மறைகள் உருவாகி அதனின் நிலைகள் கொண்டு தாவர இனங்களும் விளைகின்றது.

அந்தத் தாவர இனச் சத்தை உணவாக உட்கொள்ளும் பொழுது அதனின் மணங்கள் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒத்து வரும். அங்கே மகிழ்ச்சியின் தன்மை வரும். வலுக்கொண்ட நிலைகளும் வரும். ஆனால் அதே சமயம்
1.மற்றவர்களுடைய நிலை வரும் பொழுது எண்ணத்தால் எதிர் நிலைகள் வரும்.
2.அவர் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் அவர் சொல்லால் எனக்குள் வரப்படும் பொழுது
3.என்னை அறியாமலே எனக்குள் தீமையை விளைவிக்கும் நிலையாக வரும்.

இதைப் போல உணர்வுகள் மாறுபட்ட நிலைகள் விண்ணிலே நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாது அதனின் உணர்வின் தன்மை அலைகளாகப் பிரிந்து… “எப்படித் தாவர இனங்கள் இருக்கின்றதோ இதைப் போல தான் நட்சத்திரங்களின் இயக்கமும்…”

1.அதனின் உணர்வுகள் எதிர்மறையாகி ஒன்றுடன் ஒன்று எதிர் நிலையாகும் பொழுது தான் விண்ணுலகில் ஆற்றல் இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
2.அதைப் போல ஒன்றுடன் ஒன்று ஒன்றும் நிலைகள் வரப்படும் பொழுது எதிர்மறையான உணர்வுகள் வரும் பொழுது தான் அதனுடைய இயக்கமும் வருகின்றது.

இன்று எலக்ட்ரானிக் என்று வரப்படும் பொழுது அது இயக்க வேண்டுமென்றால் அதற்கு எதிர்மறையான நிலைகள் இருந்தால் தான் இயக்கும். அதைப் போல
1.ஒரு உணர்வின் சக்தி உடலுக்குள் ஒத்துக் கொண்ட உணர்வாக இருப்பினும்
2.எதிர்மறையான நிலைகள் இருக்கும் பொழுது தான் அது உந்தி இயக்கும் நிலைகள்.

கரண்ட் ஆக நாம் உபயோகப்படுத்தினாலும் அதனின் நிலைகள் கொண்டு நெகட்டிவ் பாசிட்டிவ் என்று எதிர்மறையான நிலைகள் வரும் பொழுது தான் மின் அணுவின் நிலைகளும்… அதனின் அழுத்தத்தைக் கொண்டு மற்ற மோட்டார்களை இயக்கச் செய்யும் நிலைகள்.

ஆனால் அந்த மின் அழுத்தத்தின் நிலைகள் கொண்டு அதனின் இயக்கத்திற்குத் தக்கவாறு மற்ற பொருள்களை இணைக்கப்படும் பொழுது அதனுடைய ஒலிப்பேழைகளை மாற்றி அமைப்பதும் அதற்குத் தக்க நிலைகளை அது உருவாக்கவும் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகள் தொடர… மனிதனின் உணர்வுக்குள் நாம் நண்பர்களாகப் பழகியிருந்தாலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறைகள் உண்டு.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடும் பொழுது இரண்டு குழந்தைகள் ஒத்து வரலாம்… ஒரு குழந்தை ஒத்து வராத நிலை வரும். எதிர்மறையான நிலைகள் வரப்படும் பொழுது எதிர்ப்பு உணர்வுகள் வருகின்றது.

இதைப் போன்று தான் வசிஷ்டாத்வைதம்
1.27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் நவக்கோள்களின் சக்திகளையும் உள்ளடக்கி
2.உணர்வின் சக்தி ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள் சப்தரிஷிகள்… சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.
3.அந்த மண்டனல்களிலிருந்து வரும் உணர்வின் சக்தியை நாம் கவரும் திறனாகத்தான் உங்களுக்குக் கூட்டுத் தியானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நாம் பலருடன் பழகினாலும்… எண்ணத்தால் கவர்ந்து நட்பின் நிலைகள் கொண்டு கேட்டுணர்ந்தாலும்… கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் எதிர்மறையை உண்டாக்கி நோயாக உருவாகும்.

சந்தேகம் இருந்தால் பார்க்கலாம்… நண்பர்கள் பலருடன் சந்தித்துப் பேசும் பொழுது இன்னொரு நண்பருடன் நாம் பேசி வரும் பொழுது தன்னை அறியாமலே ஒரு கலக்கமும்… ஒரு வியாபார ரீதியாகச் சென்றாலும் அவருடன் உறவாடி விட்டுச் சென்றால் இனம் புரியாது கலக்கங்கள் ஏற்படுவதைக் காணலாம்.

இது எல்லாம் நம்மை அறியாது நடக்கும் செயல்கள். நமது உயிர் கார்த்திகை நட்சத்திரமாக இருப்பினும் மற்றவருடைய உணர்வின் தன்மை எதிர்நிலையாக மாற்றங்கள் அமைக்கப்பட்டு நம்மை இயக்குகின்றது.

இதைப் போன்ற நிலைகள் தான் “வசிஷ்டாத்வைதம்” என்ற தத்துவம்.
1.எதையுமே தனக்குள் கவரச் செய்து – அருந்த்தி…!
1.இணைந்தே வாழும் நிலைகளும்
2.இணைத்து அறிந்திடும் நிலைகளும்
3.இணைந்தே தெரிந்திடும் நிலைகளும்
4.இந்த உடலிலே இணைத்திடும் நிலைகள் கொண்டு என்று நாம் என்று கொள்ளுகின்றோமோ
5.இதனை இணைந்திடும் நிலைகள் ஆக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பருக வேண்டும்.
6.அப்படிப் பருகும் நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்தக் கூட்டுத் தியானம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் வலிமை

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் வலிமை

 

வராகன் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நல்ல பொருளை எடுத்து அது உணர்வுக்குள் நல்லதாக மாற்றி நாற்றமான உடலைப் பிளந்து மனிதனாகப் பிறக்கச் செய்தது

அதைப் போல் விஞ்ஞான அறிவால் இந்த காற்றுக்குள் இருக்கும் நச்சுத்தன்மைக்குள் மகா ஞானியின் உணர்வலைகள் நமக்கு முன் மிதந்து கொண்டிருக்கின்றது. அதை நாம் நுகர வேண்டும்.

1.அந்த மகா ஞானியின் உணர்வலைகளை உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்ய
2.உங்கள் நினைவின் எண்ணங்களைக் கூர்மையாக்க
3.அந்த ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்வதற்கே இந்த நிலை.

பதிந்தபின் நீங்கள் தியானித்து அந்த அருள் சக்தியைப் பெறுவதற்காக…
1.நாம் அனைவரும் சேர்ந்து எண்ணி ஏங்கி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது எளிதில் கிடைக்கும்.

ஒரு நூலால் ஒரு கடினமான பொருளைத் தூக்க முடியாது ஆனால் பல நூல்களை இணைத்துப் பெரும் கடினமான பொருளையும் தூக்க முடியும்.

சாதாரண மனிதன் இந்தப் புவியின் ஆசையுடன் இருக்கப்படும் பொழுது நம் எண்ணத்திற்கு வலு குறைவு. ஞானிகள் பிறவிக் கடனை வென்று இன்னோரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி ஒளியின் சுடராகச் சென்றவர்கள்.

அவர்கள் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளுக்கு அருகிலே நம் உணர்வுகள் செல்ல அருகதையற்றது. அதனை நுகர்வது என்றால் மிகக் கடினமானது.

அந்த ஞானிகள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டி உணர்ந்து உணர்வின் தன்மையை எம்மை ஏங்கிப் பெறச் செய்து
1.அதை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.ஞானிகள் கண்ட உணர்வினை உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி இந்த உணர்வுகளைக் கேட்க வைத்து
3.இந்த உணர்வுகளை நுகரச் செய்து நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து
4.இந்த நினைவின் ஆற்றல் எண்ணும் பொழுது
5.டிவியும் ரேடியோவும் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதை காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் காட்டுவது போல
6.இந்த மகா ஞானிகளின் உணர்வலைகளை நம்மால் எடுக்க முடியும். வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

ஆலயங்களிலே தேரை இழுக்கப்படும் பொழுது பலரும் ஒன்று சேர்த்து அந்தக் கடினமான தேரை இழுப்பது போன்று நாம் அனைவரும் இந்நேரம் வரை கேட்டுணர்ந்த உணர்வை அந்த மகரிஷ்களின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் தியானிக்கப்படும் பொழுது “காற்றுக்குள் மறைந்துள்ள இந்த ஞானிகள் உணர்வலைகளை இங்கே படரச் செய்வதுதான்…”

இங்கே படர்ந்த உணர்வின் சத்தை அவரவர்கள் ஏங்கிய நிலையில் கொண்டு பெற முடியும்.

இந்தத் தியானம் முடிந்த பின் தியானத்தில் அமர்ந்த அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்… எல்லோருக்கும் பெற வேண்டும் என்று உணர்வினை வெளிப்படுத்தும் போது சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து உயர்ந்த எண்ணத்தின் வலுவாக அது கூடி… நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் புற நிலையில் ஈர்த்து உங்களுக்குள் சக்தி வாய்ந்தத உணர்வுகளாகப் பதியச் செய்வதே இந்தக் கூட்டுத் தியானம்.

கூட்டுத் தியானத்தின் மூலம்
1.அனைவரின் எண்ணத்தின் வலு கொண்டு நாம் ஈர்க்கும் திறன் பெற்று
2.இங்கே அணைத்து வந்த உணர்வுகள் நமக்குள் இணைத்திடும் சக்தியாக ஆக்கிய பின்
3.இதற்கடுத்து நாம் தனித்து இருந்தாலும் அந்த உயர்ந்த சக்திகளை “எப்பொழுது வேண்டுமென்றாலும் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும்…”

அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகள்

அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகள்

 

அகஸ்தியனின் தாய் தந்தையர் காட்டிலே வாழும் போது அவர்களுடைய புலனறிவால் தன்னைக் காத்துக் கொள்ளும் ஞானத்தின் நிலைகள் வளர்கின்றது. அப்படி வளர்த்த அந்த தாய் தந்தையரின் கருவில் வளர்ந்த நிலைதான் பிற்காலத்தில் அகஸ்தியன் என்ற நிலை வந்தது.

அகஸ்தியன் அங்கே குழந்தையாகப் பிறந்த பின் அவன் அருகிலே நஞ்சு கொண்ட எதுவுமே வருவதில்லை. மிருகங்கள் கொஞ்சித் திரியும் நிலைகளுக்கு வந்து விட்டது.

1.ஆக தாய் தந்தையர் முலாம் பூசிக் கொண்ட அந்த நஞ்சு கொண்ட மணத்தை நுகர்ந்து கண்டு மற்ற மிருகங்கள் விலகிச் சென்றாலும்
2/ஆனால் அதே சமயம் அந்த நஞ்சு கொண்ட மிருகங்கள் அனைத்தும் அகஸ்தியனைத் தீண்டாமல் பாதுகாக்கும் நிலைக்கே அமைகிறது.

இதைக் கண்ட அன்னை தந்தையர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
1.கடவுளின் அவதாரமாக நம் குழந்தை பிறந்து இருக்கிறது என்று பேரானந்த நிலை பெற்று
2.அன்று சூரியனை வணங்கி வந்த வழக்கப்படி அந்தக் குழந்தைக்கு அவனே தான் இந்த அருள் கொடுத்தது என்று
3.அவர்கள் அறியாது இயங்கிய நிலைகள் கொண்டு அந்த குழந்தையைப் போற்றிக் காத்து வந்தார்கள்.

இருப்பினும் அவர்கள் உடலிலே அதிகமான நஞ்சின் தன்மை பூசியதால் அதனின் உணர்வுகள் உடலில் சிறுகச் சிறுக விளைந்து இந்தக் குழந்தை ஐந்து வயது ஆவதற்கு முன் அந்த உடல்கள் மடிந்து விடுகின்றது.

மடிந்தபின் இவன் தனித்து வாழுகின்றான் அகஸ்தியன். தன் அன்னை தந்தையர் இறந்துவிட்டனர் என்று இந்த ஏக்கத்தின் நிலைகள் கொண்டு காலை கதிரவன் அவன் சுடரை வீசி வரப்படும் போது கதிரவனைப் பார்த்து…
1.என்னை ஈன்ற அன்னை தந்தையர் மடிந்து விட்டனர்
2.அந்த அன்னை தந்தையரின் அருளை நான் பெற வேண்டும்
3.அவருடைய அணைப்பு எனக்கு வேண்டும் என்றும்
4.என் அன்னை தந்தையரை நான் பார்க்க வேண்டும் என்றும் இந்த உணர்வினை விண்ணை நோக்கி ஏங்கி
4.அன்னை தந்தையரைப் பெற வேண்டும் என்ற உணர்வில்… அறியாப் பருவத்தில்
5.ஒளி சுடராக வீசி வரும் அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி அந்தக் கதிரவனின் காந்தப்புலனை எண்ணி ஏங்கி வணங்குகின்றான்.

அப்படி வணங்கப்படும் போதுதான் தான் தாயின் கருவிலே அவன் உடலுக்குள் விளைந்த நஞ்சின் உணர்வின் தன்மை… “நஞ்சினைக் காணும் நிலையை” அவனுக்குள் உருவாக்குகின்றது.

இப்படித் தன் தாய் தந்தையரை எண்ணி அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஏக்கம் கொண்டு கதிரவனைப் கண்ணால் பார்க்கப்படும் பொழுது கதிரவனிலிருந்து வெளிப்படும் அந்த நஞ்சின் தன்மையை அவன் உணர்கின்றான்.

விஞ்ஞானிகள் அல்ட்ரா வயலட் என்று இன்று சொல்வதை அன்று இவன் உடலில் இருந்த நஞ்சின் ஆற்றலால் அந்தச் சூரியனிலிருந்து வெளிப்படும் அந்த நஞ்சினைக் கண் கொண்டு பார்க்கின்றான்.

ஆக இவன் அறியாத நிலைகளில் இருந்தாலும்
1.இவன் உடலில் விளைந்த இந்த உணர்வின் தன்மைகள் இவன் எதை எடுத்துச் சூரியனை வணங்கினானோ
2.அந்த ஞானத்தின் உணர்வின் தொடராக அந்த காந்தப் புலனின் ஆற்றல் பெருகி
3.இவன் எண்ணத்தின் நிலைகள் வலுப் பெற்று
4.சூரியனிலிருந்து வெளிப்படும் இந்த உணர்வினை உற்று நோக்க அதனின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தான்.

அதிலிருந்து வெளிப்படும் நஞ்சும் சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப் புலன்களும் அதைக் கடந்து வரப்படும் பொழுது அந்த அணுவின் இயக்கங்கள் எவ்வாறு மாறுகிறது…? என்று முதல் முதலிலேயே அணுவின் இயக்க உணர்வின் ஆற்றலைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

ஆகையினால் தான் அவன் விண்ணுலக ஆற்றலும்… அதனின் பரிணாம வளர்ச்சியும்… அணுவின் ஆற்றலும்… பிரபஞ்சம் உருப்பெற்றதையும்… அந்த இளம் பிஞ்சு உள்ளத்திலே அவன் மெய்யுணர்வைக் காணும் நிலைகள் அங்கே வளர்ந்தது.

ஏனென்றால் தாயின் கருவில் இருந்து வளர்ந்த நிலைகள்
1.அந்த நஞ்சு வலுக்கொண்டதாக… நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் வளர்ந்ததனால்
2.நஞ்சான உணர்வின் தன்மைகளைப் பிளந்து நல்ல உணர்வின் தன்மையை அகஸ்தியன்ன் அறிந்திடும் பருவம் பெற்றான் முதல் நிலைகளில்.

அவன் உடலில் விளைந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் பிரபஞ்சத்தின் இயக்கமும் பிரபஞ்சத்தில் அணுவின் ஆற்றலின் பெருக்கமும் அதனின் நிலைகள் கொண்டு கோள்களானதும் கோள்கள் நட்சத்திரமாவதும் நட்சத்திரங்கள் சூரியன் ஆவதும் என்ற நிலையினை வெளிப்படுத்துகின்றான்.

அந்தச் சூரியன் நட்சத்திரமாகும் போது அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் அது எவ்வாறு கோள்களாக மாறி கோள்கள் நட்சத்திரமாகி நட்சத்திரங்கள் அனைத்தும் விண்ணுலக ஆற்றலைப் பெற்று இந்த நட்சத்திரங்கள் நஞ்சினை வென்று நல்ல உணர்வுகளைத் தனக்குள் பாய்ச்சி இந்த பிரபஞ்சத்திற்குள் செலுத்துகிறது என்றும்
1.பிரபஞ்சத்திற்குள் இருக்கும் நிலைகள் அதனைக் கவர்ந்து கோளாக மாறி
2.அது உமிழ்த்தும் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து ஒளியின் சுடராக மாற்றி
3.அதனுடன் கலந்த நஞ்சினைப் பிரித்து ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கும் நிலை பெற்றது என்ற உண்மை நிலையை
4.முதன் முதலில் உணர்ந்து பரிணாம வளர்ச்சியும் அணுவின் வளர்ச்சி நிலையும் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்,

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்

 

இப்பொழுது நம் உடலில் வேதனை என்ற உணர்வுகள் அடர்த்தியானால் கேன்சருக்குண்டான அணுவாக உருவாகின்றது. அப்பொழுது விஷத்தைத் தான் அது உணவாக உட்கொள்கின்றது.

அந்த அணுக்கள் உருவானவுடன் விழுதுகளைப் பரப்புகின்றது. எந்தப் பாகத்தில் போகின்றதோ அந்தப் பாகத்தில் எல்லாம் பரப்புகின்றது. அந்த விஷத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது.
1.விஷம் இருந்தால் தான் அது இயக்கும்.
2.அப்பொழுது என்ன செய்கின்றது…? நம் உடலில் கேன்சர் வருகின்றது.
3.ஆக வேதனை ஒரு பக்கம் அதிகமாகக் குமியும். நல்ல அணுக்களைச் செயலற்றதாக்கும்.

இப்பொழுது நமக்குள் சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று அதிகமானால் நம் நுரையீரல்களில் அது அதிகமாகச் சேர்கின்றது. அப்பொழுது அது சளி கட்டும் தன்மை வரும்.

இந்த வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் கிட்னி ஃபெயிலியர் ஆகி இரத்த நாளங்களில் இருக்கக்கூடியது நீர்ச்சத்தாக மாறி நெஞ்சுகளில் அதிகமாக ஆகும்.
1.கிட்னி சரியாக இயங்குவதில்லை… நீர்ச்சத்தாக மாறும்.
2.துரித நிலைகள் கொண்டு மனிதனை அழித்துவிடும்.

அடிக்கடி வேதனை என்ற உணர்வு அதிகமானால் பித்த சுரப்பியின் உணர்வுகள் அதிகமாகின்றது. இந்தப் பித்த சுரப்பிகள் அதிகமாகி விஷத்தின் தன்மை கூட்ட நம் இரத்தத்துடன் அது கலக்கப்படும் பொழுது தலை சுற்றும் கிறு… கிறு… என்று வரும்.

ஆகவே இந்த வேதனை என்ற உணர்வுகளை நாம் பார்த்தால் நினைப்பு வேதனை. ஆனால் இங்கே பித்தங்கள் அதிகமாகும். நாம் தவறு செய்யவில்லை. அந்த விஷத்தின் தன்மை பெருகுகின்றது.

அதே மாதிரி இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது நம் உடலில் மேலே தடிப்பாகின்ற மாதிரி கல்லீரலில் அதே மாதிரித் தடிப்பானால் நம் உடலில் இனம் புரியாத வலி ஏற்படும்.

அப்பொழுது அந்தக் கல்லீரல் வீக்கம் ஆகத் தொடங்கி விடும். கல்லீரல் வீக்கமானால் மண்ணீரலிலும் இதைப் போன்று பல வீக்கங்கள் தொடரும். அதைப் பார்த்தோம் என்றால் ஈரல் பக்கம் முழுவதும் பெரிதாகிவிடும். அது நீண்டு வளரத் தொடங்கிவிடும்.
1.ஆக அந்த மாதிரி அணுக்களை உருவாக்கினால் ஈரலைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.
2.டாக்டரிடம் சென்றால் ஈரலை குறைத்தால்தான் நல்லது என்று சொல்வார்கள்.
3.ஆனால் அதைக் குறைத்து யாரும் பிழைத்த மாதிரிக் கண்டதில்லை.

ஆகவே இதைப் போல உறுப்புகளை மாற்றி உறுப்புகளை வளர்த்தாலும் சிறிது காலமே இருக்க முடியும்.

தேடிய செல்வம் எல்லாம் கொஞ்ச நாள் வாழ்க்கைக்கு பல லட்சங்கள் இருப்பதைப் போட்டு தப்பித்து வந்து விடுகிறார்கள். அடுத்தாற்படி வாழ்க்கைக்கு இல்லை என்றால் மறுபடியும் அந்த வேதனையைத்தான் உருவாக்கும்.

ஓரளவுக்கு அரையும் குறையுமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் நிம்மதியாக இருக்கும். உதவிக்கு ஆள் இருக்க வேண்டும். காசு போய்விட்டால் கடன்காரனாகி விடுவோம். இருக்கிற வீட்டை விற்றுவிட்டுச் சிறிய வீட்டிற்குச் செல்வார்கள்.
1.ரொம்பச் செல்வந்தர்களாக இருந்தாலும் கடைசியில்
2.இதை எல்லாம் எதற்கு…? போ…! என்று போகின்ற நேரம் தான் வரும்.
3.ஆகவே இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்.

என்றும் ஏகாந்த நிலை என்ற உணர்வுகள் நாம் பெறுவதற்கு நாம் இப்பொழுது சொல்லும் இந்த ஆயுட்கால மெம்ராகப்படும் பொழுது உங்களுக்கு கொடுத்த இந்தச் சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

என் பிள்ளை இப்படி வரவில்லையே அது வரவில்லையே என்று கூறிக் கொண்டு அதாவது இந்த உணர்வின் தன்மைக்கு நீங்கள் செலவழித்தால் இதிலிருந்து நாம் என்றைக்கும் மீள முடியாது.

அப்பொழுது
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வை நீங்கள் பெருக்கி
2.என் பிள்ளைக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும் அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று
3.கல்வியிலோ அல்லது வேறு எந்த நிலைகளிலோ தவறானாலும்
4.அவன் செய்யும் அந்தத் தவறான உணர்வு நமக்குள் வளராது காத்துக் கொள்ள வேண்டும்.

அவன் செய்யும் தவறின் உணர்வை நாம் நுகர்ந்தால் வேதனை ஆகி இந்த உணர்வுகள் வந்த பிற்பாடு நமக்கு நோயாகின்றது. நோயாகி வெளியே வந்த பிற்பாடு யார் உடலுக்குள் செல்வோம்…?

யாரைப் பற்றி எண்ணி இந்த விஷங்கள் உருவானதோ அவர் உடலுக்குள் தான் செல்வோம். அவனும் பாழானான் நாமும் பாழானோம். இது தான் நடக்கும்.

ஆகவே தெரிந்தும் தவறு செய்யக் கூடாது.
1.நீங்கள் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகி
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் வளர்ந்து தீமைகளை அகற்ற வேண்டும்.

கணவன் மனைவி ஒன்று சேர்த்தே வாழ்தல் வேண்டும். கணவன் வெளியில் சென்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும். அவர் செய்யக்கூடிய காரியங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

கணவன் வெளியில் போகும் பொழுது மனைவிக்கு அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும். ஒன்றுபட்ட உணர்வோடு நாங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.
1.பண்பு கொண்ட உணர்வுகளை மனதால் நினைத்து அருள் உணர்வைச் சேர்த்து
2.அந்த ரசத்தை… பெண்பாலின் உணர்வைக் கணவன் எடுத்துக் கொண்டால் வெறுப்பு என்ற நிலைகள் மாறும். இருவருக்குமே இது பாதுகாப்பாக இருக்கும்.

நன்மைகள் பல செய்யத் துணிவோம்

நன்மைகள் பல செய்யத் துணிவோம்

 

உலகில் பக்தி மார்க்கங்களில் எத்தனையோ தவறுகள் செய்து வருகின்றனர். அகண்ட அண்டமும் இந்தப் பிரபஞ்சமும் இந்த உடலும் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் அறியாமையிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய முடியும்..

ஒருத்தர் இங்கிருந்து போகிறார் என்றால் அங்கே சாக்கடையாக இருக்கின்றது…! என்று சொல்கின்றோம். அந்தச் சாக்கடையில் அவர் விழுகாமல் இருப்பதற்காகச் சொல்கின்றோம்.

ஒருத்தர் குளிக்கப் போகின்றார். இந்த இடத்தில் மடுகு இருக்கின்றது நீ விழுந்து விடாதே என்று சொல்வதற்கு நாம் தயங்கக் கூடாது. ஏனென்றால் அவன் அங்கே சென்றால் செத்துப் போய்விடுவான் என்று காப்பாற்றுவதற்காகக் கட்டாயப்படுத்தி நாம் இழுக்கின்றோம்.

சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான்… “போகட்டும்…!” என்று விடுவதற்கு மனது வருகின்றதா…?
1.அதே போல் நம்முடைய ஞானத்தால் மற்ற மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
2.அவன் அகராதி பிடித்தவன் என்று சொல்லக்கூடாது‌ அந்த உணர்வு நமக்குள் வந்து நம் நல்லதையே மாற்றிவிடும்.

அதே சமயத்தில் நம் வீட்டிலோ அல்லது மற்றவர்களோ சில சந்தர்ப்பங்களில் சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்… குறைபாடுகள் வந்துவிடும்.

அந்த அறியாமை என்னும் இருளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்ற வகையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று அவர்களுக்கு நாம் பாய்ச்ச வேண்டும்.

அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் நமக்குள் முதலில் இயங்கிவிடக் கூடாது. முன்னால் தடுத்துப் பழக வேண்டும் இல்லை என்றால் அவர்களுடைய தவறு செய்யும் உணர்வு நம்மையும் தவறு செய்பவர்களாக மாற்றுகின்றது.

இப்பொழுது நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…?
1.நான் சொல்லிப் பார்த்தேன் முடியவில்லை என்றால்
2.அதைக் காட்டிலும் நாம் கடுமையான தவறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

வெறுப்பு வேதனை என்ற நிலைகளில் வரப்படும் பொழுது தேடிய செல்வத்தைக் கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லை. நல்ல ஒழுக்கங்கள் எல்லாம் போய் என்ன வாழ்க்கை…? என்ற இந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும். இராமேஸ்வரத்தில் என்ன செய்கின்றோம்…? நாம் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கோடிக்கரை. இப்பொழுது மனிதனாக ஆனபின் என்ன செய்கின்றோம்…? தனுஷ்கோடி.

அகஸ்தியன் என்ன செய்கின்றான்…? தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றினான்.
1.ஆக நமது வாழ்க்கையில் தீமையின் நிலைகள் வந்தால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

இப்பொழுது நோயாளியைப் பார்த்து இரக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டதே என்று ஏங்கினால் சிவ தனுசு ஆகின்றது. அந்த உணர்வின் தன்மை நாம் இயக்கப்பட்டு அந்த நிலைக்குப் போனால் நாம் அடுத்த பிறவிக்குப் போகின்றோம். மனிதனல்லாத பிறவிக்குத் தான் போக வேண்டும். அவன் வேதனை எப்படிப் பெறுகின்றானோ அந்த உணர்வாகின்றது.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன பிற்பாடு அந்த துருவ நட்சத்திரம் என்பது விஷ்ணு தனுசு.
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றும்.
2.நமது குருநாதர் காட்டிய வழியில் அதை நமக்குள் பெருக்கி எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.

அருள் ஞானச்சக்கரம்

அருள் ஞானச்சக்கரம்

 

“அருள் ஞானச்சக்கரம்” பூஜை அறையில் வைக்க வேண்டும். சில சிரமங்களையோ சங்கடங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளையோ உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும் “எந்தக் காரணத்தைக் கொண்டும்…”
1.கணவன் மனைவிக்குள் பேரானந்த நிலையைத் தான் என்றும் உருவாக்க வேண்டும்.
2.கோபங்கள் வரலாம்… ஆத்ம சுத்தி செய்து உடனே அதைத் தடுத்துப் பழக வேண்டும்…
3.நானும் விடுபட வேண்டும்… மனைவியும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று
4.ஆனால் இதை நீங்கள் சீராகச் செய்தால் “நான் செய்வது தான் சரி” என்று வராது.

பால் ருசியாகத் தான் இருக்கின்றது… அதிலே பாதாமைப் போட்டால் ருசியாகத் தான் இருக்கிறது. ஒரு துளி காரம் பட்டு விட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சி தான் வரும்.

ஆது போல் நம் நல்ல மனதில் வெறுப்பை ஊட்டினால் என்ன செய்யும்…? விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைத் தணித்துச் சுவையாக மாற்ற வேண்டும்.

தியானம் செய்தேன் என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என்றால் நீங்கள் எதைச் செய்கின்றீர்கள்…? இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகிறீர்கள்.

1.தியானத்தைக் கூட்டி நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்
2.அந்த உணர்வு பெறுக வேண்டும் என்று மனதிலே பெருக்க வேண்டும்.

வேதனை உணர்வுகளை எடுத்து “எல்லாம் செய்தேன்… இப்படி ஆகிவிட்டது என்னத்தைத் தியானம்…?” என்று கொண்டு போனால் அது நமக்கு அல்ல. கடைசியில் நாம் எதை எடுத்து எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் உருவாக்கும்.

ஆகவே எந்த காரணத்தைக் கொண்டும் தனுசுக்கோடி…! வரக்கூடிய தீமைகளை மாற்றி… கோடி என்று சொன்னால் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்குவது… பிறவில்லா நிலை அடையச் செய்வது.

உணர்வின் எண்ணங்களைப் பற்றி இராமாயணத்தில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள். அதை நாம் கடைபிடித்து நம் வாழ்க்கையை இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும்.

என்னதான் ஒழுங்குபடுத்திச் செல்வத்தைத் தேடினாலும் அது நிற்குமா…? இந்த உடலே சொந்தமில்லை என்கிற போது உடலால் தேடிய செல்வம் எப்படி நிலைத்து இருக்கும்…!

1.அந்தப் பேரருளை இந்த உடலிலே கூட்ட வேண்டும்
2.எந்த அளவுக்குக் கூட்டுகின்றமோ இது அழியாச் செல்வமாகின்றது.
3.என்றும் ஏகாந்த நிலை வருகின்றது… அழியா ஒளிச்சரீரம் பெறுகின்றோம்
4.அதைத்தான் ஒவ்வொரு மகரிஷிகளும் பெற்றார்கள்… அதையே நாமும் பெறுவோம்.

சந்தேக உணர்வின் விளைவுகள்

சந்தேக உணர்வின் விளைவுகள்

 

தன் கணவன் ஒருவரோடு பழகுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த உடனே.. நேரடியாகப் பார்க்கும் மனைவி அதைச் சந்தேகப்படுகின்றார்.

அந்தச் சந்தேகப்படும் உணர்வுடன் கலந்து மனைவி நுகர்ந்து விட்டால் அதன் உணர்வின் தன்மை திருப்பிப் பாய்ச்சப்படும் போது அந்த உணர்வின் அணுக்கள் இங்கே வருவதும் இதனால் தன் மனதில் “மனக் கலக்கம்” ஆகும் உணர்ச்சிகள் தோன்றுகின்றது.

அதே போல் கணவன் மனைவி மேல் வெறுப்படைந்து இதே போல் சந்தேக உணர்வு ஏற்பட்டால் இந்த உணர்வுகள் இதனுடன் கலக்கப்பட்டு இங்கே மனதில் கலக்கத்தின் தன்மை ஏற்படுகின்றது.

இப்படி வெறுப்படையும் உணர்வுகள் இருவருக்குள்ளும் வரும்போது
1.உடலுக்குள் எதிர்நிலைகள் உருவாக்கப்பட்டு
2.நல்ல குணங்களை உருவாக்குவதற்கு மாறாகத் தீமையின் உணர்வுகளைத் தான் அந்த அணுக்கள் மாற்றும்.

இப்படி மாற்றி வரப்படும் போது பகைமை உணர்வுகள் சேரத் தன் உடலுக்குள் மீண்டும் தீமையின் உணர்வுகளை விளைவிக்கும் தன்மையாக வந்துவிடும்.

ஆனால் அதே சமயத்தில் தொழில் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை என்ன செய்யும்…! இப்போது எதற்கடா…? என்று தோன்றும்.

ஆனால் அதே சமயத்தில் எப்படியும் சம்பாரிக்க வேண்டும் நம் குடும்பத்தைப் பெரிதாக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.

பிறகு அந்த நிலைகளில் பலவீனமான நிலைகள் அடையும் பொழுது வளர்த்து வந்த தன்மையும் இழந்து மற்ற உணர்வின் தன்மை தன் உள்ளடக்கும் தன்மை வருகிறது… பகைமை உணர்ச்சிகளே வரும்.

1.அப்போது நம்மை எது இயக்குகின்றது…?
2.நாம் தவறு செய்கின்றோமா…? என்றால் இல்லை…!
3.சந்தர்ப்பம்… இவ்வாறு நுகரப்படும்போது நம் உணர்ச்சிகளை மாற்றி சந்தேகப்படுபவர்களாக இரண்டு பேரையும் மாற்றி விடுகின்றது.

இதனின் விஷத்தன்மை மனித உடலையே அழிக்கச் செய்யும். தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் செல்லும். இல்லையென்றால் ஏன் எதற்கு என்று வாழ்க்கையையே விரயமாக்கச் செய்யும். கணவன் மனைவியைப் பிரித்து வாழச் செய்யும்.

ஆகவே பிரித்து வாழும் போது வேதனையின் தன்மை உருவாகும். இதைப் போல இந்த உணர்வுகள் அதிகமாக விளைந்தால் என்ன ஆகும்…?

மனிதனாகப் பிறந்தும்
1.விஷத்தின் தன்மை கொண்டு தனக்குத் தானே எமனாகவும் மனித உருவுக்கு எமனாகவும்
2.இரண்டு பேருமே பெற்றுக் கொள்ளும் தன்மை வருகின்றது.

இப்படி விளையும் உணர்வுகள் எதிர் நிலையாகப்படும் பொழுது நரகலோகத்தையே சந்திக்க நேர்கின்றது…! ஏன் வாழ்கின்றோம்…? எதற்காக வாழ்கின்றோம்…? என்று இந்த உணர்வுகள் இரண்டு பாலருக்கும் இருக்கும்.

இரண்டு பேருக்குள்ளும் இப்படி மனப் போராட்டங்கள் ஏற்படும் பொழுது இந்த உணர்வுகள் பித்த சுரப்பிகளில் வேதனை உணர்வுகள் (விஷம்) அதிகரித்து கடும் நோயாக மாறிவிடுகிறது. அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அகஸ்தியனும் மனைவியும் நஞ்சினை வென்று ஒன்றாக இணைந்தனர். துருவத்தின் எல்லையில் இருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றினர். இன்றும் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

என்னை குருநாதர் அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஆயுட்கால மெம்பராக ஆக்கினார். அதே போல்
1.மனித வாழ்க்கையில் இருளை நீக்கித் துருவ நட்சத்திரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ
2.அதிலே நீங்களும் ஆயுட்கால மெம்பராக இணைந்து என்றும் ஒளியாக நிலை பெற வேண்டும்.
3.இருள் சூழ்ந்த நிலைகள் உங்கள் மனதை மாற்றக்கூடிய நிலைகள் வரக்கூடாது.

தங்க நகை செய்யப் பித்தளை செம்பு போன்ற சில பொருட்களை அதனுடன் இணைக்கின்றோம். அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தால் இதைப் பிரித்து தங்கத்தைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம்.

இதைப் போல் நமக்குள் மனப் போராட்டங்கள் பல சந்தர்ப்பத்தில் இணைந்தாலும் திரவகத்தை ஊற்றித் தங்கத்தைத் தெளிவாக்குவது போல
1.மனிதனின் வாழ்க்கையில் வரும் இப்படி சந்தேக உணர்வுகளும் மற்ற நிலைகளும் கடும் விஷத்தின் தன்மையை உருவாக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து தனக்குள் இணைத்தோம் என்றால்
3.கணவனும் மனைவியும் ஒன்றி வாழும் நிலை ஏற்படும். மகிழ்ந்து வாழச் செய்யும்.

அன்றாட வாழ்க்கையில் உடனுக்குடன் நாம் செய்ய வேண்டியது

அன்றாட வாழ்க்கையில் உடனுக்குடன் நாம் செய்ய வேண்டியது

 

நாம் எப்போது பிறருடைய உணர்வுகளை எடுக்கின்றோமோ அதன் உணர்வின் தன்மை நமக்குள் வந்து விடுகின்றது. அப்போதே நாம் அதைக் கொன்று விட்டால் தீமை செய்யும் இயக்கமாக வராது.

வேதனையான உணர்வு வரப்படும் பொழுது ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அதை அடக்கி விட்டால் நமக்குள் அந்தப் பரம்பரை என்ற நோய்கள் வராது.

தொழிலில் நஷ்டம் ஆகிறது… வேதனைப்படுகின்றோம்.
1.அந்த வேதனை உணர்வு நமக்குள் வளராது
2.நாம் அப்பொழுதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துக் கொன்று விட்டால்
3.அந்த உணர்வின் தீமைகள் நமக்குள் செயல்படாது.

உணர்வின் உணர்ச்சிகள் நுகர்வது எண்ணங்களாக எப்படி ஆகின்றது…? அந்த உணர்ச்சியின் தன்மை நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

காரணம் தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்ம குரு. இப்பொழுது நாம் ஒருத்தர் பேசுவதை நாம் கவர்ந்து கேட்டால் வசிஷ்டர். உணர்வின் தன்மை நுகர்ந்தால் நம் உடலில் அக்குணத்தின் தன்மை நமக்குள் உருவாக்கும் பிரம்மம் ஆகி அணுவாக உருவாகிவிடுகின்றது.

அந்த அணுத்தன்மை ஆகிவிட்டால் வசிஷ்டர் பிரம்மகுரு. பிரம்மகுருவின் மனைவி யார்…? அருந்ததி.

1.எந்தக் குணத்தின் தன்மை கவர்கின்றோமோ அது உணர்வின் தன்மை அணுவாகும் பொழுது
2.அதன் இனத்தின் தன்மையே தான் இயக்கும் அருந்ததி… என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது சாஸ்திரங்கள்.

ஆக இங்கே விஷ்ணு உயிர். விஷ்ணுவின் மகன் பிரம்மா. சீதாராமன் விஷ்ணுவின் மறு அவதாரம் என்ற நிலைகளைத் தெளிவாக கூறுகின்றனர்.

நாம் எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை பிரம்மம் ஆகும்பொழுது அந்த பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
1.இங்கே அதன் ஞானமாக இயக்கும் என்றும்
2.வசிஷ்டரின் மனைவி அருந்ததி எதைக் கவர்ந்தோமோ அது உருவாக்கப்படும் பொழுது பிரம்மம் ஆனாலும்
3.அது இணைந்தே அந்தச் சக்தியாக இயக்குமென்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றது.
4.எந்த உணர்வின் தன்மையோ அந்த ஞானத்தின் தன்மை இங்கே இயக்கும் என்று கூறுகின்றனர்.

ஆனால் விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். எதன் சுவையின் உணர்ச்சிகள் எண்ணங்களாக இயக்குகின்றதோ அப்பொழுது அது அணுவாகப் படும் பொழுது அதனுடைய இயக்கமும் ஈசன்… அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.

உயிரின் இயக்கமும் இதே தான். விஷ்ணு என்று இருக்கும் பொழுது இயக்கம் ஈசன் அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.

ஆகவே விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். ஆக எந்த உணர்வின் தன்மையோ அதன் உணர்ச்சியின் அணுவாகி அந்த உணர்வின் தன்மை உடலாகி அதன் வழியே இயக்கும் என்றும் நமது சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஆகவே இங்கே இராமாயணத்தில் பரதன் கைகேயிடம் என்ன சொல்கின்றார்…? உன் தாயார் பாட்டன் வீட்டில் எதைச் செய்ததோ… அதையே நீ இங்கேயும் செய்கின்றாய். அதாவது
1.பரம்பரை நோயும் பரம்பரை குணங்களும் நமக்குள் வருகின்றது.
2.ஏனென்றால் இன்னொரு உடலில் விளைந்த உணர்வின் தன்மையை நாம் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மையே நமக்குள் வருகின்றது.
3.அப்பொழுது நமக்குள் அது வளராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அதைக் கொன்று பழக வேண்டும்.

சங்கடத்தையோ சலிப்பையோ வேதனையோ வெறுப்பையோ சந்தர்ப்பத்தால் நுகரும்போது ஆசையின் நிமித்தம் வரப்படும் பொழுது அதன் அருகிலே நாம் செல்கின்றோம்.

தொழிலில் நாம் வேலை செய்து வரப்படும் பொழுது எல்லோருக்கும் நன்மையை செய்கின்றோம். அதில் எதிர்பாராத நிலைகளில் ஒருவன் குறை கூறினால் நாம் நல்லது செய்தும் குறை கூறும் போது அவன் நம்முடைய இடத்தைப் பிடிப்பதற்காக அவன் குறை கூறுகின்றான் அந்தக் குறையின் உணர்வை நுகரப்படும் பொழுது அந்த உணர்வு நமக்குள் விளைந்த பின் அது தான் தாய் ஆகின்றது.

அந்த உணர்ச்சியின் தன்மை வெறுப்படைந்து… “என்னை இப்படிச் செய்கின்றானே..” என்று வேதனை உணர்வை நமக்குள் எடுக்கப்படும் பொழுது அவனை நினைக்கும் பொழுதெல்லாம் வேதனை வருகின்றது.

அப்பொழுது நாம் வேதனைப்படும் செயல் வரப்படும் பொழுது நம் சிந்திக்கும் தன்மை எல்லாம் இழக்கின்றது. நமக்குத் தீங்கு செய்தவன் உணர்வு தான் வளர்கின்றதே தவிர நமது நன்மை செய்த உணர்வை நாம் வளர்க்க முடியவில்லை.

1.ஆனால் அந்தத் தீமை செய்யும் உணர்வு நமக்குள் வளராது “அப்போதே அதைக் கொன்று பழகுதல் வேண்டும்…”
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று அந்த இயக்கச் சக்தியை நாம் மாற்றினோம் என்றால்
3.நமக்குள் அந்தத் தீமை என்ற நிலைகள் வராது.

நல்லது எது…? கெட்டது எது…?

நல்லது எது…? கெட்டது எது…?

 

குருநாதர் என்னைக் காடு மேடெல்லாம் அலையச் செய்து ஒவ்வொரு உணர்வுகளும் நீ நுகரப்படும் போது என்ன செய்கின்றது…? என்று பச்சிலையின் ரூபமாகக் காட்டினார்.

1.ஒரு பச்சிலையை நுகர்ந்த பின் அது உனக்குள் எப்படிப் பேசுகின்றது…? என்று பார் என்கின்றார்.
2.அதை நுகர்ந்த உடனே அந்தப் பச்சிலை பேசுமா…? என்று கேட்கின்றார்.

எப்படி சாமி பேசும்…! என்றேன்.

இப்பொழுது பேச வைக்கின்றேன் பார்…! என்று பச்சிலையை நசுக்கி என்னை நுகரச் செய்தார். நுகர்ந்தவுடனே “ஓ…ய்” என்று பேச ஆரம்பிக்கின்றது… ஐய்யய்ய… என்று ஒரு மாதிரியாக உமட்டலாக வருகின்றது.

1.இப்பொழுது எது பேசுகின்றது…? நீ பேசுகின்றாயா…? இல்லை… அந்தப் பச்சிலையா…?
2.இப்படி ஒவ்வொரு இலைகளையும் நுகரப்படும் பொழுது உணர்த்துகின்றார்.

திடீரென்று என்னை ஓங்கி அடிக்க வருகிறார். அப்பொழுது அடிக்க வந்தவுடன் நுகர்ந்தவுடன் என்ன செய்தது…? யார் அடிக்க வந்தது…? நுகர்ந்த உணர்வு உனக்குள் வந்து உன்னைப் பயப்பட வைக்கிறது.

அப்பொழுது நீ பயந்தாயா…? நான் செய்த செய்கையை நீ நுகர்ந்த பின் உன்னைப் பயமுறுத்தச் செய்கின்றது. அப்பொழுது நீயா…? இல்லை நானா…?

1.இதில் இரண்டையும் சொல்லி இப்படி எல்லாம் வினாக்களைக் கேட்பார்.
2.ஏனென்றால் இதை அனுபவ ரீதியில் ஒவ்வொன்றையும் உணர வைக்கின்றார்.

சில நேரங்களை எடுத்துக் கொண்டோம் என்றால் இதை ஏதாவது ஒன்று சொல்வார். இது நல்லதா… கெட்டதா…? என்பார். நல்லது என்று சொன்னால் எப்படி நல்லது…? என்பார் கெட்டது என்று சொன்னால் எப்படிக் கெட்டது…? என்பார்.

இந்த வினா கொடுப்பதற்கு முன்பே கெட்டது என்று சொன்னாலும் கூட எப்படி கெட்டது என்று…! நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல என்பார்.

இப்பொழுது நீங்கள் நல்ல தேனும் பாலும் சுவையாகச் சாப்பிடுகிறீர்கள்… அது நல்லது தானே…!
1.ஆனால் உடம்புக்கு முடியாத நேரத்தில் இதைச் சாப்பிட்டால் என்ன செய்கின்றது…? எதிர்நிலையாகின்றது.
2.அப்பொழுது இது நல்லதா… கெட்டதா…? என்பார்.

இதைச் சொல்லிவிட்டு இது எல்லாம் நல்லது தானே..! எப்படி நீ நல்லது என்று சொல் பார்ப்போம்…? என்று கேட்பார். உடம்பு முடியாமல் போனால் நல்லதை நீ சாப்பிட்டவுடன் அது நல்லது செய்கின்றதா இல்லை கெட்டது செய்கின்றதா…? என்பார்.

1.எவ்வளவு நாசூக்காக அவருடைய உணர்வுகளை உணர்த்துவதற்காக வேண்டி அனுபவரீதியாகக் கொடுக்கின்றார்.
2.ஆனால் மனிதன் வாழ்க்கையில் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் நல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல.

இப்பொழுது நாம் மருந்து சாப்பிடுகின்றோம்… அது கசப்பாக இருக்கின்றது. ஆனால் நோயை நீக்கக்கூடிய தன்மை இருக்கின்றது. மருந்தைச் சாப்பிட்டவுடன் என்ன செய்கின்றது…?
1.நமக்குள் இருக்கக்கூடிய கெட்டதை நீக்கிவிட்டு நல்லது ய்கின்றது.
2.அப்பொழுது அந்த மருந்துக்குள் இருக்கக்கூடிய கசப்பின் உணர்ச்சி என்ன செய்கின்றது…? நமக்கு நல்லது செய்கின்றது அல்லவா…!

ருசியின் தன்மை இருக்கும் போது நீ ருசியாகச் சாப்பிடுகின்றாய். சாப்பிடும் போது உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்கின்றது…? வயிற்று வலி வருகின்றது தலைவலி வந்து விடுகின்றது வாந்தி வந்து விடுகின்றது எல்லாம் வந்து விடுகின்றது. அப்பொழுது இது எப்படி நல்லதாகும்…? என்று கேட்கின்றார்.

ஆக நாம் நுகரும் உணர்வுகளை இயக்குவது யார்…? நமது உயிர். அப்பொழுது நமக்குக் கடவுள் யார்…? நமது உயிர். அந்த உணர்வின் தன்மையை நாம் இயக்கி உடலில் உணர்வின் தன்மை அணுவாகி விட்டால் நம் உள் நின்று குணத்தின் தன்மை உயிரைப் போலவே உள் நின்று கடவுளாக இயக்கும்.

1.அது தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் பிரணவத்திற்குள் பிரணவம்.
2.இயக்கத்தின் தன்மை எப்படி இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

ஆகையினாலே நாம் இந்த ஆயுட்கால மெம்பராக இருப்பதெல்லாம் எப்போது நமக்குத் தீமை என்று தெரிகின்றோமோ அப்போதே அதைக் கொன்று பழக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது நமக்குள் வளராது ஆத்ம சுத்தி செய்து அதை நாம் அடக்கிப் பழக வேண்டும். அதை வளரவிடக் கூடாது.

நாம் மிளகாயை அள்வாகக் குழம்பில் போடும்போது அது ருசியாக வருகின்றது. அதே மிளகாய் அதிகமாகி விட்டால் ருசி கெடச் செய்கிறது. ஆகவே நாம் தீமை என்ற கார உணர்ச்சிகளை நுகரும் போதெல்லாம் கொன்று பழக வேண்டும்.

குழம்பில் அதிகமாக காரம் இருந்தால் இரண்டாவது முறை சாப்பிடத் தோன்றுமா? உஷ்…உஷ்… என்று தள்ளி விட்டுவிடுகிறோம். அப்போது அதைச் சாப்பிடுகின்றோமா…? இல்லை.

இதை போல தான் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒருவர் தீங்கு செய்தான் என்று தெரிகிறது. இப்படித் தீங்கு செய்தானே இப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று நாம் உள்ளுக்குள் போட்டவுடன் என்ன செய்கின்றது…? நமக்குள் இருக்கக் கூடிய நல்ல குணங்களை எல்லாம் கொல்கின்றது. ஆக நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றும்.

அப்பொழுது நாம் எதைக் கொல்ல வேண்டும்…?
1.அவனை எண்ணி அவன் வழியில் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் கொல்வதா…?
2.ஆனால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காக்க… தீமை என்று உணர்வு நமக்குள் வருவதை அதைக் கொல்வதா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

அந்த உயர்ந்த சக்திகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதற்காக குருநாதர் எப்படி ஆயுட்கால மெம்பராக என்னை இணைத்தாரோ அதே போல் ஆயுட்கால மெம்பராக உங்களையும் இணைக்கின்றேன்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ்நாளில் நஞ்சினை வென்றானோ கணவன் மனைவி ஒன்றாக இணைந்தனரோ இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியின் சரீரமாகப் பெற்றனரோ… அதன் வழிப்படி இந்த ஆயுட்கால மெம்பர்கள் உங்கள் குடும்பத்தில் அன்புடனும் பற்றுடனும் பரிவுடனும் வாழ்தல் வேண்டும்.

தன்னை அறியாது வரும் தீயவினைகளை…
1.இராமாயணத்தில் பரதன் சொன்னது போல அந்தத் தீமை என்ற உணர்வுகளை
2.அப்போதே அதைக் கொன்று அருள் உணர்வினைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

ஆயுட்கால மெம்பராக வந்தவர்கள் நீங்கள் இதனை வழிப்படுத்தி நடத்தி இந்த உடல் தான் கடைசி உடல் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுங்கள்.

நம்மைப் பலவீனப்படச் செய்வது எது…?

நம்மைப் பலவீனப்படச் செய்வது எது…?

 

நான் என்னுடைய அனுபவத்தில் சொல்கின்றேன். 20 வருட காலம் குருநாதர் காட்டிய அருள் வழியில் எதை எதை எப்படி எல்லாம் நுகர்கின்றோமோ…? அது எல்லாம் எப்படி என்னை இயக்குகிறது…? என்று அதைக் காட்டுகின்றார்.

உதாரணமாக காட்டுக்குள் செல்லப்படும் பொழுது ஒரு மோசமான இலை இருக்கின்றது. அதை நசுக்கியவுடன் ரொம்ப நாற்றம் அடிக்கின்றது.
1.நாற்றம் அடிக்கின்றது என்று முகத்தைச் சுளித்தால்
2.இந்த உணர்வின் தன்மை முகத்தைச் சுளிக்க வைப்பது எது…? நீயா… இல்லை அந்தப் பச்சிலையா…? என்று கேட்பார்.

அந்த பச்சிலையின் உணர்வு உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சியின் தன்மை உடலாக்கப்பட்டு
1.அந்த உணர்ச்சிகள் உன்னை எப்படி முகத்தைச் சுளிக்க வைக்கின்றது…?
2.வாந்தி உமட்டல் எப்படி வருகின்றது…?
3.இது எதனுடைய காரணம்…?

நீ நுகர்ந்த உணர்வு தான் அதை இயக்குகின்றது. இயக்குவது யார்…? உயிரே…! ஆக அந்த உயிர் இயக்கும் உணர்வுகளில் இருந்து இது எப்படிச் செயல்படுகின்றது…? என்பதனை இப்படித் தெளிவாக்குகின்றார்.

இதைப்போல் எத்தனையோ வகையான பச்சிலைகளை நுகரும்படி செய்கிறார். சந்தர்ப்பங்களில் என்னை இடக்கு முடக்கான இடங்களில் கொண்டுபோய் ஏற்றி வைத்துவிட்டு நீ இங்கே இரு… நான் வருகின்றேன்…! என்று போய்விடுவார்.

அப்பொழுது அவர் போனவுடனே என்ன நடக்கிறது…? அவர் இருக்கும் பொழுது முதலில் தைரியமாக இருந்தது. ஆனால் அதற்குப் பின் அந்த இடத்திலிருந்து கீழே இறங்க முடியாத நிலையும் பயம் கொள்ளும் உணர்ச்சிகளை எனக்குள் ஊட்டுகிறது.

இந்த உணர்வுகள் தோன்றிய பின் அதன் பின் நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் என்னென்ன செயல்கள் செயல்படுகின்றது…? அதிலிருந்து நீ எப்படி விடுபட வேண்டும்…? என்று இவ்வளவும் ஞாபகப்படுத்தினாலும்
1.அந்தப் பயம் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறந்து விடுகின்றோம்.
2.மறந்தவுடன் நடுக்கம் ஆகின்றது… மன உறுதியே இருக்காது. நாக்கு கூட சில நேரங்களில் வறண்டு போகும்.

ஒரு ஆபத்தான இடத்தில் விட்டவுடன் அந்த உணர்ச்சியின் வேகம் வரும்போது இதை உற்றுப் பார்க்கும்போது நாக்கு வறட்சியாகி விட்ட்து. தண்ணீருக்கு எங்கே செல்வது…? அப்பொழுது வறட்சி ஆகும்போது பலவீனமடைகின்றது.

இதையெல்லாம் எது இயக்குகின்றது…?

1.நீ உன்னுடைய எண்ணத்தால் நுகர்ந்த நிலை உன்னைப் பலவீனப்படுத்தச் செய்து
2.அப்பொழுது நீ எடுக்கும் மன பலம் குறைகின்றது.
3.இங்கே வறட்சி ஆகின்றது. உன் உடலில் வேர்வையாகின்றது.

ஆக இதன் உணர்வுகள் உள் நின்று வெப்பமாகி இதன் உணர்வுகள் ஆவி ஆக்கப்படும் போது நீ எந்தப் பொருளைத் தொட்டாலும் அது வழுக்கும் தன்மை வருகிறது. மீண்டும் இங்கே உன் பலவீனம் தான் காட்டப்படுகின்றது.
1.பலவீனம் காட்டுவது எது…?
2.உன்னுடைய எண்ணம் தான்.

உயிரிலே பட்டு இயக்குவது யார்…? அந்த உயிரே தான். அந்த உணர்ச்சியின் தன்மை உன் உடலில் இயக்குவது யார்…? இந்த உயிரே தான் என்ற நிலையில் இப்படி ஒவ்வொரு நிலைகளையும் தெளிவாகக் காட்டுகின்றார்.

நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான் ஞானியர்கள் அரங்கநாதன் என்றும் இந்த அரங்கத்திற்குள் உணர்வின் தன்மை மோதும் போது அந்த உணர்ச்சிகள் (ஆண்டாள்) நம்மை ஆளுகின்றது… அது சொல்லைக் கேட்பவரையும் ஆளுகின்றது என்று தெளிவாக்கினார்கள்

இப்பொழுது வேறு ஒன்றும் தேவையில்லை. நாம் கொஞ்சம் தைரியமாக இருப்போம், ஒருத்தர் முடியாத நிலையில் அவர் பலவீனமான உணர்வை நுகர்ந்த பின் அந்த நாதத்திற்கொப்ப அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு அவருடைய செயலைப் பார்க்கும்போது நாம் வலுவாக இருப்பவர்கள் என்ன செய்வோம்…?

என்னப்பா…? இதற்கெல்லாம் போய் நடுங்கிக் கொண்டிருக்கின்றாய்…! என்று நாம் கேலி செய்வோம். ஆனால் அவருக்கு அங்கே முடியாத நிலை. ஆனால் நாம் கேலி செய்வோம்.

அந்தக் கேலியின் தன்மை சிரிக்கச் சிரிக்க மீண்டும் அவருடைய பலவீனத்தைத் தான் ஊட்ட முடியும். ஆனால் அவருக்குத் தெளிவூட்டுகின்றோமோ…?

ஆனால் அதே சமயத்தில்
1.அவன் முடியாத நிலைகளை நாம் நுகர்ந்து விட்டால் அடுத்து இந்த மாதிரிச் சந்தர்ப்பம் வரும்போது நமக்கும் இதே மாதிரி நடுக்கம் வரும்.
2.நடுக்கம் வரும்போது யாராவது சிரித்தால் நமக்கு உடனே கோபம் வரும்.
3.என்னைப் பார்த்து அவன் கிண்டல் செய்கின்றான் பார் என்று கோபம் வரும்… அல்லது பதட்டம் வரும்.

ஆக
1.அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நுகர்ந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக பரவப்பட்டு
2.நம்மை ஆளுவது நாம் எண்ணிய எண்ணங்கள் தான் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொரு நிமிஷமும் எத்தனையோ வகையான ஆயிரக்கணக்கான நிலைகள் வருகின்றது. அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.