துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்

 

காலையில் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாக வளர்க்க நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடைப்படுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்துன் சக்தியை முன்னணியில் வைத்தால்…
1.தீமையான அணுக்களை நம் உடலுக்கு ஓர் அடிக்கு உள்ளே வராதபடி தடுத்துவிடலாம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் தியானித்து வலுப்பெற வலுப்பெற
3.நமது ஈர்ப்பு வட்டத்தில் இருந்து அந்தத் தீமைகள் கடந்து பரமாத்மாவிலே கலந்து விடுகின்றது.

நம் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள நல்ல அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க அது வலுப்பெற்று தீமைகளை மாற்றிவிடும்.

இவ்வாறு மாற்றி அமைத்தால் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் வலுப் பெறுகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்கின்றோம்.

ஆனால் பிறிதொரு உணர்வுக்குள் சிக்கிவிட்டால் அந்த உடலுக்குள் சென்று நோயை உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தத்தான் செய்யும். அந்த உடலை விட்டு வந்தபின் பரமாத்மாவிலே கலந்து எந்த விஷத்தன்மையுடன் வந்ததோ அதனுடைய ஈர்ப்புக்கு அழைத்துச் சென்று மனிதனல்லாத உருவை உருவாக்கி விடும் நமது உயிர்.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும். ஆகவே
1.அடிக்கடி துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை சேர்த்துக் கொண்டே வந்தால்
2.பற்று கொண்ட மற்றவர்களின் தீமையான உணர்வுகளும் நமக்குள் நோயாக மாறாது.

அந்த ஆன்மாக்களை விண் செலுத்தி விட்டால் அந்தத் தீமை நமக்குள் இயங்காது மாறி விடுகின்றது. உடல் ஈர்ப்புக்குள் வராதபடி நம் ஆன்மாவிலிருந்து தள்ளிப் பழகுதல் வேண்டும்.

அதற்குத் தான் ஆத்ம சுத்தி அந்த ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். எப்பொழுது மனக்கலக்கமோ சோர்வோ சலிப்போ சஞ்சலமோ வேதனையோ நம்மை அறியாமலே வரும் அந்த மாதிரி நேரங்களில் அதை நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

1.தீய அணுக்கள் கண் வழி அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது.
2.இழுத்து ஆன்மாவாக மாற்றிச் சுவாசிக்கும்படி செய்து… அப்போது அந்த எண்ணங்கள் வருகின்றது.
3.இரத்த நாளங்களில் கலந்து நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைத்து அதன் படி தீமைகளை உருவாக்கி விடுகின்றது.

இது போன்று எப்பொழுதெல்லாம் தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். துருவ நட்சத்திரத்தின் பால் நினைவச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் வலுப்படுத்துங்கள்.

இந்த உணர்வுகள் வலுப்பெற்ற பின் சோர்வடையச் செய்யும் சஞ்சலப்படச் செய்யும் கவலைப்படச் செய்யும் வெறுப்படையச் செய்யும் அணுக்களுக்கு ஆகாரம் செல்லாதபடி இந்தத் துருவ நட்சத்திரத்தின் அவைகளைத் தள்ளி விடுகின்றது.

1.நாம் ஆன்மாவை விட்டுத் தீமைகள் கடக்கப்பட்டு பரமாத்மாவிலே கலந்து விடுகின்றது.
2.அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் வலுப்பெறும் போது நல்ல அணுக்களுக்கு இது உணவாகச் சென்று
3.உடலுக்குள் நல்ல அணுக்களாக வளரத் தொடங்குகிறது.

மனிதனாக இருப்பவர் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

தீமை செய்யும் அணுவாகிவிட்டால் அது உந்தி தன் உணவை எடுக்கின்றது… அறியாதபடி நோய்களும் வந்து விடுகிறது… நம் மனநிலையும் வித்தியாசமாகி விடுகின்றது.

அன்பு கொண்டு மற்றவரிடம் பழகினாலும் அந்த அன்பு மறைந்து விடுகிறது… பகைமையை ஊட்டுகின்றது. பகைமையான அணுக்கள் உடலுக்குள் உருவாகும் பொழுது உடலுக்குள்ளேயே பகைமை உணர்ச்சிகள் வளர்ச்சி அடைந்து விடுகின்றது.

இதைப்போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒவ்வொரு நாளும் வாழ்க்கையையே தியானம் ஆக்குங்கள்.

சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு போன்ற செயலற்ற நிலைகள் வரப்படும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் வலுப்படுத்தினால் தீமைகளைத் தள்ளி விடுகின்றது… ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது… மன வலிமை பெறச் செய்கின்றது.

வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தீமையிலிருந்து விடுபடும் சக்தியும் பெறுகின்றோம். அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றுகின்றோம். ஆகவே
1.இந்த வாழ்க்கையில் பிறவி இல்லா நிலை அடைய முயற்சி எடுங்கள்.
2.இந்த உடலுக்குப் பின் நாம் இன்னொரு உடல் பெறக் கூடாது.

சப்தரிஷிகளின் செயல் நிலை

சப்தரிஷிகளின் செயல் நிலை

 

ஆதி சக்தியின் ஜீவ சக்தி தான் அனத்துமே. அஜ்ஜீவ சக்தியை அவ் ஆதி சக்தி வளர விடுகின்றாள். அவ்வளரும் பக்குவத்தில் அவை அவை எடுக்கும் சுவாச நிலை கொண்டு தான் பலவும் உருப்பெறுகின்றன. ஆதி சக்தியின் அருள் சக்தியின் அச்சக்தியுடனே ஐக்கியப்படும் நிலை பெற வேண்டும்.

இன்று நம் உலகினில் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை ஒருவருக்கொருவர் மாறு கொண்டுள்ளது.
1.நல்லவர் தீயவர் என்பதெல்லாம் ஆண்டவன் படைப்பு அல்ல,
2.அவரவர் எடுத்து சுவாச நிலை ஒன்று அமையப்பெற்றது.

நல்லவரின் எண்ணத்தை அச்சக்தியின் நிலையுடன் சக்தியை ஈர்த்து அந்நிலையில் மென்மேலும் நற்பயனைச் செயல்படுத்தி அதன் வழித் தொடரிலேயே ஆத்மாவிற்கு நற்சக்தி கூடி பரம்பொருளான ஆதி சக்தியுடன் ஐக்கியப்பட்டு ஆண்டவனின் அருள் பெற்றவனாய் ஆண்டவனாய் இன்று சப்தரிஷி நிலை பெற்ற பக்குவம் பெற்ற மகான்கள்.

இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களையும் நல் உணர்வு பெற்று நல் ஆத்மாக்களாக தன் வட்டத்திற்குள் அச்சக்தியை ஈர்ப்பதற்காக மனித ஆத்மாக்களின் அவ்ஈர்ப்பு நிலை கொண்ட எண்ணங்களுடன் கலந்து மற்ற மனித ஆன்மாக்களை நற்பயன் பெறச் செய்யும் பக்குவ சக்தியை ஊட்டி நல் உணர்வுகளைப் பக்தி என்னும் நிலையில் வளர விடுகின்றனர்.

அந்நிலை பெற்று வழி வந்த பல மனித ஆன்மாக்கள் எந்நிலை கொண்டு பிறகு செயல்படுகின்றன…?

முந்தைய பாடங்களில்
1.இயேசுநாதரும் முகமது நபியும் ஐயப்பனும் இந்நிலையில் பக்தி கொண்டு வெளி வந்தவர்களின் நிலை எல்லாம் உணர்ச்சி வந்தேன்.
2.இவர்களின் உடலை ஒரு சப்தரிஷி கொண்ட முனிவரின் ஆத்மாவின் செயலினால் வழி நடத்தப்பட்டவர்கள் என்று.

பிற உடலில் அவ்ஆதி சக்தியின் அருள் பெற்ற சப்தரிஷியின் நிலையினால் இவ்வுலகிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடல் கொண்ட ஆத்மாவை அச்சப்தரிஷி வழி நடத்தி அருள் புரிந்த பிறகு அந்த உடலின் ஆத்மாவின் நிலை என்ன…?

ஒவ்வொரு உடலுக்கும் உகந்த உயிரணுவும் உயிராத்மாவும் உள்ள நிலையில் ஒரு சில உடல்களை அவ்உடலில் இருந்து அந்த உயிராத்மா பிரிந்த பிறகு கட்டையான ஜீவனற்ற உடலுக்கு அந்த ரிஷிகளின் ஆத்மா செயல் கொண்டு சில நிலைகள் நடக்க வைக்கின்றனர்.

உயிராத்மாவுடன் உள்ள உடலில் அந்த ரிஷிகளின் நிலை செயல்படும் நிலையில் அந்த உடலில் உள்ள ஆத்மாவின் நிலை எந்நிலை கொள்கின்றது…?

இராமகிருஷ்ண பரமஹம்சர் உயிருடன் உள்ள நிலையிலேயே அவரைத் தன் செயலுக்கு உகந்த ஆத்மாவாகத் தேர்ந்தெடுத்து அவர் வழியில் இவ்வுலகிற்குப் பல வழிகளைப் புகட்டிய அந்த ரிஷியின் அருள் இவருக்கு எப்படிச் செயல்பட்டது…?

அதற்குப் பிறகு இவரின் உயிர் ஆத்மாவின் நிலை என்ன…?

இவரின் உடலில் இருந்து அந்த உடல்நிலை கெட்ட பிறகு அந்த உடலில் இருந்து கொண்டு அவர் உயிராத்மா செயல்படாது என்ற நிலையில்
1.அவர் உயிருடன் உடல் பெற்று வாழ்ந்த காலத்தில் அவர் நிலையிலிருந்து செயல்படுத்திய அந்த ரிஷியின் சக்தி
2.அவர் உடலில் உள்ள அனைத்து அமிலத்தையும் புனிதமாக்கும் பக்குவத்தை அவர் சுவாசமுடனும் எண்ணமுடனும் கலக்கச் செய்து
3.அவ்ஆத்மாவுக்கும் அந்த ரிஷியின் ஆத்மாவுடன் கலக்கும் பக்குவத்தை அந்த உயிராத்மாவே ஏற்படுத்திக் கொண்டு
4.அந்த ரிஷியின் சக்தி வட்டத்திற்குள் இவரின் சக்தியும் ஒன்றி விடுகின்றது.
5.இவர் வேறல்ல அந்த ரிஷி வேற இல்லை என்ற நிலையில் ஐக்கியப்பட்டுச் செயல்நிலை கொள்கின்றது.

இப்படித்தான் இச்சப்தரிஷி நிலை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தன் வட்டத்திற்குள் சேமிக்கும் சக்தியாய்ப் பலரை ஈர்த்துச் செயல்படுத்துகின்றனர்

போகருக்குக் குருவாக அருள் பெற்ற காளிங்கராயச் சித்தரின் நிலையும் இன்று அவரின் வட்டத்திற்குள் அவரின் ஒளியுடனே ஒளியாகக் கலக்க போகருக்கு தீட்சை தந்து அவர் நிலையில் முருகா என்ற மந்திரத்துடன் அவருடன் ஐக்கியப்படும் ஆத்மாக்களை ஒளிவட்டமாகத் தனதாகப் பல சக்தியை ஈர்த்து “இன்று ஒரு மண்டலமாகும் நிலையுடன் ஒளிக்கதிர்களைச் சேமித்து செயல் கொண்டு வருகின்றார்…”

மனித ஆத்மாக்களில் மட்டும் எண்ண நிலை மாறு கொண்டு செயல்படவில்லை.
1.சப்தரிஷியின் நிலையிலும் மாறு கொண்ட நிலை உண்டு.
2.ஆனால் அவர்களின் நிலையில் நற்பயனைப் போதிக்கும் நற்சக்தி நிலைதான் கூடிச் செயல்படுகின்றது.

மனித ஆத்மாக்களுக்குத் தான் இப்பேராசையின் நிலையிலிருந்து விடுபடத் தெரியவில்லை. நல் உணர்வை ஊட்டினாலும் ஏற்பதற்கு எண்ணத்தில் ஆசை இல்லை. அன்பென்னும் நிலையைச் சிதற விட்டு வாழுகின்றனர்.

எம்முடைய உபதேசத்தின் சாரம்

எம்முடைய உபதேசத்தின் சாரம்

 

இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வெல்லாம்
1.துருவ நட்சத்திரத்துடன் உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்து
2.இந்த உணர்வினை நீங்கள் நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் கருவாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பது.
3.இதை நீங்கள் ஏங்கி சுவாசித்தாலே போதுமானது
4.ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

நமது வாழ்க்கையில் தவறு செய்தவரையும் தீமை செய்பவரையும் உற்று நோக்கி… அவர்கள் பேசும் உணர்வைச் செவிகளிலே கேட்கப்படும் பொழுது அதே உணர்வு கொண்டு “இப்படிப் பேசுகின்றார்கள்” என்று நுகர்ந்தால் அதுவும் தியானம்தான்.

இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் தீமை செய்யும் நிலையாக அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் அணுவாக மாற்றிவிடும்.

ஆனால் இந்த உபதேச வாயிலாக உங்களைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினைச் சொல்லாகச் சொல்லும் பொழுது
1.செவிகளில் இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண் வழி அதைக் கவர்ந்து
2.கண்ணின் காந்தப் புலனறிவு கொண்டு அதை நம் ஆன்மாவாக மாற்றி உயிரான ஈசனிடம் கொடுக்கப்படும் பொழுது
3.இந்த உணர்வின் தன்மை அதாவது பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா ஆக நமக்குள் மாறி அதன் உணர்வு கொண்டு நம் உடலாகிறது.

இதனின் உணர்வை வளர்த்துக் கொண்டால் உயிரான்மாவுடன் சேர்த்து அருள் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மை பேரருள் என்ற உணர்வின் ஆன்மாவாக அந்த உணர்வின் அணுத் தன்மை அடைகின்றது.

அவ்வாறு அடையச் செய்யத்தான் இந்த உபதேசத்தை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு எப்படிக் காட்டினாரோ… அதே வழிப்படிதான் உங்களுக்குள் அது பெருகவும் அதே உணர்வினைச் செவி வழி உணர்ச்சிகளை உந்தும்படி செய்து கண் வழி அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரச்செய்து ஜீவான்மாவாக மாற்றி அதன் உணவுக்காக அதே உணர்வுகள் தூண்டப்படும் பொழுது அதை ஏங்கி வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி நஞ்சினை வென்று பேரருள் பெற வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வாகச் சொல்கின்றேன்.

செவி வழி உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண் வழி அந்த அரும்பெரும் சக்தி அதை நீங்கள் நுகர்ந்து பேரானந்த நிலை பெறும் அந்த ஆற்றல் பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன்.
1.கருத்தினைக் கூர்ந்து கவனித்து அந்த உணர்வுகளை நுகர்ந்தறிந்து அறிவதோடு மட்டுமல்லாதபடி
2.அறியச் செய்யும் மகரிஷிகளின் பேராற்றல் மிக்க உணர்வினை உங்களுக்குள் உருவாக்கவே இந்த உபதேசம்.

தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

 

கேள்வி:-
சர்வ ஜீவ ஜெந்துக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை. மனிதனும் அவ்வண்ணமே படைக்கப்பட்ட பொருள்களில் ஒருவன். மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கிறார் என்பது சான்றோர்கள் வாக்கு.

அந்நிலையை நாம் அனுசரித்து வருகிறோம். அப்படி இருக்கத் தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

எண்ணத்தை வைத்துத் தான் செயல்படுகிறோம். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களே ஏற்படுமானால் நற்செயல்களே செய்வார்கள் அல்லவா…? தீய செயல்களுக்கு இடமில்லாமல் போய்விடும் அல்லவா…? ஏன் அப்படி நடப்பதில்லை…?

ஈஸ்வரபட்டரின் விளக்கம்:-
இறைவன் படைத்த படைப்பே நாம்… நாம் மட்டுமல்ல சகலமுமே ஐக்கியப்படும். இந்நிலையில் இயற்கையிலேயே பல மாற்றங்கள் உண்டு.
1.நீர் மனிதராய்ப் பிறந்துள்ளீர். நாயுமுள்ளது, பாம்பும் உள்ளது, மாங்கனியும் வளர்கின்றது. நச்சுச் செடியும் வளர்கின்றது.
2.மனித ஆத்மாக்களின் நிலையை மட்டும் கேள்வியாக்கினீர்…?
3.இவ்வுலகில் உதித்த உயிரணுக்கள் யாவுமே ஏன் ஒன்றைப்போல் ஒன்றில்லை. எண்ண நிலையும் மாறு கொள்கிறது.
4.உருவ நிலை மற்ற எல்லா நிலைகளுமே தான் மாறு கொண்டுள்ளது.
5.ஒன்றைப் போல் ஒன்றில்லை ஆண்டவன் படைப்பில் ஏன் இவ் ஏற்றத்தாழ்வு…? என்ற எண்ணம் தானே உம் எண்ணம்…?

சூரியனிலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் நம் பூமியின் மேல் படும் நிலையில் ஒவ்வொரு நொடிக்குமே மாறு கொண்ட அணுக்கதிர்கள் தான் நம் பூமியில் வீசுகிறது.

நம் பூமிக்கும் மேல், நம் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள காற்று மண்டலத்திற்கும் மேல் உள்ள பால்வெளி மண்டலத்திற்கும் ஜீவனுண்டு, இயற்கைத் தன்மை உண்டு. பால்வெளி மண்டலத்தில் பல நிலை கொண்ட அமிலங்கள் உண்டு.

எல்லாவற்றுக்கும் பொது மண்டலம் பால்வெளி மண்டலம். சுழலும் நிலையில் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலங்கள் பல நிலை கொண்டதாகப் படர்ந்து சுழன்று அதன் ஜீவ சக்தியில் விளையாடுகின்றது.

நம் பூமி சுழலும் வேகத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலத்தில் பட்டுப் பூமியின் காற்று மண்டலத்திற்கு வருகிறது.

1.இக்காற்று மண்டலம் சுழலும் நிலையில் பூமியின் ஈர்ப்பு சக்திக்குகந்த அமிலத்தன்மை அவ்வொளிக்கதிர்கள் வீசிப் படர்ந்தவுடன்
2.அந்தந்த நிலையில் அந்நிலைக்குகந்த அமிலங்கள் படர்ந்து அதைப் பூமி ஈர்த்து பூமி விடும் சுவாசத்தைக் கொண்டு, அந்நிலையின் உயிர் அணு பிறக்கின்றது.
3.அதன் தன்மையில் ஏற்படும் அமில சக்தி நிலை கொண்டுதான் பூமியின் இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்கள் மற்றக் கனிவளங்கள் எல்லாமுமே.
4.எவ்வமிலத்தை பூமி ஈர்த்ததோ அந்நிலைக்கொப்ப சக்தி நிலை வெளிப்படுகிறது.

பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மா நிலை பெறுவதற்குள் மனித ஆத்மாக்களுக்குப் பல எண்ண நிலைகள் கூடி விடுகின்றன. எவ்வெண்ணத்தை அச்சுவாச நிலையுடன் ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டதோ அந்நிலை கொண்ட அமிலத்தையே ஒவ்வோர் உடலுமே சேமித்துக் கொள்கின்றது.

1.பல ஜென்மங்கள் எடுத்தாலும் உயிரணுவாய் உதித்து உயிர் ஆத்மாவாய் உருப்பெறும் நிலையில்
2.அமில சக்தியைக் கொண்ட தொடர்பின் எண்ணமும் அதன் தொடர்ச்சியின் குண நிலையும் தான் அவ்வாத்மாவுக்கு உண்டே ஒழிய
3.அப்பரம் பொருளான ஆண்டவன் அனுப்புவதல்ல “நல்லவளையும் கெட்டவளையும்…”
இயற்கையின் ஆதி சக்தியின் நிலை பொதுவான சக்தி தான். அவளிலிருந்து உதித்த உயிரணுக்கள் எடுக்கும் வளர்ச்சி நிலை எல்லாம் அதனதன் சக்திதான்.

பரம்பொருள் ஒன்றே அப்பரம்பொருளின் பொருட்கள் தான் நாமெல்லாம். அப்பரம்பொருளின் நிலையுடனே ஐக்கியப்பட்டு ஜெபப்படுத்தும் நிலையினால் நம்மையே அப்பரம்பொருளாக்கிடலாம்.

“அவரவர்கள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டுதான் வாழ்க்கை…”

இக்காற்றுடன் பல நிலைகளும் கலந்துள்ளன.
1.நல்லெண்ணத்தின் சுவாசமும் இக்காற்றினால் தான்
2.துவேஷ எண்ணத்தின் மூச்சுக் காற்றும் இக்காற்றினால் தான்.

நம் வாழ்க்கையுடன் மோதுண்டு வாழும் நிலையில் பல செயல்கள் நடக்கின்றன. அந்நிலையில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு பல நிலைகள் நடக்கின்றன.

நம் ஆத்மாவுடன் நாம் மட்டும் வாழவில்லை பல கோடி உயிரணுக்கள் வாழ்கின்றன. ஆனால் நமக்குத் தான் நம் ஆத்மா சொந்தம். நம் உடலில் தான் மற்ற உயிரணுக்களும் இருந்தாலும் அதற்கு நம் உடலும், நம் ஆத்மாவும் சொந்தமல்ல.

அதைப்போல் நாம் எடுக்கும் எண்ணமுடன் இக்காற்றில் உள்ள பல அலைகளும் நம் எண்ணமுடன் மோதுகின்றன. இதனால் நம்மை அறியாமலேயே நம்முள் பல எண்ணங்கள் மோதுண்ட நிலையில் பல செயல்கள் நடக்கின்றன.

1.மனித ஆத்மாவாய் வாழ்வதுவே பெரும் பொக்கிஷம்.
2.நம்மையே நாம் மற்றத் தீய அணுக்களுக்கு அடிமைப்பட்டு வாழ்வதினால் தான் நல்லவன் கெட்டவன் என்று நிலை வருவது.

ஐந்தறிவு ஆறறிவு என்பதெல்லாம் நம்மால் ஏற்படுத்திய நிலைதான். மனிதனிலிருந்து நம் அறிவின் நிலையைச் சிதறவிடுவதினால் மிருக ஜென்திற்குச் செல்கின்றோம். நம்மைக் காட்டிலும் நுண்ணிய அறிவு மிருகங்களுக்கு உண்டு.

ஆறறிவு ஐந்தறிவு என்பதல்ல வாழ்க்கையே…!

அருள் ஞான வித்து என்ற “மதுரம்”

அருள் ஞான வித்து என்ற “மதுரம்”

 

நாம் ஒரு செடியை வைத்து விட்டால் அது செழித்து வளர்ந்து அதிலே மலர்கள் உருவாகின்றது.
1.மலருக்குப் பின் அதிலே மதுவான இனிமை கொண்ட தேன் இணைந்து
2.அதற்குள் மதுரத்தைத் தனக்குள் நுகர்ந்து… அதனின் நிலை கொண்டு கருவுற்று
3.கருவுற்ற நிலைகள் கொண்டு அது தன் வித்துக்களை உருவாக்குகின்றது.

இதைப் போல
1.நாம் எடுத்து வளர்த்துக் கொண்ட மெய் உணர்வுகளின் தன்மை மலர்ந்து
2.அதனின் மணத்தைத் தனக்குள் நுகர்ந்தறியும் உணர்வின் தன்மை “மதுரம்”
3.மகிழ்ச்சியான அலைகளாக… நம் ஆன்மாவாக அது மாறுகின்றது.
4.அப்படி மாறும் உணர்வுகளை நாம் சுவாசித்து “அந்த அருள் ஞான ஒளியின் வித்தாக”
5.முழுமை பெறும் தன்மையை நாம் அவசியம் அடைதல் வேண்டும்… அடைய முடியும்.

ஆகவே ஏனோ தானோ என்று “எமது உபதேசங்களை” அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என் குருவின் அருளை “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை” நீங்கள் பெற வேண்டும். அவரின் அருளால் நீங்கள் தெளிந்திடும் நிலை பெற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் உங்களுக்குள் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று தான் உங்களை எண்ணி நான் பிரார்த்திக்கிறேன்.

என் குருவை உங்களிடம் நான் பார்க்க விரும்புகின்றேன்.

ஆகவே உங்களை அறியாது வந்த இருளை நீங்கள் போக்கிடல் வேண்டும் அதிலே மகிழ்ந்து பேரானந்த நிலை பெற வேண்டும்.
1.உங்களில் வரும் அந்த உணர்ச்சிகள் எனக்குள் மதுரமாகி அதை நுகரும் பொழுது
2.உயிரான ஒளியுடன் ஒன்றி என்றும் நிலைத்திருக்கும் நிலையாக நான் பெறுகின்றேன்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தனக்குள் வரும் நஞ்சினைப் பிரித்து உணர்வின் ஒளியாக எப்படி மாற்றுகின்றதோ இதைப் போன்று தான் நமது குருநாதர் ஆற்றலைப் பெருக்கினார்.
1.அவர் வழிகளிலே நானும் பெற முடிகின்றது,
2.அதன் வழிகளில் நீங்கள் அனைவரும் பெற முடியும்… இதில் கடினம் எதுவும் இல்லை.
3.உங்களைப் பார்க்கும் அனைவரும் இந்த நிலை பெறுதல் வேண்டும்… அந்த நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.

துயர்படுவோரைக் கண்டாலோ அல்லது அதைக் கேட்டறிந்தாலோ அடுத்த கணம் ஒரு 50 முறையாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அவர் உடலில் பட்ட இருள் உங்களை மறைத்திடாது துடைத்துப் பழகுங்கள்.

பின் அவரிடம்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள் உங்கள் பிணிகள் அகலும் மகரிஷியின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வீர்கள் உங்கள் நோய்கள் நீங்கும் உங்கள் குடும்பம் நலமாக இருக்கும் உங்கள் தொழில்கள் வளமாக இருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளரும் என்று
1.இது போன்ற அருள் ஞான வித்தாக வாக்காக அவருக்குள் பதிவு செய்யுங்கள்.
2.இதைப் போன்று வழி தொடர்ந்து வழி தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள்
3.தீமைகள் அகன்று தீமை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைந்து அலைகளாகப் படரும்.
4.அதை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் படரச் செய்யும்.

அப்பொழுது அந்த தீமைகளை அகற்றும் அலையின் தொடர்கள் நாம் எண்ணியவுடன் உடனடியாகக் கிடைக்கப் பெற்றுத் “தீமைகளை அகற்றும் அந்தக் கடவுளாக… அந்த மகரிஷியின் உணர்வுகள்” நமக்குள் சிருஷ்டிக்கும் தன்மையாக வரும்.

ஆனால் இன்றைய மக்கள் பரமாத்மாவிலே எதைப் பரவச் செய்து கொண்டிருக்கின்றார்கள்…? பயத்தையும் வேதனையையும் தான்…!

பஸ்ஸிலே சென்றால் பயம் வீட்டில் இருந்தால் பயம் காசைக் கொண்டு சென்றால் பயம் எதையாவது சத்தமாகப் பேசினால் பயம் என்று அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் இந்த காற்றிலே அலைகளாகப் படர்ந்து கொண்டுள்ளது.

அந்த உணர்வுகள் மகரிஷிகள் உணர்வலைகளைப் பெறாது தடைப்படுத்துகின்ற நிலையாகவே வளர்ந்து கொண்டுள்ளது.

சூரியனின் காந்த சக்தி அதையெல்லாம் கவர்ந்து பரவச் செய்யும் பொழுது நமக்குள் அச்சுறுத்தும் நிலையே வருகின்றது. அத்தகைய கடவுளாகத்தான் இன்று மாற்றி வைத்திருக்கின்றோம்… பரமாத்மாவாக அதைத் தான் மாற்றுகின்றோம்.

அதிலிருந்து நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் சென்ற பின் நம்முள் நின்று அதுவே இயக்கச் செய்கின்றது

இதைப் போன்ற நிலைகளை அகற்ற
1.உலகம் உயர்ந்த நிலைகள் பெற அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து
2.இனி வரக்கூடிய காலங்களில் பூரண பௌர்ணமி போன்று உலக மக்கள் அனைவரும் ஒளியின் சுடராக மாறி
3.தெளிந்த நிலைகள் கொண்டு எல்லோரும் மனிதன் என்ற முழுமை அடைந்து
4.இந்த உடலை விட்டு அகன்றால் நிலை கொண்ட ஒளியான சரீரம் பெற வேண்டும் என்று
5.ஏகோபித்த நிலையில் எண்ணி நாம் வாழ்வோம்… வளர்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

அதிகக் கோபம் நமக்கு ஆகாது

அதிகக் கோபம் நமக்கு ஆகாது

 

நாம் எண்ணியபடி வாழ்க்கையில் நடக்கவில்லை என்றால் கோபம் வருகிறது.
1.அந்தக் கோபத்தினால் உண்டாகும் ஆத்திரமான வெறி உணர்வு,
2திலிருந்து விடும் சுவாசத்தினால் ஏற்படும் உடலின் அமில சக்தி மாறுபட்டு
3.அதிலிருந்து பல உபாதைகள் நாமே நம் உடலுக்கு ஏற்றிக் கொள்கிறோம்.
4.கோபம் ஏற்பட்டவுடன் நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் துரிதம் கொள்கிறது.
5.அந்நிலையில் நாம் எடுக்கும் சுவாசமே கடினமாய் நம் உடலில் ஏறுகிறது
6.இக்கனமான சுவாசத்தை ஈர்க்க ஈர்க்க, நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களும் ஒரு நிலைப்படாமல் துடிக்கும் நிலை கொள்கிறது.
7.அந்நிலையில் இருந்து, நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் துரிதமாகச் செயல்பட்டு
8.மனிதனின் உடல் நிலைக்கே மூலகாரண வித்தாய், பல வியாதிகள் ஏற்படும் நிலைக்கு ஆளாக வேண்டி உள்ளது.

மனச் சஞ்சலத்திலிருந்து நாம் ஏற்றிக் கொள்ளும் நிலைதான் நமக்கு ஏற்படும் இத் தொடர் நிலையெல்லாம்.

சஞ்சல நிலை ஏற்பட்டவுடன் மனநிலையை அமைதிப்படுத்தி… அதனால் ஒரு நிலை கொண்ட சுவாசத்தை ஈர்த்தால் இச்சஞ்சலத்திற்குத் தெளிவு பெறலாம்.

தெளிவை நாமேதான் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

நம்மையே நாம் செய்யாத தவறுக்காக ஏசும்பொழுதும்…
1.அடுத்தவர் ஏசலைக் கொண்டு இப்படிச் செய்கின்றாரே… நாம் என்ன தவறு செய்தோம்…?
2.நம்மிடம் தவறில்லாத பொழுது… நம்மை ஏசுபவனை அவனே தண்டனை அனுபவிக்கட்டும் என்று அவன் தவறை என்றெல்லாம் எண்ணி
3.தவறு செய்பவன் இருக்க நம்மையே நாம் தவறாக்கிக் கொள்கின்றோம்.

நம் எண்ணத்தில் அவ் ஏசும் சொல்லை ஏன் அண்டவிட வேண்டும்…?

1.அவர்கள் நல்லுணர்வு பெறட்டும் நல்வழி படட்டும் என்ற எண்ணத்தில்
2.நம்முடன் அச்செயலை மோதவிடாமல் எண்ணும் பொழுது நம் உணர்வே நலம் பெற்று
3.நம் எண்ணத்தில் பிறரின் தீட்சண்ய சொல் தாக்காமல் நம்மைப் புனிதப்படுத்திக் கொண்டால்
4.நம்மையே நாம் பல இன்னல்களில் இருந்து காத்துக் கொள்கின்றோம்.

வினை செய்தவன் இருக்க வினை பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…? பிறரை ஏமாற்றியோ வஞ்சனை செய்தோ, துவேஷித்தோ வருபவன் எல்லாம் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். பிறரை ஏமாற்றுவதாக எண்ணி தன்னையே நான் ஏமாற்றி வாழ்கின்றான்.

மன நிலையை ஒருநிலைப்படுத்திச் சமமான வரையறை கொண்ட வாழ்க்கைதனை வாழும் பக்குவத்திற்குப் “பல நெறி முறைகள் உண்டப்பா…!”

பேய் ஓட்டுகிறார்கள் என்றால் “இன்னொரு பேயை உள்ளே ஏற்றுகின்றார்கள்” என்று தான் பொருள்

பேய் ஓட்டுகிறார்கள் என்றால் “இன்னொரு பேயை உள்ளே ஏற்றுகின்றார்கள்” என்று தான் பொருள்

 

எண்ணற்ற காலம் முதற்கொண்டே இவ்வாவிகளை வசியப்படுத்தி செயல்படுத்திடும் பல நிலைகள், பல ஆயிரம் காலங்களாகவே இருந்து வருகின்றன. நற்காரியங்களுக்காகவும் தன் பேராசையின் நிலைக்காகவும் இந்நிலையைச் செயல்படுத்தி வந்தார்கள்.

மந்திரம் மாயம் செய்வதெல்லாம் ஒரு கலையாகவும் வம்ச வழியாகவும் நிலைப்படுத்தி செயல் கொண்டு வருகின்றனர். நம் நாட்டில்தான் பேய் ஓட்டுதல், மந்திரித்தல் என்பன போன்ற பல நிலைகள் நடக்கின்றன.

1.எண்ணத்தில் சோர்வு கொண்டவரின் உடலில் அவர்கள் எந்த எண்ணத்தைக் கொண்டு உள்ளனரோ
2.அவ்வெண்ண நிலைக்கொப்ப ஆவிகள் அவர்கள் உடலில் ஏறி விடுகின்றன.

உதாரணமாக பல ஆசை நிலையுடன் வாழும் ஒருவன் தன் இல்லத்தில் குழந்தைகளின் பற்றைக் கொண்டு, பல நினைவுகளுடன் இல்லத்தில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் நிலையிலும், இல்லத்தில் இருந்த நிலையின் எண்ண ஆசையுடன், தன் குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் வாங்கும் ஆசையில், அதே எண்ண நிலையில் செல்லும் பொழுது அவ்வாசை நிலை கொண்ட நிலையில், மற்ற போக்குவரத்து இடையூறுகள் கவனிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டு, அந்நிலையில் அகால மரணம் எய்தி குருதி (இரத்த) வெள்ளத்தில் அடிபட்டு ஆத்மா பிரிந்த பிறகு
1.அவ்வாத்மா அவ்வாசை நிலையுடன் அங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
2.அதே நிலை கொண்ட எண்ண நிலை உடையவன் அந்நிலைக்குச் செல்லும் பொழுது
3.இவ்விரண்டு எண்ணங்களும் ஒரு நிலைப் பட்டவுடன் இவன் உடலில் அவ்வாவி ஏறிக்கொள்கின்றது.

இவனுடைய செயலுடன் அவ்வாவியின் செயலும் ஒன்றுபட்ட பிறகு இவன் உடல் நிலையில்… அவ்வுடலில் அவ்வாவி மனிதனாய் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையெல்லாம் “இவன் உடலிலும் ஏறிக்கொள்கின்றது…”

தன் நிலையே, தான் மறந்து உடலில் உள்ள ஆவிக்குத் தன்னை அறியாமல் அடிமைப்பட்டு வாழும் நிலை ஏற்பட்ட நிலையில்… சோர்வு கொண்ட நிலையுணர்ந்து உள்ளவர்கள் மந்திரவாதிகளிடம் செல்லும் நிலை மிகுந்து விட்டது.

இந்நிலை கொண்டவன் மந்திரவாதியிடம் சென்றால்…
1.அவனுக்கு இவன் உடலில் ஏறியுள்ள மற்றொர் ஆவி ஆத்மாவின் நிலை புரிந்து பேய் ஓட்டுவதாகச் சொல்லி
2.மீண்டும் இதற்கு மேல் சக்தி கொண்ட மற்றும் ஒரு குட்டிச்சாத்தானை இவன் உடலில் ஏற்றி
3.அதன் சக்தியைச் செயல்படாமல் செய்து “பேய் ஓட்டுவதாய் அவ்வாத்மாவைப் பல இம்சைகள் செய்து” அவன் பொருளீட்டிக் கொள்கின்றான்.

இவன் உடலில் ஏறிய குட்டிச்சாத்தான் ஏவலிலிருந்து, “இவன் உடல் அழியும் வரை தப்புவது இயலாக் காரியம்…” இப்பேயோட்டும் நிலையினால் ஒவ்வொருவரையும் என்றென்றைக்கும் அதற்கே அடிமைப்படுத்துகின்றனர்.

இந்நிலையிலிருந்து தப்புவதற்கு நம் உடலில் எவ்வாத்மா எவ்வாவி நிலைகள் ஏறி இருந்தாலும்
1.அதன் பாதிப்பால் வரும் சஞ்சலம், சோர்வு, சோர்வில் இருந்து விடுபட
2.எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி மகரிஷிகள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி
3.அந்தச் சக்தியை அந்த ஆன்மாவுக்கும் அன்பு கலந்த நிலையில் பெறச் செய்ய வேண்டும்.

அப்படித் தான் அதன் செயலைக் கட்டுப்படுத்த முடியும்.

மெய் ஞானிகளின் அறிவை நாம் பெறுதல் வேண்டும்

மெய் ஞானிகளின் அறிவை நாம் பெறுதல் வேண்டும்

 

டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட வகையில் இன்ஜினியராகப் போக வேண்டும் என்றால் அதனைப் படித்தவுடன் “இஞ்சினை எப்படி ஓட்டுவது…?” என்று நீங்கள் படித்துக் கொள்கின்றீர்கள்.

விஞ்ஞானி ஒவ்வொரு பொருளின் உணர்வையும்…
1.அதனதன் இயக்கத்திற்கு எதை எதை இணைக்க வேண்டும்…? என்று அவர் கண்டுபிடித்துச் சொல்கின்றார்.
2.இன்ஜினியரோ அதற்குத் தகுந்த சாதனங்களை உருவாக்கி அதனதனைச் செய்கின்றான்.
3.மெக்கானிக்கலோ இதனை இந்த வலுவில் செய்தால் இதனுடைய எடை கூட இப்படி இருக்கும் என்று.

இப்படி அவரவர்கள் உணர்வுக்கொப்பதான் அதைச் செய்கின்றோம்.

அதைப் போல் தான் “மெய் ஞானிகள் அன்று சொன்னதை” உங்களுக்குப் பாட நிலையாக இப்போது கொடுக்கின்றோம்.

பள்ளியில் சென்று நீங்கள் எதனெதன் வழிகளில் பாடங்களைப் பதிவு செய்கின்றீர்களோ அது நினைவு வரப்படும் பொழுது இப்படி வருகின்றது.

இதைப்போல விஞ்ஞான அறிவுப்படி… தான் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை எதிலே எண்ணங்கள் செல்கின்றதோ அது பதிவாகின்றது.

வக்கீல் என்று வைத்துக் கொண்டால் “பதிந்த பின்” சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்கின்றோம். இதிலே சட்டத்தின் நுணுக்கங்களை அறிந்து கொண்டாலும் “பிழைகள் எது…?” என்ற நிலைகளை அறிந்து நீக்கக் கற்றுக் கொள்ளுகிறோம்.

ஆனால் கற்றுக் கொண்டாலும்
1.தனது நிலைகளில் “தன் நண்பன்” என்று வந்து விட்டால், அவன் தவறு செய்தால் கூட
2.சட்டத்தில் எங்கே குறை இருக்கின்றது…? என்று நண்பனைக் காக்கத் “தவறும் செய்கின்றோம்…”
3.(கோபித்துக் கொள்ளாதீர்கள்… இப்படிச் சொல்கின்றேன் என்று…!) சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகளில் இப்படி…!

அதே மாதிரி ஆடிட் (AUDIT) அதன் வழியிலே கற்றுணர்ந்தாலும் அவர் கற்றுணர்ந்த நிலைகள் “தன் வாடிக்கையாளரை” எப்படிக் காப்பாற்றுவது…? என்பது தான் அவர்களுடைய தத்துவம்.

ஆக தனக்குள் பற்றிக் கொண்ட… சர்க்கார் நிலைகளில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை தான் இங்கு வருகின்றதே தவிர
1.பொது விதியான நிலைகள் நம் தவறும் இங்கே வரக்கூடாது.
2.இங்கேயும் நாம் தவறான நிலைகள் செய்யக்கூடாது என்ற நிலைகளில்
3.அதிலே எது மையமாக இருக்கின்றதோ அதை உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டு செயல்படும் இந்த நிலையும் இல்லை,

அப்படிப் போனால் “அவர்களுக்குப் பிழைக்கத் தெரியாது” என்று பட்டமே வந்துவிடும்.

இந்த ஆறாவது அறிவால் வரக்கூடிய நிலைகள். இவர் எதற்கும் லாயக்கே இல்லை இவர் எதற்கு இங்கே வந்தார்…? என்று சொல்வார்கள். நியாயத்திற்காகப் போராடினால் அவரைப் பைத்தியக்கார வக்கீல் என்று சொல்வார்கள். நியாயத்திற்காக வேண்டி ஆடிட்டர் சொன்னால் “இவர் பிழைக்கத் தெரியாதவர்” என்று சொல்வார்கள்.

தவறு செய்தவரின் நிலைகள் “நான் தவறு செய்து விட்டேன்” என்றால் அந்தத் தவறைச் சாதகமாக வைத்து… சட்டத்தில் எங்கே ஓட்டை இருக்கிறது என்று அதைப் பிடித்துக் கெட்டிக்காரராகும் நிலை தான். அப்பொழுது “எங்கள் வக்கீல் கெட்டிக்காரர்” என்று சொல்வார்கள்.

குற்றவாளி ஆக்குவதில் முதன்மையாக வந்து விடுகின்றான்.
1.இவர் செய்யக்கூடிய தப்பை வக்கீல் ஏற்றுக் கொண்டு அவர் குற்றவாளியாக ஆக வேண்டும்.
2.இவர் குற்றத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைகளில் வாதிடுகின்றார்.

இன்றைய கல்வியின் ஞானங்கள் வரப்படும் பொழுது இதுதான் வருகின்றது. இந்த விஞ்ஞான அறிவால் மனிதனால் கற்றுணர்ந்த நிலைகள்.

ஆனால் மெய்ஞானியின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு சமயமும் நமக்குச் சரியான பாதையை அது காட்டும். ஏனென்றால் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்,

1.இயற்கை உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.அந்த உணர்வின் ஆற்றல் மனிதனை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை மெய் ஞானிகள் அறிந்து காலத்தால்
3.சந்தர்ப்பத்தால் இணைந்த அந்த நிலைகளை இதை எவ்வாறு முறியடிப்பது…? என்று செயலாக்கியவர்கள்.
4.மெய் ஞானிகள் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை. (ஆனால் இண்றைய கல்வியறிவு மற்றவர்களைக் குற்றவாளியாக்கும்)

சந்தர்ப்பத்தால் தான் குற்றங்கள் ஏற்படுகின்றது. அதை மாற்றும் வழிக்குத் தான் மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குத் தொடர்ந்து போதித்துக் கொண்ட வருகின்றேன் (ஞானகுரு).

நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது

நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது

 

ஏவல், குட்டிச்சாத்தான், மையிட்டு மந்திரம் செய்து பிறரை வசப்படுத்தி நம் ஆத்மாவை நாம் இந்நிலையிலிருந்து செயல்படா வண்ணம் நம்மைக் காத்திடும் நிலையை அறிந்து வாழ்ந்திடல் வேண்டும்.

அழியாச் சக்தியுள்ள நம் சக்தியை
1.நம்முள் ஊன்றியுள்ள நம் சக்தியை பல எண்ணங்களின் நிலையிலிருந்து காத்திடல் வேண்டும்.
2.சோதனை கொண்ட காலங்களில் சோர்வு நிலை கொண்டு முடங்கிடல் ஆகாது.
3.ஏவல்களின் தன்மை எல்லாம் சோர்ந்தவர்களை அதிவிரைவில் அண்டிக் கொள்ளும்.

இத்துர் ஆவிகள் நடமாட்டத்தைப் பல மிருக ஜெந்துக்கள் எப்படி உணர்கின்றன…?

ஏவலும் சூனியமும் மிருக ஜெந்திற்குச் செயல் கொள்ளாது. அதன் உடலிலேயே உணரும் தன்மை கலந்துள்ளது. இச்சுவாச சக்தி நாய்க்கு அதிகம். புலிக்குத் தன் பார்வையிலேயே கண்டிடும் சக்தி உண்டு.

இவ் ஏவலின் நடமாட்டம் உள்ள இடங்களை எல்லாம்… இவற்றை அறியும் தன்மை கொண்ட மிருகங்கள் உணர்ந்துவிடும்.

முந்தைய காலங்களில் வீடுகளில் நாய், பூனை இவற்றைத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக மட்டும் வளர்க்கவில்லை….
1.துர் ஆவிகளிடமிருந்து அவற்றின் ஏவல் இல்லங்களில் உட்சென்று செயல்படாமல் காக்கவும் இம் மிருகங்களை வளர்த்தனர்.
2.ஏவல்காரனையும் குட்டிச்சாத்தான் செயல் உடையவனையும் கண்டால் இந்நாய், நரி, பூனைகள் குரைத்துச் சப்தமிட்டு உணர்த்திவிடும்.

அக்கால இல்லங்களில் இல்லத்தின் முன் வாயிலுக்கு மேல் “நிலைக் கண்ணாடியைப் பதித்திருப்பார்கள்…” நாம் சாதாரண நிலையில் இருக்கும் நிலையில்… நம் கண்ணிற்குத் துர் ஆவிகளின் நடமாட்டம் தெரிந்திடாது.

நிலைக் கண்ணாடியில் தெரியும் நிலை என்ன…?

நிலைக் கண்ணாடியில் பூசி உள்ள அவ்வமில சக்தி இத் துர் ஆவிகளின் சக்திக்கு எதிர்கொண்டது. நாயின் உடலில் உள்ள அமில சக்திக்கும் நிலைக் கண்ணாடியில் உள்ள அமிலத்திற்கும் தொடர்பு உண்டு.

இத்துர் ஆவியின் நிலையைப் பலர் காண்கின்றனர். பேயின் நடமாட்டத்தைக் கண்டேன் என்பவர் பலர். பேயல்ல… குட்டிச்சாத்தானின் உருவ நிலை அது.

சிலருக்கு மட்டும் புலப்படும் நிலை என்ன…?

ஒவ்வோர் உடலுக்கும் அவரவர்களின் அமிலத்தன்மை ஒன்று உண்டு என்று உணர்த்தினேன் அல்லவா…? இவற்றைக் காணும் அமிலத்தன்மை கூடியவர்கள் உடல் இந்நிலையை அறியலாம்.

சிலரின் நிலையில் அவர்களின் உடலில் உள்ள அமிலத் தன்மையே அபூர்வத் தன்மையில் இயற்கையிலேயே கூடிப் பிறந்திருப்பர்.

எண்ணத்தில் ஞானசக்தி நிறைவு கொண்ட அபூர்வப் பிறவி எடுத்தவர் பலர் உள்ளனரே. அவர்களுக்கு இயற்கையின் அமிலமே தன்னுள் கூடி பிறவி எடுத்து பிறந்து வளர்பவர்கள்.

பல பிறவியில் சேமித்த அமிலத்தின் கூட்டு நிலையினால் பல ஞானிகள் மற்ற ஏவலின் சக்தி இல்லாமல் வாழ்கின்றனர்.

1.நம்முள் உள்ள நிலையையே நாம் நல் நிலையில் வளரும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்
2.நமக்காக ஏவாமல் பிறருக்காகச் செய்த மந்திர நிலையும் தாக்கும் நிலையும் நமக்கு உண்டு.
3.இருந்தாலும்… நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது.

தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வை வளர்ப்பதற்குத் தான் “சாஸ்திரங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்”

தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வை வளர்ப்பதற்குத் தான் “சாஸ்திரங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்”

 

மனித வாழ்க்கையில் நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வுகளையும் சித்திரை (சிறு திரை) மறைத்துக் கொள்கின்றது. புது வருடத்தில் (வெளிச்சத்தை மறைக்கும் இருளைப் பிளந்து ஆறாவது அறிவின் துணை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காண வேண்டும் என்பது

புது வருடம் தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் விசேஷத்தை வைத்ததின் நோக்கங்கள் 12 ராசி என்றும் வைப்பார்கள்.
1.இந்தப் 12 மாதத்திலும் ஒவ்வொரு உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…?
2.ராசியின் தன்மை எவ்வாறு விளைய வேண்டும் என்று நான் 12 மாதத்திலும் 12 ராசிகள் என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு மாதத்திலும் நாம் எதை எதைச் செய்ய வேண்டும்…? என்ற நிலையில் சித்திரை பிறக்கும் பொழுது நாம் எதைச் செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

வருடம் பிறந்து விட்டது… நமது வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறைக் கண்டுனர்ந்தாலும் அச்சித்திரையை…
1.உத்தராயணம் என்ற இந்த ஒளி கொண்டு இருளைப் போக்கிப் பொருள் கண்டு
2.புது வருடம் நாம் நடக்க வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி நமக்குத் தத்துவத்தைக் கொடுத்தார்கள் மாதங்களையும் அமைத்தார்கள்.

ஆனால் அதை எல்லாம் யாரும் நமக்கு விளக்கமாகச் சொல்வதற்கு இன்று இல்லை. யாம் இப்பொழுது இதைச் சொன்னால் “புதிதாக ஏதோ சொல்கிறார்…” என்று எம்மைச் சொல்கின்றார்கள்.

ஏனென்றால் இன்று ஒவ்வொரு மாதத்திலும் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று எத்தனையோ ஐதீகங்களையும் சாங்கியங்களையும் தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

காரணம்… காலத்தால் இந்த உண்மைகள் மறைந்து விட்டது… மறைத்து விட்டார்கள்.

சித்திரை – ஒரு கனி விளைந்த பின் அது எப்படித் தன் வித்தாக ஆகின்றதோ இதைப் போன்று
1.பல கோடி உணர்வின் தன்மை தனக்குள் கனியாகும் பொழுது
2.அதனின் வித்து ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வாக விளைந்தது.

இதைப்போல்
1.ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வே விளைந்தது
2.அந்த விளைந்த நிலைகள் கொண்டு உயிரான நிலைகள் மனிதனின் நிலைகள் வரும் பொழுது கனியாகின்றது.

ஒரு மாங்கனி தன் இனத்தின் வித்தை அது உருவாக்கிக் கொள்கிறது. இதைப் போல் தான் உயிரான நிலைகள் கொண்டு பல கோடி உணவை உணவாக உட்கொண்டாலும்… அவை அனைத்திலும் ஒருக்கிணைந்து “ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வாக வந்த… இந்த ஒளியின் சுடராக ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விளைந்த நிலைகள் “கார்த்திகேயா…”

அதனின் உணர்வு கொண்டு மனித வாழ்க்கையில் வரும் சித்திரையை (குறைகளை) புது வருடம் நீக்க வேண்டும்
1.இருளை நீக்கி மறைந்த பொருளைக் காண வேண்டும்…
2.எவ்வாறு தீமையிலிருந்து மீள வேண்டும்…?
3.எவ்வாறு ஒளியாக மாற வேண்டும்…? என்ற தத்துவத்தைத் தான் மெய் ஞானிகள் நமக்குத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.