Archive

இன்றைய உலகச் சூழ்நிலையிலிருந்து தப்ப முடியுமா…!

ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி வருகின்றது. ஆனால் ஒரு பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்த ஒருவனை நினைத்தே குடும்பம் சிக்குண்டு சுக்குநூறாகத் தெறித்து விடுகின்றது. எவ்வளவு கோடிச் செல்வம் இருப்பினும் இதைப் போல் நிகழந்துவிடுகிறது

சூரியனை மையமாக வைத்து ஒரு பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றதோ நம் உயிர் சூரியனாக இருந்து இந்த உடலை இயக்குகிறது.

பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்ததிரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி… அது உமிழ்த்துவதைக் கோள்கள் உணவாகக் கவர்ந்து… கோள்களிலிருந்து வருவதைச் சூரியன் தனக்கு உணவாக எடுத்து உட்கொள்கின்றது,

இதைப் போல் பிறருடைய உணர்வுகள் வெளி வருவதை நம் எண்ணத்தால் (நட்சத்திரம் போல்) கவர்கின்றோம். கவர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் உடலாக (கோள்கள் போல்) அந்தச் சத்தாக விளைகின்றது. உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை உயிருடன் சேர்த்து உயிராத்மாவாக (சூரியனைப் போல்) விளைகின்றது.

ஆகவே…
1.பிறரிடம் இருந்து வரும் உணர்வுகளை ஒன்று சேர்த்துக் கவர்ந்து
2.அந்த உணர்வுகள் நம் உடலாக ஆக்கப்படும் போது
3..நமக்குள் தெளிந்திடும் உணர்வாக உயிருடன் ஒன்றி…
4.அந்த ஞானியின் உணர்வுடன் நாம் இணைப்போம் என்றால்
5.அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றது போன்று நாமும் பெற முடியும் என்பது தான் ஆலயங்களின் தத்துவம்.

ஆனால் அந்த ஆலயத்தில் இப்பொழுது நாம் எப்படிப் போகின்றோம்…?

வெளியில் கடைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்கின்றனர் காசுக்காக. ஆனால் அவர்களும் இந்தத் தெய்வத்தை வணங்கக்கூடியவர்கள் தான்.

சாமி பேரைச் சொல்லி ஏமாற்றுகின்றான். அதே சமயத்தில் அர்ச்சனை என்று இங்கே காசைக் கொடுத்து ஏமாற்றச் செய்கின்றான்.

அதை எல்லாம் செய்தால்…
1.ஆண்டவன் நமக்கு அதைச் செய்வான் இதைச் செய்வான் என்று
2.நம் ஆசைக்குகந்தபடி தான் நாமும் அங்கே நடக்கின்றோம்.

ஆனால் ஆலயம் என்பது நம்மைப் புனிதமாக்கும் இடமாகும்…!

பெரும்பகுதியான ஆலயங்களுக்கு முன்னாடி பார்க்கலாம்… தெய்வத்தின் பேரைச் சொல்லி நமக்கு நாமே ஏமாற்றும் நிலை தான் அதிகமாக இருக்கின்றதே தவிர… “ஆலயம் வரும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நிலைகள் இல்லை…!”

1.சாமிக்காக அபிஷேகம் ஆராதனை என்றெல்லாம் காட்டி
2.அந்த உணர்வினை நுகர்ந்தால் (ஐந்து புலனறிவாலும்) நமக்குள் பஞ்ச அமிர்தமாக அந்தச் சக்திகள் இணையும் என்று
3.ஆறாவது அறிவினைத் தெளிவுற எடுத்துரைத்த அந்த போகனின் நிலையை எடுத்துக் கொள்ளாது…
4.போகன் காட்டிய அறவுரைகளை அழித்துவிட்டு மனிதனின் நல்ல எண்ணங்களை அழித்திடும் நிலையாக
5.வியாபார ஸ்தலமாகத் தான் ஆக்கி விட்டார்கள்.

இங்கிருந்து நாம் அருள் ஒளி பெறவேண்டும் என்று சென்றாலும் புனிதத் தன்மை இழக்கும் நிலைகளைத் தான் அங்கே காணுகின்றோம். அங்கே நிர்வகிப்பவர்களும் அப்படித்தான் உள்ளனர். ஆலயத்தின் மறைவில் தனக்குப் பொருள் தேட வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்கள்.

1.அந்த மெய் ஞானிகள் காட்டிய தத்துவங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.ஒவ்வொரு மனிதனும் முழுமை பெறவேண்டும்…
3.இந்தப் பூமியில் இருளைப் போக்க வேண்டும்… தீமைகள் அகல வேண்டும்… என்ற நிலைகளை வழி காட்டவில்லை.

அந்த மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை நாம் யாரும் பெறவில்லை. இன்று யாம் (ஞானகுரு) அதை எல்லாம் சொன்னாலும்
1.இதை ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாது
2.இதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைகளில் தான் உள்ளனர்.

ஒரு மது குடிப்பவரிடம் போய்… “நீ குடிக்காதே…!’ என்றால் ஐயா… உங்களுக்கு என்ன தெரியும்…? இதைக் கொஞ்சம் போட்டால் சொர்க்கமே வரும்… நீங்களும் கொஞ்சம் குடித்துப் பாருங்கள்…! என்று நம்மிடமே திரும்பச் சொல்வார்கள்.

அதைப் போன்று தான் அநாகரீகமான நிலைகளில் அதர்வண வேதத்தின்படி இந்த நிலைகள் உருவாக்கப்பட்ட நிலைகளே இன்றும் உள்ளது.

இன்னென்ன மந்திரங்களைச் சொல்லி விட்டால் அந்த இறைவன் இறங்கி வந்து உனக்கு எல்லாம் செய்வான்..! என்ற நிலைகளில் மந்திர உச்சாடணங்களை அங்கே சொல்லி அதை ஆழமாக நமக்குள் பதிவு செய்து விட்டனர்.

அந்த உணர்வின் சக்திக்கு நாம் வந்த பின் ஒரு போதை ஏற்றியது போன்று இதிலிருந்து மீளாது சிக்கிக் கொண்டு…
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் அழிவில் இருந்து தப்ப முடியாதபடி
2.இருள் சூழ்ந்த நிலைகளாகப் போகும் நிலையே அதிகமாக உருவாகிக் கொண்டுள்ளது

ஆக ஐதீகம் என்றும் சாஸ்திரம் என்றும் மனிதனுடைய நிலைகளில் ஆசைகளைத் தான் வளர்க்கப்பட்டுள்ளது.

மனிதன் என்றால் ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால்…
1.அதைத் தணியச் செய்யும் சக்தியான அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து
2.நமக்குள் இருள் சூழும் அந்த நிலைகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று
4.அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் செல்வோம் என்றால் இனி தப்பலாம்…!

உயிரில் ஏற்ற வேண்டிய  தீபம்  

அமாவாசை அன்று முன்னோர்களைக் கூப்பிடலாமா…?

 

வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

 

நம்முடைய சகஜ வாழ்க்கையில் ஏற்படும் சஞ்சலமும் சோர்வும்… சோர்விலிருந்து ஏற்படும் கோபமும்… கோபத்தினால் உண்டாகும் ஆத்திரமான வெறியுணர்வுகளாலும்…
1.இதிலிருந்து விடும் சுவாசத்தினால் ஏற்படும் உடலின் அமில சக்தி மாறுபட்டு
2.அதிலிருந்து பல உபாதைகளை நாமே நம் உடலுக்குள் ஏற்றிக் கொள்கின்றோம்.

கோபம் ஏற்பட்டவுடன் நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் துரிதம் கொள்கின்றது. அந்த நிலையில் நாம் எடுக்கும் சுவாசமே கடினமாக நம் உடலில் ஏறுகின்றது.

1.இக்கனமான சுவாசத்தை ஈர்க்க ஈர்க்க…
2.நம் உடலிலுள்ள அனைத்துப் பாகங்களும் ஒருநிலைப்படாமல் துடிக்கும் நிலை கொள்கின்றது.

அதனால் நம் உடலிலுள்ள இரத்த நாளங்கள் துரிதமாகச் செயல்பட்டு மனிதனின் உடல் நிலைக்கே மூலகாரண வித்தாக இருக்கும் நல் நிலைகள் மாறி பல வியாதிகள் ஏற்படும் நிலைக்கு நாம் ஆளாக வேண்டியுள்ளது.

மனச் சஞ்சலத்திலிருந்து நாம் ஏற்றிக் கொள்ளும் நிலைதான் நமக்கு ஏற்படும் தொடர் நிலையெல்லாம்…!

1.சஞ்சல நிலை ஏற்பட்டவுடன் மன நிலையை அமைதிப்படுத்தி
2.அதனால் ஒரு நிலை கொண்ட சுவாசத்தை ஈர்த்தால் சஞ்சலத்திற்குத் தெளிவு பெறலாம்.
3.தெளிவை நாமே தான் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

உதாரணமாக நாம் செய்யாத தவறுக்காக ஒருவர் ஏசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஏசலைக் கொண்டு இப்படிச் செய்கின்றாரே… நாமென்ன தவறு செய்தோம்…? என்று எண்ணுகின்றோம்.

ஆனாலும்… நம்மிடம் தவறில்லாத பொழுது நம்மை ஏசுபவனை ஆத்திரத்துடன் எண்ணி…
1.இப்படியெல்லாம் செய்பவன் அவனே அந்தத் தண்டனையை அனுபவிக்கட்டும் என்று
2.தவறு செய்பவன் இருக்க நம்மையே நாம் தவறாக்கிக் கொள்கின்றோம்.

நம் எண்ணத்தில் அவன் ஏசும் சொல்லை ஏன் அண்டவிட வேண்டும்…?

1.அவர்கள் நல் உணர்வு பெறட்டும்… நல் வழி படட்டும் என்ற எண்ணத்தில்
2.நம்முடன் அச்செயலை மோத விடாமல் எண்ணும் பொழுது நம் உணர்வே நலம் பெற்று
3.நம் எண்ணத்தில் தீட்சண்ய சொல் தாக்காமல் நம்மைப் புனிதப்படுத்திக் கொண்டால்
4.நம்மையே நாம் பல இன்னல்களிலிருந்து காத்துக் கொள்கின்றோம்.

வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…?

ஏனென்றால் பிறரை ஏமாற்றியோ வஞ்சனை செய்தோ துவேஷித்தோ வருபவனெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். பிறரை ஏமாற்றுவதாக எண்ணி தன்னையேதான் ஏமாற்றி வாழ்கின்றான்.

1.மன நிலையை ஒரு நிலைப்படுத்தி…
2.சமமான வரையறை கொண்ட வாழ்க்கைதனை வாழும் பக்குவத்திற்குப் பல நெறி முறைகள் உண்டப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையின் நிலைகளில் “உடலின் ஆசைகளைக் கூட்டும்போது” நம் உயிர் ஈசனாக இருந்து அதையே உருவாக்கி அந்த உணர்வின் தன்மைகளை உடலாக்கிவிடும்.

அதன் வழியில் மீண்டும் எண்ணினால் அந்தக் குருவின் வழியில் நமக்குள் உடலின் இச்சைதான் வளரும். அதனின் ஆசை எங்கே செல்லும்?

இப்பொழுது சிலர் மீடியம் பவரை – ஆவிகள் வைத்து (MEDIUM POWER) சில ஆன்மாக்களை இப்படி இடறி விழுந்தால் அந்த மீடியத்தை வைத்து அபூர்வ சக்தி பெறுவதாகச் செய்கிறார்கள்.

அதில் நம் எண்ணத்தைச் செலுத்தினால்
1.பிறிதொரு ஆன்மா உங்களுக்குள் வந்துவிடும்.
2.அதனின் ஆசைகளையெல்லாம் உங்களுக்குள் வந்து வெளிப்படுத்தும்.
3.அதே உணர்வுகள் உங்களுக்குள் வளர்ந்துவிட்டால் அந்த ஆசையின் தன்மையே உங்களுக்குள் விளைவிக்கின்றது.

(அதாவது அதனின் வலுவை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த ஆன்மாக்கள் நமக்குள் வந்துவிடுகின்றது)

ஒரு ஆன்மா மனித உடலுக்குள் வந்தபின் அது எந்த நிலையிலும் வெளியில் வரவே முடியாது. அந்த உடலுடன் இருப்பவர் மடியும் பொழுது தான் அதுவும் வெளியேறும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.சிலர் வழி தெரியாதபடி புத்தகங்களைப் படித்துக் கொண்டு
2.இதைப் போல் செய்தால் மீடியம்களுடன் தொடர்பு கொண்டு ஆவியுடன் பேசலாம்.
3.அருள் சக்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்றெல்லாம் விளையாட்டாகச் செய்து எளிதில் அதற்குள் சிக்கிக் கொள்கின்றார்கள்.
4.பின்பு வெளியில் சொல்ல முடியாதபடி பல அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்

ஆகவே உங்களுடைய சக்தி எதுவாக இருக்க வேண்டும்?

இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகில் ஒளியின் சுடராக வாழும் அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்ட பின் உங்கள் எண்ணம் உங்கள் நினைவு மகரிஷிகளின் அலைவரிசையுடன் அங்கே செல்ல வேண்டும்.

மகரிஷிகளின் உணர்வை எடுத்துக் கொண்டவர்கள் நீங்கள்
1.மீடியம் (ஆவிகள்) பவர் உள்ள இடத்திற்கு எங்கே சென்றாலும்
2.அது வேலை செய்யாது… இதைப் பார்க்கலாம்.

யாம் சொல்லும் தியானத்தைச் சரியான வழிகளில் செய்து வந்தால் மீடியம் வைத்துச் செயல்படுவோர்கள் “அந்த மீடியம் உணர்வுகள்” என்று அவர்கள் உடலில் இருந்தாலும்
1.அந்த இயக்கச் சக்தி மாறிவிடும்.
2.அது பேசாது. அதனின் உணர்வுகள் செயல்படாது. இதையும் பார்க்கலாம்.

ஏனென்றால் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் மீடியமாக்கப்படும் பொழுது இந்த உணர்வு உங்களை அங்கே விண்ணுக்கே அழைத்துச் செல்லும்.

குலதெய்வங்களாக இன்று நாம் நம் ஊரில் வணங்கிக் கொண்டிருப்பதெல்லாம் நம் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் தான்.

அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அவர்கள் எண்ணங்களை எடுத்தால் அவர்கள் இங்கே நம் உடலுக்குள் வந்து அருளாடுவார்கள். அதைப் பார்க்கலாம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றுவோம். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் பெறுவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து தீமைகளை நீக்கி நல்ல உணர்வின் தன்மையை வளர்க்கச் செய்யும் மனித உடலைப் பெற்றோம்.

ஆனால் அதர்வணவாதிகள் விஷத் தன்மையை வளர்க்கும் மாட்டின் நிலைக்குத்தான் நம்மைக் கொண்டு செல்கின்றார்கள்.

சரணாகதி என்ற தத்துவத்தைக் கொடுத்து “யாகங்களைச் செய்… பாவங்களைப் போக்கு…” என்று சொல்லி இதனின் மணத்தைக் கூட்டி எடுத்து ஒருவரின் உடலுக்குள் சேர்க்கச் செய்தபின் இவர் இறந்த பின் இவர் ஆன்மாவை ஆகாதவர் உடலில் தான் பாய்ச்சுகின்றர்கள்.

இது போன்ற நிலைகளிலிருந்து என்று நாம் விடுபடுவது?

நாம் எதனின் உணர்வை எடுத்தோமோ அது சாகாக்கலை. வேதனையான உணர்வுகளை நாம் நுகர்ந்து பெருக்குவோமேயானால் பெருக்கிய உணர்வின் கலையின் பிரகாரம் நம் உடல் நலிவடைகின்றது.

நலிந்த உடலை நம் உயிர் உருவாக்கும். இது “சாகாக்கலை”.

பழனியில் சிலர் எம்மை வைத்தியரீதியில் அணுகி “போகர் சமாதியானது உங்களுக்குத் தெரியுமா…?” என்று கேட்டார்கள்.

எமக்குத் தெரியாது… என்றோம்.

போகர்… காயகல்ப சித்தியாகி “சாகாக்கலையாக இருக்கிறார்” என்றார்கள்.

போகர் சாகாக்கலையாக “எங்கே…” இருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டோம்.

போகர் முருகன் பக்கத்தில் சமாதியாகிவிட்டார் என்று கூறினார்கள்.

சமாதியைத் தோண்டி “அவரைப் பாருங்கள்” என்று கூறினோம்.

அது எப்படித் தோண்டுவது…! என்றார்.

போகர் உயிருடன் தான் இருக்கின்றார் சமாதியைத் தோண்டி போகரை அணுகி அனைவரும் அருள் வாக்கு வாங்கலாம்… நீங்கள் எல்லோரிடமும் சொல்லுங்கள் என்று கூறினோம்.

இப்படி எம்மிடம் பேசிக் கொண்டிருந்தவர் போகர் பன்னிரெண்டாயிரத்தைக் கற்றுக் கொண்டவர். தமிழ் வைத்தியர் சாகாக்கலையைக் கற்றிருக்கின்றேன் காயகல்ப சித்தியைக் கற்றிருக்கின்றேன் என்று கூறினார்.

இன்று விஞ்ஞானிகள் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்” என்ற நிலை கொண்டு உணர்வின் இயக்கங்கள் எப்படி என்று கண்டறிந்துள்ளனர்.

1.ஒரு உணர்வுடன் மற்றொரு உணர்வை மோதச் செய்து
2.அதனில் உணர்வுகள் விரிவடைவதைக் காண்கின்றனர்.
3.கெமிக்கல் (இரசாயணம்) கலந்து ஒரு தக்டை வைத்து
4.எலெக்ட்ரிக்கைப் பயன்படுத்தி அதனில் உள்ள காந்தப் புலன்களைத் தட்டிவிடுவது.

நாம் இரண்டு கல்லை உரசினால்… “ஒளி” வருகிறதல்லவா.

இதைப் போன்று உராய்ந்த உணர்வுகள் அழுத்தமான பின் ஒளிக் கற்றைகளை வெளிப்படுத்தும். இதனின் உணர்வின் அழுத்தம் எதுவோ அழுத்தத்தின் வேகத்திற்குத்தக்க எழுத்து வடிவமோ உருவமோ உணர்வின் தன்மையோ உருவாக்கிக் காட்டுகின்றது.

இது மனிதனின் சிந்தனையில் உருவானது.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையைக் கண்டறிந்த பின் அதன் உணர்வுகள் கொண்டு “மனிதரைப் போன்று வேலை செய்ய முடியும்” என்று காண்பிக்கின்றனர்.

ஒரு நொடிக்குள் உணர்வின் தன்மையினைக் கணக்கிடுகின்றனர். இதன் தொடர் கொண்டு நாம் எப்படி நுகர வேண்டும் எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் இயந்திர நிலைகளைக் கூட்டிக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் போகர் பன்னிரெண்டாயிரத்தைக் கற்றுக் கொண்டவர்கள் காயகல்ப சித்தி சாகாக்கலை என்ற நிலையில் எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

சாகாக்கலை காயகல்ப சித்தி கற்றுக் கொண்டேன் என்னிடம் போகர் பேசுகின்றார் என்று சொல்பவர்களின் நிலை என்ன?

இவரைப் போன்றே ஒருவர் சாகாக்கலை என்ற தத்துவ உணர்வைப் படித்து மனதில் பதிய வைத்து தன்னுள் அந்த உணர்வை வளர்த்து அவர் இறந்திருப்பார்.

இவர்கள் இப்பொழுது புதிதாகச் சாகாக்கலைப் புத்தகங்களைப் படித்துக் கொண்டு “மீடியம் பவர்… 1..,2..,3…” என்று எடுத்து இறந்த ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு “போகரிடம் பேசுகின்றேன்…” என்று கூறுவார்கள்.

இவர் எப்படிப் பச்சிலைகளுக்கு அலைந்தாரோ கண்டாரோ இதனின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் இவருடைய உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா இதே நிலை கொண்ட இன்னொரு உடலுக்குள் புகுந்துவிடும்.

அதன் பிறகு புகுந்து கொண்ட உடலில் சாகாக்கலையாகச் செயல்படுத்திவிடும்.

இப்படிப் போகர் என்னிடம் பேசினார் என்று சொன்னால் இதைத் தேடிக் காசைச் சேர்க்கும் நிலைக்குத்தான் வருகின்றனர். உடலை வளர்க்கத்தான் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் போகர் இன்று இருக்கின்றாரா என்றால் இல்லை.

தன் உணர்வின் தன்மையை
1,தன் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையும்
2.தன் கவர்ச்சியின் நிலைகள் கொண்டு
3.உயிருடன் தொடர்பு கொண்டு விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து,
4.உணர்வின் தன்மையைத் தன் சுழற்சிக்குள் இருக்கச் செய்தார்.

இதுதான் “காயகல்ப சித்து” என்பது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நுகரும் ஆற்றல் கொண்டு ஒருவருக்கு ஜோதிடம் பார்ப்பது போல் முன்னாடியே அறியக்கூடிய நிலையும் நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் பார்த்துச் சொல்லலாம்.

அத்தகைய நிலைகள் சென்றால் ஒரு மனிதனுக்குள் விளைவைத்த “தீமையின் உணர்வும்…” நமக்குள் வந்து சேரும்.

சாதாரணமாக உங்கள் உடலிலிருந்து பல உணர்வுகள் வெளிப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

உங்களைச் சந்தித்தவுடனே உங்கள் உணர்வின் தன்மை அனைத்துமே நான் அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் வாழ்க்கையிலே எத்தகைய துன்பங்களை அனுபவித்தீர்களோ
1.அந்த உணர்வை இழுத்து
2.அதை நான் சுவாசித்துத்தான்
3.உங்கள் நிலையைச் சொல்ல முடியும்.

ஒருவன் துன்பப்படுவதைப் பார்த்தபின் “இப்படிக் கஷ்டப்படுகின்றானே…!” என்று பரிவுடன் ஏக்கத்துடன் பார்த்தால் அவன் உடலில் விளையக்கூடிய துன்ப உணர்வின் அலைகள் நமக்குள் நிச்சயம் வந்துவிடும்.

வந்த பின் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நடுக்கமும் பயத்தையும் சோர்வையும் அல்லது மயக்கத்தையும் நமக்கு உண்டாக்கும்.

நமக்குச் சம்பந்தமே இல்லை என்று கூடச் சொல்லலாம். திடீரென்று எதிர்ப்பார்க்காதபடி ஒருவர் விபத்துக்குள்ளாகிவிட்டால் அந்தப் பரிவான குணம் கொண்டு பார்க்கும்போது
1.பயம் கலந்த நிலைகளில் ஈர்த்துவிட்டால்
2.நாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும்
3.அது நுகரப்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி மயக்கமடையச் செய்யும்.

இதைப் போன்று வலுக்கட்டாயமாக ஒருவர் உடலிலிருக்கும் துன்பத்தை அறிந்துணர்ந்து சக்தியின் தன்மை பெற்றவர்கள் அதைச் சொல்ல வேண்டும் என்றாலும் அவர் கஷ்ட நஷ்டங்களையும் அவர் எதிர்கால நிலைமைகளையும் சுவாசித்துத்தான் அதை உணர்ந்து தான் சொல்ல முடியும்.

சொன்னாலும் அந்த வலுக்கட்டாயமாகக் கவர்ந்த பிறர் உடலிலிருக்கக்கூடிய தீய சக்திகள் நம் உடலில் பெருகத் தொடங்கும்.

சிலர் இதே மாதிரி “ஒவ்வொருவருடைய துன்பங்களையும் நான் போக்குவேன்…” என்ற நிலையில் மந்திரங்கள் யந்திரங்கள் செயல்படுத்திச் சொல்வார்கள்.

இதே மாதிரியான ஈர்க்கும் ஆற்றல் கொண்டு பிறருக்கு மந்திரித்து அல்லது மந்திரங்கள் சொல்லி அவர் உடலில் உள்ள தீமையின் விளைவுகளை இந்த உடலில் இழுத்துக் கொள்ள முடியும்.

ஏனென்றால் “அறிதல்…” என்ற நிலையில்
1.ஈர்த்துச் சொல்லக்கூடிய பக்குவம் வந்துவிட்டாலே
2.ஒருவர் உடலிலிருப்பது தன்னிச்சையாகவே
3.இவர் நினைக்கும் பொழுது வந்துவிடுகின்றது.

அவரைப் பற்றியதெல்லாம் அறிந்து சொல்வார். அவரின் வியாதியைப் போக்கும் நிலையும் வரலாம். நான் நல்லது செய்தேன் என்று அவரும் நினைக்கலாம்.

வியாதியைப் போக்கும் பொழுது இவர் உடலில் அவரின் வியாதியை உருவாக்கிய தீய சக்திகள் விளைந்து மறுபடியும் மனித உணர்வல்லாத ஈர்ப்புக்குள் தான் இவர் செல்ல முடியும்.

மிருக இனங்களுக்குத்தான் அழைத்துச் செல்லும். ஞானிகளின் உணர்வலைக்குள் செல்ல முடியாது.
காரணம் சாதாரண மனிதனின் எண்ணங்களைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த மெய் ஞானிகளின் அருள் அருகில் போனால் என்ன செய்யும்?

மெய் ஞானிகள் தீமைகளை மாய்க்கும் கடும் அக்கினி சக்தி பெற்றவர்கள். அந்த நெருப்புக்கு அருகில் சென்றால் சுட்டுப் பொசுக்கிவிடும். நம் உணர்வுகளைக் கருக்கிவிடும். ஞானிகள் அருள் மிக்க ஆற்றல் பெற்றவர்கள்.

நம் எண்ணத்தால் சாதாரணமாக அவர்களைக் கவர வேண்டும் என்றால் நடக்காது. அந்தச் சக்திகளைக் கவர வேண்டும் என்றால்
1.அவர்களின் உணர்வை நமக்குள் பதிவாக்கி இருக்க வேண்டும்.
2.பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து
3.விண்ணிலிருந்து அதைப் பெறவேண்டும் என்றால் கவர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தினசரி மனித வாழ்க்கையில் எத்தனையோ சிரமங்கள் படுகின்றோம். கஷ்டப்படுகின்றோம் கோபப்படுகின்றோம் ஆத்திரப்படுகின்றோம்.

ஆக வீணாகக் கவலைப்பட்டோ சங்கடப்பட்டோ சலிப்படைந்தோ வெறுப்படைந்தோ வேதனைப்பட்டோ அதையே மீண்டும் மீண்டும் நமக்குள் வளர்த்தால் மனித உடலுக்குள் தீமைகள் அதிகமாகி அடுத்து மனித உருவல்லாத உடலாகத்தான் நம்மை உயிர் உருவாக்கும்.

ஜோதிடமோ ஜாதகமோ நல்ல நேரமும் கெட்ட நேரமும் உங்களுக்கு ஒன்றும் செய்யாது.

தீமையை நீக்க வேண்டும் என்று எப்பொழுது எண்ணுகின்றீர்களோ அந்த நேரமே உங்களுக்கு நல்லது.

1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “அந்த நேரத்தைப் பயன்படுத்தி”
3.எங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால்
4.அந்த நேரம் தான் உங்களுக்கு நல்ல நேரமாகும்.

ஏனென்றால் மனிதன் எல்லாவற்றையும் உருவாக்கக்கூடியவன்.
1.நல்லதை உருவாக்கப்படும் பொழுது அந்த நல்ல நேரம் வருகின்றது.
2.நல்ல செயல்கள் வருகின்றது.
3.மன பலம் கிடைக்கின்றது. மன உறுதி கிடைக்கின்றது.

என்னை இப்படிச் செய்தானே… என்ற நிலைகளில் கோபமும் ஆத்திரமும் வரும் பொழுது அந்த நேரம் கெட்ட நேரம்.

“எனக்கு இப்படித் தீங்கு செய்தானே… நான் தொழில் செய்தேனே நஷ்டமாகி விட்டதே… என் பையன் சொன்னபடி கேட்கவில்லையே…,” இப்படி எல்லாம் எண்ணிக் கொண்டிருந்தால் இதெல்லாம் கெட்ட நேரம் தான்.

எனக்குத் தீங்கு செய்பவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று பொருளறிந்து செயல்பட வேண்டும். சிந்தித்து அவன் செயல்பட வேண்டும். நல்லது செய்யக்கூடிய உயர்ந்த எண்ணங்கள் வர வேண்டும்.

நான் செய்யும் தொழில்கள் அனைத்தும் சீராகி அதில் உற்பத்தியாகும் பொருள்களைப் பயன்படுத்துவோர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும். என் வியாபாரம் விருத்தியாக வேண்டும் என்று இப்படி எண்ணினால் அதுவெல்லாம் நல்ல நேரமாகின்றது.

என் பையன் ஞானம் பெற்று நல்ல தெளிவானவனாக வர வேண்டும். அவன் அந்த அருள் சக்திகள் பெறவேண்டும் என்று எண்ணினால்
1.அவனுக்கு அது நல்ல நேரம்.
2.அவனைப் பற்றி இப்படி நாம் எண்ணினால் நமக்கும் அது நல்ல நேரமாக வருகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோவில்களில் ஜோதிடம் பார்ப்பார்கள். நல்ல நேரம் வருகின்றதா… கெட்ட நேரம் வருகின்றதா…! என்று பூ வைத்துக் கேட்பார்கள்.

இவர்கள் எந்த எண்ணம் கொண்டு வைக்கின்றார்களோ அந்த நிலையில் வைத்துப் பூவைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பார்த்தவுடனே
1.இவர்கள் உணர்வுகள் அங்கே செல்லும்.
2.அந்த உணர்வலைகள் என்ன செய்யும்?

உதாரணமாக கல்யாணப் பெண் சம்பந்தமாகப் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

கெட்ட நேரம் வர வேண்டும் என்றால் சிவப்புப் பூ வரட்டும்… நல்ல நேரமாக இருந்தால் வெள்ளைப் பூ வரட்டும்…! என்று முதலில் எண்ணிக் கொள்வார்கள்.

1.கேட்ட நேரம் என்று எண்ணும் பொழுது (இவர்களின் எண்ணம்)
2..அழுத்தமாக எண்ணும் பொழுது
3.அங்கே சிவப்புப் பூ விழுகும்.

விழுந்தவுடனே கெட்ட நேரம் வந்துவிட்டது… இந்தப் பெண் வேண்டாம்…! என்பார்கள்.

ஒரு காரியத்திற்குப் போக வேண்டும் என்றால் இந்த உணர்வின் அலைகள் கண்களில் படரப்படும் பொழுது எதிர் நிலையான உணர்வு வரப்படும் பொழுது உணர்வுகள் எப்படி இயக்குகின்றது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

“சாமி மேல் உள்ள பூ” விழுகின்றதா… விழுகவில்லையா…! என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

பெண்ணைக் கொடுப்போர் ஒரு பக்கமும் மாப்பிள்ளை கொடுப்போர் ஒரு பக்கமும் இருப்பார்கள். “எப்படியோ…” வெள்ளைப் பூ விழுந்தால் பரவாயில்லை என்று ஒரு சாரார் (பெண்ணைக் கொடுப்போர்) நினைக்கின்றார்கள்.

அந்த வேதனையும் மகிழ்ச்சியும் இருந்தாலும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்?

மாப்பிள்ளை வீட்டில் அவர்கள் சார்புடைய பெண்கள் அந்தப் பெண் வீட்டுக்கு வந்தால் சரியில்லை. இந்தத் தெய்வம் அதற்குத் தகுந்த மாதிரிச் சொல்ல வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எண்ணிப் பார்க்கப்படும் பொழுது என்ன நடக்கும்…?

அங்கே எதிர்மறையான நிலைகள் உருவாகும்.

1.இத்தகைய உணர்வு வரப்படும் பொழுது
2.எவருடைய உணர்வின் எண்ணங்கள் வலுவாகின்றதோ
3.அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு தான் இந்த உணர்வுகள் இயக்கும்.
4.வலுவான உணர்வுகள் இயக்கி “அந்தப் பூவை விழுகச் செய்யும்”

அந்தத் தெய்வத்தின் மேல் உள்ள பூ விழுகும் நேரத்தில் இந்தப் போராட்ட முறைகளைப் பார்க்கலாம்.

ஆனால் நாம் என்ன எண்ணுகின்றோம்…!?

“தெய்வம் அருள் சக்தி கொடுக்கின்றது… வரம் கொடுக்கிறது…” என்று இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நாம் எண்ணக்கூடிய உணர்வின் எண்ணங்கள் தான் இயக்குகின்றது. இதைத் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

நம் வாழ்க்கையில் எத்தனையோ செயல்கள் இதைப் போன்று தான் நடக்கிறது.

ஒரு மனிதன் அரிப்பின் காரணமாக மேலில் அரித்துக் கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். உற்று நாம் அதைப் பார்த்தால் போதும்.

பார்க்கலாம்…! உடனே நம்மை அறியாமலே நம் உடலில் எங்கேயாவது கையை வைத்துத் தேய்க்க (அரிக்க) ஆரம்பிப்போம். அந்த உணர்வின் உணர்ச்சிகள் நம்மை அறியாமலே அதே உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்.

ஏனென்றால் இது இயற்கையின் உணர்வுகள்.

1.நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ
2.அது நம் சுவாசத்திற்கு வருகின்றது. அதை நுகர்கின்றோம்.
3.”அதே உணர்வு” நம்மை அறியாமலே அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.

ஒருவர் தன் தலையைச் சொறிவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும். நம்மை அறியாமலே நம் கை என்ன செய்யும்…? தலையைச் சொறியப் போகும்.

காரணம் அந்த உணர்வின் எண்ணங்கள் நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஜோசியம் ஜாதகம் என்ற நிலையில் நீங்கள் வேண்டி விரும்பிப் பார்க்கிறீர்கள். அதில் இருக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு சமயம் யாம் (ஞானகுரு) சுற்றுப் பயணம் வந்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நம்மிடம் அவர் பழகியிருந்தார்.

அவரிடம் சினிமா தியேட்டர் ஒன்று உண்டு. அவர் குடும்பத்தில் அதாவது ஏறுசிங் இறங்குசிங் என்ற நிலையில் விவசாயம் செய்து கொண்டிருந்தால் பயிர் நன்றாக விளைச்சலாகி வரும். பின் சில சமயங்களில் அதில் ஒன்றுமே விளைந்திருக்காது.

சினிமா தியேட்டர் ரைஸ் மில் என்று எத்தனையோ வைத்திருந்தார். அவை அனைத்தும் ஓடும். ஆனால் காசு இருக்காது. மூடியே கிடந்தது.

இப்படி அவர் முயற்சி எடுத்து எத்தனையோ செய்து பார்த்திருக்கிறார். முடியவில்லை.

அப்போது யாம் கொல்லூர் மூகாம்பிகையில் தியானம் இருந்தோம். மூகாம்பிகாவைக் கடந்து குடசாஸ்திரி என்று ஒன்று உண்டு. அங்கே மேலே தபோவனம் உண்டு.

அங்கே ஐந்து ஆறு வருடம் இருந்தேன்.

இங்கே அடிக்கடி வந்து சென்றாலும் அங்கே சென்று தியானத்தை மேற்கொள்வது. ஆதிசங்கரரின் இயக்கம் கோலமா மகரிஷி அவர் பெற்ற நிலையும் அந்த உணர்வின் தன்மை அறிவதற்காக இந்த தியானத்தை அங்கே மேற்கொண்டேன்.

கோலமாமகரிஷி அவர் பெற்ற உணர்வுகள் அதை அறிவதற்கு இந்தத் தவத்தை மேற்கொண்டது.

இந்த நண்பர் தன் தியேட்டர் ஓடாததையும் விளைச்சல் இல்லாததையும் பற்றி என்னிடம் வந்து விபரம் கேட்டார்.

அதர்கு நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று நான் சொன்னேன்.

அதன் பின் அவர் வீடுகளில் புதைத்து வைத்திருந்த சில யந்திரங்கள் தகடுகள் எல்லாம் வெளி வந்திருக்கின்றது. வந்த பின் எனக்குத் தபால் எழுதியிருந்தார்.

எல்லாமே எடுத்துவிட்டோம். தன்னாலே எப்படி வந்தது என்று தெரியவில்லை.. எனக்கு அந்த உணர்வு தோன்றியது. அதை வைத்து எல்லாவற்றையும் எடுத்து விட்டேன் என்று கூறினார்.

மறுபடி தீபாவளி அன்று சினிமா தியேட்டரில் படம் ஓட்டப் போகின்றேன். அந்தச் சமயம் “சாமிகள்” நீங்கள் வர வேண்டும் என்று எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்.

மூகாம்பிகாவிலிருந்து பண்ணாரி வந்து அங்கே இருந்தேன்.

“என்ன நடக்கின்றது…!” என்று பார்த்துவிட்டுத் தீபாவளி அன்று மதியம் இரண்டு மணிக்கு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இங்கே படம் ஓட்டுகிறார்கள். படம் ஓட்டினால் சத்தம் இல்லை. சத்தம் வந்தால் படம் தெரியவில்லை. டிக்கெட் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் படம் ஓட மாட்டேன் என்கிறது.

இருக்கிறவர்கள் பொறுமை இழந்து தியேட்டரே அல்லாடிக் கொண்டிருக்கின்றது. காசைக் கொடு என்று இந்த மாதிரி சூழ்நிலைகள் அங்கு வந்துவிட்டது.

அப்பொழுது நான் அங்கே வருகின்றேன்,

“சாமி வருவார்…! வந்தால் தியேட்டருக்குள் உள்ளே விட்டுவிடுங்கள்…” என்று அவர் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கின்றார்.

நான் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். உட்கார்ந்த உடனே படம் பாட்டுக்கு தாராளமாக ஓடுகிறது.

நன்றாக ஓடியவுடனே விழுந்தடித்து ஓடி வந்தார். யாராவது வந்தார்களா?

ஆமாம்…! சாமி உள்ளே உட்கார்ந்து இருக்கிறார்… என்று சொல்கிறார்கள்.

அப்புறம் உள்ளுக்குள் வந்தார். படம் முழுவதும் ஓடி முடியும் வரையில் கூடவே இருந்தார்.

இந்த நண்பர் ஏற்கனவே இந்த ஜோசியம் ஜாதகம் எல்லாம் பார்த்து அடிக்கடி பதிவு செய்து கொண்டவர்,

இவர் நட்சத்திரம் இவர் பெயர் இவர் பூர்வ புண்ணியம் இவர் எந்த எந்த வழி என்கிற வழியில் சொல்லால் அங்கே ஜாதகம் பார்க்கிறவரிடம் பதிவு செய்திருக்கிறார்.

தியேட்டர் வைத்திருக்கின்றார். ஆனால் இவருக்கு ஆகாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்?

இவருக்கு ஆகாதவர்கள் அந்த ஜாதகம் பார்ப்பவரிடம் குறிப்பை எடுத்துக் கொண்டு இவருக்கு “எந்த வகையில் கெடுதல் செய்கிறது…? என்று பார்க்கின்றார்கள்.

அந்த ஜோசியக்காரர் என்ன செய்கிறார்?

அவர் காசை வாங்கிக் கொண்டு இவருடைய தியேட்டரைச் சூனியமாக்கி விவசாயத்தை நாஸ்தியாக்கும் நிலைக்குச் சூனியம் ஏவல் செய்து வைத்துவிட்டார்.

அதற்காக அந்த ஜோசியக்காரருக்குக் நிறையக் காசு கிடைக்கிறது.

ஆனாலும் அந்த ஜோதிடக்காரர் ஜாதகம் பார்ப்பதில் பேரும் புகழும் கொண்டவர். குட்டிச் சாத்தானை வைத்துக் கொண்டு நீங்கள் நினைப்பதை எல்லாம் சொல்வார்.

ஆகையினால் பெரிய ஜோதிடக்காரர் ஆகி விடுகிறார்.

ஜோதிடம் ஜாதகம் எல்லாம் நன்றாகப் பார்க்கிறார். நன்றாகத் தெளிவாகச் சொல்கிறார் என்று தேடி வருகின்றார்கள்.

குட்டிச் சாத்தானையும் கருவித்தைகளையும் வைத்து ஜாதகம் பார்ப்பதில் இப்படியெல்லாம் சில வேலைகள் செய்கிறார். அந்தக் கருவித்தைகளைப் பார்த்து வருபவர்களுடைய ஜாதகங்களைப் பார்ப்பது. அதன் வழியில் அவர்களுக்கு எல்லாம் சொல்கிறார்.

இதை நான் (ஞானகுரு) அனுபவத்தில் உங்களிடம் சொல்கிறேன்.

ஏனென்றால்
1.ஜாதகம் பார்ப்பதால் எத்தனையோ பேர் கெட்டிருக்கின்றார்கள்.
2.ஜாதகங்கள் பார்த்து எத்தனையோ குடும்பங்கள் எல்லாவற்றையும் தொலைத்திருக்கின்றார்கள்.
3.அந்த நம்பிக்கையினால் எத்தனையோ பேர் தன்னை இழந்து அவதிப்பட்டிருக்கின்றார்கள்.
4.அவரவர்கள் அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.
5.ஆயிரத்தில் ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி நல்லதாக நடந்திருக்கும்.

ஜாதகக்காரருடைய என்னுடைய இந்த நண்பர் வீட்டிற்கு அங்கே வந்திருக்கின்றார். ஏனென்றால் அடிக்கடி நான் அங்கே போகக்கூடியவன்.

ஆனால் அந்தச் சமயத்தில் வெளியில் வரப்படும் போது என்னைப் பற்றிய உண்மையைச் சொல்ல மாட்டேன். “சாமியார்…” என்று சொல்ல மாட்டேன். அரசியல் பற்றி ரொம்பக் கடுமையாகப் பேசிக் கொண்டு இருப்போம்.

ஆகையினால் யாருக்கும் நான் “சாமி…” என்கிற வகையில் தெரியாது. “சாமி..” என்கிற வகையில் தியேட்டரில் ஓடாத படத்தை ஓட்ட வைக்கும் பொழுது தான் தெரியும்.

அதே சமயத்தில் சூனியம் வைத்த அந்த ஜோதிடம் பார்ப்பவர் என் நண்பரிடம் (தியேட்டருக்கு வந்து) வந்து சொல்கிறார்.

எனக்கு வீட்டுக்குப் போவதற்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது. இந்த பக்கம் வருவதற்குத்தான் எனக்குக் கண் தெரிகிறது என்றார்.

“என்ன…! என்று நண்பர் கேட்டார்.

நான் இன்னென்ன தவறுகளையெல்லாம் செய்திருக்கின்றேன். உங்களுக்குக் கெடுதல்கள் செய்திருக்கின்றேன்.

அவர் “தன்னாலே…” உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

இந்த மாதிரி இங்கே ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார் என்கிறார் அவர்.

“எந்தச் சாமியார்..?” என்று கேட்டார்.

அவர் உங்கள் கடைக்குக் கூட அடிக்கடி வந்திருக்கின்றார். நான் கூட உங்கள் கடைக்கு அடிக்கடி வந்து அவர் அரசியல் பேசும் பொழுது பார்த்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

“அப்படியா” சரி பார்க்கலாம் என்று என்னிடம் அழைத்து வருகிறார். இந்தப் பக்கம் தான் (நான் இருக்கும் பக்கம்) வருகிறார். அந்தப் பக்கம் போனால் அவருக்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது.

சாமியைப் பார்த்து நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். நான் காசை வாங்கி இத்தனைத் துரோகம் செய்து விட்டேன் என்றும் அவர் சொல்கிறார்.

அவர் இப்படிப் பேசியவுடன் என்னிடம் கூப்பிட்டு வந்தார். நான் தியேட்டருக்குள் உட்கார்ந்திருந்தேன்.

வந்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டு நான் பாவங்கள் நிறையச் செய்துவிட்டேன் என்றார்.

நான் ஜாதகம் பார்த்ததுடன் மட்டும் இல்லாமல் பணத்தின் மீது ஆசைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அங்கங்கே போய்க் கேட்டுச் சில விபரங்களைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த தீயவினைகளைச் செய்தேன்.

அதனால் இப்பொழுது எனக்கு அந்தப் பக்கம் போனால் கண் தெரிய மாட்டேன் என்கிறது என்றார். அவர் செய்த உணர்வுகள் அவருக்குள் உள்ள அனைத்தையும் சொன்னார்.

என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இந்தப் பாவச் செயலைச் செய்யவே மாட்டேன் என்று சொல்கிறார்.

சரி.. என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தேன்.

இனிமேல் யாருக்கும் இந்தத் தீங்கைச் செய்யாதே. இந்த ஜாதகத்தைத் தொடாதே… நீ ஜாதகத்தைத் தொட்டால் மீண்டும் இந்தக் காசு ஆசைதான் வரும் என்று சொல்லி அனுப்பினேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனக் கவலையில் இருந்து விடுபடுவதற்காக வேண்டித் தண்ணீ போடுவார்கள். குடித்தபின் எல்லா கவலையையும் மறந்து விடுவார்கள்.

தண்ணீ போடுகிறவர்கள் மாமிசமும் அதிகமாகச் சாப்பிடுவார்கள்.

கடைசியில் இந்த உணர்வெல்லாம் சேர்த்துச் சேர்த்து இவர்களுக்குள் இந்த நிலை நிறுத்த முடியாதபடி வந்து விடும். உயிரான்மாவில் அந்த வாசனை அதிகமாகிவிடும்

இவர்கள் இறந்த பிற்பாடு எங்கே போவார்கள்…?

மந்திரக்காரர்கள் தண்ணீ கறி இரண்டையும் வைத்து என்ன செய்வார்கள்?

ஆரம்பத்தில் இந்த மந்திரங்கள் உற்பத்தி செய்வது எல்லாமே அந்தச் சோமபானம் வைத்துத்தான். அதனால் சில மயக்க நிலைகளை ஏற்படுத்தித்தான் வசியப்படுத்துவார்கள். மது இல்லாத மந்திரம் கிடையாது.

மந்திரத்தை எப்படி உருவாக்கினார்கள் என்ற நிலையில் முழுமையாக இப்போது நான் (ஞானகுரு) சொல்லத் தயாராக இல்லை. அது நமக்கு ஆகாத வேலை.

சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்று சொன்னால் மாமிசத்தையும் தண்ணீயையும் வைத்து அதற்கென்று சில மந்திரங்கள் இருக்கின்றது. ஜெபித்து இந்த ஆத்மாக்களைப் பிடித்து இழுத்துக் கொள்வார்கள்.

ஏனென்றால் தண்ணீ போடும் பழக்கம் ஏற்படுவதன் காரணமே
1.பெண்டு பிள்ளைகள் மீது கவலை அதனால் அவஸ்தைப்படுவது,..
2.பிறிதொருவர் அவமரியாதையாகப் பேசினார் என்னால் தாங்க முடியவில்லை…
3.வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்தேன் அந்தக் கவலையை மறக்க முடியவில்லை..
4.இந்த மாதிரி இருப்பவர்கள் கதி எல்லாம் இறந்த பிறகு மந்திரக்காரன் கையில் போய்ச் சிக்கும்.
5.இந்தக் கறியும் தண்ணியைச் சாப்பிட்டு இருப்பவர்கள் மந்திரக்காரனுடைய பிடியில் ரொம்ப சீக்கிரம் போய்ச் சிக்கிவிடும்.

அப்புறம் சிக்கிய பின் என்ன கத்தினாலும் முடியாது. அது அங்கே போய்ச் சிக்கிக் கொண்டதும் அவர்கள் என்ன செய்கின்றனர் தெரியுமா இல்லையா…!

காசைக் கொடுத்து அடுத்தவர்களைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தகைய மந்திரக்காரர்களை நாடுகின்றனர்.

காசை வாங்கிக் கொண்டு ஆகாதவர்கள் உடலில் இந்த ஆவிகளை ஏவி விடுவார்கள். அங்கே போய் எல்லாக் கெடுதலையும் செய்து அது சாப்பிடும். அங்கே நிர்மூடத்தனமான வேலைகளைச் செய்யும்.

ஏற்கனவே வாழ்ந்த உடலில் பல வேதனைகள் ஆன்மாவில் இருக்கிறது. அடுத்து மந்திரக்காரன் கையில் சிக்கி அடுத்த உடலில் போய் அங்கே இன்னும் அதிகமான விஷத்தையெல்லாம் இழுத்துக் கொண்டு இந்த ஆவி வரும்,

விஷங்கள் அதிகமான பின் மீண்டும் அதை எடுத்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த வேதனையான உணர்வு இன்னொரு உடலில் போய் என்ன செய்யும்?

அவனைத் திருப்பி அடித்துக் கொல்லும்.

எதிலெல்லாம் ஏவினானோ கொன்று விட்டு மீண்டும் பிறவிக்கு வரப்போகும் போது விஷமான உயிரினமாகத்தான் உருவாகும்.

உருவான பின் அந்த உடலில் உடல் உறுப்புகள் என்ன செய்யும்…? சாப்பிடும் பொழுது மிகவும் அவஸ்தைப்பட்டுத் தான் சாப்பிட வேண்டும். சில உயிரினங்களைப் பார்க்கின்றோம்.

பாம்பு தேள் சில விஷப் பிராணிகள் மற்றதைத் தன் விஷத்தால் கொன்றுவிடும். ஆனால் அதைச் சாப்பிடும் பொழுது நரக வேதனைப்படும். அது எத்தனை அவஸ்தை எல்லாம் படுகின்றது.

1.பல உடல்களுக்குள் சென்று எல்லாவற்றையும் வேதனைப்படச் செய்தாய்
2.முழுவதும் நஞ்சாக நீ உருவாக்கினாய்.
3.இப்பொழுது நீ அவஸ்தைப் படு…! என்று இந்த உயிர் செய்யும்

தண்ணீ போடுகிறவர்கள் நீங்கள் யாரும் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தண்ணீ போட்டதன் விளைவுகள் சீக்கிரம் மந்திரவாதிகளிடம் போய்ச் சிக்கிக் கொள்வீர்கள்.

இன்றைக்கு மந்திரம் ஜாஸ்தியாக (வியாபாரமாக) வந்து விட்டது. எங்கே பார்த்தாலும் “ஒருவரைத் தொட்டு…” புத்தியை மாற்றி விட்டுக் காசை எடுத்துக் கொண்டு செல்கின்றவர்கள் நிறைய வந்தாகி விட்டது.

டிரெயினில் உட்கார்ந்து கூட்டத்திற்குள் இருந்து வந்தால் “நகையைக் கழற்றிக் கொடு…!” என்று வாங்கிக் கொண்டு போகக்கூடிய நிலைமை வந்து விட்டது.

ஏனென்றால் விஞ்ஞான உலகமாக இருந்தாலும் இன்றைக்கு மந்திரங்கள் நிறைய வந்துவிட்டது. இந்த விஞ்ஞான உலகில் சில
1.விஞ்ஞானச் செயல்களை அழிப்பதற்கும் கூடச்
2.சில வேலைகளைச் செய்கின்றனர்.

ஏனென்றால் வாழ்வதற்கு எவ்வளவு பெரிய வசதி இருந்தும் சிறு விஷயங்கள் நடந்ததென்றால் அந்த விஷத்தன்மையில் இருந்து மீளாத நிலைகளில் இருக்கின்றோம்.

கடைசியில் எங்கே கொண்டு போய் விடும்?
1.மந்திரக்காரனிடம் போய்
2.ஆகாத உடலுக்குள் சென்று பேயாகப் போய் ஆட்டிப் படைத்து கொண்டே இருக்கும்.
3.அங்கே அத்தனை வேலையும் செய்யும்.

இதைப்போல நிலைகள் நம்மை அறியாமலே இயக்கிக் கொண்டு இருக்கக்கூடிய நிலைகளில் இருந்து நம்மை மீட்டுக்கொள்ள வேண்டும்.

“நான் தவறாகச் சொல்கின்றேன்…!” என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இயற்கையில்
1.மந்திரக்காரர்களின் செயல்களையும்
2.உடலை விட்டுப் போகும் உயிரான்மாக்களை எப்படிக் கவர்கிறார்கள் என்ற நிலையும்
3.அது என்னென்ன அல்லல்படுகிறது என்றும்
4.நேரடியாகவே இழுத்துக் காண்பித்தார்.

1.இன்னென்ன நிலைகளை நீ சொல்லு என்றார்
2.இந்த ஆவிகள் என்ன செய்கிறது என்று பார்…!
3.தண்ணீ போட்டவர்களை இறந்தவுடனே சுலபமாக வந்து அழைத்துக் கொள்ளலாம்…! என்று காட்டினார்
4.என்னென்ன வேலைக்கு நீ பயன்படுத்திக் கொள்கிறாயோ நீ வைத்துக்கொள்…! என்றார் குருநாதர்.

மந்திரத்தை சொல்லி அவர்களை இழுத்துக் கெட்ட வேலைக்குப் பயன்படுத்தினால் அப்புறம் இந்தப் புத்தியெல்லாம் உன்னிடம் வந்து அவர்கள் பின்னால் “நீ போக வேண்டியதுதான்…! என்று அதையும் சொல்லி விட்டார் குருநாதர்.

இப்படிச் செய்தாய் என்று சொன்னால் கடைகியில் உன் கதியும் அப்படித்தான் வந்து விடும் என்று காட்டினார்.

ஆனால் அவர்கள் அந்தத் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும் என்று எண்ணினால் நீக்கும் உணர்வுகள் உனக்குள் வருகின்றது என்று இதைச் சொல்லிக் காண்பித்தும் நேரடி அனுபவமாக செய்து காட்டி உணர்த்தவும் செய்தார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் எனக்கு இடைஞ்சல் செய்தவனை எண்ணுகின்றேன். “என் பிள்ளை படிக்கவில்லையே… நாளைக்கு எதிர்காலம் என்ன ஆகுமோ…!” என்று நான் எண்ணிச் சிந்திக்கின்றேன்.

அப்பொழுது இந்தச் சிந்தனை எங்கே போகின்றது?

என் பிள்ளை படிக்கவில்லை என்றால் நாளை அவன் எதிர் காலம் என்னவாகும் என்று நான் நினைத்துக் கொண்டே இருந்தேன் என்றால் போதும்…! (ஒரு நல்ல பையனைப் பற்றிக் கூடச் சிந்திக்க மாட்டோம். நல்லது எண்ணத்திற்கு வராது.)

இவன் சொன்னபடி கேட்கவில்லை…. படிப்பு சரியாக இல்லை… என்ற இந்த நிலையில் இருந்தால்
1.அவனைப் பற்றியே எண்ணி
2.அவன் உயர்ந்தவனாக வர வேண்டும் ஆனால் வரவில்லையே என்று எண்ணிக் கொண்டே இருக்கின்றேன் என்றால்
3.நான் இறந்த பிற்பாடு இந்த உயிராத்மா அவன் உடலுக்குள் தான் போகும்.

அவனை எண்ணியே வேதனைப்பட்டேன். அந்த வேதனையான நிலைகள் எனக்குள் நோயாக வந்தது. நோயாக உருவான இந்த உயிராத்மா நான் இறந்த பிற்பாடு என் பையன் உடலில் தான் போகும்.

அங்கே போய் அங்கே நல்லதை விளைய வைக்கின்றதா…? என்றால் இல்லை. அவனை வீழ்த்தச் செய்வேன்.

மந்திரங்கள் தந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள்
1.மனித உடலில் விளைந்த உணர்வு எண்ணங்களைத் தனக்குள் கவர்ந்து கொண்டவர்கள்
2.வாமன அவதாரம் என்று சொல்வார்கள்.

இதுகளெல்லாம் மந்திரத்தாலே அப்போதைக்கு அப்போது அந்தந்தக் காரியங்களை ஜெயித்துக் கொண்டு வந்தவர்கள்.

அதை எல்லாம் “தெய்வப் பண்புகளிலே பார்க்கப்பட்டு…” அந்த உணர்வின் தன்மை திசை திருப்பி அன்றைய வாழ்க்கையை எப்படியோ பொழுது போக்க வேண்டும் என்று செய்வார்கள்.

வீட்டில் மாடி கட்டுவதற்கு பொய்ப் பந்தலைக் கட்டி அதன் மேலே தளம் சுவர் எழுப்பிக் கட்டுவோம். செய்து முடித்தபின் பொய்ப் பந்தலை உடனுக்குடனே எடுத்து விடுவது போல் தான் மந்திரம் சொல்வதை அது நிரந்தரமாகக் கட்டி விட்டார்கள்.

1.மனித உடலிலே விளைய வைத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ள
2.இந்த மனித வாழ்க்கையிலே தன்னுடைய பேருக்கும் புகழுக்கும்
3.தன் சுகபோகங்களுக்கும் எண்ணி எடுத்துக் கொண்டது தான் இந்த மந்திர ஒலிகள்.

அந்த மந்திர ஒலிகள் எங்கிருந்து வந்தது?

ஒரு மனித உடலில் விளைய வைத்த அந்த எண்ணங்களைக் கவர்ந்து தனக்குள் அது உருவாக்கித் தன்னுடன் இயக்கச் செய்யும் நிலையே அது.

சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் குணம் கொண்டு ஒரு ஆன்மா நம் உடலில் எப்படி நுழைந்து விடுகின்றதோ இதைப்போல
1.செயற்கையில் ஒரு மனிதன் மந்திர ஒலிகளைப் பரப்பச் செய்து
2.அந்த மந்திரத்தை எவன் உருவாக்கினானோ
3.அந்த மந்திர ஒலி கொண்டே மீண்டும் தனக்குள் கவர்ந்து
4.இன்னொரு ஆத்மாவினுடைய செயலைத் தனக்குள் கவர்ந்து கொள்வது
5.இது தான் மந்திரம்.

கவர்ந்து கொண்ட நிலைகள் கொண்டு சில காலம் இன்னொரு உடலுக்குள் போய்ப் பேயாகவும் அருளாகவும் தெய்வமாகவும் செயல்படுத்தி மாற்றிக் காட்டலாம்.

பல வித்தைகளைச் செய்து காட்டலாம். ஆனால் பயன் ஒன்றுமே இல்லை. அப்படிச் செய்தவர்கள் அனைத்தும் மீண்டும் விஷத்தின் தன்மை கொண்டு பாம்பாகவோ தேளாகவோப் பிறந்து தான் மீண்டும் மனிதனாக வரவேண்டும்.

இதைப்போல நாம் மந்திரம் என்ற இந்த நிலைகளில் இருந்து விடுபட்டு பத்தாவது நிலையான கல்கி என்ற நிலையில் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.

ஏனென்றால் நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நம்மை அறியாமல் நமக்குள் சென்ற இந்த அழுக்கினைத் துடைக்கத்தான் இந்தத் தியானம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பக்தி நிலைகளில் நாம் போகும் போது கோயில்களுக்குப் போகிற இடத்திலே சிலர் ஆண்டவன் எனக்கு நேரிடையாகச் சொல்கிறான் என்று சொல்வார்கள்.

இந்த மாதிரிச் சொல்லிக் கொண்டு பழனியில் ஒருவர் இருந்தார். நான் மிலிட்டரிக்குப் போய் விட்டு வந்தேன். அது… இது… என்று சொல்கிறார்.

ஜோசியங்களை சொல்லிக் கொண்டு அது இப்படி நடக்கிறது. அப்படி நடக்கிறது என்றெல்லாம் சொல்வார்.

உங்கள் வீட்டில் இந்தச் சக்கரத்தை வைத்திருந்தால் மிகவும் நல்லது என்று சொல்வார். அதைக் கொடுத்துக் காசுகளை வாங்குவார்.

கோயில்களுக்கு வருபவர்களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டு அவர்களை எப்படி மடக்குவது என்று சில வேலைகளைச் செய்வார்.

நான் (ஞானகுரு) சித்து ஆகியிருக்கும் நிலையில் அவரைச் சந்திக்கும் போது சொன்னேன்.

உன்னுடைய மந்திர வித்தை சிறிது காலம் செல்லும். ஆனால் இது உன்னையே வீழ்த்தும். நீ முழுமையாகக் கற்றுக் கொள்ளவில்லை.

காசைக் கொடுத்து நீ வாடகைக்கு வாங்கி இந்த வேலையைச் செய்கிறாய்.
1.அற்பக் காசுக்காக இதைச் செய்கிறாய்.
2.அந்த வினைகளை எப்படி நீ தெரிந்து கொள்ளப் போகின்றாய் பார்…! என்றேன்.

அதெல்லாம்… என்னால் எதை வேண்டும் என்றாலும்… செய்ய முடியும்…! என்றார். கடைசியில என்ன செய்தார்…?

ஒருவரைக் கொல்வதற்காக வேறொருவரிடம் சக்தியை வாங்கி வைத்துப் பழனி வையாபுரி குளத்தில் வைத்துச் செய்தார். அவர் அங்கேயே செத்து மடிந்தார்.

இதே மாதிரி பழநி பஸ் ஸ்டாண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி. இதே மாதிரி கோவிலுக்குப் போவோரை ஒருவர் மடக்கிக் காசுக்காகச் செய்து கொண்டிருந்தார்.

ஒருவர் அவர் இரண்டு சம்சாரத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

சார்…! இங்கே வாருங்கள்…! என்றார். நீங்கள் உங்கள் பாக்கெட்டில் வைத்திருந்த காசெல்லாம் காணாமல் போய்விட்டது…! என்றார்.

அதெல்லாம்… “ஒன்றும் இல்லை…!” என்றார்கள் அவர்கள்.

“இல்லை இல்லை… நீங்கள் பாருங்கள்…!” என்றார்.

உங்கள் பாக்கெட்டில் இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது… பாருங்கள்…! என்றார்.

“பணம் காணாமல் போய்விட்டது…!” என்று சொல்லிவிட்டு இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது என்று சொல்லி அதை அவர்கள் பார்த்தவுடனே இவர் மீது முழு நம்பிக்கை வந்துவிடுகிறது.

அப்புறம் “போனது வந்தது… சண்டை போட்டது… அவர் வாழ்க்கையில் நடந்தது…” எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார்.

எல்லாம் அவர்கள் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால் முருகன் உங்களுக்கு நிறைய இந்த மாதிரி அருள் கொடுத்திருக்கின்றார். சரி…! நீங்கள் மலைக்குப் போய் முருகனைத் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

முதலில் “வெறும் ஒரு ரூபாய் தான்… அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம்…!” என்று சொல்லிக் கவர்ச்சி செய்து கொள்கிறார்கள்.

அடுத்தாற்போல் என்ன சொல்கிறார்?

உங்களை மடக்குவதற்காக எதிரிகள் இருக்கின்றார்கள். அதைச் சரி செய்ய வேண்டும்…! எதற்கும் ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்கள். அப்புறம் நல்லதான பிற்பாடு மிச்சத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கேட்கிறார்.

“அதற்காக உங்களுக்குச் சக்தி தருகிறேன்…! என்று சொல்லிக் கோவிலுக்கு வருபவர்களிடம் சொல்லி ஒவ்வொரு நாளும் இப்படித் தட்டிப் பறிக்கின்றார்கள்.

இந்த மாதிரி ஜோதிடங்கள் நிறைய உண்டு. ஏனென்றால் கரு வித்தைகளை வைத்து அந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி இப்படிச் செய்வார்கள்.

சமுதாயத்தின் மத்தியில் “இப்படி எத்தனையோ பேர்…” மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள்.

கோவில்கள் இருக்கும் பக்கம் போனால் ஜோசியம் ஜாதகம் மந்திரம், தந்திரம் ஏவல் பில்லி சூனியம் என்று ஏகப்பட்டது இருக்கின்றது. ஏனென்றால் அங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள் அல்லவா…!

இதை வைத்து ஏமாற்றி “இது தான் கடவுள்” என்ற நிலைகளில் முருகனே சொல்வதாகச் சொல்கிறார்கள்.

அப்புறம் இன்னொரு இடத்தில் என்ன செய்கிறார்கள்?

எல்லாம் உட்கார்ந்திருக்கின்றார்கள்.

முருகா…! வாடா…! என்று அங்கிருப்பவம் சொல்கிறான். தீபத்தைப் பொருத்துடா…! என்கிறான். “டக்…” என்று அந்தக் கற்பூரம் எரிகிறது.

ஆகா..! உனக்கு முருகன் ஆசி கொடுத்திருக்கின்றார். உனக்கு எல்லாம் நன்றாக இருக்கிறது.. அது இது…! என்று இந்த மாதிரி இரண்டு பேரிடம் சொல்லிக் காசை வாங்குகிறான்.

நல்ல பண்பு உள்ள ஆலயங்களில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

பக்தி கொண்ட மக்களும் அதில் ஏமாற்றம் அடைந்து உண்மையின் உணர்வை அறிய முடியாதபடி
1.இந்த உடலின் ஆசைக்கு இதற்குள் சிக்கப்பட்டுத்
2.தனது பண்புகளை இழந்த நிலையில் இருக்கிறார்கள்.

பெரும் பகுதி பாருங்கள்…! திருவண்ணாமலை ஆனாலும் சரி பழனி ஆனாலும் சரி திருப்பதி ஆனாலும் சரி இப்படிப் பல பேர் அங்கிருந்து இந்த வேலைகளைச் செய்கிறார்கள்.

நாடி சாஸ்திரம் என்று எடுத்துக் கொண்டால் யட்சினி நாடி- அரசர்கள் தனக்குள் அனுபவித்த இப்படி நாடி சாஸ்திரங்கள் உண்டு.

எதன் வழிகளில் அரசர்கள் செய்தார்களோ விஸ்வாமித்திரர் நாடி கௌசிகர் நாடி என்று அன்று வைத்த சிலதுகளை வைத்து நாடிகளைப் பார்த்து நடந்தவைகளைச் சொல்லும். நடக்கப் போவதைச் சொல்லாது.

இதைப் போன்று சில தவறான நிலைகளை செயல்படுத்தப்பட்டுத் தவறின் பாதைக்கே அழைத்துச் செல்கின்றனர். எல்லா மதத்திலும் சரி இதே தான்.

உடலிலிருந்து பிரிக்கப்பட்ட ஆன்மாக்களை வைத்து சில மந்திர ஜாலங்களைச் செய்து இது தான் ஆண்டவன் செயல் என்ற நிலையில் செய்கின்றார்கள்.

உண்மையின் இயக்கத்தைப் பெறுவதற்கு மாறாக உடலின் இச்சைகள் கொண்டு பல தவறுகள் நடக்கின்றது. இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

நாம் ஞானிகள் காட்டிய மெய் வழியில் அந்த அருள் ஞானத்தைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுதல் வேண்டும்.

உண்மையின் உணர்வின் தன்மையை உணர்ந்து அந்த ஆலயத்தின் பண்புகளைத் தெளிவாகத் தெரிந்து ஆலயத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தர்மபுரியில் பவானி என்ற ஊரில் ஒருவன் (அக்காவின் மகன்) தன் சின்னம்மாவிடம் தன் செலவுக்காகக் காசு கேட்டு வந்திருக்கின்றான்.

அவன் ஊர் சுற்றித் திரிவதால் பணம் கேட்டதும் அவர்கள் “இல்லை…” என்று சொல்லி உள்ளார்கள்.

நீ என்ன கொடுப்பது…! நானே எடுத்துக் கொள்கிறேன்…! உன்னைக் கொன்று விட்டு நான் எடுத்துக் கொள்வேன் என்று தன் சின்னம்மாவைக் கொன்று விட்டான்.

பணத்தையும் எடுத்துக் கொண்டு ஜாலியாக ஐயாயிரம் ரூபாய் செலவு அளித்து விட்டான்.

சின்னம்மாவைக் கொன்ற பின்னர் சேலத்தில் அவர்கள் அக்கா வீட்டுக்குப் போயிருக்கின்றான். அங்கே போய் “இப்படி ஆகிவிட்டது…! ஆனால் யார்… எவர்…! என்று தெரியவில்லை…” என்று சொல்லி இருக்கின்றான்.

ஏனென்றால் சின்னம்மாவைக் கொன்றவன் இவர்களைக் கொலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? இந்த உணர்வுகள் அவர்களுக்குச் சந்தேகம் ஆனவுடன் அவனைப் போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டார்கள்.

இன்று இந்த மாதிரி நிறைய நடக்கின்றது. நீங்கள் யாரை நம்பி வாழப் போகின்றீர்கள்?

1.எத்தனையோ கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குகின்றோம்.
2.ஜாதகம் ஜோதிடம் பார்த்துத் தான் கல்யாணத்தைச் செய்கின்றோம்.
3.அக்கா மகன் இப்படிச் செய்வான் என்று ஜோதிடத்தில் கூறினார்களா?
4.கல்யாணம் முடிக்கப்படும் போது ஜாதகத்தில் எழுதி இருந்ததா?
5.ஜாதகம் சொன்னவன் ஏன் தவற விட்டான்? சொல்லி இருக்க வேண்டும் அல்லவா…!

அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்வது எப்படி என்று ஞானிகள் மக்களை ஒழுங்குபடுத்தி ஒரு சீரான பாதையில் செல்வதற்காக வானவியல் புவியியல் உயிரியலைக் காட்டினார்கள்.

27 நட்சத்திரங்களும் பல விதமான விஷத் தன்மைகள் கொண்டது. அதை அதிகமாகக் கவர்ந்து கொண்ட கோள்களிலும் விஷத் தன்மைகள் பரவி இருக்கும்.

அவைகள் வெளிபடுத்தியதைச் சூரியன் கவர்ந்து செல்லப்படும் போது பூமியின் ஈர்ப்புத் தன்மைக்குள் வந்து விட்டால் இங்கே விஷத் தன்மைகள் பூமியிலே பரவுகின்றது.

அது எந்தப் பகுதியில் பரவுகின்றதோ அந்தப் பகுதியில் விஷத் தன்மைகள் பரவி வருகின்றது.

இன்றுள்ள ஜாதகப்படி இன்ன நிலையில் இன்ன நட்சத்திரத்தில் வருகின்றது. அப்போது இன்ன கோள்கள் இன்ன திசையில் சேர்க்கப்பட்டு இந்தக் கோள்கள் இப்படி இயங்குகிறது என்று குறிப்பிட்ட கோள்களின் உணர்வுகளைத்தான் எழுத முடிகின்றது.

இப்படி (நட்சத்திரங்கள் கோள்கள்) கலவையாகி வரக்கூடிய உணர்வுகளைச் சூரியன் எடுத்து தன் உணவாக எடுத்துக் கொள்ளும் நிலைக்குச் செல்லப்படும் போது பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அது வந்தவுடனே இழுத்து இங்கே காற்றழுத்த மண்டலத்தில் மோதியவுடனே நெருப்பாகவும் புகையாகவும் ஆவியாகவும் மாற்றி விடுகின்றது.

அப்போது இவர் ஜாதகத்தை இன்னது நல்லது இன்னது கேட்டது என்று இப்படி எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். வானவியலைப் பற்றி ஜாதகத்தில் எழுதியிருந்தாலும் (அந்தக் குறிப்பிட்ட) ஜாதகத்தில் எல்லாம் நல்லதாகும் என்று எண்ணியிருந்தாலும் இந்த விஷத்தன்மையான நிலைகளில் பட்டபின் பல விதமான நோய்கள் வந்து மடிகின்றார்கள்.

பிறகு ஜாதகம் நிஜமாகுமா பொய்யாகுமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

ஜாதகத்தைப் பார்த்து “ஏழரை நாட்டுச் சனியன் வந்துவிட்டான்…” அதனால் என் தொழில் சரி இருக்காது என்று மனதில் பதிவு செய்து கொண்டால் அதற்கு என்ன அர்த்தம்?

அந்த ஜோசியக்காரன் நமக்குள் இதை ஆழமாகப் பதிய வைத்து விட்டான் என்று அர்த்தம்.
1.அப்படிப் பதிந்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும் போது
2.”காரியம் தோல்வியாகுமே…” இந்த ஏழரை வருஷம் நாம் எப்படி இருப்பது..? என்று
3.அவன் கூறிய உணர்வுகளை நமக்குள் திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துக் கொள்கிறோம்.
4.நாம் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தையும் மன உறுதி கொள்ளும் நிலையும் இழந்துவிடுகின்றோம்.

நமது வாழ்க்கையில் நல்லதை உறுதிபடுத்தும் நிலையையே மாற்றி ஒவ்வொரு கேட்டது நடக்கும் போதும்
1.ஏழரை நாட்டுச் சனி நடப்பதால் இப்படித்தான் இருக்கும்…! என்று
2.நல்லதைப் பெறும் தகுதியையும் நல்லதாக்கும் பண்புகளையும்
3.சுத்தமாகவே இழக்கச் செய்துவிடுகின்றது.

நம் நாட்டைக் காட்டிலும் ஜப்பானில் மத நம்பிக்கை உண்டு. ஜாதக நம்பிக்கை அதிகமாக உண்டு.

ஒரு செருப்பு வைத்தாலும் கூட எந்தத் திசையில் வைத்தால் வைக்க வேண்டும் என்று பார்ப்பார்கள். இன்ன வீட்டிற்குப் போனால் இன்ன திசையில் வைக்க வேண்டும் என்றெல்லாம் பார்த்து வைக்கக்கூடிய அந்த அளவிற்குச் சாங்கியங்கள் உண்டு.

ஆனால் அதே ஹிரோஷிமாவில் அணுகுண்டுகள் வெடித்தபின் இவர்கள் சாஸ்திரமோ மதமோ அல்லது கடவுளின் அடிப்படையில் சாங்கியங்கள் செய்த நிலைகளோ அவர்களைக் காப்பாற்றியதா…? அவர்களால் தப்ப முடிந்ததா…? இல்லையே.

எல்லா இடமும் கட்டிடங்களும் கருகியது. அவர்கள் எண்ணமும் கருகியது.

அதே சமயத்தில் ஹிரோஷிமாவில் அந்தக் காற்றலையில் பரவிக் கொண்டிருந்த விஷக் கதிரியக்கங்கள் எங்கெங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் கருவில் உள்ள குழந்தைகள் தாக்கப்பட்டது.

இன்றும் அங்கே கருச் சிதைவாகின்றது. ஊனமாகின்றது. கண்கள் இழக்கப்படுகின்றது. உறுப்புகள் சிதைகின்றது. அந்தக் கதிரியக்கம் கருவில் இருக்கக்கூடிய குழந்தையைச் சிதையச் செய்கின்றது.

புத்தர் காட்டிய அருள் வழியில் அவர்கள் கடைப்பிடித்துச் சென்றாலும் அவர்கள் எழுதிய சாஸ்திரங்கள் இன்று விஞ்ஞான உலகால் நிலைத்து இருக்கின்றதா?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

“இது நிலையற்றது…” என்ற நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக மிளகாயைத் தூவுகின்றனர். அல்லது சமையலுக்காக வேண்டி மிளகாயை வறுக்கின்றார்கள். அது கருகிக் காற்றில் வருகிறது.

இங்கே நாம் இருக்கும் பக்கம் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். நுகர்ந்தால் உங்களுக்கு இருமல் வருகின்றது.

அப்பொழுது நான் சொல்வதைக் கேட்பீர்களா? அல்லது மிளகாய் நெடியைச் சுவாசித்ததும் இருமுவீர்களா?

இந்தத் திசைப் பக்கம் வருகின்றது என்றால் அதை நீங்கள் நுகர்கின்றீர்கள்.
1.அது உங்களை இப்படித் திருப்புகின்றது.
2.ஆனால் நெடி எங்கேயோ இருந்து வருகின்றது.

இதைப் போன்று நமது வாழ்க்கையின் நிலையில் எத்தகைய கொடிய தன்மைகள் வந்தாலும் அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தாது அதிலிருந்து நாம் பிரிந்திருத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில விஷத் தன்மைகளை முறிக்கும் உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து பல மந்திர ஒலிகளாக மந்திரங்களைப் பாய்ச்சப்பட்டு இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்துக் கொண்ட பின் என்ன செய்கின்றது…! என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்னொரு மனித உடலின் வீரிய உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதற்கென்ற மந்திர ஒலியை எடுத்துக் கண் கொண்டு பார்த்தான் என்றால்
2.புலி அப்படியே தனக்குள் ஒடுங்கிவிடும்.

மனிதனுக்குள் வந்தபின் இதே மந்திரத்தால் தனக்குள் ஜெபித்து அதர்வண வேதம் என்ற நிலைகள் கொண்டு அதை எப்படிப் பக்குவப்படுத்துவது என்று பின் வந்த “அரசர்கள்…” செய்தனர்.

அதே நிலைகள் கொண்டு வந்து (சித்தர்கள் என்ற நிலையில்) காட்டிற்குள் போனால் இந்தப் புலிகள் ஒடுங்கும்.

இந்த மாதிரி மந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள் புலித் தோலை விரித்து வைத்து அந்தப் புலி எப்படி வீரிய உணர்வுகள் எடுத்ததோ இதன் மேல் அமர்ந்து சில மந்திரங்களை ஜெபிக்கின்றார்கள்.

அப்படி உட்கார்ந்து ஜெபித்தார்கள் என்றால் அந்தப் புலியினுடைய உணர்வுகள் இங்கே வந்தபின் புலியைக் கண்டால் எப்படி அஞ்சுகின்றனரோ இதைப் போல பிறர் அஞ்சி ஒடுங்கும் நிலை வருகின்றது.

இந்த இந்த மந்திரத்திற்கு இப்படிச் செய்தால் இப்படி என்று புலித் தோல்களை விரித்து வைத்து அதன் மேல் இருந்து சில ஜெபங்களைச் செய்தார்கள்.

அவன் உடலில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளை நாம் கேட்டோம் என்றால் நாம் அவர்களுக்கு அடிமையாக இருப்போம். இது வசிய மந்திரங்களில் எதன் மேல் உட்கார்ந்து எதைச் செய்வதென்று செய்தார்கள்.

எப்படிப் புலியின் தன்மை அடைந்ததோ புலியின் உணர்வுகளை இவர் நுகர்ந்தால்
1.இவர் எவ்வளவு பெரிய சித்தராக இருந்தாலும் சரி
2.(கடைசியில்) அவர் செத்தவராகத் தான் ஆகின்றார்.
3.இந்தப் புலியின் தன்மை ஆனபின் இந்தப் புலியின் மணமே வரும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு மற்றவர்களை இவர் ஒடுக்கக் கற்றுக் கொண்டாலும் இவர் வெளியிலே சென்றபின் மனிதனின் உணர்வு இவருக்குக் கிடைக்காதபடி இவரை அடிமையாக்கிவிடும்.
1.புலித் தோலில் உட்கார்ந்தார்.
2.கடைசியில் புலிக் குட்டியாகத்தான் போவார்.
3.இது இவர்களுக்குத் தெரியாது.

குருநாதர் இதை எல்லாம் தெளிவாக்கினார்.

என்னைச் சில காலம் மான் தோலில் புலித் தோலில் உட்கார்ந்து இந்த உணர்வின் மணங்கள் வரப்போகும் போது இதனால் மற்றவர்களை நீ எப்படி வசியப்படுத்த முடிகின்றது…? என்று காட்டினார்.

முந்தி நான் (ஞானகுரு) மான் தோலை வைத்திருப்பேன். அது தனக்குள் எளிமையாகப் போகும் போது அப்புறம் புலித் தோலையும் வைத்திருந்தேன்.

அந்த உணர்வுகளை நுகரப்படும்போது அந்தப் புலியின் உணர்வுகள் வரப்படும் போது மற்றவர்களை எப்படி அடிமையாக்குகின்றது…? என்று காட்டினார் குருநாதர்.

நீங்கள் வந்தவுடனே இரண்டு வார்த்தை கேட்டால் போதும். நான் சொல்கின்ற மாதிரி பூனைக்குட்டி மாதிரி நீங்கள் வருவீர்கள். இது வசியம்.

சில மந்திரங்களுக்கு இப்படிப்பட்ட இந்தச் சக்தி உண்டு.

ஆளைப் பார்த்தவுடனே அவரை வசியம் செய்ததும் ஆஹா… மகான்…, “பெரிய மகான்…!” என்று நாம் போற்றலாம்.
1.ஆனால் அவரும் மகானாகப் போவதில்லை.
2.நாம் கேட்டவர்களும் மகானாகப் போவதில்லை.
3.உடலின் தன்மை கொண்டு நம் செயலை இழந்தது தான் மிச்சம்.

ஆனால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அகஸ்தியன் தன் தாய் கருவில் பெற்ற சக்தியால் நஞ்சை வென்றிடும் நிலை வரும்போது இவன் காட்டிற்குள் சென்றால் மற்ற உயிரினங்களோ மற்ற மிருகங்கள் எல்லாமே அடங்கிவிடுகின்றது.

அதுதான் அகஸ்தியனைக் காட்டு ராஜா என்பது.

அகஸ்தியனுடைய தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது மிருகங்கள் விஷ ஜெந்துக்களிலிருந்து தன்னைக் காத்ததுக் கொள்ள பல பச்சிலைகளையும் மூலிகைளையும் அரைத்துத் தன் உடலில் பூசியது. அந்த மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.

அந்த மணங்கள் கருவிலிருக்கும் அகஸ்தியருக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது. அகஸ்தியனுக்கு அந்தச் சக்திகள் சந்தர்ப்பத்தில் உருவானது தான்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு காட்டு விலங்குகளுடன் செல்லப்படும் போது எல்லாமே ஒடுங்கிவிடும். இவன் உடலில் வெளிப்படும் மணத்தை நுகரும் காட்டு விலங்குகள் எல்லாம் அதனுடைய வீரியத்தன்மை குறைவதால் சாந்தமாக ஒடுங்கிவிடுகின்றது.

அகஸ்தியன் காட்டுக்குள் போகின்றான் என்றால் அவன் பின் படையே போகும். அதனால் அகஸ்தியனுக்குக் “காட்டு ராஜா…” என்று பெயரை வைத்தார்கள்.

காடு இருக்கின்றது என்றால் அனைத்திற்கும் ராஜா இவன். தன் வளர்ச்சியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் ஒளியான அணுக்களைசு சுவாசித்தவர்கள் தங்களுக்குள் வளர்த்து இன்று சப்தரிஷி மண்டலமாக அவன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மனித வாழ்க்கையில் மிகவும் இக்கட்டான நிலைகளாகி வீழ்ந்து விட்டால் என்ன செய்வார்கள்?

சில பேர் வசதியாக இருப்பார்கள். வசதியற்ற நிலைகளில் இருந்தால் ஆண்களாக இருந்தால் அந்தத் துன்பங்களை மறப்பதற்காகப் போதை வஸ்துக்களைப் பயன்படுத்திச் சிந்தனையற்றவர்களாகி விடுகின்றனர்.

பெண்களாக இருந்தால் துன்பத்தைத் தாங்க முடியவில்லை என்றால் “என்ன வாழ்க்கை..!” என்று இந்த உடலை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

விஷத்தை அருந்தி மனித எண்ணமே இல்லாதபடித் தன் உடலை அழித்துக் கொள்கின்றனர்.

எந்த விஷத்தை உட் கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்றார்களோ அந்த விஷத்தின் தன்மை உயிராத்மாவில் பரவி விஷம் கொண்ட பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று மறு பிறவியில் பாம்பாக உருவாக்கிவிடும்.

இதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்…!

வீட்டில் கஷ்டம் வந்தால் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு என்ன வாழ்க்கை என்று இவர்கள் வெறுக்கலாம். கடைசியில் சமாளிக்க முடியாத நிலைகளில் விஷத்தை உட்கொண்டால் மீண்டும் பாம்பாகப் பிறக்கிறார்கள்.

ஆண்கள் தன் மனதை மாற்றுவதற்காக வேண்டி போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தன்னை மறந்து நல்ல எண்ணங்களை எல்லாம் இழந்து கடைசியில் உடலை விட்டு இந்த உயிராத்மா செல்லும்போது மந்திரக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

போதை வஸ்துக்களை யார் யார் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மாமிசமும் உட் கொள்வார்கள். அந்த மாமிசம் இருந்தால் தான் அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும்.

இந்த இரண்டையும் அவர்கள் பயன்படுத்தினால் அந்த உயிராத்மாக்களை மந்திரக்காரர்கள் வெகு சுலபமாகப் பிடித்து விடுவார்கள்.

மாமிசத்தையும் போதை மருந்தையும் வைத்து அதற்கென்று சில மந்திரங்களைச் சொன்னால் போதும். உயிராத்மா அந்த மந்திரக்காரனின் கைகளில் போய்ச் சிக்கிவிடும்.

அவனிடம் சென்றபின் பல பல செயல்களைச் செய்யும். கெட்டதையும் செய்யும். நல்லதையும் செய்யும்.

ஒருவருக்கு தலை வலி போக வேண்டுமென்றால் இந்த ஆத்மாவை இழுத்துச் சேர்த்துக் கொள்வார்கள். அவர் நோய் தீரும்.

ஆனால் மந்திரக்காரன் கையில் சிக்கிய ஆன்மா அந்த உடலில் உள்ள நோயையெல்லாம் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொள்ளும். மந்திரக்காரன் ஆட்டிப் படைக்கும் சக்தியாக இருக்கும்.

ஒருவருக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்றால் இந்த உயிராத்மாவை அங்கே ஏவி விடுவார்கள். தொல்லை கொடுக்கும் நிலைகளை அங்கே உருவாக்கி அந்த உணர்வைத் தனக்குள் விளைய வைத்து இன்னும் அதிகமான விஷத் தன்மையாகும்.

1.முதலில் மந்திரக்காரன் கையில் சிக்கும்.
2.பின் பல உடல்களிலிருந்து வேதனையெல்லாம் சேர்க்கும்.
3.அந்த வினைக்கு நாயகனாகப் பாம்பாய் பிறக்கும்.

இன்று மந்திரங்களைக் கற்றுக் கொண்ட உயிராத்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்று அவருடைய நோயை நீக்க.. “டேய் உனக்கு நோயெல்லாம் போய் விடும்…!” என்று மந்திரத்தைச் சொல்லி ஜபிப்பார்.

நோயாளிக்கு உடல் நலமாகிப் போகும். அவர் உடலில் இருந்த நோயெல்லாம் இந்த மந்திரக்காரன் உடலில் வந்து சேர்ந்துவிடும். இது தான் கடைசி முடிவு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எல்லோருமே ஜோசியரிடம் சென்று ஜாதகத்தைக் காட்டி ஜோசியம் கேட்க விரும்புகின்றோம். ஜோசியக்காரர் “ஏழரை நாட்டான் சனியன் பிடித்திருக்கிறது…!” என்று சொன்னால் “சனியனை…” நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.

ஏழரை நாட்டான் சனி நான்கு வருடங்கள் கழித்து வருகிறது என்று சொன்னவுடனே இந்த நான்கு வருஷத்திற்கும் கொஞ்சம் கொஞ்சமாக வரும். ஆரம்ப நிலைகளிலே இன்னென்ன இடைஞ்சல் வரும் என்று பதிவு செய்வார்கள்.
1.உங்கள் பையனுக்கு இப்படி ஆகாது,
2.உங்கள் தொழிலில் எது எடுத்தாலும் நஷ்டம் ஆகும்,
3.உங்கள் நண்பர்களுக்குள் பகைமையாகும் என்று
4.ஜாதகத்தின் படி அவர் சொல்லி விடுவார்.

அதை எல்லாம் உங்கள் எண்ணத்தில் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.
மீண்டும் நினைவுக்கு செய்தவுடனே அது என்ன செய்யும்…!

டேப் ரெகார்டில் ஒன்றைப் பதிவு செய்து விட்டு அதனை மீண்டும் போட்டால் என்ன செய்யும்? அதே பாடலைத்தான் பாடும்.

உங்கள் உடலில் ஜோதிடக்காரன் பதிவு செய்ததைத் திருப்பி எண்ணினால் அந்த உணர்வு தான் முன்னாடி வரும்.

நீங்கள் யாரிடம் போய் வியாபாரத்தைப் பற்றிப் பேசினாலும் இந்த உணர்வு வரப்போகும் போது நீங்கள் சொல்லக்கூடிய சொல் அவர் காதிலே பட்டபின் அவர் என்ன செய்வார்…?

அவர் கண் உங்களை உற்றுப் பார்க்கின்றது.

ஏழரை நாட்டான் சனியன் பிடித்து விட்டது… கஷ்டம் இருக்கிறது…! என்று இந்த உணர்வுகள் உங்கள் உடலிலிருந்து வெளி வருகிறது. உங்களை அவர் கூர்ந்து கவனிக்கும் போது நீங்கள் வெளிப்படுத்தும் வாசனையை அவர் நுகர்கின்றார்.

1.நாம் முதலில் சொன்ன சொல்லை அவர் கேட்டறிந்தாலும்
2.உடலிலிருந்து போன வாசனையை அவர் சுவாசித்தவுடனே
3.நம் பலவீனத்தைக் காட்டிக் கொடுத்து விடுகின்றது.
4.”நம் வியாபாரம் மட்டமாகத்தான் இருக்கும்…, என்னத்த…?” என்கின்ற நிலையை அது காட்டிக் கொடுத்துவிடும்.

“யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே” என்கிற மாதிரி ஏழரை நாட்டான் சனியன் பிடித்து விட்டது கஷ்டம் வரும் என்று பதிவான நிலைகள் எவ்வளவு பெரிய முயற்சி எடுத்துச் செய்தாலும் அது தான் நினைவுக்கு வரும்.

அந்த ஜோசியக்காரன் கஷ்டம் என்று சொல்லி இருக்கின்றான்…! என்ன ஆகப் போகிறதோ…! என்ற இந்த சந்தேக உணர்வுகள் உடலிலிருந்து அந்த மணமாக வந்து விடும்,

நீங்கள் சொல்லும் போதெல்லாம் உங்கள் உடலில் இருந்து போகக்கூடிய மணம் உங்களை எதிரியாக்கி விடும்.

ஜோசியக்காரன் சொன்னதை ரெகார்டு செய்து வைத்துக் கொண்டு அதன் வழியில் தான் உங்களால் நடக்க முடிகின்றது. ஜோசியப்படி மிகவும் சரியாக நடக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள்.

ஏனென்றால் அவர்கள் சொன்னதை அப்படியே உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொண்டு அந்த எண்ணத்தை வளர்த்து கொண்டால் அதன்படி தான் நடக்கும்.

“எண்ணியது தான் பதிவாகின்றது” என்று (அன்றைய) அரசனுக்கும் சரி ஜோதிடக்காரர்களுக்கும் தெரிகின்றது.

எந்த பக்தியின் தன்மையில் எதை அரசன் அன்று உருவாக்கினானோ அதை மதமாக்கி மதத்தின் அடிப்படையில் மக்களைத் தனக்குள் அடிமைப்படுத்திக் கொண்டு வருவதற்காக “ஜாதகக் குறிப்புகளைக் கொடுத்து” அவனவன் மதத்திற்குத் தகுந்தவாறு இணைத்து எடுத்து வைத்துக் கொண்டார்கள்…!

ஒவ்வொரு மதத்தின் அடிப்படையில் அவர்கள் காட்டியதைத்தான் எடுத்து இந்த நேரம் நல்லது… இந்த நேரம் கெட்டது… என்று நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

அந்தச் சட்டப்பிரகாரம் “இப்படித்தான்…!” என்று வகுத்து கொண்ட அந்த ஜாதகக் குறிப்பு தான் பதிவாகி வேலை செய்யும்.

1.அருள் சக்திகளை நமக்குள் கூட்டப்படும் போது
2.அந்த உணர்வின் சக்தி கெட்டதை நீக்கி
3.நல்லதை உருவாக்கும் என்று தான் ஞானிகள் சொன்னார்கள்.

இவ்வாறு அந்த மெய் ஞானியினுடைய உணர்வினைப் பதிவாக்கி இந்த உணர்வின் சக்தியை நீ இப்படி வளர்த்துக் கொண்டால் இந்த வேலையைச் செய்யும் என்று அன்றைக்கு அந்த ஞானிகள் சொன்னார்கள்

மனிதன் தான் எண்ணிய நிலைகளே திருப்பி வேலை செய்கின்றது என்று ஞானிகள் சொன்னதைத்தான் ஜாதகங்களாக எழுதி வைத்து விட்டு “கஷ்ட காலங்களை எல்லாம்…” நாம் வரவழைத்துக் கொள்கின்றோம்.

அதற்கு இடைவெளியில் இந்த இந்த மாதத்தில் நல்லதாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் பாலிற்குள் ஒரு விஷத்தைப் போட்டு விட்டால் என்ன செய்யும்?

அந்த நான்கு மாதத்தில் கொஞ்சம் தெளிவாக இருந்தாலும் அந்த விஷத்தைத் சுத்தமாக துடைக்க முடியாது.
1.என்னமோ முயற்சி எடுத்தேன்…,
2.கஷ்டம் இன்னும் என்னை விட்டுக் போகமாட்டேன் என்கிறதே…! என்று தான் சொல்வார்கள்.

இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்குள் தெளிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அந்த உணர்வுகள் விளைந்ததைத்தான் வியாசகர் அன்று வேதங்களாகக் கூறினார்.
1.உருவம்.., திடப் பொருள் என்பது “ரிக்”
2.அந்தப் பொருளிலிருந்து மணங்கள் வரும்போது “சாம”.
3.ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது “அதர்வண”.
4.இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது “யஜூர்”.

ஒரு சத்து மற்றொன்றை எப்படி அது விழுங்கியது? அதன் மூலமாகப் புதிதாக ஒரு பொருள் எப்படி உருவாகின்றது என்பதை இவ்வாறு நான்கு வேதங்களாகக் காட்டியுள்ளார்.

சூரியனில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் அது ஒன்றோடு ஒன்று சேர்த்து அந்தப் பதிவான உருவான உணர்வுகள் “ரிக்…”

அதே சமயத்தில் அது பூமிக்குள் அது வந்தவுடனே தாவர இனங்களாக மணங்களாக வீச ஆரம்பிக்கின்றது.

மற்ற கோள்கள் அதிகமாக மணங்கள் வீசாது. ஆனால் அதனின் சத்து மற்ற பொருள்களுடன் நெகட்டிவ் பாசிட்டிவ் ஆனவுடனே மணத்தை வீசும் இது “சாம…”

ஒரு வேப்ப இலையை எடுத்துக் கொண்டால் அது மணம் வீசுகின்றது. அது தான் நாதங்கள். இப்படிப் பல நிலைகள்.

ஆனால் அதை எடுத்துச் சாப்பிடும் பொழுது யஜூர். அது பதிவாகின்றது. பதிவான நிலைகள் கொண்டு அது எதை எதை இணைத்து இது ஒன்றாக வேப்ப மரமாக ஆனதோ அது யஜூர் – ஒரு வித்தாக முழுமை அடைகின்றது.

அதே சமயத்தில் அவை ஒன்றை ஒன்று விழுங்குகின்றது “அதர்வணம்…” வலு கொண்டது வலுவற்றதை விழுங்குகின்றது. அப்போது அது விழுங்கி எது வலு கொண்டதோ அதனுக்குக் கீழ் மற்றதை அடிமையாக்குகின்றது.

(உதாரணமாக வேப்ப மரத்தின் மணம் ரோஜாப்பூவின் மணம் விஷச் செடியின் மணம் மூன்றும் ஒன்றானால் கருவேப்பிலையாக உருவாகின்றது)

வலு கொண்டது ஒரு எளிமையானதை விழுங்கினாலும் அதனின் இயக்கம் எப்படி இருக்கிறது?

மிளகாயில் காரம் ஜாஸ்தியாக இருக்கின்றது. அதற்குள் சிறிதளவு “சப்…” என்று இருக்கும் மாவைப் போட்டவுனே மாவு காரமாகத்தான் இருக்கின்றது.

ஆனால் “சப்…” என்று இருக்கும் மாவு அதிகமாகி விட்டது என்றால் மிளகாயின் காரம் உள்ளுக்குள் மறைந்து காணாமல் போய்விடும். காரத்தின் வீரியத்தைக் குறைத்து விடுகின்றது.
1.மாவு அதிகமாக இருக்கும் போது
2.காரத்தைப் போட்டால் ருசியாக இருக்கின்றது.

இதைப் போலத் தான் நம்மிடம் நல்ல குணங்கள் இருப்பினும் “இப்படிச் செய்கின்றார்களே… இப்படிச் செய்கின்றார்களே…!” என்று அடுத்தவர்களின் குறைகளை எடுத்துக் கொண்டோம் என்றால் அது நல்ல குணத்திற்குள் சேர்ந்து சேர்ந்து நல்லது மறைந்து குறையான குணமாக வளர்ந்து விடும்.

அப்பொழுது நல்ல குணத்தால் உடலாக வளர்ந்த பூரிப்பான சதையும் கரையும். இது தான் அதர்வண வேதம் என்பது.
1.நாம் எதனை எடுத்து எதனை அதிகமாக்குகின்றோமோ
2.அதனின் வலு கொண்டு மற்றதை அழிக்கின்றது.

மந்திரம் ஜெபிப்பவர்கள் இந்த மந்திரத்தை நீ 1008 தரம் ஜெபிக்க வேண்டும் 108 தரம் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லி அதற்கென்று சில முறைகள் வைத்து அந்த மந்திரங்களை உச்சாடணம் செய்யச் சொல்வார்கள்.

“இவ்வாறு செய்து கொண்டே வந்தாய்…!” என்றால் உனக்குக் காளி வசியமாவாள். மாரி உனக்கு வசியமாவாள் என்றெல்லாம் சொல்வார்கள்.

நோயான நிலை எதைக் கேட்கின்றாயோ அது மாறி உனக்குள் வந்து எவ்வளவு தீமையை விளைய வைக்கின்றதோ அதைப் போன்று இதைச் சொல்லி மீண்டும் ஒருவருக்கு ஏவினாய் என்றால் “அவர்கள் பூராமே கரைந்து போவார்கள்…!” என்றெல்லாம் அதர்வண வேதத்தில் காட்டுவார்கள்.

தான் எண்ணியபடி மற்றவர்கள் தன்னை வணங்கவில்லை… மதிக்கவில்லை…, என்றால் அந்த எதிரியை வீழ்த்திடும் நிலையாக அவனை அடிபணியச் செய்கின்றேன் என்று மந்திர ஒலிகளை வைத்து இவ்வாறெல்லாம் செய்வார்கள்.

பாலுக்குள் விஷம் பட்டவுடனே நல்ல சத்தை அடக்குவது போல
1.மனிதனுக்குள் விளைந்த நஞ்சின் உணர்வைக் கவர்ந்து
2.”நான்” என்ற ஆணவத்தைக் காட்டி மற்றவரை வீழ்த்தத்தான்
3.இந்த மந்திர ஒலிகள் பயன்படுகின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் உள்ள உண்மைகள் காலத்தால் மறைந்துவிட்டது. எல்லாம் சாங்கிய சாஸ்திரமாகிப் போய்விட்டது.

விநாயகருக்கு அருகம்புல்லை மட்டும் இரண்டு வைத்தால் போதும்…! ஏற்றுக் கொள்வார். அதுவும் முடியாவிட்டால் பக்தியோடு பக்கத்தில் இருக்கும் தழைகளைப் போட்டு “இந்தாப்பா உனக்குச் சாப்பாடு…!” என்று சொன்னால் அதையும் ஏற்றுக் கொள்வார் என்று இப்படி மாற்றி அமைத்துவிட்டார்கள்.

அரசன் தான் வாழ உருவாக்கிய நிலைகளில் “சரணாகதி தத்துவமாகத்தான்…” இன்று இயக்கப்பட்டு அதைக் காக்கும் நிலைகளில் தான் எல்லா மதங்களுமே செயல்பட்டுக் கொண்டுள்ளது.

அதைப் பாதுகாக்கும் குருமார்களாகத் தான் இருக்கிறார்களே தவிர மெய் ஞானிகள் காட்டிய நிலைகளில் இந்து என்றோ முஸ்லீம் என்றோ கிறிஸ்துவன் என்றோ அல்லது மற்ற நிலைகளிலோ எதுவுமே கிடையாது.
1.உணர்வுக்கொப்ப உணர்ச்சியும்
2.உணர்ச்சிக்கொப்ப இயக்கமும் (சொல் செயல்) என்ற நிலைகள் தான் ஞானிகளால் உணர்த்தப்பட்டது.

ஆண்டவன் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று ஒரு சாரார் உணர்வைப் பதிவு செய்கிறார்கள். அடுத்து கடவுள் எங்களுக்கு இப்படிச் சொல்கிறார் என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.

இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் இந்த இருவருக்கும் ஒத்துக் கொள்வதில்லை.

கர்த்தர் வான் வெளியில் இருந்து எடுத்துக் கொண்டு வந்தார் என்று சொல்கிறார்கள். அந்த மெய் ஞானிகளின் உண்மை வழிப்படி நமது உயிரே கர்த்தராகிறது.

“ஆண்டவா…” என்று சொல்கிறார்கள். எதனின் உணர்வை எடுத்தோமோ அது நம் உடலாகிறது.
1.இந்த உடலை ஆள்வது யார்?
2.நமது உயிர் தான் – “ஆண்டவா…!”

கட + உள் = கடவுள் – ஆகவே உள் நின்று நம்மை இயக்கி உணர்வை உடலாக உருவாக்குவது “கடவுள்…” உருவாக்குவதால் ”ஈஸ்வரா…” என்று உயிரைச் சொல்கிறார்கள்.

உருவாக்கிய உணர்வுக்குள் நம்மை ஆளும் ஆண்டவனாக இருக்கிறான். நம்மை ஆள்வது அவன் தான்.

நாம் எண்ணிய உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை இரையாக்குகிறார்.
1.இரையின் உணர்வு உடலாகிறது.
2.உணர்வின் இயக்கம் செயலாகிறது… “தெய்வமாகிறது…!” என்று
3.ஆதியிலே தோன்றிய “அகஸ்தியன்” தெளிவாகக் கூறியுள்ளார்.

இதைச் சீராகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த மெய் ஞானிகள் சொன்ன உணர்வுகளை இணைத்து இணைத்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஒன்று போல் வரும்.

கார்… ரேடியோ… போன்ற உபகரணங்களில் அதற்குள் இருக்கும் உறுப்புகளைத் தனித் தனியே செய்கின்றார்கள். அதில் இந்தெந்த உறுப்புகள் (பாகங்கள்) இந்தெந்த வேலைகள் செய்யும் என்று உருவாக்கி வைத்து விடுகிறார்கள்.

அதைச் சேர்த்து இணைத்து முழுமையாக ஆன பிறகு அது அது அதனதன் வேலைகளைச் செய்யும். அந்த உபகரணம் சீராக இயங்கும்.

உதாரணமாக ஒரு மைக் (MIC) வைத்துப் பேசினால் அங்கே சப்தம் வெளி வருகிறது. ஒலியைப் பெருக்கும் ஆம்ப்ளிபையர் (AMPLIFIER) ஒன்றோடொன்று சேர்த்து ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்யும். ஆனால்
1.அதிலே கொஞ்சம் (அழுத்தமாகி எதிர் நிலையானால்) ரிப்பேர் ஆனால்
2.“கரா… புரா… உஸ்ஸ்ஸ்… உய்ய்ய்…” என்று சப்தம் எழுப்பிவிடும்
3.மைக்கில் யார் பெசினாலும் கேட்க முடியாது அர்த்தமும் ஆகாது
4.மீறிக் கேட்டாலும் எரிச்சலாகிவிடும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உணர்த்திய அருள் வழிப்படி அந்த ஞானிகளும் மகரிஷிகளும் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நாம் சாமியை இப்படிக் கும்பிட்டோம்…! “இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே…?” என்று நினைத்தால் “கரா…புரா…” ஆகிப் போய் விடுகிறது.

நாம் விநாயகரைக் களிமண்ணால் செய்து (விநாயகர் சதுர்த்தி அன்று) எப்படியெல்லாம் கும்பிட்டோமே…, “இவர் இப்படிச் சொல்கிறாரே” என்று
1.இரண்டையும் கிராஸ் (CROSS) பண்ணி நினைத்தீர்களானால்
2.நான் சொல்வதை நீங்கள் CROSS பண்ணிக் கொண்டே..
3.”கரா..புரா…” என்று பண்ணிக் கொண்டே இருப்பீர்கள்.
4.அர்த்தமே உங்களுக்கு ஆகாது.

ஆகவே இயற்கையின் உண்மையின் நிலைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மெய் ஞானிகளின் உணர்வுகளை முதலில் பதிவு செய்துக் கொள்ளுங்கள். அதைப் பதிவு செய்த பின் உங்கள் வாழ்க்கையில் எது… எப்படி…? என்ற நிலைகள் தெளிவாகத் தெரியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அமாவாசை என்றால் இருள் சூழ்ந்த நாள். அதாவது சூரியனுடைய ஒளிக்கதிர் கிடைப்பது இல்லை.

முன்னோர்களை வணங்குகின்றோம் என்ற நிலையில் சாமி கும்பிடுவதற்காக மந்திரம் சொல்லி யாகங்கள் செய்வோம். அதிலே புஷ்பங்கள் நெய் சோமபானம் எல்லாம் போடுவார்கள்.

அமாவாசை அன்று இந்த உணர்வுகள் எல்லாம் பூமியில் அதிகமாகச் சுற்றி கொண்டிருக்கும்.

நம் மூதாதையர்கள் என்னென்ன சாப்பிட்டார்களோ அதை எல்லாம் வைத்துக் கும்பிடுவோம். அவர்கள் நினைவு மறக்காமல் இருப்பதற்காக எங்களை இப்படி வளர்த்தீர்கள் அப்படிச் செய்தீர்கள் என்று எண்ணி அவர்களை அழைத்துச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கும்பிடுவோம்.

அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பிற்பாடு நாம் என்ன செய்கிறோம்.

சுட்ட சாம்பலை எடுத்துக் கங்கையிலோ ஆற்றங்கரையிலோ கொண்டு போய்க் கரைக்கின்றோம். கரைத்தால் அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்று நினைத்துக் கொள்கிறோம்.

வீட்டிற்கு வந்த பிற்பாடு சொந்த பந்தம் எல்லாம் ஒன்று கூடி எண்ணையை தேய்த்துக் குளிக்க வைத்து நல்ல புதுத் துணி எல்லாம் கொடுக்கின்றார்கள்.

புதுத் துணியைக் கட்டிக்கொண்டு தலை மகனை மாவிளக்குத் தீபம் ஏற்றச் செய்கின்றார்கள். பின் முக்காடு போட்டுக் கொண்டு அந்தத் தீபம் அணையாதபடி விநாயகர் கோயிலில் போய் அர்ச்சனை செய்து விட்டால் இறந்தவர்கள் மோட்ச லோகம் போவதாகச் சொல்கிறார்கள்

நாம் தீபாவளி அன்று. புத்தாடைகளை அணிகிறோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி விட்டு அருள் உணர்வுகளைப் புத்தாடையாகப் போடுகின்றோம்.

ஆனால் இங்கே ஒருவர் இறந்துவிட்டால் பாவத்தைப் போக்கிவிட்டு சொந்த பந்தங்களைக் கூப்பிட்டுச் சொந்த பந்தத்திற்காக வேண்டிப் புத்தாடைகள் அனியச் சொல்கிறார்கள்…!

நெய் தீபம் ஏற்றிக் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டால் மோட்ச தீபம் என்கிறார்கள்,

இந்த மஹாளய அமாவாசை மிகவும் முக்கியமா முன்னோர்களுக்காக வணங்குவார்கள். ஆனால் அந்த மந்திரவாதிகள் (குடுகுடுப்புக்காரர்கள்) என்ன செய்வார்கள் தெரியுமா…?

நம் வீட்டு வாசற்படியில் இருக்கும் கொஞ்சம் மண்ணை எடுத்துக் கொண்டு செல்வார்கள். வீட்டில் உங்களுக்குத் தெரியாமல் சிநேகிதமாக வந்து தலைமுடியை எடுத்துக் கொள்வார்கள்.

குடுகுடுப்புக்காரன் வந்தால் நம்மிடம் பழைய துணியைத்தான் கேட்பான். கொடுத்துவிடுவோம்

இந்த மூன்றையும் எடுத்துச் சென்று என்னா செய்கிறார்கள்…!

முன்னோர்களின் உணர்வு தான் உடலாக நாம் உருவாகியுள்ளோம். அமாவாசை அன்று சாப்பாடு கொடுத்து அவர்களை நாம் கூப்பிடுவோம். அப்பொழுது அந்த உணர்வு எல்லாம் அங்கே குவிந்து வரும்.

நம் பாதம் பட்ட மண் தலை முடி எல்லாவற்றையும் வைத்து எங்கே அந்த உடலைச் சுட்டார்களோ அல்லது எங்கே புதைத்தார்களோ அங்கே சென்று அதற்கென்ற மந்திரத்தைச் சொல்வார்கள். மதுபானம் மாமிசம் எல்லாம் வைத்து ஜெபிப்பார்கள்.

மந்திரத்தை ஜெபித்தவுடன் இங்கே அம்மா அப்பாவைச் சாப்பாடு வைத்துக் கூப்பிடுவோம்… அவன் மந்திர சக்தியால் இழுக்கும் பொழுது அந்த ஆன்மா அங்கே சென்றுவிடும்.

யாகம் என்றால் என்ன? யாக வேள்வி என்றால் அன்றைய காலங்களில் அதிலே மனிதனைப் பொசுக்கினது உண்டு. ஆடு கோழிகளை குதிரைகளைப் பொசுக்கினது உண்டு.

இராமாயணத்தில் சொல்லியிருப்பார்கள். அசுவமேத யாகம் என்பது, நம் உயிரணு தோன்றியதிலிருந்து புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் மனிதனின் மாற்றங்கள் ஏற்பட்டதற்குத் தகுந்த மாதிரி
1.ஒவ்வொரு மாற்றத்திற்குத் தக்க
2.1008 குணங்கள் உருவான நிலையைத்தான் யாகத்தீயில் போட்டு
3.அந்த ரிக்கியர்கள் மந்திரங்களைச் சொல்லி
4.அதற்கு வேண்டிய சாப்பாடு மற்றும் மயக்கமாக்கும் பல உணர்வுகளைக் கொடுத்து,
5.சோமபானம் என்ற மதுவைக் கொடுத்து நினைவை மாற்றச்செய்து,
6.மந்திரங்களைச் சொல்லிக் கடைசியில் யாகத் தீயில் போட்டுப் பொசுக்குவார்கள்.

மந்திரத்தைச் சொன்னவுடன் அந்த உடலில் (பொசுக்கிய உடலில்) மந்திரவாதி பதிவாக்கிய உணர்வெல்லாம் வெளிவரும்.

உதாரணமாக ஒரு மனித உடலில் நோயாகி விட்டதென்றால் பாசத்தால் அந்த நோயின் உணர்வை நாமும் எடுத்தால் அந்த மனிதன் இறந்தவுடன் அந்த உணர்வு நமக்குள் வந்து அதே நோய் நமக்கு வரும்.

இதைப் போன்ற் மந்திரத்தை ஜெபித்த பிற்பாடு இறந்த பின் அதே மந்திரத்தைச் சொன்னால் அந்த ஆன்மாக்களைக் கைவல்யம் செய்து கொள்வார்கள்.

கைவல்யம் ஆன பின் சில பக்குவங்களைச் செய்து மற்றவர்கள் மீது ஏவல் செய்வார்கள்.
1.நோய் நீங்க வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்
2.நோயை உருவாக்க வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்
3.ஒரு குடும்பத்திற்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்.

இறந்தவர்களின் உயிரான்மாக்களை இதற்குத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விஞ்ஞான காலத்தில் வாழ்ந்தாலும் இதையெல்லாம் விஞ்ஞானத்தையும் ஏமாற்றிச் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு வித்திட்டவர்கள் அன்றைய அரசர்கள் தான்.

சரியான முரடனை உண்டாக்கி நாட்டுப் பற்றை ஏற்றி
1.“நீ தான் இந்த நாட்டைக் காப்பாற்றுகின்றாய் என்று சொல்லிக் கொடுத்து
2.அவனுக்குத் தெரியாமலே தீயில் போட்ட பிற்பாடு
3.மந்திரத்தைச் சொல்லி அந்த உயிரான்மாவை எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
4.தன் நாட்டைக் காக்கும் காவல் தெய்வம் என்று தன் எல்லையின் முகப்பில் வைத்திருப்பார்கள்.

தான் சுகமாக வாழ்வதற்காக அரசர்கள் உருவக்கியது தான் இந்த நிலைகள். குலதெய்வங்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள். பெரும்பகுதியானவர்கள் எங்கள் குலதெய்வம் தீயிலே மாண்டது என்று தான் சொல்வார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானிகள் காட்டிய வழிக்கு மாறாக மனிதன் விண் செல்லும் நிலைகளைத் தடைப்படுத்திவிட்டார்கள். இன்று இந்த உண்மைகளைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள ஆள் கிடையாது.

இதற்கு முன்னாடிச் செய்ததெல்லாம் தப்பா…? என்று வாதத்திற்கு வருவார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்


பண்டைய அரச காலங்களில் மந்திர சக்தியால் பில்லி சூனியம் ஏவல் என்ற நிலைகளில் செயல்பட்டார்கள்…? அதனின் தொடர்ச்சியாக இன்றும் பல பல இடங்களில் மந்திரத்தால் என்னென்ன தவறுகள் செய்கின்றார் என்பதை குருநாதர் காட்டினார்.

ஒரு வயதிற்கு வந்த பெண்ணை அது திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றவுடனே ஏவல் செய்து விட்டார்கள்.

அந்தப் பெண் விட்டத்தில் அப்படியே தலை கீழாகத் தொங்கும். அப்புறம் கீழே இறக்கி விட்டு விடுவார்கள். இறக்கி விட்ட பின்னாடி ஆகாரம் சாப்பிடப் போனால் உச்சந்தலையில் இருந்து வெறும் இரத்தமாகக் கொட்டும்.
1.சாப்பிட விடாது செய்கின்றது.
2.ஆனால் இத்தனை இம்சைகளையும் பட்டு அது வாழுகின்றது.

இன்னொரு ஆவி அந்த உடலுக்குள் நின்று ஏவல் செய்த நிலைக்கொப்ப எப்படி இம்சிக்கின்றது என்று காட்டுகிறார் குருநாதர். அந்தப் பெண் எந்தத் தவறும் செய்யவில்லை.

எதை எதையெல்லாம் உருவாக்கி அந்த உடலைக் கொன்றானோ கொல்வதற்கு எது மூலமாக இருந்ததோ அதை வைத்து ஏவல் செய்கிறார்கள். ஏவல் வேலைக்காக என்றே இப்படித் தயார் செய்கிறார்கள்,

மந்திரம் செய்பவர்கள் பிறருடைய நிலைகள் அறியாதபடி பொருளுக்காகச் செய்கிறார்கள்.

1.தன்னுடைய புகழைத் தேடவும்
2.தன்னை எல்லோரும் போற்ற வேண்டும் என்றும்
3.தன்னைக் கண்டால் மற்றபர்கள் பயப்பட வேண்டும் என்றும்
4.நிலையற்ற உடலுக்காகவே அவ்வாறு செய்கிறார்கள்.

பிறரை இம்சிக்கச் செய்து பொருளை வாங்கி இவன் அனுபவித்தாலும் இவன் கண்ட வித்தைகள் அனைத்தும் பிறரைத் துன்புறுத்தும் நிலைகளில் தான் செய்து விட்டேன் என்று அகந்தை கொள்வதும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அகம் கொண்டு செயல்படுபவர்களையும் குருநாதர் காட்டுகின்றார்.

மனித உடலில் எந்த ஆசையின் உணர்வுகள் விளைய வைத்தார்களோ அதனின் அடிப்படையில் மந்திரங்கள் ஜெபிக்கப்படும் போது அந்த அலைகளைக் கவர்ந்து பெரிய தத்துவ ஞானியாகவும் பெரிய கடவுளாகவும் அவர்கள் செயல்படுத்துகின்றார்கள்.

தனக்கு மீறி எவரும் இல்லை…! நானே கடவுள்…! என்ற நிலையும் மந்திர ஒலிகள் பெற்றவர்கள் அவர் எவ்வாறு அலைகின்றனர்…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

ஆவியை வைத்துச் செயல்படுத்தும் போது அந்த உடலிலே இம்சைகளைக் கொடுத்தாலும் அவன் (மந்திரவாதி) இறந்தபின் இந்த ஆன்மா எவ்வாறு போகும் என்ற நிலையும் நிலைப்படுத்திக் காட்டுகின்றார்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் அவன் எந்த காரியத்தைச் செய்தானோ அதே உணர்வு இவர்களுக்குள் வந்து
1.அடுத்தவன் கையில் சிக்கி இதே காரியத்தைச் செய்து
2.அதில் எத்தனை வேதனைப்படுகின்றான் என்ற நிலையும் காட்டுகின்றார்.

அதே சமயத்தில் மந்திர சக்தி பெற்றவர்கள் மந்திரம் அல்லாது ஞானத்தின் தொடர் கொண்டு ஞானியின் வழியில் செல்ல வேண்டும் என்று அந்த வழியில் செல்ல முற்படுபவர்களுக்கு தீமையான நிலைகளைச் செய்து அவர்கள் பெற முடியாத நிலைகள் எவ்வாறு தடைபடுத்துகின்றனர்..?

ஆகவே ஒரு மந்திரக்காரனிடம் அவனுடைய தொழில் எவ்வாறு இருக்கின்றதென்றால்
1.நீ நன்மையே செய்தாலும்
2.அவன் தீமையின் வலு கொண்டு
3.உன் நல்லதைச் செய்யாது எவ்வாறு தடைபடுத்துவான் என்ற நிலையையும் உணர்த்துகின்றார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட அவனுக்குத் தொல்லைகள் வருவதைப் பார்த்து “அவனுக்கு இப்படித் தான் ஆகவேண்டும்…” என்று நாம் ரசித்தோம் என்றால் அவனுக்குள் வந்த தொல்லைகளும் அந்த துயர உணர்வுகளும் நமக்குள் வந்து அதே உணர்ச்சிகளைத் தூண்டி நமக்கும் அந்த நிலை வந்து விடும்.

துயரப்படுபவன் யாராக இருந்தாலும்… அல்லது நமக்கு ஆகாதவனே துயரப்பட்டாலும்…
1.அவர்கள் அறியாத நிலையிலிருந்து விடுபட்டு
2.அருள் உணர்வுகள் அவர்கள் பெற்று
3.மெய் பொருள் காணும் நிலை பெற்று
4.பற்றும் பாசத்துடன் வளரும் நிலையும் நன்மை செய்யும் உணர்வுகள் அவருக்குள் வளரவேண்டும் என்று
5.இதனை நாம் நுகர்ந்தால் இந்த உணர்வுகள் நம் உயிரான ஈசனிடம் பட்டு
6.அந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலந்து
7.பகைமை என்ற உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கும்.

இதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் சொல்…! இந்த உணர்ச்சிகளை “நீ அனைவருக்கும் பரப்பு…!” என்றார் குருநாதர்.

அதன் வழி உங்கள் உயிரைத்தான் நான் கடவுளாக மதிக்கின்றேன். அவனால் உருவாக்கப்பட்ட உடல் என்ற நிலைகளில் மதித்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆரம்பத்தில் என்னைக் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அழைத்துச் சென்றார் குருநாதர். பின் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று
1.ஒவ்வொரு உணர்வுகளுக்கும் என்னென்ன உருவங்கள் இருக்கிறது…?
2..அந்தத் தெய்வ குணத்தின் சிறப்பு என்ன…?
3.அதனை எப்படி மக்கள் வளர்க்கின்றனர்…? என்று உணர்த்தினார்.

ஞானிகள் தாம் கண்டுர்ந்த உண்மையின் உணர்வை (மெய்யை) உணர்த்துவதற்கு உருவச் சிலையை அமைத்தனர்.

ஆனால் அதைத் தவறான வழியில் தான் இன்று பயன்படுத்துகின்றனரே தவிர நல்வழிப்படுத்தும் நிலை அற்றுப் போய் விட்டது.

ஆகவே ஒவ்வொரு மக்களுக்கும் ஞானிகள் கண்ட மெய்யை நீ தெளிவுபடுத்த வேண்டும் என்றார் குருநாதர்.

உதாரணமாக குலதெய்வங்களை வணங்குகின்றோம். அதே சமயத்தில் நாம் குலவழியில் எந்தெந்தத் தெய்வங்களை வணங்கிச் செயல்பட்டோமோ அதன் வழி தான் இன்று அந்தந்தக் குடும்பங்களில் பல உட்பிரிவுகளும் அதிகமாக வளர்கின்றது.

அந்தக் குலதெய்வம் எப்படி உருவானது என்ற நிலையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

அன்று ஆண்ட அரசர்கள் மற்ற எதிரிகளை வீழ்த்துவதற்காக சில மந்திரங்களைச் சொல்லிச் செயல்படுத்துவார்கள். அந்த அரசன் ஒரு கூட்டமைப்பாகப் போருக்குச் செல்லும்போது அதிலே ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்வார்கள்.

1.நாட்டைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் சேர்ந்து
2.தன் எதிரியை வீழ்த்தவேண்டும் என்ற உணர்வை அந்தக் குழந்தைக்கு ஊட்டி
3.அதனைத் தீயிலே போட்டுப் பொசுக்கி விட்டு
4.அதிலிருந்து உணர்வுகளைப் (மந்திர ஒலிகளாக) பிரித்து எடுத்துக் கொள்வார்கள்.

அந்த மந்திர ஒலி கொண்டு பிறிதொரு போர் முறையில் வரும் எதிரிகளுக்குள் பாய்ச்சி அடுத்த நாட்டுக்காரர்களைச் செயலற்றவர்களாக ஆக்குவதற்காக அக்காலங்களில் இவ்வாறு செய்தனர்.

இதனை நாம் ஒவ்வொரு குடும்பங்களிலும் பார்க்கலாம். குலதெய்வம் யார் என்றால் “நெருப்பிலே மாண்டவர்கள்…!” என்று தான் வைத்திருப்பார்கள்.

அதன் வழி கொண்டு “அவர்களின் ஆடைகளையும் ஆபரணங்களையும்…” வைத்துக் குல வழியில் நாங்கள் வணங்கி வருகிறோம் என்று தான் சொல்வார்கள்.

“இல்லை…” என்று யாரும் இதை மறுக்க முடியாது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இதை எல்லாம் அந்த அரசக் காலங்களில் வளர்த்துக் கொண்ட அந்தப் பரம்பரை வழிகளில் தான் வருகின்றனர்.

இன்று நம் குடும்பத்தில் மூதாதையர் இறந்து விட்டால் அந்தக் குல வழியில் நாம் அவர்கள் என்னென்ன வழி மார்க்கங்கள் செய்தார்களோ அதே போன்று தான் நாமும் அவர்களை வணங்கி வருகின்றோம்.

வணங்கினாலும் அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அந்தக் குடும்பத்தில் யார் பற்று கொண்டனரோ அந்த உடலுக்குள் மீண்டும் வந்து விடுகின்றது.

வந்த பின் அருளாடத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் குடும்பத்தில் சகோதரர் பத்துப் பேர் இருக்கின்றார்கள் என்றால் (அக்காலங்களில் பத்துப் பேர் உண்டு) அங்கு பங்கு பிரிப்பதில் தவறு நடந்து விட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் போர் செய்து பிரிந்து விடுவார்கள்.

பிரிந்து கொண்ட பின் என்ன நடக்கின்றது…?

1.என் சொத்தை நீ அபகரித்துக் கொண்டாய்…!
2.உன் குடும்பமெல்லாம் சீரழிந்து விடும்…! என்றும்
3.ஒருவருக்கொருவர் சாபம் இட்டுக் கொள்வார்கள்.

ஆக கூட்டாக இருந்து நான் சம்பாதித்தேன். என் பங்கை அவன் எடுத்துக் கொண்டான் என்று பகைமை உணர்வுகள் வந்து விடுகின்றது.

அப்படிப் பகைமை உணர்வு வந்த பின் அந்தக் குலதெய்வம் என்று வணங்கி வந்தவர்கள் அதை வணங்குவதில்லை.

அந்தக் குலதெய்வத்தை வணங்கவில்லை என்றாலும் இந்த இரண்டு பேர் பிரிந்த உணர்வுகளில் உடலை விட்டு உயிராத்மா பிரிந்த பின் இவர் சார்புடைய நிலையில் இந்த ஆன்மா புகுந்து குல வழியாக மாறுகின்றது.

அதைப் போன்று அங்கேயும் சகோதரர் பிரிந்து சென்றார் என்ற நிலையில் இறந்தால் அதே குலதெய்வங்களை வணங்கும் பொழுது
1.உயிருடன் இருக்கும் பொழுதே அவர் தொல்லை கொடுத்தார்…!
2.உடலை விட்டுச் சென்றாலும் புகுந்த உயிரான்மாக்கள் இவர்கள் உடலில் அருளாடும்…!

குலதெய்வங்கள் வணங்கும் குடும்பங்களில் அருளாடும் குடும்பங்களில் இதைப் பார்க்கலாம். அருளாடுபவர்களில் குடும்பங்களில் நிம்மதி இருக்குமா என்றால் இருக்காது.

1.குல வழியில் வரக்கூடிய அனைத்தும்
2.நாம் இந்த மனித உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
3.பழி தீர்க்கும் உணர்வும் பகைமையை வளர்த்துக் கொள்ளும் நிலையும் தான்
4.(அருளாடும் இடங்களில்) குலதெய்வங்களை வணங்கும் பொழுது இம்முறைப்படிதான் வருகின்றது.

குலதெய்வங்களை வணங்குபவர்கள் எல்லாம் இன்றும் ஒவ்வொரு உடலிலும் அந்த உணர்வுகள் கலந்தே தான் வருகின்றது.

ஏனென்றால் சகோதர்களுக்குள் சாபமிட்டு என் சொத்தை அபகரித்துக் கொண்டார் என்ற உணர்வினைத் தொடரப்படும் பொழுது
1.நம் செவிகளிலும் படுகின்றது.
2.அந்த உணர்வுகள் இரத்தநாளங்களில் கலக்கிறது
3.திருமணமாகி வரப்படும் பொழுது கருவிலே வளரும் குழந்தைக்கும்
4.இதே போல அந்த உணர்வுகள் வழி வழி வந்து பழி தீர்க்கும் உணர்வுகள் வளரப்பட்டு
5.உண்மையின் உணர்வை அங்கே மாற்றிக் கொண்டே வருகின்றது.

இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்,

மக்கள் அன்பு கொண்டு வாழ்ந்து வரப்படும் பொழுது அங்கே தெய்வீக பண்பையும் உயர்ந்த குணங்களையும் அது வளர்ப்பதற்கு மாறாக பகைமை உணர்வை மாற்றிப்
1.பகைவனை அழிக்க வேண்டும்..
2.அவனைக் கொல்ல வேண்டும்…
3.அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வுகளே குல வழிகளில் வளர்கின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஜாதக ரீதியாக எடுத்துக் கொண்டாலும் மதங்கள் வகுக்கப்பட்ட ஜாதகம் தான் எல்லாம். ஒவ்வொரு மதத்திற்கும் அதற்கென்ற கால நேரங்களை வகுத்துள்ளார்கள்.
1.ஒரு மதம் எனக்கு 1 மணிக்கு நல்ல நேரம் என்கின்றது
2.மற்றொரு மதமோ அது 2 மணிக்கு நல்ல நேரம் என்கின்றது
3.இன்னொரு மதமோ 1.30 மணிக்கு நல்லது என்கின்றது
4.இன்னொரு மதமோ 12 மணிக்குத் தான் எங்களுக்கு நல்ல நேரம் என்கின்றது.

மதத்தின் அடிப்படையில் இப்படிப் பிரிந்தாலும் இனத்தின் நிலைகள் கொண்டு திருமணங்கள் திருப்பூட்டும் போது எடுத்துக் கொண்டால் இனங்களில்
1.எங்களுக்கு மாசி மாதம் தான் நல்ல நேரம்
2.எங்கள் இனத்திற்கு மாசி மாதம் ஒத்து வந்தது
3.எங்கள் இனத்திற்கு ஆடி மாதம் ஒத்துக் கொள்கின்றது
4.எங்கள் இனத்திற்கு மார்கழி மாதம் ஒத்துக் கொள்கின்றது என்று
5.இவ்வாறு இனத்திற்கு ஒரு சட்டத்தை இயற்றி
இதைக் கடவுள் அவர்களை ஏற்றுக் கொள்வதாகத் தான் இன்று நடைமுறை சம்பிரதாயங்கள் நடக்கின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

மதம் மக்களைக் காத்தாலும் மக்களைப் பாதாளத்தில் அமிழ்த்துகின்றது, ஓர் மதத்தின் தன்மை அவர்கள் வகுத்துக் கொண்ட நிலைகளில் நியதிகள் இருப்பினும் அதற்குள் இருக்கும் நியதிகளில் இனங்கள் பிரிக்கப்படும் போது அதற்குள்ளும் போர் முறைகளே தான்…!

இனங்கள் பிரித்துக் கொண்ட பின் குலங்கள் பிரிக்கப்பட்டு
1.எங்கள் குலத்திற்கு இந்தத் தெய்வம் ஆகாது
2.இ்தை வணங்கினால் எங்கள் குடும்பத்திற்கு அழிவு
3.உங்கள் தெய்வத்தை நாங்கள் வணங்கினால் எங்கள் குடும்பத்திற்கு அழிவு
4.இப்படி இனங்களுக்குள் தெய்வமும் தெய்வத்திற்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் இதிலேயும் போர் முறை…!

எங்கள் குல தெய்வத்தை மீறி மற்ற இனங்களிலிருந்து எடுத்துக் கொண்ட உங்கள் குலதெய்வம் எங்களுக்கு ஆகவில்லை. அதனால் நீ வீடு புகுந்த நாள் முதல் எங்கள் குடும்பம் சீர் கெட்டு விட்டது என்று இப்படி ஒரு போர் முறை…!

அன்று ஆண்ட அரசர்களால் பிரிக்கப்பட்ட நிலைகளில் நமக்குள் எதனை ஊன்றி வேராக வளர்த்து வைத்திருக்கின்றோமோ அந்த நிலையே தான் நம்மை இயக்குகின்றது. இதைப் போன்று
1.நமக்குள் பதிவு செய்து கொண்ட உணர்வு எதுவோ
2.அதுவே “ஓ…ம் நமச்சிவாய…” என்று உடலாக மாற்றி
3.“சிவாய நம ஓ…ம் உடலாக மாற்றியதை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
4.அந்த உணர்வின் இயக்கமாக நம்மிடமிருந்து வெளிப்பட்டு இயக்கும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு நாடாவில் நாம் பதிவு செய்து கொண்டதை மீண்டும் அதைக் காந்த ஊசியுடன் இணைக்கப்படும் போது பதிவு செய்ததை அது மீண்டும் அப்ப்டியே பேசுகின்றது.

பல நாடாக்களைப் ஏக காலத்தில் போட்டுப் பதிவாக்கிய பின் அதனை எந்தச் செயல் வேண்டுமோ அதற்குத் தக்க இயக்கப்படும் பொழுது அந்த நாடா ஒலி/ஒளி அலைகளை வெளிப்படுத்துகின்றது.

இதைப் போல உலகில் உள்ள மதங்களில் எத்தனை நிலைகளில் சட்டங்கள் இயற்றினாலும் அதை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டபின்
1.மீண்டும் அதை நினைவு கொள்ளும் போது
2.நமக்கு (மதத்திற்கு) இது விரோதமானது என்ற நிலைகளுக்குக் கொண்டு வரும்.
3.ஏனென்றால் நமக்குள் இருக்கும் அந்தப் பதிவு தான் நம்மை இயக்குகின்றது.
4.நாம் எண்ணியது அனைத்தையும் நம் உயிரே பதிவாக்குகின்றது.
5.பதிவின் நிலையே நினைவாகி நினைவின் செயலாகத்தான் நாம் இயங்கிக் கொண்டுள்ளோம்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலும் உடலில் உள்ள அணுக்களுக்கும் நினைவைச் செலுத்துதல் வேண்டும்.

நம் உடலிலே துருவ நட்சத்திரத்தின் வலிமை பெறப்படும் பொழுது அந்த ஈர்க்கும் சக்தியால் நம் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் (ஆன்மாவில்) உள்ள வேதனை மனக்கலக்கம் போன்ற உணர்வுகளை ஈர்க்காது அவைகளை ஒதுக்கித் தள்ளும் சக்தி பெறுகின்றது.

வெறுப்போ கோபமோ ஆத்திரமோ பயங்கரமோ மற்ற எத்தனையோ வகையான உணர்வுகள்
1.நம் உடலைச் சுற்றி அந்த உணர்வுகள் படர்ந்திருப்பதை
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி
3.நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது
4.அது வலு பெற்று நம் உடலைச் சுற்றியுள்ள அந்த ஆன்மாவைத் தூய்மைப்படுத்தித்
5.தீமையான உணர்வுகளை விலக்கித் தள்ளிவிடும்.

நாம் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நாம் எண்ணும் பொழுதெல்லாம் நம் “விலா எலும்புக்குள்ளும்…” பதிவாகி விடுகின்றது.

1.சந்தர்ப்பத்தால் நாம் கொடிய உணர்வுகளைப் பார்த்தாலும்
2.கொடிய உணர்வுகளை நீக்கிய அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும்
3.நமக்குள் இது அதைக் காட்டிலும் வலுக் கூடிக் கொண்டே வரும்.

இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமது “விலா எலும்புகளில் அதைப் பதிவாக்கி… அதனின் கணக்கைக் கூட்டிப் பழக வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“பஸ்ஸில் ஒருவன் அடிபட்டுத் துடிக்கின்றான்…” என்று வைத்துக் கொள்வோம். அடிபட்டு அவன் துடி துடிக்கும் உணர்வுகள் பாவ வினைகள். அவனுக்குள் எத்தனை இம்சைகள் வந்ததோ பார்க்கும் பொழுது அது நமக்குள் வந்துவிடுகிறது.

“ஒருவன் ஆட்டைக் கத்தக் கத்த அறுக்கிறான்…” என்று வைத்து கொள்வோம், பார்த்தவுடன் முகதைச் சுளிக்கின்றோம். ஆட்டின் உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளி வருகின்றது.

ஆட்டை அறுப்பவன் செய்கின்றான் பாவம், நாம் பார்க்கின்றோம். ஆடு துடி துடிக்கும் உணர்வுகள் நமக்குள் பாவ வினைகளாக வந்து விடுகிறது.

“மற்றொரு ஜீவனை நாய் கடித்துக் குதறுகிறது…” பரிவு மனம் கொண்ட நாம் துடிக்கும் உணர்வைப் பார்க்கின்றோம். அது நமக்குள் வந்துவிடுகின்றது.

1.கொன்று புசித்த உணர்வின் வேகமும் அலைகளாகப் படர்கின்றது
2.தாக்கப்படும் பொழுது துடி துடிக்கும் உணர்வும் அலைகளாகப் படர்கின்றது
3.இந்த இரண்டு உணர்வும் வித்தாகப் பாவ வினைகளாக இணைந்து நம் நல்ல குணங்களைக் கொன்று விழுங்கி
4,நம்மைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்ற சாப வினைகளையும் பாவ வினைகளையும் நீக்க வேண்டும் என்றால் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு விண்ணிலே ஒளியாக இருக்கும் மகரிஷிகளின் ஆற்றலை நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

விண்ணிலே வாழும் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் எளிதில் பருகுவதற்குத் தான் “விநாயகனை நாம் வணங்கும் முறையை” ஏற்படுத்தினார்கள் ஞானிகள்.

1.மண்ணுலகில் தான் வாழும் பொழுது
2.தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தையும் நீக்கி
3.நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற
4.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
5.ஒவ்வொருவரும் தன் உயிரான ஈசனிடம் வேண்டுவதற்காக விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

தீமையை விளைவிக்கும் உணர்வுகளில் இருந்து தப்புவதற்காக அந்த மகா ஞானியான அகஸ்தியர் அருளாற்றலை இது வரையில் எடுத்துக் கொண்டவர்கள் “எத்தனை பேர்…!” என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை.

ஏதோ சாமியிடம் (ஞானகுருவிடம்) சென்றோம். அவர் இரண்டு வாக்கைக் கொடுத்தால்
1.நம் குடும்பம் நன்றாக இருக்கும்…
2.தொழில் கிடைத்தால் நமக்கு நன்றாக இருக்கும்…! என்ற
3.இந்த நிலையில் தான் வருகின்றார்கள்.

யாம் உபதேசிக்கும் பொழுது அதிலுள்ள உள் கருத்தினை எடுத்து உங்களுக்கு வேண்டிய உணவை நீங்கள் உட்கொண்டால் தான் அந்த ஞானிகளின் ஆற்றல் உங்களுக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவு கொண்டுதான் நாம் வாழுகின்றோம். அதே சமயத்தில் சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும்போது அவர்களை நாம் பண்புடன் அணுகி அதைக் கேட்டறிகின்றோம்.

அப்பொழுது அந்த உணர்வுகள் நாம் நுகர்ந்தறிந்தாலும் அது நம் உடலுக்குள் அணுக்கருக்களாக மாறிவிடுகின்றது.

அவர்கள் உடலில் வேதனையால் நோயானபின் தன் குடும்பத்திற்காகச் செல்வமோ சொத்தோ இதைச் சேர்த்து வைத்து இந்த உடலைவிட்டு பிரியப் போகின்றோமே என்ற ஏக்கத்துடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று மரணமடைகின்றார்.

1.அப்பொழுது அவரைப்பற்றி நாம் கேட்டறிந்த உணர்வுகள்
2.நமக்குள் அந்த அணுவின் தன்மை அதிகமாக வளர்ந்திருந்தால்
3.அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி நமக்குள் மன வேதனை கொடுக்கும் நிலையாக முதலில் மாறும்.

அதே சமயத்தில் அந்த வேதனையுடன் வெளிப்பட்ட அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்தால்
1.அது இந்த வேதனை உணர்வை உணவாக எடுத்து
2.அதனுடைய இனங்களை நம் உடலுக்குள் பெருக்கிவிடும்.

அப்படி இருந்தால் இப்பொழுது யாம் சொல்லும் இந்த உபதேசத்தின் உணர்வுகளை நுகரவிடாது தடுக்கும்.

இதைத் தடைப்படுத்தும் நிலைகள் வரப்படும்போது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்ற நிலையில்
2.இப்பொழுது தியானத்தில் உட்கார்ந்திருந்தாலும்
3.எழுந்து ஓட வைக்கும்.
4.ஏனென்றால் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதனால் அதன் வழி அதை வழிப்படுத்தும்.

ஆகவே, இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் அதை அடக்கப் பழகிக் கொள்வதற்கே இதைச் சொல்கின்றோம்.

ஆனால் பழகவில்லை என்றால் உடலுக்குள் இருக்கும் ஆன்மா அதன் வழியில் நம்மை அழைத்து சென்றுவிடும். மீண்டும் உடல் பெறும் உணர்வைத் தான் நாம் பெற முடியும்.

உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் இந்த மன வேதனை வரப்படும் பொழுது மன நோயாக வருகின்றது. உடல் நோயாக மாறி பின் இந்த உடலையே மாற்றியமைக்கும் சக்தியாக மனிதனல்லாத உருவாக மாற்றிவிடுகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

எத்தகைய நிலையாக இருந்தாலும் சரி தியானத்தில் உட்கார முடியவில்லை.., எண்ணங்கள் எங்கெங்கோ ஓடுகின்றது.., ஒரு நிலைப்படுத்த முடியவில்லை.., இப்படியெல்லாம் சொல்லி “உங்களை எண்ணவிடவில்லை” என்றால்
1.உடனே கண்களைத் திறங்கள்.
2..உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
3.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும். எனக்குள் இருக்கும் இருள் மறைய வேண்டும்.
4.மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும்
5.என் உடலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
6.இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7.என் உடலிலுள்ள ஆன்மா அந்த மெய்ஞானிகளைப் போன்ற உயர்ந்த நிலை
8.என்னுள் இருந்தே பெற வேண்டும் என்று ஏங்கினால் அது நமக்குள் அடங்கும்.

ஆக இவ்வாறு எண்ணும்போது அந்த ஆன்மாக்களுக்கும் நற்பயன் கிடைக்கும். அதே சமயத்தில் நம் உடலில் உள்ள அணுக்களை அந்த ஒளியின் அணுவாக மாற்றிவிடலாம்.

இதை மறவாது செய்து பழகுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான்கு நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நண்பர் என்று பழகிப் பாசத்துடன் ஒன்றிவிடுகின்றோம். அதே சமயத்தில் ஒரு நண்பருக்கு அவர் குடும்பத்தில் சிக்கல் வந்துவிடுகின்றது. அவர் மீது குடும்பத்தில் மிகுந்த வெறுப்பின் தன்மை அடைகின்றார்கள்.

அதைத் தாங்காது குடும்பத்தின் மேல் வெறுப்பு வந்தபின் “என்ன வாழ்க்கை…!” என்று அந்த நண்பர் மருந்தைக் குடித்துவிடுகிறார். தற்கொலை செய்து கொள்கிறார்.

அப்பொழுது அந்தக் குடும்பத்தின் மேல் வெறுப்பும் அதே சமயத்தில் சாப உணர்வுகளும் அங்கே வரும்.

என் குடும்பத்தில் இப்படிச் செய்தார்களே.., “அவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…!” என்ற சாப அலைகளை அங்கே பதிவு செய்கின்றது.

சாப அலைகள் அந்தக் குடும்பத்திலுள்ளோர் மீது பதிவாகி விடுகின்றது. இறந்த பின் அந்த உடலில் எந்த நிலைகள் பதிந்ததோ அந்த வீட்டிலும் பதிவாகின்றது.

அவரைச் சார்ந்தவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது. அதன் உடலில் எவ்வளவு கெடுதல் செய்ததோ அதுவெல்லாம் இங்கே வந்துவிடுகின்றது.

அதே சமயத்தில் நண்பர் என்ற நிலைகளில் பாசமாகப் பழகி இருந்தார் அல்லவா. மருந்தைக் குடிக்கும் பொழுது

1.“நண்பனே…, நாம் இருவரும் எவ்வளவு பழகியிருந்தோம்…! இந்த மாதிரி ஆகிவிட்டதே…,
2.நான் உன்னை எப்படி வந்து பார்ப்பது?” என்றே தெரியவில்லை.
3.உனக்குத் தெரியாமல் நான் இப்படிச் செய்துவிட்டேன் என்ற எண்ணத்தை அதிகமாகச் சேர்த்துவிட்டால் இந்த ஆன்மா எங்கே போகும்?
4.எந்த நண்பன் மேல் பாசமாக இவ்வாறு எண்ணினாரோ அந்த நண்பனின் உடலுக்குள் வரும்.

எப்படி? ஏன்?

தற்கொலை செய்த நண்பரைப் பற்றி இவர் கேள்விப்படுவார். கேள்விப்பட்டவுடன் நண்பனைப் பற்றிப் பாசத்தால் எண்ணுவார்.

“அடடா.., நேற்று வரையிலும் என்னிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தானே… அதற்குள் இப்படிப் போய்விட்டானா…!” என்று இந்த எண்ணத்தை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது இறந்த ஆன்மா இங்கே வந்துவிடும்.

பாசத்தால் எண்ணும்பொழுது இரண்டு பேரின் எண்ணங்களும் ஒன்றும்போது ஆன்மா நண்பரின் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

தற்கொலை செய்து கொண்ட ஆன்மா அந்தக் குடும்பத்தில் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்ததோ இவை அனைத்தும் நண்பர் உடலுக்குள் ஆகி…, “இல்லாத கஷ்டங்களை எல்லாம்” அவருக்கு உண்டாக்கும்.

இவரும் தவறு செய்யவில்லை. அவர்களும் தவறு செய்யவில்லை. ஆனால், அந்தக் குடும்பத்தில் இந்தச் சாப அலைகள் அதன் தொடர்பு கொண்டு இது வளர்ந்து கொண்டே இருக்கும்.

இது ஒவ்வொரு குடும்பத்திலும் இது இல்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு வகையிலும் இதனுடைய தொடர்பு இல்லாது இருக்காது.

இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

யாராக இருந்தாலும் சரி…, “உடலை விட்டுப் பிரிந்துவிட்டார்கள்…,” என்று கேள்விப்பட்டாலே உடனே நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து எங்களுடன் நண்பராகப் பழகிய உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

1.உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.உயிருடன் ஒன்றிய “ஒளியின் சரீரம் பெறவேண்டும்”
என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இதைப் போன்று குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து கூட்டாகத் தியானித்து அந்த உயிரான்மாவை எளிதில் விண் செலுத்தலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் பிச்சையோ யாசகமோ எடுத்துக் கொண்டு வருகின்றார் என்றால் அவனிடத்தில் கடும் வேதனையும் சங்கடமும் துன்பமும் இருக்கும்.

விரக்தியின் நிலைகள் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராது நம்மிடத்தில் யாசகத்திற்கு வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனைக் கடுமையான சொற்கள் கொண்டு திட்டும் பொழுது பதிலுக்கு அவன் கடுயான வாக்கு கொண்டு நம்மைச் சொல்லிவிட்டால் அந்த வாக்கு உடனடியாகப் பலிக்கும்.

ஏனென்றால் அது நஞ்சின் தன்மை.

நான் (ஞானகுரு) பல வருடங்கள் சிரமப்பட்டு பல ஆற்றல்கள் பெற்று நீங்கள் நலம் பெறவேண்டும் என்று ஒரு வாக்கைக் கொடுத்தால் அந்த வாக்கை நீங்கள் ஏற்றுக் கொண்ட நிலைகளுக்கொப்பத்தான் அது நல்லதாகின்றது.

இது கால தாமதமாகும்.

நான் கொடுத்த வாக்கின்படி நல்லதாக ஆனாலும் நீடித்த நாள் அது செயல்பட வேண்டும் என்றால் உங்கள் எண்ணத்தைக் கொண்டு அதை ஊடுருவச் செய்து நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் ஒரு தீயவனின் சக்தியோ அவன் சாபமிட்டால் அந்த உணர்வுகள் உடனடியாக வேலை செய்யும்.

பாலுக்குள் விஷம் பட்டால் அந்த விஷமான பாலைக் குடித்தால் எப்படி நஞ்சாக மாய்த்துவிடுகின்றதோ அதைப் போல சாதாரண மனிதனாக இருந்தாலும் அவன் சாபமிடுகின்ற நிலைகள் அப்படி விஷத் தன்மை வாய்ந்தது தான்.

நம்மைச் சாபமிட்டான் என்றால் நாம் என்ன செய்வோம்?

என்ன சொன்னாய்…? என்று எதிர்த்துக் கேட்போம். அவன் மீண்டும் ஏதாவது சொன்னால் அடிக்கத் துணிவோம்.

அந்த ஆத்திரத்தை நாம் ஊட்டப்படும் பொழுது அவன் மீண்டும் கடுமையான சொற்களைச் சொன்னால் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடும்.

அவ்வாறு சேர்ந்துவிட்டால் அந்தச் சாப அலைகள் குடும்பப் பரம்பரைக்குள் வந்துவிடும். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அது ஆட்டிப் படைத்துவிடும்.

செல்வம் இருக்கும். ஆனால் உடலுக்குள் துன்பம் இருக்கும். அவர்களுக்குள் மகிழ்ச்சி இருக்காது. ஆசையின் நிலைகளில் அதிகமாகப் பேசலாம். இதைப் போன்ற துன்புறும் நிலைகள் நிச்சயம் வந்தே தீரும்.

ஆனால் சாபமிட்டவன் அது எப்படி ஏழ்மை என்ற நிலைகளில் எப்படியெல்லாம் துன்பம் அனுபவித்தானோ
1.பணமில்லாது உள்ளுக்குள் வேதனை கொண்டு அனுபவித்தாலும்
2.பொருள் இல்லாததால் அவன் தாங்கும் சக்தி இருக்கின்றது.
3.ஏனென்றால் அந்த விஷத்தின் தன்மை வரப்படும் பொழுது அவன் தாங்கிக் கொள்ள முடிகின்றது.

செல்வச் செழிப்புடன் ஆனந்தமாக இருப்பவர்கள் இத்தகைய சாபத்தினால் அவர்களுக்கு வேதனையாகிவிட்டால் அவர்களுக்கு அதைத் தாங்கக்கூடிய சக்தி இல்லை.

வேதனைகள் அதிகமாக இருக்கும். பொருள்கள் எல்லாம் இருக்கும். உள்ளுக்குள் அதைச் சுவைக்கும் நிலை இல்லை. மகிழும் நிலை இல்லை.

உடல் முழுவதற்கும் நரகத்தை அனுபவிப்பது போல் ஒவ்வொரு நிமிடமும் வேதனையை அனுபவிப்பார்கள். இதைப் போன்ற வேதனையான உணர்வுகளை இந்த உடலில் விளையை வைத்தால் உடலை விட்டுச் சென்ற பின் எதுவாகப் பிறக்க முடியும்?

மிருகங்கள் அனைத்தும் விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொண்டது. அதைப் போல இவர்கள் இறந்தால் இவர்கள் உடலிலிருக்கக்கூடிய வேதனையான உணர்வின் அணுக்கள் விளைந்த அனைத்துமே அந்த செல்கள் உயிராத்மாவில் சேர்ந்து மிருகத்தின் தன்மையாகத்தான் பிறக்க முடியும்.

மிருகத்தின் அலைகளின் உணர்வுகள் சேர்க்கப்பட்ட அணு செல்கள் அந்த வாசனை வரப்போகும் பொழுது இவன் எத்தனை அநாகரிகமான முறையில் சாபமிட்டானோ அந்தச் சாபத்தின் நிலைகளுக்கொப்ப உடல் உருமாறிவிடும்.

ஒரு மெய்ஞானி சொல்லக்கூடிய வாக்கைக் காட்டிலும் ஏழ்மையிலே தரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய உணர்வின் விஷத்தன்மைகள் அவ்வளவு சீக்கிரம் வேலை செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் யாம் சொல்லும் முறைப்படி கணவனும் மனைவியும் தியானத்தையும் ஆத்ம சுத்தியையும் சரியானபடி செயல்படுத்துதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அடிக்கடி எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ நிலைகளைப் பத்திரிக்கை வாயிலாகவும் தொலைக்காட்சி வழியாகவும் தினசரி பார்க்கின்றோம்.

தொலைக்காட்சி வழியாகப் பார்த்தோம் என்றால் உலகில் நடக்கின்ற அசம்பாவிதங்களை எல்லாம் “ஆ…” என்று பார்க்கின்றோம். கண்கள் அப்படியே அதை ஈர்த்து நமக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றது.

டி.வி.யில் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் பொழுது நம் நினைவு முழுவதும் அங்கே அந்த இடத்திற்கே போகின்றது. அங்கே பரவியிருக்கும் நினைவையே நாம் சுவாசிக்க நேர்கின்றது.

அவ்வாறு நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் செய்த (அசம்பாவித) உணர்வெல்லாம் இந்த விஞ்ஞான அறிவால் நமக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு நாட்டினை அழிக்கத் தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ஒலி அதிர்வுகளைக் கொடுத்து நமக்குள் பதிவாக்கி நம்மை அப்படியே புத்தியை செயலிழக்கச் செய்வதற்கும் விஞ்ஞான அறிவு இன்று சென்றுவிட்டது.

இப்படி ஒலிபரப்பும் நிலைகளில் நாம் டி.வியைப் பார்க்கப்பப்படும் பொழுது நம் மனித எண்ணங்களையே சீரழிக்கும் நிலைகள் வருகின்றது.

விஞ்ஞான அறிவால் கேட்ட உணர்வுகள் நாம் வீட்டிலிருந்தபடியே தீமையின் உணர்வை நமக்குள் வளர்ப்பதும் பகைமை உணர்வுகள் ஊட்டுவதும் ஒருவனை எப்படி மாற்றுவது என்ற நிலைகள் வருகின்றது.

டி.வி.யில் காண்பித்த நிலைகளையும் மற்றவைகளையும் உற்றுப் பார்க்கும் போது (சினிமாவில்) காட்டும் காட்சிகளில்
1.கொலை செய்வது எப்படி?
2.கொலையிலிருந்து தப்புவது எப்படி? என்ற நிலையெல்லாம் வந்த பின் இந்த உணர்வுகளே நமக்குள் பதிவாகின்றது.
தன் வாழ்க்கையில் ஒரு சிரமம் வந்தால் அது மாதிரி நாம் ஏன் இதைச் செய்யக்கூடாது என்ற உணர்வுகள் தூண்டுகிறது. அதன் வழியிலே தான் தவறுகள் அதிகமாக இன்று உலகம் முழுவதும் வளர்கின்றது.

ஆக மொத்தம் விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கையே நாம் வாழுகின்றோம்.

மெய் ஞானத்தின் நிலைகளில் பக்தி என்ற நிலை வந்தாலும் அதிலேயும் குறைகளைக் கூறி நல்ல நிலைகள் எடுக்க முடியாதபடி ஆலயங்களையும் அசுத்தப்படுத்துகின்றோம்.

எந்த ஆலயத்திற்குள் சென்றாலும் நம் குறைகளைத்தான் சொல்கின்றோம்.
1.பாவி எனக்குத் துரோகம் செய்தான்…
2.நீ பார்த்துக் கொண்டே இருக்கின்றாயே…!
3.”உன்னைத்தான் நான் வணங்குகின்றேன்…” என்று சொல்லிக்
4.கடவுளையே சாபமிடும் நிலையில் மனிதனின் உணர்வு வந்து விட்டது
5.உனக்குக் கண் இல்லையா…? மூக்கு இல்லையா…?
6.இனி உன்னை எட்டிக் கூட பார்க்கப் போவதில்லை,
7.அவன் செத்தால் தான் உன்னை வந்து பார்ப்பேன் அவன் தொலைந்தால் தான் உன்னை வந்து பார்ப்பேன் என்று
8.பக்தியில் முத்தி்ய நிலைகளாக அஞ்ஞான வழிகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதைப்போன்ற நிலைகளிலெல்லாம் இருந்து நாம் விடுபட வேண்டும். அன்று அகஸ்தியன் கண்ட பேருண்மையின் உணர்வின் வழிப்படி
1.நம் வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும்.
2.ஒவ்வொரு தீமைகளிலிருந்தும் பகைமையிலிருந்தும் நாம் மாறுபடுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நமது வாழ்க்கையில் சீராக வாழ்ந்து கொண்டிருந்தாலும் இரண்டு தலை முறைக்கு முன்னாடி வாழ்ந்த நம் மூதாதையர்களின் உணர்வுகள் நம்மை இயக்கத்தான் செய்கின்றது.

நம் மூதாதையர்கள் அவர்கள் வாழ்க்கையில் அண்ணன் தம்பிகளாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து வரும் பொழுது வரும் சம்பாத்தியத்தையும் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

உதாரணமாக நான்கு பேர் சகோதரர்களாக இருந்தாலும் சந்தர்ப்ப பேதத்தால் கொடுக்கல் வாங்கல்களில் ஒருவருக்கு குறைத்துக் கொடுக்கும் போது என்ன ஆகின்றது?

ஏனென்றால் ஒரு சகோதரனால் தொழில் செய்ய முடியவில்லை. அவன் நோயின் காரணமாக எழுந்து வரவில்லை என்றால்
1.நாம் தான் உழைத்தோம்…
2.அவனுக்கென்ன கொடுப்பது…? என்று
3.மூன்று பேர் வலுவின் தன்மை வரப்படும் போது நான்காவது சகோதரன் வலுவற்றதாக மாறுகின்றான்.
4.அப்பொழுது அவன் வெறுப்படைகின்றான்.

மூன்று பேரும் சேர்ந்து எனக்கு இப்படிச் செய்து விட்டார்களே…! என்ற வேதனையின் தன்மை வரப்படும் போது இந்த மூன்று பேர் மீதும் வெறுப்பு வருகின்றது.

இந்த வெறுப்பு வளர… வளர… வளர… வெறுப்பான பேச்சுகளைப் பேசப் பேச… மூன்று பேர் மேலேயும் வெறுப்பான உணர்வுகள் பதிவாகின்றது. அதே சமயத்தில் மூன்று பேரும் சேர்த்து இவரைப் பழித்துப் பேசுவதும் அவருக்கு மீண்டும் இன்னல்களை உருவாக்கும் நிலையும் வருகின்றது.

இது தான் “ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம்.” அதாவது யார் வெறுப்பாக எண்ணுகின்றாரோ அந்த எண்ணத்தை உயிர் “ஓ…” என்று பிரணவமாக்கி “ம்…” என்று உடலாக்குகின்றது.

வெறுப்பின் உணர்வுகள் ஒவ்வொருவர் உடலிலும் ஜீவ அணுக்களாக உருவாகி உடலான சிவமாகின்றது. உடலாக ஆன உணர்வுகள் சொல் வடிவமாகும் போது அவர் மேல் வெறுப்பாகப் பேசச் செய்கின்றது.

இது தான் “ஓ…ம் நமச்சிவாய…!” நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எதுவோ அதை உயிர் “ஓ…” என்று ஜீவனாக்கி “ம்…” என்று உடலாக்கி விடுகின்றது. அப்பொழுது சகோதரர்கள் மூன்று பேருக்கும் வெறுப்பின் தன்மை அடைகின்றது. அது ஒரு வித்தாக உருபெற்று விடுகின்றது.

இப்படிப் பேசுகின்றான் என்று சொல்லும்போது இந்த உணர்வும் இந்த மூன்று பேருக்கும் வளர்கின்றது. நான்காவது சகோதரன் தனித்த நிலைகள் இருந்தாலும் அவர்கள் மீது வெறுப்பாக வெறுப்பாக இவர் உடலிலே அது நோயாக மாறுகின்றது. உடல் பலவீனமடைகின்றது.

மூன்று பேரும் வலு கொண்டு இவரைத் தாக்கிப் பேசும் உணர்வுகள் அதிகமாக அதிகமாக
1.இந்த மூன்று உணர்வுகளும் இவர் உடலுக்குள் வரும் போது
2.அவரிடம் உள்ள நல்ல உணர்வுகள் தணிந்து
3.மூன்று பேரும் சேர்த்து… “எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்…!” என்ற எண்ணம் அதிகமாகின்றது.

ஆனால் கடைசியில் இவர் மரணமடையப்படும் போது என்ன எண்ணுவார்?

அண்ணன் தம்பிகளில் மூத்த வரிசை யாரோ… “இவன் கூட இப்படிச் சேர்ந்து எனக்குத் துரோகம் செய்கின்றானே…! பாவி…!” என்று ஏக்கத்துடன் உடலை விட்டுச் சென்றால் இந்த உயிரான்மா அவரின் உடலுக்குள் சென்று விடுகின்றது.

இவர் எப்படி நோயால் வேதனைப் பட்டாரோ அந்த வேதனைகள் அனைத்தும் மூத்தவரின் உடலுக்குள் செயலாக்கி அந்த உணர்வுகள் மற்ற குடும்பங்களிலும் பரவத் தொடங்கி விடுகின்றது.

இந்த நிலை வருவதற்குள் அந்தக் குடும்பம் நான்கு விதத்திலேயும் அது வேதனைகள் அனுபவிக்கத் தொடங்குகின்றனர். நலிவடைகின்றனர்.

1.அந்தத் தலைமுறைக்கு அதுவானாலும்
2.பின் வரும் தலைமுறைகளில் வேறு வேறு நிலைகளில் திருமணம் செய்து கொண்டு வந்தாலும்
3.இந்த மூதாதையர்கள் சண்டையிட்ட உணர்வுகள் பதிவாகிப் பதிவாகி
4.பெண்கள் கர்ப்பம் ஆகும் போது பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்கின்றது.

அதாவது அந்த நான்கு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சாபமிட்ட நிலைகளில் உன் குடும்பம் நசிந்து போகும்; கண் தெரியாது. குருடாகிப் போவாய்; கால் ஊனமாகும் என்று பேசி இருந்தால்
1.பிறக்கும் குழந்தைகளுக்குள் அது வித்தாக ஊன்றி
2.இந்த உணர்வுகள் வழித் தொடர் கொண்டு
3.கருவிலேயே அது ஊனமான குழந்தையாகத்தான் வரும்.

மூதாதையர்கள் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்ட உணர்வுகளைச் சாபமாக இட்டார்களோ
1.வழி வழி வந்த அந்த உணர்வுகள் தான்
2.பலவிதமான பகைமைகளாக உருவெடுத்து
3.மனிதனின் நிலைகள் (இன்று) மறைந்து கொண்டே வந்து விட்டது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மனிதனுக்குள் ஒருவருக்கொருவர் பாசமாக அன்பாகத்தான் வாழ்கின்றார்கள்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால் சில சிரமங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து மீளத் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக நண்பர்களையோ உறவினர்களையோ தேடி வருகின்றார்கள்.

ஏனென்றால் அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தை வாங்கிச் சமாளிக்கலாம் என்று வாங்குகிறார்கள்.

சீக்கிரம் திரும்பத் தந்துவிடுவேன் என்று சொன்னபின் அவர்களும் பணத்தைக் கொடுக்கிறார்கள்.

எப்படியோ (ஏமாற்றி) பணத்தை வாங்கிக் கொள்வார்கள். வாங்கிய பணத்தைச் செலவழிக்கின்றார்கள்.

ஆனால் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

இப்பொழுது கொடுக்க முடியவில்லை. “தருகிறேன்…” என்று சொல்வார்கள்.
1.இரண்டாவது தடவை கேட்கும் பொழுதும் அதே பதில் வருகிறது.
2.மூன்றாவது தடவையும் கேட்டவுடனே என்ன சொல்வார்கள்?

“நான் தான் கொடுக்கிறேன்…!” என்று சொன்னேனே அதற்குள் என்ன அவசரம் என்பார்கள். அன்று
1.தக்க சமயத்தில் தனக்கு உதவி செய்தார்கள் என்ற
2.அந்த நல்ல எண்ணம் வருவதில்லை.
3.ஆக பணத்தைத் திருப்பிக் கேட்பவருக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை.

அப்பொழுது அவருக்குக் கோபம் வரும்.

கோபத்தின் தன்மை பணம் கொடுத்தவருக்கு வரப்படும் போது உதவி செய்தார்கள் என்ற எண்ணம் பணம் வாங்கியவருக்கு மறந்துவிடுகின்றது. அப்புறம் அவருக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பணம் கொடுத்தவர் என்ன சொல்வார்? பார்… அன்றைக்கு உதவி செய்தேன். பாவிப் பயல் இன்றைக்கு அவன் எனக்குத் தொல்லை கொடுக்கிறான்…! என்பார்.

அப்பொழுது தொல்லையின் உணர்வுகளைத்தான் இவர் உடலிலே வளர்க்க முடிகிறது. தொல்லைகளை நீக்கும் நிலை இல்லை.

இப்படி மனிதனுக்கு மனிதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் உணர்வுகள் இப்படி மாறுகின்றது.
1.பகைமை உணர்ச்சிகள் உருவாகி உடலுக்குள் வந்தவுடன்
2.உறுப்புகள் சீர் கெடுகின்றது. கடும் நோயாக மாறுகின்றது.
3.இந்த நோயை மாற்ற என்ன வழி?

மனிதன் சந்தர்ப்பத்தால் நல்ல குணங்களை நல்ல முறையில் பயன் படுத்தினாலும் வாங்கிய பணத்தைத் திருப்பி அவர்களால் கொடுக்க முடியவில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் அங்கே என்ன நடக்கின்றது?

“என்னைத் தொந்தரவு செய்கின்றார்களே… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள்” என்ற உணர்ச்சிகள் தன்னை அறியாமலே அதிகரித்துவிடுகின்றது.

உண்மையில் அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாத நிலையில் இருந்தாலும் இரண்டு தடவை பணத்தைத் திருப்பிக் கேட்டாலே போதும். அங்கே உணர்ச்சிகள் மாறும்.

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருக்கிறது. “தருகிறேன்…” என்று சொல்வார்.

ஆனால் முயற்சி எடுக்கும் பொழுது வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளால் இவர் செல்வம் தேடுவதும் இழந்து விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் இரண்டு தரம் பணத்தைத் திரும்பக் கேட்டு நிர்ப்பந்தப்படுத்தும் போது அந்த வெறுப்பு காழ்ப்புணர்ச்சியாக வருகின்றது. இந்த வேதனையின் உணர்வைத் தனக்குள் எடுத்தவுடன்
1.ஒன்று இவர் தவறு செய்பவராக மாறுகின்றார்.
2.இல்லை என்றால் அவர் நுகர்ந்த உணர்வு கடும் நோயாக மாறுகின்றது.
3.இதன் உணர்வுகள் இப்படித் தான் போகின்றது.

பணம் கொடுத்தவரோ… பாருங்கள்… அன்றைக்குக் கொடுத்தேன். இன்றைக்கு எதிர்க்கிறான்… கொடுக்காமல் ஏமாற்றுகிறான்.. என்பார்.

ஏனென்றால் இயற்கையில் (உண்மையில்) பணத்தை அவரால் திரும்பக் கொடுக்க முடியவில்லை.

அவருக்கு எப்படியோ நல்ல நேரம் வரட்டும். அவருக்குக் கொடுக்க வேண்டிய வலு வரவேண்டும். பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் வரவேண்டும் என்று “பணம் கொடுத்தவர்கள்… எண்ணுகிறார்களா…!” என்றால் இல்லை.

அப்படி எண்ண முடியவில்லை.

பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற வேதனை உணர்வு தான் வருகிறது. அப்பொழுது அந்த வேதனையைச் சமைக்கும் உணர்வுகள் பணம் கொடுத்தவர் உடலிலும் வருகிறது.

நான் அவ்வளவு உதவி செய்தேன். இந்த மாதிரி எல்லாம் செய்கிறானே என்று இவர் சந்தர்ப்பத்தில் விளைந்த உணர்வுகள் கடன்காரனை எண்ணி எடுக்கும் போது “ஓ…ம்” வெறுப்பான உணர்வுகள் ஜீவனாகி
1.இவனெல்லாம் உருப்படுவானா…?
2.என்னை இப்படி ஏமாற்றுகிறான் பார்…! என்று
3.சாபமிடும் நிலைக்கு வந்துவிடுகின்றார்.

அன்றைக்குக் கேட்டதும் பணத்தைக் கொடுத்தேனே… இவன் உருப்படுவானா…? என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்து இந்த உணர்வுகள் உடலிலே விளைகின்றது.

இதே போல உணர்வுகள் அங்கே பணத்தை வாங்கியவர் உடலிலும் படருகிறது. இதை எண்ணும் போது அவரின் செயலின் தன்மையும் இழக்கச் செய்கிறது.

கடைசியில் பணம் கொடுத்தவருக்கும் வேதனை வருகின்றது. பணம் வாங்கியவருக்கும் வேதனை வருகின்றது. நல்லதின் பலனை இரண்டு பேரும் அடைய முடியவில்லை.

இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைப்பதற்காகத்தான் ஆலயங்களில் தீப ஆராதனை காட்டுகின்றார்கள். ஏனென்றால் அப்பொழுது அங்கே மறைந்திருக்கும் பொருள்கள் அந்த வெளிச்சத்தால் தெரிகின்றது.

அப்பொழுது நாம் எண்ண வேண்டியது எது? பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

1.இந்த ஆலயத்திற்கு வரும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
2.எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
3.என்னிடம் தொழில் செய்வோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
4.என்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
5.என்னைப் பார்க்கும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாடிப்பட்டியிலிருந்து ஒரு பையன் வந்தான். அந்தப் பையனுக்கு பத்து வயதுக்கு மேல் ஆனவுடன் உடலெல்லாம் அப்படியே சுருங்கிக் (முடங்கி) கொண்டே வந்துள்ளது.

இங்கே எம்மிடம் வந்தால் சரியாகும் என்று அழைத்து வந்திருந்தார்கள்.

முதலில் நன்றாக நடந்து கொண்டிருந்தான். இப்பொழுது இந்த மாதிரி ஆகிவிட்டது. உடலில் இப்பொழுது எதுவும் வேலை செய்யவில்லை என்றார்கள்.

அப்பொழுது நான் சொன்னேன். உங்கள் மூதாதையர் யாராவது இதே வயதில் கை கால் எல்லாம் அடித்து முடங்கி “அதனால் இறந்திருக்கின்றார்களா…!” என்றேன்.
1.யாராவது அப்படி இறந்திருந்தால்
2.அந்த மாதிரித்தான் “இதுவும் இருக்கும்” என்று சொன்னேன். போய்க் கேட்டு வாருங்கள் என்றேன்.

எனக்குத் தெரியாமல் அது எப்படி இருக்கும்? யாரும் இல்லையே… என்றார்கள்.

நன்றாக விசாரித்துக் கொண்டு வாருங்கள் அப்புறம்தான் என்ன என்று பார்க்க முடியும் என்று சொல்லி அனுப்பினேன்.

அப்புறம் அவரைச் சேர்ந்த ஆட்கள்.., “ஆமாம்… நீங்கள் சொன்ன மாதிரி நடந்திருக்கிறது” என்றார்கள்.

ஒரு பெண் இருந்தது. அவர்கள் ஆசைப்பட்டு ஒருவருக்கொருவர் ஏதோ ஆகவில்லை போலிருக்கின்றது.

அவர்கள் ஆசாரி. அதனால் அந்தப் பெண்ணைச் சுத்தியலில் அடித்துப் போட்டு நகையெல்லாம் கழட்டிக் கொடு என்று சொல்லி ஒரு குழியைத் தோண்டி அதிலே போட்டுக் கொன்று விட்டார்கள்.

“அடப்பாவிகளா…! என் குடும்பம் எப்படி இப்படி ஆனதோ உன் குடும்பமும் ஆகும்…” நான் வேதனைப்பட்டேனோ…, “உன் குடும்பமும் உருப்படியாகாமல் போய்விடும்” என்று அங்கே சாபமிட்டது.

அதற்குப் பின் ஒரு பெண் வாரிசு வந்தால் அந்தப் பெண் குழந்தை எங்கே போனாலும் கல்யாணம் ஆகி அந்த வயதானால் துடிக்கத் துடிக்க இறந்து போகும்.

ஆண் வாரிசு என்றால் அந்தக் கை கால் முடங்கிக் கொண்டே வரும். அது எப்படிக் குறுகி இறந்ததோ அதே மாதிரி இறக்கும்.

இது கரு வழி. இது சாபம்.

நாம் நினைக்கின்றோம் ஒருவரை அடித்து நொறுக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று.
1.ஆனால் சாகும் பொழுது என்ன ஆகும்…?
2.அந்த அலைகள் எல்லாம் உடலுக்குள் வரும்.
3.இதிலிருந்து “யாரும்” தப்ப முடியாது.

நாம் நினைக்கலாம் எல்லாம் கெட்டிக்காரத்தனமாகச் செய்துவிட்டோம் என்று. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் மனிதனாகப் பிறந்த பின் எப்படியெல்லாம் ஆகின்றோம் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதைப் பற்றி அதிகமாகவும் சொல்ல முடியாது. சொன்னால் பிறகு பயந்து போய்விடுவீர்கள்.

ஏனென்றால் “தவறு செய்துவிட்டால்… அதன் பின்பு என்ன ஆகும்…” என்று ஒரு உதாரணத்திற்கு உங்களுக்குத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றோம்.

எல்லாம் இப்பொழுது மன தைரியமாக இருப்பீர்கள்.

ஆனால் வீட்டில் சிறிது குறை என்றால் அது கடினமாக ஆகிவிட்டால் “உன்னால் தான் இப்படி ஆகிறது” என்று ஒருவருக்கொருவர் சாபமிடும் நிலைகள் ஆகின்றது.

அதிகமாகி வளர்ந்துவிட்டால் அடித்துக் கொல்லும் நிலைக்கே வந்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிய அந்த மகரிஷிகளைப் பற்றிய உணர்வுகளைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு நொடியிலேயும் உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் ஞாபகப்படுத்துகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

பேரண்டமே ஒளிமயமாக மாறும் காலமும் உண்டு

 

நம் பூமியில் பரிணாம வளர்ச்சியில் மனிதனானவர்கள்… தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிவிட்டு ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாமும் அந்த எல்லையைச் சென்றடையலாம்.

ஆக… தீமைகளை வென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்தால்
1.நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை நாமும் வென்று
2.என்றும் ஒளியாக அந்த மகரிஷிகள் வாழ்வது போல் பிறவியில்லா பெரு நிலைகள் அடையலாம்.

இதைத் தான் வேகா நிலை என்பது…!

மாறாக… இந்த வாழ்க்கையில் பந்தம் பாசம் என்ற நிலைகள் வந்து விட்டாலோ… நம்முடைய பார்வையில் பிறர் செய்யும் தீமைகளை அதிகமாக எண்ணி அந்தத் தீமையின் பற்று வளர்ந்து விட்டாலோ… நாம் புவியின் ஈர்ப்புக்கே வந்து விடுகின்றோம்.

அதை எல்லாம் விடுத்துவிட்டு அந்த மெய் ஞானியின் உணர்வின் தன்மை நாம் நினைவு கொண்டால் இந்த மனித உடலிலிருந்தே அந்தச் சொர்க்க பூமியான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ முடியும்.

1.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வுகளும் ஒன்றாகி
2.நாம் நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளி உணர்வுகளாக மாற்றி
3.அழியா ஒளிச் சரீரம் பெற்று… சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்திட முடியும்.

இந்தப் பிரபஞ்சம் முழுமையாக அழிந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் அழிவதில்லை.

இதைப் போல் எத்தனையோ கோடிப் பிரபஞ்சங்கள் உண்டு. அதில் விளைந்த மனிதர்களும் இதைப் போல் விண் சென்றவர்கள் பேரண்டத்தில் வெளி வந்த பின் அவர்கள் ஐக்கிய உணர்வு கொண்டு இந்த ஒளியின் சரீரமாக வாழ்கின்றார்கள்.

அதன் வழியில் பிறவியில்லா பெரு நிலை பெற்று இந்தப் பேரண்டமே ஒளிமயமாகும். அந்த நிலை அடையப் பல கோடி ஆண்டுகளாகும்.

ஆகவே… பேரண்டம் என்பது அகண்ட நிலைகள் பெற்றது. மனிதனான பின் நாம் நுகரும் உணர்வின் தன்மையை ஒளியாக்கி விட்டால் நமக்கு என்றும் அழிவில்லை.

அந்த அழியாத நிலைகள் பெறுவதற்குத் தான் இங்கே உணர்த்துகின்றோம். நாம் அனைவரும் அந்த வேகா நிலை பெறுவோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மெய் உணர்வுகளை நமக்குள் எடுத்து வளர்த்து… நமக்குள் வரும் தீமைகளை அகற்றி அந்த மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற நாம் தியானிப்போம்.
1.நமக்குள் தீமைகள் புகாது தடுப்போம்.
2.நாம் பார்ப்போருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம்.

தவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது…?

 

உதாரணமாக ரோட்டில் செல்லும் போது விபத்துக்களைப் பார்க்க நேர்கிறது. அடிபட்டவர்கள் அவர்கள் வெளிப்படுத்தும் வேதனை உணர்வுகள் பூமியில் படர்கிறது.

நம் கண் பார்த்து அந்த விபத்தான உணர்வுகளை… அந்த உடலைப் பதிவாக்கிய பின் அந்த உணர்வுகள் அலைகளாக வெளி வருகிறது.
1.அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் அது விளைந்து
2.அந்த உடல் சிதைந்திருந்தால் அதே உடலிலிருந்து உணர்வுகள் நமக்குள் விளைந்து நம் உடலையும் சிதையச் செய்துவிடும்.

இல்லை என்றால் அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாகி அவர்களைப் போல் நம்மையும் விபத்துக்குள்ளாக்கும் செயல்களை உண்டாக்கிவிடும்.

ஒரு பேருந்திலேயே பிரயாணம் செய்கிறோம் என்றாலும்… ஒரு விபத்தைக் கண் கொண்டு பார்த்த உணர்வின் எண்ணம் நமக்குள் பயத்தை ஏற்படுத்தி நாம் செல்லும் வண்டியின் ஓட்டுநரை அந்த உணர்வுடன் பார்த்தால் போதும்.

இந்த உணர்வுகள் அவரை இயக்கச் செய்து அவரின் சிந்தனைகள் குறைக்கப்பட்டு தன்னை அறியாமலே எதிரில் வரும் வாகனத்தைக் கண்டு மாற்றி அமைத்தால்… ஒரு மனிதனோ மாடோ குறுக்கே வந்தால் வண்டியை ஓரமாக ஒதுக்கினால்… அருகில் உள்ள மரத்தில் மோதி நாம் உட்கார்ந்திருக்கும் அந்தத் திக்கிலேயே உராயும் தன்மை வரும்.

இது எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் இயல்புகள்.

விமானத்தில் அல்லது இராக்கெட்டுகளில் ஒரு ரிமோட் என்ற உணர்வின் தன்மையை வைத்து விஞ்ஞான அறிவு கொண்டு எப்படி இயக்குகின்றனரோ… இங்கிருந்து ஆணையிடும் அந்த ரிமோட் அதிலே எதைப் பதிவு செய்திருக்கின்றனரோ… அதே உணர்வின் அழுத்தத்தை இங்கே இயக்கும் போது அந்த விமானங்களையும் இராக்கெட்டுகளையும் திசை மாற்றுகின்றனர்.

இதே போல் தான் மனிதனுக்குள் விளைந்த (முதலிலே சொன்ன) உணர்வுகள் இதைப் போன்ற எண்ணங்கள் கொண்டு
1.தன்னுடைய எண்ணமே அது ரிமோட் ஆகி
2.யாரைப் பார்க்கின்றோமோ அந்த ஓட்டுநரையே திசை திருப்பச் செய்து விடுகிறது.

இதே போல் தான் நம்முடைய நண்பர்கள் என்று எண்ணும் போது… நட்பின் தன்மை கொண்டு “உதவி செய்தார்…” என்று மற்றொரு நண்பரிடம் புகழ் பாடும் போது அந்த உணர்வுகள் அங்கே விக்கலாகி அவருடைய குடும்பங்களோ தொழிலோ நலமாகின்றது.

ஆனால் பகைமை உணர்வு கொண்டு “எனக்குத் துரோகம் செய்தான் பாவி…” என்று எண்ணி விட்டால்… ஒரு காரையே அந்தச் சமயம் ஓட்டிக் கொண்டிருந்தால் அல்லது வியாபாரம் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தால் அல்லது அதனின் பலன்களை எண்ணிப் பார்க்கும் பொழுது அந்த நேரத்தில் பார்த்தால் புரையோடும்.

புரை என்றால்… எனக்குத் துரோகம் செய்தவன் எங்கே சென்றாலும் உருப்பட மாட்டான்…! என்ற இந்த உணர்வுகளைச் சொல்லும் போது அவர் உடலில் பதிந்தது ரிமோட் செய்து அந்த வியாபாரத்தையே தடை செய்துவிடும்.

அதே சமயத்தில் தான் ரோட்டில் செல்லும் போது தான் இதைப் போல் புரையோடினால் சிந்தனை குறையப்பட்டு வாகனங்களை அது திசை திருப்ப அது ஒரு நொடி கவனம் மாறினாலும் மரத்திலோ அல்லது எதிரில் செல்லும் ஒரு மனிதன் மீது மோதி விபத்துக்குள்ளாக்கும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் பதிவு செய்த உணர்வுகள் நம்மை இப்படியெல்லாம் ரிமோட் செய்து கொண்டிருக்கும்.
1.இது இயற்கையின் நிலைகள் (தவறில்லாது இயக்குகிறது)
2,இதை விதி என்றும் சொல்லலாம்.

ஏனெனன்றால் பதிவு செய்த அந்த உணர்வின் தன்மை வலு கொண்டது.

உதாரணமாக தாய் கருவிலே விளையப்படும் போது கருவின் சிசுவிலே இதைப் போன்ற உணர்வு பதிவானால் எந்த வயதில் அவர்கள் விபத்துக்குள்ளானார்களோ அதே உணர்வு பதிவாக்கப்படும் பொழுது அதே உணர்வுகள் அந்த உணர்வு வரப்படும் பொழுது அந்தக் கால நிலையில் இப்படி ரிமோட் செய்துவிடும்… விபத்தாகிவிடும்.

நாம் தவறு செய்யாமலே…
1.தாய் கருவில் இருக்கப்படும் பொழுதே இத்தகைய பதிவுகள் ஆகி விட்டால்
2.நம்மை அறியாமலே இது இயக்கி… விபத்துக்களும் பல தீமைகளும் உருவாகும் சந்தர்ப்பமாகிவிடுகிறது.

உயிரின் இயக்கம் எலெக்ட்ரிக் என்றாலும் நுகர்ந்ததை எலெக்ட்ரானிக்காக அந்த உணர்ச்சியாக இயக்கிவிடுகிறது. எலும்புகளில் உள்ள ஊனில் பதிவாக்கி விடுகிறது.

அதனின் விளைவுகளாகத் தான் இயக்கமாகிறது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு தீமையின் விளைவுகளிலிருந்து தப்ப அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அவ்வப் பொழுது (விபத்தாகும் போதும் எதிர்பாராத இயக்கங்கள் நடை பெறும் போதும்) ஆத்ம சுத்தி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

முன் ஜென்ம வாழ்க்கை என்று ஒன்று உண்டா…? – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகில் சில இடங்களில் சில ஆத்மாக்கள் குழந்தைப் பிராயத்திலேயே அதன் வயதுக்கு ஒவ்வாத நிலையில் சில நிலைகளை ஞானோதயம் பெற்று “வயதுக்கு மீறிய செயல்கள் செய்கிறது…” என்றால் அது எந்த நிலையில்…?

அவ்வாத்மாவின் ஒளி அலைகள்…
1.அதனுடைய முன் ஜென்மத்தில் சில மகான்களின் தொடர்புடன் வாழ்ந்திருந்து
2.அவர்களின் எண்ணத்திலேயே ஆத்மா பிரிந்து…
3.மறு ஜென்மத்திற்கு வரும் பொழுது தான் இத்தகைய நிகழ்வுகள் வருகிறது.

ஒவ்வோர் உடலுக்குள்ளும் பல அணுக்கள் உள்ளன… பல ஆவிகளும் உடலில் ஏறிக் கொண்டுள்ளன…! என்று ஏற்கனவே உணர்த்தியுள்ளோம்.

அந்த மகானானவர் அவர் வாழ்ந்து ஞானம் பெற்று சக்தியின் நிலையில் ஒளியுடன் கலக்கப் பெறும் பொழுது அவர் உடலுடன் உள்ள நிலையிலேயே அவர் எடுத்த ஜெபத்தினால் அவ்வுடலில் இருந்த மற்ற ஆவிகளும் அணுக்களும் (பல கோடி எண்ண அணுக்கள்) அவரின் ஞானத்தினால் இவைகளும் நல்ல நிலை எய்துகிறது.

மகான் உடலைவிட்டுச் செயல்படும் நிலையிலேயே இவ்வுடலில் தங்கிய இவ்வாவிகளுக்கும் அவற்றின் எண்ணமெல்லாம் நீங்கி இம் மகானுடன் அவர் உடலில் சாடியதின் பயனால் அவர் பெற்று ஏற்றிய ஞானத்தின் ஒளியில் பங்கு பெறுகிறது.

அடுத்து மறு ஜென்மத்திற்கு வந்து வாழும் நிலையில்…
1.அந்த மகானுடன் (மகான் உடலில்) ஒன்றியதினால்
2.அவ்வொளி அலையை ஈர்க்கும் அமில குணமுடன் இச்சிசு பிறப்பில் வாழும் பொழுது
3.அம்மகானின் சக்தி அலை இச்சிசுவின் மேல் பாய்ந்து பல அபூர்வ நிலையெல்லாம்
4.வயதிற்கு மீறிய செயலாக இன்றளவும் நடந்து வருகின்றது.

திருஞானசம்பந்தரின் மொழி அமுதை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது இந்த நிலையில்தான்.

இன்று மட்டுமல்ல பல கால கட்டங்களாய் சில சில இடங்களில் இப்படி வியக்கத்தகும் நிலைகள் நடந்து வருகின்றன. இதன் வட்ட ஒளியிலேயே ஞானம் பெற்று செயல்பட்டால் மீண்டும் மீண்டும் சக்தி நிலை பெருகிப் பல நிலைகளைச் செயலாக்கிடலாம்.

பெற்ற பயனைப் பொருளாக்கும்… புகழுக்கும்… விரயப்படுத்தி விட்டால் ஞான சக்தியின் வலு குன்றிவிடுகின்றது.

திருவையாறு தியாகராஜரின் நிலை இந்த நிலையில் வந்தது தான்…!

அவர் தன் உடலை விட்டுப் பிரியும் நாள் வரை அச்சங்கீத ஞானத்துடனே ஐக்கியப்பட்டு தான் அடைந்த ஞானத்தின் பொக்கிஷத்தை இம்மியளவும் சிதறவிடாமல் செயல் கொண்டதினால் நல் ஒளி பெற்றார்.

இந்த நிலை தெய்வீக நிலையில் மட்டும் ஏற்படுகின்றதா…? மற்ற நிலைகளில் இல்லையா…,? என்ற வினா எழும்பலாம்.

இன்று உலகத்தில் பல பாகங்களில் தன் பூர்வ ஜென்மத்தில் இந்த இந்த இடத்தில் வாழ்ந்ததாகவும்…
1.இவர் தான் என் தாய்… இவர் தான் என் தந்தை…! என்று சொந்தபந்தங்கள் உணர்த்தியும்
2.தன் முந்தைய நாமகரணத்தையும் சொந்தபந்தங்களின் நாமகரணத்தையும் மற்ற எல்லாக் குறிப்புக்களையும்
3.மறு ஜென்மம் எய்திய பிறகும் முன் ஜென்மத்தில் நடந்த இடத்தை உணர்த்துகின்றார்கள்.

இது எல்லாம் எந்த நிலையில்…?

ஓர் ஆத்மா வாழுகின்றது. அது வாழும் நிலையில் இன்று பேய் பிடித்து விட்டது. பிசாசு பிடித்து விட்டது என்றெல்லாம் சிலரைச் செப்புகின்றனர்.

எந்தப் பேயும் யாரையும் பிடிப்பதில்லை. ஆனால் இம்மனித ஆத்மாவின் எண்ணச் சிதறலினால் அந்த அந்தந்த எண்ண நிலைக்கொப்ப ஆவி உலக ஆத்மாக்கள் அதன் எண்ணத்தை ஈடேற்றச் சில உடல்களில் ஏறுகின்றன.

உடலில் ஏறிய எந்த ஆத்மாவுமே அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மா பிரிந்த பிறகுதான் இவ்வாவி ஆத்மாவும் வெளியேற முடிகின்றது.

“ஓர் உடலில் இப்படி ஏறிய ஆவி ஆத்மாவானது…”
1.அந்த உடலுக்குச் சொந்தமான ஆத்மாவைக் காட்டிலும்
2.சக்தியுடையதாய் ஏறிச் சில செயல்களைப் புரிவதினால்தான் சிலர் (சில உடல் ஆத்மாக்கள்)
3.தன் நிலை பெற முடிந்து தன் எண்ணத்தைக் கொண்டு வாழ்ந்திட முடியாமல்
4.ஆவி ஆத்மாவின் செயலிலேயே வாழ்வதினால்தான் “பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்து விட்டது…” என்கின்றனர்.

இப்படி வீரிய சக்தி கொண்ட ஆவி ஆத்மாக்கள் ஏறிய உடல் ஆத்மாக்கள் நீண்ட நாளும் வாழ்வதில்லை. அகால மரணம் எய்துகின்றனர்… தன் நிலை மறந்து…!

அந்த நிலையிலேயே அவ்வுடலில் இருந்து உடலுக்குச் சொந்தமான ஆத்மாவும்… உடலில் ஏறிய ஆவி ஆத்மாவும்… பிரிந்து செல்கின்றது.

ஆனால் அந் உடலில் ஏறிய ஆவி ஆத்மாவிற்குத் தன் செயலைச் செயல்படுத்த மற்றோர் உடலில் ஏறியதினால்…
1.தன் முந்தைய நிலையும் மறந்து
2.எந்த உடலில் ஏறிச் செயல் கொண்டதோ அவ் உடலின் சொந்த பந்தங்களுடன் தன் எண்ணமும் செயல்பட்டதினால்
3.இவ்வுடலுக்குச் சொந்தமான சொந்த பந்தங்களும் வாழ்ந்த இடங்களையும் தனதாக ஒன்றிவிடுகின்றது.

பொதுவாக… உடலை விட்டுப் பிரிந்த எந்த ஆத்மாவானாலும் சரி உடனே பிறப்பிற்கு வருவதில்லை. தன் உதிரத் தொடர்புடைய தாய் தந்தையர் மக்கள் இவர்கள் உள்ளவரை பிறப்பிற்கு வருவதில்லை.

அப்படி இருக்க… இந்தக் குறுகிய காலத்தில் பிறப்பெய்தி இவர்கள்தான் என் தாய் தந்தையார் சுற்றத்தார்…! என்றெல்லாம் முன் ஜென்மத்தின் நிலையை உணர்த்துகிறது என்றால்
1.இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவானது தாயின் கரு நிலைக்கு வந்தவுடன் அதன் இரண்டு நிலைகொண்டு
2.இரண்டு நிலையென்பது அதன் முன் ஜென்ம நிலையும் ஆவியாக மற்ற உடலில் சாடியதின் நிலையும் கொண்டு கர்ப்பத்திற்கு வந்தவுடன்
3.இவ்வாத்மாக்களுக்கு பன்னிரண்டு வகையான அமிலத்தை ஈர்க்கும் குணமுடைய சக்தியைக் காட்டிலும்
4.மற்றோர் உடலில் ஏறி வெளிப்பட்டதின் நிலையினால் தாயின் கருவில் அதன் நிலையும் மறக்கப் பெற்று
5.பிறப்பிற்கு வந்த பிறகு அது எடுக்கும் சுவாசத்தினால்
6.எண்ண நினைவுகள் எல்லாம் நினைவில் சாடும் பருவத்திலேயே
7.அதன் பேசி உறவாடும் கால கட்டத்தில்
8.அவை ஏறிய உடலாத்மாவின் சொந்த பந்தங்கள்… வாழ்ந்த நினைவலைகள்… எல்லாம் இவ்வாத்மா செப்புகின்றது.

மற்றோர் உடலில் குடியேறித் தன் முந்தைய ஆவி நிலையை மறந்து அவ்வுடலின் எண்ணத்தில் வாழ்ந்து செயல்பட்ட ஆவிகளினால்தான் இப்படி முந்தைய ஜென்மத்தைச் செப்ப முடியும்.

ஆனால் இவற்றிலேயே எல்லா ஆவிகளும் இப்படி மற்ற உடலில் ஏறிய பிறகு ஜென்மத்திற்கு வர முடியாது.

நல்ல ஆத்மாவின் எண்ணமுடன் ஏறிச் செயல்பட்ட ஆத்மாக்களுக்குத்தான் இப்படிப் பிறப்பெடுக்கும் நிலை பாக்கியமும் வருகின்றது.

ஆனால் முந்தைய ஜென்ம வாழ்க்கையை உணர்த்தி வாழும் ஆத்மாக்களும் நீண்ட நாட்கள் வாழ்ந்திடாது…!

பனை மரத்தில் பேய் இருக்கிறது…! என்ற எண்ணம் எப்படி உருவாகிறது…?

 

ஒரு சமயம் குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். பனை மரம் ஒன்று இருந்தது. அந்தப் பனை மரத்தில் ஒரு கோடைப் போடச் சொன்னார்… போட்டேன்…!

இராத்திரி இந்தப் பனை மரத்தில் ஒரு இராட்சசன் வந்தான்.. ஆகையினால் இந்த வழியாகப் போகும் பொழுது பார்த்துப் போங்கள்…! என்று யாரிடமாவது சொல்லு என்றார்.

அதே மாதிரிச் சொன்னேன்.

இந்த எண்ணத்தைப் பதிவு செய்த பின் அதே எண்ணத்திலேயே அங்கே போகின்றார்கள்.
1.வெண்மையாகக் கோடு போட்டத்தைப் பார்த்ததும்
2.இவன் எண்ணத்திற்கு அது தெரியப்படும் பொழுது பளீர்… பளீர்…! என்று மின்ன ஆரம்பித்தது.
3.இராட்சசன் வருகின்றான்…! என்ற உணர்வு அவனுக்கு வருகிறது.

ஏனென்றால் இதே எண்ணத்தில் இறந்த ஆன்மாக்கள் இவனுக்குள் குவிக்கப்படுகின்றது. வந்ததும்… அது இவனுக்குள் வருவதாகவே அந்த நினைவு வருகின்றது.

அப்படி வந்ததும் இவனின் இதயங்கள் வேகமாகத் துடிக்கின்றது. உணர்ச்சி வேகங்கள் இரத்தநாளங்களில் ஆனவுடனே அது வெடித்து விடுகின்றது… அல்லது இதயத்தில் வெடித்து விடுகின்றது. இரத்தம் இரத்தமாகக் கக்குகின்றான்.

இப்படி அச்சுறுத்தும் நிலை வரும் பொழுது “பேயடித்து விட்டது..!” என்று சொல்கிறார்கள். அவன் இப்படிக் கிடக்கின்றான் என்றவுடன் அடுத்தாற்போல் அந்தப் பக்கம் யார் போனாலும் இதே பயம் வருகிறது.

1.ஏனென்றால் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள்
2.அதே நினைவு கொண்டு அதையே நமக்குள் உருவாக்குகின்றது.

இப்படித்தான் ஆலயங்களில் இந்தத் தெய்வம் அதைச் செய்யும் இதைச் செய்யும் என்றும் யாகங்கள் நடத்தி… அந்த உணர்வை நமக்குள் உருவாக்கி வைத்துள்ளார்கள். அந்த உணர்வின் நினைவு வரப்படும்போது அது தான் பக்தி என்று நாமும் எண்ணுகிறோம்.

சில தெய்வங்களுக்கு ஆட்டையும் கோழியையும் வெட்டி அதில் நைவைத்தியம் செய்து படைக்கின்றார்கள். இப்படிச் செய்தால் அந்தத் தெய்வம் நம்மைக் காப்பாற்றும்…! என்று நினைக்கின்றோம்.

இது போன்ற தெய்வங்களுக்கு என்று விசேஷமான வாத்திய இசைகள் உண்டு. உறுமி மேளம் அது போன்று மற்றதை வாசிப்பார்கள். அதையும் நமக்குள் பதிவு செய்து வைத்திருப்போம்.

பூஜைக்கு என்று எதை வெட்டி அங்கே படைத்துக் கொடுத்து விட்டு நாம் அதைச் சாப்பிடுகின்றோமோ அதன் உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் வளர்ந்தபின் நாம் இறந்தபின் என்ன நடக்கின்றது..?

அடுத்தாற்படி பூஜைக்கு வருபவர்கள்..
1.இந்த உறுமிக் கொட்டை மீண்டும் கொட்டியவுடனே… அதைக் கேட்டு அந்த உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.அவர்கள் உடலில் போய் இந்த ஆன்மாக்கள் சேர்ந்துவிடும்.

சேர்ந்த பின்… ஏன்டா எனக்கு இன்னும் ஆடு கொடுக்கவில்லை…? உன் குடும்பத்தை நான் பார்க்கின்றேன் பார்…! என்று அருளாடும்.

இது எல்லாம் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் தான்…!

ஏனென்றால் அதே உணர்வு கொண்டு இங்கே எண்ணி ஏங்கி வரப்படும்போது இந்த உடலுக்குள் அது புகுந்து விடுகிறது. அந்த அசுர குணங்கள் கொண்டே அது கேட்கும்.

ஆனால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்றால்…
1.அந்த மாடனுக்கு அதைச் செய்யவில்லை
2.அதனால் இந்த நிலை உருவானது என்று…!

இவை எல்லாம் அரசர் காலங்களில் “ரிக்கியர்கள்…” என்று சொல்வார்கள். மாட்டுக்கு ஒரு உணர்வும் பன்றி போன்ற மற்ற மிருகங்களுக்கு என்று அதனின் அசுர குணங்களும் உண்டு. அதைப் பலியிடுவார்கள்.

இதைப் போன்ற மிருக உணர்வுகளைச் சொல்லி (மந்திர ஒலி கொண்டு) அந்த உணர்வைத் தனக்குள் உருவாக்கப்பட்டு அந்த உணர்வின் மந்திரத்தை இதே மனிதனுக்குள் எடுக்கப்பட்டு இதே மாமிசத்தை அவனுக்குள் உணவாக உட்கொள்ளச் செய்வார்கள்.

இந்த உணர்வின் தன்மை பதிவானபின் அந்த அசுர குணங்கள் கொண்டு மனிதனே அசுரனாக மாறுகின்றான் இதனுடைய நிலைகளில்.

அக்கால அரசர்கள் தனக்குப் பாதுகாப்புக்காக இப்படி மாற்றப்பட்டு ஞானிகள் காட்டிய அருள் உண்மையின் உணர்வுகளை இவர்களுக்குச் சாதகமாக்கி தீமையின் விளைவாக உருவாக்கிக் கொண்டார்கள்.

அதர்வண என்று நல்ல குணங்களை அடக்கி எதிரி நாட்டு அரசனையோ அவன் நாட்டு மக்களையோ அடிமைப்படுத்தும் நிலைகள் கொண்டு வந்தார்கள்.

இதே அசுர உணர்வுதான் மக்கள் மத்தியிலும் சுழன்று கொண்டுள்ளது. இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் இவையெல்லாம் கடந்து போய்விட்டது. விஞ்ஞான அறிவு ஓங்கிவிட்டது. கதிரியக்கச் சக்திகள் அதிகமாகப் பரவியிருக்கின்றது.

சிந்தனை குறையும் நிலைகள் வந்துவிட்டது. மனிதனுக்குள் இருக்கும் நல்ல சிந்தனையே இழந்து மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் நிலை வந்துவிட்டது.

ஆனால் இதையெல்லாம் வென்று பழகியவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நமது மனதை நாம் கட்டுபடுத்துதல் வேண்டும்.
2.அதைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிட வேண்டும்.
3.எவர் இதைச் செய்கின்றனரோ அவரே பற்றற்ற நிலைகள் கொண்டு பிறவியில்லா நிலைகள் அடைகின்றார்.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைப் பெறுவோம் அருள் ஞானத்தைப் பெருக்குவோம்.

மனிதனான பின் தனக்குள் வரும் தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றும் பயிற்சியே பிரம்ம சூத்திரம்

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசம் செய்கின்றோம். பெரும்பகுதியான படித்தவர்கள் என்ன நினைக்கின்றார்கள்…? யாம் சொல்வதை சரியா தப்பா…! சரியா தப்பா…? சரியா தப்பா…? என்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

ஆனால் அந்த அளவுக்குப் படிப்பில்லாதவர்கள்
1.யாம் என்ன சொன்னாலும் அதைப் பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.
2.குருநாதர் சொன்னார் அல்லவா… இதை நாம் செய்து பார்ப்போமே…! என்று
3.அந்த உணர்வுகள் தூண்டும்போது அவர்கள் ஞானத்தைப் பெறுகின்றார்கள்.

படித்தவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

நான் மகாபாரதத்தைப் படித்தேன் கந்த புராணத்தை படித்தேன்… பிரம்ம சூத்திரத்தையும் படித்தேன். ஆனால் அதையெல்லாம் இங்கே சாமி (ஞானகுரு) சொல்லவில்லை.

ஆக அவர்கள் படித்ததைப் பதிவு செய்து கொள்வார்கள். ஆனால் இங்கே யாம் சொல்லும் ஞானத்தின் நிலைகள்
1.அந்த அருள் ஞானிகள் பெற்றதைச் சொல்லும்போது இந்தச் சூத்திரத்தை விட்டுவிடுவார்கள்.
2.காலி செய்து கொண்டே இருப்பார்கள்…
3.தான் பதிவும் ஆக்க முடியாது. அதைப் பெறவும் முடியாது.

அவர்கள் படித்த பிரம்ம சூத்திரத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் மனு நீதி சாஸ்திரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1.மனிதனான பின் இந்த தீமைகளை அகற்றுவது எப்படி…?
2.தீமையை அகற்றியவன் யார்…?
3.தீமையை அகற்றிய உணர்வுகளை நாம் எப்படி எடுப்பது…? என்று
4.இந்த மனு நீதி சாஸ்திரத்தில் இது உண்டு.

மனுஷாள்…! என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அந்தச் சாஸ்திரத்தை தெளிவாக்கும் நிலைகள் இல்லை.

மனு நீதி சாஸ்திரத்தை நான் படித்து இருக்கின்றேன்… இவர் சொல்வது எங்கே இருக்கின்றது…? காணவில்லையே…! இந்த நிலைகள் தான் படித்தவர்களுக்கு எண்ணமாக வரும்.

மகாபாரதத்தைப் படிக்கும்போது படித்த நிலைகள்… அந்தப் படித்தது மட்டும் தான் இருக்கும். குருநாதர் சொல்வதை அதிலே காணோமே…! என்பார்கள்.

உதாரணமாக கேரளாவில் மொக்கை அரிசியைச் சாப்பிடுகின்றார்கள். அதனின் ருசி வேறாக இருக்கின்றது. இங்கே நாம் பொன்னி அரிசியைப் போட்டுச் சாப்பிட்டோம் என்றால் அந்த ருசி வேறு இருக்கும்.
1.அந்த ருசியை இதிலே காணோமே… என்பது போன்று
2.அந்தப் படித்த உணர்வுகள் எதுவோ அதே தான் வரும்.

நம்மிடம் மொக்கை அரிசியைச் சாப்பிடச் சொன்னால் பார்த்தவுடனே பொன்னி அரிசியின் ருசி அதில் வரவில்லையே என்று தான் சொல்வோம்.

ஏனென்றால் அந்தந்த உணர்வின் சுவை எதுவோ அதனால் வளர்ந்த அணுக்களும் அதே போல் தான் உணர்வினை இயக்கும். ஆக மதங்கள் ஆனாலும் இனங்கள் ஆனாலும்
1.எதன் மேல் பற்று வைத்து நாம் பதிந்து கொண்டோமோ
2.அதன் சுவை தான் அவர்களுக்கு ரசிப்பாக இருக்கும்.

நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் ஞானியின் உணர்வை நாம் பெற வேண்டும். இருள் சூழா நிலைகள் கொண்டு நம்மை எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்று இங்கே யாம் கொடுக்கும் உபதேசங்களைப் பதிவாக்கிக் கொண்டால் அதன் சாரமாக நமக்குள் அருள் ஞானியரின் உணர்வைப் பெருக்கி நமக்குள் அறியாது வரும் தீமைகளை மாற்ற முடியும்.

படித்ததை வைத்து நாம் தெளிவாக்க வேண்டுமென்றால்…
1.படித்தது பாதைகளை அறிவதற்கு உதவும்.
2.ஞானத்தின் நிலைகள் வளர்வதற்கு அருள் ஞானியின் உணர்வைப் பெறுதல் வேண்டும்.
3.ஞானத்தை வைத்துத்தான் படித்த கல்வியின் நிலைகள் ஞானத்தில் கொண்டு செல்ல முடியும்.

கல்வி உடலின் உணர்வுக்குதான் உதவுமே தவிர… உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை வளர்க்கும் ஞானத்திற்கு இது உதவாது.

நமக்கு நற்பாதையை காட்டுவதற்குத்தான் கல்வி. அந்தக் கல்வியை நாம் சீராக எண்ணி
1.அந்த அருள் ஞானியின் உணர்வுடன் ஒன்றிப் பார்த்தால்
2.இன்றைய விஞ்ஞான உணர்வின் தீமையான விளைவுகளை மாற்றியமைக்கலாம்.

ஒளியுடன் ஒளி சேரின் ஒளிருமே.. அறு குண நிலையுடன் உயருமாம் ஆன்மா…! – ஈஸ்வரபட்டர்

 

உயிரணு உதித்து உயிராத்மாவாய் ஆத்ம சக்தியை அவ் உயிரணு சேமிக்கும் நிலையிலேயே உயிரணுவின் ஆரம்ப உறுப்பாய் இக்கவன நரம்பின் செயல்தான் முதலில் தாயின் வயிற்றில் உதிக்கிறது.

1.அதுவே… உயிரணுவிற்குச் செயல் கருவியாய்
2.அது ஈர்க்கும் அமில குணமான ஆத்மா என்ற ஆவி அமிலம் திடப்பட்டு
3.அதன் தொடர்ச்சியில் இருந்துதான் ஒவ்வோர் உறுப்புகளும் உருக்கொள்கின்றது.

மனித ஆத்மாவுக்குகந்த பன்னிரண்டு வகையான குண அமிலத்தையும் ஈர்க்கவல்ல சக்தியாய் இக்கவன நரம்பு ஆரம்ப கட்டத்திலிருந்தே செயல் கொள்கின்றது.

சாதாரண மனித ஆத்மாக்கள் இதன் தொடர்ச்சி வட்டத்தில் எக்குண அமில சகக்தியை அதிகப்படியாக ஈர்த்துப் பழக்கப்படுத்தி வாழ்ந்தனவோ அதே தொடர் நிலையில் வாழ் நாள் முழுவதும் வாழ்கின்றன.

வாழ் நாள் முடிந்த பிறகும் ஆவி உலகிலும் மறு ஜென்மத்திலும் இதன் தொடரில் இருந்து மாறுபடுவதில்லை.

ஆனால் இப்பன்னிரண்டு வகையான அமில வட்டத்தில் வாழும் மனிதன்… தன் நிலை உணர்ந்து… சம நிலை பெற்று…
1.இங்கே உணர்த்தும் ஞான மார்க்கத்தின் தொடர் நிலை எய்துங்கால்
2.இப்பன்னிரண்டு வகையான குண அமிலத்திற்கும் அப்பாற்பட்ட
3.உயர்ந்த குண அமிலமான ஞான அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால்
4.அதன் தொடரினால் ஒவ்வோர் ஆத்மாவும் இவ்வுலகினில் நம்முள் கலந்துள்ள
5.தீய சக்தி எது…? நற்சக்தி எது…? என்ற பாகுபாட்டை அறியலாம்.

ஒருவரைக் காணும் பொழுதே அவரின்ம் குண நிலையையும்… அவர் எவ்வெண்ணமுடன் நம்மை நாடுகிறார்…? என்ற செயலையும் “அவர் சுவாசமுடன் நம் சுவாசம் மோதும் நிலையிலேயே…” அவரது எண்ண நிலையை நாம் அறியலாம்.

ஆனாலும் இந்த ஞானத்தொடர் வழி பெற்றுத் தெய்வத்துடன் ஐக்கியமாகி தெய்வமாகிப் பேரானந்தம் அடையலாம்…! என்ற ஆசையில் செயல்பட்டால் அது கொடிய விஷத் தன்மையுடைய நான் என்னும் அகந்தையில் செல்லும் மார்க்கம்.

நாம் பிறந்த பூமியில் நம்முடன் கலந்துள்ள ஜீவ ஆத்மாக்களின் நிலையிலிருந்து ஒதுங்கி… “தான் மட்டும்…” ஆண்டவனாகச் செல்லும் ஞான மார்க்கம் உகந்த மார்க்கமல்ல.

நம்முடன் கலந்துள்ளவர்களின் விரோதத்தையும் கோபத்தையும் சாடி வாழ்ந்து… பொருளாசையில் தனக்கே சொந்தமாகப் பொருள் பெற்று… “நான் என்ற வட்டத்தில் வாழ்வதினால் நம் ஆத்மாவிற்கு என்ன பயன்…?”

1.நம்முடன் கலந்துள்ள ஜீவ ஆத்மாக்களுக்கு அன்பு என்ற கலசத்தை ஏற்றிக் கலந்து வாழ்ந்து…
2.நாம் பிறந்ததின் நலனை உணர்ந்து…
3.நாம் அறிந்த இந்த உண்மையின் ஞானத்தைப் பலருக்குப் போதித்து
4.வாழும் இக்குறுகிய வாழ் நாட்களில் அன்பின் அடிப்படையில் வாழும் பக்குவத்தையும்
5.நம் சக்தியைக் கொண்டு சேமிக்கும் பொருளினால்
6.பல ஜீவன்களையும் வாழ வைக்கும் முறையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.

நமக்கு உள்ள பொருளை எடுத்து அடுத்தவர்களுக்குத் தானமளித்து அவர்களைச் சோம்பேறி நிலைப்படுத்திடச் செப்பவில்லை.

ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் தனக்குகந்த செயல் புரிந்து தான் ஜீவிதம் கொள்ள வேண்டும். அதன் வழித் தொடருக்குப் பொருளிடுங்கள். அங்கவீனமுற்ற ஆத்மாக்களுக்கு ஜீவிதம் செய்திடப் பொருள் அளித்திடலாம்.

பட்சிகளோ மற்ற மிருக இனங்களோ தனக்கு வேண்டிய உணவை எப்படித் தானாகச் சம்பாதித்துக் கொள்கிறதோ அதைப் போன்ற பக்குவ ஆத்மாக்கள் மனித ஆத்மாவில் குறைவு.

பன்னிரண்டு வகையான குண அமிலத்தைப் பெற்ற மனித ஆத்மாதான் இன்று தன் நிலை உணராமல் வாழ்கின்றான். மிருக இனங்கள் மனிதனைக் காட்டிலும் இன்று உயர்ந்ததாகிவிட்டது.

1.நாம் நம் நிலையை (தன் நிலை) உணரும் பக்குவம் பெற்ற பிறகு
2.ஞானத் தொடரின் ஓளியை ஈர்க்கும் குண நிலை கொண்ட பிறகு
3.ஞானத்தின் வட்டத்திலுள்ள பல ஒளி ஞானிகள் (மகரிஷிகள்) எல்லாம் நமக்கு உதவுவர்.

ஆரம்ப நாளிலேயே ஏன் அவர்கள் நம்மை ஏற்கவில்லை…? என்ற வினா எழும்பலாம்.

நம் ஆத்மாவைக் கொண்டு நாம் பெறும் சக்தியின் ஞான ஈர்ப்பில் “நம் செயல் சென்ற பிறகுதான்…” அச் செயலின் ஒளியும் நம்முடன் கலக்குமே அன்றி
1.அவர்கள் சக்தியை எல்லாம் தீய ஆத்மாக்களின் வட்டத்தில் செலுத்தி விட்டால் அவர்கள் பெற்ற சக்தியும் குறைந்துவிடும்.
2.குறைந்துவிடும் என்பது மட்டுமல்ல வீண் விரயப்பட்டுவிடும்…!

இதனை உணர்ந்துதான் சில கால கட்டங்களில் இத்தியான மார்க்கத்தை ஈர்த்து ஞானத்தின் வழிபெறும் ஆத்மாக்களின் நிலையுடன் இவ்வுலகிற்குத் தன் ஒளியை எப்படி எப்படி எல்லாம் பரப்பிடலாம்..? என்ற ஆர்வத் துடிப்புடன்… இன்று நாம் எப்படிப் பல சித்தர்களின் நிலையை உணருகின்றோமோ அதைப் போன்று பல காலமாய் இச்செயல் நிலைகள் நடந்து வந்தன.

1.தானாக எந்த நிலையும் செயல் கொள்ளாது…!
2.ஒளியுடன் நல்லொளியாய்க் கலக்கத்தான் செய்யுமே ஒழிய வீண் விரயப்படுத்திச் செயல்படாது.

ஞானிகளின் வழித் தொடரை நாம் ஒவ்வொருவரும் அவசியம் பெற வேண்டும்

 

உதாரணமாக ஒரு மனிதன் மிகவும் பயந்த நிலைகள் கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனின் உடலில் விளைந்த உணர்வுகள் “ஐயோ… பயமாக இருக்கின்றது… பூதம் வருகின்றது…” என்று நாம் கற்பித்த உணர்வின் தன்மை கொண்டு (விளையாட்டாகப் பேய் பிசாசு ஆவி என்று சொல்கிறோம் அல்லவா…!) அவன் ஏற்றுக் கொண்ட உணர்வுகள் அந்த அலைகளாகப் படர்ந்து அவனுக்குள் விளைந்து விடுகின்றது.

தான் கற்பனையாகச் செய்து கொண்ட “பூதகணங்கள்…” இவ்வாறு இருக்கிறது என்ற அச்சத்தால் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மை இவனுக்குள் விளைந்த பின் அவன் வெளியிட்ட இந்த அலைகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.

அதே சமயத்ததில் இவனைப் போலவே இன்னொரு மனிதன் அச்சப்படுவான் என்றால்
1.ஏற்கனவே முதல் மனிதன் பயந்த உணர்வுகள் வெளிப்படுத்தியதை
2.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அந்த அச்ச அலைகளை இவன் நுகர நேருகின்றது.

நுகர்ந்த பின்… “பூதம் வருகின்றது… இதோ பேய் வருகிறது…! என்று சொல்ல ஆரம்பிப்பான். நமக்குத் தெரியாது ஆனால் அவர்களுக்குத் தெரியும்.

என்னென்ன உணர்வு கொண்டு அதைப் பிரித்தார்களோ அந்தந்த உணர்வு கொண்டு பூதம் வருகின்றது… ஐயோ… ஐயோ… என்னை நசுக்க வருகின்றது…” என்னைப் பிடிக்க வருகின்றது…! என்று சொல்வதை நாம் கேட்கலாம்.

ஒரு மனிதனில் விளைந்த உணர்வுகள்… அவன் எதைக் கொண்டு எதனை அஞ்சிடும் உணர்வு கொண்டு எண்ணினானோ… அவனின் உணர்வுகளுக்குள் விளைந்ததோ அவனில் விளைந்த உணர்வின் அலைகள் வெளியே வரப்படும்போது சூரியனின் காந்த சக்தியால் அது கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படித்தான் நாம் நுகரும் ஒவ்வொருவரும் உணர்வும் நம்மை இயக்கிக் கொண்டுள்ளது.

இது எல்லாம் ஞானிகள் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகள்…!

1.நல்லது… கெட்டது… என்ற நிலைகளில் சூட்சும நிலைகளில் உலகில் எது எப்படி இயக்குகின்றது….?
2.நுகர்ந்த அறிவாகத் தனக்குள் வந்தபின் உடலில் அது எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துள்ளார்கள் மகரிஷிகள்.

இயற்கையில் மனிதனாக உருவாவதற்கும் மற்ற உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் எப்படி உருவானது…? என்ற நிலையையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்கள் அந்த “மகரிஷிகள்…”

மகரிஷிகளிலே அகஸ்தியன் தான் முதன்மை பெற்றவன். அவன் கண்டுணர்ந்த உணர்வு தான் மெய் (ஞான) உலகிற்கு இன்றும் வழி காட்டிக் கொண்டுள்ளது.

அவன் வழியினைப் பின்பற்றிய மெய் ஞானிகள் காட்டிய உணர்வுகள் அனைத்தும் மனிதனுக்குள் உணர்வலைகளாகப் படர்ந்து படர்ந்து… அது பரவிக் கிடப்பதைத் தான் எழுத்தறிவு என்று வரப்படும்போது விண்ணுலக ஆற்றலை வான இயல் சாஸ்திரம் என்று கொண்டு வருகின்றார்கள்.

இன்னென்ன இடத்தில் சூரியன் இருக்கின்றது… வியாழனும் மற்ற கோள்களும் இருக்கின்றது… என்ற நிலையும் அதனின் திசைகளையும் அதனின் ஓட்ட நிலைகளையும் அதனின் ஓட்டப் பாதைகளையும் அதனுடைய பாதையின் திசைகளையும் அன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகஸ்தியன் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியுள்ளான்.

அவனில் வெளிப்பட்டதைப் பின் வந்த வியாசகன் தன் உணர்வின் ஆற்றலால் அதைக் கண்டுணர்கின்றான். அகஸ்தியன் கண்டுணர்ந்த கோள்கள் எதுவோ…
1.அவனுக்குள் படமெடுத்த உணர்வுகள் எண்ண அலைகளாகப் பரப்பியதையும்
2.அவனின்று வெளிப்பட்ட உணர்வுகளயும் வியாசகனால் அது சந்தர்ப்பத்தால் கண்டுணர முடிகின்றது.

ஏனென்றால் இதை எல்லாம் நம் தத்துவ ஞானிகள் சந்தர்ப்பத்தால் இதை பெறுகின்றனர். ஆகவே வியாசகன் அவனுக்குள் எதை விளைய வைத்தானோ அந்த உணர்வின் அணு செல்கள் வரப்படும்போது அது மற்றொரு உடலுக்குள் வரும்போது அதுவே வரும்.

ஆகவே ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அந்த உணர்வினை நாம் நுகர்ந்தால் நம்மையும் அது ஞானியாக மாற்றும். ஞானியாக நீங்கள் மாற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும் அதன் சக்தியை ஈர்க்கும் நிலை எங்குள்ளது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.நெற்றியின் மையத்தில் மஞ்சளும் குங்குமமும் தரித்து
2.ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்த இடமாக எண்ணி
3.நம் நெற்றியில் திலகமோ திருநீறோ இட்டுக் கொள்கின்றோமே
4.அங்குதான் உள்ளது மனிதனை இயக்கும் ஜீவத் துடிப்புள்ள கவன நரம்பு.

மனிதனின் எண்ணத்தைச் செயல்படுத்தும் முக்கிய இடம் அக்கவன நரம்புதான்…!

ஒவ்வொரு மனிதனின் அக்கவன நரம்பு செய்யும் செயல் கொண்டுதான் அம் மனிதனின் உடல் நிலையும் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

கவன நரம்பிலுள்ள ஈர்க்கும் பணி…
1.நாமெடுக்கும் சுவாசமுடன் நம் உயிர் சக்திக்கு ஈர்த்து
2.அவ்வுயிர்த் துடிப்புடன் இக்கவன நரம்பு அதனை ஈர்த்து
3.நம் மண்டையின் பின் பாகத்திலுள்ள சிறு மூளையில் மோதச் செய்து
4.அதன் வழித்தொடரில் இருந்துதான் உடல் உறுப்புகள் அனைத்திற்குமே செயல் நிலை ஏற்படுகின்றது.

இக்கவன நரம்பு பாதிக்கப்பட்டாலோ… பின்னப்பட்டாலோ… உடல் உறுப்புகளின் நிலையும் சரி… நம் உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானாலும் சரி.. “அதன் வழித்தொடர் நிலையைச் செயல்படுத்திட முடியாது…!”

“இதயத்தில்தான் இவ்வுடலுக்குகந்த நிலை உள்ளது…” என்று நம்முடன் கலந்த ஆத்மாக்கள் நம்பி வந்தனர்.
1.மாற்று இதயம் இணைக்கப் பெற்று வாழும் மனிதர்கள்
2.பெறப்பட்ட இதய எண்ணமுடனா வாழ்கின்றனர்…?

இதயத்தையே இயக்கும் செயல் இக்கவன நரம்பின் மூலமாய் ஈர்க்கப் பெற்று சிறு மூளையின் வழித்தொடரினால் செயல்படுகின்றது.

இவ்வுடலிலுள்ள எந்தப் பாகத்தையும் இவர்களினால் மாற்று உறுப்புகளைப் பொருந்தி உயிர் வாழ வைத்திட முடிந்திடும்.

ஆனால் இந்த நெற்றியில் உள்ள கவன் நரம்பிற்கு மேல் ஏற்படும் பின்னத்திலிருந்து பைத்தியம் பிடித்த ஆத்மாவையோ கவன நரம்பில் அடிபட்டு அதனால் அதன் நினைவிழந்த ஆத்மாவையோ சரிப்படுத்துவது முடியாத காரியம்.

நம் தலையில் உள்ள பெருமூளையை மாற்றி அமைத்தாலும் கூட நம் எண்ணமும் மாறாது செயலும் அதே நிலையில்தான் இருந்திடும். ஆனால்…
1.இக்கவன நரம்போ… இக்கவன நரம்பை ஈர்த்துச் சிறு மூளையின் உதவி கொண்டு
2.இவ்வுடலையும் ஆத்மாவையும் வளர்க்கும் இதில் பின்னப்பட்டால்
3.தன் நிலையில் எவ்வாத்மாவும் வாழ்ந்திட முடியாது.

உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தின் துரித நிலை அதிகப்பட்ட ஆத்மா… இக்கவன நரம்பின் தொடர் கொண்ட சிறு மூளைக்குச் செல்லும் நிலையில் வெடித்து விட்டால்தான்… “இதய வலியினால் இறந்து விட்டதாகச் சொல்கின்றோம்…”

இதயத்திலுள்ள எந்த நரம்புகள் பாதிக்கப்பட்டாலும் இன்றைய அறிவியல் மருத்துவரால் குணப்படுத்திடலாம். இதயத்திற்கும் இரத்த அழுத்த விகிதத்திற்கும் தொடர்பு கொண்டது இக்கவன நரம்புகள் சிறு மூளையும்தான்.

முதலில் செப்பியப்படி இவ்வுடலில் உள்ள எந்த உறுப்பையும் இன்றைய அறிவியல் மருத்துவ ஞானத்தினால் செய்விக்கும் செயல் திறமையுண்டு.

இக்கவன நரம்பை மட்டும் படைக்கப் பெற்றவன் இவ்வாத்ம சக்தியைத் தந்த ஆதி சக்தியின் செயல் சக்தியின் செயல்தான்.

இவ்வுடலில் எப்பாகங்கள் பின்னப்பட்டு ஆத்மா பிரிந்திருந்தால் கூட அவ்வுடலை ஏற்கச் சில சித்தர்கள் செயல்பட்டாலும்… கவன நரம்பும் சிறு மூளையும் பின்னப்படாமல் இருந்தால்தான் அவ்வுடலையும் சித்தர்கள் ஏற்பார்கள்.

ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்ததாகவும் நெற்றிக் கண்ணை வைத்துத்தான் உலகை ஆண்டதாகவும் புராணம் கூறுகின்றது. ஒவ்வோர் ஆத்மாவிற்குமே நெற்றிக்கண் உண்டு. நெற்றிக்கண்ணினால் தான் நம் விழிக்கு ஒளியைக் காணும் நிலை பெற முடிகின்றது.

1.கவன நரம்பைத்தான் நெற்றிக்கண்ணாகவும் ஞானக்கண்ணாகவும்
2.நம் முன்னோர்கள் புராணக்காலங்களில் இதனை உணர்ந்து அதற்கு உருவம் தந்து சிவனாக்கி
3.சிவனுக்கு நெற்றிக்கண்ணைப் படைத்து அன்றைய கால மனித ஆத்மாக்கள் புரிந்திடும் பக்குவத்தை ஊட்டினார்கள்.

புராணக் கதைகளில் அன்றே பல நிலைகளைப் புரியாத நிலையில் சூட்சுமமாக… ஆண்டவன் வாழ்ந்ததாகவும் அதற்குகந்த நிலைகளை உணர்த்த “ஆண்டவனையே கதையின் நாயகனாக்கி…” பல நிலைகள் சித்தர்களினால் கதைப்படுத்தி வழங்கப்பட்டன.

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் உள்ள உண்மை நிலைகள் மறைக்கப்படாமல் அதனை அவரவர்கள் எண்ணத்திற்குகந்து திரிக்கப்பட்டு சில நிலைகளை ஏற்றி இராவிட்டால் உண்மை நிலைகளை உணர்ந்திருக்கலாம்.

இராமாயணமும் மகாபாரதமும் உயர்ந்த பொக்கிஷமாய் அதிலுள்ள கருத்தாற்றலைக் கொண்டு பல நடைமுறை பொக்கிஷ நிலையெல்லாம் இன்று நாம் தவற விட்டு இருக்கும் நிலையை எய்தியிருக்க வேண்டியதில்லை.

1.அன்று போதிக்கப்பட்ட அரும் பெரும் பொக்கிஷமெல்லாம்
2.இன்று கேலிக்குரிய நடைமுறைச் செயலுக்குப் பொருள் என்ற வியாபார நிலைக்கு வந்துவிட்டது.

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் உகந்த உயர்ந்த ஞான சக்தியையும் நமக்குள்ள இக்கவன நரம்பு நல்ல நிலையில் செயல்படுங்கால்…
1.இக்கவன நரம்பின் துணையினாலேயே
2.ஒளியின் ஞானத்துடன் செல்லும் பேற்றை அடையலாம்…!

ஆண்டவனால் ஒருவருக்கு அதிக அறிவுத் திறனும் குறைந்த அறிவும் படைக்கப்படவில்லை – ஈஸ்வரபட்டர்

பன்னிரண்டு வகையான குண அமிலங்களைச் சேமித்துப் பக்குவ நிலை பெற்ற பிறகுதான் மனித ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை இப்பூமியில் ஆதி காலத்தில் மனித உயிர் ஆத்மா தோன்றிய நாட்களில் வழி பெற்றது.

அதன் தொடர் நிலையில் இன்று வரை அக்குண அமிலமே வலுக்கொண்ட சக்திகளாய் ஒவ்வொரு வகையான குண அமிலமும் வலுப்பெற்று வழி வந்துள்ளது.

இவை எந்த நிலையில்…?

நம் நிலையில் அறிவியல் வளர்ச்சி நிலை முந்தைய காலத்தைவிட இந்தக் காலத்தில் கூடி உள்ளது. எந்த நிலைகொண்டு இது கூடிற்று…?

பன்னிரண்டு வகையான அமில குணம் என்கின்றோம். இவற்றில் சரி பாதி நல் அறிவை ஈர்க்கும் சக்திகளும் தீய சக்தியை உடைய குண நலன்களையும் கொண்டவைதான்.

அறிவுத் திறமையில் இரண்டு வகையிலுமே இப்பன்னிரண்டு வகையான அமில குணங்கள் இன்றைய கலியில் வலுப்பெற்றுத்தான் உள்ளன.
1.ஒரு மனிதனுக்கு வேண்டப்படும் குணாதிசயங்களைத்தான்
2.இப்பன்னிரண்டு வகையான அமில சக்தி என்று உணர்த்தியுள்ளோம்.

இந்நிலையில்தான் எல்லா ஆத்மக்களுமே உள்ளனவா என்ற வினாவும் எழும்பலாம்.

ஆதியில் மனித உயிரணுவாய்த் தோன்றப் பெறும் தருவாயில் மனிதக் கருவிற்கு வரும் அனைத்து ஆத்மாக்களுமே ஒன்றைப் போன்ற குண நிலையைக் கொண்ட அமில சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில்தான் இம்மனித ஆத்மா பிறவிக்கு வருகின்றது.

அதிலிருந்து…
1.தனக்களிக்கப்பட்ட சக்தியை எக்குண நிலை கொண்ட அமிலத்தை அவ்வாத்மா வளர்ச்சி நிலை (வலு) ஏற்படுத்திக் கொண்டதோ
2.அதன் தொடரில்தான் அவ்வாத்மாவின் புத்தி எனப்படும் அறிவின் நிலை ஒவ்வொரு பிறவியிலும் வெளிப்படுகின்றது.
3.ஆண்டவனால் ஒருவருக்கு அதிக அறிவுத் திறனும் குறைந்த அறிவும் படைக்கப்படவில்லை.

அவ்வாத்மாவே அதனுடைய எண்ணத்தை எவ்வமிலத்தை முக்கியத்துவம் அளித்து வளர்க்கப் பழக்கிக் கொண்டதோ அதன் தொடர் சுற்றலில்தான் அன்பு பண்பு பாசம் ஆசை ஆனந்தம் பக்தி இப்படி ஒவ்வொரு குண நிலையும் சலிப்பு கோபம் குரோதம் காமம் வெறி வஞ்சனை இப்படிப்பட்ட நிலைகளையும் வளர்க்க நேர்கிறது.

இதிலே எதன் தொடர் நிலையில் எண்ணச் சுற்றல் அதிகமாக ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டோமோ அதன் குணப் பலனை வைத்து
1.அன்பானவன் பண்பானவன் நாணயஸ்தன் பக்திமான் தர்மவான் என்றும்
2.சங்கடம் கொண்டவன் கோபக்காரன் குரோதக்காரன் நயவஞ்சகன் வெறி உணர்வு கொண்டவன் காமுகன் என்றும்
3.நாமகரணம் பிறரினால் பெறப்படவில்லை…
4.அவ்வுடலின் வீரிய அமில குணத்தைக் கொண்டுதான் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நாமகரணம் சூட்டப்படுகின்றது.

இந்த மனித ஜென்மத்தில் பிறவி எடுக்கும் நாள் வரை ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பன்னிரண்டு வகையான அமில குண வகைகள் உண்டு.

மனிதனாய் உள்ள நிலையிலேயே இது நாள் வரை இக்குண அமிலத்தில் எந்த ஒன்றை அதிகப்பட்டுச் செயல்பட்டு வாழ்ந்திருந்தாலும்…
1.நாம் வாழ்ந்திடும் காலத்திலேயே இப்பன்னிரண்டு வகையான அமிலத்தில் உள்ள
2.ஆறு தீய குணங்களை எந்நிலையில் அதிகமாய் நம் எண்ணத்தை அதிகப்படுத்தி வளர்த்துக் கொண்டிருந்தாலும்
3.இவ்வாழும் பக்குவத்தில் நம்மை நாம் உணர்ந்து தியானம் என்ற முறைப்படி நற்சக்திகளைப் பெற
4.நம் உயிராத்மாவுக்குள் உள்ள உயிரான ஈசனின் சக்தியைக் கொண்டு
5.நமக்குகந்த நல்ல குணங்களுடைய மறு பாதையில் உள்ள நற்குணங்களை ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்.

நாம் உடலுடன் இரண்டறக் கலந்த தீமைகளை நீக்க வேண்டுமென்றால் எதிலிருந்து… எப்படி நீக்க முடியும்…?

 

1.ஈசனால் உருவாக்கப்பட்ட நம் உடலில் தீமையான உணர்வுகள் ஊடுருவி
2.தீமையின் உணர்வுகள் உடலிலே வளர்ந்து விட்டா;ல்
3.உயிரால் உருவாக்கப்பட்ட இந்த ஈசனுக்கே நாம் தீங்கு செய்வது போன்று ஆகும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றித் தங்கதைப் பரிசுத்தப்படுத்துவது போன்று உங்களை அறியாது நல்ல உணர்வுடன் இரண்டற இணைந்த தீமையான உணர்வுகளை அகற்ற இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கும் இந்தச் சக்தியின் துணை கொண்டு…
1.நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவீர்கள் என்றால்
2.உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகளோ சாப வினைகளோ தீய வினைகளோ
3.இவை அனைத்தும் அகல உங்கள் எண்ணம் உங்களுக்குள் உதவும்.

இப்படி… அறியாது சேர்ந்த தீமைகளை நீக்க… அந்தத் தீமைகளை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தியை… சப்தரிஷி மண்டலத்தில் விளைந்த உணர்வுகள் இங்கே முன்னாடி படர்ந்திருப்பதை நீங்கள் கவருவதற்கே இதை உபதேசிப்பது.

இதைப் பதிவு செய்து கொண்டபின் நீங்கள் “எப்போது எண்ணினாலும்…” அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்.

உதாரணமாக சாதாரண ஆண்டனா மூலம் லோக்கலில் ஒளிபரப்பு செய்வதை டி.வி. அதை ஈர்த்து நமக்கு முன் படமாகக் காட்டுகின்றது… நாம் காணுகின்றோம்.

இதைப் போல சப்தரிஷிகளின் அருளாற்றல்களை… சக்தி வாய்ந்த நிலையாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கிறோம். அப்பொழுது உங்கள் கண் சக்தி வாய்ந்த ஆண்டனாவாக மாறுகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… அன்பான குணமோ கோப குணமோ தீய குணமோ உங்களுக்குள் ஏற்கனவே பதிவானதை மீண்டும் எண்ணினால் அது கண்ணின் நினைவிற்கே வருகின்றது.

அப்பொழுது அந்த நினைவின் ஆற்றலை யாருடன் பகைமை கொண்டோமோ யாருடன் அன்பு கொண்டோமோ யாருடன் பரிவு கொண்டோமோ யாருடன் பண்பு கொண்டோமோ இதைக் கவர்ந்து நாம் அறியவும் முடிகின்றது.

ஆனால் தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை உங்களைப் பெறச் செய்யும்போது…
1.சக்தி வாய்ந்த ஆண்டனாவாக உங்கள் கண் மாறுகின்றது.
2.அதனின் துணை கொண்டு நமக்கு முன் படர்ந்திருக்கும் மகரிஷியின் உணர்வை நுகரப்படும் போது நம் ஆன்மாவாக அது மாற்றுகின்றது
3.பின் அந்தத் தீமையின் உணர்வை அகற்றும் நிலையாக அது நமக்குள் நிலை பெறுகின்றது.

அந்தச் சக்தியைப் பெறுவதற்குத் தான் இப்பொழுது கூட்டுத் தியானத்தில் பலருடைய உணர்வையும் ஒன்றாக இணைத்து… ஒரு நிலை கொண்டதாக உருவாக்கி.. அந்த உணர்வின் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

இது சக்தி வாய்ந்த ஆண்டனாவிற்குப் பொருந்தும்…!

ஆகவே இதனின் துணை கொண்டு உங்கள் முதாதையரை எளிதில் விண் செலுத்தவும் முடிகின்றது. ஏனென்றால் மூதாதையரின் உணர்வு தான் உங்கள் உடலே…!

அவர்களை விண் செலுத்திய பின் ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தை எண்ணும் போதெல்லாம்… அந்த உணர்வின் ஆற்றல் இங்கே பதிந்திருக்கும்… படர்ந்திருக்கும்… பேரருள் பேரொளி உணர்வின் தன்மையை எளிதில் நுகர முடிகின்றது.

1.ஆகவே நீங்கள் செய்த இந்தச் சக்தியினை விரயமாக்காது
2.ஒவ்வொரு நாளும் இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் சப்தரிஷி மண்டலங்களை எண்ணி எடுத்து
3.தங்கத்தில் திரவகத்தை ஊற்றிச் செம்பையும் வெள்ளியையும் நீக்குவது போல்
4.மேலுக்குக் (உடல்) குளிப்பது போல் உங்கள் உணர்வைச் சுத்தப்படுத்துங்கள்.

தூங்கச் சொல்லும்போது சப்தரிஷிகளின் அருள்சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி அந்தச் சப்தரிஷிகளை எண்ணி கண்ணைத் திறந்தே சிறிது நேரம் ஏங்கி எடுங்கள்.

பின்.. கண்ணை மூடி சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டுமென்று நூறு முறையாவது ஏங்கி எடுங்கள். எவ்வளவு தூரம் இதை எண்ணி எடுக்கின்றீர்களோ அவ்வளவுக்கு லாபம் உங்களுக்கு….!

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீர் ஊற்றும் போது அழுக்கு நீர் குறைந்து கொண்டே வரும். செம்பும் தழும்பாது. ஞானியரின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க… அது பெருகப் பெருக அந்தத் தீமைகள் தணியும்.

உதாரணமாக ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அது குடிப்போரை மடியச் செய்கின்றது.
1.இதில் பல ஆயிரம் குடம் பாலை ஊற்றும் போது
2.விஷத்தின் தன்மை சிறுகச் சிறுகக் குறைந்து
3.அந்தப் பாலிற்கே வீரிய சக்தியாக இந்த விஷத் தன்மை அமைகின்றது.

இதைப் போல் நமக்குள் விஷம் கொண்ட உணர்வுகள் நமக்குள் பல இருப்பினும்…
1.நஞ்சினை வென்ற அருள் ஞானியின் உணர்வை நாம் நூறு முறையாவது எடுத்துக் கொள்வோம் என்றால்
2.இந்த உணர்வுகள் நமக்குள் ஒரு தூய்மைப்படுத்தும் சக்தியாக மாறும்.
3.நம் நினைவின் ஆற்றலும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே ஒன்றுகின்றது.

அதைப் பற்றுடன் பற்றும் நிலையும்… அந்த அருள் ஞான சக்தியை நமக்குள் பற்றுடன் பற்றச் செய்வதற்கும் தான் இதைச் சொல்கிறோம்.

ஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்

ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அதனதன் ஜீவ அமில குணங்கள் உண்டு. அக்குணத் தொடர்ச்சியில் எவ் அமிலத்தின் விகித நிலை கூடியுள்ளதோ அதன் சக்தித் தொடரில் அவ்வாத்மாவின் செயல் சென்றிட்டால் அவ்வாத்மாவின் ஒளி பிரகாசிக்கும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் பன்னிரண்டு வகையான அமில குணங்கள் உண்டு.
1.எதன் தொடரில் உயிரணு உதித்து உயிராத்மாவான மனித உடல் பெறுகின்றோமோ
2.அதிலிருந்தே இந்தப் பன்னிரண்டு வகையான குணங்களில் ஒன்றை ஒவ்வோர் ஆத்மாவும்
3.அதன் ஈர்ப்பிலேயே வளர்ச்சியை ஈடுபடுத்தி இழுக்கின்றது.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இப்பன்னிரண்டு வகையான குண அமிலங்கள் இருந்தாலும்…
1.ஏதாவது ஒன்றின் வளர்ச்சியின் வட்டத் தொடரில்தான் ஒவ்வோர் ஆத்மாவும் வளர்ந்து கொண்டே செல்கின்றதே ஒழிய
2.தனக்குள்ளுள்ள மற்றக் குண அமிலத்தை எண்ணுவதோ செயல்படுத்துவதோ இல்லை.

மனித ஆத்மாவாய் வரும் காலத்திலேயே இப் பன்னிரண்டு வகை குண அமில சக்தி பெற்ற பிறகுதான் மனிதனாகவே மனிதக் கருவிற்கு வர முடிகின்றது.

இயற்கையின் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகை நிலை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பொழுதைய செயற்கையிலேயே எப்படி ஒரு தாவரத்திற்கு அளிக்கும் எருவை (உரம்) மற்றொரு தாவரம் ஏற்பதில்லையோ அதைப்போல் ஒவ்வோர் இன வளர்ச்சிக்கும் உயிரணுவிலிருந்து அவை ஈர்க்கும் குண வளர்ச்சியின் தொடர்படுத்தித்தான் இன வளர்ச்சியும் வளர்கின்றது.

இந்தப் பன்னிரண்டு வகை குண அமில வளர்ச்சி பெற்ற பிறகு தான் மனித உருப் பெறுகின்றது. இம் மனித உருவில் அக் குண வளர்ச்சியின் சக்தியை அதன் வழித்தொடரிலேயே செயல்படுத்தினால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் தொடர் நிலையினால் ஏழு ஜென்மங்கள் எடுக்கக்கூடிய அளவிற்கு மனித உருப்பெற்ற காலத்திலேயே சக்தி கூடிவிடுகின்றது. அதன் தொடரில் ஏழு ஜென்மம் எடுக்கக் கூடிய சக்தி ஆற்றலுண்டு.

1.இச்சக்தியை உபயோகப்படுத்திச் செயல்படும் நல்லாத்மாக்கள்
2.இந்த ஏழு ஜென்மத்திற்குள் இப்பன்னிரண்டு வகையின் குண அமிலத்தை உரமாக்கி
3.சூட்சுமம் கொண்டு என்றென்றும் அழியாத வழித்தொடர் பெற்று விடுகின்றனர்.

இதில் சில ஆத்மாக்கள் இவ் ஏழு ஜென்மத்தின் வழித்தொடர் வந்து “கரை சேராத நிலையில்…” உலக மாற்றத்தில் சிக்குண்டு மற்றொரு பிரளயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளின் சுழற்சி வட்டத்திற்குச் செல்கின்றது.

மனித ஆத்மா உடலுடனே மனித வளர்ச்சிக்கு அடுத்த வளர்ச்சியில் அதிவிரைவில் மனித உடல் பெறும் பக்குவத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றது.

சில ஆத்மாக்களின் நிலையில்… இவ் ஏழு ஜென்மத்திற்குச் செல்லுவதற்குள்ளேயே
1.தான் பெற்ற இப்பொக்கிஷ குண சக்தியை உணராமல்
2.பேராசைக்கும் வெறி உணர்விற்கும் காம இச்சைக்கும் உட்பட்டு
3.அவ்வாத்மா வெறி உணர்வு கொண்ட மிருக வட்டத்திற்குள் சென்று
4.அதன் வழித் தொடர்ச்சியில் மிகவும் அல்லல்பட்டு அடுத்த சுழற்சி வட்டத்திலும்
5.மனித இனம் பெற வேண்டிய இப்பன்னிரண்டு வகையான குண அமிலம் பெறப் பல நாட்கள் சென்று விடுகின்றன.

இம் மனித ஆத்மாக்களுக்கு மனிதனாய் வாழக்கூடிய குண அமிலத்தைப் பெற்ற சக்தியை உணராமல் தன்னைத்தானே சிதறவிட்டு வாழும் நிலையை உணர்ந்தீரா…?

அகண்ட அண்டத்தில் பல கோடி மண்டலங்கள் இருந்தாலும் எல்லா மண்டலத்திலும் மனித உருப்பெற்ற ஜீவன்கள் இல்லையல்லவா…? ஆக… இன்று இந்த மனித உருப்பெறவே பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.

பல கோடி வகையான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனைப்போல அறிவு வளர்ச்சியுற்ற செயல் திறன் மற்றவற்றிற்கு இல்லை.
1.நாம் எதனை உணர்ந்தோம்…?
2.இன்றிருக்கும் நிலை நாளையில்லை
3.நேற்று நடந்த நிலை இன்று கனவுதான்.
4.இன்றைய நடைமுறை நாளை கனவு

கனவு என்பதையே மறந்து… நம்முள் ஏற்படும் இச்சைக்கெல்லாம் நம்மை நாமே அடிமைப்படுத்தி… கால வெள்ளத்தை விரயம் பண்ணி… வீண் சஞ்சலமான வட்டத்திற்குள் நம்மைச் சிக்க வைத்து வாழும் நிலைதான்… “இன்று நாம் வாழ்ந்திடும் நிலை…”

சில தாவரங்கள் எப்படி அதன் ஈர்ப்பின் தன்மையினால் வைரம் பாய்ந்த மரமாய் தன்னையே வளர்த்துக் கொண்டுள்ளனவோ அதைப்போல் நம் ஆத்மாவை வைரம் பாய்ந்த ஞான வட்டத்தின் சுழற்சியாக்கி அச் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தின் வழித்தொடரில் செல்ல வேண்டும்.

அவ்வளர்ச்சியின் வட்டத்திற்குச் சென்றுவிட்டால் அதன் தொடரில் பல சக்தி நிலையை நாம் உணரலாம்.
1.அந்த உணர்வின் சக்தியை உண்மையாக்கி
2.தன்னடக்கம் பெறும் பக்குவம் கொண்டு செயல்பட்டால்
3.அதன் தொடர்பில் அடையும் பேரானந்தம் உள்ளதே அவ்வானந்தத்தில்தான் அகிலமே கலந்துள்ளது.

இந்நிலையில் தான் பெற்ற நிலையை சிதறவிட்ட ஆத்மாக்களும் பல உண்டு… “நான்” என்ற நிலை ஏற்பட்டதினால்…!

தான் பெற்ற சக்தியை எக்காரணம் கொண்டும் நானாக்கிக் காட்டினால் அச்சக்தி நிலைத்திடுமா…? ஞானம் பெறவே பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பல காலம் சேமித்த இஞ்ஞான சக்தியையே நான் என்ற நிலையில் சிதறவிட்ட ஆத்மாக்கள் பலர் உள்ளனர் இன்று நம்முடனே.

சிதறவிட்ட பிறகு அவ்வாத்மாக்கள் அதன் தொடர்ச்சியில் செல்ல முடியாமல் அதன் கீழ் நிலைக்குத் தான் திரும்பவும் சென்று விடுகின்றன.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஒரு இயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…!

 

மனிதனுக்கு மனிதன் இங்கே நாம் நேரடியாகப் பழகி ஒருத்தருக்கொருத்தர் நண்பர்கள் என்று உதவி செய்து கொண்டால் உதவி செய்த உணர்வு இரண்டும் கலந்து வெளி வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கிறது.

இது அலைகளாக மாறும்போது… நீங்கள் அமெரிக்காவில் இருந்தாலும்
1.நண்பன் ஒரு நல்ல காரியம் செய்யும் பொழுது
2.நான் அமெரிக்காவிற்கு வந்ததே அந்த நண்பனின் உதவியால் தான்…! என்று எண்ணும்போது
3.உடனடியாக அங்கே அந்த நண்பனுக்கு விக்கலாகின்றது.

அதே சமயத்தில் ஒரு நண்பருடன் சந்தோஷமாக இருந்து பழகி பின்னாடி.. தொழில் விஷயத்தில் ஒருவருக்கு ஒருவர் பகைமையாகி விட்டால் இருவருமே என்ன நினைக்கின்றோம்…?

1.இவரால் தான் நஷ்டமானது… இவனெல்லாம் உருப்படுவானா…? என்று
2.இருவருக்குள்ளும் இந்த உணர்வுகள் கூடி.. இரு உடலிலிருந்தும் இப்படிப் பரவச் செய்துவிடுகின்றோம்.

அடுத்து இவர் அமெரிக்காவிற்குச் சென்றாலும் இன்னொரு நண்பர் இங்கே வருகின்றார். நான் அமெரிக்காவில் உன் நண்பரைப் பார்த்தேன். அந்த நண்பர் உயர்ந்த நிலை பெற்று நல்ல நிலையில் இருக்கின்றார் என்று சொல்கிறார்.

சொன்னவுடன் பாவிப்பயல்… எனக்கு மோசம் செய்தவன் அங்கே போய் விட்டானா…! அவன் எல்லம் உருப்படமாட்டான்…! என்று அந்த உணர்வை வெளிப்படுத்தினால்
1.அது அங்கே சென்று அவனுக்குள் ஊடுருவுகிறது.
2.ஏற்கனவே பதிவானதன் துணை கொண்டு இந்த வீரிய உணர்வுகள் அவரின் உடலில் பாயத் தொடங்குகின்றது.

அந்தச் சமயத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால்… இந்த உணர்வுகள் அந்த நேரத்தில் இது பாய்ந்தால்… உறுப்புகள் சீராக இயங்காதபடி புரை ஓடும். புரை ஓடும்போது நுரையீரல் பாகம் ஒரு சோற்றுப் பருக்கை இழுத்து விட்டால் போதும். திக்கு முக்காடச் செய்துவிடும்.

உதாரணமாக வாய்க்காலில் ஒரு பக்கம் தண்ணீர் போகின்றது என்றால் அதில் ஒரு பக்கம் சிறு ஓட்டை விழுந்தால் போதும்…!
1.அதன் வழி தண்ணீர் சென்றால்…
2.தண்ணீர் வரும் நிலைகள் இருந்து காற்றின் நிலைகள் வரும்.
3.ஜிர்ர்..ர்ர்ர்… என்று இழுக்கும்…. இந்த இடத்தில் சுழிக்காற்று வரும்.
4.இனம் புரியாத நிலையில் அந்த பக்கம் ஒரு ஓசையும் வரும்.

அதைப்போலத்தான் இங்கே இந்த உணர்ச்சியின் தன்மை வரப்படும்போது குறுக்காட்டி நுரையீரலில் அந்த உணர்வின் வேகம் கூடிய பின் நாம் உணவாக உட்கொள்ளும் நிலையை இடைமறித்து வேகமாக இழுத்துவிடும்.

நுரையீரலில் உணவுப் பொருள் சென்றுவிட்டால் நாளடைவில் நாற்றமாகி அதிலே புழுக்கள் உருவாகி நுரையீரல் பின்னமாகிக் கடும் நோயாகி… மரணமடையவும் நேரும்.

அதே போல் ஒரு காரையே ஓட்டிச் சென்று கொண்டிருந்தாலும் கண் கொண்டு முன்னாடி உற்றுப் பார்த்து… உணர்வினை நுகர்ந்தறிந்து இந்த வாகனத்தைச் சீராக ஓட்டினாலும்..
1.ஓட்டிக் கொண்டிருக்கும் போது இங்கே நண்பர் வந்து
2.உன் நண்பர் அமெரிக்காவில் நன்றாக இருக்கின்றான் என்று சொன்னால்
3.அவன் எங்கே சென்றாலும் தொலைந்து போவான்… அடிபட்டுச் சாவான்…! என்று எதாவது உணர்வினைச் சொன்னால் போதும்.

அந்த உணர்வின் தன்மை இங்கே ஊடுருவி… அவன் உணர்வை நுகரக்கூடிய தன்மை வந்து…
1.அதே சமயத்தில் இந்த இரண்டு எண்ணங்கள் கலந்து உயிரிலே பட்ட பின்
2.வேகமான உணர்வுகள் வந்து சிந்திக்கும் தன்மை இழந்து
3.வாகனத்தைச் சீர்படுத்த முடியாத நிலையில் எங்கேயாவது ஆக்சிடெண்டாகும்.

எதிரே ஒரு மனிதர் வந்தாலும் பிரேக்கை அணைக்கும் தன்மை இழந்துவிடும். மோதியபின் தான் தனக்குள் தெரிய வரும். இப்படி எல்லாம் மனிதனை அந்தச் சந்தர்ப்பங்கள் இயக்கிடும் நிலை வருகின்றது.

உதாரணமாக கர்ப்பத்தில் குழந்தை இருக்கின்றது என்று வைத்து கொள்வோம். அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் யாராவது சாபமிட்டு இருந்தால் அதன் வழியில் அந்தக் குடும்பத்தின் சார்புடையோர் வேதனைப்பட்டால் போதும்.

இப்படிச் செய்தார்களே… அவர்கள் குடும்பம் உருப்படுமா…! என்று இந்த உணர்வின் சாப அலைகள் கர்ப்பிணித் தாய் நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய இந்தச் சிசுவிற்கும் பாதிப்பாகிறது.

அந்த நேரத்தில் வீட்டிற்குள்ளும் ஒரு நெடி கலந்த உணர்வுகள் வரும்.

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பியோ சகோதரர்களோ வீட்டிற்குள் பாகம் பிரிப்பதில் தவறான முறையில் பிரிக்கப்பட்டால் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அது வீரியம் கொண்டதாக மாறுகிறது.

கண்ணின் நினைவலைகளை இங்கே ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் போது அந்த எல்லையில் வரும்போது இந்த உணர்வின் தன்மை இங்கே வருகின்றது. அதே எண்ணத்தின் உணர்வுகளை இங்கே பரப்புகின்றது.

1.ஒரு இயந்திரத்தைக் காட்டிலும் கண்ணின் நிலைகள் வெகு தூரம் ஊடுருவி
2.அந்த உணர்வின் தன்மை அறியும் தன்மையும் அதை இயக்கும் தன்மையும் வருகின்றது.

இதை போன்று இந்த இயற்கையின் நியதிகள் இருப்பதை குருநாதர் ஒவ்வொரு செயலாக்கங்களிலும் எமக்குக் காட்டுகின்றார்.

இத்தகைய உண்மைகளை எல்லாம் அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்து அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் பெற்றவன் என்பதனையும் உணர்த்தி அகஸ்தியனின் ஆற்றலை நாம் அனைவரும் பருக வேண்டும் என்று தெளிவாக்கினார் குருநாதர்.

உயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது

 

ஒன்றுடன் ஒன்று மோதுண்டு ஒன்றை ஒன்று பின்னியே அண்ட கோளங்களும் அனைத்து நிலைகளும் உள்ளன.

ஓ…ம் என்ற நாதத்தின் உண்மை நிலையென்ன…? ஓ…ம் என்ற ஒலி எப்படி ஒலிக்கின்றது…? விஞ்ஞானத்தினால் கண்டுபிடித்த மின் விசிறிக்கு அதன் சுழலும் நிலை எப்படி வருகின்றது…?

மின் விசிறி சுழல மின்சாரத்தை அதில் பாய்ச்சியவுடன் அதன் காந்த சக்தியை ஈர்த்து அந்த மின் விசிறி சுழலுகின்றது. சுழலும் நிலையில் காற்றை நாம் எந்த எண்ணில் வைத்துச் சுழல விடுகின்றோமோ அதன் தன்மை கொண்டு அது சுழலுவதற்கு ஏற்ப அது பரப்பிடும் காற்று வருவதை உணர்கின்றோம்.

அதே போல் தான் நம் பூமி சுழல…
1.சூரியனிலிருந்து பாயும் காந்த அலையை நம் பூமி இழுத்து…
2.பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியைக் கொண்டு இக்காற்று ஏற்படுகின்றது.

காற்றுடன் ஒளியும் நீரும் கலந்துள்ளன. நீரின் நிலையுடன்தான் நம் பூமி அவ்வொளியை ஈர்த்து வெளிக்கக்கி… அதிகாற்றாக… பூமியைச் சுழலவிடும் அந்த ஓசைதான் ஓ…ம் என்ற நிலையில் நமக்குத் தெரிகின்றது.

இந்த ஒலியை ஒவ்வொருவரும் உணரலாம்.

ஏனென்றால் நம் பூமி எதையெல்லாம் ஈர்த்து உண்டு கழிக்கின்றதோ அந்தச் சக்தியெல்லாம் நமக்கும் உண்டு.
1.நீரிலிருந்து மின்சாரத்தைக் காந்த அலையுடன் எடுக்கின்றார்கள்.
2.நம் உடலில் உள்ள காந்த மின் அலையை நாம் அறிவதில்லை.

நம் காந்த மின் அலையை நாம் உணரும் பக்குவம் பெற்றோமானால் அதன் தொடரில் நம்மையே அவ்வொளியாகச் செயல்படுத்திட முடிந்திடும்.

இப்பூமி வெளிப்படுத்தும் இக்காற்று மண்டலம்தான் நம் உடலிலும் மோதுண்டு செல்லுகின்றது. சிறு எறும்பையும்… மென்மையான பூவையும் இந்தக் காற்றே மோதிச் செல்கின்றது.

1.இக்காற்று மோதும் இடமெல்லாம் ஒலி பெறுகின்றது.
2.அந்த ஒலியுடனே நீரும் சேருவதினால் ஒளியாகின்றது.
3.காற்று இல்லாவிட்டால் மணம் வீசிடாது.
4.அந்த மணம் பெறவும் அவ்வொளியும் ஒலியும் சேர்ந்துதான் அம்மணமே வீசுகின்றது.

காற்றில் உள்ள ஜீவனுக்கு இக்காற்றினிலேயே படர்ந்துள்ள நீர் தான் ஜீவ சக்தி. நம் பூமியில் வீசிடும் காற்றின் நிலைக்கும் பால்வெளி மண்டலம் மற்ற மண்டலங்களின் நிலைக்கும் பல கோடி மாறுபாடுகள் உண்டு.

ஜீவனுடன் கூடிய அதிசக்தி வாய்ந்த காற்று மண்டலம் நம் பூமியின் காற்று மண்டலம்…!

மற்ற மண்டலங்களின் தன்மையில் இந்நிலை மாறு கொள்கின்றது.
1.நம் பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலத்தில்
2.அக்காற்றுடன் கலந்துள்ள நீர் அலைகள் அதிகம்.

ஒவ்வொரு மண்டலமும் அதன் சுழற்சியில் அதன் சுவாசம் கொண்டு அவை உண்டு வெளிப்படுத்தும் பக்குவ நிலைக்கொப்பத்தான் அதற்குகந்த காற்று மண்டலம் உண்டு.

சூரியன் வளர்ந்து கொண்டே… சக்தியைப் பெற்றுக் கொண்டே… சுழன்று ஓடிக்கொண்டே… அனைத்து மண்டலங்களைக் காத்துக் கொண்டே… இருந்திட்டாலும் “நம் பூமியின் ஜீவ சக்தி சூரியனுக்கில்லை…”

அறிவு வளர்ச்சி பெற்ற ஆத்மாக்களைக் கொண்ட பூமி மட்டுமல்ல நம் பூமி. நம் பூமியின் ஆத்மாவிற்கே அறிவின் சக்தி ஜீவ பூமியப்பா நம் பூமி.

இப்பூமியின் ஆத்மாக்களின் நிலையை மாற்றி…
1.நம் பூமிக்குகந்த நிலையை
2.நம் பூமியின் ஆத்மாவே செயல் கொள்ளப் போகின்றது சிறிது காலத்திற்குள்…!

நாம் தான் நம் விஞ்ஞானத்திற்காக பூமியின் மட்டத்தை நகரங்களாக்கித் தார் ரோடுகளாகவும்… இல்லங்களை அழகுபடுத்தப் பல நிலைகளைச் செய்தும்… பூமியின் ஆத்மா சுவாசிக்கத் தடைப்படுத்தியும்… தாவரங்களின் இன வளர்ச்சியை காடுகளையெல்லாம் அழித்தும்… பூமியின் பொக்கிஷங்களையெல்லாம் நம் உல்லாசச் செயற்கைக்காகப் பாழ்படுத்தி விட்டோமே…!

ஆகவே… நம் பூமியின் ஆத்மா ஜீவன் கொண்டது. அது தன்னைத்தானே காத்துக் கொள்ளும்.

இம்மனித ஆத்மா எப்படி ஒவ்வொரு பிறவியாய்…
1.ஓர் உடல் கெட்டு மறு பிறவிக்கு வந்து.. மறு உடல் எடுத்து வாழ்கின்றனவோ
2.அதைப்போல் நம் பூமியின் ஆத்மாவிற்கும் பூமியின் கோளமென்ற இவ் உருவ உடல் வியாதிப்பட்டுவிட்டது.
3.எந்த நேரத்திலும் அதன் நிலை மாறும் கால கட்டத்தில்தான் நம் பூமியின் ஜீவ ஆத்மாவின் நிலை இன்று உள்ளது.

இதனை உணர்ந்து… நாமும் நம் ஆத்மாவை இக்குறுகிய காலகட்டத்திற்குள் உயர் சக்தி நிலை பெறும் பக்குவ நிலையை எய்திடல் வேண்டும்.

“நம் பூமி ஆத்மாவிற்கே ஜீவனுண்டு…” நம் சக்தியையும் அச்சக்தியே காக்கும் பக்குவத்தை… அந்த வழி முறையை நாம் உணரல் வேண்டும்.

நல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு

 

குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்கு நான் (ஞானகுரு) தொடர்ந்து உபதேசம் சொல்கின்றேன். ஆனாலும் எத்தனையோ பேர் வந்து கஷ்டங்களை எல்லாம் சொல்கின்றீர்கள்… நான் கேட்கின்றேன்.

ஒருத்தர் கஷ்டம் என்று சொல்வதை நீங்கள் கேட்டாலே உங்களுக்கு முடியாது போய் நோய் வருகின்றது. ஆயிரம் பேர் கஷ்டம் என்று சொல்வதை நான் கேட்டால் எனக்கு எத்தனை நோய் வரும்…? என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்…!

உங்களைக் காட்டிலும் பல வேதனைகள் எனக்கு வரும். எனக்கு அதைத் துடைக்கத் தெரியவில்லை என்றால் அப்புறம் நான் குருவாக உங்களிடம் வந்து சொல்ல முடியாது.

தீமைகளைத் துடைக்கத் தெரிய வேண்டும். இல்லையென்று சொன்னால் அந்த நோயெல்லாம் என்னைச் சேரும். கடைசியில் என்னையே மாற்றிவிடும்.

பாலிலே பாதாமைப் போட்டிருந்தாலும் சிறிது விஷத்தைப் போட்டால் என்ன ஆகும்…? அந்த நிலைதான் அடையும். ஆகையினால் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் மாற்றிக் கொள்கிறேன்… தூய்மைப்படுத்திக் கொள்கிறேன்.

உதாரணமாக ஒரு விஷமான பொருளைக் கையால் எடுத்துப் பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலை முடிந்ததும் அந்த விஷத்தை நீக்கிட அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததை வைத்துக் கையைக் கழுவிக் கொள்கிறோம் அல்லவா…!

வயல்களிலே பூச்சிகளைக் கொல்லும் மருந்தினைத் தெளிக்கின்றார்கள். எல்லாம் தெளித்துவிட்டுச் சாதாரண தண்ணீரில் கையைக் கழுவி விட்டு உணவை உட்கொண்டார்கள் என்றால் அந்த மருந்தின் விஷம் உடலுக்குள் ஊடுருவிப் போய்விடும்.

அப்புறம் அவர்கள் இருக்க மாட்டார்கள்…!

பூச்சியைக் கொன்றார். இருந்தாலும் அதற்குத்தகுந்த சோப்பை எடுத்துச் சுத்தமான நிலைகளில் கைகளைக் கழுவவில்லை என்றால் இவரைக் கொன்றுவிடும்.

இதைப் போலத்தான் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும் வேதனைப்படுவோரை எல்லாம் சந்தர்ப்பத்தால் உற்றுப் பார்க்கின்றோம்… விபரங்களையும் நாம் கேட்டறிகின்றோம்.

உயர்ந்த மனிதர் என்ற பண்பால் பல உதவிகளை நாம் செய்தாலும் அவர்கள் கஷ்டம் நமக்குள் வந்த பின் நம் நல்ல குணங்கள் இங்கே அழிந்து விடுகின்றது. இதைச் சுத்தமாக்க வேண்டுமா இல்லையா…?

1.தப்பு செய்தவர் யாரும் இல்லை
2.ஆனாலும் நாம் தவறு செய்யாமலேயே இத்தகைய நிலைகள் வருகின்றது
3.இயற்கையின் உணர்வை… இயற்கையின் இயக்கங்கள் எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையை
4.நம்மை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் நம் எல்லை எது…? என்று அறிதல் வேண்டும்.

நம் உயிர் ஒளியானது… நுகர்ந்த உணர்வைக் கொண்டு உடலை உருவாக்கியது. உடலைக் கொண்டு இருளை நீக்கும் ஒளியின் தன்மை பெற்றது… கார்த்திகேயா…!

நம்மை அறியாமல் வரும் தீமைகளை அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அகற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்வதே அது.

இந்தத் தெய்வம் செய்யும்… அந்தத் தெய்வம் செய்யும்…! என்பது எல்லாம்
1.நாம் எண்ணிய உயர்ந்த குணங்களே
2.நமக்குள் தெய்வமாக… அந்த உணர்வாக நம்மைச் செயலாக்கும்.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மையைத் தான் உயிர் இயக்குகின்றது. ஈசனாக இருந்து அதனின் உணர்வுகளை… நாம் எண்ணியதை நமக்குள் இருக்கும் மற்றதுடன் இரண்டறக் கலக்கின்றது. அது பிரம்மமாக நமக்குள் உடலாகச் சிருஷ்டிக்கின்றது.

இந்த உயிருடன் இயக்கப்படும் அதன் தொடர் வரிசையில் எக்குணமோ அதை இயக்கி அதனின் நிலைகள் கொண்டு இங்கே வளர்க்கின்றது நமது உயிர்.

நாம் தவறே செய்யவில்லை என்றாலும்… தவறு செய்வோனை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் இயக்கப்பட்டு… தவறை அறியச் செய்கின்றது. ஆனாலும் அறிந்த தவறின் உணர்வோ நம் உடலுடன் ஒன்றி விடுகின்றது.

ஒன்றிய நிலைகள் கொண்டு உயிரின் இயக்கத்தால் நம் அறிவால் அறியச் செய்யும் அதனதன் அறிவை அது இயக்குகின்றது.

வேப்ப மரம் தன்னுடைய கசப்பின் அறிவால் தான் தனது மணத்தைக் காற்றிலிருந்து நுகர்ந்து அது வளர்கின்றது. அதே சமயம் தன் மணத்தால் அது தன்னைப் பாதுகாத்து கொள்கின்றது.

ரோஜாப்பூவும் தன் நறுமணத்தால் தன்னைப் பாதுகாத்து கொள்கின்றது. தன் உணர்வால் தன் சத்தை எடுத்து கொள்கின்றது.

இதைப் போல்தான் நாம் எத்தனை கோடி மணங்களை நாம் நுகர்ந்தாலும் எத்தனை கோடி குணங்கள் இருந்தாலும் அதை எல்லாம் அறியச் செய்யும் நமது உயிர். அறிந்ததை மீண்டும் ஜீவ அணுவாக… உடலாக மாற்றிவிடும் நமது உயிர்.

உணர்வின் தன்மை உடலாக்கப்படும்போது ஓ…! என்று ஜீவனாக்குகின்றது உயிர். அதே சமயம் அந்த உடலாக இயக்கப்படும்போது அதுவும் ஓ…! என்று ஜீவனாக இயங்கிக் கொண்டிருக்கும்… அதன் தொடர் வரிசையில்…!

தவறு என்று கண்டு கொண்டாலும் அதை நாம் சுத்தப்படுத்தவில்லை என்றால் அதுவும் நம் உடலுக்குள் ஜீவன் பெற்று விடும். இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

ஏனென்றால் நான் படிக்காத மூடன் பேசுகின்றேன்…! ஆனால் இயற்கையின் உணர்வின் அளவை குரு காட்டிய உணர்வு கொண்டு அதை அறியும் ஆற்றலைப் பெற்றேன்.

1.நான் படித்துப் பேசவில்லை… அனுபவப்பட்டுப் பேசுகின்றேன்.
2.குருநாதர் எமக்குள் இருக்கும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு என்று உணர்த்தினார்
3.ஒவ்வொரு உணர்வும் எம்மை அது எவ்வாறு இயக்குகின்றது..? என்று அறிந்து பார்…! என்று
4.தனித்துத் தனித்துத் தனித்துத் தனித்துப் பிரித்துக் காட்டினார்.

ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் நுகரும் ஆற்றல் உனக்குள் எவ்வாறு வருகின்றது…? நுகர்ந்தபின் அந்த உணர்வின் குணங்கள் உனக்குள் எவ்வாறு ஜீவன் பெறுகின்றது….? அந்த உணர்வால் உன்னை எப்படி இயக்குகின்றது…? என்ற இந்தத் தெளிந்த மனதை குருநாதர் அனுபவப்பூர்வமாக எமக்கு ஊட்டினார்.

உடலில் இருக்கப்படும்போதே… அவருக்குள் கற்றுணர்ந்த உயர்ந்த உணர்வை… அவரின் உணர்வின் வலு கொண்டு எனக்குள் பதியச் செய்தார்.
1.பதிவு செய்ததை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு எடுக்கும்படி சொன்னார்
2.அதனின் துணை கொண்டு அதை எடுத்து வளர்ச்சியின் தன்மை பெற்றேன்.

அதே வழிப்படித்தான் உங்களுக்கும் இதை உணர்த்த்துகின்றேன்…!

முடிவு நிலையில் உள்ள நாம்… முதல் நிலைக்குச் செல்லும் பக்குவம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

தியானத்தில் நம் சுவாச நிலை சமநிலைப்பட்டவுடன்…
1.நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் எண்ணத்தை ஒரு நிலையில் குவித்து
2.எந்த மகரிஷியை எண்ணுகின்றோமோ அந்நிலை கொண்ட அருள் ரிஷியின் ஒளிக்கதிர்கள்
3.நம் உயிராத்மாவுடன் நாமெடுக்கும் சுவாசமுடன் மோதுண்டு
4.நாம் எடுக்கும் இச்சக்தியின் அருளைக் கூட்டச் செய்கின்றது.

முந்தைய கால புராணங்களிலும் நடைமுறை வாழ்க்கையிலும் ஆண்டவனே வந்து சில நிலைகளைக் கவியாக உணர்த்தியதாக உணர்ந்திருப்பீர்.

பல ஆயிரம் காலங்களாக இம்மனித எண்ண அறிவு வளர்ச்சி கொண்ட நாள் தொட்டே பல ரிஷிகளின் சக்தி நிலை நம் பூமியில் செயல்பட்டு வருகின்றது.

அந்தந்தக் கால நிலைகளுக்கொப்ப இச்செயல் நிலை கலந்து வந்தது.

இன்றைய மனித ஆத்மாக்களின் எண்ணத்தில்… இச்செயற்கை நிலையிலும் புத்தக அறிவின் உறவிலும் செயல்படும் நிலையில் பக்தி கொண்டு உள்ளதால்
1.தன் எண்ணத்தைக் குவித்து
2.சப்த ரிஷிகளின் நிலையுடன் தொடர்பு கொள்ளும் பக்குவ நிலை இக்கலிக்கு வரவில்லை.
3.இன்றைய கலியின் நிலையில் உணரும் பக்குவமும் இல்லை.

சப்த ரிஷிகளின் நிலையுமே இன்றைய இக்கலிக்குகந்ததாகத்தான் எவ்வெண்ணத்தில் மனித ஆத்மாக்கள் செல்லுகின்றனரோ அதே வழித் தொடர்கொண்ட சக்தியைத்தான் அவர்களும் நமக்கு உணர்த்துகின்றனர்.

கவியிலும் காவியத்திலும் இன்றைய சக்தி நிலையை உணர்த்தி… அதை ஏற்கும் பக்குவ ஆத்மாக்கள் “சில தான் உள்ளன…!” என்பதனைப் புரிந்தே கால நிலைகேற்ப அருள் ஒளிதான் அவ்வாண்டவனின் ஜெபம் கொண்டவர்களின் நிலையிலும் செயல்படுகின்றது.

நம் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி… இவ்வுலக வாழ்க்கையுடன் நம் வாழ்க்கையை ஜெயித்துக் காட்டிட வேண்டிய பக்குவ நிலை பெறவும் நமக்கேற்படும் அனைத்து நிலைகளிலிருந்து நம் நிலையை உயர்ந்ததாக்கும் செயல் நிலைதான் நமக்கு இன்று தேவைப்படுகின்றது.

அந்நிலை பெறவும்… இயற்கையின் உண்மை நிலையை அறியவும்… நம் எண்ணத்தை அவனிடம் செலுத்தும் பக்குவத்தைத்தான்… இன்றைய நம் நிலை இருந்திடல் வேண்டும்.

1.எண்ணத்தை ஒரு நிலைப்படுத்திக் குவிக்கக் குவிக்க
2.நம் சக்தி உயிரான ஈசனிடம் ஐக்கியப்பட்டு… உரமாய் அவன் சக்தியை நம்முள் ஊன்றச் செய்து
3.அவனும் நாமும் ஒன்றான நிலையில் நம் உயிராத்மாவும் நம் உடலும் இருந்திடும்.
4.இந்த நிலையில் நமக்கு ஏற்படும் நம்மைச் சுற்றியுள்ள எந்நிலையும் நம் அருகில் நெருங்காது.

இவ்வுலக மாற்ற நிலை கூடிய விரைவில் ஏற்படப் போவதினால் நம்மை அதிபக்குவப்படுத்தி நாம் செயல் கொண்டிடல் வேண்டும்.

மனித ஆத்மாக்களுக்குத்தான் இந்நிலையில் புகட்டுகின்றீர்…! மற்ற ஜீவன்களுக்கு அதன் ஆத்மாவைக் காத்திடும் பக்குவம் எப்படி ஏற்படும்…? என்ற வினாவும் எழலாம்.

இன்றைய நிலையில் எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்பவன் இம்மனிதன் தான்…!

மிருகங்களில் சிலவற்றின் நிலையும் பறவைகளில் சிலவற்றின் நிலையும் சில உயர்ந்த நிலையில் வாழுகின்றன. இம் மாற்றத்தினால் பறவைகளில் சிலவற்றின் நிலை சிதறுண்ட நிலையில் செயல்படப் போகின்றது.

பூமிக்கு மாற்றம் வரும் நிலையில் பறக்கும் பட்சிகளுக்குத் தப்ப முடியாதா…? என்று எண்ணலாம்.

காற்று மண்டலமே மாற்றம் கொண்டுள்ள இந்நிலையில் இப்பொழுதே பறவைகளின் எண்ணச் சிதறலின் வளர்நிலை தொடர்பட்டுவிட்டது. இவ்வுலக மாற்றத்திற்குள்ளேயே பறவைகளின் நிலை மிகவும் குறைந்துவிடும்.

நம் பூமியிலேயே பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பறவைகளின் நிலை இருந்ததைக் காட்டிலும் படிப்படியாய் இன்று குறைந்துவிட்டது.

மற்ற ஜீவராசிகளின் நிலையும் ஒரு சில இன வர்க்கங்கள் மிகவும் குறைந்து விட்டதற்குக் காரணமே…
1.தாவரங்களை அழித்ததினால் இக்காற்று மண்டலமே விஷத்தன்மை அதிகப்பட்டதிலிருந்து இம்மாற்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
2.முந்தைய காலங்களில் வயல்களில் விளையும் கதிர்களை பட்சிகளிலிருந்து காக்கத் தக்க நடவடிக்கை இருந்திட்டது
3.இன்றைய நிலையில் தாவரங்களை புழு, பூச்சி இவற்றிலிருந்து காக்கும் நிலைதான் அதிகப்பட்டுவிட்டது.

காலங்கள் மாற மாற இன வளர்ச்சியின் நிலையும் மாறிக் கொண்டே வருகின்றது. இப்பூமியில் கல்கியில் தொடர்ந்து இக்கலி வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் முடிவு நிலைதான்… இன்று நாமுள்ள நிலை…!

1.முடிவு நிலையில் உள்ள நாம்…
2.முதல் நிலைக்குச் செல்லும் பக்குவ நிலைதான் இங்கு உணர்த்தும் உண்மை நிலை…!

நாம் சுவாசிப்பது எது…? நாம் சுவாசிக்க வேண்டியது எது…?

 

பல கோடித் தாவர இனங்கள் வளர்ச்சிக்குப் பின் பல கோடி உயிரினங்கள் உருவாகி… உணர்வுக்கொப்ப உடல் பெற்று அதிலிருந்து உணர்வின் எண்ணங்கள் இன்றும் ஏராளமாக உண்டு.

1.மற்ற உயிரினங்கள் நுகர்ந்தது ஒரு உடலுக்குள் ஒரு உடல் ஐக்கியமாகி விடுகின்றது
2.ஆனால் மனித உடலுக்குள் உருவான உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தது.

அதை எல்லாம் சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்தந்த உணர்வைத் தாங்கி இன்றும் அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது “சூரியனின் இயக்கச் சக்தியாக…”

சூரியனைப் போல் தான் நாம் உயிரின் தன்மையும்…!

நாம் எதை எல்லாம் நுகர்கின்றோமோ இந்த உயிரின் துடிப்பால் அதை இயக்கிக் கொண்டே உள்ளது… அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது.
1.உடலை விட்டு உயிர் வெளியே சென்றாலும்
2.இந்த உடலின் தன்மை கரைந்தாலும்
3.உயிருடன் இந்த உணர்வுகள் நிலைத்தே இருக்கும்.

அதாவது… இந்த உயிருடன் நிலைத்து இருந்தாலும் இந்த உணர்வுக்கொப்ப உடல் இல்லை என்றாலும் உடலில் வேதனைப்பட்ட உணர்வுகள் அதிலே நிச்சயம் உண்டு.

ஒரு மனிதன் உடலுக்குள் இது சென்றால் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அங்கேயும் அதே உணர்வாக இயக்கும்.

ஒரு இயந்திரத்தில் நாம் ஒரு நாடாவில் பதிவு செய்து கொள்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதையே நீங்கள் எடுத்து மற்ற எந்திரங்களில் போடும் போது அந்த ஒலி அதிர்வுகளை எடுத்து ட்ரான்சாக்ஸன் கொடுத்து ஒலி/ஒளிப்பதிவைப் பதிவாக்கவும் ஒலி அலைகளைப் பெருக்குவதும் உணர்ச்சிகளைத் தூண்டுவதும் என்று பல செயல்களைச் செயல்படுத்துகின்றோம்.

ஒரு மைக்கின் (MIC) வழி கூடி நாம் சொல்வது போல…
1.இயந்திரமான இந்த உடலுக்குள் ஒரு மனிதனுக்குள் விளைந்த உணர்வை நுகரப்படும் போது
2.உயிரான காந்த ஊசியில் இந்த உணர்வலைகள் படர்ந்து அதன் மூலமாக
3.அந்த எண்ணங்களை அந்த உணர்ச்சிகளையும் நாம் அறிகின்றோம்.
4.அறிந்தாலும் இதை உயிர் உடலுக்குள் ஜீவ அணுக்களாக மாற்றி விடுகின்றது.

இந்த இயற்கை நிலைகளை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன் அவனில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு.

மனிதனாக வளர்ந்தவர்கள் தீமைகளை விளைய வைத்தாலும் சரி தீமையினுடைய உணர்வுகள் அவர்கள் உடலிலிருந்து வந்தாலும் சரி அடுத்தவர்கள் உடலுக்குள்ளும் ஊடுருவி… அங்கும் அது விளைந்து அதன் உணர்வுகள் இவ்வாறு பரவிக் கொண்டே தான் இருக்கின்றது… அழிவதில்லை…!

ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டான் என்றால் அந்த தற்கொலை செய்து கொண்ட உணர்வின் அலைகள் வெளிப்படும்போது
1.ஒரு மனிதன் பாசத்தால் அந்த உணர்வைக் கவர்ந்து கொண்டால்
2.அதே தற்கொலை செய்யும் உணர்வுகள் இங்கே தூண்டப்பட்டு
3.இவனையும் தற்கொலை செய்யும் நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தற்கொலை செய்யும்போது… அவன் உடலை எப்படிச் சிதையச் செய்ததோ இதே உணர்வுகள் வெளி வந்தபின் இதே சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

எப்போது… எந்த மனிதன் சோர்வடைந்து… என்ன வாழ்க்கை…? என்று வெறுப்பு அடைகின்றானோ அப்பொழுது இந்த உணர்வுகள் ஊடுருவுகின்றது.

அதே உணர்வுகள்… அதே உணர்ச்சிகள் அவனை இயக்கி… அவனையும் தற்கொலை செய்யும்படி செய்கின்றது. அவனாக அதைச் செய்வதில்லை. (உள் புகுந்த அலைகள் தான் இயக்குகிறது)

இந்த உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் எண்ணங்கள் செயலாக்கி அவனை அறியாமலே அந்த உடலை தற்கொலை செய்ய இயக்குகின்றது.

அதைப் போலவே… தீமைகள் வரும்போதெல்லாம்
1.நாம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்று எண்ணி
2.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி அதன் உணர்வை நாம் கவர்ந்தால்
4.நமக்குள் தீமையை அகற்றும் உணர்வின் வலுகூடும்.

ஏனென்றால் வலிமை கொண்ட உணர்வுகள் கொண்டு அதை அடக்கி விட்டால் நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாக மாறி… அந்த உணர்வின் ஞானமாக நமக்குள் இயக்குவதும்… நம் வாழ்க்கையைச் சீர்படுத்தவும் இது உதவும்.

நமது குருநாதர் இத்தகைய உண்மையின் உணர்வை அறிவதற்காக மலைக் காடெல்லாம் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்றார்.

1.மலைப்பகுதியில் அகஸ்தியன் பாதங்கள் பட்ட இடங்களில்
2.அவன் உணர்வுகளை அங்கே புவியில் ஈர்க்கப்படுவதும்
3.அவனின் உணர்வின் எண்ண அலைகள் அங்கே பரவியிருப்பதையும்
4.எந்தெந்த இடத்தில் எவ்வாறு அவன் செயல்படுத்தினானோ
5.அதன் நிலையெல்லாம் உணரும்படி செய்கின்றார்… உணர்த்தி வருகின்றார்

அந்த அலைகள் உலகம் எங்கிலும் கலந்துள்ளது. அதை நீங்களும் பெற வேண்டும்… பெறச் செய்ய வேண்டும் என்பதற்கே இந்த உபதேசம்.

ஆத்மா பிரிந்து விட்டது என்றால் “ஆத்மா என்பது என்ன…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தும் பக்குவ நிலைக்கு நம் ஆத்மாவைச் செயல்படுத்திட வேண்டும் என்று சொல்கிறோம். அந்த ஆத்மா என்பது எங்குள்ளது…?

இறந்து விட்டால் ஆத்மா பிரிந்து விட்டது…! என்கின்றோம். ஒரு ஜீவ உடல் இறக்கும் பொழுது அவ்வுடலில் இருந்து அவ்வுடலின் “உயிரணுதான்” முதலில் பிரிகின்றது.

1.அவ்வுயிரணுவிற்கும் அவ்வுடலில் உள்ள ஜீவனற்ற ஆத்மாவிற்கும் தொடர்பு கொண்டுதான்
2.அவ்வுடலிலிருந்து ஓர் அங்குல வட்டத்திற்குள் தான் அவ்வுயிரணு
3.அவ்வுடலின் மேல் பகுதியிலேயே அவ்வாத்மாவுடன் இருக்கும்.

ஆத்மா என்பது என்ன…? அவ்வுயிரணு சேமித்த அமில சக்தி தான் ஆத்மா…!

அவ்வுடலை எந்த நிலைப்படுத்துகின்றோமோ அதன் பிறகுதான் அவ்வுடலைச் சுற்றிக் கொண்டே உள்ள அவ்வுடலின் ஆத்மா இந்த உயிரணுவுடன் கலந்து ஆவி உலகிற்கு வருகின்றது.

எவ்வுடலும் அதன் ஜீவன் பிரிந்த உடனே அதனுடைய செயல் நிலை ஏற்படுத்துவதில்லை. அவ்வுடலை எரிக்கும் நிலையில் அதனுடைய உயிருடன் அவ்வாத்மா சுற்றிக் கொண்டு ஆவி உலகில் கலக்கின்றது.

மற்ற நிலையில் அடக்கம் செய்யும் உடலாத்மா அதன் உயிரணுவுடன் சேர்ந்து உடலில்லாமல் செயல் கொள்ளப் பல நாட்களாகின்றன.

1.ஆத்மா என்பது உடலின் அனைத்து உறுப்புகளிலுமே ஆவித்தன்மையில்
2.உடலில் மட்டுமல்லாமல் உடலைச் சுற்றியுள்ள நிலையிலும் படர்ந்துள்ளது.
3.உயிரணுவிற்கும்… ஆவி ஆத்மாவிற்கும்.. ஜீவனுடன் கூடிய ஆத்மாவிற்கும் பொருள் புரிந்ததா…?
4.ஆவி உலக ஆத்மாவிற்கும் ஜீவ உடல் ஆத்மாவிற்கும் மாறுபட்ட நிலை இதுதான்.

ஜீவ உடலை விட்ட ஆத்மாவிற்கு எண்ணத்தின் நிலையைச் செயலாக்கிட பிற எண்ணமுடன் (உடலுடன் கொண்ட) மோதித்தான் அதன் செயல் நிலை இருந்திடும். அதனால் தான் அதில் சிக்கிவிடக் கூடாது என்று சொல்கிறோம்.

நம் எண்ணத்தை ஒரு நிலை கொண்டு ஒவ்வோர் ஆத்மாவும் ஆசையுடன் வாழும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

1.அனைத்திற்குமே ஆசை வேண்டும்
2.அன்பு கொள்ளவும் ஆசை வேண்டும்
3.கோபத்தை விடவும் ஆசை வேண்டும்
4.எந்நிலை செயல் கொள்ளவும் அவ் ஆசை வேண்டும்
5.நமக்குகந்த ஆசையை நாம் ஆசைப்பட்டால்தான் எச்செயலும் நடக்கும்.

பேராசைக்குத் தான் நாம் இடம் தரலாகாது…!

அமுதான உணவானாலும் நாம் நம் உடலுக்கு வேண்டிய அளவுதான் உண்ணுகின்றோம். எப்படி உண்டாலும் அதிகமாய் நம் உடம்பு ஏற்றுக் கொள்கின்றதா…? இல்லையே…!

ஆக… உடலே தனக்குகந்த அளவு உணவைத்தான் செரிக்கும் பொழுது நம் எண்ணத்தையும் அளவுடன் கூடிய ஆசையை எண்ணியே செரிக்கும் பக்குவத்தை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

பித்தப்பையிலும் சிறுநீரகத்திலும் உருவாகும் கற்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

 

ஒன்றுடன் ஒன்று இணைந்து எண்ணிலடங்கா தாவர இனங்கள் உருவாகி அதை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு வளர்ந்த பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக உருப்பெறுகின்றது.

மனித உடல் மடிந்த பின் இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அழுகிய நிலைகள் ஆகும்போது அதிலே புழுக்கள் உருவாகின்றது.

அந்த உடலை உருவாக்கிய அணுக்களை எல்லாம் அது உணவாக உட்கொண்டு அதுவும் மடியும்போது அந்த மடிந்த நிலைகள் கொண்டு மற்றொரு ஆகாரத்தை எடுத்து அந்தப் புழுக்கள் பூச்சிகளாக மாறுகின்றது.

அது போன்ற புழுக்களின் தன்மை மடிந்த நிலையில்… மழைக்காலம் வந்தால் வெப்பமும் மற்றதும் இணைந்து கொண்டபின் பல பல பூச்சிகள் உற்பத்தியாவதைப் பார்க்கலாம்.

இதிலே பெரும்பகுதி மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவு தானியங்களில் இது பட்டால் அதை எல்லாம் அழித்துவிடும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள் என்பதை குருநாதர் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் செல்லப்படும்போது அக்காலங்களில் எவ்வழியில் மனிதன் வளர்ந்தான்…? மனித உடலில் விளைந்த நிலைகள் எவ்வாறு அலைகளாகச் செல்கின்றது…? என்று காட்டினார்.

1.மனிதனாக வளரும்போது உடலில் அணுக்களாக இருக்கின்றது.
2.மடிந்தால்… உடலிலிருந்து உயிர் பிரிந்து சென்ற பின்
3.தனித்து அதற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் அந்த உணர்வின் அணுக்களின் தன்மை எதுவோ
4.அதற்குத்தக்க புழுவின் தன்மை அடைகின்றது.

அந்தப் புழுக்களும் மடிந்த பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு மீண்டும் மற்ற தாவர இனங்களில் விழுந்து அதை உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது..

தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் புழுத்தன்மையை அடைந்தபின் இந்த உடல் மடிந்தால் இது நுகர்ந்த உணர்வுகளுக்கொப்ப பூச்சிகளின் ரூபங்களாக வருகின்றது.

பார்க்கலாம்… பல விதமான புழுக்களையும் பூச்சிகளையும்…!
1.மழைக் காலத்திற்கு முன்னாடி இருக்காது
2.மழை பெய்த பின் புவியின் வெப்பத்தின் தன்மை கொண்டு… இந்த உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு…
3.உருவாகும் சக்தியும் பெறுகின்றது என்பதனைக் குருநாதர் காட்டுகின்றார்.

இந்த உண்மைகளை குருநாதர் எவ்வாறு காட்டுகின்றார்…?

அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டு அவன் அறிந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

குருநாதர் அதைப் பின்பற்றி எடுத்து அந்த உண்மையின் உணர்வை வெளிப்படுத்தும் போது எமக்குள் பாய்ச்சினார்.
1.சூட்சுமத்தில் நடப்பதைக் காட்சிகளாகவும் அந்த உணர்வை நுகர்ந்தபின்
2.நுகர்ந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையையும் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றார்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவு கொண்டு கற்றுணர்ந்த பின் ஆய்வுக்கூடத்தில் (LABORATORY) வைத்து மனித உடலில் பல பல பரிசோதனைகளைச் செய்கிறார்கள்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றது… பித்தப்பையில் கற்கள் உருவாகின்றது என்றால் கற்கள் உருவாகுவதற்குக் காரணம் என்ன…? என்று அன்று மெய்ஞானி கண்டான்

நம் உடலுக்குள் வரும் நோயை போக்க பல விதமான ஆங்கில மருந்துகளை இன்று உட்கொள்கிறோம். இரத்தநாளங்களில் கலக்கப்படும்போது அந்த உணர்வின் சத்து இரத்தங்களில் கலந்து உடல் முழுவதும் சென்ற பின் பித்தசுரபி அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் வடிக்கின்றது.

அப்படி வடிக்கப்படும்போது உறைக்கும் உணர்வு கொண்ட மருந்து அங்கே சேர்ந்தபின் அது உறையும் தன்மையாக வருகின்றது. பித்த சுரபிகளில் கற்களாக உருவாகின்றது.

அதே சமயத்தில் இரத்தத்தில் கலந்து வருவதைக் கிட்னி அது சுத்திகரிக்கக்கூடிய நிலை வரும்போது உப்புத் தன்மை அடைந்திருந்தால் அங்கேயும் உறையும் தன்மை அதிகரிக்கின்றது.

பின் சிறு மணலாக மாறினால் அதனின் வளர்ச்சியின் தன்மை கல்லாக மாறுகின்றது… ஒரு சிலருக்குப் பெரும் கல்லாகக் கூட மாறுகின்றது.

இது எல்லாம்…
1.இந்த இயற்கையின் நிலைகள் ஒவ்வொன்றும் தான் சுவாசித்த நிலைகளும் உணவாக உட்கொள்ளும் நிலைகளும்
2.தான் வாழ்க்கையில் மற்ற உணர்வின் தன்மைகளைக் கவர்ந்திருந்தாலும்
3.அந்த உணர்வுக்குள் ஏற்படும் இரத்தத்தின் கசிவுகளை (உப்பு நீராகக் கசிவது போல்) இது எப்படி மாற்றுகின்றது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

காரணம்… சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும் உணர்வுகளையோ சலிப்பு கொண்டவர்களையோ நாம் காண நேர்கின்றது. உதாரணமாக ஒரு சிறுநீரகக் கோளாறு உள்ள மனிதனை உற்றுப்பார்க்கின்றோம்… பழகுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிகமாக அவரிடம் பழகி இருந்தால் அவனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகரப்படும் போது அவன் உடலில் உணர்வான அந்த உறையும் தன்மை நமக்குள்ளும் வருகின்றது.

1.ஆனால் டாக்டர்கள் பார்க்கப்படும்போது
2.நோயை நீக்க வேண்டுமென்ற உணர்வு வரப்படும்போது இதைக் கவர்வதில்லை.
3.ஒரு இரக்கம் ஈகை கொண்ட டாக்டர் இதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தால் அவருக்கும் இதே நோய் வரும்.

ஆகவே இதைப் போல் தான் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் கலந்து நம் இரத்தநாளங்களில் கலக்கப்படும்போது
1.ஒன்றில் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் அதே செயல்களாகச் செயல்படுகின்றது என்று
2.இதையெல்லாம் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர்.

இது போன்ற விஷத் தன்மைகள் நம் உறுப்புகளில் சேராதபடி தடுக்க வேண்டும் என்பதற்குத்தான் தியானத்தில் அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடல் உறுப்புகளில் சேர்த்துக் கொண்டே வர வேண்டும் என்று சொல்கிறோம்.

உறக்கத்தில் வரும் கனவுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் எண்ண நிலையைத் திசை திருப்பிடவும் இவ்வுலகில் பல நிலைகள் பல வழியில் நம்மை வந்து மோதத்தான் செய்யும். நாம் தான் இந்நிலையிலிருந்து நம் எண்ணத்தை ஓ…ம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஞானிகளின் உணர்வுடன் சுழல விடவேண்டும்.

காலையில் துயிலெழுந்து இரவு உறங்கும் காலம் வரை நம் எண்ணத்துடன் பல செயல்கள் மோதுண்டு நம்மைப் பல நிலைகளுக்கு ஆளாக்குவது என்பது மட்டுமல்ல.

பகலில் ஏற்படும் செயல்களின் நினைவுடனே நாம் உறக்கம் கொள்வோமானால்…
1.அந்நினைவின் தொடரில் அதே நினைவுடன் கூடிய இக்காற்று மண்டலத்தில் கலந்துள்ள பல ஆத்மாக்களின் நினைவலைகளும்
2.நாம் நம் செயலின் நினைவலைகளும் உள்ள நிலையில் அதுவும் இதுவும் மோதுண்டு
3.அதன் எண்ணச் சுழற்சியில் நம் எண்ணம் சிக்குண்டு
4.உறக்கத்தில் உள்ள நிலையில் நம் செயல் எண்னத்தின் தொடர் எண்ணத்தில் நம்மைச் செல்லவிடாமல்
5.நம் எண்ணத்துடன் மோதுண்ட பிற ஆத்மாவின் எண்ணச் செயல் நிலையின் எண்ண ஓட்டத்திற்கே
6.நம்மை அவ்வாவி ஆத்மா தூண்டி அதன் எண்ண கலவையின் ஓட்டமுடனே நாம் செல்லும் நிலையில் தான்
7.நமக்கு ஏற்படும் கனவுகளில் நம் வாழ்க்கைக்கும் எண்ணத்திற்கும் ஒட்டாத செயல்களை எல்லாம் கனவில் காணுகின்றோம்.

உடலை விட்ட ஆத்மாக்களுக்கு உணவுமில்லை உறக்கமுமில்லை. மனித ஆத்மாக்கள் உறங்கிடும் வேளையில்… இவ்வாவி உலக ஆத்மாக்கள் தன் எண்ணத்தைச் செயல்படுத்த அதனுடைய எண்ண நிலைகேற்ப ஆத்மாக்களின் நிலைகளில் “நம் வட்டத்திற்குள் வந்து… நம் எண்ணத்தைத் தூண்டுகின்றது…”

இரவில் நாம் காணும் துர்க்கனவானாலும் ஆனந்த நிலை கொண்ட கனவாய் இருந்தாலும் நாம் உறங்கி எழுந்த பிறகு காலையில் நம் நினைவில் வருவதை வைத்து என்ன செய்கிறோம்…?

அதே எண்ண ஓட்டத்தில்…
1.இப்படிக் கனவு கண்டு விட்டோமே…
2.கனவு பலித்திடும் என்று செப்புகின்றனரே…! என்ற எண்ணத்தில் மோதவிட்டு
3.அதே நினைவுத்தொடரில் நாம் எடுக்கும் சுவாசத்தினால்
4.நம் சப்த அலையுடன் இந்நிலையும் கலந்து அதன் தொடர்ச்சியில் நம் செயல் நிலை இழுக்கப்படுகின்றது.

நல்ல ஆனந்த நிலை கொண்ட கனவும் இந்த நிலையே…! கனவில் ஏற்படும் நிலையினாலும் நம் வாழ்க்கையில் சில நிலைகள் தொடர் கொள்கின்றன.

பகலில் மட்டும் நம் செயலின் எண்ணம் கொண்டு நம் நிலை ஏற்படுவதில்லை. பகலிற்கு மேல் இரவிலும் நம் எண்ணம் செயல்படுகின்றது என்பதனை உணர்ந்தீரா…?

நாம் உறங்குவதற்கு முன் ஒரு ஐந்து நிமிடமாவது நம்மையே தியானத்துடன் கலக்கும் நிலைப்படுத்தி நம் தாய் தந்தையரை வணங்கி ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகள் ஞானிகளை எண்ணி அதைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடனே உறங்கினால் உறக்கத்தில் உள்ள நிலையில் நம் உயிரைச் சுற்றியுள்ள நம் ஆத்மாவுடன் நாம் எடுக்கும் இந்தச் சுவாசமே சுழன்று கொண்டிருக்கும்.

அந்த நிலையில் நம் எண்ணமும் நாம் விழித்துள்ள நிலையில் செய்த செயல் எண்ணமும் அதன் தொடரில் நாம் காணும் பல பல (கற்பனை) எண்ணங்களும் தியான நிலையில் உள்ள ஆத்மாவுடன் வந்து மோதுவதுமில்லை. பல கனவுகளைச் சிதறுண்டு நாம் காணவும் முடிந்திடாது.

உறங்கும் நிலையிலும் நாம் நல் சக்திகளை வளர்த்திட முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

செல்வத்தைத் தேடும் ஆசையால் கடைசியில் நாம் வேதனையைத் தான் அனுபவிக்கின்றோம்

 

அகஸ்தியன் அவன் கண்டுணர்ந்த நஞ்சினை வென்றிட்ட வழிகளிலேயே நாமும் செயல்பட வேண்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு மனமும் ஒன்றிட வேண்டும் என்று உணர்வின் தன்மையை வளர்த்து இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இரு உணர்வும் ஒன்றி ஒளியின் உணர்வாக உருவாக்கி எத்தகைய நஞ்சினையும் வென்றிடும் ஒளியின் தன்மை பெற்று ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவன் வழியிலேயே நாமும் சென்று எந்த நேரம் இந்த உடலிலிருந்து நாம் பிரிந்தாலும் பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திட நாம் ஒவ்வொரு நாளும் முயற்சிப்போம்.

இதை ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் நமது செல்வம் நிலைப்பதில்லை நம் உடலும் நிலைப்பதில்லை.

நிலையில்லாத இந்த உடலுக்கு நிலையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டு தேடிய செல்வத்தைச் சீராக பயன்படுத்தத் தவறும் போது அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகி விடுகின்றது.

ஏனென்றால் நாம் சேமித்த செல்வத்தை நம் பிள்ளைகள் செலவழிக்கின்றார்கள் அல்லது கடன் கொடுத்தது திரும்ப வரவில்லை என்றால் அதன் வழி கொண்டு வேதனையைத் தான் எண்ணுகின்றோம்.

1.அந்த வேதனைப்படும் நிலையே நமக்குள் எதிரி என்ற உணர்வுகளை உருவாக்கி
2.செல்வத்தைக் காக்கும் செயலை இழந்து
3.உடலின் தன்மை கொண்டு நாம் செல்வத்தைச் சேமித்தாலும்
4.அதனால் வேதனை என்ற உணர்வுகள் நுகர்ந்து இந்த உடலையே அழித்திடும் தன்மை வருகின்றது.

ஆகவே அந்தச் செல்வம் நம் உடலைக் காப்பதில்லை. அந்தச் செல்வம் நல்ல குணங்களையும் காப்பதில்லை. இருப்பினும் மனிதன் என்ற நிலையைச் சீர்குலையச் செய்து செல்வத்தால் பேரழிவு வருகின்றது.

செல்வம் தேவைதான்… செல்வத்தினைத் தேடும் முறைகள் வேறு. செல்வத்தைத் தேடும் முறைகள இருப்பினும் “போதும்…” என்ற மனம் இருந்தால் செல்வம் தன்னை நாடியே அது வரும்.

ஆனால் தனக்குச் செல்வம் வேண்டும் என்ற நிலை வரப்படும்போது அந்த உணர்வின் இயக்கமாகக் குறைகளைச் செயல்படுத்தத் தான் செய்யும். மற்றவருடைய பொருளை (மனத்தை) அறியத் தெரியாது. உண்மையின் உணர்வை அறியத் தெரியாது.

செல்வத்தையே தேடும் நிலையோ அல்லது அதை நமக்குள் பெறும் நிலையோ வரும்போது
1.ஈகை என்ற நிலை வராது… இரக்கம் என்ற நிலைகளும் வராது…!
2.பண்பென்ற நிலைகளை அழிக்கப்படுகிறது
3.துன்புறுத்தும் உணர்வே அங்கே விளைகின்றது… ஒதுக்கும் நிலையே இங்கு வருகின்றது.

இப்படிப்பட்ட உணர்வின் தன்மைகளத் தனக்குள் எடுக்கும் பொழுது செல்வத்தால் நமக்குள் தீமையின் தன்மை தான் வருகின்றதே தவிர நன்மை இல்லை.

செல்வத்தைப் பெற்றிருந்தாலும்… கடைசியில் செல்வத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்…! என்று பின்னாட்களில் வேதனை என்ற உணர்வே வருகின்றது.

ஆக… தேடிய செல்வத்தால் விஷத்தின் தன்மை தனக்குள் உருவாக்கப்பட்டு உடலிலிருந்து நாம் அகன்ற பின் விஷத்தின் உணர்வு அதிகரித்தால் மனிதன் சிந்தனையை இழக்கப்பட்டு மனிதனல்லாத உடலை உருவாக்கிடும் நிலையே வருகிறது.

இன்னொரு பற்று கொண்ட மனித உடலுக்குள் இந்த உயிரான்மா சென்றாலும்… எடுத்துக் கொண்ட வேதனைப்படுத்தும் உணர்வு கொண்டு ஒருவர் நமக்குக் கொடுக்கவில்லை என்றால் இவன் தான் என்னை வேதனைக்குள்ளாக்கினான் என்று எண்ணினால் அந்த உடலுக்குள் புகுந்து இதே வேதனை என்ற உணர்வை உருவாக்கி அதையும் வீழ்த்தத் தான் செய்யும்.

வீழ்த்திய பின் அடுத்து பாம்பினமோ தேளினமோ போன்ற நிலையை உயிர் உருவாக்கி விடுகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

ஏனென்றால் விஷத்தின் தன்மை அதிகரித்தால் அந்த விஷத்தின் துணை கொண்டு மற்றதைக் கரைத்து தான் உணவாக உட்கொள்ளும் இதற்கே உதவும்.

தன் உணவுக்காக ஊர்ந்து சென்று பிறிதொரு எதிரி என்ற நிலை தன்னை தாக்கிடாது அஞ்சி வாழும் நிலையில் நரக வேதனையே அது அனுபவிக்கின்றது. அத்தகைய நரக லோகத்தின் நிலைக்கு நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

1.ஆகவே பல கோடிச் சரீரங்களைக் கடந்து
2.சொர்க்க பூமியாக சொர்க்க உடலாக சொர்க்க லோகமாக உருவாக்கிடும் உயிரை நாம் மதித்திடல் வேண்டும்
3.தீமைகள் நமக்குள் உருவாகாதபடி ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை உருவாக்க வேண்டும்.

ஆன்மாவுக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்து என்ன பயன்…? – ஈஸ்வரபட்டர்

காட்சி:
பாட்டிலில் புனலை வைத்துத் திரவத்தை ஊற்றும் நிலை தெரிகின்றது.

விளக்கம்:
முந்தைய காலங்களில் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்திய ஜெப அருளினால் மட்டும்தான் ஞான நிலை பெற முடிந்தது. எழுதி வைத்துப் படிக்கும் நிலை அன்றில்லை…!

குப்பியில் புனலை வைத்துத் திரவத்தை ஊற்றுவதைக் கண்டோம். அக்குப்பிக்குப் புனல் உள்ளதினால் அதில் ஊற்றும் திரவம் சிந்தாமல் ஊற்ற முடிந்தது.
1.புனல் இல்லாவிட்டால்…
2.எண்ணத்தைச் சிறிது மாற்றினாலும்…
3.அத்திரவம் சிந்தி விடுகின்றது.

இன்றைய ஏட்டு நிலை கொண்டு ஆரம்ப நிலையிலேயே அறியும் பக்குவத்தை நாம் உணரப் பல நிலைகள் எழுத்து வடிவினில் தரப்படுகின்றன.

ஆனாலும் புனலைப்போல் நம் ஆத்மாவுக்குகந்த ஈர்ப்பு நிலையை நாம் உணராமல் வாழுகின்றோம். இம்மனித ஆத்மாவுக்கு மட்டும்தான் காந்த அமில சக்தியுடைய ஈர்ப்பு சக்தி அதிகம்.

இவ்வுலகின் ஈர்ப்பு நிலைக்குகந்த அமில சக்தியில் தாவர வர்க்கங்களும் மற்ற உலோகங்களும் அதற்குகந்த அமிலத்தைத் தான் ஈர்க்கும்.

மற்ற ஜீவ ஜெந்துக்கள் அதன் எண்ண வளர்ச்சியில் எச் சக்தியில் ஜீவன் பெற்றதோ அதன் வளர்ச்சித் தொடரில்தான் செல்லும். அனைத்து நிலைகளையும் உணரும் சக்தி சில ஜீவராசிகளுக்கு இருந்திட்டாலும் செயல்படத்தக்க இயற்கை நிலை இல்லாததினால் மனித ஆத்மாவை ஒத்த செயல் நிலை அவற்றிற்கும் இல்லை.

1.இம் மனித ஆத்மா ஒன்றுக்கு மட்டும்தான் இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி அமில நிலையினில்
2.தனக்கு வேண்டியதைப் பிரித்தெடுக்கும் ஆற்றல் உண்டு.

இம் மனித ஆத்மா ஒரு நிலை கொண்ட ஜெப அருள் பெற்று விட்டால் எண்ண சக்தியை ஒரு நிலையில் எண்ணி எடுக்கும் சுவாசத்தில் இருந்து அவ்வெண்ண சக்தியின் தொடர் நிலை கொண்ட அமிலத்தின் ஈர்ப்பினால்… “எதை எண்ணி நம் ஜெபக் குறி உள்ளதோ…” அந்நிலையை நாம் எடுக்கும் சுவாசத்தில் அலையுடன் நம் உயிராத்மா அவ் ஈர்ப்பு காந்த அமிலத்தை நமக்கு ஈர்த்தெடுத்து அளிக்கின்றது.

1.விழியை மூடிக் கொண்டே நாம் எடுக்கும் சுவாசத்திலிருந்து
2.எவ்வெண்ணத்தைப் பாய்ச்சி நம் தியானம் உள்ளதோ
3.அதன் தொடர்நிலை அனைத்தும் விழியுடன் காண்பதைப் போலவே காணலாம்.

இக்காற்றிலுள்ள ஜீவ அணுக்களை நமக்குகந்த அமிலத்தை நம் சுவாசம் எடுக்கும் நிலை பெறல் வேண்டும்.
1.காற்று மண்டலமே இன்றைய நிலையில் விஷத்தன்மை கூடி விட்டது என்றாலும்
2.நம் சுவாசத்திற்கு வேண்டிய நல் அணுக்களை நாம் சுவாசிக்கும் ஈர்ப்பு நிலை பெற வேண்டும்.

இத்தொடர் நிலை ஜெபத்தினால் நம் ஜெப சக்தியில் எவ் அமிலத்தையும் நாம் நமதாக எடுத்திடாமல்.. எம் மண்டலத்திலிருந்தாலும் நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து வாழும் பக்குவத்தை அறியலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் செயற்கைக் கோளைக் கொண்டு நம் மண்டலத்திலிருந்து பிற மண்டலம் செல்ல நம் பூமியின் அமிலக் காற்றை அதில் செல்லும் ஜீவ ஆத்மாவிற்கு எடுத்துச் சென்றும் பல பாதுகாப்பு நிலைகளைப் புகைப்படமாக்கி இப்பூமிக்கு அறியும் நிலையை ஏற்படுத்தி வர ஏவுகின்றனர்.

ஜெப நிலை கொண்டு தன் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை இக்காற்று மண்டலத்தில் எக் கோளத்தில் இருந்தாலும் ஈர்க்கும் பக்குவம் பெற்றுவிட்டால் இவர்கள் அனுப்பும் செயற்கைக் கோளில் எப்பாதுகாப்பு சாதனமும் இன்றி ஆகாரம் எடுத்துச் செல்லாமல் இவ்வுடலுடனே குறிப்பிட்ட காலங்களுக்குச் சென்று வர முடிந்திடும்.

1.எண்ணத்தில் ஜெப நிலை பெறல் வேண்டும்
2.அச்சாதனை நிலைபெற்ற ஆத்மாவினால் இச்செயல் நிலை கொள்ள முடியும்
3.பயமும் திகிலும் கொள்ளும் சிறு எண்ணப் பிசிறு உள்ள நிலையிலும் இச்செயல் நிலை சாத்தியமல்ல.
4.இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நிலையிலேயே சப்தரிஷியின் நிலை பெறும் ஆத்மாவினால்தான் அந்த நிலை பெறல் முடியும்.

சூட்சுமத்தில் உள்ளோரின் நிலை வேறு…! இவ்வுடலுடன் கொண்ட சூட்சும நிலை கொள்ளும் ஆத்மாவினால் இச்செயல் நிலை செயல்படுத்திட முடிந்திடும்.

“மனித ஆத்மா ஒவ்வொன்றிற்கும் இச்சக்தி நிலையுண்டு…!” என்பதனை உணர்த்தத்தான் இந்நிலை விளக்கப்பட்டதேயன்றி நம் வாழ்க்கையின் நம் ஆத்மாவின் குறிக்கோளுக்குச் செப்பவில்லை.

இவ்வாத்மாவிற்கு உகந்த சக்தியை உணர்த்திடத்தான் இந்நிலை உணர்த்தப்பட்டது.

இக்கால நிலையுடன் கலந்து வரும் பூகம்பத்தையும் இடி மின்னலையும் எரிமலை கக்கும் நிலையையும் பனிமலை உறையும் காலத்தையும் கடல் கொந்தளிக்கும் நிலையையும் இவ்வுடல் மண்டலத்தில் ஈர்க்கும் நிலைப்படுத்தி உணர்ந்திடலாம்.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே உடலுடன் இருந்த பல ஆத்மாக்கள் பல நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நிலைகளையெல்லாம் அறியும் பக்குவம் பெற்று இப்பூமியிலேயேதான் வாழ்ந்தார்கள்.

1.இன்று நாம் நமக்குகந்த உண்மை நிலையை உணராமல் செயற்கையில் மகிழ்ந்து வாழ்கின்றோம்
2.நம் ஆத்மாவையே செயற்கையுடன் ஒன்றச் செய்து விட்டோம்
3.ஆன்மாவுக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்து என்ன பயன்…?

“சீதா” ஜனகச் சக்கரவர்த்திக்கு வளர்ப்பு மகள் என்றால் அதனுடைய விளக்கம் என்ன…?

 

இராமாயணத்தில் காட்டப்பட்ட ஜனகச் சக்கரவர்த்தி என்பது சூரியன். பூமியிலிருந்து வெளிப்படும் சத்துக்களை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கிறது.

அதிலே சுவை கொண்ட உணர்வின் எண்ணங்கள் கொண்டே மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலையை உணர்த்துவதற்காக ஜனகச் சக்கரவர்த்தி என்று சூரியனைக் காட்டுகின்றனர்.

ஒரு நிலத்தினைப் பண்படுத்தி நல்ல வித்தினை ஊன்றினால் அதிலே விளைந்த சத்து (வித்துகள்) சீதா என்றும் அதை உணவாக சுவைக்கப்படும் பொழுது மகிழ்ச்சியின் நிலைகளை நாம் பெறுகின்றோம் என்று காட்டுகின்றனர்.

1.அதாவது உணர்வின் சத்தைத் தான் சூரியன் கவர்ந்து வைத்திருக்கின்றது
2.ஜனக சக்கரவர்த்தி அதைத் தத்தாக எடுத்து (சீதா என்ற சத்தை) அவன் வளர்க்கின்றான் என்ற பேருண்மையைக் காட்டுகின்றார்கள்.

மனிதனில் எடுத்துக் கொண்ட கோபமோ காரமோ மற்ற உணர்வுகள் எல்லாமே சீதா தான். அதைத்தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.

ஆனால் காடுகளில் விளைந்த விஷத் தன்மைகளை நாம் நுகர்ந்தால் என்னவாகும்..? நம்மைக் கொன்றுவிடும். இதைப் போல உணர்வுகள் அதனதன் விளைவுகளை… அதன் ஒலி அலைகளைப் பாய்ச்சப்படும்போது அதனுடைய திறமைகளைத்தான் காட்டும்…! என்பதனை உணர்த்துகின்றனர்.

அதே சமயத்தில் ஜனக சக்கரவர்த்தி சுயம்வரத்தை வைக்கின்றார். திறமைகளைக் காட்டுபவர்களுக்கே தன் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து தருவேன் என்று…!

ஒரு கொடியவன் மற்றவரை வீழ்த்திடும் திறமையைக் காட்டுகின்றான். வில்லிலே நாண் ஏற்றி அம்பை எய்து மற்றவரை மரணமடையச் செய்கின்றான். மற்றதைத் துன்புறுத்தும் நிலைகளையே அவன் உருவாக்குகின்றான்.

முதலிலே சொன்ன மாதிரி காடுகளின் விளையும் விஷச் செடிகளின் உணர்வினை நாம் நுகர்ந்தால் அது நம்மைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால்
1.மனிதனாக உருவான பின்… மனிதன் வளர வேண்டும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்ற உணர்வினை எடுத்து
2.அந்த உணர்வினைச் சீதாவாக எடுத்து சூரியன் வளர்க்கப்படும்போது
3.அதனை நாம் அரவணைக்கும் சக்தியாக எப்படிப் பெற வேண்டுமென்று தான் இராமயாணத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதனை நாம் சற்றும் சிந்தித்தோமா…? என்றால் இல்லை.

இராமாயணம் என்ற காவியத்தைக் கடவுளாக்கப்பட்டு அந்தக் கடவுளை வேண்டினால்… இராம நாம ஜெபத்தை நாம் ஜெபித்தால் நமக்கு உதவி செய்வான்…! என்று இப்படித்தான் நமக்குள் ஊட்டிவிட்டார்கள்.

அந்த இராம நாமத்தை நாம் சொன்னாலும் நாம் எந்தக் குணத்தை எடுத்தோமோ அது தான் சீதா. உதாரணமாக…
1.நான் வாழ வேண்டுமென்ற உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.ஒருவன் எதிரியாக வரும்போது அவனைப் பழித்துப் பேசும் உணர்வு கொண்டு
3.அவனைத் தாக்கும் நிலைகளே வரும்… ஒதுங்கி நிற்கும் நிலைகளே வரும்…!

இது போன்ற தீமைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்காகத் தான் சீதாவைத் திருமணம் செய்வதற்காக… தன் மகளைத் திருமணம் செய்ய அவரவகள் திறமைகளைக் காட்டும்படி செய்தார் என்ற நிலையைக் காவியமாகப் படைத்து நம்மைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

அவரவர்கள் திறமையைக் காட்டும் போது அங்கே பிறரைத் தாக்கக்கூடிய அம்புகளை வைத்து… மற்றவரைக் குறி வைத்துத் துன்புறுத்தும் இயக்கங்களே வருகின்றது.

ஆனால் பிறரைத் துன்புறுத்தும் அந்த உணர்வின் தன்மையை…
1.இராமன் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்
2.பிறரைத் துன்புறுத்தும் எண்ணத்தையே அக்ற்றி விட்டால் அந்த வேதனை என்ற நிலையே வராது.

சுவை கொண்ட உணர்வினைத் தனக்குள் உணவாக்கும் போதுதான் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக நமக்குள் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

ஆகவே அந்தக் குணத்தை எடுத்து அரவணைக்கும் தன்மையாகப் பெற்றான்… கல்யாணராமா…!

துன்புறுத்தும் உணர்வை நம் மீது ஒருவன் தாக்கினால் அவனை எதிர்த்துத் தாக்கும் உணர்வே வரும். இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்ளுவான்.

இனிமையான சொல்லைச் சொன்னால் அதையே திருப்பி எனக்குள் இனிமையாகி அரவணைக்கும் தன்மையே மீண்டும் வரும்.

ஆக… சுவை கொண்ட சீதா தன்னுடன் இணைந்து வாழும் சக்தியை உருவாக்குகின்றது என்று எல்லோரும் புரியும் வண்ணம் கொடுத்துள்ளார்கள்.

இராமயாணக் காவியத்தில் உள்ள மூலங்களை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நிலை கொண்ட தியானத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பத்தை எச்செயலுக்கும் உகந்ததென உட்படுத்தலாம்.
1.எண்ணத்தை ஒரு நிலைகொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால்
2.இவ்வுடல் என்ற பிம்பமும் இக்காற்றுடன் காற்றாய்ப் படர்ந்திடும் சக்தியைப் பெறலாம்.

உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களும் ஒரு நிலைப்பட வேண்டும். அந்நிலையில் இவ்வுடலை எந்நிலையில் வருத்தினாலும் அவ்வுடலுக்கு உணர்வு இராது.
1.எல்லா உயிர் அணுக்களும் ஒரு நிலைப்பட்டு தியானத்தில் உள்ள நிலையில்
2.இவ்வுடல் என்ற பிம்பம் ஜீவனற்ற பிம்ப நிலை கொள்கின்றது.
3.அந்நிலையில் அவ்வுடலுக்கு உணரும் சக்தி தடைப்பட்டு விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட ஜெப நிலையுடன் உள்ள உடலை அவ் உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எத்தகைய அறுவை சிகிச்சைகளையும் போதை நிலைப்படுத்திச் செயலாக்காமல் செய்திடலாம்.

உடலில் இருந்தே நீரிலும் நடக்கலாம்… அமரலாம்… உறங்கலாம்… நாம் கனவில் காணும் நிலை போன்று பறக்கவும் செய்யலாம்…! உடலில் பின்னப்படாவண்ணம் எச் செயலையும் அவ்வுடல் தாங்கிடும்.

இவ்வுடல் என்ற பிம்பம் அவ்வுயிராத்மாவிற்குச் சொந்தம்.
1.உயிராத்மாவின் ஆணைப்படித்தான் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் செயல் கொள்கின்றன.
2.உயிராத்மாவின் ஜீவனே இவ்வெண்ணத்தில்தான் செயல் கொள்கின்றது
3.இவ்வெண்ணமே நாம் எடுக்கும் சுவாசத்தினால்தான் நம் உயிராத்மாவை நிலைக்கச் செய்கின்றது என்பதனை உணர்ந்து
4.நம் எண்ணத்தினால் ஒரு நிலை கொண்டு ஜெபம் பெறும் நிலையில் நாம் எடுக்கும் சுவாசம் இருந்திடல் வேண்டும்.

எந்த வகையான மோதலின் நிலையையும் நம் எண்ணத்தில் பற்றாமல் எண்ணத்தைப் பற்றற்றதாக்கி ஒரு நிலை கொண்ட ஜெபம் எடுத்திடல் வேண்டும்.

நம்மை எதிர் நோக்கி வரும் எவ்வெண்ணத்தின் பற்றுதலையும் நம் எண்ணமுடன் ஒரு நிலை கொண்டிடல் வேண்டும்.

தியானத்தில் ஒரு நிலை கொண்டவரின்… அவர்கள் இல்லத்தையும் அவர்களின் உடலையும் அவர்கள் சார்ந்து செய்யும் எத்தொழிலையும் எத்தடங்கலும் இன்றி நல் நிலையாய் செயல் கொண்டிடும்.

1.எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்ந்திடுங்கால்
2.நமக்கு நடக்கும் எந்நிலையும் சிதறுண்ட நிலையில்தான் நம்மைத் தாக்கும்.

இன்றைய கால நிலையில் தெரிந்தோ தெரியாமலோ இவ்வுலகம் முழுவதுமே ஆத்மீக நெறி உணர்த்த… ஆண்டவனை இவர்களின் செயலுக்கு உகந்த பொருளாக்கி… இன்றைய அரசியலும் சரி… ஆலயங்களும் சரி… “பல ஆவிகளின் வசியத் தொடர்பு கொண்டு இவ்வுலகமே ஆடிக்கொண்டுள்ளது…”

இவ்வுலகினில் மேலை நாட்டில் ஆயிரம் உடல் ஆத்மாக்களை ஒரு மனித ஆத்மா வசியப்படுத்திச் செயல்படுத்தி வந்த நிலையில் இதன் நிலை வெளியுலகிற்கு அறியப்பட்டவுடன் அனைத்து ஆத்மாக்களையும் உடலுடன் வசியப்படுத்திட எண்ணியவன் அவ்வாத்மாவுடன் தன் ஆத்மாவை செயல்படுத்திட அனைத்து உடல்களையும் தன் உடலுடன் அழித்து இன்று அவ் ஓர் ஆத்மாவே அதன் வசியத்தில் அது அழித்த அனைத்து ஆத்மாக்களையும் வசியப்படுத்தி இவ்வுலகத்திலே அதன் நிலையைச் செயல்படுத்திக் கொண்டுள்ளது.

தலைவனாய் வசியப்படுத்திய அவ்வாத்மா உடலுடன் இருந்திருந்தால் அவன் அழித்த மற்ற உடல் ஆத்மாக்கள் இவன் வசியத்திற்கு வந்திருக்காது.

இன்னும் இந்திய நாட்டிலேயே உண்மை நிலை வழி நாமம் கொண்ட சில நிலைகள் நடக்கின்றன. ஆவிகளை வசியப்படுத்தி அதிகார வர்க்கமுள்ளவர்களையும் பொருட்செல்வம் கொண்டவர்களையும் தன் வசியத்திற்கு ஈர்த்து “உண்மை வழி…” என்ற போர்வையில் வாழுகின்றனர்.

இந்நிலையெல்லாம் இக்கலியில் வந்தது மட்டுமல்ல. அரசர்கள் ஆண்ட கால நிலைத்தொட்டே வந்து கொண்டுள்ளது.

ஆவி ஆத்மாவின் வசிய நிலை கொண்டு பல ஊடுருவல் வேலையெல்லாம் செய்வித்து… ஒரு நாட்டுடன் பிற நாடு சண்டை இட்டு போர்க்களம் கொண்டு அவ்வாவிகளுக்கு மற்ற ஆத்மாவின் குருதிகளை உணவாக்கிப் பல தேசங்களைப் பிடித்தார்கள்.
1.அவ்வாவிகளின் எண்ணமும் வெறி உணர்வு கொண்ட ஆக்ரோஷ நிலைப்பட்டு வழி வழியாய்
2.எத்தீய செயலுக்கும் எண்ணத்தில் பயமில்லாமல் இன்றைய பல ஆத்மாக்கள் செயல் கொள்கின்றன.

எவ்வுயிரணுவும்தான் அழிவதில்லையே…!

ஆக… இன்றைய உலகமும் இவ்வுலகினில் உள்ள அரசியல் நிலைகளும் ஆவியின் பிடியில் சிக்குண்ட நிலையில்
1.நமது ஆத்மாவை நாம் ஒரு நிலைகொண்ட ஜெப சக்தியில்
2.சலிப்பு கோபம் குரோதம் இப்படி எண்ணத்தை வளர்க்காமல்
3.நமது ஆத்மாவை ஒரு நிலைகொண்ட தியானம் ஒன்றினால் மட்டும்தான் நல் வழி கொண்டிட முடியுமப்பா…!

நாம் உருவாக்க வேண்டிய “பாதுகாப்பு அரண்”

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் முழுவதும் தலையிலிருந்து கால் வரை அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுகின்றீர்கள்.

உங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்கி உடலில் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உருவாகி அந்த அருள் ஞான சக்தி உங்களுக்குள் பெருகும்.

நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களிலே விளையும். நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்போது நீங்கள் உணரலாம். கை கால் குடைச்சலோ சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ மன நோயோ இவை அனைத்தும் அகலும்.

அருள் ஞான ஒளி உங்களிலே பெருகும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வுகள் உங்களில் விளையும். உங்களை மகிழச் செய்யும் அணுக்கள் விளையும்.

அருள் ஒளி வளரும் மெய்ப் பொருள் காணும் திறன் பெறுவீர்கள். உங்கள் பார்வையால் உங்கள் நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

பிறருடைய துன்பங்களைப் போக்கும் வலு பெற்றால் பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடைப்படுத்த முடியும் உங்கள் உணர்வால்…!

தியானமிருக்கும் அனைவரது உடலிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிலே படர்ந்து மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுவீர்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாகப் படரும். சகோதர உணர்வுகள் விளைந்து மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அத்தகையை அருள் சக்திகள் கொண்ட உங்கள் மூச்சலைகள் காற்றிலே படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்திட குருவைப் பிரார்த்திக்கின்றேன்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களில் படர
2.மகிழ்ச்சி பெறும் உணர்வை வளர்த்திட
3.அந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.அந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக உருவாகி
5.உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் சொல்லாக உருவாக்கும் சீதா இராமனாக எண்ணங்கள் தோற்றுவிக்கவும்
6.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்திடவும்
7.மகரிஷிகள் உணர்வுகள் அரணாக உங்கள் உடலுக்கு அமைந்து
8.இந்தப் பிறவியிலேயே பேரின்பப் பெரு வாழ்வு பெற்றிடவும்
9.எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கிடவும்
10.உங்கள் உடலைச் சொர்க்க லோகமாக்கி உங்கள் உயிரைச் சொர்க்க வாசலாக அமைத்திடவும்
11.அந்த மாமகரிஷிகளின் அருளாசி படர்ந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திடவும்
12.உங்கள் பார்வையிலேயே தீமைகளை அகற்றிடவும் மெய் ஒளியைப் பரப்பிடவும்
13.என்றுமே அழிவில்லா வாழ்க்கையாக வாழ்ந்திடவும்
14.மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடும் அருள் ஒளி உங்களில் படர்ந்திடவும்
15.உங்கள் பேச்சால் மூச்சால் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகள் வளர்ந்திடவும்
16.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களுக்கு உறுதுணையாக இருந்திடவும்
17.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்திட குரு அருள் உங்களுக்குள் எப்பொழுதும் உறுதுணையாக இருந்திடவும்
18.அந்த அருள் ஞான குரு வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தியாக விளைந்திடவும்
19.நான் (ஞானகுரு) பிரார்த்திக்கின்றேன்… தியானிக்கின்றேன்…!

இதைக் கேட்டுணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் குறைந்திருப்பதையும் காணலாம்.

இதைப் போன்ற அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ள அதிகாலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலே படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும்… இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… நல்ல இரத்தங்கள் உருவாக வேண்டும்… நல்ல ஞானங்கள் எங்களுக்குள் வளர வேண்டும்…. ஒரு பத்து நிமிடமாவது ஏங்கிப் பெறுங்கள்.

இப்போது கொடுக்கும் இந்த அருள் ஞான வித்துக்களை உங்கள் நினைவால் நீங்கள் மீண்டும் மீண்டும் எண்ணும்போது
1.உங்கள் உயிரே அந்த அணுக்களை வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உடலில் வளர்த்து
3.மன பலம் மன நலம் பெறச் செய்து
4.அருள் ஒளி பெறும் அருள் ஞான வழியில் அழைத்துச் சென்று
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் உங்கள் உயிர்…!

ஆகவே
1.எண்ணியதை உருவாக்குவது உயிரான ஈசன்.
2.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே
3.எண்ணியதை காத்தருளுவதும் உயிரே
4.ஆண்டவனாக இருப்பதும் உயிரே.

நம்மைக் காத்தருளுவதும்… ஈசனாக இருந்து உருவாக்குவதும்… என்றென்றும் பாதுகாப்பு அரணாக இருந்து நம்மைக் காப்பதும் உயிரே…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகிச் செல்லும் எந்தச் சந்நியாசியாக இருந்தாலும் ரிஷித் தன்மை பெற முடியாது – ஈஸ்வரபட்டர்

ஆத்மீக நெறிக்கு வருபவர்களும் சந்நியாசிக் கோலத்தை மனிதர்களுக்கு உணர்த்தி…
1.குடும்பப் பற்றையும் மற்ற எல்லா ஆசை நிலையையும் துறந்துதான் ஆத்மீக நெறிக்கு வர வேண்டும் என்பதனை ஒரு சாரார் உணர்த்திவிட்டனர்
2.இன்னும் ஒரு சாரார் அப்பக்தியைப் பொருளாக்கி வளரவிட்டு விட்டனர்
3.இன்னும் ஒரு சாரார் தனக்கு அனைத்து நிலைகளும் தெரிந்துள்ளதாகவும்
4.அவ்வாண்டவனே இவர்களின் மூலமாய்த்தான் பிறருக்கு அச்சக்தியை அளிப்பதாகவும் எண்ணத்தில் கொண்டு
5.மடாலயம் கட்டி மத குருக்களாய் அனைவரையும் வணங்கச் செய்கின்றனர்.

எல்லா மதத்திலும் இந்த நிலைதான்…! உலகுடன் பல காலமாய் எண்ணத்துடனே வளர்ச்சியின் பல நிலைகள் வந்துவிட்டன.

இதிலிருந்தெல்லாம் நமது ஆத்மாவை எல்லாமில் எல்லாமாய் அவனருள் எப்படிக் கலந்துள்ளதோ அதைப் போன்றே எல்லாவற்றுடனும் எல்லாமாய்த்தான் நாம் நம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்திடல் வேண்டும்.
1.அழுக்குப்படிகிறதே…! என்று அஞ்சி ஒதுங்கி விடலாகாது…
2.அழுக்கை அகற்றிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

மண்ணிலிருந்து கரும்பை எடுத்து அதனைச் சாறாக்கும் நிலையில் அதன் நிறமும் அதன் மணமும் கண்ணுற்றால் இதையா நாம் உண்ணுகின்றோம் என்று எண்ணுகின்றோம்…!

அச்சாறே அதனுடன் சில கலவையை ஏற்றிய பிறகு தூய கற்கண்டாய் உள்ள நிலையில் அதன் வெண்மையும் சுவையும் கண்டு நாம் அருவருப்பதில்லை.

அதைப்போல் உலகத்துடன் ஒன்றியுள்ள நாம் பிற ஆத்மாக்களின் தீய எண்ணத்தைக் கண்டு ஒதுங்கிடலாகாது. கரும்புச்சாறு பார்க்க அருவருப்பாய் உள்ளதென்று ஒதுக்கிவிட்டால் கற்கண்டு கிடைக்குமா…?

மற்ற ஆத்மாக்களையும் நம் நிலையினால் தூய்மைப்படுத்த வேண்டுமேயன்றி எதையுமே வெறுத்து ஒதுக்கலாகாது.

ஆதவனுடன் ஆதவனாய் ஜோதி நிலை பெற்றுக் கலந்திட அவ்வாதவன் எப்படி நன்மை தீமை கொண்டு அவ்வொளியைப் பாய்ச்சவில்லையோ அதைப் போல் உலகுடன் கலந்துள்ள பல நிலை கொண்ட எல்லாமில் எல்லாமாய்த்தான் நம் ஒளியையும் நாம் பெறல் வேண்டும்.

வாழ்க்கையுடன் இருந்திட்ட பெரியோர்கள்தான் இன்று அவ்வொளியுடன் ஒளியாய்க் கலந்து ஆண்டவனாய் உள்ளார்கள் என்பதனை யார் வினா எழுப்பினாலும் அவர்களுக்கு விடையளிக்கப்படும்.

1.குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகி
2.இமயமலைச் சாரலுக்குச் சென்று ஜெபமிருக்கும் எந்த ஆத்மாவானாலும் சரி
3.அவ்வாத்மாவும் உடலை விட்டுப் பிரிந்த பிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறந்து வாழத்தான் வேண்டும்.
4.சித்தனாகவும் முனிவனாகவும் சப்தரிஷியாகவும் எந்த நிலையும் பெற முடிந்திடாது என்பதனை இங்கே வெளிப்படுத்துகின்றேன்.

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் நம் எண்ணமுடன் சுவாசத்தை எடுக்கும் முறையில் இருந்துதான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் அமில சக்தி கூடுகின்றது.

ஒவ்வொரு நாளும் பல தரப்பட்ட எண்ணத்தின் மோதலில் இருந்தும் நாம் தப்பி நல்லுணர்வையே நம் ஆத்மா சேமிக்கும் அமிலமாய் நம்மை நாம் பக்குவப்படுத்திப் பல ஆத்மாக்களை அப்பக்குவ ஜெபத்திற்கு ஈர்த்துச் செயல்படுத்த வேண்டும்.

இதை உணர்ந்து கொண்டு…
1.நான் என்ற தனித்த நிலையை விட்டு விட்டு
2.எல்லாமுடனும் எல்லாமாய் நம் ஆத்மாவும் ஒளிரும் வழி முறை பெற்று
3.எல்லாமே ஒளிரச் செய்யல் வேண்டும்.

தன்னிச்சையாகத் தீமைகளை அகற்றிடும் வல்லமையை வளர்த்துக் கொள்ளுங்கள்

 

மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்பதற்கே அழுத்தமாகவும் உங்களுக்குள் தெளிவாக்கவும் சிறிது வேகமாகச் சொல்கிறேன் (ஞானகுரு).

யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மைகளை யார் கூர்மையாக எண்ணி எடுக்கின்றார்களோ அவர்கள் உடலிலே இந்த அணுத் தன்மை பெருகும்.

தீமைகளை அடக்கும் வல்லமை பெறுகின்றீர்கள். புரியவில்லை என்றால் அந்த உணர்வின் தன்மை கலக்கப்படும் போது அதே தான் ஆகும்.

ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக்கை வைத்து எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். ஒரு நாடாவில் முலாம்களைப் பூசி அதை உயர் அழுத்தத்தில் இணைக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒலிகள் அதிலுள்ள அதிர்வுகளை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதன் ஒளி அதிர்வுகளை இந்த எலெக்ட்ரிக் தன்னுடைய ஒளிப் பேழைகளில் மாற்றியமைத்து ரூபமாகவும் எழுத்தாகவும் ஆணைகளாகவும் கூட்டுகின்றது.

இதிலே இடைமறித்து எதையாவது தவறுதலாக ஓசை மாறி விட்டால் உடனே அதனின் அழுத்தங்கள் மாறிவிடுகின்றது.

1.ஏனென்றால் ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்க வேண்டும் என்றால்
2.அல்லது இந்த நேரத்தில் நிறுத்த வேண்டும் என்றால் இடைமறித்து இது தாக்கப்படும் பொழுது
3.குறித்த நேரத்தில் இது தாக்கி அந்த இயந்திரத்தைப் பாதுகாப்பாக நிறுத்திவிடும்.

இப்படி இயந்திரங்களை இயக்குவதும் விமானங்களை ஓட்டுவதும் இராக்கெட்டுகளை இயக்குவதும் விஞ்ஞானத்தில் செயல்படுத்துகின்றனர்.

இதே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற பேழையை அங்கே வைத்து விட்டு அதன் ஒலி அதிர்வுகள் கதிர்களை இயக்கப்படும் பொழுது தொலை தூரத்தில் செல்லும் இராக்கெட்டையே இயக்கச் செய்கின்றது.

இராக்கெட்டுகளில் ஏதாவது குறைகள் இருந்தாலும்…
1.கம்ப்யூட்டர் மூலம் இந்த ஒலி அதிர்வுகளை ஏவி அதன் கட்டளைப்படி
2.அதை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் மீண்டும் சீராக்குகின்றான் மனிதன்.

இதைப் போன்று தான் நமக்குள் நுகர்ந்த தீமையின் விளைவுகளை மாற்ற வேண்டும் என்றால்… “நம் எண்ணத்தின் நிலையை அருள் மகரிஷிகளுடன் ஒன்றச் செய்ய வேண்டும்…”

மகரிஷிகளுடன் நாம் ஒன்றி…
1.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்கி
2.அந்த எண்ணத்தை இங்கே இயக்கினால் அதன் துணை கொண்டு
3.நமக்குள் சேரும் தீமையின் உணர்வுகளை மாற்றியமைக்க முடியும்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாம் விஞ்ஞானத்தை நம்புகின்றோம். ஞானிகள் கொடுத்த மெய் ஞானத்தை இழந்து விட்டோம்.
1.மெய் ஞானத்தின் உண்மைகளை அறிந்தால் மனிதனுக்கு உதவும்.
2.பிறவியில்லா நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் அடைய உதவும்.

ஆனால் மனித ஆசையின் உணர்வுகள் கொண்டு ஒவ்வொன்றையும் வளர்க்கப்பட்டால் அது இந்த உடலுக்கே உதவும். இந்த உடல் அழிந்து விட்டால் இதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மீண்டும் அடுத்த உடலாக மாற்றிவிடும்.

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டு அகன்ற பின் மெய் ஞானியின் உணர்வுடன் ஒன்றச் செய்யும்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றச் செய்யும்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

அகஸ்தியன் இளமைப் பருவத்தில் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகள்

 

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகி மின்னல்களாகப் பாய்கிறது.

தாய் கருவிலே விஷத்தை வென்றிடும் ஆற்றல் பெற்ற அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது அத்தகைய மின்னலை எல்லாம் உற்றுப் பார்க்கின்றான்.
1.பார்க்கும் பொழுது அதிலுள்ள விஷக் கதிரியக்கங்களை அடக்கி
2.அதை எல்லாம் ஒளிக்கதிர்களாக மாற்றும் தன்மையாக
3.தன் உடலில் ஒளியான அணுக்களாக மாற்றும் தன்மை அவனுக்குள் உருவாக்குகின்றது.

இதைப்போல சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையும் அந்தக் குழந்தை உற்றுப் பார்க்கின்றது.

இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானதோ…? இதற்குள் நட்சத்திரங்கள் எப்படி உருவானதோ…? அகண்ட அண்டங்கள் எப்படி உண்டானதோ..? இந்த உணர்வெல்லாம் சூரியனுக்குள் உண்டு.

இதன் வரிசைப்படுத்தி வந்த உண்மைகளை எல்லாம் அந்த நட்சத்திரங்களின் சக்திகளை இவன் நுகரப்படும்போது அந்த உணர்வின் எண்ணங்கள் (ஞானமாக) வருகின்றது.

ஒரு குளவி மண்ணைப் பிசைந்து கூட்டைக் கட்டி அதற்குள் புழுவை எடுத்து வந்து வைக்கின்றது. புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. எத்தனையோ உணர்வுகள் கலந்து தான் அந்த விஷத்தின் தன்மை குளவிக்குள் வருகின்றது.

குளவி புழுவைத் தன் விஷத்தால் கொட்டிய பின் அந்த விஷம் புழுவின் உடலுக்குள் சென்று அந்த விஷத்தின் தன்மைகள் கொண்டு துடிப்புகள் அதிகமாகிறது.

அதுவே புழு உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இந்திரீகமாக மாறி அது இந்திரலோகமாக மாறி அந்தப் புழுவின் தன்மை குளவியாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் இவன் அறியவில்லை என்றாலும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் வரப்படும் பொழுது நட்சத்திரங்களிலிருந்து வரும் மின்னல்களையும் மற்றவைகளையும் இவன் அடக்குகின்றான்.

உதாரணமாக பல நட்சத்திரங்களின் சக்திகள் வந்தாலும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியைச் சூரியன் கவரும்பொழுது அடுத்த நட்சத்திரத்தின் சக்தி அங்கே வந்தால் இந்த இரண்டும் மோதும் போது எர்த் (EARTH) ஆகின்றது.

அப்பொழுது பளீர்…” என்று மின்னுவதும் அந்த உணர்வுகள் மற்றதோடு ஊடுருவதும் அதன் அலைவரிசையில் ஊடுருவும்போது மரங்களில் விழுந்தால் அதைக் கருக்கி விடுகின்றது.

இந்த மின்னல்கள் அடுத்து பூமியின் ஈர்ப்புக்குள் அதிகமாகச் சேர்த்தால் இது கொதிகலனாக மாறுகின்றது.

அணுவைப் பிளந்து அதன் வீரியத்தன்மை கொண்டு அணு உலைகளில் (ATOMIC POWER STATION) வைக்கும்போது அது எவ்வளவு வேகமாக வெப்பத்தை உண்டாக்குகின்றதோ இதைப்போலத்தான் இந்த மின்னல்கள் ஊடுருவி அந்த பூமியின் அடியில் சென்றபின் கொதிகலனாக மாற்றுகின்றது.

வெப்பத்தின் துரிதத்தால் பாறைகள் உருகுகின்றன. உருகிய பின் அந்தப் பாறைகள் கீழே இறங்கப்படும் போது நிலநடுக்கம் வருகிறது. அந்த ஒரு நொடிக்குள் எல்லாம் கூழான பின் இதில் அடங்கி விடுகின்றது.

அதே மின்னல்கள் கடல்களிலும் பாய்கிறது. கடல்களில் உள்ள ஹைட்ரஜன் அது உப்புச்சத்து கொண்டது. அதிலே மின்னல்கள் பரவினால் இது பூராமே அடக்கி மணலாக மாற்றுகின்றது. கதிரியக்கத் தனிமங்களாக உருவாகிறது.

1.இதைப் போலத்தான் அகஸ்தியனுடைய பார்வையில் மின்னல்கள் பட்டாலும்
2.விஷத்தை ஒடுக்கும் சக்தி இவனுக்குள் இருக்கும்போது
3.அந்த உணர்வின் தன்மை கடல் எப்படி தனக்குள் அடக்கியதோ
4.இதே உணர்வின் அணுவாக இவனுக்குள் இவனுக்குகந்த அணுவாக மாற்றும் திறன் பெறுகின்றான்.
5.அவன் இளமை பருவத்தில் அவனுக்குத் தெரிந்தல்ல.

அவனுடைய சந்தர்ப்பங்கள் அவன் அத்தகைய நிலைகளில் வளர்ச்சி பெறுகின்றான். அப்படி வளர்ச்சி பெற்றவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றோம் என்றால் நாமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

நாம் ஞானத்தின் சக்தி பெறுவது என்பது ஆத்மாவிற்குத் தான்… செல்வத்திற்கும் புகழுக்கும் அல்ல…! – ஈஸ்வரபட்டர்

 

தியான முறையும் ஞான முறையும் பெற்றிட நம்மை நாம் பல பக்குவ நிலைப்படுத்திச் செயல் கொண்டு நாம் அந்த ஞானம் பெறுவது என்பது நம் ஆத்மாவிற்குத்தான்…!
1.நம் எண்ண்ம் செயல் எல்லாமே… “நமக்குச் சாதகமாக”
2.மற்றைய நிலையிலிருந்து தப்பி ஒதுங்கிப் பெறுவதல்ல தியானமும் ஞானமும்.

நம் எண்ணம் செயல் உடல் அனைத்துமே சத்தியம் கொண்டு தூய்மையுடன் நாம் உள்ளோம். மற்றவர்களுக்கு அந்த நிலை தெரியவில்லை என்று எண்ணினாலும் நமக்கு அந்த “நான்” என்ற நிலை வந்து விடுகின்றது.

நம்முள் பல நற்சக்திகளையே ஈர்த்துச் செயலாக்கி வருகின்றோம் என்ற நிலையில் நாம் இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள ஆத்மாக்களின் நிலையுடன் நம்மை நாம் ஒன்றித்தான் செயல் கொண்டிடல் முடியும்.

நம் உடலைத் தினமும் நீர் விட்டுக் குளித்துத் தூய்மைப்படுத்துகின்றோம். நம் உடல் தூய்மையாய் உள்ளதென்று நாம் வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா…?
1.வெளி உலகில் கலந்துள்ள காற்றும் மண்ணும் நம் மேல் படத்தான் செய்யும்
2.மீண்டும் மீண்டும் இவ்வுடலைத் தூய்மைப் படுத்திக் கொள்கின்றோம்.

புற உலகின் அழுக்கு நம் மீது வேண்டும் என்றே படிகிறதென்று நாம் வெளியில் செல்லாமலே இருக்க முடியுமா…?

அதைப்போல் நம் எண்ணம் ஒரு நேர்கோடான சத்தியச் செயலைச் சார்ந்துள்ள நிலையில் நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஆத்மாக்களின் நிலையும் நம்மை ஒத்திருந்தால்தான் நாம் அதனுடன் கலந்து வாழ்ந்திட முடியும்.

1.தீய பழக்க வழக்கம் கொண்டவனை விட்டு நாம் விலகித்தான் வாழ வேண்டும் என்று நம் எண்ணத்தில் எண்ணினோமானால்
2.நம் எண்ணத்தில் உள்ள அச் சத்திய நேர்கோட்டின் பிடிக்கு நாம் அடிமைப்பட்டு
3.”நான்” (நான் ஒழுக்கமானவன்) என்ற வைராக்கிய ஆத்மாவாகத்தான் நாம் இருந்திட முடியும்.

நாம் பெற்ற சக்தியை நமக்கே சொந்தமாக்கி நம் ஆத்மாவிற்கு எத்தனை செல்வங்கள் சேமித்தாலும் அதுவும் “நான்” என்ற சக்தியாகத்தான் இருந்திடுமப்பா.

1.நான்… எனது… என்ற அணுவளவு எண்ணத்தில் பிற பேராசை பற்று இருந்தாலும்
2.ஆண்டவனை பூஜிக்கும் பற்றானாலும் சரி
3.தான் கற்ற வித்தையின் பலனை எண்ணினாலும் சரி அந்த நிலை அந்த நானாகிவிடுகின்றது.

பல ஆத்மாக்கள் இயற்கையிலேயே பல உன்னத சக்தியைப் பெற்று வாழ்கின்றனர்… மருத்துவம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், ஓவியம், விவசாயம் எல்லாவற்றிற்கும் மேன்மையான சமையல் திறன்.

இப்படி ஒவ்வோர் ஆத்மாவும் இயற்கையிலேயே உன்னத சக்தி பெற்றிருந்தாலும் அச் சக்தியைத் தன் நலம் நாடாமல் பொருள் ஆசையின் நிலையில் அத் திறனை வளரவிட்டால் “நான் என்ற நிலையில்தான்… அவர்கள் பெற்ற பயன் சிக்குண்டு விடுகின்றது…!”

பொருள் இல்லாவிட்டால் எப்படி ஜீவிதம் கொள்ள முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

பொதுவான நிலைப்படுத்தி அவரவர்கள் பெற்ற பயனைச் செயலாக்கித் தேவை என்ற அடிப்படையில் ஜீவிதத்திற்குகந்த பொருள் நிலை பெற்றுத்தான் அஜ்ஜீவன் நடக்கும்… உண்மைதான்.

ஆனால்… அதற்காக ஆண்டவன் அருளில் பெற்ற அதி பொக்கிஷ செயல் திறமையை நாம் பேராசைக்கு அடிமைப்பட்டு உழலும் காலமாய் இன்றைய கால நிலை உள்ளது.

தேவை என்ற அடிப்படையில் பொருள் சேமிக்கலாம்…!
1.அதி தேவையாக்கி நம்மையே நாம் அதற்கு அடிமைப்பட்டு சேமிக்கும் பொருளினால்தான்
2.இன்றைய இவ்வுலகமே இப்பேராசைப் பிடிக்கு அடிமை கொண்டு வாழ்கின்றது.

காற்றே தான் கடவுள்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காற்றேதான் கடவுள்…! காற்றையே தெய்வமாக்கி நாம் எடுக்கும் சுவாசத்தில் கலக்கவிடுங்கள் என்றெல்லாம் இப்பாடநிலை உணர்த்திய நாள் தொட்டே செப்பி வருகின்றோம்.

ஆனால் மனித ஆத்மாக்களுக்கு…
1.மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதையும் சர்க்கஸில் ஆடும் கோமாளியின் லீலையில் மகிழவும்தான் பேராவல் உள்ளது.
2.மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதை மந்திரக்காரன் செய்கிறானே…
3.அதில் உள்ள உண்மை என்ன…? என்று அறியும் நிலை கொண்ட எண்ணமுடையோர் மிகச் சிலர் தான்.

இவ்வுலகமே வேடிக்கையான உலகம் தான்.

உலகம் என்பது இவ்வுலகின் ஜீவ ஆத்மாக்கள்தான்.
1.இக்காற்றைச் சுவாசமாய் ஈர்க்கும் ஒவ்வோர் ஆத்மாவுக்குமே
2.இக்காற்று எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் சுவாசத்தினாலேயே அங்குள்ள நிலையினை உணர்த்திட முடியும்.

சுழலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அம் மண்டலத்தின் உருவ அளவைக் கொண்டு அம்மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் காற்று மண்டலம் (அடர்ந்த காற்று மண்டலம்) அம்மண்டலத்தின் அளவைப் பொறுத்து உள்ளது.

நட்சத்திர மண்டலங்களுக்கும் அதன் சுழற்சியைக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள அதன் சுவாச நிலை கொண்ட காற்று மண்டலம் உண்டு. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் அததற்குகந்த அமிலக் காற்று மண்டலமுண்டு.

நம் பூமியிலிருந்து பத்து மைல் சுற்றளவில் கொஞ்சம் கூடவும் குறையவும் நம் பூமிக்குகந்த காற்று மண்டலமுண்டு. அனைத்திற்கும் பொதுவான “சூனிய மண்டலம்” என்று உணர்த்துகிறார்களே அங்கும் உண்டு காற்று. அதன் தன்மை வேறு…! மண்டலங்கள் வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் தன்மை வேறு.

இப்பூமியில் பல இயற்கைத் தாதுப் பொருட்கள் தானாகவே வளர்கின்றன. இத்தாதுப் பொருள் வளர அதற்கு மூலப் பொருளாய் இவ் இரசமணி ஒன்று வளர்ந்தால்தான் பல தாதுப் பொருள்கள் வளர முடியும்.

இந்த இரசமணியின் சக்தி நிலை மனித ஜீவ ஆத்மாக்களுக்கும் சிங்கத்திற்கும் நாய் நரி பூனை இவற்றிற்கும் வாழை மரத்திற்கும் இந்நிலை அதிகம்.
1.நம் முன்னோர்கள் வாழை இலையில் சூடான உணவைப் படைத்து
2.நம்மை உணவாக உட்கொள்ளச் செய்ததன் இரகசியம் இது தான்…!

இம் மனித ஆத்மாவினால் இயற்கையில் வளரும் தாதுப்பொருளையே செயற்கையில் இவ் இரசமணியின் சேர்க்கையினால் சில குறிப்பிட்ட தாவரங்களின் இலையின் சாறு எடுத்து இவ் இரசமணியின் கலவையுடன் இவ் எண்ணத்தை அவ்வமில சக்தியுடன் ஜெபப்படுத்தினால் எவ்வுலோகத்தையும் பூமியில் இருந்து எடுக்காமலும் பணம் தந்து வாங்காமலும் செய்விக்க முடியும்.

அந்தத் தாவரங்களின் நாமம் மறைக்கப்பட்டதின் நிலை மனித ஆத்மாக்கள் இப்பேராசையில் சிக்கிடாமல் இருப்பதற்கே.

தன் ஆத்மாவையே… தன் ஆத்மாவுடன் உடலுடன் கலந்துள்ள இரசமணியின் ஈர்ப்பினால் நம் எண்ணம் தங்கமாகவும் நம் செயல் வைரமாகவும் ஆக்கிடலாம்.

1.நம்முள்ளேயே அனைத்துப் புதையலும் உள்ளன…
2.அழியாச் செல்வப் புதையல் இச்சக்தியை உணர்ந்து
3.நம் சக்தியை வளரவிடும் சத்தியமாக வாழ்ந்திடுங்களப்பா…!

வெப்பம் காந்தம் விஷம் – இராமா சீதா இலட்சுமணா

 

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் விஷமும் மும்மலம் என்று சொல்வார்கள். அதிலே… தான் நுகர்ந்த மணம் என்ற நிலை இருந்தாலும் அந்த சுவை – சீதா ஒரு திடப்பொருளாக மாறுகின்றது.

திடப்பொருளாக மாறும்பொழுது அதனுடைய மணம் ஞானம் சரஸ்வதி என்றும் இதிலே இணைந்த சக்தியை சீதா என்றும் அதன் உணர்வின் தன்மை இந்த மூன்று நிலைகள்
1.வெப்பம் தனக்குள் உருவாக்குவதும்
2.காந்தம் தனக்குள் அரவணைப்பதும்
3.விஷம் இயக்கும் தன்மை வரப்படும்பொழுது
4.நாராயணன் (சூரியன்) லட்சுமி நாராயணனாக அங்கு உருவாகிறது.

சூரியன் விஷத்தின் தன்மையைப் பிரித்த பின் இங்கே அந்தக் காந்தம் இதை மீண்டும் கவர்ந்து கொள்ளும் போது லட்சுமணா. அதே சமயத்தில் சூரியன் மோதி இந்த உணர்வின் தன்மை வெப்பமாகும்போது நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு ஆகின்றான்.

ஆனால் அதனுடன் இணைந்த நிலையோ லட்சுமி ஆகின்றது. ஆக விஷ்ணு லட்சுமி இரண்டும் இணை சேர்க்கப்படும் பொழுது இதனால் பிரிக்கப்பட்ட விஷத்தின் தன்மை தனக்குள் இருக்கப்படும்போது அந்த விஷத்தின் தன்மை தான் லட்சுமணா.

1.ஆக… இந்த வெப்பம் அந்த இராமனாக எண்ணத்தின் நிலை உருவாக்கும் நிலைகள் பெற்றது.
2.காந்தம் தனக்குள் அந்த மணத்தை சீதா அந்தச் சுவையின் தன்மை தனக்குள் இணைத்து மற்றதை வளர்க்கும் தன்மை கொண்டது
3.விஷம் இலட்சுமணா இந்த உணர்ச்சியைத் தூண்டும் (மணத்தை) வல்லமை பெற்றது.

இப்படி மூன்று நிலைகள் கொண்டது.

நுகர்ந்த மணம் ஞானம் என்றாலும் சீதா என்றாலும் நான்காவது நிலை அடைகின்றது. இதனுடன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது இயக்கச் சக்தியாக மாறும் பொழுது காயத்ரி.. முழுமை பெறுகின்றது.

அதாவது இந்த அணு எதனைக் கவர்ந்ததோ அதன் வலுவாக அது மற்றொன்றுடன் புகப்படும்போது அதனின் செயலாக்கமாக மாற்றும் ஆகவே புலனறிவு ஐந்து என்ற நிலை.

சூரியன் (ஆதிசேஷன்) விஷத்தின் துணை கொண்டு விஷத்தின் உருவால் உருவாக்கப்பட்ட நிலைகள் ஐந்து புலனறிவாக ஐந்து நிலைகளில் இது உருவாக்குகின்றது. இதே விஷத்தின் இயக்க தொடராக…!

இந்த நிலையைக் காட்டுவதற்குத் தான் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன் என்று காட்டுகின்றார்கள்.

இதனின்று வெளிவந்த உயிரின் தன்மைகள் பல விஷத்தன்மை கொண்ட தாக்குதலில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு உயிரின் துடிப்பின் நிலை வரப்படும்போது “உயிரணுவாக மாறுகின்றது…”

கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை என்பது ஆண்பாலை உருவாக்கும் தன்மை பெற்றது. ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால் ஒன்றுடன் இணைந்து ஒன்றை வளர்க்கும் திறன் பெற்றது

இயக்கச்சக்தி ஒன்றுடன் ஒன்று மோதும்போது… அதாவது உராயப்படும்போது பூமி சுழற்சியாகி அதனால் வெப்பமாவதும் ஒரு பக்கம் ஈர்த்து தனக்குள் ஒன்றை கருவாக உருவாக்கிறது அல்லவா…!

அதைப் போன்று தான் கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் இரண்டு மோதலும் ஏற்படும்போது இந்த மோதலினால் துடிப்பின் நிலை வருவதும் அந்தத் துடிப்பால் தனக்குள் ஈர்க்கும் சக்தியும் பெறுகின்றது

அத்தகைய ஈர்க்கும் சக்தி பெறுவதற்கு…
1.கதிரியக்கப் பொறிகளை உருவாக்கும் வியாழன் கோளால் உருவான நிலைகள் இதனைத் தாக்கப்படும்பொழுது
2.துடிப்பின் நிலைகளாகி மும்மண்டலங்களாக மாறுகின்றது.

ஒன்று விஷம்… ஒன்று ரேவதி நட்சத்திரம் வளரும் பருவம் பெற்றது… மற்றொன்று உறையும் தன்மை பெற்றது. இந்த மூன்று நிலைகள் பெற்று துடிக்கப்படும்போதுதான் இயக்கமாகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு எடுத்தாலும் இன்று பெரும் பெரும் சக்திகளை இயக்கப்பட வேண்டுமென்றால்
1.மூன்று நிலைகள் கொண்ட மூன்று வயர்களை வைத்துத்தான் இயக்குவார்கள்
2.இதைச் சக்தி வாய்ந்த அழுத்தம் (THREE PHASE CURRENT) என்று கூறுவார்கள்.

அதைப் போலத்தான் இந்த உணர்வின் சத்து மூன்றும் சக்தி வாய்ந்த அழுத்தமாக எதனையும் தனக்குள் ஜீரணித்து அணுவின் தன்மை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

துடிப்பால் ஈர்க்கும் காந்தமாகி அந்தக் காந்தத்தால் தன்னுடன் இணைத்து உணர்வின் தன்மை தனக்குள் ஒளிக்கதிராக மாற்றும் திறன் பெறுகின்றது.

ஏனென்றால் பௌதீக நிலையில் உங்களுக்குள் விளக்கத்தைக் கொடுத்து உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

அகஸ்தியனுக்குள் விளைந்த உணர்வுகள் அணுக்களாக நமக்கு முன் உலாவிக் கொண்டுள்ளது

கடவுள் என்றால் என்ன…? உணர்வு என்றால் என்ன…? என்ற நிலையை
1.தனக்குள் இயங்கும் அணுவின் இயக்கங்களையும்
2.விண்ணின் அணுக்களின் இயக்கமும்
3.மண்ணின் அணுக்களின் இயக்கமும்
4.தாவர அணுக்களின் இயக்கமும்
5.தாவர இனச் சத்தை நுகர்ந்தபின் அணுக்களின் இயக்கமும் என்ற இந்த உட்பிரிவினை எல்லாம் அறிந்துணர்ந்ததனால்
6.அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்த சக்தி தனக்குள் கவர்ந்து வைத்துள்ளது.
1.இன்றும் அது இருக்கின்றது… அது அழியவில்லை அழிந்து போகவுமில்லை.
2.அணுக்களாக உலாவிக் கொண்டுள்ளது நம் பூமியில்…!

இங்கு மட்டுமல்ல… நமது சூரிய குடும்பத்தில் நம் பிரபஞ்சித்திற்குள்ளே அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வுகள் விண்ணிலும் சரி இம்மண்ணுலகிலும் சரி இது உலாவிக் கொண்டே உள்ளது.

சந்தர்ப்பத்தால் நமக்குள் நுகர்ந்து அதை பதிவாக்கி விட்டால் அதே நினைவின் எண்ணங்கள் வருகின்றது.
1.அதைக் கவர்ந்து நமக்குள் வளர்க்கவும் முடியும்…வளரவும் முடியும்.
2.மற்றோரை வளர்த்திடவும் முடியும்…! என்று இந்த நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
3.அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்த அந்தச் செயலாக்க உணர்வுகள்.

நான் சொல்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்…. நீங்கள் புரிந்து கொள்வதற்கு. ஏனென்றால் இன்றைய உலகில் கற்றுணர்ந்த உணர்வின் நிலைகளை எழுத்தறிவாக பாட உணர்வுகளைக் கொடுக்கப்பட்டு அதனின் பதிவாக்கங்களாகத் தான் வந்துள்ளது.

ஞானியர்கள் உண்மைகளைக் காட்டியிருந்தாலும் அதன் பின் வந்தவர்கள் தான் நுகர்ந்த உணர்வின் தன்மையை அவர்கள் மதங்களாக உருவாக்கப்பட்டு அவர்களுக்குகந்த சட்டங்களை இயற்றுகின்றனர்.

ஒவ்வொரு மதமும் தனக்குள் எண்ணத்தால் உருவாக்கப்பட்டதை அதைப் படித்து உணர்ந்தால் அவை நமக்குள் கடவுளாக இயங்கத் தொடங்குகின்றது “உள் நின்று அந்த உணர்வுகள்…”

ஆகவே ஒவ்வொரு மதமும் அதற்குள் எத்தனையோ வகையான உணர்வுகளைப் பதிவு செய்தாலும்… “அதற்குள் இனங்கள் பல” தான் எண்ணிய உணர்வுகளைப் பதிவாக்கப்படும்போது அது உள் நினறு கடவுளாக நம்மை உருவாக்குகின்றது.

இப்படி மதங்களால் எண்ணங்களை உருவாக்கப்பட்டு அதன் வழிகளிலே தான் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அவைகளை நமது பூமியில் பரவச் செய்துள்ளது. அதுவும் இன்றுள்ளது…!

இருந்தாலும்…
1.அந்த மெய்யை நம்மில் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால்
2.அகஸ்தியன் வழியில் நாம் சென்றோமென்றால் தான்
3.அந்த அணுவின் இயக்கப்பொறியின் ரூபங்கள் எவ்வாறு…? என்ற நிலையை நாம் அறிந்திட முடியும்.

நாம் எதையெல்லாம் பெற்று அந்தந்த உணர்விற்கொப்பப் பரிணாம வளர்ச்சி அடைந்து எப்படி வந்தோம்….? இந்த உணர்வின் கலவையால் நமது உயிர் எவ்வாறு நம்மை மனிதனாக உருவாக்கியது…? உடலுக்குப் பின் ஒளியின் தன்மையை எப்படி அடைய வேண்டும் என்ற நிலையையும் நாம் அறிந்திட முடியும்.

அதற்குத் தான் இதைத் தெளிவாக்குகின்றோம்.

நம் ஆத்மாவை நற்சக்தியுடன் கலக்கவிடும் பக்குவ நிலை பெற வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒரு நொடியில் ஜீவிதம் பெற்றுச் சில நிமிடங்கள் வாழ்ந்து மறையும் விட்டில் பூச்சிகளும் உயிராத்மாதான். பல கோடி ஆண்டுகளாய் வாழும் மண்டலமும் (சூரியனும்) ஜீவன் பெற்ற ஜீவ ஆத்மாதான். அதனதன் வளர்ச்சியில் அது அது எடுக்கும் சுவாச நிலைகொண்டுதான் நீடித்து வாழும் பக்குவம் கொள்கின்றது.

பல நாட்களாய் நம் உலகம் கலியின் பிடியில் சிக்குண்டிருக்க இன்றைய நிலையில் மீளச் சொல்வதின் பொருளென்ன…? என்ற வினாவும் எழும்பலாம்.

1.இவ்வுலகிற்காக இப்பூமி நிலைத்துச் செயல் கொண்டிட
2.நல் ஆத்மாக்களின் சக்தி நிலை இருந்தால்தான் இப்பூமி வாழ முடியும்.

இப்பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் நற்சக்தியை ஈர்த்து ஞானம் பெற்று இன்று சூட்சுமத்தில் உள்ள அனைத்துச் சித்தர்களுமே…
1.இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் அவர்களின் சக்தி நிலையை உயிராத்மாக்களின் நிலையில் உணர்த்தி
2.நம் பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான்
3.இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன.

எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி ஓ…ம் என்ற நாதத்தை உயிரணுவில் கலக்கவிடும் சத்திய நிலையை ஒவ்வொரு உயிராத்மாக்களுக்கும் உணர்த்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்கு நற்பயன் தேட எவ்வாத்மாவும் செயல் கொண்டிடவில்லை. கொண்டிடவில்லை என்பதன் பொருள் புரியாமல் உள்ளதின் நிலை.

1.பக்தியையே ஜாதகத்தின் வழியில் காணுகின்றனர்.
2.எதிர்காலம் என்பதனையே இவ்வுலகில் வாழும் இக்குறுகிய நிலைக்காக
3.தாமடைந்த இவ்வுடல் கொண்ட ஜீவ ஆத்மாவைச் சிதறவிட்டு
4.பொருளுக்கும் பதவிக்கும் போற்றலுக்குமே வாழ்நாளைக் கழித்து
5.நமக்குக் கிடைத்த இவ்வாய்ப்பின் நழுவ விட்டே வாழ்கின்றனர்.

நமக்குக் கிடைத்துள்ள இக்கால சந்தர்ப்பம் என்பது நம் ஆத்மாவை நற்சக்தியுடன் கலக்கவிடும் பக்குவ நிலைக்காகத்தான்…!

நம் உலகினில் பல அரசியலின் தலைவர்கள் தோன்றித் தோன்றிப் பெரும் புகழும் அழிவும் கொண்டெல்லாம் வளர்ந்து வாழ்ந்தனர்.

உலகையே அடிமைப்படுத்தும் அதிகாரப் பதவியில் இருந்து வாழ்ந்தாலும் அவ்வாத்மாவிற்குப் பேராசை நிலையின் அதி பற்றிருந்ததினால் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்தும் மீண்டும் மீண்டும் பல பிறவிக்குத் தன் ஆசையைப் பூர்த்தி செய்யப் பிறந்து கொண்டே உள்ளது.

1.திருவள்ளுவர் அரசனாக வாழவில்லை
2.தன் ஆத்மாவையே கவியாக்கி ஞான சக்திச் சொற்களை உலகிற்கு உணர்த்த ஆசைப்பட்டுச் செயல் கொண்டார்.

அவர் ஆத்மா இன்றளவும் அவரின் மனையாளின் ஆத்மாவுடன் ஒன்றியே சூட்சுமம் கொண்டு இன்று உலகமே போற்றும் அத் திருக்குறளில் உள்ளார். அவரின் குறட்பாக்களைப் படிக்கும் ஆத்மாக்களின் எண்ணமுடனே அவரின் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

“பேரானந்த நிலை… தெய்வீக நிலை…!” என்பதெல்லாம் நாம் காணும் இன்றைய மாயக் கனவு வாழ்க்கையில் இல்லை…! – ஈஸ்வரபட்டர்

 

உலக சக்தி என்பதைத் தனித்து எதனைச் செப்புவது…?

இன்றைய உலகமே பிம்பத்தைத்தான் உலகமாகக் காண்கின்றது. எப்பிம்பமும் நிலைத்த பிம்பமல்ல.
1.இன்றைய பிம்பம் மாறிவிட்டால் காற்றுதான் (ஆவி)
2.அன்றைய காற்று இன்றைய பிம்பம்.

காற்றில் தான் அனைத்தும் உள்ளன. நீரும் காற்றுத்தான் நெருப்பும் காற்று தான். நீரும் ஆவியாகிக் காற்றுடன் கலக்கின்றது. நெருப்புக் கோளங்களும் எரிந்து ஆவியாகிக் காற்றுடன் தான் கலக்கின்றன.

1.அனைத்து பிம்பமும் காற்று தான்.
2.காற்றே தான் கடவுள்
3.அக்காற்றிலிருந்து ஜீவன் கொண்ட அனைத்துமே கடவுள்தான்.

பால்வெளி மண்டலத்தைக் காற்றாய்க் காண்கின்றோம். அப்பால்வெளி மண்டலத்தில் இருந்துதான் ஆதவனாய் உள்ள சூரியனும் பிறந்தான். பூமித்தாயும் வளர்ந்தாள். மற்ற அனைத்துக் கோளங்களுமே பிறந்து… வளர்ந்து… வாழ்கின்றன.

இந்தப் பால்வெளி மண்டலத்தில் காற்றில் கலந்துள்ள அமிலமே நீராயும் நெருப்பாயும் ஒன்றை ஒன்று பற்றியே சுழன்று கொண்டு உள்ளது.

1.இவ்வமிலமே திடமாகி… அத்திடத்தில் இக்காற்று பட்டு
2.அதை ஈர்த்து அது வெளிப்படுத்தி… அந்நிலையிலேயே வளர்ந்து
3.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றின் அமிலம் மற்றொன்றில் கலந்து
4.அது ஈர்த்து சமைத்து வெளிக்கக்கும் அமிலம் மற்றொரு கலவையுடன் சேர்ந்து… அவை எடுத்து அவை வெளிப்படுத்தி
5.இப்படியே மோதுண்டு மோதுண்டு… ஒன்று உண்டு அதன் கழிவு வெளிப்பட்டு
6.அக்கழிவு அதன் இனமுடன் சேர்ந்து அவை உண்டு அவை சமைத்து வெளிப்படுத்தும் அமிலம் படர்ந்தே
7.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஜீவன் கொண்டு
8.ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டு மண்டலமாய் உருப்பெற்று
9.அம்மண்டலம் எடுக்கும் உணவு (சுவாசத்தை) கொண்டு அதன் சக்தி நிலை வளர்ந்து
10.அது வெளிப்படுத்தும் அமிலத்திலிருந்து பல நிலை பெற்று
11.பால்வெளி மண்டலத்தை… இக்காற்று மண்டலத்தை… மையமாய்க் கொண்டு சுழலுவது தான்
12.அனைத்து மண்டலங்களும்… நாமும்… எல்லாமுமே…!

ஆவிதானப்பா அனைத்துமே…!

ஆவியான இக்காற்றில் நிறைந்துள்ள அமில சக்தியைக் கொண்டு நம் ஆத்மாவிற்கு உகந்த அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து உயர்ந்த ஞான நிலைபெறும் பக்குவ அமிலத்தை உணரும் சக்தி பெறல் வேண்டும்.

இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்களெல்லாம் தனக்குகந்த அமிலத்தையே ஈர்த்து வளரும் பக்குவ நிலை உள்ள பொழுது நாமும் அனைத்துமே ஆவிதான்.

நாமும் ஆவிதான் நம் உடலில் உள்ள அனைத்துமே ஆவிதான் என்பதனை உணர்ந்து நமக்குகந்த ஆவி அமிலத்தை எண்ணத்திலேயே ஒரு நிலை கொண்டிடும் பக்குவ நிலைப்படுத்திட வேண்டும்.

1.பக்குவத்திய முறையில் ஞானத்தின் வழித்தொடர் பெற்று
2.ஆவியாய்ப் பிரியப் போகும் பிம்பத்தை பேராசைப் பொருளாய் எண்ணிடாமல்
3.அனைத்தும் ஆவிதான் என்பதனை உணர்ந்து ஒவ்வோர் உடல் கொண்டு வாழ்ந்து பல எண்ணத்தை ஈர்த்து
4.பல கோடி ஆண்டுகளுக்கு ஜீவன் கொண்ட பல பிம்ப உடல்களை ஏற்று ஏற்று (பிறவிக் கடனாக)
5.நம் ஆத்மாவைப் பெரும் இன்னல் படுத்திடாமல் உயர் ஞானம் பெறும் நல்லுபதேசம் பெற்று
6.சித்தாதி சித்தர்களும்… ஞானாதி ஞானியர்களும்… சத்திய ஞானம் பெற்ற சப்தரிஷிகளும் இக்காற்றில்தான் கலந்துள்ளார்கள் என்ற எண்ணம் கொண்டு இவ்வுண்மையை உணர்ந்து
7.ஆண்டவனுக்கு மத வேறுபாடு இல்லை…. எவ்வாண்டவனை வணங்கினாலும் ஒன்றே என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு
8.உம்மின் அன்பை ஆண்டவனாய் ஒருநிலைப்படுத்தி
9.உம் எண்ணத்தில் ஆண்டவனாய் வரித்துள்ளவரையே ஆண்டவனாக்கி உம் எண்ணத்தில் செயல்படுத்தி…
10.நீவிர் எடுக்கும் சுவாசமெல்லாம் உம் உயிர் ஆத்மாவின் அமில வட்டத்தில் ஞானத்தின் சக்தித் தொடரை ஈர்க்கும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.

ஞானத்தின் வழித்தொடர் பெற்று விட்டால் நம் எண்ணமும் செயலும் ஞானமாகி அதன் தொடர்பிலேயே பல நிலைகளை நாமும் உணர்ந்திடலாம்.

இத்தொடரின் வழியினால் நம் ஆத்மா நம் நிலையில் அக்காற்றுடன் காற்றாய் செயல் கொள்ளும் பக்குவத்தை நம் எண்ணத்தினால்தான் செயல்படுத்திட முடியும்.

உயிரணுவாய்த் தோன்றிய நிலையிலேயே ஈர்க்கும் நிலைப்படுத்தி அவ்வுயிரணு தோன்றிச் சேமித்துச் சேமித்துப் பழக்கப்படுத்தி பல நிலைகளை ஈர்த்த பின் மனித ஆத்மாவாகப் பல நாள் சேமிப்பின் அமிலத்தை வளர்த்துக் கொண்டுள்ள நிலையில்
1.தன் ஆத்மாவைக் காற்றுடன் கலக்கவிடும் பக்குவத்தை உணர்ந்து செயல்படுத்தினால்
2.ஞானம் என்ன…? சித்தென்ன…? சப்தரிஷிதான் என்ன…? சகலத்திலும் சகலமாய் உள்ள அவ் ஆதி சக்தியுடனே ஒன்றிடலாம்.

“பேரானந்த நிலை… தெய்வீக நிலை…!” என்பதெல்லாம் இன்று வாழ்க்கையில் நாம் காணும் இந்த மாயக் கனவு வாழ்க்கையில் இல்லை…! என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

யாம் சொல்வது வெறும் வார்த்தையல்ல – ஞானகுரு

 

நம் வீட்டில் சிறு குழந்தையாக இருப்பது டி.வி.யைப் பார்க்கும் பொழுது அதில் வரும் பாடலோ ஆடலோ அது மனதில் பதிவாகிறது. மற்ற கலக்கம் இல்லாத நிலையில் தான் குழந்தை டி.வி.யைப் பார்க்கின்றது.

இப்படி அந்த ஆடல் பாடல்களை உற்றுப் பார்க்கப்படும் பொழுது மீண்டும் அதே உணர்வுகள எண்ணத்தால் எண்ணும் போது ஆடிக் காட்டுகின்றது… பாடவும் செய்கிறது.

குழந்தை இதை எல்லாம் தெரிந்து செய்யவில்லை. பதிவானது இயக்குகிறது.. இயங்குகிறது.

இதைப் போல் தான் இங்கே யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞானிகளின் அருள் உணர்வுகளை
1.நீங்கள் கற்கவில்லை என்றாலும்… கற்றறியும் திறன் இல்லை என்றாலும்
2.யாம் சொல்வதைக் கூர்ந்து பதிவாக்கப்படும் பொழுது
3.மீண்டும் இதனின் நினைவாற்றல் வந்தால் இந்த ஞானத்தின் உணர்வின் இயக்கமாக மாற்றும்.
4.உங்களில் உள்ள தீமைகளை மாற்றிடும் தன்மையும் வரும்.

நான் கற்காதவனாக இருந்தாலும் கல்வியற்றவனாக இருந்தாலும் குருநாதர் எனக்குள் அதைப் பதிவு செய்தார். அந்த உணர்வை நுகர்ந்தேன். அந்த உணர்வின் அறிவாக எனக்குள் அது இயக்கச் சக்தியாக வளர்ச்சி அடைந்தது.

1.அப்படி வளர்ச்சி அடைந்த ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அதன் செயலாக்கங்களாக… அதே வழியில்… உங்களுக்குள்ளும் உருவாக்கும் நிலைகள் வர வேண்டும் என்பதற்குத் தான் இதனைச் சொல்வது.

ஏனென்றால் நான் வெறும் வார்த்தையாகப் பேசவில்லை…!

குரு அருளின் உணர்வுகளைத் தான் வாக்காக… ஞான வித்தாக… உங்களுக்குள் அது பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கிடும் மனிதர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும்.

இந்தப் பிரபஞ்சம் அழியும் தருவாயில் இருக்கும் பொழுது
1.மனிதனான நாம் அந்த அருள் ஒளியைப் பற்றுடன் பற்றி
2.இனி பிறவியில்லா நிலை அடைந்து
3.என்றும் ஒளியின் சரீரமாக நாம் மாறிடல் வேண்டும். (இந்தப் பிரப்ஞ்சம் அழிவதற்கு முன்)

அந்த நிலை பெறாதபடி இங்கே வேதனை என்ற உணர்வு கொண்டால் மனிதனல்லாத ரூபமாக மாற்றி நரக வேதனைப்படும் உணர்வின் அணுக்களாக மாற்றிவிடும். நஞ்சின் தன்மை அடைந்து விட்டால் மனித உடலை இழந்து விடுவோம்.

அப்படியே தப்பித் தவறி மனிதனாகப் பிறந்தாலும் “அசுர சக்திகள்” கொண்டு செயல்படும் உணர்வாகத் தான் அது மாற்றும். ஆகவே இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதாவது… மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றாலும் மனித உடலில் வாழும் போது “யார் உணர்வைக் கவர்ந்தோமோ” அந்த உடலுக்குள் சென்று தான் இந்த உணர்வைக் கருவாக்க முடியும்.

ஆனாலும் இப்பொழுது வாழும் இந்த மனித உடலில்… நஞ்சு கொண்ட உணர்வுகளால் நல்ல அறிவின் ஞானத்தை இங்கே இழந்து விட்டால்… அந்த உணர்வின் அணுக்களாகத் தான் நம் உயிராத்மாவிலே விளையும்.

உடலை விட்டுப் பிரிந்தாலும் மீண்டும் பற்று கொண்ட மனித உடலுக்குள் நாம் செல்லப்படும் பொழுது இங்கே விளைந்த உணர்வுகள் அந்த மனிதனையும் வீழ்த்திடும் உணர்வைத்தான் உருவாக்கும்.

அங்கே சென்று குழந்தையாகப் பிறக்காதபடி நஞ்சினை வளர்த்திடும் நிலை கொண்டு… மனித ரூபத்தையே மாற்றிவிட்டு… மாற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு வெளி வந்த பின்
1.மனிதனல்லாத உணர்வின் வலு கொண்ட உடலுக்குள்ளே ஈர்க்கப்பட்டு அதனின் ரூபமாக நம் உயிர் மாற்றிவிடும்.
2.இன்றைய செயல் நாளைய சரீரமாக ஆகும்.
3.ஆகவே இன்றைய நம் செயல் எதுவாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு நாமும் ஞானியாக வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

தீய வினைகளிலிருந்தும் சாப வினைகளிலிருந்தும் விடுபடுங்கள்

 

நமது வாழ்க்கையில் எத்தனையோ சலிப்பு பட்டவர்கள் சங்கடப்பட்டவர்கள் கோபப்பட்டவர்களை எல்லாம் பார்த்திருப்போம்… நுகர்ந்திருப்போம். அந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் தீய வினைகளாக இருக்கும். அதே போல் நாம் தாய் கருவில் இருக்கப்படும்பொழுது பெற்ற பூர்வமும் இருக்கின்றது.

அதாவது தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது நோயாளியைப் பார்த்திருப்பார்கள் சாபமிட்டவரைப் பார்த்திருப்பார்கள் எத்தனையோ வேதனைப்பட்டோரையும் பார்த்திருப்பார்கள். அதே சமயத்தில் ஒரு சிலருக்குச் செய்வினை செய்திருக்கின்றார்கள் என்றெல்லாம் கூட கேட்டிருப்பார்கள்.

இந்த உணர்வை எல்லாம் தாய் நுகர்ந்த பின் தாய் கருவில் இருக்கும் பொழுது அது பூர்வ புண்ணியமாக நமக்குள் விளைகின்றது.
1.இது எல்லாம் அந்தந்தக் காலகட்டங்களில் அந்த வளர்ச்சிகள் வரும் போது
2.நம்மை அறியாது எத்தனையோ நோய்களாகவோ மற்ற தீமை செய்யும் இயக்கங்களாகவோ வருகிறது.
3..நாமும் தவறு செய்யவில்லை… தாயும் தவறு செய்யவில்லை
3.நுகர்ந்த உணர்வோ தாய் தந்தையரால் நுகரப்பட்டது தான்.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது அந்தத் தாய் விஷத் தன்மையில் இருந்து தப்பிப்பதற்காகப் பல பல பச்சிலைகளையும் விஷத்தை முறிக்கும் மூலிகைகளையும் நுகர்ந்தது.

1.அந்த உணர்வுகள் தாய் கருவிலே இருக்கும் அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாகின்றது
2.விஷத்தை முறிக்கும் சக்திகளை அகஸ்தியன் பெறுகின்றான்.
3.அதன் மூலம் அவன் அண்டத்தையே அறியும் அருள் சக்தி பெறுகின்றான்
4.நஞ்சை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் வல்லமையும் பெறுகின்றான்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களைப் பெற்றால் தான் முதலிலே சொன்ன… அறியாமல் வந்த எத்தனையோ தீய வினைகளிலிருந்தும் தாய் கருவிலே பெற்ற பூர்வம் என்ற நிலைகளிலிருந்தும் ஒவ்வொருவரும் தப்ப முடியும்.

அந்தச் சக்திகளைப் பெற நாம் இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து… ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து
1.எங்கள் வாழ்க்கையில் அறியாது செர்ந்த தீயவினைகளால் விளைந்த சாப வினைகளால் விளைந்த பாவ வினைகளால் விளைந்த பூர்வ ஜென்ம வினைகளால் விளைந்த
2.கேன்சர் டி.பி. இரத்தக் கொதிப்பு சர்க்கரைச் சத்து ஆஸ்த்மா வாத நோய் முடக்கு வாதம் சரவாங்கி நோய் போன்ற சர்வ நோய்களும் நீங்கி
3.நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று உடல் நலம் பெற்று மன பலம் பெற்று
4.நாங்கள் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற்று எங்கள் இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி பேரருள் பெற்றுப் பேரொளியாகி… தெளிந்த மனமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வும் பெற்று.. பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று… தொழில் வளம் பெருகி செல்வம் பெற்று… அருள் ஞானம் பெருகி அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

கூட்டுத் தியானங்களில் இது போன்று எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பின் எந்த நேரம் எண்ணினாலும் அந்த ஆற்றலை எளிதில் பெற முடியும்.

ஐக்கியத் தொடர் ஜெனிப்பினுள்ளே… ஐக்கியமாகிவிடு ஈஸ்வரபட்டாய குருதேவா – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு மதத்தவரும் ஆண்டவனை அவரவர்கள் உணர்ந்த நிலையில் உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். அனைத்து ஆத்மாக்களுக்குமே நல்லுணர்வு பெற வேண்டுமென்று அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள்ளும் ஓர் எண்ண நிலை ஓடிக்கொண்டுதான் உள்ளது.
1.ஆனால் அவரவர்கள் வளர்ந்த நிலையினால்
2.அந்த நல் உணர்வுகளைச் செயல்படுத்த முடியவில்லை.

பல காலமாய் நல்லுணர்வு கொண்ட சப்தரிஷிகளும் பல மகான்களும் எண்ணங்களில் பக்தியைச் செலுத்தியும் இன்றளவும் செயல் கொண்டுள்ளார்கள்.

ஆனால் இம் மகான்கள் எல்லாம் ஏன் பிறப்பில் வந்து செயலாக்குவதில்லை…?

சப்தரிஷியாய் சகலத்துடன் கலந்திட்ட ஒளி பிம்ப சக்தி பூண்ட ஆண்டவன்களெல்லாம் பிறப்பில் வருவதில்லை. ஏனென்றால் பிறப்பில் வரும் பொழுதே இவ் ஆண் பெண் என்ற இச்சையில்… ஆசையில் உட்பட்டால் அவர்கள் பெற்ற சக்தி தடைப்படுகிறது.

1.ஒவ்வோர் ஆத்மாவும் பிறப்பிற்கு வரும் பொழுது
2.முன் பிறப்பு நிலை மறைக்கப்படுவது இந்த இச்சை நிலையினால் தான்.

பிறப்பிற்கு வந்து விட்டால் முன் ஜென்மத்தில் முந்தைய நாட்களில் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும் “பிறப்பு…” என்று ஆசைப்பட்டவுடனே பெற்ற பலன் சிதறுண்டு இவ்வுலக ஆசையில் சிக்குண்டு விடுகிறது. அதனால்தான் எம் மகான்களும் பிறப்பில் வந்து பிறப்பதில்லை.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன்.

பதினாறாவது வயதில் ஈஸ்வரப்பட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல் கொண்டார். அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை வெளிப்படுத்தினார் “பைத்தியக் கோலம் பூண்டு…!”

பல அன்பர்களின் இல்லத்தில் வைத்திய முறையை உணர்த்தியும் சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச் செய்வித்தும் அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.

அந்த நிலையில் அவர்களுக்கும் பல ஆசை நிலைகளையூட்டி இவ் உலக மக்களின் பேராசையான “தங்கம்” செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின் மூலமாய் உணர்த்தி அவர்களின் ஆத்மா இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு அல்லல் படுவதையும் உணர்த்திட்டேன்.

1.எம்மை ஒரு கருவியாக்கி எம்மால் அடையும் பலனைப் பற்றித் தான் விரும்பினார்களே தவிர
2.அழியாத பொருளான ஆத்மச் செல்வத்தை யாரும் விரும்பவில்லை.

பல இல்லங்களில் ஈஸ்வரப்பட்டரின் உடல் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தி ஞானத்தைப் போதிக்க முயன்றோம்…
1.எம்மிடமுள்ள வித்தை என்ன…?
2.அதனால் பெறப்போகும் பயனென்ன…?
3.பயன் என்பதையே அழியப் போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா…!

அந்நிலையில்தான் வேணுகோபால நாயகனையும் (ஞானகுரு) பிடித்தேன். அவனது முன் ஜென்மத்தில் பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான்.

அஜ்ஜென்ம ஆசையிலிருந்து விடுபடாமல் வேணுகோபால பிம்ப உடலைக் கொண்ட ஜென்மத்திற்கும் வந்தான். அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே பல இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.

மற்ற ஆத்மாக்களாய் இருந்தால் இன்றைய இக்கலியில் மீளுவது கடினம். பல இன்னல்களைத் தந்துதான் அவனை ஞானத்தின் வழித்தொடர் அறிய வைத்தேன்.

1.பல காலமாய் இவ் இன்னலில் இருந்த பிறகுதான் அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன்
2.பல ஆசை நிலைகளையும் ஊட்டி விட்டேன்
3.இவ்வாத்மாவையே முடித்துக் கொள்ளலாம் (தற்கொலை) என்னும் சங்கட நிலையையும் ஊட்டிவிட்டேன்.

பல ஊர்களுக்கு அலையவிட்டு ஒவ்வோர் ஆத்மாக்களின் எண்ண நிலை ஆசை நிலை அனைத்தையும் அறியச் செய்து அவ் வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கி பல சக்திகளை வெளிப்படுத்தி பல ஆத்மாக்களுக்கு ஞான வழித் தொடர் பெறும் நிலையை எல்லாம் செயலாக்கினேன்.

அந்த நிலையிலேயே எமக்குச் சிஷ்யனாக்கி… அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம் என்பதனை உணர்ந்து ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலேயே விட்டுப் பிரிந்தேன். அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது.

ஈஸ்வரப்பட்டரின் உடலில் இருந்து பிரிந்து வேணுகோபாலின் மூலமாய் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை உணர்த்தினேன்.

எம்மைப் போல் உள்ளவர்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு ரூபத்திலும்… மனித ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்க பல செயல்களைச் செய்விக்கின்றோம்.

1.அனைத்து ஆத்மாக்களுமே எமக்கு ஒன்றுதான்…!
2.எம் செயலை வெளிப்படுத்திட உடல் ஆத்மா ஒன்று தேவை.
3.எம் செயலை ஈர்க்கும் ஞானத்தின் சக்தியைத்தான் எம் செயலுக்குகந்த சக்தியாகச் செயல்படுத்த முடியும்.
4.அதன் வழி வருவோர் அனைவரும் அவர்கள் வேறல்ல யான் (ஈஸ்வ்ரபட்டர்) வேறல்ல என்ற நிலையில் ஐக்கியப்பட்டே
5.எம் செயல் நிலை இவ்வுலகினில நடந்திடும்.

ஈஸ்வரபட்டர் தன்னைப் பற்றிச் சொன்னது

 

“ஈஸ்வரப்பட்டர்…” என்ற நாமமுடைய சூட்சும நிலை கொண்டு காணும் எம் நிலையை அறிய…
1.எம் நிலையென்பது ஈஸ்வரப்பட்டர் என்ற நாமகரணம் கொண்ட அவ்வுடல் ஆத்மாவில் “யாம் செயல் கொண்டதையும்…”
2.எம் சக்தி நிலையை எந்த நிலையில் உணர்த்தி வருகின்றோம் என்பதனை அறியவும் அனைத்து ஆத்மாக்களுக்குமே ஆசையுண்டு.

கர்நாடக மாநிலத்தில் மங்களூருக்கு அருகில் கன்னட பிராமண குடும்பத்தில் பல நாள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தில் முதல் மகனாய் ஜெனனம் பெற்றேன்.

ஈஸ்வரமங்கலம் என்ற ஊரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள கிராமத்தில் பாக்குத் தோட்டங்கள் விவசாயத்தில் முக்கியத்துவம் உள்ள கிராமத்தில் அவ்வூரின் நாமம் அவ் ஊரில் உள்ள கோவிலின் நாமம் அங்குள்ள குடும்பங்களின் நாமம் எல்லாமே ஈஸ்வர நாமத்தை முதன்மை பெற்று உள்ள சிற்றூர் அது.

பல காலம் புத்திர பாக்கியம் இல்லாமல் பிறந்த ஈஸ்வரப்பட்டன் யான். யான் பிறந்து சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட்டார். தாயினால் வளர்க்கப் பெற்று தாயின் ஜீவிதம் கொண்டு சிறு கல்வி அறிவும் பெற்று வளரும் பக்குவத்தில் தாயும் இறந்தார். சகோதர சகோதரிகளின் பாக்கியமும் பெறாமல் தனித்து விடப்பட்டேன்.

கோவிலில் ஈஸ்வரர் கோவிலில் ஈஸ்வரர் கோவிலில் அவ்வாண்டவனே அனைத்தும் என்ற நிலையில்… எண்ணம் குன்றி… ஜீவதித்திற்கு வழியறியாமல் அவ்வாண்டவனை பூஜிப்பதிலேயே எம் ஜீவன் பிரிந்தது.

எம் ஜீவன் பிரிந்த நிலையில் என் உடலை ஒரு மகான் ஏற்றுக் கொண்டார். என்னை என்பது
1.பிரிந்த என் உயிராத்மாவை அம்மகான் அவ்வுடலைச் செயல்படுத்த ஏற்றுக் கொண்ட நிலையில்
2.அந்த உடலை விட்டு நான் விட்டுப் பிரிந்த உடலில் அம் மகானினால் மீண்டும் அவ்வுடலுக்கு ஈர்க்கப் பெற்று
3.அம்மகானே எம் உயிரையும் எம் உடலையும் வழி நடத்தி…
4.எம்மை என்பது ஈஸ்வரப்பட்டர் என்ற உடலைச் செயலாக்கினார்.

பதினாறாவது வயதில் பழனிக்கு வந்தோம். வந்தோம் என்பதின் பொருள் புரிந்ததா…?

என் உடலை ஏற்ற அம்மகானின் செயல் நிலை வெளிப்படும் நிலையிலிருந்து “நான் வேறல்ல அம் மகான் வேறல்ல…” என்ற நிலையில் அம்மகானேதான் எல்லாமில் எல்லாமாய்ச் செயல் கொண்டார்.

மகான் என்பது ஒளியுடனே ஒளியாய் அனைத்திலும் கலந்துள்ள அவ்வாதவனான சூரிய மகான்தான். இவ்வுடலை ஏற்றுச் செயல் கொண்டார்.
1.இனி யான் என்று ஈஸ்வரப்பட்டரின் எம் நாமத்தை எனதாக்கிச் செப்பிட யாதுள்ளது…?
2.அவ்வாதவனுக்கே அர்ப்பணித்த உடல்…. அவ்வாதவனிடம் ஐக்கியப்பட்டுவிட்டது எம் உயிராத்மாவும்…!

மகான்களின் நிலையெல்லாம் பிற உடலை ஏற்றுத்தான் சில நிலைகளை அவர்களின் ஒளி வட்டத்திற்குள் மற்ற உயிரணுக்களையும் சேர்த்திடச் செயல் கொள்ளும்.

இப்பூமியில் இப்பூமி உயிராத்மாக்களை வளரவிட்ட காலம் தொட்டே மகான்களாய்ச் சக்தி பெற்ற பல ஆத்மாக்கள் உள்ளன.

அவ்வாத்மாக்களின் நிலைபெற்ற மகான்களெல்லாம் அவர்கள் பெற்ற சக்தியை இவ்வுலகினில் ஒவ்வொரு ரூபத்தில் இன்றளவும் வெளிபடுத்திக் கொண்டேதான் உள்ளனர்.
1.மற்ற ஜீவ ஆத்மாக்களின் மூலமாய்த்தான்
2.அவர்களின் செயல் நிலையெல்லாம் கலந்திருக்கும்.

போகர் எப்படி முருகா என்ற பிரணவ நாமத்தையும் இன்னும் இவ்வுலகினில் அங்கங்கு தனக்குகந்த நாம சக்தியைச் சுழலவிட்டே… அருளைப் பாய்ச்சி அந்த அருள் வழியில் ஈர்ப்பு நிலை கொண்ட நல்ல ஆத்மாக்களையெல்லாம்… அவ்வாத்மாக்கள் ஜீவன் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை நிலையிலேயே இவரின் ஒளி வட்டத்தைப் பாய்ச்சி… இவரின் ஈர்ப்புக்குள் பல ஆத்மாக்களை ஒளியாக்கிக் கலக்கச் செய்து கொள்கின்றார்.

முருகா…! என்ற அந்த நாமத்திலேயே அவரின் ஒளியைப் பாய்ச்சி ஒளியை ஈர்த்து ஒன்றைப் பலவாக்கி பலவற்றை நிறைவாக்கிக் காண்கின்றார் போகர்.

ஒவ்வொரு மகானும் இந்நிலையில்தான் அவர்களின் நல் உணர்வை நலமாகப் பரப்பிட ஒவ்வொரு நாமத்தை ஆண்டவனாய் வெளிப்படுத்தி இம் மனித ஆத்மாக்களை நல்லுணர்வாக்கினார்கள்.

1.ஒவ்வோர் உயிராத்மாவும் நல் நிலை பெற்று
2.அந்த நல்லதையே அனைவருக்கும் உணர்த்திடத் தன்னையே ஒளியாக்கி
3.அவ்வொளியையே அனைத்திலும் காணப் பல ரூபங்களைக் கல்லிலும் மண்ணிலும் வடித்து
4.இம் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை அவ்வொளி வட்டமுடன் நல்லுணர்வு பெற வேண்டும் என்ற நிலைப்படுத்தி வந்த நிலைதான்
5.நாம் வணங்கிக் கொண்டிருக்கும் பல ஆண்டவன்களின் நிலை…!

சாந்த குணம் கொண்டோருக்கு எப்படி இரத்தக் கொதிப்பு வருகிறது…?

சாந்த குணங்கள் கொண்ட நாம் பிறரின் கோபிக்கும் உண்ர்வுகளைச் சந்தர்ப்பத்தால் காண நேர்கின்றது. அப்பொழுது அவர் வெளிப்படுத்தும் அந்தக் காரமான உணர்வை நுகர்கின்றோம் (சுவாசிக்கின்றோம்).

அவர் வெளிப்படுத்தும் கோப உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றினாலும் நாம் உற்றுப் பார்த்து அதை நுகரும் போது நம் சுவாசத்திற்குள் வந்து… உயிரிலே பட்டு அந்தக் காரமான உணர்வின் சத்தாக உமிழ் நீராக மாறி… ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் இணைகிறது.

இணைந்து இரத்தத்துடன் கலந்து உடலிலே சுழன்று வரும் பொழுது முட்டையாக மாறி அந்தக் கார உணர்ச்சியைத் தூண்டும் அணுவின் கருவாகின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பம் தான்.

சாந்தமான உணர்வு கொண்டு நாம் இருக்கப்படும் போது அந்த வேகத் துடிப்பு வருவதில்லை. ஆனால் அந்தக் கோபித்தோரின் உணர்வை நுகர்ந்த பின் அது ஓமுக்குள் ஓம் ஆகி சாந்த உணர்வுகளுக்குள் எதிர்மறையாகத் தாக்குகின்றது. துடிப்பு அதிகமாகின்றது… உணர்ச்சி வசப்படுகின்றோம்.

1.இயல்பாக ஒரு கடினமான பொருளை வைத்து மற்றொன்றோடு தாக்கப்படும் பொழுது
2.அங்கே அந்த வெப்பம் உருவாகின்றது
3.அந்த உணர்ச்சியின் வேகத்தினால் வலியும் வேதனையும் அதிகரிக்கின்றது.

இதைப் போன்று தான்
1.அந்த வேகத்தின் உணர்வுகள் (கோபம்) நம் சாந்த உணர்வில் தாக்கப்படும்பொழுது
2.இந்த அணுவிற்குள் ஊடுருவி இது அணுவின் தன்மை அடைந்து
3.அந்தச் சாந்தத்தை அடக்கும் வல்லமை பெறுகின்றது.
4.ஓமுக்குள் ஓமாகி மாறி அதனை இது அடக்கும்
5.அதற்குள் இது அடங்கி சாந்தத்தின் செயலாக்கத்தைக் குறைக்கின்றது.

ஏற்கனவே இருக்கும் சாந்த குணமும் சாந்த எண்ணங்களும்… “தன்னை வளர்க்கும் தன்மை இழந்து…” இந்தக் காரத்தின் உணர்வை இதற்குள் வளர்க்கப்படும் போது அதற்குள் நாம் பார்க்கும் இனத்தை எல்லாம் (மற்ற குணங்களை) அது அடக்கிவிடும்.

ஓமுக்குள் ஓ…ம்… ஓமுக்குள் ஓ..ம்… ஓமுக்குள் ஓ..ம்…! என்ற நிலைகளில் இந்தக் கார உணர்வுகள் இதற்குள் ஒடுங்கி ஒடுங்கி ஒடுங்கி வருகின்றது. நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

இப்படி நல்ல மணத்தை உருவாக்காத நிலைகள் கொண்டு வரப்படும்பொழுது தான் மனிதனுக்கு இரத்தக் கொதிப்பே வருகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தோரை டாக்டர் பரிசோதித்தால் அவரின் துடிப்பின் நிலையும் கொதிக்கும் நிலையும் இரத்தத்தில் அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்.

நேரடியாகச் சுவாசித்திருந்தாலும் சரி அல்லது வேடிக்கை பார்த்திருந்தாலும் சரி அதை நுகர்ந்தால் இது போன்று ஆகிவிடுகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.அதைத் தூய்மைப்படுத்துவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுத்து
2.அடிக்கடி உங்கள் இரத்தங்களில் அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துத் தூய்மைப்படுத்தும்படி சொல்கிறோம்.

அனைத்திலும் இருக்கும் உயிரே கடவுள் என்று ஏன் சொல்கிறோம்…? – ஈஸ்வரபட்டர்

நம் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்களையும் நம் வசப்படுத்தி நல் அணுக்களாய்ச் செயல் கொள்ளும் பக்குவம் பெறல் வேண்டும் என்று ஏற்கனவே சொன்னேன்.

சுகம் துக்கம் சஞ்சலம் சாந்தம் சகலமும் கலந்த நிலைதான் ஒவ்வொரு மனித ஆத்மாவின் வாழ்க்கையிலும் நடை பெறுகின்றது. நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் நம் உடலுக்குகந்த அமிலத்தன்மை பெற்றுள்ளோம் என்பதல்ல.

ஒவ்வொரு மனிதனுக்கும் அம்மனித ஆத்மா பெற்ற நிலையிலிருந்தே அவ்வாத்மாவுக்குகந்த
1.எண்ண சக்தியின் சுவாசத்திலிருந்துதான் மனிதனின் உடல் உறுப்புக்களும் அவ்வுடலின் பிம்பமும் அவ்வுடலின் வண்ணமும் அமைகின்றன
2.எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாச நிலைக்கொப்பத் தான் உடலின் பிம்ப நிலையும்
3.அதற்குகந்த அமில சக்தியின் செயல் கொண்டு சேமித்த எண்ணத் தொடரின் நிலைகளும் அவ் உடல் பெறுகின்றது.

மேல் நோக்கிய சுவாசம் கொண்ட தாவர இனங்கள் அவற்றுக்குகந்த ஆகாரத்தைச் சுவாசமாய் மேல் நோக்கியே சூரிய வெப்பத்திலிருந்து இக்காற்றினில் கலந்துள்ள தனக்குகந்த ஆகாரத்தை ஈர்க்கிறது.

அப்படி ஈர்க்கும் தருவாயிலேயே ஒரு நிலை கொண்ட தனக்கு வேண்டிய ஆகாரத்தை மேல் நோக்கிச் சுவாசித்து ஆவியாக்கி ஈர்த்து அவ் ஆணிவேரின் நிலைக்குப் படரவிட்டு பூமியில் வேரினுள் சேமித்துக் கொள்கின்றது.

மேல் நோக்கிய சுவாசம் பெற்ற தாவரங்களின் நிலைக்கொப்ப சக்தி நிலை ஜீவ ஆத்மாக்களுக்கு இல்லை.

நாம் உண்ணும் உணவிலிருந்து அவ்வுணவே அமிலமாகி அந்த அமிலமே நம்மை வளர்க்கின்றது. நம் எண்ணமும் இவ் அமிலத்துடன் கலந்து செயல் கொள்கின்றது.

நம் எண்ணமும்… அந்த அமிலத்துடன் கலந்து செயல் நிலை கொள்ளும் பக்குவம் மேற்கொள்ள… நமக்கு என்று நம் சக்தியை எந்த எண்ணத்தின் சக்தியுடைய ஞானம் பெறும் நிலை எய்துகின்றோமோ அத் தொடர் பெற்றிட நம் எண்ணத்தைச் சமமாக்கினாலன்றி எந்த நற்சக்தியின் வழித்தொடரை அடைவதும் சிரமம் கொள்கின்றது.

1.நம் ஆத்மாவை நாம் நற் ஜெப சக்தியின் வழி பெற்றிட
2.நம் ஆத்மாவும் அப்பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலை எய்திட
3.நாம் பக்குவ நிலை கொள்ளும் தருவாயில்
4.நம் நிலையைக் கண்டு ஏளனம் செய்பவரின் எண்ணத்தையும் புகழ்பவரின் எண்ணத்தையும் நம் எண்ணத்துடன் மோதவிடலாகாது.

ஞானத்தின் வழித்தொடர் பெற்றபின் சலிப்பு நிலையையும் சங்கட நிலையையும் பேராசை நிலையையும் நம்மை நாமே ஆட்படுத்தி கொண்டிடலாகாது.

1.பலருடன் கலந்து வாழ்ந்திட முடியவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சும்
2.நாம் சென்றிடும் சத்தியத்தின் வழிக்கு உகந்ததல்ல.

ஞானம் பெற்று நற் சக்தியை ஈர்த்தே சித்து நிலை பெறுவதற்கு இவ்வெண்ணச் சிதறலை மாற்றியே சமமெய்திடும் முறை பெற்றே நம் ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்னும் உணர்வு பெற வேண்டும்.

1.இவ் வாழ்ந்திடும் குறுகிய காலத்திற்காக நம் ஆத்மாவுக்கு உகந்த சக்தியைப் பெறாமல் சிதறவிட்டு வாழ்ந்திடாமலும்
2.நம் ஆத்மாவிற்குத் தான் நல் ஞானத் தொடர் பெற்று சத்தியத்துடன் கலக்கப் போகின்றோமே என்ற அந்த “நான்” என்ற நினைப்பும்
3.நாம் பெறும் சத்திய நிலைக்கு உகந்ததல்ல.

அனைத்து ஆத்மாவுடன் கலந்தே… மற்ற ஆத்மாவிடமிருந்து ஒதுங்கிய நிலை பெறாமல்… “நம் ஆத்மாவிற்கு நற்சக்தியைச் சேமித்திடல் வேண்டுமப்பா…!”

1.உண்ணும் உணவும் அவனே
2.உணரும் உணர்வும் அவனே
3.எண்ணக் கலவையும் அவனே
4.எடுக்கும் ஞானமும் அவனே
5.ஞானத்தின் சத்தியமும் அவனே என்பதனை உணர்ந்து
6.இவ்வுடலும் நம் உணர்வும் இவ்வுலகமும் மற்ற எதுவுமே நமக்குச் சொந்தமல்ல.

அனைத்திலும் அனைத்தாக உள்ள அவ்வனைத்தாண்டவனுடன் ஒன்றிடும் பக்குவத்தைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…! அதனால் தான் உயிரே கடவுள் என்று சொல்கிறோமப்பா…!

நம் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்களையும் நல்லெண்ணம் பெறும் சக்தியாக்கிட நம் சக்தியை வளரவிடல் வேண்டும்…!

தீமைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதை விட அதை நீக்குவதற்காக நாம் எடுக்க வேண்டிய அருள் சக்திகளே முக்கியமானது

 

டாக்டருக்குப் படித்தவர்கள் உடல் கூறில் எந்தக் குறைபாடு வந்தாலும் அந்த நோயைக் கண்டுபிடிப்பார்கள். ஸ்கேன் வைத்து அதிர்வுகள் மூலம் பார்ப்பார்கள். அதன் மூலம் உடலிலுள்ள உறுப்புகளையும் பார்க்கின்றார்கள். நாமும் தெரிந்து கொள்கிறோம்.

அதே சமயத்தில் உங்களிடம் நான் (ஞானகுரு) உபதேசம் சொல்லும் போது வைத்திய ரீதியாகத்தான் பேச வேண்டும். அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு உங்களை நீங்கள் அறிய விரும்பினால் உடலின் ஓட்டத்தினை நீங்களும் பார்க்கலாம்.

ஆனால் இது நமக்குத் தேவையற்றது.

என்ன பார்க்கலாம்…? என்றால்
1.என்னவெல்லாம் தெரிகின்றது என்ற நிலையில்
2.சில பேர் எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
3.அப்படிப் பார்க்கும் போது பார்த்த நிலைகள் கொண்டு அங்கிருக்கும் தீமையைத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.

சில பேர் என்ன செய்கின்றார்கள்…?

மந்திரத்தால் பில்லி சூனியங்கள் ஏவப்படுகிறது அதனால் சில விலை உயர்ந்த பொருட்கள் கூட காணாமல் போகின்றது. குடும்பத்திலும் முடக்கங்கள் ஏற்படுகின்றது.

சாமிக்கு (ஞானகுரு) சக்தி இருக்கின்றதல்லவா…! சாமி எங்களுக்கு இதை எல்லாம் சரி செய்து கொடுக்கலாம் அல்லவா…! என்று கேட்கின்றார்கள்.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எல்லாச் சக்திகளையும் எமக்குக் கொடுத்தார் என்று சொன்னோம் என்றால் அதை வைத்து “மந்திர தந்திரம் செய்பவர்களை நான் அடக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.

நான் செய்வேன் என்று சொன்னால் நானா…?
1.குருநாதர் உபதேசித்த உணர்வுகளை நான் எடுத்தேன்
2.அந்த உணர்வின் வழிப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடிய நிலை வந்தது.

குருநாதர் ஞான வித்தை எனக்குள் விதைத்தார்… வளர்த்துக் கொண்டேன்.
1.அதே வழிப்படி உங்களுக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
2.அதற்குண்டான சக்திகள் அனைத்தும் இந்தக் காற்றில் இருக்கின்றது.
3.அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
4.உங்களுக்குள் தீமையைப் போக்க கூடிய சக்தியாக அது வரும் என்று தான் சொல்கிறோம்.

நான் செய்தேன் என்றால் இதை நான் செய்யவில்லை…! குருநாதர் காட்டிய வழியில் அருளைப் பெருக்கும் போது அது அந்த வழியை உங்களுக்குள் காட்டும். அதன் வழியில் நீங்கள் செல்லலாம்.

ஏனென்றால் ஆரம்பத்தில் சில பேருக்கு இதைச் செய்யும்போது எனக்கு அந்தக் கடவுள் தெரிகின்றது உடலில் இருப்பது எல்லாம் தெரிகின்றது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

காட்சி என்று தெரிந்தாலே எனக்கு எல்லாம் தெரிகின்றது என்று அடுத்தவருக்குக் குறி சொல்வது போல் சொன்னார்கள்.

கடைசியில் வீணாக அடுத்தவர்கள் கஷ்டங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வம்பிலே போய் மாட்டிக் கொள்கிறார்கள். கஷ்டத்தைத் தான் வாங்கிக் கொள்கின்றார்கள்.

தெரிந்ததைச் சொல்லப்படும்போது இதில் வருவதைக் கழிக்கத் தெரிய வேண்டுமல்லவா…? அது முக்கியம்…!

ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆனால் அப்படி எடுக்கவில்லை என்றால் அந்த விஷம் இங்கே வந்து விடுகின்றது. அங்கிருக்கும் தீமைகளைத் தான் மீண்டும் தனக்குள் வளர்க்க முடியுமே தவிர நல்லதை வளர்க்க முடியாது.

அருள் சக்திகளைப் பெறும் பொழுது அந்த உணர்வை நாம் நுகர்கின்றோம்…. தெரியச் செய்கிறது. தெரிந்து கொண்டாலும் அந்த தீமைகள் வருவதை அறிகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறர் உணர்வு நுகர்ந்ததை உடனடியாக நீக்க வேண்டும். அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் புகாது விழிப்புடன் இருக்க வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளால் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
2.அவ்ர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்.
4.அவர்கள் தொழில்கள் நன்றாக இருக்க வேண்டும்
5.அவர்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று
6.நம் உணர்வை இந்த மாதிரி அவர்களுக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

தீமை என்று தெரிந்தாலும் தெரிந்து கொண்டேன் என்பதை விட அதை நீக்கும் அருள் சக்திகளை எடுத்து வலுவாக்க வேண்டும். அதைத் தான் அடுத்தவருக்கும் போதிக்க வேண்டும்.

“எல்லாம் அவன் செயல்” என்பதன் உட்பொருள் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எல்லாவற்றுடனும் எல்லாமாய்க் கலந்துள்ள அவ் எம்பெருமானின் நிலையில்
1.எல்லாச் செயலும் அவனால் நடக்கப் பெற்று செயல் கொள்ளக் கூடாதா…?
2.இவ் ஏற்றத் தாழ்வும் எண்ண மாற்றமும் எதற்கப்பா…?
3.எல்லாமும் அவனே…! என்றிருக்க எண்ணிய நிலை ஏன் நடப்பதில்லை…?
4.எண்ணமும் அவனே… செயலும் அவனே… எண்ணமும் செயலும் அவனாய் இருக்க
5.அவனே ஏன் செயல் கொள்ளலாகாது…? என்ற எண்ணம் “நமக்குள்ளே…!”

அனைத்துமே பரம்பொருள்தான். அப் பரம்பொருளின் பொருளாய் உள்ள அனைத்திற்கும் ஏற்றத்தாழ்வு நிலை ஏன்…? அன்பாயும் ஆசையுடனும் அறநெறியுடனும் வாழ்கின்றனர் ஒரு சிலர். வாழ்க்கையையே இன்னலில் மூழ்கவிட்டு நரகமாகவும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.

எல்லாரும் எல்லாமுமாய்க் கலந்துள்ள அப் பரம்பொருளுக்கு ஏன் இம்மாற்ற நிலை…?

பரம்பொருளினால் படைக்கப் பெற்ற எல்லாப் பரம்பொருளுமே அவன் படைப்பில் சக்தி பெறச் செய்கின்றான். அப்பரம் பொருளின் சக்தியில் சக்தி பெற்று… வழித்தொடர் பெறும் பரம் பொருள்கள்… அப்பரம் பொருளிடமே ஐக்கியப்பட்டு… அதன் தொடர்ச்சியில் பல பரம்பொருள்கள் சுழன்று கொண்டே செயல் கொள்கின்றன.

உயிரணுவாய் உதித்து பல மாற்றங்களில் அவ்வுயிரணு செயல்பட்டு அதன் தொடர்ச்சியிலிருந்து உயிர் ஜீவிதம் பெற்று இஜ்ஜீவிதத்தின் தொடரினால் ஜீவ ஆத்மாவாய் ஜீவ சக்தியுற்று இவ் ஆத்மா நிலைபெற்று ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவ்வாத்ம நிலையில் ஏழு சந்தர்ப்பங்களில்தான் அவ்வாத்மாவினால் நற்சக்தியான சூட்சுமம் கொள்ளும் வழித்தொடரை அடைய முடியும்.

உயிர் ஆத்மா பெற்ற நிலையிலிருந்து சேமிக்கும் அமிலத்தின் தொடர் இவ் ஏழு சந்தர்ப்பத்தைப் பெறும் வழித்தொடர் கொள்ளும் அமில சக்தியை…
1.இவ் ஏழு தொடரில் ஞானத் தொடர் வழியை அறிந்து
2.அத்தொடரையே தொடராக்கி சக்தி கொண்டிட்டால் அந்நிலையில் சித்து நிலை பெற்று
3.இவ்வாத்மாவைச் செயலாக்கும் சக்தியாய் மண்டல உருப்பெறும் நிலை கொண்டு
4.ஒவ்வோர் உயிராத்மாவின் வட்டத்திலும் ஒவ்வொரு மண்டலமாகிடும் பக்குவம் பெற்று
5.மண்டலத்துடனே வளர்ச்சியுற்று அம்மண்டலமே உலகாய்ச் சுழன்று
6.பல உயிரணுக்களை ஈர்த்து வளர விட்டுச் செயல் கொண்டிட முடியும்.

இவ்வுலகில் மட்டுமல்ல பலகோடி மண்டலங்களும் இப்பால் வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள எண்ணிலடங்கா ஜீவசக்திகளும் அப்பரம் பொருளினால் படரவிட்டவைதான்.
1.கொசுவாயும் சாக்கடைத் திரவமாயும் உள்ளவையும் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான்
2.ஜோதியுடன் ஜோதியாய் எரிந்திடும் கற்பூரமும் அப்பரம் பொருளின் ஐக்கியம்தான்.

அப்பரம்பொருளான அவ் ஆதி சக்தி அனுப்பிடும் உயிரணுக்களில் அவை அவை எடுக்கும் சுவாச சக்தியைக் கொண்டு தான் அவரவர்களுக்கு அமையும் வாழ்க்கை நிலையும்… செயல் முறையும்… வந்திடும்.

விருந்தில் உணவு படைக்கின்றார்கள். பல பதார்த்தங்கள் இருந்தாலும் நம் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசம் எதை ஈர்த்து நம் நாக்கு ருசிப்படுத்துகின்றதோ அவ்வுணவைத்தான் நம் எண்ணம் விரும்புகின்றது.

அதைப்போல் நாம் எடுக்கும் அமில சக்திக்குகந்த சுவாசத்தைக் கொண்டுதான் ஒவ்வோர் உயிராத்மாவிற்கும் அப்பரம் பொருளின் ஆசியும் கிட்டுகின்றது.

மண்டலமாகவும் சுழல்வது உயிராத்மாதான்… புழுவாக நெளிவதும் இவ்வுயிராத்மாதான். பரமாத்மாவின் வழி பெற்று வந்த இவ்வுயிரணு எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பதுதான் அனைத்துமே…!

மண்டலமாய்ச் சுழன்றாலும் மண்டலத்திற்கும் எண்ணமுண்டு சப்தரிஷிக்கும் எண்ணமுண்டு.

பரமாத்மாவின் நிலையுடன் ஐக்கியப்படும் நிலையென்ன…?

சப்தரிஷியாய் சகலத்திலும் ஒளிர்ந்து ஒளியாய்ச் செயல் கொண்டு சூரியனாய் ஒளி பெற்றாலும் அச் சூரியனுக்கும் “தான்…!” என்ற நிலை வந்து விட்டால் கோடி கோடி கோடி ஆண்டாகப் பெற்ற சக்தியும் இழக்க நேரிடும்.

மனித ஆத்மாவாய் இருந்துதான் ஒளியுடன் கலந்திட முடியும். அவ்வொளியின் ஈர்ப்பினால் மண்டலமாய்ச் சுழன்று செயல் கொண்டிட முடியும்.
1.செயலிலேயே வழித்தொடர் பெற்றுச் சூரியனாயும்
2.சூரியனுக்கு மேல் சக்தி பெற்ற பல சூரியனாயும் சுழன்றிட முடியும்.

அனைத்தையுமே செயல்படுத்திடும் அப்பரம்பொருளிடம் ஐக்கியப்படும் சக்தியைப் பெற்றிடும் சக்தியை அப் பரம்பொருளான அவ் ஆதிசக்திக்குத்தான் தெரிந்திடும் அனைத்துமே.

அவரவர்களுக்கு அளிக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டு பல கோடி ஆண்டுகள் வளர்ச்சியுறல் வேண்டும். இம்மனித ஆத்ம உடலிலேயே வளர்ச்சி பெற்றால்தான் நம் ஆத்மா ஒளியுடன் கலக்க முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் மிருக ஜெந்துவாகி மிருகத்திலிருந்து கொசுவாய் புழுவாய் பிறிதொரு உலக மாற்றத்திலிருந்து இவ்வுயிரணுக்கள் உயிராத்மா நிலை பெற எண்ணிலடங்கா ஆண்டுகளாகலாம்.

அச் சந்தர்ப்பத்தில் நம் ஆத்மா எய்தும் நிலையைக் கொண்டுதான் நம் நிலை உயர்ந்திட முடியும். இதனை உணர்ந்தே…
1.பரம்பொருள் என்பது யாது…?
2.அப்பரம்பொருளுக்கென்ன ஏற்றத்தாழ்வு…? (ஓரவஞ்சனை)
3.ஆண்டவன் அளித்த கஷ்டம்…! என்று இந்த வாழ்க்கையை எண்ணாமல்
4.இன்று வாழும் நம் ஆத்மாவை நல் ஞானம் பெறும் நிலையை எய்திட
5.நம் ஆத்ம நிலை எப்படிச் செயல் கொண்டிடல் வேண்டும்…?
6.எப்படி நம் வாழ்க்கை முறை அமைய வேண்டும்…? என்பதனை உணர்ந்து
7.நம் சுவாசம் சத்தியத்துடன் கலக்கும் நிலையினைப் பெறுதல் வேண்டும்.

அதைப் பெறுவதற்குத் தான் இந்த உபதேசமே…!

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் அவ்வாத்மாவின் உடலில் பல உயிரணுக்கள் உள்ளன. எவ்வாத்மாவும் தனித்து வாழவில்லை என்பதனை முதல் பாடமாக உணரல் வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் உள்ள உயிரணுக்கள் அவ்வாத்மாவின் எண்ணத்தைப் பல திசைகளில் மாற்றிச் சென்று வாழச் செயல்படுத்துகின்றது.

அவ்வுயிரணுக்களின் ஆசைக்கும் அதனுடைய தூண்டுதலின் சோர்வுக்கும் நம்மை அறியாமலே நமக்குத் தெரியாமலே அடிமைப்பட்டு சிக்குண்டுள்ளோம்.

நம் ஆத்மா ஞானம் பெற்று ஒளி பெறும் நிலையினால் நம் உடலில் குடி புகுந்துள்ள பிற உயிர் அணுக்களுக்கும் நம்மால் விமோசனம் கிட்டும்.
1.நம் உடலிலுள்ள அமிலத்தை ஞானத்தின் அமிலமாக்கி
2.பரமாத்மாவின் சொத்துத் தான் நாம் என்பதனை உணர்ந்து
3.தீய எண்ணப் பேய்க்கு அடிமை கொண்டிடாமல் நம் ஆத்மா செயல்பட்டால்
4.நம்முள் உள்ள பல கோடி உயிரணுக்களும் இவ்வெண்ணத் தொடரின் சக்தியினால் ஒளிர்ந்திடும்.

ஒவ்வோர் உடலிலிருந்தும் ஒவ்வோர் ஆத்மா பிரியும் பொழுதும் அவ்வுடலுடன் கூடிய உயிரணுக்கள் அவ்வுடலில் எடுத்த சுவாசத்தின் வழித்தொடர் கொண்டே இக்காற்றினில் படர்ந்து சுற்றுகின்றது.

இப்பொழுது நாம் வாழும் இவ்வாழ்க்கை உடலில் உள்ள உயிரணுக்கள் இவ்வுடல் காலத்தில் மட்டும் நம் உடலில் ஏறவில்லை.

ஒவ்வோர் உயிரணுக்களுக்கும் எண்ணமுண்டு… சுவாசமுண்டு அமில சக்தியுண்டு…!
1.மனித ஆத்மாவின் உடலில் உள்ள இவ்வுயிரணுக்களினால்
2.இம்மனிதனின் எண்ணத்தை அதற்குகந்த ஆசையின் நிலைக்கொப்பத் திசை திருப்பிட முடிந்திடும்
3.நம் ஆத்மா செயல் கொள்ள முதலில் நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம் நம் வசப்படுத்திடல் வேண்டும்.

ஓம் ஈஸ்வரா… என்ற எண்ணத்துடன் புருவ மத்தியில் எண்ணி ரிஷிகள் ஞானியர்கள் வெளிப்படுத்தும் உணர்வலைகளை அங்கே ஈர்க்கும் பழக்கம் வந்து விட்டால் உயிருடன் இணையச் செய்ய முடியும். ஜோதி நிலை காண முடியும்… ஒளியுடன் ஒளியாகக் கலக்கலாம்.

சுவாசம் உயர்ந்ததாக இருந்தால் தான் மோட்சத்தை அடைய முடியும் என்று மகாபாரதம் காட்டுகின்றது

 

மனிதனின் உணர்வின் இயக்கங்களைப் பார்த்தோம் என்றால் அவன் அப்படிச் செய்கின்றான்… நான் இப்படிச் செய்கின்றேன்…! என்ற நிலைகளில்
1.நான் தான் செய்தேன்…
2.நான் செய்து கொண்டிருக்கின்றேன்…
3.என்னால் தான் முடியும்…
4.இது அனைத்தையும் நான் செய்தேன்…! என்று பலருக்குப் பல உபகாரம் செய்வார்கள்.

இப்படிப் பல உபகாரம் செய்தவர்களின் உணர்வுகள் “நான்…” என்ற உணர்வு வரப்படும்போது இங்கே கௌரவர்கள் ஆகின்றது.

அதே சமயத்தில் சிறிது குறைவானால் “அன்றைக்குச் செய்தேன்… பார்… இன்று என்னை மதிக்கின்றானா பார்…!” என்று இந்தக் கௌரவ போர் வருகின்றது

தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் போது அவர்களைப் பார்த்தவுடனே குருக்ஷேத்திரப் போர். அதை மீறி உடலுக்குள் போனவுடன் மகாபாரதப்போர் ஆகிறது.

கௌரவம் என்ற நிலைகள் கொண்டு எடுக்கும் உணர்வின் தன்மை புலனறிவு ஐந்து வழியாக உள்ளுக்குள் செல்லும்பொழுது பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர்.

போர் என்று உடலுக்குள் வரப்படும்போது நமக்குள் இருக்கும் பல அணுக்களுக்குள் மகாபாரதப்போராக மாறுகின்றது. கலக்கமும் பல நிலைகளும் மற்ற நிலைகளும் இரத்தத்திற்குள் நடக்கும் போது மகா போராக இது உடலுக்குள் நடக்கின்றது.

ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களின் உணர்வின் நிலைகளையும் நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பின் உணர்வை சந்தர்ப்பத்தில் எடுத்து வைத்திருக்கின்றோம்.

அப்பொழுது நாம் நல்லது என்று எண்ணப்படும் பொழுது அதனுடைய நிலைகளை கௌரவர்கள் விடுவதில்லை.

ஒவ்வொரு நாளும் இதைப் போல் நமக்குள் கௌரவப் போர் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என்று பார்க்கலாம்.
1.என் பையன் சொல்வதை நான் கேட்பதா…?
2.மனைவி நல்லது சொன்னால்… மனைவி சொல்வதை நான் கேட்பதா…?
3.மனைவி தப்பு செய்து விட்டால் கணவருக்குத் தெரிந்தால் திருப்பிப் பேசுவார் என்று கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.
4.குழந்தை ஒரு தப்பு செய்து விட்டால் அப்பா திட்டுவார் என்றால் இல்லவே இல்லை பொய் சொல்லும்.
5.அதே சமயத்தில் நாம் நல்லவன் என்று பெயர் எடுத்திருப்போம். சந்தர்ப்பத்தில் அறியாமல் தப்பு செய்திருப்போம். கேட்டால் “இல்லவே இல்லை…” என்போம்.

ஆக… தவறை மறக்கும்போது இத்தகைய கௌரவப் பிரச்னை வருகிறது. ஏனென்றால் குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை மூடி மறைக்க என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.

ஆனால் இது போன்ற உணர்வின் தன்மை வரும்போது கடைசியில் இந்த வேதனை என்ற உணர்வுகள் வரும். இருளை நீக்கி மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது. வேதனை என்ற போர் முறைகள் வருகின்றது.

கடைசியில் அடிக்கடி வேதனை என்று நம்முடைய எண்ணங்கள் வரும் பொழுது
1.கண்ணும் (கண்கள் – கண்ணன்) பார்வையை இழக்கின்றது.
2.அர்ஜூனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகள் சோர்வடைகின்றது
3.நமக்குள் வலுவான உணர்வுகள் பீமன் என்ற நிலைகள் அழிகின்றது… தாக்க முடியவில்லை.

மகாபாரதப்போர் முடிவில் கண்களை இழந்தபின் அர்ஜூனனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனுக்கு முன்னாடியே திருடிக் கொண்டு போகின்றார்கள். அவனால் தடுக்க முடியவில்லை.

கண் பார்வை (கண்ணன்) இழந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பிரித்து காட்டித் தெளிவாக்குகின்றார்கள்.

அர்ஜூனன் எல்லாவற்றையும் செய்தேன் என்பான். கண்கள் இழந்தபின் என்ன செய்ய முடியும்…? கண் இழந்தபின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நிதர்சனமாகவே காட்டுகின்றார்கள்.

கடைசியில் தர்மன் என்ன செய்கின்றான்….?

இது எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்…
1.மோப்பத்தில் அறிந்து கொண்ட உணர்வுகள்தான் எனக்கு எல்லா வகையிலும் வழி காட்டியது
2.நன்மை தீமை என்று எனக்கு அறியச் செய்தது
3.தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை அதன் வழியில் தான் எடுத்தேன்…! என்று தர்மன் சொல்வதாகக் காட்டுகின்றனர்.

அவன் யாருக்கு மோட்சத்தைக் கேட்டான்… என்றால் முதலில் தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு என்று தான் கேட்டான். நாம் சுவாசித்த (நுகரும் சக்தி – மோப்பம்) உணர்வின் தன்மைதான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.

1.தீமை நீக்கும் உணர்வு தான் (சுவாசம்) எனக்கு வழிகாட்டியாக வருகின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மைக்கு… “அதற்கே அந்த ஒளியாகும் தன்மை வேண்டும்…” என்று
3.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றான்.

யாராவது இதைப் பற்றிச் சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…! எவ்வளவு பெரிய பேருண்மையைக் காட்டியுள்ளார்கள்.

குருக்ஷேத்திரப் போர் நடப்பதும் கௌரவப்போர் உள்ளுக்குள் நடப்பதும் மேல் வலிகின்றது தலை வலிக்கின்றது என்று உடலுக்குள் நடப்பதைக் காட்டி வெளியிலே ஒருவருக்கொருவர் கௌரவப் போர் வந்தாலும் எல்லாம் ஒன்றாக உள்ளுக்குள் நடக்கும்போது மகாபாரதப்போர் என்று வருகின்றது.

நமது கண்களால் எடுத்துக் கொண்ட உணர்வு எண்ணங்களாக உருவாகி அந்த எண்ணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள் நமக்குள் போர் முறைகளாக எப்படி வருகின்றது…?

உணர்வின் இயக்கம் எந்த நிலையில் இருக்கின்றது…? என்று மகாபாரதப்போர் நம் உடலுக்குள் எப்படி நடக்கின்றது…? என்ற நிலைகளையும் மகாபாரதப் போர் என்று சித்தரித்துக் காட்டுகின்றார்கள் ஞானியர்.

ஒன்றே குலம்… ஒருவனே தேவன் – ஈஸ்வரபட்டர்

 

உபதேசம் புகட்டிய நாள் தொட்டே யான் (ஈஸ்வரபட்டர்) உணர்த்திய உயிர் ஜீவன் சுவாசத்தின் வழி பெற்ற எண்ண ஜெபத்தைத்தான் மையப்படுத்தி உணர்த்தி வருகின்றேன்.

இவ்வெண்ணம் செயல்பட அன்பு சத்தியம் இவற்றின் நியதி பெறல் வேண்டும். சத்திய நிலை பெறப் பல ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த வழியிலிருந்து இச்சத்தியத்தை நிலைநிறுத்தச் சில கடின நிலைகளை ஏற்க வரும் இத்தருணத்தில் அன்பென்னும் ஆயுதத்தினால் தான் செயல்படும்.

1.இவ் அன்பினாலேதான் எச்செயலையும் நிலைநாட்ட முடியும்.
2.அன்பிற்கு அடிமைப்பட்டதுதான் அனைத்துமே.
3.நம்மை அன்பாக்கி அவ் அன்பையே எல்லா நிலையிலும் செயல்படுத்திடல் வேண்டும்.

ஆனால்… நம் அன்பிற்குப் பிரதிபலனை எதிர்பார்த்துச் செயல்கொள்ளும் நிலைதனை அகற்றல் வேண்டும்.

ஏனென்றால்…
1.நாம் அன்பு செலுத்துகின்றோமே என்ற நிலையில்
2.அவ்வன்பின் பிரதிபலிப்பிற்காக ஏங்கிடும் எண்ணத்திற்கு
3.நாம் செலுத்திய அன்பும் விரயம் கொள்கின்றது.
4.பிறரின் அன்பிற்காக ஏங்காதீர்….!

நம்மையே அன்பாக்கி அவ்வன்பின் சக்தியை அனைத்திலும் செயல்படுத்திடுங்கள். இவ்வன்பு வழியைப் பெற்று விட்டால் சத்திய நிலை ஏற்பட்டுவிடும்.

பிற அன்பிற்கு அடிமை கொண்டும் விடாதீர்…!

“ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…” என்ற சத்திய நியதியைத்தான் இவ்வுலகமே செப்புகின்றது. ஆனால் அதனைக் கடைப்பிடிக்கும் ஆத்மாக்கள் இப்பரந்த உலகில் கோடியில் சிலர் தான்.

மதங்கள் என்ற ரூபப்படுத்தி ஒரே குலத்தைத்தான் அனைவரும் போதிக்கின்றனர். ஆனால் இவர்களே எம்மதம் சிறந்தது…? என்ற வினாவையும் எழுப்புகின்றனர்.

எம்மதமாயினும்… எச்செயலாயினும்… “அவர்கள் வகுத்த சத்திய நியதியைச் செயல் கொள்ளும் சிறந்த நிலையுடையதுதான்… சிறந்த மதம்…”

இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும் தான் இவ்வுலகினில் தனித்தனி நிலையாய்ச் செயல்கொள்கின்றன. இதன் தழுவலில் பல மதங்கள் ஜாதிகள் என்ற ரூபங்கள் வழி பெற்றுவிட்டன.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நெறி முறைகளுண்டு. அதற்குகந்த தத்துவத்தையும் உணர்த்துகின்றனர் “அவரவர்கள் மதம் சிறந்ததென்று…”

எம் மதத்தவரும் தம் மதத்தின் நிலையைத்தான் பெரிதாகப் போற்றி வருகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் அம் மதம் பிறந்த கால கட்டத்தை உணர்த்துகின்றனர்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற நிலையினைப் பிரித்துத் தனக்குச் சாதகமான வழி முறைகளை வகுத்துக் கொண்டவன் அவனுக்குகந்த தன்மையில் தன் மதத்தை வளர விடுகின்றான்.

இந்து மதத்தில் ஒரே நிலையையே பலவாக்கி வணங்குகின்றனர். இஸ்லாமிய மதத்தில் அவ் அல்லா என்ற ஒன்றே ஆண்டவன் என்ற சத்திய நிலைப்படி அவ்வழி நிலை செயல் கொள்கின்றது. அவர்கள் வழியில் வந்த குர்ஆனின் வேத வாக்குப்படி இன்றளவும் மாறுகொண்ட ஆண்டவனின் ரூபத்தைக் காணாமல் அல்லா என்ற ஒரே கடவுளைக் காண்கின்றனர்.

கிருஸ்து மதத்தில் பரமபிதா என்ற ஜெபத்தை ஜெபித்து அவ்வழித்தொடர் பெற்றாலும் அதனையே சிலர் இரண்டு நிலைப்படுத்திவிட்டனர். அதிலும் தடங்கல் ஏற்பட்டுவிட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை.

இந்து மத வழிபாட்டில் இராமரின் நிலையை ஆண்டவனாக்கி இராமருக்கு ஒரு மனைவி… ஏக பத்தினி விரதம் கொண்டவர் இராமர் என்று ஒரு காலத்திலும்… கிருஷ்ணருக்குப் பல மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… முருகருக்கு இரண்டு மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… இந்துமதச் சட்டத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலையினையும் உணர்த்திப் பல வழிகளைச் செயல் கொள்கின்றனர்.

ஆனாலும் தன் செயலுக்குகந்த சாதகப்படி…
1.நம் சட்டத்திலேயே பல ஓட்டைகள் வைத்து
2.மனைவி தாம்பத்ய நிலைக்கு உகந்தவளல்ல என்ற நிலையிருந்தால்
3.மறுமணம் புரியலாம் என்றெல்லாம் சாதப்படுத்தி
4.நமக்குகந்த சத்திய நிலையைக் காலப்போக்கிற்குத் தகுந்த நிலையில் நாம் வாழ்கின்றோம்.

இந்து மதத்தின் பிறப்பு நிலையை அறிந்தாரில்லை…!

ஒன்றே குலம் என்ற நிலையில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து பிரிந்து சென்று மதமானதுதான் கிருஸ்து மதமும் இஸ்லாமிய மதமும்.

இந்து மதத்தின் நெறி முறையென்ற வழி நிலை சத்திய நிலையில் உணர்த்துவாரும் இன்றில்லை. இந்து மதத்தின் நிலையிலிருந்துதான் பல சித்தர்கள் வெளிப்பட்டார்கள். ஆனால் சித்தர்கள் உணர்த்தியதை உணர்ந்து செயல் கொள்ள இந்து மதத்தாரின் எண்ணங்கள் கூடிச் செயல்படுத்தவில்லை.

மதங்களில் சிறந்தது எது…? என்பது எம்மதமாயினும் “அச்சத்திய நியதியைக் கடைப்பிடித்துச் செயல்படுமாயின் அதுவே சிறந்தது…”

1.மதம் என்ற பிரிந்த எண்ணத்திற்கே நம் எண்ணத்தை அடிமை கொள்ளாமல்
2.எல்லாம் ஒன்றே… ஒருவனே தேவன்… அத்தேவனின் சக்தி புத்தர்களாய் சகலத்துடனும் கலந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

நோய் வராது தடுக்கும் வழி

 

நாம் எத்தனையோ கோடி உடல்களிலிருந்து இன்னல் பட்டுத் தான் மனிதனாக வந்துள்ளோம். இந்தச் சரீரத்திலும்… வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களிலிருந்து விடுபடும் உணர்வைத் தான் நாம் எடுக்க வேண்டும்.

உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகப் பேசுகின்றார்கள் என்று நாம் பார்க்கின்றோம்.

அதிலே ஒருவன் மற்றவனைச் சாபமிட்டு “அவன் நாசமாகப் போக வேண்டும்…” என்று சொல்கிறான். அதை நாம் கூர்ந்து பதிவாக்கினால் அவன் சொன்ன உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அதே உணர்ச்சியைத் தூண்டுகிறது.

அந்த உணர்வுகள் உமிழ்நீராகும் போது நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து அது இரத்தமாக மாறுகின்றது. உடல் முழுவதற்கும் போகின்றது.

1.அந்தக் கரு முட்டை… (நாசமாக வேண்டும் என்ற வினை – வித்து) எங்கே போய்த் தேங்குகின்றதோ அந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு
2.ஒரு தட்டான் பூச்சி பூக்களில் முட்டையிட்ட பின் பல பல பட்டாம் பூச்சியாக வருவது போல்
3.நம் கல்லீரலிலோ நுரையீரலிலோ இதயத்திலோ அந்த அணுக் கரு போகப்படும் போது
4.இதயம் வடிகட்டினாலும் ஒரு முட்டை போனாலும் போதும்
5.அந்த இடத்தில் வீக்கமாகி இரத்தம் மாசுபடுகின்றது.

அப்பொழுது அந்த அணுவின் மலம் பட்டவுடன் இருதயத்தில் போய் உறைந்து விடுகின்றது. அப்புறம் படக்…படக்… நெஞ்சு வலி வரத் தொடங்குகிறது.

நெஞ்சு வலிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றால் எத்தனையோ இலட்சம் வேண்டும். அப்பொழுதுதான் சரி செய்ய முடியும். ஆனாலும் ஆபரேஷன் செய்து எத்தனை நாள் நன்றாக இருக்கின்றோம்…?

சம்பாதித்த காசைக் கொடுத்துச் செலவழித்துக் கொஞ்ச நாள் வாழச் செய்கின்றோம். அப்புறம் என்ன செய்கின்றோம்…?

நான் சம்பாரித்தேனே… இப்படியெல்லாம் செய்தேனே… கடைசியில் காசை எல்லாம் இப்படி டாக்டருக்குக் கொண்டு போயி கொடுத்தேனே…! என்று இப்படி ஒரு வேதனை.

அடுத்தாற்படி வீட்டில் இருக்கக்கூடிய சண்டையோ சச்சரவோ குறையுமா என்றால் இல்லை….! பணம் குறைந்தவுடன் இன்னும் கொஞ்சம் வேதனை அதிகமாகும்.

அப்பொழுது இந்த வேதனை அதிகமாகும்போது என்ன செய்கின்றது…? நம் உடலிலே பலவிதமான நோய்கள் வருகின்றது.

என்னடா இது…! ஒன்று போனது… பாக்கி எல்லாம் சேர்த்து நம் உடலிலே இப்படி ஆகிவிட்டதே என்று இந்த உடலில் வேதனையெல்லாம் எடுத்த பிற்பாடு இந்த உயிர் வெளியில் செல்லும் பொழுது என்ன செய்கின்றது…?

அந்த வேதனை என்ற நஞ்சுக்குத் தக்கவாறு உயிரினங்களின் உடலிலே கொண்டு விட்டு விடுகிறது.

ஆக… எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து தான் இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரை நாம் மதிக்க வேண்டுமா இல்லையா…?

தீமை என்றால் அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி கார்த்திகேயா என்றும் சேனாதிபதி… தீமைகளைத் தடுக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது.

தீமை புகாமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இந்நேரம் வரையிலும் பேசுகின்றேன் என்றால் அதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். தியானப் பயிற்சியாகவும் கொடுக்கின்றேன்.

இதை எல்லாம் பதிவாக்கிய பின் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்தால் அந்த சக்தி எண்ணியவுடன் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் சிலர் என்ன செய்கின்றார்கள்…?

உபதேசம் கேட்கும் வரையிலும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் இங்கே நாம் சொன்ன உணர்வுகளைப் பதிவாக்காது விட்டு விடுகிறார்கள். (பதிவானால் தான் மீண்டும் நினைவுக்கு வரும்)

“தியானம்…” என்று சொன்னதும் நினைவுகள் எங்கெங்கோ போகிறது என்பார்கள். என் பையன் இப்படிச் செய்கின்றான்… தொழிலில் நஷ்டம் என்று பல எண்ணங்கள் வருகிறது. நான் தியானத்தில் உட்கார்ந்தாலும் முடியவில்லை என்பார்கள்.

ஏனென்றால் தியானத்தில் இருக்கும் பொழுது பாருங்கள்… மனக்குடைச்சல் வரும்… இல்லாத சங்கடம் எல்லாம் வரும்.

அதற்குத் தான் இங்கே உபதேசிக்கும் போது கூர்ந்து பதிவாக்குங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம். உபதேசத்தன் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை இழுப்பதற்காக வேண்டி இதைச் சொல்கின்றோம்.

இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்து நாம் பழகிக் கொண்டோமென்றால் பிறர் சாபமிடுகின்றார்கள் சண்டையிடுகிறார்கள் என்று பார்க்கும் போது அதை நுகராமல்
1.உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்தச் சக்திகளைக் கவர்ந்து
3.மீண்டும் கண்ணின் நினைவை உயிரிடம் புருவ மத்தியில் கொண்டு வந்து அதன் வழியாக இழுங்கள்.

அப்போது தீமை செய்வோர் உணர்வு நமக்குள் ஈர்க்காது… நம்மை இயக்காது…! இந்த மாதிரித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீய வினைகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி நோயாகாதபடி தடுக்க வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவும் சத்தியம் என்ற நேர் கோட்டைச் செயல்படுத்தினால் எந்தத் தீய சக்தியும் நம்மை அண்டாது

 

“எல்லாம் பரம்பொருளின் ஐக்கியம்தான்…” என்ற எண்ண நிலை செயல்பட்டு அவ் வழித்தொடரில் வாழ்ந்திடும் பக்குவத்தை மனித ஆத்மாக்கள் பெற வேண்டும்.

1.அதன் வழித்தொடரினைச் செயல்படுத்திட நல் உபதேசங்களை ஏற்றிடல் வேண்டும்.
2.அந்த நல் உபதேசத்தையே நற்செயலாக்கிடல் வேண்டும்
3.வயது வரம்பு இதற்கு வேண்டியதில்லை.

பக்தியினால் மட்டும் தான் நல்லதை உபதேசிக்க முடிந்திடும் என்ற கால நிலை இன்று மாறிவிட்டது.

தீயோரைக் காண்பதுவும் தீதே…
தீயோர் சொல் கேட்பதுவும் தீதே…
தீயோருடன் இணங்கி இருப்பதுவும் தீதே…!
என்றெல்லாம் முந்தைய காலத்தில் செய்யுள் படுத்தி உபதேசித்தனர்.

விஷமாகத் தீய சக்தி படர்ந்துள்ள நிலையில் நற்சக்தியை… சத்தியத்தை நிலைநாட்டுபவர்… “கோடியில் ஒருவர் கூட இவ்வுலகினில் மிஞ்சவில்லை…”

இவ்வுலகமே இப் பொருளாசை என்ற பேய்க்கு அடிமைப்பட்டு விட்டது. ஆலயங்களுக்குச் சென்றாலும் இப்பொருள் உள்ளவனுக்குத்தான் முதல் இடம்.

“பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை…” என்று எப்பொருளை வைத்து இவ்வாக்கியத்தை அமைத்தார்களோ அதுவே நிலைத்துப் பொருளுக்கே (பணம்) அடிமைப்பட்டு விட்டது இவ்வுலகம்.

பொருள் வைத்துத்தான் எச்சக்தியும் செயல் கொள்கின்றது இன்று இப்பூமியில்…!

பல மடாலயங்கள் அமைத்து அங்கு செயல் புரியும் மடாதிபதிகளே இப்பொருள் உதவி புரிபவரின் நிலைக்கொப்பத்தான் அவர்களை நடத்திடும் நடைமுறை உள்ளது.
1.அவர்களின் சத்தியத்தை நிலைநிறுத்தப் பொருள் வேண்டுமாம்…!
2.பஜனைகள் பாடிட ஆண்டவனின் அடிமை நாமம் பூண்டு ஒவ்வொரு திரு ஸ்தலங்களுக்கும் சென்று
3.அவ்வாண்டவனை எண்ணி துதி பாடப் பொருள் உதவி அளிக்கப்பட்ட பின் தான்
4.அவ்வாண்டவனுக்கும் துதி பாடுகின்றான் அப்பாடகன்.

அவனுக்கு இட்டிருப்பது ஆண்டவனின் நாமம் ஆண்டவனின் அடிமையாம் அவன். ஆனால் அவன் ஆண்டவனிடம் அவனைத் துதித்துப் பாடக் கூலி பெற்றுக் கொள்கின்றான்.

ஆண்டவனை மனமுருக அன்புருக பக்திப் பாடலை இவன் பாடுகின்றானாம்…! பக்தியையே விலை பேசிப் பாடுகின்றனர். அவனைத் துதி பாட பக்க மேள மனித ஆத்மாக்கள் வேறு.
1.ஆண்டவனின் துதி பாடப் பொருள் வாங்குபவனின் பக்தியினால்
2.அவ்வாண்டவனின் அருள் எப்படிக் கிட்டும்…?

தான் பிழைக்க வேண்டாமா…? தன் சுற்றத்தாரை எப்படிக் காப்பாற்றுவது…? என்ற வாதங்கள் புரிவார்கள்.

சோம்பேறி வாழ்க்கையாய் பிறரின் உழைப்பிலிருந்து கிடைக்கப் பெறும் ஊதியத்தை ஏற்று இப்பஜனை பாடித் திரிபவனின் ஆத்மாவெல்லாம் எந்த நிலை பெறும்…?

எங்குள்ளான் அவ்வாண்டவன்…?

பொருள் வாங்கி இசைத்திடும் இசைப்பவனின் இசையும் அப்பொருளுக்குத்தான் அடிமைப்பட்டதேயன்றி “ஆண்டவனுக்கு அடிமைப்படவில்லை…”

1.தன்னுள்ளே உள்ள ஆண்டவனை அன்பாக்கி
2.தன்னை ஒத்த அனைத்து உயிர் ஆண்டவ ஆத்மாக்களிடம் அன்பு பூண்டு
3.தன்னையே அவ்விசையின் இசையாய் பக்தி கமழச் செய்து
4.தன்னைச் சார்ந்தோரையும் அப்பக்தி இசையில் வழி நடத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நிலைக்கும் உம்மால் (ஈஸ்வரபட்டர்) மாறு கொண்ட வாதம் உள்ளதே… சாதாரண நடைமுறை கொண்ட மனித ஆத்மாவினால் இச்சக்தி நிலையெல்லாம் பெற முடியுமா…? என்று எண்ணுவீர்.

ஒவ்வோர் ஆத்மாவும் அச்சத்தியம் என்ற நேர் கோட்டைச் செயல்படுத்தினால் எத்தீய சக்தியும் நம்மை அண்டாது.
1.தீயது என்ற சொல்லுக்கே இடமில்லாமல்
2.தீயவர் நல்லவர் என்ற பாகுபாடு எண்ணம் கொள்ளாமல்
3.நம் சத்தியக் கோடு நேராய் இருந்துவிட்டால் எச்சஞ்சலத்திற்கும் இடமில்லை.

தீயோரையும் காணலாம் தீயோர் சொல்லும் கேட்கலாம் தீயோருடனும் வாழலாம். தீயது என்று ஒதுங்கி ஏனப்பா செல்ல வேண்டும்…?

நம் சத்தியத்தின் நேர் வழியினால் நாமும் இவ்வுலகினில் உதித்த உயிரணுதான். தீயோன் என்று ஒதுக்கப்பட்டவனும் நம்மை ஒத்த உயிரணுதான். நம்மால் அத்தீயவனையும் நல்லுணர்வு படுத்திடலாம் என்ற ஜெப நிலை கொள்ள வேண்டும்.

ஒதுங்கி வாழ்வதல்ல வாழ்க்கை…!

பல காலங்களுக்கு முன்னே போகரினால் ஸ்தாபிதம் செய்து வைத்த முருகரின் சிலை நவபாஷானத்தைக் கொண்டு செய்விக்கப் பெற்றது.
1.விஷத்தையே ஆண்டவனின் உருவமாக்கி அபிஷேக ஆராதனை செய்து
2.இம்மனிதர்களை உண்ணச் செய்தான் அப்போகநாதன்.

இது எதை உணர்த்துகின்றது…?

விஷம் என்று ஒதுங்கிச் செல்வதினால் நம்மையும் விஷமாக்கிக் கொள்கின்றோம் பயந்த நிலையில்…!

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அச்சத்திய ஜெபம் ஓங்கல் வேண்டும். சத்திய ஜெபம் பெற்றுவிட்டால் எத்தீய சக்தியையும் நற்சக்தியாக்கிடலாம். நம் உடலில் உள்ள பல கோடி அணுக்களையும் நம் நிலைக்குக் கட்டுப்படுத்திடலாம்.

1.இந்த நிலை பெற்றவனின் ஜெபத்தினால் அனைத்து சித்து நிலைகளையும் கண்டிடலாம்
2.சித்தனுடனே கலந்திடலாம் சிவ பதம் எய்திடலாம்…!

மனித எண்ணங்களின் தடுமாற்றத்தினால் இவ்வுலகமே இம்மனிதனால்தான் விஷம் கொண்டுள்ளது. சஞ்சலம் கொள்ளா அமைதி வாழ்க்கை வாழ்பவனுக்கு அவனின் ஆரோக்கிய நிலையும் பாதிப்பதில்லை. அதன் வழித்தொடரில் எச்சிக்கலும் ஏற்படுவதில்லை.

மனச் சஞ்சலத்துடனும் கோபத்துடனும் உள்ளவன் புசிக்கும் உணவு அவனுக்குச் செரிப்பதில்லை.

அந்த உணவே விஷமாக ஆவியான அமில நிலை கொண்டு இவ்வுடலுக்கு வாய்வு என்ற நிலை ஏற்படுத்தி அங்கங்கு உடல் உறுப்புகளில் தங்கி விடுகின்றது.

சீராய் இவை வெளியேறாவிட்டால் அங்கங்கு தங்கி உள்ள இக்காற்றின் அமிலமே அங்கு உறைந்து மேலும் உண்ணும் உணவைச் செரிக்க விடாமல் இத்தங்கிய வாய்வு அமிலங்கள் உறைந்து கோழையாய் கட்டி நிலைபெற்று சளி பிடித்து தும்மல் எய்தி இருமலாகி இக்கோழை வெளி வரும்வரை இவ்வுடல் மண்டலமே அவஸ்தையுற்று அதன் தொடர்ச்சியில் பல நிலைகள் ஏற்படுகிறது.

அங்குகங்கு தங்கிடும் இவ்வமிலத்தினால் சில உறுப்புகளும் கெடும் நிலை எய்துகிறது. இதன் தொடர்ச்சியில் பல வியாதிகள் மனிதனுக்கு வருகின்றன.

1.நாமே சம்பாதித்துக் கொள்வதுதான் இவ்வியாதியே அன்றி
2.உண்ணும் உணவிலிருந்து மட்டுமோ அல்லது மற்றதிலிருந்தோ
3.நம்மைத் தொற்றிக் கொள்கிறது என்பதல்ல இந்த வியாதியின் அணு.

வியாதியில் அடிப்பட்டவனின் சுவாசக் காற்றினிலே இந்த நிலைகொண்ட அணுவைத்தான் வெளியிடுகின்றான். இவனைச் சார்ந்தவரின் நிலையையும் இவனின் வட்டத்தில் ஈர்த்துக் கொள்கின்றான்.

இவ்வெண்ணத்தின் நிலையை மாற்றுவதால் ஏற்படும் நிலையிலிருந்து நம் ஆத்மா தப்பும் நிலை பெறல் வேண்டும்.

குரு வழியில் தீமையை நீக்கும் அனுபவங்களைப் பெற்றால் “நமது” என்று அதைச் சொந்தம் கொண்டாட முடியும்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வுகளை அறிவதற்கும் அந்த ஆற்றலைப் பெறுவதற்கும் 20 வருடம் பல கஷ்டங்களை (ஞானகுரு) அனுபவித்தேன்.

அதை எல்லாம் இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது 10 நிமிடம் கூட உட்கார முடியாமல் எழுந்து செல்பவர்களும் உண்டு. உட்கார்ந்து இருக்கின்றேன்… “கால் வலிக்கின்றது…” என்று சொல்பவர்களும் உண்டு.

சீக்கிரம் சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்று நினைத்தால் இப்படியே என்னத்தையோ அறுத்துக் கொண்டிருக்கின்றார்…! என்று நினைத்தால் நிச்சயம் உங்களுக்குக் கால் வலி வரும்… இடுப்பு வலி வரும்… கொஞ்ச நேரத்தில் எழுந்து போகலாம் என்ற சொல்லும் வரும்.

ஏனென்றால் இந்த உபதேசத்தின் உணர்வினை நீங்கள் ஈர்க்கவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை இயக்கத்தான் செய்யும். ஆனால் பெற வேண்டுமென்ற ஏக்கமிருந்தால் நிச்சயம் பெறலாம்.

சாதாரணமாக கதாகலாட்சேபம் செய்பவர்கள் சிரிக்கப் பேசுவார்கள். கிண்டல் செய்தால் ஆகா…! என்று சிரித்து எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். நான் அப்படிச் சொல்வதற்கில்லை…!

மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்றால் இருளை அகற்ற முடியும் என்று நிலைக்குத் தான் சொல்கிறேன். பொறுமையுடன் பொறுத்து இருந்து உணர்வின் தன்மை பதிவாகி இதை நுகரப்படும்போது உங்கள் இடுப்பு வலி கால் வலி நெஞ்சு வலி எல்லாம் குறையத் தொடங்கும்.

ஹார்ட் பட…பட.. என்று துடிப்பவர்களும்… உட்கார முடியவில்லை…! என்று சொல்பவர்களும் கூட அமர்ந்து கேட்பார்கள். இதைக் கேட்கக் கேட்க இந்த உணர்வுகள் உள்ளே போகப் போக உங்களை அது அமைதிப்படுத்திவிடும்.

ரொம்ப நேரம் உட்கார முடியாது என்று சிலர் இருப்பார்கள். அரை மணி நேரத்திற்கு மேல் உட்கார மாட்டேன் என்று சொல்லியிருப்பார்.
1.ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருப்பார்.
2.எப்படி உட்கார்ந்திருந்தோம்…! என்று தன்னை மறந்திருப்பார்.
3.ஏனென்றால் எதன் உணர்வைக் கவர்ந்து கொண்டோமோ அந்த ஞானிகளின் உணர்வின் தன்மை நமக்குள் வளரப்படும்போது
4.மற்ற தீமைகள் நமக்குள் நுகர முடியாதபடி தடைப்படுகின்றது.

அருள் உணர்வுகள் வளர்கின்றது தீமையைக் குறைக்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்கில்…” சொல்லி ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

1.உடலைப் பற்றியோ தொழில் நிலைகளைப் பற்றியோ மறந்துவிட்டு
2.சாமி சொல்லும் அந்த அருள் ஒளியை பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
3.எவர் உட்கார்ந்திருக்கின்றனரோ அவருக்கு அந்த அருளுணர்வு பதிவாகின்றது
4.உங்கள் நினைவு தீமையிலிருந்து விடுபடும் சக்தியாக மாறுகின்றது.

ஆனால் நம்முடைய பழக்க வழக்கத்தில் அடுத்தவர்கள் பேசினால் நாம் ஒட்டுக் கேட்போம். நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றான்…! என்ன சொல்கிறான்…? என்ற எண்ணத்தில் ஒட்டுக் கேட்போம்.

ஒட்டுக் கேட்டபின் அந்தத் தீமையின் நிலைகளையே பேச ஆரம்பிப்போம். அவன் செய்யும் தீமையின் உணர்வை ஒட்டுக் கேட்டபின் “அவனை எப்படிக் கெடுப்பது…” என்ற உணர்வுகள் தான் வரும். பதிவான பின் அந்த நினைவே அதிகரிக்கின்றது.

இதைப் போலத்தான் நீங்கள் என்ன செய்ய வேண்டும்…?
1.உடலுக்குள் நினைவைச் செலுத்தி “நீ இருப்பா… கொஞ்ச நேரம்…!”
2.சாமி சொல்லும் துருவ நட்சத்திரத்தின் அருளை கொஞ்சம் ஒட்டுக் கேட்டுக் கொள்கிறேன் என்று
3.இந்த உணர்வின் தன்மையை இப்படி ஒட்டி வைத்தால் தீமையை நீக்கும் அரும் பெரும் சக்தியாக மாற்றுகின்றது.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

நமது குருநாதர் எம்மை இது போன்று தான் அனுபவத்தைப் பெறச் செய்தார். ஒவ்வொரு நொடியிலும் அதை அறிணந்துணர்ந்து கொள்வற்கு எனக்குள்ளும் தீமைகளைப் பாய்ச்சினார்.

அந்த உணர்வின் நினைவுகள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையை உணரச் செய்தார். அந்தத் தீமைகளிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…? என்று அத்தனை துன்பங்களையும் அனுபவித்து மீள்வதற்குக் காட்டினார்.

ஆய்வுக் கூடங்களில்…
1.இன்று எப்படி ஒரு பொருளின் தன்மை திரவத்தை ஊற்றிப் பரிசோதித்துப் பார்த்து
2.அதிலிருக்கும் உண்மைகள் ஒவ்வொன்றையும் பெறுகின்றோமோ அதைப் போல்
3.என் உடலிலேயே இந்த உணர்வுகளைப் பாய்ச்சி மெய் உணர்வின் தன்மை அறியும்படி செய்து
4.அத்தகைய நிலையை உருவாக்கினார் நமது குருநாதர்.

ஆகவே இதை (குரு வழியில் தீமையை நீக்கும் அனுபவங்களை) என்றால் நமது என்ற நிலைகளில் சொந்தம் கொண்டாட முடிகின்றது.

எனது குருநாதர் என்று இருந்தாலும்…
1.அதை நீங்களும் உணர்ந்து நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளும் போது
2.அந்த குரு வழியில் நமக்குள் “நமது…” என்று ஒன்று சேர்த்து வாழும் தன்மை அங்கே வருகின்றது.

இந்நேர வரையிலும் வலு கொண்டு உபதேசித்த உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில் அருள் ஞானத்தைப் பெறவே இதைச் செய்தது.

இப்பொழுது கேட்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் “இதுவே ஒரு பெரிய தியானம்…!
1.அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வு ஈர்க்கப்பட்டது
2.நீங்கள் நுகர்ந்தீர்கள்…. ஒவ்வொரு நிமிடமும் இதை வளர்த்துக் கொள்ளுங்கள்…!

பொது நலம் கொண்ட ரிஷிகளின் செயலுக்கும் சுயநலம் கொண்டவர்களின் செயலுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இறை ஆத்மாவின் அன்பு கொண்ட சக்தி ஜெபம் பெற்றவர்கள் (ரிஷிகள்) இறைவனாகவே செயல்படுகின்றனர்.

ஒவ்வோர் உயிரணுவையும் தனதாக எண்ணி அவ்வுயிராத்மாக்கள் படும் வியாதியின் சங்கடத்தை இவ் இறை ஆத்மாக்களினால் ஏற்கப் பொறுக்காமல்… அவ்வாத்மா வேறல்ல தனதாத்மா வேறல்ல என்ற நிலைப்படுத்தி… ஒவ்வொரு சிறு உயிரணுவும் அதன் துடிப்பில் வேதனை உறுவதை தன் உயிராத்மாவுடன் கலக்கவிட்டு… “தானே அவ்வேதனைக்கு உடையவனாகி அதை அகற்றிடல் வேண்டும்… மற்ற உயிரணுக்கள் எல்லாமே இன்புறல் வேண்டும்…” என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயலாக்குகின்றார்கள்.

1.ஆனால் அது அது செய்த பாவத்திற்கு அது அனுபவிக்கின்றது
2.நாம் ஏன் வேதனையுறல் வேண்டும் என்ற சுய நல மிக்க ஆத்மாக்களினால்
3.நற்செயலையே செய்து நல்லொழுக்கமே கொண்டு வாழ்ந்து வழி வந்தாலும்
4.மற்ற ஜீவ அணுக்களையும் தனதாக ஏற்காமல் செயல்படுபவன் “சுயநலமிக்கவனாகின்றான்…”

“எல்லா உயிரணுக்களுமே ஒன்றுதான்…!” என்ற எண்ணம் கொண்ட உயிராத்மாக்கள்தான் “ஞான ஒளி…” ஆகின்றார்களே அன்றி சுயநலம் மிக்க ஆத்மாக்களினால் அருள் நிலை பெறுவது கடினம்.

சிறு எறும்பு நம்மை வந்து கடிக்கின்றது. அக்கடி நிலை பொறுக்காமல் அதை நசுக்கி எறிகின்றோம். அவ் எறும்பின் ஜீவன் பிரிந்து விடுகின்றது. அதன் உருவம் நச்சுப்படுகின்றது என்று எண்ணுகின்றோம். அதன் ஜீவன் எங்கு செல்கின்றது…?

அதை நசுக்குபவரின் எண்ணத்திலேயே…
1.அவ் எறும்பு சேமித்த எண்ணத்தையும் அமிலத்தையும்
2.அதை நசுக்குபவனே ஏற்றுக் கொள்கின்றான்.

பல உயிர்களை உணவாக்கி உண்ணுகின்றோம். அதனால் அவைகளுக்கு இம் மனிதர்களின் உடலிலேயே அவற்றின் சக்தியை எல்லாம் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை அறியாமல் நம் நாவின் சுவைக்காக நம்மை அறியாமல் நாம் பலி படுகின்றோம்.

எல்லா உயிர் அணுக்களுக்குமே எண்ணமுண்டு. இவ்வெண்ணத்தில் சேமித்த அமிலத்தின் நன்மை தீமை கொண்ட குண நிலையும் உண்டு.
1.ஓர் உயிர் ஜெந்துவை அழித்து உண்ணும் நாம்
2.அஜ்ஜெந்துவின் நிலையையும் நம்முள் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை உணரல் வேண்டும்.

மனிதர்களில் இருந்துதான் மிருக ஜெந்துவும் பறவைகளும் ஊர்வனவும் வருகின்றன என்று முதலிலே சொல்லியுள்ளேன். மிருகங்கள் மற்றப் பறவைகள் எல்லாம் மனித இனமாக வருவதில்லையா…? என்று எண்ணிடலாம்.

மனிதர்களால் மற்ற ஜெந்துக்களைப் புசிக்கும் நிலையில் அதன் சப்த அலையும் உயிரணுவும் அதன் உடலைப் புசித்தவனின் உடலுக்குள் ஏறிக் கொள்கின்றது.

1.அறிவு வளர்ச்சி நிலை கொண்ட மனித ஆத்மாவில் ஏறிக்கொள்ளும் மிருக ஜெந்திற்கு
2.அம் மனிதக்கூட்டில் இருந்து அம்மனித ஆத்மா பிரிந்த பிறகு
3.மனிதனின் உடலில் ஏறிய இஜ்ஜீவனுக்கும் மனித உருவாய்ப் பிறந்திடும் பக்குவ நிலை பெற்று பிறப்பிற்கு வருகின்றது.

அஜ் ஜெந்திற்கு இம் மனிதனால் விமோசனம் கிடைக்கின்றது…!

இம் மனிதனுக்குத்தான் மற்ற ஜீவனை உண்ட நிலையினால் அதன் குண நிலையின் வழித்தொடர் பெறுகின்றான்.

இந்த நிலையை உணர்ந்து நாம் எல்லா ஜீவ ஆத்மாக்களிடமும் உயிரணுக்களிடமும் “அவை வேறல்ல… நாம் வேறல்ல…” என்ற நிலையில் நம்மையே அவையாக்கி அவையே நாமாகி… “அன்பென்னும் நிலைதனை கனிவாகப் படர விடல் வேண்டும்…!”

இன்று அவை கொசுவாகவும் குருவியாகவும் ஆடாகவும் இருந்திடலாம். அவையும் நம்மைப் போல் ஜீவன் கொண்டவை தான். எல்லா உயிரணுக்களையும் நமதாக எண்ண கனிவு நிலையில் வழி நடந்திடுங்கள்.

இவ்வுலகிற்கும் எண்ணமுண்டு… ஜீவ காந்த அமில சக்தியுண்டு. இவ்வுலகினில் வாழும் அனைத்திற்கும் மனிதன் முதல் எறும்பு வரை அனைத்து ஜீவராசிகளுக்குமே எண்ணமும் உண்டு… அதற்குகந்த காந்த அமில சக்தியுண்டு…!

1.யாருக்கு யாரும் மூத்தவருமல்ல இளையவருமல்ல
2.எல்லாம் அப் பரம்பொருளின் ஐக்கியம் கொண்ட ஆத்மாக்கள் தான்.

ஒரு நாளைக்கு உயிரான ஈசனை எத்தனை முறை நினைக்கின்றோம்…?

 

இயற்கையின் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு குருநாதர் எத்தனையோ இம்சைகளை எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார். முழுவதும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப் பட்டேன்.

ஏனென்றால் சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…? அதிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தார் குருநாதர்.

பரிணாம வளர்ச்சியில் உயிர் எத்தனையோ உடல்களைக் கடந்து வந்து மனிதனாக உருவாக்கி உள்ளது.
1.ஆனால் அந்த உயிரை மதிக்கமாட்டேன் என்கின்றார்களே…!
2.உடலைத்தான் மதிக்கின்றார்கள்… இந்த உயிரை யாரும் மதிப்பதில்லை.

நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது…? இதையாவது மக்களுக்கு எடுத்துச் சொல்… ஆண்டவனுக்கு இந்தச் சேவையைச் செய்…! என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலை ஆளுகின்றது. அப்பொழுது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார் குருநாதர்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். குருநாதர் எனக்கு உணர்த்திய இந்த வழிப்படி
1.இப்பொழுது இங்கே சொல்லக் கூடிய உபதேசங்களை நீங்கள் நுகரப்படும்போது
2.அந்த ஆண்டவனுக்கு இந்த உணர்ச்சியின் தன்மை இந்த அருள் உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.

எது…?

கோவிலில் பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் அந்த நல்ல குணத்திற்குப் பாலாபிஷேகம்…! அதாவது நம் நல்ல குணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினால் “அந்தப் பாலைப்போல் மனம் பெற வேண்டும்…” என்று நாம் எண்ண வேண்டும்.

ஆனால் வேதனை உணர்வை எடுக்கப்படும் பொழுது பாருங்கள். இந்த வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வார்கள். இந்த உயிரில் அந்த வேதனை தான் அபிஷேகம் ஆகும்.

வேதனை உணர்ச்சிகள் முன்னாடி இருக்கின்றது. அப்பொழுது பாலாபிஷேகம் செய்தால் என்ன செய்யும்…?
1.விஷத்தில் பாலை ஊற்றினால் என்ன செய்யும்…! பாலும் விஷமாக மாறிவிடும்
2.அது போல் தான் யாம் கொடுக்கும் வாக்கும் பயனற்றதாகப் போகும்.

நான் பல முறை சொல்லியிருக்கின்றேன். இதைப் பயனற்றதாக ஆக்காதீர்கள் என்று. சிரமப்பட்டு சம்பாதித்த சொத்து அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழக வேண்டும்.

1.உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும்
2.அவனை மதித்து அந்த அருளை பெற்றீர்கள் என்றால்
3.இந்த உடலுக்குப் பின் நீங்கள் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.

என்ன தான் ஆபரேஷன் செய்து உடலை நலம் பெறச் செய்தாலும் அடுத்தாற்படி மனிதனின் கடைசி முடிவு எங்கே செல்கிறது…! எடுத்துக் கொண்ட விஷமான உணர்வுக்குத் தக்க… இந்த உயிர்… நீ செய்தாய் அல்லவா…! என்று விஷம் கொண்ட உயிரினங்களில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

ஆனால் இதை எல்லாம் நமக்குள் தெரியச் செய்வது கார்த்திகேயே… சேனாதிபதி…! பாதுகாக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது.

1.அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால்..
2.நாம் இன்றைக்கு மனிதன்… நாளைக்கு எடுத்துக் கொண்ட வேதனைக்குத் தக்க வேறு ஒரு உருவம்.

இது போன்ற நிலைக்கு உயிர் மாற்றிவிடும் என்ற நிலைகளில் தான் இத்தனையும் என் உடலில் பாய்ச்சி
1.நீ கெட்டதை நுகரப்படும்போது அது என்ன செய்கின்றது…?
2.எவ்வளவு நேரத்தில் அது உடலில் என்னென்னவெல்லாம் செய்கின்றது…? என்று குருநாதர் காட்டினார்.
3.அவஸ்தைப்பட்டுத்தான் இதை எல்லாம் தெரிந்து கொண்டேன்.

அதற்குப் பின் அதை எப்படித் திருத்துவது என்று குருநாதர் சொன்ன நிலைகளைத் திருப்பி எடுத்து எனக்குள் மாற்றி அமைத்துக் கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களிடம் சொல்கின்றேன். அதை நீங்களும் எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

உயிரணு தோன்றி உணர்வின் தன்மை முழுமையானது துருவ நட்சத்திரம்…! அதிலிருந்து வரக்கூடிய உணர்வை உங்களுக்குள் செலுத்தி எப்படியாவது அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

1.“உயிரான ஆண்டவன் உங்களை ஆண்டு கொண்டிருக்கின்றானே…”
2.அவனுக்கு என் சேவையை நான் செய்வதற்கு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அனுப்பி வைக்கின்றேன்.

ஆனால் அப்படி அனுப்பும் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கஷ்டத்தையும் வேதனையையும் எண்ணிக் கொண்டு வந்தால் எப்படி உள்ளுக்குள் போக போடுவீர்கள்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

இந்த நாடு… உலகம்… காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக உள்ளது. அதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் அல்லவா…!

பிறந்துவிட்டோம்… மனிதராக வளர்ந்துவிட்டோம் மனிதனுக்குபின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் அதுதான் கடைசி நிலை…!

நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குபவன் உயிர். அது ஈசனாக இருக்கிறது. உருவாக்கிய உணர்வு உடலாகி சிவமாகின்றது. உடலான இந்தச் சிவத்திற்குள் தீமையை நீக்கிய உணர்வு மணம் அந்தக் குணம் ஆறாவது அறிவாக இருக்கின்றது.

1.ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உயிரான ஈசனிடம் வேண்டி
3.ஒளியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து
4.உங்களைத் தெளிவாக்கி கொள்ளுங்கள் என்று தான் யாம் சொல்கிறோம்.

அந்தத் தீமையை நீக்கிய உணர்வின் தன்மையை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடலிலுள்ள இரத்தத்தில் கலக்கப்படும்போது அந்த ஒளியான அணுக்கள் உங்களுக்குள் பெருகும்.

எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன் ஆண்டவன் ஆகலாம் – ஈஸ்வரபட்டர்

 

இங்கே கொடுக்கும் உண்மைகளைப் படிக்கும் ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் இவ் விஷமாய்க் கலந்துள்ள காற்றின் சக்தியிலிருந்து உன்னத நிலை பெறல் வேண்டும்.
1.நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அழியாச் சொத்தை சேமித்திடல் வேண்டும்.
2.நம் உயிராத்மாவை உன்னதப் பொக்கிஷமாக்கி அவ்வொளியுடனே ஒளியாய்க் கலந்திடல் வேண்டும்.

இன்று வாழும் நிலையில் விஷத்தன்மை வாய்ந்த காற்று அலையில் சிக்குண்டு இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள இம்மனித உடல் வாழ்க்கையை ஏக்கத்தினாலும் பேராசை வெறியினாலும் சலிப்பினாலும் ஆத்மா பிரிந்து சென்று அவ்வெண்ண அலையுடனே ஈன ஜெந்துவாய் அதன் ஈர்ப்பலையில் சிக்கி அதன் வட்டத்திற்குள் நம் உயிராத்மா சென்று வாழும் பிடியிலிருந்து மீண்டு செயல் கொள்ள வேண்டுமென்றால் நம் வாழ்க்கையைப் புனிதமாக்கி ஜெபம் கொண்டிடல் வேண்டும்.

1.ஈஸ்வர நாமத்தை ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை
2.நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்னலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.

பக்தி என்ற நிலையில் நம் எண்ணத்தில் அப்பரந்தாமனையே எண்ணிப் பல நாள் பூஜித்து வணங்கி நாம் முக்தி எய்திட அப்பரந்தாமனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும் பக்தி ஜெபத்தில் ஈடுபட்டு வழி வந்திடும் நிலையில்
1.நம் வாழ்க்கையில் ஏற்படும் நம்மைச் சார்ந்தவரின் நிலையினாலும் மற்றவர்களின் நிலையினாலும்
2.நம் பூஜையில் குறுக்கிடும் நிலையோ அல்லது அவர்களினால் நம் ஜெபம் தடைபடுகின்றதே என்ற ஏக்கத்தினாலும்
3.நம் எண்ணத்தைச் செலுத்தினாலும் நம் ஜெபம் நமக்குக் கைகூடாது.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஒவ்வோரு சக்தி நிலையுண்டு. அச்சக்தி நிலையை வெளிப்படுத்திடப் பக்குவ நிலை வேண்டும்.

உதாரணமாக நம் இல்லத்தில் நாம் சமைக்கும் பதார்த்தத்தில் எப்பதார்த்தத்தை மையப்படுத்திச் சமைக்கின்றோமோ அதன் நிலையில் உப்போ புளிப்போ காரமோ எச்சுவை அதிகப்படுகிறதோ அந்நாமம்தானே அப்பதார்த்தம் பெறுகிறது. நீங்கள் செய்த பதார்த்தத்தின் நாமம் மாறி “ஒரே உப்பு” என்று நாமம் பெறுகிறது.

அது போல் பக்குவ நிலை மாறு கொண்டால் நம் உயிராத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து நம் எண்ண நிலை மாறு கொண்ட ஏக்கத்தில் நம் உயிராத்மா பிரிந்து விஷமாய்க் கலந்துள்ள இக்காற்றினில் நம் ஆத்மா தத்தளிக்க நாமே நம் ஆத்ம சக்தியைச் சிதற விடுகின்றோம்.

நாம் செய்யாத ஒரு செயலுக்கு மற்றவரினால் கடும் சொல்லோ எதிர்ப்பு நிலையோ ஏற்படும் தருவாயில்…
1.நாம் சத்தியவனாய் உள்ளோம் நம்மை ஏன் வீண் இகழ்ச்சி செய்கின்றனர்…?
2.ஆண்டவா அவனைப் பார்த்துக்கொள்… அவனைச் சும்மா விடலாகாது
3.நம் சத்தியத்தை அவன் மீறி நம்மைத் துவேஷிக்கிறான் என்ற எண்ண நிலையில் நம் எண்ணத்தைச் செலுத்தி
4.ஆண்டவனை வணங்கி அவன் செய்த பாவத்திற்கு நாம் எண்ணும் நிலையிலேயே
5.நம்மையே நாம் தண்டனைப்படுத்திக் கொள்கின்றோம்.

இவ்வுணர்வின் நிலையினால் நம் உடல் நிலையும் பாதித்து அதன் வழித் தொடரில் பல இன்னல்களை நாம் அடைகின்றோம்.

நாம் அறிந்தே நமக்கு ஒருவர் தீங்கு இழைக்கின்றார். நம்மை ஏமாற்றி வஞ்சனைப்படுத்தி வாழ்கின்றாரே அந்நிலையைப் பார்த்து நாம் எப்படிச் சும்மா இருத்தல் முடியும்…? என்று எண்ணத்தில் சலிப்புத் தோன்றலாம்.

நம்மை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு ஏமாற்றுபவர்கள் எல்லாம் நம்மை ஏமாற்றவில்லை. “அவர்களையே அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள்…”

ஒருவரின் மேல் குரோதத்தை வளர்ப்பவனும் பொறாமை கொண்டு ஏக்கப் பெருமூச்சு விடுபவனும் நம்மைப் பார்த்துப் பொறாமை கொள்ளவில்லை…. ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.

அவனையேதான் அவன் பொறாமைப்படுத்துகின்றான்… ஏக்கப்படுத்தி கொள்கின்றான்…! இது தான் உண்மை.

அது போன்ற எண்ணத்தின் அடிப்படையில் நாம் சிக்காது…
1.நாம் நம் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி
2.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! எனக்கு நல்ல மனதைத் தா
3.அவனுக்கும் நல்லுணர்வு கொண்ட நற்சக்தியை வளரவிட்டு நல்லவனாய் ஆக்கிடுங்கள் என்ற
4.இந்த ஜெபத்தைத்தான் நாம் பெறல் வேண்டும்.

அவர்கள் செய்யும் வினையல்ல அது. அவர்களை ஆட்டி வைக்கும் துர் சக்தி தான் அதுவேயன்றி “ஆண்டவனின் அருளில் உதித்த அனைத்து உயிராத்மாவுமே ஒன்றுதானப்பா…”

இக்காற்றினில்தான் அனைத்துமே கலந்துள்ளன. தீயவனாய் எவனும் பிறந்திடவில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலையினால் ஏற்படும் இத்தீய சக்தியின் பிடியிலிருந்து மீள முடியவில்லை.

இன்று மட்டும் வந்த நிலையல்ல இது…!

பல காலமாய் இம் மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியில் குரோத வெறியுணர்வினால் அரசர்கள் ஆண்ட காலத்தில் பேராசையில் அவர்கள் நாடு பிடிக்கப் போர் என்ற நிலையில் பல ஆத்மாக்களை இக் குரோத எண்ணத்தில் போர்க்களத்தில் உயிர் நீத்த ஆத்மாக்களின் நிலையின் வழித்தொடரினால் வந்த வினை தானேயன்றி “இன்று வாழும் நம் மனித ஆத்மாக்களினால் வந்த நிலையல்ல இந்நிலை…”

இதிலிருந்து மீளுவதற்குத்தான் நம் ஆத்மாவை எப்படிச் செயல்படுத்திடல் வேண்டும்…? நம் எண்ணத்தைக் கொண்டு நம் உயிராத்மா அடையப் போகும் நிலைதனை உணர்ந்து சத்தியத்தின் சக்திவானாய் சக்தி பெற்றிடல் வேண்டும்.

தீயவர்கள் என்று ஒதுங்கி வாழ்ந்திடல் ஆகாது…!

நாம் எடுக்கும் நல்லுணர்வின் ஜெபத்தினால் நம் எண்ணத்தின் சுவாசத்தைப் பல மைல்களுக்கு அப்பால் இருந்திட்டாலும்
1.அன்பான சுவாசத்தை அவர் எண்ணமுடன் நம் எண்ணம் கலக்கச் செய்து
2.அவரையே நம் எண்ணத்தினால் புனிதமடையச் செய்திடலாம்.
3.நம் எண்ணச் சக்திக்கு உகந்த நிலைதனை நாம் உணர்ந்திடல் வேண்டும்.

பல மகான்களும் சப்தரிஷிகளும் இவ்வெண்ண சக்தியில் உயர்வு பெற்று மகான்கள் ஆனார்களேயன்றி “கடும் ஜெபத்தினாலோ விரதத்தினாலோ யாக குண்டங்கள் வளர்த்து பூஜித்ததினாலோ அம்மகான் நிலை பெறவில்லை…!”

எண்ணத்தில் உயர்ந்த ஞான சக்தி பெற்றவன் தான் ஞானியாகவும் சித்தனாகவும் ரிஷியாகவும் ஆனானேயன்றி பக்தியைக் கொண்டு ஆண்டவனை வணங்கி… பூஜித்து நற்சக்தியைப் பெறவில்லை…!

அவரவர்களுக்குள் உள்ள ஆத்மாண்டவனை இவ்வெண்ணத்தினால் பூஜித்துப் புனிதப்படுத்தி பக்குவ நிலை பெற வேண்டுமேயன்றி “பஜனை பாடி கோவிந்தனை அழைத்து எவ்வாண்டவனின் ஜெபத்தையும் பெற முடிந்திடாது…”

ஒவ்வோர் ஊர்களுக்கும் சென்று மக்களுக்கெல்லாம் நல்லுணர்வு பெற அக் கோவிந்த ஜெபம் பாடினால் மட்டும் நல்லுணர்வு பெற முடிந்திடாது.
1.எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன் தான் ஆண்டவன் ஆகலாமேயன்றி
2.அவ் ஆண்டவனின் சக்தியைப் பெற எப்பூஜையும் பஜனையும் வழி நடந்திடாது.

நன்றாக இருப்பவர்களுக்குத் திடீரென்று இருதய அடைப்பு (அட்டாக்) ஏன் வருகிறது…?

 

நாம் சாப்பிடுகின்ற ஆகாரத்திற்குள் நல்ல வாசனையான பொருளைப் போட்டு. ருசியாகத் தான் சாப்பிடுவோம். சத்துள்ளதை எல்லாம் அதிலே போடுகின்றோம். ஆனால் அதற்குள் மறைந்து இருக்கும் அந்த விஷமான சத்தை நம் உயிர் என்ன செய்கிறது…?

அந்த நஞ்சை எல்லாம் பிரித்து மலமாகக் கொண்டு வருகின்றது நம் உடல். அதாவது உணவிற்குள் மறைந்திருக்கும் நஞ்சைப் பிரிக்கக்கூடிய சக்தியாக நமது ஆறாவது அறிவு இருக்கிறது.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று இப்படி இருக்கப்படும்போது அதை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

உதாரணமாக… வியாபாரத்தில் நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை… ஏமாற்றுகின்றான்…! என்று தெரிகின்றது. இது கார்த்திகேயா.

ஏமாற்றுகிறான் என்று சொன்னவுடனே நாம் வேதனைப்படுகின்றோம். நம் தலை சுத்துகின்றது. கொடுத்தேனே என்னை ஏமாற்றுகின்றானே…! என்று இதுவும் தெரிகின்றது கார்த்திகேயா.

ஏமாற்றுகின்றான் என்று சொல்லும்போது நாம் இன்னொன்று என்ன நினைக்கின்றோம்…? அந்த நேரத்தில் இன்னொருவருக்கு நாம் காசு கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம்.

ஏனென்றால் கடனுக்கு வாங்கித் தான் நாமும் தொழில் செய்கிறோம். பொருள் வாங்கியவரிடம் பணம் கொடுக்கின்றேன் என்று சொல்லிவிட்டுத் தான் நாமும் வாங்குகின்றோம். அந்த நாணயத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் பொருளை விற்கும் போது நம்மிடம் வாங்கியவன் பணத்தைக் கொடுத்தால் தான் நாம் வாங்கியவருக்குக் கொடுக்க முடியும் என்ற நிலையில் நாமும் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது…?

அதை நினைத்தாலே கோபம் வரும்… கண்கள் சிவக்கும்…! நரம்பு மண்டலமெல்லாம் விடைக்கும். இப்படி ஆகின்றதே என்று அந்த நேரத்தில் வேதனையும் விஷமும் சேர்த்தால் எப்படி இருக்கும்…?

இந்த உணர்வுகள் எல்லாம் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலிலே கை கால் குடைச்சலை உண்டாக்கும். சில பேருக்கு மூட்டு மூட்டிற்கு வலி இருக்கிறது… என்று சொல்வார்கள்.

அதாவது “சரவாங்கி நோயாகி விட்டால் மூட்டு மூட்டுக்கு வலி வந்துவிடும். அதே சமயத்தில் எவ்வளவு திடமாக இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வு வரப்படும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் இந்த கோபமும் வேதனையாக ஆன பிற்பாடு நமது கவன நரம்பில் சென்று அங்கே இந்த அழுத்தம் ஆன பிற்பாடு என்ன செய்கின்றது…?
1.பலூன் மாதிரி உப்பிவிடும்
2.பலூன் மாதிரி உப்பிவிட்டது என்றால் நம் இருதயத்தை சரியாக இயக்க முடியாது
3.மூச்சு இழுத்தது கீழே இறங்காமல் நிற்கும்.
4.அப்படியே ஹார்ட் அட்டாக் ஆகிறது… உடனே இறந்தவர்களும் இருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் இரத்தம் போகும் நுண்ணிய நாளங்கள் வெடித்து விட்டதென்றால் அப்படியே சுத்தமாவே நின்றுவிடும்.

1.நாம் நினைக்கின்றோம் சாதரணமான நிலைகள் என்று….!
2.ஆனால் நாம் பார்க்கின்ற உணர்வெல்லாம் நம் உடலிலே இப்படிச் செய்து கொண்டே இருக்கும்

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நாம் சம்பாரிக்க வேண்டும் என்று நினைத்தோம் தொழிலில் லாபம் வரும் என்று நினைத்தோம். நாம் ஏமாற்றவில்லை…! இங்கே வாங்கிக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கடன் வாங்கினோம்.

கொஞ்சப் பணம் இருந்தாலும் கடனுக்கு வாங்கி வியாபாரம் செய்து இதிலே லாபம் வரும் என்று தான் ஆசையுடன் இருக்கின்றோம். கடையில் நம் வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்றும் கார்த்திகேயா அது நமக்குத் தெரிகின்றது.

ஆனால் பணம் திரும்ப வரவில்லை என்று தெரிகின்றது. நாம் பொருள் வாங்கியவர்கள் நம்மிடம் பணத்தைக் கேட்பார்களே…? அவர்களுக்கு என்ன சொல்வது…? என்கிற பொழுது நாம் மயங்கி விடுகின்றோம்.

அந்த மாதிரி நேரத்தில் யாம் (ஞானகுரு) உங்களுக்கு உபதேசித்த அருள் வழிப்படி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்யுங்கள்.

1.கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2,அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலமும் வளமும் பெறவேண்டும்.
3.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
4.அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும்
5.நமக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

இவ்வாறு செய்தால் பணம் வந்து சேரும். வேதனையோ கோபமோ வராது… நோயாகவும் மாற்றாது.

ஆசை இருக்கலாம்… பேராசை இருக்கக்கூடாது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சூரியனிலிருந்து கிடைக்கப் பெறும் காந்த அமில சக்தியினால் மட்டும் நம் உலகிற்கு ஒளி பாய்வதில்லை. நம் உலகமும் அதனை ஈர்க்கும் நிலைதனைப் பெறல் வேண்டும்.

அந்தக் காந்த அலைகளை நம் பூமி ஈர்த்து அதன் வட்டத்திற்குள் சுழலவிட்டு அச்சுழற்சியில் இருந்து சூரியனின் ஒளி அமிலத்தை மென்மேலும் ஈர்த்துச் செயல் கொள்ளாவிட்டால் நம் உலகிற்கு சக்தி ஏது…? செயல் ஏது…? இவ்வுலகமே ஏது…?
1.சூரியனின் படைப்பில் சக்தியை அளித்தாலும்
2.நம் பூமி ஈர்த்து செயல் கொள்ளாவிடில் நம் பூமிக்கு ஜீவனில்லை.

அதைப் போல் ஒவ்வோர் உயிராத்மாவும் ஆண்டவன் படைப்பில் அதனதன் சுழற்சியில் ஏற்படுத்திக் கொண்ட அமில சக்தியின் வட்டத்தின் வளர்ச்சியில் தான் அதனின் வாழ்க்கை நிலை அமைகின்றது.

பல பிறப்புகளை ஏற்கும் நம் உயிராத்மா ஒவ்வொரு பிறப்பிலும் சேமிக்கும் அமில சக்தியில் நற்சக்தியும் தீய சக்தியும் கலந்தே வழி வருகின்றோம்.

ஒவ்வொரு பிறப்பிலும் இந்நிலையில் ஒரு பிறப்பில் சேமித்த நற்பயனும் தீய பயனும் மற்றொரு பிறப்பில் ஏற்றத்தாழ்வு கொள்கின்றது. இதன் நிலையில் தொடர்பு கொண்டு நாம் செய்திடும் நிலையல்ல இது.

நாம் வளர்த்த எண்ண நிலை நம்முள் கலந்துள்ள தொடர் நிலையென்ற வழியிலேயே வழி பெற்றால் நாமெல்லாம் இன்று மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திடும் இப்போக்கிஷமான வாழ்க்கைதனை ஈன நிலைக்கு நாமே அடகு வைக்கிறோம்.

“அடகு” என்றவுடன் திரும்பவும் பெறும் நிலைகல்லவா செப்புகின்றார் என்று உணருவீர்…!
1.ஆம்… இன்று இக்கலியில் நம் உயிராத்மா கொண்ட இப்பொக்கிஷ வாழ்க்கையை அடகு வைத்துவிட்டால்
2.நாம் அதனைப் பெறும் காலம் பல நூறு கோடி ஆண்டுகள் ஆகலாம்.

பல காலமாய்ச் சேமித்து உயிர் ஆத்மாவாய் மனித உடல் கொண்ட எண்ண வளர்ச்சியில் அறிவுப் பொக்கிஷ வாழ்க்கைதனைப் பெற்ற நம் ஆத்மாவின் நிலையைப் பெற்றிருக்கிறோம் என்பதனை உனர்தல் வேண்டும்.

இன்று இந்த வாழ்க்கையில் ஏற்படும் சஞ்சலங்களுக்கு அடிபணியாமல் நம்முடன் (நம் எண்ணமுடன்) மோதிடும் பல நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் சம நிலைப்படுத்தும் பக்குவநிலை பெறல் வேண்டும்.

இம்மனித ஆத்மாக்களினால் மட்டும்தான் ஜீவ சக்தியை ஒளிபெறும் சக்தியாக்கிடல் முடிந்திடும்.

மனித ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று அஜ்ஜோதியுடன் ஐக்கியமாகி… அஜ் ஜோதியின் வட்டத்தை வளரவிட்டே மண்டலமாய் ஜீவன் கொண்டு வளர்ச்சி பெற்று… வளர்ச்சியில் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியிலேயே அமில நிலை பல பெற்று… மண்டலமாய் உருளும் சக்தியும்.. உயிராத்மாவாய் வாழும் நிலையும்… அதன் தொடர் நிலை அனைத்துமே “இம் மனித ஆத்மாக்களுக்குத்தான் உண்டு…”

1.மண்டலமாய் சுழல்வதுவும் இவ்வாத்மாக்களே
2.கொசுவாய்க் கழிவின் சுவாசத்தை ஈர்த்து வாழ்வதும் இம்மனித உயிராத்மாவே
3.இவ்வெண்ண சக்தியில் நிலை கொண்டு அமைவதுவே அனைத்துமே.

நாம் பிறப்பெடுத்து வாழ்வதெல்லாம் நம்மை அவன் அனுப்பி வைத்து நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம் என்று பார்க்கத்தான் என்ற எண்ணமும் வேண்டும்…!

அன்றைய நாளில் மனித ஆத்மாக்களைப் அருள் நிலையில் தான் உயர்வுபடுத்திட முடியும் என்ற தத்துவத்தை உணர்த்தி ஆலயத்தை அமைத்தார்களே அன்றி “ஆலயத்திற்குச் சென்றால் தான் அவனருள் கிட்டும்…!” என்ற நிலையில்லை.

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரவர்களுக்குகந்த அமில சக்தியையே ஒளி சக்தியாக்கி வழி பெறல் வேண்டும்.
1.ஆசையும் அன்பும் அளவுடனே இருந்திடட்டும்
2.ஆதி ஆசைக்கும் அதி அன்பிற்கும் வழிபட்டால் பேராசைக்குப் பிடிபடும் நிலையில்
3.சலிப்பும் சஞ்சலமும் வெறுப்பும் கொண்டே இதன் வழித்தொடரினால் ஏற்படும் கோபங்களும்
4.அதிலிருந்து ஏற்படும் வைராக்கியத்தின் உறுதியும்
5.எச்சிரமப்பட்டாலும் அடைந்தே தீருவேன் என்ற வெறியின் உந்தலினால்
6.நம்மையே நாம் சிதறவிட்டு வாழ்கின்றோம்.

அன்பும் ஆசையும் இல்லாவிட்டால் உலகமே இல்லை. நற்சக்தியின் பொக்கிஷ சக்தியே இவைதான். ஆனால்
1.இவற்றிற்கே அடிமைப்பட்டு பேராசை நிலையில் செல்லும் எவையுமே
2.அவ்வன்பிற்கும் ஆசைக்கும் எதிர் சக்திதான்…!

உடலுக்கு பின் என்ன…? என்ற நிலைகளை நாம் யாராவது சிந்திக்கின்றோமா…

 

சில ஜோதிடம் பார்ப்பவர்கள் என்ன செய்வார்கள்…? வருவோரை உற்று நோக்கி நுகர்ந்து நுகர்ந்து பார்ப்பார்கள். ஏதாவது உணர்வு ஒன்றைச் சொல்வார்கள்.

1.சொல்லும்போது நம் தலை அசைவதைப் பார்ப்பார்கள்.
2.“ஓ… இப்படியெல்லாம் இருக்கின்றது…!” என்று (அறிந்து கொண்டு) ஒரு கேள்வியைப் போடுவார்கள்.
3.உங்கள் வீட்டில் இப்படியெல்லாம் கஷ்டம் இருக்கின்றது என்று தொடர்வார்கள்.

அதாவது வாஸ்து சாஸ்திரக்காரர்கள் வீட்டிற்கு வந்தவுடன் அப்படியே உங்கள் முகத்தைப் பார்ப்பார்கள். சில மந்திரங்கள் சொல்லி முகத்தைப் பார்த்து வீட்டைப் பார்த்தவுடன் என்ன செய்வார்கள்…?

வீட்டில் பையன் ஏதாவது தொல்லை செய்கிறானா…? என்பார்கள்.

ஆமாம்…! என்று சொன்னால் போதும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அப்படியே வரிசையாக எடுத்துச் சொல்லிவிட்டு கடைசியில் இரண்டு வார்த்தையைச் சொல்லி விட்டுக் காசைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டு உங்கள் வீட்டை மாற்றி அமைப்பீர்கள்…!

ஆனால் வீட்டில் பத்துப் பேர் இருப்பார்கள். அதிலே ஒருவர் இனம் புரியாதபடி ஒரு ஆக்சிடண்ட்டைப் பார்க்கின்றான். அதிர்ச்சியால் புத்தி பேதலித்துப் போகின்றது.

அப்போது அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்போது இந்த வேதனை எல்லோருக்கும் வந்தால் அவன் சொன்ன வாஸ்து என்ன செய்கின்றது…?

வாஸ்து என்றால் யார்…?

1.உயிர்…! வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
2.நாம் நுகர்வதையெல்லாம்… சுவாசித்ததை எல்லாம்… உருவாக்கக் கூடியது “நம் உயிர் தான்…” என்று இந்த இடத்தில் காட்டுகின்றார்கள்.

தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வு உடலுக்குள் வரப்படும்போது வாசுதேவனுக்கும் தேவதிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான். “பார்க்க வேண்டும்…” என்ற இந்த உணர்வுகள் கொண்டு கண்கள் தோன்றுகின்றது என்று காட்டுகின்றான்.

ஜோதிடக்காரன் சொன்னதைக் கேட்டால் வாசுதேவன் (உயிர்) என்ன செய்கின்றான்…? அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் உருவாக்கிவிடும்.

உங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றதா…? என்றால் ஆமாம் என்று சொல்கின்றோம்.

அடுத்தாற்படி இந்த வீட்டின் வாசலை உடைத்தால்தான் சரியாக இருக்கும் என்பான். வீட்டின் நிலையை இப்படி மாற்றி வை என்பான் அல்லது இந்த ஓரத்தில் ஏதாவது ஒன்றை வை என்பான்.

அவன் சொன்னபடி வைத்துவிட வேண்டும். வைக்கவில்லை என்றால் நான் அன்றைக்கே சொன்னேன் நீ வைக்கவில்லை என்ற நிலையானால்… அந்த வேதனையால் என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ…? என்று இந்த உணர்வின் தன்மை மீண்டும் அதையே வளர்த்துக் கொள்ளும்.

இன்னொன்றும் சொல்வார்கள். நியுமராலஜி…! அம்மா அப்பா வைத்த பெயரெல்லாம் ஒழுங்காக முழுதாக இருக்கும். உங்கள் பெயரில் இந்த எழுத்தை இப்படிப் போட்டீர்கள் என்றால் உங்கள் எதிர்காலம் நியுமராலஜிப்படி நன்றாக இருக்கும் என்பார்கள்.

இந்த எழுத்துக்களை அந்த நம்பர்கள் பிரகாரம் இப்படிப் போட்டால் ராசியாக வரும் என்று அவன் சொன்னதைக் கேட்டுப் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கின்றோம்.

ஏனென்றால் நமக்குள் இருக்கும் வேதனை உணர்வை நீக்க வேண்டும் என்றால் அதை எல்லாம் நீக்கிய அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.

தப்பாக நினைக்க வேண்டாம்…!
1.இன்றைக்கு இந்த உடலின் இச்சைக்குத் தான் வாழுகின்றோமே தவிர
2.உடலுக்கு பின் என்ன…? என்ற நிலைகளை நாம் சிந்திக்கவே இல்லை.

எப்படி இருந்தாலும் இந்த உடல் மடிகின்றது. ஆனாலும் உடலிலே வாழ்வதற்குத்தான் இத்தனை செல்வங்களை கோடிக் கோடியாக வைத்துள்ளார்கள்.

இராமயாணத்தில் என்ன செய்கின்றார்கள்…? என்றால் தனுசுகோடி. தனுசு என்றால் இப்பொழுது நான் சொல்லும் உணர்வுகள் உங்களைத் தாக்குகிறது… தனுசு. அதே நேரத்தில் இந்த உபதேசங்கள் உங்களை மகிழச் செய்யும் தனுசு.

தனுசு என்றால் அம்பு சமஸ்கிருதத்தில்…!

கோடிக்கரை என்ற கடைசி எல்லையில் மனிதப் பிறவியில் இப்பொழுது நிற்கின்றோம். இந்த மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் அகற்றினால் தனுசுகோடி.

ஒளி உடல் பெறவேண்டும் என்ற நிலையில் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று அடைய வேண்டும். அது தான் நம் சாஸ்திரங்கள் கூறும் உண்மைகள்.

இசைக்கும் இசையெல்லாம் ஈசனின் இசையாக்கிடுங்கள் – ஈஸ்வரபட்டர்

இன்று நம்மில் பல மகான்கள் தோன்றி வாழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவரவர்களின் அறிவு சக்தியை உலகிற்காக உணர்த்தினார்கள். பல துறைகளில் மாமேதைகள் வழிபெற்று வந்தார்கள். இன்றும் வருகிறார்கள்…!

“திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா…” என்ற விழாவினை அவரின் ஞாபகமாக இன்றும் நடத்துகின்றனர். அவரின் நிலையென்ன…?

இசைக்காகவே பிறந்தார்… இசையுடனே கலந்தார்…! அவர் உடலில் செயல் கொண்டவர்… அவரின் இசை பக்தியில் அவரையே இசையாக்கி இன்புறும் பக்குவப்படுத்தி அவ் இசையுடனே அவரின் ஆத்மாவைச் செயல்பட வைத்தார் அவர் உடலில் செயல்படுத்திய ஒரு சப்தரிஷி.

அத் தியாகராஜரின் உயிராத்மாவே இசையுடன் கலந்து அவ் இசை ஞானம் பொழிந்திடும் இசையுள்ளங்களில் தன் இசை ஒளியைக் காண்கின்றார்.

பல மகான்கள் இசையையே பக்தியாக்கி அப்பக்தியையே ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அவ் இசையுடனே ஒன்றிவிடுகிறார்கள். இசை ஞானம் பெற்று உள்ளத்தையே அமுதிசைப்படுத்தி ஆண்டவனை வணங்குவதாக எண்ணி வணங்குகிறார்கள்.

1.இசை ஞானம் பெற்று இசையுடன் ஒன்றிய ஆத்மாக்களின் நிலையெல்லாம்
2.அவர்கள் இசைக்கும் இசையே அவர்களின் உயிராத்மாவையே
3.இசையமுதின் அமில சக்தியை அவ்வாத்மாவுடன் ஒன்றச் செய்து
4.அவ்வுயிராத்மாவிற்குப் பேரானந்த நிலையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
5.இசைக்கும் இசையெல்லாம் ஈசனின் இசையாக்கி…
6.தன் உயிராத்மாவையே ஈசனாக்கிடும் போது இன்பமுடன் அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கிடைக்கப் பெறுகின்றது.

வாழ்க்கைக்கு இவ் இசையமுதம் பெரும் சொத்தப்பா…!

இசைக்கும் இசையிலேயே ஒவ்வோர் உடலிலும் உள்ள உயிர் அணுக்கள் அனைத்துமே அவ் இசைக்கு அடிமைப்படுகின்றது. நம் உலகமே ஓம் என்ற இசையில்தான் உருளுகின்றது. இசைக்கு மயங்காத எவ்வுயிரணுவுமில்லை.

வாழ்க்கையே அமுதிசையாக்கி அப்பக்திச்சுரங்களைப் பாடி நற்பயனைப் பெறத்தான் காலம் காலமாய் இவ்வுலகமே இசையின் வழியில் வருகின்றது. அருள் மணம் பெற அவ் இசையமுதம் நம் உயிராத்மாவுக்கு மிகவும் அவசியமாகின்றது.

இந்த நிலையுணர்ந்த பல மகான்கள் இசையுடனே கலந்து இன்றளவும் தன் செயல் கொள்கின்றார்கள்.

ஒவ்வோர் ஆத்மாவும் தன் எண்ணத்தில் ஏற்படுத்தி வழி நடத்தும் செயல் நிலைக்கு உகந்த ஞான சக்தியை அந்நிலையை வளரவிட்டால் அவ்வளர்ச்சிக்குகந்த சக்தி நிலை கொண்டவரின் உதவியுடன் நம் சக்தியை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வோர் ஆத்மாவும் அதற்குகந்த அமில சக்தியின் கூட்டுநிலை உயிர் பிறப்பிலேயே வழி பெற்று வழிபெற்று வருகின்றது.
1.ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவரின் சாதனை செயல் கொள்கின்றது
2.இதற்கெல்லாம் உயிரணுவிலேயே சேமித்த அமில சக்தியின் தொடர் நிலைப்படித்தான் வளர் நிலை கொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் நிலையில்தான் செயல் கொண்டு வருகின்றனர். ஆனாலும் இவ்வமில சக்தியையே உயிர் பிறப்பில் வளர்ச்சி கொண்டு
1.இன்றளவும் ஒவ்வோர் ஆத்மாவும் வழி வந்த நிலையிலேயே
2.நம் ஜெப சக்தியினால் ஜெயம் கொண்டிட முடியும்…!

ஜெப சக்தியினால் நம் உயிராத்மா எந்த நிலை பெறுகின்றது…? ஜெப சக்தியிலிருந்து நம் உடம்பிலுள்ள அமில சக்தியை எப்படித் தூய்மை கொண்டிடலாம் என்பதை உணர்ந்திடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பயன்படுத்த வேண்டிய சரியான முறை

 

நம் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆர்வப்படுகின்றோம். ஆனால் குழந்தை விளையாடப் போகும்போது ஏதோ ஞாபக சக்திக் குறைவால் படிப்பு குறைவாகி விடுகின்றது.

படிக்க முடியவில்லை என்றால் அவனுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்கு மாறாக நாம் என்ன செய்கின்றோம்…?

அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவன் படிக்கவில்லை என்றால் உடனே அந்த இடத்தில் வேதனைப்படுகின்றோம்.

வேதனைப்படுத்துகின்றான் என்றால் “அவனுக்கு நல்லதை எடுத்து எப்படிச் சொல்வது…?” என்று புரியவில்லை. உனக்கு எவ்வளவு காசு செலவு செய்கின்றேன்…! நீ இப்படிச் செய்கின்றேயே…! என்று திட்ட ஆரம்பிக்கின்றோம்.

வேதனையாகச் சொல்லப்படும்போது அவனுக்குள் இது பதிவாகிறது. இந்த உணர்வு அங்கு என்ன செய்கின்றது…? அது ஓ…ம் நமச்சிவாய அவன் உடலாகின்றது.

அப்புறம் திட்ட ஆரம்பித்தால் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் “எப்பொழுது பார்த்தாலும் என்னை இப்படியே திட்டுகின்றார்கள்..” என்று இந்த உணர்வு படிக்கப்போகும் போதெல்லாம் அவனுக்கு இந்த நினைவு வரும்.

அடுத்தாற்படி புத்தகத்தை எடுத்தாலே அம்மா திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நிலை வராது. இல்லையென்றால் அப்பா திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நினைவு வராது.

அப்போது அது வாலியாகின்றது. வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்….?

குகையிலிருக்கும் வாலியை இராமன் கல்லைப் போட்டு மூடி அவன் வெளி வராது செய்கிறான் என்று காவியத்தில் காட்டியுள்ளார் வான்மீகி. வேதனை என்ற உணர்வு வந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…?

சந்தோஷமான நிலைகள் இருக்க வேண்டுமென்றால் அந்த குழந்தையின் மேல் இருக்கும் வேதனையை எடுத்த உடனே உள்ளுக்குள் போகாதபடி அதை மூடி விட வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்தச் சக்தி வாய்ந்த நிலைகளைத் தனக்குள் எடுக்க வேண்டும்.

குழந்தை எண்ணி வேதனைப்படுவதை நேர்முகமாகத் தள்ளிவிட்டுப் போக முடியாது. அதற்குத் தான் புருவ மத்தியில் அடைக்க வேண்டும் என்று சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் வளர்த்த பின் என்ன செய்கின்றது…? இதோடு (வெளியிலே) நின்று விடுகின்றது.

அதாவது ரிஷியின் மகன் நாரதன்…! அங்கே உருவான உணர்வு உயிரிலே பட்டபின் சக்திவாய்ந்த நிலைகள் கொண்டு அந்தத் தீமைகளை நீக்கும்.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே கொண்டு வரவேண்டும்.

கண்ணன் என்ன செய்கின்றான்…? எல்லாரிடமும் போய்ச் சொல்வான்.

1.இந்திரலோகத்தைக் காட்டி இங்கிருக்கின்ற செய்தியை அங்கே சொல்கின்றான்
2.அங்கிருக்கின்ற செய்தியை இங்கே சொல்கின்றான்… எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்கின்றான்
3.இந்தக் கண்களின் இயக்கங்கள் தான் அது…!

அதாவது நம் உடலுக்குள் அந்த கண்ணின் நினைவைச் செலுத்தி என் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இந்த உணர்வைக் கொண்டு வந்து இங்கே அடைத்துவிட வேண்டும்.

ஆனால் வேதனையான உணர்வுகளை உள்ளே விட்டால் உடலிலுள்ள அணுக்கள் என்ன செய்யும்…? சாப்பாடு கிடைக்கின்றது என்றால் சும்மாவா இருக்கும்..? முந்திக் கொண்டு வரும்.

அப்பொழுது இந்த உணர்வு அதிகமாக இருந்தால் நம் உணர்ச்சிகள் அனைத்தும் நம் செயல்கள் அனைத்தும் வேதனையும் ஆத்திரமும் கோபமுமாக மாற்றிவிடுகின்றது.

அப்படி ஆகாமல் தடுக்க வேண்டும் என்று தான் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணி இங்கே நிறுத்திவிட வேண்டும் என்று சொல்கிறோம்.

அது உடலுக்குள் வலுப்பெற்றபின் என்ன செய்கின்றது…?
1.கெட்ட அணுக்கள் இருக்கிறது அல்லவா…!
2.அதற்கு சாப்பாடு கிடைக்காது செய்கிறது
3.இழுக்கக்கூடிய சக்தி இல்லாது ஆக்குகிறது.

அது தான் கண்ணன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்பது. அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்துக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் படைக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

மற்ற அணுக்களுக்கு அதனதன் சத்தை இழுக்கக்கூடிய சக்தி இல்லை. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்கே வலுவாக எண்ணும்போது நம் ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளை படிப்படியாக சூரியன் எடுத்துக் கொள்கின்றது. தீமைகளைத் தள்ளி விடுகின்றது.

துணியில் அழுக்குப் பட்டால் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அந்த அழுக்கைத் தள்ளி விடுவதைப்போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலுக்குள் செலுத்தப்படும்போது இந்த உணர்வு வலிமை பெற… வலிமை பெற… குழந்தை மேல் வரக்கூடிய வேதனையான உணர்வை இங்கே தள்ளிவிடுகின்றது.

தள்ளிவிட்ட பின் என்ன செய்கின்றோம்…? இந்த இடத்தில் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம். அவனுக்கு நல்ல சொல்லையும் சொல்கிறோம்.

நீ படித்துக் கொண்டால் நல்லதப்பா… நீ படிக்கவில்லை என்றால் உன்னை நீ எப்படிப் பாதுகாத்துக் கொள்வாய்…? நீ படித்துத் தெரிந்து கொண்டால் உனக்கு நல்லது. நீ தான் உன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

எதிலே குறைவாக இருந்தாயோ அதை நீ இப்படிப் படித்தாய் என்றால் நன்றாக இருக்கும். நீ இப்படிப் படித்து பார்…! இந்த நிலையை இந்த உணர்வைச் சொல்லாகச் சொன்னால் இந்த உணர்வை குழந்தை நுகரும்போது ஓ…ம் நமச்சிவாய.

ஆக… தீமைகளை நீக்கி அந்த அருள் ஒளியை எடுக்கப்படும்போது அங்கே நாரதனாக வந்து சேர்ந்து நம் குழந்தைக்கு ஞானத்தைப் போதிக்கும் தன்மையாக வருகின்றது.
1.அவனைக் கல்வியில் சிறந்தவனாக்குகின்றோம்
2.நம் சொல் அவனை நல்வழிப்படுத்தும் செயலாக வரும்.

சப்தரிஷிகளின் செயல் யாவும் ஆதி சக்தியே…! – ஈஸ்வரபட்டர்

ஆதி சக்தியின் ஜீவசக்திதான் அனைத்துமே…! அந்த ஜீவ சக்தியை அவ் ஆதி சக்தி வளரவிடுகின்றாள். வளரும் பக்குவத்தில் அவை அவை எடுக்கும் சுவாச நிலை கொண்டுதான் பலவும் உருப்பெறுகின்றன. ஆதி சக்தியின் அருட்சக்தியின் அச்சக்தியுடனே ஐக்கியப்படும் நிலை பெற வேண்டும்.

இன்று நம் உலகினில் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை ஒருவருக்கு ஒருவர் மாறு கொண்டுள்ளது.
1.நல்லவர் தீயவர் என்பதெல்லாம் ஆண்டவன் படைப்பல்ல
2.அவரவர் எடுத்த சுவாச நிலைகொண்டு அமையப் பெற்றது தான் அது.

நல்லவரின் எண்ணத்தை… அச்சக்தியின் நிலையுடன் அச்சக்தியை ஈர்த்து… அந்நிலையில் மென்மேலும் நற்பயனைச் செயல்படுத்தி… அதன் வழித் தொடரிலேயே அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கூடி… அப்பரம்பொருளான ஆதி சக்தியுடன் ஐக்கியப்பட்டு… ஆண்டவனின் அருள் பெற்றவனாய்… ஆண்டவனாய்… இன்று சப்தரிஷி நிலைபெற்ற பக்குவம் பெற்ற மகான்கள் பலரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

அவர்கள்
1.இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களையும் நல் உணர்வு பெறச் செய்து
2.நல் ஆத்மாக்களாய்த் தன் வட்டத்திற்குள் அச்சக்தியை ஈர்ப்பதற்காக
3.மனித ஆத்மாக்களின் அவ் ஈர்ப்பு நிலை கொண்ட எண்ணங்களுடன் கலந்து
4.மற்ற மனித ஆத்மாக்களை நற்பயன் பெறச் செய்யும் பக்குவ சக்தியை ஊட்டி
5.நல்லுணர்வுகளை அருள் ஞானம் என்னும் நிலையில் வளர விடுகின்றனர்.

அந்த நிலை பெற்று வழி வந்த பல மனித ஆத்மாக்கள் எந்நிலை கொண்டு பிறகு செயல்படுகின்றன…?

ஏசுநாதரும் முகமது நபியும் ஐயப்பனும் இந்நிலையில் ஞானம் கொண்டு வெளி வந்தவர்களின் நிலையெல்லாம் உணர்த்தி வந்தேன். அதாவது அவர்களின் உடலை ஒரு சப்தரிஷி நிலை கொண்டவரின் ஆத்மாவின் செயலினால் வழி நடத்தப்பட்டவர்கள் என்று.

பிற உடலில் அவ்வாதிசக்தியின் அருள் பெற்ற சப்தரிஷியின் நிலையினால் இவ்வுலகிற்குத் தேர்ந்து எடுக்கப்பட்ட அவ்வுடல் கொண்ட ஆத்மாவை அச்சப்தரிஷி வழி நடத்தி அருள் புரிந்த பிறகு அவ்வுடலின் ஆத்மாவின் நிலையென்ன…?

ஒவ்வோர் உடலுக்கும் உகந்த உயிரணுவும் உயிராத்மாவும் உள்ள நிலையில் ஒரு சில உடல்களை அவ்வுடலில் இருந்து அவ் உயிராத்மா பிரிந்த பிறகு அக்கட்டையான ஜீவனற்ற உடலுக்கு அந்த ரிஷிகளின் ஆத்மா செயல் கொண்டு சில நிலைகள் நடக்க வைக்கின்றனர்.

உயிராத்மாவுடன் உள்ள உடல்களில் அந்த ரிஷிகளின் நிலை செயல்படும் நிலையில் அவ்வுடலில் உள்ள ஆத்மாவின் நிலை எந்நிலை கொள்கின்றது…?

இராமகிஷ்ண பரமஹம்ஸர் உயிருடன் உள்ள நிலையிலேயே அவரைத் தன் செயலுக்குகந்த ஆத்மாவாய்த் தேர்ந்தெடுத்து அவர் வழியில் இவ்வுலகிற்குப் பல வழிகளைப் புகட்டிய அந்த ரிஷியின் அருள் இவருக்கு எப்படிச் செயல்பட்டது…?

அதற்குப் பிறகு இவரின் உயிராத்மாவின் நிலையென்ன…?

இவரின் உடலிலிருந்து அவ்வுடல் நிலை கெட்ட பிறகு… அவ் உடலில் இருந்து கொண்டு அவர் உயிராத்மா செயல்படாது என்ற நிலையில்…
1.அவர் உயிருடன் உடல் பெற்று வாழ்ந்த காலத்தில் அவர் நிலையிலிருந்து செயல்படுத்திய அந்த ரிஷியின் சக்தி
2.அவர் உடலில் உள்ள அனைத்து அமிலத்தையும் புனிதமாக்கும் பக்குவத்தை அவர் சுவாசமுடனும் எண்ணமுடனும் கலக்கச் செய்து
3.அவ்வாத்மாவுக்கும் அந்த ரிஷியின் ஆத்மாவுடன் கலக்கும் பக்குவத்தை இவ்வுயிராத்மாவே ஏற்படுத்திக் கொண்டு
4.அந்த ரிஷியின் சக்தி வட்டத்துக்குள் இவரின் சக்தியும் ஒன்றி விடுகின்றது.
5.இவர் வேறல்ல… அந்த ரிஷி வேறல்ல…! என்ற நிலையில் ஐக்கியப்பட்டுச் செயல் நிலை கொள்கின்றது.

இப்படித்தான் இச் சப்தரிஷி நிலை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தன் வட்டத்திற்குள் சேமிக்கும் சக்தியாய்ப் பலரை ஈர்த்துச் செயல்படுத்துகின்றனர்.

போகருக்குக் குருவாய் அருள் பெற்ற காளியங்கராய சித்தரின் நிலையும் இன்று அவரின் வட்டத்திற்குள் அவரின் ஒளியுடனே ஒளியாய் கலக்கப் போகருக்குத் தீட்சை தந்து அவர் நிலையில் முருகா என்ற அருள் உணர்வுடன் ஐக்கியப்படும் ஆத்மாக்களை ஒளி வட்டமாய் தனதாகப் பல சக்தியை ஈர்த்து இன்று ஒரு மண்டலமாகும் நிலையுடன் ஒளிக் கதிர்களைச் சேமித்துச் செயல் கொண்டு வருகின்றார்.

மனித ஆத்மாக்களில் மட்டும எண்ண நிலை மாறு கொண்டு செயல்படவில்லை. சப்தரிஷியின் நிலையிலும் மாறு கொண்ட நிலையுண்டு. ஆனால் அவர்களின் நிலையில் நற்பயனைப் போதிக்கும் நற்சக்தி நிலைதான் கூடிச் செயல் கொள்கின்றது.

1.மனித ஆத்மாக்களுக்குத்தான் இப்பேராசையின் நிலையிலிருந்து விடுபடத் தெரியவில்லை
2.நல்லுணர்வை ஊட்டினாலும் ஏற்பதற்கு எண்ணத்தில் ஆசையில்லை
3.அன்பென்னும் நிலையைச் சிதறவிட்டு வாழ்கின்றனர்.

உடல் என்ற விதிக்கு இனி செல்ல வேண்டாம்…!

 

ஞானிகள் தெய்வங்களை உருவமாக்கி அதன் மூலம் அருவத்தின் நிலைகளை நாம் எப்படி நுகர்தல் வேண்டும்…? இருளை எப்படி அகற்றுதல் வேண்டும்…? என்று தான் ஆலயங்களை அமைத்தனர்.

இந்த உடலின் இச்சைக்குத் தான் அர்ச்சனை அபிஷேகம் இதை எல்லாம் நாம் செய்கின்றோமே தவிர ஞானிகள் சொன்ன வழியை நாம் எடுக்கவில்லை.

1.அருள் ஞானத்தை நாம் நுகர்ந்து
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கி அதை அர்ச்சனையாக்கி
3.அந்த ஒளித் தன்மையை நமக்குள் கூட்டி நம்மை அறியாது வரும் இருளைப் போக்கி
4.மெய்ப் பொருள் காண வேண்டும் என்ற உணர்வை நீங்கள் ஆலயங்களிலே தியானியுங்கள்.

இந்த அருள் ஒளியின் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உயிரான ஈசனிடம் படப்படும் பொழுது இருளை அகற்றுகின்றது. மெய்ப் பொருளை உணர்த்துகின்றது.

இந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள்.

ஆனால் அந்த ஆலயத்தை இன்று நாம் அவமதிக்கின்றோம். எவருக்கோ காசைக் கொடுத்து அவர் எல்லாம் செய்து கொடுப்பார்… வாங்கித் தருவார்…! என்ற நிலையில் தான் நம்பிக் கொண்டிருக்கின்றோமே தவிர ஞானத்தின் வழி எட்டிப் பார்க்கும் நிலை இல்லை… அதைப் பெறும் நிலையும் இல்லை…!

உயர்ந்த நிலைகளைச் சொன்னால் அதைப் பின்பற்றி அந்த உயர்ந்தது எனக்குள் வளர வேண்டும் என்ற இதைத் தான் நாம் பெறுதல் வேண்டும்.

ஒருவன் தீமை என்ற நிலையைச் செய்கின்றான்… நாம் பார்க்கின்றோம். அவன் தீமை செய்கின்றான் என்று எண்ணும் போது
1.அதே தீமையை எண்ண எண்ண நமக்குள்ளும் அது வளர்கின்றது.
2.நாமே தீமை செய்வோராக மாறிவிடுகின்றோம்.

அதைத் தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஞானிகள் காட்டிய வழி சென்றால் நாம் தெளிவான வாழ்க்கை வாழ முடியும். வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும்.

கடலிலே நீந்திச் செல்லப்படும் பொழுது எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது. நாம் எந்தக் கரையை எல்லையாக வைத்தோமோ அதை அடைய வேண்டும் என்ற மன உறுதி கொண்டால் நாம் அங்கே செல்கின்றோம்.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் நம் எல்லை எது…?

உயிருடன் ஒன்றி இனி உடல் இல்லை என்ற நிலை கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ஒளியான அந்த சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைதல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வுடன்
2.ஒவ்வொரு நொடியிலும் இங்கே வரும் துன்பங்களை அந்த அருள் ஞானம் என்ற துடுப்பை வைத்துத் தள்ளிவிட்டு
3.நம் எல்லை அந்தத் துருவ நட்சத்திரம் தான் என்ற நிலை வரும் பொழுது சங்கடங்களோ மற்ற துயரங்களையோ நாம் நீக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பற்றுடன் பற்ற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் பாச அலை வரும்… அன்பு அலைகள் வரும்… சங்கட அலைகள் வரும்… வெறுப்பு அலைகள் வரும்… மற்ற குரோத அலைகள் நம்மை எத்தனையோ மோதிக் கொண்டிருக்கும்.

இதில் எதிலே சிக்கினாலும் நாம் மூழ்கிவிடுவோம்.

1.ஆக அதிலே சிக்காதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் துடுப்பாக வைத்து
2.அந்த எல்லையை நாம் அடைய வேண்டும் என்பதற்குத் தான் இந்தத் தியானமே…!

அத்தகைய அரும் பெரும் சக்தியை நம் குருநாதர் அருளால் உங்களுக்குள் பதிக்க முடிந்தது. அந்த ஞானத்தை உங்களுக்குள் விதிக்க முடிந்தது. இதைப் பெறவேண்டும் என்ற அந்த மதி கொண்டு தீமைகளை மாற்றிட முடியும்.

வாழ்க்கையில் சங்கடம் வேதனை என்று இது அதிகமானால் இந்த விதிப்படி மீண்டும் பிறவிக்குச் செல்கிறது.
1.மதி வழி இனி உடல் வேண்டாம்.
2.மதி என்றாலே ஒளி…! அந்த மதி கொண்டு விதியை வெல்லுங்கள்
3.இனி உடல் என்ற விதிக்குச் செல்ல வேண்டாம்…!

மதி கொண்டு என்றும் நிலையாக இருக்கச் செய்யும் ஒளி என்ற நிலைக்கு வாருங்கள். உங்களால் அதைப் பெற முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவோம். இந்தக் காற்றிலே மகரிஷிகள் உணர்வுகள் உண்டு. அதை நாம் நுகரப் பழக வேண்டும். அந்த வலுவைப் பெறுவோம்.

நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம். அவர்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்வோம். அந்த உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தியைப் பெறுவோம்.

மற்றவர்களின் தீமைகளை நீக்கி அவர்களையும் மெய்ப் பொருளைக் காணச் செய்வோம்…!

படைக்கும் போதே ஆண்டவன் எல்லாவற்றையும் நல்லதாகப் படைக்கலாம்… ஆனால் ஏன் அப்படிப் படைக்கவில்லை…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கேள்வி:
சர்வ ஜீவ ஜெந்துக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை. மனிதனும் அவ்வண்ணமே படைக்கப்பட்ட பொருள்களில் ஒருவன். மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கின்றார் என்பது சான்றோர்கள் வாக்கு. அந்நிலையை நாம் அனுசரித்து வருகிறோம்.

1.அப்படி இருக்க தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…?
2.எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

எண்ணத்தை வைத்துதான் செயல்படுகின்றோம். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களே ஏற்படுமானால் நற்செயல்களே செய்வார்கள் அல்லவா…! தீய செயல்களுக்கு இடமில்லாமல் போய்விடுமல்லவா…! ஏன் அப்படி நடப்பதில்லை…?

ஈஸ்வரபட்டரின் பதில்:
இறைவன் படைத்த படைப்பே நாம். நாம் மட்டுமல்ல, சகலமுமே அதிலே ஐக்கியப்படும். இந்த நிலையில் இயற்கையிலேயே பல மாற்றங்கள் உண்டு.

நீர் மனிதராய்ப் பிறந்துள்ளீர். நாயுமுள்ளது பாம்புமுள்ளது மாங்கனியும் வளர்கின்றது. நச்சுச் செடியும் வளர்கின்றது. மனித ஆத்மாக்களின் நிலையை மட்டும் ஏன் கேள்வியாக்கினீர்…?

இவ்வுலகில் உதித்த உயிர் அணுக்கள் யாவுமே ஏன் ஒன்றைப்போல் ஒன்றில்லை. எண்ண நிலையும் மாறு கொள்கின்றது. உருவ நிலை மற்ற எல்லா நிலைகளுமேதான் மாறு கொண்டுள்ளது. ஒன்றைப்போல் ஒன்றில்லை… ஆண்டவன் படைப்பில் ஏன் இந்த ஏற்றத் தாழ்வு…? என்ற எண்ணம்தானே உம் எண்ணம்…!

சூரியனிலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் நம் பூமியின் மேல் படும் நிலையில் ஒவ்வொரு நொடிக்குமே மாறு கொண்ட அணுக்கதிர்கள்தான் நம் பூமியில் வீசுகின்றது.

நம் பூமிக்கும் மேல் நம் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள காற்று மண்டலத்திற்கும் மேலுள்ள பால்வெளி மண்டலத்திற்கும் ஜீவனுண்டு… இயற்கைத் தன்மையுண்டு. பால்வெளி மண்டலத்தில் பல நிலை கொண்ட அமிலங்கள் உண்டு.

எல்லாவற்றுக்கும் பொதுவான மண்டலம் தான் பால்வெளி மண்டலம். சுழலும் நிலையில் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலங்கள் பல நிலை கொண்டதாகப் படர்ந்து சுழன்று அதன் ஜீவ சக்தியில் விளையாடுகின்றது.

நம் பூமி சுழலும் வேகத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அப் பால்வெளி மண்டலத்திலுள்ள அமிலத்தில் பட்டு பூமியின் காற்று மண்டலத்திற்கு வருகிறது.

இக்காற்று மண்டலம் சுழலும் நிலையில் பூமியின் ஈர்ப்பு சக்திக்குகந்த அமிலத் தன்மை அவ்வொளிக்கதிர்கள் வீசிப் படர்ந்தவுடன் அந்தந்த நிலையில் அந்நிலைக்குகந்த அமிலங்கள் படர்ந்து அதைப் பூமி ஈர்த்து பூமி விடும் சுவாசத்தைக் கொண்டு அந்நிலையின் உயிர் அணு பிறக்கின்றது.

அதன் தன்மையில் ஏற்படும் அமில சக்தி நிலை கொண்டுதான் பூமியின் இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்கள்… மற்றக் கனிவளங்கள் எல்லாமுமே.

எந்த அமிலத்தை பூமி ஈர்த்ததோ அந்த நிலைக்கொப்ப சக்தி நிலை வெளிப்படுகிறது. பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மா நிலை பெறுவதற்குள் மனித ஆத்மாக்களுக்குப் பல எண்ண நிலைகள் கூடிவிடுகின்றன.

எந்த எண்ணத்தை அச்சுவாச நிலையுடன் ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டதோ அந்த நிலை கொண்ட அமிலத்தையே ஒவ்வோர் உடலுமே சேமித்துக் கொள்கின்றது.

1.பல ஜென்மங்கள் எடுத்தாலும்
2.உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் உருப்பெறும் நிலையில்
3.அமில சக்தியைக் கொண்ட தொடர்பின் எண்ணமும் அதன் தொடர்ச்சியின் குண நிலையும்தான் அவ்வாத்மாவுக்கு உண்டே ஒழிய
4.அப்பரம்பொருளான ஆண்டவன் அனுப்புவதல்ல நல்லவனை(ளை)யும் கெட்டவனை(ளை)யும்.

இயற்கையின் ஆதி சக்தியின் நிலை பொதுவான சக்திதான். அதிலிருந்து உதித்த உயிரணுக்கள் எடுக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் அதனதன் சக்திதான்.

பரம்பொருள் ஒன்றே…! அப்பரம்பொருளின் பொருட்கள் தான் நாமெல்லாம். அப்பரம்பொருளின் நிலையுடனே ஐக்கியப்பட்டு ஜெபப்படுத்தும் நிலையினால் நம்மையே அப்பரம்பொருளாக்கிடலாம்.

அவரவர்கள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டுதான் வாழ்க்கை…!

இக்காற்றுடன் பல நிலைகளும் கலந்துள்ளன.
1.நல்லெண்ணத்தின் சுவாசமும் இக்காற்றினில்தான் உள்ளது
2.துவேஷ எண்ணத்தின் மூச்சுக் காற்றும் இக்காற்றினில்தான் உண்டு.

நம் வாழ்க்கையுடன் மோதுண்டு வாழும் நிலையில் பல செயல்கள் நடக்கின்றன. அந்நிலையில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு பல நிலைகள் நடக்கின்றன.

நம் ஆத்மாவுடன் நாம் மட்டும் வாழவில்லை. பல கோடி உயிரணுக்கள் வாழ்கின்றன. ஆனால்
1.நமக்குத்தான் நம் ஆத்மா சொந்தம்
2.நம் உடலில் மற்ற உயிரணுக்கள் இருந்தாலும் அதற்கு நம் உடலும் நம் ஆத்மாவும் சொந்தமல்ல.

அதைப் போல் நாம் எடுக்கும் எண்ணமுடன் இக்காற்றிலுள்ள பல அலைகளும் நம் எண்ணமுடன் மோதுகின்றன. இதனால் நம்மை அறியாமலேயே நம்முள் பல எண்ணங்கள் மோதுண்ட நிலையில் பல செயல்கள் நடக்கின்றன.

மனித ஆத்மாவாய் வாழ்வதுவே பெரும் பொக்கிஷம்…!

நம்மையே நாம் மற்றத் தீய அணுக்களுக்கு அடிமைப்பட்டு வாழ்வதினால்தான் நல்லவன்… கெட்டவன்… என்ற நிலை வருவது.

1.ஐந்தறிவு ஆறறிவு என்பதெல்லாம் நம்மால் ஏற்படுத்திய நிலைதான்.
2.மனிதனிலிருந்து நம் அறிவின் நிலையைச் சிதறவிடுவதினால் மிருக ஜெந்திற்குச் செல்கின்றோம்.

நம்மைக் காட்டிலும் நுண்ணிய அறிவு மிருகங்களுக்குண்டு. ஆறறிவு ஐந்தறிவு என்பதல்ல வாழ்க்கையே…!

தீமைகள் நமக்குள் புகாது அடைக்க வேண்டிய இடம் எது…?

 

இராமன் வாலியை மறைந்திருந்து ஏன் தாக்குகின்றான் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

நம் குழந்தை தவறு செய்கின்றான். அதனால் நமக்கு வேதனை வருகின்றது. அந்த வேதனை நம் உடலுக்குள் போனால் இது ஓ…ம் நமச்சிவாய என்று உடலாகின்றது (சிவமாகின்றது).

அந்த உணர்ச்சியின் உணர்வுகள் அங்கே எண்ணங்களாகின்றது சொல்லாக வரப்படும் பொழுது இந்த உணர்ச்சிகள் அங்கே எப்படித் தூண்டுகின்றது…? உணர்வின் தன்மை அணுவாகும்போது நமக்குள் அந்த அணுத்தன்மை எப்படி இயங்குகின்றது…? என்பதைத்தான் அங்கே இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றான்.

இதெல்லாம் நான் (ஞானகுரு) எதற்குச் சொல்கின்றேன் என்றால் பெண்கள் குடும்பப் பற்றுடன் இருக்கப்படும் போது இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாசத்தால் நாம் எப்படியோ நினைக்கின்றோம். ஆனால் சில குழந்தைகளால் எத்தனையோ சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இதே மாதிரி தொழில் நடத்தும்போது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நன்றாக நடக்க வேண்டுமென்று நினைக்கப்படும்போது நம்மை அறியாமலேயே வியாபாரம் கம்மியாகிவிட்டது என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.
1.இந்த வாலி உள்ளே புகுந்துவிடுகிறான்.
2.இது நம் நல்ல குணத்தையே கெடுக்கின்றது.

வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். ஒருத்தர் மேல் அதிகமான அன்பையும் பண்பையும் பெற வேண்டும்… சிநேகிதமாக வாழ வேண்டும்… ஒருத்தருக்கொருத்தர் கொடுத்து வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம்.

ஆனால் அது சரியாக வரவில்லை என்றால் வேதனை என்ற உணர்வு வந்துவிடுகின்றது. அந்த வாலி என்ற நிலைகள் புகுந்து விடுகின்றான். அந்த வலிமை உடலுக்குள் சென்றபின் நம் நல்ல குணத்தைப் பாதுகாக்கும் நிலை இல்லை.

ஆக பாதுகாக்க முடியவில்லை என்றால்…
1.நாம் நுகர்ந்த உணர்வோ அது நம் உடலுக்குள் வேதனைப்படுத்தும் கருவாக உருவாகி
2.வேதனை என்ற உணர்வு பிரம்மமாகி அது தன் வேதனையை உருவாக்கும் அந்தச் சக்தியாக
3.தன் இனத்தைப் பெருக்கும் சக்தியாக மாற்றிவிடுகின்றது.

இயற்கையின் நியதிகள் இவ்வாறு தான் இருக்கின்றது. ஆனால் நாம் இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது இராமயாணம்.

ஒரு பாறையை வைத்து மேலே கல்லை வைத்திருப்பான். படம் போட்டுக் காண்பித்து அதாவது துவைதம் உருவ நிலையைக் காட்டி அருவ நிலையை நமக்குள் புரிய வைக்கின்றான்.

குகைக்குள் இருக்கின்றான் வாலி…! அரக்கர்களிடம் இருந்தான் அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். எதையும் அடக்கி ஆளும் வல்லமை இருக்கின்றது.

அப்போது இராமன் என்ன செய்கின்றான்..?

அவன் (வாலி) செயலைப் பார்க்கவில்லை. அந்தக் குகைக்கு மேல் இருக்கும் பாறையை எடுத்து மூடிவிட்டான். மூடி விட்டால் வாலி வெளியில் வருவானா…? முடியாது…!

நம் குழந்தை தவறு செய்கின்றது அல்லது கடையில் நஷ்டமாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கே வேதனை என்ற உணர்வு வரப்படும்போது அது வலிமை பெற்றுவிடுகிறது.

1.அப்பொழுது சிந்திக்கும் திறமை வருகின்றதா…? வியாபாரத்தைச் சீராக நடத்த முடிகின்றதா…?
2.இந்த உணர்வின் தன்மை நாளை என்ன ஆகுமோ…! என்ற பயம் வருகின்றது
3.நடுக்கம் ஆகின்றது… சிந்தனை இல்லாமல் போகின்றது…!

இந்த எண்ணங்கள் நமக்குள் எப்படி உருவாகின்றது…? நமக்குள் தீமையின் வலிமை எப்படிக் கூடுகின்றது…? நம் மகிழ்ச்சி என்ற உணர்வு எப்படி தடைப்படுகின்றது…?

நாம் இதை எல்லாம் எப்படி மாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டித் தான் இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

அதாவது வேதனையை நுகர்ந்தால் அடுத்த கணமே கண்ணின் நினைவு கொண்டு
1.ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தினை அங்கே நிலை நிறுத்தினால்
3.அந்த வேதனை என்ற உணர்வு உட்புகாது நின்றுவிடும்.

நாம் ஈர்க்கத் தவறிய வேதனைகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து சென்று விடும்.

நம் உடலுக்குள் போகவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் வராது… வேதனை என்ற அணுவும் நமக்குள் உருவாகாது. வேதனையை உருவாக்கும் அணுவின் தன்மை கருவாகவும் ஆகாது…! நம் சிந்தனையும் தெளிவாகும்.

அப்போது தொழிலைச் சீராக்கும் உணர்வுகளும் குழந்தைக்கு எப்படி நல் வழி காட்ட வேண்டும் என்ற தெளிந்த உணர்வுகளும் நமக்குள் தோன்றும்.

நம் கண்களுக்கு.. கருவிழிகளுக்கு… கண்ணின் திரைகளுக்கு… நாம் கூட்ட வேண்டிய “உயர்ந்த சக்தி”

மெய் ஞானிகள் தன் உடலில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த உணர்வின் நிலையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கே பூமியில் சுழன்று கொண்டிருப்பதை ஈஸ்வரபட்டர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்ததை நினைவு கொண்டு எண்ணும்போது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நான் சுவாசிக்க நேருகின்றது.

என் உடலுக்குள் அது கலந்த பின்… தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பும் பித்தளையும் திரவகத்தை ஊற்றிப் பிரிப்பது போல
1.அந்த அருள் ஞானியினுடைய உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று
2.தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது…
3.தீமைகளைப் பிரித்துவிடுகின்றது… அதைச் சுத்தப்படுத்துகின்றது

இதுதான் ஆத்மசுத்தி என்பது.

மற்றவர்களுடைய குறைகளை நான் கேட்டாலும் இந்த முறைப்படி சுத்தப்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு முன்னாடி நான் எத்தனையோ வேதனைகளை அனுபவிக்க நேரும்.

உங்களுக்கு நன்மை செய்யலாம்… ஆனால் நீங்கள் பட்ட தீமைகள் எல்லாம் எனக்குள் அதிகமாக வந்து எனக்குள் நல்லதை மூடி மறைத்துவிடும்.

இதைப் போன்று தான் உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குவதற்கும் இந்த உபாயத்தை… அந்த மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையைக் காட்டிக் கொண்டு வருகின்றேன்.

எந்த அளவுக்கு நீங்கள் கூர்ந்து இதைக் கவனிக்கின்றீர்களோ இது ஊழ்வினையாக உங்கள் எலும்புக்குள் பதிவாகின்றது.

எப்போது நீங்கள் தீமைகளைச் சந்திக்க நேருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை நீங்கள் தூண்டப்படும் போது
2.அதைப் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும்போது
3.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வைச் சுவாசிக்க நேருகின்றது.

டி.வி.யுடன் சேர்ந்த ஆண்டன்னாவின் பவரைக் கூட்டும்போது வெகு தொலைவில்… செயற்கை கோள்கள் மூலமாக அங்கிருந்து ஒலி… ஒளிபரப்பச் செய்வதைக் கவர்ந்து அது காட்டுகிறது

அதை நாம் டி.வி.யில் பார்ப்பதைப்போல அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்பொழுது யாம் சொல்லும்போது கூர்ந்து கவனித்தால் உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு ஆவது மட்டுமல்ல…
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு
2.அதனின் நிலைகள் கொண்டு ஆழமாகப் பதிவானபின்
3.அந்த நினைவின் அலைகளை… மகரிஷிகளை எண்ணும்போதே
4.ஆண்டன்னாவின் சக்தியைக் கூட்டியது போல்… நம் கண் (ஆண்டன்னா) மிக சக்தி வாய்ந்ததாக மாறி
5.அந்த ஆற்றல்களைக் கவர்தல் வேண்டும்.

ஆகவே இப்பொழுது கேட்டுணரும்போது உங்கள் கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை இணைந்து… நான் சொல்வதை அதே கண் தான் ஈர்த்து ஊழ்வினையாக உடலிலே பதிவு செய்கின்றது.

அதே சமயம்
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிகளுக்கு…
2.அந்தத் திரைகளுக்கு அனுப்பும் கண்ணின் நினைவை
3.ஒவ்வொரு நுண்ணிய அலைகளையும் இது சக்தி வாய்ந்ததாகச் சேர்க்கின்றது.

பின்பு அந்த ஆண்டன்னா பவர் போல… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஏங்கினால் அதைக் கவர்ந்து உங்களைச் சுவாசிக்கச் செய்து உங்கள் உடலுக்குள் அந்த உணர்வுக்ள் சென்று அறியாது வந்த தீமைகளை நீக்கிட உதவும்.

இப்படிச் செய்யாமல் சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் என்ற எண்ணம் இருந்தால்
1.நமக்கு நாமே ஏமாந்து நமக்கு நாமே காலத்தை விரயம் செய்து
2.நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்வதுபோல் தான் ஆகும்.
3.யாகங்களைச் செய்தோ வேள்விகளைச் செய்தோ இதை எல்லாம் நிவர்த்திக்க முடியாது.

யாகம் என்பதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்த்தால் இது தான் யாகம்… அது தான் வேள்வி.

அந்த உயர்ந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணத்தை நமக்குள் செலுத்தினால் ஒழிய துன்பங்களை அடக்க முடியாது.

1.நம் உயிர் ஒரு நெருப்பு
2.அதிலே எதைப் போடுகின்றோமோ அந்த வாசனை தான் வரும்

ஒரு நஞ்சினை நெருப்பிலே போட்டால் அந்த நஞ்சின் வாசனை தான் வரும். ஆனால் அதிலே நல்ல மணத்தின் தன்மையைப் போட்டால் நல்ல மணத்தின் தன்மையை நாம் காணலாம்.

இதைப் போன்று தான் நம் உயிரில் நல்ல மணத்தின் தன்மையைப் போடும்போது நம் எண்ணங்கள் நல்லதாக வருகின்றது.

ஆகவே மிக சக்தி வாய்ந்த ஒரு நறுமணம் கொண்ட நிலையை நாம் இடும்போது அதிலிருந்து வெளிப்படுவதைச் சுவாசிக்கும்போது நல்ல வாசனை கொண்டதாக இருக்கின்றது.

ஆனால் நஞ்சான நிலைகள் நெருப்பிலே விழுகும்போது அதை நுகர்ந்தால் நாம் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விடுகின்றோம்.

இதைப் போலத் தான் நாம் எந்த உணர்வின் தன்மை எண்ணுகின்றோமோ இந்த நெருப்பான உயிருக்குள் இந்த உணர்வின் அலைகளாக உடலுக்குள் சென்று அந்த குணங்களுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.

ஆக அந்த ஞானிகளின் சக்தியை நமக்குள் எடுத்துத் தீமையின் உணர்வுகளை நீக்கி நல் உணர்வின் சத்தை நமக்குள் வலுக்கொண்டதாக மாற்றிக் கொள்வதற்குத்தான் எமது குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்றுதான் உங்களுக்குள்ளும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்கின்றோம்.

1.நீங்கள் அனைவரும் மெய்ப்பொருள் காண வேண்டும்
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.இருள் நீங்கிய உணர்வலைகள் கொண்டு நீங்கள் பேசப்படும்போது
4.நீங்கள் வெளியிடும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவரப்படும்போது
5.பிறருடைய உணர்வுகளுக்குள் அது சென்றாலும் அல்லது
6.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்
7.உங்கள் மூச்சின் அலைகள் பிறருடைய தீமைகளை நீக்க இது நிச்சயம் உதவும்.

இந்த உடலை விட்டு உயிர் எப்பொழுது போகும் என்று சொல்ல முடியாது…!  

தியானத்தில் முன்னணியில் வைக்க வேண்டிய ஆசை

தியானத்தில் ஒரு நிலைப்படுத்துவது எப்படி…?

யாம் கொடுக்கும் சக்தியைக் கையாளும் முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர ஞானகுரு கொடுக்கும் தியானப் பயிற்சி

தவறு செய்யாமலே தண்டனை எப்படி வருகிறது…? – அனுபவங்கள்

தியானத்தின் மூலம் சக்தி பெற வேண்டிய சரியான முறை

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.நிச்சயம் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றீர்கள்….
2.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்…
3.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் நோயை எல்லாம் மாற்றி அமைத்து விடுவீர்கள்….!
4.கணவன் மனைவிக்குள் சில குறை உணர்வுகள் இருந்தாலும் அதை எல்லாம் மாற்றி நிச்சயம் உயர்ந்தவர்களாக ஆவீர்கள்
5.இவ்வாறு நல்லதாக மாற்றக்கூடிய சக்தி உங்களிடம் இருக்கிறது.

உங்கள் குடும்பத்தில் உங்கள் குழந்தையோ பிள்ளைகளோ “இப்படி இருக்கின்றார்களே…!” என்று வேதனையுடன் எண்ணுவதிற்குப் பதில் “அவர்கள் நிச்சயம் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள்…” என்று எண்ணி இந்த உணர்வை நிச்சயப்படுத்தி நல்லவராக வேண்டும் என்று எண்ணி வாருங்கள்.

தியானம் செய்ய வேண்டிய முறை இது தான்…!

தியானத்தின் மூலம் அரும் பெரும் சக்தியை வளர்க்கவே இதை வாக்காகக் கொடுக்கின்றோம். இதை நீங்கள் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள முடியும். உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்… உங்கள் தெருவும் நன்றாக இருக்கும்… உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்…! ஊர் ஒற்றுமையாக இருந்தால் விவசாயமும் நன்றாக இருக்கும்.

ஊரில் ஒற்றுமை இல்லாது பகைமை இருந்தால் இந்தப் பகைமையான உணர்வுடன் நாம் பயிரிடும்போது பயிர்களிலும் கெடுதல் வரும். பல பூச்சிகள் விழும். விஷத் தன்மைகள் நம்மிடம் இருந்து அதற்குப் பரவும்.

அதை ஒழிக்க யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி தியானத்தின் வலுக் கொண்டு அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் பயிர்களிலே பாய்ச்சுங்கள். பூச்சிகளைக் கொல்லும் விஷமான மருந்திற்கே வேலை இல்லை.

உங்கள் பார்வையில் விவசாயம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எண்ணிக் காலை துருவ தியானத்தை எடுங்கள்.

அதில் நல்ல அணுக்கள் விளைய வேண்டும். நல்ல அணுக்களால் தாவர இனங்கள் விளைய வேண்டும். அதில் விளைந்திடும் உணவை உட்கொள்வோர் அனைவரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும். உங்கள் விவசாயம் நன்றாக இருக்கும்.

ஏனென்றால் இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கின்றது. இதிலிருந்து நாம் அனைவரும் மீள வேண்டும்.

1.எல்லாரையும் அந்த ஞானத்தின் சக்தியைப் பெற வைக்க வேண்டும் என்றார் குருநாதர்
2.அதைப் பார்த்து நீ பேரானந்தப்பட வேண்டும் என்று தான் என்னிடம் சொன்னார்.

அதே உணர்வுடன் நீங்களும் எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணிச் செயல்படுங்கள். பேரானந்தத்தை உருவாக்குங்கள்.

இந்தப் பூமியில் பிறந்த நாம் அந்தத் தாய்க்குச் சேவை செய்ய வேண்டும்.
1.தாய் பூமியை அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.
2.இதிலிருந்து தான் நாம் உருவானோம்… அந்தத் தாயை மதிக்க வேண்டும்
3.அந்தத் தாய் வீற்றிருக்கும் இந்த இடம் சுத்தமாக இருந்தால் இதில் வாழும் மக்கள் நாமும் நன்றாக இருப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறரை ஏசிப் பேசும் நிலைகள் கொண்டு ஒருவன் சாபமிடும் நிலைக்கு வருவான். அந்த மாதிரி எந்த மனிதன் தன் எண்ணத்தில் துரிதமாக இருக்கின்றானோ மற்றவர்கள் “எவ்வளவு நல்லது சொன்னாலும்.., சாபமிடுவதை.., அவன் நிறுத்த மாட்டான்”.

அதே சமயத்தில் யாரை அவன் சாபமிடுகின்றானோ அந்தச் சாப வினையைக் கேட்டவனும்.., “அதை விடுவேனா..,” என்று அதே உணர்வு கொண்டு அவனும் அத்தகையை நிலைகளைச் செய்வான்.

ஓம் நமச்சிவாய.., சிவாய நம ஓம்.., முதலில் சாபமிட்டவன் உடலில் விளைந்த தீமைகளின் வினைகள் இவருக்குள்ளும் பதியப்பட்டு அதே உணர்வுகள் இங்கே எதைப் பேசுகின்றார்களோ அதை எதிர்மறையாகப் பேசச் செய்யும்.

இவ்வாறு அந்த உணர்வின் தன்மைகள் வேகமாக இயக்கப்படும் பொழுது மற்றவர்கள் இதைப் பார்த்துக் கேட்பார்கள். அட.., இரண்டு பேரும் ஏன் இந்த மாதிரி ஏசிப் பேசுகின்றீர்கள்.., “விட்டுவிடுங்கள்” என்று சொன்னாலும் இந்த உணர்வுகள் எடுக்காது.

“உங்களுக்கு என்ன தெரியும்..!” என்று சொல்வார்கள்.

இருவரில் எவரையாவது.., அவன் தான் பேசுகின்றான்.., “நீ ஏன் அதை விட்டுவிட்டுப் போகலாம் அல்லவா.., போ..,” என்று சொன்னால் என்ன ஆகும்.

“நீ அவனுக்குத்தான்.., சாதகமாகப் பேசுகிறாய்” என்ற உணர்வுகள் அங்கே நல்லதைச் சொன்னாலும் எதிர்த்துத் தாக்கும் நிலை வரும்.

இதைப் போல ஒருவர் ஏசுவதைக் கண்டு சரி விட்டு விடுங்கள் போகட்டும் என்று சொன்னால் உடனே அவன் என்ன சொல்வான்?

“பார்… அவன் எப்படிப் பேசுகின்றான் பார்..,” என்பான்

ஆக, இவன் ஏசிப் பேசிவிடுவான். அடுத்தவனுக்குள் இது பட்டவுடன் இந்த உணர்ச்சிகள் பொங்கிவிடும்.

1.அவன் ஒரு சொல்லைச் சொல்லி இருப்பான்
2.ஆனால் இவன் பத்து சொல்லைச் சொல்வான்.

இவ்வாறு அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் பொழுது இருவருக்குமே தர்மத்தையோ நியாயத்தையோ மற்ற நல்ல வழிகளைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு மிளாகாய்ச் செடி தனக்குள் காரமான உணர்வை எடுத்துத்தான் அந்த மிளகாயின் வித்து உருவாகும். அந்த வித்தின் தன்மை தன் செடியின் சத்தைக் கவர்ந்து தன் இனத்தின் தன்மையைத்தான் அது விருத்தி செய்யும்.

இதைப் போல ஒருவருக்கொருவர் பேசிய உணர்வுகள் அது வித்தாகும் பொழுது இந்த மனிதன் எவ்வளவு சாபமிட்டுப் பேசினானோ இவனுக்குள்ளும் அதே உணர்வைச் சுவாசித்துச் சாபமிட்டுக் கொண்டேயிருப்பான்.

இந்தச் சாபமிடுவதைக் கேட்டுணர்ந்தோரும் அவர்களும் சாபத்தை விட்டுக் கொண்டேயிருப்பார்கள். இந்த அலைகள் படர்ந்து.., படர்ந்து.., இவர்களுக்குள் உள்ள நல்ல குணங்கள் இயங்காது தடைபடுத்திவிடுவார்கள்.

இந்தச் சாப அலைகள் இருவருக்குள்ளும் விளைந்து இவர்கள் எதையெல்லாம் சொன்னார்களோ இவை அனைத்தும் அங்கே படர்ந்து அங்கே இருவருடைய குடும்பங்களிலும் இவர்கள் வீரியமாகப் பேசுவார்கள்.

அதே சமயத்தில் இந்த வீரிய உணர்வுகள் இவர்கள் குடும்பத்தில் பாசத்தையும் பற்றையும் விட்டு அதனால் ஒருவருக்கொருவர் வெறுப்பை உருவாக்கிவிடும்.

பாசத்துடன் இருப்போரின் நிலைகளும் இவருடன் பேசப்படும் பொழுது இந்த வெறுப்பான அந்த உணர்வுகள் பற்று கொண்ட அவருக்குள் ஈர்ப்புக்குள் அதிகமாகிவிடும்.

ஆனால், ஏசியவர் தப்பிவிடுவார்கள். குடும்பத்தில் பாசத்துடன் உள்ளோரின் நிலைகளில் இது படப்பட்டு அந்த உணர்வுகள் அது துரிதமாக விளைந்து நோயாக மாற்றி அவனை முதலில் வீழ்த்தும்.

அண்ணன் தம்பிக்குள் இதைப் போன்று ஒருவருக்கொருவர் பார்த்து விடும் சாப அலைள் உற்று நோக்கப்படும் பொழுது அவர்களுக்குள் தீய வினைகள் ஆகி நோயாக மாறி அவர் குடும்பத்திலேயே வெறுப்பின் தன்மை வந்துவிடும்.

அவர்கள் தாயோ தந்தையோ அவர்கள் “அதை விட்டு விடுடா..,” என்று சொன்னாலும் அந்த வேக நிலையில் “நீ பேசாமல் இரு..,” என்பார்கள்.

ஆனாலும் அவர்கள் இட்ட சாப அலைகள் அவர்களுக்குள்ளே படர்கின்றது. இது “அவர்களுடன் போனாலும் பரவாயில்லை”.

அதே சமயத்தில் அவர்கள் குடும்பத்தில் கர்ப்பமாக இருந்தால் அதே சாப அலைகள் தன் வீட்டிலிருப்போரின் நிலைகளுக்குள் நுகரப்பட்டு அவரின் “கருவிலிருக்கும் குழந்தைக்கும்” இந்தச் சாப அலை படர்ந்து விடுகின்றது.

அதே போன்று ஒருவருக்கொருவர் சாபமிடுவதை மற்றவர்கள் இதை வேடிக்கையாப் பார்ப்பார்கள்.

ஆனால் “வேடிக்கையாகப் பார்ப்போரின் நிலைகளும் இது பாய்ந்து” அவர்கள் குடும்பத்திலும் படரும். கருவுற்றவர்கள் இருந்தால் அந்தக் கருவிலிருக்கும் குழந்தைக்கும் இது பாயும்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் சாபமிடும் போது “கால் முடமாகும்…, உன் கண்கள் குருடாகிவிடும்..,” என்று பேசியிருந்தால் அதைக் கர்ப்பமான தாய் கேட்டுணர்ந்தால் உணர்வுகள் வேடிக்கையாகப் பார்த்திருந்தாலும் கருவில் விளைந்து அது இணைந்துவிட்டால் அது கால் முடமாகும்.

அல்லது கண்கள் குருடு என்று பேசினால் அதே உணர்வினுடைய தன்மைகள் இங்கே கண் வளர்ச்சியின் தன்மையைத் தடைப்படுத்தும்.

இவ்வாறு தான் மனிதன் பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலைக்கு வந்த பின்னும் இந்த உணர்வின் இயக்கங்கள் அது இப்படியெல்லாம் இயங்கத் தொடங்கிவிடுகின்றது.

நிம்மதியாக வாழும் குடும்பத்திற்குள் சண்டைகளும் சச்சரவுகளும் ஏன் வருகின்றது என்று நமக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி வாயிலாகவும் இன்னும் எத்தனையோ சாதனங்கள் வழியாக பல இடங்களில் ஒருவருக்கொருவர் ஏசிப் பேசும் நிலைகளையும் அசுரத்தனமாகத் தாக்குவதையும் அப்படியே காண்பிக்கின்றார்கள்.

எல்லாவற்றையும் பார்க்கின்றோம், கேட்கின்றோம். நமக்குள்ளும் அதே கொதிப்பும் ஆத்திரமும் வருகின்றது. நாமும் அவர்களைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

ஆகவே அவ்வாறு கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த தீமை செய்யும் நிலைகளைச் சுத்தப்படுத்துகின்றோமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தவறு நாம் யாரும் செய்யவில்லை.

ஒரு இடத்தில் விளைந்த தீமை எல்லோருக்குள்ளும் சென்று அதனின் இயக்கமாக எல்லோரையும் அது இயக்குகின்றது. இதை நிறுத்த வேண்டுமல்லவா.

ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

ஏசிப் பேசுவோர் உடல்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர்கள் உண்மையை உணர வேண்டும். சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெறவேண்டும் என்று நாம் இவ்வாறு எண்ணி நம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

தூய்மைப்படுத்தவில்லை என்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
1.கடுமையான நோய்கள் வரும்
2.குடும்பத்தில் ஒற்றுமை குலையும்
3.பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் இருக்காது
4.தொழில்கள் நசிந்து போகும்
5.வேலை பார்க்கும் இடங்களில் தொல்லைகள் வரும்
6.நிம்மதி இழந்து தவிக்க நேரும்
7.கடைசியில் மனிதனல்லாத உருவைத் தான் பெறச் செய்யும் நம் உயிர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

 நம் வாழ்க்கையில் எல்லோரும் அன்புடன் பண்புடன் பழகுகின்றோம். அவர்களின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்கின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

ஆகவே, அதைப் போன்ற நிலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் “நீ விழித்திரு” என்று பெயரை வைக்கின்றார்கள்.

கஷ்டப்படுகின்றவர்களையும் குறை கூறுபவர்களைப் பற்றியும் வேதனைப்படுபவர்களையும் நாம் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் வந்தால் தீமை செய்யும்.

அப்பொழுது உடனே நாம் என்ன செய்யவேண்டும்?

“ஈஸ்வரா..,” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி உடலுக்குள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

ஒருவர் நோயுடன் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்.., “உங்கள் உடல் நலமடையும்” என்ற உணர்வை அவருக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.

ஒருவர் உங்களிடம் மற்றவர்களைப் பற்றிக் குறை கூறுகின்றார்கள். அல்லது உங்களைப் பற்றிக் குறையாகச் சொல்கிறார்கள் என்றால் உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தூய்மைப்படுத்திக் கொண்ட பின்.., “எல்லோரும் நல்லவராக வேண்டும். எல்லோருக்கும் என் மீது அன்பு வரவேண்டும்.., அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா..,” என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணினோம் என்றால் அந்தத் தீமையான உணர்வுகள் எதுவும் நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாவதில்லை.

அதனால் தான் “நீ விழித்திரு…, நீ தனித்திரு..,”

அப்படி என்றால் விழித்திருந்து மற்ற தீமையான உணர்வுகளை நமக்குள் விடாதபடி நாம் எந்த உயர்ந்த உணர்வுகளை எடுத்தோமோ அதிலே நாம் தனித்து இருக்க வேண்டும்.

நீ விழித்திரு, நீ தனித்திரு என்று சொன்னால்.., உடனே என்ன செய்கின்றார்கள்? வேறு விதமாக “எங்கேங்கோ..,” கொண்டு செல்கின்றார்கள்.

அர்த்தத்தை அனர்த்தம் செய்து அதர்ம உணர்வைத்தான் அவரவர்கள் உணர்வுக்குத் தகுந்த மாதிரி நமக்குள் புகுத்தியிருக்கின்றார்கள்.

எப்பொழுதுமே.., “பிறிதொரு உணர்வுகள் நம்மை இயக்கக்கூடாது”.

அந்த அருள் உணர்வுகள் நாம் பெறவேண்டும் என்று நாம் தனித்து நின்று மற்றவர்களுக்கு என்ன செய்யவேண்டும்?

“அந்த அருள் ஒளியினை நாம் பாய்ச்சி.., இப்படித்தான் ஆகவேண்டும்” என்று எண்ணினால் அவர்களையும் நல்லவர்களாக்க முடியும். ஆகவே, நம்மை அவர்கள் பார்க்கப்படும் பொழுது நம்மைப்பற்றி குறை சொல்லும் உணர்வுகளே அங்கே மாறிவிடும்.

இரண்டு தரம் நல்லதாக வேண்டும் என்று நாம் சொன்னாலும் மீண்டும் கொஞ்சம் தூண்டிப் பார்ப்பார்கள்.

“எல்லோரும் நல்லவராக வேண்டும்”. என்னைப் பார்க்கும்பொழுது எல்லோருக்கும் பேரன்பு வரவேண்டும்.., மகிழ்ந்திடும் உணர்வுகள் வரவேண்டும்.., என்று மீண்டும் நமக்குள் இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற இந்த உணர்வைச் சேர்த்து இதை உருவாக்கி விட்டீர்கள் என்றால் அந்தக் கரு மீண்டும் அந்த உணர்வைக் கூட்டித் தீமை நமக்குள் புகாதபடி தடுக்கச் செய்யும்.

எப்படிக் காரமான மிளகாயைச் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோமோ உப்பைச் சேர்த்து சுவைப்படுத்துகின்றோமோ இதைப் போல நம் உணர்வின் அணுக்களைச் சுவைமிக்கதாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

அதனால் தான் நம் ஆறாவது அறிவைப் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று காட்டுகின்றார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் எல்லோரும் உயரவேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இருக்கும் பொழுது
1.என்னைத் தாழ்த்தி
2.உங்களை உயர்த்துகின்றேன்.

ஆனால் நான் உங்களைத் தாழ்த்தி என்னை உயர்ந்தவனாகக் காட்டினேன் என்றால் அகந்தை என்ற நிலை வரும். நான் என்ற ஆணவம் வந்தால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று குருநாதர் தெளிவாக எமக்குக் காட்டினார்.

நாம் அனைவரும் குரு வழியில் சென்று நான் என்ற அகந்தை விடுத்து
1.அருள் உணர்வை அனைவரும் பெறவேண்டும் என்றும்
2.அனைவருடைய உயிரும் கடவுள் என்றும்
3.அந்த உடல்கள் அனைத்தும் ஆலயம் என்றும் நாம் மதித்து வாழ்தல் வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் வழி நடத்திச் செல்லப்படும் பொழுது என்னைப் போற்றுவோர் பலர். சிலர் தூற்றவும் செய்வர்.

போற்றுவோரைக் கண்டு நான் அவருக்காக அதிகமாகச் செய்வதும் தூற்றுவோரைக் கண்டால் வெறுப்படைவதும் அல்ல.

“போற்றுவதும் தூற்றுவதும் சமமே”.

போற்றலுக்குரிய நிலைகளை ஒருவரிடமிருந்து கேட்டபின் அவர் உடலிலிருந்து மகிழ்ச்சி என்ற உணர்வுகள் பெறப்படும் பொழுது நான் கவலைப்படும் பொழுது அந்தப் போற்றும் உணர்வுகள் எனக்குள் அதிக சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஆனால் என்னை ஒருவன் தூற்றிவிட்டான் என்ற உணர்வைச் சேர்த்து விட்டால் என் உடலுக்குள் தூற்றும் உணர்ச்சிகள் அதிகமாகி நான் நல்லதைச் செய்யும் உணர்வுகள் செயலிழக்கப்படும்.

இதைப் போன்ற நிலைகளில் குருநாதர் கொடுத்த அந்தப் பக்குவ நிலைகளில் தான் நான் வழி நடத்திச் செல்கின்றேன்.

இன்றைய விஞ்ஞான உலகை வெல்லும் அஞ்ஞான வாழ்க்கையை அகற்றி மெய்ஞான உணர்வுடன் ஒன்றி மெய்ஞான உலகுடன் உங்களை ஒன்றச் செய்து இனி பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச் செய்வதற்கே இதைச் சொல்கின்றேன்.

“ஏன்…?” என்று கேட்கலாம்.

நீங்கள் தான் அந்தப் பக்குவ நிலை பெற்றுவிட்டீர்கள் அல்லவா…! நீங்கள் ஏன் எங்களுக்குச் சொல்ல வேண்டும்? ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும் என்று…! கேட்கலாம்.

“நீங்கள் எல்லாம் உயர வேண்டும்” என்பதற்குத்தான் சொல்கிறேன்.

ஒரு நெல்லை எடுத்து விதைத்தோம் என்றால் அந்த நெல் (விதை) அழிந்துவிடுகின்றது. அதன் சத்தை எடுத்துத் தன் இனத்தை அங்கே பெருக்குகின்றது.

நெல் (விதை) அழிந்துவிட்டது என்றால் உனக்கு எப்படிக் கிடைக்கும்? என்று சொன்னால் முடியுமோ…!

அந்த விதையைப் பக்குவப்படுத்தும் பொழுது தான் மீண்டும் பல நெல்லாக விளைகின்றது.

வித்துக்களை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்துகள் மறைந்து விடுகின்றது. அதனின் சத்துகளை எடுத்துத் தன் இனத்தை வளர்க்கச் செய்கின்றது.

நெல்லை விளைய வைத்த பின் மகசூல் கொடுக்கின்றது. குவிந்த பின் அனைவரும் சாப்பிடுகின்றனர்.

இதைப் போலத்தான் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்கச் செய்து கொண்டிருக்கின்றோம். உங்களுக்குள் அருள் ஞானம் விளைந்த பின்
1.எனக்கும் உயர்ந்த ஆகாரம் கிடைக்கின்றது.
2.உங்களுடன் பழகியவர்களுக்கும் அருள் ஞானம் கிடைக்கின்றது.
3.அருள் வழி அருள் ஞான வித்துகள் அங்கே வளரத் தொடங்கும் சக்தி கிடைக்கின்றது.

நாம் அனைவரும் அருள் ஞானத்தைப் பெருக்கி இந்த உணர்வின் சொல்லாக வரும் பொழுது அருள் ஞான வித்துக்களாகப் படர்கின்றது.

கேட்போர் உணர்வுகள் அனைத்திலும் பதிவாகின்றது. அதை நினைவு கொள்ளும் பொழுது வளர்க்க முடிகின்றது.

கேட்ட பின் அதனுடைய நிலைகள் அவ்வளவு தான்…, “கேட்டது போதும்…!” என்று இதைப் போற்றித் துதித்துவிட்டுச் சென்றால் ஞானத்தை வளர்க்க முடியாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

 ஒரு புயல் காற்று எப்படி வீசுகின்றதோ அதைப் போல் தான் சனிக்கோளின் இயக்க நிலைகள்.
1.சனிக் கோளிலிருந்து உமிழ்த்திய ஒவ்வொரு வட்டமும்
2.அது முதுமை அடைந்தவுடன் கழன்று வெளியிலே வரும்.
3.அதனின் அலையின் தொடர் எப்படிச் சக்கரமானதோ எதிர் நிலையாகும் பொழுது சுழற்சியாகின்றது.

ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட பம்பைப் (MOTOR PUMP) போட்டவுடன் (சுழலும்போது) தண்ணீரை எப்படி உறிஞ்சுகின்றதோ இதைப் போல
1.சனிக்கோள் மற்ற உணர்வின் தன்மையைத் தன் இனமான சத்தை அது கவர்ந்து கொள்ளும்போது
2.மற்றதுக்குள் இந்த சுழற்சியின் தன்மை கொண்டு மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்.

இது தான் “புயல்” என்பது.

ஆகவே அது எந்த அட்சரேகைப் பக்கம் இந்த முழுமையான வட்டச் சுடர்கள் வந்ததோ அந்தப் பகுதியில் இந்தப் புயல் செல்லும். இதை விஞ்ஞான அறிவு கொண்டு இயந்திரத்தின் துணையால் கண்டு கொள்கின்றனர்.

இன்றும் நீங்கள் இதைப் பார்க்கலாம்.

அன்று மெய்ஞானி சனிக் கோளின் இந்த நிலைகள் எவ்வாறு இங்கே மாற்றித் தன் உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து
1.இதனைச் சுழல் காற்றாக மாற்றி
2.அது மழை மேகங்களை எப்படிச் செயல்படுத்துகின்றது?
3.பெரும் மழையாக எப்படிக் கொட்டுகிறது? என்று தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.

அதைப் போலத்தான் மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அந்த ஞானியின் உணர்வை நமக்குள் எடுத்துப் புயல் போல் பேரருள் பேரொளியைப் பரப்பப்படும் பொழுது
1.தீமை செய்யும் நிலைகள் அனைத்தும் மறைந்து
2.நமக்கு முன் சுழலும் நச்சுத் தன்மைகள் அகன்று ஆன்மா சுத்தமாகின்றது.

ஆகவே அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை மறைக்கும் “நச்சுத் தன்மையைச் செயலிழக்கச் செய்து” அதற்கு உணவு கிடைக்காதபடி தடைப்படுத்துவதே “கார்த்திகை ஜோதி கார்த்திகை தீபம்”.

மெய்ஞானியின் உணர்வை நமக்குள் செலுத்தி அந்த உணர்வு மிக்க ஆற்றலை நமக்குள் பெருக்கச் செய்வது தான் தீப நாள் – கார்த்திகை ஜோதி என்பது.

இந்த நாளில் முருகனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “முருகு…” நாம் மாற்றியமைக்கும் தன்மை கொண்டவர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து உணர்வு ஒவ்வொன்றையும் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும். நம் எண்ணத்தின் நிலைகள் ஒவ்வொன்றும் ஒளிச் சுடராக மாற்றவேண்டும்.

நாம் எந்த எண்ணங்களை எண்ணினாலும் பிறர் குறையின் தன்மைகளைக் கண்டபின் எப்படி வெளிச்சத்தைக் கண்டபின் அங்கிருக்கும் இருள் மறைந்து பொருள் தெரிகின்றதோ இதைப் போல கார்த்திகை ஜோதி அன்று நம்முடைய எண்ணங்கள் நாம் எண்ணும் பொழுதே பிறருடைய தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர வேண்டும்.

மற்றவர்கள் சொன்னாலும் அதைப் பிளந்து அந்த உணர்வுக்குள் இருக்கும் “மெய்ப் பொருளைக்” கண்டுணர வேண்டும்.

அந்தத் தீமைகள் இயக்காதபடி அதைப் பிளந்து அந்த அருள் ஞானியின் உணர்வுகள் கொண்டு உண்மையை அறிந்து கொள்வதும் அதற்குத் தகுந்தவாறு நாம் செயல்படும் தன்மைதான் திரு அண்ணாமலை தீபம் என்பது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

 நாம் நல்லவைகள் ஆயிரம் செய்தாலும் அதற்குள் நஞ்சு கலந்துவிட்டால் அந்த நல்லது அனைத்தையுமே அது அடிமையாக்கி விடுகின்றது.

ஆனால், நஞ்சினை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் அந்த நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக்க முடியும்.

1.நாம் உயிருக்குள் இருக்கும் நஞ்சின் துடிப்பே – உயிரின் இயக்கம்.
2.நஞ்சு அதிகரித்துவிட்டால் துடிப்பின் இயக்கம் குறைவாகிவிடும்.

தேவாங்கு என்ற உயிரினத்தை நீங்கள் பார்க்கலாம். அதிலே நஞ்சின் இயக்கத் துடிப்பு குறைவு. உணர்ச்சியின் தன்மை வேகத்தைக் குறைத்த நிலைகள் வரப்படும் போது அதனுடைய “இயக்கச் சக்தி” குறைவாகின்றது.

உடலில் நல்ல தசைகளாக இருப்பினும் எவருக்கும் தீங்கு செய்யாத நிலையில் உடல் அமைப்பு கொண்டுள்ளது. உயிரின் துடிப்பு குறைவாக உள்ளதால் தன்னைத்தானே தான் காத்திடும் நிலை இழந்த நிலைகள் கொண்டுள்ளது.

1.உயிர் மற்றொன்றைத் தாக்கி அதன் உணர்வின் தன்மை கொண்டு
2.கடுமை கொண்ட உணர்வின் தன்மை எடுக்கப்படும்போதுதான்
3.இதன் உணர்வின் இயக்கமாக அது வளர்ந்து
4.அதற்குள் மற்றது அந்த உயிரின் வலுவையே பெற முடியும்.

ஒவ்வொரு உயிரனத்திற்கு அதற்கென்ற (உடல் அமைப்பு) தசைகள் கொண்டுள்ளது. பல்வேறு விதமான தசைகள் கொண்ட அத்தகைய உயிரினங்களின் உயிரில் உள்ள விஷத்தன்மை குறைந்துவிட்டால் என்ன ஆகின்றது?

1.விஷத் தன்மை குறைந்தால்
2.உயிரின் துடிப்பு வேகம் குறைந்து
3,எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மை சீராக இயக்காது அந்த உணர்வின் தன்மை மறைந்துவிடும்.
4.அதனின் வலுவை இழந்து விடும்.

இதைப்போன்ற இயக்கத்தின் தன்மை கொண்டு அத்தகைய உயிர்கள் வாழ்ந்தாலும் விஷத்தன்மை குறைந்ததாக இருப்பினும்… “எந்த நெருப்பிலும் இந்த உயிர் வேகாது”.

ஆனால் நஞ்சின் அறிவுடன் இருந்தால் நஞ்சினைத் தான் விளைய வைக்கும். அதாவது இன்று பூச்சிகளைக் கொல்லப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தூவுகின்றோம்.

பூச்சிகள் இந்த விஷத் தன்மை கொண்ட அந்தப் பூச்சிக்கொல்லி மருந்தைச் சுவாசிக்கும்போது அந்த உயிரிலே பட்டபின் அந்த உடலை மடியச் செய்கின்றது.

1.ஆனால் அதே சமயம் மடிந்து கொண்ட பின் இந்த நஞ்சின் உணர்வு அதனுடன் இணைந்து கொள்ளுகின்றது.
2.மீண்டும் அதே உயிரணு மற்ற நஞ்சு கொண்ட உயிரணுவாக மாறி
3.இந்த நஞ்சிற்கே அதைக் கொல்லும் சக்தி அதிகமாகி விடுகின்றது.

இதைப்போல நஞ்சைப் பாய்ச்சிப் பயிரைக் காக்க இவர்கள் தூவும் மருந்து அந்த சமயம் பூச்சிகளின் உடல்கள் மடிந்தாலும்
1.இந்த நஞ்சின் தன்மை உணர்வாக இணைந்து
2.அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.நஞ்சினை வீழ்த்திவிடும் நிலைகள் வருகின்றது.
4.அதை எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது.

இதைப்போன்ற தீமையின் நிலைகள் கொண்டால் தீமையின் உணர்வைத்தான் நமக்குள் அதிகரிக்கச் செய்யும். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து இந்த நஞ்சினை ஒடுக்கிடல் வேண்டும். அதை அடக்கிடல் வேண்டும்.

உயிர் எவ்வாறு எந்த நெருப்பிலும் வேகுவதில்லையோ எந்த நஞ்சிலும் மடிவதில்லையோ அதைப் போன்று நாமும் அழியாத நிலையாக வேகா நிலை என்ற நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

வேகா நிலையாக நமக்குள் உணர்வின் இயக்கம் மற்றொன்றை மடிந்திடாது உயிருடன் ஒன்றிய ஒளியின் சிகரமாக இருளைப் பிளந்து ஒளி காணும் உணர்வை இந்த உடலிலே விளைய வைக்க வேண்டும்.

1.இதை விட்டு அகன்றால் என்றும் பதினாறு என்ற நிலையும்
2.அழியா ஒளிச் சரீரம் என்ற நிலையும்
3.பிறவியில்லா நிலை என்ற நிலையும் அடைய முடியும்.

ஞானிகள் காட்டிய அத்தகைய மார்க்கத்தில் நாம் செல்வோம். இந்த உடல் சதமல்ல. எந்த நிமிடத்திலும் இந்த உடலை விட்டு இந்த ஆன்மா செல்லலாம்.

இந்த உடலில் எந்த உணர்வை அதிக அளவில் நாம் எடுத்து விளைய வைத்தோமோ இந்த அளவுகோல்படிதான் அடுத்த உடலை உருவாக்கும் நிலையும் அந்த உணர்வின் செயலாக்கமும் வரும்.

நாம் எந்த நிமிடம் இந்த உடலை விட்டு அகன்றாலும் மெய்ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் செல்ல வேண்டும்.

1.அதனின் வழித்தொடரில் தொடர்ந்து அந்த வரிசையில் சென்றால்
2.நாம் அதனின் அரவணைப்பில் நாம் என்றும் ஒளிச் சரீரம் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

 நாம் பல வகையான உணர்வுகளையும் இந்த மனித உடலுக்குள் நின்றே அறிய முடிகின்றது. இது தான் மகா சிவன் இராத்திரி.

நம் உடலுக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை நம் உயிருடன் நினைவு கொண்டு வரப்படும் பொழுது அந்த நினைவின் ஆற்றலாக நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் துணையாக நம்மை அறியச் செய்கின்றது. தெளியச் செய்கின்றது.

ஆனாலும் நம் உடலுக்குள்… “இருளாக” இருக்கின்றது.

ஒரு விளக்கில் எண்ணையை ஊற்றும் பொழுது
1.எண்ணெய் இருண்ட நிலையாகத்தான் இருக்கின்றது.
2.அந்த எண்ணெயில் நாம் நெருப்பை வைத்து எரிக்கும்போது
3.அது ஒளியாக மாறுகின்றது.

இதைப் போலத் தான் நம் உடலுக்குள் எத்தனையோ வகையான குணங்கள் பதிவாகியிருக்கின்றது.

அந்த நினைவுகளை எண்ணும் பொழுது
1.அந்த மணம் (உணர்வுகள்) உயிருடன் ஒன்றி
2.உயிரிலே உராய்வாகும் பொழுது
3.அதனின் அறிவாக நம்மை இயக்கி அது அறியச் செய்கின்றது.

இது இயற்கையின் சில நியதிகள்.

இதைப் போன்ற இயற்கையின் தன்மைகளைத்தான் வேதங்கள் கூறுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் இணை சேர்க்கும் உணர்வுகளில் மாறுபடும் நிலையை “உபநிஷத்து” என்று உட்பிரிவுகளை உணர்த்திக் காட்டினர்கள் ஞானிகள்.

பல கோடிச் சரீரங்களில் நாம் கடந்து இந்த மனித உடல் பெற்ற பின் இந்த இருளுக்குள் மறைந்து
1.மறைத்து வைத்திருக்கக்கூடிய நிலைகளில் நாம் எதை நினைவு கொள்கின்றோமோ
2.அதனின் நினைவின் ஆற்றலாக நமக்குள் தெரியப்படுத்துகின்றது. அதை அறிகின்றோம்.
3.அதன் வழிகளில் வளர்கின்றோம். அதனின் வழிகளில் நாம் இயங்குகின்றோம்.

இவ்வாறு வருவதை நமக்கு உணர்த்துவதற்குத்தான் மகா சிவன் இராத்திரி என்றும் நம்மை நாம் அறிந்திடும் நிலையாக வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“நாம் யார்…?” என்று தன்னைத் தான் யார் என்று அறிந்து கொள்ளும் நிலைக்காக அன்றைய காலங்களில் அந்த மகரிஷிகள் காட்டிய உண்மையின் உணர்வுகள் வேதங்களில் உண்டு,

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

 நம் வாழ்க்கையில் காலையில் எழுகின்றோம்.

எழுந்திருக்கும் பொழுதே எப்படியும் (உதாரணமாக) இந்தக் காரியத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கட்டாயமும் இருந்தால் உடனே உடல் நிலை எப்படி இருந்தாலும் அதைச் சரிக்கட்டி எப்படியோ அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றோம். வெற்றியும் அடைகின்றோம்

ஆனால் அதிலே கொஞ்சம் சோர்வடைந்துவிட்டால் என்ன ஆகிறது?

அது மிகவும் முக்கியமான காரியாமாக இருந்தாலும் கூட.. “கிடக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்று விட்டுவிடுகின்றோம்.

இதே மாதிரித்தான் மனிதனுடைய உணர்வுகளில் சில நேரங்களில் தொழிலோ அல்லது வியாபாரத்திலோ இந்த உணர்வுகள் நாம் அடுத்தடுத்து வேதனை வெறுப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகள் பட்டால்
1.நாம் தொழிலையே சீராகக் கவனிக்க முடியாது போய்விடுகின்றது.
2.அதனால் நஷ்டமும் ஏற்பட்டுவிடுகின்றது.
3.அடுத்து வேதனைப்படும் பொழுது நம் உடலில் நோயாகவும் மாறிவிடுகின்றது.
4.இதையெல்லாம் என்றைக்குத் துடைப்பது?

எத்தனையோ உடலில் தீமைகளை நீக்கி நீக்கி தீமைகளை நீக்கக்கூடிய உடலாக அமைத்து தீமையை நீக்கும் சக்தி ஆறாவது அறிவு பெற்றுள்ளோம். அதனின் அறிவாகத் தெரிந்து
1.தீமைகளை நீக்கி நல்லதை உருவாக்கக்கூடிய இந்த உடலைக் கொடுத்தும்
2.நாம் தவறு செய்தோம் என்றால் எங்கே போவோம்?

அதற்காகத்தான் நம் குருநாதர் கூறிய அருள் வழியில் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறவேண்டும் என்று ஒரு பத்தும் நிமிடமாவது தியானிக்கச் சொல்வது.

ஏனென்றால் இன்று விஞ்ஞானம் எலெக்ட்ரானிக் முறைப்படி – ஒரு உணர்வின் அழுத்தத்தைக் கொண்டு தீமைகள் வராதபடி தடுக்கும் நிலையாக இதை நிரூபித்துக் காட்டுகின்றது.

அந்த எலெக்ட்ரானிக்கை வைத்து என்னென்னமோ வேலைகளைச் செய்கின்றார்கள். எலெக்ட்ரானிக் முறைப்படி சிறு சுவிட்சுகளைப் போட்டு வைத்துவிட்டால்
1.ஓரு பெரிய விமானத்தையே அது சீர்படுத்துகின்றது.
2.எதிர் நிலை வந்தால் விலகிச் செல்கிறது.
3.இந்த ஊர் வருகின்றது என்றால் (காற்றிலே அதை நுகர்ந்து) இன்ன ஊரில் அந்த இடத்தில் விபத்து வருகிறது
4.காற்றில் அலைகள் மாறுகின்றது என்றால் அது உடனே மாற்றியமைக்கின்றது.
5.அவ்வளவு பெரிய இயந்திரத்தைச் சீராக இயக்குகின்றார்கள்.

நூற்றுக்கணக்கானோரை ஏற்றிக் கொண்டு விமானம் சென்று கொண்டிருந்தாலும் அந்தச் சிறு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் மூலமாக மாற்றியமைத்துக் கொள்கின்றனர்.

எதிரிலிருந்து வரக்கூடிய விமானத்திலிருந்தும் தப்பிக்கின்றது (விலகிச் செல்கிறது)

அதே சமயத்தில் விமானம் கீழே இறங்குவதற்காகச் செல்லப்படும் பொழுது எதிர் நிலையான நிலைகள் ஒரு உயரமான கோபுரமோ அல்லது ஏதாவது ஒரு வயரோ அல்லது மரங்களோ விமானம் போகும் பாதையில் வந்ததென்றால்
1.அதிலே மோதாதபடி தன்னாலே விமானத்தை மேலே பாதுகாப்பாக ஏற்றிக் கொடுக்கின்றது.
2.அந்த அளவிற்குச் செய்து வைத்துள்ளார்கள் இன்று விஞ்ஞானிகள்.

அதைப் போன்று தான் அகஸ்தியன் நஞ்சினை வென்று ஒளியின் சிகரமாக பிறவியில்லா நிலை அடைந்து துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை உயிரான ஈசனிடம் வேண்டி நமக்குள் அதை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ரேடியோ டி.வி அலைகளில் எந்தெந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ அந்தந்த அலையில் தான் வருகின்றது. கோபித்தவனுடைய உணர்வைப் பதிவாக்கிவிட்டால் அது ஒரு ஸ்டேசன் ஆகின்றது.

அவன் உடலில் விளைந்த உணர்வு அங்கே இருக்கின்றது. நம் உணர்வு அவனிடம் இருக்கின்றது. “என்னை இப்படி மோசம் செய்தான்…” என்று எண்ணினால் அந்த அலைகள் வருகின்றது.

அதே நேரத்தில் அந்த உணர்ச்சிகள் நம்மை ஞாபகப்படுத்துகின்றது. உடனே நம்மை அறியாமலே இங்கே தவறுகள் செய்ய ஆரம்பித்துவிடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் உலகில் எத்தனையோ உணர்வுகளைப் பார்க்கின்றோம். ஒரு ஆக்சிடென்டைப் பார்க்கின்றோம். அப்பொழுது அது ஒரு ஸ்டேசனாக அமைந்துவிடுகின்றது.

இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம். ஒருவன் மற்றொருவனை மிரட்டிப் பேசுகின்றான்.
1.அவன் உடலிலிருந்து வெளிவந்த அலைகள் இங்கே இருக்கின்றது.
2.அவனுக்குள் விளைந்திருக்கின்றது. அவனிடமிருந்து வெளி வருகின்றது.
3.நமக்குள் பதிவாகியிருக்கின்றது. அந்த அலைகளை நுகரச் செய்கின்றது.
4.அது அழிவதில்லை.
5.அதை (அந்த ஸ்டேசனை) அழிக்க வேண்டுமல்லவா…!

அது நமக்குள் இருக்கும் பொழுது என்ன செய்கின்றது?

நாம் சோர்வடையப்படும் பொழுது காரமான உணர்ச்சி கொண்டு நம்மை இயக்கச் செய்கின்றது. திடீரென்று நமக்குக் கோபம் வரும்.

அப்பொழுது எதை எடுத்தாலும் வேகம் வரும். ஒரு பொருளை எடுத்தாலும் அந்த வேகம் வரும். சோர்வடைந்த அந்த நேரத்தில் தூக்கி எறிவார்கள்.

ஒரு பலகாரம் சுட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்த மாதிரி ஆகட்டும். உடனே என்ன செய்வார்கள்?

வடையை எணணெய்ச் சட்டிக்குள் மெதுவாகப் போடுவதற்குப் பதில் தூக்கி “டப்..” என்று போடுவார்கள். எண்ணெய் மேலே படும்.

செய்வது எது…? நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள் தான்.

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் அந்த உணர்வுகள் நம்மை இயக்காது நாம் அதை அடக்க வேண்டும்.

ஒரு ரேடியோ ஸ்டேசனில் உணர்வலைகள் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருக்கின்றது. சில நேரங்களில் காரசாரமான உணர்ச்சிகள் இன்னொரு அலைவரிசையில் வருகிறது என்றால் இதே அலைவரிசையில் வரப்படும் பொழுது இதிலிருந்து இந்த ஏரியல் வழி கூடித்தான் எடுக்கும்.

அந்த ஏரியலில் வரும் பொழுது இந்த அலை வரிசை அதிகமாகிவிட்டதென்றால் இதனின் அதிர்வலை “ஜிர்..ர்ர்..ர்ர்” என்று சப்தம் போடும்.

ஆகவே இதில் அலை வரிசையில் வரும் பொழுது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் வந்தாலும் எலெக்ட்ரிக்கின் உணர்வலைகள் வரப்படும் பொழுது அந்த எலெக்ட்ரிக்கின் தொடர்பு கொண்டுதான் இங்கே இயக்குகின்றது.

அந்த உணர்வின் தன்மை எரியல் வழி கூடி அது வந்தாலும் இது எர்த் ஆன பின் இன்னொரு ஸ்டேசனை வலுவான நிலைகளை இழுத்து என்ன செய்கின்றது?

அந்த அதிர்வுகளையே காட்டுகின்றது. (நீங்கள் கேட்டிருப்பீர்கள் – இரண்டு ஸ்டேசன் ஒரே அலைவரிசையில் வந்தால் ரேடியோவாக இருந்தாலும் டி.வி.யாக இருந்தாலும் அதிர்வாகி இரைச்சலாகும்) இதைப் போல
1.நம் உயிர் எலெக்ட்ரிக் என்றாலும்
2.ஒரு எதிர் உணர்வான எலெக்ட்ரிக் அந்த எலெக்ட்ரானிக்காக மாற்றப்படும் பொழுது
3.நம்முடைய சிந்தனை குலைந்து
4.நம்மை அறியாமலே தவறான சொல்களைச் சொல்லச் செய்து
5.தவறான செயல்களைச் செய்யச் செய்துவிடுகின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

 

மனிதனான நாம் நாம் எதை எண்ணினாலும் அந்த உணர்வுகள் நமக்குள் இரத்தமாக மாறி “ஜீவ அணுவாக” மாறுகின்றது.

 

நாம் எந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தோமோ அது ஜீவ அணுக்களாக மாறும் போது அந்த அணுக்கள் அனைத்தும் அதன் உணர்வுப்படியே அது இயக்கும்.

 

1.தீங்கு செய்ததும் அணுவாக வருகின்றது. அதை எண்ணும்போது நமக்குத் தீமை விளைவிக்கின்றது.

2.நல்லது செய்ததும் அணுவாக வருகின்றது. அது நமக்கு நல்லது செய்கின்றது.

 

ஒருவன் வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தால் வேதனைப்படும் உணர்வை உருவாக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை அணுக்களாக நம் இரத்தத்தில் வளர்கின்றது.

 

உங்கள் கண்ணின் நினைவைக் கூர்மையாக இரத்த நாளங்களில் செலுத்தி ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

 

இப்பொழுது உங்கள் இரத்தத்தில் “புதுவிதமான உணர்ச்சிகள்” வரும்.

 

இந்த வலிமை பெறும்போது

1.உங்கள் உடலுக்குள் தீமையை இழுக்கக்கூடிய

2.உங்கள் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் வெறுப்பு வேதனை சலிப்பு கோபம்

3.இது மாதிரி எத்தனையோ வகையான தீமையான உணர்வுகளை

4.உங்கள் உடலின் ஈர்ப்பை விட்டுத் தள்ளிவிடுகின்றது.

5.உங்கள் ஆன்மா சுத்தமாகின்றது.

6.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் வலிமை பெறுகின்றது

 

இப்படி இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்களுக்கு நாம் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செயல்படுத்தும் பொழுது அந்தத் தீமை என்ற நிலை உருவாகாதபடி தடுக்கின்றது.

 

“ஜீவ ஆன்மாக்கள்” என்றால் நாம் பிறர் மீது அன்பு கொண்டிருப்போம். அந்த அன்பு அதிகமாகிவிட்டால் இறந்தவரின் உயிர் நமது ஈர்ப்புக்குள் வந்து இரத்தத்தில் தான் தங்கும்.

 

ஆனால் அவர் உடலில் எந்த நோய்வாய்ப்பட்டார்களோ அந்த நிலையெல்லாம் நம் இரத்தத்தில் இருந்து உருவாக்கும். அந்த ஆன்மா இரத்தத்தில் இருந்தாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது.

 

அதன் உணர்வு எதுவோ அதைத்தான் இயக்கும். இத்தகைய ஆன்மா இருந்தால் சில நேரங்களில் நம்மை அறியாமலே (பிடிவாதமாக) இயக்கும்.

 

அவ்வாறு இயக்கும் அந்த ஆன்மா துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.

 

அந்த ஆன்மாவிற்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கச் செய்தால் தீமையின் உணர்வைக் குறைக்கச் செய்து நமக்குள் நல்ல உணர்வின் தன்மை பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

 

நாள் முழுவதற்கும் நாம் உடலிலே உழைக்கின்றோம். ஒரு பத்து நிமிஷம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

 

ஏனென்றால் நம் வாழ்க்கையில் நம்மையறியாமல் நாம் தவறு செய்யாமலே நம்முள் புகுந்து அது பல எண்ணங்களைத் திசை திருப்பும் அல்லது நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்,

 

அல்லது பாசத்தாலே ஒருவருக்கு நன்மை செய்தாலும் அந்தப் பாசத்தின் உணர்வு கொண்டு ஒரு ஆத்மா நமக்குள் வந்து துன்பங்களை விளைய வைத்தாலும்

1.நாம் இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு அதை மாற்றியமைக்க முடியும்.

2.நாம் செய்த நன்மையின் தன்மையைக் காக்கவும் முடியும்.

 

அதே சமயம் அந்த உயிராத்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

 

அவ்வாறு விண் செலுத்தி விட்டால் பாசத்துடன் இருக்கக்கூடிய நிலைகள் நம் உடலிலே இருந்தாலும் அந்த இரு உணர்வின் தன்மை நம் உடலுக்குள் “ஆற்றல் மிக்கதாக” மாறும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குளித்துச் சுத்தமாக வெண்மையான உடையைப் போட்டுக் கொண்டு சாலையில் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த நேரம் நாம் போகும் பாதையில் பன்றியோ அல்லது மாடோ எதுவோ சாக்கடையில் இருக்கிறது. அது தன் வாலை வீசுகின்றது. அந்தச் சேறு ஒரு துளி நம் மீது பட்டுவிடுகிறது.

எறும்பு கடிக்கிறது என்றோ அல்லது ஈ வந்து உட்காருகிறது என்றோ அல்லது கொசு கடிக்கிறது என்றோ தன் வாலை வீசியது.  கொசுக் கடி தாங்காதபடி அதனுடைய அறிவிற்குத் தக்கவாறு அந்த மாடு இயங்குகிறது.

பன்றிக்குக் கொழுப்புச் சத்து ஜாஸ்தி. அதிகமான வெப்பங்கள் வரும் போது வெப்பம் தாக்கினால் கொழுப்பு உருகும் நிலை வரும்.

பன்றிக்கு வலு இருந்தாலும் இந்த வெயிலின் தன்மை வரப்போகும் போது அதனுடைய ஞானம் சாக்கடையில் போட்டுச் சகதியில் போட்டு தன் உடலைப் பிரண்டு வைத்துக் கொள்கின்றது. அதனால் வெப்பம் உடலில் தாக்குவது இல்லை.

எருமைக்கும் வலு அதிகமாக இருந்தாலும் இந்த வெயில் அடிக்கும் போது அதைத் தாங்கும் உணர்வு வலு இல்லை. அதுவும் சாக்கடையிலோ சகதியிலோ தன் உடலைப் பிரண்டு தான் வரும்.

சகதிக்குள் பிரண்டு வந்த பிற்பாடு என்ன செய்கிறது? அது தன் வாலை வீசுகின்றது. அதனின் சந்தர்ப்பம் அது.

நாம் சுத்தமாகத்தான் போகின்றோம். அப்பொழுது  நம் மேலே பட்டு விடுகிறது? பட்டவுடனே “ஐய்ய..ய்ய…, சே…” அந்தச் சகதி பட்டுவிட்டது…!” என்று நம்மை அறியாமலே சொல்வோம். அதைத் துடைக்கப் போகிறோம்.

அடுத்து அந்த மாட்டையோ ஏச ஆரம்பித்து விடுகின்றோம்.

வெறுப்புடன் “சீ… சனியன்…! எவன் வளர்த்தானோ…!” நடு ரோட்டில் போகும் போது இந்த மாதிரிச் செய்துவிட்டது என்று சப்தம் போடுகின்றோம்.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால் அந்த உணர்வை நாம் நுகர்ந்து அறிகின்றோம். இந்தத் தீய வினைகள் சித்திரை – சிறு திரைகளாக நம்முடைய அறிவின் தன்மையை மறைக்கின்றது.

அது மாடு. அதற்கு அறிவு இல்லை. அது வாலை வீசியது. சரி… சேறு நம் மீது பட்டுவிட்டது. அதைத் துடைத்துக் கொள்வோம் என்று போனால் பரவாயில்லை.

ஆனால் அந்த மாட்டை வளர்த்தவர்களைத் திட்டுவோம். அல்லது மாட்டைப் பேசுவோம். இயற்கையிலே நம் உணர்வுகள் இப்படித்தான் செயல்படுகிறது.

நான் இதைச் சொல்கிறேன் என்றால் எனக்கும் அந்தப் புத்தி தான் வரும். சாலையில் போகும் போது பன்றியோ மாடோ இப்படிச் செய்தால்.. “சீ… கிரகம்… சனியன்…” என்று இப்படித் தான் சொல்வோம்.

பார்…! மாட்டைச் சாலையில் விட்டு விட்டு இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றான். அந்த மாடு இப்படிச் செய்து கொண்டிருக்கின்றது என்று அந்த உணர்வுகள் இயக்கி நம்மை அப்படிப் பேச வைக்கத்தான் செய்யும்.

ஆனாலும் இந்த உணர்வுகள் நமக்குள் நல்ல அறிவை மறைக்கிறது. இதைத் துடைக்க வழி வேண்டுமா… இல்லையா…?

ஏனென்றால் இது இயற்கை. இது போன்ற நிலைகள் வந்தாலும் நம்மை அறியாமலே நம் நல்ல குணங்களை அது அந்தச் சந்தர்ப்பத்தில் மறைத்து விடுகின்றது.

மறைத்தபின் நாம் நல்ல செயல் இழந்து கோபம் வெறுப்பு  வேதனை அந்த மூன்றையும் நாம் எடுக்கப்படும் போது வேதனைப்படுவோம்.

வேலைக்குப் போவதற்கு நேரமாகிப் போனதே…! நான் கடைக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன்…! இதோடு நான் எப்படிப் போவது…? என்ற இந்த வேதனை வருகின்றது.

வேதனை என்பது விஷம். ஆனால் நாம் தவறு செய்ய வில்லை. இந்த உணர்வுகள் எனக்குள் பட்டுவிட்டது. இது சந்தர்ப்பம்.

சந்தர்ப்பத்தால் ஏற்படும் வேதனை நிலைகளிலிருந்து அது நமக்குள் தீமை எப்படி ஏற்படுகின்றது…? என்பதைக் காட்டுவதற்காத்தான் ஞானிகள் கருப்பண சாமியைப் போட்டுக்  காண்பித்திருப்பார்கள். அருகிலே மோப்ப நாயையும் காண்பித்திருப்பார்கள்.

ஏனென்றால் அன்றைய தினம் நடந்த இந்தச் செயல் தீமையானதாக நமக்குள் மோப்பமாகப் போகும் போது இருள் சூழ்ந்து விடுகின்றது.

இந்த நிலையைப் பார்த்து இதே வெறுப்பான நிலையுடன் அடுத்து நீங்கள் அலுவலகத்தில் போய் உட்கார்ந்து பாருங்கள்.

அங்கே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி கொஞ்சம் மெதுவாக வேலை செய்தாலோ அல்லது நடந்து போனாலோ என்ன…! எருமை மாடு மாதிரி இருக்கின்றான்…? நம்மை அறியாமலே “இந்த வார்த்தை” வரும்.

தவறு நாம் செய்யவில்லை. நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் வேகத்தின் தன்மை நமக்குள் சித்திரையாகி (சிறு திரையாக) நம் நல்ல குணத்தை மறைத்து விடுகின்றது.

அதை மாற்றிடத் தான் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்திகளை ஒவ்வொருவரும் பெறுவதற்காக ஆலயங்களை அமைத்து  தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வதைக் காட்டினார்கள்.

அருள் மணங்களை நம் உயிருக்குள் அபிஷேகம் செய்து நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு தெய்வச் செயலாக நாம் செயல்பட வேண்டும் என்பதற்காக அந்தத் தெய்வச் சிலைகளை வைத்து தெய்வ குணங்களைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

அந்தத் தெய்வ குணத்தை நாம் பெறுவோம். தெய்வ சக்தியை வளர்ப்போம். அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபடுவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பகைமை கொண்ட உணர்வுகளையோ நோய்வாய்ப்படும்  உணர்வுகளையோ தீமை செய்யும் உணர்வுகளையோ நுகர்ந்து விட்டால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்?

 

அடுத்த கணமே அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து அந்தச் சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை அகற்றிடல் வேண்டும். ஏனென்றால் ஆறாவது அறிவு கொண்ட நாம் நல்லதை உருவாக்கும் பண்பு பெற்றவர்கள் என்று உணர்தல் வேண்டும்.

 

நாம் இதைச் செய்யத் தொடங்கினால் நமக்குள் தீமைகள் வராது தடுக்கலாம். இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது.

 

அதே சமயத்தில் உங்களுக்குள் உபதேசத்தின் உணர்வின் நினைவுகள் பதிவானால்தான் அது செயல் முறைக்கு வரும்.

 

டாக்டருக்குப் பயிற்சிக்குச் செல்பவர்கள் மற்ற கற்றுணர்ந்த டாக்டர்கள் சொல்லும் கருத்துக்களைப் பின்பற்றி அதன் வழி பெறவேண்டும் என்ற அந்த ஞானத்தைச் செலுத்தினால் உயர்ந்த டாக்டர் ஆகின்றார்.

 

ஆனால் பயிற்சி செய்யும் நேரத்தில் சிந்தனை இழந்திருந்தால் அவர் டாக்டர் ஆவதற்குப் பதில் சோர்வின் தன்மை அடைந்து அவர் வைத்தியம் பார்த்தாலும் அதனால்  பிறருக்குத் தீமையே உருவாகும்.

 

கல்வி கற்கும் நிலையும் இதே போலத்தான்.  எதைப் பெறவேண்டும் என்று குறிக்கோள் வைத்துச் செலுத்துகின்றோமோ  அதன் வழி அங்கே வழி செய்கின்றது.

 

ஆகவே உங்கள் வாழ்க்கையில் அருள் ஞானத்தின் உணர்வைப் பதிவாக்கப்படும் போது அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களை வாழ வைக்கும். தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும்

 

பொருளறிந்து செயல்படும் சக்தியும் நீங்கள் பெறமுடியும். பேரின்பத்தை இந்த வாழ்க்கையில் நீங்கள்  பெறமுடியும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு தாய் கருவுற்ற தாயைத் தேள் கொட்டிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். மருந்து போட்டுத் தாய் தப்பித்துக் கொள்கின்றது. ஆனால் கருவில் வளர்ந்த அந்தக் குழந்தை பிறந்த பின்பு தேள் அவனைக்  கொட்டினால் தேளின் விஷம் அவனை ஒன்றும் செய்யாது.

 

இதே மாதிரிக் கருவிலே இருக்கும் போது ஒரு  தேனீ கொட்டினால்  இந்தக் குழந்தை தேனீயைப்  பிடித்தானென்றால்   அவனைக் கொட்டாது.

 

இதைப் போல கருவுக்குள் (சிசு) உணரும் உணர்வுகள் அதன்  வழி கொண்டு இங்கே  சந்தர்ப்பத்தால் இத்தகைய தன்மை பெறுகின்றது.

 

இப்போது இங்கே மெய் ஞானிகளைப் பற்றிப் பேசுகின்றோம்.  ஒரு கருவுற்ற தாய் இதைக் காதில் கேட்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த ஞானத்தைப் பேசும் போது அது தாயின் உணர்வுக்குள் பதிவாகின்றது. ஞானிகளின் உணர்வுகளை நுகர்கின்றது. கருவுக்குள் இருக்கும் சிசுவும் ஞானிகளின் உணர்வைப் பெறுகின்றது. அந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைகின்றது.

 

எதனின்  தன்மை அங்கு உருவாகின்றதோ அந்தக் குழந்தை பிறந்தபின் இந்தத் தத்துவத்தைப் பெறும் சக்தி பெறுகின்றது.

 

ஆகவே கருவுற்ற தாய்மார்கள் தீமைகளை அகற்றிவிட்டு உண்மையின் உணர்வைப் பேசும்  அருள் ஞானிகளின் உணர்வை நுகரப் பழகிக் கொள்ளுங்கள்.

 

கருவுற்ற காலங்களில் அருள் உணர்வுகளை நுகர்தறிந்தால் அந்த உணர்வின் கருவே  சிசுக்களுக்குத் தீமையை அகற்றும் வல்லமை கிடைக்கின்றது.

 

அந்தக் குழந்தை பிறந்தபின் உங்கள் துன்பத்தைப் போக்கும். நீங்கள் பேரின்பத்தைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

 

பல இன்னல்கள் பட்ட குடும்பங்களில் பார்தோம் என்றால் அந்தக் குடும்பங்களில் ரொம்பத் தரித்திரத்திலும்  சிரமத்திலும் இருப்பார்கள்.

 

பல நோய்வாய்ப்பட்டுப் பல இன்னல்கள் கொண்டு பல தரித்திரத்தில் வாழப்படும் போது  இதையெல்லாம்  மறந்துவிட்டு கருவுற்ற தாய் தான் “என்றைக்கு நல்லதைப் பெறப் போகிறோம்… என்று ஏங்கித் தவிக்கின்றது.

 

அந்தச் சிரமமான காலங்களில் தாய் தான்  எப்படியும் மீளவேண்டும் என்ற உணர்வினை அது  சிந்தித்து ஞானிகளையோ தன்னைக் காக்கும் உணர்வு கொண்ட  ஞானத்தின் உணர்வுகளை நுகர்ந்தது என்றால் அந்தக் கருவில் வளரும் குழந்தைக்கும் அந்த நிலைகள் பெற்று அது பிறந்தபின் பெரிய கலெக்டர் ஆகின்றான் அல்லது பெரிய தத்துவ ஞானியாக உலகம் போற்றும் நிலைக்கு வருகின்றான்.

 

அவனுடைய சந்தர்ப்பம் தரித்திரத்தில் வாழ்ந்தாலும் தாய் பல சிரமங்களிலிருந்து மீளவேண்டும் என்ற உணர்வை அது நுகர்ந்ததால் அந்தக் குழந்தை அத்தகைய நிலை பெறுகின்றது.

 

சில குடும்பங்களில் படிப்பதற்கே வசதி இல்லை என்றாலும் அவன் ஞானத்தின் நிலை கொண்டு அதீத  வளர்ச்சி அடைந்திருப்பதை நாம் பார்க்கலாம்.

 

“சந்தர்ப்பம்தான்…” எல்லாவற்றுக்கும் காரணம் – ஆனாலும் சந்தர்ப்பங்களையே நல்லதாக மாற்றியமைக்கும் சக்தி “நமக்கு உண்டு”

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமை வரும் சமயம் அவ்வப்பொழுது ஆத்ம சுத்தி செய்து கொண்டே வந்தாலும் முந்தைய பழைய பதிவின் ரெக்கார்ட் நம் உடலுக்குள் அணுக்களாக விளைந்திருக்கின்றது.

 

ஒரு ஒலி நாடாவில் ஏற்கனவே மற்றவைகளைப் பாடிப் பதிவாக்கியிருப்பார்கள். அப்படிப் பாடிய பாடலை அழிக்காமல் மீண்டும் அதிலே பதிவு செய்தால் அடுத்துப் பதிவாக்குவதை நாம் அர்த்தம் காண முடியாது…!

 

நாடாக்களின் முதலில் ஒன்றைப் பதிவு செய்திருந்தாலும் அதில் மீண்டும் பதிவு செய்யும்போது விஞ்ஞான அறிவு கொண்டு அந்தப் பதிவானதை அழித்து விட்டுத் தான் மீண்டும் பதிவு செய்வார்கள்.

 

இதைப்போல நாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே நமக்குள் பதிவான குணங்களைத் துடைக்க வேண்டும். துடைத்துப் பழக வேண்டும்.

 

மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தித் துடைக்க வேண்டும்.

 

ஒரு முறை துடைத்து… மீண்டும் அந்த எண்ணம் வந்தது என்றால்…! மீண்டும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை வேண்டி மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று அதை மீண்டும் துடைக்க வேண்டும்.

 

“அதிலும் நினைவு குறைந்தால்… மீண்டும் மீண்டும் துடைத்து விட்டு…” யார் நம்மை ஏசினார்களோ தவறாக எண்ணினார்களோ மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும். எங்கள் உணர்வுகள் அவரை நல்லதாக்கவேண்டும். எங்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று பிறரிடம் விளைந்த தீய வினைகள் நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும்.

 

இதற்குப் பெயர் தான் விநாயகர் சதுர்த்தி.

 

அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் கலக்கச் செய்வதே “ஆத்ம சுத்தியின் மூலக் கூறு…!”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்குள் தெளிந்த சக்தியான நல்ல குணங்கள் இருப்பினும் நமது வாழ்க்கையில் பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்து விட்டால் என்ன ஆகின்றது?

 

பாலில் பாதாமைப் போட்டு வைத்திருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாதாமிற்கே சக்தி இழந்தது போல வேதனையை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் சக்தி இழந்து விடுகின்றது.

 

ஒரு விஷம் பட்டால் எப்படி நம் தலை சுற்றுகின்றதோ விஷம் பட்டால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றதோ அதைப் போல எதை எடுத்தாலும் பெரும் பாரம் போலத் தோன்றும்.

 

நம் காரியத்தைச் செய்ய முடியவில்லை என்றால் “கோபம்…” என்ற உணர்ச்சிகள் வரும். நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகள் உருவாகும். நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலையும் வருகின்றது.

 

இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து விடுபடுவதற்கு அதிகாலையில் துருவ தியானத்தை எடுத்து வாழ்க்கையே தியானம் என்ற நிலைகள் கொண்டு வாருங்கள்.

 

எப்பொழுதும் உங்கள் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே இருக்கட்டும். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள யாம் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை எண்ணினால் இந்தக் காற்றில் உள்ளதை அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் தீமைகளை நீக்கச் செய்யும்.

 

சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெருகி வாழ்க்கையை நல் வழியில் வழி நடத்தும் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கும்.

 

உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறச் செய்வதே நமது குரு காட்டிய அருள் வழியில் இந்தத் தியானம்

 

உதாரணமாக ஒரு பேட்டரியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியிலேயும் அது இயங்கிக் கொண்டே உள்ளது.

 

அதில் சார்ஜ் குறைவாகி விட்டால் மறுபடியும் பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் செய்யவில்லை என்றால் அதிலுள்ள மற்ற செல்கள் எதுவும் இயங்காது.

 

இதைப் போல உயிரிலும் உயிர் வழியாக உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் வீரியத்தை ஊட்டினால் சிந்திக்கும் வலிமையான ஆற்றல்கள் கிடைக்கும்.

 

பேட்டரியில் சார்ஜ் சரியாக இருந்தால் தான் அதன் மூலம் அந்தக் கருவிகள் எல்லாம் சீராக இயக்கும். அது உறுதுணையாக இருக்கும்.

 

ஆகவே மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்போகும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து நாம் இயக்கி நமக்குள் அந்த வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஒவ்வொருவரும் காலையில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சார்ஜ் செய்து உங்கள் அணுக்களுக்கு வீரியம் ஊட்டித் தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையே…. “தியானம்” ஆகும்.

உங்கள் வாழ்க்கையில் அந்தத் துருவ நட்சத்திர உணர்வைப் பற்றுடன் பற்றுங்கள். தீமைகளைப் பற்றற்றதாக்கிக் கொள்ளுங்கள். நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று அவர்களையும் அதைப் பற்றச் செய்யுங்கள்.

அவர்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் உணர்வை ஊட்டினால் நண்பர்களும் நலமாவார்கள்… நாமும் நலமாவோம்… நம் உடலும் நலமாகும்… நம் வாழ்க்கையும் நலமாகும்… நம் தொழிலும் நலமாகும்…! ஒவ்வொரு குடும்பத்திலும் இதைச் செய்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) சிரமப்பட்டேன். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரிடம் பல அனுபவங்களைப் பெற்றேன்.

 

தீமையான உணர்வுகளைப் பார்க்கச் செய்வார். தீமை  உன் உடலில் எப்படிச் செயல்படுகின்றது என்று பார்…! என்பார். பின் தீமையை நீக்கும் வழியைக் காண்பித்தார். எல்லாம் அறிந்து தெரிந்து கொண்டேன்.

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துச் சுவாசிக்கும் பொழுது அசுர உணர்வுகள் நமக்குள் புகாதவாறு அதை மடியச் செய்கின்றது.

 

துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும். உங்களால் எளிதில் பெறமுடியும். இதற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உங்கள் உடலில் தீமையான உணர்ச்சிகள் எப்படி இயங்குகிறது என்று உணர்ந்து தெரிந்து கொள்ள முடியும்.

 

உணர்ந்த உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து அதை மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.

 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறும் அருள் வழியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

 

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் இணைக்கும்… “சரியான பக்குவ முறையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

தீமை என்ற உணர்வு பதிவானால் அதனின் இயக்கம் தனித்து இயங்காதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வைப் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அதன் அருகிலேயே பதிவாகின்றது.

அதைக் காட்டிலும் வலுவானது துருவ நட்சத்திரம். நல்லவனாக வேண்டும் நல்லது செய்ய வேண்டும். நல் வழியில் வரவேண்டும். உலகம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்கினால் அதைச் சுற்றிப் பெரிய வட்டமாகி விடுகின்றது.

ஒரு குழம்பில் பல பொருள்களைச் சேர்த்தாலும் அதில் எதை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதன் சுவையே கடைசியில் வருகின்றது. இதே போல அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கொண்டு சிந்திக்கும் உணர்வுகளை இதில் கலந்து விட்டால் அதை நாம் கவர்ந்து… உணர்ந்து… சிந்தித்துச் செயல்படும் தன்மை வருகின்றது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு “நாம்…” என்ற அணைப்பிலேயே செல்வோம். ஏனென்றால் எல்லாமே “நமக்குள்..” தான் இருக்கின்றது.

பல கோடி அணுக்கள் சேர்த்துத்தான் “நாம்” ஆகின்றோம். ஆனால் எந்தெந்த அணுக்களைச் சேர்த்துக் கொள்கின்றோமோ அந்த “நான்…” ஆகின்றோம்.

கோள்களும் நட்சத்திரங்களும் சூரியனும் மற்றவைகளும் கூட்டு ஐக்கியமான நிலைகளில் இயங்குகின்றன. ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால் கூட்டு ஐக்கியமான நிலைகளில்தான் அது மரமாக வளர்கின்றது. அதற்குள் பிரித்திருந்தால் தசையினுடைய நிலைகள் வளராது

அதைப் போன்று தான் நமக்குள்ளும் கூட்டு ஐக்கியமான நிலைகளில் இருந்தாலும் வெறுப்பான உணர்வுகளை நாம் சேர்க்கும்பொழுது ஒரு அணுவின் தன்மை இரத்தத்தை உருவாக்கினாலும்… இன்னொரு அணு அதன் மேலே பட்டவுடன் அதனுடைய மலம் நம் இரத்தைத்தைக் குடித்துவிட்டு… அந்த அணுவின் மலம் உடலிலே பீய்ச்சும் பொழுது நம் தசைகளும் கரைந்து அழுகிப் போகின்றது. நமக்குள் அது பிரியும் தன்மை பெறுகின்றது.

இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பிறரைப்பற்றி வேதனை உணர்வுடன் எண்ணும் பொழுது அந்த வேற்றுமையான உணர்வுகள் நமக்குள் வந்து அவர்களை அழிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம்.

நமக்குள் எடுத்துக் கொண்ட அந்த அழிக்கும் உணர்வுடன் நாம் பேசினாலும் அதே சமயத்தில் அவரிடமிருந்து கெடுதலான அந்த அலைகள் நம் தசைகளிலே படும் பொழுது அந்த உணர்வுகள் பட்டு அரிப்பு ஆகின்றது.

அந்த அரிப்பினாலே சில கிருமிகளாகி நம் தசைகளையும் அது கரைத்துவிடுகின்றது.

பல வகைகளிலும் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இப்படி வருகின்றது. ஏனென்றால் மனிதனாகத் தோன்றியபின் மனிதனிலிருந்து தோன்றும் இத்தகைய உணர்வுகள் “உருவாக்கும் ஆற்றல்” பெற்றது.

இவ்வாறு நாம் அடிக்கடி பேசும் பொழுது, இதைப் போன்ற நோய்களும் புற சரீர நோய்களும் உள் சரீரத்திற்குள்ளும் உணர்வின் அணுக்களாக மாறிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் தப்பிக்க வேண்டும்.

அதிலிருந்து நாம் விடுபட துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுவதற்காக யாம் இந்தத் தியானமும் ஆத்ம சுத்தி பயிற்சியும் கொடுக்கின்றோம்.

இப்பொழுது யாம் இதைச் சொல்கிறோம் நீங்கள் கேட்கின்றீர்கள். இதைப் போல நீங்களும் ஒவ்வொருவராகச் சொல்லும் பொழுது கேட்பவர்களுக்கும் இது பதிவாகின்றது. அவர்களுடைய உணர்வுகள் அங்கே பதிவாகி எண்ணத் தொடருடன் நல்லதாகின்றது.

இதைப் போன்று ஒவ்வொருத்தரும் ஒரு குடும்பத்தில் இருந்தாலும் சரி நம் தியான வழி அன்பர்கள் கூட்டுக் குடும்பத் தியானமிருக்கும் பொழுது, ஒரு நாளைக்கு ஒவ்வொருவராகச் சொல்லிப் பழக வேண்டும்.

நாம் வீட்டிலிருந்தாலும் நம் குழந்தைகளையும் இதே மாதிரி அவர்களைச் சொல்லச் சொல்லி நாம் கேட்க வேண்டும். இந்த முறைகளில் நாம் பக்குவத்திற்கு வரவேண்டும்.

காரணம் “உணர்வுபூர்வமாக எடுத்து…” அதைச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போது கேட்போருடைய செவிகளிலும் அது பதிவாகின்றது. இவருடைய நல்ல எண்ணம் அவருக்குள் உருவாகும் பொழுது, அந்த நல்ல எண்ணம் இவர் மேல் அன்பைப் பாய்ச்சுகின்றது.

கூட்டுக் குடும்ப தியானங்கள் இருக்கப்படும் பொழுது ஒவ்வொரு மெம்பர்களும் இன்று ஒருவர் சொன்னாலும் நாளை ஒருவரைச் சொல்ல வைக்க வேண்டும். நான்கு பேர் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரும் செய்து பழக வேண்டும்.

ஆத்ம சுத்தியும் பயிற்சியும் செய்யும் பொழுதும் ஒருவரே செய்ய வேண்டுமென்பது அல்ல. ஒவ்வொருத்தரும் இந்த நிலைகளைச் செய்து பழக வேண்டும்.

இப்படி ஒருவருக்கொருவர் அந்தக் கலப்பு உணர்வினுடைய நிலைகளில் ஒன்று சேர்ந்தோம் என்றால் அந்தப் பிரியத்துடன் பாசத்துடன் நாம் சொல்லப்படும் பொழுது அதே பாசம் இங்கே வளர்கின்றது.

ஏனென்றால் இந்த உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்வதற்கும் அந்த ஐக்கிய மனோபாவத்தின் நிலைகளும் இந்தப் பற்றுதலுடன் ஒன்று சேர்வதற்கும் இதைப் போன்று நாம் முறைப்படிச் செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளை “நான் பெற வேண்டும்… நான் பெற வேண்டும்…” என்று எண்ணுவதற்குப் பதில் “நாங்கள் பெற வேண்டும்… நாங்கள் பெற வேண்டும்…!” என்று எடுத்துப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது எல்லோருடைய வலுவும் நமக்குக் கிடைத்து அதன் மூலம் அந்த மகரிஷிகளின் சக்திகளை உடனுக்குடன் நாம் பெற முடிகிறது.

நம் உடலுக்குள் உள்ள எல்லா அணுக்களும் உயிருடன் ஒன்றிய நிலைகளாக ஒரே உணர்வாக ஒளியாக மாறும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறரை நாம் மதித்துதான் பழக வேண்டுமே தவிர தாழ்த்திப் பழகவே கூடாது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அதைத் தான் எனக்கு (ஞானகுரு) முதலிலே சொல்லிக் கொடுத்தார்.

குழந்தை தாயை ஏசி விட்டால் அந்தத் தாய் அரவணைத்துச் செயல்படும். ஆகவே “தாயாக நீ இரு…!” என்றார்.

தாய் அடித்து விட்டாலும் மீண்டும் தாயின் நிலைகளைக் குழந்தை அணுகி இருக்கின்றது. அந்த இடத்தில் “நீ சேயாக இருக்க வேண்டும்” என்றார் குருநாதர்

இதைப் போன்று தாயகவும் சேயாகவும் நாம் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு வாழ வேண்டும் என்று குருநாதர் முதலிலே எனக்குக் காட்டினார்.

எத்தனையோ பேர் உன்னைப் பேசுவார்கள்… ஏசுவார்கள்…! அப்போது நீ தாயாக இருந்து அதை ஏற்று அவர்களுக்கு நீ சேய்க்கு உபதேசிப்பது போல ஒவ்வொரு நிலைகளுக்கும் அதை நீ காத்தருள வேண்டும்.

தாய் தன் குழந்தையை எப்படிக் காக்கின்றதோ அதை போலக் காத்து வர வேண்டும். ஆகவே நாம் அனைவரும் குரு காட்டிய வழிகளில் தாயாக மாற வேண்டும்,

சேயை எப்படி வளர்க்கின்றோமோ அதைப் போல் பிறர் நம்மை ஏசி விட்டாலும் பேசிவிட்டாலும் அதை மறந்து பழக வேண்டும் என்பதைத் தெளிவாக்கினார் குருநாதர்.

குழந்தையை யாராவது திட்டி விட்டாலும் அடுத்தாற் போல் “இந்தா பிஸ்கட்…” என்று கொடுத்தால் வாங்கிக் கொள்ளும். ஆகவே அந்தச் சேயைப் போல பிறர் மேல் உள்ள பகைமையை நாம் மறந்து பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தை நமக்குள் உயர்த்த வேண்டும். இதைப் போன்ற நிலைகளை நாம் பின்பற்றுதலே குரு காட்டிய நல்ல வழி.

அதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள் இதைக் கூட்டமைப்பாக உருவாக்கி உபதேசிக்கின்றோம். இல்லை என்றால் யாமும் காட்டுக்குப் போயிருப்போம்.

ஏனென்றால் அங்கே இடைஞ்சலான இடத்தில் போய் உட்கார்ந்தாலும் அங்கு நான்கு பேர் நல்லதைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வருவார்கள்.

கஷ்டப்பட்டுப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்கள் நிச்சயம் அருள் ஞானத்தைப் பெறுவார்கள். குரு காட்டிய வழியில் பிறரை நாம் வாழ்த்த வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் வாழ்க்கையில் வரும் இன்னல்களை எளிதில் மாற்றிக் கொள்ளலாம். எளிதில் மாற்றிக் கொள்ளும் உபாயத்தைத்தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

 

எப்படிக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றனரோ இதைப் போல உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும்.

 

உங்கள் கண்ணில் உள்ள கருவிழி விலா எலும்புகளில் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.

 

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அந்த நேரத்தில் யாம் பதிவாக்கியதை மீண்டும் எண்ணும் பொழுது தீமை நம்மை எப்படி இயக்குகின்றது…? தீமையிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்ற ஞானம் உங்களுக்குக் கிடைக்கும்.

 

இன்று செல்ஃபோன்களை வைத்துள்ளார்கள். அதிலே அந்த நம்பரை யார் அழுத்துகின்றார்கள் என்று தெரிந்து கொள்கின்றோம். இதைப் போல நாம் எங்கெங்கேயோ இருக்கக்கூடிய இடங்களுக்கு எல்லாச் செய்திகளையும் படங்களையும் காட்சிகளையும் அனுப்புகின்றோம்.

 

வயர் (Electrical wire) எதுவும் கிடையாது. அது இல்லாமலே செய்திகளை அனுப்புகின்றோம்.

 

ஆகவே, சூரியனிலிருந்து வரக்கூடிய காந்தப் புலனறிவு இதை மோதச் செய்து நாம் அனுப்புவதை அங்கே இருக்கக்கூடியவர்களைத் தெளிவாக்குகின்றது. விஞ்ஞான அறிவு கொண்டு இதைச் செய்கின்றார்கள்.

 

இதைப் போன்றுதான் யாம் உபதேசிக்கும் மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்கள் விலா எலும்புகளுக்குள் உள்ள ஊனுக்குள் வித்தாகப் பதிவாக்கிவிட்டால் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுதெல்லாம் அது உங்களுக்குள் எளிதில் கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

 

இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுதெல்லாம் உங்கள் அம்மா அப்பாவை எண்ணி ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தினால் அந்த அணுக்களுக்கு நேரடியாகச் சக்தி கிடைக்கின்றது.

உங்கள் வாழ்க்கையில் தெளிந்து வாழ்ந்திட மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும். எமது அருளாசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு மனிதனும்… “தான் வேண்டும் என்று” தவறு செய்வதில்லை.

 

நுகர்ந்த உணர்வுகள் அதனின் ஆசையை ஊட்டி அதன் வழியிலே அவனுக்குள் பெருகச் செய்கின்றது.  அதன் வழியே அவனை வீழச் செய்கின்றது.

 

இராட்சனாக ஆவதும் அசுர உணர்வு கொள்வதும் தீமையினுடைய நிலைகளில் செயல்படுவதும் தீமையே அவனுக்கு ஒரு சந்தோஷத்தை ஊட்டும். ஆனால் தீமையின் நிலைகளை அவன் தொடர்ந்து செய்தால் மனிதப் பிறவியின் நிலையை இழக்கின்றான்.

 

தீமை செய்கின்றான் என்று அவனைப் பற்றி எண்ணி நாம் நுகர்ந்தால் நமக்குள் அந்த அணுவின் தன்மை வந்து நம்மையும் தீமை செய்வோனாக மாற்றுகின்றது.

 

அத்தகையை தீமையின் நிலைகளைச் செய்தால்… நாம் பார்த்தால்…, அடுத்த கணம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

 

பின் தீமை செய்வோர் அவர்கள் அறியாத நிலைகளிலிருந்து விடுபட வேண்டும். பொருளறிந்து செயல்படும் எண்ணங்கள் அவர்களுக்குள் வரவேண்டும் என்று அவரைப் பற்றி நாம் கவர்ந்த உணர்வுகளுடன் இதைக் கலக்கின்றோம்.

 

நமக்குள் அந்தத் தீமைகள் விளையாதபடி தடுத்துக் கொள்கின்றோம். அவர்கள் நாம் சொல்வதை எடுக்கின்றார்களோ இல்லையோ…! அவன் செய்த தீமையின் விளைவுகள் “நமக்குள் வரக்கூடாது”.

 

தனித்து ஒரு மிளகாய் காரமாக இருக்கின்றது. இதைப் போன்று மற்ற கடுகு இஞ்சி மிளகு எல்லாமே தனித்த நிலையில் காரமாக இருக்கின்றது. ஆனால், மற்ற பொருள்களுடன் இவைகளைக் கலக்கப்படும் பொழுது சுவையான நிலைகள் வருகின்றது.

 

இதைப் போலத்தான் நாம் அருள் உணர்வுகளை இணைத்து இணைத்து மகிழ்ச்சியாக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

பிறிதொரு தீமையான உணர்வை நாம் நுகர்ந்தறிந்தாலும் ”அது தனித்து விளையாதபடி” அருள் ஞானிகளின் உணர்வு கொண்டு எடுத்து அதை உள்ளடக்குதல் வேண்டும்.

அதன் உணர்வின் அணுக்களாகிவிட்டால் நமக்குள் அவர்களின் அணுக்கள் தீங்கு செய்யும் நிலைகளாக வராது. ஆகவே இதை “மடக்கிப் பழகுதல்” வேண்டும்.

இந்த மனிதனின் வாழ்க்கையில் அகஸ்தியன் சென்ற பாதையில் அவன் உணர்வை நாம் நுகர்ந்தால் அவன் துருவனாகி துருவ மகரிஷியான நிலை போல நாமும் அடையலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பேசுவது நான் (ஞானகுரு) அல்ல. பேசுவதற்கு அந்த அளவு தகுதி படைத்தவனும் அல்ல. மெய்ஞானிகளால் வளர்க்கப்பட்ட அந்தப் பேருண்மைகளை குருவின் உணர்வால் அந்த மெய் ஒளியினைக் காண முடிந்தது.

 

ஆனாலும் அதைக் காண்பதற்கு பல இம்சைகளைக் கொடுத்தார் குருநாதர். அந்த இம்சையை மாற்றுவதற்கு எதை எடுப்பது? என்றும் அந்த ஞானிகளின் மெய் ஒளியினை எப்படிப் பெறவேண்டும்? என்றும் உபதேசித்து உணர்த்தினார்,

 

துன்பங்களைக் கொடுத்துத் துன்பங்களை மாற்ற மெய் ஒளியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினார்.

 

ஆனால் உங்களுக்கோ துன்பம் நேரும் பொழுது மெய் ஒளி கொண்டு துன்பத்தை நீக்கும் நினைவைக் கொண்டு வருகின்றோம். ஆகவே இதை அலட்சியப்படுத்திவிடாதீர்கள்.

 

எனக்குத் துன்பத்தைச் செயற்கையில் உருவாக்கித்தான் இந்தத் தீய நிலைகளை நீக்கும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினார்.

எனக்குள் வளர்ந்த தீமைகளை நீக்கும் அந்த ஆற்றல்கள் உங்களுக்குள்ளும் வளர வேண்டும் என்பது எனது ஆசை.

 

உங்களையறியாது வரும் துன்பத்தை நீக்க இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் துன்பத்தை நீக்கிவிட்டு இன்பத்தை வளர்க்கும் என்றும் நிலையான இன்ப நிலைகள் பெறும் பெரு வீடான பெரு நிலைகள் பெற முடியும் என்றுதான் உங்களுக்குள் லேசாகச் சொல்கிறேன்.

 

ஒரு விவசாய ஆபீசில் எவ்வளவோ நாள் பக்குவப்படுத்தி ஒரு வித்தைக் கொடுத்த பின் அதற்கு நீரை ஊற்றிப் பக்குவமாகப் பராமரித்து வளர்த்தால் அது “தக்க பலன் தரும்…” என்று சொல்வார்கள்.

 

அது போல் குருநாதர் கூட 12-13 வருடம் பெற்ற உணர்வுகளை வித்தாக அருள் வாக்காக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

 

அந்த அருள் வாக்குக்குள் மூலம் உங்கள் நினைவலைகளைக் கூட்டி அதன் மூலம் காற்றில் படர்ந்துள்ள ஆற்றல்மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளும் முறைதான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.

 

“ஞானிகள் சென்ற வழிகள்” அது தான்.

 

சாமியாரிடம் சென்றால் தலை வலி போகும் வயிறு வலி போகும் என்று எண்ணினால் அந்த நிலையிலேயே நிற்க வேண்டியது தான்.

 

சாமி (ஞானகுரு) சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெற்றால் அந்தத் தலை வலியும் வயிற்று வலியும் போக்க முடியும் அது தன்னாலே போகும். அறியாது வரும் இருள் சூழ்ந்த நிலைகள் விலகும். மெய் ஒளியின் தன்மை வளரும் என்ற இந்த நிலைகளுக்கு வரவேண்டும்.0

 

அதைப் பெறும் பொழுது இருள் நமக்குள் நிற்காது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

இருளை நீக்க வேண்டும் என்று ஓட்டையாக (குறைபாடு) உள்ளதை… “அதை உடனே தட்டியெறிந்து விட்டு” முழுமையான நிலைகளில் செயல்பட்டால்தான் சரியாகும்.

ஒரு பாத்திரத்தில் ஓட்டை உடைசல் அடைக்கிற மாதிரி அப்பொழுதுக்கு மட்டும் ஏதாவது சாமியைப் பார்ப்பதோ மந்திரத்தைச் செய்தோ மாயங்கள் செய்தோ சாமியாரைப் பார்த்தோ செய்வோம்..! “பின்னாடி எல்லாம் சரியாகிப் போய்விடும்” என்றால் எல்லாம் கழன்று ஓடி விடும்.

அந்த மாதிரி இல்லாதபடி மெய் ஒளியின் தன்மையை உங்களுக்குள் வளர்ப்பதற்கு அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் பெறவேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைக்கு விஞ்ஞான அறிவு கொண்டு சில கருவிகளை வைத்து மிக மிக நுண்ணிய நிலைகளை படமாக எடுத்துத் தெளிவாகக் காட்டுகின்றனர். நாம் அதிசயமாகப் பார்க்கின்றோம்.

இயற்கையின் உண்மைகளை நேரடியாகப் பார்க்கப்படும்போது அந்த உண்மையின் இயக்கங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வோம்.

விஞ்ஞான அறிவு கொண்டு யானைகளை மடக்குவதற்குக் கூட சில உபாயங்களைக் கண்டு நாம் வியக்கக்கூடிய அளவிற்குத் தக்க கேமராக்களை வைத்து எலக்ட்ரானிக் நுட்பம் கொண்டு பிரமிக்கத்தக்க அளவில் கூட இன்று படங்களைக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் இயற்கைக்கு மாறாக தான் எடுத்துக் கொண்ட திறமையைக் காட்டி உலகம் இப்படிதான் இருக்கின்றதென்று விஞ்ஞான அறிவால் சில நிலைகளைப் பார்க்கின்றோம்.

நீங்கள் கையில் ஒரு பையைக் கொண்டு போனால் இந்தப் பையைப் பிடுங்கி இன்னொருவன் கையில் கொடுக்கின்ற மாதிரி கேமராவில் எலக்ட்ரானிக் வழியில் மாற்றி டி.வி.யில் அப்படியே காட்டுகின்றார்கள்.

டி.வி.யிலும் சினிமாவிலும் இதைப் போன்ற படங்களையும் முறைகேடான நிலைகளையும் காட்டுகின்றனர். இயற்கைக்கு மாறான செயல்களையும் காட்டி அதிசய வைக்கும் நிலையும் பயமூட்டும் நிலையும் காட்டுகின்றனர்.

“ஆ…!” இதெல்லாம் எப்படி…! என்ற நிலையில் அதிர்ச்சியூட்டும் நிலைகளைத்தான் நாம் நுகர்கின்றோம். அதனின் விளைவுகளைப் பற்றி அறிவோரும் இல்லை. அறிவுறுத்துவோரும் இல்லை.

ஆனால் குருநாதர் என்னைக் (ஞானகுரு) காடுகளில் அலையச் செய்து ஒவ்வொரு நிமிடங்களிலும் ஒவ்வொரு உயிர்கள் (மிருகங்களும் உயிரினங்களும்) தன்னைப் பாதுகாக்க என்ன செய்கின்றது?

சினிமா டி.வி.யில் காட்டுகின்றார்கள் அல்லவா…! அது போல என்னை நேரடியாகவே கொண்டு போய்க் காட்டினார்.

மிருகங்கள் எப்படிப் போர் செய்கின்றது? மற்றதை எப்படித் தந்திரமாகப் பிடிக்கின்றது? தப்பி ஓட அந்த உயிரினங்கள் என்னென்ன செய்கின்றது?

அதே சமயத்தில் நான் வேடிக்கை பார்க்கும் போது என்னைத் தாக்க வரும் நிலையில் எனக்குள் எனென்ன உணர்வுகள் வருகின்றது?

அந்த உணர்வுகளை எல்லாம் நான் நுகர்ந்தபின் பதட்டமும் பயமும் ஆகி என் உடலில் எப்படியெல்லாம் மாற்றங்கள் ஏற்படுகின்றது?

அதை நுகர்ந்த ஒரு இரண்டு மணி நேரத்தில் இரத்தங்களில் வேதனை உணர்வுகள் கலக்கப்படும் பொழுது ஒவ்வொரு அணுக்களின் இயக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றது என்று குருநாதர் அனுபவரீதியில் கொடுத்தார்.

மாறிய நிலைகளை மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு அடக்கி அந்தத் தீமை செய்யும் நிலைகளை நன்மை பயக்கும் அணுக்களாக ஒளியாக எப்படி மாற்ற வேண்டும் என்பது தான் காட்டிற்குள் அனுபவம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

தீமைகள் எப்படி நம் உடலுக்குள் வருகின்றது…? அதனுடைய செயலாக்கங்கள் என்ன…? அதைத் தடுப்பது எப்படி…?

ஞானிகளும் மகரிஷிகளும் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களை எப்படி அகற்றினார்கள்…? உயிருடன் ஒன்றிய உணர்வுகளை எப்படி ஒளியின் சுடராக மாற்றினார்ககள்…? விண்ணுலகம் எப்படிச் சென்றார்கள்..?

இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்ட பின் தான் உங்களுக்குள் அதை உணர்த்துகின்றோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்பபடி செய்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் ரோட்டில் செல்லும் பொழுது ஒரு வாகனம் வேகமாகச் செல்கிறது என்று வைத்துக் கொல்வோம். இது யார் மீதாவது மோதிவிட்டால் “அவர்கள் அவதிப்படுவார்களே…” என்ற எண்ணங்கள் நமக்குள் தோன்றுகிறது.

அந்த எண்ணங்கள் தோன்றும் பொழுது நமக்குள் அந்த வாகனத்தின் வேக உணர்வுகள் காணும்பொழுதே மனது நமக்குள் “பட…பட…” என்று துடிக்கின்றது.

அப்படிப் பயத்தின் உணர்வுகள் துடிக்கப்படும் பொழுது பய அலைகள் நமக்குள் பெருகிவிட்டால் நம் சிந்திக்கும் திறனே இங்கே இழக்கப்படுகின்றது.

அப்பொழுது அந்த வேதனையின் உணர்வுகள் “இது என்ன ஆகுமோ…!” என்ற மன பயத்தால் வேதனை என்ற உணர்வுகள் தூண்டுகின்றது.

வேதனை என்ற அந்த நஞ்சு இதனுடன் கலக்கப்படும் பொழுது என்ன ஆகும்?

ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தவுடன் “அது கீழே விழுந்துவிடுமோ…” என்ற பயமாகி விட்டால் அந்தப் பொருளை அந்த எண்ணத்தால் எண்ணும் பொழுது பார்க்கலாம். அந்தப் பொருள் கீழே கண்டிப்பாக விழுகும்.

ஆனால் அதே சமயத்தில் அந்த மன வலுக் கொண்டு இதை மாற்றி வைக்க வேண்டும் என்று எண்ணினால் உடனே அது வரும்.

நாம் அப்படி எண்ணாமல் “இது கீழே விழுந்துவிடும்..” என்று தான் எண்ணுவோம். ஆனால் எடுத்து அதை “மாற்றி வைக்க வேண்டும்” என்ற மனம் வராது.

ஆகவே இந்த உணர்வுகள் இத்தகைய நிலைகள் கொண்டு அதே எண்ணத்திலிருக்கும் பொழுது இந்த உணர்வின் அலைகள் மோதும் பொழுது நாம் எண்ணிய எண்ணங்களும் எதிர்படும் உணர்வுகளும் மோதப்படும் பொழுது காற்றலை போல் வந்து அந்தப் பொருள் ஆடுவதைப் பார்க்கலாம்.

ஆக “மனிதனின் உணர்வின் உணர்ச்சிகள்” அது சிறிதளவு இருப்பதை இதிலுள்ள காந்தப் புலன் இழுத்து “டப்..,” என்று கீழே விழுகச் செய்யும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாகனங்களில் செல்லும் போது “விபத்தில் சிக்கி விடுவோமோ…!” என்று அதிர்ச்சியாகி டிரைவரை எண்ணினால் இந்த உணர்வுகள் ஊடுருவி அதற்குத் தகுந்தாற்போல் அணைத்து அடுத்து ஆக்ஸிடண்ட் ஆகும்.

இவன் எண்ணியபடி டிரைவரின் உணர்வை அணைத்து வண்டிக்குள் இருந்தாலும் இவன் மேல் உராய்ந்து இவன் அடிபடுவான். மற்றவருக்கு ஆவதில்லை. பார்க்கலாம்.

இவர்களின் எண்ணத்திற்கு ஒப்ப அந்த உணர்வின் தன்மைகள் டிரைவரையும் இயக்குகின்றது.

எப்படி ஒரு கம்ப்யூட்டர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் உணர்வை இயக்குகின்றதோ… இதன் வழி தான் நம் உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகர்வைதை எலக்ட்ரானிக்காக… உணர்வாக மாற்றுகின்றது.

அதன் வழி தான் (உயிரிலே மோதினால் உணர்ச்சிகளாகின்றது) இந்த உடலை இயக்குகின்றது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு நாம் தெரிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞான அறிவில் வளர்கின்றோம். விஞ்ஞானியும் காட்டுகின்றான். அதன் உணர்வின் இயக்கம் எப்படி என்று காட்டிய பின் இனியாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது? நம்மையறியாது தவறு எப்படி வருகின்றது?

நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி நோயாகின்றது? நோயின் தன்மை வளர்ந்தபின் உடலை எப்படி இழக்கச் செய்கிறது என்பதை மெய்ஞானிகள் காட்டிய உணர்வு கொண்டு அறிந்து உணர்வோம். வரும் தீமைகளிலிருந்து விடுபடும் அருள் சக்திகளை வளர்த்துக் கொள்வோம்.

அந்த விஞ்ஞானியின் தன்மையில் வளர்ந்து காட்டினாலும் அஞ்ஞான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

பக்தி மார்க்கத்தில் பற்று கொண்டவர்களும் உண்மையின் உணர்வை அருள் ஞானிகள் காட்டிய வழியில் நுகராது அதை வளர்த்திடாது அதனுடைய நிலைகள் தனியப்படும் போது அஞ்ஞான வாழ்க்கை வாழும் நிலையே பக்தி மார்க்கத்திலும் வருகிறது.

பத்திரிகைகளில் படிக்கும் போது எப்படி இந்த உணர்ச்சி  கொள்ளையர்கள் வந்து விடுவார்களோ என்ற இயக்கத்தின் தன்மை ஆகின்றது.

நாம் இதற்கு என்ன செய்வது? அந்த உணர்வைத் தூண்டுகின்றது. உணர்வின் தன்மை வளர்ந்த பின் பயந்து வாழும் நிலைகளே வருகின்றது.

இரயிலிலே அல்லது வாகனங்களில் செல்லப்படும் போது இந்த உணர்வுகளை அதிகமாகத் தூண்டி நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அந்த அணுக்களுக்கு அதை வீரிய உணர்வாக ஊட்டி நமக்குள் அச்சுறுத்தும் அணுக்களை வளர்த்து இந்த உடலையே பறி கொடுத்த உணர்வு கொண்டு நல்ல உணர்வையே நாம் பறி கொடுத்து விடுகின்றோம்.

அவன் பொருளைப் பறிகொடுத்தான். உடலை பறி கொடுத்தான். இந்தச் செய்தியைப் படிக்கின்றோம் பதிவாக்கிக் கொள்கின்றோம். நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கடும் நோயாக வரத்தொடங்கி விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான் ஆலயங்களில் அந்தச் சிலையை உருவாக்கிக் காவியத்தைப் படைத்துக் கருத்தினை நுகரும்படி செய்கின்றார்கள் ஞானிகள்.

அவ்வாறு நுகர்ந்த கருத்து அருள் உணர்வின் தன்மை இயக்கமாகி அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்கி பகைமை உணர்வுகளை அகற்றி நம் சொல் பிறரைக் காக்கும் நிலை வருகின்றது.

ஆலயத்திற்குச் சென்றபின் தீப ஆராதனை காட்டும் போது மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த ஆலயம் வருவோர் எல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

அவர்கள் குடும்பமெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும். தொழில் செய்யும் இடமெல்லாம் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

நான் பார்ப்போர் எல்லாம் பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும் என்று இப்படிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்தல் வேண்டும்.

தீப ஆராதனை காட்டும் போது அங்கு இருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரியும். பொருள் தெரிந்தபின் அந்தத் தெய்வத்தைப் பார்க்கின்றோம். அது துவைதம்.

“இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…” என்று உருவமாக்கி அந்த எண்ணத்தை எடுத்து அதைக் காவியமாக்கிப் படிக்கும் போது அந்த நல்ல உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் ஒருவர் தவறு செய்தார் என்றால் அந்தத் தவறின் நிலையை நாம் சுட்டிக்காட்ட நேர்கின்றது. ஆனால் சுட்டிக்காட்டும் நிலை தவறினால் வெறுப்பின் உணர்வையே ஊட்டுகின்றது.

 

வெறுப்பின் நிலை வளர்த்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.

 

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம் எதனை… எவ்வாறு… எதன் வழியில் உருவாக்குதல் வேண்டும்…? என்ற நிலைகளை அறிந்துணர வேண்டும்.

 

அதை நாம் பக்குவப்படுத்தும் நிலைகளுக்குச் சமப்படுத்தல் வேண்டும்.

 

ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்… “பக்குவப்படுத்தும் பண்பு” வருகின்றது.

 

பக்குவப்படுத்தும் பண்பு வர வேண்டும் என்றால் “அருள் ஞானத்தின் உணர்வை” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் விளைவிக்க வேண்டும்.

 

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை விளைய வைத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளையும் நஞ்சான உணர்வுகளையும் கார உணர்ச்சிகளையும் “அடக்கும் தன்மை” வருகின்றது.

 

தீமைகளை அடக்கும் தன்மை வந்தால் “சிந்திக்கும் தன்மை” வருகின்றது.

 

சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல்கள் அனைத்தும் “சீராக அமைய” இது உதவும்.

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை நமக்குள் அணுக்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

அருள் ஒளியினை வளர்த்துப் “பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்போது நம்மை ஒருவர் திட்டிவிட்டால் நாம் என்ன நினைக்கின்றோம்…? என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்றே நாம் பேசுகின்றோம்.

இந்த உணர்வின்தன்மை நாம் ஜெபிக்கப்படும் போது சூரியனின் காந்தப்புலனறிவுகள் சும்மா இருப்பதில்லை. பேசுவதை எல்லாம் அது எடுத்து அலைகளாகக் கவர்ந்து கொள்கின்றது.

என்னை இப்படிப் “பேசினார்கள்… பேசினார்கள்…” என்று சொன்னால் அது அவர்கள் காதில் விழுந்தது என்றால் அவர்கள் நம்முடன் சண்டைக்கு வருவார்கள்.

கேட்கவில்லை என்றாலும் இந்த உணர்வின் சத்தைக் காந்த அலைகள் இழுத்து நம் உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டே இருக்கும்.

இதை மீண்டும் மீண்டும் எண்ண எண்ண விளைய வைத்தது எல்லாவற்றையும் உடல் இழுத்து வைத்துக் கொள்ளும். நமக்குப் (உடலுக்கு) பின்னாடி முன்னாடி இதுதான் நிற்கும்.

இப்படி இந்த உணர்வுகள் நமக்கு முன் நின்று கொண்டே இருந்தால் “என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… அவன் மோசமானவன்…!” என்று சொல்லிக் கொண்டேயிருப்போம்.

இப்படி பேசினான் என்று சொல்லும்போது வேறு என்னென்னமோ கலந்து நாம் பேச ஆரம்பித்து விடுகின்றோம். இந்தப் பேச்சின் தொடர்கள் அனைத்தும் வெறுப்பை ஊட்டும் உணர்வாக வந்துவிடுகின்றது.

வெறுப்பு கொண்டு பேசுவது அனைத்தையும் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொண்டு நாம் பேசப் பேசப் பேச நம் உடல் பக்கம் முன்னாடியே நிறுத்திவிடும்.

முன்னாடி நின்றவுடனே என்ன செய்கின்றோம்? மீண்டும் எங்கே பார்த்தாலும் அந்த நினைவு தான் வரும்.

வெறுப்பான நிலைகளில் இருந்தால் பெண்கள் சமையல் செய்யும் பொழுது குழம்பு வைக்கும் போது பார்க்கலாம்.

எந்தக் குணத்தின் அடிப்படையில் வெறுப்பாக இருக்கின்றீர்களோ – எரிச்சலான நிலைகள் இருந்தால் மிளகாயை அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.

“என்னை இப்படியே பேசி கொண்டு இருக்கின்றார்களே…,” என்று வேதனையான நிலைகள் இருந்தால் உப்பை அதிகமாகப் போட்டு விடுகின்றீர்கள்.

உங்களை அறியாமல் உப்பை கையில் அள்ளிப்போட வைக்கும். வேண்டும் என்றால் பாருங்கள்.

சங்கடப்பட்டு நீங்கள் எதை எதை வெறுக்கின்றீர்களோ அன்றைக்குக் குழம்பு வைக்கும்போது உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். என்ன உப்பு இப்படி அதிகமாக இருக்கின்றது…? என்று வீட்டில் சண்டை வரும்.

கோபமாக இருந்தீர்கள் என்றால் இரண்டு மிளகாயாவது கூடச் சேர்த்துப் போட்டு விடுவீர்கள். அப்பறம் எரிச்சலாக இருக்கும்.

அதே மாதிரி நீங்கள் சலிப்பு சஞ்சலத்துடன் இருந்தால்  சீரகத்தை அதிகமாக அள்ளிப் போட்டு விடுவீர்கள். சீரக வாசனை அடித்தால் உமட்டலாகும்.

அந்தந்தக் குணத்திற்குத்தகுந்த மாதிரி அன்றைக்கு குழம்பு வைக்கச் சொல்லும். குழம்பின் சுவையும் அப்படித்தான் இருக்கும்.

ஒருவரிடம் அன்றைக்குச் சலித்துப் பேசினீர்கள் என்றால் புளிக் குழம்பு வைக்கவேண்டும் என்று சொல்லச் சொல்லும். ஆனால் புளியை அதிகமாகக் கரைத்துவிட்டு உப்பைக் குறைத்துவிடுவீர்கள். கடைசியில் புளிப்பு அதிகமாகிப் போய்விடும்.

ஏனென்றால் சலிப்பை ஜாஸ்தி எடுத்துக் கொண்டால் நிச்சயம் புளிக் குழம்பு தான் வைக்க வேண்டும் சாதித்துப் புளிக் குழம்பை உங்களை வைக்க வைத்து விடும்.

வைத்தாலும் உப்பு போடாமல் விட்டு விடுவீர்கள். புளி ஜாஸ்தி ஆகிவிடும். வேண்டும் என்றால் உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

(சலிப்பாக இருக்கும் பொழுது) அதே போல் இட்லியை புளிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து உப்பு போட்டுக் கரைத்து வைத்தால் மறுநாள் காலையில் இட்லி புளித்துக் கொண்டு இருக்கும்.

அப்பறம் இட்லியைத் தின்றால் “கல்..” மாதிரி ஆகிப் போகும்.

“ஐய்யய்யோ…! நான் சரியாகத் தானே போட்டேன் இப்படி ஆகிவிட்டது என்பார்கள். அந்தந்தக் குணத்திற்குத் தகுந்தவாறு நாம் எடுத்துப் பேசும் உணர்வுகள் துரித நிலைகள் கொண்டு இவ்வாறு இயக்கிவிடும்.

மனிதனுடைய ஆற்றல் அந்த அளவிற்கு உள்ளது.

திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப குறையான உணர்வுகளைப் பேசும் போது இந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது. இதைப் போலானாலும் கூடப் பரவாயில்லை. நம் உடலில் சாப்பிட்ட ஆகாரத்தையும் இந்த நிலைக்கு ஆக்கி விடுகிறது.

வியாபாரத்தில் போய் உட்கார்ந்து சரக்கை எடுத்து விலையைச் சொன்னோம் என்றால் நாம் எந்த புளிப்பாக இருக்கின்றோமோ வாடிக்கையாளர்களையும் சலிப்பாக எண்ண வைக்கும்.

துணியை காட்டினல்… “என்ன துணி இது..? போ…!” போய்க்கொண்டு இருப்பார்கள். நம் சொல் அவர்கள் காதில் கேட்ட இந்த உணர்வு கண்ணிலே பார்த்தவுடன் அந்தச் சரக்கை மட்டமாகச் சலிப்பால் புளிப்பாக அந்த உணர்வு போகச் சொல்லிவிடும்.

அதே மாதிரி வெறுப்பான எண்ணங்களைப் பேசி பேசி இந்த அலைகள் எனக்கு முன்னால் இருக்கும் பொழுது நாம் அடுத்தவர்களிடம் பேசும் பொழுது  இதுவும் கலந்து தான் வரும்.

நண்பர்களிடம் பேசும்போது நாம் ஏதாவது சந்தோஷமாக சொல்லப் போனோம் என்றால் அவர் காதில் கேட்டவுடனே வெறுப்பாக இருப்பார்கள். நாம் பேசுவதெலாம் அவருக்கு வெறுப்பாக இருக்கும். கூட ஏதாவது பேசினால் இன்னும் கொஞ்சம் வெறுப்பாகி விடும்.

நாம் சுவாசித்ததே நமக்கு வாகனமாக வருகின்றது என்பதற்காகத்தான் மூஷிகவாகனா  என்று காட்டுகின்றார்கள். நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

நான் மாம்பழத்தை தேட வேண்டும் என்கிறபோது மாம்பழத்தைத் தேடிப் போகின்றேன். ஒருவனை உதைக்க வேண்டும் என்கிற போது அவனைக் குறி பார்த்துப் பேசித் தேடிக்கொண்டே போகின்றேன்.

இதே போல் நாம் எண்ணிய நிலைகளை அதைச் சுவாசிக்கும் போது மூஷிக வாகனா…! நாம் சுவாசித்த இந்தக் குணம் இந்த உடலை அழைத்துச் செல்லுகின்றது.

இவ்வளவு பக்குவமாக ஞானிகள் கொடுத்திருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்போது ஒரு வேதனைப்படுவோரின் உணர்வை நாம் நுகர்ந்தால் உற்றுப் பார்த்த உணர்வுகள் நமக்குள் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி நமது உடலையும் வலு இழக்கச் செய்கின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வே நம்மை இயக்குகின்றது. அதன் வழி அன்றைய வாழ்க்கையும் அமைகின்றது.

ஒரு குடம் பாலில் நீங்கள் பாதாமைப் போட்டாலும் அதைக் காட்டிலும் பல உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும் ஒரு துளி விஷம் பட்டால் பால் அனைத்தும் நஞ்சாகி விடுகின்றது.

அதில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை சிறுத்துப் பாலின் தன்மை வீரியத்தன்மை அடைகின்றது.

ஒரு சமயம் 100 தரம் நாம் நல்லதைச் செய்தாலும் ஒரு நொடி அந்த வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை தான் நம்மை இயக்குகின்றது.

100 மணி நேரம் நாம் நல்லதை நுகர்ந்தாலும் அந்த 100 மணி நேரமும் நல்லவைகளை உருவாக்குகின்றது நமது உயிர். ஆனால் ஒரு நொடி வேதனை என்ற உணர்வை நுகரப்படும்போது அது நம் நல்ல குணங்கள் அனைத்தையும் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இது இயற்கையின் நியதிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் நடந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகர நேரும் அந்தத் தீமையான உணர்வுகளை அகற்றியே ஆக வேண்டும்.

அன்றாடம் உடலையும் உடைமைகளையும் நாம் எப்படித்தான் தூய்மைபடுத்தினாலும் அழுக்குப்படியத்தான் செய்யும். அதைத் தூய்மையாக்கவில்லை என்றால் அழுக்குகள் கூடிவிடும்.

அதைப் போன்று நம் மனதையும் அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வினை நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் தினசரி வாழ்க்கையில் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

கணவனும் மனைவியும் எப்படி இருந்தாலும் (வெளி ஊரில்) காலையில் ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடம் எடுத்தால் போதும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். என் கணவர் உடல் முழுவதும் படரவேண்டும். என் மனைவி உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்.

எங்களைப் பார்க்கும் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். எங்கள் பார்வையில் பிறருடைய தீமைகள் அகன்றிடும் அருள் சக்தி பெறவேண்டும்.

எல்லோருக்கும் அந்தத் தெளிந்த மனம் கிடைக்கும் அருள் சக்தி பெறவேண்டும். ஒவ்வொரு மனிதனும் அந்தத் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று காலையில் இப்படி எண்ணி கணவன் மனைவி இருவருமே உங்களுக்குள் படைத்துக் கொள்ளுங்கள்.

இதுதான் உண்மையான தியானமும் நாம் போகும் மார்க்கமும்.

நாம் உட்கார்ந்து மணிக்கணக்கில் ஜெபம் இருந்து ஆண்டவனை அடைவேன் அந்தச் சக்தியைப் பெறுவேன் என்றால் அது முடியாது.

அப்படி மணிக்கணக்கில் ஜெபமிருந்து முடிந்தாலும் முடிந்த பின் வாழ்க்கைக்கு வரும் பொழுது தீமைகள் வரும். அப்படி ஜெபமிருந்து பல நிலைகளைப் பெற்றாலும் அது “முனி” என்ற நிலையாகத்தான் வரும். ஒரே வைராக்கிய நிலைகள் கொண்டு “மற்றதைச் சிந்திக்கவிடாது” செயல்படுத்தும் நிலைகள் தான் வரும்.

ஆகவே, அருள் ஞானத்தை வளர்த்து மெய்ப்பொருள் காணும் நிலையை இந்த உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த உபதேசங்களை ஒவ்வொரு நாளூம் திரும்பத் திரும்பப் படியுங்கள். வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்தால் ஒரு 10 நிமிடமாவது இதைப் படியுங்கள்.

இதுவே ஒரு தியானமாகின்றது.

இதைப் படித்து முடித்த பின்பு “எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்” என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

அப்பொழுது இந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மற்றவர்களை நலமாக்க இது உதவும்.

அருள் ஒளி பெறுவோம். இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக என்றும் எகாந்த நிலை என்ற நிலையில் வாழும் அந்த அருள் சக்தியைப் பெறுவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கையில் நாம் எந்தத் தொழில் செய்தாலும் எந்த வேலை பார்த்தாலும் எந்த நிலையிலிருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் தியானப் பயிற்சியையும் ஆத்ம சுத்தியையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதைச் செய்யவில்லையென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற முடியாத தகுதியற்றவராக மாற்றிவிடும்.

துருவ நட்சத்திரத்தின் அலைகள் நமக்கு முன் இருக்கும். அதை நாம் எடுக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

தங்க நகை செய்கின்றோம். அதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் தான் தங்கம் சுத்தமாகின்றது.

அதிலே அந்தத் திரவகத்தை ஊற்றினால் தானே அவ்வாறு ஆகும்.

ஆனால், தங்கத்தில் திரவகத்தை ஊற்றாமலே அதிலுள்ள செம்பு பித்தளை, வெள்ளி எல்லாம் கரைந்து போய்விடும் என்று சொல்லிக் கொண்டு நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன் என்றால் எப்படி முடியும்…?

அது முடியாது.

அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் அன்றாடம் நமக்குள் வரும் கோபம் சலிப்பு வேதனை வெறுப்பு ஆத்திரம் பயம் இதைப் போன்ற எத்தனையோ உணர்வுகளை நுகர நேர்கின்றது. அறிய நேர்கின்றது.

நம் சுவாசத்தின் வழி நம் உடலுக்குள் போய் இரத்தத்தில் கலந்து அணுவாக உருவாகும் கருவாக ஆகிவிடுகின்றது. பின் இரத்தத்தில் சுழன்று முட்டை வெடித்து எந்த உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றதோ அங்கே அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கும்.

அது பெருகிய பின் நல்ல குணங்களால் நல்ல அணுக்களால் உருவான நம் உறுப்புகள் செயலாக்கங்கள் குறையும். பின் உடல் நோயாகி மன நோயாகும்.

அத்தகையை தீமையான அணு உருவாகாமல் தடுக்க வேண்டும் அல்லவா. அப்படி உருவானாலும் அதைக் கரைத்துப் பிரிக்க வேண்டுமா வேண்டாமா…?

சாமி செய்யுமா…! சாமியார் செய்வாரா…! ஜாதகம் காப்பாற்றுமா…! சிந்தித்துப் பாருங்கள்.

நாம் எதை எண்ணிச் சுவாசித்தோமோ அதை அணுவாக உருவாக்குவது நம் உயிரின் வேலை. “அவனன்றி அணுவும் அசையாது…”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் – 109

கரையானைத் தின்னாத உயிரினமே இல்லை என்று கூடச் சொல்லலாம்.

 

கரையான் எப்படிக் கரைக்கின்றதோ இப்படித்தான் (கரைக்கக்கூடிய) அமிலங்கள் மாறுவதும் உணர்வின் சத்து இயக்கத்தின் தன்மை மாறுவதும் என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருநாதர்.

 

ஏனென்றால் உயிரணு தோன்றிய பின் முதலிலே எப்படி இருந்தது என்ற நிலையை அறிவதற்காக வேண்டி என்னைக் கரையான் புற்றிலும் எறும்புப் புற்றிலும் அமர வைத்துக் காட்டினார்.

 

எறும்புகளும் கரையானைப் போன்றே செய்கிறது. அதிலேயும் ஒரு விதமான அமிலங்கள் உண்டாகும்.

 

அந்த அமிலத்தைச் சேர்த்துக் கொண்டபின் கரையான் எவ்வாறோ இதைப் போலச் சேமித்துச் செத்தை குப்பைகளை எல்லாம் பச்சையாகக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

 

குவியலாகப் போட்டு இது மலத்தை உருவாக்கிவிடும். அது குறிப்பிட்ட காலம் வந்தபின் எடுத்து உணவாக உட்கொள்ளுகின்றது. இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கம்தான்.

 

செடியின் சத்து மணம் என்று இருந்தாலும் அந்த செடிக்குள் சேர்த்த (செடியின் மணம்) இயக்கத்தின் தன்மை உணர்வாக இயக்குகின்றது.

 

அந்த மணத்தின் நிலைகள் எவ்வாறு இயக்குகிறதென்ற நிலை தான் என்னைக் கரையான் புற்றில் அமரச் செய்து எவ்வாறு இயற்கையின் நிலைகள் உருவாகின்றது என்ற நிலையைக் காட்டினார்.

 

இப்போது நீங்கள் டி.வி.யிலேயும் பார்க்கின்றீர்கள்.

 

கடலுக்குள் நீருக்கடியில் போகும்போது ஆழப்பகுதிகளில் அதற்கென்ற விஞ்ஞானக் கருவி கொண்டு டெலஸ்கோப்பை வைத்துக் காணுகின்றார்கள்.

 

நீருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வின் அணுக்களையும் நீருக்குள் நுண்ணிய அணுக்கள் (ORGANISMS – உயிரினங்கள்) உருவாகுவதையும் விஞ்ஞானிகள் கண்டுணர்கின்றார்கள்.

 

இதைப் போல மெய்ஞானி தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்தைக் கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்று மற்றொன்றை உருவாக்கி அந்த ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் உணர்ந்து கொள்கின்றான்.

 

இது தீயது இதை விலக்கவேண்டும்… இது நல்லது இதை இணைக்க வேண்டும் என்ற நிலையில் தன் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தனக்குள் இயக்கச் சக்தியினை மாற்றி அமைத்துக் கொள்கின்றான்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருளை நீக்கி ஒளி என்ற உணர்வு பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் நம் குடும்பத்தில் எதனால் நஷ்டமானது? எதனால் ஒற்றுமை இழந்தது? குடும்பத்தில் நம் பிள்ளைகள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை செய்தார்கள்?

பக்கத்து வீட்டுக்காரர் நம்மிடம் ஏன் சண்டை போட்டார்?  அதிலிருந்தெல்லாம் நாம் எப்படி விடுபட வேண்டும்?

கஷ்டங்களையும் வேதனைகளையும் திரும்பத் திரும்ப எண்ணுவதனால் உடலில் கை கால் குடைச்சல் எப்படி வருகின்றது? நாம் நுகர்ந்த உணர்வுகளால் வீட்டில் எப்படி வெறுப்பை உண்டாக்கச் செய்கின்றது?

பிறர் சொல்லும் தீமையான நிலைகளை நமக்குள் அதிகமாகக் கேட்டால் குடும்பத்திற்குள் எப்படிப் பகைமை உண்டாகின்றது?

இதைப் போன்ற சிந்தனைகளை நாம் செய்தோம் என்றால் சிந்தித்துச் செயல்படும் உபாயங்கள் கிடைக்கும். தீமைகள் வராதபடி நம் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றவேண்டும் என்ற அருள் வழியும் கிடைக்கும்.

ஆகவே நம் வாழ்க்கையில் தீமையின் நிலைகளை நாம் கேட்டறிந்தவுடன் தூய்மை செய்து பழக வேண்டும்.

எப்படி?

அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு 10 நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் பரவி உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உள் முகமாக இந்த உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

நம்முடைய சகஜ வாழ்க்கையில் ஏற்படும் சஞ்சலமும் சோர்வும்… சோர்விலிருந்து ஏற்படும் கோபமும்… கோபத்தினால் உண்டாகும் ஆத்திரமான வெறியுணர்வுகளாலும்…
1.இதிலிருந்து விடும் சுவாசத்தினால் ஏற்படும் உடலின் அமில சக்தி மாறுபட்டு
2.அதிலிருந்து பல உபாதைகளை நாமே நம் உடலுக்குள் ஏற்றிக் கொள்கின்றோம்.

கோபம் ஏற்பட்டவுடன் நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் துரிதம் கொள்கின்றது. அந்த நிலையில் நாம் எடுக்கும் சுவாசமே கடினமாக நம் உடலில் ஏறுகின்றது.

1.இக்கனமான சுவாசத்தை ஈர்க்க ஈர்க்க…
2.நம் உடலிலுள்ள அனைத்துப் பாகங்களும் ஒருநிலைப்படாமல் துடிக்கும் நிலை கொள்கின்றது.

அதனால் நம் உடலிலுள்ள இரத்த நாளங்கள் துரிதமாகச் செயல்பட்டு மனிதனின் உடல் நிலைக்கே மூலகாரண வித்தாக இருக்கும் நல் நிலைகள் மாறி பல வியாதிகள் ஏற்படும் நிலைக்கு நாம் ஆளாக வேண்டியுள்ளது.

மனச் சஞ்சலத்திலிருந்து நாம் ஏற்றிக் கொள்ளும் நிலைதான் நமக்கு ஏற்படும் தொடர் நிலையெல்லாம்…!

1.சஞ்சல நிலை ஏற்பட்டவுடன் மன நிலையை அமைதிப்படுத்தி
2.அதனால் ஒரு நிலை கொண்ட சுவாசத்தை ஈர்த்தால் சஞ்சலத்திற்குத் தெளிவு பெறலாம்.
3.தெளிவை நாமே தான் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

உதாரணமாக நாம் செய்யாத தவறுக்காக ஒருவர் ஏசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஏசலைக் கொண்டு இப்படிச் செய்கின்றாரே… நாமென்ன தவறு செய்தோம்…? என்று எண்ணுகின்றோம்.

ஆனாலும்… நம்மிடம் தவறில்லாத பொழுது நம்மை ஏசுபவனை ஆத்திரத்துடன் எண்ணி…
1.இப்படியெல்லாம் செய்பவன் அவனே அந்தத் தண்டனையை அனுபவிக்கட்டும் என்று
2.தவறு செய்பவன் இருக்க நம்மையே நாம் தவறாக்கிக் கொள்கின்றோம்.

நம் எண்ணத்தில் அவன் ஏசும் சொல்லை ஏன் அண்டவிட வேண்டும்…?

1.அவர்கள் நல் உணர்வு பெறட்டும்… நல் வழி படட்டும் என்ற எண்ணத்தில்
2.நம்முடன் அச்செயலை மோத விடாமல் எண்ணும் பொழுது நம் உணர்வே நலம் பெற்று
3.நம் எண்ணத்தில் தீட்சண்ய சொல் தாக்காமல் நம்மைப் புனிதப்படுத்திக் கொண்டால்
4.நம்மையே நாம் பல இன்னல்களிலிருந்து காத்துக் கொள்கின்றோம்.

வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…?

ஏனென்றால் பிறரை ஏமாற்றியோ வஞ்சனை செய்தோ துவேஷித்தோ வருபவனெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். பிறரை ஏமாற்றுவதாக எண்ணி தன்னையேதான் ஏமாற்றி வாழ்கின்றான்.

1.மன நிலையை ஒரு நிலைப்படுத்தி…
2.சமமான வரையறை கொண்ட வாழ்க்கைதனை வாழும் பக்குவத்திற்குப் பல நெறி முறைகள் உண்டப்பா…!

விஷ்ணு தனுசை எடுத்தால் தான் வேதனைகளை அகற்ற முடியும்

 

தன் குழந்தையைக் காக்க தாய் தந்தையர்கள் எத்தனையோ வேதனைகள் படுகின்றார்கள்.

பிள்ளைகளுக்காக வேண்டிச் சேமித்து வைக்க வேண்டும் என்ற நிலை தான் வருகின்றது. நாம் கஷ்டப்பட்டோம் ஆனால் பிள்ளைகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.. ஆரோக்கியமாக இருக்க வேண்டும். என்று விரும்புகின்றனர்.

பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணும்போது
1.பிறர் வேதனைப்படுத்தும் உணர்வுகளையோ வேதனையான செயல்களையோ பார்க்கப்படும்போது
2.தன் குழந்தையைக் காக்க வேண்டுமென்ற உணர்வு தான் வருகின்றது
3.இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வு முதலில் உள்ளே நுழைந்து விடுகின்றது.

அதே போல் நாம் எண்ணியபடி குழந்தை வளர வேண்டும் என்று விரும்புகின்றோம். பள்ளியில் அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே இவன் எதிர்காலத்தில் எப்படித்தான் வாழப்போகின்றானோ…! என்ற வேதனை வருகின்றது.

வேதனை வரும்போது அடுத்து கோபம் வரும். இந்த உணர்வு உடலிலே பட்டபின் சிவ தனுசு (உடலைக் காக்கும் உணர்வு) என்ன செய்யும்…?

1.இப்படிச் செய்கின்றானே…! என்று சொல்லி நாம் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது
2.அது அவனைப் போய்த் தாக்கும்.

எது…? நம்மை அறியாமலேயே நாம் இந்த ஆயுதத்தைப் (சிவ தனுசை) பயன்படுத்துகின்றோம்.

அப்போது நமக்குள் உருவானது ஓ…ம் நமச்சிவாய…! உடல் சிவமாகின்றது. மீண்டும் சிவாய நம ஓம்…! “இப்படிச் செய்கின்றானே…!” என்று அவனைச் சொல்லப்படும் போது அதே உணர்ச்சிகள் அங்கே பாய்கின்றது.

ஆக…
1.அவனைத் திருத்துவதற்கு மாறாக அவன் செயலையே மீண்டும் ஊக்குவிக்கும் நிலைக்குத்தான் நாம் செல்கின்றோமே தவிர
2.அவன் செயலை நல்லதாக மாற்றும் தன்மை இல்லாது போய்விடுகிறது.

குழந்தை படிக்கவில்லை என்றால் உடனே என்ன செய்கின்றோம்…?

அவன் எதிர்காலத்தைப் பற்றி வர்ணிக்கின்றோம். அவன் படிக்கவில்லையே என்ற உணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்துக் கொண்டபின்… இப்படி இருக்கின்றான்… எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்ற வேதனை வருகிறது.

வேதனையின் தன்மை வரப்படும்போது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம். அந்த சிந்திக்கும் தன்மை இழந்தபின் திருப்பிப் பேசுகின்றோம். அதுதான் ஓ…ம் நமச்சிவாய சிவாய நம ஓ…ம்.

வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வரப்படும்போது வாலி ஆகின்றது.
1.வாலி என்ற உணர்வுகள் உள்ளே சென்று
2,நம் நல்ல குணங்களைச் செயலிழக்கச் செய்து அது வலிமை பெறுகின்றது.

அது வலிமை பெற்ற பின் நம் குழந்தை தான் என்று காக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட அந்தச் சந்தர்ப்பத்தில் அவனை உதைக்கத்தான் சொல்லும்…. அல்லது அவனைத் திட்டச் சொல்லும்… அவனைச் சாபமிடச் செய்யும்…!

இதை எல்லாம் அவன் நுகர்ந்தால் என்ன செய்யும்…? அவன் என்ன செய்வான்…?

நம்மைப் பார்த்தாலே ஜிர்…! என்று வருவான். ஓ…ம் நமச்சிவாய சிவாயநம ஓ…ம். அதாவது இராமன் அம்பை எய்தால் தன் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்வான்.
1.நாம் எதைச் சொல்கின்றோமோ
2.திருப்பி அந்த பதில் தான் நமக்கும் வரும்.

எவ்வளவோ சொத்து வசதி எல்லாம் இருந்தாலும் நீங்கள் ஒரு தடவை உங்கள் பையனைத் திட்டிப் பாருங்கள். அங்கிருந்து என்ன பதில் வரும்…! என்று தெரியும் உங்களுக்கு.

இரண்டாவது தடவை மூன்றாவது தடவை திருப்பிச் சொல்லிச் சொல்லி இரண்டு பேரும் கடைசியில் எதிரி ஆகிவிடுவார்கள்.

என் பிள்ளையாவது..? என் அம்மாவாவது என் அப்பாவாவது..! என்று இப்படித்தான் வரும். இது தான் சிவதனுசு… தன் தன் உடலைக் காக்க இந்த உணர்வின் நிலைகள் எதைப் பெற்றதோ இந்த உடலைக் காக்கத் தான் (நுகர்ந்த உணர்வுகள்) அது எண்ணுகின்றது.

ஆனால் விஷ்ணு தனுசு…! இந்த உயிரின் நினைவு கொண்டு உடலில் வந்த தீமைகளை நீக்கி ஒளியானது துருவ நட்சத்திரம். வாழ்க்கையில் வந்த இருளை அகற்றிப் பேரொளியாக ஆனது தான் அங்கே…!

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் பொழுது விஷ்ணு தனுசு. உயிருடன் ஒன்றி ஒளியாகவே இருக்கின்றது. எதையும் அது வென்றிடும் ஆற்றல் பெற்றது.

நம் வாழ்க்கையில் எந்தத் தீமை வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று
1.அதை எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி
2.நம் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
3.அந்த விஷ்ணு தனுசைப் பாய்ச்சுதல் வேண்டும்.
4.அப்பொழுது நமக்குள் வந்த கோபத்தையும் வேதனையையும் அது அடக்குகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் இருக்கும் நல்ல குணத்தையும் காத்து நம் குழந்தைக்கும் நல் உணர்வினைப் பாய்ச்ச முடியும். வேதனைகளிலிருந்து நாம் முழுமையாக விடுபட முடியும்.

“பேயை ஓட்டுகிறேன்…” என்று சொல்பவர்களின் உண்மைச் செயல் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணற்ற காலம் முதற்கொண்டே ஆவிகளை வசியப்படுத்திச் செயல்படுத்திடும் பல நிலைகள் பல ஆயிரம் காலங்களாகவே இருந்து வருகின்றன. நற்காரியங்களுக்காகவும் தன் பேராசையின் நிலைக்காகவும் இந்நிலையைச் செயல்படுத்தி வந்தார்கள்.

மந்திரம் மாயம் செய்வதெல்லாம் ஒரு கலையாகவும் வம்ச வழியாகவும் நிலைப்படுத்திச் செயல் கொண்டு வருகின்றனர்…. பேய் ஓட்டுதல் மந்திரத்தில் என்பன போன்ற பல நிலைகள் நடக்கின்றன.

எண்ணத்தில் சோர்வு கொண்டவரின் உடலில் அவர்கள் எந்த எண்ணத்தைக் கொண்டு உள்ளனரோ அவ்வெண்ண நிலைக்கொப்ப ஆவிகள் அவர்கள் உடலில் ஏறிவிடுகின்றன.

உதாரணமாக… பல ஆசை நிலையுடன் வாழும் ஒருவன் தன் இல்லத்தில் குழந்தைகளின் பற்றைக் கொண்டு பல நினைவுகளுடன் இல்லத்திலிருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் நிலையிலும் இல்லத்தில் இருந்த நிலையின் எண்ண ஆசையுடன் தன் குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் வாங்கும் ஆசையில் அதே எண்ண நிலையில் செல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அதே எண்ணம் கொண்டு அந்த ஆசையில் மற்ற போக்குவரத்தின் இடையூறுகள் கவனிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டுவிடுகின்றது. அப்பொழுது அகால மரணம் எய்தி குருதி வெள்ளத்தில் அடிபட்டு ஆத்மா பிரிந்து விடுகிறது.

1.அத்தகைய ஆத்மா அவ்வாசை நிலையுடன் அங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
2.அதே நிலைகொண்ட எண்ண நிலையுடன் இன்னொருவன் அந்த நிலைக்குச் செல்லும் பொழுது
3.இவ்விரண்டு எண்ணங்களும் ஒரு நிலைப்பட்டவுடன் இவன் உடலில் அந்த ஆவி ஏறிக் கொள்கின்றது.

இவனுடைய செயலுடன் அவ்வாவியின் செயலும் ஒன்றுபட்ட பிறகு இவன் உடல் நிலையில் அவ்வுடலில் அவ்வாவி மனிதனாய் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையெல்லாம் இவன் உடலிலும் ஏறிக்கொள்கின்றது.

இப்படிப்பட்ட நிலையின் காரணமாக…
1,தன் நிலையே தான் மறந்து
2.உடலில் உள்ள ஆவிக்குத் தன்னையறியாமல் அடிமைப்பட்டு வாழும் நிலை ஏற்பட்டு
3.சோர்வு கொண்ட நிலையாகி அதை மாற்றிட மந்திரவாதிகளிடம் செல்லும் நிலை மிகுந்து விட்டது.

இந்த நிலை கொண்டவன் மந்திரவாதியிடம் சென்றால் அவனுக்கு இவன் உடலில் ஏறியுள்ள மற்றோர் ஆவி ஆத்மாவின் நிலையைப் புரிந்து கொண்டு
1.பேய் ஓட்டுவதாகச் சொல்லி மீண்டும் இதற்கு மேல் சக்தி கொண்ட மற்றும் ஒரு குட்டிச்சாத்தானை இவன் உடலில் ஏற்றி
2.அதன் சக்தியைச் செயல்படாமல் செய்து
3.பேய் ஓட்டுவதாய் அவ்வாத்மாவைப் பல இம்சைகள் செய்து
4.அவன் பொருளீட்டிக் கொள்கின்றான்.

இவன் உடலில் ஏறிய குட்டிச்சாத்தானின் ஏவலிலிருந்து இவன் உடல் அழியும் வரை தப்புவது இயலாத காரியம். இத்தகைய பேயோட்டும் நிலையினால் ஒவ்வொருவரையும் அவர்கள் வாழ் நாள் முழுமைக்குமே அதற்கே அடிமைப்படுத்துகின்றனர்.

இந்நிலையிலிருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

நம் உடலில் எவ்வாத்மா எவ்வாவி நிலைகள் ஏறி இருந்தாலும்
1.எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி சப்தரிஷிகளின் உணர்வுடன் ஒன்றச் செய்து அந்த எண்ணத்தை வலுவாக்கி
2.உடலில் உள்ள ஆவி புனித நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் அதனின் இயக்கத்திலிருந்து தப்ப முடியும்.

மனித வாழ்க்கையில் இன்று கேள்விக்குறியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

 

இன்றைய சூழ்நிலையில் காலையிலிருந்து இரவு வரையிலும் பண்பு கொண்ட மனிதன்… அன்பு கொண்ட மனிதன்… பரிவு கொண்ட மனிதன்… ஈகை கொண்ட மனிதன்… பிறருடைய துயர்களைக் கேட்கப்படும்போது அதை நுகரப்படும்போது உயிரிலே அந்த உணர்வுகள் உராய்ந்து அந்த உணர்ச்சிகள் தான் உடல் முழுவதும் சுழல்கின்றது.

அதனால் துயரப்படும் உணர்ச்சிகளே இயக்குகின்றது. ஆக.. மனிதன் தனது வாழ் நாளில் கேள்விக்குறியாகவே இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளோம்.

ஏனென்றால் இன்று உலக நிலைகளில் அரசியல் நிலைகள் பூராமே மனிதனை முழுமையாக அறவே அழிக்கச் செய்து அரக்க உணர்வுகள் பெறும் சக்தியே விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்டு விட்டது.

நாம் செல்வத்தைத் தேடினாலும்…
1.அந்தச் செல்வத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்று சொன்னாலும்
2.அதற்கு வேண்டிய உத்திரவாதமும் இன்று இல்லை.

அதே சமயத்தில் உயர்ந்த குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் நமது நல்ல பண்புகள் நமக்குள் நிலைத்திருக்குமா…? என்று பார்த்தால் “அதுவும் இல்லை…” என்ற நிலை தான் உள்ளது.

பண்பு கொண்டு வாழ வேண்டும் அன்புடன் வாழ வேண்டும் அரவணைத்து வாழவேண்டும் என்ற எண்ணங்களை மக்கள் எண்ணினாலும் வேதனை வேதனை என்று அதைத்தான் அதிகம் சுவாசிக்க நேருகின்றது.

சீரிய பண்பு கொண்டு வாழவேண்டுமென்று இருப்பினும் இன்று அத்தகைய பண்பு கொண்ட மனிதர்கள் அனைவரும் வேதனை வேதனை வேதனை என்ற உணர்வினையே சுவாசிக்க நேருகின்றது.

அந்தப் பண்பும் பரிவும் பாசமும் தன்னுடன் நிலைத்து இருப்பதில்லை…! அன்புடன் பண்புடன் பரிவுடன் பேசுபவர்கள் என்றால் ஏதோ கொஞ்சம் ஓரளவுக்கு வசதியாக இருப்பவர்கள் தான் அவ்வாறு பேசிக் கொள்வார்கள்.

ஆனாலு அப்படி வசதியாக இருப்பவர்கள் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணத்தில் உதவி செய்தாலும் அவர்கள் படும் வேதனை வேதனை என்ற சொல்லைக் கேட்டுக் கேட்டு அதை நுகர்ந்து அறியக்கூடிய நிலைகள் வருகின்றது.

ஆக… வேதனைப்படுத்துவோரைப் பார்த்து “இப்படி நடக்கின்றதே…!” என்று அந்த வேதனை உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது. அதைத்தான் அதிகமாக நேசிக்க முடிகின்றது.

பத்திரிக்கைகளைப் படித்தாலே “உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றது…” நாம் எப்படி நாளை இங்கே வாழ முடியும்…? என்ற நிலைகள் வருகின்றது.

1.பத்திரிக்கையைப் பார்த்தாலே மனிதன் வேதனைப்படும் உணர்வே வருகின்றது
1.இந்த சகஜ வாழ்க்கையில் அன்பு கொண்ட உள்ளங்கள் அனைத்தும்
2.அரவணைக்கப்பட வேண்டுமென்ற உள்ளங்கள் அனைத்தும்
3.கடும் வேதனையைத்தான் அவர்கள் நுகர நேருகின்றது.
4.அந்த வேதனையைத்தான் அவர்கள் உடல்களில் உருவாக்க முடிகின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டாமா…? என்று சற்று சிந்தியுங்கள்.

நம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்

 

ஏவல்… குட்டிச்சாத்தான்… மையிட்டு மந்திரம் செய்வோரிடம் நாம் சிக்கிடாமல்… அவர்கள் செயல்கள் செயல்படாவண்ணம் “நம் ஆத்மாவை..” நம்மைக் காத்திடும் நிலையை அறிந்து வாழ்ந்திடல் வேண்டும். பல எண்ணங்களின் நிலையிலிருந்து நம்மைக் காத்திடல் வேண்டும்.

1.சோதனை கொண்ட காலங்களில் சோர்வு நிலை கொண்டு முடங்கிடலாகாது
2,இவ் ஏவல்களின் தன்மையெல்லாம் சோர்ந்தவர்களை அதி விரைவில் அண்டிக் கொள்ளும்.

இத்துர் ஆவிகள் நடமாட்டத்தைப் பல மிருக ஜெந்துக்கள் எப்படி உணர்கின்றன…?

ஏவலும் சூனியமும் மிருக ஜெந்திற்குச் செயல் கொள்ளாது…! அதன் உடலிலேயே உணரும் தன்மை கலந்துள்ளது. இச்சுவாச சக்தி நாய்க்கு அதிகம். புலிக்குத் தன் பார்வையிலேயே கண்டிடும் சக்தியுண்டு.

இவ் ஏவலின் நடமாட்டமுள்ள இடங்களையெல்லாம் இவற்றை அறியும் தன்மை கொண்ட மிருகங்கள் உணர்ந்துவிடும்.

முந்தைய காலங்களில்… வீடுகளில் நாய் பூனை இவற்றைத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக மட்டும் வளர்க்கவில்லை. துர் ஆவிகளிடமிருந்து அவற்றின் ஏவல் இல்லங்களில் உட்சென்று செயல்படாமல் காக்கவும் இம் மிருகங்களை வளர்த்தனர்.

1.ஏவல்காரனையும் குட்டிச்சாத்தான் செயல் உடையபனையும் கண்டால்
2.இந்நாய் நரி பூனைகள் குரைத்துச் சப்தமிட்டு உணர்த்திவிடும்.

அக்கால இல்லங்களில் எல்லாம் இல்லத்தில் முன் வாயிலுக்கு மேல் நிலைக்கண்ணாடியைப் பதித்திருப்பார்கள். சாதாரண நிலையில் இருக்கும் நிலையில் நம் கண்ணிற்குத் துர் ஆவிகளின் நடமாட்டம் தெரிந்திடாது.

ஆனால் நிலைக்கண்ணாடியில் தெரியும் நிலையென்ன…?

நிலைக்கண்ணாடியில் பூசியுள்ள அவ்வமில சக்தி இத்துர் ஆவிகளின் சக்திக்கு எதிர் கொண்டது. நாயில் உடலிலுள்ள அமில சக்திக்கும் நிலைக்கண்ணாடியில் உள்ள அமிலத்திற்கும் தொடர்புண்டு.

இத் துர் ஆவியின் நிலையைப் பலர் காண்கின்றனர். பேயின் நடமாட்டத்தைக் கண்டேன் என்பவர் பலர். பேயல்ல அது குட்டிச்சாத்தானின் உருவ நிலை அது.

சிலருக்கு மட்டும் புலப்படும் நிலையென்ன…?

ஒவ்வோர் உடலுக்கும் அவரவர்களின் அமிலத்தன்மை ஒன்று உண்டு என்று உணர்த்தினேன் அல்லவா…! இவற்றைக் காணும் அமிலத்தன்மை கூடியவர்கள் உடல் இந்த நிலையை அறியலாம்.

சிலரின் நிலையில் அவர்களின் உடலிலுள்ள அமிலத் தன்மையே அபூர்வத் தன்மையில் இயற்கையிலேயே கூடிப் பிறந்திருப்பர். எண்ணத்தில் ஞானசக்தி நிறைவு கொண்ட அபூர்வப் பிறவியெடுத்தவர் பலர் உள்ளனரே. அவர்களுக்கு இயற்கையின் அமிலமே தன்னுள் கூடி பிறவியெடுத்து பிறந்து வளர்பவர்கள்.

1.பல பிறவியில் சேமித்த அமிலத்தின் கூட்டு நிலையினால்
2.பல ஞானிகள் மற்ற ஏவலின் சக்தியில்லாமல் வாழ்கின்றனர்.
3.ஆகவே நம்முள் உள்ள நிலையையே நல் நிலையில் வளரும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

நமக்காக ஏவாமல் பிறருக்காகச் செய்த மந்திர நிலையும் நம்மைத் தாக்கும் நிலையும் உண்டு. நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் (சுவாச நிலை) எத்தகைய தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது.

பூரண நிலவு போன்று நாம் முழுமை அடைந்து பிரகாசிக்க வேண்டும்

 

பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கும் போது உங்கள் மனம் இருண்டு விடுகின்றது. உங்களுடைய செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்லறிவின் செயலே முழுமையாக இழந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான் சப்தரிஷிகளின் அருளையும் துருவ மகரிஷியின் அருளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வலைகளையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை நுகரச் செய்து உங்கள் கண்ணின் வாயிலாகப் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் ஆறாவது அறிவை…
2.எதனையுமே அறிந்து தெளிவாக்கிடும் அந்த ஞானத்தின் நிலையைக் காத்திடவே இதை உபதேசிப்பது.

உங்களை அறியாமலேயே பதியச் செய்கின்றோம்.

பதிவானதை மீண்டும் எண்ணும் போது உங்களை அறியாமலே பல அற்புதங்கள் நடக்கும். தீமைகளை நீக்கிடும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானியின் உணர்வை நுகரும்படி செய்கிறோம். மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றோம்.

உங்களை அறியாது நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும் சிறு திரையை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களின் நல்ல குணங்களுக்குள் ஆழமாக இணைக்கச் செய்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் நினைவு கொண்டால் ஒவ்வொரு நொடியிலும் உங்கள் நல்ல குணங்களை நீங்களே தெளிவாக்கிக் கொண்டுவர முடியும்.

அவ்வாறு நீங்கள் தெளிவாக்கிக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் இது முழுமை பெற்றால் சந்திரன் எப்படி பூரண நிலாவாகின்றதோ அதைப் போல இந்த உடலிலுள்ள உணர்வுகள் அனைத்தும் அந்த ஒளியின் சிகரமாக மாறும்.

ஒளியாக மாறிய பின் இந்த உடலை விட்டுச் சென்ற பின் இந்த உயிராத்மா பிறவியில்லா பெரு நிலைகள் அடையும்.
1.அத்தகைய நிலை பெறச் செய்வதற்கும்
2.இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை அகற்றிடவும்
3.தீமையற்ற செயலாக நம் உடலுக்குள் வளர்த்திடவும்
4.நம் எண்ணத்தால் நம்மைக் காத்துக கொள்வதற்கும் தான் இதை உபதேசிப்பது.

இப்போது பதிவு செய்ததை நீங்கள் ஒவ்வொரு நொடியிலேயும் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவினைச் செலுத்தினாலே போதும்…!

குட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கிளி… எலி… அணில்… ஜோதிடம் இப்படிப் பல நிலைகளைச் செய்வது எந்த நிலை கொண்டு…?

இவை எல்லாமே கரு வித்தையின் செயல்தான். அந்தந்தப் பிராணிகளின் உடலில் கருவின் மையை ஏற்றிவிடுவார்கள். அவரின் பழக்கப்பட்ட பரிபாஷைகள் இப்பிராணிகளுக்குத் தெரிந்திடும்.

இவர்கள் சொல்லும் பெயர் நாமத்தைக் கேட்டு அந்தப் பிராணிகள் ஜோதிடம் செப்பிடும் நிலையாக வரும். அதாவது…
1.அந்தப் பிராணியின் உடலிலுள்ள குட்டிச்சாத்தான்தான்
2.அவன் சொல்லும் நாமகரணத்திற்குகந்த செயல் கொண்ட
3.எந்த நிலை பெற்ற குண நிலைக்குகந்த ஏடுகளை ஓதிட வேண்டுமோ அதனையே சரியாக எடுத்துத் தரும்
4.இவர்கள் மன நிலைக்குகந்த சொல்வாக்கே அதிலும் காணப்படும்.

அவ்வெண்ணமுடனே இவர்கள் செயல்பட்டால் அதன் தொடர்ச்சி நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் இருந்திடும். இவ் உலகினில் பல பாகங்களில் இச்சூனிய வேலை நடக்கின்றது.

பிறரைத் தன் வசியப்படுத்தவே இக்கரு வித்தை வேலையெல்லாம் செய்யப்படுகின்றன. ஆவியின் தொடர்புப்படுத்தி தன் உடலிலேயே பல ஆவிகள் துர் ஆவிகளை ஏற்றிக்கொண்டு அதனை ஏவி சூனியம் செய்வார்கள்.
1.சூனியத்திற்கு அடிமைப்பட்டவன்
2.அச்சூனியத்தினாலேதான் அதனுடைய ஆத்மாவும் பிரியும்.

பிற இடத்தில் ஜெபம் செய்து பல பொருட்களை வைத்துவிட்டு இக்குட்டிச்சாத்தானின் தொடர்புடைய நாமத்தை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜெபித்தால்…
1.அவ்வாவியான குட்டிச்சாத்தானே அப்பொருளை இவர்கள் “வா…!” என்றவுடன்
2.இவர்களின் கையில் அப்பொருள் கிடைக்கும் நிலையில் செய்து தரும்.
3.இவர்கள் வைத்த பொருள்தான் அங்கிருந்து வருமே ஒழிய
4.ஆகாயத்தில் இருந்து ஆண்டவனால் செய்விக்கப் பெற்ற உருவச் சிலையோ விபூதியோ புஷ்பமோ
5.எவையுமே இவர்களிடத்திற்கு மாறுபட்டு வராது.

இந்த நிலையிலுள்ள எந்தெந்தச் சாமியார்கள் ஆகட்டும்… அல்லது மந்திரவாதிக ஆகட்டும்… அவர்களால் மக்களை ஏமாற்றிடும் செயலுக்குத் தன் புகழ் உயர.. தன் நாமத்தினால் பொருளீட்டி… இச்செயலையெல்லாம் செய்வித்து
1.மக்களை மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை
2.தன் ஆத்மாவையே… தானே ஏமாற்றி வாழ்கின்றார்கள்.

சொந்தமில்லா இவ்வுடலின் வாழ்க்கை எத்தனை நாட்களுக்குச் சொந்தமப்பா…?

“இருக்கும் ஒரே சொந்தம்” நம் ஆத்ம சக்தியை இயற்கை என்னும் சொந்தமுடன் சொந்தமாக்கி நம் ஆத்மாண்டவனை நல்வழியில் செயலாக்குவதை விட்டு சாமியார்கள் என்ற நாமத்தில் ஏன் ஆண்டவனின் நாமத்தையே அடிமைப்படுத்திடல் வேண்டும்…?

இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கையின் வித்தே இத்தகைய சூனியக்காரர்களினால் வந்த நிலைதான். நம் பூமியில் நாம் வாழும் இக்கண்டத்தில் தன்னை றியாமலே நம்மில் பலர் இதற்கு அடிமை கொண்டு வாழ்கின்றனர்.

நமக்கும் மேல் சீனாவிலும் ஜப்பானிலும் இன்னும் சில ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் அரேபிய நாடுகளிலும் இந்த நிலை அதிகம். ஒவ்வோர் இடத்திலும் வாழும் மனிதர்களின் எண்ண நிலைக்கொப்ப அங்கு வாழும் கருவித்தை வேலைகளும் நடக்கின்றன.

நம் பூமியில் இங்கே இந்த இந்திய தேசத்தில்தான் பல ரிஷிகளும் சப்தரிஷிகளும் உரு பெற்று… “உயர்ந்த நிலை எய்தியவர்கள் அதிகம் வாழ்ந்த பூமி இது…”

அவர்களின் எண்ண ஓட்டமும் (சப்த அலைகள்) அவர்கள் விட்ட சுவாசத்தின் சப்த அலையையும் தாங்கி வாழும் நிலைதான் இப்பூமியின் நிலை.

கரு வித்தையின் குட்டிச்சாத்தான் ஏவலில் உள்ளவர்கள் இதை உணர்ந்து நல் ஆத்மாவாய் இப்பொருள் என்னும் பேய்க்கு அடிமைப்படாமல் வாழ்ந்திட வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்…!

நம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…!

 

பிற மண்டலங்களிலிருந்து வருவதை 27 நட்சத்திரங்கள் நவக்கோள்கள் கவர்ந்து வெளிப்படுத்துவதை சூரியன் கவர்ந்து தன் சுழற்சி வேகத்தால் அந்த அணுக்களில் உள்ள விஷத்தினைப் (அல்ட்ரா வயலட்) பிரித்து விடுகின்றது.

மனிதனுடைய ஆறாவது அறிவோ நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றி அதை நீக்கிவிடுகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ பேருடன் நாம் பழகுகின்றோம்… பார்க்கின்றோம். ஆனால் சந்தர்ப்பத்தால் அவர்கள் படும் வேதனைகளைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுக்க வேண்டும்.

1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.அந்த அருள் உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக்கிடும்… அந்த அறிந்திடும் தெளிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.

ஆனால் வேதனை கொண்ட நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மையை இதிலே கலந்து விட்டால் இங்கே மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது. நுகர்ந்தாலும் அதை வைத்து உங்கள் வேதனைகளை நிவர்த்தி செய்ய முடியாது.

1.அதாவது பிறிதொரு மனிதன் வேதனைப்பட்ட உணர்வு நம் நல்ல அறிவை மறைக்கும் போது
2.இன்னொரு சாதாரண மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அதை மாற்ற முடியாது.

மாற்ற வேண்டும் என்றால் “வேதனை என்ற நஞ்சினை நீக்கி… அதை ஒளியாக மாற்றிடும்…” அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று உடலுக்குள் இணைக்க வேண்டும்.

மீண்டும் இதைத் தெளிவாக்குகின்றேன்…!

உங்கள் வாழ்க்கையில் நல்லது செய்வதாக எண்ணி ஒரு வேதனைப்படும் மனிதனை உற்றுப் பார்த்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்கின்றீர்கள்… உதவி செய்கின்றீர்கள்…!

ஆனால் உங்களிடமிருக்கும் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவரின் வேதனைப்பட்ட அந்த விஷமான உணர்வு இணைந்து உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது… மறைத்து விடுகின்றது. இதுதான் சிறு திரை – “சித்திரை…” என்பது.

அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும். அதை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே ஞானிகளின் பால் ஒன்றச் செய்து இங்கே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அந்த மகரிஷிகளுடன் இணைத்து விட்டால் அந்த வேதனையான உணர்வினை நுகர்வதைத் தவிர்த்து அருள் உணர்வுகளை வலுப் பெறச் செய்யும்.

அப்படி அந்த மகரிஷிகளின் உணர்வை வலுப்பெறச் செய்யும் நிலைக்குத்தான் உங்களுக்குத் தெரியாமலேயே இந்த உபதேசத்தின் வாயிலாக அதைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

உங்கள் நல்ல அறிவைக் காக்க இது உதவும்…!

மை… தாயத்துக்கள்…! உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மலைப் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மந்திரவாதிகள் பல மண்டை ஓடுகளை வைத்துப் பூஜிப்பர். அதுவும் அல்லாமல் அம்மண்டை ஓட்டின் சொந்தம் கொண்ட உடலின் நிலையிலிருந்து மை எடுத்து அதனையும் இம்மண்டை ஓட்டையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

மையை யார் யாருக்கெல்லாம் தாயத்துகளாய்த் தருகின்றார்களோ அவர்களின் நிலையும் மந்திரவாதியின் நிலைக்கும் தொடர்பு பட்டு சில நிலைகளை அறிந்திடத்தான் இவர்கள் பூஜையில் அம்மண்டை ஓட்டை வைப்பது.

இவர்கள் மை தயாரிப்பது எந்நிலையில்…?

மயானத்தில் அர்த்த ஜாமத்தில் சில உடல்களை கூடிய வரை கருச் சிசுக்களைத்தான் (இறந்த சிசுக்களை) இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். வளர்ந்து ஆசைப்பட்டு குடும்பப் பற்றுடன் நீத்தாரின் உடல்கள் இவர்கள் செயலுக்கு செயல்பட்டு வராது.

அவர்களின் ஆத்ம எண்ணமே தன் குடும்ப நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும். அதனால்தான் இக்கரு வித்தை மந்திரவாதிகள் எல்லாரும் தாயின் கர்ப்பத்தில் தோன்றும் முதல் சிசுவை அது இறந்துவிட்டால் (தலைச்சன்) அதனுடைய உடலை புதைத்துச் சென்ற பிறகு அதைத் தோண்டியெடுத்து இவர்களின் செயலுக்காக அவ்வுடலை ஈடுபடுத்துகின்றனர்.

நம் மூதாதையர் காலத்தில் முதல் தலைச்சன் சிசு காலமானால் அதன் உடலை சிறிது பின்னப்படுத்தித்தான் அடக்கம் செய்வார்கள். பின்னப்படுத்திய அச்சிறு சதையை இவர்கள் தாயத்தாக்கி பூஜிப்பார்கள். அந்நிலையில் அச்சிசுவின் ஆவி இங்கு செயல்கொள்ளும் ஏவலின் நிலைக்கு ஒத்து வராது.

இப்பின்னப்ப்டா இறந்த சிசுவை எடுத்துச் சென்று பெரிய மண் பானையில் அச்சிசுவின் உடலை இட்டு அப்பானைக்கும் கீழ் இரண்டொரு பானைகளை வைத்து பெரும் நெருப்பிட்டு எரியவிட்டு கீழ் எரியும் நிலையிலிருந்து மேல் பானைக்கு அவ்வுஷ்ணம் பட்டு அச்சிசுவின் உடலில் இருந்து கசியும் அதன் அமில நீர் சக்தி எல்லாம் எரிய எரிய வடிந்து இக்கீழ்ப் பானையில் மெழுகு போன்ற மை பதத்தில் ஒட்டிக் கொள்ளும்.

சிசுவை இட்டுள்ள பானைகளில் துவாரம் வைத்திருப்பார்கள். இச்சிசுவின் மைக்கு வேண்டிய அமில நீர் சக்தியெல்லாம் ஈர்த்த பிறகு அச்சிசுவின் சக்கை உடலை அதே நெருப்பிலிட்டு அதன் அவயங்களையும் சேகரித்து அதன் அவயவத்தை வெந்த நிலையில் வைத்து மண்டை ஓடுகளுடன் அங்கங்களையும் சேர்த்துப் பூஜிப்பார்கள்.

இவ்வமில நீரில் அவ்வுடலின் வெந்த சாம்பலையும் சேர்த்து மைபோல் மசிய வைத்து பூஜித்து பில்லி சூனியம் ஏவல் மையிடுதல் போன்ற நிலைக்கெல்லாம் இச்சிசுவின் நிலையை ஏவுவார்கள்.

கருப்பு நிறம் கொண்ட இந்த மையையே தன் நெற்றியில் இட்டுக் கொண்டும் தாயத்துக்கள் செய்து மையை அதனில் வைத்துத் தன் உடலிலும் அணிந்து கொள்வார்கள்.

இவர்களின் பொருளாசைக்குகந்த நிலைப்படுத்திட இக்குட்டிச்சாத்தானை ஏவுவார்கள். ஒவ்வொரு மந்திரவாதியும் ஒரு சிசுவிலிருந்து மட்டும் தன் ஏவலைச் செயல்படுத்துவதில்லை. பல சிசுக்களையும் இந்நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.

இவர்கள் ஏவிய நிலைக்கெல்லாம் அக்குட்டிச்சாத்தான்கள் ஆவி உருவில் சென்று பல உண்மைகளை அறிந்து வரும்.

1.“மாரியம்மாள் காளியம்மாள்…” என்று மனிதர்கள் மத்தியில் இச்சக்தியின் நாமத்தைச் செப்பியே பேய் ஓட்டுவதைப் போலவும்
2.“மாரியாத்தா ஆடு கேட்கிறாள்… கோழி முட்டை கேட்கின்றாள்…!” என்றெல்லாம் சொல்லி
3.அவர்கள் வைத்திருக்கும் குட்டிச்சாத்தான்களின் ஆசைக்கு உகந்த உணவுகளைப் படைத்து
4.இவர்கள் தங்களுக்குகந்த செயலை முடித்துக் கொள்கின்றனர்.

எந்த மாரியம்மனும் காளியம்மனும் உயிரைப் பலி கேட்பதில்லை…! மனிதன் தன் ஆசைக்குத் தான் இது போன்ற செயலைச் செய்கின்றான்.

உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்

 

அருள் மகரிஷிகளின் அருளால் நாம் நம்முடைய மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

அவர்கள் அந்த ஒளி நிலை பெற்றால் அதனுடைய துணை கொண்டு நாம் இந்தப் புவியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட முடியும்.

உடலுக்குள் வரும் தீமைகளில் இருந்து விடுபட்டு நம் உணர்வின் தன்மை என்றும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிரே நமக்குச் சொந்தம்.
2.உயிரின் தன்மை சொந்தமாக்க வேண்டுமென்றாலும்
3.இப்பொழுது உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் இருக்கின்றோம்.

நாம் எதை எண்ணுகின்றோமோ உயிரிலே பட்டவுடன் உயிர் இந்த உடலை இயக்குகின்றது. உயிர் தான் இயக்குகிறது என்று யாரும் எண்ணவே இல்லை. “நான்…” என்று இந்த உடலைத் தான் எண்ணுகின்றோம்.

ஆனால் அவனால் உருவாக்கப்பட்டதுதான் இந்த உடல் என்ற நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். உயிரை வேண்டி நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதையே உருவாக்குகின்றது.

1.ஒருவருக்குக் நாம் கடுமையான தீங்கு செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம்
2.அதை உயிர் உருவாக்குகின்றது… அந்த உணர்வை உடலுக்குள் பரப்புகின்றது.
3.அதனின் செயலாகவே அந்தத் தீமை செய்யும்படி நம்மைச் செய்கின்றது.

அதே சமயத்தில் ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம். அந்த நல் உணர்வின் தன்மையை உயிர் அதை இயக்கிக் காட்டுகின்றது.

ஆனாலும்…
1.நாம் தீமையின் உணர்வைப் பெற வேண்டுமென்று எண்ணினால்
2.அந்தத் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து
3.இந்த உடல் அழுகுகின்றது… வேதனைப்படுகின்றது….!

எவரை வேதனைப்படச் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோமோ அந்த வேதனைப்படும் உணர்வுகள் அணுக்கள் நமக்குள் விளைந்து அதே வேதனையை உருவாக்குகின்றது.

கீதையிலே சொன்னபடி “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” என்று அதனின் வளர்ச்சியாகத் தான் நாம் அடைகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள வேண்டும்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.தீமையை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால்
3.தீமையை அகற்றும் உணர்வுகள் நமக்குள் பெருகி
4.தீமையற்ற உணர்வாக நமக்குள் ஆகி… “நாம் அதுவாகின்றோம்…”

ஆகவே முதலில் மூதாதையருடைய உயிரான்மாக்களை விண் செலுத்துங்கள். ஒவ்வொரு நொடியிலும் இதைப் போல செய்யுங்கள்… மறவாதீர்கள்…!

மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை ஒடுக்கி ஒளியாக மாற்றியவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்

 

உதாரணமாக கோழி விஷமான உணவுகளை (ஜெந்துக்களை) உணவாக உட்கொண்டாலும் அந்த விஷத்தின் தன்மையை ஒடுக்கி தன் தசையாக மாற்றித் தன்னிலை அடைகின்றது. அதே போல் மயில் போன்ற பெரும்பகுதி பறவை இனங்களும் விஷத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி கொண்டவைகள்.

இதைப் போலத்தான் மனித வாழ்க்கையில் வந்த கடும் தீமையினுடைய நிலைகளையும் அதனுடைய செயலாக்கங்களை ஒடுக்கித் தன் இணைப்பின் நிலையாகச் செயல்படுகின்றார்கள் மகரிஷிகள்.

அப்படி செயல்பட்டவர்கள்… தன் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளனர்.

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட பேரருள் உணர்வுகளை அதன் பின் வந்த மனிதர்கள் கவர்ந்து தன் உடலில் அது ஒவ்வொன்றிலும் இணைக்கப்படும்போது மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலைகளை மாற்றி அமைத்தனர்.

அவ்வாறு உயிருடன் ஒன்றி ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிச் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலம் என்பது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே சுழன்று கொண்டுள்ளார்கள்.

அதாவது உணர்வின் தன்மை ஏழாவது நிலை அடைவதுதான் சப்தரிஷி என்பது. மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு தீமைகளைத் தனக்குள் செயலாக்காது தடுத்து ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் அடக்கி ஒளியின் உணர்வாகத் தன் உடலிலே வளர்த்துக் கொண்டால்
1.இந்த உடலைவிட்டுச் சென்ற பின்
2.எந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ
3.அதன் உணர்வுகள் நமக்குள் வலுப்பெறப்பட்டு
4.துருவ மகரிஷி எப்படித் துருவ நட்சத்திரமாகி வளர்ந்து கொண்டுள்ளோரோ
5.அந்த ஈர்ப்பு வட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் அடுத்து உடல் பெறும் விஷத்தன்மைகளை ஒடுக்கிவிடும். பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றி விடுகின்றது. அதன்பின் நமக்குப் பிறவி இல்லை.

விண்ணுலகில் உருவாகும் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பெரும் கூட்டமைப்பாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர். அதைத் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பார்கள்.

1.அந்தக் கூட்டமைப்புக்குள் மனிதனாகச் சென்றவர்கள் அனைத்தும்
2.சாதாரண கண்ணுக்குப் புலப்படாத அளவுகளுக்கு ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக
3.வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டு உள்ளார்கள்… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்…!

இன்றைய பிழைப்புக்கு என்ன வழியோ அது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர்

 

இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் இனத்துக்குள் ஒன்றுடன் ஒன்று தன் இரைக்காக மோதுவதும் உண்டு.

அதே சமயத்தில் தன் இனத்தின் தன்மை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு. ஞானிகள் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளனர்.

இதைப்போன்று உயர்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் உணர்வின் தன்மைளை உடலிலிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் செலுத்தப்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்து விண் சென்றுள்ளார்கள்.

அதிலே விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதனான அகஸ்தியன் ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதிலிருந்து உணர்வின் அலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் அது பரவச் செய்து கொண்டுள்ளது.

இதைப்போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும்போது அதைச் சூரியன் கவர்ந்து தனது உணவாக உட்கொண்டு வெப்ப காந்தங்களாக அதன் அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிலருக்கு இதை எல்லாம் (ஞானகுருவின் உபதேசங்களை) படிக்கும் போதும் கேட்கும் போதும் சில வித்தியாசமான நிலைகள் ஏற்படலாம்.
1.நமக்கு இது எல்லாம் எதற்கு…?
2.ஏனென்றால் நாளைக்கு விடிந்தால் சோறு இருந்தால் போதும்.
3.குருடனுக்குக் கண் தானே தேவை…
4.நாளைக்கு என்ன ஆகப்போகின்றதோ…? ஏது ஆகப்போகின்றதோ…! இன்றைக்கு எனக்கு இரண்டு சோறு கிடைத்தால் போதும்
5.ஞானகுரு ஆசீர்வாதம் இருந்தால் போதும்
6.தொழில் கிடைத்தால் போதும். தொழில் நல்ல முறையில் நடந்தால் போதும்.
7.என் உடல் நோய் தீர்ந்தால் போதும் என்ற இந்த உணர்வில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
8.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலுள்ள அணுக்களில் சேர்க்கப்பட்டு
1.“நம்மை அறியாமல் வேதனையை உருவாக்கி… நல்லவைகளை எண்ண விடாதபடி
2.நமக்குள் வேதனையை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

இதை நாம் மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அடைந்து மீண்டும் நாம் உயிரணுக்களின் தோற்றங்களில் ஆரம்பத்தில் விஷ அணுக்களாகத் தோன்றியது போல் நம்மை இந்த உணர்வுகள் அனைத்தும் விஷ அணுக்களாக மாற்றப்பட்டுவிடும்.

மீண்டும் புழுவாக பூச்சியாக பாம்பாக தேளாகத்தான் மீண்டும் பிறக்க வேண்டிய நிலை வரும். எனென்றால் இந்த இயற்கை மாற்றங்களில் அதனுடைய இயக்கம் எது…? என்ற நிலைகளில்
1.எதனுடைய கலவைகள் அதிகமாகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு தான் மாறுகின்றது… மாற்றம் அடையச் செய்கிறது.

இன்று மனிதனாக இருக்கின்றோம் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

உயிரின் துடிப்பால் உடலில் உண்டாகும் உஷ்ண நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

வான் வீதியில் வட்டமிட்டுக் கொண்டே உள்ள மண்டலங்களும் நட்சத்திர மண்டலங்களும் இந்தப் பால்வெளி மண்டலத்தில் வளர்ச்சி கொண்டுள்ள சில நிலைகளும் ஒன்றைத் தாண்டி ஒன்று ஓடும் நிலைக்கும் ஜீவன் வேண்டும்.

உஷ்ண அலைகளைக் கொண்ட நிலையில்தான் அததற்கு உயிர்த் துடிப்பே வருகின்றது.
1.அதி உஷ்ணத்தை எதுவும் ஏற்பதில்லை.
2.அதி குளிர்ச்சி பனிக்கட்டியாக உறைந்த நிலையிலும் தாவர இன வளர்ச்சி வளர்வதில்லை.

இன்று நம் பூமியின் நிலை எந்த நிலையில் அது சுழலும் தன்மை கொண்டு காற்று மண்டல வட்டத்திற்கு மேல் உஷ்ண அலைகளை நம் பூமி வெளிப்படுத்துகின்றதோ அந்த நிலையில்தான் ஒவ்வொரு கோளங்களுக்கும் அதன் சுழற்சியில் காற்று மண்டலமும் அம்மண்டலம் கக்கும் உஷ்ண நிலையும் செயல் கொள்கின்றது.

மனித உடலுக்கும் சரி ஒவ்வொரு ஜீவனுக்கும் சரி…
1.அதனைச் சுற்றி சப்த அலை உண்டு
2.சப்த அலைக்குச் சிறிது தள்ளி உஷ்ண அலை உண்டு.
3.இந்த மனிதனின் உடல் வெப்ப நிலையும் அம்மனிதனைச் சப்த அலையின் வெப்பக் காற்றும் ஒன்றாய்த்தான் இருந்திடும்.

தாவரங்களுக்கும் இந்த நிலையுண்டு. இதைப் போல் இவ்வுலகம் மற்ற எல்லா மண்டலங்களுக்குமே இப்படிப்பட்ட உஷ்ண அலைகள் உண்டு.

சந்திரனின் நிலை குளிர்ந்த நிலை என்று முன்னர் உணர்த்தினேன். ஒவ்வொன்றிற்கும் அதனதன் சுழலும் வேகம் கொண்டு இவ்வுஷ்ண அலைகள் மாறுபடுகின்றன.

இவ்வுஷ்ண அலை கக்கும் நிலையே எந்த மண்டலத்திற்கும் ஓர் இடத்தில் இருக்கும் நிலை மற்றொரு இடத்தில் இருந்திடாது. எல்லா ஜீவராசிகள் தாவரங்களின் நிலைக்கும் இத்தகைய நிலை உண்டு.

அது போல் சூரிய மண்டலத்திற்குச் சென்றிட முடியாது… “அது உஷ்ணமான கோளம்…” என்று விஞ்ஞானத்தில் உணர்த்துகின்றனர். ஆனால் அங்கே அப்படி இல்லை…!

என்ன கிரகமோ… என்ன சனியனோ…! நம்மைப் பிடித்து ஆட்டுகிறது என்று பேச்சு வழக்கில் சொல்வதன் இயற்கை நிலை என்ன…?

 

1.பால்வெளி மண்டலத்தில் ஓடிக்கொண்டே உள்ள மண்டலங்களின்
2.ஒன்றின் ஈர்ப்பும் அதன் அமில சக்தியும் மற்றொன்றின் நிலைக்கு மோதுவதால்
3.ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அந்த ஈர்ப்பின் சக்தி நிலை கூடுகின்றது.

அனைத்து மண்டலங்களுமே சுழன்றே ஓடிக்கொண்டுள்ளன. ஒன்றுக்கு உகந்த சக்தி மற்றொன்றுக்கு இல்லை. சூரியனை மையப்படுத்தி சுழன்றோடும் இந்த 48 மண்டலங்களுக்கும் தனித்தனி தன்மை உண்டு.

நம் பூமியில் இன்றுள்ள சப்த அலைகளும் சுவையும் மற்ற இயற்கையில் தோன்றிடும் தாவரம் கனிவளம் இப்படிப் பல நிலைகள் வேறு மண்டலங்களில் மாற்றம் கொண்டுள்ளன.

நம் பூமியின் சக்தி நிலை போன்ற அதிக சக்தி கொண்ட மண்டலம் சூரியனை மையப்படுத்திச் சுழன்றிடும் இந்த 48 மண்டலங்களுக்குமே இல்லை.

நம் பூமிக்கு வியாழனிலிருந்து இன்று எப்படி நீர்நிலைகள் வந்திடும் சக்தி கிடைத்தது…? வியாழனிலிருந்து அதன் சுழலும் வேகமும் சூரியனின் சுழலும் வேகத்திற்கும் இரண்டின் ஈர்ப்பில் ஏற்படும் நிலை அதன் நேர் நிலை கொண்ட நம் பூமிக்குக் கிடைக்கின்றது.

வியாழனின் நிலை இல்லாவிட்டால் “நம் பூமிக்கு நீரில்லை…” இதே போல் செவ்வாயின் சக்தி நம் பூமிக்கு எந்த நிலையில் பாய்கின்றது…?

நம் பூமியிலிருந்து செவ்வாய் மண்டலமும் வியாழன் மண்டலமும் காணுவதற்கு நட்சத்திர மண்டலம் போல் இன்றும் தெரிந்து கொண்டுள்ளன.

பல கோடி நட்சத்திரங்களில் ஒன்றாய்க் காண்கின்றோம். செவ்வாயில் நிறைந்துள்ள சக்தி “நம் பூமிக்குச் சப்த அலைகளைப் பாய்ச்சும் சக்தி…”

உம் சப்தமே வெளி வராத நிலைக்கான காற்றில்லா அடைப்பில் இருந்தால் கேட்டிடுமா…? அதைப் போல் பூமிக்கும் மையமான சூரியனுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள செவ்வாயின் நிலையினால் செவ்வாயின் சக்தியையும் மோதுண்டு அதன் ஒளி அலையையும் நாம் பெறுகின்றோம்.

1.செவ்வாயின் சுழலும் தன்மை கொண்டு அதன் அமிலத் தன்மையும்
2.சூரியன் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத்தன்மையும்
3.கலவை பெறும் இடத்திலிருந்து தான் “சப்த ஒலி” பிறக்கின்றது.

இதே நிலை கொண்டு நம் பூமிக்குத் தொடர்பு கொண்ட சந்திரனின் ஈர்ப்பு நிலை அமில நிலை வேறு. சந்திரனின் நிலை இல்லாவிட்டால் நாம் காணும் இவ்வண்ணங்களே இல்லை.

பல சக்தியை நம் பூமி ஈர்த்து நம் பூமியின் சக்தியை சந்திரன் பெறுவதினால் சந்திரனுக்கும் நம் பூமிக்கும் அதிகத் தொடர்பு உள்ளதினால் நம் பூமியின் நிலையைக் காட்டிலும் சந்திர மண்டலம் உருவில் சிறிதாகவும் அதே நிலையில் பல சக்திகளைத் தன்னுள் அடக்கிய வளரும் தருவாயில் உள்ள மண்டலம்.

நடக்க இருக்கும் மாற்ற நிலையினால் சந்திரனுக்குச் சப்த அலையும் இன்று ஒரே நிலையில் இரவு பகல் என்ற மாறுபட்ட குண நிலை பெறாமல் சுழன்றிடும் சந்திர மண்டலத்தில் நீர் நிலை சப்த ஒலியின் நிலையும் ஏற்படப் போகிறது.

அந்த வளர்ச்சி நிலை ஏற்பட்டு அதற்குப் பின் பல நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியையும் சந்திரன் பெற்ற பிறகுதான் அதன் வளர்ச்சியில் ஊரும் உயிரினங்கள் உருப்பெற்று ஜீவ உடல் கொண்ட உயிராத்மாக்கள் தோன்றிடும் காலம் வரும்.

1980ல் நடந்த அந்தக் கிரகண கால நிலைக்குப் பிறகு நம் சூரிய கிரகமுடன் பல நிலைகள் மாற்றம் ஆகிக் கொண்டுள்ளது.

இப்படிக் கிரகணம் பிடிக்கின்றது ஒவ்வொரு கோளும் சூரியனை…!

இதனால் சூரியனுக்கும் சூரியனை நேர் கொண்ட மண்டலத்தை எந்தக் கிரகம் தாண்டிச் செல்கின்றதோ அந்த மண்டலத்திற்கும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. (நாம் சந்திப்போர் குணங்களுக்குத்தக்க நம்மை நன்மை தீமை என்று எப்படிப் பாதிக்கிறதோ அது போல்…!)

நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணத்திலும் (அறிவிலும்) மகரிஷிகளின் உணர்வை இணைத்து நல்லதைக் காக்கும் கவசமாக்க வேண்டும்

 

நாம் பிறருடைய தீமைகளைப் பார்க்கும்போது நம் நல்ல உணர்வுகளை அந்த விஷத் தன்மையான உணர்வுகள் மறைத்து விடுகின்றது. (ஒரு திரை போல்)

அப்படி மறைத்ததைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்து
2.அவ்வப்போது நம்மை மறைக்கும் அந்தச் சிறு சிறு திரைகளை அகற்றிட வேண்டும்.
3.அன்றன்று அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிவாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

எதன் துணை கொண்டு…?

அதற்குத்தான் இப்போது இடை மறித்து இடைமறித்து உங்களுக்குள் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்ப உபதேசிகின்றேன். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என்றால் உங்களுடைய உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுடன் இணைக்கச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் ஒவ்வொரு அறிவிலும் (உணர்விலும்) இணைத்த பின்
2.தீமைகளைக் கவராது “அந்தந்த அறிவு” அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.

அத்தகைய நிலைகளை உருவாக்கினால்தான்… இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளும் காற்று மண்டலத்தில் இருக்கும் நச்சுத் தன்மைகளும்… பிற மனிதன் செய்யும் தவறான உணர்வும்… விஞ்ஞான அறிவால் ஏற்படும் தீமைகளும் நமக்குள் புகாது… நம்மை இயக்காது… தடுக்க முடியும்.

பகுத்தறிவு கொண்டு படித்திடும் விஞ்ஞான அறிவை எழுத்து வடிவில் உற்றுப் பார்த்து அதன் உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் பதிவு செய்து கொண்டாலும்… இங்கே பூமியிலே பரவிக் கொண்டிருக்கும் உணர்வுகளை நாம் கவர்ந்தாலும்… அது எல்லாம் நம் ஆன்மாவில் இணைந்து கொண்டே உள்ளது.

அதாவது… எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் தீமைகள் படர்ந்துள்ளதோ அது நம் பூமியான இந்த பரமாத்மாவில் (காற்றிலே) வளர்ந்துள்ளதோ இதைப் போல நம் ஆன்மாவிலும் இது உண்டு.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் எண்ணிலடங்காத அணுக்கள் ஜீவான்மாக்களாக வாழுகின்றது. ஆகவே இந்தப் பூமியில் எந்த அளவுக்குத் தீமைகள் பரவி உள்ளதோ அந்தத் தீமையின் உணர்வுகளை நம் எண்ணத்தால் (நம் சந்தர்ப்பம்) பதிவாக்கி இருந்தால் அந்தத் தீமையின் அணுக்கள் உடலுக்குள்ளும் விளையும். அந்த அணுக்கள் தீமைகளைத் தான் விளைவித்துக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் எலும்புக்குள் ஊனாக இருக்கின்றது. அந்த எலும்புக்குள் ஊனாக இருக்கப்படும் பொழுது அதனின் வளர்ச்சி
1.ஒரு மனிதனைக் கண் கொண்டு பார்க்கும்போது அவர் தவறு செய்கின்றார் என்று பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் அதே நினைவு கொண்டு கண்ணுக்கு வரப்படும்போது
3.எந்த மனித உடலிலிருந்து தவறு செய்யும் உணர்வுகள் அலைகள் வந்ததோ
4.அந்த உருவத்தை நமக்குள் நுகரச் செய்து அதே கோபத்தின் உணர்வுகளையோ அல்லது
5.அவனைக் கண்டு அஞ்சியிருந்தால் அந்த அச்சத்தையோ நமக்குள் செயலாக்குகின்றது.
நமக்குள் பதிவு செய்த இந்த வித்து… “ஊழ்வினை” என்ற நிலையில் வினைக்கு நாயகனாக அந்த உணர்வின் இயக்கமாக்கி நம்மை அதன் வழிகளில் வளர்த்துக் கொண்டுள்ளது.

அதைப் போன்ற தீமைகளை (வினைகளை) மாற்றுவதற்குத்தான் திரும்ப திரும்பச் சொல்லி உங்கள் உணர்வின் ஈர்ப்புகளை ஞானிகளின் பால் கொண்டு வரச் செய்கிறோம்.

எந்த அளவுக்குக் கூர்ந்து பதிவாக்கி அந்த அருள் சக்திகளை எண்ணி உங்களுக்குள் எடுக்கின்றீர்களோ முந்தைய நிலையில் உங்களுக்குள் சேர்ந்த தீய விளைவுகளையும் இதன் மூலம் மாற்றி அமைக்க முடியும்

உபதேசத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் நோக்கமே அதற்குத் தான்…!

சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கேள்வி:
விஞ்ஞானத்தில் அவர்கள் கண்டுபிடிப்பிலிருந்து சந்திர மண்டலத்தில் உயிரணு இல்லை… நீர் நிலையும் இல்லை…! இந்தச் சூழ்நிலையில் உயிரினங்கள் எப்படி எப்படி வாழ முடியும்…?

ஈஸ்வரபட்டரின் பதில்:
காற்றுடன் நீர் இல்லா விட்டால் அந்த மண்டலத்தின் சுழற்சியில் ஒளி ஏது…? உயிரணு இல்லா விட்டால் மண்டலத்திற்கு வளர்ச்சி ஏது…?

அந்த மண்டலமே உருப்பெற உயிரணுக்களை உண்டல்லவா அதன் கழிவை உஷ்ண அலையாய் வெளிப்படுத்தி அதன் வழியில் தொடர் கொண்டு வளர்ச்சி கொண்டு வளர்கின்றது.

பால்வெளி மண்டலத்தில் காற்றும் உண்டு நீரும் உண்டு உயிரணுக்களும் உண்டு.

வானமாகப் பரந்து விரிந்துள்ள பால்வெளி மண்டலத்திற்கே ஜீவன் உண்டு என்ற நிலையில் சந்திரனுக்கு ஏனப்பா நீரும் உயிரணுவும் இல்லையென்று விஞ்ஞானத்தில் செப்புகின்றனர்…?

1.காற்றுடன் கலந்துள்ள ஜீவனான நீர் இல்லா விட்டால்
2.அந்த மண்டலத்திற்குச் சுழற்சி ஏது…?
3.அதிலிருந்து பௌர்ணமி நிலவாகக் காண்கின்றோமே அந்த ஒளியும் ஏது…?

நம் பூமியைப் போல் அடர்ந்த கடல் நிலைகள் நிறைந்த நீர் நிலை அங்கே இல்லை. நீர் நிலையிலிருந்து வெளிப்படும் அமில சக்தியினால் நம் பூமி முழுவதுமே செயல் கொண்டு ஆங்காங்கு பெய்திடும் பருவ மழையினால் உண்டான நீர் நிலைகள் ஆறு ஏரி குளம் குட்டைகள் இப்படி சந்திரனில் இல்லை.

சந்திரனில் கண்டுபிடித்த நிலை போல் நம் சூரியனிலும் எந்த நிலையில் நீர்நிலை உள்ளது…? என்று உணர்த்தினார்களா…?

ஆனால் வரப்போகும் மாற்றத்திலிருந்து அடர்ந்த நீர் நிலைச் சக்தி சந்திரனுக்குக் கூடப் போகின்றது. நம் பூமியைப் போல் பருவ மழைகளைக் காணாத மண்டலம் அது. சந்திரனில் இன்றளவும் மழை பெய்ததில்லை.

சந்திரனில் நீர் இல்லாவிட்டால் சந்திரனிலிருந்து தோண்டி எடுத்து வந்தார்களே அந்தக் கல் எப்படி வளர்ந்தது…?

1.பனியான நிலை என்றுமே சந்திரனுக்கு உண்டு
2.குளிர்ந்த மண்டலம் அது…!
3.அதன் சுற்றலில் பனித்துளி போன்ற நீர் நிலைகள் படிந்து அதன் கசிவில்
4.நசநசப்புத் தன்மையில் சுழன்று கொண்டுள்ள குளிர்ந்த மண்டலம்தான் சந்திரனின் இன்றைய நிலை…!

நம் பூமியில் கிணறுகள் தோண்டி நீரை எடுப்பதைப் போல் சந்திரனுக்கு அந்தச் சக்தி நிலையில்லை. நீர் நிலை அடர்ந்து உள்ள மண்டலத்திலத்தில்தான் அந்த மண்டலத்துடன் கூடிய எந்த இடத்திலும் நீரைக் கண்டிட முடியும்.

1.நம் பூமியிலிருந்து விண்கலத்தை அங்கே ஏவி இந்த மனித சுவாசத்தை அங்கு விட்டு வந்துள்ளானே
2.அச்சுவாச நிலையின் வெக்கையில் தோன்றிடும் உயிரணுவிற்கு
3.இப்பூமியில் இருந்து சென்ற சக்தி நிலைதானே வேண்டும்…!

அன்று வியாழனிலிருந்து பூமிக்கு உயிரினங்கள் வந்தது போல் தான் இதனின் நிலையும் இருந்திடும்…

ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை மூலமாக அண்டத்தையே அளந்தறியும் சக்தியை எடுக்கச் சொன்னார்கள் ஞானிகள்.. எடுக்கின்றோமா…?

 

விஞ்ஞானிகள் எந்தக் கோள் எங்கே… எந்தத் திசையில் செல்கின்றது…? என்ற உணர்வினை தொலைநோக்கிகள் மூலம் கவர்ந்து பதிவாக்குகின்றார்கள் ஒரு கம்ப்யூட்டரில். பின் ஆயிரம் மடங்கு அதைப் பெருக்குகின்றார்கள்.

பெருக்கிய பின் என்ன செய்கின்றனர்…?

இந்த உணர்வின் அதிர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டபின் எந்த கோளின் உணர்ச்சிகள் (FREQUENCY WAVES) வருகின்றதோ அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.

1.நாடாக்களில் பதிவு செய்து
2.இராக்கெட்டை உந்து விசையால் விண்ணிலே உந்தச் செய்து அதனின் முகப்பில் வைக்கின்றான்
3.திசை… எல்லை… பாதை… எதுவுமே அமையாமல் இருக்கும்போது
4.எந்த கோளின் உணர்வலைகள் அங்கே பரவிக் கொண்டுள்ளதோ
5.அந்த திசைப் பக்கம் வந்தபின் அழுத்தமானபின் இராக்கெட் அதனுடன் சேர்ந்து செல்கின்றது
6.அதன் உணர்வின் ஒலி அதிர்வுகள் ஆனபின் தரை மார்க்கத்தில் இருந்து எடுக்கின்றான்.

இதைப் போலத்தான் அன்று மெய் ஞானி தனது மனிதனின் வாழ்க்கையில் நாம் எதை எப்படிப் பெற வேண்டும்… என்று உணர்ந்து மனிதன் இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்ற நிலைகளைத் தெளிவாக்கினான்.

இந்த உயிரின் தன்மை பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனை எப்படி உருவாக்கியது…? என்ற நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காக விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்க்கும்படி செய்து நீர் நிலைகள் இருக்கும் பக்கம் விநாயகரை வைத்தான்.

விநாயகருக்கு முன்னாடி எலியை வைத்தான்… மூஷிகவாகனா..! (சுவாசநிலை).
1.நாம் சுவாசித்த உணர்வுகள் கொண்டு வாழ்க்கையில் நடந்து வந்த ஒவ்வொரு நிலைகளும்
2.கணங்களுக்கு அதிபதியாகி இன்று பரிணாம வளர்ச்சியாகி நாம் மனிதனாக வந்தோம்
3.நாம் உணவுகளை எப்படி உட்கொள்கின்றோம்…? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
4.இந்தப் பிள்ளையார் (பிள்ளை யார்…?) என்று கேள்விக்குறி வைத்து நம்மைச் சிந்திக்கச் செய்கின்றனர்.

காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஆற்றிலே குளித்து உடல் அழுக்கைப் போக்குகின்றோம்… துணி அழுக்கைப் போக்குகின்றோம். அன்றைய கால நிலையில்…!

கரையேறி வந்தபின் விநாயகரை உற்றுப் பார்த்து… ஆதிமூலம் என்ற (நம்) உயிர் பல பல உணர்வின் தன்மைகளை இந்த உயிர் ஈசனாக இருந்து மனிதனாக நம்மை எப்படி உருவாக்கியது…? என்ற உண்மையை அறிவதற்காக இந்த கணங்களுக்கு எல்லாம் ஈசா “கணேசா…” என்று உயிரை வணங்கச் செய்கின்றனர்.

பின்… இந்த உலக உண்மைகளை எல்லாம் உணர்ந்த அன்று வாழ்ந்த அகஸ்தியன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியுமாக இரண்டறக் கலந்து விண்ணுலகை உணர்வினை ஒளியாக மாற்றி…
1இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதை நினைவாக்கிப் பதிவாக்கிக் கொள்ள
2.நம் நினைவினை விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார்.

இந்த உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கி அந்த அகஸ்தியன் நஞ்சினை எப்படி வென்றானோ அதே வழியில் நாம் வெல்லும் சக்திக்காக விநாயகரை இங்கே வைத்தான்.

அதாவது… டி.வி. ரேடியோவில்…
1.எப்படி எந்த ஸ்டேஷன் வேண்டுமோ அந்த அலைவரிசையில் நாம் அதைத் திருப்பி வைக்கின்றோமோ
2.அதைப் போல் பதிவின் எண்ணமாக்கி நஞ்சை வென்றிடும் சக்திகளை நாம் நுகரும்படி வைத்தான் ஞானி.

ஆகவே காலை எழுந்தவுடனே அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா… என்று அவனிடம் வேண்டி அந்தச் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

ஏனென்றால் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ பகைமை உணர்வை நம் கண்டிருப்போம். அதன் வழி தொடர்ந்து நம் உறுப்புகளில் இந்த அணுக்கள் சேர்ந்திருக்கும். ஏனென்றால் நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து தான் உணர்வின் தன்மையை மற்ற அணுக்கள் பகிர்ந்து கொள்கின்றது.

நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த விஷத்தின் தன்மை இங்கே வராதபடி நமக்குள் நட்பின் தன்மை வர வேண்டும் என்பதற்குத்தான் இரத்தங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நேரடியாகச் சேர்க்கச் சொல்கிறோம்.

ஆக இராமன் காட்டிற்குள் செல்லும்போது எப்படிக் குகனை நண்பனாக்கிக் கொண்டானோ அது போல்
1.அருள் மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் சேர்க்கப்படும் போது
2.நமக்குள் பகைமை உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைக்கப்பட்டு
3.உடலில் உள்ள அனைத்து அணுக்களையும் நண்பனாக்கும் நிலையைக் கொண்டு வருகின்றது.

இத்தகைய சுவையின் உணர்வுகளை ஒளியின் தன்மையை மனிதன் தனக்குள் எப்படி உருவாக்க வேண்டும் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரம்.

அந்த இராமாயணத்தில் உள்ள மூலங்களை இது போல் தெரிந்து கொண்டால் மனிதன் தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்ற உண்மையை உணர முடியும்.

இவ்வாறு மனிதர்களான நாம் இனி எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைப்படுத்திக் காட்டினான் அருள் ஞானி.

இன்றைய உலக மாற்றத்திற்கு வித்திட்டவர்கள் அன்றாண்ட அரசர்கள் தான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சக்தியின் சக்தி பெற்று… பூமியில் மனித ஆத்மாவாய் அறிவு நிலை பெற்று… ஆக்கத்தின் செழிப்பினால் அகிலத்தையும் ஆளும் செழிப்பைப் பெறத் தகுதி பெற்ற மனிதனே படைப்பில் முதிர்ந்த படைப்பு. முழுமுதல் கடவுள் மனிதன் தான்.

அத்தகைய எண்ண வளர்ச்சியாக இந்தப் பூமியில் மனித ஆத்மாவாய் வாழும் பக்குவம் பெற்று அந்த உயிரணுவிற்குத் தொடர் நிலை கொண்ட அமில சக்தி கூடப் பல கோடி ஆண்டுகள் ஆயிற்று.

ஆகவே பெரும் பாக்கிய சக்தி என்பது இன்று மனிதனாக வாழும் சக்தியே…!

இருந்தாலும்… இயற்கையின் செழிப்பில் அன்பு கொண்ட இதயமாய் வாழ்ந்து வந்திட்ட நிலையையே
1.அறிவில் மிஞ்சியே நிலை என்ற கணிப்பில்
2.ஒவ்வோர் இடத்தில் வாழ்பவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
3.அவர்களில் ஒருவரைத் தலைவனாக்கி அரசாளும் நிலைப்படுத்தி விட்டனர் இந்தப் பூமியில்.

அந்த வட்டத்தின் வழியிலேயே அவர்களைச் சார்ந்த இனத்தவரை எல்லாம் தனி ஓர் இனமாய்ப் பிரித்து ஜாதி வெறியூட்டி ஒருவரின் உயர்வில் ஒருவர் பொறாமை கொண்டனர்.

இதன் தொடர்ச்சி நிலையிலேயே இன்றளவும் மனிதனின் எண்ண வளர்ச்சி வளர்ந்து இக்கலப்பான சக்தி நிலையை ஊட்டி ஊட்டி…
1.இன்றைய மனிதன் ஒவ்வொருவனும் தனக்குள் உள்ள ஆண்டவனை மறந்தே உள்ளார்கள்.
2.தானும் இந்த நாட்டின் மன்னன் என்ற நிலையில்
3.ஒவ்வொருவரின் மனப்பாங்கும் “இம்மதிப்பின் பேராசை வெறியில்” வழி வந்துவிட்டது.

இன்று நம்முடன் வாழ்ந்திடும் மனிதர்களால் மட்டும் ஏற்படவில்லை இன்றைய இந்தக் கலியின் இழி நிலை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முதலே “ஆட்சி என்னும் வித்திட்டு” அழிவதற்கு… மனித எண்ணங்களுக்குப் பாதை வகுத்துத் தந்தவர்கள் அன்றாண்ட அரசர்கள்தான்.

இன்றைய செயற்கையில் இம்மனித எண்ணங்களின் நிலை இன்று பிறப்பில் மட்டும் வந்திட்ட நிலையில்ல. நற் சக்தியின் பயனும்… சொல்லில் செயலும் மாறிவிட்டது.

செயற்கையில் இந்தப் பூமியின் பொக்கிஷத்தை உறிஞ்சி எடுத்ததல்லாமல் இப்பூமியிலிருந்து ஏவிவிட்ட விஷத் தன்மை கொண்ட ஊசிகளும் (இராக்கெட்) காற்று மண்டலத்தையும் பிரபஞ்சத்தையும் நஞ்சாக்கி விட்டது.

இன்றல்ல நேற்றல்ல இவ் ஏவுகணை அனுப்பும் நிலையே இப்பூமியில் பல நூறு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வந்த நிலையினை…
1.நம் பூமியின் வட்டத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற கிரகங்களுக்கும் அனுப்பிவித்த ஏவுகணைகளெல்லாம்
2.இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தினால்
3.ஒவ்வொரு மண்டலத்திற்கும் இதன் தொடர்பினால் மாற்றம் ஏற்படப் போகின்றது…! என்பதனை உணர்த்தினேன்.

பால்வெளி மண்டலத்தில் ஏவச் செய்த விஷ ஊசிகளும்… ஏவுகணைகளின் நிலையில் நிறைந்துள்ள அணுவிசை சக்திகளும்… இனி நடக்கப் போகும் மாற்றத்தினால் அங்கங்கு செயலிழந்து அதனின் சுற்றலுக்குகந்த அருகாமை கொண்ட மண்டலங்களில் மோதி அவற்றின் நிலையிலிருந்தும் பல தீய சக்திகள் ஏற்படத்தான் போகின்றன…!

1.இயற்கையின் சக்தியே மாற்றம் கொள்ளும் சீற்றம் கொள்ளும் நிலையெல்லாம்
2. இம்மனித ஆத்மாவினால்தான் நடக்கப் போகின்றன.

இம்மனித ஆத்மாவினால் மண்டலமாய் உருக்கொண்டு சுழன்றிடவும் முடியும். சுழற்சியின் சக்தியில் பல கோடி மண்டலங்களை வளர்த்திடவும் முடியும்.

1.ஆக்கத்தின் அறிவு சத்தியாக ஒளிரும் ஆத்மாவையே
2.அழிவின் சக்திக்கு அடிகோலும் பேராசை பேயின் நிலையில் சிக்குண்டு
3.தன் சக்தியைத் தானே நீங்கள் இழந்து விடாதீர்கள்.

கலியின் மாற்றத்தில் படப்போகும் இன்னலை உணர்ந்து கொள்ளுங்கள். இங்கே உணர்த்திடும் இச்சக்தி நிலையை உணர்ந்து ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கிடுங்கள்.

இக்கலியின் மாற்றத்தினால் சந்திரனுக்கு நம் பூமியின் தொடர்பும் ஈர்ப்பு சக்தியும் பழக்கப்பட்டு வந்திட்ட நிலையில் 1980ல் நடந்த சூரிய கிரகணத்திற்குப் பின் சந்திரனுக்குச் சில சக்திகள் கூடியது.

சூரியனைத் தாண்டிக் கேது சென்றதால் பூமிக்குக் கேதுவின் விஷ அணுக்கள் கூடி நம் பூமி இன்று சுழன்று ஓடும் வட்டத்திலிருந்து சிறிது கீழ் இறங்கிச் செல்லும் நிலை உருவானது.

அதே சமயத்தில் பூமியின் ஈர்ப்பு சக்தி… நம் பூமியின் பொக்கிஷ அமில சக்தியின் இயற்கைத் தன்மை… சந்திரனின் வட்டத்திற்கு அதிகமாகச் சேரத் தொடங்கியது.

நடந்த அன்றைய மாற்றத்தின் நாளிலிருந்தே சந்திரனில் நீர் நிலைகள் அதிகரிக்கும் தன்மை உருவானது. (விஞ்ஞானிகள் சமீப காலமாகத் தான் சந்திரனில் நீரைக் கண்டறிந்துள்ளனர்).

நம் பூமியின் பொக்கிஷ சக்தியே இந்த நீர் நிலைகள்தான். சந்திரனும் நம் பூமியின் ஈர்ப்பால் அந்தச் சக்தி நிலை கூடிக் கூடி வளர்ச்சி ஆகிக் கொண்டே உள்ளது.

இந்நிலையின் தொடர் வளர்ச்சி நிலை சந்திரனுக்கு உண்டு. மனித ஆத்மாவினால் மாறப்போகும் தன்மை நிலையிலிருந்து மீளுவதற்கும் இயற்கையில் சக்தியுண்டு. அதைத் தான் இங்கே தொடர்ந்து காட்டிக் கொண்டு வருகின்றேன்.

தீப ஒளித் திருநாள் – “கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்…” என்றால் ஞானிகள் கொடுத்த உண்மைகளை நாம் அறிதல் வேண்டும்

 

கண்ணின் நினைவு கொண்டு பிறர் வேதனைப்படுவதை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் நமக்குள் அணுவானால் நரகாசுரனாகி விடுகின்றது.

இருவர் சண்டை இடுகின்றனர்… அதிலே ஒருவன் கொலை செய்கின்றான்…! என்பதை நாம் உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாக மாறி நம் நல்ல குணங்களைக் கொன்று தின்று கொண்டே இருக்கும்.

1.கண்களால் பார்த்துத் தான்
2.நமக்குள் நுகர்ந்தறிந்து அதைத் தீமை என்று உணர்கின்றோம்.
3.இருந்தாலும் நம் உயிர் நுகர்ந்த உணர்வினை உடலுக்குள் அணுவாக மாற்றி விடுகின்றது.

இதிலிருந்து நாம் மீள வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரம் அருள் ஒளி பெற்று உணர்வின் ஒளியாக இருக்கின்றது. சூரியனின் காந்தப் புலனறிவு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அதிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தாங்கி அலைகளாகப் பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது.

நம் பூமியோ துருவத்தின் நிலைகள் கொண்டு அந்த அலைகளைக் கவருகின்றது. நமக்கு முன் பரவி வருகிறது.

தீப ஒளித் திருநாள் அன்று அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு ஒன்று கூடி அந்த அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் அனைவரது உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று அந்த வலுவைக் கூட்ட வேண்டும்.

உதாரணமாக நம் பிள்ளை சேட்டை செய்திருப்பான். அவனை வெறுத்துப் பேசுவதற்கு மாறாக அவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவனுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அவன் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் அன்னை தந்தையருடன் ஒன்றுப்ட்டு வாழ வேண்டும் என்று இப்படி நாம் எண்ணுதல் வேண்டும்,

அதே போல் மற்றவர்களிடம் முதலில் நண்பராகப் பழகி இருப்போம். ஆனால் சந்தர்ப்பத்தால் பகைமை உணர்வு வந்து ஒருவருக்கொருவர் வெறுப்படைந்திருப்போம்.

அதை எல்லாம் தடுப்பதற்காக நாம் பார்த்த நண்பர்கள் குடும்பங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும். அவர் குடும்பத்தில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் சாப அலைகள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அவர் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இப்படி எல்லோரும் ஏகோபித்த நிலைகள் எண்ணுதல் வேண்டும்.

பிறிதொருவர் என்று சொன்னாலும் அவரின் உணர்வுகள் நமக்குள் உண்டு…! உதாரணமாக
1.ஒருவர் நம்மைத் திட்டினார் என்றால் அவர் உணர்வு நமக்குள் வந்து
2.நாமும் பதிலுக்குத் திட்டும்போது அவரின் உணர்வு உடலில் வந்துவிடுகின்றது.
3.(அவர் உணர்வு இயக்கித் தான் நாமும் பதிலுக்குத் திட்டுகிறோம்).

அவன் திட்டிய உணர்வுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. அது நமக்குள் வந்து விடுகிறது. ஏனென்றால் உற்றுப் பார்க்கின்றோம்… பதிவாகிறது. பதிவானதை மீண்டும் எண்ணும் போது அந்த அலைகள் நமக்குள் வரத் தொடங்குகிறது.

ஒரு செடியில் வளர்ந்த சத்தினைச் சூரியன் எடுத்து வைத்துக் கொண்டால் அதிலே விளைந்த வித்தினை மீண்டும் நிலத்தில் ஊன்றும் போது நிலத்தின் துணை கொண்டு சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அந்தச் சத்தினை எடுத்துத் தான் அது செடியாக அது வளர்கின்றது. அந்தச் செடியின் இனப்பெருக்கங்கள் அதிகமாகின்றது.

இதே போல் தான் நமக்குள்ளும் பிறர் திட்டியது வேதனைப்பட்டது போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால்… உடலுக்குள் வந்து அந்த அணுவின் தன்மையாக அடைந்து விட்டால் அது அது தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

நம்மைக் காக்க அல்லது மற்றவருக்கு உதவி செய்ய என்று நாம் பரிவுடன் கேட்டறிந்தாலும் பிறர்படும் வேதனை உணர்வுகள் நமக்குள் அணுவாகின்றது.

1.ஏற்கனவே சொன்ன மாதிரி அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை எல்லாம் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது.
2.அது நமக்குள் புகாதபடி தடுக்கவில்லை என்றால் அதே வேதனை அதே கோபம் நமக்குள்ளும் விளைந்து
3.அசுர குணங்களாக நமக்குள் மாறத் தொடங்கும்.

ஆகவே நாம் கண்களால் பார்த்து நுகர்ந்து இது போன்ற அசுர உணர்வுகளாக வளர்வதைத் தடுக்க வேண்டும்.

அதற்குத் தான் அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்த அருள் ஒளி பெற வேண்டும் எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்.

அப்பொழுது அந்த வேதனையான உணர்வைத் தணிக்கச் செய்கிறது. அதே சமயத்தில் அது போன்ற தீமைகளை நீக்கக்கூடிய சக்தியும் நாம் பெறுகின்றோம்.

இப்படி எல்லோரும் எண்ணும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வுகளை (அலைகளை) காலை ஆறு மணிக்கெல்லாம் சூரிய உதயம் வரும் பொழுது அது கவர்ந்து பூமியின் காற்று மண்டலத்தைக் கடந்து லேலே பிரபஞ்சத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றது…. அங்கே கரைத்து விடுகின்றது.

அதனால் பகைமை ஊட்டும் உணர்வுகள் நம் பூமியில் தணிகின்றது இப்படி நம்மை நாம் காத்துக் கொள்ளும் வழிகளைத்தான் அன்று ஞானிகள் தெளிவாகக் கூறி உள்ளார்கள்.

நேற்று வியாழன்… இன்று பூமி… நாளை சந்திரனா… – ஈஸ்வரபட்டர்

 

ஒன்றின் துணையுடன் ஒன்றியே மற்றொன்றின் செயல் நிலை உள்ளது. தொடர் நிலை இல்லாத செயல் நிலை எதுவுமே இல்லை. பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற சக்தியை ஈர்த்துச் செயலாக்கும் சக்தி உண்டு. வானமும் பூமியும் எதுவுமே ஒன்றின் தொடர் இல்லாமல் ஒன்றில்லை.

வியாழனில் இருந்து தான் நம் பூமிக்கு உயிரணுக்கள் வந்து தோன்றின என்பதனை ஏற்கனவே உணர்த்தினேன்.

நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் வாழ்ந்த பூமி தான் வியாழ மண்டலம். ஆனால்
1.மனித உடல் கொண்ட அறிவு நிலையும் செயல் திறமையும்
2.எண்ணத்தின் வளர்ச்சி சக்தி கொண்ட மனித ஆத்மாக்களும் இன்று அங்கில்லை.

ஆனால் அங்கிருந்து வந்தவர்கள்தான் நாம் எல்லாரும்…!

இம்மனித உடல் எய்தி வாழ்ந்திடும் ஆத்மாக்களில் முதலில் தோன்றிய உயிரணுக்களின் தொடர் சக்தி வியாழனில் இருந்து வந்தது தான்.

நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் அங்கு வாழ்ந்த காலத்திலேயே…
1.தன் அறிவினால் எண்ணத்தில் ஜெயம் கொண்டு
2.சூட்சுமம் கொண்டோரின் சக்தியினால் வியாழனின் சக்தித் திறனை நம் பூமி ஈர்த்து வாழப் பழகி கொண்டவுடன்
3.சூட்சுமத்தில் உள்ளோரால் (வியாழனிலிருந்து சூட்சுமம் கொண்டவர்கள்) நம் பூமியின் இயற்கையின் வியாழனின் சக்தித் தன்மை கூடி
4.நீர் நிலைகள் பெருக்கம் கொண்டு மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் பக்குவ நிலை வந்தடைந்த பிறகு
5.சூட்சுமத்தில் அங்கிருந்து வாழ்ந்து வந்தவர்களால் அவர்களின் தொடர்ச்சியை இப்பூமியில் வளரவிட்டு
6.அதன் தொடர் நிலையிலிருந்து வந்தது தான் இக்கலி காலம் வரை இப்பூமியின் இன்றைய நிலை.

சூட்சுமம் கொண்டு செயல்படுபவர்களிலும் தன் இனப் பெருக்கத்தைச் செயலாக்கும் ஆசை நிலை உண்டு…!

நம் பூமியில் வந்து வாழ்ந்து சூட்சுமம் கொண்ட போகர் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது செயலைக் கொண்டு பல மருத்துவ நிலைகளையும் பக்தி நூலையும் ஏடுகளையும் இப்பூமியில் பதியச் செய்தார்.

தன் நிலை உணரவும் தன் சக்தியின் சக்தியைப் பலருக்கும் பரப்பும் ஆசையுடன் செய்திட்ட நிலை தான் போகரின் நிலை.

முருகருடன் ஒன்றிய எண்ணம் கொண்டோருக்கெல்லாம் போகரின் சக்தியில் ஈர்த்துச் செயல்படுத்தி அவ்வட்டத்தின் வளர்ச்சியையே ஓங்கச் செய்கின்றார்.

1.மனித ஆத்மாக்களுக்கு மட்டுமல்ல ஆசை நிலை – ரிஷிகளுக்கும் ஆசை உண்டு
2.ஆசை இல்லாவிட்டால் எதுவுமே இல்லை…!

பேராசைப் பிடியில் சிக்குண்டு அடிமைப்படாமல் அன்பான ஆசையில்தான் அனைத்துமே செயல் கொள்கின்றது. வியாழனில் வாழ்ந்தவரின் ஆசையினால் தான் நம் பூமி சக்தி பெற்றது…!

நம் பூமியில் வாழ்ந்து செயல் கொண்டு சூட்சுமம் கொண்டோரினால் சந்திரனில் சக்தி நிலை கூடப்போகின்றது. சந்திரனுக்கு நம்மை ஒத்த உயிராத்மாக்கள் சென்று வாழ்வதற்கே இச் சூட்சுமம் கொள்வோரின் சக்தியினால்தான் செயல்படுத்திட முடிந்திடும்.

1.சந்திரனில் மனித ஆத்மாக்கள் வாழப்போகும் நாட்களின் நிலை ஒரு வருடமல்ல… இரண்டு வருடமல்ல…!
2.ஆயிரம் ஆண்டு காலம் ஆனாலும் ஆகலாம்.

பல கோடி ஆண்டுகளாய் பல நற்சக்திகளை ஈர்த்து இயற்கையிலே பல பொக்கிஷங்களைப் பெற்றிட்ட நம் பூமியே… இக்கலியினால்… கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களினால்… “மாற்றம் கொள்ளப் போகின்றது…”

நம் பூமியின் மாற்றத்தினால்…
1.இக்கலியினால் வந்த மனித ஆத்மாவினால் நிகழப்போகும் இயற்கையின் கொடுமையான மாற்றத்தினால்
2.நம் பூமி மட்டுமல்ல இதன் தொடர்பினால் ஒவ்வொரு மண்டலத்திற்கும் இம்மாற்ற நிலை ஏற்பட்டு
3.பால்வெளி மண்டலமும் நம் சூரியனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்
4.எழுத்திலும் எண்ணத்திலும் எண்ணத்தகா மாற்ற நிலை
5.இக்குறுகிய காலத்தில் நிகழத்தான் போகின்றது…!

ஏகாந்த நிலை

 

நீங்கள் ஒவ்வொருவரும் காலை துருவ தியான நிலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று அந்த சக்தி மனைவிக்குப் பெற வேண்டும் என்றும் மனைவி கணவனுக்குப் பெற வேண்டும் என்றும் தங்கள் தாய் தந்தையருக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும் என்றும் இப்படி யாரெல்லாம் தியானிக்கின்றீர்களோ அப்பொழுது பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்…!

இந்த மனித உடல் கிடைத்த பின் இந்த உடலிலிருந்தே சொர்க்க பூமி என்றும்
1.நம் உயிர் சொர்க்கவாசல் என்றும்
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதன் வழி (உயிர்) சென்று
3.பிறவியில்லா நிலை அடையும் அருள் ஞானத்தை நாம் பெறுதல் வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நமக்கு எதுவுமே சொந்தமானது இல்லை… நிரந்தரமானது என்று எதுவும் இல்லை.

உயிருடன் ஒன்றிய இந்த உணர்வை ஒளியாக மாற்றுவதுதான் நமக்குச் சொந்தம். பேரின்பப் பெருவாழ்வு என்ற பேரானந்த நிலை கிடைக்கின்றது. அதுவே ஏகாந்த நிலை என்று ஆகின்றது.

இதைத்தான் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

நாம் அனைவரிடமும் பழகுகின்றோம். பழகும் போது ஒவ்வொருவர் உடலிலும் பகைமை உணர்வுகள் சலிப்பு உணர்வுகள் குரோத உணர்வுகள் கோப உணர்வுகள் கொதித்தெழும் உணர்வுகள் இதைப் போன்று எத்தனையோ உணர்வுகளை நாம் கேட்டறிகின்றோம்.

இந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி தடுப்பதற்காக துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

1.நாம் பார்ப்போர் உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் தொழில்கள் வளம் பெற வேண்டும்.
4.அவர் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
5.எங்கள் பார்வையில் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.
6.எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.
7.எங்களைப் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று
8.இந்த முறைப்படி எண்ணினால் இது தான் ஏகாதசி விரதம்…!

எத்தகைய பகைமை உணர்வும் நமக்குள் உருவாகாதபடி அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்கி அனைவருடைய எண்ணங்களையும் நமக்குள் ஒன்றாகச் சேர்த்து பகைமையற்ற வாழ்க்கை வாழும் இந்த விரதம் தான் விரதம்.

ஆக.. எந்தத் தவறும் நமக்குள் உட்புகாதபடி பாதுகாத்துக் கொள்வதே ஏகாதசி விரதம்.

அண்டத்திலே உணவு இல்லாது எந்தச் சக்தியும் ஜீவிப்பதில்லை… செயல்படுவதில்லை – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகமே…
1.இக்காற்றுடன் பால்வெளி மண்டலத்திலுள்ள அமில சக்தியையும்
2.பூமியின் மேல் மட்டத்தில் இப்பூமி சுழலும் வேகத்தில் அதன் ஈர்ப்பில் சூரியனிலிருந்து வெளிப்படும் அமில சக்தியையும்
3.மற்ற மண்டலங்களின் சக்தியையும் தன் சுவாசமுடன் உணவாய் ஈர்த்து
4.அதன் சக்தியைத் தன் மண்டலத்திற்கு வேண்டிய அமிலத்தைச் சேமித்துத்தான்
5.பூமியின் கழிவான உஷ்ண அலைகள் வெளிப்பட்டுப் பல நிலைகள் ஏற்படுகின்றன.

மனித உடலுக்கு நாம் உண்ணும் உணவு அமிலமாய் ஆவி நிலை கொண்டு நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் அச்சக்தி மோதி இவ் ஆவியான அமில உணவே உதிரமாய் (இரத்தம்) உருப்பெற்று நம் உடலிலுள்ள அனைத்துப் பாகங்களின் செயலுக்கும் செல்கிறது.

1.அந்த உதிரமே பல அணுக்களாய் அவற்றிலிருந்து எடுக்கும் சக்தியைக் கொண்டுதான்
2.நம் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் அததற்கு வேண்டிய அமில உணவை உண்டு
3.எலும்பாகவும் மயிர்க்கால்களாகவும் நகங்களாகவும் வளர்ந்து கொண்டே உள்ளது.

எலும்பின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தால், நம் உருவ அமைப்பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா..? ஆனால் குறிப்பிட்ட கால வயதுக்கு பிறகு இவ்வளர்ச்சியின் நிலை மாறு கொள்கின்றது.

குழந்தையின் எலும்பின் உறுதித் தன்மைக்கும் வளர வளர முதியோர்களான பிறகு உள்ள எலும்பின் உறுதிக்கும் மாற்றம் உள்ளது. எப்படி யானையின் தந்தம் வயதான பிறகு அதனுடைய உறுதி கூடுகின்றதோ அந்த நிலை போன்றுதான் எலும்பின் வளர்ச்சி நிலையும்.

குறிப்பிட்ட வயது வரம்பிற்குப் பிறகு உடல் வளர்ச்சி மாற்றம் கொள்ளும் நாளிலிருந்து வெளி வளர்ச்சிக்கு மேல் நம் (மனிதனின்) உள் உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சியில் மாற்றங்கள் உண்டு.

1.நாம் உண்ணும் உணவிலிருந்து சுரக்கும்
2.அமில சக்தியின் ஆவி நிலைதான் நம் உணவிற்கு சக்தி தரும் நிலை.

நம் பழக்க வழக்கப்படி நம் உணவை உட்கொண்டு பழகினோமோ அதே அமில சக்தியின் வளர்ச்சியின் நிலை கொண்ட நிலையைத்தான் நம் உடல் ஏற்கிறது.

முசுக்கொட்டைத் தளையை மட்டும் உட் கொண்டிடும் பட்டுப்புழுவின் உடலிலிருந்து அது எடுத்த ஆவியின் அமிலத்தினால் தான் பட்டை எடுக்க முடியும். அந்தப் பட்டுப் புழு முசுக்கொட்டைத் தளையைத் தவிர வேறு உணவை உண்டால் அதன் நிலையில் இப்பட்டை நாம் எடுத்திட முடிந்திடாது.
1.அதைப் போல்தான் ஒவ்வொன்றின் நிலைக்கும் செயல் நிலை நடக்கின்றது.
2.மனிதனின் நிலையும் அதுவே…!
3.மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் அதுவே.
4.உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை.

ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவிலிருந்து தான் மற்றொன்றின் வளர்ச்சி ஏற்படுகின்றது.

மனித உடல் என்ற கோளத்திலேயே பல உயிரணுக்கள் வாழ்கின்றன. அவை அவை உண்டு வெளிப்படுத்தும் அமிலத்திலிருந்துதான் மற்ற நிலைகள் ஏற்படுகின்றன.

1.நாம் உண்ணும் உணவு ஆவியாய்… அமிலமாய்… உதிர சக்தி பெறுகின்றது
2.அவ்வாவி ஆன பிறகு நாம் உண்ட உணவின் தன்மை அதன் சக்கை மலமாய் வெளிப்படுகின்றது.

அந்த ஆவி அமில உதிர சக்திதான் அதில் வளரும் உயிர் அணுக்களின் நிலையைக் கொண்டு நம் உடம்பிலுள்ள மயிர்க்கால்கள் வளர்ச்சி பெறுகின்றன. ஒவ்வொரு முடியும் வளர்வதற்கே அவ்வுயிரணுக்களின் நிலையிருந்தால்தான் வளர்ந்திடும்.

இந்த நிலையை வைத்துத்தான்…
1.நம் ஆத்மாவுடன் நம் உயிர் மட்டுமல்ல
2.பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன என்று உணர்த்தினேன்,

இன்றுள்ளவர்களின் நிலை சாங்கிய சாஸ்திரத்திலிருந்து தப்ப முடியாத நிலைகளாகத்தான் உள்ளது – நடந்த நிகழ்ச்சி

 

எம்முடன் (ஞானகுரு) 20 வருடம் பழகியவர்களும் அவர்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் இங்கே வந்தால் (தபோவனம்) தீட்டு…! போகக் கூடாது…! என்று எண்ணுகின்றார்கள்.

1.இறந்த பின் இன்னொரு இடத்திற்குப் போகக் கூடாதா…?
2.கோயிலுக்குப் போகக் கூடாதா…?
3.கோயிலுக்குப் போகாமல் நல்ல நிலை பெறச் செய்வது எது…?

நல்ல நிலை பெறச் செய்வது தான் ஆலயம்…! அனைவரும் கூடி உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாவை ஒளி நிலை பெறச் செய்ய வேண்டும். இது தான் ஞானிகள் காட்டியது.

தீட்டு… தோஷம்… என்று சொல்லிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா 48 நாட்கள் கழித்து இன்னொரு உடலுக்குள் போன பிற்பாடு தான் இங்கே வரப்போகின்றார்கள்.

இது எல்லாம் எந்த நல்ல நிலையைச் செய்தாலும் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை பெற்றாலும் யாம் சொன்ன நிலைகளை மறந்து விடுகின்றார்கள்.

இங்கிருந்து திருப்பதிக்குப் போனவுடனே உண்டியலில் காசு போடுகின்றோம் அல்லவா…? போகும் போது என் சார்பாக நீங்கள் என் காசையும் உண்டியலிலே போட்டு விடுங்கள்…! என்பார்கள்.

ஏனென்றால் இப்படித் தேடிக் கொண்டு வந்து போடச் சொன்னால் அதற்காக வேண்டி நமக்குச் “செல்வத்தைக் கொடுப்பான்…” என்ற நிலைகளில் அந்தப் பழக்கத்தில் தான் சிலர் உள்ளார்கள்.

அதே பழக்கத்தில் தான் இங்கே என்ன செய்கின்றார்கள்…?

“இறந்து விட்டார்…” என்று சாங்கியம் செய்து சாம்பலை எடுத்துக் கரைத்து விட்டு ஆற்றுக்குச் சென்று எல்லாரும் குளித்துவிட்டு மந்திரத்தைச் சொல்லி வீட்டிற்கு வந்து எண்ணெய் தேய்த்து முழுகி விட்டுச் சுற்றமும் உறவும் புத்தாடைகள் கொடுத்து அணிகின்றனர்.

பின் மாவிளக்கு செய்து நெய் தீபம் இட்டு விநாயகருக்குக் கொண்டு அர்ச்சனை செய்து மோட்சத்திற்கு அனுப்பும் பழக்கம் தான் உள்ளது.

1.இந்தப் பக்குவம் பெற்ற அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற்று
3.அவர் (இறந்தவர்) உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நேரடியாக விண் செலுத்த வரவில்லை.

ஏனென்றால் தீட்டு ஒட்டிகொள்கின்றது என்ற நிலைகளில் இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட உணர்வுகள் கொண்டு அந்த மெய் வழியைக் காணும் நிலைகளைத் தடைப்படுத்திடும் காலமாகத் தான் உள்ளது. இதிலிருந்து விடுபடும் காலம் எப்பொழுது வரப்போகின்றது…? என்று தெரியவில்லை.

ஏனென்றால் என்னுடன் (ஞானகுரு) நீண்ட நாள் பழக்கமான சித்தையைன் என்ற அன்பர் ஆன்மா திடீரென்று மறைந்து விட்டது. தகவல் கொடுத்தார்கள். தியானத்தின் மூலம் உந்தி மோட்சத்திற்கு அனுப்பி விட்டோம்.

பழனிச்சாமி இங்கே வருகின்றார். எல்லாம் இருக்கின்றது… ஆனால் மருமகன் இறந்து விட்டார்…! என்றால் உடனே அழுகை வருகின்றது.

ஏன் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு வரக் கூடாதா..? என்றேன்.

“தீட்டு…! என்று சொல்கின்றார்கள்…” என்கிறார்.

நாம் அனைவரும் மோட்ச லோகம் போக வேண்டும்… நாம் அதற்காக மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துத் தியானிக்க வேண்டும்…! என்ற நிலைகள் இல்லை.

செய்த பாவங்களை நீக்குவதற்காகச் சாங்கியங்கள் செய்யும் நிலைக்குத் தான் வருகின்றார்கள். இந்த உணர்வுகள் அடிப்பட்டால் மந்திரத்திற்குள் சிக்கி இன்னொருவனின் ஏவலுக்கு ஆளாகி ஆவியின் நிலையாகத் தான் இயக்க முடியுமே தவிர உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது.

நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு இதைத் தெளிவாக்குகின்றோம்.
1.நாம் எதனின் வளர்ச்சியில் குரு காட்டிய வழியில் அருள் உணர்வைப் பெறுகின்றோமோ
2.அதன் வழியிலேயே தான் செல்ல வேண்டும்.

ஏனென்றால் இன்று விஷம் கொண்ட உலகில் வாழுகின்றோம். அதனை அகற்றிடும் நிலைகள் பெற வேண்டும்.

குடும்பத்தைச் சார்ந்தோர் அந்த ஆன்மாவை உந்தி விண் செலுத்தினால் உடல் பெறும் உணர்வை… அந்த இருளை அகற்றிவிட்டால் “அவர் நினைவு வரும்போதெல்லாம்..” நமக்குள் வரும் நஞ்சினை மாற்றும் அரும் பெரும் சக்தியாக வரும்.

உடலை விட்டுப் பிரிந்தவர்கள் யாரையும் இனி நாம் இங்கே இந்தப் பூமிக்குள் இழுக்கக் கூடாது. அவர்களை அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி அந்த உடல் பெறும் உணர்வுகளை அங்கே கருக்க வேண்டுமே தவிர “சுட்ட சாம்பலை இங்கே கருக்கிவிட்டால் பாவம் போய்விடும்…” என்றால் அசாத்தியமான நிலைகள் கொண்டு நமக்குள் தவறின் வழிகளிலே நாம் பிழை கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்.

என்னிடம் சொன்னவுடனேயே அந்த உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்தில் யாம் இணைத்து விட்டோம். ஆனால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒரு ஈ கூட வரவில்லை. ஏனென்றால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமாம்…!

கோயிலுக்குள் போகக் கூடாது… போனால் பாவமாம்…! ஆனால் கோவிலுக்குள் ஒருவர் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்…? கோவிலையே தூக்கிப் பேர்த்து எடுத்து விடுவார்களா…?

நல்ல ஒழுக்கம் கொண்டு நல்ல உணர்வுகளை வளர்ப்பதற்கு யாம் சொன்னாலும் இந்தத் தியான வழியில் என்னுடன் பழகி 20 வருட காலத்தில் அனுபவப்பட்ட குடும்பமே இந்த நிலையானால் இன்று வருவோர் என்ன நிலை ஆவார்கள்…?

1.அருள் ஒளி பெற வேண்டும் என்ற நிலையையும்
2.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் நிலையையும்
3.என்றுமே பிறவியில்லா நிலை பெற வேண்டும் என்றும்
4.நாம் எண்ணியதைத் தான் உயிர் உருவாக்குகிறது என்றும் தெளிவாகச் சொல்கிறோம்.

ஆனல் இவர்கள் வழிபடும் தெய்வம் தான் இவர்களைக் காப்பாற்றும் என்றால் அவர்கள் குடும்பத்தில் ஏன் சிக்கல் வருகின்றது…?

ஏனென்றால் இதைப் போன்ற நிலையில் ஒன்றை நாம் வளர்த்துக் கொண்டால்… “நான்…” என்ற நிலைகளில் மற்றவர்களை அடக்க வேண்டுமென்ற உணர்வுகள் அங்கே வரப்படும் பொழுதுதான் பகைமை என்ற உணர்வுகளாகின்றது.

அதனால் ஒருவருக்கொருவர் வேதனை என்ற உணர்வுகள் வந்து… கடும் நோயாகி மனிதனல்லாத உருவாக மாற்றும் நிலையே வருகின்ற்து.

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய அந்த மறைந்த நிலைகளைத் தான் மீண்டும் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இன்று விஞ்ஞான உலகில் மனிதனுடைய உருவே முழுமையாக அழியும் தன்மையிலிருந்து மீண்டிடும் நிலையைப் பெற வேண்டும் என்று சொல்கிறேன்… கேட்பார் யாருமில்லை…!

ஏனென்றால் 20 வருடம் பழகியவர்களே இந்த மாதிரி இருக்கின்றார்கள் என்றால் அப்புறம் எப்படி இருக்கும்…? விடிய விடிய உட்கார்ந்து எல்லா உண்மைகளையும் அவர்களிடம் சொல்லியிருக்கின்றேன். நான் ஞானம் பெற்ற நிலை… வளர்ந்த நிலை…! என்று எல்லாமே சொல்லியிருக்கின்றேன். அவர்களே இந்த நிலையில் இருக்கின்றனர் என்றால் அப்புறம் அதில் வேறு என்ன இருக்கின்றது…?

ஏனென்றால் எல்லாரும் அருள் ஞானம் பெற வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கின்றது. என் ஆசை என்றும் குறைந்ததில்லை…! எல்லாரும் பெற வேண்டுமென்ற ஆசையின் உணர்வு இருந்தால் நிச்சயம் அந்த அருள் ஒளியை நாம் பெறுகின்றோம்.

ஆனால் இப்படிச் சாங்கியத்தை செய்து பாவத்தைப் போக்கும் ஆசை இருந்தால் அவர்கள் அந்த வழியிலே போகட்டும்.

ஒவ்வொரு நொடிகளிலும் இந்த மனித வாழ்க்கையில் நாம் எதனின் நிலையை எடுக்கின்றோமோ நம்மை அறியாது சில குறைகள் எடுத்தால் அருள் ஒளி பெற்று நம்மை நாம் திருத்தி கொள்ளப் பழகுதல் வேண்டும்.

பிறரின் குறைகளைப் பற்றிச் சொல்லும் போது தனக்குள் இருக்கும் குறை வருவதில்லை. குறைகளை உணர்ந்தாலும் குறையைத் தான் திருப்பி வளர்க்க முடிகின்றதே தவிர குறையை நீக்கும் மார்க்கம் இல்லை.

ஆகவே நம்மை அறியாது இயக்கும் இது போன்ற அறியாமையிலிருந்து மீள்தல் வேண்டும். அப்படி மீள்வதற்கே இந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிப்பது…!

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் அணுக்களாக உருவாக்கி ஞான சக்தியாக மாற்ற வேண்டும்

 

கல்வியில் சிறந்தவன் ஆனாலும் ஞானம் இல்லை என்றால் கல்விக்காக நாம் கொடுத்த செல்வம் பாழாகிவிடும்.

ஏனென்றால் கற்றவன் மற்றவர்களை ஏமாற்றும் நிலைகள் கொண்டு சாதுர்யமாகத் தன் தாய் தந்தையரையும் ஏமாற்றுவார்கள். மற்றவரை ஏமாற்றத்தான் இந்தக் கல்வி பயன்படுகின்றது.

மற்றவரை வாழ வைக்க வேண்டும் என்ற ஞானங்கள் இந்தக் கல்வியில் வரவில்லை.
1.இன்றைய கல்வியின் நிலைகள் பார்த்தோம் என்றால்
2.தன் தாய் தந்தையரை ஏமாற்றிக் காசை வாங்கி
3.ஞானத்தை பேசும் நிலைகள் கொண்ட குழந்தைகளும் நிறைய உண்டு.

குழந்தை நன்றாகப் படித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தாய் தந்தை நினைக்கின்றனர். ஆனால் காசை வாங்கிவிட்டு அங்கே தவறான வழிகளில் செலவழித்துவிட்டு
1.நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று பொய் பேசி
2.இங்கே கல்வி கற்கும்போதே தவறான உணர்வுகள் வளர்த்துக் கொள்கின்றனர்.

அது மட்டுமல்லாது.. கல்வியில் மேற்படிப்புக்குச் செல்பவர்களை
1.முதல் நாள் உள் புகும் மாணவனை முகப்பிலேயே ஆண்பால் ஆனாலும் பெண்பால் ஆனாலும்
2.எவ்வளவு அசிங்கத்தை உருவாக்க முடியுமோ (ragging) அதைச் செய்து
3.படிக்க வருபவர்களைத் தீமையின் உணர்வோடு ஒன்றி வரத் தான் செய்கின்றனர்.

இதையும் அனுமதிக்கின்றது அரசு. பல ஆசிரியர்களும் அனுமதிக்கின்றனர். ஆனால் நாட்டைக் காக்கவும் மனித பண்பைக் காக்கவும் தான் கல்வி…! என்பதை மறந்து விட்டனர்

கல்வியில் மேற்படிப்பிற்குச் செல்லும்போது இப்படி அநாகரீக நிலைகளைச் செயல்படுத்துகிறார் என்றால் கல்வி கற்ற ஜட்ஜுகளோ கல்வி கற்ற வக்கீல்களோ இதற்கென்ற சட்டங்களை வைத்து நியாயத்தையும் தர்மத்தையும் வளர்க்கக்கூடிய நிலையில் இதை ஏன் ஒன்றுப்பட்டு நிறுத்த முடியவில்லை…?

எதிர்கால மாணவ மாணவிகளை அசுத்த வழியில் செலுத்தினால் அவன் நாட்டைக் காப்பானா…? அல்லது குடும்பத்தைக் காப்பானா…?
1.அவன் சுதந்திரத்திற்கு நல்ல குணங்களை அழிப்பான்
2.அவன் சுகத்திற்குத் தீய வழிகளிலே தான் செல்வான்
3.தீய மார்க்கங்களில் தான் செல்வார்கள்.

தீய மணத்தை நுகரும்போது நல்ல மணத்தை நுகர முடியாதபடி அந்த உணர்வுகள் மடியத்தான் செய்யும். வாழ்க்கையில் இழி நிலை கொண்டு பேயாகவும் பூதமாகவும் இந்த நிலைகள் உருவாக்கப்பட்டு மனிதனைச் சிதறச் செய்யும் உணர்வே பரவும்.

இது போன்ற நிலைகள் நாட்டில் இருந்து விடுபட வேண்டுமென்று மக்கள் எவராக இருப்பினும் கல்விச் சாலைகளுக்குச் சென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ர அருள் ஞானத்தினைப் போதியுங்கள்.

நீ என் வழியில்தான் வர வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவதும் அப்படி அவன் கேட்கவில்லை என்றால் தனித்துக் கூப்பிட்டு உதைக்கும் நிலைகள் வருகின்றது.

அப்படிப்பட்ட அசுர உணர்விலிருந்து மீட்கப் பழக வேண்டும். கல்விச் சாலைகளுக்குள்ளே அது போன்று செய்பவர்களை நுழைய விடாமல் செயல்படுத்த வேண்டும்.

ராகிங்… என்ற நிலைகளில் அசுர உணர்வு கொண்டு உதைப்பதும் தவறான நிலையில் செயல்படுவோரையும் நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருக்கலாம்.

தன்னுடன் இணைந்து ஒன்றி வரவில்லை என்கிற போது டாக்டர் படிப்புக்காகக் கற்றுக் கொண்ட மாணவன் ஒருவன் எவருக்கும் தெரியாமல் அவனுக்கு ஆபரேஷன் செய்து அங்கங்களைத் தனித்தனியாக பெட்டிக்குள் போட்டு நான்கு மூலையில் தூக்கி வீசி எறிந்துவிட்டான்.

ஏனென்றால் அவன் கற்ற கல்வியின் ஞானம் பிறரைக் கொலை செய்து தான் தப்பும் நிலைகளுக்கே வருகிறது. பெரும்பாலான நிலைகளில் கலாச்சாரம் எல்லாம் அநாகரீகக் கலாச்சாரங்களாகத் தான் மாறுகின்றது.

கல்வி எதற்கு…?

1.ஞானம் இல்லை என்றால் கல்வியைக் காக்கும் நிலை இல்லை.
2.கல்வியால் ஞானம் வர முடியாது
3.ஞானத்தால் கல்வியின் நிலைகள் வளர்க்க முடியும்.

ஆகவே இதைப்போல நாட்டில் வரும் தீய பண்புகளில் இருந்து நாம் மாற்றி அமைத்து மக்களைக் காக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள் உருவாகும் அணுக்களை அருள் ஞானமாக மாற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் கடைப்பிடிக்கின்றோமா…?

நாம் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்கச் சொல்கிறோம்…!

ஆனால் திடீரென்று கேட்பார்கள்… என் அம்மா என்னைச் சும்மா தினமும் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா எப்படி எப்படியோ செய்து என்னை என்னமோ என்னைச் சொல்கிறது…! என்று இப்படியெல்லாம் பேசுவார்கள்.

தாயைக் கடவுளாக மதிக்கச் சொல்கிறாயே… எங்கள் அம்மாவுக்காக வேண்டச் சொல்கிறாயா…? என்றெல்லாம் இப்போது சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.

ஆனால் நாம் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது தாய் எத்தனை அவஸ்தைப்பட்டிருக்கும்…? அது நமக்குத் தெரிகின்றது.

இப்பொழுது நாம் பார்க்கின்றோம். கர்ப்பமாக இருக்கின்ற தாய் எத்தனை அவஸ்தைகள் படுகின்றார்கள்… எத்தனை வேதனைப்படுகின்றார்கள்… என்று.

அன்னை தந்தை நமக்காக வேண்டி நம்மை வளர்த்திட எத்தனையோ வேதனைகளையும் சிரமத்தையும் அனுபவித்தார்கள். அது அனைத்தும் அவர்கள் உடலில் தீய வினைகளாக இருக்கும்.

அது அனைத்தையும் நீக்க…
1.மகரிஷிகளின் அருள்சக்தி என் அன்னை தந்தை பெற வேண்டும்.
2.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைய வேண்டும்.
3.மகரிஷிகளின் அருளுணர்வு என் அன்னை தந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.என்னை வளர்த்திட்ட என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட… நான் பார்க்க வேண்டும்
5.அந்தப் பேரானந்த பெருநிலையான நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று
6,இதை வினையாக ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டும்.

இப்படித் தான் அம்மா அப்பாவை வணங்கச் சொல்லி சொல்கின்றார்கள். அதை யாரும் நினைக்கவில்லையே…!

தன் பிள்ளை கருவில் இருக்கப்படும்போது எந்த நிலையை அந்தத் தாய் செய்ய வேண்டும்…?

கருவில் வளரப்படும்போதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று தாய் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கர்ப்பமான அந்தத் தாயைப் பார்ப்பவர்களும் இதை எண்ணி அந்தக் கருவில் வளரும் சிசு
1.இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.உலகையே காத்திடும் உணர்வுகள் அதிலே விளைய வேண்டும் என்று
3.அந்த உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்றும்
4.அந்தக் கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு இந்த அருள் சக்திகள் எல்லாம் வினையாகச் சேர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

அதே தாய் உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வு பெற வேண்டும் என்று அதை எண்ணும்போது இந்த உணர்வுகள் அனைத்தும் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

பிறக்கும் குழந்தை ஞானக் குழந்தையாகப் பிறக்கும். அனைவரும் போற்றும்படியாக ஞானவானாக வளரும். இப்படித்தான் அன்று ஞானிகள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

நாம் இதைச் செய்கின்றோமா…?

நம் பூமியில் ஏற்பட்ட முதல் இரண்டு பிரளயங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் பூமிக்கு மேல் வியாழன் மண்டலம் பெரியது. சூரியனின் நிலை மிகவும் பெரியது. இந்த நிலையில் சூரியனை வியாழனின் கிரகணம் பிடித்தவுடன் சூரியனைத் தாண்டி வியாழனின் செல்லும் நிலையில் நம் பூமிக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட நிலையில் பால்வெளி மண்டலத்தில் “வியாழனின் சக்தி நம் பூமியின் மேல் நேர்ப்பார்வையில் பட்டது…”

அப்படிப் பட்டவுடன் பால்வெளி மண்டலத்திலுள்ள அமில சக்திகள் உறைந்து வேகமாய் “வியாழனின் இயற்கைக் குணமான அதிக நீரைக் கொண்ட சக்தியுடைய அமில உப்பு…” இப்பால்வெளி மண்டலத்தில் கலந்து வேகமாய்ப் படர்ந்து உறைந்தது.

வியாழன் சூரிய கிரகணத்தைத் தாண்டிய நிலையில்
1.உப்புக் கலந்த உறைந்த அந்த அமில சக்தியானது
2.சூரியனின் ஒளி பட்டவுடன் கரைந்து நம் பூமிக்குள் வரத் தொடங்கியது.

பூமியில் எப்பொழுதும் இருந்த இயற்கை நிலையுடன் அதிக சக்தி கொண்ட இவ்வுப்புக் கலந்த அமில நிலை மோதுண்டவுடன் நம் பூமியின் நிலை ஏற்காமல் பிரளய நிலை (முதல் பிரளயம்) ஏற்பட்டது.

அதன் சுழற்சி வட்டத்தில் சிக்கிக் கொண்ட நீர் நிலைகள்தான் நம் பூமிக்கு இரண்டு பக்கமும் “வட துருவ தென் துருவ நீர் நிலைகள். அடர்ந்த கடல்களாகப் பெருகியது…”

அதன் தொடர்ச்சியிலிருந்து சுழன்ற நிலை கொண்டு நம் பூமி முதலில் சேமித்துப் பழக்கப்படுத்திய இயற்கைத் தன்மை மாறி இத்தாவர வர்க்கங்களும் முதல் பிரளயத்திற்கும் பிறகு நீருடனே நீர் நிலைகளுள்ள இடத்தில் நீருக்கடியில் ஆரம்ப காலத்தில் வளர ஆரம்பித்தன.

அதன் தொடர்ச்சியிலிருந்து ஏற்பட்ட இன வர்க்கங்கள் தான் கொசுக்களைப் போன்று நுண்ணிய உடல்களைக் கொண்ட உயிரணுக்கள் நீர்நிலைகளில் தோன்றி நீர் நிலைகளின் மேல் படர்ந்து வளர்ந்தது.

அதன் தொடர்ச்சியில் அதன் சுவாசத்தில் அதன் கழிவின் உஷ்ண நிலையிலிருந்து சிறு சிறு முட்டைகள் தோன்றி அதிலிருந்து எறும்பின் தலையை ஒத்த தலையுடைய சிறு வால் நீண்ட உயிரணுக்கள் வளர்ச்சி கொண்டன.

அந்தத் தொடரில் நீரிலிருந்து வளர்ந்த இவ்வுயிரணுவே சிறு சிறு மாற்றம் கொண்ட நிலையில் ஜீவ உடல் கொண்ட உயிர்ப்பிராணி வர்க்கத்திற்கு வந்ததின் தொடர் நிலையிலிருந்துதான் பல நிலைகள் மாறியது.

பல ஆயிரம் கோடி ஆண்டுகள் அந்நிலையின் வளர்ச்சிக்குப் பிறகு அடுத்த பிரளயம் ஏற்பட்டது.

1.முதல் வளர்ச்சி நிலையில் உயிரணுவாய் ஜீவ உடல்களைக் கொண்ட ஜீவன்களின் நிலை
2.அதன் வளர்ச்சியில் அது சேமித்த சக்தியின் நிலை கொண்டு
3.அடுத்த பிரளயத்தில் அவ்வுயிரணுக்களே தோன்றிய நிலையில்தான்
4.மனித உடல் கொண்ட அறிவு வளர்ச்சியுற்ற ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை வந்தது.

இரண்டாவது பிரளயத்தினால் நம் உலகிற்கு எந்த நிலை கொண்ட மாற்றம் வந்தது…? இரண்டாவது பிரளயத்திற்கும் வியாழன் தான் காரணம்…! வியாழனிலிருந்துதான் நம் பூமிக்கு மனிதர்கள் வாழும் நிலையின் தொடர் வந்தது.

நம் பூமியில் இன்று எப்படி நமது நிலை உள்ளதோ அதைப் போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வியாழனிலும் நம்மை ஒத்த மனித இன வர்க்கமும் அடர்ந்த நீர் நிலைகளும் இருந்தன.

1.அறிவின் வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் ஆசையின் நிலையினால்தான்
2.அன்று வியாழனில் ஏற்பட்ட பிரளயத்தினால் இன்று வியாழனில் மனித ஆத்மாக்கள் இல்லாத நிலை…!

ஆனால் நம் பூமிக்கு வியாழனில் இருந்துதான் அதன் தொடர் சக்தியின் உருவிலிருந்துதான் நம் உயிராத்மாக்கள் தோன்றி “இன்று இங்கு நாம் வாழும் நிலை உள்ளது…”

இந்தக் கலி வரை ஏழு ஜென்மங்களில் இன்று மனிதராய் வாழ்பவரில் பலர் உள்ளனர். இக்கால நிலையிலேயே மனித உடல்களில் இருந்து மாறு கொண்ட மிருக வர்க்கத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளாகவே பல உயிர் ஆத்மாக்கள் சென்று விட்டன. மிருக உடலிலிருந்து மாறிக் கொசுவாகவும் ஈ எறும்பு புழு பூச்சியாகவும் பல ஆத்மாக்களின் நிலை சென்று விட்டன.

இம் மண்டலத்தில் வந்து வாழக் குடியேறிய உயிராத்மக்களுக்கு வந்த சக்தி ஏழு உடல்களை ஏற்கும் சக்திதான் உண்டு. அதிலிருந்து மாறுபட்டுத் தோன்றிப் பல நிலைகள் கொண்ட உடல்களை ஏற்று எண்ணிலடங்கா உயிரணுக்கள் வாழ்கின்றன.

ஓர் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியில் உயிராத்மாவாய் பல ஜென்மங்கள் மாறு கொண்டு பல நிலைகளைப் பெற்று வாழும் தருவாயில் ஒவ்வோர் உயிராத்மாவும் பல உயிரணுக்களை உண்டு பண்ணியே தான் வாழ்கின்றது.

“எந்த உயிரணுவும் உணவில்லாமல் வாழ்ந்திட முடியாது…!” அது எடுக்கும் ஆகாரத்தில் அதன் சக்தியை வளர்த்த பிறகு அது வெளிப்படுத்தும் மலத்திலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுகின்றன.

1.உண்டு… கழித்து… வாழ்ந்திடும்… உயிராத்மாக்களினால் எண்ணிலடங்கா உயிரணுக்கள் தோன்றி
2.அவை அவை தோன்றிய நிலைக்கொப்ப பல நிலைகளில் வளர்ச்சி கொள்கின்றன.

கிரகணம் பற்றிய உண்மைகள் – ஈஸ்வரபட்டர்

 

பூமியில் அதனின் வளர்ச்சி நிலைக்கும் அதிலே ஜீவன்கள் தோன்றி வாழ்ந்திடும் கால நிலைக்கும் அச் சக்திகள் உருப்பெறவே பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

அத்தகைய ஜீவராசிகள் ஊரும் பக்குவம் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அந்த மண்டலத்தின் வளர்ச்சியுடனே அதே நிலையில் தான் பல ஆயிரம் கோடி ஆண்டுகளானாலும் சுழன்று கொண்டே இருக்கும்.

1.இம்மண்டலத்துடன் இதன் ஈர்ப்பு சக்தியின் அமில சக்தி கூடும் நிலையில் தான்
2.இம்மண்டலத்தில் வளர்ந்திடும் மற்ற சக்திகளும் கூடுகின்றன.

ஆனால் இந்த நிலையிலே சுழலும் அந்த மண்டலத்திற்கு மாறிக் கிடைக்கும் சக்தி எப்பொழுதெல்லாம் ஏற்படுகின்றது…?

ஏற்கனவே நம் சூரியனைச் சுற்றி மண்டலங்கள் சுழன்று கொண்டுள்ளது என்று உணர்த்தி உள்ளேன். அவ்வாறு சூரியனைச் சுற்றி வரும் இந்தக் கோளங்கள்…
1.சூரியனுக்கும் நம் பூமிக்கும் மத்தியில் ஓடும்பொழுது
2.சூரியனின் ஒளிக்கதிர் வீச்சுகள் நம் பூமிக்கு நேராகத் தாக்கிடாமல்
3.சூரியனைத் தாண்டி (குறுக்கே) எந்தக் கோளம் செல்கின்றதோ அந்தக் கால நிலைக்கொப்ப
4.நம் பூமிக்கு எப்பொழுதும் கிடைத்திடும் அந்த ஒளி அலையின் மாற்றத்தினால்
5.சூரியனைத் தாண்டி செல்லும் அந்தக் கோளத்தின் மறைப்பினால் (கிரகணம்)
6.நம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் கலந்துள்ள அந்த ஒளி அலைகளை
7.இரவில் உள்ள நிலைபோல் குளிர்ச்சி கொண்டு மேகங்களாய் கனம் பெற்று
8.எந்த மண்டலம் தாண்டிச் செல்கின்றதோ அதிலிருந்து வீசிடும் அணுக்களின் சக்தி நிலை பூமியின் ஈர்ப்புக்குள் கவரப்பட்டு
9.அந்த ஒரு இரண்டு நிமிடம் ஒரு நிமிடம் கால நேரத்திலேயே பூமியின் சக்தி நிலையிலும் மாற்றம் கொள்கின்றது.

நம் பூமிக்கு மட்டும் கிரகணம் பிடித்துத் தாக்கும் நிலை வருகிற்து என்பதல்ல…! எல்லா மண்டலங்களுக்குமே இந்த நிலையின் தாக்குதலில் “வளர்ச்சியும் உண்டு… வீழ்ச்சியும் உண்டு…!”

ஒவ்வொரு மண்டலத்திலும் அது அது சேமித்த தனித்தனி சக்தி நிலையும் உண்டு.

சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள் – விளக்கம்

 

காலையில் எப்படி இருந்தாலும் நீங்கள் கணவனும் மனைவியும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

1.பின் தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்
2.அதே போல் மனைவியும் தன் கணவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்
3.இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரண்டு பேரும் இந்த அருள் உணர்வை எடுத்துச் சேர்க்க வேண்டும். இப்படி இருவருமே எடுத்து உணர்வை ஒளியாக மாற்றினால்தான் அந்த ஒளியின் அணுவாக மாற்றும் தன்மை அடைகின்றது.

அதைத் தான் எமனிடம் இருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்று சொல்வது…!

உதாரணமாக குடும்பத்திலோ அல்லது உறவினர்களோ நோய்வாய்ப்பட்டிருந்தால் பற்று கொண்ட நிலையில் அவரின் உணர்வை நுகர்ந்து விட்டால் அது நமக்குள்ளும் அணுவாக விளைகின்றது.

அந்த நோயாளி இறந்து விட்டால் அந்த ஆன்மா நமக்குள் வந்து நோயாக உருவாக்குகின்றது. இது போன்ற நிலைகள் வருவதைத் தடுக்க வேண்டும்.

என் கணவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்றும் அதே போல் என் மனைவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மையை அதனோடு இணைக்கப்படும்போது “எமனிடம் இருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…” என்ற நிலை வருகிறது.

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள்…
1.அன்புடன் பரிவுடன் நோய் உள்ளோரைக் கேட்டறிந்தால்
2.அந்த உணர்வு நமக்குள் எமனாகின்றது…
3.இந்த எண்ணம்தான் எமனாகின்றது.

எந்தக் குணத்தின் தன்மையைப் பெறுகின்றோமோ “வேதனை வேதனை…” என்றால் அதன் வழி கொண்டு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.

வேதனை என்பதே விஷம்…!

உடலுக்குள் வேதனை அதிகமானால் இந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த விஷம் கொண்ட உடலாக நம் உயிர் உருவாக்கிவிடுகிறது. பாம்பினமாகவோ அல்லது விஷம் கொண்ட ஜெந்துக்களாகவோ அழைத்துச் சென்று விடுகின்றது.

ஆக… இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் வேதனை உடல் முழுவதும் விஷமாகி விட்டால் மனிதனுடைய நல்ல சிந்தனை இழக்கப் படுகின்றது.

அப்பொழுது நாம் எங்கே செல்கின்றோம்…?

மனைவிக்குக் கணவன் இல்லை… மனைவியும் இதே போல் வேதனைப்பட்டால் கணவனுக்கும் மனைவி இல்லை…!

ஏனென்றால் நாம் எடுக்கும் உணர்வு
1.மற்றொன்றோடு ஒன்றி வரப்படும்போது இங்கே தன் மனைவியைப் பிரிக்கின்றது அல்லது கணவனைப் பிரிக்கின்றது.
2.அருள் ஒளியைக் குறைக்கின்றது… நஞ்சு என்ற நிலையை வளர்க்கின்றது.
3.நஞ்சிற்குள் நம் நல்ல உணர்வுகள் அடிமையாகின்றது.

அடிமையான பின் அதன் உணர்வின் உடலாக மாற்றிவிடுகின்றது இது எல்லாம் நம் உயிரின் வேலை.

ஆகவே கணவன் மனைவியும் இருவருமே இதைப் போல காலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எந்த ஊரிலும் இருந்தாலும் சரி… அல்லது எங்கே சென்றிருந்தாலும் சரி… உங்களுக்குள் பதிவு செய்த நினைவை எடுத்து மனைவிக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.. அதன் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று கணவன் எண்ணுதல் வேண்டும்.

அதே மாதிரி மனைவியும் இதைப்போல எண்ணி தன் கணவருக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வெண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும்…. அருள் ஒளி பெற வேண்டும்… அவர் பார்வையில் இருள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும். அவரின் அருட்பார்வை என்றைக்கும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையை இருவருமே இப்படி எண்ணிப் பழக வேண்டும்.

இப்படி எண்ணினால் மனிதன் என்ற முழுமை அடையலாம்.

1.எப்படி இரக்கம் கொண்டு எண்ணியபின் ஒரு ஆத்மா நமக்குள் வந்து விடுகின்றதோ…
2.இதைப்போல கணவன் மனைவி இருவரும் ஒன்றானால் இரு உயிரும் ஒன்றாகின்றது.

ஆனால் இந்த உணர்வுடன் மற்றவர்கள் உணர்வுகள் நம்முடன் ஒன்றினால் இணைந்த நிலை மாற்றப்பட்டு “உயிரைப் (இருவரையும்) பிரித்து விடுகின்றது…”

ஆனால் அதே சமயம் இரு உயிரும் ஒன்றாக்கிடும் நிலையாக… இரண்டையும் பிணைத்து அருள் ஒளியைக் கூட்டும் போது உடலை விட்டுச் சென்ற பின் இரு உயிரும் ஒன்றாகி அந்த ஒளியின் சரீரமாக… பேரருள் பேரொளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

இப்படித்தான் அக்காலத்தில் கணவன் மனவியாக வாழ்ந்த அகஸ்தியன்… விஷத்தின் தன்மையை வென்று… அருள் ஒளிச் சுடராகி… துருவனாகி துருவ மகரிஷியாக ஆனது…!

அவன் திருமணம் ஆனபின் தான் இந்த நிலையை அடைகின்றான். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான். ஆகவே அந்த அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒன்றி வாழ்ந்த வழிப்படி நாமும் வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

கிரகணத்திற்கும் பிரளயத்திற்கும் உள்ள சம்பந்தம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒரு மண்டலத்தைத் தாண்டி ஒரு மண்டலம் செல்லும் நிலையிலும் அது அது சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பு மற்ற மண்டலத்தின் செயலுடன் தாக்கும் நிலையிலும் ஒவ்வொரு மண்டலத்திற்குமே பல காலங்கள் ஒரு நிலையில் சேமித்த சக்தியின் தன்மை இம்மண்டலங்களின் சுழற்சியில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையில் அது நிமிடக் கணக்காய் இருந்திட்டாலும் அதன் ஈர்ப்பில் இதன் ஈர்ப்பின் நிலையும் மோதுண்ட நிலையில் இவ்விரண்டிற்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி மண்டலத்திலும் அதன் அமிலத் தன்மை மாறு கொள்கின்றது.

அதிலிருந்து ஒவ்வொரு மண்டலத்திற்குமே அதனுடைய இயற்கை குணத்தில் சில மாற்றங்கள் வருகின்றன.

1.சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் எந்த மண்டலம் தாண்டி ஓடுகின்றதோ
2.அம் மண்டலத்தின் குண நிலை கொண்ட இயற்கை நிலையின் தாக்குதல் நம் பூமிக்கு ஏற்பட்டு
3.அதிலிருந்து இயற்கையிலேயே நற்சக்திகளும் வளர்கின்றன… பல தீய அணுக்களும் வளர்கின்றன.

பிப்ரவரி 16.01.1980ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தில் நம் சூரியனைத் தாண்டி கேதுவின் ஓட்டம் சென்றதனால் கேது மண்டலத்தில் உள்ள விஷ அணுக்கதரின் தாக்குதல் நம் பூமியைத் தாக்கியது.

கேதுவின் தன்மையில் விஷத் தன்மை அதிகம்…!

நம் பூமியில் எப்படி சில தாவரங்கள் விஷத் தன்மை கொண்டதாகவும் சிலது நல்ல தாவரங்களாகவும் வளர்கின்றனவோ அவை போல் இம் மண்டலங்களின் வளர்ச்சியிலும் ஒவ்வொரு தன்மையில் வளர்கின்றது.

இந்தக் கேது மண்டலம் இல்லாவிட்டால்…
1.பால்வெளி மண்டலமே மற்ற மண்டலங்களுக்கு நன்மை தரும் சக்தியாக இல்லாதபடி
2.பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையில்
விஷ அமிலமும் நிறைந்தே சுற்றிக் கொண்டிருக்கும்.

நட்சத்திர மண்டலங்களிலும் இவ்விஷமான அமில சக்தி கொண்ட பல நட்சத்திர மண்டலங்கள் உண்டு.

எண்ணத்தில் கூட கேதுவின் சக்தியை எண்ண முடியாதபடி எண்ணிலடங்கா வண்ணம் நச்சுத் தன்மை கொண்ட அமில சக்தி நிறைந்த மண்டலமாய் கேது மண்டலம் வளர்ந்துள்ளது.

சூரியனின் ஈர்ப்பிலுள்ள இந்த 48 மண்டலங்களின் சுழற்சியுடன் கூடிய மண்டலம் தான் கேது மண்டலமும். கேதுவின் கிரகணம் பிடித்ததினால் நம் பூமியின் மேல் அதன் ஈர்ப்பு சக்தி தாக்கி நம் பூமியின் இயற்கையுடன் இவ்விஷ அணுக்களின் தாக்குதல் பட்டு அத்தாக்குதலினால் நம் பூமியின் நிலையே சிறிது இறக்கம் (கீழ்) இறங்கி விட்டது.

சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட தூர விகிதமும் அதிகப்பட்டு விட்டது. பூமிக்குக் கிடைக்கும் சூரியனின் உஷ்ண அலையின் சக்தி குறைவு கொண்டு குளிர்ந்த நிலை அதிகப்பட்டு விட்டது.

1.நம் பூமியின் மாற்ற நிலை ஏற்படப்போகும் நிலைக்கு இக்கேதுவின் நிலை சாதகப்படுத்திச் சென்றது.
2.நல் வழியின் சாதகமல்ல கேதுவின் கிரகணத்தினால்… …
3.நம் முன்னோர்கள் எக் கிரகணம் பிடித்ததோ இந்த நிலையில் வாழ…?! என்று தெரிந்தோ தெரியாமலோ செப்பினர்.
நம் பூமி பல கேதுவின் கிரகணத்தினால் சில தன்மைகளில் மாற்றம் கொண்டு விட்டது.

சுழன்று கொண்டே உள்ள இம் மண்டலங்களின் ஓட்டத்தில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையிலும்… ஒன்றுக்கொன்று ஒன்றின் சக்தியை… ஒன்று அதன் ஓடும் நிலையில் ஈர்த்துக் கொண்டே செல்லும் நிலையிலும்…
1.பல ஆண்டுகள் ஒன்று போல் உள்ள அம்மண்டலத்தின் சக்தியே
2.மற்ற மண்டலத்திலிருந்து அதன் ஈர்ப்புப் பட்டவுடன் (கிரகணத்திற்குப் பின்) மாறும் நிலை கொள்கின்றது.

நம் பூமியில் தோன்றிய உயிர் அணுவின் தாவர வர்க்க நிலையையும் அதிலிருந்து ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தோன்றிய தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன்.

அந்நிலையில் ஓடுகள் கனத்து நத்தை போன்றும் ஆமை போன்றும் தோன்றிய ஜீவ அணுக்களின் வளர்ச்சி நிலை பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆன பிறகு இப்பூமியின் முதல் பிரளய காலத்திற்குப் பின் வந்தது.

முதல் பிரளய நிலைக்குப் பிறகுதான் நம் பூமிக்கு இன்று பொக்கிஷமாய் உள்ள வட துருவ தென் துருவங்களில் நீர் நிலைகளும் கிடைத்தது.

இப்பூமி ஒரு மண்டலம். இப்பூமியில் தோன்றி வளர்ந்திடும் உயிரணுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மண்டலம்.

நம் உடலுக்கு நம் பழக்க வழக்கப்படி ஒரே மாதிரியான உணவு நிலைகளை உண்டு வாழ்ந்திடும் பக்குவத்தில் நாம் உண்ணும் உணவில் மாற்றம் கொண்டால் நம் உடல் என்னும் இம்மண்டலம் அதை ஏற்பதில்லை.

1.அதை ஏற்காதபடி… வாந்தியாகவோ அல்லது வாயுவாகவோ மற்ற நிலையில்… பல இன்னல்களை
2.இம்மண்டலத்தின் மையமான நம் வயிற்றில் வலியும் மற்றத் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

அதிலிருந்து நம் உடல் மண்டலம் சரிப்பட்டுப் பழைய நிலையில் வருவதற்குச் சில நாட்கள் ஆகின்றன. அல்லது அதன் தொடர் நிலையில் ஒவ்வொரு தொந்தரவுகளும் ஏற்பட்டு நம் ஆரோக்கிய நிலையே மாறு கொள்கின்றது.

இந்த நிலை போன்றுதான் மண்டலங்களின் ஒவ்வொரு நிலைக்கும் அதன் மாற்ற நிலை வருகின்றது.

பிரளயம் ஏற்படுவதும் சுழற்சியில் நம் மண்டலத்துடன் எம் மண்டலத்தின் தாக்குதல் ஏற்படுகின்றதோ அதன் நிலை ஏற்காமல் அதிலிருந்து பல மாற்றங்கள் ஏற்படும்.

நம் உடல் மண்டல ஆரோக்கிய நிலையே… கல்லைத் தின்றாலும் ஜீரணிக்கும் நிலை போலவும் எதைச் சாப்பிட்டாலும் ஜீரணித்து விடும் நிலையும் கொண்ட ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட மண்டல மனிதனாய் உள்ள நிலையில்
1.உடலிலுள்ள இவ் எதிர்ப்பு சக்தியினால்
2.மற்றத் தீய அணுக்கள் வந்து நம் ஆரோக்கியத்தைத் தாக்கிடாது.

அந்த நிலை போல் நம் பூமி மண்டலத்தின் ஆரோக்கிய நிலை இருந்திருந்தால் இப்பிரளய நிலையிலும் சக்தி கூடும். சூரியனைத் தாண்டிக் கேது சென்ற போதும் அவற்றின் தாக்குதலை நம் பூமி ஏற்றிருக்காது.

ஆனால் நம் பூமியிலிருந்து தான்
1.நம் செயற்கைக்காக பூமியின் பொக்கிஷத்தையே பிரித்தெடுத்து
2.ஆரோக்கியம் குன்றிய பூமியாக நாம் செய்து வைத்துள்ளோமே…!
3.இந்த நிலையில் ஏற்படும் இயற்கைக்கு நாம் தான் பொறுப்பு ஆகின்றோம்.

நம் பூமியில் முதல் பிரளயத்தில் ஏற்பட்ட நீர் நிலைகளின் வளர்ச்சி “நம் பூமி சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பிலிருந்து நாம் பெற்ற பொக்கிஷம்…!”

சூரியனுக்கும் பூமிக்கும் சமீபத்தில் எப்படிக் கேது கிரகணம் பிடித்ததோ அதைப் போன்றே சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் வியாழனின் கிரகணம் பிடித்தது. இது முதல் பிரளயத்திற்கு முன் நடந்தது…!

நம் நல்ல குணங்களை மறையச் செய்யும் தீமைகளைக் கிழித்தெறிய வேண்டும்

 

“சித்ரா பௌர்ணமி…” அது எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போல் நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆனால் பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசித்தாலும் அதற்கடுத்து நாள் மற்ற கோள்களின் தன்மைகள் சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை மறைத்தால் அந்த நிழல் பட்டு ஒளி மங்கத் தொடங்குகின்றது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று அறிந்திடும் அறிவாக கார்த்திகேயா என்று நாம் அறிவின் தெளிவாக இன்று இருக்கின்றோம்.

ஆனால் ஒரு மனிதன் வேதனைப்படும்படியான சொல்களைச் சொல்லும்போது அந்த உணர்வை நுகர்ந்தால் நம் நல்லறிவு இங்கே இருண்டு விடுகிறது.

நல்ல குணத்துடன் தான் நாம் இருக்கின்றோம். அந்த நல்ல குணம் கொண்டு தான் வேதனைப்படுபவரை உற்றுப் பார்க்கின்றோம்.
1.ஆனால் நாம் நுகரும் வேதனைப்படும் உணர்வுகள்
2.நல்ல அறிவை மேலே மூடுகின்றது திரை போன்று…!

ஏனென்றால் எந்தக் குணத்தை கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மை இங்கே உண்டு. அந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் தான் காட்டுகின்றது. ஏனென்றால் முதலில் கண்கள் வழியாகத் தான் நமக்குள் எதுவுமே பதிவாகின்றது.

கண்ணால் பதிவாகும்போது…
1.“ஒரு தவறு” என்று இருந்தால் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகரும்போது எண்ணமாகின்றது.
2.அதாவது கண்களால் பதிவானது உயிரிலே நுகரும் போது அந்த எண்ணங்கள் வருகின்றது.
3.ஆனால் பதிவானதை எண்ணும்போது மீண்டும் கண்ணுக்கே வருகின்றது (சொல்வது அர்த்தமாகிறதல்லவா).

“எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணும்போது அந்த மனிதனின் நினைவு கண்ணுக்கு (திரைப்படம் போல்) வருகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக இயக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் “தப்பு செய்திருக்கின்றான்…” என்றால் கண்ணிலே அவனைப் பார்த்தவுடனே… நமக்குள் பதிவான இந்த எண்ணங்கள் “இவன் எனக்கு துரோகம் செய்தான் பாவி…!” என்ற வெறுப்பின் உணர்வை ஊட்டுகின்றது.

1.அது தான் கண்ணால் பதிவு செய்வதும்
2.கண்ணால் பதிவானதை மீண்டும் எண்ணும் போது எண்ணத்தால் நம்மை இயக்குவது என்பது
3.(அதாவது அந்த எண்ணம் தான் நம்மை அடுத்து இயக்குகிறது)
4.எண்ணம் என்பது உணர்வுகள் உணர்ச்சிகள் தூண்டுவது.

ஆகவே புறத்தில் இருப்பதை நாம் நுகர்ந்த பின் இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் தீமைகளாக உருவாகாதபடி துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தரையில் அழுக்கு இருந்தால் துடைத்துவிடுகின்றோம் நம் உடல் மீது அழுக்கு இருந்தால் துடைத்து விடுகின்றோம். துணியில் அழுக்குப் பட்டால் துடைத்து விடுகின்றோம்.

ஆனால் நம் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைக்கின்றோமா…! அதைத் துடைத்துப் பழக வேண்டும். இல்லை என்றால்… அழுக்கு சேர்ந்தால்… நம் மனம் இருளாகிவிடும்.

முழு நிலாவாக இருக்கும் சந்திரன் அதற்கடுத்து மற்ற கோள்களின் மறைவு வர…வர வர…வர பௌர்ணமி சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் அது சிறிதாகி விடுகின்றது.

இதைப் போல் தான் நம்முடைய மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பழி தீர்த்தல் பழி வாங்குதல் என்ற இந்த உணர்வுகள் வந்து விட்டால் நம் நல்ல குணங்கள் முழுமையாகத் தேய்ந்து விடுகின்றது.

ஆனால் உயிரின் உணர்வுடைய கடைசி தொக்குகள் உண்டு. அதாவது உயிரணு விண்ணிலிருந்து பூமிக்குள் வந்து தாவர இனச் சத்தைக் கவர்ந்து ஆரம்பத்தில் எப்படிப் புழுவானதோ அதே போல நல்ல குணங்கள் தேய்ந்து விட்டால் உயிரின் தன்மையில் இருண்டுவிடும்.

1.அப்படி இருண்டு விட்டால் விஷம் என்ற நிலைகள் ஆகி
2.அந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டே அடுத்த உடல் பெறும் தன்மை அடைந்து விடுகின்றது.

ஆகவே மனிதனாக இருக்கும் நாம் மீண்டும் தேய்பிறையாகக் கூடாது. அருள் ஒளி பெற்ற அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து இனி என்றுமே ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை பெறுவதே இந்த மனித உடலின் முழுமை…!

நான் யார்…? நம் உடல் என்று அல்ல…! உயிரால் வளர்க்கப்பட்டது தான் மனிதனின் உடல்.

1.உயிருடன் (ஒன்றி) இருக்கப்படும்போது நான் என்று வருகின்றது.
2.நான் நானாக அந்த நானாக (உயிராக) வேண்டும்.
3.உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால்தான் “நான் நானாகின்றேன்…!”
4.உயிர் நம்மை இயக்கும் போது நானாகின்றது
5.நான் என்ற சொல்லுக்கு உயிரே மூலமாகின்றது.

ஆகவே உயிரின் உணர்வின் ஒளி எவ்வாறோ அதனின் ஒளியின் தன்மையை நமக்குள் வளர்த்தல் வேண்டும்

இன்றைய மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் நீங்கள் தீமைகளில் இருந்து விடுபடுவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

உதவி செய்தால் கிடைக்கும் நன்றிக் கடன் கடைசியில் எப்படிப்பட்டதாக இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மால் அந்த உதவி பெற்ற மனிதனோ உதவி செய்ததற்குண்டான நன்றியைக் கடைசியில் (உடலை விட்டுப் பிரியும் போது) எண்ணுகின்றான். பிரமாதமாக… எனக்கு மகராசனாக உதவி செய்தார் என்று…!

அந்த உடலை விட்டு நீங்கும் போது… உதவி செய்தவரை எண்ணி அந்த உணர்வின் வலுக் கொண்டால் உதவி செய்த நம் உடலுக்குள் அந்த ஆன்மா வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்து விட்டால் அவன் பெற்ற துயரமோ துன்பமோ நோயோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் இயக்கத் தொடங்குகின்றது. நம்மையும் அது நலிவடையச் செய்துவிடும்.

இதைப்போன்ற நிலைகளை நாம் தடுக்க வேண்டுமென்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் எண்ணத்தால் எண்ணுவது அனைத்தும் நமக்குள் ஜீவ அணுக்களாக மாறுகின்றது. நாம் பிறருக்கு உதவி செய்திருந்தால் பற்றுடன் அந்த ஆன்மா நமக்குள் ஜீவான்மாவாக வந்து அவர் படும் துயரத்தை நமக்குள் உருப் பெறச் செய்து விடுகின்றது.

இது போன்ற நிலைகளை அடக்க வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.
2.நம்மைப் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும்
4.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லா நலமும் பெற வேண்டும்.
5.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
6.அங்கே பணி செய்பவர்களெல்லாம் சகோதர உணர்வுகள் பெற வேண்டும்.
7.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
8.நாங்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி
9.நமக்குள் பகைமையற்ற உணர்வினை வளர்க்க வேண்டும்.

இது போன்ற நல் உணர்வுகளை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அதைக் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாக்க வேண்டும். அதாவது பிறர் தீமையை அகற்றும் அந்த உணர்வின் எண்ணத்தைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்.

இவ்வாறு உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்போது அந்த இடத்தில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பரவச் செய்கின்றோம்.

1.எல்லாரும் இப்படிச் சொல்லிப் பாருங்கள்…!
2.இந்த காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகள் போய்விடும்.

பூமி உருவானது எப்படி…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.எறும்பைக் காட்டிலும் சிறிய நுண்ணிய உயிரணு கொண்ட உயிராத்மா
2.அவ்வுயிரணுவுடன் மற்றோர் உயிராத்மாவின் சேர்க்கையில்
3.ஒன்றுடன் ஒன்று ஜீவ சக்தி பின்னிய நிலையில் இரண்டும் ஐக்கியப்பட்டு
4.தன் ஆவி நிலையுடன் பால்வெளி மண்டலத்தின் பல நிலைகள் கொண்ட… ஆவியான அமில சக்திகள்…
5.இவ்விரண்டு ஆத்மாவுடன் இதன் சேர்க்கையுடன் ஆவியாய் மோதுண்டு
6.இதன் ஈர்ப்பு நிலையுடன் இதன் வட்டத்திலேயே இவ்வாத்ம அமிலமுடன் “பல சக்தி நிலைகள் கூடி…”
7.இவ் ஆவியான அமிலமே உறைந்த நிலையில்… திடப்பொருளாய்ச் செயல்படுவதற்கு முன்
8.இவ்வாத்மாவின் ஈர்ப்பில் அமிலமுடன் பல சக்தி நிலைகள் கூடி
9.இவ்வாவியான அமிலமே உறைந்த நிலையில் திடப்பொருளாய்ச் செயல்படுவதற்கு முன்
10.இவ்வாத்மாவின் ஈர்ப்பில் அமிலமுடன் கலந்து வந்த உயிர்த் துடிப்பு கொண்ட
11.மற்ற உயிரணுக்கள் இவ் ஈர்ப்பு நிலையில் சிக்கி… இதன் வட்டத்திற்குள் வந்த பிறகு
12.இதன் ஆவி அமிலமும் இச் சுழற்சியில் காற்றும் நீரும் படும் நிலையில்
13.திடப் பொருளாய் கெட்டிப்பட்ட உயிர்த் துடிப்பு கொண்ட திடமாய் ஆகின்றது.

இதன் வளர்ச்சியே அமிலத்தின் ஈர்ப்பாக அதிகப்படுகின்றது. அமிலத்தை ஈர்க்கும் சக்தி இவ்விரண்டு ஆத்மாவின் உயிர்ச் சக்தியுடன் உட்சென்ற உயிரணுக்களின் பெருக்கமும் இச்சிறிய கோளமாய் உருப்பெற்ற இதன் ஈர்ப்பின் வட்டத்தில் இதற்கு உணவாய் இவ்வுயிரணுக்களின் சக்திதான் இது வளரும் நிலைக்கு உதவுகின்றது.

உயிரணுக்கள் இவ்வட்டத்திற்குள் வந்தவுடன்… அதன் சக்தியை உணவாய் ஈர்த்து அதன் சக்தியை உண்டு…
1.அதில் வெளிப்பட்ட கல்லிலிருந்தும் மண்ணிலிருந்தும்
2.அதன் உஷ்ண அலையின் வெக்கையில் இஜ் ஜீவராசிகள் தோன்றி சில தாவரங்களை உணவாக உண்டு
3.இவை கழித்த மலத்திலிருந்து பல உயிரணுக்கள் ஜீவன் கொண்ட நிலையில் தவளையாகவும்
4.மற்றும் சில நிலை கொண்ட ஜீவராசிகளும் தோன்றின.

ஒன்று உண்டு… அது வெளிப்படுத்தும் கழிவிலிருந்து பல உயிரணுக்கள் அதன் சுவாச நிலைக்கொப்ப பல ஆயிரம் ஆண்டுகள் ஒத்த நிலையின் வளர்ச்சியிலேயே வளர்ச்சி கொண்டே வந்தது.

இப்படி வளர்ந்தது தான் நம் ஜீவ பூமி.

உலகின் எப்பகுதியிலும்… எந்த நேரத்திலும்… எந்த நிலையிலும்… இனி எதுவும் நடக்கலாம்…!

நாம் நல்லதே செய்கின்றோம்…! சிறிது நோய் வந்துவிட்டால் நாம் என்ன செய்கின்றோம்…?

ஐயோ என் பிள்ளை இப்படி இருக்கின்றானே… உடம்பெல்லாம் வலிக்கின்றதே…! நான் நல்லது செய்தேனே ஆண்டவா… நீ என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…! அட தெய்வமே… இப்படிச் செய்கின்றாயே…! பிள்ளையாரப்பா… நீ இப்படிச் செய்கின்றாயே… விநாயகா… கணபதி இப்படிச் செய்கின்றாயே…! வஜ்ர கணபதி..! உனக்கு எல்லாம் செய்தேனே உன்னை வணங்காத நாள் இல்லையே என்று இப்படிப் புலபுகின்றோம்.

அதாவது நல்ல பதார்த்தத்தை வைத்துச் சுவையாகச் செய்த பின் அதனுடன் விஷத்தைக் கலந்தே நாம் செய்கின்றோம்.

இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம் சிவபுராணம் இவை எல்லாம் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள்… அது மெய்…!

இதை எல்லாம் சாங்கியங்களாகக் காட்டப்பட்டு ஞானிகள் கொடுத்த சாஸ்திரத்தையே மறைத்து விட்டு மனிதன் போகும் பாதையையே இருள் சூழச் செய்துவிட்டார்கள்.

விஞ்ஞான உலகில் இந்த பிரபஞ்சத்தின் நிலைகளிலே விஷத் தன்மைகள் கலந்து நம் பிரபஞ்சமே அழியும் தருணத்தில் இருக்கின்றது…!

அணுவைப் பிளந்தான்… அணுக்கதிரியக்கங்களைப் பூமியில் பரப்பினான் பூமியின் ஈர்ப்பிற்குள் (நடு மையம்) வெப்பத் தணலாகக் கூடி கொதிகலனாக மாறும் நிலை அடைந்து விட்டது.

அதே சமயத்தில் பூமிக்கு வெளியே பிரபஞ்சத்திலும் இதைத் தூவினார்கள். சூரியனின் கதிர் அலைகள் வரும்போது இதே கதிரியக்கச் சக்திகளைத் தாங்கி மீண்டும் பூமிக்குள் வரப்படும்போது நஞ்சினை ஒடுக்கிடும் ஓசோன் திரையைப் பிளந்து விட்டது.

அதனால் நம் பூமி நஞ்சை வடிகட்டும் தன்மையை இழந்து மனிதனுடைய சிந்தனைகளையும் இழக்கச் செய்து கொண்டுள்ளது.

ஒரு விஷம் கொண்ட உயிரினம் நம்மைத் தீண்டினால் நல்ல நினைவை நாம் இழப்பது மனிதன் என்ற நிலையையே இழந்திடும் நிலைகளில் வந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான அறிவு அபரிதமாக வளர்ந்ததனால் மனிதன் என்ற சிந்தனையற்று இருள் சூழ்ந்த நிலைகளாகப் போய்க் கொண்டிருக்கின்றது இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

1.எப்பகுதியிலும்… எந்த நேரத்திலும்… எந்த நிலையிலும்… எதுவும் நடக்கலாம்.
2.ஏனென்றால் இன பேதம் மன பேதம் மொழி பேதம் என்ற நிலைகளில்
3.உலகம் எங்கும் பகைமை உணர்ச்சிகள் பரவிக் கொண்டிருக்கின்றது.

மதத்திற்குள் மதம் மதத்திற்குள் இனம் இனத்திற்குள் இனம் என்ற நிலைகளில் சிதறுண்டு இன்று தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள் இந்த உலகம் முழுவதும் படர வேண்டும் என்ற சிந்தனைகளை நாம் செலுத்த வேண்டும்.

அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் நமக்குள் நாம் பெருக்க வேண்டும். நமக்குள் விளைய வைத்த ஞானிகளின் உணர்வலைகளை காற்று மண்டலத்தில் பரப்பச் செய்து தீமையை விளைவிக்கும் அந்த நிலைகளைப் பிளக்க வேண்டும்.

நம் ஆன்மாவில் மட்டுமல்ல… இந்தப் பரமான பூமியில் இருக்கும் பரமாத்மாவில் உள்ள தீமைகளையும் பிளக்க வேண்டும்…!

அதைப் பிளக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் வளர்க்க வேண்டும். அந்த மகரிஷியின் உணர்வின் சொல்லாக… செயலாக.. எல்லாவற்றையும் மாற்றுதல் வேண்டும்.

என்னவோ சாமி… (ஞானகுரு) சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதே போல் நீங்களும் அந்தச் சக்திகளைப் பெற முடியும் என்ற முழு நம்பிக்கையில் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.

மீண்டும் இதை எண்ணப்படும்போது இந்த ஞானமே உங்களைக் காக்கும். தீமை செய்தோரைப் பதிவு செய்து மீண்டும் அதை நினைவில் கொண்டு வரும்போது தீமை செய்யும் உணர்வுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

1.ஒருவன் தவறு செய்தான்… எதிர்த்துப் பேசிவிட்டான்…! என்றால் பழி தீர்க்கும் உணர்வுடனே நாம் செல்கின்றோம்.
2.அதே பழி தீர்க்கும் உணர்வு நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.

ஆகவே உங்களுக்குள் வரும் இந்தத் தீமைகளை அகற்றிடும் நிலையாக ஞானிகளின் அருள் உணர்வுகளை இந்த உபதேசத்தின் வாயிலாகக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்டால் இதையே நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

இதைத் தான் ஒவ்வொரு ஆலயத்திலும் ஞானிகள் காட்டியுள்ளனர். ஆலயத்திற்குச் செல்லும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்ற இந்த முறைப்படி நீங்கள் வணங்கிப் பாருங்கள்.

உங்கள் உயிர் அதை உங்களுக்குள் உருவாக்கி உங்களை ஞானியாக ஆக்கும்…! அதற்குத் தான் இந்த விநாயக தத்துவமே…!

சந்திரனில் நீர் நிலைகள் கூடக் காரணம் என்ன…?

 

நம் பூமியில் இன்றுள்ள மூல சக்தியே கடலில் உள்ள நீர்கள் தான். நம் பூமிக்கு இரண்டு பக்கமும் உள்ள வட துருவ தென் துருவக் கடல்களின் நிலையினாலும் இப்பூமி முழுவதற்குமே அங்காங்குள்ள நீர் நிலைகளும் ஆறு குளங்களும் இப்பூமியில் பெய்திடும் மழையின் நிலையினாலும் தான் இப்பூமி முழுவதற்குமே நீர் நிலை பெறும் சக்தி வந்தது.

1.காற்றுடன் நீர் இல்லாவிட்டால்…
2.தாவரங்கள் மட்டும் அல்ல இப்பூமியில் வளர்ந்திடும் எந்தக் கனி வளங்களும் எந்த உயிரணுவும்
3.இன்றைய நிலை கொண்ட வளர்ச்சிக்கு வந்திருக்க முடியாது.

எந்த அமிலமும் நீருடன் தன் சக்தியைச் சேமிக்கும் சக்தி கொண்ட பூமி தான் இது. நம் பூமியின் கடல்களில் உள்ள நீர் பகலில் குறைந்ததும் இரவில் அதிகப்பட்டும் உள்ளது.

அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் மற்ற நாட்களைவிட இந்நீர் அதிகமாகப் பொங்கி வரக் காண்கின்றோம்.

பகலில் சூரியனின் நேர் ஒளி படும் காரணத்தால் அக்கடலின் நீரில் சூரியனின் ஒளி பட்டவுடன் அந்நீரிலிருந்து ஆவியான அமிலங்கள் காற்றுடன் கலந்து விடுகிறது.

ஆனால் இப்பூமி சுழலும் நிலை கொண்டு இரவில் சூரியனின் ஒளிக்கதிர் அந்த நீர்நிலையில் படாமல் அக்கடல் நிலையுள்ள இடமும் இச்சுழலும் தன்மையில் இப்பூமியின் அசைவு கொண்டு வடதுருவத்தில் மோதப்பட்டு பகலில் ஆவியான இவ்வமிலமும் குளிர்ச்சி கொண்டு வட துருவ பூமியில் படிவமாய் குளிர்ந்த நிலையில் பனிக்கட்டியாய் உறைந்து விடுகின்றது.

இப்பூமியின் வட துருவத்திலும் தென் துருவத்திலும் பாறை போல் உறைந்து குளிர்ச்சியான உப்புக் கலந்த அமில சக்தியைக் கொண்ட நீராய் உறைந்துள்ளது.

சூரியனின் ஒளி இரவில் இல்லாததினாலும் அவ்வுஷ்ண அலைகள் இக்கடலில் தாக்காததினாலும் பகலில் ஈர்த்து ஆவியான நீர்களே இரவில் அவ்வுறைந்த நிலைகொண்ட பகுதியில் இக்காற்றலைகள் மோதி நீராய் வடியப் பெற்று இரவில் கடல்களில் நீர் நிலைகளின் பெருக்கத்தைக் காண்கின்றோம்.

வட துருவம் தென் துருவம் இரண்டு பக்கத்திலுமே இந்நிலை கொண்ட சக்திதான் உள்ளது.

அமாவாசையன்றும் பௌர்ணமியன்றும் ஏற்படும் இவ்வணுக்களின் மாற்றத்தினால் இக்காற்று மண்டலத்தின் சக்தியில்
1.சந்திரனிலிருந்து கிடைக்கப் பெறும் குறைந்த அம்மாவாசையின் அணுசக்தியும்
2.பௌர்ணமியில் கிடைத்திடும் அதிக அணுசக்தியும்
3.இவ்விரண்டு பக்கத்திலும் உறைந்துள்ள நீரின் அமில சக்தி மாற்றம் கொள்ளும் நிலையில் இக்கடல் நீர் பொங்குகின்றது.

பூமிக்கு ஜீவனாகப் பொக்கிஷமாய் அமைந்துள்ள நீர்நிலைகள் வட துருவமாயும் தென் துருவமாயும் இப்பூமி சுழல்வதற்கே சக்தி கொடுத்து நிறைந்திருக்கா விட்டால் நம் பூமிக்கு இம்மழையும் மற்ற நீர் நிலைகள் எவையுமே கிடைத்திருக்காது.

ஜீவனாக நம் பூமிக்கு இருக்கும் இச்சக்தி ஒவ்வொரு மண்டலத்திலும் மாறு கொள்கின்றது. சந்திரனில் நம் பூமியில் பெய்யும் மழையும் மற்ற நீர் நிலைகளும் இங்கு தேங்கியுள்ளதைப் போல் அங்கு மாறு கொண்ட நிலையில் உள்ளது.

இதுவே இப்பூமியின் கலி மாற்றத்தினால்… நம் பூமியின் சக்தியைப் போல்
1.நம் பூமிக்கு அருகாமையில் பூமியுடன் அதிகத் தொடர்பு கொண்ட சந்திர மண்டலம் இருப்பதினால்
2.இப்பூமியின் சக்தியைப்போல் சக்தியை வளர்க்கப் போகின்றது.

நம் பூமியைக் காட்டிலும் சுழலும் வேகம் குறைவு. ஆனால் மாற்றத்தில் சந்திரனின் சக்தி கூடி “துரித வேகம்” அதிகப்படப் போகின்றது. துரித சக்தியின் வளர்ச்சியினால் ஈர்ப்பு சக்தியின் நிலையும் கூடப் போகிறது.

இன்று செழித்து வளரும் நிலையில்லாமல் காற்றும் மழையும் குறைந்துள்ள நிலையில் மழையென்றால்

நம் பூமியில் மழை பெய்வது போல்…
1.பூமி ஈர்த்து ஆங்காங்கு வெளிப்படுத்தும் பருவ மழைகளும்
2.இக்கடலில் புயலாய் ஏற்பட்டு உருக்கொண்டு வீசிடும் காற்றிலிருந்து இங்கு பெய்யும் மழையின் நிலையும்
3.இரவு பகல் என்ற மாற்றம் கொண்ட நிலையும் சந்திரனில் இல்லாமல் உள்ள இன்றைய நிலையே
4.இக்கலியின் மாற்றத்தினால் இப்பூமியின் சக்தியின் நிலையே சந்திரனின் சக்தி நிலையுடன் செயல் கொள்ளப் போகின்றது…!

உயிரே கடவுள் என்றும்… வெப்பம் தான் கடவுள்…! என்றும் ஏன் சொல்கிறோம்…?

இந்தக் காற்று மண்டலத்தில் சூரியனோ அதனுடைய கதிரியக்க அலைகளைப் பரப்பிக் கொண்டே உள்ளது.

இருந்தாலும்… அதன் ஒளி அலைகள் ஒரு செடியின் மேலோ ஒரு மரத்தின் மேலோ மனிதன் மேலோ மற்ற ஜீவணுக்கள் மேலோ படும் பொழுதுதான் அதனுடைய இயக்கத் தொடரே வருகின்றது.

செடியானாலும் அந்த சூரியனின் அந்த காந்த புலனறிவு தாக்கி உருவாக்கினால்தான் அந்த வெப்பம் உருவாகும். அந்தச் செடியும் வளர்கின்றது… புழுவும் வளர்கின்றது… மனிதனும் வளர்கின்றான்…!

1.அந்த வெப்பம் இல்லையென்றால்… ஒரு ஐஸ் பெட்டியில் போட்ட மாதிரி
2.எல்லா அணுக்களும் செத்துப் போகும்… மனிதனே வாழ முடியாது…!
3.ஆகவே இவை அனைத்திற்கும் இந்தச் சூரியனே காரணமாக இருந்து இயக்குகின்றது.

சூரியனின் வெப்பத்தால் ஓங்கி வளர்க்கும் இந்த உணர்வுகளை… பூமி தனக்குள் நடு மையமாக அந்த வெப்பத்தை அதிகமாகச் சேர்த்துக் கொள்கின்றது.

மார்கழி மாதமோ… அல்லது அதிகமான மழைகள் பெய்யும் காலத்திலோ மேற்பரப்பு குளிர்ந்து விடுகின்றது. இருப்பினும் பூமியின் அடிப்பாகத்தை தோண்டினால் வெப்ப நிலையே வருகின்றது.

1.ஆகவே சேமித்து வைத்த இந்த வெப்ப அலைகள்
2.சூரியனின் வெப்பத் தன்மை தணியும் போது
3.மனிதனுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ மற்ற தாவர இனங்களுக்கோ அது இயக்க
4.இது உதவுகின்றது நமது பூமி வாங்கி வைத்த வெப்பங்கள்.
5.அந்த வெப்ப நிலை இல்லையென்றால் எதுவுமே வளராது… இயங்காது… வாழாது… ஜீவிக்காது…!

கடலுக்குள் மீன் வாழ்கின்றது என்றால் நீருக்குள் தான் அது இருக்கின்றது. நீருக்குள் இருக்கும் காந்தப் புலனறிவு இந்த மீனுக்குள் உறைந்த அந்த காந்தப் புலனறிவுடன் உராயப்படும்போது மின் ஆற்றல் உற்பத்தியாகின்றது… “வெப்பமாகின்றது…”

இந்தக் காற்று மண்டலத்தில் எப்படிப் பல நிலைகள் உருவாகின்றதோ… நீர் குளர்ந்திருந்தாலும் நீருக்குள் வாழும் மீன் அது அதற்குள் இருக்கும் காந்தப் புலன்கள் கொண்டு வெப்பத்தை உருவாக்குகின்றது.

நாம் மின்சாரத்தை உருவாக்குவது போன்று கடலில் மின்சார மீன் என்றும் உண்டு. ஓடும் வேகத்தில் பளீர்…பளீர்…! என்று மின்னும்.

தரைகளிலும் வாழும் வண்டு இனங்களில் மின்னெட்டாம் பூச்சி என்று உண்டு. அந்த மின் மினிப் பூச்சிகள் தான் நுகரும் தன்மை கொண்டு வெளிச்சத்தை உமிழும்.

இரவிலே பார்த்தோம் என்றால் பளிச்… பளிச்… என்று மின்னிக் கொண்டிருக்கும்.
1.அதாவது தனக்குள் ஒளியைச் சேமித்து வைத்து
2.இருளாகும் போது அது “ஒளிரும் தன்மையாக…” ஒளிபரப்பும் தன்மைகள் இந்த உயிரினங்களுக்கு உண்டு.

இவையெல்லாம் இயற்கையின் செயல்கள்…!

சந்திர மண்டலத்தின் இன்றைய பூகோள வளர்ச்சி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கலியின் மாற்றம் கொண்டு நம் பூமியின் நிலை மாற்றம் கொள்ளப் போகிறது என்று உணர்த்தினேன். அந்நிலை கொண்டு அனைத்து மண்டலங்களின் நிலையும் மாறுவதையும் உணர்த்தியுள்ளேன்.

சந்திரனில் நம் பூமியைப் போல் மழையும் இங்குள்ள காலை பகல் இரவு என்று சூரியனின் ஒளி வீச்சில் கிடைத்திடும் மாற்ற நிலை அங்கில்லை.

சூரியனின் ஒளிக்கதிர் வீச்சின் நிலை ஒரே நிலையில் ஒளி பாய்ச்சிடும் சக்தி நிலையாய்ச் சுழற்சி கொண்டு மூன்று குமிழ் நிலை கொண்ட சக்தியில் சந்திரனின் நிலை உள்ளது.

ஒரே நிலையில் சூரியனின் அணு வீச்சுகள் இருந்தாலும் மையப்பகுதியின் பள்ளத்தினால் சந்திரனின் நிலை சிதறாமல் சுழன்று கொண்டுள்ளது. நம் பூமியின் இயற்கை சக்தியைப் போல் சந்திரனின் இயற்கை வளமும் கூடப் போகின்றது.

இன்று சந்திரனில் நீர் நிலை நம் பூமியில் கடல்கள் உள்ளதைப் போல் ஆழ்ந்த நீர் நிலை அங்கு இல்லை. ஆனால் உருவாகிக் கொண்டுள்ளது.

நம் பூமியில் வட துருவ தென் துருவ நீர் நிலையின் சக்தியினால் இப்பூமி சுழலும் நிலையில் காற்று மண்டலம் இந்நீர் நிலையிலிருந்து வருவதினால் இவ்விரண்டு பக்க நீர் நிலையில் ஒன்றை ஒன்று உலகம் சுழலும் நிலையில் ஈர்க்கும் சக்தியும் ஏற்படுகிறது.

அவ்வாறு ஏற்படுவதனால் நம் பூமிக்கு இக் காற்று மண்டல சக்தியுடன் நான்கு நிலை கொண்ட கால நிலையினால் இங்கு ஏற்படும் மழையும் மற்றச் சீதோஷ்ண நிலைகளின் மாறு கொண்ட சக்தியும் நம் பூமியின் பொக்கிஷமாய் உள்ளதைப் போல் சந்திரனில் வரப் போகிறது.

சந்திரனுக்கு அருகாமையில் நீரை ஏற்படுத்தும் அமில நிலை கொண்ட உப்புக் கலந்த அமில சக்தி கொண்ட நட்சத்திர மண்டலங்கள் அதிகமாய் உள்ளன.

இக் கலியின் மாற்றத்தினால்… மாறும் தருணத்தில்
1.மனிதன் சந்திரனுக்குச் சென்று அவனது சுவாச அலையை அங்கு விட்ட நிலையிலும்
2.இப்பூமியிலிருந்து ஆத்மாக்களில்லா ஏவுகணைகள் பல அந்நிலைக்குச் சென்று பூமியின் சக்தி சந்திரனில் செயல்படும் நிலையிலும்
3.நம் பூமியின் பார்வை நிலையில் நம் பூமியின் ஈர்ப்பு சக்தியும் சந்திரனில் நிறைந்துள்ள நிலையிலும்
4.தெரிந்தோ தெரியாமலோ சந்திர நிலவை… பௌர்ணமி நாளை… நம் ஆத்மாக்களில் பலர் ஆண்டவனாய் வழிப்பட்டதின் நிலையில்
5.நம் பூமியின் ஆத்மாக்களின் எண்ண சக்தியின் அலையும் சந்திரனில் கலந்துள்ள நிலையில்
6.சந்திரனில் நாம் காணும் அப்பள்ள நிலைகளே நம் பூமியின் நிலை போல் சந்திரனில் இரண்டு பக்கங்களிலும் நீர் நிலைகள் கூடப் போகின்றன.

நம் பூமியில் உள்ளதைப்போல் தாவர வளர்ச்சி நிலையும் செயல் கொண்டு நம் பூமியின் சக்தி நிலைக்கொப்ப வளரும் நிலை “சந்திரனுக்குக் கூடப் போகிறது…!”

அந்நிலையிலிருந்து நம் பூமியில் உள்ள ஆத்மாக்கள் நம் பூமியின் இக்கலி மாற்றத்தில் நம் பூமியின் சுவாச நிலையின் சக்தி கொண்ட சந்திரனில் வாழப் போகின்றார்கள்…! எந்த நிலை கொண்டு…

பூமியில் வாழ்ந்த ஆத்மாக்கள் மாறு கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்திட முடியாது… என்று உணர்த்தியுள்ளோம். பூமியின் ஆத்மாக்கள் எப்படிச் சந்திரனுக்குச் சென்று வாழ்ந்திட முடியும்…? என்ற எண்ணம் இதைப் படிப்பவருக்குத் தோன்றிடலாம்.

இந்த உடல் வாழ்க்கையில் வரும் வேதனைகளை மறக்க என்ன செய்ய வேண்டும்…?

நாம் எத்தனையோ கோடி ஜென்மங்கள் தாண்டித்தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

புலி ஒரு ஆட்டைக் கண்டால் எத்தனையோ வேதனைப்படச் செய்கிறது. கடித்துக் குதறி அதனுடைய ஜீவனை முழுங்குகின்றது. அதை பார்க்கின்றோம்.

வீட்டிலே பார்த்தால் ஒரு எலியைப் பூனை எத்தனையோ அவஸ்தைப்படச் செய்து அதைக் கொன்று குதறி உணவாக உட் கொள்கிறது.

நாய்கள் பூனைகளைக் கண்டாலே விரட்டிச் சென்று கடித்துக் குதறுகிறது. காக்காயோ குருவிகளோ இரைக்காக வேண்டி விட்டில் பூச்சிகளைக் கொத்தி எத்தனையோ இம்சை செய்து உணவாக உட்கொள்கின்றது என்று நாம் இதையெல்லாம் பார்க்கின்றோம்.

தேள் கொடூர விஷம் கொண்டிருந்தாலும் கீரிப்பிள்ளையோ அந்தத் தேளையும் உதறி உணவாக உட்கொள்கின்றது.

இப்படித் தான் பல கோடிச் சரீரங்களில் ஒன்றுக்கு இரையாகும் போது… அந்த உடலிலே துடிதுடித்து… வேதனை தாங்காது…
1.எது தன்னைத் தாக்குகின்றதோ அந்த நினைவிலேயே ஒங்கி வளர்ந்து
2.தன் உடலை மறந்து அந்த வலிமையான உடலுக்குள் உயிர் சென்று
3.அங்கே கருவாகி அந்த உயிரினமாகப் பிறக்கின்றது.

இதைப் போலத்தான் இன்று இந்த உடலிலே வரும் வேதனைகளை எல்லாம் மறந்துவிட்டு
1.மெய் ஞானியின் உணர்வை நாம் தொடர்ந்து
2.அதனின் உணர்வைப் பெற வேண்டுமென்று எண்ணிவிட்டால்
3.இந்த உடலின் வேதனைகள் அனைத்தும் இங்கே மடிகின்றது.
4.மெய் ஞானியின் உணர்வோடு நம் உணர்வுகள் ஒன்றுகின்றது
5.நாம் (உயிர்) அங்கே சென்றடைகின்றோம்.

இவ்வாறு அடையச் செய்வதற்குத்தான் தத்துவ ஞானி சூட்சுமத்தில் நடப்பதை எளிதில் கண்டுணர்ந்து மனிதன் தன்னைத் தானறிந்து கொள்ள சாஸ்திரங்களைப் படைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

தான் யார்…? இந்தப் பிள்ளையார்…? என்ற கேள்விக் குறியைப் போட்டு… கல்லால் சிலைகளை வடித்து யானையின் சிரசை மனிதனின் உடலில் பொருத்தி.. பல காரணப் பெயர்களை வைத்து உணர்த்தினர்.

1.அதன் மூலம் நம் மனித உடல் உருவான நிலையையும் உயிர் தோன்றியதையும்
2.அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும் என்றும்… எந்த நிலையை அடைய வேண்டும்…? என்பதையும் காட்டினார்கள்.

வியாழனிலிருந்து தான் மனித உயிராத்மாக்கள் பூமிக்கு வந்தது – ஈஸ்வரபட்டர்

 

மண்டலங்களின் சக்தி நிலையும் இன்றுள்ள இம் மண்டலங்களின் சுழற்சியின் வேகத்தைக் காட்டிலும்… பூமியின் சுழற்சி சக்தி அதிகப்படுவதாகவும் இந்த நிலை ஒத்தே மற்ற மண்டலங்களின் துரித நிலையும் அதனதன் விகித நிலைப்படி அதிகப்படுவதாக உணர்த்தியுள்ளேன்.

இப்பூமியின் ஈர்ப்பு சக்தி நிலையும்… ஓட்ட நிலையும்… இந்த 24 மணி நேரம் 18 மணிக்கணக்கில் வரும் நிலையில் இப்பூமியில் திடப்பொருளாய் உள்ளவற்றின் நிலையெல்லாம் எந்த நிலையில் செயல்படும்…?

இன்றுள்ள மலைகளும் நீர்ன்நிலைகளும் இயற்கை சக்திகள் அனைத்துமே இப்பூமியின் அசைவின் தொடர்நிலை கொண்டு மாற்றம் கொள்ளப் போகின்றன.

இப்பூமியில் இவ் அசைவின்போது ஏற்படும் இயற்கையின் தாக்குதலின் நிலையில்லாமல்
1.தப்பிவிடும் பூமியில் வாழ்ந்திடும் உயிரினங்களின் நிலையும்
2.இப்பூமியின் சுவாச சக்தியே மாறு கொண்ட பிறகு தப்பி வாழ்ந்திடும் ஜீவராசிகளின் சுவாசத்தின் நிலையும் மாறு கொள்வதால்
3.இவ் இயற்கையிலிருந்து தப்பிடும் எந்த ஜீவராசிகளும் பல காலங்கள் வாழ்ந்திட முடிந்திடாது.

இப்பூமியின் இயற்கை சக்தியே மாற்றம் கொள்ளப் போகின்றது…!

பூமி தோன்றிய நாள் தொட்டே உதித்த உயிரணுக்கள் எவையுமே அந்த உயிரணு அழிந்திடாது… பிம்ப நிலையில் மாறும்…! என்று உணர்த்தியுள்ளேன்.

அதே சமயத்தில் இப்பூமியில் தோன்றி இப்பூமியின் சுவாசத்தையே சுவாசித்து பழக்கப்பட்ட எவ்வுயிராத்மாவும் இப்பூமியில் இருந்து மற்ற மண்டலத்திற்கு மாறு கொண்ட சுவாச நிலையில் சென்று வாழ்ந்திட முடியாது என்றும் உணர்த்தி உள்ளேன்.

இக்கலி மாறிக் கல்கியில் சுவாச நிலை மாறு கொண்ட இப்பூமியில் கலியின் காலம் வரை வந்திட்ட உயிராத்மாக்களின் பிறப்பிடம் எதுவாய் இருந்திடும்…?!

இக்கேள்வியின் நிலை இந்த நிலையிலேயே இருந்திடட்டும்…

1.நம் பூமிக்கு உயிரணுக்கள் தோன்றி உயிராத்மாவாய் அறிவு நிலை பெற்ற மனிதர்களாய் வாழும் சக்தி எந்த நிலையில் வந்திட்டது…?
2.நம் சந்திரனின் நிலையென்ன…?
3.நம் பூமியில் மனித உயிரணுக்கள் தோன்றிடும் வித்து எங்கிருந்து ஆரம்பித்தது…?

நம் சூரியனின் ஈர்ப்புடன் கூடிய 48 மண்டலங்களில் நம் பூமியைக் காட்டிலும் வியாழன் மண்டலத்தின் அளவு விகித நிலை அதிகம். ஆனால் வியாழன் மண்டலத்தின் சக்தி நிலை கூடியிருந்தாலும் உயிராத்மா பிம்ப நிலை கொண்ட மனித இனங்கள் இல்லை.

இன்றும் அங்கு உயிரணுக்கள் உண்டு. நம் பூமியைக் காட்டிலும் செழிப்பு நிலைகொண்ட கனி வளங்கள் அனைத்தும் உண்டு. ஆனால் நம் பூமி இன்றுள்ள மனித ஆத்மாக்களை வளர்க்கும் நிலை நம்மைவிட சக்தி கொண்ட வியாழனில் இல்லை.

ஆனால் நம் பூமிக்கு உயிராத்மாவின் நிலை பெறும் சக்தி வியாழனிலிருந்துதான் வந்தது…!

ஒரு கோடி… இரண்டு கோடி… நிலையில்லை… பல கோடி ஆண்டுகளுக்கு முன் நம் நிலைக்கொப்ப அறிவு நிலைப்பட்டு வாழ்ந்த ஆத்மாக்களைக் கொண்ட மண்டலம் தான் “வியாழன் மண்டலம்…”

இன்று நம் அறிவின் வளர்ச்சியில் மற்ற மண்டலத்திற்குச் செல்லும் ஆசை நிலையின் செயற்கை நிலைக்கொப்ப நம் பூமியிலிருந்து சந்திரன் செவ்வாய் இப்படியுள்ள மண்டலங்களுக்கு ஏவுகணைகளைச் செலுத்துகின்றார்கள் அல்லவா…!

1.அந்த ஏவுகணையின் மூலமாய்ச் சென்ற மனித ஆத்மாக்களின் சுவாச நிலை
2.அங்கு இவர்கள் இருந்து வாழாவிட்டாலும் இவர்கள் விட்டு வந்த சுவாச நிலையின் சக்தியிலிருந்து
3.உயிரணுக்களாகத் தோன்றிடும் வளர்ச்சி நிலையில் வித்திட்டு வந்துள்ளார்கள்.

இதே நிலை போன்றே…
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழனில் தோன்றிய உயிராத்மாக்கள்
2.நம் பூமிக்கு வந்து சென்ற நிலையினால் நம் பூமியில் உயிராத்மாக்களின் தொடர் நிலை கொண்டது.

வியாழனில் ஏற்பட்ட பிரளயத்தினால்… இங்கு எப்படி இக்கலியில் ஏற்படும் பிரளயத்தைச் செப்புகின்றோமோ அந்த நிலை போன்றே
1.அன்று அங்கு ஏற்பட்ட பிரளயத்தினால்
2.நம் பூமிக்கு உயிராத்மாக்கள் தோன்றும் நிலை வந்தது.

வரப்போகும் இப்பிரளய நிலையினால் நம் பூமியின் விகித அளவு நிலை கூடுவதைப்போல் “சந்திரனின் நிலையும் கூடப் போகின்றது…!” (கூடிக் கொண்டிருக்கின்றது என்பதை இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது)

விரதம்

இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அங்கே சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும். காலை ஐந்து ஆறு மணிக்குள் இந்த உணர்வினைப் பெறலாம்.

1.தியான வழியில் அன்பர்களில் சிலரை எடுத்துக் கொண்டால் இந்தக் காலங்களில் தான் (அதிகாலை) ஆன்மா பிரியும்.
2.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் நேரடியாகச் செல்லும் நிலை வரும்.

அங்கே சென்றால் உணர்வுகள் கரைக்கப்படுகின்றது. சூரிய ஒளிக்கதிர் உடல் பெறும் உணர்வை அது கவர்ந்து எடுத்துச் செல்கின்றது. உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உணர்வின் ஒளியாக மாறுகின்றது.

1.ஆகவே நாம் பெறுவது அழியா ஒளிச் சரீரமாக இருக்க வேண்டும்.
2.அழியும் இந்த உடல் நமக்கு தேவையில்லை.
3.உயிருடன் ஒன்றி வேகா நிலை அடைதல் வேண்டும்.

அகண்ட அண்டத்தில் உள்ள எந்த நஞ்சும் நம்மை வென்றிடக் கூடாது. அந்த நஞ்சினை ஒளியாக மாற்றிட வேண்டும்.

உதாரணமாக ஒரு பாம்பினம் நஞ்சினைப் பிற உயிரினங்களில் பாய்ச்சி அதை உட்கொண்டு தனக்குள் மகிழ்ச்சி ஆகின்றது. அதில் உறைந்த நிலைகள் தான் இங்கே நாகரத்தினமாக மாறுகின்றது. பாம்பிற்குள் உறையும் கல்லாக இருக்கின்றது. இது ஜீவனற்றது.

ஆனால் நமக்குள் நஞ்சினை ஒளியாக மாற்றி என்றும் ஜீவ அணுவாக இருக்க வேண்டும். ஜீவனுள்ளதாக கணவனும் மனைவியும் ஈருயிரும் ஒன்றாகி என்றும் ஒளியின் சுடராக மாறுதல் வேண்டும்.

இதைத்தான் ஏகாந்த நிலை “ஏகாதசி…!” என்று சொல்வார்கள். அந்த ஏகாந்த நிலைகள் நாம் பெற வேண்டும்.

ஆனால் ஏகாதசி அன்று “ஆண்டவனுக்கு விரதம் இருந்து சாப்பிட்டால் ஏகாந்த நிலை பெறலாம்…” என்று இப்படி நம்மை அறிவிலிகளாக மாற்றிவிட்டனர்.

ஏகாந்த நிலைகளில் நாம் எப்படி இருக்க வேண்டும்….? விரதம் என்பது எது…?

யாருடன் எல்லாம் பகைமை கொண்டோமோ அவர்களின் பகைமையை மறந்துவிட்டு
1.நான் பார்த்த குடும்பங்களில் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.அவர் குடும்பங்கள் ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ வேண்டும்
3.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
4.அவர்கள் குடும்பங்களில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் அந்த நிலை பெற வேண்டும்
6.எங்களைப் பார்ப்போர் குடும்பம் எல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று
7.இந்த விரதத்தைத் தான் எடுக்கச் சொன்னார்கள்.

ஏகாதசி அன்று விரதம் இருப்போர்கள் சமையல் செய்து படைப்பார்கள். அன்றைய தினம் சங்கடம் எல்லாவற்றையும் கேட்பார்கள். கேட்டுவிட்டு கடைசியில் இந்த உணர்வின் எண்ணங்கள் கொண்டு சாப்பிட்டால் என்ன நடக்கிறது…?

பசியாக இருந்து சாப்பிட்டாலும் அன்றைக்கு ஜீரணம் சரியாக இருக்காது. அரிசி சாதம் சாப்பிட்டால் கோதுமை சாப்பிடுகிறோம் என்றும் கோதுமை சாப்பிட்டால் அரிசி சாதம் சாப்பிடுகின்றோம் இது ஒரு விரதம். அல்லது வெறும் வாழைப்பழம் மட்டும் சாப்பிடுகிறேன் என்பார்கள்.

விரதம் என்று இப்ப்டிக் குறைத்துக் சாப்பிட்டால் என்ன ஆகின்றது…?

இவர்கள் உடலிலே வேதனை என்ற உணர்வான பின் குடலில் இருக்கும் ஜீரணிக்கும் அணுக்கள் அப்படியே படுத்துவிடும்…! ஏனென்றால் திடீரென்று உணவைப் (நேரம் கழித்து) போட்டவுடன் ஜீரணிக்கும் சக்தி இல்லை.

இரவு ஆனதும் பார்த்தால் நெஞ்சைக் கரிக்கின்றது… மேல் வலிக்கின்றது… என்று இதைத்தான் நாம் பார்க்கின்றோம்.

நம் உடலில் இருக்கும் உறுப்புகள் அது சீராக இயக்க வேண்டுமென்றால் ஏகாந்த நிலைகள் கொண்டு எப்படி இருக்க வேண்டும்…?
1.அனைவரும் நலம் பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பம் மலரைப் போல் மணம் பெற வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டுமென்ற உணர்வை எப்பொழுது சேர்க்கின்றனரோ
4.அப்பொழுது தான் பகைமை இல்லாது “ஏகாந்த நிலை” அடைகின்றோம்.

நமக்குள் வரும் நோயைத் தடுக்கும் நிலையும் உடல் ஆரோக்கியமும் வருகின்றது.

அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும்… அருள் மகரிஷிகளின் சக்திகளை அனைவரும் பெற வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எண்ணினால் ஏகாந்த நிலை. இது தான் உண்மையான ஏகாதசி விரதம்…!

கால மாற்றமும்… இயற்கை மாற்றமும்…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்பூமி சுழலும் வேகத்தை ஒரு நாளைக் குறிக்க 24 மணி நேர விகிதப்படுத்தி… இவ்வுலகம் முழுவதுமே அக்கணக்குப்படி ஒரு நாள் நிலைப்படுத்தி உள்ளார்கள்.

இந்த 24 மணி நேர விகிதக் காலம் குறித்துப் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவும் அந்நிலையை வைத்தே அந்நிலையின் செயலுக்கொப்பக் கால நிலை குறிக்கும் அளவைச் செயலாக்குகின்றனர்.

இந்த 24 மணி நேரம் குறித்த காலத்திற்கும்… இன்று இப்பூமி சுழலும் நிலைக்கும் துரிதம் கொண்டுள்ளது வினாடி விகிதத்தில்…! பல நூறு கோடி ஆண்டுகளில் சில வினாடி நேரம்தான் அதிகத் துரிதத்துடன் இன்று நம் பூமி சுழல்கின்றது.

ஆனால் இக்கலி முடிந்து கல்கியில் இவ்வுலகப் பிரளயம் தோன்றி இவ்வுலக நிலை மாறிச் சுழலும் தருவாயில் நம் பூமியின் சுழலும் வேகம் இப்போதைய நேரத்தில் நான்கில் ஒரு பாகம் எடுத்த நிலையில் மூன்று பாகங்கள் கொண்ட துரித கதியில் இன்று 24 என்பது 18 மணி விகிதத்தில் சுழலப் போகின்றது.

நம் பூமியில் இவ்வசைவின் பிரளயத்தின்போது நம் பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களும் சேரப் போகின்றன. நம் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் சக்தி நிலையும் அதிகப்படப் போகின்றன.

நம் சூரியனின் விகித நிலையும் கூடப்போகின்றது. சூரியனும் 48 மண்டலக் கோள்களும் ஒரே சமயத்தில் வளர்ச்சி கொள்ள இவற்றிற்கு சக்தி நிலை கூடும் அமிலங்கள் யாவும் நம் கண்ணிற்கு தெரியாத நிலைகொண்டு பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியே இம் மாற்றம் கொள்ளும் தருவாயில் மண்டலங்களின் ஈர்ப்பில் வந்து சேர்ந்து மண்டலங்களின் வளர்ச்சி நிலை கூடப்போகின்றது.

இன்று நம் பூமியில் வடதுருவம் தென் துருவ நிலை கொண்டு பூமியின் சுழற்சியில் பகலும் இரவும் இக்கால நிலைகள் நான்கும் ஒத்த நிலையில் உள்ளன.

மழைக்காலம் மட்டும் அந்தந்தப் பிரதேசங்களின் பூமி ஈர்த்து அப்பூமி கக்கும் உஷ்ண அலைகளுக்கொப்ப மழையின் நிலை அந்தந்த நிலைகளில் மாறு கொண்டு வருகின்றது.

ஆனால் நம் பூமியின் மாற்றம் கொள்ளும் கல்கியின் காலத்தில் இன்று இவர்கள் குறித்துள்ள 365 நாள் விகிதக் கணக்கு வருடச் சுற்றலில் குறைவுபடப் போகிறது.

சூரியனைச் சுற்றியுள்ள அனைத்துக் கோளங்களின் சுற்றலின் நிலையும் துரிதப்படுவதினால் சூரியனின் நிலையும் துரிதம் கொள்ளப் போகின்றது.

நம் சூரியனுடன் தொடர்பு கொண்ட மண்டலங்களின் விகித நிலை கூடும் பொழுது பால்வெளி மண்டலத்தின் ஈர்ப்பு சக்தியில் அமில சக்தியை எல்லாம் இம் மண்டலங்கள் உறிஞ்சிய பிறகு நம்மைச் சார்ந்துள்ள இம் மண்டலங்களின் நிலையில்லா மற்ற மண்டலங்கள் நம் சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட சூரியனின் சுழற்சியின் ஈர்ப்பிலுள்ள ஒரு மண்டலம் ஆவியாய்ப் பிரியும் நிலை கொண்டு தன் ஜீவனை இழக்கப் போகின்றது.

பல நூறு கோடி ஆண்டுகளாய் வாழ்ந்த மண்டலம் அது…!

1.நம் பூமிக்கு மட்டும் மாற்ற நிலை வரப்போகின்றது என்பதல்ல.
2.இந்த அண்டத்திலுள்ள அனைத்து மண்டலங்களின் நிலையிலுமே இந்நிலை செயல்படப் போகின்றது…!

நுண்ணிய வேலைகளைச் செய்யும் கம்ப்யூட்டரின் செயல்பாடு (INTELLIGENCE) எப்படிப்பட்டது…?

 

எதிர்நிலையான நட்சத்திரங்களின் மோதலினால் மின்னல்கள் உருவாகின்றது. மின்னல் பாயும் பொழுது மரத்தின் மேல் பட்டால் மரத்திற்குள் ஊடுருவி அது தன் இனத்தை எடுத்துக் கருகி விடுகின்றது.

மின்னல்கள் நிலத்தில் பட்டால் பூமியின் நடு மையமான நிலைகள் சென்றடைகின்றது. இப்படி அதீதமான நிலைகள் உள் சென்று எதிர்மறையான உணர்வுகள் பூமியின் நடு மையமானால் “எந்தப் பகுதியில் ஆகின்றதோ… அங்கு கொதிகலனாக மாறி… பாறைகள் எல்லாம் இளகுகின்றது…”

உள்ளே இருக்கும் பாறைகள் இளகும் போது பூமி வெடிக்கின்றது. மேலிருக்கும் பாறைகள் கீழே இறங்குகின்றது. “நில நடுக்கம்” என்று அடிபாகத்திற்குள் போகின்றது. அதற்குள் அடக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் மின்னல்கள் கடலில் பாய்ந்தால் அந்த மின் அணுக்களின் கதிர்கள் கடலுக்குள் படியப்படும்போது மணலாக மாறுகின்றது.

கடலுக்குள் இருக்கும் ஹைட்ரஜன்… அந்த உப்பின் சத்து மின்னலின் வீரியத்தைத் தணிக்கின்றது.

கடலிலே பாயும் இத்தகைய நிலைகள் எல்லாம் மணலாக மாறி அந்த மின் அணுக்களின் துகள்களாக வரப்படும்போது கடலில் வரக்கூடிய மணல் அத்தகைய ஆற்றல்கள் பெறுகிறது.

இதைத்தான் யுரேனியம் என்று பிரித்தெடுக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகள் இது கலவைகளாகின்றதோ அதற்குத் தக்க கனிமங்களாக உருவாகிறது.

இந்த மணலின் தன்மையை எடுத்துப் பிரித்து அதை வைத்துத் தான் அணுவைப் பிளக்கின்றனர் விஞ்ஞானிகள்.
1.இந்த அணுவின் தன்மை மற்றொன்றை அடக்கும் போது
2.வரும் அணுவின் தன்மையைப் பிளந்து உணர்வை எடுக்கின்றான்.
3.இதில் சிதைந்த உணர்வின் தன்மையைத் தான் இன்றைக்கு கம்ப்யூட்டரிலும் ஃபோனிலும் (SMART PHONE) உபயோகப்படுத்துகின்றனர்.

அதாவது அந்த உணர்வைப் பாய்ச்சி… ஒளி அதிர்வுகளைக் கண்டு… உணர்வின் செயலாக்கங்களுக்கு (COMMAND)
1.அந்த நுண்ணிய “கதிரியக்கப் பொறிகளை” மாற்றும் போதுதான் கம்ப்யூட்டர் என்னும் நிலைகள் வருகின்றது
2.இப்படி மின் அணுவின் கதிரியக்கங்களுடைய நிலைகள் ஒரு காந்தப் புலனறிவில் கவரப்பட்டு
3.கம்ப்யூட்டரில் – ஒரு காந்தத்தை கவரும் ஒரு உணர்வின் தன்மையைப் பதிவு செய்து… அந்த உணர்வின் அறிவாக ஆன பின்
4.எதிர் ஒலியின் தன்மை மின் அணு போன்ற இந்த உணர்வின் தன்மை தோன்றும்.
5.அந்த உணர்வின் தன்மை எதுவாகின்றதோ மோதும் ஒவ்வொரு உணர்வுக்கொப்ப அதனின் உருவத்தையும் காட்ட முடியும்.

ஆக… ஒவ்வொருவரும் அவரவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் எப்படி வருகின்றது…? என்ற நிலையும்… ஒரு மனிதன் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான் என்றால் அவர்கள் வம்ச வழியில் வந்தவனின் ரூபங்கள் எப்படி இருக்கின்றது…? என்றும் காணலாம்.

ஒரு உணர்வின் தன்மையைப் பதிவாக்கி அந்தக் கம்ப்யூட்டர் எதிர் நிலைகளை (0 1) எடுத்துக் கொண்டால் ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது.

“ஆயிரம் மடங்கு” அதைக் கூட்டுகின்றான். மீண்டும் அந்த உணர்வின் எதிர் ஒலிகள் வரப்படும்போது… வாழ்ந்த உணர்வை… பூமியில் பதிந்ததை எடுத்து… மனித ரூபத்தைக் கொடுக்கின்றது.

இன்று விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.

அதைப் போலத் தான் அன்று வாழ்ந்த மெய் ஞானியின் உணர்வை நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாக்கப்படும் போது
2.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து (நுகரப்பட்டு)
3.அவன் ஒளியான உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் ஒளியாக முடியும்.

சில பேர் என்ன சொல்வார்கள்…? விஞ்ஞஞான அறிவு எங்கேயோ போகின்றது… சாமி (ஞானகுரு) எங்கேயோ மூலையில் இருக்கிறார் என்று…!

ஏனென்றால் விஞ்ஞானத்தின் அறிவு எப்படி இருக்கின்றது…? மெய் ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? என்று குருநாதர் எல்லாவற்றையும் காட்டினார்.

1.இயற்கையின் நிலைகளை அதனின் இயக்கத்தை எப்படி…? என்று
2.கற்றுணர்ந்த பின் தான் அதை உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.
காலம் வரும் போதெல்லாம் உங்கள் உணர்வுக்கொப்ப… காலத்தின் மாற்றத்திற்கொப்ப இதை நுகரும் போது… அந்தந்த உணர்ச்சிகள் அது கவரப்பட்டு உங்களுக்குள் பதிவு செய்யும் நிலையாக இது வரும்.

1.ஏனென்றால் முந்திச் சொன்னது எல்லாம் வேறு விதமாக இருக்கும்.
2.அந்த உணர்வின் வளர்ச்சிக்கு நீங்கள் வரப்படும்போது
3.இந்த இயற்கையின் தன்மை… உங்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

இந்த உடலிலே எத்தனை காலம் நாம் வாழப் போகின்றோம்…? நம் உடல் சதமற்றது…!
1.ஆனால் என்றைக்கும் நிலையானது உயிர்
2.அந்த உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக்கப்பட வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலையை அடைய வேண்டும். பிறவியில்லா நிலை அடையச் செய்யும் அந்த அருள் ஒளியை உங்களுக்குள் சேர்ப்பிப்பதற்குத் தான் இது போன்ற உபதேசங்கள்.

நம் சூரியக் குடும்பத்தில் பூமியின் சுழற்சி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்பூமியும் இப்பூமியைப் போன்ற இப்பூமியைச் சார்ந்த 48 மண்டலங்களும் நம் சூரியனைச் சுழன்று தானும் சுழன்று கொண்டே உள்ளது.

நம் சூரியன் சுற்றும் வேகமும் நம் சூரியனின் குழந்தைகளான நம் மண்டலங்கள் சுற்றி ஓடும் விகித நிலைப்படுத்தி ஒரு வருடம் என்ற நிலையில் 365 நாள் விகிதக் கணக்குப்படுத்தியும் நான்கு வருடத்திற்கு ஒரு நாள் அதிகப்படுத்தி லீஃப் வருடம் என்றும் சூரியனைச் சுற்றி ஓடும் நிலையுணர்ந்து இவ் வான சாஸ்திரத்தில் வருடம் நாள் வாரம் இப்படி நிலையுணர்ந்திடப் பல நிலைகளை இவ்வுலகின் நிலையில் உணர்த்தியுள்ளார்கள்.

இப்பூமிக்கும் நம் சூரியனுக்கும் உள்ள தொடர்பு நிலை எந்நிலை கொண்டுள்ளது…? காலங்களில் நான்கு வகைக் காலங்களும் ஒரு நாளில் காலை பகல் இரவு என்ற மூன்று நிலைகளும் ஒவ்வொரு நொடியும் ஒரு நொடியை போல் இல்லாமல் இவ்வுலக ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் சுழன்று கொண்டே உள்ளன.

1.உதய காலத்தில் நாம் காணும் சூரியனின் விகித நிலை உருவமே பெரிதாகவும்
2.பகல் ஏற ஏற நம் பூமிக்கு நேர் மையத்தில் சூரியனின் நிலையைக் காணும் பொழுது
3.உதய காலத்தில் கண்டிட்ட சூரியனின் உருவ அமைப்பை விட உச்சிக் காலத்தில் சிறிய கோளமாகவும்
4.பகல் மாறி மாலை சூரியனின் அஸ்தமத்தில் உதய காலத்தில் கண்ட நிலைப்படி உருவ அமைப்பு பெரியதாகவும் காண்கின்றோம்.

எந்த நிலை கொண்டு…?

உதய காலத்தில் சூரியனின் நிலை நம் பூமியின் நிலைக்கும் இடைப்பட்ட தூரம் குறைவு. நமக்கு அருகாமையில் சூரியனின் நிலையுள்ளது.

ஒவ்வொரு நொடியும் உச்சிப்பகல் வருவதற்குள் நம் பூமியின் ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் ஓடும் நிலையில் நாம் உள்ள இடத்தில் சூரியனின் நிலை நமக்கும் நேர் மேலே வரும் பொழுது உதய காலத்திற்கும் பகல் உச்சி நேரத்திற்கும் நம் பூமிக்கு சூரியனின் தூர விகிதம் மிகவும் அதிகமாகி விடுகின்றது.

உதய கால தூர விகிதப்படி உச்சிக் காலத்தில் இருந்திட்டால் நம் பூமி சுழற்சி வேகமும் சூரியனின் சுழற்சி வேகமும் சூரியனிலிருந்து வந்திடும் ஒளிக் கதிர்களின் வெப்ப நிலை நம் பூமியின் நேர் மையத்தில் பட்டு பூமியே வெடிப்பு நிலையில் சிதறுண்டிருக்கும்.

உச்சி நிலையில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் அதிகப்படுவதினால் சூரியக் கோளின் உருவ அமைப்பைச் சிறிதாகக் காண்கின்றோம். பகல் மாறி மாலை வர வர நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை வருவதினால் மாலையிலும் இந்நிலை போன்ற சூரியனின் உருவ நிலையைப் பெரிதாகக் காண்கின்றோம்.

1.ஆனால் உதய காலத்தில் நமக்கு அருகாமையிலுள்ள சூரியனின் வெப்ப நிலை நமக்குக் குறைந்தும்
2.பகல் நேரத்தில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் நீண்டுள்ள நிலையில்
3.வெப்பத்தை அதிகமாக எடுக்கின்றோம்…!

எந்நிலை கொண்டு…?

நம் பூமிக்கு உள்ள நான்கு திசைகளில் வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு என்ற நிலையில் வட துருவத்திலும் தென் துருவத்திலும் நம் பூமியின் அச்சாக நிறைந்துள்ளது நம் பூமியின் பொக்கிஷமான கடல்கள்.

கடல்களான அந்நீர்நிலைகளின் மேல் இவ்வுதய கால சூரிய அலைகளின் வெப்பம் பட்டு அவ்வொளிக் கதிர்களின் எதிர் வீச்சின் சக்திதான் காலையும் மாலையும் உள்ள கால நிலைகள்.

1.நம் பூமியின் இவ்வடதுருவ தென் துருவ நிலைகளில் அமைந்துள்ள இக் கடல்களின் சக்தியினால்தான்
2.நம் பூமியின் சக்தியே இந்நிலையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒவ்வொரு தன்மை கொண்ட சக்தி நிலையில் உருப்பெற்ற மண்டலமாய்ச் சுழல்கின்றது. நம் பூமியின் இயற்கை தந்த பொக்கிஷ நிலைதான் நாம் இன்று நான்கு வகைக் காலங்களை அடைந்த நிலை.

சூரியனின் விகித தூரத்திற்கும் மற்ற மண்டலங்களிலிருந்து நம் பூமிக்கு ஏற்படும் ஈர்ப்பு சக்தியின் நிலைக்கொப்பத்தான் கோடை காலம் வசந்த காலம் இளவேனிற் காலம் குளிர் காலம் இப்படி நிலை பிரித்து நாமமிட்டு நாம் அழைக்கும் இக்காலங்கள்.

நம் பூமியின் வட துருவ தென் துருவ நீர் நிலைகளின் மேல் சூரியனின் தூர விகிதமும் நம் பூமிக்கு அருகாமையிலுள்ள சந்திரனின் தூர விகிதமும் உள்ள நிலையில் வட துருவ தென் துருவ நீர் நிலைகளின் மேல் அம் மண்டலங்களிலிருந்து தாக்கிடும் அணு சக்திகளின் நிலை கொண்டுதான் இப்பூமிக்கு ஏற்படும் காற்று மண்டலங்களின் சக்தி நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறு கொள்கின்றன.

ஒவ்வொரு நொடியும் இப்பூமி தோன்றிய நாள் தொட்டே மாற்றம் கொண்டேதான் சுழன்று கொண்டுள்ளது.

1.நொடிக்கும் குறைவான நிலையிலேயே ஒவ்வொரு நிலையும் மாறி மாறியே தான்
2.இன்றளவும் இனி நடந்திடும் பல ஆயிரம் கோடி ஆண்டுகளும்
3.இப்பூமியின் நிலையும் மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும்
4.ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் சுழன்றே ஓடிடும்.

சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் தன்மை கொண்டவன்…!

 

நம்மைத் திட்டியவரை நினைத்தால் நாம் கணக்குகள் பார்த்துக் கொண்டிருந்தால் அது தப்பாகும். வேறு எந்த வேலை செய்தாலும் நம்மால் அதைச் சீராகச் செய்ய முடியாது.

அந்தத் திட்டியவனை எண்ணி… நமக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்று அவனை எண்ணும் போது அவனுக்குள்ளும் இது சென்று அவன் காரியங்களுக்கும் இடைஞ்சலாகும்.

அதே போல் ஒரு வேதனைப்படுவோரை நாம் நுகர்ந்தால் அது ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகின்றது. நமக்கும் அதே வேதனை வருகிறது.

ஆனால் இது போன்ற தீய வினைகளை எல்லாம் வேக வைத்து விட்டால் முளைக்காது.

பண்புடன் பரிவுடன் தான் அந்த வேதனைப்படுவோரிடம் கேட்டறிகின்றோம். அவனுக்கு வேண்டிய உதவிகளையும் செய்கின்றோம்.

ஆனால் உதவி செய்தாலும்… ஈஸ்வரா… என்று உயிரை வேண்டி நம் நினைவுகள் அனைத்தும் விண்ணிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் சென்று… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அந்தச் சக்திகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இவ்வாறு புருவ மத்தியில் தடைப்படுத்திய பின்
2.அந்த வேதனைப்பட்ட உணர்வு நமக்குள் புகாது தடைப்படுகின்றது.

அங்கே நிறுத்திய பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தித் தியானிக்க வேண்டும்.

கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தும் போது…
1.அந்த வேதனை உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி
2.துருவ நட்சத்த்திரத்தின் உணர்வு வலு பெற்ற பின் தடுக்கப்படுகின்றது.
3.அப்பொழுது நம் ஆன்மா தூய்மை அடைகின்றது.

பின்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வேதனைப்படுவோர் உடல் முழுவதும் படர வேண்டும். அந்த வேதனையிலிருந்து அவர் மீண்டு சிந்தித்துச் செயல்படும் திறன் பெற்று பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வை நாம் எண்ணி அதை அவர் மேல் பாய்ச்சுதல் வேண்டும்.

அப்பொழுது அவர் உடலில் உள்ள வேதனைகளை மாற்றிட இந்த உணர்வை எடுத்துக் கொண்டால் பரவாயில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தியால் “நீ உடல் நலம் பெறுவாய்…!” என்று நாம் சொல்லும் உணர்வுகள்
1.அவர் செவிகளில் மோதி அந்த உணர்வுகள் அங்கே பாயும் போது சிறிதளவாவது பாயும்.
2.அதே சமயத்தில் அவரின் வேதனையான உணர்வுகளை நமக்குள் வராதபடி தடுத்து விடுகின்றோம்.

துருவ நட்சத்திரம் என்பதை “சுக்ரீவன்” என்று காரணப் பெயர் வைத்துள்ளனர்.

பல கோடிச் சரீரங்களைக் கடந்த அகஸ்தியன்… கணவன் மனைவி என்று இரு உணர்வுகளையும் ஒன்றாகச் சேர்த்து இணைத்துத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வெளிப்படும் உணர்வினை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் சுக்ரீவன்.

சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் தன்மை கொண்டவன்…! ஒரு வேதனைப்படுவோரைப் பார்த்த பின் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற ஏங்கினால் அந்தத் தீயது உடலுக்குள் போகாதபடி தடுக்கின்றது.

அந்த உணர்வின் தன்மை நம் உடலில் பெருக்கிய பின் அந்தத் தீமை என்ற உணர்வுகளைத் தள்ளிவிடுகின்றது. நாம் உடல் நலம் மன நலம் பெறுகின்றோம். மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் பெறுகின்றோம்.

“நம்முள் ஈசனே குடி கொண்டுள்ளான்…” என்று உணர்ந்து அவன் வழியில் நாம் வாழ்ந்திட வேண்டும்

 

பாம்பின் விஷத்தையும் போக்கி விடலாம் மற்றத் தீய சக்திகளையும் நம்முள் அண்டவிடாமல் போக்கி விடலாம்.
1.ஆனால் நம்முள்ளே நாம் ஏற்றிக் கொண்ட இவ்வெண்ணத்தின் சுமையை
2.ஒரு நிலைப்படுத்தி ஜெபம் பெறுவதுதான் நம் சக்திக்கும் மேம்பட்ட சக்தி.

இவ்வுலகச் சூழ்ச்சியிலிருந்தும் மற்றவர்களின் நிலையின் தாக்குதலிலிருந்தும் இன்றுள்ள இவ்விஷமான இவ்வுலக நிலையிலிருந்து மீண்டு செயல் கொள்ளுவது மிகவும் கடினம்…!

ஆத்மீக நெறியின் வழிமுறைக்கு நம் வழி அமைந்த பிறகு…
1.நாமே தான் நமக்குகந்த நெறி முறையை அமைத்துக் கொண்டு செயல்படல் வேண்டும்
2.அச்செயல் வழியில்தான் நம் சக்தி நிலையே கூடி வழி வந்திடும்.

இந்நிலையின் தொடர் நிலை வந்த பிறகு பிறரின் எண்ண நிலையை நம்முடன் மோதவிட்டு ஆத்மீக நெறி முறையில் செல்லுவதும் அழகல்ல. “போற்றலும் தூற்றலும்…” ஒரு நிலை போன்ற சம நெறியின் வழியாக்கிடல் வேண்டும்.

இவ்வெண்ணத் தொடரின் வழி பெற்ற பிறகு ஞானத்தின் சக்தி நிலை கூடும் நிலையில் நம் உடலில் உள்ள முன்பு வாழ்ந்த வாழ்க்கையில் உள்ள தீய சக்திகளும் செயலற்றதாய் நற்சக்திகளின் நிலை வளர்ந்து கொண்டே வரும்.

இந்த நிலையின் வழித் தொடரில் வந்த பிறகு..
1.வாழ்க்கையுடன் உள்ள நம் நிலையில் ஏற்படும் சிக்கலை நம் எண்ணத்தில் ஏற்றிக் கொண்டு
2.அந்தக் கவலையை வளரவிடும் பொழுது நம் உடலில் உள்ள தீய சக்திகளுக்கு நாம் உரம் இட்ட நிலை போல் வளர்ந்து விடும்.

நற்சக்தியின் நிலை கூடுவதற்குப் பல காலம் ஜெபம் பெற்று ஞானத் தொடரை வழிபெற்ற பிறகு ஒரு சில நொடியில் இவ்வெண்ண மோதலினால் அதை விரையப்படுத்தலாகாது.
1.பக்திமானாக சக்திமானாக ஆண்டவனின் சக்தியில் ஒளிர
2.ஒரு நாளில் இரண்டு நாளில் அந்த ஞானத் தொடரும் சக்தி தொடரும் வந்திடாது.

உயிரணுவாய்… உயிராத்மாவாகப் பிறப்பெடுத்து… நாம் நம் உடலுடன் சேமிக்கும் அமில சக்தி அனைத்தையுமே நற்சக்தியாகக் கலந்து ஒளி பெறும் நிலையில் தான் நம் நிலையும் உயர்ந்திடும்.

இவ்வாத்மீக நெறிக்கு வழி பெற்றிட…
1.தீய சக்திக்கு நாம் அடி பணியாமல் நம்முள் தீய சக்தியை அகற்றினால் அன்றி
2.நூறாண்டு காலமல்ல நூறு கோடி ஆண்டானாலும் நம் ஆத்மாவை
3.ஆண்டவனின் சக்தியின் சக்தியாய் ஒளிரச் செய்வது கடினமே.

சொத்தும் சுகமும் அல்ல சக்தியின் செல்வம். இது போன்ற அல்ப ஆசைகளை நம் எண்ணத்தில் துறக்கும் நிலை பெற வேண்டும்.

துறவியாய் ஆண்டிக் கோலம் பூண்டு செல்லும் துறவறம் அல்ல…!

1.ஒன்றை எண்ணிய நிலையில் “அடைந்தே தீருவோம்…!” என்ற பேராசையின் பிடியில் சிக்கிடாமல்
2.வாழ்க்கைக்குகந்த அன்புச் செல்வங்களைத் தன்னிறைவு பெற ஆசையுடன் செயல் கொள்ளுங்கள்.

உண்ணும் எவ்வுணவையும் அமுதமாக உண்டிடும் பக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள். உண்ணும் உணவே ஒவ்வோர் உடலையும் எண்ண நிலைக்கொப்ப அமில சக்தியின் சேமிப்பையும் நம் உடல் பெறுகின்றது.

எண்ணத்தையே அமுதாக்கி உண்டிடுங்கள். எவ்வுணவை உண்டாலும் அமிர்தமாய்… நம் உடலில் செயல் கொள்ளும் வழி முறையும் செயல் நிலையும் நாமாய் வழி வகுத்துத்தான் நம் ஆத்மா செயல் கொண்டிடும்.

நாம் வாழ்ந்திடும் இனி வரப்போகும் ஒவ்வொரு நொடியையுமே இவ்வழித் தொடரின் ஜெப சக்தியை வளரவிட்டே நம்முள் நம் ஆத்மாவாய் நம் ஈஸ்வரனே குடிகொண்டுள்ளான் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

நாம் எடுத்திடும்… நாம் விட்டிடும்.. சுவாசமே
1.அவ் ஈஸ்வரனின் ஜெபத்துடனே ஓ…ம் ஈஸ்வரா…! என்ற நிலையிலேயே
2.எந்நிலையில் எச்செயலில் இருந்திட்டாலும்
3.நம் எண்ண ஜெபம் முழுவதுமே அவ் ஈசனின் நினைவுடன் இருந்திட்டால்
4.மற்றத் தீய சக்தியின் நிலை நம்மை எப்படித் தாக்கும்…?

ஏனென்றால் நம்மை அத் தீய சக்தியில் இருந்து காக்கத்தான் அவ் ஈசனே ஜெபம் கொண்டு நம்முள் உள்ளானே…!

1.நம் ஆத்மாவே ஈசன் தான்… ஈசனின் சக்தியில்லாமல் எச்சக்தியுமில்லை.
2.ஈசனே குடி கொண்டு உள்ள நம் ஆலய ஆத்மா கொண்ட நம் உடலை
3.ஈசனின் சக்தியாய் வாழ்ந்திடும் நெறி முறையின் வழித்தொடர் கொண்டே வாழ்ந்திடுங்கள்.

“நான்…!” என்று நிலைப்பட்டால் வளர்ச்சியே இருக்காது – ஈஸ்வரபட்டர்

 

இன்றளவும் நம்மில் தோன்றி சப்தரிஷி நிலை கொண்ட ஒவ்வொரு ஜோதிகளும்…
1.தனக்கு மேல் உள்ள உயர்ந்த சக்தியான இயற்கையின் ஆதி சக்தியையே ஜெபப்படுத்தி
2.நான் என்ற நிலைப்படாமல் மென்மேலும் அவ் இயற்கை ஜெபத்துடன் தான் செயலாற்றுகின்றார்கள்.

அனைவருக்கும் முருகனாய் ஜெபப்படுத்தி வணங்கிடும் அப்போகநாதரும் இன்றளவும் ஜெபத்தின் மூலம் சக்தியைப் பெருக்கி வளர்த்துக் கொண்டுள்ளார்.

பழனியில் உள்ள முருக ஸ்தலமே… அம் முருகரின் சிலையே அவர் ஜெபிக்கும் ஜெபத்தை ஈர்த்து… அருள் சக்தியை வளர்த்துக் கொண்டே அருள் புரிகின்றது.

இவ்வுலகில் வளர்ந்த கனி வளங்களை இப்பூமியிலிருந்து பிரித்த பிறகு ஜீவனற்றுப் போகின்றது என்று இதற்கு முன் உணர்த்தியுள்ளோம்.

ஆனால் போகர் ஸ்தாபிதம் செய்த அம்முருகரின் சிலைக்கு அப்போகர் ஜெபித்த ஜெபத்தினால் “அம்முருகரின் சிலையே… ஜீவன் கொண்ட நிலையில்… அந்த மலையில் ஐக்கியப்பட்டு விட்டது…”

ரிஷிகளும் சப்தரிஷிகளும் அவர்களின் நிலையினால் நட்ட கல்லையும் ஜீவன் கொண்டிட முடிந்திடும்.

சப்தரிஷியின் நிலை என்பது…
1.எந்த அண்டத்தையும் எந்தப் பிண்டத்தையும் சுழலிலிருந்து நிறுத்திடவும் முடியும்
2.பிண்டத்தையே அண்டமாக்கிச் செயல்படுத்திடவும் முடியும்.
3.அனைத்து உலக சக்தியையுமே செயலாக்கிடும் நிலை கொண்டுதான் அவர்கள் செயல் புரிகின்றனர்.

உயிரணுவாய் உயிராத்மாவாய் வளர்ச்சி கொண்டவர்களே சப்தரிஷியாய் சகலத்தையும் அறிந்திடும் சக்தி கொண்ட நிலையிலும்
1.இயற்கையின் சக்தியை பூஜித்தே
2.அவ் ஆதி சக்தியின் சக்திக்கு அடிபணிந்தே செயலாக்குகின்றனர்.

ஆகவே வாழ்ந்திடும் இக்குறுகிய கால வாழ்க்கையை…
1.ஞானத்தொடர் வழியை செயல்படுத்திடும் வழிக்கு ஒவ்வொருவரும் வந்து
2.நம் சக்திக்கும் அனைத்து சக்தியையும் ஈர்க்கும் சக்தியுண்டு…! என்ற
3.ஒரு நிலை கொண்ட எண்ண நிலை கொண்ட வழித்தொடர் பெற்றிடுங்கள்.

சப்தரிஷிகளின் வழித் தொடரில் ஐக்கியமாகுங்கள்…!

யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டுமென்று யாரும் விரும்பவும் இல்லை…! விளக்கம்

 

நீங்கள் ஒரு குழம்பை வைக்கப் போகும்போது சமமாக நிலைகள் கொண்டு சுவையாக சமைத்து விடுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலே சந்தர்ப்பவசத்தால் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் உணவாக உட்கொள்ளும் அனைவருமே மயக்க நிலை பெற்று சிந்தனை இழந்து விடுகின்றார்கள்.

அதே சமயம் ஞாபகக் குறைவாக சிறிதளவு மிளகாய்த் தூளை அதிகமாகச் சேர்த்து விட்டால் சாப்பிடும்போது வாயில் காரம் அதிகமாகின்றது. அதிலே உணவு உட்கொள்வது கணவராக இருந்தால் “குழம்பு வைத்திருக்கும் லட்சணத்தைப் பார்…!” என்று கோபமாகப் பேசுவார்கள்.

அதே சமயத்தில் நாம் நன்றாகத் தானே வைத்துள்ளோம்… என்ற எண்ணத்தால் “சந்தர்ப்பத்தால் நாம் ஒரு மிளகாய் அதிகமாகச் சேர்த்தோமா…! என்ற நினைவு இருக்காது.

இது எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும்…!

அப்பொழுது கணவன் இவ்வாறு கோபமாகப் பேசிவிட்டாரே…! என்ற அந்த வேதனை வரும்போது…
1.விஷத்தை ஒரு துளி நுகர்ந்து விட்டால் நம் சிந்தனை குலைந்து விடுவது போன்று
2.சிந்தித்து பதில் சொல்வதை விட்டுக் கண்ணை கசக்க அழுகத் தொடங்கிவிடுவோம்.

நான் இப்பொழுது என்ன செய்தேன்…? இப்பொழுது என்னைக் கணவர் இப்படிக் கோபித்துப் பேசுகின்றார்…! நான் நன்றாகத் தான் குழம்பை வைத்துள்ளேன்…! என்று எண்ணுவார் மனைவி.

கணவரோ… நான் என்ன செய்து விட்டேன்…? என்று நீ கண்ணைக் கசக்குகின்றாய்…! என்று சொன்னால் போதும்.

மீண்டும் அந்த உணர்வின் தன்மை விளையச் செய்து இங்கே காரத்தின் உணர்வுகள் மனைவிக்குள் அதிகமாகும்.

ஏனென்றால் இந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகள் இங்கே இருக்கப்படும்போது அதே உணர்வுகள் தூண்டப்பட்டு எதைச் சொன்னாலும் இப்படித் தான் அழுகும் என்ற நிலைகள் வரும்.
1.கணவரைப் பார்க்கும்போது அந்த வேதனையின் உணர்ச்சிகள் அந்த மனைவிக்கு ஏற்பட்டுவிடுகின்றது.
2.இங்கே மனைவியைப் பார்க்கும்போது கோபத்தின் தன்மை கணவனுக்கு வந்துவிடுகின்றது.

மாமியாருக்கோ… நம் பிள்ளை சொல்கின்றான் ஆனால் பார்..! எதிர்த்துப் பேசும் அளவுக்கு வந்து விட்டாள். இப்பொழுது வர…வர… வர..வர… மருமகளுக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டது என்று அதைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆக இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள்…!

இப்பொழுது என்ன சொன்னோம்…? என்று நீ அழுது கொண்டிருக்கின்றாய். இப்படியே அழுது கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆகும்…? என்று கேட்கத் தொடங்குவார்கள்.

இவைகள் எல்லாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகளை (அவரவருக்குத் தக்க) நமது உயிர் நம்மை இயக்கிக் காட்டுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தவறு யாரும் செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் இயக்கி
1.இந்த உணர்வுகளை உயிர் உணர்த்துகின்றது… உணரச் செய்கின்றது.
2.உணர்ந்ததை ஜீவனாக்குகின்றது… ஜீவ அணுவாக மாற்றுகின்றது
3.நம் உடலாக மாற்றிவிடுகின்றது உயிர்…!

நற்குணத்திலும் நற்பண்பிலும் உள்ளோரைப் பார்த்து அந்தப் பாக்கியம் பெற நாம் ஏங்கினாலே அவர்களின் நற்சக்தி நம் ஆன்மாவிலும் பெருகும் – ஈஸ்வரபட்டர்

 

நல்லோருடனே பழகியும்… நற்பயன் கொண்ட காரியத்தைச் செய்தும்… பக்திமானாய் அன்பு கொண்ட வாழ்க்கை வாழ்ந்தும்… இவ்வாழ்ந்திடும் வழித்தொடரில் நம்மைக் காட்டிலும் நம் வழித்தொடர் பெறாமல்… இருக்கும் பிறரின் வாழ்க்கை நிலை நெறி முறைகளை ஒப்பிடக்கூடாது.

நம்முடன் ஒட்டாமல்…
1.சத்துரு மித்திரு கொண்டவரின் தீய சக்தியின் பிடியில் சிக்கி
2.அப்பழக்கத்திற்கு அடிமை கொண்டவரின் நிலையையும் நம் உயர்ந்த நிலையையும் ஒப்பிட்டு
3.நம் நிலையின் பெருமையை நாம் எண்ணினாலே
4.“நான்…” என்ற நிலையினால் நாம் வளர்ந்த இந்நற்சக்திகள் கரைபடுகின்றது.

அதே சமயத்தில் பல தீய வழிகளில் அடிமை கொண்டோர்… அந்நிலையிலிருந்து மீள வழியில்லாதோர்…
1.அந்தத் தீய நிலையில் உள்ளவரின் எண்ணம்… “அன்புபடுத்தி பக்திப்படுத்தி இருக்கும் நல்லுணர்வு கொண்டோரை எண்ணி…”
2.இந்த நல்லவர்களைப் போல் நமக்கும் அப்பாக்கிய வழி சென்றிடும் வழித் தொடர் இல்லாமல் இந்நிலையில் உள்ளோமே…! என்ற எண்ணத்திலேயே
3.அவர்களின் ஆத்மாவில் நற்சக்தி பெற்றோரை எண்ணத்தில் ஈர்த்த சக்தி கூடி வலுப்பெறுகின்றது… தீமையின் பிடியில் சிக்கியுள்ள அவ்வாத்மாக்களுக்குமே…!

இன்றைய நம் வாழ்க்கையில் நம் நினைவுடன் கலந்திடும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் அவற்றுக்குண்டான சக்தி நிலை நம்முள் சேமிக்கப்படுகின்றது.

இவற்றை உணர்ந்திடாமல்…
1.வாழ்ந்தோம்…! என்ற நிலை கொண்ட சாதாரண நிலையில் வாழ்ந்து
2.மனித ஆத்மா கொண்ட உடலைப் பெற்று வாழ்ந்திடும் இந்த நல்ல பாக்கியத்தைச் சிதற விடாதீர்கள்.

நம் குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் நல்லாசி நமக்கு மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்

 

உடலை விட்டு ஆத்மா பிரிந்து செல்வதைச் சிவ பதவி அடைந்து விட்டார்… தெய்வீக பதவிக்குச் சென்றிட்டார்…! என்றெல்லாம் சொல்கிறார்கள்.

1.இது எல்லாம் நம் ஆத்மா பிரிந்த பிறகு நம்முடன் வாழ்ந்தவர்கள் நமக்களிக்கும் பதவி தானே தவிர
2.எப்பதவியும் அந்தச் சிவனால் நமக்கு அளிக்கப்படுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் நாம் இருக்கும் நிலையைக் காட்டிலும் ஆவி உலகில் அல்லல்படும் நிலை மிக மிகக் கொடிய நிலை (இது மிகவும் முக்கியமானது).

நல் ஆத்மாவாய்… நற்செயலைச் செய்வித்து… நல்லுணர்வு கொண்டு… அமைதி கொண்டு… இவ் உலக வாழ்க்கையில் உள்ள பற்று பாசம் ஆசை அனைத்து நிலைகளையுமே வாழ்ந்த நிலை கொண்டு பூரிப்படைந்து…
1.சஞ்சலத்தில் விட்டுச் செல்வதைப்போல் எண்ணாமல்
2.அமைதியுடனே இவ்வுலக பற்றற்றுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களினால் தான்
3.ஆண்டவனாக அக்குடும்பத்தின் தெய்வமாகவும் தான் வாழ்ந்த குடும்பத்தைச் செழிக்கச் செய்திடல் முடிந்திடும்.

குடும்பத்தில் உள்ளோரும் அந்தக் குடும்பத்தில் வாழ்ந்திடும் பெரியோர்களை அன்புடன் வணங்கும் போது
1.அவர் ஆத்மா பிரிந்த பிறகு நம் குடும்பத் தெய்வமாய் நம்மைக் காப்பார்.
2.அவ்வழியின் தொடர்தான்… குடும்பத் தொடராக… பெரியோரை தாய் தந்தையரை…
3.பக்தி கொண்டு வணங்கிடும் பக்குவ நிலை என்பதனை உணர்ந்து
5.ஒவ்வொரு குடும்பத்தையும் அக்குடும்பங்களே கோயில்களாய்த் திகழும் வண்ணம் வாழ்ந்து வழி நடந்திடல் வேண்டும்.

பல கோயில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனை செய்வித்து பக்தியை வளர்த்து… வணங்கி வேண்டும் முறையைக் காட்டிலும்… நம் இல்லக் கோயிலை அன்பு கொண்டதாய்… இனிமையை வளர்க்கும் இன்ப இல்லமாய்… இல்லத்தில் உள்ளோர் அனைவரின் எண்ணக் கலப்பும் ஒன்றுபட்டதாய் வாழ்ந்திடும் வழி பெறுங்கள்.

1.வாழ்க்கையுடன் மோதிடும் பல இன்னல்களுக்கும் தெளிவு பெறும் பக்குவத்தில்
2.ஞான வளர்ச்சியின் தொடர்பினை வளர விடுங்கள்.
3.செல்வமும் செழிப்பும் தானாக வளரும்.

விஞ்ஞான அறிவால் பேரழிவை நோக்கி இருக்கும் காலம் இன்றையது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்…!

 

உலக ரீதியில் எடுத்துக் கொண்டால் அன்று எப்படி பிரிட்டிஷ் ஆட்சி செய்து கொண்டிருக்கும்போது அவன் கடுமையான ஆயுதங்கள் கொண்டு உலகை அடக்கிவிட வேண்டும்…! என்றும் அவன் எண்ணினான்.

ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் கிளர்ந்து எழும்போது அதிலிருந்து அவனால் மீட்க முடியவில்லை. பின் தன் பிடிப்பில் இருந்து உலகம் அனைத்தையும் விடுவித்தான் பிரிட்டன்.

ஆனால் அதே சமயம் அணு ஆயுதங்களை எல்லாம் இன்று பெருகிக்கொண்டு ஐக்கிய நாடு சபை என்ற நிலைகள் ஒன்றைத் தன் அடிப்படை திட்டமாக அமைத்துக் கொண்டு
1.தன் உளவாளிகளின் தன்மை கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் ஊடுருவி
2.இவன் கண்டுபிடுத்த நஞ்சின் தன்மைகளைத் தூவி
3.அதனின் நிலைகள் கொண்டு மனிதனை மிருகமாக்கும் நிலைகள் கொண்டு
4.மதம் இனம் பேதம் என்ற நிலைகளில் தூண்டிவிட்டு… மனிதனைச் செயலிழக்கும் நிலைகள் செய்துவிட்டு
5.நானே தான் உலகிற்கு ராஜா…! என்று இன்று அமெரிக்காவின் செயல்கள் வந்துவிட்டது.

அதே சமயத்தில் நம் இந்தியாவின் எல்லைகளில் அசுர குணங்கள் கொண்டு தாக்குபவனை அந்த அசுரனை முழுமையாக அழிக்கச் செல்ல முடியவில்லை.

சாதாரண மக்களை அழித்துக் கொண்டிருக்கும் அந்தத் தீய நிலைகளை சட்டப்பிரகாரம் அவனை அடக்கி அவன் செயலில் இருந்து மீட்டி நற்குணங்களை ஊட்ட வேண்டுமென்று அரசு முயற்சி செய்தாலும்… அவனைக் கைது செய்து அவனுடைய அறிவீனத்திலிருந்து தெளிந்த உணர்வு வர வேண்டும் என்று செய்தாலும்… இதை அங்கிருந்தே கொக்கரித்து கொண்டிருக்கின்றான் அமெரிக்கா…!

மனிதாபிமானம் அற்ற நிலையில் நீ அவனுக்குத் (அசுரனுக்கு) தீமை செய்கின்றாய் என்ற நிலையில்… அங்கிருந்து “நீ மனிதாபிமானம் அற்றவன்…” என்று இந்தியச் சர்க்காரைப் பழி சுமத்தும் நிலைகள் வருகின்றது.

எல்லைப்புறங்களில் எல்லாம் இன்றைய நிலைகளில் பல சாதாரண பொது மக்களை அவன் கொன்று குவிக்கின்றான். இரக்கமற்ற செயல்களை செய்து கொண்டிருக்கின்றான்.

ஆனால் அவனைத் தட்டிக் கேட்டு அந்தத் தீயவனை ஒடுக்க இடமில்லாது அவன் நேரடியாக அந்தத் தீயவனுக்குப் பரிந்து பேசிக்கொண்டு இருக்கின்றான்.

1.அந்தத் தீயவனுக்குப் பரிந்து பேசும் நிலைகள் கொண்டு
2.தன் உளவாளிகளைக் கொண்டு அவன் எந்த மதத்தை உருவாக்கினானோ
3.அந்த மதத்தின் அடிப்படை கொண்டு இன்றும் மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்து
4.நஞ்சினைத் தூவித் தன் இனத்தை பெருக்கும் நிலைகளை இன்று நிலைகள் போய் கொண்டிருக்கின்றது.

தத்துவ ஞானிகள் காட்டிய உண்மையின் நிலைகள் மறைந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த உலக நிலைகள் கொண்டு
1.மதம் நமக்குச் சொந்தமல்ல…
2.அருள் ஞானியின் உணர்வே நமக்குச் சொந்தம் என்ற நிலைகளில் நாம் அந்த அருளை எடுத்துப் பழக வேண்டும்.

குறுகிய காலத்தில் தீமைகளில் இருந்து மீள வேண்டுமென்றால் சகோதர உணர்வுகளை நாம் வளர்த்தே ஆக வேண்டும். குறைகளை அகற்றும் நிலைகள் வர வேண்டும்.

பிறருடைய குறைகளைக் கண்டாலும் விண்ணை நோக்கி நாம் ஏகி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டுமென்றும்
2.தீமைகளில் இருந்து அவர்கள் விடுபட வேண்டுமென்றும்
3.ஒருவருக்கொருவர் இந்த அருள் வழியில் நேசித்து கொண்டால்தான்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியை நாம் பெற முடியும்.

எந்த விஷத் தன்மை வந்தாலும் தப்ப முடியும்…!

முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சொல்லும் இந்தப் பாத நிலை என்றால் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆதியிலிருந்து இன்றளவும் நமக்குக் கதைகளாகவும் பாடல்களாகவும் போதனை நிலைகளாகவும் தெய்வீக நிலைகளை நமக்கு உணர்த்தியவர்களெல்லாம்
1.சூட்சமப்படுத்தி மறைக்கப்பட்டு அதிலுள்ள ஜீவ நிலையை மக்களுக்குப் புரியும் நிலையில்
2.கதைகள் ரூபத்திற்காக அன்று வெளியிட்ட ஞானிகளின் ரிஷிகளின் நிலையையே
3.காலப் போக்கில் பல வடிவங்களைச் (திரிபு) சேர்த்து இன்றைய நிலைக்கு நம்பா நிலைப்படுத்தி விட்டார்கள்.

அவரவர்கள் வாழும் நிலைப்படுத்தி அவரவர்களின் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதமுண்டு, முதல் பாதம்… இரண்டாம் பாதம்… என்று இப்படி வரிசைப்படுத்தி எல்லாவற்றுக்கும் மேல் பாதம் சென்ற பிறகு தான் “அந்த ஆண்டவனுடன் ஐக்கியப்பட்டிடலாம்…” என்ற நிலையில் உணர்த்தி வருகின்றனர்.

இப்பாத நிலை பெறும் நிலை என்ன…?

ஒவ்வொரு பாதத்திலிருந்தும் முதல் படி இரண்டாம் படி மூன்றாம் படி இப்படிப் பள்ளியில் படித்திடும் நிலைக்கொப்ப “கடைசிப் படியில் பட்டம் வாங்குவதைப் போல் அல்ல…!” அவ்வாண்டவனிடம் ஐக்கியப்படும் நிலை.

எங்கும் நிறைந்துள்ள… நம்முள்ளும் கலந்துள்ள… நம் ஆத்மாண்டவனின் சக்தியை நமக்களித்த இந்த ஏழு பிறவியில் நாம் பெறுதல் வேண்டும்.

ஆனால் வாழ்ந்த நிலை கொண்டு நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு நமக்குகந்த அபிலாஷைப்படி இந்த ஏழு பிறப்புகளை நம் எண்ண நிலையில் மேம்படுத்திடாவிட்டால் நம் ஆத்மாவிற்கு இந்த மனித உடலை ஏற்கும் சக்தி இழந்துவிடுகின்றோம்.

இந்த ஏழு பிறப்பிலும் நம் எண்ண நிலைக்கொப்ப நாம் சேமித்துச் செயல்படுத்திட்ட பல தீய சக்திகளின் அமில சக்தியின் நிலை… இந்த ஏழாம் பிறப்பில் அதன் துரித சக்தியினால்… இந்த ஏழு பிறப்பில் சேமித்த நற்சக்திகளையும் இத்துரிதம் கொண்ட தீய சக்தியின் நிலையுடன் கலந்து…
1.இந்த ஏழாம் பிறப்பில் நம ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
2.நம் எண்ண சக்தியே தீய சக்திக்கு அடிபணிந்திட்ட நிலையில்
3.நாம் ஆவி உலகில் பல காலம் சஞ்சரிப்பதால் அந்நிலையில்…
4.அந்நிலையின் குண நிலைக்கொப்ப மிருகங்கள் உடல்களில் ஏறியும் அங்ககீனமுற்ற பிறப்புக்குத் தான் அடுத்து வருகிறோம்.

நாமாகச் சேமித்த வழி சென்றிடும் நிலை தான் இந்த நிலை…!

முதல் பாதம் இரண்டாம் பாதம் என்பதெல்லாம் ஒவ்வோர் உடலை ஏற்று அந்த உடல்களில் நாம் ஏற்படுத்திடும் சக்தி நிலைக்கொப்பத்தான் பிறவி நிலை பெறுகின்றோம்.

ஞான சக்தியின் தொடர்பு நிலைகொண்டு இவ்வுலக நிலையில் பற்றற்ற நிலைப்படுத்தி பக்தி நிலையின் சித்து நிலை பெற்ற பிறகுதான் சூட்சம நிலைக்கே சென்றிட முடியும்.

இவ்வாத்மாவுடன் கூடிய இந்த உடலில் வாழும் காலத்திலேயே நம் எண்ணத்தில் தீய அணுக்களின் சக்தி நிலையை நாம் அடக்கிப் பழக வேண்டும்.

கோபத்தையும் குரோதத்தையும் சஞ்சலத்தையும் சலிப்பையும் நம் எண்ணத்தில் வளரவிட்டு ஜெபம் கொண்டால் அதிலே எந்தப் பலனும் நம் ஆத்மாவிற்குக் கூடுவதில்லை.

நம் ஆத்மாவுடன் அன்பு கொண்ட நல் உணர்வையே வளரவிட்டால் அன்றி ஞான சக்தியின் தொடர் அறிவதும் கடினமே.

1.முதலில் நம்மையே நாம் உணர்ந்து.. நற்சக்திகளின் வழித் தொடர் பெற்று
2.ஞான வழியின் தொடரினால் அந்தத் தொடர் நிலை கொண்டோரின் தொடர் சக்தியையும் பெற்று
3.இவ்வழியிலேயே இவ்வழித் தொடரினை அறிந்து சப்தரிஷியின் நிலை பெற்று
4.ஒளியுடன் ஒளியாகக் கலந்து செயல்படும் நிலை தான் ஆண்டவன் நிலை பெறுவது.

இந்நிலையை உணர்த்திடத்தான் முதல் பாதம் இரண்டாம் பாதம் என்றெல்லாம் வழிப்படுத்தி உணர்த்தி உள்ளனர்.
1.ஆண்டவனே தான் நாம்… அவனே தான் மற்ற எல்லாமுமே…
2.யாரும் நமக்கு அப்பதவியை அளிப்பதல்ல… நாமே தான் நம் பதவியை அடைந்திட வேண்டும்.

ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களினால் தன் அறிவு நிலையை வளர்ச்சியில் செயல்படுத்திட முடியாது. ஆசை நிலை நல்லுணர்வுக்குத் தோன்றினாலும் பிறப்பெடுத்து இவ்வுடல் கொண்ட ஆத்ம வழியில் தான் எச்சக்தியின் தொடரையும் நாம் அறிந்திட முடியும்.

ஆகவே ஆவி உலகிற்குச் சென்று அல்லல்படும் நிலை இல்லாதபடி இன்று உடலுடன்… நல் நினைவுடன் இருக்கும் பொழுதே.. ஞானத்தின் வழி கொண்டு செயல்பட வேண்டும்.

இன்றைய உலகச் சூழ்நிலையிலிருந்து தப்ப முடியுமா…!

 

ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி வருகின்றது. ஆனால் ஒரு பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்த ஒருவனை நினைத்தே குடும்பம் சிக்குண்டு சுக்குநூறாகத் தெறித்து விடுகின்றது. எவ்வளவு கோடிச் செல்வம் இருப்பினும் இதைப் போல் நிகழந்துவிடுகிறது

சூரியனை மையமாக வைத்து ஒரு பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றதோ நம் உயிர் சூரியனாக இருந்து இந்த உடலை இயக்குகிறது.

பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்ததிரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி… அது உமிழ்த்துவதைக் கோள்கள் உணவாகக் கவர்ந்து… கோள்களிலிருந்து வருவதைச் சூரியன் தனக்கு உணவாக எடுத்து உட்கொள்கின்றது,

இதைப் போல் பிறருடைய உணர்வுகள் வெளி வருவதை நம் எண்ணத்தால் (நட்சத்திரம் போல்) கவர்கின்றோம். கவர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் உடலாக (கோள்கள் போல்) அந்தச் சத்தாக விளைகின்றது. உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை உயிருடன் சேர்த்து உயிராத்மாவாக (சூரியனைப் போல்) விளைகின்றது.

ஆகவே…
1.பிறரிடம் இருந்து வரும் உணர்வுகளை ஒன்று சேர்த்துக் கவர்ந்து
2.அந்த உணர்வுகள் நம் உடலாக ஆக்கப்படும் போது
3..நமக்குள் தெளிந்திடும் உணர்வாக உயிருடன் ஒன்றி…
4.அந்த ஞானியின் உணர்வுடன் நாம் இணைப்போம் என்றால்
5.அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றது போன்று நாமும் பெற முடியும் என்பது தான் ஆலயங்களின் தத்துவம்.

ஆனால் அந்த ஆலயத்தில் இப்பொழுது நாம் எப்படிப் போகின்றோம்…?

வெளியில் கடைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்கின்றனர் காசுக்காக. ஆனால் அவர்களும் இந்தத் தெய்வத்தை வணங்கக்கூடியவர்கள் தான்.

சாமி பேரைச் சொல்லி ஏமாற்றுகின்றான். அதே சமயத்தில் அர்ச்சனை என்று இங்கே காசைக் கொடுத்து ஏமாற்றச் செய்கின்றான்.

அதை எல்லாம் செய்தால்…
1.ஆண்டவன் நமக்கு அதைச் செய்வான் இதைச் செய்வான் என்று
2.நம் ஆசைக்குகந்தபடி தான் நாமும் அங்கே நடக்கின்றோம்.

ஆனால் ஆலயம் என்பது நம்மைப் புனிதமாக்கும் இடமாகும்…!

பெரும்பகுதியான ஆலயங்களுக்கு முன்னாடி பார்க்கலாம்… தெய்வத்தின் பேரைச் சொல்லி நமக்கு நாமே ஏமாற்றும் நிலை தான் அதிகமாக இருக்கின்றதே தவிர… “ஆலயம் வரும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நிலைகள் இல்லை…!”

1.சாமிக்காக அபிஷேகம் ஆராதனை என்றெல்லாம் காட்டி
2.அந்த உணர்வினை நுகர்ந்தால் (ஐந்து புலனறிவாலும்) நமக்குள் பஞ்ச அமிர்தமாக அந்தச் சக்திகள் இணையும் என்று
3.ஆறாவது அறிவினைத் தெளிவுற எடுத்துரைத்த அந்த போகனின் நிலையை எடுத்துக் கொள்ளாது…
4.போகன் காட்டிய அறவுரைகளை அழித்துவிட்டு மனிதனின் நல்ல எண்ணங்களை அழித்திடும் நிலையாக
5.வியாபார ஸ்தலமாகத் தான் ஆக்கி விட்டார்கள்.

இங்கிருந்து நாம் அருள் ஒளி பெறவேண்டும் என்று சென்றாலும் புனிதத் தன்மை இழக்கும் நிலைகளைத் தான் அங்கே காணுகின்றோம். அங்கே நிர்வகிப்பவர்களும் அப்படித்தான் உள்ளனர். ஆலயத்தின் மறைவில் தனக்குப் பொருள் தேட வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்கள்.

1.அந்த மெய் ஞானிகள் காட்டிய தத்துவங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.ஒவ்வொரு மனிதனும் முழுமை பெறவேண்டும்…
3.இந்தப் பூமியில் இருளைப் போக்க வேண்டும்… தீமைகள் அகல வேண்டும்… என்ற நிலைகளை வழி காட்டவில்லை.

அந்த மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை நாம் யாரும் பெறவில்லை. இன்று யாம் (ஞானகுரு) அதை எல்லாம் சொன்னாலும்
1.இதை ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாது
2.இதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைகளில் தான் உள்ளனர்.

ஒரு மது குடிப்பவரிடம் போய்… “நீ குடிக்காதே…!’ என்றால் ஐயா… உங்களுக்கு என்ன தெரியும்…? இதைக் கொஞ்சம் போட்டால் சொர்க்கமே வரும்… நீங்களும் கொஞ்சம் குடித்துப் பாருங்கள்…! என்று நம்மிடமே திரும்பச் சொல்வார்கள்.

அதைப் போன்று தான் அநாகரீகமான நிலைகளில் அதர்வண வேதத்தின்படி இந்த நிலைகள் உருவாக்கப்பட்ட நிலைகளே இன்றும் உள்ளது.

இன்னென்ன மந்திரங்களைச் சொல்லி விட்டால் அந்த இறைவன் இறங்கி வந்து உனக்கு எல்லாம் செய்வான்..! என்ற நிலைகளில் மந்திர உச்சாடணங்களை அங்கே சொல்லி அதை ஆழமாக நமக்குள் பதிவு செய்து விட்டனர்.

அந்த உணர்வின் சக்திக்கு நாம் வந்த பின் ஒரு போதை ஏற்றியது போன்று இதிலிருந்து மீளாது சிக்கிக் கொண்டு…
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் அழிவில் இருந்து தப்ப முடியாதபடி
2.இருள் சூழ்ந்த நிலைகளாகப் போகும் நிலையே அதிகமாக உருவாகிக் கொண்டுள்ளது

ஆக ஐதீகம் என்றும் சாஸ்திரம் என்றும் மனிதனுடைய நிலைகளில் ஆசைகளைத் தான் வளர்க்கப்பட்டுள்ளது.

மனிதன் என்றால் ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால்…
1.அதைத் தணியச் செய்யும் சக்தியான அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து
2.நமக்குள் இருள் சூழும் அந்த நிலைகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று
4.அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் செல்வோம் என்றால் இனி தப்பலாம்…!

“அபிராமிப்பட்டர்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இக்கலியில் ஏற்படும் கால மாற்றத்தின் உண்மைகளை இங்கே உணர்த்துகின்றோம். ஒவ்வொரு ஆத்மாவும் அந்த நிலையில் ஒளிர்ந்திடலாம் என்பதனை உணர்ந்து செயல்படும் வழிமுறைகளை யாம் (ஈஸ்வரபட்டர்) அறிந்த வழியில் உணர்த்துகின்றோம்.

இப்பூமியிலே உயிரணுவாகத் தோன்றி உயிராத்மாவான இன்றும் தன் உடலை அழியா வண்ணம் ஒளியுடனே நினைத்த நேரத்தில் கலந்து செயல் கொள்ளும் கொங்கணரும் போகரும் இவ்வழித் தொடரை எந்நிலையில் பெற்றார்கள்…?

அபிராமி அந்தாதி இயற்றிய அபிராமிப்பட்டர் அம்மாவாசை நாளில் பௌர்ணமி நிலவாகக் காண முடியும் என்று பூரணச் சந்திரனைக் காணச் செய்தது எந்த நிலையில்…?

சந்திர நிலவா அன்று காட்சி அளித்தது…?

அபிராமிப்பட்டராக வாழ்ந்த அந்த ஆத்மா தன் எண்ணத்தைத் தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் அச்சக்தி மாதாவின் செயல் கக்தியின் உண்மைக்கே அடிபணியச் செய்து… அவ்வுண்மையின் சக்தியையே அன்பு கொண்டு பூஜித்து…
1.தன் எண்ணத்திலும் உணர்விலும் எவ்வணுவின் சக்திக்கும் அடிபணிய வைத்திடாமல்
2.ஒரே சக்தி ஜெபத்தை ஈர்த்து வந்த நிலையில் அம்மாவாசையில் பௌர்ணமி நிலவைக் காண முடியும் என்று
3.சரபோஜியின் (அரசன்) எண்ண நிலையில் தெய்வ சக்தியை ஓங்கிக் காட்டிடல் வேண்டும் என்ற ஒரு நிலை கொண்ட தீவிர ஜெப சக்தியினால்
4.அவரின் ஒரு நிலை கொண்ட எண்ண சக்தியே அவர் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் பிரிந்து ஒளியாகி கூடி
5.பௌர்ணமி நிலவாக அனைவரும் காணும் சந்திர பிம்பமாகக் காட்சி தந்தது.

அபிராமிப்பட்டரின் ஆத்மா பெற்ற சக்தி தான் அவ்வாத்மாவே நிலவாக ஒளிர்ந்தது. அவரின் கூடு தான் பிம்ப நிலையில் இருந்தது. சக்தியின் தேவியையே தன் ஆத்மாவில் ஐக்கியப்படுத்திக் காட்டினார்.

இன்று போகரின் நிலை ஒளியுடன் முருகா என்று உள்ளம் உருக ஒலிக்கும் நிலைக்கெல்லாம் ஒளியாக நல்லருளைச் செலுத்தும் நிலையும் இதுவே. கொங்கணவரின் நிலையும் இந்நிலைக்குகந்ததே.

தன் ஆத்மாவின் சக்தியையே ஒளியுடன் கலந்து ஒளிரும் சக்தி இவர்களுக்கெல்லாம் உண்டு.

ரிஷிகளும் ஞானிகளும் மந்திரம் செய்யவும் தந்திடம் செய்யவும் தன் நிலையில் சக்தி கொண்டு செயலின் பயனைப் பெறுவதாகவும் மக்களின் எண்ணத்தில் உள்ளது.

ஆனால் அச்சப்தரிஷிகளின் நிலையினால் தான் இந்தப் பூமியின் சக்தி நிலையே பெருகி வருகிறது.

இன்றளவும் மனித் ஆத்மாக்கள் இந்நிலை கொண்டு வாழ்வதற்கே நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இப்பூமியின் நிலையே இன்றுள்ளது.

1.அவர்களும் நம்மைப் போல் வாழ்ந்தவர்கள் தான்..!
2.நாமும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தொடர்பு கொண்டு வாழ்ந்தவர்கள் தான்.

ஆனால் நம் நிலையில் வழி வந்த நிலை தான் இன்று வாழ்ந்திடும் நிலை. அவர்களின் தொடர்பை ஏற்றே இனி வழி நடந்திடுவோம்.

புற்று நோய் வரக் காரணம்

 

இன்று நாம் விவசாயம் செய்யும் போது பயிரினங்களைத் தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்க பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றோம்.

பூச்சி மருந்தைத் தூவிய பின் பூச்சிகள் இறந்து விடுகின்றது. அனால் அந்தப் பூச்சிகள் இடும் முட்டைகளிலும் இந்த மருந்து ஊடுருவுகின்றது. முட்டையில் இருக்கும் அந்த மேல் ஓடு அந்த விஷத்தைக் கவர்கின்றது.

1.மேல் பகுதியிலிருந்து இந்த விஷம் அந்த முட்டைக்குள் ஊடுருவி
2.இதிலிருந்து வரக்கூடிய அந்த ஆவியின் தன்மை… உருவாகும் அந்தப் பூச்சிக்குள் இணைந்து
3.இதற்குச் சமமாக ஏற்றுக் கொள்ளும் நிலை வருகின்றது..!
4.அதாவது முட்டைக்குள் இருக்கும் இதே பூச்சியை உருவாக்கும் அந்த உயிரணுவிற்கு விஷம் கூடி
4.அதன் வழி புதிதாக பூச்சி உருவாகிறது வலு கொண்டதாக…!

இதைப் போல் நாம் தூவும் பூச்சி மருந்துகள் தாவர இனத்துடன் கலந்து நெல்லிலோ கத்தரிக்காயிலோ திராட்சையிலோ மாம்பழத்திலோ எல்லாவற்றிலும் இது இருக்கத் தான் செய்கிறது.

இப்படிக் கலந்து வரும் உணவைத்தான் நாம் தினமும் உட்கொள்கிறோம். அப்போது விஷம் கொண்ட அணுவாக நமக்குள் மாற்றுகின்றது.

பின் அது ஜீவ அணுவாக மாற்றிய பின் அதனுடைய மலம் வெளிப்படும் போது நம்முடைய தசைகளுக்குள்ளும் விஷம் ஊடுருவுகின்றது.

உடல் எல்லாம் நன்றாக இருக்கிற மாதிரித்தான் தெரியும்.
1.ஆனாலும் கை கால் கடு கடு என்று இருக்கிறது…
2.கண் வலிக்கிறது தலை வலிக்கிறது நெஞ்சு வலிக்கிறது பிடரி வலிக்கிறது என்றெல்லாம் நாம் சொல்வோம்.

இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே நம் உணர்வுக்குள் இது கலந்து விடுகின்றது. மனிதனின் சிந்தனைகளையும் குறைக்கச் செய்கிறது.
1.அடிக்கடி வேதனை என்ற உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது
2.நம் உடலில் இந்த வேதனையையே அனுபவிக்கும் நிலை வருகிறது “இந்தப் பூச்சிகளைக் கொல்லும் நஞ்சால்…”

அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி விட்டால் இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்து அது சிறுகச் சிறுகக் “கேன்சராக” முளைக்கத் தொடங்கிவிடுகின்றது.

நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணு இதைப் போல் அதிகமான விஷத்தின் தன்மையை நுகர்ந்து விட்டால் அந்த விஷத்தையே வளர்த்துக் கொள்ளும் நிலை வரும் பொழுது தன் அருகிலே இருக்கும் தசைகளில் இருக்கும் அணுக்களும் மடியத் தொடங்குகின்றது.

பின் இதனின் இனப் பெருக்கமாகி வந்து விட்டால் இதைப் புற்று நோய் என்று சொல்வார்கள். தன் இனத்தின் தன்மை பெருகிப் பெருகி மற்றதுக்கு இடமில்லாது கலைத்துக் கொண்டே போகும்.

“புற்று” தனக்குள் எப்படிப் பல கண்களாக விளைகின்றதோ… அதைப் போல் தன் இன அணுக்கள் பெருகிப் பெருகி… நம் உடல் தசைகளில் இருக்கும் அணுக்களைக் கொன்று கொன்று… இது உணவாக உட்கொண்டு தன் பெருக்கமாக நல்ல தசைகளிலும் இதனின் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொண்டே போகும்.

இப்படிக் கொடூரத் தன்மைகள் விளைகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஆக… விஞ்ஞான அறிவால் மனிதனுக்காக எத்தனையோ வசதிகள் செய்து
1.உணவுக்கு என்று அந்தப் பூச்சிகளைக் கொன்றால் தான் உணவும் பற்றாக்குறை இல்லாது கிடைக்கின்றது.
2.ஆனால் மனிதனுக்குள் இந்த நஞ்சின் முடிவு இப்படி எல்லாம் மனிதனுக்குப் பாதகமாக வருகின்றது.

காற்று மண்டல நச்சுத் தன்மை அதிகமாக அதிகமாக எண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு மனிதன் பைத்தியமாகும் நிலை வந்து கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

உயிரணுவாக உதித்திட்ட இவ்வுயிரணுக்களே… வளர்ச்சியின் வழி சக்தி நிலை கொண்ட உயிராத்மாவாக இந்த மனித உடல் பெற்று… எண்ண நிலையின் வளர்ச்சித் தொடர் கொண்டு அவ்வெண்ணத்தின் ஞான சக்தியினால் பல நிலைகளைக் கண்டுணர்ந்து… ஆத்ம சக்தியை எண்ன சக்தியுடனே வளர்ச்சி கொண்டு வந்தது தான் ஆதியிலிருந்து வந்த நிலை.

அப்படி இக்கலியின் முற்பட்ட அவதார காலங்களில் எல்லாம் வந்த “அந்த ஞானத்தின் வழித் தொடர் சக்தி நிலையே…” கிருஷ்ணாவாதர கால முதல் கொண்டு வளர்ச்சி நிலை குன்றி விட்டது.

நல் ஒழுக்கம் நல் ஞானம் சத்தியம் தர்மம் நியாயம் என்ற நற்சக்திகளின் வழித் தொடரில் சென்றிட இன்று இந்தக் கலியில் பிறபெய்தி வாழும் இந்த மனித ஆத்ம சக்தியிலேயே தொடர் நிலை இல்லை.

இந்தக் கலியில் மனிதர்களாக இன்று வாழ்பவர் எல்லோருடைய நிலையிலும்…
1.இக்கலிக்கு முற்பட்ட காலத்திலே வாழ்ந்தவரின் எண்ண சக்தியின் தொடர் நிலையில்
2.அதே வழியில் வந்திட்ட ஆத்மாக்களாக இக்கலியில் பிறப்பெடுத்து வாழ்வதினால்
3.இன்று வாழும் அனைத்து ஆத்மாக்களின் எண்ண சக்தியே அன்று வாழ்ந்தவரின் தொடர் நிலையினால் வந்த வினைச் செயலாக உள்ளது.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களின் எண்ணம் முன் ஜென்மத் தொடருடன் செயல்பட்டு வழி வந்த வினை… “இன்றைய இக்கலியின் பேராசை நிலை…!”
1.நாமாக இந்த நிலையை வளரவிடவில்லை…
2.வளர்ச்சியின் தொடர் நிலை தான் இந்நிலை.

ஒவ்வோர் உடலுக்குள்ளும் அந்த உடலுக்குகந்த ஆத்மா ஒன்று தான். ஆனால் ஒவ்வோர் உடலுக்குள்ளும் இருந்து செயல்படும் “மற்ற அணுக்களின் நிலை அதிகம்…”

தோன்றிக் கொண்டே உள்ள உயிரணுக்கள் இந்தப் பூமியில் உதித்து வளர்ச்சி கொண்ட கோளத்திலும் அன்றன்று உயிர் பெற்றுக் கொண்டே வளர்ந்து வருகிறது.

தாவரங்களில் எப்படி அதன் சுவாசத்துடன் கூடிய புழுக்கள் பூச்சிகள் வண்டுகள் வளர்கின்றனவோ அந்நிலை போன்றே இப்பூமியில் கழிவிடங்களில்… நிலத்தில்… நீரில்… இப்பால்வெளி மண்டலத்தில்… மற்ற பிராணிகள்… பட்சிகள்… மனிதர்கள்… எல்லாவற்றிலுமே இவ்வுயிர் அணுக்கள் வளர்ந்து கொண்டே தான் உள்ளன.

அந்நிலையில் நம் உடலுடன் சூரியனின் ஒளிக் கதிரிலிருந்து வந்திடும் உயிரணுக்களின் நிலை பல வளர்ந்து கொண்டே ஒவ்வொரு நாளும் உள்ளன.

ஒவ்வொரு நாள் என்பது மட்டுமல்ல…
1.நம் சுவாச நிலை செயல் கொண்டிடும் நிலையில் எல்லாம்
2.பல உயிரணுக்களின் நிலை நம் உடலிலும் ஏறுகின்றது.

இப்புதிய உயிரணுக்கள் மட்டுமல்லாமல் இக்காற்றினில் படர்ந்துள்ள ஏற்கனவே பல நிலைகளில் வாழ்ந்து பல உடல் நிலைகளை மாற்றிக் கொண்ட பல எண்ணக் கலப்புக் கொண்ட உயிரணுக்களும் நம் சுவாசத்துடன்… நம் உடலுடன் ஏறுகின்றன.

நம் உயிராத்மாவும்… உயிரணுவாகத் தோன்றி பல நிலைகள் பெற்ற பிறகு இந்த மனித ஆத்மாவாக உடல் கொண்ட எண்ணக் கலப்பு கொண்ட வாழ்க்கையின் ஏழு ஜென்ம நிலை கொண்ட சக்தி நிலை தொடர்பும் கொண்டு இன்று வாழ்ந்திடும் நிலையில் உள்ளோம்.

ஆனாலும்…
1.இவ்வுடலுடன் கூடிய ஆத்மாவை இவ்வெண்ணச் சிதறலில் இருந்தும்
2.இன்றைய வாழ்க்கை நெறி முறையிலிருந்தும் தப்பி…
3.ஞான சக்தியின் வழித் தொடரை அறிய நம் எண்ணத்தையே கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய
4.இன்றைய இப்பிடிப்பிலிருந்து மீள்வது கடினம் தான்…!

இன்றுள்ள இந்த வளர்ச்சியின் தொடரிலேயே மனித ஆத்மாக்கள் சென்றிட்டால் இச் செயற்கையின் ஆசையினால் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையே சூனிய நிலை போல் சக்தி இழந்துவிடும்.

ஆக… செயலற்ற நிலையில் செல்லும் நிலைக்குத் தான் இக்கலியின் பிடிப்பில் நம் ஆத்மாக்கள் சிக்குண்டுள்ளன.

இவ்வணுக்கதிர்களை ஆராயும் நிலைக்காக இப்பூமியிலிருந்தும் வான மண்டலத்திலிருந்தும் பல அணுக்கதிர்களை ஒன்றுபடுத்தி விஞ்ஞானத்தில் செயல்படுத்திடும் நிலையினாலும் அணு ஆயுதங்களை அடிக்கடி வெடிப்பதினாலும் இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாகி செயலற்றதாகி விட்டது.

அதனால் மனித ஆத்மாக்களின் சுவாச நிலையும் மாறு கொண்டு… இவ்வெண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு… “சூனிய நிலை கொண்ட பைத்தியங்களாகத் தான் மனித ஆத்மாகளின் நிலையும் செயல்படப் போகின்றது…”

அறிவு நிலை கொண்ட ஆத்மாக்களுக்கே இந்த நிலை என்றால் இந்த மனிதனிலிருந்து மாறு கொண்ட மிருகங்கள் பட்சிகள் இவற்றின் நிலை எப்படி இருந்திடும்…?

1.எண்ண வளர்ச்சியை ஞானத்தின் சக்தி நிலை தொடர்புபடுத்தி
2.சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தினால் அன்றி
3.இந்தக் கலியின் பிடிப்பிலிருந்து தப்புவது கடினம் தான்…!

எழுத்தறிவில்லாத அக்காலத்தில் அகஸ்தியன் வெளிப்படுத்திய சொல் வாக்குகள்

 

விஷத் தன்மையால் உருவாகும் தன்மையை நம் பூமியின் துருவத்தின் ஆற்றல் அது எப்படி…? என்று அறிந்து அந்தத் துருவத்தின் ஆற்றலைப் பெற்று தன் உடலில் வந்த விஷத்தை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அதாவது நாகரத்தினம் என்று சொல்கிறோம் அல்லவா…! ஒரு நாகம் தன் உடலில் இருக்கும் விஷத்தை வைரமாக மாற்றுகின்றது.
1.பல விஷத்தின் தன்மை கொண்ட உயிரணுவை ஜீவ அணுவாக மாற்றும் திறன் பெற்றது தான் அத்தகைய பாம்புகள்
2.அந்த விஷம் பாம்பின் உடலிலே உறையும் போது வைரமாகின்றது..

இது இயற்கையிலே நாகரத்தினமாக மாறுகின்றது. அதற்கு ஜீவனில்லை. ஆனால் “இருளில் ஒளி…!” என்ற நிலையில் தான் அது இருக்கும்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பெயிண்டைத் தயார் செய்கின்றனர். அதைப் பூசிய பின் அதிலே வெளிச்சம் பட்டால் அதில் உள்ள எதிர் ஒளியை (FLUORESCENT) நமக்குக் கொடுக்கின்றது.

ஆனால் அதிலே சூரியனின் ஒளி பட்டால் அது சாதாரண பெயிண்டாகத் தான் தெரியும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா. இதே மாதிரித் தான் இந்த இயற்கையின் நியதிகள்.

1.எதையோ புரியாததைச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்…!
2.முதலில் பதிந்தால் தான்… பிறகு எண்ணினால் புரிகிறது.

புரிய வைப்பது என்றால் எப்படி…?

குழந்தைகள் ஆரம்பத்தில் பள்ளிக்குச் செல்லும் போது எழுத்துக்களைப் பார்த்தால் அதை என்ன சொல்வது…? என்று தெரியாது. ஆ… ஊ… ஏ… என்று அந்த ஒலிகளை எழுப்புவதற்கு எழுத்தைச் சொல்லி ஆசிரியர் உணர்த்துகின்றார்.

ஊ.. என்பதை ஆ… என்று சொன்னால் சரியாகுமா…? அப்படிச் சொன்னால் அந்த எழுத்திற்கும் ஒலிக்கும் வித்தியாசம் ஆகிவிடும் அல்லவா…?

எந்த மொழியை எடுத்தாலும் முதலில் ஒலியின் சப்தங்களைக் கூட்டுகின்றனர். அடுத்து அந்த நாதங்களை எழுப்புகின்றனர். அப்பொழுது அந்தச் சொல்லின் வன்மை எப்படி இயங்குகிறது…?

சொல்லால் சொன்ன பின் புரிந்து (தாய் தன் குழந்தைக்குச் சொல்வது போல்) கொள்ளும் நிலை வருகின்றது. இதன் வழி கொண்டு அன்று தத்துவ ஞானிகள் இந்த எழுத்து வடிவினைக் கொண்டு வந்தனர்.

1.இதைப் போன்று தான் இயற்கையின் நியதிகளை அகஸ்தியன் அன்று கண்டு இந்த உணர்வினை வெளிப்படுத்தினான்
2.ஆனால் அவன் காலத்தில் எழுத்து வடிவில்லை.. திருப்பிப் பார்ப்பதற்கு (REFERENCE).

அவன் காலத்தில் “உணர்வின் ஒலியைப் பதிவாக்கி… மற்றவர்களை ஈர்க்கச் செய்து…
1.“உன் உடல் நலமாகும் போ…!” என்று சொல்லப்படும் போது
2.அவன் எடுத்துக் கொண்ட உணர்வு பதிவான பின் அது நல்லதாகின்றது.
3.விஷத்தை முறித்த நிலைகள் – அவன் சொல் அதற்குள் சென்று அந்த நோயை நீக்கும் வல்லமை பெறுகின்றது.

ஏனென்றால்… “அவன் சொல்லைக் கேட்டு உணர்ந்திருந்தால் தான்…” அது வருகின்றது. ஆகையினால் நஞ்சை வெல்லும் உணர்வு அங்கே வருகிறது.

ஏனென்றால் அகஸ்தியன் தன் தாய் கருவிலிருக்கும் போது பெற்ற சக்தியின் துணை கொண்டு விஷத்தை வென்று பழகியவன்.
1.அக்காலத்தில் அவன் பார்வையில் பலருடைய நோய்கள் இப்படித் தான் நீங்கியது.
2.அதே உணர்வுகளைத் தான் இங்கே உங்களுக்கும் வாக்காகக் கொடுக்கின்றோம்.

ஆகவே அகஸ்தியன் உணர்வைப் பெற்று நஞ்சினை ஒளிச் சுடராக மாற்றும் பழக்கத்திற்கு வாருங்கள்.

கலி மாற்றத்தில் மனிதன் சந்திரனில் வாழப் போகின்றானா…! – ஈஸ்வரபட்டர்

 

கிருஸ்து பிறந்த நாளில் வான மண்டலத்திலிருந்து புதிய நட்சத்திரங்கள் தோன்றி பிரகாசமான ஒளி தந்ததை அன்று வாழ்ந்தவர்கள் பலர் பார்த்ததாகவும் செப்புகின்றனர்.

வான மண்டலத்தில் தோன்றிய அந்த நட்சத்திரத்தின் பிரகாசமான ஒளி எந்த நிலையில் வந்தது…? அவற்றின் நிலை இந்தப் பூமியின் மேல் எப்படிப் படிந்தது…?

பூமி சுழலும் வேகத்தில் பால்வெளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள எண்ணிலடங்கா பல நட்சத்திரங்கள் இந்தப் பூமியின் ஈர்ப்பில் சிக்கி இந்தப் பூமியுடன் வந்து சேர்கின்றது.

நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் கரையும் தன்மை கொண்ட அமில சக்தியினால் மின்னுவது தான்.

நட்சத்திர மண்டலத்திற்கும்… பால்வெளி மண்டலத்திற்கும்… நம் பூமியின் சக்திக்கும்…
1.நம் பூமி தொடர்புபடுத்தி நம் பூமி சுழன்று ஓடும் வேகத்தில்
2.பால்வெளி மண்டலத்தில் நம் பூமியின் சக்தி மோதும் ஈர்ப்புத் தன்மை கொண்டு
3.இப்பூமிக்குகந்த அமில சக்தியுடைய நட்சத்திர மண்டலமாக இருந்திட்டால் இப்பூமியின் பிடிப்புடன்
4.அந்த நட்சத்திர மண்டலத்தை இந்தப் பால்வெளி மண்டலத்தில் உள்ள காற்று மண்டலம் அதன் மேல் மோதி
5.இவ்ஈர்ப்பு சக்தியில் அந்த நட்சத்திர மண்டலம இச்சுழலும் வேகத்தில் பட்டு
6.ஒன்றுக்கொன்று திடமாக உறைந்த அமில சக்தியைக் கொண்ட அந்த நட்சத்திர மண்டலமே இந்தப் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்கியவுடன்
7.”கரைந்த அமிலமாக…” இந்தப் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றது.

இந்நிலை போல் தான் பல கோடி நட்சத்திர மண்டலங்களும் பெரிய கோளங்கள் சுழன்று ஓடும் ஈர்ப்பில்… அதனதன் அமில சக்தியின் தொடர் நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் எல்லாம் அது ஈர்த்து செயல் கொண்ட சக்தி இழந்து… அந்த நட்சத்திர மண்டலத்தின் ஆன்மாவும் பிரிந்து… அதன் சக்தி அமிலம் மற்ற பெரிய மண்டலங்களின் அமிலமுடன் அமிலமாகக் கலந்து விடுகின்றது.

இப்பெரிய மண்டலங்களின் ஈர்ப்பில் சிக்காமல் இம்மண்டலத்துடன் தொடர்பு கொண்டே பல நட்சத்திரங்கள் சுழன்று கொண்டுள்ளன.

இன்னும் சில நட்சத்திர மண்டலங்கள்… இப்பெரிய மண்டலங்கள் ஓடும் நிலையில் இவ்வமிலத்திற்கும் நட்சத்திர மண்டலத்தின் அமிலத்திற்கும் “சத்துரு மித்திரு நிலையாக இருந்தால்…” இந்த மோதுண்ட நிலையில் எரி நட்சத்திரமாக எரிந்து… அந்த நிலையிலேயே கருகிய நிலையில் செயலற்றதாகி விடுகின்றன.

இந்த வான் மண்டலத்தில் இந்தப் பால்வெளி மண்டலத்தில் நடந்திடும் சக்தி நிலை “எண்ணிலடங்கா நிலை கொண்டவைகளாக உள்ளன…”

1.இப்பூமியில் வாழ்ந்து சாதாரண வாழ்க்கையில் ஆயுள் பிரிந்த ஆத்மாக்கள் அனைத்துமே
2.இப்பூமியிலிருந்து… இப்பூமியைச் சுற்றிப் படர்ந்துள்ள இந்தக் காற்று மண்டலத்தில் ஒட்டிய நிலையிலேதான்
3.இந்த அனைத்து ஆத்மாக்களும் சுற்றிக் கொண்டுள்ளன.

இப்பூமியில் சுவாசித்து வாழ்ந்ததின் நிலைக்கொப்ப உள்ள காற்று மண்டலத்துடனே தான்… உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் சுவாச நிலையும் கலந்துள்ளது.

.மற்ற மண்டலத்திற்குச் செல்லவோ இந்தப் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள இயற்கை நிலையுடனோ செல்ல முடியாது.

இந்தப் பூமியில் உயிரணுவாக உருப்பெற்று வாழ்ந்து ஆவி உலகிற்கு வந்த உயிரணு உயிராத்மா எல்லாம் இவற்றின் நிலையில் படர்ந்தே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும்.

வான் மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாக மின்னும் சக்திக்குக் கூட இந்தப் பூமியில் உதித்த உயிரணுக்களினால் சுவாச நிலை மாறி வளர்ச்ச்சி நிலை பெறும் நட்சத்திரமாக மின்ன முடியாது.

1.ஆனால் இந்தப் பூமியிலேயே பிறப்பில் வந்து இந்தப் பிறப்பின் பயனைப் பெற்று
2.சூட்சம நிலை கொண்ட ஆத்மாக்கள் இன்று நட்சத்திர மண்டலமாக ஒளிர்ந்து வாழ்கின்றன.

இன்று இந்தப் பூமியில் உள்ள நிலை போல மனித ஆத்மாக்களாக வாழும் நிலை கொண்ட ஆத்மாக்கள் இந்தப் பூமியைச் சார்ந்த இந்தச் சக மண்டலத்தில் இல்லை என்று உனர்த்தினேன்.

இதுவே இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்குள் இந்தப் பூமியில் உடலுடன் வாழ்ந்திடும் ஆன்மாக்களே… இன்று செயற்கையுடன் ஆசை கொண்டு சந்திர மண்டலத்திற்குக் குடியேறும் நிலைக்காக ஆராயும் மனிதர்கள்… வரப் போகும் இந்தக் கலியின் மாற்றத்தினால் இன்று இந்தப் பூமியில் உள்ள சக்தியின் தொடர் சக்தியின் வளர்ச்சி நிலை பெற்ற “சந்திரனில் வாழத்தான் போகின்றான்…!”

இன்று நாம் வாழும் இந்தப் பூமியின் சக்தி நிலையின் வளர்ச்சியின் நிலையினால் வரப் போகும் கல்கியின் பெரும் மாற்றம் கொண்டதாக இயற்கை சக்தியே செயல் கொள்ளப் போகிறது.

நடக்கப் போகும் மாற்றத்தின் அசைவினால்… இந்தப் பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களின் குவிப்பு சக்தி சேரப் போகின்றது.

மனித ஆத்மாக்களினால்… இந்தக் கலியின் கொடுமையினால்…
1.இவ்வியற்கையின் சக்தி கொண்ட இந்தப் பூமியின் ஆத்மாவே
2.இந்த மனித ஆத்மாக்களின் அழிக்கும் எண்ண சக்தி கொண்ட ஆத்மாக்களைச் சீற்றம் கொண்டே மாற்றி
3.இன்னும் சக்தி கொண்ட பூமியாகத்தான் நம் பூமி சுழலப் போகின்றது.

இந்தப் பூமியில் உதித்த ஆத்மாக்களினால் தான் இந்தக் கலியின் நிலையும் மாற்றம் கொள்ளப் போகின்றது…!

உடலைக் காக்க முற்படும் விஞ்ஞானத்தால் உடல் நோய் குறைந்தாலும் நஞ்சு அதிகரிக்கின்றது..!

 

நாம் காளானைச் சாப்பிடுகின்றோம். ஆனால் மருத்துவத்திற்காக என்று பல விதமான கெமிக்கலைக் கலந்து காளானை உற்பத்தி செய்கின்றார்கள்.

அதை ஊறலில் போட்டபின் அணுக்கள் உருவாகின்றது. எல்லாவற்றையும் உட்கொண்ட பின் அணுக்கள் கூட்டமாகின்றது. அப்படிப்பட்ட அணுக்கள் ஆனபின் அதை வடிகட்டி பெனிசிலின் மருந்தாக மாற்றுகின்றனர்.

அது கடுமையான விஷம் கொண்டது.

அந்த மருந்தை இரத்தத்தில் செலுத்திய பின் அந்த வீரிய உணர்வு உள்ளே சென்று ஒரு கடுமையான ஜுரமாகவோ அது நம்மைப் பாதிக்கக்கூடிய நிலை இருப்பதை இது ஊடுருவி அதை உணவாக உட்கொள்கிறது.

இவர்கள் கண்டுபிடித்த நிலையில் அந்த ஜுரம் அதிகமாக இருக்கிறது என்று மருந்தினைக் கொடுத்தாலும்…
1.நோயாளியின் உடலில் வேறு ஒரு மாற்று அணுவின் தன்மை வரும் போது மோதலில் இந்தக் காய்ச்சலும் விடாது இருக்கும்.
2.அதற்கு இந்தப் பெனிசிலின் என்ற மருந்தைச் செலுத்தினால் இது அதைக் (கிருமியை) கொல்வதற்கு மாறாக
3.நல்ல அணுக்களைப் புசிக்கும் தன்மையாகி அலர்ஜியாகின்றது.

சிலர் உடலில் எல்லாம் இந்த மருந்தைச் செலுத்திய பின் கொப்புளித்து விடும்.

விஞ்ஞான அறிவு கொண்டு குணப்படுத்த இவ்வாறு செய்தாலும் அதிலே ஒரு பங்கு அதிகமாகி விட்டால் மற்ற நல்ல வீரியத் தன்மைகளைக் கொன்று விடுகின்றது.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் வெளிப்படுத்துகின்றேன்.

துவாராக யுகத்தில் தீமையின் நிலைகளைத் தெரிந்து கொள்ளப்படும் போது இது போன்ற தீமையின் உணர்வை வென்ற அருள் உணர்வைப் பெற வேண்டும் என்பதற்காகவே உணர்த்துகின்றேன்.

ஏனென்றால் வாழ்க்கையில் வந்த சர்வ தீமைகளையும் வென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதிலிருந்து வரும் சக்திகளை நீங்கள் கவரும் வழிக்கு உபதேசித்து…
1.இதையும் சொல்லி அதையும் சொல்லும் போது
2.உங்கள் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலவையாக்கி வரும் போது
3.நீங்களும் அந்த அகஸ்தியன் நீக்கிய நஞ்சை நீக்க முடியும்.

எத்தகைய நோயிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும்.

ஆண்டவன் என்பது ஒரு தனித்த சக்தியல்ல… ஒன்றுடன் இன்று கலந்தால் தான் அப்படிப்பட்ட சக்தியாக மாறும்

இந்தப் பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியில்… அமில சக்தியின் அமில சக்தி மட்டுமல்ல “ஜீவ சக்தியினால் உராயும் நிலை கொண்டு தான்…” ஒவ்வொரு கோளங்களும் சுழல்கின்றது

1.ஒவ்வொரு கோளமும் தான் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலை
2.இந்தப் பால்வெளி மண்டலத்துடன் “மோதுண்டவுடன் தான்…” ஒலி பிறகின்றது
3.அந்த “ஒலியினால் தான்” ஒவ்வொரு மண்டலமும் சுழல்கிறது.

பால்வெளி மண்டலமாக ஜீவனுடன் உள்ள வான மண்டலதையே நாம் பரந்த வெளியாகக் காண்கின்றோம். இந்தப் பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியே அனைத்து மண்டலங்களுக்குமே “உயிர் நாடி…!”

இந்தப் பூமியிலிருந்து நாம் காணும் பால்வெளி மண்டலமான இந்த வான் மண்டலத்தில் படர்ந்த மேகக் கூட்டங்கள் ஓடுவதைப் போல் காண்கின்றோம்.

அந்த மேகக் கூட்டங்கள் மட்டும் ஓடவில்லை நாமும் தான் ஓடுகின்றோம். அனைத்து மண்டலங்களும் தான் ஒரு நிலையில் நிலைத்து நில்லாமல் ஓடிக் கொண்டே உள்ளது.

இந்தப் பூமி சுழலும் வேகத்தைப் பொறுத்து இந்தப் பூமியில் நடக்கும் சீதோஷ்ண நிலைகள் உள்ளன. இந்தப் பூமியிலேயே பல பாகங்களில் பல நிலை கொண்ட சீதோஷ்ண நிலை கலந்துள்ளது.

இந்தப் பூமியிலிருந்து மற்ற மண்டலங்களில் உள்ள நிலை அறிய நம் சக்தியைச் செயலாக்குகின்றோம். ஆனால் இந்தப் பூமியிலேயே பூமத்திய ரேகையான அந்த மையப் பகுதியில் உள்ள நிலை என்ன…?

பூமி சுழலும் 24 மணி நேரக் கணக்கு விகித நிலைப்படி ஒரு நாளையும்… இரவு பகல் நிலை ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் நிலையை எல்லாம்… இந்தப் பூமி சுழலும் வேகத்தையும் அங்கங்குள்ள நிலையையும் வைத்து அறிகின்றோம்.

ஆனால் இந்தப் பூமியின் மையப் பகுதியில் என்றுமே சூரியனின் ஒளிக் கதிர்கள் தாக்குவதில்லை…! என்பதைனை அறிந்துள்ளோமா…?

பூமத்திய ரேகையின் மையத்திற்கு சற்றுத் தள்ளிய இடத்தில் தான் பகலும் இரவும் சில காலங்கள் மாறி மாறி வருகின்றன. மையப் பகுதி என்றுமே இருண்ட நிலை தான்.

ஆனால் அந்த மையத்தினால் தான் இந்தப் பூமியில் நிறைந்துள்ள கடலின் நீர நிலைகள் எல்லாம் உள்ளது.

பூமி சுழலும் வேகத்தில் மற்ற இடத்தில் படும் ஒளிக் கதிரின் அமில சக்தியின் நிலையை இந்த மையப் பகுதி ஈர்த்துப் படிவங்களாக பாறையைப் போன்று அடர்ந்து பதிந்துள்ளன.

இக்சுழலும் நிலையிலேயே மென்மேலும் ஈர்த்து அந்தப் படிவங்களுடன் அந்த அமில நிலை வளர்ந்து கொண்டே உள்ளன.

எந்த நிலையில் உப்பு அமில சக்தி படிவங்கள் வளர்ச்சி கொண்டுள்ளனவோ அந்த நிலை போன்ற விகிதத்திலேயே இந்தப் பூமி சுழலும் வேகத்தில் பால்வெளி மண்டலங்களில் நிறைந்துள்ள அமில சக்தி மோதுண்டு உருளும் நிலையில் ஆவியான உப்புக் கலந்த நீராக வடி கொண்டு தான் இன்று கடலாக வற்றாத நிலையில் பொங்கிக் கொண்டுள்ளது.

பூமத்திய ரேகையின் சிறிது தள்ளி உள்ள நிலையில் சில காலம் ஒளியும் இருட்டும் உள்ள நிலைப்படுத்தித்தான் அந்த நிலையின் தொடர்பு நிலை கொண்ட பூமிகளில் உள்ள கடலில் நீர் நிலை பொங்கி வருவதைக் கண்டிடுவீர்.

இந்த உப்புக் கலந்த அமிலத்திலிருந்து உற்பத்தி ஆகி வருவதே கடல் நீர் உப்புக் கரிக்கும் நிலை. ஆனால் கடற்கரை ஓரங்களிலேயே உள்ள கிணறுகளில் உள்ள நீரெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியுடன் அந்தப் பூமியின் நிலைக்கொப்பச் சுவை தருகின்றது.

இன்று கடலாகப் பொங்கி உள்ள இடத்திலேயே இந்தக் கடல் நீரின் மட்டத்திற்குக் கீழ் அந்தப் பூமியின் நிலையிலிருந்து தோண்டி எடுக்கும் நீரின் சுவை இந்தக் கடல் நீரின் சுவைக்கு மாறு கொண்டதாகத் தான் இருந்திடும்.

நம் பூமியின் இயற்கை சக்தியின் தெய்வமான சூரியனின் சக்தியில் இருந்து பல சக்தியை நாம் நேராகவும்… மற்ற மண்டலத்தில் மோதி அந்த மண்டலத்திலிருந்தும் ஒன்றின் துணையுடன் ஒன்றாகச் செயல்படவே… இந்தப் பால்வெளி மண்டலத்தின் சக்தியின் துணையினால் செயல் கொண்டுள்ளோம்.

இந்த இயற்கையின் ஒவ்வொரு நிலையையும் உணர்ந்திட்டால் அந்த ஆண்டவனின் சக்தியின் நிலை ஒன்றுடன் ஒன்று செயல்படும் நிலையை அறிந்திட்டால் அந்த ஆண்டவன் என்ற சக்தியே தனித்ததல்லாமல் செயல்படுவதாக உணர முடியும்.

1.அனைத்துச் சக்தியுமே ஒன்றுடன் ஒன்று கலந்த சக்தியாகத்தான் அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது
2.அந்த ஒரே சக்தியான நிறைந்த தனித்த சக்தி… அச்சக்தியின் கலந்த சக்தி தான் நம் அனைத்து சக்தியுமே…!

மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் தகுதி பெற்றது தான் இந்த மனித உடல் என்று அறிந்திருக்கின்றோமா…?

 

ஆதிமூலம் என்பது உயிர்.

நாம் பல கோடிச் சரீரங்களில் ஒவ்வொன்றிலும் தான் பார்த்துத் தப்பிக்கும் உணர்வுகள் வலு பெற்று… அதுதான் மூஷிகவாகனா (மூச்சு – வாகனம்). அந்தக் கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து அதிலிருந்து தப்பிக் கொள்ளும் உணர்வைக் கொண்டு அது தப்பி ஓடுகின்றது.

இருந்தாலும் அந்தத் தப்பிக்கும் உணர்வுகளுக்குள் வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகச் சுவாசித்தால் அது அந்த உடலிலே கணங்களுக்கு அதிபதியாகின்றது.

அப்படி ஆன பின்… நோயாகி அல்லது அந்த வலிமையான மிருகத்திற்கு இரையாகி அதன் வாழ்க்கையில் இந்த உடலை விட்டுக் சென்ற பின்…
1.எந்த உடலினை உற்றுப் பார்த்து அதனால் பயந்து… உணர்வின் வேகங்கள் கூடியதோ
2.அதன் உணர்வுகள் இதற்குள் வளர்ந்த பின் இந்த உடலைவிட்டுச் சென்ற பின்
3.இந்த உயிராத்மா அந்த உடலுக்குள் சென்று அதன் உணர்வின் கருவாக பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

இந்த நிலையை நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்படுள்ளது.

ஆகவே இதைப் போன்று பரிணாம வளர்ச்சியாகி ஒவ்வொரு வாழ்க்கையிலும் தன் வாழ்க்கையை அது வாழ தான் சுவாசித்த நிலையும் தன்னைக் காட்டிலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் நிலைகளிலும் வளர்ச்சி பெற்று வளர்ச்சி பெற்றுத் தான் வருகின்றது.

உதாரணமாக ஒரு காகத்தை எடுத்து கொள்வோம். தன் ஆகாரத்தை எடுக்கும் போது… ஒரு கொத்து கொத்தி விட்டுப் பின் எதிரிகள் யாராவது வருகின்றனரா…? தன்னைத் தாக்க முற்படுகின்றனரா…? என்று எண்ணிப் பார்க்கின்றது.

குருவியானாலும் தன் ஆகாரத்தை எடுத்தவுடனே கொத்தி வைக்கின்றது. மீண்டும் திரும்பிப் பார்க்கின்றது ஒவ்வொரு நிமிடமும் தன் உடலைப் பாதுகாக்கும் உணர்வுகளே அங்கே வருகின்றது.

அதே சமயத்தில் ஒரு பூனை அந்தக் குருவியைச் சீறித் தாக்கி சந்தர்ப்பவசத்தால் சிக்கிவிட்டால் பூனையின் வாயில் சிக்கிய குருவிக்குப் பூனையின் நினைவே வருகின்றது.

குருவியின் தசைகள் பூனைக்கு இரையாகின்றது. ஆனால் குருவியின் எண்ணங்களோ அந்தப் பூனையின் பால் நினைவாற்றல் அதிகரிக்கப்படும்போது அதனின் உணர்வின் தன்மை கருவாக்கி அடுத்துப் பூனையாகத் தான் பிறக்கும்.

இன்றும் பார்க்கலாம்…! மரத்திலே அடங்கி ஒருக்கும் பட்சிகளை…! அது ஒன்று சேர்த்து ஒன்றுக்கொன்று நுனியில் தான் இருக்கும்.

மரக் கொப்புகள் அசைந்தால்… அல்லது அதை காட்டிலும் கடுமையான நிலைகள் (எதிரிகள்) அங்கே வரமுடியாத எல்லையைப் பார்த்துத் தான் சிறு நுனிகளில் தான் எல்லாமே இருக்கும்.

காரணம் அந்த அசைவைக் கண்டு தான் விழித்துக் கொள்வதற்குத்தான்…!

குருவி இனங்களாக இருப்பினும் அதனதன் பாதுகாக்கும் எண்ணங்களையே உருவாக்கி அதனின்று மரண பயத்தோடுதான் வாழ்கின்றது. அதன் வாழ்க்கையில் ஒன்று சப்தமிட்டால் கூட எல்லாம் எழுந்துவிடும்.

இதைப் போலத் தான் நாம் குருவியாக… பூச்சியாக… இருக்கப்படும்போது தன் எதிரியிடம் இருந்து தப்பிக்க இந்த உணர்வின் தன்மை கூர்மையாக்கி இந்த உணர்வின் வலிமை பெற்று நாம் தப்பி பல கோடி சரீரங்களைக் கடந்து தான் மனிதனாக வந்துள்ளோம்.

இதை உணர்த்துவதற்குத்தான் மூஷிகவாகனா… கணங்களுக்கு அதிபதி கணபதி என்று காட்டினார்கள் ஞானிகள். பரிணாம வளர்ச்சியில் மனிதனானக ஆன பின்
1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக
2.மனித உடலை உருவாக்கியது நமது உயிர் “ஆதிமூலம்” என்று
3.உயிருக்குக் காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

ஒவ்வொரு சரீரங்களிலும் உயிர் வளர்த்த நிலைகள் கொண்டு… சுவாசித்த உணர்வுகள் இந்த கணங்களுக்கெல்லாம் அதிபதி கணபதி…
1.பல கோடி சரீரங்களில் தீமைகளிலிருந்து தப்பித்து வாழ்ந்திடும் உணர்வு ஆறாவது அறிவாக வந்து
2.மற்றதை அடக்கி ஆட்சி புரியும் கணங்களுக்கு அதிபதியாக நம்முடைய எண்ணங்கள் உருவாகி உள்ளது என்று காட்டினர்.

இந்தக் கணங்களுக்கு எல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர். ஆக கணங்களுக்கு எல்லாம் ஈசா “கணேசா…” என்று
1.நாம் எத்தனையோ கோடி சரீரங்களைக் கடந்து தீமைகளில் இருந்து விடுபட்டு
2.தீமையற்ற மரணமில்லா பெரு வாழ்வு பெற்று வாழும் இந்த மனித உடலைக் கொடுத்தது என்று
3.நம் உயிரை வணங்குபடி சொல்கிறார்கள்.

அங்குசபாசவா…! நம் ஆறாவது அறிவு கொண்டு எதனையும் அடக்கிடும் சக்தியாக அதனை ஒடுக்கி மரணமில்லா பெரு வாழ்வு வாழ முடியும் என்று இந்த நிலையை உணர்த்தவே அங்குசத்தைக் காட்டுகின்றார்கள்.

guru spiritual wishes

என்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்

இங்கு வெளியிடப்பட்டுள்ள அருள் ஞான நூல்களை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போது உங்கள் வாழ்க்கையில் மனம் சோர்வடைகின்றதோ அப்போது அதை எடுத்துப் படித்தால் அந்தச் சோர்வின் தன்மையை அது மாற்றி அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்களை அழைத்துச் செல்லும்.

ஆகவே இதை ஒவ்வொருவரும் தலையாய கடமையாக வைத்து அதைப் படியுங்கள். படித்ததை நீங்கள் மீண்டும் நினைவு கொண்டால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1.நான் (ஞானகுரு) ஒரு பங்கு தான் வளர்ந்திருக்கின்றேன்
2.என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு உயர்ந்தவர்களாக முடியும்.
3.அருளானந்தத்தைப் பெறக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்.
4.அனைவருக்கும் அருளானந்தத்தைக் கொடுக்கும் உயர்ந்த நிலைகள் நீங்கள் பெறலாம்.

சாமிக்கு மட்டும் ஏதோ சக்தி இருந்து பெற்றதில்லை…! என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு அதிகமாக அந்த அருள் சக்தியைப் பெறலாம். இதன் வழி நீங்கள் பின்பற்றிப் பாருங்கள்.

நீங்கள் எந்த அளவுக்கு உயர்கின்றீர்களோ உங்களிடமிருந்து அந்த ஆனந்தமான உணர்வை நானும் பெறுகின்றேன். இதைப் போல பிறருக்கு நீங்கள் போதித்து அவர்கள் வளர்ச்சி அடையும்போது அதைக் கண்டு நீங்களும் ஆனந்தப்படுங்கள்.

இணைந்து வாழும் நிலையும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் நாம் அனைவரும் பெறுகின்றோம். நீங்கள் எல்லோரும் உயர வேண்டும் என்ற கருத்தில்தான் இதை உபதேசித்து அந்த உயர்ந்த உண்மையின் உணர்வை நீங்கள் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

நீங்கள் எந்த அளவுக்கு இதிலே வளர்ச்சி பெறுகின்றீர்களோ அந்த அளவுக்கு எனக்கு ஆனந்தம் வரும்.

ஒரு வித்தினை ஊன்றியபின் அது சீராக முளைத்து நல்ல பலன் கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்…? சந்தோஷம் என்ற நிலை வரும்.

ஒரு வித்தினை ஊன்றி அது சரியாக முளைக்காவிட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்… சோர்வடைந்துவிடும்…!

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானத்தைப் போதித்து அருள் உணர்வுகள் உங்களில் வளர வேண்டும். இந்த வாழ்க்கையில் துன்பங்களை அகற்றிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும். பேரானந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்றுதான் எனது தியானமே.

இதைக் கேட்டுணர்ந்தோர் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் வலு கொண்டு துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெருக்குங்கள் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுங்கள். அதைப் போல பேரானந்தத்தைப் பெருக்கும் நிலையை கூட்டுங்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய தீமைகளை அகற்ற உதவும். உங்கள் வாழ்க்கையில் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் வளர்வதைக் கண்டால் எனக்கு சந்தோஷம். அதே போல் நீங்கள் உங்களுடன் அணுகி வருவோருக்கு உங்கள் நோயெல்லாம் போய்விடும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொல்லி அதன் மூலம் அவர்கள் சந்தோஷப்படும்போது உங்களுக்கும் சந்தோஷம் வருகின்றது.

ஆகையினால் இந்தத் தியானத்தைச் செய்வோர் பிறருடைய நிலைகளைக் கண்டு “உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று கேட்க வேண்டாம்.

உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு…
1.உங்கள் நோய் ஓடிப் போகும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் தொழில் லாபகரமாக இருக்கும் என்ற இந்த வாக்கினைக் கொடுங்கள்.

உங்கள் வாக்கு அது ஒரு ஞான வித்தாகி அவர்கள் நினைவு கொண்டால் நிச்சயம் அவர்கள் நலம் ஆவார்கள். ஒருவருக்கொருவர் இப்படிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாதாரணமாக… ஒருவர் “தான் படும் துன்பத்தைச் சொன்னால்” அதை நாம் கேட்டபின் அந்தத் துன்ப நிலையே நமக்குள்ளும் விளைகின்றது.

இதைப் போல் பேரின்பம் பெற வேண்டுமென்று உங்களுக்குள் அருள் ஞான வித்தை யாம் ஊன்றிய பின் இதன் உணர்வை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

ஒவ்வொருவரும் அதிகாலையில் கூட்டுக் குடும்ப தியானம் இருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பெருக்குங்கள். எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்.

இன்றைய கால கட்டத்தில் நாம் பெற வேண்டிய முக்கியமான சக்தி

வடக்கு வாசல்

நாம் தேடிக் கொண்டிருக்கும் கடவுள் எங்கே… எப்படி இருக்கின்றான்…?

நாம் சுவாசிக்கும் இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக மாறக் காரணம் என்ன…?

உணவை அமிர்தமாக உட்கொள்ளும் முறை – உபதேசமும் விளக்க உரையும்

காற்று மண்டல நஞ்சு நமக்குள் புகாதபடி தடுக்கும் உயிர் வழி சுவாசம் 

Nostradamus

மகரிஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இவ்வுலக மக்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவர்கள் அறியாமலே அவர்களை இப்பேராசை என்னும் செயற்கைப் பேய் ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.

1.அன்றாண்ட அரசர்களின் ஆவேச உணர்ச்சிகள் அன்றைய மக்களின் எண்ணங்களிலெல்லாம் கலக்கவிட்டு
2.இன்றும் அதே வழி வழியாய் வந்த அவ்வாவேச நிலை கொண்ட உணர்ச்சியினால்
3.இவ்வுலக நிலையே செயற்கைக்கு அடிபணிந்து வாழும் நிலையில் உள்ளது.

இன்றுள்ள மனிதர்களில் பெரும்பாலோரின் எண்ணங்கள் பெரும் பேராசை கொண்ட பணத்திற்கு அடிமைப்பட்டு வாழும் நிலை தான்…! செல்வத்தை ஈட்ட எவ்வழியையும் நாடலாம் என்று தான் உள்ளார்கள்.

இவ்வுலகில் வாழப் பணச் செல்வம் ஒன்றைத்தான் பொக்கிஷத்தின் பொக்கிஷமாகக் கருதி அதற்கே அடிமையாகி இவ்வுலகத்தையே செயற்கையின் கோளமாக்க இந்நூற்றாண்டில் அறிவு வளர்ச்சி பெற்ற மனிதர்கள் இவ்வுலக நிலையை நடத்திச் செல்கின்றார்கள்.

ஆண்டவனையே பல ஜாதி நிலை கொண்டு பிரித்து வைத்துள்ளார்கள். ஜாதி என்னும் வழியை உண்டு பண்ணியவர்களும் அதன் வெறி நிலையில் இன்று தன்னைத் தானே தன் ஜாதிக்குத்தானே அடிமைப்பட்டு உழன்று வாழ்கின்றார்கள் என்று எண்ணுவதில்லை.

தன் ஜாதிக்குத் தான் மதிப்பளிப்பதாக எண்ணுகிறார்கள் அச் ஜாதிக்கு அடிமைப்பட்டவர்களெல்லாம்…!

இவ்வுலக நிலையை இவ்வரசர்கள் ஆண்ட காலம் முதல் இப்பொழுது அரசாட்சி நிலை கொண்டும் ஆட்சியில் உள்ளவர்கள் நடத்திடும் நாடகத்தினால் வந்த வினைச் செயல்தான் இன்று இவ்வுலக நிலையில் உள்ளன.

சூழ்ச்சியான நிலையில் பேராசையின் பேயை வளர விட்டுத்தான் இன்று இவ்வுலக நிலையே உள்ளது.

அனைவரின் எண்ணமும் ஒன்றுபட்டுச் செயல்படும் நிலையாகக் கூடி வரும் நிலையை ஏற்படுத்திட
1.இன்றுள்ள பல மத வழிகளில் உள்ள பெரியோர்கள் எல்லாம் ஒரு நிலைப்பட்டு
2.இவ்வுலக நிலையை இவ்வுலக மக்களின் எண்ண நிலையை ஒன்றுபடுத்திட
3.பக்தி என்னும் நிலையை வளரவிட்டு அன்பு பாசம் என்ற பிணைப்பு நிலையை மக்களின் எண்ணத்தில் சுழல விட்டு
4.இப்பேராசையிலிருந்து விடுபட்டு ஆசையான அமுதை ஊட்டி தெய்வீக நிலையில் ஈர்த்து
5.இன்றுள்ள மக்களின் ஜன நெருக்கத்தை மிகத் துரித நிலையில் பெருகும் நிலையைச் சமப்படுத்தி
6.தாவர வர்க்கங்களை ஓங்கச் செய்து இவ்வுலகை நிலைப்படுத்தும் தன்மைக்கு
7.பல நூறு வருடங்களுக்கு முன் நம்மைப் போல் இவ்வுலகினில் பிறந்து நமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்த
8.இவ்வுலகின் ஞானச்சுடரான மகரிஷி ஒருவர் எழுதி வைத்த பெரும் பொக்கிஷம் ஒன்று
9.அவரால் பாதுகாக்கப்பட்டு அந்நிலையிலேயே ஜெபம் கொண்டும் காத்துள்ளார்.

அவருக்கு ஜாதி மதம் ஒன்றுமில்லை. இன்று இவ்வுலகிலுள்ள சக்தியின் செல்வங்களான சக்தி பெற்ற நம் மக்களில் யாவரும் அறிந்திடலாம் அதை.

அவரவர்களின் நிலையில் நடக்கும் நிலைகொண்டு ஜெபத்தின் அருளைப் பெற்றால் அந்த ஞானச் சுடரின்… அம்மகரிஷியின் அருளைப் பெற்று… அவ்வுலகப் பொக்கிஷத்தை எடுத்து அனைவருக்கும் அதிலுள்ள உண்மையை உணரும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்திடலாம்.

இம்மதம் என்ற நிலையை மாறுபடுத்தி இன்று இவ்வுலக நிலையைக் காத்து ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனின் ஜோதிகளை…
1.பல ஞான நிலைகளை மக்களுக்கு உணர்த்திடும் நல் பெரியோர்கள் அனைவரும் ஒன்றுபட்டால்
2.இவ்வுலகில் உதித்த சக்தியின் செல்வ குழந்தைகளை
3.இச்செயற்கையின் பேராசைப் பேயிலிருந்து விடுபடும் நிலைக்கு அழைத்திடலாம்.

இஜ்ஜாதி மதப் பேயின் வழி நடந்திடாமல் ஒன்றுபட்டுச் செயல் கொண்டு தன்னைத்தானே அடிமைப்பட்டு வாழும் நிலையிலிருந்து மீண்டு அருள் வழி நடந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். கட்டும் போது அங்கங்கே முட்டுகள் (பொய்க்கால்) கொடுத்துத்தான்  கட்டுகின்றோம்.

கட்டிடம் வலுவாக நின்ற பின் சிமெண்ட் நன்றாகக் காய்ந்துவிட்டதா என்ற பதத்தைப் பார்த்த பின் அந்த முட்டுகளை எடுக்கின்றோம். அப்புறம் முட்டு இல்லாமல் கட்டிடம் தன்னாலே நிற்கின்றது.

ஆகவே முட்டு இல்லாமல் எந்தக் கட்டிடமும் கட்ட முடியாது.

ஆனால் கட்டிடம் சரியாகக் காய்வதற்கு முன்னனாடியே முட்டைத் தட்டி விட்டோம் என்றால் என்ன செய்யும்? கீழே விழுந்துவிடும்.

சிமெண்ட் பாலை ஊற்றிக் கட்டிடத்தைக் கட்டிவிட்டு அடுத்தாற்போல் உடனே அந்த முட்டுகளைத் தட்டிவிட்டோம் என்றால் நம்மைத் தான் போட்டு அமுக்கும்.

இந்த மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அணையாக‌ இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளைக் கழற்றி விட்டு விடக்கூடாது.

இப்போது மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் என்று சொன்னால் யாம் வலுவாகக் கொடுக்கும் அந்த முட்டுகளை (உபதேச உணர்வுகளை) அந்த ஞானிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிடக் கூடாது.

நான் எல்லாச் சக்திகளையும் பெற்றுவிட்டேன் என்கிற வகையில்  கொடுக்கும் ஞானிகளின் உணர்வைக் கழற்றி விட்டு விட்டு எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன் என்று சொன்னால் என்ன ஆகும்?

இப்படிக் கொஞ்ச பேர் இருக்கின்றனர்.

தீமைகளிலிருந்தோ அல்லது துன்பங்களிலிருந்தோ விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து (உடனடியாக) “தப்ப முடியவில்லையே…” என்ற வேகத்தில் எடுத்துக் கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிட்டு விடுகின்றார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து நான் சொல்கின்றேன். குருநாதர் அனுபவத்தின் மூலமாகத் தான் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்தார்,

மனிதருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் பாச அலைகள் துன்ப அலைகள் மற்ற உணர்வுகள் எப்படித் தாக்குகின்றது…? இதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்று குருநாதர் உணர்த்தினார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாரையும் நாம் பகைமையாக்கக் கூடாது. பகைமை இல்லாதவர்களாக நாம் மாறுதல் வேண்டும் என்று காந்திஜி பேசினாலும் மதம் இனம் என்ற உணர்வு கொண்டவர்கள் அவரைத் தாக்கப்படும் போது என்ன செய்தார்…?

ஹரே ராம்… ஹரே ராம்… ஹரே ராம்…! என்று தான் அவர் கூறினார்.

அப்பொழுது தன்னைச் சுட்டவரை மற்றவர்கள் தாக்குவார்கள்…! தண்டனை கொடுப்பார்கள்…! என்று முன் அறிவிப்பாக இருந்து தன்னைச் சுட்டவுடன்… அறியாமல் செய்துவிட்டார்கள்… அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்…! (இதைப் போன்ற) அந்தத் தவறு செய்வோரின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று எல்லோரிடமும் தெளிவாகக் கூறினார் காந்திஜி.

அவன் அறியாது செய்த அந்தச் செயல் மற்றோருக்கு அவன் செய்த செயலை நாம் எண்ணும் போது… அதே உணர்வுகள் நமக்குள் வந்து நமக்குள்ளும் அந்தத் தவறு செய்யும் உணர்வுகளை வளர்க்கும் என்றார் காந்திஜி.

இத்தகைய செயலை மற்ற யாரும் செய்யக் கூடாது  என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காகக் காந்திஜி அவனை (கோட்சேயை) அங்கே பகைமையாக்கவில்லை.

கோட்சே இவரைச் சுடும் போது “அவனைப் பகைவன்…!” என்று அவர் சொல்லவில்லை. பகைமையாக்கும் உணர்வில் இருந்து நாம் விடுபட வேண்டும். “சுதந்திரம் அடைய வேண்டும்” என்ற நிலையைத் தான் அன்று காந்திஜி சொன்னார்.

இதையெல்லாம் நாம் பின்பற்றினால் மனிதன் என்ற சுதந்திரத்தை அடைகின்றோம்.

அந்நியர் ஆட்சி என்று வந்தாலும்… அந்நியர் என்ற நிலைக்குப் பிரிக்காதபடி ஒன்று சேர்த்து வாழும் போது சகோதரர்களாக வாழுகின்றோம்.

அவன் அடிமைப்படுத்திச் செயல்படும் நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. நாம் நம்முடைய சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உணர்ச்சியைத்தான் ஊட்டினார். அவர்களைப் பகைவர்கள் என்று இவர் சொல்லவில்லை.

நாமெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். காந்திஜியின் வாழ்க்கையை நாம் ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்துதல் வேண்டும்.

இன்று ஒவ்வொரு குடும்பத்திலேயும் பார்த்தோம் என்றால்  மகன் தாய் தந்தையைக் கொன்று விடுவேன் என்று சொல்வதும் நான் கேட்டதைக் கொடுக்கவில்லை என்றால் பழிக்கு பழியாக உன்னைத் தீயை வைத்துக் கொளுத்தி விடுவேன் இல்லாவிட்டால் சுட்டுப் பொசுக்குவேன் என்ற நிலைகளில் செயல்படுகின்றார்கள்.

அமெரிக்காவில் நடந்தது. இப்போது அது நம் நாட்டிலும் வந்துவிட்டது.

ஒன்றைப் பிடிக்கவில்லை என்றால் உடனே ஒரு இனமாக மாறிவிடுகின்றது. தன்னை வளர்த்த தாயையும் தந்தையும் கூட அழிக்கும்படி வந்து விடுகின்றது. தன்னுடன் கூடப் பிறந்த சகோதரனையும் கூட எதிரியாக்கி விடுகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

காந்திஜியை நினைவு கொள்தல் வேண்டும். அவர் சாதாரண மனிதன் தான். பட்டினியாக இருந்து நாமெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கடும் தவம் இருந்தார்,

எதற்காக…?

பிறிதொருவர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வந்து அது வீரியம் அடைந்து விடக்கூடாது. சமத்துவ நிலைகள் வர வேண்டும் என்று சாந்தத்தை உருவாக்கும் நிலைகள் கொண்டு பட்டினியாக இருந்தார். நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழக் கடும் தவம் இருந்தார்.

அனைவரும் பகைமையை மறந்து ஒன்றுபட்டு வாழ்வோம் என்ற நிலை வந்தால் தான் உண்ணாவிரதத்தைக் கை விடுவேன்… உணவை உட்கொள்வேன்…! என்று நமக்காகத் தவம் இருந்தார் காந்திஜி.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாடு சுதந்திரம் அடைந்து பல வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

எதற்காகப் போராடிப் போராடிச் சுதந்திரம் பெற வேண்டும் என்று எண்ணினோமோ நாம் எண்ணிய சுதந்திரம் யாருக்குமே கிடைக்கவில்லை.

இன்று கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் சரி… அரசி்யலில் முன்னணியில் இருந்தாலும் சரி… அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களாக இருந்தாலும் சரி… நிம்மதியாக இருப்பவர்கள் யாரும் இல்லை…!

உலகம் முழுவதற்கும் அரசியலில் வாழ்க்கை நடத்துவோர் அனைவரும் அவர்கள் நிம்மதியற்ற வாழ்க்கை தான் வாழ்கின்றார்கள். அவருக்குச் சுதந்திரம் என்ற நிலைகள் இல்லை.

வெளியே வர வேண்டும் என்றால் அவர்களும் அஞ்சுகின்றார்கள். அவர்களுக்கு என்று தனிப் பாதுகாப்புடன் தான் வருகின்றார்கள்.

அதே போல் இன்று நாமும் வெளியே செல்ல வேண்டும் என்றால் பஸ்ஸில் சென்றாலும் சரி… ட்ரெயினில் சென்றாலும் சரி… அல்லது ரோட்டில் நடந்து சென்றாலும் கூடச் சரி… நமக்கும் அந்தச் சுதந்திரம் இல்லை.

எவன் பறிப்பானோ…! எவன் அழிப்பானோ…! நம்மை எவன் கொல்வானோ என்ற உணர்வுகள் தான் அது வருகின்றது. சுதந்திரம் என்ற நிலையில் யாருக்கும் வரவில்லை.

அரசியலிலும் செல்வத்திலும் அவர்கள் ஓங்கி வளர்ந்திருந்தாலும் இந்த உடலில் சுதந்திரமான வாழ்க்கை இல்லை. ஆனால் சுதந்திர வாழ்க்கை வர வேண்டும் என்றால் ”காந்திஜியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்”

எத்தகைய தீமையும் அவர் தனக்குள் புகாது “அனைவரும் சகோதரர்களே…!” என்ற உணர்வைத் தன் உடலுக்குள் ஊட்டிக் கொண்டார். அதையே சகோதரத்தத்துவமாக அவருக்குள் வளர்த்துக் கொண்டார்.

இந்தியாவில் மதக் கலவரங்களும் இனக் கலவரங்களும் ஏற்பட்டு மக்கள் மடிவதை அசுர சக்திகள் மக்களை மாய்க்கின்றது என்று கூட அவர் எண்ணவில்லை ”அசுர சக்தி…” என்றே அவர் எண்ணத்திற்குள் வரவில்லை.

அனைவரும் ஒன்றென்ற நிலைகளை அவர் அறிந்துணர்ந்தார். அதைப் போன்ற சாந்த நிலைகளே நம்மை வாழ வைக்கும் என்றார். அப்போது தான் இந்த உடலுக்குள் (நமக்கு) சுதந்திரம் கிடைக்கின்றது என்று தெளிவாக உணர்ந்து கொண்டார்.

இன்று எடுத்துக் கொண்டால் மனிதன் அழகாக இருப்பான். செல்வமும் இருக்கும். செருக்கும் இருக்கும். ஆனால் அவனுக்குச் சுதந்திரம் இல்லை.

அம்மம்மா…! நான் எல்லோரையும் போல சாப்பிட முடியவில்லையே… படுக்க முடியவில்லையே… தூங்க முடியவில்லை…! என்று தூக்கமின்மையால் அவனுக்குச் சுதந்திரமாகத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை.

செல்வம் இருக்கின்றது… சுதந்திர வாழ்க்கை வாழ முடியவில்லை. ஆகவே சுதந்திரம் எது…?

ஒரு நண்பன் “நல்ல உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…” என்று எண்ணத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவர்கள் வளர வளர அந்த வளர்ச்சி மிகவும் உயர்ந்ததாக நமக்குள்ளும் வளரும்.

அதே சமயத்தில் “எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கின்றானே பாவி…!” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நமது அந்த நல்ல மனம் சுதந்திரத்தை இழந்து விடுகின்றது.

அதே சமயம் அந்தப் பகைமை உணர்வை நமக்குள் வளர்க்க வளர்க்க நம் உடலுக்குள்ளே எதிரியாக வந்து அது நல்ல செயல்களை அழித்துக் கொண்டேயுள்ளது. அப்போது நாம் சுதந்திரமாக வாழும் தன்மை இல்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைப் பெறவேண்டும் என்றால் கண்ணின் நினைவு கொண்டு நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு சென்று அதைக் கவர்ந்து கொண்டால் தான் நம் உடலுக்குள் செலுத்தி அணுக்களாக உருவாகிக் கொண்டிருக்கும் கருவிற்குள் உபதேசிக்க முடியும்.

(கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உபதேசித்தான் என்று சொல்வார்கள்)

இங்கே நான் (ஞானகுரு) உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் நினைவலைகள் வேறு பக்கம் இருந்தால் இது பதிவாகாது.

எனக்கு நேரமாகி விட்டது. அந்த பஸ்ஸுக்கு போக வேண்டும் என்ற நினைவலைகளை அங்கு வைத்துக் கொண்டு இங்கே கேட்டுக் கொண்டிருந்தால் உபதேசம் கொடுக்கமாட்டான் – கண்ணன் (உயிருக்கு).

அவசரமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்று (கண்ணின் நினைவலைகள்) நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவலைகள் அனைத்தையும் உங்களுக்கு இழுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

யார்…? கண்ணன்…. நம் கண்கள்.

பிள்ளைகள் என்ன செய்கின்றார்களோ…? அவன் என்னென்னமோ செய்கிறான். இவனைப் பார்த்தால் நம்மை ஏமாற்றிக் கொண்டேயிருக்கின்றான்…! என்று பல நிலைகளில் கண்ணின் நினைவலைகள் கொண்டு எண்ணிக் கொண்டிருந்தால் அதற்குத்தான் வழி காட்டுவான் கண்ணன்.

திருடப் போகிறேன் என்று சொன்னால் “வீட்டுக்காரன் அங்கே இருக்கிறான் சிக்கிவிடாதே…! இப்படிப் போ…” கண்கள் என்று காட்டும்.

அந்த வீட்டுக்காரன் நிறையச் சம்பாதித்து வைத்திருப்பான். சிறியதாக நறுக் என்று சத்தம் கேட்டவுடன் “ஓகோ… திருடன் வருகிறான் போலிருக்கின்றது… நீ இப்படிப் போ…” என்று வழி காட்டுவான் கண்ணன்.

அதைப் போன்று தான் நான் எவ்வளவோ உயர்ந்த நிலைகளில் உபதேசம் கொடுத்தாலும் கூட எம்முடைய உபதேசத்தை நீங்கள் கேட்கும் அந்தச் சமயம் எந்த நினைவு கொண்டு வருகின்றீர்களோ… கண்ணன் கண்கள் உங்களுக்கு அந்த உபதேசத்தைத்தான் கொடுப்பான்.

இப்படி எல்லாம் பல நினைவுகள் வருவதனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை என்ன செய்தார்…?

இவனைச் சும்மா விட கூடாது என்பதற்காகத்தான் எறும்புப் புற்றுக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் கொண்டு போய் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.

அப்பொழுது எனக்கு வீட்டு நினைவு எங்கே வருகிறது…? எப்படி வீட்டு நினைவு வரும்…?

வசமாகக் கொண்டு போய்ச் சிக்க வைத்துவிடுவார்.

காட்டுக்குள்ளே “செந்தேள்…!” ஒன்று இருக்கிறது. அது கொட்டியதென்றால் எப்படித் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. மிளகாயைப் போட்டு அரைத்துத் தேய்த்தால் எப்படி இருக்கும் எரிச்சல்…! அதே போல இருக்கும்.

அதை என்னைக் கொட்ட வைத்தார். அது கொட்டினவுடனே, ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று துடித்துக் கொண்டு இருப்பேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “விண்,,,விண்,,,” என்று வலி இருக்கும்.

“ஈஸ்வரா…” என்று சொல்லுடா என்பார். ஆனால் ஈஸ்வரா என்று சொல்ல எனக்கு வராது. ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று தான் அலறிக் கொண்டு இருப்பேன்.

விஷம் எந்த அளவுக்கு ஏறியதோ அந்த அளவுக்கு நான் அலறும் பொழுது உன்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் எங்கேடா போனது…? என்று கேட்பார் குருநாதர்.

எல்லாருக்கும் நல்லது செய்தாய்…! நல்லது செய்த அந்த நல்ல குணங்கள் எல்லாம் எங்கே போனது…? இந்த விஷத்தைக் கண்டது அது ஓடி ஒளிந்து விட்டது அல்லவா…! என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

இதற்காகத்தான் இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேராகத் தாக்கவில்லை…!

ஏன்…?

நமக்குள் வேதனை வந்தாலும்… அது நம்மைத் தாக்கினாலும்.. நம்முடைய நினைவு அந்த வேதனையின் மீது இருக்கக்கூடாது.

உதாரணமாக ஒரு புலி வருகிறது என்று எண்ணிப் பாருங்கள்…! புலி வருகிறதா..!. என்று எண்ணிய உடனே கிடு…கிடு…வென நடுங்குவோம்.

நாம் இருக்கும் இந்தப் பக்கம் ஒரு போக்கிரி வருகிறான். பார்ப்பவரை எல்லாம் எல்லாம் அடிக்கிறான்… உதைக்கிறான் என்று சொன்னால் போதும்.

இங்கே நமக்குக் கிடு…கிடு…வென்று வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் நம் வலு எல்லாம் எங்கே போகிறது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

”போக்கிரி…” என்று சொன்னவுடனே நம் வலு அனைத்தும் அவனிடத்தில் போகிறது. நம் நிலை எல்லாம் அங்கே போய்விடுகிறது.

வாலி என்ன செய்கிறான்…? அவனுக்கு நேராக நின்றால் (நம்முடைய) சம பலத்தை எடுத்துக் கொள்கிறான். இராமாயணத்தில் வான்மீகி மாமகரிஷி மிகவும் தெளிவாகவே இதைக் காட்டுகின்றார்.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்தின் வலு இழந்தபின் அடுத்து நாம் எதை எடுக்க முடியும்… முடியாது.

அதற்காக வேண்டித் தான் நம் கண்கள் செல்லும் வழியில் (கண்ணன் சொல்லும் வழியில்) புருவ மத்தியில் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி அவனை (போக்கிரியின் உணர்வை) நேரடியாகத் தாக்காதபடி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் அந்த உபதேசத்தைச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிக் கொண்டு என்று நம் உடலில் இந்த வாசனையை அதிகமாகப் பரவச் செய்து கொள்ள வேண்டும்.

அப்பொழுது அவனை எண்ணும் பொழுது (முதலில்) நமக்கு எப்படி நடுக்கம் வருகின்றதோ… அதே மாதிரி – “அவன் நம்மை எண்ணும் பொழுது..” மறைமுகமாக நாம் பரவச் செய்த மகரிஷிகளின் உணர்வை அவன் நுகர்ந்தால் அது அவனுக்குள் போய் அவனிடத்தில் இருக்கும் அந்த வீரியத் தன்மையை குறைக்கும்… “தடுமாறச் செய்யும்….!”

ஏனென்றால் அவன் உணர்வைக் காட்டிலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று நாம் இதை எண்ணும் பொழுது நம்மைத் தாக்க வேண்டும் என்று எண்ணினால் நம்மைப் பார்த்ததும் நம் நினைவுகள் அவனுக்குள் குபு…குபு… என்று போய் அவன் உணர்வு அனைத்தையும் மாற்றிவிடும்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சந்தர்ப்பம் தெருவில் எத்தனையோ பேர் சண்டை போடுவதைப் பார்ப்போம். அதிலே போக்கிரியைப் பார்த்து இருப்போம். கடை வீதியில் அவன் ரௌடித்தனம் செய்து இருப்பான். அதைப் பதிவு செய்து இருப்போம்.

இந்த மாதிரி உணர்வுகளெல்லாம் நமக்குள் வந்தவுடனே அந்த ரௌடித்தனம் செய்தவனைப் பார்த்து “இவனையெல்லாம் அடக்க வேண்டும்” என்று நினைத்து வைத்து இருப்போம்.

இந்த மாதிரி உணர்வுகள் வரப்படும் போது அடுத்தாற்போல் சாதாரணமாக ஒருவன் ஏதாவது தப்பு செய்தால் நாம் என்ன சொல்வோம்?

“உன்னையெல்லாம் உதைத்தால் தான்டா சரி…!” என்று அவன் (ரௌடியின்) உணர்வை இங்கே எடுத்து இவனை உதைக்க வேண்டும் என்று வரும். தப்பு செய்பவனுக்குப் புத்தி சொல்வதை விட்டு விடுவோம்.

இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே (போக்கிரியின்) உணர்வுகள் பதிந்தது மற்றவர்கள் தவறு செய்யப்போகும் போது அவன் தவறு செய்த இந்த உணர்வுகள் நம்மை இயக்கி இவனைக் குற்றவாளியாக ஆக்குகின்றது.

ஆனால் அவன் செய்த தவறைத் திருத்தும் உணர்வுகள் நமக்குள் வராது. இதைப் போன்ற நிலையில் இருந்து தான் தவறு வருகின்றது.

அதற்காகத்தான் ஞானிகள் “சதுர்த்தி…” என்று காட்டியுள்ளார்கள். காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் பார்த்த நிலைகளில் இந்த மாதிரி வினைகள் நமக்குள் வளராது அதைத் தடுத்து நிறுத்துதல் வேண்டும். சதுர்த்தி என்றால் “நிறுத்துதல்…” என்று பொருள்

நம் தெரு முழுவதும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும். எல்லோருக்கும் ஒருவருக்கொருவர் நட்பின் தன்மை வளர வேண்டும். நம் ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம் தெரு ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக வாழும் அந்தக் சக்தி இங்கு படர வேண்டும்.

ஒவ்வொரு ஊரில் இருக்கின்றவர்களும் இந்த மாதிரி எண்ணிப் பாருங்கள். அங்கு மத பேதங்களோ இன பேதங்களோ இது வராது.

ஒருவருக்கொருவர் வெறுப்பான உணர்வுகள் வளர்க்கப்படும் போது ஒருவனை “மிரட்டிப் பழகி விட்டான்” என்றால் அதே நிலை வரும்.

அப்போது அவனைப் பார்க்கும் போதெல்லாம் “மிரட்டும் உணர்வுகள்” நமக்குள் வருகின்றது. அப்போது அதே செயலை “நாமும்…” செய்ய ஆரம்பிப்போம்.

ஒரு பாலுக்குள் காரம் பட்டால் காரத்தின் நிலைகள் செயல்படுவது போல நம்முடைய செயலும் உருவாகி விடும்.

ஆகையினாலே நாம் இதிலிருந்து நாம் ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி நாம் விண்ணுலகின் ஆற்றலை எடுத்து இங்கே பெற வேண்டும் என்று நாம் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் “சுருக்…”கென்று சொல்லி விட்டால் அந்த உணர்ச்சிகள் தூண்டி நம்மை வேதனைப்படச் செய்கின்றது. அந்த வேதனையான உணர்வுகளுடன் நாம் இருக்கும் போது மற்றவர்கள் என்னதான் நல்லதைச் சொன்னாலும் அந்த நல்ல சொல்லை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

 

இதைப் போல சாதாரணமான மனிதர்களுடன் நாம் பேசும் போது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே நாம் எண்ணிய எண்ணங்களுக்குத் தகுந்த மாதிரி உமிழ் நீராகி நம் இரத்தத்தில் (கருவாகி) வித்தாக மாறி உடலில் வியாதியாக மாறுகிறது.

 

நாம் ஒரு தடவை சஞ்சலப்படுகிறோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்த்து வந்துவிடுகின்றது.

 

குழம்பை ருசியாகச் செய்ய வேண்டுமென்றால் காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு இவைகளை எல்லாம் கலந்துதான் வைக்கிறோம். அப்பொழுது எல்லாம் சமமாக இருந்தால் குழம்பு ருசியாக இருக்கின்றது.

 

காரமோ மிளகோ சீரகமோ உப்போ கசப்போ நாம் சேர்க்கும் பொருள்களில் எது அதிகமானாலும் அது தான் முன்னணியில் நிற்கும். அப்பொழுது அது சுவையைக் கெடுத்து விடுகிறது.

 

வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் பயம் வேதனை இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கும் போது அதிலே நீங்கள் நினைவைச் செலுத்தியவுடன் வேதனையான எண்ணங்கள் வந்துவிடுகின்றது.

 

குடும்பத்தில் கஷ்டப்படுகிறோம் என்றால் அந்தக் கஷ்டமான எண்ணத்தை எண்ணி எம்முடைய உபதேசங்களைப் படிக்க நினைத்தாலும், அந்த வேதனையான எண்ணங்கள் நீங்கள் எண்ணியவுடன் உங்கள் உடலைச் சுற்றி அந்த வாசனை இருக்கும்.

 

உங்கள் கஷ்டத்தைப் போக்குவதற்கு யாம் அந்த நல்ல வாக்குகளை அந்தச் சக்தியை உங்களைக் கேட்கச் செய்து அந்த உணர்ச்சிகளை உங்கள் உடலிலே படரச் செய்து அந்த ஞானிகளின் சக்தி உங்கள் உடலுக்குள்ளும் உமிழ் நீராகச் சேர்க்கச் செய்வதற்கு யாம் முயற்சி எடுக்கின்றோம்.

 

அப்படி எடுத்தாலும் கூட நீங்கள் வேதனையாக இருக்கக்கூடிய எண்ணம் யாம் சொல்லக்கூடிய வாக்கை உங்களால் ஈர்க்க முடிவதில்லை.

 

நீங்கள் நல்லதைப் பெற வேண்டும் என்று வந்தாலும் கூட முடிவதில்லை. சிலபேர் அந்த வேதனை கலந்து இப்படியெல்லாம் இருக்கிறதே என்று வேதனையைத்தான் முன்னாடி கொண்டு வருகிறார்கள்.

 

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம். இனி நமக்குக் கஷ்டமில்லை. என் துன்பத்தைப் போக்கி நான் நன்றாக இருப்பேன் என்ற நினைவுடன் நீங்கள் இருந்தீர்களானால் யாம் கொடுக்கக்கூடிய வாக்கு உங்கள் உடலிலே நல்ல முறையில் பதிவாகி உங்கள் துன்பத்தைப் போக்க உதவும்.

 

இது பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எப்படித்தான் இருந்தாலும் காற்று அடிக்கிறது மழை பெய்கின்றது வெயில் அடிக்கின்றது குளிர் அடிக்கின்றது…! காற்று மழை வெயில் குளிர் ஆகிய நான்கு காலங்களும் மாறி மாறி வருகிறது.

இதைப் போலத் தான் மகிழ்ச்சியாகச் சென்றாலும் நாம் போகும் போதே திடீரென்றுஒருவன் குறுக்கே போகின்றான்… கீழே விழுந்து அடிபடுகின்றான். அதைப் பார்த்தவுடனே பதட்டமாகி வேதனைப்படுகின்றோம். பயம் வந்து குளிர் போல நமக்குள் நடுக்கமாகிவிடுகிறது.

இரண்டு பேர் சண்டை போடுகின்றனர். அப்போது எரிச்சலான பேச்சுக்களை ஒருவருக்கொருவர் பேகிக் கொள்கின்றனர். நாம் பார்க்கின்றோம் அதைக் கேட்டு நுகர்ந்தவுடனே நமக்கும் எரிச்சலாகின்றது. அப்பொழுது வெயிலாகின்றது.

அதே சமயம் ஒருவருக்கொருவர் பரபரப்பான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அதை நாம் பார்க்கப்படும் போது நம் மனதில் பெரும் புயலாகின்றது.

ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். அதைப் பார்க்கும் போது பெரும் புயலாக நம் எண்ணங்களைச் சிதறச் செய்து நம்மையே ஓட வைக்கின்றது.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வரக்கூடிய இந்த நிலைகள் ஒவ்வொன்றும் மாறி மாறி (காலங்கள்) வந்து கொண்டே இருக்கின்றது.

சகஜ வாழ்க்கையில் குளிர் அதிகமாக அடித்தால் “வெயில் வந்தால்…” பரவாயில்லை என்று சொல்லுகின்றோம்.

வெயில் அதிகமாக அடிக்கப் போகும் போது காற்று இல்லை என்றால் “காற்று வந்தால்…” பரவாயில்லை என்று நினைக்கின்றோம்.

காற்று அதிகமாக வந்தவுடன் என்ன சொல்கிறோம்…? ஐயோ…! காற்று இப்படி அடிக்கின்றதே… என்னால் தாங்க முடியவில்லையே…! என்கின்றோம்.

ஆக மொத்தம் எல்லாவறையும் விரும்புகின்றோம். ஆனால் அந்தந்தக் காலங்கள் வந்தால் அது மேலேயே வெறுக்கின்றோம். நான்கு காலத்திலேயும் இப்படி அதைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

ஒரு பொருளைக் காய வைப்பதற்காக வெயில் வேண்டும் என்கின்றோம். ஆனால் அந்தப் பொருளைக் காய வைப்பதற்கு முன்னாலே வெயில் அடித்தால் “அப்பப்பா… உடம்பெல்லாம் எரிகின்றது…!” என்கின்றோம்.

அந்தப் பொருளும் காய வேண்டும். அதனாலே (வெயிலால்) வேதனையும் படுகின்றோம். நன்மைக்காக வேண்டி எண்ணுகின்றோம். அடுத்த நிமிடம் அதனால் வேதனைப்படுகின்றோம்.

துவைத்த துணிகளைக் காய வைக்கக் காற்று அடிக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம், அது அதிகமாகப் போய்த் துணியைத் தூக்கி எறிந்தது என்றால் “துணியைத் தூக்கி எறிந்து விட்டதே…!” என்று வேதனைப்படுகின்றோம்.

இதைப் போல எல்லா நன்மைகள் வந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயேசு அவர் வாழ்ந்த காலத்தில் தாய் கருவிலே பெற்ற உண்மையின் உணர்வுகள் கொண்டு மக்களுக்குப் பல நன்மைகள் செய்தார்.

 

மக்கள் அதனால் நல்லதாகி மகிழ்ச்சி அடைந்தாலும் மக்கள் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகளை அவர் கவர நேர்ந்தது.

 

அவர் மக்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணும் பொழுது மற்றவர்களுக்கு நல்லதானது. ஆனால் அவர் உடலில் தீமையின் விளைவே வந்தது. துன்புறுத்தும் உணர்வே வந்தது.

 

மக்களுக்குப் பல நன்மைகளை அவர் செய்தாலும் அன்று ஆண்ட யூத சட்டத்திற்கு விரோதமானது என்று அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். என் தந்தையே… “என்னைக் கைவிட்டுவிட்டாயே…!” என்று அவர் வேதனைப்பட்டார்.

 

அதே சமயத்தில் அங்கே ஒரு கொள்ளைக்காரனையும் தண்டனைக்காகச் சிலுவையில் அறைந்திருந்தார்கள். இவரைப் பார்க்கும் பொழுது “அவனுக்கு அந்த வேதனை தெரியவில்லை…!”

 

ஏனென்றால் மக்களுக்கு நன்மை செய்தார்…! அவருக்கு இந்தத் தண்டனையா…? என்று அவரை அவன் எண்ணும் பொழுது அவர் செய்த நன்மையின் உணர்வுகள் அவனுக்குள் வந்து தன் வேதனையை மாற்றியது. திருடன் அவன் தீயதை மறந்து நல்லதை எடுத்தான். அவனுக்கு வேதனை தெரியவில்லை.

 

இதே போலத்தான் நமது வாழ்க்கையில் இன்று உலகில் எத்தகைய தீமைகள் நிகழ்ந்தாலும் அவைகளை அழுத்தமாகத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்க வேண்டியதில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித உடல் நமக்குச் சொந்தமல்ல.

ஆனால் கோபமோ ஆத்திரமோ வந்து என்னை அவர்கள் இப்படிப் பேசினார்கள்… இவர்கள் குறையாகப் பேசினார்கள்… கேவலமாகப் பேசினார்கள்… அவமதித்துப் பேசினார்கள் என்கிற இந்த உணர்வுகளைத்தான் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிறபோது இந்த உடலைத்தானே அப்படிப் பேசுகின்றார்கள்.

இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே போய்விட்டால் இதை யாராவது மதிக்கின்றார்களா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உடலை யாரும் மதிப்பதில்லை.

எவ்வளவு அழகான உடலாக இருந்தாலும் திடீரென்று ஒரு ஹார்ட் அட்டாக்கோ மற்ற ஏதோ வந்தால் எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்…? என்னென்னவோ செய்து முட்டி மோதுகிறோம்…!

இருந்தாலும் இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா போய்விட்டது என்றால் இந்தச் சரீரத்தை யார் மதிக்கின்றார்கள்…?

கூடக் கொஞ்சம் நேரம் வைத்திருக்கலாம் என்றால் “இல்லை… நாற்றமாகிவிட்டது… சீக்கிரம் கொண்டு போக வேண்டும்…” என்று தான் சொல்கின்றோம்.

ஏனென்றால் வைத்திருக்கலாம் என்றால் அதற்குள் உடல் அழுகிப் போய்விடும் வீடே நாற்றமாகிக் கெட்டுப் போய்விடும்… “கொண்டு போய்ச் சேருங்கள்…” என்று தான் சொல்கின்றோம்.

ஆக இவை அனைத்திற்கும் எங்கே இருக்கின்றது…?

உயிர் தான் மூலமாக இருக்கின்றது. அந்த உயிர் இருக்கும் வரை தான் “இந்த மரியாதை”.

ஆனால் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வை இந்த உயிருடன் ஒன்றிச் சேர்த்துவிட்டால் இந்த உடல் என்ற மரியாதை போய் உயிர் என்ற நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் “அந்த மரியாதை” நமக்குள் வந்துவிடும்.

இதை நாம் பழகிக் கொண்டால் இந்த உடலின் தன்மையைப் பற்றி அதிகமாக நாம் நினைக்க வேண்டியது இல்லை. நினைப்பு வராது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் நாம் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகிவிடுகின்றது. (வினை – வித்து)

ஆனாலும், நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.

நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைச் கேட்டறிகின்றோம்.

இப்படிக் நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அதை அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் மீண்டும் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.

இதைப்போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.

மற்றவர்கள்படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது.

மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர்கள்படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.  “கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.

நாம் அடுத்தவர்களிடம் போய் இந்த மாதிரி…, எல்லாருக்கும் உதவி செய்தேன்… எல்லாம் செய்தேன்… “ஆண்டவன் என்னை சோதிக்கின்றான்” என்று நமக்குள்ளே அதே வித்தை நாம் உருவாக்குகின்றோம்.

உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். “நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும்போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது.

ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை. அந்த நல்லது சொல்வது என்பது சிறிது காலம் இருந்தாலும் அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

செல்வம் தேடுகின்றோம். ஆனால் தேடிய செல்வத்தால் மனிதர் நிலைத்திருக்கின்றனரா..? மனிதனால் தேடிய செல்வத்தைக் காக்க முடிகின்றதா..?

 

செல்வத்தைக் குவித்து வைத்திருந்தாலும்.., நிம்மதி வருகின்றதா..? வேதனையுடன் தான் வாழ்கின்றோம்.

 

செல்வத்தைத் தேட ஆசைப்படுகின்றோம். அதற்கடுத்து அந்தத் தேடிய செல்வத்தைக் காக்க.., மீண்டும் வேதனைப்படுகின்றோம்.

 

நேற்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம். இன்று செல்வத்தைத் தேடிக் குவிக்கின்றோம்.

 

சிரமப்படும்பொழுது நண்பராகப் பழகியவர்.., “நீ இவ்வளவு பணம் வைத்திருக்கின்றாயே.., ஏன்.., எனக்குச் பணம் கொடுக்கக்கூடாதா..,?” என்று கேட்பார்.

 

முதலில் ஏழ்மையில் வாடுகின்றோம். பின் வசதியாக வந்து விட்டோம். ஏழ்மையாக இருக்கும் பொழுது நண்பனாகப் பழகியவன் வசதியான பின் நம்மிடம் பணம் கேட்கும்பொழுது நாம் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வான்?

 

“நம்மைக் குற்றவாளியாக ஆக்க வேண்டும்..,” என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு மற்றவர்களிடம் அவ்வாறு சொல்லிப் பறைசாற்றுவான்.

 

“கொடுக்கவில்லை” என்பதற்காக என்னை இப்படியெல்லாம் பேசுகின்றானே என்று வேதனை நமக்குள் வந்துவிடும்.

 

அத்தகைய வேதனை வந்துவிட்டால் நுகர்ந்த உணர்வுகள் நம் ஈஸ்வரலோகமாக இருக்கும் சிரசிற்குள் அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக கருவாக உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.

 

எந்த மனிதன் வேதனைப்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தினானோ ஈஸ்வரலோகத்திற்குள் கருத்தன்மை அடைந்த பின் இந்திரலோகமாக மாறி அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் பிரம்மலோகமாக மாறுகின்றது.

 

அணுவாகிவிட்டால் எந்த மனிதன் எதனால் குறை கூறி வேதனைப்பட்டானோ அந்த வேதனை உணர்வை நுகர்ந்து வேதனைப்படும் அணுக்களைப் பெருக்கி இந்த உடலையே வேதனைக்குரிய நிலையாக நோயாக மாறுகின்றது.

 

நோயாக மாற்றி சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடுகின்றது. இதை நீங்கள் நடைமுறையில் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

 

ஆகவே, செல்வத்தைத் தேடினாலும் சந்தர்ப்பத்தால் இப்படி ஒரு நிலை. இது போன்று செல்வத்தைக் காக்கும் நிலை இல்லை. செல்வம் தேடினாலும் உடலைக் காக்கும் நிலை இல்லை.

 

நமது ஆசையின் நிமித்தம் இந்த உடலின் இச்சைக்கே தான் வாழ்கின்றோமே தவிர “இந்த உடலுக்குப் பின்.., என்ன..?” என்ற நிலையை யாரும் சிந்திக்கவில்லை.

 

நம்மைக் காக்க வேண்டும் என்றால் அதற்குண்டான சக்தி நமக்குத் தேவை. அதற்குத் தான் இந்த உபதேசம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

டயானா… தான் வாழ்ந்த காலத்தில் ஆடைகளை எவ்வளவோ செலவழித்து வாங்கும் அளவிற்குச் செல்வம் இருந்தது. செல்வாக்கும் தன்னிடம் இருந்தது.

அன்று இறந்த டயானாவின் ஆடைகளை எத்தனையோ கோடி விலைக்கு ஏலத்தில் விற்கிறார்கள். ஆமற்றவர்களுக்கும் பல கோடிப் பணம் கொடுத்து அந்த ஆடையை வாங்க வேண்டும் என்ற ஆசையை அது ஊட்டுகின்றது.

அந்த ஆசையைத்தான் முதலிலே (டயானா) அது வளர்த்தது. ஆனால், “வாழ வேண்டும்..,” என்று எண்ணிய அவளுக்கு அங்கே “நொடிக்குள் மரணம் சம்பவித்தது…!”

அதையும் நாம் நுகர்கின்றோம், அறிகின்றோம். “இருந்தாலும்…. ஆசை நம்மை விட்டபாடில்லை…!

“அவர் வளர்த்துக் கொண்ட ஆசையை” நமக்குள் பதித்துக் கொண்டபின் “ஏன்.., நாமும் அவரைப் போல் வரக்கூடாது…” என்ற இந்த நிலை தான் வருகின்றது.

அதே வழியில், “மெய் ஞானிகள்.., பிறவியில்லா நிலை அடைந்தனரே…!” அதை நாம் பெறலாம்.

நாம் ஏன் அந்தப் “பிறவியில்லா நிலை அடைய முடியாதா..,?” என்று அவர்கள் வழி சென்று அருள் மகரிஷிகளின் உணர்வை வளர்த்தால் நாம் அதைப் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் நாம் எப்படியும் வாழ வேண்டும் என்று வேகத் துடிப்புடன் பல கோடிகளை இணைத்துப் பொருளாகச் சம்பாரித்து வைக்கின்றோம்.

சம்பாரித்து வைத்தாலும் அந்தப் பணத்தைப் பார்க்கலாம். பணம் கோடி கோடியாக இருந்தாலும் என்ன சொல்கிறார்கள்.

இவ்வளவு வைத்திருக்கின்றேன்… ஆண்டவன் என்னை ஏன் சோதிக்கின்றான் என்று தெரியவில்லை…! இந்த வேதனையைத்தான் எடுக்கின்றார்கள்.

இதற்கும் அதற்கும் உடலுக்கும் மனதிற்கும் சீரற்ற நிலைகள் ஆகி கடைசியில் மன நிம்மதியற்ற நிலையில் தான் இருக்கின்றார்கள்.

பல ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாரித்த பின் இன்றைக்குப் பொய் சொல்லி “எப்படிடா தப்பிக்கலாம்…” என்று ஷேர் மார்க்கெட்டிலோ மற்ற தெரியாத வகைகளிலோ கொண்டு போய் அந்தக் கோடிகளைப் போடுகிறார்கள்.

இவ்வளவும் இருந்தாலும் “மன நோய்க்கு…” மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

சொத்துக்களைக் காக்க வேண்டும் என்று சென்றாலும் இந்த மனதிற்கும் உடலுக்கும் நிம்மதி இல்லை. நிம்மதியற்ற உணர்வே நஞ்சாக மாறுகின்றது.

உடலை விட்டுச் சென்றால் இந்தக் கோடிச் சொத்து எங்கே வருகின்றது? வருமா…!

இன்றைக்கு முதல் மந்திரியாக இருப்பவர் பிறர் மேல் பழியைத் தூக்கிப் போட்டுப் “பல கோடி நான் அவருக்குக் கொடுத்தேன்… இவருக்காக இதைச் செய்தேன்…” என்பார்.

இப்படி இருப்பவருக்குத் தன் நாட்டைக் காக்க வேண்டும் என்றால் “நிம்மதி… எங்கிருந்து வரும்?

நாட்டிற்கு முதல் மந்திரியாக இருக்கலாம். அதிகாரத்தின் நிலைகளில் தட்டிக் கேட்கும் நிலையும் இங்கே இருக்கலாம். ஆனால் இவருக்கு நிம்மதி ஏது?

அதைப் போலத்தான் இன்றைய நிலைகள் கொண்டு பெரிய பதவிகளில் இருப்போருக்குப் பேரும் புகழும் இருக்கலாம்.

ஆனால் அதன் மறைவிலே நஞ்சு கொண்ட உணர்வின் தன்மைகள் ”இணைந்தே” இருக்கின்றது. இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

அந்த நஞ்சற்ற நிலையாக நாம் திகழ வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் தன்மையை நாம் பழக வேண்டும்.

ஆகவே அத்தகைய நஞ்சின் தன்மை வரும் நிலையிலிருந்து தப்ப “தனி மனிதன் – எதுவும் செய்ய முடியாது”,

அதற்குத்தான் ஆலயங்களிலே விநாயகரை முன்னிறுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

நம் வாழ்க்கையில் எத்தகைய கஷ்டம் வந்தாலும் அந்த விநாயகரைப் பார்த்தவுடனே மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று உயிருடன் ஒன்றச் செய்து உணர்வின் ஆற்றலை உடலுக்குள் உள் செலுத்துதல் வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை நாம் கண்டறிந்த கேட்டுணர்ந்த நம்மையறியாது வந்த நஞ்சான உணர்வுகள் நம் ஆன்மாவாக நிற்கும்.

நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உள் செலுத்தும் பொழுது உள் நின்று வரும் குழம்பின் தன்மை இந்தத் தீமைகளைப் பிளக்கச் செய்யும்.

அந்த விநாயகர் தத்துவத்தின்படி அருள் மகரிஷிகளின் உணர்வை நம்மை நுகரச் செய்து அறிந்திடும் உணர்வாக உயிர் இயக்கி அந்த உணர்வின் ஆற்றலாக நாம் செயல்படும் தன்மையை உருவாக்கினார்கள் ஞானிகள்.

நாம் ஆலயங்களுக்குச் சென்று இந்த முறைப்படி எண்ணினால் இது தான் ஆத்ம சுத்தி என்பது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்றும் அறியாத மூடனான இரக்கமற்ற வான்மீகி சந்தர்ப்பத்தால் பட்சியின் மூலமாகத் தான் நுகர்ந்த உணர்வுகளால் மெய் ஒளி பெறும் தகுதியைப் பெற்றான். தனக்குள் மெய்யை வளர்த்துக் கொண்டான்.

தனக்குள் விளைந்த அந்த உணர்வின் ஆற்றலால் அவன் இராமாயணக் காவியத்தையே வெளிப்படுத்தினான். அவன் எப்படி வெளிப்படுத்தினானோ அதைப் போன்ற நிலைகளைத்தான் உங்களிடம் இப்போது சொல்வது.

புத்தகத்தைப் படித்து யாம் சொல்லவில்லை. குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து விளைய வைத்து அதன் வழியில் அனுபவபூர்வமாக உணர்ந்த மெய் உணர்வுகளைத்தான் வெளிப்படுத்துகின்றோம்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் ஒளி அலைகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே அவர்கள் உணர்வின் எண்ண அலைகளை உங்கள் கண்ணிற்குள் பாய்ச்சச் செய்து மெய் உணர்வின் ஒலியைத் தட்டி எழுப்பச் செய்கின்றோம்.

உங்களுக்குள் பதிவாக்கும் அந்த ஞான வித்தை வளர்க்கும் விதமாக விண்ண நோக்கி ஏங்கித் தியானித்து அந்த ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் பெருக்க வேண்டும்.

அதைப் பெறவேண்டும் என்ற அந்த உணர்வை நீங்கள் ஈர்ப்பீர்களேயானால் அந்த மெய் ஒளியைக் காணும் தகுதி நீங்களும் பெறுவீர்கள். ஆகையினாலே உங்களை நம்புங்கள்.

ஏனென்றால் சாமியை நம்புகின்றீர்கள்… சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகின்றீர்கள்… மந்திரத்தை நம்புகின்றீர்கள்… ஆயுள் ஹோமம் செய்கின்றீர்கள்…! அதை எல்லாம் செய்து எதுவும் ஆவதில்லை.

ஒவ்வொரு நிமிடமும் அந்த ஞானியின் அருள் ஒளியைப் பெறுவேன். அந்த அருள் சுடரை நான் பெறுவேன் என்ற இந்த ஹோமத்தைச் செய்தால் உங்களுக்கு நிலையான ஆயுள் ஹோமம் இதுதான்.

ஞானிகள் வெளிப்படுத்திய அந்த உணர்வின் ஒளிகள் இந்தக் காற்றில் இருக்கின்றது. ஒளியின் நிலையாக அதைப் பெற்று நமக்குள் அந்த ஞான வழியின் தொடர் கொண்டு நம்மைச் சார்ந்தோருக்கும் அதைப் பாய்ச்சிடல் வேண்டும்.

ஹோமத்தின் நெருப்பிலே இடப்பட்ட பொருளின் தன்மை கருகி அதன் மணத்தின் தன்மை சுழல்வது போல உங்களுக்குள் வரும் தீயதை மாற்றிவிட்டு மெய் உணர்வாகப் படைக்கும் நிலைகள் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குழந்தையைத் திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றோம். ஆனால் புகுந்த வீட்டில் பல தொல்லைகள் வருகின்றது.

தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளை மேல் உள்ள பாசத்தால் “பாவிகள்…! என் பிள்ளையை இப்படிச் செய்கிறார்களே…” என்று எண்ணி மிகுந்த வேதனைப்படுவோம்.

வேதனை அதிகமாகிக் கடைசியில் நோயாகி அதே ஏக்கத்திலேயே உடல விட்டுப் பிரியும் நிலை ஆகின்றது. பிரிந்த பின் எந்தப் பிள்ளையைப் பாசத்தால் எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தோமோ அந்த உடலுக்குள் தான் போவோம் அங்கே சென்று இந்த உடலில் பட்ட வேதனையைப் பிள்ளை உடலிலும் உருவாக்கிவிடும்.

பின்… யார் யாரெல்லாம் பிள்ளைக்குத் துன்பம் கொடுத்தார்களோ அவர்களை வெறுக்கச் செய்து வெறுப்பின் நிலைகள் அதிகமாகி பிள்ளை உடலிலும் நோயை உருவாக்கும்.

இப்படி பாசத்தால் வளர்த்த பிள்ளைக்குள் சென்று சீரழிந்த நிலைகளாக நோயாக்கி… “குழந்தையையும் அழித்துவிடுகின்றோம்”. பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கின்றோம் என்றாலும் வேதனையுடன் செல்லும் பொழுது பிள்ளையைக் காக்க முடியவில்லை.

இதைத்தான் மெய்ஞானிகள் “சித்திர புத்திரனின் கணக்கு” என்று காவியப்படைப்புகளில் காட்டியுள்ளார்கள்.

சித்திரம் என்பது நாம் கண்களால் பார்ப்பது எல்லாமே “சித்திரம்”.

ஒரு நல்ல படத்தைப் பார்த்தவுடன் மகிழ்கின்றோம். சரியில்லாத படத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுழிக்கின்றோம்…, வெறுக்கின்றோம்.

இதைப் போன்று தான் மற்றவர்களின் செயல்களை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அவர்களைப் படமாகப் பதிவாக்குகின்றோம்.

அவர்கள் செய்வது தவறாக இருக்கும் பொழுது அவர்களையே மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசிக்கின்றோம். அப்பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுடன் சத்தாகும் பொழுது சித்திரம்…, “புத்திரனாக… அணுவாக… உருவாகிவிடுகின்றது”.

எந்தக் குணத்தை எண்ணி எண்ணிச் சுவாசித்தோமோ நம் உடலுக்குள் விளைந்து “குழந்தையாக… அந்தக் குணம்” என்னுடன் இயங்கத் தொடங்குகின்றது.

உடலுக்குள் அது விளைந்தபின் என் உயிராத்மாவில் போய்ச் சேர்கின்றது. உயிராத்மாவில் சேர்ந்தபின் அது சித்திர புத்திரனின் கணக்காகப் போய்விடுகின்றது.

ஆகவே பிள்ளை மேல் பாசமாக இருந்து “வேதனை…வேதனை…” என்று வளர்த்தால் அந்தக் கணக்கின் பிரகாரம் தன் உடலையும் வீழ்த்தி பிள்ளைக்குள் சென்று அந்த உடலையும் வீழ்த்தி கடைசியில் மனிதனல்லாத மாடோ மற்ற மிருக உடலாகவோ தான் பிறக்க நேரும்.

இதையெல்லாம் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா அணுவிற்குள் அணு சென்று (ஒரு உடலுக்குள் சென்று) அது எவ்வாறு செயல்பட்டது என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நேரடியாகவே எமக்கு (ஞானகுரு) உணர்த்தினார்… என் கண்ணாலேயே பார்க்கச் செய்தார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடல்களிலே படகுகளில் சென்றாலும் அவர்கள் அலை கடலிலே எதைக் குறிக்கோளாக வைத்துச் செல்லுகின்றனரோ அந்த அலை கடலில் எதிர் நீச்சலாடி அந்தக் கரையைக் கடந்து செல்கிறார்கள்.

தான் எண்ணிய காரியங்களை நிறைவேற்ற ஒரு ஊரைக் கடக்க வேண்டும் என்றாலும் அல்லது கடலுக்குள் மீன் பிடிக்க வேண்டும் என்றாலும் ஒரு எல்லை வகுத்துத் தான் செல்லுகின்றனர். இதைப்போல தான் மனிதனான நாம் இந்த உடலிலே இருந்தாலும் உடலுக்குப் பின் என்ன என்ற எல்லையை வகுத்து கொள்ள வேண்டும். அருள் ஞானிகள் சென்ற அந்த உணர்வுடன் நாம் ஒன்ற வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் வெறுப்பு வேதனை சங்கடம் சலிப்பு கோபம் குரோதம் என்ற கடுமையான புயல் நிலைகளில் அந்த அலைகளில் சிக்கி இன்று ஒவ்வொருவருமே தவித்துக் கொண்டிருக்கின்றோம்

இதையெல்லாம் மாற்றிவிட்டு சீரான நிலைகள் பெறவேண்டும் என்று வரப்படும் போது தான் அந்த அலைகளைப் பிளந்து நாம் எண்ணும் எல்லைகளை அடைய முடியும்.

இன்று ஒரு தெய்வத்தை வணங்க வேண்டும் என்று சென்றாலும் கூட ஒருவருக்கொருவர் எதிர்க்கும் நிலையில் புயல் போன்று கொந்தளித்து இந்த “வாழ்க்கையில் என்ன ஆகுமோ…? என்று எதிர் சிந்தனையாடிக் கொண்டுள்ளார்கள்.

நம் நாட்டில் வாழும் மக்களும் உலக மக்களும் எத்தனையோ வகைகளில் சிந்தனை சிதறி இன்று அவதிப்பட்டுக் கொண்டு பெரும் புயலில் அந்த அலையில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளார்கள்.

இந்த நேரத்திலும் நாம் ஒவ்வொருவரும் அதைச் சீராக்கிட அந்த மகரிஷியின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை நமக்குள் செலுத்துதல் வேண்டும்.

நாம் அந்த மகரிஷிகளின் அலைகளை எண்ணி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து நம்மை நம்மைக் காத்து நம்மைச் சார்ந்தோர் அனைவருக்கும் அதைக் கிடைக்கப் பெறச் செய்யவேண்டும்.

மகரிஷியின் அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் அவர்கள் பொருள் கண்டுணர்ந்து செயல்பட வேண்டும் என்ற இந்த நிலைக்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் உங்களுக்கு இதை உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

அதாவது உலகம் முழுவதற்கும் பரவிக் கொண்டு வரும் அந்தத் தீமையான அலைகள் – புயல்களிலிருந்து நாம் தப்பித்து மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இந்த உடலிலிருந்தே அழியா ஒளியின் சரீரம் நாம் பெற வேண்டும்.

இன்று இந்த வாழ்க்கையில் வந்த கடுமையான அலைகளிலிருந்து நாம் விபத்தில் சிக்கியது போல் ஆகிவிடக் கூடாது.

நாம் எண்ணும் நல்ல எண்ண அலைகளை மறைத்திடாது அருள் உணர்வின் வலுகொண்டு இந்த வாழ்க்கையில்… வரும் உலகத்தில் வரும்… தீமைகளை வென்றிட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞான அறிவிலே பெண்ணை ஆணாக மாற்றுகின்றனர். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றனர்.

அதே மாதிரி பெண்கள் மீது அதிக மோகம் கொண்டவர்கள் இருந்தால் இந்த உணர்வுகள் மாற்றப்பட்டு அந்த உணர்வுகள் ஜெயித்தாலும் இந்த உடலுக்குப்பின் “எந்த ரூபம் பெற்றாலும்… பெண்ணாகத்தான் மாற்றும்”.

விஞ்ஞானிகள் இயற்கையில் இயற்கையில் மனித உடலில் உருவாக்கப்பட்ட தன்மையை எடுத்து அதை அமிலமாக மாற்றி இன்னொரு உடலிலே பாய்ச்சப்படும் பொழுது அந்த அமிலங்களைப் பெருக்கும் தன்மை வருகின்றது.

அப்பொழுது பெண் ஆணாகவே மாறுகின்றது. அதற்குத்தக்க உறுப்புகளை உருப்பெறச் செய்கிறார்கள். நரம்பு மண்டலங்களை இணைக்கின்றனர். இன்று விஞ்ஞானிகள் செய்கிறார்கள் அல்லவா…!

இதைப் போன்ற (பெண்களைப் பற்றிய) உணர்வுகளை அதிகமாக எடுத்தால் இன்று ஆணாக இருக்கலாம். நாளை பெண்ணாக இருப்போம்.

இதே உணர்வுகள் வரப்படும் பொழுது மற்ற உயிரினங்களைப் பார்க்கலாம். பெண்ணாகப் பிறக்கக்கூடிய ஆடு மாடு எல்லாம் எத்தனை அவஸ்தைப்படுகின்றது?

குழந்தையை ஈன்றெடுக்கும் பொழுது அவஸ்தைப்பட்டாலும் குழந்தை பிறந்த பின் பாசத்துடன் காக்கின்றது. பாசம் இருப்பதால் வேதனையை மறக்கின்றது.

தாய்க்கு வேதனை இருந்தாலும் பிள்ளை மேல் உள்ள பாசத்தால் தன் வேதனையை மறந்து “பிள்ளை சாப்பிட்டதா…” என்று எண்ணுகின்றது. தாயின் பாச உணர்வு இவ்வாறு செயல்படுத்துகின்றது.

இதைப் போலத்தான் நாம் நுகரக்கூடிய உணர்வுகள் உறுப்புக்களையே மாற்றக்கூடிய சக்தியாக வருகின்றது.

அப்பொழுது ஒருவனின் தீமை செய்யும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அணுக்களை மாற்றியவுடன் உடல்களில் உறுப்புக்களை மாற்றிவிடுகின்றது.

உறுப்புகள் மாறியவுடன் அதற்கேற்ப எண்ணங்கள் மாறும். செயல் மாறுகின்றது. வெறுப்பென்ற உணர்வுகள் வருகின்றது. இவ்வளவும் நடக்கின்றது.

நல்ல திடகாத்திரமாக இருப்பவர்கள் பலருடன் பழகப்படும் பொழுது சில உணர்வுகளை எடுத்தவுடன் இந்த அணுக்கள் மாற்றம் அடைந்த பின் “உறுப்புகளே சுருங்கிப் போய்விடுகின்றது… எண்ணங்கள் சுருங்கி விடுகின்றது”.

இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆகவே நம் உடலுக்குள் பிறரின் தீமை செய்யும் உணர்வுகள் புகாமல் தடுக்க வேண்டுமல்லவா…!

அதற்குத்தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தில் எந்த நிலையாக இருந்தாலும் அடுத்த நிமிடம் அந்தத் தீமை நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

இல்லை என்றால் நம் உடலில் உள்ள கெட்ட அணுக்கள் சாப்பாடு அதிகம் எடுத்துவிடும். அதற்குச் சக்தி வாய்ந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் எடுத்து அதைத் தடைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் கண்களால் பார்த்து நமக்குள் பதிவான உணர்வுகள் நுகரப்பட்டு நம் ஆன்மாவாக மாறுகின்றது.

நாம் சுவாசிக்கும்பொழுது உயிரிலே பட்டவுடன் அந்தந்த உணர்ச்சிகளாக இயக்குகின்றது. உடலுக்குள் சென்று அணுவாக உருவாகும் கருவாக உருவாகின்றது.

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் அவரிடமிருந்து வெளிப்படும் அலைகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு அலைகளாகப் பரவி வருகின்றது.

அந்த அலைகள் எல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் கலக்கின்றது. அதைத்தான் “பரமாத்மா” என்று சொல்வது. அவர் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய பின் கண்ணின் காந்த புலனறிவு அந்த அலைகளைக் கவரச் செய்கின்றது.

அப்பொழுது சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்ட அந்த வேதனப்பட்ட உணர்வுகள் பரமாத்மாவிலிருப்பது நம் ஈர்ப்புக்குள் வருகின்றது. அது நம் “ஆன்மாவாக” மறுகின்றது.

நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலிருந்துதான் சுவாசிக்கின்றோம். எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ (பரமான இந்தப் பூமியில்) இந்தப் “பரமாத்மாவிலிருந்து தான்.., நம் ஆன்மா” எடுக்கின்றது.

அந்த அலைகள் நம் நெஞ்சுப் பகுதியின் அருகில் வருகின்றது. மூக்கின் துவாரங்கள் கீழ் நோக்கி இருப்பதால் அதைக் கவர்ந்து சுவாசத்திற்குள் செல்கின்றது.

மூக்கின் வழியாக சுவாசிக்கப்பட்ட உணர்வுகள் “கவன ஈர்ப்பு நரம்பு” கவரும் புருவ மத்தியில் உள்ள நம் “உயிரிலே” மோதுகின்றது.

உயிரிலே மோதியபின் “ஒ…ம்”…, வேதனைப்பட்ட உணர்வலைகளைச் சுவாசித்தால் வேதனையை நமக்குள் ஊட்டும் உணர்ச்சிகளை உயிர் ஊட்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மையை நம் உயிர் நுகர்ந்து உடலுக்குள் சென்றபின் ஜீவான்மாவாக மாறுகின்றது. அதாவது உடலுக்குள் நுண்ணணுக்கள் விளைந்து வேதனைப்படும் அணுவாக ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது.

இப்படி எந்தெந்த குணங்களை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ அதையெல்லாம் உயிர் ஜீவ அணுக்களாக ஜீவான்மாவாக உடலாக நம் உயிர் விளைய வைக்கின்றது.

இந்த ஜீவான்மாவில் விளைந்ததைத்தான் “உயிரான்மா” எடுக்கின்றது. பாலிலிருந்து வெண்ணையைப் பிரிப்பது போல் நம் உடலுக்குள் விளைந்த சத்தை உயிர் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

உயிரான்மாவில் இருக்கும் சத்துக்கொப்பத்தான் நாம் அடுத்த உடல் பெறமுடியும். ஆகவே இந்த வாழ்க்கையில் எதனை நாம் எடுக்கின்றோமோ அதனின் வலுத்தன்மையே உருவாக்கப்படுகின்றது.

அப்பொழுது எதை நாம் நம் உயிரான்மாவாக்க வேண்டும்?

நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று கண்களால் பதிவு செய்து அதை நினைவு கொண்டு உயிரான நிலைகள் கொண்டு உந்த வேண்டும்.

அதைத்தான் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்பது.

நம் உடலே சிவம். நம் உயிரே அகக்கண். கண்களோ புறக் கண்.

புறக் கண்கள் கொண்டு பிறரைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை நம் ஆன்மாவாக மாற்றி நாம் சுவாசிக்கும் பொழுது அது அகக் கண்ணுடன் மோதும் பொழுது உடலுக்குள் உணர்வைப் பரப்புகின்றது. உணர்வை அணுவாக மாற்றுகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் அறிகின்றோம்.

தீமைகளிலிருந்து மனிதன் விடுபடுவதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரிலே நினைவினைச் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று “உள் முகமாகக் கொண்டு வர வேண்டும்”.

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்திருப்பினும் இந்த உணர்வுகள் வரும் பொழுது அதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

நம்மை அறியாது வந்து நமக்கு முன் சுருண்டு கொண்டிருக்கும் இந்த தீமையான உணர்வுகளை அந்த ஆன்மாவைப் பிளக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்குள் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

இதை முறைப்படிச் செய்வதற்குத்தான் விநாயகர் தத்துவத்தை அமைத்தனர் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் சொல்லும் முறைப்படி தியானம் இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் கூட்டுக் குடும்ப தியானமிருக்க வேண்டும்.

 

தியானமிருந்த பின் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து விண்னை நோக்கி உந்தித் தள்ள வேண்டும்.

 

அவர்கள் அங்கே சென்று ஒளிச் சரீரமானபின் அங்கிருந்து எங்களுக்கு நல் ஒளிகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

ஏனென்றால் அவர்கள் அங்கே போகாதபடி நாம் அங்கே செல்ல முடியாது.

 

மூதாதையர்களின் உணர்வுகள் தான் நாம். முதலில் நம் குலதெய்வங்களை விண்ணுக்குச் செலுத்திவிடுகின்றோம். பின் அவர்கள் இருக்குமிடத்திற்கு நாம் போகலாம்.

 

நம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள். முதுமையாகும் பொழுது போகின்றார்கள். அவர்கள் உடலை விட்டுச் செல்லும்போது அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ள வேண்டும்.

 

அதற்காக வேண்டித்தான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் உங்கள் உணர்வின் எண்ணங்களுக்கு விண்ணை எட்டிப் பிடிக்கும் நிலையும் விண்ணிலே ஊடுருவிச் செல்லகூடிய நிலைக்கும் பழக்கப்படுத்துகின்றோம்.

 

அந்த வலுவின் துணை கொண்டு ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தது என்றால் அதை நீங்கள் உந்திச் செலுத்தும் ஆற்றலைப் பெறச் செய்வதற்கும் உங்களைப் பழக்குகின்றோம்.

 

இவைகள் எல்லாம் “சிறு துளி… பெரு வெள்ளம்”.

 

இப்பொழுது எல்லோரும் நன்றாக இருந்தாலும் கூட யாராவது ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் “ஐய்யய்யோ.., இப்படி இறந்துவிட்டாரே…” என்று எண்ண வேண்டியதில்லை.

 

நீங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த இந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணித் தியானித்தால் அந்த ஆன்மா “ ஜிர்..ர்ர்…ர்ர்..” என்று (அவர்) மேலே போய்விடலாம். அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) தேவை.

 

ஆனால், இதை விட்டுவிட்டு… இந்தச் சரீரத்தை இங்கே புதைக்கலாமா… அல்லது அங்கே எரிக்கலாமா… என்று “அழுகக்கூடிய சரீரத்திற்கு” முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

 

ஆக சமாதியைக் கட்டினேன்… அதற்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் அதை மிகவும் விரும்பிச் செய்து கொண்டிருந்தால் மீண்டும் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் தான் சிக்க வேண்டும்.

 

இந்த நாய் எப்படியோ போகின்றது பூராம் குப்பை என்று இதைத் தூக்கி எறிந்து விட்டு அந்த உயிரான்மா அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும். அதை நிலைத்த இடத்தில் நிலையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) என்னுடைய சிறிய வயதில் தெரியாமல் ஒரு குருவியைப் பிடித்து என்ன செய்தேன்…? நெருப்பில் உயிரோடு வாட்டினேன்.

குருநாதர் பிற்பாடு அதை என்னிடம் சுட்டிக் காண்பித்தார். அந்தக் குருவி எப்படி எரிந்தது தெரியுமாடா…? என்று கேட்டார்.

அது… எரிந்தது…! தெரியும். அது உள்ளுக்குள் எப்படி ஆனது…? என்று எனக்குத் தெரியாது என்றேன்.

இப்பொழுது… “பாருடா…!” என்றார்.

அது உடலில் எத்தனை கொதிப்பானதோ அந்த எரிச்சல் எல்லாம் எனக்குள் அப்படியே வந்தது.

இப்பொழுது என்னடா செய்கிறது…? என்று கேட்டார்

அது எரிந்தது. வேதனைப்பட்ட மூச்சலைகளை வெளிவிட்டிருக்கிறது. அந்த (குருவியின்) உயிரும் உன்னிடம் இருக்கிறது.

தெரியாத வயதில் நீ செய்திருந்தாலும் இப்பொழுது நினைவுபடுத்தியவுடன்  அது எரிந்த உணர்வைச் சுவாசிக்கின்றாய். சுவாசித்தவுடன்… உன் உடலை என்ன செய்கிறது பாருடா…! என்றார்.

நீ தெரியாமல் தான் செய்தாய், “உன் உயிர்” அதை விட்டு விடுகிறதா…? அது வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் கவர்ந்து கொண்டது.

அந்தக் குருவியும் செத்தது. உன் உடலுக்குள்ளே இருக்கிறது. நீ ஆண்பாலாக இருக்கின்றாய் உனக்குள் கருவாக இருக்கின்றது.

இது எந்தக் கருவில் போய் இது பிறக்கின்றதோ “எரிகிறதே…! எரிகிறதே….!” அந்த உடலை எரியச் செய்யும். இப்பொழுது உன் உடலிலேயும் “எரியும்டா… பாருடா…” என்றார்.

இதை அப்படியே அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார். சொல்வது அர்த்தம் ஆகின்றதா…!

அதனால் எல்லாமே சந்தர்ப்பம் தான். பல கோடி உடல்களில் சந்தர்ப்பங்கள் நீக்கி நீக்கி இப்படி வந்து தான் இந்த மனித உடலைப் பெற்றுள்ளோம்.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்தை எண்ணுகின்றமோ அதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது என்றார் குருநாததர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் பெற வேண்டியது எது…? பெறக் கூடியது எது…? பெறக் கூடாதது எது…? என்ற நிலைகளைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று பதிய வைத்துக் கொண்டால் “அவன் தீமை செய்தான்.., ஆகவே அவனை விடுவேனா பார்..,?” என்று எண்ணினால் என்ன ஆகும்…?

இந்தக் கணக்கின் பிரகாரம் நாம் சிந்தனை இழந்த நிலையாகச் செயல்படுவோம்.

எந்த எண்ணத்தால் “அவனை அழித்திட வேண்டும்..,” என்ற எண்ணம் ஓங்கி வளர்கின்றதோ அதன் மேல் நாம் கொள்ளும் பாசம் அவனுக்குள் விளைந்த தீயவினைகள் நமக்குள் விளையத் தொடங்குகின்றது.

அதே சமயத்தில் ஒரு நோயாளியை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி விட்டால் பாசத்தால் “இப்படி வேதனைப்படுகின்றாரே..,” என்று எண்ணினால் அவர் நோயின் உணர்வுகள் நமக்குள் வருகிறது.

அப்படி நோயாளியை உற்றுப் பார்த்த அந்தக் கணக்கின் பிரகாரம் அவரையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வளர்ந்துவிடுகிறது. அடுத்து நாமும் வேதனைப்படுவோம்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும்போது அவர்களைப் படமெடுத்து அவர்களில் உருவான உணர்வுகள் அவருடைய நிலைகளை “எவ்வளவு நேரம் எண்ணுகின்றோமோ… எவ்வளவு நேரம் அறிகின்றோமோ… அந்தக் கணக்குகள் கூடிவிடும்.

ஆகவே “இந்த மனித வாழ்க்கையில் பெறப்படாதது… பெறக் கூடாதது… மனிதனின் ஆசை”.

ஆலயங்களில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரா” என்று காட்டுகின்றார்கள்.

நந்தீஸ்வரன் என்றால் நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும். நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

நாம் சுவாசிக்கும் உணர்வின் கணக்குகள் நம் உடலுக்குள் கூடும்பொழுது அதில் எது அதிகமோ அடுத்த நிலை அடைவாய் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எத்தகைய தீமையைக் கேட்டுணர்ந்தாலும் யாம் உபதேசிக்கும் அருள் உணர்வின் துணை கொண்டு நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் வரும் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும் துயர் பட்ட நிலைகள் இருந்தாலும் வேதனைகள் இருந்தாலும் இதற்கு முன் நம் உடலில் அறியாது சேர்ந்த பல உணர்வுகள் இருந்தாலும் இன்னல்களால் விளைந்த நோய்கள் இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீயவினைகள் நீங்க வேண்டும் சர்வ நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணித் தியானியுங்கள்.

எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை மறக்க இவ்வாறு செய்யுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுங்கள்.

எனக்கு வந்த தீமை மற்றவர்களுக்கு வரக்கூடாது. உலக மக்கள் அனைவரும் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் பரப்புங்கள்.

நாம் ஒவ்வொருவரும் இதைச் செய்வோம் என்றால் இந்த உலகில் உள்ள நஞ்சான நிலைகள் மாறும். பத்தாவது நிலையாக கல்கி தீமை அகற்றும் உணர்வு நமக்குள் விளையும்.

ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் விளைந்த உணர்வு கொண்டு உடலை விட்டு அகன்றாலும் தீமையற்ற உலகில் நாம் வாழ்ந்திட முடியும். இங்கேயும் வாழ்ந்திட முடியும்.

எப்போதும் தீமைகள் நம்மை நாடாத  நிலைகள் கொண்டு என்றும் அழியாத ஒளிச் சரீரமாக நிச்சயம் நாம் பெற முடியும். இந்த உடலை வைத்துதான் அந்த நிலை பெற முடியும்.

இந்த உடலை இழந்துவிட்டு நஞ்சால் இழக்கப்பட்டால் நஞ்சின் செயலாக மாறி மீண்டும் அந்த நஞ்சான சரீரத்திலிருந்து மீண்டிடப் பல கோடிச் சரீரங்கள் ஆகலாம்.

அது வரையிலும் இந்தப் பூமி இருக்குமோ… மனிதனாகப் பிறப்போமோ…! என்று சொல்ல முடியாது.

மனிதனாகப் பிறந்தோம்… மனிதனாக வாழ வேண்டும். இந்த உடலிலே தீமைகள் அகற்றும் உணர்வை விளைய வைக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் – 84

ஒரு மரம் வளர்ந்த பின் தன் இனத்தின் வித்துக்களை உருவாக்குகின்றது. அதிலிருந்து கீழே விழுந்த வித்து மண்ணுக்குள் பதிந்து விட்டால் அந்த மரத்தின் சத்தை இந்தப் பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து “அதே மரமாக…” மீண்டும் விளைகின்றது.

இது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். புதிது ஒன்றும் இல்லை.

ஆனால் மரத்தின் வித்தைப் போட்டால் அது முளைக்கின்றது… மரமாக விளைகிறது என்று தான் தெரியும்.

இதற்கு வேண்டிய சத்து எங்கிருந்து கிடைக்கின்றது…?

சூரியன் எடுத்து அந்த உணர்வுகளைப் பரமாத்மாவில் (நமக்கு முன் இருக்கும் காற்று மண்டலத்தில்) படரச் செய்து வைத்திருக்கின்றது. அது எப்போதும் அழிவதில்லை.

இங்கே விளைந்த மரத்தின் வித்தை எடுத்து அமெரிக்காவிற்குக் கொண்டு போய் ஊன்றினால் சந்தர்ப்பத்திற்கு ஒப்ப சீதோஷ்ண நிலைக்கொப்ப இதே காற்றில் இருந்து தாய் மரத்தின் சத்தை அங்கிருந்து எடுத்து அந்த மரம் விளையும்.

உதாரணமாக ஊட்டி கொடைக்கானல் மற்றும் நீலகிரி போன்ற உயரமான இடங்களில் குளிர்ச்சி அதிகம் இருக்கும்.

இங்கு விளைந்த வித்தினை நாம் சமமான இடத்தில் கீழே குளிர்ச்சி இல்லாத இடங்களில் ஊன்றினோம் என்றால் இந்த இடத்திற்குத் தக்கவாறு அது முளைப்பதில்லை.

ஏனென்றால் குளிர்ச்சியில் இருந்தது. இங்கே வெப்பம் அதிகமாக இருப்பதால் அதன் வளர்ச்சி குன்றுகிறது. சரியான வளர்ச்சி ஆவதில்லை. காரணம் வெப்ப தட்ப நிலைகளுக்கு ஒப்ப இது மாறுகிறது.

அதே சமயத்தில் அந்தக் குளிர்ச்சியான நிலைகளை இங்கேயும் உண்டாக்கி அந்தக் காற்றைக் கொடுத்தோம் என்றால் ஊட்டியில் விளைந்த மாதிரி இங்கேயும் விளையும்.

அதற்கு அந்தக் குளிர்ச்சி இங்கே கொடுக்க வேண்டும். ஏனென்றால் அது எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ அதற்குத் தக்கவாறு விளையும்.

அந்த ஊட்டியில் விளைந்த வித்து ஏதோ ஒன்று தப்பித் தவறி இங்கே விழுந்து முளைத்து அதிலே கொஞ்சம் வளர்ச்சியில்லாத ஒரு வித்து உருவானால் அது மீண்டும் இதிலே விழுந்த வித்தைப் போல இது கொஞ்சம் விளைய ஆரம்பிக்கும்.

அப்புறம் இந்தச் சீதோஷ்ணத்திற்கொப்ப வளர ஆரம்பிக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக முதலில் வளர்ந்ததன் உணர்வை எடுத்து அடுத்தடுத்து இரண்டாவது மூன்றாவது வளரப்படும் பொழுதெல்லாம் கடைசியில் இதிலே விளைந்த வித்துக்கள் சத்துள்ளதாக விளையும்.

இந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை அறிந்து கொண்டோம் என்றால் இயற்கை எப்படி வளம் பெற்றது..? வளர்ச்சி பெற்றது..? என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் தான் யாம் உங்களுக்குள் அருள் ஞானிகளின் அருள் வித்துக்களை ஊன்றி வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் பிரபஞ்சத்திலுள்ள வியாழன் செவ்வாய் இராகு கேது சனி என்று நவக் கோள்களின் தன்மையும் ஒவ்வொன்றும் தனித் தன்மை கொண்டது.

இருப்பினும் அவை அனைத்தும் உமிழ்த்துவதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து “ஒளியின் சிகரமாக…” மாற்றுகின்றது. இதைப் போல தான் நம் உயிரான நிலையும் நமக்குள் சூரியனாக இருக்கின்றது.

தினசரி நம் வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். நாம் சந்திப்போர் ஒவ்வொரு உடலிலேயும் சில சில கஷ்டங்களும் இருக்கும் துன்பங்களும் இருக்கும் அனைத்தும் இருக்கும்.

நாம் அனைவரும் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கப்படும் பொழுது இந்தத் துன்பங்களை நீக்கிடும் அகற்றிடும் அந்தச் சக்தியாக நாம் விளைய முடியும்.

பாசத்தின் நிலைகள் கொண்டு வேதனை என்ற நிலைகளைச் சுவாசிப்பதற்குப் பதில் பாசத்தின் பற்று கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவ்வாறு எண்ணும் பொழுது அந்தப் பற்றுதல் அதனின் நிலைகள் கொண்டு நமக்குள்ளும் அந்தப் பாசத்தின் நிலைகள் கொண்டு அருள் ஞானியின் உணர்வைப் பருக முடிகின்றது.

நமக்குள் தீமையை அகற்றும் சக்தியாக விளைகின்றது. ஒவ்வொரு நாளும் இதிலிருந்து நீங்கள் ஆரம்பித்துப் பாருங்கள்.

உங்களை நீங்கள் நம்பிப் பாருங்கள். எண்ணியதை உங்கள் உயிர் இயக்குகின்றது. அதை இயக்கத்தின் நிலைகளில் அறிந்து கொள்கின்றீர்கள். அறிந்த உணர்வை உயிர் உடலாக்குகின்றது.

மீண்டும் நினைவாக்கும் பொழுது நன்மையின் தன்மையை உயிர் உருவாக்கிக் காட்டுகின்றது. எதனின் உணர்வை நமக்குள் விளைய வைக்கின்றோமோ விளைய வைத்த நிலையை உயிர் தன்னுடன் அணைத்துச் செல்கிறது.

எண்ணிய பாதையில் உயிர் அங்கே அழைத்துச் செல்கிறது. என்றும் அழியா நிலையான ஒளியின் சரீரமாக பெருவீடு பெரு நிலையாக உயிர் நம்மை அடையச் செய்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை உருவாக்கிய ஈசனை அவன் துணை கொண்டு ஒளியின் சரீரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கி அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

விநாயகர் தத்துவத்தில் மனிதனின் வாழ்க்கையில் எதைச் சுவாசிக்கின்றோமோ மூஷிகவாகனா என்று காட்டியுள்ளார்கள்.

அந்தக் கசந்த வாழ்க்கையை நடத்தி அப்படிக் கசந்த வாழ்க்கையே கணங்களுக்கு அதிபதியானால் இந்த மனிதப் பிறவியில் எதன் நிலைகளை எடுத்தாயோ அதற்குத்தக்கவாறு பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாக கீழே போவாய் என்று காட்டுகின்றார்கள்.

பௌர்ணமி இன்று முழு நிலாவாக இருக்கின்றது. ஆனால் அடுத்த நாள் பார்த்தால் மற்ற கோள்கள் மறைக்கின்றது. சூரியனின் கதிரியக்கங்கள் இதற்கு வராது தடுக்கப்படும் பொழுது ஒரு பக்கம் இருள் சூழ்ந்த நிலையாக வருகின்றது.

இப்படி நாளுக்கு நாள் இதன் ஒளிக்கதிர்கள் மங்க மங்க சந்திரனே நம் கண்ணுக்குப் புலப்படாமல் இருள் சூழ்ந்த நிலை ஆகிவிடுகின்றது. பின், சூரியனின் ஒளிக்கதிர்களைத் தான் எடுக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக மீண்டும் ஒளியாகின்றது.

இதைப் போன்று தான் நம் உயிர் மற்றவர்களுடைய துன்பங்களை எடுக்கபப்படும் பொழுது மனிதனாக வளர்த்த இந்த அணுக்கள் சிறுகச் சிறுக மறைகின்றது.

இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது நோயாகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றபின் மனிதனல்லாத உணர்வின் உருக்களாக அது உருப்பெறச் செய்கின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக அன்று ஞானிகள் காவியங்களைத் தீட்டியுள்ளார்கள். இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

மீள வேண்டும் என்றால் அந்த விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி நம்முடன் வாழ்ந்த வளர்ந்த முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 184

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் “இனி.., நாம் எப்படி வாழ வேண்டும்? என்று சிந்தித்தல் வேண்டும்.

இந்த உடலே நமக்குச் சதமில்லாத பொழுது தேடி வைத்த செல்வங்கள் நமக்குச் சதமாகுமா..? நிலம், பூமி, காடு, கரை எல்லாம் சதமாகுமா..?

ஏனென்றால், அன்று வாழ்ந்த அரசர்கள் மற்ற நாட்டின் மீது போர் புரிந்து எத்தனையோ கொள்ளையடித்தார்கள். கொள்ளை அடித்த செல்வங்களை அவன் பித்ருக்கள் வைத்துள்ளார்களா..,? சந்ததிகள் வைத்துள்ளார்களா..,?

இல்லை. அனைத்தும் மடிந்துவிட்டது. கட்டிய கட்டடங்கள் நகரங்கள் அழிந்து விட்டது.

“எவரோ ஆண்டார் என்றும்.., இதனை எக்காலத்தில் “எவன் ஆண்டான்..,” என்றும் பூமிக்குள் பல இயற்கையின் நிலைகள் சீற்றமாகி அடக்கமில்லாத நிலை வரும் பொழுது நீர் நிலைகள் பரவப்பட்டு “நாட்டையே அழித்துச் சென்றபின்..,” அந்த மண் மேட்டிற்குள் அனைத்தும் அடங்கிவிடுகின்றது.

அவன் கலாச்சாரம், அவன் செய்த நிலைகள் எல்லாம் மறைந்தது. அரசனும் மடிந்தான். அவன் மீண்டும் மிருக நிலையையே அடைந்தான்.

அதைப் போன்ற நிலைகள் “மனிதனுக்குள் தீவிரவாதம்..,” என்ற நிலைகளில் அதீதமாக வளர்ந்து இன்றும் மனிதன் சிந்தனை இழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளான்.

கடும் விஷத் தன்மைகளைப் பரவச் செய்துள்ளார்கள். அந்த விஷத் தன்மைகள் அனைத்தும் நம் பூமியின் மையைப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

அதனால், நம் பூமி கூடிய சீக்கிரம் நீர் நிலை அடையப் போகின்றது. நீர் நிலை அடைந்தால் நாம் மீனின் நிலை தான் அடைவோம்.

ஆக, சூரியனைக் கடந்து செல்லப்படும் பொழுது வியாழன் கோளைப் போன்று பனிப் பாறைகளாகி இந்தப் பூமி நகர்ந்து சென்றாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த விஷத்தன்மைகள் சூரியனுக்குள் சென்று “சூரியனே மடியப் போகின்றது”.

அதிலே கதிரியக்கப் பொறிகள் வரப்படும் பொழுது அந்தச் சூரியனுக்குள் கொதிகலனாகின்றது.

பூமிக்குள் இங்கே எரிமலை கக்குவது போல சூரியன் செயலிழக்கும் தன்மை வந்து கொண்டே இருக்கின்றது. இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் பிரபஞ்சத்தில் பரவப்படும் பொழுது மற்ற கோள்களுக்குள்ளும் செல்கின்றது.

இந்தச் சுழற்சி போய்விட்டால் இனி மனிதன் வாழும் இன்னொரு பூமிக்குள் சிக்கி அங்கே மனிதனான பின் தான் அதிலிருந்து மீண்டிட முடியும்.

ஆனால், அது வரையில் எந்த வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க நேரும். இதிலிருந்து சிறிதளவேனும் காக்க வேண்டும்.

ஆகவே, இன்று மனிதனாக வாழும் நிலையில் “நினைவு இருக்கும் பொழுதே” அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் செல்லும்போது அந்த ஞானிகளின் உணர்வுடன் “என்றும் ஏகாந்த நிலை பெற முடியும்..,” என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 183

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் தாய் நாம் கருவிலிருக்கும் பொழுதும் குழந்தையாக இருக்கும் பொழுதும் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் என்று கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

தன் வேலைகளை எல்லாம் செய்கின்றது. பெருமூச்சு இடுகின்றது. குழந்தை மேல் பாசமாக இருப்பதால் வேதனைகளைத் தாங்கிக் கொள்கின்றது.

எத்தனையோ வேதனைகளைப் பட்டாலும் தன் குழந்தையின் ஆசையை  நிறைவேற்றி அதன் சந்தோஷத்தில் தாயும் மகிழ்கின்றது.

தாய் தன் அன்றாட வாழ்க்கையின் நிலைகளில் உணவினைச் சமைப்பதும் தொழில் செய்வதும் இப்படி எல்லாவற்றையும் செய்து அதிலுள்ள அத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு தன் குழந்தை மேல் உள்ள பாசத்தால் அது வளர்க்கின்றது.

குழந்தை பிறக்கும் பொழுதும் தாயிற்கு வேதனை. குழந்தை வளரும் பொழுதும் தாய் எத்தனையோ வேதனைகள் படுகின்றது.

நாம் பல குறும்புத்தனங்கள் செய்வோம். அதனால் வயிற்று வலி வந்திருக்கும். தலை வலி வந்திருக்கும்.

தாய் இதையெல்லாம் உற்று நோக்கி என் குழந்தைக்கு இப்படி இருக்கிறதே என்று எண்ணி வேதனைப்படும். நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய் வேதனைப்படுகின்றது.

தாய் படும் வேதனையில் தந்தையும் பங்குகொள்கின்றார். இதைப் போன்ற எத்தனையோ வேதனைகளை நம் தாய் தந்தையர் அனுபவித்தார்கள். நம்மை வளர்ப்பதறாகப் பல இன்னல்களை அவர்கள் பட்டார்கள்.

அவர்கள் உயிர் கடவுளாக நின்று நம்மை மனிதனாக உருவாக்கி  தெய்வமாக நம்மைக் காக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் தவழ்ந்து நடக்கும் பருவத்தில் குருவாக நின்று இது நல்ல வழி நீ இந்த வழியில் இப்படிச் செல் என்று முதல் குருவாக இருந்து வழி காட்டியதும் நம் தாய் தந்தையர் தான்.

அத்தகையை குருவாக இருந்த தாய் தந்தையரை எப்படி மதிக்க வேண்டும்…? அவருக்குச் செய்ய வேண்டிய காணிக்கை என்ன…? என்பதை ஞானிகள் விநாயகர் தத்துவத்தில் காட்டியுள்ளார்கள்.

எனக்காக அல்லும் பகலும் விழித்து என்னைக் காத்தருளிய தெய்வங்களான அன்னை தந்தையர் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.

அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

விநாயகர் தத்துவப்படி நாம் இதைச் செயல்படுத்தி தாய் தந்தையரை மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்று நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியன் அவர் மனைவி அவர் தாய் தந்தையர் நான்கு பேரும் இணைந்து உருவானது தான் துருவ நட்சத்திரம். அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது தான் “விநாயக தத்துவம்”.

நம் சாஸ்திரங்கள் காட்டிய வழியில் இன்று நடக்கின்றோமா…! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 182

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

ஒரு புழு எதன் உணர்வை எடுத்ததோ அதற்குள் தான் சிக்கப்பட்டு அது தட்டாண் பூச்சியாக மாறுகின்றது. அதனுடைய முட்டைகளை எதன் எதனில் இடுகின்றதோ அந்த உணர்வுக்கொப்ப மாறுகின்றது.

பல வகையான பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது. இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப்போலத் தான் நமது மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் விஞ்ஞானத்தால் வந்த பேரழிவை அவர்களால்தான் மாற்ற முடியும்.

நாம் இந்த உடலில் குறுகிய காலமே வாழ முடியும். அகஸ்தியரைப் போன்ற உலகைக் காத்திடும் மெய் ஞானிகளை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 181

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கும் துருவ மகரிஷியும் அவரைப் பின்பற்றி சென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர வேண்டும்.

இந்த நிகழ்காலத்தில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் அந்தத் தீமையை நீக்க அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் நம் நிகழ்காலம் எதிர்காலத்தில் ஞானிகள் அடைந்த எல்லையை அடைய முடியும்.

ஏனென்றால் பண்பால் அன்பால் பரிவால் எனக்கு இப்படிச் செய்தார்களே எனக்குத் துரோகம் செய்தார்களே என்று இந்த நிகழ்காலத்தில் நாம் அதிகமாக மற்றவருடைய எண்ணத்தை அதிகரித்து விட்டால் என்ன ஆவோம்?

நாம் யார் மேல் பகைமை கொண்டோமோ அந்த உணர்வுகள் நமக்குள் வளரப்பட்டு இதை நிகழ்காலத்தில் வளர்ந்தபின் எதிர்காலம் அந்தப் பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து அவர் உடலில் புகுந்து இந்தப் பகைமையை தீர்க்கும் உணர்ச்சிகளின் வேதனையை உருவாக்கி அந்த உடலைத்தான் வீழ்த்தும்.

பின் அந்த வேதனையை உருவாக்கிய பின் எத்தகைய வேதனையின் உணர்வுகள் அணுக்கள் ஆனதோ அடுத்து தேய்பிறையாக மற்ற மனிதனல்லாத உடலைத்தான் உருவாக்கும்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வதற்குத்தான் இந்த சிவன்ராத்திரி – நீ விழித்திரு.

பல கோடிச் சரீரங்களில் இருந்து நீ தப்பினாய்… எக்காரணத்தைக் கொண்டும் தீமைகள் வளராதபடி அருள் உணர்வைச் சேர்க்கும் நிலையில் இனி எப்பொழுதும் நீ விழித்திருத்தல் வேண்டும்.

அருள் ஞானியின் உணர்வை ஒவ்வொரு நொடியிலும் நீ நுகர்ந்து இந்த வாழ்க்கையில் வரும் மாசினை நீ துடைக்க வேண்டும் என்பதே ஞானிகள் உரைத்தது.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வை நிகழ்காலத்தில் வளர்த்து எதிர்காலத்தில் நமக்குள் அது உருவாக்கிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 180

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் சென்ற அவர்களின் வழிப்பாதைகளில் செல்ல வேண்டும் என்று நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்.

அப்போது அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்க எமது குருநாதர் பல முறைகளில் அவர் கண்டுணர்ந்த உணர்வை அவர் எனக்குள் பதிவு செய்துள்ளார்.

அவர் உடலுக்குள் விளைய வைத்த ஆற்றல்களை எண்ணத்தின் செயலாகச் சொல்லுகின்றார். அதை உற்று நோக்கும் போது அந்த உணர்வின் சத்து அவர் உடலில் இருந்து வரக்கூடிய ஒலியை என் செவிப் புலன் ஈர்த்தாலும் அந்த உணர்வின் சத்து எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

ஊழ்வினை என்றால் “வித்து” என்று பொருள். அதாவது ஒரு மரத்தின் சத்து தனக்குள் விளைந்து அதனின் வித்தாகும் போது அதை ஒரு நிலத்தில் நாம் பதியச் செய்கின்றோம்.

அப்பொழுது அந்த மரம் எந்த உணர்வின் சத்தை வித்தாக எடுத்ததோ அந்த வித்து அதே உணர்வின் இயக்கமாக பூமியின் துணைகொண்டு நம் முன் படர்ந்திருக்கும் தன் தாய் மரத்தின் சத்தை உணவாக எடுத்து வளரும்.

இதைப் போலத்தான் குருநாதர் அவர் விளைய வைத்த உணர்வின் சத்தை எனக்குள் உபதேசித்தார்.

என் செவிப் புலனறிவால் நான் கேட்டறியும்போது அவர் உணர்வின் உணர்ச்சிகள் எனக்குள் உந்தப்பட்டு அந்த உணர்வின் ஆற்றலை நான் நினைவு கொண்டு “கூர்ந்து…” எண்ணும் போது ”அதைக் கவரும் நிலை” ஏற்படுகின்றது.

கவர்ந்த உணர்வுகள் என் நினைவுகளுடன் இணைக்கப்பட்டுக் கருவின் தன்மையாக ஊழ்வினையாக ஒரு “ஞான வித்தாக” எனக்குள் பதிவாகின்றது.

அவர் உபதேசித்த உணர்வின் தன்மை கூர்மையாகக் கவனித்த பின் அதனின் நிலைகள் எனக்குள் பதிவாகி அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தேன்.

அவர் உடலிலே விளைந்த தீமைகளைக் கண்டறிந்து அதனின் உண்மையின் பொருளை கண்டுணர்ந்து மெய்யுணர்வை அவர் தனக்குள் வளர்த்த உணர்வுகளை என்னால் பெற முடிந்தது.

நமது குருநாதர் அவர் தீமைகளை அகற்றி மெய்யுணர்வைத் தனக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி இன்றும் விண்ணுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்,

இதைப் படித்துப் பதிவாக்கும் அனைவரும் மெய் வழி நடந்து மெய் ஞானம் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து “என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்” என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் பிரார்த்திக்கின்றேன்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 179

பால்வெளி மண்டலமும்… அதிலிருக்கும் அபரிதமான சக்திகளைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தப் பூமி பால்வெளி மண்டலத்திலிருந்து சூரியனின் ஒளிக் கதிரினால் வந்துள்ள அணுக்கதிர்களை
1.எப்படித் தனதாக ஈர்த்துப் பல கனி வளங்களை வளர்க்கின்றதோ அந்த நிலை போல்
2.இந்தப் பூமி எனும் மண்டலத்தில் “நம் ஆத்ம மண்டலம் எந்தச் சக்தியையும் கண்டுணரலாம்…”

நம் பூமியில் சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு பூமியும் நாமும் மட்டும் பலன் பெறவில்லை. பூமிக்கும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் உள்ள சக்தி நிலையை யார் அறிவார்…?

இந்தப் பால்வெளி மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்ந்து… அந்த நிலையிலேயே மாற்றுடல் பெற்றுப் பல நிலைகள் நடக்கின்றன.

இந்தப் பால்வெளி மண்டலத்தில் பல அமில சக்திகள் நிறைந்தே திரவ நிலையில் படர்ந்துள்ளன.

இன்றைய நம் விஞ்ஞானிகள் இதை உணர்ந்தாலும்… அந்தத் திரவத்தையும் நம் பூமிக்கு ஈர்த்து எடுத்திடும் நிலைப்படுத்தி… “அந்த இயற்கையின் சக்தியையே தன் செயற்கையின் அழிவுக்குச் செயல்படுத்திடுவர்…”

இன்னும் இந்த வான மண்டலத்தில் எண்ணிலடங்கா சக்தி நிலைகள் படர்ந்துள்ளன. நாம் காணும் நிலைக்கு
1.மேகங்களும் பால்வெளி மண்டலமாகவும் காட்சி அளிக்கும் பால்வெளி மண்டலத்தினால் தான்
2.“அனைத்துக் கோளங்களுமே ஜீவன் கொண்டு சுழல்கின்றன…!”

இந்தப் பூமியும் சூரியனும் சந்திரனும் மற்ற எல்லா மண்டலங்களுமே தன் நிலையில் ஒரே இடத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டுள்ளது என்பதல்ல. சுழன்று கொண்டே… ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்காவண்ணம்… சுற்றிக் கொண்டே ஓடுகின்றன.

வழக்கமாகத் தெரியும் நட்சத்திரங்களைக் காட்டிலும் புதிய புதிய நட்சத்திர மண்டலங்களையும் வான்வெளியில் காண்கின்றோம்.

இந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தியின் நிலை கொண்டும்… இந்தப் பூமியின் அமில சக்தியின் தொடர்பு கொண்ட நட்சத்திர மண்டலங்களாக வாழ்ந்திடும் மண்டலங்களும்… இந்தப் பூமியின் ஓட்டத்துடன் தன் ஈர்ப்பு சக்தியையும் ஒன்றுபட்டுள்ளதால்… இந்தப் பூமியுடனே அவற்றின் நிலையும் சுழன்றே இதன் ஈர்ப்புடனே வருகின்றன.

புதிய நட்சத்திர மண்டலங்கள் என்பது இந்தப் பூமியின் ஓட்டத்தினால் அங்கங்குள்ள இப்பால்வெளி மண்டலத்திலிருந்து ஒன்றுபட்ட அமிலத்தினால் சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாக ஆங்காங்கு சுழலும் நட்சத்திர மண்டலங்கள்.

இச்சுழலும் வேகத்தில் ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குகின்றன. சில நட்சத்திர மண்டலங்கள் மாறு கொண்ட அமில கக்தி கலந்துள்ளனவாக இருந்தால் இவ் ஈர்ப்பில் வந்தடையாமல் உருகும் நிலையாக பரந்த நிலைப்படுத்திப் பிரித்து விடுகின்றது.

இன்று காணும் நட்சத்திர மண்டலங்கள்… இந்தப் பூமியைப் போலவும் இந்தப் பூமியின் நிலைக்கொப்ப வளர்ந்த நிலை கொண்ட பெரிய மண்டலங்களின் நிலை போலவும் இல்லாமல்… ஆவியான அமிலங்கள் ஒன்றுபட்டுக் கரையும் நிலை கொண்ட வடிவத்தில் தான் சுழன்று கொண்டுள்ளது பனிக்கட்டியைப் போல்.

பனிக்கட்டி என்பது குளிர்ந்து நீராகும் தன்மையில் உறைந்துள்ளது. ஆனால் நட்சத்திர மண்டலங்களின் நிலை அதுவல்ல.
1.அமிலமாக அமிலத்தையே ஈர்த்து அமிலக் கோளங்களாக
2.உயிரணுக்களை வளர்த்திடாமல் சுழன்று கொண்டுள்ளவை.

இந்தப் பூமியில் உள்ள எல்லாக் கனிவர்க்கங்களுமே கரைபவை தான். ஆவி நிலை கொண்டவை தான் என்று ஏற்கனவே உணர்த்தியுள்ளேன்.

சூரியனிலிருந்து வரும் எல்லா நிலை கொண்ட அமிலத்தையும் ஈர்க்கும் நம் பூமியில்… மண்ணும் கல்லும் ஈயம் பித்தளை செம்பு தங்கம் வைரம் இதற்கும் மேல் சக்தி கொண்ட பல படிவங்களும் கலந்துள்ளன.

நட்சத்திர மண்டலத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்ப்பதனால் நம் பூமியில் உள்ள பல நிலை கொண்ட கனிவர்க்கத்தின் நிலை போல் ஒவ்வொரு நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பல கோடி நிலைகள் உள்ளனன.

இன்றைய இந்தக் கலியில் தங்கத்திற்குப் பொருளாதாரச் செல்வமாக மதிப்புத் தந்திடும் “தங்கத்தையே கோளமாக…” ஒரு நிலை கொண்ட அமிலமாக ஈர்த்து நட்சத்திர மண்டலமாக பல கோடி சுற்றிக் கொண்டுள்ளன.

இந்தப் பூமியின் கனி வளங்களின் சக்தி நிலை கொண்ட அமிலங்கள் எல்லாமே தனித்துப் பல நிலைகள் கொண்ட நட்சத்திர மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளன.
.
இன்றைய மனிதன் விஞ்ஞானத்தினால் பெரிய கோள்களின் நிலை அறிந்திடச் செல்கிறான். இந்தச் சிறிய கோளமான நட்சத்திர மண்டலங்களின் சக்தி அறியாததனால்…!

வயதாகி விட்டாலே நோய் வரும் என்று ஏன் சொல்கிறோம்…?

 

பெரும்பகுதியானவர்கள் எனக்கு வயதாகி விட்டது. அதனால் என் உடலில் நோய் வந்து விட்டது என்பார்கள். இப்பொழுது செய்ததனால் வந்ததல்ல அந்த உடல் நோய்.

இளமையிலிருந்தே ஏங்கிப் பெற்ற… சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்த தீமைகள் அதிலிருந்து விடுபட…
1.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் போது விதி என்ற நிலையாகி
3.விதிப்படி வினைகள் விளைந்து நோயாகி… வேதனையாக நமக்குள் வளர்க்கின்றது.

அப்படிப்பட்ட விதிப்படி விளைந்த உணர்வுகளை அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து “அந்த விதி என்ற இருளை நீக்கி அருள் ஞானியுடன் ஒன்றச் செய்வதே மதி…!” . மகரிஷிகளின் அருள் சக்தி என்ற மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.

தன் மதி கொண்டு தான் மனிதருக்குள் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது… எத்தனையோ அருள் ஞானம் உருப்பெற்றது.

ஆகவே… அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்துவோம். நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்… அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

ஏனென்றால் ஒவ்வொரு நோடியிலேயும் நம் வாழ்க்கையில் முன்பு செய்து கொண்ட வினையே (விதியாக) இது வருகின்றது.

ஒருவர் விபத்தில் சிக்கினாலோ அல்லது அதைக் கேட்டுணர்ந்தாலோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற்றால் நம் நல்ல குணங்களையும் அது இருள் சூழச் செய்து விடுகிறது.

அந்த விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… அதே நிலைகள் நம்மை இயக்கி நம்மை அறியாமலே சில நோய்கள் வந்து விடுகின்றது… விபத்தும் ஏற்பட்டு விடுகின்றது.

இதைப் போல் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று… அந்த வினைகளுக்கு ஆளாக்கி… அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகின்றது.

இதைப் போன்ற தீயவினைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

சுத்தப்படுத்திய பின்பு நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெறவேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெறவேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாம் எண்ணும் இந்த நல் உணர்வுகளை உயிர் நமக்குள் விளையச் செய்கின்றது. அந்த வலுவாக வளரச் செய்கின்றது.

எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறுவதற்குண்டான தகுதியை நாம் பெற வேண்டும்.

அதற்கு… நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

இந்த வாழ்க்கையில் வந்த இருளை வென்று அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து அறிவின் ஒளியாக நம் முன்னோர்களை நிலைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி நிலைக்கச் செய்து… அந்த அறிவின் ஒளியின் தன்மையை நமக்குள் பெறும் போது…
1.நம்மை அறியாது வரும் இருளை நீக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.
2.பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையும் நாம் அடையும் தன்மை பெறுகின்றோம்.

ஆகவே குருநாதர் நமக்குக் காட்டிய இந்த அருள் ஞான வழியில் செல்வோம்.

மகாத்மா காந்திஜியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இறைவனின் சக்தி பெற்ற இறைவன் தான் நாமுமே…!

நம் சக்தியை உயர்ந்த நிலைப்படுத்தி நாம் இவ்வளவு காலங்களும் நம்முள் வளர்த்து வந்த தீய சக்திகளை அடிபணிய வைத்து நம் இறை சக்தியை உணரும் முறை அறிந்தே வழி நடந்திடல் வேண்டும்.

இக்கலியின் கடைசி நூற்றாண்டில் தோன்றி மகானாக அவதரித்த அவரும் அவதாரத்தில் மகானாகத் தோன்றவில்லை.

எல்லோரையும் போல் பிறவி எடுத்து…
1.பிறப்புடன் பல தவறு கொண்ட வாழ்க்கையில் வழி நடந்து வாழ்ந்து தான்
2.அந்த நிலையை உணரும் தருவாயில் தன் ஞான சக்தியை வளர்த்து
3.அதை அனைவரும் உணர்ந்திட பல இன்னல்களை ஏற்று அந்த ஞானத்தின் தொடரை தனதாக நிலைநாட்டி
4.இன்றைய மக்கள் உணரும் மகாத்மாவாக வாழ்ந்து காட்டினார்.

அந்த நிலையிலும் தான் என்ற தனதாக்கும் இறை பக்தியின் வழியின் பேராசை இல்லாததினால் சக்தி நிலை கொண்ட மகாத்மாவாக ஆனார்.

நாம் கண்டு நம்முடன் ஒன்றிய ஓர் ஆத்மாவே மகாத்மாவாக உயர்ந்துள்ளதை உணர்ந்து அவரையே ஆண்டவனாக அவர் அடி நடந்திட்டாலே “நம் ஆத்ம ஜெபமும் கூடும்…” என்ற உணரும் நிலை அவருடன் கலந்து வாழ்ந்தவருக்கும் அன்றும் இல்லை… இன்றும் இல்லை…!

1.அன்று நடந்ததுவும்… இன்று நடப்பதுவும் நாளை கனவு தான்…
2.நிலைத்து நிற்பவை அந்த மகாத்மாவைப் போன்றோர் சேமித்து வளரவிட்ட
3.அவர் ரூபத்தில் அவரால் ஏற்படுத்திய நற்போதனை நிலைகள் தான் கனவில்லாத உண்மை சக்தி நிலை.

ஆகவே… இன்று இந்தப் பூமியில் வாழ்ந்திடும் இப்பாக்கியத்தை… நம் உடலில் உள்ள இந்த ஈர்க்கும் சக்தியைக் கொண்டே… அனைத்து சக்தியையும் கண்டிடும் பக்குவ நிலையை உணர்ந்தே…
1.இறை பக்தியின் தொடர்பை ஈர்த்து
2.அந்த இறை ஞானம் பெற்றவர்களின் நல் வழித் தொடரில் சென்றிடுங்கள்.

மெய்ப்பொருள் – மெய் எது…? பொருள் எது…?

 

சாஸ்திர விதியின் அமைப்பு எவ்வாறு என்ற நிலைகளில் நாம் அனைவரும் தெரிந்து கொண்டால் சாஸ்திரம் மெய் ஆகின்றது. மெய்ப் பொருளைக் காணும் நிலையையும் நாம் அடைய முடிகிறது.

ஆனால் அதற்குப் பதில் இன்று சாங்கிய சாஸ்திரத்தில் மூழ்கி மெய்ப்பொருளின் தன்மையைக் காண முடியாது மறைந்து விட்டது காலத்தால்…!

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் இந்த உண்மையினை வெளிப்படுத்தி மெய்ப்பொருள் என்பது யாது..? என்ற நிலையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

1.நம் உயிரே நமக்குள் மெய் ஆகிறது…!
2.அதே சமயத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய நிலைகள் வெளிப்பட்டாலும்
3.அதிலிருந்து நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை…
3.அதனின் உண்மையின் உணர்வை நமக்குள் மெய்யாக எடுத்துரைக்கின்றது நம் உயிர்.

இதைத் தான் மெய்ப்பொருள் என்று சொல்வது.

ஆக… பேரண்டத்தில் எத்தகைய நிலைகள் இருப்பினும்
1.நமக்குள் மெய்யை உணர்த்துவதும்
2.மெய்யின் தன்மையை அறியச் செய்வதும்
3.மெய் வழி நம்மை இயக்கச் செய்வதும் நம் உயிரே.

மெய் ஞானிகள் அவர்கள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை உயிரின் துணை கொண்டு உலகின் நிலையையும் பேரண்டத்தின் நிலையையும் உண்மையை உணர்ந்தறிந்து அந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்தனர்.

தன் உயிருடன் ஒன்றிய மெய்யாக… மெய்யின் நிலையாக… இன்றும் நிலை கொண்டு சப்தரிஷி மண்டலங்களாகத் திகழந்து கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்த எல்லையை அடையும் வழி முறைகளைத் தான் நமக்கு சாஸ்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன.

பல பிறவிகளில் நன்மை தீமைகளைக் கடந்து வந்தாலும்… மனிதப் பிறவியில் நாம் சேமிக்க வேண்டியது ஞானிகளின் சக்தி தான் – ஈஸ்வரபட்டர்

 

மனித ஆத்மா ஒன்றுக்குத் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல அமில நிலைகளில் தனக்குகந்த அமில சக்தியை ஈர்க்கும் பக்குவ நிலை பெறலாம் “தாவர நிலையைப் போல…!”

மற்ற ஜீவ ஜெந்துக்களின் நிலையில் இத்தகைய சக்திநிலை இல்லை. மனித ஆத்மாவில் அது நிறைந்துள்ளது.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் பார்த்தும் கேட்டும் சுவாசத்தில் உணர்ந்தும் பேசியும் வரும் நாம்… “நமக்குகந்த சக்தியை உணராமல் செயல் கொள்கின்றோம்…”

இயந்திரத்தின் துணையுடன் சில கருவிகளை “அதற்குகந்த அமிலத்தைச் செலுத்தி…” ஒளிப்படங்களைப் பிம்பப்படுத்திக் காண்கின்றோம்.

1.அந்த அமில சக்தியையே நம் உணர்வுடன் ஈர்த்து
2.இக்காற்றினில் கலந்துள்ள அச்சக்தியை ஒருநிலைப்படுத்தி
3.எங்குள்ள நிலையையும் உள்ள நிலையிலேயே நாம் கண்டிடலாகாதா…? என்றுணரல் வேண்டும்.

இவ்வுடல் என்னும் கோளத்திற்குகந்த காந்த சக்தியினால்… காற்றில் கலந்துள்ள எந்த அமில சக்தியையும்.. ஒலி ஒளி இவற்றின் சக்தி நிலையையும்… நம் உயிராத்மாவினால் செயல்படுத்தி ஈர்த்திட முடிந்திடும்.

வானொலியின் துணையுடனும்… தொலைக்காட்சியின் துணையுடனும்… இயந்திரத்தின் துணையுடனும் (கம்ப்யூட்டர்)… செயல் கொள்ளும் இந்த நிலையை மனிதனால் செயல்படுத்திய அந்தச் செயற்கையை “நம் இயற்கை ஆத்மாவினால் அனைத்து சக்திகளுமே அறிந்திட முடிந்திடும்…!”

1.மனித உடல் என்னும் இப்பிம்ப நிலை பெற்று இன்று நாம் வாழ்ந்திடும் நிலையில்
2.ஆதியிலே முதல் உயிணுவாய்த் தோன்றிய நாள் முதற்கொண்டு
3.பல நிலைகளை எடுத்துப் பல சுவாச நிலைகளின் தொடருடன் வாழ்ந்து
4.நம்முடனே கலந்து வந்துள்ள அமில சக்தியில் நம் ஆத்மாவுடன்
5.பல நன்மை தீமை கொண்ட பல கோடி அணுக்களைச் சேமித்தேதான் வழி வந்துள்ளோம்.

ஆனால் இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில்… நம்முள் உள்ள… நாம் பழக்கப்படுத்தி அடிமை கொண்டு வாழ்ந்து வந்த தீய சக்திகளின் நிலைக்கு அடிபணிந்திடாமல்…
1.நல்லுணர்வைச் சேமித்து… நம் நியதியையே ஞானிகள் வழியில் சென்றிடும் தன்மைக்கு
2.சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்தே செயல்படல் வேண்டும்.

தென்னாட்டில் தோன்றிய அக்காலத் தத்துவங்கள் எப்படி மாற்றப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

நான் (ஞானகுரு) ஏட்டைப் படித்து இதைப் பேசவில்லை. குருநாதர் இந்த உலகின் நிலைகள் அக்காலங்களில் என்ன செய்தார்கள் என்று உணர்த்தினார். அதன் வழிகளில் தான் வெளிப்படுத்துகின்றேன்.

அன்றைய அரசர்களும் சரி… அதற்குப் பின் மக்களாட்சி என்று வந்தாலும் சரி… மதத்தின் பேரால் “உலகைக் காக்க…” என்று சொல்லி அவரவர் சுயநலன்களுக்கு என்ன செய்தார்கள்…? அப்படிச் செய்த அரசர்களோ அல்லது அந்த அரசியல் தலைவர்களோ இன்று வாழ்கின்றாரா…? இல்லை…!

1.எத்தகைய விஞ்ஞான நிலைகள் முன்னேற்றம் பெற்றாலும்
2.அல்லது வேறு எந்தத் துறையில் அறிவு பெற்றாலும்
3.இந்த உடலிலேயே எவரும் வாழ்ந்ததில்லை.

இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப… எந்த மதத்தின் அடிப்படையில் இங்கே வாழ்ந்தனரோ… அதே மதத்தின் எண்ணத்தால் இந்த ஆன்மா மற்றவர் உடலுக்குள் ஈர்க்க்கப்பட்டு எவ்வாறு செல்கிறது…? என்று நீ தெளிவாகத் தெரிந்து கொள்…! என்று குருநாதர் காட்டினார்.

ஆனால் இந்தப் பூமியில் தோன்றிய மனித உடல் பெற்றவர்கள்… உடலை விட்டு நீங்கியவர்கள் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விண்ணிலே இருக்கின்றார்கள். அப்படி விண் சென்றவர்கள் அக்காலத்தில் நிறைய உண்டு.

ஆகவே உனக்குள் நீ பெற வேண்டியது எது…? அதை எவ்வாறு பெற முடியும்…? என்று அந்த மெய் வழியினை உணர்த்தினார் குருநாதர்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்ற நிலைகளில் நாம் இன்றும் சொல்கிறோம்.

1.முதல் மனிதனாகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்
2.தன் சந்தர்ப்பத்தால் விண்ணுலகை எட்டிப் பிடித்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
3.துருவத்தில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக ஆனவன்
4.“இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான்” என்பதற்கே அவ்வாறு சொல்கிறோம்.

அவனில் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை தான் வான இயலின் தன்மையில் அவன் பறக்கும் நிலை கொண்டு செல்லும்போது எகிப்து என்ற நாட்டில் இதனின் உணர்வின் அலைகள் அங்கே அதிகமாகப் பரப்பச் செய்தான். விண் அறிவின் தன்மையை அங்கே தான் முதன் முதலிலே வருகிறது.

1.விண்ணுலக சாஸ்திரமும்… மணிக்கணைக்கைப் பார்ப்பதும் நம் தென்னாட்டில் இல்லை
2.ஆனால் எகிப்து என்ற நாட்டில் தான் இது உருவாக்கப்பட்டது.

ஆண்டுகளை… மாதங்களை… நாள்களை வடிவமைத்து… அந்தக் கணக்குகள் எல்லாம் அந்த நாட்டில் தான் ஆரம்பத்தில் செயல்பட்டது. அழியா நிலை பெற வேண்டும் என்று இவருடைய தத்துவமும் அங்கே வெளிப்பட்டது.

சூரியன் ஒளிக்கதிர்கள் படப்படும் போது அந்த ஒளியின் தன்மையைப் பிரித்தெடுத்து இந்த உடல்கள் அழுகிடாதபடி… இன்று எப்படி ஐஸ் பெட்டியில் (REFRIGERATOR) வைத்து நாம் பாதுகாத்துக் கொள்கின்றோமோ இதைப் போல
1.சூரியனின் கதிரியக்கங்கள் அது தாக்காமல் அது இடைப்படும் போது
2.அந்த உணர்வின் தன்மை பிரித்துக் கொண்டு பூமியின் நிலைகள்
3.நீர் நிலை கொண்டு குளிர்ச்சியின் தன்மை அடைந்து அந்தப் பொருள்கள் கெடாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையைச் செய்தனர்.

அதாவது அக்கால மெய் ஞான அறிவால் காட்டப்பட்ட நிலைகளை அரசர்கள் பிரமிட்டுகளாக உருவாக்கிக் கொண்டனர்.

சூரியனின் ஒளி இத்தனை டிகிரி இத்தனை சாயலில் வருகிறது என்றும்… இதனின் உணர்வின் தன்மை கொண்டு தான் மணிக்கணக்கை அறிந்ததும்… அதைப் போன்று சூரியனின் இயக்கங்களை அங்கே ஆரம்ப நிலைகளில் கண்டுணரப்பட்டது என்று ஈஸ்வரபட்டர் எமக்குக் காட்டினார்.

நான் (ஞானகுரு) சரித்திரப் பாட நிலைக்குச் செல்லவில்லை. குருநாதர் காட்டிய நிலைகளில்தான் நான் இதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு விஞ்ஞான அறிவும் இப்படித் தான் தொடர்ந்தது.

ஆனால் அதே சமயத்தில் நம் தென்னாட்டில் தோன்றிய மெய் ஞான ஆறிவின் தன்மை தான் உலகெங்கிலும் பரவி அங்கே தொடர்ந்த நிலை மீண்டும் இங்கே வருகிறது.

இதை எல்லாம் குரு காட்டிய வழியில் தொட்டுக் (SAMPLE) காண்பிக்கின்றேன்.
1.ஏனென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதை இணை சேர்த்துச் சொல்லும் போது தான்
2.உங்களுக்கு அதனின் காலத்திற்கு இது உகந்ததாக இருக்கும்.

அதற்குண்டான விளக்கங்கள் பதிந்த பின் உங்களுக்குள் இணைத்து வரும் போது “உலக அறிவுடன் ஒன்றி… இன்றைய இயக்கத்தின் நிலைகளைத் தெளிந்து கொள்வதற்கு இது உதவும்…!”

வானியல் புவிஇயல் உயிரியல் என்ற அடிப்படையில் உலகெங்கிலும் ஞானிகளால் கண்டுணர்ந்த.. அவர்களால் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் அனைத்தும்
1.அன்றைய அக்கால அரசர்கள் குறுகிய காலத்திற்குத் தனது சுகபோகத்தை உருவாக்குவதற்காக மறைத்து விட்டனர்
2.அவரவர்கள் இச்சைக்குத் தக்க உணர்வுகள் உருவாக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டு விட்டது.

நாளை நடப்பது எல்லாம் இனி நல்லதாக இருக்கட்டும் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய இவ்வுலக நியதியிலே “நீதி…” என்னும் சொல்லே
1.இக்காலத்திற்குகந்ததாக
2.இன்றைய மனிதர்களின் எண்ணத் தொடரினால்
3.மாறி மாறி வரும் இவ் அரசியலின் நிலைக்கொப்ப சாதகப்படுத்தி
4.அநீதியையே நீதி என்ற சொல்லாக்கி நிலை நாட்டுகிறார்கள்.

இன்றைய இவ்வுலக நியதியில் நீதியும் சத்தியமும் எங்கு ஓங்கி நிற்கின்றது…? தனக்குகந்த பொருளாதாரத்தின்… “செல்வத்திற்கு அடிபணிந்த நிலையில்தான் இன்றைய உலக நீதியே உள்ளது…!”

சத்தியமும் ஜெயமும் ஒன்றுமறியா பாமர மக்களுக்குத் தான்…! இன்றைய உலக நியதிப்படி சொந்தமில்லா நிலையில் அடிமைப்படுத்திட்ட நிலையில்தான் நீதியும் சத்தியமுமே நிலைத்துள்ளன.

இச்செல்வத்திற்கு அடிமைப்பட்டும் செயற்கையில் வாழ்ந்திடும் இவ்வுலக நியதியில் தர்மமும் நியாயமும் தலை நிமிர்ந்திட வழியுமில்லை… இன்றைய நிலைக்கொப்ப நீதியுமில்லை.

அவரவர்களே தான்…
1.தன் உணர்வை நல் நிலையாக தன் எண்ண ஜெபத்தில் வழிப்படுத்தி
2.நம்முள் உள்ள பல கோடி அணுக்களையும் பல நிலை கொண்ட அணுக்களையும்
3.நம் ஜெபத்தினால் நல்லணுவாய் அடக்கச் செய்து… நம் ஆத்மாவை வளர்ச்சி கொண்டிடல் வேண்டும்.

நம்மையே நாம் ஓர் ஆண்டவனாய்… அனைத்து சக்திகளுமுள்ள கோளமாய் உணர்ந்து…
1.நம்முள் உள்ள மற்ற அணுக்களின் உந்தலுக்கு அடிபணிந்திடாமல்
2.நம் உணர்வே ஒரு நிலை கொண்ட நீதியாய் சத்தியமுடன் செயல்படல் வேண்டும்.

இன்றைய இவ்வுலகின் ஜீவஜெந்துக்களின் எண்ண நிலையே மாறு கொண்டு தீய சக்திகளுக்கு அடிபணிந்தே இந்நிலையின் தொடரின் எண்ண சக்தியால் “காற்றில் அசுத்த அணுக்கள் நிறைந்து பரவி வருகின்றது…”

இன்றைய நிலைக்கொப்ப புதிய புதிய வியாதிகளின் தொடர் நிலை பரவும் நிலையும் வெகு துரிதமாக உள்ளது.

விஞ்ஞானத்திலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் பல பல புதிய மருத்துவத்தைக் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் இக்காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை எங்குள்ளது…?

இச்சுவாசத்தின் எண்ண சக்தியின் நிலைதான் இன்றைய இவ்வுலகின் நிலையுடன் கலந்துள்ள நிலை.

இவ்வுலகின் மேல் கலந்துள்ள சுவாசத்தையேதான் நம் பூமியும் ஈர்த்துச் சுவாசமெடுத்து வெளிப்படுகின்றது.
1.இந்த அசுத்தக் காற்றை உயிராத்மாக்கள் மட்டும் சுவாசித்து வெளிப்படுத்தவில்லை
2.இப்பூமியும் அக்காற்றையேதான் தன் சுவாசத்தில் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

இக்கலியில் மாறு கொண்டதுதான் இக்காற்றின் அசுத்த நிலையெல்லாம். கலியில் வந்த மனிதர்களின் பேராசையினால் தான் இவ்வுலகின் நியதியே மாறு கொள்ளப் போகின்றது…!

இப்பூமியில் மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் நாம்… நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தினாலன்றி மாறப்போகும் கலியின் பிடியில் சிக்கி மீள வழி பெற முடியாது.

அத்தகைய அல்லல்படும் நிலையில் இருந்து மீண்டு சூட்சும நிலை பெறவில்லை என்றால்…
1இன்று மனிதராய் வாழும் இப்பாக்கியத்தை
2.நாமே நசியவிடும் நிலைதான் நமது நிலையாகிவிடும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் நல் சக்தி உண்டு…!

வாழ்க்கையில் நடந்த பல தீய நிலைகளை எண்ணி… சோர்வை அண்ட விடாமல் இனி நடக்கும் நிலையை உணர்ந்து செயல்பட்டு… ஒவ்வோர் ஆத்மாவுமே சக்தி ஜெபம் பெற்று…
1.சக்தியுடன் சக்தியாய்… ஒளியுடன் ஒளியாய்க் கலந்துள்ள…
2.நம் சப்தரிஷிகளின் நிலையுடனே கலந்திடலாம்.

நம் கண்களுக்கு.. கருவிழிகளுக்கு… கண்ணின் திரைகளுக்கு… நாம் கூட்ட வேண்டிய “உயர்ந்த சக்தி”

 

மெய் ஞானிகள் தன் உடலில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த உணர்வின் நிலையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கே பூமியில் சுழன்று கொண்டிருப்பதை ஈஸ்வரபட்டர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்ததை நினைவு கொண்டு எண்ணும்போது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நான் சுவாசிக்க நேருகின்றது.

என் உடலுக்குள் அது கலந்த பின்… தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பும் பித்தளையும் திரவகத்தை ஊற்றிப் பிரிப்பது போல
1.அந்த அருள் ஞானியினுடைய உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று
2.தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது…
3.தீமைகளைப் பிரித்துவிடுகின்றது… அதைச் சுத்தப்படுத்துகின்றது

இதுதான் ஆத்மசுத்தி என்பது.

மற்றவர்களுடைய குறைகளை நான் கேட்டாலும் இந்த முறைப்படி சுத்தப்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு முன்னாடி நான் எத்தனையோ வேதனைகளை அனுபவிக்க நேரும்.

உங்களுக்கு நன்மை செய்யலாம்… ஆனால் நீங்கள் பட்ட தீமைகள் எல்லாம் எனக்குள் அதிகமாக வந்து எனக்குள் நல்லதை மூடி மறைத்துவிடும்.

இதைப் போன்று தான் உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குவதற்கும் இந்த உபாயத்தை… அந்த மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையைக் காட்டிக் கொண்டு வருகின்றேன்.

எந்த அளவுக்கு நீங்கள் கூர்ந்து இதைக் கவனிக்கின்றீர்களோ இது ஊழ்வினையாக உங்கள் எலும்புக்குள் பதிவாகின்றது.

எப்போது நீங்கள் தீமைகளைச் சந்திக்க நேருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை நீங்கள் தூண்டப்படும் போது
2.அதைப் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும்போது
3.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வைச் சுவாசிக்க நேருகின்றது.

டி.வி.யுடன் சேர்ந்த ஆண்டன்னாவின் பவரைக் கூட்டும்போது வெகு தொலைவில்… செயற்கை கோள்கள் மூலமாக அங்கிருந்து ஒலி… ஒளிபரப்பச் செய்வதைக் கவர்ந்து அது காட்டுகிறது

அதை நாம் டி.வி.யில் பார்ப்பதைப்போல அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்பொழுது யாம் சொல்லும்போது கூர்ந்து கவனித்தால் உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு ஆவது மட்டுமல்ல…
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு
2.அதனின் நிலைகள் கொண்டு ஆழமாகப் பதிவானபின்
3.அந்த நினைவின் அலைகளை… மகரிஷிகளை எண்ணும்போதே
4.ஆண்டன்னாவின் சக்தியைக் கூட்டியது போல்… நம் கண் (ஆண்டன்னா) மிக சக்தி வாய்ந்ததாக மாறி
5.அந்த ஆற்றல்களைக் கவர்தல் வேண்டும்.

ஆகவே இப்பொழுது கேட்டுணரும்போது உங்கள் கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை இணைந்து… நான் சொல்வதை அதே கண் தான் ஈர்த்து ஊழ்வினையாக உடலிலே பதிவு செய்கின்றது.

அதே சமயம்
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிகளுக்கு…
2.அந்தத் திரைகளுக்கு அனுப்பும் கண்ணின் நினைவை
3.ஒவ்வொரு நுண்ணிய அலைகளையும் இது சக்தி வாய்ந்ததாகச் சேர்க்கின்றது.

பின்பு அந்த ஆண்டன்னா பவர் போல… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஏங்கினால் அதைக் கவர்ந்து உங்களைச் சுவாசிக்கச் செய்து உங்கள் உடலுக்குள் அந்த உணர்வுக்ள் சென்று அறியாது வந்த தீமைகளை நீக்கிட உதவும்.

இப்படிச் செய்யாமல் சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் என்ற எண்ணம் இருந்தால்
1.நமக்கு நாமே ஏமாந்து நமக்கு நாமே காலத்தை விரயம் செய்து
2.நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்வதுபோல் தான் ஆகும்.
3.யாகங்களைச் செய்தோ வேள்விகளைச் செய்தோ இதை எல்லாம் நிவர்த்திக்க முடியாது.

யாகம் என்பதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்த்தால் இது தான் யாகம்… அது தான் வேள்வி.

அந்த உயர்ந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணத்தை நமக்குள் செலுத்தினால் ஒழிய துன்பங்களை அடக்க முடியாது.

1.நம் உயிர் ஒரு நெருப்பு
2.அதிலே எதைப் போடுகின்றோமோ அந்த வாசனை தான் வரும்

ஒரு நஞ்சினை நெருப்பிலே போட்டால் அந்த நஞ்சின் வாசனை தான் வரும். ஆனால் அதிலே நல்ல மணத்தின் தன்மையைப் போட்டால் நல்ல மணத்தின் தன்மையை நாம் காணலாம்.

இதைப் போன்று தான் நம் உயிரில் நல்ல மணத்தின் தன்மையைப் போடும்போது நம் எண்ணங்கள் நல்லதாக வருகின்றது.

ஆகவே மிக சக்தி வாய்ந்த ஒரு நறுமணம் கொண்ட நிலையை நாம் இடும்போது அதிலிருந்து வெளிப்படுவதைச் சுவாசிக்கும்போது நல்ல வாசனை கொண்டதாக இருக்கின்றது.

ஆனால் நஞ்சான நிலைகள் நெருப்பிலே விழுகும்போது அதை நுகர்ந்தால் நாம் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விடுகின்றோம்.

இதைப் போலத் தான் நாம் எந்த உணர்வின் தன்மை எண்ணுகின்றோமோ இந்த நெருப்பான உயிருக்குள் இந்த உணர்வின் அலைகளாக உடலுக்குள் சென்று அந்த குணங்களுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.

ஆக அந்த ஞானிகளின் சக்தியை நமக்குள் எடுத்துத் தீமையின் உணர்வுகளை நீக்கி நல் உணர்வின் சத்தை நமக்குள் வலுக்கொண்டதாக மாற்றிக் கொள்வதற்குத்தான் எமது குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்றுதான் உங்களுக்குள்ளும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்கின்றோம்.

1.நீங்கள் அனைவரும் மெய்ப்பொருள் காண வேண்டும்
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.இருள் நீங்கிய உணர்வலைகள் கொண்டு நீங்கள் பேசப்படும்போது
4.நீங்கள் வெளியிடும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவரப்படும்போது
5.பிறருடைய உணர்வுகளுக்குள் அது சென்றாலும் அல்லது
6.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்
7.உங்கள் மூச்சின் அலைகள் பிறருடைய தீமைகளை நீக்க இது நிச்சயம் உதவும்.

இயந்திரங்களின் (கம்ப்யூட்டர்) சக்தியை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்… தன் ஆத்ம சக்தியைப் பற்றி உணரவில்லை – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மனிதனின் பல எண்ண சக்தியினால் கணிதத்தின் (கம்ப்யூட்டர்) தொடர்பு கொண்டு…
1.செயற்கையினால் இயந்திரத்தின் துணை கொண்டு
2.ஒருவர் இருவர் அறிந்த சக்தியை இயந்திரங்களின் வழியில் செயல்படுத்தி
3.மற்ற ஆத்மாக்களின் சக்தியை இவ்வியந்திரத்தின் கணிதத் தொடர்பு கொண்டு சக்திக்கு அடிமைப்படுத்தி
4.செயலற்ற சோம்பேறி நிலையில் சென்று கொண்டுள்ளது இன்றைய உலகம்.

உலகம் எப்படித் தோன்றியது…? எந்நிலையில் உயிரினங்கள் வளர்ச்சி கொண்டன…? என்ற நிலையை அறியவும் ஆராயவும் இன்றளவும் இம் மனித எண்ணங்களின் நிலையுள்ளது.

பிறரின் தொடர்பை மட்டும் இயக்கி உள்ள நிலை இது…!

1.தான் பிறந்து வளர்ந்து செயல் கொண்டு வாழ்ந்திட… தனக்குள்ள சக்தியையும்…
2.தான் வாழவே தன்னுள் உள்ள தன் ஆத்மாண்டவனையும் வணங்கிடல் வேண்டும்…! என்று உணராமல்
3.பிறரின் சக்தியில் சக்தியில் அடிமை கொண்டு வாழ்ந்து என்ன பயன்…?

நாம் பிறவியெடுத்த பயனை உணர்ந்து ஆத்ம ஜெபம் கொண்டால் நம் சக்தியுடன் அனைத்து நற்சக்திகளையும் ஈர்த்துச் செயல்படுத்தி வாழ்ந்திடலாம்.

நம் ஆத்மாவான நம் சக்தியை நாம் உணர்ந்து செயல் கொண்டால்தான் இம் மாறப்போகும் இக்கலியின் மாற்றத்திலிருந்து நம் ஆத்மாவை ஒளிரச் செய்திட முடிந்திடும்.

ஆத்ம சக்தியை உணர்ந்து கொண்டால் அவரவர்களிடத்திலுள்ள இவ்வெண்ண சக்தியின் தொடரைக் கொண்டு இக்கோளம் மட்டுமல்ல… இப் பிரம்மாண்ட அனைத்துக் கோளங்களையுமே நமதாக்கும் சக்தி ஒவ்வோர் ஆத்ம சக்திக்கும் உண்டு.

அனைத்துக் கோளங்களுமே நமக்குச் சொந்தமானவைதான்.

இப்பூமியில் உயிரணுவாய் உயிராத்மாவாய் வாழ்ந்திடும் நாம் நம் சக்தியைச் செயல் கொண்டதாக்கி வாழ்ந்து காட்டிடல் வேண்டும். ஜீவன் பிரிந்த பிறகு ஆவி உலகில் இவ்வுடலில்லாமல் நம் சக்தியை வளர்த்திட முடியாது.

மாறப் போகும் கலியிலும் பிறகு வரும் கல்கியிலும் ஆவி உலகில் ஆத்மாக்களாய்ச் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.இவ்வுடலில் இருந்து பிரிந்து சென்ற நிலையிலுள்ள எண்ண நிலைக்கொப்ப…
2.பிறவி எடுத்திடும் நாள் வரை இவ்வாவி உலகில் சுற்றிக் கொண்டேதான் எண்ணத் தவிப்புடனே இருந்திடல் வேண்டும்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குரு பலம் நாம் பெற வேண்டும்

 

எனக்குள் (ஞானகுரு) வந்த தீமைகளிலிருந்து விடுபட மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “பல உணர்வின் ஒலிகளைக் கூர்மையாகக் கேட்டுணரும்ப்படி செய்து… அந்த உணர்வை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்தார்…!”

1.அவர் பதிவு செய்யும் போது
2.அவரைக் கூர்மையாகக் கவனிக்கும் போது
3.அவர் சொன்ன நிலைகளிலிருந்து
4.எனக்கு வரும் தீய விளைவுகளிலிருந்து என் குருவை எண்ணும் போதெல்லாம்
5.எனக்குள் வந்த தீமையை நீக்கி நல்ல வினைகளை எனக்குள் வளர்க்க முடிகின்றது.

அதே சமயம் மற்றவர்கள் என்னிடம் அவர்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கேட்க வரப்படும் போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் எனக்குள் கேட்டறிந்தாலும் “அந்தக் கஷ்டம்” என்னை இயக்காதவண்ணம் மாற்ற முடிகிறது.

இப்பொழுது கசப்பு புளிப்பு காரம் போன்ற பல சரக்குகளை இணைத்து எப்படிச் சுவையாகச் சமைத்து உணவாக உட்கொள்கின்றோமோ அதைப் போல் என்னால் மாற்றிக் கொள்ள முடிகிறது.

ஏனென்றால் ஒவ்வொருவரும் என்னை அணுகும் போது அவர்களின் துன்பத்தையும் கஷ்டத்தையும் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்து தான் நான் பதில் சொல்ல வேண்டியது வரும்.

1.உங்கள் உடலில் விளைய வைத்த துன்பங்களை நீங்கள் சொல்லும் போது
2.நான் கேட்டறியப்படும் போது அந்தப் பலவும் சேர்த்து என் உடலுக்குள் வந்தால்
3.ஒரு நூறு பேர் சொல்கிறீர்கள் என்றால்.. எனக்குள் அது நோயாக உருவாக்கத் தான் தூண்டும்.

ஆனால் அவை அனைத்தும் எனக்குள் நோயாக விளையாதபடி குருநாதர் காட்டிய வழிகளில் விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து அதனுடன் கலக்கச் செய்து நான் மாற்றிக் கொள்கிறேன்.

ஒரு குழம்பை வைக்கும் போது காய்கறிகளையும் மற்றதையும் போட்டு வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை (காரலை) நீக்கிச் சுவைமிக்கதாக ஆக்குகின்றோம் அல்லவா…!

அதைப் போல் நீங்கள் பேசும்… எம்மிடம் கேட்க வரும் அந்த நிலையை
1.எனக்குள் சேராவண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.அந்தக் குழம்பைச் சுவையாக்கியது போல் எனக்குள் அந்தத் தீமை விளைவிக்காதபடி சுவைமிக்கதாக ஆக்கிக் கொள்கிறேன்.

மிளகாயை வாயிலே போட்டவுடனே ஆ… என்று அலறுகின்றோம். நம் உமிழ் நீரே காணாது போய்விடுகின்றது. ஏனென்றால் அதில் உள்ள விஷத் தன்மை அதனின் துடிப்பு நம் அங்கங்களை அவ்வளவு வேகமாக இயக்குகின்றது.

அது வேகமாக இயக்கினாலும் அதே மிளகாயைப் பல சரக்குகளுடன் சேர்த்து இந்தக் காரத்தை அதிலே அளவுடன் போடும் போது
1.இரசனை கொண்டு நம் உமிழ் நீரைச் சுரக்கச் செய்து
2.ஆகா..!. என்று நாம் ருசித்துச் சாப்பிடும் நிலையாக உணர்ச்சிகளைத் தூண்டி
3.மனிதனுக்குள் வலுவின் தன்மை கூடி சிந்திக்கக்கூடிய உணர்வை ஊட்டி
4.நம்மை மகிழ்ச்சி அடையச் செய்கிறது அதே காரம்…! (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!)

இதைப் போல் தான் கோபமாகவோ வெறுப்பாகவோ சலிப்பாகவோ சஞ்சலமாகவோ வேதனையாகவோ பல சோர்வடைந்த நிலைகளில் அவரவர்களுடைய கஷ்டங்களை எம்மிடம் சொல்லி… அந்தக் கஷ்டத்திற்கு நிவாரணம் தேட என்னிடம் கேட்க வந்தாலும்… நீங்கள் கஷ்டப்படும் உணர்வின் தன்மை நான் கேட்டறியும் போது அந்த உணர்வுகளை என் செவிப்புலன் ஈர்த்தாலும்… அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நான் சுவாசித்து என் உயிரிலே பட்டு அதை அறிந்து தான் நான் பதில் சொல்ல வேண்டி வரும்.

1.குருநாதர் கொடுத்த சக்தி கொண்டு பல உபகாரங்களை உங்களுக்குச் செய்தாலும்
2.நான் அதை மாற்றவில்லை என்றால் நீங்கள் சொன்ன உணர்வுகள் என் உடலுக்குள் சென்று
3.கடுமையான தீய விளைவுகளை உண்டாக்கிவிடும்.

அத்தகைய நிலையை நான் சமப்படுத்துவதற்குத் தான் குருநாதர் அந்த விண்ணின் ஆற்றலை… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை… நீ எப்படிப் பருக வேண்டும்…? என்று தெளிவாக்கினார்.

அதை எடுத்துச் சுத்தப்படுத்தி… வேக வைத்து… அதனைச் சமப்படுத்தி… சமைத்து… ருசியாக்கி…
1.யார் உன்னிடம் சொன்னார்களோ அவர்களின் தீமைகளை நீக்க
2.அருள் உணர்வின் வாக்கினை அங்கே அவர்களுக்குள் பதிவு செய்து
3.அவர்களைத் தீமையிலிருந்து விடுபடச் செய்வதற்கு நீ இதைச் செய்…! என்று குருநாதர் சொன்னார்.

உங்களை அறியாது உடலில் சேரும் தீமையிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் “குருநாதர் சொன்ன வழியில்… உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்…!”

இன்றைய குறுகிய காலத்தை விரயம் செய்யாது ஆத்ம சக்தியை உயர்த்திக் கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

எல்லா மண்டலமும் ஒரே நிலை கொண்டு வளர்ச்சி பெறும் என்பதல்ல…!

வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாகவும்… சிறு சிறு கோளமாக உள்ள மண்டலங்களும்… ஜீவனற்று உள்ள மண்டலங்களும்… பெரிய மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியில்
1.அதன் சக்தி நிலையும் (அமில நிலை) பெரிய மண்டலங்களின் அமில நிலையும் ஒன்றுபடும் பொழுது
2.இதன் ஈர்ப்புடன் வந்து சேர்ந்து அந்நிலையிலேயே கலந்து சுழல்கின்றது.

மண்டல வளர்ச்சி கொண்ட சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாய் சுற்றிக் கொண்டுள்ள கோளங்கள் எல்லாம் பெரிய மண்டலங்களின் பிரளய நிலையின் காலங்களில்தான் வந்து சேருகின்றன.

பூமியின் பூமத்திய ரேகையின் இன்றுள்ள நிலை… நடக்க இருக்கும் பிரளயத்தின் போது பிரளயத்தின் அசைவினால்… சிறிது மாறுபட்ட இடத்தில் வரப்போகின்றது.

1.இன்று நீர் நிலைகளாய் ஆழ்கடலாய்ச் சூழ்ந்துள்ள இடமெல்லாம்
2.சமமான தரையாகச் (நிலங்களாக) செயல் கொள்ளப் போகின்றது.

இம்மனித ஆத்மாக்கள் ஜீவராசிகள் மட்டும் மாறப்போகின்றன என்பதல்ல. இன்று வளர்ச்சியில் உள்ள தாவர வர்க்கங்களின் நிலையும் மாறப் போகின்றது.

இன்று ஆத்மீக நெறியை அறியும் சக்தி நிலையே குறைந்துள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ள ஆத்மாக்கள் எல்லாம் இயற்கையின் சீற்றத்திலிருந்து தப்பும் நிலையை உணர்ந்திடல் வேண்டும்.

வாழும் வாழ்க்கை செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ளதை மாற்றி இவ் இயற்கையின் கால மாறுதலை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.

1.பல சித்தர்கள்… பல ரிஷிகள்… வாழ்ந்து செயலாக்கி இன்றும் ஆண்டவன் ரூபம் கொண்டு
2.நம் கோயில்களின் மூலமாகப் பல சக்தி நிலைகளை உணர்த்திக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்ற நாம்
3.நம் ஆத்மாவிற்கு உயர்ந்த சக்தியின் நிலையைச் சேமிக்கும் சக்தி பெற்றிட வேண்டும்.

நம் சக்தியைச் செயற்கைக்கும் விளையாட்டிற்கும் வீண் விவாதத்திற்கும் இன்றைய அரசியம் ஆட்டத்திற்கும் அடிபணியச் செய்திடக் கூடாது.

1.நம்மைப் பற்றிக் கொண்டுள்ள அடிமைப்படுத்திடும் எத்தகைய நிலையிலிருந்தும் மீளும் நிலையில் நம் சக்தியை ஓங்கச் செய்தே
2.இக் குறுகிய காலத்தில் அன்பு என்ற ஜெபத்தின் செயல் கொண்டு
3.ஆத்ம சக்தியை வளர்க்கும் பரிபக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள்.

“ஜோதி மரம்… ஜோதிப் புல்…”

 

மலைகளில் உள்ள சில மரங்களில் “மெர்க்குரி…” போன்று வெளிச்சம் வரும். அதனின் மரப்பட்டைகளில் எடுத்துக் கொண்டால் மெர்க்குரி போல ஒளி வரும்.

1.அத்தகைய மரங்கள் மின்னலில் இருந்து ஒளிக்கற்றைகளைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும் சக்தி பெற்றது.
2.மிகவும் இருண்டு விட்டால் அந்த ஒளி அலைகளை வெளி பரப்பும்.
3.இதை “ஜோதி மரம்” என்று சொல்வார்கள்.

காட்டிற்குள் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று அந்த இயற்கையின் மணங்களை நீ பார்…! என்று காட்டினார்.

அதே சமயத்தில் இன்னொரு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் புல்லைத் தூருடன் எடுத்துக் காட்டச் சொன்னார். பார்த்தால் அதிலிருந்து வெளிச்சங்கள் வருகின்றது. “ஜோதிப் புல்” என்று சொல்வார்கள்.

ஒரு பேட்டரி லைட்டை நாம் உபயோகிப்பது போல அன்று காட்டு விலங்குகளுடன் வாழ்ந்து வந்த மனிதன் இதை எல்லாம் பயன்படுத்தித் தனக்கு வேண்டிய வெளிச்சத்தை உருவாக்கிக் கொண்டான். இந்த வெளிச்சத்தில் பல உண்மைகள் அறிந்து கொண்டான்.

புலஸ்தியர் வம்சத்தில் வந்தவர்கள் இத்தகைய இயற்கையின் உண்மையை அறிந்து கொள்ளும் சக்தி பெற்றனர். புலஸ்தியர் வம்சத்தின் வழி வந்தவன் தான் அகஸ்தியன். இன்று கதைகளில் நாம் சொல்லும் அகஸ்தியர் அல்ல. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தவர்.

அந்தப் புலஸ்தியர் வம்சத்தில் வந்தவர்கள் காட்டு விலங்குகளில் இருந்தும் மற்ற விஷ ஜந்துகளிடம் இருந்தும் விஷமான காற்றுகளிலிருந்தும் (மணம்) தங்களைப் பாதுகாத்துக் கொளள “பல மூலிகைகளைக் கண்டுணர்ந்தார்கள்…”

ஏனென்றால் சில செடிகள் இருக்கும் பக்கம் மனிதர்கள் சென்றால் அந்த விஷக் காற்று பட்டால்.. மனிதனை மயக்கச் செய்யும். மிருகங்களையும் கூட மயக்கச் செய்யும்.

இது போன்ற நிலைகளில் இருந்து தப்புவதற்கு அன்று மனிதனாக வந்த புலஸ்தியர் வம்சத்தை சேர்ந்த அந்தக் குடும்பம்
1.பல தாவர இனங்களை எடுத்துத் தன் உடலில் அணிகலன்களாக அணிந்து கொண்டனர்.
2.விஷ ஜெந்துகளிலிருந்தும் பூச்சிகளிலிருந்தும் இருந்தும் மின்னல்கள் தாக்குவதிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர்.

பூமியில் மின்னல்கள் ஏற்பட்டால் கடலிலே தாக்கினால் மணலாகின்றது. மரத்தைத் தாக்கினால் மரம் கருகிவிடுகின்றது. மனிதனைத் தாக்கினால் மனிதன் கருகி விடுகின்றான்.

பூமியைத் தாக்கினால் பூமியின் நடு மையம் சென்று அது கொதிகலனாக மாறி
1.இந்த பூமிக்குள் பல பொருள்களை உருவாக்கும் வீரியத்தைக் கொடுக்கின்றது.
2.அதற்குள் பல கலவைகளை மாற்றி… ஆவியாக மாற்றி அது வெளிவரப்படும்போது
3.பல பல உலோகங்களைக் கூட உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதைப் போன்ற மின்னலின் இயக்கத்தை அடக்குவதற்கு என்று மூலிகைகளை அந்தப் புலஸ்தியர் கண்டுணர்ந்தனர். அந்த மூலிகையை அணிகலன்களாக அணிந்திருப்பதனால் மின்னலின் வீரியம் தணிந்து நாம் சாதாரண மின் ஒளி விளக்குகளைக் கண் கொண்டு பார்க்கின்றோமோ இதைப்போல அன்று கண்களால் மின்னலை எளிதில் கண்டார்கள்.

இதைத் தெரியப்படுத்துவதற்காக குருநாதர் என்ன செய்தார்…?

என் கையில் விழுது ஒன்றைக் கொடுத்துவிட்டார். ஆனால் அது எதற்கு என்று எனக்குத் தெரியாது. நீ மின்னலைப் பாருடா…! என்றார்.

மின்னலைப் பார்த்தால் கண் எல்லாம் போய்விடும்.. நான் பார்க்க மாட்டேன் சாமி…! என்று சொல்கிறேன். இரண்டு பேருக்கும் சண்டை வருகிறது.

நான் சொல்வதைச் செய்வேன் என்றாய் அல்லவா.. நீ மின்னலைப் பார்… என்றார் குருநாதர்.

அதைப் பார்க்க மாட்டேன்… நான் பெண்டு பிள்ளைக்காரன்… குடும்பம் எல்லாம் இருக்கிறது..! என்றேன்.

அவர்களை எல்லாம் விட்டுவிட்டுத் தானே இங்கே என்னுடன் வந்தாய்… நான் சொல்வதைக் கேள்… என்றார்.

உன் சம்சாரத்தை நோயிலிருந்து எழுப்பிவிட்டேன். சில உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்குத் தான் காட்டிற்குள் உன்னைக் கூப்பிட்டேன். இப்பொழுது நீ மாட்டேன் என்று சொன்னால் எப்படி…? என்று கட்டாயப்படுத்துகின்றார்.

மின்னல்கள் வருவதைப் பாருடா…! என்கிறார். ஆனால் என் கையில் விழுதைக் கொடுத்தது எனக்குத் தெரியாது. தொடர்ந்து வாதிக்கிறார் குருநாதர்.

கையில் விழுது இருக்கிறது… என்று சொல்லிக் கொடுத்தால் தானே எனக்குத் தெரியும். மின்னலைப் பாருடா… பாருடா…! என்றே சொல்கின்றார்.

அப்புறம் அதைப் பார்த்தபின் என் கண்கள் கூசவில்லை. நம் மெர்குரி லைட் எவ்வாறு இருக்குமோ அது போன்று இருக்கிறது.

ஏனென்றால் அந்த மின்னலின் வீரியத்தை அடக்கக்கூடிய சக்தி அந்த விழுதுக்கு உண்டு. அப்பொழுதுதான் அதை உணர்ந்தேன்

இருபத்தேழு நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று எதிர்நிலையான உணர்வு கொண்ட நிலையில் மோதி மின்னலாக மாறினால் காட்டிலிருக்கும் மரம் செடி கொடிகளில் பட்டால் அது கருகிவிடும்.

மின்னல் தாக்கப்படும்போது அதற்கு எதிர்நிலையான மரங்கள் தான் கருகுமே தவிர அதன் அருகில் வேறு மரங்கள் இருந்தால் அவை கருகுவதில்லை.

பனை மரம் என்றால் பனை மரம் கருகும். தென்னை மரம் என்றால் தென்னை மரம் கருகும். மாமரம் என்றால் மாமரம் மட்டும் தான் கருகும். அதன் அருகிலே இருக்கக்கூடிய மற்ற செடி கொடிகள் எதுவும் கருகுவதில்லை.

இந்த இயற்கையின் சீற்றங்கள் எப்படி இயங்குகின்றது…? என்று குருநாதர் இதையெல்லாம் தெளிவாக உணர்த்தினார். அதைத் தான் உங்களிடமும் சொல்கிறேன்.

பிரளயத்தினால் பூமிக்கு வளர்ச்சி நிலை உண்டா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பூமி தோன்றிய நாள் கொண்டே இந்தப் பூமிக்கும் ஓர் எண்ண நிலையுண்டு. இரண்டு ஆத்மாக்கள் ஒன்றுபட்டு சக்தி நிலையைச் சேமித்து இப்பூமி என்னும் பிம்பத்தை வளர்த்தது என்று ஏற்கனவே சொன்னேன்.

ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் கிடைக்கக்கூடிய சக்தி நிலையை வைத்துப் பல நிலைகளிலிருந்தும் பல சக்திகளை ஈர்க்கும் நிலைப்படுத்தி இப்புண்ணிய பூமியைச் சிறுகச் சிறுக வளர்த்து… இன்று இப்பூமியே தன் எண்ண நிலையில் தானே கற்றும் நிலையில் உள்ளது.

பூமி வளர்த்த உயிரணுக்களின் சுவாச நிலையுடன் தன் சுவாச நிலையைக் கலக்கவிட்டே இப்பூமியே சுவாச நிலை எடுத்து ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தில் சுழல்கின்றது.

இப்பூமியில் உள்ள அனைத்து சப்த அலைகளையுமே இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டேயுள்ளது.

சிறு எறும்பு முதற்கொண்டு… எண்ணங்கள் கொண்டு சுவாச நிலையை ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து ஜீவராசிகளின் சுவாச நிலையும்… தாவர வர்க்கங்களின் சுவாச நிலையும்… இயந்திர வர்க்கங்களின் சப்த ஒலியும்… அனைத்துமே இக்காற்றுடன் கலந்து இப்பூமியின் சுவாசத்திற்கு வந்து சென்று கொண்டுள்ளன.

இப்பூமிக்கும் ஜீவன் உண்டு… எண்ணம் உண்டு… சுவாச நிலையும் உண்டு. அழியா ஆயுட்காலமும் உண்டு.

மாறி மாறிப் பிரளய நிலை ஏற்படுவதெல்லாம் இன்று நாம் எப்படி பிறப்பெடுத்து வாழ்ந்து இவ்வுடல் என்னும் இப்பிம்பம் செயல்படாமல் போகும் நிலையில் நம் ஆத்மா பிரிந்து செல்கின்றதோ அந்த நிலை போன்றது தான்.

அதாவது பூமியின் பிரளய நிலையினால்…
1.இப்பூமியின் ஆத்மா ஜீவன் இல்லாமல்… பிரிந்து செல்லாமல்
2.ஜீவனுடனே தன் ஆத்மாவைக் காத்து கொண்டே பிரளய நிலை ஏற்படுத்தி
3.தான் வளர்த்துச் செயலாக்கிய உயிரணுக்களின் மற்ற இயற்கையின் தன்மையைச் சிறிது மாற்றி
4.”பிரளயம்…” என்ற மாற்றத்தினால் சுற்றிக் கொண்டே வாழ்கின்றது.

பூமி சுழல இந்தச் சப்த அலைகள்தான் இப்பூமிக்கு உயிர் நாடி. பேரிரைச்சல் கொண்ட இக்கடல் அலைகளும் ஜீவ ராசிகளின் சுவாச நிலையும் இருந்தால்தான் இப்பூமியைச் சுற்றியுள்ள இக்காற்று மண்டலத்திற்கே செயல் நிலை வருகின்றது.

பூமி தோன்றிய நாளில்… இன்று இருக்கும் ஓங்கார நாதத்தின் உயிர் நாடியின் சப்த அலையை விட ஒலியின் சப்த நிலை குறைவாகத்தான் இருந்தது. இப்பூமி வளர வளரத்தான் சப்த அலை ஓங்காரமுடன் வளர்ந்து கொண்ட வந்துள்ளது.

இப்பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலமும் வியாழன் மண்டலமும் பெரியவை. அவற்றின் சுழலும் வேகமும் இதை விடப் பல மடங்கு அதிகம் என்று உணர்த்தியுள்ளேன்.

சூரிய மண்டலத்தில் உள்ள உயிரணுக்களின் தன்மையும் நம் பூமியின் தன்மையும் மற்ற மண்டலங்களின் தன்மையும் மாறு கொள்கின்றது என்று உணர்த்தினேன்.

அந்தந்த மண்டலத்தின் சீதோஷ்ண நிலைக்கொப்பத்தான் அம்மண்டலத்திலுள்ள உயிரணுக்களின் நிலையும் இருந்திடும்.

எந்த மண்டலத்திலும் உயிரணுக்கள் இருந்து சுவாசம் எடுத்திடாமல் இருந்தால் அந்த மண்டலத்திற்கே ஜீவனில்லை.
1.நடமாடும் பறக்கும் ஊரும் ஜெந்துக்களுக்கு மட்டும்தான் ஜீவன் உண்டு என்ற பொருளில்லை.
2.ஒவ்வொரு மண்டலத்திலும் அம்மண்டலத்துடனே வளர்ந்துள்ள கல் மண் நீர் அனைத்திற்குமே ஜீவனுமுண்டு… சுவாசமுமுண்டு.

கல் பேசும் மண் பேசும் என்பதின் பொருளென்ன…? அதனதன் சுவாசமே அதனதன் சொற்கள்தான். சுவாசமில்லாமல் எந்த மண்டலமுமில்லை சுவாசம் எடுத்திடாமல் எந்த உயிரணுக்களும் இல்லை.

1.இஜ்ஜீவத்துடிப்பின் ஒலியினால்தான் ஒவ்வொரு மண்டலமும் வாழ்கின்றது
2.நம் பூமியின் சக்தி நிலையும் கூடிக் கொண்டே வருகின்றது.

கலியின் பிரளயத்திற்குப் பிறகு வரப்போகும் கல்கியின் வளர்ச்சியிலிருந்து நம் பூமி இன்னும் சக்தி நிலை நிறைந்ததாகத்தான் சுழலப் போகின்றது. இன்று சூரியனின் சக்தியினால் சக்தி கொண்டு சுழலும் நம் பூமியே சூரியனின் நிலைக்கொப்பச் சுழலப் போகின்றது.

ஒவ்வொரு பூமியின் நிலையும் ஒவ்வோர் உயிராத்மாவின் சக்தியினால் செயல் கொண்டு சுழல்கின்றது அதனதன் நிலைக்கொப்ப…!

தியானம்

 

நம்முடைய அம்மா அப்பா தான் நாம் மனிதனாக உருவாகக் காரணமானவர்கள். தெய்வமாக நம்மைக் காத்து இது வரை நமக்கு நல்வழியைக் காட்டி அவர் வழியிலே வளர்ந்தவர்கள்தான் இந்த ஞானத்தை உணரும் சக்தியும் இன்று பெறுகின்றோம்.

ஆகவே அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அவர் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கண்ணின் கருமணி வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எண்ணி
2.அந்தச் சக்தியை அது ஈர்க்கும் சக்தி பெறும் போது கருமணிகளில் அந்தக் கனமான ஒரு உணர்வுகள் வரும்.

அடுத்து உங்கள் புருவ மத்தியில் ஈசனாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் உங்கள் உயிரின் பால் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

கண்ணை மூடுங்கள். கண் வழியாகக் கவர்ந்ததை உயிர் வழியாக (புருவ மத்தி) துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.புருவ மத்தி வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும்போது
2.அந்த உயிரின் இயக்கம்… துருவ நட்சத்திரத்தின் வலுவை அப்படியே பெறும்போது
3.உங்களுக்குள் ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்…!
4.துருவ நட்சத்திர உணர்வுகள் புருவ மத்தியில் நேரடியாக மோதும் போது
5.அந்த உணர்ச்சிகளின் அழுத்தமும்… ஒளிக்கற்றைகளின் வெளிச்சமும் தெரியும்.

இவ்வாறு ஒரு நிமிடம் எண்ணி ஏங்கினால் நம் உடலுக்குள் புகும் தீமைகளை எல்லாம் விலக்கிவிடும். அதே சமயத்தில்
1.உடலுக்குள் தீமையை விளைய வைக்கும் அணுக்களுக்கு
2.தீய உணர்வுகள் உட்புகாது இப்பொழுது தடைப்படுத்துகின்றோம்.

அதாவது நம் உடலுக்குள் தீய உணர்வுகள் சென்று தீய அணுக்கள் வளராது தடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா..! என்று கண்ணின் நினைவினை இரத்தத்தில் செலுத்தி இரத்த நாளங்களிலும்… அந்த இரத்த நாளங்களில் இருக்கும் ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது கண்கள் மூலமாக இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது…
1.இரத்தங்களில் தீமையை உருவாக்கும் கரு முட்டைகளோ அல்லது நோயாக மாறும் அணுக்களோ எது இருப்பினும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும்போது நல்ல அணுக்களாக மாற்றும் சக்தி பெறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்

இப்பொழுது கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை அதைக் கவரும்படி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அந்த உடல் உறுப்புகளுக்குள் அந்த அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெறும்போது உங்கள் உடல் முழுவதற்கும் ஒரு புது நல்ல உணர்ச்சிகள் ஏற்படும். இதை நீங்கள் உணரலாம்.

ஏனென்றால் இந்தப் பயிற்சி மூலம் உங்கள் உடல் உறுப்புகளான சிறு குடல் பெரும் குடல்.. கணையங்கள்.. கல்லீரல் மண்ணீரல்… நுரையீரல்… சிறுநீரகங்கள்… இருதயம்… கண்களில் உள்ள கருமணிகள்… நரம்பு மண்டலம்… எலும்பு மண்டலம்.. விலா எலும்புகள்.. குருத்தெலும்பு… எலும்புக்குள் உள்ள ஊண்.. தசை மண்டலம்… தோல் மண்டலம்… அதை உருவாக்கிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றேன் (ஞானகுரு).

இந்தத் தியானத்தைப் பயிற்சியாக எடுத்துக் கொள்ளுங்கள்…!

நம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பூமி தோன்றிய நிலையை… சூரியனிலிருந்து சிதறி வந்த கோளங்கள் பல ஒன்று சேர்ந்து ஆரம்ப நிலையில் ஆவியாய்க் குளிர்ந்து ஒன்றுபட்டு இப்பூமியாகச் சுழல்கின்றது என்ற யூக நிலையில் உள்ளனர்.

பூமி தோன்றிய நிலையை ஆரம்ப நிலைப்படுத்திப் பல நிலைகளில் செப்பிவந்துள்ளேன். வரிசைத் தொடரை இன்று உணர்த்துகின்றேன்.

இந்தப் பூமியே “ஆண்பால் பெண்பால் கொண்ட இரண்டு ஆத்மாக்களின் ஜோதிக் கலப்பினால்…” உற்பத்தியானது.

இந்தப் பூமியைப் போன்ற… இன்று வாழ்ந்திடும் வளர்ந்த அறிவு நிலை பெற்ற… ஆத்ம உடல் கொண்ட மனித இனம் இப்பூமியில் வளரும் நிலைக்கும் முதலே…
1.நம் சூரியனைச் சார்ந்துள்ள 48 மண்டலங்களில்லாமல்
2.மற்ற சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட நிலையில் வாழும் மண்டலங்களில்
3.பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித ஆத்மாக்கள் உண்டு.

நம் பூமியில் இம்மனித இன வர்க்கங்கள் தோன்றியதெல்லாம் மூன்று மாற்றங்களுக்குப் பிறகு தான் மனித இன வர்க்கமே அறிவு நிலை பெற்று வளர்ச்சி நிலையில் வாழ்ந்து வருகின்றது.

அதுவும் இக்கலியினால் மாற்றம் கொண்டு கல்கியில் இன்னும் மாற்றம் கொண்ட நிலையில்தான் செயல்படப் போகின்றது.

ஆனால் இந்நிலையில் செப்பியபடி மனித ஆத்மாக்கள் வளர்ச்சி கொண்ட மண்டலங்கள் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகின்றன.

அத்தகைய மண்டலங்களில் வாழ்ந்த அறிவு நிலை பெற்ற ஆத்ம உடல் கொண்ட சூட்சும நிலையைக் கொண்டோருக்கு எந்த மண்டலத்திலும் தன் நிலையைச் செயலாக்கும் பக்குவம் உண்டு.

அத்தகைய வளர்ச்சி கொண்ட… ஜீவன் கொண்ட ஆத்மாக்களினால்தான்
1.ஒவ்வொரு மண்டலமுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு
2.ஈர்ப்பு நிலையின் சக்தியினால் ஒவ்வொரு மண்டலமாக (புதிதாக) உருப் பெறுகின்றது.

சப்தரிஷிகளின் மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றனர். இவ் ஏழு நட்சத்திர மண்டலம் மட்டும் சப்தரிஷியினால் உருக்கொண்டு செயல்பட்டு வாழ்கிறார்கள் என்பதல்ல பொருள்.

இந்த ஏழு சப்தரிஷி மண்டலம் என்பதின் பொருள்…
1.இந்தப் பூமியிலிருந்து இம் மனித ஆத்மா உயர் நிலை பெற்று
2.ஜெப நிலை கொண்ட ஆத்ம மண்டலங்கள்தான் அந்த ஏழு நட்சத்திர மண்டலங்களும்.

அனைத்து மண்டலங்களுமே ஆத்ம நிலை பெற்ற ஜீவன் கொண்டு வாழ்ந்து வழி வந்த ஆத்ம மண்டலங்கள்தான். இப்பூமி தோன்றிய நிலையும் இரண்டு ஒன்றுப்பட்ட ஆத்மாக்களின் அன்புக் கலவையினால் ஆண் பெண் என்ற சக்தி நிலையில் உருவானது தான்.

1.மற்ற சூரியக் குடும்பத்தில் இருந்து வீரிய ஜெபம் கொண்டு
2.ஒரே நிலையில் சூட்சுமம் பெற்று
3.இப்பூமியை இரண்டு ஆத்மாக்களுமே ஒன்றுபட்டு ஈர்த்து ஆவி நிலையாக ஆத்மாவுடன் இணைத்து
4.இரண்டு ஆத்மாவுமே ஆத்மாவுக்குகந்த சக்தியின் ஈர்ப்புத் தன்மையினால்
5.பல சக்திகளைத் தன்னுள் ஈர்த்தே சிறுகச் சிறுக வளர்த்துத்தான் உயிருடன்
6.உணர்வுடனே இப்பூமியை இன்றளவும் வளர்த்துக் கொண்டே தன் சக்தியின் செயலினால் சுற்றிக்கொண்டு
7.பல உயிரினங்களை வளர்த்துக் கொண்டே வாழ்கின்றது இந்தப் பூமி.

இப்பூமியில் ஆண் பெண் என்ற பிணைப்பு நிலையினால் மற்ற உயிராத்மாக்களின் உற்பத்தி நிலை ஏற்படுவதின் நிலையும் இப்பூமியின் நிலையும் ஒன்றுபட்டதுதான்.

இப்பூமி தோன்றி உயிரணுக்கள் உதித்துச் சில காலங்களிலேயே இனத்துடன் இனச் சேர்க்கையினால் இன வளர்ச்சி பெறும் நிலை வந்துவிட்டது.

உயிரணு உதித்தால் அந்த உயிரணுவிலிருந்து பல கோடி உயிரணுக்கள் வளர்ச்சி பெறுகின்றன. அதன் தொடர்ச்சியிலே எந்த உயிரணுக்களுமே அழிவதில்லை. உயிரணுவாய் உதித்த பிறகு அவற்றின் உடல் பிம்ப நிலைதான் மாறு கொள்கின்றது.

இந்நிலையில் வளர்ச்சி பெறும் உயிராத்மாவாக ஞானி சித்தன் ரிஷி சப்தரிஷியாக ஆகி சூட்சுமம் கொண்ட பிறகு
1.ஒவ்வொரு சப்த ரிஷியின் நிலையிலும் தான் ஈர்த்து செயல் கொண்ட ஆசை நிலைக்கொப்ப
2.மற்ற மண்டலத்துடன் சேர்ந்தும் தனி மண்டலமாய் உருப்பெற்றும்
3.தான் வாழ்ந்து வழிவந்த மண்டலத்தை ஆண்டவனாய்க் காத்திடும் நிலையிலும்
4.தன் தன் சக்தி நிலைக்கொப்ப இவ்வுலகில் மட்டுமல்லாமல்
5.மற்ற மண்டலங்களிலும் பால்வெளி மண்டலத்திலும் சென்று வரும் நிலையிலும்
6.தான் பெற்ற சக்தியைச் செயலாக்குகின்றனர் சப்தரிஷிகளெல்லாம்.

ஆகவே… பூமியில் இன்று மனித ஆத்மாவாய் வளர்ச்சி கொண்ட நிலையில் நாம் சேமிக்கும் சொத்து நிலைதான் அப்பேரானந்த நிலை. ஆனால் வழியின் நிலையை அறிந்திடாமல் வாழ்ந்திடும் நிலைதான் இன்றுள்ள நிலை.

இன்றுள்ள மக்களின் எண்ண நிலையே “ஆராயும் நிலையையும் தர்க்க நிலையையும்” வளர்த்துக் கொண்ட நிலையாக உள்ளது.

எந்த நிலையையும் ஆராய்ந்து… அறிவு நுட்பத்தின் வழித்தொடரின் ஞான வழியில் வந்திட்டால்… உண்மை நிலையின் வழித் தொடரை அறிந்திடலாம்.

1.ஆனால் இன்றுள்ள ஆராயும் நிலையோ சஞ்சலமுடன் செயல்படுவதினால்
2.மெய் உணர்வை அறிந்திட முடியாமல் உள்ளது.

வேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது…? தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…?

 

கண்ணின் கரு விழிக்குப் பின் இருக்கும் நரம்பு மண்டலம் வழி கொண்டு நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்கும் கண் இணைக்கப்பட்டிருக்கிறது.

வேதனையான உணர்வுகள் நம் கண் வழியாகச் சென்று நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் இந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

தூண்டிய பின் அதனின் வலுவின் தன்மை கொண்டு அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நுகரச் செய்து அந்த வேதனையான உணர்ச்சி கொண்டு எண்ணம் சொல் செயல் என்று இயங்கத் தொடங்குகிறது.

அதே சமயத்தில் சுவாசித்தது வேதனையான உமிழ் நீராக மாறி சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது. அதனால் சிறு குடல் பெரும் குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கமடைகிறது.

சிறு குடல் பெரும் குடல் பலவீனம் அடைந்தால் நாம் உணவாக உட்கொண்ட இந்த உணவுகள் நஞ்சாக மாறி நஞ்சின் தன்மை கொண்ட இரத்தமாக மாற்றுகின்றது.

அப்படி நஞ்சாக மாறும் போது நம் உடல் உறுப்புகளுக்குள்ளும் இரத்தத்தின் வழி விஷத் தன்மை பரவி நம் உடலில் பல விதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நம் உடலில் உள்ள அணுக்களை உற்சாகப்படுத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நாம் அதே கண்கள் வழியாக ஏங்கிக் கவரப்படும் போது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் கண் வழி உள்ள நரம்பு மண்டலம் வழியாக
2.உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் பாய்ந்து உற்சாகமூட்டும் வீரியத் தன்மையாக அடைகின்றது.
3.அதே சமயத்தில் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயங்கி
4.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி நம் சிறு குடல் பெரும் குடல்களில் கலந்து உற்சாகம் அடையச் செய்கிறது
5.சாப்பிட்ட ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

பின் அந்தச் சக்திகள் அனைத்தும் நம் உடல்களில் உள்ள உறுப்புகள் அனைத்திற்குமே கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் கணையங்கள் கிட்னி இருதயம் இந்த நல்ல இரத்தங்கள் செல்லப்படும் அவைகளும் உற்சாகம் அடைந்து தீமையை நீக்கும் வலிமையான உணர்வைப் பெறுகின்றது.

இதைப் போன்று உடல் உறுப்புகளுக்குச் சக்தியைக் கூட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அடிக்கடி பெற்று தீமைகளைத் துடைத்துக் கொண்டே வந்தால்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலிலே அதிகமாகப் பெருகி
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே என்றுமே அழியாத வாழ்க்கை நாம் வாழ முடியும்…!

நல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்

 

“எண்ண நிலைப்படிதான் அனைத்து நிலைகளும் இயங்குகிறது…!” என்று உணர்த்தி வந்தேன். இந்நிலையின் சூட்சும நிலையை உணர்த்துகிறேன்.

முன் பாட நிலைப்படி… மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் அனைவரின் எண்ண நிலையும் மகிழ்ச்சி கொண்டதாகவும்… துக்கம் அனுஷ்டிக்கும் இடத்தில் அந்த நிலைக்கொப்ப அனைவரின் நிலையிலுமே துக்க நிலை சாடும் என்றுணர்த்தினேன்.

இப்படி இவ்வெண்ண நிலையின் சுவாச நிலை கொண்டுதான் இன்றைய “கைரேகை ஜோதிட நிலையும்… மனோவசிய நிலையும்” உள்ளன.

அந்நிலையிலுள்ளோர் (மனோவசியம் செய்பவர்) தன் எதிரில் அமர்ந்துள்ளவரின் எண்ணத்துடன் தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரது எண்ணத்துடன் ஈர்க்கும் நிலையில் மனோவசியம் செய்யப்படுவோரின் அனைத்து நிலைகளுமே செய்யப்படுபவருக்கு இவரின் எண்ணக் கலவையுடன் வந்து மோதி அனைத்து நிலைகளும் அறிகின்றனர். இந்நிலை அறிபவர்கள் மற்ற ஆவியின் தொடர்பை வைத்து ஈர்க்கும் சக்தியைச் செயல்படுத்துகின்றனர்.

ஆனால் நம்மில் உயர்ந்த ரிஷிகளின் நிலையும் எண்ண சக்தியின் சக்தி நிலைத்தொடர் கொண்டுதான் அவர்கள் சூட்சும நிலைக்குச் சென்றதின் நிலையும்.

இவ்வுலகினில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒவ்வொரு நிலையான எண்ணக் கலவையின் வாழ்க்கை நிலையுண்டு.

அவ்வழியில் நல்லுணர்வு கொண்ட சக்தி நிலையின் எண்ணக் கலவையுடன்… வாழ்க்கையில் வழி வந்தவர்களின் நிலையில்தான் இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே…
1.பல சக்தி நிலையை இவ்வெண்ணத்துடனே ஈர்த்து இன்று ஆண்டவனாய்ச் செயல்படுகின்றனர்.
2.அவர்கள் மனித ஆத்மாவாய் நம்மைப் போன்ற நிலையில் வந்தவர்கள் தான்…!

எண்ணமுடன் தீய சக்தியை வளரவிட்டவர்களின் நிலை எல்லாம் எந்த நிலைக்குச் சென்றிட்டார்கள் என்று முன் பாட நிலையிலேயே உணர்த்தியுள்ளேன்.

நல்லுணர்வின் வழி வந்தவர்கள்…
1.தன் வாழ்க்கையில் நடந்திடும் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஜெயித்த நிலை கொண்டு வந்தவர்கள் தான்
2.இவ் உலகில் தோன்றிய மகான்கள் எல்லாரும்.

இதன் வழி வந்தவர்களின் உடல்களைத்தான் இவர்களின் நிலையைக் காட்டிலும் சக்தி கொண்ட ரிஷிகள் தன் உடலாக ஈர்த்துச் செயல்படுகின்றனர்.

ஆதிசங்கரர் போன்றோரும் மற்றும் அருணகிரிநாதர் முகமது நபி புத்தர் இயேசு பிரான் ஐயப்பர் கோலமாமகரிஷி இக்கலியில் வந்திட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் இன்னும் பல ரிஷிகளும் இவ்வழியில் வந்தவர்கள் தாம்…!

நம் போகரே பல உடல்களைத் தன்னுடலாகச் செயல் கொண்டு செயல்படுத்தி வந்தார். இவ்வுலகினிலே ஆறுமுகனாய் இவர்கள் புராணக் கதையில் சொல்லிய நிலையில்லாமல் ஆறு உடல்களைத் தனதாகச் செயல்படுத்தி வந்தார்.

1.பிறவி எடுத்துப் பிறந்து வளர்ந்து வழிபடுத்தவில்லை தன் சக்தி நிலையை நம் போகர்
2.பல ஆத்மாக்களை ரிஷியின் நிலைக்குச் சென்றிடும் பக்குவ நிலை ஏற்படுத்தித் தந்தார் நம் போகர்
3.இன்று அனைவருக்கும் முருகனாய் ஜோதி அருள் அளித்திட ஆண்டவனாய்ச் செயல் கொண்டுள்ளார்.

இவ்வெண்ண நிலையின் தொடர் நிலையை வைத்துத்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலையெல்லாம் செயல் கொண்டு நடக்கின்றது. போகரைப் போன்றே இந்நிலையில் பல சித்தர்கள் இவ்வுலகெங்கும் செயல் நிலைப்படுத்தி நல் உணர்வுகளை இன்றும் செயலாக்கி வருகின்றனர்.

ஆனால் இக்கலியில் பக்தி நிலையும் தன் உணர்வும் குறைந்ததினால் பல நிலைகள் செயல்படாமல் செயற்கைக்கே அடிமைப்பட்டுச் சென்று விட்டனர்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நம் எண்ண சக்தியின் தொடர் நிலையை ஈர்த்து
2.நல்லுணர்வு கொண்ட எந்த ரிஷியின் சக்தியின் தொடரையும் நாம் ஈர்த்துச் செயல் கொண்டிட முடிந்திடும்
3.நாமும் அவர்களின் நிலையை அடைய முடியும் என்பதற்குத் தான்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்

 

நம் உடலில் உறுப்புகள் பழுதானால் மாற்று உறுப்பு கொண்டு சரி செய்கிறோம். உறுப்பை மாற்றி வாழ்ந்தாலும் சிறிது காலமே வாழ்கின்றோம். ஆகவே இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையை நாம் உணர்தல் வேண்டும்.

அதற்குத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்
2.அதன் வழியில் இருளை நீக்க வேண்டும்
3.வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன்
4.இதை ஏங்கிக் கேட்டு கொண்டிருந்தால் உங்களுக்குள் பதிவாகிறது.
5.பதிவான ஞானிகளின் உணர்வை மீண்டும் எண்ணினால் அந்த ஞானத்தை உங்களால் பெற முடியும்… அந்த வழியைக் காட்டும்.

நமக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தாலும் ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் அந்த உணர்வை உற்றுப் பார்த்தால் அது பதிவாகின்றது.

அவன் தவறு செய்தான்… தவறு செய்தான்… என்று திரும்பத் திரும்பச் சொல்லும் போது அந்த உணர்வை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அதனால் தீய உணர்வே வருகிறது

அதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.

நாம் எண்ணும் எண்ணம் எதுவோ அதிலே நம் கண் பார்வையைச் செலுத்திய பின் இந்த காற்றில் உள்ளதைக் கவர்ந்து (சுவாசித்து) நம் உயிரிலே மோதச் செய்கின்றது. இந்த உணர்வுகள் நம் அறிவாக இயக்கக்கூடிய நிலை வருகின்றது.

1.தீமை என்றால் தீமையின் அறிவாக நம்மை இயக்குகின்றது…
2.அப்பொழுது தீமையின் உணர்வையே நம்முள் வளர்த்து விடுகின்றது.

ஆனால் தீமையை நீக்க வேண்டும் என்ற உணர்வை நாம் எண்ணினால்
1.அதற்குண்டான வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக எண்ணி எடுத்து
2.தீமையை நீக்கினால் ஒழிய நாம் வேறு வழியில் அந்தத் தீமையை நீக்க முடியாது.

ஒரு வலிமை கொண்டவனின் (போக்கிரி) உணர்வு நமக்குள் வந்தால் நம் சாந்த உணர்வுகள் அடங்கிவிடுகிறது. என்ன தான் நம் மனதைச் சமாதானப்படுத்தினாலும் அந்த வலிமை நமக்குள் திடுக்… திடுக்… என்று அச்சத்தை ஊட்டி உடலிலே கடும் நோயாக வந்து விடுகின்றது.

நாம் எவ்வளவு நல்லவராக வேண்டுமென்று விரும்பினாலும் இதையெல்லாம் நமக்குள் வளர்ச்சியாகி நம்மை அறியாமலேயே நமது வாழ்க்கையில் கடும் நோய்களாக உருவாகின்றது.

இதைத்தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…” என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
1.இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய குணங்களை அதிகமாகச் சுவாசிக்கின்றோமோ
2.அந்தக் கணக்கின் பிரகாரம் அடுத்த உடலாக நம்மை மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வரும் நஞ்சை வென்ற உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால் அது வசிஷ்டர் பிரம்ம குரு.

அதை நுகர்ந்து உடலுக்குள் பெருக்கிக் கொண்டால்… இந்த வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பற்று அதிகமானால்… அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

ஆகவே அதன் மார்க்கங்களை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் தியானத்தில் உங்களுக்கு பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

உதாரணமாக நம்மை ஒருவன் திட்டினான் என்றால் அந்தத் திட்டியவனை எண்ணி அதை நுகர்ந்த பின் அந்தத் தீமையின் செயலே நமக்குள் வருகின்றது. அதே போல் வேதனைப்படுவோரை எண்ணும்போது அந்த வேதனைப்படும் செயலே நமக்குள் வருகின்றது.

1.வேதனைப்படுவோரை பார்க்கும்போது அதே நிலை.
2.வேதனைப்படுத்துவோரின் செயலை எண்ணும் போது அதுவும் தீய உணர்வாக நம்மை இயக்கி ஆத்திரப்படச் செய்கிறது.

அதைப் போன்ற தீமைகளை நீக்கிடத் தான் உங்களுக்குள் அரும் பெரும் சக்தியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது பெறும்படி செய்கிறோம்.

அகஸ்தியன் எப்படித் தன் தாயின் கருவிலிருந்தே தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்றானோ அதைப் போல நுகர்ந்தறியப்படும் போது உங்கள் இரத்தத்தில் கலந்து… அங்கே கருத்தன்மைகள் உருவாகிறது.

கருவான பின் உடல் முழுவதற்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பரவி உடல் உறுப்புகளில் உள்ள இருளை நீக்கும் உணர்வுகளாகப் அது பெருகத் தொடங்கும்.

1.ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி நம் உடலுக்குள் சேர்க்கப்படும்போது
2.எல்லா உறுப்புக்களிலும் இந்த தீமையை நீக்கும் உணர்வுகள் பெருகி
3.ஒளி என்ற உணர்வின் அறிவைப் பெருக்குகின்றது… ஒளியின் சரீரம் பெற நாம் தகுதி பெறுகின்றோம்.

நல் உணர்வு கொண்ட ஆத்மாக்களுக்காகவே உலகம் இன்றளவும் நிலைத்திருக்கின்றது – ஈஸ்வரபட்டர்

 

\இன்றும் இக்கலியில் ஆத்மீக நெறியும் நல்லொழுக்கம் அன்பு பாசம் பக்தி தர்மம் நியாயம் சமத்துவம் இப்படிப்பட்ட நல்லுணர்வுகளும் சத்தியத்துடன் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.
1.இந்த நிலையில் வாழும் ஆத்மாக்களின் நல்லுணர்விற்காகவே
2.இப்பூமியின் நிலை இன்றளவும் நிலைத்துச் செயல்படுகிறது.

எண்ணத்தில் நல் சக்தியும் தீய சக்தியும் உள்ள நிலையில்… நல்லுணர்வைக் காட்டிலும் தீய உணர்வின் வழி நிலைதான் பெருகும் நிலையில் உள்ளது.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் மட்டுமல்ல தீய உணர்வுடன் வாழ்வது. இவ்வுடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களிலும் தீய சக்தி நிறைந்த எண்ண நிலைகள்தான் நல்லுணர்வைக் காட்டிலும் பெருகிய நிலையில் உள்ளன.

ஆவி உலகிலும் நல்லுணர்வு கொண்ட ஆத்மாக்களின் நிலையுண்டு. வாழும் மனித ஆத்மாக்களிலும் இந்நல்லுணர்வின் நிலை உள்ளதினால்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலை இன்றளவும் இப்பூமியின் நிலையைக் காத்தருளும் நிலையில் செயல் கொண்டு நடக்கின்றது.

இன்றைய விஞ்ஞானத்தினால் செய்து வைத்துள்ள அணு குண்டுகளும் விஷ மருந்துகளும் நிறைந்துள்ள இந்த நிலையிலும்
1.ஒரு நொடியில் அனைத்துமே மாற்றம் கொள்ளும் விஷ சக்தியின் தாக்குதலிலிருந்து
2.நல்லுணர்வு உடையோர் வாழ்வதினால்… இவ்வுலக நிலையே நம் ரிஷிகளினால் காக்கப் பெற்று வருகிறது.

நல்லுணர்வையே உலகெங்கும் பரப்பிடும் நிலைக்காக பக்தி நிலையை வளரவிட்டதின் நிலையே… இன்று பக்தியையே தன் பேராசைக்கு உகந்த சக்தியாக நாடும் நிலையாக இன்றைய எண்ண நிலை உள்ளது.

பூமிக்காகவும் இப்பூமியில் வாழ்ந்திடும் உயிராத்மாக்களுக்காகவும் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திய நம் ரிஷிகளின் சக்தி நிலை செயல்படாமல்… மீட்டுச் செல்லும் நிலைக்கு இன்று வந்துள்ளது.

“மீட்டுச் செல்லும் நிலை…” என்பது…
1.இம் மாறப்போகும் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் இக்கலியுடனே ஈன நிலை பெற்று…
2.கல்கியின் ஆரம்ப நிலை உயிரினமாகிப் பல நிலைகளை எய்தி…
3.பல கோடி ஆண்டுகள் இவ்வெண்ண சக்தியுடனே அல்லல் கொண்டிடாமல் தடுக்கும் நிலை தான்.

இக்கலியிலேயே மனித ஆத்மாவை மனிதனாய் ஞானியாய் சித்த அருள் பெற்று சூட்சும நிலைக்குச் சென்றிடச் செயல் கொண்டிடும் நிலைதான் இன்றுள்ள நம் ரிஷிகளின் செயல் நிலை.

இந்நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து மாறப்போகும் இக்கலியின் நிலையை எண்ணத்தில் கொண்டு இவ்வெண்ண சக்தியினால் செயல் கொண்டே வாழ்ந்திடுங்கள்.

அழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை

 

இன்றைய வாழ்க்கையில் நோயை நீக்க மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கே இன்னொரு விஷத்தின் தன்மை கொண்ட மருந்துகளைக் கொடுக்கப்படும்போது அதில் உள்ள விஷமும் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.

இப்படி மனிதன் நோயை நீக்கப் பல உபாயங்களைச் செய்தாலும் இந்த விஷத் தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் உறுப்புகளைப் பாழாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆக… கொஞ்ச காலம் வாழ்வதற்காக நாம் எத்தனையோ உபாயங்களை வைத்துச் செயல்படுத்துகின்றோம்.

மனிதன் உறுப்புகள் செயலிழந்து விட்டால் நுரையீரலில் இருந்து எல்லா ஈரல்களுக்கும்.. கிட்னி… இருதயம்… போன்றவைகளையும் மாற்று உறுப்புகளை வைத்து மனிதனை வாழ வைக்க முடியும்…! என்று விஞ்ஞானி செயல்படுத்துகின்றான்.

ஒரு எலும்பே இல்லை என்றாலும் அந்த எலும்பைப் போல இன்னொரு உடலில் அந்த எலும்பை உருவாக்கும் அணுக்களை வைத்து மோல்ட் (அச்சு) செய்கின்ற மாதிரி செய்து மனிதனுக்குத்தக்க எலும்புகளை உருவாக்கி… கை கால்களுக்கோ மற்ற இடங்களுக்கோ அதைப் பொருத்தி மீண்டும் சாதாரண மனிதனைப் போல வாழச் செய்ய முடியும்…! என்று விஞ்ஞானிகள் செயல்படுகின்றனர்.

ஏனென்றால் எலும்புகள் உருவாக்கிய அணுக்களை வைத்து மீண்டும் அதைப் பெருக்கப்படும் பொழுது அந்த மலம் உருவாகின்றது. அப்படி வளர்த்து மீண்டும் பொருத்துகின்றான்.

பண வசதி உள்ளவர்கள் இதைப் போல் பல லட்சம் செலவழித்து அதை எடுத்துப் பொருத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படிப் பொருத்தினாலும்…
1.அங்கங்களை இழந்த நிலையை எண்னும் போது
2.மற்றவர்கள் எல்லாம் சுயமாக இருக்கப்படும்போது நமக்கு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று
3.மீண்டும் அந்த நோயின் உணர்வுகள் கிளர்ந்து வருகிறது.

இதைப் போல் தொடர்ந்து வரும் போது அதௌ முழுமையாக நீக்கும் திறன் இல்லை.
1.செல்வத்தைச் செலவழித்து. உறுப்புக்களை மாற்றி அமைத்தாலும்…
2.உடலில் வரும் அந்த வேதனை உணர்ச்சிகள் (வேதனை என்றாலே நஞ்சு)
3.உடலை விட்டுச் செல்லப்படும்போது… உயிருடன் சேர்ந்தே செல்கின்றது.

சேர்த்துக் கொண்ட இந்த வேதனைக்கொப்ப மாற்று உடலாக மற்ற உயிரினங்களாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

ஆனால் நாம்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் இத்தகைய விஷத் தன்மைகளை எல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நம் உடலில் பதிவாக்கிக் கொண்டால்
1.நமது வாழ் நாளில் தீமைகளைக் கண்டாலும் உடனே அதைத் தடுத்து
2.நல்ல உணர்வாக அந்த அணுக்களையே மாற்றிவிட முடியும்.

இன்று எப்படி விஞ்ஞானி இந்த உறுப்புக்களின் தன்மையைப் பெற்று அந்த எலும்பையே உருவாக்கச் செய்கின்றானோ இதைப்போல நல் அணுக்களைப் பெருக்கி அதைச் சீராக்க இயக்கிட முடியும்.

உறுப்புகளை உருவாக்க முந்தி மற்ற பொருள்களால் செய்து வைத்தான். இப்பொழுது அதே போல் உறுப்புகளையே உருவாக்கிச் செயல்படும் நிலைகளை வைத்து கொள்கின்றான்.

மனிதனின் மேல் தோல் பாழாகிவிட்டால் அதைப் போல் தோலை உருவாக்கும் அணுக்களை வைத்து வளர்த்து மீண்டும் அழகான உடலாகவும் உருவாக்கும் நிலையைச் செய்கின்றான்.

1.ஆனால்.. இந்த உயிரைப் போல (அழியாத) உணர்வின் தன்மை உருவாக்கும் செயல் விஞ்ஞானியிடம் இல்லை.
2.உடலைக் காக்கப் பல முறைகள் கொண்டு விஞ்ஞானி செயல்படுத்தினாலும்
3.வேதனை உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
4.உடலுக்கு பின் சேர்த்து கொண்ட வேதனைக்கொப்ப இந்த உயிர் மாற்று உடலை உருவாக்கி விடுகின்றது.

இதிலிருந்து யாரும் தப்ப முடியவில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டால்… நாம் அந்த நினைவினை அடிக்கடி எடுக்கப்படும் பொழுது…
1.ஒரு கஷ்டப்படுவோரோ வேதனைப்படுவோரோ துயரப்படுவோரோ… அல்லது
2.ஒருவர் நம்மிடம் பழகி உடலை விட்டு அவர் பிரியும் போதோ அந்த நேரமெல்லாம்
3.அதைத் தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் நாம் வைத்து
4.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
5.உயிர் வழியாகக் கவர்ந்து நம் உடலுக்குள் கண்ணின் நினைவைக் கொண்டு செலுத்தி
6.நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று உள் முகமாகப் பாய்ச்சப்படும்போது
7.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நம் இரத்தத்தில் பெருகி தீமையான அணு உருவாகாதபடி தடுக்கின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. ஒளியான உணர்வாக மாறுகின்றது.

வாழ் நாளிலே எத்தனை கோடித் தவறுகளை நாம் பார்த்தாலும் அந்தந்தச் சமயத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டுமென்று உள்ளுக்குள் செலுத்தி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும். எந்த நேரத்தில் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் உயிரான்மா துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும். அழியாத நிலைகள் பெறலாம்.

சக்தி பெற்று சூட்சம நிலையில் இருக்கும் ஞானிகளின் இன்றைய முக்கியமான செயல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மாறப் போகும் இஜ் ஜீவ உடலையோ மாற்றம் கொண்டு சுழலப் போகும் இப்பூமியின் நிலையையோ சலிப்பு நிலைப்படுத்தி எண்ணத்தை வளரவிடாமல் நம் ஆத்மாவின் உயர்ந்த நிலையை உயர்த்திடும் எண்ணத்தில் செயல் கொண்டு நடந்திடல் வேண்டும்.

1.பூமி ஆரம்ப நாள் தொட்டு வந்திட்ட உயிரணுவாய் உயிராத்மாவாய்… வளர்ந்த நற்ஜோதியின் நல்தெய்வங்களெல்லாம்…
2.இப்பூமியில் ஒவ்வொரு பிரளயத்திலும் பல நிலையிலும் வாழ்ந்து அந்நிலையின் தொடரினால்…
3.இன்றளவுமுள்ள நல் நிலையில் வந்திட்ட நல் ஆத்மாக்களின் சக்தி நிலையின் தொடராக…
4.சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே இன்று பல நிலைகளுக்கு…
5.நல் ஆத்மாக்களாகப் பலரை ஈர்க்கும் நிலைகொண்டு செயல்படுகின்றன.

இவ்வுலகில் இந்தியாவில்தான் ஞானிகளும் சித்தர்களும் வழி வந்ததின் நிலை அதிகம். இவ்வுலகனத்துமே இவ் இந்தியாவில் இருந்துதான் பல சித்தர்கள் சென்று ஆத்மீக வழியை வழி நடத்தினார்கள்.

இயேசு கிருஸ்து இந்தியாவில் சில இடங்களில் வந்து வாழ்ந்து சென்றார். முகமது நபியும் இவ்விந்தியாவில் வந்து வாழ்ந்தவர்தான். புத்தரின் நிலையும் அதுவே…!

“இந்தியாவை உயர்ந்த எண்ணத்தில் காட்டல் வேண்டும்…” என்ற நிலையில் விளக்கவில்லை. இப்பூமியில் உள்ள அனைத்து நிலைகளும் பொதுவானவையே…!
1.ஆத்மீக நெறியில் தொடர் நிலை வழி வந்த முதல் நிலை இங்குதான்.
2.ஆனால் இன்று நாம் எல்லாரும் முருகராய் வழிபடும் அப்போகரின் ஆரம்ப ஞான சித்து நிலை பெற்ற இடம் சீனாவில்தான்.

இன்று… இன்றைய மக்களினால் பிரித்த நிலைதான் சீனா… இந்தியா என்ற நிலையும்…! அந்நிலையில் வழிவந்தவர்தான் நம் போகர்.

போகர் சித்து நிலையின் தொடர் நிலையில் சூட்சுமத்தில் செயல் கொண்டிடும் சக்தி பெற்ற பிறகு இன்று மெக்கா மதீனா என்று புண்ணிய யாத்திரை ஸ்தலமாகச் சென்றிடும் இடத்தில் இதே நம் போகர்தான் முகமது நபியின் நாமத்தில் செயல் கொண்டு அந்நாட்டில் இப்பக்தி நிலையை அல்லா என்னும் நாமத்தில் வளர விட்டார்.

இன்றைய புண்ணிய ஸ்தலமாய் செயல் கொண்டு துதித்திடும் அம் மெக்கா மதீனாவின் திரைகளுக்குள் பூஜிக்கும் சக்தி நிலை என்ன..?

காட்சி – யானைச் சிலையின் மேல் லிங்க ஜோதியின் காட்சி…!

பல கோடி மக்கள் தரிசிக்கச் சென்றிடும் அந்நிலையிலுள்ள திரையின் மர்ம நிலையென்ன…?

1.ஆண்டவனின் சக்தி நிலை ஒன்றே
2.இஜ் ஜாதி இனம் போர்வையில் வழி வந்ததின் நிலைதான் இன்றுள்ள நிலை.
3.அங்குள்ளவர்கள் சிலருக்கு மட்டும் உண்மையின் நிலை புரியும்.

அல்லாவாய் அங்கு செயல்படுத்துபவர் யார்…?

காட்சி: மேடையில் ஜிப்பா அணிந்து தலையில் துணியுடன் ஒரு பெரியவர் காட்சியளிக்கின்றார்… புன்னகைத்தே தலையை மட்டும் அசைக்கின்றார்…! அடுத்து பெரிய வேல் எதிரில் நிற்கிறது…!

யாரென்று எண்ணுகின்றீர்…?

அல்லாவாய் செயல் கொண்டவரும்… முருகனாய் வழி வந்தவரும்… இலங்கையில் கதிர்காமத்தில் சில நிலைகளைச் செய்தவரும்… “அனைவருமே ஒரே சக்தி நிலை கொண்ட போகரின் நிலைதான்…”

சூட்சும நிலையில் எவ்வுடலையும் தனதாக ஏற்கும் சக்தி பெற்ற போகரினால் பல நாடுகளில் அவரது எண்ணத்தின் செயல் ஜோதி சக்தி “இன்றும்…” செயல் கொண்டு வருகின்றது.

அவர் வாழ்ந்த ஒவ்வொரு சூட்சும நிலையிலும் பல போதனை சக்திகளை வளரவிட்டுச் சக்தியளித்துச் செயலாக்கியுள்ளார். ஜாதகம் நாடி மருத்தவம் இப்படிப் பல நிலைகளைச் சித்து நிலை கொண்ட நாளிலேயே படரவிட்டுள்ளார்.

இன்று இவ்வுலகெங்கும் வெடி நிலையை ஆரம்பித்தவரே நம் போகர்தான். ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு வெடி நிலையினால் பல நிலைகளை ஆரம்ப நாளில் செயலாக்கிக் காட்டியவர் நம் போகர்தான்.

சித்து நிலையில் அவர் அறிந்த நிலைதான் இன்று இவ்வுலகம் முழுவதும் பரவியுள்ள மருத்துவ நிலையும். அந்நிலையின் தொடரை வைத்துத்தான் இன்றைய வளர்ச்சி நிலையெல்லாம்.

அவர் சீனாவில் வாழ்ந்த நாளில்தான் சூட்சுமத்தின் ஆரம்ப நிலையில் பல நிலைகளை முதன் முதலில் செயலாக்கி வெளிப்படுத்தினார். அன்றே பல சக்தி நிலையை சித்து நிலையினால் சூட்சும நிலை பெறும் நிலையெல்லாம் அறிந்து செயலாக்கினார்.

இவரின் நிலை போன்றே…
1.இவ்வுலகம் தோன்றிய நாள் தொட்டு தன் சக்தியைச் செயல் கொண்டு வந்திடும் நல் ஆத்மாக்களெல்லாம்
2.இக்கலியில் வாழ்ந்திடும் பிம்ப நிலை கொண்ட ஆத்மாக்களை
3.நல்லுணர்வு கொண்டு வந்திடும் சக்தி நிலைக்கு அழைத்துச் சென்றே
4.இம் மாறப்போகும் கலியின் பிடியிலிருந்து மீட்டே…
5.கல்கியில் நல் ஆத்மாக்களாய் செயலாக்கிட அழைத்துச் செல்கின்றனர்…!

மனிதனின் எண்ண வலிமை… எண்ண உறுதி… கொண்டு எதைப் பெற வேண்டும்…?

 

மிருகங்களெல்லாம் என்ன செய்கின்றது…? தன் உடல் வலுவைத் தான் காட்டுகிறது.

நான் (ஞானகுரு) வேட்டைக்குப் போயிருக்கின்றேன். புலி கடினமானது அதை ஈட்டி வைத்துக் குத்த முடியுமோ… முடியாது…!

நல்ல கூர்மையான ஈட்டி வைத்துக் கொண்டு புலி அப்படி வருகின்றதென்றால் ஒரு பக்கமாகப் பம்பும். பம்பியவுடன் நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் பார்வைக்குத் தாக்க வரும்போது இப்படி நேராக வைத்தால் சீறித் தாக்கும்.

ஆனால் இலேசாகச் சாய்த்து வைத்தால் போதும். மேலே வந்தவுடன் அது லபக்… என்று ஊடுருவிவிடும். விட்டுவிட்டோம் என்றால் தய்யா… தக்கா… என்று குதிக்கும்.
1.மனிதன் தன் எண்ண வலு கொண்டு… உறுதி கொண்டு
2.அந்த ஈட்டியை வைத்தான் என்றால் புலியைக் கொன்று விடலாம்.

புலி உடல் வலு கொண்டு தான் தாக்கும். மனிதனை ஒரு அடி அடித்தால் குடல் எல்லாம் பிய்த்துக் கொண்டு போட்டுவிடும்.

தெரிந்தோ தெரியாமலோ நான் வேட்டைக்குப் போகும்போது எனக்கு இந்த மாதிரி யுக்தி வரும். ஈட்டியைக் கையில் வைத்துக் கொண்டு புலி வருகின்றது என்று இப்படித் தாக்கினால் பிரண்டு ஓடும். ஈட்டி குத்தியிருந்தால் இன்னும் ஆவேசமாகத் துடிக்கும். கொஞ்ச நேரத்தில் இரத்தமெல்லாம் வெளியில் போய் விட்டது என்றால் சுணங்கி விடும்.

ஒரு கரடிக் கூட்டத்திற்குள் போகும் போதும் இதே யுக்தி கொண்டு ஈட்டியை வைத்தால் போதும்.

அது என்ன செய்யும்…? எதாவது கொடுத்தால் கையில் பிடித்து கொள்ளும். நாம் வலுக்கொண்டு நன்றாகப் பிடித்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பொசுக்கென்று கையை உருவிவிடும்.

நாம் வலுவாக இரண்டு கைப்பிடியை வைத்துக் கொண்டு பிடித்திருந்தால் மண்டி போடும் இப்படியே இழுக்கும். மண்டி போட்டு இழுக்கும் உட்கார்ந்து. நன்றாக இழுத்து வலுவாக விட்டு லபக் என்று விட்டோம் வயிற்றில் ஈட்டி குத்தும்.

மனிதனுடைய எண்ணங்கள் எப்படி இருக்கின்றது…? என்ற வகையிலே குருநாதர் ஒவ்வொரு செயல்களிலும் செய்து காட்டுகின்றார். எது…?

மனிதனின் எண்ண வலுக் கொண்டு எப்படி மிருகங்களைக் கொல்கின்றான்…? என்பதைக் காட்டுகின்றார்.

உணர்வுக்கொப்ப இசை கொண்டு ஊதும் போது பாம்பு மகுடியில் ஆடுகின்றது. அவன் கையில் “விழுது…” (பாம்பு மிரட்டி) வைத்திருப்பான். அந்த விழுதைக் கையில் வைத்தவுடன் பையிலிருந்து பாம்பை எடுத்துக் கொண்டால் படம் எடுப்பதைத் தாழ்த்திவிடும்.

1.மனிதன் எண்ண உணர்வினால் எதையும் அடக்கக் கூடிய வல்லமை பெற்றவன்.
2.நாம் அதிலிருந்து பிறந்து வந்தவர்கள் தான்
3.பல சரீரங்களில் ஒன்றுக்கொன்று இரையாகி வந்தவர்கள் தான்.
4.எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட நிலையில் அதை அடக்கக்கூடிய சக்தி மனித உணர்விற்கு உண்டு.

இதை எல்லாம் காட்டிற்குள் அழைத்துக் கொண்டு போய் குருநாதர் கொடுக்கின்றார்.

கலியிலிருந்து கல்கி உலக மாற்றம்… “பிரளயம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தெய்வ நிலை கொண்ட ரிஷிகளின் சக்தியினால் இப்பூமியில் இன்று வாழ்ந்திடும் மனித இன வர்க்கத்தின் தொடர் நிலையே அடுத்து மாறப்போகும் கல்கியில் வந்திடும் உயிரினங்களின் சக்தி இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை கொண்ட ஆத்மாக்களின் சக்தியைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற நிலை வரப்போகின்றது.

இப்பூமி தோன்றிய நாள் தொட்டு இம் மனித ஆத்மாக்களாய் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட்ட நிலைகள் மாறி மாறிப் பல தடவை (மூன்று) ஏற்பட்டுள்ளன.

இப்பூமியில் ஆரம்பத்தில்…
1.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் இயற்கையின் தாவர வர்க்கத்திலிருந்து மாறு கொண்ட உயிரினங்கள் வளர்ச்சி பெற்றன
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனித உடல் கொண்ட ஆத்ம நிலையும் வந்தது.

அந்நிலையின் வளர்ச்சி கொண்டு இப்பூமியின் பிரளய நிலை மாறி மற்ற நிலை வந்த பொழுதும் ஆரம்ப நாளில் இப்பூமியில் தோன்றிய உயிரணுக்களின் நிலைக்கும் இரண்டாவது மாற்றம் கொண்டு வளர்ந்திட்ட உயிரணுக்களின் நிலைக்கும் மாறு கொண்ட நிலை வந்தது.

அந்நிலையின் தொடர்ச்சியில் பல கோடி ஆண்டுகள் இப்பூமியின் தொடர்ச்சி நிலை இருந்தது. ஒவ்வொரு மாற்றம் கொண்ட நிலையிலும்
1.இப்பூமியின் நிலையும்… உயிரினங்களின் நிலையும்
2.இப்பூமியில் வளர்ந்த தாதுப் பொருட்களின் நிலையும் மாறி மாறித்தான் வந்து கொண்டுள்ளன.

இன்று நம் பூமியில் பல நிலைகொண்ட உலோகங்கள் சில சில இடங்களில் வளர்ந்து வருகின்றன. ஆனால் உலோக சக்தியிலேயே உருளுகின்ற மண்டலங்கள் சில உள்ளன.

மற்ற அமில நிலைகளை ஈர்க்காமல் ஒரு நிலை கொண்ட ஒரே அமில சக்தியின் சக்தியை மட்டும் ஈர்த்து வளருகின்ற சிறிய மண்டலங்கள் சில உள்ளன.

நட்சத்திர மண்டலமாக உருளுபவை நிலையெல்லாம் இந்நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன. மாற்றம் கொண்ட மண்டலமும் உண்டு.

நம் பூமியில் மாறி மாறி வந்திடும் இப் பிரளய நிலையில் உயிரினங்களும் மாற்றம் கொண்டே சுற்றி வருகின்றன என்று சொன்னேன். உயிரினங்கள் சுவாசித்து வெளிப்படுத்தும் நிலைக்கொப்பத் தான் அவற்றின் சக்தி நிலையுள்ளது.

ஆனால் பூமி ஒவ்வொரு தடவையும் மாற்றம் கொண்டு சுழலும் நிலையில்
1.பூமியின் சுவாச நிலையும் மாற்றம் கொண்ட நிலையின் தொடரினால்
2.அந்நிலையிலிருந்து வளர்ச்சியுறும் இன வர்க்கங்கள் அதற்குகந்த நிலையில்தான் வளர்கின்றன.

ஆரம்ப நாளில் உலகம் தோன்றிய நிலையிலிருந்து பல பிரளய நிலை ஏற்பட்டு அன்று தோன்றிய உயிரினங்கள்
1.அன்றிலிருந்தே எவையுமே அழிந்திடாமல் பல எண்ண நிலையில் சக்தி நிலையின் தொடர்பு கொண்டு…
2.இன்றளவும் என்றென்றும் வாழ்ந்து கொண்டேதான் உள்ளன.

பல புராணக் கதைகளைக் கேட்டு வருகின்றீர்கள்… இவற்றின் நிலையெல்லாம் என்ன…?

ஒவ்வொரு பிரளயம் நடப்பதற்கும் முந்தைய வாழ்க்கையில் நடந்த நிலைகளை அவ்வாத்மாவின் தொடர் கொண்டு வந்திட்டவர்கள்… அடுத்த பிரளயத்தில்…
1.சக்தி கொண்ட நிலை பெற்றவர்களின் எண்ணத்தில் உதித்திட்ட நிலைகள்தான்
2.இன்று நாம் நம்ப முடியாமல் கேட்டிடும் புராணக் கதைகளெல்லாம்.

எவ்வெண்ணமும் முன் தொடரில்லாமல் வருவதில்லை…!

வாழ்க்கையில் நடப்பவைக்கும் கனவில் காண்பவைக்கும் மாறுபட்டுக் காண்கின்றோம். எவையுமே பொய்யல்ல…!

இவ்வுலகம் எத்தனை பிரளய நிலை ஏற்பட்டுச் சுற்றிக் கொண்டு வந்தாலும் எண்ணமும்… எண்ணத்தின் கலப்பினால் நாம் கண்டு பேசி வாழ்ந்திடும் நிலையெல்லாம்… “நம்மைத் தொடர்ந்து கொண்டேதான் வரும்…!”

பரமபதம்…!

 

புலி மிகவும் கொடூரமான விஷத் தன்மை கொண்டது. உதாரணமாக புலி ஒரு மானைத் தாக்கப்படும்போது அந்த விஷத்தின் தன்மை மானை உருவாக்கிய அணுக்களுக்குள் ஊடுருவி அந்த உணர்வுகள் வலுப் பெறச் செய்கின்றது.

மான் இறந்து விட்டால் புலியின் ஈர்ப்பிற்குள் வந்து புலியாகப் பிறக்கின்றது. இப்படித் தான் பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.பல உடல்களுக்கு இந்த உடல் இரையாகி…
2.இரையாக்கிய உடலின் உணர்வின் சத்தை நுகர்ந்து தனக்குள் இரையாக்கி..
3.அந்த இரையின் உணர்வை உயிர் செயலாக்கப்படும்போது பரிணாம வளர்ச்சி அடைந்து…
4.இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது என்பதனை நாம் மறந்திடலாகாது.

இதை நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. வைகுண்ட ஏகாதசி அன்று பரமபதம் என்ற நிலையில் ஒரு அட்டையை வைத்திருப்பார்கள். அதிலே பார்க்கலாம்.

முதலில் தாயத்தைப் போடுவார்கள். விழுகும் தாயத்திற்குத் தக்க காய்களை வைத்து அங்கே நகட்டுவார்கள். சிறுகச் சிறுகக் காய்கள் நகற்றப்படும் போது.. பாதையில் ஏணி இருக்கும். ஏணியின் பக்கம் சென்று விட்டால் மேலே சென்று விடுகின்றது.

சிறு ஏணியில் ஏறினாலும் அதற்கடுத்த கட்டம் விஷம் கொண்ட பாம்பு இருக்கும். அது தீண்டிவிட்டால் மீண்டும் கீழே இழுத்துக் கொண்டு வந்துவிடும். நாய் நரி போன்ற நிலைகளை அங்கே போட்டுக் காட்டியிருப்பார்கள்.

அடுத்து மீண்டும் தாயத்தை உருட்டி மேலே செல்லும் போது மிகப் பெரிய ஏணி மூலம் துரித நிலைகள் கொண்டு மேலே சென்று விடுகிறோம்.

மிகவும் வேகமாக மேலே வந்துவிட்டோம்…! என்று இறுமாப்பு கொண்டலும் அடுத்த கணம் அருகிலே பெரிய பாம்பு காத்திருக்கின்றது.

தாயம் அதிலே விழுந்து விட்டால் அதன் வாயின் பக்கம் சென்ற பின் நேராகக் கீழே இறக்கிப் பன்றியின் பக்கம் கொண்டு வந்து விடும்.

பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை எப்படி நீக்கி நல்லதை எடுத்ததோ அதைப் போல மீண்டும் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி நீக்கித் தான் அடுத்து மனித நிலைகளைப் பெற முடியும் என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

1.அதாவது உயர்ந்த நிலையில் ஏணியில் மேலே சென்றாலும்
2.ஒரு விஷத்தின் தன்மை தாக்கப்படும்போது மீண்டும் கீழான பிறவிகளுக்குப் போய்விடுவோம் என்பதனை
3.இரவு முழுவதும் நாம் விழித்திருந்து சிவன் ராத்திரி… வைகுண்ட ஏகாதசி அன்று
4.இந்த விளையாட்டின் மூலமாக நம்மை உணரும்படி செய்தனர் ஞானியர்.

காரணம்… தீமைகளை நீக்கி மனிதனாக உருவாக்கிய நம் உயிரின் நிலைகள் கொண்டு இந்த மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள்.. தீமையான உணர்விலே சிக்கினால் அதன் உணர்வு கொண்டு மீண்டும் இழி நிலையான சரீரத்தில் கொண்டு போய் நம்மைச் சேர்த்துவிடும் என்று இரவு விழித்திருக்கும் போது இத்தகைய பரமபதத்தை ஆடுவார்கள்.

மனிதர்கள் நாம் தெரிந்து கொள்வதற்காக சாஸ்திர விதிகள் இவ்வாறு கூறுகின்றது.

ஆக… பெரிய ஏணி எடுத்து தப்பிச் சென்றாலும் அடுத்து வரும் பெரிய பாம்பின் தன்மை வரும் பொழுது அதிலிருந்து தப்புவதற்கு என்ன வழி…?

பரமபதம் என்பது… இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் உணர்வு கொண்ட இருபத்தி ஏழு உணர்வுகளும் ஒன்றானால் அடுத்து பிறவியில்லா நிலை அடையும் நிலை.

1.என்றுமே பிறவியில்லா நிலைகள் கொண்டு எதுவும் எதிர்ப்பு இல்லாத நிலைகள் கொண்டு
2.அருள் உணர்வுகளைப் பெற்றால் இருளை அகற்றிப் பேரொளி என ஆக முடியும் என்பதனை
3.பரமபதம் என்று ஒரு காகிததை வைத்து அதிலே தாயத்தை உருட்டி விளையாடும் போது “தன் நிலையை அடையும் படி செய்கின்றனர்…!”

ஆனால் இதையெல்லாம் நாம் விளையாட்டிற்காக என்று நாம் பார்த்துத் தெரிந்து கொள்கின்றோமே தவிர இயற்கையின் உண்மையின் நிலைகளை அறியவில்லை.

சிவன் ராத்திரி என்று விழித்திருப்பதும் வைகுண்ட ஏகாதசி என்று விழித்திருப்பதும் அன்றைய நாள் ஒரு விளையாட்டு மூலமாக
1.பேருண்மைகளை எல்லாம் அறியும்படி நமது நாட்டின் சாஸ்திரங்கள் இருப்பினும்
2.நமது ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வினை இன்னமும் நாம் அறியாமல் தான் இருக்கின்றோம்…!

குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று காதலிப்பவர்கள் தற்கொலை செய்தால் எந்த நிலை அடைகிறார்கள்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

உதாரணமாக வாலிப பருவத்தில் காதலிக்கின்றனர். ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர்.

ஆனால் குடும்பத்தில் பற்றுடன் இருப்போர் (தாய் தந்தையர்) இது எதற்கு…? இது நமக்கு ஆகாத நிலைகள்…! என்று உணர்த்துகின்றனர்.

இதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இதன்படி என்ன வாழ்க்கை…? என்று இருவருமே மடிந்துவிடுவோம்…! என்று தற்கொலை செய்கின்றனர்.

ஆனால் தற்கொலை செய்யும் இந்த உணர்வுகள் யாரால் இது ஏற்பட்டதோ… இந்த உணர்வின் தன்மை உடலை விட்டு சென்ற அந்த ஆன்மா அவர்கள் உடலில் சேர்ந்து இது உயிரின் தன்மையை அதனை வேதனைப்படச் செய்து இந்த உடலை வீழ்த்திவிட்டு மீண்டும் மனிதனல்லாத உருவுக்கு அழைத்துச் செல்கிறது.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்தாலும்… தற்கொலை செய்யும் உணர்வு வரப்படும்போது.. “இதிலிருந்து விடுபடலாம்…” என்று எண்ணுகின்றனர்

ஆனால் வெளிவந்தபின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலுக்குள் தான் செல்ல முடிகிறது. அந்த உடலையும் வீழ்த்தி விட்டு மிகவும் நஞ்சான நிலையில் வெளி வருகிறது.

தாய் தந்தையர் பற்றாக இருந்து பிளைகளை வளர்த்து ஆதரித்துப் பண்புள்ளவராக மாற்றினர். இவ்வளவு செய்தும் கடைசியில் தன் குழந்தை இப்படிச் செய்துவிட்டதே என்று அவ்ர்களும் கடும் வேதனைப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட வேதனையுடன் குழந்தையை எண்ணும் போது தற்கொலை செய்த அந்த ஆன்மா தாயின் உடலுக்குள் வருகின்றது.

தற்கொலை செய்யும் உணர்வுகளை அங்கே ஊட்டுகின்றது. அதுவும் பலவீனமாகின்றது. அந்த உடலையும் அதில் உள்ள நல்ல அணுக்களையும் மடியும் தன்மை செய்கிறது

இதன் வழி அந்த உயிரான்மா சென்றால் தான் எந்த நிலை பெற்றதோ அந்தத் தாயின் உடலுக்குள் இந்த ஆன்மா புகுந்து அதன் வழி செயல்பட்டுத் தாயைக் கொல்லவும் செய்கின்றது… நரகலோகத்திற்குத்தான் அனுப்புகிறது. தானும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றது…!

1.ஆக சிறிது நேரம் சந்தோஷத்தை ஊட்டும் இந்த உணர்வுகளில் சிக்குண்ட நிலையில் (தற்கொலை)
2.அடுத்து மனிதன் அல்லாத உருவாகப் பாம்பாக… தேளாகத் தான் உருப்பெற முடியும்.

தாய் தந்தையரை வேதனைப்படச் செய்வோர் இதைப் போல் விஷத் தன்மையைக் கலந்தால் சிந்தனையற்ற நிலை கொண்டு விஷத்தைப் பாய்ச்சி உணவாக எடுக்கும் உயிரினங்களாக நம்மை உயிர் மாற்றிவிடும் என்பதை மறந்திடலாகாது.

அதைக் காட்டுவதற்குத் தான் “சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான்…!” என்று உணர்த்தினார்கள்.

1.நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலிலே பதிவாகி
2.அதன் உணர்வைத் தொடர் வரிசையில் எண்ணும் போது அதனின் உணர்வின் அணுக்களாகி
3.அந்த உணர்வின் செயலாகவே நம்மை இயக்குகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நல்லது.

இன்றைய இப்பூமியின் பூமத்திய ரேகையின் நேர் கோட்டை வைத்து  அந்த நிலையில் இன்றைய விஞ்ஞானிகளால் மேலே வான மண்டலத்தில் வான இயல் நுட்பக் கருவிகளை வைத்து இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தைக் கண்டறிகின்றனர்.
 
அதைப் போல இப்பூமத்திய ரேகையின் மையத்தில் இப்பூமியின் உள் பாகத்தில் சில நிலைகளைச் செய்வித்தால் இப் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் தன்மையைக் கொண்டு…
1.இப்பூமியில் தற்பொழுதும் இனி நடக்கப்போகும் காலத்தின் இயற்கையின் சீற்றத்திலிருந்து
2.எந்தெந்த இடங்களில் நிகழப்போகும் பெரும் மாற்றத்தைக் கண்டறிந்து அந்த ஆத்மாக்களைக் காத்திடவும் முடிந்திடும்.
 
வான நிலையில்தான் இவர்களின் ஆராய்ச்சி நிலை எல்லாம் உள்ளது. பூமியின் உள் நிலைகளை அதிகமாகக் காண முயலவில்லை.  
 
ஆனால் இப்பூமி கவர்ந்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்துதான் இப்பூமியைச் சுற்றியுள்ள வான நிலையும் உள்ளது.
 
வளர்ந்திட்ட விஞ்ஞானத்தின் சக்தி அறிந்த ஆத்மாக்களினால் அவர்களின் சக்தியையே செயல் கொண்டு காத்திடும் நிலைப்படுத்திடும் ஆத்மீக நெறியையும் கலக்க விட்டால் உலகைக் காக்கவும் முடிந்திடும்.
 
இவ்வுலகையே செயலாக்கிடும் சப்த ரிஷிகளின் சக்தி கொண்டு…
1.மனித உடலுடன் உள்ள விஞ்ஞான ஆத்மாக்களினால்
2.இவ்வுலகை இக்கலியின் கடைசி மாற்றத்திலிருந்து காத்திடும் சக்தி நிலையும் உண்டு.
 
ஒவ்வோர் ஆத்மாவிற்குமே ஆதி சக்தியின் செயல் சக்தி அனைத்தும் உண்டு. செயல்படுத்திட்டால் அந்த நற்சக்தியுடன் கலந்தே செயலாக்கிட முடியும்.
 
சக்தி பொதுவானதே…!

மெய் வழி செல்லும் பாதையைத் தான் எம்மால் காட்டிட முடியும்…. ஏற்றுக் கொள்வதும் அதன் வழி செயல்படுத்துவதும் அவரவர்கள் எண்ணத்தால் தான் அது முடியும்.

ஞானிகள் கொடுத்த தத்துவங்கள் காலத்தால் மாற்றப்பட்டு அந்த நூல்கள் அனைத்தும் மாற்றம் கொண்ட உருவில் தான் இன்று உள்ளது

 

வான்மீகி மகரிஷியினால் இயற்றப்பட்ட இராமாயணக் காவியத்தைக் காலப்போக்கிற்கும் அவரவர்கள் வாழ்ந்த எண்ண நிலைக்கொப்ப நாம் மாற்றப்பட்ட இக்காவிய நூலைப் போலவே
1.இன்று இவ்வுலகில் தோன்றிய ஒவ்வொரு நூலும்
2.கால நிலையில் எண்ண நிலைக்கொப்ப மாற்றம் கொண்ட உருவில் தான் உள்ளது.

இயேசு கிறிஸ்து இயற்றியதாக பைபிளை வெளியிட்டு அவ்வுருவில் அவரின் செயலை வெளிப்படுத்துகிறார்கள்.

எழுதியவர் யார்…? வழிப்படுத்துபவர் யார்..? இவ்வுலகம் எந்நிலையில் உருப்பெற்றது…? மனித ஆத்மாக்கள் தோன்றிய நிலையையே ஆதாம் ஏவாள் என்ற இருவரால் மனித வர்க்கம் வளர்ந்தது என்கின்றனர்.

அப்படி இருக்க இயேசு கிருஸ்துவின் உண்மையின் சக்தியான அன்பு ஆசையுடன் கூடிய எல்லா உயிரினங்களையும் ஒன்று போல் அன்புபடுத்திய அவ்வுடலில் ஏறிய மகானின் சக்தியையே பைபிளின் நிலையினால் “உயிரணுக்களை (மாமிசங்களை) உணவாக்கி உண்டிடும் நிலையில் அம் மகான் இருந்தார்…!” என்று உணர்த்துகின்றனர்.

ஏன்…?

அவரது சக்தி நிலையில் பொறாமை கொண்டவரின் எண்ணத்தினால் அம் மகானின் உடலையே அழித்துவிட்டு…
1.அன்று வாழ்ந்த மக்களின் எதிர்ப்பிலிருந்து மீள அவர் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட சக்திச் சொல்லை
2.பிறர் ரூபத்தில் வெளியிட்டதின் நிலைதான் இன்றைய பைபிளின் நிலை.

நீங்கள் புசித்திடும் அனைத்துமே அணுக்கள்தான். “ஒன்றை அழித்து ஒன்று வாழ்கின்றது…” என்பதனைத்தான் முன் பாடத்தில் உணர்த்தியுள்ளேன்.

உயிரணுவாய் வளர்ச்சி பெற்று மனித ஆத்மாவாகப் பல எண்ணங்களுடன் பல ஜென்மங்கள் பெற்று இவ்வெண்ண நிலையில் வந்திட்ட நிலையில் மிருகத்தின் நிலையையே உணவாக உண்டால் என்ன ஆகும்…?

நல் நிலையில் உணர்வு பெற்று மனித ஆத்மாக்களாய் உள்ள நிலையில்…
1.நம்மிலிருந்து கீழ் நிலைக்குச் சென்றிட்ட (மற்ற உயிரினங்களின்) எண்ண அணுக்களின் பிம்ப உடல்களைச் சமைத்து உண்ணும் பொழுது
2.நம் எண்ணமுடன் நம்மைக் காட்டிலும் பல எண்ண நிலைகளுடன் வாழ்ந்திட்ட அணு சக்திகள் நம் உடலில் ஏறி
3.நம் நிலையும் அவற்றின் நிலையுடன் சென்றிடும் நிலை தான் ஏற்படும்.

இம் மாமிச உணவுகளிலிருந்து மாறு கொண்ட உணவை உண்டால்…
1.நம் உடலுடன் பல தீய சக்திகளின் நிலைகள் ஏறாமல்
2.நம்மைக் காத்து கொண்டிட முடியும்.

அனைத்துமே அணுக்கள்தான். அணுவில் வந்த கனியும் ஒன்றுதான் பட்சிகளும் ஒன்றுதான். எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்திய பிறகு எல்லாம் ஒன்றே தான்.

இயேசுபிரான் தான் வாழ்ந்த காலத்தில் அவர் உடலில் ஏறிய அம் மகானுக்கு அனைத்துமே ஒன்றேதான். அன்புடன் அளித்திட்ட உணவு வகைகளை மறுத்திடாமல் எல்லாமே ஒன்றாக எண்ணிப் புசித்திட்டார்.

பாமர ஜென்மங்களாய் வாழ்ந்திடும் நாம்…
1.ஆத்மீக நெறி வழியில் ஆண்டவனின் சக்தி பெற்ற ஜோதிகளாய் வளர்ச்சி பெற்று வந்திட
2.நம் ஆத்மாவுடன் நாம் வாழ்ந்திடும் இந்த உடலில்
3.மற்ற அணுக்களின் எண்ணத் தாக்குதலில் இருந்து மீளத்தான்
4.நம்மைத் தீய சக்திகள் தாக்காமலிருக்கத் தான் வழி முறைகளை உணர்த்துகின்றோம்.

தினசரி நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை

 

குலதெய்வங்களான நம் மூதாதையர்களின் குல வழியில் தான் நாம் வந்தோம். அவர்கள் உணர்வுகள் தான் நம் உடல். அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அத்தகைய மூதாதையர்களை அதிகாலை துருவ தியானமிருந்து விண் செலுத்த வேண்டும்.

அந்த உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்து உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விட்டால் “பரம்பரை நோய்…!” என்று நம் குடும்பத்தில் வராது.

ஏனென்றால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அவர்கள் உயிரான்மாக்கள் செல்லும் பொழுது
2.அடுத்து உடல் இல்லாது கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நிலைத்திருக்கும்.
3.அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நம் மூதாதையரின் உயிரான்மாக்கள் உணவாக உட்கொண்டு
4.அதன் ஈர்ப்பு வட்டத்தில் பெருவீடு பெருநிலை என்ற நிலைகள் அடைந்து
5.பிறவியில்லா நிலை அடையவும் அழியா ஒளிச் சரீரம் பெறவும் இது உதவும்.

ஆகவே தியானம் இருப்போர் அனைவரும் நம் முதாதையரை அவசியம் விண் செலுத்த வேண்டும்.

மூதாதையர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொருத்தரும் சாப அலைகளை விட்டிருப்பார்கள். அந்த வேதனை உணர்வுகள் நம் குடும்பத்தில் பரம்பரை நிலைகளில் அது தொடர்ந்து வரும்.

அனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைப்போன்று மூதாதையர்களை விண் செலுத்தி விட்டால் சாப அலைகளோ தீய அலைகளோ நம்மைச் சாடாது பாதுகாத்துக் கொள்ள இது உதவும்.

ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் உங்கள் குடும்பத்தில் வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை ஒரு இரண்டு நிமிடமாவது எண்ணி அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து உடல் பெரும் உணர்வுகளைக் கரையச் செய்தல் வேண்டும்.

பிறிதொரு ஆன்மாக்களை நம் பழக்கவழக்கங்கள் காரணமாக அதிகமாக நேசித்து இருந்தால் அந்த ஆன்மாக்கள் நம் உடலிலே புகுந்திருக்கும்.

துருவ தியானத்தில் நாம் இருக்கும்போது…
1.என் உடலில் உள்ள அத்தகைய ஆன்மாக்களும் அது பிறவியில்லா நிலைகள் அடைந்து
2.எனக்குள் நல்லது செய்யும் தன்மைக்கு வர வேண்டும்…! என்று இப்படி எண்ணி ஏங்குதல் வேண்டும்.

காரணம் ஒரு உடலில் உருவான உணர்வுகள்தான் நம் உடலிலே வந்து அது இயக்கும். ஆனால் அதற்கு மேல் வளர்ச்சி இல்லை.

நம் இரத்த நாளங்களில் தான் பிறிதொரு ஆவியின் தன்மைகள் இருக்கும்.
1.அது நம் உயிரின் தன்மையில் உராயப்படும் பொழுதுதான் அதனின் உணர்ச்சிகளை ஊட்டும்
2.இரத்தங்களில் சுழன்று கொண்டே வரும்
3.இரத்தத்தின் வழியாக நம் கவன நரம்பு இருக்கும் பக்கம் சென்றபின்
4.அதன் நினைவாற்றல் தூண்டி அந்த உணர்வுகளை இயக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து தப்பிக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

நம் இரத்தங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கப்படும்போது அந்தத் தீய உணர்வு கொண்ட உணர்வின் அணுக்களையும் நம்மால் மாற்ற முடிகின்றது.

அந்த ஆன்மாக்கள் நமக்குள் இருந்து பிறவியில்லா நிலையும் அடையும் தகுதியும் பெறுகின்றது. நாமும் பிறவியில்லா நிலை அடைய இது உதவுகின்றது.

நாம் எத்தனையோ நண்பர்களிடம் பழகுகிறோம். அப்படிப் பழகிய நண்பர் திடீரென்று அகால மரணம் அடைந்தார் என்றால் இறக்கும் சமயம் நம் மீது அவர் எண்ணங்களைச் செலுத்தினால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

வந்து விட்டால் அவர்கள் உடலில் வாழும் காலத்தில் எப்படி அவஸ்தைப்பட்டனரோ அதையெல்லாம் நம் உடலுக்குள் வந்து சேர்த்துவிடும்.

இது போன்ற நிலைகளைத் தடுக்கவும் காலை துருவ தியானத்தில்
1.எங்களுடன் நண்பர்களாகப் பழகி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள்
2.அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அவர்கள் அழியா ஒளிச் சரீரம் பெற்று
4.பிறவி இல்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

நம் ஆத்மாவை ஸ்ரீ இராம ஜெயம் ஆக்கிட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஸ்ரீ இராமனாய் வால்மீகி மகரிஷியினால் எழுதப்பட்ட அக்காவியக் கதையில்
1.ஸ்ரீ இராமருக்கு உகந்த குண நிலைகளை அப்பாத்திரத்திற்கு ஏற்றி
2.ஒவ்வோர் ஆத்மாவும் ஸ்ரீ இராமனின் குணநிலைக்கொப்ப வாழ்ந்திட வேண்டும் என்ற ஆசை நெறியில்தான்
3.வான்மீகி மகரிஷியால் இயற்றப்பட்ட காவிய சக்தி ஸ்ரீ இராமநாதனின் சக்தி.

ஒவ்வோர் ஆத்மாவின் வாழ்க்கையிலும்…
1.குடும்பச் சூழ்நிலையில் ஏற்படும் தாய் தந்தை சகோதர பாசங்கள்
2.வாழ்க்கையுடன் கொடிய எதிர்ப்பு நிலைகள்
3.வாழ்க்கையுடன் உள்ள இயற்கையின் சூழ்நிலைகள்
4.வாழும் நெறி இவற்றையெல்லாம் பிணைத்துத் தாய் தந்தையரையே தெய்வமாக்கி
5.கற்புக்கு நெறி வழி அமைத்து வீரத்திற்குத் தக்க மன பலம் ஏற்றியும் அமைக்கப்பட்ட காவியம் தான் ஸ்ரீ இராம காவியம்.

வாழ்க்கை நெறியுடன் ஒவ்வோர் ஆத்மாவுமே வழிவந்திட வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்டது தான் இந்தக் காவியம். ஸ்ரீ இராமனுக்கு மட்டும் அப்பலமும் செயல் திறமையும் அன்பும் பாசமும் சொந்தமல்ல.

ஒவ்வோர் ஆத்மாவும் ஸ்ரீ இராமனின் குண நிலைக்கொப்ப வாழ்ந்திட வேண்டுமென்ற நெறி முறையின் காவியத்தை… அன்றிலிருந்து பல கோணங்களில் மாற்றப்பட்ட அக்காவியத்தையே… இக்கலியில் நாம் ஸ்ரீ இராமனின் குண நிலையை நெறி வாழ்க்கையாக வழிபடுத்தி வழிநடத்தி வந்திடும் மன நிலையுடன் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இராமர் வாழ்ந்ததாகச் சொல்லிடும் அக்காவியத்தின் பிறப்பிடமான இராமேஸ்வர ஆலயத்தில்…
1.வான்மீகி மகரிஷியின் சக்தி நிலை இன்றும் செயல் கொண்டு வழி நடக்கின்றது.
2.அந்நூலின் உண்மை நிலையும் சக்தி நிலையும்
3.இவ்வியற்கையின் சீற்றத்திலிருந்தும் கால நிலையின் மாற்றத்திலிருந்தும்
4.அந்த ஆலயம் இன்றளவும் தப்பி வருவதின் உண்மை நிலையே அங்கு தவமிருந்த ரிஷிகளின் சக்தியின் நிலையினால்தான்.

உள்ளத்தில் சபல நிலை இல்லாமல் ஸ்ரீ இராமேஸ்வரத்தில் இராம தீர்த்தம் பெறுபவரின் உடலுக்கும் உள்ளத்திற்கும் அந்நல்லருளின் ஜெபத்தின் சக்தி பெற்றே வருகின்றனர்.

1.அந்த நல் எண்ணமேதான் ஒவ்வோர் ஆத்மாவிற்குமே வழி தெய்வம்
2.எவ் வழியில் வழி நடக்கின்றதோ அவ்வழியின் சக்தி நிலை ஒவ்வோர் ஆத்மாவுமே பெறுகின்றது.

எண்ண வழியில் ஆலயத்தில் நாம் வழிபடும் முறை கொண்ட அந்தச் சக்தி நம் ஆத்மாவிற்கும் உடனே வந்தடைந்து அச்சக்தியின் அருளைப் பெறலாம்.

ரிஷிகளினால் ஜெபம் கொண்ட ஆலயங்களில் எல்லாம் அவ்வாலயங்களுக்குச் சென்று நம் எண்ண வழியைச் செலுத்திடும் நிலைக்கொப்ப அவர்களின் அருளாசி நம்முடன் வந்து கலக்கின்றது.

ரிஷிகளினால் வழி நடத்தித் தந்திட்ட பொக்கிஷ வழியுடன் வாழ்ந்திடும் நாம் அந்நல்வழியின் தொடரையே நமதாக ஏற்று ஒவ்வோர் ஆத்மாவுமே ஸ்ரீ இராமனைப் போன்று வாழ்ந்து காட்டிடுங்கள்.

1.சொல்லிலும் செயலிலும் ஆத்மீக அறத்துடன் தியானிக்கும் போது நற்பாக்கியத்தைப் பெறுகின்றோம்
2.மகரிஷிகளின் அருளை நாம் பரிபூரணமாகப் பெறுகின்றோம்.
3.ஆகவே… “நம்முள் உள்ள ஆத்மாவையே ஸ்ரீ இராம ஜெயம் ஆக்கிடுங்கள்…!”

நமக்குள் பிரணவமாக்க வேண்டிய சக்தி

 

ஓ…ம் என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம்.

நாம் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் நிலைகளை எல்லாம் உயிர் ஓ..ம்… ஓ…ம்… என்று பிரணவமாக்குகின்றது. பிரணவம் என்றால் அதை ஜீவன் பெறச் செய்து உடலுக்குள் ஜீவணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது உயிர்.

அதே சமயத்தில் நுகர்ந்த உணர்ச்சிகள் கொண்டு நம்மை இயங்கச் செய்வதும்… அந்த உணர்வே தன்மை நம் உடலை இயக்குவதும்… அதன் வழி நம் வாழ்க்கை வழி நடத்திச் செல்வதும்… நுகர்ந்தது எந்தக் குணமோ அக்குணமே நம்மை ஆள்கின்றது.

அதனால் தான் ஓ…ம்…! என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம் என்று சொல்வது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நுகர்கின்றோமோ பார்க்கின்றோமோ… நாம் எண்ணிய அந்தந்தக் குணங்களை வைத்து நம்மை ஆள்கின்றது. உயிர்… ஆண்டவனாக ஆளச் செய்கின்றது.

1.நமது உடல் ஒரு அரங்கம்
2.நாம் நுகரும் உணர்வுகள் ஒரு நாதம் (உயிரிலே பட்ட பின் உணர்வின் ஒலிகள் கிளம்புகிறதல்லவா…”
3.கோபமான நாதங்களை எடுத்தால் அந்த உணர்வின் தன்மை நம்மை ஆளுகின்றது… நமக்கும் கோபம் வருகிறது.

அதைத் தான் “அரங்கநாதன்” என்று உயிருக்குக் காரணப் பெயர் வைத்து உடலுக்குள் அந்த நாதங்களை (எண்ணங்களை) எழுப்பிக் கொண்டே இருக்கின்றது உயிர் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஆனாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை ஆளுகின்றது என்பதற்கு “ஆண்டாள்” என்று காரணப் பெயர் வைத்து
1.நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை நடத்த…
2.பண்படும் உணர்வுகளை நாம் வளர்க்க ஞானிகள் காவியமாகப் படைக்கின்றனர்
3.ஸ்தல புராணங்களாகவும் வடித்து வைத்துள்ளனர்.

அந்த ஸ்தல புராணங்களில் உள்ள உண்மையின் உணர்வுகளை நுகர்வோமேயென்றால் அந்தப் புராணத்திற்குள் மறைந்துள்ள உணர்வுகள் கொண்ட் நமக்குள் தெளிந்த மனதை ஊட்டவும் நம்மை அறியாது பிறருடைய தீமையின் உணர்வுகள் நம்மை இயக்கினால் அதை இயக்காது தடைப்படுத்திடவும் கொடுத்துள்ளார்கள்.

1.ஏனென்றால் அருள் உணர்வை நாம் பெருக்கி
2.அதன் வழி நமது உணர்வே நம்மை ஆள வேண்டும்
3.நமது செயலும் நமது எண்ண வழிப்படி செயல்படுத்திட வேண்டும் என்பதற்குத்தான்…!

ஆனால் தீமையின் உணர்வுகள் நமக்குள் சென்று விட்டால் தீமையின் செயலும் தீமையான சொல்லும் சொல்லைக் கேட்போர் உணர்வுகளும் நம்மை எதிரியாக்கும் தன்மையும் பகைமையானவனாக மாற்றிவிடும்.

ஆகவே அருள் உணர்வு அனைவரும் பெற வேண்டும் என்று நாம் இத்தகைய நல்ல உணர்வை எண்ணும்போது நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி ஜீவன் பெறுகின்றது.

அதே சமயத்தில் இந்த உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும்போது
1.நமக்குள் தெளிந்த மணமும்..
2.நாம் எதிரிலே நம்மைப் பார்ப்போரை நல்லவராகவும் பண்புள்ளவராகவும் உருவாக்கும் உணர்வுகள் நமக்குள் உருவாகி
3.நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் அத்தகைய நிலைகளை மாற்றியமைக்கும்.

அதனால் தான் ஓ..ம் என்ற நாதமாக இயக்கும்… நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரை வணங்க வேண்டும்… உயிரின் துணையால் அருள் உணர்வுகளை நமக்குள் பிரணவமாக்க வேண்டும்…! என்று சொல்வது.

நம் ஆத்மாவை ஸ்ரீ இராம ஜெயம் ஆக்கிட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஸ்ரீ இராமனாய் வால்மீகி மகரிஷியினால் எழுதப்பட்ட அக்காவியக் கதையில்
1.ஸ்ரீ இராமருக்கு உகந்த குண நிலைகளை அப்பாத்திரத்திற்கு ஏற்றி
2.ஒவ்வோர் ஆத்மாவும் ஸ்ரீ இராமனின் குணநிலைக்கொப்ப வாழ்ந்திட வேண்டும் என்ற ஆசை நெறியில்தான்
3.வான்மீகி மகரிஷியால் இயற்றப்பட்ட காவிய சக்தி ஸ்ரீ இராமநாதனின் சக்தி.

ஒவ்வோர் ஆத்மாவின் வாழ்க்கையிலும்…
1.குடும்பச் சூழ்நிலையில் ஏற்படும் தாய் தந்தை சகோதர பாசங்கள்
2.வாழ்க்கையுடன் கொடிய எதிர்ப்பு நிலைகள்
3.வாழ்க்கையுடன் உள்ள இயற்கையின் சூழ்நிலைகள்
4.வாழும் நெறி இவற்றையெல்லாம் பிணைத்துத் தாய் தந்தையரையே தெய்வமாக்கி
5.கற்புக்கு நெறி வழி அமைத்து வீரத்திற்குத் தக்க மன பலம் ஏற்றியும் அமைக்கப்பட்ட காவியம் தான் ஸ்ரீ இராம காவியம்.

வாழ்க்கை நெறியுடன் ஒவ்வோர் ஆத்மாவுமே வழிவந்திட வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்டது தான் இந்தக் காவியம். ஸ்ரீ இராமனுக்கு மட்டும் அப்பலமும் செயல் திறமையும் அன்பும் பாசமும் சொந்தமல்ல.

ஒவ்வோர் ஆத்மாவும் ஸ்ரீ இராமனின் குண நிலைக்கொப்ப வாழ்ந்திட வேண்டுமென்ற நெறி முறையின் காவியத்தை… அன்றிலிருந்து பல கோணங்களில் மாற்றப்பட்ட அக்காவியத்தையே… இக்கலியில் நாம் ஸ்ரீ இராமனின் குண நிலையை நெறி வாழ்க்கையாக வழிபடுத்தி வழிநடத்தி வந்திடும் மன நிலையுடன் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இராமர் வாழ்ந்ததாகச் சொல்லிடும் அக்காவியத்தின் பிறப்பிடமான இராமேஸ்வர ஆலயத்தில்…
1.வான்மீகி மகரிஷியின் சக்தி நிலை இன்றும் செயல் கொண்டு வழி நடக்கின்றது.
2.அந்நூலின் உண்மை நிலையும் சக்தி நிலையும்
3.இவ்வியற்கையின் சீற்றத்திலிருந்தும் கால நிலையின் மாற்றத்திலிருந்தும்
4.அந்த ஆலயம் இன்றளவும் தப்பி வருவதின் உண்மை நிலையே அங்கு தவமிருந்த ரிஷிகளின் சக்தியின் நிலையினால்தான்.

உள்ளத்தில் சபல நிலை இல்லாமல் ஸ்ரீ இராமேஸ்வரத்தில் இராம தீர்த்தம் பெறுபவரின் உடலுக்கும் உள்ளத்திற்கும் அந்நல்லருளின் ஜெபத்தின் சக்தி பெற்றே வருகின்றனர்.

1.அந்த நல் எண்ணமேதான் ஒவ்வோர் ஆத்மாவிற்குமே வழி தெய்வம்
2.எவ் வழியில் வழி நடக்கின்றதோ அவ்வழியின் சக்தி நிலை ஒவ்வோர் ஆத்மாவுமே பெறுகின்றது.

எண்ண வழியில் ஆலயத்தில் நாம் வழிபடும் முறை கொண்ட அந்தச் சக்தி நம் ஆத்மாவிற்கும் உடனே வந்தடைந்து அச்சக்தியின் அருளைப் பெறலாம்.

ரிஷிகளினால் ஜெபம் கொண்ட ஆலயங்களில் எல்லாம் அவ்வாலயங்களுக்குச் சென்று நம் எண்ண வழியைச் செலுத்திடும் நிலைக்கொப்ப அவர்களின் அருளாசி நம்முடன் வந்து கலக்கின்றது.

ரிஷிகளினால் வழி நடத்தித் தந்திட்ட பொக்கிஷ வழியுடன் வாழ்ந்திடும் நாம் அந்நல்வழியின் தொடரையே நமதாக ஏற்று ஒவ்வோர் ஆத்மாவுமே ஸ்ரீ இராமனைப் போன்று வாழ்ந்து காட்டிடுங்கள்.

1.சொல்லிலும் செயலிலும் ஆத்மீக அறத்துடன் தியானிக்கும் போது நற்பாக்கியத்தைப் பெறுகின்றோம்
2.மகரிஷிகளின் அருளை நாம் பரிபூரணமாகப் பெறுகின்றோம்.
3.ஆகவே… “நம்முள் உள்ள ஆத்மாவையே ஸ்ரீ இராம ஜெயம் ஆக்கிடுங்கள்…!”

நமக்குள் பிரணவமாக்க வேண்டிய சக்தி

 

ஓ…ம் என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம்.

நாம் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் நிலைகளை எல்லாம் உயிர் ஓ..ம்… ஓ…ம்… என்று பிரணவமாக்குகின்றது. பிரணவம் என்றால் அதை ஜீவன் பெறச் செய்து உடலுக்குள் ஜீவணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது உயிர்.

அதே சமயத்தில் நுகர்ந்த உணர்ச்சிகள் கொண்டு நம்மை இயங்கச் செய்வதும்… அந்த உணர்வே தன்மை நம் உடலை இயக்குவதும்… அதன் வழி நம் வாழ்க்கை வழி நடத்திச் செல்வதும்… நுகர்ந்தது எந்தக் குணமோ அக்குணமே நம்மை ஆள்கின்றது.

அதனால் தான் ஓ…ம்…! என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம் என்று சொல்வது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நுகர்கின்றோமோ பார்க்கின்றோமோ… நாம் எண்ணிய அந்தந்தக் குணங்களை வைத்து நம்மை ஆள்கின்றது. உயிர்… ஆண்டவனாக ஆளச் செய்கின்றது.

1.நமது உடல் ஒரு அரங்கம்
2.நாம் நுகரும் உணர்வுகள் ஒரு நாதம் (உயிரிலே பட்ட பின் உணர்வின் ஒலிகள் கிளம்புகிறதல்லவா…”
3.கோபமான நாதங்களை எடுத்தால் அந்த உணர்வின் தன்மை நம்மை ஆளுகின்றது… நமக்கும் கோபம் வருகிறது.

அதைத் தான் “அரங்கநாதன்” என்று உயிருக்குக் காரணப் பெயர் வைத்து உடலுக்குள் அந்த நாதங்களை (எண்ணங்களை) எழுப்பிக் கொண்டே இருக்கின்றது உயிர் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஆனாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை ஆளுகின்றது என்பதற்கு “ஆண்டாள்” என்று காரணப் பெயர் வைத்து
1.நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை நடத்த…
2.பண்படும் உணர்வுகளை நாம் வளர்க்க ஞானிகள் காவியமாகப் படைக்கின்றனர்
3.ஸ்தல புராணங்களாகவும் வடித்து வைத்துள்ளனர்.

அந்த ஸ்தல புராணங்களில் உள்ள உண்மையின் உணர்வுகளை நுகர்வோமேயென்றால் அந்தப் புராணத்திற்குள் மறைந்துள்ள உணர்வுகள் கொண்ட் நமக்குள் தெளிந்த மனதை ஊட்டவும் நம்மை அறியாது பிறருடைய தீமையின் உணர்வுகள் நம்மை இயக்கினால் அதை இயக்காது தடைப்படுத்திடவும் கொடுத்துள்ளார்கள்.

1.ஏனென்றால் அருள் உணர்வை நாம் பெருக்கி
2.அதன் வழி நமது உணர்வே நம்மை ஆள வேண்டும்
3.நமது செயலும் நமது எண்ண வழிப்படி செயல்படுத்திட வேண்டும் என்பதற்குத்தான்…!

ஆனால் தீமையின் உணர்வுகள் நமக்குள் சென்று விட்டால் தீமையின் செயலும் தீமையான சொல்லும் சொல்லைக் கேட்போர் உணர்வுகளும் நம்மை எதிரியாக்கும் தன்மையும் பகைமையானவனாக மாற்றிவிடும்.

ஆகவே அருள் உணர்வு அனைவரும் பெற வேண்டும் என்று நாம் இத்தகைய நல்ல உணர்வை எண்ணும்போது நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி ஜீவன் பெறுகின்றது.

அதே சமயத்தில் இந்த உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும்போது
1.நமக்குள் தெளிந்த மணமும்..
2.நாம் எதிரிலே நம்மைப் பார்ப்போரை நல்லவராகவும் பண்புள்ளவராகவும் உருவாக்கும் உணர்வுகள் நமக்குள் உருவாகி
3.நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் அத்தகைய நிலைகளை மாற்றியமைக்கும்.

அதனால் தான் ஓ..ம் என்ற நாதமாக இயக்கும்… நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரை வணங்க வேண்டும்… உயிரின் துணையால் அருள் உணர்வுகளை நமக்குள் பிரணவமாக்க வேண்டும்…! என்று சொல்வது.

நீங்கள் ஒவ்வொருவரும் மகா மகானாகுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

எண்ணத்தில் உயர் ஞானத்தையும் நற்செயலையும் ஆத்மீக நெறி கொண்ட அன்பு வாழ்க்கையையும் வழி நடத்திட்டால் அந்த நிலையில் பெறும் சக்தியின் திறன் தானப்பா நாம் அடைந்திடும் பேரானந்த வாழ்க்கை.

ஆரம்ப வழித்தொடர்…
1.வாழ்க்கையுடனும் பிற எண்ணங்களின் மோதலினாலும் தொடரை வழிப்படுவதற்கு சிரம நிலை கொண்டிடலாம்
2.அச்சிரம நிலையிலிருந்து வழி நடந்து வந்திட்டால் இப்பேரின்ப நிலையை அடைந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தினால் செயற்கைக்கோளை இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களின் நிலையறிய ஏவுகின்றனர்.

இப்பூமியின் காற்று மண்டலத்தையும் இப்பூமிக்கு மேல் சில தூர விகிதத்திற்கு அந்த ஏவுகணையைச் (இராக்கெட்) செலுத்திட இவ்வமிலங்களின் (அணுகாந்த மின் அலை) உதவியினால் செலுத்தி அதற்கு மேல் உள்ள நிலைகளுக்கு எந்த அமில சக்தியின் நிலையில்லாமலே இயக்கிடும் நிலைக்கு அவ் ஏவுகணை செல்கின்றது.

குறிப்பிட்ட தூர விகிதத்திற்குத்தான் மற்ற அமில சக்தியின் நிலையினால் இயங்குகிறது அந்த ஏவுகணை. பிறகு செல்லும் நிலைக்கெல்லாம் எரிபொருள் செலவு நிலை இல்லாமலே செல்லும் நிலையைத்தான் செய்வித்து அனுப்புகின்றனர்.

அதைப் போலவே நம் எண்ண சக்தியின் வழித் தொடரினை நற்சக்திக்கு வழிப்படுத்திட்டால் ஆத்மீக நெறிக்கு நம்மை வழி நடத்திட நம் உயிராத்மாவின் சக்தியினால் முடிந்திடும்.

1.இவ்வுடல் என்னும் அமிலங்கள் நிறைந்த இப்பிம்பத்தின் காந்த சக்தியின் நிலையை நாம் உணர்ந்திட்டால்
2.இப்பிம்பத்தையே பறக்கும் நிலைக்கும் பதப்படுத்திடலாம்.
3.நம் உடலிலுள்ள அமில சக்தியின் சக்தியே பெரும் சக்தி…!
4.இச்சக்திதனை நாம் உணர்ந்திடாமல் நம்மையே நாம் விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

செயற்கையினால் இன்று காணும் அனைத்து நிலைகளையுமே… அனைத்து நிலையென்பது ஒலி… ஒளி… இவற்றின் ஈர்ப்பு சக்தி கொண்ட நிலையை எல்லாம் இவ்வுடல் என்னும் அமில சக்தியின் தொடபினாலேயே கண்டிடலாம்.

“இவ்வெண்ண சக்தியின் வழித்தொடர் பெற்றோரின்…” சொல் செயல் பார்வை இவற்றின் சக்தி நிலையினால் அவர்கள் சொல்லும் சொல்வாக்கு பலிதம் கொள்ளும்.

ஒருவரைக் காணும் பொழுது அவரின் மேல் எவ்வெண்ணத்தின் நினைவுடன் அவரின் சுவாசக் காற்று பட்டுக் காண்கின்றனரோ அவ்வெண்ண நிலைப்படியே அவர்களைக் காண்பவரின் நிலையும் நடக்கும்.

1.ஆத்மீக நெறியறிந்து சக்தி நிலை பெற்றோரின் சொல்வாக்கும்
2.அவர்கள் எண்ணத்தில் பாய்ச்சிடும் விழியின் ஒளி நிலையும் பலிதம் கொள்ளும்.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பேரின்ப சக்தியுண்டு. மகான்களின் நிலையிலெல்லாம் இந்நிலையுண்டு.

1.மகான்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2.அவர் புண்ணிய பாதம் பட்ட இடமெல்லாம் செழிப்பு
3.அவரின் பார்வை பட்டாலே புண்ணியம்
4.அவரின் ஆசியினால் பேரின்பம் கிட்டும் என்ற வழித் தொடரிலுள்ள நாம் அத்தொடரினையே
5.அம்மகானின் புண்ணிய நிலையை நம் ஆத்மாவுடனும் கலந்து நாமும் அம்மாகனைப் போன்ற மகான்கள் ஆகலாம்.

இந்த உண்மை உணர்ந்து… உயர்ந்த நிலையிலுள்ளோரைத் தாழ்ந்தே வணங்கி… “தாழ்ந்த நிலையிலேயே இருந்திடாமல்…” அவரின் அடிச்சுவட்டைப் பற்றியே உயர்ந்து… அவரின் நிலையுடனே உயர்நிலை பெறும் மகான்களாய் நல் ஆத்மாவாய் நாமும் கலந்திடல் வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திடல் வேண்டும்.

1.அடிமை கொண்டு வணங்கி வாழ்ந்திடுவதல்ல வாழ்க்கை.
2.அன்பு கொண்டே வணங்கிடல் வேண்டும்.
3.அன்புடனே அன்பாய்க் கலந்து வாழ்ந்திடல் வேண்டும்.

ஆனால் நம் வழி முறையும் செயல் முறையும் அடிமை கொண்ட நிலையில்தான் மகான்களின் நிலையையும் பணிந்து பற்றி வாழ்கின்றனர்.

மகானுடனே மகானாய்க் கலக்கும் மனப்பக்குவ நிலையை வளர்த்து இவ்வுலகின் சக்திச் செல்வமான சக்தி ஆத்மாக்கள் அனைவருமே
1.சக்தி ஜோதியாய்த் திகழ்ந்திடும் உண்மையினை உணர்ந்து
2.உன்னத வழி பெற்றே மகாமகான்கள் ஆகிடுங்கள்.

நம்மையும் உலகையும் அமைதி பெறச் செய்யும் சக்தி

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் உலக மக்களுடைய குறைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் நாம் கண்ணால் உற்றுப் பார்க்கின்றோம்.

ஏனென்றால் பிறருடன் பேசும் போது கண் கொண்டு உற்றுப் பார்க்கப்படும்போது அந்தந்த உணர்வுகளை நம் கண்கள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக நம்முள் பதிவாக்கி விடுகின்றது.

அந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கினால் எந்தெந்த உணர்வுகளைக் கவர்ந்தோமோ அதன் உணர்வுப்படி உயிர் நம்மை வழி நடத்திச் சென்று விடுகின்றது.

அந்த உணர்வுகளை இயக்குவது யார் நமது உயிரே. அதன் வழியில் நம்மை ஆட்சியும் புரிகின்றது நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள்.

அதன் உணர்வுகளைக் கவர்ந்து நுகர்ந்த பின் நம் இரத்த நாளங்களில் கலந்துவிடுகிறது. இரத்தத்தின் வழியாக உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும் அந்த உணர்வுகள் கலந்து தீமை செய்யும் உணர்வுகளாக உருவாகத் தொடங்குகிறது.

அந்தத் தீமை செய்யும் உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் வளராது தடுக்க “எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…!” என்று நாம் எண்ணி ஏங்குதல் வேண்டும்.

அதை நாம் நுகர்ந்தோம் என்றால் அந்த உணர்வு ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் இரத்த நாளங்களில் ஜீவ அணுவாக உருவாகும் நம் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியை நமக்குள் பரப்பும்.

இவ்வாறு நாம் செய்தோமென்றால்…
1.நம் உயிரை நாம் மதித்தவர்கள் ஆகின்றோம்
2.நம் உடலையும் நாம் மதித்தவர்கள் ஆகின்றோம்.

காரணம்… இதற்கு முன்பு பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வு கொண்டு… “தப்பித்துக் கொள்ளும் உணர்வுகளைப் பெற்றுப் பெற்றுத் தான்..” இன்று இத்தகைய மனித உடலை உயிர் உருவாக்கி உள்ளது.

ஆகவே எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உயிர் உருவாக்கிய நிலையில் தீமையென்ற நிலையை நமக்குள் வளர்த்திடாது பாதுகாத்தல் வேண்டும்.

எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…!

நமது பேச்சும்… நமது வாழ்க்கையும்… நமது செயல்களும்… நாம் நுகரும் உணர்வுகள் கொண்டு இந்த உலகில் யாரிடம் பேசினாலும் பழகினாலும்…
1.அவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டுமென்றும்
2.அமைதி பெற வேண்டுமென்றும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்றும்
3.இத்தகைய உணர்வுகளை நாம் நுகர வேண்டும்.

நுகர்ந்த இந்த நல் உணர்வுகளை நமது உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்…” என்று நம் இரத்த நாளங்களில் பரவச் செய்கின்றது. அருள் ஒளியின் உணர்வுகள் உடலுக்குள் இணைந்து உடலில் உள்ள அணுக்களை அமைதி பெறச் செய்கின்றது.

ஏனென்றால் உலக மக்களின் உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலே உண்டு. அந்த அணுக்களுக்கு இது போன்ற நல் உணர்வுகளை ஊட்டினால்
1.வெறுப்பென்றோ பகைமையென்றோ ஆகாதபடி நம் உடலுக்குள் மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளை ஊட்டும்.
2.இதே உணர்வுகள் மற்றவர்களுக்கும் நல் உணர்வின் அலைகளாகப் பாய்ந்து அவர்களையும் அமைதி பெறச் செய்யும்…!

ரசமணியை வைத்துச் சித்து வேலை செய்தவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” இப்படிப் பல மணிகளைத் தன் ஜெபத்தினால் செய்வித்துச் சித்து நிலை பெற்றவர்கள் தம் உடலில் இந்த மணிகளை அணிந்து கொண்டு அவற்றின் ஈர்ப்பு சக்தியின் நிலையினால் தன் ஆத்மாவிற்குச் சில நிலைகளை அறிந்திட இப்படிப் பல நிலைகளை ஜெபம் கொண்டு செய்வித்தனர்.

சந்திர மண்டலத்தில் இருந்தும் சூரிய மண்டலத்திலிருந்தும் நம் பூமியின் தொடர்புடைய மற்ற மண்டலங்களில் இருந்தும் நமக்குக் கிடைக்கும் அணுக்கதிர்களின் சக்தியை உணர்ந்து அமாவாசையில் சந்திரனின் சக்தி இல்லாமல் சூரியனின் ஒளிக்கதிரையே பெற்றிடும் இப்பூமியை நிலைப்படுத்தி மூலிகைகளை வளரச் செய்யும் நாள் கணக்குப்படி அதை நீர் மட்டத்தின் தூர விகிதப்படுத்தி இம் மூலிகைகளை ஒன்றுக்கு நேர்ப்படுத்தி மற்றவற்றை வைத்து அதன் நாள் கணக்கில் வளரும் நிலைப்படுத்தி பக்குவமுடனே இரசமணியுடன் கலந்த ஜெபம் செய்கின்றார்கள்.

துளசி நாமத்தையும் அகஸ்தியர் நாமத்தையும் எம்மணியை உருவாக்குகின்றார்களோ அம்மணிக்குகந்த நாமத்தை ஜெபித்து தம் உடலுடன் ஜெபம் கொண்ட அந்த மணிகளை அணிந்து கொண்டு அதன் ஈர்ப்பு சக்தியின் தொடரினால் பல நிலைகளைச் செய்கின்றார்கள்.

1,இவ்வுடலையே ஒருவர் கண்ணுக்கும் காணாத நிலையெல்லாம் செய்விக்கின்றனர்
2.இவ்வுடலை விட்டு ஆத்மாவைப் பிரித்துப் பல சக்தி நிலைகளை அறிந்திடும் நிலைக்கும் பல நிலைகளைச் செய்கின்றனர்.
3.இயற்கையுடன் வளர்ந்திட்ட இம் மூலிகையின் நிலையறிந்து
4.இயற்கையின் சக்தியினாலேயே ஞான வழியில் சித்து பெற்றவர்கள் செய்திடும் நிலை இவையெல்லாம்.

ஆனால் சூனிய நிலை கொண்ட தீய சக்தியிலும் இந்நிலைகள் செயல்படுகின்றன.

குடுகுடுப்பு ஆண்டிகளும் இன்னும் சில சூனிய சாமியார்களின் நிலையிலும் மை போட்டு மந்திரித்து கறுப்புக் கயிற்றில் தாயத்துக்களை அளித்துப் பல நிலைகளை அவர்கள் செய்கின்றனர்.

இந்தியாவிலும் மற்றைய சீனாவிலும் திபெத்திலும் இன்னும் ஒரு சில நாடுகளிலும் இச்சூனியக்காரர்களின் ஆதிக்க நிலை நிறைந்துள்ளது.

குறைப் பிரசவத்தில் போன சிசுக்களையும் பிறந்த சிசுவையும் அதைப் புதைத்த நிலையிலிருந்து எடுத்துச் சென்று… அதன் ஜீவ சக்தியைத் தன் உடலுடன் ஏற்றிக் கொள்ளும் மந்திர ஜெபங்கள் செய்து தன் உடலுடன் ஏற்றிக் கொள்கின்றார்கள்.

குட்டிச் சாத்தான் வேலையும் இதுவே…!

கூடுவிட்டுப் பறந்து செல்லும் நிலையும் தன் உடலையே பிறர் கண்ணிற்குக் காணாமல் ஆவி உருவப்படுத்தும் நிலையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

இவர்களினால் பல தீய நிலைகள் இன்றும் நடந்து வருகின்றன. தீய எண்ணத்திற்கு இத்தீய சக்தியின் தொடர்பும் கிட்டுகின்றது.

நல்வழிக்கும் தீய வழிக்கும் இந்நாடு கலந்த நிலையில்தான் உள்ளது.

இவ்வெண்ண சக்தியை மேம்படுத்தி இவ்வுலக சக்தியில் ஆத்ம சக்தியை ஒன்றச் செய்தால் நம் ஆத்மாவுடன் நாம் வளர விடும் நற்சக்தியின் பயனால் நாம் வாழ்ந்திடும் காலத்தில் இக் காற்றுடன் கலந்துள்ள தீய சக்திகளின் அணுக்கதிர்களை வளரவிட்டு சோர்வும் நலிவும் இவ்வுடலை அண்டாமல் இவ்வுடல் அகால மரணம் எய்திடாமல் அன்பு கொண்ட ஜீவாதார அறம் கொண்ட நல் வாழ்க்கை வாழ்ந்தே சூட்சும உலகிற்குச் சென்றிடும் பக்குவ நிலைக்குச் சென்று வாழ்ந்திடலாம்.

தீயோரின் சக்தி நிலை வளர்ந்து நற் சக்தியைக் குறைத்துக் கொண்டு வருவதினால் நம் சக்தியையும் நம்மைச் சார்ந்தோரின் சக்தியையும் அவர்களின் தொடர்பு கொண்டோரின் சக்தியையும் கீழான நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தன் இனத்துடன் தன் இனத்தைச் சேர்த்தே ஒவ்வொரு மண்டலமும் ஈர்த்து எப்படி வளர்ந்ததுவோ அந்த நிலை போன்றே…
1.இவ்வுலகில் உதித்த ஆத்மாக்கள் அனைவருமே ஒன்றுடன் ஒன்றை நற்சக்திகளாக்கி
2.இவ்வுலகையே நல் உணர்வு கொண்ட நல் பூமியாக வாழ்ந்திடும் பக்குவம் பெற்ற ஆத்மாக்களாய் வந்திட
3.நல்லுணர்வையே நலமாக்குங்கள் என்றே வழிப்படுத்தி வாழ்த்துகின்றேன் நல் வாழ்த்துக்களை…!

கண்களால் பதிவாக்கப்படும் உணர்வுகள் சந்தர்ப்பத்தால் விசித்திரமான ரூபமாற்றங்களுக்கு எப்படிக் காரணமாகிறது…?

 

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று மிருகங்களைப் பற்றி அறியும்படி செய்தார்.

ஒரு சமயம் ஒரு புலி அது கர்ப்பமுற்று இருக்கிறது. ஆனால் அது அடிபட்டு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றது. அதே சமயத்தில் தன் இரைக்காக வரும் மானை உற்றுப் பார்த்து கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் இது அடிபட்டு நகர முடியாமல் இருப்பதால் தன் இரைக்காக வேண்டி எண்ணி ஏங்கிப் பார்க்கின்றது.
1.மானின் உணர்வை எண்ணி எண்ணித் தன் கண்ணால் பார்க்கப்படும்போது
2.அந்த உணர்வுகள் அந்தப் புலியின் கருவிலே விளையத் தொடங்குகிறது.

அதாவது இந்தச் சந்தர்ப்பத்தில் அது நுகரும் உணர்வுகள் அந்தப் புலிக்கும் மானுக்கும் உண்டான வித்தியாசங்கள் அங்கே வருகிறது. புலி ஏக்கத்தால் தன் இரைக்காக (மானை) ஏங்குகின்றது.

அந்த உணர்வின் சத்து கருவிலே இருக்கக்கூடிய அந்த உயிரணுக்களில் இணைக்கப்பட்டு அது எவ்வாறு விளைகின்றது…? என்பதனை அங்கே காட்டுகிறார்.

இப்பொழுது உங்களிடம் இதை லேசாகச் சொல்கின்றேன். ஆனால் காட்டிற்குள் என்னை பட்டினியாக இருந்து தான் பார்க்கச் சொன்னார் எந்தப் பக்கமும் போகக்கூடாது…! என்று சொல்லிவிட்டார்.

1.உயிரனங்களில் தான் கண்ணால் பார்த்து நுகர்ந்தறிந்த உணர்வுகள்
2.அந்த நுகர்ந்ததை உயிர் தனக்குள் உணர்வாக அலையப் பெற்று உணர்வை அறிவாக இயக்கப் பெற்று
3.அது உடலுக்குள் பதிந்தபின் கருவில் வளரும் சிசுவிற்குள் ஒட்டுன்னி போன்று
4.அந்த உணர்வுகள் எவ்வாறு இயக்கப்படுகின்றது…? என்பதனை தெளிவாகக் காட்டுகின்றார்.

இன்று விஞ்ஞான அறிவில் நாம் எத்தனையோ பல பல உண்மைகளை இயந்திரங்களின் மூலமாகவும் சாதனங்களின் மூலமாகவும் நாம் பார்த்து அறிகின்றோம்.

ஆனால் ஆரம்பத்தில் மெய் ஞானிகள் இதை எல்லாம் கண்டுணர்ந்து தன் புலனறிவாலேயே அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பருகி அவர்கள் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள்…? என்ற நிலையை குருநாதர் உணர்த்தி…
1.என் புலனறிவிற்கு ஊட்டச் சத்தை ஊட்டிப் புலனின் அறிவு கொண்டு
2.அங்கே நடக்கும் சம்பவங்களை உற்றுப் பார்க்கும் சமயம்
3.அதனின் உணர்வின் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று அறியும்படி செய்தார்

அந்த அனுபவத்தைத் தான் சொல்கின்றேன். ஏனென்றால் நான் (ஞானகுரு) கல்வியறிவு அற்றவன்.

குருநாதர் தன் உணர்வின் வலு கொண்ட நிலையால் கண்டுணர்ந்த அந்த உண்மைகளை நீங்கள் அனைவரும் அறிந்துணர வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

நமது சாஸ்திரங்களில் இந்த மெய்யுணர்வுகள் அனைத்தும் உணர்த்தப்பட்டுள்ளளது. மகாபாரதமோ இராமயாணமோ கந்த புராணமோ சிவபுராணமோ அதிலே உணர்த்தப்பட்ட உண்மைகள் அந்த சாஸ்திரம் அனைத்தும் மெய் தான்…!

அந்த உண்மைகளை எல்லாம் மனிதர்கள் உணர்ந்தால்…
1.அந்த ஞானிகள் சென்ற பாதையில் சென்று
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றுமே நிலை பெறுவது திண்ணம்
3.பிறவி இல்லா நிலையை நாம் பெற முடியும் என்பதை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆக… அந்தக் கர்ப்பமான புலி தன் இரைக்காக மானை ஏங்கிய… அந்த ஏக்கத்தின் உணர்வுகள் கருவிற்குள் இருக்கக்கூடிய சிசுவின் உணர்வுக்குள் படப்பட்டு இந்த உணர்வுகள் அதனுடைய ரூபங்கள் எப்படி மாறுகிறது…? என்று காட்டுகின்றார்.

அந்தப் புலி குட்டியை ஈனும் வரையிலும் என்னை அந்த இடத்தை விட்டு நகரச் சொல்லவில்லை. அதனுடைய உணர்வின் வளர்ச்சியையும் மாற்றத்தையும் அங்கேயே அமர்ந்து அதைத் தியானிக்கும்படி செய்தார்.

இன்று ஜோதிடம் பார்க்கின்றார்கள் அல்லவா…! அவர்கள் உடலிலுள்ளதை எல்லாம் நுகர்ந்தறிந்து… “நீங்கள் என்னென்ன நினைத்தீர்கள்…?” என்று அப்படியே சொல்வார்கள்.

இதைப் போலத்தான்… அந்தப் புலியின் கருவிற்குள் உணர்வின் இயக்கமும் அதனின் அலைகள் எவ்வாறு தொடர்ந்து இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக தெளியும்படி அங்கே ஊட்டினார்.

1.மான் இடும் மூச்சலைகள் அந்த உடலிலிருந்து வெளிப்படும் இந்த உணர்வலைகள் இந்தப் புலியின் உணர்வுக்குள் எப்படி இணைகின்றது…?
2.புலி சுவாசித்த உணர்வுகள் இரத்தத்துடன் கலந்து வரும்போது அதன் கருவிலே விளையக்கூடிய அந்த சிசு இந்தப் புலியின் ரூபம் மாறி மானின் நிலைகள் எவ்வாறு இணைகின்றது…?
3.கடைசியில் இரண்டும் கெட்டானாக எப்படி விளைகின்றது…? என்ற நிலையை நேரடியாகவே தெரியப்படுத்தினார்.

மனிதக் கருவில் கூட இது போல் சில மாற்றங்களுடன் குழந்தைகள் மிருக உடலுடனோ அல்லது மிருகத் தலையுடனோ பிறப்பதைப் பத்திரிக்கைகளிலோ டி.வி.யிலோ பார்த்திருப்பீர்கள்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் ரூப மாற்றங்கள் எப்படி அமைகிறது…? கண்களால் பார்த்து நுகரும் உணர்வுகளை நம் உயிர் எப்படி எல்லாம் உருமாற்றுகிறது..? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்…!

தானாய் ஒளிரும் ஜோதி ஒளியை ஒவ்வொருவரும் தன்னுள் ஏற்றி ஒளி பெற்றிடுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

தீப ஜோதியைக் கண்டிடவே தீபங்களை ஏற்றி வைத்து புனித நன்னாளாய்க் கார்த்திகைத் திருநாளைத் தீபத்தின் ஜோதியிலே ஜோதியாய் வணங்குகின்றீர்.

தீபம் ஏற்றி வணங்கிடும் நாளில்…
1.தீப ஜோதியையே உம்முள் ஐக்கியப்படுத்திடும்
2.ஜோதி தீபங்களாய் வாழ்ந்திடும் “எண்ண தீபத்தை ஏற்றிடுங்கள்…!”

எண்ணெயும் திரியும் ஏற்றுவதற்குத் தீக்கோளப் பெட்டியும் செயற்கை கொண்டு தீபம் ஏற்றி தீப விழாவாக்கி மகிழ்ந்திடும் நன்னாளை…
1.என்றுமே தீபமாய்ச் சுடர்விடும் ஆத்ம விளக்கை
2.”எண்ண தீபத்தில் இயற்கையின் சக்தியில் கலக்கவிடுங்கள்…!”

நம் பூமியின் ஒலியினால் ஒளியாகி ஒளியுடனே வாழ்ந்துள்ள நாம் நம்மைப் போன்ற ஒவ்வொரு மண்டலமும் ஒலி கொண்டு ஒளி பெற்று வாழ்வதைப் போல்…
1.மற்றச் சாதனங்களினால் எரிந்து ஒளிவிடும் ஒளியாய் இல்லாமல்
2.தானாய் ஒளிரும் ஜோதி ஒளியை ஒவ்வொருவரும் தன்னுள் ஏற்றி ஒளி பெற்றிடுங்கள்.

சூரியனும் மற்ற அனைத்து மண்டலங்களும் தானாகவே தன்னுள்ளேயே ஒளியினால் ஒளி பெற்றுச் சுற்றிடும் ஜோதி மயம் போல் ஒவ்வோர் ஆத்மாவுமே…
1.அவரவர்களின் ஆத்மாவுடன் ஜோதியின் சக்தியைப் பெற்று
2.ஜோதி மயமான ஜோதியுடனே கலந்தும் தனிப்பெரும் சக்தியினைப் பெற்றிடலாம்.

நம் ஆத்மாவிற்கு உள்ள சக்தியினை நாம் உணர்ந்திடல் வேண்டும். நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும். ஆனால் நம் சக்தியை நாம் அறிந்திடாமல் பல தீய சக்திகளுக்கு நம்மை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்.

1.வாழ்க்கையுடனே தியான வழியின் ஜோதித் தொடரை வளரவிட்டு வாழ்பவருக்கு
2.நம் ஆத்ம ஜோதியின் சக்தியினைப் பூர்ணமாக அறிந்திடும் சக்தி நிலை வந்தடையும்.

வாழும் காலம் குறுகியதுதான்…! “மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் காலத்தில்தான்…” நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் கிட்டுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களுக்கு… ஆத்ம வளர்ச்சி வளர்ச்சி என்பது சக்தி நிலை கூடிடும் நிலையில்லை. உடலுடன் கொண்ட ஆத்மாக்களினால்தான் வாழ்ந்திடும் பக்குவத்தில் ஆத்மாவை ஜோதியாக்கிட முடிந்திடும்.

வாழ்வும் சாவும் என்ற இரண்டு நிலைகளைத்தான் உணர்ந்துள்ளோம்.
1.பிறந்த பின் நம் நிலையை நாம் உணரப் போகின்றோமா…? என்ற பக்குவம் பெறாத நிலையில்
2.நாம் பிறப்பதுவே நம் தாய் தந்தையரின் நிலையினால் வந்தது…
3.நாமாகப் பிறவிக்கு வரவில்லை… ஆகவே வாழும் காலத்தை அனுபவித்து வாழலாம் என்றெல்லாம்
4.நம் ஆத்ம சக்தியைப் புரிந்திடாமல் எண்ணி வாழ்ந்திடும் நாம்
5.இனி வரும் காலத்தை நாம் எடுத்திடும் சுவாச நிலையின் ஒளியினால்
6.நம் ஆத்மாவை ஒளி கொண்ட ஒளியாக்கித் தீப ஒளியாக வாழ்ந்திட வேண்டும்.

எமது அருளாசிகள்…!

நம் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி கலந்தே வர வேண்டும்

 

உடலில் எந்த நோய் இருந்தாலும் அந்த நோயை மறக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உடலில் படர்ந்து
1.சர்க்கரை சத்தை நீக்கும் அரும் பெரும் சக்தியாக எனக்குள் உருவாக வேண்டும்
2.இரத்தக் கொதிப்பு இருந்தால் அதனுடைய நிலைகள் நீங்க வேண்டும்
3.இருதய நோயோ ஹார்ட் அட்டாக்கோ வந்தால் அதை நீக்கிடும் அந்த அரும் பெரும் சக்திகள் எனக்குள் வளர வேண்டும் என்று
4.இந்த உணர்வினைச் சேர்த்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இத்தகைய ஒரு பழக்கத்திற்கு நீங்கள் வந்து விட்டால் வாழ்க்கையில் நாளை வரும் கடும் விளைவுகளில் இருந்து மாற்றி இந்த உடலைவிட்டு எந்த நேரம் போனாலும் நாம் அங்கே சப்தரிஷி மண்டலம் போய்ச் சேரலாம்.

இல்லை என்றால் நோயின் உணர்வுகள் பங்கு அதிகமாகச் சேர்ந்து விட்டால் இந்த புவியின் ஈர்ப்புக்கு வரும்.

ஆகவே நம் உடல் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்த நஞ்சை எப்படி மலமாக மாற்றுகின்றதோ இதைப்போல் நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் நஞ்சினை அருள் உணர்வுகளை எடுத்து மாற்றி நல்ல அணுக்களுக்கு அதைத் தெளிந்த உணவாகக் கொடுக்க வேண்டும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு உப்புத் தண்ணீரில் உள்ள உப்புச் சத்தை மாற்றி நாம் நல்ல நீராக (RO WATER) மாற்றுகின்றார்கள். அதைத் தான் நாம் இன்று குடிக்கின்றோம்.

1.இதைப்போல… நாம் மகரிஷிகளின் உணர்வை எடுத்து நம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி
2.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளியாக ஆக்க முடியும்.

ஆகவே அப்படி ஒளியாக மாற்றும் திறன் பெறுவதற்குத்தான் அடிக்கடி உங்களுக்குள் நினைவுபடுத்தி அந்த உயர்ந்த சக்தியைப் பெறச் செய்வதற்குத்தான் இதைத் திரும்ப திரும்ப சொல்வது.

என்னடா சாமி திரும்பத் திரும்பச் சொல்கின்றார்…! என்று நினைக்கலாம். இந்த உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அரும்பெரும் சக்தியை நுகரச் செயவதற்குத்தான் இதைச் செய்கிறேன்.

ஒரு தடவை சொல்லிவிட்டுப் பேசாமல் விட்டுவிடலாம்…
1.ஆனால் உங்கள் நினைவின் ஆற்றலை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்
2.அதை நுகரும் ஆற்றலைக் கொண்டுவர வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி நாம் சொல்வது
3.அடிக்கடி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி கொண்டே இருக்கவேண்டும்.

ஏனென்றால் நாம் இன்று பார்க்கலாம்… எந்த நோயாக இருந்தாலும் இரத்தத்தைத்தான் எடுத்துப் பரிசோதிக்கின்றார்கள். சளி சம்பந்தப்பட்டது ஆஸ்மா சம்பந்தப்பட்டது. டி.பி. என்று இப்படி எதுவாக இருந்தாலும் அந்த விஷ அணுக்கள் உருவாகும் தன்மை இருக்கின்றது என்று இரத்தப் பரிசோதனையில் தான் பார்க்க முடிகின்றது.

வாழ்க்கையில் சலிப்பும் சங்கடத்துடன் இருக்கும் ஒரு கூட்டத்துடன் ஒரு மாதம் சேர்ந்து இருந்துவிட்டு வந்து பாருங்கள். உங்கள் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்தால் அதில் நீங்கள் நுகர்ந்த அந்த விஷத் தன்மைகள் இரத்தத்தில் இருக்கும்.

ஆனால் இது போன்று ஆகும் தன்மையில் அதனுடைய உணர்வுகளை எல்லாம் மாற்றுவதற்காகத்தான் மருந்தை உட்கொள்கின்றோம். ஆனால் மருந்திற்குள்ளும் விஷம் உண்டு

அந்த மருந்தைக் கொண்டு உடல் நோயை அழித்தாலும் அந்த மருந்துக்குள் ஊடுருவிவிட்ட அந்த விஷத்தன்மை நமக்குள் கலக்கின்றது

1.நீங்கள் எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் உடலில் உள்ள விஷத்தை ஒன்றை மாற்ற அடுத்து இன்னொன்று வரும்.
2.ஆக இதை எல்லாம் வென்ற அருள் ஞானியின் உணர்வை எடுத்து அதை மாற்றி
3.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வின் எண்ணங்களை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் அணுக்கதிரியக்கங்கள் சூரியனை அணுகி விட்டது. ஒரு நொடிக்குள் எப்படி பூமி நில நடுக்கம் ஆகின்றதோ இதைப்போல அங்கே அதிகமான விஷத் தன்மைகள் பரவினால் நம் சிந்தனைகளை சிதறிவிடும்.

ஆகவே அத்தகைய நேரங்களிலும் நம்முடைய சிந்தனைகள் சிதறிடாது காக்க வேண்டும்.

எப்படி பல்பு ஃபீஸ் (FUSE) ஆகிவிட்டால் வேலை செய்யுமோ…? செய்யாது. அது போல் மனிதனின் உணர்வுகள் ஃபீஸ் ஆகிவிட்டால் மனித நிலை அல்லாது வேறொரு உருவை உருவாக்கிவிடும்.

அந்த நிலைக்கு விஞ்ஞான அறிவினால் ஒரு நொடிக்குள் மாற்றம் ஏற்படப் போகும் தீமைகளில் இருந்து நாம் மீள ஒவ்வொரு நொடியிலும் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பழக வேண்டும்.

காலையிலிருந்து இரவு படுக்கச் செல்லும் நேரம் வரையிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.“சொல்லுக்குச் சொல்… செயலுக்குச் செயல்…! இதை நாம் பெற வேண்டும்.
2.அதற்குத்தான் மீண்டும் மீண்டும் இதைச் சொல்லிக் கொண்டே வருகிறோம்.

புத்தர் ஞானம் பெற்ற பூர்வாங்கத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

புத்தரை ஆண்டவனாய் வழிபடுகின்றனர். புத்தரின் நிலையென்ன…?

சித்தார்த்தராய் அரச குடும்பத்தில் அவதரித்து வாழ்ந்தவருக்கு ஒரே நாளில் துறவு நிலை கொண்ட ஞான நிலை போதி மரத்தடியில் பெற்றார். எந்த நிலையில் அவரின் நிலை இப்படி வந்தது…?

பிறவியின் ஆரம்ப நாள் தொட்டு வாழ்ந்த காலத்தில் அவரின் நிலை எல்லோரின் நிலையை ஒத்த வழியில்தான் வந்தது. ஞான நிலைக்கு அவர் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திடாமல் போதி மரத்தடியில் வந்ததின் நிலையென்ன…?

அவரின் நிலை சித்தார்த்தராய்ப் பிறவி எடுத்து அவர் அரச காலத்துடன் மட்டும் ஏற்பட்டதல்ல.

இவ்வுலகில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி பல ஜென்மங்கள் வாழ்ந்த நாட்கள் தொட்டே…
1.அந்நிலையில் அவரின் தொடர்புடைய ரிஷிகளின் நிலையிலிருந்தெல்லாம் அவர் சேமித்து வைத்து
2.அவருடனே வளர்ந்த ஜீவ சக்தி எந்தப் பிறவியிலும் செயல்படாமல்
3.அவர் கடைசியாக எடுத்த உடலில் ராஜ வம்சத்தில் பிறந்ததின் நிலையினால்
4.வளர்ந்த சூழ்நிலை வளர்ப்பின் நிலை இவற்றினால் அவரின் முன் ஜென்மத்தில் சேமித்த நற்சக்தியுடன் மோதுண்டவுடனே
5.இக்கலவையின் சக்தி கூடி அந்த ஞானி வழிதனை அவரும் வழி நடத்தி ஞானோதயம் பெற்று
6.சூட்சும உலகினில் பலருடன் கலந்து… ஆண்டவனாய் அருள் செய்திடும் அன்பு நிலையில் உள்ளார்.

இவ்வுலகினில் உதித்து… உலகுடனே ரிஷிகளாய் சப்த ரிஷிகளாய்க் கலந்தவர்களின் எண்ணக் கலவைகளின் நற்சக்திகள் அனைத்துமே ஒன்று கூடி இப்பூவுலகிற்கே பூ மழையாய்ப் பல நிலைகளைச் செய்விக்கின்றன.

ஆத்மீக நெறிதனில் ஞானியாய் சித்தனாய் ரிஷியாய் சப்த ரிஷியாய் ஓங்கி நிற்கும் அனைத்து நற்சக்திகள் கொண்ட நல் ஆத்மாக்களின் நிலையில் இன்று நீங்கள் வழிபடும் ஆலயங்களில் இருந்தெல்லாம் அவரவர்களின் எண்ண நிலைக்கேற்ப அவர்களின் சக்தி நிலை ஒன்று கூடிய ஆண்டவனாய்ச் செயல்படுகின்றது.

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று… கோயிலில்லா ஊரில் குடியிருத்தல் வேண்டாம்…!” என்றெல்லாம் உணர்த்தினர் நம் முன்னோர்.

பக்தி நிலையை வளர்க்கவும் ஆத்மீகத்தை நிலைநிறுத்தவுமே இந்நிலைகளை எல்லாம் நமக்குப் போதித்தனர்.

காட்சி:
ஒரு பெரிய யானை விபூதிப் பட்டையுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு பக்தரின் சிரசில் தும்பிக்கை வைத்து ஆசிர்வாதம் செய்கின்றது. அந்த யானையே ஒரு மகா ரிஷியாய் உருமாறிக் காட்சியளித்து ஆசிர்வதிக்கின்றார்.

மக்களின் எண்ணத்தில் அந்த யானையையே ஆண்டவனாய் வணங்கிடும் பொழுது யானையின் நிலையிலும் அந்த ரிஷிகளே வந்து வணங்கிடும் ஆத்மாக்களுக்குச் சில நிலைகளில் பக்தி கொண்டவருக்கு ஆசிர்வதிக்கின்றனர்.

காட்சி:
பாடை கட்டி நான்கு பேர் ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்வது போலவும்… “கோவிந்தா…!” என்ற கோவிந்த ஜெபம் செய்து கொண்டே செல்வது போலவும்… காரியம் முடிந்து வந்து கை கால் அலம்பி ஜோதியைக் காண்பது போலவும் காட்சி தெரிகிறது.

ஆண்டவனின் நிலையை உணர்த்திவிட்டு இந்நிலையின் காட்சியை “ஏன் அளித்தேன்…?” என்று எண்ண வேண்டாம்.

1.புத்தருக்கே இந்த நிலையைக் கண்ட பிறகுதான் ஞான நிலையே வந்தது.
2.எந்த நிலையையும் ஒரு நிலையாய்க் காணும் ஆத்ம ஜெபம் நமக்கு வேண்டும்.

ஆண்டவனின் அருள் ஆலய நிலையில் மட்டும் தான் கிட்டும் என்பதல்ல.

ஆலயங்களுக்குச் சென்று ஆத்ம ஜெபம் பெறும் பொழுது நம் ஆத்மா அமைதி பெறுவதற்குத் தான். வாழ்க்கையுடன் வந்து மோதிடும் பல நிலைகளில் இருந்தெல்லாம் நம் எண்ணப் பயத்தையும் எண்ணச் சோர்வையும் அந்த நிலைக்குச் சென்றிட்டால் அமைதி கொண்டு வந்திடவே நமக்கு வழிப்படுத்தி வைத்தனர் நம்மில் கலந்த ஆண்டவன்கள் எல்லாம்.

காட்சி:
ஜெகஜோதி மயமாய் ஒரு தேர் தானாக ஆடி வருவது போல் காட்சி. அந்தத் தேரே புஷ்பமாய் ஒரு மகா சப்தரிஷியால் அருள் புரிந்து ஆசிர்வதித்திடும் காட்சி தெரிகிறது.

1.காட்சியில் கண்டிடும் இந்த ரிஷியின் அரும் பெரும் சக்திகள் அனைத்துமே
2.இதைக் காண்பவருக்கும் இதை எழுதுபவருக்கும் இவற்றைப் படிக்கும் என் ஆசிகள்.

தேரில் வந்தவர் புத்தர்…!

மந்திரம் தேவையில்லை…! எண்ணினாலே போதும்… உங்களுக்கு அரும் பெரும் சக்தி கிடைக்கும்…!

 

யாம் (ஞானகுரு) சொல்லும் தியானத்திற்கு மந்திரம் சொல்ல வேண்டும்… அது எனக்கு மறந்து போய் விட்டது…! என்று எல்லாம் நீங்கள் சொல்லத் தேவை இல்லை.

ஈஸ்வரா… என்று உயிரை உங்கள் புருவ மத்தியில் நினைக்கின்றீர்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா..! என்று உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்தினாலே போதும்.

எந்த நல்லதைச் செய்ய விரும்புகிறீர்களோ அந்தக் காரியம் நல்லதாக இருக்க வேண்டும் என்று என்ணினாலே போதுமானது.

ஆனால் துருவ நட்சத்திரத்தை நினைத்தேன்… தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கின்றது… என்றைக்குத் தான் போகுமோ…? என் வயிற்று வலி என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று இருக்கிறது என்று இதைத் தியானித்தால்
1.இன்னும் விஷம் அதிகமாகப் போகும்
2.சுத்திகரிக்கும் நிலையே மாறிவிடும்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை விடுத்து விட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறுகின்றேன். துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் இரத்த நாளங்களில் கலக்கின்றது. என் உடல் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது. நோய் நீக்கும் சக்தி அந்த அரும் பெரும் சக்தியை நான் பெறுகின்றேன்…! என்று எண்ணுதல் வேண்டும்.

சர்க்கரைச் சத்தோ… இரத்தக் கொதிப்போ… வாத நோயோ… எதுவாக இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எனக்குள் சர்க்கரைச் சத்தை நீக்கும் அந்த அரும் பெரும் சக்தி வளர வேண்டும்.

அதே மாதிரி இரத்த கொதிப்பை நீக்கிடும் அரும்பெரும் சக்தி பெற வேண்டும். ஆஸ்துமா போன்ற நோய்கள் நீக்கி அந்த அரும்பெரும் சக்தி எனக்குள் பெற வேண்டும் என்று இதை மாற்றியமைக்க வேண்டும்.

இதைப்போல தியானத்தின் முலம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வாருங்கள்.

1.இந்த உணர்வை நீங்கள் அடிக்கடி அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்
2.இத நுகர நுகர உங்கள் இரத்த நாளங்கள் பரிசுத்தமாகும்
3.எந்த நோயாக இருந்தாலும் அதை நீங்கள் மாற்றி அமைக்கும் நிலை வரும்.

உங்கள் எண்ணத்தால் தான் நோய் வருகின்றது. உங்கள் எண்ணத்தாலேயே அதைப் போக்கவும் முடியும்.

எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றது…? பிறர் படும் தீமைகளை அவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வை உற்றுப் பார்க்கின்றோம். அவர் உடலில் இருந்து வருவதை நுகர்கின்றோம்.

நுகர்ந்தது நம் இரத்த நாளங்களில் கலந்து நம் நல்ல குணங்களுக்கும் இதற்கும் போர் முறைகள் வருகின்றது. ஒன்றுக்கொன்று மோதல் அதிகமாகும்போது இந்த உணர்வின் தன்மை வரும்.

இடைப்பட்ட நேரத்தில் இதைச் சமப்படுத்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் இதைச் சமப்படுத்தலாம்.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை…!

ஏனென்றால் ஒருத்தருக்கொருத்தர் குடும்பத்தில் சண்டை போட்டுப் பல சிக்கல்கள் வருகின்றது. இதை யார் பஞ்சாயத்து செய்தாலும் ஒன்றும் நடக்காது.

அந்த உணர்வுக்கொப்பத் தான் இப்படிப்பட்ட செயலாக்கங்களும். அந்த உணர்வுக்கொப்பத்தான் இந்த எண்ணங்களும் வரும்.

அதை மாற்றிட…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என்னை இயக்கும் இந்த சக்தியிலிருந்து நான் விடுபட வேண்டும்.
3.என் பார்வையில் அனைவரும் நலமாக வேண்டும்
4.அனைவரும் நல்ல உணர்வுகளைப் பெறும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வை எண்ணினால் பகைமையான உணர்வு நமக்குள் வளர்க்காது பாதுகாக்கலாம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் மீண்டிட குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கும். இனி வரும் காலத்தில் அனைவரும் பிறவி இல்லை என்ற நிலை பெற வேண்டும்.

ஏகாந்த நிலைகள் கொண்டு… எதுவுமே நம்மைத் தாக்கிடாது… எதையுமே வென்றிடும் உணர்வுகளை நாம் இந்த மனித உடலில் உருவாக்கினால்தான் உடலை விட்டு உயிர் சென்றபின்… இந்த உணர்வின் துணை கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இல்லையென்றால் மீண்டும் மீண்டும் உடலின் தன்மை பெற்று அந்த உடலைக் காத்திடும் எண்ணங்கள் தான் வரும். உயிராத்மாவை ஒளியாக்கும் எண்ணம் வராது.

ஆனால் நம் உணர்வுகளை ஒளியாக்கி விட்டால் இருள் என்ற நிலை வராதபடி ஒளிச் சரீரம் நாம் பெறலாம். ஒளியாக மாற்றும் அந்தத் திறனை உருவாக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருமே துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவனுக்குக் கிடைக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் அன்னை தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று
4.இப்படி நாம் அடிக்கடி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

ஆகவே அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம். ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ்வோம்.

கலி கடைசியில் உலக நாடுகளில் ஏற்படப் போகும் மாற்றம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மாறப் போகும் இக்கலியின் கால நிலைக்காக… இதை உணர்த்துகின்றேன்.

1.இக்கலியுடனும்… இக்கலிக்கு முந்தைய காலங்களிலும்
2.இப்பூமியில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி உங்களுடனே வாழ்ந்த
3.இவ்வுலகுடன் ஒன்றிய நிலை கொண்ட ரிஷிகளின் அருளாசியினால்
4.இவ்வுலகத் தன்மை மாறப் போகும் தற்போதைய காலத்தில்
5.உங்களுடன் கலந்து வாழ்ந்த எங்களின் ஆசையினால்
6.இம்மாற்றத்திலிருந்து அணுவாய்… ஆத்மாவாய்… அனைத்து அறிவும் ஆற்றலும் சக்தி கொண்ட மனித உடல் பெற்ற ஆத்மாக்களை
7.இப்பேறு பெறும் பாக்கிய நிலை அடைந்தவரை நம்முடன் அழைத்திடவே (ரிஷிகளுடன்)
8.இந்நிலையில் இப்போதனை வழியினைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.

பூமியின் பூமத்திய ரேகையின் நிலையைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம். இவ்வுலக நிலை கால நிலைகேற்ப உஷ்ண நிலையும் மாறு கொள்கின்றது. காற்றும் மழையும் பனியும் குளிரும் அனைத்துமே மாறி மாறி வருகின்றன.

அது எவ்வாறு என்ற நிலையில்… இப்பூமியின் பூமத்திய ரேகையின் நிலையில் அதன் சுற்றும் தன்மையில் சூரியனின் நிலைக்கு சூரியனின் தூர விகிதப்படி இவ் இயற்கையின் நியதிகள் மாறுபட்டு வருவதாகப் பண்டைய காலம் தொட்டு இன்றளவும் உணர்ந்து வருகிறீர்கள்.

பல நாட்களுக்கு முதலிலேயே வான சாஸ்திரப்படி என்றென்று சந்திர சூரிய கிரகணங்கள் வருகின்றன என்றும் சரியாக உணர்த்துகின்றனர்.

1.இவ்வான மண்டலங்களில் சுழற்சியில் ஏற்படும் நிலைகளையெல்லாம் பல நிலைகளில் அறிந்துள்ளனர்
2.இருந்தாலும் எல்லாவற்றையும் வெளியிடும் அச்ச நிலையில் உள்ளனர்.

இப்பூமி சுழலும் தன்மையில் ஏற்படும் ஒளி (சூரியனின் ஒளிக்கதிர்கள்) சில இடங்களில் படுவதே இல்லை. என்றுமே இருண்ட பூமியாக சில இடங்கள் உள்ளன.

ஆனால் இப்பூமியின் அசைவு காலத்தில் (மாறப் போகும்) அவ்விருண்ட நிலை கொண்ட இடங்களெல்லாம் ஒளிக்குச் சிக்கிடும் இடங்களாக வந்துவிடும்.

சில இடங்களை இப்பூமியின் மாற்றத்தின்போது ஏற்படும் அசைவுக்குக் குறிப்பிடுகின்றேன்.
1.இன்று மக்கள் நிறைந்து வாழ்ந்திடும் சீனாவும் அமெரிக்காவும் இம் மாற்றத்திற்குச் சிக்கிடும் நிலையில் உள்ளன.
2.அதிக மாற்றம் கொள்ளும் நாடுகள் இவை இரண்டும்தான்…!

மற்ற நாடுகளில் மாற்றம் வந்தாலும் சில நிலைகளில் அந்நீரின் மட்டம் ஏறாமல் நிலமாக இருந்திடும்.

இவ்வுலக மாற்றத்தினால் இன்று இருண்ட நிலையில் உள்ள பூமிகள் எல்லாம் ஒளிக்கு வந்துவிடும்.
1.இன்று செயற்கையுடன் ஒன்றிய வளர்ச்சியடைந்த நாடுகள் என்று நாம் செப்பிடும்
2.பூமிகளில் சில இருண்ட நிலைக்குச் சென்றிடும்.

இம் மாறப்போகும் இப்பூமியின் தன்மையுடன் இயற்கை சக்தியும் இன்றுள்ள நிலையிலிருந்து மாறும் தன்மை படுகின்றது. சித்திரையில் உள்ள வெயிலும் மார்கழியின் குளிரும் இம்மாற்றம் கொள்ளும் இப்பூமியின் நிலையினால் மாற்றம் கொண்டு சுழலப் போகின்றது.

அனைத்து நிலைகளையும் நீங்களும் காணப் போகின்றீர்கள்…!

1.இவ்வெண்ண சக்தியின் செயலைக் கொண்டு ஜெப சக்தியை உயர்வாக்கி
2.ஜெபம் கொண்ட வாழ்க்கையை ஜெயித்தே வந்திடுங்கள்.
3.வழியின் தொடர்பினை அறிந்துள்ளீர்… இனி வருவதற்குச் சிரமம் இல்லை.

ஞானத்தின் வழியறிந்து செயல்பட்டு எல்லோரும் ஞானியாகி… அந்த வழித்தொடரினை வழிப்படுத்தியே “சப்த ரிஷிகளுடன் சங்கமித்தே சகல நிலையுடன் கலந்திடுவோம்…” என்ற ஓ…ம் என்ற நிலையினிலே மன நிலையை ஒன்றச் செய்திடுங்கள்.

இவ்வுலகம் மட்டுமல்ல… அனைத்து உலகங்களுமே நமதாக்கி அனைத்து உலங்கங்களுக்கும் சொந்தமான அவ் ஆதி சக்தியுடனே கலந்திடுவோம்… என்ற “ஒரு நிலை கொண்ட தைரியமுடன் கலந்திடுங்கள்…!”

1.எவ்வாண்டவனும் வந்து நம்மை அழைத்துச் செல்வதல்ல அந்நிலைக்கு…
2.நம்முடன் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனை (உயிரான ஈசனை) நாம் வழி நடத்திட்டால்
3.அனைத்து ரிஷிகளின் அருளைப் பெற்று… அனைத்துடனும் நாமும் கலந்திடலாம்.
4.ஒன்றிடும் பக்குவ நிலையையே அறிந்து… பக்குவப்படுத்தி வளர்ந்து கல்கியின் நிலைக்கே வந்திடுங்கள்.

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை உணர்த்தினால் ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள் இல்லை… என்று வேதனைப்பட்டுச் சொன்னார் குருநாதர்

 

நம் உடலான சிவனுக்குள் எதனையும் உருவாக்கும் அந்த உணர்வுகள் வலுப் பெற்றாலும் எதனின் உணர்வை நாம் அதிகமாக நுகர்ந்தோமோ அதுவே நமக்குள் விளைந்து அடுத்த சரீரத்தை இது நிர்ணயிக்கின்றது.

1.ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசிக்கும் நிலைகள்
2.உடலுக்குள் சென்று எப்படிச் சிவமாகிறது (உடலாக) என்பதை உணர்த்துவதற்குத்தான்
3.சிவன் ஆலயங்களில் நந்தீஸ்வரனை வைத்துள்ளார்கள்.

ஐந்து புலனறிவு கொண்ட மிருகங்கள் அது உணவுகளை உட்கொள்ளும்போது அதில் உள்ள விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்கிறது… மற்றதை மலமாக மாற்றுகின்றது.

ஆனால் நல்லதை உடலாக்கி விஷத்தை மலமாக மாற்றும் திறன் கொண்ட நாம்… இன்றைய வாழ்க்கையில் வேதனைப்படும் ஒரு மனிதனின் உணர்வை நுகர்வோமென்றால் (சுவாசம்) அது நம் உடலுக்குள் சென்று அணுவாக மாறி நம் உடலில் விஷத்தின் தன்மையாக உருவாக்கிவிடும்.

வேதனை என்றாலே விஷம். இதனின் கணக்கின் தன்மை அதிகரித்து விட்டால் அந்த விஷத் தன்மை கொண்ட அணுக்களாக உடலுக்குள் பெருகத் தொடங்குகிறது.

இப்படி நமக்குள் எதனை அதிகரிக்கின்றோமோ… அதன் வழிகளில்… இந்தக் கணக்கின் பிராகரம் தான்… நம்முடைய அடுத்த சரீரத்தை உயிர் உருவாக்கும் என்ற நிலையைத் தெளிவாக கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

1.இதை நாம் அறிவதில்லை…
2.இதை உணர்த்துவாரும் இல்லை…
3.உணர்த்தச் செய்யும் மனிதர் இல்லை….!

இப்பொழுது இதை உணர்த்தினாலும் இன்று ஏற்றுக் கொள்ளும் மனிதர் இல்லை…! என்று வேதனைப்பட்டுச் சொன்னார் நம் குருநாதர் ஈஸ்வரபட்டர்.

சாங்கிய சாஸ்திரங்களைச் சொல்லி சிவனுக்கு அபிஷேகங்களையும் என்றும் ஆராதனையும் செய்தால் “அவன் எனக்கு ஓடி வந்து செய்வான்…!” என்ற இந்த உணர்வைத் தான் தனக்குள் பதிவாக்கியுள்ளார்கள்.

அதன் வழியில் உடலிலே விளைந்த அணு அதே உணர்வின் எண்ணங்களைத் தான் உருவாக்கும். அதன்படி மந்திரங்களைச் சொல்லி அதற்கு வேண்டிய அபிஷேக உணவுகளையும் கொடுத்து இந்த உணர்வை நுகர்ந்து விட்டால் நந்தீஸ்வரா…!

இதே மந்திர உணர்வின் அணுவாக உடலிலே உருவாகி விளைந்து… உயிராத்மாவில் இணைந்துவிடும். இதை வளர்த்துக் கொண்ட நிலையில் உடலை விட்டுப் பிரியும் இந்த ஆன்மா எங்கே போகும்..?

இதே மந்திர ஒலியை அடுத்து இன்னொரு மனிதன் எழுப்புவான் என்றால்…
1.இதனின் கணக்கின் பிராகாரம் அந்த உடலின் ஈர்ப்புக்குள் தான் உயிரான்மா செல்கிறது
2.நாம் சுவாசித்த கணக்கின் பிராகாரம் தான் அடுத்த உடல் என்று தெளிவாக்கினார் குருநாதர்.

ஆகவே சிவாலயத்தில் எதை எண்ண வேண்டும்…? எதைப் பெற வேண்டும்…? என்றும் மக்களுக்கு எடுத்துச் சொல்…! என்றார் குருநாதர்.

ஆகவே நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டும்…?

நம்மைப் போன்று இந்தப் பூமியில் வாழ்ந்தவர்கள் தன் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றினார்கள்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியின் சரீரமாகப் பெற்று கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று
2.அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

காலை 4 மணிக்கு இதை எடுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெறவேண்டும் என்று நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்…!

“நான்… செய்வது தான் சரி…!” என்ற எண்ணத்துடன் இருந்தால் ஞானத்தின் வளர்ச்சி இருக்காது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கேள்வி:
எண்ணத்தில் தூய்மையும் நற்செயலுடனும் இருக்கும் ஒருவருக்குத் தியானம் அவசியமா…?

மற்றவரை நோக வைக்கும் எண்ணமோ செயலோ இல்லை. தான் செய்யும் காரியமும் எண்ணமும் சரியானதாகவும் இருப்பதாக இருக்கின்றது.

தான் செய்வது சரியா…? நியாயமா…? என்பது தெரியவில்லை.
1.எனக்கு நியாயம் என்று தோன்றுகிறது.
2.ஆனால் மற்றவர்கள் அதை ஏற்பது இல்லை…!

என் நினைவிலும் செயலிலும் தவறு இருந்தால் அதைத் திருத்திக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

பதில்:
எண்ணமுடனும் உணர்வுடனும் நல் நிலை பெற்றிருந்தாலும் பக்தி என்ற அன்பு நிலையை வளரவிடாமல் “நான்…” என்ற நிலைப்படுகின்றது இந்த வினாவின் நிலை.

கேள்வி கேட்டவர்:
அது சரியா… தவறா..! என்பது தெரியவில்லை. “நான்…” என்று எனக்கு உணரும் நிலை எனக்கு நன்றாகத் தெரிகின்றது.

பதில்:
உணர்வுடனே… “தன் நிலையை நல் நிலை என்றுணர்ந்து.. நான்…!” என்ற உணர்வையும் கலக்கிவிட்டதினால் வந்த நிலை உன் நிலை.

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இவ்வியற்கையின் சக்தியில் எவையுமே இல்லை
2.இந்த நிலையில் தன் உணர்வை நல்லொழுக்கப்படுத்தி அவ்வொழுக்க நிலைக்கே அடிமைப்பட்டு
3.அந்த நிலையையே தெய்வமாக்கித் தன் உணர்வுடன் நானாக இருந்து என்னம்மா பயன்…?

அனைத்து நிலைகளை அறிந்த சப்தரிஷிகளுமே தனித்த நிலையில் இயங்குவதில்லை. உணர்வுடன் உணர்வை ஒன்றச் செய்து தான் செயலாக்குகின்றார்கள்.

1.நீ அமைத்துக் கொண்ட இந்நிலையிலிருந்து விடுபட்டால் தான்
2.உன் உணர்வுடன் சேமித்துள்ள நற்சக்திகள் செயல் கொண்டிட முடியும்.

நல் எண்ணமும் அவ்வெண்ணமுடன் கூடிய உணர்வினால் நம் பார்வையின் சக்தியும் நாம் செப்பிடும் சொல் அழகும் அன்பான ஆசை வாழ்க்கை நிலையும் தான் ஜெப வாழ்க்கையம்மா.

“ஜெபம் என்பதுவே வாழ்க்கையுடன் ஒன்றிட்ட நல் உணர்வைப் பெற்றதுவே…”

எண்ண நிலையை ஒரு நிலைகொண்டு உண்மையுடனும் அன்புடனும் அன்பாசையுடனும் உள்ளவர்களுக்குத் தெய்வ நிலை கிட்டும். தெய்வம் என்பதுவே இந்த நிலை பெற்றோரைத்தான்.

1.ஆதிசக்தியின் இயற்கை சக்திகள்தான் அனைத்து சக்திகளும்.
2.நம்மையே நாம் இவ் இயற்கையுடன் தெய்வமாகக் கலக்கவிட்டு வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இப்பேராசைக்கும் வெறி உணர்வுகளுக்கும் மற்றத் தீய சக்திகளின் உணர்வுகளுக்கும் நாம் அடிமையாகாது வாழ்வதற்கே நல் ஜெபம் எடுத்திடுங்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்வது.

தியானத்தின் மூலம் சக்தி பெற வேண்டிய சரியான முறை

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.நிச்சயம் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றீர்கள்….
2.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்…
3.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் நோயை எல்லாம் மாற்றி அமைத்து விடுவீர்கள்….!
4.கணவன் மனைவிக்குள் சில குறை உணர்வுகள் இருந்தாலும் அதை எல்லாம் மாற்றி நிச்சயம் உயர்ந்தவர்களாக ஆவீர்கள்
5.இவ்வாறு நல்லதாக மாற்றக்கூடிய சக்தி உங்களிடம் இருக்கிறது.

உங்கள் குடும்பத்தில் உங்கள் குழந்தையோ பிள்ளைகளோ “இப்படி இருக்கின்றார்களே…!” என்று வேதனையுடன் எண்ணுவதிற்குப் பதில் “அவர்கள் நிச்சயம் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள்…” என்று எண்ணி இந்த உணர்வை நிச்சயப்படுத்தி நல்லவராக வேண்டும் என்று எண்ணி வாருங்கள்.

தியானம் செய்ய வேண்டிய முறை இது தான்…!

தியானத்தின் மூலம் அரும் பெரும் சக்தியை வளர்க்கவே இதை வாக்காகக் கொடுக்கின்றோம். இதை நீங்கள் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள முடியும். உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்… உங்கள் தெருவும் நன்றாக இருக்கும்… உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்…! ஊர் ஒற்றுமையாக இருந்தால் விவசாயமும் நன்றாக இருக்கும்.

ஊரில் ஒற்றுமை இல்லாது பகைமை இருந்தால் இந்தப் பகைமையான உணர்வுடன் நாம் பயிரிடும்போது பயிர்களிலும் கெடுதல் வரும். பல பூச்சிகள் விழும். விஷத் தன்மைகள் நம்மிடம் இருந்து அதற்குப் பரவும்.

அதை ஒழிக்க யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி தியானத்தின் வலுக் கொண்டு அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் பயிர்களிலே பாய்ச்சுங்கள். பூச்சிகளைக் கொல்லும் விஷமான மருந்திற்கே வேலை இல்லை.

உங்கள் பார்வையில் விவசாயம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எண்ணிக் காலை துருவ தியானத்தை எடுங்கள்.

அதில் நல்ல அணுக்கள் விளைய வேண்டும். நல்ல அணுக்களால் தாவர இனங்கள் விளைய வேண்டும். அதில் விளைந்திடும் உணவை உட்கொள்வோர் அனைவரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும். உங்கள் விவசாயம் நன்றாக இருக்கும்.

ஏனென்றால் இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கின்றது. இதிலிருந்து நாம் அனைவரும் மீள வேண்டும்.

1.எல்லாரையும் அந்த ஞானத்தின் சக்தியைப் பெற வைக்க வேண்டும் என்றார் குருநாதர்
2.அதைப் பார்த்து நீ பேரானந்தப்பட வேண்டும் என்று தான் என்னிடம் சொன்னார்.

அதே உணர்வுடன் நீங்களும் எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணிச் செயல்படுங்கள். பேரானந்தத்தை உருவாக்குங்கள்.

இந்தப் பூமியில் பிறந்த நாம் அந்தத் தாய்க்குச் சேவை செய்ய வேண்டும்.
1.தாய் பூமியை அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.
2.இதிலிருந்து தான் நாம் உருவானோம்… அந்தத் தாயை மதிக்க வேண்டும்
3.அந்தத் தாய் வீற்றிருக்கும் இந்த இடம் சுத்தமாக இருந்தால் இதில் வாழும் மக்கள் நாமும் நன்றாக இருப்போம்.

இந்த உலகில் நாம் வாழ்ந்து காட்ட வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.இயற்கை உணர்வுடனே கலந்திட்ட நல் நிலை பெற்றோரின் எண்ணச் சக்திக்கு
2.இவ்வெண்ணத்துடன் கலந்திட்ட இயற்கை சக்தியும் உறுதுணையாக நிற்கும்

இயற்கையின் தன்மையில் ஒரே நிலை இருப்பதில்லை.

காற்றும் மழையும் குளிரும் உஷ்ணமும் கால நிலைக்கேற்ப மாறிக் கொண்டு வருகின்றன. இயற்கை அனைவருக்கும் பொதுவான சக்தி தான்.

அச்சக்தியின் அருளைச் சாதக நிலைப்படுத்தி எண்ணத்தில் உயர்வு கொண்டோரின் நிலையின் ஜெபத்திற்கு அவர் எண்ண ஜெபத்தின் நிலைக்கு இயற்கையும் ஒத்துழைக்கும்.

எண்ணத்தில் ஏற்றுவித்த இந்நல் சக்தியின் நிலை கொண்டு இயற்கையின் சீற்றத்தையும் நாம் கட்டுப்படுத்திடலாம்.

நம் எண்ணமே அத்தெய்வ சக்தியை ஈர்த்து ஜெப நிலையில் உள்ள பொழுது… இவ் இயற்கையில் கலந்திட்ட பல நிலை கொண்ட அமில சக்தியை நம் எண்ணத்தின் சக்தியைக் கொண்டு திசை திருப்பிடவும்… ஜெபப்படுத்தி அவ் இயற்கையின் சக்தியையே நம் எண்ண நிலைக்கொப்ப நிலைப்படுத்திடலாம்.

ஆனால் எண்ணத்தில் கறையுண்டோருக்கு இயற்கையும் ஒத்துழைப்பதில்லை.

இன்றைய மனித ஆத்மாக்கள் தன் நிலை உணர்ந்திடாமல்… தான் பிறவி எடுத்து வாழ்ந்த நிலையையும் மடியும் நிலையையும் எண்ணத்தில் கொண்டு
1.இவ் இடை கொண்ட வாழ் நாட்களில் இருந்தென்ன பயன்…? என்றும்
2.இவ்வுடலுடன் நாம் இருந்து அடையும் நன்மை என்ன…? என்றும்
3.இயற்கை எய்திடும் (இறப்பு) நாம் இவ்வாழ்க்கையில் சிக்கி மனக் கலக்கப்பட்டு வாழ்ந்து என்ன பயன்…? என்றும்
4.எண்ணும் எண்ணத்தில்தான் பல ஆத்மாக்கள் உள்ளன.

எண்ணத்திலேயே தன் நிலையை வினாவாக்கி வாழ்பவருக்கு… இவ்வுடலுடன் மட்டுமல்ல… இவ்வுடலை விட்டுச் சென்றிட்ட ஆத்ம நிலையிலும் “இவ்வினா நிலைதான்…” சுற்றிக் கொண்டே இருக்கும்.

இயற்கையின் சக்தியில் இயற்கையே அளித்திட்ட இயற்கையுடன் ஒன்றிய நம் உயிராத்மாவை இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நாட்களிலும் சரி… ஆத்மா பிரிந்து ஆவியுடன் சுற்றிக்கொண்டுள்ள நிலையிலும் சரி… இவ் இயற்கையுடன் ஒன்றியே தான் உயிரணு உதித்த நாள் முதற் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையும் அமில சக்தியும் நம் எண்ண சக்தியுடன் என்றென்றும் அழியாமல் சுற்றிக் கொண்டுள்ளன.

இப்பிறவிக்கு நம் எண்ணம் கொண்டுதான் வருகின்றோம். ஈன்றவரின் நிலையினால் மட்டுமல்ல…!

நாம் பிறவி எடுத்த நற்பயனையே நற்சக்தியாக்கி… இவ்வுலகுடன் ஒன்றியே நம் உயிராத்மாவும் தொடர்பு கொண்டு… நம் பிறவிப் பயனைப் பெற்று…
1.நாம் பிறந்திட்ட உண்மை சக்தியினை இவ்வுலகில் நிலை நிறுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.
2.அகஸ்தியனைப் போன்றும் போகனைப் போன்றும் கொங்கணவரைப் போன்றும் ஒவ்வொரு நிலையிலும் நல் உணர்வு கொண்டு
3.நம்முடன் நம்மை வழி நடத்திச் செயல் கொண்டு செயலாக்கிடும் பல ரிஷிகளின் நிலை பெற்று வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இயற்கையின் சக்தி அனைத்திற்கும் பொது சக்தி. அச்சக்தியின் நல் உணர்வை ஈர்த்து நம் ஆத்மாவை நிலைப்படுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

நல்ல மணமகன் நல்ல மணமகளைத் தேர்ந்தெடுக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறை

 

தன் மகன் திருமணத்திற்குத் தகுந்த மணப்பெண் வேண்டுமென்றால் “மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தைக் காக்கும் அருள் சக்தி கொண்ட பெண் நமக்குக் கிடைக்கும்…” என்று இந்த உணர்வினை எண்ணிச் செயல்படுத்திப் பாருங்கள்.

இதைப் போன்ற உணர்வுகள் வரப்படும்போது அதற்குத்தக்க நல்ல இடத்தை அழைத்துக் சென்று நல்ல மணமகளைப் பார்க்க முடியும். அதே போல் நல்ல மணமகனையும் தேர்ந்தெடுக்கும் சக்தி உங்களிலே பெருகும்.

ஆனால் ஜாதகம் ஜோதிடம் என்று பார்த்தால்… அது உங்களைத் தான் அடிமையாக்குமே தவிர மெய் உணர்வை உங்களை அறியச் செய்யாது.

1.ஜாதகம் ஜோதிடம் பார்க்காது மனம் ஒத்துச் சென்றால்
2.உணர்வின் தன்மை ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

ஜாதகம் பார்த்துப் பார்த்து எதுவும் ஒன்றி வரவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை பதிவாகி… கடைசியில் சோர்வின் தன்மை அடையப்படும்போது அதற்குத் தகுந்த “சோர்வான மாப்பிள்ளையையோ சோர்வான பெண்ணையோ தான்” பார்க்கும்படி வரும்.

அப்படி வந்த பின் கீரியும் பாம்பும் போல தான் அவர்கள் வாழ்க்கை அமையுமே தவிர மகிழ்ச்சி பெறும் தன்மை இல்லை.

ஜாதகம் ஜோதிடம் பார்த்து ஆயுட்காலத்தை நிர்ணயித்துத் தான் திருமணத்தைச் செய்கின்றார்கள். எல்லாப் பொருத்தமும் இருந்தால் அவர்களுக்கு நோய் வராது…! என்பார்கள். அதன் பிரகாரம் வாழ்கின்றனரா…? நோயில்லாமல் வாழ்கின்றனரா…?

1.மனப்பொருத்தத்தைப் பார்த்து அருள் ஒளி பெற வேண்டுமென்று ஏங்கிப் பெற்றால்
2.ஒன்றி வாழும் நிலை பெற்று அவர்கள் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் திறன் பெறுகின்றனர்.

ஆகவே அருள் ஞானி காட்டிய அருள் வழிகள் அவர்கள் பெற வேண்டும் அதன் வழி எங்கள் குடும்பங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

ஜாதகம் ஜோதிடம் என்ற நிலைகளை ஒழித்துத் தள்ளுங்கள். அருள் வழி பெற வேண்டுமென்ற நிலைகளில் நம் குடும்பம் ஒத்து வாழ வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணுங்கள்.

பொண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் அவர்கள் வாழ்க்கையில் நோயின் தன்மையை விசாரியுங்கள். குணத்தின் தன்மையை விசாரியுங்கள். நல்ல ஒழுக்கத்துடன் செயல்படுகின்றாரா…? என்று பாருங்கள்.

இப்படித்தான் பொருத்தங்களைப் பார்க்க வேண்டும். நல்லொழுக்கத்துடன் செயல்பட்டால் இந்த முறைப்படி நாம் தியானித்தால் இந்த நல்லொழுக்கம் மீண்டும் வளர்கின்றது. தவறுகள் வராது.

ஆனால் தவறு செய்வோர் ஆசையின் உணர்வுகளை ஊட்டுவார். அதை ஏற்றுக் கொண்டு ஏமாந்து விட்டால் “நான் ஏமாந்துவிட்டனே…” என்று ஆன பின் திருமணமான பின் தீய பழக்கங்கள் கொண்ட நிலைகளே வருகின்றது.

ஆகவே துருவ தியானங்கள் இருந்து கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நம் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்
2.நம் பெண் எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பம் தொழில் வளம் பெருக வேண்டும்
3.அதன் பார்வை அந்தக் குடும்பத்திற்கு நலம் பெறும் சக்தியாக அமைய வேண்டும்
4.அதே போல வீட்டிற்கு வரும் மருமகளும் மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தை அழகுபடுத்தும்
5.மகிழ்ச்சி அடையச் செய்யும் அந்த உணர்வுகள் பெற வேண்டும்
6.அத்தகைய மணப்பெண் நம் வீட்டிற்கு வர வேண்டுமென்ற எண்ணத்தைத் தொடருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைகள் நிச்சயம் வரும்.

மனிதன் உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு அக்கால ஞானிகள் காட்டிய மிகவும் எளிதான வழி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இவ்வுலகில் உதித்திட்ட அனைத்து உயிராத்மாக்களும் உயிரணுக்களும் அனைத்துமே தெய்வம் தான்.
1.தெய்வம் என்று அன்பு கொண்டு நாம் காணும் சிறு துரும்பும்
2.நாம் தெய்வம் என்று எண்ணும் நிலையிலேயே
3.நம் உயிராத்மாவும் அத்தெய்வ சக்தியைப் பெறுகின்றது.

கல்லையும் மண்ணையும் ரூபப்படுத்தி தெய்வமாக வணங்குவதெல்லாம்
1.நம் ஆத்மாவையே அத் தெய்வ நிலையில் அன்பு கொண்டு வணங்கிடுங்கால்
2.அச்சக்தியின் திறன் நம் ஆத்மாவிற்கே பதிவு கொள்கின்றது.

உருவ வழிபாடெல்லாம்.. குண நிலையை உணர்த்திட நம் முன்னோர்கள் வழி நடத்திட்ட நல் வழி முறைகள் தாம்.

இம்மனித எண்ணங்களில் வாழ்க்கையுடன் கூடிய பல நிலைகள் கொண்ட எண்ணக் கலவையிலிருந்து
1.ஆண்டவனைப் பக்தி கொண்டு பூஜிக்கும் நிலை ஏற்படும் பொழுதே
2.ஒவ்வோர் ஆத்மாவும் அமைதி கொள்கின்றது.

பாட நிலையில் இந்நிலைகள் அனைத்திற்கும் எல்லா நிலைகளையும் புரியும்படி விளக்கியுள்ளோம். வழிப்படுத்தும் முறைக்காகத்தான் இப்பக்தி நிலை.

நாம் வாழ்ந்த வாழும் இந்த நாட்டில் உள்ள பக்தி நிலையின் தொடர்பினால்தான் இங்குள்ள மக்களின் எண்ணத்தில் அன்பு நிலையும் சில இடங்களில் ஆத்மீக நெறி முறையும் உள்ளன.

ஆனால் இப்பூமியிலேயே மற்ற மேலை நாடுகளில் உள்ள நிலையினை அறிந்திருக்கலாம் எப்படி இருக்கிறது என்று…!

ஏனென்றால் அவரவர்கள் தான் அமைத்துள்ள வழியில்… வந்த தம் தம் தொடர்புப்படி பெற்ற… எண்ணக் கலவையின் வழித்தொடரிலேயே இன்றளவும் எண்ண நிலையுள்ளது.

ஆனால் மனித எண்ணத்தில் அனைத்து நிலைகளையும் அறியும் சக்தித் திறனுண்டு. அதை நல் நிலைப்படுத்தி எடுத்த பிறவியின் பலனை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும் என்பதற்கே இந்தப் போதனைகள்.

நல்ல மக்களை வீட்டிலிருந்தே உருவாக்க ஞானிகள் அன்று காட்டிய நெறி

 

ஒரு குழந்தை அழகாகப் பிறக்க வேண்டுமென்றால்… அருள் ஞானியாகப் பிறக்க வேண்டுமென்றால்… அதற்குண்டான உவமையும் அழகுபடுத்த தெய்வாம்சம் கொண்ட படங்களை வீட்டிலே வைத்து மெய் ஞான அறிவுப்படி கருவுற்ற பெண்களை அதை உற்றுப் பார்க்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

சரஸ்வதி படத்தை உற்று நோக்கி… “கல்வியில் சிறந்தவர் கருத்தறியும் உணர்வுகள் கொண்டவர் இசையில் வல்லவர்” என்ற இந்த உணர்வின் தன்மையை எண்ணி எடுக்கும்படி செய்தனர்.

இலட்சுமி படத்தை உற்று நோக்கி… “அழகையும் செல்வத்தையும் செழிப்பையும்” எண்ணி எடுக்கும்படி செய்தனர்.

பராசக்தி படத்தை உற்றுப் பார்க்கும் பொழுது “சர்வத்தையும் தனக்குள் உருவாக்கும் உணர்வுகள் உண்டு” என்று அந்த ஆற்றல்களை எண்ணி எடுக்கும்படி செய்தனர்.

இந்த மூன்று படங்களை ஒன்றாக இணைத்து… ஒன்று இசை இன்னொன்று அழகு செல்வம் மற்றொன்று சக்தி என்று எண்ணி எடுக்கும் நிலையில்… எந்த குணத்தின் தன்மையோ அதை இலட்சுமி தனக்குள் அதை வளர்த்துக் கொள்ளும் என்று காட்டுகின்றார்கள்.

1.அதாவது உயிரிலே ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும்…
2.உணர்வின் தன்மை எதை இசையோடு இணைக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மையைக் கருவாக்கும் என்றும்
3.ஈர்க்கும் உணர்வுகள் உயிரிலே மோதும் போது அதிலிருக்கும் வெப்பத்தின் தணல் கொண்டு ஒன்றென இணைந்து
4.”அந்த உணர்வின் தன்மைகள் கருவாகும்…” என்பதை நினைவுபடுத்தி
5.சாதாரண மக்களுக்கும் தன் குடும்பத்தில் தன் கருவிலே விளையும் சிசுக்களை
6.அருள் ஞானக் குழந்தைகளாக வளர்த்திட ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

வீட்டிலே இத்தகைய தெய்வப் படங்களை வைத்து அதிலே சூரிய ஒளிக்கதிர்கள் படும்போது அந்த நிலைகள் அலைகளாகப் படர்கிறது.

அதை உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால் அந்த அலைகளை நாம் நுகர நேர்கின்றது. நுகர்ந்தது நம் உயிரிலே படும்போதுதான் அந்த படத்தையே… அந்த அழகையே… ரசிக்கும் தன்மை நமக்குள் வருகின்றது.

இத்தகைய நிலைகளை கருவுற்ற தாய்மார்கள் நுகர்ந்து கருவிலே வளரும் சிசுக்களை அழகாகவும் அருள் ஞானியாகவும் உயர்ந்த குணங்களை வளர்ப்போராகவும்… இப்படிப்பட்ட உயர்ந்த நிலைகளைத் தனக்குள் உருவாக்கும் சக்தியாகப் பெறுவதற்காக இந்த மூன்று படங்களையும் வைத்தனர் ஞானிகள்.

அந்தப் படங்களைப் பார்க்கும் போது அதில் உள்ள கருத்தை எண்ணத்தால் தனக்குள் கருவாக்கி… கர்ப்பமுற்ற அந்தத் தாயை எண்ணும்படி செய்கின்றனர்.

அதே போல் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோரும் கருவில் வளரும் சிசுவிற்கு அந்த ஆற்றல் பெற வேண்டுமென்று இந்த உணர்வின் தன்மையை உருவாக்கப்படும்போது கருவிலே வளரும் அந்த சிசு அழகாகவும் அருள் ஞானியாகவும் கருத்தறிந்து செயல்படும் சக்தியாகவும் வளர்கின்றது.

1.நல்லதை உருவாக்கும் அணுக்கதிர்களை எடுத்து…
2.கருவில் வளரும் சிசுக்களை மெய் ஞானிகளாக வளர்க்க முடியும் என்று தான்
3.வீட்டிலே இததகைய படங்களை வைக்கச் சொன்னார்கள் ஞானிகள்.

ஆனால் அழகான படத்தைப் பார்த்து… அருள் ஞானத்தை எண்ணி எடுப்பதற்குப் பதில்… குடும்பத்தில் இருக்கும் சங்கடங்களையும் வேதனை கொண்ட இசைகளையும் இணைத்து… இந்த உணர்வுகளைக் கருவுற்றிருக்கும் தாய் நுகர்ந்தால் என்ன ஆகிறது…?

கருவிலிருக்கும் அந்த சிசுவிற்கும் இதே சங்கட அலைகள் இணைந்து அதனுடைய அழகான ரூபங்கள் தொலைந்து… சிந்திக்கும் உணர்வுகளும் இழக்கப்பட்டு
1.குழந்தை பிறந்த பின் வெறுப்பும் வேற்றுமையும் கொண்டு
2.மேனியில் அழகு குறைந்த நிலைகளாகவும் சில குடும்பங்களில் இப்படி வளர்கின்றது.

ஆக.. இது போன்று ஆகாதபடி நல்லொழுக்கப்படுத்த அன்று தத்துவ ஞானிகள் இப்படி எத்தனையோ வழிகளை நமக்குக் காட்டியுள்ளார்கள்.

நம் வீடுகளில் சாமி படங்கள் பலவும் உண்டு. அதனை வைத்துப் பூஜிக்கும் அனைவரும் எப்படிப் பூஜிக்கின்றோம்…?

குடும்பத்தில் கஷ்டமாக இருந்தது என்றால் அந்தக் கஷ்டத்தையே சொல்லி வழிபடுவர். நான் உன்னையே எண்ணி நாள் முழுவதும் வழிபடுகின்றேன்… எனக்கு ஏன் இந்தச் சோதனை…? என்ற உணர்வுகளைத் தான் நாம் எண்ணுகின்றோம்.

இந்த நிலையில் நாம் எண்ணிய வேதனை உணர்வுகளை நமது உயிர் “ஓ…” என்று அணுவாக மாற்றுகின்றது. “ம்…” என்று உடலாக மாற்றுகின்றது.

1.நாம் வளர்த்த அந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் ஆண்டவனாக ஆண்டு கொண்டு இருக்கின்றது
2.மீண்டும் அதை எண்ணும்போது அந்த உணர்வை இயக்கி நமக்கே உணர்த்துகின்றது நமது உயிர்.
3.உயிரின் வேலை அதுதான்…!

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஞானிகள் நமக்குக் கொடுத்த நல்வழிகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

eswarpattar and agastyar

பித்தனைப் போன்று சுழன்று கொண்டிருக்கும் ஈஸ்வரபட்டரின் பூர்வீகம்

 

நமது குருநாதர் ஈஸ்வரபட்டர்… தன் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி மெய்ப் பொருளை கண்டுணர்ந்து உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்.

அவர் விண் சென்ற நாள் தான் வைகுண்ட ஏகாதசி. எந்த உடலுக்குள்ளும் புகாது… எதற்குள்ளும் சிக்காது பேரண்டத்தின் உணர்வைத் தனக்குள் உணர்வின் ஒளியாக மாற்றி என்றும் ஏகாந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது குருநாதர்.

அதற்கு முந்திய மகரிஷிகளும் உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

நமது குருநாதர் அவர் வாழ்க்கையில் எத்தனை சரீரங்களை எடுத்தாரோ… எத்தனை வேதனைகளைப்பட்டாரோ… எத்தனை இன்னல்களை அவர் பட்டாரோ… அந்த உணர்வுகளிலிருந்து நீங்கும் எண்ணத்தைக் கொண்டு தான் வளர்ந்தார். ஏனென்றால் அவரும் பல இன்னல்களைச் சந்தித்தவர் தான்…!

மங்களம் என்ற ஊர் ஒன்று உண்டு. அதிலே ஒரு குக்கிராமம் அதாவது கேரளா எல்லையும் கர்நாடக எல்லைக்கு அருகிலே அமைந்தது தான் ஈஸ்வர மங்களா…! என்ற ஊர்.. அந்தக் குக்கிராமம்.

குறைந்தபட்சம் அதிலே பத்து வீடுகள் இருப்பதே அதிகம் தான். ஆக தனித்துத் தனித்து இருக்கும் நிலைகளில் நமது குருநாதரின் பூர்வீகம் அதுவாக இருப்பினும் அவருடைய தாய் தந்தையர்கள் அங்குள்ள ஆலயத்தில் சேவை செய்து பூஜை செய்து அங்கே மந்திர ஒலிகளை ஒலித்துக் கொண்டிருந்தவர்கள்தான்.

அக்காலத்தில் அகஸ்தியன் தனது ஐந்தாவது வயது அடையப்படும் போது தன் அன்னை தந்தையை இழந்த நிலையில் அன்னை தந்தையின் ஏக்கம் கொண்டு இருக்கப்படும் போது அந்த இரண்டு ஆன்மாக்களும் அகஸ்தியன் உடலுக்குள் புகுந்து… அவர்கள் கண்டுணர்ந்த உணர்குகளை எல்லாம் இந்த உடலுக்குள் நின்று அந்ப் பச்சிளங்குழந்தையைக் காத்து மெய் உணர்வைப் பெறும் தகுதி ஏற்படுத்தினரோ அதே போன்றுதான் நமது குருநாதர் வாழ்க்கையிலும் ஏற்பட்டது.

குருநாதருடைய தாய் தந்தையர்கள் கோயில்களில் பூஜை செய்து கொண்டிருக்கும்போது இவர் ஐந்து வயது அடையப்படும் போது அவரது அன்னை தந்தை இருவரும் சந்தர்ப்ப பேதத்தால் உடலை விட்டுப் பிரிந்து விடுகின்றார்கள்.

தவித்துக் கொண்டிருந்த இந்தப் பச்சிளங்குழந்தை தன் அன்னை தந்தையைக் காக்க வேண்டுமென்ற ஏக்க உணர்வு கொண்டு ஏங்கிய நிலையில் அந்த ஆன்மாக்கள் இவர் உடலில் புகுந்து விடுகின்றது.

தாய் தந்தையரோ பல மந்திர ஒலிகளை எழுப்பிப் பல யாகங்களும் பல வேள்விகளும் செய்தவர்கள் தான். அந்த உணர்வின் ஞானத்தால் பல உண்மைகளை அறியும் ஆற்றலும் பெறுகின்றார்.

அதன் வழியில் அன்றைய மகாபாரதப் போரின் நிலைகள் எவ்வாறு…? என்று வியாசகர் வெளிப்படுத்திய தத்துவ நிலைகள் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் கவரப்படுகின்றது.

மகாபாரதமும் அதனின் தொடர் வரிசையில்…
1.சாஸ்திரங்களில் கூறப்பட்டிருந்த உணர்வுகள் அனைத்தும் இந்த பிஞ்சு உள்ளங்களிலே கவரப்பட்டு
2.அந்த உணர்வின் துணையால் இந்த பூமியின் எந்த மூலைக்கும் தன்னிச்சையாகச் செல்லும் சக்தியும் திறனையும் பெற்றார்.

அதன் வழியிலேயே தான் அவருக்குள் அன்னை தந்தையரின் உணர்வுகள் இயக்கப் பெற்றுப் “பேரண்டத்தை அறியும் ஆற்றலும்…” அவருக்குள் கிட்டியது.

சாங்கிய சாஸ்திரப் பிடிப்பில் சிக்கிய அந்தக் குடும்பத்தில் அத்தகைய நிலைகள் கொண்டு கண்டுணர்ந்தாலும்…
1.மந்திர ஒலியில் சிக்காது அவருடைய எண்ணங்கள் விண்ணை நோக்கி ஏகி
2.அந்த உணர்வு கொண்டு சப்தரிஷி மண்டலங்களின் உணர்வினைப் பெறும் தகுதியைப் பெறுகின்றார் நமது குருநாதர்.
3.அதுவும் அவருடைய சந்தர்ப்ப பேதங்கள்தான்.

தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு உலகம் எங்கிலும் சுற்றி வந்து… உலகில் உள்ள சாங்கிய நிலைளைத் தனக்குள் கண்டுணர்ந்து… சாங்கியத்தால் பெற்ற அந்த தீமையில் இருந்து விடுபட வேண்டுமென்ற உணர்வினைத் தன்னுள் பதியச் செய்து…
1.விண்ணுலக ஆற்றலைப் பெற்றுணர்ந்த நமது குருநாதர்
2.அந்த உண்மைகள் மக்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெற வேண்டும் என்றுதான்
3.பித்தனைப் போலவே அவர் பல காலம் பல நிலைகளிலும் சுழன்று கொண்டுள்ளார்…!

Vallalar HD

சாகாக்கலை… வேகா நிலை… போகாப்புனல்… இராமலிங்க அடிகள் சொன்னது

1.அகஸ்திய மாமகரிஷி தன்னுள் கண்டுணர்ந்ததும் தன்னை அறிந்ததும்
2.அணுவின் ஆற்றலை அறிந்து ஆற்றல்மிக்க உணர்வினை தன் உடலிலே வளர்த்து
3.பேரண்டத்தையும் தன்னுள்ளே கண்டுணர்ந்து
4.தனக்குள் கண்டுணர்ந்த உணர்வில் இருள் படர்ந்ததை இருளை நீக்கி
5.தன் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ மகரிஷியாகி
6.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக என்றும் பதினாறு என்ற நிலை அடைந்துள்ளார்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வினை எவர் கவர்ந்தனரோ அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் பெற்று சப்தரிஷி மண்டலங்களாக அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

மனிதனில் உயர்ந்த நிலைகள் பெற்றவர்கள்… வாழ்வில் பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைந்து… அழியா ஒளிசரீரம் பெற்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின்படி அவர்கள் சென்ற பாதையில் நாம் சென்றோமென்றால் இந்த வாழ்க்கையில் வரும் இருளினை நீக்கி இருளுக்குள் பொருள் கண்டுணர்ந்து இருளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக முடியும்.

இவ்வாறு இந்த வாழ்க்கையில் இருளை நீக்கிடும் உணர்வின் தன்மைகளைத் தன்னுள் எவர் பெறுகின்றனரோ அவரே அடுத்த எல்லையாக இந்த உடலிலே பிறவா நிலை என்ற பெரு நிலை அடைகின்றனர். இதற்குப் பெயர் “வேகா நிலை…”

இன்று நமது வாழ்க்கையில் எந்தந்தெந்த ஆசைகளை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ அது சாகாக்கலையாக வளர்ந்து இந்த உடலை விட்டு அகன்றாலும் அந்தக் கலையின் உணர்வின் துணை கொண்டு அந்த உணர்வுக்கொப்ப மீண்டும் உடலின் அமைப்புகள் அமைகின்றது.

இதைத் தான் சாகாக்கலை வேகா நிலை போகாப்புனல்…! என்று தற்காலத்தில் இராமலிங்க அடிகள் இதைத் தெளிவாக்கியுள்ளார்.

தீயில் விழுந்தால் உயிர் கருகுவதில்லை. உயிர் வேகா நிலை…!

1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை சாகாக்கலையாக வளர்த்து
2.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றி உணர்வு அனைத்தையும் வேகா நிலை பெற்று
3.உடலை விட்டு அகன்றால் என்றும் போகாப்புனல் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலை அடைய வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார் இராமலிங்க அடிகள்.

இதைப் போன்று நமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று நம் உயிரையும் உயிரின் இயக்கத்தையும் உயிரால் இயக்கப்பட்டு மனிதனாக ஆன நிலையும் உணர்ந்து
1.மனிதனானபின் நாம் இப்போது எங்கே செல்ல வேண்டும் என்பதை நினைவுப்படுத்தி
2.அதன்படி நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவதே மேல்…!

Big dipper - Ursa major

மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழும் நிலை பெற்றிடுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகின் ஈர்ப்பு நிலை போன்றே… எண்ணத்தின் நினைவும் தொடர் நிலை கொண்டதாக ஒவ்வோர் உயிரணுவும் அது தோன்றிய நாள் தொட்டே உயிராத்மாவுடனும் சேர்ந்து வருவது தான்.

இவ்வுலகின் சுழற்சி நிலை வேகத்தின் நிலைக்கொப்ப அது பெற்ற ஈர்ப்பு சக்திதான் இந்த உலகிற்கு உண்டு. அந்த நிலை போன்றே… நம்முடனே வளர்ந்திட்ட அமில நிலைக்குகந்த எண்ண சக்திதான் ஒவ்வொருவருக்கும் உண்டு.

பல நிலை கொண்ட குண நிலைகள் அமைவதெல்லாம்
1.நம்முள் உள்ள நாம் ஈர்த்துச் சேமித்த உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே
2.வளர்ந்த நிலை கொண்ட… குண நிலை கொண்ட நாம்
3.அந்நிலைக்கே… அச்சுழற்சியுடனே… இன்று வரை வழி நடந்தும்
4.எண்ண நிலை பெற்றும் வாழ்ந்து வருகின்றோம்.

எப்பிறவிக்கு வந்தாலும் நாம் நம் உயிரணுவுடன் சேமித்த அமில சக்தியுடன் தான் (உயிராத்மாவில் விளைந்தது) இன்றளவும் வாழ்ந்து வருகின்றோம்.

பல உலோகங்களும் தாவரங்களும் அதனதன் நிலைக்குகந்த அமிலத்தை ஈர்த்து ஒரே நிலை கொண்ட தன்மையில் வளர்கின்றன. பல உலோகங்களும் திரவங்களும் ஆவியான தன் இனத்திற்கு உகந்த இனத்தையே மேன்மேலும் ஈர்த்துச் செயல்படுகின்றன.

வான மண்டலத்தில் இடியும் மின்னலும் ஓர் இனத்துடன் மற்றோர் இன அமில நிலை மோதிடும் பொழுது “சத்ரு… மித்ரு…” நிலையினால் ஏற்காத நிலையில் இடியும் மின்னலும் ஏற்படுவதாக உணர்த்தியுள்ளேன்.

இவ்வுலகினில் மற்ற எல்லா மண்டலமும் அதனதன் இனத்துடன் தான் வாழ்கின்றன. ஆனால்…
1.இம்மனித ஆத்மா நிலை கொண்ட நம்மால்
2.நம் இன நிலையான இவ்வெண்ண நிலையை
3.நாம் எடுத்திடும் சுவாச நிலையினால் நல் நிலைப்படுத்திட முடியும்.

மண்டலங்களுக்கும்… மண்டலங்களில் தோன்றி வளர்ந்திடும் இயற்கை வளங்களுக்கும்… மற்றத் தாவர இன வர்க்கங்களுக்கும் எவற்றுக்குமே இம் மனித உடல் கொண்ட ஆத்மாவுடன் கூடிய நாம்… வாழ்ந்திடும் இந்த மனிதப் பிறவியின் பாக்கியத்தை… நம்மால் நம் நினைவினில் நமக்குகந்த நிலையினை ஈர்த்து வாழ்ந்து காட்ட முடியும்.

ஆனால்…
1.எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம்.
2.வெறி உணர்வுக்கும்… பேராசைக்கும் அடிமை கொண்டு… பக்தி நிலையை வளர்த்தாலும் பலன் பெறுவது கடினம்.
3.பக்தி என்பதனையே அடிமைப்படுத்திடும் நிலையாக்கிடாமல்
4.அவரவர்களின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அன்பாக்கி
5.அந்நிலையின் தொடரினால் ஜெப நிலையில் நல்லுணர்வு கொண்ட அமிலத்தையே நம் ஆத்மாவின் சொத்தாக்கி
6.மாறப்போகும் கலியில் இருந்து மீண்டு பல மகரிஷிகளுடன் கலந்திடலாம்.
7.இன்று இவ்வுடலில் நாம் சேமித்த ஒளி சக்தியின் தொடர்புடனே மனித வாழ்க்கைக்கும் உயர்ந்த வாழ்க்கையான
8.மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழும் நிலை பெற்றிடலாம்..!

இப்பூமியின் அமில சக்தி உன்னத சக்தி. அனைத்து நிலைகளும் கலந்த சக்தி. இப்பூமியின் தன்மை மாறுபடத்தான் போகின்றது. சூரியனின் நிலையும் மாறுபடத்தான் போகின்றது. ஆனால் நம் எண்ணத்தில் எண்ணிடும் நிலையில் இல்லை.

சூரியனையே நெருப்புக் கோளமாக எண்ணுகின்றனர். ஆனால் அது குளிர்ந்த பூமி. எச்சக்தியையும் அறிந்திடும் நிலை இம்மனித ஆத்மா ஒன்றுக்குத்தான் உண்டு.

யாம் உணர்ந்த ஆத்மீக நெறியையே அனைத்து உலக நிலைகளையும் உணர்த்திட்டால் “நான்…” என்ற அந்நான் நிலை வந்துவிடும்.

1.ஆத்மீக நெறியினில் அன்பு கொண்டே ஜெபம் கொண்டு அறிய வருபவர்களுக்கு
2.அந்நிலையின் தொடரை வழிப்படுத்தி
3.அனைவருக்கும் பொதுவான சக்தியின் சக்தியை உணரும் நிலையை
4.எமக்குக் கிட்டிய சக்தியின் வழித் தொடரை வழிப்படுத்துகின்றோம் (ஈஸ்வரபட்டர்)

path way of Eswarapattar

ஞானிகள் காட்டிய நெறிகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்

 

இன்று நாம் பேசிக் கொள்கின்றோம் இராமன் கடவுள் என்று. அதே போல் கீதாச்சாரத்தில் கூறப்படும் நிலைகள் கொண்டு கண்ணன் கடவுள் என்றும் சொல்கிறோம்.

இவ்வாறு அவர்கள் சொன்ன நிலைகள் எதுவோ அதைத்தான் எண்ணி நாம் வாழ்கின்றோமே தவிர மூலக்கூறுகளைப் பிரித்து “மூலம் எது…?” என்று அறிந்துணர முடியவில்லை.

பேருண்மைகளைத் தனக்குள் உணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் நிலை கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள் காட்டிய சாஸ்திரங்கள் காலத்தால் மறைந்து போய் விட்டது.

இன்று சாங்கிய சாஸ்திரம் செய்வதும்… நைவைத்தியங்கள் செய்வதும்… யாகங்கள் வளர்ப்பதும்… ஜோதிடங்கள் பார்ப்பதும்… அதன் வழி கொண்டு இந்தச் சாங்கியங்களைச் செய்து விட்டால் “கடவுள் நம்மைக் காப்பார்” என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறோம்.

கடவுளின் அருளைப் பெறுவதற்காக யாகங்களைச் செய்வோம். கடவுளால் உருவாக்கப்பட்ட ஜோதிடங்கள் என்ற நிலையில் அதிலே சொல்லப்பட்ட சாங்கியத்தைச் செய்துவிட்டு கடவுளிடம் வரம் கேட்போம்.

1.இது போன்ற சாங்கிய சாஸ்திரத்தில் மூழ்கி…
2.நம்மையே நாம் அறிய முடியாத நிலைகளும்…
3,நமக்குள் புகுந்து தீமைகளைச் செய்யும்… வேதனைப்படச் செய்யும்… தீமையிலிருந்து நாம் விடுபடாத நிலைகளிலும்
4.எவருக்கோ பணம் கொடுத்து அவர் தான் நமக்கு நன்மை செய்வார் என்ற நிலைகளில்
5.தீங்கினையே நாம் நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர
6.நமக்குள் அறியாது புகுந்த தீவினைகளை அகற்றும் ஞானிகள் காட்டிய நெறிகளை நாம் பின்பற்றவில்லை.

காரணம்… இந்தத் தியான வழியில் வந்த அன்பர்களும் உலகை ஒத்து வரப்படும்போது மற்றவர்களுடைய தவறான செயலைக் கண்டு வேதனைப்படுகின்றனர்.

ஆனால் அவர்கள் நல்ல வழியில் திருந்தி வரவேண்டுமென்ற எண்ணங்களைச் செய்வதில்லை.
1.உண்மையை அறிந்தும்… சாமி (ஞானகுரு) சொல்லியும்
2.அவர்கள் பிழைகள் செய்கிறார்கள் என்ற வேதனையைத்தான் வளர்க்க முடிகின்றதே தவிர
3.பிழைகள் செய்வோர் அவர்கள் தவறை உணர வேண்டும்…
4.மூலக்கூறுகளை அறிந்து தெளிந்து தெளிவான நிலையில் அவர்கள் செயல்பட வேண்டும்…! என்று
5.தனக்குள் இந்த நல் எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றனரா என்றால் இல்லை.

ஆக… சாங்கிய உணர்வுகளை நாம் வளர்த்துத் கொண்ட வழியின் துணை கொண்டே பிறர் செய்யும் செயல்களைக் குறைவாக எண்ணி அந்த குறைவு என்ற நிலைகளில் “பலவீனப்படுத்தும்… வேதனைப்படும்…” நிலைகளையேதான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உபதேசித்து உணர்வின் தன்மையை உங்களுக்குள் தெளிவாகக் காட்டிக் கொண்டு வருகிறோம்.

பிறர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வேதனை என்ற நிலைகளில் நமக்குள் புகுந்து தீமையை விளைவிக்கா நிலைகள் பாதுகாக்கும் உணர்வினை உங்களுக்குள் ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று முறைப்படுத்தியும் கொடுத்துள்ளோம்.

அந்த ஆயுதத்தின் வலுக் கொண்டு பதிந்த உணர்வின் தன்மை கொண்டு நினைவு கொள்ளும் பொழுது உங்களில் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும் என்று உங்களைத் தன்னம்பிக்கை கொண்டு வளர்க்கவும் செய்கிறோம்.

இப்படிச் செய்தாலும்…
1.அவரவர்கள் வளர்த்துக் கொண்ட உணர்வின் வினையே அது வலுப் பெற்ற நிலைகள் கொண்டு
2.அது தன்னைச் சீர்படுத்தும் நிலைகள் மாறித் தியான வழியில் உள்ளோரும் இந்த நிலையில் சிக்குண்டு
3.மீளும் நிலையே இல்லாது தவிக்கும் பலர் உண்டு.

ஒரு சிலரே இதனின் உணர்வை உணர்ந்து அறிந்து செயல்படுகின்றனர். தீமைகளை அகற்றிடும் உணர்வினை வலுப்பெற்று
1.தன்னுள் தீமையை நாடா நிலையும்
2.தன்னைச் சார்ந்தோருக்குத் தீமைகள் நாடாதபடி சொல்வாக்கின் நிலைகளைப் பதிவு செய்து
3.வளர்ந்து கொண்டுள்ள தியானவழி அன்பர்களும் உண்டு.

ஆகவே இதை இப்பொழுது தெரிந்து கொண்டோம்… இனி நாம் தெரிய வேண்டியது என்ன…? என்பதைத் தெளிந்து… வாழ்க்கையை புரிந்து…
1.இருள் சூழும் நிலைகளில் இருளைப் பிளந்து
2.பொருள் காணும் உணர்வினை நமக்குள் வளர்த்து
3.என்றென்றும் மெய்ப் பொருள் கண்டுணரும் திறன் பெற்று
4.தீமைகளைப் பிளந்திடும் நிலையை நிச்சயம் நம்முள் வளர்க்க முடியும்.

நம்மை அறியாது இயக்கும் இது போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கே மீண்டும் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

power of divine souls

நம் சுவாச நிலையில் மறைந்துள்ள இரகசியங்கள் – ஈஸ்வரபட்டர்

 

நாம் ஈர்த்து வெளியிடும் சுவாசத்திற்கு “ஈர்க்கும் நிலையை ஒத்த சக்தியே…” நாம் வெளியிடும் சுவாச சக்திக்கும் உண்டு.
1.நாம் எடுக்கும் சுவாசத்தை நேராக நம் உயிரணு ஈர்க்கிறது
2.உயிராத்மா ஈர்த்த நிலையில் அச்சக்தி நம் நெற்றியில் வந்து பாய்ந்து…
3.இவ்வுடல் அனைத்திற்கும் நாம் ஈர்க்கும் சுவாசம் பரவுகிறது.

எந்த நிலையில் அந்த ஈர்த்த நிலை செயல்படுகின்றதோ அந்நிலை போன்றே நாம் வெளிப்படுத்தும் சுவாசமும் வெளிப்படுகின்றது. நாம் எடுத்து வெளிப்படுத்தும் சுவாசித்தின் நிலையினால்தான்… நம் நினைவலைகளும்… சப்த ஒலிகளும்… நாம் காணும் பிம்ப ஒலிகளும்.. நமக்குத் தெரிகின்றன.

இச்சுவாசத்தின் நிலை கொண்டேதான் அனைத்து சக்தி நிலைகளையும் நாம் செயல்படுத்துகின்றோம். இந்நிலையில் நாம் செயல்படுத்திடும் நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாச நிலை நம் உயிராத்மாவுடன் கலந்துதான் நம் உடல் நிலையும் நம்மைச் சுற்றியுள்ள ஒலி ஒளி அலைகளும் உள்ளன.

இச்சுவாச நிலை என்னும் பொக்கிஷ நிலையை நாம் உணர்ந்திட வேண்டும். எந்தெந்த நினைவலைகளுடன் நாம் இருக்கின்றோமோ அந்த நினைவலைகளுடன் நம் எண்ண நிலை உள்ள பொழுதில்… நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தில் நம்முடன் ஒலியாகவும் ஒளியாகவும் அனைத்து நிலைகளும் சுற்றிக் கொண்டுதான் உள்ளன.

நம் வாழ்க்கையில் நடந்த பழைய நினைவுகளை நாம் எண்ணிடுங்கால் “அன்று நாம் கண்ட அக்காட்சியின் பிம்பமும்… ஒலி அலைகளையும்…” நாம் கண்டு கொண்டுதான் உள்ளோம்.

நாமாக நினைவுபடுத்திக் கற்பனையாக அக்காட்சியை நம்முள் காண்பதாக எண்ணுகின்றோம். நாம் எண்ணும் நிலைப்படி அல்லாமல்… ஒலி அலைகளைப் போலவே இவ்வொளி அலைகளும் நம் உயிராத்மா தோன்றிய நாள் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையுடன் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளன.

1.நம் நினைவை ஒரு நிலைப்படுத்தி பல எண்ணங்களின் நினைவின் மோதலைத் தாக்கவிடாமல்
2.ஒரே நினைவுடன் நல்லுணர்வு கொண்ட நிலையில்
3.அவரவர்களுக்கு உகந்த அன்புருவம் கொண்ட எவற்றையும் ஒரே நிலையில் நம் எண்ண சக்தியில் செலுத்தி
4.அந்நிலையில் நாம் எடுத்திடும் சுவாசத்தின் சக்தியினால்
5.நம் உயிராத்மாவில் கலந்து வெளிப்பட்ட அனைத்து நிலைகளையும் அறிந்திடலாம்.

நாம் நம் ஆத்மாவுடன் கூடிய நிலையினைத்தான் அறிந்திடும் நிலையை இந்நிலையில் வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்நிலை போன்றே நாம் உள்ள நிலையில் நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இப்பூமியும் இப்பூமியைச் சார்ந்த அனைத்து நிலைகளையும் நம் எண்ண சக்தியையும் ஒரே நிலையில் பாய்ச்சும்போது நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் அக்காந்த நிலை கொண்ட இச்சுவாச சக்திக்கு நம் எண்ணமுடன் நாம் எண்ணிடும் இடத்திலுள்ள நிலைகளையெல்லாம் அறிந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் காந்த நிலை கொண்ட அமிலக் கற்களைப் பதிய வைத்துப் பல அலைவரிசைகளை ஓர் இடத்தில் ஒலிபரப்பப்படும் ஒலியையே இருந்த நிலையில் இவ் வானொலியின் மூலமாக அவ்வலை வரிசையிலேயே மோதவிடும் பொழுது அங்கு நடக்கும் ஒலியின் அலையையே வானொலியின் மூலமாக நாம் கேட்கின்றோம்.

இந்தக் காற்றினில் கலக்கவிட்டுத்தான் விஞ்ஞானியும் பல செயல்களைச் செய்கின்றான்.
1.இக்காற்றையே சுவாசித்து நம் உயிராத்மாவுடன் மோதவிட்டு
2.அந்நிலையிலேயே எம்மண்டலத்திற்கும் நம் எண்ண நிலையைப் பாய்ச்சி
3.நாம் அந்நிலையில் எடுத்திடும் சுவாசத்தின் அலைகள் நாம் வெளிப்படுத்திடும் நிலையில் அங்கும் பாய்ந்து
4.எங்குள்ள நிலையையும் நம் உயிராத்மாவின் சக்தியுடன் நாம் இருந்த நிலையிலேயே அறிந்திடலாம்.

இத்தியான நிலையில் ஆரம்ப பக்குவ நிலையில் ஞானம் கொண்ட நிலைக்கு வந்திட்டால்… நம் விழியை நாம் மூடி அமர்ந்துள்ள நிலையிலேயே அறிந்திட முடியும்.

பக்குவ நிலைக்குப் பதம் பெற்றுச் செல்லச் செல்ல… இவ்விழியைத் திறந்தே
2.உள்ள நிலை அனைத்தையும்… நம் எதிரிலுள்ள பிம்ப நிலைகளையும் தாண்டி
3.எங்குள்ள நிலையையும் நாம் அறிந்திட முடியும்

ஞானமும் சித்தும் இவ்வாத்மீக நெறியிலுள்ள எந்த நிலைக்குகந்த சக்தி நிலை பெறவும் இவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி… “சிறுகச் சிறுகத்தான் பெருகச் செய்து… வழி நடந்திடல் முடிந்திடும்…”

preachings of Eswarapattar

உலக மாற்றத்தின் ஓட்டத்தில்… “நடப்பது நடக்கட்டும் அனைவருக்கும் ஆவதே நமக்கும்… என்று எண்ணிடலாகாது…! – ஈஸ்வரபட்டர்

 

பல காலங்கள் வெளியிடாமல் இருந்திட்ட சக்தியின் உண்மை நிலையை இங்கு போதனைக்கு அளித்திட்ட நிலைக்குக் காரணம்
1.இப்பொழுது மாறப் போகும் கலியில்…
2.இன்றுள்ள இக்கலியில் வாழ்ந்திடும் அறிவாற்றல் கொண்ட மனித ஆத்மாக்களின் நிலையை
3.இம்மனிதரின் நிலைக்கு உணர்த்தவே இப்போதனை நிலை.

இன்றைய மனிதரின் வாழ்க்கை முறையும் எண்ணக் கலவையும் இன்று வாழ்ந்திடும் மனிதனால் ஏற்பட்டதல்ல. கல்கியில் தோன்றிட்ட கால நிலை தொட்டே வருவது தான்.

மனிதருடன் எண்ண நிலை சப்த அலையாக எப்படிச் சுற்றிக் கொண்டு உள்ளதோ… அந்த நிலையின் தொடர்ச்சியுடன் ஒவ்வொரு உயிராத்மாக்களின் எண்ணத்துடன் கூடிய சப்த அலைகளும் இப்பூமியில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்… “இப்பூமிக்கே உகந்த சப்த அலை ஒன்று உண்டு…” என்று உணர்த்தினேன்.

ஓங்கார இசையுடன் ஓ…ம்… என்ற பிரணவ நாதத்தில் உருளுகின்ற இவ்வுலகினில் உயிராத்மாக்களின் சப்த அலையின் தொடர்ச்சியில் இவ்வுலகிற்கு எண்ண நிலையும் உண்டு. இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் சப்த அலையுண்டு.

சுவாசம் எடுத்திடும் நிலையிலேயே சப்த அலையுண்டு. ஒலி நிலை இல்லாமல் இவ் உலகமே இல்லை என்று உணர்த்தினேன்.
1.இயற்கையில் அமைத்திட்ட உன்னத ஒலிதனில்
2.இன்றைய செயற்கையும் கலந்து செயல்படும் நிலையில்
3.இப்பூமியே மிகவும் தத்தளித்த நிலையில் உள்ளது.

இப்பூமியில் அறிவாற்றல் கொண்டு வாழ்ந்திடும் மனிதர்கள் தன் சக்தியை உணர்ந்து செயல்படாமல் வாழ்ந்ததின் வினையினால் இவ்வினையின் செயல் இவ்வுலகுக்கு மட்டுமல்ல… “இவ்வுலகைச் சார்ந்த அனைத்து மண்டலங்களுக்கும் மாறு கொள்ளும் நிலை…” மிகவும் குறுகிய கால நிலையில் உள்ளன.

பயந்த நிலையில் எண்ணத்தைச் செயல் கொண்டு பேராசைக்கு அடிமைப்பட்டிடாமல் ஆத்மீக நெறியறிந்து ஒவ்வோர் உயிராத்மாக்களும் செயல்பட வேண்டும்.

1.மனித ஆத்மாக்களிடமிருந்து மட்டுமல்ல
2.நினைவாற்றல் உடைய மற்ற ஜெந்துக்களிலும் வெறியுணர்வு பேராசை நிலை இவற்றிலிருந்து விடுபட்டால்தான்
3.மாறப் போகும் இக்கலியிலாவது நாம் மீட்சி கொண்டிட முடியும்.

அடுத்து வரப்போகும் கல்கியில் இன்று இப்பூமியில் அவதார புருஷர்களாக அவதரித்தவரின் எண்ண நிலை கொண்ட பிறப்பு நிலையின் தொடரினால் “நல் நிலையில் அவதரிக்கலாம்…!”

இவ்வுலக நிலையே மாறப் போகின்றது என்றால்…
1.நம் உடல்களும் அனைத்து ஜீவராசிகளும்தான் இயற்கை எய்தப் போகின்றனவே
2.அடுத்த நிலைக்காக ஏன் நம்மை இப்பொழுது செயல் கொண்டிட வேண்டும்…?
3.நடப்பது நடக்கட்டும்… அனைவருக்கும் ஆனது நமக்கும்…! என்று எண்ணிடலாம்.

இயற்கையின் நியதியும் இயற்கையின் சீற்றமும் இயற்கையின் சக்தியுடனே தான் செயல்படுகின்றன.

இந்த இயற்கையில் தோன்றிய உயிரணுக்களிலிருந்து அந்நிலையின் தொடரினால் சக்தி கொண்ட உயிராத்மாக்களாகி… செயலாற்றும் திறமையுடைய “அதிக சக்தி நிலை கொண்ட இம் மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் மண்டலங்கள் சில தான்…”

இவ்வுன்னத பூமித் தாயின் குழந்தைகளாய் இப்பூமியின் சுவாசமுடன் கலந்துள்ள உயிராத்மாக்களான நாம்… நம் ஆத்மாவும்… நம் எண்ணமும்… நம் சப்த அலைகளும்.. என்றுமே அழிவதில்லை என்பதின் உண்மையினை உணர்ந்து… மாறப் போகும் இக்கலியில் நம் ஆத்மாவை உன்னத பொக்கிஷமாக நாம் உணர்ந்து…
1.பல தீய சக்திகளுக்கு நம்மை அர்ப்பணித்திடாமல்
2.நம்முடன் தொடர்பு கொண்டவரின் நிலைக்கும் நம்மிடமுள்ள தீய சக்தி பாய்ந்திடாமல்
3.நல்லுணர்வுகளையே அவர்களுடனும் கலக்கவிட்டு
4.அவர்களின் நற்சொற்களையே நம் ஆத்மாவிற்கும் சுழலச் செய்து
5.உலக சக்தியையே இவ்வியற்கையின் மாற்றத்தில் வரப்போகும் கல்கியின் சுழற்சியில்
6.நல் நிலையாக்கிடத்தான் இப்போதனை நிலையெல்லாம்.

மனிதர்களின் இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை இன்று அவர்களால் ஏற்படுத்திய நிலை மட்டுமல்ல…! கல்கியிலிருந்து கலிவரை வந்த நிலை. இவ்வுலகுடன் கலந்துள்ள சப்த ஒலிகளில் ஈர்த்து எண்ணமுடன் கலந்திட்ட நிலை. இந்நிலையிலிருந்து மீளும் நிலையைத்தான் நாம் அறிந்திடல் வேண்டும்.

“உயிராத்மாக்களின் பொக்கிஷ சக்தி நிலையை… ஆத்மீக நெறிதனில் அழைத்திடவே…” இப்போதனை நிலையெல்லாம் ஈஸ்வரபட்டனாகிய யான் கொடுக்கின்றேன்.

desire for spirituality

இந்த மனித வாழ்க்கையில் நம் வளர்க்க வேண்டிய பேராசை எது…?

 

யாம் (ஞானகுரு) உங்களிடம் பதிவு செய்யும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூர்ந்து கவனிக்கும்போது கண் (ஆண்டனா) மூலம் தான் உங்கள் உடலுக்குள் அதைப் பதிவாக்குகின்றது.

இப்பொழுது மீண்டும் அந்த எண்ணத்தை எண்ணி வரப்படும்போது அந்தக் காற்றில் எது இருக்கின்றதோ அதை இழுத்து நமது கண் நம் ஆன்மாவாக்கி சுவாசித்து நமது உயிரிலே மோதச் செய்கிறது.

இந்த உணர்வை ஏங்கிப் பெறும் போது நமது கண் ஆண்டன்னா… ஏரியல்… மூலம் வெளியிலிருந்து அந்தத் துருவ நட்சத்திர அலைகளை எடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறக்கூடிய அந்த சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று இந்த ஆசை தொடர்ந்து நமக்கு இருக்க வேண்டும்

ஆசைப்பட்டு நாம் நுகரும் இந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி நம் உடலில் இந்தச் சத்தைச் சேர்க்கின்றது. ஒவ்வொரு உடலிலும் உள்ள அணுக்கள் அதைப் பெறுவதற்குத் தனித்து வந்து இதை இயக்கச் செய்வது தான் இந்த வழி.

ஏனென்றால் இந்த விஷத் தன்மையான உலகில் நீங்கள் சீக்கிரம் இதை பெற்றுக் கொண்டீர்கள் என்றால்
1.உங்கள் உடல் நன்றாக இருக்கும்
2.உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
3.உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்
4.உலகமும் நலம் பெறக்கூடிய சக்தி பெற முடியும்.

ஏனென்றால் உலகமே நம் உடலுக்குள் அடங்கி இருக்கின்றது… யாரும் பிரிந்து இல்லை.

இந்த உலக இயல்பு நாம் கேட்டறிந்த உணர்வு பதிவாகி மீண்டும் நமக்குள் இயக்கிக் கொண்டிருப்பதனால் இதை மாற்றுவதற்குத்தான் என் குருநாதர் எப்படி எமக்குச் செய்தாரோ அதே மாதிரி உங்களுக்குச் செய்கின்றேன்.

ஆனால் இந்த வாழ்க்கையில் நம் ஆசையை எங்கேயோ வைத்துக் கொண்டு…
1.தொழில் இப்படி இருக்க வேண்டும்
2.நான் இப்படி எல்லாம் இருக்க வேண்டும்…
3.நான் பெயரும் புகழும் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தில்
3.இந்த ஆசை கொண்டு அந்த ஒன்றிலே போகும் போது சிந்திக்கும் ஆற்றலை இழந்து விடுவோம்.

எதன் மேல் ஆசைப்படுகின்றோமோ அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! நம்மை மாற்றிக் கொண்டே போகும்… கடைசியில் படும் பாதாளத்தில் கொண்டு செல்லும்.

ஆனால் நம் ஆசை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் போனால் அங்கே இணைந்து… வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி ஒளி என்ற உணர்வாக நம்மை மாற்றுகின்றது.

அந்த நிலை பெறச் செய்வதற்காகத்தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லி இதை நினைவுபடுத்துகின்றேன்.

நம் அன்னை தந்தையர் தான் இந்த உடலை உருவாக்கியது… நமக்கு நல்ல வழிகளை உணர்த்தியதும் அவர்கள் தான். அது குருவாகவே இருக்கின்றது. குரு எனக்கு இந்த வழியில் தான் காட்டினார்

ஆகவே ஒவ்வொரு முறை தியானிக்கும் போதும் முதலில் அம்மா அப்பாவை மனதில் எண்ணி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

இந்த மனித உடலுக்குப் பின் இருளை நீக்கி அந்த ஒளி பெறும் உணர்வைப் பெறுவதற்கு… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்ன உணர்வை
1.அவர் சொன்னபடி பின்பற்றினேன்
2.அவர் நுகரச் சொன்னதை நுகர்ந்தேன்
3.அந்த உணர்வு என் உடலில் என்ன செய்கிறது என்று அறிந்தேன்.
4.அதைப் போல் நுகர்ந்த உணர்வுகள் என்ன செய்யும்…? என்பதை உங்களுக்கும் உணர்த்துகின்றேன்
5.இதை உணர்ந்தால் உங்கள் தீமைகளை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

ஒரு பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை எப்படி எடுத்ததோ இந்தச் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து அந்த அருள் ஞானியின் உணர்வைச் சுவாசித்து அந்த ஒளி மயமான நிலைகள் பெற முடியும்.

கணவன் மனைவியும் இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றித் தெய்வீகப் பண்பும் தெய்வீக அன்பும் தெய்வீக சக்தியும் பெற வேண்டும் சொல்லிலே வைரத்தைப் போல் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும்.

தங்கம் எப்படி மங்குவதில்லையோ அதைப் போல எதைப் பார்த்தாலும் நம் மனது மங்காத நிலைகள் நாம் கொண்டு வரவேண்டும். மலர் எப்படி நல்ல நறுமணங்கள் கொடுக்கின்றதோ அதைப் போல் உங்கள் சொல் மற்றவர்களுக்கு நல்ல மணங்களாக மாற்றும் அந்தச் சக்தி கொண்டுவர வேண்டும்.

அந்தச் சக்தியை ஒவ்வொருவரும் பெறுவதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைச் செய்கின்றோம்.
1.நீங்கள் இதை பெற வேண்டுமென்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறோம்.
2.அதே போல் எல்லோருக்கும் இந்தச் சக்தி பெறவேண்டும் என்கிற பொழுது இது பேராசையாக மாறுகின்றது.

நானும் பெறவேண்டும்.. நீங்களும் பெற வேண்டும் என்கிற போது நான் பெறக்கூடிய ஆசை நீங்களும் பெற வேண்டும் என்ற நிலையில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் இந்தப் பேராசை நம்முள் வளரும்.

ஆனால் உங்களுக்கு நான் சொல்லிக் கொடுத்து விட்டுத் தவறான வழியில் ஏமாற்றினால் அது பேயாசைதான்.

அதே போல் சாமி (ஞானகுரு) இப்படியெல்லாம் சொல்கின்றார்…! என்று என் பெயரைச் சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தினால் அது பேயாசை தான்…! அவர்களையும் கெடுத்து… நீங்களும் கெட்டு.. மற்றவர்களையும் பெறக் கூடியதைத் தடுக்கும் நிலை வந்துவிடும்.

1.ஏனென்றால் ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு விதமான தீமைகள் உண்டு
2.அந்தத் தீமைக்குச் சிறிது இடம் கொடுத்தால் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிடும்
3.நாம் பெறக்கூடிய நல்ல பாதையைத் திசை திருப்பி வேறொரு வழிக்கு நம்மை அழைத்துச் செல்லும்
4.முதலில் தெரியாது…. சிக்கலான பிற்பாடு… வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுதுதான் உணர முடியும்.
5.அது போன்ற நிலையிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக வேண்டித் தான் மீண்டும் மீண்டும் இதை எச்சரிக்கை செய்கின்றோம்.

உங்களைக் கட்டுப்பாட்டுடன் கொண்டு வரவில்லை நீங்கள் தெளிவாகுவதற்குத்தான் இதைக் கொண்டு வருகின்றோம்.

அதை நீங்கள் நல்ல வழிக்கு பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கிப் பிறவியில்லா நிலை அடையலாம்.

remote power of sixth sense

நம் ஆறாவது அறிவு தீமைகளைத் தடுக்கும் சேனாதிபதி…!

நம்முடைய ஆறாவது அறிவைக் கார்த்திகேயா… சேனாதிபதி என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள். நம் வாழ்க்கையில் ஒரு கஷ்டம் என்று தெரிகின்றது. அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…” அந்தத் தீமை நமக்குள் இயக்காதபடி தடுக்க வேண்டும்.

அதற்காகத் தன் படைக்கலத்தை எப்படிப் பாதுகாப்பது…? என்ற நிலையில்… சேனாதிபதி எல்லாக் கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.. இல்லையா…?

ஆகவே அந்தத் தீமைகளை நீக்கிடும் சக்தியைப் பெறுவதற்குண்டான முறைகளைத் தான் இங்கே உங்களுக்குப் பழகிக் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லிப் புருவ மத்தியில் எண்ணி இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

ஏனென்றால் தப்பு யாரும் செய்யவில்லை. நாம் நினைக்கின்றோம் நாம் தான் தப்பு செய்கின்றோம்… தப்பு செய்கின்றோம்… என்று..! நாம் அல்ல…!

1.நெருப்பிலே ஒரு பொருள் போட்டால் எப்படி அதனின் வாசனை வருகின்றதோ
2.இதே மாதிரித் தான் நம் உயிரிலே படும் உணர்வுக்குத்தக்க நாம் அடிமையாகின்றோம்.

இந்த ஆறாவது அறிவு நம் உடலில் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நஞ்சினைப் பிரித்து மலமாக விடுகின்றது. நல்ல உணர்வின் சக்திகளை நம் உடலாக்குகின்றது.

ஆக… நஞ்சின் தன்மையைப் பிரிக்கக்கூடிய சக்தி தான் ஆறாவது அறிவு.
1.அந்த ஆறாவது அறிவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம் உயிரிலே மோதச் செய்ய வேண்டும்.
2.அப்பொழுது கெட்டது நமக்குள் போகாதபடி மறைப்பு வந்து விடுகின்றது… சேனாதிபதி…!
3.படைகலன்களான உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி கிடைக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களெல்லாம் அதைப் பெறும் அந்தச் சக்தியை நாம் கொடுக்கின்றோம்.

உடனே இது நமக்குள் வலுவாகின்றது. உள்ளுக்குள் போன பின் என்ன செய்கிறது..?
1.துணியில் ஒரு சோப்பைப் போட்டால் உள்ளுக்குள் அந்த நுரை ஏறி
2.அதில் உள்ள அழுக்கைத் தள்ளிவிடுவது போல் நம் தீமைகளை அகற்றிவிடுகின்றது.

ஆனால் நாம் இப்பொழுது அடிக்கடி குடும்பத்தை எண்ணியோ பையனை எண்ணியோ தொழிலை எண்ணியோ கவலைப்படுவது… சஞ்சலப்படுவது… அல்லது ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்திற்குப் போகச் சொல்வது… இதெல்லாம் அதனுடைய இஷ்டத்திற்குத் தான் நாம் செல்கின்றோம்.

அதை மாற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று சொல்லி உள்ளுக்குள் “கட்டளை இட வேண்டும்… தீமைகள் விலகிப் போகும்…!”

பையனுக்கு நல்ல ஞானமும் புத்தியும் பெற வேண்டும். என் குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என் தொழில் சீராக இருக்க வேண்டும் என்று பதிவு (ரெக்கார்ட்) செய்து கொள்ளுங்கள். உங்கள் சிந்தனை நல்ல முறையில் வரும்.

அதே போல் உடலில் நோய் வந்தால் அந்த நோய்க்குத் தான் எண்ணத்தைச் செலுத்துகின்றோமே தவிர நோயை நீக்க எண்ணம் கொடுப்பதில்லை.

அப்பொழுது அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எங்கே வலிக்கின்றதோ… இடுப்பு வலியோ அல்லது முதுகுத் தண்டிலோ அல்லது மற்ற எந்த இடமாக இருந்தாலும் அங்கே நம் கண்ணால் இந்த வலிமையான சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

ஏனென்றால் “வலிக்கிறது…” என்று எண்ணினாலும் நம் கண்ணின் நினைவு அங்கே தான் செல்கிறது. அதே கண்ணின் நினைவு கொண்டு வலிக்கும் இடத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எந்த இடத்தில் வலி வருகிறதோ அந்த இடத்தில் நினைவினைச் செலுத்தி வலியை உங்களால் குறைக்க முடியும். அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

இந்த மாதிரி இருந்து எண்ணிப் பழகி விட்டோமென்றால் மனத் தூய்மை கிடக்கும்… மன வலிமை கிடைக்கும் சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும். தீமையை அகற்றும் வலிமை நிச்சயம் கிடைக்கும்.

1.ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது
2.அதனாலே நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் பழக்கத்திற்கு வந்துவிடுங்கள்.

இப்பொழுது சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…?

Maharishikaludan Pesungal - gnana

உலக நிலை மாறு கொள்ளப் போகின்றது – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகினில் தோன்றிய உயிர் அணுக்களுக்கும்… உயிரணுவாய் ஜீவ ஆத்மா கொண்ட உடல் பிம்பம் கொண்ட அனைத்திற்கும்… எப்படி மறு ஜென்மம் ஒன்றுள்ளதோ அந்த நிலை போன்றே
1.இவ்வுலகிற்கும் இவ்வுலகைப் போன்ற வளர்ச்சி நிலை பெற்ற ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஜென்ம நிலை உள்ளது.
2.ஜீவன் கொண்டு தனி ஒரு சக்தி நிலை பெற்ற பெரிய மண்டலங்கள் அனைத்திற்குமே ஜென்ம நிலையுண்டு.

இவ்வுலகம் மாறு கொண்ட நிலையில் கல்கியில் தோன்றிய நாளில் உதித்திட்ட உயிரணுக்களின் செயல் சக்தியினை விளக்கியுள்ளோம்.

கல்கியில் தோன்றிய உயிரணுக்கள்… அன்றிருந்த நிலை ஜீவன் கொண்டு பிம்பக் கூடுகள் பெறும் நிலையில் அதிகச் சதை நிலை கொண்ட எலும்புகளின் வளர்ச்சி நிலையில்லா நிலையில்தான் பிம்ப உருவங்கள் இருந்தன.

கல்கியில் இருந்து தொடர்ந்த நிலை கொண்ட… மாறி மாறி வந்திட்ட ஜென்மத் தொடரில் ஈர்த்த சக்தி நிலைதான் இன்றுள்ள மனிதர்களும்… மற்ற இன வர்க்கங்களின் வளர்ச்சி நிலையும். இந்நிலை போன்றே இவ்வுலக நிலையும்.

1.அதிசக்தி நிறைந்த வளர்ச்சியில் வந்த நிலைதனை
2.இன்றைய வளர்ச்சி கொண்ட இக்கலியின் “செயற்கையின் நிலையினால்”
3.இப்பூமியின் சக்தியையே சிதறும் நிலைப்படுத்தி விட்டார்கள்.

ஆனால் நம் பூமியின் தொடர்பு நிலை கொண்ட இச் சூரியனைச் சுற்றியுள்ள மற்ற மண்டலங்களில்… நம்மை ஒத்த மனித பிம்பங்களும் இச்செயற்கையின் நிலையும் அந்நிலையில் இல்லாததினால் அம் மண்டலங்களின் சக்தி நம் பூமியையும் விட மென்மேலும் வளரும் நிலையில் அதிக சக்தி கொண்டதாக உள்ளது.

நம் பூமியும் வளர்ந்து கொண்டு தான் உள்ளது “பலன் இல்லாத நிலையில்…!”

அறிவு வளர்ச்சி கொண்ட… செயலாற்றும் திறமையும் அதற்குகந்த அங்கங்களும் பெற்ற… பிறவியிலேயே உன்னதப் பிறவி பெற்ற இம்மனிதனால் “தன் சக்தியை உணர்ந்திடாமல் வந்ததின் வினைதான்… இன்றுள்ள நம் பூமியின் நிலை…!”

தனக்குகந்த அறிவின் செல்வத்தைப் பேராசைக்கு அடிமை கொண்டு வாழ்வதின் நிலை இன்றைய மனிதனின் நிலையும் இம் மனிதனை வளர்க்கும் பூமிக்கும் உள்ளது.

இன்றைய பாட நிலையிலிருந்து ஜென்ம நிலையை உணர்த்தியதின் நிலை புரிந்ததா…?

இப்பூமியின் பொக்கிஷத்தைத்தான் இக்கலியின் மனிதனின் பேராசைக்காக எடுத்து விட்டீர்கள். இவ்வுலகனைத்தும் உள்ள எண்ண நிலையே இப்பேராசைப் பிடியில் சிக்குண்டு தவித்த நிலையில் உள்ள பொழுது…
1.இந்நிலையில் இருந்து விடுபடும் எண்ணத்தை
2.இவ் உலகனைத்திற்கும் போதிக்கும் சக்தி நிலை இவ் உலகைக் காக்கும் சக்திக்கே இல்லை.
3.உலக நிலை மாறு கொள்ளப் போகின்றது.

அழிவு என்னும் நிலையே எதற்கும் இல்லை. எதுவுமே அழிவதில்லை…! மாறு கொண்ட நிலைதான் ஏற்பட்டிடும். மாறு கொண்ட நிலையில் இவ் உடல் என்னும் கூட்டிலிருந்தும் அனைத்து ஜீவராசிகளும் மாறு கொள்ளத்தான் போகின்றன.

எவ்வாத்மாவும் அழிந்திடாது. இவ்வுலகம் மாறு கொண்டு சுழலும் நிலையில் இவ் உடல் கூட்டை விட்டு வெளிப்படும் உயிராத்மாக்களின் நிலைக்காகவே இந்நிலையில் அளித்திடும் பாட நிலைகள் எல்லாம்…!

இப்பூமியில் வாழ்ந்திடும் இன வர்க்கங்களைப் போன்ற நிலை மற்ற மண்டலங்களில் மாறு கொள்கின்றது. இவ்வுலக நிலை மாறுபட்டு உயிராத்மாக்கள் இப்பால் வெளி மண்டலத்தில் உள்ள நிலையில் இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் இருந்த நிலை கொண்டு மற்ற மண்டலங்களின் நிலைக்குச் சென்று உடல் பெறலாம்.

அந்த நிலைக்காகத்தான் இப்போதனை நிலையும்… இப்பாட நிலையும்…!

இவ்வுலக நிலை மாறு கொள்ளும் நிலை நெருங்குவதினால் இந்த நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் ஆத்மீக நெறிக்கு வந்து அந்நிலையின் மூலமாக மீட்சி பெறுங்கள்…!

Powers of Human

மனித ஆத்மாவின் தெய்வீக சக்தியை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் மனித உடலுக்குத்தான் பல நிலை கொண்ட அமில சக்தியும் காந்த சக்தியும் கலந்த நிலை நிறைந்துள்ளது. இவ்வுடலுடன் பல அணுக்களின் நிலையும் ஏறி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலையும் குண நிலையும் உண்டு.

நம் ஆத்மாவை நாம் செயல்படுத்திடும் நிலை கொண்டு
1.எந்த நிலைக்குகந்த எண்ண சக்தியை ஈர்க்கின்றோமோ
2.அந்த நிலைக்குகந்த சக்தியுடன் கூடிய நிலைகளை எல்லாம் இவ்வாத்மாவுடன் ஒன்றச் செய்திடலாம்.

இன்றைய செயற்கையில் விஞ்ஞான நிலைப்படுத்தி இரசாயன முறையில் பல செயல்களைச் செய்கின்றனர்.
1.ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவும் ஒன்றுடன் ஒன்றைச் சேர்க்கவும்
2.பல நிலைகளை இன்றைய விஞ்ஞானத்திலும் செயலாக்குகின்றனர்.

விஞ்ஞான சக்திக்கும்… மெய் ஞான சக்திக்கும்… அனைத்திற்குமே… இக்காற்றிலிருந்து நமக்குக் கிடைத்திடும் சூரியன் அளித்திட்ட அமில சக்தி கொண்டுதான் இவ்வுலக சக்திகள் செயல்படுகின்றது.

அதன் மூலம் நம் ஆத்மாவின் துணையினாலே..
1.நம்முள்ளே அனைத்து சக்தியையும் ஈர்த்துச் செயல் கொண்டிடும் “உன்னத தெய்வீக அருள் கொண்ட நாம்…”
2.இன்றைய கலியில் மிகவும் ஈன நிலையில் அடிமை கொண்ட பேராசையில்
3.இக்குறைந்த வாழ் நாட்களை விரயம் செய்தே வாழ்கின்றோம்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இன்றைய விஞ்ஞானத்தில் கண்டிட்ட சக்தியின் நிலைக்கு மேலே “இவ்வாத்மாவின் சக்தியை ஈர்த்தே…” பல நிலைகளை ஒவ்வொருவரும் செயலாக்கிட முடியும்.

பண்டைய காலம் தொட்டே பல ரிஷி நிலை கொண்ட தேவர்கள் எல்லோரும் அவர்கள் இப்பூமியில் வாழ்க்கையுடன் வாழ்ந்திட்ட நாட்களில்… அவர்களால் உணர்த்தப்பட்ட… பதிவு செய்வித்த அனைத்து உண்மை நிலைகளையுமே… இன்றுள்ள இக்கலியின் எண்ணத்திற்கு செயல்படுத்திட முடியாத வண்ணம் பல நிலைகள் மறைக்கப்பட்டன.

நம் எண்ண நிலையை ஒரு நிலை கொண்டிட்டால் அவர்களின் துணையுடனே பல நிலைகளை நாம் இன்று பெறலாம்.

தாவரங்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு தாவரமும் ஒரே நிலை கொண்ட சக்தியைத்தான் (அமிலம்) ஈர்த்து வளர்கின்றது. சில வகைத் தாவரங்களின் நிலையுடன் சில அமிலங்களைக் கலக்கும் போது இப்பூமியில் இருந்து நாம் எடுத்திடும் கனி வளங்களைப் போன்ற பல வகை உலோகங்களை நாம் செய்திடலாம்.

தங்கம் தாமிரம் ஈயம் செம்பு இப்படிப் பல நிலைகள் நாமே செய்திடலாம். செய்து என்ன பயன்…? இப்பேராசையை வளர்க்கும் நிலைதான் ஏற்படும்.

தாவரங்களைப் போன்றே சில ஊரும் நிலை கொண்ட அட்டை என்னும் இன வர்க்கத்தை உடைய புழுவும் இன்னும் சில புழுக்களும் ஒரே அமில சக்தியை ஈர்க்கும் நிலையுடையதாக உள்ளன.

அந்த அட்டைப் புழுவின் நிலையெல்லாம் தாமிர சக்தியை ஈர்த்து வளர்ந்த நிலை. இவ்வுலகினில் இப்படிப் பல நிலைகள் உள்ளன. எத்தகைய விஷத்தையும் எடுத்திடும் தாவர வர்க்கங்கள் பல உள்ளன.

அனைத்து நிலைகளுக்கும் குறிப்பு நிலைகள் நம் சித்தர்களால் பதியச் செய்து மறைக்கப்பட்டுள்ளன.

அது எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற சாதாரண நிலையில் அந்த எண்ணத்தின் நிலைக்கு நாம் அடிமைப்பட்டிடலாகாது என்பதற்காக… “பல நிலைகளை மறைத்தே வெளிப்படுத்துகின்றோம்…!”

இருந்தாலும் சக்தியின் நிலையில்…
1.இம் மனித ஆத்மாவின் தெய்வீக சக்தியை உணர்த்திடவே
2.சில குறிப்புகளை இங்கே வெளிப்படுத்தினோம்.

pranav

சூரியகலை சந்திரகலை – பிராணாயாமம்

 

இந்த வாழ்க்கையில் எப்படித்தான் இருந்தாலும் எதாவது குறைபாடுகள் வரும். எவ்வளவு நல்லது செய்தாலும் கூட இந்த நிலை வரும்.

நம்மைச் சங்கடத்திலோ சலிப்பிலோ வெறுப்பிலோ ஆழ்த்தக்கூடிய நிலைகள் நமக்கு வந்தால்…
1.அந்த உணர்வுகள் எல்லாம் மூக்கின் வழியாகச் சென்று
2.புருவ மத்தியில் உயிரிலே பட்டுத்தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
3.ஆண்டென்னாவான (ANTENNA) நமது கண் தான் அதை எடுக்கின்றது.
4.அதன் அழி ஆன்மாவிலிருந்து சுவாசித்துக் கொண்டே இருக்கும்
5.அந்தக் கெட்ட அணுக்கள் தான் வளரும்… சிந்திக்கும் தன்மை போய்விடும்.

அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…” என்று சொல்லி ஒரு பிரேக்…!

நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒட்டி ஈஸ்வரா…! என்று எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அப்பொழுது அந்தச் சங்கட அலை மூக்கின் வழி உள்ளே போவதை இங்கே தடுக்கின்றது.

நெருப்பிலே ஒரு பொருள் பட்டால் தான் அந்த வாசனை தெரியும். அதே மாதிரி உயிரிலே பட்டால் தான் இயங்கும். ஆகவே
1.தீமை செய்யும் உணர்வுகள் உயிரிலே படாமல் அதை முதலில் தடுத்துப் பழக வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இதன் வழி (புருவ மத்தி) உள்ளுக்குள் இழுக்க வேண்டும்.
3.இது தான் பிராணயாமம் என்பது.

பிராணயாமம் என்றால் மூச்சை ஒரு பக்கமாக இழுத்து இன்னொரு பக்கமாக விடுவதில்லை. மூக்கு வழி போவதை நிறுத்தி… புருவ மத்தி வழி உள்ளே கொண்டு செல்ல வேண்டும். இது தான் சூரியகலை என்பது.

சந்திரகலை என்பது சாதாரணமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. நாம் வழக்கமாக எடுக்கும் சுவாசம் தான் அது.

ஆனால் உயிர் வழி எடுக்கும் போது சூரியகலை.

சூரியன் இழுத்துத் தான் எல்லாவற்றிற்கும் ஒளி அலைகளை அனுப்புகின்றது. அதாவது காற்றில் வரக்கூடிய அலைகளை அது எது எது வருகிறதோ… அதை எல்லாம் எடுத்து அந்தந்த அலைகளாக இயக்கச் செய்கின்றது

சூரியகலை என்கிறபோது நாம் என்ன செய்கின்றோம்…?

நம் ஆறாவது அறிவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று சொல்லி “உயிர் வழி…” உள்ளுக்குள் நேரடியாகக் கொண்டு போகிறோம்.

அதே சமயத்தில் நம் ஆன்மாவில் இருப்பது சுவாசத்தின் மூலம் உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றோம்.

1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்தோமோ அந்த உணர்வுகளை
2.உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து இயக்குவதுதான் பிராணயாமம்.
3.நல்ல அணுக்களை நமக்குள் உயர்த்த வேண்டும்… அதனால் தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா என்பது…!

ஆனால் இவர்கள் பிராணயாமத்தை எத்தனையோ அர்த்தங்களில் கொண்டு போகின்றார்கள்.

Golbal Tamil Nadu

மெய் ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றிய சூட்சமங்களை எல்லோரும் அறியும் கால நேரம் வந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

இப்பூமி சுற்றுவதைக் காட்டிலும் சூரியன் சுழலும் வேகம் அதிகப்படுகிறது. இன்று இப்பூமியின் ஈர்ப்புத் தன்மைக்கு மேல் சூரியனின் ஈர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகமாக உள்ளது. அது ஈர்த்து வெளியிடும் நிலையும் அதே நிலைக்குகந்த துரித நிலையில் உள்ளது.

பல சூரியன்களின் தொடர்பு கொண்ட நம் சூரியன் நாம் காணும் சூரியனின் சக்தி மிகவும் வலுப்பெற்ற சக்தி. சூரியனின் பூமி நிலை குளிர்ந்த நிலை. இப்பூமியில் பிறவி எடுத்து இப்பூமியிலிருந்து சூட்சும நிலைக்கு சென்ற பலர் இருந்து செயல்படுத்தும் கோயில்தான் நம் சூரியன்.

இப்பூமியில் உதித்த உயிரணுக்கள் மற்ற மண்டலங்களில் வாழ்ந்திட முடியாது. சுவாச நிலை மாறுபடும் பொழுது அம்மண்டலத்தின் உந்தலினால் இம்மண்டலத்திற்கே உந்தப்பட்டு வருவார்கள் என்று உணர்த்தினேன்.

சூட்சும நிலைக்குச் செல்பவர்கள் பல மண்டலங்களிலும் இருந்து செயல்படுத்துகிறார்கள். இப்பூமியிலும் பிற மண்டலத்தில் உதித்து வாழ்ந்தவர்கள் சூட்சும நிலை பெற்றே இம்மண்டலத்திலும் (பூமி) சில நிலைகளைச் செய்கிறார்கள்.

வான சாஸ்திரம் என்று அறியப் பல நிலைகளைச் செய்கிறார்கள்.
1.அன்றே இப்பூமியும் மற்ற பூமிகளின் நிலையையும் என்றாவது ஒரு நாள் வெளிப்படுத்தும் நிலையில்
2.பல சித்தர்கள் ஒன்றுபட்டு இப்பூமியிலேயே அக்காலப் பெட்டகத்தைப் பதித்து வைத்துள்ளார்கள்.
3.இக்கலி மாறுவதற்குள் அந்நிலை வெளிப்படும்.
4.அந்நிலையை வெளிப்படுத்திட இக்கலியில் வந்து பல சித்தர்களினால் உருவப்படுத்தி ஜீவன் தந்த ஓர் உயிரணு
4.ஒரு தாயின் வயிற்றியிலேயே பிறந்து வந்துள்ளது
5.அவன் வெளிப்படுத்துவான் சூட்சும நிலையில் உள்ள பல சித்தர்களை என்றேன்…
6.சூட்சும நிலைக்குச் சென்ற பெரியோர்கள் என்றும் உணர்த்துகிறேன்.

அச் சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் தனித்த நிலையில் யாரும் இயங்குவதில்லை. அவர்களின் சக்தியை எல்லாம் ஒன்றாக்கி அச்சப்தரிஷிகளின் நிலையிலிருந்து செயல்படும் தன்மைக்கு வருகிறார்கள்.

மனிதர்களின் குண நிலை மாறுபட்ட குண நிலைகள். சூட்சுமத்தில் உள்ளோரின் குண நிலைகளோ ஒன்றுப்பட்ட நிலை.

இன்று சிறு தேவதைகள்… பெரும் தேவதைகள் என்று மாறுபட்டுப் பிரித்துச் சொல்கிறார்கள் புராணக் கதைகள் மூலமாக. இச்சிறு தேவதைகளின் நிலை துர் ஆவிகளின் நிலையில் இருந்து மாறுபட்ட அன்பு கொண்ட ஆத்மாக்கள்.

இவ்வுலகின் ஆசையுடன் இவ்வுலகில் உள்ளோரின் எண்ணமுடன் கலந்து தன்னையே ஆண்டவனாக ஏற்கும் நிலைப்படுத்திச் செய்து வரும் நிலை.
சூட்சுமத்திற்குச் சென்று அச்சகல தேவர்களின் தேவனாக இயங்கும் அச்சூரிய தேவனிடம் செல்லும் நிலைக்குப் பக்குவப்படாத நிலையிலேயே உள்ள நிலைதான். சித்து நிலையுடன் கலந்து உறவாடும் நிலை.

சூரிய தேவன் என்றேனல்லவா…? அனைத்துச் சித்தர்களும் முனிவர்கள் ரிஷிகள் சப்த ரிஷிகள் அனைவரும் ஒன்றுபட்டு அச்சக்தியின் சக்தியான அச்சூரியனில் ஒன்று கலந்து அச்சூரியனின் நிலையிலிருந்துதான் எல்லாச் செயல்களுமே இன்று செயல்படுத்துகின்றனர்.

இன்று அச்சூரிய தேவன் இல்லா விட்டால் எவ்வுலகமும் இல்லை. நம் சூரியனைப்போல் சக்தி கொண்ட பல சூரியன்கள் இருந்தாலும் அனைத்து சூட்சும சக்தியிலுள்ள தேவர்கள் கலக்கும் நிலை நம் சூரியன் தான்.

1.இவ்வுடலில் உள்ளபோதே அனைத்து நிலையையும் அறியும் பக்குவத்திற்கு உங்களைச் செயல்படுத்திடத்தான்
2.பல சக்திகளைக் கொண்ட சூட்சும நிலையில் உள்ளவர்களின் நிலையை ஒன்றுபடுத்தியே
3.இந்நிலையை இங்கு வெளிப்படுத்துகின்றோம்

சக்தியின் சக்தி பெற்ற இம் மனித ஜென்மத்தில் வாழும் பாக்கியத்தைப் பெற்ற சக்திகளே…!
1.உங்களின் சக்தியை அனைத்து சக்திகளுடன் ஒன்றுபட்டு
2.அனைத்து மண்டலங்களின் நிலையையும் உம் சக்திகளில் இருந்தே ஈர்த்து அறியும் பக்குவத்திற்கு
3.உம் சக்தியின் செல்வத்தைச் சக்தியாக்கி வாழுங்கள்.

வாழ்க்கையே தியானம் – பயிற்சி

ஞானகுரு வழியில் நாம் செய்ய வேண்டிய தவம் 

முன்னோர்களை விண் கெலுத்தும் பயிற்சி தியானம் 

தீமையை நீக்கும் கூட்டமைப்பு

சாப அலையின் இயக்கங்கள் – அண்ணன் தம்பி முன்னோர்கள்

உங்களிடம் என் குருவைக் காண விரும்புகின்றேன்

விமான விபத்தைத் தடுத்த நிகழ்ச்சி

 

 

Mentor of Globe

உலகைக் காக்கும் சக்தியாக… “அகஸ்தியனுடைய வாக்கு நமக்குள் பிரதிபலிக்க வேண்டும்”

 

இப்பொழுது இருக்கக்கூடிய உலக நிலைமை மிகவும் மோசமாக இருப்பதினால்
1.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற நிலையில்
2.நம் நாட்டில் அதிகமாகப் படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுத்து
3.நம் நாட்டு மக்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உலகம் முழுவதும் படர்ந்து சகோதர உணர்வு வளர வேண்டும். மத பேதமில்லாமல் இன பேதமில்லாமல் மொழி பேதமில்லாமல் அரசியல் பேதமில்லாமல் மக்கள் வாழ வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து இந்தக் காற்று மண்டலம் சுத்தமாக வேண்டும். நாம் அனைவருமே உலகத்திற்கு எடுத்துக் காட்டும் நிலைகளாக வளர்ந்து வர வேண்டும் என்று “நாம் எல்லோரும் எண்ண வேண்டும்…!”

இதை எல்லாம் சர்கார் தான் (அரசில் உள்ளவர்கள்) செய்யும் என்று எண்ணாமல்
1.நாம் தான் சர்காரில் (சர்காராக) இருக்கின்றோம்…
2.நாம் தான் ஆபிசராக இருக்கின்றோம்…
3.நாம் தான் தொழிலாளியாக இருக்கின்றோம்.. என்று எல்லோரையும் ஒன்றாக்கி
4.நாங்கள்…! “நாம்…” என்ற இந்த எண்ணங்கள் வரப்படும்போது பேதங்களே இந்த உலகில் வராது…
5.அந்தந்த அரசும் தடையில்லாமல் நடக்கும்
6.நம்முடைய இந்த நல்ல எண்ணங்களும் உலக முழுவதும் பரவும்.
7.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்.

இன்றிருக்கும் நிலையில் உதாரணமாக… நான் உத்தியோகத்தில் இருந்தேன் என்றால் நான் ஏதாவது தவறு செய்கின்றேன். ஆனால் உத்தியோகத்தில் இல்லாமல் வெளியே இருக்கின்றேன் என்றால் அவர்கள் செய்யும் குறைகளைச் சொல்கின்றேன்.

அதே சமயத்தில் உத்தியோகத்தில் இருக்கின்றார்கள் என்றால் நான்கு பேர் ஒன்று போல் ஒரு தேவையின் நிமித்தமாகக் கேட்கின்றார்கள் என்றால் அரசில் இருப்பவர்களாக் செய்ய முடியவில்லை.

அந்த நான்கு பேரில் ஒருத்தருக்கு உத்தியோகத்தில் இருப்பவர் (அரசு) வேண்டியதைச் செய்தால் “இவர் நல்லவர்” என்று சொல்கின்றார். ஆனால் மீதி மூன்று பேர் “இவர் நல்லவர் இல்லை…” என்கிறார்கள்.

இப்படித்தான் உலக நிலைகளிலே இத்தகைய நிலைகள் வருகின்றது. குறை காணும் நிலையும் பகைமையாக்கும் நிலையும் வருகின்றது.

இது போன்ற நிலைகள் எல்லாம் மாற வேண்டுமென்றால் முதலிலே சொன்ன மாதிரி தியானித்தால் எல்லாருடைய உணர்வுகளும் சீராக வரும். விநாயகரை வணங்கும்போதெல்லாம் இந்த முறைப்படுத்தி நாம் தியானிக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
1.நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் பெற வேண்டும்
2.எங்கள் ஊர் முழுவதும் படர வேண்டும்
3.இந்த நாடு முழுவதும் படர வேண்டும் என்று ஒவ்வொரு ஞாளும் எண்ணினோம் என்றால்
4.இந்த அருள் உணர்வுகள் பெருகுகிறது… குறைகள் நீங்குகின்றது.
5.நாம் என்ற நிலைகளில் அனைவரும் ஐக்கியமாவோம்
6.நமக்குள் பேதமில்லா நிலைகள் உருவாகும்.

இந்த நிலைகளை நாம் அவசியம் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால் தீவிரவாதிகள் கடுமையான நிலைகளைச் செயல்படுத்தி விட்டார்கள். பல விஷத் தன்மைகளையும் விஷத்தை உருவாக்கும் மருந்துகளையும் அவர்கள் உருவாக்கத் தெரிந்து கொண்டார்கள்.. அது உலகம் முழுவதும் பரவி விட்டது.

ஒவ்வொரு நாட்டிலும் சிறுகச் சிறுகப் பரவி இன்று உலகம் முழுவதிற்கும் பரவிவிட்டது. இதிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்
1.நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்
2.அதன் மூலம் விண்ணின் ஆற்றலை நாம் பெருக்க வேண்டும்
3.காற்று மண்டலத்தில் அந்த அரும் பெரும் சக்திகளைப் பரப்ப வேண்டும்.

அனைவரும் இவ்வாறு செய்தோம் என்றால் நம்மிடம் தீமையான உணர்வுகள் பதிவாகாது. பதிவானாலும் அதற்குச் சாப்பாடு வராது.

ஒவ்வொரு நாளும் இரவு படுக்கும் போதும் அதிகாலையில் எழுந்திருந்ததும் இது போன்று எண்ணுங்கள். மத பேதம் வராதபடி இன பேதமில்லாதபடி மொழி பேதமில்லாதபடி
1.உலகில் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் சொல்லிப் பாருங்கள்.
2.தென்னாட்டுடைய சிவனே போற்றி…! என்று அந்த அகஸ்தியன் வாக்கு மீண்டும் இங்கே பிரதிபலிக்கும்
3.உலகம் அழியும் தருவாயில் இருந்தாலும் அதை நம்மால் காக்க முடியும்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்து பழக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகள் என்பது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது ஒளியாகத் தனக்குள் சிருஷ்டித்துக் கொள்பவர்கள். உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியின் தன்மையாக மாற்றியவர்கள்.

தன் வாழ்க்கையில் அறியாது வந்த துன்பங்களை விலக்கி ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று அதைத் தூய்மைப்படுத்தி ஒளியாக மாற்றியவர்கள் தான் மகரிஷிகள்.

மகரிஷிகள் என்றால் எல்லாவற்றையும் சேர்த்து விண்ணுலகம் சென்றவர்கள். அனைத்தையும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

பொதுவாக எல்லோரையும் மகரிஷி என்று அழைக்கின்றோம். மகரிஷிகள் எண்ணிலடங்காதோர் உண்டு. ஒவ்வொருடைய பேர்களையும் தனித்துச் சொல்லி எடுக்க முடியாது.

அந்த மகரிஷிகள் நல்ல உணர்வின் தன்மையை எவ்வாறு பெற்றார்களோ அது பொதுத் தன்மை. மனித உடலிலிருந்து விடுபட்டு பிறவியில்லா நிலை அடைந்து விண்ணுலகம் சென்றவர்கள் தான் மகரிஷிகள்.

ஆகையினால் தான் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

எனக்குள் வந்த அசுத்தங்களை நீக்குவதற்காக குருநாதர் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்தார்.

அவர் பெற்ற அற்றலின் தன்மையைக் கண்டுணர்ந்து அதை உணர்வதற்கும் அவரின் உணர்வின் ஆற்றலையும் குரு அருளால் என்னால் பெற முடிந்தது.

அதைப் போன்றுதான் உங்களுக்கும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகயைப் பதியச் செய்கின்றோம். நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் அவர் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியைப் பெறுவதற்காக இதைச் செய்கிறோம்.

ஆகையால் அவர்களின் நினைவு கொண்டு “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் தொடர்பு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள். உடல் உறுப்புகள் முழுவதும் படரவேண்டும் என்று உள்முகமாகச் செலுத்துங்கள்.

இதைப் பழகிக் கொண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே தியானமாகின்றது.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 178

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் அந்த வெளிச்சத்தினால் நாம் பல பொருள்களை “இது இன்னது தான்… இது இன்னது தான்…” என்று காண முடிகின்றது.

இதைப் போல அந்த அருள் மகரிஷிகள் தன் உணர்வின் ஆற்றல் மிக்க சக்தி கொண்டு அவர்கள் “ஒளி கண்ட உணர்வின் தன்மை கொண்டு” எதனையும் பிளந்து அதற்குள் இருக்கும் இருளைப் பிளந்து அதற்குள் இருக்கும் உணர்வின் சத்தை உணர்ந்தவர்கள்.

தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக மாற்றினார்கள்.

ஒளியாக மாற்றிடும் ஆற்றல் கொண்டு விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சு கொண்ட உணர்வுகள் உருவாகி வருவதைப் “பலவீனமாக்கி…” அதனின் உணர்வையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றார்கள்.

அண்டத்தின் உணர்வை இந்த மண்ணுலகில் தோன்றிய இந்தப் பிண்டத்திற்குள் (இந்த உடலில்) மாற்றி இன்றும் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொண்டுள்ளார்கள்.

விண்ணுலக ஆற்றல் (அண்டத்தின் சத்து) அது இங்கே மண்ணுலகில் கலந்து மாறி வருவதற்கு முன்பாக அண்டத்தின் உணர்வை அடக்கி அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி இந்தப் பிண்டத்திற்குள் (தன் உடலுக்குள்) உருவாக்கினார்கள் அன்று மகரிஷிகள்.

அதனின் துணை கொண்டே உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரமாக “துருவ நட்சத்திரமாகவும்… சப்தரிஷி மண்டலமாகவும்…” இன்றும் (என்றும்) நிலைத்துள்ளார்கள்.

பூமியின் துருவப் பகுதியில் நிலை கொண்டு விண்ணின் ஆற்றல் புவியின் ஈர்ப்புக்குள் “நுழையும் தருவாயில்…” அதைத் தனக்குள் நுகர்ந்தறிந்து உணர்வின் ஆற்றலை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளார்கள்.

இந்த மனித உடலில் இருப்பது போன்றே உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்தை ஒளியின் சிகரமாக மாற்றி “என்றும் பதினாறு” என்று அழியாத நிலைகளில் உள்ளார்கள்.

“அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்” மற்ற அலைகளை அடக்கி ஒளியின் தன்மையில் பொருளைக் காணும் நிலையாக விளைந்திட்ட அந்த அருள் ஞானியின் உணர்வுகள் “நமக்கு முன்” சுழன்று கொண்டிருக்கின்றது.

இந்த உபதேசத்தின் வாயிலாக அதை நீங்கள் கேட்டுணரும்போது சக்தி வாய்ந்த “ஞான வித்தாக…” உங்கள் உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

அதனை நீங்கள் நினைவு கொள்ளும்போது நினைத்த மாத்திரத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறமுடியும்.

விண் சென்ற அந்த அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்கு  அனைவரையும் அழைத்துச் செல்லும் நிலையாக அமைவதே யாம் உணர்த்தும் இந்த உபதேசத்தின் நோக்கம்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 177

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

நான் கல்வியறிவு அற்றவனாக இருப்பினும் அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு உணர்வின் இயக்கங்கள் இயங்குகின்றது என்ற நிலையை குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

அண்டத்தை அவர் கண்டுணர்ந்து அவருக்குள் விளைந்த நிலையை விளைவித்த உணர்வின் தன்மையைச் என் செவிப்புலனால் கேட்கச் செய்து உணர்ச்சிகளால் உந்தப்பட்டு அதனைக் கவனித்துக் கூர்ந்து உற்று நோக்கும்படி செய்தார்.

நான் அவர் சொல்வதைக் கவனித்துக் கூறவில்லை என்றால் அதற்காக என்னைத் தூண்டுதலாக உணர்ச்சியின் நிலைகளைத் தூண்டச் செய்து அதை எனக்குள் பதியச் செய்யும் நிலையாகப் பதியச் செய்வார்.

மேலும் இயற்கையில் மனிதனுக்குத் துயரங்களும் வேதனைகளும் வெறுப்புகளும் எவ்வாறு ஏற்படுகிறது என்ற நிலையை அனுபவபூர்வமாக எமக்குள் ஏற்படுத்திக் காட்டினார்.

அதனின் துணை கொண்டு அறிந்துணர்ந்த நான் உங்களுக்கும் இதைப் பதிவு செய்யும் நோக்கிலே இதைச் சொல்கின்றேன்.

சொல்லும் நேரத்தில் உங்கள் நினைவலையை வேறு எங்கோ செலுத்திவிட்டுச் “சாமி சொல்வது… எனக்குப் புரியவில்லை…!” என்ற உணர்வைனைத் தடுத்து நிறுத்திவிட்டால் கேட்டும் பலனில்லாமல் போய்விடும்.

அப்படிப் பயனற்ற நிலைகளில் செல்லாது இந்த மனித வாழ்க்கையில் மெய் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பெறும் நோக்குடன் “உங்கள் ஞானக் கதவுகளைத் திறந்து வையுங்கள்”.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் இன்று மனித எண்ணங்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்த மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் “பதியச் செய்து” உங்கள் பொன்னான அருள் சக்தியான மனித உணர்வுக்குள் விளைந்த ஆற்றல்மிக்க உணர்வின் நிலைகள் தீமையை நீக்கிடும் ஆற்றலாகப் பெருக வேண்டும்.

மெய் உணர்வைக் கண்டுணர்ந்த நிலைகள் என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறும் அவ்வாறு பெற்ற அந்த ஞானியின் உணர்வலைகள் உங்களுக்குள் விளைய வேண்டும் என்ற ஆசையில் தான் இதைப் பதிவு செய்கின்றோம்.

ஆகையினால் உங்கள் கவனங்கள் வேறு எங்கும் செலுத்தாது “எதைச் சொல்கிறோம்…” என்று கூர்ந்து கவனித்து இதைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 176

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

ஒவ்வொரு நிமிடமும் “ஈஸ்வரா…” என்று விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று உங்கள் உடலுக்குள் வரும் தீமைகளை நீக்கிக் கொள்ளுங்கள்.

உங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் கஷ்டத்தைக் கேட்டுணர்ந்தோர் அவர்களுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைப் பாய்ச்சுங்கள்.

மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும் அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டுணரும் அருள் சக்தி பெறவேண்டும் தீமைகள் அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியாக அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்றால் அதே உணர்வு உங்களுக்குள் விளையும். அதனின் உணர்வாக உங்களுக்குள் உங்கள் உயிர் அதை ஆள்வான். ஒளியின் சரீரமாக ஆக்கிடும் நிலையாக உங்களை ஆண்டு கொண்டிருக்கும் அந்த உயிர் செய்வான்.

உங்களுடைய நிலைகளை நான் எண்ணும் பொழுது அந்த எண்ணத்தை என் உயிர் அதைப் படைக்கின்றது. இயக்குகின்றது. குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அவர் எனக்கு இதைத்தான் சொன்னார்.

உங்கள் உயிரை நான் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உயிரை நீங்கள் கடவுளாக மதியுங்கள். பிறருடைய உயிரையும் கடவுளாக மதியுங்கள். ஒவ்வொரு உடலையும் “அந்தக் கடவுள் தான் எடுத்தது…” என்று மதியுங்கள்.

இதைப் போல நீங்கள் எண்ண வேண்டும். அந்தச் சக்திகளை நீங்கள் பெறவேண்டும் என்ற இந்த நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் இதைப் பதிவாக்குகின்றோம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியை நீங்களும் பெற்று மனிதன் என்ற புனிதச் சரீரத்தை அழியாச் சரீரமாக ஒளியின் தன்மையாக மாற்றி என்றும் விண்ணுலகில் பெரு வீடு பெரு நிலை என்ற நிலையில் சென்றடைந்த அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடையலாம்.

இருள் சூழ்ந்த இந்த நஞ்சு கொண்ட மனித வாழ்க்கையில் நஞ்சினை நீக்கி நாம் உயர்ந்த நிலைகள் பெறுவோம் என்ற இந்த நிலைக்குத்தான் தியானமும் பயிற்சியும் கொடுக்கின்றோம்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 175

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

வைரம் தனக்குள் நஞ்சினை அடக்கி அது தன் பிரகாசமான நிலைகளை வெளிப்படுத்துகின்றது. இதைப் போல் தான் மகரிஷிகள் அனைவரும் நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாகினும் அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்துள்ளார்கள்.

அத்தகைய ஞானிகள் இன்னொரு மனிதனின் ஈர்ப்புக்குச் செல்லாது தன் உணர்வின் தன்மையைத் தன் நிலை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அனைவரும் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் நினைவலைகளைக் குவித்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று உங்களை எண்ணச் செய்கிறோம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயத்திற்குள் மகரிஷிகளின் அருள் சக்தி அது கிடைக்க வேண்டும் அந்த ஆலயம் புனிதமாக வேண்டும் அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும் அந்தத் தெய்வ நிலைகள் அங்கே வளர வேண்டும் என்று தான் உங்களை நான் தியானிக்கின்றேன்.

உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது அந்தச் சக்தியின் தொடரை நீங்கள் பெற முடிகின்றது. கவர முடிகிறது.

இன்று டி.வி.யோ மற்ற சக்தி வாய்ந்த எதுவாக இருந்தாலும் அதைக் கவர்வதற்கு “ஆன்டெனா” வைத்துள்ளார்கள்.

அதனுடன் சக்தி வாய்ந்த இயந்திரங்களையும் நுண்ணிய கருவிகளையும் பொருதி அதன் துணை கொண்டுதான் இந்த ஆன்டெனா தனக்கு முன் இருக்கும் மிகச் சக்திவாய்ந்த அலை வரிசைகளைக் கவர்கின்றது,

அவ்வாறு ஆன்டெனா கவரும்போது நிசப்தமான நிலைகளிலும் சீராகவும் திரைப்படங்களில் காண்பது போல் அந்த அலைகளை ஒருமித்த நிலை கொண்டு சீராக நாம் பார்க்க முடிகின்றது.

இதைப் போல் தான் எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணையச் செய்கின்றோம். நீங்கள் அதைப் பெறுவதற்காக உங்களை நான் தியானிக்கும்போது நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் பெற முடிகிறது.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 174

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உடலில் எதை வளர்க்கின்றீர்களோ அதன் வழி அதை உங்கள் உயிர் உருவாக்கிக் கொடுக்கின்றது. மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் விளைய வைத்தீர்கள் என்றால் அந்த “ஞானிகள் சென்ற பாதையில்” நீங்கள் செல்லலாம்.

“பாவி…! என்னை இப்படிப் பேசினானே…!” என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து அவர்கள் உடலில் போய்த்தான் பிறக்க வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் தப்ப வேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலை ஆலயமாக மதித்து நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உபதேசிக்கின்றோம்.

நீங்கள் நல்ல எண்ணத்துடன் பிறருக்குச் செய்த நன்மைகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும். அதே சமயத்தில் கேட்டறிந்து உங்களுக்குள் அறியாது உட்புகந்த தீமைகள் நீங்க வேண்டும். மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும் என்று தான் வேண்டுகிறேன்.

மாமகரிஷி ஈஸ்வரய குருதேவர் எம்மை இவ்வாறு செய்யச் சொன்னார். ஆகையினால் நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் அந்தச் சக்தியாக மாறுகின்றேன்.

என் சொல்லை நீங்கள் கேட்கும் பொழுது உங்களுக்கு அது நல்லதாகின்றது. நான் ஞானிகளின் வாக்குகளைச் சொல்லிக் கொண்டு வரும் பொழுது நீங்கள் இதைக் கூர்மையாகக் கவனித்தாலே உங்கள் நோய்கள் அனைத்தும் போகும்…. பார்க்கலாம்…!

எப்படியும் உங்களுக்குள் அந்த ஞானிகளின் வாக்கைப் பதிய வைக்க வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். பதிய வைத்துக் கொண்டு அதை மீண்டும் நினைவாக்கினால் உங்கள் உயிர் அதைப் படைக்கின்றது. ஞானிகளின் சக்திகளை விளைவிக்கின்றது.

ஒரு நல்ல ரோஜாப்பூவைப் போட்டால் அந்த வித்து விளைந்த பின் தன் நறுமணத்தை வீசுகின்றது. அதே போல் நல்ல எள்ளைப் போட்டால் நல்ல எண்ணெயைக் கொடுக்கின்றது.

இதைப் போன்று தான் மெய் ஞானிகளின் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம். மெய் ஞானிகளாக நீங்கள் ஆக வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 173

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

குருநாதர் காட்டிய அருள் வழியில் “உயிரே கடவுள்…” என்று நாம் சொன்னால் “கடவுள் தான்… உயிர்..” என்று எழுதி  வைத்து விடுகின்றார்கள்.

காப்பி அடித்தாலும் உயிரே கடவுள் என்றால் அந்த உண்மைப் பொருளைத் தெரிவதற்கு இல்லை. ஆனால் கடவுள் தான் உயிர் என்ற நிலைக்கு மாற்றிச் சில நிலைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

உட் பொருளைக் கண்டு தனக்குள் அறிந்தோ தன் உணர்வின் தன்மையை அந்தக் குரு மூலமாகவோ அறிந்தோ அதைச் சொல்வதில்லை.

ஏனென்றால அதை முதலில் தனக்குள் படைத்துப் பார்க்க வேண்டும். அதனின் இயக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். பின் அது சொல்லாக வர வேண்டும்.

இதையேல்லாம் பனிரெண்டு வருடங்கள் யாம் அனுபவித்தபின் தான் புற நிலைகள் இருப்பது அக நிலைகளுக்குள் எப்படி இயக்குகின்றது என்றும் இந்த உடலுக்குள் எப்படி விளைகின்றது என்றும் அதை எப்படி மாற்ற வேண்டும் என்றும் குருநாதர் உணர்த்தினார்.

ஆரம்பத்தில் நானும் (ஞானகுரு) உங்களை மாதிரி நன்றாகச் சாப்பிட்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டு இருந்தவன் தான்.

பின்னாடி இதை எடுத்துக் கஷ்டப்படச் செய்து எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் எனக்குள் விளைந்த அந்த மெய் உணர்வுகளை இப்போது நான் உங்களிடம் சொல்வது.

அதே சமயத்தில்… இதை எல்லாம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்தான் ”எனக்கே சத்து…!” என்று குருநாதர் சொல்லி விட்டார்.

அதாவது நீங்கள் எல்லாம் அந்த மெய் ஞானிகள் பெற்றது போல ஆற்றல்கள் பெற்றால் தான் எனக்குச் சத்து என்றார் குருநாதர். அதைத் தான் இங்கே உணர்த்திக் கொண்டுள்ளோம்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 172

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

கலசம் வைக்கும் முறை:-
 
ஒரு பித்தளைத் தகட்டில் அந்தத் தட்டிற்குத் தகுந்தாற்போல் பச்சரிசியை நிரப்பி “ஓம்” என்று எழுதவும்.
 
பிறகு அந்தப் பித்தளைத் தட்டில் வைக்கும்படியாக ஒரு சொம்பை எடுத்துக் கொள்ளவும். அதைத் தட்டின் மீது வைக்கவும். அதிலே பாதி அளவு நீரை நிரப்பவும்.
 
சொம்பின் மீது ஐந்து மாவிலைகளை நீரிலே படாதவண்ணம் வைக்கவேண்டும். அதன் மீது ஒரு தேங்காயை வைக்க வேண்டும்.
தேங்காயை வைப்பதற்கு முன் அதைச் சுத்தமாகக் கழுவி மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
 
பிறகு தேங்காயைச் சொம்பின் மீது வைக்கும் பொழுது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த நீருக்குள் போட வேண்டும்.
 
தேங்காயையும் நீரில் படாதவாறு வைக்க வேண்டும். பின் சொம்பின் கழுத்தில் ஒரு மஞ்சள் துண்டை நூலை வைத்துக் கட்டவும். தேங்காயின் மீது மலரைச் சாத்தவும்.
 
இவ்வாறு கலசம் வைத்த பின் அதற்கு முன் ஒரு சிறிய டம்ளரில் நீரும் ஒரு டம்ளரில் பச்சைப் பாலும் வைக்கவும்.
 
பிறகு தியானத்திற்கு எல்லோரையும் அழைத்து வந்து கலசத்திற்கு முன் அமரச் செய்து தியானிக்க வேண்டும்.
 
தியானிக்க வேண்டிய முறை:-
 
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எல்லோரும் சேர்ந்து சொல்லித் தியானத்தை ஆரம்பிக்கவும். ஓம் ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரை எண்ணி வணங்க வேண்டும்.
 
கீழே உள்ளதை ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஏங்கித் தியானிக்க வேண்டும். ஒரு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை தியானிக்கலாம்.
 
எங்கள் தாய் தந்தை தெய்வ சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா
 
எங்கள் தாய் தந்தையருக்கு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா
 
எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
 
எங்கள் குருவின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
 
எந்த எண்ணத்தை எண்ணிக் கலசம் வைத்துள்ளோமோ அந்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்துடன் கலசத்தை உற்று நோக்கி எண்ணத்தைச் செலுத்தவும்.
 
கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி பூமியின் வடதுருவப் பகுதியில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி உடலுக்குள் செலுத்திச் சிறிது நேரம் தியானியுங்கள்.
 
பின் கண்களைத் திறந்து கலசத்தைப் பார்த்து மலரின் மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் தெய்வ குணமும் இந்தக் கலசத்திலே படர்ந்து இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிராத்மாக்களுக்கும் அந்தச் சக்தி கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஐந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.
 
பின் ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லித் தியானத்தை நிறைவு செய்யுங்கள். கற்பூர தீபம் காட்டிவிட்டு கலசத்தின் முன் வைத்திருந்த நீரையும் பாலையும் எல்லோருக்கும் கொடுங்கள்.
 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 171

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

“சரவணபவா… குகா…” தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக உடலான குகைக்குள் நின்று “கந்தா…” பலவற்றையும் அறிந்திடும் நிலை “கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேளே…!” என்று இராமலிங்க அடிகள் பாடியுள்ளார்,

கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேளே சண்முகத் தூயமணி. சண்முகம் என்றால் உண்மையான ஐந்தாவது அறிவின் தன்மை கொண்டு தான் நுகர்கின்றோம்  ஆக புலனறிவு ஐந்து.

தூய்மையான உணர்வைத் தனக்குள் நுகர்ந்து அந்தத் தெய்வமணியாக என்னை ஆக்க வேண்டும் என்று அவர் தெளிவாகப் பாடியுள்ளார். அவர் பாடியதை அர்த்தத்தை இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை.

சண்முகம் என்றால் ஐந்தாவது அறிவு. சண்முகம் என்றால் வேறு விதமாக எண்ணிக் கொள்கின்றார்கள்.

இதை நாம் புரிந்து கொண்டால் அன்று இராமலிங்க அடிகள் எவ்வாறு பாடினார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவர் பாடல்களைப் புகழ்ந்து பாடுகின்றோம். பாடலின் “மூலத்தை…” இன்னும் நாம் காணவில்லை.

ஆனால் அதைச் சொன்னால் நாம் தேடிக் கொண்டேயிருப்போம்.

உணர்வின் உணர்வின் இயக்கங்களைத் தெளிவாக இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிந்திடல் வேண்டும்.

சண்முகத் தூயமணி – சண்முக…, ஐந்தாவது அறிவின் துணையால் உயர்ந்த உணர்வு கொண்டு அந்த ஒளியின் உணர்வாக எனக்குள் உருவாக்குதல் வேண்டும் என்று அவர் பாடியுள்ளார்.

அதனின் மூலக்கருத்து இது தான்,

உண்முகச் சைவமணி – மற்றொன்றைக் கொல்லாதபடி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை கொண்டு இந்தச் சைவம் என்ற நிலையில் செயல்படுத்த வேண்டும்.

நாம் (உடல்) அசைவம். துருவ நட்சத்திரம் சைவம் அது தனக்குள் அசையும் தன்மை இல்லாது இருக்கும் இருப்பிடத்திலே தனக்குள் அந்தச் சைவ மணியாக உருவாகின்றது.

இதனை நாம் பெறவேண்டும் என்று தான் அவர் பாடல்களிலே பாடினார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 170

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

தீமைகள் செய்வோர் உணர்வுகள் இங்கே நிறைய உண்டு. உங்களைப் பார்த்தவுடனே “இன்னென்ன தவறு செய்கிறீர்கள்… செய்தீர்கள்…!” என்று நான் சொல்லலாம்.

எனக்கு அது தலை வலியா…?

ஒருவர் செய்யும் தவறுகளைக் கூர்மையாகக் கவனித்தோம் என்றால் நம் உயிர் அதை எலக்ட்ரானிக்காக மாற்றி நமக்குள் பதிவாக்கி விடும்.

மற்றவர்களுடைய கெட்டதையெல்லாம் அடிக்கடி நான் பார்த்து நுகர்ந்து அறிந்து கொண்டே இருந்தேன் என்றால் அயோக்கியன் நம்பர் ஒன்றாகப் போய்விடுவேன்.

அதற்குப் பதிலாக கெட்டதையும் தவறுகளையும் அகற்றச் செய்யும் அருள் ஞானிகளின் உணர்வை எனக்குள் திரும்பத் திரும்பப் பதிவாக்கி அந்த அருள் உணர்வுகளை எனக்குள் வளர்த்துக் கொண்டால் கெட்டதை நீக்கும் ஆற்றலாக  எனக்குள் வளரும்.

குருநாதர் எனக்குக் காட்டியது அது தான்…!

சில பேர் நினைக்கலாம்…. சாமி ஏன் எங்கள் கஷ்டங்களை எல்லாம் தெரிந்து கொள்ளக்கூடாது..! தெரிந்து எங்கள் கஷ்டத்தை நீக்க உதவி செய்யலாம் அல்லவா…! என்று.

இவருக்குத் தெரிகின்ற கஷ்டத்தை எல்லாம் என்னிடம் கேட்டால் நான் பதிவாக்கி இருந்தால் ஒவ்வொருத்தர் கஷ்டத்தையும் கேட்டால் என்னிடம் என்னென்ன கஷ்டம் எல்லாம் பதிவாகும்?

எல்லாம் சாமிக்கே தெரியும். சில பேர் சொல்வார்கள்.

சில சாமியாடிகள்… ஜோசியர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் நாம் சென்றால் உங்களைப் பற்றி எல்லா விபரமும் தெரியும் எதற்காக வந்திருக்கின்றீர்கள் என்றும் எனக்குத் தெரியும் உங்கள் கஷ்டம் எல்லாம் எனக்குத் தெரியும் என்பார்கள்.

அப்பொழுது அவர்கள் பெரிய மகானாகி விடுவார்கள். அந்த மகான் கடைசியில் என்ன ஆவார்…!

மற்றவர்கள் கஷ்டத்தையெல்லாம் நுகர்ந்து அறிந்து கொண்டார்கள் அல்லவா…! அவர்கள் உடலில் அந்த விஷம் அதிகரித்துக் கடைசியில் பாம்பின் உடலிலும் விஷ ஜெந்துக்களின் உடலாகவும் பூத கணமாகவும் தான் ஆக முடியும்

நான் அப்படி மகான் ஆகவில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 169

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

தெளிந்த நீராக இருக்கும் பொழுது நீரின் அடியில் கீழே இருக்கும் பொருளை நாம் அப்படியே காண முடிகின்றது. ஆனால் நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் அலைபாயும் பொழுது கீழே இருக்கும் பொருள் தெளிவாகத் தெரிவதில்லை.

அதைப் போன்று தான் தெளிந்த மனதுடன் நாம் இருக்கப்படும் பொழுது எதையும் சீராகக் காண முடிகின்றது. மனக் கலக்கமாகிவிட்டால் எதையும் சீராகச் செயல்படுத்த முடியாது போய்விடுகின்றது.

அவ்வாறு மனதில் வரும் கலக்கமான நிலைகளையும் தெளிவாக்க முடியாத நிலையில் சிந்தனையைக் குலைக்கும்  நிலைகளையும் பல உணர்வின் அலைகள் அலைந்து கொண்டிருப்பதைச் சமப்படுத்தி நிறுத்தும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி.

ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது அந்தத் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய் ஞானியின் அருள் சக்தி உடலுக்குள் ஊடுருவி நம்மை ஆட்டிப்படைக்கும் மனக் குழப்பத்தையும் மனக் குடைச்சலையும் நிவர்த்தி செய்து நம் எண்ணத்தையும் செயலையும் தெளிவாக்குகின்றது. வியாபாரத்தையும் சீராக்கச் செய்கின்றது. குடும்பத்திலும் அனைவரையும் ஒற்றுமையாக்குகின்றது.

அந்த அருள் ஒளி நமக்குள் பெருகும் பொழுது உயிரிலே பேரொளியாக வீசிக் கொண்டே இருக்கும். அது வளர்ச்சியாகும்.

அவ்வாறு அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை வளர்த்து இந்த உடலைவிட்டுச் சென்றபின் உயிராத்மா ஒளியாக மாறி எந்த மகரிஷிகள் இதைக் காட்டி அந்த மெய்யை உணர்த்தினார்களோ அவர்களின் அருள் வட்டத்தில் இணையலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 168

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

சாமி (ஞானகுரு) இத்தனையும் தெரிந்து கொண்டார். எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் எல்லாவற்றையும் தெரிந்து தான் செய்தார் என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் தெரிந்து எதுவுமே நான் செய்யவில்லை. குருநாதர் பதிவு செய்தார். அதைப் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் வழி எனக்குள் தெரியும் வாய்ப்பு வருகின்றது.

நான் தெரிந்து கொண்டது போன்று நீங்களும் தெரியப்பட வேண்டும் என்று “ஆசைப்பட்டால்…” அந்த உணர்வின் தன்மையை வளர்க்கின்றீர்கள் என்று அர்த்தம்.

ஆனால் நீங்கள் எதை ஆசைப்படுகின்றீர்கள்…? அதை ஆசைப்படுகின்றீர்களா…! சிந்தித்துப் பாருங்கள்.

சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினால் என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்… உடலில் உள்ள நோய்கள் நீங்கும்… தொழில் நன்றாக இருக்கும்… என்று தான் எண்ணுகிறீர்கள்.

இந்த ஆசை “குறுகிய ஆசையாகின்றது…!”

அருளைப் பெருக்க வேண்டும். இருளைப் போக்கும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் இந்த ஆசை “தீமைகளை நீக்கும் ஆசையாகின்றது…”

இதைப் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நீங்கள் வந்தால் அருள் ஞானம் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அறியாது இடைமறிக்கும் உணர்வின் தன்மைகளை அது “நிச்சயம்” மாற்றும்.

யாம் உபதேசிக்கும் உணர்வுகளைச் சீராகக் கடைப்பிடிப்போர் இதை உணர்ந்திருப்பார்கள்.

“சாமி தான் கொடுப்பார்… அவர் தான் எல்லாம்…!” என்றால் நான் என் குருநாதரை அப்படி எண்ணவில்லையே…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 167

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

பௌர்ணமி அன்று உங்கள் குடும்பத்தில் கூட்டுத் தியானம் இருந்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதற்குப் பின் உங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு பழகிக் கொண்ட பின் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று வாரத்தில் ஒரு நாளாவது எண்ண வேண்டும்.

காரணம் அவர்களது உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு.

இன்னொரு உடலில் இருந்து முன்னோர்களின் ஆன்மா வெளி வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்ட வலிமையால் உந்தித் தள்ளினால் அந்த உயிராத்மாக்களைப் பிறவா நிலை பெறச் செய்ய முடியும்.

உங்கள் குடும்பத்தில் உள்ள மூதாதையர் எவரேனும் விண் சென்றால் தான் நீங்களும் அவர்களைப் பின் தொடர்ந்து விண் செல்ல முடியும்.

இது அல்லாது மார்க்கம் இல்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 166

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

வியாசகர் வான்மீகி சமீபத்தில் வந்த அருணகிரிநாதர் இராமலிங்க அடிகள் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ஏனைய மகான்கள் என்று சொல்லும் அனைவருமே கல்வி கற்று உணர்ந்தவர்கள் அல்ல கல்வியில் ஞானம் பெற்றவர்கள் அல்ல…! அவர்கள் கற்றுணர்ந்ததெல்லாம் தங்களுடைய அனுபவத்தில் கண்டுணர்ந்தவைகள் தான்.

அனுபவபூர்வமாகத் தான் பெற்ற உயர்ந்த சக்திகளையும் தங்கள் உடலில் விளைய வைத்த ஆற்றல் மிக்க உணர்வுகளையும் போதனைகளாக மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

சந்தர்ப்பத்தால் நுகர்ந்த சக்தி தான் அவர்களுக்குள் அது அவ்வாறு உருப்பெறுகின்றது.

அவர்கள் பெற்றது போல் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றோம்.

நான் (ஞானகுரு) கல்வி கற்காதவன் தான். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அவரைப் பின்பற்றிய உணர்வு கொண்டு அதைப் பதிவு செய்து அதனின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற முடிந்தது.

மக்களின் உணர்வின் தன்மையும் தீமைகளை அகற்றும் உணர்வையும் கண்டறிய முடிந்தது. தீமைகளை அகற்றும் சக்திகளை எனக்குள் வளர்த்துக் கொள்ள முடிந்தது.

கற்றவர்களோ கற்காதவர்களோ… அறிந்தவர்களோ அறியாதவர்களோ… என்று (உங்களை) நீங்கள் யாரும் எண்ண வேண்டாம். அறிய வேண்டும் என்பதற்காகத்தான் வருகிறோம்.

பள்ளிக்குச் செல்வோர் அனைவரும் அறிந்து கொண்டு செல்வதில்லை. அறிந்து கொண்ட பின் பள்ளிக்குச் செல்லவில்லை. அறிவதற்குத் தான் பள்ளிக்குச் செல்கிறோம்.

அதைப் போன்று உலகை அறிவதற்காகவும் மெய் ஞானம் பெறுவதற்காகவும் தான் இங்கே வந்துள்ளோம். அதைப் பெறும் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 165

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கந்த சஷ்டி எல்லா முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. அதை நாம் வேடிக்கை பார்க்கச் செல்கின்றோம். எப்படி…?

முருகனைப் பற்றிய காவியங்களை மனதில் வைத்துக் கொள்கின்றோம். கந்தன் அசுரனைக் கொல்லப் புறப்படுகின்றான் என்ற நிலை தான் நமக்குத் தெரிகின்றது.

ஆனால் அந்தக் கந்த புராணத்தின் உண்மையின் நிலைகளை நாம் அறிவதில்லை.

அதை இராமலிங்க அடிகள்…, “கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேளே…” என்று பாடல்களைப் பாடியுள்ளார்.

பல கோடிச் சரீரங்களில் பல அணுக்களால் உருவாக்கப்பட்டு அவை அனைத்தும் எனக்குள் கூர்மையாக இருந்து எனக்கு முன் தெளிவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிரை – அதைத்தான் கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள இந்த உயிரைக் “கந்தவேளே…” என்று அவர் பாடுகின்றார்.

தீமைகள் எனக்குள் நாடாது நன்மைகள் செய்யும் பல உணர்வுகள் என்னிலே தோன்ற வேண்டும் என்று தன் உயிரை வேண்டுகின்றார்.

தீமையான உணர்வுகளைத் தனக்குள் நுகராது “நல்ல உணர்வுகளை நாம் எவ்வாறு நுகர வேண்டும்…” என்று இராமலிங்க அடிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 164

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையே மாற்றியமைத்துக் கொண்டு தனக்குள் இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொள்ளும் சக்தி இந்த மனிதனுக்குத்தான் உண்டு. நாம் எந்த மெய் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ… அதனின் நிலைகளில் நாம் வளர்ந்து விடலாம்.

நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் வளருகின்றேன். நீங்களும் இதைப் போன்று எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… நீங்கள் நிச்சயம் வளர்கிறீர்கள்.

இந்தத் தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வுகளை எல்லோருக்கும் பாய்ச்சப்படும் பொழுது நிச்சயம் நாம் அந்த நிலைகளைப் பெறுகின்றோம்.

நான் இப்படி நினைத்தேனே…! ஆனால் இன்று இப்படித் துன்பங்கள் வந்துவிட்டதே என்று இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை.

நமக்கு உடல் முக்கியமாக வேண்டும். ஆனால் இந்த உடலுக்குள் இருக்கப்படும் பொழுதே நாம் எதைச் செய்ய வேண்டும்? எதை நாம் கழிக்க வேண்டும்? எதை நாம் கூட்டவேண்டும்? என்பது தான் முறை.

இந்த உடல் நமக்கு என்றும் சதமில்லை.

இந்த உடலை விட்டு உயிராத்மா சென்று விட்டால் இந்த உடலில் நாம் எந்த வினையைச் சேர்த்து கொண்டோமோ இந்த வினையின் உணர்வுகள் உயிருடன் ஒன்றி அதை இயக்கியே தீரும்.

உடல் மீது பற்று கொண்டால் வேதனையை உருவாக்கும். இந்த நிலையில் இருந்து நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும பத்தாவது நிலையான “கல்கி..” என்ற நிலையை அடைய வேண்டும்.

சூரியனை விட்டுப் பூமி விலகிச் சென்றால் பனிப் பாறைகளாகிவிடும். நாம் இதற்குள் சிக்கிவிடாதபடி இப்பொழுது இருக்கும் குறைந்த காலத்திலேயே நம்முடைய எண்ணத்தை அந்த மகரிஷிகளின் எண்ண உணர்வுடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

இந்த உடலை விட்டு நாம் சென்றால் அந்த விண்ணுலகம் சென்று என்றும் அழியா ஒளிச் சரீரமாக பெரு வீடு பெரு நிலையான அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.

அந்த எண்ணத்தை வலுவாக வைத்து இதை நீங்கள் செய்து பாருங்கள். உங்கள் வாழ்விலே தெய்வீக நிலையாக மலர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 163

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

என்னைப் போற்றிப் புகழ்வதில் பயனில்லை.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் ஞானத்தை நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டி அந்த உணர்வின் தன்மையால் உலகம் போற்றும் உத்தமர்களாக நீங்கள் வளர வேண்டும். அதுதான் என்னைப் போற்றுவதாகும்.

ஆகவே அருள் சக்திகளை கணவன் மனைவி இரு பாலர்களும் வளர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் நீங்கள் ஒன்றி வாழும் நிலைகள் பெற்று குடும்பத்தில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை எப்படி மாற்றிட வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வாருங்கள்.

அதிகாலையில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினைப் பெறவேண்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அலைகளை எளிதில் கவர முடியும்.

யாம் உங்களுக்குள் பதிவு செய்த எண்ணம் கொண்டு அதை நுகர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று தியானியுங்கள். இருவரும் ஒன்று சேர்த்து இவ்வாறு எண்ணினால் உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கல்களிலிருந்து விடுபடும் உபாயங்கள் அங்கே தோன்றும்.

இதனின் துணை கொண்டு நீங்கள் வாழ்ந்து வந்தால் இன்று இந்த நஞ்சு கலந்த உலக உணர்வுகளிலிருந்து மீட்டிடும் நிலைகள் உங்களுக்குக் கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 162

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

வக்கீல் படிப்பைப் பயின்றபின் பல சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்கின்றோம். சட்டத்தின் நுணுக்கங்கள் அறிந்து கொண்டாலும் இதிலே பிழைகள் எது? என்ற நிலைகள் நீக்கக் கற்றுக் கொள்கிறோம்.

கற்றுக் கொண்டாலும் தனக்கு நெருங்கிய ஒரு நண்பன் இருக்கின்றான் என்றால் அவன் தவறு செய்தால் அவனைக் காக்க முற்படுகின்றோம்.

“சட்டத்தில் எங்கே குறை இருக்கிறது…?” என்று நண்பனை காக்கத் தவறும் செய்கின்றோம்.

யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள். சில நிலைகளில் நடப்பதைச் சொல்கிறேன். (சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகள் இப்படி)

அதே மாதிரி ஆடிட்டர் படித்தவர்கள் அதன் வழிகளிலே கற்றுணர்ந்தாலும் அவர் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு தன் வாடிக்கையாளர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று தான் அவருடைய தத்துவமாக இருக்கின்றது.

விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற சர்க்கார் நிலைகளிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை தான் இங்கே வருகின்றதே தவிர பொது விதியான நிலைகள் கொண்டு செயல்படும் நிலைகள் இல்லை.

தவறு அங்கேயும் அங்கே வரக்கூடாது இங்கேயும் நாம் தவறான நிலைகள் செய்யக்கூடாது என்ற நிலைகள் அதிலே எது மையமாக இருக்கிறதோ அதை உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டு செயல்படும் இந்த நிலையும் இல்லை.

ஏனென்றால் அப்படிப் போனால் இவர் “பிழைக்கத் தெரியாதவர்…” என்ற பட்டமே வந்து விடும். இந்த ஆறாவது அறிவால் வரக்கூடிய நிலைகளை இவர் இந்த வேலைக்கு லாயக்கில்லை. இவர் எதற்காக இங்கே வந்தார்..? என்று சொல்வார்கள்.

நியாயத்திற்காகப் போராடினால் அவர் “பைத்தியக்கார வக்கீல்…” என்று சொல்வார்கள். நியாயத்திற்காக வேண்டி ஆடிட்டர் சொன்னால் இவருக்குப் “பிழைக்கத் தெரியவில்லை..!” என்று சொல்வார்கள்.

இப்படித் தவறு செய்பவனுடைய நிலைகள் தவறு செய்து விட்டேன் என்றால் அந்தத் தவறை அது சாதகமாக வைத்து எந்தச் சட்டத்தில் எது ஓட்டை இருக்கின்றதோ அதைப் பிடித்து தவறு செய்தவரைக் காப்பாற்றிக் கெட்டிக்காரராகும் நிலை தான்,

அப்பொழுது எங்கள் வக்கீல் “மிகவும் கெட்டிக்காரர்” என்பார்கள்

குற்றவாளியாக இருப்பவன் இவன் முதன்மையாக (நல்லவனாக) வந்து விடுகின்றான். குற்றவாளி செய்யக்கூடிய தவறை அவர் ஏற்றுக்கொண்டு வக்கீல் குற்றவாளியாக வேண்டும்.

குற்றத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைகளுக்கு இவர் வாதிடுகின்றார். இப்படித்தான் இன்றைய நிலைகள் கல்வியில் ஞானங்கள் வரப்படும் போது இது தான் வருகின்றது.

ஏனென்றால் இது விஞ்ஞான அறிவால் மனிதனால் கற்றுணர்ந்த நிலைகள் இத்தகைய இயல்புகள் வருகின்றது. (நான் யாரையும் குறை கூறவில்லை)

மெய்ஞானியின் உணர்வுகளை நாம் ஒவ்வொரு சமயம் நாம் எடுக்கப்படும் போது நம்மை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து குற்ற இயல்புகளை அகற்றச் செய்யும்.

இயற்கையின் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது? அந்த உணர்வின் ஆற்றல் மனிதனை எப்படி இயக்குகின்றது? என்ற நிலையை அறிந்தவர்கள் ஞானிகள்.

காலத்தால் சந்தர்ப்பத்தால் இணைந்த இந்த நிலைகளை இது எவ்வாறு முறியடிப்பது? என்ற ஆற்றல்களை வளர்த்துக் கொண்டவர்கள் மகரிஷிகள்.

சாதாரண மனித உணர்வின் இயக்க நிலைகள் இது மற்றவர்களைக் குற்றவாளியாக்கும். அந்த மெய்ஞானிகள் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 161

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி அவசியம் தேவைப்படுகிறது.

இந்த உடலிலிருக்கும்போது தான் சக்திகளைக் கூட்ட முடியும் இந்த உடலை வைத்துத்தான் அந்த மெய் ஒளியைப் பெற முடியும். அந்த மெய் வழியைப் பெறுவதற்காகத்தான் மகரிஷிகளும் ஞானிகளும் அத்தனை பாடுபாடுபட்டனர்.

இதை நாம் எண்ணி எடுத்தால் இரண்டு பயன்களும் விளையும்.

இந்த மனித வாழ்க்கையில் செல்வமும் நமக்கு இணைந்து வரும். நம் மனமும் அமைதி பெறும். உடலை விட்டுப் பிரியும் பொழுது விண்ணுக்குப் போகிறோம்.

இந்த உடலில் நோயோ மற்ற துன்பமோ வந்தால் துன்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அது பாட்டுக்கு வரும் போகும். அந்த நேரத்தில் துன்பம் வந்தது…! அது அது பாட்டுக்குப் போகும் நாங்கள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் என்று இதை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும்.

எனக்குள் இந்த அழுக்குச் சேராத நிலை பெற வேண்டும் என் சொல் கேட்பவர்களுக்கு இனிமையாக இருக்க வேண்டும். என் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும். இந்தச் சக்திகள் அனைத்தும் என்னுள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் ஈஸ்வரா.. என்று உயிரிடம் சொல்லி முறையிட வேண்டும்.

இந்த உணர்வை நாம் ஆழமாக பதியச் செய்து இயக்கமாக மாற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 160

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு மகான்களும் மகரிஷிகளும் தன் உடலுக்குள் வளர்ந்த மெய் உணர்வுகளை தான் பெற்ற இனிமையின் நிலைகளைத் தன் இன மக்கள் பெற வேண்டும் என்று ஒரே நோக்குடன் எல்லாரும் மகிழ்ந்திட வேண்டும் என்று தனக்குள் விளைவித்த உணர்வின் சொல்லை நமக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்தார்கள்.

ஆனால் காலத்தால் அருள் ஞான வித்துகளை அது முளைக்காது தடைப்படுத்தி  விரையமாக்கி விட்டோம். காலத்தால் அருள் ஞான வித்துகள் அனைத்தும் முளைக்காது சென்றதால் அருள் ஞானியின் உணர்வுகள் தேங்கிவிட்டது.

அதற்குண்டான ஊட்டச்சத்து இல்லாது தவித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் மகரிஷிகளின் உணர்வைப் பெறும் பாக்கியத்தை எமக்கு (ஞானகுரு) மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் ஏற்படுத்தினார்.

குருநாதர் அவர் பித்தனைப் போன்று தான் வாழ்ந்தார். வாழ்க்கையில் இன்னல் எதுவென்றே அறியாத நிலைகளில் இன்னலைப் போக்கிடும் ஒளியின் சுடராக விண்ணின் ஆற்றலை அவர் தனக்குள் விளைய வைத்து ஒளியின் சுடராகப் பெற்றார்.

அவருக்குள் ஒளியின் சுடராக விளைய வைத்த அந்த ஒளியின் சுடராகப் பெறும் நிலையைப் பித்தனாக இருந்து எமக்குள் அது ஆழப் பதியச் செய்து அருள் வித்தை வளர்க்கும் முறையையும் வகுத்துக் கொடுத்தார்.

விண்ணின் ஆற்றல் மிக்க நிலையும் மகரிஷிகளால் வளர்க்கப்பட்ட அருள் ஞான வித்துக்களைச் சாமானிய மனிதரும் அதை எவ்வாறு எடுத்திடல் வேண்டும்… பதிந்திடல் வேண்டும்… அதை எவ்வாறு பருகிட வேண்டும்… வளர்த்திடல் வேண்டும்…? என்ற நிலையை உருபடுத்தி உணர்த்தினார் குருநாதர்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்குள் பதித்த அருள் ஞான வித்தை அதை வளர்ப்பதற்கு இந்தப் பூமியில் எங்கெங்கெல்லாம் அந்த அருள் ஞான சக்தி தொடர்ந்துள்ளதோ அங்கெல்லாம் கால்நடையாக நடக்கச் செய்தார்.

உலகம் முழுவதும் எம்மை அழைத்துச் சென்று அந்த ஞானிகளின் உணர்வின் ஆற்றலைப் பருகும் முறையைக் காட்டி ஆங்காங்கு படர்ந்துள்ள அந்த மகரிஷிகளின் உடலில் விளைந்த மெய் உணர்வின் அலைகள் படர்ந்திருப்பதை நீ நுகரு அதனின் அந்த ஆனந்த சக்தியான வித்தை உனக்குள் வளர்த்துக் கொள் என்று காட்டினார்.

இந்தப் புவி முழுவதும் சுழன்று வந்து அவர் காட்டிய அருள் ஞான வித்துக்கள் அனைத்தும் வளர்த்து அந்த வித்தின் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்வதற்குத்தான் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை அமைத்தது…!”

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைகளுக்காகத்தான் குரு காட்டிய வழிகளில் உங்களுக்குள் அது பதியச் செய்து கொண்டே வந்தது.

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டும் அழியாப் பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்த மகரிஷியின் ஆற்றலில் விளைய வைத்த அந்த அருள் ஞான வித்தை நமக்குள் பருக வேண்டும்… அது பெருக வேண்டும் நமக்குள் பெருக்கிடல் வேண்டும்  எல்லோருடைய அருள் ஞானப் பசியையும் போக்கிடல் வேண்டும்.

அந்த மாமகரிஷியின் நினைவு கொண்டு அவருடைய துணை கொண்டு விண்ணின் ஆற்றல் மிக்க நிலைகளை அருள் ஞான சக்தியின் தொடர் கொண்டு எண்ணத்தால் அதை நாம் வளர்த்திடுவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 159

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் மனிதன் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவா நிலை அடைந்தான் அகஸ்தியமாமகரிஷி.

அவன் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகள்… அவன் உடலில் விளைய வைத்த அந்தச் சக்திகள் இப்பொழுது உபதேசிக்கின்ற மாதிரி அவன் உடலிலிருந்து வந்த வாசனைகளை எல்லாம் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர்ந்து இந்த வாழ்க்கையில் நம் உடலிலிருந்து வரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்ற வேண்டும்.

ஒளியான அந்த அகஸ்தியனின் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அந்த வினைக்கு நாயகனாக அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும்.

“மனிதனின் கடைசி எல்லை அழியா ஒளிச் சரீரம் தான்”.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 158

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

 

நம்மை வளர்த்த தாய் தந்தையர்களின் மூதாதையர்களும் நம்மை வளர்த்திட எத்தனை நிலைகள் நாம் சிறு வயதாக இருக்கும் பொழுது தாத்தா பாட்டி என்று சொன்னால் அவருடைய சிரமத்தையும் பார்க்காது நமக்கு எத்தனையோ நிலைகளைச் செய்தார்கள்.

அதே போல் அந்த ஆன்மாக்களையும் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செலுத்த வேண்டும் என்று இத்தகைய நிலைகளையும் குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகக் காட்டினார்.

ஆனால், இன்றைய நிலையில் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்கள் குல தெய்வங்கள் குடும்பத்தை காத்திட்ட நிலைகள் கொண்டு அவர் ஆன்மாக்கள் பிரிந்து சென்றபின் என்ன செய்கின்றார்கள்?

அமாவாசை அன்று இருண்ட நாளில் அவருக்கு வேண்டிய உணவை வைத்து அவர்களுக்கு வேண்டிய மற்றவைகளையும் படைத்து அழைக்கின்றார்கள்.

அவர்களை மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே இழுத்துப் பழகி விட்டனரே தவிர ஒளி என்ற சரீரம் கொண்ட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கும் நிலை முழுவதுமே அற்றுப் போய்விட்டது.

ஐதீகம் சாஸ்திரம் என்ற நிலைகள் இருளான அமாவாசை நாள்களில் அவர்கள் உணவாக உட்கொண்ட நிலைகள் கொண்டு அவர்களை ஏங்கி இந்தப் புவிக்குள் இழுக்கும் நிலைகளாகச் சாஸ்திர விதிகளை மாற்றி விட்டனர்.

ஆனால், அவர்களுக்கு உணவு எப்படிக் கொடுக்க வேண்டும்?

இந்தப் புவியிலே விளைந்த அந்த ஆன்மாக்களைச் “சப்தரிஷி மண்டலத்துடன்…” இணைக்கக் கற்றுக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கிறது? எதனின் உணர்வை உனக்குள் கவர வேண்டும்? எதனின் வலுவின் துணை கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்? அந்த ஆன்மாக்களை உந்தி விண்ணிலே வீசி விட்டால் அந்த ஞானிகள் அருகிலே செல்லும்போது உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகின்றது.

ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது? என்று அவர் எம்முடன் இருந்தே இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் “நானல்ல…,” குருநாதர் காட்டிய உணர்வின் தன்மையே இது.

ஒரு மரம் எவ்வாறு தன் மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய உணர்வு கொண்டு இயக்குகின்றதோ இதைப்போல ஒரு மனிதனுக்குள் எடுத்துக்கொண்ட உணர்வின் செயல் எதுவோ அதனின் நிலைகளையே பேசுவர். அதனின் நிலையிலேயே வலுப்படுவர்.

இதைப்போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருக்குள் விளைந்த ஆன்ம ஞானத்தை மெய் உணர்வின் தன்மையை விண்ணில் வளர்ந்துக் கொண்டிருக்கும் உணர்வுகளைப் பரப்பும் மார்க்கத்தைக் காட்டினார்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 157

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் தியானம் செய்தேன். என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என் குடும்பத்தில் இப்படி நடந்து விட்டது…! என்றால் என்ன அர்த்தம்…?

இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகின்றீர்கள் என்று அர்த்தம்.

“வேதனை…” என்ற உணர்வைப் பெருக்கி எல்லாவற்றையும் செய்துவிட்டு “தியானம் செய்தால்… என்னத்திற்கு ஆகும்…?” என்று எண்ணினால் அது நமக்கல்ல.

தியானத்தைக் கூட்டி எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அந்த உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் சங்கடங்களையோ சிரமங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளை உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

கணவன் மனைவிக்குள் அந்தப் பேரானந்த நிலையை தான் என்றும் உருவாக வேண்டும். சந்தர்ப்பத்தில் கோபம் வரும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஏதோ ஒன்றல்லவா… “நம்மை இயக்குகின்றது..!” என்று உடனே சுதாரித்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து ஆத்ம சுத்தி செய்யும் உணர்வு வந்து விட்டது என்றால் “நான் செய்வது தான் ரைட்…!” என்ற எண்ணம் வராது.

பால் ருசியாகத் தான் இருக்கும். அதிலே பாதாமைப் போட்டால் இன்னும் ருசியாகத் தான் இருக்கும்.

ஆனால் ஒரு துளி காரம் பட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சிகளைத் தான் ஊட்டும். அதைப் போன்று தான் நம் நல்ல மனதில் வெறுப்பின் உணர்வை ஊட்டினால் அது விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரோளி பெற வேண்டும் அதைத் தணித்து சுவையைக் கொண்டு வர வேண்டும்.

நாம் கடைசியில் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நமது உயிர் உருவாக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 156

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் என்றுமே பெறவேண்டும் என்று எண்ணுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானமாக்குங்கள்.

ஏனென்றால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் தீமை என்று வந்தால் அந்தத் தீமை புகாது தடுக்க அருளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள இது உதவும்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உங்கள் நினைவு முழுவதையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதனின்று வரும் பேரருள் பேரொளியை ஏங்கிப் பெறுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் உங்களுக்குள் ஏங்க வைத்து அதை நுகரச் செய்து அந்த வலிமையை ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வலிமையின் துணை கொண்டு உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியை ஊட்ட முடியும்.

உங்கள் கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரம் எப்படி இருக்கும் அது எங்கே இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை.

உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் எங்கேயோ இருக்கின்றார். அவர் இந்த மாதிரி எல்லாம் அவஸ்தைப்படுகின்றார் என்று கேள்விப்பட்டவுடன் உங்களுக்குள் பதிவாகின்றது.

அது நினைவாகும் பொழுது என்ன செய்கின்றது? அவர் அங்கே “எப்படிச் சிரமப்படுகின்றாரோ..! என்ன செய்கின்றாரோ..?” என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள்ளும் இயங்குகின்றது.

இதைப் போல துருவ நட்சத்திரம் எங்கேயோ இருக்கின்றது. உங்கள் கண்களால் பார்க்க முடியவில்லை. குருநாதர் எனக்குக் காட்டினார். பார்த்தேன்.

அவர் காட்டிய நிலைகள் கொண்டு அதனின் ஆற்றலைப் பெற்றேன். அந்த உணர்வினை இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றேன்.

பதிவானதை நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து உங்கள் கண்களாலேயும் பார்க்க முடியும். இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த அருள் ஒளிகள் இங்கே படர்ந்து வருவதையும் உங்களால் பார்க்க முடியும். நீல நிற ஒளி அலைகள் சுழன்று வருவதைப் பார்க்கலாம். ஒரு வெல்டிங்கைத் (WELDING) தட்டினால் “பளீர்..,” என்று வெளிச்சமாவது போல் தெரியும்.

ஏனென்றால், பழக்கப்பட்டோர் உணர்வுகளில் இதைப் பெற முடியும்.

பேசுவது நான் அல்ல. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வே இங்கே பேசுகின்றது.

அவர் ஒளி என்ற உணர்வைப் பெற்றார். அது உங்களுக்குள் வந்து அதைப் பெறும் தகுதி பெறக் கூடிய சந்தர்ப்பம் தான் இப்பொழுது சொல்லும் இந்தத் தியானம்.

ஏனென்றால் அவர் ஒளியான உணர்வை நீங்களும் பெற முடியும்  பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் பதிவாக்குவது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள். உங்கள் உடலிலுள்ள எல்லா நினைவுகளையும் ஒன்றாக இணைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதனின்று வரும் பேரொளியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். மெதுவாகக் கண்களை மூடுங்கள். உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு இங்கே வரும் பொழுது உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமையான அணுக்களுக்குத் தீமையின் உணர்வுகள் போகாதபடி இப்பொழுது எடுக்கும் தியானத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படுகின்றது.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமையான சந்தர்ப்பமாக இருந்தாலும் அந்த நேரத்திலும் அதை மாற்றிட இதைப் போன்று தியானத்தைச் செய்யுங்கள்.

உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 155

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் உபதேசிக்கும் உணர்வுகளைப் படிக்கும் சமயத்தில் பல உணர்வுடன் இருப்பார்கள்.

என் குடும்பத்தில் கஷ்டம்,.. என் குடும்பத்தில் தொல்லை.. என் குடும்பத்தில் சண்டை… என் பையனின் நிலைகள் இப்படி… நான் கடன் கொடுத்தவன் ஏமாற்றுகின்றான்… அவன் தரவே முடியாது என்கிறான்… என் உடல் நிலை சரியில்லை… என் குடும்பத்தில் என்னை எல்லோரும் எதிர்க்கிறார்கள்…! என்று இப்படிப் பல சிக்கல்களின் உணர்வு கொண்டு தான் இதைப் படிக்கின்றோம்.

எம்முடைய அருள்ஞான உபதேசங்களைப் படிக்கும் நேரம் அந்த மாதிரி அணுக்களானால் அந்த அணுவெல்லாம் தன் உணவாக எதைக் கேட்கும்…?

எவர் மேல் பகைமை கொண்டு சிக்கல்கள் ஆகி இந்த உணர்வின் தன்மை அணுவாக ஆனதோ… “அது அது…” தன் உணர்ச்சிகளை உந்தும்.

உபதேசிக்கும் உணர்வை எடுக்கவிடாது.., “அது உந்தித் தடைப்படுத்தும்”. “நல்ல உண்மைகளைப் பெறமுடியாதபடி… தடைப்படுத்திக் கொண்டிருக்கும்”.

தடைப்படுத்தும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்… “எப்படியும் நீங்கள் அதிலிருந்து மீண்டிட வேண்டும்” என்று தான் வலிமையான உணர்வு கொண்டு “உங்கள் கவனத்தை இங்கே திருப்பி” அருள் உணர்வு கொண்டு உங்களுக்குள் பதிவு செய்து கொண்டுள்ளோம்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் “அணுக்களாக விளைந்து” பகைமையற்ற உணர்வுகள் உங்கள் உடலிலே விளைய வேண்டும் என்ற நிலைக்கு உபதேசிக்கின்றோம்.

உங்கள் பார்வை பகைமையை உட்புகாது தடுக்கும் நிலையாக வர வேண்டும் என்றும்.., “உங்கள் பார்வை” எங்கே பகைமை உருவாகின்றதோ “அங்கேயே.., அதை அடக்கிடும் சக்தி” பெறவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

பகைமை என்றால் விஷத் தன்மை கொண்ட விஞ்ஞான அறிவால் வெளிப்படுத்திய உணர்வுகள் “எத்தனையோ.., எத்தனையோ” நமக்கு முன் சந்தர்ப்பத்தால் வந்து கொண்டே இருக்கின்றது.

அத்தகைய தீமை செய்யும் நிலைகளை நாம் காண நேர்கின்றது. செவி வழி கேட்கவும் நேர்கின்றது.

இதைப் போல “செவி கொண்டு கேட்டுணர்ந்த உணர்வுகள் உடலுக்குள் பதிவாகி.., கண் வழி கொண்டு நுகர்ந்தறிந்து..,” அதன் வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்.., இயற்கையின் செயலாக்கங்களிலிருந்து “நம்மை எப்படி மீட்டிக் கொள்ள வேண்டும்..?”  என்பதைத்தான் குருநாதர் காட்டிய வழிகளில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

சூரியன் எவ்வாறு தன் உணர்வின் தன்மை கொண்டு மற்றவைகளை வளர்க்கின்றதோ அதைப் போன்று குருநாதர் நாம் எல்லோரும் அருள் ஞானம் பெறவேண்டும் என்ற ஆசையில் வளர்க்கின்றார்.

அவர் இன்று சூரியனாக இருக்கின்றார். அகஸ்தியன் பெற்ற உண்மைகளை அவர் கண்டார். அவர் வாழ்க்கையில் அறிந்துணர்ந்தார். அவர் வழியில் அவர் கண்ட உண்மையும் அதன் உணர்வை எனக்குள் பதியச் செய்தார்.

“பதிந்த உணர்வுகளை…” மீண்டும் நினைவு கொண்டேன். அதை நுகரும்… அறியும்… சந்தர்ப்பத்தை எனக்குள் உருவாக்கினார்.

அதன் உணர்வின் தன்மை பெருகும் நிலைகளில்.., “அவர் கவர்ந்து கொண்ட உண்மைகள்.., அவர் வெளிப்படுதிய உணர்வுகள் எதுவோ” அதை நான் பருகினேன்.

எனக்குள் அந்த அணுவின் தன்மையை உருவாக்கினார். அது அணுவான பின் தன் உணவுக்காக ஏங்குகின்றது. அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது.

உணர்வை அறிகின்றேன். “அதையே” இங்கே உங்களிடம் சொல் வடிவில் வெளிப்படுத்துகின்றேன்.

அதைக் கேட்கும் பொழுதும்.., படிக்கும்பொழுதும் உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது. இதை உங்களுக்குள் அணுவாக மாற்றிவிட்டால் தெளிந்த மனம் வரும்.

ஏற்றுக் கொள்ளும் பண்பு… உங்களுக்கு வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 154

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியான சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி ஏகாதசி ஏகாந்தமாக வாழுகின்றார்.

வைகுண்ட ஏகாதசி அன்றுதான் நமது குருநாதர் ஒளியின் சரீரம் ஆனார். நமது குரு காட்டிய அருள் வழிகளைத்தான் உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

தீமைகளிலிருந்து விடுபடும் நிலையாக அருள் ஒளியை எப்படிப் பெறவேண்டும் பெற முடியும் என்று உணர்த்திய உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தைத் தான் எனக்குக் காட்டினார்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை எடுத்து நீ பெற்றுக் கொள். இருளை அகற்ற அது உதவும். மெய்ப் பொருளைக் காணவும் உதவும். உன்னை அறியாது சேர்ந்த தீங்கை அகற்றிடவும் உதவும் என்று கூறினார்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார்.

அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஒருவர் தீங்கு செய்கிறார் தீங்கு செய்கிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த உணர்வை அதிகமாகச் சேர்த்தால் நமக்குள் தீங்கு செய்யும் உணர்வுகள் வந்து  நம்மையும் தீமை செய்ய வைத்துவிடும்.

ஆகவே தீமைகளை நுகர்ந்தால் தீமை செய்யத்தான் முடியுமே தவிர  நன்மை பயக்க முடியுமா என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

குருநாதர் எம்மிடம் சொன்னது:- ஒவ்வொரு நொடியிலேயும் ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நாம் பார்த்து அதனை நுகர்ந்து விட்டால்  வேதனையிலிருந்து அவர் மீள வேண்டும் என்று தான் நீ எண்ணுதல் வேண்டும்.

அதே போல ஒருவன் தீங்கு செய்ய நினைத்தால் அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்று தான் நீ எண்ண வேண்டும்.

நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவர்களைத் தீமையிலிருந்து மீட்க வேண்டும். வேதனைகளிலிருந்து மீட்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

உங்களுக்கும் இதைத்தான் யாம் தெளிவுபடுத்துவது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 153

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகள் அனைவவருமே 27 நட்சத்திரத்தினுடைய உணர்வுகளை எடுத்துத் தான் அது அனைத்தையும் ஒன்றாக்கி தனக்குள் ஒளியாக ஒளியின் சரீரமாக மாற்றினார்கள்.

எதுவும் இயக்கமல்லாது அதனின் உணர்வின் இயக்கமாக மாற்றி NEGATIVE/POSITIVE +/- கரண்ட் எப்படி உண்டாகின்றதோ அதைப் போல சம நிலைப்படுத்தி ஒருமையின் நிலைகள் கொண்டு ஒன்றைத் தனக்குள் இறையாக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்.

அதனின் தன்மையை நீங்களும் பெற வேண்டும் என்ற உணர்வுடன் தான் இந்த 27 நட்சத்திரத்தின் சக்தியை உங்களை எடுக்கச் சொல்கிறோம்.

மகரிஷிகள் இதையெல்லாம் வடித்துக் கொண்டவர்கள்.

அந்த உணர்வின் சத்துக்களை இதனுடன் இரண்டறக் கலந்து அது புதுப் புது எண்ணங்களாக உருவாக்கி அதனின் துணை கொண்டு இதை நீங்கள் பருகும் நிலைக்கே இதைச் செய்கின்றோம்.

உங்கள் வாழ்க்கயில் நீங்கள் எதை எண்ணினாலும் இதைப் பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் இருப்பீர்கள் என்றால் அது ஊழ் வினையாக உங்களுக்குள் பதிவாகி அதனின் செயலாக உங்கள் உணர்வுகள் இயங்கி அந்த மெய் ஞானியின் உணர்வின் ஒளியைப் பெறக்கூடிய தகுதியை பெறுகின்றீர்கள்.

இப்படி அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நமக்குள் வலுபெறுகின்றது. அப்பொழுது அதனின் துணை கொண்டு நமது ஆன்மாவாக மாறுகின்றது.

இந்த உணர்வின் துணை கொண்டு தான் நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெற முடிகின்றது. ஆகவே உயிரை ஓம் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதனின் நினைவு கொண்டு செயல்படுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 152

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியர் கண்ட பேருண்மைகளை நீங்களும் காண வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்

அந்த மெய் ஞானி உணர்வுகளை நுகர்ந்தால் வந்தால் இந்தத் தீமைகளை எல்லாம் அகற்றிவிடும். மெய்ப் பொருளை வளர்க்க முடியும். தீமையற்ற நிலையாக வாழ முடியும் என்று சொல்கிறோம்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் இல்லை. இந்த உடல் நிலையானதில்லை. ஆனால் இந்த உயிர் என்றும் நிலையானது.

அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மையை இந்த மனித உடலில் இருந்து தான் கருவாக்கினான் அகஸ்தியன்.

அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்….!

இந்த உடலை விட்டுச் சென்றால்… “என்றும் நிலையான… ஒளியின் சரீரமாக இருக்க முடியும்…!” என்ற அந்த நோக்கத்துடன் எவர் வருகின்றனரோ அவர்கள் அனைவருமே நிச்சயம் அகஸ்தியனைப் போன்று பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 151

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் உணர்வைத் தன்னுள் கண்டுணர்ந்து இந்த மண்ணுலகை வென்று விண்ணுலகைச் சென்றடைந்து முழுமை பெற்றார்.

விண் செல்வதற்குண்டான பாதையை அவர் கற்றார். இந்த உணர்வை முழுமை பெறுவதற்குத் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று எண்ணினார்.

அந்தத் துணையைத் தான் பெற்றாலும் விண்ணுலகம் செல்வதற்கு விண்ணிலே உந்தித் தள்ளுவதற்கு தனக்குகந்த ஆதாரங்கள் தேவை. விழுதுகள் இல்லாது மரம் வளர்ந்திடாது ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார். அதே போலத்தான் ஒவ்வொரு உயிருக்கும் விழுதுகள் தேவை.

நாம் எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு விண் சென்ற மகா ஞானிகளின் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் எடுத்து அந்த விழுதுகளாக நாம் ஓவ்வோருவரும் உருவாக வேண்டும். உங்களுக்கு நான் விழுது. எனக்கு நீங்கள் விழுது என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.

விழுது இல்லாது ஒன்றின் துணை இல்லாது ஒன்று விளையாது என்ற நிலையைக் குருநாதர் தெளிவாகக் காட்டினார். அதே சமயத்தில் நான் மட்டும் தனித்துத் பெறுவேன். மற்ற அனைத்தையும் வெறுப்பேன் என்ற நிலையில் பெற இயலாது.

இதை எல்லாம் “துணுக்குத் துணுக்காகச் சொல்கிறேன்…!” என்று எண்ண வேண்டாம்.

இதை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் நினைவாக்கும் பொழுது சந்தர்ப்பத்தில் தீமைகளைப் போக்கும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

நீங்கள் அனைவரும் அவ்வாறு பெறவேண்டும் என்பதற்காகத்தான் தெளிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 150

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது சூரியக் குடும்பத்தில் பூமியில் உருவான மனிதன் சில் உண்மைகளைக் கண்ட பின் மின்னல்கள் தாக்கி கடல்களிலே படும்போது மணல் ஆவதை அதற்குள் இருக்கும் நிலையை வடிகட்டி கதிர் இயக்கப் பொறிகளாக மாற்றுகின்றான்.

இன்று அணு குண்டுகளாகவும் லேசர் கதிரியக்கங்களாகவும் அதை உருவாக்கி விட்டார்கள்.

தன்னுடைய உடல் ஆசைக்காக வேண்டி நாட்டு ஆசைக்காக வேண்டி உலகை அழித்திடும் தன்மைகளாக அது இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

நம் பூமியில் விளைவதை சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இந்தக் கதிரியக்கங்களை கவர்ந்து இன்று நமது பிரபஞ்சமே கதிர் இயக்கமாக மாறிவிட்டது.

மனிதனின் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிலையால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்து விட்டது. சூரியனும் சிறுகச் சிறுக செயல் இழந்து கொண்டு இருக்கின்றது. அது செயலிழக்கும் பொழுது அதனுடன் சேர்ந்த நம் பூமியும் அது செயல் இழக்கும்.

இங்கே வாழும் மனிதர்களும் அசுர உணர்வு கொண்டு தீவிரவாதம் என்ற நிலைகளில் ஒருவருக்கொருவர் கொன்று சாப்பிடும் நிலை வருகின்றது.

பாதரசங்களை உருவாக்கும் சூரியனுக்குள் விஞ்ஞானக் கதிரியக்கச் சக்திகள் கலக்கப்பட்டு அந்த பாதரசங்களைக் கருகிய விஷத் தன்மையாக மாற்றி உமிழ்ந்து கொண்டுள்ளது.

சூரியன் செயல் இழக்கும் தன்மையால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் செயலிழக்கும் நிலை ஆகின்றது. நான் (ஞானகுரு) சொல்வது வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவாக்கினால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் உணர முடியும். சூரியன் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் நீங்கள் உணர முடியும்.

ஆனால் இதிலிருந்து தப்பிய இந்தத் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் என்றுமே அழிவதில்லை. எத்தகைய நஞ்சானாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்துகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம். பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவான பின் நினைவைக் கூட்டி நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் ஒவ்வொருவரும் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 149

protected zone of Sages attraction

இனம் இனத்துடன் தான் சேரும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இவ்வுலகம் இன்றுள்ள நிலைக்கொப்ப இக்கலியின் நிலைக்கேற்ப ஆத்மீக நெறியைப் போதிக்கும் நிலையும்… அவ்வழிக்கு வழி நடந்திட வந்திடும் நிலையும்… கால நிலைபோல் மாற்ற நிலையில் உள்ளன.

இப்போதனை நிலையே பல நாட்களுக்கு முதலில் பின் நோக்கிச் சென்றிட்ட அன்று வாழ்ந்திட்ட எண்ண நிலைக்கொப்ப வழி முறைகள்தான் இவ்வாத்மீக நெறி முறையுடன் கலந்துள்ளன.

இன்று நாம் வாழ்ந்திடும் இக்கலியுகத்தில் நாம் வளர்ந்து விட்ட நாகரிகத்துடன் ஒன்றியுள்ள நிலையில் இவ்வாத்மீக நெறியை எந்நிலையில் ஏற்று வழி நடந்திடல் என்பதனை உணர்த்திடவே… இப்பரந்துள்ள உலகில் ஈஸ்வரப்பட்டராகிய யான் “என் பூர்வ ஜென்மத்தின் தொடர்பு கொண்டவர்கள் மூலமாகத் தான்…” இந்தப் பேருண்மைகளை இங்கே போதனைப்படுத்திட முடிந்தது.

இந்த நிலைக்கு ஒப்பத்தான் இவ்வுலகு அனைத்திலுமே…!

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட ஒரு நிலைப்பட்ட சக்திகள்தான் ஒன்றுபடுகின்றன
2.இனம் இனத்துடன் எப்படிக் கலக்கின்றதோ அந்த நிலை போன்றே…!

எந்த இனமும் தன் இனத்துடன் மற்ற நிலை மோதும்போது “சத்ரு… மித்ரு…” நிலை ஏற்பதில்லையோ அந்த நிலை போன்றே இவ் உலகில் இவ்வெண்ண நிலைக்கும் தொடர்பு நிலை உள்ளது.

இத்தொடர் நிலை கொண்டுதான் பிறப்பும் இறப்பும் உள்ளன. இந்த ஜென்மம் மறு ஜென்மம் அனைத்துமே இக்கலியில் மனித ஜென்மங்களாய் அறிவாற்றலும் நற்செயலைச் செயல்படுத்திடும் அங்கங்கள் பெற்றிட்ட நாம் நமக்குகந்த நம் உடலுடன் உள்ள இக்காந்த சக்தியை அறிந்திடாமல் நம் கால நிலையைக் களிப்பு நிலை என்ற உல்லாச நிலைக்கு அடிமைப்படுத்தி நம் ஆத்மாவை அடிமையாக்கி வாழ்கின்றோம்.

இன்று வளர்ந்துள்ள விஞ்ஞான யுகத்திற்கு வேண்டிய சக்தி அனைத்துமே இக்காற்றில் உள்ள காந்த சக்தியை ஈர்த்து இன்றைய மின்சாரமாகவும் இன்னும் இப்பூமியிலிருந்து ஈர்த்தெடுத்த திரவத்தைக் கொண்டு பல மண்டலங்களுக்குச் சென்றிடும் பல கோளங்களைச் செய்வித்தும் செயலாக்குகின்றனர்.

நம் எண்ணத்தில் நம்மையும் விட இயந்திரத்தின் சக்திக்கு அடிமைப்பட்டிடும் நிலையான வாழ்க்கை இக்கலியில் உள்ளது.

பல நிலைகளைப் புகைப்படமாக எடுக்கின்றீர். பல நாட்களுக்குப் பிறகு பழைய நினைவுகளை காண்பதற்கே. பதிவேட்டில் நம் சப்த அலைகளைப் பதித்துக் கேட்கின்றீர்.

ஆனால் இன்று இயந்திரத்தின் உதவியுடன் செயற்கையாகக் காணும் இந்த நிலைகள் அனைத்துமே நம் ஆத்மாவின் சக்தியில் (நம்மிடம்) உள்ளன.

இன்று எடுக்கும் மின்சாரத்திற்கு காந்தத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு அச்சக்திகளை ஈர்த்து நமக்கு ஒளியை அளிக்கின்றது. இவ்வுடல் என்னும் கூட்டில் நாம் அங்கமாகப் பெற்றிட்ட நாம் செயல்படுத்திடும் நம் கைகளுக்கு அக்காந்த சக்தி நிறைந்துள்ளது.

“நம் ஆத்மாவின் நிலையினை நாம் உணர்ந்தால்…” இவ்வுலகனைத்தும் தோன்றிய நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை அனைத்து நிலைகளையுமே நாம் பிம்பமாக எந்த நிலையை எண்ணுகின்றோமோ அந்நிலையின் ஆரம்ப நாள் தொட்டு இன்று நடக்கும் நாள் வரை ஒளிக் காட்சிகளாகக் கண்டிடலாம். சப்த அலைகளையும் அந்நிலையிலேயே கண்டிடலாம்.

1.நம் ஆத்மாவுடன் கூடிய காந்த சக்தியை நாம் எவ்வெண்ணம் கொண்டு ஈர்த்து எடுக்கின்றோமோ
2.அவ்வெண்ணத்தின் சக்தி அனைத்தும் தொடர் நிலையாக நாம் அறிந்திடலாம்.
3.இவ்வெண்ண நிலையின் பிறவி நிலையிலும் இத்தொடர் நிலையுள்ளது.
4.அவ்வெண்ணமேதான் அனைத்து நிலைகளுக்கும் முதல் நிலை.
5.இவ்வெண்ணத்தின் நினைவுடன் நாம் எடுக்கும் சுவாசமேதான் நம் ஆத்மாவின் செயல்நிலை.

ஆகவே… ஒவ்வொருவரும் இவ்வுலக சக்தியினை இவ் உடல் என்னும் கூட்டில் உள்ள நம் ஆத்மாவின் ஜோதியையே நற்சக்தியாக்கிடும் நிலைப்படுத்துங்கள்.

Radioactive power

அணுக்கதிரியக்க வெடிப்பு நிலைகளைப் பற்றி படிக்காதவன் சொல்கிறேன் – ஞானகுரு

 

சாதாரணமாக ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் துகள்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது மின்னலாக மாறுகின்றது.

அதே மின்னலின் தன்மை புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும்போது எந்த மரமோ எந்த நட்சத்திரத்திலிருந்து வருகின்றதோ
1.அந்த இனம் இந்த மரத்திலிருந்தால் பக்கத்தில் உள்ள மரம் அப்படியே இருக்கும்..
2.ஆனால் இந்த மரம் பொசுங்கிவிடும்.
3.தன் இனத்தை எடுத்துப் பூமிக்குள் ஊடுருவிவிடும்.

அது பூமிக்குள் சென்ற பின் வெப்பத்தின் நிலை அதிகமாகி அது கொதிகலனாகும். இதனுடைய சேமிப்பு அதிகமானால் அது நாளடைவில் நிலநடுக்கமாகும்.

அதாவது அந்த வாயுவின் தன்மை அதிகரித்து வெடிக்கும் தன்மை வரும். அந்த இடம் நேராகக் கீழே இறங்கும். அந்த இடத்தில் மட்டும் தான் நிலநடுக்கமாகும். ஒரு சில நிமிடங்களில் அடங்கிவிடும்.

ஆனால் அதே போல் அந்த நட்சத்திரத்தின் மின் அழுத்தங்களின் நிலைகள் கடலில் படும் போது அங்கே உப்புச் சத்து இருக்கிறது. இந்த பூமிக்குள் ஊடுருவாதபடி கடலிலே அந்த உணர்வின் சத்து பட்டபின் அது யுரேனியமாக மாறுகின்றது.

1.எந்தந்தெந்தப் பகுதியில் எந்தெந்த நட்சத்திரத்தின் தன்மை படருகின்றதோ
2.அதற்குத் தகுந்த மாதிரி எத்தனையோ வகையான யுரேனியத் தனிமங்களாக
3.அதனின் வலுவுக்குத் தக்கவாறு அங்கே உறைந்து மணலாக மாறுகிறது
4.அதற்குப் பல பெயர்களையும் (தோரியம் புலுட்டோனியம்) வைக்கின்றனர்.

பின் என்ன செய்கின்றான்…? அதைப் பிரித்து எடுத்து அந்த அணுவைப் பிளக்கின்றான். அந்தக் கதிரியக்கப் பொறிகளை அடக்குகின்றான்.

கடல் நீரில் உள்ள ஹைட்ரஜன் (கண நீர்) அந்த உணர்வின் தன்மை கொண்டு அழுத்தத்தின் தன்மை கொண்டு அதை வெடிக்காத மாதிரிப் பாதுகாக்கின்றான்.

ஆகவே ஹைட்ரஜன் என்ற நிலைகள் வந்தாலும்… அடர்த்தியின் தன்மை கொண்டு ஒளிக்கதிர்களைச் சேர்த்து மீண்டும் வெடிக்கப்படும்போது (ஹைட்ரஜன் வெடிக்கப்படும் போது) என்ன நடக்கிறது…?

சனிக் கோளிலிருந்து வரக்கூடிய நிலைகள் (நீர் சத்து) ஒவ்வொரு அணுக்களிலும் கலந்துள்ளது. அந்தச் சனிக்கோளிலிருந்து வடிக்கப்படுவது தான் கடலாக மாறுகின்றது.

அந்த உணர்வின் தன்மையுடன் ஹைட்ரஜன் வரப்படும்போது வான்வீதியிலே இது வெடித்த பின் தன் இனத்தின் தன்மை ஜீவ சக்தியை இழக்கச் செய்கின்றது.

1.இங்கே வளரும் தாவர இனங்களுக்குள் ஊடுருவி
2.அதற்குள்ளும் கதிரியக்கப் பொறிகள் வெகு தூரம் பரவப்பட்டு
3.அதிலிருக்கும் ஜீவ சக்தியையே எடுக்கச் செய்து விடுகின்றது
4.இதெல்லாம் இந்த ஹைட்ரஜனின் வேலைகள். விஞ்ஞான அறிவால் இதைக் கண்டு கொண்டார்கள்.

மூன்றாம் வகுப்பு முழுவதும் படிக்காதவன் (ஞானகுரு) இதை எல்லாம் உங்களிடம் சொல்கிறேன். நான் பார்த்து இதைச் சொல்கிறேன். நீங்களும் பார்க்க முடியும். “தன்னம்பிக்கை வேண்டும்…!”

எனென்றால் இயற்கையின் உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உள்ளதையும் அதில் உள்ள அதிர்வின் ஒலிகளைக் கொண்டு அதனின் உருவத்தையே விஞ்ஞானி படமாக இன்று வரைகின்றான்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் உணர்வுகள் பாயப்படும் போது உணர்வுகள் எப்படி இயக்கின்றது என்பதை விஞ்ஞானி இப்படிக் காணுகின்றான்.

அதைப் போன்று தான் அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் உணர்வின் இயக்க உணர்ச்சியின் தூண்டுதலைப் பார்த்தான். எண்ணங்கள் கொண்டு எப்படி உருவானது என்ற நிலையை அவன் கண்டுணர்ந்தது தான் பேரண்டத்தின் உண்மை நிலைகள் அனைத்தும்.

அவனுக்குப் பின் வான்மீகி கண்டான். பின் வியாசகன் கண்டான். அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட நிலைகள எடுத்தார்கள் பின் வந்த ஞானிகள் அனைவருமே…!

Spiritual family

ஞானம் பெற சந்நியாசம் தேவை இல்லை – ஈஸ்வரபட்டர்

 

வளர்ந்து வரும் செயற்கையுடன் கூடிய கால நிலையில் ஆவி உலகின் செயலும் நம்முடனே வருகிறது என்பதனை உணர்ந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

1.இன்று வாழ்ந்திடும் மக்களின் (எண்ணிக்கை) அளவை விடவும் அதிகமாக
2.இவ்வாவி உலகில் ஆத்மாக்களின் தாக்குதலினால் இன்றுள்ள மக்களின் வெறியுணர்வு அதிகரித்துள்ளது.

உயிரணுவாய் உதித்து ஆத்மாவுடன் கூடிய ஜீவ நிலை பெற்று ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்திடும் வாழ்க்கையிலெல்லாம் நாம் உண்ணும் நிலை கொண்டும்… எண்ண நிலை கொண்டும்… நம்முடன் பல உயிரணுக்கள் நம்முள் நம் உயிர் ஜீவ ஆத்மாவுடன் நம் உடலில் ஏறுகிறது.

அதனால் நம் செயல் எல்லாம் நம் ஆத்மாவுடன் கூடியதாக மட்டும் இருந்திடாமல் பல உயிரணுக்களின் நிலைக்கு ஒத்த சக்தியெல்லாம் நம் உடலில் இருப்பதினால் “பல நிலை கொண்ட சக்தி” நம் உடலுடன் வளர்கின்றது.

ஒவ்வொருவரின் உடலிலும் பல நிலைகள் உள்ளன. நம் ஆத்மாவை நாம் செயலாக்கிட…
1.ஒரே வழியான ஜெபம் கொண்ட வழியை நாம் செயலாக்கும் பொழுது
2.நம் உடலில் உள்ள பல நிலைகொண்ட அணுக்களின் சக்தி குறைந்து விடுகின்றது.

நம் உயிராத்மாவுக்கு நம் பூமியின் தொடர்பு கொண்ட சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் சக்திகளை நம் உயிராத்மா தன்னிச்சையில் ஈர்க்கும் பக்குவம் பெற்றுவிட்டால் அதிலிருந்து வருவதுதான் நமக்குகந்த ஜெப நிலை.

1.பல தீய அணுக்களின் சக்திக்கு அடி பணிந்தே வாழும் வரை
2.தெய்வீக சக்தி நிலையை அடையும் நிலைக்கு நாம் வருவது மிகவும் கடினம்.

நம் உயிராத்மாவிற்கு வேண்டிய சக்தியினை ஈர்க்கும் நிலைப்படுத்தி வாழுங்கால் நமக்கு சப்தரிஷி மண்டலங்களின் தொடர்பிலிருந்து சேமிக்கும் நிலையை எளிதில் பெற முடியும். இது தான் தியானம் என்பது.

இத்தகைய தியானத்தின் மூலம் பல எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டுத் தெய்வீக சக்தியை ஈர்க்கும் நிலை பெற்று விட்டால் பல ஞான வழிகளையும் சித்து முறைகளையும் சப்த ரிஷியின் நிலையையும் நம் உயிரணுவே (உயிர்) ஈர்த்துச் செயல் கொண்டிடும்.

இவ்வுயிர் என்னும் ஜீவக்கூட்டை இருந்த இடத்தில் விட்டுவிட்டு நம் ஆத்மாவுடன் கூடிய சத்து (அமில) நிலையை ஈர்த்துக் கொண்டே பறக்கும் நிலை பெறலாம்.

எந்நிலைக்கும் சென்று நம் ஆத்மாவுடன் கூடிய சத்து நிலையுடன் பிம்ப நிலையையும் ஏற்படுத்தி ஒவ்வொரு மண்டலங்களின் நிலையையும் அறியலாம்.

இக்காற்றுடன் எந்தெந்த ஜென்மங்கள் எடுத்து அச் ஜென்மத்தில் நாம் வெளியிட்ட மூச்சு அலையினால் சப்த அலையின் நிலை கொண்டு பல ஜென்மங்களில் வாழ்ந்த நிலையையும் அறிந்திடலாம். இவ்வுலகினிலும் மற்ற மண்டலங்களின் நிலையை அறிந்திடலாம்.

இவற்றினால் யாது பயன் என்றும் கேட்டிடுவீர்…?

இவ்வுயிர் ஆத்மாவின் சக்தியை இக்காலமுடன் காலமாக இவ்வுடலுடன் கூடிய குறுகிய வாழ்க்கையுடன் சுழல விடாமல் இம் மாற்றம் கொண்டு சுழலப் போகும் “இக்கலியின் நிலையிலிருந்து மீளத்தான் இவ்வழியினை வெளியிடுவதெல்லாம்…!”

நம் சக்தியுடன் பல மண்டலங்களின் சக்தியையும் இணைத்துச் செயல்படுத்திட முடியும். இவ்வழியினை யாவருமே அடைந்திடலாம்

இல்வாழ்க்கையென்னும் பிடியில் பேராசையில் வாழ்ந்திட்டால் செயலாக்குவது கடினம். அன்பு கொண்ட ஆண்டவனாய் வந்திட்டாலே இச்சக்தி நிலையை நம் ஜெபமுடன் பெற்றிடலாம்.

இந்நிலையில் வந்த சித்தர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகொண்டு வந்துள்ளனர். வாழ்க்கையுடன் இன்னலில் இருந்து சலிப்புற்ற நிலையில் வந்த பலர் உள்ளனர்.

1.போகரின் நிலையைப் போல் வாழ்க்கையுடன் கூடிய நிலையில் வருவதுவே மகத்துவம்.
2.கோலமாமகரிஷி தன் சக்தியையே ஆதிசங்கரரின் சக்திக்கு அளித்திட்டார்.
3.ஒவ்வொரு ரிஷியும் ஒவ்வொரு நிலை கொண்டு வந்தவர்கள்தான்.
4.புத்தரின் நிலை அனைத்திற்கும் மாறு கொண்ட வெறுப்பற்ற நிலையில் வந்த நிலை.
5.பல ஞானிகள் வந்த நிலையெல்லாம் குடும்பத்துடன் ஒன்றிய ஆத்மீக நெறி கொண்ட அன்பு வழியில்தான்.
6.இவ்வழி அடைவதற்கே சந்நியாசி நிலை உகந்ததல்ல
7.ஆத்மீக நெறி பெறுவதற்கு வயது வரம்பு இல்லை.

இந்நிலைகளை உணர்ந்து ஒவ்வொருவரும் வழி பெற்றிடுங்கள்.

everything is for good

சந்தர்ப்பத்தால் நம்மை இயக்கும் தீமைகளை… நம் எண்ணத்தால் எண்ணி அதை நல்லதாக மாற்ற முடியும்

 

யாம் உபதேச வாயிலாகச் சொல்லும் ஞானிகளின் உணர்வுகள் உங்கள் உயிரிலே பட்டு… விஷ்ணு சங்கு சக்கரதாரி…! அந்த ஒலியை எழுப்புகின்றது…. ஞானத்தின் உணர்ச்சிகள் உடலிலே படருகின்றது. எந்த உணர்வோ அதன் வழி வழி நடத்துகின்றது உயிர்.

ஆகவே உயிர் வழி நடத்தும் உணர்வின் தன்மை கொண்டு எவர் இதை நுகர்கின்றனரோ அவர் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.

ஏனென்றால் இருண்ட உலகமாக (உடலுக்குள்) விஷத்தின் தன்மை கலந்த… விஷத்தில் கலந்தது தான் மற்ற உணர்வுகள்.

ஆதியிலே… ஆங்காங்கு விஷத்தின் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று உராயும் வலுக்கள் வரப்படும்போது தான் வெப்பம் என்ற உணர்வாகி அங்கே ஆவி என்ற நிலைகள் உருவாகிறது.

ஆவி என்ற நிலைகள் வரப்படும் பொழுது இந்த வெப்பத்தால் தாக்கப்பட்டு உணர்வின் வேகத் துடிப்பாகி நெருப்பாகும் போது நகர்ந்து செல்லும்…! நகரும் போது காந்தமாகிறது. அந்தக் காந்தத்தால் கவர்ந்து ஒன்றை உருவாக்குகிறது.

1.விஷம் இயக்கச் சக்தியாகவும்
2.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்
3.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும் பெற்று
4.காந்தம் அரவணைத்து உணர்வைத் தன்னுடன் மோதப்படும் உணர்வின் சக்தி எதுவோ
5.அதன் வழி பிரம்மம் உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி…! எதன் உணர்வு பட்டதோ அதன் உணர்ச்சிகளுக்கொப்ப அது உருவாக்கும் அதனின் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது என்ற நிலையை நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஆகவே மனிதனானபின் இந்த இருளை அகற்றி எதனையுமே எண்ணத்தால் உருவாக்கும் நிலை பெற்றது தான்…! மற்றது அனைத்தும் சந்தர்ப்பத்தால் மோதும் தன்மை வருகின்றது.

1.சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள் வாழ்க்கையை அமைக்கின்றது.
2.ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை மாற்றி அருளுணர்வு என்ற நிலையை அகஸ்தியன் உருவாக்கி
3.அழியாத நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்

அவன் மாற்றிய உணர்வு கொண்டு… நாமும் சந்தர்ப்பத்தில் தீமை என்ற உணர்வை நுகரும் போது… அதன் வழியில் அழைத்துச் செல்லாதபடி தீமைகளை அடக்கி ஒளியாக மாற்றும் உணர்வைப் பெற முடியும்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம் உணவாக உட்கொள்வதில் மறைந்துள்ள நஞ்சை உடல் மலமாக மாற்றுகிறது. நஞ்சை நீக்கிடும் வலிமைமிக்க உணர்வு கொண்டு கார்த்திகேயா… தெரிந்த உணர்வு கொண்டு வலிமை கொண்டு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்முள் செல்த்தி அதை நாம் அடக்கிப் பழகுதல் வேண்டும்.

நம் வாழ்க்கையில் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் இப்பொழுது உங்களுக்குள் இதைத் தெளிவாக்கியது

ஆகவே அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலிலுள்ள அணுக்களை எல்லாம் ஒளியாக மாற்றுவோம்.

விநாயகர் தத்துவம் மூலம் ஞானிகள் நமக்குக் கொடுக்கும் தீமையை நீக்கும் வலிமைமிக்க சக்தி

அரச மரத்தைப் போல் நம் நினைவுகளை விண்ணிலே ஊடுருவிப் பாய்ச்சி மெய் ஞானிகளின் உணர்வைக் கவர்தல் வேண்டும் 

நாம் தெய்வமாக வேண்டும் 

“நல்ல நேரம்…” என்று ஒன்றை ஞானிகள் வைத்ததன் நோக்கம் 

world religions

ஞானிகள் காலத்திற்குப் பின் அவரின் போதனைகளை வழி நடத்துவோர் அரிதாகவே உள்ளனர் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இயேசு கிருஸ்துவைக் கல்லறையில் அடக்கம் செய்த பிறகு அவர் மூன்றும் நாளில் எப்படி வெளிப்பட்டார்…? முன் பாட நிலைப்படி அவ் உடலை ஒரு ஞானி ஏற்றார்…! என்று செப்பியுள்ளேன்.

அவ்வுடலை இவர்கள் அடக்கம் செய்த பிறகு அவ் உடல் என்னும் கூட்டிற்கும் அவ்வுடலில் ஏறிய ஞானியின் ஆத்ம சக்திக்கும் தொடர்பற்ற நிலையில் இவர்கள் இம்சித்ததெல்லாம் உடல் என்னும் கூட்டைத்தான்.

இவர்கள் இம்சித்த நிலையில் இவர்கள் எண்ணத்தில்தான் அத்தீய சக்தி இவர்களையே தாக்கிற்று. இயேசு பிரானின் ஆத்மாவையோ அஜ்ஜீவ சக்தியையோ இவர்கள் செய்த இம்சை நிலை பாதிக்கவில்லை.

எப்படி எப்படி எல்லாம் இம்சைப் படுத்திடலாம் என்ற எண்ணம் கொண்டார்களோ அவ்வெண்ணமுடனே சுவாசித்த சக்தி நிலையெல்லாம் இவர்கள் உடலில் தான் ஏறியது.

அம்மகான் இவர்கள் அடக்கம் செய்திட்ட பூத உடலில் இருந்து அந்த ஞானியின் சக்தி வெளிப்பட்டு ஆவியான அமில நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஆவி பிம்பத்தைத்தான் இயேசு பிரானாய் இவர்கள் மூன்றாம் நாளில் கண்டது.

இந்நிலை பெறுவதற்கு அவ்வுடலில் ஏறிய அம்மகான் இச்சுவாச சக்தியை எங்கும் பிம்பப்படுத்திடும் நிலை பெற்றார்.

ஆனால் அங்கு வாழ்ந்த மக்களிடையே… இன்று அவ்வழியில் வந்திட்ட அந்நிலையைப் போதிக்கும் ஜெப நிலையில்…
1.அவரை ஜெபப்படுத்தும் நிலையே மாறு கொண்ட நிலையில் உள்ளது
2.சக்தியின் ஜெபத்தை ஈர்த்து ஜெபிப்பார் இல்லை.

ஞான ஒளியைத் தன் ஞானமுடன் ஜெபம் கொண்டு ஈர்த்து இயேசுபிரான் நாமத்தில் வந்திட்டவரின் சக்தியை ஈர்த்து அவருடன் தொடர்பு கொண்டு செயல் படுத்திடும் நிலை அவர்களை வழி நடத்துவோருக்கு எட்டவில்லை.

பல ஜெபங்கள் செய்கின்றனர்… வளர்ந்துள்ள நாகரிக நிலைக்கொப்ப…! ஆத்ம ஜெபம் கொண்டு அவரின் தொடர்பைப் பெற்றிடும் நிலை கொண்டிடவில்லை.

பக்தி நிலையை வளரவிட்டு சக்திக்கு அடி பணியும் நிலை உள்ளது. அம் மகானின் தொடர்பைப் பெற்றிருந்தால் இன்று இம் மனித உள்ளங்களின் வெறி உணர்வை மாற்றும் நிலையைப் போதித்திடலாம்.

இன்றுள்ள எண்ண நிலையே வெறி உணர்வும்… காம இச்சையின் நிலையும்… பேராசையின் நாகரிக நிலையும்… “அதி வேகமாக எண்ணமுடன் கலந்து வளர்கின்றன…!”

இந்நிலையின் வளர்ச்சியினால் வரும் அபாயத்தையோ உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்ம சக்தியையோ கடுகளவும் எண்ணுவார் இல்லை.

ஆத்மீகத்தை வழிப்படுத்திட்டால் இன்றுள்ள இவ்வெண்ண நிலைக்கு அமைதி கொள்ளும் அன்பு நிலையைச் செயலாக்கிடலாம்.
1.இன்றும் அங்குள்ள மக்களின் நிலையில் பக்தி என்னும் பய நிலை உள்ளது
2.வழிப்படுத்திடத் தக்க குரு இல்லை.

மற்ற நாடுகளில் தம் தம் எண்ணத்தில் உள்ள கறையை இன்றுள்ள ஜெபாலயங்களில் வெளியிட்டால் எண்ணக் கறையை நீங்கிவிடுவதாகப் போதனை நிலையுள்ளது. இக் கறையுடன் கறையைச் சேர்த்து ஒரே சூனிய நிலையாக்குகின்றார்கள் மனித ஆத்மாக்களை.

சக்தியின் சக்தியாய் ஆத்ம ஜீவன் கொண்ட மக்களெல்லாம் இன்று வாழ்ந்திடும் அன்பு நிலையிலும் பந்த பாசம் கொண்ட ஆத்மீக நெறியும் இல்லாமல் மிகவும் கீழ் நிலை கொண்ட அவல நிலையிலும் வாழ்கின்றனர்.

மாபெரும் முனிவரின் சக்தி பெற்ற இந்நிலையுள்ள அவ்விடம் இன்று சூனிய நிலையாக உள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுப் பேராசைப் பேயின் பிடியில் சிக்கி நாகரிகப் போர்வை போர்த்தியே ஆத்மீக நெறியினை அறிந்திடாமல் இப்பாட நிலையை யாவருக்கும் பொதுவான நிலைப்படுத்தி வழங்கி வருகின்றோம் (ஈஸ்வரபட்டர்).

real wealth bliss

என்றுமே அழியாத துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்

 

அகஸ்தியன் எல்லா விஷத்தையும் நீக்கி இருளை நீக்கி ஒளியாகப் போனான். கணவன் மனைவி ஒளியான உடல் எடுத்துத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

நம் சூரியக் குடும்பமே அழிந்தாலும் சரி… இந்தத் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக் கூடிய சப்தரிஷி மண்டலங்களும் அழியவே அழியாது. இது வேகாக் கலை…!

நாம் தீயில் குதித்தால் உடல் கருகுகிறது. ஆனால் உயிர் கருகுவதில்லை.
1.எப்படி உயிர் வேகுவதில்லையோ அதைப் போல்
2.பிரபஞ்சத்தில் எத்தனை விதமான விஷத் தன்மைகள் வந்தாலும்
3.துருவ நட்சத்திரமும் அழியாது அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருப்பதும் அழியாது.

ஏனென்றால் நம் சூரியக் குடும்பம் எல்லாம் நம் உடலைப் போல அழியக் கூடியது தானே தவிர “அது முழுமையானது அல்ல…” என்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…! என்ற நிலையில் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் அலைகளை எல்லாம் சூரியன் எடுத்துக் கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. அதனால் தான் அதை நாராயணனின் அபிமான புத்திரன் என்பது. (நாராயணன் என்றால் சூரியன்)

சூரியன் என்ன செய்கின்றது..?

எந்தெந்தச் செடியில் இருந்து வாசனை வருகின்றதோ அந்த சத்தை எல்லாம் எடுத்து அலைகளாக மாற்றி நம் பூமியில் பரவச் செய்கின்றது. அந்தந்தச் செடியில் விளைந்த வித்தை பூமியில் நாம் ஊன்றினால் அதற்கு சாப்பாடாகக் கொடுத்து அதை வளர்க்கின்றது சூரியன்.

உதாரணமாக இரண்டு பேர் சண்டை போடுகின்றார்கள். ஒருத்தர் வேதனையோடு வருகின்றார். நாம் அதை உற்றுப் பார்த்து நுகர்ந்தால் நம் உடலுக்குள் அது பதிவாகி விடுகின்றது.

சண்டை போடுவோர் உடலிலிருந்து வெளிப்படும் அலைகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக வைத்துக் கொள்கிறது.

நமக்குள் அந்த வேதனைப்படுவோரின் உணர்வு பதிவான பிற்பாடு அவரை எண்ணும் போது சூரியன் கவர்ந்த அந்த வேதனையான உணர்வலைகளை நாம் நுகர்கின்றோம். அதாவது பதிவான அந்த வித்திற்குச் (வினை) சத்தாகச் சூரியன் கொடுக்கின்றது. அவனை நினைக்கும் போதெல்லாம் அந்த வேதனை நம் உடலில் விளைகின்றது.

வேதனைப்படுகின்றார்கள் என்று பார்க்கின்றோம்.. விபரத்தைக் கேட்கின்றோம். ஆனால் நம் உடலில் அது விளைகின்றது. ஆக.. வேதனை என்ற உணர்வை நுகர்ந்து அந்த வேதனையை நமக்குள் வளர்க்க முடிகின்றது.

அதே போல்… வேதனையை நீக்கிய அந்த அருளுணர்வைப் பெறச் செய்வதுதான் ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…!

அதை எடுத்து நாம் சுவாசித்தோமென்றால் அவன் வாழ்க்கையில் எப்படி விஷத் தன்மையை நீக்கினானோ அந்த உணர்வின் சத்து நமக்குக் கிடைக்கும். நாரதன் கலகப்பிரியன்…! கலகமோ நன்மையில் முடியும்.

யாரோ சண்டை போடுகின்றார்கள் என்று தான் நாம் பார்க்கின்றோம். அதிலே யாராவது ஒருத்தர் திட்டுகின்றார்… அடிக்கின்றார்…! ஏனென்றால் அவர் மோசமான ஆள். அந்த இரண்டு பேருக்கும் வெறுப்பு இருப்பதனால் சண்டை போடுகிறார்கள்.

சண்டை போடும் சந்தர்ப்பம் நாம் அதைப் பார்க்கின்றோம். ஒருத்தர் மேல் நாம் பாசமாக இருந்தால்… அந்த நல்ல மனிதனை இப்படித் திட்டுகின்றானே…! என்று நினைக்கின்றோம்.

அவ்வாறு திட்டும்போது நம்முடைய மனது கேட்குமோ…? ஏனப்பா…? இந்த மாதிரி எல்லாம் செய்கின்றாய்…? என்று அந்தத் திட்டுபவரைக் கேட்கிறோம்.

அவர் உடனே உனக்கு என்ன தெரியும்…? என்று நம்மிடம் கேட்டால் அப்பொழுது இல்லாத வம்பு வந்து விடுகிறது. அதைத் திருத்த முடிகின்றதா…? என்றால் நம்மால் முடியவில்லை. அவர்களை எதாவது சொல்ல முடியுமோ…?

1.ஆனால் அதே உணர்வு நமக்கு வந்தால் நாம் சும்மா விடுவோமோ…?
2.சொல்கிறேன்… கேட்க மாட்டேன் என்கிறான்… இரு நான் பார்க்கின்றேன்..! என்று நாமும் வம்பு தான் பேசுவோம்

இது எல்லாம் நமக்குத் தெரிகின்றது… இருந்தாலும் அவனிடம் வம்பை இழுக்கின்றோம். அப்பொழுது அந்தக் கலகம் வருகின்றது.

இதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் சண்டையிடுவோரை எண்ணி… அந்த நல்ல மனிதன் சும்மா இருந்தாலும் இந்த மாதிரிப் பேசுகிறான் பார்…! என்று அதை எடுத்து நமக்குள் வளர்த்து கொள்கிறோம்.

அதாவது… அவர்கள் செய்யும் தவறை நாமும் செய்ய வந்து விடுகின்றோம். (நாம் அவரைத் திட்டத் தொடங்குகின்றோம்)

அதற்குப் பதிலாக… “ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நம் உயிரிலே பட்டு அந்த ஒளியான உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரம் நஞ்சுகளை எல்லாம் கரைத்து ஒளியாக மாற்றும் திறன் பெற்றது.
1.அந்தச் சக்தி உள்ளுக்குள் போனவுடன் நாம் பிடிவாதமாக இருப்பதை உடனே சிந்திக்கச் சொல்லும்.
2.இந்த நேரத்தில் சண்டையிடுவோரிடம் வாயில் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்ற உணர்வையும் பிரித்துக் காட்டும்,

இவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் இரத்தங்களில் கலக்க வேண்டும் என் உடல் முழுவதும் படர வேண்டும் என் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்து பெற வேண்டுமென்று எண்ணி உடலுக்குள் செலுத்தினால் முன்னாடி இந்தப் பாதுகாப்பு கொடுக்கின்றது

அதற்குத் தான் இந்த தியான பயிற்சியாகக் கொடுக்கின்றோம். அதை சேர்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். அதை எடுத்து இரத்தத்தில் கலக்க வேண்டும் என்று சொல்லும் போது நாம் எடுத்த உணர்வுகள் அது உமிழ் நீராக மாறுகின்றது.

சிறு குடல் பெருங்குடலுக்குள்ளே போகின்றது. நல்ல இரத்தமாக மாறுகின்றது நம் உடல் முழுவதற்கும் அது நன்மை செய்யும் பக்குவமாக வருகின்றது.

வேதனைப்படுவோரை பார்க்கின்றீர்கள். உமிழ் நீர் வருகின்றது நம் இரத்தத்தில் வேதனை என்ற விஷமாக வருகின்றது.

அப்பொழுது ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் அவன் கலகப்பிரியன் அப்பொழுது நம்முடைய பிடிவாதத்தை விடுக்கச் செய்து நம் உடலில் வேதனை உருவாகாது தடுக்கின்றது.

நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்கிறபோது நம் உடலில் எத்தனை விதமான கலக்கங்கள் இருக்கின்றதோ அதையெல்லாம் மாற்றிவிடுகிறது. உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

Murugeswara boganathar

முருகேஸ்வர போகநாதரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் வழக்கத்திலுள்ள சொல் நாமங்கள் நம்மால் வழக்கத்திற்குப் பேசுவதற்காக நம் முன்னோர்களின் ஒவ்வோர் இன வழிப்படி பல நாமச் சொற்களை இவ்வுலகினிலே பல பாகங்களில் பல நிலைகளில் அவரவர்கள் வந்த வழிப்படி பேசி வருகின்றோம்.

ஆண்டவனின் நாமத்தையே பல நாமங்கள் சூட்டி… அவரவர் வழக்கப்படி வேண்டுகின்றோம்.

“முருகா…” என்ற ஜெபம்
1.போகரினால் இவ் ஆறு வகைக் குணங்களை நாம் போற்றி வணங்கிட
2.இக்குணங்களையே முருகனாக்கி… அம் முருகா என்ற நாமகரணம் சூட்டியவர் போகர் தான்.
3.முருகா என்னும் நாமகரணம் சூட்டிக் கொண்ட தனித்த ஆண்டவன் ஒன்றில்லை.

அழியா ஒளி உடல் கொண்ட ஆத்மா நிலை பெற்ற அப்போகர் தன் சக்தியுடன்… இம் முருகா என்ற ஜெபம் கொண்ட நிலைக்கு… அவர் சக்தியில் அவர் உடலிலேயே… அவர் ஆத்மாவுடன்… அவர் உடலிலுள்ள அவர் ஈர்த்துச் சேமித்த முருகா என்ற சக்தியின் நிலையினை ஒளியாகத் தன்னுள் ஈர்த்துக் கொண்டே இன்றும் உள்ளார்.

அந்த நிலையில்…
1.முருகா…! என்ற சொல் எவ்வுள்ளங்களில் இருந்தெல்லாம் எழுகின்றதோ
2.அந்தச் சக்தி போகரின் சக்தியுடன் நினைத்த மாத்திரத்தில் வந்து மோதி ஒளியாக…
3.ஜெபிப்பவரின் உள்ளத்திற்கெல்லாம் போகரின் நிலையிலிருந்து அச்சக்திதனை வழங்கி வருகின்றார்.

அழியா உடல் பெற்ற ஆத்ம சக்தியுடன் தனக்குகந்த நாமத்தையே ஜெபமாக்கி அஜ்ஜெப நாமத்தை எண்ணுபவரின் சக்தியுடன் இன்றும் இந்நிலையில் கலக்கவிட்டு… எண்ணுபவரின் ஆத்மாவிற்குகந்த அவர்களின் நிலைக்கெல்லாம் “தான் பெற்ற சக்தியைப் பகிர்ந்து அளித்து வருகின்றார்…” அம் முருக நாமம் கொண்ட “முருகேஸ்வர போகநாதர்…!”

போகரின் சக்தி அழியா சக்தி. இன்றும் அச்சக்தியினை பலவாக ஈர்த்து அருளிக் கொண்டே உள்ளார். அவர் எடுத்த சக்திப்படி இன்றும் மனிதருள் மனிதராகச் சில நிலைகளில் வந்து செல்கின்றார்.

எந்நிலையில் என்று உணர்ந்தீரா…?

அப்போகநாதரின் உடல் கூடு எந்நிலைக்கும் அவர் ஜெபம் கொண்டு இன்றுள்ள அப்பழனிக் குகை வாசஸ்தலத்தை விட்டு வெளிப்படுவதில்லை.

ஆனால் முருகராகவும் மற்றும் பல நிலைகளிலும் மக்களுடன் மக்களாக அவர்களின் இன்னலைத் தீர்க்க வந்து செல்கின்றார்.

போகரின் ஆத்மாவுடன் அவர் சேமித்த சக்தி சுற்றிக் கொண்டுள்ள நிலையில் ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தி நிலையை… உடல் கூட்டிலிருந்து பிரித்துக் காண்பவருக்கு… அவ்வாவி சக்தியை… இக்காற்றிலிருந்தே பல சக்திகளை ஈர்த்து ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தியைப் பிம்பமாக்கி வந்து செல்கின்றார்.

அதாவது ஆவியான அமில சக்தியை எந்நிலையிலும் விரிந்து கூடும் நிலைப்படுத்தும் நிலையைப் பெற்றுள்ளார் முருக நாமம் கொண்ட நம் போகர்.

ஒரே நாளில் பல இடங்களில் அவரின் பிம்பத்தை அவரால் காணச் செய்திடவும் முடிந்திடும். அம் முருக நாமத்துடன் பல செயல்களைச் செயலாக்குகின்றார் நம் போகர்…!

ஆவியான அமில சக்திகள்தான் அனைத்து சக்திகளுமே. இவ்வுடலும் ஆவியான பிம்பம்தான். இப்பிம்பத்திலிருந்து நம் ஆத்மா பிரிந்து சென்றாலும்… நம் ஆத்மாவுடன்… நம் உடலுடன் கூடிய ஆவியான நமக்குகந்த அமில சத்துக்கள் நம்முடனே… நம் ஆத்மாவுடன் ஈர்த்துத்தான் ஆவி உலகில் நாமும் இருந்திட முடியும்.

1.இவ்வுலக சக்தியையே நம் சக்தியாக்கி நாமும் நிலைத்து வாழ்ந்திட முடியும்
2.இன்று நாம் வாழும் வாழ்க்கை நம் வாழ்க்கையல்ல
3.நம் வாழ்க்கை என்பது இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடும் வாழ் நாட்கள் மட்டுமல்ல
4.இவ்வுடலுடன் வாழ்ந்திடும் வாழ்க்கை நமது அரும்பெரும் பாக்கியத்தை நாடுவதற்கு நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம்தான்.

ஒவ்வொருவரும் இவற்றை உணர்ந்து வாழ்ந்திடும் நாளில் பல நிலைகளுக்கு எண்ணத்தைச் செலுத்தி…
1.வாழ் நாளைத் தன்னிச்சைக்கு (தன் இஷ்டம் போல்) வாழாமல்
2.இவ்வுலக இன்பத்தைத் துறந்து வாழ்ந்திடல் வேண்டும் என்ற எண்ணத்தை வளரவிடாமல்
3.இவ்வுடலுடன் நாம் இன்று பெறும் நிலைக்குகந்த சக்தியே அழியா சக்தியாக நம்முடன் வரும் சக்தி என்பதனை உணர்ந்து
4.நம் போகநாதரின் சக்தியின் அருளை நாம் ஈர்த்து நல் வழியில் வாழ்ந்திடலாம்.

Eaganthanilais

போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குருநாதரின் செயல்கள்

 

மனிதனுடைய சிந்தனை முழுமையாக மறைந்து போகும் காலம் நெருங்கிக் கொண்டுள்ளது.

உயிரணுக்களாக ஆரம்பக் காலங்களில் தேடியது எந்த நிலையோ அதைப் போல் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு என்ற உணர்வினை நமக்குள் சேர்த்து அதனால் பல கலக்கங்கள் ஆகி சிந்தனை செய்யும் திறன் குறைந்து இந்த உடலை காக்கும் செயலையே இன்று இழந்து கொண்டிருக்கின்றோம்.

1.இந்தக் கோயிலுக்குப் போனால் நன்றாக இருக்குமா…? அந்தக் கோயிலுக்குப் போனால் நன்றாகுமா…?
2.இந்த ஜோதிடத்தைப் பார்த்தால் நன்றாக இருக்குமா…? ஜாதகத்தைப் பார்த்தால் நன்றாக இருக்குமா…?
3.இந்த மந்திரத்தைச் சொன்னால் நன்றாக இருக்குமா…? என்று
4.ஒவ்வொன்றாக எடுத்துத் தேடி நாம் அலைகின்றோமே தவிர
5.நாம் சுவாசிப்பது நமக்குள் எப்படி இயங்குகின்றது…? என்றே நாம் அறியாது
6.விஞ்ஞான உலகில் மெய்ப்பிக்கும் இந்தக் காலத்திலும் நம்மை அறியாமலே இது பித்தனாக இருக்கின்றோம்.

இதைத்தான் குருநாதர் சொன்னார்..! போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருப்பார்.

என்ன சாமி… சும்மா இருக்கின்ற போஸ்ட்டில் போய் கல்லைக் கொண்டு அடிக்கின்றீர்கள் என்று கேட்டேன் (ஞானகுரு).

நீ தான்டா என்ன என்று கேட்கிறாய்..! ஆனால் மற்றவர்கள் எல்லாம் என்னைப் பைத்தியக்காரர் என்று நினைக்கின்றார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவன் எதன் மேல் ஆசைப்பட்டானோ… அதிலே அந்தப் பித்துப் பிடித்துப் போய்… அதையே பெற வேண்டுமென்று எண்ணுகின்றான்.

1.ஆனால் தன் அருகிலே நல்ல பொருள் இருந்தாலும் கூட அதை எடுக்கும் வழியில்லை
2.தன் உடலில் நல்லது இருந்தாலும் அதை வளர்க்கும் வழியில்லை.
3.இப்படிப் பித்தனாக அலைந்து கொண்டிருக்கின்றான்.

நான் இந்தப் போஸ்டில் தட்டும் போது இந்த ஓசை வருகின்றது. அந்த ஓசையைக் கேட்டு ஏன் இப்படித் தட்டுகிறீர்கள்…? என்று என்னை நீ கேட்கின்றாய். அதனால் உனக்கு இப்பொழுது அதற்கு விளக்கம் நான் கொடுக்கின்றேன்.

நான் தட்டுவதைப் பார்த்து… “பைத்தியக்காரன்… தட்டிக் கொண்டிருக்கின்றான்…” என்று மற்றவன் நினைக்கின்றான்.

1.இந்த ஓசையை அவன் கேட்டு அவன் உணர்வுகள் என்னைப் பைத்தியக்காரனாக எண்ணி
2.பைத்தியக்காரன் என்று அவன் எண்ணும்போது அதைச் சுவாசித்து
3.உயிர் அவன் எதை எண்ணினானோ அந்த உணர்வின் தன்மையை அவன் உடலில் ஓடச் செய்கின்றது.

ஆக… அவன் பித்துப் பிடித்து இருக்கின்றான் என்று அவனுக்கே தெரியவில்லை. அந்தப் பித்தின் நிலைகள் அவனுக்குள் விளைகின்றது.

அதாவது நம் உடல் ஒரு அரங்கம்… சுவாசித்த உணர்வு உயிரிலே பட்டபின் அரங்கநாதன் ஆகி ஒலிகளாக எழும்புகின்றது. அந்த உணர்ச்சிகள் நம்மை ஆளுகின்றது என்பதனை ஆண்டாள்…! என்று ஞானிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் காரணப் பெயர் வைத்து இதை அறியச் செய்கின்றனர்.

1.நான் தட்டும் அந்த ஓசையை நீ சுவாசித்தாய்…
2.அதை என்ன என்று கேட்டாய்…? நுகர்ந்து என் அருகில் வந்தாய்…!
3.நான் இதற்கு விளக்கம் சொல்கின்றேன்… நீ புரிந்து கொண்டாய்.
4.தீமைகளிலிருந்து நீ மீளும் உபாயத்திற்கு உன் அறிவு இங்கே அழைத்து வந்தது.

ஆனால் அவன் (மற்றவர்கள்) அறிவு என்ன செய்கின்றது…?

அவன் என்ன செய்கின்றான் என்று தெரியாதபடி அவன் பித்தனாக இருக்கின்றான். இருந்தாலும்…
1.அவன் என்ன தப்பு செய்தான் என்ற எண்ணத்தில் நான் (ஈஸ்வரபட்டர்) வந்தால்
2.நான் அந்தப் பித்தனாகத் தான் வளருவேன்….
3.அவன் பித்தனென்றால் நான் பித்தனாகத்தான் இருக்க வேண்டும்.
4.அதனால் அதை நான் நுகர்வதில்லை…!

போஸ்டில் அடித்து வரும் இந்த ஓசையினைத் திரும்பிப் பார்த்து ஏன்… என்ன..? என்று கேட்கும்போது இதன் நிலையை நீ செய்தால் நல்லதாக இருக்கும் என்று சொல்வதை நுகர்ந்தால் அவர்களுக்குள் நன்மை பயக்கும்.

அவன் என்னைப் பித்தனாக்குகின்றான்…. அவன் பித்தன் என்று அவன் உணர முடியவில்லை..!

போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டிய இந்தச் சத்தத்திற்கு
1.குருநாதர் இத்தனை வியாக்கியானங்கள் சொல்கின்றார்….
2.மனிதன் இயல்பில் உயிரின் உணர்வுகள் எப்படி வருகின்றது என்று..!

creations-of-humanity

மனிதனாக வாழ்ந்து ரிஷித் தன்மை பெற்றவர்கள் தான் மண்டலங்களை (சூரியக் குடும்பங்கள்) உருப்பெறச் செய்கின்றனர் – ஈஸ்வரபட்டர்

 

இயற்கை சக்தியில்…
1.ஆவியாக இருப்பது அணுவாக உயிர் பெற்று
2.அவ் ஆவியிலே உள்ள சக்தியினை உயிரணுவிற்கு ஊட்டமாக்கி
3.அவ்வாவியின் பிம்பமாய் ஜீவ ஆத்மாவிற்கு வந்து
4.ஜீவனாய் மனித பிம்பம் பெற்று பிம்பமாய் வாழ்ந்திட்டு
5.ஆத்மா பிரிந்து பிறகும் அவ்வாத்மாவுடன் ஆவியான சக்தியை ஈர்த்தே
6.இப்படி மாறி மாறி ஆவி உலகம்… பிம்ப ஜீவன் கொண்ட… ஜீவ ஆத்மா வாழ்க்கை வாழ்ந்திடும் உயிரணுக்கள் யாவற்றுக்குமே
7.அனைத்து சக்திகளும் அடைந்திடும் சக்தி (தகுதி) உண்டு.

எவ்வுயிரணு எவ்வழியில் தன் சக்தியினை வளர்த்துக் கொள்கின்றதுவோ அவ்வழியில் சென்றிடலாம்.

ஆனால் தன் சக்தியைத் தான் உணர்ந்திடாமல் இருந்திடும் மனித ஆத்மாக்களாகத்தான் இன்று வாழ்ந்திடும் வாழ்க்கை நிலைகள். சக்தியினைச் சிதறவிட்டு இப்பேராசை நிலையையே வளர்த்துக் கொண்டு வாழ்வதின் வினையினால் வந்ததது தான் இன்றைய வாழ்க்கையின் நெறி முறைகளாக உள்ளன.

பல மகான்கள் இப்பூமியில் அவதரித்து ஆண்டவனாய் இன்றும் அருள் புரிகின்றனர். ஆனால்
1.இன்றைய மனிதர்களோ தன் சக்தியினை வீண் விரயம் செய்து
2.இந்த உடலுடன் கூடிய ஆத்மார்த்த ஆத்மீக நெறி உடைய அன்பு கொண்ட வாழ்க்கைதனை
3.இம்சையிலும் பேராசையிலும்… பல நெறி கெட்ட காமச் சூழ்நிலையிலும்… தன்னடக்கம் இல்லா வாழ்க்கையிலும்
4.குரோதம் விஷமம் இப்படி நமக்குள் பல தீய சக்தியினை வளர விட்டு
5.நல்லொழுக்கம் எற்றிடும் நற்பயன் கொண்ட வாழ்க்கைதனைச் சிதற விட்டு
6.இவ்வாத்மீக நெறி கொண்ட இல்வாழ்க்கைதனை இன்பமுடன் வாழ்ந்திடாமல் வாழ்ந்து என்ன பயன்…?

நம்மைப் போன்ற உயிரணுவாய் உதித்திட்டு உயிர் ஆத்மா கொண்டு ஜீவ ஆத்மாவாகி இஜ்ஜீவ வாழ்க்கைக்கும் வந்து இவ் உலகில் உதித்ததின் உண்மை சக்தியினை உணர்ந்து தன் ஆத்மாவின் சக்தியினால் இவ்வுலக சக்தி அனைத்தையும் எந்நிலையில் பெற்றனர் பல மகான்கள் என்பதனை இப்பாட நிலையில் வெளியிடுகின்றேன்.

பல ரிஷிகள் நம்மைப் போல் வாழ்ந்த வாழ்க்கையில் பல இன்னல்களில் வாழ்ந்துள்ளார்கள். வாழ்க்கைச் சுற்றலில் குடும்பப் பற்றுடன்தான் வாழ்ந்தார்கள்.

அந்நிலையில் இருந்து கொண்டே அவர்கள் எடுத்த ஜெப நிலையால்
1.ஜெப நிலை என்பது… எவ்வெண்ணத்திற்கும் அடிமை ஆகாமல்
2.எவ்வெண்ணத்திற்கு என்பது வாழ்க்கைக்குகந்த நெறிமுறையில் மாற்றம் காணாமல்
3.வரும் இன்னலுக்குச் சோர்வு நிலைப்பட்டோ சந்தோஷ நிலைக்கு அடிமைப்பட்டோ
4.பாசத்திற்குத் தன்னைக் கட்டுபடுத்தியோ வாழ்ந்திடாமல்
5.இவ்வெண்ண சக்தியினை வாழும் காலத்திலேயே அனைத்து சக்திகளையும் தன்னுள் ஈர்க்கும் பக்குவ நிலை பெற்று
6.ஆத்மீக நெறிக்குகந்த ஞான வழிக்கு வித்திட்ட வழியில் வந்தவர்கள் தான் அனைத்து மகான்களும்.

வாழ்க்கை நிலையில் ஞான நிலை பெற்ற முதல் நிலைக்கு வந்தவர்கள்… அந்நிலையின் தொடர் நிலையை வளர்த்தே சித்து நிலை பெற்றிடலாம்.

சித்து நிலை பெற்றவர்கள் மகரிஷியாய் சப்தரிஷியாய் வந்திடலாம்.

இவ்வழியில் வந்தே தன் உயிரணுவாய் உதித்து ஆத்ம நிலைக்கு வந்தவர்கள் பெற்ற சக்தியினால் எவ் உலகில் உதித்தனரோ அவ் உலகில் இருந்து எவ் உலகிற்கும் (மற்ற சூரியக் குடும்பங்களுக்கு) சென்றிடும் நிலை பெற்றுள்ளனர்.

மேலும் மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களின் நிலையிலிருந்து பல சக்தியினைத் தன் உயிராத்மாவுடன் சேமித்து… தனக்குகந்த பல சக்தியினை ஈர்த்துத் தன்னுள்ளே சுழலச் செய்து… தனி ஒரு மண்டலமாக உருப்பெறச் செய்தும்… அந்நிலையிலிருந்து தனி ஓர் உலகமாகத் தன் மண்டலத்தினுள்ள பல ஜீவன்களின் வளர்ச்சியைத் தானே வளரச் செய்தும் மண்டலங்களாக உருப் பெறுகின்றனர்.

1.இவ்வியற்கையின் சக்தியில் எண்ணில் அடங்காப் பல உண்மைகள் உள்ளன.
2.உயிரணுவாய் நம்மைப் போல் உதித்திட்டவைதான் இன்றுள்ள பல மண்டலங்கள்.

இந்நிலைக்கு வருவதற்கு உயிரணுவாய் இருந்து… உயிர் ஆத்மா கொண்ட செயலாற்றும் நிலைபெற்ற இம் மனித உடலினால் மட்டும்தான் முடிந்திடும்.

இந்நிலையில் இருந்து வந்தவர்கள் தான் நாம் சொல்லும் பல பல ரிஷிகளும்…!

empowering nature

கடலின் உப்புத் தன்மையும் மனித உடலின் உப்புத் தன்மையும் ஒன்று தான் – ஈஸ்வரபட்டர்

இப்பூமியின் நிலை இரண்டும் பாகம் நீரும் ஒரு பாகம் நிலமும் உள்ளது. அவற்றிலும் ஒரு பாகத்தில் ஏரி குளம் கிணறு ஆறு இப்படி நீர் நிலைகள் உள்ளன.

இன்று நில அதிர்வு ஏற்படுவது நிலத்தில் மட்டுமல்ல. பூகம்பமும் எரிமலையும் இப்பூமியின் நீர் நிலை இல்லாத இடங்களில் மட்டும் ஏற்படுவது அல்ல. பூமியுடன் கலந்த கடலிலும் இப்பூகம்ப நிலை அதிகமாக ஏற்பட்டுக் கொண்டேதான் உள்ளது.

கடலில் சில நிலைகளில் இப்பூகம்ப நிலை ஏற்பட்டு அதனால் அக்கடலுக்குள் திடீர் திடீரென்று மலைகள் வளர்கின்றன என்கின்றனர். கடலுக்கடியில் வளர்ந்திடும் மலையின் நிலையென்ன…?

இப்பூமித்தாய் வெளியிடும் உஷ்ண அலைகள் வெளிப்படும் தன்மையினால் பூமியில் ஏற்படுவதைப் போன்ற நில அதிர்வு இக்கடலிலும் ஏற்படுவதினால் அந்நிலையில் பொங்கும் நிலையில் வளர்வது தான் இப்படி திடீர் திடீரென்று தோன்றிடும் மலைகளின் நிலையெல்லாம்.

கடல் நீரிற்கும் இம்மனித ஜீவ ஆத்மாவின் உடல் தன்மைக்கும் அநேக ஒற்றுமை நிலைகள் உண்டு.
1.இம் மனித உடலின் சுவாசத் தன்மை உப்புக் கலந்த அமிலத்தைத் தான் அதிகமாக ஈர்த்து சுவாசிக்கின்றது.
2.கடல் நீரின் உப்புத் தன்மையும் இம் மனித ஜீவாத்மாவின் உடல் தன்மையும் ஒன்றுபட்டதே
3.இம்மனித உடலைப் புதைத்தால் அவ்வுடலின் மேல் மற்றத் தாவர இன வர்க்கங்கள் வளர்ந்திடாது.

இன்று தாவரங்களுக்குப் பல இரசாயன உரங்களைச் செய்வித்து வளரச் செய்கின்றனர். அவற்றினுள் இம் மனிதனின் உடல் தன்மையை ஓர் இரசாயனத்திற்கும் பயன்படுத்திட முடியாது.

இன்று சில இடங்களில் சில தாவர வர்க்கங்களுக்கு நாய் நரி இவற்றின் உடல்களை அத்தாவரங்களின் வேர்களுக்கு உரமாக இட்டால் அத்தாவரம் செழித்து வளர்ந்திடும் என்ற நிலையில் பயிர் செய்கிறார்கள்.

1.ஆனால் மனித உடல் உப்புக் கலந்த அமிலத் தன்மை பெற்றதினால் எத்தாவரமும் இவ்வுடலில் இருந்து வளராது
2.இவற்றைப் போன்றே தாவரங்களுக்கு இப்பூமியில் மூன்றில் இரண்டு பாகமாக உள்ள கடல் நீரைப் பயன்படுத்திட முடிவதில்லை.

கடலிலேயே அச் சுவாசமுடனேயே வளர்ந்திடும் சில தாவர வர்க்கங்கள் உண்டு. ஆனால் அதே இனம் கொண்ட இத்தரையுடன் உள்ள நீர் நிலையில் வளர்ந்திடாது. இயற்கையிலேயே இப்படிப் பல பல மாற்றங்கள் கலந்தே உள்ளன.

இயற்கையின் சக்திக்குட்பட்ட… இயற்கை எய்தும் ஜீவ ஆத்மா பெற்ற நாம்… நம் சக்தியை இயற்கையுடன் கலக்கவிடும் நிலை பெற வேண்டும்…!


எத்தனையோ பேருடன் எத்தனை விதமாக நாம் பழகுகின்றோம்.


வியாபாரத்திற்கோ மற்றதுக்கோ போகும்போது அந்த நேரத்திலே நமக்கு வேண்டாதவன் வந்து விட்டான் என்றால் அவனைப் பார்த்துவிட்டுப் போனால் அந்த காரியமே தோல்வியாகும்…! என்று எண்ணுவோம்.


அதே சமயத்தில் வீட்டை விட்டுப் போகும்போது சாங்கிய சாஸ்திரத்தை எல்லாம் பார்ப்போம்.


உதாரணமாக இரண்டு மணிக்கு நல்ல நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் நல்ல காரியத்தை ஜெயித்து விட்டு வரலாம் என்று செயல்படுத்துவோம்.


1.ஏனென்றால் நம் மனதை நல்ல வழியில் மாற்றுவதற்கு இப்படி ஒரு சாஸ்திரத்தை எழுதி வைத்திருக்கின்றார்கள்.

2.அதன்படி நல்லதை முழுமையாக நினைக்கின்றோமா என்றால் இல்லை…?


கல்யாணத்திற்குப் பொண்ணு பார்க்கின்ற காரியத்திற்கோ அல்லது புதிதாக ஒரு தொழில் தொடங்கப் போகும் போதோ நல்ல நேரத்தைப் பார்ப்போம்.


அந்த நல்ல நேரத்தில் மற்றவர்களையும் வாருங்கள் போகலாம்…! என்று அழைத்துச் செல்வோம்.


ஏனென்றால் அதற்கு முன்னாடி ஏதேதோ சங்கடங்கள் சலிப்புகள் எல்லாம் பேசிக் கொண்டிருப்போம். அவன் அப்படிச் செய்தான் இவன் இப்படிச் செய்தான்…! என்ற உணர்வுகள் எல்லாம் நமக்குள் இருக்கும்.


1.இதை மாற்றுவதற்காக வேண்டி அந்த இரண்டு மணிக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்று

2.நம் தீமைகளை எல்லாம் மறந்து நல்லதை எடுக்கும்படி செய்கிறார்கள்.

3.ஆக… தத்துவ ரீதியில் மனிதனை இப்படியெல்லாம் நல்ல வழிக்கு மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை

4.அங்கே நமக்குக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.


ஆனால் போகும் பொழுது அந்தப் பாதையில் எதிர்த்தாற்போல் ஒரு விதவை முக்காடு போட்டு வந்தால் போதும்… “தொலைந்தது போ…!” என்று சொல்வோம்.


இந்த உணர்வை வைத்துக் கொண்டு போனால் நல்லதைச் செயல்படுத்தும் எண்ண வருகிறதா…? முதல் முதலில் கடை திறப்பதற்காகப் போனால் இத்தனை சாங்கியம் பார்த்துவிட்டுத் தான் போகின்றார்கள்.


இப்படி ஒரு விதவை முன்னாடி வந்துவிட்டால் நம்மை அறியாதபடி தொலையும் உணர்வை எடுத்துக் கொள்கிறோம். பின் கடைக்குப் போனவுடன் என்ன செய்கின்றது…?


கடையைப் போய்த் திறப்பார்கள். அந்த மனதோடு கடை வைத்து நடத்தினால் என்ன ஆகும்…?


அடுத்தாற்படி ஒன்று எதிர்பாராதது ஆகிவிட்டது என்றால் “நான் நினைத்தேன் இப்படி ஆகிவிட்டது…! என்ற இந்த எண்ணம் தான் வரும்.


நம்முடன் கூட வந்தவர்கள் என்ன சொல்வார்கள்…?


நான் அன்றைக்கே சொல்லலாம் என்று பார்த்தேன். சகுனம் மாறிவிட்டது என்று சொல்லி அப்பொழுது அவர் கெட்டிக்காரர் ஆகிவிடுன்றார்.


லேசாகச் சொல்வார்கள்… முழுவதும் சொல்ல மாட்டார்கள். ஏதோ குறுக்கே போனது பார்த்துச் செய்யலாம்…! என்ற இந்த நினைவை ஊட்டி விட்டுவிடுவார்கள்.


அவர் சொன்னதும் இந்த உணர்வுடன் கடை வைத்தால் என்னாகுமோ ஏதாகுமோ..? என்று அதே ஞாபகம் தான் வரும். கடை திறக்கும் போதே இப்படித் தான் இருந்தது… அதனால் இன்றைக்கும் இப்படி விரயம் ஆகின்றது என்று தொடர்ந்து வரும்.


ஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணுகின்றோமோ “அது தான் நம்மை இப்படி எல்லாம் ஆட்சி புரிகின்றது…!” என்பதை மறந்து விட்டோம்.


1.ஆட்சி புரியச் செய்வது யார்…? இதே உயிர் தான்.

2.உணர்த்துவதும் அவன் தான்… இயக்குவதும் அவன் தான்.

3.நம்மை வளர்ப்பதும் அவன் தான்… நம்மை உருவாக்குவதும் அவனே தான்.


நம் உயிரான ஈசன் தான்….!

eswarapattar wishes

நாம் தெய்வமாக வேண்டும்

இன்று கம்ப்யூட்டரில் விஞ்ஞான அறிவு கொண்டு எல்லாவற்றையுமே ரெக்கார்ட் (RECORD) செய்து கொள்கின்றார்கள். பதிவானதை மீண்டும் தட்டி விட்டவுடனே அதன் இயல்பைத் தெரிந்து கொள்கின்றார்கள்.

அதே போல் தான் மனிதர்கள் நாம் என்ன செய்கிறோம்…?

இரண்டு பேர் சண்டை போட்டால் அதை உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொள்கிறோம். மீண்டும் அவனை எண்ணியவுடன் உடனே நமக்கும் கோபம் வருகிறது. நம் நல்ல காரியத்தைக் கெடுத்து விடுகிறது.

கோயிலுக்குச் சென்று வணங்குகின்றோம். நாம் எண்ணியபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் அதையும் ரெக்கார்டு செய்கின்றோம்.

எப்படி…?

1.என்னத்தைச் சாமி கும்பிட்டு என்ன செய்ய..?
2.இந்த ரெக்கார்டைத் தட்டியதும் சோர்வடைந்து அடுத்து நல்லதை எடுக்க முடியாமல் போய்விடும்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகளை எல்லாம் உடலில் உள்ள எலும்பிலே ரெக்கார்ட் செய்து வைத்து விடுகிறது. எண்ணிலடங்காத நிலைகள் நமக்குள் இருக்கிறது. இப்பொழுது விஞ்ஞானி எலெக்ட்ரானிக் என்ற நிலையில் அதை நிரூபிக்கின்றான்.

உதாரணமாக சண்டை போடுவதையும் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள்… குடும்பத்தில் வரும் கஷ்டப்படுவதையும் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள்.

வேறு ஒன்றும் தேவையில்லை… துணி எடுக்க நீங்கள் ஜவுளிக் கடைக்குப் போகின்றீர்கள். போகும்போது குழந்தைகளைச் சும்மாவது அடம்பிடிக்கச் சொல்லுங்கள்.

அப்போது ஏண்டா இப்படிப் போகும்போது..? என்று மனது சங்கடமாகும்…. அந்த வெறுப்புணர்வு வரும். அந்த உணர்வு வந்த பின் அவர்களை நல்ல புடவை எடுத்து வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்…!

கடைக்குப் போனவுடனே அதே சங்கடமாக இருக்கும்…
1.இந்த வெறுப்பு உணர்வு தான் கண்ணில் வரும்
2.நல்ல புடவையாக எடுத்துப் போடப் போட இது வேண்டாம்… இது வேண்டாம்…! என்பார்கள்.
3.கடைசியில் வெறுப்புணர்வு கொண்டு சடைச்சுப் போய்… “சரி இதையாவது கொடுங்கள்…” என்று எடுத்து வருவார்கள்.

எடுத்து அப்புறம் வீட்டுக்கு வந்தபின் அடுத்தவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். துணியைப் பார்த்து “என்னங்க… போயும் போய் இந்தப் புடவையைத் தானா எடுத்தீர்கள்…!” என்று கேட்பார்கள்.

இல்லைங்க இது தான் நல்லது…! என்பார்கள்.

நன்றாகப் பாருங்கள்…! என்று மீண்டும் அடுத்தவர்கள் சொன்னாலும் அன்றைக்குத் தெரியாது. மறு நாள் காலையில் பாருங்கள்.

சனியன்…! போகும் போதே குறுக்கே வந்து பையன் நமக்கு இத்தனை தொல்லை கொடுத்து விட்டான். மீண்டும் “சனியன்: என்றுதான் சொல்வோம். யாரை..?

இந்த உணர்வுகள் அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெறுப்பு வரும். இப்படி அவனை எண்ணிவிட்டு அன்று காய்கறிகளை எடுத்து சமைக்க வேண்டும் என்றாலும் “காயை அறுக்கப் போனால்..” அந்த உணர்வின் தன்மை என்ன செய்யும்…?

காயை இப்படிப் பிடித்து இப்படிக் கொண்டு போவார்கள். இது தெரியாதபடி சாய்த்துவிடும். கையில் அறுத்துவிடும்…! அடக் கிரகமே…! இதைப் பார்க்கலாம்.

கீதையில் சொன்னது போல்… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! இந்த உணர்வின் இயக்கமாக நம்மை எப்படி இயக்குகின்றது என்று பார்க்கலாம். இது எல்லாம் இந்த மனித வாழ்க்கையில் இயக்கப்படும் நிலைகள்.

பையனின் நிலைகள் இப்படித் தான் என்று ரெக்கார்ட் செய்கின்றீர்கள்… எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் தான் செய்கின்றான். யாரிடம் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான் என்று சொல்கிறீர்கள்.

மனைவி மேல் கணவனுக்குக் கொஞ்சம் வெறுப்பு வந்துவிட்டால் அதை ரெக்காட் செய்து கொள்கின்றார்கள். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா…! என்பார்கள்.

அவர்கள் அடுப்பில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். சரியாகக் காதில் விழுந்திருக்காது.

பார்… எப்பொழுது பார்த்தாலும் நான் எதாவது சொன்னால் சரியாகவே கவனிக்க மாட்டேன் என்கின்றாய்…! என்று சொல்லிக் கோபமாகப் பேசுவார்கள்.

பேசியதும் அவரைப் பார்த்தவுடன் மனைவி என்ன செய்கின்றார்கள்…?

எதாவது ஒன்று.. என்றால் கொஞ்சம் பொறுத்துச் சொல்லாதபடி “எப்பொழுது பார்த்தாலும் என்னைக் குற்றவாளி ஆக்குவது தான் உங்களுக்கு வேலை…” என்பார்கள்

இந்த உணர்வுகள் தான் குடும்பத்தில் வளரும். இதை எது செய்கின்றது…? இந்தச் சந்தர்ப்பங்கள் செய்கின்றது.

ஏனென்றால் இந்த உடலில் எத்தனை காலம் வாழுகின்றோம்…? எதை எடுத்தாலும் இன்றைய செயல் தான் நாளைய சரீரம்.

1.நம்மை அறியாமல் நமக்குள் வரும் இத்தகைய தீமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்றால்
2.அந்த அருள் ஞானிகள் உணர்வை எடுக்க வேண்டும்
3.அந்த அருள் ஞானிகள் காட்டிய உணர்வினை நீங்கள் பெறுவதற்குதான் இப்பொழுது ரெக்காட் செய்கின்றேன் (ஞானகுரு).
4.நீங்கள் எந்த அளவுக்கு பதிவு செய்கின்றீர்களோ… அந்த அளவுக்குத் திருப்பி எண்ணும் போது…
5.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

சாமி… சக்தி வாய்ந்தவர் எனக்குச் செய்வார் என்று சொன்னால் அந்த உணர்வின் வழியைப் பெற்றேன்…. வளர்த்தேன்… அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவின் நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தப் பதிவு நிலையை மீண்டும் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்ற உணர்வை எடுத்தால் அருள் பெருகுகின்றது… சிந்திக்கும் ஆற்றல் கொடுக்கின்றது… நம் சிரமங்களை மீட்டுத் தருகின்றது… ஞான சக்தியாக உருவாகின்றோம்.

இதைத் தான் மனிதனின் ஆறாவது அறிவை ஞானிகள் எப்படிக் காட்டியுள்ளார்கள்…?

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அது கிரியை ஆகி அதன் ஞானமாகத்தான் நம் உடலுக்குள் விளையும்.

தெய்வீக பண்புகளை நாம் பெறுவதற்குத்தான் ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள். ஆலயத்தில் காட்டப்பட்ட அந்த அருள் உணர்வை நுகர்ந்தால் அது நம் உடலுக்குள் விளைந்து நாம் தெய்வமாகின்றோம்.

1.நம்மை எல்லாம் தெய்வமாக்கத்தான் அங்கே சிலையை உருவாக்கி
2.அந்தச் சிலை வடிவில் அருள் ஞானத்தை ஊட்டினார்கள் ஞானிகள்.

Divine realization - treaure

தலையெழுத்து நிர்ணயமாகும் நாள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலத் தன்மையான பல நிலை கொண்ட உயிரணுக்கள் இப்பூமி தன்னுள் ஈர்த்து அவ்வுஷ்ண அலைகளை வெளிப்படுத்திக் கொண்டே தான் உள்ளது.

ஆக… பல மாறுபட்ட நிலைகள் கொண்ட அமில சக்திகள் இப்படர்ந்த காற்றினில் உள்ளதினால் அவ்வமிலத்தின் மேல் இச்சூரிய ஒளி பட்டவுடன்
1.மென்மேலும் பல நிலை கொண்ட அமிலத்தன்மையும் வளர்ந்து
2.உயிரணுக்களும் வளர்ந்து கொண்டேதான் உள்ளன.

இப்பூமியின் வளரும் நிலை கொண்ட அனைத்து சக்திகளுமே ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தான்.

ஒவ்வோர் உயிரணுக்களும் எச்சக்தியில் உயிரணுவாய் எவ்வமில சக்தியைப் பெற்று உதித்தனவோ அவ்வமிலத் தன்மை உடைய காந்த சக்தியை உடைய உயிரணு அச்சக்தி நிலை கொண்ட அமிலத்தைக் காந்த நிலையுடனே மென்மேலும் ஈர்த்து வளர்கிறது.

அவ்வாறு வளரும் நிலையில் அது அது ஈர்த்த நிலை கொண்டு தாவரங்கள் கல் மண் நீர் மற்ற பூமிக்கு அடியில் உள்ள திரவப் பொருள்கள் உலோகங்கள் (கனி வளங்கள்) இப்படி வளரும் உயிரணுக்கள் சில. இன்னும் சில நிலை கொண்ட உயிரணுக்கள் ஜீவ உடல் பெற வருகின்றன.

இப்பூமியில் இருந்து வளரும் இப்பொழுது சொல்லிய உயிரணுக்கள் எல்லாம் இப்பூமியின் மேல் படர்ந்து பூமியுடனே ஐக்கியப்பட்டு பூமிக்குள்ளே இருந்து வளர்ந்த நிலை பெற்ற இயற்கை வளம் கொண்ட உயிரணுக்களின் நிலை தான் இவையெல்லாம்.

ஆனால் இஜ்ஜீவ உடலை ஏற்கும் உயிரணுவானது இக்காற்றில் படர்ந்து கொண்டே இக்காற்றில் உள்ள அமில சக்தியை மென்மேலும் தன்னுள் ஈர்த்துச் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் வளர்ச்சி கொண்ட நிலையில் உள்ள பொழுது அடுத்து… கருவாக அதாவது உடல் பெறுவதற்கு வருகிறது.

தாய் தந்தை என்ற இரண்டு ஜீவ உடல் நிலை கொண்ட இனங்கள் ஒன்றுபடும் பொழுது இவ்விரண்டு ஜீவ உடல்களின் அமில சக்தி ஒன்றுபட்டவுடன் காற்றில் கலந்துள்ள அந்த உயிரணு தன் நிலைக்கு ஒப்ப அமில நிலை கொண்ட காந்த சக்தியுடைய உயிரணுவின் சக்தி இவ்வொன்றுபட்ட சக்தியுடன் வந்து உயிர் கொள்கின்றது.

இவ்விரண்டு ஜீவ உடல்களின் அமில சக்தி ஒன்றுபட்டவுடன் அவ்வுயிரணுவின் சக்திக்குகந்த பிறப்பிடமாக இவற்றை ஏற்றுத்தான் அவ்வுயிரணு கருவாகின்றது.

கரு உருவாகி வளரும் போது அத்தாயின் கருவிலே… தான் ஈர்த்துப் பழக்கப்பட்ட அமில சக்தியைத்தான் எடுக்கிறது. அத்தாய் சுவாசிக்கும்போது தன் நிலைக்கு ஒப்ப… தனக்கு வேண்டிய அமிலத்தை மட்டுமே ஈர்த்து வளர்ச்சி பெற்று வளர்கின்றது.

1.சூலுண்ட நிலையில் உள்ள ஜீவ உடல் கொண்ட தாயின் ஜீவ ஆத்மாவிற்கும்
2.தனித்த நிலையிலுள்ள ஜீவ உடல் கொண்டவரின் துடிப்பு நிலைக்கும்
3.சூலுண்ட நிலையிலுள்ள ஜீவ உடல் கொண்ட ஜீவன்களின் துடிப்பு நிலைக்கும் மாறு கொண்ட நிலை இருந்திடும்.

தாவர வர்க்கங்களின் நிலையை ஜீவ அணுவாய் வளர்ந்த நிலை என்று உணர்த்தினேன். ஜீவன் கொண்ட ஜீவ அணுக்கள்தான்… துடிப்பு நிலையில்லா வர்க்கங்கள்… இவை…!

1.ஆனால் ஜீவ ஆத்மாக்கள்தான் ஜீவ உடல் கொண்ட ஆத்மாக்களாய்
2.உதிர ஓட்டமுடன் துடிப்பு நிலை கொண்ட அங்கங்களை உருவாக்கி வளர்ந்திடும் ஜீவ ஆத்மாக்கள்.

அனைத்துமே உயிரணுவாய் இயற்கையுடன் இவ்வுலகில் உயிர் பெற்றாலும் ஒவ்வொன்றிற்கும் அவையவை ஈர்த்த காந்த அமில சக்தி கொண்ட இப்பூமியில் படர்ந்து பூமியுடன் ஐக்கியப்பட்டு பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகளை ஈர்த்தே வாழ்கிறது.

அதாவது இயற்கை வளங்களாகவும்… காற்றுடனே ஆவியாகப் படர்ந்த நிலையில் தன் சக்திகளை ஈர்த்தும்…
1.வளர்ந்திடும் உயிரணுக்கள்தான் ஜீவ உடல் கொண்ட ஆத்மாவாக
2.ஊர்வன பறப்பன நீரில் வாழ்ந்திடும் நீரினங்கள் மிருக வர்க்கங்கள் இம் மனித உடல்கள் எல்லாமே.
3.உயிரணுவாய்த் தோன்றிய நாளிலேயே அது ஈர்க்கும் அமில சக்தியைக் கொண்டு தன் தன் பிறப்பு நிலை எய்துகிறது.
4.உயிரணுவாய் உதித்த நாளிலேயே தன் தலை எழுத்தைத் தானாகவே எழுதிக் கொள்கின்றது.

இக்காற்றில் படர்ந்துள்ள உயிரணுக்கள்தான் ஜீவாத்மாவாகி என்றும் அழியாமல் மீண்டும் மீண்டும் ஜென்மம் பெறுவதற்கு வருகிறது என்பதல்ல. இப்பூமியுடன் ஐக்கியப்பட்டு வளர்ந்த அனைத்துமே இந்நிலையில்தான் தத்தம் இனத்துடன் அவையவை சேருகின்றன.

realization of nature

மனித உணர்விற்கு எட்டாத பல கோடி நிலைகள் இயற்கையில் உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

எறும்பிற்கும் உணர்வுண்டு… சிறு மண் புழுவிற்கும் உணர்வுண்டு…! இஜ் ஜீவத் துடிப்பு நிலையுள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே இவ்வுணர்வு நிலையுண்டு.

ஆனால் தாவர வர்க்கங்களுக்கு இஜ் ஜீவத் துடிப்பு நிலை இல்லாததினால் தாவரங்களுக்கு உணரும் தன்மை இல்லை.

சில வகைத் தாவரங்கள் மனிதனின் உடல் உறுப்புகள் பட்டவுடனே சுருங்கும் தன்மை பெறுகின்றன. உணர்வில்லாமல் அவை எப்படிச் சுருங்குகின்றன என்று எண்ணுவீர்…?

இவ்வுணரும் சக்தி பெற்ற ஜீவஜெந்துக்கள் அதற்குகந்த அவை ஈர்த்து வளர்ந்த அமிலத் தன்மைக்குகந்த காந்த சக்தி நிலையுண்டு.

இச்சக்தியினால் அத்தாவரங்களின் மேல் இச்ஜீவஜெந்துவின் சக்தி நிலை பட்டவுடன்… அந்தத் தாவரம் எந்த நிலைகொண்ட சக்தி பெற்று எந்த அமிலத்தை ஈர்த்து வளர்ந்ததோ… அந்நிலைக்கும் இந்நிலைக்கும் எதிருண்ட நிலை அடைவதினால்… “மற்ற ஜீவ ஜெந்துவின் உறுப்புகள் பட்டவுடன் அது சுருங்கும் நிலைக்கு வருகின்றது…”

அஜ் ஜீவ ஜெந்துவின் வெப்ப நிலையும் அத்தாவரத்தின் வெப்ப நிலையும் மாறுபட்ட நிலையில் உள்ளதினாலும் இந்நிலை பெறுகிறது.

சில வகைத் தாவரங்கள் சில நிலை கொண்ட மனிதரின் தீய எண்ணத்தையே ஈர்த்து நச்சு நிலையில் வாழ்பவரின் உஷ்ண நிலை அவர் அந்நிலையில் எடுக்கும் சுவாச நிலை அந்தத் தாவரங்களின் மேல் பட்டாலே அத்தாவரம் கருகும் நிலை பெறுகிறது.

இன்னும் சிலரின் நிலையில் அவர்கள் விதை விதைத்தால் அவ்விதை வளர்ந்திடாது. அவ்விதையே இவர் கையில் ஏந்தி வைத்துள்ள நிலையிலேயே அவர் எடுக்கும் சுவாச நிலை கொண்டு அவர்களின் அங்க சக்தியைக் கொண்டு அவ்விதைக்கு வளரும் சக்தியற்றுப் போகிறது. அந்நிலையில் அவர் விதைக்கும் விதையும் வளர்வதில்லை.

1.சிலரின் சுவாசத்தினால் இவ்வுலக சக்தியையே சக்தியாகக் காணும் நல் நிலை உள்ளது
2.சிலரின் சுவாசத்தினால் அவர்களின் எண்ணத்தின் நிலையினாலேயே
3.எந்த நிலைக்குச் சென்றிட்டாலும் சோர்ந்த நிலை பெறுகின்றனர்.

சக்தி நிலை பொதுவானதே…! இவ்வெண்ண நிலையினால்தான் மாறுபட்ட நிலைகளெல்லாம்…!

தாவரங்களின் நிலைக்கு இவ்வுணரும் நிலையும் எண்ண நிலையுமில்லை. உயிரணுவாய் ஒரே நிலையில் சக்தியை ஈர்த்து எந்நிலை கொண்ட அமில சக்தியை ஈர்த்து வளர்த்தனவோ அந்நிலைக்கொப்பத்தான் அவற்றில் விளையும் பூவும் காயும் கனியும் தானிய வகைகளும் இருக்கும்.

தாவர வர்க்கங்களை நாம் அதில் வளரும் பூவையும் காய்கனியையும் சில கீரைகளின் மேல் நிலையில் உள்ள கொழுந்துகளையும் நாம் பறித்து எடுக்கும் பொழுது அதன் நிலை மென்மேலும் வளரத்தான் செய்கிறது.

அவற்றுக்கு ஜீவத் துடிப்பும் உணரும் தன்மையும் இல்லாமல் ஒரு நிலை கொண்ட சக்தியை ஈர்த்து வளரப் பெற்றதினால் ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட கால நிலைப்படி அதன் பயன் நிலை கொண்டு சக்தியளித்து நமக்குப் பயன் தருகின்றது.

1.இந்த இயற்கையின் சக்தியில் பல நிலை கொண்ட ஒவ்வொன்றிற்கும் மாறுபட்ட நிலையில்
2.நம் எண்ணத்திற்கும் நம் உணர்விற்கும் எட்டாத பல கோடி நிலைகள் உள்ளன.

சில தாவரங்கள் பல நாட்கள் வளர்ந்தாலும் பலன் தராததை வைத்தும் இன்னும் சில வகைத் தாவரங்களுக்கு ஒன்றுக்கெதிரில் அதே நிலைகொண்ட (ஜாதி) அதன் நிலை பெற்ற தாவரம் இருந்திட்டால்தான் இவை இரண்டுமே பலனளிக்கும்.

தாவரங்களில் சில பலன் தராத நிலை பெற்றதை ஆண் தாவரம் என்கின்றனர். தாவரங்களுக்கு இவ் ஆண் பெண் என்ற நிலையில்லை. உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிடும் எவ்வுயிரணுக்களுக்குமே இவ் ஆண் பெண் நிலையில்லை.

உயிரணுவாய் இருந்து ஜீவ ஆத்மாவிற்கு வந்த பிறகுதான் இவ் ஆண் பெண் நிலையெல்லாம். ஆவி உலகத்திலும் இவ் ஆண் பெண் நிலையில்லை.

இவ்வாவி உலகிலிருந்து ஜெனனத்திற்கு வருபவர்களின் ஆவி ஆத்மாவின் எண்ணப்படிதான் இஜ்ஜீவ ஆத்மாவிற்கு ஆணாகவும் பெண்ணாகவும் வந்து பிறப்பது எல்லாம்.

1.அவரவர்கள் எண்ண நிலைக்கும் உணர்வு நிலைக்கும் தக்கப்படிதான்
2.அவ்வாவி உலக ஆத்மா இஜ் ஜீவ உடலுக்கு வருகின்றது.

Breathing states

நாம் இயக்குகின்றோமா…? அல்லது நாம் சுவாசிப்பது நம்மை இயக்குகிறதா…?

 

ஒரு செடியிலிருந்து அதன் (மணம்) சத்தை வெளிப்படுத்தினால் சூரியன் கவர்ந்து அலைகளாக இந்தப் பூமியில் பரவச் செய்கின்றது. அதே செடியை நாம் கண் கொண்டு பார்த்து அது பற்றித் தெரிய வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தால் அந்த மணம் நம் உயிரிலே படுகிறது.

தெரியவில்லை என்றாலும் அதை நுகர்ந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.
1.இதனுடைய குணம் என்ன…?
2.இதனுடைய மணம் என்ன…? இது என்ன செய்யும்…?
3.நம்மை வேதனைப்படுத்துமா…? உடம்புக்கு நல்லதாகுமா…? என்று சிந்திக்கின்றோம்.

செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்திருந்தாலும் அந்தச் செடியின் வாசனையை நுகர வேண்டுமென்றால் நமது கருவிழி ருக்மணி அந்தச் செடியை நமக்குள் பதிவாக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நாம் இயங்குகின்றோமா…? நம்மை மற்றது இயக்குகின்றதா…?
2.அல்லது நாம் ஒன்றைத் தவறு செய்கின்றோமா…?
3.அல்லது நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா?
4.அப்படி தவறு செய்ய வைக்கின்றது நமது உயிரா…? நாம் நுகர்ந்த உணர்வா…? நமது உடலா…? என்பதனை எல்லாம்
5.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகள்.

உதாரணமாக வேப்ப இலை என்று வைத்துக் கொள்வோம். அந்தச் செடியின் சத்தை நுகர்ந்த பின் ஒரு கசப்பென்ற நிலைகள் வருகின்றது

அந்த உணர்வின் மணங்கள் நம் உயிரிலே பட்டுக் கசப்பின் உணர்ச்சிகளாக நம் உடலிலே படரும். அப்பொழுது என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகள் பட்டதும் அந்த உணர்ச்சிகளாக நம்மைத் தூண்டும்
2.ஓய்ய்…ய்ய்ய்…! கசப்பை நுகர்ந்தால் ஓ…ய் என்று உமட்டலாக வரும்
3.அப்போது இயக்குவது யார்..? நாம் நுகர்ந்த உணர்வு இயக்குகின்றது
4.ஆனால் அந்த உணர்வை இயக்கிக் காட்டுவது யார்..? உயிர்
5.அந்த உணர்ச்சிகள் நம் உடலுடன் சேர்த்தவுடனே அதுதான் நம்மை இயக்குகின்றது… ஆண்டாள்…! (காரணப் பெயர்)

வேப்ப மரத்தைக் கூர்ந்து கண் கொண்டு பார்த்தால் அதைப் பதிவாக்குகின்றது நம் கண்ணின் கருவிழி.

அந்த மரத்திலிருந்து வரக்கூடிய உணர்வு என்ன…? என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். அந்த ஆசையால் அது கவரும் சக்தி பெறுகின்றது.

அப்பொழுது அந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அது என்ன செடி…? நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா…? என்று நாம் ஆராய்ச்சி செய்வோம்.

வாந்தி வரும்… என்று சொன்னால் அதை நீக்கி விடுகின்றோம்.

ஒருவருக்கு அம்மை வார்த்திருந்தது என்றால் இது விஷத் தாக்குதல். அதற்கு இந்த வேப்பிலையை முழுதாகப் போட்டு இரண்டு மஞ்சளைப் போட்டுக் கலக்கித் தெளித்தால் உடலில் அம்மை என்ற அந்த விஷக் கிருமிகளை மாற்றுகின்றது.

ஆனால் அதே வேப்பிலையை நாம் உணவாக உட்கொள்ளும்போது உமட்டல் வருகின்றது… வாந்தியாகி வெளியே தள்ளுகின்றது.

இருந்தாலும் அந்த வேப்பிலையை அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணம் வருகின்றது அதை அளவுடன் சாப்பிட்டால் அந்த வேப்பிலை நமக்குள் இருக்கும் பல கசப்பின் உணர்வுகளை நீக்குகின்றது.

1.அதனதன் சந்தர்ப்பத்திற்கு அது வேலை செய்கின்றது
2.இவை எல்லாம் இயற்கையின் நியதிகள்…!

Fire maharishi

நல்லதைச் செய்தாலும் அதைக் காக்கும் சக்தி மிகவும் அவசியம்…!

 

ஒருவர் ரொம்பப் பிரியப்படுவார் நல்லது பெற வேண்டுமென்று…! மிகவும் கஷ்டப்பட்டவருக்கு ஒரு வேதனைப்பட்டுக் கொண்டிருப்போருக்கு இவர் ரொம்ப உதவி செய்கின்றார்.

உதவி செய்யும் இவரோ தெய்வ பக்தி கொண்ட ஆன்மாவாக இருப்பார்…! இருப்பினும் உதவி பெற்றவரோ…
1.நான் தெய்வத்தை எல்லாம் வேண்டினேன்
2.எல்லாத் தெய்வமும் என்னைக் கைவிட்டுவிட்டது என்று
3.தெய்வத்தின் மேல்… நல்லொழுக்கத்தின் மேல்… வெறுப்புணர்வு இருக்கும்.

ஆனால் இவருக்கு உதவி செய்த நல்லவர் எல்லாருக்கும் உதவி செய்திருப்பார். அந்த உதவியின் தன்மை கொண்டு பிறரிடம் நல்ல பெயரும் புகழும் வாங்கியிருப்பார்.

கோயில்களுக்கு ஓடி ஓடியும் பல நல்லவைகளைச் செய்திருப்பார். கோயிலில் காட்டிய பக்தி கொண்டு கஷ்டப்பட்ட அந்த மனிதனுக்கு ஓடிப் போய் அடடா முருகா…! அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும்…! என்ற எண்ணத்திலே உதவி செய்திருப்பார்.

இருந்தாலும் உதவி பெற்றவரோ… இவர் உதவியை மட்டும் தான் எண்ணுவார். முருகன் என்று சொல்லப்படும்போது எல்லாம் வெறுப்பார்.
1.அந்த முருகன் என்னைக் கைவிட்டார்…
2.நீதானப்பா என்னைக் காப்பாற்றுகிறாய்…! என்று சொல்வார்.

அப்பொழுது இந்த உணர்வுகள் அதிகமாக விளைந்து எல்லா உதவியும் வாங்கிக் கொண்டவரின் உயிரான்மா இவர் மேல் எண்ணமாகி இறந்த பின் செய்த நன்றிக்கு இவரை எண்ணி அந்த ஆன்மா இவர் உடலில் வந்து சேர்ந்துவிடும்.

அது வரை எல்லாக் கோவில்களுக்கும் பக்தியாகப் போய் செய்து கொண்டிருந்தவர் அதற்கு அப்புறம் என்ன செய்வார் தெரியுமோ…?

கோயிலைக் கண்டாலே வெறுப்பு வரும்.

ஏனென்றால் அந்த நோய்வாய்ப்பட்டு இறந்த ஆன்மா இவர் உடலுக்குள்ளே வந்து விட்டதல்லவா. அதனால் அது அவருக்குள் இருந்து வெறுக்கச் செய்யும்.

நல்லது என்று சொல்லி இங்கே உட்கார வைத்தாலும் எழுப்பி வெளியே இழுத்துக் கொண்டு போய் விட்டுவிடும்.

பக்தி மார்க்கங்களில் இப்படித்தான் நாம் உதவி செய்த நன்றியை நாம் பெற முடியாத நிலையில் அதிலே அந்த எண்ண வலு எது பெற்றதோ அது உணர்வின் துணை கொண்டு நமக்குள் வந்து விட்டால் சந்தர்ப்பம் இப்படி ஆகின்றது.

நாம் ஒருவருக்கு நன்மை செய்தோம். ஆனால் அவருக்கு யார் மேலேயோ வெறுப்புப்பட்டது. அந்த வெறுப்பின் உணர்வு நமக்குள் வரும் போது நம் நல்லொழுக்கத்தை இதுவே தடைப்படுத்தும்.

கடைசியில் என்ன சொல்வோம்…?

என்ன நல்லது செய்து என்ன ஆனது…? எனக்கு இப்படி நோய் வந்துவிட்டது…! என்ற வேதனை தான் வரும்.

ஏனென்றால் அந்த உணர்வு கொண்ட ஆன்மா உடலுக்குள் வந்து விட்டால் இந்த வேலையைத்தான் செய்யும்.

சொல்வார்கள்…! நேற்றெல்லாம் இவர் கோயில்களுக்கு ஓடி ஓடிப் போய் என்னென்னமோ நல்லது செய்தார். இன்று நல்லது என்று சொன்னாலே நிற்க மாட்டேன் என்கின்றார். இப்பொழுது சதா வேதனையே சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்வார்கள்.

காரணம்… அவர் நல்லவர்தான்…!
1.அவரை அறியாது வந்த தீமைகளிலிருந்து தான் துடைக்கும் மார்க்கத்தைத் தவறியதனால்
2.அதன் உணர்வுகள் தனக்குள் வந்து அந்த ஆன்மா குடி கொள்கின்றது.

புலியிடம் சிக்கும் மான் என்ன ஆகிறது…?

புலி தன்னை இம்சிக்கும் உணர்வு கொண்டு அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்ற எண்ணத்திலே புலியையேக் கண்டு கண்டு அது நிலைகள் கொண்டு மானின் ஆன்மா வெளியே சென்றபின் புலியின் உணர்வை நுகர்ந்து புலியின் ஈர்ப்பிற்குள் சென்று புலியின் உணர்வைக் கொண்டு “அந்த மான் புலியாகவே மாறுகின்றது…!”

இதைப் போன்றுதான் இவர்கள் நல்ல உணர்வு கொண்டாலும்… இந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் உடலுக்குள் வந்தபின் பாலுக்குள் நஞ்சைப் போட்டால்… பாதாமிற்குள் நஞ்சைப் போட்டால்… குடிப்போரைக் கொன்று விடுவதைப்போல இவர் பட்ட வேதனை இவர் உடலுக்குள் சென்று அந்த நல்லதைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் மகரிஷி. அந்த அருள் சக்தியின் வலுக் கொண்டு தீமைகளை அடக்க வேண்டும். ஏனென்றால். அவர்கள் தீமையைப் பொசுக்கியவர்கள்.

அந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணி எடுக்கும்போது நமக்குள்ளும் தீமைகளைப் பொசுக்கும். அருள் உணர்வுகளை வளர்த்து நாம் வெளி சென்ற பின்
1.அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று இந்த உடல் பெறும் உணர்வைக் கருக்கும்.
2.கருக்கிய உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் நாம் நிலைத்திருப்போம்.

Breathing third eye

ஒரே நிலை கொண்ட சுவாசத்தைப் பெற வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாம் எடுக்கும் சுவாசம் ஒரே நிலை கொண்டதாக இருந்திடல் வேண்டும். பல எண்ணங்களின் நிலையுடன் எடுக்கும் சுவாசத்தில் நம் நிலைக்கு நாம் பெறும் சக்தி நிலை தடைப்படுகின்றது.

1.வாழ்க்கையில் பல நிலைகள் மோதுண்டாலும்…
2.நம் எண்ண சக்தி அவ்வீசனின் ஜெபம் கொண்டதாக
3.நம்முள்ளே உள்ள ஈசனை வணங்கிய நல் சக்திக்கு வர வேண்டும்.

காட்சி:
இல்லத்தில் தூசி அண்டிக் கொண்டே இருந்திட்டாலும் அதனை நாம் பெருக்கி தூய்மைப்படுத்திக் கொண்டே உள்ளோம்.

அதே போல் ஒரு தீபத்தை ஏற்றும் பொழுது அத்தீபத்தில் உள்ள எண்ணெய் குறையக் குறைய மீண்டும் அவ்வெண்ணையை ஊற்றித் தீபத்தின் திரியைத் தூண்டுகின்றோம்.

அப்படித் தூண்டினால்தான் அத்தீபம் ஒளி அளித்துக் கொண்டே இருக்கும்.

1.அதே போல்… நம் எண்ணத்தை எண்ணெயாக்கி
2.நம் ஆத்மாவின் ஜோதி என்னும் ஒளிரும் சக்தியில்
3.இவ் எண்ணமான எண்ணெயை குறையக் குறைய ஊற்றினால்
4.தீபம் சுடர் விட்டுப் பிரகாசிப்பது போல் நம் சக்தியை நாம் உணர்ந்து உணர்வுகள் ஒளியாகும் நல் சக்தி பெற வேண்டும்.

தாவர வர்க்கங்கள் ஒரே நிலை கொண்ட சக்தியை மட்டும் ஈர்த்து எப்படி அச்சக்தியின் நிலை கொண்ட செயலில் வளர்கின்றனவோ அந்த நிலை போல் நம் நிலையும் இருந்திடல் வேண்டும்.

தாவரங்கள் அதன் இயற்கையின் சக்தியில் ஒரே நிலை கொண்டு அவ்வணு வளர்வதினால் ஒரே சக்தியில் ஈர்த்து வளர்கின்றன.

ஆனால் ஜீவ ஆத்மாக்கள் (நாம்) பல நிலைகளை எண்ணும் நிலையில் உள்ளத்தினால் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்ந்தந்த நிலைக்குகந்த சக்தி நிலையும் நம் உடலுக்குள் செல்லுகின்றது.

அதிகோப நிலையும் சலிப்பு நிலையும் பயந்த நிலையும் இப்படி ஒவ்வொரு நிலை கொண்ட எண்ணமுடன் நாம் உள்ள நிலையில்
1.நாம் எடுக்கும் சுவாசத்தினால் இக்காற்றில் உள்ள அமிலத்தில் இருந்து அவைகள் நம் உடலில் வந்து குவிந்து
3.நம் உடலின் நிலையை மாறுபடச் செய்கின்றது.

ஆக… நாமாக ஏற்பதுதான் நம் வாழ்க்கை நிலையும் ஆயுள் நிலையும்.

எண்ண சக்தி கொண்டு உயிராத்மாவாய்ப் பிறந்து இவ்வெண்ணமுடனே வளர்ந்து இவ்வெண்ணத்துடனே உடலை விட்டு ஆத்மா பிரிந்தும் இவ்வெண்ணத்துடனே ஆவி உலகில் சஞ்சரித்தும் பிறகு இவ்வெண்ண நிலைகொண்டு தான் இப்பூமிக்கு மறு பிறப்பிற்கும் வருகின்றோம்.

உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே அந்த நிலைகொண்டு வளர்ச்சியுற்று எல்லா நிலைகளுமே இந்த ண்ணத்துடன்தான் செயல்படுகின்றன.

எண்ண சக்தியை நாம் பெற்ற மானிடனாக இப்பூமியில் வாழ்ந்திடும் காலத்திலேயே
1.நாம் பிறந்ததின் பயனை உணர்ந்து
2.நம் ஆத்மாதான் நமது தெய்வம்
3.அவ்வாத்மாவிற்கு நாம் ஈர்க்கும் சுவாசம் கொண்டும்… நாம் சேமிக்கும் சக்தி நிலையைக் கொண்டும்…
4.நம் நிலையை நல் நிலை ஆக்கிடும் நிலைக்கு நம்மை நாம் பக்குவப்படுத்தி வாழ்ந்திடும் எண்ணத்தை வழிப்படுத்துதல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள தாவரங்களின் நிலையுடன் இயற்கை அன்னை அளித்துள்ள நல்ல கனிகளையும் உண்டிட்டே நம் நிலையில் அவற்றின் சக்தியைக் கொண்டே வளர்த்திடல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள இத் தாவரங்களுக்கு மட்டும் ஜீவனில்லையா..? இவ் இயற்கையுடன் பூமியில் உள்ள அனைத்துமே ஜீவனுடன் உள்ள பொழுது மிருகங்கள் பறவைகள் இவற்றின் மாமிசத்தைப் புசித்திடலாகாது. இத்தாவரங்களை நசித்து உண்ணலாமா…? என்றுரைப்பீர்.

தாவரங்கள் இப்பூமியைப் போன்ற நிலை பெற்றவை. உயிர் அணுவாய் ஒரே நிலை கொண்ட சக்தியை ஈர்த்து அச்சக்தியின் நிலையின் தொடர்பு கொண்டு நம்மை வளரச் செய்பவை.
1.இத்தாவரங்கள் உயிரணுவாய் வளரப் பெற்றவைதான்
2.ஆனால் இச்சரீர நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஜீவத்துடிப்பு இல்லாதவை.

இஜ்ஜீவனுடன் ஜீவன் பெற்ற அனைத்து ஆத்மாக்களுக்குமே அது ஈர்க்கும் சக்தி கொண்ட உஷ்ண அலைகளின் வெக்கை நிலையும் அதன் உடல் ஆரோக்கிய நிலையைப் பொறுத்துக் கூடிக் குறையும் நிலை அஜ் ஜீவனுடனே அஜ் ஜீவனே ஏற்படுத்திக் கொள்கிறது.

தாவரங்களின் நிலையில் நம் பூமி வெளியிடும் உஷ்ண சக்தியின் நிலைதான் அந்நிலையில் வளர்ந்திடும் தாவரங்களுக்கும் இருந்திடும்.
1.ஜீவத் துடிப்பும் ஜீவ எண்ணமும் தாவரங்களுக்கில்லை
2.தாவரங்களின் சக்தியெல்லாம் ஒரே நிலைகொண்ட சக்தியை ஈர்த்து வளர்ந்திடும் நிலைதான்…!

தியானத்தில் நம் உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது…?

பல துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தாலும் நம் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் திறன் பெற வேண்டுமா இல்லையா…?

தீமைகளை வென்றிடும் உணர்வுகளாக நம் உடலுக்குள் விளைந்த நல்ல குணங்களை நாம் பாதுகாத்தல் வேண்டும் 

Arul Gnanigal

மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன…?

ஆரஞ்சுப் பழம் நன்றாக இருக்கின்றது. நன்றாக இருப்பது கொஞ்சம் கெட்டுப் போய்விட்டால் என்ன ஆகிறது…? அதிலே புழு வருகின்றது. எங்கிருந்து அந்தப் புழு வந்தது…?

கெட்டுப் போகப் போகும்போது காற்றில் இருக்கக்கூடிய கெட்ட அலைகளை இழுத்து அது புழுவாக மாறுகின்றது. நன்றாகக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதே போல் நன்றாக இருக்கின்ற ஆரஞ்சுப் பழம் ஒரு பக்கத்தில் அடிபட்டு அழுகினால் போதும். உடனடியாக புழு வந்துவிடும்.

அதே மாதிரி “வேதனை வேதனை…” என்று நீங்கள் சுவாசித்த உணர்வுகள் உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தவுடன் என்ன செய்கின்றது…?

இந்த உணர்வு மாறி இரத்தமாகப் போகும் போது அந்த வேதனைப்படக்கூடிய அணுவாக மாறும். அது தான் இந்திரலோகம். அணுவான பிற்பாடு என்ன செய்கின்றது…?

பழத்தில் அழுகிய உணர்வை எப்படி அந்த அணு சாப்பிட்டவுடனே புழுவாக எப்படி மாறுகிறதோ அதே போல் உங்கள் உடலில் வேதனையான அணுவாக மாறுகிறது. கெட்டதைச் சாப்பிடுகின்றது.

நல்ல பழமாக இருக்கும் பொழுது அதில் புழுக்கள் வருமா…? வராது.

இதே மாதிரி அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் உடலில் வந்து இரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக மாறுகின்றது. அப்பொழுது உங்கள் உடலில் என்ன செய்யும்…?
1.அந்த வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டும்
2.அந்த அழுகிய உணர்வை எடுத்துத் தான் உங்கள் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்குப் போகும் இந்த இரத்தம்.

மற்ற உறுப்புக்குள் போனவுடன் எங்கெங்கே நல்ல அணுக்கள் இருக்கின்றதோ அந்த உறுப்புகள் கெட்டு அதிலே போய் இந்த அணு தங்க ஆரம்பித்துவிடும்.

நமக்குள் கெட்டது எப்படி உருவாகிறது என்று இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இன்னும் சாமியையும் சாமியாரையும் நம்பிப் போய்க் கொண்டிருப்பதைத் தான் விரும்புகின்றோம். ஆனால் அந்த நல்ல சக்திகள் உங்களுக்குள் இருக்கின்றது… உங்களை நீங்கள் நம்பிப் பழகுங்கள் என்பதைத் தான் அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு).

ஆகவே எந்தப் பழமாக இருந்தாலும் கொஞ்சம் அடிபட்டு விட்டால் புழு வந்துவிடும்.

இதே மாதிரி நீங்கள் நல்ல நிலையில் இருக்கப்படும்போது
1.ஒருவன் கஷ்டப்பட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.
2.ஒருவன் சாபமிட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.

அப்பொழுது அந்த உமிழ் நீர் அங்கே இரத்தமாக மாறினால் அவன் எதையெல்லாம் கேட்டுப் போக வேண்டும் என்று சொன்னானோ… நீ நாசமாகப் போவாய்… உனக்குக் கை கால் முடமாகிப் போகும்… நீ நோயால் சாவாய்…! என்று சொன்னால்…
1.இதே உணர்வுகள் அது இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் படர்கிறது.
2.கலந்த பின் அங்கே போய் என்ன செய்கின்றது…?
3.பதிவானது கருவாகி முட்டை ஆகிவிடுகின்றது… ஒவ்வொரு உறுப்புகளிலும் கூடுகிறது.

உதாரணமாக தேனீ என்ன செய்கிறது…? தேன் எடுக்கச் செல்கிறது. பூக்களில் அமர்கிறது. சில நேரங்களில் அதிலே முட்டையும் இடுகின்றது.

அதே போல் தட்டான் பூச்சி இருக்கின்றது. அது பூவில் இருக்கும் அமுதைச் சாப்பிடுகின்றது. அந்தப் பூ மேலே முட்டையிடுகின்றது.. கொஞ்ச நாள் கழித்து இதனுடைய முட்டை வெடித்துப் பட்டாம் பூச்சியாக மாறுகின்றது. அந்தப் பூ எந்த நிறத்தில் இருக்கின்றதோ அதே மாதிரி வரும்.

அதே மாதிரி அடுத்தவர் உடலிலே எப்படி நோயானதோ அதே போல் ஒரு மனிதன் எப்படிச் சாபமிட்டானோ அதே உணர்வுகள் நம் இரத்தத்திலே கலந்து உடலில் சுற்ற ஆரம்பிக்கின்றது.

1.அது நம்முடைய எல்லா உறுப்புகளுக்கும் போய் வரும்
2.போகின்ற நேரத்தில் இந்த முட்டை ஒன்று ஒதுங்கினால் போதும்.
3.அந்த உறுப்பில் உள்ளதை எடுத்து வளர்ந்து அங்கே அணுவாக விளைகின்றது.
4.அந்த உறுப்பினுடைய நிலைகளையே சாப்பிடக்கூடிய நிலைகள் வந்து விடுகிறது
5.தன் இனத்தை அங்கே பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

நுரையீரலில் அந்த மாதிரித் தங்கி விட்டால் நுரையீரல் ரிப்பேர் கல்லீரலில் தங்கி விட்டால் கல்லீரலில் ரிப்பேர் மண்ணீரலில் தங்கி விட்டால் மண்ணீரலில் ரிப்பேர்.

இது எல்லாம் வந்த பிற்பாடு டாக்டர்கள் இந்த உறுப்பு கெட்டுவிட்டது… இன்ன நோய் இருக்கிறது…! என்று சொல்வார்கள்.

அகஸ்தியன் இதைப் போன்ற பல உண்மைகளை அன்றே கண்டுணர்ந்தான்…தான் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கினான்… துருவ நட்சத்திரமாகப் போனான்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நாமும் தீமைகளை நீக்க முடியும்.
2.அவனைப் போன்றே அழியா ஒளி உடல் பெறலாம்

அதைத் தான்… அந்த அகஸ்தியன் உணர்வை முழுமையாகக் கண்டுணர்ந்த நமது குருநாதர் “நம் டாக்டர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” என்னிடம் (ஞானகுரு) என்ன சொன்னார்…?

டேய்…! சாபமிட்டவனை நீ பார்த்தால்…
1.அந்த உணர்வுகள் உன் ஆகாரத்தின் வழியாக உடலுக்குள் போகும்.
2.அந்தக் கருவாகும் அது அணுவாகும்… அது இரத்தத்தில் சுற்றும். தெல்லாம் உனக்குள் நோயாகும்…
3.எப்படி அந்தத் தட்டான் பூச்சி பூவிலே முட்டையிட்டவுடனே அதற்குத் தகுந்த மாதிரி பூச்சிகள் வளர்கின்றதோ
4.அதே மாதிரி இந்த உறுப்பை உட்கொள்ளும் அணுவாக மாறிவிடும்…! என்று சொல்லி
5.இதையெல்லாம் நேரடியாக எனக்குக் காண்பித்தார்… மக்களுக்கு இதை எடுத்துச் சொல்…! என்றார்.

நீங்கள் யாருமே தவறு செய்யவில்லை. அந்தச் சாபமிட்டதை உற்றுப் பார்க்க அந்த உணர்வை நுகர்ந்த பிற்பாடு இங்கே வந்துவிடுகிறது.

உதாரணமாக நாம் ஒரு விஷமான பொருளை எடுத்து வேலை செய்கின்றோம் என்றால் அடுத்து நம் கை கழுவாமல் சாப்பிடுவோமா…?

ஒரு நாற்றமான பொருள் நம் மீது பட்டால் அந்த நாற்றத்தோடு நாம் சாப்பிடுவோமா…? துணியிலும் பட்டது என்றால் துடைக்காமல் உட்கார்ந்தால் என்ன செய்யும்…? இந்த நாற்றம் முன்னாடி இருக்கும். நல்ல சாப்பாடு ருசி இருக்குமா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

Markandaeyan

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களின் (ஆவி) நிலைகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கால நிலை எப்பொழுதும் ஒன்று போல் இருப்பதில்லை. காலை பகல் இரவு ஒவ்வொரு தன்மைக்கு உகந்த உஷ்ண நிலையும் காற்று மழை இடி இவற்றைப் போன்ற சில நிலைகளும் மாறி மாறித்தான் இப்பூமிக்கும் அதன் சக்தி நிலை கிடைக்கின்றது.

இப்பூமியில் வாழும் நாமும் மற்ற ஜீவராசிகளும் இக்கால நிலையின் மாற்றத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு அவரவர்களின் நிலைக்குகந்த காப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஜீவ உடல் பெற்ற ஜீவ பிம்பம் கொண்ட ஆத்மாக்கள் வெயில் மழை காற்று பனி குளிர் இவற்றில் இருந்து ஜீவ உடலைக் காப்பதற்காக இருப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஆனால் ஜீவனுடன் வாழ்ந்து ஜீவன் விட்டுப் பிரிந்த ஆவி நிலையில் வாழ்ந்திடும் ஆத்மாக்களின் நிலைக்கு… அவ்வாவியுடன் ஆவியாகத் தன் சக்தியைத் தனியாக தன் ஆத்மாவுடனே கலந்து படர்ந்து வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள இவ்வாத்மாக்களுக்கு அவற்றின் சக்தியுடன் கலந்து விட்டதினால் இந்நிலை தாக்கப்படுவதில்லை.

இவற்றில் சில ஆவி உலக ஆத்மாக்கள் வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.அவ்வாத்மாவுடன் கூடிய ஆவி சக்தியுடன்..
2.இக்காற்றில் கலந்துள்ள அவற்றின் சக்திக்கு ஒத்த சக்தி அவற்றுடன் சேரும் பொழுது அதன் கனம் அதிகரிப்பதனால்
3.அதி மழை வரும் பொழுது இம்மழையின் தன்மையினால் கனமான ஆவி நிலை கொண்ட சக்தியை ஈர்த்த ஆத்மா
4இப்பூமியின் மேல் மழை வரும் காலங்களில் வந்து படர்கின்றது.
5.அந்த நிலையில் அச்சக்தி நிலை கொண்ட ஆத்மாவே சில புதிய தாவரவர்க்கமாக
6.நச்சுத் தன்மை வாய்ந்த தாவர இனமாக வளர்கின்றன.

இவ்வுடலை விட்டு எந்த எந்த எண்ணம் கொண்ட நிலையில் ஆவி பிரிந்ததோ… அந்த அந்த நிலை கொண்ட எண்ணமுடன்தான் அனைத்து ஆவிகளுமே சுற்றிக் கொண்டுள்ளன.

தன் எண்ண நிலை கொண்டே சுற்றிக் கொண்டுள்ள ஆவிகளின் நிலை… அவரவர்கள் உடலில் வாழ்ந்த நாட்களில் ஈர்த்து வெளியிட்ட சுவாச நிலைப்படி ஆவி உலகிற்குச் சென்றிட்டாலும்… வாழ்ந்த நாட்களில் அவர்களின் குண நிலைப்படி உள்ள எண்ணத்தைக் கொண்டே ஆவி உலகினிலும் அவர்களின் எண்ணம் செயல்படுவதினால்… இந்நிலையை வைத்தே
1.அவர் முதல் பாதத்தில் உள்ளார் இரண்டாம் பாதத்தில் உள்ளார் என்று
2.இப்படிப் பல பாத நிலைகளை வரிசைப்படுத்தி… ஒவ்வொரு பாதமாக மேல் நிலைக்கு சென்று
3.அச் சிவனிடம் ஐக்கியப்படுவதாகச் சொல்கின்றனர்.

இப்பாதம் என்னும் நிலையென்ன…?

வெறியுணர்வுடன் செல்லும் ஆத்மாக்கள் அவ்வெறி உணர்வுடனேதான் ஆவி உலகில் இருந்தும் மற்ற உடல்களில் ஏறியோ மற்ற எண்ணங்களுடன் கலந்தோ இன்று நாம் பேய் பிசாசு என்று செப்பிடும் நிலையில் மிகவும் கீழ் நிலையான எண்ணத்துடனே தான் பெற்ற சக்தியைச் செயலாக்கியும் சுற்றிக் கொண்டுள்ளன.

சலிப்புடன் செல்லும் ஆத்மாக்கள்… அச்சலிப்பு நிலை கொண்டே பெரும் சோர்வுடனே ஆவி உலகிலும் சஞ்சரித்துக் கொண்டுள்ளன சில ஆத்மாக்கள்.

குடும்பப் பற்றுக் கொண்ட குடும்ப ஆசையுடன் செல்லும் ஆத்மாக்கள்… அக்குடும்பத்துடனே அக்குடும்பத்தை காக்கும் நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

தெய்வ பக்தியுடன் தன் எண்ணம் அனைத்தையும் பக்தி கொண்ட நிலையிலேயே செல்லும் ஆத்மாக்கள்… கோவில்கள் உள்ள இடத்திற்குச் செல்வோரின் எண்ணத்திற்கெல்லாம் ஆவி நிலையில் இருந்து கொண்டு… அப்பூஜை நிலைக்கே செல்பவரின் எண்ணத்தையும் செயலாக்கித் தானும் பூஜித்தே தன் எண்ணத்தை கலக்கவிட்டு வாழ்கின்றன சில ஆத்மாக்கள்.

இந்நிலையைத்தான் எந்தெந்த எண்ணம் கொண்டு ஆவி பிரிந்து ஆத்மா செல்கின்றதோ அந்தந்த நிலையை முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சூட்சுமமாக நம் முன்னோர் வெளியிட்டதை… இன்று பல நிலைப்படுத்திக் காண்கின்றோம்.

ஆனால் இவ்வெண்ணமுடன் எல்லாம் செல்லும் ஆத்மாக்கள் எவ்வளவு காலங்கள் ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருந்தாலும்… இப்பூமிக்கு எதாவது ஒரு பிறப்பிற்கு மீண்டும் மீண்டும் வரத்தான் செய்கின்றது.

“ஏழு ஜென்மம் எடுக்கின்றன…” என்று உணர்த்தினேன் முன் பாடங்களில். இவ் ஏழு ஜென்மத்தை மட்டிலும் எவ்வாண்டவன் செயல்படுத்தி அனுப்பினான் என்றுரைப்பீர்.

எவ்வாண்டவனும் செயல்படுத்திடவில்லை…!

இப்பூமியில் உயிர் அணுக்களாய் வந்து மோதும் அனைத்து உயிரணுக்களுமே மனிதப் பிறவியாய் வருவதில்லை.

அப்படியும் இம்மனிதப் பிறவியாய் முதல் பிறவிக்கு வருவதற்கு முன்னே பல நிலைகள் பெற்றுப் பல உயிராத்மாக்கள் மாறி மாறி… உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிய நாள் தொட்டு அவ்வுயிரணு ஈர்த்துச் சேமித்து கொண்ட சக்தியின் நிலை பெற்றுதான்… பல நிலைகள் மாறி மனிதக் கர்ப்பத்திற்கு இம்மனிதன் வருகின்றான்.

மனிதனாய் உருவம் பெற்று வரும் நிலையிலேயே இவ் ஏழு நிலைகளுக்குகந்த சக்திகளை ஈர்த்துதான் மனித நிலைக்கு வருகின்றான்.

தான் ஈர்த்த சக்தியினை என்றும் அழியாச் சக்தியாக்கி “ஒரே பிறவியிலேயே…” ஆண்டவன் நிலைக்குச் சென்ற அரும்பெரும் ஜோதிகள் பல உள்ளனர்.

தான் பெற்ற சக்தியே “இவ் ஏழு ஜென்மத்திலும் தவறவிட்டு” பல ஈன நிலைகளுக்குச் செல்லும் எண்ணத்தையும் பல ஆத்மாக்கள் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இன்று வாழும் வாழ்க்கை மட்டும் “எண்ணம் போல் வாழ்வு…” என்பதல்ல.

உயிரணுவாய் இவ்வுலகில் தோன்றிய நாள் தொட்டே இவ்வெண்ண சக்தியின் நிலை கொண்ட ஒவ்வொரு உயிரணுவின் சக்தி நிலையும் ஒவ்வொன்றுக்கும் கிட்டுகின்றது.

1.உயிரணுவாக நிலை பெற்ற நாள் கொண்டே… அதன் தொடராக
2.நாம் நம் நிலையைதனைச் செயல் கொண்ட வாழ்க்கையாக வாழ்வதுவே
3.இன்றைய நம் வாழ்க்கை நிலையும்…!

gateway to heaven

நம் உயிரே சொர்க்கவாசல்

 

நமது வாழ்க்கையில் எத்தனையோ பேருக்கு நாம் உதவி செய்கின்றோம். உதவி செய்தாலும் அவர்கள் தீமைகளை எல்லாம் கேட்டுணர்ந்த பின் தான் அந்த நன்மைகள் செய்கின்றோம்.

ஆனாலும் நம்மால் நன்மைகள் பெற்றோர் அந்த நன்மையை மறந்து நமக்கே தீமை செய்யும் நிலைகள் வரும் போது நாம் என்ன நினைக்கின்றோம்…?

1.இப்படி எல்லாம் அவர்களுக்கு உதவி செய்தேனே…
2.என்னை இப்படித் துன்புறுத்துகின்றார்களே…! என்று தான் எண்ணுவோம்
3.மீண்டும் மீண்டும் எண்ணி அதையே பிடிவாதமாகப் பிடித்து நமக்குள் வளர்ப்போம்.

ஆனால் இப்படி அவன் செயலை எண்ணி நமக்குள் உருவாக்கப்படும் பொழுது
1.அவன் செய்யும் தீமையின் உணர்வே நமக்குள் வந்து
2.நம் உடலுக்குள்ளும் தீமைகளாக விளைந்து விடுகின்றது என்பதனை நாம் மறந்துவிட்டோம்.

அவன் தீமை செய்கின்றான்…! என்று முதலில் உணர்கின்றோம்.

இருந்தாலும் அவன் இப்படிச் செய்கின்றான் என்று தொடர் வரிசையில் அவன் செயலை நாம் நுகரப்படும்போது அவன் உணர்வு நமக்குள் ஆகி தீமையின் அணுக்களாக உருவாகி நம் உடலையே நலியச் செய்து விடுகின்றது என்பதனைத் தெளிவாக்குகின்றது நமது சாஸ்திரம்.

இதனை மாற்ற வேண்டும் என்றால் நம் கண்ணின் நினைவை வானை நோக்கி எண்ணி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரை வேண்டி உணர்வினை நம் உடலுக்குள் பரப்ப வேண்டும்.

பல கோடிச் சரீரங்களைக் கடந்து தான் மனிதனாக இன்று வந்துள்ளோம். தீமையை அகற்றும் சக்தியாக மனித உடலை உருவாக்கிய உயிரை நாம் மதித்து நடக்கத் தெரிய வேண்டும்.

1.நம் உயிரை மதிக்கத் தவறினால்
2.நுகர்ந்த உணர்வு கொண்டு இந்த உடல் தான் நமக்குச் சொந்தம் என்ற நிலையில் வாழ்ந்தால்
3.அந்தந்த சந்தர்ப்பத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை எல்லாம் உயிர் உடலாக்கி
4.வேதனை உணர்வாக நம்மை நரகலோகத்திற்கே அழைத்துச் செல்லும்.
5.உடல் பற்றே மிஞ்சும்… இந்த நல்ல மனித உடலை இழக்கச் செய்யும்
6.மனிதனல்லாத உடலாக மாற்றியமைத்துவிடும் நமது உயிர்.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் எடுத்து வளர்த்து… அருள் ஒளியின் சுடராக நாம் மாறினால் நமது உயிரே சொர்க்கவாசலாக அமைகின்றது.

எதைக் கூர்மையாக எண்ணி வளர்த்தோமோ அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து சொர்க்கலோகம் அடைகின்றோம்.

ESWARAPATTAYA GURU

ஆத்மீக குருவிற்கு நாம் கொடுக்க வேண்டிய காணிக்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

புள்ளிகளோ கோடோ மையமாக வைத்துத்தான் கோலம் போடுகின்றோம். அவற்றை அழகு பெறவும் செய்கின்றோம்.

அதே போல் நம் ஆத்மாவை நாம் உணர்ந்து… மையமாக அதை வைத்து நம் எண்ணச் சிதறல்களுக்கு அடிமையாக்கிடாமல் வாழ்ந்திட வேண்டும்.

இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகளெல்லாம் உள்ளனவோ அதைப் போலவே நம் உயிர் ஆத்மாவிற்கும் அனைத்து சக்திகளும் உள்ளன என்ற உண்மைகளை உணர்ந்திட வேண்டும்.

1.இப்பூமிக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு…
2.பூமிக்கு மேலே எந்த ஒரு பொருளைத் தூக்கிப் போட்டாலும் அதை எந்தக் கால அளவில் பூமி தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றதோ
3.அந்த நிலை போலவே நம் உயிராத்மாவும் ஈர்க்கும் காந்த சக்தி கொண்டதாகத்தான் உள்ளது.

இன்று நாம் நம் செயற்கையில் ஓடவிடும் அனைத்து இயந்திர நிலை கொண்ட சாதனங்களுக்கும்… அதற்குகந்த சக்தி நிலையை வைத்து மற்ற சக்தியை அதனுடன் மோதலிடும் பொழுதுதான்… நாம் அமைக்கும் இயந்திர நிலைகள் செயல்படுகின்றன. அச்சக்தியே செயல்படுகின்றது.

இந்த நிலை போலவே நம்முள் உள்ள இக்காந்த சக்தி கொண்ட அனைத்து சக்தி நிலையையும் ஈர்க்கும் இவ்வாத்மாவைப் பெற்ற நாமும் பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… என்று தானாக இயங்கும் இயந்திரமாக இவ்வுடலை எண்ணிடலாகாது.

இவ்வுலகம் எந்தெந்த அமிலங்களை எல்லாம் ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றதோ அவற்றின் நிலைப்படுத்திய சக்தியனைத்தும் இவ்வுடலுக்கும் உண்டென்பதை உணர்ந்து
1.நம் ஆத்மாவின் உன்னத சக்தியை விரயம் செய்திடாமல்
2.நம் அறிவாற்றலை மென்மேலும் வளர்த்து
3.நம் உடலில் அண்டவிடும் பிணிகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய நிலையில் வாழ்ந்திடவும்
5.கோபம் குரோதம் சலிப்பு இவற்றிலிருந்து விடுபட்டு சாந்தம் அன்பு ஆசை என்ற ஆத்மிக நெறியை அனைவரும் ஈர்த்து
6.நமக்கு வழி காட்டும் ஆண்டவன் நிலைபெற்ற சப்தரிஷிகளின் அருளாசியைப் பெற்றிடல் வேண்டும்.

இந்த வளர்ச்சியில் இவ்வுலக உண்மைகளை மட்டுமல்ல… இவ்வுலகைப் போலுள்ள எல்லா மண்டலங்களின் நிலையையும் அதனதன் ஈர்ப்பு சக்தியையும் அறிந்திடலாம்.

ஒவ்வொரு மண்டலங்களுக்கும் அதற்குகந்த தனித்தன்மை உண்டு ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லை.

இன்றைய நம் வாழ்க்கை வழி முறைகள் அனைத்துமே பிறர் எழுதிய… பிறர் சொல்லும் நிலையைக் கேட்டு… வாழ்ந்திடும் நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆத்மீக நெறிக்கே பிற ஏடுகளையும் பழங்காலக் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். வாழ்க்கையின் கால நிலையை அதிலே விரயமாக்கி பிறர் நிலை அறிந்து வாழும் எண்ண வேட்கை கொண்டதாகவே உள்ளது.

1.சக்தியின் சக்தி ஆத்மா தான் நாமும் என்றுணர்ந்து
2.நம்முள்ளேயே நம் சக்தியை வளர்த்து
3.அனைத்து நிலையையும் நாமே அறிந்திடும் ஆற்றலையும்… உணரும் சக்தி நிலையையும் நாம் பெற வேண்டும்.

வழி அறிந்திட குரு வேண்டும்… அக்குருவின் சக்திக்கு மேல் சக்தி பெறும் சக்திவானாகச் செல்வதுதான் குருவாக நாம் ஏற்பவருக்கு நாம் அளிக்கும் காணிக்கை…!

ஒவ்வொருவரும் தனக்குகந்த ஈர்ப்பு சக்தியை உணர்ந்து ஒரு நிலை பெற்று… “உயிரோட்டம் கொண்ட சக்தி ஜெபம் பெற்றிடுங்கள்…!”

மணிக்கணக்கில் அமர்ந்து எடுப்பது தியானமல்ல… வாழ்க்கையே தியானமாக்க வேண்டும் 

தீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்

உயிருடன் நாம் ஒன்ற வேண்டியதன் அவசியம்

big dipper - sapdharishi mandalams

சப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…!

 

நம் சூரியனுடைய நிலைகள் அழிந்தாலும் இந்தச் சப்தரிஷி மண்டலம் ஒருக்கிணைந்து அகண்ட வெளிப்பாதைக்குச் (COSMOS) செல்லும் திறன் பெற்றது

அகண்ட வெளிப்பாதைக்குச் சென்றாலும் நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி ஒன்று சேர்த்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் நிலைகள் கொண்டது… அழிவே இல்லாது என்றும் நிலையானது தான் சப்தரிஷி மண்டலம்.

ஆகவே பரிணாம வளர்ச்சியில் மனிதனானபின் முழுமைப்படுத்தும் உணர்வுகள் கொண்டு தீமைகளைச் சமப்படுத்தும் நிலைகள் பெற்றவர்கள் அது தான் பரசுராம்.
1.எண்ணங்களால் சமப்படுத்தி
2.எண்ணத்தின் உணர்வை ஒளியாக்கி
3.உணர்வின் தன்மை என்றும் ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதி பெற்றது.

ஆகவே.. நாம் இந்த மனித உடலை இழப்பதற்கு முன் அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டி இந்த உடலை விட்டு அகன்றால் என்றும் பதினாறு என்ற நிலையில் அகண்ட வெளியில் நாம் பிறவியில்லா நிலை கொண்டு மகிழ்ந்து வாழும் அந்தப் பேரின்பப் பெருவாழ்வு பெற முடியும்.

அந்த நம்பிக்கையுடன் வாழ வேண்டும்…!

1.எத்தனையோ கோடிச் செல்வம் இருப்பினும்
2.கோடி நண்பர்கள் இருப்பினும் அந்தக் கோடி நண்பர்கள் பால் நாம் பழகியிருப்பினும்
3.அந்த உணர்வுகள் எல்லாம் நாம் இந்த உடலில் வாழும் வரை தான்… என்றும் நிலைத்ததல்ல…!

இந்த உடலில் நாம் எத்தகைய நிலைகள் அதிகமாக வளர்த்திருக்கின்றோமோ அதன் வழியில் தான் இந்த உடலை விட்டு உயிரான்மா செல்கின்றது.

ஆகவே நாம் சேர்க்க வேண்டிய அழியாத செல்வம்… அருள் செல்வமான அந்தத் துருவ மகரிஷியின் நிலைதான்.
1.நம்முடைய பற்று துருவ நட்சத்திரம்தான் என்ற நிலையில் முடிவாக்கி
2.இந்த வாழ்க்கையில் என்றும் அழியாப் பருவம் பெற வேண்டும் என்று
3.இந்த உடலில் சேர்த்தால் அது அழியாத செல்வமாக வருகின்றது.

இந்த உடலைவிட்டு நாம் எந்த நேரம் சென்றாலும்… அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் பருவத்தைப் பெற வேண்டும்.

நமக்குள் அந்த அருள் வழியின் தன்மையை நாம் கூட்ட கூட்ட கூட்ட அதை இரத்த நாளங்களில் பெருக்க பெருக்க அனைத்தும் ஒன்றென்ற நிலையில் ஒளியாகின்றது.

அதனின் தொடர் வரிசையில் நம் எண்ணங்களை அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும். காலம் குறுகி இருப்பதினால் இவ்வாறு சொல்கிறேன் (ஞானகுரு).

முன்பு சூரியனைப் பார்க்கச் சொன்னேன்… சூரியனின் ஒளிக் கதிர்களைப் பார்க்கச் சொன்னேன். அக்காலம் அது வித்தியாசமாக இருந்தது.

சூரியனில் நச்சுத் தன்மைகள் அதிகரித்து விட்டது என்ற காரணத்திற்காகத்தான் இனி அதிலெல்லாம் தொடர்பு கொள்ளக் கூடாது என்று நிறுத்தியது.

காலங்கள் நெருங்கி வரப்படும் பொழுது…
1.இனி நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அந்தத் துருவ நட்சத்திரத்துடனே என்ற நிலையில்
2.அதனுடன் ஒன்றி வாழ்ந்திட வேண்டும் என்ற நிலைக்கு ஒவ்வொர்வரும் வருதல் வேண்டும்.

இந்தப் பூமியில் அகஸ்தியன் உருப்பெற்றதன் நிலையும் அவன் துருவனான நிலையும் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான இந்த நிலை இருப்பதனால் அந்த அடிப்படை வரிசையிலேயே நாம் நுகர்ந்து நம் உடலில் இரத்த நாளங்களில் அந்தச் சக்திகளைப் பெருக்குவோம்.

“இந்த வரிசைப்படுத்தி…” நம் குரு காட்டிய அருள் வழியில்
1.அகஸ்தியன் பாதையில் நாம் செல்வோம்
2.வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அடக்குவோம்
3.என்றுமே ஒளிச் சுடராக வாழ்வோம்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் என்றும் ஒன்றி வாழ்வோம் என்று நிலைப்படுத்தி
5.நாம் அந்த நிலையான உணர்வுடன் ஒன்றியே வாழ்வோம் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

true divien marg

உண்மையான ஞானமார்க்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஞான மார்க்கத்துக்குச் சென்ற அவ்வாத்மீக வழியின் ஞானத் தொடருக்கு வந்தவர்களும் சித்தர்களும் முனிவர்களும் அவர்கள் தியானம் பெறுவதற்கு மலைக் குகையையும் சோலைகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் இப்பூமியின் மட்டத்திற்கு மேல் உயர்ந்த இடமான மலைச் சிகரங்களுக்கும் சென்று அமர்ந்து தியானம் புரிவதின் உண்மை நிலையென்ன…?

இன்று நாம் வாழ்ந்திடும் ஊர்களிலும் நகரங்களிலும்… இம்மனித ஜீவாத்மாக்கள் நிறைந்து வாழ்ந்திடும் இடத்திலும்… மற்ற ஆலைகள் உள்ள இடங்களிலும்… அங்குள்ள காற்று…
1.அங்கு வாழும் மக்களின் அவர்கள் ஈர்த்து வெளியிட்ட எண்ண நிலை கொண்ட சுவாசமாகவும்
2.ஆலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் புகைகளாகவும்
3.காற்றுடனே அந்நிலை கொண்ட அவ்விடத்திலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

அந்நிலையில் அமர்ந்து தியானம் பெறும் பொழுது அவர்களின் எண்ணமுடன் இவ்வெண்ணத்தின் அலைகள் மோதும் பொழுது அவர்கள் ஈர்க்கும் சக்தி நிலையில் சில தடங்கல்கள் ஏற்படுகிறது.

ஆகையினால் இக்காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் தாவர வர்க்கங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமர்ந்து தியானம் செய்கின்றனர். அப்பொழுது அத்தியானத்திற்குப் பல நல்லுணர்வுகளும் அவர்களின் ஆத்மாவிற்கு நற்பயனும் கிட்டுகின்றன.

இதைப் போன்றே இப்பூமி மட்டத்திற்கு மேல் ஓர் அளவு கொண்ட உயரத்திற்கு மேல் மலைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது அசுத்தமான காற்று அவர்கள் செய்யும் தியானத்திற்கு வந்து அண்டுவதில்லை.

மலைக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுதும் இப்பூமிக்கு அடியில் இவ்வசுத்தக் காற்று வந்து தாக்குவதில்லை. இதன் உண்மை நிலை இதுவே. “வாழ்க்கையிலிருந்து மீண்டு துறவறம் கொண்டவர்களினால்” இந்நிலைக்குச் சென்று இத்தியானம் பெறுவது எளிது.

1.ஆனால் வாழ்க்கையுடன் ஒன்றிய நம் நிலைக்கு
2.நம் வாழ்க்கையையே… நாம் வாழும் நிலையையே தியானமாக்கி
3.வாழும் பக்குவ நிலைதான் நமக்குகந்த உன்னத நிலை.

உடல் உபாதை உறும் பொழுது எந்நிலை கொண்ட உபாதை பெற்றோமோ அந்நிலையை அடக்கும் அதற்கு மேல் சக்தி கொண்ட வீரியமுற்ற மருந்தை உண்டால்தான் அந்த உபாதை மறைகிறது.

அதைப் போல் இவ்வாத்மீக வழியில் நல்லுணர்வு கொண்ட ஜெப நிலைக்கு வரும் பொழுது இக்காற்றுடன் கலந்துள்ள நல் சக்திக்கு மேல் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து நாம் விடுபட்டுப் பழகுதல் வேண்டும்.

நாம் செல்லும் பாதையில் பல மேடு பள்ளங்கள் வரத்தான் செய்யும்…!

பள்ளம் உள்ள இடத்தையும் கல் தடுக்கும் இடத்தையும் அவற்றில் விழுந்தோ தடுக்கியோ செல்லும் அபாயத்திலிருந்து எப்பாதை சரியான பாதை என்று நாம் உணர்ந்து செல்கின்றோமோ அதைப் போன்றே
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து நாம் மீண்டு சென்று
2.ஆத்மீகப் பாதையை அடையும் ஞான மார்க்கம் தான் உயர்ந்த ஞான மார்க்கம்.

இம்மார்க்கத்தை வெறுப்புடனோ… சலிப்புடனோ… சஞ்சல நிலை கொண்ட நிலையிலோ… நம்மைத் தாக்கிடும் இன்னல்களிலிருந்து பயந்தோ… செல்வது முறையல்ல…!

1.வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்…
2.அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு ஆத்மீக வழிக்குச் செல்வதுதான்
3.நாம் செல்லும் ஞான மார்க்கத்திற்கு உயர்ந்த நிலை.

இந்த ஞான மார்க்கத்தை நம் முன்னோர் பல நிலைகளில் சூட்சுமம் கொண்டு இவ்வுலகம் முழுவதுமே வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்று வழி நடந்து வந்திடுபவர் “கோடியில் ஒருவராகத்தான்…!” இன்று இவ்வுலகில் உள்ளனர்.

ஞான வழியையும் இத்தெய்வீக வழியையுமே இம் மனித ஜென்மங்கள் அடைய முடியாத நிலை…! என்று உணர்ந்து அந்த வழிக்குச் செல்வதற்கே பயந்த நிலை கொண்டு வாழ்கின்றனர்.

உயிரணுவாய் மனிதனாகத் தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவராக வணங்கிடும் பல பல தத்துவ ஞானிகளும்…!

அவர்களைப் போன்றே… நாமும் நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி அச்சக்தியின் சுடரின் தொடர்பினை நம்முள்ளும் ஏற்றி நற்சக்திகளாய் ஆத்மீக நெறி கொண்ட ஞான வாழ்க்கையின் நெறியை நம் வழியாக ஏற்று வழிப்படுத்தியே சென்றிடுவோம்.

thunder and lightnings

இடி மின்னல்கள் எப்படி வருகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்கின்றனர். பால்வெளி மண்டலமும் பல மண்டலங்களில் இருந்து வெளிப்படும் சக்தியினைத் தன்னுள் வைத்துக் கொண்டேதான் சுற்றிக் கொண்டுள்ளது.

இப்பால்வெளி மண்டலத்தில் இருந்து மழை வரும்போது இடியும் மின்னலும் எந்நிலையில் வருகின்றன…?

பால்வெளி மண்டலத்தில் பல சக்திகள் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் மேகம் அடர்ந்து மழை பெய்யும் பொழுது பல அமில சக்திகள் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் மழைத் துளிகள் அதன் மேல் பட்டவுடன் இரண்டு வெவ்வேறு நிலை அமிலங்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதும் பொழுது ஏற்படும் நிலைதான் இடியும் மின்னலும்… மழை வரும் காலங்களில் ஏற்படுவதெல்லாம்.

இரண்டு தன்மை கொண்ட சக்திகள் மோதுண்ட நிலையில் ஒன்றை ஒன்று ஏற்காத நிலையில் பூமி எப்படிப் பூகம்பத்தை நிலநடுக்கத்தை வெளிப்படுத்துகின்றதோ அந்நிலை போலத்தான் இப்பால்வெளி மண்டலத்தில் இந்தச் “சத்ரு… மித்ரு” நிலை மோதுண்ட நிலையில் இடியும் மின்னலும் வருவதெல்லாம்.

இடியும் மின்னலும் வரும்போது பூமியில் உள்ள எவ்வமிலத்தன்மை கொண்ட சக்தி இப்பூமியில் அது தாக்கும் இடத்தில் உள்ளதுவோ அதனுடன்தான் இம்மின்னலுடன் வெளிவரும் அமில சக்தி வந்து கலக்கின்றது.

சில வகை மரங்கள் இவ்வமிலத்தன்மை கொண்டதாக உள்ளன. அவற்றின் மேல் இந்த மின்னல் தாக்கும் பொழுது அம்மரம் இதனைத் தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றது. தன் சக்திக்குகந்த அணு சக்தியைத் தான் அச்சக்தியின் நிலை கொண்ட மரங்கள் ஈர்க்கும்.

எப்படிப் பூமியில் பல நிலை கொண்ட தாவரங்களும் கனி வர்க்கங்களும் திரவங்களும் இக்காற்றினில் உள்ள அணுக்களைத் தனக்கு வேண்டியதைத் தன் நிலைக்கு ஒத்த அணுவை… தான் ஈர்த்து வளர்ந்து கொண்டே உள்ளனவோ அவை போல் தான் இப்பால்வெளி மண்டலத்திலும் சுற்றிக் கொண்டுள்ள அமில சக்திகளும் அதனதன் இனத்துடன் சுற்றிக் கொண்டே உள்ளன.

அதன் மேல் நீர்நிலை படும்போது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் வெளிப்படுகின்றது இடியுடன் கூடிய மின்னல்.

இம்மின்னல் வரும் பொழுது…
1.ஓர் இடத்தில் அப்படரும் ஒளி ஆரம்பித்தவுடன்
2.ஒரே நேர் கோடுபோல் நீண்டு அப்பட படக்கும் ஒலி ஒலித்துக் கொண்டே
3.அச்சக்திகள் உள்ள தூரம் வரை அப்படப்படக்கும் ஒலியுடன் கூடிய ஒளியின் மின் காற்றும் ஒலித்து வருகின்றது.

அம்மாறுண்ட சக்திகள் மோதுண்டு வரும் வரைதான் இடியின் ஒலியும் மின்னலின் ஒளியும். இடி இடிக்கும் பொழுது அதிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் இப்பூமிக்குள் வந்து… “அதன் சக்திகுகந்த தாவரங்களின் நிலையுடன் வந்து கலந்து விடுகின்றது…”

அதிகமான மேகங்கள் கூடி மழை பெய்யும் காலங்களில் நம் முன்னோர்கள் மரங்களின் கீழ் நிற்கக் கூடாது என்று சொல்லி வந்ததன் உண்மை இது.

இன்றைய விஞ்ஞானத்தில் மின்னலைத் தாங்கும் கருவிகளைக் கண்டுணர்ந்து மின்னலில் இருந்து மனிதரைக் காக்கும் நிலையில் அச்சக்தியை ஈர்க்கும் கருவிகளைப் பதித்து வைத்துள்ளார்கள்.

சில வகைத் தாவரங்களுக்கு இம்மின்னலை ஈர்க்கும் சக்தி நிலையுண்டு. மனிதரின் மேலும் மற்ற ஜீவராசிகளின் மேலும் மாடு மனை இவற்றின் மேலும் விழுந்தால் அந்நிலையில் தாங்கும் சக்தி இருப்பதில்லை.

ஆனால் இந்நிலையில் சக்தி கொண்ட தாவரத்தின் மேல் அம்மின்னலின் ஒளிக்கதிர்கள் தாக்கினாலும் அவை ஈர்த்தே வளர்கின்றன. சில தாவரங்கள் மரங்கள் இந்த இடி மின்னல் பட்டவுடன் கருகும் நிலையும் பெற்றுள்ளன.

இடியும் மின்னலும் எந்த நிலை பெற்று வருகின்றதோ அந்த நிலை போலத்தான் இவ்வான மண்டலங்களில் பல பல சக்தி நிலைகள் மாறு கொண்டு சுற்றிக் கொண்டுள்ளன.

soul-is-sole-god

மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகள் காலத்தால் மறைந்ததன் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்

 

பக்தி எது என்று முழுமையாக உணராது அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம். ஆன்மீக வாழ்க்கை என்றாலும் இன்று அந்த ஆன்மீகமும் அரசியல் வாழ்க்கையாகவே மாறிக் கொண்டு வருகின்றது.

ஒருவன் ஒரு ஆன்மீகத்தைப் பற்றிப் பேசினால் மற்றவர் ஒன்னொன்றைச் சொல்ல அதற்கும் இதற்கும் கலக்கம் உண்டாகின்றது.

மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிகளைக் காலத்தால் அரசர்கள் கைப்பற்றிக் கொண்டு அதை எல்லாம் அவர்களுக்குகந்ததாக மாற்றி விட்டனர்.

உதாரணமாக நம் ஊரிலே ஒரு நல்ல பேச்சாளி இருக்கின்றார். அதே போல் ஒரு போக்கிரியும் இங்கே இருக்கிறான் என்றால் திறமைசாலியான பேச்சாளியாக இருப்பினும் இந்தப் போக்கிரியைக் கண்டு அஞ்சித் தான் இருக்க வேண்டும்… அவனுக்கு ஒடுங்கித் தான் பேச முடியும்.

1.இதைப் போன்ற போக்கிரியாக இருந்தவர்கள் தான் அன்றைய அரசர்கள்…
2.இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது
3.அவனை எதிர்ப்போரை வீழ்த்துவதுதான் நியாயம் தர்மம் என்ற நிலைகள் அரசனுடைய வாழ்க்கை.

அன்றைய அரசன்… தான் வாழ தனக்கென்ற ஒரு மதத்தை உருவாக்குகின்றான். அவன் இயற்றும் சட்டத்தை அவனை அணுகிய மக்கள் அதை அதைப் பதிவாக்கினால் அந்தப் பதிவே கடவுளாகின்றது.

1.அவர்கள் இட்ட சட்டத்திற்கு மாறாக நடந்தால்
2.இது தெய்வத்தின் குற்றம் அல்லது ஆண்டவனின் குற்றம் என்று சட்டங்களை இயற்றப்பட்டு
3.அரசன் காட்டிய நெறிகளுக்கு மாறாக நடந்தால் அவனுக்கு மரண தண்டனை கொடுத்தனர்.

இப்படித் தான் ஞானிகள் அல்லது மகரிஷிகள் அவர்கள் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளை மக்களுக்குக் கிடைக்காது தடைப்படுத்தித் தன் சுயநலங்களுக்குக் கொண்டு சென்று விட்டனர்.

இன்றைக்கும் பார்க்கலாம்.. “வள்ளுவன் குறள் வையகமெல்லாம் ஓங்கி வளர வேண்டும்…” என்று சொல்வார்கள்.

ஆனால் திருவள்ளுவர் செய்த காரியம்…
1.அரசர்கள் தன்னாட்சியாக செயல்படும் நிலைகளில் இருந்து மீட்டிட
2.மனிதன் மனிதனை எப்படி மதிக்க வேண்டுமென்ற நிலையைத் தெளிவாக்கினார்.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு…” என்ற பாடலைப் பாடியுள்ளார்.

ஏனென்றால் அனைத்திற்கும் மூலமாக… முதலாக உள்ளது… இவ்வுயிரே தான் காரணம்…! என்ற நிலைகளில் அவர் அந்தப் பாடலின் மூலம் பதிவாக்கினார்.

இதை எல்லாம் அவர் அன்றே சொல்லியிருந்தாலும் அன்றைய அரசர்கள் சட்டப்படி இப்படிச் சொல்வோரைக் குற்றவாளி என்றே பறைசாற்றும் நிலைகள் வருகின்றது.

ஞானிகள் கொடுத்தது எல்லாம் இப்படித்தான் மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட நிலைகள் கொண்டு தான் நாம் இன்று நல்லதைத் தேடிக் கொண்டே உள்ளோம்.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய உண்மைகளை உணர்த்துகின்றோம்.

ultimate spirituality

உயிருக்குள் உலகமும் உலகுக்குள் உயிரும் – ஈஸ்வரபட்டர்

இன்று நாம் வாழும் வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவும் நாம் எடுக்கும் சுவாசமும் விஷம் கலந்ததாக உள்ளது. அதனால் பல புதிய வியாதிகளை நாம் ஏற்க வேண்டிய நிலையும்… அது நம்மைத் தாக்கும் நிலையும் உள்ளது.

இவை தவிர இன்றைய இக்கலியில் வாழ்ந்த நம்மில் வாழ்ந்த உடலில்லா ஆத்மாக்களின் எண்ணத்தில் செயலில் இருந்து நம்முடன் வாழும் மனிதர்களின் எண்ணத்தில் செயலில் இருந்தும் தப்ப வேண்டியுள்ளது.

இவைகளின் தாக்குதலில் இருந்தெல்லாம்…
1.நம்மையும் நம் மனோநிலையையும் நம் உடலையும் காத்திட வேண்டும் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து
2.ஆத்மீக வழியைப் பின்பற்றி வாழும் நிலைக்குப் பக்குவம் பெற்று வந்திடல் வேண்டும்.
3.நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி.

ஓங்கி நிற்கும் “தனியான தெய்வம் ஒன்றில்லை…” என்பதனை உணர்ந்து… நாமும் நம்மைப் போல்தான் இவ்வுலகமும் மற்ற அனைத்து உலகங்களுமே என்றுணர்ந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் அதனதன் உடல் தன்மை எந்தெந்த நிலை கொண்டெல்லாம் ஒவ்வொரு நாளும் செயல்படுகின்றதோ அந்நிலை கொண்டே இப்பூமித்தாயும் உயிருடன் உணர்வுடன் வாழ்கின்றாள்.

இப்பூமியில் வளர்ந்து வாழும் நாம் ஜீவன் கொண்டு எப்படி வாழ்கின்றோமோ அப்படியே தான் இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்… வளர்க்கின்றாள்… காக்கின்றாள்… அனைத்து சக்தியையும் வளர விடுகின்றாள்…!

உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கும் எந்நிலை கொண்ட உணர்வுத் தன்மை உள்ளதோ அந்நிலையின் உணர்வுடனே இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்.

இவ்வுலகத் தாயின் உணவாக இவ்வுலகத் தாய்க்குச் சூரியனிலிருந்தும் மற்ற மண்டலங்களிலிருந்தும் கிடைக்கப் பெறும் அமுது தான் பல சக்திகள் கொண்ட இக்காற்றினில் வந்து சேரும் இப்பூமித்தாய் ஈர்க்கும் பல அணுக்களும் நீருமே.

இப்பூமித்தாய் உண்ணும் நீரும் அணுவும்தான் அவள் உண்டு அந்த அமுதை நமக்கும் அளிக்கின்றாள். அவள் பெற்ற செல்வங்களுக்கு இந்நீர் இல்லாவிட்டால் இவ்வுலகுக்கே ஜீவனில்லை.

இவ்வுலகிலுள்ள உலோகங்கள் தங்கம், தாமிரம், வைரம், நிலக்கரி இன்னும் பல நிலை கொண்ட உலோகங்களும் கல்லும் மண்ணும் மரமும் செடியும் எவையுமே
1.இப்பூமியிலிருந்து வளரும் எவையுமே நீர் இல்லாவிட்டால் வளர்ந்திடாது.
2.இப்பூமியும் நீர் இல்லாவிட்டால் வாழ்ந்திட முடியாது
3.நீரையே ஜீவனாகப் பெறும் இவ்வுலகிற்கு உணரும் தன்மை அனைத்தும் உண்டு.

இவ்வுலகில் பல இடங்களில் எரிமலையும் வெளிப்படுகின்றது பனி மலையும் வளர்கிறது பாலைவனங்களும் உள்ளன. “பாலைவனங்களுக்குச் சக்தி இல்லை…” என்று எண்ண வேண்டாம்.

பாலைவனங்கள் தான் மற்ற நிலையில் உள்ள சோலைகளுக்கு உயிர் நாடி. சோலைவனங்களும் மலைகளும் கடலும் சில பள்ளத்தாக்குகளும் இப்படி இவ்வுலகிலேயே ஒன்றுபோல் இல்லாமல் ஒவ்வொர் இடத்திற்கும் ஒவ்வொரு மாறுபட்ட தன்மைகளை இப்பூமித்தாய் தான் ஈர்த்து வெளிக்காட்டிடும் நிலையில் வளரச் செய்கின்றாள்.

பல சக்திகள் இக்காற்றில் சுற்றிக் கொண்டே உள்ளன.

அனைத்து சக்திகளுமே மனிதனுக்கெப்படி துடிப்பு நிலை சுவாச நிலை ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளனவோ அந்நிலை போல்தான் இப்பூமியும் ஈர்த்துத் துடிப்புடனே வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

இவ்வுடலுக்கு நாம் உண்ணும் ஆகாரங்கள் அமிலமாகி அவை ஜீரணித்து நமக்கு வேண்டிய சக்தியைப் பெற்று நமக்கு வேண்டாத நிலையை வெளிப்படுத்துகின்றது.

நாம் எடுத்துக் உண்ட உணவையே இவ்வுடல் ஏற்று உதிரமாகவும் சிறுநீராகவும் மலமாகவும் காற்றாகவும் வியர்வையாகவும் ஆக்குகின்றது. இவற்றில் உதிர சக்தியை மட்டும் உடல் ஏற்று மற்றவைகளை வெளிப்படுத்துகின்றது.

அந்நிலை கொண்டுதான் இப்பூமித்தாய் ஈர்க்கும் நீரையும் அணுவையும் எந்தெந்த நிலைகளில் எச்சக்தி கொண்ட அணுவான அமிலத்தை ஈர்த்தனளோ அவ் ஈர்த்த சக்தியின் நிலை கொண்டே அச்சக்தியின் நிலை பெற்று அந்நிலையில் வளர்ச்சி பெறுகிறது.

அப்படி வளரும் நிலைகேற்ப சக்தியை அளிக்கும் (கொடுக்கும்) நிலையில் இப்பூமியின் உள் நிலையில் பல நிலை கொண்ட அமிலச் சக்திகள் தங்கி ஈர்க்குங்கால் அந்நிலையில் அவை சுற்றிக் கொண்டுள்ள தன்மையில் ஒரு சக்தியுடன் ஒரு சக்தி என்பது ஒரு நிலை கொண்ட அமிலத்துடன் மற்றொரு சக்தி நிலை கொண்ட அமிலம் மோதும் பொழுது (சத்குரு, மித்குரு நிலை) ஒன்றுக்கொன்று ஏற்காத நிலையில் அவை வெடிக்கும் தன்மையில் தான் பூமி அதிர்வு ஏற்படுவதெல்லாம்.

நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முதலிலேயே இன்றைய விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கும் நிலையை உணர்ந்துள்ளார்கள்.

ஆனால் இந்நிலை அதிர்வு பூகம்பம் இவை எல்லாம் எந்நிலையில் ஏற்படுகின்றன…? என்பதனை உணர்த்தி விட்டால் இனி விஞ்ஞானத்திற்கு இன்னும் பல வழிகள் புலப்பட்டிடும்.

1.பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து சக்திகளையும்
2.இக்காற்றிலிருந்து இழுத்துத் தன் சுவாசத்திற்கு ஈர்த்திடும் ஆற்றல்
3.இந்த உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உண்டு.

ஆனால் அவையவை எடுத்த சக்தியின் நிலை கொண்டு குறைந்தும் அதிகரித்தும் மாறுபட்ட தன்மையுண்டு. உலோகங்களில் மாறுபட்ட தன்மை உள்ளது போல் ஜீவராசிகள் ஈர்த்து வெளிபடுத்திடும் சக்தியிலும் மாறுபட்ட சக்தி நிலையுள்ளது.

ஒன்று போல் ஒன்றில் சக்தி நிலை ஒன்றுபட்டு எவற்றுக்குமே இருந்திடாது. கனி வர்க்கங்களிலும் ஒரே மரத்தில் காய்க்கும் கனிக்கும் மாறுபட்ட சுவையும் மாறுபட்ட சக்தியும் மாறுபட்ட அளவு நிலையும் இருந்திடும் சிறிதளவேனும்.

ஒரே செடியில் பூக்கும் புஷ்பங்களின் நிலையும் இவை போன்றே. இவ்வுலக நிலையும் இவை போன்றே.

சுற்றிக் கொண்டே உள்ள உலகில் அவை ஈர்த்து வெளிப்படுத்திய சக்தியில்தான் எத்தனை மாற்றங்கள்…? எத்தனை நிலை கொண்ட தன்மைகள்…?

இவை போல்தான் ஒவ்வொரு மண்டலத்தின் நிலையுமே.

இவ்வான மண்டலத்தின் நிலையும் ஜீவன் கொண்டேதான் சுற்றிக் கொண்டு உள்ளது. பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்றெல்லாம் செப்புகின்றோம். எவை சூனிய மண்டலம்…?

1.சூனிய மண்டலம் என்ற தனித்த மண்டலம் ஒன்றில்லை.
2.இப்பால்வெளி மண்டலம் என்ற மண்டலத்திற்கே ஜீவன் உண்டு.

guru and disciple

குரு காட்டிய நெறியை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் – நடந்த நிகழ்ச்சிகள்

 

அன்று எஸ்.எஸ்.எம். இருக்கும் போது உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு ஆன்மீகம் பற்றி விளம்பரம் செய்தார், பத்திரிக்கை நிருபர்கள் எல்லோரையும் கொண்டு வந்துவிட்டார்.

ஆன்மீகத்தில் உள்ள பெரிய பெரிய ஆள்களையும் அங்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டார்.

சாமி… நீங்கள் சும்மா இருங்கள்… எல்லாவற்றுக்கும் விடை அளிக்கிற மாதிரி மட்டும் எனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து விடுங்கள்…! என்றார்.

தன்னைப் பெரிய மனிதனாகக் காட்டுவதற்காக வேண்டி என்னிடம் இப்படிச் சொல்கிறார். நான் பேசாமல் “கம்…” என்று உட்கார்ந்து விட்டேன்.

வந்தவர்கள் என்ன கேட்பார்கள்…? எப்படிக் கேட்பார்கள்…! என்று யாருக்குத் தெரியும்…? அவர்கள் கேட்பதற்கெல்லாம் இவரால் (எஸ்.எஸ்.எம்.) ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

நான் தான் எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் அல்லவா.. சொல்லுங்கள்…! என்றேன்.

நீங்கள் சொல்லிக் கொடுத்ததைக் கேட்கவில்லை… வேறு ஏதோ கேட்கிறான். இதற்கு என்ன பதில்…? என்று கேட்கிறார்.

நீங்களே சொல்லுங்கள்… உங்களுக்கு விடை வரும்…! என்றேன்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் தொண்ணூறு வயதுக்காரர் கேள்வி கேட்க ஆரம்பித்தார். பதில் அவரால் (எஸ்.எஸ்.எம்.) சொல்ல முடியவில்லை.

அதே சமயம் என்னைப் பார்த்ததும் சாதாரணமாக நினைத்து விட்டார். அப்புறம் அவரிடம் (தொண்ணூறு வயதுக்காரரிடம்) நான் கேட்டேன். கிரேதா யுகம் எது…? திரேதா யுகம் எது…? துவாபர யுகம் எது..? கலியுகம் எது…? கல்கி யுகம் எது…?

அது நாலாயிரம் ஆண்டு… அது ஐயாயிரம் ஆண்டு… பத்தாயிரம் ஆண்டு… என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

இது எல்லாமே உங்களுக்குள் இப்பொழுது நடக்கிறது…! என்றேன்.

1.நீங்கள் கவர்ந்து கொண்ட உடல் (கிரகித்துக் கொண்டது) கிரேதா யுகம்…
2.இந்த உடலுக்குள் திரேதா யுகத்தில் (திரேதா என்றால் சரீரம்) சுவையின் உணர்வுக்கொப்ப (சுவாசித்தது) எண்ணங்கள் வருகிறது…
3.துவாபர யுகத்தில் சாந்தமாக நாம் இருந்தாலும் ஒரு வெறுப்பான உணர்வு வரப்படும் போது அது நம்மை மாற்றுகிறது கலி.
4.அதாவது சாந்தமாக இருந்தாலும் நல்லதைத் தெரிந்து கொள்ளும் நிலையில் விஷம் என்ற நிலைகள் மோதும் போது இருள் சூழ்கிறது. இது கலி யுகம்.

5.இதிலிருந்து மீள வேண்டும் என்று வரும் போது கல்கி யுகம். தீமையை நீக்கக்கூடியது ஆறாவது அறிவு கார்த்திகேயா. இதை வைத்து மீளக்கூடியது கல்கி யுகம்.

உயிர் ஒளியாக இருக்கிறது. எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக வந்த பிற்பாடு எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடியது நம் ஆறாவது அறிவு கார்த்திகேயா.

ஆகவே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தீமை என்று தெரிந்து அதை நீக்கி ஒளியாக்கி ஒன்றாகச் சேர்க்கும் போது கல்கி யுகம்.

அப்புறம் ரிக் சாம அதர்வண யஜூர் என்ற நான்கு வேதங்களுக்கும் விளக்கம் கொடுதேன்.

இதை எல்லாம் சொன்னவுடனே அந்தத் தொண்ணூறு வயது பெரியவர் என் காலில் அப்படியே விழுந்து விட்டார்.

உங்கள் பாதம் எனக்குக் கொடுக்க வேண்டும். எனக்கு நீங்கள் ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும் நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன்… உங்களைச் சாதாரணமாக நினைத்து விட்டேன்.

நான் படித்த நூல்களில் விளக்கம் தெரிய விரும்பிய அத்தனையும் விளக்கமாகச் சொல்லி விட்டீர்கள். நூல்களில் தெரிந்து கொள்ள முடியவில்லை… ஆனால் உங்கள் மூலமாக இப்பொழுது தெரிந்து கொண்டேன். ஆகையினால் “என்னை மன்னித்தேன்…” என்று சொன்னால் நான் எழுந்திருப்பேன்.

நான் உங்களைப் பரீட்சித்தேன் என்று கோப அலைகள் விட்டதினால் என் மனது துடிக்கின்றது… என்று சொல்லிக் காலில் விழுந்தவர் அவர் எழுந்திருக்கவில்லை.

ஏனென்றால் சாம வேதத்தைப் பற்றி அவருக்கு விளக்கமாகக் கூறி வைத்தியரீதியில் எப்படிப் பயன்படுத்துகின்றார்கள்…? மனிதனுக்குள் எப்படி மாற்றி அமைக்கும் நிலையாக வருகிறது…? என்று எல்லா விளக்கங்களையும் தெளிவாகச் சொன்னேன்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ…? நான் தெரியாமல் தப்பு செய்து விட்டேன்.. ஏனென்றால் அகராதித்தனமாகக் கேட்கிறேன் என்றால் சாபத்திற்கு ஆளாக நேரும். என்னைச் சபித்து விடாதீர்கள் என்றார். ஆக அவர் விஷயம் தெரிந்த ஆள்..! இது அங்கே நடந்த நிகழ்ச்சி.

அதே போல் இங்கே ஆடிட்டர் ஒருவர் செய்தார்.

குரு என்கிற போது அதை மதிக்க வேண்டும். நாம் எல்லோருக்கும் பரந்த மனதுடன் தான் கொடுக்கின்றோம். அதைச் சுயநலத்திற்குப் பயன்படுத்தினால் சரியாகுமா…?

உங்களுக்கு ஞானிகளின் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்கு உங்களை உயர்த்துவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதிலே நன்மை இருக்கிறது.

ஆனால் இதை ஒரு கருவியாக வைத்து உங்களிடமிருந்து நான் பறித்துச் சாப்பிட ஆரம்பித்தால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எனக்கு அப்படிக் கொடுக்கவில்லையே…!

அவர் (ஆடிட்டர்) அறியாமல் அப்படிச் செயல்பட்டாலும்… மனிதனின் மனங்கள் எப்படியெல்லாம் மாறுகிறது…? என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டோம்.

1.இதை நீங்கள் அடுத்தவருக்கு எடுத்துச் சொல்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
2.அல்லது நம்முடைய மனமே மாறப் போகும் போது… நாம் திரிந்து வாழ இவருடைய செயல் உபயோகமாக இருக்கும்.

தவறுகளில் ஆசை வைத்தால் அது நாம் போகும் ஞானப் பாதையை எப்படித் திசை திருப்பும்…? அன்று எல்லோரும் தெரிந்து கொள்ள இந்த சம்பவம் உதவியாக இருக்கும்.

ஏனென்றால் எல்லாமே சந்தர்ப்பம் தான்…!

அதனால் நான் அவரைக் குற்றமாக எண்ணவில்லை. இனி அது தவறில்லாத நிலை வரட்டும். மற்றவர்களையும் உஷார்படுத்திக் கொள்ளலாம்.

ஏனென்றால் இந்த உடல் ஆசையைக் கூட்டப்படும் போது அந்த நிலை ஆகிவிடும். ஆகவே நம் ஆசை எதுவாக இருக்க வேண்டும்…?

பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற இந்த ஆசை இருக்க வேண்டும்.

herbal power of agastyar

நச்சுத்தன்மையின் வீரியம் தான் இன்றுள்ள காற்று மண்டலத்தில் ஓங்கி நிற்கின்றது… ஜெப நிலை பெற்றால் தப்பலாம் – ஈஸ்வரபட்டர்

 

நல் உணர்வுடைய நற்செல்வங்களை (குழந்தைகளை) நாம் பெற்றே சமமான நிலையில் வாழ்ந்திட்டாலும் வாழும் நிலையில் சூழ்ந்துள்ள அசுத்தத் தன்மை வாய்ந்த மூச்சுக் காற்றுகளும் நல் நிலையில் வாழ்பவரையும் வந்து தாக்குகின்றது. ஆரோக்கிய நிலையும் மாறுபடுகின்றது.

1.இக்காற்றில் கலந்துள்ள சக்தியில் நச்சுத்தன்மையின் வீரியம் தான் இப்பொழுதுள்ள நிலையில் ஓங்கி நிற்கின்றது
2.இதிலிருந்து மீண்டு ஜெப நிலை பெற்றே வாழ்ந்திட வேண்டும்.

சில உபாதைகள் இக்காற்றிலிருந்து நாம் ஈர்க்கும் சுவாசத்துடன் நம்மை வந்து அணுகத்தான் செய்கின்றன. அந்நிலையிலிருந்து நாம் மீள… சில வைத்திய முறைகளை ஏற்க வேண்டியுள்ளது.

இக்காலநிலை மாறும் தன்மையிலும் இவ்வுடல் நிலை மாறும் தன்மையிலும் சில நிலை கொண்ட மாற்றங்கள் உடல் நிலைக்கும் வரத்தான் செய்கின்றன.

இந்நிலையில் இருந்தெல்லாம் நம் உடல் ஆரோக்கியம் பெறச் சாதாரண வாழ்க்கை நிலையிலுள்ள நாம் சில மருந்துகளை உட்கொள்ள வேண்டியுள்ளது.

சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் ரிஷிகளும் போல் இக்காற்றிலிருந்தே உடலில் ஏற்படும் பிணிகளை மாற்றும் சக்தி கொண்ட காற்றினை ஈர்த்து வாழும் பக்குவ நிலை பெற்றவர்கள். அத்தகைய நிலையை நாமும் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கும் சரி… பிறந்த சிசுவுக்கும் சரி.. தாயின் கர்ப்பத்திலிருந்து இவ்வுலகில் வாழ வந்த நாட்களில் அதைப் பேணிப் பாதுகாக்கப்
1.பிறந்த நாளிலிருந்தே சில மருந்துகளை நம் முன்னோர்கள் அதற்கு ஊட்டித்தான்
2.வளரும் பக்குவத்தை நமக்கும் வழிகாட்டித் தந்தார்கள்.

ஆனால் இன்று வாழும் மனிதர்களோ… உணவைப் போலவே மருந்தையும் உட்கொண்டே வாழும் நிலையில் உள்ளார்கள்.

ஏனென்றால் இக்காற்றின் அசுத்தத் தன்மையினால் வளரும் பயிரின் செழிப்பும் குறைந்து விட்டது. மக்கள் தொகையும் பெருகி விட்டது.

நாம் உண்ணும் உணவுத் தானியங்களைப் பெருக்கிட வேண்டும் என்றால்… இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல இரசாயன நிலை கொண்ட உரங்களைச் செலுத்தியே உணவுத் தானியங்களின் உற்பத்தியை வளரச் செய்து நாம் அதை உண்ண முடிகின்றது.

1.இயற்கையின் உரங்கள் செலுத்தி வளரச் செய்த காலங்கள் மாறி
2.செயற்கையான உரங்கள் செலுத்தித்தான் இன்றைய உணவு உற்பத்தி நிலையை நாம் பெற முடிகின்றது.

இந்த இரசாயன உரங்களை ஈர்த்து வளர்ந்த பயிர்களில் இருந்து நாம் பெற்று உண்ணும் தானியங்களின் மூலம் நம்மையும் அந்நிலை கொண்ட சத்து நிலை (இரசாயணங்கள்) வந்து தாக்குகின்றது.

இயற்கையில் வளரும் தன்மை இன்றுள்ள இக்கால நிலையில் முடியாததினால் இச்செயற்கையின் வளர்ச்சியில் வந்த செயற்கையான தானியத்தையே உட்கொள்ள வேண்டியுள்ளது.

ஆகவே செயற்கையுடன் ஒன்றி நாம் வாழ்வதால் இவ்வுடல் மாற்றத்திற்கு இன்று புதிய புதிய மருத்துவத்தைச் செயல்படுத்தி நமக்கு ஏற்கத்தான் வேண்டியுள்ளது.

1.நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டிய பல மூலிகைகளை இன்று இக்கால நிலையில் தவற விட்டுவிட்டோம்
2.மூலிகையில் உள்ள மகத்துவத்தை நாம் எடுக்கும் நிலையில் இல்லை
3.அதை ஏற்கும் மனோ நிலையும் நம்மிடம் இல்லை.

சித்தர்கள் நமக்கு உணர்த்திய பல மூலிகைகளை நாம் பெறுவதற்கும்… இன்றைய மனிதனின் மன வளர்ச்சியில் எதையும் துரித நிலை கொண்டு செயலாக்கும் மன வளர்ச்சியில்… “இன்றைய மனிதனுக்குப் பொறுமை நிலையும் இல்லை…!”

இதில் வந்த வினைச் செயலால் தான் இன்று இத்தேசத்தில் அன்று உணர்த்திய பல உன்னத மூலிகைகளின் பொக்கிஷமெல்லாம் மறைந்து சிதைந்து விட்டதின் நிலை.

ஞானத்தையும் தியானத்தையும் தெய்வீகத்தையுமே மிஞ்சும் “விஞ்ஞானம்…” என்னும் துரித நிலையில் சென்று கொண்டுள்ளான் இன்றைய மனிதன்.

அன்றன்ற தேவையை மட்டும் உணர்ந்து வாழும் மனிதன் தன் ஆத்மா என்ற ஆண்டவனை எண்ணி வாழ்வதில்லை.

துரிதமுடன் செயற்கைக்கு அடிமைப்பட்ட இன்றைய மனிதனால்
1.இவ்வாத்மீக வழியும் ஜெப வழியும் அறிந்து வாழ்ந்திட்டால்
2.தன் வாழ்க்கையின் முழுமை எங்குள்ளது…? என்பதனையே அறிந்திடலாம்
3.காற்று மண்டல நஞ்சிலிருந்து விடுபடவும் செய்யலாம்…!

first and foremost god

இந்த அருள் ஞான வழியில் நாம் பயணம் செய்யக் காரணமாக இருக்கும் நம் தாய் தந்தையரைக் கடவுளாக மதித்தல் வேண்டும்

 

மனிதனாக உருப்பெறக் காரணமாக இருந்த நம் தாய் தந்தையை முதலில் அவர்களைக் கடவுளாக நாம் மதித்துப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ தொல்லைகள் பட்டுத்தான் அவர்கள் மனிதரானார்கள். ஆனால் நாம் ஈயாக எறும்பாக தேளாக பாம்பாக இருந்திருப்போம்.

அதை அடித்திருப்பார்கள். அந்த உயிர் அவர் உடலில் ஈர்ப்புக்குள் சென்றது. அவர் உடலில் சேர்த்த அந்த உணர்வைக் கவர்ந்தது. நம் உயிர் அவர் உடலுக்குள் சென்றால் அவர் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையை அது கவர்ந்தது… மனிதனாக உருப்பெரும் சந்தர்ப்பமாகின்றது.

தாய் கருவில் இருக்கக்கூடிய காலத்தில்… தாய் நல்லதைப் பற்றி ஏங்கியிருந்தால் நல்ல உணர்வாகக் கருவுக்குள்ளும் சேர்த்து நல்ல உடலாக உருவாக்குகிறது.

ஆனால் நாம் கருவிலே இருக்கப்படும்போது
1.தாய் வேதனையும் துயரமும் அதிகமாக எடுத்திருந்தது என்றால்
2.நம் உடலில் பல நோய்களும்… ஊனமான உடலாக உருவாக்கும் தன்மை கூட வருகின்றது.

ஆகவே நம்முடைய சந்தர்ப்பம்… கருவில் இருக்கும்போது தாய் எடுத்துக் கொண்ட மகிழ்ந்த நிலை உணர்வுக்குத்தக்க தான் நம்மை நல்ல மனிதனாக உருவாக்கியது… சிந்தித்துச் செயல்படும் திறனாகவும் பெற்றது.

தாயின் உணர்வால் நாம் நல்லவராகவும் சிந்திக்கும் தன்மையும் பெற்று இப்பொழுது நல்ல உபதேசங்களைக் கேட்கும் அருளும் கிடைக்கிறது.

1.தாயின் உடலில் கருவாக இருக்கும் பொழுது அத்தகைய நல் உணர்வை எடுத்தவர்கள் தான்
2.அந்த வலுக் கொண்டு இதைக் கேட்கும் சக்தியுடன் இங்கே அமர்ந்திருப்பார்கள்
3.அந்த உணர்வின் தன்மை இருந்தால் தான் கவர முடியும்.

அப்படிப்பட்ட பூர்வ புண்ணியம் இல்லாதவர்கள் உபதேசம் கேட்டுப் பார்ப்பார்கள்.
1.அதிலே தனக்கு வேண்டியதை எதிர்பார்ப்பார்கள்
2.அது இல்லையென்றால் போய்க் கொண்டே இருப்பார்கள்.

அது மட்டுமல்ல…! நல்ல உணர்வு பெற வேண்டுமென்ற தாய் எடுத்த உணர்வின் தன்மையே உங்களை இங்கு அமர்ந்து இதைக் கேட்கும்படி செய்கிறது.

1.எத்தனை தொல்லைகள் இருப்பினும்
2.எத்தனை துயரங்கள் இருப்பினும்
3.இந்த அருள் உணர்வை நீங்கள் பெறும் தகுதி ஏற்படுத்துவது உங்கள் தாயே.

ஆகவே உங்கள் தாயை நீங்கள் கடவுளாகவும் தெய்வமாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நொடியிலும் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் நம்மை எத்தனையோ வகையில் நாம் பிறந்த பின் நம்மைக் காத்தருளிய தெய்வம் அது. நமக்கு நல் வழி காட்டிய குருவும் நம் தாயே.

தாய் கருவில் இருக்கப்படும்போது எடுத்துக் கொண்ட உணர்வே நம்மை நல்லவனாக்குவதும் கெட்டவனாக்குவதும்…!

ஆகையினால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் தாய் தந்தையர் உயிரைக் கடவுளாக மதித்து அவர்களைத் தெய்வமாக மதித்து இந்த வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் செயல்படுத்துங்கள்.

ஒவ்வொரு சமயமும் உபதேசத்தை உணர்த்தும் பொழுதெல்லாம் நம் குரு காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.

இதை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால் அந்த அருளைப் பெறலாம். உங்களுக்குள் அறியாது புகுந்த இருளைப் போக்கலாம். தெளிந்த மனம் பெறலாம்… தெளிவான வாழ்க்கை வாழலாம்.

heaven destination

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்ற பின் தொக்கியுள்ள விஷங்கள் கரைந்துவிடும்

 

ஒரு வால் நட்சத்திரத்திலிருந்து வந்த கற்கள் மற்ற எதிலேயும் பிடிப்பில்லாதபடி வரும்போது நம் சூரியன் இழுக்கின்றது.

நமது பூமி இடைமறிக்கப்படும்போது துருவப் பகுதியில் அதைக் கவர்ந்து நம் பூமிக்குள் கலந்து கொண்டபின் அந்தக் கற்கள் நமது பூமியில் காற்று மண்டல அழுத்தத்திற்குள் வந்தவுடனே சூடேறிக் கரைந்து விடுகின்றது.

அது கரையவில்லை என்றால்… அத்தனையும் அப்படியே விழுந்தால் இங்கே யார் ஒருத்தரும் இருக்க முடியாது. இதைப் போல் தினமும் எரி கற்கள் விழுந்து கொண்டுதான் உள்ளது.

நமது பூமியின் காற்று அழுத்தத்தில் வரும்போது கரைத்து விடுகின்றது. கரைக்கத் தவறிய சில பெரிய பாறைகள் எல்லாம் பூமியில் விழுகத்தான் செய்கின்றது. இத்தகைய நிலைகள் இருந்தால் நாம் யாரும் வாழ முடியாது

இதைப் போன்று தான்…
1.நமது உடலில் வெளியிலிருந்து வரும் தீமையான உணர்வின் தன்மைகளை
2.அது நமக்குள் ஈர்க்கும் சக்தி அடைவதை நீக்கிவிட்டால்
3.நமக்கு முன்னாடி வரும் இந்த தீமையின் அணுக்களை அந்த தீமையின் உணர்வுகளை
4.சூரியன் காலையில் அழைத்து மேலே கொண்டு செல்கின்றது.

ஆகையினால் தான் காலை துருவ தியானத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைத் தூய்மை செய்யப் பழகிக் கொள்ளச் சொல்கிறோம்.

வாழ்க்கையில் துயரமோ சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ இதைப்போன்ற நிலைகள் வரப்படும்போதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரான ஈஸ்வரலோகத்தை எண்ணுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்குங்கள். அப்போது இந்த உணர்வுகள் அதிகரித்து அந்தத் தீமையின் உணர்வுகளை மாற்றி அதை அடக்கிவிடும்.

குழம்பில் காரத்தைப் போடும்போது அது எப்படிச் சுவையாக மாறுகின்றதோ இதைப் போன்று சுவைமிக்க உணர்வாக அத்தகைய அணுக்கருக்கள் நம் உடலில் இந்திரலோகமாக மாறுகின்றது.

இப்படி அதை மாற்றப்படும்போது…
1.தீமையென்ற உணர்வின் தன்மையை நீங்கள் ஈர்க்கத் தவறுவதினால்
2.உடலில் உள்ள அந்தத் தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்கத் தவறுகின்றது.
3.உணவு கிடைக்கவில்லை என்றால் அது சோர்வடைந்துவிடும்
4.அது சோர்வடைவதோடு மட்டுமல்லாதபடி நம் உடலில் தீய அணுக்கள் உருவாகாதபடி அது செயலிழந்துவிடும்.

ஏனென்றால் “ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் இருக்கும் அந்த உணர்வுகள்…” நிலத்திற்குள் எப்படி விஷ வித்துக்கள் பதிந்தபின் மழை வரும்போது வருகின்றதோ… இதைப்போல இந்த உடல் இருக்கும் வரையில். அதனுடைய வேலைகளைத் தொடர்ந்து செய்யும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அணுக்களாக நமக்குள் பெருக்கி விட்டால் அது விளைந்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு நாம் அங்கே செல்ல முடியும்.

ஏனென்றால் நம் உயிர் உடலில் விளைந்த உணர்வு கொண்டுதான் அடுத்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.

ஆகவே தீமையான ஊழ்வினை என்ற நிலைகள் உருவாகாதபடி துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளாக மாற்றி இந்த உடலை விட்டு நாம் சென்ற பின்
1.அந்த அணுக்களில் சேர்ந்த விஷத் தன்மையை
2.நாம் துருவ நட்சத்திரத்துடன் சேர்ந்த பின் தொக்கிய உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றது.
3.அங்கே கரைத்தபின் விஷத் தன்மையைச் சூரியன் கவர்ந்து விடுகின்றது.
4.அந்த ஒளியுடன் ஒன்றிய ஒளியின் அறிவாக அங்கே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் இணைகின்றோம்
5.துருவ நட்சத்திரம் விளைவிக்கும் அந்த விஷமற்ற உணர்வை உணவாக உட்கொண்டு
6.அதன் தன்மை கொண்டு நம் உயிரான்மா வளர்ச்சி அடைகின்றது.

ஒரு பிரபஞ்சம்… இந்தச் சூரியக் குடும்பம் எப்படி இருக்கின்றதோ இதைப் போல் அமைப்பில் நாம் சேர்க்கப்படும்போது துருவ நட்சத்திரமோ வலுவடைகின்றது. அதன் ஈர்ப்பு வட்டத்தில் ஒளிமயம் ஆகின்றது.

உலகில் உள்ள உணர்வுகளில் அந்த ஒளி அலைகள் பரவப்படும்போது இருள் சூழும் நிலைகளில் இருந்து விடுபட்டு ஒளிமயமாக மாற்றும் இந்த உணர்வின் தன்மை பெறப்படுகின்றது.

ஆகவே நம் குருநாதர் காட்டிய இத்தகைய உண்மைகளை உணர்ந்த நிலையில்…
1.மனிதனான பின் இன்னொரு பிறவிக்குச் செல்ல விரும்பாதீர்கள்
2.இந்த உடலின் மீது பற்றை வைக்காதீர்கள்.

குறைகளைக் காணினும் அதை அகற்ற முயற்சி எடுங்கள். குறை என்ற உணர்வுகள் தோன்றிய பின் அது நமக்குள் உருவாகாதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அதன் உணர்வை அதிகரியுங்கள்.

அதன் உணர்வுகள் நம் இந்திரலோகத்தில் பெருகும். அதன் உணர்வுகள் பெருகினால் நமக்குள் தீய அணுக்கள் சிறுத்துவிடும். அது சிறுத்திடும் நிலைகள் கொண்டு அருள் உணர்வுகள் பெருகப்படும் போது நமக்குள் மன பலமும் மன வலிமையும் வரும்.

intelligent child

நமக்குப் பிறக்கும் செல்வங்கள் எல்லாம் “அறிவின் சுடராக வந்து பிறந்திட வேண்டும்…” – ஈஸ்வரபட்டர்

 

“கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்…” என்ற பொருள்படி கம்பராமாயணத்தை கம்பர் எழுதும்கால் அவரின் எண்ணம் நினைவு எல்லாமே அவர் எவ்வெண்ணத்தை ஈர்த்துச் செயல்படுத்துகிறாரோ அவ்வெண்ணத்தின் சுவாசக் காற்றுத்தான் அவர் உள்ள இடம் தனில் சுற்றிக் கொண்டிருக்கும்.

எவ்வில்லத்தில் எவ்வெண்ணத்தின் செயலுடன் துரிதமாகச் சுற்றிக் கொண்டுள்ளதோ அந்த நிலைக்கொப்பத்தான் அந்தந்த இடத்தில் உள்ள எல்லா நிலைகளும் நடந்திடும்.

அவ்வில்லத்தில் வாழ்பவரின் எண்ணமும் இவ்வெண்ணத்தின் சுவாசக் கலப்பினால் ஒவ்வோர் இல்லத்திலும் எச்சக்தியின் எண்ண நிலை ஓங்கி நிற்கின்றதோ அந்நிலை கொண்ட செயல்தான் நடந்திடும்.

கவி பாடும் கவிஞரின் இல்லம் மட்டுமல்ல…! ஒவ்வொரு குடும்ப நிலையிலும் அக்குடும்பத்தில் உள்ள தனித்தன்மையின் நிலை அக்குடும்பத்தில் உள்ளோரின் நிலையும் ஒன்றுபட்டதாகவே இருந்திடும்.

பிறக்கும் குழந்தைகளில் நல்லறிவு கொண்ட குழந்தைகளும்… சில குழந்தைகள் நல்லறிவு வளர்ச்சி பெறாமல் பிறப்பதுவும் கண்டிருப்பீர்.

முன் ஜென்மத்தில் செய்த வினைப்பயன் மட்டும் கொண்டு அனைத்து குழந்தைகளும் பிறப்பதில்லை. பிறக்கும் ஒவ்வொரு சிசுவுக்கும் முன் ஜென்மத் தொடர் தொடர்வதில்லை.

ஆதியில்… ஆதியில் என்பது இவ்வுலகம் கல்கியில் பிறந்த நாளில் இருந்த உயிர் அணுவிற்கும் இப்பொழுதுள்ள உயிரணுவிற்கும் பல கோடி கோடி நிலைகள் அதிகரித்துள்ளன.

அந்நிலையில் இப்பொழுது வாழும் அனைவருக்குமே முன் ஜென்மத்தில் வாழ்ந்ததின் தொடர் நிலைகள் எந்நிலையில் வந்திடும்…?

புதிய புதிய உயிரணுக்கள் தோன்றிக் கொண்டே உள்ளன. முன் பாடத்தில் சொல்லியபடி ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் உடலை அடக்கம் செய்த நிலையில் அவ்வுடலில் இருந்து பல உயிரணுக்கள் தோன்றி சுற்றிக் கொண்டு உள்ளன என்றேனல்லவா…?

1.அந்நிலை கொண்ட உயிரணுக்களெல்லாம் தாயின் கர்ப்பத்திற்கு ஜீவன் பெற வந்திடும் பொழுது
2.அவ்வுயிரணுக்களுக்கு எண்ண நிலைகளும் செயல் திறமையும் முழுமை பெறாததால்
3.அத்தகைய உயிரணுக்கள் தாயின் கர்ப்பத்திற்கு வரும் பொழுது தான்
4.சில குறைப் பிரசவங்களும் கருச்சிதைவுகளும் உண்டாவதெல்லாம்.

இவ்வுயிர் அணுக்கள் தன் ஜீவன் பெறும் துடிப்பில் எத்தாயின் கர்ப்பத்திற்கும் வந்து பிறக்கும் நிலையில் பிறப்பிற்கு வருகின்றது.

மனித உடலிலிருந்து உண்டான உயிரணுக்கள் எல்லாமே மனித சுவாசம் நிலை கொண்ட மனித கர்ப்பத்திற்குத்தான் வருகின்றது. மிருக நிலையும் இதைப் போன்ற நிலை கொண்டதுவே.

இப்புதிய உயிரணுக்கள் ஜீவன் பெற தாயின் வயிற்றில் உதித்து வளரும் பொழுது… எக்கரு எத்தாயின் வயிற்றில் வளர்கின்றதோ…
1.அத்தாயின் நிலை சமமான நிலை கொண்ட சஞ்சலம் கொள்ளாத நிலையிலிருந்தால்
2.அத்தாயின் ஆரோக்கிய நிலையும் நல் நிலையிலிருந்தால்
3.அத்தாயின் வயிற்றில் உள்ள கருவும் அத்தாயெடுக்கும் சுவாச நிலை கொண்ட புத்தியின் வளர்ச்சி நிலைக்கும்
4.அத்தாயின் வாழ்க்கையுடன் கலந்துள்ளவரின் சுவாச நிலைக்கும் அக்கருவையும் தன்னுள் வளர்த்துக் கொண்டு
5.நல் நிலை கொண்ட சிசுவாக வந்து பிறக்கின்றது.

இன்னும் பல சிசுக்கள் தாயின் கர்ப்பத்தில் உள்ள பொழுதே அத்தாயின் எண்ண நிலை கொண்டு அந்நிலையின் தாக்குதலினால் இச்சிசுக்கள் பிறந்தவுடன் பிறவியிலேயே பல நிலை கொண்ட வியாதியின் அணுவைத் தாங்கியே பிறக்கின்றது.

இவ்வுலகத்தாய் பெற்றெடுத்த தாயானவள் “தான் பெற்றெடுக்கும் சிசுக்களை…” நல்ல அறிவுள்ள பொக்கிஷமாகப் பெற்றெடுக்க சூலுண்ட நிலையில் உள்ள ஒவ்வொரு தாயும் தன் எண்ணத்தை அன்புடனும் ஆசையுடனும் பண்பாக்கிச் சம நிலையில் கொண்ட நிலையில் வாழ்ந்தே “அறிவுடன் கூடிய அன்புச் செல்வங்களை பெற்றெடுத்து மகிழ்ந்திடுங்கள்…”

சூலுண்ட நிலையில் அன்பு, ஆசை, பண்பு என்ற ஆண்டவன் ஜெபம் கொண்ட அமுதுண்டே அழகுடனே பெற்றிடுங்கள் அரும் செல்வங்களை.

1.ஆண்டவன் வந்து அளிப்பதல்ல நாம் பெறும் செல்வங்களை…!
2.நம்மை நாம் பக்குவம் கொண்டு வாழ்ந்திட்டாலே அவ்வாண்டவனின் செல்வம் நம்முள் வந்து பிறந்து
3.நாம் பெற்றெடுக்கும் செல்வமும் அவ்வாண்டவனின் சக்தி கொண்டு நமக்கு வந்து பிறக்கும்.
4.நமக்குப் பிறக்கும் செல்வங்கள் எல்லாம் “அறிவின் சுடராய் வந்து பிறந்திட வேண்டும்…” என்ற ஜெப நிலை கொண்டே பெற்றெடுங்கள்.

Heatlh bliss

உடல் பிணி யாவற்றுக்குமே முன்னோடி சிரசில் வரும் வலி தான் – ஈஸ்வரபட்டர்

 

நல்நிலை பெற்று நாம் எந்நிலை கொண்ட சுவாசம் எடுக்கின்றோமோ அந்நிலைக்குகந்த உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் நம் ஆரோக்கிய நிலையும் நமக்குக் கிட்டுகின்றன.

நமக்கு வரும் பிணிகள் எல்லாம் நம்மை வந்து அண்டுவது பிறரிடத்தில் இருந்தோ அனைத்தும் வம்ச வழி கொண்டோ நமக்கு வந்து அடைகிறது என்பது மட்டுமல்ல.

வம்ச வழியில் வருகின்றது பல பிணிகள் என்கிறார்கள். வம்ச வழியில் உதிரத் தொடர்புடன் சில நிலைகள் நமக்கு வருகின்றன.

ஆனாலும் நம்முடைய உணர்வும் உணவும் செயலும் கொண்டு நம் எண்ணத்தினால்… அந்த வம்ச வழியின் தொடரில் வரும் பிணிகள் நம்மை அண்டாமல்… நம் உடல் நிலையை ஆரோக்கிய நிலையில்… “இஜ்ஜெப நிலை என்னும் ஆத்மீக வழிக்கு நம்மை நாம் வழி நடத்தி வரும் பொழுது… எப்பிணியும் நம்மை அண்டாது…!”

1.இவ்வுடல் பிணிகள் அனைத்துமே வருவதெல்லாம் இவ்வெண்ணத்திலிருந்துதான்
2.மனிதனின் குண நிலை கொண்டுதான் அவனுக்கு வரும் பிணி எல்லாம்.

தலை வலி எந்நிலை கொண்டு வருகின்றது…?

சமமான நிலையில் மன நிலை உள்ள பொழுது ஆரோக்கிய நிலையில் நாம் உள்ளோம். அப்படி இருந்தாலும்
1.எண்ணமுடன் எண்ணம் மோதும் பொழுது (எதிர் நிலை)
2.நாம் உட்கொள்ளும் ஆகாரம் நமக்குச் செரித்து நம் நிலையில் அவ்வுமிழ் நீர் சுரக்கும் தன்மை தடைப்படுகிறது.

இந்த உமிழ் நீர் சுரப்பியின் நிலை வேறுபடும் பொழுது நாம் உட்கொள்ளும் உணவும் நமக்குச் செரிப்பதில்லை. அந்த நிலையிலிருந்து தான் நமக்கு வருகிறது தலை வலி.

1.உடல் பிணி யாவற்றுக்குமே முன்னோடி இச்சிரசில் வரும் வலி தான்.
2.இதன் தொடர்நிலை தான் நமக்கு வரும் வாந்தி மயக்கம் காய்ச்சல் இப்படி வரும் அனைத்துப் பிணிகளுமே
3.இந்நிலையின் தொடர்தான் அடிக்கடி உடல் உபாதை உற்றவனுக்கு
4.அவன் உடலில் சில உறுப்புகள் செயல்படும் தன்மையை இழந்து விடுகின்றன.

சில உறுப்புகள் அதிகப் பிணி கொண்டு அதன் செயல் தன்மை இழந்த பிறகு எந்த விதமான வைத்தியத்தாலும் அதைக் குணப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. நாமே நமக்கு வரவழைத்துக் கொள்ளுவதுதான் நமக்கு வரும் பிணிகளெல்லாம்.

1.மன நிலையில் மாற்றமில்லாதவனுக்கு
2.என்றும் அமைதி கொண்டு வாழ்பவனுக்கு இவ்வலியும் பிணியும் வந்து அண்டாது.

நாம் மாறுபட்ட உணவை உட்கொள்ளும் பொழுது அம்மாறுபட்ட உணவினால் தான் “நம் உடல் நிலை சீர் கெட்டது…!” என்று செப்புகின்றோம்.

1.மாறுபட்ட இடம் மாறுபட்ட உணவு என்று எண்ணும் பொழுதே
2.நம் எண்ணத்தையும் மாறுபடக் கொள்கின்றோம்.

அந்நிலையின் கலக்கத்தினால் நம் எண்ணமே அவ்வுணவை உட்கொள்ளும் பொழுதே நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் உமிழ் நீர் சுரக்கும் தன்மையும் மாறுபடுகிறது.

அந்நிலையிலேயே அவ்வுணவு செரிக்கும் பொழுது இவ்வுடலுக்கும் அதை ஏற்கும் தன்மை குறைபடுகிறது. உணவின் மேல் நாம் பாரத்தைப் போடுகின்றோம்.

நம் உடல் நிலைக்குப் புசிக்கும் உணவை நாம் விரும்பி உண்ணும் பொழுது அதன் சுவை “நமக்கு அமிர்தம் போல் உள்ள நிலையாக” உணர்ந்து உண்டிட வேண்டும்.

உணவின் நிலையைப் பற்றி நம் முன்னோர்கள் எழுதிய பல நூல்களில் உணவை உண்ணும் நிலையையும்… நாம் உண்ணும் உணவினால் நம் உடல் பெறும் நிலைகளைப் பற்றியும்… பல நிலைகளை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

1.நாம் உண்ணும் உணவையே நாம் சந்தோஷத்துடன் அவனளித்த அமிர்தத்தை அமிர்தமாகப் புசித்திடல் வேண்டும்.
2.“பசித்துப் புசி…!” என்று நம் முன்னோர் செப்பியுள்ளனர்.
3.பசித்த நிலையில் புசிப்பவனுக்குப் புசித்த உணவெல்லாம் அமிர்தம் போல் உட்சென்று
4.அதன் சத்தினை இவ் உடல் ஏற்கும் பக்குவ நிலைக்கு இருந்திடும்.

நம் முன்னோர்கள் நமக்குகந்த பல உணவுகளைப் பக்குவ நிலைப்படுத்தி நமக்கு உணர்த்திச் சென்றார்கள். உண்ணும் உணவை நாம் ஆசையுடன் புசித்திட்டாலே இவ்வுடல் நிலைக்கும் இவ்வுள்ள நிலைக்கும் எப்பிணியும் வந்து அண்டாது.

நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதற விட்டும் மோத விட்டும் நம் கோபத்தையும் அதி சந்தோஷ நிலையையும் வளரவிட்டும் அந்நிலையில் நாம் உண்ணும் எவ்வுணவையும் நம் உடல் நிலை ஏற்பதில்லை.

நமக்கு வரும் வலியும் பிணியும் இம்மாறுபட்ட சஞ்சல நிலை கொண்ட எண்ணத்தின் மோதலினால்தான் நமக்கு வருகிறது என்பதனை அறிந்திடல் வேண்டும்.

வியாதி உள்ளவனை நாம் சென்று பார்த்தால் அவன் உடல் நிலையிலுள்ள அவ்வியாதியின் அணுக்கள் நம்மையும் வந்து தாக்கி நமக்கும் அவ்வியாதி வரும் என்று சொல்கின்றோம்.

வியாதியஸ்தனைக் காணச் செல்பவனுக்கு…
1.நல்நிலையில்… ஆரோக்கிய நிலையில்… சமமான நிலையில்… அவன் எண்ணத்தில்
2.சிறு அணுவும் தனக்கு அந்த வியாதி அண்டிக் கொள்ளுமே என்ற பயமில்லாத நிலையில் செல்பவனுக்கு
3.எந்த வியாதிஸ்தனின் உடலிலுள்ள எவ்வியாதி அணுவும் வந்து அண்டாது.

ஆனால்… அவ்வியாதியஸ்தனின் “உதிரத் தொடர்புடையவருக்கு” எண்ண நிலையில் ஒரு நிலை கொண்டவருக்கு அவன் சுவாச நிலை பட்டாலே அக்கிருமிகள் வந்து தாக்கும் நிலை உள்ளன.

சில வகை ஜுரங்களின் அணுக்கள் அவ்வியாதியஸ்தன் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்துடனே அவனைச் சுற்றிக் கொண்டே உள்ளன.

1.உடல் நிலையில் ஆரோக்கியமில்லாதவரும்
2.எண்ண நிலையில் கலக்கமுள்ளவர்களும்
3.அந்நிலையிலுள்ள வியாதியஸ்தனின் சுவாசக் காற்று பட்டாலே
4.அவனின் வினையான இவ்வியாதி அணு இவர்களையும் வந்து அண்டிக் கொள்ளும்.

இப்படர்ந்த பூமியில் உள்ள அணுக்கள்தான் யாவையுமே. வியாதியின் அணுவும் இக்காற்றில்தான் உள்ளது. அவ்வியாதியைக் குணப்படுத்தும் மருந்தும் இக்காற்றில்தான் உள்ளது.

நாம் ஏற்கும் சுவாசம் கொண்டுதான் அனைத்து நிலைகளுமே நமக்கு வருகின்றன. “இவ்வெண்ணத்தினால் வருவதுதான் எல்லாப் பிணியும்…!”

இன்று பல புதிய புதிய வைத்தியமும் தான் வளர்ந்துள்ளன.

ஜீவராசிகளின் பெருக்கத்தினாலும் பல ஆலைகளிலிருந்து வெளிப்படும் கழிவின் புகையினாலும் விஞ்ஞானம் கொண்டு இப்பூமியின் பொக்கிஷத்தை நாம் பிரித்து எடுத்தினாலும் தாவர வர்க்கங்களின் நிலையின் குறைவினாலும் வந்த வினைதான் “இன்று இக்காற்றில் கலந்து வரும் புதிய புதிய பிணிகளெல்லாம்…!”

இன்று இவ்வுலகம் உள்ள நிலையில் ஜீவராசியின் அதிபெருக்கத்தைச் சமப்படுத்தினால்தான் இவ்வுலகம் இனி வரும் மாற்றத்திலாவது தாவரங்கள் செழித்து வளர்ந்திடும்.

1.தாவரங்களின் வளர்ச்சிதான் உலகத்தின் உண்மையான வளர்ச்சி.
2.விஞ்ஞானம் கொண்டு வளரும் வளர்ச்சியல்ல இவ்வுலக வளர்ச்சி.

ஜீவராசிகளின் இனப்பெருக்கத்தைச் சமப்படுத்திடும் நிலை உணர்ந்தே வந்திடுங்கள்.

soul is god (3)

உயிர் உடலில் இருக்கும் வரை தான் மதிப்பும் மரியாதையும்…!

 

நாம் எத்தகைய உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும்…
1.இந்தச் சரீரத்தை விட்டு உயிரான்மா சென்று விட்டால்
2.நம் அழகையும்… நாம் போற்றித் துதித்த தருமத்தையும்…
3.யாராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா…? இல்லை…!

நேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள் என்று தான் சொல்கின்றார்கள்.

அத்தகைய நிலைகள் கொண்டு சென்றாலும் அங்கே எரிக்கும் இடத்தில் பார்த்தாலோ அதிலே நெருப்பிலே இட்டு எரிக்கப்படும்போது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…? என்று பார்க்கலாம்.

அதே சமயம் புதை குழியில் போடும்போது அதனை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்…? சொந்தகாரர்கள் நாமாவது சடலத்தைத் தூக்கி போடுகின்றோமா…! என்றால் இல்லை.

யாரையோ வைத்துத் தூக்கிப் போடுங்கள் என்று தான் சொல்கின்றோம்… இல்லையா…? இதைத்தான் அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு அவர்களை அதற்குத்தான் (குடியானவன் என்றும் வெட்டியான் என்றும்) என்று வைத்திருக்கின்றோம்.

ஏனென்றால் இவர்களை அது சாடி விடுமாம்…!

ஆனால் இவருடைய சொத்து… செல்வம்… எல்லாம் தேவை. இப்படித்தான் நம்முடைய உணர்வுகள் வருகின்றது.

ஆகவே… இந்த உடல் நமக்குச் சொந்தம் என்று ஆக்க வேண்டாம். இந்த உடலின் சொந்தம் கொண்டாடி அதில் வளர்த்துக் கொண்ட சாபங்களை நீக்கி இந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றி என்றுமே மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் நிலை கொள்ள வேண்டும்.

நமக்கு அந்த நிலையான சரீரம் வேண்டுமென்றால் பற்று எதில் வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருளுணர்வோடு பற்று வேண்டும். அந்தப் பற்றை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் இந்த வாழ்க்கையில் எந்த மகரிஷிகளின் உணர்வை அதிகமாகக் கூட்டுகின்றோமோ அங்கே செல்கின்றோம்.

இல்லையென்றால் இந்தச் சாப அலைகள் சிக்கியவர்கள் நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற நிலை ஆகிறது. பின் தாவர இனங்களைப் புசித்து வரும் நிலை மாறி மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் நிலைகள் வரும்.

1.அப்படிக் கொன்று மற்றொரு உடலுக்குள் புகுந்து
2.இப்படிப் பல நிலைகள் மாறி மாறி நரக லோகத்தைச் சந்தித்த பின் தான்
3.அதாவது சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் இந்தத் தண்டனைகளை எல்லாம் நாம் அனுபவித்த பின் தான்
4.மீண்டும் மனிதனாக வர முடியும் (உடனடியாக வருவது மிகவும் கடினம்)

ஏனென்றால் சாதாரணமாக மனிதனின் கையில் சிக்கி அந்த உயிரினங்கள் சாகாது. அதனுடைய நிலைகள் தன் பசிக்காக ஏங்கி எடுக்கும் அதன் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.

ஒரு புலி அடித்துக் கொல்கிறது என்றால் அவன் புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பிடம் சிக்கித் தவித்தது என்றால் அடுத்த பிறவியில் அவன் பிறப்பு பாம்பாகத்தான் பிறக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான்
1.விண்ணுலக ஆற்றலும் மண்ணுலக நிலையையும்
2.உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்
3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்
4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எதுவாக மாறுகின்றது…? என்ற
5.அந்தப் பேருண்மைகளை எல்லாம் எமக்குத் (ஞானகுரு) தெளிவாக எடுத்து காட்டினார் நமது குருநாதர்.

உங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசியலின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் நமக்குள் பட்ட குணங்களும்… நாம் வளர்ந்து வந்த நிலைகளும்… அவைகளுடன் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியினை இணைத்தே…
1.அண்டத்தில் இருக்கும் நிலைகள் பிண்டத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வுடன் இணைத்து
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளை
2.உங்களுக்குள் உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேசம்.

குருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப் போன்று உங்களையும் ஞானியாக உருவாக்க வேண்டுமென்பதற்குத் தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் நிலைகளை இன்று எண்ணத்தால் உங்களிலே பெருக்கச் செய்கின்றோம்.

ஒவ்வொருவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

hiclipart.com (1)

நம்முடைய அந்தஸ்து எதுவாக இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

வாழும் காலத்தில் அவரவர்களின் அந்தஸ்தைப் பொறுத்த வாழ்க்கை நிலை வாழ்வதாக இம்மனிதன் சொல்கின்றான். மனிதன் சொல்லும் அந்தஸ்து இப்பொருள் சுகத்தைக் கொண்ட அந்தஸ்து.

பொருளை வைத்து… அவரவர்களின் கையிலுள்ள செல்வத்தை வைத்து… இன்றுள்ள மனிதன் மனிதனை எப்படி எடை காண்கின்றானோ அந்நிலைக்கு மேல்…
1.இன்று நாம் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் பெற்ற வழி நெறிகளைக் கொண்டு
2.நம் ஆத்மா இவ்வுடலை விட்டுச் சென்ற பிறகும்
3.நம் ஆத்மாவிற்கும் அந்தஸ்து நிலையுண்டு (தர நிலையுண்டு).

வாழ்ந்த காலத்தில் மனிதன் தனத்தை வைத்துத் தரத்தை நிர்ணயிக்கின்றான். இத்தரம் எத்தரம்…? மனிதனே மனிதனுக்கு அளிக்கும் தரம் தான் இந்தத் தரம்.

வாழ்ந்த வாழ்க்கையில்… எண்ணம் செயல் அனைத்தையுமே ஆத்மீக நெறி கொண்ட அன்பு நிலை கொண்டு வாழ்பவனின் தரம்தான் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் நிலைத்து நிற்கும் “நிர்மலமான ஜோதி நிலை கொண்ட தரம்…!”

அத்தகைய தரம் பெற்ற ஆத்மாவுக்கு ஆண்டவனாக வாழும் அரும் பெரும் பொக்கிஷ நிலை கிட்டுகிறது.
1.வாழும் காலத்தில் இவ்வாத்மீக நெறி கொண்டவன் அவ்வழிக்கு வந்துவிட்டால்
2.மற்ற அணுக்களுக்கும் வந்து தாக்கிடவும் செய்யாது.
3.முதலில் அவ்வுடலில் இருந்த மற்ற அணுக்களின் (ஊழ்வினைகள்) சக்தியும் செயலற்றுப் போகின்றன.

ஆத்மீக வழிக்கு வந்து… அறம் பெற்று… வாழும் தரம் கொண்டே வாழ்ந்திட்டால்… இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் வாழும் நாட்கள் தான் மிகவும் குறுகிய நாட்கள்.

இவ்வாவியான உலகில் ஆத்மாவுடன் ஆவி உலகில் வாழும் நாள் தான் நீடித்த நாள் இவ்வாத்மா இருக்கும் நாள்.

இவ்வுடலுடன் உள்ள நாட்களில் நாம் நமக்களித்த இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி
1.நம் ஆத்மாவுடன் ஆவி உலகத்தில் வாழும் வாழ் நாட்களுக்கும்
2.இவ்வுடலுடன் உள்ள பொழுது நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்ட எண்ணமும் செயலும்தான் வந்து
3.நம்முடன் என்றும் சப்த அலைகளாக சத்து கொண்ட ஆத்மாவாக ஆவி உலகில் வாழப் போகின்றோம் என்பதை உணரல் வேண்டும்.

ஏனென்றால் நாம் சேர்க்கும் சொத்தும் சுகமுல்ல நம்முடன் வருவது.

நாம் உடலுடன் உள்ள நிலையில் நாம் இப்பிறவி எடுத்து நம் ஆத்மா என்று பிரிகிறதோ அன்று வரை “நம் சப்த அலைகள் அனைத்துமே” நம் ஆத்மாவுடன் நம் கூட வருகின்றன.

ஆகவே எண்ணத்தையும் செயலையும் நன்றாக்கி வாழ்ந்திடுங்கள். தம் ஆத்மாவிற்கு நாம் சேர்க்கும் சொத்து அவைதாம்…! என்பதனை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.

ஞானிகள் வெளிப்படுத்தும் நல்ல அலைகளை ஈர்த்து வாழும் பக்குவத்திற்கு வாருங்கள். பல நிலை கொண்ட தீட்சண்ய ஆவிகளின் செயலில் இருந்து தப்பி வாருங்கள்.

இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் உள்ளன என்று பல முறை உணர்த்தியுள்ளேன்.

நம் உடலுக்குத் தேவையான மருந்தும்… உணவும்… நீரும்… காற்றும்… உலோகமும்… பல நிலை கொண்ட திரவங்களும்… இப்பூமித்தாய் பதித்துள்ள அனைத்து சக்திகளும்… இக்காற்றினிலே கலந்துள்ள பொழுது
1.நமக்கு வேண்டிய நல் நிலைகளை
2.நாம் ஈர்த்து வாழும் பக்குவம் பெற வேண்டும்.

Agastyan blissful state

செல்வம் இருந்தாலும் செல்வம் இல்லை என்றாலும் மனப் போராட்டம் இல்லாதவர்கள் உண்டா….?

 

செல்வங்களை எவ்வளவு தேடி வைத்திருப்பினும் செல்வம் வைத்திருப்போர் குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எத்தனை துயரங்கள்…? எத்தனை தொல்லைகள்…? எத்தனை வெறுப்புகள்…? அடைகின்றார்கள் என்று பார்க்கலாம்..

செல்வம் இல்லாதவர்கள்… அது கிடைக்கவில்லையே… அது கிடைக்கவில்லையே… என்று அவர்களும் வேதனை அடைவதைப் பார்க்கின்றோம். ஆனால்
1.செல்வம் இல்லாத போது உடலில் வேதனைப்பட்டாவது
2.செல்வத்தைத் தேட வேண்டும் என்ற வலிமை வருகின்றது.

செல்வம் வந்த பின் செல்வத்தைக் காக்க உணர்வுகள் வலிமை பெறுகின்றது. இருந்தாலும் வேதனையை வளர்க்க நேருகின்றது. அப்பொழுது தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் உணர்வுகள் இழக்கப்படுகின்றது.

செல்வம் உள்ளோருக்குத் தன்னிடம் தேடிய செல்வம் இருப்பினும் வேதனை என்ற உணர்வை நீக்க முடியவில்லை.

செல்வம் இல்லாதவருக்கு எப்படியும் செல்வம் தேட வேண்டுமென்ற ஆர்வம் வருகின்றது. அந்த ஆர்வத்தின் நிலைகள் கொண்டு உடல் உழைப்புகளைச் செய்து… தனது கஷ்டங்களை எண்ணாது… எப்படியும் தான் இந்த வாழ்க்கையை உயர்த்த வேண்டுமென்று மன உறுதி கொண்டு வளர்கின்றது.

நாளைக்குச் சாப்பாட்டுக்கு இல்லை என்று சொன்னால் எப்படியும் சாப்பாட்டைத் தேட வேண்டுமென்ற நிலையில் அந்த மன உறுதி வருகின்றது.

அடுத்தாற்போல் பார்த்தால்…
1.கூட நான்கு நாட்களுக்கு சாப்பாடு இருந்தால்… “சரி விடு போ… பார்க்கலாம்…!” என்று
2.அந்த தேடிச் சேமிக்கும் நிலையும் குறைந்துவிடுகின்றது.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

ஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.

அருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.

protection from astral souls

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம்மை நாம் பக்குவப்படுத்தி அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்கும் போது பல ஞானிகளும்… முன்னோர்களும்… நம் ஜெபத்துடன் வந்து அருள் தருகின்றார்கள்.

முன்னோர்கள் என்பது நம் குடும்பத்தில் நாம் பிறவி எடுத்த இப்பிறவியில் உதிரத் தொடர்புடைய பெரியோர்களின் ஆசியும் நமக்குக் கிட்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் அக்குடும்பத்தின் மூதாதையர் அவர்கள் இறந்த பிறகு உடனே மறு பிறப்பிற்கு வராமல் தனது உதிரத் தொடர்புடைய வம்ச வழிக்கு ஆவி உலகில் இருந்து கொண்டே பல நற்செயல்களைச் செய்து அக்குடும்பத்தைக் காக்கும் தெய்வமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

வாழ்ந்த நாளில் அக்குடும்பத்திற்காகச் செய்த நன்மையைக் காட்டிலும் ஆவி உலகில் இருந்து கொண்டே பல நற்செயல்களைச் செய்கின்றனர்.
1.தன் உதிரத் தொடர்பு உடையவர்கள் நிலையெல்லாம் மறைந்த பிறகுதான்
2.அவர்கள் மறு பிறப்பிற்கு வருகிறார்கள்.
3.இப்படி பிறப்பு இறப்பு என்னும் நிலைகளில் பல நிலைகள் உள்ளன.

நம் முன்னோரை வணங்கி நாம் ஆகாரம் படைத்து அவற்றைப் பட்சிகளுக்கு வைக்கின்றோம். அப்பட்சிகள் வந்து உண்ணும் நிலையில் நாம் நம் முன்னோரே அதை வந்து உண்டதாக மகிழ்கின்றோம்.

நம் முன்னோர் அப்பட்சியின் நிலைக்கு எப்படி வருகிறார்கள்…? அவர்களின் ஆத்மா அப்பட்சியின் உடலில் ஏறுவதல்ல.

ஞானிகளும் ரிஷிகளும் செயல்படுவதைப் போல் இந்நல்நிலை பெற்ற குடும்ப முன்னோர்களும் அப்பட்சியின் எண்ணமுடன் கலந்து அப்பட்சியையே தான் வருவதாக இயங்கச் செய்து அப்பட்சி உணவு எடுக்குங்கால் நாம் படைக்கும் அவ்வுணவில் உள்ள மணத்தை அவர்கள் ஈர்த்து எடுத்துச் செல்கிறார்கள்.

நாம் அவர்கள் எடுத்தார்கள் என்பதனை அறிய அப்பட்சியை ஒரு கருவியாக்கி அவர்களே அப்பட்சியுடன் வந்து எடுத்துச் செல்வதுதான் நாம் படைக்கும் நிலையெல்லாம்.

பறக்கும் நிலைகொண்ட அப்பட்சியின் உடலில் செயல்படுவது எளிது. அதன் நிலை கொண்டு தான் நம் முன்னோர்கள் நிலையும் இங்கு நடக்கின்றது.

எவ்வுடலையும் தன் செயலுக்குக் கட்டுப்படுத்திட எவ்வாவிகளுக்கும் முடியும். அவ்வாவிகளின் குண நிலைக்கு ஏற்பச் செயல்படுத்திடும் நிலை கொண்டவரின் நிலைக்கெல்லாம் அவ்வாவிகள் வருகின்றன.

குறிப்பிட்ட காலங்களில் இன்னும் பல இடங்களில் பட்சிகளுக்கு உணவு வைத்தால் அவ்வுணவை அதே நேரத்தில் வந்து அப்பட்சிகள் எடுத்துச் செல்வதைக் கண்டிருப்பீர்கள்.

இன்றும் அருணகிரிநாதர் தன் செயலை பட்சியின் மேல் வந்து அவருக்குப் படைக்கும் உணவை எடுத்துச் செல்கின்றார்.

இவ்வாவி உலக வாழ்க்கை ஒன்று உள்ளது.

மனித வாழ்க்கையில் உண்டு உறங்கி உழைத்து வாழ்கின்றோம். இவ்வாழ்க்கைக்கே ஆவி உலகில் உள்ளவரின் வாழ்க்கையும் கலந்துதான் செயல்படுகின்றது. அவ்வாவி உலகில் உள்ளவரும் நம்முடனே சுற்றிக் கொண்டுதான் உள்ளார்கள்.

இன்று மனிதனையும் இப்பிம்பப் பொருள்களையும் நிழல் படம் எடுப்பதைப் போல் ஆவி உலகில் உள்ளவர்களையும் எடுத்திடலாம்.

1.ஆவி உலகில் உள்ளவர்களும் எண்ணமும் செயலும் கொண்டுதான் வாழ்கின்றார்கள்
2.தன் ஆத்மாவிற்கு அவர்களும் நுகரும் தன்மை கொண்டு
3.பல சக்தி ஆகாரத்தை ஈர்த்துத்தான் ஆவி உலக ஆத்மாவும் வாழ்கிறது.

ஜீவ உடலில் உள்ள நாம் திடப்பொருளை உணவாக்கி உண்ணுகின்றோம்.
1.இவ்வுடலில்லாத ஆவி உலக ஆத்மாக்கள் தன் ஆத்மாவுக்கு வேண்டிய உணவை
2.ஆவியாகவே ஈர்த்துத் தன் ஆத்மாவுக்கு உணவாக்கிச் சுற்றிக் கொண்டுள்ளன.

நாம் படைக்கும் உணவையும் சில இல்லங்களில் அவ்வில்லங்களில் உணவைச் சமைத்து வைத்த நிலையிலும் அவ் இல்லத்தில் இறந்தோர்கள் தனக்கு வேண்டிய உணவை இன்றும் வந்து அதன் சுவையை ஈர்த்தெடுத்துச் செல்கின்றார்கள்.

சில இல்லங்களில் கேட்டிருப்பீர்…! உறக்கத்தில் உள்ள பொழுதே எழுந்து நடமாடி வீட்டு வேலைகள் செய்து உணவு சமைத்து உண்பதாக எல்லாம்.

உறக்கத்திலேயே அனைத்தையும் செய்துவிட்டு விழித்த பிறகு கேட்டால் மறந்துவிட்டதாகச் சொல்லுவார்கள்.

உறக்கத்துடன் பல நிலைகளை இன்றும் பலர் செய்கிறார்கள். இவையெல்லாம் தன் ஆசை அடங்காத நிலைகொண்ட ஆவிகளின் நிலைகள் தான்.

தன் நிலையைச் செயல்படுத்திட…
1.தன் ஆசைக்கு இவ் உடல்களைத் தன் எண்ணத்துடன் கலக்கச் செய்து
2.அவர்கள் நிலையை மறக்கச் செய்து தன் செயலை தன் ஆசையை இவ்வாவிகள் பூர்த்தி செய்து கொள்கின்றன.

இவ்வாவிகளுக்கு மனிதர்கள் விழித்துள்ள நிலையில் அவர்கள் எண்ணத்தை அடங்கச் செய்து தன் செயலைச் செயல்படுத்திட முடியாத நிலையில் தன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளத்தான் பலர் இரவில் தன்னை அறியாமல் உறக்கத்தில் நடந்திடும் நிலையெல்லாம்.

இவ்வாவிகள் தன் ஆசையைச் செயல்படுத்திடும் எண்ணத்துடனேதான் இவ்வுலகினில் சுற்றிக் கொண்டே உள்ளன. ஆகவே
1.நாம் பெறும் ஜெபம் முதலில் பிற ஆவியின் அணுக்களின் உந்தலில் இருந்து தப்பி
2.நம் சக்தியை நாம் உணர்ந்து நல் சக்தியை ஓங்கச் செய்து நாம் வாழ வேண்டும்.

lord-velaudha murugan

தீமைகளை வென்றிடும் உணர்வுகளாக நம் உடலுக்குள் விளைந்த நல்ல குணங்களை நாம் பாதுகாத்தல் வேண்டும்

 

ஏனென்றால் நாம் தவறு செய்யவில்லை என்றாலும் மனித வாழ்க்கையில் பண்பும் அன்பும் பரிவு கொண்டு மனிதனுக்கு மனிதன் காத்திட வேண்டுமென்று நாம் செயல்படுகின்றோம்.

தீமைகளினால் மற்றவர்கள் சிரமப்படும்போது பண்பு கொண்ட நாம் அவர்களை அணுகி அவர்கள் படும் துயரத்தைக் கேட்டறிந்து அவருக்கு நன்மையும் செய்கின்றோம்.

இது மனிதனின் நற்குணங்களைக் காட்டுகின்றது.

மனிதனானபின் இப்படிப் பண்பும் பரிவும் கொண்டு பாசத்துடன் நாம் வாழ்ந்தாலும் பிறர் படும் துயரத்தையோ அல்லது பிறரைத் துயரப்படுத்தும் செயலைச் செயல்படுத்துவோரையோ அல்லது பிறரைத் துன்பப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்போரையோ நாம் உற்றுப் பார்க்க நேருகின்றது.

அப்பொழுது அதை நாம் நுகர்ந்து “பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றார்கள்…” என்பதை நாம் அறிந்தாலும் அந்த உணர்வுகள் நம் நல்ல குணத்துடன் இணைந்து விடுகின்றது.

ஆக அவர்கள் செய்யும் தவறுகள் நம் நல்ல குணத்தில் பட்டபின் என்ன ஆகிறது…?

உதாரணமாக நாம் கீழே விழுந்து விட்டால் நம்மை எழுந்திருக்க விடாது நம்மை ஒருவன் அடித்துக் கொண்டே இருப்பான் என்றால் எப்படி இருக்கும்…?

அதைப் போல் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களில் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் பார்த்தோமென்றால்
1.நாம் இந்த இரண்டு குணங்களுடன் நுகரப்படும்போது
2.அவனுக்கு ஒருவன் தீமை செய்து கொண்டிருக்கின்றான் என்ற நிலை வந்தாலும்
3.நம் நல்ல அணுக்களில் இது பட்டபின் அது பலவீனமடைகின்றது.

ஒருவனைக் கீழே தள்ளி விட்டு நாம் மேலே ஏறி உட்கார்ந்தால் எப்படிப்பட்ட துன்பமோ இதைப்போல மனிதனை உருவாக்கிய இந்த நல்ல அணுக்கள் அது வேதனையுடன் துடிக்கத் தொடங்கிவிடும்.

1.இவ்வாறு நாம் வேதனையுடன் துடிக்கப்படும் போது
2.எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணினாலும் கீழே தள்ளும் நிலை போன்று தான் வரும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீங்கு செய்கின்றான் என்றால் அந்தத் தீங்கு செய்வோனை உற்றுப் பார்க்கின்றோம். அதனால் பாதிக்கப்படுபவன் பதறி அழுவதையும் பார்க்கின்றோம்.

அப்பொழுது அவனின் நல்ல குணங்களின் தன்மை கொண்டு நம் நல்ல குணங்களில் இணைக்கின்றது.

ஆனால் அதே சமயம் அந்த தீமை செய்வோன் தாக்கும் உணர்வுகளும்.. அதனால் அவன் பதறும் உணர்வுகளும்… இந்த இரண்டும் கலந்து இந்த உணர்வுகள் வெளிப்படுவதை நாம் நுகர்ந்து அறியும் போது நம் நல்ல குணங்களுடன் இந்த இரண்டுமே இணைந்து விடுகின்றது.

இது ஒரு சந்தர்ப்பமாக இருந்தாலும் அடுத்து ஒரு தரம் இதே போல் நடந்தால்…
1.நம்மை அறியாமலேயே என்ன உலகம்..? என்போம்…
2.எந்த நன்மையைச் செய்தாலும் இப்படி ஒரு உலகம் இருக்கின்றதே…! என்ற அந்த உணர்வுகள்
3.நல்லதைப் பேச விடாது தவறு செய்யும் உணர்வுகளையே நம்மைப் பேசவைத்து விடுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு டேப்பில் இனிமையான பாடலை ரெக்கார்டிங் செய்கிறோம் என்றால் அதிலே எதிர்மறையான ஒலிகளும் இடையிலே சேர்ந்து பதிவாகி விட்டால் நல்ல பாடலை இடைமறித்து அந்த இனிமையையே மாற்றி விடுகின்றது.

இதைப்போலத் தான் நாம் நுகரும் சந்தர்ப்பத்தில்… நமது உயிர் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்…
1.தீமை செய்வோனையும் தீமையில் சிக்குண்டவனையும் இந்த இரண்டு உணர்வையும் நாம் நுகரப்படும்போது
2.அவன் பதறுவதை இந்த உணர்வு வலு கொண்ட அணுவாக மாற்றுகின்றது.

அதே சமயத்தில் நல்ல குணம் கொண்டு நாம் உற்றுப் பார்க்கப்படும்போது அந்த நல்லவனுக்காக நம் எண்ணங்கள் பரிவுடன் சென்றாலும்… அவன் வேதனையாகப் பேசும் போது அவன் வேதனைப்படும் உணர்வுகள் எல்லாம் நம் நல்ல அணுக்களில் பதிந்து விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால்
1.நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள்
2.நல்ல உணர்வுகளை உருவாக்கும் அந்த அணுக்கள் செயலிழக்கத் தொடங்கி விடுன்றது.

நம் நல்ல குணங்களுடன் இதைப் போன்ற தீமைகள் இணைந்து நமக்குள் பதிவாகாமல் தடுக்க வேண்டுமல்லவா…! தடுக்கவில்லை என்றால் நம் நல்ல குணங்கள் பலவீனமாகும்… நம்மை அறியாமல் பதட்டம் வரத் தான் செய்யும்.

act of soul

நமக்குள் இருக்கும் பிற உணர்வின் உந்துதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள ஆவிகளின் சுமையுடன் நம்மை அறியாமலேயே அவற்றின் சக்திகள் பலவற்றை நம்முடலில் நாம் ஏற்றிக் கொண்டுள்ளதினால் தான் நம்முள் உள்ள குண நிலையை
1.நம் குண நிலைக்கு மேல் பிற அணுவின் செயலை நம்முள் ஏற்படுத்தி
2.அதனால் நமக்கு வரும் பல இன்னல்களின் நிலையுடன் வாழ்கின்றோம்.

நம் சக்தியின் செயலை நாம் பெற வேண்டும். பல அணுக்கள் நம் உடலிலிருந்து செயல்பட்டாலும்…
1.அவ்வணுக்களின் எண்ணத்திற்கு நம் புத்தியை அடிபணிந்து செல்லாத நிலைப்படுத்தி
2.நம் தியான சக்தியின் ஜெபத்தை நாம் பெற வேண்டும்.

எண்ணத்தில் கலக்கத்தை அண்ட விட்டால் நம் உடலிலிருக்கும் பிற அணுவின் துரிதம்தான் செயல்படும். நம் நிலை ஒரே நிலையிலிருந்தாலும் நம்முடன் கலந்து வாழ்பவர்களின் எண்ண நிலையின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் தாக்கும் பொழுது நம் நிலையும் மாறுபடும்.

சந்தோஷமான சூழ்நிலை உள்ள இடத்தில் நாம் உள்ள பொழுது நம் நிலையும் அங்குள்ளோரின் நிலையும் மகிழ்ச்சியுடன் உள்ளதல்லவா…? அதே நிலைபோல் துக்கம் உள்ள இடத்திலும் அங்குள்ளோரின் நிலையும் கவலை கொண்டதாக உள்ளதல்லவா…?

ஏனென்றால் இந்தக் காற்றினில் அனைத்து நிலைகளும் கலந்துள்ளன.

நாம் எந்நிலையில் உள்ளோமோ அந்நிலையில் சுற்றிக் கொண்டுள்ள சுவாசத்தின் துரித நிலை நம் நிலைக்கும் வந்து தாக்கி நம்மையும் அச்சூழ்நிலையில் கலக்கச் செய்கிறது.

இக்காற்றினில் உள்ள துரித நிலை கொண்டு எந்த இடத்தில் நாம் உள்ளோமோ அந்த நிலையின் சூழ்நிலைகேற்ப நம்மை அறியாமலே நாம் அடிமைப்பட்டு செயல்படுகின்றோம்.

இவ்வெண்ணத்தின் நிலைதான் இவ்வனைத்து நிலைகளுக்கும் நம்மை அடிகோலுகிறது.

நம்மில் வாழ்ந்த பெரியோர்கள் இந்நிலையிலிருந்து நாம் மாறுபடுவதற்குத்தான் இப்பக்தி நிலை தியான நிலை என்று நம்மை நல்வழியில் அழைத்துச் செல்லப் பல வழிகளை நமக்கு உணர்த்தினர்.

இந்நிலையை அறிந்த சிலரும் சில வினாக்களை எழுப்புகின்றனர். ஆண்டவன் அருள் பெற்று மகான் என்று பலரும் போற்றும் நிலையில் உள்ளவருக்கும் பல கஷ்டங்களும் பல உபாதைகளும் அவர் உடலில் வருகிறதல்லவா…? அது எதனால்…?

நம் கலியுடன் வாழ்ந்த மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற நாமம் கொண்டவர் வாழ்ந்த கடைசிக் காலத்தில் அவர் உடலில் பல உபாதைகள் இருந்தனவே.

அவர் தான் இவ்வுலகத்திற்கு இக்கலியில் வாழும் மனிதர்களுக்காக அவர்கள் நிலைக்கு புரியும்படி பல அருட்சொற்களை வெளியிட்டு பல ஜெபங்கள் இருந்து பல வழிகளைப் புகட்டினார். பலருக்குப் பல நல் நிலைகளைப் புகட்டிய அவர் உடலிலேயே பல நோய்கள் ஏன் தாக்கின..?

அவர் அவ்வுடலை அவரின் சொந்தமாகக் கருதவில்லை. மக்களுடன் மக்களாக வாழ்ந்தது தான் இவரின் நிலை.

இவரிடம் உபதேசம் பெற வருபவர்களின் எண்ணத்திற்கும் மற்ற நிலையில் வருபவர்களுக்கும் இவரின் நிலையை ஆண்டவனாக எண்ணி அவர்களின் கஷ்டத்தை இவரிடம் செப்பிடும் பொழுது இவரின் ஜெபத்தின் பயனால் இவரிடம் அருள் வேண்டி வருபவர்களின் உடல்களில் உள்ள உபாதைகளை இவர் ஈர்த்து இவர் உடலில் ஏற்றுக் கொண்டு அவர்களை நலமுடன் வாழும் நிலைப்படுத்தி அனுப்பினார்.

இவர் பெற்ற சக்தி இவரைக் காண்பவரின் நிலையிலுள்ள உபத்திரவத்தைத் தான் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலை பெற்றிருந்தார்.

ஆனால் அந்நிலையில் அஜ்ஜெப நிலை செய்யும் பொழுது ஈர்த்து உடனே வெளிப்படுத்தா விட்டால் இவர் இஜ்ஜெப நிலைக்கு வரும் காலத்திற்கு முதலில் இவர் உடலில் இருந்த அணுக்களின் வேகத்தினால் மற்றவரிடமிருந்து இவர் ஈர்த்த அவ்வியாதியின் அணுக்கள் இவர் உடலிலேயே தங்கிவிடுகின்றன.

இந்நிலையில் வந்ததுதான் அவரின் அந்திமக் காலத்தில் நடந்த நிலை. நிலை அறிந்தேதான் அவரும் வாழ்ந்தார். இத்தவயோக முனிவர்களின் நிலையெல்லாம் இதைப்போல்தான்.

உடல் உபாதையில் மற்றவர்கள் நிலை இருக்கும் பொழுது அவற்றைத் தான் ஈர்த்து வெளிப்படுத்திட முடியும். அவர்களைக் குணமாக்கிடவும் முடியும்.

இதுவே இவ்வுடல் தசைப் பாகத்தில் மட்டும் இந்நிலையைச் செய்திட முடியுமே தவிர இவ்வுடலிலுள்ள எலும்பின் நிலையில் உள்ள மாற்றத்தையும் பிணியையும் எம்முனிவனாலும் சித்தனாலும் ஈர்த்துச் செயலாக்கிட முடியாது.

ஆவி நிலைகொண்ட தசையில் உள்ள நிலைகளை மட்டும் தான் குணப்படுத்திட முடியும்.

1.சக்திக்கும் சக்தி வாய்ந்த அச்சக்தி தேவனின் அருளை வென்றிட
2.எந்த ரிஷி நிலை பெற்றாலும் அச்சக்தியேதான் ஓங்கி நிற்கும் நிலை உள்ளது.
3.அச்சக்தியின் சொரூப நிலையை எண்ணியே வணங்கிடத்தான் முடியும்.

ஆகவே… நம்மில் நம் எண்ணத்தை நல் நிலைப்படுத்தி
1.நமக்குள் இருக்கும் மற்ற அணுக்களின் செயல்களிலிருந்து
2.நம்மை நாம் பாதுகாப்புடன் வாழும் நிலைக்கு முதலில் பக்குவம் கொண்டு வந்திட வேண்டும்.

soul cleaning importance

பல துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தாலும் நம் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் திறன் பெற வேண்டுமா இல்லையா…?

 

விஞ்ஞான அறிவில் படித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோ வகையில் இப்பொழுது தனக்கு வேண்டிய உயிரணுக்களை மற்ற உடல்களில் இருந்த செல்களை எடுத்து மற்ற உடலில் சேர்த்து புது புது ஆட்டினங்களையோ மாட்டினங்களையோ நாயினங்களையோ உருவாக்குகின்றார்கள்.

எத்தனையோ எண்ணிலடங்காத நாய்களைப் பூனை போல்… கரடி போல் உருவாக்கியிருக்கின்றனர். பூனை போல்… கரடி போல் உள்ளது. மற்ற உயிரினங்களிலிருந்து எடுத்து அதை ஒன்றாகக் சேர்த்து புதுப் புது நாய்களை உருவாக்குகின்றான்.

அதே போல் உணவுப் பொருள்களில் பார்த்தாலும் சாதாரண மனிதன் பல வகையான பொருள்களைச் சேர்த்துப் புதுப் புது பதார்த்தங்களை செய்கின்றான்.

மனிதனுக்குச் சுவையாக இருப்பதற்குப் புதுப் புது பதார்த்தங்களைச் செய்கின்றோம். எந்தப் பொருளை எதனுடன் போட்டால் எதன் சுவை வரும்…? என்ற நிலையில் மனிதன் கற்றுணர்ந்து அதன்படி சுவையான பதார்த்தங்களைச் செய்கின்றான்.

அன்றெல்லாம் ரொட்டி கடையில் மட்டும் தான் ரொட்டி தான் இருக்கும். இப்பொழுது வீட்டிலேயே கூட ரொட்டியோ மற்றதோ செய்யக்கூடிய அளவிற்குக் குடும்பங்களில் படித்ததை வைத்துச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இதைப்போல மனிதன் தன் எண்ணத்தால் புதுப் புதுப் பொருள்களை உருவாக்கும் அளவிற்குத் திறன் பெற்றுள்ளான் மனிதன்.

பெண்கள் வீட்டில் வகை வகையான குழம்புகளை வைக்கின்றார்கள். பருப்பை எடுத்து அளவாகப் போட்டு அதற்கு வேண்டிய சரக்குகளைப் போட்டுப் பக்குவப்படுத்திச் சுவையான உணவு வகைகளைச் சமைக்கின்றனர்.

அதே சரக்குகளை அதே அளவுகோல்படி இன்னொரு பெண்மணியிடம் கொடுத்து அதே மாதிரிச் சமைக்கச் சொன்னால் அதன் சுவை வித்தியாசமாகத் தான் இருக்கும்.

காரணம் அவர் உணர்வுகொப்ப அந்த சுவையைக் கூட்டிடும் உணர்வுகளை உருவாக்குகின்றது. இது ஒவ்வொரு குடும்பத்திலும் பார்க்கலாம்.

சில குடும்பங்களில் பார்த்தால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். சுவையாக இருப்பதற்குக் காரணம்… அங்கிருக்கும் பெண்கள்
1.கூடுமான வரையிலும் நல்ல சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்த வேண்டுமென்று
2.அந்த உணர்வை ஏற்றுக் கொண்டதனால்
3.அந்த உணர்வுகள் அந்தந்தப் பக்குவத்தை பெறப்படும் பொழுது
4.குழம்பைச் சுவையாக செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கொஞ்சம் விரக்தியாக வரட்டும் அல்லது சண்டை போடட்டும்…! ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பான உணர்வு வரப்படும்போது அன்று குழம்பு வைப்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலா.

உதாரணமாக.. கோபமாக இருந்தால் காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்கள். சலிப்பு சஞ்சலம் அதிகமாக இருந்தால் இரண்டு உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்கள்.

ஆனால் அதே சரக்குகளை வைத்து சுவையாக முதலில் செய்தவர்கள் தான். அந்த அளவுகோலும் இருக்கின்றது. ஆனால் இந்த உணர்ச்சிகள் அதற்குத்தக்க இந்த உடலை இயக்குவது எது…?

அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்தான்…! அவர்கள் தப்பு செய்யவில்லை.

குழம்பு வைத்த பிறகு பார்த்தோமென்றால் ஐய்யய்யோ… நான் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி குழம்பு வைத்துவிட்டேன் என்பார்கள்.

அதே போல் பக்கத்து வீட்டுப் பையன் அடிக்கடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். பார்த்தவுடனே… இப்படியா அவர்கள் வீட்டில் சண்டை போடுவார்கள்…! என்று சலிப்படைந்தேன். அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தேன். இங்கே உப்பு அதிகமாகி விட்டது என்பார்கள்.

இதை எல்லாம் மாற்றுவது யார்…?

பிறர் செய்யும் சிந்தனையற்ற செயலின் உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் நம் உடலுக்குள் ஓடி அவரின் உணர்வுகளுக்குத் தக்கவாறு நாம் குழம்பு வைக்கின்றோம்.

அப்பொழுது யார் தப்பு செய்தது…? நாம் அந்த சந்தர்ப்பத்தில் நுகர்ந்தது தான் இயக்குகிறது.

கையிலே மண்ணை எடுத்து ஒரு வேலையாகப் பிசைந்து கொண்டிருக்கின்றீர்கள். கையை கழுவாமல் அப்படியே நீங்கள் அடுத்தாற்படி குழம்பை வைத்தீர்கள் என்றால் என்ன ஆகும்…?

இந்த மண்ணோடு காய்கறிகளைச் சேர்த்தோமென்றால் இந்த மண்ணும் சேர்த்து நர…முற… நர…முற… என்று இருக்கும். அப்படியானால் நம் கையைக் கழுவுகிறோம் அல்லவா…?

அதே சமயத்தில் வழு வழுவென்று இருக்கக்கூடிய பதார்த்தத்தைத் தொட்டு வேலை செய்கின்றோம். கை கழுவாமல் இருந்தால் அதே உணர்வின் தன்மை நாம் வைக்கும் குழம்பில் சேருமல்லவா…? அதை சுத்தப்படுத்திவிட்டு தானே வேலை செய்கின்றோம்.

இதே மாதிரித் தான்…
1.ஒரு கோபப்படும் உணர்வை நாம் கேட்கின்றோம்… உயிரிலே படுகின்றது
2.இந்த உணர்ச்சிகள் போனவுடனே நம் ஆன்மாவில் தூய்மை கெடுகின்றது
3.நம் உடலுக்குள் போனவுடன் அதே கோப உணர்ச்சிகளை இயக்குகின்றது
4.அப்பொழுது நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டுமா இல்லையா?

அதற்கு என்ன ஆயுதம் வைத்துள்ளீர்கள்…?

ஏனென்றால் இதெல்லாம் மறைமுகமாக நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றுகின்றது நல்ல உடலையும் நோயாக மாற்றி விடுகின்றது.

பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கப் பார்க்க அந்த உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறுள்ளவனாக மாற்றி விடுகின்றது.

அதனால்தான் விநாயகர் கையில் கொடுத்திருப்பது அங்குசபாசவா.

அதாவது உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில்
1.ஒவ்வொரு பிறவியிலும் தீமைகளில் இருந்து விடுபட வேண்டுமென்று
2.தன் கண்களால் கூர்மையாகப் பார்த்து அதன் வலிமையை நுகர்ந்து
3.எதிரியிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து
4.அதிலிருந்து விலக வேண்டும் என்ற உணர்வு அதிகமானபின் தன் உடலில் இது விளைந்து
5.இது இறந்தபின் எதன் வலுவான உணர்வு நுகர்ந்ததோ அந்த உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் மனிதனான நிலையில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கிட… ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து… அதை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்ற வேண்டும் என்பதற்கே “அங்குசபாசவா” என்று ஞானிகள் காட்டினார்கள்.

lord-eswaran-god

நம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்

 

நமக்கு வழி காட்டிய நம் முன்னோரும்… நம்மில் கலந்து வாழ்ந்த சப்தரிஷி நிலை பெற்றவர்கள் முதற்கொண்டு இயற்கையின் நிலையைத்தான் போற்றி வழி நடந்து வந்தார்கள்.

இன்றும் அவர்களின் செயல் பல ரூபத்தில் செயல் கொண்டு வழி நடத்தியும் வருகின்றார்கள். எந்நிலையில்;..?

இன்று நீங்கள் பல இடங்களில் அகஸ்தியர் நாடி போகர் நாடி பிருகு மகரிஷியின் நாடி இன்னும் இப்படிப் பல நிலை கொண்ட நாடிகள் சில இடங்களில் உள்ளதாக அந்நிலைக்குச் சென்று அதை ஒதுபவர்களின் வாயிலாக அறிந்து வருகிறீர்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்நாடிக்கும் இன்றைய நிலைக்கும் பெயர் நாமம் முதற்கொண்டு ஒத்து வரும் தன்மை என்ன…?

அந்நாடியை ஓதுபவரின் ஜெபமும் எண்ணமும்… எப்பெரியோரின் நாடியைத் தெய்வ நிலை கொண்டு ஜெபம் கொண்டு அவர் ஏற்கும் பக்தி நெறியின் நிலைக்கு… அந்நாடியை எழுதிய பெரியோரை… அதை வணங்கி ஓதுபவரின் சப்த அலையுடன் வந்து கலந்து… ஓதச் செய்வதுதான் அந்நாடியில் உள்ள நிலை.

இன்று படிப்பவரின் அறிவுக்கு எட்டாத இன்றைய கல்வித் திறனும் அதை எழுதி வைத்த காலத்தின் கல்வித் திறனும் மிகவும் வேறுபட்ட நிலையில் இருக்கும் நிலை கொண்டு இன்று ஓதுபவருக்கு அச்சொல்லின் நயமும் அழகும் அவரால் ஈர்த்துப் படித்திடவும் முடியாது.

சில குறிப்புகள் மட்டும் இவரால் அறிந்திட முடியும். அந்நிலையில் வந்து சொல்வதெல்லாம் அந்நாடிகளை எழுதியவர்களே தான் வந்து உணர்த்துகிறார்கள்.

காமாட்சி நாடி மீனாட்சி நாடி என்றெல்லாம் சொல்லும் நிலையிலும் அந்நிலையிலுள்ள சித்து நிலை கொண்ட காமாட்சி அம்மனும் மீனாட்சி அம்மனுமே வந்து இவர்கள் நிலையில் உணர்த்துவதுதான்.

சிலருக்கு நாடியில் வந்ததை அதன் சொல்லிய வாக்குப்படி எந்நிலையில் நம்புகின்றார்களோ அந்நிலையின் பரிபூரண அருளாசி பெறுகின்றார்கள்.

நம்பிக்கையில் நடப்பதுதான் இவ்வுலகமே…!

நாடியில் கேட்டதையே மனச் சஞ்சலத்துடன் வளர விடுபவனுக்கு அனைத்து நிலைகளுமே தவறாகத்தான் நடந்திடும்.

ஆண்டவனே… ஆண்டவனே…! என்பது நாம் ஆண்டவனாக வணங்கும் பெரியோரின் நிலையையே சஞ்சலப்படுத்தும் நிலைதான் இவையெல்லாம்.

நம் பாட நிலையில் தான் ஆண்டவன் என்றால் யார்…? என்பதனைப் பல நிலைதனில் விளக்கியுள்ளோம். ஞான வழியின் பக்குவ நிலைக்கு நாம் பெறும் சொத்து தான் ஆண்டவனின் அருள் சொத்து.

ஆவி உலகின் சூழ்ச்சியினால் இவ்வுலக நிலையே தத்தளித்த நிலையில் உள்ளது. ஆவி உலகில் அல்லல்பட்டு…
1.பல செயல்களை அதி கஷ்டத்துடன் செயலாற்றும் பல நிலை கொண்ட ஆவிகளுடன் நாம் கலந்து வாழ்வதினால்
2.நம்மில் தியான நிலை கொண்ட செயலை வளரவிடுவது ஒன்றுதான்
3.இன்று இவ்வுலகினில் உள்ள நிலையிலிருந்து நாம் தப்பும் வழி.
4.ஏனென்றால் இப்படர்ந்த உலகினில் நம் எண்ணத்தில் சிறு சலிப்புக்கும் கோபதாப குரோதத்திற்கும் இடம் அளித்திட்டாலும்
5.இவ்வாவியின் நிலையிலிருந்து தப்புவது கடினம்.

நம்முள் உள்ள இறை சக்தியை உணர்ந்தே அவ் ஈஸ்வர ஜெபத்தை எந்நிலையிலும் நம் நினைவில் கொண்டிடல் வேண்டும்.

1.நம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடாமல்
2.ஒவ்வொருவரும் இதன் வழி பெற்று வாழ்ந்தால்தான்
3.இவ்வாவி உலகிலுள்ள ஜீவ ஆத்மாக்கள் அனைத்தின் செயலிலிருந்தும் நாம் தப்ப முடியும்.

Varanasi, Kasi

பாவங்களைப் போக்க புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் இன்று பாவத்தைப் போக்க முடிகின்றதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் பாட நிலையில் உடலில்லாத ஆத்மாவுடன் கூடிய ஆவிகளின் நற்செயல்கள் தீமைகள் இவற்றையே பல நிலைகளில் சொல்லி வருகின்றேன்.

1.வாழ்பவரின் நிலையைக் காட்டிலும்… அவர்களின் எண்ண சக்தியை
2.இவ்வாவிகளின் செயல்தான் இவ்வுலக நிலையையே நடத்திச் செல்லும் தன்மை கொண்டதாக உள்ளது.

இன்று புனித கங்கை என்ற நிலையில் காசிக்குச் சென்று நம் பாவங்களைக் கழிக்கப் பல மைல்களுக்கப்பால் இருந்தும் அப்புண்ணிய நதியில் நீராடி வந்தால் பாவங்கள் குறையும் என்ற எண்ணத்தில் பக்தி கொண்டு பல கஷ்டங்களுடன் பாவத்தைப் போக்க காசிக்குச் செல்கிறார்கள். அதே போல் இராமேஸ்வரம் என்று புண்ணிய ஸ்தலத்தையும் நாடி மக்கள் செல்கிறார்கள்.

அக்காசி கோவிலில் உள்ள அத் தபசு ரிஷியான காசி விஸ்வநாதரின் அருளைப் பெற்றிட அப்புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்கின்றார்கள்.

ஆனால் அங்கும் நடக்கும் நிலை என்ன…?

அப்புண்ணிய ஸ்தலத்தில் வாழும் மக்களின் எண்ணமெல்லாம் புண்ணியாத்மாக்களாக புண்ணிய பூமியாக்கிடவா செயல்கள் நடக்கின்றன…?

பாவத்தைக் கழிக்கும் இடமாக எண்ணிச் சென்று புண்ணியத்தை வாங்கியா வருகின்றார்கள்…? கொலையும் கொள்ளையும் மலிந்து அப்புனித கங்கையில் புனித நீரைக் குருதி நீராக்கிக் கலக்க விட்டுள்ளார்கள்.

பல மைல்களுக்கப்பால் இறந்தோரை எல்லாம் அவ்வுடல்களை இக்கங்கையில் செலுத்தினால் இறந்தவருக்குப் புண்ணியம் என்ற நிலையில் இந்நிலையில் கொண்டு வந்து விடுகின்றார்கள்.

பாவத்தின் பிறப்பிடமாக இன்று உள்ளது புனித கங்கையும் காசியின் திருத்தலமும். அங்கு செயற்கொண்டு இருக்கும் ஆண்டவனின் அஜ்ஜோதி மகான் இன்றும் அங்கு தான் உள்ளார்.

அனைத்துப் பாவங்களையும் அவரும் பார்த்துக் கொண்டே தான் உள்ளார். எண்ணத்திற்குகந்த அருளைத்தான் அவர் அளிக்கின்றார். பாவத்திற்கு அவர் என்ன செய்ய முடியும்…?

1.பாவத்தின் எண்ணம் கொண்டவன் அவன் செய்யும் பாவங்களின் அணுவையே மீண்டும் மீண்டும் தன்னுள் ஏற்றிக்கொண்டு
2.எப்பாவத்திற்கும் துணிந்தவனாகப் பல பாவங்களுக்கு உகந்தவனாகத் தன்னை ஏற்படுத்திக் கொண்டு
3.அப்புண்ணியக் கரையிலேயே பலர் இன்று வாழ்கிறார்கள்.

ஏன் அவ்வாண்டவன் இவர்களுக்கு நல்வழி புகட்டக் கூடாதா…? என்று கேட்பவர் பலர். ஆண்டவன் நிலையையும் ஆவியின் நிலையையும்தான் நாம் பிரித்துப் பிரித்துப் பல நிலைகளில் சொல்லியுள்ளோம்.

1.எண்ணத்தின் பேய்க்கு அடிமைப்பட்டவனை எவ்வாண்டவனும் வந்து நல்வழியில் செலுத்திட முடியாது
2.அவன் உடலைவிட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
3.அவ்வாத்மாவின் நிலை அடையும் அதிகாட்டத்திலிருந்துதான் அவன் உணர்ந்திட முடியும்.

அந்நிலையில் வாழ்ந்தவனுக்கு உணரும் தன்மையும் உடலைவிட்டு ஆத்மா பிரிந்த பிறகும் அறிந்திட முடியாது. நரகலோகம் என்னும் அதி அவஸ்தை கொண்ட அழுகும் ஆவியாகத்தான் மிகவும் அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

அவ்வாவி பிறப்பெடுத்தாலும் நாயாகவும் அதற்கும் ஈன நிலையில் உள்ள மற்ற ஜெந்துக்களின் நிலைக்குத்தான் வந்திட முடியும்.

வாழும் காலத்தில் வாழ்க்கையின் சுகம் என்ற நிலையில் பல சுமைகளை ஏற்றிக் கொண்டு வஞ்சகம் குரோதம் ஆத்திரம் வெறி காமம் இப்படி பல வெறி கொண்ட நிலையை வாழ்க்கையின் சுகமாக எண்ணி வாழ்ந்து என்ன பயன்…?

வாழும் காலம் ஒரு மனிதனுக்கு 60, 70 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதில்லை. இக் குறுகிய காலத்தின் ஆசைக்குத் தன் ஆத்மாவை அடிபணிய வைத்து வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

அழிவில்லா இவ்வாத்மா மனித வாழ்க்கையில் வாழும் காலம் மிகவும் குறுகிய காலம். என்றுமே அழியாத ஆத்மாவை இம்மனித உடலில் உள்ள பொழுதினில் மட்டும் தான் கரை சேர்த்து என்றும் அல்லல் இல்லா வாழ்க்கை பெறும் சூட்சுமம் கொண்ட வாழ்க்கைக்குச் செல்லும் பொக்கிஷம் இம்மனித வாழ்க்கையில்தான் உண்டு.

1.அறியாமல் செய்திடும் பிழைதான் இன்று வாழும் வாழ்க்கை நிலை
2.கரை சேர்ந்திடும் நிலைக்கு நம்மை பக்குவப்படுத்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் பல மனிதர்களுக்கு இல்லை.

அன்று நம் முன்னோர் புண்ணிய ஸ்தலமாக்கி ஆண்டவன் சக்தி பெற்றுப் பல கோவில்களை அமைத்து நமக்கு வழிகாட்டிட ஏற்படுத்திய நிலையை எல்லாம் இன்று நாம் நம் வேடிக்கைக்காகவும் உல்லாசப் பயணங்களுக்காகவும் பொழுது போக்கும் நிலைக்காகவும் நமக்கு உகந்த ஆசைப்படி எல்லாம் ஏற்படுத்தி விட்டோம்.

அதனால் இன்று அந்தப் புண்ணிய ஸ்தலங்களும் பல புண்ணிய நதிகளும்
1.ஆவிகளின் அட்டுழியங்கள் நடக்கும் நிலையாக மாறி
2.இன்று புண்ணியம் வாங்கச் செல்பவர்களின் உடல்களில் எல்லாம் பல உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
3.அடங்கா ஆசையுடன் உள்ள ஆவிகள்தான் உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
4.தன் ஆகைக்குகந்த செயல்களையும் நடத்துகின்றன.

தன் செயலின் நிலை ஈடுபடுத்தாவிட்டாலும் அவ்வுடலில் இருந்து வெளிவர முடியாத நிலையில் பல உடல்களை இவ்வாவிகளினால் அவ்வாவிகளின் உந்தலுக்கு உட்படுத்திவிட்டன.

1.நாம் செல்வது புண்ணியம் வாங்க…
2.அப்புண்ணிய ஸ்தலத்தில் உள்ள இவ்வெண்ண மூச்சுக்கள் எல்லாம் நாம் சென்றதும் நம் எண்ணத்தில் கலந்து (நம் சுவாசத்தில்)
3.நம்மையே நம் செயலில் செயல்படாத நிலை ஏற்டுத்தி விடுகின்றன.

புண்ணிய ஸ்தலத்திற்குச் சென்று “பாவ மூட்டையைத்தான் சுமந்து வருகின்றோம்…!” இன்றைய நிலை இது தான்…!

guru spiritual wishes

என்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்

 

இங்கு வெளியிடப்பட்டுள்ள அருள் ஞான நூல்களை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போது உங்கள் வாழ்க்கையில் மனம் சோர்வடைகின்றதோ அப்போது அதை எடுத்துப் படித்தால் அந்தச் சோர்வின் தன்மையை அது மாற்றி அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்களை அழைத்துச் செல்லும்.

ஆகவே இதை ஒவ்வொருவரும் தலையாய கடமையாக வைத்து அதைப் படியுங்கள். படித்ததை நீங்கள் மீண்டும் நினைவு கொண்டால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1.நான் (ஞானகுரு) ஒரு பங்கு தான் வளர்ந்திருக்கின்றேன்
2.என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு உயர்ந்தவர்களாக முடியும்.
3.அருளானந்தத்தைப் பெறக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்.
4.அனைவருக்கும் அருளானந்தத்தைக் கொடுக்கும் உயர்ந்த நிலைகள் நீங்கள் பெறலாம்.

சாமிக்கு மட்டும் ஏதோ சக்தி இருந்து பெற்றதில்லை…! என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு அதிகமாக அந்த அருள் சக்தியைப் பெறலாம். இதன் வழி நீங்கள் பின்பற்றிப் பாருங்கள்.

நீங்கள் எந்த அளவுக்கு உயர்கின்றீர்களோ உங்களிடமிருந்து அந்த ஆனந்தமான உணர்வை நானும் பெறுகின்றேன். இதைப் போல பிறருக்கு நீங்கள் போதித்து அவர்கள் வளர்ச்சி அடையும்போது அதைக் கண்டு நீங்களும் ஆனந்தப்படுங்கள்.

இணைந்து வாழும் நிலையும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் நாம் அனைவரும் பெறுகின்றோம். நீங்கள் எல்லோரும் உயர வேண்டும் என்ற கருத்தில்தான் இதை உபதேசித்து அந்த உயர்ந்த உண்மையின் உணர்வை நீங்கள் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

நீங்கள் எந்த அளவுக்கு இதிலே வளர்ச்சி பெறுகின்றீர்களோ அந்த அளவுக்கு எனக்கு ஆனந்தம் வரும்.

ஒரு வித்தினை ஊன்றியபின் அது சீராக முளைத்து நல்ல பலன் கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்…? சந்தோஷம் என்ற நிலை வரும்.

ஒரு வித்தினை ஊன்றி அது சரியாக முளைக்காவிட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்… சோர்வடைந்துவிடும்…!

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானத்தைப் போதித்து அருள் உணர்வுகள் உங்களில் வளர வேண்டும். இந்த வாழ்க்கையில் துன்பங்களை அகற்றிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும். பேரானந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்றுதான் எனது தியானமே.

இதைக் கேட்டுணர்ந்தோர் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் வலு கொண்டு துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெருக்குங்கள் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுங்கள். அதைப் போல பேரானந்தத்தைப் பெருக்கும் நிலையை கூட்டுங்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய தீமைகளை அகற்ற உதவும். உங்கள் வாழ்க்கையில் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் வளர்வதைக் கண்டால் எனக்கு சந்தோஷம். அதே போல் நீங்கள் உங்களுடன் அணுகி வருவோருக்கு உங்கள் நோயெல்லாம் போய்விடும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொல்லி அதன் மூலம் அவர்கள் சந்தோஷப்படும்போது உங்களுக்கும் சந்தோஷம் வருகின்றது.

ஆகையினால் இந்தத் தியானத்தைச் செய்வோர் பிறருடைய நிலைகளைக் கண்டு “உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று கேட்க வேண்டாம்.

உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு…
1.உங்கள் நோய் ஓடிப் போகும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் தொழில் லாபகரமாக இருக்கும் என்ற இந்த வாக்கினைக் கொடுங்கள்.

உங்கள் வாக்கு அது ஒரு ஞான வித்தாகி அவர்கள் நினைவு கொண்டால் நிச்சயம் அவர்கள் நலம் ஆவார்கள். ஒருவருக்கொருவர் இப்படிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாதாரணமாக… ஒருவர் “தான் படும் துன்பத்தைச் சொன்னால்” அதை நாம் கேட்டபின் அந்தத் துன்ப நிலையே நமக்குள்ளும் விளைகின்றது.

இதைப் போல் பேரின்பம் பெற வேண்டுமென்று உங்களுக்குள் அருள் ஞான வித்தை யாம் ஊன்றிய பின் இதன் உணர்வை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

ஒவ்வொருவரும் அதிகாலையில் கூட்டுக் குடும்ப தியானம் இருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பெருக்குங்கள். எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்.

human thinkings

மனிதன் தன் எண்ண சக்திகளை ஆக்கபூர்வமான காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

அச்சு ஒன்று பதித்து உருவம் ஒன்று ஆவதில்லை. எந்த விதையைப் போடுகின்றோமோ அந்தச் செடிதான் வளரும்.

நம் எண்ணத்தை எந்த நிலையில் செயல்படுத்துகின்றோமோ அந்த நிலையின் தொடரின் வழி நிலையின் வாழ்க்கைதான் வந்தமையும் நமக்கெல்லாம்.
1.எண்ணப்படிதான் வாழ்க்கை…
2.உன் எண்ணம் போல் வாழ்ந்திடு…! என்ற பெரியோரின் வாழ்த்தைத்தான் நாம் பெறுகின்றோம்.

ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் பல குழந்தைகளின் குண நிலை ஒன்று போல் இருப்பதில்லை. குண நிலை மட்டுமல்ல மன நிலையும் ஒவ்வோர் உடலுக்கும் ஒவ்வொரு வித மனம் உண்டு.

இப்பூமியில் உதித்த ஜீவன் பெற்ற அனைத்திற்குமே ஒவ்வொரு மணம் உண்டு. மணத்தைப் போலவே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலை உண்டு.

ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் அவரவர்கள் எந்நிலை கொண்ட குண நிலையையும் சக்தி நிலையையும் வளர்த்துக் கொள்கின்றார்களோ அந்நிலையின் வளர்ச்சிக்கு அந்நிலைக்கு ஒத்த குண நிலைகளில் உள்ள ஆவி உலகிலுள்ள ஆத்மாக்களின் தொடர்பு நிலையும் இவர்களுக்கு வந்தடைகின்றது.

இன்று இந்நிலத்தில் நீர் எங்குள்ளது..? எந்நிலையில் ஊற்று நிலை உண்டு…? என்பதனையறிய சிலரின் உடல் நிலையிலேயே அச்சக்தி நிலையுண்டு.

அவர் உடலிலேயே அச்சக்தி நிலையும் அந்நிலைக்கு ஒத்த அவர் நிலையில் உள்ள மற்ற ஆத்மாவின் தொடர்பும் அவர் உடலில் இருந்தால் தான் நீர் உள்ள நிலைகளைக் கண்டறிந்திட முடிந்திடும்.

நம் முன்னோரின் வழியில் வந்தது தான் இந்நிலையின் வழி. இவை போலவே இப்பூமியில் உள்ள உலோக நிலையையும் கண்டறியலாம்.

இவ்வுடலில் இப்பூமி எச்சக்தியெல்லாம் எடுத்து வெளிப்படுத்துகின்றதோ அந்நிலைக்குகந்த சக்தி நம் உடல்களிலும் உள்ளது. இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் கலந்துள்ளன.

எப்படி இப்பூமியில் பல நிலை கொண்ட உலோகங்கள் வளர்கின்றனவோ அந்நிலைபோல் ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் பல நிலைகள் கொண்ட சக்தி நிலைகள் உண்டு.

நமக்குகந்த சக்தி நிலையை வளர விட்டு அவற்றின் நிலையை அறிந்து அதன் வழிக்குச் செல்லும் பக்குவ நிலை புரியாமல் வாழ்கின்றோம்.

இன்று பல இடங்களில் மனோவசிய நிலை (மெஸ்மரிஸம்) என்னும் நிலையைச் சிலர் அறிந்து ஒருவரது நிலை அனைத்தையும் கட்டுப்படுத்தி இவர்கள் எச்சக்தியைப் பாய்ச்சுகின்றார்களோ அச்சக்தியின் நிலை கொண்டெல்லாம் மனோவசியத்திற்கு உட்பட்டவர் நடப்பதாகப் பார்த்தும் கேட்டும் இருப்பீர்.

இவற்றின் நிலையென்ன…?

அறிந்து… கல்வி அறிவில் வந்த நிலை என்பர் பலரும். கல்வி அறிவில் மட்டும் வந்த நிலையல்ல அந்நிலை.

அவர்கள் நிலையும் இன்று பல நிலை கொண்ட சாமியார்கள் மந்திரம் செய்து பல பொருட்களை விபூதி புஷ்பம் இப்படிச் செய்யும் நிலைக்கும் இம்மனோவசியம் செய்யும் நிலைக்கும் ஒத்த நிலைதான்.

ஆவியின் தொடர்பு கொண்டு மனோவசியத்தால் யாரை அந்நிலைக்கு வசியப்படுத்துகிறார்களோ அவர்களின் எண்ணத்துடன் இவ்வாவியின் எண்ண அலையும் சப்த அலையும் கலக்கவிட்டு வசியப்பட்டவரின் நிலையை அடக்கி இவர்கள் ஏவிய ஆவியின் நிலைப்படியெல்லாம் அவ்வசியப்பட்டவர்கள் நடக்கும் நிலைதான் இம்மனோவசிய நிலை.

யார் இம்மனோவசியம் செய்கிறாரோ அவரது சொல்லும் அவரது எண்ணமும் இவ்வசியப்பட்டவரின் நினைவில் கலந்துள்ள ஆவியின் நிலைக்கும் தொடர்பு கொண்டு இவ்வசியப்படுத்தியவர் சொற்படியெல்லாம் அவ்வாவி அவ்வசியப்பட்டவரின் உடலில் இருந்து செயல்படுத்துகிறது.

1.அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழை இது
2.வசியப்பட்டவரின் சக்தியும் பாதிக்கப்படுகிறது
3.வசியம் செய்தவரின் சக்தியும் இதனால் பாதிக்கப்படுகிறது.

இதன் நிலையில் அடையும் நல் நிலை என்ன..? கால நிலையும் விரயமாகிறது.

ஆண்டவன் அருளிய சக்திதனை அன்பென்னும் பொக்கிஷமாக்கி அச்சக்தியான ஜெபத்தைக் கொண்டு பல உன்னத அறிவுச் செல்வத்தை நாம் பெற்று இவ்வுலகினைச் செழிப்பான உலகமாக்கி செழித்து வாழ்ந்திடும் இயற்கையின் செழிப்பிற்கு நம் சக்திதனை ஒன்றச் செய்தல் வேண்டும்.

அப்படிச் செய்தால் இவ்வுலகமே செழித்து…
1.இன்று இக்காற்றே கடும் விஷமாகச் சுற்றியுள்ள நிலையை மாற்றி
2.ஆனந்தமான மண நிலையைப் பரவச் செய்யத் தாவரங்களின் நிலையைத் துரிதப் படுத்தி தாவரங்களை வளரச் செய்து
3.நற்கனிகளையும் நல் தானியங்களையும் நாம் பெற்றே
4.நற்சுவையுடன் நாம் உண்டே நல் மணத்துடன் நாம் வாழும் நிலை ஏற்படுத்திட முடியும்.

அதற்கு நாமெல்லாம் ஒன்றுபட்டு நம் சக்தியின் ஜெபத்தால் அந்த இயற்கைக்கே அடிபணிவோம்.

Blessings of Sages

எந்தத் தீமையும் தன்னைச் சாடாதபடி… அதைத் தாக்கிடும்.. தாங்கிக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றவர்களே ஞானியர்கள்

 

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் எத்தனையோ வேதனைப்பட்டுள்ளோம்.

அத்தகைய வேதனையிலிருந்து மீண்டிடும் உணர்வுகளைச் சுவாசித்துச் சுவாசித்து அதன் வளர்ச்சியாக இந்த மனித உடலாக உருவாக்கியது நம் உயிர் தான்.

அப்படி வேதனையிலிருந்து விடுபடும் உணர்வுகள் கார்த்திகேயா…!

அதாவது ஒவ்வொரு உடலிலும் எத்தனை தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வின் ஞானம் பெற்று
1.இந்த மனித உடலாகும் போது அதற்குத்தகுந்த உறுப்புகளை உருவாக்கி
2.தீமையிலிருந்து விடுபடும் வலுவான அந்தச் சக்தியாக
3.ஆறாவது அறிவாக வள்ளி மிகச் சக்தி வாய்ந்த நிலையாக மாறுகின்றது.
4.அதைத்தான் வள்ளி என்று பெண்பாலைக் காட்டுகின்றார்கள்.

இந்த வலிமைமிக்க சக்தி பெற்ற நிலையைத் தான் நம்மைக் காட்டிலும் ஞானிகளோ பெரியவர்களோ அவர்கள் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று மிக மிகச் சக்தி வாய்ந்ததாக அவர்கள் உடலில் வளர்த்துள்ளார்கள்.

அந்த மகான்கள் எல்லாம் தனக்குள் வந்த நோய்களையும் தீமைகளையும் வராதபடி வலு கொண்டு சமாளித்துக் கொண்டவர்கள்.

அந்தக் குடும்பப் பந்தம் இல்லாதபடி தீமையிலிருந்து விடுப்ட வேண்டும் என்று
1.அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு வலிமையான உணர்வுகளைச் சுவாசித்து
2.அவர் உடலிலே எந்தத் தீமையும் சாடாதபடி…
3.அதைத் தாக்கிடும் தாங்கிக் கொள்ளும் அந்த உணர்வினைப் பெற்றுள்ளார்கள்.

அப்படிப் பெற்றிருக்கும் போது… நம் கண்ணுக்கு முன்னாடி ஒரு மகானைப் பார்த்தோம் என்றால்
1.அந்த மகானின் அற்புத நிலைகள் நாமும் பெற வேண்டும்
2.அவரின் அருளாற்றல் பெறவேண்டும்
3.நமக்குள் இருள் வராதபடி தடுக்கும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று எத்தனை பேர் இப்படி எண்ணுகின்றோம்…?

நம் உடலில் ஒரு நோய் வந்ததென்றால் அந்த மகானை நினைத்து அழுவோம். நான் எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன்… என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றாய்…? என்ற நிலையில் கோவிலுக்குச் சென்றாலும் இதைத்தான் நினைக்கின்றோம்.

ஏனென்றால் நன்மை செய்பவர்கள் எல்லாம் எப்படிச் செய்கின்றார்கள்…?

மற்றவர்கள் வேதனைப்படுவதை எல்லாம் கேட்டு அறிந்து அடப் பாவமே…! என்று சொல்லித் தான் நாம் உதவியே செய்கின்றோம்.

அவர் வேதனையை நாம் அதிகமாக நேசித்த பிற்பாடு அதன் ரூபமாக பண உதவியோ மற்றதையோ செய்கின்றோம். ஆனாலும் அவர் உடலிலிருந்து வேதனையை நாம் நுகர்கின்றோம்.

இப்படி நம்மை அறியாமலே நன்மை செய்யும் சமயங்கள் எல்லாம் அடுத்தவர்களின் வேதனைகளையோ அவர்களின் குடும்பக் கஷ்டங்களையோ நோய்வாய்ப்பட்டோரின் உணர்வுகளையோ எல்லாவற்றையும் நுகர்கின்றோம்.

இந்த உணர்வுகள் வலிமையாகி… நாம் நுகர்ந்த பின் நம் உடலில் வந்து சேருகிறது “காசு கொடுத்து விலைக்கு வாங்கிய மாதிரி…!”

ஆனாலும் இதைச் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…! அதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…?

ஞானிகளையோ மகான்களையோ நாம் உற்றுப் பார்த்தோ அல்லது அவர்கள் உபதேசக் கருத்துக்களை நமக்குள் பதிவாக்கியோ வைத்திருந்தால் அதன் துணை கொண்டு
1.அவர்கள் தீமையை வென்ற உணர்வுகளை நாம் எளிதில் பெறலாம்.
2.நமக்குள் வந்த இருளை அகற்றலாம்… தூய்மைப்படுத்தும் சக்தியாக வளர்க்கலாம்
3.மன பலமும் மன நலமும் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற முடியும்.

Gnanaguru blessing and wishes

நல்ல உணர்வுகளைக் காக்க குருநாதர் எமக்குக் கொடுத்த பாதுகாப்புக் கவசம்

 

“நாம் எண்ணியது எதுவோ அதைத் தான் நம் உயிர் இயக்கும்…!” என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருந்தாலும் அதை மறந்து நம்முடைய எண்ணத்தை யாருக்கோ அடமானம் வைத்து விட்டு… யாரோ செய்வார்… எவரோ செய்வார்…! என்ற நிலையிலேயே தான் வாழ்கிறோம்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றினால் தான் அது முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்றால்
1.அவர்கள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்
2.அந்த உணர்வின் தன்மையை வலுப் பெறச் செய்ய வேண்டும்
3.வலு பெற்ற பின் யாம் சொல்லும் தியானத்தைச் செய்ய வேண்டும்.
4.தியானத்தின் மூலமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவரும் திறன் பெற வேண்டும்.

இப்பொழுது இத்தனை சிரமம் இருக்கின்றது. முன்பு எளிதில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதியை ஏற்படுத்தினார்கள். அது எல்லாம் காலத்தால் மறைந்து விட்டது. அதனைப் பெறும் தகுதி நம்மிடத்தில் இல்லாது போய்விட்டது.

மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெற வேண்டுமென்றால் எண்ணத்திற்கு வலுவிழந்து விட்டது. வலுவிழந்த நிலைகளில் நாம் எதைச் செய்யப் போகின்றோம்.

அந்தச் சக்திகளைப் பெறும் வழியை குருநாதர் எமக்குக் காட்டினார். அதைப் பெற்று வளர்த்தேன். வளர்த்த நிலை கொண்டு எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கிடைக்கச் செய்… என்றார்.

குருநாதர் எம்மிடம் சொன்னது:-
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக எண்ணு
2.கடவுளால் அமைக்கப்பட்ட கோட்டை என்று அந்த உடல்களை எண்ணு
3.நற்குணங்களால் உருவாக்கப்பட்ட மனிதனை அந்த மனித உடலை ஆலயம் என்று எண்ணு.

இதை ஓதி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்ற ஏக்கத்துடன் நீ தியானி. அதனின் உணர்வின் தன்மை கொண்டு நான் கொடுத்த அருள் உணர்வை எல்லோருக்குள்ளும் பதிவு செய்.

பதிவு செய்யும் நிலையில்…
1.எவர்கள் எண்ணத்தால் இதை ஏங்கி எடுக்கின்றனரோ அவர்கள் நற்பயனைப் பெறட்டும்
2.அவர்கள் உடலான ஆலயத்திற்குள் இருக்கும் ஈசனை மதிக்கட்டும்.
3.மனிதனாக உருவாக்கிய நல் உணர்வை மதிக்கட்டும்.

இதனின் உணர்வின் தன்மை பெறும் அந்த உணர்வின் தன்மையை நீ ஆழமாகப் பதிவு செய். அவர்கள் நினைவு கொள்ளட்டும்… பெறட்டும்…!

அவர்கள் இதைச் சொல்லியும் “எடுக்கவில்லை…” என்றால் அதைக் கண்டு நீ வேதனைப்படாதே…! அவர்கள் பெற வேண்டுமென்று மீண்டும் உன்னுடைய வலுவை ஏற்றிக் கொள்.

அவர்களுக்குச் சொன்னோம்… கேட்கவில்லையே…! என்று வேதனை உணர்வை உனக்குள் எடுக்காதே. இது உன்னைத் தாழ்வின் நிலைக்கு அழைத்துச் செல்லும்.

1.எப்படியும் அவர்கள் பெற வேண்டுமென்ற அந்த உணர்வின் வலுவைச் செருகேற்று.
2.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று இந்த தியானத்தை நீ உனக்குள் கூட்டு
3.அந்த உணர்வின் அலைகளை உலகிலே பரப்பு
4.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் பெறட்டும்
5.அவர்களது வாழ்க்கையில் அறியாது வந்த இருள் நீங்கட்டும்.
6.மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் அவர்களுள் விளையட்டும்.
7.மெய்ப்பொருள் கண்டுணரும் சக்தி அவர்கள் பெறட்டும் என்ற நிலையில் உன்னுடைய தியானத்தை நீ கூட்டிக் கொள்.

எவரைக் கண்டும் அவர்கள் பெறவில்லை என்றால் நீ சோர்ந்து விடாதே… எல்லோரும் பெற வேண்டுமென்ற வலுவை நீ கூட்டி விடு…! என்று குருநாதர் சொன்னார். அதைத் தான் நான் (ஞானகுரு) செய்கின்றேன்.

ஆனால் பிறர் போற்றுவதற்காக நான் இதைச் செய்யவில்லை… பேசவில்லை.

அருள் உணர்வுகளைப் பெற்று அவர்களுக்குள் மகிழ்ந்திடும் நிலை வரப்படும் போதெல்லாம்…
1.என் உணர்வுகளுக்குள் இருக்கும் நல்ல உணர்வுகள்
2.என் எண்ணமே என்னைப் போற்றும்
3.எனக்குள் மகிழ்ந்திடும் நிலைகள் ஊட்டும்.

பிறர் எந்த அளவுக்கு மகிழ்கின்றாரோ அவரிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் உனக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளாக விளைந்து உயர்ந்த உணர்வின் சத்தாக உனக்குள் ஊட்டும். அவர்களுக்குள் மெய்ப்பொருள் பெருகுவதைக் கண்டு “நீ மகிழ்த்திட வேண்டும்…” என்றார் குருநாதர்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழியில் அவர் எமக்குள் ஊட்டிய உணர்வின் தன்மையை நீங்கள் அனைவரும் எளிதில் பெற முடியும் என்ற அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.

ஏனென்றால் நாம் எண்ணியது எதுவோ… “அதை நமது உயிர் இயக்குகின்றது…” என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ancestors wishes

அமாவாசை தினத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய ஒவ்வொரு வழியிலும் உள்ள உண்மையினை அறியாமல் நாம் அவற்றை குடும்பங்களில் வந்த குடும்பச் சடங்கு… சாங்கியம்… என்று வழிப்படுத்தி விட்டோம்.

1.அதன் நிலையில் மாறுபடும் பொழுது மனச் சஞ்சலம் கொண்டு
2.நாம் தெய்வக் குற்றம் செய்து விட்டோம்… பாவத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற பயந்த நிலையில்
3.இன்றும் பல குடும்பங்களில் பல நிலைகள் நடக்கின்றன.

பக்தி நிலை வளர்வதற்காக நம் முன்னோர்கள் பல வழிகளில் அவர்களின் சந்ததியார் வர வேண்டுமென்பதற்காகக் காட்டிச் சென்ற வழிதான் அந்தப் பல வழிகளும்.

1.அமாவாசை அன்று அவரவர்களின் முன்னோர்களை நினைத்து வணங்குவது
2.அமாவாசையில் வைத்தியம் செய்து கொண்டால் நற்பயன் அடையலாம்
3.அமாவாசையன்று எந்த நற்காரியங்களுக்கும் நல்ல நாள்
4.அமாவாசையன்று சேமித்து வைத்த தானியத்தைச் சூரியனின் ஒளி படும்படி வைத்தால் பல நாட்கள் அவற்றில் பூச்சி புழுக்கள் அண்டா
5.அமாவாசையன்று தொழில்களுக்குச் செல்லலாகாது என்றெல்லாம்
6.பல நிலைகளை நமக்கு உணர்த்திச் சென்றார்கள் நம் முன்னோர்கள்..

அமாவாசையின் நிலையென்ன…?

அன்று நமக்கு இப்பூமியின் மேல் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் அனைத்தும் அப்படியே வந்து தாக்குகின்றன. தாக்கும் நிலை கொண்டு இப்பூமியும் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

அமாவாசையன்று கடல் பொங்குகின்றது என்கின்றோம். கடலும் பொங்குகிறது. அமாவாசையன்று மட்டும் கடல் நீர் அதிகரிப்பதன் நிலையென்ன…?

இப்பூமித்தாய் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையில் அதிசக்தி வெளிப்படுத்துகிறது. கடல் நீர் எப்படி பொங்குகிறதோ அதைப் போலத்தான் ஜீவராசிகளின் நிலையும் தாவரங்களின் நிலையும் பனிமலையின் நிலையும் எரிமலையின் நிலையும் மற்றுமுள்ள பல இவ்வுலகில் இப்பூமியிலிருந்து இப்பூமித்தாய் வளர்க்கும் அனைத்து ஜீவ நிலை கொண்ட யாவுமே அமாவாசை அன்று சூரியனிலிருந்து கிடைக்கும் சக்தியின் மாற்றத்தினால் இந்நிலை பெறுகின்றது.

மனிதர்களுக்கு அமாவாசையன்று உடல் கனம் தெரியும். ஒரு வித சோர்வும் என்றும் இல்லாத நிலையில் சிறு தளர்ச்சியும் ஏற்படும்.

நாம் அன்று சுவாசிக்கும் காற்றில் கனமான அணு நிலை கொண்ட சூரியனிலிருந்து வெளிப்படும் சக்தியின் துரிதத்தினால் அக்காற்றை நாம் சுவாசிப்பதினால் நம் உடல் நிலையில் மாற்றம் தெரிந்திடும்.

1.ஆரோக்கியமுடன் வாழ்பவர்க்கே இந்நிலை ஏற்படும் பொழுது
2.நலிவுற்றோரின் நிலைக்கு அவர்கள் எடுக்கும் சுவாசம் கனம் பெறுவதால்
3.அவர்களின் உடல் நிலைக்கு முதலில் இருந்த நிலைக்கும் அவ்வமாவாசை நாளுக்கும் முன்னேற்றத்தை விட நலிவுத் ன்மை கூடிவிடுகின்றது.

நம் முன்னோர்கள் அதிக நலிவுற்றோர்களைக் காணும் பொழுது அமாவாசை தாண்ட வேண்டும் என்பதின் நிலையும் இதுதான்.

நலிவுற்ற நிலையில்… இக்கனமான சுவாச நிலையை நலிவுற்றோர் ஈர்த்து சுவாசிப்பது கடினமாவதினால்தான் இந்நிலை நடக்கின்றது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் இவ்வமாவாசையன்று அவர்கள் மன நிலை அதிகமாக மாறுபடும் நிலைக்கு வருகின்றது.

அமாவாசையன்று சந்திரனில் இருந்து நாம் பெறும் பல நிலைகள் நமக்குக் கிடைக்காமல் போகின்றது. நமக்கு எப்பொழுதும் பாதுகாப்பு போல் உள்ள சந்திரனின் அன்பான அரவணைப்பு இல்லாததினால் இந்நிலை ஏற்படுகின்றது.

விண் சென்ற முன்னோரை பக்தி கொண்டு நாம் வணங்கும் பொழுது நம் எண்ணம் அனைத்தும் அவர்களின்பால் பக்தி கொண்டு செல்வதினால் அவர்கள் காக்கும் நிலைக்கு நம்மை நாம் நிலைப்படுத்துகின்றோம்.

அப்பொழுது நமக்கு அமாவாசையன்று கனமான சுவாசத்தை ஈர்த்துச் சுவாசித்தாலும் அந்நிலையில் அவர்களின் ஆசி பெறுவதினால் இந்நிலையில் சோர்வு நமக்குத் தெரிவதில்லை.

அமாவாசையன்று நம் முன்னோர் விரதம் இருக்கும் நிலை ஏற்படுத்தியது எந்த நிலையில்…?

நாம் எடுக்கும் சுவாசத்திலேயே அமாவாசை தினத்தில் பல சக்திகள் அதிகரித்து ஏற்பதினால் இவ்வுடல் நிலைக்கு அன்று பசியின் நிலையும் குறைவு.
1.அதன் நிலையை அறிந்துதான் நம் முன்னோர்கள் “விரதம்” என்னும் பக்தி நிலையை
2.அந்நிலையில் காட்டி நமக்கு வழிப்படுத்தித் தந்தார்கள்.

எந்த ஒரு சிறிய நிலையையும் நம் முன்னோர்கள் நமக்குப் பக்தி நிலையிலேயேதான் உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

ஆண்டவன் என்ற பக்தி நிலை ஒன்றினால் மட்டும்தான்… என்றும் இவ்வுலக மக்களின் நிலையை நல்வழிப்படுத்திட முடியும் என்ற உண்மை நிலையில் தான்… பல நிலைகள் கொண்ட செயல்களையெல்லாம் நமக்கு உணர்த்திச் சென்றார்கள். பல ஏடு நிலைகளில் எழுதி வைத்தும் சென்றுள்ளார்கள்.

எந்நிலையிலும் நம்பிக்கை என்ற ஆண்டவனை நம்பினால் அனைத்து சக்திகளின் ஆண்டவனையே ஆண்டவனின் அருளையே அந்நம்பிக்கையில் நாம் பெறலாம்.

நல்லோரின் வாயிலிருந்து வரும் சொற்கள் எல்லாமே ஆண்டவனின் நாமச் சொற்கள் என்ற நம்பிக்கையுடன்
1.நாம் நம் முன்னோரையும் நம் பெரியோர்களின் வாழ்த்தையும்
2.நம்பிக்கையுடன் ஆண்டவனின் சொற்களாக நம்பி வரம் பெற்றால் நடப்பவை யாவும் நல் நிலைகளாக நடந்திடும்.

நம் முன்னோரையும்.. நம்மில் பெரியோரையும்… அவர்கள் ஆசி பெற நாம் வணங்குவது ஆண்டவனின் அருள் சொற்களை அவர்களின் நிலையில் இருந்து பெறுகின்றோம் என்ற நம்பிக்கையில் நலம் பெறப் “பெரியோர்களின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்…!”

kudajadri

கோலமாமகரிஷி தவமிருந்த இடத்தில் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்

 

இன்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. கருவில் இந்த உயிரணு உடல் பெறும்போது இந்த இன்னொரு உடலில் பெற்ற நிலையோ அல்லது தாய் நுகரும் உணர்வின் தன்மையில் அந்தக் கருவில் இருக்கும் சிசுக்கு இந்த உணர்வுகள் பட்டபின் அந்த கருவும் அந்த வேதனைப்படுகின்றது.

அந்த வேதனை என்ற உணர்வுகளையே அது இயக்குகின்றது. இதை நமது குருநாதர் பல முறை காட்டினார்
1.கருவில் வளரும் குழந்தைகள் தாய் நுகரும் உணர்வால் எவ்வாறு இயங்குகின்றது…?
2.இன்னொரு உடலில் பெற்ற அந்த உயிரணு (உயிராத்மா) தன் உடலுக்குள் சென்ற பின் அந்த உடலை எப்படி ஆட்டிப் படைக்கின்றது..?
3.நாம் கொல்லும் உயிரான்மாக்கள் மனித உடலுக்குள் வந்தபின் மனிதனின் உணர்வை நுகர்ந்து அது கருப்பைக்குள் செல்லும்போது மனித உரு பெறும் தன்மைகள் எப்படி பெறுகின்றது…?

மனித உருப்பெறும்போது அந்தத் தாய் வேதனைப்படுவோரையோ சலிப்புப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ முடமானவர்களையோ கண் இழந்தவர்களையோ பார்க்கும்பொழுது அந்த உடலில் இருந்து வெளிப்படுவதை அந்த உருவத்திலிருந்து வெளிப்படுவதை சூரியனின் காந்தச் சக்தி கவரும்போது கர்ப்பமான தாய் நுகர்ந்து விட்டால் கருவிலே எவ்வாறு அது உருப்பெறுகின்றது…?

இதைப்போல ஒவ்வொரு நொடிகளிலும் ஒரு உயிரணு ஒரு உடலுக்குள் செல்வதும் தாய் மனித உணர்வை நுகர்ந்து மனிதனாகப் பெறும் நிலையும் ஆனால் கருப்பைக்குச் சென்ற பின் அந்தக் கருவிலே வளரும் பொழுது தாய் நுகரும் உணர்வுகள் அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக எவ்வாறு அமைகின்றது…?

இதை எல்லாம் குருநாதர் காட்சியாகவே காண்பித்தார். நான் (ஞானகுரு) இதை எல்லாம் அறிந்து கொள்வதற்காக குறைந்தது “ஒரு லட்சம் உணர்வுகளின் தன்மைகளையாவது..” குருநாதர் காட்டினார். இதற்கு மூன்று வருடம் ஆகிவிட்டது.

அதைக் காணும் போது சரியான ஆகாரம் கிடையாது.. குறித்த நேரங்களில் சில பச்சிலைகளையும் ஒரு பேரீச்சம்பழத்தையும் தான் சாப்பிட வேண்டும். அதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

இதற்கு ஒரு அரை மணி நேரம் விடுபடும்படி செய்வார். அதற்குள் அதைச் சாப்பிட்டுவிட்டு அமர்ந்து அவர் சொன்னதைப் பேசாமல் பார்த்திருக்கும்படி சொல்வார்.

ஏனென்றால் இவை அனைத்தும் கொல்லூர் மூகாம்பிகை என்று சொல்லும் என்று குடசாஸ்திரி மலைக் காட்டில் தான் பார்த்தது.

1.அன்று கோலமாமகரிஷி அவர் தியானமிருந்த இடம் சிறு குகையாக இருக்கும்.
2.அங்கு பெரிய வனமாக இருக்கும்… தபோவனமும் உண்டு.
3.மலை மேலே கொஞ்ச தூரம் இவ்வளவு தூரம் சென்றால் கூடு மாதிரி இருக்கும்
4.அதற்குள் அமர்ந்து அவர்கள் பெற்ற உணர்வுகளை எல்லாம் காணும்படி செய்தார் குருநாதர்.

மற்ற உயிரினங்களை மனிதன் கொல்வான் என்றால் அந்த ஆன்மாக்கள் எல்லாம் அவர்கள் உடலுக்குள் செல்கிறது. இப்பொழுது நாம் செல்லப் பிராணிகளை வளர்க்கின்றோம் ஆடு மாடு எல்லாம் வளர்க்கின்றோம். அவை யார் மேல் பற்றுள்ளதோ அது பற்றுள்ள நிலைகளில் இறந்தால்… அந்த ஆன்மா வளர்த்தவர் உடலுக்குள் சென்று மனிதனாக எப்படிப் பிறக்கின்றது…? என்ற நிலையையும் இதை தெளிவாகக் காட்டியுள்ளார்.

இப்படி எல்லாம் நாம் எத்தனையோ நிலைகள் பட்டுப் பல பிறவிகள் தாண்டித் தான் இன்று மனிதனாக பிறந்திருக்கின்றோம் என்று காட்டுகிறார் குருநாதர்.

இதைப் போல் தான் நம் பூமியில் ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான். அவனைப் பின்பற்றியவர்கள் எல்லாம் சப்தரிஷி மண்டலமாக அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் அவர்கள் எல்லாம் எத்தனையோ இன்னல்கள் பட்டு அந்த நிலையை வளர்த்துக் கொண்டவர்கள். சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த சக்திகள் கொண்டு ஒளியின் சரீரம் பெற்றவர்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படும் உணர்வின் ஒளியை
2.நாம் சுவாசித்து… அதை நாம் நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொண்டோம் என்றால்
3.நம்முடைய இந்தச் சந்தர்ப்பம் நம்மைப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச் செய்கின்றது.

Nostradamus

மகரிஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இவ்வுலக மக்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவர்கள் அறியாமலே அவர்களை இப்பேராசை என்னும் செயற்கைப் பேய் ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.

1.அன்றாண்ட அரசர்களின் ஆவேச உணர்ச்சிகள் அன்றைய மக்களின் எண்ணங்களிலெல்லாம் கலக்கவிட்டு
2.இன்றும் அதே வழி வழியாய் வந்த அவ்வாவேச நிலை கொண்ட உணர்ச்சியினால்
3.இவ்வுலக நிலையே செயற்கைக்கு அடிபணிந்து வாழும் நிலையில் உள்ளது.

இன்றுள்ள மனிதர்களில் பெரும்பாலோரின் எண்ணங்கள் பெரும் பேராசை கொண்ட பணத்திற்கு அடிமைப்பட்டு வாழும் நிலை தான்…! செல்வத்தை ஈட்ட எவ்வழியையும் நாடலாம் என்று தான் உள்ளார்கள்.

இவ்வுலகில் வாழப் பணச் செல்வம் ஒன்றைத்தான் பொக்கிஷத்தின் பொக்கிஷமாகக் கருதி அதற்கே அடிமையாகி இவ்வுலகத்தையே செயற்கையின் கோளமாக்க இந்நூற்றாண்டில் அறிவு வளர்ச்சி பெற்ற மனிதர்கள் இவ்வுலக நிலையை நடத்திச் செல்கின்றார்கள்.

ஆண்டவனையே பல ஜாதி நிலை கொண்டு பிரித்து வைத்துள்ளார்கள். ஜாதி என்னும் வழியை உண்டு பண்ணியவர்களும் அதன் வெறி நிலையில் இன்று தன்னைத் தானே தன் ஜாதிக்குத்தானே அடிமைப்பட்டு உழன்று வாழ்கின்றார்கள் என்று எண்ணுவதில்லை.

தன் ஜாதிக்குத் தான் மதிப்பளிப்பதாக எண்ணுகிறார்கள் அச் ஜாதிக்கு அடிமைப்பட்டவர்களெல்லாம்…!

இவ்வுலக நிலையை இவ்வரசர்கள் ஆண்ட காலம் முதல் இப்பொழுது அரசாட்சி நிலை கொண்டும் ஆட்சியில் உள்ளவர்கள் நடத்திடும் நாடகத்தினால் வந்த வினைச் செயல்தான் இன்று இவ்வுலக நிலையில் உள்ளன.

சூழ்ச்சியான நிலையில் பேராசையின் பேயை வளர விட்டுத்தான் இன்று இவ்வுலக நிலையே உள்ளது.

அனைவரின் எண்ணமும் ஒன்றுபட்டுச் செயல்படும் நிலையாகக் கூடி வரும் நிலையை ஏற்படுத்திட
1.இன்றுள்ள பல மத வழிகளில் உள்ள பெரியோர்கள் எல்லாம் ஒரு நிலைப்பட்டு
2.இவ்வுலக நிலையை இவ்வுலக மக்களின் எண்ண நிலையை ஒன்றுபடுத்திட
3.பக்தி என்னும் நிலையை வளரவிட்டு அன்பு பாசம் என்ற பிணைப்பு நிலையை மக்களின் எண்ணத்தில் சுழல விட்டு
4.இப்பேராசையிலிருந்து விடுபட்டு ஆசையான அமுதை ஊட்டி தெய்வீக நிலையில் ஈர்த்து
5.இன்றுள்ள மக்களின் ஜன நெருக்கத்தை மிகத் துரித நிலையில் பெருகும் நிலையைச் சமப்படுத்தி
6.தாவர வர்க்கங்களை ஓங்கச் செய்து இவ்வுலகை நிலைப்படுத்தும் தன்மைக்கு
7.பல நூறு வருடங்களுக்கு முன் நம்மைப் போல் இவ்வுலகினில் பிறந்து நமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்த
8.இவ்வுலகின் ஞானச்சுடரான மகரிஷி ஒருவர் எழுதி வைத்த பெரும் பொக்கிஷம் ஒன்று
9.அவரால் பாதுகாக்கப்பட்டு அந்நிலையிலேயே ஜெபம் கொண்டும் காத்துள்ளார்.

அவருக்கு ஜாதி மதம் ஒன்றுமில்லை. இன்று இவ்வுலகிலுள்ள சக்தியின் செல்வங்களான சக்தி பெற்ற நம் மக்களில் யாவரும் அறிந்திடலாம் அதை.

அவரவர்களின் நிலையில் நடக்கும் நிலைகொண்டு ஜெபத்தின் அருளைப் பெற்றால் அந்த ஞானச் சுடரின்… அம்மகரிஷியின் அருளைப் பெற்று… அவ்வுலகப் பொக்கிஷத்தை எடுத்து அனைவருக்கும் அதிலுள்ள உண்மையை உணரும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்திடலாம்.

இம்மதம் என்ற நிலையை மாறுபடுத்தி இன்று இவ்வுலக நிலையைக் காத்து ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனின் ஜோதிகளை…
1.பல ஞான நிலைகளை மக்களுக்கு உணர்த்திடும் நல் பெரியோர்கள் அனைவரும் ஒன்றுபட்டால்
2.இவ்வுலகில் உதித்த சக்தியின் செல்வ குழந்தைகளை
3.இச்செயற்கையின் பேராசைப் பேயிலிருந்து விடுபடும் நிலைக்கு அழைத்திடலாம்.

இஜ்ஜாதி மதப் பேயின் வழி நடந்திடாமல் ஒன்றுபட்டுச் செயல் கொண்டு தன்னைத்தானே அடிமைப்பட்டு வாழும் நிலையிலிருந்து மீண்டு அருள் வழி நடந்திடுங்கள்.

Computer

நம்மை ஞானியாக்கும் சக்தி…!

 

இன்று விஞ்ஞான அறிவுப்படி எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்று காட்டுகின்றார்கள். அந்த விஞ்ஞான அறிவுப்படியே மெய் ஞான அறிவையும் உங்களுக்கு ஊட்டுகின்றோம்.

நம் உயிர் எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது… சூரியனும் எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது.
1.அதன் (சூரியன்) இயக்கச் சக்தியினுடைய நிலைகள் அது பூமியில் படரப்படும் போது
2.இந்தப் பூமியில் விளைந்த உணர்வின் சக்தியை அது எதைக் கவர்ந்ததோ
3.அதை எல்லாம் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதே போல் மனிதனாக இருக்கும் நம் மனித உடலிலிருந்து வெளிப்படும் உணர்வினை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால்
1.இந்த மனித உடலில் உருவான அந்த உணர்வின் உணர்ச்சிகளை இயக்கும்
2.அதாவது சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால் அதை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
3.அதன் உணர்வின் இயக்கமாக மாற்றுகின்றது.
4.(அதை நாம் நுகர்ந்தால் உணர்ச்சிகளாக இயக்கும்)

இப்பொழுது நான் (ஞானகுரு) பேசுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பேசிய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால் இது எலெக்ட்ரானிக்காக மாறுகின்றது.

படிக்காதவன் தான்…. நான் இதைச் சொல்கிறேன். ஆக… சாமி சொல்வது புரியவில்லை என்று விட்டுவிடாதீர்கள்.
1.ஏனென்றால் பதிவின் நினைவு எதுவோ
2.அது அந்த நினைவின் நிலையைக் கவர்கின்றது.
3.அதன் உணர்வின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது.

உதாரணமாக சிறு குழந்தைப் பருவத்தில் குழந்தைகள் படித்ததில்லை. ஆனால் ரேடியோவையும் டி.வி.யையும் உற்றுப் பார்க்கின்றது. அதிலே வரும் இசையைக் (பாடலை) கவர்ந்து கொண்ட பின் இந்த உடலில் அந்த உணர்வுகளுக்கொப்ப அந்தக் குழந்தை ஆட்டங்கள் ஆடுகின்றது.

1.அதற்கு ஒன்று,மே தெரியவில்லை என்றாலும்
2.பாடநிலை இல்லை என்றாலும் – சிறிதளவே பதியச் செய்த பின்
3.அது பேசத் தொடரும் போது இந்தப் பாடலை எளிதாகப் பாடுகின்றது.

இது குழந்தைப் பருவத்திலே…!

ஆனால் பெரியவர்களாக இருப்போர்கள் நாம் பல விதமான உணர்வுகளை மாற்றிக் கொள்கின்றோம். பல உணர்வுகள் நமக்குள் கலக்கும் போது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம்.

குழந்தைப் பருவத்தில் அத்தகைய நிலை இல்லை. குறுகிய உணர்வுகளும்… பார்த்துணர்ந்த உணர்வுகளும் பதிவாக்கிக் கொள்ளும் போது அதனுடைய சிந்தனை அதன் வழியில் செல்லப்படும் போது அதை இயக்கும் சக்தி பெறுகின்றது.

பெரியவர்களாக இருக்கும் நாம் அதைக் காண முடியவில்லை.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் எம்முடைய உபதேச உணர்வுகளை (எலெக்ட்ரானிக்) நீங்கள் குழந்தைகள் பதிவாக்குவது போல் பதிய வைத்துக் கொண்டால்
1.ஞானிகள் கண்ட அறிவின் ஞானம் அனைத்தும் உங்களுக்குள் தோன்றும்.
2.ஞானிகளின் உணர்வின் இயக்கமாக நீங்கள் செயல்படுவீர்கள்.
3.அவர்கள் தீமையை நீக்கிய அந்த ஆற்றல்களை நீங்களும் பெறுவீர்கள்.

உங்கள் உணர்வுகளை எல்லாம் நீங்கள் ஒளியாக மாற்ற முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

Kali kalki

இவ்வுலக மாற்றத்திலிருந்து அதை மீட்டிடும் வழி உள்ளதா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தாவர வர்க்கங்களை நாம் இன்று அழித்தும்… அதிலிருந்து நாம் பெறும் உன்னத நிலைகளைச் சிதற விட்டும் வாழ்கின்றோம்.

1.இம் மனித வர்க்கத்தின் பெருக்கத்தினாலும்
2.மற்ற ஜெந்துக்களின் பெருக்கத்தினாலும்
3.நம் செயற்கைக்குகந்த நிலைகளைப் பிரித்ததினால் மட்டும் அல்லாமல்
4.இன்று ஆவி உலகத்தின் பெருக்கத்திலுள்ள ஆவிகளும் அச்சத்தை ஈர்த்து வாழ்வதினாலும்
5.இன்று இவ்வனைத்து இனப் பெருக்கத்தினால் அச்சக்தியெல்லாம் இந்நிலையில் ஈர்க்கப்படுவதினால்
6.தாவர வர்க்கங்களுக்குக் கிடைக்கும் சத்து நிலை குறைந்துவிட்டது.

எத்தாவரமும் சூரியனின் சக்தி பட்டு மட்டும் வளரவில்லை. இப்பூமித்தாய் சக்தியை ஈர்த்து ஊட்டம் தரும் நிலையிலிருந்தும் தான் அத்தாவரங்களின் செழிப்பு நிலை உள்ளது.

சில தாவரங்களினால் இப்பூமியில் உற்பத்தியாகும் பல அணுக்களை ஈர்த்து வளரும் தன்மை உள்ளது.

உயிரணுக்களையே ஊட்டமாக ஈர்த்து வளரும் தன்மையில் பல தாவரங்கள் உள்ளன. உயிரணுக்களையே என்பது இன்று பல ஜீவன்கள் ஆத்மா பிரிந்த பிறகு நாய் நரி பன்றி இப்படிப் பல ஜீவன்களைத் தாவரங்களின் வேருக்கு அடிப்பாகத்தில் இஜ்ஜீவன்களின் உடலை உரமாக இட்டு… அதையே உரமாக்கித் தன் சக்தியில் ஈர்த்து நற்கனிகளைப் பல தாவரங்கள் நமக்கு அளிக்கின்றன.

அத் தாவரங்களின் சக்திக்கு உரமாக வைத்த அவ்வுடலில் உள்ள தன்மையெல்லாம் அத்தாவரமே சத்தாக ஈர்த்ததினால் அதிலிருந்து பல உயிரணுக்கள் ஜீவன் பெறும் நிலையில்லாமல் அதிலிருந்து சென்ற ஓர் ஆத்மா மட்டும்தான் சுற்றிக் கொண்டிருக்கும்.

மனிதனிலிருந்து மாறுபட்ட மிருக ஜெந்துக்கள் மற்றப் பிராணிகள் யாவையுமே
1.அதை எருவாக வைக்கும் பொழுது
2.தாவர வர்க்கங்கள் உரமாக ஈர்த்துச் செழித்து வளர்ந்திடும்.

ஆனால்… இம்மனித உடலைப் புதைத்தால் இம்மனித உடலைப் புதைத்த இடத்தில் அதன் சக்தி அங்கிருந்தால் இம்மனித உடலில் இருந்து “ஒரு புல் பூண்டும் வளர்ந்திடாது…!”

இம்மனித உடல் தாவர வர்க்கத்திற்கு எருவாக சக்தி தரும் பாக்கியமும் இம்மனித உடலுக்கில்லை…!

மற்ற ஜெந்துக்களும் இம்மனித உடலுக்கும் உள்ள வேறுபாடு இம்மனித உடல் “கடும் உப்பு நிலை” பெற்றது. இம்மனித உடலை உப்புக் கலந்த இரசாயன நிலைப்படுத்தி பல நாட்கள் ஆவி பிரிந்த உடலைப் பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கலாம்.

ஒன்றை அழித்து ஒன்று சக்தி பெறுகிறது. எதுவுமே அழிவதில்லை… வளரத்தான் செய்கிறது. இச்சூரியனின் சக்தியில் வந்த எவற்றையும் யாராலும் அழித்திட முடியாது.

வளர்ந்து கொண்டே உள்ள இவ்வுலகினில் இன்று நாம் ஆரம்பத்தில் உள்ள நிலையை… ஒரு சக்தியை அழித்ததினால் மற்ற சக்தி வளர்ந்து விட்டது. அந்நிலையை மாற்றி அச்சக்தியை அழித்துத்தான் முன் இருந்த சக்தியை வளரச் செய்ய வேண்டும்.

தாவர வர்க்கங்களை வளர்த்து மற்ற இனப்பெருக்கத்தை நாம் மாற்றி மாற்றி என்னும் பொழுது அழித்து மற்ற மிருக வர்க்கத்தை நாமே அதை உண்டு பல அணுக்களை வளரவிடாமல் மற்றப் பிராணிகள் இறந்த பிறகு அதன் உடலைத் தாவரங்களுக்கு எருவாக்கி தாவர நிலையை வளரச் செய்ய வேண்டும்.

மனித வர்க்கத்தின் பெருக்கத்திற்கும் எவ்வுடலையும் நாம் புதைக்காமல் மனிதன் இறந்த பிறகு அவ்வுடலை எரிக்கும் நிலைப்படுத்திட வேண்டும்.

செயற்கையின் ஆசையை மாற்றி வாழும் நிலையில்லை இன்று மனிதனுக்கு…! ஆகவே இவ்வுலக நிலையையே காத்து அதன் அழிவான மாற்றத்தைத் தாங்கும் சக்தி சித்தர்களாலும் ரிஷிகளாலும் முடியாத நிலையில் இன்றுள்ளது.

1.இச் செயற்கையை மனிதனின் நிலையிலிருந்து மாற்றிடவும் முடியாது…
2.இவ்வுலகத்தின் மாறும் தன்மையிலிருந்து
3.இவ்வுலக நிலையை மீட்டிடவும் முடியாத நிலையில் உள்ளது…!

meditation-technique

தியானத்தில் நம் உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது…?

 

தியானிக்கும் போதும் சரி… ஆத்ம சுத்தி செய்யும் போதும் சரி… இப்படி நோயாக இருக்கிறதே…! என்று எண்ணிக் கேட்காதீர்கள். நோய் நீங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தியானியுங்கள்.

அதே போல் என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… என் குழந்தைக்குத் திருமணம் ஆக வேண்டும்.. அந்த அருள் வேண்டும். எங்கள் தொழிலில் வளம் பெற வேண்டும்… எனக்கு வர வேண்டிய பாக்கி வர வேண்டும்… அதற்கு அருள் சக்தி வேண்டும்…! என்று இப்படிக் கேட்டு பழகுங்கள்.

அதை விட்டு விட்டுக் கடன் வாங்கியவன் கொடுக்கவே மாட்டேன் என்கிறான்… எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்…! என்று எண்ணாதீர்கள்.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி…
1.அவர்களுக்கு வருமானம் வர வேண்டும்
2.வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்கும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று
3.மீண்டும் மீண்டும் நீங்கள் எண்ண எண்ண…
4.நமக்குள் இந்த உயர்ந்த நிலைகள் வர வர…
5.அவன் தன்னாலே வந்து பணத்தைக் கொடுக்கும் நிலையும் வரும்… பார்க்கலாம்.

உங்கள் எண்ணம் அவர்களை உயர்த்தும். அவர்களுக்கு வருவாய் வர வைக்கும். நமக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணம் வரும். கொஞ்சம் கால தாமதம் ஆகும்.

ஆனால் அவசரப்பட்டு… “ஆத்திரப்பட்டு விட்டோம்…” என்றால் கொடுக்க வேண்டும் என்று வருபவனையும் தடுத்து அவர்களும் வராதபடி ஆக்கி அந்தப் பாக்கியும் திரும்ப வராது.

கொடுக்க முடியவில்லையே…! என்று அவர்கள் மீண்டும் சங்கடப்பட்டால் அந்தச் சங்கடத்தால் அவர்களுக்கு வருமானம் வராது… நமக்கும் பணம் வராது… நாமும் சங்கடப்படுவோம்…!

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட்டு அவர்களுக்கு வரவு வரும்… அவர்கள் கொடுப்பார்கள்…! என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குள் இது ஒவ்வொரு நொடியிலும் உயர்ந்ததாக வரும்.

ஆகவே நாம் பிறருடைய நிலைகளில் குறைகளை எண்ணாது அவர்கள் நிறைவு பெறுவர். நமக்கும் அது வரும் என்றும் நிறைவான உணர்வை எடுத்தால் நிறைவான உணர்வுகள் வெளிப்படுகின்றது. நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் நிறைவான மனங்கள் வருகின்றது.

அவர்கள் வாழ்க்கையில் மகிழும் உணர்வுகளை அது இயக்கத் தொடங்குகின்றது.

1.ஆகவே நாம் அருள் வாழ்க்கை வாழ்வோம்
2.பேரானந்த நிலை பெற்று நமக்குள் ஏகாந்த நிலையாக
3.என்றும் ஏகாதசி என்ற பத்தாவது நிலைகள் அடைவோம்
4.அனைவரும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தி உங்களிடம் பெருகும்.

உங்கள் பார்வையில் அனைவரும் நலம் பெறுவர். அனைவரும் ஆனந்தப்படும் அந்த நிலையை நீங்களும் கண்டு நீங்கள் உங்கள் உடலில் ஆனந்தம் என்ற பேரானந்த நிலையைப் பெறுங்கள்.

ஏனென்றால் பலர் என்ற நிலைகளில் நாம் ஆனந்தப்படும்போது பேரானந்தம் வருகின்றது. ஒருவர் என்ற நிலையில் ஆனந்தம் என்ற நிலை வருகின்றது. அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றால் பேரானந்தம் ஆகின்றது.

1.ஆகவே எல்லாம் பேரானந்தம் என்ற நிலைகளில் உங்கள் பார்வையில் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.அதைக் கண்டு நீங்கள் பேரானந்தப்படும் நிலை பெற வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

chinese food

பூமி வலு இழந்ததற்கும் காற்று மண்டலம் நஞ்சாக மாறியதற்கும் காரணம் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

செயற்கையின் பாவத்தினால் வந்த வினையான தாவரங்களின் நிலையின் குறைவினால் இன்று இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வந்துள்ளது.

தாவரங்களின் நற்பயனை அறிந்து சுவையுள்ள காய் கனி வர்க்கங்களும் தானிய வர்க்கங்களும் நாம் பெற்று இயற்கையின் அமுதைப் புசித்திட்ட உன்னத கால நிலை மாறி இன்றைய மனிதனின் உணவில் தன் இனத்திலிருந்து மாறுபட்ட ஜென்மம் சென்ற மற்ற ஜெந்து வர்க்கங்களைச் சமைத்து உண்ணும் நாகரிக நிலைக்குத் தன்னையே அடிமைப்படுத்தி வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

இவ்வுலகம் ஒன்றின்ன் சக்தியிலிருந்து ஒன்று சக்தி பெற்றுத்தான் வாழ்கிறது. ஒன்றை ஒன்று அழித்து ஒன்றின் சக்தியை ஒன்று பெற்றுத்தான் வாழும் சக்தியையே சக்தி நிலை நமக்கு அளித்துள்ளது.

அந்நிலையில் இதன் நிலையில் மட்டும் என்ன பாவம்…? என்பீர்.

மற்ற ஜெந்து வர்க்கங்கள் எப்படி உருவாகி வந்தன…? என்பதைத்தான் பாட நிலையில் உணர்த்தியுள்ளோம்.

இன்று இருக்கும் இவ்வுலக நிலையில்…
1.இவ்வுலகிலுள்ள பூமியிலுள்ள கனி வர்க்கங்களையும் தாவர வர்க்கங்களையும் நாம் சிதறவிட்டதனால்
2.(நாம் சிதறவிடவில்லை அதை எடுத்துப் பயன்படுத்தித்தான் கொண்டோம் என்பீர்)
3.நம் செயற்கையின் ஆசையினால் இவ்வுலகின் பொக்கிஷங்கள் குறைந்ததின் நிலையில்
4.மற்ற ஜெந்துக்கள் மனித வர்க்கம் முதற்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளும் மிகத் துரிதமாகப் பெருகியதன் நிலையில்
5.இம்மனிதனும் மற்ற ஜெந்துக்களும் இப்பூமியின் சக்தியை ஈர்த்து வாழ்வதினால்
6.இப்பூமியிலிருந்து மற்ற கனிவர்க்கங்கள் வளரும் நிலை குறைந்துவிட்டது.

இஜ்ஜீவ ஜெந்துக்கள் பெருகப் பெருக இன்னும் இவ்வுலக நிலையிலுள்ள சத்துத் தன்மை குறையும் நிலையில்தான் உள்ளது.

ஒரு ஜீவனை அழிப்பதினால் பல ஜீவன்கள் உற்பத்தியாகின்றன.

உங்கள் நினைவில் மண்ணில் புதைத்தால்தான் அவ்வுடலிலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுவதாக எண்ணுவீர். அப்படி அல்ல..!

1.மற்ற ஜீவ ஜெந்துக்களை நாம் சமைத்து உண்டு அதன் சக்தியைப் பெற்று
2.அதைக் கழிவாக வெளிப்படுத்தும் அக்கழிவில் இருந்தும்
3.எந்நிலைகொண்ட ஜீவ ஜெந்துவை உண்டு கழித்தோமோ அதன் நிலையிலிருந்து
4.அந்நரகமான அவ்வாடையிலிருந்து பல ஜீவ ஜெந்துக்கள் உயிர் பெறுகின்றன.

ஒன்றை அழித்துத்தான் ஒன்று சக்தி பெறுகின்றது. இஜ்ஜீவ ஜெந்துவின் பெருக்கத்திற்குக் காரணம்… ஆறறிவு படைத்த இம்மனிதனாலேதான் அனைத்துப் பெருக்கங்களும் வந்துள்ளன.

இன்று இவ்வுலகில் மனித இனத்தைக் (மக்கள் தொகையை) குறைக்கப் பார்க்கின்றான். ஒரு மனிதன் வாழும் காலத்தில் அவன் வாழ்க்கையில் அவன் எத்தனை குழந்தை பெறுகின்றானோ அவைதாம் அவனது பெருக்கம்.

ஆனால் இவ்வுடலை விட்டு அவனது ஆத்மா சென்ற பிறகு அவன் வாழ்ந்ததில் ஆசை வைத்து அவன் வாழ்ந்த காலத்தில் “அவன் பெற்ற இரத்தபந்தத்துடன் உள்ள குழந்தை வாழும் நாள் வரை…” அவனது ஆத்மா மறு ஜென்மத்திற்குச் செல்வதில்லை.

ஆனால் அவனின் உடலை அடக்கம் செய்த இடத்தில் அவன் உடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று ஜென்மத்திற்கு வருகின்றன.
1.இம் மனிதனே மனித வர்க்கத்திற்கும் மிருக வர்க்கத்திற்கும்
2.மிருகத்திலிருந்து பல ஜெந்து வர்க்கங்களுக்கும் அடிகோலியாகின்றான்.

தாவர வர்க்கங்களின் உன்னத பொக்கிஷத்தைச் சிதற விட்டவனும் இவ்வாறறிவு என்னும் அறிவைப் பெற்ற ஆண்டவனின் அடிகோலிகள் என்று செப்பிடும் இம்மனிதனேதான்…!

alcor-mizars

கணவன் மனைவியாகச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் ஒன்றி வாழ வேண்டிய வழி முறை

 

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் பூமியில் பரவச் செய்து கொண்டே உள்ளது.

குருநாதர் எனக்குக் (ஞானகுரு) காட்டிய அந்த உணர்வின் தன்மைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டபின் அந்த உணர்வின் வலுவான எண்ணம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேச வாயிலாக வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் “பரமாத்மாவாக” (காற்று மண்டலத்தில்) மாறுகின்றது.

1.இந்த அருள் உபதேசங்கள் உங்கள் செவிகளில் படும்போது அதனின் உணர்ச்சிகளாக உங்களுக்குள் தூண்டப்படுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் வழி அதனின் நினைவாற்றல் உங்கள் கண்களுக்கு வந்து
3.அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இருந்தால்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர நேருகின்றது.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்குள் வருகின்றது. அந்த எண்ணத்தின் தன்மை உங்கள் “ஆன்மாவாக” மாறுகின்றது. அப்போது நீங்கள் அதை நுகர்ந்தால் அது உடலுக்குள் “ஜீவான்மாவாக” மாற்றும் தன்மை வருகின்றது.

இப்படி உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளும் உங்களுக்குள் அணுத் தன்மையாக மாறுகின்றது.

1.பின் அந்த அணுக்கள் வாழ அதன் உணர்வுகளை… உணர்ச்சிகளை… உந்தும்.
2.அப்படி உந்தும் போது அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அதிகரிக்கும் தன்மை வரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் கணவனும் மனைவியும் இரு உணர்வும் இரண்டறக் கலக்கப்படும்போது
1.இன்று தன் தன் இனத்தை நாம் எப்படி உருவாக்குகின்றோமோ அது போல
2.கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இரு உடலிலும் இணைந்து வாழச் செய்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து இந்த உணர்வை ஒளியாக மாற்றி… இந்த உடலை விட்டு யார் முந்திச் சென்றாலும் அதன்பின் அடுத்தவரையும் அந்த ஆன்மாவையும் தன்னுடன் இணைத்தே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் “இணை பிரியாத நிலைகள் கொண்டு…” அந்த ஒளியின் உணர்வை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.

1.இங்கே எப்படிக் கணவனும் மனைவியாக மகிழ்ந்து வாழ்கின்றோமோ
2.அதே மகிழ்ச்சியின் தன்மை அங்கேயும் இருக்கும்.

ஒவ்வொரு விஷத்தின் தன்மையும் தன்னுடன் மோதும்போதும் அந்த விஷத்தின் தன்மையைத் துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

அத்தகைய உணர்வைக் கவரும் போது இன்று நாம் எப்படி இயற்கையில் விளைந்த உணவைச் சமைத்து உட்கொண்டு… அதில் மகிழ்ச்சி பெறுகின்றோமோ… அதைப்போல எத்தகைய தன்மையின் நிலையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

என்றுமே ஏகாந்த நிலையாக… எதிர்ப்பே இல்லாத நிலைகொண்டு இன்று நாம் எப்படி இங்கே வாழ்கின்றோமோ இந்த நினைவாற்றல் எல்லாம் அதற்குள்ளும் உண்டு.
1.இரு உயிரும் ஒன்றென இணைந்து
2.ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றது.

கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் ஆண் பெண் என்ற நிலைகளில் மோதுண்டு தான் ஒரு உயிரின் தன்மையை உருவாக்குகின்றது. அந்த உயிர் மற்றொன்றைக் கவர்ந்து அந்த உணர்வின் தன்மையை உருவாக்கும் தன்மையாக உடல் பெறுகின்றது.

இதைப் போலத்தான்… கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து விட்டால் இந்த உணர்வுகள் அனைத்தும் “பிறவியில்லா நிலை..” என்ற நிலைகளை அடைய உதவுகின்றது.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

novel virus

இயற்கையின் சக்தியை எல்லாம் செயற்கையின் பேய்க்குப் பலியிட்டதின் பாவத்தை மனிதன் உணரும் தன்மைக்கு வந்து விட்டான் – ஈஸ்வரபட்டர்

 

நம் முன்னோர்கள்… ஆத்மா பிரிந்த உடலில் அவ் உடலிலிருந்து உற்பத்தியாகும் உயிரணுக்கள் தோன்றாத நிலைப்படுத்தி அவ்வுடலுடன் அவ்வுடல் கெடாத பக்குவ நிலைப்படுத்தி அடக்கம் செய்து வைத்தார்கள்.

இன்று இக்கலியில் மக்களின் தொகை பெருகுவதினால் அனைத்து ஆக்க சக்திகளும் அதிகரிக்கும் நிலைக்காக மக்களின் தொகையையே குறைக்கும் நிலையில் பல வழிகளைச் செய்கிறார்கள்.

மனிதனே மனிதனின் இன வர்க்கத்தை நிறுத்தப் பார்க்கின்றான் இன்று வாழும் மனிதன்.

ஆவி உலகில் பல மனித இன ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்றச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில்தான்
1.இன்று பல இடங்களில் ஒரு தாய் ஒரு மகவு பெறும் நிலை மட்டும் இல்லாமல்
2.ஒரு தாய் ஒரே சூலில் பல மகவுகளை ஈனும் நிலையில்
3.மிருக வர்க்கத்தின் நிலைக்கு ஒப்ப வந்து பிறக்கின்றன.

பிறக்கும் மகவுகளைக் குறைக்க வழி காண்கின்றான் இக்கலியின் மனிதன். ஆனால் இறக்கும் உடலை எந்நிலையில் சிதற விடுகின்றான்…? இந்த நிலையைப் புரிந்து கொண்டால் பல நிலைகளில் இந்நிலையை மாற்றிடலாம்.

ஆவி உலகிலுள்ள ஆத்மாக்கள் மட்டும் பிறவி எடுத்தால் இன்றுள்ள மக்கள் தொகையுடன் கூடி வராதா…? என்பீர்.

ஆவி உலகிலுள்ள மனித ஆத்மாக்கள் எவையுமே உடனே பிறவி எடுக்கும் ஜென்ம ஆசையில் வந்து பிறப்பதில்லை. ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களுக்குத்தான் இவ்வுலகில் உடலுடன் வாழும் மனிதர்களின் நிலை புரிகின்றதே.

இப்புதிய புதிய உயிரணுக்கள் தோன்றும் நிலையை இம் மனிதன் மாற்றும் வழியை ஏற்படுத்தி வாழ்ந்தாலே…
1.மனிதனிலிருந்து மிருகம் மிருகத்திலிருந்து மற்ற ஜெந்துக்கள் இவற்றின் நிலையும் மாறி
2.சூரியனிலிருந்து வரும் சக்தியினால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் உன்னத நிலை பெறலாம்.

சூரியனிலிருந்து வரும் சக்தியில் குறைந்தோ அதிகப்பட்டோ வருவதில்லை. என்றும் ஒரே நிலைப்படித்தான் வந்து குவிகிறது.

இவ்வுலகினில் தோன்றிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு சக்தியின் துரிதத்தினால் (ஜீவன் பெற்ற உயிரணுக்களின் பெருக்கத்தினால்) தாவர வர்க்கங்களின் நிலை குறைந்துவிட்டன.

இன்று தாவரங்களுக்குப் பல செயற்கை நிலை கொண்ட பக்குவம் (உரங்கள்) ஏற்றினாலும் முன் காலத்தில் உள்ளதின் சுவையும் மணமும் இன்றில்லை.

பூமியிலிருந்து வெளிப்படும் சக்தியையே மற்ற ஜீவன் பெற்ற உயிரணுக்கள் ஈர்த்து வாழ்கின்றன. இனப் பெருக்கம் ஆக ஆக இப்பெருக்கத்திலுள்ள ஜீவன்களுக்குத்தான் இப்பூமித்தாயும் நம் சூரியனும் தரும் சக்திகள் சரிப்படுகின்றன.

தாவர வர்க்கங்களின் நிலைக்கு அதன் ஈர்ப்புத் தன்மைக்கு உகந்த சத்துத் தன்மை குறைந்தே வருகிறது.

ஜீவன் பெற்ற உயிரணுக்களின் பெருக்கத்தின் சுவாசத்தினாலும் இன்று செயற்கையினால் வந்த வினை கொண்டு இக்காற்று மண்டலத்திலுள்ள சக்தியின் தன்மை குறைந்ததினாலும் இக்காற்றே கடும் விஷத்துடன் சுற்றிக் கொண்டுள்ளது. அதனால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் நிலையில்லை.

1.கலியான இம்மனிதன் தன் சக்தியின் சக்தியெல்லாம்
2.செயற்கையின் பேய்க்குப் பலியிட்டதின் பாவத்தை
3.உணரும் தன்மைக்கு வந்து விடுவான்… வந்து விட்டான்…!

blssings of mother

நம் பையன் சீராகப் படிக்கவில்லை என்றால்… உடல் நலம் சரியில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்று நமக்குள் முதலில் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.

1.என் பையன் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்
2.அவன் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வுகள் அவன் பெறவேண்டும்.
4.அறிந்துணர்ந்து செயல்படும் சக்தி அவன் பெறவேண்டும் என்று
5.இப்படி இந்த உணர்வைத் தாய் தனக்குள் சமைத்து அந்த உணர்வுடன் பையனை உற்று நோக்கி
6.ஒரு உணவுப் பொருளைக் கையிலே கொடுத்து… இதை நீ சாப்பிடப்பா…
7.உனக்கு நல்ல ஞாபக சக்தியும் ஞான சக்தியும் வரும் என்று சொல்லுங்கள்.

அதைப் போல சந்தர்ப்பத்தில் குழந்தைகளுக்கு உடல் நலம் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டுமென்று தாய் தனக்குள் எண்ணி வலுவாக்கிய பின்
1.தன் பையன் இந்த உடல் நோய் நீங்க வேண்டும் என்ற உணர்வை இந்தத் தாய் எடுத்து
2.சிறு விபூதியோ ஏதோ ஒன்றை எடுத்துக் கொடுத்தாலும்
3.இந்த உணர்வு கலந்து அந்த உடல் ஆரோக்கியம் பெறும் சக்தி கிடைக்கும்
4.கடினமான மருந்தும் தேவையில்லை.

அகஸ்தியன் பல தாவர இனங்களின் தன்மையை விஷத்தின் தன்மையை ஒடுக்கியவர். அந்த உணர்வின் தன்மை பெற்று விஷம் கொண்ட மிருகங்களையும் அடக்கியவர்.

இப்படி அந்த அகஸ்தியன் பல தீமைகளை வென்று தீமைகளை வென்றிடும் உணர்வை வளர்த்துத் துருவனாகி திருமணமான பின் தன் மனைவியின் உடலில் அதை எல்லாம் பாய்ச்சிக் கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றியவர்கள். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து
1.உங்கள் குழந்தைக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தில்
2.அவனைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து
3.அவன் கண்ணின் நினைவிற்குள் அவன் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று
4.எதாவது ஒரு ஆகாரத்தை எடுத்து ஜெபித்துக் கொடுங்கள்.

அந்தக் குழந்தை உடல் நலமாகும் பார்க்கலாம்.

மருந்துகளை டாக்டர் கொடுத்தாலும் நாம் அடிக்கடி இந்த முறைப்படி செய்தோமென்றால் கடும் நோயாக உருவாகாதபடி அவனைக் காத்திடலாம்… நோயை தடுத்திடலாம்.

இதெல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஒரு பையன் சீராக வரவில்லை என்றால் இதைப் போல அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அந்த பையனுக்கு நல்லொழுக்கமும் நல்ல ஞானமும் உலகை அறிந்திடும் அருள் ஞானமும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப் போல எண்ணி அவனுக்கு எதாவது பிரசாதத்தைக் கொடுத்து இதை உட்கொள்ளச் சொல்லுங்கள்.
1.நீ ஞானி ஆவாய்… உலகை அறிவாய்… உலக ஞானம் பெறுவாய்…!
2.நல்லொழுக்கம் பெறுவாய் பிறர் போற்றும் நிலையில் உன் வாழ்க்கை அமையும் என்று
3.இதைப் போன்ற உயர்ந்த வாக்கினை நீங்கள் கொடுத்துப் பாருங்கள்.

இந்த உணர்வின் தன்மை அவனுக்குள் பதிவாகி… நீங்கள் சொன்னது அவனுக்குள் மீண்டும் நினைவாகி… நீங்கள் எண்ணிய உணர்வு அங்கே இயக்கப்பட்டு… அவன் தீமையில் இருந்து விடுபடும் நிலை பெறுகின்றான்… நோயிலிருந்தும் விடுபடுகின்றான்.

cremation

இறந்த உடலைத் தகனம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் வழிப்படுத்தியதன் காரணம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒவ்வொரு பிறவியிலும் பல உயிரணுக்களின் நிலையுடன் வாழ்ந்த நாம் அவ்வுடலை விட்டு நம் ஆத்மா பிரிந்து செல்லும் பொழுது நம் ஆத்மாவுடன் கூடிய “சப்த அலையும்… சத்து நிலையும் தான்…” நம் உயிராத்மாவுடன் இஜ்ஜென்மத்திற்கு வரும் பொழுதும் வருகிறது

இக்காற்றினில் பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டேதான் உள்ளன.

1.பிறவி எடுக்கும் ஆசையிலும்
2.தன் எண்ணத்தைச் செயலாக்கும் ஆசையிலும்
3.குடும்பத்தைக் காக்கும் பற்றுக் கொண்ட ஆசையிலும்
4.பழிவாங்கும் வெறி நிலை கொண்ட குரோதத் தன்மையிலும்
5.வாழும் காலத்தில் அகால மரணமடைந்து அவதியுறும் நிலையிலும்
6.பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

இவ்வுலகில் வாழ்ந்திடும் மனிதர்களைக் காட்டிலும் மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் அதிக நிலையில் படர்ந்த நிலையில் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

புதிய புதிய மனிதன் பிறக்கிறானா…? அப்படி என்றால் போன ஜென்மம் என்பதின் நிலையென்ன…? ஆதியில் வந்த உயிரணுக்கள்தான் நாம் எல்லாம் என்றால் ஆதி காலத்தில் மனிதர்களின் ஜனத்தொகை குறைவு…! இப்பொழுது அதிகமல்லவா…?

ஆவி உலகிலும் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளனவல்லவா என்று எண்ணுவீர்.

இவ்வுலகம் கல்கியில் தோன்றிக் கலியில் முடியும் காலத்தில் வந்த உயிரணுக்கள் மட்டும் அல்ல… இன்றுள்ள உயிரணுக்கள் மட்டும் இன்றுள்ள உயிரணுக்கள் எல்லாம்.

இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே வந்த உயிரணுக்கள்தான் எல்லாமே. படர்ந்துள்ள உயிரணுக்கள் எல்லாம் உலகம் மாறுபடும் நிலையிலும் இவ்வுலகுடனே சுற்றிக் கொண்டேதான் வருகின்றன.

புதிய புதிய உயிரணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன. இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலைகளைக் கொண்டு பல கோடி உயிரணுக்கள் அன்றன்று வளர்ந்து கொண்டேதான் உள்ளன.

இம்மனித உயிரணுவில் இருந்து பல உயிரணுக்கள் உதித்து வெளிப்படுத்துகின்றன. ஒவ்வோர் உடலிலிருந்தும் அவ்வுடல் அழிந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் பல உயிரணுக்கள் அவ்வுடலில் இருந்தே வளர்ச்சி பெற்று பல உயிரணுக்கள் உதிக்கின்றன.

ஆதியில் வாழ்ந்த மனித இனம் குறைவாயிருந்தாலும் அம்மனித இனத்தில் ஒவ்வோர் உடலும் அதன் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு அவ்வாத்மாவுக்குச் சொந்தமான ஆவி நிலையான சத்து நிலையும் சப்த அலையும் அதனுடன் சென்ற பிறகு இவ்வுடலை நாம் அடக்கம் செய்யும் நிலையில் இவ் உடலில் இருந்து பூமியில் இருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் ஈர்ப்பினால் அவ்வுடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று புழுவான நிலையில் படர்ந்துள்ளன.

மனித உடலில் இருந்து உயிர் பெற்ற உயிரணுக்கள் அந்நிலைகொண்ட சக்தியையே தன்னுள் ஈர்த்து அதே நிலை கொண்ட சுவாசங்களைப் பெற்று மனித கர்ப்பத்திற்கு வந்து மனிதனுடன் வந்து விடுகிறது.

ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவ் ஒரே மனிதன் மட்டும் பிறவி எடுத்து வந்த நிலையல்ல இப்பொழுது உள்ள நிலை.

1.ஒவ்வொரு மனிதனும் அவன் இறந்த பிறகு
2.அவனிலிருந்து பல உயிரணுக்கள் மனிதனாகப் பிறவி எடுத்து
3.மனித இனமும் வளர்ந்து கொண்டே வருகிறது.

அதைப்போலத்தான் மற்ற ஜெந்துக்களின் உயிரணுவின் நிலையும்.

நம் முன்னோர்கள் இதன் நிலை அறிந்து தான் உடலை அடக்கம் செய்யும் நிலையிலிருந்து எரிக்கும் நிலையை ஏற்படுத்தினார்கள்.
1.உடலை எரிக்கும் பொழுது அவ்வுடலில் உள்ள ஆத்மா மட்டும்தான்
2.அதன் ஆவி நிலையான சத்து நிலையைத் தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது
3.உடலில் உள்ள நீர்ச் சத்துக்கள் அதை எரிக்கும் நிலையில் ஆவியாகி நீருடன் நீர் கலந்து விடுகிறது
4.தகனம் செய்த உடலிலிருந்து புதிதாக உயிரணுக்கள் தோன்றுவதில்லை.

இதன் உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் அவ்வுடலைப் பல நிலையில் பக்குவப்படுத்தும் வழி காட்டினார்கள்.

உயிரணுக்கள் பெருகும் நிலை புரிந்ததா…?

Child care

நச்சு… நச்சு… என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன…?

 

உதாரணமாக ஒரு கருவுற்ற தாய் இருக்கிறது என்று வைத்துக் கொல்வோம். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குள் சண்டை போட்டார்கள் என்றால் அவர்கள் மேல் இந்தக் கருவுற்ற தாய் அன்பாக இருந்தால் அதைப் போய்ப் பார்ப்பார்கள்.

யார் மேல் பற்றுடன் இருக்கின்றதோ இன்னொருத்தர் அவரைக் கோபமாகப் பேசினனால் கருவுற்ற தாய் அந்தப் பாசமாக உள்ளவர்களை உற்றுப் பார்த்து அடப் பாவி…. அவர் சும்மா இருக்கிறார் இப்படி பேசிக் கொண்டே இருக்கின்றார்களே…! என்று அந்த உணர்வை எண்ணுகிறது.

1.இப்படிப் பேசுகின்றார்களே என்று வேதனையான உணர்வுகளை சுவாசித்து விட்டால்
2.தாய் நுகர்ந்த உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இது பூர்வ புண்ணியமாக அமைந்துவிடுகின்றது.

இதைக் கேட்டறிந்த பின் தாய் என்ன செய்யும்…? வருபவர்களிடம் எல்லாம் சொல்லும். இந்த அம்மா சும்மா இருக்கின்றது… கோபமாகப் பேசுகிறார்கள் திட்டுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.

ஆனால் கருவுற்றிற்கும் பொழுது சாதாரணமாகவே தாய் உடலில் அந்த சோர்வின் தன்மை இருக்கும். சண்டை இடும் போது எந்தக் கடினமான வார்த்தையைத் தாய் கேட்டதோ மீண்டும் அந்த உணர்வே இயக்கிக் கொண்டிருக்கும்.

பலவீனம் அடையப்படும் போது அவர் கேட்டறிந்த உணர்வுகள் இந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உணர்வாகும்போது பார்க்கலாம்… அந்த குழந்தைகள் துடித்துக் கொண்டே தான் இருக்கும்.

இந்த உணர்வின் நிலைகளை தாங்காது அப்பொழுது அந்த உணர்ச்சிகளை தூண்டும்போது தாயின் உடல் மேலும் சோர்வடையும் அதே சமயத்தில் பதிந்த உணர்வை நுகர அங்கே சண்டையிட்டோர் நினைவுகள் இது அதிகமாகக் கூடும்.

நாம் எல்லாப் பொருள்களையும் போட்டு அதிலே காரத்தை அதிகமாக இணைத்து விட்டால் நல்ல சுவையை இழக்கச் செய்து காரத்தின் தன்மையே முன்னணியில் இருக்கும்.

அதைப் போன்று தான் நாம் கேட்டறிந்த உணர்வுகள் நாம் சதா திரும்ப எண்ணும் போது கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் பதிந்து விடுகின்றது.

பின் அந்தக் குழந்தை பிறந்த பின் எப்படி அவர்கள் சண்டையிட்டு வேதனைப்பட்டாரோ இந்த வேதனையான உணர்வு கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குள் விளைந்து பிறந்தபின் நச்சு… நச்சு…! என்று அழுகும்.

நச்சு… நச்சு…! என்று அழுகப்படும்போது ஐயோ பாவமே…! இந்தக் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது…? என்ற நிலைகள் இதை அடிக்கடி எண்ணி அதே வேதனையின் உணர்வை நமக்குள் மீண்டும் வளர்த்திடும் சந்தர்ப்பமாகி விடுகின்றது. நம் நல்ல குணங்களைப் பலவீனமடையச் செய்கின்றது.

சண்டையிட்டதை நினைத்து தாயின் கருவிலே வளரும்போது அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தாலும்… தாய் அவனைக் காத்திடும் நிலைகள் இன்னும் அதிகமாகக் கூடக் கூடக் கூட… இந்த உணர்வின் தன்மை தாயின் உடலுக்குள் உருவாகி… அல்லும் பகலும் முழித்திருந்து வேதனையின் வினையாக தனக்குள் வித்தாகி அடிக்கடி இந்த வேதனையை நுகர வேண்டி வரும்.

தாய் ஆரம்பத்தில் எதை உற்றுப் பார்த்ததோ அது தாய் உடலில் வினையாகச் சேர்கின்றது. கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது. பின் அந்தக் குழந்தை வளர்ந்தபின் அந்த உணர்வுகள் இயக்கும்போது ஏன் அழுகின்றது…? அது என்ன…? என்று தெரியாது.

சில குழந்தைகளைப் பார்க்கலாம். இந்த மாதிரி சண்டையிட்டோரைப் பார்த்திருந்தால் இனம் புரியாமல் நச்சு… நச்சு என்று அழுகும். சமாதானப்படுத்த நீங்கள் என்ன தான் கொடுத்தாலும் அதற்கு அந்த உணர்வுகள் தணியாது.

காலத்தால் தன் அறிவு என்று சிந்திக்கும் திறன் வந்து… மற்றவரை உற்றுப் பார்த்து அதை காணும் நிலை வரும்போது தான்… இது சிறுகச் சிறுக இது வந்து ஒடுங்கி இந்த உணர்வின் நிலைகள் மாறும்.

அது வரை எதுவும் அறியாத குழந்தையாக மூன்று மாதம் வரை அந்தக் குழந்தை இனம் புரியாமல் அழுது கொண்டே இருக்கும்.

ஆனால் சாதாரணமாக உள்ள குழந்தைகள் எல்லாம் ஒரு மாதம் ஒன்றரை மாதம் ஆனவுடன் தாயை உற்றுப் பார்க்கும். அதனின் செயல்கள் சீராக இருக்கும்.

கருவிலே இருக்கப்படும்போது பிறருடைய சங்கடங்களை எண்ணியிருந்தால் இது பூர்வ புண்ணியமாக அமைந்து பிறந்த பின்
1.குழந்தை தாயைக் கூட பார்க்காது
2.எங்கோ பார்த்து அது விக்கி விக்கி அழுகும். பயத்தின் நிலைகள் துடிக்கும் ஏங்கி அழுகும்.
3.இது போன்ற நிலைகளில் குழந்தைகளைக் காணலாம்

குழந்தை சில்லு… சில்லு என்று அழுகப்படும்போது நமக்குள் வெறுப்பின் தன்மைகள் கூடி… குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று இந்தப் பாசத்தால் இந்த உணர்வுகள் அதிகமாக இதுவே வினையாகி நோயாக மாறுகின்றது.

குழ்ந்தை மேல் பாசம் கொண்ட நிலையில் இந்த உணர்வுகள் பதிவானபின் அவனில் இந்த நோய்கள் வளரப்படும்போது காத்திடும் தெய்வமாகத் தாய் இருப்பினும் அவனில் விளைந்த நோயினை தாய் அடிக்கடி எடுக்கும்போது இங்கேயும் அது வளர்கிறது.

இது வளர வளர பின் விளைவு அதிகமான வேதனையாக உருவானால் அந்த வேதனையின் தன்மை திரண்டு கேன்சராக மாறும்.

இதைப்போல ஒவ்வொரு நொடியிலும் அதனுடைய உணர்வு விளைந்து விட்டால் இதனுடைய பருவம் விளைந்தபின் தான் கேன்சரின் தன்மையே நமக்குள் தெரியவரும்.

1.ஆக நாம் தவறு செய்யவில்லை
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது அந்த உணர்வின் தன்மை வந்துவிடுகின்றது.

ஒரு செடியிலே விளைந்த வித்தை மண்ணிலே ஊன்றினால் தன் உணர்வுக்குள் இருக்கும் சத்தை அதுவே ஏங்கித் தன் உணர்வால் கவர்ந்து கொண்டே இருக்கும்.

காற்றிலே மிதந்து வரும் உணர்வுகளை… அந்தத் தன் தாய் இனத்தில் இருந்து வெளி வருவதை அது உணவாக எடுத்து இந்தச் செடி வளர்கின்றது.

அந்தச் செடி மற்ற தாவர இனச் சத்தைத் தன் அருகிலே வராது தடுத்துக் கொண்டதோ இதைப் போன்றுதான்…
1.நமக்குள் எந்த குணத்தின் தன்மை வந்ததோ
2.மற்ற நல்ல குணங்கள் நம்மை அணுகாது
3.அந்த வேதனை என்ற உணர்வை தனக்குள் எடுத்து இங்கே விளைந்து விடுகின்றது.

தன் குழந்தைகளை எண்ணி அடிக்கடி இப்படி ஆகின்றதே என்று வேதனையை எடுக்க… அது நாளாக நாளாக இந்த தாய்க்கு கை கால் குடைச்சல்… ஒரு தலை வலி… முதுகு வலி… இடுப்பு வலி… இதைப்போன்ற நிலைகள் எல்லாம் வரக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் பார்த்தது வேடிக்கை என்றாலும் நுகர்ந்த உணர்வுகள் இத்தனை வேலையைச் செய்கிறது.

guru arul Eswarapattar

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய முறை

 

ஒவ்வொரு நிலையிலும்…. ஒவ்வொரு ரூபத்திலும்…
1.குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த ஏட்டை (பதிவுகளை) நினைவு கொள்ளும் போது
2.எனக்குள் (ஞானகுரு) உணர்த்தி உணர்வின் தன்மையை அவரே இந்த உடலை வழி நடத்துகின்றார்.

ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!

அவர் பதிவு செய்த நாடாக்களை (RECORD) நான் எண்ணும் போது… “அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு…”
1.நீங்கள் பெற வேண்டும் என்று
2.அவர் செய்த உண்ர்வைத்தான் நானும் (ஞானகுரு) செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னைச் செய்விக்கின்றது.

ஆகவே குரு அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய வழியில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலிலே பெறச் செய்வோம்.

நாம் பார்க்கும் அனைவரின் உடலையும் மகிழச் செய்வோம். மகரிஷிகளின் அருள் உணர்வுடனே இந்த வாழ்க்கையை ஒன்றி வாழ்வோம்.

என்றும் பேரானந்த நிலைகள் பெற்ற பெரும் நிலையுடன் ஒன்றியே வாழ்ந்திடும் நிலையை நாம் உருவாக்குவோம். குருவுடன் ஒன்றி வாழும் நிலையைப் பெறுவோம்.

உங்களுக்குள் குரு உணர்த்திய பேருண்மைகளைப் படிப்படியாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் காலமும் இல்லை… நேரமும் இல்லை.

குருநாதர் எமக்குக் கொடுத்துப் பதிவு செய்த நிலைகள் எண்ணிலடங்காதது. இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.
1.அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வைப் பதிவு செய்த இந்த நிலையை
2.எல்லோரும் பெற வேண்டும் என்பதற்கு
3.அவ்வப்போது அந்தத் துணுக்குகளை எடுத்து அந்த நினைவைக் கூட்டும் போது
4.உணர்வு ஒளியாகி… உணர்வின் தன்மைகள் எண்ணமாகி… அதனின் நிலைகளில் தான் செயல்படுகின்றேன்.

streaming-blood

நம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு உடலும் மாறுபட்டாலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறப்பிலும் குழந்தை பருவம் முதல் தன்னைத்தானே உணர்ந்து வாழும் காலம் வரை நம்மை ஒருவர் வழிநடத்தித்தான் நாம் வாழும் காலம் வருகிறது.

1.அன்னை அன்னத்தை ஊட்டத்தான் செய்வாள்… அதை ஏற்று உண்ணுவது நாம் தான்
2.பள்ளியில் பாடத்தை உபாத்தியாயர் போதித்தாலும் அதை ஏற்று மதிப்பெண் பெறுவதும் நாம் தான்
3.நம்மை நாமே உணரும் காலம் வரும்வரை வழியைத்தான் நமக்குணர்த்துவர் பெரியோர்
4.ஏற்றுச் செயல்படுவது நம் செயலில்தான் உள்ளது.

ஒவ்வொரு ஜென்மத்திலும் மாறி நாம் வந்தாலும் முன் ஜென்மத்தின் நினைவு இஜ்ஜென்மத்தில் இருப்பதில்லை. முன் ஜென்மத்தின் தொடரின் அறிவுடன் தான் இஜ்ஜென்மத்தில் பிறக்கின்றோம்.

அவ்வறிவுடன் இஜ்ஜென்மத்தில் நாம் பிறந்ததின் பயனைக்கூட்டி வாழும் பக்குவத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்படும் நிலைக்கு நம்முள் உள்ள சக்தியை நாமேதான் செயல்படுத்தி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வாண்டவனும் வந்து நமக்கு அனைத்தையும் அருள்வதல்ல…!

தீய வழிக்குச் செல்பவனுக்கும் அவன் செல்லும் வழியிலேயே அவன் சக்தியை வளர்ப்பதனால் அத்தீய சக்தியே அவன் வழியில் கூடி மென்மேலும் அந்நிலையிலேயே செல்கின்றான்.

நல் உணர்வை வளரச் செய்தால் அந்நிலைதான் வளரும். ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலை அமைவதுவும் அவரவர்கள் அமைத்துக் கொண்ட நிலைதான்.

எவ்வெண்ணத்தில் நாம் உள்ளோமோ அவ்வெண்ணத்தின் வழித் தொடர்தான் நம்முடன் வளரும். வியாதியில் உள்ளவன் அவ்வெண்ணத்தையே வளர விட்டால் அவ்வெண்ணத்திற்கேப வளரும் நிலைதான் தொடர்ந்து வரும்.

ஒவ்வொரு வழி நிலையும் இதைப் போல்தான் வருகின்றது.

விஞ்ஞானத்தில் பல நிலைகளை அறிபவனும் அவன் எண்ணத்தின் வளர்ச்சிப்படிதான் அவன் வழி நடக்கிறது. ஆக எந்த ஒரு நிலையிலும் அவரவர்களின் எண்ண நிலையை வளரும் நிலைப்படுத்தி வளர விடுகின்றோமோ அந்நிலையில்தான் வாழ்க்கை நிலை அமைகிறது.

நம் எண்ணமுடன் இக்காற்றினில் கலந்துள்ள பல உயிரணுக்கள் நம் உயிரணுக்களுடனும் கலந்து விடுகின்றன. நாம் ஏற்ற ஒரே வழியில் செல்லும் பொழுது நம்முள் கலந்துள்ள அவ்வுயிரணுவும் நம்முடன் செயல்பட வருகிறது.

1.நம் எண்ண நிலையில் மாற்றம் வரும் பொழுது
2.நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளாத வழியில்
3.நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணுவின் எண்ணத்தை
4.நாம் வேறு எண்ணத்திற்குச் சென்றாலும்
5.நம்மைத் தடைப்படுத்துகிறது நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணு.

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பல உயிரணுக்கள் ஏறித்தான் உள்ளன. நம் ஆத்மாவை நாமே ஆண்டு… நம்மை நாம் உணர்வது என்பதன் பொருள்…
1.நம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல்
2.நம் ஆத்மாவின் வழியில் நமக்குகந்த சக்தி நிலையில் நாம் வாழும் நிலைப்படுத்தி
3.சீராக வாழும் பக்குவத்தை நாம் பெற வேண்டும்.

breathing tap root

மனிதனுடைய ஆணிவேர் அவன் ஆன்மாவுமல்ல… உடலுமல்ல… நாசி தான்… அவன் எடுக்கும் சுவாசம் தான்…! – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுடல் பசிக்கு நாம் எப்படி உண்ணுகின்றோம்…?

பசித்ததும் புசிக்கின்றோம். புசித்த பிறகு அதன் நிலையை இவ்வுடல் ஏற்றதும் மறுபடியும் பசி வந்து புசிக்கும் பொழுது நாம் தான் புசித்து விட்டோமே இப்பொழுது எதற்காக…? என்று எண்ணுவதில்லை.

மறுபடியும் மறுபடியும் பசி வந்தால் புசித்துக் கொண்டே உள்ளோம்.
1.இவ்வுடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவு
2.நம் எண்ணப் பசியில் இருந்து வருவதுதான்
3.இவ்வெண்ணப்பசியே நாம் எடுக்கும் சுவாசநிலை கொண்டுதான் வருகின்றது.

இவ்வுடல் நாம் புசிக்கும் ஆகாரத்தை எந்நிலையில் ஏற்று வளர்கிறது…? நாம் உண்ணும் ஆகாரம் இவ்வுடலில் எத்தன்மையில் செயல்படுகின்றது…?

நாம் எண்ணுகின்றோம்…! நாம் உண்ணும் உணவெல்லாம் இவ்வுடலுக்குள் சென்று இரைப்பை ஏற்று அந்நிலையிலிருந்து சிறு குடல் பெருங்குடலுக்குச் சென்று ஜீரணித்து அந்நிலையிலிருந்து அவை இரத்தமாகவும் சிறு நீராகவும் மலமாகவும் பிரித்து இவ்வுடல் நிலை உள்ளதென்று…!

இவ்வுடலின் நிலை எந்நிலையில் உள்ளதென்று உணர்த்துகின்றோம் இப்பாட நிலையில். இ

தைப் படிப்பவரின் எண்ணத்தில் இதன் உண்மையினை அறிய வேண்டுமென்றால் (வினா எழுப்பினால்) இந்நிலையில் வந்து அவர்கள் கேட்டிடலாம். நாம் ஏற்கும் உணவு இவ்வுடல் எந்நிலையில் ஏற்கிறது…?

நாம் எந்த ஆகாரத்தை உண்ணும் பொழுதும்…
1.இக் கையான காந்த சக்தி கொண்ட ஈர்ப்பு நிலை கொண்ட இக்கையினால் நாம் எடுத்துப் புசிக்கும் பொழுதே
2.அவ்வாகாரம் நம் வாய்க்குச் செலுத்துவதற்கு முன் நம் சுவாசத்திற்கு அதன் மணம் ஈர்க்கின்றது.

ஈர்க்கும் நிலையில்… நம் உடலுக்குள் சென்ற அவ்வாகரமும் நம் வாயில் உள்ள பொழுதே… நம் சுவாசம் ஈர்த்த நிலையில் “நம் வாயிலிருந்து உமிழ் நீர் சுரக்கிறது…!”

அவ்வுமிழ்நீர் அவ்வாகாரத்தில் பட்டு…
1.அவ்வாகரத்திலுள்ள சத்தையும் சேர்த்து ஆவியாகி
2.அவ்வாவியே அமிலமாகி நம் உடலில் எல்லாப் பாகங்களுக்கும் சென்று
3.அவ்வாகாரத்திலுள்ள ஆவியான சத்துள்ள அமிலம் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.

நாம் உண்ணும் உணவு எல்லாமே நம் சுவாசம் ஏற்றுத்தான் அவ்வுமிழ்நீர் என்னும் நீர் சுரந்து அதிலிருந்து செயல்படுவதுதான் இவ்வுடலமைப்பே…!

மரம்… செடி… கொடி… இவ்வுலகம்… இவ்வுலகைப்போல் பல உலகங்கள் எல்லாவற்றுக்குமே “ஆணிவேர்…” உண்டு. அதைப்போல் இம் மனிதனுக்கு எது ஆணிவேர்…? இம்மனிதனுக்கு மற்றுமல்ல மற்ற ஜெந்துகளுக்கும் எது ஆணிவேர்…?

1.இம்மனிதனின் ஆணிவேர் அவன் ஆத்மாவுமல்ல… அவன் உடலுமல்ல.
2.அவன் எடுக்கும் சுவாசம் தான்… இந்நாசி தான் மனிதனுக்கு ஆணிவேர்
3.இவ்வாணிவேரில் மாற்றம் வந்தால்… அனைத்து நிலையுமே மனிதனுக்கு மாற்றம்தான்.
எடுக்கும் சுவாச நிலைகொண்டு அவ்வெண்ணத்தில் எண்ணுவதின் நிலை கொண்டுதான் அவன் உடல் நிலையே உள்ளது.., வாழ்க்கை நிலையும்தான்…!

உடல் பசிக்கு உண்டதை நினைத்திடாமல் “பசி வரும் பொழுதெல்லாம் எப்படி உண்ணுகின்றோமோ…” அதைப்போல்
1.இவ்வெண்ணத்தை நடத்தவற்றை நினைவுகூர்ந்தே பின் நோக்கிச் செலுத்திடாமல்
2.இவ்வெண்ணப் பசியை நடப்பவற்றைச் செயலாக்கும் நிலையிலேயே நல் நிலைப்படுத்தி வாழுங்கள்.

பசிக்கும் பொழுது புசிக்கும் நிறைவைப் போல் எப்படிப் பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம்.

அதாஅது இப்பொழுது பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலையை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம். இப்பொழுது பசிக்கும் பொழுது இப்பொழுதே சாப்பிடாமல் பிறகு வரும் பசிக்கு என்ன செய்வது…? என்று இவ்வுடல் எண்ணுவதில்லை.

அதைப்போல் நடந்தவற்றையும் நடக்கப் போவதையும் கனவான கற்பனைப்படுத்தி கால நிலையை விரயம் செய்திடாமல்… ஆண்டவன் தந்த கால நிலையில் இவ்வுடல் என்னும் பொக்கிஷத்தை உயர்ந்த தெய்வமான இவ்வாத்மாவின் செயலினால் இக்காலத்தை விரயமாக்கிடாமல்…
1.ஒவ்வொரு நொடியையும் அத்தெய்வத்தின் சேவகனாய் நம் எண்ணத்தைச் செயல்படுத்தி
2.தெய்வமுடன் தெய்வமாக… தெய்வீக வாழ்க்கையில் தேவனாய் வாழ்கின்றோம்…! என்ற நிலைப்படுத்தி ஒவ்வொருவரும் வாழ்ந்திடுங்கள்.

இக்காற்றினில்தான் அனைத்து சக்தியும் கலந்துள்ளன. அனைத்து சக்திகளின் கலவைதான் நம் உடலும்.

இவ்வுடலின் உண்மை மகத்துவத்தை உணர்ந்து… நாமும் தெய்வத்துடன் தெய்வமாக சூட்சுமம் கொண்டு வாழ்பவர்களுடன் “இவ்வுடலில் நாம் உள்ள நிலையிலேயே கலந்து வாழ்வதற்குத்தான்…” இப்பாட நிலையின் உண்மை நிலை.

full meal

மனம் விரும்பி உணவாக உட்கொண்டால்தான் உங்கள் வயிறும் உடலும் நலம் பெறும்… இல்லை என்றால் நோய் தான்…!

 

சில இடங்களில் வற்புறுத்தி சாப்பிட வேண்டும் என்பார்கள். ஆனால் கௌரவத்திற்காக… இல்லை நான் இப்பொழுதுதான் சாப்பிட்டு வந்தேன்…! என்று தலையைச் சொறிவார்கள்.

பசியும் இருக்கும்…! சாப்பிடுங்கள்…! என்று சொன்னால் எப்படி சாப்பிடுவது…? என்று சொல்வார்கள். ஆனால் அந்தச் சலிப்பான நிலைகள் கொண்டு இருப்பார்கள்.

இல்லை இல்லை…! எங்கள் வீட்டில் நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும்…! என்று சொன்ன பின் சரி உங்களுக்காகச் சாப்பிடுகின்றேன் என்று உட்கார்வோம்.

இந்தச் சலிப்பும் சோர்வும் அடைந்த பின்.. அந்த சலிப்பு என்பது ஒரு புளிப்பின் தன்மையை உண்டாக்கும்.

இந்தப் புளிப்பு கலந்த பின் சாப்பாடு போட்டவுடனே கொஞ்சம் தான் சாப்பிட்டிருப்பார்கள். அதற்கு அப்புறம் உள்ளுக்கே விடாது. ஏனென்றால் அப்போது அந்தப் புளிப்பின் தன்மை வந்த பின் எதிர்க்கும் தன்மை வந்துவிடுகின்றது.

1.கொஞ்ச நேரத்தில் பார்த்தவுடனே நெஞ்சைக் கரிக்க ஆரம்பிக்கும்.
2.அந்த உணர்வில் புளிப்பின் சக்தி வரப்படும்போது… நாம் வேறு எதை விழுங்கினாலும் அந்த புளிப்பு என்ன செய்யும்…?
3.அன்னக் குழாய்களில் அதிலுள்ள அமிலத்தைக் கரைத்துவிடும்.
4.பின் நமக்குள் அது உராயும் போது நெஞ்சு எரியும்.

நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் இந்த அமிலங்களை உருவாக்கிவிடுகின்றது.

இதைப் போன்று நாம் நமது எண்ணங்களில் உருவாகும் உணர்வின் அமிலங்கள் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மடியச் செய்கின்றது. நமது உறுப்புகளையும் மாற்றி விடுகின்றது.

நாம் அடுத்து உணவுகள் உட்கொள்ளும்போது நம்மை யார் சாப்பிடச் சொன்னார்களோ… அவர்களை எண்ணி… “நான் வேண்டாம் என்று சொன்னேன் என்னை இப்படியெல்லாம் செய்துவிட்டார்கள்…. என் நெஞ்சைக் கரிக்கின்றது…!” என்று சாப்பாடு போட்டதற்காக அவர் மேலும் வெறுப்படைவார்கள்.

இதைப்போல பெண்களும் பெரும்பகுதியான பேர் இருப்பார்கள்.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்று உடனே முதலில் கொஞ்சம் சாதம் போட்டிருப்பார்கள்.. இரண்டாவது போட்டவுடன் “லபக்….” என்று தள்ளுவார்கள்,

தள்ளியவுடன் பார்த்தால்… பெரிய பாறையையே தூக்கிப் போட்ட மாதிரி இருக்கும். ஐயோ இப்படிப் போட்டு விட்டார்களே…! என்ற உணர்வுகள் பட்டபின் அவர்கள் உடல்கள் எப்படி இருக்கும்…? என்று நினைக்கின்றீர்கள்

இதைச் சாப்பிட முடியாது. உடனே சாப்பாடு போட்டவர்கள் மீது வெறுப்பு வரும். ஆனால் அவர்கள் சிரிப்பார்கள்.

இந்தச் சந்தர்ப்பம் அவர்கள் மேல் வெறுப்பின் அணுக்கள் வளர்ந்த பின் இந்த வெறுப்பின் அணுக்கள் வளர்ந்து அந்த ஆகாரத்தைப் போட்டவர்களை நினைத்தவுடன் அந்த வீட்டிற்குப் போனவுடனே “இப்படித் தான் செய்வார்கள்” என்ற இந்த எண்ணங்கள் வரும்.

இந்த வெறுப்பின் அணுக்களை நமக்குள் விளையப்படும் போது நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் எத்தனையோ நோய்கள் வந்துவிடும். அந்த வெறுப்பின் நிலை கொண்டு இப்படி செய்துவிட்டார் என்று பார்க்கப்படும் போது சிரித்துக்கொண்டு பார்த்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைகள் விலகும்.

வெறுப்பை உருவாக்கும் அணுக்களே அங்கே உருவாகின்றது…!

ஆகவே இதைப்போல வெறுப்பை உருவாக்கிவிட்டால் அங்கே அவருக்குள் என்ன ஆகிறது…? ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதைப் போன்று ஒரு சொந்தமோ பந்தமோ உங்களுக்கு உணவை அவர்கள் சமைக்கப்படும்போது இந்த வெறுப்பின் உணர்வு அதிகமாகும் போது
1.அந்தக் குழம்புகளில் அவர்களும் ஏதாவது பொருளை அதிகரித்து விடுவார்கள்
2.அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டாலே நாம் வெறுக்கும் தன்மையே வரும்
3.உப்பு அதிகமாகி விட்டால் வெறுக்கும் தன்மை வரும்.
4.சீரகத்தை அதிகமாக சேர்த்து விட்டால் ஒமட்டலின் தன்மை வரும்.
5.காரத்தை அதிகமாக்கிவிட்டால் வெறுப்பின் தன்மை வரும்.

இதைப்போன்று அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இந்த உணர்வுகள் இயக்கி அந்தப் பொருளை அதிகமாகச் சேர்க்கும் தன்மை வரும். இது எல்ல, நம்மை அறியாமலேயே இயக்கும் சில நிலைகள்…!

ஆகவே… எப்போதுமே பிறருக்கு உணவு சமைக்கும் போதும்… பரிமாறும் போதும்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர் மகிழ்ச்சி பெறும் சக்தி பெற வேண்டுமென்று எண்ணி உணவைச் சமையுங்கள்… போடுங்கள்…!

அதே சமயத்தில் இது போன்ற நிலைகளை எவருக்கும் நாம் அவரை மகிழச் செய்ய அதிகமாக உணவைப் போட்டுவிடாதீர்கள்…! போதும்… என்றால் அதை நிறுத்தி விடுங்கள்.

இரண்டாவது தடவை வந்து போடட்டுமா… போடட்டுமா…? என்று சொன்னால் அவர் சாப்பிட்டதைவிட அந்த வெறுப்பின் தன்மை கூடி நான்கு தடவை சொன்னால் என்ன நடக்கும்…?

இல்லைங்க கொஞ்சம் தான் என்று சொல்ல அவர் வேண்டாம் என்று சொல்ல இல்லை கொஞ்சம் தான் என்று மீண்டும் அழுத்திச் சொல்ல
1.அப்பொழுது இந்த வெறுப்பின் உணர்வை அங்கே வளர்த்து
2.அது உமிழ் நீரில் சேர்த்தால் முதலில் சாப்பிட்ட ஆகாரத்தை அது அஜீரணம் தான் செய்யும்

அப்போது அஜீரணம் ஆகும்போது என்ன ஆகின்றது…? நீங்கள் சாப்பாடு போட்டும் பயனில்லாமல் போகின்றது. இதைப் போன்ற நிலைகளில் இருந்து ஔவொருவரும் மீள்தல் வேண்டும்.

ஏனென்றால் இதெல்லாம் நம்மை அறியாத அன்பால் நடக்கும் செயல்கள்…!

மிகவும் ருசியாக இருக்கின்றது என்று நீங்கள் எதையாவது உணவை அதிகமாக்கி விட்டால் உங்கள் உடல் ஏற்றுக் கொள்கின்றதா….? இல்லையே…! அஜீரண சக்தியாகி அதிக புளிப்பின் தன்மை அடைந்து நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களும் சோர்வடையச் செய்துவிடுகின்றது அல்லவா….!

அப்படிச் சோர்வடைந்த நிலைகளில் தொழில் செய்ய நேருகின்றது. நம்முடைய எண்ணங்கள் பிறருடன் பேசும் போதும் அதே சோர்வின் தன்மை அடைகின்றது. நம் வாழ்க்கையில் இது போன்ற அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடுகின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றி அமைத்தே ஆக வேண்டும்…!

polluted earth

இந்தக் காற்று மண்டலமே விஷமாக உள்ளதால் புதிய புதிய வியாதிகள் தாக்கத் தான் செய்யும் – ஈஸ்வரபட்டர்

சூரியனின் அணு சக்தியில்லாமல் இவ்வுலகில் உள்ள எந்தச் சக்தியும் இயங்கிட முடியாது. சூரியனிலிருந்து இப்பூமிக்கு வந்து படரும் சக்தியைக் கொண்டுதான் அனைத்து சக்தியுமே இன்று இயங்குகின்றன.

அதன் தொடரில் இருந்துதான் இன்றைய மனிதனால் செயலாக்கிய பல மின் அணுக்கதிர்களின் செயல் எல்லாமே.

1.இக்காற்றுடன் கலந்துள்ள சூரியனின் அணு சக்தியை
2.இன்று மனிதன் தன் செயற்கையின் நிலைக்காகப் பல அணுக்கதிர்களைப் பிரித்து எடுப்பதினால்
3.இக்காற்று மண்டலமே கடும் விஷமாகச் சுற்றிக் கொண்டுள்ளது.

மின்சாரம் எடுப்பதற்காக இக்காற்றில் கலந்துள்ள காந்த சக்திகளை ஈர்த்து எடுக்கின்றான். அதைப் போல் பல நிலைகளுக்காக இவ்வணு சக்திகளை காற்றிலிருந்து ஈர்த்து எடுக்கின்றார்கள்.

இன்றைய மனிதன் வாழ்வதற்குத் தானாகச் சூரியனில் இருந்து வரும் அணுப் பிளம்புகளைத் தன்னுள்ளேயே அச்சக்திதனைப் பெறும் வாய்ப்பினை இன்று வாழும் மனிதனே அதனைச் செயற்கை நிலைப்படுத்தி வாழப் பழகிக் கொண்டான்.

இனியும் அச்சூரியனின் சக்தியிலிருந்து மேன்மேலும் பல செயற்கை நிலைக்காக ஈர்த்தெடுத்து விஞ்ஞானம் கண்டே வாழ்ந்திட்டால் விஞ்ஞானத்தைத் தாங்கும் நிலை மெய் ஞானம் கொண்ட இப்பூமியினால் முடிந்திடாதப்பா.

காற்றையே கடும் விஷமாக்கி விட்டான் சக்தியின் சக்தி பெற்ற இன்று வாழும் இம்மனிதன்.

1.இவன் செய்த இவ்வினையினால் வருவதுதான் புதிய புதிய வியாதிகள்
2.இப்புதிய புதிய வியாதிகளுக்கு அதன் சக்திக்கும் மேம்பட்ட சக்தியைக் கொண்ட மருந்தையும்
3.இவன் சக்தி கொண்டு புதிய புதிய நிலைப்படுத்தித்தான் இவன் மருத்துவத்தில் இவனே கொண்டுவர வேண்டும்.

இன்று நாம் பெறும் சுவாசமே விஷ நிலைக்கொண்ட காற்றாக உள்ள பொழுது புதிய புதிய வியாதிகள் நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

மனிதனை மனிதனே அழித்து வாழும் நிலையில்தான் இன்றுள்ளார்கள் மனிதர்கள் எல்லாருமே.

ஆனால் இயற்கையுடன் கலந்து இயற்கையையே தெய்வமாகப் போற்றி இயற்கை அன்னைக்குச் சக்தி தந்த அச்சூரியனை தேவனாக்கி தெய்வமாக வாழ்ந்தார்கள் அன்று பல மக்கள்.

இன்று வாழும் நிலை எல்லாமே எப்படி இருக்கிறது என்றால்…
1.செயற்கைக்கு ஏங்கும்…
2.செயற்கையான மனமுடைய…
3.செயற்கையுடன் ஒன்றிய
4.செல்வந்த வாழ்க்கைதான் செழித்த வாழ்க்கை என்ற மன நிலையிலேயே
5.இவ்வுலகமே தன்னைத்தானே விஷமாக்கி
6.இவ்வுலகையும் விஷமாக்கிச் சுழன்று கொண்டே உள்ளார்கள்

இச்சுழற்சியிலிருந்து தப்புவதற்கு எந்நிலையும் யாரும் நாடவில்லை. காலத்துடன் வழிப்படுத்தி வந்த வினை இன்றுள்ள வினை.

இதிலிருந்து மீளும் நிலையை ஏற்க வருபவர்க்கு நம் தியான நிலையின் மகத்துவ நிலை புரியும். இவ்வுலகில் படர்ந்துள்ள பல உண்மை சக்தியினையும் புரிந்துணர்ந்து வாழ்ந்திட முடியும்.

1.நல்லுணர்வைப் புகட்டுகின்றோம்
2.புகட்டத்தான் நம் சக்தியில் சக்தியுண்டு.

அவரவர்கள் ஏற்கும் நிலைகொண்டு தான் அவரவர்களுக்கும் அச்சக்தி நிலை பெறும் பாக்கியமும் உண்டு.

1.அச்சக்தியினை ஏற்போர்க்கும் வழி நடத்தி வந்திடுவோம்
2.எண்ண நிலையை மாற்றுவோருக்கு நல்நிலை பெற்றிட நமக்குச் சக்தி தந்த அச்சக்தி தேவனையே வணங்கி
3.அவர்கள் நிலையை நல் சக்தியாக்கிட நாமும் வணங்கிடுவோம்.

End of the world

எப்படி வேண்டும் என்றாலும் வாழலாம்…! என்ற எண்ணத்திற்கு இன்று மனிதர்கள் வந்துவிட்டனர்

 

இன்றைய விஞ்ஞான உலகில் காலத்தால் சிறுகச் சிறுக விஷத் தன்மைகள் பரவி இந்த காற்றுத் தன்மையே நச்சுத் தன்மையாகி விட்டது. மனிதனுக்குள்ளே இது பெரும் பிரளயமாக மாறிவிட்டது.

இன்று பார்க்கின்றோம். சிறைச்சாலைகளில் எல்லாம் போலீஸ் பந்தோபஸ்து உள்ளது. இருந்தாலும் அந்தச் சிறைச்சாலைகளுக்குள் புகுந்து தன் எதிரியை மடக்கியே தீர வேண்டும்… கொன்றே தீர வேண்டும்… என்று எவ்வளவு காவல்கள் இருந்தாலும் உள்ளே சென்று அந்த மனிதனைக் கொன்று அந்த பழியைத் தீர்த்து கொள்ளும் உணர்வுகள் தான் வருகின்றது

பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் அந்தக் காவலர்களையும் தாக்கிவிட்டுத் தன் எதிரியைத் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு செயல்படும் தன்மைகள் அதிகமாக வளர்ந்துவிட்டது.

1.தான் எப்படி நல்லதாக ஆக வேண்டும் என்று சிந்தனை இல்லை
2.ஆனால் எதிரியை வீழ்த்திவிட வேண்டும் என்ற உணர்வுதான் வருகின்றது.

அதே போல் குடும்பத்தில் ஒரு வெறுப்பின் தன்மை ஆகிவிட்டால் இதனின் உணர்வை தனக்குள் வளர்த்துத் தான் எப்படியும் மடிந்தே (தற்கொலை) ஆக வேண்டுமென்று எண்ணிவிட்டால் எந்த வழியிலும் மடிந்து கொள்ளும் எண்ணங்களே வருகின்றது.

ஆக… எப்படியும் வாழலாம் என்ற நிலைகளே மனிதனின் உணர்வுக்குள் விளைந்துவிட்டது

இன்று செல்வத்தைச் சேர்த்து தன் குடும்பத்திற்குள் மகிழ்ச்சியாக இருப்போம் என்று தான் ஒவ்வொருவரும் எண்ணுகின்றோம். ஆனால் தான் வாழவேண்டும் என்றும் எப்படியாவது வாழவேண்டும் என்று உணர்வை ஏற்றுக் கொண்டவர்கள் என்ன செய்கிறார்கள்…?

1.நாம் இரவிலே தூங்கப்படும்போது… மனிதனை விட்டாலும் கூட பரவாயில்லை
2.எழுந்துவிட்டால் தன்னைப் பற்றி வெளியே சொல்லி விடுவான் என்று அடித்துக் கொலை செய்துவிட்டு
3.வீட்டிலுள்ள பொருள்களை எல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றார்கள்.

பின் நாம் உழைத்துச் சம்பாதித்த சொத்து எங்கே இருக்கின்றது…? இப்போது இதனின் வளர்ச்சிதான் அதிகமாகப் பரவியும் இன்று உருமாறிக் கொண்ட நிலைகள் இருக்கின்றது.

இதைப் போன்ற தீமைகள் விளையும் இந்த உலகில் நாம் வாழும்போது அஞ்சியே… திருடன் வந்து விடுவான்… நம்மைக் கொலை செய்துவிடுவான்…! என்ற உணர்வை அதிகமாக வளர்த்துவிட்டால் இந்த உணர்வின் தன்மை வளரப்படும்போது அதே எண்ணங்களே வருகின்றது.

அந்தத் திருடன் என்ற உணர்வு வரப்படும்போது அந்த உணர்வின் அலைகள் பட்டபின் திருட வேண்டுமென்ற எண்ணம் கொண்டு அவன் இந்த வீட்டிற்கே வருவான்.

அதாவது… யார் வரப் போகிறார்கள்…! தைரியமாக இரு… என்று இருக்கும் அந்த வீட்டிற்குச் செல்ல மாட்டான்.

அங்கே திருடுகின்றார்கள்… இங்கே திருடுகின்றார்கள் என்றும் பொருள் எல்லாம் போய்விட்டது என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்…
1.இரவில் படுக்கும்போது இந்த எண்ண அலைகளை பரப்பினால் போதும்
2.நிச்சயம் அந்த வீட்டிற்குள் திருடன் வந்துவிடுவான்.

“சரட்… என்று சத்தம் போட்டால் போதும்.. ஆ…! என்று இந்த மூச்சை விடுவார்கள். இந்த மூச்சலைகள் படரும்போது திருடனுடைய நிலைகள் என்ன…?

ஒரு கல்லைப் போடுவார்கள். அந்தக் கல்லை போட்டபின் அதனின் எதிரொலிகளைப் பார்ப்பார்கள். இரண்டாவது கல்லைப் போடுவார்கள் மூன்றாவது கல் வரப்படும்போது இந்த உணர்வுகள் அப்படியே மறைந்துவிடும்.

நமக்குச் சத்தம் கேட்கும்… ஏதோ கல் என்று…! இரண்டாவது கல்லைப் போடும்போது ஏதோ சத்தம் கேட்கும்… “சரி விடு…” என்போம். மூன்றாவது கல் வரப்படும்போது முழித்திருந்த உணர்வுகள் மாறி நன்றாகத் தூங்க வைத்துவிடும்.

இப்படி அவர்கள் எண்ணங்கள் திருட வேண்டுமென்ற எண்ணம் வரும்போது நம்மைத் தூங்க வைத்தேவிடும்.

திருடன் வருவான் என்று எவ்வளவோ உஷாராக இருப்பார்கள். இருந்தாலும் திருடன் வரும்போது நன்றாகத் தூங்கிவிடுவார்கள்.

ஏனென்றால் நம்முடைய எண்ணங்கள் அது சிறுகச் சிறுக இவ்வாறு வந்து… அந்த உணர்வின் தன்மை சோர்வடையச் செய்து… அவனுடைய எண்ணம் வலுவாகி… அவனுடைய எண்ணக் குறிகளை வைக்கும்போது அந்த உணர்வலைகளே நம்மைத் தூங்க வைத்து விடுகின்றது.

நான் எவ்வளவோ உஷாராக முழித்துக் கொண்டுதான் இருந்தேன் இருந்தேன். என்னை எப்படியோ ஏமாற்றி விட்டார்கள் என்பார்கள்.

வேறொன்றும் தேவையில்லை. இங்கே தபோவனத்தில் கூட ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு பேட்டரி லைட் அப்பொழுதுதான் புதிதாக வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது. ஃபோர்மேன் ஒருவர் இருந்தார்.

தபோவனத்தில் உள்ள வேலியெல்லாம் எடுத்துவிட்டு கல்களை ஊன்றிக் கொண்டிருந்தோம். இத்தனை நாள் வேலி இருந்தது. இன்றைக்கு இல்லை என்று சொன்னவுடன் தாராளமாக எல்லோரும் வந்து போகும் நிலை இருந்தது.

அதனால் தான் நான் (ஞானகுரு) அப்பொழுது சொன்னேன்…! முன்பு வேலியில்லாமல் இருந்தது அதைப்பற்றி யாரும் சிந்திக்கின்றதில்லை. பல பொருள்கள் உள்ளே வைத்திருப்பதனாலே இதைப் பார்த்திருப்பார்கள். வேலி இல்லை என்பதைப் பார்த்தவுடன் அந்த எண்ணம் தூண்டும்… நிச்சயம் வந்து எதாவது எடுப்பார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்றேன்.

அட…! நான் எப்பொழுது பார்த்தாலும் முழித்துக் கொண்டுதான் இருப்பேன் என்றார் அந்த ஃபோர்மேன்.

அவர் அன்று சொன்னாரோ இல்லையோ நேராக அவரிடம் இருந்த புதிய டார்ச் லைட் அவர் வைத்திருந்த தாமிர வயர் (COPPER COIL) எல்லாவற்றையும் அலுங்காமல் கொண்டு சென்று விட்டான்.

கொண்டு போகும் போது அங்கே ஒருத்தர் பார்த்திருக்கின்றார். யாரோ போகின்றார் என்று. அட நம்முடைய ஆள் தான்…! வேலியில்லை.. அதனால் ஓரத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றார் என்ற எண்ணத்தால் பேசாமல் போய்விட்டார்.

ஏனென்றால் அந்த உணர்வின் எண்ணங்கள் இப்படித்தான் இயக்குகிறது.

ஆனால் அந்தத் திருடனுடைய வலுவான நிலைகள் வரப்படும்போது எது எப்படி மாறுகின்றது…?

தபோவனம் தான்…! இருந்தாலும் அவருடைய எண்ணங்கள் இப்படி இருக்கப்படும்போது அதெல்லாம் ஒன்றும் செய்யாது என்றார் ஃபோர்மேன். ஆனால் பொருள் போய்விட்டது.

என்னா சாமி…? இந்த இடத்தில் வந்து இப்படிக் கொண்டு போய்விட்டாரே…! என்று என்னிடம் கேட்டார்.

உங்கள் எண்ணங்கள் எப்படி இருக்கின்றது…! என்ற நிலையை அவருக்கு எடுத்துக் காட்டினேன். ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்று…!

1.மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு மன பலம் கொண்டு
2.உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் சொல்கிறேன்.

உயிர் காக்கும் ஒரே மருந்து

point to point north stars

வேதனையை நுகர்ந்தால்..

அடுத்த கணமே கண்ணின் நினைவு கொண்டு
1.ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணுங்கள்
2.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா.. என்று ஏங்கி அங்கே “நிலை நிறுத்துங்கள்…”
3.கண்கள் + துருவ நட்சத்திரம் + புருவ மத்தி.. இந்த மூன்றையும் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் நிலை நிறுத்தினால்…
4.அந்த வேதனை என்ற உணர்வு உட்புகாது நின்றுவிடும்.

நாம் ஈர்க்கத் தவறிய வேதனைகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து சென்று விடும்.

நம் உடலுக்குள் போகவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் வராது… வேதனை என்ற அணுவும் நமக்குள் உருவாகாது.;; வேதனையை உருவாக்கும் அணுவின் தன்மை கருவாகவும் ஆகாது…!

ஆகவே நாம் இதைத்தான் அந்த நேரத்தில் நாம் விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது.
1.எப்போதுமே பிறருக்கு நன்மை செய்தாலும்
2.அந்த தீமைகள் நமக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும்…!

நம் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்…? என்று ஈஸ்வரபட்டர் சொன்னது

தன் உயிராத்மாவிற்கு உணவு கொடுத்த கோலமாமகரிஷி 

வியாசர் கொடுக்கும் கீதாச்சாரம் 

விஷத்தை குருவாக ஏற்றுக் கொண்ட போகரின் ஆற்றல் 

ஆத்ம சுத்தி பயிற்சி 1

ஆத்ம சுத்தி பயிற்சி 2 

முன்னோர்களை விண் கெலுத்தும் பயிற்சி தியானம் 

புருவ மத்தி தியானம் -1 (புருவ மத்தியின் இரகசியங்கள்) 

புருவ மத்தி வழி குரு வழி துருவ நட்சத்திரத்தை அணுகும் தியானப் பயிற்சி

சப்தரிஷி மண்டலம் இங்கிருந்து பார்த்தால் கேள்விக்குறி போன்று தெரிவதன் காரணம் என்ன…?

உபதேசத்தைப் பதிவாக்க வேண்டியதன் அவசியம்

முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை

“அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உருவான மரபணுவை” நாம் எல்லோரும் பெற வேண்டும்

வசியம்.. கைவல்யம்… ஏவல்…!

 

 

Sages powers

வசியம்.. கைவல்யம்… ஏவல்…!

குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.அந்த மகரிஷிகளின் உணர்வின் உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்கின்றோம்
2.அந்த உணர்வின் ஏக்கத்தைப் பெருகச் செய்கின்றோம்
3.மகரிஷிகளின் பால் உங்கள் நினைவாற்றலைப் பெருகச் செய்கின்றோம்
4.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் ஆழப் பதிவு செய்கின்றோம்

ஆலயங்களில் இந்தத் தெய்வம் உங்களுக்கு நல்லதைச் செய்யும் என்ற நிலையில் அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் யாக வேள்விகளைச் செய்யச் செய்து உங்களை வசியப்படுத்துகின்றனர்.

கோவில்களிலே வசியப்படுத்துவது போன்று… குருநாதர் என்னை வசியப்படுத்தியது போன்று…
1.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நீங்கள் பெற வேண்டுமென்று
.உங்கள் உணர்வை அதிலே வசியப்படுத்தச் செய்கின்றேன்.

இந்த வசியத்தைக் கண்டுணர்ந்தபின்… உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் “கைவல்யப்படுத்த முடியும்…”

இதனின் துணை கொண்டு எண்ணத்தால் மகரிஷிகளின் உணர்வைப் பிறர்பால் பாய்ச்சி அவர்களுடைய தீமைகள் வராமல் தடுத்தால் அது “ஏவல்…”
1.அந்தத் தீமைகள் அகல வேண்டும் என்ற நினைவால்
2.உங்கள் உணர்வின் தன்மை அங்கே தீமைகளை அகற்ற முடியும்…
3.உங்களை நீங்கள் நம்புங்கள்.

ஆகவே… அருள் ஞானிகள் காட்டிய பாதையில் நாம் செல்வோம். அருள் ஞானிகள் காட்டிய உணர்வில் அந்த முழுமை அடைவோம்.

உயிரால்… உணர்வால் நாம் அறிந்திடும் நிலையும்… இருளைப் போக்கிடும் உணர்வின் ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம். இருளைப் போக்கி ஒளி காணும் தன்மையாக உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்.

நாம் நுகரும் உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு “உணர்வை இன்னது தான்…” என்று அறியும் ஆற்றலைக் கொடுத்த அந்த நிலையில் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு… இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக நாம் பெற முடியும்.

நம்மை ஆண்டு கொண்டிருப்பது நம் உயிர் தான். நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றோமோ அதை வைத்துத் தான் உயிர் நம்மை ஆட்சிப் புரிகின்றது.

ஆகவே நமது குருநாதர் காட்டிய நிலைகள் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து… நீங்கள் வசியமாக்கிக் கொண்டு இந்த உணர்வின் தன்மை நீங்கள் அதை கவர்ந்துணர்ந்தால் அதை வைத்து மீண்டும் அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் கைவல்யப்படுத்த முடியும்.

உங்கள் மூச்சால் பேச்சால் உங்களுக்குள் வரும் தீமைகளை ஏவல் செய்து மீட்டிட முடியும். பிறருக்குள் உங்கள் சொல்லை அங்கே ஏவல்படுத்தித் தீமைகளை ஒழித்திட முடியும்.

நமக்குள் விளைந்த இந்த உணர்வின் தன்மைகளைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால் விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளையும் மந்திரத்தால் உருவான தீமைகளையும் அகற்றச் செய்ய முடியும்.

அந்த மெய் ஞான உணர்வு கொண்டு நாம் அனைவரும் கூட்டமைப்பாக இந்த ஒளி அலைகளைப் பரப்பப்படும்போது தீமைகளை விளைவிக்கும் நிலைகளைப் பிளக்கவும் முடியும்.

அந்த ஆற்றல் பெற வேண்டும் என்றால் உங்கள் மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும். விண் செலுத்தி விட்டால்…
1.விண் சென்ற அவர்கள் உணர்வை எளிதில் பெற்று
2.அவர்களின் துணை கொண்டு அந்த அருள் ஞானியின் உணர்வை எளிதில் பெற முடியும்.
3.நம்மை அறியாது வந்த தீமைகளைச் சுட்டு பொசுக்க முடியும்.

உண்மையான தியானம் இது தான்…!

ஆகையினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை கவரும் நிலைக்கே உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதை வசியப்படுத்தச் செய்கின்றோம்.

அதாவது இந்த உபதேசத்தை உற்றுக் கேட்ட உணர்வுகள் அந்த ஞானிகள் உணர்வின் தன்மை பதிவான பின்பு வசியம்…!

இந்த உணர்வின் தன்மை கூடும் போது அந்த ஞானிகள் உணர்வைக் கைவல்யப்படுத்த முடியும். அதே சமயத்தில் நாம் எல்லோரும் ஒன்றாக அதைச் சேர்க்கும்போது அது கைவல்யம். ஒவ்வொருவரும் தனக்குள் அந்த சக்தியைச் சேர்த்திட முடியும்.

பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு
1.யாரைப் பார்த்தாலும் “தீமைகள் அகன்றுவிடும்” என்று
2.உங்கள் சொல்லால் இந்த உணர்வின் தன்மை ஏவல் படுத்தும்போது
3.அங்கே இருக்கக்கூடிய தீமைகள் ஒடுங்கும்.

ஒரு தேரை பல ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்து அதை எல்லை சேர்ப்பது போல நாம் அனைவரும் சேர்ந்து அந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து இயக்கினோம் என்றால்
1.நமக்கு முன் படர்ந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை
2.அவரவர்கள் எண்ணி ஏங்கி எடுக்கும் அந்தப் பங்கின் விகிதாச்சாரப்படி உங்கள் ஆன்மாவில் கலக்கும்.
3.இப்படி இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வரும்போது தான் கைவல்யம் ஆகும்.

முதலில் வசியப்படுத்தும் நிலைக்கு உங்களைத் தயார் செய்தது இந்த உபதேசம். பின் அதனின் உணர்வின் தன்மை ஏங்கப்படும்போது கைவல்யம். உங்களுக்குள் அந்தச் சக்தியின் தன்மை பெருகும்.

பின் தீமைகளை அகற்றும் உணர்வின் தன்மையாக கொண்டு நினைவால்… சொல்லால்… ஏவல் செய்ய முடியும் தீமைகளை அகற்ற முடியும். உங்களை நம்புங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைக்கப்படும் பொழுது அந்த நஞ்சினை ஒளியாக மாற்றி அறிவின் ஞானமாகவும் இந்த மனித வாழ்க்கையில் இருளை வென்றிடும் உணர்வும் அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றும் வலிமையும் நமக்குக் கிடைக்கின்றது.

அதைப் பெறச் செய்வதற்காகத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஆகவே மறவாதீர்கள். உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.

இந்த உடல் உங்களது அல்ல. உயிரால் தான் உருவாக்கப்பட்டது.

அறிவால் உணரப்பட்ட உணர்வின் தன்மை “தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் விளையும் தீமைகளை நாம் அகற்றக் கற்றுக் கொண்டால் நம்மை இயக்கிய நம்மை உருவாக்கிய உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலைகளை அடையலாம்.

யாம் உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் நிலைகளை நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதைப் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 148

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

அருள் ஒளி பெற வேண்டும். என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். உடல் நலம் பெற வேண்டும். எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும். என் தொழில் நலம் பெற வேண்டும். என் பையன் நல்லவனாக வேண்டும் என்று கேளுங்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களுக்கு இந்த நிலை வேண்டும் என்று தான் நான் கேட்கச் சொல்கிறேன்.

எத்தனை பேர் இப்படிக் கேட்கிறீர்கள்…!

இவ்வளவு தூரம் நான் சொல்கிறேன். இருந்தாலும் இப்பொழுது தான் உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். “நீங்கள் பெரிய மகான்…” என்று சொல்லி “என் கஷ்டம் இப்படி இருக்கிறது…!” என்று சொல்லி உடனே அழுக ஆரம்பித்துவிடுகிறார்கள்.

நான் சொன்னதை எல்லாம் மறந்துவிடுகின்றார்கள். அவர்களுக்குள் எது பதிவானதோ அந்த உணர்வு தான் வேலை செய்கிறது.

யாம் சொல்லும் உயர்ந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அவர்கள் பெறும் தகுதியை அவர்கள் உடலுக்குள் இருக்கும் உணர்வே தடைபடுத்துகின்றது என்று உணர்கிறார்கள். உணர்ந்தாலும் அதை அறிய முடிவதில்லை.

ஒரு இடத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்றால் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். இன்னும் கொஞ்சம் இருக்கிறது அதையும் தூய்மையாக்கிப் பழக வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை பெற்று உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது ஒவ்வொரு நொடியிலும் விழித்திருத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 147

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

மெய் ஞானிகளைப் பற்றி யாம் உபதேசிக்கின்றோம். மகரிஷிகள் தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டி உங்களை மேல் நோக்கிச் சுவாசிக்க வைக்கின்றது.

அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது கிடைக்கவேண்டும் என்று பெருமூச்சாக அமைந்து அந்த ஆற்றல் கிடைக்கின்றது.

சிலர் அடி பணியும் நிலைகள் கொண்டு கீழ் நோக்கி எண்ணிச் சுவாசிக்கின்றார்கள். மேல் நோக்கி எண்ணி எடுப்பதற்கு பதில் கீழ் நோக்கி எடுக்கும் பொழுது சாதாரண மனிதருடைய உணர்வைத்தான் பெற முடியும்.

ஏனென்றால் நாம் பெறவேண்டிய ஆற்றல் விண்ணிலே இருக்கின்றது. விண்ணின் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்களும் அதே வழியில் எண்ணினால் அந்தச் சக்திகளைப் பெறுவது எளிதாக இருக்கும்.

சாதாரண வாழ்க்கையில் பெரியவர்களுக்குப் பாத பூஜையும் பாத நமஸ்காரமும் கும்ப அபிஷேகமும் செய்து அடிபணிந்தே பழகிவிட்டோம்.

நமக்குள் வரும் இந்த ஆசை நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் நிலைகளுக்கே அழைத்துச் செல்லும். இந்த உயர்வு நமக்குத் தேவை இல்லை. உயர்ந்த எண்ணங்கள் தான் நமக்குத் தேவை. நாம் எந்த உயர்ந்த உணர்வின் தன்மையைப் பெறவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு வருகின்றமோ அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் தூண்ட வேண்டும்.

பிறரைப் போற்றிப் புகழ்ந்து பேசித் துதிக்க வேண்டும். அப்படியெல்லாம் போற்றினால் தான் நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நம் எண்ணங்கள் செல்லக்கூடாது.

மெய் ஒளி பெறும் உயர்வான எண்ணங்களை எடுத்து எடுத்து எடுத்து நம் உடலுக்குள் தீமையான உணர்வுகளையும் தீய வினைகளையும் (அவைகளை) அடிபணியச் செய்ய வைக்க வேண்டும். இது நம் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 146

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று அவர் அருளை நீங்களும் பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான  அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிப் பெறுங்கள்.

கண்களைத் திறந்தே தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கவும்.

இப்பொழுது நமது குரு அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குக் காட்சியாகவும் கிடைக்கலாம்.

கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கும் பொழுது குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை நீங்கள் உணர முடியும். காட்சியாகவும் பார்க்க முடியும்.

நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது உங்கள் சுவாசித்திற்குள் வரும். உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் நல்ல உணர்ச்சிகள்  உருவாகும்.

உங்கள் இரத்த நாளங்களில் அந்த அரும்பெரும் சக்தி உடல் முழுவதும் அது சுழன்று வரும் அந்த உணர்ச்சிகள் உங்களில் தோன்றும்.

உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியான அந்த அரும்பெரும் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைப் பதிவாக்கி அந்த நினைவுடன் இவ்வாறு ஏங்கித் தியானித்து வரும் பொழுது உங்கள் ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் ஒளிகள் பெருகத் தொடங்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 145

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மிளகாயை மாவிலே போட்டுச் சுட்டால் “வடை” ஒரு பதத்தில் ருசியாக இருக்கும். அதே மாவில் மிளகாய்க்குப் பதில் இனிப்பைப் போட்டு ஊற்றினால் “பனியாரம்” அது ஒரு பக்குவமாக ருசியாக இருக்கும்.

இதே மாதிரித் தான் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை எதிலே கொண்டு போய் இணைத்தாலும் அதைச் சுவையாக ஆக்கி அந்த உணர்வாக இயக்க வேண்டும்.

வாழ்க்கையில் எந்தெந்த குணங்கள் உங்களை இயக்கினாலும் அந்த நேரம் ஞானிகளின் உணர்ச்சியை உங்களிடம் தூண்டச் செய்து அந்த உணர்வை உங்களுடன் இணைக்கப்படும் போது சந்தர்ப்பத்தால் வந்த தீமையான குணங்களை அடக்கும் சக்தியாக உங்களுக்குள் வளரும்.

அதற்குத்தான் இந்த விரிவுரைகளைக் கொடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று இணைத்து இணைத்து அந்த உணர்வின் அணுக்களாக விளையச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் பள்ளிக்கூடத்தில் படிக்கப்போகும் போது ஒரு விஞ்ஞான அறிவோ அல்லது டெக்னிக்கலோ இதைச் சொல்லும் போது அது திரும்பத் திரும்பச் சொல்லி இது இதனுடன் சேர்க்கப்படும் போது இவ்வாறு ஆகும் என்பார்கள்.

ஒவ்வொரு பாட நிலைகளையும் கொடுக்கும் பொழுது செயின் (CHAIN) தொடர் போல ஒவ்வொன்றையும் இணைத்தே தான் சொல்வார்கள்.

இங்கே இயக்கப்படும் போது இதனுடைய சுழற்சி இப்படி வருகின்றது. இந்த இயக்கத்தின் நிலைகள் இது தடைப்பட்டால் மாற்றங்கள் இப்படி ஆகும் என்கின்ற வகையில் அந்தக் குறிப்பைப் பதிவு செய்து கொடுப்பார்கள்.

அதன் பின் தான் நாம் ஒரு இயந்திரத்தையோ அல்லது ஒரு செயலையோ முழுமையாக இயக்க முடிகின்றது.

இயக்கத்தை மட்டும் சொல்லிக் கொண்டே போனாலும் இரண்டாவது அதைச் செயலாக்கப்படும் போது இதில் இன்னென்ன பிழைகள் என்ன வரும் என்று இதைச் சொல்லாதபடி இயக்கத்தைப் பற்றிச் சொன்னால் தெரியாது… அறியும் ஆற்றல் வராது.

அந்த மாதிரிப் பயனற்றுப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் மறந்தாலும் அந்த மகரிஷிகளின் உணர்வை நினைவுபடுத்தி  உங்களை மீண்டும் மீண்டும் எண்ணி எடுக்கும்படி செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 144

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் தியானம் செய்தேன். என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என் குடும்பத்தில் இப்படி நடந்து விட்டது…! என்றால் என்ன அர்த்தம்…?

இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகின்றீர்கள் என்று அர்த்தம்.

“வேதனை…” என்ற உணர்வைப் பெருக்கி எல்லாவற்றையும் செய்துவிட்டு “தியானம் செய்தால்… என்னத்திற்கு ஆகும்…?” என்று எண்ணினால் அது நமக்கல்ல.

தியானத்தைக் கூட்டி எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அந்த உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் சங்கடங்களையோ சிரமங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளை உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

கணவன் மனைவிக்குள் அந்தப் பேரானந்த நிலையை தான் என்றும் உருவாக வேண்டும். சந்தர்ப்பத்தில் கோபம் வரும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஏதோ ஒன்றல்லவா… “நம்மை இயக்குகின்றது..!” என்று உடனே சுதாரித்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து ஆத்ம சுத்தி செய்யும் உணர்வு வந்து விட்டது என்றால் “நான் செய்வது தான் ரைட்…!” என்ற எண்ணம் வராது.

பால் ருசியாகத் தான் இருக்கும். அதிலே பாதாமைப் போட்டால் இன்னும் ருசியாகத் தான் இருக்கும்.

ஆனால் ஒரு துளி காரம் பட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சிகளைத் தான் ஊட்டும். அதைப் போன்று தான் நம் நல்ல மனதில் வெறுப்பின் உணர்வை ஊட்டினால் அது விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரோளி பெற வேண்டும் அதைத் தணித்து சுவையைக் கொண்டு வர வேண்டும்.

நாம் கடைசியில் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நமது உயிர் உருவாக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 143

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு புலனறிவுகள் ஐந்திலும் கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.

நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம்.

இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.

அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது.

அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெறவேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுதுதான் நீங்கள் அந்த நிலைகளைக் கேட்க முடியும். “கேட்க வேண்டும்” என்ற விருப்ப நிலைகள் வரப்படும் பொழுதுதான் இது உங்களுக்குள் பதிவாகின்றது.

யாம் குருநாதர் மூலம் “அதைத் தெரிந்து கொண்டோம்… இதை அறிந்து கொண்டோம்…” என்று சொல்ல வரவில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 142

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உங்கள் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு துன்ப நிலைகளிலிருந்தும் உங்களை மீட்கச் செய்வதற்கே இந்த உபதேசம். மெய் ஒளியை வளர்த்து தீமைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளுங்கள்.

இந்த மெய் உணர்வுகளைக் கேட்டு வளர்த்துக் கொண்டவர்கள் உங்கள் ஊர்களில் உள்ள மற்றவர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி அவர்களையும் மீட்கச் செய்ய வேண்டும்.

ஞானிகளின் ஆற்றலைப் பெறும் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அவர்கள் அறியாது வந்த இருளை நீக்கும் நிலைகளை நாம் பெறச் செய்ய வேண்டும்.

நாம் வாழும் ஒவ்வொரு இடங்களிலும் ஞானிகளின் உணர்வுகளை நம் மூச்சலைகள் மூலமாக அதைப் படரச் செய்ய வேண்டும்.

அப்படிப் படர்ந்தால் தான் நச்சுத் தன்மைகளிலிருந்து மனிதன் ஒவ்வொரு மனிதரும் விடுபடும் நிலைகளைப் பெருகச் செய்ய முடியும்.

கடல் பெரிதாக இருக்கின்றது. அதில் எது கலந்தாலும் கடைசியில் “உப்பு நீராக” மாற்றிவிடுகின்றது. அதாவது நல்ல தண்ணீரோ அசுத்த நீரோ சாக்கடைத் தண்ணீரோ எதுவாக இருந்தாலும் அந்தக் கடலுக்குள் சேர்ந்த பின் உப்பின் நிலைக்கே அதை மாற்றி விடுகின்றது.

இதை போல தான் நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வுகளும் அந்த மெய் உணர்வின் கடலிலே ஒளிக்கடலான அந்த ஞானிகளின் உணர்வுடன் தான் சங்கமமாக வேண்டும்.

வாழ்க்கையில் வரக்கூடிய அசுத்தங்களோ தவறான நிலைகளைக் கேட்டுணரந்தாலோ உலகில் எங்கெங்கோ நடக்கும் தவறுகளைக் கேட்டு நுகர்ந்தாலோ அதைப் பார்த்தாலோ அதைப் பற்றிப் பேசுவதைக் கேட்டாலோ இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் போய் நம் உடல் என்ற பெரும் கடலுக்குள் உப்பாக மாற்றி அதனின் (தீமையின்) செயலுக்கே நம்மை மாற்றிவிடுகிறது.

ஆனால் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நாம் அனைவரும் சேர்ந்து மீண்டும் மீண்டும் குவியலாகக் கவரப்படும் பொழுது நமக்குள் அது பெருகி நம்மை ஞானியாக மாற்றி மெய் ஒளிக்குள் – மகரிஷிகளின் அருள் வட்டமான அந்த எல்லைக்குள் நம்மை அழைத்துச் சென்று விடும்.

அந்தப் பெரும் கடலான ஒளிக் கடலில் கலக்கும் நிலையை நாம் இன்றிலிருந்தே இப்பொழுதிலிருந்தே செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 141

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம். தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.

பாம்பு எப்படித் அதனை நாம் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ அது போன்றே “சாந்த மனம் கொண்டவன் கூட..,” அவனுக்கு முன் எதிரிகள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.

தீமை செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர் “சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” என்ற நிலைகளில் சாந்த உணர்வு கொண்டோர் இத்தகையை தீமைகளைக் கண்டால் வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை இன்று வந்துவிட்டது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.

அதிலிருந்து மீண்டிடும் நிலையாக குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அருள் ஞானிகள் கண்ட மெய் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைக் கவரும் நிலையாக உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தச் செய்து அந்தப் பேரருள் உணர்வினை ஈர்க்கும்படிச் செய்கின்றோம்.

வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று இன்றைய விஞ்ஞான உலகில் காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து நல்லதை நுகரப் பழக வேண்டும்.

சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்வோம். நம்மை அறியாது வரும் இருளைப் போக்குவோம். மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுவோம்.

அந்த மெய்ஞானிகளின் தொடர்பு கொண்டு முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம்.

முன்னோர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அவர்கள் வெளி வரும் பொழுது இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களையும் நாம் விண் செலுத்துவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 140

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை வென்று இன்றும் ஒளியின் சுடராக நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றித் தொடர்ந்து சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

சப்தரிஷி மண்டலம் பூமியின் துருவப் பகுதியில் நின்று அந்தத் துருவப் பகுதியிலேயே இந்தச் சுழற்சியின் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்தை எடுத்துக் கொண்டால் துருவத்தினை மையமாகக் கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் தான் சுழன்று வரும்.

அது ஒரு வட்டமாக அமைந்திருக்கும்.

நம் பூமியில் மனிதனாக வாழ்ந்தவர்கள் ஒளியின் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து அதனின் உணர்வின் சத்தை இங்கே பரப்பிக் கொண்டுள்ளார்கள்.

அதை எடுத்துப் பழகியவர்கள் வெளிப்படுத்திய நிலைகள் பல உண்டு. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றவர்.

அதிலே கருவாகி உருவாக்கிய அணுவின் வித்தாக உருவான அந்த நிலையைத்தான் எமக்குள் பதிவு செய்து அதை நுகரும்படி செய்தார்.

நுகர்ந்த அந்த உணர்வின் சத்தைத்தான் இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய்ஞானிகள் உணர்வை நீங்கள் வளர்த்து அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால் உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 139

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

மனித இனத்தையே கூண்டோடு அழிக்கும் உணர்வுகள் மனிதனுக்குள் விளைந்து விளைந்து… வெளிப்படுத்தப்பட்ட அத்தகைய உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்று இந்தக் காற்று மண்டலமே நஞ்சு கொண்ட “சாக்கடையாக” மாறிவிட்டது.

அதே சமயத்தில் இந்தச் சாக்கடைக்குள் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மெய் ஞானிகளின் தீமைகளை நீக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அரும் பெரும் சக்திகளும் இங்கே நமக்கு முன் மறைந்திருக்கின்றது.

மறைந்த அந்த அருள் ஞானியின் உணர்வைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து இந்தச் சாக்கடையான உலகில் இந்தச் சாக்கடையான வாழ்க்கையைப் பிளந்து உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக வாழும் அழியா ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெறமுடியும்.

இதற்கென்ற “விதி…” எதுவும் இல்லை….!

இளம் பிள்ளை என்றோ… முதுமையானவர்கள் என்றோ… அறிந்தவன் என்றோ… அறியாதவன் என்றோ… எதுவும் இல்லை…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 138

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித உடலுக்குப் பின் அடுத்து நம்முடைய எல்லை எது? என்று ஒரு முடிவிற்கு ஒவ்வொருவரும் வர வேண்டும். ஏனென்றால் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

இந்த வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய தீமையாக இருந்தாலும் உடனுக்குடனே இது மாற்ற வேண்டும்.

மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

கெட்டதைப் பார்க்கின்றோம். அதைத் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அந்தத் தீமையான உணர்வு நமக்குள் பதிந்து விடக்கூடாது.

கெட்டது விளையாமல் தடுப்பதற்குத்தான் உங்களுக்கு சக்தி கொடுக்கின்றோம். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

வெளியிலிருந்து உள்ளுக்குள் புகும் தீமைகளை “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி அதை இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.

ஏனென்றால் முதலில் சிறிதளவு உள்ளே போயிருந்தாலும் அதற்குண்டான அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது. அந்தக் கருவின் தன்மை அணுவின் தன்மை அடைவதற்கு முன்னாடி அந்தக் கருவிற்குள்ளேயே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்து விட வேண்டும்.

எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று இந்த அலைகளைப் பரப்பப்போகும் போது இது வலுவாகின்றது.

தீமையைத் தள்ளி விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 137

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக – சகஜ வாழ்க்கையில் நாம் கடுமையாக வேலை செய்கிறோம். முடித்த பின்… கையிலே பட்ட அழுக்கைக் கழுவாமல் நாம் உணவு உட்கொள்ளப் போவதில்லை.

நாம் குளிக்காமல் அப்படியே படுக்கப் போவதில்லை. துணியில் படிந்த அழுக்கைத் துவைக்காமல் மீண்டும் நாம் உடுத்தப் போவதில்லை.

இதைப் போல தான் நம் வாழ்க்கையில் நல்லதை நாடிச் சென்றாலும் ஒவ்வொரு நிமிடத்திலும் பிறர் படும் தீமைகளைக் கேட்டால் நம் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைக்க வேண்டும் அல்லவா…!

கடவுளா வந்து தூய்மைப்படுத்துவார்…? இல்லை.

உடல் அழுக்கையும் துணி அழுக்கையும் நாம் சோப்பைப் (SOAP) போட்டுத் தூய்மைப்படுத்துவது போல் மகரிஷிகள் அருள் சக்தியின் துணை கொண்டு ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்குதல் வேண்டும்.

கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் “ஈஸ்வரா…” என்று நினைவை மேல் நோக்கி விண்ணிலே செலுத்துதல் வேண்டும்.

பின் கவர்ந்த மகரிஷிகளின் உணர்வுகளை உள்முகமாகக் கொண்டு வந்து உடலுக்குள் செலுத்தித் தூய்மைப்படுத்த வேண்டும்.

அடுத்து நாம் நல்லதைச் சிந்திக்க இது இடம் கொடுக்கும். செய்து பாருங்கள்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 136

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முதுமை என்பது வயதால் வருவது அல்ல. அறுபது வயது…, எழுபது வயது… நான் முதுமை அடைந்து விட்டேன்..! என்று வெறும் வருடத்தால் கணக்கிட்டுச் சொல்வதல்ல…!

ஒரு தானியம் விளைந்தாலும் அதனின் முதிர்ச்சியின் தன்மையில் தன் இனத்தை உருவாக்கும் வித்தின் தன்மையாக அடைந்து அது மீண்டும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக வளர்க்கச் செய்யும் போது தான் அது முதுமை அடைந்தது (முதிர்ந்த வித்து) என்று சொல்ல முடியும்.

அதைப் போன்று தான் ஒரு உயிரின் தன்மை மனித உடலாக உருப் பெற்ற பின் அறிந்திடும் உணர்வு கொண்ட ஒளியின் சரீரம் பெற்ற மெய் ஞானியின் உணர்வைச் சேர்த்து உடலை முதுமையாக்கிவிட்டு உணர்வின் தன்மையை – நம்மை என்றும் இளமையாக்கும் நிலைக்கு வளர வேண்டும். (உடல் அழியக்கூடியது உயிர் என்றுமே அழியாதது)

இப்படி ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.

நாம் இளமை பெற்று அது உடலிலே முதுமை பெறும்போது தான் (உடலுக்குள் விளைந்தது) ”முதுமையின் வித்தாக…! உருபெற்ற உணர்வின் அறிவாக… அது உயிருடன் ஒன்றிய நிலை கொண்டு, அடுத்த அறிவின் ஞானச் சுடராக கனியின் வித்தாக (உணர்வாக) ஞானத்தை வளர்க்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 135

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

மரணமடையும் தருவாயில் பார்க்கலாம். நாம் என்னவெல்லாம் எண்ணுகின்றோம்…!

“எனக்குத் துரோகம் செய்தான்… பாவி…,!” என்று எண்ணத்தில் பிரிந்து சென்றால் “நேராக…பாவி…” என்று சொன்ன உடலுக்குள் உயிராத்மா போகும்.

அதே சமயத்தில் “மகராசன்..,” எனக்கு நல்ல நேரத்தில் உதவி செய்தான் என்று எண்ணினால் யார் உதவி செய்தாரோ அவர் உடலுக்குள் உயிராத்மா போகும்.

எல்லோருக்கும் எல்லா வகையில் நான் உதவி செய்தேன் பல நன்மைகள் செய்தேன் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று விரக்தியான நிலையில் சோர்வடைந்தால் இதைப் போல சோர்வடைந்த உயிரான்மா நமக்குள் வரும்.

அல்லது அந்த விரக்தியான எண்ணத்துடன் நம் உயிராத்மா பிரிந்தால் சோர்வடைந்த ஒரு மனிதனுக்குள் செல்லும்.

ஒரு வேப்ப மரம் கசப்பான உணர்வுகளை வெளிப்பரப்பித் தன் கசப்பின் தன்மை எப்படி எடுத்துக் கொள்கின்றது. அதைப் போன்று தான் இந்த உடலுக்குள் எந்தக் குணத்தின் தன்மையை நமக்குள் சிருஷ்டித்து முன்னனியில் வைத்திருக்கின்றோமோ அந்த முன்னனியில் வைத்திருக்கும் குணத்திற்குத்தக்க தான் அடுத்த உடலுக்குள் உயிராத்மா போகும்.

ஆனால் இன்னொரு மனிதனின் உடலுக்குள் போனால் ஏற்கனவே இந்த உடலில் எந்தத் தீமைகள் விளைந்ததோ அதைத்தான் அங்கே விளைவிக்க முடியும். தீமைகள் தான் அங்கே கருவாக உருவாக முடியும்.

தீமையை உருவாக்கும் அந்த அசுத்த சக்தியின் நிலைகளை “ஞானிகள் உணர்வு கொண்டு…” அதைத் தடைப்படுத்தினால் தான் இன்னொரு கருவின் தன்மை அது விளையும்.

அது அல்லாதபடி இங்கே விளைந்த தன்மைகள் அது வந்தால் இந்த உணர்வின் நினைவலையாக பல தீய விளைவுகளையே அது ஏற்படுத்தும்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபடுவதற்காக அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் அடிக்கடி சுவாசித்து அதை உடலுக்குள் சேர்த்து நம்மைப் பரிசுத்தப்படுத்தப் பழக வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ கோடி மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்களுடைய உணர்வலைகள் எத்தனையோ உண்டு. அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்காகத்தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 134

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் பிரபஞ்சமே கார்த்திகை நட்சத்திரம் அசுவினி போன்ற ஐந்தாறு நட்சத்திரங்கள் தனித் தன்மை கொண்டு தனக்கென்று ஒரு பிரபஞ்சமாகப் பிரிந்து செல்லும் நிலைக்கு வந்துவிட்டது.

அதனால் இங்கே நாம் மனிதர்கள் வாழத் தேவையான சிந்தனைக்குரிய நிலைகள் அழிந்து கொண்டும் தெரிந்து செயல்படும் நிலைகள் மாறிக் கொண்டிருக்கின்றது.

இன்று விஞ்ஞான அறிவால் இருள் சூழ்ந்த நிலைகளாக மாறி நம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலையாகி நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் உணர்வாக விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது.

ஒரு குடி போதையில் உள்ளவர்களை நீங்கள் என்ன தான் எடுத்துச் சொன்னாலும் அது தான் அவர்களுக்கு ரசனையாக இருக்கும்.

இதைப்போல விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த பல பல கருவிகளையும் உபகரணங்களையும் உபயோகப்படுத்திப் பழகிவிட்டோம். அது இல்லை என்றால் இன்றைய சூழலில் நம்மால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது.

உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருந்தாலும் மைக் இல்லாமல் பேசினால் அடுத்த நிமிடம் இங்கு யாரும் அமர்ந்து இருக்க மாட்டார்கள்.

இந்த மைக்கின் மூலம் விஞ்ஞான அறிவில் பலரைக் கேட்டு அறியச் செய்கின்றோம். டி.வி. ரேடியோ ஸ்டேஷன் மூலம் அந்த அலைகளைப் பரப்பினால் உலகம் முழுவதற்கும் அறியும் தன்மை வருகின்றது.

விஞ்ஞான அறிவால் எங்கிருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள முடிகின்றது. எங்கேயோ விளையாடும் விளையாட்டினை வீட்டில் அமர்ந்தபடியே பார்க்கின்றோம்.

இது எல்லாம் இல்லை என்றால் நாம் இல்லை என்ற அளவுக்கு நாம் அதிலே அடிமையாகி விட்டோம்.  இதிலிருந்து விடுபட வேண்டுமா என்று சற்று சிந்தியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 133

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உண்மைகள் எவ்வாறு இயங்குகின்றது என்று அறிந்து கொள்வதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைக் கொடுத்தார்.

மேலும், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் எப்பகுதியில் எந்தெந்த இடங்களில் அவன் உணர்வுகளும் மூச்சலைகளும் பதிவாகியுள்ளதோ அங்கெல்லாம் குருநாதர் அழைத்துச் சென்றார்.

அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின் பேருண்மைகளை அறியச் செய்தார். அவர் காட்டிய வழியில் உண்மைகளை அறிய முடிந்தது, உணரவும் முடிந்தது.

அறிந்து கொண்ட பின் எனக்குள் மட்டும் வளர்ந்தால் போதுமா..,? “நீங்களும்.., அதைப் பெறவேண்டும் அல்லவா”.

ஆகவே, “எல்லோரையும்.., அதைப் பெறச் செய்..,” என்றார் குருநாதர்.

ஆனால். நீ சுயநலம் கொண்டு நான் வளர்த்துக் கொண்டேன்.., “நான் பெரிய மகான்” நான் அதைச் செய்வேன்.., இதைச் செய்வேன்.., என்று உனது பெருமையைக் காட்டினால் உனக்குச் சிறுமையே வரும்.

ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி “அவர்களை உயர்த்தும்படி..,” நீ இதைப் பெறச் செய்தால் நீ உயர்கின்றாய்.., அவர்களை உயர்த்துகின்றாய். அந்த உயர்ந்த நிலைகளை நீ நுகர்கின்றாய்.

அவர்களும் உயர்கின்றனர்.., அப்பொழுது நீயும் உயர்கின்றாய்.., ஆக, இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கின்றேன்.

நீ இத்தனையும் கற்றுணர்ந்தபின் எல்லாம் செய்த பின்.., “நான் தான் இதையெல்லாம் செய்தேன்..,” என்ற “அகம்” எப்பொழுது உனக்குத் தோன்றுகின்றதோ அப்பொழுது உண்மையை அறியும் தன்மையினை இழக்கின்றாய்.

ஆக, “ஒருவர் உயர வேண்டும்” என்ற உணர்வினை எப்பொழுது நீ ஊட்டுகின்றாயோ “அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும்” என்று ஆசைப்படுகின்றாயோ அவர்களைக் கேட்க வைக்கின்றாயோ அந்த அருள் ஞானத்தை உருவாக்குகின்றாயோ உருவான அந்த உணர்வு “உன்னை.., வலுவாக்கும்”.

அதே சமயத்தில் உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களையும் காக்கும் நிலை வருகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 132

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆறாவது அறிவின் துணை கொண்டு நமக்குள் நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் நிலையாகத்தான் இந்த நிலையைத் தெளிவுற எடுத்து உணர்த்தினார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதி என்றார். அவர்கள் உடலை ஆலயமாக மதி என்றார். அந்த ஆலயங்களில் அமைந்துள்ள உயர்ந்த குணங்கள் அனைத்தும் மனிதனாக உருவாக்க உதவிய அந்த நற்குணங்களைத் தெய்வமாக மதி என்றார்.

ஒவ்வொரு மனிதனையும் தீமைகளிலிருந்து அகற்றிடவும் மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும் மனித நிலையிலிருந்து விடுபட்டு ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக நிலைத்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “நீ பிரார்த்தனை செய்” என்றார்.

உனக்குக் கிடைக்க வேண்டும் என்று எதை நான் பிரார்த்தித்தேனோ எதை உபதேசித்தேனோ அதை நீ எவ்வாறு கூர்ந்து கவனித்தாயோ இந்த உணர்வுகள் உனக்குள் பதிவாகின்றது

அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது நான் கூறிய உணர்வும் நான் உணர்த்திய உணர்வும் நீ பெறும் தகுதியைப் பெறுகின்றாய்.

“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்”.

பிறருடைய தீமைகளை அகற்றி அதன் வழியில் மெய்வழி பெறவேண்டும் என்று ஏங்கி அதனை நீ ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு என்றார்.

நான் உனக்குக் காட்டிய அருள் வழிப்படி அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பருக நீ எண்ணு.

“எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற ஏக்க உணர்வுடன் நீ பெறுவாய் என்றால் எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது. அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியினைப் பெறுகின்றாய். அது உனக்குள் விளைந்து உன் சொல்லைக் கேட்போர் உடலுக்குள்ளும் விளையும்.

அவ்வாறு விளையச் செய்ய அந்த மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை ஆழப் பதியச் செய் என்றார். அவர்களை மீண்டும் நினைவு கொள்ளும்படிச் செய்.

அவர்கள் நினைவு கொள்ளும் பொழுது அவர்களும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றனர்.

அவர்கள் அறியாது சேர்ந்த தீமைகளிலிருந்து விடுபட நீ கண்டறிந்த உபாயத்தை உனக்கு உணர்த்திய இந்த உணர்வை உணர்த்திய வழியில் நீ கண்டறிந்த அறிவினை எல்லா மக்களுக்கும் உபதேசி என்றார்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படித்தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 131

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளைப் பற்றியும் மெய் ஞானிகளைப் பற்றியும் அவர்கள் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நாம் படிக்கவில்லை…! ஒன்றும் தெரியவில்லை…! ஆனால் சாமி (ஞானகுரு) சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்றோ இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொல்கின்றாரே…! நமக்கு ஒன்றும் புரியவில்லையே என்று விட்டு விட்டீர்கள் என்றால் தீர்ந்து விட்டது.

”புரிய வேண்டும்…” என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியும். புரியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியாது.

முதலில் பள்ளிக்கூடத்திற்கு நாம் படிக்கச் செல்கின்றோம் என்றால் “நாம் தெரிந்து போய்த் தெரிந்து கொள்வதில்லை…!” தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அங்கே போகின்றோம்.

முதலில் எழுத்துக்களைப் பார்க்கப்படும் போது அந்த எழுத்துக்களில் என்ன கருத்து உள்ளது என்று அறிய அதை ஆழமாகப் பதிவு செய்தால் தான் பதிவு ஆகும்.

இல்லை என்றால் நீங்கள் ஆயிரம் வருடம் அ… ஆ… என்று சொல்லிக் கொண்டே வந்தால் முடியாது. அ… ஆ… என்று எழுத்தைப் படிக்க வேண்டும் என்றால் எத்தனை குழந்தைகள் வருடக் கணக்கில் உட்கார்ந்து தெரிந்து கொள்கிறது என்று பார்க்கலாம்.

ஆர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குழந்தைகளுக்குச் சொன்னது பதிவாகி… அது உடனடியாகப் பதில் சொல்லக்கூடிய நிலைக்கு வரும்.

ஆகையினாலே ஏதோ சொல்லுகின்றேன் என்று எண்ணி விட வேண்டாம்.

வான்மீகி தெரிந்து வரவில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்தும் அறிந்து கொண்டு வரவில்லை. இராமலிங்க அடிகள் அறிந்து வரவில்லை.

வியாசகர் பேரண்டத்தின் இயக்கத்தின் தத்துவத்தையே காட்டினார் அவர் தெரிந்து வரவில்லை. உணர்வின் இயக்கங்களை எண்ணங்களைப் பற்றி வெளிப்படுத்திய வான்மீகியும் அறிந்து சொல்லவில்லை. அறிவின் ஞானம் இல்லை. அகஸ்தியனோ கல்விச் சாலைக்கே செல்லாதவன். அவன் இயற்கையின் இயக்கங்கள் அனைத்தையும் கண்டுணர்ந்தான்.

எவரும் தெரிந்து வரவில்லை. அறியாத நிலைகள்… “சந்தர்ப்பத்தால் இணைந்து இயக்கிய அந்த உணர்வின் தன்மை…” தன்னுள் அறியும் பருவம் வரும் போது தான் மகா ஞானி ஆகின்றார்கள்.

அறிந்தவர் அறிந்ததைத் தனக்குள் விளைவைத்த பின் அதை அறிந்திடும் நிலை கொண்டு நாம் செல்லும் போதுதான் அறிவைப் பற்றி நாம் தெரிந்து கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 130

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

நமது குருநாதர் அவர் பைத்தியக்காரராக இருந்தார். அவர் இந்த உடலுக்கு இச்சைப்படவில்லை.

அது தான் ஒவ்வொரு உயிருக்கும் டெலிஃபோன் கம்பியை அடித்து அவர்களுக்கு ஞானத்தை கொடு. நல் வழியைக் கொடு என்று சொன்னேன்,

அதற்காக வேண்டித்தான் டெலிஃபோன் அடித்தேன்.

ஒவ்வொரு உயிரும் அவன் கடவுள் அவனுக்கு இதைச் செய்து ஏன்டா…! இந்த உடலில் வீற்றிருக்கும் “நீ…” அந்தக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்ற உணர்வை ”ஏன் நீ கொடுக்கவில்லை…?” என்று அவனிடம் முறையிடுகிறேன்.

அவனிடம் (ஒவ்வொரு உயிரிடமும்) முறையிடுகின்றேன். அதே சமயத்தில் என்னை இயக்கிக் கொண்டிக்கின்ற இவனிடமும் (என் உயிரிடமும்) முறையிடுகின்றேன்.

அப்படி என்றால் என்ன அர்த்தம் ஆகின்றது?

நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னால் எனக்கு நல்லதாகின்றது. நீங்கள் உயர வேண்டும் என்று சொன்னால் (என் உயிர்) எனக்கு நல்லதைச் செய்வான். அதற்குத் தான் இப்படிச் சொன்னேன் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார்.

இப்படி சூட்சம நிலையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார். அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 129

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உண்மையின் உணர்வுகளை அறியச் செய்வதற்காக காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்றார் குருநாதர். பல பேருண்மைகள் மறைந்து உள்ளது.

அரசர்கள் மதங்களாக்கி அவர்கள் இட்ட சட்டத்தை நம் உடலுக்குள் பதிவாக்கி விட்டால் மீண்டும் அதை எண்ணும் போது நமக்குள் கடவுளாக அது இயங்கத் தொடங்கிவிடும்.

அது எந்தெந்த குணங்கள் எதுவோ அது குணத்தின் தெய்வமாக அது இயங்கும் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டினார் நமது குருநாதர்.

மனிதனின் வாழ்க்கையில் நாம் எப்படி எல்லாம் பல இன்னல்கள் பட்டு வளர்ந்தோம்; பிறந்தோம்; இன்று மனிதனானோம்.

வளர்ந்தோம்; பிறந்தோம் என்றால் மீண்டும் மடிந்தோம்; பிறந்தோம்; மடிந்தோம்; பிறந்தோம் – பல கொடுமைகள் பட்டுத்தான் ஒவ்வொரு சரீரத்தையும் காக்கும் உணர்வின் வலு பெற்று வந்தோம்.

எது இதைக் கொடுமைப்படுத்துகின்றதோ அதன் உடலுக்குள் சென்று இப்படித்தான் மாறி மாறி வந்தது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 128

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

அகண்ட அண்டத்தையும் இந்த பிண்டத்திற்குள் எப்படி இயங்குகின்றது என்ற உண்மையினை உணர்ந்தவன் முதன் முதல் மனிதன் அகஸ்தியன்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் பூமியில் படர்ந்துள்ளது. அகஸ்தியன் கண்டுணர்ந்த (மறைந்த) அந்தப் பேருண்மையின் உணர்வுகளை அறியும்படிச் செய்தார் குரு.

பல காலம் 20 வருடம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார் குருநாதர். அவர் உபதேசித்து உணர்த்திய உணர்வுகளை எமக்குள் பதிவாக்கி அந்த நினைவு கொண்டு அகஸ்தியர் உணர்வுகள் எங்கெங்கெல்லாம் எவ்வழியில் இருந்தது? அகஸ்தியன் எங்கெங்கெல்லாம் சென்றான்? அவன் நடந்து சென்ற பாதைகளில் உணர்வுகள் எவ்வாறு படர்ந்துள்ளது? என்று பார்க்கும் படிச் செய்தார்.

உதாரணமாக அவர் உடலோடு இருக்கும் போது பித்தனாக இருப்பினும் கைகளில் அடிக்கடி ஒரு கிழிந்த துணியைக் கட்டுவார். காலில் ஒரு துணியைக் கட்டுவார். வித விதமான துணிகளைக் கட்டுவார்.

பார்ப்போருக்கு அவர் பைத்தியம் போலவும் இருப்பினும் அவர் செடி கொடிகளில் துணிகளைக் கட்டுவார். என்னென்னமோ புரியாத பாஷையில் சொல்வார்.

நான் அதைக் கேட்பேன்… அர்த்தமாகாது….! ஏதோ செய்கின்றார்…! என்று தான் இருக்கும்.

ஆனால் கடைசி நிலையில் அவர் சரீரத்திற்குப்பின் அவர் எதையெதையெல்லாம் எப்பாஷையில் பேசினாலும் அதை எமக்குள் பதிவாக்கி நினைவாக்கும் முறையை உருவாக்கினார்.

அவரை நினைக்கும் போதெல்லாம் குரு சென்ற பாதையில் அவர் எங்கெங்கெல்லாம் சென்றார்? அகஸ்தியரின் நிலைகளை எப்படியெல்லாம் அறிந்தார்?

அவர் அறிந்த உணர்வுகளில் அக்காலத்தில் அகஸ்தியன் வாழ்ந்த நிலையும் அவர் கண்டுணர்ந்த உணர்வுகளை அறிய முடிந்தது.

அகஸ்தியன் துருவனான நிலையும் துருவ மகரிஷியான நிலையும் துருவ மகரிஷி ஆனபின் துருவ நட்சத்திரமான இந்த வழிமுறைகளை அவர் எமக்குள் உபதேசித்த இந்த உணர்வின் வழி கொண்டு கண்டுணர முடிந்தது.

நான் பல காடுகளுக்குச் செல்லப்படும்போது இந்தத் துணிகளைக் கட்டிக் காண்பித்த நிலையில் அங்கே… “அந்தச் செடிகளில்… மரங்களில்… தெரியும்.”

அப்போது அந்த நினைவுகள் வரும்.

அந்த நேரம் அந்தச் செடியின் அருகிலே போய் நின்றோம் என்றால் அந்தத் தழை அப்படியே வந்து என் மீது ஒட்ட வரும். அப்போது அவர் சொன்ன நினைவுகள் வரும்.

ஏனென்றால் இந்தச் செடிகளில் அந்தத் துணிகளைக் காட்டும் போது நாம் போகும் போது அந்த துணிகள் தெரிந்தால் அது எச்சரிக்கையாக இருக்கும்.

ஆனால் ஊரில் இருக்கும் போது அவர் இந்தத் துணிகளைக் கட்டிக் காண்பிக்கும்போது ஏதோ…, “பைத்தியம் பிடித்த நிலையில் தான் இருக்கிறார்…” என்று யாம் எண்ணினோம்.

அவர் உணர்த்திய உணர்வுகள் எனக்குப் புரியாத பாஷையில் புரிய வைத்துப் பதிய வைத்தார். ஆனால் அந்தத் துணிகளைப் பார்க்கப்படும் போது இந்த நிகழ்ச்சிகள் எமக்குத் தெரிகின்றது.

ஏனென்றால் இங்கே படர்ந்திருப்பதை நுகர முடிகின்றது.

எப்படி கம்ப்யூட்டர் அதில் செய்த எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்படும் போது அந்த அதிர்வுகளை அந்த கம்ப்யூட்டரில் உள்ள நாடாக்களில் ஒலி ஒளி என்ற நிலையில் பதிவாக்குகின்றார்கள். அதன் வழி ரூபங்களைக் காணுகின்றான் விஞ்ஞானி.

ஆனால் மெய்ஞானி (நமது குருநாதர்) இப்படி காட்டச் சொன்னார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 127

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

வைகுண்ட ஏகாதசி அன்று உடலை விட்டுச் செல்லும் பொழுது குருநாதர் எம்மிடம் சொன்ன நிலைகள் இது.

பல அற்புதங்களை நான் செய்து காட்டினேன். அந்த அற்புதங்களிடத்தில் மயங்கியிருந்தோர் உண்டு. அதன் வழியில் என்னை அணுகியவர்கள் பலர்.

என்னிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ள எப்படி எல்லாம் வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள் என்றார் குருநாதர். ஆனால், என்னிடம் எதை நாடி வந்தார்கள்?

எனக்குச் சொத்து வேண்டும். சுகம் வேண்டும். உடல் நலம் வேண்டும். இதைத்தான் கேட்டார்கள். அதே சமயத்தில் வருவோரெல்லாம் எனக்கு “அந்த அருள் வேண்டும்.., இந்த அருள் வேண்டும்..,” என்று தான் கேட்டார்கள்.

மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும் உலக மக்கள் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்.

பிறருடைய குடும்பங்களை நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் பேச்சால் மூச்சால் அனைவரின் துன்பங்கள் அகல வேண்டும். நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலம் பெறவேண்டும் என்று “இதைப் பற்றிக் கேட்பார்.., யாரும் இல்லை”.

அத்தகைய மனம் உள்ளோர் என்னை அணுகி வந்தார்கள்.  “தனக்காகத்தான்.., கேட்டார்களே தவிர.., எல்லோரும் நலம் பெறவேண்டும்..,” என்ற கேள்வியே அங்கே எழவில்லை.

ஆனால், அத்தகைய தன்மை பெற்றோர்களும் மற்ற எல்லோரும் அருள் ஞான சக்தி பெறவேண்டும் என்று நான் எண்ணினேன். நான் அதைப் பெற்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வைகுண்ட ஏகாதசி அன்று நான் உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.

ஆனால், நீ எதை எண்ணப் போகின்றாய்? நீ எதைப் போகின்றாய்? என்று பல வினாக்களை எழுப்பினார். நீ பெறவேண்டிய தகுதிகள் எது? அதைப் பெறுவது எப்படி?

இதையெல்லாம் எமக்குள் தெளிவாக்கிக் காட்டினார்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் நீ என்னுடன் இணைந்து வர வேண்டும் என்றால் “நீ எதை எண்ண வேண்டும்..?” என்றும் சொன்னார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குரு பெறவேண்டும். அவர் அழியாத ஒளியின் சரீரம் பெறவேண்டும். அவர் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும். பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அருள் வழி குரு பெறவேண்டும் என்று நீ எண்ணினால் அந்தக் குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார். ஆகவே, நீ எதை எண்ணுகின்றாயோ நீ அவ்வாறு ஆகின்றாய் என்று உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 126

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில பேர் தியானம் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு அந்தத் தியானம் ஒன்றைத்தான் சொல்கின்றார்களே தீமையைத் தடுத்துப் பழகும் ஆற்றலைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று உணரவில்லை.

என்னை இப்படிப் பேசுகின்றான்.., நான் எத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருப்பது…? கடன் கொடுத்தவன் பணம் திரும்பத் தர மறுக்கின்றான்.., நான் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…? என்று இப்படி மாற்றிக் கொள்கின்றார்கள்.

நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது. கண்கள் அந்த வழியைக் காட்டுகின்றது.

குருநாதர் எமக்கு உபதேசித்தது ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாகவும் ஒவ்வொரு உடலையும் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட வேண்டும் என்றார்.

அப்பொழுது “அவர்களிடமிருந்து பகைமை மறைந்து.. அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்” என்ற எண்ணம் எனக்கு வருகின்றது.

அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணும் பொழுது “என் உடலான.. இந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துகின்றேன்”.

“நீங்கள் நன்றாக ஆக வேண்டும்” என்று நான் எண்ணினால் எனக்குள் நல்ல நிலை ஆகின்றது.

இப்பொழுது யார் நமக்குத் தீமைகள் செய்தார்களோ அவருக்கும் “நல்லது செய்யக்கூடிய எண்ணம் வரவேண்டும்” என்று சொன்னால் அந்தத் “தீமையின் உணர்வுகள்” நமக்குள் வருவதில்லை.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று சொன்னால் அவரைப் பற்றிய “வெறுப்பான உணர்வுகள்” நம் உடலுக்குள் வருவதில்லை.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டுமே தவிர அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவர் கெட்டதைத்தான் நல்லதாக்கும். அவர் செய்யும் தவறுக்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகிவிடும்.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும். எல்லோரிடமும் பண்பும் பரிவும் காட்டும் எண்ணங்கள் வரவேண்டும் அந்த அருள் ஞானம் அங்கே வர வேண்டும் என்று சொன்னால் இந்த உணர்வுகள் அவர்களைத் தவறு செய்ய விடுவதில்லை. அப்பொழுது இதை நாம் வெறுமனே சொல்ல முடியாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று இதைக் கலந்து நம் எண்ணங்களுக்கு “முதலில்” வலிமை கொடுக்க வேண்டும்.

இப்படி நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தில் “எத்தகையை சங்கடங்கள் வந்தாலும்” மாற்றி அமைக்கலாம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 125

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்கு நோய் என்று வந்து விட்டால் நமக்கு வேதனை வருகின்றது. வேதனைப்படும் பொழுது அந்த நேரத்தில் நல்லதை யாராவது சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மறுப்போம்.

வேதனைப்பட்டுள்ளோர்களுக்கு வேதனைப்படும் நிலைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தால் ரசித்துக் கேட்பார்கள். அப்பொழுது அந்த நேரத்தில் அவர்களுடைய வேதனைகள் தெரியாது.

அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது “இது நல்லது.., அது அப்படி இருந்தது..,” என்று உயர்ந்த குணங்களைப் பற்றி நீங்கள் சொன்னாலும் அதற்கு எதிர்மறையாகி அதனுடைய நிலைகளை நாம் கேட்க மறுப்போம்.

ஏனென்றால் அந்த வேதனை உணர்வு நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை நுகராதவண்ணம் தடைப்படுத்தி நமக்குள் தீமைகளையே விளைய வைக்கும்.

இதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 124

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

நம் உடல் எல்லாம் பொய் உடல்கள். உடலைப் பொய் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இப்போது நாம் மனிதனாக இருக்கிறோம். அடுத்துப் பார்த்தால் சுருங்கிப் போகிறோம்.

சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கிறது…? வேறொரு உடலை நாடுகிறது. ஆகவே பொய் உலகில் வாழுகின்றோம் என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும்.

இதைத்தான் குருநாதர் அடிக்கடி எம்மிடம் (ஞானகுரு) சொல்வார். “டேய்…! ஏன்டா பொய் உலகிற்கு போகிறாய்…? மெய் உலகத்திற்கு வாடா…!” என்பார். ஆகவே நம் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…?

உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான்… உணருகின்றான்… உணரச் செய்கின்றான்… உணரும் வழியில் வாழச் செய்கின்றான்…!

ஆனால் இதை ஆறாவது அறிவால் தெரிந்து கொண்ட பின் நீ எந்த உலகிற்குச் செல்லுகின்றாய் என்று சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் இப்படியெல்லாம் கேட்பார்.

சில சிக்கலான நிலைகள் வரும் போது என்ன செய்வேன்..? என்ன வாழ்க்கை போ…!

என் மனைவியை நோயிலிருந்து எழுப்பி விட்டார். சொல்வதைச் செய்கிறாயா என்று வாக்கை வாங்கிக் கொண்டார்.

ஆனால் காட்டுக்குள் அழைத்துச் சென்று “இப்படித் தொல்லை கொடுக்கிறாரே…!” என்று ரொம்பக் கஷ்டம் வரும் போதெல்லாம் என்னுடைய நினைவு இப்படி வரும்.

எங்கேயாவது பேசாமல் உடலை விட்டுப் போயிடலாம்…! என்று இரண்டு மூன்று முறை தோன்றியது. அந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் “தற்கொலை செய்து கொள்ளலாம்…! என்ற உணர்வு வரும்.

அப்போதெல்லாம் குருநாதர் சிரிப்பார். இந்த உலகத்தை என்ன என்று நீ அறிந்தாய்…? உன் உயிரை யார் என்றும் அறிந்தாய்…! இந்த உடலையும் அறிந்தாய்… மீண்டும் ஏன்டா பொய் உலகத்திற்கு போகிறாய்…?

வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நான் எண்ணுகின்றாய். நீ யாரை எண்ணி இதைச் செய்து கொண்டாயோ இந்த வேதனையான உணர்வுகள் கேட்பவருக்குள் வலுவாகும். அவர் உடலுக்குள் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய்.

இந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குப் பின் என்ன என்ன ஆவாய்..? பிறிதொன்றைக் கொன்று தின்னும் உணர்வின் தன்மை தான் உடல் பெறும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய். அடுத்து நீ பொய் உலகிற்குத் தானே போகின்றாய்…?

உயிரால் மனித உடல் பெற்று ஆறாவது அறிவால் இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நிலைகள் கார்த்திகேயா என்ற நிலைக்கு நீ வந்தாய். மீண்டும் ஏன் பொய் உலகிற்குச் செல்கின்றாய்…? என்று இந்த இடத்தில் விளக்கங்களைக் கொடுப்பார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 122

Golbal Tamil Nadu

மெய் ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றிய சூட்சமங்களை எல்லோரும் அறியும் கால நேரம் வந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமி சுற்றுவதைக் காட்டிலும் சூரியன் சுழலும் வேகம் அதிகப்படுகிறது. இன்று இப்பூமியின் ஈர்ப்புத் தன்மைக்கு மேல் சூரியனின் ஈர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகமாக உள்ளது. அது ஈர்த்து வெளியிடும் நிலையும் அதே நிலைக்குகந்த துரித நிலையில் உள்ளது.

பல சூரியன்களின் தொடர்பு கொண்ட நம் சூரியன் நாம் காணும் சூரியனின் சக்தி மிகவும் வலுப்பெற்ற சக்தி. சூரியனின் பூமி நிலை குளிர்ந்த நிலை. இப்பூமியில் பிறவி எடுத்து இப்பூமியிலிருந்து சூட்சும நிலைக்கு சென்ற பலர் இருந்து செயல்படுத்தும் கோயில்தான் நம் சூரியன்.

இப்பூமியில் உதித்த உயிரணுக்கள் மற்ற மண்டலங்களில் வாழ்ந்திட முடியாது. சுவாச நிலை மாறுபடும் பொழுது அம்மண்டலத்தின் உந்தலினால் இம்மண்டலத்திற்கே உந்தப்பட்டு வருவார்கள் என்று உணர்த்தினேன்.

சூட்சும நிலைக்குச் செல்பவர்கள் பல மண்டலங்களிலும் இருந்து செயல்படுத்துகிறார்கள். இப்பூமியிலும் பிற மண்டலத்தில் உதித்து வாழ்ந்தவர்கள் சூட்சும நிலை பெற்றே இம்மண்டலத்திலும் (பூமி) சில நிலைகளைச் செய்கிறார்கள்.

வான சாஸ்திரம் என்று அறியப் பல நிலைகளைச் செய்கிறார்கள்.
1.அன்றே இப்பூமியும் மற்ற பூமிகளின் நிலையையும் என்றாவது ஒரு நாள் வெளிப்படுத்தும் நிலையில்
2.பல சித்தர்கள் ஒன்றுபட்டு இப்பூமியிலேயே அக்காலப் பெட்டகத்தைப் பதித்து வைத்துள்ளார்கள்.
3.இக்கலி மாறுவதற்குள் அந்நிலை வெளிப்படும்.
4.அந்நிலையை வெளிப்படுத்திட இக்கலியில் வந்து பல சித்தர்களினால் உருவப்படுத்தி ஜீவன் தந்த ஓர் உயிரணு
4.ஒரு தாயின் வயிற்றியிலேயே பிறந்து வந்துள்ளது
5.அவன் வெளிப்படுத்துவான் சூட்சும நிலையில் உள்ள பல சித்தர்களை என்றேன்…
6.சூட்சும நிலைக்குச் சென்ற பெரியோர்கள் என்றும் உணர்த்துகிறேன்.

அச் சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் தனித்த நிலையில் யாரும் இயங்குவதில்லை. அவர்களின் சக்தியை எல்லாம் ஒன்றாக்கி அச்சப்தரிஷிகளின் நிலையிலிருந்து செயல்படும் தன்மைக்கு வருகிறார்கள்.

மனிதர்களின் குண நிலை மாறுபட்ட குண நிலைகள். சூட்சுமத்தில் உள்ளோரின் குண நிலைகளோ ஒன்றுப்பட்ட நிலை.

இன்று சிறு தேவதைகள்… பெரும் தேவதைகள் என்று மாறுபட்டுப் பிரித்துச் சொல்கிறார்கள் புராணக் கதைகள் மூலமாக. இச்சிறு தேவதைகளின் நிலை துர் ஆவிகளின் நிலையில் இருந்து மாறுபட்ட அன்பு கொண்ட ஆத்மாக்கள்.

இவ்வுலகின் ஆசையுடன் இவ்வுலகில் உள்ளோரின் எண்ணமுடன் கலந்து தன்னையே ஆண்டவனாக ஏற்கும் நிலைப்படுத்திச் செய்து வரும் நிலை.
சூட்சுமத்திற்குச் சென்று அச்சகல தேவர்களின் தேவனாக இயங்கும் அச்சூரிய தேவனிடம் செல்லும் நிலைக்குப் பக்குவப்படாத நிலையிலேயே உள்ள நிலைதான். சித்து நிலையுடன் கலந்து உறவாடும் நிலை.

சூரிய தேவன் என்றேனல்லவா…? அனைத்துச் சித்தர்களும் முனிவர்கள் ரிஷிகள் சப்த ரிஷிகள் அனைவரும் ஒன்றுபட்டு அச்சக்தியின் சக்தியான அச்சூரியனில் ஒன்று கலந்து அச்சூரியனின் நிலையிலிருந்துதான் எல்லாச் செயல்களுமே இன்று செயல்படுத்துகின்றனர்.

இன்று அச்சூரிய தேவன் இல்லா விட்டால் எவ்வுலகமும் இல்லை. நம் சூரியனைப்போல் சக்தி கொண்ட பல சூரியன்கள் இருந்தாலும் அனைத்து சூட்சும சக்தியிலுள்ள தேவர்கள் கலக்கும் நிலை நம் சூரியன் தான்.

1.இவ்வுடலில் உள்ளபோதே அனைத்து நிலையையும் அறியும் பக்குவத்திற்கு உங்களைச் செயல்படுத்திடத்தான்
2.பல சக்திகளைக் கொண்ட சூட்சும நிலையில் உள்ளவர்களின் நிலையை ஒன்றுபடுத்தியே
3.இந்நிலையை இங்கு வெளிப்படுத்துகின்றோம்

சக்தியின் சக்தி பெற்ற இம் மனித ஜென்மத்தில் வாழும் பாக்கியத்தைப் பெற்ற சக்திகளே…!
1.உங்களின் சக்தியை அனைத்து சக்திகளுடன் ஒன்றுபட்டு
2.அனைத்து மண்டலங்களின் நிலையையும் உம் சக்திகளில் இருந்தே ஈர்த்து அறியும் பக்குவத்திற்கு
3.உம் சக்தியின் செல்வத்தைச் சக்தியாக்கி வாழுங்கள்.

meditation high tech

பிறந்த பின் அமைவது விதி அல்ல… தாயின் கருவில் தான் நம் விதியே நிர்ணயமாகின்றது

 

இன்றைய மனிதனின் நிலைகளில் “விதி…!” என்ற நிலைகள் ஒன்று உண்டு என்றால் அது எப்படி இருக்கிறது…?

மனிதன் தாயின் கருவிலே சிசுவாக வளரப்படும் பொழுது அந்தத் தாய் எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மையை அது பதிவாக்குகின்றதோ…
1.அதுவே குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக ஆனாலும்
2.அந்த விதியே அவன் வளர்ச்சியில் அதன் நிலைகளே வளர்த்துக் கொண்டிருக்கும்.

உதாரணமாக ஒரு நோயாளியை அந்தத் தாய் கருவுற்ற ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களிலே உற்றுப் பார்த்தால் கருவிலே விளையப்படும் பொழுது குழந்தைக்கு இந்த நோயின் உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.

அது வளர்ச்சி அடைந்து பிறக்கப்படும் பொழுது அந்தத் தருணம் வரப்படும் பொழுது முடிவின் தன்மையாக அவன் விதிப்படி அந்த நோய் வந்தே தீரும்.

நீங்கள் ஜோதிடம் பார்த்து அல்லது வேறு எந்த மந்திரத்தைச் செய்தாலும் டாக்டரிடம் சென்று நீக்க முயற்சி செய்தாலும் அந்த விதிப்படி அந்த நோயின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.

1.அவர் மருந்துகள் கொடுப்பார்
2.இருந்தாலும் அந்தத் தருணம் வந்த பின் அந்த மருந்து கொடுத்ததில் உள்ள நஞ்சே
3.அது தன்னுடன் இணைத்து இணைத்து அதுவும் பெருகி இவரை வீழ்த்தியே தீரும்.

ஆக சிறிது நாளைக்கு அந்த வலியிலிருந்து தப்பலாம். ஆனால் உள்ள விஷத்தைத் தனக்குள் எடுத்து உடல் உறுப்புகளைக் கொன்று இந்த விதிப்படி அவன் மடிந்தே தான் தீருவான்.
1.விதி இப்படிப்பட்ட ரூபத்திலே தான் வருகின்றது…!
2.நாம் பிறந்த பின் வருவதெல்லாம் அது விதியாகாது.

கருவில் வளரப்படும் பொழுது அந்தத் தாய் எதை எதை எல்லாம் தனக்குள் உருவாக்கி உள்ளதோ அந்த விதியின் பலனே நடக்கும்.

தாய் கருவிலே இருக்கும் பொழுது… ஒரு தத்துவத்தைப் பேசி உயர்ந்த ஞானத்தைப் பேசி “அதன் வழி உயர்ந்தார்…” என்ற ஏக்கத்துடன் தன் குடும்பத்தின் நிலைகள் சிக்கல் அதிகமாகும் பொழுது எண்ணி
1.அந்த மகான்களை எண்ணி…
2.அந்த மகானின் உணர்வுகள் எங்கள் குடும்பத்தில் படர வேண்டும் என்ற இந்த எண்ணத்தை ஓங்கி வளர்த்து
3.அதிலே நாட்டத்தை அந்தத் தாய் அதிகம் செயல்படுத்தியிருந்தால்
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒரு சாது வரப்படும் பொழுது அந்த மகானின் அருள் பெறவேண்டும் என்று
5.அவரிடம் சக்தி இருக்கிறதோ இல்லையோ அவரை மகானாக எண்ணி
6.அந்த உணர்வினைப் பெறவேண்டும் என்ற எண்ணம் வரும் பொழுது அந்த உயர்ந்த சக்தி பதிவாகின்றது.

அதே சமயத்தில் ஒரு யாசகத்தைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீ நன்றாக இரம்மா… உன் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்கும்…! என்ற இந்தச் சொல்லை அந்த சாதுவிடம் இருந்து பதிவாக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை கருவிலே வளரக்கூடிய சிசுவிற்கு “அது விதியாகின்றது…”

அதன் விதிப்படி அதன் வளர்ச்சிகள் இங்கே வளர அவன் எதிர்பார்க்காத நிலைகள் காரியங்கள் எல்லாம் சித்தியாகும். குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் ஒருவன் தொலைத்துக் கொண்டே இருப்பான். ஆனால் இவன் ஒருவன் வளர்ந்து கொண்டே இருப்பான்.

அந்தக் குடும்பமோ தரித்திரமான நிலைகளில் இருக்கும். ஆனால் தாய் கருவில் இருக்கும் பொழுது எதை எடுத்ததோ ஒருவருக்கு நோய் வந்திருக்கின்றது என்றால் அந்தக் குழந்தை நலிந்து கொண்டே இருப்பான்.

அவனை எண்ணும் பொழுதெல்லாம் தாய் வேதனைப்பட்டுக் கொண்டேயிருக்கும். இந்த வேதனை குடும்பத்தில் அனைத்தையும் மாற்றிக் கொண்டேயிருக்கும்.

ஆனால் அதே குடும்பத்திலே ஒருவர் ஞானத்தின் வழி கருவாகி உருவாகி இருந்தால் தன் நிலைகளை எடுத்துக் கொண்டு இந்தத் தீமைகளை வெல்லும் சக்தியாக அவர் வளர்வார். இது எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதற்குத்தான் மதி கொண்டு அந்த விதியை மாற்ற வேண்டும் என்று சொல்வது…!

ஒரு தீமையை நாம் பார்க்கின்றோம் மனித வாழ்க்கையில். அந்த உணர்வு உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது. அந்த வித்து முளைக்காது தடுப்பதே மதி…!

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று
2.மதி கொண்டு தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அந்தத் தீமை தனக்குள் வளராது முளையிலே அதைக் கிள்ளி எறிந்து விடுகின்றது.

புளியங்கொட்டை என்று அதைக் கீழே தட்டி விட்டால் அது குப்பையில் தான் விளையும். ஆனால் தன் வீட்டருகில் வந்து விட்டால் அது தன் விழுதுகளைப் பரப்பி அது பெரும் விருட்சமாக மாறுகின்றது.

அதை வெட்ட வேண்டும் என்றால் மிகுந்த பாதுகாப்பு வேண்டும். வெட்டும் போது வீட்டுப் பக்கம் சாய்ந்து விடாமல் நம் மதி கொண்டு அதைச் சிறுகச் சிறுகத் தான் அப்புறப்படுத்த வேண்டும்.

இதைப் போன்று தான் மதி கொண்டு விதியை மாற்றுதல் வேண்டும்.

இப்படித்தான் இந்த வாழ்க்கையில் இன்னொரு உடல் பெறாத நிலையில் தன் மதி கொண்டு உணர்வின் தன்மையை வளர்த்தான் துருவ மகரிஷி… தன் சந்தர்ப்பத்தால் பெற்ற உணர்வு கொண்டு…!

அந்த மதி கொண்டு தன் மனைவியும் அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும் என்று ஊக்குவித்தான். அதனில் விளைந்த உணர்வுகள் கொண்டு தன் மதி கொண்டு தன் உணர்வுக்குள் மனைவியையும் சேர்த்துக் கொண்டான்.
1.இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் மதி கொண்டு விதியை மாற்றினான்
2.பிறவியில்லா நிலை அடைந்தான் துருவ மகரிஷி.

இதை எல்லாம் குருநாதர் ஒவ்வொரு நொடிக்கும் பல இன்னல்களைக் கொடுத்துக் காட்டிற்குள் அழைத்துச் சென்று இது எல்லாம் எப்படி உருப்பெறுகின்றது…? உருமாற்றியது…? இதிலிருந்து நீ எப்படி உருமாற வேண்டும்…? நீ எப்படி உருமாறினாய்…? எப்படி உருமாற்ற வேண்டும்…? என்ற நிலைகள் கொண்டு தான் உனக்குள் உபதேசிக்கின்றேன்.

1.அருள் ஞான வித்தை உனக்குள் கொடுக்கின்றேன்
2.இதைச் சீராகப் பண்படுத்தி வளர்த்துக் கொள்
3.அதிலே விளைந்த வித்தின் எண்ணங்களைப் பரப்பு
4.மக்கள் அனைவரும் உயர வேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்திக் காட்டு.

அந்த உணர்வின் சொல்களை ஒவ்வொரு நிலைகளிலும் வெளிப்படுத்து கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் பதிவாகி விட்டால் அவர்கள் அதை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அருள் ஞானம் அங்கே நிச்சயம் வெளிப்படும்.

அதைக் கண்டு நீ பேரானந்தப்படு… அந்தப் பேரானந்தம் தான் உன்னை ஒளியின் சுடராக மாற்றும் என்று தெளிவாக்கிய அதே வழிப்படித்தான் உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

eswarapattaya-namaha

விஞ்ஞானத்தால் காண முடியாத உண்மைகளை மெய் ஞான சக்திகளின் துணை கொண்டு அறிய முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

விஞ்ஞானம் கொண்டு இன்று பல ஏவுகணையின் மூலமாகப் பல மண்டலங்களின் உண்மை நிலையறியத் தன் சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறியப் பார்க்கின்றான் இன்றைய மனிதன்.

1.ஒவ்வொரு மண்டலத்திலும் மாறுபட்டதன் நிலையை அறியும் ஆவலில்
2.தன் எண்ண சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறிந்திட எண்ணுகின்றான்.

அனைவருக்கும் பொதுவான அச்சக்தியை ஒவ்வொருவரும் உணர்ந்தே தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தினால் ஜெபம் கொண்ட நிலையில் எம் மண்டலத்திற்கும் அவரவர்களின் ஆத்மாவுடன் இவ்வுடலின் சக்தியையும் சேர்த்தே பல மண்டலங்களுக்குச் சென்று அம் மண்டலங்களில் உள்ள உண்மை நிலையை அறிந்து வரலாம்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு உதித்து வாழ்ந்ததுவோ அந்த மண்டலத்தை விட்டுப் பிற மண்டலத்தில் வாழ்வதற்கு அதற்குச் சக்தியில்லை.

1.சுவாச நிலை மாறுபடும் பொழுது வாழும் தன்மையும் அற்று விடுகிறது.
2.எம் மண்டலத்தில் இவ்வுயிரணு ஜீவன் பெற்றதோ
3.அந்நிலையிலிருந்து மாறுபட்டால் எந்த உயிரணுவினாலும் வாழ்ந்திட முடியாது.

நம் பாடத்தில் இவ்வாத்மா அழிவதே இல்லை இவ்வுடல்தான் மாறுகிறது என்றேன். அப்பொழுது இவ்வழியாத ஆத்மா பிற மண்டலத்துக்குச் சென்றால் மட்டும் அழிந்துவிடுமா…? என்பீர்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு தோன்றியதோ அவ்வுயிரணு என்ற ஆத்மாவானது அதன் சுவாசம் கொண்டு உயிர் என்னும் ஜீவனைப் பெற்ற இக்காற்று மண்டலத்திற்கு மேல் செல்லும் சக்தி அவ்வுயிரணுவிற்கு இல்லை.

இன்று விஞ்ஞானம் கொண்டு பிற மண்டலத்திற்கு எடுத்துச் செல்லும் ஜீவாத்மாக்களும் அந்நிலையில் இவர்கள் விட்டு வந்தாலும் (நாய், பூனை, குரங்கு) அந்நிலையின் சுவாச நிலைக்கும் இஜ்ஜீவாத்மாவின் சுவாச நிலைக்கும் ஏற்காத தன்மையில் அவ்வாத்மாவை எம்மண்டலத்தில் இருந்து வந்ததோ அம்மண்டலத்தின் நிலைக்கு ஏற்காத தன்மையில் உந்தித் தள்ளிவிடும். இனம் இனத்துடன்தான் சேரும்.

ஆனால் இங்கிருந்து பல உயிரணுக்களை.. உயிரினங்களை… எடுத்துச் சென்று மற்ற மண்டலத்தில் அங்கே வாழ்ந்திட முடியுமா…? என்பதனை அறியப் பல சக்திகளைச் செயலாக்குகிறார்கள்.

எந்த மண்டலத்திலும் உள்ள உயிரணு பிற மண்டலத்திற்குச் சென்று வாழ்ந்திட முடியாது. ஆனால் நம்முள் உள்ள சக்தியை அவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி ஜெபம் கொண்டால் சகல நிலையையும் அறிந்திடலாம்.

சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் எந்த மண்டலத்திலும் வாழும் நிலைக்கு வந்திட முடிந்திடும். இன்று நம்மில் இருந்து சென்ற பல சூட்சும நிலை பெற்றவர்கள் எம்மண்டலத்திலும் செல்லும் பாக்கியத்தைப் பெற்றவராய் இருக்கின்றார்கள்.

இன்று சூரியனில் சென்று வாழலாமா…? பெரும் நெருப்பு கோளமான அந்நிலைக்கு எப்படிச் செல்வது…? என்று விஞ்ஞானம் கொண்டு ஏவுகணை அனுப்புபவனும் சூரியனின் நிலையைக் கண்டு அஞ்சுகின்றான்.

சூரியனின் நிலை குளிர்ந்த நிலை. நம் பூமியைப் போல் காலை மாலை இரவு என்று மாறுபட்ட நிலை அங்கில்லை. இங்கு எப்படி நம் நிழலைக் காணுகின்றோமோ அந்நிலையும் அங்கில்லை.

அதி சுவையான நீரும்… ஆனந்த மயமான மணமும்… உள்ள பூமி அது. இந்நிலையில் உள்ளது போல் மழை நிலையும் மாறுபட்ட நிலையில் அங்கு உள்ளது. மழை உண்டு ஆனால் மாறுபட்ட நிலை. பனியான மழை. எப்பொழுதும் அந்நிலை இருந்து கொண்டே உள்ளன.

காட்சி:
அந்நிலையில் ஜீவன் பெற்று பல உயிரணுக்கள் வாழ்கின்றன. நாம் இவையெல்லாம் கதைக்குச் சொல்வதைப் போல் சொன்னதின் நிலையல்ல. உள்ளதின் உண்மையைத்தான் ஜெபம் கொண்டு அறிந்ததில் வெளியிடுகின்றோம்.

ஒவ்வொருவரின் சக்தியிலும் அறிந்திடும் தன்மையுண்டு. இப்பூமியைப்போல் பல நூறு மடங்கு பெரியவையான அச்சூரியன் சுழலும் வேகத்திலேயே அதன் ஈர்ப்புத் தன்மையும் பல மடங்கு அதிகமாகப் பெறுகிறது.

இச்சூரியனைச் சுற்றி எப்படி 48 மண்டலங்கள் அதன் ஈர்ப்பு நிலைகொண்டு வாழ்கின்றனவோ அதைப்போல் சூரியனும் பல சூரியன்களின் சக்தியின் உதவியால் வாழ்கிறது.

polaris agastyar

நமது எல்லை பிறவியில்லா நிலை அடைவதே…!

 

1.இந்த மனித உடலைவிட்டு நாம் சென்றால் அடுத்து நாம் எந்த நிலை அடைய வேண்டும்…?
2.நமது எல்லை எது…? இனி பிறவியில்லா நிலையே அது…!

அவ்வாறு பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டுமென்றால் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி… அந்த ஒன்றிய நிலைகள் கொண்டு தன்னிலையை எவ்வாறு வளர்க்க வேண்டுமென்று
1.அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வினை அனைவரும் அவ்வழியிலே பெற்றால்
2.அவர் சென்ற பாதைகளில் நாமும் அதைப் போய் அடையலாம்.

அதைத் தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று நமது தமிழ் பாடல்களில் எல்லாம் முன்னணியில் உண்டு.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் விண்ணுலக ஆற்றலைத் தன்னுள் அறிந்து “இயற்கையின் சக்தி மோதலில் எவ்வாறு உருவானது…?” என்ற நிலையைத் தெளிவாக்கியபன்.

தன் ஐந்தாவது வயதில் துருவத்தை நுகர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அதன் வழியில் பிரபஞ்சத்தை நுகர்ந்து துருவனாகின்றான்… திருமணமான பின் துருவ மகரிஷி ஆகின்றான்.

துருவத்தின் ஆற்றலை அறிந்துணர்ந்தவன் பின் அதனைத் தனக்குள் விளைய வைத்துத் துருவ மகரிஷி ஆகின்றான்.

அவனுக்குத் திருமணம் ஆகும் போது இரு மனமும் ஒன்றான நிலைகளில் தான் பெற்ற சக்திகள் அனைத்தையும் தன் மனைவி பெற வேண்டுமென்றும் தன் மனைவி பெற்ற சக்திகள் அனைத்தும் நான் பெற வேண்டும் என்ற நிலைகளில் இருவருமே ஒருக்கிணைந்து வாழ்ந்தவர்கள்.

எந்தத் தீமைகளும் தனக்குள் வராது உணர்வினை ஒளியாக மாற்றி ஆண் பெண் என்ற நிலைகளில் இரண்டு உயிரும் ஒன்றாக இணைந்து இரண்டு உடலும் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒன்றாக இணைந்து இன்றும் துருவ நட்சத்திரமாக இயங்கிக் கொண்டுள்ளார்கள். அதற்கு அப்புறம் பிறவியில்லை.

இதைத்தான் முதலில் தோன்றிய உயிர் பின் நிலைகளில் எப்படி உருவாகின்றதென்றும் இந்த உயிர் தோன்றி பல கோடிச் சரீரங்களை எடுத்து
1.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய பின் கல்கி
2.இந்த உயிர் எப்படி உருவானதோ இதைப்போல் உணர்வின் அணுக்களைத் தனக்குள் உருவாக்கி
3.ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்வதே கடைசி நிலை
4,இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய “உயிரணுவின் கடைசி நிலை அது…!”

அவர்கள் பெற்ற சக்தியை பின் வரும் உயிராத்மாக்கள் நுகர்ந்த பின் அதன் வழி அவர்களுடைய அருள் வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இணைகின்றனர் என்பதையும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

நான் சொல்வது புரியவில்லை என்று இதை விட்டுவிடாதீர்கள். இன்று குழந்தைகள் ரேடியோவையோ டி.வியையோ பார்க்கின்றது என்றால் அதன் உணர்வுகளைப் பதிவாக்கி கொள்கின்றது. பதிவான பின் அந்தப் பாடலை அப்படியே முழுமையாகப் பாடுகின்றது

நாம் பல எண்ணங்கள் கொண்டிருப்போர் இதைப் பார்க்கும்போது இதை பதிவாக்குவது இல்லை. அதைப் பாடவும் தெரிவதில்லை.

அந்தக் குழந்தைகள் பதிவாக்குவது போல் இந்த உபதேச உணர்வுகளைக் கூர்மையாகக் கவனித்தால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது. அதை மீண்டும் நினைவாக்கப்படும்போது அந்த நினைவின் சக்தியாக வருகின்றது.

ஆகவே…
1.உபதேசிக்கும் உணர்வைக் கூர்மையாக எண்ணி உங்களில் பதிவாக்கி
2.இந்த நினைவினை வலுக்கூட்டினால் அந்த மெய் ஞானிகள் பெற்ற உணர்வை நீங்களும் பெற முடியும்.

துருவ தியானத்தை தினமும் நீங்கள் செய்தீர்கள் என்றால் அதை நீங்கள் எளிதில் பருகும் நிலையும் விண்ணுலக ஆற்றலையும் மண்ணுலக ஆற்றலையும் தன்னுள் எவ்வாறு இயங்குகின்றது…? என்ற நிலையையும் உணர முடியும்.

அவ்வாறு அதை உங்களில் உருப்பெறச் செய்யும் நிலைக்கே ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாள் அன்று உபதேசத்தை உங்களுக்குள் பதிவு செய்வது.

Spiriual science

உலக நிலையையே இவ்வாறறிவு படைத்த மனிதன்தான் மாற்றுகின்றான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அனைத்துமே ஆவிதான்… ஆவியிலிருந்து வந்தது தான் அனைத்து உலோகங்களும்… ஜீவராசிகளும்…! அந்நிலையிலிருந்து பிரித்தெடுத்து அதனதன் தன்மையில் அறியும் ஆற்றலைப் பெற்றுள்ளோம்

இப்பூமியில் இயற்கையிலிருந்து எடுத்த நிலைகளிலிருந்து அணுகுண்டு செய்து இப்பூமியில் புதைத்து வைத்துள்ளார்கள். சகல பாதுகாப்புடனும் அவர்கள் பாதுகாத்து வைத்த உலோகத்தினாலான துருப்பிடிக்காத இரும்பைக் கொண்டு பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

பலர் பதப்படுத்தும் நிலையில் பதப்படுத்தி வைத்துள்ளார்கள். இப்பூமியிலிருந்து எடுத்த உலோகத்திலே தன் அறிவினால் விஞ்ஞானம் கொண்டு இவ்வணுகுண்டைச் செய்து வைத்துள்ளார்கள்.

அனைத்துமே ஆவிநிலை ஆகக்கூடியதுதான். உதாரணத்திற்கு தங்கத்தினால் ஓர் ஆபரணத்தைச் செய்து இன்று நீ பார்க்கும் எடைக்கும் பத்தாண்டிற்குப் பிறகு அவ்வாபரணத்தை உபயோகிக்காத நிலையிலேயே நிறுத்திப் பார்த்தால் அதன் நிறையில் ஒரே நிலை இல்லாமல் குறைந்துதான் இருக்கும்.

1.தேய்மானம் என்பார்கள்…!
2.பிற வஸ்துவில் பட்டுத் தேய்வதல்லை
3.இக்காற்றில் கலந்துள்ள ஆவித் தன்மையினால் இப்பூமிக்குள்ள காந்த சக்தியைக் கொண்டு ஈர்ப்பதினால் அதுவும் ஆவியாகிறது.

அனைத்து உலோகங்களின் நிலையும் இதுதான். இவ்வுலக நிலையும் இதுதான். இவ்வுலகம் ஆவியை ஈர்த்து அவ்வாவியையே வெளிப்படுத்துகிறது.

அதனால்தான் இன்று விஞ்ஞானம் கொண்டு செய்திடும் அணுகுண்டைப் பாதுகாக்கும் நிலை கொண்ட அவ்விரும்புக் கவசமே இவ்வுலகம் ஈர்த்து ஆவியை வெளிப்படுத்தும் தன்மையில் அதன் நிலையும் ஆவியாகி… “அதில் ஏற்படும் சிறு துவாரத்தினால் வரப்போகின்றது இவ்வுலக மாற்றமே…!”

இன்று விஞ்ஞானம் கொண்டு சூரியனிலிருந்து வரும் சக்தியினால் பல நிலைகளைச் செய்திடலாம் என்று விஞ்ஞானப் படுத்துகிறான். சூரியனிலிருந்து வந்த அணுக்கதிரினால் பூமியில் ஏற்பட்ட கனி வளங்களையும் பல திரவ வஸ்துக்களையும் தன்னிலைக்கு ஈர்த்து எடுத்துவிட்டான்.

இன்று இவன் செயற்கைக்காக சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிரை ஈர்த்து (SOLAR POWER) அதிலிருந்து பல சாதனை செய்து காட்டுகின்றானாம். இக்காற்றையே கரியாக்கி வாழ்கின்றான்.

1.வரும் சக்தியையே ஒவ்வோர் இடத்திற்கும் தன்னிலைக்குகந்த விஞ்ஞானமாக்கி ஈர்த்து எடுத்து விட்டான்
2.வாழும் மனிதர்கள் இக்காற்றிலிருந்து பிரித்தெடுத்து நல் சுவாசம் எடுப்பதற்குண்டான சக்தியை அழித்து வருகிறான்.
3.இன்றைஅ விஞ்ஞானத்தினால் வந்த வினைதான் இது…!
4.மனிதனுக்கு ஆறறிவு என்று அவன் பெற்ற அறிவினாலேயே உலக நிலையையே இவ்வாறறிவு படைத்த மனிதன்தான் மாற்றுகின்றான்.

இதனால் இவ்வுலகம் மட்டும் மாறப்போகிறதா…? உலகுடன் தொடர்பு கொண்ட எல்லா மண்டலங்களுமே மாறத்தான் போகின்றன.

இன்று இவ்வுலகில் வாழும் மக்களினால் வந்த வினை தான் அது.

1.ஆத்மீக வழியை வழியமைத்தால் ஏற்பதற்கும் ஆளில்லை.
2.இதன் நிலை அறிந்துதான் பல சித்தர்கள் பல உண்மைகளையே மறைத்தார்கள்.

இன்று குழந்தை பெறுவதற்கே செயற்கை முறைப்படுத்திப் பேழையில் கரு வளர்த்து அக்கருவை தாய்க்குச் செலுத்திக் குழந்தையை வளர விடுகின்றானாம்.

இன்று ஒரு சித்தனால் தாயும் தந்தையும் இல்லாமல் இக்காற்றில் உள்ள சகல சக்தியிலும் கலந்துள்ள இம்மனித ஜீவ அணுவிற்கு வேண்டிய ஜீவ அணுவையே பிரித்தெடுத்து அப்பிரித்ததின் ஜீவ அணுவை வளரவிட்டுக் குழந்தையாக்கிக் காட்ட முடியும்.

புராணக் கதைகளில் படித்திருப்பீர்… ஆறுமுகனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள் என்று.

அந்த அறுமுகன் எந்தத் தாயின் கர்ப்பத்தில் இருந்தான் என்பதனைச் சூட்சுமத்தில் மறைத்தார்கள். அனைத்தையுமே இந்நிலையில் வெளியிட்டு நான் என்ற ஆணவத்தை ஏற்படுத்திடவும் விரும்பவில்லை.

நம் சக்தியை நல்வழிக்குச் செலுத்திவிட்டால் அந்நிலையில் என்றுமே நிலைத்திருக்கலாம். சக்தியையே… “நமக்குத் தெரிந்தது…! என்று ஆணவத்தால் செய்து காட்டி என்ன பயன்…? என்றுணர்ந்துதான் அன்றே பல சித்தர்களினால் பலவும் மறைக்கப்பட்டன.

1.எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்தினால்
2.சகல நிலையையும் சகலரும் அறிந்திடலாம்.

baterfly

உயிரினங்கள் ரூபம் பெறுவதை குருநாதர் நேரடியாகக் காணும்படி செய்தார்

 

உதாரணமாக ஒரு தட்டாண் பூச்சி ஒரு செடியில் உள்ள மலரில் அதனுடைய முட்டையை இட்டு விட்டால் அந்த மலரில் வரும் சத்தினைக் கவர்ந்து அது ஒரு பூச்சியாக வளர்ந்து பட்டாம் பூச்சியாக வளர்கின்றது.

அந்தப் பூ என்னென்ன கலரில் இருந்ததோ பட்டாம் பூச்சி அந்த பூவில் இருந்து வரக்கூடிய நிலைகளைக் கவர்ந்து (XEROX) அதனுடைய இறக்கைகள் பூவின் ரூபமாக இருப்பதையும் காணலாம்.

ஏனென்றால் இதை உங்களுக்கு நான் (ஞானகுரு) லேசாக சொல்கின்றேன். அந்தப் பட்டாம் பூச்சிகள் அது எவ்வாறு உருவாகிறது…? என்று குருநாதர் காடும் மேடும் அலையச் செய்து அது உருப்பெறும் விதங்களை அறியும்படி செய்தார்.

இப்பொழுது நான் அறிந்த நிலைகளை நீங்களும் அறிய வேண்டும் என்றால் உங்கள் தொழிலை விட்டுவிட்டு அறியச் சென்றால் சோறு யார் போடுவது…?

எனக்குச் சோறு இல்லை என்றாலும் காட்டிற்குள் இரண்டு பச்சிலையைக் கையில் கொடுத்து அதை மென்று தின்ற பிற்பாடு வெறும் தண்ணீரைக் குடித்தோமென்றால் பசி தெரியாது.

அந்தப் பசி தெரியாத நிலைகள் கொண்டு பசி என்ற உணர்வு வரப்படும்போது இன்ன பச்சிலையை நீ உணவாக உட்கொள் என்று குருநாதர் காட்டியிருந்தார்.

1.அந்த ஒரு பச்சிலையை அதிலே ஒரு துண்டு தான்…!
2.அதை ஒரு நிமிடத்தில் உட்கொண்டுவிட்டு
3.மீண்டும் அவர் எதைச் சொன்னாரோ அது குறி தவறாது அந்த நினைவாற்றலைச் செலுத்தும்படி சொல்வார்.

அப்படிச் செலுத்தினால் தான் எனக்குள் நுகர்ந்த உணர்வுகள் அது எப்படி உருமாறுகின்றது…? அந்த உணர்வின் தன்மை ஒன்றோடு ஒன்று மோதும் போது எப்படி அதனுடைய உணர்வலைகள் அது இயங்குகின்றது என்ற நிலையை உணர முடியும். இப்படித்தான் குருநாதர் தெளிவாகக் காணும்படி செய்தார்.

இதை எல்லாம் நீங்கள் இங்கே அமர்ந்து கேட்கின்றீர்கள். நான் அங்கே இயற்கையின் நிலைகள் எப்படி உருப்பெறுகின்றது…? என்று
1.குரு அருள் அவருடைய வலுத் துணை கொண்டு
2.அதனை அறியும் வாய்ப்புகளை எனக்குக் கொடுத்தார்.

அவர் எனக்குக் காட்டிய அதே வழிப்படி உங்களுக்குள் இதை உபதேசிக்கும் போது இதன் உணர்வை நினைவாற்றலாக நீங்கள் வரும்போது
1.இயற்கையின் நிலைகளை நீங்களும் உணர முடியும்
2.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்… அதை மாற்றியமைக்கவும் முடியும்.

அந்தப் பட்டாம்பூச்சிகள் அதனுடைய இறக்கைகளில் இந்த பூவிலிருந்து அது இழுக்கும் துகள்களில் பல வர்ணங்களில் வேஷமாகப் போடும்.

நீங்கள் பார்த்திருப்பீர்கள்…! எத்தனையோ வண்ணத்தில் பட்டாம் பூச்சிகளை. அதிலே எத்தனையோ வகையான பூச்சிகள் உண்டு இதெல்லாம் முதலில் புழு இனங்களாக வந்து பின் பூச்சி இனங்களாக மாறி பின்பு பறவை இனங்களாக மாறுகின்றது அது கவர்ந்த உணர்வுக்கொப்ப என்ற இந்த நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

அதே சமயத்தில்… ரேவதி நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளும் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உணர்வுகளும் இரண்டும் ஆண் பெண் என்ற நிலைகளில் ஒன்றாக இயங்கி… உணர்வின் சத்தைக் கவர்ந்து… தான் கவர்ந்த உணர்வுகளை அந்தந்த குணங்களுக்கொப்ப அணுவின் தன்மை உருவாக்கி… அதனின் மணம் அது உடலாக்கி… அந்த உடலின் ரூபங்கள் எப்படி உருவாகின்றது…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

இதை நாம் அறிவதற்காக…
1.இந்த உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்
2.உயிரின் இயக்கத்திற்குள் ஏற்படும் ஈர்ப்பை (காந்தம்) லட்சுமி என்றும்
3.அந்த ஈர்ப்பால் அதனுடன் இணைந்து உருப்பெறும் சக்தியை பிரம்மம் என்றும்
4.நமது உயிரின் இயக்கங்களை குரு தெளிவாக்குகின்றார்.

இந்த உயிர் எதனைக் கலவையாக உருவாக்குகின்றதோ அதன் உணர்வின் தன்மை கொண்டு அதனதன் உணவாக எடுத்து அந்த உணர்வின் தன்மை விளையும்.

அந்த உணர்வின் தன்மை உணவு எதுவோ அக்குணத்தின் தன்மை எண்ணங்கள் கொண்டு இயங்கும் என்ற நிலையை தெளிவாகக்கிக் கொடுக்கின்றார்கள்.

இவ்வாறு வளர்ந்த அந்த நிலைதான் முதலிலே ஒரு புழுவாக உருவாக்குகின்றது. அங்கே உயிர் ஈசனாகவும் உயிருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் அதே சமயத்தில் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும் இங்கே உருப்பெறுகின்றது

இதை எல்லாம் உயிரினங்களில் ரூப மாற்றம் எப்படி…? என்பதை ஆதியிலிருந்து குருநாதர் வரிசைப்படுத்திக் காட்டினார்.

Climate change

மனிதனால் பூமியில் புதைக்கப்பட்டுள்ள அணுகுண்டுகளின் பாதுகாப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இங்கே சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றோம் என்பதின் பொருளே
1.இக்கலியின் மாற்றத்திலிருந்து மக்களை நல்வழியில் கல்கிக்கு அழைத்துச் செல்வதற்காக
2.பல சித்தர்களினாலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை இன்று இந்நிலையில் அச்சித்தர்களுடன் கலந்தே
3.இவ்வுலக மக்கள் இதிலிருந்து மீண்டு உண்மையை உணர்ந்து ஏற்று நடப்பதற்காகத்தான்
4.இந்தச் சக்தி அனைவருக்கும் பொதுவானதே.

அச்சக்தியின் நிலையை ஏற்கும் தன்மை மட்டுமல்ல ஏற்றதனை வழி நடப்பதிலும் அச்சக்தியின் தன்மையுள்ளது.

அனைத்தையும் அறிந்து விட்டோம் என்ற நிலையில் நம் சக்தியை விரையமாக்கினாலும் அச்சக்தி நிலைத்திடாது. அச்சக்திகளை நிலைநிறுத்தி வாழும் தன்மையிலே வழி வந்திட வேண்டும் நாம் அனைவருமே.

சூரியனிலிருந்து நாம் அணுக்கதிர்களைப் பெற்று வாழ்கின்றோம். அவ்வாவியான அணுவேதான் இவ்வுலகும் அனைத்து உலகுமே.

ஆவியான அணுவை ஆக்கும் வழியில் செயல்படுத்திடாமல் அழிக்கும் நிலைக்குச் செயல்படுத்திடும் வினையை இவ்வுலக மக்கள் கூடிய விரைவில் உணரும் காலம் மிகவும் நெருங்கிக்கொண்டே வருகிறது.

எந்நிலையில் என்று கேட்பீர்கள்…?

இவ்வுலகில் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைக் கொண்டேதான் பல நிலை பெற்ற செயல்களை இம் மனிதனின் எண்ணம் கொண்டு உருவாக்கியுள்ளான்.

இவன் உருவாக்கிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாக்கும் நிலையில் பூமியின் அடியில் புதைத்துப் பல இரும்புக் கவசங்களைக் கொண்டு சிறு அணுவும் வெளிப்படாத நிலையில் தன் அறிவை எல்லாம் சக்தியையெல்லாம் செயல்படுத்தி விஞ்ஞானக் குண்டுகளைப் பல நாடுகளில் புதைத்து வைத்துள்ளான்.

“இன்று வெடிக்கப் போகின்றேன்… நாளை வெடிப்பேன்…!” என்று பயமுறுத்தலுடன் பயமுறுத்தலுக்காக வைத்துள்ள குண்டுகளை இவனும் வெடிக்கப் போவதில்லை… மற்றவனும் வெடிக்கப் போவதில்லை.

ஆனால் இவ்வுலகம் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில் சூரியனின் அணுக்கதிர்களைப் பெற்றுக் கொண்டே உள்ளது. இவ்வுலகமும் ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

ஆவியில் வந்த அணுக்கதிர்கள்தான் அனைத்துமே. இவ்வுலகம் ஈர்த்த நிலையில் அது வெளிப்படுத்தும் நிலைகொண்டு இவ்வுலகத்தின் பாதுகாப்பினால் ஆன அணுகுண்டுகள் வைத்துள்ள நிலையெல்லாம் இப்பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியை ஈர்த்துக் கொண்டே உள்ளன.

இந்நிலையிலேயே இன்னும் சில காலங்களில் அதன் சக்தி இழந்து இவ்வுலக சக்தி தன்னுள் ஈர்த்த சக்தியை வெளிப்படுத்தும் நிலையில் கக்கும் நிலையில் அதன் மேல்பட்டு ஓர் இடத்தில் வெடிக்கும் நிலையில் அணுக்களின் சிதறலினால் அனைத்து அணுகுண்டுகளுக்கும் அதனதன் ஈர்க்கும் நிலையில் அனைத்தும் வெடிக்கும் நிலை மிகக் குறுகிய காலத்தில் உள்ளது.

இப்பூமியில் அணுகுண்டுகள் வெடிக்கும் நிலையில் இப்பூமியே அதிரும் நிலையில்தான் சிறு அதிர்வினால் இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வரப்போகின்றது.

இந்நிலையை அறிந்து நல்வழி பெற்று வாழ்வதுதான் நம்மால் இன்று செய்திட முடியும்.

இன்று இந்நிலையை வெளிபடுத்துபவர் ஏன் அந்நிலையிலிருந்து காப்பாற்றலாமே…? என்ற வினாவும் எழலாம்.

1.அனைத்தையும் அறிந்து சூட்சும நிலைகொண்டு நல்வழி புகட்டிடலாமே தவிர
2.அனைத்தும் அறிந்த ஆண்டவன் என்ற அச்சக்தியின் சக்தியே நான் என்ற சக்தி எனக்கில்லையப்பா.

யானறிந்த சக்தியை என்னுடன் கலந்துள்ள பல ரிஷிகளின் நிலை கொண்டே இந்நிலையை வெளியிடுகின்றேன். அதி விரைவில் அனைவருக்குமே வெளியிடவும் காலம் சொல்வோம்.

Full moon meditation

பௌர்ணமி தியானத்தின் மூலம் அபரிதமான சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்கின்றோம்

 

இன்று நமது வாழ்க்கையில் ஒரு நிமிடம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றால் சந்தர்ப்பத்தால் அடுத்த கணம் மனம் இருள் சூழ்ந்துவிடுகின்றது.

இதைப் போன்று மாறி மாறி வரும் இந்த நிலைகளில் இருந்து மாறாத நிலைகள் பெற்ற அந்த ஞானிகளின் உணர்வின் அலையைப் பெறச் செய்யக்கூடிய அந்தப் பிரகாசமான நாள் தான் நம் குருநாதர் காட்டிய இந்த பௌர்ணமி நாள்.

பௌர்ணமி அன்று நாம் எல்லோரும் சேர்த்து நம் மூதாதையருடைய உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களை உந்தித் தள்ளி சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்வதற்கே இந்த பௌர்ணமி தியானம்.

அவர்கள் முதலில் விண் சென்றால் அவர்கள் வழியில் நாமும் பின் நாம் செல்ல முடியும். நாம் முன்னாடி அங்கே அந்தப் பாதத்தை… பாதையை வகுத்துக் கொண்டால்தான் அந்த நிலைகள் பெற முடியும்.

ஆகையினாலே ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் இருந்தே அந்த அழியா ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டுமென்ற எண்ண வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த உடலைவிட்டு நாம் சென்ற பின் அந்த மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை நாமும் அடைய வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நம்மை எதிர்கொண்டு துன்ப அலைகள் வீசுவதை அது நம்மை அணுகாது அந்த மகரிஷிகளின் உணர்வலைகளைச் சுவாசித்து அதிலிருந்து காத்து அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் விண் செல்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானம்.

ஆகையினாலே….
1.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வழியில் செல்ல வேண்டும் என்று
2.நம் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டால் தான் அங்கே செல்ல முடியும்.

இல்லை என்றால் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொன்னேன். என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லை… நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். என் மேல் வலி கால் வலி போகமாட்டேன் என்கின்றது. கொடுத்த கடன் திருப்பி வரமாட்டேன் என்கின்றது என்று இப்படி எல்லாம் ஊடே ஊடே கலந்து கொண்டிருந்தால் எல்லாம் போய்விடும்.

நமக்கு வர வேண்டிய பாக்கி வர வேண்டும். கடன் கொடுத்தோமென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்களுக்கு வருமானம் வர வேண்டும்… எனக்குத் திரும்பக் கொடுக்கும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் பணம் வரும்.

இதைப்போன்ற பக்குவ நிலை கொண்டு நாம் எண்ணத்தை வளர்க்கும்போது
1.பிறிதொரு தீமையான உணர்வின் தன்மை வராது தடுத்தால்
2.நமக்குள் அதுவே பெரும் சொத்தாக வந்து சேர்ந்துவிடுகின்றது மெய் ஒளியின் சத்தாக…!

இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் இதைச் செய்யலாம்.

இல்லை என்றால் இந்த மனித வாழ்க்கையில் என்ன செய்கிறோம்…?

நம் உடலைவிட்டு ஈசன் சென்று விட்டால் அப்புறம் நீச உடலுக்காக வேண்டித் தான் வெகுநாளாகப் பாடுபட்டிருக்கின்றோம் என்று அர்த்தம். ஏனென்றால் உயிர் போய் விட்டால் அப்புறம் என்ன இருக்கின்றது…?

நாற்றமாக இருக்கின்றது… சீக்கிரம் தூக்கிக் கொண்டு போய் விடுங்கள்… ஐஸ் கட்டி (FREEZER BOX) வைத்துவிடுங்கள்… அதை வையுங்கள் இதை வைத்துவிடுங்கள்…! என்று தானே சொல்கின்றோம்.

எவ்வளவு செல்வமாக அழகாக இந்த உடலை வளர்த்திருந்தாலும் அதிலே ஒரு சிறு அழுக்கு பட்டு விட்டால் என்ன பாடு படுகின்றோம்…!
1.ஆனால் அந்த ஈசன் உயிரை விட்டுப் போன பிற்பாடு என்ன செய்கின்றோம்…?
2.நடப்பதை எல்லாம் நாம் கண்ணிலே பார்க்கத்தான் செய்கின்றோம்
3.ஆனால் இது நமக்கு நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது.

ஏனென்றால் நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது செல்வோம்…? என்று யாருக்கும் தெரியாது

ஆகவே இந்த உடலில் உயிர் இருக்கும்போது அந்த மெய் ஞானிகளுடைய அலைகளை ஒளி வட்டமாக நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த நிலைகள் பெற வேண்டுமென்பதற்குத்தான் இந்த தியானத்தை உங்களுக்குள் சொல்லிக் கொடுப்பது. நம் மூதாதையர்கள் இன்னும் நமது பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய ஆத்மாக்கள் இன்னொரு உடலில் புகுந்திருந்தாலும் நாம் அடிக்கடி இது மாதிரி செய்யப்படும்போது அந்த உடலை விட்டு வெளிவரப்போகும்போது அந்த ஆத்மாக்களையும் நாம் விண் செலுத்திவிடலாம்.

ஆகையினாலே நீங்கள் ஒவ்வொருவரும் ஏனோ என்று இல்லாதபடி இந்த தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் உங்கள் வீட்டில் கூட்டுத் தியானங்கள் இருக்க வேண்டும். உங்கள் முதாதையர்களை விண் செலுத்த கூடிய எண்ணங்களைச் செலுத்த வேண்டும்.

அடுத்தாற்படி நாம் செய்ய வேண்டிய முறைகள் என்ன…?

நமக்குள் யாராவது பகைமை வெறுப்பு என்ற நிலைகளில் இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று அதைத் தணிக்க வேண்டும்.

உதாரணமாக நாம் பொண்ணு கொடுத்திருப்போம். மாமியார் வீட்டில் கொஞ்சம் தொல்லை கொடுத்திருப்பார்கள். அடப்பாவிகளா… இப்படி செய்கின்றார்களே…! என்று அவர்கள் மேல் பகைமையை வளர்த்துக் கொண்டே இருப்போம்.

அப்பொழுது அந்த உணர்வு என்ன செய்யும்…? நம் உடலில் அந்த உணர்வு விளைந்து கொண்டே இருக்கும். பின் நல்ல உடலை நோயாக மாற்றிக் கொண்டு இருக்கும்.
1.நாம் சொல்லக்கூடிய உணர்வுகள் நம் குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் அங்கே சாடும்
2.இப்படி அந்தச் சிக்கலில் இருந்து மீளாதபடி
3.அந்த விஷத்தின் தன்மை ஒன்றில் பட்டுவிட்டால் அந்த விஷத்தின் நிலைகளில் நாம் மூழ்கி விடுகின்றோம்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி இதுதான். நாம் செய்ய வேண்டிய நிலைகள் வாரத்தில் ஒரு நாள் நாம் கூட்டு தியானம் இருக்கப்படும்போது
1.நாம் யார் கூட எல்லாம் வெறுப்பின் தன்மை அடைந்தோமோ
2.குடும்ப சகிதமாக எங்களுடைய பார்வை எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்.
3.எங்களுடைய பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் நிலைகள் வர வேண்டுமென்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம் மேல் பகைமை கொண்டிருந்தால் என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என் சொல் அவரை இனிமையாக்க வேண்டும். அவர்கள் என்னைப் பார்க்கும்போது நல்ல நிலைகள் அடைய வேண்டும். என் வாடிக்கையாளர் நல்ல நிலைகள் அடைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்பொழுது கடன் கொடுத்து வாங்குகின்றோம் என்றால் அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும். எனக்கு கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் வர வேண்டும் என்று இவ்வாறு எண்ணிக்கொண்டு இருந்தீர்கள் என்றால்
1.அங்கே பகைமை தீருகின்றது
2.நமக்குள் மெய் ஒளி வளருகின்றது
3.அந்த மெய்யின் தன்மை நாம் நிச்சயம் அடைய முடியும்.

அந்த நிலை பெறுவதற்குத்தான் வாரத்தில் ஒரு நாள் நீங்கள் கூட்டுத் தியானம் இருங்கள் என்று சொல்வது.

Sri Vivekananda

ஜெப நிலையின் (தியானம்) முக்கியத்துவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கேள்வி:
நாம் ஏதாவது ஒரு காரியத்தைப் பற்றி முடிவு எடுக்க முடியாமல் இருந்தால் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டு இருக்காமல் அந்த விஷயத்தை ஆராய்ந்து கூறுமாறு அந்தராத்மாவிடம் ஒப்பித்து விட்டு நமது வேறு காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அந்த அந்தராத்மா அந்தக் காரியத்தை அலசிப் பார்த்து சரியான விடையைக் கண்டு பிடித்து நம் வெளி மனதிற்குத் தெரியப்படுத்தும் என்று எண்ணுகின்றேன்.

ஈஸ்வரபட்டர்:
இந்நிலைதான் ஜெப நிலை (தியானம்) என்று நான் உணர்த்தும் நிலை.

ஒரு நிலைக்கு நம்முள் தீர்வு கண்டிட நம்முள் சுற்றியுள்ள எண்ணச் சிதறல்களை ஒரு நிலைப்படுத்தி அந்நிலையிலேயே நம் மனதை அமைதியுறச் செய்து அந்நிலையில் நம் மனது தெளிவு பெறும் நிலைதான் நீங்கள் சொல்லும் அந்தராத்மா முடிவெடுக்கும் நிலை என்பது.

அந்நிலைதான் ஜெப நிலையும். ஜெபம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் நிலைதான்.

இன்று நம்மில் கலந்துள்ள பல பெரியோர்களின் வழியில் அவர்கள் வழிப்படுத்திச் சென்ற நிலை வாழ்க்கை நிலைக்கும் ஜெப நிலைக்கும் வேறுபாடில்லை.

வாழ்க்கை நிலையில் வரும் நிலைகளுக்குத் தெளிவு பெற வழியமைத்த நிலைதான் இஜ்ஜெபநிலை. இந்நிலையையே ஞானிகளும் சித்தர்களும் வழியமைத்து வந்ததுதான் அவர்களின் உயர்ந்த நிலை.

இவ்வெண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் பல நிலைகளில் செயல் படுத்துகிறது.
1.உள் மனம் வெளி மனம் மட்டுமல்ல
2.முதல் பாடத்தில் சொல்லியுள்ளேன் அகக்கண் புறக்கண் என்பதையே ஞானக்கண்ணால் வென்று வா என்று.

சாதாரண மனிதர்களின் நிலைக்கும் சித்தர்களின் நிலைக்கும் எந்நிலையில் மாற்றம் உள்ளது…?

நாம் சாதாரண மனிதர்களாகிய நாம் ஒன்றை எண்ணும் பொழுது பிற நிலை தாக்கினால் நம் எண்ணம் ஒன்றையேத்தான் சுற்றிக் கொண்டிருக்கும். அந்நிலையில் தாக்கும் மற்றதின் நிலையை இந்நிலைபோல் செயல்படுத்திட முடிந்திடாது.

1.எண்ணத்தின் சிதறலைத் தாங்கும் சக்தியை இழந்து
2.அந்நிலையில் மனச் சோர்வு கொண்டு நம்மை அறியாமல் பல சொற்களை வெளியிடுவோம்.
3.நம் நிலைக்கும் பதட்டம் வரும்
4.அப்பதட்டத்திலிருந்து வருவது தான் கோபமும்.

இப்படி நாமே வளர்த்துக் கொள்வதுதான் நம்மில் இந்நிலையெல்லாம். இந்நிலையில் இருந்து மீள்வதற்குத் தான் பல நிலையின் மோதல்களைத் தாங்கும் நிலை ஏற்படுத்திட ஜெபம் என்ற நிலையை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள்.

ஜெப நிலையை நம்முள் ஏற்படுத்திக் கொண்டால் எந்நிலையிலும் அது தாக்கும் நிலையிலேயே அந்நிலைக்குத் தீர்வு கண்டிட நம்மைப் பக்குவப்படுத்திடும் நிலையாக வரும். நம்மை நாமே அடிமைப்படுத்தும் நிலையிலிருந்து அத்தகைய ஜெப நிலையைப் பெற்றிட வேண்டும்.

இதை நமக்குப் புரியச் செய்வதற்காகப் பல இதிகாச நூல்களில் ஆண்டவன் என்று ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல தலைகள் பல கைகள் இருப்பதாகக் காட்டினார்கள் ஞானிகள்.

ஆண்டவன் ஒரே சமயத்தில் பலருக்கும் எந்நிலையில் அருள் புரிகின்றார் என்பதைப்போல் சித்தர்கள் மக்களுக்கு உணர்த்தும் வகையில் உணர்த்திய வழிகள் தான் ஆண்டவனுக்குப் பல தலைகளும் பல கைகளும் காட்டப்பட்டது.

சூட்சும நிலையில் உள்ளவர்கள் (ஞானிகள்) ஒரே சமயத்தில் பல நிலைகளில் தன் செயலைச் செயலாக்குகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவரவரின் எண்ணத்தின் சிதறலினால்தான் பல நிலைகள் பதட்ட நிலை பெற்று தன்னுள் தன்னையே கைதியாக்கி வாழ்கின்றான்.

உள் மனம் வெளி மனம் என்பதல்ல இவ்வெண்ண மனம். பல நிலைகளுக்குச் சென்றாலும் ஒரு நிலைப்படுத்திடும் பக்குவம் பெற்றாலே ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிற்கு நல் சொத்தைச் சேர்த்த நிலை பெறுகின்றான்.

1.இன்று மக்களுக்குப் போதனை நிலையும் குறைவு
2.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் குறைவு
3.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் (தாய் தந்தை) உபதேசிக்கும் நிலையற்றதினால் வந்த நிலை இவ்வுலகின் நிலை இன்று.

முந்தைய காலத்தில் பல நீதி நிலைகளைக் கதையாக்கி தாத்தா பாட்டி கதை என்ற ரூபத்திலும் அரிச்சந்திரனின் கதையாகவும் விக்கிரமாதித்தனின் கதையாகவும் மக்களின் எண்ணத்தில் பதிய வைப்பதற்காகப் பல நீதி நூல்களை வெளியிட்டார்கள்.

இன்று அனைத்து நீதி நூல்களையுமே ஆராயும் தன்மையில் வைத்துள்ளார்கள். அந்நிலையையும் மாற்றி அன்று சித்தர்கள் வெளியிட்டதின் வழியிலேதான் இன்று இருக்கும் விஞ்ஞான உலகத்தின் அறிந்த நிலையெல்லாம்.

“முள்ளை முள்ளால் எடு…” “வைரத்தை வைரத்தால் அறு…” என்பதைப் போல் ஒவ்வொரு நோய்க்கும் அந்நோயின் தன்மை கொண்ட எந்நிலை கொண்ட நோய் வருகிறதோ அதன் தன்மைக்குகந்த மருந்தை அதன் விஷத் தன்மையிலேயே அதற்கு மேல் இதை ஏற்றி இதை வெளிப்படுத்தும் நிலையை உணர்த்தியவர்களே நம் சித்தர்கள் தான்.

இவ்வுலகில் வந்து குவியும் அமிலத் தன்மையிலிருந்து பல நிலைகளைத் தன்னுள் ஈர்த்து ஒவ்வொன்றையும் செயல்படுத்திக் காட்டிய பல ரிஷிகள் உள்ளார்கள்.

போகரின் நிலையும் போகரை ஒத்த நிலைகளில் உள்ள பல ரிஷிகளின் நிலையும் இன்று அழியாத உடலை எந்நிலையில் பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

இக்காற்றில்தான் அனைத்து நிலைகளுமே கலந்துள்ளன. தன் நிலையையும் தன் உடலையும் அழியாத நிலைப்படுத்திப் பாதுகாக்கும் பக்குவத்தை இன்றும் ஈர்த்துச் செயல்படுத்துகிறார்கள்.

இவ்வுடலையே கல்லாகவும் எந்நிலைக்கொண்ட உலோகம் போலவும் காத்து வைத்திட முடியும். இக்காற்றில் உள்ள அமிலத்தை தனக்குகந்ததை ஈர்த்துக் காத்து வருகின்றார்கள்.

வைரமாகவும் இவ்வுடலை ஆக்கிட முடியும். மண்ணுடன் மண்ணாக மக்கும் நிலையிலும் ஆக்கிடுகின்றோம்.

அனைத்துமே இவ்வெண்ணத்தினால் வந்ததுதான்…!

உலக சக்தியும்… சக்தியாக சக்தியுடனே நம் எண்ணத்தைக் கலக்கிவிட்டு நல்சக்தி பெற்றுவிட்டால் “அனைத்து சக்திகளையுமே நம்முள்ளே கண்டிடலாம்…!”

இவ்வெண்ண சக்தியினால் வளர்வதுதான் வளர்வது மட்டுமல்ல வாழ்வதுதான் இவ்வுலகமும் பிற உலகங்களுமே.

pipal-tree-vinayagar

அரச மரத்தைப் போல் நம் நினைவுகளை விண்ணிலே ஊடுருவிப் பாய்ச்சி மெய் ஞானிகளின் உணர்வைக் கவர்தல் வேண்டும்

 

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றதை விநாயகன் என்றும் இந்த வினையெல்லாம் தீர்க்கும் தகுதி பெறுகின்றான் என்றும் ஞானிகள் காட்டுகின்றார்கள்.

வினையெல்லாம் தீர்ப்பவனே விநாயகனே… ஆதிமுதல்வனே…! என்றும் சொல்கிறோம். ஆதிமுதல்வன் என்றால் யார்…?

நம்முடைய இந்த மனித உடலை உருவாக்கிக் கொண்டு வருவதற்கு ஆதிமுதல்வனாக இருந்தது நமது உயிர். அதைத் தான் ஆதிமுதல்வன் என்றார்கள் ஞானிகள்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? விநாயகர் கடவுளுக்கு அப்பாற்பட்டவர். அவர்தான் முதல்…! என்ற நிலைகளை நாம் எண்ணுகின்றோம்.

நம் உடலுக்குள் நின்று இந்த மனிதனாக உருவாக்கிய இந்த நிலைகளை “ஆதிமுதல்வன் நம் உயிர் தான்…!” என்று தெளிவுற அன்று உணர்த்தியுள்ளார்கள்.

விநாயகருக்கு புல்லைக் காட்டித் தழை தாம்புகளை வைத்து அதை அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் ஸ்தல விருட்சமாக வைத்து இதை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

அரசு என்ன செய்கின்றது…? ஒரு குருவி அந்த அரசம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அது இட்ட மலம் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால் அதற்குள் அந்த வித்து நீரேயற்ற இடத்தில் வளரத் தொடங்குகிறது.

இப்பொழுது நாமெல்லாம் ஒரு வீட்டில் குடியிருந்தோமென்றால் அங்கே நாம் நீரைச் சிந்துவோம். அதிலிருந்து வரக்கூடிய வாசனைகள் படும். இது அதனால் முளைத்தது என்று சொல்லலாம்.

ஆனால் குருவிகள் இட்ட அந்த மலத்தின் தன்மை கொண்டு அரச வித்து ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால்…
1.அந்த அரசு காற்றிலே இருக்கக்கூடிய வீரிய சக்தியும்
2.தன் இனமான சக்தியையும் எடுத்து ஓங்கி வளர்ந்து
3.தன் விழுதை நீர் இருக்கும் இடத்தில் பாய்ச்சித் தனக்கு வேண்டியதை நுகர்ந்து எடுத்துக் கொள்கின்றது.

அதனின் விழுதுகளில் உள்ளது போல இலைகளில் உள்ள நரம்பியல்கள் காற்றில் இருக்கும் ஈரப்பதைத் தனக்குள் அது உறிஞ்சி தன் உணர்வின் தன்மையை வலுப் பெறும் தன்மையை அது அடைகின்றது.

அன்று மனிதனாக வாழ்ந்தவர்கள் தங்கள் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

விண்வெளியிலே சப்தரிஷி மண்டலங்களாக இருக்கிறதென்றால் அங்கே எல்லை இல்லை. ஆனால் தனித்து நிற்கின்றது. நீரோ குளமோ அங்கே கிடையாது.

இருந்தாலும்…
1.மனிதனாக இருந்த போது தன் உடலில் உணர்வின் தன்மை ஒளியான வித்தாக மாற்றி
2.விண் சென்றபின் பேரண்டத்தில் வரும் விஷங்களை எல்லாம் முறித்து
3.உணர்வின் தன்மையை தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் நிலையான சரீரமாக
4.எந்த உழைப்பும் இல்லாமல்… தூங்காது…
5.தூங்காமல் தூங்குவது எக்காலம் என்பது போல ஓங்கி வளர்ந்து
6.இன்றும் நிலையான சரீரம் பெற்றுள்ளார்கள் என்ற நிலையைக் காட்டி
7.அந்த நிலையை நாம் அடைய வேண்டும் என்பதற்குத்தான் அரசையும் வேம்பையும் வைத்துக் காட்டுகின்றார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்தாலும் இடைப்பட்ட நேரங்களில் கசப்பின் தன்மையான உணர்வுகள் நாம் நுகர நேருகின்றது. நம்மை மேலே எழுந்திரிக்காமல் செய்கின்றது.

அதே சமயம் நாம் விண்ணை நோக்கி அண்டத்திலே இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்து… கசப்பான நிலைகளை இங்கே சிறுக்கப்பட்டு அந்தக் கசப்பின் தன்மையை நீக்கி நல் உணர்வின் தன்மை ஓங்கி வளரும் நிலையாக ஒளியின் சரீரம் பெற வேண்டுமென்பதற்காக அங்கே நினைவுப்படுத்தி ஸ்தல விருட்சமாக வேம்பையும் அரசையும் அங்கே வைத்தார்கள்.

ஆனால் இந்த வேம்பையும் அரசையும் நாம் வேடிக்கையாகத் தான் சுற்றி வருகின்றோமோ தவிர அதில் உணர்த்தப்ப்ட்ட உயர்ந்த சக்தியை நுகர்வோர் யாரும் இல்லை. அதை நினைப்பாரும் யாருமில்லை.

சுற்றி வந்தால்… விநாயகன் நமக்கு ஓடி ஓடி வந்து செய்வான் என்றும்… அவன் எங்கோ இருக்கின்றான்…! நமக்கு எப்படியோ வந்து செய்கின்றான் என்ற நிலையிலும் தான் நாம் இருக்கின்றோமே தவிர அந்த உண்மையின் தன்மையை நாம் உணர முடியல்லை.

இன்று இந்த உண்மையைச் சொன்னாலும் நம் உடலுக்குள் பதிவு செய்த இந்த உணர்வுகளோ எதிர்க்கும் நிலையாக வருகிறது.

இப்பொழுது யாம் (ஞானகுரு) இதைத் தெளிவுபடுத்தினாலும் கூட…
1.என்ன…? அன்றைக்கு எழுதி வைத்தவர்கள் எல்லாம் முட்டாளா..?
2.இவர் மட்டும் புதிதாகச் செய்கின்றார் என்றால் அது எப்படி…? என்ற நிலையில்
3.நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்டது அது வெறுக்கின்றது.

ஒரு கசப்பைச் சாப்பிட்ட பின் நாம் இனிப்பை கொடுத்தால் எப்படி இருக்கும்…! அந்த உணர்வின் தன்மை இனிப்பை ஏற்றுக் கொள்ளாது.

அதைப் போல இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் இயக்கங்கள் அந்த உணர்வின் வழிகளைத்தான்… “நாம் எண்ணியதை… இந்த உணர்வின் தன்மை… சேர்த்த மணத்தின் உணர்வின் எண்ணமாக…” நமக்குள் அது இயக்கிக் கொண்டிருக்கின்றது.

எந்த உணர்வு ஆனாலும் நம் உயிர் அந்த மணத்தை நுகர்ந்தால் அதை எண்ணமாக மாற்றுகின்றது.
1.ஆனால் அதற்குள் மறைந்த இந்த உணர்வின் சக்தி
2,இந்த உடலைத் தனக்குள் அதனின் இயக்கமாகச் செயல்படுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஞானிகள் நமக்குக் காட்டிய வழியில் செல்வதே நல்லது.

Nature is God

ஆவியின் பிம்பமான அனைத்து பிம்பமுமே ஆண்டவன் என்று கண்டு ஆண்டவா ஆண்டவா…! என்று வணங்கிட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்கு மட்டும் மற்ற உடலில் ஏறினால் வெளி வரும் சக்தியில்லேயே…! மற்ற முனிவர்களும் சித்தர்களும் ரிஷிகள் மட்டும் தன் சக்தியை எந்நிலையில் செயல்படுத்துகிறார்கள்…? என்று இதைப் படிப்பவர்கள் எண்ணலாம்.

இந்நிலையை அறிவதற்கு முன் இவ்வுலகின் நிலையை முதலில் அறிந்திடுவோம். நேற்றைய பாடத்தில் அனைத்துமே ஆவி தான் என்று உணர்த்தினேன்.

எந்நிலை என்று அறிந்திட எண்ணுவீர்.

இவ்வுலகம் எப்படித் தோன்றியது…? மற்ற மண்டலங்கள் எப்படித் தோன்றின…? இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதே அளவுடன் தான் உள்ளனவா…? இவ்வுலகின் நிலையென்ன…? என்று அறிந்திட எண்ணுவீர்.

ஆவியான உலகங்கள் தான் அனைத்து உலகங்களுமே. உலக ஆரம்ப காலத்தில் உலகம் எப்படி தோன்றியது…? இக்காற்றுடன் இக்காற்றே ஆவிதான்.

காற்றுடன் கலந்துள்ள நீரும்… சகல சக்திகளும்… கலந்துள்ள இவ்வாவி
1.காற்றில் கலந்துள்ள அமிலங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து திடப்பொருளாகி
2.அத்திடப் பொருளில் உள்ள காந்த சக்தியினால் பல அமிலத் தன்மைகள் உள்ள திட பிம்பங்களைத் தன்னுள் ஈர்த்து
3.அதுவே சுழலும் வேகத்தில் இக்காற்றினில் கலந்துள்ள சகல அமில சத்தையும் தன்னுள் ஈர்த்து
4.ஒரே கோளமாக ஆனது தான் இப்பூமியின் நிலையும்.
5.இதைப்போலத்தான் மற்ற பூமிகளின் நிலையும்.
6.சிறுகச் சிறுக ஈர்த்துத்தான் இவ்வுலகமே ஆனதப்பா.

இக்காற்று மண்டல ஆவியில் கலந்துள்ள அமிலத் தன்மையினால் வளர்ந்தது தான் இப்பூமி.

எந்த நிலைகொண்ட அமிலத்தை ஈர்த்து இப்பூமி வளர்ச்சி பெற்றதோ அதே நிலைகொண்ட அமிலத்தைத்தான் இன்றும் ஈர்த்து வளர்கிறது.

இவ்வளரும் நிலை இந்நிலை கொண்டேதான் வளர்ந்து கொண்டே உள்ளனவா…? வளர்வதற்கு சக்தியான அமிலம் எங்கிருந்து வந்து கொண்டே உள்ளது என்றும் எண்ணுவீர்.

இவ்வுலகம் எந்நிலை கொண்டு வளர்ந்ததோ அந்த நிலை கொண்ட சுவாச நிலைகொண்ட உயிர் அணுக்கள்தான் இன்று இவ்வுலகிலுள்ள உயிரணுக்களின் தன்மையெல்லாம்.

இவ்வுயிரணுக்களின் சுவாச நிலையும் இவ்வுலக சுவாச நிலையும் ஒன்று போல்தான் இருந்திடும். இவ்வுலகின் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்க்கின்றன.

இவ்வுலகம் எப்படி ஆவியான அமிலத்தைத் தன்னுள் ஈர்த்து வளர்த்து கொண்டதுவோ அதைப்போல் இவ்வுலகம் வெளிப்படுத்தும் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்த்து அதற்குகந்த நிலையில் அதன் தன்மை உள்ளது.

இவ்வுலகத்தின் சுவாச நிலை ஈர்த்து எடுக்கும் அளவு அதன் ஆவியையும் வெளிப்படுத்துகிறது. அதனால் இவ்வுலகம் வளர்ந்து கொண்டே உள்ளதுவா…? குறைந்து உள்ளதுவா…? என்று எண்ணுவீர்.

இவ்வுலகின் காலங்கள் மாறுபடும் பொழுது இவ்வுலகின் தன்மையிலும் மாறுபாடு நடக்கின்றது. அந்நிலையில் அதன் ஈர்ப்புத் தன்மையில் மாறும் நிலையில் உள்ளது. அந்நிலையில்தான் இவ்வுலகத்தின் அளவு நிலையும் மாறுபடும் தன்மை பெறுகிறது.

இவ்வுலகம் மாறுபடும் நாளில் தான் எல்லா மண்டலங்களுமே மாறுபடும் தன்மை பெறுகின்றது. அந்நிலையில் ஏற்படும் ஆவியின் சக்தி நிலைகொண்டு ஒவ்வொரு மண்டலங்களிலும் மாறுபடும் தன்மைகள் வருகின்றன.

அந்நிலையை சூட்சுமத்தில் வருபவர்கள் அறிந்திடலாம்.

1.இவ்வுலகம் யாரும் கண்டு எடுத்து வாழ்வதற்கு வந்த உலகமல்ல.
2.ஆவியினால் அவதரித்த உலகம்.
3.ஆவியின் உயிரணுக்களை ஈன்றெடுத்த உலகம்.
4.ஆவியின் ஆவியான அனைத்துமே கலந்துள்ள உலகம்.
5.நீ அருந்தும் நீரும் ஆவிதான் நெருப்பும் ஆவிதான்.
6.நீ இன்று செல்வமாக்கக் கருதும் இப்பூமியின் பொக்கிஷங்கள் அனைத்துமே ஆவிதான்.
7.ஆவியின் ஆவிதானப்பா அவ்வாண்டவனே.

ஆவி உலகம் என்பதனை நாம் இன்று பேய் பிசாசு ரூபத்தில் இனி எண்ணிலடாகாதப்பா.

இம்மனித உடலில் இருந்து பிரிந்த ஆத்மாக்கள் தன் ஆசையை செயல்படுத்திடத்தான் இவ்வுலகையே இவ்வுலக மக்களின் எண்ணத்தையே மாசுபடுத்தி இருக்கிறது.

ஆசையின் நிலையிலிருந்து உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் வழிவழியாய் வந்ததின் கொடுமையின் கொடுமைதானப்பா இன்று உடலுடன் வாழ்பவர்களின் நிலையெல்லாம்…!

இதிலிருந்து மீள்வதற்காக முனிவர்கள் சித்தர்கள் ரிஷிகள் இவர்களின் நிலையை விளக்கிடுவேன்.

ஆண்டவா… ஆண்டவா…
ஆண்டவா…. ஆண்டவா…!

ஆண்டவன் எங்குள்ளான்…?
ஆண்டவன் எங்குள்ளான்…?
என்றே அறிந்திட… “ஆண்டவனை”
எங்கும் எதிலும் காண்பதற்கே
என்னையே நான் ஆண்டவனாக்க…
என்னில் அவ் ஆண்டவனை
என்றும் கண்டிடவே….!

என்னுள்ளே அன்பையும்
சத்தியத்தையும் தர்மத்தையும்
அஹிம்சையையும் ஏற்றிடவே

ஏற்றிய வழியினிலே
ஆண்டவனைக் கண்டிடவே
ஆண்டவா… ஆண்டவா…!
என்றே நம் ஆத்ம
ஜோதியை வணங்கிடுவோம்

அகிலத்திலே அகிலமாக
ஆவியின் ஆவியாக
ஆவியின் சக்தியே
ஆவியே ஆண்டவனே…!

ஆவியின் பிம்பமான
அனைத்து பிம்பமுமே
ஆண்டவன் என்று கண்டு
ஆண்டவா ஆண்டவா…!
என்றே வணங்கிடுவோம்…!

Sapdharishi mandalam

இந்த மனித வாழ்க்கையில் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டுமென்று எண்ணும்போது நாம் அங்கே செல்கின்றோம்

 

மகரிஷிகளின் அருள் ஒளியான சக்தியும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து படர்ந்து கொண்டு இருக்கக்கூடிய அதனின் பேரருளும் பேரொளியும் உங்கள் ஈர்ப்புக்குள் நீங்கள் ஈர்க்கப்படும்பொழுது இங்கே அந்த ஒளி அலைகள் பரவுகின்றது.

அவர்கள் பிறவா நிலைகள் பெற்றவர்கள்…! ஒரு நெருப்பிற்குள் போய் ஒரு விட்டில் பூச்சி விழுந்தால் அது என்ன செய்யும்…? அது சுட்டுப் பொசுக்கிவிடும்.

இதைப் போன்று சாதாரணமாக இருக்கக்கூடியவர்கள் நாம்
1.அந்த ஞானியரினுடைய அருள் சக்தியை நேரடியாகப் பெற முடியாது.
2.காரணம்… அவர்கள் எல்லோரும் இந்த பூமியினுடைய பிடிப்பை அறுத்து விட்டுச் சென்றவர்கள்.

பூமியின் பிடிப்பை விட்டுச் சென்ற அந்த ஞானியரின் உயர்ந்த உணர்வலைகளைத் தூண்டச் செய்து… உங்களுக்குள் அதைச் செருகேற்றி…
1.அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்தச் சக்தியை
2.நீங்கள் அத்தனை பேரும் சேர்ந்து இழுக்கப்படும் பொழுது
3/சிறு துளிகளாகச் சேர்ந்து பெரும் மழை போல அது அப்படியே படர்ந்து வருகின்றது.

அதன் மூலம் இப்பொழுது ஒவ்வொருத்தருடைய உடலுக்குள்ளும் சேர்க்கச் செய்வதுதான் முதலில் இருந்த தியானம். தியானம் இருந்த பிற்பாடு நம் முதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் மூதாதையரின் உடலின் உணர்வு கொண்ட சரீரம்தான் நாம். அந்த மகரிஷிகளின் சக்திகளைச் செருகேற்றிக் கொண்ட பின் நம் மூதாதையரின் உயிராத்மாக்களை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று உந்தித் தள்ள வேண்டும்.

அவர்கள் உயிராத்மா சூட்சும நிலையில் உள்ளது. நம் உடல் எந்திரம் போன்று உள்ளது. நாம் எந்திரமாக உந்தித் தள்ளும் போது மூதாதையரின் உயிராத்மாக்களை விண்ணிற்கே செலுத்தி விடுகின்றோம்.

இப்படி நாம் செலுத்திப் பழகினால் அவர்களும் பிறவா நிலைகள் பெறுகின்றனர். அவர்கள் தவமிருக்கவில்லை என்றாலும் நம் உணர்வின் துணை கொண்டு அவர்களுடைய சந்தர்ப்பம் விண் செல்ல நேருகின்றது.

மனித வாழ்க்கையில் ஒன்றும் அறியாத மூடர்களாக இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் மெய் ஞானிகளுடைய ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி பெற்றவர்கள் ஞானியாகின்றார்கள்.

இதைப்போலத்தான் நானும் (ஞானகுரு) ஒரு படிப்பறிவு இல்லாதவன்தான். சந்தர்ப்பம் என் மனைவியினுடைய உடல் நிலை சரியில்லாத போது என் குருவின் (ஈஸ்வரபட்டர்) சந்தர்ப்பம் அவரைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவரால் மனைவி எழுந்து அது நடமாடும் நிலையும் வந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு…
1.குருவின் ஈர்ப்பிலே நான் சிக்கப்பட்டு
2.அவர் உணர்த்திய உணர்வின் ஆற்றல்தான் சந்தர்ப்பம் நான் இதைப் பெற முடிந்தது…
3.இதை எல்லாம் என்னால் பேசவும் முடிகின்றது.
4.ஏட்டுச் சுவடிகளிலோ மற்றவைகளைக் கற்றுணர்ந்தோ நான் இதைப் பெறவில்லை…. நான் அதைப் பேசவும் இல்லை.

குரு காட்டிய அருள்வழி கொண்டு உணர்த்திய அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அனுபவரீதியாகக் கண்டுணர்ந்து என் உடலில் அனுபவித்த இந்த உண்மையின் நிலைகள் கொண்டுதான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே இந்தச் சக்தி பெற்றவர்கள் அனைவருமே நாம் முதாதையர்களை முதலிலே விண் செலுத்தினால் நாமும் அங்கே செல்கின்றோம்.

இதைப்போன்ற வலுவை நாம் ஏற்றிக் கொண்ட பின் நமக்குள் எத்தகைய துன்பம் நேரினும்… எத்தகைய துன்பம் கஷ்டம் வந்தாலும்… அதை நாம் மறக்க வேண்டும்.

அதை மறக்கச் செய்வதற்கு ஈஸ்வரா…! என்று உயிரின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டுமென்று விண்ணை நோக்கி ஏகும்போது… அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறக்கூடிய தகுதியினைப் பெறுகின்றீர்கள்.

அத்தகைய தகுதி பெறத்தான் இந்தத் தியானம்…!

இதே மாதிரி நாம் ஒவ்வொரு நிமிடமும் நாம் நினைவை மேலே விண்ணிலே செலுத்தி அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இழுத்து நம் உடலுக்குள் செலுத்தி இந்த உணர்வை வலுப்பெறச் செய்தால் இந்த வாழ்க்கையில் வந்த துன்பங்கள் நீங்குகின்றன… இந்த வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகள் எல்லாம் நீங்குகின்றது.

பின் நாம் எதையெல்லாம் நினைவில் வைத்தோமோ… கீதையிலே சொன்ன மாதிரி நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!
1.இந்த மனித வாழ்க்கையில் நாம் அங்கே…
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டுமென்று எண்ணும்போது அங்கே செல்கின்றோம்.

மனிதன் அடைய வேண்டிய எல்லை அது தான்…!

nebulae

ஆவியைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

சக்தியின் சக்திகள்தான் சகலருமே. பாகுபாடு வந்ததெல்லாம் மனிதரின் எண்ணத்தில் தான்…!

அனைத்து உலகமுமே எந்த நிலையில் அமைந்தன…?

அனைத்து உலகத் தன்மையுமே ஆவிதானப்பா. அவ்வாவியே “சக்தி தானப்பா…” அவ்வாவியை எவ்வுலகத்திலும் காணலாம்.
1.நீ காணும் சூரியனும் ஆவிதான் (VAPOUR)
2.சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களும் ஆவிதான்
3.நட்சத்திர மண்டலமாகக் காணும் பல கோடி மண்டலங்களும் ஆவிதான்
4.இவ்வுலகமும் நீர் நெருப்பு மாடு மனை நீயும்தான் அனைத்துமே ஆவிதான்.
5.ஏன் சகலமும் ஆவிதான்.
6.சகலத்தில் வந்த ஆவியின் பிம்பம் தான் இன்று நாம் காணும் அனைத்துமே.

ஆவி என்றாலே பேய் பிசாசு என்று மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்தி விட்டார்கள். இப்பீதியை ஏற்படுத்தி யாவரும் அவ்வெண்ணத்தில் கலந்த பயத்தினால் வந்ததுதான்.

இவ்வாவி என்றாலே உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாவையே ஆவி உலகம் என்ற உலகமாக்கி எல்லோர் நினைவிலும் ஆவி என்றாலே அரண்டு நினைக்கும் நிலையில் தான் காலம் காலமாக பழக்கத்தில் வந்துவிட்டது.

ஆவியுடனே ஆவியாக வாழும் நாம் நம்மைப் போல் வாழ்ந்த உடலை விட்டுச் சென்ற ஆவிகள் தன் எண்ணத்தின் நிலைகொண்டு அது அது எடுத்த சுவாச நிலையின்படி சுற்றிக் கொண்டுள்ளது.

வாழ்ந்த காலத்தில் நல்லவனாகவும் தீய நினைவு கொண்ட விஷம் படைத்தவனாகவும் வாழ்ந்ததை நிலைப்படுத்தி தன் குரோதத்திலும் நல் நிலையில் உள்ள நல் ஆவியும் சுற்றிக் கொண்டே உள்ளது.

1.இவ்வுலகினிலே தன் எண்ணத்தை முதலில் செயல்படுத்தி
2.அதன் பிறகு பிறவி எடுக்கலாம் என்ற நிலையில் பல ஆவிகள்
3.அதாவது உடலை விட்டுச் சென்ற ஆவிகள் உடலுடன் உள்ள மனிதர்களின் எண்ணத்துடன் கலந்து செயல்படுத்திட
4.இரண்டு எண்ணமும் ஒரு நிலைப்படும் பொழுது
5.உடலுடன் உள்ளவர்களின் உடலில் உடல் கூடு இல்லாத ஆவிகள் அதன் நிலையைச் செயல்ப்படுத்திட இவ்வுடலில் ஏறுகின்றது.

இவ்வுடலில் வந்து ஏறிய ஆவிகள் அவ்வுடலில் இருந்து கொண்டே தன் எண்ணப்படியெல்லாம் உடலுடன் உள்ள வரை செயல்படுத்துகிறது.

பல துர் ஆவிகளின் நிலைக்கு ஆளாகும் உடலுடன் உள்ளவர்களுக்கு அவர்களின் எண்ணத்தை நல்ல நிலைப்படுத்திட அவ்வாவிகள் அவர்களை விடுவதில்லை.

நாம்… அவர் செய்யும் பாவங்கள் என்று எண்ணுகின்றோம். பாவத்தை அவன் மட்டும் செய்யவில்லை. அவனை ஆட்டுவிப்பது அத் துர் ஆவியின் நிலைதான்.

அறியாமல் தன் எண்ணத்தில் களங்கம் வைத்திருப்பவனுக்கு துர் ஆவிகளின் செயலுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்று உணர்ந்து வாழ்ந்தால் தன் எண்ணத்தைச் சுத்தப்படுத்தி புனித வாழ்க்கை வாழ்ந்து இத் துர் ஆவியின் நிலையிலிருந்து தன் நிலையை உயர்த்தி வாழ முடியும்.

பேய் பிடித்துள்ளது பிசாசு பிடித்துள்ளது ஆவியை ஓட்ட வேண்டும் என்றெல்லாம் ஆவியை ஓட்ட வேப்பிலை தட்டி பலவித ஒலிகளை எழுப்பும் வாத்திய இசையை இசைத்து அவ்வாவியை ஓட்டுவதாகச் சொல்கிறார்கள்.

எவ்வாவியை யார் ஓட்ட முடியும்…?

அவ்வாவிக்கு பிற உடலில் ஏறி தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத்தான் முடிந்திடுமே தவிர உடலில் இருந்து வெளிவந்திட அவ்வாவிக்கு சக்தியும் திறமையும் இல்லை.

அவ்வுடல் என்று மாறுபடுகிறதோ அதனுடன் தான் இவ்வாவியும் வெளிப்படுகின்றது. பிற உடலில் ஏறிய இவ்வாவியினால் மனித ஜென்மத்திற்கு ஜெனனத்திற்கு வர முடிந்திடாது.

ஆண்டவன் சக்தியில் அருளிய ஏழு ஜென்மங்களையே பல ஆவிகள் பயன்படுத்திடாமல் ஆவி உலகிலும் தன் ஆசையை செயல்படுத்திட மற்ற உடலில் ஏறி தன் ஆத்மாவுக்கு அடங்காத இன்னலைத்தானே தேடிக் கொடுக்கின்றது.

ஒருவர் உடலில் இருந்து அவர் ஆவி பிரிந்து செல்லும் பொழுது அவ்வுடலுக்குச் சொந்தமான ஓர் ஆவி மட்டுமா பிரிந்து செல்கிறது…?

அவ்வுடலுடன் இருந்த பொழுது அவன் ஏற்றிக் கொண்ட பல ஆவிகளுமே பிரிந்து செல்கின்றன.

அவன் உடலில் ஏறிய ஆவிகளின் சுவாச நிலை மாறுபட்டு பல பல புதிய புதிய இன வர்க்கங்கள் வருவதுவும் இம்மனித மனங்கள் எடுத்த சுவாசத்தின் நிலையிலிருந்துதான்.

துர் ஆவியைப் போலவே…
1.நல் நிலையில் நம் சுவாசம் கொண்டு பல நிலைகளைத் தன்னுள் காணும் ஒவ்வொருவருக்கும்
2.அந்நிலையில் அவர் உடலில் ஏறிய ஆவிகளும்
3.அவர் எடுத்த அவ்வுடலுடன் உள்ளவரின் சுவாச நிலை கொண்டு
4.அவ்வுடலில் ஏறிய நல் நிலை பெற்ற ஆவிகளும்
5.இவ்வுடலுடன் இருந்தவனின் ஆத்மா பெறும் பாக்கியத்தையே அவையும் பெறுகின்றன.

அதாவது தன் ஆத்மா மட்டும் சாந்தி பெறுவதில்ல. பல ஆத்மாக்களுக்கும் விமோசனம் கிடைக்கின்றது.

Third eye souls

மணிக்கணக்கில் அமர்ந்து எடுப்பது தியானமல்ல… வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்

 

இப்பொழுது நாம் எல்லோரும் ஒரே உணர்வின் தன்மை கொண்டு நாம் எடுத்துக் கொண்ட அந்த ஞானிகளின் அருள் சக்தி நமக்குள் ஓங்கி வளர்கின்றது.

அன்று வாழ்ந்த ரிஷிகள் வசிஷ்டரும் அருந்ததியும் எப்படி ஒருமித்த சக்திகளைக் கொண்டு வந்தனரோ… அதைப் போல
1.நாமும் அந்த ஒருமித்த எண்ணத்தைக் கொண்டு
2.மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தின் மூலம்
3.கவர்ந்து கொண்டு வரப்படும்போது ஒத்த நிலைகள் ஏற்படுகின்றது.

இந்த ஒருமித்த உணர்வின் ஆற்றல்மிக்க வலிமை கொண்டு சிறு துளி பெரு வெள்ளம் போல ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நம் மூதாதையருடைய உயிராத்மாக்களை விண் செலுத்துவதே யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த முறை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய இந்த அருள் வழிப்படி நாம் கூட்டு தியானங்கள் மூலமாக ஏகோபித்த நிலையில் இந்த மகரிஷிகளின் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து இந்த உணர்வை வலுப்பெறச் செய்கின்றோம்.

அந்த வலுவால் நம்முடைய மூதாதையருடைய உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து அவர்களை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

1.அங்கே அந்த சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுக்குள் சென்று
2.இருள் சூழ்ந்த உடலைப் பெறும் நிலைகள் நீங்கி
3.மெய் ஒளி கண்டு மெய் வழியில் என்றும் நிலையான சரீரம் பெற வேண்டும் என்று எண்ணச் செய்வதற்கே
4. குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.

இதைத்தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துவது. ஏனென்றால் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு உண்மைகள் வரும். போன மாதம் பௌர்ணமிக்குச் சொன்னதையும் இந்த மாதம் சொல்லலாம். புதிதாகவும் கருத்துக்கள் வரும்.

ஏனென்றால் இராமயாணக் கதையை எடுத்துக் கொண்டால் ஒன்றே தான் இருக்கும். வேறு எதாவது சொல்வார்களா…? இல்லை.

மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் அதிலுமே ஒன்றே தான் இருக்கும். கீதையை எடுத்துக் கொண்டால் அங்கே கண்ணன் சொன்ன உணர்வும் ஒன்றே தான்.

நாம் பள்ளியிலே படிக்கின்றோம் என்றால் அதிலே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுப்பார்கள். ஐந்தாம் வகுப்பிற்கு மேலே போகும்போது கற்கும் நினைவுகள் சீராக வந்தால் மேல் படிப்புக்கு அடுத்து சீராகப் போக முடியும்.

அதைப் போன்று தான்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள்
2.நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலைகள் பொறுத்துத் தான்
3.விண்வெளியின் ஆற்றலைப் பெறும் தகுதியை நாம் பெறுவது.

பள்ளியிலே பத்தாவது படிப்பு வரை அந்த யுக்திகள் எல்லாம் வாத்தியார் சொல்லி கொடுப்பது நமக்குள் வரும். அந்த யுக்தியின் வலு பெற்ற பின் அடுத்து அந்த சிந்தனையுடன் வெளி வரப்படும்போது அதற்கு அப்புறம் கல்லூரிப் படிப்பு மிகவும் எளிது.

அப்பொழுது நாம் படிக்கும் திறனும் சீராக வருகின்றது. நாம் எதையும் கிரகித்து அது செயல்படும் தன்மை வரப்படும்போது நம்மாலே நம் யுக்தியால் செயல்படும் தன்மை வருகின்றது.

நான்கு வருடத்தில் படிப்பதைக் கூட ஒரு வருடத்திற்குள் படிக்கும் திறன் வருகிறது.
1.பல விதமான பாட நிலைகளைக் கற்றிடும் தன்மையாக
2.தன் உணர்வின் ஞானம் அங்கே வரப்போகும்போது
3.சீக்கிரம் தெளிவாகும் நிலை அங்கே கல்லூரிகளிலே வருகின்றது.

இதைப் போலத்தான் நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் தன்மையை அன்று பக்தி மார்க்கத்தில் காட்டியதை உணர்ந்திருந்தாலும் அந்த உண்மையின் தன்மை உங்களுக்குள் அணு செல்களாகப் பதிவாகியுள்ளது.

அதன் மூலம்… மகா ஞானிகள் காட்டிய… நமது குருநாதர் பெற்ற… மற்ற மகரிஷிகள் பெற்ற அந்த பேரண்டத்தின் பேருண்மையை உங்களுக்குள் மறைந்து இருக்கும் உணர்வின் ஆற்றலைத் தட்டி எழுப்புகின்றேன் (ஞானகுரு).

இந்த உணர்வின் சக்தியைக் கூட்டி நீங்கள் அந்த விண்வெளியின் ஆற்றலை எடுக்கப்படும்போது இன்றைய வாழ்க்கையில் உங்களை அறியாது சேரும் துன்ப நிலைகளை மாற்றிட முடியும்.

அதே சமயத்தில் இதற்கு முன்னாடி அறியாத நிலைகள் உடலுக்குள் சென்று தீய வினைகளாக உருவாகி நோய்களாக இருந்தாலும் நாம் எடுக்கும் இந்த தியானத்தின் மூலம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று எண்ணும்போது
2.அழுக்குத் தண்ணீரில் நல் நீரை விடப்படப் போகும்போது அழுக்கு நீர் குறைவது போல
3.சதா ஒவ்வொரு நிமிடமும் ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை நீங்கள் பின் தொடரப் போகும்போது
4.அது ஒவ்வொரு நொடியிலும் உங்கள் உடலில் வரக்கூடிய துன்பத்தைத் துடைத்திடும் சக்தியாக மலரும்.

ஆனால் வாழ்க்கையுடனே ஒன்றிக் கொண்டு… நான் தியானத்தைச் செய்தேன்… என் கடையில் வியாபாரம் இப்படி குறைந்தது…! நான் அதைச் செய்தேன் இப்படி ஆகிவிட்டது…! என்று மீண்டும் இந்த எண்ணத்தைக் கொண்டு குழப்பினீர்கள் என்றால் மேலே போக முடியாது.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.என் பார்வை எல்லாவற்றையும் நலமாக்க வேண்டும்
4.எங்கள் சொல்லினுடைய நிலைகள் அது இனிமை பெற வேண்டும்
5.எங்கள் செயலின் தன்மை அது புனிதம் பெற வேண்டும் என்று
6.இத்தகைய உணர்வுகளை எடுத்து நமக்குள் படைக்கப்படும் பொழுது அது முதிர்ந்த நிலைகள் நல்ல பலன் தரும்

உதாரணமாக… ஒரு செடியை விதைத்து விட்டு அது வேர் விட்டிருக்கின்றதா… இல்லையா…? என்று நோண்டிப் பார்த்துக் கொண்டு இருந்தால் ஒவ்வொரு வேராக அறுந்து கொண்டிருக்கும்.

சரி வேர் போடவில்லை…! என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாக உரம் போடலாம் என்று சொல்லி உரம் போட்டால் எந்தப் பலனையும் கொடுக்காதபடி அப்படியே அது கருகிப் போய்விடும்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் மணிக்கணக்கில் உட்கார்ந்து நாம் அதிகமான நிலைகள் தியானத்தை எடுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று செய்தால் அது ஒன்று வளர்ந்து விடும்.

ஆனால் நமக்குள் நல்ல குணம் சிந்திக்கும் செயலிழிந்து உட்கார்ந்து இருப்போம்.

நம்மைப் பார்ப்பவர்கள் “ஏனப்பா நீ இப்படிச் செய்தாய்…! உன் பிழைப்பு என்னாவது…?” என்று சொன்னால் இதிலே கசப்பு வெறுப்பு எல்லாமே சேர்ந்து கருகிப் போகின்றது. நம் நல்ல குணங்களை எடுக்க முடியாமல் போகின்றது.

இதையெல்லாம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும்
1.எப்போது நமக்குள் துன்பம் வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை பெற வேண்டுமென்று எண்ணி
3.உடலுக்குள் ஈர்த்து அந்த உணர்வின் சக்தியைச் செலுத்தி நமக்குள் இருள் சூழ்ந்த நிலைகளை அது நீக்கிக் கொண்டே வர வேண்டும்
4.வாழ்க்கையே தியானமாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

adi shankaracharya

கோலமாமகரிஷியால் ஆட்கொள்ளப்பட்ட ஆதிசங்கரரின் அருளாற்றலை எடுத்து வழி நடந்தால் ஆவி உலகத் தொடர்பிலிருந்து பூரணமாக மீளலாம் – ஈஸ்வரபட்டர்

 

அன்றாட வாழ்க்கையில் ஆவியின் தொடர்பில்லாமல் வாழ்வது மிகவும் கடினமான நிலை. தன் எண்ணத்தைச் செயல்படுத்திட எந்த ரூபத்திலும் அவ்வாவி செயல்படுத்திடும்.

அவ்வாவியின் எண்ணமெல்லாம்…
1.தான் முன் ஜென்மத்தில் விட்டு வந்த குறையை
2.எந்தெந்த நிலையில் யார் யார் மேல் அன்பு பாசம் ஆசை குரோதம் வெறுப்பு விருப்பு கொண்டு வளர்ந்ததோ
3.இவை எல்லாவற்றையுமே எந்த ரூபத்திலும் அந்த எண்ணத்திற்குகந்தவர்கள் கிடைத்தவுடன்
4.அவர்களின் உடலில் எப்பாகத்திலும் ஏறி அவர்கள் எண்ணத்துடனே கலந்து தன் நிலையைச் செயல்படுத்திக் கொள்ளும்.

நம் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற ஆவிகள் மட்டும் நம்மை வந்து காத்துச் செயல்படுத்தும் என்பதல்ல. இவ்வுலகில் சுற்றியுள்ள எந்த ஆவியும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத் தனக்குகந்த உடலை எடுத்துக் கொள்கின்றது.

ஆவியின் நிலை இந்நிலையில் உள்ளதினால் இதை உணர்ந்த ஜெபம் கண்ட நம் முன்னோர் பலர் இந்நிலையிலிருந்து மக்களை மீட்கத்தான் பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.

இவ்வுலகம் முழுவதுமே ஆண்டவன் என்றால் யார் என்று சொல்கிறார்கள்…?

ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நிலைப்படுத்தித் தான் வணங்கும் பக்தியைக் கொண்டே அவர்களுக்கு உகந்த நிலையை ஆண்டவனாக்கி வணங்குகின்றார்கள்.

அனைத்து உலகிலுமே இவ் ஆவி என்னும் பயந்த கிலி நிலை பரவித்தான் உள்ளது. பலரின் கண்களுக்கு ஆவியின் நிலை புலப்படுவதையும் கேட்டிருப்பீர்.

சில நிலைகளில் ஆவியின் நிலையையே ஆண்டவனாக வணங்குகின்றார்கள். சக்தி நிலையறிந்து சக்தியான அவ்வாண்டவனைக் கண்டவர்கள் யார் உள்ளார்கள்…?

நம் ரிஷிகள் எல்லாரும் நம்மை இவ்வாவியின் நிலையில் இருந்து தப்ப பல ஜெப வழிகளை நமக்குணர்த்தி அச்சக்தியிலிருந்து தான் பெற்ற பல நல் உணர்வுகளை நமக்கு ஊட்டினார்கள்.

அந்த நிலையில்தான் கோலமாமகரிஷி அவர்கள்…
1.தன் ஜெபத்தை… தான் பெற்ற அருள் செல்வத்தை…
2.அனைவரும் உணர்ந்து நல் வழிக்கு மக்களைச் சீர்படுத்த ஆதிசங்கரரின் உடலில் அவர் நிலையை ஏற்றி
3.ஆதி சங்கரரையே அனைவரும் தெய்வமாகக் காணும் நிலைக்கு
4.அவர் உடலில் இவர் இருந்து பல செயல்களைச் செய்து வந்தார் ஆதிசங்கரரின் ரூபத்திலேயே.

அவர் சொல்லி வந்த உபதேசங்களை வழி நடத்திட பல இடங்களில் பல மடாலயங்கள் அமைத்தார்கள். அந்நிலையையே வழி வழியாய் இன்று மக்களுக்கு உணர்த்துவதற்காக சங்கராச்சாரியார்கள் என்று மத வழியை அவ்வழியில் புகட்டி வழி நடத்தி வருகின்றார்கள்.

நல்வழியில் வந்த நிலைதான் ஆதிசங்கரரின் நிலை. ஆனால் அனைவரையும் ஒன்று போல் எண்ணும் நிலைக்கு இல்லாமல் மாறியதின் நிலை இன்றுள்ள நிலை.

1.பக்தி மணம் உள்ளது
2.பக்தி மணத்தில் எல்லா மணமும் ஒன்றே என்னும் ஒரே மணத்தைப் பரப்பிவிடாமல்
3.அம்மணத்துடன் சிறு விஷமான மணமும் கலக்கவிட்டு விட்டார்கள்.

இந்நிலையில் சிறிதளவு மாற்றும் தன்மை இன்று வந்தாலும் அவர்கள் வழியிலேயே உலகத்தையே தெய்வ மணமாக்கிடலாம்.

இவ் ஈஸ்வரபட்டனாகிய நான் இக்கலியின் ஆரம்பத்தில் ஓர் உடலை ஏற்று இப்பக்தி மணத்தைப் பரப்பியதுவும் ஜாதி நிலையில் இருந்துதான். ஜாதியின் மதத்தின் நாமத்தைச் செப்பிட விரும்பாததினால் இந்நிலையில் செப்பவில்லை நான்.

வழி வழியாய் வந்த வினைதான் இவ்வினை. நாமாக ஏற்ற நிலையல்ல. நாமாக மீளும் நிலையைத்தான் இனி அனைவரும் எண்ணத்தில் கொண்டு செயல்படுத்திட வேண்டும்.

ஆதி சங்கரராய் வணங்கிடும் கோலமாமகரிஷி அவர்கள் இன்றும் உள்ளார். என்றும் இருப்பார்…!

இன்று அவர் நடத்திச் சென்ற வழியில் வந்த சங்கரர் வழியில் இருந்திடும் பல ஜெபங்கள் செய்து பூஜிப்பவர்கள் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால்…
1.அவரிடத்திலுள்ள சிறு கறையையும் நிறைவாக்கி ஜெபம் பெறும் பொழுது
2.அந்த ரிஷிகளின் தொடர்பு பெற்று… இன்று மகான் என்ற இன்றுள்ள மனிதர்களால் நாமம் பெற்றவர்கள்
3.சப்த ரிஷிகளின் சொல் நாமத்தை ஏற்றிடலாம்.

மாமகான் என்ற நாமத்துடனே பல ரிஷிகளுடனும் கலந்திடலாம் இப்பாக்கியத்தை எண்ணி வழியமைத்து வந்திட்டாலே…!

air pollution

இன்றைய விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷங்களை மாற்றி அமைப்போம்…! என்று உறுதி கொள்ளுங்கள்

 

நமது குரு காட்டிய அருள் நெறிகளை இப்பொழுது உங்களிடம் பதிவு செய்கின்றேன். ஏனென்றால் இன்று குரு ஒளி உடல் பெற்ற நாள் தான் வைகுண்ட ஏகாதசி.

1.அவரைப் போலவே நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றுங்கள்
2.இந்த உடலுக்கு பின் இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுங்கள்.

ஆனால் உங்களுக்காக… நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களை மாற்ற முடியாது. சாமி மாற்றுவார்… சாமியார் மாற்றுவார்… என்று சொன்னால்
1.நீங்கள் அந்த உணர்வை எண்ணுகின்றீர்களோ
2.அதை உங்கள் உயிர் தான் உருவாக்குகின்றது.

நீங்கள் எல்லாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டுமென்று எண்ணும்போது முதலில் நான் அதைப் பெறுகின்றேன். நீங்களும் இதே போல இந்த உலக மக்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டுமென்று ஏங்கினால் அதை நீங்களும் பெறலாம்.

நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் இதை எல்லாம் பின்பற்றுவோம். அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால்
1.நான் ஒருவரைப் பார்த்தேன்.. அவர் தீமைகளைக் கேட்டேன்…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நான் பெற்று என் ஆன்மாவைத் தூய்மையாக்கினேன்
3.பின் அந்த அருள் சக்தி அவர்கள் பெற்று அவர்களுக்கும் நல்லாக வேண்டுமென்று சொன்னேன்
4.அதன் வழியில் அவர்கள் நன்றாக ஆனார்கள் என்று இந்த சந்தோஷம் உங்களுக்கு வரும்.

இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

அப்படி அல்லாமல்… ஒருவர் என்னைத் திட்டினார்… இரு நான் உன்னைப் பார்க்கின்றேன் என்று அவனைத் தொலைத்தேன்…! என்ற நிலை வரக்கூடாது.

அந்த அருள் உணர்வைப் பெற்றேன்… அவன் தீமைகளில் இருந்து விடுபட்டான்… அவனும் நல்லவனான்… அந்த உடலில் இருந்த நோய்கள் விலகியது என்று இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வாருங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் (ஞானகுரு) காட்டினார் நான் உங்களுக்கு அந்த நிலையை உணர்த்துகின்றேன்… பதிவாக்குகின்றேன். இதைச் செயலில் ஆக்குவது உங்களுடைய பொறுப்பு தான்.

ஆகவே..
1.பகைமையை மாற்றுங்கள்
2.பண்பை வளர்த்து கொள்ளுங்கள்
3.அன்பை வளர்த்து கொள்ளுங்கள்
4.அரவணைக்கும் சக்தியை உங்களுக்குள் கூட்டிப் பேரன்பை உருவாக்குங்கள்.

பேரிருளை மாற்றுங்கள். பேரன்பைக் கூட்டினால் இருள் என்ற நிலைகள் நமக்குள் வராது தடுக்க முடியும் குருநாதர் பெயரைச் சொல்லித்தான் இந்த தபோவனம் அமைத்துள்ளோம்.

1.அவர் அணியில் தான் நாம் எல்லோரும் இருக்கின்றோம்.
2.நாம் எல்லோரும் அருள் வழியில் செல்வோம்
3.இன்றைய விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷங்களை மாற்றி அமைப்போம்…! என்று உறுதி கொள்ளுங்கள்.

Brihadeeswarar Temple

அரசர்கள் பெரிய பெரிய கோவிலைக் கட்டியதன் உண்மை நிலை என்ன என்பதைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அன்றாண்ட அரசர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் புகழ் ஓங்க… கோயில்கள் மூலமாகத் தன் பெயரை நிலைநாட்டினார்கள்.

கோயில்களைச் ஸ்தாபிதம் செய்து அந்நிலையில் பல கல்வெட்டுகளில் தன் பெயர் நிலைக்கத் தன் புகழின் ஆசைக்காக தன்னால் எழுப்பிய கோயிலிலேயே தன் பெயரையும் கல்வெட்டில் செதுக்கி வைத்து அவர்கள் பெயர் என்றுமே அழியாமல் இருக்க வேண்டுமென்றே புகழ் ஆசையினால் பல கோயில்களைக் கட்டினார்கள்.

புகழின் ஆசையில் வந்ததுதான் இன்று நாம் சென்று வணங்கும் பல கோயில்களின் நிலை. அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த அவ்வரசர்களின் ஆவிகளும் அந்நிலையிலேயே தான் சுற்றிக்கொண்டுள்ளன.

1.இன்று நாம் வாழ்ந்திடும் இந்நாட்டில்… ஆண்டவனின் பெயரையே
2.தன் புகழுக்காகத்தான் அன்றாண்ட அரசன் முதல் இன்று வாழ்ந்திடுபவர் வரை எண்ணி வணங்குகின்றோம்.

ஆண்டவன் என்பது எந்நிலையில் உள்ளது பார்த்தாயா…?

அன்று இருந்தவர்களின் குண நிலையைப் பொறுத்துத்தான் இன்று வாழும் மக்களின் நிலையும் உள்ளது. வழி வழியாய் வந்த மக்களின் “சுவாச நிலை” மாறுபடவே இல்லை.

மனித உடலை விட்டு ஆவி உலகுக்குச் சென்றாலும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட அவ்வாவிகளுக்கு ஆசையும் அடங்கவில்லை.

அவ்வெண்ணத்தின் தொடர்ச்சியில் வரும் எண்ணம்தான் இப்பொழுது உள்ளவர்களின் நிலையும்.
1.புகழ் ஆசையினால் வந்த வினைதான் இன்று இவ் உலகம் உள்ள நிலையும்
2.புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது.

இன்றிருப்பவரின் மன நிலை அவர்கள் செய்த நிலை மட்டுமல்ல தொடர்ந்து கொண்டே வரும் “பல ஆவிகளின் தொடர்தான்…”

புகழ் என்னும் பேராசைக்கு அடிமைப்பட்டதினால் இன்றுள்ள எல்லோரின் மனமும் புகழ் ஒன்றுக்கே எண்ணி ஏங்கும் நிலையில் உள்ளது.

காலத்தையே விஷமாக்கியவர்கள் அன்றாண்ட அரசர்கள்தான். மனிதர்களின் மனதையெல்லாம் பேராசைக்கு உட்படுத்தியவர்களும் அவ்வரசர்கள்தான். அவ்வெண்ண நிலை இன்றும் இங்கு மாறவில்லை.

பல கோயில்களில் ஆண்டவனின் விக்ரகங்கள் களவாடும் நிலை எப்படி வந்தது…? கயவனை அவ்வாண்டவன் பிடித்துத் தரக்கூடாதா…? அவனுக்கு நல்வழி புகட்டக் கூடாதா…? என்றெல்லாம் ஆண்டவனை நாம் பல வினாக்களைக் கேட்கின்றோம்.

கல்லான விக்ரகம்தான் ஆண்டவன் என்பது எடுத்துச் செல்பவன்… தான் அவனின் எண்ணத்தின் பேராசையினால் களவாடிச் செல்கின்றான். கல் என்ன செய்யும்…?

ஆனால் சில கோயில்களில் களவாடிச் செல்லும் விக்ரகங்கள் எடுத்துச் செல்பவன் உதிரம் கொட்டி இறப்பது எந்நிலையில்…?

அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த ஆவி வந்து அவனை அடித்துக் கொன்று விடுகிறது. ஆவியின் நிலையும் தொடர்பில்லாத சில கோயில்களில்தான் அவ்விக்கிரகங்கள் களவு போகும் நிலையில் உள்ளன.

ஆவி நிலையில் உள்ள எந்தக் கோயிலின் விக்ரகமும் களவாடிச் செல்பவனின் நிலையைப் பார்த்து அவனை விட்டு வைத்திடாது. பல கோயில்களின் நிலையும் இந்நிலையில்தான் இன்றுள்ளது.

ஆண்டவன் என்னும் ஆண்டவனையே இந்நிலைக்கு வந்ததின் நிலையெல்லாம் அரசர்களினால் வந்த வினைதான்…!

தெய்வ பக்தியும் நல்லொழுக்கமும் நற்போதனையும் மக்களின் எண்ணத்தில் பதியச் செய்து ஆத்மீக வழியில் அன்புடன் வாழ்வதற்கு வழியமைத்துச் சென்றிடாமல் இக்கலியின் காலத்தையே விஷமாக்கி இவ்விஷத்தின் தொடர்புடனே வாழ்கின்றான் ஒவ்வொரு மனிதனும்.

இந்நிலையில் ஜாதி மதம் என்ற வேலி வேறு. இதைப் படித்திடும் ஒவ்வொருவரும்
1.தன் எண்ணத்தைத் தூய்மைப்படுத்துங்கள்
2.சத்தியத்தை உம்முள் ஐக்கியப்படுத்துங்கள்
3.அன்பையே ஆண்டவனுக்கி வணங்கிடுங்கள்.

தெய்வத்தைக் கண்ட பேரானந்தப் பொக்கிஷத்தை நம் ஆத்மா என்ற ஆண்டவனுக்கு அற்பணித்தே வாழ்ந்திடலாம். ஒவ்வொருவரும் இன்று சூழ்ந்துள்ள விஷத் தன்மையில் இருந்து மீண்டு தன்னைத் தானே உணர்ந்து வாழ்வதற்கே இப்பாட நிலையும் ஜெப நிலையும்.

Hare Krishna hare krishna

கீதா உபதேசம் செய்யும் கண்கள்

 

உதாரணமாக ஒரு ஆமையை உற்றுப் பார்க்கும் நரி அதைத் தன் இரைக்காக விழுங்க எண்ணுகின்றது. நரியைப் பார்த்த உடனே ஆமை தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கின்றது.

இதிலே சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் அந்த நரியின் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வைக் கவர்ந்து கொண்டால் அது வலிமையானது…!

இதை அர்ச்சுனன் என்று காட்டுகின்றனர். அவன் மிகவும் திறமைசாலி ஆனவன். குறி வைத்துத் தாக்கக்கூடிய வல்லமை பெற்றவன்… குறி தவறாது அர்ச்சுனனுக்கு.

அர்ச்சுனனுக்கு யார் கற்றுக் கொடுப்பது…? கண்ணன் தான். அந்த சகல சக்தியும் அர்ச்சுனனுக்குக் காட்டுகின்றான். எதன் வலிமையோ அதனை நிலையை உணர்த்துகின்றான் என்ற நிலையை காவியத் தொகுப்புகள் தெளிவாக கூறுகின்றது.

கீதா உபதேசத்தைப் படிக்கும்போது அதை நீங்கள் நுகர்ந்து இதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் கீதா உபதேசம் கண்ணன் எங்கிருந்தோ கொடுக்கின்றான்…! என்று தான் நீங்கள் படிக்க முடியுமே தவிர
1.ஆமையின் கண்கள் தான் இந்த நரி உன்னை விழுங்கிவிடும் என்ற
2.உபதேசத்தைக் கொடுக்கின்றது என்ற நிலைகளை நீங்கள் இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆகவே இந்தப் புலனறிவான அந்த அர்ச்சுனன் ஆமையைத் தாக்கியபின்… அந்த உணர்வுகள் ஆமையின் உடலுக்குள் சென்ற பின்… அதனுடைய சாந்தமான குணத்தை அது அமிழ்த்தி விடுகின்றது. நரியின் உணர்வே ஆமைக்கு வருகின்றது.

ஆனால் குறி வைத்துத் தாக்கியபின் இந்த சாந்தமான அணுக்குள் காந்தம் உண்டு. அந்தக் காந்தம் இழுத்து நரியின் உணர்வைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளப் போகும்போது சகாதேவன்.

நரியின் உணர்வை ஆமை தனக்குள் இணைத்துக் கொள்கின்றது என்ற நிலையை இந்த உணர்வினை சகாதேவன் என்று கூறுகின்றனர். புலனறிவு ஐந்தையும் இப்படித் தெளிவாக்குகின்றனர்.

அதே சமயத்தில் இந்த நரியின் உணர்வினைச் சாந்தமான ஆமையின் உணர்வுக்குள் சேர்த்த பின் நகுலன்…
1.இந்த நரி எப்படி உருவானதோ அதைப் போல
2.”உணர்வின் பொறிகளை எழுப்பும்” என்பதனை இங்கே காட்டுகின்றனர்.

இது புரியவில்லை என்று விட்டுவிட வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் இதுதான்…!

இது உங்களை நீங்கள் அறிவதற்கும்… பிறர் அவர்கள் வாழ்க்கையில் துயரப்படுவதைக் கேட்டறிந்தால் அதனால் உங்கள் உடலிலே எப்படி மாற்றம் அடைகின்றது…? என்று அறிந்து கொள்ளலாம்.

அறிந்த நிலை கொண்டு இதிலிருந்து மீட்டுவதற்கு உபாயத்தை நாம் கையாளவில்லை என்றால் பரிணாம வளர்ச்சியில் வந்தது போலே நாமும் தேய்பிறையாகச் செல்ல வேண்டியதுதான். இன்று மனிதன்… நாளை மனிதனல்லாத நிலையை உருவாக்கி விடும் நம் உயிர்.

ஆனால் அன்று ஞானிகள் கூறிய அருள் வழியில் நாம் செயல்படுத்த வேண்டும். அதற்குத்தான் இதைக் கூறுகின்றோம் (ஞானகுரு).

அப்பொழுது நரியின் உணர்வுகள் ஆமையின் உடலிலே இணைந்து கொண்டபின் சாந்தமான ஆமையின் உடலுக்குள் இது வலுவாகின்றது. இது பீமன். எதையும் அடித்து நொறுக்கும் உணர்வுகள் அந்த உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அதே சமயத்தில் இது கூர்மையாகப் பார்த்தது. அனால் ஆமையை இந்த நரியால் அடக்க முடியவில்லை. ஏனென்றால் ஓட்டுக்குள் ஒளிந்து விடுகின்றது.

ஆனாலும் நரியின் உணர்வினை இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்டபின் இது வலிமையானபின் வேறு வழியில்லை. புல்லை மேய முடியவில்லை. இந்த உணர்வின் தன்மை அதற்குள் சேர்ந்துவிடுகின்றது.

இந்த உடலை விட்டுச் செல்லும் இந்த உயிரான்மாவிற்கு… அதுதான் கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான்.

1.எதன் வலிமை பெற்றதோ… இந்த உடலை விட்டு இந்த உயிர் செல்லப்படும்போது
2.எந்த நரியின் உணர்வை எடுத்ததோ அதற்குச் சாரதியாக இந்த உயிரான்மாவை நரிக்குள் அழைத்துச் செல்கின்றது.

வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! கீதா உபதேசத்தில் இந்தக் கண்கள் எதன் வலிமை அதனுள் இருந்து கவர்ந்ததோ அதை இணைத்துக் கொடுக்கின்றது.

அதனால்தான் இந்த கண்ணன் பிரம்மத்தைச் சேர்ந்தது என்பார்கள். அது உருவாக்கும் திறன் பெற்றது என்பதனை இங்கே தெளிவாக்கப்படுகின்றது.

இப்படி அந்த நரியின் உடலுக்குள் ஆமையின் உயிரான்மா சென்ற பின் நரியின் ரூபமாக மாற்றுகின்றது. அப்பொழுது ஆமை நரியாகப் பிறந்தபின் அந்த நரி தன் குட்டியைப் பாதுகாக்கின்றது. உன்னைப் பாதுகாக்கும் உடலை அந்த உணர்வைக் கொடுப்பதைத் தான் தர்மன் என்று காட்டுகின்றார்கள்.

1.புலனறிவு ஐந்தானாலும் இதன் வழி சென்ற பின்
2.உன்னைப் பாதுகாக்கும் இடம் அதுதான் என்று அந்த நிலையை
3.வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! என்று கண்ணன் சொல்கிறார்.

அந்த நரியின் உடலுக்குள் ஆமை சென்று அது குட்டியான பின் அந்தக் குட்டியைப் பாதுகாக்கின்றது நரி.
அந்த நரியின் உடலுக்குள் ஆமை சென்று அது குட்டியான பின் அந்தக் குட்டியைப் பாதுகாக்கின்றது நரி.

இந்தk கண்கள் எப்படி எல்லாம் நம்மை வழி நடத்துகிறது என்று நாம் புரிந்து கொள்வதற்கு கீதா உபதேசத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

big dipper - sapdharishi mandalams

“சப்தரிஷி மண்டலம்” கேள்விக் குறி போல் தெரிவதன் காரணம் என்ன…?

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ அவஸ்தைப்பட்டுத் தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்

இதிலிருந்தெல்லாம் மீண்டு இன்னொரு மனிதனுடைய ஈர்ப்புக்குச் சிக்காமல் முதல் முதலில் நம் பூமியிலே வாழ்ந்த அகஸ்தியர் என்ன செய்தார்…?

நம் பூமியின் சக்திகளை எல்லாம் அறிந்தார். சூரியக் குடும்பத்திலிருந்து வரும் சக்திகளை எல்லாம் நம் பூமி வட துருவத்தின் வழியாக எப்படிக் கவர்கின்றது…? என்பதையும் உணர்ந்தார்.

அந்தத் துருவத்தையே எண்ணி ஏங்கி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக விண்ணிலே இன்றும் இருக்கின்றார்.

அதிலிருந்து ஒளிச் சரீரமாகப் போனவர்களிடமிருந்து பல பல ஒளி அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. அகஸ்தியனைப் பின்பற்றிப் போனவர்கள் தான் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

1.வானிலே நாம் பார்த்தால் அந்த ஏழு நட்சத்திரங்கள் தனியாகத் தெரியும்
2.கேள்விக் குறி போல் அது தெரியும்.

நாளை நீ எதுவாகப் போகின்றாய்…? இந்தப் பிள்ளை யார் (பிள்ளையார்) என்று கேள்விக் குறி போட்டிருக்கின்ற மாதிரி இதிலிருந்து தப்பிப் போனவர்கள் அனைவரும் எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் உள்ள சப்தரிஷி மண்டலத்தில் இருப்பார்கள்.

அந்தக் கேள்விக் குறி மாதிரி… அந்த நட்சத்திரங்கள் இங்கிருந்து பார்க்கும் போது
1.நாம் எங்கே போக வேண்டும்
2.மனிதன் எப்படி இருக்க வேண்டும்…? என்று
3.கேள்விக் குறியாகப் போட்ட மனிதன் அங்கே இருக்கின்றான்.

இப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து போன உயிரணுக்கள் நம் கண்ணுக்குப் பார்த்தால் தெரிகின்றதோ…?

ஒரு சிலர் இந்தத் தியானத்தில் இருப்போருக்கு உடலை விட்டு உயிராத்மா செல்லும் போது கொஞ்சமாவது தெரியும். பாக்கிப் பேருக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் இதே எண்ணத்தில் இருப்பதனால் காண முடிகிறது.

இந்த உயிராத்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தவுடனே முதலில் சிறியதாக இருக்கும். சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய சக்தியை உணவாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் விண்ணிலிருந்து வரும் விஷத்தை வடிகட்டி வெளியில் அனுப்புவதனால் அந்த வட்டத்திற்குள் இருப்பதை ஆகாரமாக எடுத்து இந்த உயிராத்மாக்கள் ஒளியின் சரீரமாக ஆகும்.

நாம் பூமியில் விளைய வைத்த இந்தச் சத்தை எடுத்து உடலாக மாற்றுகின்றது புழுவிலிருந்து மனிதன் வரையிலும். ஆனால்
1.இதிலே இந்த உணர்வை ஒளியாக மாற்றி
2.விண்ணிலிருந்து வரக்கூடிய சக்திகளை எல்லாம்
3.தன்னிச்சையாக விஷத்தை முறித்து ஒளியாக மாற்றிடும் சக்தி இந்த ரிஷிகளுக்கு உண்டு.

அந்த அலைகள் விண்ணிலேயும் இருக்கின்றது. நம் பூமியிலும் படர்ந்திருக்கின்றது. அதை எடுப்பதற்காக வேண்டித் தான் இங்கே உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

இதை எடுத்து வளர்த்துக் கொண்டால் நாமும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.

கெட்டதை நீக்கி நல்லதை (ஒளியான உணர்வுகளை) எடுக்கக்கூடிய இந்த ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

Life cylce of man

பிற ஆத்மாக்களின் உணர்வின் உந்துதல் இல்லாமல் நாம் வாழ வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆவியின் தொடர்புடன் தான் பல அணுக்களின் உந்தலினால் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளோம் என்றேன். தாஜ்மஹாலின் நிலையை விளக்கினேன்.

இங்கு பல கோயில்களின் நிலையும் அது போல் தான். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் நிலையென்ன…?

அங்கு ஆண்ட இராஜராஜ சோழனின் எண்ணமேதான் அக்கோயில். எவ்வெண்ணம் வைத்து அவ்வரசன் அக்கோயிலை ஸ்தாபிதம் செய்தாரோ அதே எண்ணம் கொண்டே அவ்வரசர் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்த பிறகும் அந்த நிலையிலேயே அவ்வாத்மா அங்குள்ளது.

இன்றும் மறு ஜென்மம் எடுத்திடாமல் சூட்சும நிலைக்கும் சென்றிடாமல் ஆசையின் நிலையிலேயே அவ்வாத்மா அங்கே சுற்றிக் கொண்டுள்ளது. இதைப்போலதான் பல கோயில்களின் நிலையும்.

அன்று வாழ்ந்தவர்களின் மன நிலையைப் பொறுத்தே கோயில்களை எழுப்பினார்கள். இங்கு வாழும் மக்களின் எண்ணமும் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணத்தின் தொடர்புடன்தான் உள்ளன.

ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்தவர்களின் எண்ணம் எந்தெந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றனவோ அதே நிலையில் தான் அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்பவரின் எண்ணமும் தன் எண்ணத்திற்கு உகந்ததைச் செயல்படுத்த அவ்வெண்ணத்திற்கு உகந்தவர்களின் உடலில் அவ்வாத்மா சென்று தன் எண்ணத்தைச் செயல்படுத்துகிறது.

1.ஒவ்வொரு மனிதனின் நிலையும் இந்த நிலையா…?
2.பிற ஆவிகளின் தொடர்பில்லாமல் யாருமில்லையா…?
3.இங்கு மட்டும்தான் இந்நிலையா…?
4.இவ்வுலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களின் நிலையெல்லாம் எந்நிலை…?

இப்படிப் பல வினாக்கள் எழுந்திடலாம் இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே.

மன நிலையில் நமக்குள்ள அதி பேராசையும் அதி கோபம் துவேஷம் இந்நிலையை நாம் வளரவிடும் பொழுது பல ஆவிகள் நம்மைத் தாக்கும் நிலைக்கு ஆளாகித்தான் ஒவ்வொருவருமே வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் நமக்கிருந்த எண்ணத்திற்கும் இஜ்ஜென்மத்தில் வாழும் முறைக்கும் தொடர்புள்ளதினால் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடுபவர்களுக்கும் எண்ண நிலை மாறுபடுகிறது. நம் எண்ணத்திற்கு உகந்த அணுக்களின் தன்மையும் நமக்குள் குடிபுகுகின்றது.

1.விதையொன்று போட்டுச் செடி ஒன்று முளைவதல்ல.
2.எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடம்பிலும் உள்ளன.

இந்நிலையிலிருந்து நாம் விடுபட நம் நிலையில் அத்தெய்வ பக்தி என்ற ரூபப்படுத்தி நம் முன்னோர்களென்பது சூட்சும நிலையில் வாழ்ந்திடும் ஆண்டவன் ரூபத்திலுள்ள அரும்பெரும் ஜோதிகள் வழிகாட்டியபடி அஹிம்சையையும் அன்பையும் ஏற்றே பேராசையையும் பெரும் கோபத்தையும் நம்மை அண்டவிடாமல் வாழ்வதுவே நல் வாழ்க்கை.

அவ்வழியினைப் பிடித்து நம்மைச் சுற்றியுள்ள பல ஆவிகளின் ஏவலுக்கு நாம் ஆளாகாமல் இந்நிலையை அறிந்து வாழ்வதுதான் உத்தமம்.

1.ஜோதிடம் கண்டு வாழ்வதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
2.மை போட்டுக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
3.பூ கட்டிக் கேட்பதுவும் கோயில்களில் அருள் வந்து ஆடுபவர்களைக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்.

வழிவழியாய் வந்தவர்கள் எண்ணத்தில் இருந்து வந்ததுவே ஆண்டவனின் ரூபத்தில் நாமத்தைச் சொல்லித் தன் எண்ணத்தைச் செயல்படுத்த இவ்வாவிகளெல்லாம் வந்து ஆடுவது தான் இன்று நாம் காணும் நிலையெல்லாம்.

இன்று நாம் வாழும் இந்நாட்டில் ஆண்டவனின் ரூபத்தில் ஆவியின் தொடர்பாட்டத்தைக் காண்கின்றோம். இவ்வுலகில் ஒவ்வொரு பாகத்திலும் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் ஒவ்வொரு ரூபத்தில் அவர்கள் ஆவி உலகிற்குச் சென்ற பிறகும் இப்பொழுது வாழ்ந்திடும் மக்களின் ரூபத்தில் வந்தே தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆவியின் தொடர்பில்லாமல் எத்தேசத்திலும் எந்நிலையும் நடக்கவில்லை…!

விஞ்ஞானியாய் விஞ்ஞானம் பல கண்டு வாழ்பவனுக்கும் அவன் வழியில் இருந்த ஆவியின் தொடர்பினால் தான் இவன் விஞ்ஞானமும் வளர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவ்வாவியின் தொடர்பு கொண்டுதான் வாழ்கின்றார்கள் மக்கள் எல்லோருமே.

1.தன் நிலை உணர்ந்து வாழ்பவர்கள்தான் சூட்சும உலகிற்குச் செல்கிறார்களே தவிர
2.ஆவியின் தொடர் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்தே பல பிறவியை எடுக்கின்றார்கள்.

பல பிறவியில் மனிதராகவே பிறவி எடுத்தாலும் நன்றே…! ஆனால் மனிதப் பிறவி மாறுபட்டு மிருகமாகி மிருகத்திற்கும் கீழ்நிலைக்குச் சென்று புழுவாகி விமோசனமே இல்லாமல் இத்தெய்வமான மனித வாழ்க்கையை ஏன் சிதற விட்டு அழுகும் அணுக்களாக அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…?

மனித ஜென்மத்திலுருந்து மாறுபட்டு மிருக ஜென்மத்திற்கு வந்தாலே மனித ஜென்மத்தில் நடந்தவை எல்லாமே மிருக ஜென்மத்தில் தெரிந்திடும்.

நடந்தவையை நினைத்தே மிருகமாகி ஒவ்வொரு ஜென்மத்திலும் விட்ட குறையெல்லாம் தெரிந்தே ஏன் அல்லல்பட்டு வாழ வேண்டும்…?

1.இவ்வுடல் என்னும் மாய ரூபம் தான் மாறுபடுகிறது
2.நம் எண்ணம் என்றுமே அழிவதில்லை
3.நம் ஆத்மாவுடனேதான் நம் எண்ணமும் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நாம் இருப்பதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்து தெரிந்து வாழ்ந்திட வேண்டும்.

Acts of souls

குடும்பப்பற்று கொண்ட ஆத்மாக்களின் நற் செயல்களும் துர்க்குணம் கொண்ட ஆத்மாக்களின் செயலையும் அறிந்து கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

மக்களின் வாழ்க்கை நிலையிலும் ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது. எண்ணம் நல்வழியில் சென்று தெய்வ பக்தி கொண்டு மனிதர்களின் எண்ணமெல்லாம் அவர்கள் செல்லும் வழிக்குத் தெய்வமாக அருள் புரிகிறார்கள்… நாம் இப்போது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களுமே.

நல் வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு அந்நிலையிலெல்லாம் ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே அவ்வாவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்தே வாழ்வதற்காகத்தான் இந்நிலையில் உணர்த்தி வருகின்றேன்.

1.காலம் காலமாக இவ்வாவிகளின் நிலையெல்லாம்
2.நல் நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவி சூட்சும நிலை கொண்டு…
3.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாய்
4.தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக பல நல்ல நிலை கொண்ட சக்தியை
5.தான் வாழ்ந்த குடும்பத்திற்கு தன் இரத்தத் தொடர்புடைய பிள்ளைகள் காலம் வரை தெய்வமாக
5.அக்குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளையும் பூர்த்தி செய்யும் நாள் வரை
6.அக்குடும்பத்திற்குப் பல உதவிகளை அக் குடும்பத்திலுள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி
7.அக்குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழலவிட்டு அவ்வாவியின் நிலை இருக்கிறது.

அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகுதான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று வாழ்க்கைக்கே வருகிறது.

ஆனால் குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும்…
1.எந்த நிலையில் அவ்வாவி பிரிந்ததோ அதே குரோத நிலையில்தான்
2.அவ்வாவி அக்குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ அதனின் தொடர் நிலையாக குரோதம் கொண்டவர்கள் மூலமாக
3.தான் வாழ்ந்த நாளில் பெற்ற நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்தினவோ
4.அதேபோல் தான் இத்துர் ஆவிகளும் வந்து தீமைகளைச் செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளினால் அதன் சுவாச நிலைகொண்டு மற்ற மிருக உடலுக்கு எந்நிலையில் சென்று மனிதன் மிருகமாகும் மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டுதான் மறு ஜென்மம் நமக்கு அமைவதுவும்.

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.

மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலையெல்லாம் தெரிந்திடும். ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்துச் செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால் தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன.

மனிதன் அம்மிருகத்தைத் தன் நிலைக்கு அரும் பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அம் மிருகத்திற்குத் தெரிகின்றது. அம்மிருக உணவை பறவைகளின் உணவை நாம் புசிப்பதினால் நம்முள்ளேயே நாம் அவற்றின் அவ்வுடல்களில் எந்த எந்த அணுக்களின் தாக்கல்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இவ்வுலகில் பல நிலைகொண்ட ஆவித்தன்மை உள்ளபொழுது
1.அவ்வாவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கி
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல்
4.இந்நிலையையெல்லாம் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இவ்வாவிகளின் நிலையே பல நிலையில் உள்ளன. இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் என்னும் ஆவியின் நிலையென்ன…?

அவ்வாவி இன்னும் அத் தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக்கொண்டுள்ளது. எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அவ்விரண்டு ஆவிகளுமே… ஷாஜஹான் என்னும் ஆவியும்…!

அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை மறு ஜென்மத்திற்கும் வரவில்லை. சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அவ்விரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில்தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையிலேதான் இருந்திடும், ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன அவ்விரண்டு ஆவிகளுமே அம்மாளிகையில்.

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராய் இன்றும் வாழ்கின்றார்கள் அவ்விரண்டு ஆவிகளுமே…!

இந்நிலைபோல் இவ்வாவி உலகில் பல நிலைகள் உள்ளன.

Guru Eswarapattar

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அருள் உபதேசம் கொடுக்கும் விதம்

 

பரிணாம வளர்ச்சியில் பல கோடி நிலைகளிலே விஷத்தை வென்றிடும் உணர்வு பெற்று இன்று மனிதனாக வந்த பின்
1.இன்று விஷத்தை வெல்லத் தவறினால் நீ மீண்டும் மிருக நிலை அடைகின்றாய்…
2.விஷ ஜந்துகளின் உருவத்தை நீ பெறுகின்றாய்…
3.உன்னில் எது…? என்ற நிலைகளை எமக்குத் (ஞானகுரு) தெளிவாக்குகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஆகவே தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பதற்கு நீங்கள் நினைக்கலாம் ஒரு பத்து நிமிடத்தில் அல்லது ஒரு அரை மணி நேரத்தில் சொல்லிவிட்டுச் செல்லலாமே என்று…!

ஆனால் குருநாதர் எம்மைத் தெளிவாக்கும் போது குறைந்தபட்சம் ஏழு நாட்கள் ஆகிவிட்டது. அந்த ஏழு நாட்களாக… இந்த விளக்கவுரைகளையும்
1.உணர்வின் அலைகள் எப்படி பதிகின்றது…? என்பதனையும்
2.பதிந்த உணர்வுகளை நீ எப்படி நுகர வேண்டும் என்பதனையும்
3.அதை நுகர்ந்த பின் நீ எதை மாற்றிக் கொள்ள வேண்டும்…?
4.எதனை நீ பெருக்கிக் கொள்ள வேண்டும்…? என்பதனையும்
5.சற்று சிந்தித்துப் பார்… என்ற உணர்வினைக் கொடுத்தார் குரு.

என் குருநாதர் எனக்குக் கொடுத்த இதே உணர்வைத்தான் இந்த இயற்கையின் நிலைகளில் இருந்து உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். நீங்கள் பெற வேண்டியது எது…? அடுத்த எல்லை எது…? என்று சற்று சிந்தித்து இந்த வாழ்க்கையின் நிலைகளை நமது கடைசி எல்லை எது…? என்ற நிலையை முடிவு செய்து அதனின் நிலைகளைப் பெறுங்கள்.

இதன் வழிகள் பெற்றவர் தான் நம் குருநாதர். வைகுண்ட ஏகாதசி அன்று இந்த உடலை விட்டுக் சென்ற பின் ஏகாந்த நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டல எல்லையை அடைந்தார்.

ஏனென்றால் அவருடைய வாழ்க்கையில் அவர் மனைவியார் தன் கணவன் சொன்னபடி அந்த அருள் உணர்வின் தன்மை பெற்ற பின் அவருடன் இணைந்தே வாழ்ந்தார்.

அதன் வழியில் இவர் உடலை விட்டுச் சென்ற பின்… தன்னுடன் (குருநாதர்) அரவணைத்த உணர்வு கொண்டு விண்ணின் ஆற்றலை தனக்குள் கருவுற்று… உணர்வின் தன்மை ஒளியாகும் நிலைகள் பெற்று… இந்த உடலைவிட்டுச் சென்ற பின் இன்றும் ஒளியின் சரீரமாக இருவருமே சப்தரிஷி மண்டலத்தில் நிலை கொண்டுள்ளார்கள்.

அவர் ஒரே நிலையல்ல… பல வழிகளில் அதாவது எத்தனையோ வகைகளில் எத்தனையோ உணர்வுகள் எதனதன் வழிகளில் எவ்வாறு ஆகின்றது என்ற நிலையைத் தான் எமக்குத் தெளிவாக்கிக் காட்டினார்.

அவர் எதாவது ஒன்றைச் சொல்வார். இது சரியா…? என்பார்.

சரி தான்… இதுதான் சரி…! என்று சொன்னால் எப்படி சரி…? என்று கேட்பார்.

1.சரி என்ற நிலைகள் சொன்னாலும்…
2.அவர் சொன்ன முறைப்படி நான் சரி என்றாலும்
3.திரும்ப இதை எப்படிச் சரி…? என்று கேட்டு
4.இதுவல்ல…! இதற்கு இந்தந்த நிலைகள் இப்படி மாற்று…! என்றும்
5.ஒவ்வொரு உணர்வுகளிலும் ஒவ்வொரு இணை சேர்க்கப்படும் போது
6.இந்த உணர்வுகள் எப்படி மாறுபடுகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டே வருவார்.

இவை அனைத்திற்கும் முடிவு… உயிர் ஒளியானது… நம் உணர்வுகளை எல்லாம் அந்த உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

அதற்குத்தான் இந்த உபதேசம்.

om eswara gurudeva

உயிருடன் நாம் ஒன்ற வேண்டியதன் அவசியம்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும்போது உங்கள் உயிரை ஈசனாக மதித்து நடக்க வேண்டும். உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உடலுக்கும் உங்கள் உயிரே குரு…!

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும்போது அனைவரும் ஒன்றுபோல உங்கள் உயிரான ஈசனை வேண்டி ஏங்கி யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி எண்ணும்படி வேண்டிக்கொள்கின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!

1.நீங்கள் யாரையும் வேண்டவில்லை… உங்கள் உயிரைத்தான் வேண்டிக் கொள்கின்றீர்கள்
2.அவனின்றி ஒரு அணுவும் அசையாது
3.இந்த உயிர் உடலில் இல்லையென்றால் உடலான சிவம் சவமாகி விடுகின்றது
4.சிறிது நேரமானால் நீசமாகிவிடுகின்றது என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

அதனால் தான் மீண்டும் சொல்கின்றேன். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கும்போது…
1.அருள் உணர்வைப் பெறலாம்
2.அறியாத இருளை நீக்கலாம்
3.பொருளறிந்து செயல்படும் திறனும் பெறலாம்
4.அருள் வாழ்க்கையும் வாழலாம்.
5.இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றவும் முடியும்.

இந்த சக்தி ஒவ்வொரு மனிதர் உடலிலும் உண்டு. இப்படி நாம் பக்குவப்படுத்தும் நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையே… சந்தர்ப்பமும் மற்ற சூழ்நிலைகளாலும் பல திசைகளிலும் இயக்கப்பட்டு அதன் மூலம்
1.மனிதன் வாழ்க்கையில் உயர்வதும்
2.மனிதன் வாழ்க்கையில் நோய் வருவதும்
3.மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் வருவதும்
4.ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் சந்தர்ப்பத்தால்… “நுகர்ந்தறிந்து உணர்ந்த உணர்வால் நிகழ்வதுதான்… இது எல்லாம்…!”

யாரும் தவறு செய்யவில்லை என்று மீண்டும் சொல்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிர் வழியாகச் சுவாசித்து உடலுக்குள் விளையச் செய்தால் அந்தச் சந்தர்ப்பத்தால் வரும் இன்னல்களை அகற்றலாம்.

நல்லதை உருவாக்கும் சந்தர்ப்பமாக நாம் என்றுமே உருவாக்க முடியும். அந்த ஆற்றலைப் பெறுவதற்குத் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று நம் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்கின்றோம்.

devil and trreasure

“பூதம் காத்த புதையல்” என்றால் என்ன என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அன்றாட அரசர்கள் முதல் இன்று வரை நாம் எந்த நிலை கொண்டு வாழ்கின்றோம்…? ஒவ்வொரு உயிரனங்களும் எப்படி எப்படி வாழ்கின்றன…? என்பதனை முன் பாடத்தில் சிறுகச் சிறுக அளித்து வந்த பாடத்தினையே விவரித்தே அளிக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).

“பூதம் புதையல் காத்த கதை…” என்று கதையாகக் கேட்டிருப்பீர். பூதம் எங்குள்ளது…? பேய் பிசாசு என்பது என்ன…? என்பதனை அறிந்து வாழ்ந்திடவே இந்நிலையில் சொல்லி வருகின்றேன்.

பல நூறாயிரம் வருடங்களுக்கு முன் அன்றாண்ட அரசர்களின் நிலையெல்லாம் என்ன…?

தன் நாட்டைக் காக்க தன் நாட்டு மக்கள் வாழ்வதற்கு மேலும் மேலும் பொருள் சேர்க்க ஒரு நாட்டுடன் ஒரு நாடு சண்டையிட்டே பல நாட்டைப் பிடித்து பேரரசர் ஆக வேண்டும் என்ற வெறி நிலை கொண்டு அவ்வரசனின் மன நிலையில் ஒரு அரசுடன் மற்ற அரசு சண்டை இடும் நிலையில் பல உயிர்ப் பலிகள் நடந்தது.

அவ்வுயிர்ப் பலி நடந்த இடத்தில் அவ்வாத்மாக்களின் நிலையென்ன…?

குரோத நிலையில் வெறியுணர்வுடன் பல ஆத்மாக்கள் சென்றன. இன்னும் பல… அன்று வாழ்ந்த மக்களிலேயே ஒவ்வொரு நாட்டிற்கும் நடக்கும் சண்டையில் தனக்குகந்த ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குக் கடத்திச் சென்ற பல பொக்கிஷங்களெல்லாம் மறைத்து வைத்த நிலையில் அந்நிலையில் அதை மறைத்து வைத்த மக்களின் ஆவிகளும் எவ்வரசனின் பொக்கிஷத்தை யார் யார் களவாடி எங்கெங்கு எடுத்துச் சென்றனரோ அந்நிலையில் அன்றாண்ட அரசர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆவி அவர்களின் பொருளைக் களவாடிச் சென்றதின் நிலையையறிந்து களவாடிச் சென்றவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அதை எடுத்திடாமல் அவ்வாவிகள் அதைப் பூதமாகக் காக்கின்றன.

அரசனின் வம்சத்தார் எடுக்கவும் முடிந்திடாமல் களவாடிச் சென்றவனின் ஆவி அந்நிலையில் இருந்தே காக்கின்றது. இப்பூமியில் பல நிலைகொண்ட பொன் பொருள் ஆபரணங்கள் விக்ரகங்கள் இன்றும் பூமியில் “பூதங்கள் காக்கும் நிலையில் தான் உள்ளன…”

சில இடங்களிலிருந்து புதையல் எடுப்பதின் நிலை அந்நிலையில் காத்து வந்த ஆவிகளின் சக்தியிழந்து அது மனச்சலிப்புப்பட்டு விரக்தி நிலையில் மறு ஜென்மம் எடுத்த பிறகுதான் இப்பொழுது சில புதையல்கள் கிடைப்பதுவும்.

அதுவும் அதன் தொடர்புடைய வம்ச வழிக்கு வம்ச வழி என்பது அச்சொத்தை அடைய வேண்டுமென்ற உரிமை பெற்றவருக்குத்தான் அதை அடையும் தன்மையும் வருகிறது.

அன்று ஆண்ட அரசர்களில் பலரின் நிலையும் இன்னும் இதே நிலையில் தான் உள்ளது. சகல சம்பத்துடன் சக்கரவர்த்தியாய் வாழ்ந்தேன் என்பவனின் நிலையும் இன்றும் பூதத்தின் நிலையில்தான் உள்ளது.

1.பல நாடுகளைப் பிடித்தான்
2.பல பொக்கிஷங்களைச் சேர்த்தான்
3.ஆனாலும் தன் உயிராத்மாவிற்கு என்ன சேமித்தான்…?

பேராசையை “வீர முரசு” என்று முழங்கிட்டே வாழ்ந்திட சக்கரவர்த்திகளின் நிலையெல்லாம் என்னப்பா…? வீழ்ச்சி பெற்று வந்திட முடியாது.

கலியில் இவ் உலகப் பிரளயம் மாறி புத்துயிர் பெற்று இவ்வாவிகளெல்லாம் ஆரம்ப நிலை கொண்டு அடுத்த பிறவியின் சுற்றலில் ஆத்மாவிற்கு ஆத்மீக வழியை எடுத்து வாழும் நாள் வரை பூதமாகவும் பேயாகவும் அலையும் ஆவிகளுக்கு முடிவே இல்லாமல் உள்ளது.

இப்பொழுது வாழ்ந்திடும் மக்களெல்லாம் இவ்வாவிகளின் பிடியில் சிக்கியுள்ளோம். இப்பிடியிலிருந்து மீள்வதற்கே இதை உணர்த்துகின்றேன்.

Kalki of our aoul

உலகச் சுழற்சியிலிருந்து மீண்டு மெய் உலகிற்கு வாருங்கள் – ஈஸ்வரபட்டர்

 

இக்கலி மாறி கல்கிக்கு வரும் பொழுது இவ்வுலகம் சுழலும் தன்மையில் சிறு அசைவின் மாறுதல் பட்டு மறுபடியும் அதே நிலைகொண்டு சுழற்சி சுற்றிக்கொண்டு இவ்வுலகம் இருக்கும் என்கின்றோம்.

இவ்வுலகின் நிலை மாறுவதைப்போல் இவ்வுலகுடன் தொடர்புடைய ஒவ்வொரு மண்டலங்களின் நிலையும் மாறுபடுகிறது.

அந்நிலையில் மாறுபடும் பொழுது இப்பொழுது இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகொண்ட சக்திகளெல்லாம் இப்பூமி ஈர்த்ததோ அதைப் போல் இப்பூமியிலிருந்து இப்பூமி வெளியிட்ட சக்தியை மற்ற மண்டலங்களின் நிலையுமே அந்த ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மாறுபடுகின்றது.

இப்பொழுதுள்ள இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளின் நிலையுமே அதை ஈர்த்து வெளியிட்ட தன்மையில்… பிறகும் சுழலும் சுழற்சியில் இதே நிலையில் அதன் நிலை வந்திடாமல் அதன் சக்தி நிலையுமே மாறுபட்ட தன்மையில்தான் சுற்றிக்கொண்டு வரும் அடுத்த சுற்றலின்போது இருந்திடும்.

இப்பொழுது வாழும் ஜீவராசிகளுக்கு மட்டும்தான் இந்நிலையா…? ஆவி உலகில் உள்ளவர்களின் நிலையெல்லாம் என்ன என்பீர். அடுத்த சுழற்சியில் அவ்வாவி நிலையில் உள்ளவர்கள் எந்நிலையில் வந்து பிறப்பார்கள் என்பீர்.

அவர்கள் இப்பூமியில் வாழும் காலத்தில் எவ்வெண்ணத்தில் எந்நிலைகொண்ட சுவாசம் எடுத்தார்களோ அந்நிலையிலே தான் சுற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

1.இவ்வுலகம் இக்கலி முடிந்து கல்கியில் மாறுபடும் பொழுது
2.மற்ற மண்டலங்களில் இருந்து இப்பொழுது நாம் பெறும் சக்தி நிலையும் மாறுபடுவதினால்
3.ஆவி நிலையில் உள்ளவர்களின் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த தன்மை இப்பூமியில் கிடைக்காததினால்
4.அடுத்த சுழற்சியில் பல ஆயிரம் காலங்கள் ஆனாலும் ஆகலாம்.
5.அவர்களுக்கு உகந்த பிறப்பிடம் பெற்று பிறவி எடுத்திட…!

இப்பொழுது மனிதர்களாக வாழ்பவர்களுக்காவது சூட்சும நிலை பெற்று எம்மண்டலத்திலும் எவ்வுடலையும் ஏற்கும் தன்மை வருகின்றது.

ஆகவே.. இப்பொழுது நாம் வாழ்ந்திடும் வாழ்க்கை பாக்கியம் பெற்ற வாழ்க்கை என்று கருத்தில் கொண்டு வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை உன்னத வாழ்க்கை…!

1.இவ்வாழ்க்கையை நிலைக்கச் செய்து ஒவ்வொருவரும் வந்திடுவீர் சூட்சும நிலைக்கே.
2.ஆவி உலகின் சிக்கலில் எவரும் சிக்கிக் கொள்ளாதீர்…!

agastiya-rishi

இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் மெய் ஒளி கொண்ட மெய் ஞானியாக உருவாகுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

தியானத்தின் மூலமாக உணர்வின் எண்ண அலையை இங்கே சுட்டிக் காட்டிய வழிமுறைப்படி எண்ணத்தில் ஓடக்கூடிய உணர்வுகளை மின்காந்த வீரியத் தன்மை உயிராத்மாவில் எடுக்கும் பொழுது சூரியனுடன் மற்றக் கோள்களின் சந்திப்பின் அமில ஈர்ப்பு மோதும் பொழுது சூரியன் அதை எடுத்துச் சமைத்து தன் ஒலியைக் கக்குவதைப் போன்று இவ்வாத்மாவில் உணர்வின் எண்ணத்தை அமைதிப்படுத்தும் தியானத்தில் ஒலியை மனித ஞானத்தில் வளர வளர மெய் ஞான உண்மைகளை சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் செயல் ஒன்றினால்தான் ஆத்மாவின் ஒளித் தன்மையை மெய் ஞானத்தின் ஒளியறியும் ஆத்மாவாக செயலாக்கும் நிலை பெற முடியும்.

வாழ்க்கையில் எண்ணத்தின் சிந்தனை குடும்பம் உடல் ஆரோக்கியம் தொழில் மற்ற எதுவாயினும் அதே தொடரில் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வளர்ந்த வாழ்க்கை ஓட்டத்தில்… இவ்வுடல் உள்ள வரை வாழ்ந்தாலும்
1.இஜ்ஜீவித உடலில் எண்ணத்தின் செயல் வேட்கைக்குத்தான் ஆத்மாவின் பிடிப்பு செயல்படும் இறுக்கத்தால்
2.ஆத்மா முன்னேறாத .நிலை ஆகி
3.எல்லா நிலைகளையும் அறியத்தக்க எண்ணம் கொண்ட மனிதனின் செயல்
4.மிருக நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடனே சிக்கிவிடும்.

யானை காட்டில் பிறப்பெடுத்து வாழ்ந்தாலும் அதனுடைய செயலுக்கொப்ப வாழ்ந்து மடியும் யானையும்… அதே யானையை அரசர்கள் பட்டத்து யானையாக உபயோகப்படுத்தும் பொழுது அரசனுக்கொப்ப அவ் யானைக்கு மரியாதையும்… வித்தகனிடம் சிக்கும் யானை வித்தகன் பழக்கப்படுத்தும் (சர்க்கஸ்) வித்தையை அறிந்து வித்தை காட்டும் யானையாகவும்… பல வேலைகளைச் செய்ய யானைகளைப் பழக்கப்படுத்தும் யானை எதைப் பழக்கப்படுத்தி செய்விக்கும் செயலறிந்து உழைப்பைத் தருகின்றதோ அந்நிலைக்கு யானையின் செயலை உபயோகப்படுத்திக் கொள்கின்றான் மனிதன் தன் செயலுக்காக.

இதைப் போன்று சில மிருகங்கள் மனிதன் பழக்கப்படுத்தக் கூடிய வளர்ப்பு நிலை கொண்டு செயல்படுகின்றதல்லவா…?

அதனுடைய வாழ்க்கையில் அதைப் போன்றே மனிதனும் இவ்வுடல் என்ற பிம்பத்தின் வாழ்க்கைக்காக மட்டும்தான் தன் தேவை அனைத்தையும் செயல்படுத்தி வாழும் வாழ்க்கை உடலுடன் மடியும் நிலை.

ஆன்மாவின் மெய்யறிய வேண்டும் என்றால்
1.மனித உணர்வின் அலையை வாழ்க்கையின் ஈர்ப்பின் எண்ணத்தில் பதிவாய் மட்டும் வாழாமல்
2.உணர்வின் எண்ணத்தில் பகுத்தறிவு வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று
3.எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்.

புதிய கண்டுபிடிப்புகளை அறியக் கூடிய விஞ்ஞானிகளையும் வான சாஸ்திரத்தைக் கணிக்கும் சாஸ்திரங்கள் அறிந்தவர்களையும் ஊன்றிப் பார்த்தால் அவர்களின் எண்ண சிந்தனை அமைதியான ஓட்டத்தில்தான் செயல்படுவதைக் காணலாம்.

எண்ணத்தின் சிந்தனையை ஓர் தொடரில் செலுத்தி அமைதிப்படுத்தும் ஞானி மெய் ஞானியாகலாம். எண்ணத்தின் உணர்வை அமைதியாக்கும் தியானமே முதலில் செயலாக்கிடல் வேண்டும்.

மனித உணர்வில் இருக்கக்கூடிய ஒலியின் தொடர் மனித ஒலியின் எதிர்ப்பில் மோதும் பொழுது எடுக்கும் ஒலியின் மின் காந்தத்தின் வீரியத்தை ஞானத்தின் மெய்யறிய முதலில் பக்குவப்படுத்தல் வேண்டும்.

மெய் ஞானத்தின் ஒலி பொதுத் தன்மைக்கு செயலாக்கும் சத்தியமே ஆத்மாவின் அழிவில்லா வளர்ச்சி ஒளி நிலை.

வாழ்க்கையில் எதிர் மோதல் யாவையுமே… உணர்வின் வீரியத்தின் விபரீதமாய் எண்ணத்தைக் காரமாக்கும் செயல்படுத்தும் ஒலியால்..
1.மனித உணர்விலிருந்து பெற்ற மெய்யொலி விரயமான விபரீத செயலே
2.மனித வாழ்க்கையிலும் ஞானியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்ததனால்தான்
3.இப்பூமியில் பல கோடி ஞானிகளும் தத்துவ செயலுக்காக சக்தியை வளர்க்க முடியாமல்
4.விரக்தியையும் சலிப்பையும் வளர்த்து… இன்று இப்பூமியில் மனிதச் செயல் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது.

மனித உணர்வில் எடுக்கக்கூடிய மெய் ஒலியை இங்கே கொடுக்கும் போதனை வழியில் உணர்வை ஒட்டி இதன் தொடர்பலையின் உண்மைத் தத்துவத்தை… ஆத்ம ஞானமாய்… ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும் வழியறிந்து… வழி தந்த முறைப்படி ஒவ்வொருவருமே இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிலிருந்து இப்பூமிக்கோளின் முதிர்வின் ஒலியாய்… பல கோடி தேவரிஷிகளின் ஒளி சக்தியுடன் ஒளிரும் ஒளி ஆத்மாவாகும்… மெய் ஒளி மெய் ஞானியாய் வளர முடியும்.

வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களின் உண்மையை தியானத்தின் சூட்சுமத்தில் முன் கூட்டி அறியக்கூடிய பக்குவங்களை இச்சரீர பிம்ப சொந்த பந்த செயல்பாட்டுக்கு விரயமாக்காதீர்கள்.

பொதுத் தன்மைக்குச் செயலாக்கும் நிலைக்கும் உணர்வுடன் உடல் சொந்தம். மற்றச் சொந்தங்களுக்கும் செயலாக்கும் முறையையும் சூட்சுமத்தில் நம் அகத்தில் அறிந்து மகிழும் ஆத்மாவின் சொத்தாய் பக்குவப்படுத்தும் ஞான ஒளியை ஒவ்வொருவரும் உண்மைத் தன்மையில் பயன்படுத்துங்கள்.

1.வெறும் புகழுக்காகவும் பாசத்திற்காகவும் சக்தியை விரயப்படுத்தாமல் “ஆத்மாவின் சொத்தாக”
2.மெய் ஞானத்தின் ஒளியை குற்றம் குறைகளை குணத்தில் நீக்கி
3.உயர்ந்த மெய் ஞானியின் ஒளியை அகத்தில் ஏற்று
4.ஞானத்தின் ஒளியை மெய் ஞானத்தின் தத்துவத்தின் மூச்சின் மூச்சாய்
5.மூவுலகின் சக்தியையும் உடல் கோளத்தில் ஆக்கப்பெறும் ஆத்மாவின் ஒளிக் கோளத்தை
6.ரிஷிகளுக்கு சொந்தமாக்கும் செயலாய் பொதுத் தன்மைக்கு
7.ஒவ்வொரு ஆத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் புனித ஆத்ம ஒளியை மெய் ஞானியாய் ஆக்குங்கள்.

மெய ஞானமாய்த் தரும் சகல ரிஷிகளின் சக்தி ஒளியாய் ஒளி பெறுவீர்.

Salaivary glands

உபதேசத்தின் வாயிலாக யாம் கொடுக்கும் அமுத சுரபிகள்

 

மனிதன் நாம் நல்லதைச் செய்யும்போது நல்லதைக் காக்கும் திறன் வேண்டும்.
1.அந்தத் திறனை இழந்து விட்டால்
2.நல்லதைத் தீயது மறைத்து விடுகின்றது.

இன்று ஒரு மரம் வளர்வதற்கு எத்தனையோ வருடங்கள் ஆகின்றது. ஆனால் அந்த மரத்தை ஒரு நொடியில் வீழ்த்தி விடலாம்.

பல வருட காலம் நாம் இந்த உடலை வளர்த்திருந்தாலும் இது என்ன வாழ்க்கை…? என்று வெறுக்கும் போது சிலர் தற்கொலை செய்து உடலை அழித்து கொள்கின்றனர்… ஒரு நொடியில்…!

ஆனால் எண்ணிய உணர்வின் தன்மை தன் உணர்ச்சிகள் வளர்க்கப்படுவதற்கு எத்தனையோ ஆசாபாசங்களை வைத்து இவ்வளவு காலம் வாழ்ந்து வந்துள்ளோம். இதைப் போல் விஷத்தின் துடிப்பு ஒரு நொடியில் இயக்கி விடுகின்றது.

அத்தகைய விஷத்தின் தன்மைகளை எல்லாம் வென்றவர்கள் தான் மெய் ஞானிகள். அத்தகைய நிலைகள் அனைத்தும் வென்று இந்த விஷத்தின் தன்மையின் ஆற்றலைத் தனக்குள் அடிமைப்படுத்தி… அந்த ஆற்றல்மிக்க சக்தியை தனக்குள் ஒளியாக மாற்றினார்கள்.

இன்று வைரம் தன்னிச்சையாக ஒளி கொடுக்கிறதென்றால்
1.விஷத்தைத் தன் உள்ளடக்கி…
2.விஷத்தின் ஆற்றல்மிக்க நிலையை ஒளிச் சுடராக…
3.தன்னிச்சையாக அது ஒளியாக இனிமையாக நம் கண்ணிலே பார்க்க முடிகின்றது குளிர்ச்சியாக.

இந்த விஷங்கள் அனைத்தும் ஒடுங்கி அந்த இயக்கச் சக்தி ஒளியாக மாறுகின்றது. ஆனால் அதைத் தட்டி விழுங்கினாலோ… “நம்மை மாய்த்துவிடும் வைரம்….”

இதைப் போன்று
1.விஷத்தின் தன்மை தனக்குள் எடுத்து…
2.இனிமை கலந்த செயலாக இயக்கக்கூடிய… ஆற்றல்மிக்க… வலிமைமிக்க…
3.மகரிஷிகளின் உடலில் விளைவித்த அந்த எண்ண அலைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.
4.அதைக் கவர்வதற்குத்தான் உங்களுக்குள் இந்தத் தியானப் பயிற்சி.

நாம் குழம்பு வைக்கும்போது காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு அனைத்தும் கலந்து ஒரு சுவைமிக்கதாகச் சமைக்கின்றோம் அல்லவா…!

இதைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாழ்க்கையிலே நலிந்து நெளிந்து சலித்து வெறுப்பு உவர்ப்பு வேதனை இதைப் போன்று எத்தனையோ எண்ணங்களுடன் நாம் இங்கே வந்து கூடியிருக்கின்றோம்.

ஆனால் அதே சமயம்… நம் குரு காட்டிய வழிப்படி மெய் வழியைக் காண வேண்டும்… அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று ஒரே சீர்படுத்தி… இந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்து கொண்டுள்ளோம்.

விண்ணை நோக்கி யாம் (ஞானகுரு) ஏகி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் அலைகள் நீங்கள் பெற வேண்டுமென்று சதா தியானமிருக்கின்றோம்… தவமிருக்கின்றோம்.

அதே உணர்வின் ஏக்கத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி தியானமிருப்போர் அனைவரும் பெற வேண்டும்… என்று ஒருக்கிணைந்த எண்ணத்துடன் ஒவ்வொருவரும் செயல்படுத்துங்கள்.

இந்த உணர்வுகள் படரப்படும்போது மற்றவர்கள் எந்தெந்தத் துன்பத்தில் இருந்தாலும் நாம் தியானித்த இந்த உணர்வலைகள் ஒன்று சேர்ந்து
1.எந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டுமென்று எண்ணினோமோ
2.இந்த உணர்வின் அலைகள் நம் ஒலி அலைகளுடன் கலந்து
3.இந்த உணர்வின் சுவாசங்கள் உங்களுக்குள் உமிழ் நீராகச் சுரந்திருப்பதையும் பார்த்திருக்கலாம்.

மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி அந்த மூச்சலைகளை வெளியிடும்போது உங்களுக்குள் உமிழ் நீராகச் சுரப்பதை இங்கு பார்க்கலாம்.

“இப்பேர்ப்பட்ட அமுத சுரபிகள்” நமக்குள் சேர்ந்து விட்டால்… அந்த ஞானியின் அருள் வித்தை அது வளர்த்து.. நமக்குள் நம்மை அறியாது உள் சென்று வேதனையை உருவாக்கும்… பல நோயினை உருவாக்கும் நம் சொல்லின் இனிமையைக் கெடுத்திடும்… இந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் அது தணித்து விடும்.

அதாவது வைரக்கல்கள் எப்படி தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றுகின்றதோ அது போன்ற நிலைகளை நாமும் பெற முடியும். நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அதைப் பெற முடியும்.

பல பொருள்கள் சேர்த்து அதை ஒரு குழம்பின் சுவையாகச் சுவைத்து சமைக்கும் நிலை போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் அனைவரது உள்ளங்களின் நிலைகளும்
1.ஒருத்தர் கோபமோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ இருந்தாலும்
2.அதைச் சரிசமமாகச் சமைக்கும் நிலைகள் கொண்டு சுவை பெறும் சக்தியாக உருவாக்கவும்
3.ஒளியின் சக்தியாக ஆக்கிடவும் தான் இந்த அருள் வித்துகளை உங்களுக்குள் ஊன்றுகின்றோம்.

meditation poses

மண்ணிலிருந்து எல்லாமே விளைவது போல் உடலான நிலத்தில் மெய் ஞானத்தினை விளைய வைக்க முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இயற்கையின் சக்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறிக் கொண்டேதான் உள்ளது. பச்சைப் பசேலென்று மழைக் காலத்தில் புல் பூண்டு படர்ந்துள்ள பூமியில் அது வளர்ந்து பழுப்பாகி காய்ந்து சருகாகி… மீண்டும் மழையில்லாக் காலங்களில் அவ்விடத்தில் வெடிப்பு விழுந்து… அங்குள்ள மண் இறுக்கம் கொள்ள… மீண்டும் மழை வர… பிறகு அதே இடத்தில் வளரக்கூடிய புல் பூண்டுகளின் வளர்ச்சி நிலை மாற மாற… இயற்கையின் தொடர்பிலேயே பல மாற்றங்கள் நொடிக்கு நொடி மாறுகின்றது.

இதைப் போன்றே மனித உணர்வின் எண்ணம் எடுக்கும் அலை ஒலியின் பதிவு நிலையைக் கொண்டு… ஆத்மா வளர்க்கும் ஒளித் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

பூமியில் இன்றைய மனித ஞானத்தைக் கொண்டு தனக்கொத்ததை வளர்த்துப் பக்குவப்படுத்தி ஆகாரத்தையும் மற்றெல்லாச் செயற்கைத் தன்மைகளையும் பூமியின் வளத்திலிருந்து மனித வாழ்க்கைக்கு வளர்த்துப் பயன்படுத்தினாலும்…
1.எந்த மண்ணிலிருந்து தனக்கொத்ததை எடுத்து மனிதன் பயன்படுத்தினாலும்
2.அதை வெறும் மண்…! என்றுதான் ஒதுக்கி விடுகின்றான்.

மண்ணிலிருந்துதான் உணவுப் பொருட்களை விளைவித்து உட்கொள்கின்றோம். ஆனால் அம்மண்ணை அவ்வுணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை.

இப்பூமியின் மண் வளத்தைக் கொண்டு வாழும் மனிதன் அம்மண்ணிலிருந்து சரீர ஜீவனை வளர்க்க தனக்கொத்ததைப் பயன்படுத்துவது போல் இச்சரீரத்தை பூமியின் கோளைப் போன்று இவ்வுயிராத்மா சரீர இயக்கத்தில் செயல்படும்.

1.ஜீவ வாழ்க்கையில் இச்சரீர உடலை ஓர் கோளாக எண்ணி
2.இச்சரீரம் மண்ணாக நாமெடுக்கும் உணர்வு ஜீவனாகி
3.அஜ்ஜீவனின் பலனே ஆத்மாவின் ஒளியாக சத்தாகும் அமைப்பாய்
4.இச்சரீரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்தும் மற்றக் கோள்களிலிருந்தும் நம் பூமியின் சுழற்சியால் அந்தந்த இடத்திற்கொப்ப ஈர்ப்பின் அமில செயல் வளர்ந்து… பல கோடித் தன்மைகள் பல உன்னத சக்திகளை பூமி வளர்த்துக் கொண்டு சுழற்சியின் கதியில் எண்ணமில்லா நிலையிலும்… பல கனி வளங்களிலும்… அபூர்வ இயற்கைத் தன்மைகளும்… இயற்கை சக்திகளும் வளருகின்றது.

இருந்த பொழுதும்
1.எல்லா நிலைகளையும் உணரவல்ல மனித உணர்வின் எண்ண ஞானம்…
2.மெய் ஞானத்தின் இயற்கை சக்தியை
3.மெய் ஞானிகள் மெய்யுணர்வில் மெய்யறிந்து மெய்யாக்கிய மேன்மையை
4.மெய் ஞானியாய் ஒவ்வொருவருமே தன் பகுத்தறிவின் உண்மை உணர்ந்து வளர்ந்திட வேண்டும்.

நம் ஜீவ உடல் உண்மையல்ல…! இயற்கையின் சதியில் ஒரு நாள் பிறப்பெடுக்கும் பூச்சியும்… ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் நாகமும்… சரீர உணர்வில் மெய்யறிய மனித நிலையின் உணர்வலையில் மோதிடும் ஞானத்தின் பகுத்தறிவால்தான் உயர் ஞானத்திற்கு செயலாக்கக்கூடிய செயல் தன்மைக்கேற்ற கோளமிது.

ஜீவ உடல் கொண்ட உயிராத்மாவில் “உடல்” இயக்கக் கோளம்.

உண்மையை உணர்ந்து உய்யும் ஆத்மா மெய் ஞானிகளின் மெய்யறிய மெய் ஞானிகளின் தொடர்பைப் பெறுங்கள்.

வானக்கோள்களில் மறைந்துள்ள எண்ணிலடங்கா உண்மை சக்தியில்… என்றுமே மங்கா ஒளித் தன்மையை வளர்க்கும் சப்தரிஷிகளின் தேவ ரிஷியாக செயலாக்கும் செயலுக்கு… மனித உணர்வின் எண்ண உடல் கோளத்தைப் பக்குவப்படுத்துங்கள்.

MMEG

தியான மண்டபத்தில் அமர்ந்து நல்லது பெற தியானிக்க வேண்டிய முறை

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்கு நீங்கள் வந்தாலே மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சொல்லி எண்ணி ஏங்கி இருந்தாலே போதுமானது.

உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும்… பிள்ளைகளுக்கு நன்றாகப் படிப்பு வர வேண்டும்… உங்கள் குடும்பத்தில் மகரிஷிகள் அருள் சக்தி படர வேண்டும்… என்று எண்ணுங்கள்.

உங்கள் விவசாயமோ தொழிலோ எது எது சீராக வேண்டுமோ அதை எல்லாம் எண்ணி ஒரு பத்து நிமிடம் தியானம் இருங்கள். மறுபடியும் ஒரு ஐந்து நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று இது போன்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து நீங்கள் தியானித்த உணர்வலைகள் வீட்டில் இருக்கும் கஷ்டங்களை நீக்க உதவும்.

“உங்களுக்கு இது எல்லாம் கிடைக்க வேண்டும் என்று தான்” சதா நான் (ஞானகுரு) எங்கிருந்தாலும் தியானிக்கின்றேன்.

ஆனால் இங்கே வரக்கூடியவர்கள் சிலர்
1.எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது
2.அது என்னை விட்டு போகமாட்டேன் என்கின்றது என்று
3.அதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கின்றார்கள்.

“அப்படிக் கேட்காதீர்கள்…” என்று சொன்னாலும் கூட அடுத்தாற்படி என்ன செய்கின்றார்கள்…?

யாம் பிரசாதம் கொடுக்கும்போது மகரிஷிகளின் அருள் சக்தியால் என் கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியால் எனக்குத் தொழில் வளம் பெற வேண்டும் மன பலம் பெற வேண்டும். என் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். என் பிள்ளைகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று கேட்க வேண்டும்.

இப்படிக் கேட்டால் “இதெல்லாம் நடக்கும்…” என்று ஒரு சொல்லில் யாம் (ஞானகுரு) ஆசிர்வாதம் கொடுக்கலாம்.

யாம் நல்ல வாக்கைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது என்ன செய்கின்றார்கள் என்றால்… என் பேரன் சரியாகப் படிக்க மாட்டேன் என்கின்றான்… ஒரே தலை வலியாக இருக்கின்றது…! என்று யாம் சொல்வதை விட்டுவிட்டு அதையே பிடித்துக் கொள்கின்றார்கள்.

நாம் கொடுக்கும் நல்ல வாக்கைக் கூட வாங்க மாட்டேன் என்கின்றார்கள்.

இன்னும் சிலர்… போன தடவை உடல் நோயை எண்ணி இங்கே வந்திருப்பார்கள். இரண்டாவது தடவை இப்பொழுது இங்கே வரும் போது “நலமாகிவிட்டது” என்று சொன்னால் பரவாயில்லை.

ஏனென்றால் முக்கால்வாசி உடல் நன்றாக இருக்கும். ஆனால் என்ன சொல்கிறார்கள் என்றால்… என் மேல் வலி இன்னும் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கின்றது… இன்னும் போகவே மாட்டேன் என்கின்றது…! என்றே சொல்லியே கேட்கின்றார்கள்.

1.போன தடவை இங்கே வந்து மருந்து சாப்பிட்டேன் உடல் வலி நீங்கியது
2.இனி கொஞ்சம் இருக்கிறதும் நீங்க வேண்டும்
3.என் உடல் முழுவதும் நன்றாக வேண்டும் என்று கேட்கும் மனது யாருக்கும் வரவில்லை.

கொஞ்சநஞ்சம் இருக்கும் வலியும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் போக வேண்டும் என்று கேட்பதற்கு மனது வர மாட்டேன் என்கின்றது.

ஆனால் யாம் இதைப் பழக்கிப் பழக்கிச் சொல்கிறோம்.

ஏனென்றால் நாம் கோவிலிற்குச் சென்று கஷ்டத்தை எல்லாம் சொல்லி அழுது தான் புலம்பி இருக்கின்றோமே தவிர
1.கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்
3.என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.கோவிலில் நின்று அவ்வாறு வேண்டிய பழக்கம் இல்லை

அந்தப் பழக்கம் இருந்தால் தானே இங்கே எம்மிடமும் அவ்வாறு கேட்கும் பழக்கம் வரும்.

காரணம் நாம் பழக்கப்படுத்திக் கொண்டு வந்த அந்த உணர்வு தான் அவ்வாறு பேச வைக்கின்றது. ஆகையினால் இங்கே வந்தீர்கள் என்றால் தயவு செய்து…
1.கூட்டு தியானம் இருந்தாலும் இல்லாமல் போனாலும்
2.வந்தவர்கள் ஒரு அரை மணி நேரமாவது மேலே சொன்ன மாதிரி தியானம் செய்ய வேண்டும்
3.அப்பொழுது உங்கள் மனதுக்கு அமைதி கிடைக்கும்… மன பலம் கிடைக்கும்
4.இந்த எண்ணம் உங்களை நல்லதாக்கும்.

அத்தகைய பழக்கத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் வர வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தியான மண்டபத்தையே கட்டி வைத்தது.

தயவு செய்து உங்களை நம்பிப் பழகுங்கள்…!

ஏனென்றால் சாமியார் செய்வார் ஜோசியம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் என்று இந்த எண்ணத்தில் தான் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கின்றது.

அந்த மெய் ஞானிகள் சொல்வது நமது உயிர் கடவுளாக இருக்கின்றது. நாம் எண்ணிய எண்ணம் இறையாகின்றது.
1.நம் உடலுக்குள் இறையான பின் அந்த உணர்வுகள் நமக்குள் செயலாகும்போது தெய்வமாக இருக்கின்றது.
2.நாம் எந்தெந்த குணங்களை எடுக்கின்றோமோ அது எல்லாம் நமக்குள் எப்படிச் செயலாக்குகின்றது…? என்பதை
3.ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

மழை நீர் பெய்யும்படி செய்து அதன் மூலம் தாவர இனங்களைக் காக்க முடியும்

மழை நீர் மூலம் உலகைக் காக்க முடியும்

மழை நீர் மூலம் தாவரங்களையும் நம்மையும் காக்கும் தியானம்

life of soul and body

நிஜமற்ற வாழ்க்கை பற்றியும் அழிவில்லா வாழ்க்கை பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.வாழ்க்கையுடன் இச்சரீரத்தைச் சொந்தப்படுத்தாதீர்கள்
2.ஆத்மாவிற்கு இந்தச் சரீரத்தைச் சொந்தப்படுத்துங்கள்.

மனித உணர்வின் எண்ணம் சுய கௌரவத்தைக் கொண்டு தன் ஆத்ம உடலையே அடகு வைத்துள்ள நிலைதான் வாழ்க்கையின் நிலை.

உற்றார் உறவினர் எதிரி நண்பன் தன் சொந்தத்தின் ஈர்ப்புப் பிடிப்பு என்ற தொடரில் எல்லாம்
1.தன் ஆத்ம உணர்வின் எண்ணத்தை அடகு வைக்கும் வாழ்க்கையிலிருந்து
2.இச்சரீரத்தை ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும்
3.பிறவா நிலை பெறும் ஒளி சக்தியைப் பெறல் வேண்டும்.

கௌரவத்தின் சுயநிலை என்பது எப்படி இருந்தாலும் இந்த உடலுடன் மறையக்கூடிய நிலை தான். ஆனால் இந்த உடலுடன் எடுக்கும் தன் ஞானத்தின் மெய்ஞானம் என்றுமே வளரும் நிலை பெற்றது.

வாழ்க்கையின் நிலையே நிலையில்லா நிலைதான்…! ஆனாலும் இந்த வாழ்க்கை என்ற நிலையிலிருந்து தான் நிலைபெறும் நிலையாக இச்சரீரத்தைக் கொண்டே சகல நிலையையும் நாம் பெற முடியும்.

உணவு உண்ணும் பொழுது உண்ணக்கூடிய உணவு காரமெடுத்தவுடன் நீரைக் குடித்துச் சமப்படுத்துகின்றோம். அதிகமான இனிப்பை உட்கொள்ளும் பொழுதும் திகட்டல் எடுத்தவுடன் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்துகின்றோம். கடினமான பொருளை உட்கொள்ளும் பொழுது விக்கல் ஏற்பட்டவுடனும் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்திக் கொள்கின்றோம்.

அதைப் போன்று…
1.இச்சரீர உணர்வில் மோதும் உணர்வின் எதிர் அலைகள் தாக்கக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும்
2.உணர்வின் எண்ணத்திற்கு – ஞானிகளின் எண்ணமுடன்
3.சமமான சாந்தம் என்ற நல் நீரைச் செலுத்த வேண்டும்.

சரீர உணர்வில் எல்லா நிலைகளும் மோதத்தான் செய்யும். நாம் உணவு உட்கொள்ளும்பொழுது அறு சுவையையும் சமப்படுத்திச் சமைத்து உட்கொள்கின்றோம். அது போல் உணர்வில் மோதக்கூடிய எண்ணத்தை நாம் சமப்படுத்தி ஆத்மாவிற்குச் சத்தாக்க வேண்டும்.

1.உணவின் சத்தெடுத்து உடல் வாழ்கின்றது
2.உணர்வின் சத்தெடுத்து ஆத்மா வாழ்கின்றது

1.ஆத்மாவின் வாழ்க்கை தான் அழிவில்லா வாழ்க்கை
2.உடலின் வாழ்க்கை நிஜமற்ற வாழ்க்கை…!

சூரியனும் மற்றக் கோள்களும் அது அது எடுக்கும் தொடர்பு கொண்டு ஓடும் கதியில் சூரியன் எப்படி ஆறு வண்ணத்தின் வளர்ச்சியில் ஏழாம் நிலையான ஒளி நிலை பெறுகின்றதோ அதைப் போன்று
1.நாம் எடுக்கும் தியான சக்தியின் மூலம்
2.இச்சரீர உணர்வில் மோதக்கூடிய குணங்களை
3.குணத்திற்கொத்த வீரிய நிலையை “நம் உயிராத்மா சமைக்க வேண்டும்…!”

dazzling of soul

உயிராத்மாவின் உயர்வு தான் “அழிவில்லா மகத்துவம்” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கோபம் என்ற கார நெடி உணர்வில் மோதியவுடன் நம் சரீர உணர்வில் இயக்கம் தாங்காமல் துரித கதியாகிறது. அப்பொழுது… “சாந்தம்…” என்ற நல் ஒலியை நாம் எடுக்கும் பொழுது அக்காரத்தின் நெடி வீரமாகின்றது

1.அந்த வீரத்தை முலாம் படுத்தும்
2.ஆத்மாவின் ஆத்ம வளர்ச்சிக்கு… வீரியத் தன்மையை வளர்த்துக் கொள்ளும் ஆயுதம் தான்
3.நமக்கு ஏற்படும் எதிர்நிலையின் கோப நிலையின் காரம்
4.வீரம் என்ற வீரிய சக்திக்கு “முலாம்”.

இதைப் போன்றே சலிப்பு சோர்வு என்ற ஒவ்வொரு குண நிலைகளுக்கும் உணர்வின் எண்ணத்தை உப்பு புளிப்பு காரத்தை எதில் எத்தன்மை கொண்டு சேர்த்துச் சுவையாக்கிச் சமைத்து சரீரத்திற்கு உட்கொள்ளும் உணவைப் போன்று இந்த ஆத்மாவிற்கு வாழ்க்கையை ஒட்டிய எதிர்நிலைகளைச் சமைக்கக்கூடிய நல் குணங்களாக்கிச் சத்தாக்க வேண்டும்.

தனி உப்பையும் தனிக் காரத்தையும் தனிப் புளிப்பையும் உடல் ஏற்பதில்லை. அறுசுவையும் உண்டு பழகிய உடலுக்கு எப்படி அவ்வெண்ணத்தில் தன் சுவைக்கொப்ப ஆகாரத்தைச் சரீர உணர்வு நாடுகின்றதோ அதைப் போன்று
1.நாம் மனிதனிலிருந்து மகானாகும் சக்தி எடுக்க
2.ஆத்மாவைப் புனிதப்படுத்தும் சுவையான நற்குணத்தைச் சமைக்கும் ஆலயமாக
3.இந்த உடலை உயிர் என்ற தெய்வம் குடி கொண்ட நிலையில்
4.நாம் எண்ணத்தை உயர்த்தி நம் ஆத்மாவை ஒளியாக்கிக் கொண்டோமானால்
5.பல கோடி ஆண்டுகளாகப் பிறப்பின் தொடரில் பிறப்பெடுத்த நம் உயிர் ஆண்டவனை
6.”ஒளி ஆண்டவனாகச் செயல்படுத்துவது” இவ்வெண்ணம் தான்…!

எண்ணம் என்ற பகுத்தறிவின் நிலையைப் படைப்பின் உயர்வில் பெற்ற இத்தருணத்தைத் தவறவிடாமல்… சேவை என்பதன் பொருளே உயர் தன்மையை வளர்க்ககூடிய சேவை தான் என்பதை இயற்கையின் உண்மையில் உணர்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால்
1.சரீர கௌரவம் அழியக் கூடியது
2.ஆத்மாவின் உயர்வு தான் அழிவில்லா மகத்துவம்.

இதன் தொடரில் சூரியனைப் போன்ற ஒளி ஈர்ப்பாக உயிராத்மாவை வைரமாக்குங்கள்.. என்றுமே அழிவில்லா “ஜொலிப்பாக…!”

ஜீவ நீரை உருவாக்கும் அகஸ்தியனின் ஆற்றல்

ஊழ்வினை, விதி, மதி

விதியை மதி கொண்டு வெல்ல வேண்டும் – நான் சிறிய வயதில் செய்த தவறுகள்

human family

பிறவா நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இயற்கையின் கதியை இறைசக்தியின் இறைத்தன்மையை வளர்க்கும் நிலைதான் பிறவா நிலை பெறும் நிலை.

உணர்வின் எண்ணமற்ற இயற்கையின் செயலில் சில மரங்கள் அம்மரத்தின் வீரியத்தில் வைரத்தின் ஒளி பாய்ந்து அவ்வைர ஒளியின் முதிர்வின் மூலம் தானப்பா “மண்டலங்களின் ஜீவ நாடி…!”

ஜீவராசிகளில் பாம்பு தன்னுடைய ஒளி சக்தியின் மாணிக்கத்தைப் பெறுகின்றது. வயது முதிர்ந்த ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யானைகளுக்கு அதனுடைய உடலில் “யானை முத்து” என்ற முதிர்வின் அபூர்வப் பொருள் வளர்கின்றது.

பூமியின் இயற்கையில் முதிர்வின் நிலை பல நிகழும் பொழுது உணர்வின் எண்ணம் கொண்ட மனித நிலையில்… பிறவா நிலை பெறும் வழியை நாம் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும். ஏனென்றால் வாழக்கூடிய காலம் குறுகியது.

யானையும் சிங்கங்களும் மனிதனைக் காட்டிலும் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றன. ஆனால் மனிதனின் தேவையின் குணம் அதிகப்பட்டு மனிதன் வாழக்கூடிய காலத்தையே குறுக்கக்கூடிய வளர்ச்சி நிலைதான் இன்றைய நிலை.

இக்குறுகிய மனித ஜீவித வாழ்க்கை நிலையில் தத்துவ ஞானிகள் பிறவாநிலை பெற அறிந்துணர்ந்தனர்.

மிருகங்களில் சில இனங்கள் நீண்ட காலம் வாழ்ந்தாலும் மனிதனைப் போன்று பிறவாநிலை பெறும் நிலை அதற்கில்லை. ஆகவே மனிதன் தன்னுடைய இஜ்ஜீவ சரீரத்தின் உண்மை நிலையை உணரல் வேண்டும்.

நல்லொழுக்கத்தில் உயர் நிலை அடைய வேண்டும் என்பவர்கள் முதலில் இவ்வுடலின் சொந்தமான நிலை யாது…? என்பதை அறிந்திடல் வேண்டும்.

இச்சரீரத்தில் எடுக்கக்கூடிய உணர்வின் ஓட்டத்தை…
1.எம்மகானாலும் வாழ்க்கைத் தொடரில் உணர்வின் ஓட்டத்தை
2/சம நிலையில் வாழ்க்கைத் தொடரில் செயல்படுத்த முடியாது.
3அதைச் செயல்படுத்தக் கூடிய நிலை பிறவாநிலை
4.அது இவ்வுடலில் இருந்துதான் செயலாக்கக் கூடிய நிலை,.. இயற்கையின் நிலை.

வாழ்க்கையில் நிகழக்கூடிய உணர்வின் மோதல் ஒவ்வொரு நொடியிலும் மாறிக் கொண்டேதான் இருக்கும். மாறக்கூடிய உணர்வின் சமைப்பை இவ்வுயிரின் செயல் சுட்டுப் பொசுக்கக் கூடிய ஜோதி நிலையான ஒளித்தன்மை பெறுவதுதான்…!

ஜீவகாந்த சரீரத்தில் விண்ணிலிருந்து எடுக்கக் கூடிய ஒளி சக்தியை… மின் காந்த ஒளியாய் நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வால் ஆத்மாவின் ஒளிசக்தி வலு கூடக் கூட
1.வாழ்க்கையில் மோதக் கூடிய எதிரொலியின் ஈர்ப்பிற்கு உணர்வின் எண்ணத்தை அடகு வைக்காமல்
2.ஆத்மாவின் செயலாய் உணர்வின் எண்ணத்தை ஈர்ப்புப்படுத்தும் பக்குவத்தில்
3.மனித குணம் ஞானம் செயல்படல் வேண்டும்.

விருப்பு வெறுப்பு வாழ்க்கையில் தான் நடக்கும். தியானத்தில் மின் காந்த ஒளியை எக்குணத்தில் நாம் முலாமாக்குகின்றோமோ… அதற்கொத்த இப்பூமியின் சமைப்பான ஏழு வண்ணத்தில்… ஒளியில்… இச்சரீர குணத்திற்கொப்ப நாம் எடுக்கும் தியானத்தால் ஆத்மாவின் ஒளித்தன்மையின் வண்ண நிலை வலுக்கொள்ளும்.

பாம்பின் மாணிக்கக்கல் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு காலங்களுக்குப் பிறகு பாம்பு கக்கும் மாணிக்கம் ஒளி வீசுகின்றது. உயிராத்மாவை திடப்பொருளாக ஆக்குவதில்லை ஆத்மாவை வலுப்படுத்தும் நிலை என்பது…!

இஜ்ஜீவ சரீர ஆத்மாவை சூட்சும ஆத்மாவாய் ஒளியாக்கும் வழியை இத்தியான வழியில் மனித குணத்திலிருந்து… சம குணத்தில் சரீரத்தில் ஓடக் கூடிய எண்ண நிலை ஆத்மாவின் உந்தலில் எண்ணம் செயலாகும் பொழுதுதான்… சரீர உணர்வில் பிறவாநிலையை இவ்வாத்மா பெற முடியும்.

1.தன் சரீரத்தை எந்த நிலைக்கும் பிரித்துக் கூட்டும் ஆத்ம ஒளி சக்தி பெற்ற ரிஷி சக்தியின் வலுவாய்
2.நம் சரீரத்தில் எடுக்கும் உணர்வின் எண்ணம் கொண்டு தான்
3.பிறவாநிலைப் படுத்த முடியும்.

இந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்

நண்பன் மேல் பகைமையானால் நல்லதை எண்ணுகின்றோமா, எண்ண வேண்டும்

பகைமையை அகற்றும் வைகுண்ட ஏகாதசி

ancesyor prayer and meditation

நம் முன்னோர்களை பிறவா நிலை பெறச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்

 

கூட்டுத் தியானங்களில் நாம் பதிவு செய்த வலுவான சக்தி துணை கொண்டு ஈஸ்வரா… என்று நம்மை இயக்கும் உயிரை எண்ணி ஏங்கி மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் மூலம் நம் உடலுக்குள் நம்மை அறியாது சேர்ந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வின் சக்திகளை பலவீனப்படுத்தச் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் அது நம் உடலுக்குள் நோயாகி நல்ல குணங்களை செயல்படுத்தாது ஆக்கி விடும்.

1.இப்படி அடிக்கடி நாம் அந்த விண்ணை நோக்கி ஏகி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஆத்ம சுத்தி நாம் செய்து கொண்டால்
3.அன்றன்று அந்தந்த நிமிடங்களில் நமக்குள் நம்மை அறியாது ஏற்படும் தீமைகளை அகற்ற இது உதவும்.

அது மட்டுமல்லாமல்… நம்முடைய எண்ணங்கள் கூர்மையாக அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து நம் நினைவலைகள் அங்கே இணைக்க படுகின்றது.

இதனை நாம் வலுக் கூட்டக் கூட்ட… விண்ணின் ஆற்றலும் அந்த மகரிஷிகளின் தொடர்பும் நமக்குக் கிட்டுகின்றது.

நம்முடைய மூதாதையர்கள் எத்தனையோ வேதனைகளை அனுபவித்துத் தான் நம்மை வளர்த்து நமக்கு எத்தனையோ சுகங்களையும் கொடுத்துள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் மனிதனாக உயர்ந்து வாழவும் வைத்துள்ளார்கள் செல்வங்களும் நமக்கு சேமித்து வைத்து உள்ளார்கள். செல்வங்களைச் சேமித்து வைத்தாலும் செல்வத்தைச் சேமிப்பதற்கு எவ்வளவோ வேதனைகள் பட்டு அனுபவித்தவர்கள் தான் நம் முன்னோர்கள்.

அந்த வேதனையின் உணர்வு வளர்ந்து மனித நினைவு இழந்து உணர்வின் சத்து அவர் உடலுக்குள் சேர்க்கப்படும்போது இன்னொரு மனிதனின் உடலுக்குள் அவர்கள் புகுந்தாலும்
1.அந்த ஆன்மா முதல் முதலில் சேர்த்துக் கொண்ட வேதனை உணர்வை அந்த உடலிலே உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தி
2.நஞ்சின் உணர்வைத் தான் அந்த ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

மீண்டும் இப்படி பல உடலுக்குள் போனாலும் அந்த நஞ்சைத் தான் வளர்த்து கொள்ள முடியுமே தவிர மனிதனின் உருவாக அந்தக் கருப்பெறும் தன்மையை இழக்கப்படுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் நாம் புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சியில் வந்தது போல… மீண்டும் மனிதனிலிருந்து பரிணாம வளர்ச்சி தேய்பிறையாகி… பௌர்ணமிக்கு மறு நாள் தேய்வதுபோல மனிதனின் ஒளிச்சுடர் நாம் அறியும் நிலைகள் மங்கி… நாம் மீண்டும் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியில் பாம்போ தேளோ பல்லியோ இது போன்ற விஷ ஜந்துக்களின் நிலையை அடையச் செய்து விடுகின்றது நமது உயிர்.

நம் முதாதையர்களின் உணர்வுகள் நம் உடலிலே உண்டு. அவர்களுடைய உணர்வுதான் நம் உடலை இத்தகைய நிலைகளுக்கு வளர்த்தது. நம்மை மனிதனாக உருவாக்கியது நம் முதாதையர்களுடைய எண்ணங்களே.

1.ஆகவே நம் வாழ்க்கையில் வரும் துன்பத்தைத் துடைக்க
2.அடிக்கடி விண்ணை நோக்கி மகரிஷிகளின் அருள் சக்தி பெறும்போது
3.நமக்குள் வலுப் பெறும் இச்சக்தியின் துணை கொண்டு
4.நம் முதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி இணைக்கச் செய்ய வேண்டுமென்றால் இப்போது நாம் இங்கே எப்படிக் கூட்டு தியானங்களில் செய்கின்றோமோ இதைப் போன்று குடும்ப கூட்டு தியானங்கள் செய்து அந்தந்தக் குடும்பத்திலிருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை பிரிந்த நிமிடமே அவர்கள் இதைப்போல சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து பிறவா நிலை என்னும் ஒளி சரீரம் பெற வேண்டுமென்று ஐக்கிய உணர்வின் வலுக்கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அதற்கு இந்தக் கூட்டுத் தியானம் உதவும்.

அந்த உணர்வின் சக்தியை நாம் வளர்த்துக் கொள்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானத்தையே வைத்துள்ளோம்.

ஒரு உந்து விசை வைத்து இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி மற்ற செயற்கை கோள்களை விஞ்ஞான அறிவு கொண்டு அனுப்புவது போல மகா ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டு
1,நம் முதாதையர்களின் உயிரான்மாக்களை
2.சரீரம் அற்ற அந்த சூட்சம சரீரத்தை… “விண் செலுத்துவதே” இந்தப் பயிற்சி.

thought power and fate of soul

மனிதனுடைய கதியை நிர்ணயிப்பது எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:
ஒரு கடிகாரம் தெரிகின்றது. கடிகாரத்தின் முட்கள் நகர்வதுவும் தெரிகின்றது.

விளக்கம்:
நேரத்தைக் குறிப்பிடுகின்ற கடிகாரத்தின் முள் ஒன்று பெரியதாகவும் ஒன்று சிறியதாகவும் உள்ளது. சிறிய முள் மணியையும் பெரிய முள் நிமிடங்களையும் காட்டுகின்றன.

பெரிய முள் ஓர் சுற்றுச் சுற்றிவர சிறிய முள் அடுத்த எண்ணுக்கு நகருகின்றது. அதைப் போன்று உணர்வின் எண்ணத்தின் வேகம் கடிகாரத்தின் பெரிய முள்ளைப் போன்று இச்சரீர ஒலியால் சுழலுகின்றது.
1.ஆத்மாவின் பதிவானது பெரிய முள்ளின் சுழற்சி வேகத்தைப் போன்றும்
2.உணர்வின் எண்ணத்தின் வேகம் ஆத்மாவின் செயல் பதிப்புகளானபின்
3.அது விளைந்து… இச்சரீரத்தின் வாசனையாக “இச்சரீரம் அடுத்து அடையும் கதியை…” சிறிய முள்ளின் குறிப்பு உணர்த்துகின்றது.

மனித உணர்வின் எண்ண ஓட்டத்திற்கு ஓப்ப செயலாக்கும் விந்தையின் விளைவுதான் “மனிதனின் கதி…”
1.மனிதனின் கதியில் செயலாக்கும் உயிரே “ஆண்டவனாய்…”
2.ஆண்டவனின் இயக்க ஆத்மாவில் எது பதிவாகின்றதோ அதுவே இறைவனாய் உள்ள நிலையில்
3.மனிதனின் மெய் ஞானம் தன் உணர்வின் எண்ணத்தின் வேகத்தை எக்கதி கொண்டு எடுக்கின்றானோ
4.அக்கதியின் ஈர்ப்பிற்குத்தான் சரீரத்தின் செயல் செயலாகும்.

இயற்கையின் கதியில்… பூமி சுழன்று ஓடும் பொழுது பூமியின் வட்டத்தில் அதன் ஓட்ட கதியில் எது எதையெல்லாம் சந்திக்கின்றதோ அச்சந்திப்பின் அமிலத்தைத் தன் வளர்ச்சியின் வித்தாக்கி… இயற்கையின் கதியாய் பூமி வளர்க்கும் வளர்ப்புகளும்… பூமியின் கால நிலையில் காற்றும் மழையும் உஷ்ணமும்… சுழற்சியின் கதியின் ஓட்டத்திற்கொப்ப பூமியின் செயல் வளர்ச்சி சுழலுகின்றது.

பூமியில் வளரக்கூடிய தாவரங்களின் வளர்ச்சியில் மரங்களையோ கொடிகளையோ வெட்டும் பொழுது… மீண்டும் அடிமரத்தின் தண்டு
1.”ஒரே கதியின் உணர்வில்” தாவரங்கள் இயற்கையின் அமிலத்தை எடுத்து ஒன்றின் தொடர்பில் வளர்வதினால்
2.வெட்டிய பிறகும்… துளிர் விட்டு மீண்டும் அம்மரங்கள் வளர்கின்றன.

ஆனால் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு… அதற்கடுத்த நிலை கொண்ட ஜீவ அணு வளர்ச்சி கொண்ட ஜீவ ஜெந்துக்களின் நிலையில் அதனுடைய உறுப்புக்கள் வெட்டுப்பட்டதென்றால் மீண்டும் வளர்வதில்லை.

அதே சமயத்தில் மனிதனின் நிலையில் பல உணர்வுகளை அறியக்கூடிய செயல் தன்மை எண்ணத்தின் உணர்வின் வேகம் கொண்ட செயல்பாட்டுத் திறமை உள்ளது.

ஆகையினால் மனிதன் தன் எண்ணத்தைக் கொண்டே தனக்கொத்ததைப் படைக்கவல்ல ஆற்றல் திறன் கொண்டவன் ஆகின்றான். மேலும்…
1.செயல் தன்மையின் உருவக நிலைக்கு
2.மனிதனின் நிலைதான் இப்பூமியின் வளர்ச்சியின் கடைசி நிலை. (உயர்ந்த படைப்பு)

தாவரங்களின் நிலையில் தனக்கொத்ததை ஈர்த்து ஒரே செயலில் வளரும் நிலையினால் அவைகளுக்கு எண்ணத்தின் ஓட்டமில்லை. மற்ற ஜீவ ராசிகளின் நிலையில் மனிதனை ஒத்த செயல் தன்மையில்லை.

1.எல்லா நிலையும் உணரக்கூடிய மனிதன்
2.தன் உணர்வின் எண்ணத்தில் எதை எடுக்க வேண்டும்..? என்பதனை
3.மனிதனின் ஞானத்தால் அறிதல் வேண்டும்.

ஆகவே… இப்பூமியில் பல நிலைகளுடன் ஒன்றிய வாழ்க்கையில் நாம் எதை எண்ணுகின்றோமோ அவ்வெண்ணத்தின் பல நிலைகள் வளர்ந்தாலும்
1.தனக்கொத்ததைப் பண்படுத்தி தன் ஜீவிதத்தை வளர்க்கும் மனிதன்
2.தனக்கொத்த நற்குணத்தின் நல் ஒலியை
3.தன் ஆத்மாவின் கதியில் பதிவாக்க வேண்டும்.

விண் செல்லும் மார்க்கம் 

உடலுடன் வாழும் பொழுதே விண் செல்லும் ஆற்றலைப் பெருக்கிடல் வேண்டும் 

soul cleaning

விநாயகர் தத்துவம் மூலம் ஞானிகள் நமக்குக் கொடுக்கும் தீமையை நீக்கும் வலிமைமிக்க சக்தி

 

உதாரணமாக நம் நண்பரின் கஷ்டத்தை நாம் கேட்டு அறிகின்றோம். அவர் பட்ட கஷ்ட உணர்வு நம் உயிரிலே பட்டவுடனே நாமும் சோர்வடைகின்றோம்.

ஐயோ.. பாவம்…! நல்ல மனிதன்… உனக்கும் இப்படிக் கஷ்டம் வந்துவிட்டதா…? என்று கேட்டு அவருக்கு உதவியும் செய்கின்றோம். அப்போது உதவி செய்யும் போது நம் நல்ல மனதில் அவருடைய கஷ்டமான உணர்வுகள் கலந்து விடுகின்றது.

தங்கத்தை நகையாகச் செய்ய வேண்டும் என்றால் செம்பையும் வெள்ளியையும் கலப்பார்கள். அதைப் போன்று அவருடைய கஷ்டம் கலந்தாலும் வாழ்க்கையில் உதவி செய்து விட்டோம்.

வாழ்க்கையில் நாம் ஒருவருக்கு உதவி செய்தால் தான் நாளைக்கு அவரும் உதவி செய்வார். அப்பொழுது
1.இந்த வாழ்க்கை என்ற செயினிற்கு (தொடருக்கு)
2.அவரோடு தொடர்பு கொண்டு அந்த அன்பை நீங்கள் வளர்க்கின்றீர்கள்.
கஷ்டத்தைக் கேட்டு உதவி செய்து வீட்டிற்குள் வருகின்றீர்கள். பேரப் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சியதும் அந்தக் குழந்தை வீர்… வீர்… என்று கத்துகின்றது.

குழந்தை கத்தியவுடன் மருமகளைக் கூப்பிட்டு… நீ பிள்ளையைக் கவனிக்கும் முறை இது தானா…? ஏன் உன் பிள்ளையை இப்படி அழுகச் செய்கிறாய்…? என்று கேட்போம்.

இல்லையே…! இது வரை குழந்தை நன்றாகத் தான் இருந்தது. இப்பொழுது நீங்கள் வந்தவுடன் தான் அழுகின்றது…! என்று மருமகள் சொல்கிறது.

அதற்கு நாம் என்ன சொல்வோம்..? அப்படியானால் நான் தான் தப்பு செய்தேனா…? என்று அங்கே சண்டை வருகிறது.

ஏனென்றால்…
1.அங்கே நம் நண்பருடைய கஷ்ட நஷ்டத்தைக் கேட்டோம்
2.அதை நாம் சுத்தப்படுத்தவில்லை
3.அது இங்கேயும் வந்து வரிசையில் அடிக்கின்றது.

கேட்டறிந்த கஷ்டத்தையும் வெறுப்பையும் வேதனையையும் துடைக்க வேண்டுமல்லவா…?

அதற்காகத்தான் விநாயகரை (தெருவுக்குத் தெரு) வைத்துக் காட்டினார்கள் நம் ஞானிகள். நண்பருடைய இன்னல்களைக் கேட்டறிந்தோம்… உதவியும் செய்துவிட்டோம்… ஆனால் அந்த இன்னலான உணர்வு நம் உடலில் அது சேரக் கூடாது.

நம் உடலில் சேரக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். நாம் எண்ணுவதை எல்லாம் அவன் தான் நமக்ககுள் உற்பத்தி (உடலாக) செய்கின்றான்.

ஆகவே அவனைத் தான் அந்த நேரத்தில் எண்ண வேண்டும். ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.விநாயகரைப் பார்த்து இந்த முறையில் கும்பிட்டுப் பழகினால் தான்
2.நாம் எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்
3.நம்மை அறியாது உட்புகந்த கஷ்டங்களையும் இன்னல்களையும் அடக்கும்…
4.நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் சக்தியாக வளரும்.

ஆனால்… இரண்டு தோப்புக்கரணம் போடுகிறேன்… உனக்கு இரண்டு அருகம்புல்லை வைக்கின்றேன்…! எனக்கு நல்லது செய்…! என்று விநாயகரிடம் கேட்டால் இந்த எண்ணம் தான் வரும்.

ஆகையினால் ஈஸ்வரா.. என்று நம் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று கண்களைத் திறந்து நினைவை வானை நோக்கிச் செலுத்தி மீண்டும் கண்ணின் நினைவை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்.

இதைத்தான் கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது…!

கண்ணில் பார்த்தவுடன்…
1.ஒருவன் தப்பு செய்கின்றான் என்று நம் கண் காட்டுகிறது.
2.அது மட்டுமல்ல… தவறு செய்த உணர்வை நம் கண் இழுத்து
3.அவன் தப்பு செய்கின்றான் என்று கண் தான் நமக்குள் தெரிய வைக்கின்றது… இல்லையா…?

அப்பொழுது நாம் நண்பரின் கஷ்டத்தைத் தெரிந்து கொண்டோம் என்று கண் உணர்த்திய பின் உடனே என்ன செய்ய வேண்டும்…?

அதே கண்ணின் நினைவை கொண்டு… உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று வானை நோக்கி அந்தச் சக்தியைச் சுவாசித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வலிமையான மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகுவதற்குத்தான் விநாயகரை வைத்தனர். ஒவ்வொரு நாளும் காலையில் அங்கே நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை பிறவா நிலை பெறச் செய்ய வேண்டும் என்று உந்தித் தள்ளும்படி செய்தார்கள் ஞானிகள்.
1.முன்னோர்க்ளை முதலில் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும் நல் வினையை உன் உடலில் சேர்க்க வேண்டும்
2.அப்பொழுதுதான் நீ விண்ணிற்குச் செல்வாய்… மனிதன் என்ற நிலையில் நீ முழுமை பெறுவாய்…! என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய வழியில் நம் உயிரை வேண்டி கஷ்டப்பட்டவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.தங்கத்தில் திரவத்தை ஊற்றி அதில் கலந்துள்ள செம்பும் வெள்ளியையும் ஆவியாக மாற்றுவது போல்
2.அந்த ஞானியர்கள் உணர்வைச் செலுத்தி நாம் சுத்தப்படுத்த வேண்டும்.

அதன் பின் நண்பரைப் பார்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய். உன் சிரமம் எல்லாம் நீங்கிப் போகும். நீ நன்றாக இருப்பாய்…! என்று
1.நம்மை முதலில் தூய்மைப்படுத்திவிட்டு அந்த வலு கொண்டு
2.நீ நன்றாக இருப்பாய்…! என்று நண்பரிடம் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.

almighty and god

“தனக்கு மேல் ஒருவன்” தன்னை உயர்த்தச் செயல்படுகின்றான்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நட்சத்திரமாய் உயர்ந்த வளர் சக்தி கொண்ட கோள்களாய்… பல கோடி உயர்ந்த உருளக் கூடிய மண்டலக் கோள்கள் இருந்தாலும்… உணர்வின் உண்மை அறியும் “ஞான மனித நிலை” எல்லாக் கோள்களிலும் இல்லை.

உணர்வின் எண்ணத்தில்… அறியும் ஆற்றல் செயல் தன்மை செயலாகும்…
1.இயற்கையின் ஒளி சூட்சுமத்தை வளர்க்கும் வலிமை கொண்ட தொடர்நிலை வளர்ந்தால்தான்
2.இயற்கையின் சுழற்சி ஓட்டத்திலிருந்து சமைக்கும் குண தத்துவத்தைச் செயலாக்க முடியும்.

ஆகவே பல கோடி நிலைகள் செயல்படும் அண்டக் கோள்களில் அறிவின் ஆற்றலும் அறியும் திறனும் மனிதனுக்குத்தான் உண்டு.

தனக்கொத்ததை மனிதனின் எண்ணம் ஏற்படுத்திக் கொள்ளும் ஏற்றத்தில்…
1.மனித உணர்வின் செயல் வீரியம்… “தான்…!” என்ற முதிர்வு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
2.தன் அடுத்த வளர்ச்சி நிலை இயற்கையின் தொடர்பு ஒலியை எடுக்க முடியா தேக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.

இந்த உண்மைகளை எல்லாம் அறிந்த சித்தன் “தனக்கு மேல் ஒருவன் உண்டு…” என்ற தெய்வத்தின் குணங்களை மனிதர்களுக்குச் சுட்டிக் காட்ட கோவில்களையும் சிலைகளையும் தத்துவ ஞானத்தில் ஸ்தாபித்தான்.

மனிதனின் உணர்வின் வேகம் “தான் உயர்ந்து விட்டேன்…!” என்ற எண்ணத்தைக் கூட்டிக் கொள்ளும் பொழுது தன்னை ஒத்த ஜீவாத்மாக்களை உயர்த்தக் கூடிய உணர்வுகள் மங்கிவிடுகின்றன.

1.தனக்கு மேல் ஒருவன்…
2.“தன்னை உயர்த்தச் செயல்படுகின்றான்…” என்ற எண்ணத்தின் வேகம் செலுத்தும் பக்தியினால் தான்
3.மனிதர்களின் உணர்வில் “தான்…” என்ற எண்ணத்தை அகற்ற முடியும்.

இதை உணர்த்திய பக்குவம் நம் ஞான பூமியில் பல உண்டு.

மனிதன் தெய்வத்தின்பால் செலுத்தப்பட்ட எண்ணத்தின் வேகம் கோயில்களில் தீ மிதித்து விரதங்கள் அனுஷ்டித்து பல செயல்கள் பக்தியில் செயல்படுவதை எல்லாம் பார்க்கின்றோம்.

பக்தியின் உந்தலின் வேகம் அவ் உணர்வின் வீரியத்திற்கொப்ப “அவன் எடுக்கும் சுவாசத்தின் வேகத்தால்” இன்றும் தீக்குண்டங்கள் நடப்பதைக் காண்கின்றோம்.

மனிதனின் உணர்வின் எண்ண வேகம் “எதனையும் ஈர்க்கவல்ல செயல் குணத் தன்மை கொண்டது…” இதனை…
1.தான் என்ற அறிந்து விட்டோம்… என்ற எண்ணத்தை விட்டு விட்டு
2.அறிய வேண்டிய எண்ணம் கொண்டு செலுத்துவதே உத்தமம்.

மனித உணர்வில் சலிப்பு சோர்வு வெறுப்பு கோபம் என்ற நிலைகளைக் கூட்டிக் கொள்ளாமல்… நற்குணத்தின் நறுமணமாய் இச்சரீர உணர்வின் ஒலி சுவாசமெடுத்து…. சம குணத்தின் ஒலியால் இயற்கையின் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் ஒளியால்… நட்சத்திர மண்டலங்களின் ஒலி அலைகளையும் ஜீவ உணர்வுடன் இழுக்கும் பொழுது… இஜ்ஜீவ உணர்வின் எண்ணத்தில் மோதும் பொழுது… ஒளியாக… மின்காந்த ஒளியாக ஆத்மா ஒளிர்கின்றது.

ஆத்மாவின் ஒளிகள் மண்டலக் கோள்களின் எண்ண உணர்வுடன் ஈர்க்கும் பொழுது எப்படி

இன்று நீரைக் கொண்டு இக்காற்றலையில் இருக்கும் மின் காந்த ஒளி சக்தியை மின்சாரமாக விஞ்ஞானத்தில் காண்பதைப் போன்று…
1.இச்சரீர எண்ணத்தின் உணர்வின் வேகத்தால்
2.நட்சத்திரங்களில் இருந்து வருவதையும் சூரியன் சந்திரன் மற்றக் கோள்களிலிருந்து வரும் சக்திகளையும்
3.நாம் எண்ணி எடுக்கும் ஒலி அலையில் அவ்வொலியின் உணர்வுடன் எண்ணத்தை எக்கோளுடன் செலுத்துகின்றோமோ
4.அந்த மண்டலங்களிலிருந்து வெளிப்பட்ட அமிலம் இச்சரீர உணர்வின் எண்ணமுடன் மோதும் பொழுது
5.உடலில் உள்ள உயிர் அணுக்கள் யாவும் ஒளி நிலையைப் பெறும் தன்மையை இச்சரீர ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

இப்பூமியின் உணர்வுடன் சுழலும் வாழ்க்கை நிலையில்… மீண்டும் மீண்டும் இப்பூமி சமைத்து வெளிப்படுத்திய உணர்வின் ஒளியைத் தான் ஆத்மா வளர்த்துக் கொள்கிறது.

அத்தகைய தொடரில் நம் ஆத்மா இப்பூமிப் பிடிப்பில் சிக்கிவிடும் தன்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு
1.உயிரின் உயர்வை உய்யும் செயலாய்
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் காலத்தை விரயப்படுத்தாமல்
3.உயரும் தன்மையில் நாம் அனைவரும் உய்வோமாக..!

கோவில்களிலே சொர்க்கவாசல் திறப்பு என்று வடக்கு வாசலைக் காட்டுகிறார்கள்… ஏன்…?

பிடிவாதமான குணம் – கௌரவர்கள் திரௌபதையை அவமதிக்கின்றனர்

வேதங்களின் மூலங்கள் – நான்கு மறை

Treaure of breathing

நுகரும் ஆற்றல் பெற்றால் தான் மெய் ஞானத்தை வளர்க்க முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:
ஒருவர் காப்பியை ஆற்றிப் பருகுவதைப் போன்று தெரிகின்றது.

விளக்கம்:
நீரைக் கொதிக்க வைத்து… அதில் காப்பித் தூளைப் போட்டு பாலைத் தனியாகக் கொதிக்க வைத்து… காப்பியில் எடுத்த நீரையும் பாலையும் சேர்த்து அதற்குகந்த பக்குவத்தில் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்து… “நம் உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய சூட்டிற்கு” அதை நாம் பருகுகின்றோம்.

பாலையும் நீரையும் காப்பித் தூளையும் சர்க்கரையையும் அதற்குகந்த உஷ்ணத்தைக் கொடுத்து காய்ச்சிச் சுவைப்படுத்திப் பிறகு அந்தச் சுவைக்குகந்த உஷ்ணத்தில்…
1.நம் உடல் ஏற்கக்கூடிய பக்குவத்திற்குக் காப்பியை ஆற்றிய பிறகுதான்
2.நாம் அதனைப் பருக முடிகின்றது.

அதைப் போன்று நம் உணர்வின் எண்ணமுடன் பல விதமான செயலுக்குகந்த எண்ண ஓட்டங்கள் கலக்கப் பெறும் பொழுது… உணர்வின் சமைப்பாய் உயிர் சமைக்கும் உஷ்ணத்தைக் கொண்டு… ஆத்மாவினைச் சுவைப்படுத்தி… ஆத்மாவின் சுவையை மீண்டும் செயலாக்க…
1.உணர்விலிருந்து வெளிப்படும் “நம் சொல்லின் ஒலி”
2.பக்குவப்படுத்தப்பட்ட பருகக்கூடிய தன்மைக்கு
3.ஆற்றிய காப்பியைப் போல் வெளிவரல் வேண்டும்.

பலவற்றையும் நாம் சமைக்கும் பொழுது… அதற்குகந்த உஷ்ணத்தைத் தந்து சமைத்த பிறகுதான் பிறிதொரு பக்குவத்திற்குச் செயல் கொள்ள முடியும்.

ஆரம்ப நிலை இயற்கையின் தொடர்பில்… வளர்ச்சியின் செயல் யாவையுமே விஷத் தன்மை கொண்ட வளர்ப்புத்தான்.

ஜீவ ஜெந்துக்கள் அதனுடைய சுவையின் உணர்விற்கொப்ப அதனதன் உடல் நிலைக்குகந்த உணவை மட்டும்தான் உட்கொள்ளும். மாற்று நிலை… சமைப்பு நிலை… ஏற்படுத்திக் கொள்ளாநிலை தான் ஜீவஜெந்துக்களின் நிலை.

இப்பூமியின் தொடர்பில் இப்பூமி எடுக்கும் அமிலத்தின் தொடர்பில் நாம் வாழ்ந்தாலும்…
1.நாம் உண்ணக்கூடிய உணவு எது எது மனிதனுக்கு ஏற்றது…? என்பதை
2.நம் முன்னோர்கள் நமக்கு தொடர்புப் படுத்திய உணவு முறையைப் பக்குவப்படுத்தி நாம் உண்ணுகின்றோம்.

மிருகங்களைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற மனித நிலையில் இயற்கையில் வளர்ந்துள்ள பல நிலைத் தாவரங்களை வழிப்படுத்திய நிலைத் தொடரில்தான் நாம் சமைத்து உண்டு வாழ்கின்றோம்.

நம்மைக் காட்டிலும் அறிவில்… செயல் திறனில் ‘செயலற்ற மிருகங்கள்…” நம்மைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் “தன் உணர்வின் சுவாசத்தால்” பல உண்மைகளை முன் கூட்டி அறியக்கூடிய நிலைக்குச் செயலாக்கும் பொழுது அறிவில் உயர்ந்த மனித ஞானம் ஏன் உயர்வில் செயலாக்க முடியாது…?

உருவத்தில் சிறிய எறும்பு… மழைக் காலத்தில் தன் ஆகாரத்தை உண்ணுவதற்காக மழை வருவதற்கு முதலிலேயே அறிந்து சேமித்துக் கொள்கின்றது.

நாம் பாத்திரங்களில் சேமித்து வைத்துள்ள பொருளைத் தனக்கு ஒத்த உணவு என்று முன் கூட்டி அறிந்து தன் இனத்தின் கூட்டில் தனக்குகந்த உணர்வின் சுவாசத்தால் எறும்பு எடுத்து விடுகின்றது.

ஆனால்… மனிதன்
1.மூடி வைத்துள்ள பாத்திரத்திலுள்ள பொருளை அதன் மூடியை எடுத்தால் தான்
2.உள்ளே என்ன இருக்கின்றது…? என்பதை அறிய முடிகின்றது.

நம்மைக் காட்டிலும் சிறு எறும்பு அதை அறியும் பொழுது மனித ஞானம் எங்குள்ளதப்பா இன்று…?

மழை வருவதற்கு முன்னும்… எதிரி தன்னைத் தாக்க வருவதற்கு முன்னும்.. பல மைல்களுக்கு அப்பாலுள்ள நீர் நிலைகளைத் தன் சுவாசத்திலேயே அறியும் நிலையும் மிருக ஜெந்துக்களினால் அறிய முடிகின்றது.

இதனை எல்லாம் நாம் அதனுடைய இயற்கையின் செயல் என்கின்றோம்.

ஒவ்வொரு உருவக நிலையும்… அது அது எடுத்த சூரிய ஒளியில் உதித்த உயிரணுக்களின்… மண்டல ஈர்ப்பின் சுவைக்கொப்ப உருவாகும் உருவகத் தொடர் தன்மையில்… பூமியின் சமைப்பின் தொடர் உருவக உரு பெற்றிருந்தாலும்…
1.உருப்பெற்ற தன்மையின் உடல் அமைப்பின் செயல் நிலையை
2.மிருக ஜெந்துக்களினால் மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.

மனித நிலையில் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு இயற்கையின் உண்மையை உணர்ந்து எண்ணத்தின் மெய் ஞானத்தால் எதனையும் மாற்றி அமைக்கக் கூடிய செயல் தன்மைக்கு மனிதனால் தான் முடியும்.

மெய் ஞானத்தின் உண்மையை இயற்கையின் தொடர்பு கொண்டு வானக்கோள்களின் நட்சத்திர ஒளியை இச்சரீர உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் அமிலத்தின் ஒலியை உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சமைக்கப்படும் நிலையே ஆத்மாவின் பதிவு ஆகிறது.

இதே தொடரில் இப்பூமியின் தொடர்புகொண்ட நட்சத்திரக்கோள்கள் நவக்கோள்கள் ஒவ்வொன்றையும் எண்ணி நாம் தியானிக்கும்பொழுது எண்ணத்தின் உணர்வில் அக்கோளின் அமிலத்தின் அலையை இச்சரீரம் சமைத்து ஆத்மாவில் பதிவாக்கிக் கொள்கின்றது.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து மனித நிலை உயர வேண்டும் என்றால்…
1.இப்பூமிக்கு வளர்ச்சி கொடுக்கும் செயலாய் சுழலும் பிற கோள்கள் நட்சத்திரங்களின் தொடர்பில்
2.நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும்
3.அந்த அமிலத்தின் அலையைக் கொண்டுதான்
4.மனித நிலைக்கு அடுத்த நிலையான ஆத்ம ஜோதி என்ற ஒளியான வளர்ச்சி நிலை வலுக்கொள்ளும்.

இப்பூமியின் தொடர்பில் இருந்து… விஞ்ஞானி பல ஒலி ஆண்டுகளையும்… ஒளி ஆண்டுகளையும் கணக்கெடுத்து வான்கோளிலுள்ள உண்மைகளை எல்லாம் அறிந்தாலும்… அப்படி அறியக்கூடிய விஞ்ஞானியின் வாழ்க்கைக் காலம் “சரீரம் உள்ள வரைதான்…!”

1.ஆனால் மெய் ஞானத்தில் அறியக்கூடிய காலம் என்பது
2.வழி வழியாய் வளரக்கூடிய காலமப்பா…!

Deep meditation

வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளை எப்படி நீக்க வேண்டும்..?

 

ஞானிகள் காட்டிய வழியில் ஆலயத்தில் வழிபட்டால் வாழ்க்கையில் வரும் குறைகளை நாம் எண்ணுவதில்லை. “எல்லோருக்கும் நல்லதாக வேண்டும்…” என்ற எண்ணங்களைச் செலுத்துகின்றோம்.

இதற்குத் தான் தத்துவஞானிகள் ஆலயங்களை வைத்தனர்.

முதலில் விநாயகரை வணங்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அதன் பின் அங்கே வரும் எல்லோருக்கும் இந்த நல்ல நிலைகள் பெற வேண்டும் என்ற நம் எல்லோருக்குள்ளும் ஐக்கிய உணர்வை கொண்டு வரச் சொன்னது தான் கோவில்.

அபிஷேகங்களோ ஆராதனைகளோ காணிக்கைகளையோ போட்டால் அந்தத் தெய்வம் நமக்குச் செய்வதல்ல. அங்கே காட்டப்பட்ட நல்ல உணர்வுகளை நமக்குள் சேர்த்து நம்மை தெய்வமாக்கச் சொன்ன நிலைகள் தான் அது.

ஆகவே இப்படிச் செய்தால்…
1.நாம் எந்த ஆலயங்களுக்குப் போனாலும் இந்தத் தெய்வீக பண்புகள் நமக்குள் வளரும்.
2.அந்த உணர்வுகள் தான் மக்களை காக்கும் நிலைகளாக வரும்
3.நம்மை காக்கும் நிலைகளாகவும் வரும்.

கருப்பணசாமியோ மாடசாமியோ போன்ற தெய்வங்களையும் காட்டி உள்ளார்கள் ஞானிகள். இந்த வாழ்க்கையில் கோபமோ ஆத்திரமோ வெறுப்போ சாபமோ இதைப் போன்ற எண்ணங்களை எடுத்துவிட்டால் நமக்குள் அது நோயாக விளைகின்றது.

அப்படி வளர்க்கும் உணர்வுகள் நமக்குள்ளும் சாபமிட்டுக் கொண்டே இருக்கும். நம்மைச் சார்ந்தோரையும் வளராமல் செய்துவிடும்.

இதைப்போன்ற நிலைகளைக் காட்டுவதற்குத்தான்
1.அந்தத் தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் என்ன செய்கின்றது என்றும்
2.நமக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகள் எப்படிச் செய்கிறது என்றும்
3.இதை எல்லாம் உருவமாக்கித் தீமையான உணர்வின் இயக்கங்களை நமக்குத் தெளிவுற உணர்த்துகின்றார்கள்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…?

கருப்பணசாமிக்கு ஆட்டையும் கோழியையும் பலி கொடுத்து “என்னைக் காக்க வேண்டும்” என்று எண்ணுகின்றோம்.

இப்படி அந்தத் தீமைகளைத்தான் நாம் வளர்க்க முடிகிறதே தவிர நமக்குள் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியவில்லை.

ஏனென்றால் ஆட்டையும் கோழியையும் தெய்வத்திடம் கொடுத்துவிட்டு அந்தத் தெய்வம் செய்ய வேண்டும் என்று எண்ணும் போழுது
1.நமக்குள் வந்த தவறை உணராது…
2.தவறை வளர்ப்பது… என்று தான் பொருள்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நமக்குள் வளர்ந்தால் நாம் இறந்தபின் அதே செயலைச் செய்யும். அந்த உணர்வுகள் நாம் இதனின் ஈர்ப்பில் செய்யும்போது கொடூர நிலைகளாக நமக்குள் வளர்த்து விடுவோம். இதிலிருந்தெல்லாம் நாம் மீள வேண்டும்…!

கருப்பணசாமி அல்லது மாடசாமி தெய்வங்களைப் பார்த்தாலும்
1.நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.நற்குணங்கள் அங்கே வளர வேண்டும்
3.நாடு நன்மை பெற வேண்டும்
4.மக்கள் நன்மை பெறவேண்டும்… நல்ல உணர்வுகள் பெற வேண்டும் என்று நாம் இப்படி எண்ணுதலே நல்லது.

இதைப் போன்ற எண்ணங்களை நாம் எண்ணினால் தான் நமக்குள்ளும் நல் உணர்வாக வலுப் பெறுகின்றது. நாம் அதை பற்றுடன் பற்றுகின்றோம். தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.

இதைக் காட்டுவதற்காகத்தான் விநாயகரின் அருகில் வேம்பை வைத்துள்ளார்கள் ஞானிகள்.

வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளையும் வெறுப்பின் உணர்வுகளும் நமக்குள் வளராது அதை மறைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தோமென்றால் இது பற்றற்றதாகும்…! மெய் உணர்வைப் பற்றுகின்றோம். அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

நஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…?

நம்மை நாம் நம்புகின்றோமா..? மற்றவர்களை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றோமா…?

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது..!

cosmic propulsions

உடலுடன் வாழும் பொழுதே விண் செல்லும் ஆற்றலைப் பெருக்கிடல் வேண்டும்

 

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் மூதாதையர்களை மீண்டும் பிறவிக்கு வராத நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்.

நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும். “இது தான் மனிதனுக்குண்டான முக்கிய உணர்வு…” இந்த உணர்வின் துணை கொண்டுதான் விண் செலுத்த வேண்டும்.

இன்று விஞ்ஞானிகள் இராக்கெட்டை பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபடச் செய்து அதில் உருவாகும் உந்து விசையால் மேலே விண்ணுக்குச் செல்லச் செய்து பேரண்டத்தின் நிலைகளையும் அறியச் செய்கின்றனர்.

இதைப் போலத்தான்…
1.நாம் அனைவரும் கூட்டுத் தியானத்தின் மூலம்
2.சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை நமக்குள் செருகேற்றி
3.அந்த உணர்வின் வலுவின் துணை கொண்டு
4.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்களை
5.விண்ணிலே உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்..
(ஒரு தடவை மட்டும் இவ்வாறு செய்வது அல்ல)

வீட்டிலே கூட்டுக் குடும்ப தியானங்கள் எடுக்கப்படும் போதெல்லாம் அதே எண்ணத்தின் வலுவான நிலைகள் கொண்டு நம் எண்ணத்தால் நம் மூதாதையர்களுடைய நிலைகளை “அடிக்கடி” விண் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

உதாரணமாக செயற்கைக் கோளை இராக்கெட் மூலம் ஒரு நாட்டிலிருந்து அனுப்புகின்றார்கள் என்றால் அதனுடைய சரியான வட்டப் பாதையில் வருவதற்குச் சிறிது கால தாமதமாகும்..

1.ஏனென்றால் நம் பூமியின் சுழற்சியின் நிலைகளுக்கும்…
2.செயற்கைக் கோளை நிறுத்தும் நிலைகளுக்கும்
3.இங்கிருந்து உந்து விசையால் சிறுகச் சிறுக அது ஒதுக்கி
4.அதனின் வட்டப் பாதையை அமைக்கின்றனர்.

இதைப் போலத்தான் நாம் அனைவரும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை உந்து விசையால் நாம் விண்வெளிக்கு அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பினாலும்…
1.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதைப் போன்று எண்ணி… எண்ணி… எண்ணி…
2.அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிகளுடன் கலக்க வேண்டும் என்று
3.உங்கள் உணர்வின் துணை கொண்டு சரியான பாதையில் இணைக்க வேண்டும்.

என்னமோ பேருக்குச் சொல்லிவிட்டேன்… என் கடமை தீர்ந்தது… அடுத்தாற்படி நாம் பார்க்கலாம்…! என்று எண்ண வேண்டாம்.

நாம் சரியான பாதையில் அவர்களை உந்தும் நிலைகள் வரும்போது நமக்குள்ளும் அந்த ஆற்றல்மிக்க சக்திகள் துணை கொள்கின்றது. நம் நினைவலைகளும் அங்கே சேர்க்கப்படும்போது அந்தச் சப்தரிஷி மண்டல உணர்வும் நமக்குள் விளைகின்றது.

இந்த உணர்வின் துணை கொண்டு… நம் ஆன்மா எப்பொழுது பிரிந்தாலும்… அடுத்து இந்தக் கூட்டு தியானத்தில் உள்ளவர்கள் நம்முடைய ஆன்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்றால் இலகுவாக அங்கே சென்றடைந்து விடுகின்றது. பிறவா நிலை அடைந்து விடுகின்றது.

அந்த விநாயகர் தத்துவத்தில் ஞானிகள் சொன்னபடி இதற்கு முன் இவ்வாறு செய்திருந்தால் இப்பொழுது எளிது. ஆனால் அதையெல்லாம் யாரும் செய்யவில்லை.

மோட்சத்திற்குப் போவதாக எண்ணி… நாம் பல பல நிலைகளைச் செய்து.. நம்மை அறியாமலேயே பூமியின் ஈர்ப்புக்குள்ளேயே நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களைச் சிக்க வைத்து விட்டோம்.

1.மந்திர ஒலியின் ஈர்ப்புக்குள் இந்த உயிராத்மாக்களைச் சிக்க வைத்து
2.அவர்களை ஆவியாக திரியச் செய்து
3.கடைசியில் அவர்களுடைய உயிராத்மாக்களை மனிதனல்லாதபடி
4.பரிணாம வளர்ச்சியில் கீழே தான் தள்ளி விடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகள் தான் அந்த அரச காலங்களிலிருந்து நடந்து வந்திருக்கின்றது. இனி அவ்வாறு இல்லாதபடி ஞானிகள் காட்டிய வழியில் முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகம் மனிதருடைய எண்ண அலைகள் முழுவதும் சிதறுண்டு போகும் நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து விடுபட… நம்முடைய எண்ணங்கள் சிதறாத வண்ணம் காத்திட வேண்டும் என்றால்
1.நம் முதாதையருடைய உயிராத்மாக்களை
2.அவசியம் பிறவா நிலை அடையச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் அவர்களை எண்ணும் போதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நாமும் அழியாத ஒளிச் சரீரம் பெறுவது திண்ணம்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருவம் இதைச் செவ்வனே கடைபிடித்திட வேண்டும்.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குக் கிடைக்கும்
2.சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகள் உங்களுக்குள் கிட்டும்.

இதனின் துணை கொண்டு இந்தப் புவியிலே உடலுடன் வாழ்ந்திருக்கும் போதே
1.விண்வெளி செல்லும் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி
2.மெய் வழி காண்போம்… மெய் வழி செல்வோம்… என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.

எதிரி எங்கும் இல்லை நமக்குள்ளே உண்டு 

அழுக்கு நீரில் நந்நீரை ஊற்ற ஊற்ற நந்நீராக மாறத் தான் செய்யும் 

எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் வரும் தீமைகளைப் போக்குங்கள் 

serene spiritual force

உலகப் பேரழிவு வரப்படும்போது அகஸ்தியன் ஆற்றல் இங்கே பெருக வேண்டும்

 

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டு தியானத்தின் மூலமாக வெளியிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் சிறுகச் சிறுகப் படர்ந்து இந்த நாட்டிற்கும் நன்மை செய்யும்… உடலுக்கும் நன்மை செய்யும்.. நம் எண்ணத்திற்கும் வலு வரும்.

இந்த உடலில் நாம் எத்தனை காலம் வாழப் போகின்றோம்…? அதிக பட்சம் நூறு வயது வரை வாழலாம். நூறு வயதிற்குப் பின் அப்புறம் இந்த உடலை விட்டு போகத்தானே வேண்டும்.

அதற்குள் நாம் சக்தியை எதன் வழியில் எங்கே பெருக்க வேண்டும்…?

இன்று உடலுடன் நாம் இருக்கும்போது
1.நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்த வேண்டும்.
2.அதன் வழி எண்ணத்தைப் பெருக்க வேண்டும்
3.நமக்குள் அந்தச் சக்தியைப் பெருக்க வேண்டும்.

இந்தப் பூமி முழுவதற்கும் நாம் விடும் மூச்சலைகள் உலகைக் காக்கும் எண்ணங்களாக வெளிப்பட வேண்டும்.

எப்பொழுதுமே… எதிலேயுமே… நாம் குறைகள் கண்டாலும் “அது நிவர்த்தியாக வேண்டும்…” என்ற எண்ணத்தில் தியானத்தைச் செய்து பழக வேண்டும்.

1.நிச்சயம் அந்த உணர்வுகள் நமக்குள் குறையாக வளராது
2.உலகைக் காக்கக் கூடிய நினைவாகவே அது வளரும்.

ஆகையினாலே நாம் ஒவ்வொருவரும் தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்ற நிலையில் தென்னாட்டில் தோன்றிய நாம் (தமிழ் நாடு) முதலில் தெளிந்த நிலைகள் வர வேண்டும்.

இதிலே அரசியலை எண்ணவே கூடாது. ஏனென்றால் நாம் தான் அரசாங்கம். “அரசு நன்றாக இருக்க வேண்டும்…” என்று எல்லோரும் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகளால் நம் நாடு நன்றாக இருக்க… அதற்குண்டான நிலைகள் வளரும்.

நம் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது நல்ல உணர்வுகள் வளரும். அரசியல் பேதங்கள் வந்துவிட்டது என்றால் குறைகளைத் தான் கூறிக் கொண்டே இருப்போம்.

ஆனால் அரசியல் பேதமில்லாதபடி “அரசு இப்படித்தான் இருக்க வேண்டும்…” என்று நாம் எண்ணினோம் என்றால்
1.நாமும் அந்த நல்ல வழிக்குச் செல்கின்றோம்
2.மத பேதங்கள் இல்லாது… இன பேதங்கள் இல்லாது போகின்றோம்
3.நம் நாட்டை காக்கக் கூடிய நிலையாக வருகின்றோம்.

அதன் மூலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தியை உலகம் முழுவதும் பரவச் செய்யலாம். அந்த உயர்ந்த பண்பின் நிலைகள் நம் நாட்டில் வர வேண்டும்.

ஏனென்றால் “தமிழ் பண்புகள்” என்பது என்றுமே… அன்றைய காலத்தில் இருந்து இன்று வரையிலும்… எல்லோரும் “குறையே இல்லாத நிலைகளை நிறைவான நிலைகளை அரவணைத்த நிலைகள் தான்…!”

சரித்திர பூர்வமாக எந்த நிலைகள் எடுத்துக் கொண்டாலும்… தமிழ் நாட்டிலிருந்து “அந்த ஞானிகள் இங்கிருந்து தான்…” உலகம் முழுவதும் உயர்ந்த தத்துவங்கள் பரவப்பட்டு இருக்கின்றது.

1.உலகப் பேரழிவு வரப்படும்போது அகஸ்தியன் ஆற்றல் இங்கே பெருக வேண்டும்
2.நாம் அனைவருமே எடுத்துக்காட்டாக வரவேண்டும்.

இந்த மாதிரிக் கொஞ்ச நாள் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியாலே நாம் உயர்ந்த நிலைகள் பெறுவோம். எல்லோரையும் உயர்த்த வேண்டிய நிலைகள் வரும். நல்ல பண்புகள் கிடைக்கும். கருவிலே விளையக் கூடிய குழந்தைக்கும் இந்த மாதிரி செயல்பட்டு வாருங்கள்.

மத பேதமும் இன பேதமும் மொழி பேதமும் அரசியல் பேதமும் உலகம் முழுவதற்கும் இராட்சச உருவை எடுத்து ஆடுகிறது. அதைப் போன்ற நிலைகளை நாம் மறந்து செயல்பட்டால் எல்லாமே நல்லதாகும். இந்தக் காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை நாம் நீக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று இங்கிருந்து உலகத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். இதே நிலையில் நாம் தியானிப்போம்… பிரார்த்திப்போம்.

கோழியை (கோடி) அறுத்துக் சாப்பிடுடா…! என்பார் குருநாதர் 

சூறாவளிக்குள் சிக்க வைத்த அனுபவம் 

குருவிடம் பெற்ற முக்கியமான அனுபவங்கள்

blissful-meditations

உணர்வின் எண்ணத்தை ஒளியாகச் சமைக்கும் வழிமுறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கடிகாரத்தை (MECHANICAL WATCH) நாம் சாவி கொடுக்கும் பொழுது எந்த அளவிற்குச் சுற்றுகின்றோமோ… அதற்கொத்த அமைப்பு முறை கொண்டு அதனுடைய ஓட்ட முறை செயல்பாடு உள்ளது. செயல்படுத்தும் பொருள் நிலை செயலாக்கப்பட்ட நிலை கடிகாரத்தின் நிலை.

அதைப் போன்றே மனித வாழ்க்கையில் நாம் எடுக்கும் எண்ண உணர்வின் செயல்…
1.காலையிலிருந்து இரவு வரை நம்முடைய செயல்பாடு அனைத்தும் நம் புலன் அடங்கி உறங்கும் வரை
2.நம் எண்ணத்தில் எடுத்த உணர்வலைகள் யாவும் வினையாகச் சரீர உணர்வில் செயல்படுகின்றது
3.செயலடங்கிப் புலன் அமைதியுற்று உறங்கும் பொழுது நம் ஊனுடன் பதிவாகி விடுகின்றது.

இதே தொடரின் அலையை ஒன்றின் தொடரில் ஆவேச உணர்வில் எந்த அலையின் வீரியத்தைச் செலுத்துகின்றோமோ… பயத்துடனோ கோபத்துடனோ அச்சத்துடனோ குரோதம் வஞ்சனை என்ற எவ்வுணர்வின் வேகத்தையாவது அதிகமாக எடுத்தால்
1.அதே உணர்வின் அலையை திரும்பத் திரும்ப எண்ணி எடுக்கும் வேகத்தால் அதுவே வினையாகி
2.வினையின் பயன் எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாகி
3.அதன் தொடர் அலையைச் சில காலங்கள் எண்ணி எடுக்கும் தொடரில்
4.நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் “விதியாகி” விடுகின்றது.

அவ்வாறு உருவாகும் விதியின் தொடரை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று தெரியாத செயலுடன் தான் நாம் வாழுகின்றோம்.

ஏனென்றால் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் உணர்வின் வேகம் பல ரூபத்தில் நமக்கு நடந்து கொண்டுதான் இருக்கும். அத்தொடரின் ஈர்ப்புகளை எல்லாம் வினையாக நமக்குள் பதிவு செய்து கொள்ளாமல் நம் உயிரின் வலுவின் ஆத்ம ஒளியைக் கூட்ட வேண்டும்.

உயிரான நெருப்பில் நாம் அதில் செலுத்தும் எண்ணத்தின் உணர்வின் வாசனையைத் தான் அது சமைக்கும். அதுவாகத் தான் நம்மை மாற்றும்.

நம் பூமியின் சுவைத் தன்மை எப்படி ஆறு குணங்களைக் கொண்டு ஆறு சுவைகளை வளர்த்துக் கொண்டதோ அதைப் போன்றுதான்
1.உணர்வில் சலிப்பை வளர்க்கும் பொழுது புளிப்பும்
2,உணர்வில் கோபத்தை வளர்க்கும் பொழுது காரமும்
3.உணர்வில் இனிமையை வளர்க்கும்பொழுது இனிப்பும்
4.உணர்வில் விரக்தியை வளர்க்கும் பொழுது துவர்ப்பும்
5.உணர்வில் வெறுப்பை வளர்க்கும் பொழுது கசப்பும்
5.இப்படியாக குணத்திற்கொப்பச் சுவையில் நம்முடைய உயிர் காந்த ஜீவ சரீரம் பதிவு கொண்டு விடுகின்றது.

இத்தகைய வினையின் செயல் விதியாகும் வளர்ச்சியை நாம் மேல் நோக்கி எடுக்கக்கூடிய உணர்வின் தியானத்தால் நற்குண ஒலி கொண்டு உயர் மின் காந்த அலையை அதிகாலையிலிருந்தே நாம் எடுக்கும் பக்குவ முறையினால்
1.அந்தந்த வினையின் செயலுக்கு அடிமையாகாமல்
2.நற்குண ஒலியின் செயல்பாட்டில்
3.எண்ணத்தின் வேகத்தை எதிர்கொள்ளும் எதுவாகிலும் (தீய நிலைகள்) சுட்டுப் பொசுக்கும் ஆயுதமாக
4.நம் உயிராத்மாவின் சமைப்பில் உயர் ஞானிகளின் மகரிஷிகளின் மணங்களை எடுத்துத் தியானிக்க வேண்டும்.

இதன் வழி செய்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நமக்குள் விதைக்கும் வளர்ப்பாக உயிராத்மாவின் வீரிய ஒளித் தன்மையின் செயலை நாம் பெற முடியும்.

ஆகவே ஒளியான எண்ணத்தின் உணர்வை உயிராக்குங்கள்…!

noble souls in astral plane

விண்ணுலக ஆற்றலைப் பெறவேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதனின் செயலில் பல விநோத உண்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளான். “மனித விஞ்ஞானம்” பல உண்மை நிலைகளைச் செயல்படுத்தும் நிலையில்… இன்று நாம் பல நிலைகளைக் காண்கின்றோம்.

தனக்கு மேல் வீரியத் தன்மை கொண்ட பல உண்மைகளை அதற்குகந்த பாதுகாப்பு செயல் திறமையுடன்… இன்றைய மனிதனின் விஞ்ஞானம் எப்படி முன்னேற்றம் கண்டுள்ளது…?

வீரிய சக்தி கொண்ட மின்சாரத்தைத் தன் செயலுக்கு மனிதன் உபயோகப்படுத்துகின்றான். அதைச் செயல்படுத்துவதற்கு அதற்குகந்த பாதுகாப்பு நிலையில்
1.எது எதில் அந்த மின்சாரம் பாயும் தன்மை கொண்டுள்ளது என்று கண்டறிந்து…
2.அதனுடைய வீரியத் தன்மையைத் தன்னுடைய செயல் தன்மைக்கு
3.அதையே பக்குவப்படுத்திப் பலன் காணுகின்றான்.

இது எல்லாமே இவ்வுடலின் வாழ்நாளைக் கருதி வளர்த்துக் கொண்ட வழிமுறைகள் தாம்.

மனித உணர்வின்… எண்ண வீரியத்தின் ஒலியை இன்றைய மனிதன் உணர்ந்தானானால்… தன் உணர்வின் ஒலி கொண்டு ஒளிரும் நிலையைத் தன் வலுவில் வளர்க்கும் வளர்ச்சியை வளர்த்துக் கொள்ள முடியும்.

நம் பூமியின் ஓட்டத்தில் பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள சூரியனின் ஒளியை நம் பூமி “தன்னுடைய சுழற்சியின் ஜீவ ஓட்ட ஈர்ப்பின் ஒளியால்” ஒளி பெறுகின்றது.

அதைப் போன்றே தன் ஓட்ட கதியில் நட்சத்திர ஒளிகளையும் சந்திரனின் ஒளி அலையையும் தன் ஓட்டத்தில் தொடர்பு கொள்ளும் மற்றக் கோள்களின் சந்திப்பில் அந்தந்தக் காலங்களில் அவ்வொளியின் ஒலியை நம் பூமி சந்தித்துக் கொண்டே ஓடுகின்றதல்லவா…?

நாம் இன்று காணும் நட்சத்திரங்களின் ஒளியையும் சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் பூமி தன் ஜீவகாந்த ஒளியின் சுழற்சியில் ஒளி பெற்று தன்னுடைய சுழற்சியின் ஈர்ப்பில் சந்திக்கும் அவைகளின் தொடர்பலையின் அமிலத்தின் ஒளித் தன்மையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று பெற்று வளர்கிறது.

மனிதப் பிறப்பிற்கு ஜாதகத்தில் நட்சத்திர ராசிகளை அந்தந்த நேரத்திற்கொப்ப பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படிக் கணிக்கின்றார்களோ அதைப் போன்றுதான் இன்று நம் பூமியில் பல நிலைகள் (அது சந்திக்கும் நிலையில்) வளர்ந்துள்ள வளர்ச்சியின் தன்மையும்.

ஆனால் இதை எல்லாமே பூமியின் சுழற்சி ஓட்ட கதியில் சந்திப்பின் தொடரில் வளர்ந்த “இயற்கையின் வளர்ச்சி” என்கின்றோம். ஆனாலும் அதே இயற்கையை… மனிதன் தன் செயலுக்குப் பல நிலைகளை வகுத்துக் கொள்கின்றான்.

ஆகவே பூமியில் ஜெனித்த மனிதன் இயற்கையைத் தன் செயலின் தொடரில் செயலாக்கும் “விந்தைதனை” தன் உணர்வின் எண்ணத்தால் “மெய்ஞானத் தொடர் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்…”

ஏனென்றால் இப்பூமியின் ஜெனிப்புத் தொடர் அலை ஈர்ப்பு… இப்பூமியில் வாழும் காலத்திற்குத்தான் பயன்படும். உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் தேய் பிறை தான்.

உணர்வின் எண்ணத்தின் ஓட்டத்தை மற்றக் கோள்களின் தொடர்புடன் எண்ணி எடுக்கும் ஒலி அலையால்… இஜ்ஜீவ காந்த சரீர ஓட்டத்தில் எண்ணி எடுக்கும் அலையின் தொடர் அமில குணத்தை…
1.இச்சரீர உணர்வின் தொடரில் வளரும் உயிர் காந்த ஒளி அலையின் தொடர்பால்
2.இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம ஒளி ஒளிரும் தன்மையை
3.இவ்வெண்ணத்தில் எடுக்கும் தொடர்புபடுத்தி வலுப்படுத்திக் கொள்ளலாம்.

நம் பூமியின் ஓட்டத்தினால்தான் சூரியனின் ஒளியையும் மற்றக் கோள்களின் ஒளியையும் பூமி பெறுகின்றது.

அதைப் போன்று ஜீவகாந்த சரீர உயிர் எண்ண ஓட்டத்தால்… நாம் எண்ணி எடுக்கும் எக்கோள்களின் ஒளி அமிலத்தையும்… இச்சரீர உணர்வில் பதிவாக்கும் வலுவினால்…
1.இது வரை ஆத்மாவின் ஒளி வட்டம் வளர்ந்த நிலையை வலுவாக்கும் வழிமுறையில்
2.தியானம் கொள்ளும் வலுவால் இச்சரீரத்தின் ஆத்ம உயிர் வலுவாகும் ஒளியை நாம் காணலாம்.

உப்பை அதிகமாக உட்கொண்டால் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் 

எலும்பு தேய்மானம் பற்றிய விளக்கம் 

தீமை செய்யும் அணுக்கள் இரத்தத்தில் கலந்து சிறு நீரகம் சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்

India with flying pigeon

ஊரையும் உலகையும் காக்கும் சக்தி…!

 

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா. எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் மகரிஷிகள் அருள் சக்தி படர அருள்வாய் ஈஸ்வரா என்று தியானித்து அந்த வலுவை நம் உடலில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

விநாயகரை வணங்கும் போதெல்லாம்…
1.மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற
2.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி பெற வேண்டும்…
3.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதற்கு அப்புறம் நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும். எங்கள் ஊர் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் நன்றாக இருந்தால்… இந்த ஊர் நன்றாக இருந்தால்… நம் நாட்டு “அரசியலும்” நன்றாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு நிலைகளிலும் இந்த மாதிரிச் செய்யுங்கள்.

மகரஷிகளின் அருள் சக்தி எங்கள் தெரு முழுவதும் படர வேண்டும். தெருவில் வசிக்கும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்… நல்ல மழை பெய்ய வேண்டும்… நல்ல விவசாயம் நடக்க வேண்டும்…! என்று எல்லோரும் சொல்லுங்கள்.

நாம் இப்படிச் சொல்கிறோம்… ஆனால் அடுத்தவர்கள் சொல்லவில்லையே…! என்று நீங்கள் எண்ணவே வேண்டாம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து தெரு நன்றாக இருக்க வேண்டும்… விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

இப்படி நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லச் சொல்ல இந்த மூச்சலைகள்… அலைகளாகப் பரவும். பத்திரிக்கை வாயிலாகவோ மற்ற டி.வி. வாயிலாகவோ அரசியல் பேதமோ மத பேதமோ இன பேதமோ நாம் படித்து அல்லது பார்த்துத் தெரிந்து கொண்டால் கூட… அந்தப் பேத உணர்வுகள் நமக்குள் விளைந்திடாது தடுக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை பார்த்தாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை வேண்டுங்கள். அந்தத் துருவ நட்சத்த்திரத்தின் பேரருள் பேரொளி “என் உயிராத்மா பெற வேண்டும்…” என்று பல முறை சொல்லுங்கள்.

துருவ நட்சத்த்திரத்தின் பேரருள் பேரொளி இந்த ஊர் முழுவதும் படர வேண்டும். நம் தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். நம் இந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

இதனால் மொழி பேதங்கள் எல்லாம் மறையும்.

ஆகவே இதைப்போல நாம் ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையில்
1.நமது தமிழ்நாடு அமைதி பெற வேண்டும்
2.இந்தியா முழுவதும் அமைதி பெற வேண்டும்
3.இந்தியாவினால் உலகம் முழுவதும் அமைதி பெற வேண்டும் என்று
4.இவ்வாறு வரிசைப்படுத்திக் கொண்டு போக வேண்டும்.

இதைத்தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! சொல்வது.

குறைகளைக் கூறினால் குறைகள் கூடிக் கொண்டே தான் இருக்கும். அதை நிவர்த்தி செய்ய அப்பொழுது…
1.இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டால்
2.எல்லாமே நல்லதாக நடக்கும்.

எத்தகைய விஷத் தன்மைகளும் நாம் வாழும் பகுதிக்குள் வந்துவிடக் கூடாது. மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இங்கிருந்து எல்லாருக்கும் பரப்பச் செய்து உலகை நலம் பெறச் செய்யும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும்.

இந்த அடிப்படையில் செயல்படுத்தினால்தான் நாம் எல்லோரும் நன்றாக இருக்க முடியும்.

2

துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு அடிக்கடி வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டித் தியானிப்போம்.

நம்முடைய நினைவுகள் அனைத்தையும் அந்த துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டுமென்று ஏங்கி நாம் பெறும் போது
1.நாம் சுவாசித்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலக்கின்றது.
2.அதைத் திரும்ப திரும்ப நாம் எண்ணும்போது அது அணுவாக அணுக்கரு முட்டையாக வளரத் தொடங்குகின்றது.

நம் இரத்த நாளங்களில் கலந்து அது குறித்த காலம் வரும் போது அந்த முட்டை அணுவாக உருப்பெறச் செய்கின்றது.

1.நாம் எந்தத் துருவ மகரிஷிகளின் உணர்வை எடுத்து நமக்குள் தியானித்தோமோ
2.அவை அந்த அணுத் தன்மை அடைந்த பின்… எதை எண்ணி ஏங்கியதால் கருவானதோ
3.அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் நிலைக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்.

அப்போது… நம் சிறு மூளை பாகத்தில் உணர்ச்சிகள் உந்தப்பட்டு
1.கண் காது மூக்கு வாய் உடல் என்ற ஐம்புலனிலும் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்தி
2.எந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து அந்த அலைகள் நம் பூமியில் பரவியதோ
3.அதை உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும்.

அப்பொழுது நாம் அந்த உணர்வுகளை எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு எளிதாக வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்…. எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கும் போது
1.அதை நம் உடலுக்குள் ஒளி பெறும் சரீரமாக
2.அந்த ஒளியான அணுக்கள் நம் உடலில் வளரும்.

நேரடியாகவோ டி.வி.யிலோ ஒரு விபத்தைக் காண நேர்ந்தால் சிதைந்தவரின் அந்த உடலின் உணர்வுகள் நம் உடலை எப்படிச் சிதையச் செய்கிறது…?

கோப குணத்தின் உணர்ச்சிகள் சிறுகச் சிறுகக் கூடி நம் உடல் உறுப்புகளை எப்படிப் பாதிக்கிறது என்று தெரிந்து கொள்வதே நலம் 

uplifting meditation

நாத விந்துவின் நாராயணா… நானும் அது தான் நாராயணா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:
நாராயணன் உருவமும் அவர் வீணையை வாசித்துக் கொண்டு நடப்பதுவும் தெரிகின்றது.

விளக்கம்:
மனித உணர்வில் மோதக்கூடிய எண்ணத்திற்கு இரண்டு விதமான “சரியா… தவறா…” என்ற குணம் ஓடுகின்றது. அதைப் பகுத்தறியக் கூடிய ஒலியைத்தான் நாராயணனாய் நமக்குச் சுட்டிக் காட்டிய தத்துவமே….!

தன் உணர்வின் பொக்கிஷமாய் எடுக்கும் ஒலி மனித ஞானத்திற்குத்தான் உண்டு.

சூரியனும் மற்றக் கோள்களும் செயல்படும் ஓட்டமெல்லாம்… அது அது ஓடக்கூடிய ஓட்டப் பாதையில் எக்கோள்களை எத்தொடரில் சந்திக்கின்றதோ… அதன் இயக்கத் தொடரில் தான் சூரியனானாலும் சந்திரனானாலும் வளர்ந்த எக்கோள்களும் அதனதன் இயற்கை நியதிக்கொப்பச் செயல் கொள்ள முடியும்.

ஆனால் மனித ஞானத்தின் பகுத்தறிவின் எண்ணம் தான்
1.எல்லாவற்றிற்கும் மேல் எண்ணத்தைச் செலுத்தும்
2.பல உணர்வைப் பெறத்தக்க எண்ண ஓட்டச் செயல் கொண்டது.

மனித குணத்தின் உணர்வின் செயலை… ஜீவகாந்த ஒளியை வலுவாக்கும் வளர்ச்சி… மனித உணர்விற்குத்தான் உண்டு.

மனித உணர்வின் எண்ண ஓட்டத்தில்… எண்ணும் வலுத்தன்மை கொண்ட நாம்
1.எண்ணத்தின் வலு பகுத்தறிவை எதில் செலுத்துகின்றோமோ…
2.அதற்கொத்த ஆத்ம வலுவைத்தான் இன்று நாம் பெறும் நியதி.

Power of Polaris stars

தீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்

 

ஒரு வேப்ப மரத்திலிருந்து வெளிவரும் கசப்பான மணத்தைக் கண்டவுடன் ரோஜாப் பூவின் மணங்கள் நகர்ந்து ஓடுகின்றது. ஓடும் போது ஒரு விஷத் தன்மையான தாவரத்திலிருந்து வரும் மணத்திற்குள் மோதியவுடன் தடுக்கப்பட்டு அங்கே சுழலத் தொடங்குகிறது.

ஏனென்றால்…
1.விஷமே இயக்கமாக ஆனது…
2.”தடுத்து நிறுத்துவதற்கும்… இணைப்பதற்கும்” அந்த விஷமே முக்கியமானது.

உதாரணமாக நோய்க்கு மருந்து கொடுக்கும் போது அதிலே கலக்கப்பட்ட விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவி வேகமாகச் செல்கிறது.

1.நோயை உருவாக்கும் அணுக்களுக்குள் மோதி எதிர்நிலையாகி
2.அங்கே சுழலின் நிலைகள் கொண்டு நல்ல மருந்தினை அங்கே செலுத்தி
3.அந்த நோயிற்குக் காரணமான அணுக்களை அங்கே மாற்றுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு இவ்வாறு செயல்படுத்துகின்றனர்.

போன் டி.பி. (BONE T.B.) வந்துவிட்டால் அதற்கென்ற எதிர்மறையான மருந்துகளை உடலிலே செலுத்தி நோயுற்றவரின் உடலுக்குள் புதுக் கிருமிகளை ஏற்படுத்துகின்றனர்.

ஏனென்றால் அந்த டி.பி.யை உருவாக்கும் அணுக்கள் நல்ல உடலில் உருவான எலும்புக்குள் இருந்து கொண்டு அங்கிருக்கும் ஊனை உணவாக உட்கொள்கிறது. இதனுடைய மலங்கள் பட்டவுடன் கொஞ்சம் கொஞ்சமாக எலும்பையே முழுவதாக உருகச் செய்து அதை உணவாக எடுத்துக் கொள்கின்றது டி.பி. அணுக்கள்.

அதே சமயத்தில் அதற்கு எதிர்மறையான மருந்தினை இஞ்செக்சன் செய்யும் பொழுது எதிர்மறையான அணுக்களை உருவாக்கி. எலும்பை உருக்கும் அணுக்களை இது உணவாக எடுக்கின்றது.

உதாரணமாக மனிதனுடைய மலம் வெளியிடும்பொழுது அதிலே நாற்றம் அதிகமாகின்றது. அந்த மலத்துடன் குதிரைச் சாணத்தைக் கலந்தவுடனே அதிலே புதுப் புழு உற்பத்தியாகின்றது. அந்தப் புழுக்கள் மலத்தை எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு வெறும் நீராக மாற்றுகின்றது.

இதைப் போலத்தான் எலும்புருக்கி நோயைக் குறைக்க மருந்தினைக் கொடுக்கும் போது அது எதிர்மறையான கிருமிகளை உற்பத்தி செய்கிறது. ஆனால் அதனுடன் மிருக நிலைகள் கொண்ட சத்தினையும் பவுடராக்கி மாத்திரையாகக் கொடுப்பார்கள்.

இந்த மருந்தினுடைய மலங்கள் வெளிவிடும் போது டி.பி. அணுக்களுக்கு எதிர்நிலையாகின்றது. அதை உணவாக எடுக்கின்றது. நோயை உருவாக்கும் அணுக்கள் செயலிழக்கின்றது. இது விஞ்ஞான அறிவு.

இதைப் போன்றுதான் அந்த மெய் ஞானியினுடைய உணர்வுகளை தியானத்தின் மூலம் எடுத்து வலுவாக வளர்த்துக் கொண்டால்
1.நம்மை நைத்துக் கொண்டிருக்கும் தீமையான உணர்வுகளை (நஞ்சினை) வென்றிடும்
2.அந்த எதிர்மறையான உணர்வுகளை நமக்குள் உற்பத்தி செய்யும்.

“இதை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்…”

எதற்காகச் சொல்கிறோம் என்றால்… மனிதனின் வாழ்க்கையில் நாம் அறியாமல் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சதா வேதனைப்படச் செய்யும் நிலைகள் ஆகும் போது அந்தத் தீமைகளையும் துன்பங்களையும் அடக்கிட வேண்டும் என்பதற்குத் தான்..

இன்றைய விஞ்ஞான அறிவு… மருந்தின் மூலம் டி.பி. அணுக்களின் வீரியத்தைத் தணிக்க மருந்தினைக் கொடுத்து அது இடும் மலத்தால் நம் உடல் அழியா வண்ணம் டி.பி. அணுக்களை எப்படி மடியச் செய்கின்றனரோ… அதே போல்
1.இன்றைய உலக நிலையில் காற்றில் பரவி வரும் விஷத் தன்மைகள் நமக்குள் உருவாகாதபடி
2.தடுக்க வேண்டும்… தடுக்க முடியும்…! என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

நல்லது என்று எண்ணி அந்த உணர்வின் ஆற்றலால் எல்லோருக்கும் நாம் நன்மை செய்தாலும் பிறருடைய தீமையின் நிலைகள் நமக்குள் வந்தவுடனே அது எதிர்நிலையான கிருமிகளாக உடலுக்குள் உருவாகின்றது.

பின் அது மன நோயாகி உடல் நோயாகி இந்த மனித வாழ்க்கையையே நலிந்திடச் செய்யும் நிலையாக வந்து விடுகின்றது.

இத்தகைய தீமைகளை வென்றிடத் தான் அந்த அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பெறும்படி செய்கிறோம். அந்த ஞானிகளின் உணர்வுகளை வளர்க்கப்படும்போது இதனின் ஆற்றல் பெருகப் பெருக உங்களை நைத்துக் கொண்டிருக்கும் அந்தத் தீமைகள் அகலும்.

ஆகவே நீங்கள் நன்மை செய்யும் போது அறியாது உட்புகுந்த அந்தத் தீமைகள் குறையச் செய்வதற்கே இந்த உபதேசம்.

அந்த மெய் ஞானிகள் எப்படி நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினரோ அதைப் போல உங்களுக்குள் அது விளைய வேண்டும்.

நீங்கள் சிரமப்பட்டு… துயரப்பட்டு… உங்களை வேதனைப்படச் செய்து கொண்டிருக்கும் இந்த உணர்வினை அடக்கி.. உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தூண்டும் நிலைகளுக்கே இதைச் சொல்கிறேன்.

நீங்கள் இதன்படி செயல்பட்டு “மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்று சொல்லும் போது அதை நான் (ஞானகுரு) கேட்டால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது.

அந்த ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நீங்கள் எல்லோரும் ஆக வேண்டுமென்று நான் எண்ணுகின்றேன்.

குருநாதர் கொடுத்த வாக்கின்படி நான் அதை எனக்குள் விளைய வைத்து இந்த சொல்லின் வாக்கால் உங்களுக்குள் விளையச் செய்கின்றேன்.

இதைத்தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…! என்று கண்ணன் சொல்வதாகக்க் காவியங்கள் உண்டு.

1.நாம் எதை எண்ணுகின்றோமோ
2.இதே கண் அந்த உணர்வால் தாக்கப்பட்டு… உணர்வின் தன்மை நுகரப்பட்டு
3.அதனின் நிலைகளையே அதுவாக மாற்றுகின்றது.

அதாவது…
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும்போது அதன் உணர்வு எனக்குள் நல்லதாக விளைகின்றது
2.அந்தச் சொல்லின் உணர்வு கொண்டு உங்களுக்குள் நன்மை செய்யும் உணர்வாக இயக்கினாலும்
3.அந்த உணர்வின் தன்மை எனக்குள் மகிழ்ந்த உணர்வாக விளைகின்றது.

இந்த வழியினைத் தான் குருநாதர் என்னைச் செயல்படுத்தச் சொன்னார்.

மகரிஷியும் நானும் – அவன் தான் நான்… நான் தான் அவன்…!

அகஸ்தியன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தினை ஒவ்வொருவரும் காண முடியும்… அந்த ஆற்றலைப் பெற முடியும்…!

அகஸ்தியன், துருவ மகரிஷி, துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலம் – நான்கும் சேர்த்து பிரம்மம்

Mentor of Globe

உலகைக் காக்கும் சக்தியாக… “அகஸ்தியனுடைய வாக்கு நமக்குள் பிரதிபலிக்க வேண்டும்”

 

இப்பொழுது இருக்கக்கூடிய உலக நிலைமை மிகவும் மோசமாக இருப்பதினால்
1.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற நிலையில்
2.நம் நாட்டில் அதிகமாகப் படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுத்து
3.நம் நாட்டு மக்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உலகம் முழுவதும் படர்ந்து சகோதர உணர்வு வளர வேண்டும். மத பேதமில்லாமல் இன பேதமில்லாமல் மொழி பேதமில்லாமல் அரசியல் பேதமில்லாமல் மக்கள் வாழ வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து இந்தக் காற்று மண்டலம் சுத்தமாக வேண்டும். நாம் அனைவருமே உலகத்திற்கு எடுத்துக் காட்டும் நிலைகளாக வளர்ந்து வர வேண்டும் என்று “நாம் எல்லோரும் எண்ண வேண்டும்…!”

இதை எல்லாம் சர்கார் தான் (அரசில் உள்ளவர்கள்) செய்யும் என்று எண்ணாமல்
1.நாம் தான் சர்காரில் (சர்காராக) இருக்கின்றோம்…
2.நாம் தான் ஆபிசராக இருக்கின்றோம்…
3.நாம் தான் தொழிலாளியாக இருக்கின்றோம்.. என்று எல்லோரையும் ஒன்றாக்கி
4.நாங்கள்…! “நாம்…” என்ற இந்த எண்ணங்கள் வரப்படும்போது பேதங்களே இந்த உலகில் வராது…
5.அந்தந்த அரசும் தடையில்லாமல் நடக்கும்
6.நம்முடைய இந்த நல்ல எண்ணங்களும் உலக முழுவதும் பரவும்.
7.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்.

இன்றிருக்கும் நிலையில் உதாரணமாக… நான் உத்தியோகத்தில் இருந்தேன் என்றால் நான் ஏதாவது தவறு செய்கின்றேன். ஆனால் உத்தியோகத்தில் இல்லாமல் வெளியே இருக்கின்றேன் என்றால் அவர்கள் செய்யும் குறைகளைச் சொல்கின்றேன்.

அதே சமயத்தில் உத்தியோகத்தில் இருக்கின்றார்கள் என்றால் நான்கு பேர் ஒன்று போல் ஒரு தேவையின் நிமித்தமாகக் கேட்கின்றார்கள் என்றால் அரசில் இருப்பவர்களாக் செய்ய முடியவில்லை.

அந்த நான்கு பேரில் ஒருத்தருக்கு உத்தியோகத்தில் இருப்பவர் (அரசு) வேண்டியதைச் செய்தால் “இவர் நல்லவர்” என்று சொல்கின்றார். ஆனால் மீதி மூன்று பேர் “இவர் நல்லவர் இல்லை…” என்கிறார்கள்.

இப்படித்தான் உலக நிலைகளிலே இத்தகைய நிலைகள் வருகின்றது. குறை காணும் நிலையும் பகைமையாக்கும் நிலையும் வருகின்றது.

இது போன்ற நிலைகள் எல்லாம் மாற வேண்டுமென்றால் முதலிலே சொன்ன மாதிரி தியானித்தால் எல்லாருடைய உணர்வுகளும் சீராக வரும். விநாயகரை வணங்கும்போதெல்லாம் இந்த முறைப்படுத்தி நாம் தியானிக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
1.நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் பெற வேண்டும்
2.எங்கள் ஊர் முழுவதும் படர வேண்டும்
3.இந்த நாடு முழுவதும் படர வேண்டும் என்று ஒவ்வொரு ஞாளும் எண்ணினோம் என்றால்
4.இந்த அருள் உணர்வுகள் பெருகுகிறது… குறைகள் நீங்குகின்றது.
5.நாம் என்ற நிலைகளில் அனைவரும் ஐக்கியமாவோம்
6.நமக்குள் பேதமில்லா நிலைகள் உருவாகும்.

இந்த நிலைகளை நாம் அவசியம் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால் தீவிரவாதிகள் கடுமையான நிலைகளைச் செயல்படுத்தி விட்டார்கள். பல விஷத் தன்மைகளையும் விஷத்தை உருவாக்கும் மருந்துகளையும் அவர்கள் உருவாக்கத் தெரிந்து கொண்டார்கள்.. அது உலகம் முழுவதும் பரவி விட்டது.

ஒவ்வொரு நாட்டிலும் சிறுகச் சிறுகப் பரவி இன்று உலகம் முழுவதிற்கும் பரவிவிட்டது. இதிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்
1.நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்
2.அதன் மூலம் விண்ணின் ஆற்றலை நாம் பெருக்க வேண்டும்
3.காற்று மண்டலத்தில் அந்த அரும் பெரும் சக்திகளைப் பரப்ப வேண்டும்.

அனைவரும் இவ்வாறு செய்தோம் என்றால் நம்மிடம் தீமையான உணர்வுகள் பதிவாகாது. பதிவானாலும் அதற்குச் சாப்பாடு வராது.

ஒவ்வொரு நாளும் இரவு படுக்கும் போதும் அதிகாலையில் எழுந்திருந்ததும் இது போன்று எண்ணுங்கள். மத பேதம் வராதபடி இன பேதமில்லாதபடி மொழி பேதமில்லாதபடி
1.உலகில் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் சொல்லிப் பாருங்கள்.
2.தென்னாட்டுடைய சிவனே போற்றி…! என்று அந்த அகஸ்தியன் வாக்கு மீண்டும் இங்கே பிரதிபலிக்கும்
3.உலகம் அழியும் தருவாயில் இருந்தாலும் அதை நம்மால் காக்க முடியும்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்து பழக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

செவி வழி கேட்டு… கண் வழி கவர்ந்து… உயிர் வழி மகரிஷிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான்… இன்றைய உலக விஷத் தன்மையிலிருந்து தப்ப முடியும்

எலெக்ட்ரானிக் போன்று ஞானி உணர்வை எடுத்துத் தீமைகளை ரிமோட் செய்யுங்கள்

தியானப் பயிற்சி, ஆத்ம சுத்தி பயிற்சி, தீமையை நீக்கும் பயிற்சி கொடுக்கின்றோம்

patience importance

ஞானப் பாதையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய மனித வாழ்க்கையில் நாம் பலதரப்பட்டோருடன் ஜீவிதம் நடத்த உறவாட வேண்டியுள்ளது. அப்படிப் பழகுபவர்களின் குணங்களில் தீயகுணம் நற்குணம் என்ற நிலையை அறியக் கூடிய தன்மையை நாம் எப்படிப் பெற முடியும்…?

சாதாரண நிலையில் எல்லாத் தீய குணங்களையும் தீய பழக்கங்களையும் கொண்ட கயவனின் உணர்வின் எண்ணம்
1.தன்னுடைய அதிகப்படியான சிந்தனையின் செயலை
2.எண்ணத்தில் தீயதிற்கு செயல்படுத்தியவனின்
3.சரீர உணர்வின் ஆரோக்கியத்தில் கூட அதிக பாதிப்பு இருக்காது.

ஒரு பித்தளைப் பாத்திரம் அது எப்படி உறுதி கொண்டதாக உள்ளதோ அதைப் போன்று திருடனின் குணத்தில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு அவன் செயல் உறுதி கொண்டதாக இருக்கின்றது.

ஆனால் சமுதாயத்தில் அவன் நல்லவனாகக் காட்டிட
1.அவனுடைய செயல் எல்லாவற்றையும் அவன் பூசிக் கொள்ளும் முலாமாக
2.எதனையும் தன்னுள் கலக்கச் செய்யும் செயலாக
3.அந்தத் தீயவனின் நிலை தான் வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் நிலையாக
4.இன்றைய கலியின் உணர்வு நிலை செயலாகின்றது.

உதாரணமாக… மண் பாண்டத்தில் எதனையும் எந்த முலாமும் பூசாமல் அதிலே சமைத்துச் சாப்பிட முடியும்.
1.எந்தத் தீயநிலையும் மண்பாண்டத்திற்கு இருப்பதில்லை
2.ஆனால் சிறிது கவனப் பிசகு ஏற்பட்டாலும் உடைந்துவிடும் அந்த மண்பாண்டம்.

அதே போல் தான்..
1.நல்லவர்களைத் தீயவர்கள் ஏமாற்றுவது மிகவும் சுலபம்
2.தீயவனை நல்லவனாக்கவோ நல்வழிப்படுத்தவோ மிக மிகக் கடினம்.

சமுதாயத்தில் நல் உணர்வு கொண்டோர் தன் உணர்வுக்கொப்பத் தான் ஒவ்வொருவரும் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தைச் செலுத்தி எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டுமென்ற உணர்வில் அவர்களின் செயல் செல்கிறது.

இருந்தாலும்…
1.தீய நிலைகள் மோதும் பொழுது அவர்களுடைய உணர்வெடுக்கும் அலையால்
2.பதட்டத்தின் சிதறல் மண்பாண்டத்தைப் போன்று உடைந்து விடுகின்றது.

ஆனால் நயவஞ்சகத்திலேயே எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள தீயவர்களின் குணம் எந்த நிலைகள் வந்து மோதினாலும் உடைவதில்லை. அவரின் உணர்வின் அலை பித்தளைப் பாத்திரத்தைப் போன்று.

இதைப் போன்ற ந்நிலையில் இருந்தெல்லாம் மனித ஆத்மாக்கள் எப்படி மீள முடியும்…?

நல் உணர்வு பெறும் பொழுதும் மீண்டும் மீண்டும் எண்ணத்தின் சிதறல்கள் வாழ்க்கையில் மோதும் பொழுதும் எல்லாவற்றையும் துறந்து சந்நியாசம் வாங்கியவர்கள் இந்தப் பூமியில் பலருண்டு.

இந்த நிலையில் மீளும் நிலைதான் சிந்தனையில் சீர்படுத்தும் சிகரமான ஆத்ம ஒளி பெறும் நிலை. அதாவது…
1.பதட்டமான காலங்களில் உணர்வின் எண்ணத்தை அவசர வேகத்தில் சொல் ஆற்றலை வெளிப்படுத்தாமல்
2.ஒவ்வொரு கால தருணத்திலும் எண்ணத்தின் சிந்தனையை நிதானப்படுத்தி
3.அத்தருணத்தில் மோதக்கூடிய எந்தச் செயலாக இருந்தாலும்
4.ஒரு நிமிட சிந்தனையால் உண்மையை அறியக்கூடிய நிதானத்தால்
5.மண்பானையை உபயோகிப்பதைப் போன்று உணர்வின் வேகத்தைப் பாதுகாத்தல் அவசியம்.

ஆகவே… நல்நிலையில் “ஏமாற்றும் தன்மையை..” சிந்தனையில் உணர்ந்துவிட்டோம் என்றால்
1.உணர்வை வேகமாகச் செலுத்தி தீய உணர்வலையுடன் நல்லதை மோதவிடாமல்
2.சிந்தனையில் நிதானப்படுத்தும் சொல் செயலால்
3.நல்வளர்ப்பின் நல் ஆத்மாவுடன் தீயதிலிருந்து விடுபட்டு

4.தன் ஆத்மா சிகரத்திற்கு செல்லும் சீர்படும் சிந்தனையால் ஒவ்வொருவருமே சித்தனாகலாம்…! 

மெய் ஞானிகளின் பேராற்றல்களைப் பெறக் கூடிய வாய்ப்புகளைக் கொடுத்தாலும் அதை வளர்ப்போர் குறைவாகவே உள்ளனர் 

சாமி நன்றாகச் சொல்கிறார்…! என்று தான் நினைக்கின்றார்களே தவிர சாமி சொன்னதைச் செய்தால்… நன்றாக இருப்போம் என்ற நிலை வரவில்லை

Sarguru Eswara

இந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்

 

நஞ்சு கொண்ட உணர்வுகள் மனித உணர்வுக்குள் கூடிக் கூடி… இன்று மனித சிந்தனையே இழக்கப்பட்டு… மனிதனாக ரூபம் இருந்தாலும் மிருகத்திற்குண்டான உணர்வுடன் அசுர உணர்வு கொண்டு ஒருவனை ஒருவன் அழித்திடும் நிலை வருகின்றது.

இத்தகைய தன்மைகள் வரும்போது மதம் இனம் குலம் என்ற நிலைகளில் பாகுபாடுபடுத்தி… மனிதன் என்ற இனத்தை “நமக்கு நாமே அழித்திடும் நிலை வந்துவிட்டது…”

ஒன்றுமறியாத பச்சிளம் குழந்தைகளையும் இனத்தால் ஜாதியால் மதத்தால் நம்மை அறியாமலே நமக்குள் வெறி கொண்ட உணர்வு கொண்டு அழித்திடும் உணர்வுகளாக வந்தது.. இந்த விஞ்ஞான அறிவால் தான்.

ஏனென்றால் இந்த விஞ்ஞானமே அன்று நாட்டைக் காத்திட அரசன் “பிரிவினை” என்ற உணர்வை ஊட்டப்பட்டு அதனின் நிலைகள் கொண்டு நாட்டுப் பற்று என்ற பெயரில் தன் நாட்டைக் காக்க இத்தகைய அழிவின் தன்மையை அன்றைய அரசன் இதைச் செய்தான்.

ஆனால் மெய்ஞானியோ இந்த மனித வாழ்க்கையின் நிலைகள் தனக்குள் வந்த தீய வினைகளைப் போராடி அதனை வென்று தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி விண் சென்றான்.

மனித உடலுக்காக வேண்டி இச்சைப்பட்டு தான் வாழ வேண்டும் என்று பிரித்தாளும் நிலைகள் கொண்டு அரசர்கள் இப்படி தனக்கென்ற ஒரு கடவுளை நியமித்து அதை மதங்களாக மாற்றப்பட்டு கடவுளின் இஷ்டப்படி நாம் செயல்படுகின்றோம் என்று உணர்த்தினார்கள்.

ஒவ்வொரு மதங்களும் அதற்கென்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து… தான் எண்ணிய உணர்வைக் கடவுளாக்கி… அதன் நிலைகளை நியாயப்படுத்தி அதையே காத்திட முற்படுகின்றார்கள்.

தன் மதத்தைக் காக்க வேண்டும் என்ற நிலையில் மாற்று மதங்களாக இருந்தாலும் அந்தக் குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் அதை அழித்திடும் நோக்கத்துடன் தான் எல்லா மதங்களும் உள்ளன.

தான் எண்ணிய கடவுள் இதைத் தான் கட்டளை இட்டான் என்ற நிலைகள் கொண்டு மனித இனத்தையே அழித்திடும் நிலைகள் கொண்டு போர்க்களங்களாகி மனிதனுக்குள் இந்த நஞ்சினை விளைய வைக்கும் நிலை ஆகிவிட்டது.

அரசன் கட்டளைப்படி போர் செய்தாலும் போர்க்களங்களில் உயிரை விடப்போகும்போது (உயிர் பிரிக்கப்படும்போது) தன் குழந்தைகளின் மேல் பற்று பாசமாக இருந்து அந்த பாச உணர்வால் தனக்குள் வெறித்தன்மையான உணர்வுகள் விளைந்து அந்த அலைகள் எல்லாம் பூமியிலே படர்ந்துள்ளது.

இதனால்… இன்று சிறிதளவு நமக்குள் குறை ஏற்பட்டாலும்
1.அது பழி தீர்க்கும் உணர்வின் தன்மையாக நமக்குள் வளர்ந்து
2.அவரைப் பழித்திடும் உணர்வும்… பழி தீர்த்திடும் உணர்வாக வளர்ந்து சிந்தனை இழந்து
3.ஒன்றும் அறியாத குழந்தைகளையும் தாக்கி… அவர்களைக் கூடப் பாதுகாக்கும் திறனற்று
4.நமக்குள் நஞ்சு கொண்ட உணர்வாக வளர்ந்து கொண்டுள்ளது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நஞ்சினை வென்ற அந்த மெய் ஞானிகள் உணர்வினை உங்களுக்குள் அருள் ஞான வித்துகளாகப் பதியச் செய்ய உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் வலுவாக்கி… அதிலே விளைந்த உணர்வின் துணை கொண்டு…
1.நீங்கள் விடும் மூச்சலைகள்
2.இந்தக் காற்று மண்டலத்தில் பரவியுள்ள நஞ்சினை வென்றிடும் சக்தியாக மலர வேண்டும்
3.அருள் உணர்வு உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
4.உங்கள் மூச்சலைகளால் பிறருடைய தீமைகள் அகல வேண்டும்.

ரோஜாப்பூவிலிருந்து வெளிப்படும் நறுமணத்தின் தன்மை கொண்டு அதனுடைய வலுவால் மற்றதை எப்படி விலக்கித் தள்ளுகின்றதோ இதைப் போல
1.உங்கள் மூச்சின் அலைகள் வெளி வருவது
2.நஞ்சு கொண்ட அலைகளை இது துரத்தி… அதனைச் செயலற்றதாக்கி
3.அதனை நல்லதாக மாற்றும் நிலையாக வரவேண்டும்.

இந்த நிலை வந்தால்தான் வேகாக்கலை என்ற நிலையை அடையும் தன்மை வருகின்றது. ஆகவே…
1.வேகாக்கலை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்
2.அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் விளைந்திட வேண்டும் அது வளர்ந்திட வேண்டும்
3.உங்கள் பேச்சால் மூச்சால் செயலால் இந்த உலகைக் காத்திட வேண்டும்.
4,உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய நல் உணர்வை காத்திட வேண்டும்
5.உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்.

குரு அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

பத்து வருடம் அமர்ந்து கேட்க வேண்டிய உபதேசத்தைப் பத்து நாளில் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்

காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு விளையச் செய்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை ஊட்டுகின்றோம்… பயன்படுத்துங்கள் 

வசியம்.. கைவல்யம்… ஏவல்…! 

soul eswaran

ஒவ்வொருவரும் ஈசனாகும் மகத்துவம்…!

அகண்ட அண்டம் இருண்டதாக இருப்பினும் அண்டத்தின் நிலை கோளாகும்போது இருண்ட நிலை தான். ஆனால் அந்தக் கோளின் தன்மை
1.நட்சத்திரமாகும் போது ஒளியின் நிலை அடைகின்றது.
2.நட்சத்திரமாகும் போது உணர்வை வளர்க்கும் நிலைக்கு வருகின்றது.

இருண்ட நிலையில் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் கோள்களில் புழு பூச்சிகளாக உருவானால் அதுவும் இருண்ட நிலை தான். அதே சமயத்தில் அதிலே பரிணாம வளர்ச்சிகள் அடைந்து… அடைந்து…
1.உணர்வின் தன்மை கொண்டு அறிவின் தன்மை கொண்டு உடலாகும் போது நட்சத்திரம்
2.அதாவது நாம் மனிதனாகும் போது நட்சத்திரம்
3.மனித நிலையில் அனைத்தையும் பக்குவப்படுத்தி உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற்றால் நாம் இவ்வுலகின் சூரியன் ஆகின்றோம்.

ஆகவே உணர்வின் தன்மை உயிராக உருவாக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான நாம் ஒவ்வொருவரும் ஈசனாக மாற வேண்டும். நம் உணர்வு ஒவ்வொன்றையும் ஈசனாக மாற்றிடல் வேண்டும்.

உயிர் ஈசனாக இருந்து உணர்வின் அறிவை ஊட்டுகின்றது. ஆறாவது அறிவின் தன்மை இருளை அகற்றும் உணர்வாக வருகின்றது.
1.அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு இந்த உயிர் என்றும் அழியா நிலைகள் கொண்டு வந்தது.
2.உயிரின் துணை கொண்டு அருள் ஒளியின் உணர்வாக
3.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும். ஆக

நாம் எண்ணியதை நமக்குள் உருவாக்குவது நமது உயிரே. எண்ணிய வழிப்படித் தான் இந்த உடலை உயிர் இயக்குகின்றது.

ஆகவே நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குவோம். அருள் ஒளியின் சுடராக மாறுவோம். பிறவியில்லா நிலைகளை அடைவோம். அண்டத்தில் அகண்ட அண்டத்தில் என்றும் பெரு வீடு என்ற நிலையை அடைவோம்.

1.இதைப் படித்துப் பதிவாக்குவோர் அனைவரும் மகானாக வேண்டும்… மகரிஷிகள் ஆக வேண்டும்.
2.உயிரின் தன்மை ஈசனாக மாற்ற வேண்டும்
3.ஒவ்வொரு அணுக்களையும் ஈசனாக மாற்ற வேண்டும்.

அருள் வழியில் அருள் ஞானத்தின் தன்மை உங்களுக்குள் வளர்த்தால் அந்த ஈசன் என்ற நிலை வரும்போது இதே உணர்வுகள் நோயுற்றவருக்குள் சென்றாலும் அங்கே ஈசனாக… அருள் ஒளி சுடரின் தன்மையாக அவர் நோயை நீக்கி… ஒளியின் உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.

1.நம் உயிர் ஈசனாக இருக்கின்றது
2.நமது உணர்வுகள் அனைத்தும் ஈசனாக வேண்டும்.
3.நம்முடைய சொல் ஒவ்வொரு உடலிலும் பாய்ந்து ஈசனாக மாற வேண்டும்.

ஆகவே அருள் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும் என்று நிலை கொள்ளுங்கள். யாரோ செய்வோர்…! எவரோ செய்வார்…! என்று எண்ண வேண்டாம். யாருக்கோ காசு கொடுத்து இதைச் செய்ய வேண்டாம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உணர்வின் வலுவைக் கூட்டினால் அதுவே உங்களில் உருவாக்கும். உங்கள் வலுவின் தன்மை பிறரின் தீமையைப் போக்கும்.

பொருளுக்காக பல மனித உணர்வுகளை வைத்து மாயாஜாலங்களைச் செய்கின்றனர். அதனால் பொருள் அவனுக்கு வருகின்றது.

அனைவருக்கும் சொல்கின்றான். இருந்தாலும் அவன் அழிகின்றான். ஏனென்றால் அவன் வளர்த்த சொத்தை அவன் பிள்ளையே அழிக்கின்றான். இலட்சம் இலட்சமாகச் சம்பாரித்தார்… எல்லாம் போய் விட்டது என்று நம் கண் முன்னாடியே பார்க்கலாம்.

1.ஏனென்றால் தவறான வழிகளில் செல்வத்தைச் செலவழித்தால் தவறான மகனே பிறக்கின்றான்.
2.தந்தையின் உணர்வை பிள்ளை தனக்குள் அங்கே கலக்கின்றான்.
3.அந்த உணர்வின் தன்மையில் சொத்தை இவன் அழிக்கின்றான் என்ற இந்த நிலைகள் தான் வருகிறது.

யாருக்காக நீங்கள் போராடுகின்றீர்கள்…? என்று சற்று சிந்தியுங்கள்.

1.உங்கள் உயிரின் தன்மைக்காகப் போர் செய்யுங்கள்
2.அருள் வழியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்
3.இருளை அகற்றும் ஆற்றலைப் பெறுங்கள்.
4.அருள் ஞானியின் உணர்வை உருவாக்கும் அதையே ஈசனாக மாற்றுங்கள்

உங்கள் உணர்வின் தன்மை மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து அவருக்குள்ளும் அந்த ஈசனின் உணர்வை அது உருவாக்கும்.

இதன் வழி உணர்வின் ஆற்றலைப் பெருக்குவோம்… குரு வழியில் செல்வோம்…. அருள் ஆனந்தம் பெறுவோம்…. அருள் வாழ்க்கையை நடத்துவோம்… இருளை அகற்றுவோம்…. மெய் உணர்வுடன் ஒன்றுவோம்… மெய் ஞானத்துடன் வாழ்வோம்…. மெய் உணர்வுடன் வாழ்வோம்…. மெய் உலகாக மாற்றுவோம்…. ஒவ்வொரு மனித உடலிலும் மெய்யை அறிந்திடும் உணர்வின் தன்மை பெற தியானிப்போம்… தவமிருப்போம்…!

நிறைந்த மனம் கொண்டு இதைச் செய்யுங்கள். அனைவரையும் நிறைவுபடுத்தும் மனமாக உயர்ந்த பண்புடன் சொல்லுங்கள். பண்பு கொண்ட உணர்வை வளர்த்திடுங்கள்.

இத்தகைய உயர்ந்த பண்புடன் அரவணைக்கும் நிலை கொண்டு நமக்கு மதம் அல்ல… இனம் அல்ல… என்று செயல்படுத்துங்கள். இனமும் மதமும் நம்மைப் பிரிக்கும்.

ஆனால் அருள் ஒளி நம்மை என்றும் ஒளியாக சுடராகப் போற்றும் என்ற இந்த நினைவு கொண்டு இந்த வாழ்க்கைப் பயணத்தை குரு வழியில் வழிபடுத்துவோம்.

நம் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை அகற்றுவோம். அனைவரும் ஒன்றென்ற நிலைகளில் உருப்பெறச் செய்வோம்.
1.அனைவரையும் மகிழ்சி பெறச் செய்யும் உணர்வினை உருவாக்கும் ஈசனாக
2.நம் உணர்வின் தன்மை ஒவ்வொரு உடலிலும் ஈசனாக உருவாக வேண்டும்.

அருள் ஒளிச் சுடராக நாம் உருவாக்க வேண்டும். அவ்வாறு நாம் எண்ணுவதே நமக்குள் ஈசனாகின்றது. அந்த அருள் வழியின் நிலைகள் வளர வேண்டுமென்ற நிலைகள் கொண்டு இதை மனதில் வைத்துக் குரு அருளின் துணை கொண்டு நாம் இதைச் செயலுக்குக் கொண்டு வருவோம் என்ற உறுதி எடுத்துக் கொள்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பழனியில் ஒரு பித்தரைப் போல இருப்பார் என்றாலும் பிறர் அவரைப் “பித்தர்” என்றே எண்ணுவார்கள்.

ஒவ்வொரு மனிதனும் எப்படிப் பித்துப் பிடித்துச் செல்வம் தேட வேண்டும் என்று எண்ணுவான். அதே சமயத்தில் செல்வத்தில் குறை என்றால் பித்துப் பிடித்து “வெறி பிடித்தவன்” போல் மற்றவரை எப்படித் தாக்குகின்றான்…!

பித்துப் பிடித்து மற்றவர்களுக்கு எப்படித் தொல்லைகள் கொடுக்கின்றான்…! ஒவ்வொரு மனிதனும் “பித்துப்பிடித்துத்தான் அலைகின்றான்” என்று சொல்வார்.

குருநாதர் போஸ்ட் கம்பத்தில் கல்லைக் கொண்டு தட்டுவார். அலோ.., ஹலோ.., என்பார்.

“ஏன் சாமி.., கல்லைக் கொண்டு போஸ்ட் கம்பத்தில் தட்டுகிறீர்கள்..,?” என்று கேட்டேன்

நீ தான்டா.., கேட்கின்றாய். மற்ற எல்லோருமே என்னைப் “பைத்தியக்காரன்..” என்று சொல்கின்றார்கள். நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார்.

என்ன சாமி டெலிபோன் செய்கின்றீர்கள்?

இந்தக் கம்பத்தின் மூலம் ஆண்டவனுக்கே அனுப்புகின்றேன். அந்த ஆண்டவன் என்பது “யார் தெரியுமா..?” என்றார்.

நான் தட்டும் உணர்வுகள் சேர்த்து “உயிரில் பட்டபின்” அந்த ஆண்டவன் என்ன செய்கின்றான்? இந்த உணர்வை என்னைச் செயல்படுத்தச் சொல்கின்றான்.

தட்டும் பொழுது நான்.., எதை எண்ணித் தட்டுகின்றேன்?

ஏனென்றால்.. “தட்டும் பொழுது.. சப்தம் வருகின்றது”. ஒவ்வொரு பொருளிலும் தட்டும் பொழுது அதில் என்னென்ன நாதம் வருகின்றது?

கல்லில் தட்டினால் ஒரு நாதம் மண்ணிலே தட்டினால் ஒரு நாதம் மரத்தில் தட்டினால் ஒரு நாதம் உலோகத்தில் தட்டினால் அது ஒரு நாதம்.

உணர்வின் ஒலியின் நிலைகள் நான் தட்டும் பொழுது என் உயிரான இவனுக்கே எட்டுகின்றது. அப்படி எட்டும் பொழுது நான் என்ன செய்கிறேன்…?

இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தெரிந்து வாழ வேண்டும். அந்த ஆண்டவன் கட்டிய ஆலயத்தில் அவர்கள் பரிசுத்த நிலைகள் பெறவேண்டும். அவர்கள் புனிதம் பெறவேண்டும். புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும். புனிதமான ஆலயமாக மாற்றவேண்டும்.

இப்படி இதை நினைத்து நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 121

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அறியும் வண்ணம் குருநாதர் எனக்குப் (ஞானகுரு) பல உபதேசங்களைக் கொடுப்பார்.

அதே சமயத்தில் அதை எனக்குள் ஆழமாகப் பதிவு செய்து உண்மையை நான் உணர்வதற்காக வேண்டி என்னைக் கடுமையாகத் திட்டுவார். அப்பொழுது எனக்குச் சோர்வு வரும்.

நான் சோர்வடையும் அந்த மாதிரி நேரங்களில் குருநாதர் என்னை அழைத்துச் சென்று இந்த மாதிரி நோயால் வாடும் ஆள்கள் இருக்கும் குடும்பங்களை நிறையக் காண்பிப்பார்.

உதாரணமாக… செல்வம் சொத்து எல்லாம் ஆரம்பத்தில் சம்பாரித்திருப்பார்கள். வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடமாட்டம் குறைந்து படுக்கையில் இருப்பார்கள்.

அந்த மாதிரி நேரத்தில் வீட்டில் இருக்கும் தன் பையனிடமோ மற்றவர்களிடமோ “தாகமாக இருக்கிறது… கொஞ்சம் தண்ணீர் கொடுப்பா…!”  என்பார்கள்.

உடனே தண்ணீரைக் கொடுக்காதபடி “உனக்கு வேறு வேலையே இல்லை… போ..!” என்று இவர்கள் திட்டிக் கொண்டு இருப்பார்கள்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா?

ஏனென்றால் அவர் நேற்று நன்றாக இருந்தார். சந்தோஷமான உலகமாக அவருக்கு இருந்தது. அதிலே அவர் எடுத்து வளர்த்துக் கொண்ட உணர்வு உடலில் சேர்ந்து நோயானவுடன் “கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டாப்பா…!” என்கிறார்.

சும்மா போகும் பொழுதும் வரும் பொழுதும் ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருப்பது…! “இது தான் உன் வேலை” என்று பையன் திட்டுகிறான்.

இவர் நன்றாக இருக்கும் பொழுது என்ன செய்கிறார்?

தன் பையனை அவன் சிறு பிள்ளையாக இருக்கப்படும் போது  அவனைக் காக்க வேண்டும் என்பதற்காக “அங்கே போயிடாதடா… இங்கு போயிடாதடா…!” என்று சொல்லி இருக்கின்றார்.

மீண்டும் மீண்டும் பையன் அந்தக் குறும்புத்தனம் செய்யும் பொழுது சங்கடப்பட்டு இவர் சொல்கிறார். பையனைக் காத்துவிடுகின்றார். ஆனால்… இவர் வயதான காலத்தில் நோயில் விழுந்து விட்ட பின்னாடி அதே சங்கடம் இங்கே பையனுக்கு வருகின்றது. இவருக்கு வேறு வேலையே இல்லை “எப்போது பார்த்தாலும் “நச்… நச்…” என்று எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பார் என்கிறான் பையன்.

தன் பையன் நன்றாக இருப்பதற்காக வேண்டிச் சங்கடப்பட்டுச் சொன்னார். அந்தச் சங்கடமான உணர்வு நோயாக வந்து விட்டது. இவர் நோயில் விழுந்து விட்டார்.

அதே சமயத்தில் நோயானபின் “அப்பாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வாடா…” என்று சொன்னால் பையன் செய்யாதபடி திட்டிக் கொண்டிருக்கின்றான்.

இது நடந்த நிகழ்ச்சி. அப்படியே இந்த உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் குருநாதர்.

இதைப் போன்று மூன்று இலட்சம் பேரைக் (குடும்பங்களைக்) காண்பித்து “மனமே இனியாகிலும் மயங்காதே…!” என்ற பாட்டின் மூலமாக எனக்கு ஒவ்வொரு நிமிடமும் உண்மைகளைத் தெரியும்படிச் செய்தார். அறிய வைத்தார்.

மின்னலைப் போலே மறைவதைப் பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…?
நிலை இல்லாத இந்த உலகத்திற்கு “நீ ஏன்டா (என்னிடம்) வாதாடுகிறாய்…?” என்று மெய்ப் பொருளைக் காட்டுவார்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 120

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் தியானம் என்றால் என்ன என்பதையும் தவத்தையும் விண் செல்லும் அந்தப் பாதையையும் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்து ஞாபகப்படுத்துகின்றோம். மெய் ஞானிகள் சென்ற வழியில் நாம் விண் செல்ல வேண்டும்.

நம்மைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் அந்த நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் நமது ஆன்மாவில் இது பெருகுகின்றது.

நமக்குள் அது பெருகும் பொழுது எந்த விஷத் தன்மையும் நமக்குள் வளராது. மகரிஷிகளின் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறும் போது அதே உணர்வின் இயக்கமாக நம் உடலும் நினைவும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பு கொள்கின்றது.

சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாக்களை உந்தித் தள்ளி அங்கே இணைக்க வேண்டும்.

மூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் முதலில் மகரிஷியாகின்றார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்து நாமும் விண் செல்ல முடியும். நாமும் மகரிஷியாக முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 119

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இனி வரும் காலங்களில் சிந்திக்க நேரம் இருக்குமா…? என்று சொல்ல முடியாது.

மெய் ஞானிகள் பெற்ற தீமையை வென்ற அருள் சக்திகளை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றோம். யாம் சொல்லும் அருள் ஞான உபதேசங்களை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

இதைக் கேட்டுணர்ந்தோர் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் ஆத்ம சுத்தி செய்யுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகருங்கள். சுவாசித்து உங்கள் உடலுக்குள் இணையுங்கள்.

அந்த உயர்வான எண்ணத்தை எடுத்து நீங்கள் விடும் மூச்சலைகள் உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். உலக மக்கள் அனைவருக்கும் நல்லதாக அமைய வேண்டும்.

நீங்கள் பேசும் பேச்சு என்பது “செய்யும் தொழிலே தெய்வம்” போல் என் மூச்சுப் பட்டால் மற்றவர்களின் துன்பங்கள் போய்விட்டது என்ற நிலைக்கு வளர வேண்டும்.

இந்த மாதிரிச் செய்து பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 118

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை எண்ணி 27 நட்சத்திரங்களின் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

27 நட்சத்திரங்களையும் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டும் பொழுது அந்த 27 நட்சத்திரத்தையும் எப்படித் தொட வேண்டும் என்று எனக்கு அந்தப் பக்குவத்தைக் கொடுத்தார்கள்.

இதை எதனுடன் இணைக்க வேண்டும்…? அதை எடுத்தால் அந்தக் கதிரியக்கங்கள் உன்னை எப்படிச் சுடாதிருக்கும்…? அந்தக் கதிரியக்கங்கள் உன்னைத் தொடாதிருக்கும்…? என்பதையும் காட்டினார் குருநாதர்.

அதன் வழி கொண்டு பிரார்த்தனை செய்து விட்டுத் தான் குருவின் துணை கொண்டு 27 நட்சத்திரங்களின் சக்திகளை நான் கவர்கின்றேன்.

கவர்ந்த அந்த நிலை கொண்டு தான் 27 நட்சத்திரத்தின் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று நான் எண்ணும் பொழுது உங்களை எண்ணச் சொல்லி – இந்த இணைப்புடன் அதை ஊழ் வினையாக உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதியச் செய்கின்றேன்.

அதை உங்களுக்குள் கிடைக்கப் பெறச் செய்வதற்கும் அந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்களையும் சமப்படுத்தும் நிலைக்கும் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 118 png

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மையை இந்த மனித உடலில் இருந்து தான் கருவாக்கினான் அகஸ்தியன்.

அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்….!

இந்த உடலை விட்டுச் சென்றால்… “என்றும் நிலையான… ஒளியின் சரீரமாக இருக்க முடியும்…!” என்ற அந்த நோக்கத்துடன் எவர் வருகின்றனரோ அவர்கள் அனைவருமே நிச்சயம் அகஸ்தியனைப் போன்று பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 117 png.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

நமது சூரியக் குடும்பத்தில் பூமியில் உருவான மனிதன் சில் உண்மைகளைக் கண்ட பின் மின்னல்கள் தாக்கி கடல்களிலே படும்போது மணல் ஆவதை அதற்குள் இருக்கும் நிலையை வடிகட்டி கதிர் இயக்கப் பொறிகளாக மாற்றுகின்றான்.

இன்று அணு குண்டுகளாகவும் லேசர் கதிரியக்கங்களாகவும் அதை உருவாக்கி விட்டார்கள்.

தன்னுடைய உடல் ஆசைக்காக வேண்டி நாட்டு ஆசைக்காக வேண்டி உலகை அழித்திடும் தன்மைகளாக அது இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

நம் பூமியில் விளைவதை சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இந்தக் கதிரியக்கங்களை கவர்ந்து இன்று நமது பிரபஞ்சமே கதிர் இயக்கமாக மாறிவிட்டது.

மனிதனின் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிலையால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்து விட்டது. சூரியனும் சிறுகச் சிறுக செயல் இழந்து கொண்டு இருக்கின்றது. அது செயலிழக்கும் பொழுது அதனுடன் சேர்ந்த நம் பூமியும் அது செயல் இழக்கும்.

இங்கே வாழும் மனிதர்களும் அசுர உணர்வு கொண்டு தீவிரவாதம் என்ற நிலைகளில் ஒருவருக்கொருவர் கொன்று சாப்பிடும் நிலை வருகின்றது.

பாதரசங்களை உருவாக்கும் சூரியனுக்குள் விஞ்ஞானக் கதிரியக்கச் சக்திகள் கலக்கப்பட்டு அந்த பாதரசங்களைக் கருகிய விஷத் தன்மையாக மாற்றி உமிழ்ந்து கொண்டுள்ளது.

சூரியன் செயல் இழக்கும் தன்மையால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் செயலிழக்கும் நிலை ஆகின்றது. நான் (ஞானகுரு) சொல்வது வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவாக்கினால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் உணர முடியும். சூரியன் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் நீங்கள் உணர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 116 png

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்கு யாம் “படிப்படியாக.., சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்”. எல்லாம் “பூரணமாகச் சொல்ல வேண்டும்..,” என்றால் காலம் இல்லை.

ஏனென்றால், குருநாதர் எனக்குள் பதிவு செய்த பேருண்மைகள் “எண்ணிலடங்காதது..,” இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.

அவ்வளவு பெரிய அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) உணர்வுகள் பதிவு செய்ததை “எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்” என்று அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காக எடுத்துக் கொடுக்கின்றோம்.

ஆக, அந்த நினைவைக் கூட்டும் பொழுது உணர்வை ஒளியாக்கி உணர்வின் தன்மை எண்ணமாக்கி அதனின் நிலைகளைத்தான் செயல்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு ரூபத்திலும் குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த உணர்வின் ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது எனக்குள் உணர்த்தி அந்த உணர்வின் தன்மையை அவரே தான் இங்கே வழி நடத்துகின்றார்.

ஏனென்றால், என்னுள் அவர் இருந்து அல்ல.

“அவர் பதிவு செய்த நாடாவாக..,” (MEMORY DISC) நான் எண்ணும் பொழுது உணர்வுகள் இயக்கப்பட்டு அது பெறப்பட்டு “நீங்கள் பெறவேண்டும்.., என்று அவர் செய்த உணர்வைத் தான்..,” நான் செய்கின்றேன்.

அவருடைய உணர்வுகள் தான் என்னைச் செய்ய வைக்கின்றது.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய அருள் வழிகளில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலுக்கு மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரது உடல்களையும் மகிழச் செய்வோம்.

மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றியே இந்த வாழ்க்கையை வாழ்வோம். என்றும் பேரானந்த நிலைகள் பெற்று பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளுடன் வாழும் நிலையை நாம் உருவாக்குவோம்.

இதைப் படித்துணர்ந்தோர் அனைவரும் அவர்கள் வீட்டில் மகிழ்ச்சி போங்கும் நிலைகளாக உருவாகும். கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்திட குரு அருளும் எமது அருளும் உறுதுணையாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 115 png

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் என்றுமே அழிவதில்லை. எத்தகைய நஞ்சானாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்துகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம். பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவான பின் நினைவைக் கூட்டி நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் ஒவ்வொருவரும் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதில் இருந்து மீட்டுக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை உபதேசிக்கின்றோம். இப்பொழுது பதிவாகின்றது.

இதனை நீங்கள் நினைவு கூறுங்கள். கூட்டுத் தியானம் செய்யுங்கள் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று பாய்ச்சுங்கள். கருவிலே வளரும் சிசு இதைப்பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப்போல எண்ணி இவ்வுலகில் வரும் விஷத் தன்மைகளை மாற்றி இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 114

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

குருநாதர் ஏகாந்த நிலைகள் கொண்டு ஒளியின் சுடராக ஒளியின் சரீரமாகி எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றார் (1971).

ஒளியின் சுடராக அவர் தனக்குள் மலரச் செய்து மனித வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த நஞ்சினை மாய்க்கும் ஆற்றல்மிக்க சக்திகளை  அவர் வெளிப்படுத்தியுள்ளார்,

அந்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றது. அவர் விண் சென்றது போல் நீங்கள் அனைவரும் அந்த ஆற்றல்களைப் பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் “குரு பூஜை”.

”குரு…” என்பது நாம் எதை ஆழமாகப் பதியச் செய்கின்றோமோ அதை மீண்டும் செய்ய எண்ணும் பொழுது அது குருவாக நின்று நமக்குள் செயல்படுத்துகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராகச் சென்ற அந்த நாள் தான் வைகுண்ட ஏகாதசி.

அவர் ஒளிச் சரீரத்தைப் பெற்றபின் தான் உடலை விட்டுச் செல்லும்போது “என்னைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்தார்”.

இந்தப் பூமிக்குள் நான் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ உணர்வு கொண்டு எல்லோரிடமும் பழகினேன். அதே சமயம் எல்லோருடைய நோய்களையும் நீக்கவும் உதவினேன்.

அவர்கள் அனைவரும் என் பால் பற்றுதலும் கொண்டார்கள். இருப்பினும் அவர்களுடைய பாச உணர்வுக்குள் சிக்காது அவர்கள் எண்ணும் ஏக்கம் என்னை இயக்காது அவர்களுக்குள் உள்ள இருள்களை நீக்கிடவும் மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் என் உணர்வுகள் செயல்பட்டது.

இந்த உடலை விட்டு (உயிரான்மா) “நான் செல்கின்றேன்”. ஒளியின் சுடராக எவருக்கும் சிக்காது இந்த உயிரான்மா எப்படிச் செல்கிறது என்று “பார்…” என்று உணர்த்தினார்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 113

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைக்கப்படும் பொழுது அந்த நஞ்சினை ஒளியாக மாற்றி அறிவின் ஞானமாகவும் இந்த மனித வாழ்க்கையில் இருளை வென்றிடும் உணர்வும் அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றும் வலிமையும் நமக்குக் கிடைக்கின்றது. அதைப் பெறச் செய்வதற்காகத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஆகவே மறவாதீர்கள். உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.

இந்த உடல் உங்களது அல்ல. உயிரால் தான் உருவாக்கப்பட்டது.

அறிவால் உணரப்பட்ட உணர்வின் தன்மை “தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் விளையும் தீமைகளை நாம் அகற்றக் கற்றுக் கொண்டால் நம்மை இயக்கிய நம்மை உருவாக்கிய உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலைகளை அடையலாம்.

யாம் உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் நிலைகளை நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதைப் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 112

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

“சாமி…” (ஞானகுரு) உங்கள் உணர்வுக்குள்ளே தான் இருக்கிறேன்.

குருவின் உணர்வை நீங்கள் பெற்றீர்கள் என்றால் அந்த உணர்விலிருந்து எல்லாமே நீங்கள் பெறலாம் அந்த நிலையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.

சாமியாரைப் பார்த்து.. அவரைப் பார்த்து… இவரைப் பார்த்து… கடைசியில் “சாமியார் தான் எல்லாவற்றையும் மீட்டிக் கொடுப்பார்…” என்று நினைக்கிறீர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வை நீக்குகின்றது. உங்கள் உடலை நலமாக்குகின்றது. உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்றது.

இந்தப் பழக்கங்கள் வரவேண்டும்.

ஒரு இடத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்றால் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். இன்னும் கொஞ்சம் இருக்கிறது அதையும் தூய்மையாக்கிப் பழக வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை பெற்று உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது ஒவ்வொரு நொடியிலும் விழித்திருத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 111

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய்ஞானிகளைப் பற்றி யாம் உபதேசிக்கின்றோம். மகரிஷிகள் தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டி உங்களை மேல் நோக்கிச் சுவாசிக்க வைக்கின்றது.

அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது கிடைக்கவேண்டும் என்று பெருமூச்சாக அமைந்து அந்த ஆற்றல் கிடைக்கின்றது.

சிலர் அடி பணியும் நிலைகள் கொண்டு கீழ் நோக்கி எண்ணிச் சுவாசிக்கின்றார்கள். மேல் நோக்கி எண்ணி எடுப்பதற்கு பதில் கீழ் நோக்கி எடுக்கும் பொழுது சாதாரண மனிதருடைய உணர்வைத்தான் பெற முடியும்.

ஏனென்றால் நாம் பெறவேண்டிய ஆற்றல் விண்ணிலே இருக்கின்றது. விண்ணின் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்களும் அதே வழியில் எண்ணினால் அந்தச் சக்திகளைப் பெறுவது எளிதாக இருக்கும்.

சாதாரண வாழ்க்கையில் பெரியவர்களுக்குப் பாத பூஜையும் பாத நமஸ்காரமும் கும்ப அபிஷேகமும் செய்து அடிபணிந்தே பழகி விட்டோம்.

நமக்குள் வரும் இந்த ஆசை நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் நிலைகளுக்கே அழைத்துச் செல்லும். இந்த உயர்வு நமக்குத் தேவை இல்லை. உயர்ந்த எண்ணங்கள் தான் நமக்குத் தேவை.

நாம் எந்த உயர்ந்த உணர்வின் தன்மையைப் பெறவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு வருகின்றமோ அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் தூண்ட வேண்டும்.

பிறரைப் போற்றிப் புகழ்ந்து பேசித் துதிக்க வேண்டும். அப்படியெல்லாம் போற்றினால் தான் நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நம் எண்ணங்கள் செல்லக் கூடாது.

மெய் ஒளி பெறும் உயர்வான எண்ணங்களை எடுத்து எடுத்து எடுத்து நம் உடலுக்குள் தீமையான உணர்வுகளையும் தீய வினைகளையும் (அவைகளை) அடிபணியச் செய்ய வைக்க வேண்டும். இது நம் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 110

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை வென்று இன்றும் ஒளியின் சுடராக நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றித் தொடர்ந்து சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

சப்தரிஷி மண்டலம் பூமியின் துருவப் பகுதியில் நின்று அந்தத் துருவப் பகுதியிலேயே இந்தச் சுழற்சியின் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்தை எடுத்துக் கொண்டால் துருவத்தினை மையமாகக் கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் தான் சுழன்று வரும்.

அது ஒரு வட்டமாக அமைந்திருக்கும்.

நம் பூமியில் மனிதனாக வாழ்ந்தவர்கள் ஒளியின் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து அதனின் உணர்வின் சத்தை இங்கே பரப்பிக் கொண்டுள்ளார்கள்.

அதை எடுத்துப் பழகியவர்கள் வெளிப்படுத்திய நிலைகள் பல உண்டு. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றவர்.

அதிலே கருவாகி உருவாக்கிய அணுவின் வித்தாக உருவான அந்த நிலையைத்தான் எமக்குள் பதிவு செய்து அதை நுகரும்படி செய்தார். நுகர்ந்த அந்த உணர்வின் சத்தைத்தான் இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 109

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெற தியானிப்போம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான  அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிப் பெறுங்கள்.

கண்களைத் திறந்தே தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கவும்.

இப்பொழுது நமது குரு அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குக் காட்சியாகவும் கிடைக்கலாம். கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கும் பொழுது குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை நீங்கள் உணர முடியும். காட்சியாகவும் பார்க்க முடியும்.

நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது உங்கள் சுவாசித்திற்குள் வரும். உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் நல்ல உணர்ச்சிகள்  உருவாகும்.

உங்கள் இரத்த நாளங்களில் அந்த அரும்பெரும் சக்தி உடல் முழுவதும் அது சுழன்று வரும் அந்த உணர்ச்சிகள் உங்களில் தோன்றும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 108

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்ட புலனறிவுகள் ஐந்திலும் கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.

நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம். இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.

அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது. அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெறவேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுது உங்களுக்குள் இது ஆழமாகப் ப்திவாகின்றது. எண்ணும் போது அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 107

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித உடலுக்குப் பின் அடுத்து நம்முடைய எல்லை எது? என்று ஒரு முடிவிற்கு ஒவ்வொருவரும் வர வேண்டும். ஏனென்றால் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

இந்த வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய தீமையாக இருந்தாலும் உடனுக்குடனே இது மாற்ற வேண்டும்.

மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்..?

கெட்டதைப் பார்க்கின்றோம். அதைத் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அந்தத் தீமையான உணர்வு நமக்குள் பதிந்து விடக்கூடாது.

கெட்டது விளையாமல் தடுப்பதற்குத்தான் உங்களுக்கு சக்தி கொடுக்கின்றோம். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

வெளியிலிருந்து உள்ளுக்குள் புகும் தீமைகளை “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி அதை இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 106

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் உங்களுக்குள் ஏங்க வைத்து அதை நுகரச் செய்து அந்த வலிமையை ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வலிமையின் துணை கொண்டு உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியை ஊட்ட முடியும்.

உங்கள் கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரம் எப்படி இருக்கும் அது எங்கே இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை.

உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் எங்கேயோ இருக்கின்றார். அவர் இந்த மாதிரி எல்லாம் அவஸ்தைப்படுகின்றார் என்று கேள்விப்பட்டவுடன் உங்களுக்குள் பதிவாகின்றது.

அது நினைவாகும் பொழுது என்ன செய்கின்றது? அவர் அங்கே “எப்படிச் சிரமப்படுகின்றாரோ..! என்ன செய்கின்றாரோ..?” என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள்ளும் இயங்குகின்றது.

இதைப் போல துருவ நட்சத்திரம் எங்கேயோ இருக்கின்றது. உங்கள் கண்களால் பார்க்க முடியவில்லை. குருநாதர் எனக்குக் காட்டினார். பார்த்தேன்.

அவர் காட்டிய நிலைகள் கொண்டு அதனின் ஆற்றலைப் பெற்றேன். அந்த உணர்வினை இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றேன்.

பதிவானதை நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து உங்கள் கண்களாலேயும் பார்க்க முடியும். இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த அருள் ஒளிகள் இங்கே படர்ந்து வருவதையும் உங்களால் பார்க்க முடியும். நீல நிற ஒளி அலைகள் சுழன்று வருவதைப் பார்க்கலாம்.

ஒரு வெல்டிங்கைத் (WELDING) தட்டினால் “பளீர்..,” என்று வெளிச்சமாவது போல் தெரியும். ஏனென்றால், பழக்கப்பட்டோர் உணர்வுகளில் இதைப் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 105

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முதுமை என்பது வயதால் வருவது அல்ல. அறுபது வயது…, எழுபது வயது… நான் முதுமை அடைந்து விட்டேன்..! என்று வெறும் வருடத்தால் கணக்கிட்டுச் சொல்வதல்ல…!

ஒரு தானியம் விளைந்தாலும் அதனின் முதிர்ச்சியின் தன்மையில் தன் இனத்தை உருவாக்கும் வித்தின் தன்மையாக அடைந்து அது மீண்டும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக வளர்க்கச் செய்யும் போது தான் அது முதுமை அடைந்தது (முதிர்ந்த வித்து) என்று சொல்ல முடியும்.

அதைப் போன்று தான் ஒரு உயிரின் தன்மை மனித உடலாக உருப் பெற்ற பின் அறிந்திடும் உணர்வு கொண்ட ஒளியின் சரீரம் பெற்ற மெய் ஞானியின் உணர்வைச் சேர்த்து உடலை முதுமையாக்கிவிட்டு உணர்வின் தன்மையை – நம்மை என்றும் இளமையாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

(உடல் அழியக்கூடியது உயிர் என்றுமே அழியாதது)

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 104

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ கோடி மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்களுடைய உணர்வலைகள் எத்தனையோ உண்டு. அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்காகத்தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

திரும்பத் திரும்ப இதைப் பதிவு செய்தாலும் “ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை…” உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

ஒன்றை எடுத்து ஒன்றின் சக்தி வளர்ந்த பின் அதனின் துணை கொண்டு விண்ணின் நிலைகளை ஒவ்வொன்றையும் வளர்க்கும் நிலைக்கு நீங்கள் வர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 103

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஈஸ்வரபட்டர் எம்மிடம் சொன்னது:-

ஒவ்வொரு நொடியிலேயும் ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நாம் பார்த்து அதனை நுகர்ந்து விட்டால் வேதனையிலிருந்து அவர் மீள வேண்டும் என்று தான் நீ எண்ணுதல் வேண்டும்.

அதே போல ஒருவன் தீங்கு செய்ய நினைத்தால் அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்று தான் நீ எண்ண வேண்டும்.

நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவர்களைத் தீமையிலிருந்து மீட்க வேண்டும். வேதனைகளிலிருந்து மீட்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

உங்களுக்கும் இதைத்தான் யாம் தெளிவுபடுத்துவது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறுங்கள். அந்த உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வு நுகர்ந்ததைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 103

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிலே புருவ மத்தியிலே எண்ணும் போது அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம். அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.

புருவ மத்தியிலிருக்கும்… நம் உயிரை” எந்த அளவிற்கு அதிகமாக எண்ணுகின்றோமோ அந்த அளவிற்கு இயக்கச் சக்தியின் ஆற்றலைப் பெற்று எண்ணிய சக்தியைப் பெற முடியும்.

ஞானிகள் அவ்வாறு பெற்றுத்தான் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும்.

அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.

அருள் உணர்வைப் பெருக்கினால் நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முடியும் பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும் என்றும் அந்த அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் நம்மால் உணர முடியும் என்றும் அதன் வழியில் நாம் எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வு வரும் என்பதையும் அதை வைத்து நாம் செல்ல வேண்டிய சப்தரிஷி மண்டல எல்லையை நிச்சயம் அடைய முடியும் என்றும் ஞானகுரு நமக்கு வழிகாட்டுகின்றார்கள். நாம் அதன் வழி செல்வோம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 102

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

பேசுவதற்கு முன் “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.

இதைப் போல “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் அடிக்கடி எண்ணினால்தான் நம் உயிரின் இயக்கம் உயிர் வழி சுவாசமாக அமையும்.

ஏனென்றால் இந்த உலகத் தொடர்பு கொண்ட மற்ற உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்… நம்முடைய எண்ண ஏக்க அலைகள் ஞானிகளின் உணர்வுகளை எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கும்… ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணினால் தான் அது மிகவும் ஏதுவாக இருக்கும்.

“எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு. அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு மெய் ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 101

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

உயிரின் உணர்வின் தன்மை கொண்டு அழியா ஒளிச் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்றால் நாம் உயிரை அவசியம் மதித்துப் பழக வேண்டும். ஞானிகள் உணர்த்தியபடி அதை நாம் பின்பற்ற வேண்டும்.

இப்படி ஒவ்வொருவரும் அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா என்று திரும்பத் திரும்பச் சொல்வது. அதே போல் எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்… நம் உயிர் தான்..” என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 100

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

ஈஸ்வரா என்றாலே புருவ மத்தியில் நம் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை. வெளியிலே நினைவு செல்ல வேண்டியதில்லை.

குரு என்றால் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் குருவை நாம் மதிக்கின்றோம் என்று பொருள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 99

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

ஓ…ம் ஈஸ்வரா…! என்று எண்ணும் போது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே “குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்

ஈசனாக இருப்பதும் உயிரே
விஷ்ணுவாக இருப்பதும் உயிரே
கடவுளாக இருப்பதும் நமது உயிரே
பிரம்மமாக இருப்பதும் உயிரே.
நாம் எண்ணியது எதுவோ அதைச் சிருஷ்டிப்பதும் நம் உயிரே,
எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் “உயிரே”.
ஆன்மாவின் நிலைகள் அது உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும் நிலைகளும் “உயிரே”.
நாம் எண்ணியது எதுவோ அதை உடலாக்குகின்றது நம் உயிர்
நாம் எண்ணியது எதுவோ அந்தச் சக்தியாக உள் நின்று மீண்டும் நம்மை இயக்குகின்றது.
நாம் எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக இருப்பதும் நம் “உயிரே”.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்து… அடுத்து…, “அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.

ஆகவே ஓம் ஈஸ்வரா குருதேவா என்கின்ற போது நம் உயிரின் இயக்கத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். மந்திரம் சொல்கிற மாதிரிச் சொல்ல வேண்டியதில்லை.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 98

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

கொங்கணவர் வந்து தங்கியிருந்த “இடம்” இன்றும் திருப்பதியில் உண்டு. அன்று திருப்பதி மலை மேலே சென்று அங்கே ஏழ்மையிலே வாழ்ந்து கொண்டிருந்த மங்கம்மாள் என்ற அந்தத் தாயிடம் உணவை உட்கொண்டு சிரமத்தின் எல்லைக்கே சென்று கடந்தபின் தான் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுத்துக் கொண்ட அகங்காரத்தை அழித்துவிட்டு, மனதைத் தங்கமாக்கும் நிலைக்கு வந்தார்.

தங்கத்திற்கு எவ்வளவு வலுவோ அடுத்த அழுக்கு அதிலே மாசுபடாத நிலைகளில் அது தங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும். இதைப் போல தன் மனதில் எண்ணத்தை வலுக் கூட்டி அந்த உணர்வின் தன்மை கொண்டு உயிரான ஒளியுடன் ஒளியைச் சேர்க்கும் நிலையையே அன்று கொங்கணவ மாமகரிஷி பெற்றார்.

தான் எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு ஒரு மனிதனுடைய துன்ப அலைகளை மாற்றியபின் அவர்கள் எண்ணும் “நல்ல எண்ணங்களினுடைய சுவாசமே” தன்னை அந்த “ஒளிச் சரீரம் பெறவைக்கும்” என்று உணர்ந்தபின் பிருகு தன் மனதைத் தங்கமாக்கக் கொங்கணவர் உடலிலே புகுந்து செயல்பட்டார்.

ஆகவே “மனதைத் தங்கமாக்குவதற்குத்தான்..” கொங்கணவர் உடலிலிருந்த பிருகு மகரிஷி ஒவ்வொரு வீட்டுக்கும் யாசகம் கேட்டுச் சென்றார்.  இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்னாடி தான்.

அந்த ஆறாவது அறிவின் தன்மையைத் தன் உடலுக்குள் எடுத்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் நிலைகளுக்குத்தான் அன்று மனதைத் தங்கமாக்கும் நிலைகளில் செயல்பட்டார் கொங்கணவர்.

போகமாமகரிஷி எப்படி மனித உடலில் விஷத்தை நீக்கி மகிழ்ச்சியான உணர்வுகளைத் தான் பெறவேண்டும் என்று பழனியிலே செய்தாரோ இதைப் போலத்தான் திருப்பதியிலே கொங்கணவ மாமகரிஷி செய்தார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 97

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

கொங்கணவர் உடலிலிருந்த பிருகு மகரிஷி முந்தைய அரச நிலைகளில் அவர எடுத்துக் கொண்ட மந்திரத்தால் சில நேரங்களில் இவரை எதிர்க்கும் நிலையில் யாராவது வந்தால் தன்னுடைய மந்திர சக்தி கொண்டு அவரை அச்சுறுத்தியோ அல்லது வீழ்த்தும் நிலைகளில்தான் செயல்பட்டார்.

ஒரு சந்தர்ப்பம்… ஒரு சமயம் மலர் சோலைகளுக்கு மத்தியில் நடந்து வரும் பொழுது கொக்கு ஒன்று பறந்து செல்லும் பொழுது அதனுடைய எச்சம் கொங்கணர் மீது பட்டுவிட்டது.

கொக்கு என்னை இப்படி அசுத்தமாக்கி விட்டது என்று தன் எண்ணத்தின் பார்வையால் அதனுடைய சிறகை ஒடித்து விடுகின்றான். ஆனால் அந்தக் கொக்கு ஒன்றும் தவறு செய்யவில்லை. இவர் முன்பு அரசன் அல்லவா…! அந்த உணர்வின் தன்மை அவரை விட்டு நீங்கவில்லை.

கொங்கணர் தான் கற்றுக் கொண்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்திருந்தாலும் போகும் பாதையில் தற்செயலாகத் தான் எச்சம் விழுந்தது என்று சிநதிக்க முடியவில்லை.

“பிச்சாந்தேஹி…!” என்று கேட்டுக் கொண்டு வாசுகி வீட்டிற்கு வருகின்றான். அங்கே வந்தவுடன் பல குரல் கேட்கிறது. தன்னைச் சொல்லி “ஆண்டவனை வழிபடுபவனை நீ கவனிக்கவில்லையே…!” என்று கொங்கணர் அகம் கொள்ளுகின்றான்.

ஏனென்றால் ஒரு வீட்டிற்குச் சென்று தான் பிச்சாந்தேஹி என்று யாசகம் கேட்பார்கள். (கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் வேறு வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள்)

வாசுகி அம்மாவிற்குத்தான் சக்தி அதிகம், திருவள்ளுவருக்கு அல்ல. வாசுகி தன் ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு சொல்லும் உணர்வின் ஆற்றலைத்தான் திருவள்ளுவர் எழுதி வந்தார்.

வாசுகி அம்மாள் தன் சக்தியினுடைய நிலைகள் கொண்டு கொங்கணவர் நினைத்ததை உணர்கின்றார். அவர் வெளியே வருவதற்குச் சிறிது நேரமாகிவிட்டது.

இவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். யாசகம் கேட்க வந்தாலும் அந்த “அகங்காரம்” இவருக்குள் இருந்தது. ஏனென்றால் அன்று அரசராக இருந்தவர்.

மக்களுக்காகச் சேவை செய்கிறேன். எனக்குக் கொடுப்பதற்கு தாமதமாகின்றது என்ற மன உறுமல் ஏற்பட்டு முணுமுணுக்கின்றார்.

கொஞ்ச நேரம் தாமதமானவுடன் மனதிற்குள் உறுத்தல். ஏனென்றால் அரசாட்சி செய்தே பழக்கமானவர். இவர் எந்த நிலைக்கு மாறவேண்டும் என்றாலும் அங்கேயும் அந்த நிலைகளே வருகின்றது.

அப்பொழுதுதான் வாசுகி அம்மாள் இவரிடம், “கொக்கென்று நினைத்தாயா… கொங்கணவா…?” என்றார்.

அவர் கொக்கை வீழ்த்திய நிலைகளை… ஒரு சாதாரண கிராமத்திலே ஒன்றும் தெரியாத… “ஒரு பெண் சொல்கிறதே…” என்ற நிலையில் அதை உணர்த்தப்படும் பொழுது தான் அவருக்கு அங்கே “ஞானம்” வருகின்றது.

தான் அரசனாக (பிருகுவாக) இருக்கக்கூடிய காலத்தில் செய்த நிலைகளிலிருந்து மீண்டு தெளிவுபடும் நிலைகளுக்கு வந்தாலும் தான் மீண்டும் ஒரு உடலிலிருந்து தெளிவு பெறும் எண்ணம் வரவில்லை.

கொக்கின் இறக்கையை ஒடித்தது உனக்கு எப்படித் தெரிந்தது…? நீ எங்கே இதைக் கற்றுக் கொண்டாய்…! என்று கொங்கணர் கேட்கின்றார்.

கசாப்புக் கடைக்காரரிடம் கேள்..! என்கிறது வாசுகி. கசாப்புக் கடைக்காரனிடம் கேட்டால் தான் “உனக்குத் தெரியும்…!” என்று சொல்கிறது.

கசாப்புக் கடைக்காரன் என்ன செய்கிறான்…? ஆடை வெட்டி வியாபாரத்தைச் செய்கிறான். ஆட்டைக் கொல்லப் போகும் போது ஆட்டின் உயிர் அவனுக்குள் போய் அது மனிதனாகப் பிறக்கிறது.

ஆனால் ஆட்டைத் தின்றவன் உடலில் என்ன செய்கிறது…? ஆட்டை ரசித்துச் சாப்பிட்டவனை எல்லாம் ஆடாகப் பிறக்கச் செய்கிறது.

நீ கொக்கை வீழ்த்தினாய். உனக்குள் வீழ்த்திடும் சக்தி வருகிறது. அதைக் கொல்லும் உணர்வு கொண்ட பின் நீ அதே நிலையையே அடையப் போகின்றாய் என்று வாசுகி தன்னுடைய கவிப் புலமைகளில் “சொல்லாமல் சொல்கிறது…” அந்தச் சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது…?

வாசுகி அம்மாள் உணர்த்திய உணர்வின் அலைகள் வரப்படும் பொழுதுதான் கொங்கணவருக்குச் சிந்திக்கும் நிலைகள் வருகின்றது. அப்பொழுது தான் அவர் சிந்தித்து மனதைத் தங்கமாக்கும் நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வருகின்றார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 96

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

கொங்கணவர் உடலிலிருந்து கொண்டு வீடு தோறும் சென்று யாசகம் செய்து அவர்கள் ஒவ்வொருவருடைய நிலைகளிலும் துன்பம் போக வேண்டும் அவர்கள் புனிதமாக வேண்டும் என்று செயல்பட்டு வந்தார்.

பிருகு அவ்வாறு யாசிக்கும் பொழுது அவர்கள் நலம் பெறவேண்டுமென்று எண்ணிச் செல்வார். அவர் வந்துவிட்டுச் சென்றபின், அவர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாகின்றது.

அவர்கள் பட்ட துன்பங்கள் நீங்கி அங்கே நல்லதாகும் பொழுது, “அன்று பிருகு வந்து சென்றார், அதிலிருந்து என் குடும்பம் ஷேமமாக இருக்கின்றது” என்று மகிழ்ந்த உணர்வை அவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 95

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

பிருகு இராஜ வம்சத்தில் பிறந்து மன்னராகச் செயல்பட்டவர். அவர் உலகையே… அண்டத்தையே ஆட்டிப் படைக்கும் நிலைகள் கொண்டவர். தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ இராஜ தந்திரங்களைச் செய்தார். எத்தனையோ நாடுகளை வென்றார். மந்திர சக்திகள் கொண்டு போர்முனைகளில் செயல்பட்டவர்தான்.

செல்வத்திலே செருக்கும் செருக்கின் நிலைகள் கொண்டு விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்துக் கொண்டவர். மந்திரம் என்ற நிலைகள் கொண்டு மதத்தின் அடிப்படையிலே மக்கள் மத்தியிலே செருகி அதன் வழியில் ஆற்றல் கொண்டு ஆட்சி புரிந்தவர்.

பிருகு மகரிஷி பல உடல்கள் மாறி மாறி  நாடிகளை எழுதி வைத்து அந்த நாடியின் தன்மையை மற்றவர் வாசிக்க அவ்வாறு வாசித்தவர் உடலுக்குள் பிருகு புகுந்து அந்த உடலின் தன்மையையும் தான் செயலாக்கி அந்த ஆற்றல் மிக்க சக்திகளைத் தேடி அலைந்தவர் தான்.

அன்று பிருகு மகரிஷி தான் எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு உலகையே ஆள வேண்டும் என்ற தன் அரசாட்சியினுடைய நிலையில் எவ்வளவோ கடுமையாக இருந்தும் கடைசியில் அரசைத் துறந்து தான் மெய் வழியைக் காண வேண்டும் என்ற நிலைக்குச் சென்றாலும் அவர் எடுத்துக் கொண்ட உணர்வு யானை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி விண் செல்ல முடியவில்லை. ஏனென்றால் மனித உணர்வுடன் அவர் சென்றதினாலே விண் செல்ல முடியவில்லை.

அவர் மீண்டும் கூடு விட்டுக் கூடு பாய்ந்ததிலேதான் இன்று நாம் “கொங்கணவ மாமகரிஷி” என்று சொல்கின்றோமே அவர் உடலில் புகுந்தார். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தான் அவர் கொங்கணவ மகரிஷியாக வந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 94

Soul lights

நஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…?

 

பாம்பு ஒரு தவளையைக் கொத்தி அதிலே தன் விஷத்தைப் பாய்ச்சி விழுங்கி அதனை உணவாக உட்கொள்கின்றது.

இதே போன்று தான் வலுக்கொண்ட நிலைகள் கொண்டோர் பிறர் துன்பப்படுவதைக் கண்டு சிலர் ரசிப்பார்கள். யாரொருவர் பிறர் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கின்றார்களோ அது எல்லாம் பாம்பு நஞ்சைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குவது போன்றது தான்.

ஏனென்றால் நஞ்சின் தன்மை கொண்டு அதை விழுங்கி இருந்தாலும் நஞ்சு என்பது சாகாக்கலை கொண்டது.
1.அதாவது எதிலே எப்படிச் சென்றாலும் அந்த நஞ்சை வீழ்த்திட உங்களால் ஆகாது
2.எதனுடன் கலந்தாலும் நஞ்சின் தன்மை அது அடக்கும் சக்தியாகத் தான் வரும்.

உதாரணமாக ஒரு குடம் பாலுக்குள் ஒரு துளி விஷம் பட்டால் அதைப் பிரித்திட முடியாது. அந்த ஒரு குடம் பாலையும் தன் இனத்தால் நஞ்சாக மாற்றி அதைச் சாகாக்கலையாக ஆக்கிவிடும். ஆனால் அதே சமயம்
1.நஞ்சு கலந்த அந்த ஒரு குடம் பாலுக்குள் பல ஆயிரம் குடம் பாலை விடும்போது
2.இதனின் சக்தி ஓங்கி நஞ்சின் தன்மை சிறுத்து அது ஆக்கச் சக்தியான வலுவை ஊட்டும்.

நோய்களை நீக்க மருந்தை உட்கொண்டாலும் அதற்குள் வீரியத் துடிப்பான நஞ்சைக் கலக்கித் தான் உங்களுக்குள் நோயினை நீக்கக் கொடுப்பார்கள்.

ஓர் உணர்வின் சக்தி கொண்டு நமக்குள் நோயாக ஆனாலும் அந்த நோயினை நீக்கிட அந்த மருந்துக்குள் நஞ்சினைப் பாய்ச்சி
1.நோயை எதிர்த்திடும் இந்த உணர்வின் மணத்தால்
2.நஞ்சு வீரிய உணர்வு கொண்டு செல்லும்போது “அது ஊடுருவி”
3.எங்கே வேதனை உணர்வு இருக்கின்றதோ அதனின் செயலை இந்த மணம் ஊடுருவி வேகமாகச் சென்று அதை அடக்கும்.

வைத்திய ரீதியிலே விஞ்ஞான அறிவு கொண்டாலும் இப்படித்தான் செயல்படுத்துகின்றார்கள்.

உதாரணமாக சர்க்கரை வியாதி அதிகமாக இருக்கின்றது என்றால் இன்சுலினை இஞ்செக்ஷன் செய்து அந்தச் சர்க்கரைச் சத்தை அடக்கிடும் உணர்வாகச் செய்வார்கள்.

சிறுகச் சிறுக இது ஒரு பழக்கமாக்கி விட்டால் இந்த இன்சுலின் இல்லையென்றால் அடுத்து நீங்கள் எந்த மருந்து போட்டாலும் அது ஆகாது.

பின்… நமக்குள் அது மாற்ற முடியாத நிலைகளும் ஒவ்வொரு நாளும் நரக வேதனையில் நமக்கு நாமே குத்திக் கொண்டு அதைக் குறைத்திடும் நிலைகள் வரும்.

முதலில் சிறுகச் சர்க்கரைச் சத்தாகத் தான் வரும். அதை அடக்க சிறிதளவு மருந்தைக் கொடுப்பார்கள். இதை உட்கொண்டாலும் சிறுகச் சிறுகச் சேர்க்க சர்க்கரை மருந்தின் அளவு கூடும்.

கடைசியில் முடியாத நிலைகளில் எல்லாம் சேர்ந்து நரம்புகள் தளர்ச்சி ஆகும். நாம் எடுக்கும் உணர்வின் நிலையில் சர்க்கரையை ஜீரணிக்க முடியாத நிலைகள் ஆகும்.

தளர்ச்சியானபின் இதனுடைய நிலைகள் துவண்டு விடும். இந்த நிலை வரும் போது தான் இன்சுலினை இஞ்செக்சனாகக் கொடுப்பார்கள்.

அதுவும் நாளடைவில் கூடிக் கூடி வீரிய உணர்வு கொண்டு நம் உடலில் இரத்தத்தில் வரும் அசுத்தங்களை வடிகட்டும் கிட்னி… கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை வருகின்றது

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

மனிதனாக நல்ல முறையில் வாழ வேண்டுமென்று தான் எல்லாம் செய்கின்றோம். இத்தகைய நோய் வந்த பின் நம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு நோயின் வீரியத்தை மாற்றிக் கொள்கின்றோம்.

இருந்தாலும் உடலில் சேர்த்துக் கொண்ட நஞ்சின் தன்மை நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து விடுகின்றது.
1.நான் நல்லதைச் செய்தேன்… எனக்கு இப்படி வந்துவிட்டதே
2.இவ்வளவு செல்வத்தைச் சேர்த்தேன்… இப்படி ஆகிவிட்டதே என்ற நிலை வருகின்றது.

அதுமட்டுமல்ல.. உடல் மிகவும் நலிவடைந்து வரப்படும்போது நம்மிடம் கடன் வாங்கியன் பணத்தைச் சரியாகத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால்… அடப்பாவி…! என்று அவன் மேல் எண்ணத்தை பதிவு செய்து
1.நான் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டிருக்கின்றேன்..
2.எனக்குப் பணம் தரமாட்டேன் என்கின்றானே என்ற நிலையில் அவன் உணர்வை வளர்த்துக் கொண்டால்
3.இந்த உடலைவிட்டு சென்றபின் அவன் உடலுக்குள் நாம் செல்வதற்குத் தயாராகி விடுகின்றோம்.

இதே வேதனை உணர்வுகள் வீரியமாகி இந்த உடலை விட்டு நாம் அங்கே சென்றபின் அந்த உடலுக்குள் போனபின் இதே இன்சுலினை அங்கே குத்தும்படியாக அங்கேயும் இதே சர்க்கரை நோயாகி விடும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு இந்த உடலுக்குப் பின் நம் நிலை என்ன…? என்று சிந்தித்து அதன் வழி மெய் ஞானிகள் காட்டிய அருள் வழி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம் உயிர் உருவான அணுக்களுக்கு உணவு கொடுக்கும் நிலை 

மெய்ப் பொருளை அறியச் செய்யும் உயிரும் நம்மை உருவாக்கிய தாயும் 

நான் என்ற சொல்லுக்கே மூலம் நம் உயிர் தான் 

manrdra 100

நம் சித்தம் தெளிவாக வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
அழகான தடாகத்தில் அன்னப்பட்சி நீரில் நீந்துவதைப் போன்றும்… படகில் மனிதர்கள் அமர்ந்து செல்வதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
மனிதனுடைய ஞானம் “ஒன்றைப் பார்த்தவுடன்…” அதனைத் தன்னுடைய செயலுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சிந்தனையில் அதைச் செயலாக்குகின்றான்.

நீரில் மிதக்கக்கூடிய அன்னப்பட்சியின் நிலையைப் பார்த்துத் தானும் அதைப் போன்று செயல்படுத்திக் கொள்ளும் அமைப்பாக (படகை) உருவாக்குகின்றான்.
1.இப்படிப்பட்ட சிந்தனையின் செயலுக்கு வலுப்படுத்தும் மனிதர்கள்
2.வாழ்க்கைத் தொடரில் வெற்றி பெறுகின்றார்கள்.

ஆனால் கற்பனையில் எண்ணக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை
1.சஞ்சலம்… சோர்வு… பிணி… என்று
2.தன் ஞானத்தின் வலுவைத் தான் எண்ணிய கற்பனை உணர்வுடன்
3.வாழ்க்கையை ஒப்பிடும் சிந்தனையற்ற செயலாக்கம் இல்லாத நிலையினால் அவ்வாறு ஏற்பட்டு விடுகின்றது.

கற்பனையின் உணர்வில் தான் எண்ணியதை… கவுரவத்தின் உணர்வாகச் செயலாக்குபவன் வாழ்க்கையில் தான் முன்னேறுவதில்லை.

ஆக்கத்தின் ஆக்கமாய் உணர்வின் எண்ணத்தைச் சிந்தனையில் சீர்படுத்தும் மனிதனின் குணம்… வாழ்க்கையின் செயல்பாட்டில் வெற்றி காணும் நிலை ஏற்படுகிறது

ஒவ்வொரு பொருளிலுமே அப்பொருளின் மாற்றம் எப்படி ஏற்படுகின்றது…? அதனுடைய “உஷ்ண அலையின் மாறுபாடு நிலை… சமைப்புநிலை… ஏற்படும் தன்மை கொண்டுதான்…” ஒவ்வொரு கருவின் உருவும் வளர்கின்றது.

வளர்ச்சியில் வெளி கக்கும் கழிவு நிலை கொண்டு தான்… அதனின் சத்து நிலையை ஒவ்வொரு செயலிலும் அச்செயல் நிலையின் “உன்னத நிலை” உருவாகின்றது.

பூமியின் ஈர்ப்பில்… உயர்ந்த ஒவ்வொரு கனி வளங்களும் வளரக்கூடிய நிலையில் அவ்வளர்ச்சியின் உயர்ந்த தன்மையான உலோகங்களை நாம் பிரித்து எடுக்கின்றோம்

சாதாரணமாகத் தங்கப் படிவங்கள் வளர்ந்துள்ள மண்ணில் உள்ள தங்கப் பாளங்களை வெட்டி எடுத்து… அதைப் புடம் போட்டுத் தங்கமாக்குகின்றோம். இதைப் போன்றே பூமியில் உள்ள கனி வளங்களை நமக்கு வேண்டிய பக்குவத்திற்கு பல நிலைகளைச் செய்வித்துச் செயல்படுத்துகின்றோம்.

இதைப்போன்று இச்சரீரத்தின் உண்மை நிலையையும் நாம் உணரல் வேண்டும்.

நாம் எடுக்கக் கூடிய எண்ணத்தின் உணர்வின் உஷ்ண ஓட்டத்தால் நாசி எடுக்கும் சுவாசம் கொண்டு
1.நாசியில் (மூக்கில்) சளியும்
2.பார்க்கும் பார்வையின் ஒளி ஈர்ப்பைக் கொண்டு கண்ணெடுக்கும் ஒளி ஈர்ப்பால் கண்ணின் பீழையும்
3.செவி கேட்கும் ஒலி ஈர்ப்பால் காதில் அழுக்கும்
4.வாய் பேசும் ஒலி அலையால் வாயில் உமிழ் நீரும்
5;உண்ணும் உணவால் மலமும் சிறு நீரும்
6.பால் உணர்வின் உஷ்ண அலையின் தொடர்பால் பெண்ணிற்கு மாதவிடாயும் ஆணிற்கு விந்து நிலையும்
7.உடல் உறுப்பின் செயலில் வேர்வையும்
8.அந்தந்த உறுப்பின் அவயவங்களின் செயலுக்கொப்ப வெளிப்படும் கழிவுகள் நம் உடல் உறுப்பிலேயே செயல் கொள்கின்றதல்லவா…!

அதைப் போன்றே மனித வாழ்க்கையில் எண்ணத்தின் உணர்வில் மோதப் பெறும்… நடந்தது… நடக்க வேண்டியது… நடப்பது எதுவாகிலும்… உணர்வின் ஜீவித எண்ணமுடன் ஓடக் கூடிய எல்லாமே இவ்வுயிர் ஆத்மாவின் சரீர வாழ்க்கையில் எலும்பில் ஊனாகப் பதிந்து விடுகின்றது.

ஊன் நிலைக்கொப்பத்தான் ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளும்… இருக்கும்.

1.எதை அதிகமாக எடுத்து மனித உணர்வின் எண்ணம் பேசிச் செயல்படுகின்றதோ
2.அந்த நிலைக்கொப்ப ஊனின் பதிவு வினையாக வாழ்க்கையில் வெளிப்படுகின்றது.

கண் பார்த்துப் பொருளறியும் நிலையால் கண்ணில் எப்படிப் பீழை ஏற்படுகின்றதோ அதைப் போன்று
1.உணர்வெடுத்து நாம் பேசியது.. பேசப் போவது என்ற எண்ண உணர்வே ஊனாகி…
2.ஊனே வினையாகி… வினையே வாழ்க்கையாக… அந்த வாழும் நிலையை மாற்றுவது என்றால்
3.இச்சரீர உணர்வின் விதியால் மதி கொண்ட உயர் ஞானத்தால் மெய் ஞானம் பெறும் ஏழாம் நிலையில்
4.இது நாள் வரை இங்கே சொன்ன வழி முறைக்கொப்ப விண்ணிலிருந்து பெறும் மின் காந்த ஒளி சக்தியைக் கவர்ந்து
5.சரீர உணர்வுடன் இவ் ஊனில் பதிவாகி உள்ள பதிவு நிலையை மாற்றக்கூடிய அந்தச் செயல் தன்மைக்கு
6.ஐம்புலனின் செயலின் வீரியத்தைக் கண் காது மூக்கு வாய் உணர்வு என்ற
7.ஐம்புலனின் செயலையும் ஒரு நிலையாக்கி… மதி கொண்டு மெய் ஞானம் பெற வேண்டும்.

மெய் உணரும் உண்மையால் பரந்து கிடக்கின்ற இயற்கையில் உண்மையின் உணர்வைச் சித்தத்தின் செயலாகச் சீர்படுத்துதல் வேண்டும்.

கற்பனைக் கோலம்… கலங்கிடும் காலம்…
அனுபவ ஆற்றல்… ஆக்கத்தின் ஆக்கம்…!

சஞ்சலத்தில் சச்சரவை… சங்கடத்தில் சிக்கலின்றி சிந்தனையில் சீர்தூக்கினால்…
சிந்தைதனில் சீர்படுத்த… சிந்தையின் செயலே சீர்படும் சிகரமாகுமே…!

நமக்குள் நின்று இயக்கும் ஈசனை உணராது தெய்வத்தை வெளியில் தேடுகின்றோம் 

நம் உடல் என்று சொல்கின்றோம் ஆனால் உயிரின் உடல் தான் இது நம் உடல் இல்லை 

எது கடவுள்..? 

THOUGHT POWER OF MAN“மனித எண்ணத்தின் உணர்வின் உன்னத சக்தி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் சூரியக் குடும்பத்தின் மனித உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஜீவகாந்த ஒளித் தன்மையின் ரிஷி சக்தியைக் கொண்டு மண்டலக் கோள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று ஓடுகின்றது.

நாற்பத்தி எட்டுக் கோள்களும் சூரியனை மையமாக வைத்துச் சுழன்று… ஒன்றொன்றின் சுழற்சி வளர்ப்பின் தொடர்பலையில் செயலின் சக்தியைச் செயலாக்கும் தன்மையில்தான் ரிஷி சக்திகளின் செயலே… செயல் கொள்கின்றது.

அந்த ரிஷி சக்திகளின் செயல்… சக்தி பெற மனித உணர்வின் எண்ண ஜீவ அலைத்தொடர் பிம்பமுடன் செயல்பட்டால்தான்… உணர்வின் எண்ணத்தைச் செலுத்தக்கூடிய… அந்த ஜீவகாந்த ஒளியைத் தன் செயலுக்கு உணவாகப் பெற்று இயங்கிட முடியும்.

நம் சூரியக் குடும்பத் தொடரைப் போன்றே பல ஆயிரம் சூரியக் குடும்பங்களும் “எண்ணத்தின் உணர்வைக் கொண்டுதான்” செயல் கொள்கின்றன.

பூமியில் உயிரணுக்களாய் ஜீவன் கொண்ட மனிதனல்லாத உயிரினங்கள் பல வளர்ந்து மடிந்தாலும் எல்லாமே பூமியில் வளர்ந்த இயற்கையில் தன் உணவை… உள்ளதை உண்டு மடிகின்றன.

தன் தேவைக்கொத்த உணவுகளைத் தானே உற்பத்தி செய்து உண்ணக் கூடிய நிலை மனிதனைத் தவிர மற்றெந்த ஜீவராசிகளுக்கும் இல்லை. தன் உடல் அமைப்புக்கு ஒத்த பாதுகாப்புடன் பிறவியில் வளர்ந்த நிலைதொட்டு அத்தொடரின் சுழற்சியுடனே இறந்து விடுகின்றது.

ஆனால் மனிதன் தன் உணர்வின் எண்ணத்தில் உடல் உபாதையை மாற்றி அமைக்கப் பல செயல்களுக்கு பக்குவத்தைச் செயல்படுத்திக் கொள்கின்றான்.

மனிதச் செயலின் ஞானத்தைக் கொண்டு… இவ் உடல் தேவையின் இன்பத்தைப் பெறப் பல நிலைகளை அறிந்து… அதன் தொடரில் செயலின் வழித் தொடரைச் செயற்கையில் செய்விக்கும் நிலை… “மனிதனுக்கு மட்டும் தான் உண்டு…”

தெய்வ சக்தியை உணரும் பக்குவமும்… செயலும் கொண்டு… அன்றைய சித்தர்கள் தன் ஞானத்தை இயற்கையின் சக்தியில் பல உண்மைகளை இந்த மனிதச் சரீரத்தில் எடுக்கக் கூடிய உயர் ஞானமாகப் பெற்று வளர்த்தார்க்ள்.

உடல் தேவையின் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வாழும் வழித் தொடரை…
1.ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து
2.ஆத்மாவை வளர்க்கக் கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும்.

அதைப் பெற்றால் இவ் உடல் வாழ்க்கையில் பெறக்கூடிய இன்பத்தைக் காட்டிலும் நம் உயிர் ஆத்மாவின் உண்மைச் செயலை நாம் அறியக் கூடிய தன்மையில் ஆத்மாவில் பெறப்படும் இன்பத்தின் சூட்சுமத்தை உணரலாம்.

ஆகவே நம் எண்ணத்தை ரிஷிகளின் தொடர்புடன் செயல்படும் செயல் கொள்ளும் பக்குவத்திற்கு நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் இன்றைய சமுதாய உணர்வு… செயற்கையின் பிடியில் உண்மை நிலையை அறியாத நிலையில் உள்ளதனால்
1.ஜீவனுடன் கூடிய பல ஆத்மாக்கள் பல இடங்களில் உடலுடன் சமாதி நிலை கொண்டு
2.மகரிஷிகளின் தொடர்புக்காகத் தன் உணர்வின் ஜீவனை அழியா நிலை கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

மனிதனுக்குள் உள்ள பகுத்தறியக்கூடிய உணர்வின் எண்ண ஞானத்தை உடலின் செயற்கை வாழ்க்கை இன்பத்திற்கு மட்டும் செயல்படாமல்
1.உயிராத்மாவின் உண்மை அறிந்து சகல மாமகரிஷிகளின் சக்தியை உணர்ந்து
2.இஜ்ஜீவ காந்த சரீரத்திலிருந்தே ஒளிகாந்த நிலையை பெறக்கூடிய பக்குவத்திற்கு
3.மெய் ஞானத்தின் சக்தி நிலையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.

manrdra 104

ஏகாந்த சுகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இங்கே உணர்த்தப்படும் உண்மை மெய் ஞானத்தை… மனிதன் பெற வேண்டிய உண்மை சக்தியின் வளர்ச்சி நிலையை… ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.

பூமியின் சுழற்சியும் பூமியின் வளர்ச்சியும் பூமியின் பல கோடி வளர்ப்பு நிலையில் ஜீவ பிம்பம் நிலை பெற்ற உணர்வுகளில் மனிதனுக்குக் காட்டப் பெற்ற உயர்வு சித்தம் என்பது அன்றிருந்த மனிதர்கள் சைவ சித்தாந்தத்தை மனிதர்களுக்கு உணர்த்தியது தான்…!

இயற்கையின் உண்மைகளை அறிய மனிதர்கள் உணர்வின் ஒட்டத்தில் ஜீவ வாழ்க்கைக்கு ஆறறிவின் முதிர்வை மெய் ஞானம் கொண்டு சித்தத்தை அறிய… சைவ சித்தாந்தத்தில் உண்மைகள் வடிக்கப் பெற்றது.

1.உயிரணுவின் உணர்வை உயர்த்தக்கூடிய ஒலி ஒளி நீரைக் கொண்டு
2.எடுக்கும் எண்ணத்திற்கு எண்ணம்தான் உணர்வாகி… உணர்வு தான் ஆத்மாவின் வலு என்பதனை உணர்ந்து
3.தெய்வ குணங்களை வணங்கும் எண்ணத்தை வழிகாட்டிய முறை நான்கு வேதங்களாய் பிரிக்கப்பட்டு
4.மந்திர ஒலிகள் ஜெபிக்கப்பட்டு மந்திர ஒலிகளுக்கு வலுவாக்க வேள்விகளை நடத்தி
5.அதிலிருந்தே மனிதனை மனிதனே உயர்த்தி… தாழ்த்தி… வழி வந்ததின் வழியினை
6.நாம் இன்று நம் சிந்தனையில் உணர்ந்திடல் வேண்டும்.

இன்றைய விஞ்ஞானத்தில் வளர்த்துக் கொண்ட முறைகள் எல்லாமே மனிதனுடைய தேவையின் அடிப்படையில் “உடலின் சுகத்திற்கே” முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விஞ்ஞானத்தின் கதியால் மனித உணர்வு உயர்வு எங்கிருக்கின்றது…? என்பதை மனிதன் மெய் ஞானத்தில் உணரவில்லை.

அணு ஆயுதங்களும் இன்று விஞ்ஞானத்தில் சுகம் கொள்ளும் ஒலி ஒளி யாவையுமே இவ்வுடலின் தேவைக்குத்தான் உள்ளது. மனித விஞ்ஞானம்… மருத்துவம்… யாவையுமே உண்ண… உடுக்க… இருக்க… உடலின் தேவைக்கு சுகம் பெற வேண்டியதாகத் தான் உள்ளது.

1.ஆனால் மனித ஜீவ வாழ்க்கையில் மலர வேண்டிய…
2.மெய் ஞானத்தால் மனிதன் பெறக்கூடிய உண்மையை உணர்ந்தோமா…?

இந்த உடலுக்கு என்று சுகம் காண… மனித ஞானம் எல்லாமே விஞ்ஞானம் கண்டு… அதனால் விபரீத சுகமாக அல்லவா… இன்று நடக்கும் கலியில் சுகம் காணும் நிலை…!

உடல் வாழ்க்கை உள்ள வரைக்கும்… இன்ப வாழ்க்கை இனிது நடக்க… மனித உணர்வின் தேவை என்பது “செயற்கையிலேயே ஒன்றி விட்டது…” இயற்கையின் வித்தாக இருந்த உலகத்தை மாற்றும் வழியாகவே மாறி விட்டது இன்றைய நிலை.

எந்தச் சுகத்தைப் பெற மனித உணர்வின் வேகம் விஞ்ஞானத்தில் சென்றதோ… அவை எல்லாம் செயற்கையின் குறுகிய கால சுகம் தான்..!
1.மனித வாழ்க்கையில் உணர்வின் குணத்தைச் சமம் கொண்டு
2.மெய் ஞானத்தை உணரும் ஆத்ம பலம் பெறும் சுகம் ஒன்றே
3.ஏகாந்தத்தில் உணரும் ஏகாந்த சுகம்.

உயிர் பெற்ற ஜீவ ஆத்மாவின் முதிர்வு கொண்ட மனித உயர்வை… மெய் ஞானத்தால் மனிதனுக்கடுத்த தெய்வ குணங்களால்… தெய்வச் செயலைத் தன் சித்தத்தின் சித்தாக்கிக் கொண்டால் பிறப்பின் முதிர்வுக்கு அடுத்த நிலையான… “பறக்கும் நிலையை” மனிதன் என்றோ பெற்றிருக்கலாம்..!

மனிதனின் உணர்வில் இனிமையை ரசிக்க… இன்பமாய் இருக்க…வேண்டும் என்றால் அது… மெய் ஞானத்தின் சித்தத்தால் தான் பெற முடியும்.

1.இன்று செயற்கையில் காணும் நிலை யாவையுமே குறுகிய கால நிலை தான்
2.வழியறிந்து வளரும் நிலை “உண்மையின் சக்தி நிலை” பெறுவது ஆகும்…!

புருவ மத்தி தான் மனிதனுக்குச் சொர்க்கவாசல் 

உயிர் – வெப்பம் – கடவுள் – வெப்பமே அனைத்தையும் உருவாக்குகின்றது – விளக்கம் 

கடவுள் யார்..? அவர் தண்டனை கொடுப்பாரா..?

gnanaguru upadesas

சாமி நன்றாகச் சொல்கிறார்…! என்று தான் நினைக்கின்றார்களே தவிர சாமி சொன்னதைச் செய்தால்… நன்றாக இருப்போம் என்ற நிலை வரவில்லை

 

“சாமி (ஞானகுரு) நேற்று சொன்னதைத்தான் சொல்கின்றார்…” என்று சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள்.

இப்போது நான் சொல்வது எல்லாம் புதிதாக இருக்கும். ஆனால் சொன்னதையும் சொல்லியிருக்கின்றேன் இடை இடையில் கொஞ்சம் கொஞ்சம் புது உணர்வும் கொடுத்திருக்கின்றேன்.

எல்லாவற்றையும் சொல்லி விட்டால்…
1.சாமி நன்றாகச் சொல்கின்றார்…! என்று இதைப் பாடமாக (போற்றும் நிலை) வைத்துக் கொள்வார்கள்
2.உபதேசிப்பதைத் தான் எடுக்க வேண்டிதை விட்டுவிடுவார்கள்.

அடுத்தாற் போல் யாம் பேச ஆரம்பிக்கும்போதே…
1.நேற்றே இதைச் சாமி சொன்னாரே… சரி சொல்லட்டும்…! என்று கூறி
2.இதை விட்டுவிட்டு… ஞாபகத்தை வேறு பக்கம் வைத்துவிடுவார்கள்.

இது தான் மனிதனுடைய இயற்கையினுடைய நிலைகள் நமக்குள் வருவது.

ஆகையினால் தான் எதையுமே எடுக்கும் பொழுது இந்த “ரசனை வரவேண்டும்…” என்பதற்காக இதை உணர்த்துகின்றோம். ஏனென்றால் நாம் அல்ல.

நமக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ரசனைக்கு எடுக்கப்படும்போது… அது ஏங்கி அதை உணர்ந்து எடுக்கும்.

ஆனால் கொஞ்சம் ஈர்க்கும் தன்மை குறைந்துவிட்டது என்றால் நேற்று சாப்பிட்டது ருசி இல்லை… இன்றைக்குப் புதுப் புது ருசியாகத்தான் சாப்பிட வேண்டும் என்று அது இயக்கும். அதாவது புதிதாக இருந்தால் ருசியாக இருக்கும்…. அந்த உணர்வுகள் அதைத் தேடும்…!

1.ஏனென்றால் நமக்குள் எடுக்கக்கூடிய பல கோடி உணர்வுகள் ஒவ்வொன்றும் இப்படித் தூண்டச் செய்யும்.
2.அப்பொழுது நாம் எடுத்துக்கொண்ட உணர்விற்குத் தக்கவாறு தான் இது பெருகும்.

இதைப் போலத்தான் உங்கள் உடலிற்குள் எடுத்துக் கொண்ட உணர்விற்கு அந்த ஞானியர் உணர்வைப் புதிது புதிதாகச் சேர்க்கச் செய்து கொண்டே இருக்கின்றோம்.

ஒவ்வொரு காலத்திலும் உங்கள் உணர்வுகள் ஒவ்வொரு விதமாக அது உங்களுக்குள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.
1.வீட்டில் சங்கடமாக இருப்பீர்கள் அந்த நேரத்தில் இங்கே இதைக் கேட்க வந்திருப்பீர்கள்.
2.நண்பனிடத்தில் பாசமாக… உயர்ந்த குணங்கள் கொண்டு இருப்பீர்கள் அதிலே கொஞ்சம் நஞ்சு கலந்திருக்கும். நஞ்சு கலந்தபின் சுவை கெட்டுப்போகி இருக்கும். அந்தச் சமயத்தில் இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மையைப் புகட்டியவுடனே அந்த ருசியின் தன்மையை மாற்றி உங்களுக்குள் சுவை கொண்டதாக மாற்றும்.

1.ஏனென்றால் சுவையற்றதாக ஆக்கும் அந்த உணர்வினை வென்றவன் ஞானி
2.அவனின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும்போது இணைக்கப்பட்டு
3.தீமையான உணர்வின் தன்மையை உங்களுக்குள் குறைக்கச் செய்யும்.

அதைக் குறைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் உபதேசிப்பதும் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதியச் செய்வதும்.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர்… எனக்கு முதுகு வலி… இடுப்பு வலி… என்னால் உட்கார முடியவில்லை…! என்ற நிலைகள் இருந்தாலும் இதைக் கேட்ட பின் அது குறைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் கை கால் குடைச்சல் எல்லாம் குறைந்திருக்கும். கலக்கமாக இருப்பவருக்கும் ஓரளவுக்கு மன பலம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் பெற வேண்டுமென்பதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். ஒரு நிமிடத்தில் சொன்னால் “சாமி நன்றாகச் சொல்கின்றார்…!” என்கிறார்கள்.

ஆனால் மணிக்கணக்கில் சொன்னாலும் கூட…
1.என்னுடைய கஷ்டங்களெல்லாம் இவ்வாறு இருக்கின்றது அது எல்லாம் நிவர்த்தியாக வேண்டும்
2.மகரிஷிகளின் அருளால் எனக்குள் தெளிவாக வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்க மாட்டேன் என்கின்றீர்கள்.

என்ன செய்கின்றார்கள்…?

ஐயோ… நான் மூன்று வருடங்களாக நோயால் கஷ்டப்பட்டேன். அந்த டாக்டரிடம் சென்றேன்… இந்த டாக்டரிடம் சென்றேன்… எல்லாம் போகின்றேன்
1.என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கின்றது.
2.அதனால் தான் இங்கே வந்தேன் என்கிறார்கள்.

ஆக எதைக் கேட்கின்றார்கள்…? தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று கேட்பதற்காகத்தான் இங்கே வருகின்றார்கள்.

எல்லா இடத்திற்கும் போனேன்… நடக்கவில்லை. ஆனால் அதெல்லாம் நீங்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை.

எனக்கு ஒரே தலைவலி… எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து சிக்கல்… அதனால் ரொம்ப அவஸ்தைப்படுகின்றேன் என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கின்றான். கொடுத்த கடனைத் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கின்றார்கள். போனால் சண்டைக்கு வந்துவிடுகின்றார்கள். இப்படித்தான் கேட்கிறார்கள்.

கடன் கொடுத்திருந்தால் அவர்களுக்கு நல்ல வருமானம் வரவேண்டும் என்னிடம் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கேளுங்கள்… கேளுங்கள்…! என்று சொல்கின்றேன்.

எத்தனை முறை சொன்னாலும் அடுத்தாற்படி கேட்டுப் பாருங்கள் மீண்டும் கஷ்டத்தைத் தான் வந்து கேட்பார்கள்.

காரணம் நாம் அல்ல…! நமக்குள் விளைய வைத்த உணர்வுகள் அந்த நினைவலைகளை நமக்குள் ஈர்க்கின்றது. அதை மாற்ற முடியவில்லை.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்காகப் பேசி
1.உங்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரவேண்டும்
2.அந்த மகிழ்ச்சியான நல்ல மூச்சலைகள் இங்கே படர வேண்டும்
3.அதன் மூலம் எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும்…! என்று சொல்கிறேன்.

5G tech

தொலைத் தொடர்பு அலை வரிசைகளினால் ஏற்படும் தீமைகள்

அமெரிக்கா விஞ்ஞானத்தில் மிகவும் உயர்ந்தவன் ஆகிவிட்டான். மற்ற நாட்டின் விஞ்ஞான அறிவுகளைத் தடைப்படுத்தும் வல்லவனாக ஆகிவிட்டான்.

சேடிலைட் டி.வி. என்று அந்த அலைகளை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டுள்ளோம். இருந்தாலும்… “அதில் வரும் கேடான அலைகளை” யாரும் அறியவில்லை.

சில டி.வி.க்களில் அவன் விஷம் கலந்த உணர்வினை ஒளிபரப்பு செய்கின்றான். அது நமக்குள் பதிவாகின்றது.

அந்த ஒளி அலைகளின் நிலைகளை எல்லாம் சேமிக்கும் கிடங்காக… எதிர் நிலையான ஒளி அலைகளைக் கவர்ந்து நிலை கொள்ளும் நிலைகளுக்கு… அந்த விஞ்ஞான அறிவைப் பரப்பி விட்டான்.

ஏனென்றால் படிப்பறிவில்லாதவன் நான் சொல்கின்றேன். நாளைக்கு உங்களுக்கு பத்திரிக்கை வாயிலாக வந்தால்தான் எல்லாமே தெரியும்.

ஐயோ… இதை அன்றைக்குச் சாமி சொன்னாரே…! என்று சொல்வீர்கள்.

விண்ணிலே ஒரு பெரிய கோளின் சிதையுண்ட பாகம் நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னேன். அந்தப் பாகம் நம் பூமியில் விழாது… வியாழன் கோளில் தான் விழுகும்…! என்றும் சொல்லியிருந்தேன் (சுமார் 30 வருடம் முன்).

ஆனால் விஞ்ஞானிகள் இங்கே விழுகுமோ… என்றும் பின் தப்பி விட்டது…! என்றும் அவர்கள் கருவிகள் மூலம் கண்டுணர்ந்து சொன்னார்கள். பின் அந்த விஞ்ஞானி “அவன் தான் கண்டுபிடித்துச் சொன்னான்…” என்று அவன் பெயரையும் அதற்கு வைத்துக் கொண்டார்கள்.

அதே போல் தான் இதையும் யாம் சொல்கிறோம். விஞ்ஞான அறிவால் டி.வி. ரேடியோவை ரசித்துக் கேட்கின்றோம்… உற்றுப் பார்த்துப் பதிவு செய்திருக்கின்றோம்.

அதன் மூலமாக… ஒரு நஞ்சு கலந்த உணர்வின் தன்மையை அவன் இயக்குவான் என்றால் அதை நமக்குள் பாய்ச்சியபின் காக்கா வலிப்பு போல் சுண்டும்.

இராணுவத்தில் இருக்கின்றான் என்றால் ரேடியோ அலைவரிசையில் அவனுடைய கூர்மையாக நிலைகளில் எதிரியைக் காண விரும்புகிறான் என்றால் அவனுக்குள் ஊடுருவி அவனுக்கு காக்கா வலிப்பாக வரவைக்கும்.

அவனுக்கு மட்டுமல்ல…! டி.வி.யை கேட்டவர்கள் அனைவருக்கும் அந்த அலைகளாக வந்தவுடன் உடலில் பதிவு செய்தது சுண்டிவிடும். பெரும் பகுதி இந்த மாதிரி வலிப்புகள் நிறைய வருகின்றது.

மனிதரைச் செயலிழக்கச் செய்யும் நிலைகளுக்கு அவன் பல முறைகளைக் கையாண்டுள்ளான். அதாவது
1.சக்தி கூடியதும் சக்தி குறைந்ததும்
2.விசை கூட்டியும் குறைத்தும் வைத்திருக்கும் இந்த நிலைகள்
3.எந்த நிமிடம் எதைச் செய்வார்கள்…? என்று சொல்ல முடியாது.

ஒரு நாடு தனக்கு அடங்கி வரவில்லை என்றால் இத்தகைய ஆயுதத்தை எடுத்துப் பயன்படுத்தித் “தனக்கு எவனும் எதிரி இல்லை…” என்ற நிலைக்கு அமெரிக்கா செய்வான்.

இத்தகைய நிலைகளை அவன் செய்வான் என்றால் தத்துவ ஞானியர்கள் (மகரிஷிகள்) அவ்வளவு எளிமையானவர்கள் அல்ல. அவன் கண்டுபிடித்த அணு குண்டைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்…!

இந்திய நாட்டைச் சீர்குலைக்கும் நிலைகளுக்கு எதைச் செய்தாலும் நிச்சயம் அதைப் படுவார்கள். ஏனென்றால்
1.அந்த விஷமான அலை வரிசைகளைக் கொண்டு மனிதனை செயலிழக்கும் நிலையாக
2.ஒவ்வொரு நாட்டையும் அடிமைப்படுத்த விஞ்ஞான அறிவால் வரப்படும்போது
3.அவனும் அழிகின்றான்… மற்றவர்களையும் அழிக்கின்றான்.
4.நாட்டு மக்களுக்கும் தீங்கைச் செய்கின்றான்

இதைப் போன்ற விஞ்ஞானத்தால் உருவாகும் தீமைகளில் இருந்து நீங்கள் மீண்டிட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

தீமைகள் உட்புகாமால் புருவ மத்தியில் தடுத்துப் பழகுங்கள் 

நமக்கு துருவப் பகுதி – புருவ மத்தியில் உள்ள உயிர் 

முதுமக்கள் தாழி, புருவ மத்தி வைரம்  

Holy Groupமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோர் “சொற்பமாக இருக்கின்றீர்கள்…” என்று எண்ண வேண்டாம்…!

மனிதருக்குள் ஒருவருக்கு ஒருவர் பகைமையான உணர்வுகள் அலைகளாகப் படர்ந்திருப்பதை நிறுத்த… அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து.. அந்தப் பகைமையை நீக்க அகஸ்தியனால் கொடுக்கப்பட்டதே விநாயகர் சதுர்த்தி.

1.எனக்குள் வந்த பகைமையை நான் நீக்குவதும்
2.யாரை நான் பகைமையான எண்ணினேனோ அவரும் இதே போல் பகைமை உணர்வை மறுப்பதும் தான் விநாயகர் சதூர்த்தி.

இப்படி ஏகோபித்த நிலைகள் கொண்டு மக்கள் அனைவரும் இந்த உலகம் முழுவதும் பகைமைகளை அகற்றிடும் சக்தியை எடுத்துத் தொழுவார்கள் என்றால் பகைமை உணர்வு இங்கே முழுமையாக அழிக்கப்படுகின்றது.

பமையான உணர்வுகளை இங்கே ஈர்க்கும் சக்தி இழக்கப்படும் பொழுது அதன் இருப்பிடத்தை மாற்றி நகன்று சென்று கடலின் ஈர்ப்பிற்குள் சிக்கி அது மறைத்து விடும்.

அந்த அகஸ்தியன் காட்டிய இந்த நிலைகளைத் தான் தத்துவ ஞானியர் விநாயகர் சதூர்த்தி என்று காட்டினார்கள்.

அன்றைய நாள் ஏகோபித்த நிலைகள் கொண்டு அனைவருடைய எண்ணங்களும் பகைமை அகற்றிடும் நிலையாக தீமைகள் தமக்குள் புகாது தடுத்து நிறுத்தும் மார்க்கம் தான் விநாயகர் சதூர்த்தி.

இதைப் பின்பற்றுவோர் நீங்கள் “சொற்பமாக இருக்கின்றீர்கள்…” என்று எண்ண வேண்டாம்.
1.நீங்கள் எடுத்து வெளிவிடும் அந்த அருள் ஞானிகளின் மூச்சலையால்
2.விஞ்ஞான அறிவைப் பொசுக்கிடும் திறமை பெறுகின்றீர்கள்.

நான் (ஞானகுரு) சொல்வது எளிமையான நிலைகளில் இருக்கின்றது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் யாம் பதிவாக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து அந்த வலிமையான எண்ணங்கள் கொண்டு அதைச் செயல்படுத்த முடியும்.

மகரிஷிகள் தோன்றிய நம் நாட்டிலே..
1.தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்பது போல
2.அந்த அகஸ்தியன் உணர்வலைகளை நமக்குள் பெருக்கி
3.அவன் உணர்வின் துணை கொண்டு நம் நாட்டைக் காக்கலாம்
4.உலக மக்களைக் காக்கும் சக்தியும் நமக்கு உண்டு.

அத்தகைய ஆற்றலை நாம் பெற வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர் குலதெய்வங்களின் உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.

அங்கே இணைத்து உடல் பெறும் உணர்வினைக் கருக்கி விட்டால் அதே உணர்வின் தன்மை நமக்குள் வரும் போது நஞ்சின் தன்மை கருக்கிடும் வல்லமையை நாமும் பெற முடியும்.

அதன் மூலம் நாம் எடுத்துக் கொண்ட மூச்சின் அலைகள் உலகம் எங்கும் பரவச் செய்யும் நிலைகள் வரும். இந்த உலகின் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது செயல்படும்.

மெய் ஞானியான… அன்று பித்தனைப் போல் இருந்த மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய “அந்த உணர்வின் சக்தியை” எல்லோரும் பெற முடியும்.

ஒரு திட்டுவோரின் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொண்டால் அவரின் நினைவு வந்து நம்மை அடக்குவது போல அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை… தீமைகளை அகற்றிய அந்த உணர்வின் தன்மையை நீங்கள் நினைவு கொள்ளும்போது… தீமையை அகற்றும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.

ஆகவே மறவாதீர்கள்… ஏதோ பேசுகின்றேன்…! என்ற நிலைகள் வேண்டாம். உங்களுடன் ஒன்றிப் பேசும் போது தான் அந்த ஞானிகளின் உணர்வின் நிலைகள் உங்களுக்குள் ஒன்றி வரும்.

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மன பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மத பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொருவரும் பரவச் செய்யுங்கள். உலக மக்களை ஒன்று சேர்க்கும் நிலையாக அது உங்களால் முடியும்.

அதே போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர வேண்டும் நல்ல மழை நீர் பொழிய வேண்டும் என்று அந்த அருள் சக்திகளை மேகங்களில் கலக்கச் செய்தால் அந்த உணர்வின் தன்மை மழையாகப் பெய்யும்போது தாவர இனங்களில் இனம் புரியாத விஞ்ஞான அறிவால் தூவப்பட்ட நஞ்சின் தன்மைகளும் மறையும்.

இதற்கு முன் நம்மில் விளைய வைத்த நஞ்சின் தன்மையை ஒடுக்கவும் இது உதவும். நமது குருநாதர் காட்டிய அருள் வழி இது தான்…!

Sages powers

வசியம்.. கைவல்யம்… ஏவல்…!

குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.அந்த மகரிஷிகளின் உணர்வின் உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்கின்றோம்
2.அந்த உணர்வின் ஏக்கத்தைப் பெருகச் செய்கின்றோம்
3.மகரிஷிகளின் பால் உங்கள் நினைவாற்றலைப் பெருகச் செய்கின்றோம்
4.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் ஆழப் பதிவு செய்கின்றோம்

ஆலயங்களில் இந்தத் தெய்வம் உங்களுக்கு நல்லதைச் செய்யும் என்ற நிலையில் அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் யாக வேள்விகளைச் செய்யச் செய்து உங்களை வசியப்படுத்துகின்றனர்.

கோவில்களிலே வசியப்படுத்துவது போன்று… குருநாதர் என்னை வசியப்படுத்தியது போன்று…
1.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நீங்கள் பெற வேண்டுமென்று
.உங்கள் உணர்வை அதிலே வசியப்படுத்தச் செய்கின்றேன்.

இந்த வசியத்தைக் கண்டுணர்ந்தபின்… உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் “கைவல்யப்படுத்த முடியும்…”

இதனின் துணை கொண்டு எண்ணத்தால் மகரிஷிகளின் உணர்வைப் பிறர்பால் பாய்ச்சி அவர்களுடைய தீமைகள் வராமல் தடுத்தால் அது “ஏவல்…”
1.அந்தத் தீமைகள் அகல வேண்டும் என்ற நினைவால்
2.உங்கள் உணர்வின் தன்மை அங்கே தீமைகளை அகற்ற முடியும்…
3.உங்களை நீங்கள் நம்புங்கள்.

ஆகவே… அருள் ஞானிகள் காட்டிய பாதையில் நாம் செல்வோம். அருள் ஞானிகள் காட்டிய உணர்வில் அந்த முழுமை அடைவோம்.

உயிரால்… உணர்வால் நாம் அறிந்திடும் நிலையும்… இருளைப் போக்கிடும் உணர்வின் ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம். இருளைப் போக்கி ஒளி காணும் தன்மையாக உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்.

நாம் நுகரும் உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு “உணர்வை இன்னது தான்…” என்று அறியும் ஆற்றலைக் கொடுத்த அந்த நிலையில் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு… இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக நாம் பெற முடியும்.

நம்மை ஆண்டு கொண்டிருப்பது நம் உயிர் தான். நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றோமோ அதை வைத்துத் தான் உயிர் நம்மை ஆட்சிப் புரிகின்றது.

ஆகவே நமது குருநாதர் காட்டிய நிலைகள் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து… நீங்கள் வசியமாக்கிக் கொண்டு இந்த உணர்வின் தன்மை நீங்கள் அதை கவர்ந்துணர்ந்தால் அதை வைத்து மீண்டும் அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் கைவல்யப்படுத்த முடியும்.

உங்கள் மூச்சால் பேச்சால் உங்களுக்குள் வரும் தீமைகளை ஏவல் செய்து மீட்டிட முடியும். பிறருக்குள் உங்கள் சொல்லை அங்கே ஏவல்படுத்தித் தீமைகளை ஒழித்திட முடியும்.

நமக்குள் விளைந்த இந்த உணர்வின் தன்மைகளைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால் விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளையும் மந்திரத்தால் உருவான தீமைகளையும் அகற்றச் செய்ய முடியும்.

அந்த மெய் ஞான உணர்வு கொண்டு நாம் அனைவரும் கூட்டமைப்பாக இந்த ஒளி அலைகளைப் பரப்பப்படும்போது தீமைகளை விளைவிக்கும் நிலைகளைப் பிளக்கவும் முடியும்.

அந்த ஆற்றல் பெற வேண்டும் என்றால் உங்கள் மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும். விண் செலுத்தி விட்டால்…
1.விண் சென்ற அவர்கள் உணர்வை எளிதில் பெற்று
2.அவர்களின் துணை கொண்டு அந்த அருள் ஞானியின் உணர்வை எளிதில் பெற முடியும்.
3.நம்மை அறியாது வந்த தீமைகளைச் சுட்டு பொசுக்க முடியும்.

உண்மையான தியானம் இது தான்…!

ஆகையினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை கவரும் நிலைக்கே உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதை வசியப்படுத்தச் செய்கின்றோம்.

அதாவது இந்த உபதேசத்தை உற்றுக் கேட்ட உணர்வுகள் அந்த ஞானிகள் உணர்வின் தன்மை பதிவான பின்பு வசியம்…!

இந்த உணர்வின் தன்மை கூடும் போது அந்த ஞானிகள் உணர்வைக் கைவல்யப்படுத்த முடியும். அதே சமயத்தில் நாம் எல்லோரும் ஒன்றாக அதைச் சேர்க்கும்போது அது கைவல்யம். ஒவ்வொருவரும் தனக்குள் அந்த சக்தியைச் சேர்த்திட முடியும்.

பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு
1.யாரைப் பார்த்தாலும் “தீமைகள் அகன்றுவிடும்” என்று
2.உங்கள் சொல்லால் இந்த உணர்வின் தன்மை ஏவல் படுத்தும்போது
3.அங்கே இருக்கக்கூடிய தீமைகள் ஒடுங்கும்.

ஒரு தேரை பல ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்து அதை எல்லை சேர்ப்பது போல நாம் அனைவரும் சேர்ந்து அந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து இயக்கினோம் என்றால்
1.நமக்கு முன் படர்ந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை
2.அவரவர்கள் எண்ணி ஏங்கி எடுக்கும் அந்தப் பங்கின் விகிதாச்சாரப்படி உங்கள் ஆன்மாவில் கலக்கும்.
3.இப்படி இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வரும்போது தான் கைவல்யம் ஆகும்.

முதலில் வசியப்படுத்தும் நிலைக்கு உங்களைத் தயார் செய்தது இந்த உபதேசம். பின் அதனின் உணர்வின் தன்மை ஏங்கப்படும்போது கைவல்யம். உங்களுக்குள் அந்தச் சக்தியின் தன்மை பெருகும்.

பின் தீமைகளை அகற்றும் உணர்வின் தன்மையாக கொண்டு நினைவால்… சொல்லால்… ஏவல் செய்ய முடியும் தீமைகளை அகற்ற முடியும். உங்களை நம்புங்கள்…!

புருவ மத்தி தான் சொர்க்கவாசல், பரமபத விளையாட்டு 

ஆலயத்தின் பண்புகள் – மூக்கு வழி சுவாசிப்பதைக் காட்டிலும் நெற்றியின் வழி சுவாசித்தல், சொர்க்கவாசல் 

புறக்கண், அகக்கண் – புருவ மத்தி வழி சொர்க்கவாசல் – மேல் நோக்கி எண்ணுதல் 

saiva sidhdhandam

தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஜீவன் பெற்ற அனைத்து ஜீவன்களுக்குமே ஞானம் உண்டு. ஞானத்தை எதில் செலுத்துகின்றோமோ அச்செயல்தான் நடக்கின்றது.

1.ஞானத்தை மெய்யாக ஆக்கும் உயர் ஞானத்தை உணரும் சித்தத்தால்
2.உண்மையை வளர்க்கும் சைவ சித்தமாக்க வேண்டும்.

உணர்வில் வளர்க்கப்படும் எண்ணங்கள் “பிறிதொன்றை வளர்க்கவல்ல…” உயர் குணமுடன் தெய்வ குணங்களைப் பெறுவது சைவத்தின் சித்தம்.

ஆனால் அசுர குணங்களை அரக்க குணமாக எண்ணக்கூடிய உணர்வு அசைவமாகின்றது. அதனுடைய தொடர் அலையில் வளர்ப்பின் நிலை யாவையுமே வளர்வற்ற சிதறும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இன்று இப்பூமியில் காற்றலையில் கலந்துள்ள அமிலத் தன்மை திடமாகி அத்திடத்தை நாம் நுகரும் பொழுது அதனுடைய வாசனை அதிகமாக வீசுகின்றது.
1.அதனையே சமைக்கும் பொழுது
2.திடத்தைக் காட்டிலும் வேகமாக அதனை நுகர முடிகின்றது.

சமைப்பின் பொருள் அனைத்தும் காற்றலையில் இருந்துதான் திடப்பட்டு செயலுக்கு வருகின்றது.

செயல்படும் பொருளைப் பார்க்கும் பொழுது (கண்களால்) அது “உறுதிப்படுத்தப்பட்ட உண்மை…” என்று அறிகின்றோம். உண்மை எதிலிருந்து வருகின்றது…?

இக்காற்றலையில் எவை எவையெல்லாம் கலக்கப் பெற்றுள்ளனவோ அவை தான் திடமாகிகச் செயலாகின்றது. அதைப் போன்று…
1.வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள திடப் பொருளை நம்பி
2.அதைத்தான் உண்மை…! என்று நாம் உணர்ந்து
3.இந்த உடலுக்கு மட்டும் வாழுகின்றோம்.

உணர்வலையாக எண்ணுவதை… காற்றலையில் கலந்துள்ள உயர்ந்த நிலையை… தனக்கொத்த உணர்வலையின் எண்ணமுடன் “வலுப்படுத்தக் கூடிய வளர்ச்சிக்குத் தன் சித்தத்தைச் சைவமாக்க வேண்டும்…”

திடத்தின் உடல் வாழ்க்கையில் வாழக் கூடிய வழித் தொடர் யாவையும் அசைவம் தான்.

சித்தத்தால் எடுக்கும் மெய் ஞானத்தைத் தன் ஞானமாக்கும் உயர் ஞானி… தன் ஆத்மாவை அழிவில்லா ஒளித் தன்மையாக… என்றுமே அழியா நிலை கொண்டு ஏகாந்தத் தன்மை பெறுகின்றான்.

1.ஏகாந்த நிலைக்கும்…
2.இவ்வுடலின் உணர்வின் எண்ணத்தைச் சைவமாக்கும் தெய்வ குணத்திற்கும்… தொடர்புண்டு.

ஏனென்றால் இஜ்ஜீவ வாழ்க்கையில் சரீர உணர்வின் எண்ணம்.. சங்கடத்துடன்… சலிப்புடன்… மோதப்படும் உணர்வால் மனிதன் தன்னையே அசைவமாக்கிக் கொள்கின்றான்.

தெய்வ குணத்தைத் தன்னுள் வளர்த்து… மெய் உணரும் வழியை அறிய… தெய்வ குணங்களைப் பெற ஒவ்வொருவரும் அதை உரமாகத் தான் எடுத்து வளர்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ குணங்களை வளர்க்கும் சைவத்தின் சித்தாகத் தன் உணர்வின் செயல் அமையும் பொழுது தன் வலுவின் வளர்ச்சியால் மெய் ஞானி சித்தனாகின்றான்.

சித்து நிலையின் அஷ்டமா சித்தினால் அகிலத்தையும் அறியக்கூடிய வளர்ச்சி நிலையின் வளர்ப்பால் ரிஷியாக முடியும்.

இரு மனத்தின் திருமணமே
இல்லறத்தின் நறு மணமே
இறையுணர்வின் வழியறிந்தே
இவ்வுலகின் காவியத்தில்
இருளகற்றும் ஒளிச்சுடராய்
இனியதொரு வாழ்வமைப்போம்

இடும்பனான குணமகற்றி
இறையருளின் நற்குணத்தில்
ஈன்றெடுக்கும் கனியமுதே
ஈசனருள் பொக்கிஷமே…!

இல்லத்தில் இனிய வித்திட்டு
இனிய குண வளர்ப்பாக
இல்லறத்தில் நீர் ஊற்றி
இன்பத்தின் இனிமை பெற்றிடவே

ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாய்
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்

lord siva shrine

சிந்தனைச் சிலையைச் சீர்படுத்த வேண்டிய அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் முன்னோர்கள் ஒலியின் நாதம் கொண்டு ஒளித் தன்மை வளரும் உண்மையைத் தன் சித்தத்தில் அறிந்து கொண்டனர்.

சூரியனும் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களுக்கும்… பூமியின் தொடர்பு பெற்ற இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும்… சனிக் கோளில் உருவாகிக் கரையும் பன்னிரண்டு கோள்களுக்கும் தொடர்பு கொண்டு… பன்னிரண்டு மாதங்களின் நாமகரணத்தை ஒலியின் ஒளியால் சூட்டினார்கள்.

இயற்கையின் தொடர்களை…
1.கோள்களின் ஈர்ப்பில் விகித கணிதத்தை வான சாஸ்திரத்தில் அறிந்த தொடரில்
2.ஒவ்வொரு ஜீவ உயிரின் வீரியமுமே… மூன்று நட்சத்திர ஒலி ஒளி பெற்ற பின் தான்
3.ஜீவ உயிரணு உயிர் பெறுகின்றது.

மனித நிலை பெற்ற பின் அடுத்த நிலை பெற மனித உணர்வின் எண்ண அலையின் ஜீவகாந்த ஈர்ப்பு வலுப் பெறுவதினால்… வலுவின் தொடர் இப்பூமி இழுக்கும் ஒலி அலைகளைக் காட்டிலும் மனித ஜீவ உணர்வின் வீரியம் பெற்று விடுகின்றது.

பூமியின் தொடரிலேயே… நடைமுறை வழக்கத்திற்கொப்ப மனிதன் வாழ்ந்தான் என்றால்
1.இப்பூமி எதன் தொடரில் சக்தி பெற்று… சமைத்து பூமியின் வளர்ப்பின் வளர்ச்சி சுழற்சி வளர்கின்றதோ
2.அதன் அதன் ஈர்ப்பு பிடிப்பில் தான் இப்பூமியில் பிறந்த நாம்
3.இப்பூமியின் ஈர்ப்பு சுழற்சியுடன் சுழன்று கொண்டிருக்க முடியும்.

ஜீவகாந்த பகுத்தறியும் எண்ண உணர்வைக் கோள்களின் தொடர்புடன் மனிதன் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மனிதனின் உண்மை நிலையை சிவரூபத்தில் உணர்த்தினார்கள் நம் முன்னோர்களாகிய அன்றைய ரிஷிகள்.

சிக்கலைத் தீர்க்க சிலை வைத்தான்
சிந்தனைச் சிலையை (மனித உடல்) உணர்ந்தானா…?

சிறுமையின் உருவாய் சிலையென்று
சந்தியில் நிற்கும் நிலையென்ன…?

சஞ்சலத்தில் சச்சரவை
சங்கடத்தில் சிக்கலின்றி
சிந்தனையில் சீர்தூக்கி
சிந்தைதனில் சீர்படுத்து…!
(சிவன் படமும் விளக்கமும்)

இதன் தொடரை மனிதன் பெற்றால் மனித நிலை தெய்வ நிலை பெறக்கூடிய தொடர்பிற்கு வளர முடியும். ஒளி கொண்டு ஒளி பெறும் ஆத்ம பலத்தின் தொடர்பைப் பெறலாம். ஆகவே இயற்கையின் தொடர்புடன் உயரும் நிலை தான் தெய்வ நிலை.

இப்புவியின் ஈர்ப்பில் வளரும் கனிவளங்களும் மற்றத் தாவரங்களும் சத்தெடுத்து அதனதன் மாற்றுத் தன்மை சிலவற்றில் வீரியமாக இருப்பது போன்று
1.இயற்கையின் ஒலித்தன்மையில் மனித ஜீவாத்மாவில் சிலருக்கு
2.சரீர உணர்வின் ஜீவ நிலையே ஒளித் தன்மை கூடியிருக்கும்.

அத்தொடரில் இயற்கையை ஒன்றி… கோள்களின் தொடர்புடன் எண்ணத்தில் ஒளிரும் ஆத்மா… நட்சத்திர நிலை போன்று என்றுமே மாறாத நிலையில்… இப்பால்வெளி மண்டலத்திலுள்ள எண்ணிலடங்கா அமிலத்தின் சமைப்பை எடுக்கவல்ல “ஜோதி நிலை பெற்று… வளர்ச்சியின் வளரும் நிலை பெறலாம்…”

ஆனால்… மனித நிலையிலேயே பிற ஆத்மாவின் ஈர்ப்பின் ஒலி அலைகள் சாடும் நிலைக்குத் தன் ஆத்மாவை அடகு வைக்கும் நிலை தான் “மந்திர தந்திர மாய நிலை…!”

ஒவ்வொரு நாளும் நமக்குள் நல்ல உணர்வுகளின் வளர்ச்சி கூடுகிறதா என்று பார்க்கின்றோமா…?

வெறுமனே தியானம் எடுத்துப் பலன் இல்லை…! தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட சக்தியைப் பயன்படுத்தும் முறை மிகவும் முக்கியமானது

சாமியை (ஞானகுரு) எண்ணுகிறீர்கள் ஆனால் சாமி சொல்வதைக் கடைப்பிடிப்பதை விட்டுவிடுகின்றீர்கள் 

light meditators

மெய் ஞானிகளின் பேராற்றல்களைப் பெறக் கூடிய வாய்ப்புகளைக் கொடுத்தாலும் அதை வளர்ப்போர் குறைவாகவே உள்ளனர்

 

ஒரு மனிதனுக்குள் உருவாகும் உறுப்பின் தன்மையை நேரடியாக நீ பார்…! என்றார் குருநாதர்.

ஒரு சமயம் திருச்சியில் ஒரு பையன் கையில் போட்டிருந்த மோததிரத்தை விழுங்கி விட்டான். டாக்டரிடம் சென்று மோதிரத்தை வெளியில் எடுக்க முயற்சித்திருக்கின்றார்கள். ஒன்றும் வெளியில் வரவில்லை.

பேதிக்கு மருந்து கொடுத்தார்கள் அது ஒன்றும் ஆகவில்லை. குடலில் சிக்கிவிட்டது.. அதனால் குடலை ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆனால் ஆபரேஷன் செய்தால் அவன் செத்து விடுவான்… என்ன செய்வது…? என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தப் பையனுக்கு ஏழு வயது. அப்புறம் நான் அங்கே செல்லும்போது அந்தப் பையனின் தாயாரைக் கூப்பிட்டு வந்து பையன் உடலில் உள்ள மோதிரத்தைப் பாரம்மா…! என்று சொன்னேன்.

ஆமாங்க… இந்த இடத்தில் இருக்கின்றது என்று அந்த அம்மாள் சொல்கிறது.

இரண்டு மூன்று வாழைப்பழத்தைச் சாப்பிடச் சொல்லி சில இதுகளைச் செய்யும் போது அந்த மோதிரம் கீழே இறங்கி வருகின்றது. அவர்கள் கண்ணில் பார்க்கின்றார்கள். வயிறு வலிக்கின்றது… இந்த இடத்தில் வலிக்கின்றது என்று சொல்கிறான். அப்புறம் இது வெளியில் வருகின்றது.

இது எல்லாம் யாம் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யும் போது பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

ஏனென்றால் குருநாதர் ஒவ்வொரு உறுப்புகளையும் பார்க்கச் சொன்னார். சூட்சும நிலைகள் இயக்குவதின் நிலைகள் எவ்வாறு என்று அறியச் சொன்னார். அதைத் தெளிவாக அறிய முடிந்தது.

முன்பு எம்மிடம் பழகியவர்கள்… உதாரணமாக கந்தசாமி அவர்களை எடுத்துக் கொண்டால் முருகன் வருகிறார்… அவர் வருகிறார்.. இவர் வருகிறார்… என்று எத்தனையோ நிலைகளை அவர்களுக்குக் காண்பித்தேன்.

ஏனென்றால் ஒரு மனித உடலில் எடுத்துக் கொண்ட பக்தியின் உணர்வின் அலைகள் அது எவ்வாறு வருகின்றது…? என்று தெளிவுப்படுத்தி உள்ளேன்.

இயற்கையின் நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சாட்சியாக எடுத்து ஒவ்வொருவருக்கும் யாம் எடுத்துக் காட்டினாலும் அவரவர்கள் பெரிய சித்தராக ஆகி விடுகின்றனர்.

சாமிக்குத் (ஞானகுரு) தெரியாது…! நம்மிடம் கேட்டுத் தான் தெரிந்து கொள்கின்றார் என்று இப்படிப் பிரித்து சென்றவர் பல பேர்.

ஒரு நூற்றியெட்டுப் பேரை யாம் வடிவமைத்து ஒரு உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குவது…? என்ற அந்த உண்மைகளை எல்லாம் அறியச் செய்ய யாம் பல நிலைகளைச் செய்தாலும் அதைப் பெற முடியாத நிலைகளில் அவர்கள் இடைவெளிகளிலேயே பிரித்துக் கொண்டனர்.

சத்திய சாய்பாபா தன் வாயிலிருந்து லிங்கத்தை எப்படிக் கக்குகின்றார்…? என்று அதே மாதிரி ஒரு பையனுக்கு எடுத்துக் காட்டச் சொல்லிச் செய்யச் சொன்னேன்.

பல முறைகளை பலருக்கும் பலவிதமான நிலைகளைக் காட்டிச் செய்யச் சொன்னேன்.

அம்பாசமுத்திரத்தில் ஒரு பையனுக்கு அகஸ்தியருடைய உணர்வின் தன்மையை ஏற்றிக் கொடுத்த பின் அவன் தியானத்தில் இருக்கும்போது பச்சிலைகள் வரும்.

அங்கே ஒரு டாக்டருடைய அப்பாவிற்குக் கடுமையான தலை வலி. வலி குறைய 12 ரூபாய் மாத்திரை மூன்று வேலைக்குச் சாப்பிட வேண்டும். ஆனால் முழுவதும் தலை வலி நிற்கவில்லை.

ஆனால் அந்த டாக்டர் இந்தத் தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த மாதிரி இருக்கப்படும்போது அவர் தந்தை என்னுடைய தலை வலியைப் போக்க முடியவில்லை… என்னடா தியானம்…? என்று சொல்லிச் சத்தம் போட்டு அவர்களுக்குள் பெரிய கலாட்டா வந்துவிட்டது.

அந்தச் சமயத்தில் தான் முதலில் சொன்ன அம்பாசமுத்திரத்தில் இருந்த அந்தப் பையன் தியானத்தின் மூலம் எண்ணி எடுக்கும் போது ஒரு பச்சிலை வேர் வந்தது.

அந்த வேரை குருநாதர் டாக்டருடைய தந்தையின் தலை மாட்டில் வைக்கச் சொன்னார் என்று அங்கே போய் வைத்தான். அதை வைத்தவுடனே தலை வலியே போய்விட்டது.

அந்த விஷத் தன்மைகளை எல்லாம் எடுத்துவிட்டது. 12 ரூபாய் மாத்திரைக்கு வேலை இல்லாது போய்விட்டது.

1.அகஸ்தியன அன்று கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகள்
2.அவர் அலைகள் இங்கே புகுத்தப்பட்டு
3.அதே உணர்வின் தன்மை எடுக்கப்பட்டு
4.21 பச்சிலைகள் (முக்கியமானது) அதை உறையும் தன்மையாக அந்த வேராகக் கொண்டு வரும்படி செய்தேன்.

கடைசியில் என்ன ஆகிவிட்டது…? அந்தப் பையன் வரவே இல்லை. வேறு வேறு விதத்தில் தவறான நிலைகளுக்கு அவன் நடக்க ஆரம்பித்தான்.

ஞானத்தின் வழியில் வளர்ச்சி ஆவதற்குத் தயார் செய்தேன். ஆனால் அவன் வேறு நிலைகளுக்குப் போய்விட்டான். நான் கூப்பிட்டவுடன் கிராக்கி செய்கிறான்.

அந்தப் பையனின் அப்பா பையனிடம்… சாமி உனக்கு எவ்வளவோ சக்தி எல்லாம் கொடுத்தார். ஏன் இப்படி இருக்கின்றாய்…? என்கிறார்.

“இது உனக்கெல்லாம் தெரியாது…” என்று அவன் கூறிவிட்டான். இப்படியெல்லாம் சில நிலைகள் ஆரம்பத்தில் நடந்தது.

ஏனென்றால் ஞானிகள் பெற்ற சக்திகளை நிரூபணம் செய்வதற்காக நான் சில முயற்சிகளை எடுத்தேன். அது எல்லாம் பலனற்றுப் போய்விட்டது.

இன்றைய உலகம் சுருங்கிக் கொண்டிருக்கின்றது. விஞ்ஞான அறிவால் பேரழிவின் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

மனிதனின் எண்ணங்கள் குறைந்து வரும் இந்த நேரத்தில் மெய் ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் பரவ வேண்டும். உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். வேறு எதுவும் இல்லை.

மதங்கள் உருவாக்கிய கடவுளை நமக்குள் எப்படி வைத்திருக்கின்றோம்…?

மதப் போர் தீவிரவாதம் வளரக் காரணம் என்ன…?

மனிதனின் சிந்தனையில்லாத செயல்கள், டயாணா விபத்து, – மீளும் வழிகள் 

suicide

தற்கொலை செய்யும் உணர்ச்சிகள் எப்படி மனிதனுக்குள் வருகின்றது…?

ஒரு சமயம் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவி நீரிலே மூழ்கி இறந்துவிட்டது. இது இறந்தபின் அதனுடன் நட்பாகப் பழகிய இன்னொரு மாணவி அதை உற்றுப் பார்க்கின்றது. நம்முடன் நன்றாகப் பழகிய தோழி இறந்துவிட்டதே…! என்ற நிலைகளில் ஏங்குகிறது.

இறந்த மாணவியோ “படிப்பில் தான் தேறவில்லையே..” என்ற நிலைகள் ஏக்கம் கொண்டு அன்னை தந்தையர் ஏசுவார்கள்…! என்ற அச்சத்தால் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

ஆனால் அதனுடன் பழகிய இந்த மாணவி பற்று கொண்டு எண்ணியபின் இறந்த மாணவியின் ஆன்மா இந்த உடலுக்குள் வந்து விடுகின்றது.

ஏனென்றால் வீட்டில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் இந்த மாணவியிடம் இறந்த மாணவி ஏற்கனவே சொல்லியிருந்தது. “சரியாகப் படிக்கவில்லை” என்ற நிலையில் தன் வீட்டில் தாய் தந்தை எப்படி எல்லாம் இம்சித்தார்கள்…! எப்படியெல்லாம் பேசினார்கள்…! என்றெல்லாம் அந்த மாணவி சொல்லியிருந்தது.

இதெல்லாம் அந்தச் சக மாணவியிடத்தில் பதிவாகி இருந்தது. பதிவான நிலைகள் கொண்டு ஏங்கிய பின் அந்த உணர்வின் தொடர்பு கொண்டு அந்த ஆன்மா இந்த உடலுக்குள் வருகின்றது.

ஆன்மா இந்த உடலுக்குள் வந்த பின் இந்த மாணவி வெளியிலே செல்லும் போதெல்லாம் “என்னைக் கிணற்றில் விழுகச் சொல்லுகின்றது… கிணற்றில் விழுகச் சொல்லுகின்றது…!” என்ற அதே நிலைகள் அது எண்ணுகின்றது.

முதலில் ஒரு குழந்தை இதே மாதிரி எண்ணி இறந்தது. அந்த உணர்வுகள் இந்த உடலில் பதிவானது. பதிவான பின் இதைப் போல அது அவ்வாறு சொல்கின்றது.

இந்த உணர்வுகள் தனக்குள் பெருகி…
1.யாரோ என்னைத் தள்ளுகின்றார்கள்…
2.ஏதோ ஒரு பூதம் என்னை அப்படியே அமுக்குகின்றது என்று சொல்கிறது.

அது எப்படி விகாரக் கோரத்தில் இருந்ததோ அது எல்லாம் இந்த உடலுக்குள் தெரிகின்றது அந்தக் கற்பனை உணர்வுகள் இதற்குள் விளைந்து
1.முதலில் இறந்த மாணவி போன்று துர் மரணத்திற்குண்டான நிலை கொண்டு
2.மன உளைச்சலுக்கு ஆகின்றது… பின் இதுவும் அதே போல் ஆகிவிடுகின்றது.

இதிலே விளைந்த உணர்வுகள் எதை எதையெல்லாம் சொன்னதோ மற்றொரு குழந்தை மேல் சாடும்போது அது அதிலிருந்து வளர்ச்சியாகி வளர்ச்சியாகி வருகின்றது.

வெகு காலம் கழித்து என்னிடம் (ஞானகுரு) அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வருகின்றார்கள்.

“திடீரென்று யாரோ வருகின்றார்கள்… என்னை உதைப்பதைப் போல் இருக்கின்றது… என்றும் யாரோ என்னைத் தள்ளுகின்றார்கள்… என்றும் கிணற்றில் விழுந்துவிட வேண்டும் என்றும்…” சொல்கிறது.

எனக்குப் பிறந்த குழந்தை… அவனும் கிணற்றுக்குள் விழுந்து விடுவானோ.. விழுந்து விடுவானோ..! என்ற எண்ணங்களையும் தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றது. இரவில் கனவுகளும் இதே போல் தான் வருகின்றது.

பூதங்கள் வந்து என்னை நசுக்க வருகின்றதென்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

பின் இது எதன் வழிகளில் வந்தது…? என்பதைப் பார்க்கப்படும்போது
1.முதலில் ஒரு குழந்தை பாடத்தில் சரியாக இல்லை என்று கிணற்றில் விழுந்து இறந்தது
2.அதன் பின் இன்னொரு குழந்தை உடலில் இறந்தது
3.அதற்குப் பின் அதைச் சரி செய்ய இவர்கள் பல மந்திரங்கள் செய்து ஏவல் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஒன்றும் முடியவில்லை.

கடைசியில் இத்தனையும் சேர்ந்து ஒரு பூத கணமாக மாறி இதற்கும் அதற்கும் அஞ்சும் உணர்வாகிப் போராட்ட நிலைகள் ஆகின்றது. முதல் ஆன்மாவை அடக்க இன்னொரு ஆவியின் நிலைகள் அதற்குள் விளைந்த செல்கள் இணைக்கப்படும்போது இது இரண்டுக்கும் போராட்டம்.

படிக்கவில்லை என்று தாங்காது அது இறந்தது. அதற்கடுத்து இது நுகர்ந்தது. மூன்றாவது ஆத்மா வரப்படும்போது “பூதம் வருகின்றது… என்னைக் கொல்லப் போகின்றது… என் கழுத்தை நசுக்குகின்றது… உள்ளுக்குள் தள்ளுகின்றது…” என்று இதனுடைய உணர்வுகள் இப்படி விளைந்து வருகின்றது.

அவர்களைப் பார்த்து… குருநாதர் காட்டிய அருள் வழிகளைச் சொல்லி இந்தெந்த நிலைகள் இருக்க வேண்டும் என்று அருள் உணர்வை வலுப்படுத்திய பின் ஒவ்வொன்றாக வடிகட்டிக் கொண்டு வந்தது.

ஆரம்ப நிலையிலிருந்து அது எப்படி ஆனதோ அதிலிருந்து பெருகி இதிலே எவ்வாறு விளைகின்றது என்ற நிலையை அறியும் தன்மையாக வந்தது.

இது எல்லாம் மனித வாழ்க்கையில் அறியாது ஏற்படக்கூடிய தீமைகள். பாசமாகப் பழகினாலும் பற்று கொண்ட நிலையில் இறந்தவரை எண்ணும் போது இந்த மாதிரி ஆன்மாக்கள் உடலுக்குள் வந்து விடுகின்றது.

கொசு மூலமாக இரஷ்யா வேவு பார்த்த நிலைகள் 

விஞ்ஞான அறிவினால் அசுரத்தனமான குழந்தைகளை உருவாக்கும் மீடியாக்கள் பெருகிவிட்டது 

விஞ்ஞானி எத்தனையோ நிலைகளை எலெக்ட்ரானிக்கில் செய்கின்றான்- நல்ல நேரம் கெட்ட நேரம் இல்லை…!

கணவன் மனைவி ஒன்றாகச் செய்தால் கிடைக்கும் ரிமோட் சக்தி

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் சொர்க்கம்

கணவன் மனைவி சேர்ந்து வாழ வேண்டியதன் அவசியம்

Super natural man - mahaan

மகானாகும் மகத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதன் தான் மகானாக முடியும்… மாமகரிஷியாக முடியும்… மண்டலமாக முடியும்… மனித குணங்களை உருவாக்க முடியும்…! மதி கொண்ட உயர் ஞானத்தால் மனித உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்திக் கொண்ட மனித உணர்வில்… மனிதன் முதலில் வாழ்க்கையில் “எளிமையைக் கடைப்பிடித்தல் வேண்டும்…”

வாழ்க்கையில் எளிமையும்… ஆத்மாவில் சுகத்தையும்… அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும் மார்க்கமே மனிதன் மனிதனாக்கும் முதல் நிலை.

இம்முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும் அறிவின் பகுத்தறிவு… உயர் ஞானத்தின் மெய் ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை… மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும்.

1.ஆகவே மனிதனைப் பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகக்கூடிய நிலை என்பது.
2.“உயர்ந்து விட்டோம்…” என்பதை விட்டு
3.“உயர்ந்திடுவோம்…” என்ற எண்ணம் வர வேண்டும்.

பிற ஆத்மாக்கள் மனிதனின் (தன்) உயர்வைக் கண்டு… நாடி வந்து வணங்க வேண்டும்… என்ற எண்ணத்தில் இருளைக் கூட்டிக் கொள்ளும் பொழுது “எம்மனிதனும் மகானாக முடியாது…”

தன் உயர்வை உயர்த்திக் காண வேண்டும் என்றால்…
1.பிறரை உயர்த்தும் பொழுதுதான் தான் உயர முடியும்
2.தன் உயர்வை நாடி எல்லாம் வர வேண்டும் என்று எண்ணுவதல்ல உயரும் நிலை…!

சூரியன் எப்படி மற்றக் கோள்களின் அலையைத் தான் பெற்று… தன்னில் அதைச் சமைத்து மீண்டும் ஒளியைத் தந்து உருளுகின்ற உண்மையில்… சூரியத் தொடர்பில் சுழலக் கூடிய கோள்கள் தானும் ஓர் நாள் வளர்ந்து… தன்னுடைய ஈர்ப்பின் சுழற்சியில் குடும்பம் அமைத்து… அதுவும் சூரியனாக வளர்ச்சி அடையக்கூடிய நிலையை அது அது பெறுகிறது.

அண்ட கோள்களில் உருள்பவை யாவும்… மண்டலக் கோள்களின் ஈர்ப்பில் மோதப் பெறும் சமைப்பு நிலையால்தான் “மறு நிலை… உரு நிலை…” பெறுகின்றது.

இத்தொடரின் சூட்சுமமே ஜீவகாந்த ஒளித் தன்மை உயிர்ப்பு நிலை வந்த பிறகு தான். ஜீவ ஆதி நிலை கொண்டு
1.ஆரம்ப நிலை – புழு நிலை
2.முதிர்வு நிலை ஜீவனின் தொடர் – மனித நிலை
3.மனித நிலையில் மகானாகி – ஒளி பெறும் நிலை
4.என்றென்றும் வளரும் நிலை – வளர்ச்சியின் ஒளி நிலை.
5.மனிதனின் நிலை தான் – தெய்வமாகும் நிலை.

இதை அறிந்து… மனிதனிடம் இருக்கும் “எண்ணத்தின் பகுத்தறிவு தான் உண்மையான சொத்து…” என்பதை உணர்ந்து
1.ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லுணர்வைத் தந்து 
2.நல்லொழுக்கத்தை ஆத்ம பலத்தில் வளர்க்கும் உரமிடுபவன் நிச்சயம் மகானாக முடியும்.

“மனிதருக்குள் தெய்வம்” என்று மகான்களைக் சொல்வதைப் போல்… தன் உணர்வின் எண்ணத்தில் சுகத்தைக் காணும் “ஆத்ம பலத்தின் ஒளித் தன்மை பெற” சரீர வாழ்க்கையில் எளிமையைக் காணுங்கள்.

Curse and scolding

கோப குணத்தின் உணர்ச்சிகள் சிறுகச் சிறுகக் கூடி நம் உடல் உறுப்புகளை எப்படிப் பாதிக்கிறது என்று தெரிந்து கொள்வதே நலம்

ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றி விட்டால் அது செடியாகி அது வளர்ச்சி பெறும்போது அதனின் வித்துக்களை அதிகமாக உருவாக்குகின்றது.

இதைப் போல நம் உடலும் ஒரு நிலம் போன்றது தான். கோபமாகப் பேசும் மனிதன் உணர்வை நுகர்ந்து நாம் வித்தாக நமக்குள் ஊன்றி விட்டால் அந்த உணர்வு நமக்குள் கோபத்தை உருவாக்கும் அணுக்களைப் பெருக்கி விடுகின்றது.

கோபத்தின் உணர்வின் அணுக்கள் நம் உடலிலே பெருகி விட்டால் நம் உடலுக்குள் இருக்கும் சாந்த குணமாக இயக்கும் அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

உதாரணமாக பார்க்கலாம்… ஒரு கோபக்காரர் நம் பக்கத்தில் இருந்தால் அவர் யாரை எடுத்தாலும் கோபமாகப் பேசிக் கொண்டிருப்பார். இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்.. என்ன செய்கின்றேன் பார்…! என்ற வகையில் உணர்ச்சிவசப்பட்டு கோப உணர்வாக வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.

இதைப் போன்று நாம் நுகர்ந்த கோப உணர்வுகள் அது அணுக்களாக உடலுக்குள் வளரப்படும் பொழுது…
1.புலி எப்படி மற்றொன்றை இரக்கமற்றுக் கொன்று புசிக்கின்றதோ
2.இதைப்போல நம் உடலுக்குள் அந்த அசுர அணுக்கள்
3.தன் அருகில் இருக்கும் நல்ல அணுக்களை இது கொன்று புசிக்கத் தொடங்கிவிடும்.

பின் நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் இந்த நல்ல உடலுக்குள் இயக்கச் சக்தியாக மாற்றும் “திரவகப் பொருட்கள்” கிடைக்காது போகும்

1.நம் உடலில் உள்ள நரம்புகளில் ஒரு விதமான அமிலம் உண்டு
2.அந்த திரவகம் நமக்குள் இல்லை என்றால் கைகளை மடக்குவதோ நீட்டுவதோ கடினம்.
3.அதே மாதிரி மூட்டுகளிலும் இந்தத் திரவகம் இணைக்கப்பட்டுள்ளது
4.மடக்கவும் நீட்டவும் அந்த வலுக் கொண்டு நம்மை இயக்க உதவுகின்றது.

இன்று நாம் பார்க்கலாம்.. இயந்திரங்களுக்கும் வண்டிகளுக்கும் விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு வித திரவகப் பொருளை (மசகு எண்ணை – LUBE OIL) கலக்குகின்றனர். அதன் மூலம் இயந்திரங்கள் தேய்வில்லாதபடி சில காலம் ஓடுகின்றது.

பெரிய பெரிய இன்ஜின்களிலும் இதே போல் திரவகத்தைக் கலக்கின்றனர். அதற்குள் இருக்கும் பேரிங்குகளோ பிஸ்டனோ இந்தத் திரவகத்தை கலக்கப்படும்போது தேயும் தன்மையும் குறைகின்றது… ஒரே சீராக இயங்குகின்றது.

இதைப் போலத்தான்… நம் உடலில் உயர்ந்த அணுக்களால் உருவாக்கப்பட்ட அதனுடைய மலம் திரவகமாக மாற்றப்பட்டு எல்லா உறுப்புகளுக்குள்ளும் அது இணைந்த நிலையில் சீராக இயங்க உதவுகின்றது.

நம் உடல் உறுப்பு நுரையீரல் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நுரையீரலில் நுண்ணிய அலைகளாக இயக்கி…
2,அதை இயக்கச் செய்யும் அந்த நரம்புகளுக்கும் வாயு நரம்புகளுக்கும்
3.நாம் சுவாசிக்கும் அந்த வாயுவினுடைய (காற்று) தன்மைகள் சென்றபின் அது விரிவடைகின்றது.
4.மீண்டும் சுருங்கச் செய்வதற்கு அதிலுள்ள திரவக அணுக்கள் அதைச் சுருங்கி இழுக்கும்…. மீண்டும் அந்தக் காற்று புகும்போது விரிவாகும்.

ஒரு காற்றினை அழுத்தப்படும்போது அதனால் விரிவாவதும் பின் காற்றினைக் குறைக்கப்படும்போது அதனுடைய நிலைகள் குறைக்கின்றதோ இதைப் போல் தான் நம் சுவாசப்பைகள் இயக்குகின்றது.

இவ்வாறு தொடர்ந்து இந்த நுரையீரலை இயக்கச் செய்யும் நிலைகளில்… மற்ற அனைத்திற்கும் இந்த உணர்வின் தன்மையை ஒருக்கிணைந்து இயக்கச் செய்யும் ஈரல் மையங்களுக்கு அனுப்பும் செயல்களில்
1.இந்த ஆசிட் பவர் (திரவகம்) குறைந்து விட்டால்
2.அது இழுத்து விரிவடையச் செய்யும் காற்றின் நிலைகள் விரிவடைந்து விட்டால் “அதிகமாக விரிவடைந்துவிடும்…”
3.அதே போல் சுருங்கச் செய்யும் சக்தியும் நரம்பு மண்டலங்களில் அந்தத் திரவகப் பொருள் இல்லையென்றால்
4.நுரையீரலைச் சுருங்கச் செய்யும் சக்தியும் குறைந்துவிடுகின்றது.

இப்படி அந்தச் சுருங்கச் செய்யும் சக்தி குறைவடையப் போகும்போது நமது நினைவாற்றலையும் குறைக்கச் செய்யும்.

அதாவது…
1.இந்தத் திரவகம் நம் சிறு மூளை பாகம் வரை சென்று
2.அதனுடன் ஒன்றுடன் ஒன்று இயக்கப்படும் பொழுது
3.அதனுடைய அழுத்தக் குறைவு ஆகிவிட்டால் அந்த உறுப்புகளை இயங்க விடாமல் தடைப்படுத்துகின்றது
4.மிகவும் நுண்ணிய நிலைகளாக ஆக்கி விடுகின்றது (சிறுத்து விடுகின்றது)

இத்தகையை நிலைகள் நமக்குள் ஏற்பட்டு விட்டால் நமக்குள் தீய அணுக்கள் உள்ளே புகாது அவைகளைத் தடைப்படுத்தும் அந்த சக்தி இழக்கப்படுகின்றது.

நாம் எடுக்கும் கோப உணர்வின் அமிலங்கள் இத்தனை வேலைகளுக்கும் காரணமாகின்றது. இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலையில் தீமையான உணர்வின் அமிலங்கள் நமக்குள் உருவாகாதபடி நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தடைப்படுத்திப் பழக வேண்டும்.
https://app.box.com/s/3hwldooo34mf6ua5wh4viw09715z12c6

கண்களின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் 

 வெளியிலிருந்து தான் தீமை வருகின்றது – நீ தடுக்க வேண்டுமல்லாவா என்றார் குருநாதர் 

பொருளைத் திருடிச் சென்றவன் பிடிபட வேண்டும் என்று எண்ணினால் அவன் பிடிபடுவான் 

ஆக்சிடென்ட் ஏற்படக் காரணம் என்ன…?

self realization - divinity

ஏழு…! ஆறைக் கடந்தால்… நிலை ஏழு…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.அறுசுவையின் முதிர்வு உணரும் நிலை ஏழு…
2.வண்ணத்தில் ஏழும்… இப்பூமியின் சுழற்சியில் இப்பூமிக்கு ஏழு நாட்களின் வாரத் தொடர்பும்…
3.“சப்தரிஷிகளின் ஏழு நிலையின் உண்மைத் தத்துவ நிலையும் தான்…!”
4.இப்பூமியின் உண்மை நிலை.

ஐம்புலனைப் பகுத்தறியக் கூடிய நிலை கொண்டது தான் “ஆறறிவு பெற்ற மனித நிலை…” மிருகங்கள் ஐந்து நிலையைப் பெற்றிருந்தாலும் இயற்கையின் தொடர்புடன் புல்லையும் பூண்டையும் நீரையும் இயற்கையுடன் ஒட்டித்தான் அதனுடைய ஜீவ வாழ்க்கை வளருகின்றது… வாழுகின்றது.

உண்ணவும் உடுக்கவும் இருக்கவும்… தன் ஆறாம் அறிவை மனித ஞானம் பயன்படுத்திக் கொண்டது.

ஏழாம் நிலையான உயர் ஞானத்தால் இச்சரீர உணர்வின் அறுகுணத்தின் அறியும் நிலை கொண்டு அடையும் நிலையை மாற்றி… ஞானத்தால் உணரும் மெய் ஞானம் கொள்ளும்… “ஏழான நிலையை” மனிதன் பெற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான்… இப்பூமியின் சுழற்சியின் மூல அமில ஒலியின் சப்தரிஷி ஒளி செயலினால்… ஏழு தன்மையின் வளர்ப்பின் செயல் சக்தி ரிஷித் தொடர்பினால்… இப்பூமியில் வளரக் கூடிய மூலத்தின் கருவின் வித்தில் வளர்ந்த பலன்கள் தான் அறு குணம் பெற்ற நிலை.

இந்தப் பூமியின் முதிர்வு நிலை மனித நிலை ஆறறிவு நிலை…!
1.அதற்கு அடுத்த நிலை மெய் ஞான நிலை
2.மெய் ஞானம் பெற்ற மனித நிலையும் இந்தப் பூமியின் சுழற்சியில் முதிர்வு நிலை
3.இவ் ஏழைக் கடக்கும் மெய் ஞானி தன் சித்தத்தை உணர்ந்த சித்தனாகி விட்டால்
4.அது எட்டாம் நிலையான அஷ்டமா சித்து நிலையை அடையும் நிலை.

இயற்கையின் மெய் உணர்ந்து மெய் ஞானத்தால் ஒளி பெற்று தன் சித்தத்தின் வலுவாகும் சித்து நிலையே ரிஷியாகும் வழி நிலை.

இப்பூமியின் உணர்வுடன் இப்பூமியின் சுழற்சியில் எடுக்கக்கூடிய ஒலி அலைகள் யாவையும்… தன் ஒளியாய் எடுத்து இவ்வாத்மாவின் ஒளி ஒளிரக் கூடிய தன்மை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அந்தத் தகுதி உண்டு.

வளர்ச்சியின் தொடர் வளர… மனித உணர்வில் தன் சரீர உணர்வால் மனிதன் பெறக்கூடிய கண்டு… கேட்டு… நுகர்ந்து… சுவைத்து… உணரும்.. இந்த ஐந்து நிலையும் அடையும் நிலை மனிதனுக்கே உண்டு.

இந்த ஐந்து நிலையில் இனிமை நிலை கூட்டுவது… மனித நிலையில் இரு நிலையான ஒவ்வொரு இயற்கை நிலையிலும் தன்னுடன் மோதக்கூடிய
1.ஜீவ நிலையான பெண்மை நிலை… வளர்ச்சி நிலை…
2.அறுநிலை கொண்ட முதிர்வு நிலை… சிவசக்தி நிலை…
3.பெண் சக்தியின் வளர்ச்சியின் தொடர் கொண்டு வளரக்கூடிய நிலைக்குத்தான்
சப்தரிஷியின் சக்தித் தொடர்பை உணர்ந்த ரிஷிகள்… சக்தியைப் பெண்ணாகக் காட்டினார்கள்.

மனித உணர்வில் அடையக் கூடிய இவ் அறு நிலைக்கும் முதிர்வு நிலையான… மெய் ஞானத்தை உணரும் ஜீவ நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும்.

ஏழான ஜீவ நிலையுடன் எட்டாகும். சித்தனால் ஒவ்வொரு கோள்களாய் உருவாகும் தன்மை எடுக்கும் இவ்வுணர்வின் எண்ணம் கொண்டு தான் உயர முடியும்.

பிற ஒலி அலைகளை இச்சரீர உணர்வுடன் எடுக்கும் சித்து என்பது..
1.இப்பூமியின் சுழற்சியுடனே…
2.இவ்வுடலை விட்டு ஆத்மா பிரிந்தவுடன் (ஆவிகள்)
3.எந்தெந்த ஒலியெல்லாம் எடுத்து இச்சரீரத்தைச் சித்தாக்கி வளர்த்துக் கொள்கின்றோமோ
4.அதன் ஈர்ப்புப் பிடிப்பினால் ஆத்மாவைச் சிதற அடிக்கும் நிலைதான் சித்து விளையாட்டு நிலை. (இதிலே நாம் சிக்கக் கூடாது)

மனிதன் எத்தாய் தந்தை தந்த இஜ்ஜீவ உடலை பெற்றானோ அதைப் போன்றே தாய் தந்தையென்ற ஆத்மாவில் மனித ஜீவனை மனிதன் பெற்ற தொடரைப் போன்று இரண்டு ஆத்மாவின் ஒரு நிலையான எண்ணத்தின் ஒற்றுமையால்
1.உணர்வின் இன்பம் (உடலின் இன்பமல்ல) உணர்வின் இனிமையை… ஆத்மாவின் இனிமையாய்…
2.ஆத்மாவின் ஜீவ இனிமை நிலையை மனித உணர்வுடன் உள்ள பொழுதே
3.குணத்தின் அன்பால் உணரக்கூடிய சம குணமுடன்
4.விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒலியை இருபாலரும் எடுத்து ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆகவே இச்சரீர வாழ்க்கையில்… மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம் தான் இது..! இரு குணத்தை ஒரு குணமாக்கி அன்பென்னும் ஆலயத்தைச் சிவசக்தியாக்கச் செய்யும் ஒவ்வொருவரையும்.

Agathiyam final

காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு விளையச் செய்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை ஊட்டுகின்றோம்… பயன்படுத்துங்கள்

நீங்கள் எல்லாம் காட்டிற்குச் சென்று தவமிருந்து மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவது என்றால் முடியாது.

ஈஸ்வரபட்டர் என்னை (ஞானகுரு) வீட்டிலிருந்து அழைத்துச் சென்று காடு மேடெல்லாம் அழையச் செய்தார். என் குடும்பத்தாரையும் கஷ்டப்படுத்தினார். இயற்கையின் உண்மைகளை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காக அத்தனையும் செய்தார்.

என்னுடைய மூத்த பையன் அவன் நல்ல பையன் தான். ஆனால் வீட்டிலிருக்கும் சொத்தை எல்லாம் செலவழிக்கச் செய்துவிட்டார் குருநாதர். சொத்தெல்லாம் போய் அநாதையாக ஆக்கி விட்டார்.
என் பையன் செய்த அந்தக் குறும்புத்தனத்தால் பணம் எல்லாமே போய்விட்டது. அந்தச் சமயத்தில் குடும்பத்தை வழிநடத்த என் மனைவி மிகவும் அவஸ்தைப்பட்டது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு விஞ்ஞானி அவன் பல சங்கடங்கள் படலாம். தன்னுடைய விடா முயற்சியினால் ஒன்றைக் கண்டுபிடிக்கின்றான். அதை இயந்திரமாகச் செய்து அதை இயக்கிக் காண்பிக்கின்றான். அதனின் செயலை நாம் அறிகின்றோம்.

அவன் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்ததை சரியான முறையில் நாம் ஏற்றுக் கொண்டோமென்றால் அந்த விஞ்ஞான அறிவு நமக்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரைச் செய்து கொடுக்கின்றான் என்றால்… முதலில் எவ்வளவு சிரமப்பட்டு அதை அவன் செய்திருப்பான்..! ஆனால் இன்று நாம் அதை விளையாட்டுக்குத் தட்டிக் கொண்டிருந்தால் அந்தக் கம்ப்யூட்டர் ஒன்றும் வேலை செய்யாது.

அதைப் போன்று தான் எவ்வளவோ சிரமப்பட்டு விளைய வைத்த ஞானிகளின் உணர்வை உங்களுக்கு இங்கே உபதேசமாக வித்தாகப் பதிவாக்குகின்றேன். அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணக்கூடிய உணர்வை எல்லாம் நம் உயிர் பதிவாக்கிக் கொள்கின்றது. எதன் வழி…? நம் கண்கள் வழி தான்…!

ரேடியோவிற்கும் டி.வி.க்கும் ஆன்டென்னா எப்படி இருக்கின்றதோ அதைப் போல
1.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்திற்கும் இந்தக் கண்ணே ஆன்டென்னாவாக இருக்கின்றது… பதிவாக்குகின்றது.
2.பதிவான பின் அதே நினைவைச் செலுத்தப்படும்போது
3.வெளியில் காற்றிலிருப்பதை இழுத்துக் கொடுப்பதும் நமது கண் தான்.

கண் வழியாகக் கவரப்படும் உணர்வுகள் உயிரிலே படும்போது எண்ணமாக வருகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மைதான் இந்த உடலை இயக்குகின்றது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைப் பற்றிக் கோபமான எண்ணங்களைப் பதிவாக்கி விட்டீர்கள் என்றால் அந்தப் பதிவு… அவரை நினைத்தவுடனே இங்கே ஆத்திரம் வரும்.

அப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சிகள் வரும்போது அடுப்பில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தால் போதும். தன் நினைவை இழந்து அடுப்பிலே எதாவது பொங்கி வந்தால்…
1.துணியையோ மற்ற உபகரணத்தையோ எடுக்காமல்
2.உடனே அப்படியே கையில் தூக்குவார்கள்… கை சுட்டுப் போகும்… பார்க்கலாம்…!

அதே மாதிரி ஒரு கணக்கை எழுதிக் கொண்டிருந்தோம் என்று சொன்னால் அந்த வெறுப்பான எண்ணங்கள் வரும்போது இங்கே தப்பான கணக்காகப் போட்டு விடுவோம்.

பணத்தையே எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட அந்த வெறுப்பான சமயங்களில் எண்ணிக்கை கணக்கில் வித்தியாசம் ஆகிவிடும்.
1.ஏனென்றால் அந்த உணர்வுகள் பதிவான நிலைகள்தான் நம்மை அவ்வாறு இயக்குகின்றது.
2.அந்த மாதிரி இயக்காமல் தடுக்க வேண்டுமல்லவா…!

இதையெல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய சக்தி இந்த ஆறாவது அறிவுக்கு உண்டு.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்… அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி முறைகளைத்தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

தியான வழியைக் கடைப்பிடிப்போர் சீர்படுத்திக் கொள்ள வேண்டிய முக்கியமான உணர்வுகள்

சுவாசிக்கும் காற்று உடலாக எப்படி மாறுகிறது…?

எண்ணமும் உணர்ச்சிகளும் நமக்கு எப்படித் தோன்றுகிறது…?

blood and cells formation

நேரடியாகவோ டி.வி.யிலோ ஒரு விபத்தைக் காண நேர்ந்தால் சிதைந்தவரின் அந்த உடலின் உணர்வுகள் நம் உடலை எப்படிச் சிதையச் செய்கிறது…?

நாம் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் ஒரு ஆக்சிடெண்ட்டை நாம் பார்க்க நேர்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதிலே அடிபட்டவர்கள் உடல் நசுங்கி இறந்து விடுகின்றார்கள்.

அடிபட்டு இறந்தவர்கள் வெளிப்படுத்திய உணர்வின் ஒலி ஒளிகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

டி.வி.யில் ஒரு மனிதனை இயந்திரத்தின் துணை கொண்டு படமாக்குகின்றனர். அதை ஒலிப்பேழைகளில் பதிவு செய்து மீண்டும் காந்தப் புலனறிவால் இயக்கப்பட்டு ஒலி/ஒளி பரப்புகின்றனர். அதை இன்னொரு இயந்திரத்தின் துணை கொண்டு நம் வீட்டில் அமர்ந்த இடத்திலிருந்து பார்க்கின்றோம்.
1.இதை வீடியோ என்று சொல்கிறோம்.
2.ஆனால் அதிலே படச் சுருள்களையோ உருவங்களையோ பார்க்க முடிவதில்லை.

ஏனென்றால் அது ஒலி… ஒளிப் பேழைகளை அதிலிருந்து அலைவரிசைகளாகத் தான் வெளிப்படுத்துகின்றது. காந்த புலனறிவால் கவரப்பட்டு எந்த மனிதனைப் படமாக்கி உருவாக்கப்பட்டதோ… அவன் எந்த நிலைகளில் இருந்தானோ அதனை அப்படியே நாம் டி.விக்களில் நாம் காணுகின்றோம்.

ஆகவே இதே காந்தப் புலனறிவால்தான் அது கவருகின்றது. அதன் உணர்வின் தன்மை ஒலி ஒளி என்ற நிலைகளில் அது பரப்புகின்றது… இது விஞ்ஞானம்…!

அதே போல் தான் ஒரு விபத்துக்குள்ளான மனிதனின் உடலிலிருந்து வேதனைப்பட்ட உணர்வுகள் அது வெளிப்படும்போது ஒலி ஒளி என்ற நிலைகள் அலைவரிசையில் வெளி வருகின்றது. அதைச் சூரியன் காந்த சக்தி கவருகின்றது.

1.எந்த மனிதனை நாம் உற்றுப் பார்த்தோமோ அதே ஒலி ஒளி என்ற நிலைகளில்
2.நமக்குள் அந்த உடலின் உருவத்தையும் அதில் எழும் சோக நாதத்தையும் நாம் பார்க்கின்றோம்.
3.அதை நமக்குள் உணர முடிகின்றது.

இதைத்தான்… நம் உயிரிலே இருக்கும் கவரும் சக்தியான காந்தப் புலனை லட்சுமி என்று ஞானிகள் சொன்னார்கள்.

ஒவ்வொன்றையும் தனக்குள் அந்த லட்சுமி கவர்ந்து… விஷ்ணுவாக (வெப்பம்) இருக்கும் தன் கணவனுடன் இணைந்து கவர்ந்த உணர்வின் சக்தியை அதே வேதனைப்படும் அணுவாக மாற்றுகின்றது பிரம்மமாக….! இதெல்லாம் நம் உயிருக்குள் நடக்கும் சம்பவங்கள்.

1.ஆக்சிடென்டைக் கண்ணுற்றுப் பார்த்தோம்
2.நம் உயிர் அதனை இப்படி ஜீவ அணுவாக மாற்றுகின்றது.

அந்த ஆக்சிடென்ட்டில் சிதைந்து போன உணர்வின் தன்மை உடலிலே உருப்பெறப்படும் போது அவன் எத்தகைய வேதனைப்பட்டானோ அதே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் வரும் போது இரவிலே சிதைந்த உடல் எல்லாம் கனவாக உருவங்களாக வரும். ஆனால் நாம் இங்கே பார்த்த இந்தச் சிதைந்தவனின் உருவு வராது

இவ்வாறு உடல்கள் சிதைவதையும்… சிதைந்து கொண்டு இருக்கும் உணர்வுகள் அச்சுறுத்தும் உணர்வாக நம் ஆன்மாவில் இருந்து கொண்டு… நம்முடைய ஒவ்வொரு குணத்திலும் இந்தச் சிதைந்திடும் உணர்வுகள் பரவிப் பரவி… மனிதனாக உருப்பெற்ற தன்மைகளையே மறைக்கச் செய்யும்.

அதற்குப் பின் நமக்குள் எதனைக் கண்டாலும் அச்சுறும் தன்மையும் அஞ்சிடும் உணர்வாகவும் வலுவாக இயக்கத் தொடங்கும். நம்மை உருமாற்றத் தொடங்கும்.

சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன் ஆக்சிடென்டில் சிதைந்தான். ஆனால் நமக்குள் நுகர்ந்த உணர்வு உடலாக உருவான அந்த அணுவின் தன்மை அதனின் மலத்தை உமிழ்த்தும் பொழுது நமது உடல்கள் சிதைந்து விடுகின்றது.

அதே உணர்ச்சி நம் எலும்புகளில் பட்டுவிட்டால்…
1.அடிபட்டவனின் எலும்புகள் எப்படி நொறுங்கியதோ
2.அதிலிருந்து வந்த உணர்வின் தன்மையை நம் காந்தப் புலன் அறிவுகள் கவர்ந்து
3.இதனின் மலத்தொடர்கள் நம் உடலில் எலும்பை உருவாக்கும்
4.நல்ல அணுக்களின் மலங்களைக் குறைக்கச் செய்கின்றது… நம் எலும்புகள் பலவீனம் அடைகின்றது.

பின் எலும்பின் தன்மை சிதைந்து எதையாவது தொட்டவுடனே அல்லது ஏதாவது பட்டு இடித்து விட்டால் சடக்கென்று நொறுங்கிவிடும்… மாவு போல ஆகின்ரது. அங்கே எலும்புகள் நொறுங்கியது. நொறுங்கிய உணர்வின் தன்மை அலைகளாகச் சென்றது. அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் இத்தகைய நிலை ஆகின்றது.

அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகளை அங்கே கவர்ந்தது நமது கண்கள் தான். இந்த உணர்வின் தன்மை “ஓ…” என்று ஜீவனாகின்றது. ஜீவ அணுவாக சிவமாகின்றது.

சிவத்திற்குள் அணுவின் தன்மை தனக்குள் அது தன் உணர்வை ஏங்கிப் பெற்று அதே உணர்வின் மலத்தை இடும்போது நம் உடலில் உள்ள எலும்பைத் தேய்மானாமாக்குகின்றது.

சில பேர் எனக்கு மூட்டு வலிக்கின்றது…! என்று சொல்வார்கள். நாம் கேட்டுக் கொண்டே இருப்போம். இந்த உணர்வின் தன்மை எதனுடன் தொடர்பு கொள்கின்றதோ இந்த உணர்வின் தன்மை ஓ…ம் நமச்சிவாய… என்று உடலாகின்றது.

சிதைந்த தன்மை வரும்போது அதே இடத்தில் உணர்வு சோர்ந்து வரும்போது சொன்னாலும் தான் அந்த பாகத்திற்குள் அதே அணு வளரும். இது எல்லாம் இயற்கையின் நிலைகள்.

அதாவது நாம் நுகரும் அந்த அணுக்கள் இங்கே வந்துவிட்டால் அந்தப் பாகத்தில் இருந்து சர்க்குலேசன் – ஓடி வரப்படும்போது நம் நினைவாற்றல் எதுவோ அந்தக் குறித்த இடம் வந்தவுடன் அந்த இடத்தில் தேங்கிவிடும்.

பின் அதனின் உணர்வின் தன்மை மலமாகும்போது எலும்பு தேய்வடையும். டாக்டரிடம் போனால் உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள்.

இவர்கள் என்னால் நடக்க முடியவில்லை…! என்பார்கள். உடல் எடையின் தன்மை கூடும்பொழுது
1.முதலில் நேராக இருந்த கால்
2.தாங்காமல் நடந்து வந்தவுடன் இப்படிப் போகின்றது.

இவைகளையெல்லாம் அந்த இயற்கையின் நிலைகள் நமக்குள் எவ்வாறு மாற்றுகின்றது…? என்பதை நாம் பார்க்கலாம்.

இதைத்தான் கீதையிலே…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று
2.கண்ணின் இயக்கத்தையும் உயிரின் இயக்கத்தையும் தெளிவுற உணர்த்தினார்கள் ஞானிகள்.

நம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி

கோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…?

பகைமையை மறப்பதற்கும் நல்ல உணர்வைச் சேர்ப்பதற்கும் தான் பாலாபிஷேகம்

Eswara sakthi power

நாம் பெறும் உயர் ஞானம் “மற்றவருக்குப் பயன்படும்படியாக இருக்க வேண்டும்” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பசு மடியில் சுரக்கும் பால்… தன் கன்று குடித்து அதன் பின் மீண்டும் பலரும் பருக அது பயன்படுகின்றது.
1.அந்தப் பசு மடி சுரக்கும் பால் போல்
2.நாமெடுக்கும் உயர் ஞானத்தின் தன்மை
3.பலருக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

நாமெடுக்கும் உயர் ஞானம் நம் உயிரானது… நம் உயிராத்மா கன்று போல் பருகி… பலரும் பருகக்கூடிய பலனாய் ஞானியின் சக்தியாகச் செயல்படல் வேண்டும்.

ஒவ்வொருவருக்குமே… தன் உணர்வில்… தன் எண்ணத்தால்… தன் ஆத்மாவில் பதியப்பட்டது தான் நியாயமாகவும் உண்மை என்றும் புலப்படும். ஆகவே
1.தன் உண்மைக்கு ஒத்த கருத்துக்கள் கொண்டு உறவாடுவதை தனக்கு உகந்ததாயும்
2.மாறுபட்ட எண்ணங்கள் யாவையுமே எதிர்ப்பு உணர்வைத் தோற்றுவிக்கும் எதிர் நிலைகளைத்தான் உண்டுபண்ணும்.

இந்த உண்மைகளை எல்லாம் அறியக்கூடிய உயர் தன்மைக்காகத்தான் அன்றைய மாமகரிஷிகள் மனிதனுக்குள் இறைத் தன்மையை வளர்க்கும் நிலையை நெறிப்படுத்தினார்கள்.

மனிதனுக்கு மேல்… மேல் நிலையாக தெய்வ குணங்களையும்… தெய்வச் சிலைகளையும்… ஆலயங்களையும்… நல்லொழுக்க நடைமுறைக்குக் கொண்டு வந்து… உண்மையின் சித்தத்தை மனிதன் அறியச் சீரிய வழிகளையும் வழிப்படுத்திச் சென்றனர்.

இதை உணர்ந்து…
1.நாம் ஒவ்வொருவருமே தெய்வ குணங்களைப் பெற்று
2.தெய்வ சக்தியை வளர்த்துத் தெய்வங்களாகும் தன்மை பெறல் வேண்டும்.

both-dippers north

கோவில்களிலே சொர்க்கவாசல் திறப்பு என்று வடக்கு வாசலைக் காட்டுகிறார்கள்… ஏன்…?

வருடம் முழுவதும் நேராகக் கோவிலுக்குள் போவோம். ஆனால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசலைத் திறப்பார்கள். அதாவது வடக்கு வாசலைத் திறப்பார்கள்.

அன்றைய தினம் எல்லாக் கோவிலிலும் வடக்கு வாசல் வழியாகப் போகும் படி அந்தச் சொர்க்க வாசலைத் திறந்து வைத்திருப்பார்கள்.

நாம் வழக்கமாகத் தெற்கு வாசலில் இருந்தும் போகலாம். கிழக்கு வாசலில் இருந்தும் போகலாம். வடக்கு வாசலை மட்டும் என்றைக்கும் அடைத்து வைத்திருப்பார்கள். “அது தான் துருவ நட்சத்திரம் என்பது…!” (நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருப்பது துருவ நட்சத்திரம்)

ஆனால் இன்று சாங்கிய சாஸ்திரப்படி என்ன செய்கிறார்கள்…? வடக்கு வாசல் வழியாகக் கோவிலுக்குள் போய் சாமியைத் தரிசனம் செய்தோமென்றால் அன்றைக்கு “நமக்கு மோட்சம் பெறும் நாள்” என்று செய்து வைத்திருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் சொர்க்கத்தை அடைவதற்காக வேண்டி இராத்திரி எல்லாம் பட்டினியாக இருந்து விடிய விடிய முழித்துக் கொண்டு இருப்பதைக் காட்டி “நமக்கு நினைவும் படுத்துகின்றார்கள்…”

பரமபதம் என்று ஒரு அட்டையை வைத்திருப்பார்கள் அதிலே கீழே இருக்கும் கட்டங்களில் பல விதமான உயிரினங்களைப் போட்டிருப்பார்கள். முதலில் தாயம் போட்டவுடனே நகற்றிக் கொண்டே இருப்போம்.

ஒன்று இரண்டு மூன்று போட்டவுடன் ஒரு ஏணி இருக்கும் மேலே டக்… என்று மேலே போய்விடும்

மனிதனாக இருக்கின்றோம்…! பாம்பு வருகிறது என்று அந்தப் பாம்பை நாம் அடித்து விட்டால் அந்தப் பாம்பு மனிதனாகப் பிறக்கின்றது. அதே மாதிரி இந்த வால்பாகம் இந்த உணர்வின் தன்மை வந்தபின் டக்… என்று வந்தால் நேராக மேலே போகின்றது (பெரிய ஏணி).

பெரிய ஏணியை வைத்து மேலே போனாலும் பின்பு அதைக் கடந்து வந்தபின் பரமபதம் போவதற்கு முன் அங்கே விஷம் கொண்ட பெரிய பாம்பு இருக்கிறது.

தாயக் கட்டையை வைத்து உருட்டும்போது பாம்புத் தலை இருக்கும் அந்தக் கட்டத்தில் போனால் ஜர்.. என்று கீழே போய்விடும் எங்கே…? பாம்பிடம் பட்ட பிற்பாடு அந்த விஷத்தைக் கொண்டு நேராக பன்றியிடம் கொண்டு வந்து விட்டுவிடும்.

பன்றியிடம் வந்தபின்… மீண்டும்..
1.பன்றி எப்படித் தீமையை நீக்கி அந்த உணர்வின் தன்மை படிப்படியாக வலுப் பெற்றதோ
2.அதைப் போல தீமையை நீக்கும் ஆற்றலை நீ பெற வேண்டும்
3.மீண்டும் மனிதனாகி அதன் வழியில் வளர வேண்டும் என்று வரிசைப்படுத்தி இருப்பார்கள்.

இப்படி அந்தச் சொர்க்கவாசலை அடையும் வழியை… அந்தப் பரமபதம் என்ற ஒரு விளையாட்டின் மூலமாகக் கூடக் காட்டி
1.நமது வாழ்க்கையில் எப்படி எல்லாம் உயருகின்றோம்…?
2.எப்படித் தாழுகின்றோம்..? எப்படி நாம் மாறுகின்றோம்…? என்று காட்டுகின்றார்கள்.

பின் அந்தப் பெரிய பாம்பைக் கடந்து சென்றபின்தான் ஒவ்வொரு குணங்களுக்கும் நகர்ந்து சென்று அபாயம் இல்லாத நிலைகளை அடைகின்றோம். அப்படி அபாயம் இல்லாத நிலைகள் வரப்படும்போது “பூரண நிலைகள்” அடையும் தன்மை அங்கே வருகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் விஷத் தன்மைகளைக் கடந்த பின் அங்கே சொர்க்க வாசல் என்று (பரமபதம்) நமக்குக் காட்டுகின்றார்கள். சொர்க்கவாசல் என்பது… இந்த “உயிரின் வழி (வாசல்)” கொண்டு தான் அதை அடைய முடியும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் நுகர்வது உயிரிலே பட்டுத் தான் அந்தந்த உணர்வுகள் நமக்குள் தெரிகின்றது.

ஆனால் அதே சமயத்தில் கண்ணிலே பார்த்த உணர்வின் தன்மை நம் உடலிலே பதிவாக்குகின்றது. பதிவானபின்.. அந்த எண்ணம் கொண்டு மீண்டும் கண்ணிலே பார்த்துத்தான் அந்த எண்ணங்களை எல்லாம் நாம் நுகர நேர்கின்றது.

அதைப் போன்று தான்…

1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன்.
2.உங்கள் நினைவைக் கூர்மையாக்கி இதைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
3.அந்தப் பதிவின் தன்மையை மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வந்து
4.“உங்கள் சொர்க்க பாதையான உயிரில் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்…!”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வினை உள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து அதனின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றால் தீமைகளை அகற்றிவிட்டு என்றும் ஒளியின் சரீரமாகத் திகழ முடியும்.

இது நம்முடைய சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

பதஞ்சலி முனிவர் – திருமூலர், சிதம்பரம் 

பதஞ்சலி திருமூலர் ஆக ஆனதன் சந்தர்ப்பம் 

பதஞ்சலி முனிவரின் உண்மை நிலைகளை குருநாதர் சூட்சமாக அழைத்துச் சென்று காட்டினார் 

Saamigal spiritual upadesam

பத்து வருடம் அமர்ந்து கேட்க வேண்டிய உபதேசத்தைப் பத்து நாளில் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்

ஒவ்வொரு அணுவிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இருந்தாலும்
1.உயிருக்குள் ஏற்படும் “வெப்பம் – விஷ்ணு” என்றும்
2.அதில் ஈர்க்கும் “காந்தம் வருவதை லட்சுமி” என்றும்
3.காரணப் பெயர் வைத்துக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

உதாரணமாக… கார்த்திகை நட்சத்திரம் ஆண்பால் கொண்டது. அதன் உணர்வின் சக்தி மற்றொன்றோடு மோதும் போது “வெப்பத்தின் தணல்” கூடுகின்றது. அந்த வெப்பத்தை உருவாக்கும் உணர்வின் சக்தியாக உருவாகிறது.

அந்த வெப்பத்தின் தன்மை கூடும்போதுதான் “ஈர்க்கும் சக்தி…” என்ற காந்தமே உருவாகின்றது. ஆகவே இதை லட்சுமி என்றும் காரணப் பெயர் வைத்துச் சுருக்கமாகக் கூறுகின்றார்கள் ஞானிகள்.

சந்தர்ப்பத்தில்… கார்த்திகை நட்சத்திரம் பெண்பால் என்ற ரேவதி நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் இணைத்து அதனுடன் இணைந்து வாழச் செய்யும் உணர்வுகளாக “ஒரு உயிரணுவாக” உருப் பெறுகின்றது.

ரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து என்று ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன். “இதில் எத்தனையோ இருக்கிறது,..!” அதில் உள்ள உள் பிரிவுகளைச் சொல்ல வேண்டுமென்றால் நமக்கு ஆயுளே பத்தாது.

ஒரு அணுவின் தன்மை பல சத்துகளை எப்படிச் சேர்த்தது…? என்ற விளக்க உரை கொடுக்க வேண்டும் என்றால்
1.ஒரு உயிரணு உண்டாவதற்குரிய (தோற்றம்) மூலம்
2.அது எதன் எதன் வழிகளில் சேர்ந்தது…? என்று
3.ஆதிசக்தியிலிருந்து… விஷத்திலிருந்து பிரித்துக் கொண்டு வர வேண்டும்.
4.அதற்குப் பின் கோளாக ஆனதையும்… அதற்குப் பின் நட்சத்திரமாக ஆனதையும் அதற்குப் பின் சூரியனாக ஆனதையும்
5.மற்ற கலவைகள் எப்படி ஆனது…? என்ற நிலையில்
6.அந்த உயிரணு தோன்றுவதற்கு உரிய மூலத்தை உங்களுக்குள் ஒப்படைக்க வேண்டுமென்றால்
7.குறைந்தது பத்து வருடம் நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டும்… இதைக் கேட்பதற்கு…!

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இப்படித்தான் சொன்னார். பத்து வருடத்தில் வளர வேண்டிய வளர்ச்சியைப் பத்து நாளில் உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன்…! என்றார்.

இயற்கையின் உண்மைகள் உபதேச வாயிலாகப் உனக்குள் பதிவானதை பத்து வருடத்திற்குள் நீ எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்றும் சொன்னார் குருநாதர்.

அதே போல் தான் இப்போது உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். பத்து வருடத்திற்குள் நிச்சயம் உங்களுக்குள் நீங்கள் இதை வளர்த்துக் கொள்ள முடியும்.

அதாவது…
1.பத்து வருடத்திற்கு அமர்ந்து கேட்கக் கூடியதை இந்த உபதேச வாயிலாகக் கேட்டு
2.அதைப் பதிவாக்கி நீங்கள் எடுத்தீர்கள் என்றால்
3.பத்து வருடத்தில் நீங்கள் நிச்சயம் வளர்ச்சி பெற முடியும்

இப்படி உங்கள் உடலில் உள்ள… ஒவ்வொரு உணர்வின் இயக்கமும் ஒவ்வொரு உணர்வின் தன்மையும்
1.அது எவ்வாறு…? என்று உணர்ந்து உணர்ந்து விட்டாலே
2.நீங்கள் அந்த மெய் ஒளியின் உண்மையைப் பெறுகின்றீர்கள்.

இப்படித்தான் குருநாதர் எனக்கு உபதேசித்தார். அதைத்தான் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன்.

இதை நினைவு கொண்டு எவர் எடுக்கின்றனரோ “அவரே…” தன் வாழ்க்கையில் இனிப் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

மக்களுக்கு நல் வழி காட்டிய மகான்களை யாரும் விண் செலுத்தவில்லை – நீ செலுத்து என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் 

எப்படி என்றாலும் இந்த உடலை விட்டுப்  போய்த்தான் ஆகவேண்டும்

உடலைவிட்டுப்பிரியும் ஆன்மா செல்வதைக் காட்டினார் (மனிதன் மிருகம்), மிருக வாயில் உணவு கரையும் நிலை

Courageous meditation

மெய் உணரும் தியான முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது… வேகக்கூடிய உஷ்ணமும்… அவ் இயந்திரம் ஓடக்கூடிய ஓட்டத்திலும்… “ஒரே பக்குவ நிலையில் ஓடும் பொழுது தான்…” ஒன்று போல அம்மிட்டாய்களைச் செய்ய முடிகின்றது. சிறிது பக்குவம் மாறினாலும் அமைப்பின் தன்மை மாறி விடுகின்றது.

அதைப் போன்றே… இயந்திரங்களில் நூற்பாலைகளில் பஞ்சின் தரத்தில் நூற்கப்படும் நூல்கள் ஓட்டத்தின் சமத்தைக் கொண்டு ஒரே போல் தரமுடன் நூல் நூற்கப்படுகின்றது. இயந்திர விசையின் வேகமோ… செயலாக்கும் திறமையில் மாற்றமோ ஏற்படும் பொழுது… நூலின் தரம் மாறுபடுகிறது இது செயற்கை.

ஓர் மரத்தில் காய்க்கும் காய்கள் அனைத்தும் ஒன்று போல் உருவத்தில் இருப்பதில்லை. பெரிதாகவும் சிறிதாகவும் கரடு தட்டியும் பூச்சி புழுக்கள் அரித்தும்… பூக்களானாலும் சரி… காய் கனிகளானாலும் சரி… ஒரே மரத்தின் கனியிலேயே மாறுபாடுகள் அந்தந்தக் கிளைகளில் எடுக்கப்படும் சத்தின் ஈர்ப்பைக் கொண்டு கனியின் வளர்ச்சி பிரிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.

அதைப் போன்று ஒரு தாயின் குழந்தைகள் உணர்வின் தன்மைக்கொப்ப குணங்கள் மாறுபடுகின்றது. ஆனால் ஒரே சூலில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து… தன் எண்ணத்தின் உணர்வு கொண்டு தானாய் வளரும் தருணம் வரை… இரண்டு குழந்தைகளின் உணர்வுகள் ஏறக்குறைய ஒன்று போல் இருக்கின்றன.

சூரியனின் ஒளி ஈர்ப்பில் பூமியின் எந்த நட்சத்திர ஒளிகளின் அலைத் தன்மை அதிகப்படுகின்றதோ அத்தருணத்தில் உருவாகக்கூடிய குணத்திற்கொப்ப… பிறப்பின் நிலை… ஜீவ அணுக்களின் வளர்ச்சி வலுக் கொள்கின்றது.

அந்தந்தத் தருணத்திற்கொப்ப நொடிக்கு நொடி மாறிக் கொண்டுள்ள சுழற்சி ஓட்டத்தில்… உணர்வின் எண்ணத்தில் மெய் அறியக்கூடிய பக்குவத்தை வளர்க்கும் மெய் ஞானியின் தன்மையும்… ஒன்றை ஒத்து ஒன்று இருக்காமல்.. மாறு கொண்ட நிலை இயற்கையின் உணர்வில் வளர்கின்றது.

செயற்கையின் தன்மையில் இயந்திர விசையின் ஓட்டத்தில் ஒன்றைப் போன்ற செயலைத் தரத்தில் செயலாக்க முடிகின்றது.

எப்படி மனிதனின் எண்ண உணர்வு செயற்கையின் விஞ்ஞானத்தில் பல செயல் திறமைகளை வளர்க்க முடிகின்றதோ… அதைப் போன்று இயற்கையில் மெய் உணரும் பக்குவ வழிமுறையை…
1.உணர்வின் எண்ணத்தில் எடுக்கக்கூடிய ஞானத்தை
2.நாம் ஒன்றை எண்ணும் பொழுது… மீண்டும் மீண்டும் அதையே எண்ணிக் கொண்டுள்ள தருணத்தில்
3.அவ் எண்ணத்திற்கு ஜீவித வலுவை ஆத்மாவின் பதிவாகச் செயல்படுத்தி விடுகின்றோம்.

எப்படி தோசையை சுட்டுப் போடும் பொழுது முதலில் சுட்ட தோசைக்கும் மேல் மேலும் அதற்கு மேலேயே சுட்டுப் போடும் பொழுது மேலிருக்கக்கூடிய உஷ்ணத்தை எடுத்து கீழிருக்கக்கூடிய தோசையும் சூடாகவே இருக்கின்றது அல்லவா…!

அதைப் போன்று…
1.நல்ல வழியோ தீயவையோ ஒன்றின் தொடரை எண்ணி எண்ணி
2.அதே தொடரில் எண்ணத்தை ஓட்டும்பொழுது
3.அதன் வலுவின் தன்மைதான் ஆத்மாவின் பதிவு.

ஜீவ ஆத்மாவின் உயிர் காந்தத்திற்கு… உண்மையான நல் உணர்வின் ஒளித் தன்மையை நம்மில் பெறுவதற்கு…
1.உயர் ஞானிகளின் எண்ணத்தை
2.சரீர ஓட்டத்தின் வாழ்க்கைத் தொடர் “கனவில்” அதிகமாக எண்ணத்தைச் செலுத்தாமல்
3.ரிஷிகளின் எண்ணத்தில் நம் எண்ணம் செல்லும் பொழுது
4.அவர்கள் பெற்ற ஒளித் தன்மையின் வலுவின் வட்டத்தில் நம் உயிர் ஜீவ அலைகள் பதிவாகி
5.நம் ஒளி வட்டமே உண்மைத் தன்மையை அறியக்கூடிய மெய் ஞானத் தன்மை பெற்று விடுகின்றது.

உணர்வில் மோதப்படும் வாழ்க்கையின் விருப்பு வெறுப்பற்ற வழித் தொடர் அடைய… நம் ஒளியின் தன்மை வளர்ச்சியின் வலுவினால்…
1.சலிப்பு சோர்வு என்ற வேண்டாத நிலைகள்… தீயவை எதுவாகிலும்…
2.அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கக்கூடிய ஒளித் தன்மையாக
3.ஆத்மாவில் மோதப்படும் எதுவாகிலும் அதை நம் இச்சைக்கு கட்டுப்படக் கூடிய செயலுக்கு
4.உணர்வின் எண்ணத்தை நாம் செலுத்தி எடுக்கக்கூடிய ஞானத்தின் தன்மை தான் “மெய் உணரும் தியான முறை…!”

soul propulsion ultimate

விண் செல்லும் மார்க்கம்

கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்கள் உடல் முழுவதும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி உடலுக்குள் செலுத்தி ஏங்கித் தியானிக்கவும்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக் கொண்டு எடுத்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை நாம் விண்ணிலே உந்திச் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

1.அப்பொழுது உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைக்கப்படுகின்றது.
2.மனிதனாக வளர்ந்த தெளிவான அறிவு நிலைக்கின்றது
3.உயிருடன் ஒன்றி… அந்த சப்தரிஷிகளின் அருள் ஒளி பெற்று
4.அங்கே பேரின்பப் பெரு வாழ்வு வாழத் தொடங்குகின்றார்கள்.

ஏனென்றால் இதற்கு முன்னாடி நம்முடன் வாழ்ந்து வந்த தாத்தாவோ பாட்டியோ அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தாலும் மேலே சொன்னபடி செய்ய மறந்திருந்தாலும் இப்பொழுது நாம் அதைச் செய்ய வேண்டும்… அவர்களை விண் செலுத்த முடியும்.

அதே போல் கணவனை இழந்திருந்தாலும் அல்லத் மனைவியை இழந்திருந்தாலும் இங்கே உடலுடன் இருப்பவர்கள் அந்த உயிரான்மாவை யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.

கணவனும் மனைவியும் வாழ்ந்த காலங்களில் இரு உணர்வும் ஒன்றி வாழ்ந்தது தான். ஆனால் ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் அவர் உணர்வு உங்கள் உடல்களில் உண்டு.

ஆகவே அந்த உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் தான்…
1.அவர்கள் அங்கே ஒளிச் சரீரம் ஆகும் போது
2.அவர் ஒளியான உணர்வை நாமும் பெற்று
3.இந்த உடலை விட்டு நாம் சென்ற பின்னும் அவருடன் ஐக்கியமாகி
4.சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதைப் போன்று
5.அருள் ஒளிக் கதிர்களை உருவாக்கி ஒளியின் சரீரமாக்கி நாமும் நிலைத்துக் கொண்டிருக்க முடியும்.

சூரியனின் ஒளி மங்கப்பட்டு… இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்… இதில் உருவான மனிதர்கள்… ஒளி நிலை பெற்ற சப்தரிஷிகள் அகண்ட உலகில் சென்று அந்த உணர்வினைத் தனக்குள் பெற்று “ஒளியாக மாற்றி… என்றுமே ஒளியின் சரீரமாக நிலைத்து நிற்க முடியும்…!

1.அத்தகைய நிலையைப் பெறுவதற்குத்தான்
2.பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் முயற்சிக்கின்றனர்.

மகரிஷிகள் என்பவர்கள் இதை எல்லாம் (ஒளி) சிருஷ்டித்துக் கொண்டவர்கள். ஞானிகள் கண்டுணர்கின்றார்கள். ஞானிகள் கண்டுணர்ந்த நிலைகள் உயிருடன் உருவாக்கப்படும்போது ரிஷி ஆகின்றார்கள்.

1.ஞானத்தின் வழி கொண்டுதான் ரிஷியின் தன்மை உருவாக்க முடியும்.
2.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் விமானத்தை உருவாக்குகின்றான்
3.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் இராக்கெட்டை உருவாக்குகின்றான்
4.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் கம்ப்யூட்டரை உருவாக்குகின்றான்
5.அதே ஞானத்தின் துணை கொண்டுதான் விண்ணிலிருக்கும் பல பல நட்சத்திரங்களையும் மனிதன் கம்ப்யூட்டர் கொண்டு பதிவு செய்கிறான்.

பதிவு செய்த உணர்வை இராக்கெட்டின் முன்னாடி முகப்பில் வைக்கின்றனர். இராக்கெட்டின் முகப்பில் வைத்தபின் எந்த நட்சத்திரமோ அங்கே அழைத்துச் செல்கின்றது. அங்கே அழைத்துச் சென்று அங்கிருப்பதை எல்லாம் படமாக்குகின்றது. அங்கே படமாக்குவதை எல்லாம் தரையில் இருக்கக்கூடிய கம்ப்யூட்டர் மூலம் உணர்கின்றனர் பார்க்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள்.

இதைப் போலத்தான்…

1.தன் கணவரின் உணர்வை முகப்பில் வைத்து
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று இணைத்து விட்டால்
3.அதே சப்தரிஷி மண்டல உணர்வினை முகப்பில் வைத்துத் தானும் வளர்ந்து கொண்டிருந்தால்
4.இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவருடன் இணையச் செய்து… இரு உயிரும் ஒன்றச் செய்து
5.அணுவின் ஒளிக் கதிராக மாற்றும் தன்மை அடைகின்றோம்.
6.இது ஒன்றும் கடினமல்ல… விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.
7.மெய் ஞானிகள் பல காலத்திற்கு முன்னாடியே சொன்னார்கள்…!

அதைத்தான் யாம் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி விண் செல்லும் உணர்வை ஊட்டுகின்றோம்.

உடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்

கூட்டம் தேவை இல்லை…! 

குருநாதர் விண் சென்ற நிலை – அகஸ்தியன் குடும்பம் துருவ நட்சத்திரமாக ஆன நிலை

Adi Sakthi Eswara

“ஆதிசக்தியின் சூட்சமம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
பெரிய குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து எதையோ ஒரு பொருளை விடாப்பிடியாகப் பிடித்து ஆட்டுவது தெரிகின்றது.

மற்றொரு காட்சியில் ஒருவருக்குக் காலில் முள் குத்துவதைப் போன்றும்… முள்ளைக் காலிலிருந்து எடுத்துத் தூர எறிவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
குரங்கு ஒன்றைப் பிடித்ததென்றால் ”குரங்குப்பிடி…” என்பதைப் போன்று
1.மதியைக் கொண்டு மெய்யுணரும் பக்குவமற்ற ஜீவனால்
2.எத்தொடரில் எதைப் பிடித்ததோ… அதன் தொடரில் தான் அதனுடைய எண்ணமிருக்கும்.

ஆனால் மெய் என்ற மதியைக் கொண்டு பகுத்தறியக் கூடிய மனிதன் “தான்…” என்ற அகந்தையின் பிடியில் வலுப்படுத்தினால் தன் வளர்ச்சியின் வலுவை இழக்கும் நிலைதான் மனித உணர்வின் ஒளிக்குச் செயல்படும்.

இச்சரீரத்தில் உணர்வுகளினால் வளரும் உயிரணுக்கள் யாவையுமே ஜீவகாந்த மின் அலைச் சக்தியை வளர்க்கவல்லவை.

அவ்வளர்ப்பின் தொடருக்குத் தன்னில் உயர்ந்த ஒளி சக்தி பெற்றிருந்தாலும்…
1.மனித உணர்வின் தொடர்பில் பாசப் பிணைப்புடன்
2.அன்பு பரிவு என்ற அறுகுணத்தின் நற்குணத்தைச் செலுத்தி மெய் உணர்வின் அறத்தை
3.இச்சரீரத்தையே மெய்யுணர்வின் தொடர்பில் செலுத்தும் பொழுது
4.இச்சரீரம் ஆண் பெண் என்ற நிலை மாறி தாயான ஜீவ சரீரமாக
5.பலவற்றையும் வளர்க்கும் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் வித்துக்களாய்
6.ஒவ்வொரு ஒளித் தன்மை கொண்ட ஜீவாத்ம உயிரும் வளர்ச்சி பெறும்.

இன்றெப்படி சூரியன் பல கோள்களின் ஜீவனை வளர்க்கின்றது…? பூமி எப்படி பல ஜீவன்களை வளர்க்கின்றது…?

அதைப் போன்று ஒளி சக்தி பெற்ற ஒவ்வொன்றும் ஒளியின் உருவப் படைப்பாய்… உருவில் பலவற்றையும் படைத்துப் படைக்கவல்ல தன்மைக்கு… இச்சரீர உணர்வில் எடுக்கும் மெய் உணர்வின் ஒளித் தன்மையைக் கொண்டுதான் அந்த “ஆதிசக்தியின் சூட்சுமமே அடங்கி உள்ளது…”

மனித உணர்வில் வேண்டாத எண்ணங்கள் நம்மைத் தாக்குபவையாக சந்தர்ப்பத்தில் வந்து மோதினாலும்
1.காலிலே முள் ஏறியவுடன் அதைப் பிடுங்கி எறிவதைப் போன்று
2.எண்ணத்திலிருந்து அதை எல்லாம் அப்புறப்படுத்திடும் செயலுக்கு வரவேண்டும்.

முள்ளின் வேதனையை… எடுக்க முடியாமல் காலில் தைத்து விட்டால் அந்த முள் புரையேறி… காலையே எடுக்கவும் ஏன்… சரீர ஜீவனுக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது…!

அதைப் போன்று… நம் உணர்வில் மோதும் எதிர் நிலை எண்ணத்தை ஒளி கொண்ட தெய்வ குணங்களில் எண்ணத்தைச் செலுத்தி… வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல்..
1.மெய் உணர்வின் மெய் ஞானியாகக் கூடிய வழியறியும் பக்குவத்தால்
2.வான மண்டலத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் கோள்கள் வளர்ந்து ஓடுவது போன்று
3.மனித உணர்வின் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருமே
4.ஒளி சக்தி கொண்ட உயர் தன்மை பெற முடியும்.

polaris agastyan

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளிக் கற்றைகளை எப்படிப் பெறுவது…?

உபதேசம் கொடுக்கும் போது சில நேரங்களில் நான் (ஞானகுரு) மெதுவாகப் பேசுகின்றேன்.. நிறுத்திப் பேசுகின்றேன்…!

இதைப் போல முதலில்… சாமி கொஞ்சம் நிறுத்தி மெதுவாகப் பேசினால் எனக்கு அர்த்தம் ஆகுமே….! என்று சிலர் எண்ணலாம்.

ஆனாலும்… “வேகமாகப் பேசுகின்றார்… எனக்கு அர்த்தமாகவில்லையே…!” என்று எண்ணினால் அது அர்த்தமாகாது தான்…!

1.குருநாதர் வேகமாகப் பேசும் உணர்வுகள் “எனக்குள் பதிவாக வேண்டும்” என்ற
2.ஏக்க உணர்வுடன் ஒன்றி வந்தால்
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆகி
3.அந்த உணர்ச்சியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அந்தத் தகுதியைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசத்தை (https://wp.me/p3UBkg-1Ag) அழுத்தமாகவும் வேகமாகவும் உங்களுக்குள் பாய்ச்சுவது. அதாவது ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்குத்தான் (ஊடுருவி) அவ்வாறு செய்கின்றேன்.

எவரொருவர் இதைப் பெற வேண்டுமென்று (அதே அழுத்தத்துடன் வேகமாக) இதைக் கூர்மையாக எண்ணுகின்றீர்களோ அவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கின்றது. மகரிஷிகளின் ஆற்றலை விண்ணிலிருந்து பருகும் ஆற்றலை எளிதில் பெறுகின்றனர்.

“என்னமோ சாமி பெரிதாகச் சொல்கின்றார்…! நமக்குப் புரியவில்லையே…” என்றால் வரும் அலைகள் அனைத்தையும் அழித்துக் கொண்டே இருக்கும்

ஆகவே இதைப் போன்ற நிலைகளைத் தவிர்த்துவிட்டு எப்போதும் உபதேசிக்கும்போது அந்தக் கருத்துக்களைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்தால் நிச்சயம் பதிவாகும்.
1.இந்த உணர்வின் தன்மை
2.உங்களை அந்த அருள் வழிக்கு அழைத்துச் செல்ல உதவும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்

ஆக்சிடென்ட் (ACCIDENT) எதனால் ஏற்படுகிறது…? 

கந்தகப் பாறைகளின் சூட்சமம் – உலோகங்களைப் பவுடராக்கும் விஞ்ஞானம்

justice

அறம் பொருள் இன்பம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பருத்தி என்றால் அதிலிருந்து பஞ்சை எடுத்து ஆடைகளை நெய்வதும் பருப்பைப் பதப்படுத்தி உண்ணவும் அதனதன் வளர்ச்சிக்கொப்ப… “இன்னதை இன்னதிற்குப் பயன்படுத்தலாம்…” என்பது மனித ஞானம் அறிந்த உண்மை.

மேலும்… இன்று மனிதன் இயற்கையில் வளரும் தாவரங்களுக்குச் செயற்கையில் உரமிட்டு இயற்கைத் தன்மையின் வளர்ச்சியை மாறுபடச் செய்து அதை வளரச் செய்யக்கூடிய பக்குவத்தை வளர்ப்பவனும் இதே மனிதன் தான்.

ஆனால் அதே மனிதன் தான்…
1.தன் உயிராத்மாவின் ஜீவித வாழ்க்கையை
2.தன் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
3.தன்னைத் தானே தான் உணர்ந்து உயர் நிலை பெறுவோம் என்ற வழியறியாது
4.தன் வாழ்க்கையில் நடப்பவை யாவும் ஊழ்வினை – “விதி” என்ற
5.வினைப் பயனை விதைத்துக் கொள்கின்றான் தன் எண்ணத்தில்.

இயற்கையையும் செயற்கையாக்கி விஞ்ஞானத்தில் பல உண்மைகளை மனிதச் செயல்தான் வளர்த்தது. அதே மனிதன் ஜீவாத்மாவின் உண்மையின் உண்மையை உணர்ந்து தன்னைத்தான் ஆள வேண்டும்.

அறம்… பொருள்… இன்பம்…
1.அறம் – நல்லொழுக்கத்தைச் சத்தியம் என்ற நேர் கோட்டில் உணரவும்
2.பொருள் – அறத்தைச் செயலாக்கி சத்தியத்தை வளர்த்து
3.இன்பம் – என்ற பிறவா ஒளி நிலை ஆனந்த உணர்வை இவ்வாத்மா அடைவதற்காக
4.முந்தைய பல ஆண்டுகளாக ஞானிகள் மகரிஷிகள் உயர் தத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.

இக்கலியிலும் புறநானூறு அகநானூறு திருக்குறள் நல்லொழுக்கம் ஆத்திச்சூடி போன்ற பல நூல்களில் வந்துள்ள தத்துவங்கள் யாவும்… மனித உணர்வின் எண்ணம் நல்லொழுக்கம் பெற்று… அகத்தின் பொருளறிந்து… “அகிலத்தின் பொருளாகும் உண்மையைத் தான் வழிகாட்டின…”

ஆகவே நம் உயிராத்மாவின் உயர் நிலை பெற ஊழ் வினை என்ற வினைப்பயனை எண்ணத்தில் எண்ணாமல்… எண்ணத்தில் நற்குணத்தை ஒவ்வொருவரும் பெற்று… விதியை மதி கொண்டு… ஞானம் கொண்டு செயல்பட வேண்டும்.

1.முதலில்… தன் சரீர உணர்வில் வெளிப்படக்கூடிய இச்சைகளை
2.தன் எண்ணத்தின் சிந்தனை கொண்டு
3.இச்சரீர ஏக்கத்தின் இச்சைகளை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

சரீர ஏக்கத்தின் இச்சை என்பது விருப்பு வெறுப்பு பசி தூக்கம் கோபம் ஆசை இன்பம் துன்பம் காமம் இவை யாவையுமே தன்னில்தான் தன் உணர்வில் தோன்றக்கூடிய உந்தல்கள் தான்.

அதன் இச்சையின் செயலுக்கு நம் உணர்வின் எண்ணம் செல்லும் பொழுது உடல் உபாதையினால் உணர்வின் எண்ணம் பாதிக்கப்பட்டுத் தன்னைத் தானே வலுவிழக்கச் செய்து வினைப் பயன் என்ற முத்திரையை… “தானே குத்திக் கொள்ளும் நிலைதான்…”

உடல் உபாதையையும்… உடல் உணர்வுகளினால் எண்ணத்தின் வலுவைக் கொண்டு… இச்சரீரத்தின் எச்செயலையும் தன்னுள் உள்ள “இறை உயிரைக் கொண்டு” நல்லதாக மாற்றிட முடியும்.

இச்சரீரம் எத்தனை கோடி ஆண்டுத் தொடரில் புழுவாய் பூச்சியாய் மனிதனாய் பல உணர்வுகளில் பல உருவில் உருப்பெற்று உயிர் ஜீவனில் இன்றுள்ள நிலைக்கு வினைப்பயனின் வித்தாய் வளர்ந்து வந்துள்ளது.

எவ்விதை ஊன்றப் பெற்றதோ… அச்செடியாக அது வளர்ந்தாலும்…
1.அதை மாற்றி அமைக்கக்கூடிய மெய் ஞானம் என்ற மதி கொண்டு
2.மனித எண்ணத்தின் உயர் ஞானத்தால்
3.அறம் பொருள் இன்பம் என்ற இனிய நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

அதைப் பெறக்கூடிய பக்குவத்தைத்தான் இங்கே தொடர்ந்து போதனையாக வழங்குகின்றோம்.

இச்சரீரம் உறங்கும் பொழுது “உறக்கம்” என்றும்… செயல்படும் பொழுது “விழிப்பு” என்றும் சொல்கின்றோம். ஆனால்..
1.ஆத்மாவின் செயலில் இச்சரீரத்தை இயக்கக்கூடிய தன்மை பெற்றல்
2.உண்மைத் தன்மை விழிப்பு நிலை பெறுகின்றது.

வாழ்க்கை நடைமுறையில் இச்சரீர உணர்வுக்கொப்ப எண்ணுபவை யாவும் ஆத்மாவில் பதிவு பெறுகின்றது. அதே தொடரின் வாசனைதான் உணர்வு பெற்று இஜ்ஜீவித இயக்கத்தில் காந்த மின் அலையான இச்சரீர இயக்க ஓட்ட ஆத்மாவில் பதிவாகி விடுகின்றது.

எப்பதிவை எண்ணத்தின் உணர்வு கொண்டு நாம் பேசி மகிழ்ந்து வாழ்கின்றோமோ அவ்வலையைத்தான் ஆத்மா பெறுகின்றது.

அவ்வலையைத்தான் நம் உணர்வின் எண்ணமும் பெற்று நம்மையறியாமல் பேசவும் செயல்படுத்தவும் செய்கின்றது. நம்மைச் செயலாக்கும் நிலையும் அதுவேதான். ஆக.. அந்நிலை இச்சரீர ஆத்மாவை இப்பூமியின் பிடிப்பில் உறங்க வைத்த நிலை.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து விழிக்கும் நிலை என்பது…
1.தன்னைத்தானே தான் உணர்ந்து…
2.இச்சரீர உணர்வின் வாசனையை… இவ்வாத்மாவில் பதிய வைத்து வளர்த்துக் கொண்ட நிலையை…
3.உயர்ஞானத்தைக் கொண்டு தன்னை இயக்கும் ஆத்மாவின் உண்மையை உணர்ந்து
4.ஆத்மாவிற்கு நல் ஒலிகளை… நற்குணமுடன் கொண்ட உயர் தன்மையை…
5.அறம் பொருள் இன்பம் என்று பெரியவர்கள் நமக்குக் காட்டிய உயர் குணத்தின் சத்தியத்தை வளர்க்க
6.மாறிப்போகக் கூடிய இச்சரீரத்தில் உயர் குண சத்தியத்தைக் கொண்டு
7.இஜ்ஜீவ உயிராத்மா – உயர் காந்த மின் சக்தியினால்
8.இச்சரீரத்தில் வாழக்கூடிய வாழ்நாளில் – விழிப்பு நிலை நாம் முதலில் பெற வேண்டும்.

SOUL PROTECTION UPDATED

செவி வழி கேட்டு… கண் வழி கவர்ந்து… உயிர் வழி மகரிஷிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான்… இன்றைய உலக விஷத் தன்மையிலிருந்து தப்ப முடியும்

குரு உணர்த்திய அருள் வழியில் எந்த நிலையில் நாம் வாழ்ந்தாலும்… எவ்வளவு தர்மத்தின் சிந்தனையில் இருந்தாலும்…
1.பிறர்படும் கஷ்டங்களையோ
2.பிறர்படும் துயரங்களையோ
3.பிறர் செய்யும் தவறுகளையோ எதையும் கேட்டுணராது நாம் இருக்க முடியாது.

பாலிலே சுத்தமான பாதாமைப் போட்டுச் சத்தாக உருவாக்கி உணவாக அதைக் குடித்தாலும் சந்தர்ப்பத்தால் தீமை என்ற உணர்வினை நுகர்ந்தறிந்தால் அந்த பாலின் சத்து நமக்குள் வளராது அதையே அழித்துவிடும்.

அதே போல் எவ்வளவு சத்து கொண்ட உணர்வை உணவாக உட்கொண்டாலும் வேதனையான உணர்வினை அடிக்கடி சுவாசிக்கும் போது வேதனையின் தன்மை வளர்ந்து… நீங்கள் உணவாக உட்கொண்ட சத்தான ஆகாரத்தையும் அது பலியாக்கி விடும்.

இதைப் போன்ற நிலைகளில்…
1.நம்மைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இன்றைய நஞ்சு கொண்ட உலகில்
2.விஞ்ஞான அறிவால் வெளிப்பட்ட சில விஷத் தன்மைகள்
3.தீமையின் உணர்வாக மனிதருக்குள் விளைந்து விட்டது.

அவ்வாறு விளைந்த உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியாலும் கவரப்பட்டு உலகம் முழுமைக்கும் நஞ்சு கொண்ட அலைகளாகச் சேமித்து வைத்துள்ளது. அதே சமயத்தில் நாம் கேட்டறிந்த அந்த உணர்வுகளை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பதிவாக்கி வைத்துள்ளோம்.
1.அப்படிப் பதிந்து கொண்ட உணர்வுகள்
2.மனிதர்கள் வெளி விட்ட நிலைகளை… அது வளர… அது கவரும்.
3.கவர்ந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் நுகரும் போது
4.அந்த உணர்வின் செயலாகவே நம்மை இயக்கும்.
5.அதனின் சத்து நம் உடலுக்குள் விளைந்து தீமையின் நிலைகளே விளையும். (நோயால் இன்றைய உலகம் அவதிப்படும் நிலை)

ஆகவே இதை அகற்ற வேண்டும் என்றால் தீமையை அகற்றிய அந்த அருள் ஞானியின் உணர்வை நாம் நுகர்ந்தே ஆக வேண்டும். அந்த நுகரும் ஆற்றல் பெறச் செய்வதற்குத்தான் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… நமது குருநாதர் காட்டிய நிலைகளில் இந்த உபதேச வாயிலாக உண்மைகளை உரைக்கின்றோம்… உயிரின் ஆக்கங்களைப் பற்றித் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

அருள் மகரிஷிகள் பெற்ற உணர்வினைப் பெற உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டும் நிலைகளாக இந்த உணர்வினைப் பதிவு செய்கின்றோம்.

இப்படிப்பட்ட உணர்வின் இயக்கத்தால் (உபதேசங்கள் மூலம் https://wp.me/p3UBkg-4BE) அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதியினை ஏற்படுத்தினால்தான் தீமைகளை அகற்றிட முடியும்… உங்களால் சாத்தியமாகும். 
 

தவமோ குண்டலினி யோகமோ மற்ற யோகங்களோ செய்தாலும் இதைப் பெறுவது மிகக் கடினம்.

அந்த மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் அதிகமாச் சேர்த்து… ஒருக்கிணைந்த அதனின் உணர்வின் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்த வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளியுடன் கலக்கச் செய்ய வேண்டும்..

உடல் பெறும் நஞ்சினை அங்கே கரைத்து விட்டு… இந்த வாழ்க்கையில் அறிந்திடும் அறிவின் நிலைகள் நிலைக்கச் செய்து… உயிருடன் ஒன்றி… என்றும் உண்மைப் பொருளாக மெய்ப் பொருளாக ஒன்றி… பிறவா நிலை என்ற பெரு நிலை அடைந்து ஒளியின் சரீரமாக நாம் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

முன்னோர்களின் உயிரான்மாக்களை இப்படி நிலைக்கச் செய்த பின் அவரின் உணர்வைக் கொண்டு நாம் விண்ணை நோக்கி ஏங்கும்போது அந்தச் சப்தரிஷிகளின் அருள் உணர்வை நாம் எளிதில் பெற முடியும்.
1.நம்மை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்
2.இந்த வழி இல்லாதபடி நாம் எதையும் செய்ய முடியாது…!

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி நாம் இதனைச் செயல்படுத்த வேண்டும்.

 நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக வளரக்கூடிய சந்தர்ப்பம் எது..?

நல்லதை விரும்பிக் கேட்க வேண்டும், வேதனையுடன் கேட்கக் கூடாது 

நல்லவர்களுக்குத் துன்பம் வருகிறது, மாற்றிட மகரிஷிகளின் மணங்களைச் சேருங்கள் 

mantra (2)

மந்திர ஒலியை ஒலிக்கக் கூடியவர்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

விஞ்ஞானத்தால் இன்றைய மனிதன் தன் ஞானத்தால் வெகு வேகமாகச் செயல்படுத்தும் இத்தருணத்தில்…
1.மந்திர ஒலியின் யாகத்தால் தன் ஆத்மாவை
2.இப்பூமியின் பிடிப்பலையிலுள்ள ஆவி ஆத்மாக்களின் ஈர்ப்பு சுழற்சியில் சிக்க விட்டுவிடக் கூடாது.
3.ஆலயத்தில் ஆண்டவனை வணங்கும் வழிமுறையறிந்து வணங்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வமுண்டு…!

யாகத்தின் தொடர்பில் மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆலய வழிபாட்டின் உண்மை நிலை என்ன…? தெய்வத்திற்கு ஓதப்படும் மந்திர ஒலியினால் மனிதன் வணங்கும் தெய்வத்திற்கு என்ன பலன்…? மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆத்மாக்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…?

ஒலியின் நாதம் கொண்டு தான் தன்னுடைய இயக்கத்தின் தொடர்புக்கு ஜீவன் பெற வருகின்றது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலில்..
1.மனிதன் தான் வணங்கும் தெய்வ நிலைக்கு ஜீவன் ஏற்படுத்தக்கூடிய தருணத்தில்
2.மனிதனின் முதல் நிலையான “புகழ்…” என்ற
3.பேராசைக் குணம் ஏற்பட்ட காலத்தில் வளர்ந்ததுதான் மந்திரமும் யாசமும்.

இயற்கையின் தொடர்பில் ஜீவ சரீரத்திற்கு வலு ஏற்படுத்திக் கொள்ள இம்மனிதனின் உடலிலுள்ள மின் காந்த ஒலி அலைக்கு மீண்டும் வலுத் தன்மை கூட்டிக் கொள்ளக் கூடிய வளர்ச்சிக்காக மந்திர தந்திரங்களை வடித்துக் கொண்டார்கள் அரசர்கள்.

மாய உருக்களைக் கொண்டு… தன் ஈர்ப்பு வட்டத்திற்கு இவ் ஒலியையும் ஒளியையும்… ஜீவனற்ற ஆத்ம உயிர் அலைகளைத் தன் சரீர ஆத்ம அலையுடன் ஈர்ப்புப்படுத்தி… மந்திரத்தால் அரசர்கள் மாய வித்தைகள் நடத்தினர்.

அத்தகைய சூட்சுமத்தின் முதல் வித்து தான்… யாகங்களை நடத்தி யாகங்களில் பலியிடும் நிலைகள்…!

யாகத் தீயிலே பலியிடக் கூடிய உயிர் ஜீவனின் ஆத்ம ஒலியைத் தன் சரீரத்தின் ஈர்ப்பு வட்டத்துடன் வளர்த்துக் கொண்ட வழித் தொடரில்தான் யாகங்களும் மந்திர ஜெபங்களும் அரசர்கள் ஆண்ட காலம் தொட்டு வளர்ந்து வந்தது.

அரசன் அதற்கென்று குருமார்களை நியமித்த பின்…
1.குருவிற்கு அரசன் அடிமையா…?
2.அரசனுக்குக் குரு அடிமையா..! என்ற தொடரில்
3.இயற்கையின் உண்மைத் தத்துவத்தை ஆரம்பத்தில் சித்தர்கள் காட்டிய இயற்கைத் தொடரில் வளர்க்காமல்
4.இறைவன் என்ற உருவத்தைக் காட்டி…!
5.மனிதன் தன்னைத் தானே அடகு வைத்திடும் நிலைதான்
6.மந்திரமும் தந்திரமும் யாகங்களும் வேள்விகளும் ஆசார அனுஷ்டானங்களும்.

எவ்வொலியின் ஈர்ப்பில் உணர்வின் எண்ணம் செல்கின்றதோ அதற்கொத்துத் தான் ஆத்ம உயிர் ஜீவன் பெறுகின்றது. அவ்வொலியின் தொடர்பு கொண்டுதான் ஈர்ப்பின் தொடர் வலுக் கொள்கின்றது.

இறைத் தன்மை என்பது எங்குள்ளது.. இறைவன் யார்…? மனிதன் யார்…?

மனிதனின் அறியக் கூடிய உயர் ஞானத்தை மனிதனுக்குள் உள்ள உயிர்த் தெய்வம் பிரிந்ததென்றால் இவ்வுடல் அழியக் கூடியதுதான்…!

இந்தத் தத்துவத்தை தன்னுள் அறிந்த மனிதன் “தான் யார்…?” என்பதை உணராமல்… கலியின் செயலில் தெய்வமென்ற உணர்வில் ஆத்மாவை அடகு வைக்கும் வழித்தொடரிலேயே இன்று உலகம் செல்கின்றதப்பா…!

ஆனால்…
1.மெய் ஞானத்தின் உண்மையின் தத்துவத்தை உணரக்கூடிய பக்குவம்
2.இஜ்ஜீவ சரீரத்தில் இவ் உயிராத்மா இயங்கக்கூடிய காலம்தான் என்பதை உணர்ந்து
3.ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்.

hybrid agastyar

“அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உருவான மரபணுவை” நாம் எல்லோரும் பெற வேண்டும்

தீமைகளை எல்லாம் அகற்றி… பேரொளியாக மாற்றிய அகஸ்தியன் துருவனாகி… துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபின் அணுவை நாம் ஒவ்வொருவரும் நுகர்ந்து பழக வேண்டும்

1.அந்த மரபணுவின் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி
2.பகைமையை மாற்றிப் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும் என்று
3.ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

இந்தப் பேருண்மையைத் தான் விநாயகர் தத்துவமாகக் காட்டினான் அன்று அகஸ்தியன். அந்த மரபணுக்களை நாம் எல்லோருமே பெற முடியும்.

இதை நிலை பெறச் செய்வதற்குத் தான் “துருவ தியானம்” என்றும் “பௌர்ணமி தியானம்” என்றும் வழிப்படுத்தியுள்ளோம்.

அந்தத் தியானத்தின் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து நஞ்சினைக் கரைத்துவிட்டு அவர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் “உயிர்” என்ற நிலைகள்… “ஒளி” என்ற உணர்வின் அறிவாகத் தெரிந்து கொண்ட பின் தீமைகளை எல்லாம் கரைத்துவிட்டு உணர்வை ஒளியாக மாற்றும் நிலையை அங்கே பெறச் செய்ய வேண்டும்.

நம் மூதாதையர்கள் அங்கே ஒளியாகச் செல்லப்படும்போது “நம்மைக் காத்திட வேண்டும்…” என்ற அந்த மரபணு நம் தீமைகளை எல்லாம் அகற்றி நம்மைக் காக்கும்.

1.அதே மரபணுவை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு நாம் ஏங்கும் போது
2.பேரருள் பேரொளி என்று பாசத்துடன் பற்றுடன் வளர்ந்த அந்த உணர்வுகளை
3.நாம் எளிதில் பெற முடியும்… அந்தத் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

ஆனால்… சாங்கிய சாஸ்திரப்படி உடலை விட்டுப் பிரிந்தவர்கள் சுட்ட சாம்பலைக் கரைத்துவிட்டு “மோட்சத்திற்கு அனுப்பிவிட்டேன்” என்று விநாயகர் கோவில் போய் “மோட்சத் தீபம்” காட்டுவதற்கல்ல.

ஒளியான மரபணுக்களைப் பெறுவதற்குத் தான் அன்று விநாயகத் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள். மனிதனாக வாழும் போது சந்தர்ப்பத்தால் வந்த பகைமை உணர்வுகளை அகற்றிவிட்டு ஒளி என்று உணர்வினை உருவாக்கி… ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளான் அகஸ்தியன் “துருவ நட்சத்திரமாக..”

அதை நாம் அனைவரும் இதை எளிதில் பெற முடியும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெற முடியும். மனிதனுக்குள் வரும் இருளை அகற்ற முடியும். மெய்ப் பொருள் காண முடியும். இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

உபதேச வாயிலாக ஏதோ சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்…!

1.உணர்வின் அழுத்தத்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகரச் செய்து
2.அந்த மகரிஷிகள் அருளாற்றல்களை உங்களுக்குள் இணையச் செய்கின்றோம்.

அதை நீங்கள் ஏங்கிப் பெற்றால்… நினைவு கொண்டு மீண்டும் மீண்டும் அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் வரும் பகைமையை மாற்றி பேரருள் என்ற உணர்வை ஊட்டி… “இனி பிறவியில்லை” என்ற நிலையை அடையலாம்.
1.குடும்பத்தில் பற்றும் பண்பும் ஓங்கி வளர்க்கச் செய்யலாம்.
2.பரிவுடன் ஒன்றி வாழச் செய்யலாம்
3.பரிவான நிலைகளில் வாழவும் முடியும்
4.பரிவால் வரும் தீமைகளை அகற்றும் வல்லமையும் பெறுகின்றீர்.

குருநாதர் கொடுக்கும் “கோடி…கோடி..” என்ற ஒளியான உணர்வின் ஆற்றல் எபப்டிப்பட்டது…?

தியானத்தின் மூலம் நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகள் அருள் சக்தியின் வலு எப்படிப்பட்டது… நடந்த நிகழ்ச்சி

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “கோடி… கோடி… கோடி…” என்று அடிக்கடி சொல்வதன் உட்பொருள் 

self trust and confidance

மனிதன் என்ற உயர்ந்த வித்திலிருந்து… எடுக்க வேண்டிய பலன் எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இயற்கையில் அமிலத்தின் ஒளி பெற்று மண்டலக் கோள்களின் ஈர்ப்பு வட்டத்தில் பூமியின் நட்சத்திரக் கோள்களின் அமில வளர்ச்சியால் உருவானது தான் இவ்வுயிர் ஆத்மாக்கள்.

அவை வளர்க்கக் கூடிய வளர்ச்சியும்… உருவான அந்தத் தொடர் நிலையின் வழித் தொடரில்தான் வளர்த்துக் கொள்ள முடியுமேயன்றி
1.வளர்ச்சித் தொடருக்கு எதிர்ப்பு நிலை ஏற்படும் பொழுது
2.வளர்ச்சியின் உருமாறக்கூடிய தன்மை தான் வளர்ப்பில் காண முடியும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையின் ஜீவ வித்தின் பலன் நிலையே… மனிதனின் உயர் ஞான ஒளி சக்தி பெறக்கூடிய… “தெய்வ நிலை தான்…”

எந்த வித்தின் தொடரிலும்…
1.ஒரு பயிர் வளர்ந்து அதனின் பலன் தந்தாலும்…
2.அந்தத் தொடரின் மகசூல் பலவாகப் பெருகும் பக்குவத்தில்தான் பலவும் நடைபெறுகின்றன.

அத்தொடரின் தொடரில் தான்… ஆதி மனிதனின் உணர்வில் மனித உரு எண்ண வளர்ச்சி ஞானம் கொள்ளும் உயர்வு நிலை…. மனித வித்தின் உணர்வின் உயர் மண்டலமாம் பூமி மண்டலத்தில் உருவான மனிதச் செயல்.

இருந்தாலும் இதிலே மனிதன் வளர்ச்சி கொண்டு வாழும் காலம் மிகக் குறுகியதுதான்.

ஓர் விதையை நாம் விதைத்து… அந்த விதை வளர்ந்து செடியாகி.. மரமாகி… பக்குவம் பெற்றுப் பலனாய் அதனுடைய மகசூல் திரும்பிப் பெறக்கூடிய காலம் நீண்ட நாட்களாகி விடுகின்றது.

அதைப் போன்று தான் இப்பூமியும் வளர்ந்து வந்தது.

அதனுடைய வளர்ச்சியின் பக்குவ முதிர்வு நிலைக்குப் பிறகு… வளர்ச்சியின் பயனாய் மனித உணர்வின் உயர் ஞானம் கொண்டு செயல்பட்ட காலம்தான்… பூமி வித்தின் பலன் கண்ட காலம்…!

கண்ட பலனை… மீண்டும் பயிராக்கினால்தான் பலனின் தொடர் வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஓர் மரம் பலன் தரும் காலங்கள் முடிந்து… அம்மரத்தின் வளர்ச்சியை ஒத்து… மரத்தின் முதிர்வைக் கொண்டு பட்டுப் போன பிறகு… அம்மரத்தின் விதைகள் பல கோடியாய் வளர வைக்கக் கூடிய பயனை அம்மரம் தருகின்றது.

அப்படித் தந்ததை விரையமாக்காமல் வளர்க்கும் வளர்த் தொடர்ச்சியைப் போன்று தான்
1.இப்பூமியின் வித்தின் தொடரில் விதையான நம் ஆத்மாவும்
2.மீண்டும் பல வித்துக்களை வளர்க்கக்கூடிய விதையாகும் பக்குவத் தொடரில் வளர வேண்டும்.

மனிதனுடைய எண்ணத் தொடர் தன்னைத் தானே தான் உணர்ந்து… இயற்கையின் ஒலி ஒளித் தொடர் கொண்டு உயர் ஞானத்தை அறியும் உண்மைத் தத்துவ ஞானியாய் உயர்ந்திட வேண்டும்.

தன் ஆத்ம உயிரின் ஜீவ காந்த மின் தொடருக்கு…
1.இக்காற்றலையில் கலந்துள்ள மகரிஷிகளின் ஒளி அலைகளை
2.தன் உயர்வின் எண்ணத்தால் நுகர்ந்தெடுக்கும் தியான வழி கொண்டு
3.இஜ்ஜீவ ஒளியின் ஒளி நாதத்தால் மனிதன் தெய்வ நிலை பெற வேண்டும்.

Curse protection

தியான வழியைக் கடைப்பிடிப்போர் சீர்படுத்திக் கொள்ள வேண்டிய முக்கியமான உணர்வுகள்

தியான வழியைக் கடைப்பிடித்து வரும் அன்பர்களும் உலகை ஒத்து வரப்படும்போது சுற்றி இருப்பவர்களுடைய தவறான செயலைக் கண்டு வேதனைப்படுகின்றனர்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் திருந்த வேண்டுமென்ற எண்ணங்களை எண்ணிச் செய்வதில்லை.

1.தான் உண்மைகளை எல்லாம் அறிந்தும்
2.தான் சொல்லியும் கேட்காமல் பிழைகளைத் தான் செய்கின்றார்கள் என்ற
3.வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றதே தவிர
4.தவறு செய்வோர் உண்மைகளை அறிய வேண்டும்… மூலக்கூறுகளை அறிய வேண்டும்…
5.மூலத்தை அறிந்து சரியான பாதையில் அவர்கள் செயல்படவேண்டும் என்ற
6.தன் எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றனரா…? என்றால் இல்லை…!

காரணம்… சாங்கிய உணர்வுகள் வளர்த்துக் கொண்ட வழியின் துணை கொண்டே
1.பிறர் செய்யும் செயல்களைக் குறைவாக எண்ணி
2.குறை… தவறு… என்ற நிலைகள் கொண்டு
3.தன்னைப் பலவீனப்படுத்தும் வேதனை உணர்வைத் தான் வளர்க்க முடிகின்றது.

ஆனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேசித்து அந்த ஞானிகளின் அருள் உணர்வின் தன்மையை உங்களுக்குத் தெளிவாகக் காட்டிக் கொண்டே வருகின்றோம்.

அதனை வலுக் கொண்டு எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றோம்.

பிறர் செய்யும் தவறின் உணர்வுகள் வேதனை என்ற நிலைகளாக உங்களுக்குள் புகுந்து அது தீமை விளைவிக்காதபடி பாதுகாக்க “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தையும் முறைப்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இத்தனையும் வாக்காக உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். பதிந்த உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் நினைவு கொள்ளும்போது
1.உங்களை அறியாது வந்த தீமைகளை நீங்களே அகற்ற முடியும் என்ற
2.தன்னம்பிக்கை கொண்டு வளர்க்கவும் செய்கிறோம்.

இத்தனையும் யாம் செய்தாலும் அவரவர்கள் வளர்த்துக் கொண்ட உணர்வின் வினையே அது வலுப்பெற்ற நிலைகள் கொண்டு இயங்கி
1.தன்னைச் சீர்படுத்தும் நிலையே மாறி
2.தியான வழியில் உள்ளோரும் இதிலே சிக்குண்டு
3.மீளும் நிலையே இல்லாது தவிக்கும் பலர் உண்டு.

“ஒரு சிலரே” இதனின் உணர்வை உணர்ந்து… அறிந்து…
1.தீமைகளை அகற்றிடும் உணர்வினை வலுப் பெற்று
2.தன்னுள் தீமை நாடா நிலையும்
3.தன்னைச் சார்ந்தோருக்கும் தீமைகள் நாடாதபடி சொல்வாக்கு கொண்டு பதியச் செய்து
4.வளர்ந்து கொண்டுள்ள அப்படிப்பட்ட தியான வழி அன்பர்களும் உண்டு.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம்…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பிறர் படும் கஷ்டமோ பிறர் செய்யும் குறைகளையோ அதை எல்லாம் நாம் முதலிலே தெரிந்து கொண்டோம்… அறிய முடிகின்றது. இருந்தாலும்…
1.இனி நாம் தெரிய வேண்டியது என்ன…? என்பதைத் தெளிந்து
2.இந்த வாழ்க்கையைப் புரிந்து இருள் சூழும் நிலைகளிலிருந்து விடுபட்டு
3.இருளைப் பிளந்து பொருள் காணும் உணர்வினை நமக்குள் வளர்த்து
4.என்றென்றும் மெய்ப் பொருளாக அந்தப் பொருள் கண்டுணரும் நிலையும்
5.நஞ்சினை பிளந்திடும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் சக்திகளை நமக்குள் வளர்க்க முடியும்… வளர்க்க வேண்டும்…!

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கே இதை எல்லாம் தெளிவாக்குகின்றோம்.

உடலில் நோய் வரக் காரணமும் நோய் வராது தடுக்கும் வழிகளும்

பிறருடைய நோயை நாம் எப்படிப் போக்க வேண்டும் 

அரளிப் பூவின் மருத்துவ குணங்கள் 

secrets of soul

ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனித உணர்வின் சூட்சுமத்தை… “மனிதனே அறியக்கூடிய ஒளி சக்தி வளரும் சுயநலச் செயலினால்தான்…” பொதுநலனின் பரிமாணத்தை விரிவுபடுத்த முடியும்.

மனிதனுக்குகந்த வீரிய மின் காந்த ஒளி சக்தி மிருகத் தன்மையின் சரீர இயக்கத்தில் அதிகப்பட்டிருந்தாலும் உணர்வின் செயலைப் பக்குவப்படுத்தக்கூடிய தன்மை அவைகளுக்குக் குறைவு.

ஆகவே “மனித எண்ணத்திற்குத்தான்” பகுத்தறிவின் சூட்சும ஒளியை வளர்க்கும் தன்மை… இப்பூமியின் சூட்சுமமுடன் வளர்ந்த “ரிஷிகளின் செயலினால் செயல்படுகின்றது…!” ஒன்றின் வளர்ச்சியில் ஒன்றின் பக்குவத்தால்.

மிருகங்களுக்குப் பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதனை ஒத்து இருப்பதில்லை. ஆனால் மிருகங்களும் இப்பூமியின் ரிஷிகளின் சூட்சுமத்தில் வளர்க்கப்பட்ட இறை சக்தி தான்.

அவைகளுக்குக் கழிவும் உணவும்… ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தாலும் மனிதனை ஒத்து அருவருப்பு… நாணம்… முதலியன மிருகங்களுக்கு இருப்பதில்லை.

மனிதனின் பகுத்தறிவால் தனக்குகந்ததை உயர்ந்ததாய்ப் பெற்று மகிழக் கூடிய பக்குவம் கொண்ட செயல் வளர்ச்சி வீரியம் பெற்ற ஜீவ இறையருளின் உன்னதத் தன்மை கொண்டவன்.

தாவரங்களும் மிருகங்களும் மனிதனும் இப்பூமியின் இறை சக்திகள் தான்.
1.இறை சக்தியே இறையுணர்வு பெற்று
2.இறைத் தன்மையில் பக்குவப்படுத்தக்கூடிய குணம் தான் தெய்வ குணம்.

இப்பூமியில் ஆரம்ப மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய மனித வாழ்க்கைக்கும் நிறைய மாற்றங்கள் உண்டு. மனிதத் தேவைக்குகந்த உணவு… உடை… இருப்பிடம்… ஒவ்வொன்றிலும் தன் ஞானத்தால் மனித வாழ்க்கையின் வசதிக்குகந்த பக்குவத்தை மனிதன் இன்று பல வகையிலும் வளர்த்துக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இச்சரீர சுகத்தின் தேவையில் வளர்ச்சியுற்ற மனிதன் ஆத்ம தேவையின் பக்குவத்தை… இறை குணத்தின் வளர்ச்சியை வலுக்கூட்டும் தெய்வத் தன்மையால்… இக்கலியின் மாற்றத்தில் கல்கியில்…
1.இன்றைய மனிதனைக் காட்டிலும்
2.மனித எண்ணத்தின் வீரியத்தின் தெய்வத் தன்மையால்
3.மனிதன் “பறக்கும் நிலை” கொண்ட உயர்ந்த செயல் நிலைக்கு வர முடியும்.

ஒன்றைப் பக்குவப்படுத்தி அப்பக்குவத்தின் பொருளை எப்படி நமக்குகந்ததாக ஏற்படுத்தி சரீர வாழ்க்கையில் இன்பத்தைக் காண்கின்றோமோ அதைப் போன்று… ஆத்மாவின் பக்குவத்தில் அகிலத்திலும் கலந்துள்ள ஆதி சக்தியின் செயல் சக்தியில் “உயர்ந்த தன்மையான சூட்சும ஒளியால் ரிஷி சக்தியை மனிதன் பெற முடியும்…”

மனிதனின் ரிஷி சக்தியைக் கொண்டுதான்… மூவுலக சக்தியான “ஆக்கல் காத்தல் மாற்றல்” என்ற வழித் தன்மையில்… வளர்ச்சியில் வளரும் அண்டக் கோள்களில்… பால்வெளி மண்டலத்தில் எண்ணிலடங்கா இறை சக்தியில் இறையுணர்வாகும் தெய்வ சக்தியில்… ஆண்டவன் என்ற படைப்பின் தன்மைக்குச் செயல் கொள்ளும் ரிஷித்தன்மையால்… அந்தந்த அமிலத்தின் உருத்தன்மையில் உருவாகும் உயிர்த் தன்மையில் பக்குவம் கொள்ளும் படைப்பின் ஒளித் தன்மையை… ரிஷித்தன்மையின் ஒளித் தன்மையால் தனக்கொத்த செயலுக்கு மண்டலங்களை உருவாக்கி… உருவின் உருக்களை உணரும் வளர்ச்சியைத் தன் வலுவாக்கி… அண்டக் கோள்களையும் படைக்கும் ரிஷிகளால்… படைப்பின் பலனாய்ப் பக்குவப்படுத்தப்பட்ட உணர்வின் தெய்வ குணத்தின் “ஆண்டவனாக்கும்” வழிச் செயல்தான்… “அண்டத்தின் சூட்சுமத்தில் ஆதி சக்தியின் உண்மைச் சக்தி – உருப்பெறும் நிலை…!”

இச்சரீரத்தின் உணர்வை… “மின் காந்த ஒளி சக்தியை” இப்பூமியின் பிடிப்பில் இச்சரீர வாழ்க்கையில் அடையும் சுகத்தால் உணர்வின் எண்ணம் ஆத்மாவை வளர்க்க உதவாது.

இச்சரீரத்தை இப்பூமியின் பிடிப்பிற்கு அடகு வைக்கும் மனித உணர்வினால் அடையப் போகும் நன்மை எதுவுமில்லை…!

ரிஷிகளின் சக்தியால் பல கோடி ஆண்டுகளாய் பலவற்றில் வளர்ந்து வலுவாகி உள்ள இவ்வுயிராத்மாவை… ஆத்ம உயிரின் வீரியத்தின் உண்மையை உணரும் எண்ணத்தில்.. மனிதன் தன்னைத் தானே உணரும் பக்குவத்தால்… ஆத்ம உயிரின் சுயநலத்தைக் கொண்டு பொது நலத்தை வளர்க்கும் சூட்சுமத்தை உணர முடியும்.

தான் உண்ணும் உணவிற்கு…
1.நெல்லை எடுத்து அதிலுள்ள உமியை ஊதிப் பிரித்து விட்டு
2.மணியை (அரிசி) எடுத்துப் பக்குவப்படுத்தி உண்ணும் மனிதன்
3.தான் எடுக்கும் எண்ணத்தின் உணர்வைப் பக்குவமாக்கி
4.ஆத்மாவின் ஒளியை வளர்க்கும் தன்மை ஏன் பெற முடியாது…?

தன்னில் உள்ள இறைத் தன்மையை… தெய்வமாக்கும் நற்குணம் கொண்ட பக்குவத்தால்
1.ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறைதான்
2.இங்கே உணர்த்தப்படுவதன் சக்தி நிலையின் உண்மை நிலை.

Bluish violet Poari rays

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தீமைகளை அகற்றலாம் என்று அறிந்த பின்னும் அதை எடுக்கவில்லை என்றால் அது நம் குற்றம் தான்

 

சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த ஒரு தீமையான உணர்வின் தன்மை இரத்தத்திலே கருவாகி அணுவாகும் போது அந்த அணுக்கள் உணர்ச்சியைத் தூண்டி தன் உணவுக்காக அது ஏங்குகின்றது.

அப்பொழுது நம்மை இயக்குவது யார்…?

நம்மை அறியாது நுகர்ந்த அத்தகைய உணர்வின் அணுக்கள் விளைந்த பின் தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டி தன் இனமான உணர்வலைகளைக் காற்றிலிருந்து நுகர்கின்ரது. அதுவே நமக்கு மன நோயாகி உடல் நோயாக அதிகமாகப் பெருக்குகின்றது.

இதைப் போன்ற கொடுமையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும் என்பதற்குத்தான் தீமைகளை அகற்றிய அகஸ்தியனின் அருள் உணர்வுகளை இங்கே உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

அகஸ்தியன் துருவனான்… திருமணமான பின் கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றானார்கள். ஒளியின் சரீரம் பெற்றார்கள். துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

இதை நமது காவியத் தொகுப்புகள் கூறினாலும் காலத்தால் மறைந்து விட்டது. இப்பொழுது நமது குருநாதர் ஈஸ்வரபட்டரால் அறியும் பருவம் பெற்றோம்.

1.குரு வழியில் இதை எல்லாம் அறிந்த பின்னும்
2.நம் வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளைத் துடைக்கத் தவறினால்
3.இது நமது குற்றமே ஆகுமே தவிர வேறு யாருடைய குற்றமாகாது…!.

நல்ல குணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிட அதைக் கேட்டறிந்து நாம் உதவி செய்தாலும்… தெய்வப் பண்போடு நாம் நடந்தாலும்…
1.நாம் நுகர்ந்த தீமை என்ற உணர்வுகளைத் துடைக்காது நாம் சென்றோம் என்றால்
2.சுவை இருக்காது… உணர்வுகள் மாறும்… மனம் மாறும்… நம் நல்ல குணங்கள் வலிமை குறையும்.

நிலக் கடலைப் பருப்பு இருக்கின்றதென்றால் தோடை (தோல்) உறிக்காமல் உட்கொண்டால் அதனின் சுவை மாறும்.

ஆடு மாடுகள் அதை அப்படியே சாப்பிடும். ஆனால் நாம் கடலைப் பருப்பைப் பாதுகாக்கும் அந்தத் தோடுடன் உட்கொண்டால் நம் உடலுக்குள் கடும் தீமையே உருவாகின்றது.

தோலை அகற்ற வேண்டும் என்று தெரிந்தும் தெரியாத நிலைகளில் உட்கொண்டால் என்ன ஆகும்…?

அதைப் போன்று தான் “தீமை வருகிறது” என்று தெரிந்தும்
1.வாழ்க்கையில் அதை (கோபம் வேதனை சலிப்பு சங்கடம்) அகற்றத் தவறினால்
2.நமக்கு நாமே… உயிரான ஈசனை… அந்த உருவாக்குபவனை… அவமதிக்கின்றோம் என்று தான் பொருள்
3.ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலை மதிப்பதில்லை என்று தான் பொருள்
4.மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை பாதுகாக்கத் தவறுகின்றோம்…! என்ற நிலை தான் வரும்.

மனிதனின் வாழ்க்கையில் இப்படி மாறிக் கொண்டே உள்ளது.

உடல் நோயாகி… வேதனைப்பட்டு… மனித உணர்வுகள் சீர்குலைந்தால்… சீர்குலைத்து உணவாக உட்கொள்ளும் மிருக நிலையாக மீண்டும் உயிர் உருவாக்கிவிடும் என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.

ஆனால் இதைப் போன்ற நோய்களை எல்லாம் நீக்கியவன்… உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன்… துருவ நட்சத்திரமாக உள்ளான் என்று
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் செவி வழி ஓதப்பட்டு
2.அந்த உணர்ச்சிகளை கண் கொண்டு உற்றுப் பார்க்கச் செய்து
3.தீமைகளை அகற்றும் வல்லமைப் பெற்ற அந்தச் சக்திகளை
4.ஊழ்வினையாக… வித்தாகப் பதிவு செய்கின்றோம்…!

உங்கள் வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமையைப் பார்க்க நேருகின்றதோ அப்போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டுமென்று அடுத்த கணமே உயிரான ஈசனிடம் வேண்டி புருவ மத்தியில் எண்ணி தீமையின் உணர்வுகள் அதிகம் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.

உப்பு கைப்பாக இருப்பினும் குழம்புக்குள் அதைச் சிறுக்கப்படும்போது சுவையாகின்றது. காரம் உணர்ச்சியை அதிகமாகத் தூண்டினாலும் “ஆ…” என்று அலறச் செய்தாலும் குழம்புக்குள் அந்த காரத்தின் உணர்வுகளைச் சமப்படுத்தும்போது சுவையாக ஆகின்றது

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் கண்டாலும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை உடலில் பெருக்கிக் கொண்டு
1.எந்தத் தீமையான செயலாக்கங்களும் வீரியமாகாது
2.வீரியமான அணுக்களாக உடலுக்குள் மாற்றிடாது
3.அருள் ஞானத்தின் உணர்வை நமக்குள் மீண்டும் மீண்டும் நுகர்ந்து
4.அந்தத் தீமையான உணர்வுகளை நமக்குள் அடிமையாக்குதல் வேண்டும்.

இதைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் கையில் அங்குசத்தைப் போட்டுக் காண்பித்து “அங்குசபாசவா…” என்று காட்டினார்கள் ஞானிகள். எத்தகைய தீமைகள் வந்தாலும் நாம் அதை அடக்கும் வல்லமை பெற்றவர்கள் என்று உணர்த்துகின்றனர்.

உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சினை அடக்கி அந்த நஞ்சினை மலமாக நம் உடல் மாற்றுகின்றது.

இதைத் தான்… நஞ்சு அறிந்த பின் அதை அடக்க வல்லமை பெற்றது மனித ஆறாவது அறிவு என்று தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நமது குரு அருளைப் பெற வந்த நீங்கள் அவர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வைப் பெற அந்த உணர்வினை நுகரச் செய்து அந்த அணுவின் தன்மை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

இந்த உபதேசத்தின் வாயிலாக தீமையென்ற அணுக்களைத் தணியச் செய்து மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டச் செய்கிறோம். தீமையை அகற்றிடும் வல்லவர்களாக நீங்கள் ஆக வேண்டும்.

1.மேலும் மேலும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்று
2.மேலும் மேலும் பேரருள் என்ற நிலைகளைத் தனக்குள் பெற்று
3.மேலும் மேலும் பேரொளி என்ற உணர்வை உருவாக்கி
4.இந்த மனித உடலுக்குப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

அத்தகைய தருணத்தைத் தான் உருவாக்கிக் கொடுக்கின்றோம். இதை வளர்த்துக் கொள்ளும் பொறுப்பு உங்களுடையது…!

புருவ மத்தியில் நிலை நிறுத்த வேண்டியது எதை…?

நம் ஆன்மாவைச் சுத்தம் செய்யும் “ஆத்ம சுத்தி” – செயல் முறை 

நான் (ஞானகுரு) கொடுப்பதை நீங்கள் எண்ணி எடுத்தால் தான் அந்தச் சக்தி உங்களுக்குள் வளரும் 

Third eye glow opening

இறை தெய்வமான “உயிர் தெய்வத்தை ஒளிர வைக்க வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.என்னுள்ளே நான்… என்ற நிலைக்கொப்ப
2.தன்னுள்ளுள்ள தன் உயிராத்மாவை
3.தன்னை இயக்கும் எல்லாமில் எல்லாமாய்ப் படர்ந்துள்ள இறை உயிரை
4.தன்னுள்ளுள்ள உயிர்த் தெய்வத்தைத் தான் வளர்க்க
5.இச்சரீரத்தைப் பதராக்கி உயிரை மணியாக்க
6.ஜீவ வளர்ச்சி ஓட்டத்தில் வளரும் காலத்தில்
7.வளர்ச்சியின் முதிர்வு நிலை முற்றிய பிறகு மணியைப் பிரித்து
8.”என்னுள்ளே நான்…” என்ற இறை தெய்வமான உயிர்த் தெய்வத்தை ஒளிர வைக்க முடியும்.

ஜீவ உணர்வின் எண்ண சரீரம் ஆத்ம உயிருக்கு உயர்வு நிலையின் எல்லாவற்றையும் கடந்து ஒளி சக்தியின் தெய்வநிலை பெறத்தக்க வழிக்கு வளர்க்கும் செயல் சரீர உருநிலை.

நெற் பயிர் வளர்ந்து முதிர்ந்து மணியை வெளிப்படுத்துவதைப் போன்று இவ்வுயிராத்மா உடலில் இயங்கும் பொழுதே.. “இவ்வுடலைச் சக்கையாக்கி உயிரை மணியாக்கி வளரும் பக்குவத்திற்கு” நாம் வருதல் வேண்டும்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள எண்ணத்தின் ஞானத்தை ஒன்றை அறியக் கூடிய வளர்ச்சியை உயர்ந்த எண்ணத்தில்

இப்பூமி பிற கோள்களின் துணை கொண்டு சுழன்று கொண்டே ஓடிக் கொண்டே உள்ள ஓட்டத்தில் பிற கோள்களின் தொடர்பு கொண்டு தான் வளர்ந்து வளரக்கூடிய நிலை பெற்றது.

இந்தப் பூமியின் மண்டல ஓட்டத்திற்கொப்ப…
1.இப்பூமியில் வளரக்கூடிய நம் உயிராத்மாவையும் ஓர் மண்டலமாக உருவாக்கக் கூடிய தன்மைக்கு
2.எதையும் வளர்க்கவல்ல எண்ணத்தின் சைவ சித்தம் மனிதனின் உணர்வில் இருக்க வேண்டும்.

“மனிதனின் எண்ணம் தான்” வீரியம் கொண்டு இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் ஒன்றை வளர்க்கவும் அழிக்கவும் செயல் கொள்கின்றது. எதையும் சாதிக்கவல்ல சக்தி மனித ஆற்றல் திறமைக்கு உண்டு.

மனிதன் தெய்வமாகக் கூடிய வழி முறைக்கு எண்ணத்தைச் செலுத்தி இப்பூமிப் பிடிப்பின் இறுக்கத்திலிருந்து இப்பூமியின் சுழற்சியிலிருந்து விடுபடலாம்.

விஞ்ஞானிகள் இன்று தன் ஞானத்தால் கண்டுபிடிக்கும் விஞ்ஞானக் கருவிகளினால் வான மண்டலத்தில் உள்ள இரகசியங்களையும் ஒவ்வொரு கோள்களில் உள்ள உண்மைகளையும் அறிந்து பூமியில் மனித ஆத்மாக்களுக்கு வேண்டிய வளர்ச்சிக்கு மனித அறிவின் ஆற்றலை விஞ்ஞானத்தில் பெருக்க முயற்சிக்கின்றார்கள் அல்லவா..!

அந்தத் திறனைப் போன்று மனிதனும் தன் உயிராத்மாவைப் பிற கோள்களில் எண்ணத்தைச் செலுத்தி
1.அவ் எண்ணத்தின் தொடர்பை இச்சரீர உணர்வுடன் எடுக்க எடுக்க
2.இச்சரீரத்திலுள்ள உயிரணுக்கள் யாவையுமே எவ் அமிலத்தை இச்சரீர உணர்வுடன் அதிகமாக எடுக்கப் பழகிக் கொள்கின்றதோ
3.அத்தொடரின் வலுத் தன்மையால் இச்சரீரம் சக்கையாகி
4.ஆத்ம உயிர் தனித்துச் செயல்படக் கூடிய வளர்ச்சியால் இச்சரீரம் ஒளிச் சரீரமாகி
5.மற்ற ஈர்ப்பின் பிடிப்பில் இவ்வுயிராத்மா சிக்காமல் ஒளி நிலை பெறுகின்றது.

எவ்வித்து வளர்ந்தாலும் அவ்வித்தின் தொடர் அதனதன் ஜீவ வளர்ச்சியில் பலவாகப் பலன் தருகின்றது. மனித சரீரத்தின் வித்தின் உண்மைப் பலன் தன் பிறப்பில் பிறக்கக்கூடிய ஜீவ குழந்தைகள் மட்டுமல்ல… மனித சரீரத்தில் இம்மனிதனாய் ஆத்ம உயிர் ஜீவன் கொண்டு வளர… “பல கோடி கோடி ஜீவ அணுக்கள்” இச்சரீரத்தில் வளர்கின்றன.

ஓர் நெல் செடியாகி அதனின் பலனில் பல நெல்களைத் தருகின்றது. அதைப் போன்று
1.இச்சரீரத்தை இயக்கும் உயிராத்மாவை வித்தாக்கி
2.உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வித்தின் பலன்களாக
3.உயிரின் பருமனை ஒளியாக்கக் கூடிய உயிர் காந்த வளர்ச்சிக்குப் பக்குவப்படுத்துவதுதான்
4.தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய உயர் ஞானத்தின் மனோ வேகத்தை
5.மகரிஷிகள் காட்டிய சைவத்தின் சித்த குணமான நற்குணத்தைச் சம உணர்வுடன் கூடிய எண்ணத்தில் பக்குவபடுத்தி
6.மின் காந்த சக்தியை இச்சரீரம் எடுக்கும் வழிமுறையில்
7.இவ்வுயிராத்மா இவ்வுடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களையும் பலனாக எடுத்து
8.தன் வளர்ச்சியின் வீரியம் பெற முடியும்.

தனக்குள் உள்ள உணர்வின் எண்ணத்தில் இருந்துதான் மனிதன் சக்தியைக் கூட்டி உயர்வு நிலைக்குச் செல்ல முடியும். இதனை உணர்ந்து பக்குவ முறையில் ஒவ்வொருவரும் பலன் பெறலாம்.

gnanaguru upadesams

ஒவ்வொரு நாளும் நமக்குள் நல்ல உணர்வுகளின் வளர்ச்சி கூடுகிறதா என்று பார்க்கின்றோமா…?

ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து இரவு வரை எத்தனையோ பேரை நாம் பார்த்திருப்போம். நோயாளிகளைப் பார்த்திருப்போம்… சண்டை போட்டவர்களையும் பார்த்திருப்போம்.

நோயுற்ற உணர்வுகளையும் சண்டை போட்ட உணர்வுகளையும் நுகர்ந்து அதை நம் உடலுக்குள் உருவாக்குகின்றோம்… அதாவது சதா சிவமாக்கிக் கொண்டே இருக்கின்றது நமது உயிர். (சிவம் என்றால் உடல்)

ஆனால் இதை மாற்றுவதற்கு நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…? அந்த அருள் ஞானியின் உணர்வைச் சிவமாக்க வேண்டும். இதைப் பழகுதல் வேண்டும்.

காலையில் விழித்தவுடனே “ஈஸ்வரா…!’ என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் வலுப் பெறச் செய்ய வேண்டும்.

என்னடா…! சாமி (ஞானகுரு) திரும்பத் திரும்பச் சொல்கின்றார் என்று நினைக்க வேண்டியதில்லை. யாம் சொல்வதைத் திருப்பிக் கேட்டு என்ன சொன்னேன்…? என்று கேட்டால் தலையைச் சொறிவீர்கள்.

ஆனால் நான் திரும்பச் சொன்னால்… அப்போது சொன்னதைத் தான் இப்பொழுதும் சொல்கின்றார்… திரும்பச் சொல்வதுதான் இவருக்கு (ஞானகுரு) வேலை போலிருக்கிறது என்று எண்ணுவீர்கள்…!

இராமயாணத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் வருடம் தோறும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதிலே எதாவது மாற்றிச் சொல்கின்றார்களா…? இல்லையே…!

இராமாயணத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்…
1.அந்த ஞானிகளின் உணர்வின் தன்மையைத் திரும்பத் திரும்பச் சொன்னால்தான்
2.உங்கள் உடலில் அந்த அணுக்களின் பெருக்கமாகின்றது.

பல உணர்வுகளில் நீங்கள் இருக்கும் பொழுது ஒரு இரண்டு தடவை சொன்னால் இது மறைந்துவிடும். ஏனென்றால் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…?

அவன் அப்படிச் செய்தான்…! இவன் சொன்னபடி கேட்கவில்லை எதிர்க்கின்றான்…! இங்கே உடம்புக்குச் சரியில்லை…! என்று
1.எத்தனையோ வேதனைப்படும் உணர்வை ஒரு நாளைக்கு நூறு தடவை சொல்கின்றீர்கள்
2.நல்லது செய்வதை ஒரு தடவை அல்லது இரண்டு தடவை சொன்னால் பற்றாதே… இது அழிந்துவிடுமே…!
3.அப்போது எங்கிருந்து மாற்றுவது…?

ஒரு அழுக்குத் தண்ணீருக்குள் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்றத் தான் அது தெளிவாகிக் கொண்டே வருகின்றது

அதைப் போன்று தான் நீங்கள் எத்தனையோ சங்கட உணர்வுகள் கொண்டிருக்கும்போது…
1.மீண்டும் மீண்டும் அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வை
2.உங்களுக்குள் செலுத்தச் செலுத்தத் தான்…
3.அந்த உணர்வை வலுப்பெற கூடிய நிலையே வருகின்றது.
4.வலுப்பெறச் செய்ய வேண்டுமென்று தான் இதை உங்களிடம் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

அடுத்தாற் போல் என்ன செய்ய வேண்டும்…?

இந்த வாழ்க்கையில் யாரை யாரை எல்லாம் நாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
1.என்னிடம் “கஷ்டம்…” என்று சொன்ன அந்தக் குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பக் கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும்
3.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று இதை நாம் எண்ணிப் பழக வேண்டும்

அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணினால் “அந்த நலம் பெறும் சக்தி” என்னிடம் இது வந்துவிடுகின்றது. அந்த உணர்வு எனக்குள் என்னோடு சேர்த்துதான் வாழுகின்றது.

அவர்கள் நல்லாக வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் எனக்குள் நல்லதாகின்றது.

அதே போல வேதனைப்படுவோரைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று அந்த வேதனை எல்லாம் நீங்கி ஒன்று சேர்த்து வாழும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி எல்லோரும் செய்ய வேண்டும்…!

எப்படிப்பட்ட எண்ணத்துடன் குருவை அணுக வேண்டும்… என்று அறிந்து கொள்ளுங்கள்

மாமகரிஷிகள் காட்டிய வழியில் புதிய பூமி

நேற்றுச் சொன்னதைத்தான் சாமி சொல்கிறார் – கோவிலுக்கோ படிப்புக்கோ அப்படி எண்ணுகிறார்களா…?

Quality of human

உடலின் தரத்தையும் உயிராத்மாவின் தரத்தையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
நெல் குவியல் தெரிவதைப் போன்றும் அக்குவியலில் உள்ள நெல்லை ஒருவர் எடுத்துக் கையில் வைத்துத் தேய்த்துப் பதரை நீக்கி அரிசியான மணியை வாயில் போடுவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்
நெல்லைப் பதம் பார்த்து நெல் காய்ந்து விட்டதா… அதை அரைத்துச் செயலுக்குக் கொண்டு வரலாமா…? என்பதற்காகவும் பதம் பார்த்திருக்கலாம். அல்லது நெல்லிலுள்ள பதரை நீக்கி அரிசியைச் சுவைக்கவும் பார்த்திருக்கலாம்.

முதலில் சொன்னது போல் நெல்லில் உள்ள மணியைப் பிரிக்க வேண்டும் என்றால் அந்த நெல் காய்ந்து பக்குவப்பட்டிருந்தால் தான் அதைச் செயலுக்குக் கொண்டுவர முடியும்.

அதைப் போன்று இவ்வுடலான நெல் பக்குவப்பட்டிருந்தால் தான் இவ்வுடலின் உயிராத்மா செயலுக்குக் கொண்டு வர முடியும்.

காய்ந்த நெல்லில் உள்ள உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகின்றோம்.
1.மணியான அரிசி உள்ளே இருக்கும் வரை நெல் என்று சொல்கிறோம்
2.நெல்லிலிருந்து அரிசி விடுபட்டவுடன் பதர் என்று அந்த உமியை ஒதுக்கி விடுகின்றோம்

அதே போல் தான்
1.உயிராத்மாவானது (உயிர்) இச்சரீரத்தில் இயங்கும் வரை மனிதன் என்ற நாமகரணத்துடன் செயல் கொள்கிறது.
2.உடலை விட்டு உயிராத்மா பிரிந்தவுடன் பதரைப் போன்று உடல் கழிக்கப்படுகின்றது.

உடலில் இருக்கும் உயிராத்மாவின் உண்மையின் ஒளி சக்தியின் செயலை… ஆத்ம உணர்வை அறியாமல்… எண்ணத்தின் ஓட்டம் ஒவ்வொருவருக்கும் தன் தேவையின் செயலுக்காகத்தான் தெய்வங்களை வணங்குவது என்ற நிலையில் இன்று உள்ளார்கள்.

தனக்கு மேல் உயர்ந்த ஞானிகளையும் ரிஷிகளையும் சந்தித்தால் கூடத் தன் உணர்வின் தேவைக்காக மட்டும் தான் அந்தச் சந்திக்கும் நிலையையும் பயன்படுத்த எண்ணுகின்றார்கள்.

அதே சமயத்தில் தனக்கு மேல் உயர்ந்தவர்களுக்கு ஓர் இன்னல் ஏற்பட்டால்…
1.இவர்களுக்கே இந்த நிலை…
2.நாம் எல்லாம் சாதாரணமானவர்கள்… நாம் என்ன செய்ய முடியும்…! என்ற எண்ணத்தில்
3.தன்னையே ஒதுக்கிக் கொண்டு… மீண்டும் பிறிதொரு ஈர்ப்புக்கே தன் எண்ணத்தைச் செலுத்தி
4.உடலே பிரதானம் என்று “தான்… தனது…” என்ற செயலுக்குத்தான்
5.மனித உணர்வின் தத்துவம் செயல் கொள்கின்றது இந்தக் கலியில்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் மற்ற கோள்களின் தொடர்பு கொண்டு… பல விதமான குண அமிலத்தைத் தனக்குள் எடுத்து… அதைத் தன் சக்திக்குகந்தாக்கி… மீண்டும் வெளிக்கக்கித் தன் வளர்ச்சியை வளர்த்து ஓடிக் கொண்டே உள்ளது.

அதைப் போன்று மனிதனின் உணர்வின் எண்ணம் சூரியனைப் போன்று…
1.தன் உணர்வுடன் மோதக்கூடிய எந்த எண்ணத்திற்கும் தான் அடிமையாகாமல் தனக்குள் அதைச் சேர்க்கும் பொழுது
2.தன்னிலிருந்து வெளிப்படும் அலையானது மாற்று எண்ணங்களைத் தனக்குள் பஸ்பமாக்கி
3.தன்னிலிருந்து வெளியாகும் உணர்வின் எண்ணம் சாந்தம் என்ற ஒளியுடன் சமைக்கப்படும் பொழுது
4.மனிதன் தெய்வ நிலை கொண்ட செயலுக்கு வந்துவிடுகின்றான்.

நெல்லில் மணி இருக்கும் வரை தான் நெல்லிற்குத் தரமுண்டு. அதைப் போன்று இவ்வுடலில் உயிராத்மா இருக்கும் வரைதான் உடலுக்குத் தரமுண்டு. ஆகவே
1.இவ்வுடலில் இருந்து உயிராத்மாவை ஒளி கொண்ட முத்தாகப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையை
2.நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் கொள்ள வேண்டும்.

oil glow soul

கடலை வித்து எண்ணையான பின் எரி பொருளாகி வெளிச்சம் தருவது போல் “மனித வித்துக்கள் முதிர்ந்து பேரொளியாக வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒவ்வொரு மனிதனுக்கும்…
1.தன் தன் உடல் தேவைக்குகந்த எண்ண ஓட்டம் தான் ஓடிக் கொண்டே உள்ளதேயன்றி
2.தன் ஆத்மாவின் உயர்வை… உண்மையான சேவையில் உணரும் பக்குவம் இக்கலியில் வளரவில்லை.

இந்தப் பூமியின் சக்திக்கு வலு கூட்டக்கூடிய வலுத் தன்மைக்கு… இன்றைய இக்கலியின் உணர்வில் மனித ஆத்மாவின் சேவை உணர்வு செயல்படல் வேண்டும்.

சேவை என்பது… தான் பெற்ற உயர் ஞானத்தில் அறியும் உண்மை ஒளி சக்தியைக் கொண்டு ஒன்றை உருவாக்கி வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் சேவையை மனிதன் பெற வேண்டும்.

உடலின் சுகத்திற்குச் சேவையும்… புகழின் பேராசைக்குச் செல்லக்கூடிய சேவையும் உண்மையின் வளர்ச்சியின் சேவையல்ல…!

மனிதனின் உணர்வின் எண்ணத்தை ஒளியாக்கக் கூடிய ஆத்ம பலம் பெற வேண்டும்.
1.எந்த மனிதனின் உணர்வையும் பாதிக்கக்கூடிய எண்ணத்தையும்
2.அழிவின் குரோதத்தையும் எடுக்காமல்
3.தன் சரீரத்தையே சம குணம் கொண்ட நற்குணத்தின் சாந்தத்தைப் பெறவல்ல தன்மை பெற வேண்டும்.

இப்படிப்பட்ட செயல் வழியில் இவ்வாத்மாவை வளர்த்திடும் பக்குவத்தில் எந்த ஒரு ஈர்ப்பலைக்கும் ஆத்மா சிக்காமல் ஒளி சரீரமாகக் கூடிய முதிர்வு நிலையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

இப்பூமியில் வளரக் கூடிய தாவரங்களிலும் மற்ற கனி வளம் ஒவ்வொன்றிலுமே முதிர்வு நிலைக்குச் சேருவது மீண்டும் ஆவியாகக் கூடிய திராவக எண்ணை வித்து நிலை.

1.இப்பூமியையே சத்தாக்கி
2.அச்சத்தின் வளர்ச்சியின் முதிர்வு நிலைதான்
3.இப்பூமியில் இருந்து நாம் எடுக்கும் எண்ணை வித்துக்கள் யாவையும்.
4.இப்பூமியின் உலோகங்களான உலோகச் சத்தையும் வளர்ச்சியின் முதிர்வில் எடுத்து வளர்ந்தது தான் அந்த எண்ணை வித்து.

ஆவியாகி… குளிர்ந்து நீராகி… நீரின் தொடர்பு கொண்டு… தான் எடுக்கும் அமிலத்தில் ஓர் செடி வளர்ந்ததென்றால் அந்தச் சத்தை வித்தாக்குகின்றது.

சாதாரணமாக நீரை எடுத்து உறிஞ்சித்தான் கடலைச் செடியே வளர்கின்றது. அதன் வித்தான நிலக்கடலையிலிருந்து எண்ணைச் சத்தைப் பிரித்தெடுத்த பிறகு அந்த எண்ணை நீருடன் ஒட்டுவதில்லை.

மேலும் அந்த எண்ணையில் ஊன்றிக் கவனித்தோமென்றால்
1.நீரின் மேல் சிறிது அந்த எண்ணெயை விட்டால்
2.வானவில்லில் காணக்கூடிய ஏழு நிறங்களையும் இவ் எண்ணையிலும் காணுகின்றோம்.

அதாவது… நீரிலிருந்து உருவான தாவரங்களின் முதிர்வு வளர்ச்சியே
1.மீண்டும் நீருடன் ஒட்டாமல் எண்ணையாகி
2.எரி நிலையில் ஆவியாகிக் கூடிய வலுப் பெற்று விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனின் உணர்வின் எண்ணத்தால்
1.விண்ணிலிருந்து வரும் மின் காந்த சக்தியைச் சம குணமுடன் எடுத்து ஆத்ம பலத்தை வளர்த்து
2.இவ்வாத்மாவையே ஒளியாக்கக் கூடிய உயர் ஞானத்தின் ஒளி ஆத்மாக்களாக ஆக முடியும்
3.ஒளியாகும் பருவம் பெற்றது தான் (மனிதர்கள்) இப்பூமியின் வித்துக்களப்பா…!

இதை அறிந்து நீங்கள் ஒவ்வொருவரும் உயர் ஞான ஜோதிகளாக உருவாகுங்கள்…!

உயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்

ஒவ்வொருவரும் ஈசனாகும் மகத்துவம்…!

மரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…?

lightnings - agastya

அகஸ்தியர் உருவத்தைக் கூழையாகக் காட்டியதன் உட்பொருள் என்ன…?

இருபத்தியேழு நட்சத்திரங்களும் விஷம் கொண்டது. அதில் ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுவது இன்னொரு நட்சத்திரத்துடன் அந்தத் தூசிகள் மோதும் போது “மின்னலாக மாறுகின்றது…”

அந்த மின்னல் வேகமாக வந்தாலும்…
1.குழந்தைப் பருவத்தில் இருக்கும் அகஸ்தியன் கண் கொண்டு அவைகளை உற்றுப் பார்க்கும் போது
2.அது அவனுக்குள் அடங்கி அது மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வருகின்றது.

அத்தகைய மின்னலின் செயலாக்கங்களையும் அது எந்தெந்த நட்சத்திரத்திலிருந்து வருகின்றது…? மோதுகின்றது…? என்ற நிலையை அறியும் தன்மை பெறுகின்றான் அகஸ்தியன் அந்தக் குழந்தை பருவத்திலேயே…!

உதாரணமாக ஒரு குளவி ஒரு புழுவைக் கொட்டித் தன் விஷத்தால் தீண்டி… தன் இனம் என்ற நிலையைப் பெருக்கச் செய்கின்றது.

தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கொண்டு மண்ணால் ஒரு கூட்டை அமைக்கின்றது. விஷத்தைப் பாய்ச்சி அந்தப் புழுவை எடுத்துக் கொண்டு வந்து கூட்டுக்குள் அடைத்து விடுகின்றது.

குளவியின் விஷம் தாக்கியபின் புழுவின் உயிரின் துடிப்பு அதிகரிக்கின்றது. புழுவின் துடிப்போ கம்மியானது.
1.ஆனால் குளவியின் விஷத்தால் புழுவின் உயிர் துடிப்பு அதிகமாகி
2.அந்த விஷத்தின் தன்மையால் புழுவின் அணுக்களில் அதிகமாகத் துடிக்கும்போது
3.புழுவின் உடல் சுருங்கி விடுகின்றது.

சுருங்கிய உணர்வு கொண்டு “குளவியின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து…” அந்தக் குளவி எப்படி உருவானதோ அதே ரூபமாக புழுவை மாற்றி விடுகின்றது அந்தக் குளவியின் விஷத் தன்மை. அதனுடைய கலவை இப்படி மாற்றி விடுகின்றது.

இதைப் போலத்தான் அந்த விஷத்தின் தன்மை கொண்டு தாய் கருவிலிருக்கும் போது நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்ற இந்த அகஸ்தியன்… அந்த மின்னலின் ஒளிக் கற்றைகளை நுகர்கின்றான்.

அந்த உணர்வின் தன்மை அவனுக்குள் வரும்போது இந்த உடல் பெறும் உணர்வின் தன்மையைச் சுருக்குகின்றது. உணர்வின் தன்மை வளர்க்கின்றது.

அதனால்தான் அன்று அகஸ்தியனை ரொம்பக் கூழையாகப் (குள்ளமாக) போட்டு காட்டியிருப்பார்கள்.
1.தசைகளின் வளர்ச்சி கம்மி…!
2.ஆனால் உணர்வின் அணுக்களின் சக்தி “வீரியம் அடைந்தது…!” என்ற நிலையை
3.அவ்வாறு தெளிவாக்கிக் காட்டுகின்றார்கள்

ஆகவே நட்சத்திரங்களிலிருந்து மின்னல்கள் வெளி வருவதைத் தனக்குள் நுகரப்படும்போது அந்தச் சக்தியால் அகஸ்தியன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் வீரியத் தன்மை பெறுகின்றது.

எதனை நுகர்ந்தாலும் அதை மாற்றியமைக்கும் சக்தியை அவன் பெறுகின்றான். இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.

எத்தகைய விஷத் தன்மை கொண்ட தாவர இனங்களை நுகர்ந்தாலும் அதனுடைய இயக்கக் சக்தி அறிந்துணர்ந்தவன் ஆகின்றான் அகஸ்தியன்.

akkinai sixth chakra

நாம் இட வேண்டிய ஆக்கினை…! (ஆக்ஞை)

உயர்ந்த உணர்வுகளை அகஸ்தியன் பெற்றான். அவன் பெற்ற வழியிலேயே தான் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம்.

ஏனென்றால் இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்குத்தான் காடுகளுக்குள் அழைத்துச் சென்றார் நம் குருநாதர்.

1.காட்டிற்குள் அகஸ்தியன் போன இடங்களில்…
2.எங்கேயெல்லாம் அவன் உணர்வுகள் பதிவாகியிருக்கின்றதோ
3.அங்கெல்லாம் போகச் சொன்னார் குருநாதர்.

அவன் எடுத்துக் கொண்ட நிலைகள் பார்த்தால் மலை உச்சியில் உட்கார்ந்து இருக்கின்றான் அகஸ்தியன். அந்த இடத்தில் பார்த்தால் மேகங்களைக் கூட்டிக் குவித்து நீராக மேலே உச்சியிலே உருவாகிறது.

அதனால் தான் அகஸ்தியருக்குக் கையிலே கமண்டலத்தைக் கொடுத்துக் காண்பித்தார்கள். “முதலில் ஜீவ சக்தி ஆனது இது மிகவும் முக்கியம்…!”

அந்த மாதிரி இடங்களை எல்லாம் குருநாதர் காண்பித்ததனால் யாம் தெரிந்து கொண்டு அவ்வப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.
1.சொல்வதோடு மட்டுமல்ல… உங்களிடம் இந்த கவனத்தைப் பதிவு செய்து
2.அந்த அகஸ்தியன் நிலைக்கே உங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

அந்த அகஸ்தியன் பெற்ற வழிகளிலேயே இந்தக் காற்றிலிருந்து “நல்லதைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்திகளை நீங்கள் பெற வேண்டும்…”

அப்படிப் பெறக் கூடிய தகுதியை நீங்கள் பெறுவதற்காக வேண்டித்தான் அடிக்கடி இதை உபதேசிப்பது. எம்முடைய (ஞானகுரு) பிரார்த்தனையும் இது தான்.

ஏனென்றால்… இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… இந்த உடலுக்கு நாம் சொந்தமல்ல…
1.உயிரை நாம் சொந்தமாக்கிக் கொண்டே போக வேண்டும்.
2.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையாக
3.நாம் என்றும் ஒளியான நிலைகளைச் சொந்தமாக்க வேண்டும்… அது தான் முக்கியம்.

ஆகையினால் இதே மாதிரி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளையும் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பம் எது வந்தாலும்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டு
2.”இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நாம் ஆணையிட வேண்டும்.

நம் காரியங்கள் சித்தியாக வேண்டும் என்றால் செய்ய வேண்டிய “முதல் பிரார்த்தனை” 

நேற்று மகிழ்ச்சியாக இருந்திருந்தாலும் அதே மகிழ்ச்சியாக இன்றும் இருக்க முடிகிறதா… நாளையும் இருக்க முடிகிறதா…? 

நல்ல உணர்வின் இயக்கமும் அசுர உணர்வின் இயக்கமும் 

nature and artificial

இயந்திரத்தனம் கொண்ட உருக்களை உருவாக்கும் இன்றைய விஞ்ஞானத்தின் செயல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
ஓர் மனிதன் முயற்சியால் செயற்கையில் “பல இயந்திர உறுப்புகளைக் கொண்டு ஓர் வாகனத்தை உருவாக்கி…” பின் அதை ஓட்டுவதைப் போன்று தெரிகின்றது.

இன்னொரு மனிதன் “தன் உடலையே” இயந்திரத்தின் நிலைக்கொப்ப சர்க்கஸ் விளையாடுவதைப் போன்று உடலைப் பல கோணங்களில் வளைத்து வித்தைகள் செய்யும் காட்சி தெரிகின்றது.

சூரியனும்… சூரியக் குடும்பத்தின் நாற்பத்தி ஏழு மண்டலங்களும்… சனிக் குடும்பத்தின் பன்னிரண்டும்… பூமியைச் சுற்றியுள்ள இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் அதி தொடர்பு கொண்ட அருகிலுள்ள சில மண்டலங்களின் காட்சிகளும்… பூமியும்… பூமியின் வளர்ச்சியும்… பூமியின் எண்ணத்தின் உணர்வின் எண்ணம் கொண்ட மனிதச் செயலும் காட்சியாகத் தெரிகின்றன.

விளக்கம்:
(முதலில் தெரிந்த) வாகனத்தின் நிலை… மனிதனால் ஜடப் பொருள்களைக் கொண்டு மனிதனின் செயலின் தேவைக்கொப்ப உருவாக்கியது.

மனிதன் தன் எண்ணத்தைச் செலுத்தி எண்ணத்தின் உணர்வைக் கொண்டு தனக்கு இசைவுபட்ட வாகனத்தை உருவாக்க… ஜடப்பொருளைத் தன் எண்ணத்திற்கொப்ப உருவாக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றான்.

தன் தேவையின் உணர்வுக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தும் பொழுது தன் ஞானத்தை வளர்ச்சிப்படுத்தி தனக்குகந்த உருவாக்கும் செயல் தான் அது.

1.அத்தகைய வளர்ச்சியின் செயல் திறமை கொண்டு
2.சரீர உணர்வில் உடலில் ஓடக்கூடிய உயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே தன்னிச்சைக்குச் செயல்படுத்தி
3.ஓர் காரியத்தைக் கூர்மையாகத் தன் ஞானத்தின் வலுவில் பழக்கப்படுத்தும் செயல்படுத்தும் வழிமுறையினால்
4.மனிதனுடைய ஆத்மா குறுகிய நிலைக்கோ வலுவிழந்த தன்மைக்கோ செல்வதில்லை.

(இரண்டாது) அதே சமயம் மனிதனுடைய உடலையே வித்தையாக்கித் தன் உடலைப் பல நிலைகளில் அவ்வுறுப்புக்களைச் செயல்படுத்தும் பொழுது மனிதனுடைய உடலிலும் இயந்திர நிலைக்கொப்பத்தான் அந்தச் செயல் நிலை செல்கின்றது.

ஆகவே…
1.பிறிதொரு பொருளை உருவாக்குகின்ற இயந்திர நிலைக்கும்
2.உடலை இயந்திரம் போன்று சாகசம் புரிந்து… வித்தை காட்டும் வழி முறைக்கும் மாறுபாடு ஏதுமில்லை.

ஆனால் மனிதனின் உணர்வின் எண்ண ஓட்டமானது… இச்சரீர உயிராத்மா ஜீவன் பெற… இப்பூமியின் உணர்வின் எண்ணத்தில் செயல் புரிகிறது என்றால் அச்செயலுக்கு மூலத்தின் வழி முறை சூரியனும் சந்திரனும் சூரியக் குடும்பத்தின் நட்சத்திரக் கோள்களும் தான்…!

அப்படிப்பட்ட வழித் தொடரில்… பல உணர்வின் அமில வழி ஒளி சக்தியின் தொடர்பு கொண்டு இச்சரீரத்தின் உணர்வின் எண்ண ஓட்டம் எப்படிக் கிடைத்தது…? என்பதை மனிதன் தன்னைத் தானே உணர்ந்து… சிந்தனையில் உணரல் வேண்டும்.

ராகு கேது சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி என்ற நவக் கோள்களை எல்லாம் நவக்கிரகமாக அன்றே சித்தன் பூமிக்கும் நவக்கோள்களுக்கும் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் காட்டினான்.

பூமியின் சுழற்சியில் பூமிக்கு அருகிலுள்ள சந்திரனின் தொடர்பைக் கொண்டு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பூமியில் ஏற்படக் கூடிய தொடர் போன்றே நவக்கோள்களின் தொடர்பில் இருபத்தியேழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டு நவக்கோளையும் அதனின் இயக்கங்களையும் காட்டினான்.

1.அதே சமயத்தில் நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்பில் வரும் அமிலத் தன்மைகளையும்
2.அதனால் இப்பூமியின் தொடர்புடன் சுழலுகின்ற காந்த ஒளி அலையில் உருவாகக்கூடிய உயர் சக்திகளின் குண நிலையையும்
3.மனிதப் பிறப்பும் தாவரங்களின் குணம் மணம் சுவை ஜீவன் யாவையுமே உருவாகக்கூடிய தன்மையையும்
4.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று ஈர்ப்பு கொண்டு சுழலக்கூடிய கால மாற்றத்தில் வளரக்கூடிய உண்மைகளை
5.பல ஆயிரம் காலங்களுக்கு முதலிலேயே மகரிஷிகளினால் பூமியின் ஜாதகங்கள் குறிக்கப்பட்டன.

அந்தந்தக் கோள்களின் ஈர்ப்பின் தொடர்புக்கு ஒத்த கால மாற்றங்களினால் நம் பூமியின் செயலில் செயல்படும் வழி முறைதனை “இந்த நாளில்… இந்த நேரத்தில் மழை வரும்…! என்பதையும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்ற கிரகணங்களின் சந்திப்பின் காலத்தையும்…” குறித்தனர்.

அன்றைய மகரிஷிகளால் வானசாஸ்திர உண்மை ஞானத்தில் அறியப்பட்ட வழித் தொடரைத்தான் இன்றைய விஞ்ஞானமும் பேசுகின்றது. ஆனால்… மெய் வழி அறிந்து வந்த அந்த வளர்ச்சி விஞ்ஞான சாஸ்திரத்தால் “தன் ஞானம்” இன்று மறைக்கப்பட்டு விட்டது.

1.உணர்வின் எண்ண ஓட்டத்துடன் கூடிய தன் ஞானத்தின் உயர் ஞானத்தை
2.இப்பூமியில் உணர்வின் எண்ணத்தில் மனித ஆத்மாக்கள் வாழ்ந்த விதத்தை வளர்த்த
3.ரிஷிகளின் வம்சத்தின் தொடரின் ஜீவ நிலை வளரும் சக்தி நிலை வளர்ந்தால்தான்
4.மீண்டும் உணர்வின் எண்ணத்தின் செயல் வளர்ச்சி மனிதச் செயலின்
5.உயர் ஞானம் வளரக்கூடிய ஜீவ உருக்களை உருவாக்க முடியும்.

மனிதன் உருவாக்கிய இயந்திரங்களோ மற்ற தாவரங்களோ எல்லாமே தன் தன் தேவைக்குகந்த… தன் தேவையினால் அழியக் கூடியவை தான். அதனால் இப்பூமியின் சக்திக்கு வலுகூட்டக் கூடிய பலனோ பயனோ இல்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

Polaris circle of protection

எது எப்படி இருந்தாலும்… “துருவ நட்சத்திரத்தின் நினைவிற்கு” நாம் வந்து கொண்டே இருக்க வேண்டும்

பல கோடிச் சரீரங்களில் எடுத்துக் கொண்ட எண்ணத்தால் தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து மனிதனாக வந்திருக்கின்றோம்.

அதே வளர்ச்சிப் பாதையில்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இப்பொழுது நமக்குள் எடுத்து
2.அந்தக் கணக்கைக் கூட்டினால் நாம் பிறவியில்லா நிலை அடைவோம்.
3.இதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்
4.நாம் எங்கே போகின்றோம்…? என்பது முன்னாடியே தெரியும்.
5.சொல்ல முடியும்… நான் இங்கு தான் போகின்றேன் என்று…!

உதாரணமாக கோபியைச் சேர்ந்த ஒரு அன்பர் “நான் சப்தரிஷி மண்டலம் போகின்றேன்” என்று சொல்லிவிட்டே போகின்றார். அதையே அவர் வீட்டில் காட்சியும் கொடுத்திருக்கின்றார்.
1.நான் சப்தரிஷி மண்டலம் போகின்றேன்
2.என்னைப் பற்றி எண்ணி அழுகாதீர்கள்…!

அவர் வீட்டில் அவர் மனைவிக்கு இந்தத் தியானம் பற்றிய விவரம் தெரியாது… தியானத்திற்கும் வராதவர். ஆனால் இவர் தான் தியானம் செய்வார். இருந்தாலும் இதை எல்லாம் அவர்களுக்கு உணர்த்தி விண் சென்றுள்ளார்.

ஏனென்றால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடல் உறுப்புகளில் இணைத்து ஒளியாக ஆக்கி விட்டால் அடுத்து ஒளி உடல் பெறுகின்றோம் அவ்வளவுதான்…!

இது தான் விஜய தசமி… உயிரைப் போல உணர்வுகள் ஒளியாகின்றது… கல்கி…!

1.இந்தப் பிரபஞ்சமே அழிந்தால் கூட துருவ நட்சத்திரம் அழிவதில்லை
2.அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வாழும் பழக்கத்திற்கு நாம் வந்துவிடவேண்டும்.

ஆகவே…
1.எது எப்படி இருந்தாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் நினைவிற்கு “நாம் வந்து கொண்டே இருக்க வேண்டும்…”
2.கஷ்டம் என்ற நினைவை உள்ளுக்கே விடாதபடி நாம் தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும்.

எதாவது ஒரு சிறு மாற்றம் வந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழிலிலே அல்லது வேலை செய்யும் இடங்களிலோ ஏதாவது எதிர்பாராது குறைகள் வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்தியை உடனே எடுத்து வலு சேர்க்க வேண்டும்.
1.அது கொஞ்ச நேரத்தில் சிந்தனை கிடைக்கும்.
2.என்ன செய்ய வேண்டும்…? என்று அமைதியும் சாந்தமும் விவேகமும் அந்த இடத்தில் வளரும்.

இது மாதிரி அனுபவத்தில் வந்தால் எதையுமே சீர்படுத்தும் வலிமை நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் பெற முடியும்.
1.கொஞ்ச நாள் அனுபவித்துப் பாருங்கள்… உங்களால் பெற முடியும்.
2.கவலை என்பதை விட்டுவிடுங்கள்
3.சோர்வு என்பதை விட்டுவிடுங்கள்
4.வெறுப்பு என்பதை விட்டுவிடுங்கள்.
5.வேதனை என்ற நிலையை விட்டுவிடுங்கள்

இதே மாதிரிச் செய்யுங்கள்.

செய்த நிலையில் எனக்கு நல்லதானது என்று மற்றவருக்குச் நீங்கள் சொல்லப்படும்போது அவர்களுக்கும் அந்த உற்சாகத்தை ஊட்ட முடியும்.

அதே மாதிரி யாம் (ஞானகுரு) இல்லை…! என்று எண்ண வேண்டியதில்லை. யாம் உபதேசித்த கருத்துக்களை… அந்த ஒலி நாடாக்களை எடுத்துப் போட்டு விளக்கங்களைக் கொடுங்கள். சும்மா இருக்கும் நேரத்தில் இதன் வழி செயல்படுத்தி மற்றவரையும் கேட்கச் செய்யுங்கள்.
1.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை நுகர்வதும் அதை வெளிப்படுத்துவதும்
2.அறியாது வரும் இருளை நீக்குவதுமே நம் வாழ்க்கை என்ற நிலைக்கு வந்துவிட வேண்டும்.

இன்றைய உலகில் எந்தப் பொருளைத் தேடினாலும் அது எதுவுமே நமக்குச் சொந்தம் இல்லை.
1.நாம் சொந்தமாக்க வேண்டியது அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைத்தான்…!
2.அதைச் சேர்த்து உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியின் உடலாகப் பெற்று
3.துயரற்ற நிலையாக இன்னல் இல்லாத நிலையை அடைவதுதான் கடைசி நிலை.

பல கோடி உடல்கள் பெற்றுத் தீமைகளிலிருந்து நீக்கிடும் சக்தியாக இந்த உயிர் தான் மனித உடலை உருவாக்கியது. இந்த மனித வாழ்க்கையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக்கிக் கொண்டால் அழியா ஒளி உடல் பெறுகின்றோம்.

மிருகங்களிடமிருந்து கூடத் தப்பலாம், மனிதனிடமிருந்து தப்ப முடியுமா…? என்றார் குருநாதர் 

விசேஷங்களை அன்று கொண்டாடியதற்கும் இன்று கொண்டாடுவதற்கும் உள்ள நிலை 

இன்றைய உலக நிலை

negligence

தன்னைத்தானே உணராமல் மிருகத்தின் நிலைக்கொப்ப இன்றைய அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இப்பூமியின் காற்று மண்டலமே விஷமாகிக் கொண்டுள்ள இக்கலியின் கடைசியில் மனிதனின் உணர்வுகளெல்லாம்…
1.மனிதன் உண்ணக் கூடிய உணவு முறையாலும்
2.வாழ்க்கை நெறியில் நாகரிகத்தின் வளர்ச்சியாலும்
3.மிருகங்களின் நிலையில் எப்படி ஆடு மாடுகள் ஒன்றைப் போன்றே பிறிதொன்றும் செய்கின்றதுவோ (ஒரு ஆடு போனால் அதற்குப் பின்னாடி எல்லா ஆடுகளுமே செல்வது போல்)
4.அதைப் போன்று மனிதனின் வீரியத் தன்மை தன்னைத்தானே தான் உணராமல்
5.மிருகத்தின் நிலைக்கொப்பத் தான் மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது.

அந்தந்தச் சரீரத்திற்குகந்த அமிலத்தின் வீரிய குணத்தைக் கொண்டு அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்கித் “தன் அறிவால் உயர் தன்மை பெறக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு…!” என்பதை அறியவில்லை… உணரவும் இல்லை.

இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரங்களின் தொடர்பில் உயிர் பெற்ற ஜீவ ஆத்மாக்கள் அனைத்துமே ஒன்று போல இருப்பதில்லை.

எந்தெந்த நட்சத்திரத்தின் வலுவுடன் எந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு நிலையுடன் தொடர்பு கொண்டு இப்பூமி சுழல்கின்றதோ அத்தருணத்தில் உயிர் பெற்ற ஜீவாத்மாக்கள்
குணங்களிலும்…
செயல்களிலும்…
உருவ மாற்றத்திலும்…
வண்ணத்திலும்…
ஒருவரை ஒத்து ஒருவரில்லாமல் தான் இருக்கும்.

இதை முதலில் உணர்ந்து கொண்டு… மனிதனுக்குண்டான “உயிர்த் தன்மையின் உயர்வு நிலையை…” உணர்ண்டு செயல்படுதல் வேண்டும்.

சூரியன் எப்படி நாற்பத்தி ஏழு கோள்களின் தொடர்புடன் தன்னையும் வளர்த்து… தன் குடும்பக் கோள்களின் தொடர்பிலும் வளர்ச்சி பெற்றுச் சுழலும் செயல் நடக்கின்றதோ… அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்துக்கும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சி தொடர் நட்சத்திர மண்டலங்கள் உண்டு.

நம் பூமியின் தொடர் நட்சத்திரம் இருபத்தி ஏழும் பூமியுடன் இருபத்து எட்டாகச் சுழலும் தொடர்ச்சியில் பூமியின் ஈர்ப்பு வளர்ச்சிக்குத் துணைக் கோள்களாக இந்நட்சத்திரங்களின் வலுவைக் கொண்டுதான் “ஜீவ ஞான சரீரங்கள் (மனிதர்கள்)” இந்தப் பூமியில் மட்டுமே உருப்பெற்று உள்ளது.

அதாவது ஜீவ அலையின் ஞான ஒளி உணர்வின் எண்ணத்தின் மையக் கருவின் செயல் வலுப் பெற்று வாழக்கூடிய தகுதி நாற்பத்தி எட்டுக் கோள்களில் இப்பூமிக்கு மட்டும் உண்டு என்றால் இப்பூமியைச் சுற்றியுள்ள வலுக் கொண்ட இவ் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் “ஜீவன் கொடுக்கும் ஜீவ நட்சத்திரங்கள் தான்…!”

ஜீவனை வளர்க்கவல்ல அத்தகைய ஜீவ நட்சத்திரங்களும் நட்சத்திரங்களிலேயே பல மாற்றுச் செயலை நிலைக்கத்தக்க பல கோடி தன்மைகள் கொண்ட நட்சத்திரங்களும் உண்டு.

இப்பூமியின் வடிவ நிலையையும் இப்பூமியின் தன்மையையும் ஆதிகாலத்தில் ஒலி ஒளி தொடர்பு நிலை விஞ்ஞான ரீதியில் பெறாத காலத்தில்…
1.வான சாஸ்திரத்தின் பல உண்மைகளையும்
2.பூமியின் இயற்கை மாற்றத்தின் நிலைகளையும்
3.இப்பூமிக்கும் மற்றக் கோள்களின் சந்திப்பு நிலைகளையும்
4.இவ் இருபத்தி ஏழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டுதான் மனிதன்
5.விஞ்ஞானம் வளராத காலத்தில் தன் ஞானத்தால் அன்றே அறிந்தான்.

பல ஆயிரம் ஆண்டு காலங்களுக்கு முன்பு ஆழ்கடலில் பயணம் செய்தவர்களெல்லாம்
1.துருவ நட்சத்திரத்தையும் விடிவெள்ளி போன்ற சில நட்சத்திரங்களையும்
2.இப்பூமியின் ஈர்ப்புத் தொடர்பில் பூமியின் ஈர்ப்புடனே சுழலக்கூடிய நிலையை அறிந்த ஞானத்தால்
3.இயற்கை நிலைகளை மனிதர்கள் அன்றே அறிந்தார்கள்.

அவர்கள் அறிந்த வழியிலேயே நம் அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்க வேண்டும் என்பதனை உணர்ந்து அந்த ஞானிகள் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.

ஏனென்றால் மனிதனுடைய உணர்வின் எண்ண ஜீவ சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளியை “எந்நிலை கொண்டு அதிலே வீரியத் தன்மையைப் பெற வேண்டும்…?” என்ற பக்குவத்தைத்தான் பல வழிகளில் இது நாள் வரை போதித்துள்ளோம்.

immune power

உடலில் நோய் வரக் காரணமும் நோய் வராது தடுக்கும் வழிகளும்

 

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தறிந்தால் அது இரத்தத்தில் கலந்து கருவாகி முட்டையாகின்றது.

இரத்தம் சுழன்று வரும் போது நம் உறுப்புகளில் எந்தப் பாகத்தில் ஒட்டி அந்தக் கரு முட்டை வெடித்து அது அணுவாகத் தோன்றுகின்றது.
1.வேதனையால் உருவான அந்த அணு
2.அதே வேதனை என்ற உணர்வை உணவாக உட்கொள்ளத் தன் உணர்ச்சிகளைத் தூண்டும்போது
3.நம் உயிருக்குள் வருகின்றது அந்த உணர்ச்சிகள்…!

அந்த உணர்ச்சியின் வழி கொண்டு உயிர் ஆணையிட்டு நம் கண்ணால் கவர மீண்டும் கண்ணுக்கே அனுப்புகின்றது அந்த உணர்வுகள். வேதனைப்படுவோரின் அந்த உணர்வுகள் படமாக… அவரைப் பற்றிய நினைவு கண்ணுக்குத் தான் வரும்.

எந்த மனிதன் வேதனைப்பட்டானோ அந்த மனிதன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வினை நுகரச் செய்கின்றது இந்த உயிர். நம் உயிரிலே பட்டபின்
1.நம்மை அறியாமலே நாம் வேதனைப்படுகின்றோம்
2.வேதனையான சொல்களைச் சொல்லுகின்றோம்
3.வேதனையான உணர்ச்சிகளைக் கொண்டு வேதனையான செயல்களைச் செய்யத் தொடங்கிவிடுகின்றோம்.

இது நம்மை அறியாமல் இயக்கும் நிலைகள். நாமல்ல… இந்த உணர்வுகள் தான் இப்படி வேலை செய்கின்றது.

டி.வி. ஸ்டேசனிலிருந்து ஒளி அலைகளைப் பரப்பப்படும்போது நம் வீட்டில் டி.வி.யை எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ காற்றிலிருந்து கவர்ந்து அதே உணர்வின் இயக்கமாக பாடலும் ஆடலும் வருகின்றது

இதைப் போலத்தான் நம்முடைய உணர்வுகளின் இயக்கமும்…!

உற்றுப் பார்த்துப் பதிவான உணர்வு உடலிலே அணுவாக விளைந்த பின் அதே உணர்ச்சிகளை நமக்குள் தூண்டி அந்த நினைவின் எண்ணமாக
1.சொல்களைச் சொல்லச் செய்வதும்
2.நம் உடலை அசையச் செய்வதும்
3.அதன் வழி நம்முடைய செயல்களைச் செயலாக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

இருப்பினும்… அந்த வேதனையான உணர்வின் அணுக்கள் நம் உறுப்புகளில் இணைந்து விட்டால் அது உணவாக உட்கொள்ளும் உணர்வின் சத்து அதனுடைய மலமாகும் போது நம் உடலாக அமைந்து விடுகின்றது.

இப்படி அந்த வேதனையான அணுவின் மலம் நம் உடலுடன் இணையப்படும் போது உடலில் உள்ள நல்ல அணுக்களின் மலத்தில் இந்த தீமையின் அணுவின் மலம் சேர்க்கப்படும்போது என்ன ஆகின்றது…?

நல்ல அணுக்களுடன் வேதனை அணுக்கள் சேர்ந்தவுடனே…
1.உடலில் சில பாகங்களில் பளீர்… பளீர்… என்று மின்னும்…
2.ஊசியால் குத்துவது போல் வலி வரும்…
3.உடல் உறுப்புகளில் வேதனை ஏற்படத் தொடங்கும்.

உதாரணமாக சர்க்கரைச் சத்து நோய் வந்து விட்டால் அந்த அணுக்கள் உடலிலே உருவாக்கிவிட்டால் நம் உடலில் உள்ள மற்ற உறுப்புக்களை கரைக்கச் செய்து இரத்தத்தைக் காணாமலே செய்து விடுகின்றது. உடலிலே புண் வந்தால் அதுவும் ஆறுவதே இல்லை.

இந்த விஷக் கிருமிகள் உடல் முழுவதும் பரவப்பட்டு சீக்கிரமாக இந்த உடலையே முடித்து விடுகின்றது.

இரத்தக் கொதிப்பு வரப்படும்போது அந்த உணர்ச்சியின் வேகங்கள் உயிரிலே இணைந்து துடிக்கப்படும் போது உடலில் உள்ள கை கால் அங்கங்களை முடக்கச் செய்து விடுகின்றது.

வேதனை வேதனை என்ற உணர்வின் சத்தை நுகர்ந்தால் என்ன ஆகின்றது…?

உதாரணமாக ஒரு விஷத்தைச் சாப்பிட்ட பின் உடல் எப்படித் துவண்டு விழுந்து செயலற்ற நிலையில் ஆகின்றதோ இதைப் போல விஷத்தின் அணுக்கள் உடலிலே விளைந்து அது வாத நோயாக மாறி உறுப்புகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடுகின்றது.

இவை எல்லாம் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய நிலைகள் தான்.

பிறருடைய துயரங்களையும்… பிறருடைய கஷ்டங்களையும்… பிறருடைய துன்பங்களையும்… பிறருடைய வேதனைகளையும்… நாம் நுகர்ந்தறிந்து மனிதப் பண்புடன்… பரிவுடன்… ஈகையுடன்… இரக்கத்துடன்… நாம் சேவை செய்யும் மனப்பான்மையில் அவர்களுக்கு உதவிகள் செய்கின்றோம்.

ஆக… அவர்கள் படும் வேதனை உணர்வை நுகரப்படும்போது “வேதனைப்படுகின்றனர்…” என்று உணர்த்துகின்றது.
1.ஆனால் அந்த வேதனையான உணர்வின் அணுவாக நம் உயிர் மாற்றுகின்றது.
2.அதனின் கருவாக உருவாக்கி விட்டால் அதே அணுவின் தன்மை ஆனபின்
3.அது நம் உடலிலே துன்பத்தை உருவாக்கும் நோய் நிலைகளை உருவாக்கிவிடுகின்றது.

இதை யார் காப்பது…?

பிறருடைய வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தாலே அடுத்த கணம் அதை நாம் வேக வைத்தல் வேண்டும். எவ்வாறு வேக வைக்க வேண்டும்…?

காலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடல் உறுப்புகளுக்கும் உடலில் உள்ள அணுக்களுக்கும் வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்றால் இந்த யாம் உபதேச வாயிலாகக் கொடுக்கும் அருள் உணர்வுகளை செவி வழி உங்களுக்குள் பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணுதல் வேண்டும்.

பிறர் வேதனைப்படும் உணர்வினை நுகர்ந்து அவருக்குத் தக்க உபகாரம் செய்தாலும் நாம் அடுத்த கணம் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டிடல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று
2.புருவ மத்தியில் எண்ணி ஒரு இரண்டு நிமிடம் அங்கே நிலை நிறுத்த வேண்டும்.
3.நாம் நுகர்ந்த வேதனைப்பட்ட உணர்வு நம் ஆன்மாவாக இருப்பதை நுகராதபடி
4.தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் செல்லாதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.

உலகையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் உருவான விதம் 

இனி கடல்கள் பெருகப் போகின்றது…!

உலகம் முழுவதும் நீர் நிலை ஆகும் சந்தர்ப்பங்கள் வருகின்றது 

sages-lights

“கலியும் கல்கியும்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அன்றைய மெய் ஞானிகளின் செயலால்… மனித ஞானத்தை உயர் ஞானத்தில் மெய் ஞானப்படுத்தச் செயல்படுத்திய சக்தியின் தொடர் இப்பூமியில் உள்ளதனால்தான் மனித அறிவே வளரக் கூடிய வளர்ச்சி இன்றும் உள்ளது.

இருந்தாலும் இன்று… இப்பூமியில் உள்ள பல கோடி ஆத்மாக்களின் உணர்வின் எண்ண சுவாச அலையின் வீரியத் தன்மை…
1.விஞ்ஞான வளர்ச்சித் தொடரில் செயல்படச் செயல்பட
2.மனித உணர்வின் வீரிய காந்த சுவாச அலையின் தொடர் அதிகப்பட
3.அதற்குகந்த உணவான தாவர இன வளர்ச்சி நிலை குறைவுபட்டு விட்டது.
4.அதனால் மெய் ஞானிகளின் செயல் தன்மைக்கு வேண்டிய ஞான வளர்ச்சிக்கு
5.அந்த ஞானிகள் செயல் நிலை யாவும் இப்பூமியின் அடுத்த பிரளயத்தில் கல்கியின் செயலுக்குச் செயலாகப் போகின்றது.

பொருளைச் சமைக்கவல்ல பக்குவமான உஷ்ணத்தைத் தந்தால் அந்தப் பக்குவப்பட்ட பதத்தில் அதைச் சமைத்து உணவாக உட்கொள்ளலாம்.

ஆனால் அதி உஷ்ணம் ஏறும் பொழுது எல்லாமே கருகும் நிலை ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட உஷ்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய காலமாகத் தான் இன்றைய “கலியின் மாற்று நிலை…!”

ஏனென்றால் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.மனித ஜீவாத்மாக்களின் காந்த உணர்வின் ஒளியின் வலுவிற்கு வலுக்கூட்டும் தாவர இனங்களின் வளர்ச்சி குறைந்து விட்டது.
2.இப்பூமிக்குள் இருக்கும் கனி வளங்களையும் செயற்கைக்காக மனிதன் பிரித்தெடுத்து விட்டான்.. அதனுடைய வளர்ச்சியும் குறைந்து விட்டது
3.அதே சமயத்தில் செயற்கை மின் காந்த ஒலி/ஒளி சக்திகளையும் இக்காற்றலையில் அதிகமாக கலக்க விட்டுள்ளனர்

இத்தனை விபரீத பாதிப்புகளால்… மனித எண்ண உணர்வுகள் தன் ஞானத்தை உயர் ஞானமாக்கி… மெய் ஞானத்தால் மனித சக்தியின் வளர்ச்சி நிலை வளரும்… அறிவின் உருவில் உயரும் நிலையைக் காட்டிலும்… குறுகிய நிலை கொண்டு மனிதனின் வீரியத் தன்மை விஷம் கொண்ட நிலைக்கே சென்று கொண்டுள்ளது.

இத்தகைய தருணத்தில்…
1.யாம் சொன்ன தியான முறையால் இக்கலியின் மாற்றத்திற்குள்..
2.தன்னைத்தானே மனிதன் உணரும் பக்குவச் செயலில் பதமாக வேண்டும்.

நற்குணத்தை வளர்க்கும் அந்தத் தியானத்தையும் சகல மாமகரிஷிகளின் தொடர்பு எண்ணத்தையும் தியானத்தால் கூட்டிக் கொள்ளும் வழிக்கு வர வேண்டும்.

இந்தச் சரீரத்தில் இருக்கக்கூடிய காலத்திலேயே இச்சரீரத்தையே மெய் ஞான உணர்வு பெறக்கூடிய ஒளித் தன்மையைச் செயல்படுத்திக் கொண்டோமானால் இச்சரீரத்தையே ஒளிச் சரீரமாக ஒளிரும் நிலையை நாம் நடைமுறையில் காண முடியும்.

1.உணர்வில் முன் கூட்டி அறியக் கூடிய சூட்சுமத்தைப் பெறக் கூடிய செயலினால்
2.ரிஷி சக்திகளின் தொடர்பை இச்சரீரமே ஏற்கும் செயலுக்கு
3.இச்சரீரமே ஆத்மாவின் ஒளியை ஒளிர வைக்கும் இயந்திரமாகவும் செயலாக்க முடியும்.

இந்த உடலுடன் வாழும் நிலையில்… உயர் காந்த மெய் ஞான உணர்வுடன் நாம் எடுக்கக் கூடிய மூச்சலையின் சுவாசக் காற்று இப்பூமியில் பதியும் பொழுது
1.ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு…
2.ரிஷி சக்தியின் செயலுக்காக இச்சரீர உணர்வின் மெய் ஞான மூச்சலையைப் பரவச் செய்தால்
3.இப்பூமி எத்தனை ஆண்டு காலங்கள் செயல்பட்டாலும் ஜீவ உடலுடன் எடுக்கக் கூடிய மூச்சலையில்
4.அந்த மெய் ஞானிகளின் மூச்சலைகள்… அது என்றுமே வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் வித்தாக
5.ஜீவித உணர்வுகளுக்கு ஜீவ உணர்வு செயலாய்ச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

கணவன் மனைவி தியானம் – பாதுகாப்புக் கவசம்

கணவன் மனைவி தியானம்

கணவன் மனைவி பண்டைய காலத்தில் ஒன்றி வாழ்ந்த நிலைகள்

point to point north stars

புருவ மத்தியில் நிலை நிறுத்த வேண்டியது எதை…?

 

குழம்பு வைக்கத் தெரிந்தவரிடம் குழம்பிற்குண்டான சரக்குகளை எடுத்து மொத்தமாகக் கொடுத்தால் அதைப் பழகியவர் என்ன செய்வார்…? எதை எதை எந்தெந்த அளவு போட்டால் அது ருசியாக வரும் என்று அதைப் போட்டுச் சமைப்பார்.

ஆனால் தெரியாதவர் கையில் கொடுத்தால் என்ன செய்வார்…? இதிலேயும்… அதிலேயும்… என்று மொத்தமாக கொட்டி இப்படித்தான் குழம்பிலே போடச் சொன்னார்கள்…! என்று மொத்தமாகப் போட்டால் என்ன ஆகும்…? எது அதிகமோ அதன் சுவையாக மாற்றிவிடும்.

இதைப் போலத் தான் இன்றைய சகஜ வாழ்க்கையில்
1.தீமையை அகற்றும் நிலையோ…
2.பகைமை உணர்வு நமக்குள் வராது தடுக்கும் நிலையோ இல்லாது
3.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பெருக்காத நிலையோ தான் வருகின்றது.

இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்..?

ஈஸ்வரா… இப்படி நோய் வந்து விட்டதே… இவருக்கு இப்படி ஆகி விட்டதே…! என்று சொல்லிவிட்டு
1.துருவ நட்சத்திரத்தையும் எண்ணி விட்டு
2.இவரை எண்ணி வேதனைப்பட்ட்டு இந்த இரண்டையும் கலந்தால் என்ன செய்யும்…?

வேதனை என்ற உணர்வே வலுப் பெறுகிறது. அப்பொழுது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் பெறாது தடைப்படுத்துகின்றது. ஆகவே இந்த வேதனை உணர்வு தான் வரும்.

இதைச் சீராக்கும் வழி என்ன…?

வேதனையை நுகர்ந்தால்..

அடுத்த கணமே கண்ணின் நினைவு கொண்டு
1.ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணுங்கள்
2.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா.. என்று ஏங்கி அங்கே “நிலை நிறுத்துங்கள்…”
3.கண்கள் + துருவ நட்சத்திரம் + புருவ மத்தி.. இந்த மூன்றையும் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் நிலை நிறுத்தினால்…
4.அந்த வேதனை என்ற உணர்வு உட்புகாது நின்றுவிடும்.

நாம் ஈர்க்கத் தவறிய வேதனைகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து சென்று விடும்.

நம் உடலுக்குள் போகவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் வராது… வேதனை என்ற அணுவும் நமக்குள் உருவாகாது.;; வேதனையை உருவாக்கும் அணுவின் தன்மை கருவாகவும் ஆகாது…!

ஆகவே நாம் இதைத்தான் அந்த நேரத்தில் நாம் விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது.
1.எப்போதுமே பிறருக்கு நன்மை செய்தாலும்
2.அந்த தீமைகள் நமக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும்…!

கடுமையாக ஒருவர் நம்மைத் திட்டி இடைஞ்சல் செய்தால் என்ன செய்ய வேண்டும்…? 

சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்  

சாது மிரண்டால் காடு கொள்ளாது – மரண பயத்தின் இயக்க உணர்வுகள்  

Gnanaguru saamigal upadesam .

நான் (ஞானகுரு) கொடுப்பதை நீங்கள் எண்ணி எடுத்தால் தான் அந்தச் சக்தி உங்களுக்குள் வளரும்

குருநாதர் எனக்கு அருள் கொடுத்திருக்கின்றார்… எல்லாம் நடக்கின்றது…! என்ற நிலையில் இரு… நான் பார்க்கின்றேன்..! என்ற அகந்தை கொண்டு
1.ஒருவனைத் தாக்க நான் எண்ணினால்
2.அந்த உணர்வின் தன்மை எனக்குள் பெருகிவிட்டால்
3,அந்த அகந்தை என்னை அழித்துவிடும்.
4.குரு அருள் எனக்குள் மடிந்துவிடும்.

ஆகவே இதைப் போன்ற தீமைகள் என்றுமே நமக்குள் புகாது துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கிப் பழக வேண்டும். இந்த உடலுக்குப் பின் எது என்ற நிலை மிகவும் முக்கியமானது.

நான் தியானம் செய்தேன்… என் உடம்புக்குச் சரியில்லை…! நான் தியானம் செய்தேன்… என் தொழில் கெட்டுப் போய் விட்டது..! என்று சொன்னால் என்ன அர்த்தம்…?

இதைத் திருத்தினால்… இந்தத் தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அதை வலுவாக்கிக் கொண்டால் தான் நம் வாழ்க்கையைச் சீராக வழிப்படுத்தும் எண்ணமே நமக்குள் வரும்.

அது மட்டுமல்ல…! ஒவ்வொரு நிமிடத்திலும் பொருளறிந்து செயல்படும் உணர்வுகளும் வாழ்க்கையில் நம்மைப் பண்புடன் வாழச் செய்யும் உணர்வுகளும் நமக்குள் வளரும்.

சந்தர்ப்பத்தால் தொழில் நஷ்டமாகி விட்டது என்றால்
1.அந்த நஷ்டத்தை மீட்கும் சக்தியை எண்ணு எடுப்பதற்கு மாறாக
2.வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது… நம் செயலும் குறுகுகின்றது.
3.ஒரு நல்ல பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் நம் சிந்தனையும் வீழ்ந்து விடுகின்றது.

இதைப்போன்ற துயர்களில் இருந்தெல்லாம் விடுபட்டு… பேரருள் என்ற உணர்வினை வளர்த்திடும் அரும் பெரும் சக்தியை நமக்குள் வளர்த்தல் வேண்டும் என்பதனை நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.

1.ஏதோ சாமி (ஞானகுரு) சொல்கின்றார்…
2.சாமி தான் நமக்குச் சக்தி கொடுக்கின்றார் என்று நினைக்கக் கூடாது.

ஏனென்றால் நான் அந்த அருளைப் பெறுகின்றேன். அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கின்றேன்.

செவி வழி நீங்கள் கேட்கின்றீர்கள். இதைப் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். பதிவாக்கும் பொழுது அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கினால் “அதை நீங்கள் நிச்சயம் பெற முடியும்…!”

உதாரணமாக ஒருவன் நம்மை ஏசினால்
1,என்னை இப்படி ஏசினான்… ஏசினான்… ஏசினான்… என்று
2.அந்த உணர்வினை திரும்பத் திரும்ப எண்ணும்போது அந்த உணர்ச்சிகள் வலுவாகின்றது.

பின் நாம் எதைச் செய்கின்றோம்…? கோபம் என்ற உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டு அவரைத் தாக்கும் உணர்வுகளே வலுவாகின்றது.

அவன் சொன்ன உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
1.நாம் தொலைய வேண்டும் என்று அவன் எண்ணுகின்றான்.
2.அதே உணர்வு நமக்குள் வந்தபின் நம்மிடமுள்ள நல்ல எண்ணங்களத் தொலைத்தே விடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட… தீமை என்ற உணர்வுகள் புகாது… அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் பெற்று பேரருள் என்ற உணர்வை நமக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதைப் படிப்போர் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுங்கள்… பேரொளியாக மாறுங்கள்.

Soul serene cleaning

நம் ஆன்மாவைச் சுத்தம் செய்யும் “ஆத்ம சுத்தி” – செயல் முறை

சூரியன் மற்றொரு பிடிப்பில் இல்லாததை எல்லாம் தனக்குள் கவர்கின்றது. கவர்ந்து தன் அருகிலே கொண்டு சென்றால் அதைப் பஸ்பமாக்கி விடுகின்றது. மீண்டும் பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.

உதாரணமாக நாம் ஒரு நோயாளியைப் பற்றி விசாரித்து அவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தறிந்தால் அது நமது ஆன்மாவில் நிற்கும். அதைச் சுவாசிக்கும் போது வேதனை என்ற உணர்ச்சிகளைத் தூண்டும். (ஆன்மாவிலிருப்பதைத்தான் நாம் சுவாசிக்க முடியும்)

அவர் நோயால் வேதனைப்படுகின்றார். ஆனால் அவரின் வேதனையான உணர்வை நுகர்ந்து நாமும் வேதனைப்படத் தொடங்குகின்றோம்.

அந்த வேதனை நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவு கொண்டு ஏங்கி எடுத்தால்
5.நமக்கு முன்னாடி இருக்கும் ஆன்மாவில் இருப்பதை இழுக்காது…
6.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கவரப்படுகின்றது
7.வேதனப்படும் உணர்வின் ஈர்ப்புத் தன்மை குறைந்ததனால் நாம் ஈர்க்காமல் விட்ட
8.நம் ஆன்மாவில் இருக்கும் அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை
9.சூரியன் காலையில் அழைத்துக் கொண்டு மேலே சென்றுவிடுகின்றது
10.நமது ஆன்மா தூய்மையாகின்றது… தீமையான அணுக்கள் வளராது தடுக்கின்றது
10.தீமையான அணுக்களுக்கு உணவு போகாமல் தடுக்கின்றது.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி ஏங்கிவிட்டு அந்த நோயாளியைப் பார்த்து.. துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீ பெறுவாய்… உன் நோய் நீங்கிவிடும்… நீ நலமாவாய்…! என்று சொல்ல வேண்டும்.

இந்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழியாக எண்ணி எடுக்கும் போது
1.தீய அணுக்களுக்குப் போகும் வேதனையை உருவாக்கும் உணர்வுகள் தடைப்படுத்தப்படுகின்றது.
2.நம் ஆன்மாவிலிருந்து விலக்கித் தள்ளியதைச் சூரியன் காலை ஆறு மணிக்கெல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றது.

தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல் தடைப்படுத்தப்படும் போது தீய அணுக்களின் வளர்ச்சி குறைந்துவிடும். பரமாத்மாவும் தூய்மை ஆகின்றது.

இவ்வாறு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தடுத்து நிறுத்த…
1.நீங்கள் எண்ணும்போதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்கின்றீர்கள்.
2.உங்கள் உயிர்… துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடலில் அணுக்களாக உருவாக்குகின்றது.
3.தீமைகளில் இருந்து நீங்கள் விடுபடும் ஆற்றலைப் பெறுகின்றீர்கள்.

இதைத்தான் ஆறாவது அறிவு… (முருகன்) “பிரம்மாவை சிறைப்பிடித்தான்…! என்று சொல்வது. நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக நின்று அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

ஆகவே ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்தோமென்றால்… நமக்குள் தீமையை நீக்கிடும் அத்தகைய நிலைகள் பெறுகின்றது.

தீமையை நீக்கிடும் ஒளியான அணுக்களை நமக்குள் பெருக்கினால் “துருவ நட்சத்திரம் எவ்வாறு ஒளியாக இருக்கின்றதோ…” அதைப்போல நாமும் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் அரும்பெரும் சக்தி அதிகாலையில் இந்தப் பூமியில் பரவுகின்றது. ஆகவே கணவன் மனைவியும் காலை துருவ தியான நேரங்களில் இதைப் போன்று எடுத்துப் பழகுங்கள்.

அந்தக் காலை நேரத்தில் உங்கள் உணர்ச்சிகளை… உங்கள் எண்ணங்களை… துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அந்த உணர்வினை உங்கள் கண்களால் பதிவாக்கி நுகருங்கள்,

கண் வழி நுகர்ந்ததை உயிர் வழி சுவாசிக்கும் பொழுது உயிர் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யும். அந்த நேரம் தான் பிரம்ம முகூர்த்தம் என்பது.

1.உயர்ந்த உணர்வினை உங்களுக்குள் உருவாக்கினால் இருளை அகற்றும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்.
2.வானுலக ஆற்றலைப் பற்றுடன் பற்றினால்
3.இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

நசுக்கினாலே உருவம் தெரியாது போகும் கொசுவிடம் இருக்கும் “வலுவான ஆற்றல்” 

27 நட்சத்திரங்களின் மாறுபட்ட இயக்கங்களால் மனிதனுக்குள் வரும் எதிர்நிலைகள்

பத்திரிக்கையில் அசம்பாவிதங்களைப் படிப்பதால் வரும் தீமைகள்

soul cleaning blissful

வண்ணான் ஆடைகளைத் தூய்மைப்படுத்தித் தருவது போல் வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்தி ஆன்மாவிற்குக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இச்சரீர இயக்கத்தில் இன்று வாழக் கூடிய காலங்களில்… உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையில்… நாம் எடுக்கக் கூடிய சுவாசத்தின் உணர்வு மற்ற எந்த உணர்வின் அலையுடன் மோதினாலும் அதைச் சீராக ஆக்க வேண்டும்.

இச்சரீரத்தில் பதிவாகக் கூடிய எண்ண அலைகளை…
1.நாம் வண்ணானிடத்தில் அழுக்குத் துணிகளைப் போடும் பொழுது
2.அழுக்கை நீக்கித் தூய்மையான துணிகளை நமக்கு எப்படித் தருகின்றானோ அதைப் போன்று
3.நம்மை எதிர்படும் தீய உணர்வுகளை நம் எண்ணத்தில் எடுத்தாலும்
4.அதை உடனே உணர்வுடன் கலக்க விடாமல் அவ்வழுக்கை நீக்கி
5.தூய்மையான அலையை இச்சரீரத்தில் பதியக் கூடிய நிலைக்குப் பக்குவமாக்கி
6.அழுக்கை நீக்கித் தூய்மையான உடையை வண்ணான் தருவதைப் போன்று
7.நம் உணர்வுடன் மோதக்கூடிய தீய அலைகளைத் தூய்மையாக்கி
8.நம் ஆத்மாவின் ஒளிக்குத் தர வேண்டும்.

இருந்தாலும் வாழ்க்கை என்னும் பொழுது உணர்வுகளில் மாற்றமில்லாத் தன்மை ஏற்படாமல் இருக்காது.

ஆகவே… வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு நொடிப் பொழுதின் உணர்வையும்
1.சரீர எண்ணத்தில் நாம் எடுக்கக்கூடிய சுவாசத்தைக் கொண்டு
2.செயலாக்கத்தக்க அணு வளர்ச்சியின் காந்த ஒளி அலையால்
3.நாம் எடுக்கக்கூடிய சாந்த நற்குணத்தின் சம அலையால்
4.உயர் காந்த மின்காந்த சக்தியால் பெறவல்ல பக்குவத்தில்
5.இவ்வாத்மாவின் ஒளியைக் கூட்டிக் கூட்டி ஆத்மாவின் வீரியத் தன்மை பெற்று
6.வாழ்க்கையில் உள்ள பொழுதும் இச்சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும்
6.தன்னைத் தானே தான் உணர்ந்து தன் வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டே இருக்க முடியும்…!

அப்படி வலுப் பெற்ற ஆத்ம ஒளிகள் தானப்பா… இன்று நாம் வாழும் பூமியும்… நம்மை வாழ வைக்கும் சூரியனும்… மற்ற பல கோடி ஜீவ ஒளி மண்டலங்கள் யாவையுமே…!

ஆனால் அப்படிப்பட்ட உணர்வின் எண்ணத்தின்… ஜீவ வளர்ச்சியின் உண்மையை மனிதன் உணராமல்…
1.இன்றைய மனிதனின் எண்ணம் செயல் எல்லாம்
2.தன்னுள் இருக்கும் ஆத்மாவின் உண்மையை அறியாமல்
3.உடலின் சுகத்தின் உணர்வின் உந்தலின் வாழ்க்கையிலேயே
4.தன்னைத்தானே – இச்சரீரத்தையே உண்மை என்று நம்பி அழித்துக் கொள்கின்றான்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள பெரும் பொக்கிஷமே இச்சரீரம் தான். இந்தப் பொக்கிஷத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்…? என்பதைத்தான் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும்

அதைத் தான் தொடர்ந்து இங்கே பாடநிலையாகக் கொடுத்துக் கொண்டுள்ளேன் (ஈஸ்வரபட்டர்).

கடிந்துரைக்க எண்ணாதே…!
கடுமையின் உணர்வு உன்னையும் சுடும்

கனிந்துரைப்பாய்…!
காரியத்தின் வெற்றியைச் சுவைக்கலாம்

மனதின் மமதைக்கு மருந்துண்டால்
மங்கிடும் மமதை மறைந்தே…!

எமனுக்கு நாம் எப்படித் தண்டனை கொடுக்க வேண்டும்…? 

நம் சொல்லை…! நயம்பட உரைக்க வேண்டிதன் முக்கியத்துவம் 

ஆன்மீகப் பாதையில்… மற்ற வழிகளைப் பின்பற்றுவோரிடம் வாதம் செய்யத் தேவையில்லை…!

blessed peoples

வெறும் கூட்டம் தேவையில்லை…! அருள் ஞானத்தை வளர்ப்போர்கள் தான் தேவை…!

தியான வழியில் இருக்கக்கூடிய அன்பர்கள் காலை துருவ தியானத்தை நீங்கள் எடுத்துக் கொண்டு கணவன் மனைவி ஒன்றிணைந்து வாழ்ந்திட வேண்டும். குடும்பத்தில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை மாற்றிடல் வேண்டும்

ஏனென்றால் அந்த நேரம் தான் அந்தத் துருவ மகரிஷிகளின் அலைகள் இங்கே அடர்த்தியாகப் படர்கின்றது. யாம் உங்களுக்குள் பதிவு செய்த எண்ணங்கள் கொண்டு
1.நாங்கள் அந்த மகரிஷிகளின் ஆற்றல் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும்
3.கணவன் மனைவி இருவரும் நாங்கள் ஒன்றி வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று
4.ஒருவருக்கொருவர் இந்த உணர்வின் தன்மைகளை வளர்த்திடல் வேண்டும்.

இருவரும் இப்படி எண்ணினால் தன் குடும்பத்தில் வரும் தீமைகளை நீக்கும் உணர்வின் உபாயங்கள் அங்கே வரும். அதனின் துணை கொண்டு வாழ்ந்தால் இன்றைய நஞ்சு உலக நிலைகளிலிருந்து தன்னை மீட்டிடும் நிலைகள் வளரும்

ஏனென்றால்…
1.இந்த உலகம் எங்கேயோ போய்க் கொண்டு உள்ளது
2.மனித உருவையே உருமாற்றும் நிலைகளாக
3.காற்று மண்டலம் நச்சுத் தன்மையாகி எங்கெங்கோ அழைத்துச் செல்லுகின்றது.

அகஸ்தியன் உணர்வு கொண்டு அவன் அரவணைப்பில் விண்ணில் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கும் அந்த அருள் ஞானிகளுடைய உணர்வுடன் ஒன்றி அந்தப் பேரானந்த நிலைகள் பெறும் தகுதிகளுக்குக் கணவனும் மனைவியும் நீங்கள் இந்த நிலைகள் பெற வேண்டும். முதலில் இந்த குடும்பத்தின் நிலைகள் கொண்டு இதை செயல்படுத்துதல் வேண்டும்.

ஆனால் இன்று பெரும் பகுதி நாம் பார்ப்பவர்கள் தியானத்தைச் செய்து கொண்டிருக்கின்றோம் என்ற நிலையில் உள்ளார்கள். இருந்தாலும் சில இடங்களில் பார்க்கப் போனால் ஒன்றுக்கொன்று “கீரியும் பாம்பையும்…” போலத்தான் உள்ளார்கள்.

எம்மைப் (ஞானகுரு) பார்க்கின்றார்கள்… கேட்கின்றார்கள்… ஆசிர்வாதம் கேட்கின்றார்கள். கேட்பதில் பயன் என்ன இருக்கிறது…? எதற்காக வந்தோமோ நாம் அதைப் பெற வேண்டுமா இல்லையா…?

1.எனக்குக் கூட்டம் தேவை இல்லை
2.அருள் ஞானம் பெறும் அருள் ஞானிகள்ளின் அமைப்பு தான் எனக்குத் தேவை.
3.அந்த அருள் ஞானத்தை வளர்ப்போர்கள் தான் தேவை
4.ஞானத்தைக் கூட்டிக் கூட்டிப் பெருக்கிக் கொள்வோர்கள் தான் தேவை
5.என்னைப் போற்றித் துதிப்போர் தேவையில்லை.
.என்னை போற்றிப் புகழ்வதில் பயனில்லை.

ஆனால் போற்றுதல் எவ்வாறு இருக்க வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருள் ஞானத்தைத் தனக்குள் ஊட்டி வளர்த்து… அந்த உணர்வின் தன்மை கொண்டு… “உலகம் போற்றும் உத்தம ஞானிகளாக நீங்கள் வர வேண்டும்…”

அது தான் நீங்கள் என்னைப் போற்றுவதாகும்…!

இல்லையெனில் என்னைத் தூற்றுவதாகவும் குருநாதரைத் தூற்றுவதாகவும் தான் ஆகுமே தவிர இதில் பயனில்லை.