“உணர்வின் வேகம் மட்டும் இருந்தால்…” சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது

“உணர்வின் வேகம் மட்டும் இருந்தால்…” சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது

 

ஒரு முறை ஆனைமலைக் காடுகளுக்குக் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று விட்டுப் பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸிற்கு முன்னால்…
1.ரோட்டைக் கடப்பது போன்று குறுக்கே சென்று எம்மையும் இழுத்தார்.
2.நாங்கள் குறுக்கே புகுந்தவுடன் பஸ் திடீரென்று நின்றுவிட்டது.

உடனே குருநாதர் டிரைவரைப் பார்த்து “மடத்தனமாக வண்டி ஓட்டுகின்றான் பார்…!” என்கிறார்.

பஸ்ஸின் டிரைவரோ “ஏனய்யா புத்தி இருக்கிறதா…? பைத்தியமா பிடித்திருக்கிறது…!” என்று திட்டினார்.

குருநாதரும் “இது போலவா வண்டி ஓட்டுவது…? அறிவு கெட்டதனமாக வண்டி ஓட்டுகிறாய்…” என்று டிரைவரைத் திட்டினார்.

பின் குருநாதர் தெளிவுபடுத்தினார். அதாவது இது போன்று சமுதாயத்தில் சந்தர்ப்பங்கள் சில நேரங்களில் உணர்வின் வேகம் கொண்டு நம் உணர்வுகள் செயல்பட்டுத் தான் செய்த தவறை மறந்து பஸ் டிரைவரைத்தான் குறை சொல்கிறோம்.

1.தவறு எப்படி நேர்ந்தது…? என்று சிந்திக்கத் தவறும் பொழுது
2.டிரைவர் மீது கோபம் கொள்வது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன.

டிரைவர் பிரேக் போடாமல் விட்டு விட்டால் அங்கே என்ன நேரும்…? என்று நாம் சிந்திப்பதில்லை. நாம் நசுங்கி இருப்போம் என்று அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

1.டிரைவர் திட்டியது சரிதான் என்று ஏற்றுக் கொள்ளும் நிலை வருமானால் நாளை இது போன்ற அவசர புத்தி நமக்கு வராது.
2.நல்ல அறிவினை ஊட்டினார் என்று எண்ணினால் டிரைவர் மீது பகைமை வராது.

இப்படி குருநாதர் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியில் கொடுத்தார்.

மக்கள் தங்கள் வாழ்க்கையில் தாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் கொண்டு செயல்படும் பொழுது சிந்தனை அதன்பால் தான் இருக்கின்றதே தவிர அங்கே தாம் செல்லும் பாதையில் உள்ள இடையூறுகள் தெரிவதில்லை.
1.தம்முடைய ஆசையின் நிலைகளிலே செல்கின்றனர்.
2.ஆனால் பாதையில் இருக்கும் ஆபத்தையும் எதிரியையும் மறந்து விடுகின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்துத் தீமைகள் நம்மிடையே வராது விலக்கி அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே
1.நான் கொடுத்த சக்தி கொண்டு பிறரை வீழ்த்துவேன் என்ற அகந்தை கொண்டால்
2.நல்வழியின் உணர்வுகள் உனக்குள் வராது என்று குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்..
3.ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி அதே உணர்வினை நுகர்ந்தால்
4.நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும்.

ஆகவே நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியுமா…? என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

நம் எண்ணத்திற்குள் நம்மை அறியாமலே புகும் சில தீமைகள்

நம் எண்ணத்திற்குள் நம்மை அறியாமலே புகும் சில தீமைகள்

 

தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி “கராத்தே…” கற்றுக் கொள்வார்கள். இரண்டு தட்டுத் தட்டினால் அடுத்தவர்களை விழுத்தாட்டி விடலாம்… ஓங்கி ஒரு உதை விட்டேன் என்றால் போதும் என்பார்கள்.

ஆனால் அந்தக் கராத்தேயின் உணர்வுகள் உடலுக்குள் வந்தபின் உடல் வலுவால் தாக்கும் தன்மை வருகின்றது.
1.ஆனால் நுகர்ந்த உணர்வோ “தாக்க வேண்டும்” என்ற உணர்வுகள் உடலுக்குள் கூடிய பின் உடலில் அழுத்தங்கள் அதிகமாகும்.
2.கூடுமான வரையிலும் இதுபோன்று கராத்தே கற்றுக் கொண்டவருடைய கடைசி நிலைகள் அழுத்தமாகி ரத்த அழுத்தம் அதிகமாகும்.
3.அழுத்தம் அதிகமான பின் அவர்களால் அந்தக் கலையைச் செயல்படுத்த முடியாது.

உடல் வலிமை இருக்கும் வரை செயல்கள் இருக்கும். சிறிது காலம் எல்லாம் நன்றாக இருக்கும். இந்தக் கலையை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்கள் அதைச் சீராகச் செயல்படுத்தும் பொழுது மகிழ்ச்சி வரும்… புகழ் வரும்.

ஆனாலும் அடுத்தவர்கள் குறைபாடுகளோ தவறுகளோ அல்லது பிடிக்காத செயல்களையோ செய்தால்
1.”இரு நான் உன்னைப் பார்க்கிறேன்… ” என்று வீரியத்தைத் தான் கூட்டும்…!
2.ஆனால் அவன் செய்யும் உணர்வைத் திருத்தி அமைக்கும் உணர்வு வராது.

அடித்தே திருத்த வேண்டும் என்று எண்ணம் தான் வரும். அவரை அறியாது செயல்படும் தீமைகளிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய வேண்டும் என்ற உணர்வு வராது.

சகஜ வாழ்க்கையில் நம்மை அறியாமலே உடல் வலுப்பெற்றாலும்
1.நம்முடைய எண்ணங்களுக்குள் தீமை வருவதை அடக்கத் தவறினால்
2.உடலுக்குள் புகுந்து நம் நல்ல குணங்களை அது அடக்கியே தீரும்.

பரிணாம வளர்ச்சியில் இந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி வேதனையுடன் வாழும் நிலையே நமக்குள் வரும். இதையெல்லாம் மாற்றுவதற்குத்தான் விநாயகர் தத்துவத்தினைக் கொடுக்கின்றார்கள்.

உடல் வலுப்பெற்றது யானை… எனவே யானை உடலைப் போட்டு விநாயகரைக் காண்பித்துள்ளார்கள். தன் எண்ண வலுவால் பாதுகாக்கும் உணர்வு கொண்டு வளர்ந்தது.
1.அதாவது உடல் வலிமை கொண்டு தான் தன்னைப் பாதுகாக்கும் நிலை வந்தது.
2.அதன் வழி மனித உடலைப் பெற்றோம் என்பதற்குத்தான் யானையைப் போட்டுக் காண்பித்தார்கள்.

அவ்வாறு வளர்ந்த நாம்… மனிதனான பின் எண்ண வலு பெற்றவர்கள். நம் எண்ணத்தைக் கொண்டு எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.

ஆறாவது அறிவு கொண்டு பல கோடித் தீமைகளை அறிந்தாலும்… சிந்தித்து அதிலிருந்து விடுபட்டு “நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால்…” அதன் வழி நுகர்ந்து தீமைகளை அகற்றும் வலிமையும் வருகின்றது.

சில மருத்துவர்கள் நோய்களைப் போக்கப் புதிதாக மருந்து கண்டுபிடிப்பார்கள். நோயை நீக்கி பேரும் புகழும் பெற்றுச் சம்பாதித்து விடலாம் என்று செயல்படுத்துகின்றார்கள். சம்பாரித்த பின் அதிலே சந்தோசமும் படுகின்றார்கள்.

இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வரும் பொழுது தன்னுடைய பையனைச் சரியாக வளர்க்கவில்லை என்றால்… அவன் தவறுகள் செய்வான்… கண்டபடி பணத்தைச் செலவழிப்பான்.

இவரோ சிரமப்பட்டு மருந்தைக் கண்டுபிடித்துச் சம்பாதித்து வைத்திருப்பார்கள். ஆனால் பையனோ வளர்ப்பின் நிலைகள் கொண்டு சேர்க்கையின் காரணமாக சில தாறுமாறான செயல்களைச் செயல்படுத்துவார்.

இந்த மருத்துவர் மற்றவர் நோய்களை எல்லாம் நீக்குவார்.
1.சம்பாதித்த காசைத் தேவை இல்லாமல் பையன் செலவழிக்கிறான் என்றால்
2.”கஷ்டப்பட்டுச் சாம்பாரித்தேன்… இப்படிச் செய்கிறானே…” என்று எண்ணி வேதனைப்படுவார்.

ஆனால் பையனுடைய தாயோ பாசமாக இருக்கும் நிலையில்… பையனை ஏன் சீறிப் பாய்கின்றீர்கள்…? நல்ல வார்த்தையைச் சொல்லுங்கள்…! என்று கணவனிடம் சொல்லும்.

நீ இப்படிப் பேசிப் பேசித்தான் அவனைக் கெடுத்து விட்டாய்…! என்று இந்த உணர்வின் வேகம் பையனின் தாயாரையும் திட்டும்படி செய்யும்.

தாய்ப் பாசம் கொண்டு கொஞ்சம் பொறுமையாகச் சொல்லுங்கள் என்று தாய் ஞாபகப்படுத்தும். “எல்லாம் உன்னால் தான் அவன் கெடுகின்றான்…” என்ற நிலை வந்துவிடும்.

1.எப்படிப் பார்த்தாலும் இந்த உணர்வுகள் நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது.
2.அதை அடக்கக்கூடிய சக்தி தெரிந்தும் நாம் அதை விட்டு விடுகின்றோம்.

நாம் அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டுமல்லவா…?

நல்லதைக் காக்கும் சக்தி அவசியம் நமக்குத் தேவை

நல்லதைக் காக்கும் சக்தி அவசியம் நமக்குத் தேவை

 

1.சக்தி இருக்கின்றது என்ற நிலையில் “நான்…” என்ற திமிர் வந்தால் அது முதலில் உன்னை அடக்கிவிடும்…
2.உன் நல்ல குணங்களை அது கொன்று விடும் என்று குரு சொல்கின்றார்.

இதே போன்று எம்மைப் பார்ப்போரும் ஒரு சிலர் சாமி நம்மை ஒன்றும் செய்ய மாட்டார் என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அது தான் உங்களுக்குள் விளையும்.

ஆனால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று நான் எண்ணும்போது எனக்குள் அது நல்லதாக விளைகின்றது.

சில பேர் நினைப்பார்கள் சாமியிடம் நிறையச் சக்தி இருக்கின்றது… எல்லோருக்கும் நல்லது தான் செய்கின்றார். ஆனால் சாமியை இத்தனை தூரம் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பார்த்துக் கொண்டு அவர் சும்மா இருக்கின்றார் என்று நினைத்தால் கெடுதலுக்கு அல்ல.
1.அவர்கள் உணர்வு நம்மைப் பாதித்து விடக்கூடாது.
2.அவர்களுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.
3.அவரவர் எடுக்கும் உணர்வுகளுக்கு அவரவர் உயிரே தண்டனை கொடுக்கின்றது. நாம் ஏன் தண்டனை கொடுப்பானேன்…?

நாம் விலகிச் சென்று விட்டால் பாதகம் இல்லை.

வெள்ளம் வருகின்றது… வீட்டை அடித்துச் சென்று விடும் என்றால் வீட்டுப் பக்கம் வராமல் மறித்து வேறு பக்கம் திசை திருப்பி விடலாம். கரையைப் போட்டுக்கொள்ள வேண்டும். விட்டு விட்டால் கட்டிடத்தைச் சாய்த்து விடும்.

1.இது போன்று ஒரு உணர்வின் தன்மை நம்மைப் பாதிக்கிறது என்றால் அது நம் மீது மோதாதபடி திசை திருப்ப வேண்டும்.
2.இத்தனை பழக்கமும் வேண்டி இருக்கின்றது.

குளத்திலே தண்ணீர் முழுவதும் நிறைந்துவிட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு என்ன செய்கின்றார்கள்…? அந்த இடத்திலே மணலை மூடடைகளாகக் கட்டி மொத்தமாகப் போட்டால் அந்தத் தண்ணீரை ஓரளவுக்கு நாம் தடுக்க முடியும். அடுக்கடுக்காக மேலே போடப் போட வலுவாகி விடுகிறது. தண்ணீர் மேலே ஏறி வருவதில்லை.

இந்தத் தந்திரம் இல்லை என்றால் வேறு எந்தப் பொருளைப் போட்டாலும் தண்ணீர் அரித்துக் கொண்டு சென்று விடும். கற்றுக் கொண்டவர்கள் இந்த நிலையைச் செயல்படுத்துகின்றார்.

இதைத்தான் மெய்ஞானியான நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஒருவன் வேதனைப்படுகிறான் என்று காணுகின்றோம் சக்தி இருந்தாலும் அதைக் கொண்டு தாக்கினோம் என்றால் நம்முடைய நல்ல நிலைகள் சிதைந்து விடும்

ஏனென்றால் நல்லது கெட்டது எப்படி நடக்கிறது…? என்று இயற்கையில் அனுபவபூர்வமாக எல்லாவற்றையும் தெரியும்படி செய்தார்.
1.சக்தி கொடுப்பார்.
2.ஆனால் அதைப் பயன்படுத்தக்கூடிய முறைகள் இப்படி இருக்கிறது.

தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒருவர் மீது நாம் கோபப்பட்டு “அவரைத் தொலைந்து போக வேண்டும்…” என்று சொல்லலாம். சந்தோஷமும் படலாம். ஆனால் அந்தச் சந்தோஷம் உங்கள் உடலில் உள்ள நல்ல குணங்களைத் தொலைத்து விடும்.

சந்தோஷத்தை ஊட்ட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகள் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து இருளை நாடாதபடி தடுத்துப் பழகினால் என்றும் பேரருள் பேரோளியைப் பெறலாம்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எம்மிடம் ஆசி பெற்றாலும் யாம் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம்

எம்மிடம் ஆசி பெற்றாலும் யாம் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம்

 

சாமியாரிடம் ஆசி வாங்கினால் போதும் என்ற நிலையில் என்னிடம் ஆசி வாங்கினால் அன்றைய தினத்திற்கு நன்றாக இருக்கும்.
1.அடுத்து நீங்கள் யாம் சொன்ன வழியைக் கடைப்பிடித்தால்
2.நிலையாக உங்களுக்குச் சரியாகும்.

அப்படி இல்லாது “சாமியிடம் ஆசி வாங்கினேன்… நன்றாக இருந்தது..!” என்று ஒரு சொல்லில் சென்று விட்டால் அடுத்து என்ன ஆகின்றது…?

சண்டை போடுபவன் வேதனைப்படுபவன் சங்கடப்படுபவன் இவர்களை எல்லாம் இரக்கத்துடன் உற்றுப் பார்த்தால்… அடப் பாவமே நல்ல மனிதன் இப்படி ஆகிவிட்டார் என்று வேதனையான உணர்வை உணர்ந்தால் அந்த உணர்ச்சிகள் உங்கள் ரத்தத்தில் தான் கலக்கின்றது.

1.கலந்த பின் நல்ல அணுக்கள் பிடிக்காது அதை விட்டு விடுகிறது.
2.நல்ல
3. அணுக்கள் ஏற்கவில்லை என்றால் சிந்திக்கும் தன்மை குறைகிறது… வியாபாரம் செய்தால் மன வலிமை இல்லாது போய் விடுகின்றது.

மன வலிமை இல்லை என்றால் நல்ல சரக்கைத் தேர்ந்தெடுக்க முடியாது. நல்ல சரக்கை எடுத்தாலும் கூட நம் சொல் வெளிப்படும் பொழுது அதனுடன் வேதனை கலந்து வருகின்றது.

1.நம் கடையில் துணியை எடுக்க வருபவர்கள் இந்தச் சரக்கைப் பார்த்த பின் அவர்களுக்கு அதிலே வெறுப்பு வருகின்றது.
2.ஏனென்றால் நம் உணர்வுகள்… அந்த மணம் அதில் பட்டபின் அவர்கள் அதை நுகரும் பொழுது துணியை வாங்குவதில்லை.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி வருகின்றது. இதை எல்லாம் துடைக்க வேண்டும் அல்லவா. இது போன்று நம்மை மறைக்கும் “சிறு திரைகளை” அவ்வப்போது தூய்மைpபடுத்த வேண்டும்.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்தியை உடலுக்குள் சேர்த்து ரத்தத்தில் கலந்து இருளை மாற்றிப் பழக வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இதைச் செய்து பழக வேண்டும்.

ரோட்டில செல்கின்றோம்… உடையில் தூசி படுகின்றது. துணியை அடுத்து துவைத்து விடுகின்றோம். நாம் ஒரு வேலை செய்கின்றோம்… கையிலே அழுக்குப் படுகின்றது. உணவை உட்கொள்ளும் முன் கையைத் தூய்மைப்படுத்துகின்றோம்.

இதே போன்று தான் ரோட்டில செல்கின்றோம்… ஒருவர் வேதனைப்படுபவதைப் பார்க்கின்றோம்.
1.அது அழுக்காக நம் ஆன்மாவிலே படுகின்றது… ரத்தத்தில் கலக்கின்றது.
2.ரத்தத்தில் அசுத்தமாவதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.

நல்ல உணர்வுகள் இருந்தாலும் பிறருடைய வேதனை உணர்வுகள் அந்த நல்ல குணத்திலே சித்திரை சிறு திரையாக மறைத்து விடுகின்றது… மூடி விடுகின்றது. இந்த வேதனை தான் முன்னணியில் வருகின்றதே தவிர நீக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

இதைப் போன்ற தீமையெல்லாம் நீக்கி ஒளியாக இருப்பது துருவ நட்சத்திரம்.
1.அதை நாம் நுகர்ந்து எடுத்து நம் ரத்தத்திலே கலந்து தூய்மைப்படுத்த வேண்டும்.
2.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

குரு சொன்னதை நாம் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்

குரு சொன்னதை நாம் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்

இப்பொழுது யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம் நீங்கள்
1.நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய வேலை என்ன…?”
2.வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ…! ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்…?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால்
3.யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.

அதைப் போல்… ஒருவர் நம்மிடம் தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போமேயானால அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.
1.அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்… ஆனால் ஈர்க்காது. 2.இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள், அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம் அதை ஈர்ப்பதில்லை.

யாம் எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால் அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.

1.அதன் பிறகு யாம் கோபமாக என்ன சொல்வோம்…?
2.“போங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…” என்று சொல்வோம்.

அப்படி யாம் சொன்னால்… “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே…” என்று எண்ணினால் என்னவாகும்…?

ஏனென்றால் அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை உடனே தாங்கி “மடக்கி” அனுப்புகின்றோம்.

நீங்கள் சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று சொன்னால் யாம் என்ன பண்ணுவது…? அப்படியானால், அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வேண்டுமா…?

யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.

மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம் நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்…? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக மாறும். ஆகையால் இந்தத் தீய உணர்வுகளை நீங்கள் உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் யாம் அநேகம் பேருக்குப் பல நிலைகளைச் சொல்லிக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்ததின் நிலைகளைத் தோல்வி அடையச் செய்து விட்டனர்.

மனிதரின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? அதை நாம் எப்படிக் கொண்டுவர வேண்டும்…? என்று உணர்த்துகின்றோம்.

ஆனால் பெரும் பகுதியானவர்கள் என்ன செய்து விட்டார்கள்…?
1.நாளை என்னவோ நடக்கட்டும்.
2.இன்று நாம் தொழிலில் முன்னேற வேண்டும்.
3.தான் ஒன்றைச் சொன்னால் அவ்வார்த்தையையும் தன்னையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று இப்படித்தான் தலைகீழாகப் போகிறார்கள்.
4.அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் தன்மையை யாம் எவ்வளவுதான் கொடுத்தாலும் எடுபட மாட்டேன் என்கிறது.

ஆகையால் யாம் மற்ற நிலைகளை நிறுத்தி விட்டு இப்பொழுது தியானவழி அன்பர்களைத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

அந்த உணர்வோடு கொண்டு போகப்படும் பொழுது அவ்வுணர்வின் ஒளிக்கற்றைகளை உங்களில் சேர்த்துப் பழகுங்கள். ஆனால் சாதாரண மின்னல் வருகின்றதே அதை நீங்கள் பார்க்கக் கூடாது.

மின் கதிர்களை எண்ணிச் சுவாசிக்கப்படும் பொழுது அதன் உணர்வின் தன்மையினை உங்களிடத்தில் ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க உதவும். நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களில் சேர்கின்றது. இவையெல்லாம் குரு தன்மையால் வருவது.

1.“சாமி (ஞானகுரு) சொன்னார் இதையெல்லாம் பெற வேண்டும்” என்று எண்ணப்படும் பொழுது
2.நீங்கள் எண்ணிய ஆற்றல் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

நான் தனித்தன்மையில் செல்வேன் என்று எண்ணினால் முடியாது.

குரு இல்லாத வித்தை எதுவுமே வித்தையாகாது. ஆகையால் “குருநாதர் சொன்னார்” என்ற நிலையில் ஒன்றை இணைத்துப் பார்க்கும் பொழுது தனக்குள் உருவாகும்.

ஆகவே இதன் வழியில்தான் நாம் அறிய முடியும். அப்படியில்லாமல் நமது எண்ணங்களை பலவீனமடையச் செய்தால் அந்த உணர்வின் அணு உங்களைத் திசை திருப்பிவிடும்.

ஏனென்றால்
1.“நாம் இம்மனித உடலுக்குப்பின் பெற வேண்டியது எது…?” என்பதை
2.உங்கள் எல்லோருக்கும் தெளிவாக்கும் தன்மைக்குத்தான் கொண்டு வருகின்றோம்.

மனிதனின் எண்ண வலு

மனிதனின் எண்ண வலு

 

நாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்…? தீமையை நீக்கும் உணர்வை நாம் இச்சைபட்டால் உயிரிலே பட்டு அது கிரியை ஆகித் தீமையை நீக்கும் ஞானங்கள் வந்து அதுவாக நாம் ஆவோம்.

அதனால் தான் வலிமை மிக்க சக்தி வள்ளி. எத்தனையோ கோடி உடல்களில் பெற்ற தீமையை நீக்கும் அந்த வலிமையான சக்தி நம் ஆறாவது அறிவிற்கு உண்டு. தெரிந்து தீமையை நீக்கும் வலிமையான நிலை பெற்றது.

ஒரு விஞ்ஞானி ஆறாவது அறிவை வைத்துத் தான் எத்தனையோ வேலைகளைச் செய்கின்றான். ஒரு கல்லை நம்மால் தூக்க முடியவில்லை
1.ஆயிரம் டன் 2000 டன் எடையுள்ள பொருளைத் தூக்கிச் செல்லும் அளவிற்கு ராக்கெட்டைச் செய்து மேலே பறக்க விடுகின்றான்.
2.அது அவனின் எண்ண வலு தானே.

தன் எண்ண வலுவைச் செலுத்தி அதனால் தூக்கக் கூடிய சக்தியை கண்டுபிடித்து இருக்கின்றான். அப்போத்து அந்த எண்ண வாலு தானே காரணம் ஆகிறது.

1.நமக்குள் அந்த எண்ண வலுவைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அந்த வலுவைக் கூட்டப்படும் பொழுது
2.எத்தகைய நிலையையும் நாம் சமாளிக்க முடியும்.
3.அதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி பழக்கப்படுத்துவதற்கு ஆத்ம சுத்தியைக் கொடுக்கின்றோம்.
4.எந்த நிமிடம் எது வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த உடலுடன் யார் இருக்கின்றார்கள்…? நம் குருநாதர் இருக்கின்றாரா…? திருமூலர் இருக்கின்றாரா…? ஆதிசங்கரர் இருக்கின்றாரா…? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ராமலிங்க அடிகள் இருக்கின்றாரா…? உலகுக்கெல்லாம் போதித்தாரே விவேகானந்தர் அவர் இருக்கின்றாரா…? அவருடைய குரு எல்லாத் தத்துவத்தையும் தெரிந்தாரே ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர் இருக்கின்றாரா…?

யாரும் உடலுடன் இல்லை. இன்றைய செயல் நாளைய சரீரம் இன்றைய நிலையில் ஒளியின் உணர்வாக நாம் பெறப்படும் பொழுது நாளை ஒளி உடல் பெறலாம்.

அதை விடுத்து விட்டு
1.நாளைக்கு என்ன செய்யப் போகின்றோம்…?
2.இத்தனை ஆசை வைத்திருக்கிறேன்… உடலை விட்டுச் சென்று விட்டால் என்ன ஆவது…? என்று எண்ணினால் மீண்டும் இங்கேதான் சுழல வேண்டி வரும்.

இந்த உயிர் என்றுமே அழிவதில்லை வேகாநிலை பெற்றது இந்த உடல் மாறி மாறி வரும். உணர்வுக்குத் தக்க உயிர் உடலை மாற்றிக் கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு ரூபத்திலும் தான் எடுக்கும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உடலை தான் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது.

உயிருக்கு வேறு வேலை இல்லை ஆக இந்த ஆறாவது அறிவு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றினால் என்றைக்கும் நிரந்தரமான நிலையாக விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி கிடைக்கும்.

1.ஆறாவது அறிவு ஏழாவது ஒளி என்ற நிலை அடைவதை விஜயதசமி
2.வான் வீதியிலே தோன்றிய உயிர் மனிதரான பின் பத்தாவது நிலை பெற வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நம் வியாபாரம் எப்படிக் கெடுகின்றது…?

சந்தர்ப்பத்தால் நம் வியாபாரம் எப்படிக் கெடுகின்றது…?

 

நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்குப் போகின்றோம். ஜவுளி வியாபாரத்திற்குப் போகும் பொழுது கடைகளில் ஆர்டர் சேகரிப்பதற்குச் சில மாதிரிகள் மட்டுமே எடுத்துச் செல்கின்றோம்.

கடைகளுக்குச் சென்று நாம் எடுத்துச் சென்ற “மாதிரித் துணிகளை” (sample) காண்பித்தவுடனே கடைக்காரர்களும் அதைப் பார்த்துவிட்டு ஒன்றிரண்டு மாதிரிகளைப் போன்று சரக்கு அனுப்பும்படி நம்மிடம் கேட்கின்றனர்.

நாமும் கடைக்காரரிடம் ஆர்டர்களைச் சேகரித்துக் கொண்டு, நமது ஊருக்குக் கிளம்பி வந்து, கடைக்காரர் ஆர்டர் செய்த சரக்குகளைத் தயார் செய்து, அவரது கடைக்கு அனுப்புகின்றோம்.

சரக்கை அனுப்பி வைத்துவிட்டு ஓரிரு நாள்கள் கழித்துப் பண வசூலுக்காக அவருடைய கடைக்குச் செல்கின்றோம்.

அவருடைய கடைக்குச் செல்ல வேண்டுமென்றால் (city) பஸ்ஸில் பயணம் செய்துதான் போக வேண்டும். ஆனால் பஸ் கிடைக்கவில்லை… நடந்தே செல்கின்றோம்.

அப்போது சந்தர்ப்பம்… ஒரு குடும்பத்தில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். பலகாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் எண்ணெய் தீர்ந்து விட்டது.

வீட்டிலிருந்த சிறுவனை அழைத்து,ச் “சீக்கிரம் எண்ணெய் வாங்கி வாடா…” என்று அவசரப்படுத்தி அனுப்பி வைக்கின்றார்கள். சிறுவனும் எண்ணெய் வாங்கி வருவதற்காக வேகமாகக் கடைக்குச் செல்கின்றான்.

சிறுவன் கடைக்குச் சென்று “எண்ணெய் கொடுங்கள்… எண்ணெய் கொடுங்கள்…!” என்று அவசரப்படுத்துகின்றான்.

ஆனால் கடைக்காரரோ இவனைப் பார்த்துப், “பொறு… பொறு…” என்று அடுத்தவர்களுக்கே சரக்கைக் கொடுத்து அனுப்புகின்றார். சிறுவனுடைய அவசரத்திற்குச் செவி சாய்க்க முடியாமல் போய் விடுகின்றது.

சிறுவனுக்கோ நேரம் கடந்து கொண்டிருக்கின்றது.

அது சமயம் சிறுவன் “நேரமாகிக் கொண்டு இருக்கின்றது… வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள், ஆகவே எண்ணெய் சீக்கிரம் கொடுங்கள்… தாமதமானால் வீட்டில் என்னைத் திட்டுவார்கள்…!” என்று கூறுகின்றான்.

1.இருந்தாலும், சிறுவனுடைய ஆவேச அவசர உணர்வுகள், அங்கே எதிர்நிலையாகின்றது.
2.“எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…” அதாவது கடைக்காரரின் உணர்வும் சிறுவனுக்குச் சீக்கிரம் சரக்கைத் தந்து அனுப்ப மறுக்கின்றது.

இப்படித் தாமதமாகும் பொழுது… “நேரமாயிற்றே, நேரமாயிற்றே…!” என்ற இந்தப் பதட்டத்திலேயே சிறுவன் இருக்கின்றான். சிறிது தாமதத்திற்குப்பின் சிறுவனும் எண்ணெயை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வேகமாக வருகின்றான்.

இப்படி, சிறுவன் வேகமாக வரும் பொழுது அவனுடைய எண்ணம் முழுவதும் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!” என்றே செலுத்துகின்றான். இதனால் சாலையில் மேடு பள்ளங்கள் தெரியாதபடி சென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றான்.

ஏனென்றால்
1.அவனுடைய எண்ணம் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!” என்று இருக்கின்றது.
2.இதனால் அவனுக்குச் சாலையில் மேடு பள்ளம் தெரிவதில்லை.

எப்படியும் எண்ணெயைக் கொண்டு போய்ச் சீக்கிரம் கொடுத்து விடவேண்டும் என்று எண்ணினான். அந்த அவசரத்தால் போகும் வேகத்தில் இவனும் தவறி விழுந்து பாட்டில் நொறுங்கி எண்ணெயும் வீணாகி விடுகின்றது.

சிறுவன் எண்ணெய் வீணான வருத்தத்தில் உடைந்த பாட்டிலை சாலை ஓரமாகத் தள்ளிவிடாதபடி சாலையில் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றான்.

அதே சமயம் நாம் அதே சாலை வழியில் (ஜவுளி) சரக்கை அனுப்பிய கடைக்கு நடந்து வருகின்றோம். வழியில் நாம் நமது வியாபாரம் பற்றிய எண்ணத்துடனே செல்கின்றோம்.

1.நமது நினைவு முழுவதும் வியாபாரம் பற்றிய சிந்தனையில் இருப்பதால்
2.சாலையில் உடைந்து கிடக்கும் பாட்டிலைக் கவனிக்காமல் உடைந்து கிடக்கும் பாட்டிலை நம்மை அறியாமலே உதைக்கின்றோம்.

உடைந்த பாட்டில் காலில் பட்டவுடன் “பாவிப் பயல்கள்… நடக்கும் ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்துள்ளார்களே…!” என்று வெறுப்பான உணர்வுகள் வருகின்றது.

உடைந்த பாட்டிலில் நம் கால் மோதிய போதும் நமது காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால் “இந்நேரம் உடைந்த பாட்டில் காலில் குத்தியிருந்தால் என்னவாயிருக்கும்…?” என்ற உணர்வுகள் வருகின்றன.

சரி… நாம் தான் உடைந்த பாட்டிலைப் பார்த்தோம். உடைந்த பாட்டில்களை ஓரமாகத் தள்ளிவிடுவோமா…? என்றால் செய்ய மாட்டோம்.

இதே பாட்டில் அடுத்தவரின் காலில் குத்த வாய்ப்பிருக்கின்றது. ஆகவே உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளிவிடுவோம் என்று உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளி விட்டிருந்தால் “நம்மிடம் சிறிது நல்ல மனம் இருக்கின்றது…” என்று இருக்கும்.

1.ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? வியாபார நோக்கத்திலேயே போகின்றோம்.
2.“ரொம்ப அறிவு கெட்டதனமாக இருக்கின்றது…” என்று
3.மற்றவர்களைக் குறை கூறும் உணர்வுகளை எடுத்துக் கொண்டு போகின்றோம்.

இப்படி இதன் உணர்வுகளுடன் கடைக்குச் சென்றபின்… “சரக்கு அனுப்பியிருந்தோம்… சரக்கைப் பார்த்தீர்களா…?” என்று கடைக்காரரிடம் கேட்போம்.

நம்மைக் கடை முதலாளி பார்க்கின்றார். அது சமயம்
1.சாலையில் நடந்த சம்பவத்தால் உண்டான “வெறுப்பின் மணம்” நமது உடலிலிருந்து வெளிப்படும் நிலையில்
2.அதன் மணத்தை முதலாளி நுகர நேருகின்றது.
3.நுகர்ந்தபின் நாம் அனுப்பியிருந்த சரக்குக் கட்டுகளைப் பிரித்துப் பார்க்கின்றார்.

கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். வெறுப்பின் உணர்வுகளை நுகர்ந்து சரக்கைப் பார்க்கும் பொழுது கடைக்காரருக்கு “வித்தியாசமாகத் தெரிகின்றது…”

உடனே கடை முதலாளி “ஜவுளி மாதிரி (sample), அன்று காண்பிக்கும் பொழுது ஒரு விதமாக இருந்தது, ஆனால் இன்று சரக்கு வேறு விதமாக இருக்கின்றதே…!” என்று கூறுவார்.

ஏனென்றால் நுகர்ந்த வெறுப்பின் உணர்வின் மணத்திற்கொப்ப அங்கே வெறுப்பு உணர்ச்சியையே காண்பிக்கின்றது.
1.ஆனால் அன்று காண்பிக்கப்பட்ட மாதிரிப் பொருளும் இன்று காண்பிக்கும் சரக்கும் ஒன்றுதான்.
2.நுகர்ந்த உணர்வுகள் இன்று வேறு விதமாகக் காண்பிக்கின்றது.

“நான் அனுப்பியது நல்ல சரக்குதான்… நன்றாகப் பாருங்கள்…!” என்று நாம் கூறுவோம்.

உடனே கடை முதலாளி, எனக்குக் கண் இல்லையா…? நன்றாகப் பார்த்துவிட்டுத் தான் சொல்கின்றேன்…” என்று கூறுகின்றார்.

நாமும் இரண்டு தரம் “நல்ல சரக்குதான்…” என்று கூறுவோம்.

அதற்குக் கடை முதலாளி “இப்படி நாணயம் (நேர்மை) கெட்டுவிடக் கூடாது…” என்று கூறுவார்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகளின் இயக்கம் இப்படி இருக்கின்றது. இதை மாற்றுவதற்கு வழி என்ன…? சந்தர்ப்பத்தால் வரும் இத்தகைய தீமைகளைத் துடைப்பதற்குச் சக்தி வேண்டுமே.

அதற்குத்தான் தியானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அறியாது வரும் தீமைகளை உடனுக்குடன் நீக்கிப் பழக வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் அருளிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் பெற்று மெய்ப் பொருள் காணும் திறனை நமக்குள் வளர்த்துக் கொண்டால்
1.நமது வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கொப்ப நல் ஞானங்கள் உதயமாகி நம்மை வழி நடத்திச் செல்லும்.
2.இதன் தொடர் கொண்டு அகண்ட அண்டத்தின் இயக்கமும் நமது உடலான பிண்டத்திற்குள் அது எப்படி இயக்குகின்றதென்றும்
3.உணர்வுகள் எப்படி எண்ணங்களாக ஆகின்றதென்றும்
4.எண்ணங்கள் எப்படி உணர்ச்சிகளாக மாறுகின்றதென்றும்
5.உணர்ச்சிகள் எப்படி நம்மை இயக்குகின்றதென்றும்
6.நமக்கு நாமே அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் குரு வழியில் நாம் எல்லோரும் பெற வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியில் உங்களை நீங்கள் அறிந்து அருள் வழி வாழ்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் வழியில் தொழில் வளம் பெற்றுச் செல்வம் செல்வாக்கு பெற்று அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.

தவறைச் சுட்டிக் காட்டும் பொழுது ஏற்படும் நிலைகள்

தவறைச் சுட்டிக் காட்டும் பொழுது ஏற்படும் நிலைகள்

 

நாம் ஒரு மனிதனிடத்தில் “நீ செய்யும் தவறுகளிலிருந்து விடுபட்டு இந்த நல்ல வழியில் செல்” என்று கூறினால் உடனே அவரிடத்தில் “எதிர் நிலையாகின்றது…”

தனக்கு விரோதமாக ஒருவர் சொல்லும் பொழுது அவர் தமது தாய் தந்தையராக இருந்தாலும் வெறுக்கின்றார்… சகோதரனாக இருந்தாலும் வெறுக்கின்றார்… நண்பராக இருந்தாலும் வெறுக்கின்றார்.
1.ஏனென்றால் மனிதர் தமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ
2.அதன் வழியே அவரை அழைத்துச் செல்கின்றது.

ஆனால் அப்படி ஒருவர் மற்றவர்களை வெறுக்கும் தன்மைக்குக் காரணம் என்ன…?

குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர்கள். அதனால் நமது குழந்தையிடமும் விளையாட்டுக் குணம் அதிகமாக இருக்கின்றது. இதனால் அவன் விபத்தில் சிக்குவான்… கல்வியில் ஞாபகம் இருக்காது… ஞானம் வராது என்று நாம் அவனைத் திட்டினால் அப்போது அங்கே எதிர் நிலையாகின்றது.

நாம் கோபமாகப் பேசினால் அவன் நம்மை எதிர்த்து பேசும் நிலை வருகின்றது. இதைப் போன்று அவன் நம்மை எதிர்த்துப் பேசும் நிலை வரும் பொழுது நமக்குள் வெறுப்பின் தன்மை இயக்கி அவனின் வெறுப்பைத் தணிப்பதற்கு மாறாக நாம் வெறுப்பின் உச்சக்கட்டம் அடைந்து அவனை உதைக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

நுகர்ந்த உணர்வுக்கொப்ப நமது உயிர் நம்மை இயக்குகின்றது.
1.நுகர்ந்த உணர்வுக்கொப்ப உயிர் நம்மை இயக்கினாலும்
2.நமது ஆறாவது அறிவால் நமது உயிரான்மாவை நம் வழிக்கு கொண்டு வரமுடியும்.

நாம் இதைக் காட்டிலும் வலுவான உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் நமது உயிர் அவ்வுணர்வின் வழி நம்மை வழி நடத்தும்.

1.தீமைகளை நீக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தறிந்தால்
2.நமது உயிர் நம்மிடத்தில் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளை ஊட்டி நமது அங்கங்களைச் செயல்படுத்தும்.
3.தீமைகளை நீக்கும் அருள் உணர்ச்சிகள் நமது இரத்தத்தில் அணுவாக உருவாகும்.

இதை போன்று தீமைகளை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நாம் நுகர்ந்து அதன் உணர்ச்சிகளை நம்முள் இயக்கினால்… நமது சொல்லில் நயமும்… நமது சொல்லைக் கேட்பவரிடத்தில் இனிமையும்… நமது சொல்லை ஏற்றுக் கொள்வோரிடத்தில் மகிழ்ச்சியும் வருகின்றது.

உணர்வின் “சில மாறுபட்ட இயக்கங்களை” அறிந்து கொள்வது நல்லது

உணர்வின் “சில மாறுபட்ட இயக்கங்களை” அறிந்து கொள்வது நல்லது

 

உயிரின் இயக்கத்தை அறிந்து அதை எப்படி மதிக்க வேண்டும்…? என்பதற்காகத்தான் குருநாதர் எம்மை காடு மேடலாம் அலையச் செய்து எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்து அறியும் படி செய்தார்.

அதே சமயத்தில் நகருக்குள் வந்த பின் இங்கே எத்தனையோ வேதனை வருகிறது.

ஒருவனுக்கு உடல் எல்லாம் ரணமாக இருக்கின்றது ஆனால் உணவுக்காக வேண்டி “ஐயா பசிக்கிறது…” என்று உடலை வளர்க்கப் பிச்சை கேட்கின்றான்
1.ஆனால் வேதனை தெரிவதில்லை.
2.வசதி உள்ளவர்கள் நமக்கு உடலில் வேதனையானால் நம்மால் ஒரு இஞ்ச் கூட நம்மால் நகர முடியவில்லை.

ஆனால் வேதனையானாலும் கூட பசிக்குச் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில் வேதனையை தாங்கிக் கொண்டு அவன் எப்படிப் பிச்சை எடுக்கச் செல்கிறான்…?

1.ஆகாரத்தின் மீது எண்ணம் இருக்கப்படும் பொழுது வேதனை குறைகின்றது.
2.ஆனால் ஆகாரம் கிடைத்த பின்பு வேதனையை ஜாஸ்தியாக உணர்கின்றான்.

முதலில் உணவு வேண்டும் என்பதற்காகத் தேடிச் செல்கின்றான். அதை தேடிச் சென்று “உணவைப் பெறும் வரையிலும் ஆர்வம் இருக்கின்றது..” உட்கொண்டு பசி தீர்ந்தபின் எவ்வளவு வேதனைப்படுகின்றான்…?

உடலை வளர்க்க விரும்புகின்றான். அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்றபின் இந்த உணர்ச்சிகள் எப்படி அறியச் செய்கின்றது…?

இதை அறியும் உணர்வுகள் உனக்குள் நுகர்ந்து கொண்ட பின் என்ன ஆகிறது…? என்பதையும் காட்டுகின்றார். இதெல்லாம் எதற்காக அனுபவம் கொடுக்கிறார்…?

என்னிடம் பழகி இருக்கிறீர்கள்.
1.உங்களுக்குக் கோபம் எப்படி வருகின்றது…? வெறுப்பு எப்படி வருகின்றது…?
2.வெறுப்படைந்த பின் வீட்டில் உள்ளவர்கள் மீது வெறுப்படையச் செய்வது எது…?
3.அதே சமயத்தில் அதை எல்லாம் எப்படி நீக்குவது…? என்பதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிப்பது.

இத்தனையும் நான் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டு வந்தேன்.

உயர்ந்த சக்தியை உங்களிடம் சொல்லி அதை ஏங்கிப் பெறும்படி செய்து வளர்த்து அந்தத் தீமையை நீக்கும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

நான் வந்து உங்களுக்கு அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்ல வரவில்லை.

திட்டியவனைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அந்த உணர்வு பதிவாகின்றது. அது எப்படி மீண்டும் மீண்டும் இயக்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் “எல்லாமே சந்தர்ப்பம்…” என்பதை நீங்கள் உணர முடியும்.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்ததும் சந்தர்ப்பம்தான். தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வைச் சுவாசித்த பின்
1.அது அணுக்களாக மாறி உடலில் மாற்றமாகி உணர்வுகள் மாறி குணங்கள் மாறி செயல்கள் மாறி
2.இது எல்லாம் எப்படி மாறி வந்தது…? என்பதைத் தெரிந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
3.நாம் போகும் வழியினைச் சீராக்கி அதன் வழி வளர்ச்சி பெற ஏதுவாகும்.

உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன்

உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன்

 

கம்ப்யூட்டரில் அழுத்தத்தின் தன்மை கொண்டு பதிவு செய்கின்றார்கள். பதிவான பின் அதற்குண்டான வேலைகளை எல்லாம் அது செய்கின்றது.

உதாரணமாக கோபமான உணர்வுகளை நீங்கள் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால்
1.அவனை நினைக்கும் போதெல்லாம் கோப உணர்ச்சிகள் தான் வருகின்றது.
2.யாரால் அது உருவானதோ அவனை எப்படி அடிப்பது…? எப்படி அவனை மிரட்டுவது…? எப்படித் துரத்துவது..? என்ற உணர்வெல்லாம் வரும்.

இல்லை என்றால் அவன் கோப்ப்பட்டு நமக்கு ஏதாவது அடுத்து தொல்லை கொடுப்பானா…? அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தனைகள் வரும்.

இவை எல்லாம்…
1.அவனைப் பார்த்துப் பதிவான அந்த ரெக்கார்ட் நல்ல குணத்துடன் இணையும் பொழுது
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் பல சிந்தனைகள் பல செயல்கள் உணர்வுகள்
3.”உணர்ச்சிகளாக ஊட்டி…” அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம்.

அதே போன்று தான் உபதேசங்கள் வாயிலாக உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன். கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று “வரிசைப்படுத்தி… ஒழுங்குப்படுத்தி…” அந்த மூலக்கூறுகளை உங்களிடம் ரிக்கார்ட் செய்கின்றேன்.

நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழியை நீங்கள் எடுக்கும் போது… ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும்.

அதற்கு அடுத்து…
1.அருள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப ரிக்கார்ட் செய்கின்றோம்.
2.அதற்குத் தக்கவாறு உங்களுக்குள் ஞானங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இதை எடுத்துப் பழகிக் கொண்டால் ஒரு தொழிலுக்குச் சென்றாலும் “அதை எப்படி வழி நடத்த வேண்டும்…?” என்ற நல்ல சிந்தனை வரும். மற்றவரிடம் யோசனை கேட்டால் கலக்கி விட்டு விடுவார்கள். அவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு சொல்வார்கள்.

நீங்களே சிந்தித்து… “இதை இப்படித்தான் செயல்பட முடியும்” என்று எண்ணம் வரும். ஆகவே அருள் ஞானச் சக்கரத்தைப் பார்த்துத் தியானிக்கும் போது இத்தகைய சிந்தனை… ஞானமாக வரும்.

இதே போன்று கணவன் மனைவியும் ஒன்று சேர்ந்து தியானித்துவிட்டு
1.உன் சக்தி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்… என் செயல் நல்லதாக இருக்க வேண்டும்.
2.இரு மனமும் ஒன்றாக வேண்டும் இரு உயிரும் ஒன்ற வேண்டும்
3.எங்களுடைய செயல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி விட்டுக் காரியத்திற்குச் செல்லுங்கள்.

இந்த உணர்வுகள் அவ்வப்போது “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்று எதிர் நிலைகள் வரும் பொழுது… உங்களைச் சரியான பாதையில் நெறிப்படுத்திக் கொண்டே செல்லும். எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!

இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது
1.தவறான நிலைகள் வந்தால் உடனே உணர்த்தி அந்த இடத்திற்கு உங்களை அது செல்லவிடாது தடுக்கும்.
2.நல்ல இடங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று சீராக வாழ வைக்கும்.
3.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் இதையெல்லாம் கடைப்பிடித்து
4.இந்த அனுபவங்களைப் பெற்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வரவேண்டும்.

உணர்வின் இயக்கங்களைப் பற்றி இன்றைய விஞ்ஞானம் நிரூபிக்கின்றது…! ஆனால் மெய் ஞானிகள் கூறிய வழிப்படி நம்மை எது இயக்குகின்றது…? என்பதை
1.நாம் நுகர்ந்தது தான் நம்மை இயக்குகின்றது… அதற்குத் தான் நாம் அடிமையாகின்றோம்.
2.நல்ல குணத்தின் தரங்களைக் குறைக்கின்றது என்பதை உணர வேண்டும்.

ஆகவே அருள் உணர்வை நாம் பெருக்க வேண்டும். தீமைகளை மாற்றி அமைக்க வேண்டும். அதன் வழி அருள் வாழ்க்கை வாழ்வோம் அருளானந்தம் பெறுவோம்.