இரு உன்னைப் பார்க்கிறேன்… தொலைத்து விடுவேன்…! என்று சொல்வதன் பின் விளைவு

இரு உன்னைப் பார்க்கிறேன்… தொலைத்து விடுவேன்…! என்று சொல்வதன் பின் விளைவு

 

குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் இன்னும் அறிந்து கொண்டே இருக்கின்றோம்.

எம்மை எத்தனையோ நிலைகள் கொண்டு பல பேர் சந்திக்க வருகின்றார்கள். அப்படி வருகின்றவர்களில்
1.நோய் உள்ளவர்களுக்கு யாம் ஆசீர்வதித்து உங்களுக்கு இப்பொழுது நோய் இல்லை நீங்கள் போங்கள்…! என்று சொன்னால்
2.“நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும்…” என்கிறார்கள்.

இனி நோயெல்லாம் நீங்கிப் போகும் என்று யாம் அவர்களிடம் சொன்னால் இல்லைங்க… என் தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! என்று சொல்கின்றார்கள்.

தபோவனத்தில் ஒரு சமயம் ஒரு அம்மா எம்மிடம் இதைப் போன்று கேட்டுக் கொண்டிருந்தது. பின் எம்மிடம் நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. என் வீட்டிற்குப் போனால் பழையபடித் தொல்லையாக இருக்கின்றது என்றார்கள்.

யாம் அவரிடம் நீங்கள் வீட்டுக்குப் போனாலும் இதே போன்றே ஆத்ம சுத்தி செய்து, “நோய் இல்லை” என்று நல்லதாக எண்ணுங்கள் என்று சொல்கிறோம்.

ஆனால் என் வீட்டுக்குப் போனால்… என் தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று இறுக்கிப் பிடித்துக் கொண்டு விடுகின்றார்கள்.

நோய் இல்லை நீங்கள் போங்கள்…! என்ற நல்ல வாக்கினைக் கொடுத்துத் தியானத்தைப் பின்பற்றுங்கள் என்று சொன்னால் அதைக் கேட்பார் யாரும் இல்லை.

“சாமிக்கென்ன தெரியும்…? நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும் என்கிறார்கள்.

ஆனால்
1.இவர்களைத் திட்டுபவர்களை மட்டும் மனதில் எண்ணி
2.“இரு உன்னைப் பார்க்கிறேன்… உன் குடும்பத்தைத் தொலைத்துக் கட்டுகிறேன்…!” என்று அதை இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள்.

அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால்
1.இவர்கள் எண்ணிய உணர்வுகள் உடலுக்குள் புகுந்து
2.இவர்கள் உடலையே தொலைத்துக் கட்டுகிறது என்பதை மறந்து விடுகின்றார்கள்.

சில வீடுகளில் பாருங்கள். கொஞ்சம் “சுருக்…” என்று சொன்னால் இவனை விட்டு விடுவதா…? இவன் எப்படிப் பேசுகிறான் பார்…! என்று வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள். நீ இப்படிப் போய்விடுவாய்… அந்த மாதிரிப் போய் விடுவாய்…! என்று பேசுவார்கள்.

அப்படிப் பேசுபவர்களிடத்தில் பார்த்தோம் என்றால் உடல் வலி கை கால் குடைச்சல் கண் எரிச்சல் தலை வலி இடுப்பு வலி மூட்டு வலி கால் வலி எல்லா வலியும் இருக்கும். – இது பேசிவர்களுக்கு.

இதையெல்லாம் பேசாமல் வேடிக்கையாகப் பொழுது போகாமல் பார்த்துக் கொண்டிருந்தவுடனே… இப்படிப் பேசுகின்றார்களே பாவி…! என்று சண்டை போடுபவர்களைப் பார்த்துப் பொல்லாதவர்களை எண்ணுவது.

அதே சமயத்தில் நல்லவர்களைப் பார்த்து இப்படி இருக்கின்றதே இங்கே இரக்கமும் அங்கே ஆத்திரமும் இரண்டும் எடுத்து விடுகின்றோம். இது வந்தவுடன் அம்மம்மா.. வயிறு எல்லாம் எரியுதே…! என்பார்கள். அவர்களுக்கு இந்த நோய் வரும்.

நாம் நல்லவர்கள்தான். ஆனால் “என்ன செய்கிறார்கள்…?’ என்று பார்க்கும் பொழுது என் குடலை முட்டுதே எப்படியோ ஆகின்றதே…? நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே…? நான் வணங்கும் தெய்வமும், இப்படிச் செய்கின்றதே…! என்று இதைத்தான் எடுத்து, நமக்குள் கூட்டிக் கொள்கின்றோமே தவிர தெய்வம் எங்கு இருக்கின்றது…? எந்த ரூபத்தில் இருக்கின்றது…? என்பதனை மகா ஞானிகள் காட்டியதை உணரும் பக்குவம் இல்லை.

இதனை வியாசக பகவான் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

1.நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தை உயிர் ஜீவனாக்கச் செய்கின்றது.
2.“ஓ…” என்று எண்ணிய உணர்வின் சத்து “ம்…” என உடலாகச் சிவனாக ஆக்குகின்றது.

இதுவே ஓம் நமச் சிவாய நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்து இறையாகி அந்த உணர்வின் சத்து இறையாகி இறைவனாகுகின்றது. அந்த இறையின் சக்தி நமது உடலுக்குள் இணையப்படும் பொழுது, இறையாகி இறைவன் ஆகி நமக்குள் செயலாக்கும் பொழுது தெய்வமாகின்றது.

நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அந்தக் குணங்களே தெய்வமாக நின்று நம்மைச் செயல்படுத்துகின்றது.

கோப குணம் என்பது “காளி…” கோப உணர்வுகள் நாம் எண்ணியதைக் காத்திடும் நிலையும் நமக்குள் ஆத்திரத்தையும் அவனைத் தொலைத்துக் கட்டிவிடுகிறேன் பார்…! என்ற உணர்வையும் எடுக்கின்றது.

நாம் தொலைத்துக் கட்டுகிறேன் என்று எண்ணும் பொழுது அந்தத் தொலைத்துக் கட்டும் உணர்வுகள் நமது நல்ல குணத்தை நமக்குள்ளே தொலைத்துக் கட்டி அந்தக் காளியின் ரூபமாக நமக்குள் கொதிப்படைந்து இரத்தக் கொதிப்பாக மாற்றி “என்னால் முடியவில்லையே தலை சுற்றுகிறதே…” என்ற நிலை வருகிறது.

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…! என்ற நிலையைத் தெளிவாகக் காட்டப்படுகின்றது. ஆகவே நாம் எதுவாக ஆக வேண்டும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

1.நம் குரு காட்டிய அருள் வழியில் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி
2.நம் உயிரான ஈசனை மதித்து எல்லோருடைய உயிரையும் ஈசனாக மதித்து அருள் வழியில் வாழ்வோம்.
3.என்றும் உயிரோடு ஒன்றி அவனுடன் இணைந்து அவனாக மாறிப் பிறவியில்லா நிலை என்ற நிலையை எல்லோரும் அடைவோம்.

எமது அருளாசிகள்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் “ட்ரான்சாக்ஷன் நடக்கும் இடமான உயிரில் மோதும் போது” ஏற்படும் சில விசித்திரங்கள்

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் “ட்ரான்சாக்ஷன் நடக்கும் இடமான உயிரில் மோதும் போது” ஏற்படும் சில விசித்திரங்கள்

 

ஒருவர் மற்றவரை வேதனைப்படுத்துகின்றார் தொல்லைப்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம். வேதனைப்படுத்துவனும் அதை நுகர்கின்றான். ஆனால் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவனைப் பார்த்த பின் நமக்கும் கோபம் வருகிறது. வேதனைப்படுவதைப் பார்த்து நாமும் வேதனைப்படுகின்றோம்.

அந்த வேதனைப்படுபவன் அழுகும் போது என்ன இப்படிச் செய்கின்றான்…? என்று தொல்லைப்படுத்துபவன் மீது கோபம் வருகிறது.

இந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்த பின் இது நம் ரத்தத்திலே கலந்து விடுகின்றது. இந்த உணர்ச்சிகள் அதிகமானால் மனித உடலை… உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களிலும் போய்ச் சேர்ந்து விடுகின்றது.

1.நல்ல அணுக்களுக்குள் இது சேரும் பொழுது அதன் ரூபம் மாறி உறுப்புகளும் குறையத் தொடங்குகிறது…
2.குறைந்தால் உடலும் நலிகின்றது. உடல் நலியும் பொழுது நம் சிந்தனைகள் குறைந்து விடுகின்றது.

இந்த உணர்ச்சியின் தன்மை எதையும் கோபமாகவே பேசும் தன்மை வருகின்றது.
1.அந்த இரத்தம் சுழன்று வரும் பொழுது ட்ரான்ஷாக்ஷன் செய்யக்கூடிய உயிரில் மோதும் பொழுது விரிவடைகின்றது.
2.சிந்தனைகள் குறைந்து கண்கள் சிவக்கின்றது.

அந்த கோபமான நேரத்தில் கண்கள் சிவக்கப் படும் பொழுது ஒரு பொருளை நாம் பார்ப்பதோ அல்லது கணக்கு வழக்குகளைச் சீராக பார்ப்பதோ நம்மால் முடியுமா…? கணக்குகள் தவறாகிவிடும். அதைச் சீராகப் பார்க்க முடியாது.

யார் கணக்கை எழுதினார்களோ எவன்டா இதை எழுதியது…? என்று அவனைக் கோபிக்கச் செய்யும். யாராவது ஒரு நல்ல பொருளைச் செய்து கொண்டு வந்து நமக்கு முன் அதைக் காட்டினால் அந்த கோபத்தின் தன்மைப்கொப்ப பொருளைப் பார்த்தால் அது தப்பாகத் தான் தெரியும்.

காரணம்
1.இந்த உணர்ச்சியின் தன்மை ரத்த நாளங்களில் கலந்து
2.கருவிழிக்கு இந்த உணர்ச்சியின் மோதலை உண்டாக்கப்படும் பொழுது நல்லதைக் காண முடியாது.

அந்த நேரத்தில் தரமான பொருளைப் பிரித்துப் பார்க்க முடியாது. அதை அதைத் தூக்கி அந்தப் பக்கம் போட்டுப் போ…! என்று தான் வரும்.

இரண்டாவது தரம் கேட்டால்… நான் என்ன பார்க்காமலா பேசுகின்றேன்…? பார்த்துத் தான் சொல்கிறேன்… என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்…? கோபத்தை உண்டாக்காதே…! என்று தான் சொல் வரும். சீரான நிலையில் பார்க்கும் நிலைகள் வராது. தவறின் நிலைகள் அதைத் தான் காட்டும்.

இங்கே தவறு செய்வது யார்…? நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்யும்படி வைக்கின்றது.

1.இப்படி இந்த கோபமான உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க
2.நம் உயிரிலே மோதி அந்த உணர்வை ஈர்க்கும் அனைத்தும் பலூன் போன்ற உப்ப ஆரம்பித்து விடும்.
3.அப்படி உப்பினால் அதற்கு மேல் சிந்தனை இருக்காது.
4.கிர்…! என்று அதற்குண்டான அழுத்தம் அந்த வாயு இது போகவில்லை என்றால் அடுத்த உணர்வின் துடிப்பு அதிகமாகும்…
5.நுரையீரலிலும் அழுத்தம் அதிகமாகும்… வலி எடுக்க ஆரம்பிக்கும்.

நாம் தவறு செய்யவில்லை… இந்த உணர்வு நமக்குள் இவ்வாறு இயங்குகின்றது. இதே மாதிரி அடிக்கடி செயல்பட்டால் வீட்டில் சாப்பாட்டைக் கொண்டு வரச் சொன்னால் சிறிது நேரமானால் அவசரப்படுவோம்… கோபம் வரும்.

கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்க்கப்படும் பொழுது பொருள் வேண்டும் என்று கேட்பார்கள். அந்தச் சாமானை எடுத்து வா என்போம். அதன் படி கடைப் பையன் அவன் எடுத்து வரும் பொழுது “பொருளை எடுத்துட்டு வர “இவ்வளவு நேரமா…?’ என்று அவனைக் கோபிக்கச் சொல்லும்.

இது எதனால் வருகிறது…?
1.நாம் நுகர்ந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு அது நம்மை இயக்குகின்றது…
2.அதன் வழி உடலை இயக்குகிறது. அதன் படி நம் எண்ணம் சொல் செயல் இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குரு மீது உண்மையான பற்று இருந்தால் தான் குரு உபதேசிப்பது ஆழமாகப் பதிவாகும்

குரு மீது உண்மையான பற்று இருந்தால் தான் குரு உபதேசிப்பது ஆழமாகப் பதிவாகும்

 

1.ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை மாணவன் கூர்மையாக உற்றுப் பார்த்து அதைத் தனக்குள் பதிவாக்கி
2.ஆசிரியர் மேல் பற்று கொண்ட உணர்வின் தன்மையையும் மாணவன் தனக்குள் பதிவாக்கினால்
3.ஆசிரியர் தமக்குள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் மாணவனிடத்தில் பரவி அந்த உணர்வே ஆசிரியராக இருந்து
4.”இது – இவ்வாறு, இது – இந்த நிலை” என்பது போன்ற சிந்திக்கும் திறனும் செயலும் அதற்குண்டான உணர்வும் வரும்.

இப்படி ஒருவர் கற்றுத் தரும் போதனையைக் கூர்மையாகக் கவனித்து அதன் உணர்வின் தன்மையை எவர் தமக்குள் பதிவு செய்கின்றனரோ அதன் வழி அவருக்குள் இயக்கமாகின்றது.

இதைத் தான் குரு எமக்குக் காண்பித்து எம்முள் அதைப் பதிவாக்கினார்.

உலக நிலையை அறியச் செய்திடும் ஆசிரியர் என்ற நிலையில் எமது குருவின் உணர்வின் தன்மையை எமக்குள் பதிவு செய்து கொண்டபின் உலகின் தன்மையையும் கடந்த காலத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்…? என்றும் குரு எமக்கு உணர்த்தினார்.

1.இப்படி இதன் வழியில் நான் எண்ணும் பொழுது
2.அவர் கற்றுணர்ந்த உணர்வின் இயக்கங்கள் எம்மைச் சிந்திக்கச் செய்யும் நிலையாகவும்
3.அதன் வழி கொண்டு வாழ்க்கை அமைத்திடும் நிலையும் வருகின்றது.

ஆதே போல்
1.இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கி… “பதிவாக்கியதை மீண்டும் நினைவு கொண்டால்…”
2.தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் அணுக்கள் உங்களுள் உருவாகி
3.நீங்களும் இதை நுகர்ந்தறிந்து தீமையிலிருந்து விடுபடும் மனிதனாகின்றீர்கள்.

ஒருவன் என்னை ஏசுகின்றான்… எனக்குத் தொல்லை கொடுக்கின்றான், என்ற உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு தீமை செய்தவனை எண்ணும் பொழுது மீண்டும் நமக்குள் தீமையின் உணர்வுகள் வளர்ந்து நம்மிடத்தில் கை கால் குடைச்சலாகிச் சிந்திக்கும் தன்மை இழந்து கோப உணர்வுகள் வருகின்றது.

சிந்திக்கும் தன்மையை இழக்கப்படும் பொழுது செயலின் தன்மை குறைகின்றது. நமது செயல் நற்பலன் தரவில்லையென்றால் உணர்ச்சியின் தன்மை கூடுகின்றது… கொதிப்பின் தன்மை ஏற்படுகின்றது.

கொதிப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது. இதுவே நமக்குள் வளர்ந்து கடும் நோயாகவும் மாறுகின்றது. ஆக இதுவும் ஆசிரியராக வருகின்றது… குருவாக வருகின்றது.

ஆகவே எதனின் தன்மையை நம்முள் பதிவாக்குகின்றோமோ அதன் வலிமை கொண்டு நம்மை இயக்கிவிடும்.
1.இதை வென்றவர் துருவ மகரிஷி.
2.அவர் கண்டுணர்ந்த உணர்வை நமது குரு கற்றுணர்ந்தார்.
3.குரு ஊட்டிய உணர்வினை யாமும் நுகர்ந்தோம்… கண்டறிந்தோம்.

குருநாதர் உபதேசித்த அந்தப் பேருண்மைகளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றோம்

தியான வழியில் உள்ள சிலர்… காசுக்காக ஞானத்தை இழந்து தவறான வழியில் சென்று கொண்டுள்ளார்கள்

தியான வழியில் உள்ள சிலர்… காசுக்காக ஞானத்தை இழந்து தவறான வழியில் சென்று கொண்டுள்ளார்கள்

1.இப்பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய சில பொருள்களிலும் சரி உணவுப் பொருள்களிலும் சரி
2.கெமிக்கல் கலக்காதது “இது அனைத்துமே பச்சிலைகள் சார்ந்தது…” என்று சொல்லிக் கொண்டு நிறையப் பேர் வருகின்றார்கள்.

துணிகளிலும் கூட பச்சிலைகளைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அந்த துணிகள் இத்துப் போய்விடும். கெமிக்கல் கலக்காமல் செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து அப்படிக் கொண்டு வந்துள்ளார்கள்.

சில பச்சிலைகளைக் கையில் எடுத்தால் அரிப்பு அதிகமாகும். கெமிக்கல் எதிலிருந்து வருகின்றது…?
1.நுகர்ந்த உணர்வுகள் கெமிக்கலாக மாறுகின்றது.
2.பச்சிலைகளிலும் அது இணைந்து நமக்குத் தெரியாமலே அவ்வாறு ஆகின்றது.

அமெரிக்காவிலிருந்து எவ்வளவோ பொருள்கள் இப்படிக் கெமிக்கல் இல்லாதது என்று சொல்லி இறக்குமதியாகி இங்கே வந்து கொண்டிருக்கின்றது.

இது எவ்வளவு பெரிய விளைவுகளைன் உண்டாக்கும்…? என்பது “பின்னாடி தான் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்…”

1.அமெரிக்காவின் ராஜதந்திரம்… மற்றவருடைய புத்திகளைக் கெடுப்பதற்கு அதிலே ஆசையால் மோகம் வரும்படிச் செய்து
2.அனைவரும் அதன் பின் செல்லும் நிலையாக… தன்னை அறியாமலே இயங்கிக் கொண்டுள்ளார்கள்.
3.இதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். நாம் நினைக்கிறோம்… இது நல்லது என்று…!

ஆனால் நம்மை எங்கேயோ அது கொண்டு போய் விட்டு விடும்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களும் சிலர் இதிலே இணைந்து கொண்ட நிலையில் இவ்வளவு பணம் கிடைக்கும் என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்…
1.கடைசியில் தியானத்தை விட்டு விடுவார்கள்.
2.அந்த மோகம் கொண்ட நிலையில் அதன் பின்னாடி தான் சென்று கொண்டிருப்பார்கள்
3.ஏனென்றால் அந்த மோகம் “தன் நிலையை” மறக்கச் செய்யும்.

யாம் கற்றுக் கொடுத்த உணர்வின் தன்மைகள் எல்லாம் அவர்களுக்குள் மாறி… இறக்குமதியாகும் அந்தப் பொருள்களை விற்றால் “இவ்வளவு சம்பாதிக்கலாம்…” என்று வீடு வீடாகச் சென்று கொடுத்தால் நல்லது என்று அவர்களின் ஆசை இப்படிச் சென்று கொண்டிருக்கிறது.

“குருநாதர் காட்டிய வழியில் ஆன்மீகத்தை வலுப் பெறச் செய்வதற்குப் பதில்…” இந்தப் பொருள்கள் இத்தனை வருடம் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்… சுத்தமானது… கெமிக்கல் கலக்காது…! என்று வீட்டு வீட்டுக்குச் சென்று சொல்லி
1.நாலு காசுக்காக இந்த மாதிரிச் செய்து கொண்டுள்ளார்கள்.
2.காசு ஆசையும் உடல் ஆசையும் இந்த உணர்வை இயக்குகின்றது.

கெமிக்கல்களில் உள்ள கெடுதல்களைப் பற்றி யாம் ஏற்கனவே பல முறை உபதேசித்துள்ளோம். ஆக இதிலே எத்தனை பேர் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்பது இனி பின்னாடி தான் தெரியும்.

அமெரிக்காவின் தந்திரங்கள் (TRICKS) இது போன்ற நிலைகளைச் செய்து கொண்டு நுண்ணிய அலைகளை எடுத்து மனிதனின் சிந்தனையைப் பித்து பிடித்துப் பேய் மாதிரி செயல்பட்டுக் கொண்டுள்ளது.
1.அவர்களுக்குச் சிந்தனையே இருக்காது.
2.ஞானத்தை இழக்கும் தன்மைகளுக்கு தான் வந்து கொண்டுள்ளதே தவிர
3.பண்பென்ற நிலைகள் முழுவதும் அழியக்கூடிய நிலை தான் அதில் இருக்கின்றது.

உங்கள் வீடுகளுக்கெல்லாம் தேடி வருவார்கள் இத்தனை வருடத்திற்கு இது பயனுள்ளதாக இருக்கும் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று வந்து “கத்து… கத்து…” என்று சப்தமிட்டுக் கொண்டுள்ளார்கள்.

1.இதுகள் எல்லாம் எங்கே கொண்டு போய் விடும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
2.”இது எல்லாம் தவறான வழி…!”

நாம் இந்த ஆன்மீகத்தின் வழியில்… அழியா உணர்வுகளைப் பெருக்கி நல்வழியில் நாம் ஜீவிக்கும் தன்மைக்கு வர வேண்டும். ஆகையால் தயவு செய்து நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்… நல்வழியில் நீங்கள் வளருவீர்கள்…!

“உணர்வின் வேகம் மட்டும் இருந்தால்…” சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது

“உணர்வின் வேகம் மட்டும் இருந்தால்…” சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது

 

ஒரு முறை ஆனைமலைக் காடுகளுக்குக் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று விட்டுப் பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸிற்கு முன்னால்…
1.ரோட்டைக் கடப்பது போன்று குறுக்கே சென்று எம்மையும் இழுத்தார்.
2.நாங்கள் குறுக்கே புகுந்தவுடன் பஸ் திடீரென்று நின்றுவிட்டது.

உடனே குருநாதர் டிரைவரைப் பார்த்து “மடத்தனமாக வண்டி ஓட்டுகின்றான் பார்…!” என்கிறார்.

பஸ்ஸின் டிரைவரோ “ஏனய்யா புத்தி இருக்கிறதா…? பைத்தியமா பிடித்திருக்கிறது…!” என்று திட்டினார்.

குருநாதரும் “இது போலவா வண்டி ஓட்டுவது…? அறிவு கெட்டதனமாக வண்டி ஓட்டுகிறாய்…” என்று டிரைவரைத் திட்டினார்.

பின் குருநாதர் தெளிவுபடுத்தினார். அதாவது இது போன்று சமுதாயத்தில் சந்தர்ப்பங்கள் சில நேரங்களில் உணர்வின் வேகம் கொண்டு நம் உணர்வுகள் செயல்பட்டுத் தான் செய்த தவறை மறந்து பஸ் டிரைவரைத்தான் குறை சொல்கிறோம்.

1.தவறு எப்படி நேர்ந்தது…? என்று சிந்திக்கத் தவறும் பொழுது
2.டிரைவர் மீது கோபம் கொள்வது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன.

டிரைவர் பிரேக் போடாமல் விட்டு விட்டால் அங்கே என்ன நேரும்…? என்று நாம் சிந்திப்பதில்லை. நாம் நசுங்கி இருப்போம் என்று அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

1.டிரைவர் திட்டியது சரிதான் என்று ஏற்றுக் கொள்ளும் நிலை வருமானால் நாளை இது போன்ற அவசர புத்தி நமக்கு வராது.
2.நல்ல அறிவினை ஊட்டினார் என்று எண்ணினால் டிரைவர் மீது பகைமை வராது.

இப்படி குருநாதர் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியில் கொடுத்தார்.

மக்கள் தங்கள் வாழ்க்கையில் தாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் கொண்டு செயல்படும் பொழுது சிந்தனை அதன்பால் தான் இருக்கின்றதே தவிர அங்கே தாம் செல்லும் பாதையில் உள்ள இடையூறுகள் தெரிவதில்லை.
1.தம்முடைய ஆசையின் நிலைகளிலே செல்கின்றனர்.
2.ஆனால் பாதையில் இருக்கும் ஆபத்தையும் எதிரியையும் மறந்து விடுகின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்துத் தீமைகள் நம்மிடையே வராது விலக்கி அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே
1.நான் கொடுத்த சக்தி கொண்டு பிறரை வீழ்த்துவேன் என்ற அகந்தை கொண்டால்
2.நல்வழியின் உணர்வுகள் உனக்குள் வராது என்று குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்..
3.ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி அதே உணர்வினை நுகர்ந்தால்
4.நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும்.

ஆகவே நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியுமா…? என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

நம் எண்ணத்திற்குள் நம்மை அறியாமலே புகும் சில தீமைகள்

நம் எண்ணத்திற்குள் நம்மை அறியாமலே புகும் சில தீமைகள்

 

தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி “கராத்தே…” கற்றுக் கொள்வார்கள். இரண்டு தட்டுத் தட்டினால் அடுத்தவர்களை விழுத்தாட்டி விடலாம்… ஓங்கி ஒரு உதை விட்டேன் என்றால் போதும் என்பார்கள்.

ஆனால் அந்தக் கராத்தேயின் உணர்வுகள் உடலுக்குள் வந்தபின் உடல் வலுவால் தாக்கும் தன்மை வருகின்றது.
1.ஆனால் நுகர்ந்த உணர்வோ “தாக்க வேண்டும்” என்ற உணர்வுகள் உடலுக்குள் கூடிய பின் உடலில் அழுத்தங்கள் அதிகமாகும்.
2.கூடுமான வரையிலும் இதுபோன்று கராத்தே கற்றுக் கொண்டவருடைய கடைசி நிலைகள் அழுத்தமாகி ரத்த அழுத்தம் அதிகமாகும்.
3.அழுத்தம் அதிகமான பின் அவர்களால் அந்தக் கலையைச் செயல்படுத்த முடியாது.

உடல் வலிமை இருக்கும் வரை செயல்கள் இருக்கும். சிறிது காலம் எல்லாம் நன்றாக இருக்கும். இந்தக் கலையை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்கள் அதைச் சீராகச் செயல்படுத்தும் பொழுது மகிழ்ச்சி வரும்… புகழ் வரும்.

ஆனாலும் அடுத்தவர்கள் குறைபாடுகளோ தவறுகளோ அல்லது பிடிக்காத செயல்களையோ செய்தால்
1.”இரு நான் உன்னைப் பார்க்கிறேன்… ” என்று வீரியத்தைத் தான் கூட்டும்…!
2.ஆனால் அவன் செய்யும் உணர்வைத் திருத்தி அமைக்கும் உணர்வு வராது.

அடித்தே திருத்த வேண்டும் என்று எண்ணம் தான் வரும். அவரை அறியாது செயல்படும் தீமைகளிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய வேண்டும் என்ற உணர்வு வராது.

சகஜ வாழ்க்கையில் நம்மை அறியாமலே உடல் வலுப்பெற்றாலும்
1.நம்முடைய எண்ணங்களுக்குள் தீமை வருவதை அடக்கத் தவறினால்
2.உடலுக்குள் புகுந்து நம் நல்ல குணங்களை அது அடக்கியே தீரும்.

பரிணாம வளர்ச்சியில் இந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி வேதனையுடன் வாழும் நிலையே நமக்குள் வரும். இதையெல்லாம் மாற்றுவதற்குத்தான் விநாயகர் தத்துவத்தினைக் கொடுக்கின்றார்கள்.

உடல் வலுப்பெற்றது யானை… எனவே யானை உடலைப் போட்டு விநாயகரைக் காண்பித்துள்ளார்கள். தன் எண்ண வலுவால் பாதுகாக்கும் உணர்வு கொண்டு வளர்ந்தது.
1.அதாவது உடல் வலிமை கொண்டு தான் தன்னைப் பாதுகாக்கும் நிலை வந்தது.
2.அதன் வழி மனித உடலைப் பெற்றோம் என்பதற்குத்தான் யானையைப் போட்டுக் காண்பித்தார்கள்.

அவ்வாறு வளர்ந்த நாம்… மனிதனான பின் எண்ண வலு பெற்றவர்கள். நம் எண்ணத்தைக் கொண்டு எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.

ஆறாவது அறிவு கொண்டு பல கோடித் தீமைகளை அறிந்தாலும்… சிந்தித்து அதிலிருந்து விடுபட்டு “நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால்…” அதன் வழி நுகர்ந்து தீமைகளை அகற்றும் வலிமையும் வருகின்றது.

சில மருத்துவர்கள் நோய்களைப் போக்கப் புதிதாக மருந்து கண்டுபிடிப்பார்கள். நோயை நீக்கி பேரும் புகழும் பெற்றுச் சம்பாதித்து விடலாம் என்று செயல்படுத்துகின்றார்கள். சம்பாரித்த பின் அதிலே சந்தோசமும் படுகின்றார்கள்.

இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வரும் பொழுது தன்னுடைய பையனைச் சரியாக வளர்க்கவில்லை என்றால்… அவன் தவறுகள் செய்வான்… கண்டபடி பணத்தைச் செலவழிப்பான்.

இவரோ சிரமப்பட்டு மருந்தைக் கண்டுபிடித்துச் சம்பாதித்து வைத்திருப்பார்கள். ஆனால் பையனோ வளர்ப்பின் நிலைகள் கொண்டு சேர்க்கையின் காரணமாக சில தாறுமாறான செயல்களைச் செயல்படுத்துவார்.

இந்த மருத்துவர் மற்றவர் நோய்களை எல்லாம் நீக்குவார்.
1.சம்பாதித்த காசைத் தேவை இல்லாமல் பையன் செலவழிக்கிறான் என்றால்
2.”கஷ்டப்பட்டுச் சாம்பாரித்தேன்… இப்படிச் செய்கிறானே…” என்று எண்ணி வேதனைப்படுவார்.

ஆனால் பையனுடைய தாயோ பாசமாக இருக்கும் நிலையில்… பையனை ஏன் சீறிப் பாய்கின்றீர்கள்…? நல்ல வார்த்தையைச் சொல்லுங்கள்…! என்று கணவனிடம் சொல்லும்.

நீ இப்படிப் பேசிப் பேசித்தான் அவனைக் கெடுத்து விட்டாய்…! என்று இந்த உணர்வின் வேகம் பையனின் தாயாரையும் திட்டும்படி செய்யும்.

தாய்ப் பாசம் கொண்டு கொஞ்சம் பொறுமையாகச் சொல்லுங்கள் என்று தாய் ஞாபகப்படுத்தும். “எல்லாம் உன்னால் தான் அவன் கெடுகின்றான்…” என்ற நிலை வந்துவிடும்.

1.எப்படிப் பார்த்தாலும் இந்த உணர்வுகள் நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது.
2.அதை அடக்கக்கூடிய சக்தி தெரிந்தும் நாம் அதை விட்டு விடுகின்றோம்.

நாம் அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டுமல்லவா…?

நல்லதைக் காக்கும் சக்தி அவசியம் நமக்குத் தேவை

நல்லதைக் காக்கும் சக்தி அவசியம் நமக்குத் தேவை

 

1.சக்தி இருக்கின்றது என்ற நிலையில் “நான்…” என்ற திமிர் வந்தால் அது முதலில் உன்னை அடக்கிவிடும்…
2.உன் நல்ல குணங்களை அது கொன்று விடும் என்று குரு சொல்கின்றார்.

இதே போன்று எம்மைப் பார்ப்போரும் ஒரு சிலர் சாமி நம்மை ஒன்றும் செய்ய மாட்டார் என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அது தான் உங்களுக்குள் விளையும்.

ஆனால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று நான் எண்ணும்போது எனக்குள் அது நல்லதாக விளைகின்றது.

சில பேர் நினைப்பார்கள் சாமியிடம் நிறையச் சக்தி இருக்கின்றது… எல்லோருக்கும் நல்லது தான் செய்கின்றார். ஆனால் சாமியை இத்தனை தூரம் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பார்த்துக் கொண்டு அவர் சும்மா இருக்கின்றார் என்று நினைத்தால் கெடுதலுக்கு அல்ல.
1.அவர்கள் உணர்வு நம்மைப் பாதித்து விடக்கூடாது.
2.அவர்களுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.
3.அவரவர் எடுக்கும் உணர்வுகளுக்கு அவரவர் உயிரே தண்டனை கொடுக்கின்றது. நாம் ஏன் தண்டனை கொடுப்பானேன்…?

நாம் விலகிச் சென்று விட்டால் பாதகம் இல்லை.

வெள்ளம் வருகின்றது… வீட்டை அடித்துச் சென்று விடும் என்றால் வீட்டுப் பக்கம் வராமல் மறித்து வேறு பக்கம் திசை திருப்பி விடலாம். கரையைப் போட்டுக்கொள்ள வேண்டும். விட்டு விட்டால் கட்டிடத்தைச் சாய்த்து விடும்.

1.இது போன்று ஒரு உணர்வின் தன்மை நம்மைப் பாதிக்கிறது என்றால் அது நம் மீது மோதாதபடி திசை திருப்ப வேண்டும்.
2.இத்தனை பழக்கமும் வேண்டி இருக்கின்றது.

குளத்திலே தண்ணீர் முழுவதும் நிறைந்துவிட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு என்ன செய்கின்றார்கள்…? அந்த இடத்திலே மணலை மூடடைகளாகக் கட்டி மொத்தமாகப் போட்டால் அந்தத் தண்ணீரை ஓரளவுக்கு நாம் தடுக்க முடியும். அடுக்கடுக்காக மேலே போடப் போட வலுவாகி விடுகிறது. தண்ணீர் மேலே ஏறி வருவதில்லை.

இந்தத் தந்திரம் இல்லை என்றால் வேறு எந்தப் பொருளைப் போட்டாலும் தண்ணீர் அரித்துக் கொண்டு சென்று விடும். கற்றுக் கொண்டவர்கள் இந்த நிலையைச் செயல்படுத்துகின்றார்.

இதைத்தான் மெய்ஞானியான நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஒருவன் வேதனைப்படுகிறான் என்று காணுகின்றோம் சக்தி இருந்தாலும் அதைக் கொண்டு தாக்கினோம் என்றால் நம்முடைய நல்ல நிலைகள் சிதைந்து விடும்

ஏனென்றால் நல்லது கெட்டது எப்படி நடக்கிறது…? என்று இயற்கையில் அனுபவபூர்வமாக எல்லாவற்றையும் தெரியும்படி செய்தார்.
1.சக்தி கொடுப்பார்.
2.ஆனால் அதைப் பயன்படுத்தக்கூடிய முறைகள் இப்படி இருக்கிறது.

தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒருவர் மீது நாம் கோபப்பட்டு “அவரைத் தொலைந்து போக வேண்டும்…” என்று சொல்லலாம். சந்தோஷமும் படலாம். ஆனால் அந்தச் சந்தோஷம் உங்கள் உடலில் உள்ள நல்ல குணங்களைத் தொலைத்து விடும்.

சந்தோஷத்தை ஊட்ட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகள் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து இருளை நாடாதபடி தடுத்துப் பழகினால் என்றும் பேரருள் பேரோளியைப் பெறலாம்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எம்மிடம் ஆசி பெற்றாலும் யாம் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம்

எம்மிடம் ஆசி பெற்றாலும் யாம் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம்

 

சாமியாரிடம் ஆசி வாங்கினால் போதும் என்ற நிலையில் என்னிடம் ஆசி வாங்கினால் அன்றைய தினத்திற்கு நன்றாக இருக்கும்.
1.அடுத்து நீங்கள் யாம் சொன்ன வழியைக் கடைப்பிடித்தால்
2.நிலையாக உங்களுக்குச் சரியாகும்.

அப்படி இல்லாது “சாமியிடம் ஆசி வாங்கினேன்… நன்றாக இருந்தது..!” என்று ஒரு சொல்லில் சென்று விட்டால் அடுத்து என்ன ஆகின்றது…?

சண்டை போடுபவன் வேதனைப்படுபவன் சங்கடப்படுபவன் இவர்களை எல்லாம் இரக்கத்துடன் உற்றுப் பார்த்தால்… அடப் பாவமே நல்ல மனிதன் இப்படி ஆகிவிட்டார் என்று வேதனையான உணர்வை உணர்ந்தால் அந்த உணர்ச்சிகள் உங்கள் ரத்தத்தில் தான் கலக்கின்றது.

1.கலந்த பின் நல்ல அணுக்கள் பிடிக்காது அதை விட்டு விடுகிறது.
2.நல்ல
3. அணுக்கள் ஏற்கவில்லை என்றால் சிந்திக்கும் தன்மை குறைகிறது… வியாபாரம் செய்தால் மன வலிமை இல்லாது போய் விடுகின்றது.

மன வலிமை இல்லை என்றால் நல்ல சரக்கைத் தேர்ந்தெடுக்க முடியாது. நல்ல சரக்கை எடுத்தாலும் கூட நம் சொல் வெளிப்படும் பொழுது அதனுடன் வேதனை கலந்து வருகின்றது.

1.நம் கடையில் துணியை எடுக்க வருபவர்கள் இந்தச் சரக்கைப் பார்த்த பின் அவர்களுக்கு அதிலே வெறுப்பு வருகின்றது.
2.ஏனென்றால் நம் உணர்வுகள்… அந்த மணம் அதில் பட்டபின் அவர்கள் அதை நுகரும் பொழுது துணியை வாங்குவதில்லை.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி வருகின்றது. இதை எல்லாம் துடைக்க வேண்டும் அல்லவா. இது போன்று நம்மை மறைக்கும் “சிறு திரைகளை” அவ்வப்போது தூய்மைpபடுத்த வேண்டும்.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்தியை உடலுக்குள் சேர்த்து ரத்தத்தில் கலந்து இருளை மாற்றிப் பழக வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இதைச் செய்து பழக வேண்டும்.

ரோட்டில செல்கின்றோம்… உடையில் தூசி படுகின்றது. துணியை அடுத்து துவைத்து விடுகின்றோம். நாம் ஒரு வேலை செய்கின்றோம்… கையிலே அழுக்குப் படுகின்றது. உணவை உட்கொள்ளும் முன் கையைத் தூய்மைப்படுத்துகின்றோம்.

இதே போன்று தான் ரோட்டில செல்கின்றோம்… ஒருவர் வேதனைப்படுபவதைப் பார்க்கின்றோம்.
1.அது அழுக்காக நம் ஆன்மாவிலே படுகின்றது… ரத்தத்தில் கலக்கின்றது.
2.ரத்தத்தில் அசுத்தமாவதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.

நல்ல உணர்வுகள் இருந்தாலும் பிறருடைய வேதனை உணர்வுகள் அந்த நல்ல குணத்திலே சித்திரை சிறு திரையாக மறைத்து விடுகின்றது… மூடி விடுகின்றது. இந்த வேதனை தான் முன்னணியில் வருகின்றதே தவிர நீக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

இதைப் போன்ற தீமையெல்லாம் நீக்கி ஒளியாக இருப்பது துருவ நட்சத்திரம்.
1.அதை நாம் நுகர்ந்து எடுத்து நம் ரத்தத்திலே கலந்து தூய்மைப்படுத்த வேண்டும்.
2.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

குரு சொன்னதை நாம் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்

குரு சொன்னதை நாம் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்

இப்பொழுது யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம் நீங்கள்
1.நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய வேலை என்ன…?”
2.வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ…! ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்…?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால்
3.யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.

அதைப் போல்… ஒருவர் நம்மிடம் தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போமேயானால அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.
1.அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்… ஆனால் ஈர்க்காது. 2.இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள், அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம் அதை ஈர்ப்பதில்லை.

யாம் எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால் அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.

1.அதன் பிறகு யாம் கோபமாக என்ன சொல்வோம்…?
2.“போங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…” என்று சொல்வோம்.

அப்படி யாம் சொன்னால்… “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே…” என்று எண்ணினால் என்னவாகும்…?

ஏனென்றால் அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை உடனே தாங்கி “மடக்கி” அனுப்புகின்றோம்.

நீங்கள் சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று சொன்னால் யாம் என்ன பண்ணுவது…? அப்படியானால், அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வேண்டுமா…?

யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.

மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம் நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்…? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக மாறும். ஆகையால் இந்தத் தீய உணர்வுகளை நீங்கள் உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் யாம் அநேகம் பேருக்குப் பல நிலைகளைச் சொல்லிக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்ததின் நிலைகளைத் தோல்வி அடையச் செய்து விட்டனர்.

மனிதரின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? அதை நாம் எப்படிக் கொண்டுவர வேண்டும்…? என்று உணர்த்துகின்றோம்.

ஆனால் பெரும் பகுதியானவர்கள் என்ன செய்து விட்டார்கள்…?
1.நாளை என்னவோ நடக்கட்டும்.
2.இன்று நாம் தொழிலில் முன்னேற வேண்டும்.
3.தான் ஒன்றைச் சொன்னால் அவ்வார்த்தையையும் தன்னையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று இப்படித்தான் தலைகீழாகப் போகிறார்கள்.
4.அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் தன்மையை யாம் எவ்வளவுதான் கொடுத்தாலும் எடுபட மாட்டேன் என்கிறது.

ஆகையால் யாம் மற்ற நிலைகளை நிறுத்தி விட்டு இப்பொழுது தியானவழி அன்பர்களைத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

அந்த உணர்வோடு கொண்டு போகப்படும் பொழுது அவ்வுணர்வின் ஒளிக்கற்றைகளை உங்களில் சேர்த்துப் பழகுங்கள். ஆனால் சாதாரண மின்னல் வருகின்றதே அதை நீங்கள் பார்க்கக் கூடாது.

மின் கதிர்களை எண்ணிச் சுவாசிக்கப்படும் பொழுது அதன் உணர்வின் தன்மையினை உங்களிடத்தில் ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க உதவும். நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களில் சேர்கின்றது. இவையெல்லாம் குரு தன்மையால் வருவது.

1.“சாமி (ஞானகுரு) சொன்னார் இதையெல்லாம் பெற வேண்டும்” என்று எண்ணப்படும் பொழுது
2.நீங்கள் எண்ணிய ஆற்றல் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

நான் தனித்தன்மையில் செல்வேன் என்று எண்ணினால் முடியாது.

குரு இல்லாத வித்தை எதுவுமே வித்தையாகாது. ஆகையால் “குருநாதர் சொன்னார்” என்ற நிலையில் ஒன்றை இணைத்துப் பார்க்கும் பொழுது தனக்குள் உருவாகும்.

ஆகவே இதன் வழியில்தான் நாம் அறிய முடியும். அப்படியில்லாமல் நமது எண்ணங்களை பலவீனமடையச் செய்தால் அந்த உணர்வின் அணு உங்களைத் திசை திருப்பிவிடும்.

ஏனென்றால்
1.“நாம் இம்மனித உடலுக்குப்பின் பெற வேண்டியது எது…?” என்பதை
2.உங்கள் எல்லோருக்கும் தெளிவாக்கும் தன்மைக்குத்தான் கொண்டு வருகின்றோம்.

மனிதனின் எண்ண வலு

மனிதனின் எண்ண வலு

 

நாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்…? தீமையை நீக்கும் உணர்வை நாம் இச்சைபட்டால் உயிரிலே பட்டு அது கிரியை ஆகித் தீமையை நீக்கும் ஞானங்கள் வந்து அதுவாக நாம் ஆவோம்.

அதனால் தான் வலிமை மிக்க சக்தி வள்ளி. எத்தனையோ கோடி உடல்களில் பெற்ற தீமையை நீக்கும் அந்த வலிமையான சக்தி நம் ஆறாவது அறிவிற்கு உண்டு. தெரிந்து தீமையை நீக்கும் வலிமையான நிலை பெற்றது.

ஒரு விஞ்ஞானி ஆறாவது அறிவை வைத்துத் தான் எத்தனையோ வேலைகளைச் செய்கின்றான். ஒரு கல்லை நம்மால் தூக்க முடியவில்லை
1.ஆயிரம் டன் 2000 டன் எடையுள்ள பொருளைத் தூக்கிச் செல்லும் அளவிற்கு ராக்கெட்டைச் செய்து மேலே பறக்க விடுகின்றான்.
2.அது அவனின் எண்ண வலு தானே.

தன் எண்ண வலுவைச் செலுத்தி அதனால் தூக்கக் கூடிய சக்தியை கண்டுபிடித்து இருக்கின்றான். அப்போத்து அந்த எண்ண வாலு தானே காரணம் ஆகிறது.

1.நமக்குள் அந்த எண்ண வலுவைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அந்த வலுவைக் கூட்டப்படும் பொழுது
2.எத்தகைய நிலையையும் நாம் சமாளிக்க முடியும்.
3.அதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி பழக்கப்படுத்துவதற்கு ஆத்ம சுத்தியைக் கொடுக்கின்றோம்.
4.எந்த நிமிடம் எது வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த உடலுடன் யார் இருக்கின்றார்கள்…? நம் குருநாதர் இருக்கின்றாரா…? திருமூலர் இருக்கின்றாரா…? ஆதிசங்கரர் இருக்கின்றாரா…? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ராமலிங்க அடிகள் இருக்கின்றாரா…? உலகுக்கெல்லாம் போதித்தாரே விவேகானந்தர் அவர் இருக்கின்றாரா…? அவருடைய குரு எல்லாத் தத்துவத்தையும் தெரிந்தாரே ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர் இருக்கின்றாரா…?

யாரும் உடலுடன் இல்லை. இன்றைய செயல் நாளைய சரீரம் இன்றைய நிலையில் ஒளியின் உணர்வாக நாம் பெறப்படும் பொழுது நாளை ஒளி உடல் பெறலாம்.

அதை விடுத்து விட்டு
1.நாளைக்கு என்ன செய்யப் போகின்றோம்…?
2.இத்தனை ஆசை வைத்திருக்கிறேன்… உடலை விட்டுச் சென்று விட்டால் என்ன ஆவது…? என்று எண்ணினால் மீண்டும் இங்கேதான் சுழல வேண்டி வரும்.

இந்த உயிர் என்றுமே அழிவதில்லை வேகாநிலை பெற்றது இந்த உடல் மாறி மாறி வரும். உணர்வுக்குத் தக்க உயிர் உடலை மாற்றிக் கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு ரூபத்திலும் தான் எடுக்கும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உடலை தான் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது.

உயிருக்கு வேறு வேலை இல்லை ஆக இந்த ஆறாவது அறிவு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றினால் என்றைக்கும் நிரந்தரமான நிலையாக விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி கிடைக்கும்.

1.ஆறாவது அறிவு ஏழாவது ஒளி என்ற நிலை அடைவதை விஜயதசமி
2.வான் வீதியிலே தோன்றிய உயிர் மனிதரான பின் பத்தாவது நிலை பெற வேண்டும்.