ஒரு அணுவின் முகப்பில் நல்லது இருந்தால் அது நல்லது செய்ய வைக்கும் அதே அணுவின் முகப்பில் கெட்டது இருந்தால் கெட்டது செய்ய வைத்துவிடும் – முகப்பில் படும் கெட்டதைத் தூய்மை செய்ய வேண்டும்

Image

siddhars

ஒரு அணுவின் “முகப்பில்” நல்லது இருந்தால் அது நல்லது செய்ய வைக்கும் அதே அணுவின் முகப்பில் கெட்டது இருந்தால் கெட்டது செய்ய வைத்துவிடும் – முகப்பில் படும் கெட்டதைத் தூய்மை செய்ய வேண்டும்

 

நாம் நல்ல சுத்தமான கையைக் கொண்டு அசுத்தமானப் பொருளை அப்புறப்படுத்துகின்றோம். அப்படி அப்புறப்படுத்தும்போது கையிலே அந்த அசுத்தம் ஒட்டிக்கொள்கின்றது.

 

கையில் ஒட்டிக்கொண்டதைத் துடைக்க வேண்டுமல்லவா?

 

சுத்தப்படுத்தாமல் அந்த அசுத்தமான கையுடனே உணவை உட்கொண்டால் என்னவாகும்? நல்ல பொருளும் அசுத்தமாகும் சுவையும் கெடும்.

 

இதைப்போலத்தான் இந்த வாழ்க்கையில் யாருக்கு எந்த நன்மை செய்தாலும் தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்த அசுத்தத்தை நீக்க அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து இதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

இதை மறவாது செய்து பழக வேண்டும்.

 

பிறர் கஷ்டங்களோ துன்பங்களோ தவறுகளோ இதைப் பார்க்கப்படும்போது அறிகின்றோம். அடுத்த நிமிடம் அது நமக்குள் ஜீவனாக வளரக்கூடாது.

 

நம் நல்ல குணங்கள் கொண்டு பார்க்கும்போதுதான் அதன் முகப்புகளிலே இது (தீமை செய்யும் உணர்வுகள்) வட்டமிடத் தொடங்குகின்றது.

 

இந்த உணர்வைக் கவரும்போது தீமைகளைக் கவர்ந்துதான் செயல்படும் தன்மை வரும்.

1.இது உள் நின்று

2.அந்தத் தீமையான அணுக்கள் வளர்ச்சிக்கு வரும்.

 

இது உள் நின்று அந்த அணுக்கள் வளர்ச்சியாகிவிட்டால் அந்தத் தீமையின் அணுவாகவே அது மாறிவிடும்.

 

நல்ல அணுவாக இருந்து தீமையின் அணுவாகிவிட்டால் தனக்குள் இதனின் தன்மை நோயாக உருப்பெற்று விடுகின்றது. இதை நாம் மாற்றுதல் வேண்டும்.

 

ஒருவர் உங்களைத் திட்டிவிட்டால் அதைப் பதிவாக்கி விட்டால் பகைமையாகி அவர்களை எண்ணும்போதெல்லாம் பகைமை உணர்ச்சிகள் நமக்குள் தூண்டும்.

 

அவரைப் பற்றித் தவறின் நிலைகளுக்கு இழுத்து வந்துவிடும்.

 

பின் நாம் திரும்பிப் பார்த்தால் “இப்படி நினைத்தேன், இப்படி வந்துவிட்டது” என்போம்.

1.தவறு செய்தவனின் உணர்வு வரப்படும்போது

2.நாமும் இங்கே தவறு செய்யும் நிலையே வந்துவிடுகின்றது.

 

நாம் செய்யும் தவறை மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது ”ஐந்தாறு பார்த்தாய்… போய்யா…, என்பார்கள்”.

 

“தவறு செய்தவர்களிடம்…” நீங்கள் சொல்லிப் பாருங்கள். உடனே பயங்கரமாகக் கோபப்படுவார்கள்.

 

கொஞ்சம்… “பொறுமையாகப் பாருங்கள்” என்று சொன்னால் “எனக்குப் புத்தி சொல்ல வந்துவிட்டான்… போய்யா…” என்றுதான் சொல்வோம்.

 

இந்த வேகம் சிந்திக்கும் தன்மையைச் செயல்படுத்தவிடாது,

 

அப்பொழுது அதைச் சொல்கிறார் என்ற நிலையில் தவறு செய்யும் உணர்வை நாம் பார்த்தபின் நாம் என்ன செய்ய வேண்டும்?

 

“ஈஸ்வரா…” என்று அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து இதைச் சுத்தப்படுத்தும் அந்த அருள் ஞானத்தை நாம் பெற்றோமென்றால் தீமைகளைத் தடுக்கும். நம் சிந்தனையைச் சீராக்கும்.

 

இல்லையென்றால்

1.நல்ல அணுவின் முகப்பில் வரப்படும்போது,

2.உணர்வின் அறிவாக ஊட்டும் “அதை” மறைத்துவிடும்.

3.நம்முடைய நினைவாற்றலும் மறைந்துவிடும் மறந்துவிடும்

4.தவறின் நிலைகளை நமக்குள் வளர்த்துவிடும்.

 

தவறான அணுக்கள் வளர்ந்துவிட்டால் பின் நோயாக உருவாகும். சிந்தனை குறையும் உடலில், அந்த வேதனை உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டித் தசைகளைக் குறைக்கும்.

 

இதை எதற்கு உங்களுக்குச் சொல்கிறோம் என்றால் சந்தர்ப்பம் நம்மை எப்படியும் எந்ததெந்த வகையிலும் இது கலந்தபின் நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றும்.

 

ஆகவே இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீளுதல் வேண்டும்.

 

அன்று அகஸ்தியன் தம் இளமைப் பருவத்தில் தான் கற்றுணர்ந்த உணர்வும் அண்டத்தைக் கண்டுணர்ந்த உணர்வும் அவனிலே விளைந்த நிலைகள் இன்றும் இங்கே படர்ந்துள்ளது.

 

அவன் வளர்ச்சியில் வளர்ந்து வந்த நிலைகளில் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி இருளை நீக்கி ஒளியைக் காணும் நிலைகள் பெற்றான்.

 

இது என்றைக்கும் இன்றைக்கும் சதா கிடைத்துக் கொண்டே உள்ளது.

1.“அகஸ்திய மாமகரிஷியின் உணர்வைக் கவர்தல் வேண்டும்”.

2.அதை நாம் பெறவேண்டும் என்ற இந்த ஆசையைக் கூட்ட வேண்டும்.

3.நம் உடலுக்குள் அதைப் பரப்புதல் வேண்டும்.

 

இந்த வாழ்க்கையில் அடிக்கடி நாம் திருடவேண்டியது அதுவாகத் தான் இருக்க வேண்டும்.

தியானத்தின் போது “உங்கள் நினைவாற்றல்…” எங்கே இருக்க வேண்டும்…?

Mind power

தியானத்தின் போது “உங்கள் நினைவாற்றல்…” எங்கே இருக்க வேண்டும்…? 

ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
1.புலனறிவுகள் ஐந்திலும்
2.கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி
3.உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.

நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம்.

இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.

அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது.

அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெறவேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுதுதான் நீங்கள் அந்த நிலைகளைக் கேட்க முடியும். “கேட்க வேண்டும்” என்ற விருப்ப நிலைகள் வரப்படும் பொழுதுதான் இது உங்களுக்குள் பதிவாகின்றது.

ஆனால் வேறு பக்கம் எண்ண அலைகளைப் படரவிட்டு எண்ணிக் கொண்டிருந்தால் யாம் உபதேசிப்பதைக் கவராது உங்கள் ஈர்ப்பினுடைய நிலைகள் தடையாகும்.

உதாரணமாக பேசும் பொழுது மைக்கை (MIC) அந்தப் பக்கம் திருப்பி வைத்துவிட்டால் சப்தம் குறையும். அதைப் போல
1.மற்ற உணர்வின் நிலைகளை நமக்குள் நினைவுபடுத்தும் பொழுது
2.நமது உணர்வுகள் நாம் பேசும் உணர்வலைகள் ஒன்றுக்கொன்று மாறுபடப் போகும் பொழுது
3.”அரத்தங்கள்…” உங்களுக்குள் பதிவாகாது
4.இதைப் படித்திருந்தாலும் கேட்டிருந்தாலும் இதற்குப் பின் “ஞாபக சக்தியும்” வராது.

அதனால் அர்த்தமற்ற உணர்வின் நிலைகளாகிப் போய்விடும்.  நீங்கள் தியானமிருக்கும் பொழுது இதை எண்ணினாலும் அந்தச் சக்திகள் கிடைப்பதும் அரிதாகிவிடும்.

ஏனென்றால் காற்றிலிருப்பதைச் சமப்படுத்திய நிலைகள் கொண்டு, உங்களுக்குள் பதியச் செய்திருந்தால்தான் நீங்கள் இதை “இயக்க…” முடியும்.

யாம் குருநாதர் மூலம் “அதைத் தெரிந்து கொண்டோம்… இதை அறிந்து கொண்டோம்…” என்று சொல்ல வரவில்லை.

அருள் ஞானிகள் தமக்குள் வளர்த்த அந்தச் சக்தி வாய்ந்த ஆற்றல்களை அந்த ஞான வித்துக்களை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.

அந்த ஞான வித்து உங்களுக்குள் வளர்ந்தால் அந்த ஞானிகள் எதைச் செய்தார்களோ அதை நீங்களும் செய்வீர்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை ஒவ்வொருவரும் தமக்குள் பெருக்கச் செய்ய வேண்டும். அதை உடலுக்குள் அணுக்களாக விளையச் செய்ய வேண்டும்.

விளைந்தால் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உயிருடன் ஒன்றிய நிலையாக என்றுமே ஒளியின் சரீரம் பெறலாம்.

மனக் குழப்பத்தை அகற்றச் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கொடுக்கின்றோம்

soul cleaning method

மனக் குழப்பத்தை அகற்றச் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கொடுக்கின்றோம் 

எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து நோய் போய்விடும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.

வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.

1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.

அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… “நீ எப்படி எடுக்க வேண்டும்…” என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும், நிவர்த்தி செய்ய முடிந்தது.

அப்படி நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன்.

அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினை பதியச் செய்கின்றேன்.

துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.

நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு…, உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்”.

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய்ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.

1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.

ஒரு நீரின் கீழ் தெளிந்த நீராக இருந்தவுடன் கீழே இருக்கக் கூடிய பொருளை நாம் காணமுடிகின்றது. நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் “அலைபாயும் பொழுது… தெளிவாகத் தெரிவதில்லை”.

நன்மையான நிலைகளை நாம் தெளிவாக்க முடியாத நிலைகளில் இருக்கும் அந்த நேரத்தில் மெய்ஞானியின் உணர்வின் அலைகளை நமக்குள் செலுத்தப்படும் பொழுது
1.பல உணர்வின் அலைகள்
2.அலைந்து கொண்டிருக்கும் நிலையை
3.அது நமக்குள் சமப்படுத்தி நிறுத்தும்.

அந்த அருள் ஒளியின் தன்மை நமக்குள் உயிரான தன்மை கொண்டு “ஒளியாக வீசிக் கொண்டே இருக்கும்… வளர்ச்சியாகும்”.

அவ்வாறு அந்த உணர்ச்சியின் நிலைகள் பெற்று வாழ்க்கையிலே மகிழ்ச்சி என்ற நிலையில் இந்த உடலை விட்டுச் சென்றபின் நம் உயிராத்மா ஒளியாக மாறி மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்ல முடியும்.

“அந்த மகரிஷிகள் வேறல்ல… நாம் வேறல்ல…” என்ற நிலையை ஒவ்வொருவரும் எய்த முடியும்.

 

உதவி செய்த பலனை நாம் எப்படிப் பெறலாம்…?

Gnana spiritual mind

உதவி செய்த பலனை நாம் எப்படிப் பெறலாம்.;;?

ஒருவர் இகழ்ந்துரைக்கிறார். அதைக் கண்டவுடன் “இப்படி ஆகிவிட்டதா…?” என்று நாம் செல்லும் நல்ல பாதைகளுக்கு இது தடைப்படுத்துகின்றது.

அதன் வழியில் பதிலுக்கு நாம் அவரை இகழ்ந்துரைக்க எண்ணினால் அந்த இகழ்ந்துரைக்கும் உணர்வுகள் நமக்குள்ளும் வளருகின்றது.

இதே சொற்கள் அவரை இகழ்ந்து பேசும் உணர்வுகள் வந்ததென்றால் அவருக்குள் பதிவாகி பதில் எனக்கே வரும். உயர்ந்த எண்ணங்களைப் பதிவாக்கும் நிலைகள் அங்கே தடைபடும்.

அவர்கள் பெறாதவண்ணம் அங்கே தடைபடுகின்றது. அந்த உயர்ந்த நிலைகள் வளரும் நிலைகள் எனக்குள் தடைபடுகின்றது.

கீழ்க்கண்ட மூன்று வாக்கியங்களும் மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

1.புகழ் கண்டு மயங்காதே..!
2.புகழாரம் பாடாதே…!
3.புகழ்ந்துரைக்க எண்ணாதே…! என்று ஆரம்பத்தில் குருநாதர் இதைச் சொன்னார்,

நம்மை ஒருவர் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தால்… எந்த நன்மை செய்தாலும் “அது வீண்தான்”.

1.எதிர்பாராது நன்மைகள் பல செய்தோம் என்றால்
2.அது நம்மையும் பாதிக்காது
3.நாம் செய்த நன்மையின் தன்மை நமக்கு உயர்ந்த உணர்வைக் கொடுக்கும்.

ஒருவருக்கு உதவி செய்துவிட்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் “நான் இத்தனை செய்தேன்… அவர் என்ன செய்தார்…?” என்ற நிலைகளை முன் வைத்தால் உதவி செய்ததற்கு “அர்த்தமில்லாமல்” போய்விடும்.

நாம் செய்தும் பலனற்றுப் போய்விடுகின்றது.

அவரும் பெறமுடியவில்லை. இரண்டு பக்கமும் பலன் இரண்டு பேருக்கும் இல்லாமல் போய்விடுகின்றது.

இதைப்போன்று நம் வாழ்க்கையில் எதைச் சீர்படுத்த வேண்டும்…? எதனைப் பெறவேண்டும்…? என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரிடம் எதிர்பார்த்து அவருக்கு ஒன்றைச் செய்வது.., எப்படியும் அவருடைய நிலைகளைப் புகழ்ந்து சொல்ல வேண்டும் என்றால் குறைகள் நிச்சயம் வந்தே தீரும்.

அந்த எதிர்பார்ப்பு இல்லாதபடி… “உயர வேண்டும்” என்ற எண்ணத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் அது உயரும்.

இதைத்தான் நாம் யாருக்குச் செய்தாலும்
1.அந்த மெய்ஞானிகளின் அருள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
2.அவருக்குள் இருக்கும் நோய்கள் நீங்கவேண்டும்.
3.மெய்ப்பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற
4.இந்த எண்ணத்தை நமக்குள் வளர்த்தால் அந்த உணர்வு நமக்குள் விளையும்.
5.விளைந்த உணர்வின் சொல்லாக அது பாயும்.

எந்தச் செடியின் சத்தை நாம் நுகர்கின்றோமோ அந்தச் செடியின் உணர்ச்சியின் தன்மைதான் நம்மை இயக்கும். எந்தக் குணத்தின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ அதன் செயலாகத்தான் நம் செயல்கள் இருக்கும்.

இதனால் தான் நாம் திருட வேண்டியது எது என்றால் “அருள் ஞானம்”.

திருடிய அருள் ஞானத்தைச் செலவழிக்க வேண்டும் என்றால் அருள் சொற்களைத்தான் நம்மைச் சொல்ல வைக்கும். தெய்வச் செயலைத்தான் நம்மைச் செய்ய வைக்கும்.

அதற்குத்தான் யாம் இதைச் சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் புருவ மத்தியில் மோதச் செய்தால்… “கிரியை” – ஒளி

Image

Third eye light

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் புருவ மத்தியில் மோதச் செய்தால்… “கிரியை” – ஒளி

 

யாம் உபதேசிக்கும் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தவும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கவும் இந்த உடலில் பிறவியில்லா நிலை அடையவும் உங்களுக்கு உதவும்.

 

ஆகவே யாம் பதிவு செய்யும் அருள் ஞானிகளின் அருள் வித்துக்களுக்கு ஆக்கச் சக்தியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற ஏங்கித் தியானியுங்கள்.

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருள் பேரொளியினை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கித் தியானியுங்கள்.

 

1.எதை நாம் பெறவேண்டும் என்றாலும்

2.அதற்கு முழுமையான ஆசை வேண்டும்.

 

அதாவது “இச்சா சக்தி… கிரியா சக்தி”.

 

ஒரு மனிதனின் வேதனையை அறியச் செய்யும் பொழுது இச்சை. நம் உயிரிலே மோதும்போது கிரியை.

 

வேதனை உணர்ச்சிகளை நாம் அறிகின்றோம். வேதனை உணர்வு நம்மை இயக்கி நம்மையும் வேதனைப்படச் செய்கின்றது.

 

ஆனால் உங்களுக்குள் வேதனையை நீக்கிய உணர்வினை இப்பொழுது பதிவு செய்கின்றோம். வேதனையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைப் பெறவேண்டும் என்ற இச்சை அந்த ஆசை உங்களுக்கு வேண்டும்.

 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை

1.உங்கள் உயிரிலே மோதச் செய்யும் போது கிரியை.

2.அந்த உணர்வின் தன்மை அதன் ஞானத்தின் வழியில் உங்களுக்குள் அது சேர்ப்பிக்கும்.

 

நீங்கள் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்?

 

நஞ்சினை வென்றிடும் இருளினை நீக்கிப் பொருளினைக் காணச் செய்யும்

1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளைப் பெறவேண்டும் என்ற இச்சைப்படுங்கள்.

2.அந்த உணர்வின் தன்மை உங்கள் உயிரிலே மோதச் செய்யுங்கள்.

3.இந்த உணர்ச்சிகளை உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.

4.உங்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியி்னைச் சேர்ப்பியுங்கள்.

 

தீமையைப் பிளக்கும் ஆற்றல் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுவீர்கள்.

 

உங்கள் பார்வையால் மூச்சால் மற்றவர்களுடைய தீமைகளும் வேதனைகளும் அகற்ற முடியும்.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால்

1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.

2.மகரிஷிகளின் உணர்வலைகளை எளிதில் பெற முடியும்.

3.அவர்களின் ஆற்றலும் உங்களுக்குள் பெருகும்.

 

ஆகவே துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் நிலை பெறுங்கள்.

“கார்த்திகை ஜோதி” – திரு அண்ணாமலை

Image

Annamalai jothi

“கார்த்திகை ஜோதி” – திரு அண்ணாமலை

 

கார்த்திகை ஜோதி (தீபம்) அன்று பக்தி மார்க்கத்தில் அந்த ஜோதியைப் பார்த்தால் நமக்குப் புனிதம் என்று ஐதீகப்படி எண்ணுவார்கள்.

 

ஆனால் விண்ணுலகம் சென்ற அருள் ஞானிகளின் உணர்வை… “நாம் பார்க்க வேண்டும்”. இருளை நீக்கிய அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெறவேண்டும்.

 

அருள் ஞானிகளின் அருள் சக்தியால் நம்மை அறியாது வந்த இருளைப் பிளந்து நமக்குள் அந்த ஒளியின் சுடரைக் காணும் நிலைகளை எண்ணி ஏங்கும் நந்நாளைத் தான் “கார்த்திகை தீபம்” என்று வைத்தது.

 

திருவண்ணாமலையில் “திரு அண்ணாமலை” என்ற நிலைகள் அங்கே காட்டப்பட்டது.

1.இந்த உடலின் தன்மையில் உணர்வின் தன்மை கொண்டு

2.உயிர் உச்சியிலே நின்று இயக்குகின்றான் “திரு அண்ணாமலை”

3.நாம் மேல் நோக்கிப் பார்க்கும் உணர்வின் தன்மையை

4.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றவேண்டும்.

5.நமக்குள் ஜோதியை உருவாக்க வேண்டும் என்று சொன்னால்…

6.நாம் இங்கிருந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம்.

 

நம் ஆசை இந்த உடலின் இச்சைக்குத்தான் செயல்படுகிறோமே தவிர  வேறு எதுவும் இல்லை.

 

அருள் ஒளியின் சுடராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நன்னாளில் மகிழ்ச்சி பெறும் உணர்வைப் பெற்று, பகைமைகள் மறந்து ஒற்றுமை ஏற்படச் செய்யும் நிலைக்காக இருளை அகற்றும் நாள் என்று ஞானிகள் குறித்தார்கள்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனவரது உடல்களிலும் படரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு உடலிகளிலும் படரவேண்டும் என்று எண்ணும்படிச் செய்தார்கள்.

 

இருள் அகற்றும் நிலைகளை நாம் ஒற்றுமையாக இருந்து தியானித்து  அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் ஞானிகள்.

 

இருண்ட உணர்வின் தன்மையைத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது

1.நமக்குள் ஒளி பெறுகின்றது.

2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.

3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.

 

நம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை நாம் மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம். இதுதான் “ஜோதி தரிசனம்” (கார்த்திகை தீபம்) என்பது.

 

கார்த்திகை தீபம் நம் வீட்டு வாசற்படியில் வைப்பது போல நம் உணர்வின் தன்மையை ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று அந்த அருள் ஓளியின் உணர்வை  உங்களுக்குள் வளர்த்துக்கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் நன்னாளாக இது அமைகின்றது.

 

நம்மை உருவாக்கிய முன்னோர்கள் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்தக் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை அவருடைய உணர்வின் தன்மை நம் உயிரான நிலைகள் கொண்டு ஒன்றி பிறவியில்லா நிலைகள் அடைந்த அந்த ஞானிகளின் உணர்வுடன் அங்கே இணைத்தல் வேண்டும்.

 

1.அந்த ஜோதியின் சுடராக விளைய வேண்டும் என்று

2.மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்த ஒளியின் சுடராக மாற்றப்படும் பொழுது

3.அதனின் உணர்வை நாம் நுகரும் ஆற்றலே பெறுகின்றோம்.

 

சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தாலும் அதை ஐதீகம் என்ற நிலைகள் கொண்டு இவர்கள் காட்டும் நெருப்பைப் பார்த்தால்…, “பாப விமோசனம்” என்று சாதாரண நிலைகளில்தான் நாம் செல்கின்றோம்.

 

உண்மையான ஜோதியின் சுடரைக் கண் கொண்டு

1.”உயிரான திரு”

2.உடலின் உச்சியில் அண்ணாமலையான உயிரை எண்ணிடல் வேண்டும்.

 

அந்த உணர்வுடன் விண்ணை நோக்கி ஏகி

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்

2.அந்த ஒளியின் சுடராக நாம் என்றுமே ஆக வேண்டும் என்று

3.நினைவு கூறும் நந்நாள் தான் “கார்த்திகை ஜோதி”.

மூல நோய் குணமாக கால் வலி நீங்க என்ன செய்ய வேண்டும்?

Image

பேரொளியின் ஆற்றல்.jpg

மூல நோய் குணமாக, கால் வலி நீங்க என்ன செய்ய வேண்டும்?

 

மூல நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி “கடு…கடு…” என்று இருக்கும். மூலக் கிருமிகள் அதிகமாகும் பொழுது அரிப்பாகும். அப்பொழுது குடல்கள் சுருங்கும். சுருங்கப்படும் பொழுது மலம் வருவது கஷ்டமாகும்.

 

மலம் வந்தவுடன் அந்த மூலத்தின் மேல் கீறினால் இரத்தம் வரும். “இரத்த மூலம்” என்று சொல்வார்கள்.

 

நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டியது இல்லை. இந்த மூல நோய்களுக்கெல்லாம் இந்த ஜவ்வரிசிப் பாயாசமே உங்களுக்குப் பெரும் மருந்தாகும்.

 

மூல பவுத்திரமோ மூல நோயோ மூல அணுக்களோ, மூல ஆணியோ இருந்தால் கூட கடுக்காய் தூளைச் சாப்பிட்டால் குறையும்.

 

மூல நோய் உள்ளவர்கள் மல்லாந்து படுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை

2.இழுத்துச் சுவாசித்து

3.அந்த மூச்சைச் சமமான நிலையில் விடுங்கள்.

 

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலங்களில் படரவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் குடல் முழுவதும் படரவேண்டும் என்ற இந்த உணர்வைச் செலுத்துங்கள்.

 

மூல நோய் குறையும்.

 

சிலருக்கு மூட்டுகளில் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள். கால்களில் ரொம்ப நாளாக வலிக்கின்றது என்பார்கள். சிலருக்குக் காலையில் எழுந்தவுடன் குதி கால்களில் நடக்க முடியாது.

 

இதற்கெல்லாம் ஆடு தின்னாப்பாளையை (ஆடு தீண்டாப்பாளை) அரைத்து இரவிலே காலிலே போட்டுவிடுங்கள்.

 

கால்களில் இருக்கும் விஷ நீர் எல்லாவற்றையும் எடுத்துவிடும். இதையெல்லாம் வாக்குடன் கொடுக்கின்றேன், புரிந்து கொள்ளுங்கள்.

 

யாம் சொன்ன இவை அனைத்தையும் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த நம்பிக்கையோடு செய்யவேண்டும்.

 

1.சாமி சொல்கிறார்… இதையெல்லாம் செய்தால் சரியாகுமா?

2.அதெப்படி சரியாகும் என்ற மனது வந்துவிட்டால் என்னவாகும்?

 

கொஞ்சம் முயற்சி செய்யவேண்டும். இரண்டு நாளைக்குப் பார்ப்பார்கள். மூன்றாவது நாள் விட்டுவிடுவார்கள். ஏனென்றால் இந்த மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

 

ஆகவே சரியாகப் போகும் (என்ற இந்த மனது) என்று மனதில் எண்ணினால் இதெல்லாம் சரியாகிவிடும். நீங்கள் செய்யுங்கள். செய்து கொண்டு வந்தால் எல்லாம் நல்லதாகும்.

ஏமாற்றுவோர் வலையில் சிக்காது அருள் மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்ற வேண்டும்

Image

ம்கரிஷி

ஏமாற்றுவோர் வலையில் சிக்காது “அருள் மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்ற வேண்டும்”

 

பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து வென்றிடும் உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி மனிதனாக உருவாக்கப்பட்டு உலகிலுள்ள அனைத்தையும் அடக்கி ஆளும் சக்தி பெற்றவன் மனிதன் என்று “அங்குசபாசவா”.

 

தனக்குள் எடுத்துக் கொண்ட எண்ணத்தைக் கொண்டு எதையும் அடக்க முடியும் என்று விநாயகர் தத்துவத்தில் அங்குசத்தைப் போட்டுக் காண்பித்துள்ளளார்கள்.

 

ஏன் நமக்கு இது தெரியாமல் போய்விட்டது?

 

கணபதி ஹோமம் செய்தால் எல்லாம் செய்வார் என்று ஹோமங்களைச் சொல்லி மந்திரங்களைச் சொல்லி கணங்களுக்கு அதிபதியாகிவிட்டது என்று சொல்லி விட்டால்

1.நாம் இறந்த பிற்பாடு மந்திரத்தைச் சொன்னால்

2.மந்திரவாதி நம்மைக் கைவல்யப்படுத்திக் கொள்வான்.

3.வாடா.., தம்பி நான் சொல்வதையெல்லாம் கேள்” என்பான்.

 

அந்தக் கருவைத் தனக்குள் பெற்ற பின் ஒரு கிளி இருக்கிறது என்றால் அதிலே அந்தக் கருவைத் தடவி விடுகின்றான்.

 

“ராஜா.., வாடா..,” என்கிறான். இந்த உணர்வுகள் அங்கே போனவுடன் அடுத்துச் சீட்டை எடுடா என்கிறான். உணர்வைப் பார்த்துச் சீட்டை எடுக்கின்றது. இதுவாகிலும் பரவாயில்லை.

 

ஒரு எலிக்குள் இந்தக் கரு மையைத் தடவிவிடுகின்றான். வாடா ராஜா, இந்தச் சீட்டை எடுடா என்கிறான். அந்த எலி போய் சீட்டை எடுக்கின்றது மனித உணர்விலிருந்து எடுத்துத் தடவிய அந்தக் கரு.

 

இதைப் போல மனிதன் தன் ஆசைக்குள் இச்சையின் உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின் நகைகள் எல்லாம் பெண்கள் போட்டிருப்பார்கள். ஆண்களும் போட்டிருப்பார்கள்.

 

1.“அண்ணே.., வாங்கண்ணே” என்பான், மையைத் தடவுவான்.

2.அப்புறம் அவர்கள் நிலையையே மறந்துவிடுவார்கள்.

3.கொஞ்ச நேரத்தில் நகை எல்லாம் கழட்டிக் கொடு என்று சொல்லி எல்லாவற்றையும் வாங்கிச் சென்றுவிடுவான்.

 

இன்றைக்கும் நடக்கின்றது.

 

மனிதனுக்குள் ஆசையின் தன்மைகள் பிறரின் மறைவின் தன்மை கொண்டு இயக்கப்படும் பொழுது தன்னை மறந்து நகைகளைக் கழட்டிக் கொடுப்போர் உண்டு.

 

இதைப் போல, மந்திரங்களைச் சொல்லி பல வேலைகளைச் செய்யும் பெரிய சாமியார்களும் இருக்கின்றார்கள்.

 

கடத்தல் சரக்குகளை அங்கே பார்த்தபின் கடத்தலைக் கண்டு பிடிப்போர் வந்தபின் அவர்களின் நினைவினை மாற்றிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு வந்துவிடுவார்கள்.

 

அதற்குக் கப்பம் வாங்கிக் கொள்வதும் உண்டு. இப்படிப்பட்ட மகான்கள் நிறையப் பேர் உண்டு.

 

பெரிய மகான் ஏனென்றால் கடத்தலில் சம்பாரித்துக் கொடுத்தார் மகானை வணங்கி இவர் சம்பாரித்தேன் என்று அவருக்கும் காசைக் கொடுப்பார்.

 

நான் தவறு செய்திருப்பேன். ஆனால் கோர்ட்டில் நான் ஜெயிக்க வேண்டும். அந்த மகான் கொடுத்தார் நான் ஜெயித்தேன். ஆகையினால் நான் திருடி வந்த பணத்தில் உனக்குக் கொஞ்சம் பங்கு.

 

இப்படி மகான்கள் நிறையப் பேர் உண்டு. நான் யாரையும் தவறாகச் சொல்லவில்லை.

 

மனிதனின் இச்சையின் உணர்வுகள் நமக்குள் இவ்வாறு வளர்ந்து கொண்டு பேருண்மையின் நிலைகளை மறைத்துக் கொண்டு நாம் இந்த உடலின் இச்சைக்குத் தான் வாழுகின்றோம்.

 

1.உயிரால் வளர்க்கப்பட்ட உணர்வின் தன்மை கொண்டு

2.அது ஒளியின் சரீரமாக அன்று அடைந்த அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பெற

3.நாம் ஆசைப்படுதல் வேண்டும்.

 

அதைப் பற்றுடன் பற்ற வேண்டும். இந்த வாழ்க்கையில் வரும் தீமையின் நிலைகளைப் பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.

 

“பற்று பற்றற்று இரு…” என்று சொன்னார்கள் ஞானிகள்.

“மற்றவர்களை” நம்பத் தயாராக இருக்கின்றோம் “நம்மை நாம் நம்புகின்றோமா…?”

Spiritual self

“மற்றவர்களை” நம்பத் தயாராக இருக்கின்றோம் “நம்மை நாம் நம்புகின்றோமா…?”

சாதாரண வாழ்க்கையில் பட்ட கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் பயம் சோர்வு போன்ற உணர்வாக இயக்கச் செய்யும் நிலைகள் நமக்குள் அடுத்து வேதனைப்படும் உடலாக உருவாக்குகின்றது.

ஆனால் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்தால் வேதனையை அடக்கி வேதனையை ஒடுக்கிடும் உணர்வாக விளைகின்றது.

நல்ல உணர்வுகள் கொண்டு நாம் வாழ்ந்து வரும்போது பிறரின் சிரமங்களையும் கஷ்டங்களையும் கண்டுணரும் பொழுது அதிலிருந்து அவர்கள் விடுபட நாம் எண்ணி ஏங்குகின்றோம். உதவியும் செய்கின்றோம்.

நல்ல உணர்வின் வலு கொண்டு அவர்களைக் காத்திட்டாலும் கேட்டுணர்ந்த உணர்வுகள் நம்மிடம் உள்ள நல்ல உணர்வுகளுடன் கலந்து அந்த நஞ்சான நிலைகள் உடலுக்குள் தீதான நிலைகளாக விளையத் தொடங்கிவிடுகின்றது.

பாலில் சத்துள்ள பாதாமைப் போட்டால் அதனின் சத்து உயர்ந்ததாக இருக்கின்றது. அதில் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் அதை உணவாக உட்கொண்டால் நம் நினைவை இழக்கச் செய்துவிடும்.

நாம் எத்தனையோ காலம் காத்து வந்த மனித உணர்வுகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடுகின்றது. உடலையும் நலியச் செய்கின்றது. நஞ்சு கொண்ட நிலையாக மாறுகின்றது.

1.நஞ்சின் வலு ஜாஸ்தி.
2.அதே சமயத்தில் நஞ்சை வென்ற அருள் ஞானிகளின் வலு ஜாஸ்தி.

நஞ்சினை ஒடுக்கிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பருகும் மார்க்கம்தான் யாம் இப்பொழுது உபதேசிக்கும் இந்த நிலை.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதிக்கு குருநாதர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி உங்களுக்கும் உபதேசித்து உணர்த்துகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் எளிதில் பெறவேண்டும் என்றால் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

அவர்கள் இன்னொரு இருள் சூழ்ந்த உடல் பெறாது பூரண நிலாவாக இருப்பது போல் ஒளியின் சரீரம் பெற்று அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்திட வேண்டும் என்று நாம் உந்தித் தள்ள வேண்டும்.

அவர்கள் அங்கே சென்றடைந்தபின் சுலப நிலைகளில் அதைப் பெற முடியும். குலதெய்வங்களை ஒளிச் சரீரம் பெறச் செய்த உணர்வின் துணை கொண்டு நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவோம்.

ஏனென்றால் இன்று சாதாரண எளிய மக்களாகத்தான் உள்ளோம். காவியங்களையோ கதைகளையோ முழுமையாக அறிந்தாரில்லை. காவியத் தொகுப்புகளை நாம் பார்த்ததில்லை.

தெய்வங்களின் நல் ஒழுக்கத்தைக் கற்றுணர்ந்தோர் தான் இருக்கின்றோம். “தெய்வத்திற்குப் படைத்தால் அந்தத் தெய்வம் நமக்குச் செய்யும்…” என்ற நம்பிக்கையில் தான் இருக்கின்றோம்.

தெய்வ நிலைகள் கொண்டோரிடம் மடாதிபதிகளோ அதைப் போன்ற மற்றவர்களிடமோ சென்று
1அவர்களிடம் ஆசி பெற அதிக அளவில் பணத்தையும் கொடுத்து
2.அவரிடம் வாக்கை வாங்கினால் அவர் நமக்கு நன்மை செய்வார் என்று
3.அவர்கள் பின்னாடி சென்று கொண்டிருக்கின்றோம்.

இப்படிப் பிறரை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்மை நாம் நம்புகின்றோமா…! நமக்குள் இருக்கும் ஆற்றலை அறிந்திருக்கின்றோமா…!

1.நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.நமக்குள் உயிராக இயக்கும் “நம் உயிரை நம்பி”
மகரிஷிகள் காட்டிய அருள் வழியினைப் பற்றுடன் பற்றி அருள் ஞான சக்தியைப் பெற முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.

நம்மையறியாது வரும் தீமைகளை நீக்கும் ஆற்றலை நாம் பெற முடியும் என்ற இந்த உணர்வின் வேட்கை ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும்.

தீமையை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வின் ஏக்கம் கொண்டு இந்த வாழ்க்கை வாழ்ந்தால் நம்மை அறியாது வந்த தீமைகளை நிச்சயம் அகற்றிட முடியும்.

யாரோ செய்வார் எவரோ செய்வார் என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

ஏனென்றால்
1.”நீங்கள் எண்ணியதைத்தான்” உங்கள் உயிர் இயக்குகின்றது.
2.அதனின் உணர்வின் துணை கொண்டு தான்
3.உடலுக்குள் சென்று அது இயக்குகின்றது.

உங்களை நீங்கள் நம்புங்கள்

அரியலூர் இரயில் விபத்தில் ஒரு சுக்குநூறாக ஆன பெட்டிக்குள் ஒரு குழந்தை மட்டும் எப்படித் தப்பியது…?

Polaris Big bear Remote power

அரியலூர் இரயில் விபத்தில் ஒரு சுக்குநூறாக ஆன பெட்டிக்குள் ஒரு குழந்தை மட்டும் எப்படித் தப்பியது…? 

அரியலூர் ரயில் விபத்தை எடுத்துக் கொண்டால் பெரிய பெரிய மனிதர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். அதிலே ஒரு பெட்டி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.

ஆனால் அந்தப் பெட்டிக்குள் ஆறு மாதக் குழந்தை ஒன்று பெஞ்சின் மீது காலை நீட்டி அலுங்காது படுத்திருந்தது. அதனுடைய தாய் இறந்துவிட்டது. இந்தக் குழந்தை மட்டும் மிஞ்சி இருக்கின்றது.
1.அந்தக் குழந்தையின் யதார்த்த உணர்வுகளும்…
2.“தாய் கருவில் வளர்ந்த ஆற்றல்மிக்க சக்தி
3.அந்தக் குழந்தையைக் காக்கச் செய்கின்றது.

நான் (ஞானகுரு) பழனிக்குச் செல்வதற்காக திண்டுக்கல் இரயில்வே ஸ்டேசனில் காத்துக் கொண்டிருந்தேன்.

அந்தச் சமயத்தில் ஒரு பெண் கைக் குழந்தையை தன் இடுப்பில் வைத்துக் கொண்டும் இன்னொரு குழந்தையைத் தன்னுடன் அழைத்துக் கொண்டும் இரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்றது.

எதிர்பாராது இரயில் வந்துவிட்டது.

வந்தாலும் மோதிய வேகத்தில் தண்டவாள மையத்திலே குழந்தை விழுந்துவிடுகின்றது. தாய் சுக்குநூறாகிவிட்டது. அதனுடன் அழைத்துச் சென்ற குழந்தையும் சுக்குநூறாகிவிட்டது.

கையிலிருந்த கைக்குழந்தை எந்த விதமான விபத்தும் இல்லாது விழுந்த அதிர்ச்சியேதான் தவிர இரத்தக் காயம் எதுவுமே இல்லை.

இவையெல்லாம் அறியாத நிலைகள் கொண்ட உணர்வின் தன்மை எதிர்பாராத நிலைகள் வரும் அந்த உணர்வலைகள்தான் அதைக் காக்கின்றது.

அந்தக் குழந்தைக்கு அறியாத நிலைகள் இருப்பினும் இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் தாய் கருவிலே பூர்வ புண்ணியமாக அமைந்த உணர்வுகள் அது.

பல நிலைகளிலும் காத்திட்ட உணர்வுகள் அது கருவிலே விளைந்திருந்தால்தான் இது நடக்கும். இதைத்தான் “பூர்வ புண்ணியம்…” என்று சொல்வது.

அதே சமயத்தில் விபத்து அந்தக் குழந்தைகளுக்கு வருகிறது என்றால் என்ன காரணம்?

வேதனை உணர்வு கொண்டு சிந்தனையற்ற உணர்வுகளைத் தாய் அதிகமாகச் சுவாசித்திருந்தால் இவர்கள் சிந்தனை குறைந்து
1.அந்த வேதனைப்படும் உணர்வால்
2.அவர்களை விபத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றது.

விபத்தினால் வேதனைப்படும் நிலைகள் வருகின்றது. வேதனையை அனுபவிக்கின்றது.

இதைப் போல ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அடிக்கடி வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்துவிட்டால் அதனின் செயலாக்கமாக அந்த உணர்வுகள் நம்மை வேதனைப்படும் செயலுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

நமது உயிருடைய வேலை என்ன?

1.நாம் கவர்ந்த உணர்வினை நமக்குள் ஆழப்பதியச் செய்வதும்
2.பதிந்த உணர்வுகள் கவரும் நிலைகள் ஆன்மாவாக மாற்றுவதும்
3.ஆன்மாவிலிருந்து நுகர்ந்தறிந்து இயக்கிக் காட்டுவதும் தான் உயிரின் வேலை.

இயக்கிக் காட்டிய உணர்வின் அலைகள் கண்ணின் புலனறிவிலே படப்படும் பொழுது
1.நேர்முகமாக இருப்பதை அறிந்துவிடுகின்றோம்.
2.மறைமுகமாக சூட்சமத்தில் இருப்பதை அறியமுடிவதில்லை.

சூட்சமமாக இருப்பதை நாம் எப்படி அறிய முடிகின்றது?

அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து அதன் வழியில் இந்த உடலை அழைத்துச் செல்வதும் அங்கு நடக்கும் நிகழ்ச்சி “உடலிலே அனுபவித்தபின் தான்… அதை அறிய முடியும்”.

ஆனால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்திருந்தால்
1.எதிர் கொண்டு அலைகள் வந்தால்
2.அதை மாற்றி அமைக்கும் சக்தியாக “ரிமோட் கன்ட்ரோல்…” போன்று செயல்படும்.

இன்று ஒரு கம்ப்யூட்டரில் வலு கொண்ட நிலைகளைச் செயல்படுத்தும் போது அடுத்தடுத்து வரும் பல பாஷைகளை உருவாக்கி இந்த பாஷையைத்தான் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணிச் செயல்படுத்துகின்றார்கள்.

எதெனெதன் எதிர் நிலை கொண்டுள்ளனரோ அந்த உணர்வலைகளை அதிலே பாய்ச்சி இவன் செலுத்திய இயற்கையில் செயல்படுத்திய இயக்கங்களை அது எந்தெந்த நிலையோ அதற்குத்தக்க கடினத்துக்குத் தக்கவாறு பல பாஷைகளையும் ஒரே காலத்தில் பிரித்துக் காட்டுகிறது இன்றைய விஞ்ஞான அறிவு.

இதைப் போல மெய்ஞானிகள் உணர்ந்த உணர்வின் தன்மையை தீமைகளை அகற்றிய உணர்வின் தன்மையை நம் உடலுக்குள் செலுத்திக் கொண்டால்
1.பல தீமையை விளைவிக்கும் நிலைகள் இருந்தாலும்
2.மகரிஷிகளின் உணர்வலைகளின் “அழுத்தத்தின் காரணமாக”
3.மற்றவைகளை ஒடுக்கி அறிந்திடும் உணர்வலைகளாக நமக்குள் வரும்.

அப்பொழுது கண் புலனறிவில் அறிந்திட்ட அந்த உணர்வுகள் நினைவலையாகக் கண்ணில் பாய்ச்சப்பப்டும் பொழுது
1.இதனுடைய உணர்வுகள் எதிர் கொண்டு
2.அது மாற்றான நிலைகளை நமக்குள் எதிர் மறையாகி
3.நமக்குள் உணர்ச்சியைத் தூண்டி
4.நம்மைத் தப்புவிக்கச் செய்யும் நிலைகளை உருவாக்கும்.

ஒரு சமயம் நான் (ஞானகுரு) மங்களூரில் இருக்கும் போழுது புயல் வருகிறது 180 மைல் வேகத்தில் காற்றுவீசும் என்று பத்திரிக்கையிலேயும் ரேடியோவிலும் அறிவித்திருந்தார்கள். கடலுக்கருகில் இருக்கின்றது மங்களூர்.

அந்த நேரத்தில் நான் ஒரு ஓட்டு வீட்டில் படுத்திருந்தேன். அங்கே என் அருகில் இரண்டு பேரும் படுத்திருந்தனர். ஓட்டு வீட்டிற்கு நேராக இரண்டு தென்னை மரம் இருந்தது.

புயல் காற்றில் அந்த மரங்கள் பேய் ஆடுகிற மாதிரி ஆடியது. நான் கட்டிலின் மீது படுத்திருந்தேன். அப்பொழுது என் தலைக்கு நேராக ஒரு இளநீர் அந்தக் காய் வந்து விழுந்தது.

அப்படி விழுவதற்கு முன் என்னை உசுப்புகின்றது.

உடனே எழுந்து உட்கார்ந்தேன். விழுந்த நேரத்தில் வட்ட வடிவமாக எனக்குள் அது விழுகின்றது. காய் என் மேல் விழுந்ததில் காயமில்லை.

எனக்கு அருகில் படுத்திருந்த பம்பாய்க்காரர் இதை அறியவில்லை. அவர் நல்ல தூக்கத்தில் இருந்தார்.

என் மேல் விழுந்ததைப் பார்த்து அவர் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று அலைகளைப் பாய்ச்சிக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றேன்.

மறுபடியும் ஒரு காய் வந்து விழுந்தது. அவர் நீண்ட நிலைகளில் படுத்திருப்பதனால் இது சுக்குநூறாகி அவரைச் சுற்றி வந்து மனித உரு மாதிரி விழுந்தது.

இது மங்களூர் திரு. நாராயணசாமி அவர்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி.

அவர் இந்தப் பக்கம் படுத்திருகின்றார். அவருக்கு மேலே வரப்படும் போது தகரம் இருக்கின்றது. அதற்கு மேல் ஒன்றும் இல்லை. நான் படுத்திருக்கின்றேன் என்று சொல்லி அவர் ஒதுங்கிப் படுத்தார்.

மற்றவர்களுக்கு இடம் கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் குறுகிய இடத்தில் ஒதுங்கிப் படுத்தார். அவருக்கு மேலே அந்தத் தகரம் தான் வேறு ஒன்றுமில்லை.

ஆனால் பம்பாய்க்காரர் நான் படுத்திருக்கின்றேன் என்ற வகையில் துணிந்து படுத்தார்.

இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் “எதனின் அதிர்வுகளில் இருந்தாலும்” அதை அகற்றக் கூடிய சக்தி கொண்டது. சில சில அதிசயங்கள் நடக்கிறதென்றால் அச்சமயத்தில் அவர்களுக்குள் விளைந்த உணர்வுகளே அவர்களைக் காக்கின்றது.

நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி “எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தியானிக்க வேண்டும், தவமிருக்க வேண்டும்.
1.இந்த உணர்வுகள் வலுப் பெறும் பொழுது
2.விபத்துக்கள் ஏற்பட்டாலும்
3.அதிலிருந்து “நம்மைக் காத்திடும் சந்தர்ப்பங்கள்” உண்டு.