உயிர் காக்கும் திருமந்திரம்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் – 113

இப்போது நம்மை ஒருவர் திட்டிவிட்டால் நாம் என்ன நினைக்கின்றோம்…? என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்றே நாம் பேசுகின்றோம்.

இந்த உணர்வின்தன்மை நாம் ஜெபிக்கப்படும் போது சூரியனின் காந்தப்புலனறிவுகள் சும்மா இருப்பதில்லை. பேசுவதை எல்லாம் அது எடுத்து அலைகளாகக் கவர்ந்து கொள்கின்றது.

என்னை இப்படிப் “பேசினார்கள்… பேசினார்கள்…” என்று சொன்னால் அது அவர்கள் காதில் விழுந்தது என்றால் அவர்கள் நம்முடன் சண்டைக்கு வருவார்கள்.

கேட்கவில்லை என்றாலும் இந்த உணர்வின் சத்தைக் காந்த அலைகள் இழுத்து நம் உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டே இருக்கும்.

இதை மீண்டும் மீண்டும் எண்ண எண்ண விளைய வைத்தது எல்லாவற்றையும் உடல் இழுத்து வைத்துக் கொள்ளும். நமக்குப் (உடலுக்கு) பின்னாடி முன்னாடி இதுதான் நிற்கும்.

இப்படி இந்த உணர்வுகள் நமக்கு முன் நின்று கொண்டே இருந்தால் “என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… அவன் மோசமானவன்…!” என்று சொல்லிக் கொண்டேயிருப்போம்.

இப்படி பேசினான் என்று சொல்லும்போது வேறு என்னென்னமோ கலந்து நாம் பேச ஆரம்பித்து விடுகின்றோம். இந்தப் பேச்சின் தொடர்கள் அனைத்தும் வெறுப்பை ஊட்டும் உணர்வாக வந்துவிடுகின்றது.

வெறுப்பு கொண்டு பேசுவது அனைத்தையும் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொண்டு நாம் பேசப் பேசப் பேச நம் உடல் பக்கம் முன்னாடியே நிறுத்திவிடும்.

முன்னாடி நின்றவுடனே என்ன செய்கின்றோம்? மீண்டும் எங்கே பார்த்தாலும் அந்த நினைவு தான் வரும்.

வெறுப்பான நிலைகளில் இருந்தால் பெண்கள் சமையல் செய்யும் பொழுது குழம்பு வைக்கும் போது பார்க்கலாம்.

எந்தக் குணத்தின் அடிப்படையில் வெறுப்பாக இருக்கின்றீர்களோ – எரிச்சலான நிலைகள் இருந்தால் மிளகாயை அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.

“என்னை இப்படியே பேசி கொண்டு இருக்கின்றார்களே…,” என்று வேதனையான நிலைகள் இருந்தால் உப்பை அதிகமாகப் போட்டு விடுகின்றீர்கள்.

உங்களை அறியாமல் உப்பை கையில் அள்ளிப்போட வைக்கும். வேண்டும் என்றால் பாருங்கள்.

சங்கடப்பட்டு நீங்கள் எதை எதை வெறுக்கின்றீர்களோ அன்றைக்குக் குழம்பு வைக்கும்போது உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். என்ன உப்பு இப்படி அதிகமாக இருக்கின்றது…? என்று வீட்டில் சண்டை வரும்.

கோபமாக இருந்தீர்கள் என்றால் இரண்டு மிளகாயாவது கூடச் சேர்த்துப் போட்டு விடுவீர்கள். அப்பறம் எரிச்சலாக இருக்கும்.

அதே மாதிரி நீங்கள் சலிப்பு சஞ்சலத்துடன் இருந்தால்  சீரகத்தை அதிகமாக அள்ளிப் போட்டு விடுவீர்கள். சீரக வாசனை அடித்தால் உமட்டலாகும்.

அந்தந்தக் குணத்திற்குத்தகுந்த மாதிரி அன்றைக்கு குழம்பு வைக்கச் சொல்லும். குழம்பின் சுவையும் அப்படித்தான் இருக்கும்.

ஒருவரிடம் அன்றைக்குச் சலித்துப் பேசினீர்கள் என்றால் புளிக் குழம்பு வைக்கவேண்டும் என்று சொல்லச் சொல்லும். ஆனால் புளியை அதிகமாகக் கரைத்துவிட்டு உப்பைக் குறைத்துவிடுவீர்கள். கடைசியில் புளிப்பு அதிகமாகிப் போய்விடும்.

ஏனென்றால் சலிப்பை ஜாஸ்தி எடுத்துக் கொண்டால் நிச்சயம் புளிக் குழம்பு தான் வைக்க வேண்டும் சாதித்துப் புளிக் குழம்பை உங்களை வைக்க வைத்து விடும்.

வைத்தாலும் உப்பு போடாமல் விட்டு விடுவீர்கள். புளி ஜாஸ்தி ஆகிவிடும். வேண்டும் என்றால் உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

(சலிப்பாக இருக்கும் பொழுது) அதே போல் இட்லியை புளிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து உப்பு போட்டுக் கரைத்து வைத்தால் மறுநாள் காலையில் இட்லி புளித்துக் கொண்டு இருக்கும்.

அப்பறம் இட்லியைத் தின்றால் “கல்..” மாதிரி ஆகிப் போகும்.

“ஐய்யய்யோ…! நான் சரியாகத் தானே போட்டேன் இப்படி ஆகிவிட்டது என்பார்கள். அந்தந்தக் குணத்திற்குத் தகுந்தவாறு நாம் எடுத்துப் பேசும் உணர்வுகள் துரித நிலைகள் கொண்டு இவ்வாறு இயக்கிவிடும்.

மனிதனுடைய ஆற்றல் அந்த அளவிற்கு உள்ளது.

திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப குறையான உணர்வுகளைப் பேசும் போது இந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது. இதைப் போலானாலும் கூடப் பரவாயில்லை. நம் உடலில் சாப்பிட்ட ஆகாரத்தையும் இந்த நிலைக்கு ஆக்கி விடுகிறது.

வியாபாரத்தில் போய் உட்கார்ந்து சரக்கை எடுத்து விலையைச் சொன்னோம் என்றால் நாம் எந்த புளிப்பாக இருக்கின்றோமோ வாடிக்கையாளர்களையும் சலிப்பாக எண்ண வைக்கும்.

துணியை காட்டினல்… “என்ன துணி இது..? போ…!” போய்க்கொண்டு இருப்பார்கள். நம் சொல் அவர்கள் காதில் கேட்ட இந்த உணர்வு கண்ணிலே பார்த்தவுடன் அந்தச் சரக்கை மட்டமாகச் சலிப்பால் புளிப்பாக அந்த உணர்வு போகச் சொல்லிவிடும்.

அதே மாதிரி வெறுப்பான எண்ணங்களைப் பேசி பேசி இந்த அலைகள் எனக்கு முன்னால் இருக்கும் பொழுது நாம் அடுத்தவர்களிடம் பேசும் பொழுது  இதுவும் கலந்து தான் வரும்.

நண்பர்களிடம் பேசும்போது நாம் ஏதாவது சந்தோஷமாக சொல்லப் போனோம் என்றால் அவர் காதில் கேட்டவுடனே வெறுப்பாக இருப்பார்கள். நாம் பேசுவதெலாம் அவருக்கு வெறுப்பாக இருக்கும். கூட ஏதாவது பேசினால் இன்னும் கொஞ்சம் வெறுப்பாகி விடும்.

நாம் சுவாசித்ததே நமக்கு வாகனமாக வருகின்றது என்பதற்காகத்தான் மூஷிகவாகனா  என்று காட்டுகின்றார்கள். நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

நான் மாம்பழத்தை தேட வேண்டும் என்கிறபோது மாம்பழத்தைத் தேடிப் போகின்றேன். ஒருவனை உதைக்க வேண்டும் என்கிற போது அவனைக் குறி பார்த்துப் பேசித் தேடிக்கொண்டே போகின்றேன்.

இதே போல் நாம் எண்ணிய நிலைகளை அதைச் சுவாசிக்கும் போது மூஷிக வாகனா…! நாம் சுவாசித்த இந்தக் குணம் இந்த உடலை அழைத்துச் செல்லுகின்றது.

இவ்வளவு பக்குவமாக ஞானிகள் கொடுத்திருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்போது ஒரு வேதனைப்படுவோரின் உணர்வை நாம் நுகர்ந்தால் உற்றுப் பார்த்த உணர்வுகள் நமக்குள் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி நமது உடலையும் வலு இழக்கச் செய்கின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வே நம்மை இயக்குகின்றது. அதன் வழி அன்றைய வாழ்க்கையும் அமைகின்றது.

ஒரு குடம் பாலில் நீங்கள் பாதாமைப் போட்டாலும் அதைக் காட்டிலும் பல உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும் ஒரு துளி விஷம் பட்டால் பால் அனைத்தும் நஞ்சாகி விடுகின்றது.

அதில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை சிறுத்துப் பாலின் தன்மை வீரியத்தன்மை அடைகின்றது.

ஒரு சமயம் 100 தரம் நாம் நல்லதைச் செய்தாலும் ஒரு நொடி அந்த வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை தான் நம்மை இயக்குகின்றது.

100 மணி நேரம் நாம் நல்லதை நுகர்ந்தாலும் அந்த 100 மணி நேரமும் நல்லவைகளை உருவாக்குகின்றது நமது உயிர். ஆனால் ஒரு நொடி வேதனை என்ற உணர்வை நுகரப்படும்போது அது நம் நல்ல குணங்கள் அனைத்தையும் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இது இயற்கையின் நியதிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் நடந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகர நேரும் அந்தத் தீமையான உணர்வுகளை அகற்றியே ஆக வேண்டும்.

அன்றாடம் உடலையும் உடைமைகளையும் நாம் எப்படித்தான் தூய்மைபடுத்தினாலும் அழுக்குப்படியத்தான் செய்யும். அதைத் தூய்மையாக்கவில்லை என்றால் அழுக்குகள் கூடிவிடும்.

அதைப் போன்று நம் மனதையும் அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வினை நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் தினசரி வாழ்க்கையில் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

கணவனும் மனைவியும் எப்படி இருந்தாலும் (வெளி ஊரில்) காலையில் ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடம் எடுத்தால் போதும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். என் கணவர் உடல் முழுவதும் படரவேண்டும். என் மனைவி உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்.

எங்களைப் பார்க்கும் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். எங்கள் பார்வையில் பிறருடைய தீமைகள் அகன்றிடும் அருள் சக்தி பெறவேண்டும்.

எல்லோருக்கும் அந்தத் தெளிந்த மனம் கிடைக்கும் அருள் சக்தி பெறவேண்டும். ஒவ்வொரு மனிதனும் அந்தத் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று காலையில் இப்படி எண்ணி கணவன் மனைவி இருவருமே உங்களுக்குள் படைத்துக் கொள்ளுங்கள்.

இதுதான் உண்மையான தியானமும் நாம் போகும் மார்க்கமும்.

நாம் உட்கார்ந்து மணிக்கணக்கில் ஜெபம் இருந்து ஆண்டவனை அடைவேன் அந்தச் சக்தியைப் பெறுவேன் என்றால் அது முடியாது.

அப்படி மணிக்கணக்கில் ஜெபமிருந்து முடிந்தாலும் முடிந்த பின் வாழ்க்கைக்கு வரும் பொழுது தீமைகள் வரும். அப்படி ஜெபமிருந்து பல நிலைகளைப் பெற்றாலும் அது “முனி” என்ற நிலையாகத்தான் வரும். ஒரே வைராக்கிய நிலைகள் கொண்டு “மற்றதைச் சிந்திக்கவிடாது” செயல்படுத்தும் நிலைகள் தான் வரும்.

ஆகவே, அருள் ஞானத்தை வளர்த்து மெய்ப்பொருள் காணும் நிலையை இந்த உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த உபதேசங்களை ஒவ்வொரு நாளூம் திரும்பத் திரும்பப் படியுங்கள். வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்தால் ஒரு 10 நிமிடமாவது இதைப் படியுங்கள்.

இதுவே ஒரு தியானமாகின்றது.

இதைப் படித்து முடித்த பின்பு “எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்” என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

அப்பொழுது இந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மற்றவர்களை நலமாக்க இது உதவும்.

அருள் ஒளி பெறுவோம். இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக என்றும் எகாந்த நிலை என்ற நிலையில் வாழும் அந்த அருள் சக்தியைப் பெறுவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கையில் நாம் எந்தத் தொழில் செய்தாலும் எந்த வேலை பார்த்தாலும் எந்த நிலையிலிருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் தியானப் பயிற்சியையும் ஆத்ம சுத்தியையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதைச் செய்யவில்லையென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற முடியாத தகுதியற்றவராக மாற்றிவிடும்.

துருவ நட்சத்திரத்தின் அலைகள் நமக்கு முன் இருக்கும். அதை நாம் எடுக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

தங்க நகை செய்கின்றோம். அதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் தான் தங்கம் சுத்தமாகின்றது.

அதிலே அந்தத் திரவகத்தை ஊற்றினால் தானே அவ்வாறு ஆகும்.

ஆனால், தங்கத்தில் திரவகத்தை ஊற்றாமலே அதிலுள்ள செம்பு பித்தளை, வெள்ளி எல்லாம் கரைந்து போய்விடும் என்று சொல்லிக் கொண்டு நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன் என்றால் எப்படி முடியும்…?

அது முடியாது.

அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் அன்றாடம் நமக்குள் வரும் கோபம் சலிப்பு வேதனை வெறுப்பு ஆத்திரம் பயம் இதைப் போன்ற எத்தனையோ உணர்வுகளை நுகர நேர்கின்றது. அறிய நேர்கின்றது.

நம் சுவாசத்தின் வழி நம் உடலுக்குள் போய் இரத்தத்தில் கலந்து அணுவாக உருவாகும் கருவாக ஆகிவிடுகின்றது. பின் இரத்தத்தில் சுழன்று முட்டை வெடித்து எந்த உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றதோ அங்கே அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கும்.

அது பெருகிய பின் நல்ல குணங்களால் நல்ல அணுக்களால் உருவான நம் உறுப்புகள் செயலாக்கங்கள் குறையும். பின் உடல் நோயாகி மன நோயாகும்.

அத்தகையை தீமையான அணு உருவாகாமல் தடுக்க வேண்டும் அல்லவா. அப்படி உருவானாலும் அதைக் கரைத்துப் பிரிக்க வேண்டுமா வேண்டாமா…?

சாமி செய்யுமா…! சாமியார் செய்வாரா…! ஜாதகம் காப்பாற்றுமா…! சிந்தித்துப் பாருங்கள்.

நாம் எதை எண்ணிச் சுவாசித்தோமோ அதை அணுவாக உருவாக்குவது நம் உயிரின் வேலை. “அவனன்றி அணுவும் அசையாது…”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கரையானைத் தின்னாத உயிரினமே இல்லை என்று கூடச் சொல்லலாம்.

கரையான் எப்படிக் கரைக்கின்றதோ இப்படித்தான் (கரைக்கக்கூடிய) அமிலங்கள் மாறுவதும் உணர்வின் சத்து இயக்கத்தின் தன்மை மாறுவதும் என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருநாதர்.

ஏனென்றால் உயிரணு தோன்றிய பின் முதலிலே எப்படி இருந்தது என்ற நிலையை அறிவதற்காக வேண்டி என்னைக் கரையான் புற்றிலும் எறும்புப் புற்றிலும் அமர வைத்துக் காட்டினார்.

எறும்புகளும் கரையானைப் போன்றே செய்கிறது. அதிலேயும் ஒரு விதமான அமிலங்கள் உண்டாகும்.

அந்த அமிலத்தைச் சேர்த்துக் கொண்டபின் கரையான் எவ்வாறோ இதைப் போலச் சேமித்துச் செத்தை குப்பைகளை எல்லாம் பச்சையாகக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

குவியலாகப் போட்டு இது மலத்தை உருவாக்கிவிடும். அது குறிப்பிட்ட காலம் வந்தபின் எடுத்து உணவாக உட்கொள்ளுகின்றது. இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கம்தான்.

செடியின் சத்து மணம் என்று இருந்தாலும் அந்த செடிக்குள் சேர்த்த (செடியின் மணம்) இயக்கத்தின் தன்மை உணர்வாக இயக்குகின்றது.

அந்த மணத்தின் நிலைகள் எவ்வாறு இயக்குகிறதென்ற நிலை தான் என்னைக் கரையான் புற்றில் அமரச் செய்து எவ்வாறு இயற்கையின் நிலைகள் உருவாகின்றது என்ற நிலையைக் காட்டினார்.

இப்போது நீங்கள் டி.வி.யிலேயும் பார்க்கின்றீர்கள்.

கடலுக்குள் நீருக்கடியில் போகும்போது ஆழப்பகுதிகளில் அதற்கென்ற விஞ்ஞானக் கருவி கொண்டு டெலஸ்கோப்பை வைத்துக் காணுகின்றார்கள்.

நீருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வின் அணுக்களையும் நீருக்குள் நுண்ணிய அணுக்கள் (ORGANISMS – உயிரினங்கள்) உருவாகுவதையும் விஞ்ஞானிகள் கண்டுணர்கின்றார்கள்.

இதைப் போல மெய்ஞானி தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்தைக் கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்று மற்றொன்றை உருவாக்கி அந்த ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் உணர்ந்து கொள்கின்றான்.

இது தீயது இதை விலக்கவேண்டும்… இது நல்லது இதை இணைக்க வேண்டும் என்ற நிலையில் தன் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தனக்குள் இயக்கச் சக்தியினை மாற்றி அமைத்துக் கொள்கின்றான்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருளை நீக்கி ஒளி என்ற உணர்வு பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் நம் குடும்பத்தில் எதனால் நஷ்டமானது? எதனால் ஒற்றுமை இழந்தது? குடும்பத்தில் நம் பிள்ளைகள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை செய்தார்கள்?

பக்கத்து வீட்டுக்காரர் நம்மிடம் ஏன் சண்டை போட்டார்?  அதிலிருந்தெல்லாம் நாம் எப்படி விடுபட வேண்டும்?

கஷ்டங்களையும் வேதனைகளையும் திரும்பத் திரும்ப எண்ணுவதனால் உடலில் கை கால் குடைச்சல் எப்படி வருகின்றது? நாம் நுகர்ந்த உணர்வுகளால் வீட்டில் எப்படி வெறுப்பை உண்டாக்கச் செய்கின்றது?

பிறர் சொல்லும் தீமையான நிலைகளை நமக்குள் அதிகமாகக் கேட்டால் குடும்பத்திற்குள் எப்படிப் பகைமை உண்டாகின்றது?

இதைப் போன்ற சிந்தனைகளை நாம் செய்தோம் என்றால் சிந்தித்துச் செயல்படும் உபாயங்கள் கிடைக்கும். தீமைகள் வராதபடி நம் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றவேண்டும் என்ற அருள் வழியும் கிடைக்கும்.

ஆகவே நம் வாழ்க்கையில் தீமையின் நிலைகளை நாம் கேட்டறிந்தவுடன் தூய்மை செய்து பழக வேண்டும்.

எப்படி?

அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு 10 நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் பரவி உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உள் முகமாக இந்த உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். கட்டும் போது அங்கங்கே முட்டுகள் (பொய்க்கால்) கொடுத்துத்தான்  கட்டுகின்றோம்.

கட்டிடம் வலுவாக நின்ற பின் சிமெண்ட் நன்றாகக் காய்ந்துவிட்டதா என்ற பதத்தைப் பார்த்த பின் அந்த முட்டுகளை எடுக்கின்றோம். அப்புறம் முட்டு இல்லாமல் கட்டிடம் தன்னாலே நிற்கின்றது.

ஆகவே முட்டு இல்லாமல் எந்தக் கட்டிடமும் கட்ட முடியாது.

ஆனால் கட்டிடம் சரியாகக் காய்வதற்கு முன்னனாடியே முட்டைத் தட்டி விட்டோம் என்றால் என்ன செய்யும்? கீழே விழுந்துவிடும்.

சிமெண்ட் பாலை ஊற்றிக் கட்டிடத்தைக் கட்டிவிட்டு அடுத்தாற்போல் உடனே அந்த முட்டுகளைத் தட்டிவிட்டோம் என்றால் நம்மைத் தான் போட்டு அமுக்கும்.

இந்த மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அணையாக‌ இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளைக் கழற்றி விட்டு விடக்கூடாது.

இப்போது மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் என்று சொன்னால் யாம் வலுவாகக் கொடுக்கும் அந்த முட்டுகளை (உபதேச உணர்வுகளை) அந்த ஞானிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிடக் கூடாது.

நான் எல்லாச் சக்திகளையும் பெற்றுவிட்டேன் என்கிற வகையில்  கொடுக்கும் ஞானிகளின் உணர்வைக் கழற்றி விட்டு விட்டு எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன் என்று சொன்னால் என்ன ஆகும்?

இப்படிக் கொஞ்ச பேர் இருக்கின்றனர்.

தீமைகளிலிருந்தோ அல்லது துன்பங்களிலிருந்தோ விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து (உடனடியாக) “தப்ப முடியவில்லையே…” என்ற வேகத்தில் எடுத்துக் கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிட்டு விடுகின்றார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து நான் சொல்கின்றேன். குருநாதர் அனுபவத்தின் மூலமாகத் தான் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்தார்,

மனிதருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் பாச அலைகள் துன்ப அலைகள் மற்ற உணர்வுகள் எப்படித் தாக்குகின்றது…? இதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்று குருநாதர் உணர்த்தினார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாரையும் நாம் பகைமையாக்கக் கூடாது. பகைமை இல்லாதவர்களாக நாம் மாறுதல் வேண்டும் என்று காந்திஜி பேசினாலும் மதம் இனம் என்ற உணர்வு கொண்டவர்கள் அவரைத் தாக்கப்படும் போது என்ன செய்தார்…?

ஹரே ராம்… ஹரே ராம்… ஹரே ராம்…! என்று தான் அவர் கூறினார்.

அப்பொழுது தன்னைச் சுட்டவரை மற்றவர்கள் தாக்குவார்கள்…! தண்டனை கொடுப்பார்கள்…! என்று முன் அறிவிப்பாக இருந்து தன்னைச் சுட்டவுடன்… அறியாமல் செய்துவிட்டார்கள்… அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்…! (இதைப் போன்ற) அந்தத் தவறு செய்வோரின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று எல்லோரிடமும் தெளிவாகக் கூறினார் காந்திஜி.

அவன் அறியாது செய்த அந்தச் செயல் மற்றோருக்கு அவன் செய்த செயலை நாம் எண்ணும் போது… அதே உணர்வுகள் நமக்குள் வந்து நமக்குள்ளும் அந்தத் தவறு செய்யும் உணர்வுகளை வளர்க்கும் என்றார் காந்திஜி.

இத்தகைய செயலை மற்ற யாரும் செய்யக் கூடாது  என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காகக் காந்திஜி அவனை (கோட்சேயை) அங்கே பகைமையாக்கவில்லை.

கோட்சே இவரைச் சுடும் போது “அவனைப் பகைவன்…!” என்று அவர் சொல்லவில்லை. பகைமையாக்கும் உணர்வில் இருந்து நாம் விடுபட வேண்டும். “சுதந்திரம் அடைய வேண்டும்” என்ற நிலையைத் தான் அன்று காந்திஜி சொன்னார்.

இதையெல்லாம் நாம் பின்பற்றினால் மனிதன் என்ற சுதந்திரத்தை அடைகின்றோம்.

அந்நியர் ஆட்சி என்று வந்தாலும்… அந்நியர் என்ற நிலைக்குப் பிரிக்காதபடி ஒன்று சேர்த்து வாழும் போது சகோதரர்களாக வாழுகின்றோம்.

அவன் அடிமைப்படுத்திச் செயல்படும் நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. நாம் நம்முடைய சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உணர்ச்சியைத்தான் ஊட்டினார். அவர்களைப் பகைவர்கள் என்று இவர் சொல்லவில்லை.

நாமெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். காந்திஜியின் வாழ்க்கையை நாம் ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்துதல் வேண்டும்.

இன்று ஒவ்வொரு குடும்பத்திலேயும் பார்த்தோம் என்றால்  மகன் தாய் தந்தையைக் கொன்று விடுவேன் என்று சொல்வதும் நான் கேட்டதைக் கொடுக்கவில்லை என்றால் பழிக்கு பழியாக உன்னைத் தீயை வைத்துக் கொளுத்தி விடுவேன் இல்லாவிட்டால் சுட்டுப் பொசுக்குவேன் என்ற நிலைகளில் செயல்படுகின்றார்கள்.

அமெரிக்காவில் நடந்தது. இப்போது அது நம் நாட்டிலும் வந்துவிட்டது.

ஒன்றைப் பிடிக்கவில்லை என்றால் உடனே ஒரு இனமாக மாறிவிடுகின்றது. தன்னை வளர்த்த தாயையும் தந்தையும் கூட அழிக்கும்படி வந்து விடுகின்றது. தன்னுடன் கூடப் பிறந்த சகோதரனையும் கூட எதிரியாக்கி விடுகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

காந்திஜியை நினைவு கொள்தல் வேண்டும். அவர் சாதாரண மனிதன் தான். பட்டினியாக இருந்து நாமெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கடும் தவம் இருந்தார்,

எதற்காக…?

பிறிதொருவர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வந்து அது வீரியம் அடைந்து விடக்கூடாது. சமத்துவ நிலைகள் வர வேண்டும் என்று சாந்தத்தை உருவாக்கும் நிலைகள் கொண்டு பட்டினியாக இருந்தார். நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழக் கடும் தவம் இருந்தார்.

அனைவரும் பகைமையை மறந்து ஒன்றுபட்டு வாழ்வோம் என்ற நிலை வந்தால் தான் உண்ணாவிரதத்தைக் கை விடுவேன்… உணவை உட்கொள்வேன்…! என்று நமக்காகத் தவம் இருந்தார் காந்திஜி.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாடு சுதந்திரம் அடைந்து பல வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

எதற்காகப் போராடிப் போராடிச் சுதந்திரம் பெற வேண்டும் என்று எண்ணினோமோ நாம் எண்ணிய சுதந்திரம் யாருக்குமே கிடைக்கவில்லை.

இன்று கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் சரி… அரசி்யலில் முன்னணியில் இருந்தாலும் சரி… அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களாக இருந்தாலும் சரி… நிம்மதியாக இருப்பவர்கள் யாரும் இல்லை…!

உலகம் முழுவதற்கும் அரசியலில் வாழ்க்கை நடத்துவோர் அனைவரும் அவர்கள் நிம்மதியற்ற வாழ்க்கை தான் வாழ்கின்றார்கள். அவருக்குச் சுதந்திரம் என்ற நிலைகள் இல்லை.

வெளியே வர வேண்டும் என்றால் அவர்களும் அஞ்சுகின்றார்கள். அவர்களுக்கு என்று தனிப் பாதுகாப்புடன் தான் வருகின்றார்கள்.

அதே போல் இன்று நாமும் வெளியே செல்ல வேண்டும் என்றால் பஸ்ஸில் சென்றாலும் சரி… ட்ரெயினில் சென்றாலும் சரி… அல்லது ரோட்டில் நடந்து சென்றாலும் கூடச் சரி… நமக்கும் அந்தச் சுதந்திரம் இல்லை.

எவன் பறிப்பானோ…! எவன் அழிப்பானோ…! நம்மை எவன் கொல்வானோ என்ற உணர்வுகள் தான் அது வருகின்றது. சுதந்திரம் என்ற நிலையில் யாருக்கும் வரவில்லை.

அரசியலிலும் செல்வத்திலும் அவர்கள் ஓங்கி வளர்ந்திருந்தாலும் இந்த உடலில் சுதந்திரமான வாழ்க்கை இல்லை. ஆனால் சுதந்திர வாழ்க்கை வர வேண்டும் என்றால் ”காந்திஜியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்”

எத்தகைய தீமையும் அவர் தனக்குள் புகாது “அனைவரும் சகோதரர்களே…!” என்ற உணர்வைத் தன் உடலுக்குள் ஊட்டிக் கொண்டார். அதையே சகோதரத்தத்துவமாக அவருக்குள் வளர்த்துக் கொண்டார்.

இந்தியாவில் மதக் கலவரங்களும் இனக் கலவரங்களும் ஏற்பட்டு மக்கள் மடிவதை அசுர சக்திகள் மக்களை மாய்க்கின்றது என்று கூட அவர் எண்ணவில்லை ”அசுர சக்தி…” என்றே அவர் எண்ணத்திற்குள் வரவில்லை.

அனைவரும் ஒன்றென்ற நிலைகளை அவர் அறிந்துணர்ந்தார். அதைப் போன்ற சாந்த நிலைகளே நம்மை வாழ வைக்கும் என்றார். அப்போது தான் இந்த உடலுக்குள் (நமக்கு) சுதந்திரம் கிடைக்கின்றது என்று தெளிவாக உணர்ந்து கொண்டார்.

இன்று எடுத்துக் கொண்டால் மனிதன் அழகாக இருப்பான். செல்வமும் இருக்கும். செருக்கும் இருக்கும். ஆனால் அவனுக்குச் சுதந்திரம் இல்லை.

அம்மம்மா…! நான் எல்லோரையும் போல சாப்பிட முடியவில்லையே… படுக்க முடியவில்லையே… தூங்க முடியவில்லை…! என்று தூக்கமின்மையால் அவனுக்குச் சுதந்திரமாகத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை.

செல்வம் இருக்கின்றது… சுதந்திர வாழ்க்கை வாழ முடியவில்லை. ஆகவே சுதந்திரம் எது…?

ஒரு நண்பன் “நல்ல உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…” என்று எண்ணத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவர்கள் வளர வளர அந்த வளர்ச்சி மிகவும் உயர்ந்ததாக நமக்குள்ளும் வளரும்.

அதே சமயத்தில் “எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கின்றானே பாவி…!” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நமது அந்த நல்ல மனம் சுதந்திரத்தை இழந்து விடுகின்றது.

அதே சமயம் அந்தப் பகைமை உணர்வை நமக்குள் வளர்க்க வளர்க்க நம் உடலுக்குள்ளே எதிரியாக வந்து அது நல்ல செயல்களை அழித்துக் கொண்டேயுள்ளது. அப்போது நாம் சுதந்திரமாக வாழும் தன்மை இல்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைப் பெறவேண்டும் என்றால் கண்ணின் நினைவு கொண்டு நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு சென்று அதைக் கவர்ந்து கொண்டால் தான் நம் உடலுக்குள் செலுத்தி அணுக்களாக உருவாகிக் கொண்டிருக்கும் கருவிற்குள் உபதேசிக்க முடியும்.

(கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உபதேசித்தான் என்று சொல்வார்கள்)

இங்கே நான் (ஞானகுரு) உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் நினைவலைகள் வேறு பக்கம் இருந்தால் இது பதிவாகாது.

எனக்கு நேரமாகி விட்டது. அந்த பஸ்ஸுக்கு போக வேண்டும் என்ற நினைவலைகளை அங்கு வைத்துக் கொண்டு இங்கே கேட்டுக் கொண்டிருந்தால் உபதேசம் கொடுக்கமாட்டான் – கண்ணன் (உயிருக்கு).

அவசரமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்று (கண்ணின் நினைவலைகள்) நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவலைகள் அனைத்தையும் உங்களுக்கு இழுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

யார்…? கண்ணன்…. நம் கண்கள்.

பிள்ளைகள் என்ன செய்கின்றார்களோ…? அவன் என்னென்னமோ செய்கிறான். இவனைப் பார்த்தால் நம்மை ஏமாற்றிக் கொண்டேயிருக்கின்றான்…! என்று பல நிலைகளில் கண்ணின் நினைவலைகள் கொண்டு எண்ணிக் கொண்டிருந்தால் அதற்குத்தான் வழி காட்டுவான் கண்ணன்.

திருடப் போகிறேன் என்று சொன்னால் “வீட்டுக்காரன் அங்கே இருக்கிறான் சிக்கிவிடாதே…! இப்படிப் போ…” கண்கள் என்று காட்டும்.

அந்த வீட்டுக்காரன் நிறையச் சம்பாதித்து வைத்திருப்பான். சிறியதாக நறுக் என்று சத்தம் கேட்டவுடன் “ஓகோ… திருடன் வருகிறான் போலிருக்கின்றது… நீ இப்படிப் போ…” என்று வழி காட்டுவான் கண்ணன்.

அதைப் போன்று தான் நான் எவ்வளவோ உயர்ந்த நிலைகளில் உபதேசம் கொடுத்தாலும் கூட எம்முடைய உபதேசத்தை நீங்கள் கேட்கும் அந்தச் சமயம் எந்த நினைவு கொண்டு வருகின்றீர்களோ… கண்ணன் கண்கள் உங்களுக்கு அந்த உபதேசத்தைத்தான் கொடுப்பான்.

இப்படி எல்லாம் பல நினைவுகள் வருவதனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை என்ன செய்தார்…?

இவனைச் சும்மா விட கூடாது என்பதற்காகத்தான் எறும்புப் புற்றுக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் கொண்டு போய் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.

அப்பொழுது எனக்கு வீட்டு நினைவு எங்கே வருகிறது…? எப்படி வீட்டு நினைவு வரும்…?

வசமாகக் கொண்டு போய்ச் சிக்க வைத்துவிடுவார்.

காட்டுக்குள்ளே “செந்தேள்…!” ஒன்று இருக்கிறது. அது கொட்டியதென்றால் எப்படித் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. மிளகாயைப் போட்டு அரைத்துத் தேய்த்தால் எப்படி இருக்கும் எரிச்சல்…! அதே போல இருக்கும்.

அதை என்னைக் கொட்ட வைத்தார். அது கொட்டினவுடனே, ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று துடித்துக் கொண்டு இருப்பேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “விண்,,,விண்,,,” என்று வலி இருக்கும்.

“ஈஸ்வரா…” என்று சொல்லுடா என்பார். ஆனால் ஈஸ்வரா என்று சொல்ல எனக்கு வராது. ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று தான் அலறிக் கொண்டு இருப்பேன்.

விஷம் எந்த அளவுக்கு ஏறியதோ அந்த அளவுக்கு நான் அலறும் பொழுது உன்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் எங்கேடா போனது…? என்று கேட்பார் குருநாதர்.

எல்லாருக்கும் நல்லது செய்தாய்…! நல்லது செய்த அந்த நல்ல குணங்கள் எல்லாம் எங்கே போனது…? இந்த விஷத்தைக் கண்டது அது ஓடி ஒளிந்து விட்டது அல்லவா…! என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

இதற்காகத்தான் இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேராகத் தாக்கவில்லை…!

ஏன்…?

நமக்குள் வேதனை வந்தாலும்… அது நம்மைத் தாக்கினாலும்.. நம்முடைய நினைவு அந்த வேதனையின் மீது இருக்கக்கூடாது.

உதாரணமாக ஒரு புலி வருகிறது என்று எண்ணிப் பாருங்கள்…! புலி வருகிறதா..!. என்று எண்ணிய உடனே கிடு…கிடு…வென நடுங்குவோம்.

நாம் இருக்கும் இந்தப் பக்கம் ஒரு போக்கிரி வருகிறான். பார்ப்பவரை எல்லாம் எல்லாம் அடிக்கிறான்… உதைக்கிறான் என்று சொன்னால் போதும்.

இங்கே நமக்குக் கிடு…கிடு…வென்று வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் நம் வலு எல்லாம் எங்கே போகிறது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

”போக்கிரி…” என்று சொன்னவுடனே நம் வலு அனைத்தும் அவனிடத்தில் போகிறது. நம் நிலை எல்லாம் அங்கே போய்விடுகிறது.

வாலி என்ன செய்கிறான்…? அவனுக்கு நேராக நின்றால் (நம்முடைய) சம பலத்தை எடுத்துக் கொள்கிறான். இராமாயணத்தில் வான்மீகி மாமகரிஷி மிகவும் தெளிவாகவே இதைக் காட்டுகின்றார்.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்தின் வலு இழந்தபின் அடுத்து நாம் எதை எடுக்க முடியும்… முடியாது.

அதற்காக வேண்டித் தான் நம் கண்கள் செல்லும் வழியில் (கண்ணன் சொல்லும் வழியில்) புருவ மத்தியில் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி அவனை (போக்கிரியின் உணர்வை) நேரடியாகத் தாக்காதபடி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் அந்த உபதேசத்தைச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிக் கொண்டு என்று நம் உடலில் இந்த வாசனையை அதிகமாகப் பரவச் செய்து கொள்ள வேண்டும்.

அப்பொழுது அவனை எண்ணும் பொழுது (முதலில்) நமக்கு எப்படி நடுக்கம் வருகின்றதோ… அதே மாதிரி – “அவன் நம்மை எண்ணும் பொழுது..” மறைமுகமாக நாம் பரவச் செய்த மகரிஷிகளின் உணர்வை அவன் நுகர்ந்தால் அது அவனுக்குள் போய் அவனிடத்தில் இருக்கும் அந்த வீரியத் தன்மையை குறைக்கும்… “தடுமாறச் செய்யும்….!”

ஏனென்றால் அவன் உணர்வைக் காட்டிலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று நாம் இதை எண்ணும் பொழுது நம்மைத் தாக்க வேண்டும் என்று எண்ணினால் நம்மைப் பார்த்ததும் நம் நினைவுகள் அவனுக்குள் குபு…குபு… என்று போய் அவன் உணர்வு அனைத்தையும் மாற்றிவிடும்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சந்தர்ப்பம் தெருவில் எத்தனையோ பேர் சண்டை போடுவதைப் பார்ப்போம். அதிலே போக்கிரியைப் பார்த்து இருப்போம். கடை வீதியில் அவன் ரௌடித்தனம் செய்து இருப்பான். அதைப் பதிவு செய்து இருப்போம்.

இந்த மாதிரி உணர்வுகளெல்லாம் நமக்குள் வந்தவுடனே அந்த ரௌடித்தனம் செய்தவனைப் பார்த்து “இவனையெல்லாம் அடக்க வேண்டும்” என்று நினைத்து வைத்து இருப்போம்.

இந்த மாதிரி உணர்வுகள் வரப்படும் போது அடுத்தாற்போல் சாதாரணமாக ஒருவன் ஏதாவது தப்பு செய்தால் நாம் என்ன சொல்வோம்?

“உன்னையெல்லாம் உதைத்தால் தான்டா சரி…!” என்று அவன் (ரௌடியின்) உணர்வை இங்கே எடுத்து இவனை உதைக்க வேண்டும் என்று வரும். தப்பு செய்பவனுக்குப் புத்தி சொல்வதை விட்டு விடுவோம்.

இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே (போக்கிரியின்) உணர்வுகள் பதிந்தது மற்றவர்கள் தவறு செய்யப்போகும் போது அவன் தவறு செய்த இந்த உணர்வுகள் நம்மை இயக்கி இவனைக் குற்றவாளியாக ஆக்குகின்றது.

ஆனால் அவன் செய்த தவறைத் திருத்தும் உணர்வுகள் நமக்குள் வராது. இதைப் போன்ற நிலையில் இருந்து தான் தவறு வருகின்றது.

அதற்காகத்தான் ஞானிகள் “சதுர்த்தி…” என்று காட்டியுள்ளார்கள். காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் பார்த்த நிலைகளில் இந்த மாதிரி வினைகள் நமக்குள் வளராது அதைத் தடுத்து நிறுத்துதல் வேண்டும். சதுர்த்தி என்றால் “நிறுத்துதல்…” என்று பொருள்

நம் தெரு முழுவதும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும். எல்லோருக்கும் ஒருவருக்கொருவர் நட்பின் தன்மை வளர வேண்டும். நம் ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம் தெரு ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக வாழும் அந்தக் சக்தி இங்கு படர வேண்டும்.

ஒவ்வொரு ஊரில் இருக்கின்றவர்களும் இந்த மாதிரி எண்ணிப் பாருங்கள். அங்கு மத பேதங்களோ இன பேதங்களோ இது வராது.

ஒருவருக்கொருவர் வெறுப்பான உணர்வுகள் வளர்க்கப்படும் போது ஒருவனை “மிரட்டிப் பழகி விட்டான்” என்றால் அதே நிலை வரும்.

அப்போது அவனைப் பார்க்கும் போதெல்லாம் “மிரட்டும் உணர்வுகள்” நமக்குள் வருகின்றது. அப்போது அதே செயலை “நாமும்…” செய்ய ஆரம்பிப்போம்.

ஒரு பாலுக்குள் காரம் பட்டால் காரத்தின் நிலைகள் செயல்படுவது போல நம்முடைய செயலும் உருவாகி விடும்.

ஆகையினாலே நாம் இதிலிருந்து நாம் ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி நாம் விண்ணுலகின் ஆற்றலை எடுத்து இங்கே பெற வேண்டும் என்று நாம் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் “சுருக்…”கென்று சொல்லி விட்டால் அந்த உணர்ச்சிகள் தூண்டி நம்மை வேதனைப்படச் செய்கின்றது. அந்த வேதனையான உணர்வுகளுடன் நாம் இருக்கும் போது மற்றவர்கள் என்னதான் நல்லதைச் சொன்னாலும் அந்த நல்ல சொல்லை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதைப் போல சாதாரணமான மனிதர்களுடன் நாம் பேசும் போது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே நாம் எண்ணிய எண்ணங்களுக்குத் தகுந்த மாதிரி உமிழ் நீராகி நம் இரத்தத்தில் (கருவாகி) வித்தாக மாறி உடலில் வியாதியாக மாறுகிறது.

நாம் ஒரு தடவை சஞ்சலப்படுகிறோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்த்து வந்துவிடுகின்றது.

குழம்பை ருசியாகச் செய்ய வேண்டுமென்றால் காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு இவைகளை எல்லாம் கலந்துதான் வைக்கிறோம். அப்பொழுது எல்லாம் சமமாக இருந்தால் குழம்பு ருசியாக இருக்கின்றது.

காரமோ மிளகோ சீரகமோ உப்போ கசப்போ நாம் சேர்க்கும் பொருள்களில் எது அதிகமானாலும் அது தான் முன்னணியில் நிற்கும். அப்பொழுது அது சுவையைக் கெடுத்து விடுகிறது.

வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் பயம் வேதனை இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கும் போது அதிலே நீங்கள் நினைவைச் செலுத்தியவுடன் வேதனையான எண்ணங்கள் வந்துவிடுகின்றது.

குடும்பத்தில் கஷ்டப்படுகிறோம் என்றால் அந்தக் கஷ்டமான எண்ணத்தை எண்ணி எம்முடைய உபதேசங்களைப் படிக்க நினைத்தாலும், அந்த வேதனையான எண்ணங்கள் நீங்கள் எண்ணியவுடன் உங்கள் உடலைச் சுற்றி அந்த வாசனை இருக்கும்.

உங்கள் கஷ்டத்தைப் போக்குவதற்கு யாம் அந்த நல்ல வாக்குகளை அந்தச் சக்தியை உங்களைக் கேட்கச் செய்து அந்த உணர்ச்சிகளை உங்கள் உடலிலே படரச் செய்து அந்த ஞானிகளின் சக்தி உங்கள் உடலுக்குள்ளும் உமிழ் நீராகச் சேர்க்கச் செய்வதற்கு யாம் முயற்சி எடுக்கின்றோம்.

அப்படி எடுத்தாலும் கூட நீங்கள் வேதனையாக இருக்கக்கூடிய எண்ணம் யாம் சொல்லக்கூடிய வாக்கை உங்களால் ஈர்க்க முடிவதில்லை.

நீங்கள் நல்லதைப் பெற வேண்டும் என்று வந்தாலும் கூட முடிவதில்லை. சிலபேர் அந்த வேதனை கலந்து இப்படியெல்லாம் இருக்கிறதே என்று வேதனையைத்தான் முன்னாடி கொண்டு வருகிறார்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம். இனி நமக்குக் கஷ்டமில்லை. என் துன்பத்தைப் போக்கி நான் நன்றாக இருப்பேன் என்ற நினைவுடன் நீங்கள் இருந்தீர்களானால் யாம் கொடுக்கக்கூடிய வாக்கு உங்கள் உடலிலே நல்ல முறையில் பதிவாகி உங்கள் துன்பத்தைப் போக்க உதவும்.

இது பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எப்படித்தான் இருந்தாலும் காற்று அடிக்கிறது மழை பெய்கின்றது வெயில் அடிக்கின்றது குளிர் அடிக்கின்றது…! காற்று மழை வெயில் குளிர் ஆகிய நான்கு காலங்களும் மாறி மாறி வருகிறது.

இதைப் போலத் தான் மகிழ்ச்சியாகச் சென்றாலும் நாம் போகும் போதே திடீரென்றுஒருவன் குறுக்கே போகின்றான்… கீழே விழுந்து அடிபடுகின்றான். அதைப் பார்த்தவுடனே பதட்டமாகி வேதனைப்படுகின்றோம். பயம் வந்து குளிர் போல நமக்குள் நடுக்கமாகிவிடுகிறது.

இரண்டு பேர் சண்டை போடுகின்றனர். அப்போது எரிச்சலான பேச்சுக்களை ஒருவருக்கொருவர் பேகிக் கொள்கின்றனர். நாம் பார்க்கின்றோம் அதைக் கேட்டு நுகர்ந்தவுடனே நமக்கும் எரிச்சலாகின்றது. அப்பொழுது வெயிலாகின்றது.

அதே சமயம் ஒருவருக்கொருவர் பரபரப்பான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அதை நாம் பார்க்கப்படும் போது நம் மனதில் பெரும் புயலாகின்றது.

ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். அதைப் பார்க்கும் போது பெரும் புயலாக நம் எண்ணங்களைச் சிதறச் செய்து நம்மையே ஓட வைக்கின்றது.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வரக்கூடிய இந்த நிலைகள் ஒவ்வொன்றும் மாறி மாறி (காலங்கள்) வந்து கொண்டே இருக்கின்றது.

சகஜ வாழ்க்கையில் குளிர் அதிகமாக அடித்தால் “வெயில் வந்தால்…” பரவாயில்லை என்று சொல்லுகின்றோம்.

வெயில் அதிகமாக அடிக்கப் போகும் போது காற்று இல்லை என்றால் “காற்று வந்தால்…” பரவாயில்லை என்று நினைக்கின்றோம்.

காற்று அதிகமாக வந்தவுடன் என்ன சொல்கிறோம்…? ஐயோ…! காற்று இப்படி அடிக்கின்றதே… என்னால் தாங்க முடியவில்லையே…! என்கின்றோம்.

ஆக மொத்தம் எல்லாவறையும் விரும்புகின்றோம். ஆனால் அந்தந்தக் காலங்கள் வந்தால் அது மேலேயே வெறுக்கின்றோம். நான்கு காலத்திலேயும் இப்படி அதைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

ஒரு பொருளைக் காய வைப்பதற்காக வெயில் வேண்டும் என்கின்றோம். ஆனால் அந்தப் பொருளைக் காய வைப்பதற்கு முன்னாலே வெயில் அடித்தால் “அப்பப்பா… உடம்பெல்லாம் எரிகின்றது…!” என்கின்றோம்.

அந்தப் பொருளும் காய வேண்டும். அதனாலே (வெயிலால்) வேதனையும் படுகின்றோம். நன்மைக்காக வேண்டி எண்ணுகின்றோம். அடுத்த நிமிடம் அதனால் வேதனைப்படுகின்றோம்.

துவைத்த துணிகளைக் காய வைக்கக் காற்று அடிக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம், அது அதிகமாகப் போய்த் துணியைத் தூக்கி எறிந்தது என்றால் “துணியைத் தூக்கி எறிந்து விட்டதே…!” என்று வேதனைப்படுகின்றோம்.

இதைப் போல எல்லா நன்மைகள் வந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயேசு அவர் வாழ்ந்த காலத்தில் தாய் கருவிலே பெற்ற உண்மையின் உணர்வுகள் கொண்டு மக்களுக்குப் பல நன்மைகள் செய்தார்.

மக்கள் அதனால் நல்லதாகி மகிழ்ச்சி அடைந்தாலும் மக்கள் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகளை அவர் கவர நேர்ந்தது.

அவர் மக்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணும் பொழுது மற்றவர்களுக்கு நல்லதானது. ஆனால் அவர் உடலில் தீமையின் விளைவே வந்தது. துன்புறுத்தும் உணர்வே வந்தது.

மக்களுக்குப் பல நன்மைகளை அவர் செய்தாலும் அன்று ஆண்ட யூத சட்டத்திற்கு விரோதமானது என்று அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். என் தந்தையே… “என்னைக் கைவிட்டுவிட்டாயே…!” என்று அவர் வேதனைப்பட்டார்.

அதே சமயத்தில் அங்கே ஒரு கொள்ளைக்காரனையும் தண்டனைக்காகச் சிலுவையில் அறைந்திருந்தார்கள். இவரைப் பார்க்கும் பொழுது “அவனுக்கு அந்த வேதனை தெரியவில்லை…!”

ஏனென்றால் மக்களுக்கு நன்மை செய்தார்…! அவருக்கு இந்தத் தண்டனையா…? என்று அவரை அவன் எண்ணும் பொழுது அவர் செய்த நன்மையின் உணர்வுகள் அவனுக்குள் வந்து தன் வேதனையை மாற்றியது. திருடன் அவன் தீயதை மறந்து நல்லதை எடுத்தான். அவனுக்கு வேதனை தெரியவில்லை.

இதே போலத்தான் நமது வாழ்க்கையில் இன்று உலகில் எத்தகைய தீமைகள் நிகழ்ந்தாலும் அவைகளை அழுத்தமாகத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்க வேண்டியதில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித உடல் நமக்குச் சொந்தமல்ல.

ஆனால் கோபமோ ஆத்திரமோ வந்து என்னை அவர்கள் இப்படிப் பேசினார்கள்… இவர்கள் குறையாகப் பேசினார்கள்… கேவலமாகப் பேசினார்கள்… அவமதித்துப் பேசினார்கள் என்கிற இந்த உணர்வுகளைத்தான் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிறபோது இந்த உடலைத்தானே அப்படிப் பேசுகின்றார்கள்.

இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே போய்விட்டால் இதை யாராவது மதிக்கின்றார்களா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உடலை யாரும் மதிப்பதில்லை.

எவ்வளவு அழகான உடலாக இருந்தாலும் திடீரென்று ஒரு ஹார்ட் அட்டாக்கோ மற்ற ஏதோ வந்தால் எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்…? என்னென்னவோ செய்து முட்டி மோதுகிறோம்…!

இருந்தாலும் இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா போய்விட்டது என்றால் இந்தச் சரீரத்தை யார் மதிக்கின்றார்கள்…?

கூடக் கொஞ்சம் நேரம் வைத்திருக்கலாம் என்றால் “இல்லை… நாற்றமாகிவிட்டது… சீக்கிரம் கொண்டு போக வேண்டும்…” என்று தான் சொல்கின்றோம்.

ஏனென்றால் வைத்திருக்கலாம் என்றால் அதற்குள் உடல் அழுகிப் போய்விடும் வீடே நாற்றமாகிக் கெட்டுப் போய்விடும்… “கொண்டு போய்ச் சேருங்கள்…” என்று தான் சொல்கின்றோம்.

ஆக இவை அனைத்திற்கும் எங்கே இருக்கின்றது…?

உயிர் தான் மூலமாக இருக்கின்றது. அந்த உயிர் இருக்கும் வரை தான் “இந்த மரியாதை”.

ஆனால் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வை இந்த உயிருடன் ஒன்றிச் சேர்த்துவிட்டால் இந்த உடல் என்ற மரியாதை போய் உயிர் என்ற நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் “அந்த மரியாதை” நமக்குள் வந்துவிடும்.

இதை நாம் பழகிக் கொண்டால் இந்த உடலின் தன்மையைப் பற்றி அதிகமாக நாம் நினைக்க வேண்டியது இல்லை. நினைப்பு வராது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் நாம் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகிவிடுகின்றது. (வினை – வித்து)

ஆனாலும், நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.

நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைச் கேட்டறிகின்றோம்.

இப்படிக் நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அதை அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் மீண்டும் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.

இதைப்போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.

மற்றவர்கள்படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது.

மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர்கள்படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.  “கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.

நாம் அடுத்தவர்களிடம் போய் இந்த மாதிரி…, எல்லாருக்கும் உதவி செய்தேன்… எல்லாம் செய்தேன்… “ஆண்டவன் என்னை சோதிக்கின்றான்” என்று நமக்குள்ளே அதே வித்தை நாம் உருவாக்குகின்றோம்.

உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். “நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும்போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது.

ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை. அந்த நல்லது சொல்வது என்பது சிறிது காலம் இருந்தாலும் அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

செல்வம் தேடுகின்றோம். ஆனால் தேடிய செல்வத்தால் மனிதர் நிலைத்திருக்கின்றனரா..? மனிதனால் தேடிய செல்வத்தைக் காக்க முடிகின்றதா..?

செல்வத்தைக் குவித்து வைத்திருந்தாலும்.., நிம்மதி வருகின்றதா..? வேதனையுடன் தான் வாழ்கின்றோம்.

செல்வத்தைத் தேட ஆசைப்படுகின்றோம். அதற்கடுத்து அந்தத் தேடிய செல்வத்தைக் காக்க.., மீண்டும் வேதனைப்படுகின்றோம்.

நேற்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம். இன்று செல்வத்தைத் தேடிக் குவிக்கின்றோம்.

சிரமப்படும்பொழுது நண்பராகப் பழகியவர்.., “நீ இவ்வளவு பணம் வைத்திருக்கின்றாயே.., ஏன்.., எனக்குச் பணம் கொடுக்கக்கூடாதா..,?” என்று கேட்பார்.

முதலில் ஏழ்மையில் வாடுகின்றோம். பின் வசதியாக வந்து விட்டோம். ஏழ்மையாக இருக்கும் பொழுது நண்பனாகப் பழகியவன் வசதியான பின் நம்மிடம் பணம் கேட்கும்பொழுது நாம் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வான்?

“நம்மைக் குற்றவாளியாக ஆக்க வேண்டும்..,” என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு மற்றவர்களிடம் அவ்வாறு சொல்லிப் பறைசாற்றுவான்.

“கொடுக்கவில்லை” என்பதற்காக என்னை இப்படியெல்லாம் பேசுகின்றானே என்று வேதனை நமக்குள் வந்துவிடும்.

அத்தகைய வேதனை வந்துவிட்டால் நுகர்ந்த உணர்வுகள் நம் ஈஸ்வரலோகமாக இருக்கும் சிரசிற்குள் அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக கருவாக உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.

எந்த மனிதன் வேதனைப்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தினானோ ஈஸ்வரலோகத்திற்குள் கருத்தன்மை அடைந்த பின் இந்திரலோகமாக மாறி அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் பிரம்மலோகமாக மாறுகின்றது.

அணுவாகிவிட்டால் எந்த மனிதன் எதனால் குறை கூறி வேதனைப்பட்டானோ அந்த வேதனை உணர்வை நுகர்ந்து வேதனைப்படும் அணுக்களைப் பெருக்கி இந்த உடலையே வேதனைக்குரிய நிலையாக நோயாக மாறுகின்றது.

நோயாக மாற்றி சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடுகின்றது. இதை நீங்கள் நடைமுறையில் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே, செல்வத்தைத் தேடினாலும் சந்தர்ப்பத்தால் இப்படி ஒரு நிலை. இது போன்று செல்வத்தைக் காக்கும் நிலை இல்லை. செல்வம் தேடினாலும் உடலைக் காக்கும் நிலை இல்லை.

நமது ஆசையின் நிமித்தம் இந்த உடலின் இச்சைக்கே தான் வாழ்கின்றோமே தவிர “இந்த உடலுக்குப் பின்.., என்ன..?” என்ற நிலையை யாரும் சிந்திக்கவில்லை.

நம்மைக் காக்க வேண்டும் என்றால் அதற்குண்டான சக்தி நமக்குத் தேவை. அதற்குத் தான் இந்த உபதேசம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

டயானா… தான் வாழ்ந்த காலத்தில் ஆடைகளை எவ்வளவோ செலவழித்து வாங்கும் அளவிற்குச் செல்வம் இருந்தது. செல்வாக்கும் தன்னிடம் இருந்தது.

அன்று இறந்த டயானாவின் ஆடைகளை எத்தனையோ கோடி விலைக்கு ஏலத்தில் விற்கிறார்கள். ஆமற்றவர்களுக்கும் பல கோடிப் பணம் கொடுத்து அந்த ஆடையை வாங்க வேண்டும் என்ற ஆசையை அது ஊட்டுகின்றது.

அந்த ஆசையைத்தான் முதலிலே (டயானா) அது வளர்த்தது. ஆனால், “வாழ வேண்டும்..,” என்று எண்ணிய அவளுக்கு அங்கே “நொடிக்குள் மரணம் சம்பவித்தது…!”

அதையும் நாம் நுகர்கின்றோம், அறிகின்றோம். “இருந்தாலும்…. ஆசை நம்மை விட்டபாடில்லை…!

“அவர் வளர்த்துக் கொண்ட ஆசையை” நமக்குள் பதித்துக் கொண்டபின் “ஏன்.., நாமும் அவரைப் போல் வரக்கூடாது…” என்ற இந்த நிலை தான் வருகின்றது.

அதே வழியில், “மெய் ஞானிகள்.., பிறவியில்லா நிலை அடைந்தனரே…!” அதை நாம் பெறலாம்.

நாம் ஏன் அந்தப் “பிறவியில்லா நிலை அடைய முடியாதா..,?” என்று அவர்கள் வழி சென்று அருள் மகரிஷிகளின் உணர்வை வளர்த்தால் நாம் அதைப் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் நாம் எப்படியும் வாழ வேண்டும் என்று வேகத் துடிப்புடன் பல கோடிகளை இணைத்துப் பொருளாகச் சம்பாரித்து வைக்கின்றோம்.

சம்பாரித்து வைத்தாலும் அந்தப் பணத்தைப் பார்க்கலாம். பணம் கோடி கோடியாக இருந்தாலும் என்ன சொல்கிறார்கள்.

இவ்வளவு வைத்திருக்கின்றேன்… ஆண்டவன் என்னை ஏன் சோதிக்கின்றான் என்று தெரியவில்லை…! இந்த வேதனையைத்தான் எடுக்கின்றார்கள்.

இதற்கும் அதற்கும் உடலுக்கும் மனதிற்கும் சீரற்ற நிலைகள் ஆகி கடைசியில் மன நிம்மதியற்ற நிலையில் தான் இருக்கின்றார்கள்.

பல ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாரித்த பின் இன்றைக்குப் பொய் சொல்லி “எப்படிடா தப்பிக்கலாம்…” என்று ஷேர் மார்க்கெட்டிலோ மற்ற தெரியாத வகைகளிலோ கொண்டு போய் அந்தக் கோடிகளைப் போடுகிறார்கள்.

இவ்வளவும் இருந்தாலும் “மன நோய்க்கு…” மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

சொத்துக்களைக் காக்க வேண்டும் என்று சென்றாலும் இந்த மனதிற்கும் உடலுக்கும் நிம்மதி இல்லை. நிம்மதியற்ற உணர்வே நஞ்சாக மாறுகின்றது.

உடலை விட்டுச் சென்றால் இந்தக் கோடிச் சொத்து எங்கே வருகின்றது? வருமா…!

இன்றைக்கு முதல் மந்திரியாக இருப்பவர் பிறர் மேல் பழியைத் தூக்கிப் போட்டுப் “பல கோடி நான் அவருக்குக் கொடுத்தேன்… இவருக்காக இதைச் செய்தேன்…” என்பார்.

இப்படி இருப்பவருக்குத் தன் நாட்டைக் காக்க வேண்டும் என்றால் “நிம்மதி… எங்கிருந்து வரும்?

நாட்டிற்கு முதல் மந்திரியாக இருக்கலாம். அதிகாரத்தின் நிலைகளில் தட்டிக் கேட்கும் நிலையும் இங்கே இருக்கலாம். ஆனால் இவருக்கு நிம்மதி ஏது?

அதைப் போலத்தான் இன்றைய நிலைகள் கொண்டு பெரிய பதவிகளில் இருப்போருக்குப் பேரும் புகழும் இருக்கலாம்.

ஆனால் அதன் மறைவிலே நஞ்சு கொண்ட உணர்வின் தன்மைகள் ”இணைந்தே” இருக்கின்றது. இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

அந்த நஞ்சற்ற நிலையாக நாம் திகழ வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் தன்மையை நாம் பழக வேண்டும்.

ஆகவே அத்தகைய நஞ்சின் தன்மை வரும் நிலையிலிருந்து தப்ப “தனி மனிதன் – எதுவும் செய்ய முடியாது”,

அதற்குத்தான் ஆலயங்களிலே விநாயகரை முன்னிறுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

நம் வாழ்க்கையில் எத்தகைய கஷ்டம் வந்தாலும் அந்த விநாயகரைப் பார்த்தவுடனே மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று உயிருடன் ஒன்றச் செய்து உணர்வின் ஆற்றலை உடலுக்குள் உள் செலுத்துதல் வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை நாம் கண்டறிந்த கேட்டுணர்ந்த நம்மையறியாது வந்த நஞ்சான உணர்வுகள் நம் ஆன்மாவாக நிற்கும்.

நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உள் செலுத்தும் பொழுது உள் நின்று வரும் குழம்பின் தன்மை இந்தத் தீமைகளைப் பிளக்கச் செய்யும்.

அந்த விநாயகர் தத்துவத்தின்படி அருள் மகரிஷிகளின் உணர்வை நம்மை நுகரச் செய்து அறிந்திடும் உணர்வாக உயிர் இயக்கி அந்த உணர்வின் ஆற்றலாக நாம் செயல்படும் தன்மையை உருவாக்கினார்கள் ஞானிகள்.

நாம் ஆலயங்களுக்குச் சென்று இந்த முறைப்படி எண்ணினால் இது தான் ஆத்ம சுத்தி என்பது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்றும் அறியாத மூடனான இரக்கமற்ற வான்மீகி சந்தர்ப்பத்தால் பட்சியின் மூலமாகத் தான் நுகர்ந்த உணர்வுகளால் மெய் ஒளி பெறும் தகுதியைப் பெற்றான். தனக்குள் மெய்யை வளர்த்துக் கொண்டான்.

தனக்குள் விளைந்த அந்த உணர்வின் ஆற்றலால் அவன் இராமாயணக் காவியத்தையே வெளிப்படுத்தினான். அவன் எப்படி வெளிப்படுத்தினானோ அதைப் போன்ற நிலைகளைத்தான் உங்களிடம் இப்போது சொல்வது.

புத்தகத்தைப் படித்து யாம் சொல்லவில்லை. குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து விளைய வைத்து அதன் வழியில் அனுபவபூர்வமாக உணர்ந்த மெய் உணர்வுகளைத்தான் வெளிப்படுத்துகின்றோம்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் ஒளி அலைகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே அவர்கள் உணர்வின் எண்ண அலைகளை உங்கள் கண்ணிற்குள் பாய்ச்சச் செய்து மெய் உணர்வின் ஒலியைத் தட்டி எழுப்பச் செய்கின்றோம்.

உங்களுக்குள் பதிவாக்கும் அந்த ஞான வித்தை வளர்க்கும் விதமாக விண்ண நோக்கி ஏங்கித் தியானித்து அந்த ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் பெருக்க வேண்டும்.

அதைப் பெறவேண்டும் என்ற அந்த உணர்வை நீங்கள் ஈர்ப்பீர்களேயானால் அந்த மெய் ஒளியைக் காணும் தகுதி நீங்களும் பெறுவீர்கள். ஆகையினாலே உங்களை நம்புங்கள்.

ஏனென்றால் சாமியை நம்புகின்றீர்கள்… சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகின்றீர்கள்… மந்திரத்தை நம்புகின்றீர்கள்… ஆயுள் ஹோமம் செய்கின்றீர்கள்…! அதை எல்லாம் செய்து எதுவும் ஆவதில்லை.

ஒவ்வொரு நிமிடமும் அந்த ஞானியின் அருள் ஒளியைப் பெறுவேன். அந்த அருள் சுடரை நான் பெறுவேன் என்ற இந்த ஹோமத்தைச் செய்தால் உங்களுக்கு நிலையான ஆயுள் ஹோமம் இதுதான்.

ஞானிகள் வெளிப்படுத்திய அந்த உணர்வின் ஒளிகள் இந்தக் காற்றில் இருக்கின்றது. ஒளியின் நிலையாக அதைப் பெற்று நமக்குள் அந்த ஞான வழியின் தொடர் கொண்டு நம்மைச் சார்ந்தோருக்கும் அதைப் பாய்ச்சிடல் வேண்டும்.

ஹோமத்தின் நெருப்பிலே இடப்பட்ட பொருளின் தன்மை கருகி அதன் மணத்தின் தன்மை சுழல்வது போல உங்களுக்குள் வரும் தீயதை மாற்றிவிட்டு மெய் உணர்வாகப் படைக்கும் நிலைகள் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குழந்தையைத் திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றோம். ஆனால் புகுந்த வீட்டில் பல தொல்லைகள் வருகின்றது.

தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளை மேல் உள்ள பாசத்தால் “பாவிகள்…! என் பிள்ளையை இப்படிச் செய்கிறார்களே…” என்று எண்ணி மிகுந்த வேதனைப்படுவோம்.

வேதனை அதிகமாகிக் கடைசியில் நோயாகி அதே ஏக்கத்திலேயே உடல விட்டுப் பிரியும் நிலை ஆகின்றது. பிரிந்த பின் எந்தப் பிள்ளையைப் பாசத்தால் எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தோமோ அந்த உடலுக்குள் தான் போவோம் அங்கே சென்று இந்த உடலில் பட்ட வேதனையைப் பிள்ளை உடலிலும் உருவாக்கிவிடும்.

பின்… யார் யாரெல்லாம் பிள்ளைக்குத் துன்பம் கொடுத்தார்களோ அவர்களை வெறுக்கச் செய்து வெறுப்பின் நிலைகள் அதிகமாகி பிள்ளை உடலிலும் நோயை உருவாக்கும்.

இப்படி பாசத்தால் வளர்த்த பிள்ளைக்குள் சென்று சீரழிந்த நிலைகளாக நோயாக்கி… “குழந்தையையும் அழித்துவிடுகின்றோம்”. பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கின்றோம் என்றாலும் வேதனையுடன் செல்லும் பொழுது பிள்ளையைக் காக்க முடியவில்லை.

இதைத்தான் மெய்ஞானிகள் “சித்திர புத்திரனின் கணக்கு” என்று காவியப்படைப்புகளில் காட்டியுள்ளார்கள்.

சித்திரம் என்பது நாம் கண்களால் பார்ப்பது எல்லாமே “சித்திரம்”.

ஒரு நல்ல படத்தைப் பார்த்தவுடன் மகிழ்கின்றோம். சரியில்லாத படத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுழிக்கின்றோம்…, வெறுக்கின்றோம்.

இதைப் போன்று தான் மற்றவர்களின் செயல்களை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அவர்களைப் படமாகப் பதிவாக்குகின்றோம்.

அவர்கள் செய்வது தவறாக இருக்கும் பொழுது அவர்களையே மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசிக்கின்றோம். அப்பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுடன் சத்தாகும் பொழுது சித்திரம்…, “புத்திரனாக… அணுவாக… உருவாகிவிடுகின்றது”.

எந்தக் குணத்தை எண்ணி எண்ணிச் சுவாசித்தோமோ நம் உடலுக்குள் விளைந்து “குழந்தையாக… அந்தக் குணம்” என்னுடன் இயங்கத் தொடங்குகின்றது.

உடலுக்குள் அது விளைந்தபின் என் உயிராத்மாவில் போய்ச் சேர்கின்றது. உயிராத்மாவில் சேர்ந்தபின் அது சித்திர புத்திரனின் கணக்காகப் போய்விடுகின்றது.

ஆகவே பிள்ளை மேல் பாசமாக இருந்து “வேதனை…வேதனை…” என்று வளர்த்தால் அந்தக் கணக்கின் பிரகாரம் தன் உடலையும் வீழ்த்தி பிள்ளைக்குள் சென்று அந்த உடலையும் வீழ்த்தி கடைசியில் மனிதனல்லாத மாடோ மற்ற மிருக உடலாகவோ தான் பிறக்க நேரும்.

இதையெல்லாம் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா அணுவிற்குள் அணு சென்று (ஒரு உடலுக்குள் சென்று) அது எவ்வாறு செயல்பட்டது என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நேரடியாகவே எமக்கு (ஞானகுரு) உணர்த்தினார்… என் கண்ணாலேயே பார்க்கச் செய்தார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடல்களிலே படகுகளில் சென்றாலும் அவர்கள் அலை கடலிலே எதைக் குறிக்கோளாக வைத்துச் செல்லுகின்றனரோ அந்த அலை கடலில் எதிர் நீச்சலாடி அந்தக் கரையைக் கடந்து செல்கிறார்கள்.

தான் எண்ணிய காரியங்களை நிறைவேற்ற ஒரு ஊரைக் கடக்க வேண்டும் என்றாலும் அல்லது கடலுக்குள் மீன் பிடிக்க வேண்டும் என்றாலும் ஒரு எல்லை வகுத்துத் தான் செல்லுகின்றனர். இதைப்போல தான் மனிதனான நாம் இந்த உடலிலே இருந்தாலும் உடலுக்குப் பின் என்ன என்ற எல்லையை வகுத்து கொள்ள வேண்டும். அருள் ஞானிகள் சென்ற அந்த உணர்வுடன் நாம் ஒன்ற வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் வெறுப்பு வேதனை சங்கடம் சலிப்பு கோபம் குரோதம் என்ற கடுமையான புயல் நிலைகளில் அந்த அலைகளில் சிக்கி இன்று ஒவ்வொருவருமே தவித்துக் கொண்டிருக்கின்றோம்

இதையெல்லாம் மாற்றிவிட்டு சீரான நிலைகள் பெறவேண்டும் என்று வரப்படும் போது தான் அந்த அலைகளைப் பிளந்து நாம் எண்ணும் எல்லைகளை அடைய முடியும்.

இன்று ஒரு தெய்வத்தை வணங்க வேண்டும் என்று சென்றாலும் கூட ஒருவருக்கொருவர் எதிர்க்கும் நிலையில் புயல் போன்று கொந்தளித்து இந்த “வாழ்க்கையில் என்ன ஆகுமோ…? என்று எதிர் சிந்தனையாடிக் கொண்டுள்ளார்கள்.

நம் நாட்டில் வாழும் மக்களும் உலக மக்களும் எத்தனையோ வகைகளில் சிந்தனை சிதறி இன்று அவதிப்பட்டுக் கொண்டு பெரும் புயலில் அந்த அலையில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளார்கள்.

இந்த நேரத்திலும் நாம் ஒவ்வொருவரும் அதைச் சீராக்கிட அந்த மகரிஷியின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை நமக்குள் செலுத்துதல் வேண்டும்.

நாம் அந்த மகரிஷிகளின் அலைகளை எண்ணி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து நம்மை நம்மைக் காத்து நம்மைச் சார்ந்தோர் அனைவருக்கும் அதைக் கிடைக்கப் பெறச் செய்யவேண்டும்.

மகரிஷியின் அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் அவர்கள் பொருள் கண்டுணர்ந்து செயல்பட வேண்டும் என்ற இந்த நிலைக்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் உங்களுக்கு இதை உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

அதாவது உலகம் முழுவதற்கும் பரவிக் கொண்டு வரும் அந்தத் தீமையான அலைகள் – புயல்களிலிருந்து நாம் தப்பித்து மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இந்த உடலிலிருந்தே அழியா ஒளியின் சரீரம் நாம் பெற வேண்டும்.

இன்று இந்த வாழ்க்கையில் வந்த கடுமையான அலைகளிலிருந்து நாம் விபத்தில் சிக்கியது போல் ஆகிவிடக் கூடாது.

நாம் எண்ணும் நல்ல எண்ண அலைகளை மறைத்திடாது அருள் உணர்வின் வலுகொண்டு இந்த வாழ்க்கையில்… வரும் உலகத்தில் வரும்… தீமைகளை வென்றிட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞான அறிவிலே பெண்ணை ஆணாக மாற்றுகின்றனர். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றனர்.

அதே மாதிரி பெண்கள் மீது அதிக மோகம் கொண்டவர்கள் இருந்தால் இந்த உணர்வுகள் மாற்றப்பட்டு அந்த உணர்வுகள் ஜெயித்தாலும் இந்த உடலுக்குப்பின் “எந்த ரூபம் பெற்றாலும்… பெண்ணாகத்தான் மாற்றும்”.

விஞ்ஞானிகள் இயற்கையில் இயற்கையில் மனித உடலில் உருவாக்கப்பட்ட தன்மையை எடுத்து அதை அமிலமாக மாற்றி இன்னொரு உடலிலே பாய்ச்சப்படும் பொழுது அந்த அமிலங்களைப் பெருக்கும் தன்மை வருகின்றது.

அப்பொழுது பெண் ஆணாகவே மாறுகின்றது. அதற்குத்தக்க உறுப்புகளை உருப்பெறச் செய்கிறார்கள். நரம்பு மண்டலங்களை இணைக்கின்றனர். இன்று விஞ்ஞானிகள் செய்கிறார்கள் அல்லவா…!

இதைப் போன்ற (பெண்களைப் பற்றிய) உணர்வுகளை அதிகமாக எடுத்தால் இன்று ஆணாக இருக்கலாம். நாளை பெண்ணாக இருப்போம்.

இதே உணர்வுகள் வரப்படும் பொழுது மற்ற உயிரினங்களைப் பார்க்கலாம். பெண்ணாகப் பிறக்கக்கூடிய ஆடு மாடு எல்லாம் எத்தனை அவஸ்தைப்படுகின்றது?

குழந்தையை ஈன்றெடுக்கும் பொழுது அவஸ்தைப்பட்டாலும் குழந்தை பிறந்த பின் பாசத்துடன் காக்கின்றது. பாசம் இருப்பதால் வேதனையை மறக்கின்றது.

தாய்க்கு வேதனை இருந்தாலும் பிள்ளை மேல் உள்ள பாசத்தால் தன் வேதனையை மறந்து “பிள்ளை சாப்பிட்டதா…” என்று எண்ணுகின்றது. தாயின் பாச உணர்வு இவ்வாறு செயல்படுத்துகின்றது.

இதைப் போலத்தான் நாம் நுகரக்கூடிய உணர்வுகள் உறுப்புக்களையே மாற்றக்கூடிய சக்தியாக வருகின்றது.

அப்பொழுது ஒருவனின் தீமை செய்யும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அணுக்களை மாற்றியவுடன் உடல்களில் உறுப்புக்களை மாற்றிவிடுகின்றது.

உறுப்புகள் மாறியவுடன் அதற்கேற்ப எண்ணங்கள் மாறும். செயல் மாறுகின்றது. வெறுப்பென்ற உணர்வுகள் வருகின்றது. இவ்வளவும் நடக்கின்றது.

நல்ல திடகாத்திரமாக இருப்பவர்கள் பலருடன் பழகப்படும் பொழுது சில உணர்வுகளை எடுத்தவுடன் இந்த அணுக்கள் மாற்றம் அடைந்த பின் “உறுப்புகளே சுருங்கிப் போய்விடுகின்றது… எண்ணங்கள் சுருங்கி விடுகின்றது”.

இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆகவே நம் உடலுக்குள் பிறரின் தீமை செய்யும் உணர்வுகள் புகாமல் தடுக்க வேண்டுமல்லவா…!

அதற்குத்தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தில் எந்த நிலையாக இருந்தாலும் அடுத்த நிமிடம் அந்தத் தீமை நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

இல்லை என்றால் நம் உடலில் உள்ள கெட்ட அணுக்கள் சாப்பாடு அதிகம் எடுத்துவிடும். அதற்குச் சக்தி வாய்ந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் எடுத்து அதைத் தடைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் கண்களால் பார்த்து நமக்குள் பதிவான உணர்வுகள் நுகரப்பட்டு நம் ஆன்மாவாக மாறுகின்றது.

நாம் சுவாசிக்கும்பொழுது உயிரிலே பட்டவுடன் அந்தந்த உணர்ச்சிகளாக இயக்குகின்றது. உடலுக்குள் சென்று அணுவாக உருவாகும் கருவாக உருவாகின்றது.

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் அவரிடமிருந்து வெளிப்படும் அலைகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு அலைகளாகப் பரவி வருகின்றது.

அந்த அலைகள் எல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் கலக்கின்றது. அதைத்தான் “பரமாத்மா” என்று சொல்வது. அவர் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய பின் கண்ணின் காந்த புலனறிவு அந்த அலைகளைக் கவரச் செய்கின்றது.

அப்பொழுது சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்ட அந்த வேதனப்பட்ட உணர்வுகள் பரமாத்மாவிலிருப்பது நம் ஈர்ப்புக்குள் வருகின்றது. அது நம் “ஆன்மாவாக” மறுகின்றது.

நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலிருந்துதான் சுவாசிக்கின்றோம். எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ (பரமான இந்தப் பூமியில்) இந்தப் “பரமாத்மாவிலிருந்து தான்.., நம் ஆன்மா” எடுக்கின்றது.

அந்த அலைகள் நம் நெஞ்சுப் பகுதியின் அருகில் வருகின்றது. மூக்கின் துவாரங்கள் கீழ் நோக்கி இருப்பதால் அதைக் கவர்ந்து சுவாசத்திற்குள் செல்கின்றது.

மூக்கின் வழியாக சுவாசிக்கப்பட்ட உணர்வுகள் “கவன ஈர்ப்பு நரம்பு” கவரும் புருவ மத்தியில் உள்ள நம் “உயிரிலே” மோதுகின்றது.

உயிரிலே மோதியபின் “ஒ…ம்”…, வேதனைப்பட்ட உணர்வலைகளைச் சுவாசித்தால் வேதனையை நமக்குள் ஊட்டும் உணர்ச்சிகளை உயிர் ஊட்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மையை நம் உயிர் நுகர்ந்து உடலுக்குள் சென்றபின் ஜீவான்மாவாக மாறுகின்றது. அதாவது உடலுக்குள் நுண்ணணுக்கள் விளைந்து வேதனைப்படும் அணுவாக ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது.

இப்படி எந்தெந்த குணங்களை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ அதையெல்லாம் உயிர் ஜீவ அணுக்களாக ஜீவான்மாவாக உடலாக நம் உயிர் விளைய வைக்கின்றது.

இந்த ஜீவான்மாவில் விளைந்ததைத்தான் “உயிரான்மா” எடுக்கின்றது. பாலிலிருந்து வெண்ணையைப் பிரிப்பது போல் நம் உடலுக்குள் விளைந்த சத்தை உயிர் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

உயிரான்மாவில் இருக்கும் சத்துக்கொப்பத்தான் நாம் அடுத்த உடல் பெறமுடியும். ஆகவே இந்த வாழ்க்கையில் எதனை நாம் எடுக்கின்றோமோ அதனின் வலுத்தன்மையே உருவாக்கப்படுகின்றது.

அப்பொழுது எதை நாம் நம் உயிரான்மாவாக்க வேண்டும்?

நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று கண்களால் பதிவு செய்து அதை நினைவு கொண்டு உயிரான நிலைகள் கொண்டு உந்த வேண்டும்.

அதைத்தான் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்பது.

நம் உடலே சிவம். நம் உயிரே அகக்கண். கண்களோ புறக் கண்.

புறக் கண்கள் கொண்டு பிறரைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை நம் ஆன்மாவாக மாற்றி நாம் சுவாசிக்கும் பொழுது அது அகக் கண்ணுடன் மோதும் பொழுது உடலுக்குள் உணர்வைப் பரப்புகின்றது. உணர்வை அணுவாக மாற்றுகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் அறிகின்றோம்.

தீமைகளிலிருந்து மனிதன் விடுபடுவதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரிலே நினைவினைச் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று “உள் முகமாகக் கொண்டு வர வேண்டும்”.

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்திருப்பினும் இந்த உணர்வுகள் வரும் பொழுது அதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

நம்மை அறியாது வந்து நமக்கு முன் சுருண்டு கொண்டிருக்கும் இந்த தீமையான உணர்வுகளை அந்த ஆன்மாவைப் பிளக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்குள் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

இதை முறைப்படிச் செய்வதற்குத்தான் விநாயகர் தத்துவத்தை அமைத்தனர் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் சொல்லும் முறைப்படி தியானம் இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் கூட்டுக் குடும்ப தியானமிருக்க வேண்டும்.

தியானமிருந்த பின் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து விண்னை நோக்கி உந்தித் தள்ள வேண்டும்.

அவர்கள் அங்கே சென்று ஒளிச் சரீரமானபின் அங்கிருந்து எங்களுக்கு நல் ஒளிகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் அங்கே போகாதபடி நாம் அங்கே செல்ல முடியாது.

மூதாதையர்களின் உணர்வுகள் தான் நாம். முதலில் நம் குலதெய்வங்களை விண்ணுக்குச் செலுத்திவிடுகின்றோம். பின் அவர்கள் இருக்குமிடத்திற்கு நாம் போகலாம்.

நம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள். முதுமையாகும் பொழுது போகின்றார்கள். அவர்கள் உடலை விட்டுச் செல்லும்போது அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ள வேண்டும்.

அதற்காக வேண்டித்தான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் உங்கள் உணர்வின் எண்ணங்களுக்கு விண்ணை எட்டிப் பிடிக்கும் நிலையும் விண்ணிலே ஊடுருவிச் செல்லகூடிய நிலைக்கும் பழக்கப்படுத்துகின்றோம்.

அந்த வலுவின் துணை கொண்டு ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தது என்றால் அதை நீங்கள் உந்திச் செலுத்தும் ஆற்றலைப் பெறச் செய்வதற்கும் உங்களைப் பழக்குகின்றோம்.

இவைகள் எல்லாம் “சிறு துளி… பெரு வெள்ளம்”.

இப்பொழுது எல்லோரும் நன்றாக இருந்தாலும் கூட யாராவது ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் “ஐய்யய்யோ.., இப்படி இறந்துவிட்டாரே…” என்று எண்ண வேண்டியதில்லை.

நீங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த இந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணித் தியானித்தால் அந்த ஆன்மா “ ஜிர்..ர்ர்…ர்ர்..” என்று (அவர்) மேலே போய்விடலாம். அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) தேவை.

ஆனால், இதை விட்டுவிட்டு… இந்தச் சரீரத்தை இங்கே புதைக்கலாமா… அல்லது அங்கே எரிக்கலாமா… என்று “அழுகக்கூடிய சரீரத்திற்கு” முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

ஆக சமாதியைக் கட்டினேன்… அதற்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் அதை மிகவும் விரும்பிச் செய்து கொண்டிருந்தால் மீண்டும் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் தான் சிக்க வேண்டும்.

இந்த நாய் எப்படியோ போகின்றது பூராம் குப்பை என்று இதைத் தூக்கி எறிந்து விட்டு அந்த உயிரான்மா அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும். அதை நிலைத்த இடத்தில் நிலையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) என்னுடைய சிறிய வயதில் தெரியாமல் ஒரு குருவியைப் பிடித்து என்ன செய்தேன்…? நெருப்பில் உயிரோடு வாட்டினேன்.

குருநாதர் பிற்பாடு அதை என்னிடம் சுட்டிக் காண்பித்தார். அந்தக் குருவி எப்படி எரிந்தது தெரியுமாடா…? என்று கேட்டார்.

அது… எரிந்தது…! தெரியும். அது உள்ளுக்குள் எப்படி ஆனது…? என்று எனக்குத் தெரியாது என்றேன்.

இப்பொழுது… “பாருடா…!” என்றார்.

அது உடலில் எத்தனை கொதிப்பானதோ அந்த எரிச்சல் எல்லாம் எனக்குள் அப்படியே வந்தது.

இப்பொழுது என்னடா செய்கிறது…? என்று கேட்டார்

அது எரிந்தது. வேதனைப்பட்ட மூச்சலைகளை வெளிவிட்டிருக்கிறது. அந்த (குருவியின்) உயிரும் உன்னிடம் இருக்கிறது.

தெரியாத வயதில் நீ செய்திருந்தாலும் இப்பொழுது நினைவுபடுத்தியவுடன்  அது எரிந்த உணர்வைச் சுவாசிக்கின்றாய். சுவாசித்தவுடன்… உன் உடலை என்ன செய்கிறது பாருடா…! என்றார்.

நீ தெரியாமல் தான் செய்தாய், “உன் உயிர்” அதை விட்டு விடுகிறதா…? அது வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் கவர்ந்து கொண்டது.

அந்தக் குருவியும் செத்தது. உன் உடலுக்குள்ளே இருக்கிறது. நீ ஆண்பாலாக இருக்கின்றாய் உனக்குள் கருவாக இருக்கின்றது.

இது எந்தக் கருவில் போய் இது பிறக்கின்றதோ “எரிகிறதே…! எரிகிறதே….!” அந்த உடலை எரியச் செய்யும். இப்பொழுது உன் உடலிலேயும் “எரியும்டா… பாருடா…” என்றார்.

இதை அப்படியே அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார். சொல்வது அர்த்தம் ஆகின்றதா…!

அதனால் எல்லாமே சந்தர்ப்பம் தான். பல கோடி உடல்களில் சந்தர்ப்பங்கள் நீக்கி நீக்கி இப்படி வந்து தான் இந்த மனித உடலைப் பெற்றுள்ளோம்.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்தை எண்ணுகின்றமோ அதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது என்றார் குருநாததர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் பெற வேண்டியது எது…? பெறக் கூடியது எது…? பெறக் கூடாதது எது…? என்ற நிலைகளைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று பதிய வைத்துக் கொண்டால் “அவன் தீமை செய்தான்.., ஆகவே அவனை விடுவேனா பார்..,?” என்று எண்ணினால் என்ன ஆகும்…?

இந்தக் கணக்கின் பிரகாரம் நாம் சிந்தனை இழந்த நிலையாகச் செயல்படுவோம்.

எந்த எண்ணத்தால் “அவனை அழித்திட வேண்டும்..,” என்ற எண்ணம் ஓங்கி வளர்கின்றதோ அதன் மேல் நாம் கொள்ளும் பாசம் அவனுக்குள் விளைந்த தீயவினைகள் நமக்குள் விளையத் தொடங்குகின்றது.

அதே சமயத்தில் ஒரு நோயாளியை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி விட்டால் பாசத்தால் “இப்படி வேதனைப்படுகின்றாரே..,” என்று எண்ணினால் அவர் நோயின் உணர்வுகள் நமக்குள் வருகிறது.

அப்படி நோயாளியை உற்றுப் பார்த்த அந்தக் கணக்கின் பிரகாரம் அவரையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வளர்ந்துவிடுகிறது. அடுத்து நாமும் வேதனைப்படுவோம்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும்போது அவர்களைப் படமெடுத்து அவர்களில் உருவான உணர்வுகள் அவருடைய நிலைகளை “எவ்வளவு நேரம் எண்ணுகின்றோமோ… எவ்வளவு நேரம் அறிகின்றோமோ… அந்தக் கணக்குகள் கூடிவிடும்.

ஆகவே “இந்த மனித வாழ்க்கையில் பெறப்படாதது… பெறக் கூடாதது… மனிதனின் ஆசை”.

ஆலயங்களில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரா” என்று காட்டுகின்றார்கள்.

நந்தீஸ்வரன் என்றால் நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும். நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

நாம் சுவாசிக்கும் உணர்வின் கணக்குகள் நம் உடலுக்குள் கூடும்பொழுது அதில் எது அதிகமோ அடுத்த நிலை அடைவாய் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எத்தகைய தீமையைக் கேட்டுணர்ந்தாலும் யாம் உபதேசிக்கும் அருள் உணர்வின் துணை கொண்டு நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் வரும் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும் துயர் பட்ட நிலைகள் இருந்தாலும் வேதனைகள் இருந்தாலும் இதற்கு முன் நம் உடலில் அறியாது சேர்ந்த பல உணர்வுகள் இருந்தாலும் இன்னல்களால் விளைந்த நோய்கள் இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீயவினைகள் நீங்க வேண்டும் சர்வ நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணித் தியானியுங்கள்.

எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை மறக்க இவ்வாறு செய்யுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுங்கள்.

எனக்கு வந்த தீமை மற்றவர்களுக்கு வரக்கூடாது. உலக மக்கள் அனைவரும் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் பரப்புங்கள்.

நாம் ஒவ்வொருவரும் இதைச் செய்வோம் என்றால் இந்த உலகில் உள்ள நஞ்சான நிலைகள் மாறும். பத்தாவது நிலையாக கல்கி தீமை அகற்றும் உணர்வு நமக்குள் விளையும்.

ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் விளைந்த உணர்வு கொண்டு உடலை விட்டு அகன்றாலும் தீமையற்ற உலகில் நாம் வாழ்ந்திட முடியும். இங்கேயும் வாழ்ந்திட முடியும்.

எப்போதும் தீமைகள் நம்மை நாடாத  நிலைகள் கொண்டு என்றும் அழியாத ஒளிச் சரீரமாக நிச்சயம் நாம் பெற முடியும். இந்த உடலை வைத்துதான் அந்த நிலை பெற முடியும்.

இந்த உடலை இழந்துவிட்டு நஞ்சால் இழக்கப்பட்டால் நஞ்சின் செயலாக மாறி மீண்டும் அந்த நஞ்சான சரீரத்திலிருந்து மீண்டிடப் பல கோடிச் சரீரங்கள் ஆகலாம்.

அது வரையிலும் இந்தப் பூமி இருக்குமோ… மனிதனாகப் பிறப்போமோ…! என்று சொல்ல முடியாது.

மனிதனாகப் பிறந்தோம்… மனிதனாக வாழ வேண்டும். இந்த உடலிலே தீமைகள் அகற்றும் உணர்வை விளைய வைக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மரம் வளர்ந்த பின் தன் இனத்தின் வித்துக்களை உருவாக்குகின்றது. அதிலிருந்து கீழே விழுந்த வித்து மண்ணுக்குள் பதிந்து விட்டால் அந்த மரத்தின் சத்தை இந்தப் பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து “அதே மரமாக…” மீண்டும் விளைகின்றது.

இது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். புதிது ஒன்றும் இல்லை.

ஆனால் மரத்தின் வித்தைப் போட்டால் அது முளைக்கின்றது… மரமாக விளைகிறது என்று தான் தெரியும்.

இதற்கு வேண்டிய சத்து எங்கிருந்து கிடைக்கின்றது…?

சூரியன் எடுத்து அந்த உணர்வுகளைப் பரமாத்மாவில் (நமக்கு முன் இருக்கும் காற்று மண்டலத்தில்) படரச் செய்து வைத்திருக்கின்றது. அது எப்போதும் அழிவதில்லை.

இங்கே விளைந்த மரத்தின் வித்தை எடுத்து அமெரிக்காவிற்குக் கொண்டு போய் ஊன்றினால் சந்தர்ப்பத்திற்கு ஒப்ப சீதோஷ்ண நிலைக்கொப்ப இதே காற்றில் இருந்து தாய் மரத்தின் சத்தை அங்கிருந்து எடுத்து அந்த மரம் விளையும்.

உதாரணமாக ஊட்டி கொடைக்கானல் மற்றும் நீலகிரி போன்ற உயரமான இடங்களில் குளிர்ச்சி அதிகம் இருக்கும்.

இங்கு விளைந்த வித்தினை நாம் சமமான இடத்தில் கீழே குளிர்ச்சி இல்லாத இடங்களில் ஊன்றினோம் என்றால் இந்த இடத்திற்குத் தக்கவாறு அது முளைப்பதில்லை.

ஏனென்றால் குளிர்ச்சியில் இருந்தது. இங்கே வெப்பம் அதிகமாக இருப்பதால் அதன் வளர்ச்சி குன்றுகிறது. சரியான வளர்ச்சி ஆவதில்லை. காரணம் வெப்ப தட்ப நிலைகளுக்கு ஒப்ப இது மாறுகிறது.

அதே சமயத்தில் அந்தக் குளிர்ச்சியான நிலைகளை இங்கேயும் உண்டாக்கி அந்தக் காற்றைக் கொடுத்தோம் என்றால் ஊட்டியில் விளைந்த மாதிரி இங்கேயும் விளையும்.

அதற்கு அந்தக் குளிர்ச்சி இங்கே கொடுக்க வேண்டும். ஏனென்றால் அது எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ அதற்குத் தக்கவாறு விளையும்.

அந்த ஊட்டியில் விளைந்த வித்து ஏதோ ஒன்று தப்பித் தவறி இங்கே விழுந்து முளைத்து அதிலே கொஞ்சம் வளர்ச்சியில்லாத ஒரு வித்து உருவானால் அது மீண்டும் இதிலே விழுந்த வித்தைப் போல இது கொஞ்சம் விளைய ஆரம்பிக்கும்.

அப்புறம் இந்தச் சீதோஷ்ணத்திற்கொப்ப வளர ஆரம்பிக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக முதலில் வளர்ந்ததன் உணர்வை எடுத்து அடுத்தடுத்து இரண்டாவது மூன்றாவது வளரப்படும் பொழுதெல்லாம் கடைசியில் இதிலே விளைந்த வித்துக்கள் சத்துள்ளதாக விளையும்.

இந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை அறிந்து கொண்டோம் என்றால் இயற்கை எப்படி வளம் பெற்றது..? வளர்ச்சி பெற்றது..? என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் தான் யாம் உங்களுக்குள் அருள் ஞானிகளின் அருள் வித்துக்களை ஊன்றி வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் பிரபஞ்சத்திலுள்ள வியாழன் செவ்வாய் இராகு கேது சனி என்று நவக் கோள்களின் தன்மையும் ஒவ்வொன்றும் தனித் தன்மை கொண்டது.

இருப்பினும் அவை அனைத்தும் உமிழ்த்துவதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து “ஒளியின் சிகரமாக…” மாற்றுகின்றது. இதைப் போல தான் நம் உயிரான நிலையும் நமக்குள் சூரியனாக இருக்கின்றது.

தினசரி நம் வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். நாம் சந்திப்போர் ஒவ்வொரு உடலிலேயும் சில சில கஷ்டங்களும் இருக்கும் துன்பங்களும் இருக்கும் அனைத்தும் இருக்கும்.

நாம் அனைவரும் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கப்படும் பொழுது இந்தத் துன்பங்களை நீக்கிடும் அகற்றிடும் அந்தச் சக்தியாக நாம் விளைய முடியும்.

பாசத்தின் நிலைகள் கொண்டு வேதனை என்ற நிலைகளைச் சுவாசிப்பதற்குப் பதில் பாசத்தின் பற்று கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவ்வாறு எண்ணும் பொழுது அந்தப் பற்றுதல் அதனின் நிலைகள் கொண்டு நமக்குள்ளும் அந்தப் பாசத்தின் நிலைகள் கொண்டு அருள் ஞானியின் உணர்வைப் பருக முடிகின்றது.

நமக்குள் தீமையை அகற்றும் சக்தியாக விளைகின்றது. ஒவ்வொரு நாளும் இதிலிருந்து நீங்கள் ஆரம்பித்துப் பாருங்கள்.

உங்களை நீங்கள் நம்பிப் பாருங்கள். எண்ணியதை உங்கள் உயிர் இயக்குகின்றது. அதை இயக்கத்தின் நிலைகளில் அறிந்து கொள்கின்றீர்கள். அறிந்த உணர்வை உயிர் உடலாக்குகின்றது.

மீண்டும் நினைவாக்கும் பொழுது நன்மையின் தன்மையை உயிர் உருவாக்கிக் காட்டுகின்றது. எதனின் உணர்வை நமக்குள் விளைய வைக்கின்றோமோ விளைய வைத்த நிலையை உயிர் தன்னுடன் அணைத்துச் செல்கிறது.

எண்ணிய பாதையில் உயிர் அங்கே அழைத்துச் செல்கிறது. என்றும் அழியா நிலையான ஒளியின் சரீரமாக பெருவீடு பெரு நிலையாக உயிர் நம்மை அடையச் செய்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை உருவாக்கிய ஈசனை அவன் துணை கொண்டு ஒளியின் சரீரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கி அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

விநாயகர் தத்துவத்தில் மனிதனின் வாழ்க்கையில் எதைச் சுவாசிக்கின்றோமோ மூஷிகவாகனா என்று காட்டியுள்ளார்கள்.

அந்தக் கசந்த வாழ்க்கையை நடத்தி அப்படிக் கசந்த வாழ்க்கையே கணங்களுக்கு அதிபதியானால் இந்த மனிதப் பிறவியில் எதன் நிலைகளை எடுத்தாயோ அதற்குத்தக்கவாறு பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாக கீழே போவாய் என்று காட்டுகின்றார்கள்.

பௌர்ணமி இன்று முழு நிலாவாக இருக்கின்றது. ஆனால் அடுத்த நாள் பார்த்தால் மற்ற கோள்கள் மறைக்கின்றது. சூரியனின் கதிரியக்கங்கள் இதற்கு வராது தடுக்கப்படும் பொழுது ஒரு பக்கம் இருள் சூழ்ந்த நிலையாக வருகின்றது.

இப்படி நாளுக்கு நாள் இதன் ஒளிக்கதிர்கள் மங்க மங்க சந்திரனே நம் கண்ணுக்குப் புலப்படாமல் இருள் சூழ்ந்த நிலை ஆகிவிடுகின்றது. பின், சூரியனின் ஒளிக்கதிர்களைத் தான் எடுக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக மீண்டும் ஒளியாகின்றது.

இதைப் போன்று தான் நம் உயிர் மற்றவர்களுடைய துன்பங்களை எடுக்கபப்படும் பொழுது மனிதனாக வளர்த்த இந்த அணுக்கள் சிறுகச் சிறுக மறைகின்றது.

இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது நோயாகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றபின் மனிதனல்லாத உணர்வின் உருக்களாக அது உருப்பெறச் செய்கின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக அன்று ஞானிகள் காவியங்களைத் தீட்டியுள்ளார்கள். இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

மீள வேண்டும் என்றால் அந்த விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி நம்முடன் வாழ்ந்த வளர்ந்த முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 184

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் “இனி.., நாம் எப்படி வாழ வேண்டும்? என்று சிந்தித்தல் வேண்டும்.

இந்த உடலே நமக்குச் சதமில்லாத பொழுது தேடி வைத்த செல்வங்கள் நமக்குச் சதமாகுமா..? நிலம், பூமி, காடு, கரை எல்லாம் சதமாகுமா..?

ஏனென்றால், அன்று வாழ்ந்த அரசர்கள் மற்ற நாட்டின் மீது போர் புரிந்து எத்தனையோ கொள்ளையடித்தார்கள். கொள்ளை அடித்த செல்வங்களை அவன் பித்ருக்கள் வைத்துள்ளார்களா..,? சந்ததிகள் வைத்துள்ளார்களா..,?

இல்லை. அனைத்தும் மடிந்துவிட்டது. கட்டிய கட்டடங்கள் நகரங்கள் அழிந்து விட்டது.

“எவரோ ஆண்டார் என்றும்.., இதனை எக்காலத்தில் “எவன் ஆண்டான்..,” என்றும் பூமிக்குள் பல இயற்கையின் நிலைகள் சீற்றமாகி அடக்கமில்லாத நிலை வரும் பொழுது நீர் நிலைகள் பரவப்பட்டு “நாட்டையே அழித்துச் சென்றபின்..,” அந்த மண் மேட்டிற்குள் அனைத்தும் அடங்கிவிடுகின்றது.

அவன் கலாச்சாரம், அவன் செய்த நிலைகள் எல்லாம் மறைந்தது. அரசனும் மடிந்தான். அவன் மீண்டும் மிருக நிலையையே அடைந்தான்.

அதைப் போன்ற நிலைகள் “மனிதனுக்குள் தீவிரவாதம்..,” என்ற நிலைகளில் அதீதமாக வளர்ந்து இன்றும் மனிதன் சிந்தனை இழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளான்.

கடும் விஷத் தன்மைகளைப் பரவச் செய்துள்ளார்கள். அந்த விஷத் தன்மைகள் அனைத்தும் நம் பூமியின் மையைப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

அதனால், நம் பூமி கூடிய சீக்கிரம் நீர் நிலை அடையப் போகின்றது. நீர் நிலை அடைந்தால் நாம் மீனின் நிலை தான் அடைவோம்.

ஆக, சூரியனைக் கடந்து செல்லப்படும் பொழுது வியாழன் கோளைப் போன்று பனிப் பாறைகளாகி இந்தப் பூமி நகர்ந்து சென்றாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த விஷத்தன்மைகள் சூரியனுக்குள் சென்று “சூரியனே மடியப் போகின்றது”.

அதிலே கதிரியக்கப் பொறிகள் வரப்படும் பொழுது அந்தச் சூரியனுக்குள் கொதிகலனாகின்றது.

பூமிக்குள் இங்கே எரிமலை கக்குவது போல சூரியன் செயலிழக்கும் தன்மை வந்து கொண்டே இருக்கின்றது. இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் பிரபஞ்சத்தில் பரவப்படும் பொழுது மற்ற கோள்களுக்குள்ளும் செல்கின்றது.

இந்தச் சுழற்சி போய்விட்டால் இனி மனிதன் வாழும் இன்னொரு பூமிக்குள் சிக்கி அங்கே மனிதனான பின் தான் அதிலிருந்து மீண்டிட முடியும்.

ஆனால், அது வரையில் எந்த வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க நேரும். இதிலிருந்து சிறிதளவேனும் காக்க வேண்டும்.

ஆகவே, இன்று மனிதனாக வாழும் நிலையில் “நினைவு இருக்கும் பொழுதே” அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் செல்லும்போது அந்த ஞானிகளின் உணர்வுடன் “என்றும் ஏகாந்த நிலை பெற முடியும்..,” என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 183

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் தாய் நாம் கருவிலிருக்கும் பொழுதும் குழந்தையாக இருக்கும் பொழுதும் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் என்று கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

தன் வேலைகளை எல்லாம் செய்கின்றது. பெருமூச்சு இடுகின்றது. குழந்தை மேல் பாசமாக இருப்பதால் வேதனைகளைத் தாங்கிக் கொள்கின்றது.

எத்தனையோ வேதனைகளைப் பட்டாலும் தன் குழந்தையின் ஆசையை  நிறைவேற்றி அதன் சந்தோஷத்தில் தாயும் மகிழ்கின்றது.

தாய் தன் அன்றாட வாழ்க்கையின் நிலைகளில் உணவினைச் சமைப்பதும் தொழில் செய்வதும் இப்படி எல்லாவற்றையும் செய்து அதிலுள்ள அத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு தன் குழந்தை மேல் உள்ள பாசத்தால் அது வளர்க்கின்றது.

குழந்தை பிறக்கும் பொழுதும் தாயிற்கு வேதனை. குழந்தை வளரும் பொழுதும் தாய் எத்தனையோ வேதனைகள் படுகின்றது.

நாம் பல குறும்புத்தனங்கள் செய்வோம். அதனால் வயிற்று வலி வந்திருக்கும். தலை வலி வந்திருக்கும்.

தாய் இதையெல்லாம் உற்று நோக்கி என் குழந்தைக்கு இப்படி இருக்கிறதே என்று எண்ணி வேதனைப்படும். நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய் வேதனைப்படுகின்றது.

தாய் படும் வேதனையில் தந்தையும் பங்குகொள்கின்றார். இதைப் போன்ற எத்தனையோ வேதனைகளை நம் தாய் தந்தையர் அனுபவித்தார்கள். நம்மை வளர்ப்பதறாகப் பல இன்னல்களை அவர்கள் பட்டார்கள்.

அவர்கள் உயிர் கடவுளாக நின்று நம்மை மனிதனாக உருவாக்கி  தெய்வமாக நம்மைக் காக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் தவழ்ந்து நடக்கும் பருவத்தில் குருவாக நின்று இது நல்ல வழி நீ இந்த வழியில் இப்படிச் செல் என்று முதல் குருவாக இருந்து வழி காட்டியதும் நம் தாய் தந்தையர் தான்.

அத்தகையை குருவாக இருந்த தாய் தந்தையரை எப்படி மதிக்க வேண்டும்…? அவருக்குச் செய்ய வேண்டிய காணிக்கை என்ன…? என்பதை ஞானிகள் விநாயகர் தத்துவத்தில் காட்டியுள்ளார்கள்.

எனக்காக அல்லும் பகலும் விழித்து என்னைக் காத்தருளிய தெய்வங்களான அன்னை தந்தையர் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.

அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

விநாயகர் தத்துவப்படி நாம் இதைச் செயல்படுத்தி தாய் தந்தையரை மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்று நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியன் அவர் மனைவி அவர் தாய் தந்தையர் நான்கு பேரும் இணைந்து உருவானது தான் துருவ நட்சத்திரம். அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது தான் “விநாயக தத்துவம்”.

நம் சாஸ்திரங்கள் காட்டிய வழியில் இன்று நடக்கின்றோமா…! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 182

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு புழு எதன் உணர்வை எடுத்ததோ அதற்குள் தான் சிக்கப்பட்டு அது தட்டாண் பூச்சியாக மாறுகின்றது. அதனுடைய முட்டைகளை எதன் எதனில் இடுகின்றதோ அந்த உணர்வுக்கொப்ப மாறுகின்றது.

பல வகையான பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது. இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப்போலத் தான் நமது மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் விஞ்ஞானத்தால் வந்த பேரழிவை அவர்களால்தான் மாற்ற முடியும்.

நாம் இந்த உடலில் குறுகிய காலமே வாழ முடியும். அகஸ்தியரைப் போன்ற உலகைக் காத்திடும் மெய் ஞானிகளை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 181

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கும் துருவ மகரிஷியும் அவரைப் பின்பற்றி சென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர வேண்டும்.

இந்த நிகழ்காலத்தில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் அந்தத் தீமையை நீக்க அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் நம் நிகழ்காலம் எதிர்காலத்தில் ஞானிகள் அடைந்த எல்லையை அடைய முடியும்.

ஏனென்றால் பண்பால் அன்பால் பரிவால் எனக்கு இப்படிச் செய்தார்களே எனக்குத் துரோகம் செய்தார்களே என்று இந்த நிகழ்காலத்தில் நாம் அதிகமாக மற்றவருடைய எண்ணத்தை அதிகரித்து விட்டால் என்ன ஆவோம்?

நாம் யார் மேல் பகைமை கொண்டோமோ அந்த உணர்வுகள் நமக்குள் வளரப்பட்டு இதை நிகழ்காலத்தில் வளர்ந்தபின் எதிர்காலம் அந்தப் பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து அவர் உடலில் புகுந்து இந்தப் பகைமையை தீர்க்கும் உணர்ச்சிகளின் வேதனையை உருவாக்கி அந்த உடலைத்தான் வீழ்த்தும்.

பின் அந்த வேதனையை உருவாக்கிய பின் எத்தகைய வேதனையின் உணர்வுகள் அணுக்கள் ஆனதோ அடுத்து தேய்பிறையாக மற்ற மனிதனல்லாத உடலைத்தான் உருவாக்கும்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வதற்குத்தான் இந்த சிவன்ராத்திரி – நீ விழித்திரு.

பல கோடிச் சரீரங்களில் இருந்து நீ தப்பினாய்… எக்காரணத்தைக் கொண்டும் தீமைகள் வளராதபடி அருள் உணர்வைச் சேர்க்கும் நிலையில் இனி எப்பொழுதும் நீ விழித்திருத்தல் வேண்டும்.

அருள் ஞானியின் உணர்வை ஒவ்வொரு நொடியிலும் நீ நுகர்ந்து இந்த வாழ்க்கையில் வரும் மாசினை நீ துடைக்க வேண்டும் என்பதே ஞானிகள் உரைத்தது.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வை நிகழ்காலத்தில் வளர்த்து எதிர்காலத்தில் நமக்குள் அது உருவாக்கிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 180

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் சென்ற அவர்களின் வழிப்பாதைகளில் செல்ல வேண்டும் என்று நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்.

அப்போது அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்க எமது குருநாதர் பல முறைகளில் அவர் கண்டுணர்ந்த உணர்வை அவர் எனக்குள் பதிவு செய்துள்ளார்.

அவர் உடலுக்குள் விளைய வைத்த ஆற்றல்களை எண்ணத்தின் செயலாகச் சொல்லுகின்றார். அதை உற்று நோக்கும் போது அந்த உணர்வின் சத்து அவர் உடலில் இருந்து வரக்கூடிய ஒலியை என் செவிப் புலன் ஈர்த்தாலும் அந்த உணர்வின் சத்து எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

ஊழ்வினை என்றால் “வித்து” என்று பொருள். அதாவது ஒரு மரத்தின் சத்து தனக்குள் விளைந்து அதனின் வித்தாகும் போது அதை ஒரு நிலத்தில் நாம் பதியச் செய்கின்றோம்.

அப்பொழுது அந்த மரம் எந்த உணர்வின் சத்தை வித்தாக எடுத்ததோ அந்த வித்து அதே உணர்வின் இயக்கமாக பூமியின் துணைகொண்டு நம் முன் படர்ந்திருக்கும் தன் தாய் மரத்தின் சத்தை உணவாக எடுத்து வளரும்.

இதைப் போலத்தான் குருநாதர் அவர் விளைய வைத்த உணர்வின் சத்தை எனக்குள் உபதேசித்தார்.

என் செவிப் புலனறிவால் நான் கேட்டறியும்போது அவர் உணர்வின் உணர்ச்சிகள் எனக்குள் உந்தப்பட்டு அந்த உணர்வின் ஆற்றலை நான் நினைவு கொண்டு “கூர்ந்து…” எண்ணும் போது ”அதைக் கவரும் நிலை” ஏற்படுகின்றது.

கவர்ந்த உணர்வுகள் என் நினைவுகளுடன் இணைக்கப்பட்டுக் கருவின் தன்மையாக ஊழ்வினையாக ஒரு “ஞான வித்தாக” எனக்குள் பதிவாகின்றது.

அவர் உபதேசித்த உணர்வின் தன்மை கூர்மையாகக் கவனித்த பின் அதனின் நிலைகள் எனக்குள் பதிவாகி அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தேன்.

அவர் உடலிலே விளைந்த தீமைகளைக் கண்டறிந்து அதனின் உண்மையின் பொருளை கண்டுணர்ந்து மெய்யுணர்வை அவர் தனக்குள் வளர்த்த உணர்வுகளை என்னால் பெற முடிந்தது.

நமது குருநாதர் அவர் தீமைகளை அகற்றி மெய்யுணர்வைத் தனக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி இன்றும் விண்ணுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்,

இதைப் படித்துப் பதிவாக்கும் அனைவரும் மெய் வழி நடந்து மெய் ஞானம் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து “என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்” என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் பிரார்த்திக்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 179

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகள் என்பது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது ஒளியாகத் தனக்குள் சிருஷ்டித்துக் கொள்பவர்கள். உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியின் தன்மையாக மாற்றியவர்கள்.

தன் வாழ்க்கையில் அறியாது வந்த துன்பங்களை விலக்கி ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று அதைத் தூய்மைப்படுத்தி ஒளியாக மாற்றியவர்கள் தான் மகரிஷிகள்.

மகரிஷிகள் என்றால் எல்லாவற்றையும் சேர்த்து விண்ணுலகம் சென்றவர்கள். அனைத்தையும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

பொதுவாக எல்லோரையும் மகரிஷி என்று அழைக்கின்றோம். மகரிஷிகள் எண்ணிலடங்காதோர் உண்டு. ஒவ்வொருடைய பேர்களையும் தனித்துச் சொல்லி எடுக்க முடியாது.

அந்த மகரிஷிகள் நல்ல உணர்வின் தன்மையை எவ்வாறு பெற்றார்களோ அது பொதுத் தன்மை. மனித உடலிலிருந்து விடுபட்டு பிறவியில்லா நிலை அடைந்து விண்ணுலகம் சென்றவர்கள் தான் மகரிஷிகள்.

ஆகையினால் தான் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

எனக்குள் வந்த அசுத்தங்களை நீக்குவதற்காக குருநாதர் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்தார்.

அவர் பெற்ற அற்றலின் தன்மையைக் கண்டுணர்ந்து அதை உணர்வதற்கும் அவரின் உணர்வின் ஆற்றலையும் குரு அருளால் என்னால் பெற முடிந்தது.

அதைப் போன்றுதான் உங்களுக்கும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகயைப் பதியச் செய்கின்றோம். நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் அவர் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியைப் பெறுவதற்காக இதைச் செய்கிறோம்.

ஆகையால் அவர்களின் நினைவு கொண்டு “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் தொடர்பு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள். உடல் உறுப்புகள் முழுவதும் படரவேண்டும் என்று உள்முகமாகச் செலுத்துங்கள்.

இதைப் பழகிக் கொண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே தியானமாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 178

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் அந்த வெளிச்சத்தினால் நாம் பல பொருள்களை “இது இன்னது தான்… இது இன்னது தான்…” என்று காண முடிகின்றது.

இதைப் போல அந்த அருள் மகரிஷிகள் தன் உணர்வின் ஆற்றல் மிக்க சக்தி கொண்டு அவர்கள் “ஒளி கண்ட உணர்வின் தன்மை கொண்டு” எதனையும் பிளந்து அதற்குள் இருக்கும் இருளைப் பிளந்து அதற்குள் இருக்கும் உணர்வின் சத்தை உணர்ந்தவர்கள்.

தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக மாற்றினார்கள்.

ஒளியாக மாற்றிடும் ஆற்றல் கொண்டு விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சு கொண்ட உணர்வுகள் உருவாகி வருவதைப் “பலவீனமாக்கி…” அதனின் உணர்வையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றார்கள்.

அண்டத்தின் உணர்வை இந்த மண்ணுலகில் தோன்றிய இந்தப் பிண்டத்திற்குள் (இந்த உடலில்) மாற்றி இன்றும் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொண்டுள்ளார்கள்.

விண்ணுலக ஆற்றல் (அண்டத்தின் சத்து) அது இங்கே மண்ணுலகில் கலந்து மாறி வருவதற்கு முன்பாக அண்டத்தின் உணர்வை அடக்கி அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி இந்தப் பிண்டத்திற்குள் (தன் உடலுக்குள்) உருவாக்கினார்கள் அன்று மகரிஷிகள்.

அதனின் துணை கொண்டே உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரமாக “துருவ நட்சத்திரமாகவும்… சப்தரிஷி மண்டலமாகவும்…” இன்றும் (என்றும்) நிலைத்துள்ளார்கள்.

பூமியின் துருவப் பகுதியில் நிலை கொண்டு விண்ணின் ஆற்றல் புவியின் ஈர்ப்புக்குள் “நுழையும் தருவாயில்…” அதைத் தனக்குள் நுகர்ந்தறிந்து உணர்வின் ஆற்றலை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளார்கள்.

இந்த மனித உடலில் இருப்பது போன்றே உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்தை ஒளியின் சிகரமாக மாற்றி “என்றும் பதினாறு” என்று அழியாத நிலைகளில் உள்ளார்கள்.

“அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்” மற்ற அலைகளை அடக்கி ஒளியின் தன்மையில் பொருளைக் காணும் நிலையாக விளைந்திட்ட அந்த அருள் ஞானியின் உணர்வுகள் “நமக்கு முன்” சுழன்று கொண்டிருக்கின்றது.

இந்த உபதேசத்தின் வாயிலாக அதை நீங்கள் கேட்டுணரும்போது சக்தி வாய்ந்த “ஞான வித்தாக…” உங்கள் உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

அதனை நீங்கள் நினைவு கொள்ளும்போது நினைத்த மாத்திரத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறமுடியும்.

விண் சென்ற அந்த அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்கு  அனைவரையும் அழைத்துச் செல்லும் நிலையாக அமைவதே யாம் உணர்த்தும் இந்த உபதேசத்தின் நோக்கம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 177

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் கல்வியறிவு அற்றவனாக இருப்பினும் அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு உணர்வின் இயக்கங்கள் இயங்குகின்றது என்ற நிலையை குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

அண்டத்தை அவர் கண்டுணர்ந்து அவருக்குள் விளைந்த நிலையை விளைவித்த உணர்வின் தன்மையைச் என் செவிப்புலனால் கேட்கச் செய்து உணர்ச்சிகளால் உந்தப்பட்டு அதனைக் கவனித்துக் கூர்ந்து உற்று நோக்கும்படி செய்தார்.

நான் அவர் சொல்வதைக் கவனித்துக் கூறவில்லை என்றால் அதற்காக என்னைத் தூண்டுதலாக உணர்ச்சியின் நிலைகளைத் தூண்டச் செய்து அதை எனக்குள் பதியச் செய்யும் நிலையாகப் பதியச் செய்வார்.

மேலும் இயற்கையில் மனிதனுக்குத் துயரங்களும் வேதனைகளும் வெறுப்புகளும் எவ்வாறு ஏற்படுகிறது என்ற நிலையை அனுபவபூர்வமாக எமக்குள் ஏற்படுத்திக் காட்டினார்.

அதனின் துணை கொண்டு அறிந்துணர்ந்த நான் உங்களுக்கும் இதைப் பதிவு செய்யும் நோக்கிலே இதைச் சொல்கின்றேன்.

சொல்லும் நேரத்தில் உங்கள் நினைவலையை வேறு எங்கோ செலுத்திவிட்டுச் “சாமி சொல்வது… எனக்குப் புரியவில்லை…!” என்ற உணர்வைனைத் தடுத்து நிறுத்திவிட்டால் கேட்டும் பலனில்லாமல் போய்விடும்.

அப்படிப் பயனற்ற நிலைகளில் செல்லாது இந்த மனித வாழ்க்கையில் மெய் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பெறும் நோக்குடன் “உங்கள் ஞானக் கதவுகளைத் திறந்து வையுங்கள்”.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் இன்று மனித எண்ணங்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்த மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் “பதியச் செய்து” உங்கள் பொன்னான அருள் சக்தியான மனித உணர்வுக்குள் விளைந்த ஆற்றல்மிக்க உணர்வின் நிலைகள் தீமையை நீக்கிடும் ஆற்றலாகப் பெருக வேண்டும்.

மெய் உணர்வைக் கண்டுணர்ந்த நிலைகள் என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறும் அவ்வாறு பெற்ற அந்த ஞானியின் உணர்வலைகள் உங்களுக்குள் விளைய வேண்டும் என்ற ஆசையில் தான் இதைப் பதிவு செய்கின்றோம்.

ஆகையினால் உங்கள் கவனங்கள் வேறு எங்கும் செலுத்தாது “எதைச் சொல்கிறோம்…” என்று கூர்ந்து கவனித்து இதைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 176

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிமிடமும் “ஈஸ்வரா…” என்று விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று உங்கள் உடலுக்குள் வரும் தீமைகளை நீக்கிக் கொள்ளுங்கள்.

உங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் கஷ்டத்தைக் கேட்டுணர்ந்தோர் அவர்களுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைப் பாய்ச்சுங்கள்.

மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும் அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டுணரும் அருள் சக்தி பெறவேண்டும் தீமைகள் அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியாக அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்றால் அதே உணர்வு உங்களுக்குள் விளையும். அதனின் உணர்வாக உங்களுக்குள் உங்கள் உயிர் அதை ஆள்வான். ஒளியின் சரீரமாக ஆக்கிடும் நிலையாக உங்களை ஆண்டு கொண்டிருக்கும் அந்த உயிர் செய்வான்.

உங்களுடைய நிலைகளை நான் எண்ணும் பொழுது அந்த எண்ணத்தை என் உயிர் அதைப் படைக்கின்றது. இயக்குகின்றது. குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அவர் எனக்கு இதைத்தான் சொன்னார்.

உங்கள் உயிரை நான் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உயிரை நீங்கள் கடவுளாக மதியுங்கள். பிறருடைய உயிரையும் கடவுளாக மதியுங்கள். ஒவ்வொரு உடலையும் “அந்தக் கடவுள் தான் எடுத்தது…” என்று மதியுங்கள்.

இதைப் போல நீங்கள் எண்ண வேண்டும். அந்தச் சக்திகளை நீங்கள் பெறவேண்டும் என்ற இந்த நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் இதைப் பதிவாக்குகின்றோம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியை நீங்களும் பெற்று மனிதன் என்ற புனிதச் சரீரத்தை அழியாச் சரீரமாக ஒளியின் தன்மையாக மாற்றி என்றும் விண்ணுலகில் பெரு வீடு பெரு நிலை என்ற நிலையில் சென்றடைந்த அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடையலாம்.

இருள் சூழ்ந்த இந்த நஞ்சு கொண்ட மனித வாழ்க்கையில் நஞ்சினை நீக்கி நாம் உயர்ந்த நிலைகள் பெறுவோம் என்ற இந்த நிலைக்குத்தான் தியானமும் பயிற்சியும் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 175

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வைரம் தனக்குள் நஞ்சினை அடக்கி அது தன் பிரகாசமான நிலைகளை வெளிப்படுத்துகின்றது. இதைப் போல் தான் மகரிஷிகள் அனைவரும் நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாகினும் அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்துள்ளார்கள்.

அத்தகைய ஞானிகள் இன்னொரு மனிதனின் ஈர்ப்புக்குச் செல்லாது தன் உணர்வின் தன்மையைத் தன் நிலை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அனைவரும் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் நினைவலைகளைக் குவித்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று உங்களை எண்ணச் செய்கிறோம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயத்திற்குள் மகரிஷிகளின் அருள் சக்தி அது கிடைக்க வேண்டும் அந்த ஆலயம் புனிதமாக வேண்டும் அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும் அந்தத் தெய்வ நிலைகள் அங்கே வளர வேண்டும் என்று தான் உங்களை நான் தியானிக்கின்றேன்.

உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது அந்தச் சக்தியின் தொடரை நீங்கள் பெற முடிகின்றது. கவர முடிகிறது.

இன்று டி.வி.யோ மற்ற சக்தி வாய்ந்த எதுவாக இருந்தாலும் அதைக் கவர்வதற்கு “ஆன்டெனா” வைத்துள்ளார்கள்.

அதனுடன் சக்தி வாய்ந்த இயந்திரங்களையும் நுண்ணிய கருவிகளையும் பொருதி அதன் துணை கொண்டுதான் இந்த ஆன்டெனா தனக்கு முன் இருக்கும் மிகச் சக்திவாய்ந்த அலை வரிசைகளைக் கவர்கின்றது,

அவ்வாறு ஆன்டெனா கவரும்போது நிசப்தமான நிலைகளிலும் சீராகவும் திரைப்படங்களில் காண்பது போல் அந்த அலைகளை ஒருமித்த நிலை கொண்டு சீராக நாம் பார்க்க முடிகின்றது.

இதைப் போல் தான் எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணையச் செய்கின்றோம். நீங்கள் அதைப் பெறுவதற்காக உங்களை நான் தியானிக்கும்போது நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் பெற முடிகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 174

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உடலில் எதை வளர்க்கின்றீர்களோ அதன் வழி அதை உங்கள் உயிர் உருவாக்கிக் கொடுக்கின்றது. மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் விளைய வைத்தீர்கள் என்றால் அந்த “ஞானிகள் சென்ற பாதையில்” நீங்கள் செல்லலாம்.

“பாவி…! என்னை இப்படிப் பேசினானே…!” என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து அவர்கள் உடலில் போய்த்தான் பிறக்க வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் தப்ப வேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலை ஆலயமாக மதித்து நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உபதேசிக்கின்றோம்.

நீங்கள் நல்ல எண்ணத்துடன் பிறருக்குச் செய்த நன்மைகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும். அதே சமயத்தில் கேட்டறிந்து உங்களுக்குள் அறியாது உட்புகந்த தீமைகள் நீங்க வேண்டும். மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும் என்று தான் வேண்டுகிறேன்.

மாமகரிஷி ஈஸ்வரய குருதேவர் எம்மை இவ்வாறு செய்யச் சொன்னார். ஆகையினால் நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் அந்தச் சக்தியாக மாறுகின்றேன்.

என் சொல்லை நீங்கள் கேட்கும் பொழுது உங்களுக்கு அது நல்லதாகின்றது. நான் ஞானிகளின் வாக்குகளைச் சொல்லிக் கொண்டு வரும் பொழுது நீங்கள் இதைக் கூர்மையாகக் கவனித்தாலே உங்கள் நோய்கள் அனைத்தும் போகும்…. பார்க்கலாம்…!

எப்படியும் உங்களுக்குள் அந்த ஞானிகளின் வாக்கைப் பதிய வைக்க வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். பதிய வைத்துக் கொண்டு அதை மீண்டும் நினைவாக்கினால் உங்கள் உயிர் அதைப் படைக்கின்றது. ஞானிகளின் சக்திகளை விளைவிக்கின்றது.

ஒரு நல்ல ரோஜாப்பூவைப் போட்டால் அந்த வித்து விளைந்த பின் தன் நறுமணத்தை வீசுகின்றது. அதே போல் நல்ல எள்ளைப் போட்டால் நல்ல எண்ணெயைக் கொடுக்கின்றது.

இதைப் போன்று தான் மெய் ஞானிகளின் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம். மெய் ஞானிகளாக நீங்கள் ஆக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 173

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் “உயிரே கடவுள்…” என்று நாம் சொன்னால் “கடவுள் தான்… உயிர்..” என்று எழுதி  வைத்து விடுகின்றார்கள்.

காப்பி அடித்தாலும் உயிரே கடவுள் என்றால் அந்த உண்மைப் பொருளைத் தெரிவதற்கு இல்லை. ஆனால் கடவுள் தான் உயிர் என்ற நிலைக்கு மாற்றிச் சில நிலைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

உட் பொருளைக் கண்டு தனக்குள் அறிந்தோ தன் உணர்வின் தன்மையை அந்தக் குரு மூலமாகவோ அறிந்தோ அதைச் சொல்வதில்லை.

ஏனென்றால அதை முதலில் தனக்குள் படைத்துப் பார்க்க வேண்டும். அதனின் இயக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். பின் அது சொல்லாக வர வேண்டும்.

இதையேல்லாம் பனிரெண்டு வருடங்கள் யாம் அனுபவித்தபின் தான் புற நிலைகள் இருப்பது அக நிலைகளுக்குள் எப்படி இயக்குகின்றது என்றும் இந்த உடலுக்குள் எப்படி விளைகின்றது என்றும் அதை எப்படி மாற்ற வேண்டும் என்றும் குருநாதர் உணர்த்தினார்.

ஆரம்பத்தில் நானும் (ஞானகுரு) உங்களை மாதிரி நன்றாகச் சாப்பிட்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டு இருந்தவன் தான்.

பின்னாடி இதை எடுத்துக் கஷ்டப்படச் செய்து எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் எனக்குள் விளைந்த அந்த மெய் உணர்வுகளை இப்போது நான் உங்களிடம் சொல்வது.

அதே சமயத்தில்… இதை எல்லாம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்தான் ”எனக்கே சத்து…!” என்று குருநாதர் சொல்லி விட்டார்.

அதாவது நீங்கள் எல்லாம் அந்த மெய் ஞானிகள் பெற்றது போல ஆற்றல்கள் பெற்றால் தான் எனக்குச் சத்து என்றார் குருநாதர். அதைத் தான் இங்கே உணர்த்திக் கொண்டுள்ளோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 172

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கலசம் வைக்கும் முறை:- ஒரு பித்தளைத் தகட்டில் அந்தத் தட்டிற்குத் தகுந்தாற்போல் பச்சரிசியை நிரப்பி “ஓம்” என்று எழுதவும். பிறகு அந்தப் பித்தளைத் தட்டில் வைக்கும்படியாக ஒரு சொம்பை எடுத்துக் கொள்ளவும். அதைத் தட்டின் மீது வைக்கவும். அதிலே பாதி அளவு நீரை நிரப்பவும். சொம்பின் மீது ஐந்து மாவிலைகளை நீரிலே படாதவண்ணம் வைக்கவேண்டும். அதன் மீது ஒரு தேங்காயை வைக்க வேண்டும்.தேங்காயை வைப்பதற்கு முன் அதைச் சுத்தமாகக் கழுவி மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு தேங்காயைச் சொம்பின் மீது வைக்கும் பொழுது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த நீருக்குள் போட வேண்டும். தேங்காயையும் நீரில் படாதவாறு வைக்க வேண்டும். பின் சொம்பின் கழுத்தில் ஒரு மஞ்சள் துண்டை நூலை வைத்துக் கட்டவும். தேங்காயின் மீது மலரைச் சாத்தவும். இவ்வாறு கலசம் வைத்த பின் அதற்கு முன் ஒரு சிறிய டம்ளரில் நீரும் ஒரு டம்ளரில் பச்சைப் பாலும் வைக்கவும். பிறகு தியானத்திற்கு எல்லோரையும் அழைத்து வந்து கலசத்திற்கு முன் அமரச் செய்து தியானிக்க வேண்டும். தியானிக்க வேண்டிய முறை:- ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எல்லோரும் சேர்ந்து சொல்லித் தியானத்தை ஆரம்பிக்கவும். ஓம் ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரை எண்ணி வணங்க வேண்டும். கீழே உள்ளதை ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஏங்கித் தியானிக்க வேண்டும். ஒரு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை தியானிக்கலாம். எங்கள் தாய் தந்தை தெய்வ சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் தாய் தந்தையருக்கு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் குருவின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா எந்த எண்ணத்தை எண்ணிக் கலசம் வைத்துள்ளோமோ அந்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்துடன் கலசத்தை உற்று நோக்கி எண்ணத்தைச் செலுத்தவும். கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி பூமியின் வடதுருவப் பகுதியில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி உடலுக்குள் செலுத்திச் சிறிது நேரம் தியானியுங்கள். பின் கண்களைத் திறந்து கலசத்தைப் பார்த்து மலரின் மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் தெய்வ குணமும் இந்தக் கலசத்திலே படர்ந்து இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிராத்மாக்களுக்கும் அந்தச் சக்தி கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஐந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும். பின் ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லித் தியானத்தை நிறைவு செய்யுங்கள். கற்பூர தீபம் காட்டிவிட்டு கலசத்தின் முன் வைத்திருந்த நீரையும் பாலையும் எல்லோருக்கும் கொடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 171

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“சரவணபவா… குகா…” தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக உடலான குகைக்குள் நின்று “கந்தா…” பலவற்றையும் அறிந்திடும் நிலை “கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேளே…!” என்று இராமலிங்க அடிகள் பாடியுள்ளார்,

கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேளே சண்முகத் தூயமணி. சண்முகம் என்றால் உண்மையான ஐந்தாவது அறிவின் தன்மை கொண்டு தான் நுகர்கின்றோம்  ஆக புலனறிவு ஐந்து.

தூய்மையான உணர்வைத் தனக்குள் நுகர்ந்து அந்தத் தெய்வமணியாக என்னை ஆக்க வேண்டும் என்று அவர் தெளிவாகப் பாடியுள்ளார். அவர் பாடியதை அர்த்தத்தை இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை.

சண்முகம் என்றால் ஐந்தாவது அறிவு. சண்முகம் என்றால் வேறு விதமாக எண்ணிக் கொள்கின்றார்கள்.

இதை நாம் புரிந்து கொண்டால் அன்று இராமலிங்க அடிகள் எவ்வாறு பாடினார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவர் பாடல்களைப் புகழ்ந்து பாடுகின்றோம். பாடலின் “மூலத்தை…” இன்னும் நாம் காணவில்லை.

ஆனால் அதைச் சொன்னால் நாம் தேடிக் கொண்டேயிருப்போம்.

உணர்வின் உணர்வின் இயக்கங்களைத் தெளிவாக இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிந்திடல் வேண்டும்.

சண்முகத் தூயமணி – சண்முக…, ஐந்தாவது அறிவின் துணையால் உயர்ந்த உணர்வு கொண்டு அந்த ஒளியின் உணர்வாக எனக்குள் உருவாக்குதல் வேண்டும் என்று அவர் பாடியுள்ளார்.

அதனின் மூலக்கருத்து இது தான்,

உண்முகச் சைவமணி – மற்றொன்றைக் கொல்லாதபடி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை கொண்டு இந்தச் சைவம் என்ற நிலையில் செயல்படுத்த வேண்டும்.

நாம் (உடல்) அசைவம். துருவ நட்சத்திரம் சைவம் அது தனக்குள் அசையும் தன்மை இல்லாது இருக்கும் இருப்பிடத்திலே தனக்குள் அந்தச் சைவ மணியாக உருவாகின்றது.

இதனை நாம் பெறவேண்டும் என்று தான் அவர் பாடல்களிலே பாடினார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 170

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகள் செய்வோர் உணர்வுகள் இங்கே நிறைய உண்டு. உங்களைப் பார்த்தவுடனே “இன்னென்ன தவறு செய்கிறீர்கள்… செய்தீர்கள்…!” என்று நான் சொல்லலாம்.

எனக்கு அது தலை வலியா…?

ஒருவர் செய்யும் தவறுகளைக் கூர்மையாகக் கவனித்தோம் என்றால் நம் உயிர் அதை எலக்ட்ரானிக்காக மாற்றி நமக்குள் பதிவாக்கி விடும்.

மற்றவர்களுடைய கெட்டதையெல்லாம் அடிக்கடி நான் பார்த்து நுகர்ந்து அறிந்து கொண்டே இருந்தேன் என்றால் அயோக்கியன் நம்பர் ஒன்றாகப் போய்விடுவேன்.

அதற்குப் பதிலாக கெட்டதையும் தவறுகளையும் அகற்றச் செய்யும் அருள் ஞானிகளின் உணர்வை எனக்குள் திரும்பத் திரும்பப் பதிவாக்கி அந்த அருள் உணர்வுகளை எனக்குள் வளர்த்துக் கொண்டால் கெட்டதை நீக்கும் ஆற்றலாக  எனக்குள் வளரும்.

குருநாதர் எனக்குக் காட்டியது அது தான்…!

சில பேர் நினைக்கலாம்…. சாமி ஏன் எங்கள் கஷ்டங்களை எல்லாம் தெரிந்து கொள்ளக்கூடாது..! தெரிந்து எங்கள் கஷ்டத்தை நீக்க உதவி செய்யலாம் அல்லவா…! என்று.

இவருக்குத் தெரிகின்ற கஷ்டத்தை எல்லாம் என்னிடம் கேட்டால் நான் பதிவாக்கி இருந்தால் ஒவ்வொருத்தர் கஷ்டத்தையும் கேட்டால் என்னிடம் என்னென்ன கஷ்டம் எல்லாம் பதிவாகும்?

எல்லாம் சாமிக்கே தெரியும். சில பேர் சொல்வார்கள்.

சில சாமியாடிகள்… ஜோசியர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் நாம் சென்றால் உங்களைப் பற்றி எல்லா விபரமும் தெரியும் எதற்காக வந்திருக்கின்றீர்கள் என்றும் எனக்குத் தெரியும் உங்கள் கஷ்டம் எல்லாம் எனக்குத் தெரியும் என்பார்கள்.

அப்பொழுது அவர்கள் பெரிய மகானாகி விடுவார்கள். அந்த மகான் கடைசியில் என்ன ஆவார்…!

மற்றவர்கள் கஷ்டத்தையெல்லாம் நுகர்ந்து அறிந்து கொண்டார்கள் அல்லவா…! அவர்கள் உடலில் அந்த விஷம் அதிகரித்துக் கடைசியில் பாம்பின் உடலிலும் விஷ ஜெந்துக்களின் உடலாகவும் பூத கணமாகவும் தான் ஆக முடியும்

நான் அப்படி மகான் ஆகவில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 169

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தெளிந்த நீராக இருக்கும் பொழுது நீரின் அடியில் கீழே இருக்கும் பொருளை நாம் அப்படியே காண முடிகின்றது. ஆனால் நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் அலைபாயும் பொழுது கீழே இருக்கும் பொருள் தெளிவாகத் தெரிவதில்லை.

அதைப் போன்று தான் தெளிந்த மனதுடன் நாம் இருக்கப்படும் பொழுது எதையும் சீராகக் காண முடிகின்றது. மனக் கலக்கமாகிவிட்டால் எதையும் சீராகச் செயல்படுத்த முடியாது போய்விடுகின்றது.

அவ்வாறு மனதில் வரும் கலக்கமான நிலைகளையும் தெளிவாக்க முடியாத நிலையில் சிந்தனையைக் குலைக்கும்  நிலைகளையும் பல உணர்வின் அலைகள் அலைந்து கொண்டிருப்பதைச் சமப்படுத்தி நிறுத்தும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி.

ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது அந்தத் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய் ஞானியின் அருள் சக்தி உடலுக்குள் ஊடுருவி நம்மை ஆட்டிப்படைக்கும் மனக் குழப்பத்தையும் மனக் குடைச்சலையும் நிவர்த்தி செய்து நம் எண்ணத்தையும் செயலையும் தெளிவாக்குகின்றது. வியாபாரத்தையும் சீராக்கச் செய்கின்றது. குடும்பத்திலும் அனைவரையும் ஒற்றுமையாக்குகின்றது.

அந்த அருள் ஒளி நமக்குள் பெருகும் பொழுது உயிரிலே பேரொளியாக வீசிக் கொண்டே இருக்கும். அது வளர்ச்சியாகும்.

அவ்வாறு அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை வளர்த்து இந்த உடலைவிட்டுச் சென்றபின் உயிராத்மா ஒளியாக மாறி எந்த மகரிஷிகள் இதைக் காட்டி அந்த மெய்யை உணர்த்தினார்களோ அவர்களின் அருள் வட்டத்தில் இணையலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 168

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாமி (ஞானகுரு) இத்தனையும் தெரிந்து கொண்டார். எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் எல்லாவற்றையும் தெரிந்து தான் செய்தார் என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் தெரிந்து எதுவுமே நான் செய்யவில்லை. குருநாதர் பதிவு செய்தார். அதைப் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் வழி எனக்குள் தெரியும் வாய்ப்பு வருகின்றது.

நான் தெரிந்து கொண்டது போன்று நீங்களும் தெரியப்பட வேண்டும் என்று “ஆசைப்பட்டால்…” அந்த உணர்வின் தன்மையை வளர்க்கின்றீர்கள் என்று அர்த்தம்.

ஆனால் நீங்கள் எதை ஆசைப்படுகின்றீர்கள்…? அதை ஆசைப்படுகின்றீர்களா…! சிந்தித்துப் பாருங்கள்.

சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினால் என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்… உடலில் உள்ள நோய்கள் நீங்கும்… தொழில் நன்றாக இருக்கும்… என்று தான் எண்ணுகிறீர்கள்.

இந்த ஆசை “குறுகிய ஆசையாகின்றது…!”

அருளைப் பெருக்க வேண்டும். இருளைப் போக்கும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் இந்த ஆசை “தீமைகளை நீக்கும் ஆசையாகின்றது…”

இதைப் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நீங்கள் வந்தால் அருள் ஞானம் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அறியாது இடைமறிக்கும் உணர்வின் தன்மைகளை அது “நிச்சயம்” மாற்றும்.

யாம் உபதேசிக்கும் உணர்வுகளைச் சீராகக் கடைப்பிடிப்போர் இதை உணர்ந்திருப்பார்கள்.

“சாமி தான் கொடுப்பார்… அவர் தான் எல்லாம்…!” என்றால் நான் என் குருநாதரை அப்படி எண்ணவில்லையே…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 167

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பௌர்ணமி அன்று உங்கள் குடும்பத்தில் கூட்டுத் தியானம் இருந்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதற்குப் பின் உங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு பழகிக் கொண்ட பின் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று வாரத்தில் ஒரு நாளாவது எண்ண வேண்டும்.

காரணம் அவர்களது உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு.

இன்னொரு உடலில் இருந்து முன்னோர்களின் ஆன்மா வெளி வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்ட வலிமையால் உந்தித் தள்ளினால் அந்த உயிராத்மாக்களைப் பிறவா நிலை பெறச் செய்ய முடியும்.

உங்கள் குடும்பத்தில் உள்ள மூதாதையர் எவரேனும் விண் சென்றால் தான் நீங்களும் அவர்களைப் பின் தொடர்ந்து விண் செல்ல முடியும்.

இது அல்லாது மார்க்கம் இல்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 166

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வியாசகர் வான்மீகி சமீபத்தில் வந்த அருணகிரிநாதர் இராமலிங்க அடிகள் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ஏனைய மகான்கள் என்று சொல்லும் அனைவருமே கல்வி கற்று உணர்ந்தவர்கள் அல்ல கல்வியில் ஞானம் பெற்றவர்கள் அல்ல…! அவர்கள் கற்றுணர்ந்ததெல்லாம் தங்களுடைய அனுபவத்தில் கண்டுணர்ந்தவைகள் தான்.

அனுபவபூர்வமாகத் தான் பெற்ற உயர்ந்த சக்திகளையும் தங்கள் உடலில் விளைய வைத்த ஆற்றல் மிக்க உணர்வுகளையும் போதனைகளாக மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

சந்தர்ப்பத்தால் நுகர்ந்த சக்தி தான் அவர்களுக்குள் அது அவ்வாறு உருப்பெறுகின்றது.

அவர்கள் பெற்றது போல் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றோம்.

நான் (ஞானகுரு) கல்வி கற்காதவன் தான். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அவரைப் பின்பற்றிய உணர்வு கொண்டு அதைப் பதிவு செய்து அதனின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற முடிந்தது.

மக்களின் உணர்வின் தன்மையும் தீமைகளை அகற்றும் உணர்வையும் கண்டறிய முடிந்தது. தீமைகளை அகற்றும் சக்திகளை எனக்குள் வளர்த்துக் கொள்ள முடிந்தது.

கற்றவர்களோ கற்காதவர்களோ… அறிந்தவர்களோ அறியாதவர்களோ… என்று (உங்களை) நீங்கள் யாரும் எண்ண வேண்டாம். அறிய வேண்டும் என்பதற்காகத்தான் வருகிறோம்.

பள்ளிக்குச் செல்வோர் அனைவரும் அறிந்து கொண்டு செல்வதில்லை. அறிந்து கொண்ட பின் பள்ளிக்குச் செல்லவில்லை. அறிவதற்குத் தான் பள்ளிக்குச் செல்கிறோம்.

அதைப் போன்று உலகை அறிவதற்காகவும் மெய் ஞானம் பெறுவதற்காகவும் தான் இங்கே வந்துள்ளோம். அதைப் பெறும் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 165

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கந்த சஷ்டி எல்லா முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. அதை நாம் வேடிக்கை பார்க்கச் செல்கின்றோம். எப்படி…?

முருகனைப் பற்றிய காவியங்களை மனதில் வைத்துக் கொள்கின்றோம். கந்தன் அசுரனைக் கொல்லப் புறப்படுகின்றான் என்ற நிலை தான் நமக்குத் தெரிகின்றது.

ஆனால் அந்தக் கந்த புராணத்தின் உண்மையின் நிலைகளை நாம் அறிவதில்லை.

அதை இராமலிங்க அடிகள்…, “கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேளே…” என்று பாடல்களைப் பாடியுள்ளார்.

பல கோடிச் சரீரங்களில் பல அணுக்களால் உருவாக்கப்பட்டு அவை அனைத்தும் எனக்குள் கூர்மையாக இருந்து எனக்கு முன் தெளிவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிரை – அதைத்தான் கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள இந்த உயிரைக் “கந்தவேளே…” என்று அவர் பாடுகின்றார்.

தீமைகள் எனக்குள் நாடாது நன்மைகள் செய்யும் பல உணர்வுகள் என்னிலே தோன்ற வேண்டும் என்று தன் உயிரை வேண்டுகின்றார்.

தீமையான உணர்வுகளைத் தனக்குள் நுகராது “நல்ல உணர்வுகளை நாம் எவ்வாறு நுகர வேண்டும்…” என்று இராமலிங்க அடிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 164

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையே மாற்றியமைத்துக் கொண்டு தனக்குள் இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொள்ளும் சக்தி இந்த மனிதனுக்குத்தான் உண்டு. நாம் எந்த மெய் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ… அதனின் நிலைகளில் நாம் வளர்ந்து விடலாம்.

நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் வளருகின்றேன். நீங்களும் இதைப் போன்று எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… நீங்கள் நிச்சயம் வளர்கிறீர்கள்.

இந்தத் தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வுகளை எல்லோருக்கும் பாய்ச்சப்படும் பொழுது நிச்சயம் நாம் அந்த நிலைகளைப் பெறுகின்றோம்.

நான் இப்படி நினைத்தேனே…! ஆனால் இன்று இப்படித் துன்பங்கள் வந்துவிட்டதே என்று இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை.

நமக்கு உடல் முக்கியமாக வேண்டும். ஆனால் இந்த உடலுக்குள் இருக்கப்படும் பொழுதே நாம் எதைச் செய்ய வேண்டும்? எதை நாம் கழிக்க வேண்டும்? எதை நாம் கூட்டவேண்டும்? என்பது தான் முறை.

இந்த உடல் நமக்கு என்றும் சதமில்லை.

இந்த உடலை விட்டு உயிராத்மா சென்று விட்டால் இந்த உடலில் நாம் எந்த வினையைச் சேர்த்து கொண்டோமோ இந்த வினையின் உணர்வுகள் உயிருடன் ஒன்றி அதை இயக்கியே தீரும்.

உடல் மீது பற்று கொண்டால் வேதனையை உருவாக்கும். இந்த நிலையில் இருந்து நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும பத்தாவது நிலையான “கல்கி..” என்ற நிலையை அடைய வேண்டும்.

சூரியனை விட்டுப் பூமி விலகிச் சென்றால் பனிப் பாறைகளாகிவிடும். நாம் இதற்குள் சிக்கிவிடாதபடி இப்பொழுது இருக்கும் குறைந்த காலத்திலேயே நம்முடைய எண்ணத்தை அந்த மகரிஷிகளின் எண்ண உணர்வுடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

இந்த உடலை விட்டு நாம் சென்றால் அந்த விண்ணுலகம் சென்று என்றும் அழியா ஒளிச் சரீரமாக பெரு வீடு பெரு நிலையான அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.

அந்த எண்ணத்தை வலுவாக வைத்து இதை நீங்கள் செய்து பாருங்கள். உங்கள் வாழ்விலே தெய்வீக நிலையாக மலர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 163

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என்னைப் போற்றிப் புகழ்வதில் பயனில்லை.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் ஞானத்தை நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டி அந்த உணர்வின் தன்மையால் உலகம் போற்றும் உத்தமர்களாக நீங்கள் வளர வேண்டும். அதுதான் என்னைப் போற்றுவதாகும்.

ஆகவே அருள் சக்திகளை கணவன் மனைவி இரு பாலர்களும் வளர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் நீங்கள் ஒன்றி வாழும் நிலைகள் பெற்று குடும்பத்தில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை எப்படி மாற்றிட வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வாருங்கள்.

அதிகாலையில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினைப் பெறவேண்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அலைகளை எளிதில் கவர முடியும்.

யாம் உங்களுக்குள் பதிவு செய்த எண்ணம் கொண்டு அதை நுகர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று தியானியுங்கள். இருவரும் ஒன்று சேர்த்து இவ்வாறு எண்ணினால் உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கல்களிலிருந்து விடுபடும் உபாயங்கள் அங்கே தோன்றும்.

இதனின் துணை கொண்டு நீங்கள் வாழ்ந்து வந்தால் இன்று இந்த நஞ்சு கலந்த உலக உணர்வுகளிலிருந்து மீட்டிடும் நிலைகள் உங்களுக்குக் கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 162

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வக்கீல் படிப்பைப் பயின்றபின் பல சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்கின்றோம். சட்டத்தின் நுணுக்கங்கள் அறிந்து கொண்டாலும் இதிலே பிழைகள் எது? என்ற நிலைகள் நீக்கக் கற்றுக் கொள்கிறோம்.

கற்றுக் கொண்டாலும் தனக்கு நெருங்கிய ஒரு நண்பன் இருக்கின்றான் என்றால் அவன் தவறு செய்தால் அவனைக் காக்க முற்படுகின்றோம்.

“சட்டத்தில் எங்கே குறை இருக்கிறது…?” என்று நண்பனை காக்கத் தவறும் செய்கின்றோம்.

யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள். சில நிலைகளில் நடப்பதைச் சொல்கிறேன். (சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகள் இப்படி)

அதே மாதிரி ஆடிட்டர் படித்தவர்கள் அதன் வழிகளிலே கற்றுணர்ந்தாலும் அவர் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு தன் வாடிக்கையாளர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று தான் அவருடைய தத்துவமாக இருக்கின்றது.

விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற சர்க்கார் நிலைகளிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை தான் இங்கே வருகின்றதே தவிர பொது விதியான நிலைகள் கொண்டு செயல்படும் நிலைகள் இல்லை.

தவறு அங்கேயும் அங்கே வரக்கூடாது இங்கேயும் நாம் தவறான நிலைகள் செய்யக்கூடாது என்ற நிலைகள் அதிலே எது மையமாக இருக்கிறதோ அதை உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டு செயல்படும் இந்த நிலையும் இல்லை.

ஏனென்றால் அப்படிப் போனால் இவர் “பிழைக்கத் தெரியாதவர்…” என்ற பட்டமே வந்து விடும். இந்த ஆறாவது அறிவால் வரக்கூடிய நிலைகளை இவர் இந்த வேலைக்கு லாயக்கில்லை. இவர் எதற்காக இங்கே வந்தார்..? என்று சொல்வார்கள்.

நியாயத்திற்காகப் போராடினால் அவர் “பைத்தியக்கார வக்கீல்…” என்று சொல்வார்கள். நியாயத்திற்காக வேண்டி ஆடிட்டர் சொன்னால் இவருக்குப் “பிழைக்கத் தெரியவில்லை..!” என்று சொல்வார்கள்.

இப்படித் தவறு செய்பவனுடைய நிலைகள் தவறு செய்து விட்டேன் என்றால் அந்தத் தவறை அது சாதகமாக வைத்து எந்தச் சட்டத்தில் எது ஓட்டை இருக்கின்றதோ அதைப் பிடித்து தவறு செய்தவரைக் காப்பாற்றிக் கெட்டிக்காரராகும் நிலை தான்,

அப்பொழுது எங்கள் வக்கீல் “மிகவும் கெட்டிக்காரர்” என்பார்கள்

குற்றவாளியாக இருப்பவன் இவன் முதன்மையாக (நல்லவனாக) வந்து விடுகின்றான். குற்றவாளி செய்யக்கூடிய தவறை அவர் ஏற்றுக்கொண்டு வக்கீல் குற்றவாளியாக வேண்டும்.

குற்றத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைகளுக்கு இவர் வாதிடுகின்றார். இப்படித்தான் இன்றைய நிலைகள் கல்வியில் ஞானங்கள் வரப்படும் போது இது தான் வருகின்றது.

ஏனென்றால் இது விஞ்ஞான அறிவால் மனிதனால் கற்றுணர்ந்த நிலைகள் இத்தகைய இயல்புகள் வருகின்றது. (நான் யாரையும் குறை கூறவில்லை)

மெய்ஞானியின் உணர்வுகளை நாம் ஒவ்வொரு சமயம் நாம் எடுக்கப்படும் போது நம்மை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து குற்ற இயல்புகளை அகற்றச் செய்யும்.

இயற்கையின் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது? அந்த உணர்வின் ஆற்றல் மனிதனை எப்படி இயக்குகின்றது? என்ற நிலையை அறிந்தவர்கள் ஞானிகள்.

காலத்தால் சந்தர்ப்பத்தால் இணைந்த இந்த நிலைகளை இது எவ்வாறு முறியடிப்பது? என்ற ஆற்றல்களை வளர்த்துக் கொண்டவர்கள் மகரிஷிகள்.

சாதாரண மனித உணர்வின் இயக்க நிலைகள் இது மற்றவர்களைக் குற்றவாளியாக்கும். அந்த மெய்ஞானிகள் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 161

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி அவசியம் தேவைப்படுகிறது.

இந்த உடலிலிருக்கும்போது தான் சக்திகளைக் கூட்ட முடியும் இந்த உடலை வைத்துத்தான் அந்த மெய் ஒளியைப் பெற முடியும். அந்த மெய் வழியைப் பெறுவதற்காகத்தான் மகரிஷிகளும் ஞானிகளும் அத்தனை பாடுபாடுபட்டனர்.

இதை நாம் எண்ணி எடுத்தால் இரண்டு பயன்களும் விளையும்.

இந்த மனித வாழ்க்கையில் செல்வமும் நமக்கு இணைந்து வரும். நம் மனமும் அமைதி பெறும். உடலை விட்டுப் பிரியும் பொழுது விண்ணுக்குப் போகிறோம்.

இந்த உடலில் நோயோ மற்ற துன்பமோ வந்தால் துன்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அது பாட்டுக்கு வரும் போகும். அந்த நேரத்தில் துன்பம் வந்தது…! அது அது பாட்டுக்குப் போகும் நாங்கள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் என்று இதை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும்.

எனக்குள் இந்த அழுக்குச் சேராத நிலை பெற வேண்டும் என் சொல் கேட்பவர்களுக்கு இனிமையாக இருக்க வேண்டும். என் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும். இந்தச் சக்திகள் அனைத்தும் என்னுள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் ஈஸ்வரா.. என்று உயிரிடம் சொல்லி முறையிட வேண்டும்.

இந்த உணர்வை நாம் ஆழமாக பதியச் செய்து இயக்கமாக மாற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 160

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு மகான்களும் மகரிஷிகளும் தன் உடலுக்குள் வளர்ந்த மெய் உணர்வுகளை தான் பெற்ற இனிமையின் நிலைகளைத் தன் இன மக்கள் பெற வேண்டும் என்று ஒரே நோக்குடன் எல்லாரும் மகிழ்ந்திட வேண்டும் என்று தனக்குள் விளைவித்த உணர்வின் சொல்லை நமக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்தார்கள்.

ஆனால் காலத்தால் அருள் ஞான வித்துகளை அது முளைக்காது தடைப்படுத்தி  விரையமாக்கி விட்டோம். காலத்தால் அருள் ஞான வித்துகள் அனைத்தும் முளைக்காது சென்றதால் அருள் ஞானியின் உணர்வுகள் தேங்கிவிட்டது.

அதற்குண்டான ஊட்டச்சத்து இல்லாது தவித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் மகரிஷிகளின் உணர்வைப் பெறும் பாக்கியத்தை எமக்கு (ஞானகுரு) மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் ஏற்படுத்தினார்.

குருநாதர் அவர் பித்தனைப் போன்று தான் வாழ்ந்தார். வாழ்க்கையில் இன்னல் எதுவென்றே அறியாத நிலைகளில் இன்னலைப் போக்கிடும் ஒளியின் சுடராக விண்ணின் ஆற்றலை அவர் தனக்குள் விளைய வைத்து ஒளியின் சுடராகப் பெற்றார்.

அவருக்குள் ஒளியின் சுடராக விளைய வைத்த அந்த ஒளியின் சுடராகப் பெறும் நிலையைப் பித்தனாக இருந்து எமக்குள் அது ஆழப் பதியச் செய்து அருள் வித்தை வளர்க்கும் முறையையும் வகுத்துக் கொடுத்தார்.

விண்ணின் ஆற்றல் மிக்க நிலையும் மகரிஷிகளால் வளர்க்கப்பட்ட அருள் ஞான வித்துக்களைச் சாமானிய மனிதரும் அதை எவ்வாறு எடுத்திடல் வேண்டும்… பதிந்திடல் வேண்டும்… அதை எவ்வாறு பருகிட வேண்டும்… வளர்த்திடல் வேண்டும்…? என்ற நிலையை உருபடுத்தி உணர்த்தினார் குருநாதர்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்குள் பதித்த அருள் ஞான வித்தை அதை வளர்ப்பதற்கு இந்தப் பூமியில் எங்கெங்கெல்லாம் அந்த அருள் ஞான சக்தி தொடர்ந்துள்ளதோ அங்கெல்லாம் கால்நடையாக நடக்கச் செய்தார்.

உலகம் முழுவதும் எம்மை அழைத்துச் சென்று அந்த ஞானிகளின் உணர்வின் ஆற்றலைப் பருகும் முறையைக் காட்டி ஆங்காங்கு படர்ந்துள்ள அந்த மகரிஷிகளின் உடலில் விளைந்த மெய் உணர்வின் அலைகள் படர்ந்திருப்பதை நீ நுகரு அதனின் அந்த ஆனந்த சக்தியான வித்தை உனக்குள் வளர்த்துக் கொள் என்று காட்டினார்.

இந்தப் புவி முழுவதும் சுழன்று வந்து அவர் காட்டிய அருள் ஞான வித்துக்கள் அனைத்தும் வளர்த்து அந்த வித்தின் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்வதற்குத்தான் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை அமைத்தது…!”

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைகளுக்காகத்தான் குரு காட்டிய வழிகளில் உங்களுக்குள் அது பதியச் செய்து கொண்டே வந்தது.

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டும் அழியாப் பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்த மகரிஷியின் ஆற்றலில் விளைய வைத்த அந்த அருள் ஞான வித்தை நமக்குள் பருக வேண்டும்… அது பெருக வேண்டும் நமக்குள் பெருக்கிடல் வேண்டும்  எல்லோருடைய அருள் ஞானப் பசியையும் போக்கிடல் வேண்டும்.

அந்த மாமகரிஷியின் நினைவு கொண்டு அவருடைய துணை கொண்டு விண்ணின் ஆற்றல் மிக்க நிலைகளை அருள் ஞான சக்தியின் தொடர் கொண்டு எண்ணத்தால் அதை நாம் வளர்த்திடுவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 159

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் மனிதன் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவா நிலை அடைந்தான் அகஸ்தியமாமகரிஷி.

அவன் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகள்… அவன் உடலில் விளைய வைத்த அந்தச் சக்திகள் இப்பொழுது உபதேசிக்கின்ற மாதிரி அவன் உடலிலிருந்து வந்த வாசனைகளை எல்லாம் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர்ந்து இந்த வாழ்க்கையில் நம் உடலிலிருந்து வரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்ற வேண்டும்.

ஒளியான அந்த அகஸ்தியனின் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அந்த வினைக்கு நாயகனாக அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும்.

“மனிதனின் கடைசி எல்லை அழியா ஒளிச் சரீரம் தான்”.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 158

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை வளர்த்த தாய் தந்தையர்களின் மூதாதையர்களும் நம்மை வளர்த்திட எத்தனை நிலைகள் நாம் சிறு வயதாக இருக்கும் பொழுது தாத்தா பாட்டி என்று சொன்னால் அவருடைய சிரமத்தையும் பார்க்காது நமக்கு எத்தனையோ நிலைகளைச் செய்தார்கள்.

அதே போல் அந்த ஆன்மாக்களையும் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செலுத்த வேண்டும் என்று இத்தகைய நிலைகளையும் குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகக் காட்டினார்.

ஆனால், இன்றைய நிலையில் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்கள் குல தெய்வங்கள் குடும்பத்தை காத்திட்ட நிலைகள் கொண்டு அவர் ஆன்மாக்கள் பிரிந்து சென்றபின் என்ன செய்கின்றார்கள்?

அமாவாசை அன்று இருண்ட நாளில் அவருக்கு வேண்டிய உணவை வைத்து அவர்களுக்கு வேண்டிய மற்றவைகளையும் படைத்து அழைக்கின்றார்கள்.

அவர்களை மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே இழுத்துப் பழகி விட்டனரே தவிர ஒளி என்ற சரீரம் கொண்ட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கும் நிலை முழுவதுமே அற்றுப் போய்விட்டது.

ஐதீகம் சாஸ்திரம் என்ற நிலைகள் இருளான அமாவாசை நாள்களில் அவர்கள் உணவாக உட்கொண்ட நிலைகள் கொண்டு அவர்களை ஏங்கி இந்தப் புவிக்குள் இழுக்கும் நிலைகளாகச் சாஸ்திர விதிகளை மாற்றி விட்டனர்.

ஆனால், அவர்களுக்கு உணவு எப்படிக் கொடுக்க வேண்டும்?

இந்தப் புவியிலே விளைந்த அந்த ஆன்மாக்களைச் “சப்தரிஷி மண்டலத்துடன்…” இணைக்கக் கற்றுக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கிறது? எதனின் உணர்வை உனக்குள் கவர வேண்டும்? எதனின் வலுவின் துணை கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்? அந்த ஆன்மாக்களை உந்தி விண்ணிலே வீசி விட்டால் அந்த ஞானிகள் அருகிலே செல்லும்போது உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகின்றது.

ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது? என்று அவர் எம்முடன் இருந்தே இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் “நானல்ல…,” குருநாதர் காட்டிய உணர்வின் தன்மையே இது.

ஒரு மரம் எவ்வாறு தன் மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய உணர்வு கொண்டு இயக்குகின்றதோ இதைப்போல ஒரு மனிதனுக்குள் எடுத்துக்கொண்ட உணர்வின் செயல் எதுவோ அதனின் நிலைகளையே பேசுவர். அதனின் நிலையிலேயே வலுப்படுவர்.

இதைப்போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருக்குள் விளைந்த ஆன்ம ஞானத்தை மெய் உணர்வின் தன்மையை விண்ணில் வளர்ந்துக் கொண்டிருக்கும் உணர்வுகளைப் பரப்பும் மார்க்கத்தைக் காட்டினார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 157

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் தியானம் செய்தேன். என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என் குடும்பத்தில் இப்படி நடந்து விட்டது…! என்றால் என்ன அர்த்தம்…?

இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகின்றீர்கள் என்று அர்த்தம்.

“வேதனை…” என்ற உணர்வைப் பெருக்கி எல்லாவற்றையும் செய்துவிட்டு “தியானம் செய்தால்… என்னத்திற்கு ஆகும்…?” என்று எண்ணினால் அது நமக்கல்ல.

தியானத்தைக் கூட்டி எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அந்த உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் சங்கடங்களையோ சிரமங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளை உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

கணவன் மனைவிக்குள் அந்தப் பேரானந்த நிலையை தான் என்றும் உருவாக வேண்டும். சந்தர்ப்பத்தில் கோபம் வரும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஏதோ ஒன்றல்லவா… “நம்மை இயக்குகின்றது..!” என்று உடனே சுதாரித்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து ஆத்ம சுத்தி செய்யும் உணர்வு வந்து விட்டது என்றால் “நான் செய்வது தான் ரைட்…!” என்ற எண்ணம் வராது.

பால் ருசியாகத் தான் இருக்கும். அதிலே பாதாமைப் போட்டால் இன்னும் ருசியாகத் தான் இருக்கும்.

ஆனால் ஒரு துளி காரம் பட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சிகளைத் தான் ஊட்டும். அதைப் போன்று தான் நம் நல்ல மனதில் வெறுப்பின் உணர்வை ஊட்டினால் அது விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரோளி பெற வேண்டும் அதைத் தணித்து சுவையைக் கொண்டு வர வேண்டும்.

நாம் கடைசியில் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நமது உயிர் உருவாக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 156

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் என்றுமே பெறவேண்டும் என்று எண்ணுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானமாக்குங்கள்.

ஏனென்றால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் தீமை என்று வந்தால் அந்தத் தீமை புகாது தடுக்க அருளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள இது உதவும்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உங்கள் நினைவு முழுவதையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதனின்று வரும் பேரருள் பேரொளியை ஏங்கிப் பெறுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் உங்களுக்குள் ஏங்க வைத்து அதை நுகரச் செய்து அந்த வலிமையை ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வலிமையின் துணை கொண்டு உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியை ஊட்ட முடியும்.

உங்கள் கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரம் எப்படி இருக்கும் அது எங்கே இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை.

உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் எங்கேயோ இருக்கின்றார். அவர் இந்த மாதிரி எல்லாம் அவஸ்தைப்படுகின்றார் என்று கேள்விப்பட்டவுடன் உங்களுக்குள் பதிவாகின்றது.

அது நினைவாகும் பொழுது என்ன செய்கின்றது? அவர் அங்கே “எப்படிச் சிரமப்படுகின்றாரோ..! என்ன செய்கின்றாரோ..?” என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள்ளும் இயங்குகின்றது.

இதைப் போல துருவ நட்சத்திரம் எங்கேயோ இருக்கின்றது. உங்கள் கண்களால் பார்க்க முடியவில்லை. குருநாதர் எனக்குக் காட்டினார். பார்த்தேன்.

அவர் காட்டிய நிலைகள் கொண்டு அதனின் ஆற்றலைப் பெற்றேன். அந்த உணர்வினை இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றேன்.

பதிவானதை நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து உங்கள் கண்களாலேயும் பார்க்க முடியும். இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த அருள் ஒளிகள் இங்கே படர்ந்து வருவதையும் உங்களால் பார்க்க முடியும். நீல நிற ஒளி அலைகள் சுழன்று வருவதைப் பார்க்கலாம். ஒரு வெல்டிங்கைத் (WELDING) தட்டினால் “பளீர்..,” என்று வெளிச்சமாவது போல் தெரியும்.

ஏனென்றால், பழக்கப்பட்டோர் உணர்வுகளில் இதைப் பெற முடியும்.

பேசுவது நான் அல்ல. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வே இங்கே பேசுகின்றது.

அவர் ஒளி என்ற உணர்வைப் பெற்றார். அது உங்களுக்குள் வந்து அதைப் பெறும் தகுதி பெறக் கூடிய சந்தர்ப்பம் தான் இப்பொழுது சொல்லும் இந்தத் தியானம்.

ஏனென்றால் அவர் ஒளியான உணர்வை நீங்களும் பெற முடியும்  பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் பதிவாக்குவது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள். உங்கள் உடலிலுள்ள எல்லா நினைவுகளையும் ஒன்றாக இணைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதனின்று வரும் பேரொளியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். மெதுவாகக் கண்களை மூடுங்கள். உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு இங்கே வரும் பொழுது உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமையான அணுக்களுக்குத் தீமையின் உணர்வுகள் போகாதபடி இப்பொழுது எடுக்கும் தியானத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படுகின்றது.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமையான சந்தர்ப்பமாக இருந்தாலும் அந்த நேரத்திலும் அதை மாற்றிட இதைப் போன்று தியானத்தைச் செய்யுங்கள்.

உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 155

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் உபதேசிக்கும் உணர்வுகளைப் படிக்கும் சமயத்தில் பல உணர்வுடன் இருப்பார்கள்.

என் குடும்பத்தில் கஷ்டம்,.. என் குடும்பத்தில் தொல்லை.. என் குடும்பத்தில் சண்டை… என் பையனின் நிலைகள் இப்படி… நான் கடன் கொடுத்தவன் ஏமாற்றுகின்றான்… அவன் தரவே முடியாது என்கிறான்… என் உடல் நிலை சரியில்லை… என் குடும்பத்தில் என்னை எல்லோரும் எதிர்க்கிறார்கள்…! என்று இப்படிப் பல சிக்கல்களின் உணர்வு கொண்டு தான் இதைப் படிக்கின்றோம்.

எம்முடைய அருள்ஞான உபதேசங்களைப் படிக்கும் நேரம் அந்த மாதிரி அணுக்களானால் அந்த அணுவெல்லாம் தன் உணவாக எதைக் கேட்கும்…?

எவர் மேல் பகைமை கொண்டு சிக்கல்கள் ஆகி இந்த உணர்வின் தன்மை அணுவாக ஆனதோ… “அது அது…” தன் உணர்ச்சிகளை உந்தும்.

உபதேசிக்கும் உணர்வை எடுக்கவிடாது.., “அது உந்தித் தடைப்படுத்தும்”. “நல்ல உண்மைகளைப் பெறமுடியாதபடி… தடைப்படுத்திக் கொண்டிருக்கும்”.

தடைப்படுத்தும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்… “எப்படியும் நீங்கள் அதிலிருந்து மீண்டிட வேண்டும்” என்று தான் வலிமையான உணர்வு கொண்டு “உங்கள் கவனத்தை இங்கே திருப்பி” அருள் உணர்வு கொண்டு உங்களுக்குள் பதிவு செய்து கொண்டுள்ளோம்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் “அணுக்களாக விளைந்து” பகைமையற்ற உணர்வுகள் உங்கள் உடலிலே விளைய வேண்டும் என்ற நிலைக்கு உபதேசிக்கின்றோம்.

உங்கள் பார்வை பகைமையை உட்புகாது தடுக்கும் நிலையாக வர வேண்டும் என்றும்.., “உங்கள் பார்வை” எங்கே பகைமை உருவாகின்றதோ “அங்கேயே.., அதை அடக்கிடும் சக்தி” பெறவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

பகைமை என்றால் விஷத் தன்மை கொண்ட விஞ்ஞான அறிவால் வெளிப்படுத்திய உணர்வுகள் “எத்தனையோ.., எத்தனையோ” நமக்கு முன் சந்தர்ப்பத்தால் வந்து கொண்டே இருக்கின்றது.

அத்தகைய தீமை செய்யும் நிலைகளை நாம் காண நேர்கின்றது. செவி வழி கேட்கவும் நேர்கின்றது.

இதைப் போல “செவி கொண்டு கேட்டுணர்ந்த உணர்வுகள் உடலுக்குள் பதிவாகி.., கண் வழி கொண்டு நுகர்ந்தறிந்து..,” அதன் வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்.., இயற்கையின் செயலாக்கங்களிலிருந்து “நம்மை எப்படி மீட்டிக் கொள்ள வேண்டும்..?”  என்பதைத்தான் குருநாதர் காட்டிய வழிகளில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

சூரியன் எவ்வாறு தன் உணர்வின் தன்மை கொண்டு மற்றவைகளை வளர்க்கின்றதோ அதைப் போன்று குருநாதர் நாம் எல்லோரும் அருள் ஞானம் பெறவேண்டும் என்ற ஆசையில் வளர்க்கின்றார்.

அவர் இன்று சூரியனாக இருக்கின்றார். அகஸ்தியன் பெற்ற உண்மைகளை அவர் கண்டார். அவர் வாழ்க்கையில் அறிந்துணர்ந்தார். அவர் வழியில் அவர் கண்ட உண்மையும் அதன் உணர்வை எனக்குள் பதியச் செய்தார்.

“பதிந்த உணர்வுகளை…” மீண்டும் நினைவு கொண்டேன். அதை நுகரும்… அறியும்… சந்தர்ப்பத்தை எனக்குள் உருவாக்கினார்.

அதன் உணர்வின் தன்மை பெருகும் நிலைகளில்.., “அவர் கவர்ந்து கொண்ட உண்மைகள்.., அவர் வெளிப்படுதிய உணர்வுகள் எதுவோ” அதை நான் பருகினேன்.

எனக்குள் அந்த அணுவின் தன்மையை உருவாக்கினார். அது அணுவான பின் தன் உணவுக்காக ஏங்குகின்றது. அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது.

உணர்வை அறிகின்றேன். “அதையே” இங்கே உங்களிடம் சொல் வடிவில் வெளிப்படுத்துகின்றேன்.

அதைக் கேட்கும் பொழுதும்.., படிக்கும்பொழுதும் உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது. இதை உங்களுக்குள் அணுவாக மாற்றிவிட்டால் தெளிந்த மனம் வரும்.

ஏற்றுக் கொள்ளும் பண்பு… உங்களுக்கு வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 154

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியான சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி ஏகாதசி ஏகாந்தமாக வாழுகின்றார்.

வைகுண்ட ஏகாதசி அன்றுதான் நமது குருநாதர் ஒளியின் சரீரம் ஆனார். நமது குரு காட்டிய அருள் வழிகளைத்தான் உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

தீமைகளிலிருந்து விடுபடும் நிலையாக அருள் ஒளியை எப்படிப் பெறவேண்டும் பெற முடியும் என்று உணர்த்திய உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தைத் தான் எனக்குக் காட்டினார்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை எடுத்து நீ பெற்றுக் கொள். இருளை அகற்ற அது உதவும். மெய்ப் பொருளைக் காணவும் உதவும். உன்னை அறியாது சேர்ந்த தீங்கை அகற்றிடவும் உதவும் என்று கூறினார்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார்.

அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஒருவர் தீங்கு செய்கிறார் தீங்கு செய்கிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த உணர்வை அதிகமாகச் சேர்த்தால் நமக்குள் தீங்கு செய்யும் உணர்வுகள் வந்து  நம்மையும் தீமை செய்ய வைத்துவிடும்.

ஆகவே தீமைகளை நுகர்ந்தால் தீமை செய்யத்தான் முடியுமே தவிர  நன்மை பயக்க முடியுமா என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

குருநாதர் எம்மிடம் சொன்னது:- ஒவ்வொரு நொடியிலேயும் ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நாம் பார்த்து அதனை நுகர்ந்து விட்டால்  வேதனையிலிருந்து அவர் மீள வேண்டும் என்று தான் நீ எண்ணுதல் வேண்டும்.

அதே போல ஒருவன் தீங்கு செய்ய நினைத்தால் அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்று தான் நீ எண்ண வேண்டும்.

நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவர்களைத் தீமையிலிருந்து மீட்க வேண்டும். வேதனைகளிலிருந்து மீட்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

உங்களுக்கும் இதைத்தான் யாம் தெளிவுபடுத்துவது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 153

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகள் அனைவவருமே 27 நட்சத்திரத்தினுடைய உணர்வுகளை எடுத்துத் தான் அது அனைத்தையும் ஒன்றாக்கி தனக்குள் ஒளியாக ஒளியின் சரீரமாக மாற்றினார்கள்.

எதுவும் இயக்கமல்லாது அதனின் உணர்வின் இயக்கமாக மாற்றி NEGATIVE/POSITIVE +/- கரண்ட் எப்படி உண்டாகின்றதோ அதைப் போல சம நிலைப்படுத்தி ஒருமையின் நிலைகள் கொண்டு ஒன்றைத் தனக்குள் இறையாக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்.

அதனின் தன்மையை நீங்களும் பெற வேண்டும் என்ற உணர்வுடன் தான் இந்த 27 நட்சத்திரத்தின் சக்தியை உங்களை எடுக்கச் சொல்கிறோம்.

மகரிஷிகள் இதையெல்லாம் வடித்துக் கொண்டவர்கள்.

அந்த உணர்வின் சத்துக்களை இதனுடன் இரண்டறக் கலந்து அது புதுப் புது எண்ணங்களாக உருவாக்கி அதனின் துணை கொண்டு இதை நீங்கள் பருகும் நிலைக்கே இதைச் செய்கின்றோம்.

உங்கள் வாழ்க்கயில் நீங்கள் எதை எண்ணினாலும் இதைப் பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் இருப்பீர்கள் என்றால் அது ஊழ் வினையாக உங்களுக்குள் பதிவாகி அதனின் செயலாக உங்கள் உணர்வுகள் இயங்கி அந்த மெய் ஞானியின் உணர்வின் ஒளியைப் பெறக்கூடிய தகுதியை பெறுகின்றீர்கள்.

இப்படி அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நமக்குள் வலுபெறுகின்றது. அப்பொழுது அதனின் துணை கொண்டு நமது ஆன்மாவாக மாறுகின்றது.

இந்த உணர்வின் துணை கொண்டு தான் நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெற முடிகின்றது. ஆகவே உயிரை ஓம் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதனின் நினைவு கொண்டு செயல்படுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 152

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியர் கண்ட பேருண்மைகளை நீங்களும் காண வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்

அந்த மெய் ஞானி உணர்வுகளை நுகர்ந்தால் வந்தால் இந்தத் தீமைகளை எல்லாம் அகற்றிவிடும். மெய்ப் பொருளை வளர்க்க முடியும். தீமையற்ற நிலையாக வாழ முடியும் என்று சொல்கிறோம்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் இல்லை. இந்த உடல் நிலையானதில்லை. ஆனால் இந்த உயிர் என்றும் நிலையானது.

அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மையை இந்த மனித உடலில் இருந்து தான் கருவாக்கினான் அகஸ்தியன்.

அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்….!

இந்த உடலை விட்டுச் சென்றால்… “என்றும் நிலையான… ஒளியின் சரீரமாக இருக்க முடியும்…!” என்ற அந்த நோக்கத்துடன் எவர் வருகின்றனரோ அவர்கள் அனைவருமே நிச்சயம் அகஸ்தியனைப் போன்று பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 151

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் உணர்வைத் தன்னுள் கண்டுணர்ந்து இந்த மண்ணுலகை வென்று விண்ணுலகைச் சென்றடைந்து முழுமை பெற்றார்.

விண் செல்வதற்குண்டான பாதையை அவர் கற்றார். இந்த உணர்வை முழுமை பெறுவதற்குத் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று எண்ணினார்.

அந்தத் துணையைத் தான் பெற்றாலும் விண்ணுலகம் செல்வதற்கு விண்ணிலே உந்தித் தள்ளுவதற்கு தனக்குகந்த ஆதாரங்கள் தேவை. விழுதுகள் இல்லாது மரம் வளர்ந்திடாது ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார். அதே போலத்தான் ஒவ்வொரு உயிருக்கும் விழுதுகள் தேவை.

நாம் எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு விண் சென்ற மகா ஞானிகளின் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் எடுத்து அந்த விழுதுகளாக நாம் ஓவ்வோருவரும் உருவாக வேண்டும். உங்களுக்கு நான் விழுது. எனக்கு நீங்கள் விழுது என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.

விழுது இல்லாது ஒன்றின் துணை இல்லாது ஒன்று விளையாது என்ற நிலையைக் குருநாதர் தெளிவாகக் காட்டினார். அதே சமயத்தில் நான் மட்டும் தனித்துத் பெறுவேன். மற்ற அனைத்தையும் வெறுப்பேன் என்ற நிலையில் பெற இயலாது.

இதை எல்லாம் “துணுக்குத் துணுக்காகச் சொல்கிறேன்…!” என்று எண்ண வேண்டாம்.

இதை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் நினைவாக்கும் பொழுது சந்தர்ப்பத்தில் தீமைகளைப் போக்கும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

நீங்கள் அனைவரும் அவ்வாறு பெறவேண்டும் என்பதற்காகத்தான் தெளிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 150

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது சூரியக் குடும்பத்தில் பூமியில் உருவான மனிதன் சில் உண்மைகளைக் கண்ட பின் மின்னல்கள் தாக்கி கடல்களிலே படும்போது மணல் ஆவதை அதற்குள் இருக்கும் நிலையை வடிகட்டி கதிர் இயக்கப் பொறிகளாக மாற்றுகின்றான்.

இன்று அணு குண்டுகளாகவும் லேசர் கதிரியக்கங்களாகவும் அதை உருவாக்கி விட்டார்கள்.

தன்னுடைய உடல் ஆசைக்காக வேண்டி நாட்டு ஆசைக்காக வேண்டி உலகை அழித்திடும் தன்மைகளாக அது இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

நம் பூமியில் விளைவதை சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இந்தக் கதிரியக்கங்களை கவர்ந்து இன்று நமது பிரபஞ்சமே கதிர் இயக்கமாக மாறிவிட்டது.

மனிதனின் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிலையால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்து விட்டது. சூரியனும் சிறுகச் சிறுக செயல் இழந்து கொண்டு இருக்கின்றது. அது செயலிழக்கும் பொழுது அதனுடன் சேர்ந்த நம் பூமியும் அது செயல் இழக்கும்.

இங்கே வாழும் மனிதர்களும் அசுர உணர்வு கொண்டு தீவிரவாதம் என்ற நிலைகளில் ஒருவருக்கொருவர் கொன்று சாப்பிடும் நிலை வருகின்றது.

பாதரசங்களை உருவாக்கும் சூரியனுக்குள் விஞ்ஞானக் கதிரியக்கச் சக்திகள் கலக்கப்பட்டு அந்த பாதரசங்களைக் கருகிய விஷத் தன்மையாக மாற்றி உமிழ்ந்து கொண்டுள்ளது.

சூரியன் செயல் இழக்கும் தன்மையால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் செயலிழக்கும் நிலை ஆகின்றது. நான் (ஞானகுரு) சொல்வது வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவாக்கினால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் உணர முடியும். சூரியன் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் நீங்கள் உணர முடியும்.

ஆனால் இதிலிருந்து தப்பிய இந்தத் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் என்றுமே அழிவதில்லை. எத்தகைய நஞ்சானாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்துகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம். பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவான பின் நினைவைக் கூட்டி நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் ஒவ்வொருவரும் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 149

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைக்கப்படும் பொழுது அந்த நஞ்சினை ஒளியாக மாற்றி அறிவின் ஞானமாகவும் இந்த மனித வாழ்க்கையில் இருளை வென்றிடும் உணர்வும் அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றும் வலிமையும் நமக்குக் கிடைக்கின்றது.

அதைப் பெறச் செய்வதற்காகத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஆகவே மறவாதீர்கள். உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.

இந்த உடல் உங்களது அல்ல. உயிரால் தான் உருவாக்கப்பட்டது.

அறிவால் உணரப்பட்ட உணர்வின் தன்மை “தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் விளையும் தீமைகளை நாம் அகற்றக் கற்றுக் கொண்டால் நம்மை இயக்கிய நம்மை உருவாக்கிய உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலைகளை அடையலாம்.

யாம் உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் நிலைகளை நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதைப் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 148

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் ஒளி பெற வேண்டும். என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். உடல் நலம் பெற வேண்டும். எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும். என் தொழில் நலம் பெற வேண்டும். என் பையன் நல்லவனாக வேண்டும் என்று கேளுங்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களுக்கு இந்த நிலை வேண்டும் என்று தான் நான் கேட்கச் சொல்கிறேன்.

எத்தனை பேர் இப்படிக் கேட்கிறீர்கள்…!

இவ்வளவு தூரம் நான் சொல்கிறேன். இருந்தாலும் இப்பொழுது தான் உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். “நீங்கள் பெரிய மகான்…” என்று சொல்லி “என் கஷ்டம் இப்படி இருக்கிறது…!” என்று சொல்லி உடனே அழுக ஆரம்பித்துவிடுகிறார்கள்.

நான் சொன்னதை எல்லாம் மறந்துவிடுகின்றார்கள். அவர்களுக்குள் எது பதிவானதோ அந்த உணர்வு தான் வேலை செய்கிறது.

யாம் சொல்லும் உயர்ந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அவர்கள் பெறும் தகுதியை அவர்கள் உடலுக்குள் இருக்கும் உணர்வே தடைபடுத்துகின்றது என்று உணர்கிறார்கள். உணர்ந்தாலும் அதை அறிய முடிவதில்லை.

ஒரு இடத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்றால் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். இன்னும் கொஞ்சம் இருக்கிறது அதையும் தூய்மையாக்கிப் பழக வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை பெற்று உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது ஒவ்வொரு நொடியிலும் விழித்திருத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 147

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகளைப் பற்றி யாம் உபதேசிக்கின்றோம். மகரிஷிகள் தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டி உங்களை மேல் நோக்கிச் சுவாசிக்க வைக்கின்றது.

அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது கிடைக்கவேண்டும் என்று பெருமூச்சாக அமைந்து அந்த ஆற்றல் கிடைக்கின்றது.

சிலர் அடி பணியும் நிலைகள் கொண்டு கீழ் நோக்கி எண்ணிச் சுவாசிக்கின்றார்கள். மேல் நோக்கி எண்ணி எடுப்பதற்கு பதில் கீழ் நோக்கி எடுக்கும் பொழுது சாதாரண மனிதருடைய உணர்வைத்தான் பெற முடியும்.

ஏனென்றால் நாம் பெறவேண்டிய ஆற்றல் விண்ணிலே இருக்கின்றது. விண்ணின் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்களும் அதே வழியில் எண்ணினால் அந்தச் சக்திகளைப் பெறுவது எளிதாக இருக்கும்.

சாதாரண வாழ்க்கையில் பெரியவர்களுக்குப் பாத பூஜையும் பாத நமஸ்காரமும் கும்ப அபிஷேகமும் செய்து அடிபணிந்தே பழகிவிட்டோம்.

நமக்குள் வரும் இந்த ஆசை நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் நிலைகளுக்கே அழைத்துச் செல்லும். இந்த உயர்வு நமக்குத் தேவை இல்லை. உயர்ந்த எண்ணங்கள் தான் நமக்குத் தேவை. நாம் எந்த உயர்ந்த உணர்வின் தன்மையைப் பெறவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு வருகின்றமோ அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் தூண்ட வேண்டும்.

பிறரைப் போற்றிப் புகழ்ந்து பேசித் துதிக்க வேண்டும். அப்படியெல்லாம் போற்றினால் தான் நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நம் எண்ணங்கள் செல்லக்கூடாது.

மெய் ஒளி பெறும் உயர்வான எண்ணங்களை எடுத்து எடுத்து எடுத்து நம் உடலுக்குள் தீமையான உணர்வுகளையும் தீய வினைகளையும் (அவைகளை) அடிபணியச் செய்ய வைக்க வேண்டும். இது நம் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 146

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று அவர் அருளை நீங்களும் பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான  அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிப் பெறுங்கள்.

கண்களைத் திறந்தே தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கவும்.

இப்பொழுது நமது குரு அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குக் காட்சியாகவும் கிடைக்கலாம்.

கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கும் பொழுது குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை நீங்கள் உணர முடியும். காட்சியாகவும் பார்க்க முடியும்.

நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது உங்கள் சுவாசித்திற்குள் வரும். உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் நல்ல உணர்ச்சிகள்  உருவாகும்.

உங்கள் இரத்த நாளங்களில் அந்த அரும்பெரும் சக்தி உடல் முழுவதும் அது சுழன்று வரும் அந்த உணர்ச்சிகள் உங்களில் தோன்றும்.

உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியான அந்த அரும்பெரும் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைப் பதிவாக்கி அந்த நினைவுடன் இவ்வாறு ஏங்கித் தியானித்து வரும் பொழுது உங்கள் ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் ஒளிகள் பெருகத் தொடங்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 145

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மிளகாயை மாவிலே போட்டுச் சுட்டால் “வடை” ஒரு பதத்தில் ருசியாக இருக்கும். அதே மாவில் மிளகாய்க்குப் பதில் இனிப்பைப் போட்டு ஊற்றினால் “பனியாரம்” அது ஒரு பக்குவமாக ருசியாக இருக்கும்.

இதே மாதிரித் தான் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை எதிலே கொண்டு போய் இணைத்தாலும் அதைச் சுவையாக ஆக்கி அந்த உணர்வாக இயக்க வேண்டும்.

வாழ்க்கையில் எந்தெந்த குணங்கள் உங்களை இயக்கினாலும் அந்த நேரம் ஞானிகளின் உணர்ச்சியை உங்களிடம் தூண்டச் செய்து அந்த உணர்வை உங்களுடன் இணைக்கப்படும் போது சந்தர்ப்பத்தால் வந்த தீமையான குணங்களை அடக்கும் சக்தியாக உங்களுக்குள் வளரும்.

அதற்குத்தான் இந்த விரிவுரைகளைக் கொடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று இணைத்து இணைத்து அந்த உணர்வின் அணுக்களாக விளையச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் பள்ளிக்கூடத்தில் படிக்கப்போகும் போது ஒரு விஞ்ஞான அறிவோ அல்லது டெக்னிக்கலோ இதைச் சொல்லும் போது அது திரும்பத் திரும்பச் சொல்லி இது இதனுடன் சேர்க்கப்படும் போது இவ்வாறு ஆகும் என்பார்கள்.

ஒவ்வொரு பாட நிலைகளையும் கொடுக்கும் பொழுது செயின் (CHAIN) தொடர் போல ஒவ்வொன்றையும் இணைத்தே தான் சொல்வார்கள்.

இங்கே இயக்கப்படும் போது இதனுடைய சுழற்சி இப்படி வருகின்றது. இந்த இயக்கத்தின் நிலைகள் இது தடைப்பட்டால் மாற்றங்கள் இப்படி ஆகும் என்கின்ற வகையில் அந்தக் குறிப்பைப் பதிவு செய்து கொடுப்பார்கள்.

அதன் பின் தான் நாம் ஒரு இயந்திரத்தையோ அல்லது ஒரு செயலையோ முழுமையாக இயக்க முடிகின்றது.

இயக்கத்தை மட்டும் சொல்லிக் கொண்டே போனாலும் இரண்டாவது அதைச் செயலாக்கப்படும் போது இதில் இன்னென்ன பிழைகள் என்ன வரும் என்று இதைச் சொல்லாதபடி இயக்கத்தைப் பற்றிச் சொன்னால் தெரியாது… அறியும் ஆற்றல் வராது.

அந்த மாதிரிப் பயனற்றுப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் மறந்தாலும் அந்த மகரிஷிகளின் உணர்வை நினைவுபடுத்தி  உங்களை மீண்டும் மீண்டும் எண்ணி எடுக்கும்படி செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 144

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் தியானம் செய்தேன். என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என் குடும்பத்தில் இப்படி நடந்து விட்டது…! என்றால் என்ன அர்த்தம்…?

இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகின்றீர்கள் என்று அர்த்தம்.

“வேதனை…” என்ற உணர்வைப் பெருக்கி எல்லாவற்றையும் செய்துவிட்டு “தியானம் செய்தால்… என்னத்திற்கு ஆகும்…?” என்று எண்ணினால் அது நமக்கல்ல.

தியானத்தைக் கூட்டி எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அந்த உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் சங்கடங்களையோ சிரமங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளை உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

கணவன் மனைவிக்குள் அந்தப் பேரானந்த நிலையை தான் என்றும் உருவாக வேண்டும். சந்தர்ப்பத்தில் கோபம் வரும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஏதோ ஒன்றல்லவா… “நம்மை இயக்குகின்றது..!” என்று உடனே சுதாரித்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து ஆத்ம சுத்தி செய்யும் உணர்வு வந்து விட்டது என்றால் “நான் செய்வது தான் ரைட்…!” என்ற எண்ணம் வராது.

பால் ருசியாகத் தான் இருக்கும். அதிலே பாதாமைப் போட்டால் இன்னும் ருசியாகத் தான் இருக்கும்.

ஆனால் ஒரு துளி காரம் பட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சிகளைத் தான் ஊட்டும். அதைப் போன்று தான் நம் நல்ல மனதில் வெறுப்பின் உணர்வை ஊட்டினால் அது விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரோளி பெற வேண்டும் அதைத் தணித்து சுவையைக் கொண்டு வர வேண்டும்.

நாம் கடைசியில் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நமது உயிர் உருவாக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 143

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு புலனறிவுகள் ஐந்திலும் கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.

நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம்.

இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.

அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது.

அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெறவேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுதுதான் நீங்கள் அந்த நிலைகளைக் கேட்க முடியும். “கேட்க வேண்டும்” என்ற விருப்ப நிலைகள் வரப்படும் பொழுதுதான் இது உங்களுக்குள் பதிவாகின்றது.

யாம் குருநாதர் மூலம் “அதைத் தெரிந்து கொண்டோம்… இதை அறிந்து கொண்டோம்…” என்று சொல்ல வரவில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 142

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உங்கள் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு துன்ப நிலைகளிலிருந்தும் உங்களை மீட்கச் செய்வதற்கே இந்த உபதேசம். மெய் ஒளியை வளர்த்து தீமைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளுங்கள்.

இந்த மெய் உணர்வுகளைக் கேட்டு வளர்த்துக் கொண்டவர்கள் உங்கள் ஊர்களில் உள்ள மற்றவர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி அவர்களையும் மீட்கச் செய்ய வேண்டும்.

ஞானிகளின் ஆற்றலைப் பெறும் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அவர்கள் அறியாது வந்த இருளை நீக்கும் நிலைகளை நாம் பெறச் செய்ய வேண்டும்.

நாம் வாழும் ஒவ்வொரு இடங்களிலும் ஞானிகளின் உணர்வுகளை நம் மூச்சலைகள் மூலமாக அதைப் படரச் செய்ய வேண்டும்.

அப்படிப் படர்ந்தால் தான் நச்சுத் தன்மைகளிலிருந்து மனிதன் ஒவ்வொரு மனிதரும் விடுபடும் நிலைகளைப் பெருகச் செய்ய முடியும்.

கடல் பெரிதாக இருக்கின்றது. அதில் எது கலந்தாலும் கடைசியில் “உப்பு நீராக” மாற்றிவிடுகின்றது. அதாவது நல்ல தண்ணீரோ அசுத்த நீரோ சாக்கடைத் தண்ணீரோ எதுவாக இருந்தாலும் அந்தக் கடலுக்குள் சேர்ந்த பின் உப்பின் நிலைக்கே அதை மாற்றி விடுகின்றது.

இதை போல தான் நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வுகளும் அந்த மெய் உணர்வின் கடலிலே ஒளிக்கடலான அந்த ஞானிகளின் உணர்வுடன் தான் சங்கமமாக வேண்டும்.

வாழ்க்கையில் வரக்கூடிய அசுத்தங்களோ தவறான நிலைகளைக் கேட்டுணரந்தாலோ உலகில் எங்கெங்கோ நடக்கும் தவறுகளைக் கேட்டு நுகர்ந்தாலோ அதைப் பார்த்தாலோ அதைப் பற்றிப் பேசுவதைக் கேட்டாலோ இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் போய் நம் உடல் என்ற பெரும் கடலுக்குள் உப்பாக மாற்றி அதனின் (தீமையின்) செயலுக்கே நம்மை மாற்றிவிடுகிறது.

ஆனால் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நாம் அனைவரும் சேர்ந்து மீண்டும் மீண்டும் குவியலாகக் கவரப்படும் பொழுது நமக்குள் அது பெருகி நம்மை ஞானியாக மாற்றி மெய் ஒளிக்குள் – மகரிஷிகளின் அருள் வட்டமான அந்த எல்லைக்குள் நம்மை அழைத்துச் சென்று விடும்.

அந்தப் பெரும் கடலான ஒளிக் கடலில் கலக்கும் நிலையை நாம் இன்றிலிருந்தே இப்பொழுதிலிருந்தே செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 141

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம். தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.

பாம்பு எப்படித் அதனை நாம் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ அது போன்றே “சாந்த மனம் கொண்டவன் கூட..,” அவனுக்கு முன் எதிரிகள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.

தீமை செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர் “சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” என்ற நிலைகளில் சாந்த உணர்வு கொண்டோர் இத்தகையை தீமைகளைக் கண்டால் வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை இன்று வந்துவிட்டது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.

அதிலிருந்து மீண்டிடும் நிலையாக குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அருள் ஞானிகள் கண்ட மெய் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைக் கவரும் நிலையாக உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தச் செய்து அந்தப் பேரருள் உணர்வினை ஈர்க்கும்படிச் செய்கின்றோம்.

வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று இன்றைய விஞ்ஞான உலகில் காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து நல்லதை நுகரப் பழக வேண்டும்.

சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்வோம். நம்மை அறியாது வரும் இருளைப் போக்குவோம். மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுவோம்.

அந்த மெய்ஞானிகளின் தொடர்பு கொண்டு முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம்.

முன்னோர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அவர்கள் வெளி வரும் பொழுது இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களையும் நாம் விண் செலுத்துவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 140

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை வென்று இன்றும் ஒளியின் சுடராக நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றித் தொடர்ந்து சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

சப்தரிஷி மண்டலம் பூமியின் துருவப் பகுதியில் நின்று அந்தத் துருவப் பகுதியிலேயே இந்தச் சுழற்சியின் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்தை எடுத்துக் கொண்டால் துருவத்தினை மையமாகக் கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் தான் சுழன்று வரும்.

அது ஒரு வட்டமாக அமைந்திருக்கும்.

நம் பூமியில் மனிதனாக வாழ்ந்தவர்கள் ஒளியின் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து அதனின் உணர்வின் சத்தை இங்கே பரப்பிக் கொண்டுள்ளார்கள்.

அதை எடுத்துப் பழகியவர்கள் வெளிப்படுத்திய நிலைகள் பல உண்டு. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றவர்.

அதிலே கருவாகி உருவாக்கிய அணுவின் வித்தாக உருவான அந்த நிலையைத்தான் எமக்குள் பதிவு செய்து அதை நுகரும்படி செய்தார்.

நுகர்ந்த அந்த உணர்வின் சத்தைத்தான் இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய்ஞானிகள் உணர்வை நீங்கள் வளர்த்து அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால் உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 139

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனித இனத்தையே கூண்டோடு அழிக்கும் உணர்வுகள் மனிதனுக்குள் விளைந்து விளைந்து… வெளிப்படுத்தப்பட்ட அத்தகைய உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்று இந்தக் காற்று மண்டலமே நஞ்சு கொண்ட “சாக்கடையாக” மாறிவிட்டது.

அதே சமயத்தில் இந்தச் சாக்கடைக்குள் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மெய் ஞானிகளின் தீமைகளை நீக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அரும் பெரும் சக்திகளும் இங்கே நமக்கு முன் மறைந்திருக்கின்றது.

மறைந்த அந்த அருள் ஞானியின் உணர்வைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து இந்தச் சாக்கடையான உலகில் இந்தச் சாக்கடையான வாழ்க்கையைப் பிளந்து உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக வாழும் அழியா ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெறமுடியும்.

இதற்கென்ற “விதி…” எதுவும் இல்லை….!

இளம் பிள்ளை என்றோ… முதுமையானவர்கள் என்றோ… அறிந்தவன் என்றோ… அறியாதவன் என்றோ… எதுவும் இல்லை…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 138

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித உடலுக்குப் பின் அடுத்து நம்முடைய எல்லை எது? என்று ஒரு முடிவிற்கு ஒவ்வொருவரும் வர வேண்டும். ஏனென்றால் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

இந்த வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய தீமையாக இருந்தாலும் உடனுக்குடனே இது மாற்ற வேண்டும்.

மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

கெட்டதைப் பார்க்கின்றோம். அதைத் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அந்தத் தீமையான உணர்வு நமக்குள் பதிந்து விடக்கூடாது.

கெட்டது விளையாமல் தடுப்பதற்குத்தான் உங்களுக்கு சக்தி கொடுக்கின்றோம். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

வெளியிலிருந்து உள்ளுக்குள் புகும் தீமைகளை “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி அதை இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.

ஏனென்றால் முதலில் சிறிதளவு உள்ளே போயிருந்தாலும் அதற்குண்டான அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது. அந்தக் கருவின் தன்மை அணுவின் தன்மை அடைவதற்கு முன்னாடி அந்தக் கருவிற்குள்ளேயே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்து விட வேண்டும்.

எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று இந்த அலைகளைப் பரப்பப்போகும் போது இது வலுவாகின்றது.

தீமையைத் தள்ளி விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 137

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக – சகஜ வாழ்க்கையில் நாம் கடுமையாக வேலை செய்கிறோம். முடித்த பின்… கையிலே பட்ட அழுக்கைக் கழுவாமல் நாம் உணவு உட்கொள்ளப் போவதில்லை.

நாம் குளிக்காமல் அப்படியே படுக்கப் போவதில்லை. துணியில் படிந்த அழுக்கைத் துவைக்காமல் மீண்டும் நாம் உடுத்தப் போவதில்லை.

இதைப் போல தான் நம் வாழ்க்கையில் நல்லதை நாடிச் சென்றாலும் ஒவ்வொரு நிமிடத்திலும் பிறர் படும் தீமைகளைக் கேட்டால் நம் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைக்க வேண்டும் அல்லவா…!

கடவுளா வந்து தூய்மைப்படுத்துவார்…? இல்லை.

உடல் அழுக்கையும் துணி அழுக்கையும் நாம் சோப்பைப் (SOAP) போட்டுத் தூய்மைப்படுத்துவது போல் மகரிஷிகள் அருள் சக்தியின் துணை கொண்டு ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்குதல் வேண்டும்.

கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் “ஈஸ்வரா…” என்று நினைவை மேல் நோக்கி விண்ணிலே செலுத்துதல் வேண்டும்.

பின் கவர்ந்த மகரிஷிகளின் உணர்வுகளை உள்முகமாகக் கொண்டு வந்து உடலுக்குள் செலுத்தித் தூய்மைப்படுத்த வேண்டும்.

அடுத்து நாம் நல்லதைச் சிந்திக்க இது இடம் கொடுக்கும். செய்து பாருங்கள்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 136

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முதுமை என்பது வயதால் வருவது அல்ல. அறுபது வயது…, எழுபது வயது… நான் முதுமை அடைந்து விட்டேன்..! என்று வெறும் வருடத்தால் கணக்கிட்டுச் சொல்வதல்ல…!

ஒரு தானியம் விளைந்தாலும் அதனின் முதிர்ச்சியின் தன்மையில் தன் இனத்தை உருவாக்கும் வித்தின் தன்மையாக அடைந்து அது மீண்டும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக வளர்க்கச் செய்யும் போது தான் அது முதுமை அடைந்தது (முதிர்ந்த வித்து) என்று சொல்ல முடியும்.

அதைப் போன்று தான் ஒரு உயிரின் தன்மை மனித உடலாக உருப் பெற்ற பின் அறிந்திடும் உணர்வு கொண்ட ஒளியின் சரீரம் பெற்ற மெய் ஞானியின் உணர்வைச் சேர்த்து உடலை முதுமையாக்கிவிட்டு உணர்வின் தன்மையை – நம்மை என்றும் இளமையாக்கும் நிலைக்கு வளர வேண்டும். (உடல் அழியக்கூடியது உயிர் என்றுமே அழியாதது)

இப்படி ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.

நாம் இளமை பெற்று அது உடலிலே முதுமை பெறும்போது தான் (உடலுக்குள் விளைந்தது) ”முதுமையின் வித்தாக…! உருபெற்ற உணர்வின் அறிவாக… அது உயிருடன் ஒன்றிய நிலை கொண்டு, அடுத்த அறிவின் ஞானச் சுடராக கனியின் வித்தாக (உணர்வாக) ஞானத்தை வளர்க்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 135

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மரணமடையும் தருவாயில் பார்க்கலாம். நாம் என்னவெல்லாம் எண்ணுகின்றோம்…!

“எனக்குத் துரோகம் செய்தான்… பாவி…,!” என்று எண்ணத்தில் பிரிந்து சென்றால் “நேராக…பாவி…” என்று சொன்ன உடலுக்குள் உயிராத்மா போகும்.

அதே சமயத்தில் “மகராசன்..,” எனக்கு நல்ல நேரத்தில் உதவி செய்தான் என்று எண்ணினால் யார் உதவி செய்தாரோ அவர் உடலுக்குள் உயிராத்மா போகும்.

எல்லோருக்கும் எல்லா வகையில் நான் உதவி செய்தேன் பல நன்மைகள் செய்தேன் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று விரக்தியான நிலையில் சோர்வடைந்தால் இதைப் போல சோர்வடைந்த உயிரான்மா நமக்குள் வரும்.

அல்லது அந்த விரக்தியான எண்ணத்துடன் நம் உயிராத்மா பிரிந்தால் சோர்வடைந்த ஒரு மனிதனுக்குள் செல்லும்.

ஒரு வேப்ப மரம் கசப்பான உணர்வுகளை வெளிப்பரப்பித் தன் கசப்பின் தன்மை எப்படி எடுத்துக் கொள்கின்றது. அதைப் போன்று தான் இந்த உடலுக்குள் எந்தக் குணத்தின் தன்மையை நமக்குள் சிருஷ்டித்து முன்னனியில் வைத்திருக்கின்றோமோ அந்த முன்னனியில் வைத்திருக்கும் குணத்திற்குத்தக்க தான் அடுத்த உடலுக்குள் உயிராத்மா போகும்.

ஆனால் இன்னொரு மனிதனின் உடலுக்குள் போனால் ஏற்கனவே இந்த உடலில் எந்தத் தீமைகள் விளைந்ததோ அதைத்தான் அங்கே விளைவிக்க முடியும். தீமைகள் தான் அங்கே கருவாக உருவாக முடியும்.

தீமையை உருவாக்கும் அந்த அசுத்த சக்தியின் நிலைகளை “ஞானிகள் உணர்வு கொண்டு…” அதைத் தடைப்படுத்தினால் தான் இன்னொரு கருவின் தன்மை அது விளையும்.

அது அல்லாதபடி இங்கே விளைந்த தன்மைகள் அது வந்தால் இந்த உணர்வின் நினைவலையாக பல தீய விளைவுகளையே அது ஏற்படுத்தும்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபடுவதற்காக அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் அடிக்கடி சுவாசித்து அதை உடலுக்குள் சேர்த்து நம்மைப் பரிசுத்தப்படுத்தப் பழக வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ கோடி மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்களுடைய உணர்வலைகள் எத்தனையோ உண்டு. அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்காகத்தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 134

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் பிரபஞ்சமே கார்த்திகை நட்சத்திரம் அசுவினி போன்ற ஐந்தாறு நட்சத்திரங்கள் தனித் தன்மை கொண்டு தனக்கென்று ஒரு பிரபஞ்சமாகப் பிரிந்து செல்லும் நிலைக்கு வந்துவிட்டது.

அதனால் இங்கே நாம் மனிதர்கள் வாழத் தேவையான சிந்தனைக்குரிய நிலைகள் அழிந்து கொண்டும் தெரிந்து செயல்படும் நிலைகள் மாறிக் கொண்டிருக்கின்றது.

இன்று விஞ்ஞான அறிவால் இருள் சூழ்ந்த நிலைகளாக மாறி நம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலையாகி நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் உணர்வாக விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது.

ஒரு குடி போதையில் உள்ளவர்களை நீங்கள் என்ன தான் எடுத்துச் சொன்னாலும் அது தான் அவர்களுக்கு ரசனையாக இருக்கும்.

இதைப்போல விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த பல பல கருவிகளையும் உபகரணங்களையும் உபயோகப்படுத்திப் பழகிவிட்டோம். அது இல்லை என்றால் இன்றைய சூழலில் நம்மால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது.

உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருந்தாலும் மைக் இல்லாமல் பேசினால் அடுத்த நிமிடம் இங்கு யாரும் அமர்ந்து இருக்க மாட்டார்கள்.

இந்த மைக்கின் மூலம் விஞ்ஞான அறிவில் பலரைக் கேட்டு அறியச் செய்கின்றோம். டி.வி. ரேடியோ ஸ்டேஷன் மூலம் அந்த அலைகளைப் பரப்பினால் உலகம் முழுவதற்கும் அறியும் தன்மை வருகின்றது.

விஞ்ஞான அறிவால் எங்கிருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள முடிகின்றது. எங்கேயோ விளையாடும் விளையாட்டினை வீட்டில் அமர்ந்தபடியே பார்க்கின்றோம்.

இது எல்லாம் இல்லை என்றால் நாம் இல்லை என்ற அளவுக்கு நாம் அதிலே அடிமையாகி விட்டோம்.  இதிலிருந்து விடுபட வேண்டுமா என்று சற்று சிந்தியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 133

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உண்மைகள் எவ்வாறு இயங்குகின்றது என்று அறிந்து கொள்வதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைக் கொடுத்தார்.

மேலும், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் எப்பகுதியில் எந்தெந்த இடங்களில் அவன் உணர்வுகளும் மூச்சலைகளும் பதிவாகியுள்ளதோ அங்கெல்லாம் குருநாதர் அழைத்துச் சென்றார்.

அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின் பேருண்மைகளை அறியச் செய்தார். அவர் காட்டிய வழியில் உண்மைகளை அறிய முடிந்தது, உணரவும் முடிந்தது.

அறிந்து கொண்ட பின் எனக்குள் மட்டும் வளர்ந்தால் போதுமா..,? “நீங்களும்.., அதைப் பெறவேண்டும் அல்லவா”.

ஆகவே, “எல்லோரையும்.., அதைப் பெறச் செய்..,” என்றார் குருநாதர்.

ஆனால். நீ சுயநலம் கொண்டு நான் வளர்த்துக் கொண்டேன்.., “நான் பெரிய மகான்” நான் அதைச் செய்வேன்.., இதைச் செய்வேன்.., என்று உனது பெருமையைக் காட்டினால் உனக்குச் சிறுமையே வரும்.

ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி “அவர்களை உயர்த்தும்படி..,” நீ இதைப் பெறச் செய்தால் நீ உயர்கின்றாய்.., அவர்களை உயர்த்துகின்றாய். அந்த உயர்ந்த நிலைகளை நீ நுகர்கின்றாய்.

அவர்களும் உயர்கின்றனர்.., அப்பொழுது நீயும் உயர்கின்றாய்.., ஆக, இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கின்றேன்.

நீ இத்தனையும் கற்றுணர்ந்தபின் எல்லாம் செய்த பின்.., “நான் தான் இதையெல்லாம் செய்தேன்..,” என்ற “அகம்” எப்பொழுது உனக்குத் தோன்றுகின்றதோ அப்பொழுது உண்மையை அறியும் தன்மையினை இழக்கின்றாய்.

ஆக, “ஒருவர் உயர வேண்டும்” என்ற உணர்வினை எப்பொழுது நீ ஊட்டுகின்றாயோ “அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும்” என்று ஆசைப்படுகின்றாயோ அவர்களைக் கேட்க வைக்கின்றாயோ அந்த அருள் ஞானத்தை உருவாக்குகின்றாயோ உருவான அந்த உணர்வு “உன்னை.., வலுவாக்கும்”.

அதே சமயத்தில் உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களையும் காக்கும் நிலை வருகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 132

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆறாவது அறிவின் துணை கொண்டு நமக்குள் நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் நிலையாகத்தான் இந்த நிலையைத் தெளிவுற எடுத்து உணர்த்தினார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதி என்றார். அவர்கள் உடலை ஆலயமாக மதி என்றார். அந்த ஆலயங்களில் அமைந்துள்ள உயர்ந்த குணங்கள் அனைத்தும் மனிதனாக உருவாக்க உதவிய அந்த நற்குணங்களைத் தெய்வமாக மதி என்றார்.

ஒவ்வொரு மனிதனையும் தீமைகளிலிருந்து அகற்றிடவும் மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும் மனித நிலையிலிருந்து விடுபட்டு ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக நிலைத்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “நீ பிரார்த்தனை செய்” என்றார்.

உனக்குக் கிடைக்க வேண்டும் என்று எதை நான் பிரார்த்தித்தேனோ எதை உபதேசித்தேனோ அதை நீ எவ்வாறு கூர்ந்து கவனித்தாயோ இந்த உணர்வுகள் உனக்குள் பதிவாகின்றது

அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது நான் கூறிய உணர்வும் நான் உணர்த்திய உணர்வும் நீ பெறும் தகுதியைப் பெறுகின்றாய்.

“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்”.

பிறருடைய தீமைகளை அகற்றி அதன் வழியில் மெய்வழி பெறவேண்டும் என்று ஏங்கி அதனை நீ ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு என்றார்.

நான் உனக்குக் காட்டிய அருள் வழிப்படி அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பருக நீ எண்ணு.

“எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற ஏக்க உணர்வுடன் நீ பெறுவாய் என்றால் எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது. அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியினைப் பெறுகின்றாய். அது உனக்குள் விளைந்து உன் சொல்லைக் கேட்போர் உடலுக்குள்ளும் விளையும்.

அவ்வாறு விளையச் செய்ய அந்த மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை ஆழப் பதியச் செய் என்றார். அவர்களை மீண்டும் நினைவு கொள்ளும்படிச் செய்.

அவர்கள் நினைவு கொள்ளும் பொழுது அவர்களும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றனர்.

அவர்கள் அறியாது சேர்ந்த தீமைகளிலிருந்து விடுபட நீ கண்டறிந்த உபாயத்தை உனக்கு உணர்த்திய இந்த உணர்வை உணர்த்திய வழியில் நீ கண்டறிந்த அறிவினை எல்லா மக்களுக்கும் உபதேசி என்றார்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படித்தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 131

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளைப் பற்றியும் மெய் ஞானிகளைப் பற்றியும் அவர்கள் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நாம் படிக்கவில்லை…! ஒன்றும் தெரியவில்லை…! ஆனால் சாமி (ஞானகுரு) சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்றோ இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொல்கின்றாரே…! நமக்கு ஒன்றும் புரியவில்லையே என்று விட்டு விட்டீர்கள் என்றால் தீர்ந்து விட்டது.

”புரிய வேண்டும்…” என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியும். புரியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியாது.

முதலில் பள்ளிக்கூடத்திற்கு நாம் படிக்கச் செல்கின்றோம் என்றால் “நாம் தெரிந்து போய்த் தெரிந்து கொள்வதில்லை…!” தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அங்கே போகின்றோம்.

முதலில் எழுத்துக்களைப் பார்க்கப்படும் போது அந்த எழுத்துக்களில் என்ன கருத்து உள்ளது என்று அறிய அதை ஆழமாகப் பதிவு செய்தால் தான் பதிவு ஆகும்.

இல்லை என்றால் நீங்கள் ஆயிரம் வருடம் அ… ஆ… என்று சொல்லிக் கொண்டே வந்தால் முடியாது. அ… ஆ… என்று எழுத்தைப் படிக்க வேண்டும் என்றால் எத்தனை குழந்தைகள் வருடக் கணக்கில் உட்கார்ந்து தெரிந்து கொள்கிறது என்று பார்க்கலாம்.

ஆர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குழந்தைகளுக்குச் சொன்னது பதிவாகி… அது உடனடியாகப் பதில் சொல்லக்கூடிய நிலைக்கு வரும்.

ஆகையினாலே ஏதோ சொல்லுகின்றேன் என்று எண்ணி விட வேண்டாம்.

வான்மீகி தெரிந்து வரவில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்தும் அறிந்து கொண்டு வரவில்லை. இராமலிங்க அடிகள் அறிந்து வரவில்லை.

வியாசகர் பேரண்டத்தின் இயக்கத்தின் தத்துவத்தையே காட்டினார் அவர் தெரிந்து வரவில்லை. உணர்வின் இயக்கங்களை எண்ணங்களைப் பற்றி வெளிப்படுத்திய வான்மீகியும் அறிந்து சொல்லவில்லை. அறிவின் ஞானம் இல்லை. அகஸ்தியனோ கல்விச் சாலைக்கே செல்லாதவன். அவன் இயற்கையின் இயக்கங்கள் அனைத்தையும் கண்டுணர்ந்தான்.

எவரும் தெரிந்து வரவில்லை. அறியாத நிலைகள்… “சந்தர்ப்பத்தால் இணைந்து இயக்கிய அந்த உணர்வின் தன்மை…” தன்னுள் அறியும் பருவம் வரும் போது தான் மகா ஞானி ஆகின்றார்கள்.

அறிந்தவர் அறிந்ததைத் தனக்குள் விளைவைத்த பின் அதை அறிந்திடும் நிலை கொண்டு நாம் செல்லும் போதுதான் அறிவைப் பற்றி நாம் தெரிந்து கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 130

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குருநாதர் அவர் பைத்தியக்காரராக இருந்தார். அவர் இந்த உடலுக்கு இச்சைப்படவில்லை.

அது தான் ஒவ்வொரு உயிருக்கும் டெலிஃபோன் கம்பியை அடித்து அவர்களுக்கு ஞானத்தை கொடு. நல் வழியைக் கொடு என்று சொன்னேன்,

அதற்காக வேண்டித்தான் டெலிஃபோன் அடித்தேன்.

ஒவ்வொரு உயிரும் அவன் கடவுள் அவனுக்கு இதைச் செய்து ஏன்டா…! இந்த உடலில் வீற்றிருக்கும் “நீ…” அந்தக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்ற உணர்வை ”ஏன் நீ கொடுக்கவில்லை…?” என்று அவனிடம் முறையிடுகிறேன்.

அவனிடம் (ஒவ்வொரு உயிரிடமும்) முறையிடுகின்றேன். அதே சமயத்தில் என்னை இயக்கிக் கொண்டிக்கின்ற இவனிடமும் (என் உயிரிடமும்) முறையிடுகின்றேன்.

அப்படி என்றால் என்ன அர்த்தம் ஆகின்றது?

நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னால் எனக்கு நல்லதாகின்றது. நீங்கள் உயர வேண்டும் என்று சொன்னால் (என் உயிர்) எனக்கு நல்லதைச் செய்வான். அதற்குத் தான் இப்படிச் சொன்னேன் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார்.

இப்படி சூட்சம நிலையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார். அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 129

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உண்மையின் உணர்வுகளை அறியச் செய்வதற்காக காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்றார் குருநாதர். பல பேருண்மைகள் மறைந்து உள்ளது.

அரசர்கள் மதங்களாக்கி அவர்கள் இட்ட சட்டத்தை நம் உடலுக்குள் பதிவாக்கி விட்டால் மீண்டும் அதை எண்ணும் போது நமக்குள் கடவுளாக அது இயங்கத் தொடங்கிவிடும்.

அது எந்தெந்த குணங்கள் எதுவோ அது குணத்தின் தெய்வமாக அது இயங்கும் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டினார் நமது குருநாதர்.

மனிதனின் வாழ்க்கையில் நாம் எப்படி எல்லாம் பல இன்னல்கள் பட்டு வளர்ந்தோம்; பிறந்தோம்; இன்று மனிதனானோம்.

வளர்ந்தோம்; பிறந்தோம் என்றால் மீண்டும் மடிந்தோம்; பிறந்தோம்; மடிந்தோம்; பிறந்தோம் – பல கொடுமைகள் பட்டுத்தான் ஒவ்வொரு சரீரத்தையும் காக்கும் உணர்வின் வலு பெற்று வந்தோம்.

எது இதைக் கொடுமைப்படுத்துகின்றதோ அதன் உடலுக்குள் சென்று இப்படித்தான் மாறி மாறி வந்தது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 128

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகண்ட அண்டத்தையும் இந்த பிண்டத்திற்குள் எப்படி இயங்குகின்றது என்ற உண்மையினை உணர்ந்தவன் முதன் முதல் மனிதன் அகஸ்தியன்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் பூமியில் படர்ந்துள்ளது. அகஸ்தியன் கண்டுணர்ந்த (மறைந்த) அந்தப் பேருண்மையின் உணர்வுகளை அறியும்படிச் செய்தார் குரு.

பல காலம் 20 வருடம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார் குருநாதர். அவர் உபதேசித்து உணர்த்திய உணர்வுகளை எமக்குள் பதிவாக்கி அந்த நினைவு கொண்டு அகஸ்தியர் உணர்வுகள் எங்கெங்கெல்லாம் எவ்வழியில் இருந்தது? அகஸ்தியன் எங்கெங்கெல்லாம் சென்றான்? அவன் நடந்து சென்ற பாதைகளில் உணர்வுகள் எவ்வாறு படர்ந்துள்ளது? என்று பார்க்கும் படிச் செய்தார்.

உதாரணமாக அவர் உடலோடு இருக்கும் போது பித்தனாக இருப்பினும் கைகளில் அடிக்கடி ஒரு கிழிந்த துணியைக் கட்டுவார். காலில் ஒரு துணியைக் கட்டுவார். வித விதமான துணிகளைக் கட்டுவார்.

பார்ப்போருக்கு அவர் பைத்தியம் போலவும் இருப்பினும் அவர் செடி கொடிகளில் துணிகளைக் கட்டுவார். என்னென்னமோ புரியாத பாஷையில் சொல்வார்.

நான் அதைக் கேட்பேன்… அர்த்தமாகாது….! ஏதோ செய்கின்றார்…! என்று தான் இருக்கும்.

ஆனால் கடைசி நிலையில் அவர் சரீரத்திற்குப்பின் அவர் எதையெதையெல்லாம் எப்பாஷையில் பேசினாலும் அதை எமக்குள் பதிவாக்கி நினைவாக்கும் முறையை உருவாக்கினார்.

அவரை நினைக்கும் போதெல்லாம் குரு சென்ற பாதையில் அவர் எங்கெங்கெல்லாம் சென்றார்? அகஸ்தியரின் நிலைகளை எப்படியெல்லாம் அறிந்தார்?

அவர் அறிந்த உணர்வுகளில் அக்காலத்தில் அகஸ்தியன் வாழ்ந்த நிலையும் அவர் கண்டுணர்ந்த உணர்வுகளை அறிய முடிந்தது.

அகஸ்தியன் துருவனான நிலையும் துருவ மகரிஷியான நிலையும் துருவ மகரிஷி ஆனபின் துருவ நட்சத்திரமான இந்த வழிமுறைகளை அவர் எமக்குள் உபதேசித்த இந்த உணர்வின் வழி கொண்டு கண்டுணர முடிந்தது.

நான் பல காடுகளுக்குச் செல்லப்படும்போது இந்தத் துணிகளைக் கட்டிக் காண்பித்த நிலையில் அங்கே… “அந்தச் செடிகளில்… மரங்களில்… தெரியும்.”

அப்போது அந்த நினைவுகள் வரும்.

அந்த நேரம் அந்தச் செடியின் அருகிலே போய் நின்றோம் என்றால் அந்தத் தழை அப்படியே வந்து என் மீது ஒட்ட வரும். அப்போது அவர் சொன்ன நினைவுகள் வரும்.

ஏனென்றால் இந்தச் செடிகளில் அந்தத் துணிகளைக் காட்டும் போது நாம் போகும் போது அந்த துணிகள் தெரிந்தால் அது எச்சரிக்கையாக இருக்கும்.

ஆனால் ஊரில் இருக்கும் போது அவர் இந்தத் துணிகளைக் கட்டிக் காண்பிக்கும்போது ஏதோ…, “பைத்தியம் பிடித்த நிலையில் தான் இருக்கிறார்…” என்று யாம் எண்ணினோம்.

அவர் உணர்த்திய உணர்வுகள் எனக்குப் புரியாத பாஷையில் புரிய வைத்துப் பதிய வைத்தார். ஆனால் அந்தத் துணிகளைப் பார்க்கப்படும் போது இந்த நிகழ்ச்சிகள் எமக்குத் தெரிகின்றது.

ஏனென்றால் இங்கே படர்ந்திருப்பதை நுகர முடிகின்றது.

எப்படி கம்ப்யூட்டர் அதில் செய்த எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்படும் போது அந்த அதிர்வுகளை அந்த கம்ப்யூட்டரில் உள்ள நாடாக்களில் ஒலி ஒளி என்ற நிலையில் பதிவாக்குகின்றார்கள். அதன் வழி ரூபங்களைக் காணுகின்றான் விஞ்ஞானி.

ஆனால் மெய்ஞானி (நமது குருநாதர்) இப்படி காட்டச் சொன்னார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 127

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வைகுண்ட ஏகாதசி அன்று உடலை விட்டுச் செல்லும் பொழுது குருநாதர் எம்மிடம் சொன்ன நிலைகள் இது.

பல அற்புதங்களை நான் செய்து காட்டினேன். அந்த அற்புதங்களிடத்தில் மயங்கியிருந்தோர் உண்டு. அதன் வழியில் என்னை அணுகியவர்கள் பலர்.

என்னிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ள எப்படி எல்லாம் வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள் என்றார் குருநாதர். ஆனால், என்னிடம் எதை நாடி வந்தார்கள்?

எனக்குச் சொத்து வேண்டும். சுகம் வேண்டும். உடல் நலம் வேண்டும். இதைத்தான் கேட்டார்கள். அதே சமயத்தில் வருவோரெல்லாம் எனக்கு “அந்த அருள் வேண்டும்.., இந்த அருள் வேண்டும்..,” என்று தான் கேட்டார்கள்.

மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும் உலக மக்கள் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்.

பிறருடைய குடும்பங்களை நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் பேச்சால் மூச்சால் அனைவரின் துன்பங்கள் அகல வேண்டும். நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலம் பெறவேண்டும் என்று “இதைப் பற்றிக் கேட்பார்.., யாரும் இல்லை”.

அத்தகைய மனம் உள்ளோர் என்னை அணுகி வந்தார்கள்.  “தனக்காகத்தான்.., கேட்டார்களே தவிர.., எல்லோரும் நலம் பெறவேண்டும்..,” என்ற கேள்வியே அங்கே எழவில்லை.

ஆனால், அத்தகைய தன்மை பெற்றோர்களும் மற்ற எல்லோரும் அருள் ஞான சக்தி பெறவேண்டும் என்று நான் எண்ணினேன். நான் அதைப் பெற்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வைகுண்ட ஏகாதசி அன்று நான் உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.

ஆனால், நீ எதை எண்ணப் போகின்றாய்? நீ எதைப் போகின்றாய்? என்று பல வினாக்களை எழுப்பினார். நீ பெறவேண்டிய தகுதிகள் எது? அதைப் பெறுவது எப்படி?

இதையெல்லாம் எமக்குள் தெளிவாக்கிக் காட்டினார்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் நீ என்னுடன் இணைந்து வர வேண்டும் என்றால் “நீ எதை எண்ண வேண்டும்..?” என்றும் சொன்னார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குரு பெறவேண்டும். அவர் அழியாத ஒளியின் சரீரம் பெறவேண்டும். அவர் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும். பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அருள் வழி குரு பெறவேண்டும் என்று நீ எண்ணினால் அந்தக் குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார். ஆகவே, நீ எதை எண்ணுகின்றாயோ நீ அவ்வாறு ஆகின்றாய் என்று உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 126

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில பேர் தியானம் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு அந்தத் தியானம் ஒன்றைத்தான் சொல்கின்றார்களே தீமையைத் தடுத்துப் பழகும் ஆற்றலைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று உணரவில்லை.

என்னை இப்படிப் பேசுகின்றான்.., நான் எத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருப்பது…? கடன் கொடுத்தவன் பணம் திரும்பத் தர மறுக்கின்றான்.., நான் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…? என்று இப்படி மாற்றிக் கொள்கின்றார்கள்.

நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது. கண்கள் அந்த வழியைக் காட்டுகின்றது.

குருநாதர் எமக்கு உபதேசித்தது ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாகவும் ஒவ்வொரு உடலையும் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட வேண்டும் என்றார்.

அப்பொழுது “அவர்களிடமிருந்து பகைமை மறைந்து.. அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்” என்ற எண்ணம் எனக்கு வருகின்றது.

அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணும் பொழுது “என் உடலான.. இந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துகின்றேன்”.

“நீங்கள் நன்றாக ஆக வேண்டும்” என்று நான் எண்ணினால் எனக்குள் நல்ல நிலை ஆகின்றது.

இப்பொழுது யார் நமக்குத் தீமைகள் செய்தார்களோ அவருக்கும் “நல்லது செய்யக்கூடிய எண்ணம் வரவேண்டும்” என்று சொன்னால் அந்தத் “தீமையின் உணர்வுகள்” நமக்குள் வருவதில்லை.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று சொன்னால் அவரைப் பற்றிய “வெறுப்பான உணர்வுகள்” நம் உடலுக்குள் வருவதில்லை.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டுமே தவிர அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவர் கெட்டதைத்தான் நல்லதாக்கும். அவர் செய்யும் தவறுக்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகிவிடும்.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும். எல்லோரிடமும் பண்பும் பரிவும் காட்டும் எண்ணங்கள் வரவேண்டும் அந்த அருள் ஞானம் அங்கே வர வேண்டும் என்று சொன்னால் இந்த உணர்வுகள் அவர்களைத் தவறு செய்ய விடுவதில்லை. அப்பொழுது இதை நாம் வெறுமனே சொல்ல முடியாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று இதைக் கலந்து நம் எண்ணங்களுக்கு “முதலில்” வலிமை கொடுக்க வேண்டும்.

இப்படி நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தில் “எத்தகையை சங்கடங்கள் வந்தாலும்” மாற்றி அமைக்கலாம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 125

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்கு நோய் என்று வந்து விட்டால் நமக்கு வேதனை வருகின்றது. வேதனைப்படும் பொழுது அந்த நேரத்தில் நல்லதை யாராவது சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மறுப்போம்.

வேதனைப்பட்டுள்ளோர்களுக்கு வேதனைப்படும் நிலைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தால் ரசித்துக் கேட்பார்கள். அப்பொழுது அந்த நேரத்தில் அவர்களுடைய வேதனைகள் தெரியாது.

அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது “இது நல்லது.., அது அப்படி இருந்தது..,” என்று உயர்ந்த குணங்களைப் பற்றி நீங்கள் சொன்னாலும் அதற்கு எதிர்மறையாகி அதனுடைய நிலைகளை நாம் கேட்க மறுப்போம்.

ஏனென்றால் அந்த வேதனை உணர்வு நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை நுகராதவண்ணம் தடைப்படுத்தி நமக்குள் தீமைகளையே விளைய வைக்கும்.

இதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 124

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உடல் எல்லாம் பொய் உடல்கள். உடலைப் பொய் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இப்போது நாம் மனிதனாக இருக்கிறோம். அடுத்துப் பார்த்தால் சுருங்கிப் போகிறோம்.

சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கிறது…? வேறொரு உடலை நாடுகிறது. ஆகவே பொய் உலகில் வாழுகின்றோம் என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும்.

இதைத்தான் குருநாதர் அடிக்கடி எம்மிடம் (ஞானகுரு) சொல்வார். “டேய்…! ஏன்டா பொய் உலகிற்கு போகிறாய்…? மெய் உலகத்திற்கு வாடா…!” என்பார். ஆகவே நம் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…?

உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான்… உணருகின்றான்… உணரச் செய்கின்றான்… உணரும் வழியில் வாழச் செய்கின்றான்…!

ஆனால் இதை ஆறாவது அறிவால் தெரிந்து கொண்ட பின் நீ எந்த உலகிற்குச் செல்லுகின்றாய் என்று சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் இப்படியெல்லாம் கேட்பார்.

சில சிக்கலான நிலைகள் வரும் போது என்ன செய்வேன்..? என்ன வாழ்க்கை போ…!

என் மனைவியை நோயிலிருந்து எழுப்பி விட்டார். சொல்வதைச் செய்கிறாயா என்று வாக்கை வாங்கிக் கொண்டார்.

ஆனால் காட்டுக்குள் அழைத்துச் சென்று “இப்படித் தொல்லை கொடுக்கிறாரே…!” என்று ரொம்பக் கஷ்டம் வரும் போதெல்லாம் என்னுடைய நினைவு இப்படி வரும்.

எங்கேயாவது பேசாமல் உடலை விட்டுப் போயிடலாம்…! என்று இரண்டு மூன்று முறை தோன்றியது. அந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் “தற்கொலை செய்து கொள்ளலாம்…! என்ற உணர்வு வரும்.

அப்போதெல்லாம் குருநாதர் சிரிப்பார். இந்த உலகத்தை என்ன என்று நீ அறிந்தாய்…? உன் உயிரை யார் என்றும் அறிந்தாய்…! இந்த உடலையும் அறிந்தாய்… மீண்டும் ஏன்டா பொய் உலகத்திற்கு போகிறாய்…?

வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நான் எண்ணுகின்றாய். நீ யாரை எண்ணி இதைச் செய்து கொண்டாயோ இந்த வேதனையான உணர்வுகள் கேட்பவருக்குள் வலுவாகும். அவர் உடலுக்குள் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய்.

இந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குப் பின் என்ன என்ன ஆவாய்..? பிறிதொன்றைக் கொன்று தின்னும் உணர்வின் தன்மை தான் உடல் பெறும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய். அடுத்து நீ பொய் உலகிற்குத் தானே போகின்றாய்…?

உயிரால் மனித உடல் பெற்று ஆறாவது அறிவால் இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நிலைகள் கார்த்திகேயா என்ற நிலைக்கு நீ வந்தாய். மீண்டும் ஏன் பொய் உலகிற்குச் செல்கின்றாய்…? என்று இந்த இடத்தில் விளக்கங்களைக் கொடுப்பார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 122

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பழனியில் ஒரு பித்தரைப் போல இருப்பார் என்றாலும் பிறர் அவரைப் “பித்தர்” என்றே எண்ணுவார்கள்.

ஒவ்வொரு மனிதனும் எப்படிப் பித்துப் பிடித்துச் செல்வம் தேட வேண்டும் என்று எண்ணுவான். அதே சமயத்தில் செல்வத்தில் குறை என்றால் பித்துப் பிடித்து “வெறி பிடித்தவன்” போல் மற்றவரை எப்படித் தாக்குகின்றான்…!

பித்துப் பிடித்து மற்றவர்களுக்கு எப்படித் தொல்லைகள் கொடுக்கின்றான்…! ஒவ்வொரு மனிதனும் “பித்துப்பிடித்துத்தான் அலைகின்றான்” என்று சொல்வார்.

குருநாதர் போஸ்ட் கம்பத்தில் கல்லைக் கொண்டு தட்டுவார். அலோ.., ஹலோ.., என்பார்.

“ஏன் சாமி.., கல்லைக் கொண்டு போஸ்ட் கம்பத்தில் தட்டுகிறீர்கள்..,?” என்று கேட்டேன்

நீ தான்டா.., கேட்கின்றாய். மற்ற எல்லோருமே என்னைப் “பைத்தியக்காரன்..” என்று சொல்கின்றார்கள். நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார்.

என்ன சாமி டெலிபோன் செய்கின்றீர்கள்?

இந்தக் கம்பத்தின் மூலம் ஆண்டவனுக்கே அனுப்புகின்றேன். அந்த ஆண்டவன் என்பது “யார் தெரியுமா..?” என்றார்.

நான் தட்டும் உணர்வுகள் சேர்த்து “உயிரில் பட்டபின்” அந்த ஆண்டவன் என்ன செய்கின்றான்? இந்த உணர்வை என்னைச் செயல்படுத்தச் சொல்கின்றான்.

தட்டும் பொழுது நான்.., எதை எண்ணித் தட்டுகின்றேன்?

ஏனென்றால்.. “தட்டும் பொழுது.. சப்தம் வருகின்றது”. ஒவ்வொரு பொருளிலும் தட்டும் பொழுது அதில் என்னென்ன நாதம் வருகின்றது?

கல்லில் தட்டினால் ஒரு நாதம் மண்ணிலே தட்டினால் ஒரு நாதம் மரத்தில் தட்டினால் ஒரு நாதம் உலோகத்தில் தட்டினால் அது ஒரு நாதம்.

உணர்வின் ஒலியின் நிலைகள் நான் தட்டும் பொழுது என் உயிரான இவனுக்கே எட்டுகின்றது. அப்படி எட்டும் பொழுது நான் என்ன செய்கிறேன்…?

இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தெரிந்து வாழ வேண்டும். அந்த ஆண்டவன் கட்டிய ஆலயத்தில் அவர்கள் பரிசுத்த நிலைகள் பெறவேண்டும். அவர்கள் புனிதம் பெறவேண்டும். புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும். புனிதமான ஆலயமாக மாற்றவேண்டும்.

இப்படி இதை நினைத்து நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 121

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அறியும் வண்ணம் குருநாதர் எனக்குப் (ஞானகுரு) பல உபதேசங்களைக் கொடுப்பார்.

அதே சமயத்தில் அதை எனக்குள் ஆழமாகப் பதிவு செய்து உண்மையை நான் உணர்வதற்காக வேண்டி என்னைக் கடுமையாகத் திட்டுவார். அப்பொழுது எனக்குச் சோர்வு வரும்.

நான் சோர்வடையும் அந்த மாதிரி நேரங்களில் குருநாதர் என்னை அழைத்துச் சென்று இந்த மாதிரி நோயால் வாடும் ஆள்கள் இருக்கும் குடும்பங்களை நிறையக் காண்பிப்பார்.

உதாரணமாக… செல்வம் சொத்து எல்லாம் ஆரம்பத்தில் சம்பாரித்திருப்பார்கள். வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடமாட்டம் குறைந்து படுக்கையில் இருப்பார்கள்.

அந்த மாதிரி நேரத்தில் வீட்டில் இருக்கும் தன் பையனிடமோ மற்றவர்களிடமோ “தாகமாக இருக்கிறது… கொஞ்சம் தண்ணீர் கொடுப்பா…!”  என்பார்கள்.

உடனே தண்ணீரைக் கொடுக்காதபடி “உனக்கு வேறு வேலையே இல்லை… போ..!” என்று இவர்கள் திட்டிக் கொண்டு இருப்பார்கள்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா?

ஏனென்றால் அவர் நேற்று நன்றாக இருந்தார். சந்தோஷமான உலகமாக அவருக்கு இருந்தது. அதிலே அவர் எடுத்து வளர்த்துக் கொண்ட உணர்வு உடலில் சேர்ந்து நோயானவுடன் “கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டாப்பா…!” என்கிறார்.

சும்மா போகும் பொழுதும் வரும் பொழுதும் ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருப்பது…! “இது தான் உன் வேலை” என்று பையன் திட்டுகிறான்.

இவர் நன்றாக இருக்கும் பொழுது என்ன செய்கிறார்?

தன் பையனை அவன் சிறு பிள்ளையாக இருக்கப்படும் போது  அவனைக் காக்க வேண்டும் என்பதற்காக “அங்கே போயிடாதடா… இங்கு போயிடாதடா…!” என்று சொல்லி இருக்கின்றார்.

மீண்டும் மீண்டும் பையன் அந்தக் குறும்புத்தனம் செய்யும் பொழுது சங்கடப்பட்டு இவர் சொல்கிறார். பையனைக் காத்துவிடுகின்றார். ஆனால்… இவர் வயதான காலத்தில் நோயில் விழுந்து விட்ட பின்னாடி அதே சங்கடம் இங்கே பையனுக்கு வருகின்றது. இவருக்கு வேறு வேலையே இல்லை “எப்போது பார்த்தாலும் “நச்… நச்…” என்று எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பார் என்கிறான் பையன்.

தன் பையன் நன்றாக இருப்பதற்காக வேண்டிச் சங்கடப்பட்டுச் சொன்னார். அந்தச் சங்கடமான உணர்வு நோயாக வந்து விட்டது. இவர் நோயில் விழுந்து விட்டார்.

அதே சமயத்தில் நோயானபின் “அப்பாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வாடா…” என்று சொன்னால் பையன் செய்யாதபடி திட்டிக் கொண்டிருக்கின்றான்.

இது நடந்த நிகழ்ச்சி. அப்படியே இந்த உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் குருநாதர்.

இதைப் போன்று மூன்று இலட்சம் பேரைக் (குடும்பங்களைக்) காண்பித்து “மனமே இனியாகிலும் மயங்காதே…!” என்ற பாட்டின் மூலமாக எனக்கு ஒவ்வொரு நிமிடமும் உண்மைகளைத் தெரியும்படிச் செய்தார். அறிய வைத்தார்.

மின்னலைப் போலே மறைவதைப் பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…?
நிலை இல்லாத இந்த உலகத்திற்கு “நீ ஏன்டா (என்னிடம்) வாதாடுகிறாய்…?” என்று மெய்ப் பொருளைக் காட்டுவார்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 120

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் தியானம் என்றால் என்ன என்பதையும் தவத்தையும் விண் செல்லும் அந்தப் பாதையையும் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்து ஞாபகப்படுத்துகின்றோம். மெய் ஞானிகள் சென்ற வழியில் நாம் விண் செல்ல வேண்டும்.

நம்மைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் அந்த நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் நமது ஆன்மாவில் இது பெருகுகின்றது.

நமக்குள் அது பெருகும் பொழுது எந்த விஷத் தன்மையும் நமக்குள் வளராது. மகரிஷிகளின் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறும் போது அதே உணர்வின் இயக்கமாக நம் உடலும் நினைவும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பு கொள்கின்றது.

சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாக்களை உந்தித் தள்ளி அங்கே இணைக்க வேண்டும்.

மூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் முதலில் மகரிஷியாகின்றார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்து நாமும் விண் செல்ல முடியும். நாமும் மகரிஷியாக முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 119

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இனி வரும் காலங்களில் சிந்திக்க நேரம் இருக்குமா…? என்று சொல்ல முடியாது.

மெய் ஞானிகள் பெற்ற தீமையை வென்ற அருள் சக்திகளை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றோம். யாம் சொல்லும் அருள் ஞான உபதேசங்களை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

இதைக் கேட்டுணர்ந்தோர் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் ஆத்ம சுத்தி செய்யுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகருங்கள். சுவாசித்து உங்கள் உடலுக்குள் இணையுங்கள்.

அந்த உயர்வான எண்ணத்தை எடுத்து நீங்கள் விடும் மூச்சலைகள் உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். உலக மக்கள் அனைவருக்கும் நல்லதாக அமைய வேண்டும்.

நீங்கள் பேசும் பேச்சு என்பது “செய்யும் தொழிலே தெய்வம்” போல் என் மூச்சுப் பட்டால் மற்றவர்களின் துன்பங்கள் போய்விட்டது என்ற நிலைக்கு வளர வேண்டும்.

இந்த மாதிரிச் செய்து பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 118

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை எண்ணி 27 நட்சத்திரங்களின் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

27 நட்சத்திரங்களையும் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டும் பொழுது அந்த 27 நட்சத்திரத்தையும் எப்படித் தொட வேண்டும் என்று எனக்கு அந்தப் பக்குவத்தைக் கொடுத்தார்கள்.

இதை எதனுடன் இணைக்க வேண்டும்…? அதை எடுத்தால் அந்தக் கதிரியக்கங்கள் உன்னை எப்படிச் சுடாதிருக்கும்…? அந்தக் கதிரியக்கங்கள் உன்னைத் தொடாதிருக்கும்…? என்பதையும் காட்டினார் குருநாதர்.

அதன் வழி கொண்டு பிரார்த்தனை செய்து விட்டுத் தான் குருவின் துணை கொண்டு 27 நட்சத்திரங்களின் சக்திகளை நான் கவர்கின்றேன்.

கவர்ந்த அந்த நிலை கொண்டு தான் 27 நட்சத்திரத்தின் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று நான் எண்ணும் பொழுது உங்களை எண்ணச் சொல்லி – இந்த இணைப்புடன் அதை ஊழ் வினையாக உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதியச் செய்கின்றேன்.

அதை உங்களுக்குள் கிடைக்கப் பெறச் செய்வதற்கும் அந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்களையும் சமப்படுத்தும் நிலைக்கும் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 118 png

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மையை இந்த மனித உடலில் இருந்து தான் கருவாக்கினான் அகஸ்தியன்.

அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்….!

இந்த உடலை விட்டுச் சென்றால்… “என்றும் நிலையான… ஒளியின் சரீரமாக இருக்க முடியும்…!” என்ற அந்த நோக்கத்துடன் எவர் வருகின்றனரோ அவர்கள் அனைவருமே நிச்சயம் அகஸ்தியனைப் போன்று பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 117 png.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது சூரியக் குடும்பத்தில் பூமியில் உருவான மனிதன் சில் உண்மைகளைக் கண்ட பின் மின்னல்கள் தாக்கி கடல்களிலே படும்போது மணல் ஆவதை அதற்குள் இருக்கும் நிலையை வடிகட்டி கதிர் இயக்கப் பொறிகளாக மாற்றுகின்றான்.

இன்று அணு குண்டுகளாகவும் லேசர் கதிரியக்கங்களாகவும் அதை உருவாக்கி விட்டார்கள்.

தன்னுடைய உடல் ஆசைக்காக வேண்டி நாட்டு ஆசைக்காக வேண்டி உலகை அழித்திடும் தன்மைகளாக அது இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

நம் பூமியில் விளைவதை சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இந்தக் கதிரியக்கங்களை கவர்ந்து இன்று நமது பிரபஞ்சமே கதிர் இயக்கமாக மாறிவிட்டது.

மனிதனின் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிலையால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்து விட்டது. சூரியனும் சிறுகச் சிறுக செயல் இழந்து கொண்டு இருக்கின்றது. அது செயலிழக்கும் பொழுது அதனுடன் சேர்ந்த நம் பூமியும் அது செயல் இழக்கும்.

இங்கே வாழும் மனிதர்களும் அசுர உணர்வு கொண்டு தீவிரவாதம் என்ற நிலைகளில் ஒருவருக்கொருவர் கொன்று சாப்பிடும் நிலை வருகின்றது.

பாதரசங்களை உருவாக்கும் சூரியனுக்குள் விஞ்ஞானக் கதிரியக்கச் சக்திகள் கலக்கப்பட்டு அந்த பாதரசங்களைக் கருகிய விஷத் தன்மையாக மாற்றி உமிழ்ந்து கொண்டுள்ளது.

சூரியன் செயல் இழக்கும் தன்மையால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் செயலிழக்கும் நிலை ஆகின்றது. நான் (ஞானகுரு) சொல்வது வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவாக்கினால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் உணர முடியும். சூரியன் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் நீங்கள் உணர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 116 png

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்கு யாம் “படிப்படியாக.., சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்”. எல்லாம் “பூரணமாகச் சொல்ல வேண்டும்..,” என்றால் காலம் இல்லை.

ஏனென்றால், குருநாதர் எனக்குள் பதிவு செய்த பேருண்மைகள் “எண்ணிலடங்காதது..,” இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.

அவ்வளவு பெரிய அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) உணர்வுகள் பதிவு செய்ததை “எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்” என்று அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காக எடுத்துக் கொடுக்கின்றோம்.

ஆக, அந்த நினைவைக் கூட்டும் பொழுது உணர்வை ஒளியாக்கி உணர்வின் தன்மை எண்ணமாக்கி அதனின் நிலைகளைத்தான் செயல்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு ரூபத்திலும் குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த உணர்வின் ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது எனக்குள் உணர்த்தி அந்த உணர்வின் தன்மையை அவரே தான் இங்கே வழி நடத்துகின்றார்.

ஏனென்றால், என்னுள் அவர் இருந்து அல்ல.

“அவர் பதிவு செய்த நாடாவாக..,” (MEMORY DISC) நான் எண்ணும் பொழுது உணர்வுகள் இயக்கப்பட்டு அது பெறப்பட்டு “நீங்கள் பெறவேண்டும்.., என்று அவர் செய்த உணர்வைத் தான்..,” நான் செய்கின்றேன்.

அவருடைய உணர்வுகள் தான் என்னைச் செய்ய வைக்கின்றது.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய அருள் வழிகளில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலுக்கு மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரது உடல்களையும் மகிழச் செய்வோம்.

மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றியே இந்த வாழ்க்கையை வாழ்வோம். என்றும் பேரானந்த நிலைகள் பெற்று பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளுடன் வாழும் நிலையை நாம் உருவாக்குவோம்.

இதைப் படித்துணர்ந்தோர் அனைவரும் அவர்கள் வீட்டில் மகிழ்ச்சி போங்கும் நிலைகளாக உருவாகும். கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்திட குரு அருளும் எமது அருளும் உறுதுணையாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 115 png

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் என்றுமே அழிவதில்லை. எத்தகைய நஞ்சானாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்துகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம். பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவான பின் நினைவைக் கூட்டி நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் ஒவ்வொருவரும் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதில் இருந்து மீட்டுக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை உபதேசிக்கின்றோம். இப்பொழுது பதிவாகின்றது.

இதனை நீங்கள் நினைவு கூறுங்கள். கூட்டுத் தியானம் செய்யுங்கள் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று பாய்ச்சுங்கள். கருவிலே வளரும் சிசு இதைப்பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப்போல எண்ணி இவ்வுலகில் வரும் விஷத் தன்மைகளை மாற்றி இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 114

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் ஏகாந்த நிலைகள் கொண்டு ஒளியின் சுடராக ஒளியின் சரீரமாகி எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றார் (1971).

ஒளியின் சுடராக அவர் தனக்குள் மலரச் செய்து மனித வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த நஞ்சினை மாய்க்கும் ஆற்றல்மிக்க சக்திகளை  அவர் வெளிப்படுத்தியுள்ளார்,

அந்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றது. அவர் விண் சென்றது போல் நீங்கள் அனைவரும் அந்த ஆற்றல்களைப் பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் “குரு பூஜை”.

”குரு…” என்பது நாம் எதை ஆழமாகப் பதியச் செய்கின்றோமோ அதை மீண்டும் செய்ய எண்ணும் பொழுது அது குருவாக நின்று நமக்குள் செயல்படுத்துகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராகச் சென்ற அந்த நாள் தான் வைகுண்ட ஏகாதசி.

அவர் ஒளிச் சரீரத்தைப் பெற்றபின் தான் உடலை விட்டுச் செல்லும்போது “என்னைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்தார்”.

இந்தப் பூமிக்குள் நான் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ உணர்வு கொண்டு எல்லோரிடமும் பழகினேன். அதே சமயம் எல்லோருடைய நோய்களையும் நீக்கவும் உதவினேன்.

அவர்கள் அனைவரும் என் பால் பற்றுதலும் கொண்டார்கள். இருப்பினும் அவர்களுடைய பாச உணர்வுக்குள் சிக்காது அவர்கள் எண்ணும் ஏக்கம் என்னை இயக்காது அவர்களுக்குள் உள்ள இருள்களை நீக்கிடவும் மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் என் உணர்வுகள் செயல்பட்டது.

இந்த உடலை விட்டு (உயிரான்மா) “நான் செல்கின்றேன்”. ஒளியின் சுடராக எவருக்கும் சிக்காது இந்த உயிரான்மா எப்படிச் செல்கிறது என்று “பார்…” என்று உணர்த்தினார்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 113

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைக்கப்படும் பொழுது அந்த நஞ்சினை ஒளியாக மாற்றி அறிவின் ஞானமாகவும் இந்த மனித வாழ்க்கையில் இருளை வென்றிடும் உணர்வும் அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றும் வலிமையும் நமக்குக் கிடைக்கின்றது. அதைப் பெறச் செய்வதற்காகத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஆகவே மறவாதீர்கள். உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.

இந்த உடல் உங்களது அல்ல. உயிரால் தான் உருவாக்கப்பட்டது.

அறிவால் உணரப்பட்ட உணர்வின் தன்மை “தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் விளையும் தீமைகளை நாம் அகற்றக் கற்றுக் கொண்டால் நம்மை இயக்கிய நம்மை உருவாக்கிய உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலைகளை அடையலாம்.

யாம் உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் நிலைகளை நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதைப் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 112

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“சாமி…” (ஞானகுரு) உங்கள் உணர்வுக்குள்ளே தான் இருக்கிறேன்.

குருவின் உணர்வை நீங்கள் பெற்றீர்கள் என்றால் அந்த உணர்விலிருந்து எல்லாமே நீங்கள் பெறலாம் அந்த நிலையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.

சாமியாரைப் பார்த்து.. அவரைப் பார்த்து… இவரைப் பார்த்து… கடைசியில் “சாமியார் தான் எல்லாவற்றையும் மீட்டிக் கொடுப்பார்…” என்று நினைக்கிறீர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வை நீக்குகின்றது. உங்கள் உடலை நலமாக்குகின்றது. உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்றது.

இந்தப் பழக்கங்கள் வரவேண்டும்.

ஒரு இடத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்றால் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். இன்னும் கொஞ்சம் இருக்கிறது அதையும் தூய்மையாக்கிப் பழக வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை பெற்று உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது ஒவ்வொரு நொடியிலும் விழித்திருத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 111

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய்ஞானிகளைப் பற்றி யாம் உபதேசிக்கின்றோம். மகரிஷிகள் தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டி உங்களை மேல் நோக்கிச் சுவாசிக்க வைக்கின்றது.

அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது கிடைக்கவேண்டும் என்று பெருமூச்சாக அமைந்து அந்த ஆற்றல் கிடைக்கின்றது.

சிலர் அடி பணியும் நிலைகள் கொண்டு கீழ் நோக்கி எண்ணிச் சுவாசிக்கின்றார்கள். மேல் நோக்கி எண்ணி எடுப்பதற்கு பதில் கீழ் நோக்கி எடுக்கும் பொழுது சாதாரண மனிதருடைய உணர்வைத்தான் பெற முடியும்.

ஏனென்றால் நாம் பெறவேண்டிய ஆற்றல் விண்ணிலே இருக்கின்றது. விண்ணின் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்களும் அதே வழியில் எண்ணினால் அந்தச் சக்திகளைப் பெறுவது எளிதாக இருக்கும்.

சாதாரண வாழ்க்கையில் பெரியவர்களுக்குப் பாத பூஜையும் பாத நமஸ்காரமும் கும்ப அபிஷேகமும் செய்து அடிபணிந்தே பழகி விட்டோம்.

நமக்குள் வரும் இந்த ஆசை நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் நிலைகளுக்கே அழைத்துச் செல்லும். இந்த உயர்வு நமக்குத் தேவை இல்லை. உயர்ந்த எண்ணங்கள் தான் நமக்குத் தேவை.

நாம் எந்த உயர்ந்த உணர்வின் தன்மையைப் பெறவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு வருகின்றமோ அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் தூண்ட வேண்டும்.

பிறரைப் போற்றிப் புகழ்ந்து பேசித் துதிக்க வேண்டும். அப்படியெல்லாம் போற்றினால் தான் நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நம் எண்ணங்கள் செல்லக் கூடாது.

மெய் ஒளி பெறும் உயர்வான எண்ணங்களை எடுத்து எடுத்து எடுத்து நம் உடலுக்குள் தீமையான உணர்வுகளையும் தீய வினைகளையும் (அவைகளை) அடிபணியச் செய்ய வைக்க வேண்டும். இது நம் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 110

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை வென்று இன்றும் ஒளியின் சுடராக நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றித் தொடர்ந்து சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

சப்தரிஷி மண்டலம் பூமியின் துருவப் பகுதியில் நின்று அந்தத் துருவப் பகுதியிலேயே இந்தச் சுழற்சியின் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்தை எடுத்துக் கொண்டால் துருவத்தினை மையமாகக் கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் தான் சுழன்று வரும்.

அது ஒரு வட்டமாக அமைந்திருக்கும்.

நம் பூமியில் மனிதனாக வாழ்ந்தவர்கள் ஒளியின் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து அதனின் உணர்வின் சத்தை இங்கே பரப்பிக் கொண்டுள்ளார்கள்.

அதை எடுத்துப் பழகியவர்கள் வெளிப்படுத்திய நிலைகள் பல உண்டு. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றவர்.

அதிலே கருவாகி உருவாக்கிய அணுவின் வித்தாக உருவான அந்த நிலையைத்தான் எமக்குள் பதிவு செய்து அதை நுகரும்படி செய்தார். நுகர்ந்த அந்த உணர்வின் சத்தைத்தான் இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 109

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெற தியானிப்போம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான  அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிப் பெறுங்கள்.

கண்களைத் திறந்தே தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கவும்.

இப்பொழுது நமது குரு அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குக் காட்சியாகவும் கிடைக்கலாம். கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கும் பொழுது குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை நீங்கள் உணர முடியும். காட்சியாகவும் பார்க்க முடியும்.

நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது உங்கள் சுவாசித்திற்குள் வரும். உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் நல்ல உணர்ச்சிகள்  உருவாகும்.

உங்கள் இரத்த நாளங்களில் அந்த அரும்பெரும் சக்தி உடல் முழுவதும் அது சுழன்று வரும் அந்த உணர்ச்சிகள் உங்களில் தோன்றும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 108

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்ட புலனறிவுகள் ஐந்திலும் கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.

நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம். இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.

அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது. அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெறவேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுது உங்களுக்குள் இது ஆழமாகப் ப்திவாகின்றது. எண்ணும் போது அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 107

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித உடலுக்குப் பின் அடுத்து நம்முடைய எல்லை எது? என்று ஒரு முடிவிற்கு ஒவ்வொருவரும் வர வேண்டும். ஏனென்றால் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

இந்த வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய தீமையாக இருந்தாலும் உடனுக்குடனே இது மாற்ற வேண்டும்.

மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்..?

கெட்டதைப் பார்க்கின்றோம். அதைத் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அந்தத் தீமையான உணர்வு நமக்குள் பதிந்து விடக்கூடாது.

கெட்டது விளையாமல் தடுப்பதற்குத்தான் உங்களுக்கு சக்தி கொடுக்கின்றோம். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

வெளியிலிருந்து உள்ளுக்குள் புகும் தீமைகளை “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி அதை இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 106

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் உங்களுக்குள் ஏங்க வைத்து அதை நுகரச் செய்து அந்த வலிமையை ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வலிமையின் துணை கொண்டு உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியை ஊட்ட முடியும்.

உங்கள் கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரம் எப்படி இருக்கும் அது எங்கே இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை.

உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் எங்கேயோ இருக்கின்றார். அவர் இந்த மாதிரி எல்லாம் அவஸ்தைப்படுகின்றார் என்று கேள்விப்பட்டவுடன் உங்களுக்குள் பதிவாகின்றது.

அது நினைவாகும் பொழுது என்ன செய்கின்றது? அவர் அங்கே “எப்படிச் சிரமப்படுகின்றாரோ..! என்ன செய்கின்றாரோ..?” என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள்ளும் இயங்குகின்றது.

இதைப் போல துருவ நட்சத்திரம் எங்கேயோ இருக்கின்றது. உங்கள் கண்களால் பார்க்க முடியவில்லை. குருநாதர் எனக்குக் காட்டினார். பார்த்தேன்.

அவர் காட்டிய நிலைகள் கொண்டு அதனின் ஆற்றலைப் பெற்றேன். அந்த உணர்வினை இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றேன்.

பதிவானதை நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து உங்கள் கண்களாலேயும் பார்க்க முடியும். இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த அருள் ஒளிகள் இங்கே படர்ந்து வருவதையும் உங்களால் பார்க்க முடியும். நீல நிற ஒளி அலைகள் சுழன்று வருவதைப் பார்க்கலாம்.

ஒரு வெல்டிங்கைத் (WELDING) தட்டினால் “பளீர்..,” என்று வெளிச்சமாவது போல் தெரியும். ஏனென்றால், பழக்கப்பட்டோர் உணர்வுகளில் இதைப் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 105

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முதுமை என்பது வயதால் வருவது அல்ல. அறுபது வயது…, எழுபது வயது… நான் முதுமை அடைந்து விட்டேன்..! என்று வெறும் வருடத்தால் கணக்கிட்டுச் சொல்வதல்ல…!

ஒரு தானியம் விளைந்தாலும் அதனின் முதிர்ச்சியின் தன்மையில் தன் இனத்தை உருவாக்கும் வித்தின் தன்மையாக அடைந்து அது மீண்டும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக வளர்க்கச் செய்யும் போது தான் அது முதுமை அடைந்தது (முதிர்ந்த வித்து) என்று சொல்ல முடியும்.

அதைப் போன்று தான் ஒரு உயிரின் தன்மை மனித உடலாக உருப் பெற்ற பின் அறிந்திடும் உணர்வு கொண்ட ஒளியின் சரீரம் பெற்ற மெய் ஞானியின் உணர்வைச் சேர்த்து உடலை முதுமையாக்கிவிட்டு உணர்வின் தன்மையை – நம்மை என்றும் இளமையாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

(உடல் அழியக்கூடியது உயிர் என்றுமே அழியாதது)

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 104

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ கோடி மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்களுடைய உணர்வலைகள் எத்தனையோ உண்டு. அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்காகத்தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

திரும்பத் திரும்ப இதைப் பதிவு செய்தாலும் “ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை…” உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

ஒன்றை எடுத்து ஒன்றின் சக்தி வளர்ந்த பின் அதனின் துணை கொண்டு விண்ணின் நிலைகளை ஒவ்வொன்றையும் வளர்க்கும் நிலைக்கு நீங்கள் வர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 103

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஈஸ்வரபட்டர் எம்மிடம் சொன்னது:-

ஒவ்வொரு நொடியிலேயும் ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நாம் பார்த்து அதனை நுகர்ந்து விட்டால் வேதனையிலிருந்து அவர் மீள வேண்டும் என்று தான் நீ எண்ணுதல் வேண்டும்.

அதே போல ஒருவன் தீங்கு செய்ய நினைத்தால் அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்று தான் நீ எண்ண வேண்டும்.

நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவர்களைத் தீமையிலிருந்து மீட்க வேண்டும். வேதனைகளிலிருந்து மீட்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

உங்களுக்கும் இதைத்தான் யாம் தெளிவுபடுத்துவது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறுங்கள். அந்த உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வு நுகர்ந்ததைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார். அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 103

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிலே புருவ மத்தியிலே எண்ணும் போது அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம். அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.

புருவ மத்தியிலிருக்கும்… நம் உயிரை” எந்த அளவிற்கு அதிகமாக எண்ணுகின்றோமோ அந்த அளவிற்கு இயக்கச் சக்தியின் ஆற்றலைப் பெற்று எண்ணிய சக்தியைப் பெற முடியும்.

ஞானிகள் அவ்வாறு பெற்றுத்தான் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும்.

அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.

அருள் உணர்வைப் பெருக்கினால் நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முடியும் பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும் என்றும் அந்த அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் நம்மால் உணர முடியும் என்றும் அதன் வழியில் நாம் எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வு வரும் என்பதையும் அதை வைத்து நாம் செல்ல வேண்டிய சப்தரிஷி மண்டல எல்லையை நிச்சயம் அடைய முடியும் என்றும் ஞானகுரு நமக்கு வழிகாட்டுகின்றார்கள். நாம் அதன் வழி செல்வோம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 102

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

பேசுவதற்கு முன் “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.

இதைப் போல “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் அடிக்கடி எண்ணினால்தான் நம் உயிரின் இயக்கம் உயிர் வழி சுவாசமாக அமையும்.

ஏனென்றால் இந்த உலகத் தொடர்பு கொண்ட மற்ற உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்… நம்முடைய எண்ண ஏக்க அலைகள் ஞானிகளின் உணர்வுகளை எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கும்… ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணினால் தான் அது மிகவும் ஏதுவாக இருக்கும்.

“எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு. அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு மெய் ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 101

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

உயிரின் உணர்வின் தன்மை கொண்டு அழியா ஒளிச் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்றால் நாம் உயிரை அவசியம் மதித்துப் பழக வேண்டும். ஞானிகள் உணர்த்தியபடி அதை நாம் பின்பற்ற வேண்டும்.

இப்படி ஒவ்வொருவரும் அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா என்று திரும்பத் திரும்பச் சொல்வது. அதே போல் எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்… நம் உயிர் தான்..” என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 100

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

ஈஸ்வரா என்றாலே புருவ மத்தியில் நம் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை. வெளியிலே நினைவு செல்ல வேண்டியதில்லை.

குரு என்றால் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் குருவை நாம் மதிக்கின்றோம் என்று பொருள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 99

புருவ மத்தியின் இரகசியம் பற்றித் தெரிந்து கொள்வோம்

ஓ…ம் ஈஸ்வரா…! என்று எண்ணும் போது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே “குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்

ஈசனாக இருப்பதும் உயிரே
விஷ்ணுவாக இருப்பதும் உயிரே
கடவுளாக இருப்பதும் நமது உயிரே
பிரம்மமாக இருப்பதும் உயிரே.
நாம் எண்ணியது எதுவோ அதைச் சிருஷ்டிப்பதும் நம் உயிரே,
எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் “உயிரே”.
ஆன்மாவின் நிலைகள் அது உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும் நிலைகளும் “உயிரே”.
நாம் எண்ணியது எதுவோ அதை உடலாக்குகின்றது நம் உயிர்
நாம் எண்ணியது எதுவோ அந்தச் சக்தியாக உள் நின்று மீண்டும் நம்மை இயக்குகின்றது.
நாம் எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக இருப்பதும் நம் “உயிரே”.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்து… அடுத்து…, “அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.

ஆகவே ஓம் ஈஸ்வரா குருதேவா என்கின்ற போது நம் உயிரின் இயக்கத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். மந்திரம் சொல்கிற மாதிரிச் சொல்ல வேண்டியதில்லை.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி… அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 98

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

கொங்கணவர் வந்து தங்கியிருந்த “இடம்” இன்றும் திருப்பதியில் உண்டு. அன்று திருப்பதி மலை மேலே சென்று அங்கே ஏழ்மையிலே வாழ்ந்து கொண்டிருந்த மங்கம்மாள் என்ற அந்தத் தாயிடம் உணவை உட்கொண்டு சிரமத்தின் எல்லைக்கே சென்று கடந்தபின் தான் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுத்துக் கொண்ட அகங்காரத்தை அழித்துவிட்டு, மனதைத் தங்கமாக்கும் நிலைக்கு வந்தார்.

தங்கத்திற்கு எவ்வளவு வலுவோ அடுத்த அழுக்கு அதிலே மாசுபடாத நிலைகளில் அது தங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும். இதைப் போல தன் மனதில் எண்ணத்தை வலுக் கூட்டி அந்த உணர்வின் தன்மை கொண்டு உயிரான ஒளியுடன் ஒளியைச் சேர்க்கும் நிலையையே அன்று கொங்கணவ மாமகரிஷி பெற்றார்.

தான் எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு ஒரு மனிதனுடைய துன்ப அலைகளை மாற்றியபின் அவர்கள் எண்ணும் “நல்ல எண்ணங்களினுடைய சுவாசமே” தன்னை அந்த “ஒளிச் சரீரம் பெறவைக்கும்” என்று உணர்ந்தபின் பிருகு தன் மனதைத் தங்கமாக்கக் கொங்கணவர் உடலிலே புகுந்து செயல்பட்டார்.

ஆகவே “மனதைத் தங்கமாக்குவதற்குத்தான்..” கொங்கணவர் உடலிலிருந்த பிருகு மகரிஷி ஒவ்வொரு வீட்டுக்கும் யாசகம் கேட்டுச் சென்றார்.  இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்னாடி தான்.

அந்த ஆறாவது அறிவின் தன்மையைத் தன் உடலுக்குள் எடுத்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் நிலைகளுக்குத்தான் அன்று மனதைத் தங்கமாக்கும் நிலைகளில் செயல்பட்டார் கொங்கணவர்.

போகமாமகரிஷி எப்படி மனித உடலில் விஷத்தை நீக்கி மகிழ்ச்சியான உணர்வுகளைத் தான் பெறவேண்டும் என்று பழனியிலே செய்தாரோ இதைப் போலத்தான் திருப்பதியிலே கொங்கணவ மாமகரிஷி செய்தார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 97

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

கொங்கணவர் உடலிலிருந்த பிருகு மகரிஷி முந்தைய அரச நிலைகளில் அவர எடுத்துக் கொண்ட மந்திரத்தால் சில நேரங்களில் இவரை எதிர்க்கும் நிலையில் யாராவது வந்தால் தன்னுடைய மந்திர சக்தி கொண்டு அவரை அச்சுறுத்தியோ அல்லது வீழ்த்தும் நிலைகளில்தான் செயல்பட்டார்.

ஒரு சந்தர்ப்பம்… ஒரு சமயம் மலர் சோலைகளுக்கு மத்தியில் நடந்து வரும் பொழுது கொக்கு ஒன்று பறந்து செல்லும் பொழுது அதனுடைய எச்சம் கொங்கணர் மீது பட்டுவிட்டது.

கொக்கு என்னை இப்படி அசுத்தமாக்கி விட்டது என்று தன் எண்ணத்தின் பார்வையால் அதனுடைய சிறகை ஒடித்து விடுகின்றான். ஆனால் அந்தக் கொக்கு ஒன்றும் தவறு செய்யவில்லை. இவர் முன்பு அரசன் அல்லவா…! அந்த உணர்வின் தன்மை அவரை விட்டு நீங்கவில்லை.

கொங்கணர் தான் கற்றுக் கொண்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்திருந்தாலும் போகும் பாதையில் தற்செயலாகத் தான் எச்சம் விழுந்தது என்று சிநதிக்க முடியவில்லை.

“பிச்சாந்தேஹி…!” என்று கேட்டுக் கொண்டு வாசுகி வீட்டிற்கு வருகின்றான். அங்கே வந்தவுடன் பல குரல் கேட்கிறது. தன்னைச் சொல்லி “ஆண்டவனை வழிபடுபவனை நீ கவனிக்கவில்லையே…!” என்று கொங்கணர் அகம் கொள்ளுகின்றான்.

ஏனென்றால் ஒரு வீட்டிற்குச் சென்று தான் பிச்சாந்தேஹி என்று யாசகம் கேட்பார்கள். (கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் வேறு வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள்)

வாசுகி அம்மாவிற்குத்தான் சக்தி அதிகம், திருவள்ளுவருக்கு அல்ல. வாசுகி தன் ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு சொல்லும் உணர்வின் ஆற்றலைத்தான் திருவள்ளுவர் எழுதி வந்தார்.

வாசுகி அம்மாள் தன் சக்தியினுடைய நிலைகள் கொண்டு கொங்கணவர் நினைத்ததை உணர்கின்றார். அவர் வெளியே வருவதற்குச் சிறிது நேரமாகிவிட்டது.

இவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். யாசகம் கேட்க வந்தாலும் அந்த “அகங்காரம்” இவருக்குள் இருந்தது. ஏனென்றால் அன்று அரசராக இருந்தவர்.

மக்களுக்காகச் சேவை செய்கிறேன். எனக்குக் கொடுப்பதற்கு தாமதமாகின்றது என்ற மன உறுமல் ஏற்பட்டு முணுமுணுக்கின்றார்.

கொஞ்ச நேரம் தாமதமானவுடன் மனதிற்குள் உறுத்தல். ஏனென்றால் அரசாட்சி செய்தே பழக்கமானவர். இவர் எந்த நிலைக்கு மாறவேண்டும் என்றாலும் அங்கேயும் அந்த நிலைகளே வருகின்றது.

அப்பொழுதுதான் வாசுகி அம்மாள் இவரிடம், “கொக்கென்று நினைத்தாயா… கொங்கணவா…?” என்றார்.

அவர் கொக்கை வீழ்த்திய நிலைகளை… ஒரு சாதாரண கிராமத்திலே ஒன்றும் தெரியாத… “ஒரு பெண் சொல்கிறதே…” என்ற நிலையில் அதை உணர்த்தப்படும் பொழுது தான் அவருக்கு அங்கே “ஞானம்” வருகின்றது.

தான் அரசனாக (பிருகுவாக) இருக்கக்கூடிய காலத்தில் செய்த நிலைகளிலிருந்து மீண்டு தெளிவுபடும் நிலைகளுக்கு வந்தாலும் தான் மீண்டும் ஒரு உடலிலிருந்து தெளிவு பெறும் எண்ணம் வரவில்லை.

கொக்கின் இறக்கையை ஒடித்தது உனக்கு எப்படித் தெரிந்தது…? நீ எங்கே இதைக் கற்றுக் கொண்டாய்…! என்று கொங்கணர் கேட்கின்றார்.

கசாப்புக் கடைக்காரரிடம் கேள்..! என்கிறது வாசுகி. கசாப்புக் கடைக்காரனிடம் கேட்டால் தான் “உனக்குத் தெரியும்…!” என்று சொல்கிறது.

கசாப்புக் கடைக்காரன் என்ன செய்கிறான்…? ஆடை வெட்டி வியாபாரத்தைச் செய்கிறான். ஆட்டைக் கொல்லப் போகும் போது ஆட்டின் உயிர் அவனுக்குள் போய் அது மனிதனாகப் பிறக்கிறது.

ஆனால் ஆட்டைத் தின்றவன் உடலில் என்ன செய்கிறது…? ஆட்டை ரசித்துச் சாப்பிட்டவனை எல்லாம் ஆடாகப் பிறக்கச் செய்கிறது.

நீ கொக்கை வீழ்த்தினாய். உனக்குள் வீழ்த்திடும் சக்தி வருகிறது. அதைக் கொல்லும் உணர்வு கொண்ட பின் நீ அதே நிலையையே அடையப் போகின்றாய் என்று வாசுகி தன்னுடைய கவிப் புலமைகளில் “சொல்லாமல் சொல்கிறது…” அந்தச் சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது…?

வாசுகி அம்மாள் உணர்த்திய உணர்வின் அலைகள் வரப்படும் பொழுதுதான் கொங்கணவருக்குச் சிந்திக்கும் நிலைகள் வருகின்றது. அப்பொழுது தான் அவர் சிந்தித்து மனதைத் தங்கமாக்கும் நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வருகின்றார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 96

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

கொங்கணவர் உடலிலிருந்து கொண்டு வீடு தோறும் சென்று யாசகம் செய்து அவர்கள் ஒவ்வொருவருடைய நிலைகளிலும் துன்பம் போக வேண்டும் அவர்கள் புனிதமாக வேண்டும் என்று செயல்பட்டு வந்தார்.

பிருகு அவ்வாறு யாசிக்கும் பொழுது அவர்கள் நலம் பெறவேண்டுமென்று எண்ணிச் செல்வார். அவர் வந்துவிட்டுச் சென்றபின், அவர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாகின்றது.

அவர்கள் பட்ட துன்பங்கள் நீங்கி அங்கே நல்லதாகும் பொழுது, “அன்று பிருகு வந்து சென்றார், அதிலிருந்து என் குடும்பம் ஷேமமாக இருக்கின்றது” என்று மகிழ்ந்த உணர்வை அவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 95

பிருகு மாமகரிஷியின் அருள் சக்தியும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியும் பெறுவோம்

பிருகு இராஜ வம்சத்தில் பிறந்து மன்னராகச் செயல்பட்டவர். அவர் உலகையே… அண்டத்தையே ஆட்டிப் படைக்கும் நிலைகள் கொண்டவர். தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ இராஜ தந்திரங்களைச் செய்தார். எத்தனையோ நாடுகளை வென்றார். மந்திர சக்திகள் கொண்டு போர்முனைகளில் செயல்பட்டவர்தான்.

செல்வத்திலே செருக்கும் செருக்கின் நிலைகள் கொண்டு விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்துக் கொண்டவர். மந்திரம் என்ற நிலைகள் கொண்டு மதத்தின் அடிப்படையிலே மக்கள் மத்தியிலே செருகி அதன் வழியில் ஆற்றல் கொண்டு ஆட்சி புரிந்தவர்.

பிருகு மகரிஷி பல உடல்கள் மாறி மாறி  நாடிகளை எழுதி வைத்து அந்த நாடியின் தன்மையை மற்றவர் வாசிக்க அவ்வாறு வாசித்தவர் உடலுக்குள் பிருகு புகுந்து அந்த உடலின் தன்மையையும் தான் செயலாக்கி அந்த ஆற்றல் மிக்க சக்திகளைத் தேடி அலைந்தவர் தான்.

அன்று பிருகு மகரிஷி தான் எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு உலகையே ஆள வேண்டும் என்ற தன் அரசாட்சியினுடைய நிலையில் எவ்வளவோ கடுமையாக இருந்தும் கடைசியில் அரசைத் துறந்து தான் மெய் வழியைக் காண வேண்டும் என்ற நிலைக்குச் சென்றாலும் அவர் எடுத்துக் கொண்ட உணர்வு யானை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி விண் செல்ல முடியவில்லை. ஏனென்றால் மனித உணர்வுடன் அவர் சென்றதினாலே விண் செல்ல முடியவில்லை.

அவர் மீண்டும் கூடு விட்டுக் கூடு பாய்ந்ததிலேதான் இன்று நாம் “கொங்கணவ மாமகரிஷி” என்று சொல்கின்றோமே அவர் உடலில் புகுந்தார். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தான் அவர் கொங்கணவ மகரிஷியாக வந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… பிருகு மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… கொங்கணவ மாமகரிஷியின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 94

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அத்திரி மாமகரிஷி அருளாற்றல்களை இந்தப் பூமியிலே எவ்வாறு பெற்றார்…? அவர் ஆற்றல் பெற்ற நிலைகள் கொண்டு தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி எவ்வாறு விண் சென்றார்…? என்ற இந்தப் பேருண்மையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய வழியில் அந்த ஆற்றலை நுகர்ந்த பின் அந்த ஆற்றலின் சக்தியை ஜெபத்தால் மேலும் பெருக்கி அந்த எண்ண அலைகளை எல்லோருக்கும் பதியச் செய்ய வேண்டும் என்ற ஆசையிலே தான் இதை வெளிப்படுத்துகின்றோம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 93

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அரசாட்சி காலங்களில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்டுணர்ந்து… இதையெல்லாம் வெறுத்து… இனி நாம் ஒவ்வொரு மக்களின் நல் எண்ணங்களை நாம் பெற்றால் தான்… நாம் விண் செல்ல முடியும்  என்ற நிலைக்கு வந்து அரச நிலையைத் துறந்து… காடு வனம் என்ற நிலைகளில் திரிந்து ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெற்று… மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து… அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து… அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கித் தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றிச் சென்றவர் அத்திரி மாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

 

manrdra 92

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

பெரிய அரசனாக இருந்த அத்திரி தன் வாழ்க்கையில் இருக்கக்கூடியதைத் துறந்து அந்த மெய் ஞானியின் அருள் ஒளி பெற வேண்டுமென்று மக்கள் மத்தியிலே வந்தான்.

பின் ஒவ்வொரு உயிரின் தன்மையில் அவர்கள் எடுத்துக் கொண்ட நல்ல எண்ணமும் அந்த நல்ல எண்ணத்தை நாம் பெற்றால் அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மெய் உணர்வின் நிலைகளை நமக்குள் வளர்த்து அந்த மெய்யின் தன்மையான ஒளி நிலையைத் தான் பெற முடியும் என்ற பேருண்மையை அறிந்து உணர்ந்தவர்தான் அத்திரி மாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 91

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அத்தி மரத்தின் நிழலிலே அத்திப் பழங்கள் எப்படி தன் தண்டுகளில் உருப்பெறுகின்றதோ அந்த உணர்வின் எண்ணத்தைக் கொண்டு ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அது தோன்றும் உணர்வின் நிலைகள் கொண்டு ஒவ்வொன்றிலும் உருப்பெறச் செய்ய முடியும் என்று தன் உணர்வின் தன்மை கொண்டு அரசனாக இருந்தவன் அத்திரி.

நாட்டின் நிலையும் தனது குடும்பத்தில் தன் மக்கள் தன்னுடைய அரசுக்குள் போர் முறைகள் கொண்டு தனக்கு இந்தச் சொத்து வேண்டும் அந்தக் சொத்து வேண்டும் என்றும் இந்த அரசுக்குள் போர் முறைகள் கொண்டு இந்த அரசனையே (அத்திரியை) திருப்பித் தாக்கும் நிலை வரும்போது தான் ஆற்றல் மிக்க மெய் நிலைகளை உணர்ந்து அரச சபையைக் கூட்டி அதன் வழிகளிலே அரசை நடத்தி அந்தப் பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகளைப் பெறமுடியும் என்று இருந்தாலும் அரசனான அவனால் பெற முடியவில்லை.

அவனுடைய குடும்பத்தில் மக்கள் எதிர்நிலைகள் செய்யும்போது, இவனது சிந்தனைகள் குலைந்து நாட்டிற்குள் தன் பிள்ளைகள் என்று வரும்போது மக்கள் மத்தியிலே பல கொடூரத் தன்மைகளை விளைய வைத்து மக்களின் நிலைகளில் எல்லை கடந்த நிலைகளாகி அவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையும் மழை நீர் பெய்யாத நிலையும், அது தவித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலைகளில்தான் இந்த அரச நிலையே வேண்டியதில்லை என்று உணர்கின்றான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 90

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

ஞானகுரு அவர்கள் சுமார் 6 வருட காலம் கொல்லூரில் இருந்தேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்குப் பின்பும் பல தடவை அங்கே சென்று வந்துள்ளார்.

அதாவது ஆரம்பத்தில் கோலமாமகரிஷி அவர்கள் கொல்லூரில் கடும் தவமிருக்கும் பொழுது அவர் உடலிலிருந்த வெறுப்புணர்வுகள் உயர்ந்த உணர்வுகளை எடுக்கவிடாது அவருடைய ஜீவான்மாவில் பதிவு செய்த நிலைகள் ஆன்மாவாக முன் நிற்கிறது. சுவாசித்த உணர்வோ தன்னைத் தான் வளர்த்துக் கொள்வதற்கு வேலை செய்கின்றது.

ஒவ்வொரு குணமும் தன்னை வளர்த்துக் கொள்ள முந்துகின்றது. முந்தும் பொழுது ஒரு நஞ்சான உணர்வை எடுத்துக் கொண்டால், நஞ்சின் தன்மை நல்ல குணங்களை அழிக்கும். தீமையை அகற்றும் சக்தியாக எடுத்தால், தீமைகளை அகற்றும் என்ற இந்தப் பேருண்மையை அறிந்து கொள்வதற்குத்தான் கோலமாமகரிஷி எதை எடுத்தார்…? எதை வெறுத்தார்…? எதை அறிந்தார்…? ஞானத்தால் எப்படித் தான் உணர்ந்தார்…? என்று அதை எல்லாம் அறிவதற்குத்தான் கொல்லூரில் பல வருட காலம் தங்கியிருந்து ஜெபமிருந்தோம் என்று ஞானகுரு சொல்கிறார்.

ஆகவே… அன்று கோலமாமகரிஷி எப்படி ஆதிசங்கரருடைய உடலிலிருந்து வெளிப்படுத்தினாரோ அதே உணர்வின் தன்மையை அவர்கள்தான் இங்கே இதை எல்லாம் வெளிப்படுத்துகின்றார்கள். அவ்வாறு அவர்கள் வெளிப்படுத்தும் அந்த உணர்வின் ஆற்றலைப் பெற நாம் தியானிப்போம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 89

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

ஆதிசங்கரர் சொன்னது… உயிர் ஈசன்… எண்ணும் எண்ணங்கள் சுவாசிக்கும் பொழுது உயிரான ஈசனிடத்தில் அந்த சுவாசங்கள் பட்டு அது உறைகின்றது. எந்தெந்தக் குணங்களை எண்ணுகிறோமோ அந்த குணமே நம் உயிரில் பட்டு அபிஷேகமாக நடக்கின்றது

நாம் பாலைப் போல மனம் வேண்டுமென்று எண்ணினால் பால் எவ்வளவு தூய்மையான சத்தாக இருக்கின்றதோ அதைப் போல பிறருடைய எண்ணம் கண்டு கலக்கமில்லாத நிலைகள் ஏற்படுத்தி நல்லது செய்ய வேண்டும் என்று சுவாசிக்கும் போது அது உயிரிலே பட்டு அந்த உணர்வின் அலைகள் உயிரான ஈசனுக்கு அபிஷேகமாகின்றது. அந்த அலைகள் உடல் முழுவதற்கும் சென்றவுடன் நம் உடலிலிருக்கும் நல்ல குணங்களுக்கு அது மகிழ்ச்சியாக இருக்கும். இது தான் உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டிய அபிஷேகம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 88

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

அத்வைதத்தின் உண்மையினுடைய நிலைகளை அன்று ஆதிசங்கரர் சொல்லும்போது… துவைதவாதிகள் “நீ இந்த வேள்விகள் செய்யா விட்டால் அவஸ்தைப்படுவாய்…” என்று சொன்னார்கள். சொன்னதோடு மட்டுமல்லாது ஏவல் செய்து ஆதிசங்கரருக்கு வயிற்று வலி வரவைத்து விட்டார்கள்.

வயிற்று வலி வந்தபின் இவர் கடும் நிலைகளில் சுவாசித்து அத்வைத நிலைகளில் தன் வயிற்று வலியை நிவர்த்தி செய்தார். நிவர்த்தி செய்து அந்தத் தத்துவத்தை தன் நிலையை அங்கே நிலைநாட்டிக் காட்டுகின்றார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

நாம் சுவாசிக்கும் இந்த உணர்வின் தன்மைகள் எந்த குணத்தைக் கொண்டு சுவாசிக்கின்றோமோ அது உயிருடன் சேர்க்கப்படும்போது “விஸ்வ விநோதினி”,

அன்றைய துவைதவாதிகள் ஆதிசங்கரரை “நீ காசியில் இருக்கும் அந்த விநாயகருக்கு யாகங்கள் செய்து வந்தால்தான் நல்லது” என்கிறார்கள், ஆதிசங்கரர் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றார்.

உடலுக்குள் உணர்வின் எண்ணங்கள் உண்டு. எண்ணத்தாலே எடுத்து அதைச் சுவாசிக்கும்போது உயிரின் துடிப்பைக் கூட்டி மெய் ஞானியின் அருள் உணர்வைச் சுவாசிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார் ஆதிசங்கரர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 86

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

சூட்சம நிலையில் எடுத்துக் கொண்ட உணர்வின் அலையை அது எவ்வாறு செயல்படுகின்றது என்ற நிலையில் ஆதிசங்கரர் தன் தாயின் ஆற்றலைச் செயல்படுத்தும்போது பாடுகின்றார்… “ஐகிரி நந்தினி நந்திதமேதினி விஸ்வ விநோதினி நந்தினிதே”

ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஐந்து அறிவின் புலனறிவு தான் அதாவது வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு. வெப்பத்திற்குள் மறைந்திருக்கக்கூடிய காந்தம் அது ஈர்க்கும் சக்தி (1), ஆனால் அந்த வெப்பத்தை உருவாக்கும் அணுவின் தன்மையை அது பொருளைக் கொடுத்தவுடன் உருவாக்கவும் செய்கின்றது. அது மற்றதை மறைக்கவும் செய்கின்றது.

ஒரு உணர்வின் தன்மையை மறைத்து மாய்த்துவிட்டு ஒன்றைத் தனக்குள் எடுத்து அது வளர்க்கச் செய்யும். ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும்போது ஒரு கருவின் தன்மை மாய்த்துவிட்டு ஒரு சக்தியின் தன்மையை உருவாக்கும் (2,3)

எந்தக் கோளின் தன்மையை எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வின் சக்தி அணுவுக்குள் சேர்க்கப்படும்போது இந்த அணுவின் தன்மை அந்த மணத்தை வெளிப்படுத்தும்(4).  அதே சமயம் அந்த உணர்வின் தன்மை ஒரு பொருளுக்குள் சேர்ந்தவுடன் இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு இயக்கும்(5) – ஆக ஐந்து.

மனிதனுக்குள் இருக்கும் புலனறிவு – ஐந்து. அதுதான், “ஐகிரி நந்தினி, நந்திதமேதினி விஸ்வ விநோதினி, நந்தினிதே” என்று சொல்லும்போது ஐந்து புலனறிவுகள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 85

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

கோலமாமகரிஷி ஆதிசங்கரருடைய உடலிலிருந்துதான் மெய் ஒளியைப் பெற்று விண் சென்றார். ஆதிசங்கரருடைய உயிராத்மாவும் விண்வெளி சென்று விட்டது. அவர்களெல்லாம் இன்று விண்வெளியில் நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

கோலமாமகரிஷி தன் தத்துவத்தினுடைய நிலைகளை அத்வைதம் துவைதம் என்ற நிலைகள் கொண்டு அவருடைய ஆற்றல் இந்த உலகம் முழுவதற்கும் ஆதிசங்கரர் மூலம் வெளிப்பட்டது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 84

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

அரச காலங்களில் பேருண்மையினுடைய நிலைகளை கற்றுக் கொண்டதினாலே அதையே பற்றிக் கொண்டு தன் வலிமையினாலே இந்த உடலை விட்டுச் சென்றால் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டிய பின்தான் அவர் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்படிச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் “மூகாம்பிகை” என்று கொல்லூரில் அந்தச் சிலையை வடித்தார்.

கோலமாமகரிஷி என்ற பெயர் வந்ததின் காரணமே கோள்களின் ஆற்றலின் பேருண்மைகளை அறிந்தவர் ஆகையினாலேதான் கோலமாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 83

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

கோலமாமகரிஷி அரச நிலைகளில் வந்தவர். அவர் அரச நிலை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மெய் ஒளியைக் காண வேண்டும் என்று வந்தவர்.

அவர் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் என்ற ஊருக்கு அருகில் “குடசாஸ்திரி” இறக்கத்தில் காட்டுக்குள் போய்த் தனித்து ஜெபமிருக்கிறார். ஜெபம் செய்து கொண்டிருந்தாலும் இவர் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு ஆவியின் நிலைகள் எதிர்ப்பணுக்கள் அதிகமாயிற்று. கடும் தவமிருந்து தான் அதிலிருந்து அவர் மீண்டார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 82

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

வேதங்கள் என்றாலே “நாதங்கள்…” என்று பொருள். ஒலிக்கொப்ப உணர்வும்… உணர்வுக்கொப்ப ஒலியும்… உணர்வுக்கொப்ப ரூபமும்… பெற்ற நாம் அடுத்து எந்த ரூபத்தை அடைய வேண்டும்…? என்பதை வேதங்களின் மூலமாக வியாசகர் காட்டியுள்ளார்

உருவம் திடப் பொருள் ரிக் அதிலிருந்து வரும் மணம் சாம மற்றொரு பொருளுடன் இணைந்து உருமாற்றும்போது இரண்டுமே தன் நிலை இழக்கின்றது அதர்வண. இரண்டும் மாறி ஒன்றாக இணைக்கப்படும்போது “யஜூர்”.

எதை அதிகமாக நுகர்ந்தோமோ அதனின் கணக்கின் பிரகாரம் தான் அடுத்த உடலின் ரூபம் அமைகின்றது என்பதே வியாசர் காட்டிய உண்மை.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 81

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சூரியனிலிருந்து வரும் வெப்பம் காந்தம் விஷம் ஒரு உணர்வின் தன்மையை எடுத்தால் அந்த உணர்ச்சி கொண்டு தாக்கி இயக்கும் போது – அர்ச்சுனன். கவர்ந்து கொண்ட உணர்வுகள் காந்தம் – நகுலன். எடுத்து இணைந்து செயல்படுத்தும் தன்மையாக வருவது வெப்பம் – சகாதேவன். நுகர்ந்தது வலிமையாகி அணுவானால் – பீமன். அந்த உணர்வு தன்னைக் காக்கும் வலிமை பெறுகின்றது

எல்லாம் சேர்த்து உடலாக்கப்படும்போது – தர்மன். எதனின் உணர்வின் தன்மை எதை எடுத்ததோ அதைத்தான் வளர்த்துக் கொள்ளும் தன்மை வருகின்றது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், இந்த உணர்வுகள் நமக்குள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை எப்படி இயக்குகின்றது? என்று மகாபாரத்தில் வியாசகர் சாதாரண மக்களும் புரியும்படி தெளிவாக உணர்த்தியுள்ளார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 80

manrdra 79

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

கண்கள் உபதேசிக்கும் பொழுது நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் வருகின்றாய்.

எதை நினைத்தாலும் என் வழி கொண்டு தான் நீ அறிய முடியும்.

நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலிலே விளைகின்றது.

நீ எதை நினைக்கின்றாயோ அதனின் நிலைகள் யார் எதைச் செய்தாலும் என்னிடமே நீ வந்து சேர்வாய்.

என் நிலையையே நீ அறிவாய் என்று இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு காட்டப்பட்டது.

கண்ணன் என்ற கண்கள் உண்மையை உணர்த்தினாலும் ஒருவன் தவறு செய்கின்றான் என்ற உணர்வை நுகரப்படும்போது உயிரிலே பட்ட பின் நம் உயிர் என்ற உணர்வுகள் கண்ணனின் சகோதரியாகத்  திரௌபதை அது கவர்ந்து சொல்கின்றது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 78

manrdra 77

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சிறு சிறு துளிகளாக அணுக்களாகச் சேர்ந்து ஒரு மலையாகப் பாற்கடலில் தோன்றியது நமது பூமி தன் சுழற்சியால் ஏற்படும் உராய்வின் தன்மை கொண்டு அது இயங்குகின்றது. வாசுகி,

பாற்கடலிலே நமது பூமி சுழலும் பொழுது அதாவது கடையும் பொழுது பாறைகளாகவும், கற்களாகவும், மரம், செடி, கொடிகளாக விளையச் செய்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் சத்தை, விண்ணிலிருந்து வந்த உயிரணு கவரும் போது அந்தச் சத்து அணுத்திசுக்களாகி புழுவிலிருந்து மனிதனாக வருவதை அவரவர்கள் விழுங்கிய நிலைகள் கொண்டு உடல்களாக உருப்பெற்றது என்பதை மகாபாரதம் என்று உணர்த்துகின்றார் வியாசர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 76

manrdra 75

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை எப்படித் தனக்குள் கண்டறிந்தானோ அந்தப் பேருண்மைகள் எல்லாம் வியாசனான ஒன்றுமறியாத அந்த மீனவனுடைய உடலிலே தென்படுகின்றது.

ஆதிசக்தி எவ்வாறு உருபெற்றது…? அது சூரியனாக எவ்வாறு தோன்றியது…? என்பதையும் பிரபஞ்சத்திற்குள் நமது பூமி மேரு என்ற மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் வைத்து பாற்கடலிலே கடைந்தெடுத்தான் என்று மகாபாரதத்திலே வியாசர் அருளினார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 74

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

அன்று வாழ்ந்த பெரும்பகுதி மக்கள் அனைவருமே சூரியனை வணங்கிப் பழகியவர்கள். அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி தான் தவறு செய்தேன்… ஆனால் இந்த மீன் இனம் என்னைக் காத்தது என்ற உணர்வை மேல் நோக்கி வானிலே நினைவைச் செலுத்துகின்றான் மீனவனான வியாசகன்.

இது நடந்தது காலை நான்கு மணி. கடல் பகுதியில் செல்பவர்கள் நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்தை நன்றாகப் பார்க்க முடியும். அதே சமயத்தில் சூரியன் அந்த துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வைக் கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வரும் நேரம் அது.

அந்த நேரத்தில் வியாசகன் இவ்வாறு எண்ணுகின்றான். அப்படி எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவன் நுகர நேருகின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் அகண்ட அண்டமும் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இருக்கிறது என்று அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை வியாசகன் நுகர்கின்றான். வியாபித்திருக்கும் உணர்வை வியாசகன் கண்டுண்ர்ந்தான். மெய்ஞானியாக ஆனான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 73

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் வியாசகன் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலில் கிக்கிப் படகு கவிழ்ந்து கடலிலே விழுந்து விடுகின்றான். அப்படித் தத்தளிக்கும்போது தான் எப்படியும் மீளவேண்டும் என்ற மனப் போராட்டம் அதிகமாகின்றது.

தான் எப்படியும் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வின் ஏக்கம், உடலின் உணர்வுகளை மறந்து தன் உடலைக் காக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஒரே எண்ண ஒலிகளை ஈர்த்து அதனின் இயக்கத்திலிருக்கும் பொழுதுதான் அவன் எந்த மீனைப் பிடித்து வேட்டையாடி அதைப் புசித்து அதன்வழி கொண்டு அவன் வாழ்ந்தானோ அதே மீன் இனம் வியாசரைக் காக்கின்றது இவனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கின்றது.

நாம் எதைக் கொன்றோமோ அந்த மீன் இனமே தன்னைக் காத்தது என்று திரும்பிப் பார்ர்கும்போது தன் தவறை உணர்ந்து உயரந்த குணங்களை எண்ணி ஏங்குகின்றான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 71

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று நுகர்ந்தால் “லவ குசா…!”

நாம் எடுக்கும் மெய் உணர்வுகள் உடலுக்குள் (சீதாவிற்குள்) விளைந்தபின் நம்மைப் பற்றியும் நமக்குள் இயங்கும் அனைத்தையும் அறிந்து அது வெளிப்படுத்திக் காட்டும். தன்னைத் தான் அறியும் நிலையாக நாம் நம்மை அறிய முடியும் என்றும் வான்மீகி காட்டினார்.

ஆகவே இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த நாம் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களைக் காத்திடல் வேண்டும் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து தப்பிட இச்சைப் பட வேண்டும் என்று தெளிவாக உணர்த்துகின்றார் வான்மீகி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 71

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

காவியத்திலே காட்டும் போது கர்ப்பமாக இருக்கும் சீதாவை மக்களின் உணர்ச்சியால் உந்தப்பட்டு உண்மையின் உணர்வை அறியாதபடி சீதா என்ற சுவையைப் புண்படும்படிச் செய்து விட்டனர். ஆனால்… அதிலே வரும் வேதனை என்ற கருவை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காகச் சீதாவின் மனதை மாற்றி அருள் உணர்வைச் செவி வழி ஊட்டி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கூட்டிக் கருவிலே வளரும் குழந்தைக்கு ஞானத்தை ஊட்டுவதாகக் காட்டினார் வான்மீகி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 70

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சீதை மானுக்காக வேண்டி ஆசைப்படுகிறாள் என்றால் சீதையினுடைய ஆசையில் அவள் எண்ணிய நிலைகள் தான் அந்த மான். இது பொய் மான். நேரிலே பார்க்கப்படும் நிலைகள் வேறு ஆனால் எண்ணங்களில் ஆசைகளைக் (பொய்யாக) கூட்டப்படும் போது அது எவ்வாறு நம் வாழ்க்கையைத் திசை திருப்புகிறது…? அதிலே எப்ப்டிச் சிக்குகின்றோம் என்று நமக்கு முன் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலைகளைத்தான்… “பொய் மான்…!” என்று அவ்வாறு மிகவும் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.

இப்படி ஒவ்வொரு நாளும் நமது எண்ணத்தால் இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ துயரங்கள் வருகிறது…! இந்த உடல் வாழ்க்கையில் வந்த அந்தத் தீய வினைகள் தீமைகள் துன்பங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்…! அதை விடுத்து விட்டு உயிரான விஷ்ணு என்ற உணர்வை நாம் எடுத்து உயிருடன் ஒன்றி பிறவியில்லா நிலை என்ற சொர்க்க நிலையை நாம் அடைய வேண்டும் என்று உணர்த்துகின்றார்கள்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 69

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

இராமாயணம் நமக்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம். துருவ நட்சத்திரம் எந்த வழிகளிலே அது ஒளியாக மாறியதோ, அந்த உண்மையின் ஆற்றல் பூராவுமே வான்மீகியின் உடலுக்குள் நின்று வெளிப்படுத்தியதுதான் இந்த இராமாயணக் காவியம்.

(உயிர் – விஷ்ணு; உயிரின் காந்தம் –  இலட்சுமி; இராமன் – எண்ணங்கள்; சீதா என்றால் சுவை – மகிழ்ச்சி; உடல் – இலங்கை; ஆஞ்சநேயன் – எண்ணங்கள் வாயுவாகச் செல்வது; வாலி – விஷம் தீமை செய்யும் உணர்வு.. உடலின் இச்சை – இராவணன் சுக்ரீவன் – துருவ நட்சத்திரம் லவ குசா – மகரிஷிகள் உணர்வு)

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 68

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

வான்மீகி மூடராக இருந்தார் கொலைகாரராக இருந்தார் கொள்ளைக்காரராக இருந்தார். இருந்தாலும், பட்சியின் பாச உணர்வு இவரிடம் வரும் பொழுது, பட்சியின் துடிப்பை உணர்ந்தார். தவறிலிருந்து மீண்டிடும் ஏக்கம் கொண்டு, விண்ணை நோக்கி ஏகுகின்றார்.

அன்று அகஸ்தியன் தான் எந்தப் பாசத்தைச் செலுத்தி தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றானோ அந்த ஆற்றலை இவர் நுகர நேருகின்றது. “வான்மீகி” என்று அப்பொழுதுதான் பெயர் வந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 67

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

வான்மீகி மூடராக இருந்தார் கொலைகாரராக இருந்தார் கொள்ளைக்காரராக இருந்தார். இருந்தாலும், பட்சியின் பாச உணர்வு இவரிடம் வரும் பொழுது, பட்சியின் துடிப்பை உணர்ந்தார். தவறிலிருந்து மீண்டிடும் ஏக்கம் கொண்டு, விண்ணை நோக்கி ஏகுகின்றார்.

அன்று அகஸ்தியன் தான் எந்தப் பாசத்தைச் செலுத்தி தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றானோ அந்த ஆற்றலை இவர் நுகர நேருகின்றது. “வான்மீகி” என்று அப்பொழுதுதான் பெயர் வந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

போகர் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்தியைக் கண்களாலே, காதாலே, வாயாலே, உடலாலே, சுவாசத்தாலே எடுத்து நமக்குள் சேர்த்தால் அது பஞ்சாபிஷேகம.

இவ்வாறு புலனறிவில் கவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அனைத்தும் பஞ்ச அமிர்தமாக நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர்கிறது.

அந்தப் பஞ்ச அமிர்தத்தை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதற்குத்தான் முருகன் சிலையை உருவாக்கினான் போகன்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 65 png

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

மனிதனைப் போன்ற ஒரு உருவச் சிலையாக அமைத்து NEGATIVE POSITIVE அதாவது சத்ரு மித்ரு என்ற நிலைகளில் இயக்கப்படும் போது எப்படி மின் அணுவின் நிலைகளில் விளக்கு எரிகின்றதோ… காந்தக் கட்டைகளைச் சுழற்றும் போது காந்தப் புலனறிவு இயங்குகின்றதோ அதைப் போன்று உயிருள்ள சிலையாக உருவாக்கினான்.

மனிதனைப் போன்ற இந்த உணர்வின் சத்தை அது உருவாக்கி மக்கள் அனைவரும் சிலையிலிருந்து வெளிப்படும் மணத்தை நுகரச் செய்து மனித வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அது உள் நின்றே பொசுக்கி மக்களை இன்னல்களிலிருந்து விடுபடச் செய்யும் தத்துவத்தை உருவாக்கினான் போகன்.

போகர் எதைக் காட்டினாரோ அந்தச் சக்திகள் அனைத்தும் முருகன் சிலைக்குள் உண்டு. முருகன் சிலையிலிருந்து வரக்கூடிய அந்த ஆவியின் தன்மையை நாம் சுவாசித்தால் நமக்குள் இருக்கக்கூடிய பல விஷத் தன்மைகளை அது மாய்த்துவிடும்.. அறியாது சேர்ந்த கடும் பிணிகளும் போகும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 64 png.

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

பாதரசம் நம் உடலிலும் உண்டு. தாவர இனத்திலும் உண்டு. கல்லிலும் உண்டு. எவை எவைகளில் எதனின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றன என்ற நிலைகளை உணர்ந்தவன் போகன்.

கண்ணாடிக் கற்களைக் (QUARTZ – CRYSTAL) கண்டுபிடித்தவன் போகன். ஏனென்றால் ஒளியின் தன்மை கொண்டு தெளிவாக உணர்த்தும் அந்த உணர்வின் தன்மையை அதை உரசி அதையும் சிலை செய்ய இணைத்துக் கொண்டான்.

மனிதனின் எண்ணத்தின் சிந்தனைகள் உருவாகக் காரணமான பல கோடித் தாவர இனங்களைத் தேடி அலைந்து அவைகளையும் முருகன் சிலைக்குள் இணைத்தான்.

சிந்தனைத் திறன் கூடி தீமைகளை அகற்றிடும் உணர்வின் ஞானங்கள் மனிதனுக்குள் எவ்வாறு வளர்ந்தது என்ற நிலையும் அந்த ஆற்றல்கள் எந்தெந்தத் தாவர இனச் சத்திற்குள் இருக்கின்றது என்பதையும் நுகர்ந்தறிந்தான். தன் உயிரின் துணை கொண்டு அதை எல்லாம் அறிந்தான் போகன்.

அத்தகைய பல கோடி உணர்வின் சத்தையும் காந்தப் புலனின் நிலைகள் கொண்ட பாதரசத்தையும் அதற்குள் இணைத்துத் தீமைகளை அகற்றும் ஆற்றல்களையும் நஞ்சினை அகற்றிடும் உணர்வின் சத்துக்களையும் முருகன் சிலையில் சாரணையாக ஏற்றினான் போகன்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 63 png

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

ஒவ்வொரு தாவர சக்தியை நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தன் உடலில் ஆற்றல் மிக்கதாகச் சேர்த்து அதற்கொத்த நிலைகள் கொண்டு தன் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி வந்தார்,

போகர். தான் வளர்த்துக் கொண்ட நிலைகளை மற்றவர்களும் பெற எண்ணி ஏங்கினார்.

நட்சத்திரங்களால் விளையப்பட்ட வைரங்களையும் நவபாஷாணத்தையும் சூரியனிலிருந்து வெளிப்படும் பாதரசத்தையும் மூன்றையும் ஒன்றாக இணைத்து முருகன் சிலையைச் செய்தார் போகர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 62 png.

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

விஷம் தீண்டி தன் தாய் விஷத்தாலே மடிய அதனின் வலுக் கொண்டு அதனில் ஏங்கி இந்த உணர்வின் ஆற்றலை தனக்குள் எண்ணி ஏங்கி விண்ணை நோக்குகின்றார் போகர்.

அவ்வாறு ஏங்கிய நிலைகள் கொண்டு ஏக்கத்தாலே சுவாசிக்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட அந்தப் பேரொளி இவர் சுவாசத்திலே ஈர்க்கப்பட்டது.

ஈர்க்கப்பட்டபின்… அந்த மாமகரிஷிகளின் வானஇயல் தத்துவத்தை எப்படி உணர்ந்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல் போகருக்குள் இது பிரம்மமாகின்றது. உருப்பெறுகின்றது.

அவருடய வ்ளர்ச்சியில் எந்த விஷமான சக்தியும், அவரை ஒன்றும் பாதிக்காத நிலையைச் செயல்படுத்தினார்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 61 png

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

குரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தி… குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ… அவர் நினைக்கும் பொழுதெல்லாம்… குரு… தான் நுகர்ந்த அந்த உணர்வின் சக்தி எளிதில் கிடைக்கும்.

எளிதில் செயல்படுத்த முடியும். தீமை என்ற நிலைகள் தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 60 png

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இணைந்தவர் நம் குருநாதர்.

அதன்வழி நமது பூமியிலே அந்த உணர்வின் வித்துக்கள் பட்டு  மற்ற உயிர்களிலே அது விளைந்து பலவாறு பல உணர்வின் தன்மையை இங்கே பரப்பிய நிலைகள் கொண்டு அந்தந்த உணர்வுகள் பட்டு… அந்தந்த உடல்கள்… அந்த உயிராத்மாக்கள் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி உள்ளனர்.

அவருடன் விண்ணிலே பெரும் மண்டலங்களாக இதைப் போன்று எத்தனையோ ரிஷிகள் சேர்ந்து விண் சென்றுள்ளார்கள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 59 png

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

பேரண்டத்தின் உண்மைகளைக் கண்டுணர்ந்த இயக்கம் அவருக்குள் இருந்தாலும்… அதன் வழிகொண்டு எதை எதை… எவ்வாறு பெறவேண்டும்…? என்று உபதேசித்து அருளினார்.

அவருக்குள் விளைந்த ஆற்றல்மிக்க சக்திகள்… அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வின் அலைகள் இங்கே படர்ந்து கொண்டுள்ளது… எல்லோருக்கும் கிடைக்கும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 58

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

பித்தரைப் போன்றுதான் அவர் இந்த உலகிலே உலாவிக் கொண்டிருந்தார். ஏனென்றால் இந்தப் பித்தனான உலகிலிருந்து மக்கள் பித்தைப் போன்று வாழ்க்கை வாழ்ந்திடும் “ஒவ்வொரு பித்து நிலைகளிலிருந்து அவர்கள் மீளவேண்டும்…” என்ற சிந்தனைதான் எனக்கு…! என்று அடிக்கடி உபதேசிப்பார்.

ஆனால் இளமையிலே ஏழ்மையில் வாடிவந்த நிலையிலிருந்து தீமைகளிலிருந்து விடுபட்டு… அவர் உடலிலே விண்ணின் ஆற்றல்களைப் பெருக்கி அந்த உணர்வு கொண்டு ஒளியின் சரீரம் பெற்று… இன்றும் அவர் விண்ணின் ஆற்றலுடன் சுழன்று கொண்டுள்ளார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 57

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

ஐந்து அல்லது ஆறு வயதில் வெளியே கிளம்பி இந்த பூமி முழுவதும் வலம் வந்துள்ளார். இந்த பூமிக்குள் எத்தனை பாஷைகள் உண்டோ அத்தனையும் இவருக்குத் தெரியும். நமது சூரிய குடும்பத்தின் தொடர் கொண்ட 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. இப்படி ஏனைய எத்தனையோ சூரியக் குடும்பங்கள் இருப்பினும் இந்த 2000 சூரியகுடும்பத்தின் உண்மை நிலைகளையும் உணர்ந்தறிந்தவர் நமது குருநாதர். அவர் அறியாது அவருக்குள் இருந்த ஆற்றல்மிக்க சக்தியின் நிலைகள் கொண்டு பேரண்டத்தின் நிலைகளை அவர் அறிய முடிந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 56

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம் – 1

இளமைப் பருவத்திலேயே உலகம் முழுவதற்கும் ஈஸ்வரபட்டர் சுற்றுப் பயணம் செய்துள்ளார். இளமைப் பருவத்தில் இவர் அறியாதபடியே பல ஆற்றல்களை அவர் பெற்றார்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 55

அகஸ்தியரின் அற்புத சக்திகளைப் பெறுவோம்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அகஸ்திய மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 54

அகஸ்தியரின் அற்புத சக்திகளைப் பெறுவோம்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அகஸ்திய மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 53

அகஸ்தியரின் அற்புத சக்திகளைப் பெறுவோம்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அகஸ்திய மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 52

அகஸ்தியரின் அற்புத சக்திகளைப் பெறுவோம்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அகஸ்திய மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 51

அகஸ்தியரின் அற்புத சக்திகளைப் பெறுவோம்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அகஸ்திய மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 50

அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் மகரிஷிகள் ஆகிவிட்டார்கள்… நாமும் கவர்ந்து மகரிஷியாக ஆவோம்…!

அகஸ்தியன் தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை நம் ஞானகுரு உபதேசித்த அருள் வழிப்படி நமக்குள் ஆழமாகப் பதிவு செய்வோம். அகசதியரின் ஸ்டேஷனை நாம் வலுவாக்கிக் கொண்டு ஒவ்வொரு நொடியிலும் நஞ்சை வெல்வோம்.. ஒளியாக மாற்றுவோம்…!

mantra 49

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி… நமக்குள் தீமையை விளைவிக்கும் உணர்வுகளை அடக்கி… உலக மக்கள் அனைவரும் ஒன்றென்ற நிலையில் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்

இந்தப் பூமி தான் நமக்குத் தாய்…! எந்தெந்த நாட்டிலே… ஊரிலே… நாம் பிறந்திருந்தாலும் நமக்குத் தாய் இந்தப் பூமியே…!

mantra 48

நமக்குள் மகரிஷிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும்… அந்த உயர்ந்த சக்திகளை வலுவாகக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

சிரமங்கள் பட்டுக் கொண்டுள்ளோருக்கு அந்த மகரிஷிகள் அருள் உணர்வுகளை எடுத்து நாம் பாய்ச்சுதல் வேண்டும்… அவர்களையும் துன்பங்களிலிருந்து மீட்க வேண்டும். 

mantra 47

அன்று அகஸ்தியன் செய்தது போன்று மீண்டும் இந்தப் பூமியைச் சீராக்க நம்மால் முடியும்

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் விண்ணிலே நினைவைச் செலுத்தி… அவர்களின் அருள் வட்டத்தில் இருந்து… நம் உடலைக் காக்கவும் நம் நாட்டைக் காக்கவும் முடியும்…!

mantra 46

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நினைவினை மேகங்களில் செலுத்தி மழை பெய்யத் தியானிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்

மனிதர்களான நாம் எதை அழுத்தமாக எண்ணுகின்றோமோ… அந்த வலிமை கூடி… மழை பெய்ய வேண்டும் என்ற எண்ண அலைகளை எங்கே நினைவைச் செலுத்துகிறோமோ அங்கே பாய்கின்றது… அந்த உணர்வுகள் படர்கின்றது. மழை பெய்ய வைக்கின்றது…!

mantra 45

நாம் கனியின் தன்மை அடைந்து… ஒளியான வித்துக்களாகப் பேரொளியாக மாற வேண்டும்

திரை மறைவாக இருக்கும் உயிருடன் ஒன்றி … மகரிஷிகள் அருள் ஒளியை ஏடுத்து முழுமை அடைந்தால் நாம் கனியாகின்றோம்.. அழியாத ஜோதி நிலை அடைகின்றோம்…!

mantra 44

மகரிஷிகளின் அருளைச் சேமிப்பதே உயிராத்மாவிற்கு அழியாத சொத்து

விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்த… உயிரால் உருவாக்கப்பட்டது தான் உடல். இந்த உடல் வாழ்க்கையில்… இருளைப் போக்கிடும் அருளைப் பெருக்கி “பேரருள் பேரொளியாகப் பெருகுவதே” படைப்பின் முக்கிய நோக்கம் 

mantra 43

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து  நாம் வாழும் இடங்களில் அடர்த்தியாக அதைப் பரவச் செய்ய வேண்டும்

நஞ்சை அடக்கி அதைப் பேரொளியாக மாற்றும்… துருவ  நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி… இந்தப் பூமி முழுவதும் பரவிப் படர்ந்து… பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் நீங்கிட… அருள்வாய் ஈஸ்வரா 

mantra 42

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்  நுரையீரலுக்குள் பாய்ச்சி அதை வலுவாக்கி எந்த நச்சுத் தனமையான காற்றும் நம் அருகே வராது தடுத்துக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா 

mantra 41

ஆண்டவன் செய்யவில்லை… அவனாகவே செய்வதுதான் அவன் வாழ்க்கை நிலை எல்லாம்…!

தான் எடுத்த ஈஸ்வர சக்தியின் துணை கொண்டு தன்னைக் காத்து.. அந்த அருள் ஒளியை மற்றவருக்குள் பாய்ச்சுவது தான்…! தன் நிலையில் இருப்பது என்பது…!”

mantra 40

உயிரே கடவுள்…! உடலே ஆலயம்…! சுவாசிக்கும் உணர்வே தெய்வமாக இருந்து இயக்குகிறது

“சுவாச நிலையில்” உயர்ந்த சக்திகளைப் பெறுவதே தியானம் செய்வதன் முக்கியமான நோக்கம். மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தால் நம் உயிராத்மா ஒளி நிலை பெறும்.

mantra 39

தீமை என்ற துவாரங்களை அடைத்தால் தான் அருள் ஒளி நமக்குள் கூடும்

இனி நாம் செய்வதெல்லாம் நமக்கும் நம் நாட்டிற்கும் உலகுக்கும் நன்மை பயப்பதாக அமையட்டும்.

mantra 37

வாழ்க்கையில் திரும்பத் திரும்ப வரும் தடங்கல்களை எண்ணிச் சலிப்படைய வேண்டியதில்லை

சலிப்பையும் சோர்வையும் அண்ட விட்டால் அது ஒரு பகடைக் காயைப் போல் நம்மை ஆட்டிப் படைத்துவிடும். மகரிஷிகளின் உணர்வு கொண்டு நாம் மீண்டும் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும்.

mantra 38

மாமகரிஷிகளுடன் இணைந்த நிலையில் நாமும் தியானிப்போம்

மகரிஷிகளின் செயல்கள் இந்தப் பூமியில் இனி வெளிப்படும் காலம் வந்து விட்டது.

mantra 36

எத்தகைய நிலை வந்தாலும் தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்தியை  எடுத்து நமக்குள் வலுப்படுத்தும் பழக்கம் வர வேண்டும்

நமக்காக வேண்டிப் பிரார்த்திக்கக்கூடிய குரு இருந்தாலும்… நாம் நமக்குள் இருக்கும் ஈசனிடம் நினைவைச் செலுத்தி… அவனிடம் அழுத்தமாக வேண்டினால் தான் நம் உயிர் அதை உருவாக்கும்… அந்த ஆற்றல் நமக்குள் கூடும்…!

mantra 35

நாம் எண்ணும் எண்ணத்தால் வருவது தான் எல்லாமே…!

அடுத்தவர் கொடுத்து நாம் பெறுவதல்ல அருள்…! வரும் இன்னல்களிலிருந்து மீண்டு பெறுவது தான் அருள்…! அப்படிப் பெறும் அருள் என்றுமே நமக்குள் நிலைக்கும்… வளரும்..!

mantra 34

எலும்புகளுக்குள் இருக்கும்  ஊழ்வினையின் பதிவே நம் வாழ்க்கையின் வினைப் பயன் ஆகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா…!

mantra 33

அழியாச் செல்வம் என்பது அவரவர்களின் உயிராத்மா தான்…! வேறு எதுவும் இல்லை…!

உயிரே நமக்குச் சொந்தம்… அருள் மகரிஷிகளே நமக்குப் பந்தம்…!

mantra 32

ஒவ்வொரு நிமிடமும் உடல் நலத்துடன் வாழ மகா பச்சிலைகளின் மணங்களைச் சுவாசிக்க வேண்டும்

அகஸ்தியன் பெற்ற பல கோடித் தாவர இனச் சத்துகளும்… அருள் ஞான மூலிகைகளின் மணங்களும்… பச்சிலை வாசனைகளும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! 

mantra 31

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் முறை

இதிலே கொடுக்கப்பட்ட ஐந்தையும் ஒரு பழக்கமாகப் பயிற்சியாக எடுத்துக் கொண்டே வந்தால் மகரிஷிகளைப் பற்றிய உணர்ச்சிகள் நேரடியாகக் கிடைக்கும்

mantra 30

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரை எண்ணி அவர் விட்ட மூச்சலைகளைச் சுவாசியுங்கள் 

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் அகஸ்தியரின் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா…!

mantra 29

ஞானகுருவின் உபதேச ஒலிகளுக்குள் எண்ணிலடங்கா மகரிஷிகளின் உணர்ச்சிகள் (சூட்சம சக்திகள்) உண்டு 

மகரிஷிகளின் உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டால் தான் அதனின் இயக்கமாக நாமும் ஞானிகளாக ஆவோம். (கேட்க விரும்புவோர் இந்த இரண்டு லிங்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் – https://wp.me/p3UBkg-1Uc  https://wp.me/p3UBkg-1Yh )

mantra 28

மீண்டும் இன்னொரு (உடலுக்குள்) பிறவிக்கு நாம் வந்து விடக்கூடாது 

நாம் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற “ஒரு உயிரான்மாவையாவது” சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும் 

mantra 27

“தீமைகளை மறக்க” நாம் அவசியம் பழகித் தான் ஆக வேண்டும் 

தீமைகளை மறந்தால் தான் நம் நல்ல குணங்களும் சிந்தனைகளும் சீராக… வலுவாக… உறுதியாக… தெளிவாக… உத்வேகமாக.. இயங்கும்

mantrta 26

மகரிஷிகள் உணர்வைச் சுவாசித்தால்  “நல்லதாக்க வேண்டும்… நல்லதாக்க முடியும்…” என்ற எண்ண வலு கூடிக் கொண்டே வரும் 

“உயிர் பற்று கொண்டு…” நாம் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் பாசம் எந்த வகையிலும் நம்மை நல் வழிப்படுத்திக் கொண்டேயிருக்கும்

mantra 25

பாசம் வைப்பது தப்பா…! அது எப்படித் தப்பாகும்…? என்று தான் கேட்போம் 

நம்முடைய பாசமும் பற்றும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதில் தான் இருக்க வேண்டும் 

mantra 24

நம் சுவாசம் மேல் நோக்கியதாக இருக்க வேண்டும்

விண்ணிலிருந்து எடுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை மற்றவருக்குப் பாய்ச்ச வேண்டும். இங்கிருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

mantra 23

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டு  நச்சுத் தன்மைகளைச் “சுட்டுப் பொசுக்க வேண்டும்” 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான். அந்தச் சக்தியை நுகர்ந்தால் நஞ்சுகளை எல்லாம் வேக வைக்க முடியும்.

mantra 22

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் வாழ வேண்டும்

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…. மெய் ஞானிகளாக உயர்ந்திட வேண்டும்…! என்று நாம் எண்ணினால் மகரிஷிகளின் ஈர்ப்பு ஒளி வட்டத்திற்குள் நாம் செல்ல முடியும்.

mantra 21

ஞானகுருவின் கண்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய “ஊடுருவும் சக்தி” 

ஞானகுருவின் கண்கள் கூர்மையாக இருந்தாலும் பார்வை எங்கே நிலை குத்தி இருக்கிறது…? என்பதை நாமும் அதைச் செய்து பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் லேசர் (LASER) போன்று அறியலாம்… இயக்கலாம்…!

MANTRA 20

புவியின் ஈர்ப்பைக் கடந்து நம் கண்ணின் நினைவாற்றல் விண்ணுலகம் செல்ல வேண்டும் – பயிற்சி

கண்களைத் திறந்து செய்யும் தியானத்தின் மூலம் நம்முடைய புலனறிவு ஆற்றல் மிக்கதாகின்றது. ஆண்டென்னா சரியாக இருந்தால்  டி.வி ரேடியோ சரியாக வேலை செய்வது போல் நம் “கண்கள் +சுவாசம்” இரண்டும் ஒன்றாக இருந்தால் அதன் மூலம் நம் நினைவாற்றல் விண்ணுலகிற்கு எளிதில் செல்லும். தொடர்பு  (NETWORK) விண்ணுடன் இருப்பதால் இந்தக் காற்று மண்டலத்தின் நச்சுத் தன்மை நம்மை ஒன்றும் செய்ய முடியாது. 

MANTRA 19

இருளைப் பிளந்து அதை ஒளியாக மாற்றும் திறன் பெறுவோம் 

துருவ நட்சத்திரம் தன் அருகில் சிறிதளவு நஞ்சு வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது. அந்தச் சக்தியை நம் உயிருக்கு உணவாகக் கொடுப்போம்

mantra 18

உயிர் காக்கும் பாதுகாப்புக் கவசம் 

விண்ணிலிருந்து வரும் அரும் பெரும் சக்திகளை நம் உயிரில் சேமிக்கும் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். 

mantra 17

நம்பிக்கையுடன் செய்யும் எந்தக் காரியமும் தோல்வி அடைவதில்லை 

எந்த எண்ணத்தையும் புருவ மத்தியிலே உயிரான ஈசனிடம் அழுத்தமாகச் (ELECTRONIC) செலுத்தினால் தான் உயிர் அதைப் பெற்றுத் தரும். 

MANTRA 16

ஓ…ம் ஈஸ்வரா… என்ற நெருப்பைக் கூட்டி தீமைகளைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் 

தியானம் என்றாலே  உயர்ந்த சுவாசத்தை எடுக்க வேண்டும் என்று தான் பொருள் 

mantra 15

நல் சுவாசத்தை எடுத்தால் தப்பலாம் 

மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நாம் என்றும் வாழ்ந்திட வேண்டும் 

mantra 14

காற்று மண்டலத்தையே நாம் முழுமையாகப் பரிசுத்தப்படுத்த முடியும் 

அகஸ்தியரைப் போன்று நாம் வெளிவிடும் சக்தி வாய்ந்த மூச்சால்  விஷக் காற்றையே புனிதமாக்க வேண்டும் – மனித குலத்திற்கு இன்று நாம் செய்ய வேண்டிய சேவை இது தான்…!

mantra 13

நாம் பற்ற வேண்டியது மகரிஷிகளின் அருள் உனர்வை…!

எந்த நோய்க் கிருமியும் நமக்குள் ஜீவன் பெற முடியாது

mantra 11

விஷத்தை வென்றிடும் எம அக்னியை நமக்குள் சேர்த்துக் கொள்வோம் 

நெருப்பைக் கொண்டு தான் விஷத்தை வெலல வேண்டும்… வெல்ல முடியும். 

mantra 10

எந்த ஒரு காரியத்திற்கும் புருவ மத்தியிலிருக்கும் ஈசனை அழைத்துச் செல்வோம்…! 

எந்தச் சிக்கலாக இருந்தாலும் எத்தகைய கடுமையான நிலையைச் சந்தித்தாலும் அடுத்த கணம்  நினைவு ஈசனிடம் தான் செல்ல வேண்டும்.

mantra 9

புருவ மத்தியில் இருக்கும் ஈசனிடம் வேண்டுவோம்

இரு கண்களுக்கு மத்தியில் இருக்கும் உயிரிடம் ஈசனிடம் வலுக் கூட்டி உணர்வு மாறாது வேண்டுவதே ஊசி முனைத் தவம்

mantra 9

எத்தகைய நஞ்சையும் ஒடுக்குவோம்…! 

அகஸ்தியன் நஞ்சை ஓடுக்கிய வழியிலேயே நாமும் செயல்படுவோம்

mantra 8

நடப்பதெல்லாம் நன்மைக்கே…! 

எது நடந்ததோ… அது நன்றாகவே நடந்தது… எது நடக்கப் போகின்றதோ… அதுவும் நன்றாகவே நடக்கும்..! என்ற இந்தச் சிந்தனை தான் நமக்கு வேண்டும்.

mantra7

மரண பயத்தை அகற்றுவோம்…! 

பயத்தின் துடிப்பை வைத்தே அதீதமாக மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெற்றுப் பழகுவோம்

mantra 6

நல்ல மூச்சை விடுங்கள்… நல் சுவாசமே எடுங்கள்…!

உங்கள் சுவாச நிலையை உயிர் வழியாக மாற்றுவதற்காகத்தான் இந்த உபதேசமே…!

mantra 5

சுவாச நிலையை மாற்றுங்களப்பா…!

கீழ் நோக்கிய சுவாசத்தை மாற்றி விண்ணிலிருந்து வரும் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

mantra 4

தூசிகளைத் தட்டி விடுவது போல்

தீமைகளைத் தட்டி விட வேண்டும்

AGATHIAR2

நல்லதைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்துத்

தீமைகளை நம் அருகில் வராதபடி விரட்டி அடிப்போம்

mantra 2

உயிர் காக்கும் ஒரே மருந்து

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைப்பது தான்

mantra 1

Leave a Reply