“பிறருக்காக… பிறருக்காக…!” என்று சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டுள்ளோம்

“பிறருக்காக… பிறருக்காக…!” என்று சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டுள்ளோம்

 

நாம் உண்ணும் உணவை எல்லாம் நம் உடல்… உடலுக்கு ஏற்ற சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை எல்லாம் கழிவுப் பொருளாக ஆக்கிவிடுகின்றது.

1.நம் உடல் அமைப்பையே ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது
2.நம் ஆத்மாவிற்கு நாம் இன்னும் எத்தனை பெரும் தெய்வீக நிலையை ஏற்றுத் தர வேண்டுமப்பா..!

நம்மைச் சுற்றிப் பல பல காரியங்களும் நல்லெண்ணம் உடையவர்களும் தீய எண்ணம் உடையவர்களும் எல்லாம் தான் கலந்துள்ளன.

நம்முள் இருக்கும் பல கோடி அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகாமல் நம் சுவாச நிலையில் நம் ஆத்மாவுக்கு வேண்டிய நல்ல நிலையைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…!

நம் உடல் அமைப்பை ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது நம் ஆத்மாவிற்கு நாம் தானப்பா பெரும் பொக்கிஷத்தைத் தேடி வைத்திட வேண்டும்.

இன்றைய பெரும் பகுதி மனிதர்கள் உள்ளோன்று வைத்து வெளியிலே ஒன்று பேசுபவர்களாகவும் பிறருக்காக… பிறர் மெச்சத் தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும் தான் நாம் பார்க்கின்றோமப்பா..!
1.பிறருக்காக வாழ்பவரும்
2.பிறர் பார்த்துப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவரும்
3.பிறரைத் துவேஷிப்பவரும்
4.பிறரைப் புகழ்பவரும் எல்லோருமே
5.தன் ஆத்மாவை மறந்துவிடுகின்றார்களப்பா…!

இன்றைய உலகில் உள்ள நற்காரியங்கள் செய்பவர்களும் புகழ்ச்சிக்கு ஏங்கித்தான் செய்கிறார்களப்பா…!
1.புகழ்ச்சிக்கு ஏங்கிச் செய்யும் நற்காரியங்களும்
2.ஆத்மாவிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லையப்பா…!

பசித்து வருபவனுக்குப் பசி அறிந்து அன்னமிட்டாலும் இந்தக் காலத்தில் அதையும் ஏமாற்றிப் பிழைக்கத்தான் பார்க்கின்றார்களப்பா…! நல்லவர்களையும் நல்லவர்களாக வாழவிடுவதில்லையப்பா இன்றைய உலகம்.

இன்றைய உலகிலிருந்து மீண்டு வருவதுவே நம் ஆத்மாவிற்குத் தேடித் தரும் பொக்கிஷமப்பா…!

“நான்…!” என்னும் பலன்

“நான்…!” என்னும் பலன்

 

நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா… இந்த உடலா..?

சரீரம் என்பது அழியக்கூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?

1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.

செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.

ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும்
1.மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான
2.”நானின்…” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.

சுவாசம் எடுத்துவிடுவதும்… கண் இமை மூடித் திறப்பதும்… செவி ஒலி கேட்பதும்… சுவை உமிழ் நீர் ஊருவதும்… இவை எல்லாமே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.

கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி… தூக்கம்… மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்… தன் தன் கதியில்
3.நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது. (பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை)

செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ தூங்கவோ வலியை நீக்க வேண்டும் என்றோ
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.

கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.

மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்… சோர்வுக்கு உறக்கத்தையும்… செலுத்தக்கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.

அப்பொழுது… இந்த “எண்ணம் தான்…” நானா…?

விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.

தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.

ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில் பொறுக்கி எடுத்த
4.நற்குணம் ஆறு எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!

அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான் விஞ்ஞானியாகவும் ஆகின்றான் அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்.

மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா…!

ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்…!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.

நான் யார்…? என்ற புதிருக்கு “விடை”

நான் யார்…? என்ற புதிருக்கு “விடை”

 

1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!”
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.

தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி” என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.

மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.

ஆகவே இந்த ஜென்மத் தொடரில் தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை
1.நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் – செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.

சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.

இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!”

நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்று “நீங்கள் எண்ணினால் அது தப்பு…”

நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்று “நீங்கள் எண்ணினால் அது தப்பு…”

 

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் மன வலிமையை நாம் எப்படிக் கொண்டு வருதல் வேண்டும்…?
1.அருளைப் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற மன வலிமை பெற்றால்
2.சிந்தித்துச் செயல்படும் வலிமையாக இயக்கச் செய்யும்.
3.நம்மைக் காக்கும் உணர்வுகளும் வளரும்.

திரும்பத் திரும்ப இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை நினைவு கொண்டால் சிந்தித்துச் செயல்படும் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்.

உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர “நான் காப்பாற்றுவேன்…” என்று எண்ணத்தை நீங்கள் எண்ணினால்
1.தனக்குள் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும் தகுதியை
2.நீங்கள் இழந்து விடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடும் விளைவுகள் வருகின்றது. இந்த விளைவில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

உங்களுக்குள் உபதேசித்த உணர்வின்படி அருளை நீங்கள் பெருக்கிக் கொண்டால் தீமை நீக்கும் சக்தி பெறுகின்றீர்கள் அதைப் பெருக்கக் கூடிய ஞானம் உங்களுக்கு வர வேண்டும்.

அந்த ஞானம் உங்களுக்குள் வரவேண்டும் என்றால் இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களுக்குள் அந்த அருள் உணர்ச்சிகளைத் தூண்டி உங்களை அதன் வழியில் சுவாசிக்கச் செய்கின்றோம்.
1.சுவாசிக்கும் பொழுது உங்கள் இரத்தங்களில் புது விதமான உணர்ச்சிகளின் ஓட்டங்கள் இருக்கும்
2.அந்த உணர்வுகள் பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அத்தகைய கருத் தன்மை உங்கள் இரத்தத்தில் உருப்பெறுகின்றது

இதை வளர்த்துக் கொண்டே வந்தால் அந்த அருள் ஞானத்தை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.

அத்தகைய அணுக்கள் உடலில் உருவாகிவிட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரும் போது உயிரில் படுகின்றது சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது நல்ல உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றது. நல்ல அணுக்கள் உங்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது அருளைப் பெருக்குகின்றது அருள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது.

1.இந்த உடலுக்குப் பின் அந்த ஞானியின் அருள் வட்டத்திலே செல்கின்றோம்
2.”எந்த ஞானி இருளை நீக்கினானோ” அவன் ஈர்ப்பு வட்டத்திற்கு… துருவ நட்சத்திரத்துடன் நாம் செல்ல முடிகின்றது.

இது தான் நமது கடைசி எல்லை உயிர் ஒளியானது… அந்த உயிரோடு ஒன்றி ஒளியின் தன்மை நாம் பெற வேண்டும்

ஆனால் நான் (ஞானகுரு) சாமியாராக இருக்கின்றேன்… உங்களைக் காப்பாற்றுவேன் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தப்பு. சாமி சொன்ன உணர்வின் தன்மையைப் பெற்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மைக் காக்கும் என்று எண்ணினால் அது தான் சரி.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களில் எல்லா வகையான தீமைகளிலிருந்தும் தப்பிக்கும் உணர்வு பெற்று இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.

உயிர் மனித உடலை உருவககிய பின் பல கோடித் தீமைகளையும் வென்று உணர்வை ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
1.குருநாதர் காட்டி அருள் வழியில் எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்ததை உங்களுக்குள் பதிவாக்கி நினைவாக்கும்படி செய்கின்றேன்
2.உங்களை காக்க அந்த அருள் ஞானம் கிடைக்கும்.
3.இருளை நீக்கிடும் ஞானிகளாக நீங்கள் உருவாக முடியும்

நீங்களும் என்னைப் போன்றே ஞானத்தின் வழியில் வளர்ந்து வர முடியும்

நீங்களும் என்னைப் போன்றே ஞானத்தின் வழியில் வளர்ந்து வர முடியும்

 

வான் வீதியில் ஜீவணுக்கள் உருவாகின்றது… “வைரஸ் உருவாகின்றது” என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர் இங்கிருந்து செயற்கைக்கோள்களை விண்ணிலே அனுப்பி அங்கே பார்க்கப்படும் பொழுது இதையெல்லாம் காணுகின்றார்கள்.

சுமார் நாற்பது வருடத்திற்கு முன்பு நான் (ஞானகுரு) ஏற்கனவே இதை எல்லாம் வெளிப்படுத்தி உள்ளேன்.

சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகளும்… இரண்டு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கங்களும் அந்த அலைகள் உள்ளே வந்தால்… வியாழன் கோளின் கதிரியக்கமும் அதனுடன் சேர்ந்தால் இந்த உணர்வின் தன்மை சேர்ந்து உயிர்த் துடிப்பாகி உயிரணுவாக உருவாகும் என்று ஏற்கனவே குரு வழியில் விளக்கம் கொடுத்துள்ளேன்.
1.துடிப்பாகும் பொழுது இயக்கமாகிறது…
2.அதனுடைய இயக்கத்தை “ஈசன்” என்று ஞானிகள் பெயரை வைத்துள்ளார்கள்.

ஆனால் வைரஸ் என்ற நிலையானால் எதன் உணர்வைக் கவர்ந்ததோ அதை வளர்க்கும் அந்த அணுவாகின்றது.

உயிரணு தோன்றுவது அங்கே பால்வெளி மண்டலத்தில். பூமி இழுத்துக் கொண்டால் மற்ற சத்தினைக் கவர்ந்து கொள்ளும் பொழுது வைரஸ்.

அதே சமயத்தில் பூமிக்குள் வந்தால் இதன் உணர்வை எடுத்து… அடுத்து இதைக் காட்டிலும் வலுவான தாவரங்களை எடுத்து உடலாக மாற்றிக் கொள்கிறது. கவர்ந்து கொண்ட தாவரத்தின் உணர்வுக்குத் தக்க புழுவாகவோ பூச்சியாவோ உருப் பெறுகின்றது

மனித உடலுக்குள் வந்தால் இந்த உணர்வை உட்கொள்ளும் விஷத்தன்மையாக மாறுகிறது. விஷத்தின் தன்மை எடுக்கப்படும் பொழுது (புதிய வைரஸ்கள்) எந்தெந்த நிலை ஆகின்றது…? என்பதை முன்பே நான் சொல்லி உள்ளேன்.

ஆனால் “ஆராய்ச்சியில் இன்று கண்டுபிடித்தார்கள்” என்று சொல்கின்றார்கள்.

ஏனென்றால் குருநாதர் காடுகளிலும் மேடுகளிலும் மலைகளிலும் பல இடங்களுக்கு என்னை அனுப்பி இந்தக் காற்று மண்டலத்தில் என்னென்ன இருக்கின்றது…? என்ன உருவாகின்றது…? என்று தெளிவாகக் காட்டினார்.

1.நான் கண்ட உண்மைகள் அதிகம்…
2.ஒரே தடவையில் அனைத்தையும் சொல்ல முடியாது
3.சிறுகச் சிறுக அதைச் சொல்லி வருகின்றேன்.
4.சிறுகச் சொன்னால்… சாமி சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை என்று விட்டுவிடாதீர்கள்.

ஒரு நாடாவிலே டேப் மூலம் பதிவாக்கி விட்டால் திருப்பி அதை இயக்கப்படும் பொழுது… எது பதிவோ அதை அப்படியே பேசுகின்றது.

அதே போன்றுதான் யாம் சொல்லக்கூடியதைக் கூர்ந்து கவனித்து நீங்கள் பதிவாக்கி விட்டால் சந்தர்ப்பம் உங்களுக்கு மீண்டும் அது (எம்முடைய பேச்சு) நினைவுக்கு வரும்.

ஒரு தீயவனைப் பார்த்தால் அவனுடைய உணர்வு வராதபடி தடுக்க வேண்டும் என்றால்… ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற புருவ மத்தியில் எண்ணிவிட்டால் அந்தத் தீய உணர்வு நமக்குள் புகாது தடுக்கப்படுகிறது.

அவ்வாறு தடுத்து நிறுத்தி விட்டு… அடுத்து நல்லதை எண்ணி நமக்குள் கலக்க வேண்டும். அதைச் செய்யப் பழக்கப்படுத்துவதற்குத் தான் இந்த உபதேசம்.

ஆக மொத்தம் நீங்கள் எல்லோருமே என்னை நம்புகின்றீர்கள்… இல்லையா…!
1.ஏன்..? நானும் மனிதன்தான்… நீங்களும் மனிதன் தான்…!
2.குரு வழியில் நான் எந்த உணர்வைப் பெற்றேனோ அதே உணர்வை நீங்களும் பெற்று ஏன் இதை வளர்த்துக் கொள்ளக் கூடாது…?

“சாமி செய்து தருவார்…” என்று மட்டும் எண்ணுகின்றீர்கள் ஆனால் “சாமி சொன்ன வழியினை…” நாம் பின்பற்றினோம் என்றால் நிச்சயம் அந்த நன்மை பெற முடியும் என்ற அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்.

என்னுடைய பார்வை என்னுடைய பேச்சு பிறருக்கு எப்படி நல்லதாகின்றதோ “அதே உணர்வை ஒத்து” நீங்களும் உங்கள் பார்வையால் உங்கள் பேச்சால் வெளிப்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கு நல்லதாக்கலாம் அல்லவா… தீமைகளைப் போக்கலாம் அல்லவா…!

பிறர்படும் கஷ்டங்களைப் பாசத்துடன் கேட்கின்றோம் அந்த உணர்வு வந்தபின் உடலுக்குள் வேதனையைத் தான் கொடுக்கின்றது நோயையும் உண்டாக்குகின்றது. இதைப் போன்ற தீமை உங்களுக்குள் வரக்கூடாது

1.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எத்தனை வகையான வேதனைகள் வரலாம்.
2.அதை எல்லாம் தவிர்த்துக் கொள்வதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால்
3.அந்த உணர்வின் தன்மை இங்கே நிறுத்தப்படுகின்றது.

இந்தப் பயிற்சியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

“தன்னுடைய பிழைப்புக்கு” ஞானகுருவின் ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்

“தன்னுடைய பிழைப்புக்கு” ஞானகுருவின் ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்

 

இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் இனத்துக்குள் ஒன்றுடன் ஒன்று தன் இரைக்காக மோதுவதும் உண்டு.

அதே சமயத்தில்
1.தன் இனத்தின் தன்மை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு.
2.ஞானிகள் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளனர்.

இதைப் போன்று உயர்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் உணர்வின் தன்மைளை உடலிலிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் செலுத்தப்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்து விண் சென்றுள்ளார்கள்.

அதிலே விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதனான அகஸ்தியன் ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதிலிருந்து உணர்வின் அலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் அது பரவச் செய்து கொண்டுள்ளது.

இதைப்போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும்போது அதைச் சூரியன் கவர்ந்து தனது உணவாக உட்கொண்டு வெப்ப காந்தங்களாக அதன் அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிலருக்கு எம்முடைய (ஞானகுரு) உபதேசங்களை படிக்கும் போதும் கேட்கும் போதும் சில வித்தியாசமான நிலைகள் ஏற்படலாம்.
1.நமக்கு இது எல்லாம் எதற்கு…?
2.நாளைக்கு விடிந்தால் சோறு இருந்தால் போதும்.
3.குருடனுக்குக் கண் தானே தேவை…
4.நாளைக்கு என்ன ஆகப்போகின்றதோ…? ஏது ஆகப்போகின்றதோ…! இன்றைக்கு எனக்கு இரண்டு சோறு கிடைத்தால் போதும்
5.ஞானகுரு ஆசீர்வாதம் இருந்தால் போதும்
6.தொழில் கிடைத்தால் போதும். தொழில் நல்ல முறையில் நடந்தால் போதும்.
7.என் உடல் நோய் தீர்ந்தால் போதும் என்ற இந்த உணர்வில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
8.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலுள்ள அணுக்களில் சேர்க்கப்பட்டு
1.“நம்மை அறியாமல் வேதனையை உருவாக்கி…” நல்லவைகளை எண்ண விடாதபடி
2.நமக்குள் வேதனையை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

இதை நாம் மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அடைந்து மீண்டும் நாம் உயிரணுக்களின் தோற்றங்களில் ஆரம்பத்தில் விஷ அணுக்களாகத் தோன்றியது போல் நம்மை இந்த உணர்வுகள் அனைத்தும் விஷ அணுக்களாக மாற்றப்பட்டுவிடும்.

மீண்டும் புழுவாக… பூச்சியாக… பாம்பாக… தேளாகத்தான் மீண்டும் பிறக்க வேண்டிய நிலை வரும். எனென்றால் இந்த இயற்கை மாற்றங்களில் அதனுடைய இயக்கம் எது…? என்ற நிலைகளில்
1.எதனுடைய கலவைகள் அதிகமாகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு தான் மாறுகின்றது… மாற்றம் அடையச் செய்கிறது.

இன்று மனிதனாக இருக்கின்றோம்… விஷத் தன்மைகள் உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து தப்புவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற்றால் தான் விஷத் தன்மைகளிலிருந்து மீட்டிக் கொள்ள முடியும். அதற்குத் தான் தொடர்ந்து இதைச் சொல்கிறோம்.

பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் அசுர உணர்வுகளை “உங்கள் மூச்சலைகளால் துரத்தியடிக்க வேண்டும்…”

பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் அசுர உணர்வுகளை “உங்கள் மூச்சலைகளால் துரத்தியடிக்க வேண்டும்…”

 

யாம் (ஞானகுரு) சொல்லக்கூடிய உபதேசங்களை… புரியவில்லை என்று விட்டு விடாதீர்கள். ஏனென்றால்
1.நான் படித்து வந்ததவன் அல்ல
2.குரு சொன்னதைப் பதித்து வந்தவன்
3.பதிந்த நிலைகளை எடுத்தவன்
4.எடுத்த உண்மைகளை உணர்ந்தறிந்து அதை நீங்களும் பெற வேண்டும் என்பதற்கே உபதேசிக்கின்றேன்.

இது உங்களுக்குள் பதிவானால்… உங்கள் நினைவு மகரிஷிகள் பால் சென்று… இருளை நீக்கி ஒளியான உணர்வைப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்

உங்கள் பார்வை பிறருடைய தீமைகளை… நோய்களை நீக்கக்கூடிய சக்தியாகத் தான் வர வேண்டும். ஆனால்
1.கோவிலுக்குச் சென்று தெய்வத்தைப் பார்த்து “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…” என்று எண்ணுவது போல்
2.என்னையும் நீங்கள் அப்படி எண்ணி… “சாமி என்னைச் சோதிக்கிறார்…” என்று எண்ணுவதற்கு அல்ல
3.அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் “சக்திமானாக” நீங்கள் மாற வேண்டும்
4.இந்தப் பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகளை உங்கள் மூச்சலைகளால் துரத்த வேண்டும் அல்லது அதை அடக்க வேண்டும்
3.உங்கள் உடலில் மட்டுமல்ல…! (எல்லாம் சேர்த்துத் தான்…!

அதைப் பெறச் செய்வதற்கு தான் எல்லோருக்கும் இந்தச் சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் நீங்கள் எல்லாம் தீமைகளை நீக்கும் வல்லுனர்களாக ஆகிவிட்டால்… இந்தப் பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் தீமைகளையும்… நாட்டுக்கு நாடு போர் என்று பரவி வரும் அசுர உணர்வுகளையும்… நிச்சயம் உங்கள் மூச்சலைகள் அடக்கும்… நல்ல உணர்வுகளை உருவாக்கும்.

அதே சமயத்தில் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு அருள் உணர்வின் தன்மையைப் பிறப்பிலிருந்தே பெறச் செய்ய வேண்டும்.
1.அகஸ்தியன் பெற்ற பேரருளை எல்லாம் கருவிலே வளரும் சிசுக்கள் பெற வேண்டும்.
2.அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்த துருவனின் ஆற்றலை குழந்தை பெற வேண்டும்
3.அணுவின் இயக்கத்தை உணர்ந்த அகஸ்தியனின் உணர்வு கருவில் வளரும் சிசுக்கள் பெற வேண்டும் என்று
4.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஏங்கிப் பெற்றால் குழந்தையின் கருவிலேயே அந்த சக்தி உருவாகின்றது.

இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் அந்தப் பதிவு உண்டு. இந்த நினைவு கொண்டு கர்ப்பமுற்ற தாய் இதை எண்ணி எடுக்க வேண்டும். காற்றிலே அந்தச் சக்திகள் உண்டு… அதை எடுக்கும் போது துருவ நட்சத்திரத்திற்கே உங்களை எட்டும்படிச் செய்யும்.

அகஸ்தியன் எப்படி உயர்ந்த சக்திகளைப் பெற்றானோ அதைப் போன்று கருவில் வளரும் குழந்தைகளை ரிஷிகளாக நாம் உருவாக்க வேண்டும். இனி வரக்கூடிய தீமைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக உங்கள் மூச்சு கருவில் வளரும் குழந்தைகளுக்கு இதைப் பெறக்கூடிய தகுதியாக வருகிறது.

விஞ்ஞான அறிவால் காற்று மண்டலமே விஷத்தன்மையாக மாறியதை அந்த ஞானிகள் வளர்ந்த பின் “இதே உணர்வுகள் தாவர இனங்களுக்குப் போய்ச் சேரும்…”

நறுமணம் வீசும் ரோஜாப்பூவின் உணர்வுகள் பட்டபின் நாம் நுகர்ந்தால் நறுமணங்களாக மாறுகின்றது. இதைப் போன்று மனித உணர்வுகள் விளைந்து வெளிப்படும் பொழுது மற்ற தாவர இனங்களுடன் சேர்க்கப்பட்டு பழையது மறைந்து மீண்டும் புது விதமான நல்ல தாவர இனங்களாக உருவாகும்.

அப்படி உருவான பின் பல உணர்வுகள் இன்று காற்றிலே படர்ந்து இருப்பினும் புதிதாக நம்மால் உருவாக்கப்படக்கூடிய இந்த தாவர இனங்கள் அந்தக் கசடுகளைக் கவர்ந்து இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தும்.

பின் ஞானிகள் என்று நாம் சொல்லும் கருவில் வளரக்கூடிய சிசுக்கள் ஞானக் குழந்தைகளாக உருவானபின் உலகைக் காக்கும் சக்தியாக வருகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் மாசுபட்ட காற்று மண்டலத்தை நல்லதாக மாற்றும் உணர்வுகள் பெற்ற பின்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ
2.அதன் உணர்வின் அருள் வழியில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலைபெற்ற உணர்வுகளுக்கு
3.இங்கிருந்து சென்று ஒளியின் உணர்வாக அங்கே மீண்டும் பெருகும் (சப்தரிஷி மண்டலம்).

இதை எல்லாம் உங்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்வது சிறிது காலமே… அதற்குள் நாம் எடுப்பது எத்தனையோ அகண்ட அண்டங்கள் வாழும் அந்தச் சக்திவாய்ந்த உணர்வுகள். அத்தகைய ஆற்றலைத் தான் பதிவு செய்கிறேன்.

இந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் பெருக்கும் பேரின்ப நிலையை… ஏகாந்த நிலை அடையும் பருவத்தைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிப்பது.

உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை “எண்ணிய நேரத்திலே” மாற்ற முடியும்

உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை “எண்ணிய நேரத்திலே” மாற்ற முடியும்

 

மற்றவர்கள் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கப்பட்டு நீங்கள் உதவி செய்கிறீர்கள். ஆனாலும் அவர்கள் பட்ட வேதனை உங்களை அறியாமல் உங்களுக்குள் புகுந்து வாட்டி வதைக்கின்றது.

அதை மாற்றி… உங்களைக் காத்துக் கொள்வதற்கு ஞானிகள் உணர்வினை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் நிரப்புகின்றோம். அதை நீங்கள் பெருக்கிக் கொண்டு அந்த ஞானிகள் காட்டும் வழியில் செயல்பட்டீர்கள் என்றால் அந்த உணர்வு உங்களைக் காக்க உதவும்.

நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களைக் காப்பாற்ற முடியாது…!

1.குரு வழியில் நான் அதைப் பெற்றேன்…
2.எடுத்து எனக்குள் வளர்த்தேன்… என் துன்பத்தைப் போக்க முடிந்தது
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை என்னால் எளிதில் பெற முடிகின்றது
4.உங்களுக்குள் அதைப் பாய்ச்ச முடிகின்றது.

ஆகவே அந்த அருள் ஞானத்தைக் கொடுக்கின்றேன் நீங்கள் வளர்த்துக் கொண்டால் தான் அந்தப் பலனைப் பெற முடியும். ஞான வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… அதற்குண்டான நீரை ஊற்றினால் தான் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளையத் தொடங்கும். மற்ற யாரும் செய்து தர முடியாது.

எந்த ஞானியாக இருந்தாலும் யோகியாக இருந்தாலும்
1.நம்முடன் கலந்து உறவாடி அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த இணைப்பு இருந்தால்தான் சொல்லி…
2.உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்தவும் முடியும்… நாமும் அங்கு செல்ல முடியும்
4.அப்படி இணைப்பில்லாதவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.

நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வு மெய் ஒளியின் சுடரைக் கொண்டு “சிறு துளி பெரு வெள்ளம்…” என்று அந்த ஆற்றல்மிக்க சக்தியைக் கூட்டி அதை வளர்த்து அந்த எண்ணத்தின் தன்மை கொண்டு தான் நாம் எதனையும் செயல்படுத்த முடியும்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்தவர்கள் “யாராக இருந்தாலும் சரி…” நம் குருநாதர் காட்டிய வழியிலே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்கள் இணைய வேண்டும் என்று அந்தந்த வீட்டாருடன் சேர்ந்து செயல்படுத்தினோம் என்றால் அவர்களை விண் செலுத்த முடியும்.

இன்னொரு உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விட்டு ஞானிகளின் அருள் வித்தின் தன்மையை விளைய வைக்க முடியும்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிகுந்த சக்திகளை
1.நீங்கள் பெற வேண்டும் என்று யாம் எப்படிச் செய்தோமோ இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.உங்கள் எண்ணத்தை அங்கே மீண்டும் செலுத்தினால் தான் உங்கள் நினைவலைகள் அங்கே செல்லும்.

அது அல்லாதபடி… என் பிள்ளை “இப்படி இருக்கின்றானே… இப்படி இருக்கின்றானே…” என்று பிள்ளையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் இங்கே நோயாகி இறந்த பின் அவன் உடலுக்குள் சென்று அவனை இன்னும் கொஞ்சம் நாசமாக்கத் தான் முடியும். நான் நாசமானேன்.. அவனும் நாசமானான்…! என்ற நிலை தான் வரும்.

வேதனையுடன் இறந்தால் இதே உணர்வின் தன்மை தான் அங்கேயும் தோன்றும்.

நான் ஒருவனுக்கு உதவி செய்தேன்…! ஆனால் பதிலுக்கு அவன் இடைஞ்சல் செய்தான் என்றால் “பாவிப் பயல்… நான் நல்லது செய்தேன் எனக்கு இப்படிச் செய்தானே… இப்படிச் செய்தானே…!” என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

கடைசியில் உடலை விட்டுச் செல்லும் பொழுது அவன் நினைப்பு தான் வரும். இதே உணர்வு கொண்டு அந்த உடலுக்குள் புகுந்து இந்த வேதனையை அங்கே விளைய வைத்து அவனையும் வாழ விடாது விஷத்தையே மீண்டும் எடுத்து வளர்த்துப் பல உடல்களுக்குள் சென்று தொல்லைகளைக் கொடுத்து விஷ ஜந்துக்களாகத்தான் பிறக்க முடியும்.

விஷ ஜெந்துக்களாகப் பிறந்தாலும் மனிதன் கையில் சிக்கி அடிபட்டு
1.அவனுடைய உணர்வைக் கவர்ந்தால் தான் மீண்டும் மனிதனாக வர முடியும்
2.அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று சொல்ல முடியாது…!
3.அது வரையிலும் எடுத்த வேதனையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் மெய் வழியின் தன்மை கொண்டு மெய் ஒளியின் தன்மை பெற்று அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்.

விஞ்ஞான உலகில் படர்ந்து கொண்டிருக்கும் நஞ்சின் தன்மையிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்கு இது உதவும்.

உங்களுக்கு இதிலே கஷ்டம் ஒன்றுமில்லை… நஷ்டமும் இல்லை. பக்தியிலே எப்படி நல்லதை நினைக்கின்றீர்களோ அதைப் போல் “ஞானிகளின் அருள் சக்திகளை எண்ணி எடுத்து… எனக்குள் அதை வளர்ப்பேன்…” என்று செயல்படுத்துவதே தியானம்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.என் சொல்லுக்குள் இனிமை பெறுவேன்
3.என் பேச்சு மூச்சும் நன்மை பெறும்
4.நான் பார்ப்பதெல்லாம் நல்லதாக இருக்கும்
5.நான் செய்வதெல்லாம் நல்லதாக இருக்கும் என்று
6.இதை எண்ணி வளர்த்துக் கொள்ளச் செய்யும் இந்தத் தியானம் உங்களுக்குக் கெட்டதா…?

ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியிலே நாம் சென்று பழகுதல் வேண்டும்.

குருநாதர் எனக்கு எப்படி வாழ்க்கையில் வந்த விஷத்தின் தன்மையை மாற்றுவதற்கு… ஞானிகள் உணர்வுகளை என் நல்ல உணர்வுடன் கூட்டச் செய்து அருள் உணர்வுகளைப் பெருக்கச் செய்தாரோ… எனக்குள் வரக்கூடிய துன்பத்தைத் துடைக்க எதைச் சொன்னாரோ… அவர் கற்றுக் கொடுத்ததைத் தான் உங்களுக்கும் உணர்த்துகின்றோம்.

அதன் வழி கடைப்பிடித்தால்…
1.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை
2.“எண்ணிய நேரத்திலே” அதை மாற்ற முடியும்… தெளிவு பெறும் தன்மையும் வரும்.

அந்த விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெற வேண்டும் என்று ஆசையிலேயே சொல்கின்றேன்.
1.அதைப் பெற வேண்டும்… அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்ற
2.அதே ஆசையில் நீங்களும் இருந்தால் இது சீக்கிரம் உங்களுக்குக் கை கூடும்.

அவ்வாறு நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கின்றேன்.

“எத்தகைய சந்தர்ப்பத்தையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்

“எத்தகைய சந்தர்ப்பத்தையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்

 

கூட்டுத் தியானத்தினுடைய முக்கியத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் மட்டும் தனித்து ஒன்றும் செய்து விட முடியாது. பலரின் அலைககளைக் குவிக்கச் செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டுதான்
1.விஞ்ஞான உலகின் நச்சுத்தன்மைகளிலிருந்து மீட்கும் சக்தியாக
2.எத்தகைய விஷமும் நம்மை அணுகாத நிலையாகக் கூட்டுக் குடும்ப தியானம் செய்து
3.மகரிஷிகளின் அலைகளைப் பரப்பி நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

பூமி தனக்குப் பாதுகாப்பாக ஓசோன் திரையை அமைத்துக் கொள்வது போன்று… எத்தகைய நிலைகள் வந்தாலும் ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்கள் ஆன்மாவிலே வலுகொண்டதாகப் பெருக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம்.. உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஏதோ
1.சாதாரணமாகக் கிடைக்கின்றது
2.சாதாரணமாகக் குருநாதர் சொல்கின்றார்
3.சாதாரணமான நிலையில் விளக்கம் சொல்கின்றார்
4.சாதாரண நிலைகள் இருக்கின்றதே… என்று
5.சாதாரணமாக விட்டு விடாதீர்கள்…!

எவ்வளவோ பணத்தைச் செலவழித்து… அலைந்து திரிந்தாலும் பெற முடியாது… அப்படி எல்லாம் இருக்கும் போது சாமி சாதாரணமாகச் சொல்கிறார்…! நாம் பெற முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

நீங்கள் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இதைக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

வாரத்தில் ஒரு நாள் ஆவது கூட்டுக் குடும்ப தியானம் இருந்து பழகுங்கள். நாள் முழுவதும் உழைக்கின்றோம் ஒரு பத்து நிமிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தினமும் நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தால் அது காக்கக் கூடிய சக்தியாக உங்கள் எண்ணம் வரும்.

ஒவ்வொரு சமயமும் சொன்னதையே சாமி சொல்கின்றார் என்று தெரிந்தாலும்… அப்படிச் சொல்வதற்குள் “சில நுண்ணிய உணர்வுகளைக் கலந்து” சொல்வேன்.

மரங்களுக்கு உரம் கொடுப்பது போன்று… வெயில் காலத்திற்குத் தகுந்த மாதிரி… மழை காலத்திற்குத் தகுந்த மாதிரி… அந்தந்தக் காலங்களுக்குத் தகுந்த மாதிரி… சூழ்நிலைக்குத் (உங்களுடைய) தகுந்த மாதிரி
1.ஞானிகள் உணர்வுகளை உரமாக உங்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குச் செருகேற்றி
2.அதன் மூலம் காற்றில் இருக்கக்கூடிய அரும் பெரும் சக்திகளை எடுத்துக் கொண்டு வந்து மெய் ஒளி பெறச் செய்கிறோம்.

ஆகையினால் உங்களை நீங்கள் நம்புங்கள்… உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உடலை ஆலயமாக மதியுங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்துப் பழகுங்கள்… உடலில் வரக்கூடிய விஷத்தை நீக்கிப் பழகுங்கள்… ஒளியின் சுடராக நீங்கள் பெற வேண்டும்.

எந்த நேரத்தில் எல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க நீங்கள் பழகிக் கொள்ளுங்கள்.

“திட்டியவனை எண்ணியவுடன்” நம் உடல் எப்படிப் பதறுகின்றதோ… “இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது எப்படி மனம் சோர்வடைகின்றதோ…
1.அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணுங்கள்.
2.சாமி சொன்னார்… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணி எடுத்தீர்கள் என்றால்
3.அந்த நடுக்கமோ சோர்வோ இவைகள் நீங்கி உங்கள் எண்ணம் சொல் வலுவாகி
4.உங்களுக்குள் அனைத்தும் வலுகொண்டதாக ஆற்றல்மிக்கதாகச் செயல்படக்கூடிய சக்தி கிடைக்கும்.

உங்களுக்கு ஒருவர் தீமை செய்கின்றார்… குறையாகச் சொல்கிறார்… திட்டுகின்றார் என்றால் உங்கள் நல்ல குணங்கள் வலு குறைந்து… இனிமை குறைந்து… மயக்கப்படும் நிலையாக… எதிர்மறையான உணர்வுகளை எப்படித் தூண்டுகிறதோ… அதைப் போன்று தான்
1.அந்த மாதிரி நேரங்களில் சாமி சொன்னார்…!
2.அவர் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்
3.என் உடல் முழுவதும் அது படர வேண்டும்
4.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
5.என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
6.அந்தக் கணமே இப்படி எண்ணி எடுக்கப் பழகிக் கொன்டீர்கள் என்றால் “உங்கள் எண்ணம் உங்களை காக்கும்…!”

அதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்வது

யாம் சொன்னதைச் சிறிது காலத்திற்குச் செய்யப் பழகிக் கொண்டால் போதும்
1.எத்தகைய சந்தர்ப்பங்களிலும் சமாளிக்க கூடிய ஆற்றல்
2.உங்களுக்குக் கிடைக்கும்… செய்து பாருங்கள்.

விஞ்ஞான உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

விஞ்ஞான உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

 

இன்றைய விஞ்ஞான உலகில்… உலகெங்கிலும் பார்த்தோம் என்றாலும் சிறிய குழந்தைகள் தப்பித்தவறி ஏமாந்து விட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.

வயது முதுமையாக இருப்பவர்களில் மிகவும் பண வசதி உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

விஞ்ஞான அறிவு கொண்டு சிறிய குழந்தைகளுடைய மூளையை எடுத்து ஆசிடாக மாற்றுகின்றார்கள். இந்த அமிலத்தை மருந்தாக ஊசியில் ஏற்றி… வயதாகி இறக்கும் தருவாயில் இருக்கக்கூடிய மனிதனுக்கு இதைப் போட்டு அவன் முதுமையை இளமையாக்குகின்றான்.

மீண்டும் இளமையாக வாழ்வதற்கு முயற்சிக்கின்றான். விஞ்ஞானம் அந்த அளவிற்கு இன்று வளர்ந்து விட்டது.

இளம் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் வளர வேண்டும் என்ற தாய் தந்தையர் பாடுபடுகின்றனர். பணம் வசதி வைத்திருப்பவன் விஞ்ஞான அறிவு கொண்டு அவனுக்குச் சாதகமாக்கிச் செயல்படுத்துகின்றான்.

குழந்தைகளைக் கடத்திச் சென்று விடுகின்றார்கள். பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று செயல்பட்டாலும் இப்படி மாற்றி மாற்றி குழந்தைகளை இரக்கமற்றுக் கொன்றிடும் நிலைகள் வந்து விட்டது.

விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் மனிதன் இன்று இவ்வாறு தான் “அசுர குணம் கொண்டு” சென்று கொண்டிருக்கின்றான்.

கொஞ்ச வயசுப் பிள்ளைகள் வெளியிலே சென்றால் போதும்…! அப்பா யார்…? அம்மா யார்…? என்று கேட்டுவிட்டு… “உன் அப்பா தான் இங்கே கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்…” என்று ஒரு பொருளைக் கொடுத்து ஏமாற்றி அவனைச் சாப்பிடும்படி செய்து மயங்க வைத்து அலுங்காமல் கூட்டிச் சென்று விடுகின்றார்கள்.

படித்த டாக்டர்கள் நிறைய இருக்கின்றார்கள். மக்களைக் காக்கும் டாக்டர் தொழிலுக்கும் படித்துவிட்டு காசுக்காக வேண்டி இந்தப் பழக்கத்திற்கு என்ன செய்கின்றார்கள்…?

மயக்கிக் கூட்டிக் கொண்டு வந்தவர்களின் கண்களை எடுத்து ஒரு நாட்டிற்கு அனுப்புகின்றார்கள். எலும்பை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… எலும்புக்குள் இருக்கும் ஊனை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… மண்டையில் இருக்கக்கூடிய மூளையை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… இருதயத்தை ஒரு இடத்திற்கு அனுப்புவது கல்லீரலை ஒரு பக்கம் அனுப்புவது கிட்னியை அனுப்புவது என்று விலை பேசி வியாபாரம் செய்கின்றார்கள்.

கொள்ளையடிப்பதற்கு எதுவும் சிக்கவில்லை என்றால் பிள்ளைகளை இவ்வாறு கொள்ளையடித்துச் சென்று விடுகிறார்கள்.

மெக்கானிக் வேலை தெரிந்து கொண்டவர்கள் காரை ஒர்க்ஷாப்பில் வைத்து பார்ட் பார்ட்டாகக் கழட்டி விற்பது போன்று மனித உடல்களைக் கவர்ந்து சென்று பார்ட்ஸ் பார்ட்ஸ் ஆகக் கழட்டி விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

விஞ்ஞானம் அந்த அளவில் இருக்கின்றது. அது மட்டுமல்ல…!

டிவி ரேடியோ அனைத்தும் நாம் கேட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அதை வைத்து என்ன செய்கின்றார்கள்…?

கடும் நஞ்சு கொண்ட அலைகளைத் தயார் செய்கின்றனர். டிவி ஸ்டேசனிலிருந்து எந்த அலை வரிசையில் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றார்களோ அந்தக் காந்த அலைகளோடு இந்த விஷத்தைக் கலந்து விடுகின்றார்கள்.

அதன் மூலம் டிவி பார்ப்பவர்களைப் புத்தி இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கின்றது விஞ்ஞான அறிவு. கடைசியில் பைத்தியம் பிடித்தது போல் சிந்தனை இல்லாது போகிறது. இதிலே வளர்ச்சி பெற்று இருக்கின்றது

இதிலிருந்தெல்லாம் காப்பாற்றுவதற்கு யார் இருக்கின்றார்கள்…?

இப்படிப்பட்ட உலகில் தான் இன்று நாம் வாழுகின்றோம் சாமியோ சாமியாரோ ஜோசியமோ வேள்வியோ யாகமோ யாரும் காப்பாற்றப் போவதில்லை.

அதே சமயத்தில் ஆயுள் ஹோமம் செய்கின்றனர் ஹோமம் செய்பவர் வயது ஐம்பது வயது ஐம்பத்தைந்து வயது இருக்கும்.

ஹோமத்தைச் செய்து மந்திரங்களைச் சொல்லி அறுபதாம் கல்யாணம் ஏழுபதாம் கல்யாணம் என்பதாம் கல்யாணம் என்று எல்லாமே செய்கின்றனர்.
1.ஹோமத்தைச் செய்து அவரை ஒரு 200 வயது வரைக்கும் வாழ வைத்தால் பரவாயில்லை
2.ஹோமத்தைச் செய்துவிட்டு அடுத்துப் பணம் இல்லை என்றால் “எங்கே செல்கிறார்…” என்று சொல்ல முடியாது
3.காசைக் கொடுத்துவிட்டு ஏமாற வேண்டியதுதான்.

மந்திரத்தைச் சொல்லி மனித உடலில் விளைய வைத்து உணர்வுகளைப் பிரித்த பின் மந்திரத்தைத் தட்டி விட்டான் என்றால் அலுங்காமல் அவன் பிடித்துக் கொண்டு செல்வான்.

மூளையை எடுத்து அதைப் பார்சல் செய்து முதுமையானவனுக்குள் பாய்ச்சி இளமையாக ஆக்குவது போன்று
1.மந்திரக்காரர்கள் இது போன்ற உணர்வுகளை எடுத்து
2.ஒன்றுமறியாத குழந்தை கருவில் இறந்ததை எடுத்து இழுத்துச் சுற்றித் தட்டினான் என்றால் இதிலே வந்து ஒட்டிக் கொள்ளும்.
3.தன் எண்ணத்தின் அலையைப் பாய்ச்சினான் என்றால் “ரேடியோ கதிரியக்கங்கள்” போன்று பாய்ந்து கொண்டிருக்கும்
4.அப்படிப் பாய்ச்சச் செய்து நல்லது… கெட்டது… மற்ற என்னென்ன புத்தி வேண்டுமா அடுத்தவனை அவ்வாறு ஆக்குவதற்கு இதைச் செய்கின்றனர்.
5.அரச காலங்களில் தவறான வழியில் செயல்படுத்தப்பட்ட நிலை… இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.

மனிதன் இறந்து வெளியே சென்ற பின் அந்த உணர்வைக் கவர்ந்து மந்திரத்தினால் நான் சக்தி பெற்றுள்ளேன்…!
1.உடனடியாக அவனை நான் நிறுத்திக் காட்டுகின்றேன்… கை கால் வராமல் செய்கின்றேன் பார்…!
2.பொருளை வரவழைக்கின்றேன் பார்… விபூதியை வரவழைக்கிறேன் பார்…! என்பார்கள்.

அந்த விபூதியை வாங்கிய பின் நாம் அவரைப் “பெரிய மகான்” என்று போற்றுவோம்.

ஆனால் நாம் உடல் விட்டுச் சென்றால் அவன் கையில் சிக்கிக் கொண்டு “விபூதியாகப் போவோம்…” நீ சொல்கிறதை எல்லாம் நான் கேட்கிறேன்…! என்று அவனுக்கு அடிமையாகப் போக வேண்டியது தான்.

இன்று அவனிடம் விபூதி வாங்கினால் நாளை அவன் என்ன சொல்கிறானோ உடலை விட்டுச் சென்ற பின் “நான் உன்னிடம் வருகிறேன் நீ சொல்வதை நான் கேட்கிறேன்…” என்று போக வேண்டியது தான்.
1.உடல் வெளியிலே போகிறது…
2.ஆனால் உணர்வுகள் அங்கே பேசும்.

இப்படி நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

இது எல்லாம் குருநாதர் காட்டிய பேருண்மைகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).