தீமையை நீக்கும் ஆறாவது அறிவே நமக்குப் பாதுகாப்புக் கவசம்

தீமையை நீக்கும் ஆறாவது அறிவே நமக்குப் பாதுகாப்புக் கவசம்

 

இயற்கையின் செயலாக்கத்தைத் தன்னில் தான் கண்டுணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக “அகஸ்தியன்… துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக” ஒளியின் சுடராக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

அதனின்று வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்தவர்கள் அனைவரும் அதன் வழிகளில்
1.இந்த வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த நிலைகளை வென்று
2.இருள் சூழா நிலை கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு
3.இன்றும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவின் தன்மையை ஏழாவது நிலைகள் பெற்று
4.சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள் சப்தரிஷிகள்.

அவர்கள் கண்டறிந்த உணர்வின் சக்திகளை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை எடுத்துக் கொண்டால்… பிற மண்டலங்களில் இருந்து வருவதை நட்சத்திரங்கள் கவர்ந்தாலும் மற்ற கோள்கள் தனக்குள் கவர்ந்தாலும்… விஷம் கொண்ட கோள்கள் எத்தனை எத்தனையோ… விஷங்களை உருவாக்கும் கோள்கள் எத்தனையோ…!

இவை அனைத்தும் உமிழ்த்தி வரும் நிலைகளைச் சூரியன் வடிகட்டி அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக வாழ்கின்றது.

அதிலே உயிரணுவாகத் தோன்றியவன் பிற தீமையிலிருந்து விடுபட்டு… விடுபட்டு… விடுபட்டு… மனிதனாக உருவாக்கப்பட்டு மனிதனில் ஆறாவது அறிவாக வளர்ச்சி அடைந்து வந்தது.

1.அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை நீக்கி நீக்கி…
2.தீமையற்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்து இந்த உடலை விட்டுச் சென்ற பின்
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்ட துருவ மகரிஷியின் நிலைகளை நாமும் அடைய முடியும்.

இது எல்லாம் ஞானிகள் நமக்குக் காட்டியது. அதை அனைவரும் நாம் பெறுதல் வேண்டும்.

உங்களுக்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்கள் அனைத்தும் தெய்வங்களே. மனிதனாக உருவாக்கிய அனைத்து நல்ல குணங்களும் பெரும் சக்தி கொண்ட தெய்வங்களாக உங்களுக்குள் இருக்கின்றது.

உங்களை எவ்வாறு காக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ அது உங்களுக்குள் கடவுளாக நின்று உயிர் உருவாக்கி உள்ளது… மனித உடலை…!

1.மனிதனின் உணர்வுகள் அனைத்தும் ஒன்றாக இணைத்துத் தீமைகள் அகற்றிடும் ஆறாவது அறிவாக “முருகு…!”
2.மாற்றியமைக்கும் சக்தியாக இருக்கிறது… என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது சாஸ்திரங்களில்.

அதன் வழி நாம் தெளிவாகச் செய்ய வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் எவ்வாறு பெற முடியும்…? என்ற தத்துவத்தைக் காட்டியுள்ளார்கள் நம் ஞானியர்கள்.

ஆதியிலே முதல் மனிதன் அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்தான்… தன் உடலில் அதைச் சிருஷ்டித்தான்… வளர்த்தான்… துருவ மகரிஷி ஆனான்… வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமியில் பரப்பிக் கொண்டுள்ளது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவரொருவர் தங்கள் உடலுக்குள் அதிகமாக நுகருகின்றனரோ
2.அவன் வழியிலே அங்கு அழைத்துச் செல்கின்றது… ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக.

சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினை பிரித்து விட்டு ஒளியின் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது. இதைப் போன்று தான் உயிரின் தன்மை சூரியனாக உள்ளது.

1.அல்ட்ரா வயலட் என்ற நஞ்சு சூரியனுக்குப் பாதுகாப்பாக நஞ்சினை நீக்கிடும் நிலைகள் பெற்று
2.உணர்வினை ஒளியாக மாற்றிடும் நிலைகளை அது (சூரியன்) எப்படிப் பெறுகின்றதோ
3.அது போல் நாம் எத்தகைய தீமைகளைக் கண்டறிந்தாலும் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் பெற்று
4.தீமைகளை அகற்றித் தூய்மை பெறும் சக்தி பெற்றது தான் மனிதனுடைய ஆறாவது அறிவு.

அதாவது… தீமைகளை பிரிக்கும் எண்ணங்களை நாம் நுகர்ந்து தீமைகளை அகற்றிடும் செயலாக வருகின்றது நம் ஆறாவது அறிவு – கார்த்திகேயா.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிர் மனிதனாக உருவாக்கி விட்டால் முழு முதல் கடவுள். ஓம் என்ற பிரணவத்திற்கு உரியவன் என்றும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

ஆகவே அருள் உணர்வின் துணை கொண்டு நம் ஆன்மாவில் படும் தீமைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே விநாயகர் தத்துவத்தை தெளிவாக எடுத்துரைத்தார்கள் ஞானிகள்.

அபிராமி (ஈஸ்வர) பட்டரும்… அந்தாதியும்

அபிராமி (ஈஸ்வர) பட்டரும்… அந்தாதியும்

 

அபிராமி அந்தாதி பாட்டு பாட வேண்டும் பாடலின் கருத்து புரிந்து இசையோடு பாடிடுவாய் கருத்துடனே பாட்டிசைப்பாய்.

“இடைச்சக்கரத்தினுள்ளே நான் இருப்பேன்…!” என்ற பாட்டைக் கேட்டிருப்பாய். பாட்டைப் பாடு… பிறகு சொல்கின்றேன். ஜெப நிலையில் ஜெபித்ததெல்லாம் உன் சக்கரத்தில் உள்ளது.

பெரும் கோயில்களில் எல்லாம் பார்…
1.எல்லாக் கோவில்களிலும் உலோகத்தினாலான சக்கரம் உண்டு.
2.அச்சக்கரம் கடவுளின் சிலைக்குப் பின் புறமாவது முன்புறமாவது இருக்கும்… அல்லது கடவுளின் பாதத்தில் இருக்கும்.

தெய்வம் என்பது நீங்கள் நினைக்கும் கல் சிலையைத் தான். சிலையின் கல் உருவத்தைப் பற்றி முதலிலேயே சொல்லிவிட்டேன்.

சிலையின் பாதத்தின் கீழே உள்ள சக்கரத்தில் சித்தனால் ஜெபித்த ஜெபமெல்லாம் அந்த உலோகத் தகடான சக்கரத்தில் பதிந்துள்ளது. அந்நிலையில் அதைப் பாதத்தில் வைத்து விட்டுப் பிறகு தான் சிலையை வைப்பார்கள்.

தெய்வத்தின் எதிரில் நின்று
1.நீ ஜெபிக்கும் ஒவ்வொரு நிலையும் அந்த உலோகத்தில் பதிகின்றது (கல்லான சிலையில் ஒன்றும் இல்லை).
2.நீ ஒலிக்கும் ஒலியெல்லாம் சக்கரத்தில் பதிகின்றது.
3.ஒலிக்கும் குரல் சக்கரத்திலே பதியும் பொழுது அந்தச் சித்தனால் ஒலித்த ஒலியும் உன் ஒலியும் கலக்கின்றது
4.அப்படிக் கலக்கின்ற போது அந்தச் சித்தனே வெளிவந்து உன்னுள்ளே புகுகின்றான்.

பழனியில் உள்ள முருகர் சிலையே உலோகம் தான். சிறு தகட்டில் ஜெபித்த ஜெபமே அவன்…! அவ்வுருவம் முழுவதும் போகனால் ஜெபித்த நிலை.

அந்த முருகனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சக்தி வந்தது…? என்கின்றாய். அந்த முருகனின் உள் அர்த்தம் புரிந்ததா…?

நீங்கள் சக்கரம் வைத்து பூஜை செய்வதன் பொருள்… நீ இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு எந்தச் சொல் சொல்கிறாயோ எந்த நிலையில் மூச்சை இழுக்கின்றாயோ “அச்சொல் எல்லாம்… மூச்செல்லாம் என்னுள் வந்து ஐக்கியம் ஆகிறது…”

அதற்காகத்தான் அந்தாதியைப் படிக்கச் சொன்னது. படித்துச் சொன்னால் அதை நான் ஏற்பேன்.
1.நான் இயற்றிய அந்தாதியை நீ படித்தால் என் மனம் குளிர்ந்திடும்.
2.என் மனம் குளிர்ந்த நிலையில் உனக்கு அருள்வேன் எல்லாமே…!

சக்கரம் வைத்தால் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் எந்தச் சுத்தத்தை நான் கேட்டேன்…? “மனச் சுத்தம் இருந்தால்” என்னுள்ளே வந்திடலாம்.

போகன் நிலையைப் பார்த்தாயா…? சக்கரத்தின் தன்மையே முருகராக வடிவெடுத்துள்ளார். வடிவெடுத்த நிலையிலேயே காலமெல்லாம் அருள்கின்றார்.

நீ “முருகா…” என்று ஒலிக்கும் உணர்வுகள் அவருக்குள் பதிவாகின்றது. உன் மனதிலிருந்து செல்லும் ஒவ்வொரு சொல்லையும் அவர் பதிவு செய்து… உனக்கு அவர் அருளும் சொல் பலவாக வருகின்றது.

1.அந்த முருகன் சிலை இந்த உலகையே ஆட்டுவிக்கும் சிலை.
2.இவ்வுலகில் எந்த இடத்திலும் அச்சத்தின் சொரூபம் இல்லை.
3.அச்சக்தியின் ரூபம் எல்லாவற்றையும் உணர்ந்து அங்கு செல்பவனும் யாரும் இல்லை.

இவ்வளவு காலமும் நீங்கள் பழனிக்கு சென்றீர்கள்…! இந்த நிலை புரிந்ததா…?
1.குறைகளுடன் கோவிலுக்குச் செல்லாதீர்கள்
2.மன நிறைவுடன் சென்று உன் மனதை அவனிடம் தா… அவன் அருள்வான் எல்லாமே…!

அந்த முருகனின் சிலையின் தத்துவத்தைப் புரிந்து சிலர் தன் தொழிலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றார்கள்… தொழிலுக்கு மட்டும் தான் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஆனால் அதை பெற்ற மனிதனுக்கும் அந்தத் தத்துவம் தெரியாது. நல் உணர்வாக அவன் பயன்படுத்தி இருந்தால் அவன் நிலையும் உயர்ந்திருக்கும்.

முதலில் அவன் நிலை நன்றாகத் தான் தெரிந்திருக்கும்… பிறகு அவன் நிலை என்ன என்று யாருக்காவது தெரியுமா…? முருகர் சிலையில் உள்ள தத்துவமே சாமி (ஞானகுரு) எழுதியுள்ள சக்கரத்தில் உள்ளது… அச்சிலையில்.

ஐவர் மலையில் உள்ள நிலைக்கும்… உன் ஜெப நிலைக்கும்… “உன் வீட்டில் உள்ள சக்கரத்திற்கும்” உள்ள தொடர்பு தெரிந்ததா…?
1.சக்கரத்திற்கு எதிரில் நீ அமர்ந்து என்ன ஜெபம் ஜெபிக்கின்றாயோ
2.அந்த ஜெபத்தின் அருளை நீ பெறுவாய்…! என்ற பொருளும் இதுவே.

ஐவர் மலையில் உள்ள நல்ல நிலையைப் பெற்றிட உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள். சக்கரத்தின் முன் உணவு படைக்கச் சொன்னதன் நிலையில் நீ ஜெபிக்கும் பொழுது சக்கரத்திலிருந்து சித்தர் வெளிப்படுகின்றார்.

அதற்காகத்தான் ஆகாரம்…! ஆகாரம் எடுத்து அவர் புசித்துச் செல்வதில்லை ஆகாரத்தின் சுவையை அவர் எடுத்து மறு சுவையை உனக்கருள்வார்.

கடவுள் என்ன கேட்டாரா…? என்று சொல்ளும் வீண் வாக்குவாதம் எல்லாம் நமக்கு வேண்டாம். நீ வைக்கும் ஒரு துளி பாலையும் அவர் ஏற்கின்றார்.

ஏன் சக்கரத்தில் தான் கடவுள் வருவாரா…? படத்திலும் வேறு இடத்திலும் வரமாட்டாரா…! என்று நினைக்கலாம்.

முதலிலேயே உங்களுக்கு எல்லா நிலையும் புரிந்து இருக்கும்
1.கடவுள் என்பவர் எங்கே எப்படி இருக்கின்றார்…? எந்த நிலையில் உள்ளார்…? என்னும் நிலை எல்லாம் பல தடவை சொல்லிவிட்டேன்.
2.எல்லா இடத்திலும் இருக்கும் கடவுளை ஒருநிலைப்படுத்தவே இச்சக்கரம்.
3.கடவுளுக்கு அல்ல அந்த நிலை.
4.உன் மனதை ஒருநிலைப்படுத்தத்தான் சக்கரம்.

பாட்டை பாடச் சொன்ன உண்மையும் இப்போது புரிந்ததா…?

அபிராமி அந்தாதி பாடும் பொழுது அவருடைய சந்தோஷம் நிலைகொள்ளாமல் இருக்கின்றது சந்தோஷ நிலை பெற்றிடவே உங்களை எல்லாம் பாடச் சொல்வது… புரிந்து பாடுவாயாக…!

ஒலியை ஒளியாக்கு…! இன்றல்ல நாளை அல்ல என்றாவது ஒருநாள் பழனிக்குச் சென்றால் காலை உதய பூஜைக்குச் சென்று அமர்ந்து நீ ஜெபித்தால்… அந்த நிலையில் உனக்கு ஐவர் மலையின் விளக்கங்களை உன் உதயத்திற்குத் தருகின்றேன்.

அதிலிருந்து எல்லாம் உனக்கு தெரியும்… அவசரம் வேண்டாம் பெரும் பதட்டம் வேண்டாம்…! உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள் என்பதின் ரகசியம் எல்லாம் இதுதான்.

சக்கரத்தின் தன்மையைச் சொல்வதும் இதற்காகத் தான்… முருகரைப் பற்றி விளக்கங்கள் சொன்னதும் இதற்காகத் தான்… விளக்கம் மட்டுமல்ல ரகசியமும் தான்.

முருகன் சிலையில் உள்ள தன்மை…. உண்மை தன்மை எல்லாம் புரிந்து விட்டதா…?

காட்சி:- முருகா முருகா சத்தம் கேட்கிறது… இங்கும் உள்ளேன் அங்கும் உள்ளேன் எங்கும் உள்ளேன் பாட்டு கைதட்டியபடி…! உட்கார்ந்து அந்த நோட்டை (குருநாதர் சொல்வதை எழுதிக் கொண்டிருக்கும்) எடுத்து படித்துக் கொண்டிருத்தல்.

உன் எழுத்தே உனக்குப் புரியவில்லை… உன் தலையெழுத்தை எழுதியவனைக் கேட்கின்றாயோ…? உன் நிலையை மாற்றிடவே இந்தப் பாடங்கள்.

1.நாளை முதல் இன்னும் துரிதமாகச் சொல்வேன்… என்னுடன் ஓடி வர நீயும் முயற்சி செய்.
2.முடியாது என்ற நிலை உனக்கு வேண்டாம் “முடித்திடுவேன்” என்று சொல்லைப் பகர்ந்திடப்பா.

என் தலையிலும் குட்டி விட்டார் என்று எண்ணாதே “உன்னுள்ளே நான் இருக்க உனக்கு ஏன் பயம்…?”

எழுதுவதற்கு மட்டு-ம் இந்தப் பாடம் அல்ல உன் நிலையைப் புரிந்து கொள்ளத்தான் இந்தப் பாடம்.

நம் குழந்தைகளைப் பற்றி அதிகமாக எண்ணுகிறோம்… தாய் தந்தை முன்னோரை அவ்வாறு எண்ணுகிறோமா…?

நம் குழந்தைகளைப் பற்றி அதிகமாக எண்ணுகிறோம்… தாய் தந்தை முன்னோரை அவ்வாறு எண்ணுகிறோமா…?

 

இன்று நாம் காணுகின்றோம்… கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகிறார்கள்…? எத்தனை வேதனைப்படுகிறார்கள் என்று…!

ஆகவே நம் தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமை எது…?

1.என் தாய் தந்தையர் என்னைக் காத்திட என்னை வளர்த்திட
2.எத்தனை வேதனைகள் அனுபவித்தார்களோ அவை அனைத்தும் நீங்கிட வேண்டும்
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையை பெற வேண்டும்.
4.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைந்து விட வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் என் அன்னை தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும்
6.”என்னை வளர்த்த தாய் தந்தையர் மகிழ்ந்திட” நாங்கள் பார்க்க வேண்டும்
7.அந்தப் பேரானந்தப் ப்ரு நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று இதை நாம் வினையாகச் சேர்க்க வேண்டும்.

இப்படித்தான் தாய் தந்தையரை வணங்கும்படி சொன்னார்கள் ஞானிகள்… நாம் அப்படி நினைக்கின்றோமா…?

என் தாய் என்னை எப்பொழுது பார்த்தாலும் சும்மா திட்டிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்பவர்கள் நிறைய இருக்கின்றார்கள்
1.தாயை கடவுளாக மதிக்க சொல்கின்றீர்களே…
2.அவர்களுக்காக என்னை வேண்டச் சொல்கின்றீர்களா…? என்பார்கள்…!

ஆனால் ஞானிகள் காட்டியது என்ன…?

தாய் கருவிலே சிசு இருக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் கருவில் வளரும் சிசு பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் கருவில் வளரும் சிசு பெற வேண்டும்
2.இருள் நீக்கிப் பொருள் காணும் திறன் என் சிசு பெற வேண்டும்
3.இந்த உலகையே காத்திடும் உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று
4.உயர்ந்த ஞானத்தை அந்த கருவிலே வளரும் குழந்தைக்கு வினையாகச் சேர்க்க வேண்டும்

உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று கருவுற்ற அந்தத் தாய் எண்ணும் பொழுது இந்த உணர்வு கருவிலேயே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

ஆனால் இன்று நடப்பது என்ன…?

ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதையோ சிலர் வேதனைப்படுவதையோ “ஐயோ… இப்படி நடக்கிறதே…” என்று கர்ப்பமுற்றிருக்கும் நுகர்ந்து விட்டால் குழந்தைக்கு இது தான் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

பத்திரிகையில் பார்த்தால்… உலகம் கெட்டு விட்டது கொலை செய்தான்… கொள்ளை அடித்தான்… திருடினான்… என்று அதிகமாகச் செய்திகளைப் போட்டிருக்கின்றார்கள்.

ஐய்யய்யோ… இப்படியெல்லாம் உலகில் நடக்கிறதே…! இந்த உணர்வை தாய் நுகர்ந்தால் கருவிலே பதிந்து விடுகின்றது. காணாததற்கு டிவி எல்லாம் இன்று போட்டு வைத்திருக்கின்றோம்.

அசுரத்தனமான எத்தனையோ உணர்வுகளை அங்கே காட்டுகின்றார்கள் இரக்கமற்றுக் கொல்வதையும் ஒருவருக்கொருவர் தாக்குவதையும் காட்டுகிறார்கள்… இத்தகைய படங்களை ரசித்துப் பார்ப்பார்கள்.

இது எல்லாம் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகப் பதிவாகி விடுகின்றது.
1.இத்தகைய உணர்வு கொண்ட குழந்தைகள் பிறந்த பின் மற்றவர்களை “டமார்… டமார்” என்று தாக்கும் நிலைக்குத் தான் வரும்.
2.குழந்தைப் பருவத்தில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட இந்த உணர்வுகள் இயக்கி விடுகின்றது.
3.டி,வி.யில் படத்தைப் பார்த்தது அங்கே காட்டும் தந்திரங்கள் அனைத்தும் இந்தக் குழந்தை செய்யத் தொடங்கிவிடுகிறது.

இந்த நிலைதான் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் ஒரு குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தாலே…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாங்கள் வேண்டும்
2.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் எல்லாம் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்
6.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும்
7.என்னை பார்ப்போருக்கெல்லாம் அந்த மகிழ்ச்சியின் தன்மை பெற வேண்டும் என்று
8.இந்த உணர்வுகளை வினையாகச் சேர்க்கச் சொன்னார்கள்… அதையே கணங்களுக்கு அதிபதியாக்கச் சொன்னார்கள்.

இதுதான் மகரிஷிகள் காட்டிய அருள் வழி…!

அன்னை தந்தையை மனிதனாக உருவாக்கிக் கொடுத்தது யார்…? நம்முடைய மூதாதையர்கள்…! அவர்களைக் குலதெய்வங்களாக கருதும்படி சொன்னார்கள் ஞானிகள்.

அந்தக் குல வழியில் தான் நம் தாய் தந்தையர் மனிதனாகப் பிறந்தார்கள் அவர்கள் வழி தான் நம்மையும் அவர்கள் மனிதனாக உருவாக்கினார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன…?

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களின் உயிரான்மக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவா நிலை பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

அவ்வாறு உந்தி தள்ளிய பின்
1.உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் அங்கே கரைய வேண்டும்.
2.ஞானிகள் உணர்வுடன் ஒன்றி என்றும் அழியா ஒளியின் சரீரம் பெற்று என்றுமே ஒளியாக வாழ்ந்திட வேண்டும் என்று
3.எந்தக் குல வழியில் நாம் மனிதனாக உருப்பெற்றோமோ…
4.அகன்று சென்ற உயிரான்மாமக்களை மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் குடும்பத்தைச் சார்ந்தோர் விண்ணிலே செலுத்தினால்
5.பிறவி இல்லா நிலை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளி சரீரமாக நிலைத்து அந்த பேரானந்த பெருநிலை அடைகிறார்கள்.

அவர்கள் அங்கே முன் சென்றால் அதன் வலுக் கொண்டு நாம் பின் செல்ல முடியும். இதன் வழி தான் நல்ல வினைகளை நமக்குள் உருவாக்க வேண்டும் என்று விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டுகின்றது.

ஆகவே மெய் உணர்வுடன் ஒன்றி இருளைப் போக்கி பொருள் காணும் உணர்வுடன் ஒன்றி இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளைப் போக்குவோம். மனித வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் திறன் பெறுவோம்.
1.பேரானந்த பேரின்ப வாழ்வாக
2.இந்த வாழ்க்கையிலேயே நாம் வாழ்ந்து காட்டுவோம் என்று அதைச் செயல்படுத்துவோம்.

ஒலி – ஒளி

ஒலி – ஒளி

 

“ஒளியைப் பற்றி சொல்கின்றேன்” என்று சொன்னேன்.
1.இவ்வுலகின் தன்மையிலேயே கலந்து இருப்பதும் ஒலி தான்
2.நீ பேசுவதும் ஒலி தான்
3.உன்னுள் இருந்து வரும் மூச்சும் ஒலி தான்
4.சிறு அசைவும் ஒலி தான்
5.பெரும் மின்னலும் ஒலி தான்
6.மழைத்துளியிலும் ஒலி உள்ளது.
7.மலர் மொக்கு விரியும் பொழுதும் ஒலி உள்ளது.

உலகம் ஒலியுடனே உருளுகின்றது ஒளியுடன் மட்டும் உலகம் இல்லை… ஒலியுடனும் கலந்து இருக்கின்றது. சிறு எறும்பின் வார்த்தையிலும் ஒலி உள்ளது… நம் உலகச் சுழற்சியிலும் ஒலி உள்ளது.

ஒலி அழிவதில்லை… காலமுடன் கலக்கின்றது.
1.உடல்கள் அழிகிறது… ஆனால் நாம் விட்ட மூச்சும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கின்றது.
2.ஆத்மாவானது மறு உடல் பெறுகின்றது… ஆனால் “ஒலி” அவன் எடுக்கும் எந்த ஜென்மத்திலும் அழிவது இல்லை… மாறுவதும் இல்லை.

அழிவதும் இல்லை மாறுவதுமில்லை என்றேன் அல்லவா. அப்போது இந்த ஒலியெல்லாம் என்னவாயிற்று…? என்று நினைக்கின்றீர்கள். இவ்வுலகம் தன்னைத்தானே சுற்றுகிறது என்கின்றீர்கள்…! அது சுற்றுவதற்குச் சக்தி எதிலிருந்து வந்தது தெரியுமா…?

இந்த ஒலியின் தன்மை எல்லாம் ஒன்று சேர்ந்து… காற்றுடனே கலந்து உலகைச் சுற்றிவிடும் நீ விட்ட நல் மூச்சும்.

நல் மூச்சு…! என்பதன் பொருள்… நல்லவர் உள்ள நாட்டில் எல்லாம் மழை பெய்கிறது என்று சொல்லும் பழக்கத்தில் இல்லையா…!

நல்லுணர்வு உள்ள வீட்டில் இலட்சுமி களை உள்ளது என்கிறோம். தன் உணர்வை மறந்து விட்ட நிலையில் உள்ள வீட்டில் எல்லாம் நாதியற்ற நிலைதானப்பா. அந்த வீட்டைப் பார்த்தவுடன் மூதேவி குடி இருக்கின்றாள் என்பதும் இது தான்.

இலட்சுமியும் பிறக்கவில்லை… மூதேவியும் பிறக்கவில்லை… ஒலியில் தான் எல்லாம் உள்ளதப்பா…!

ஒளியைப் பற்றி நினைத்து வந்தால் ஒலியின் பாடம் என்பது தான் முதல் பாடம். எல்லாம் முதல் பாடம் என்கின்றீர்கள் இரண்டாம் பாடம் இல்லையா…?
1.எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டுமப்பா
2.முதலாவதாகவே இருக்கட்டும்… முடிவு நிலை வேண்டாம்
3.எல்லாத் தன்மையுமே முதல்… முதல் தன்மை தான்.

குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நிலையும் முதல் தான் குழந்தைக்கு. என்றும் முதலாகவே இருந்திடும் நிலையிலேயே பாடங்கள். முதல் பாடம்… முதல் பாடம்…! என்பதன் பொருள் இதுவே தான்.

மூல முதல்வர் என்று சொல்கின்றோம் அது போல மூல இரண்டாமவர் என்று சொல்கின்றோமா…? “எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டும்…”

ஒலியின் தன்மையை உணர்ந்திடுவாய். ஒலிக்கும் இசையில் உணர்ந்திடுவாய். ஒளியை அமைப்பது இந்த ஒலி தான். ஒளிமயமான எதிர்காலம் என்று சொல்கின்றோம். ஒளிமயமான எதிர்காலம் ஒலியில் இருந்து தான் வருகின்றது.

ஒலிக்கும் ஒலியெல்லாம் எதிலிருந்து என்கின்றாய்…? ஒளியின் தன்மை தானே புரிந்திடும். இந்தப் பாடத்தின் தன்மை புரிந்ததா.

நீ ஜெபிக்கும் ஜெபமும் என்னிடம் தான்… நீ துவேஷித்த சொல்லும் என்னிடம் தான். உன் ஜெபம் மட்டும் தான் என்னிடம் அடையும்… துவேஷம் எங்கு செல்கிறது என்று நினைக்கின்றாய்…?

ஜெபம் துவேஷம் காற்றில் தான் கலக்கின்றது புரிந்ததா…? ஒளியின் தன்மை சொன்னேன்… ஒளியின் தன்மை புரிந்ததா…? ஒலியில் தான் ஒளியின் தன்மை இருக்கின்றது.

இதைப் புரிந்து கொண்டால் ஒலியின் தன்மை புரியும். ஒளி எங்கிருந்து வருகின்றது…? ஒலியிலிருந்து தான் ஒளி உள்ளது.

1.சுவாச நிலை என்பதும் இது தான்
2.சுவாச நிலை ஒன்றுபட்டால் ஜெப நிலை கூடிவிடும்
3.ஜெப நிலை கூடிவிட்டால் ஒளியின் தன்மை தெரியும் என்கிறோம்.

சுவாச நிலை என்னும் பொழுதே ஒலியாக ஆகிறது. அந்த ஒலி தான் ஒளியப்பா. விளக்கில் தான் ஒளியுள்ளது. விடியும் விடிவில் தான் ஒளி உள்ளது. சந்திரனும் சூரியனும் தான் ஒளி தருகின்றது.

நட்சத்திர மண்டலத்தில் உள்ள ஒலி எல்லாம் ஒளி என்கிறார்கள். அந்த ஒலி ஒளி அல்ல. ஒலிதானப்பா ஒளியே. நம்முடைய சுவாசத்தில் உள்ள ஒலி நல் ஒலியாக உள்ள நேரத்தில் தான் நல்ல பூவும் பூக்கும் நல்ல கனியும் கனியும்.

என் தாயார்… என் தாயாரின் தாயார் சமைத்த ருசி… இப்பொழுது இல்லை என்கிறாய்.
1.காலநிலை மாற மாற மன நிலையும் மாறிவிட்டது.
2.மனிதனும் மூச்சுக் காற்றும் மாறிவிட்டது.
3.அந்நிலையில் இருந்து வரும் தன்மையில் இருந்து தான் விளையும் பயிரின் ருசி எல்லாம்.

தர்மம் நியாயம் எங்கு உள்ளது…? அன்றுள்ள நிலையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

பிறகு எப்படி இருக்கும் நிலை எல்லாம்…? “சுவாச நிலையை மாற்றிக்கொள்” என்பதும் இது தானே. சுவாச நிலையைப் பற்றிச் சாமி விடிய விடியச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டீரா…? இப்பொழுது புரிகின்றதா ஒலியின் தன்மையும் ஒளியின் தன்மையும்.

உன்னுள்ளே ஒளி பிறந்திட “ஒலியை முதலில் கற்றிடு…” குழந்தைக்கும் புரியும்படி இந்தப் பாட நிலை உள்ளது.

ஒளியின் தன்மைக்குப் புதுப் பாடம் வேண்டுமா…? ஒளியைப் பற்றி இன்னும் கேட்டால் நான் ஒலியைப் பற்றி தான் மீண்டும் சொல்வேன்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல… பெரும் மேகங்கள் வந்தால் மறைந்துவிடும். மேகத்தின் தன்மையே மின்னல் வந்தால் மறைத்திடும்.

அது போல
1.நல் உணர்வை எடுத்து நல் மூச்சு விட்டிடுவாய்.
2.நல் மூச்சு விட்டால் ஆயிரம் நஞ்சின் தன்மை இருந்தாலும் “ஒருவரின் நல் மூச்சு அதை மாற்றிவிடும்…”

வைரத்தின் தன்மை வார்த்தையில் வேண்டுமென்றேன் அல்லவா வைரத்தின் தன்மை எல்லாம் அதன் ஜொலிப்பில் தான் உள்ளது அதற்குள்ள மதிப்பை பார்த்தாயா…?

அது போலத் தான் எல்லாமே. நல்லுணவை நான் சமைத்தேன். உனக்குள்ளே ஊட்டி விட்டேன் இந்த நிலையை மாற்றி விடாமல் ஊக்கமுடன் இருந்திடுவாயா…? புது பானையில் விறகு வைத்துச் சமையல் செய்யும் காட்சி…!

1.நான் (ஈஸ்வரபட்டர்) இங்கும் உள்ளேன்… அங்கும் உள்ளேன்…
2.எங்கும் உள்ளேன்… எல்லாமில் எல்லாமாக உள்ளேன்.

நாம் பழக வேண்டிய நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடர்

நாம் பழக வேண்டிய நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடர்

 

ஒவ்வொரு நொடிக்கும் எண்ணமில்லாத மனிதன் எவருமில்லை. எண்ணத்தில் எடுப்பது தான் இச்சுவாசம்.
1.இச்சுவாசத்தில் எடுக்கும் நிலை கொண்ட மனிதனுக்கு…
2.“மனிதனின் எண்ணத்துடன் நிறைந்துள்ள குண அமில சுவாசம் தான்” அவன் ஈர்ப்புக்கு வருகின்றது.

1.மனிதன் தன் எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்தி” எடுக்கும் சுவாசத்தினால்
2.எத்தனை காலங்கள் ஆனாலும் “குறைவின்றி நல்வழி பெற்று”
3.பலவாக நிறைந்துள்ள அமில குணத்தைத் “தன் எண்ண மேம்பாட்டினால்”
4.ஒன்றின்பால் “நல் ஞானத்திற்குகந்த” செயலாக்கும் அமிலத்தின் வளர்ச்சியின் குணத்தைக் கொண்ட சுவாசத்தை எடுத்து
5.எடுக்கக்கூடிய காந்த மின் அலையின் ஈர்ப்பை “நல்ல சக்தியுடன்” மோதச் செய்தோமானால்
6.அச்சக்தியின் ஒளி ஈர்ப்பை “நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடரினால்” நம் உடல் முழுவதுக்கும் பரவச் செய்து
7.இந்த உடலுக்குள் ஏற்கனவே பலவாக நிறைந்துள்ள “பல குண நிலை கொண்ட அமிலங்களையும்”
8.இவ்ஈர்ப்பின் நுண்ணிய அலையினால் “ஒரு நிலையான குண அமிலத்தை” இந்த உடல் முழுமைக்குமே நாம் பரவ விட்டால்
9.மனித வாழ்க்கையில் மோதிடும் பல நிலை கொண்ட குண நிலைக்கொத்த செயல் எதுவும் “நம் நிலையை மாற்றிட முடியாது…!”

அதே சமயத்தில் பல எண்ணச் செயல்கள் மோதினாலும் நாம் எடுக்கும் சுவாசத்தால்… அதன் குண நல ஈர்ப்பில் நாம் சிக்கிடாமல்…
1.ஏற்கனவே இந்த உடலில் நாம் நிறைத்துக் கொண்டுள்ள
2.ஒரு நிலையான அமில குணத்தின் நுண்ணிய அலையின் ஈர்ப்பு வளர்ச்சியில் பெற்ற
3.ஒளிச் சக்தியின் செயலே நமக்குள் நிறைந்து நிற்கும்.

மனித ஆத்மாவின் இவ்வெண்ண சுவாச சக்தியில் பெறத்தக்க நிலையினால் வளர்க்கும் நிலை உண்டு. தாவரங்களுக்கு அந்த நிலையில்லை.

ஒரு நிலையான எண்ண ஈர்ப்பில் தாவரம் வளர்ந்து வாழ்ந்தாலும் அதன் பலன் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொன்றின் வளர்ச்சி நிலைக்கொத்த காலக்கெடுவில் தான் தாவரங்களின் நிலை உண்டு.

1.எண்ணத்தின் மேம்பாட்டின் வழி நிலை கொண்ட மனிதன் தான்
2.தன் எண்ணத்தில் பலவாகப் படைக்கவல்ல ஆண்டவனின் ஆண்டவனாக முடியும்.

ஆனால் இந்த எண்ண மேம்பாட்டின் உணர்வு அறியாத இன்றைய மனிதன் தான் உழன்று கொண்டே… உருவை மாற்றி… “உருச்சிதைந்து வாழ்கின்றான்….!”

நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும்

நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும்

 

அகஸ்தியன் தன்னுடைய கூர்மையான எண்ண வலு கொண்டு விண்ணுலகை உற்றுப் பார்த்து அதிலிருந்து வரும் பேராற்றல்களை எடுத்துத் தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒளிக் கதிர்களாக மாற்றிக் கொண்டான்.
1.அதைத்தான் குருநாதர் எனக்குள்ளும் (ஞானகுரு) பதிவு செய்தார்…
2.எடுத்து அதை வளர்க்கும்படியும் செய்தார்.

நான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் நீ இதைப் பெற்றால் உனக்குள் அந்த அகஸ்தியனின் ஆற்றல்கள் வளரும் என்றார்.

இதையே மற்ற மக்கள் மத்தியில் நீ பதிவு செய்யப்படும் பொழுது அவர்களும் அதே எண்ணம் கொண்டு எடுத்தால் அவர்களாலும் அதைப் பெருக்கிக் கொள்ள முடியும். இப்படி ஒரு கூட்டமைப்பின் நிலைகளை நீ உருவாக்க வேண்டும்… என்றார்.

1.எனது வலிமை கொண்டு… பல ஆயிரம் மடங்கு வலிமை கொண்டுதான்
2.எனக்குள் பெற்ற சக்தியை… உனக்குள் கொடுத்து… அதை எடுக்கச் செய்கின்றேன்
3.ஆனாலும் நீ ஒருவனே இதனுடைய பலனைப் பெற முடிகின்றது…!

ஆனால் பலரும் இந்தப் பலனைப் பெற வேண்டுமென்றால் நீ இதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று எனக்கு உபதேசித்து அருளினார்.

நீ கண்ட அந்த ஞான வித்தை ஒவ்வொரு உடல்களிலும் விதைக்கப்படும் பொழுது அது பதிந்து அந்த அருள் உணர்வுகள் அங்கே பெருகி விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெறும்படி செய்ய வேண்டும் என்றார்.

1.அவர்களுக்குள் அந்த வளர்ச்சி பெற வேண்டுமென்று
2.நீ எடுத்துக் கொண்ட சக்தியால் நீ தவம் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

நீ தியானிக்கின்றாய்… உனக்குள் விளைய வைத்தாய்…! ஒவ்வொரு உடலிலும் அது இணைந்து கொண்ட பின் அவர்கள் அவ்வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்ற நிலையை என்னைத் தவம் இருக்கும்படி செய்கின்றார் குருநாதர்.

அவர் சொன்ன வழிப்படித் தான் இன்று வரையிலும் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு) நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும் என்று…!

ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்கின்றேன். அதே எண்ணத்தை நீங்களும் எண்ணி அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் எளிதில் பெற முடியும்.

1.ஏனென்றால் எனது வேலை கடவுளை நான் எங்கும் தேடவில்லை…!
2.உங்கள் உயிரைத்தான் குருநாதர் கடவுளாக வணங்கும்படி சொன்னார்.
3.அவன் அமைத்த கோட்டை தான் உங்கள் உடல் என்று சொன்னார்.

பல ஆயிரம் ஆண்டுகள் இதன் உணர்வைத் தேர்ந்தெடுத்து இந்த மனித உருவை உருவாக்கி உள்ளது உயிர். அதற்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைத் தெய்வமாக மதித்து
1.இந்த மனிதனை உருவாக்கும் உணர்வுகள் அனைத்தும்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று தான் நான் எண்ணுகின்றேன்.

உலக வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் அந்தத் தீமைகளின் நிலையை நீக்குவதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

உனக்குள்ளே… “நான் வந்து அமரும் நிலை பெற வேண்டுமப்பா…!”

உனக்குள்ளே… “நான் வந்து அமரும் நிலை பெற வேண்டுமப்பா…!”

 

நம் காலம் கலியுகம்…! அங்கு சொல்வது விஞ்ஞான காலம். அவன் விஞ்ஞானம் எல்லாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு…?

விஞ்ஞானத்தில் விளையாடுபவன் சித்தனாக இருந்தான். சித்தனே தான் விஞ்ஞானி. எஞ்ஞானத்தையும் வெல்பவன் விஞ்ஞானத்தை வெல்ல மாட்டானா…?

இந்நிலையில் நீ இருந்தால் இந்நிலை என்பது
1.இப்பொழுது நீங்கள் தியானிக்கும் நிலையில் விஞ்ஞானத்தை வெல்லும் மெய் ஞானத்தைக் காண்பாய்
2.இந்த நிலையில் இருந்து கொண்டு எஞ்ஞானத்தையும் வென்று விடலாம்.

விடியும் காலத்தையும் நீ காண்பாய்… விடியும் காலத்தை என்னும் பொழுது உன் நினைவில் “வான மண்டலத்தின் நிலை” தெரிந்து இருக்கும்.

முதல் பாடம் பூமியின் நிலையைத் தெரிந்து கொள் என் நினைவை நீ தெரிந்தவுடன் இப்பூமியின் நிலையைத் தெரிந்து கொள்வாய்…
1.உனக்குள்ளே நான் வந்து அமரும் நிலை பெற்றுவிட்டால்
2.இந்தப் பூமியை இயக்கும் தன்மை புரியும்… மனித நிலை மாறியதன் தன்மையும் புரியும்.

மாற்றுடலைப் பெற்றிடலாம்…! மாறிடும் காலத்திற்கு முன்னே இந்த உடலிலேயே எல்லா நிலையையும் உனக்குத் தந்திடுவேன்.

பூமி இயங்கும் தன்மையே ஆகர்ஷண சக்தி என்பதை வைத்து உன் நிலையைப் பறக்கச் செய். இம்மண்டலம் விட்டு பிற மண்டலம் நீ சென்று வரலாம். பிற மண்டலத்தில் நடக்கும் நிலையை நான் தருவேன். நீ இருந்த நிலையிலேயே எல்லாம் உண்டு.

உன் மனதை நீ அடக்கு என்பதன் பொருள் இதற்காகவே.

1.முதலில் உள் மனதை அடக்கும் தன்மை வந்து விட்டால் வெளி மனதும் அடங்கிவிடும்
2.உள் மனதை அடக்கி விட்டால் ஜெப நிலையில் ஜோதி நிலை கண்டிடுவாய்.
3.மிக சீக்கிரத்தில் ஆகர்ஷண சக்தியை வென்றிடலாம்.

ஆரியபட்டா பறந்ததன் நிலை என்ன…? (ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும்). அவனே செய்தானா…? ஈஸ்வரப்பட்டா சென்றல்லவா அதைப் பார்த்தான்.

“ஆரியபட்டா” என்னும் பெயர் வர அவனுள்ளே நான் இருந்தேன். நீ இருக்கும் இந்தியா மட்டும் உலகம் அல்ல…
1.உலகில் உள்ள மறுபகுதியில் உள்ளவனுக்கும் நான் உள்ளேன்.
2.இங்கும் சித்தன் உள்ளான் அங்கும் உள்ளான்
3.நாம் நினைப்பது இங்கு தான் சித்தன் உள்ளான் என்று
4.அங்கிருக்கும் நிலையை அவன் வெளிப்படுத்துவதில்லை.

உன் மூளையை நீ உபயோகித்தால் அவனையும் நீ வென்றிடலாம். அவனையும் வென்று விட்டால் போதுமா…? அவனுக்கும் மேலே உள்ளவனை யார் வெல்வது…?

அவன் அவனையே தான் வென்று கொண்டிருக்கின்றான்… அவனுக்கு மேல் உள்ளவன் அவனை வெல்ல எவ்வளவு நாள் செல்லும்…?

விஞ்ஞான நிலை கொண்டு அழிக்கும் நிலை நமக்கு வேண்டாம். நம் ஞானத்தின் நிலை இந்த விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் இல்லையப்பா.

1.இந்தத் தியானத்தின் நிலையில் அந்த ஈஸ்வரனே பந்தம் வருவான்
2.நீ வேறு அவன் வேறு அல்ல என்ற நிலையை நீ பெற்றிடு.

நான் சொல்லும் பாடம் எல்லாம் இதுவே தான்.

இவ்வுலகில் நீ பிறந்த நிலை வேறு எந்த உலகத்தில் இல்லை. நம் மனத்தையே தெய்வமாக்கிக் கொள்ளும் நிலையைச் சீக்கிரம் பெற்றிடுங்கள். வாயளவில் மனமே தான் தெய்வம் என்பது இல்லாமல் மனதையே தெய்வமாக்கிடுங்கள்.

உன் மனதைத் தெய்வமாக்கிய பின்னால் தான் உனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். தியான நிலையின் பொருள் எல்லாம் புரிந்திருக்கும் நாசியில் நீ பெற்றிடும் வாசனையை உன் மனதில் ஆக்கு.

சுவாச நிலை என்பதன் உட்பொருள் இதுவே தான் உன் மனதை வாசனையாகப் பெற்று விட்டால் கோடி இன்பம் அதுவே தான்.

நுகரும் தன்மையில் நீ இருந்திடப்பா மலரும் கழிவும் வேறல்ல என்ற நிலை தெரிந்திடும்.

கோப நிலை எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு… உனக்கும் உண்டு…! மணம் என்னும் வாசனையைப் பெற்று விட்டால் எல்லா நிலையும் மாறிவிடும்.

யோகியாகச் சென்று தான் அடைய வேண்டும் என்னும் நிலை உனக்கில்லை. இருக்கும் நிலையில் எல்லாம் தெரியத்தான் இந்தப் பாடங்கள்.

பாட்டின் தன்மை புரிந்திருக்கும் பாடத்தின் தன்மைகளும் புரிந்திருக்கும் முதல் படி தாண்டி விட்டாய் என்று சொன்னேன்… அடுத்த படி ஏறத்தான் இந்தப் பாடங்கள்.

எல்லா நிலையும் வென்றிடும் சக்தி உனக்கு உண்டு.
1.பறக்கும் நிலை பார்த்திடுவாய்.
2.காட்சி:- உடல் இருக்க சாமி (ஞானகுரு) பறந்து போகும் நிலை
3.இந்த நிலையை உனக்கு அருள்வேன்.

மகரிஷிகளின் அருள் சக்தியை வளர்த்து “உலகெங்கிலும் நாம் அதைப் பரவச் செய்வோம்”

மகரிஷிகளின் அருள் சக்தியை வளர்த்து “உலகெங்கிலும் நாம் அதைப் பரவச் செய்வோம்”

 

இன்று உலகெங்கிலும் நடக்கும் எத்தனையோ அசம்பாவிதங்களை நாம் பார்த்தும் கேட்டும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உலகெங்கிலும் பரவ வேண்டும் என்று
2.நாம் நம் சிந்தனைகளைச் செலுத்த வேண்டும்.

ஞானிகள் உணர்வுகளை நமக்குள் பெருக்குதல் வேண்டும். ஞானிகள் உணர்வை வளர்த்து அதைப் பரப்பி இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கும் தீமைகளை… அந்த நஞ்சான உணர்வுகளைப் பிளக்க வேண்டும்.

1.நம் ஆன்மாவை மட்டும் தூய்மைப்படுத்துவது என்பது அல்ல…!
2.பரமான இந்தப் பூமியில் இருக்கும்… பரமாத்மாவில் படர்ந்துள்ள தீமைகளைப் பிளக்க வேண்டும்.

அதைப் பிளக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் வளர்க்க வேண்டும்.
1.அந்த உணர்வின் சொல்லாக… செயலாக…
2.எல்லாவற்றையும் (வாழ்க்கையை) அதனின் செயலாக்கமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

நான் (ஞானகுரு) சாதாரணமாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். குருநாதர் எனக்குள் உயர்ந்த உணர்வுகளைப் பதிவு செய்தார். எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

அதை நீங்களும் பெற வேண்டும்… நீங்கள் பெறுவீர்கள்…! என்ற நம்பிக்கையுடன் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணினால் “அந்த ஞானமே” உங்களைக் காத்திடும் சக்தியாக தக்க உபாயங்களைக் காட்டும்.

தீமை செய்தவனைப் பதிவு செய்து மீண்டும் அவனை நினைவுக்குக் கொண்டு வந்தால்… தீமை செய்யும் உணர்வுக்கே நம்மை அது அழைத்துச் செல்கின்றது.

தவறு செய்கிறான்… தன்னை எதிர்த்துப் பேசி விட்டான்…! என்றால் உடனே பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அவனைப் பழி தீர்க்கச் செல்கின்றோம்.

ஆனால் பழி தீர்க்கும் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் அது நம் நல்ல குணங்களையும்… நம் உடல் உறுப்புகளையும்… நம்மையும்… அழித்து விடுகின்றது.

இதைப் போன்று தான்… இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் நிலையாக “தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால்” அதை வளர்த்து நம்மைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாகப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆலயங்களிலே அதைத்தான் நமக்கு ஞானிகள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். பிறருடைய தீமைகளை அகற்றிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்.

1.உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின்ன் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அந்த மகரிஷிகள் அடைந்த… அவர்கள் பெற்ற ஆற்றலை நாம் பெறுகின்றோம்

இந்த முறைப்படி எல்லோரும் நீங்கள் சொல்லிப் பாருங்கள்
1.காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை அகன்று விடும்
2.காற்று மண்டலம் பரிசுத்தமாகிவிடும்.

நினைத்தவுடன் நான் வருவேன்… என் நினைவைக் கூட்டிக் கொள்

நினைத்தவுடன் நான் வருவேன்… என் நினைவைக் கூட்டிக் கொள்

 

48 நாட்களில் கலசம் வைத்ததின் மகிமை புரியும். எதற்காகக் கலசம் வைத்தது என்று புரிந்ததா…?
1.நினைவலைகள் வருவதற்காக… சுவாச நிலைக்காக…!
2.நாம் ஒரு காரியத்தை நினைத்துக் கலசம் வைத்திருக்கின்றோம். அதே நினைவில் ஈஸ்வர நினைப்பின் ஈர்ப்புக்காக.
3.அதாவது… 4+8=12 குணாதிசயங்கள்
4.சக்தி சொரூபத்தில் உள்ள பல விதமான குணங்களை 12 கோடு போட்டு ஒன்றாகச் சேர்த்தல்…
4.12 விதமான மனத்தையும் ஒருநிலைப்படுத்தல்.

குழந்தைகளுக்கு எப்படிப் பல துறைகளில் அறிவை ஊட்டி வளர்த்திருக்கின்றார்களோ அப்படியே தியான வழிபாட்டையும் கொடுக்க வேண்டும்.

விளையாட்டுப் போக்கு கடின சொல் இல்லாமல் ஆத்மீகப் பாடத்தை ஆரம்பி… நிதானமாக வரவேண்டும்.

1.நாள்… நட்சத்திரம்… பார்ப்பதெல்லாம் மனதை ஒருவழிப்படுத்தவே
2.நேரம் காலம் என்பது ஒன்றுமில்லை… மனதை தடைப்படுத்தவே நேரம்-காலம்.
3.மன பயம் உனக்கில்லை. அதன் பொருள் இதுதான்.
4.சந்தோசமான நிலையைக் கூட்டி வா நலிவும் நோவும் பயமும் வேண்டாம்.

வைரத்தின் ஜொலிப்பு வார்த்தையில் வேண்டும்
பூவின் வாசனை நாசியில் வேண்டும்
சிங்கார இசையின் ஒலிகள் செவிக்கு வேண்டும்
வளர்ந்த பின் எனக்கு அந்நிலை தா ஈஸ்வரா…!
இந்தப் பாடல் புரிந்ததா…? பாட்டின் தன்மையைப் புரிந்து பாடவும். சொல்கிற வார்த்தைகளும் செய்கிற செயலிலும் உன் நினைவு வேண்டும்.

எந்த ஒரு துளி நிலையும் வீண் பண்ணாமல் காலத்தை உபயோகப்படுத்து. உன் நிலை நல் வழியாக இருக்கட்டும்… “என்னுடன் நீ இருப்பாய்…”

1.எனக்கு நல்ல மனம் கொடு ஈஸ்வரா…! என்று சொல்லும் பொழுது எல்லோரும் ஏற்றுக் கொள்வதில்லை
2.பக்குவ நிலையில் உள்ளவர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

நேரத்தை வீண் செய்யாதே… உன் காலம் குறுகியது… படிப்படியாக வெற்றி கொள்… இந்தப் பாடம் எல்லோருக்கும் தான். காலநிலை குறுகிவிட்டது… காற்றுடன் கலந்து வா…!

“கஷ்டங்கள் வந்தாலும் என் அருள் உன்னுடனே…”

ஜெப நிலையைக் கூட்டிக் கொள்
ஜெபத்துடனே நான் இருப்பேன்
ஜெபமெல்லாம் உன்னுடனே
ஜோதி மயம் தந்திடுவேன்

ஜெபித்ததெல்லாம் உன்னுள்ளே
ஜெபித்ததெல்லாம் நானல்லவோ
இந்நிலையில் நானிருக்க
உனக்கு இனி கவலை இல்லை

பாடும் பாடல் நானல்லவோ
பாடிய குரல் எனதல்லவா – புரிந்ததா…?
உன் நிலை மறந்து விடாமல்
ஜெப நிலையில் வந்து விட்டால்
எந்நிலையும் கிட்டி விடும்
என்ற பொருள் இதுவே

ஜோதி நிலை தந்திடுவேன்
ஜோதியுடன் கலந்திடுவாய்
ஜோதியாகி உலகத்தையே
ஜோதி மயம் ஆக்கிடுவாய்

“உனதல்ல… எனதல்ல… இந்த உலகம்” என்று ஏற்கனவே சொல்லி உள்ளேன். ஆத்மீக வழிக்கு வயது வரம்பு இல்லை… ஏற்றுக் கொள்ளும் நிலையும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு.

உங்கள் ஆசையைத் தூண்டத்தான் இந்தப் பாட்டு. உன் பாடலை எனதாக்கு… என் பாடலை உனதாக்குகிறேன்.

உன் நிலையை மாற்றிக் கொள்… காலம் உனக்குக் கனிந்து வரும்… மனப்பக்குவம் வந்துவிட்டது… பாத்திரத்தில் சாதம் உள்ளது. எடுத்துச் சாப்பிடுவது அவன் வேலை…!

1.நம்பி வந்த பாதையை வென்று வா… சித்தன் நிலை காண்பாய்
2.சித்து நிலை தந்து விட்டேன்… சித்தனாகிச் சித்தனுடன் கலந்திடுவாய்.

சித்து நிலை ஞான நிலை எல்லாமே ஜோதிடன் கலப்பதுவே. இந்நிலையைச் சீக்கிரம் பெற்றுக் கொள்… வழி அமைத்துக் கொள்… உன் நிலைக்கே எல்லாம் புரியும்.

இன்றைய பாடம் புரிந்ததா…?

எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?

எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?

 

பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கப்படும் பொழுது “இப்படித் தவறு செய்கின்றார்களே…” என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த நேரத்தில் “அவர்கள் தவறிலிருந்து விடுபட வேண்டும்…” என்று நாம் எண்ண முடியவில்லை.

அதற்குண்டான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலையாகத்தான்
1.உடல் அழுக்கையும் துணி அழுக்கையும் தினசரி போக்குவது போன்று
2.வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நம்மை அறியாது வந்து சேரும் அழுக்கைப் போக்க
3.விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
4.நாம் கேட்டறிந்த தீமைகளைத் தூய்மைப்படுத்தும்படி… ஆன்மாவைத் தூய்மைப்படுத்தச் சொன்னார்கள் ஞானிகள்.

பல முறை இவ்வாறு செயல்படுத்த… இந்த வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் எண்ணுவதற்கு நேரமில்லை. இருப்பினும்
1.என்னைப் பார்ப்போருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர வேண்டும்.
2.அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும்
4.அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மகிழ்ச்சி பெற வேண்டும்
5.அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
6.நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரிடம் கேட்டால் ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய…”

ஓ… …ம் நமச்சிவாய ஓ… …ம் நமச்சிவாய என்று வெறும் வாயில் சொல்வதில் பொருள் இல்லை. அது வெறும் சொல்.

காரணம்… நாம் எந்த உணர்வினை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது ஓ…ம் நமச்சிவாய…! அந்த அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வினை நமக்குள் சிவமாக்க (உடலாக) வேண்டும்.

ஆக…. எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?

சாஸ்திரங்களில் ஓ…ம் என்றால் பிரணவம் என்று காட்டப்பட்டுள்ளது. “அதையே சொன்னால் ஜீவன் வந்துவிடும்” என்று தவறான வழிகளில் ஜெபித்துக் கொண்டுள்ளோம்.

அவன் சொன்ன உள் பொருளே… வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கிட “மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது…”
1.நமது உயிர் அதை ஓ… என்று அதைப் பிரணவமாக்கி
2.ம்… என்று நம் உடலாக ஆக்குகின்றது

அதாவது… மகரிஷிகளின் அருள் சக்திகளை உன் உடலாக்கு உனக்குள் அதை ஜீவ அணுவாக ஆக்கு என்று தான் காவியத்தைப் படைத்துள்ளார்கள்.

ஆனால் வெறுமனே ஓ… …ம் நமச்சிவாய என்று சொன்னால் “சிவன்” தன்னையே சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்று… எதையாவது ஓடி வந்து செய்வார் என்று “இப்படிப்பட்ட நம்பிக்கையை” ஊட்டி விட்டார்கள்.

சந்தர்ப்பத்தில் ஒருவன் விபத்துக்குள்ளாகின்றான். “இப்படி ஆகிவிட்டதே” என்று பதட்டமாகி வேதனையுடன் சுவாசிக்கும் பொழுது ஓ…ம் நமச்சிவாய. பய உணர்வுகளை எடுக்கும் பொழுது அது உடலாக… சிவமாக ஆகிவிடுகிறது.

அடுத்து நமக்குள் நடுக்கமும் அச்சமும் ஏற்படுகின்றது.

உன் உயிர் நீ நுகர்ந்ததை எவ்வாறு உடலாக ஆக்குகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.
1.நடந்த விபத்தை கண்கள் உற்றுப் பார்க்கும்படி செய்தது… அந்த உணர்வினை கவரும்படி செய்தது
2.உயிர் ஓ… என்று பிரணவமாக்குகின்றது உணர்வினை உனக்குள் உணர்த்துகின்றது
3.உணர்வினை உடலாக (சிவமாக) உறையச் செய்கின்றது என்று தான் சாஸ்திரங்கள் தெளிவாக நமக்குக் காட்டியுள்ளது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பத்தில் தான் அந்த விபத்து நடந்தது. வேண்டுமென்று அவன் விழுகவில்லையே…! அவன் வாழ்க்கைக்குச் சென்றான்… எதிர்பாராது வண்டி மோதுகின்றது… அடிபட்டு அவன் துடிக்கின்றான்.

அவன் உடலிலிருந்து துடித்து வெளிப்படுத்தும் உணர்லைகளைச் சூரியன் கவர்கின்றது… அலைகளாகப் பரப்புகின்றது.

நம் கண் அவனைப் பார்க்கின்றது… உணர்வினை கருவிழி (படமாக) பதிவாக்குகின்றது. அவன் வெளிப்படுத்திய அலைகளைக் கண்ணின் காந்தப்புலன் நமது ஆன்மாவாக மாற்றி… சுவாசிக்கும்படி செய்து… உயிரிலே பட்ட பின் உணர்த்துகின்றது… உடலில் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.

ஆக நாம யாரும் தவறு செய்யவில்லை… நம்முடைய புலனறிவு தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வாகக் காட்டுகின்றது… தீமை என்று உணர்த்துகின்றது.

ஆனால் ஆறாவது அறிவின் துணை கொண்டு “அதிலிருந்து நாம் விடுபட வேண்டுமே…!”

தீமைகளிலிருந்து விடுபடுவற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் காட்டிய வழிப்படி…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று “உயிருடன் ஒன்றினால்” ஓ…ம் நமச்சிவாய.
2.அவன் (மகரிஷி) தீமைகளை எப்படி அகற்றினானோ “சிவாய நம ஓ…ம்” நம் தீமைகளை அகற்றச் செய்கின்றது.

நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… அவர்கள் நோய்கள் நீங்க வேண்டும்… எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்…! என்று இப்படி எண்ணினால் இது ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்.
1.அந்த அரும் பெரும் சக்திகள் நம் உடலாகின்றது
2.மற்றவரின் தீமைகளை அகற்றும் சக்தியாக நம்மிடமிருந்து வெளிப்படுகின்றது.

இதை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.