நாம் போகும் பாதையில் வரும் தடைகளிலிருந்தெல்லாம் மீண்டு செல்வது தான் இறை ஞானம் பெறும் சரியான ஜெப முறை

நாம் போகும் பாதையில் வரும் தடைகளிலிருந்தெல்லாம் மீண்டு செல்வது தான் இறை ஞானம் பெறும் சரியான ஜெப முறை

 

இங்கு வந்து எங்களின் (மகரிஷிகளின்) செயல் நடப்பின் உண்மைகளை உணர்ந்து மனித ஆத்மாக்கள் அவரவர்கள் உணர்ந்து பக்குவம் பெறும் பாட முறைகளை உணர்த்திக் கொண்டே வந்துள்ளோம்.

பள்ளியில் பயிலும் மாணவனுக்கு… அவன் ஆசிரியரின் போதனையை ஏற்கும் நிலை கொண்டு… அவனுக்கு வைக்கும் தேர்வில் அவன் பெறும் மதிப்பெண்படித்தான்… அவன் அறிவு நிலை கூடிய மதிப்பெண் பெறுகின்றான்.

அந்த மதிப்பெண் உயர்ந்திருந்தால் உயர் ஞானக் கல்விக்குச் செல்கிறான். அறிவு ஞானம் பெறாத மாணவனை உயர் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்க மாட்டார்…! அந்த உபாத்தியாயர்.

அதைப் போல் ஆண்டவனின்… ஆண்டவன் என்பது…
1.உயர் சக்தி ஞான ரிஷியின் அருள் உலகளவுக்கும் பரப்பப்பட்டு
2.அந்த ஞானத்தின் பால் ஈர்ப்பு கொண்ட அவர்களின் பலனில் கண்டெடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்.

அந்தப் பலம் பெற்ற ஆத்மாக்களின் செயலுக்கும் “பல தேர்வுகள் வைத்துப் பொறுக்கித்தான்…” அவர்களின் வட்டச் சுழற்சிக்கே செல்ல முடிகிறது.

கல்விக்கூடம் செல்லும் மாணவர்கள் எல்லொருமே பள்ளியில் இறுதிப் படிப்பு வரையும் செல்வதில்லை. சிலர் மேல் ஞானக்கல்வி பெறச் செல்ல முடியாமலும்… அந்தப் படிப்பை ஏற்க முடியாமல் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றார்கள் அல்லவா…!

அதைப் போன்று… இந்தச் சக்தி நிலையுணர்ந்து “பேரின்ப நிலை எய்திடல் வேண்டும்…!” என்ற செயலில் உள்ளவர்களும் தான் எடுக்கக்கூடிய முயற்சி ஜெபத்தில் பின்தங்கி விடுவதுண்டு…!

1.தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சித் தட்டத் தட்டத் தான் அதன் தரம் உயர்கின்றது
2.அது போல் எண்ணத்தில் ஏற்படும் பலவற்றிலிருந்தும்
3.ஒன்றான இறை ஞான சக்தியை ஈர்க்கும் நிலை பெற ஏற்படும் சோதனையில் எல்லாம்
4.எந்தச் சோதனையிலிருந்தும் நாம் மீண்டும் அந்த ஜெப நிலை பெறுகின்றோமோ…
5.“அது தானப்பா இறை ஞானம் பெறும் ஜெபம் முறை…!”

நெற்றிக் கண்ணை நாம் திறக்க வேண்டும்

நெற்றிக் கண்ணை நாம் திறக்க வேண்டும்

 

நண்பராகப் பழகுகிறோம். சந்தர்ப்பத்தில் அவன் தீங்கு செய்தான் என்றால் கண்களால் உற்று நோக்கி அதைப் பதிவாக்கி விடுகின்றோம். அதற்குப் பின் நினைவை நாம் செயல்படுத்தப்படும் பொழுது அந்த நண்பன் அமெரிக்காவில் இருந்தாலும் பதிவான உணர்வின் அலைகள் இதே காற்றிலே தான் உண்டு… அங்கே போய் அவனை இயக்கி விடுகிறது.

நாம் உபயோகப்படுத்தும் செல்ஃபோன்களில் பட்டனை அழுத்தியவுடன் இன்னார் பேசுகிறார் என்று தெரிகின்றது… அது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! அதே போன்று
1.நமது உயிர் எலக்ட்ரிக்
2.நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்
3.நாம் பார்த்த உணர்வுகள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.
4.அதில் எத்தனையோ எண்ணிலடங்காத வகைகளைப் பதிவாக்கலாம்.
5.பட்டனை அழுத்திச் செல்ஃபோனை இயக்குவது போல் பதிவானது அனைத்தும் அந்தந்தச் சந்தர்ப்பத்தின் அழுத்தத்திற்கொப்ப இயக்கும்.

வேறு ஒரு நண்பன் வருகின்றான் என்னப்பா…! உன் நண்பனை அமெரிக்காவில் பார்த்தேன்… அவன் நன்றாக இருக்கின்றான் என்று நம்மிடம் நினைவுபடுத்தினால் போதும்.

அவனா… துரோகி…! எங்கிருந்தாலும் அவன் உருப்பட மாட்டான்..! என்று அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு உடனே சொல்கின்றோம்.
1.அங்கே அமெரிக்காவில் அவன் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் இதே உணர்வு கிராஸ் ஆகி… சிந்தனை குறைந்து ஆக்சிடென்ட் ஆகும்
2.உணவு உட்கொண்டிருந்தால் புரை ஓடும்.
3.நடந்து சென்றாலும் மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விடுவான்.

அன்பால் பண்பால் பரிவால் நண்பன் என்று பழகுகிறோம். நமக்கு அவன் உதவி செய்தான் என்று எண்ணும் பொழுது அங்கே விக்கலாகப் பாய்கின்றது… அவனுக்கு நல்லதாகிறது.

கணவன் மனைவி பாசத்துடன் இருப்பார்கள். வீட்டிலே பையன் சொன்னபடி கேட்கவில்லை… குறும்புத்தனம் செய்கின்றான்… கணவர் வேலை பார்க்கும் இடத்தில் கஷ்டப்படுகின்றார் என்ற இத்தகைய சூழ்நிலையில்…
1.அங்கே தொல்லை படுத்துகின்றார்களே…! என்று மனைவி தன் கணவனை எண்ணினால்.
2.கணவன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாலும் இதே பாச உணர்வு அங்கே இயக்கப்பட்டு
3.மேடு பள்ளம் தெரியாதபடி ஆக்சிடென்ட் ஆகும்…. அல்லது வாகனம் வருவது தெரியாதபடி விபத்தாகும்.

இதெல்லாம் மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்டு இயக்கும் நிலைகள்…! பாசத்தாலும் இயக்குகிறது… பகைமையாலும் இயக்குகிறது…!

இப்படி
1.நம்மை அறியாது நம் உடலுக்குள் எத்தனையோ தீமைகள் இயக்கிக் கொண்டே தான் உள்ளது
2.அதனுடைய வலிமை கொண்டு நமக்குள் எத்தனையோ வகையான நோய்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றது
3.அந்த நோய்களால் நமக்குள் போர் நடந்து கொண்டே இருக்கின்றது
4.அதனதன் உணர்வுக்கொப்ப புறத்திலே நாமும் போர் செய்து கொண்டே தான் இருக்கின்றோம்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…?

மீள்வதற்குத் தான் “கோடிக்கரை…” என்ற இந்தக் கடைசிக் கரையில் இருக்கக்கூடிய நாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை நம் உயிரான ஈசனிடம் வேண்டி அங்கே நிலை நிறுத்த வேண்டும்.

அதைத்தான் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால்… சுட்டுப் பொசுக்கி விடுவான்…!” என்று காட்டினார்கள் ஞானிகள்.

1.தீமை நீக்கும் உணர்வின் சக்திகளைக் கண்ணிலே கவர்ந்து உயிரிலே மோதச் செய்யும் பொழுது “உயிர் வழி அது கவரப்படுகின்றது…”
2.மூக்கு வழி வருவதில்லை… தீமை புகாது அங்கே தடைப்படுத்தி விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் சிறிது நேரம் நிறுத்தி அந்த வலுவைப் பெற வேண்டும் என்று நம் எண்ணங்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் எலும்புக்குள் இருக்கும் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

ஏற்கனவே முதலில் சொன்னது போல் கண்ணின் நினைவு காற்று மண்டலத்தின் வழி ஒருவரை ஒருவர் தாக்கி அது இயக்குவது போல்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை உய்ரி வழி கவர்ந்து எடுத்து
2.நம் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் பாய்ச்சி…
3.போர் முறைகளை மாற்றிச் சமப்படுத்தும் சக்தியாகக் கொண்டு வர வேண்டும்.

கல்கியைக் காண சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன

கல்கியைக் காண சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன

 

இன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக… அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.

நாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.

ஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.

இந்தப் பூயின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்… ஜீவன் பிரிந்த உடல்களும்… அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்… “சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்…” கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.

இந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவன்ற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.

இருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே…! அதன் நிலை எப்படி…?

நாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா…!

அது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.

அதன் பிறகுதான்… உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.

1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்…
2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்
3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்
4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.

ஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.

காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.

நம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா…? மற்ற மண்டலங்கள் இல்லயா…? என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.

அதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்
1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று… அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து
2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து
3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து
4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற
5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.

மண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா…? மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.

1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.
2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.

அதைப் போன்று…
1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை
2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.

சப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்… அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்
1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண
2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.

ஐம்புலன்களின் இயக்கம் (பஞ்ச பாண்டவர்கள் – ஐவர்மலை)

ஐம்புலன்களின் இயக்கம் (பஞ்ச பாண்டவர்கள் – ஐவர்மலை)

 

மான் சாந்தமானது புலியோ கொடூரமானது. புலி மானைத் தாக்க விரும்புகின்றது தன் உணவுக்காக வேண்டி…!

மானைக் கொன்று புசிக்க வேண்டும் என்ற உணர்வுகள் புலியிடமிருந்து வெளிவரப்படும் பொழுது சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய “வெப்பகாந்தம்…” அதைக் கவர்ந்து கொள்கிறது.

புலியின் உணர்வைக் கவர்ந்து கொண்ட பின்
1.மான் புலியைப் பார்த்த பின்… வெப்பகாந்தம் கவர்ந்த உணர்வை மான் நுகர்ந்தபின் அதற்கு அந்த வலிமை வருகின்றது.
2.அது தான் கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருக்ஷேத்திரப் போர் என்று சொல்வது.
3.மான் புலியைப் பார்த்து அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது உயிரிலே மோதப்பட்டு
4.அபாயக் குரல்களை… இந்த உணர்ச்சிகளை எழுப்புகின்றது…
5.கண்ணன் சங்கநாதம் ஊதுகின்றான்… குருக்ஷேத்திரப் போர் அங்கே நடக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் புலியின் உணர்வுகளை அது எடுத்துக் கொண்டு வரும் பொழுது… “அர்ஜுனன் – வலிமைக்க சக்தி…!”

எதைக் கவர்ந்து கொண்டதோ அந்தச் சத்தை இதில் உள்ள விஷம் “அந்த உணர்ச்சியின் வேகத்தை ஊட்டும் – நகுலன்…!”

மான் நுகர்ந்து கொண்ட பின் உயிரிலே குருக்ஷேத்திரப் போராகிறது… ஆனால் அதே சமயத்தில்… எதையுமே குறிவைத்துத் தாக்கும் வல்லமை பெற்றவன் அர்ஜுனன் என்ற நிலையில் “புலியின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி… இரத்தத்தின் வழி சென்று அந்த வலிமையை உடல் முழுவதும் பரவச் செய்கின்றது – அர்ஜுனன்…”

இந்த உடலுக்குள் இந்த உணர்வின் தன்மை ஊடுருவி… குறி வைத்துத் தாக்கப்படும் போது… நகுலன்.
1.அதனுடைய இயக்க உணர்வின் தன்மை மானை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.இந்த வலிமையை ஒன்று சேர்த்து விடுகின்றது… அதாவது அதற்குள் விரிவடையச் செய்கின்றது.

அதனுடன் சேர்த்துக் கொண்ட பின்… இரண்டறக் கலந்து விட்டால் (மானின் உணர்வும் புலியின் உணர்வும்) – “சகாதேவன்…” என்றும் அதனுடன் சேர்த்து வலிமையாகி விட்டால் – “பீமன்…” என்றும் காட்டப்படுகிறது.

மானின் உடலுக்குள் புலியின் உணர்வுகள் வலிமை பெற்றால் அப்போது பீமன் என்ற நிலை வருகிறது. பீமன் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கித் தனது நிலைக்கே அடிமையாக்கி விடுகின்றான் என்று காவியத் தொகுப்புகள் காட்டுகிறது.

புலி தன் பசிக்காக அந்த மானை அடித்து உட்கொண்ட பின் மானின் உயிரான்மா வெளி வருகிறது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்…!

எப்படி…?

கண்கள் தான் உற்று நோக்குகிறது…
1.புலியோ மானின் உடலை இரையாக்குகின்றது
2.புலி மானின் உடலை இரையாக்குவதற்கு முன் “புலியின் உணர்வின் உணர்ச்சிகளை…”
3.மானின் கண்கள் தனக்குள் புலியின் உணர்வுகளை இரையாக்கி விடுகின்றது.

இரையின் உணர்வு செயலாகும் போது… எதன் வலிமை பெற்றதோ அதன் நிலை கொண்டு உருவாகிடும் தன்மை பெறுகின்றது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாக செல்கின்றான்.

அந்த வலிமைக்குத்தக்க சாரதியாகச் சென்று எந்தப் புலியைக் கூர்மையாக உற்றுப் பார்த்ததோ அந்தக் கூர்மைக்குத்தக்க வலிமை கூடி
1.அங்கே இதிலே சேர்ந்த காந்தப்புலன் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில்
2.செல்ஃபோன்களில் நாம் பதிவாக்கி விட்டால்… அதை இயக்கப்படும் பொழுது அது எப்படித் திரும்ப இயங்குகின்றதோ
3.ஒரு செடியில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது எப்படி விளைகின்றதோ
4.அதைப் போன்று எந்தப் புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் சென்றதோ
5.மானின் உயிரான்மா வெளிவந்த பின் புலியின் ஈர்ப்புக்குள் சூட்சமமாக வந்து விடுகின்றது.

புலியோ உடலுடன் இருக்கின்றது… அதைக் (மானின் ஆன்மாவை) கவர்ந்து விடுகின்றது. அதனுடைய கண்கள் இந்த மானை எப்படிப் பார்த்ததோ அதன் உணர்வு கொண்டு அதைக் கவர்ந்து விடுகின்றது.

புலியின் ஈர்ப்புக்குள் சென்று… புலியின் வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! என்று கண்ணன் உபதேசிக்கின்றார்.

பரிணாம வளர்ச்சிக்குக் கண் தான் பெரும்பகுதி வழிகாட்டுகிறது. ஆகவே… நமது வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தில்
1.நாம் நுகரும் தன்னைக் காட்டிலும் வலிமையான உணர்வுகள்
2.நம்மை எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மாற்றியது என்று தான் தெளிவாகக் கூறப்படுகின்றது நமது சாஸ்திரங்கள்.

இப்படி மானின் ஆன்மா புலியின் உடலுக்குள் சென்ற பின் அதனுடைய குட்டியாக உருவாகிவிடுகிறது. “குட்டியாக ஈன்ற பின் – தர்மன்…!”

மானின் உடல் முதலில் புலிக்கு இரையாக்கப்பட்டது. இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் குட்டியான பின் தன் நிலை (புலி) ஆன பின் தர்மன்… “எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு சமாதானப்படுத்துவான்…”

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில்
1.ஒவ்வொரு உணர்வுகளும் உணர்ச்சிகளும் எதன் எதன் வழியில்…
2.எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தான் சாஸ்திர விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

உலகத்திலுள்ள “பொருள் என்ற பொக்கிஷத்தை…” நாடி நாம் செல்லக்கூடாது

உலகத்திலுள்ள “பொருள் என்ற பொக்கிஷத்தை…” நாடி நாம் செல்லக்கூடாது

 

இந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்… அகழிகளிலும்… சுரங்கப் பாதைகளிலும்…. மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்… பீடங்களுக்குள்ளும்… பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அப்படி வைத்தவர்கள்…
1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்
2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்
3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.

நம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.

ஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன…?

1.பிம்பப் பொருளை அடைந்தால்
2.நாம் பெற வேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்…
3.மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து..
4.இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும்.

“நல்ல நிலை அடையும் வழி இல்லை…!”

இந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வக் கனி வளங்கள்… படிவக் குவியல்கள்… எங்கெங்கு உள்ளன…? என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.

அதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி…
1.எப்பொருளை அடைய வேண்டும்…? என்ற
2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.

சித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு
1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற
2.பலவாக உள்ள உலகத்தில் – ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.

ஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சூரியன் இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் உருவாக்கினாலும் இந்தப் பேரண்டத்தில் வந்த உணர்வின் துணை கொண்டுதான் ஒரு பிரபஞ்சமாக உருவாகின்றது.

பிரபஞ்சத்தில் உருவானதை ஒரு உயிரணு நுகர்ந்து உணர்வின் எண்ணங்கள் கொண்டு இயக்கும் தன்மை வந்து அதன் வழி கொண்டு மனிதனாக உருவாகின்றது.
1.மனிதனான பின் அகண்ட அண்டத்தில் பரவிக் கிடந்த உணர்வை நுகர்ந்தவர்கள் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
2.அவர்கள் அகண்டு சென்று எந்த அண்டத்திலிருந்து நுகர்ந்ததனரோ அதன் வழி வழி தொடர்ந்து
3.என்றும் அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலையாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தச் சூரியன் அழியலாம். ஆனால் மனித உயிர் இந்த உணர்வின் தன்மையைப் பெற்று விட்டால் என்றும் அழியா நிலைகள் பெறும் தகுதியைப் பெறுகின்றது.

அந்த நிலை பெறுவதற்காகத் தான் ஞானிகள் அனைவரும் சென்றார்கள்.

ஆகவே…
1.இந்த மனித வாழ்க்கையில் பல இன்னல்கள் எப்படிச் சேருகின்றது…?
2.நுகர்ந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது…?
3.இதிலிருந்து நீ விடுபடும் மார்க்கங்கள் என்ன…? என்று எம்மிடம் குருநாதர் வினா எழுப்பினார்.

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீ ஏங்கு. அதன் வலிமையை உனக்குள் சேர்த்துக் கொள். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உனக்குள் வளர்த்து அனைவரும் பெற வேண்டும் என்ற உணர்வை நீ செலுத்து.
1.அவர்கள் வளர நீ அதைக் கண்டு மகிழ்ச்சி பெறு… அதன் நிலைகளே உனக்குள் வளரும்.
2.அதை நீ பெறுவாய்… அனைவரையும் பெறச் செய்வாய் என்று குரு அருளை
3.எமக்குள் பாய்ச்சிய நிலைகளைத் தான் உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றேன்.

இன்றைய செயல் நாளைய சரீரம். இன்று எந்த உணர்வை நாம் சேர்க்கின்றோமோ அடுத்து ஒளிச் சரீரம் பெறலாம்.

அதே சமயத்தில் இன்று வேதனை என்றால் வேதனையை உருவாக்கி அதைக் கொண்டு வேதனையை உணவாக உட்கொள்ளும் அந்தச் சரீரத்தைப் பெறலாம்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு இன்று அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்ப்போம். நாளை ஒளியின் சரீரம் பெறுவோம்.

இந்த உடல் நமக்குச் சதமல்ல. ஆனால், இந்த உடலின் துணை கொண்டு தான் நாம் சப்தரிஷி மண்டலம் செல்ல முடியும்.

எனவே இந்த உடலில் இருக்கும் பொழுதே நம் நினைவின் ஆற்றலை மகரிஷிகளின் பால் செலுத்தி அதன் வலிமையை நமக்குள் வளர்ப்போம். தீமைகள் நம்மை நாடாது தடுத்துக் கொள்வோம். மெய் ஞானிகளுடன் ஒன்றுவோம்.
உலகத்திலுள்ள “பொருள் என்ற பொக்கிஷத்தை…” நாடி நாம் செல்லக்கூடாது

இந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்… அகழிகளிலும்… சுரங்கப் பாதைகளிலும்…. மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்… பீடங்களுக்குள்ளும்… பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அப்படி வைத்தவர்கள்…
1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்
2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்
3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.

நம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.

ஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன…?

1.பிம்பப் பொருளை அடைந்தால்
2.நாம் பெற வேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்…
3.மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து..
4.இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும்.

“நல்ல நிலை அடையும் வழி இல்லை…!”

இந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வக் கனி வளங்கள்… படிவக் குவியல்கள்… எங்கெங்கு உள்ளன…? என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.

அதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி…
1.எப்பொருளை அடைய வேண்டும்…? என்ற
2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.

சித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு
1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற
2.பலவாக உள்ள உலகத்தில் – ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.

ஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.

“இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் உடல் இச்சைகளுக்காகத் தியானித்தால் நமக்கு வளர்ச்சி இருக்காது

“இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் உடல் இச்சைகளுக்காகத் தியானித்தால் நமக்கு வளர்ச்சி இருக்காது

 

எனக்கு இடைஞ்சல் செய்கின்றான் பாவி…! இப்படிச் செய்தால் அவனெல்லாம் உருப்படுவானா…? என்று நமக்கு ஆகாதவனைப் பற்றி நாம் பேசுகின்றோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் அந்த உணர்வின் தன்மையையே எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால் இடைஞ்சல் செய்தவனின் எண்ணமே நமக்குள் தோன்றுகின்றது. அதன் அணுக்களே நமக்குள் பெருகுகின்றது.

பின் அதற்கப்புறம் ஒன்றும் சொல்ல வேண்டாம். உடலில் அது நோயாக மாறி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி பகைமையை உருவாக்கும் அணுக்களாக விளைய வைத்த பின் உடலை விட்டுச் சென்ற பின் எங்கே போவோம்…?
1.அவர் முன்னாடி இறந்தார் என்றால் அவர் ஆன்மா இங்கே வந்து விடும்.
2.நாம் முதலில் இறந்தால் அவருக்குள் செல்வோம்.
3.இதே உணர்வை அந்த உடலிலும் விளைய வைத்து அந்த உடலையும் வீழ்த்தும்.

அவர்களும் அதேபோல தன் நினைவு கொண்டு மற்றவர்களை எண்ணுவார்கள். அந்த ஆன்மா வேறொரு உடலுக்குள் போகும்.

ஆனால் இந்த உடலை விட்டு வெளி வந்த ஆன்மாவோ நஞ்சு கலந்த உணர்வின் அணுக்கள் எதுவோ இந்த உயிருடன் ஒன்றிய கருவின் ஆன்மாவாக மாறுகின்றது.

அடுத்து உயிராத்மாவில் சேர்ந்த மணம் எதுவோ தேளோ பாம்போ விஷமான ஜெந்துக்களோ அத்தகைய உடலுக்குள் தான் போவோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

புழுவிலிருந்து பாம்பாக தேளாக மற்ற எத்தனையோ விஷ ஜந்துகளாகப் படிப்படியாக உருவாகித் தான் இன்று நாம் மனிதனானோம்.
1.மனிதனான பின் மீண்டும் விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டுமா…?
2.சற்று சிந்தியுங்கள்.

ஆகவே உடல் இச்சைகளுக்கு எண்ணி “இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் வந்தால் மீண்டும் சாதாரண வாழ்க்கையில் இருப்பது போன்று அந்த உணர்வுகளை வளர்த்துக் கீழே தான் போவோம்.

1.பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் மக்கள் மத்தியில் வந்து
2.தோல்வியைக் கண்டு வெறுப்படைந்துதான்
3.இத்தகைய (மனித) ஆன்மாக்களின் மீது பற்று இருந்தால் நம்மையும் இது இழுத்துக் கொண்டு போய்விடும் என்று
4.அவ்வாறு விலகிச் சென்ற ஞானிகள் ஏராளம்.

தீமையை அகற்றிடும் உணர்வை விளையச் செய்து அனைவரையும் ஞானியாக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் அந்த ஞானிகளுக்கு வரப்படும் போது தான் தகுந்த உபாயத்தைக் கொடுக்கின்றனர்.

அவருக்குள் உருபெற்ற இந்த நிலையை அவர் வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வை நுகர்வோருக்கெல்லாம் அது கிடைக்கின்றது. ஆனாலும் உடல் இச்சையுடன் இந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்தால் அது எங்கே கொண்டு செல்கின்றது…?

1.உடல் மீது பற்றின் தன்மை வரப்படும் போது விண்ணின் ஆற்றலை மறக்கச் செய்கின்றது.
2.பின் நாம் எங்கே போகின்றோம்…? கீழே தான் போகின்றோம்…!
3.அப்பறம் தியானத்திற்கு வந்தால் என்ன ஆகும்….?

சிலர் நீங்கள் தியானத்தில் என்ன பார்த்தீர்கள்…? என்ன பார்த்தீர்கள்…! என்று இப்படித் தான் மற்றவர்களைக் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

சாமி (ஞானகுரு) சொன்ன வழியில்தான் இவர் நடக்கிறார்.
1.அப்படி இருந்தும் இப்படித்தான் நடக்கின்றது… ஒன்றும் நல்லதாகவில்லை…! என்று இலேசாகத் தூண்டி விட்டால் போதும்…!
2.ஆமாம்…! என்று தலையாட்டி விட்டு… தான் பெற்றுக் கொண்டிருக்கும் நல்லதைக் கெடுக்கத்தான் உதவும்.
3.ஆக அவரும் பெற முடியாது… இவரும் பெற முடியாது…!

ஏனென்றால் நான் (ஞானகுரு) இவர்களிடமிருந்து ஏதோ சக்தி பெறுவதாகத் தான் அர்த்தமாகின்றது.

எல்லோரும் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்ற என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான் எனக்குள் அது உருபெருகின்றது. அந்த ஆசையைத் தான் நான் பெறுகின்றேன்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உபதேசத்தைத் தான் கொடுக்க முடியும்.

ஞானத்தின் தன்மை விளைந்த அந்த வித்தின் உணர்வுகள் சொல்லாக வரப்படும் போது சீதா. சூரியன் எடுத்து கொண்டால் உணர்வின் அலைகளாகப் படர்கின்றது.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுக்க எடுக்க அந்த உணர்வலைகள் உங்களுக்குள் சென்று
1.உங்களுக்குள்ளும் அருள் ஞானம் பெருகும்…
2.மெய் வழியில் செல்ல முடியும். பேரானந்த நிலை பெற முடியும்.

அதிக வெயில்… அதிக மழை… அதிகக் குளிர்… ஏன் இந்த மாற்றங்கள்…?

அதிக வெயில்… அதிக மழை… அதிகக் குளிர்… ஏன் இந்த மாற்றங்கள்…?

 

ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால் கதையாகப் படைக்கப்பட்டு உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால் “அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வடதிசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல்புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனல் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது… அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்துவிட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்..?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால் வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”

எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே.

கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் உலக மாற்றங்கள்…

கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் உலக மாற்றங்கள்…

 

உதாரணமாக 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய உணர்வலைகள் சூரியனுக்குச் செல்லும் பாதையில் துருவத்தின் வழி நம் பூமிக்குள் கவரப்பட்டால் நம் பூமியின் காற்றழுத்த மண்டலத்தில் மோதிய பின் அந்த உணர்வுகள் எரிக்கப்பட்டு அது பரவப்பட்டு மின்னலாக மாறுகிறது.

1.கடலிலே பட்டால் மணலாக மாறுகின்றது…
2.மரத்தில் பட்டால் மரம் கருகி விடுகின்றது.
3.அந்த மின்கதிர்களின் உணர்வுகள் பூமிக்கு அடியிலே சென்றால் நடு மையத்தில் கொதிகலனாக மாறுகின்றது.
4.இதிலே வந்த துகள்கள் அனைத்தும் பூமியிலே படர்ந்து விடுகின்றது.

ஆனால் இதற்கு எதிர்நிலையான நட்சத்திரங்களின் துகள்கள் நம் பூமியின் ஈர்ப்பிற்குள் வந்தால் அதனுடைய அழுத்தம் அதிகமானால் இந்த உணர்வலைகள் படர்ந்து இருக்கும் பொழுது இது இரண்டும் ஒன்றுக்கொன்று மோதும் போது சூறாவளியும் சுழிக்காற்றுகளும் உருவாகின்றது. இது இயற்கை…!

ஆனால் மின்னல்கள் கடலில் பட்டு மணலாக மாறியதை விஞ்ஞான அறிவு கொண்டு பிரித்து எடுத்து அதை யுரேனியமாக உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை வைத்து அணு உலைகளையும் விஷமான ஆயுதங்களையும் செய்து வைத்துள்ளார்கள்.
1.அதிலிருந்து வெளிப்பட்ட கசிவுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.
2.எங்கெங்கு இது அதிகமாகச் செயல்படுத்தினார்களோ அந்த நாட்டில் உள்ள காற்று மண்டலத்தில் இது அதிகமாகப் படர்ந்து கிடக்கின்றது.

ஆனால் இயற்கையாக நட்சத்திரங்களுடைய உணர்வலைகள் அழுத்தங்கள் வரும் சமயம்… அதனுடன் மனிதன் செயற்கையாக உருவாக்கி வெளிப்படுத்திய அணுக்கதிரியக்கங்கள் மோதும் பொழுது
1.மிக மிகக் கடுமையான சூறாவளியாக
2.எல்லாவற்றையும் துரித கதியில் அழிக்கும் நிலையாக வந்து விடுகிறது
3.(வெயிலோ மழையோ காற்றோ பனியோ எதுவாக இருந்தாலும் அது வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டே போகும்)
4.விஞ்ஞான அறிவால் செயல்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் இத்தகைய தீமைகள் படர்ந்து கொண்டே உள்ளது (TORNADO, CLOUDBURST, BOMB CYCLONE…)

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்கே தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன்… அவன் உடலில் விளைந்த உணர்வுகள் பூமியிலே படர்ந்து கொண்டு தான் உள்ளது.

1.தென்னாட்டின் எல்லையில் அவனுடைய உணர்வுகள் அதிகமாக இருப்பதால்
2.அதை நாம் எளிதில் பெற்று அகஸ்தியனைப் போன்ற அருள் ஞானிகளாக உருவாகி
3.விஷத்தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகை
4.அந்த விஷத்தை நீக்கிடும் ஆற்றலை நாம் பெற வேண்டும்.

எத்தகைய விஷத்தையும் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் செலுத்தி அதை வலுவாக்கி அதன் உணர்வைப் பூமியில் பரப்ப வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை அடர்த்தியாக பூமியில் நாம் படரச் செய்யும் போது விஞ்ஞான அறிவால் உருவான விஷத்தன்மைகளை அகற்றி… இங்கே வாழும் மக்களை நாம் தெளிவாக்க முடியும்.

இதைப் படிப்போர் “அந்தத் தன்னம்பிக்கையுடன் செயல்படுத்துங்கள்…” அதே சமயத்தில் “அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்… உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்…!”

மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஏன் சொல்கிறோம்…?

மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஏன் சொல்கிறோம்…?

 

ஓர் மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல்… குணமும்… உடல் உறுப்பும்… உருவமும்… எல்லாமே இருந்திடும்.
1.அதை எல்லாம் எந்த ஒரு தனி மனிதனுக்கும்
2.ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை…! (இது முக்கியம்)

எல்லாமும் ஒன்றாக… ஒன்றிலே எல்லாமும் உள்ள பொழுது.. எதன் அடிப்படைச் சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ… அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு… அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.

ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின் வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் அந்த மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப ஆவிகளின் (பிற ஆன்மாக்கள்) தொடர்பும் ஏற்படுகின்றது.

மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அந்த இயந்திரம் எடுத்து ஓடுகிறது.

அதைப் போல்…
1.எதன் அடிப்படையில்… எதன் விகித நிலைக்கொப்ப..
2.ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணச் சுவாசமும் உள்ளதோ..
3.அதன் சக்தி நிலையைத்தான் அவன் பெற முடியும்.

அதன் செயலில் தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி பல கோவில் ஸ்தலங்களுக்குச் சென்று ஆண்டவனை வணங்கி வந்து “பூஜித்துச் சக்தி பெறுவதல்ல…!”

எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இந்தக் காற்றின் அமிலத்திலிருந்து “நமக்குகந்த அமிலத்தை நாமாக எடுத்துக் கொள்ளலாம்…”

இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும் இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில் நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த மகரிஷிகளின் பால் நம் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

அப்படி மகரிஷிகள் பால் தொடர்பு கொண்டு எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்… இந்த உடலுடன் மனித உலக வாழ்க்கையில் வாழும் நாம்
1.பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும் இந்த வாழ்க்கையிலிருந்து பெற முடியாத “ஞானத்தை”
2.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை மகரிஷிகள்பால் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
4.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும் வழி முறைப் பாதையை அறிந்து கொள்ளலாம்.
5.அந்தப் பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய வழியில் எந்தத் தடங்கலும் இருக்காது.

பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி… “ஓ…ம்” என்ற ஒலியுடன் மகரிஷிகள் பால் நம் எண்ண ஈர்ப்புச் சக்தியை நாம் தந்தோமானால் மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்.

ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.

ஞானிகளும் சப்தரிஷிகளும் நம் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்காவிட்டால் நம் பூமியில் மனித ஞானம் இன்று “ஞானமும் கண்டிருக்காது… விஞ்ஞானமும் கண்டிருக்காது…!”
1.இன்றைய காலகட்டத்தில் நம் மகரிஷிகளின் ஒளி சக்திகள்
2.இந்த உலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் மனித ஞானம் எல்லாமே ஞானத்தின் பால் செல்லும் வழிமுறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தன் வலுவான விந்தை காணத் துடிக்கிறது.

மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுகள் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு… மோதி… உயிர்ப்பலிகள் அதிகமாகி…
1.ஆவியின் சூழ்ச்சியில்.. அல்லலுக்கந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் மனிதன் என்பதை
2.அறியாமல் தான் இன்றைய மனிதர்கள் வாழ்கின்றனர்…!

தானதாக உள்ளது எது…? என்பதும் இம் மனித ஞானத்திற்குப் புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை… “தனியாக” யாருமே எங்கேயுமே வாழ முடியாது.

காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுள் உள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து… வாழும் மனிதன்…
1.தானாக வாழ்கின்றானா..? அந்தத் “தனது” என்ற பேராசைக்கார மனிதன்…?
2.ஒன்றின் துணையில்லாமல்…
3.ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்
4.”நான்…” என்ற நானாக… வாழ்கின்றானாம்..!

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

மக்கள் மகிழ வேண்டும்…! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே சிவபதம் முதலிய எப்பதமும் காணலாம்

மக்கள் மகிழ வேண்டும்…! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே சிவபதம் முதலிய எப்பதமும் காணலாம்

 

சக்தியின் நிலை பலவற்றில் கலந்திருந்தாலும் அதன் “கூட்டு நிலை…” கொண்டு தான் ஒவ்வொன்றின் பிரகாசமும் ஜொலிக்கின்றது.

தனித்த பூக்களாக இருந்தாலும் அதை எல்லாம் ஒன்றாகக் கோர்த்து ஆரம் கட்டித்தான் ஆண்டவனுக்குச் சூட்டி மகிழ்கின்றோம்.
1.ஒன்றாக உள்ளதைப் பலவாகத் தருவதே இயற்கை…!
2.தாவர வளர்ச்சியின் நிலையிருந்துதான் முன்னோடி நிலை பெறுகின்றது.

தானாக வளரும் தாவரங்களும் சரி… நாமாகப் பயிர் செய்யும் தாவரங்களும் சரி… ஆரம்ப வளர்ச்சியில் அதற்கு வேண்டிய சக்தியை ஈர்த்துத் தன் சேமிப்புச் சக்தியின் பலன்களைத் தருகின்றன.

1.பூவும் காயும் கனியும் சில தாவரங்கள் தருகின்றன.
2.பூவும் கனியும் அளிக்காத புல் பூண்டு இன வர்க்கங்கள் அதன் அமில குணங்கள் முற்றிய பிறகு
3.வேர்களின் அதனின் சக்தி குணத்தை அதிகப்படுத்திக் கனம் கொண்டு தான் சேமித்து
4.வளர்ச்சி நிலையை வளரந்த பிறகு வெளிப்படுத்துகின்றது.

“வளர்ச்சியின் முற்றலை…” ஒவ்வொரு தாவர இன வர்க்கமும் வெளிப்படுத்திய பிறகு தான் அதனின் உயிர் ஜீவ சக்தி மாறுபடுகிறது.

அதன் மாற்றத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவ ஆத்மாக்களுக்கு ஆரம்ப காலத்திலேயே ஒன்றாகப் பல அமில குணத்தை ஈர்க்கும் நிலை பெற்றதனால் மனிதனும் மிருகமும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இன வர்க்கங்களும் தம் உடல் அவய அமைப்பில் பல நிலைக்கேற்ப அங்க அவயங்கள் ஒரே தன்மையில் ஈர்த்து வளரும் நிலை கொண்ட இன குணங்களுடைய ஜீவராசிகளாக வளர்ந்திருக்கின்றோம்.

தாவரங்கள் சக்தியை ஈர்த்துப் பிறகு பலன் தருகிறது. தாவரங்களுக்கு உண்டு கழிக்கும் நிலை இல்லை.

பலவும் ஒன்றாக ஈர்த்துப் பல அவயங்களை ஒன்றுபடுத்தி உருவ அமைப்பு கொண்ட ஜீவன்களுக்கு உண்டு கழித்து வாழும் அவயங்கள் எப்படி அளிக்கப்பட்டன…?

அளிக்கப்பட்டன…! என்பதைக் காட்டிலும் வளர்ச்சியில் முன்னேற்றம் கொண்ட ஜீவ ஜெந்துக்கள் தன் வளர்ச்சியில் உண்டு கழித்துப் பல கோடி உயிரணுக்களை வளர்த்து வாழும் நிலையில்… “பயன் பெறும் பக்குவ நிலை பெறுவது தான்…!” அது.

அதாவது…
1.தன் அவயங்களில் உள்ள பல கோடி அணுக்களை வளர்த்து
2.ஒன்றாக அதைக் கூட்டிப் பேணிக் காக்கும் ஓர் உயிரணுவின் தெய்வ சக்தியில்
3.உயிர் சக்தியான மனித உயிரணுவின் ஞானத்தின் வளர்ச்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டு
4.ஞான வளர்ச்சிக்கு உகந்த தன்மையில் ஒவ்வொரு உயிரணுவும்
5.இதன் தொடருடன் ஐக்கியப்படும் வளர்ச்சி நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான் மனித ஜீவன் பெறும் பலன்.
6.ஆக ஜீவனாக உள்ள ஜீவனின் பலன்… இந்த ஞானம் பெறும் வழி ஞானம் தான்.

பலனற்ற நிலை பெறாத ஜீவ ஞானம் தான் அதனின் தொடரில் ஏற்படும் “மாற்று நிலைகளுக்குச் செயல்படச் சென்றுவிடுகிறது…”

மனிதனின் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் அதனதன் வளர்ச்சியில் வளர்ந்து கொண்டு இருந்தால் தான் அவயங்களில் உள்ள அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமான நிலையில் வளர்ந்து வாழ முடிகின்றது.

அணுக்களுக்கு உகந்த உணவை அதற்குகந்த ஈர்ப்பில் பெற்று வளர்ந்து வாழ்கின்றது.
1.எண்ணத்தின் நிலையை மாற்றிக் கொண்டு செயல்புரியும் நிலை பெற்று விட்டால்
2.ஈர்க்கும் குண நிலையும் அதன் வழித் தொடர் கொண்ட எந்தச் செயல் முறையும் தடைப்படத்தான் செய்யும்.

பலவாக உள்ள பூவை ஒன்றாக்கி ஆரம் கட்டி அதன் அழகை ஆண்டவனுக்கு அணிவித்து இன்பம் காணுவது போல்
1.நம் உடலில் பலவாக உள்ள அணுக்களை ஒன்றாக ஆரம் கட்டி
2.உயிராத்ம ஆண்டவனுக்கு ஞானம் சூட்டி… அழகாக்கி…
3.மனிதன் மகிழ வேண்டும்…! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே
4.சிவபதம் முதலிய எப்பதமும் காணலாமப்பா…!