நன்மைகளைச் செய்யும் மன வலிமையும் நன்மைகளைப் பெற வேண்டிய பக்குவ முறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்

Image

நன்மைகளைச் செய்யும் மன வலிமையையும் நன்மைகளைப் பெற வேண்டிய பக்குவ முறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் – உதவி செய்வதும் உதவி பெறுவதும் எப்படி?

 

நாம் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். நாமும் உதவி செய்கிறோம்.

 

உதவி எப்படிச் செய்ய வேண்டும்? உதவி நாம் எப்படிப் பெற வேண்டும்? உதவி செய்த பின்… உதவி செய்தவரும் உதவி பெற்றவரும் எப்படி மகிழ்ச்சி அடைவது? என்பதை நாம் அதிகமாகச் சிந்திப்பதில்லை.

 

அது எந்த வகையான உதவி செய்தாலும் கூட கடைசியில் எத்தனையோ பேர்களுக்கு நான் உதவி செய்தேன் ஆனால்

1.அவர்கள் என்னை மதிக்கவில்லை

2.ஆண்டவன் என்னை ஏனோ சோதிக்கின்றான்

3.நல்லதுக்குக் காலம் இல்லை இந்த உலகம் சரியில்லை

4.நல்லது செய்து எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று

பின்னாட்களில் இந்தச் சோக கீதம் பாடத் தொடங்கிவிடுவார்கள்.

 

அதே போல் உதவி பெறுபவர்களோ எவ்வளவு உதவிகளைப் பெற்றாலும்

1.”என் தலைவிதி இப்படி…” என்று இருக்கிறது அதற்கு நான் என்ன செய்வது?

2.எனக்கு உதவி செய்தவர்கள் என்னத்தைப் பெரிதாக அப்படிச் செய்துவிட்டார்கள்…!

3.எவ்வளவோ வைத்திருக்கிறார்கள் கேட்டால் ஒன்றும் இல்லை என்கிறார்கள்

4.போகும் பொழுது எல்லாவற்றையும் கொண்டு செல்லப் போகின்றார்களா…? என்று

உதவி செய்தவர்களைப் பழிக்கும் நிலையில் தான் அவர்கள் செயல் இருக்கின்றது.

 

ஆக மொத்தம் சொந்தத்திலே வியாபாரத்திலோ பக்கத்து வீட்டுகளிலோ வேலை பார்க்கும் இடங்களிலிலோ இதைப் போன்ற நிலைகள் ஏற்பட்டு அதனால் மன நிம்மதி இல்லாத நிலை ஏற்படுகிறது.

 

ஒருவருக்கு உதவி செய்து மற்றவருக்குச் செய்யவில்லை என்றால் பெரிய கௌரவச் சிக்கலாகக் கூட வந்துவிடுகின்றது. உடனே பகைமையாக்கி விடுவார்கள்.

 

பணம் வசதி உடல் நலம் எல்லாம் இருந்தாலும் மனதில் அமைதி இருப்பதில்லை. ஒரே போராட்டமாகத்தான் இருக்கும்.

 

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் ஒரே வழி தான்.

 

ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி மகரிஷிகளின் அருள் சக்திகளை வலுவாகச் சேர்த்துக் கொண்டு உதவி செய்பவர்கள் பணமோ பொருளோ ஒரு சேவையோ எதைச் செய்தாலும்

1.உதவி பெறுபவருக்கு அதைக் கொடுக்கும் பொழுது

2.நம்மைக் காட்டிலும் அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்

3.தொழிலில் உயர்ந்த நிலை அடைய வேண்டும்

4.குடும்பத்தில் மிக உயர்ந்த நிலை அடைய வேண்டும்

5.அவர்கள் செயலெல்லாம் உலகமே போற்றும் வண்ணம் வர வேண்டும்

6.உலகுக்கே எடுத்துக்காட்டாக உயர்ந்த ஞானியாக வேண்டும் என்ற எண்ணைத்துடன்

உதவி செய்ய வேண்டும்.

 

இந்த உயர்ந்த உணர்வுகளைச் சொல்லி அழுத்தமாகக் கொடுக்க வேண்டும். அவர்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் தரித்திரங்களையும் குறைகளையும் நோய்களையும் நமக்குள் பதிவாக்கக் கூடாது. அதைப் பற்றி அறிய முற்படக் கூடாது.

 

அவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்ற இந்த உணர்வு தான் நமக்குள் எஞ்சி இருக்க வேண்டும்.

 

இந்த உணர்வு இந்த மணம் இந்த அலைகள் நம் ஆன்மாவில் அதிகரித்துவிட்டால் சாதாரண நிலையில் எவரும் உங்களிடம் கெட்ட எண்ணத்தில் உதவிக்கு வர மாட்டார்கள்.

 

உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்பவர்கள் மட்டும் தான் அணுகி வர முடியும். செய்து பாருங்கள்.

 

உதவி பெறுபவர்கள் அதே மாதிரி ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால்

1.என்னை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் இருள்களிலிருந்து விடுபவேண்டும்

2.உதவி செய்தவர் எந்த உயர்ந்த உணர்வுடன் செய்தாரோ அந்த உயர்ந்த நிலை என்னிலே வளர வேண்டும்

3.அவரைப் போன்று நானும் பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு உயர்ந்த நிலை பெறவேண்டும்

4.நான் படும் இந்தத் துயரங்களோ துன்பங்களோ நோய்களோ வேதனைகளோ வேறு யாருக்கும் வரக் கூடாது

5.எல்லோரையும் இன்புற்று மகிழ்ந்து வாழச் செய்யும் அந்தப் பேராற்றல்கள் என்னிலே வளர வேண்டும் என்று

6.இப்படி எண்ணினால் எதனால் நமக்குத் தொல்லைகள் வந்தது என்று அறியும் ஞானம் வரும்.

 

மேலும் இதை மாற்றி உயர்ந்த நிலை பெற என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும் என்ற யுக்திகளும் உபாயங்களும் வழி முறைகளும் தோன்றும்.

 

அதன்படி ஒவ்வொன்றாகச் செய்யச் செய்ய மனதில் உற்சாகம் வரும். துன்பங்களும் துயரங்களும் மறையும். நம் நினைவுக்கு அது வராது.

 

தன்னம்பிக்கை பெருகும். அமைதியும் மகிழ்ச்சியும் தன்னாலே பெருகும். தொழில் சீராகும். உடல் நோய்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை கிடைக்கும்.

 

மகிழ்ச்சி தன்னாலே வரும். அதற்குப் பின் கிடைத்த இந்த அனுபவத்தால் எல்லோருக்கும் உயர்ந்த நிலைகள் கிடைக்கக்கூடிய உதவியாக நாமும் செய்ய முடியும்.

 

மகரிஷிகள் உணர்த்திய நிலையில் அனுபவபூர்வமாகக் கண்டுனர்ந்த உண்மை இது.

கம்ப்யூட்டர் பிழைகளைத் திருத்துவது போல் உங்கள் இரத்தத்தில் சேரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றுங்கள் – “உங்களால் முடியும்”

Image

Super computer

கம்ப்யூட்டர் பிழைகளைத் திருத்துவது போல் உங்கள் இரத்தத்தில் சேரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றுங்கள் – “உங்களால் முடியும்”

 

 

விஞ்ஞானி விஞ்ஞான அறிவைக் கொண்டு ஒரு கம்ப்யூட்டரைத் தயார் செய்கின்றான். அதிலே எழுத்துக்களை அடிக்கும் பொழுது பிழைகள் வந்து விடுகின்றது.

 

அவன் அதைக் கண்டுணர்ந்து அந்தப் பிழைகள் வராமல் இருக்க அதற்குகந்த சக்தி வாய்ந்த நிலைகளைச் செயல்படுத்துகின்றான். பிழைகள் நீங்கிச் சீரான நிலையில் இயங்கச் செய்கின்றான்.

 

கம்ப்யூட்டர் அதிர்வின் தன்மை கொண்டு கெமிக்கல் கலந்த காந்தப் புலனை வைத்துக் கொண்டால் இந்த ஒலியின் அதிர்வுகளைக் காட்டப்படும் பொழுது அது எழுத்தோ படமோ சப்தமோ இயக்கிக் காட்டுகின்றது.

 

உதாரணமாக பேட்டரிக்குள் வைத்திருக்கும் பல பொருள்கள் எதிர் நிலையாகும் பொழுது வெளிச்சமாக வருகின்றது.

 

இதே போல கெமிக்கல் கலந்த உணர்வுகளின் அதிர்வுகளை எடுக்கப்படும் பொழுது இது உராய்ந்து அதற்குத் தக்க ஒளிக் கற்றைகளை வீசுகின்றது.

 

அதன் வழி கொண்டு மனித ரூபங்களையும் கம்ப்யூட்டரில் போட்டுக் காட்டுகின்றான் விஞ்ஞானி.

 

ஒரு மனிதனின் கை ரேகையை எடுத்து அந்த மனிதனின் உணர்வின் தன்மையைக் கம்ப்யூட்டரில் இந்த உணர்வின் அதிர்வுகளைப் பதிவாக்கி அதில் மீண்டும் அதிர்ச்சிகளைச் செயல்படுத்தும் பொழுது “இந்த மனிதன் தான்… என்று அவன் ரூபத்தையே…” காட்டுகின்றது.

 

இதே போல தான் நமது வாழ்க்கையில் பிறிதொருவரின் செயல்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது

1.அவன் மோசமானவன்…!

2.கோபக்காரன்… கெட்டவன்… தவறு செய்பவன்…. முரண்டு பிடிப்பவன்

3.பிறருக்குத் தீங்கு செய்பவன் என்று

4.இந்த உணர்வெல்லாம் கண் பதிவாக்குகின்றது

5.பின் நமது எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாற்றி விடுகின்றது.

 

நாம் பிறிதொருவரின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம் உயிரில் பட்டு இந்த உணர்வின் அதிர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது.

 

1.இரத்தங்களில் எதனின் உணர்வுகள் கலக்கின்றதோ

2.உடலிலுள்ள அணுக்களில் இது சிதறப்பட்டு

3.அந்தந்த உணர்வுக்கொப்ப ரூபங்களை மாற்றி அமைக்கின்றது.

 

இன்று மனிதனாக இருக்கின்றோம். மிருக குணங்களை கொண்ட உணர்ச்சிகளை நாம் அடிக்கடி நுகர்ந்து நம் இரத்த நாளங்களில் கலந்து விட்டால் இதன் உணர்ச்சியின் இயக்கங்கள்

1.நம் உடலில் உள்ள அணுக்களில் கலக்கப்பட்டு

2.அதற்குத்தக்கவாறு நம் உடல் உறுப்புகள் மாற்றமடைகின்றது.

3.உறுப்புகள் மாறும் பொழுது இதனின் மலங்கள் கொண்டு

4.நம் சிந்திக்கும் தன்மையும் மாறுகின்றது.

 

சகஜ வாழ்க்கையில் கோபப்படுவது வெறுப்படைவது வேதனைப்படுவது போன்ற உணர்ச்சிகளைத்தான் அடிக்கடி நம்மால் பார்க்க முடிகின்றது.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம் என்ன மாற்று வழி வைத்திருக்கின்றோம். சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கின்றது. நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.

 

மனிதன் ஒரு எந்திரத்தை உருவாக்கி அதில் பிழைகள் வந்து விட்டால் கம்ப்யூட்டரின் இயக்கத்தால் கண்டு பிடித்துச் சரி செய்து “சூப்பர்..” என்ற நிலையில் அதை மாற்றியமைத்து எந்திரத்தைச் சீராக்கி விடுகின்றான்.

 

வெறுப்படைபவர்கள் கோபப்படுவோர்கள் வேதனைபடுவோர்கள் வேதனைப்படுத்துவோர்கள் போன்ற பலரின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதை நுகர்கின்றோம்.

 

அந்தந்த உணர்வுகளுக்குத் தக்கவாறு இயக்கம் ஆகின்றது. உதாரணமாக

1.வேதனைப்படுவோரைப் பார்த்து அவர் மீது அன்பு கொண்டால்

2அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் செயல்படுகின்றோம்.

3.அவர் மீது அன்பு இல்லாதபடி வெறுப்பாக இருந்தால்

4.அவர் செய்த நிலைகளுக்கு அப்படி வேதனைப்பட்டுதான் ஆகவேண்டும் என்ற உணர்வு நமக்குள் வருகின்றது

 

வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தாலும் வெறுப்படைந்தால் அவர் மீது வெறுப்பின் நிலையே நமக்குள் அதிகமாக வந்து விடுகின்றது.

 

ஆனால் எப்படிப்பட்ட்ட உணர்வுகளை நுகர்ந்தாலும் அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் நம் உடலில் இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது.

 

இத்தகைய தீமையான இயக்கங்கள் நமக்குள் வளர்ந்திடாது மாற்றி அமைக்க வேண்டும். தீமையான இயங்களை மாற்றியமைக்கும் சக்தியாகத்தான் உங்களுக்குள் தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

 

உயிருடன் ஒன்றி இருளை மாய்த்து என்றும் ஒளியாக இருப்பது தான் அந்தத் துருவ நட்சத்திரம். அதற்கு “விஷ்ணு தனுசு” என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.

 

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில்

1.தீமையான நிலைகளைக் கண்டால்

2தீமைகளை நுகரக்கூடிய சந்தர்ப்பம் வந்தால்

3.அந்தத் தீமையின் உணர்ச்சிகள் நம் உடலில் வராதபடி

4.தீமையான உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்காதபடி

5.நம் உடலை உருவாக்கிய அணுக்கள் தீமைகளைப் பருகாதபடி

6.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு மாற்றி அமைத்தல் வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வப் பொழுது நமக்குள் ஏற்றி வைத்துக் கொண்டால் விஞ்ஞானிகள் “SUPER COMPUTER…” என்று செயல்படுத்துவது போல் நம்முடைய வாழ்க்கையில் தீமைகளை உடனுக்குடன் மாற்றியமைக்க முடியும்.

 

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தின் என்றுமே மகிழ்ந்து வாழ முடியும்.

வியாழன் கோளுக்குப் பெயர் “குரு” என்று சொல்கிறோம்? குரு என்று ஞானிகள் ஏன் சொன்னார்கள் என்று அறிந்திருக்கின்றோமா…!

Image

view-of-jupiter

வியாழன் கோளுக்குப் பெயர் “குரு” என்று சொல்கிறோம்? குரு என்று ஞானிகள் ஏன் சொன்னார்கள் என்று அறிந்திருக்கின்றோமா…!

 

 

இந்த பூமியே சீக்கிரம் அழியப் போகின்றது. ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞான உலகில் அணுக் கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவிவிட்டது.

 

அவைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து விட்டது. இந்தப் பூமியின் நடு விட்டத்திற்குள் அணுக்கதிரியக்கங்கள் ஊடுருவிப் போய்விட்டது.

 

அந்த அணுக் கதிரியக்கங்கள் சூரியனின் வெப்ப காந்தங்களுடன் கலந்தவுடனே

1.இந்த உணர்வுகள் அதில் இருக்கக்கூடிய காந்தமும்

2.பூமியில் இருக்கக்கூடிய காந்தமும்

3.ஒரு உலோகத்திற்குள் இருக்கக்கூடிய காந்தங்களுக்குள் மோதியவுடனே

4.புயல் அடித்த மாதிரி இரும்பே உருகுகின்றது.

5.அந்தக் கதிரியக்கங்கள் மீண்டும் அது வளர்ச்சி அடைகின்றது.

 

அது ஓங்கிய நிலைகள் கொண்டு சுழிக் காற்று போன்று எல்லாவற்றையும் பிளந்து அதனின் வீரிய சக்தி அடங்குகின்ற வரையிலும் இங்கிருக்கக்கூடிய செடி கொடி கல் மரம் கட்டிடங்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டுப் போய்க்கொண்டே இருக்கும்.

 

ஏனென்றால் இந்தப் பூமியில் இருக்கக்கூடிய இந்த அணுவின்
விஷத்தை எடுத்துப் பிளந்து (NUCLEAR REACTION) அது செய்து கொண்ட நிலை இது.

 

வேறு வேறு வேலைகளுக்குக் கரண்ட் உற்பத்தி செய்வதற்காக அதைச் செய்கிறோம் என்று விஞ்ஞானிகள் சொல்லலாம். ஆனாலும் இதனுடைய தணிந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

 

பூமிக்குள் அணுவைப் பிளந்தால் விபத்து என்று தெரிந்த பின் பூமியைக் கடந்து வான வீதியிலே இந்த அணுக்களைப் பரீசீலனை செய்து வெடிக்கச் செய்தார்கள்.

 

வான்வீதியிலும் இந்த அணுக்களுடைய தன்மை படர்ந்து விட்டது. மற்ற கோள்களுக்குள்ளும் சூரியனுக்குள்ளும் அது சென்று விட்டது.

 

அதே சமயத்தில் வான்வீதியில் படர்ந்த அந்த அலைகள் பூமியின் ஈர்ப்புக்குள் வந்து நமக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய திரையையும் (OZONE LAYER) பிளந்து மீண்டும் இந்த விஷத்தின் தன்மை பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் வந்து கொண்டு இருக்கின்றது.

 

இவை அனைத்தும் பூமியின் நடு விட்டம் அடைந்து விட்டது. வெப்பத்தின் தணல் கூடிவிட்டது. பனிப் பாறைகள் உருகத் தொடங்கிவிட்டது.

 

உருகிய நீர்கள் பூமியில் இருக்கக்கூடிய நிலத்தை ஒடுக்கச் செய்து கொண்டிருக்கின்றது. மீண்டும் மீண்டும் வெப்பத்தினால் பனிப்பாறைகள் கரைய அந்த நீரின் தன்மை அதிகமாகப் படரும் தன்மை வரப்போகும் போது சூரியனை விட்டு பூமி நகர்ந்து சென்று விடுகின்றது.

 

விலகிச் சென்று மீண்டும் இது குறைந்தவுடனே (பூமி) பனிப்பாறையாக உறைந்துவிடும். நம் உயிர் எல்லாம் அந்த பனிப் பாறைக்குள் சிக்கிவிடும்.

 

இன்று கோழி முட்டைகளை ஐஸ் பெட்டியில் வைத்துவிட்டு அடுத்துத் தேவைப்படும் பொழுது மிஷினில் சூடு செய்து குஞ்சு பொரிப்பார்கள்.

 

இதே மாதிரி முந்தி வியாழன் கோளில் நம் உயிர் எல்லாம் சிக்கப்பட்டு மீண்டும் அதிலிருந்து தெறிக்கப்பட்டு வான வீதிக்கு வந்து இந்தப் பூமிக்குள் வந்து தான் நாம் மனிதனாகப் பிறந்திருக்கின்றோம்.

 

அதனால் தான் வியாழன் கோளை… “குரு…” என்று சொல்வது.

 

அதிலே மனிதர்கள் வாழ்ந்து அதிலேயும் விஞ்ஞான வளர்ச்சியாகி இத்தகைய தவறு செய்து பயன்படுத்திய அந்த ஆயுதங்கள் இன்னும் இருக்கின்றது.

 

அதே உணர்வு வளரப்படும்போது அது வளர வளர இந்தப் பூமியும் குறையப் போகின்றது.

 

பூமியில் இங்கிருக்கும் விஞ்ஞானிகள் செய்து வைத்திருக்கின்ற ஆயுதங்களைக் காட்டிலும் பன் மடங்கு சக்தி வாய்ந்த நுட்பமான ஆயுதங்கள் எல்லாம் அங்கே வியாழன் கோளில் புதைந்து கிடகின்றது.

 

இதைக் குருநாதர் காட்டியிருக்கின்றார்.

 

வியாழன் முழுவதும் பனிப்பாறைகளாகி அதற்குள் சிக்கிய உயிர்கள் அதிலே வந்த அந்த ஒவ்வொரு உயிரணுவினுடைய தன்மையினுடைய நிலைகள்தான் மீண்டும் இது ஜீவன் பெற்றுப் பல நிலைகள் வந்தது.

 

வியாழன் கோளைப் பற்றியும் மற்றும் இருபத்தியேழு நட்சத்திரங்களைப் பற்றியும் சில உண்மை நிலைகள் அது எப்படி வந்தது என்று குருநாதர் காட்டினார்.

 

இதை விஞ்ஞானிகள் கண்டு கொள்ள ரொம்ப நாளாகும். இப்போது நான் சொன்னதை இனிமேல் கண்டுபிடித்து ஒரு காலத்தில் சொல்வார்கள்.

“தப்பிக்கலாம்…” என்று நினைத்துத் தற்கொலை செய்து கொண்டாலும் அந்த இம்சைப்பட்ட உணர்வுகள் அடுத்த உடல்களிலும் தொடர்ந்து வரத்தான் செய்யும் – உயிரிடமிருந்து யாரும் தப்ப முடியாது

Image

Eye lights

“தப்பிக்கலாம்…” என்று நினைத்துத் தற்கொலை செய்து கொண்டாலும் அந்த இம்சைப்பட்ட உணர்வுகள் அடுத்த உடல்களிலும் தொடர்ந்து வரத்தான் செய்யும் – உயிரிடமிருந்து யாரும் தப்ப முடியாது

 

 

மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஆத்திரம் தாங்காமலோ பிறருடைய கடும் சொல்லை ஏற்க முடியாமலோ கடுமையான சூழலில்  தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விஷத்தைக் குடிக்கின்றனர். (சிலர் தூக்குப் போட்டு இறக்கின்றனர்).

 

அப்பொழுது மனிதனின் எண்ணங்கள் போய்விடுகின்றது. உடலை அழித்து விடுகின்றது. விஷத்தைக் குடிப்பவர்கள் உயிரை விட்டுப் பிரிந்த உயிரான்மா எங்கே செல்லும் தெரியுமா?

 

எந்த விஷத்தைக் குடித்தார்களோ அதன் நிலை கொண்டு பாம்பாகவோ தேளாகவோ இதைப் போன்ற விஷம் கொண்ட சரீரமாகத்தான் அடுத்து பிறப்பார்கள்.

 

வேறு எங்கும் போகமாட்டார்கள்.

 

இந்த மனித உடலை விட்டுப் போன பின்

1.வேறு உடலுக்குள் போனாலும்

2.அவர்களையும் இதே போன்று விஷத்தைக் குடித்துச் சாக  வைப்பார்கள்.

 

இதில் விளைந்த விஷம் அந்த உயிருடன் – அவனுடன் ஒன்றிக் கொண்டே தான் இருக்கும். வேறு எங்கும் போகாது. நாம் இந்த உடலில் இம்சைப்பட்டிருந்தால் அடுத்த உடலில் அதுவும் அதே இம்சையைத்தான் படும்.

 

1.விஷத்தைச் சாப்பிட்டுவிட்டு எத்தனை துடி துடித்தாரோ

2.அது உயிரிலே கலந்து கொண்டு

3.அதே துடிப்பு நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும்.

 

இந்தத் துடிப்பான உணர்வுகள் உடலுக்குள் போனவுடனே அது வேலை செய்யத் தொடங்கி விடுகின்றது.

 

சில பேர் தற்கொலை செய்து கொண்டு… “இந்த உலகத்தை விட்டே நான் போய் விடுகிறேன் என்பார்கள்..! எங்கே போவது…?

 

அவனிடமிருந்து (உயிரிடமிருந்து) தப்பிக்கவே முடியாது.

1.தப்பு செய்தால் தப்பு தான்.

2.சரியாகச் செய்தால் சரி தான்.

3.மார்க் போட்டுக் கொண்டே இருக்கும் நமது உயிர்.

 

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கீதையிலே வியாசகர் சொன்னது “நீ எதை எண்ணுகிறாயோ.. நீ அதுவாகின்றாய்…!

 

ஒருவரைக் கோபத்துடன் சண்டையிட்டு நான் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்… பார்…! என்று நினைக்கலாம். சுட்டுப் பொசுக்கும் எண்ணம் முதலில் என்னிடம் தான் வருகின்றது எனக்குள் வளர்கின்றது.

 

சுடப்பட்ட பின் அவன் துடித்த உணர்வு அதே எண்ணத்தை நாம் எண்ணிக் கொண்டிருந்தால் நேராக என்னிடம் வந்துடுவான். என் உடலுக்குள் வந்த பின்னாடி

1.நான் சுட்டுப் பொசுக்கிய உணர்வின் தன்மை என்ன செய்யும்…?

2.என்னைச் சுட்டு பொசுக்கிக் கொண்டேயிருக்கும்.

3.இந்த உயிருடன் ஒன்றி அந்த இம்சைப் படுத்திக்கொண்டே இருக்கச் செய்யும்.

 

உயிரிடம் இருந்து யாரும் தப்ப முடியாது.

 

உயிரோடு ஒன்றிய அந்த நிலைகள் நீ தவறு செய்தாய்…
அதனால் வேதனைப்படு என்று இந்த உயிர் செய்யும்.  ஏனென்றால் அவன் கடவுள்.

 

பெரும் பகுதியானவர்கள் நாம் இந்த உடலை விட்டுப் போய் விட்டால் எல்லாம் முடிந்தது என்று நினைக்கின்றோம்.

 

தற்கொலை செய்து கொள்ளும் உயிரான்மாக்கள் எங்கே போகின்றது? அடுத்த உடலுக்குள் புகுந்து அந்த உடலையும் எப்படி அல்லல்படுத்துகின்றது? கடைசியில் விஷமான உயிரினங்களுக்குள் சென்று அடைவதையும் நேரடி அனுபவமாகக் குருநாதர் காண்பித்துத் தெரிய வைத்தார்.

 

அதைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.

 

வாழ்க்கையில் கடுமையான இன்னல்கள் ஏற்படும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

 

ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணத்தைச் செலுத்தி.

1.மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவைச் செலுத்த வேண்டும்

3.என்னை அறியாது வந்த தீமைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று

4.அந்த மெய் உணர்வுகளை நம் உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும். அதை நம் உடலாக ஆக்க வேண்டும்

5.இதை நாம் சிருஷ்டித்தால் மெய் உணர்வைத்தான் உயிர் நமக்குள் கொடுக்கும்.

 

அடுத்து உடலைவிட்டு போய் விட்டால் உயிர் நம்மை எதுவாகப் படைக்கும்? நம்மை அந்த மெய் ஞானியாகப் படைத்துவிடும். ஏனென்றால் முழு முதற் கடவுள் – நாம் சிருஷ்டிக்கும் உடல் பெற்றவர்கள்.

 

ஆனால் இந்த மனிதப் பிறவியில் இதை இழந்து விட்டால் அடுத்து மீண்டும் தேய் பிறை என்ற நிலைக்கே நம்மை உயிர் அழைத்துச் செல்லும்.

 

ஆகவே

1.விஜயதசமி – பத்தாவது நிலை பெறும் அந்தப் பாதையிலே

2.ஞானிகள் சென்ற பாதையிலேயே நாம் செல்வோம்.

3.நம்மை அறியாது வந்த எத்தகைய இருளையும் போக்குவோம்.

4.”கல்கி…” என்ற அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.

மகரிஷிகள் கொடுக்கும் அருள் வாக்கு

Image

பணத்தையோ பொருள்களையோ பற்றி எல்லாக் கணக்குகளையும் பார்க்கின்றோம் – இந்த மனித வாழ்க்கைக்கு நமக்கு வேண்டிய நல்லதைப் பற்றிய கணக்கைக் கொஞ்சமாவது பார்க்கின்றோமா…?

 

 

அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் அது நல்லதாக வேண்டும் என்று எத்தனை தடவை எண்ணி அதைச் சுவாசிக்கின்றோம்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

என் வாழ்க்கையில் எப்பொழுதும் நல்லது நடக்காது என்ற எண்ணத்தில் சில பேர் இருப்பார்கள். காரியத்தைத் தொடங்கும் பொழுதே இது எங்கே நடக்கப் போகிறது என்ற இரண்டு உணர்வாக எண்ணுவார்கள்.

 

எண்ணியது நடக்கவில்லை. ஆகவே அது நடக்காது என்ற எண்ணத்திலேயே போய்க் கொண்டிருப்பார்கள்.

 

அதே மாதிரி உடலில் வலியோ அல்லது நோயோ வந்தாலும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

நோய் நீங்க வேண்டும் வலி நீங்க வேண்டும் என்று எத்தனை தடவை எண்ணுகின்றோம்? வலியாக இருக்கிறது… நோய் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! ஒரே இம்சையாக இருக்கின்றது…! என்று எத்தனை தடவை எண்ணிச் சுவாசிக்கின்றோம்?

 

இந்தக் கணக்கை நாம் பார்க்கின்றோமா…? பணமோ பொருளோ அதையெல்லாம் நாம் கணக்கு சீராகப் பார்ப்போம்.

 

ஆனால் நம் ஆன்மாவில் நம் மனதில் நம் உடலில் ஒவ்வொரு நாளும் நல்லதை எத்தனை தடவை எண்ணிச் சுவாசிக்கின்றோம்? கெட்டதை எண்ணி எத்தனை தடவை சுவாசிக்கின்றோம்? இந்தக் கணக்கைப் பார்ப்பதில்லை.

 

கெட்டது நடந்தாலும் தீமைகள் வந்தாலும் அதைப் பற்றி எண்ணினால் எத்தனை தடவை எண்ணினாலும் அது நன்மை பயக்கப் போவதில்லை.

 

ஆனால் கெட்டது வந்ததும் அல்லது தீமையானதும் கணக்கை மாற்றி… சரி இந்த மாதிரி ஆகிவிட்டது. அடுத்து

1.இதை எப்படி நல்லதாக்குவது?

2.இது மாதிரித் திரும்ப வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

3.இந்த இழப்பை நல்லபடியாக எப்படிச் சரிக் கட்டலாம்?

4.இதனால் நமக்கு எந்த அளவிற்குப் பாதிப்பு.. அதை எப்படியாவது சீராக்க வேண்டும் என்று

5.இந்தச் சிந்தனையை… இந்த எண்ணத்தை… இந்தக் கணக்கைக் கூட்டினால்

6.இது எல்லாமே நல்ல கணக்காக… நல்ல எண்ணமாக… நல்ல செயலாக… நல்ல அனுபவமாக… அமையும்.

 

இத்தகைய வலுவான எண்ணமும் மன பலமும் கிடைக்க வேண்டும் அதை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்வது.

 

மகரிஷிகள் என்னிடம் சொன்னது:-

நீ நல்லது நடந்ததை எங்களிடம் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் கெட்டது நடந்தால் அடுத்த கணமே அதைத் தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

 

அப்படி நீ தெரியப்படுத்தினாய் என்றால் அதிலிருந்து எப்படி விடுபட வேண்டும்? எப்படி அதை நல்லதாக்க வேண்டும்? சீராக்கும் நிலையாக என்னவெல்லாம் நம்மால் செய்ய முடியும் என்ற அத்தனை உபாயங்களையும் ஆற்றல்களையும் சக்திகளையும் நாங்கள் உனக்குக் காட்டுவோம். அதை நீ பெறக் கூடிய தகுதியையும் உருவாக்குவோம்.

 

உன் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.

 

உன்னுடைய சக்தியும் கூடும் ஞானமும் கூடும் ஆற்றலும் கூடும். விண்ணின் ஆற்றல்களை இந்த மனித உடலில் பெற்று தெளிந்து வாழலாம். வேதனை உனக்கு வராது. என்றென்றும் நீ ஏகாந்தமாக இருப்பாய். மகரிஷிகளுடன் என்றுமே ஒன்றி வாழ முடியும் என்று தெளிவாக்குகின்றார்கள்.

இது என்னுடைய அனுபவம்.

 

1.நடப்பதெல்லாம் நன்மைக்கே

2.நடப்பது அனைத்தையும் நன்மையாக்க முடியும்

3.இனி எது நடந்தாலும் அதை நல்லதாக்க முடியும்…!

மகரிஷிகள் கொடுக்கும் “அருள் வாக்கு…” இது.

வியாசக பகவான் கொடுத்த வராக அவதாரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்

Image

Aadi Varaha-Swamy

வியாசக பகவான் கொடுத்த “வராக அவதாரத்தின் முக்கியத்துவத்தை…” அறிந்து கொள்ளுங்கள்

 

 

வராகன் என்றால் – “மிகவும் வலிமையானது…” என்று பொருள்

 

பன்றி தன் உடலின் வலிமை கொண்டு சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளக்கிறது. பிளந்து எடுத்த பின் சாக்கடைக்குள் இருக்கும் நல்ல மணத்தைப் பிரித்து (அதில் மறைந்துள்ள உணவு பொருளை) எடுத்துச் சந்தோஷமாகச் சாப்பிடுகிறது.

 

சாக்கடையில் ஒரு பருப்பைப் போட்டு விட்டு நீங்கள் முகர்ந்து பாருங்கள். என்ன வாசனை வருகிறது? அந்த நல்ல பருப்பின் வாசனை வருகிறதா? அல்லது மேலே இருக்கும் வாசனை வருகிறதா?

 

“நல்ல வாசனையைப் பிரிக்க முடியுமோ? பிரிக்க முடியாது…” அதைக் காட்டுகிறார் குருநாதர்.

 

பல உடல்களிலே தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பெற்று பன்றியான உடல் அமைப்பைப் பெற்றது.

 

குருநாதர் சொல்கிறார்… நீ (ஞானகுரு) முதலில் பன்றியாகவும்  இருந்தாய்.

 

இதைக் காட்டுவதற்காக சாக்கடைப் பக்கத்தில் என்னைக் கூட்டிக் கொண்டு போனார். சாக்கடையிலிருந்த குப்பையெல்லாம் அள்ளிப் போட்டு வைத்துள்ளார்கள்.

 

FLUSH OUT – கழிப்பறைகள் இல்லாத காலம் அது.  கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தும் சாக்கடை அது. சாக்கடையில் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது.

 

பழனியில் என் வீட்டிற்கு அருகில் தான் இது நடக்கிறது.

 

நான் தெலுங்கு பேசுவதால் “வாடா தெலுங்கு இராஜ்ஜியம்…!” என்று குருநாதர் என்னைக் கூப்பிடுகிறார்.

 

திருப்பதி வெங்கடாஜலபதி மிகப் பெரிய செல்வந்தர். நீ வெங்கடாஜலபதியை தோஸ்து (நண்பனாக்கி) பண்ணிக் கொள் என்பார்.

 

இல்லை நான் முருகனைத் தான் வணங்குகிறேன் என்பேன்.

 

டேய்… நீ தெலுங்குஇராஜ்ஜியம்டா, அங்கே போடா..! என்றெல்லாம் சொல்வார்.

 

சாக்கடைப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு “காப்பி வாங்கிக் கொண்டு வாடா…” என்றார். எனக்குக் காப்பி.. அவருக்கு டீ.. அவர் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்தேன்.

 

நான் வாங்கி வந்த டீயில் சாக்கடையில் இருந்து அள்ளிப் போட்டிருந்த குப்பைகள் இரண்டைப் போட்டார். என் காப்பியிலும் இரண்டைப் போட்டு சர்…ர்ர். என்று ஆற்றிவிட்டுச் “சாப்பிடுடா…!” என்றார்.

 

சாக்கடையை அள்ளிப் போட்டுவிட்டுக் காப்பியைச் சாப்பிடு என்றால்… “எப்படி இருக்கும்…?”

 

நைனாவிற்கு ரொம்பப் (எனக்கு) பைத்தியம் பிடித்து விட்டது…! என்று எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

 

இங்கேயும் அங்கேயும் நான் பார்க்கிறேன். சாமி…! இதைப் பார்த்தாலே எனக்கு வாந்தி வருகிறது…! என்கிறேன்.

 

“நான் சொல்வதைச் செய்கிறேன்… என்று சொன்னாய் அல்லவா…! நீ செய்டா…” என்கிறார். “நான் சாப்பிடுகிறேன் பார்…” என்று சொல்லி அவர் சாப்பிடுகிறார்.

 

அவர் சாப்பிடுவதைப் பார்த்தாலே “எனக்கு” வாந்தி வருகிறது

 

அப்பொழுது கடவுளின் அவதாரத்தில்… “வராக அவதாரத்தைப்” பற்றி அந்த இடத்தில் காட்டுகிறார்.

 

என்னால் காபி சாப்பிட முடியவில்லை. காபியைக் கொட்டி விட்டு வட்டைக் கப்பைக் கொண்டு போய் டீ கடையில் திரும்பக் கொடுக்கிறேன்.

 

என் வீட்டுப் பக்கத்தில் டீக்கடை வைத்திருக்கும் “பாய்” அவர் அந்த வட்டக்கப்பை வாங்க மறுக்கிறார்.

 

“நைனா…! இந்த வட்டைக்கப்பை உங்கள் வீட்டில் வைத்துச் சாப்பிடுங்கள்… சாக்கடையில் இருப்பதைப் போட்டதால் இதில் யாரும் காப்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் இதை உங்கள் வீட்டிற்கே கொண்டு போங்கள் என்கிறார்.

 

வேறு வழியில்லாமல் அதற்கான காசைக் கொடுத்தேன்.

 

வட்டகப்பை கடை வாசல் முன்னாடி கூட வைக்க வேண்டாம் என்கிறார்.

 

பக்கத்தில் இப்ராஹிம் சைக்கிள் கடை வைத்துள்ளார். அங்கே வைத்தேன். “கொஞ்ச நேரம் கழித்து எடுத்துக் கொள்கிறேன்…” என்று சொன்னால் கூட அவர் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்.

 

உங்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போங்கள். பன்றி முகர்ந்து பார்த்துள்ளது. யாராவது பார்த்தால் நானும் அதைச் சாப்பிடுகிறேன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்கிறார்.

 

பன்றி முகர்ந்து பார்த்துள்ளது என்று அங்கு வைக்கக்கூட விட மாட்டேன் என்கிறார். நான் என் வீட்டிற்கே கொண்டு போய் வாசற்படி அருகில் வைத்துவிட்டேன்.

 

முறுக்கு நிலக் கடலை பொட்டுக் கடலை… வாங்கிக் கொண்டு வாடா என்றார் குருநாதர். ஒரு குச்சி எடுத்து வாடா… என்றார். சாக்கடைக்குள் மூன்று கோடுகளைப் போடச் சொன்னார்.

 

போட்டேன்.

 

நிலக் கடலைப் பருப்பை முதலிலும் அடுத்து பொட்டுக் கடலையையும் அதற்குப் பிறகு முறுக்கையும் போடச் சொன்னார்.

 

பன்றி அந்தப் பக்கம் மேய்ந்து கொண்டு வருகிறது. கடலைப் பருப்பின் வாசனை… எண்ணையில் பொறித்தெடுத்த முறுக்கின் வாசனை.. வருகிறது.

1.நேராக கடலைப் பருப்பை முகர்ந்து எடுக்கிறது.

2.அடுத்து முறுக்கை எடுத்துச் சாப்பிடுகிறது.

3.மூன்றாவதாக பொட்டுக் கடலையைச் சாப்பிடுகிறது.

 

“பார்த்தாயாடா., பன்றி எப்படி எடுக்கிறது என்று…?” அந்த இடத்தில் காட்டுகிறார். நீயும் இதற்கு முன்னால் பன்றியாக இருந்தவன் தான்டா. இந்த உயிர் தான் பன்றியாகவும் ஆக்கியது என்கிறார்.

 

தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பன்றி உடலிலிருந்து பெற்ற பிறகு மனிதனாக்கிக் கொண்டு வந்தது இதே உயிர் தான் என்று காட்டுகிறார். இங்கே விளக்கம் கொடுக்கிறார் குருநாதர்.

 

பன்றி எவ்வாறு பல உடல்களிலிருந்து தீமையை நீக்கி… நீக்கி… வந்தது. பன்று உடலில் வலுவானதால் அதற்குத்தகுந்த உறுப்பாகி நாற்றத்தைப் பிளந்து அதில் உள்ள நல்ல மணத்தைப் பிரித்து எடுத்துச் சாப்பிடுகிறது என்று நிதர்சனமாய்க் காட்டுகிறார்.

 

எனக்கு ஒரு பக்கம் பயம் இருந்தது. முறுக்கையும் கடலைப் பருப்பையும் இதில் துவட்டி எடுத்து சாப்பிடச் சொல்லப் போகிறார் என்று.

 

 

1.பல உடல்களில் தீமையை நீக்கி

2.அதற்குத் தக்க உடல்கள் மாறி மாறி

3.இதே உயிர் தான் பன்றியாக உருவாக்கியது.

தீமைகளையெல்லாம் நீக்கும் உடல் உறுப்புகளைப் பன்றி பெற்றதனால் சாக்கடையில் வரக் கூடிய நாற்றத்தை எண்ணாது அதிலுள்ள நல்லதை நுகர்கிறது என்று குருநாதர் விளக்கம் சென்ன பிறகு மனது தெளிவாகி விட்டது.

 

நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுக்கும் வலு வளர்ச்சியான பின் பன்றி மனிதனாகப் பிறக்கின்றது.

 

மனிதனான பின் நஞ்சைப் பிரித்து விட்டு நல்ல உடலாக உன்னை மாற்றுகிறது. எது ஆனதோ எல்லாமே சந்தர்ப்பம் தான்.

 

சாக்கடை என்று எண்ணுகிறாய்.

1.நீ சுவாசிக்கும் நாற்றம் வலுவாகிறது

2.இதைச் சுவாசித்து உயிரில் பட்டபின் நாற்றமாகிறது

3.உன்னால் நல்லதைப் பிரிக்க முடியவில்லை என்கிறார்.

4.எண்ணியவுடனே நாற்றம் வந்தது.

5.எண்ணாமல் இருந்தால்  நாற்றம் வந்ததா? என்று கேட்டார்.

 

வீட்டுக்கு முன்னாடி தான் சாக்கடை இருக்கிறது. ஆனால் நாற்றம் தெரிகிறதா? அந்த வீட்டுக்காரருக்கு நாற்றம் தெரிவதில்லை.

 

ஆனால் நாம் போனால் உடனே “அச்சச்சோ….” என்று மூக்கைப் பிடிக்கிறோம்.

 

ஒரு சமயம் திடீரென்று குருநாதர் வருகிறார். இங்கே வாடா… என்று என்னைக் கூப்பிட்டுக் கொண்டு போகிறார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு எனக்கு நாற்றம் வருகிறது. என்ன என்று பார்க்கிறேன். பார்த்த பின்.. சாமி…! இங்கே அசூசை இருக்கிறது பாருங்கள் என்றேன்.

 

கூப்பிட்டு வரும் பொழுது முதலிலே நினைத்தாயா…? நினைக்கவிலை, அதனால் வாசனை வரவில்லை. ஆனால் கண்ணில் பார்த்தவுடன் அசூசை இருக்கிறது தெரிகிறது. வாந்தி வருகிறது.

 

எதனால் இப்படி வருகிறது?

1.“நம் எண்ணத்தில் எண்ணுவதால் தான் அது வருகிறது” என்று

2.இவ்வளவு தெளிவாகக் கொடுக்கிறார்.

 

உடலாக இருப்பதெல்லாம் சிவம் தான். எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ அதற்குத்தக்க உடலை உருவாக்குகிறது.

 

நம் உயிரணு பூமிக்குள் வரும் போது

1.எந்தச் சத்தை முதலில் நுகர்ந்ததோ அதற்குத்தக்க உடலாகிறது.

2.உடலான பின் மூஷிக வாகனா – அந்த மணதைச் சுவாசித்து

3.அதற்குத்தக்க வாழ்க்கை ஆகின்றது என்று

சாக்கடைக்கு அருகில் என்னை அமர வைத்து வியாசக பகவான் கண்டுணர்ந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.

 

இன்று இந்தக் காற்று மண்டலம் நச்சாக இருந்தாலும் அதில் மறைந்துள்ள மெய் ஞானிகளின் உணர்வை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்த அனுபவத்தின் மூலமாகத்தான்

1.மகரிஷிகளின் உணர்வுகளைத் தனித்துப் பிரித்துக் கவரும்படி செய்தார்.

2.அத்தகையை ஆற்றல் நீங்களும் பெறவேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசமே.

கம்ப்யூட்டர் பிழைகளைத் திருத்துவது போல் உங்கள் இரத்தத்தில் சேரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றுங்கள் – “உங்களால் முடியும்”

Image

Super computer

கம்ப்யூட்டர் பிழைகளைத் திருத்துவது போல் உங்கள் இரத்தத்தில் சேரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றுங்கள் – “உங்களால் முடியும்”

 

 

விஞ்ஞானி விஞ்ஞான அறிவைக் கொண்டு ஒரு கம்ப்யூட்டரைத் தயார் செய்கின்றான். அதிலே எழுத்துக்களை அடிக்கும் பொழுது பிழைகள் வந்து விடுகின்றது.

 

அவன் அதைக் கண்டுணர்ந்து அந்தப் பிழைகள் வராமல் இருக்க அதற்குகந்த சக்தி வாய்ந்த நிலைகளைச் செயல்படுத்துகின்றான். பிழைகள் நீங்கிச் சீரான நிலையில் இயங்கச் செய்கின்றான்.

 

கம்ப்யூட்டர் அதிர்வின் தன்மை கொண்டு கெமிக்கல் கலந்த காந்தப் புலனை வைத்துக் கொண்டால் இந்த ஒலியின் அதிர்வுகளைக் காட்டப்படும் பொழுது அது எழுத்தோ படமோ சப்தமோ இயக்கிக் காட்டுகின்றது.

 

உதாரணமாக பேட்டரிக்குள் வைத்திருக்கும் பல பொருள்கள் எதிர் நிலையாகும் பொழுது வெளிச்சமாக வருகின்றது.

 

இதே போல கெமிக்கல் கலந்த உணர்வுகளின் அதிர்வுகளை எடுக்கப்படும் பொழுது இது உராய்ந்து அதற்குத் தக்க ஒளிக் கற்றைகளை வீசுகின்றது.

 

அதன் வழி கொண்டு மனித ரூபங்களையும் கம்ப்யூட்டரில் போட்டுக் காட்டுகின்றான் விஞ்ஞானி.

 

ஒரு மனிதனின் கை ரேகையை எடுத்து அந்த மனிதனின் உணர்வின் தன்மையைக் கம்ப்யூட்டரில் இந்த உணர்வின் அதிர்வுகளைப் பதிவாக்கி அதில் மீண்டும் அதிர்ச்சிகளைச் செயல்படுத்தும் பொழுது “இந்த மனிதன் தான்… என்று அவன் ரூபத்தையே…” காட்டுகின்றது.

 

இதே போல தான் நமது வாழ்க்கையில் பிறிதொருவரின் செயல்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது

1.அவன் மோசமானவன்…!

2.கோபக்காரன்… கெட்டவன்… தவறு செய்பவன்…. முரண்டு பிடிப்பவன்

3.பிறருக்குத் தீங்கு செய்பவன் என்று

4.இந்த உணர்வெல்லாம் கண் பதிவாக்குகின்றது

5.பின் நமது எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாற்றி விடுகின்றது.

 

நாம் பிறிதொருவரின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம் உயிரில் பட்டு இந்த உணர்வின் அதிர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது.

 

1.இரத்தங்களில் எதனின் உணர்வுகள் கலக்கின்றதோ

2.உடலிலுள்ள அணுக்களில் இது சிதறப்பட்டு

3.அந்தந்த உணர்வுக்கொப்ப ரூபங்களை மாற்றி அமைக்கின்றது.

 

இன்று மனிதனாக இருக்கின்றோம். மிருக குணங்களை கொண்ட உணர்ச்சிகளை நாம் அடிக்கடி நுகர்ந்து நம் இரத்த நாளங்களில் கலந்து விட்டால் இதன் உணர்ச்சியின் இயக்கங்கள்

1.நம் உடலில் உள்ள அணுக்களில் கலக்கப்பட்டு

2.அதற்குத்தக்கவாறு நம் உடல் உறுப்புகள் மாற்றமடைகின்றது.

3.உறுப்புகள் மாறும் பொழுது இதனின் மலங்கள் கொண்டு

4.நம் சிந்திக்கும் தன்மையும் மாறுகின்றது.

 

சகஜ வாழ்க்கையில் கோபப்படுவது வெறுப்படைவது வேதனைப்படுவது போன்ற உணர்ச்சிகளைத்தான் அடிக்கடி நம்மால் பார்க்க முடிகின்றது.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம் என்ன மாற்று வழி வைத்திருக்கின்றோம். சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கின்றது. நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.

 

மனிதன் ஒரு எந்திரத்தை உருவாக்கி அதில் பிழைகள் வந்து விட்டால் கம்ப்யூட்டரின் இயக்கத்தால் கண்டு பிடித்துச் சரி செய்து “சூப்பர்..” என்ற நிலையில் அதை மாற்றியமைத்து எந்திரத்தைச் சீராக்கி விடுகின்றான்.

 

வெறுப்படைபவர்கள் கோபப்படுவோர்கள் வேதனைபடுவோர்கள் வேதனைப்படுத்துவோர்கள் போன்ற பலரின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதை நுகர்கின்றோம்.

 

அந்தந்த உணர்வுகளுக்குத் தக்கவாறு இயக்கம் ஆகின்றது. உதாரணமாக

1.வேதனைப்படுவோரைப் பார்த்து அவர் மீது அன்பு கொண்டால்

2அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் செயல்படுகின்றோம்.

3.அவர் மீது அன்பு இல்லாதபடி வெறுப்பாக இருந்தால்

4.அவர் செய்த நிலைகளுக்கு அப்படி வேதனைப்பட்டுதான் ஆகவேண்டும் என்ற உணர்வு நமக்குள் வருகின்றது

 

வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தாலும் வெறுப்படைந்தால் அவர் மீது வெறுப்பின் நிலையே நமக்குள் அதிகமாக வந்து விடுகின்றது.

 

ஆனால் எப்படிப்பட்ட்ட உணர்வுகளை நுகர்ந்தாலும் அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் நம் உடலில் இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது.

 

இத்தகைய தீமையான இயக்கங்கள் நமக்குள் வளர்ந்திடாது மாற்றி அமைக்க வேண்டும். தீமையான இயங்களை மாற்றியமைக்கும் சக்தியாகத்தான் உங்களுக்குள் தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

 

உயிருடன் ஒன்றி இருளை மாய்த்து என்றும் ஒளியாக இருப்பது தான் அந்தத் துருவ நட்சத்திரம். அதற்கு “விஷ்ணு தனுசு” என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.

 

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில்

1.தீமையான நிலைகளைக் கண்டால்

2தீமைகளை நுகரக்கூடிய சந்தர்ப்பம் வந்தால்

3.அந்தத் தீமையின் உணர்ச்சிகள் நம் உடலில் வராதபடி

4.தீமையான உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்காதபடி

5.நம் உடலை உருவாக்கிய அணுக்கள் தீமைகளைப் பருகாதபடி

6.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு மாற்றி அமைத்தல் வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வப் பொழுது நமக்குள் ஏற்றி வைத்துக் கொண்டால் விஞ்ஞானிகள் “SUPER COMPUTER…” என்று செயல்படுத்துவது போல் நம்முடைய வாழ்க்கையில் தீமைகளை உடனுக்குடன் மாற்றியமைக்க முடியும்.

 

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தின் என்றுமே மகிழ்ந்து வாழ முடியும்.

விண்ணின் ஆற்றலை நீங்கள் பெறுவதற்காகச் சக்தி வாய்ந்த… “ஆண்டெனா பவர் (ANTENNA POWER)” கொடுக்கின்றோம்

 

ganakan

விண்ணின் ஆற்றலை நீங்கள் பெறுவதற்காகச் சக்தி வாய்ந்த… “ஆண்டெனா பவர் (ANTENNA POWER)” கொடுக்கின்றோம்

விஞ்ஞான அறிவால் பரீட்சாந்திரமாகப் பிற ஆன்மாக்கள் மீது நஞ்சு கொண்ட விஷமான உணர்வுகளைப் பாய்ச்சும் பொழுது அந்த ஆன்மாக்கள் எவ்வாறு பதை பதைக்கின்றது?

எதை அழிக்க நஞ்சான உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தில் கண்டு கொண்டானோ அதனால் வெளி வந்த அந்த விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள் அனைத்தும் உலகில் சுழன்று கொண்டுள்ளது.

1.துன்புறுத்தும் நஞ்சு கொண்ட உணர்வின் ஆன்மாக்களாக எவ்வாறு படர்ந்து கொண்டிருக்கின்றது.
2.அதனுடைய விளைவுகள் என்ன என்ற நிலையை அறிந்து கொள்வதற்கு
3.குருநாதர் உலகம் முழுவதும் என்னைச் சுற்றுப் பயணம் செல்லச் செய்தார்கள்.
4.பன்னிரண்டு வருடம் இதையெல்லாம் அனுபவித்த பின் தான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

விஞ்ஞான அறிவால் தன் ஆராய்ச்சியின் நிமித்தமாகப் பல கடுமையான விஷம் கொண்ட இதைப் போன்ற நிலைகள் இந்தக் காற்றிலே சுழன்று கொண்டுள்ளது.

இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன?

ஒரு உணர்வைப் பிளந்து உடல் பெறும் தன்மையை மறைத்து தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்ற முதல் மனிதன் அந்த அகஸ்தியன்.

அகஸ்தியனின் உணர்வுகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை எடுத்துச் சுவாசித்துத் தன் உணர்வுகளை ஒளியாக்கி விண் சென்றவர்கள் மெய் ஞானிகள்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் நமது பூமி சுழன்று கொண்டிருக்கின்றது.

அதே போல இந்தப் பூமிக்குள் உயிரணுவாகத் தோன்றி ஒளியின் சரீரமான அந்த அகஸ்தியனின் உணர்வைக் கண்டுணர்ந்து அதை நுகர்ந்து
ஒளியாக மாற்றிச் சென்ற மனிதர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

1.“முப்பது முக்கோடி தேவாதி தேவர்கள்…” என்று சொல்வார்கள்.
2.சப்தரிஷி மண்டலங்களாக நமது பூமியின் சுழல் வட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படரச் செய்கின்றது.

இன்று வெகு தொலைவில் இருந்து ஒலி/ஒளிபரப்பு செய்தாலும் சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்து தொலைக் காட்சியின் மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம்.

செயற்கைக் கோள்களை ஏவி விண்ணிலிருந்து ஒளி பரப்பச் செய்யும் விண்ணின் ஆற்றல்களையும் அந்த அலைகள் வெளியில் படர்ந்திருந்தாலும் அதற்குத் தகுந்த ஆண்டெனா பவரை வைத்து தரையிலிருந்து இங்கே கவர்கின்றார்கள்.

அதை விஞ்ஞானத்தின் மூலம் திரைகளிலும் டி.வி.யிலும் அந்தப் படங்களைத் தெளிவாகப் பார்க்கவும் முடிகிறது.

இதைப் போல மெய் ஞானிகள் கண்ட விண்ணின் ஆற்றல்களையும் நாம் பார்க்க முடியும் நுகர முடியும் அறிய முடியும்.

அந்த மெய் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை நீங்கள் பெறும் வண்ணம் யாம் உபதேசிக்கும் போது
1.எந்தளவிற்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றீர்களோ
2.உங்கள் கண் இதை ஈர்த்து உடலுக்குள் ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.

சாதாரணமாக உங்கள் கண் ஈர்க்கும் நிலைகளைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆண்டெனா போன்று உங்கள் கண்களுக்கு ஈர்க்கும் சக்தியைக் கூட்டும் நிலைகளுக்கே இதை உபதேசிக்கின்றோம்.

எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் பொழுது நான் கூர்ந்து அவர் சொல்லும் உணர்வைக் கேட்டு என் நினைவைச் செலுத்தி அவர் உணர்வின் ஆற்றலை நான் நுகர்ந்தேன்.

அதனின் நினைவு கொண்டு என் கண்ணின் புலனறிவுகள் ஆற்றல் மிக்கதாக மாறியது. அவர் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் எனக்குள் ஊழ் வினையாகப் பதிவானது.

அதை நான் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார்.

நீங்களும் அவ்வாறு பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் சொல்கின்றோம். இந்த உபதேசங்களை யாரெல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்கின்றனரோ அவர்கள் கண்ணுக்கு (உரம் ஊட்டுவது போல) ஆற்றல் மிக்க சக்தியாக அந்த ஆண்டெனா பவர் கூடுகின்றது.

சாதாரண ஆண்டெனாவை வைத்து டி.வி.யைத் திருப்பி வைத்தால் அது பக்கத்தில் வரக்கூடிய ஸ்டேசன்களை இயக்கிக் காட்டுகின்றது.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி வெகு தொலைவில் இருக்கும் கோள்களின் செய்திகளை அறிய சக்தி வாய்ந்த ஆண்டெனாவைத் தரையிலே வைத்துக் கவரும் பொழுது அது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

அதைப் போலத்தான் விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும்  சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகரும் ஆற்றலை உங்களைப் பெறச் செய்கிறோம்.

உங்கள் கண்ணின் ஈர்ப்பு சக்தியை அந்த ஆண்டெனா பவரைக் கூட்டுவதற்குத்தான் இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

கண்களுக்குக் கொடுக்கும் அதீத ஈர்க்கும் சக்தியை வைத்து நீங்கள் விண்ணை நோக்கி எண்ணி ஏங்கும் பொழுது சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வலைகளை எளிதில் பெற முடியும்.

அதை உங்கள் உடலில் வினையாகச் சேர்த்து அறியாது வந்த தீமைகளைத் துடைப்பதற்காக இதைச் சொல்கின்றோம்.

மனிதர்களுக்குள் நாம் பழகிய நிலைகள் கொண்டு பத்திரிகை வாயிலாக எங்கோ ஆக்ஸிடன்ட் ஆன நிலைகளைப் படிக்கும் பொழுது எண்ணத்தைக் கூர்ந்து செலுத்திவிட்டால் அதிர்ச்சி வேதனை பயம் போன்ற தீமைகளை நமக்குள் விளைவிக்கின்றது.

நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் வந்து இயக்கி விடுகின்றது.

பத்திரிக்கை வாயிலாக நாம் படித்துணர்ந்த அந்த எண்ண அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.

அதை மீண்டும் எண்ணும் பொழுது பதிவான அதே எண்ண அலைகளைக் குவித்து நம்மை உணரச் செய்கின்றது. அதன் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகின்றது.
1.எப்படியெல்லாம் அவர்கள் வேதனைப்பட்டார்களோ
2.அதே வேதனை நமக்குள் விளையும் தருணமும் வந்து விடுகின்றது.

இதே போன்ற நிலைகளிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துத் தான் தடுத்து நிறுத்த முடியும்.

சலிப்பு சோர்வு கோபம் வேதனை வெறுப்பு ஆத்திரம் இத்தகைய உணர்வுகள் எல்லாம் சாதாரண ஆண்டெனாவில் கவருவது போல நமக்குள் வந்து விடுகின்றது.

அவைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் சக்தி வாய்ந்த மெய் ஞானிகளின் உணர்வு தேவை. அதைக் கவர நமக்கு அந்த அதீத ஈர்க்கும் சக்தியும் தேவை.

குருநாதர் எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை நான் பருகினேன். அவரைக் கூர்ந்து நான் கவனிக்கும் பொழுது அதனின் தன்மை ஊழ் வினையாகப் பதிவாகியது.

மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நுகர்ந்து எனக்குள் பெருக்கி அறியாது சேர்ந்த தீமைகளையும் துன்பங்களையும் நீக்கினேன்.

குருநாதர் காட்டிய வழியில் அதைக் கடைப்பிடித்தேன். தீமைகளை நீக்கிய அந்த அருள் உணர்வுகளைச் சொல்லால் சொல்லி உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிய வைக்கின்றேன்.

இதை மீண்டும் நினைவு கூர்ந்து எண்ணிணீர்கள் என்றால் அந்த மெய்ஞான உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உங்கள் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கச் செய்யும்.

குருநாதர் ஒவ்வொரு நிமிடத்திலும் துன்புறுத்தும் உணர்வுகளை செயற்கையாக எனக்குள் பாய்ச்சி
1.அந்தத் துன்பப்படுத்தும் உணர்வுகளை நீக்குவதற்காக
2.விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருகப் போகின்றாய் என்று கேள்வி எழுப்பினார்.

பின் அந்த விண்ணின் ஆற்றலை எனக்குள் எடுக்க வேண்டிய முறைகளை உபதேசித்து செய்து அதனின் அனுபவபூர்வமான செயல்களை அவர் ஊட்டினார். அவர் ஊட்டிய பக்குவ நிலைகளை நான் எடுத்துக் கொண்டேன்.

மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அவர்கள் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது என்று இருபது வருட காலம் அனுபவ ரீதியாக  உணர்ந்தேன்.

அதிலே மனிதர்கள் நல்லவர்களாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பவசத்தால் நுகரும் உணர்வால் அவர்கள் எப்படி அவதிப்படுகின்றார்கள் என்று அனுபவத்தில் காட்டுகின்றார் குருநாதர்.

அதில் தேர்ந்தெடுத்துத் தீமைகளை நீக்கிய ஆற்றல்களையும் உபாயங்களையும் தான் இங்கே திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம்.

“நல்லதை எண்ணி ஏங்குபவர்களைக் காக்க வேண்டும்…!” என்பதற்கே இதைச் செய்கின்றோம்.

ஞானிகள் ஆலயங்களில் கருப்பண சாமியை அரிவாளுடன் காட்டியதன் உட்பொருள் என்ன?

Image

ஞானிகள் ஆலயங்களில் கருப்பண சாமியை அரிவாளுடன் காட்டியதன் உட்பொருள் என்ன?

 

 

பெரிய பெரிய கோவில்களில் எல்லாம் கருப்பண சாமியை முன்னாடி வைத்திருப்பார்கள். அதற்கு முதல் மரியாதைகளையும் செய்வார்கள்.

 

காரணம் என்ன என்று நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

தெய்வத்தை நாம் காண வேண்டும் என்றால் நம் சுவாச நிலை எப்படி இருக்க வேண்டும்? உயர்ந்த நிலைகளைப் பெற வேண்டும் என்றால் நம் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்?

 

மெய் உணர்வைப் பெறத் தகுதி பெறவேண்டும் என்றால் நம் எண்ணம் பரிபக்குவ நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே கருப்பண சாமியை முன்னாடி வைத்துள்ளார்கள்.

 

கருப்பண சாமிக்கு  வாகனமாக நாயையும் கையில் அரிவாளையும் காட்டியுள்ளார்கள்.

 

நாய் தன் மோப்ப சக்தியால் தான் அனைத்தும் அறியும் ஆற்றல் பெற்றது.

 

சகஜ வாழ்க்கையில் நம்மைப் பற்றிக் குறையாகவும் தவறாகவும் பேசினால் நம் சிந்தனை அவர்கள் பால் செல்கிறது. வேதனைப்படும் நிகழ்ச்சிகளோ வேண்டத்தகாத நிலைகளோ நடந்தால் நம் நல்ல மனது வேதனையாகின்றது.

 

இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் நம் மனம் இருண்டு விடுகின்றது. நம்முடைய சுவாசம் (மோப்பம்) குறையாகப் பேசுபவர்கள் மீதும் வேண்டத்தகாத நிலைகள் மீது தான் திரும்பத் திரும்பச் செல்கிறது.

 

அதற்காகத்தான் நாயைக் காட்டுகின்றார்கள்.

 

குறையான உணர்வுகளையும் வேதனைப்படும் உணர்வுகளையும் நாம் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அது நமக்குள் வந்து நம் நல்ல குணங்களையெல்லாம் கொன்று விடுகிறது.

 

அதைக் காட்டுவதற்காகத்தான் அரிவாளைக் காட்டுகின்றார்கள்.

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் நாம் குறையான உணர்வுகளை நுகர நேர்ந்தால் அது நம் சுவாசத்தை மாற்றி நம் நல்ல குணங்களையும் அழித்துவிடுகிறது என்பதை உணர்த்துவதற்காகத்தான் அவ்வாறு காட்டுகின்றார்கள்.

 

ஆகவே நம் சுவாசத்தின் முகப்பில் இருந்தால் அடுத்து நாம் நல்லதையே வலுவாக எண்ண முடியாதபடி நல்ல சக்திகளை நமக்குள் சேர்க்கவிடாதபடி தடுத்துவிடும் என்று நமக்கு கருப்பண சாமியைக் காட்டி ஞானிகள் அறிவுறுத்துகின்றார்கள்.

 

நல்ல எண்ணம் கொண்டு நல்ல சுவாசத்துடன் கருவறைக்குள் சென்று அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வத்தைப் பார்த்து அதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… இந்த ஆலயம் வருவோர் குடும்பங்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒவ்வொருவரையும் அந்த நல்லதை எடுக்கும் முறைப்படுத்தினார்கள் ஞானிகள்.

 

நல்ல உணர்வுகளையும் நல்ல சிந்தனைகளையும் முகப்பில் வைத்திருந்தால் நம் ஆன்மா நலமாகும் நம் செயல்கள் நல்லதாகும்.

 

தான் பெற்ற அந்தத் தெய்வீக நிலைகளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் கருப்பண சாமியை முன்னாடி வைத்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

குழந்தைகள் “மாறு கண்ணுடன்” பிறப்பது… பிறந்த பின் வீட்டிலே “சண்டையும் சச்சரவும்” வருவது… தொழிலில் “மந்தம்” ஏற்படுவது… இதற்கெல்லாம் காரணம் என்ன…?

Mother and child care

குழந்தைகள் “மாறு கண்ணுடன்” பிறப்பது… பிறந்த பின் வீட்டிலே “சண்டையும் சச்சரவும்” வருவது… தொழிலில் “மந்தம்” ஏற்படுவது… இதற்கெல்லாம் காரணம் என்ன…? 

ரோட்டிலே இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகிறார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கடுமையாகப் பேசுகின்றார்கள்.

இந்த மாதிரிச் சாபவிடுவதைக் கர்ப்பமான தாய் மூன்று மாதத்திற்குள்ளே பார்த்து விட்டார்கள் என்றால் பார்த்த உணர்வுகள் கருவிலே ஆழமாகப் பதிந்து விடும்.

மூன்று மாதங்களுக்கு மேலே போனால் உருவமாகிவிடும்.

ஆனால் கருவுற்றது உரு பெறும் நிலைகளாக இந்த மூன்று மாதங்களுக்குள் இது பதிவு செய்து கொள்ளும்.

இந்த மூன்று மாதத்திற்குள் எதையெல்லாம் அந்தத் தாய் கூர்மையாகப் பதிவாக்குகின்றதோ அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிடும்.

இன்று புதிதாக ஒரு செடியை எப்படி உருவாக்குகின்றார்கள்?

1.ஒரு செடியின் வித்துக்களை வைத்து முளை வரும் போது
2.மற்ற செடியோட இரண்டறச் சேர்த்து இழுக்க வைத்து
3.ஒரு புதிய செடியாக – இரண்டு செடியின் சத்தும் சேர்ந்ததாக உருவாக்குகின்றார்கள்.

இதே மாதிரி ஒருவன் சாபமிடுகின்றான் என்றால் போதும்.

அந்தச் சாப வினைகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு என்ன செய்கின்றது என்று சொன்னால்
1.தாய் கண்ணுற்றுப் பார்க்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை நுகருகின்றது.

சாபமிடுபவர்களைப் பார்த்து “இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அந்தத் தாய் தனக்குத் தெரிந்த நியாயத்திற்குப் பேசுகிறது. ஆனால் நல்ல குணங்களுக்கு இது எதிர் மாறானது.

அப்போது அதைப் பார்த்தவுடனே தாய் என்ன செய்கிறது?

இப்படிப் பேசுகிறதே என்று ஏங்குகின்றது. இந்த உணர்வின் தன்மை கேட்கும் பொழுது “ஸ்..ஸ்ஸ்…, அப்பா…! என்று களைப்பு வருகிறது.

ஏனென்றால் கர்ப்பமாக இருக்கப்படும்போது அந்த ஆரம்பக் காலங்களில் உமட்டலாக அந்தச் சோர்வான நிலைகள் இருக்கும். அப்போது இதைத் தாங்காதபடி… “அப்பா…!” என்று எண்ணும்போது
1.இந்தச் சாபமிட்ட உணர்வுகள் நேராகக் குழந்தைக்குள் இணைந்து
2.நல்ல உணர்வைக் கொன்று
3.இந்த வித்தாக அது இணைத்து விடும்.

உனக்கு கண் தெரியாது… உன் கால் முடமாகும்… உன் குடும்பம் நாசமாகப் போகும்…! என்று சொல்லிச் சாபமிடுவார்கள்.

இதைக் கேட்டவுடனே இந்த உணர்வு அதில் விளைந்த வித்து இந்தக் குழந்தையுடன் இணைந்து விடுகின்றது.

குழந்தையுடன் விளைந்த பிற்பாடு என்னவாகின்றது?

குழந்தை பிறக்கப் போகும் போது இவர்கள் தன்னை அறியாமலே  உலகம் கெட்டுப் போய்விட்டது….! அங்கே இப்படிப் போய்விட்டது…! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

சாபமிட்டவர்கள் “உனக்குக் கண் தெரியாது…!” என்று ஒரு நான்கு தரம் பேசியிருந்தால் அந்தத் தாய் அதை நுகர்ந்திருந்தால் கருவில் உருவாகிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையின்
1.கருவிழிக்கு வரும் நல்ல உணர்வின் தன்மையை இது தடுக்கும்.
2.குழந்தை பிறந்த பின்னாடி பார்த்தோம் என்றால் குழந்தைக்கு “மாறு கண்ணாக…” இருக்கும்.

சாபமிட்டவர்கள் “உன் குடும்பம் தொலைந்து போகும்…!” என்று பேசியிருந்தார்கள் என்றால் கருவில் பதிவாகி அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து “இப்படி ஆகிப் போய்விட்டதே… இப்படி ஆகிப் போய்விட்டதே…” என்று நினைத்தார்கள் என்றால்
1.இந்தச் சோர்வின் தன்மையால் தொழில் கெடும்
2.சோர்வடையும் போது வீட்டில் சண்டை வரும்.
3.சம்பாதித்து வைத்த காசு இது தன்னாலே ஓடும்.
4.சாபத்தை – சும்மா வேடிக்கையாகப் பார்த்த கர்ப்பிணிக்கு இத்தனை நிலை ஆகிறது.

இதுவெல்லாம் நாம் தவறு செய்யவில்லை. ஆனால் சந்தர்ப்பத்தால் இப்படிப் பதிவாகி நமக்குள் விளைந்துவிடுகிறது.

இதை எல்லாம் நாம் எப்படித் துடைப்பது? நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய ஞானிகள் எதைச் சொன்னார்கள்?
1.நமக்குள் கெட்டது எப்படிச் சூழுகின்றது?
2.அறியாமலே தீமை நமக்குள் எப்படி விளைகிறது?
3.தீமைகளை எப்படி விலக்குவது…? என்பதைக் காட்டுவதற்காகத்தான் ஆலயங்களை அமைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

ஒரு ஊர் இருந்தாலும் ஒரு கிராமம் இருந்தாலும் பத்து வீடு இருந்தாலும் கோவில் கட்டி வைத்திருக்கின்றோம். விநாயகரைப் பார்க்கிறோம். தினசரி எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

தேங்காய் பழம் வைத்து வணங்குகிறோம். பிள்ளையாரைச் சுற்றி வந்தால் பிள்ளை வரம் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு அர்ச்சனை செய்து அந்தக் கோவிலைச் சுற்றுகின்றோம்.

ஆனால் நம் வாழ்க்கையில் எதை வினையாகச் சேர்க்க வேண்டும் என்று அறிந்திருக்கின்றோமா…! ஞானிகள் சொன்ன அந்த நிலையைப் பற்றி ஏதாவது நினைக்கின்றோமா?

ஞானிகள் சொன்ன நிலையை நாம் உணர்வால் எண்ணத்தால் எடுத்துத் தீமையை நீக்க வேண்டும். ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தீய வினைகள் அகற்றிடும் சக்தியாக… தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக “சரஹணபவா.. குகா..”
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக விண்ணிலே இருக்கின்றான்.

மண்ணுலகில் தீமைகளை வென்று விண்ணுலகில் இருக்கும் அந்த அகஸ்தியன் காட்டியது தான் “விநாயகர் தத்துவம்”.

விநாயகரைப் பார்க்கும்போதெல்லாம் விண்ணிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் தீய வினைகள் சாப வினைகள் அனைத்தையும் அகற்ற முடியும். கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த அகஸ்தியனின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அவன் கருவிலேயே ஞானியாவான்.

நம்மை அறியாமல் வரும் தீய வினைகளை அகற்றி நல் வினைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் விநாயகரை எங்கே பார்த்தாலும் வைத்திருக்கின்றார்கள்.

ஒரு நல்ல வித்தின் தன்மையை நாம் மாற்றி விட்டால் கனியின் தன்மை பலன் கொடுக்குமோ? கொடுக்காது.

ஆகவே நம் நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும்
1.தீமைகளிலிருந்து மனிதர்கள் அகல வேண்டும் என்பதற்காகத் தான்
2.குருநாதர் சொன்ன அருள் வழிகளை இங்கே உணர்த்துகின்றோம்.