கிரகணம்

கிரகணம்

 

இந்த வாழ்க்கையில் பிறிதொரு தீமையான உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு நம் ரத்தங்களிலே கலந்து விடுகின்றது.
1.அப்படிக் கலந்த உணர்வுகள் நம் நல்ல அணுக்களின் செயலை… அது நல்லதை நுகர விடாது தடுத்து விடுகின்றது.
2.அந்தத் தீமை பெறுகப் பெறுக நல்ல அணுக்களும் கெட்டதாக மாறத் தொடங்குகிறது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சிறுகச் சிறுகத் தெரிந்திடும் நிலையாக அனைத்தையும் தெரிந்திடும் நிலையாக மனிதனாக இப்பொழுது வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

அப்படி வந்தாலும் மனிதன் தன்னுடைய அன்பால் பண்பால் பரிவால் பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தால்… அந்தத் துயர உணர்வுகள் அனைத்துமே நம் ரத்த நாளங்களிலே கலந்து விஷத்தின் தன்மையாகி உடலில் உள்ள நல்ல அணுவின் செயலை மறைத்து விடுகின்றது.

சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டு வெளிச்சமாகத் தெரிந்தாலும் மற்ற மற்ற கோள்கள் அதை மறைக்கத் தொடங்குகிறது. பூரண நிலவாக இருப்பது பூமி மறைக்கத் தொடங்கியபின் சிறுக சிறு இருளாகின்றது. அதே சமயத்தில்
1.இன்னொரு கோளின் தன்மை மறைத்து சந்திரனின் ஒளி பூமிக்குக் கிடைக்காது இருக்கும் பொழுது அதைக் “கிரகணம்” என்று சொல்கின்றோம்.
2.இப்படி ஒரு கோளின் தன்மை இடைமறித்தால் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பெறாதபடி விஷத்தின் தன்மை கலந்து விடுகின்றது.

அத்தகைய கிரகண காலங்களில் அதை நாம் நேரடியாக உற்றுப் பார்த்தால் கண் கருவிழிகளில் விஷம் பாய்ந்து விடுகின்றது. அது பதிந்து விட்டால் கண்களில் கோளாறும் வருகின்றது.

அந்த விஷம் நுகரப்பாட்டு நம் ரத்தங்களிலே கலந்து அணுக்களிலும் சேர்ந்து கொள்கிறது. கிரகணம் அன்று அவ்வாறு சாப்பிட்டால் ஜீரணிக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

1.காரணம் இன்னொரு விஷமான கோளின் தன்மை மறைக்கப்படும் பொழுது
2.சந்திரனின் குளிர்ச்சி ஊட்டும் சக்தி அது நமக்குக் கிடைக்காதபடி தடுக்கப்படுகின்றது.

அது அந்த விஷமான கோள் மறைவாகும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை சந்திரனுடன் கலந்து நாம் பார்க்கப்படும் பொழுது சுவாசித்து உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது. நம்மை அறியாமல் விஷத்தன்மைகள் பாய்ந்து விடுகின்றது.

இது போன்று நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ கிரகணங்கள்… அதாவது மற்ற மனிதர்களின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது. அந்த உணர்வுகள் நம் ரத்தங்களிலே கலக்கக் கலக்க அது மாசுபடுகின்றது.

இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் ஞானிகள் எத்தனையோ வழிகளைக் காட்டி உள்ளார்கள்.

அகஸ்தியன்… அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு “நஞ்சினை வென்று விஷத்தை முறிக்கும் ஆற்றலாக வளர்ந்து” அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக உள்ளான்.

1.அதனின்று வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்து நம் இரத்தங்களில் அடிக்கடி கலக்கக்கச் செய்தோம் என்றால்
2.நம்மை அறியாது இப்படி உள் புகும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply