
உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன்
கம்ப்யூட்டரில் அழுத்தத்தின் தன்மை கொண்டு பதிவு செய்கின்றார்கள். பதிவான பின் அதற்குண்டான வேலைகளை எல்லாம் அது செய்கின்றது.
உதாரணமாக கோபமான உணர்வுகளை நீங்கள் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால்
1.அவனை நினைக்கும் போதெல்லாம் கோப உணர்ச்சிகள் தான் வருகின்றது.
2.யாரால் அது உருவானதோ அவனை எப்படி அடிப்பது…? எப்படி அவனை மிரட்டுவது…? எப்படித் துரத்துவது..? என்ற உணர்வெல்லாம் வரும்.
இல்லை என்றால் அவன் கோப்ப்பட்டு நமக்கு ஏதாவது அடுத்து தொல்லை கொடுப்பானா…? அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தனைகள் வரும்.
இவை எல்லாம்…
1.அவனைப் பார்த்துப் பதிவான அந்த ரெக்கார்ட் நல்ல குணத்துடன் இணையும் பொழுது
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் பல சிந்தனைகள் பல செயல்கள் உணர்வுகள்
3.”உணர்ச்சிகளாக ஊட்டி…” அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம்.
அதே போன்று தான் உபதேசங்கள் வாயிலாக உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன். கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று “வரிசைப்படுத்தி… ஒழுங்குப்படுத்தி…” அந்த மூலக்கூறுகளை உங்களிடம் ரிக்கார்ட் செய்கின்றேன்.
நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழியை நீங்கள் எடுக்கும் போது… ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும்.
அதற்கு அடுத்து…
1.அருள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப ரிக்கார்ட் செய்கின்றோம்.
2.அதற்குத் தக்கவாறு உங்களுக்குள் ஞானங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
இதை எடுத்துப் பழகிக் கொண்டால் ஒரு தொழிலுக்குச் சென்றாலும் “அதை எப்படி வழி நடத்த வேண்டும்…?” என்ற நல்ல சிந்தனை வரும். மற்றவரிடம் யோசனை கேட்டால் கலக்கி விட்டு விடுவார்கள். அவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு சொல்வார்கள்.
நீங்களே சிந்தித்து… “இதை இப்படித்தான் செயல்பட முடியும்” என்று எண்ணம் வரும். ஆகவே அருள் ஞானச் சக்கரத்தைப் பார்த்துத் தியானிக்கும் போது இத்தகைய சிந்தனை… ஞானமாக வரும்.
இதே போன்று கணவன் மனைவியும் ஒன்று சேர்ந்து தியானித்துவிட்டு
1.உன் சக்தி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்… என் செயல் நல்லதாக இருக்க வேண்டும்.
2.இரு மனமும் ஒன்றாக வேண்டும் இரு உயிரும் ஒன்ற வேண்டும்
3.எங்களுடைய செயல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி விட்டுக் காரியத்திற்குச் செல்லுங்கள்.
இந்த உணர்வுகள் அவ்வப்போது “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்று எதிர் நிலைகள் வரும் பொழுது… உங்களைச் சரியான பாதையில் நெறிப்படுத்திக் கொண்டே செல்லும். எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!
இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது
1.தவறான நிலைகள் வந்தால் உடனே உணர்த்தி அந்த இடத்திற்கு உங்களை அது செல்லவிடாது தடுக்கும்.
2.நல்ல இடங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று சீராக வாழ வைக்கும்.
3.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் இதையெல்லாம் கடைப்பிடித்து
4.இந்த அனுபவங்களைப் பெற்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வரவேண்டும்.
உணர்வின் இயக்கங்களைப் பற்றி இன்றைய விஞ்ஞானம் நிரூபிக்கின்றது…! ஆனால் மெய் ஞானிகள் கூறிய வழிப்படி நம்மை எது இயக்குகின்றது…? என்பதை
1.நாம் நுகர்ந்தது தான் நம்மை இயக்குகின்றது… அதற்குத் தான் நாம் அடிமையாகின்றோம்.
2.நல்ல குணத்தின் தரங்களைக் குறைக்கின்றது என்பதை உணர வேண்டும்.
ஆகவே அருள் உணர்வை நாம் பெருக்க வேண்டும். தீமைகளை மாற்றி அமைக்க வேண்டும். அதன் வழி அருள் வாழ்க்கை வாழ்வோம் அருளானந்தம் பெறுவோம்.

“மெய் ஞானத்தின் மூலங்களை எல்லாம்” படிக்காதவன் வெளிப்படுத்துகின்றேன்
நமது காவியங்களில் பேருண்மைகளைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். அதனின் மூலக்கூறுகளை நாம் சற்று சிந்தித்துப் பார்த்து இருக்கின்றோமா…?
1.ஆனால் நான் படிக்காதவன் தான்…! அந்தக் காவியங்களையும் நான் படிக்கவில்லை.
2.இருந்தாலும் அதனின் விளக்கங்களை உங்களிடம் சொல்கிறேன்.
3.காரணம் குருநாதர் காட்டிய அருள் வழியில் என்னால் அதை அறிய முடிந்தது.
4.அந்த இயற்கையின் உண்மைகள் மறைந்து விடவில்லை.
இன்றைய விஞ்ஞான அறிவு… பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே பூமிக்குள் எந்தெந்த நிலைகள் பதிவாகியுள்ளதோ “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்ற முறைப்படி அதனின் உணர்வின் அதிர்வுகளை எடுக்கின்றான்.
அந்த அதிர்வுகளை வைத்து அந்தக் காலத்தில் வாழ்ந்த உயிரினங்களோ மனிதர்களோ அவருடைய எண்ண அலைகளை வைத்து “உருவத்தையும் காட்டுகின்றான்…”
இதைப் போன்று தான்
1.மெய் ஞானிகள் கண்ட உண்மை உணர்வை “மெய் ஞானத்தைக் கண்ட நமது குருநாதர் எனக்குள் பதிவு செய்து…”
2.அதை எப்படி அறிய வேண்டும்…? என்று உணர்வுகளை ஊட்டினார்.
அதன் வழியில் நான் செல்லப்படும் பொழுது அதை எல்லாம் காண முடிந்தது.
1.அந்த உண்மையின் சக்திகளைப் பெறும் தகுதியைப் பெற்றேன்.
2.நீங்களும் அந்தத் தகுதியைப் பெற வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.
ஒரு கம்ப்யூட்டரில் பதிவானால்தான் அது இயக்கும். ரேடியோ டி.வி. ஸ்டேசன்கள் எங்கேயோ இருந்து கொண்டு ஒலி/ஒளிபரப்பு செய்கின்றார்கள். அந்த அலைவரிசையில் இங்கே நாம் திருப்பி வைத்தால் தான் காற்றிலிருந்து வருவதை எடுக்க முடியும்.
இதே போன்றுதான் பகைமை உணர்வு வெறுப்பு கொண்ட உணர்வு கோப உணர்வு இப்படி எண்ணிலடங்காத உணர்வுகள் உங்கள் ஒவ்வொருவர் உடலிலும் பதிவாகியுள்ளது.
அதை நினைக்கும் போதெல்லாம் அதற்குத் தக்கவாறு அதனுடன் தொடர்பு கொண்டு… கவர்ந்து சுவாசிக்கப்பட்டு இயக்குகின்றது.
ஆனால் குரு கொடுத்த தீமைகளை அகற்றிடும் அருள் ஞான சக்திகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
1.எப்பொழுதெல்லாம் இதை எண்ணுகின்றீர்களோ
2.அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் மாற்றி விட்டு
3.வாழ்க்கையைச் சீராக்க நிச்சயம் இது உதவும்.
4.”உதவ வேண்டும் என்பதற்குத்தான்” உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சில தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள்… இதைச் செய்யக்கூடாது… அதைச் செய்யக்கூடாது… என்று நினைப்பார்கள் ஆனால் இரண்டு பேர் சேர்ந்து சிகரெட் பிடிப்பதைப் பார்த்த பின் “எப்படியோ அதைக் குடிக்க வேண்டும்…” என்ற ஆர்வம் வந்துவிடும்.
கொஞ்ச நேரம் மனதைக் கட்டுப்படுத்திப் பார்ப்பார்கள்… அப்புறம் என்ன ஆகும்…?
1.எப்படியோ கொஞ்சம் அதைச் செய்து பார்க்கலாமா…?
2.அந்த வழியில் போகலாமா…! என்று இந்த உணர்வு வரும்.
அதே மாதிரித் தான் லாகிரி வஸ்துகளைப் (போதை உண்டககுவது) பயன்படுத்துபவர்கள். நான் அதைக் கட்டுப்படுத்தி விடுவேன் என்று சொல்வார்கள். ஆனால் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பழகிய பின் இந்த உணர்ச்சிகளை உந்தும்.
தன்னை அறியாமலே அங்கு செல்லும். யாராவது அதைப் பற்றிப் பேசினாலோ அல்லது ஆடிக் கொண்டே அங்கே முன்னாடி போனால் போதும். உடனே அதைச் சாப்பிட வேண்டும் என்று இழுத்துச் சென்று விடும்.
ஏனென்றால் அந்தத் தீயதுக்கு அவ்வளவு சக்தி இருக்கின்றது.
1.உங்கள் மனது இவ்வாறு மாறினாலும் அடுத்த கணமே எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.அது நமக்குள் வராதபடி… வளராதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இந்த வலுவை ஒவ்வொரு நிமிடத்திலும் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.
ஆகவே… இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுபட அதிகாலையில் ஒரு 15 நிமிடம் ஆவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்… உடலுக்குள் அதை வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எலக்ட்ரானிக்காக மாற்றிக் கொண்டால்
2.குறைபாடுகள் வந்தால் அது நம்மை இயக்காதபடி சிந்தித்துச் செயல்படும் வலிமை வரும்..
3.இதை உங்கள் அனுபவத்தில் பெறலாம்
உலக நடப்புகளைப் பத்திரிகை டி.வி. மூலம் அறிந்து கொள்கிறோம். அதைக் காதிலே கேட்டாலும் அடுத்த கணம் கண்ணுக்கே நினைவு வருகிறது. (எங்கே… என்ன… ஏது…? என்று அந்த இடத்திற்கே நம் நினைவுகள் செல்கிறது)
காற்றில் இருப்பதை டி.வி. ஆண்டெனா எப்படிக் கவர்கின்றதோ அது போன்று நம் கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகின்றது. ஆன்மாவாக மாற்றியதை உயிரின் காந்தம் இழுத்துச் சுவாசிக்கும்படி செய்கிறது.
சுவாசித்தது உயிரிலே மோதச் செய்து அந்த உணர்வலைகளை உடல் முழுவதும் பரவச் செய்கிறது.
உலகெங்கிலும் நடக்கக் கூடிய கொடுமைகள் கொலை கொள்ளை போன்ற
1.எத்தனையோ பதிவுகள் டி.வி பத்திரிக்கை மூலம் இதற்கு முன்னாடி நாம் கவர்ந்தது நமக்குள் அந்த அணுக்கள் உண்டு.
2.அதே அணுக்கள் மீண்டும் தன் உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை அறியாமலே அதனதன் செயலுக்கு அழைத்துச் செல்லும்… அது நாம் அல்ல…!
அதாவது… ஆண்டனா கவர்ந்த அலைகள் டிவி.க்குள் நுழைந்த பின் அதனதன் பாகங்கள் அந்தந்த வேலையைச் செய்வது போன்று நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் அதனதன் இயக்கங்களாகச் செயல்படத் தொடங்கி விடுகின்றது
ஆகவே உலக நிலைகள் எதைக் கேள்விப்பட்டாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு “உலகம் நலமாக இருக்க வேண்டும்…” என்று எண்ணி எடுக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு பழக்கத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத்தான் நினைவுபடுத்தித் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
1.குரு உயர்ந்த உணர்வுகளை எனக்குக் கொடுத்தார்
2.அதன் வழி உங்களையும் பெறச் செய்கிறோம்.
தலை வலிக்கின்றது… மேல் வலிக்கின்றது என்று என்னிடம் எத்தனையோ குறைகளைச் சொல்கின்றார்கள்… அழுது என்னிடம் கொட்டுகின்றார்கள். அதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால் எத்தனை ஆத்ம சக்தி செய்ய வேண்டும்…?
சாதாரணமாக ஒருவர் வேனைப்படுவதைக் கேட்ட உடனே நம் உடலில் அது தீமையாகப் பரவுகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொன்றாக இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால் வந்து கொண்டே தான் இருக்கும்.
ஆக… நல்லவருக்குத் தான் எல்லாத் தொல்லைகளும் வருகிறது.
“நான் தியானம் செய்தேன்…” என்று சொல்லிவிட்டு பிறருடைய துன்பங்கள் எல்லாவற்றையும் கேட்டு அதை உடனடியாகச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த உணர்வுகள் வலிமை பெற்று உமிழ் நீராக ஆன பிற்பாடு உடலில் அதிகமாகிவிடும்.
1.உடனுக்குடன் அதை மாற்றிப் பழக வேண்டும்
2.ரெக்கார்டை (RECORD) மாற்றிப் பழகிக் கொள்ள வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்தக் குறிப்பை உடலுக்குள் அதிகமாக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.


மூதாதையர்களுக்கு இதற்கு முன் நாம் செய்ய மறந்த காரியத்தைச் செயல்படுத்த வேண்டும்
மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அருள் உணர்வைத் தூண்டி…
1.உங்கள் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தச் செய்து
2.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி உணர்வுகளை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெற்று அதனின் வலுக் கொண்டு “அவரவர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை” சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க முடியும்.
ஏனென்றால் நாம் அனைவரும் சேர்ந்து வலுக் கொண்டு “உந்தித் தள்ளப்படும் பொழுது…” சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்புக்குள் முன்னோரின் ஆன்மாக்கள் செல்கின்றது.
1.உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைக்கின்றது
3.சப்தரிஷி மண்டலத்துடன் அது சுழலத் தொடங்குகிறது.
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ராக்கெட் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணிலே செலுத்துகின்றார்கள். பூமியின் ஓடு பாதையில் சுழலச் செய்யும் பொழுது அதன் வரிசையில் சுழல்கின்றது.
அதே சமயத்தில் தெற்கு வடக்காகச் சுழலும் பொழுது அந்தச் சூழலின் தன்மைக்கு இதனின் ஈர்ப்பு வேகத்தைக் கூட்டும் பொழுது அது சுழல்கின்றது. அதனுடைய வேகத்தைக் குறைத்து பூமியின் சுழல் வட்டத்தில் சமமான நிலைகள் இருக்கும் பொழுது… “அது எந்த ஊரின் எல்லையோ…” அங்கேயே நிலைகொண்டு அதனைச் செயல்படுத்துகின்றது.
இதைப் போன்று தான் எந்த மனித உடலில் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றனரோ அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் செலுத்தி… அதனின் வலுக் கொண்டு மூதாதையரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் முறைப்படி விண் செலுத்துதல் வேண்டும்.
அவ்வாறு விண் செலுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றது. பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலேயே சுழலத் தொடங்குகிறது.
அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்
1.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அதைப் பெற்று
2.வாழ்க்கையில் வரும் கடும் தீமைகளையும் மாற்றி அந்த மகரிஷிகளின் உணர்வை வளர்த்துக் கொள்ளலாம்.
பௌர்ணமி தோறும் அனைவரும் ஒன்று சேர்ந்து இதைப் போன்று செயல்படுத்த வேண்டும்.
இதற்கு முன்பு நாம் செய்யாத்தால் நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்று இருந்தாலும் நாம் எடுக்கும் வலுவின் துணை கொண்டு
1.அந்த உடலிலிருந்து எப்பொழுது வெளி வந்தாலும் நம்முடைய நினைவின் ஆற்றலை அங்கே பெருக்கப்படும் போது
2.அந்த உடலில் பெற்ற நஞ்சினைக் கரைத்து விட்டு விண் செல்லும் தகுதியை நாம் ஏற்படுத்த முடியும்.
ஆகவே நாம் தளராது இதைச் செய்ய வேண்டும். மனிதனாக நம்மை உருவாக்கிச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த நம்முடைய முன்னோர்கள் மீண்டும் பிறவிக்கு வராதபடி செய்வதே நம்முடைய “தலையாயக் கடமையாக” வைக்க வேண்டும்.
ஆங்காங்கு உள்ளோர் கூட்டுத் தியானங்களின் மூலம் முதலில் இதை வலுப்படுத்திச் செயல்படுத்த வேண்டும். உடலை விட்டு வந்த ஆன்மாக்களைத் துரிதமாக நாம் விண் செலுத்த முடியும். காரணம் அவருடைய உணர்வுகள் தான் நம் உடலாக இருக்கின்றது. எளிதில் அனுப்ப முடியும்.
ஆனால் இப்பொழுது சாங்கியத்தைத் தான் நாம் கடைப்பிடித்து வருகின்றோம். சுட்ட சாம்பலைக் கொண்டு போய் ஓடும் தண்ணீரில் கரைத்தால் பாவம் போய் மோட்சம் போவார்கள். மோட்ச தீபம் ஏற்றினால் சொர்க்கம் செல்வார்கள் என்று தான் செய்து கொண்டுள்ளோம்.
ஆகவே காலத்தால் மறைந்த அந்த உண்மைகளை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் செயல்படுத்தி நம் முன்னோர்களின் ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பிறவியில்லா நிலை பெறச் செய்வோம்.
அவர்கள் ஒளி நிலை பெற்றால் அவருடைய துணை உண்டு இந்தப் பூமியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு வாழ்க்கையில் நாம் மகிழ்ந்து வாழவும்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவும் முடியும்.
இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… உயிரே நமக்குச் சொந்தம். ஆனால் வழக்கத்தில் நாம் உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலையில் இருக்கின்றோம்.
உயிரை நாம் சொந்தமாக்க வேண்டும் என்றால் குரு காட்டிய அருள் வழியில் நாம் இதைச் செயல்படுத்துவோம்.
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது… உடலாக்குகிறது
2.அப்படிப்பட்ட உயிரைச் சொந்தம் என்று யாரும் எண்ணவே இல்லை.
3.அவனால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல்.
4.அவனை வேண்டி அந்த அருள் உணர்வுகளை நாம் வலுவாக்கிக் கொண்டால்
5.உயிருடன் ஒன்றி என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பிறர் நம்மைக் குறை கூறுவதோ குற்றம் சொல்வதோ அவரவர் உணர்வுக்குத் தக்க பேசுவார்கள். உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களில் ஏங்கித் தியானிக்க வேண்டும்
1.ஏனென்றால் குறை உணர்வுகளைக் கண்ணின் கருமணி தான் அதைக் கவர்கிறது.
2.அதன் வழியாகத்தான் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களுக்குச் (செய்தியாக) செல்கின்றது… உடல் உறுப்புகளுக்கெல்லாம் இணைக்கிறது
3.குறை உணர்வை இழுத்து நம் முன்னாடி பரப்பப்படும் பொழுது அந்த உணர்வுகளே வலுப்பெறுகின்றது
4.அதன் இயக்கத்திற்கு நம்முடைய நிலைகள் சென்று விடுகின்றது… அது நம்மை இயக்க ஆரம்பிக்கின்றது.
5.அவர் செய்யும் தவறை நமக்குள் ஏற்று அவர் வழியிலேயே நடக்கும் நிலை வருகின்றது.
ஏனென்றால் வாலி அது வலிமையானது.. அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது நம் நல்ல குணங்களை இயக்க முடியாது தடைபடுத்தி விடுகின்றது.
ஆகவே ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அவர் உணர்வு நம்மை இயக்கக் கூடாது. அடுத்த நிமிடமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.கண்ணின் கருமணியில் இணைக்கப்படும் போது
2.நம்மை அவர் குறை கூறிய உணர்வு அதிலே இல்லாதபடி துடைக்கின்றது… சுத்தப்படுத்துகிறது.
ஏனென்றால் கண்களால் தான் அவருடைய செயலை நாம் பார்த்தோம். கருமணிகளில் அது பட்டு அந்த உணர்ச்சிகளை உள்ளே அனுப்புகிறது. அப்போது கருமணியில் அந்த அழுக்கின் தன்மை படுகிறது.
அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கருமணிகளைச் சுத்தப்படுத்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.
இந்த வலுவைச் சேர்த்து விட்டால்
1.கண்களால் பார்த்த இந்த உணர்வுகள் உடல் உறுப்புகளை இயக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்துக் குறையை இழுக்காதபடி முதலில் தடைப்படுத்துகின்றோம்
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
இத்தகைய வலுவான உணர்வுகள் வரப்படும் பொழுது நமக்குள் அவர் முதலிலே பேசிய அந்தக் குறையான உணர்வுகளை இது தள்ளி விட்டு விடுகின்றது. நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.
பின்… அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் அவரிடத்தில் தோன்ற வேண்டும்; பண்பும் பரிவும் பெறக்கூடிய அந்த அருள் உணர்வு அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணி விட்டால் இதன் உணர்வு நமக்குள் நல்லதை இயக்கும் சக்தியாக மாறுகின்றது.
எப்படித் தான் இருந்தாலும் பிறர் குறை கூறாமல் இருக்க மாட்டார்கள். எவ்வளவு நல்லது செய்தாலும் காசை வாங்கிக் கொண்டு செய்கின்றார்…! சும்மாவா கொடுப்பார்…?
1.தர்மம் செய்தால் அவர் அதைச் சும்மாவா கொடுக்கின்றார்…
2.ஏமாற்றுவதற்காகக் கொடுக்கின்றார்…! என்றெல்லாம் சொல்வார்கள்.
இதைப் போன்ற மற்றவரின் உனர்வை நாம் எடுத்தால்
1.அவர்கள் மீது நமக்கு வெறுப்பும்
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் மீது வெறுப்பும் ஏற்பட்டு விடுகின்றது… “நமக்குள்ளேயே…!”
இதைப் போன்ற நிலைகளை நாம் ஒவ்வொரு நொடியிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் பல கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலுவைச் சேர்த்துத் தான் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.
இருந்தாலும் மனிதன் ஆன பின் இதைப் போன்ற குறைகளை நுகர்ந்தால் அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் கொடுமைப்படும் நிலையை வருகின்றது.
அந்த நல்ல அணுக்கள் பலவீனம் அடையாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து வலிமை பெறச் செய்து உயிருடன் ஒன்றி என்றும் அழியாத… பேரின்ப நிலையான… அருள் பெற வேண்டும்.
அதைத்தான் ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.
1.கண் விழித்தவுடனே காலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எந்தப் பகைமையும் நமக்குள் வளராதபடி அருள் உணர்வுகளை எடுத்து
3.பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்.
இந்த உபதேசத்தின் நோக்கமே அதற்குத் தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தியானம் செய்யும்போது எப்போதுமே புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரைத் தான் எண்ணி தியானிக்க வேண்டும். “என் (ஞானகுரு) உயிரை எண்ணுவதனால் பயனில்லை…”
சாமி (ஞானகுரு) உயிரால் உருவாக்கப்பட்ட அருள் உணர்வலைகள் இங்கே பரவி இருக்கப்படும் பொழுது உங்கள் உடலிலே அது பதிவாகின்றது.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைத் தான்
2.குரு வழியில் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏகமாக எண்ணி
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பிக் கொண்டே உள்ளோம்.
4.மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்
குரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது எல்லோரும் சேர்ந்து… தியானத்தின் மூலம் தவமிருந்து வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே உண்டு… அது உங்களுக்குக் கிடைக்கின்றது.
அது மிகவும் வலிமைமிக்க சக்தி…!
யாம் சொன்ன முறைப்படி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம்.
எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் இந்த முறைப்படித் தான் எண்ணி அதைச் செயல்படுத்த வேண்டும். ஆனால்
1.நமது ஆசை நல்ல உணர்வின் தன்மை கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்.
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய இச்சையில் நாம் செயல்பட வேண்டும்
3.அதன் வழி ஏங்கித் தியானித்தால் உங்களுக்கு அது கிடைக்கும்.
ஆகவே எந்தத் திசையில் எங்கிருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் மிகவும் எளிதாக கிடைக்கும்.
1.அது வலிமைமிக்க சக்தியாக உங்களுக்குள் வரும்
2.உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய ஆசைகள் எல்லாம் குரு வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதாக இருக்க வேண்டும். குரு துணை கொண்டு அதைத் தான் பரப்புகின்றோம்.
எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது நம் பூமி முழுவதும் அது படர்கின்றது
உலகின் எந்த மூலையிலிருந்து நீங்கள் எண்ணினாலும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைப் பெற முடியும் (வாக்காகக் கொடுக்கின்றேன் – ஞானகுரு)
2.ஏனென்றால் அவர் உணர்வுகளைப் பெற்று தான் நான் வளர்ந்தது
3.அவர் உணர்வை எடுத்துத் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்…
4.அவர் இன்று ஒளியின் உடலாக இருக்கின்றார்… அவருடைய உணர்வை எளிதில் பெற முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வை எனக்குள் விளைய வைத்து அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்கும் கொடுக்கின்றேன்.
ஆகவே…
1.ஞானகுரு கூறிய வழிப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்றால்
3.இது தான் முறை… முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றோம்.
குரு காட்டிய உணர்வுகள் எனக்குள் விளைந்தாலும் ஒளியின் உடலாக இருக்கும் அந்தக் குருவின் அருளை எளிதில் பெற முடியும். ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தில் அவர் உள்ளார்.
அவர் உடலுடன் இங்கே இருந்த காலத்தில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் ஆழமாகப் பதிவானது. அதை உங்கள் எல்லோருக்குள்ளும் பதிவு செய்து… ஒருக்கிணைந்து அந்த உணர்வின் தன்மை அலைகளாகப் பரப்பி வைத்திருப்பதனால் அதனை நீங்கள் எளிதில் பெற முடியும்.
“சாமி செய்து கொடுப்பார்…” என்றால்
1.குருவின் வழியை நமக்குக் காட்டினார்
2.அந்த ஞானத்தின் வழியினைப் பதிவாக்கப்படும் பொழுது இதுவே குருவாக அமைந்து
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் அருள் வழியாகக் கிடைக்கும்
4.குரு ஒளியான உணர்வைப் பெறக்கூடிய தகுதியும் நீங்கள் பெறுவீர்கள்.


கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
இந்த மனித வாழ்க்கையில் தீமைகளைக் காணும் பொழுதெல்லாம் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நுகர்ந்து
1.ஒவ்வொரு நொடியிலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் ஆன்மாவை இணையச் செய்யும்
2.அந்த வலுவான நிலைகளை உங்கள் உடலில் உருவாக்குதல் வேண்டும்.
இவ்வாறு உருவாக்கினால் இந்த வாழ்க்கைக்குப் பின் இதே உடலில் உருவான உயிருடன் ஒன்றி கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து அதனுடன் இணைய முடியும்.
கணவன் மனைவியாக இணைந்து குழந்தையை எப்படி உருவாக்குகின்றோமோ… அது போல் இருவரும் துருவ தியானத்தில் கணவனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று மனைவியும் மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவனும் இவ்வாறு உணர்வால் ஒன்றிய பின் “இரு உயிரும் ஒன்றாக இணைந்து விடுகின்றது…”
இரு உயிரும் ஒன்றான பின் அருள் ஒளியின் உணர்வை உருவாக்கி ஒளியின் சரீரமாக இயங்கத் தொடங்கும்.
1.உயிருக்குள் வெப்பம் என்ற நிலை இருக்கும் பொழுது அது விஷ்ணு என்றும்
2.அதிலே ஈர்க்கும் காந்தத்தை லட்சுமி என்றும்
3.ஆண் பெண் என்ற நிலை இல்லை என்றால் இதை உருவாக்க முடியாது.
ஆண் என்ற நிலையில் இயங்கினாலும் பெண் என்ற நிலையில் இணைக்கும் போது எண்ணத்தால் உருவாக்கும் அருள் சக்தியை… “தன்னுடன் இணைத்துப் பெருக்கும் சக்தி பெறுகின்றது…”
காரணம் – அமிலத்தின் தன்மை கொண்டு ஒன்றைத் தனக்குள் வளர்த்திடும்… அதை உருவாக்கும்… உணவாகக் கொடுத்து வளர்த்திடும் திறன் பெற்ற அமிலங்கள் பெண்கள் உடலில் உண்டு.
ஆண்களில் திடப்பொருளின் தன்மையை இறுகச் செய்யும் நிலையில் இருப்பினும் பெண் உணர்வுடன் கலந்து உயிருடன் ஒன்றி உருவாக்கினால்
1.உடலை விட்டு அகன்றால் இரு உயிரும் இணைந்து
2.ஒருவர் பின் ஒருவர் சென்றாலும்… அல்லது
3.இந்தத் தியானத்தில் இணைந்து வாழ்ந்தால் ஒன்று முன் சென்றாலும்
4.பின் வரும் தன் கணவனோ தன் மனைவியோ அவர் உணர்வையும் அரவணைத்து ஒன்றியே அதை அழைத்துச் செல்லும்.
5.எந்த விண்ணை நோக்கி ஏங்கி எடுத்தோமோ அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
6.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிலே வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணைய முடியும்.
இந்தப் பிரபஞ்சம் அகண்ட அண்டத்தில் வரும் சக்திகளை நுகர்ந்தாலும் நமது பூமி நுகரும் தருவாயில் பூமியில் உருப் பெற்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக அமைந்திருப்பதனால் பூமிக்கு வரும் உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியான உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலங்கள் அதுவும் ஒளியின் சுடராக வளர்கின்றது.
சூரியன் எப்படிக் கோள்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கிப் பிற மண்டலத்திலிருந்து வருவதைச் சூரியன் கவர்ந்து அனைத்தையும் அரவணைத்து எப்படி வளரச் செய்கின்றதோ இதைப் போல் தான் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் நிலை கொள்ளுதல் வேண்டும்.
இந்த வளர்ச்சிக்கு நாம் செல்ல வாழ்க்கையில் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.
மனிதனாகப் பிறந்தோம்… உடல் மடிகிறது…! என்றால் மனித வாழ்க்கையிலே விஷத்தின் தன்மை அளவுகோல் கூடும் பொழுது தான் உடலில் நல்ல அணுக்கள் மடிகின்றது.
மடிந்து உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா எந்த ஆசையை வளர்த்து வாழ்ந்ததோ பேயாசையாக மாறி… எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஒன்றை பெறப் வேண்டும் என்ற ஆசையின் உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது இன்னொரு மனித உடலுக்குள் புகுந்து அந்தப் பேயாசையை அங்கே ஊட்டி அந்த விஷத்தன்மையை அந்த உடலிலும் அதிகமாகச் சேர்த்து அந்த உடலை வீழ்த்தி விட்டு வெளிவந்த பின்… மனிதன் அல்லாத நிலைகளைத் தான் பெறச் செய்கின்றது.
1.ஆனால் நம்முடைய ஆசை அருள் மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றி
2.அந்த உணர்வினை நமக்குள் எடுத்தால் எந்த மனிதனுடைய ஈர்ப்புக்குள்ளும் செல்லாது
3.அருள் ஒளியின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
இந்த வலுவைச் சேர்த்தால் நாம் அங்கே செல்கின்றோம். “மனிதனின் கடைசி எல்லை சப்தரிஷி மண்டலத்தை அடைவது தான்…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எத்தனையோ பல சிக்கல்கள் வருகிறது. இதைத் தடுப்பதற்கு நாம் எந்த ஆயுதம் வைத்திருக்கின்றோம்…?
உதாரணமாக நாம் வயல்களில் பயிரிடுகின்றோம் என்றால் ஒரு வேலியைப் போட்டு மறைத்து மற்ற உயிரினங்கள் வராதபடி பாதுகாத்துக் கொள்கின்றோம். இதே போல் தான்
1.நம் உடலில் கார்த்திகேயா…!
2.இந்த ஆறாவது அறிவு நாம் தெரிந்து கொள்ளும் அறிவாக வருகின்றது,
3.சேனாதிபதி இந்த ஆறாவது அறிவு தீமைகள் வராது பாதுகாக்கின்றது.
அதே சமயத்தில் மனிதனின் ஆறாவது அறிவு என்கிற பொழுது தன் எண்ணத்தால் உருவாக்கும் சக்தி பெற்றது. அதாவது ஒன்றை ஒன்றுடன் இணைத்தால் ஒன்று உருவாகும் என்று அறிந்து செயல்படும் அறிவைப் பெற்றவன்.
அருள் ஒளி பெற்றவன்… உணர்வின் தன்மை ஒளியின் தன்மையாக உருவாக்கியவன்… ஒளியின் சரீரமாகப் பெற்றவன்… யார்…? அந்த அகஸ்தியன்…! அந்த ஒளியான உணர்வை நமக்குள் நுகர்ப்படும் பொழுது இருளை அகற்றும் ஒளியின் உணர்வாக நமக்குள் உருவாக்க முடியும்.
நஞ்சை ஒடுக்கிய அந்த ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது இருள் என்ற நிலைகள் இங்கே அகற்றப்படுகின்றது.
பாம்புகள் தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குகின்றது, அந்த விஷங்கள் பாம்பின் உடலில் பல வர்ணங்களாக நாகரத்தினமாக ஆகிறது. ஆனால்
1.அந்தத் துருவ மகரிஷியோ (அகஸ்தியன்) விஷத்தை வென்று ஒளியின் உணர்வாகப் பெற்றவன்
2.அது நீல நிறமாக இருக்கும்… இளம் நீலம்…!
நெருப்பு எரியும் பொழுது அதில் நீல நிற ஜுவாலை வந்தால் அது வீரியமான நெருப்பாக வரும். இதே போலத் தான் துருவ நட்சத்திரத்தின் ஒளியும் தெரியும்.
1.வானத்தில் மற்ற நட்சத்திரங்களைக் காட்டிலும்
2.துருவ நட்சத்திரத்தைப் பார்த்தோம் என்றால் இளம் நீலமாகப் பள…பள..பள.. என்று மின்னும்.
3.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நமக்குள் நுகர்ந்து பழக வேண்டும்.
4.இந்த உணர்வை நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்க வேண்டும்.
உதாரணமாக வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் என்ற உணர்வுகளை நாம் நுகரும் பொழுது ஓ…ம் நமச்சிவாய.. என்று அந்தந்தக் குணத்திண் அணுக்களாக உருவாக்கி அவைகள் எல்லாம் நம் உடலாக மாறுகின்றது.
ஆனால் அத்தகைய உணர்வுகள் நம் உடலாக ஆவதற்கு முன்னாடியே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதற்கு ஜீவன் கொடுக்காதபடி தடுத்து விட வேண்டும்.
அகஸ்தியனைப் போன்று நாம் நம் உணர்வுகளை ஒளியாக மாற்றிடல் வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறோம் (ஞானகுரு).


இந்தப் பிள்ளை யார்…?
ஒளியின் சிகரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எவ்வாறு பெற வேண்டும்…? என்பதை உணர வேண்டும்.
1.அவர்கள் விண்ணுலகம் சென்ற உணர்வை நாமும் நுகர்ந்து
2.வாழ்க்கையில் வரும் தீமைகளைச் செயலற்றதாக மாற்றி
3.அருள் மகரிஷிகள் உணர்வுகளை அரும்பெரும் சக்தியாக மாற்றச் செய்வது தான் விநாயகர் தத்துவம்.
இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறியிட்டு அங்கே காட்டியிருப்பார்கள்.
புழுவிலிருந்து மனிதனாக வந்த நிலையில் மனிதனாக ஆனபின் மற்ற தீமைகளை அடக்கி விட்டு உயர்ந்த ஒளியின் உணர்வாக தனக்குள் அரசாட்சி பரிந்து அதையே ஒளியாக மாற்றி
1.விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.அவனுடன் ஒன்றிய அவனாக நாம் மாறுகின்றோம்.
நாம் எண்ணிய உணர்வு அனைத்தும் “நான்” என்றாலும் உயிரின் தன்மை கொண்டு தனித்த நிலையில் உயிரே இயக்குகின்றது. அதிலே நாம் எண்ணிய உணர்வு எதுவோ அதனுடன் இணைந்து செயல்படும் போது “தான்” ஆகின்றது.
உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும் பொழுது அனைத்தும் நானாகின்றது… அதாவது நான் தானாகி… தான் நானாகின்றது.
உயிரின் தன்மை தனக்குள் ஒளியின் சிகரமாக மாறினாலும்… உணர்வுகள் தனக்குள் அடர்த்தியாகி இது மறைத்தாலும்
1.தான் என்ற இரு நிலைகள் கொண்டு இயங்குவதை
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாறிய பின்… ஒளிச் சரீரமாக மாறிய பின் “நான் ஆகின்றது…”
நான் தானாகி… தான் நானாகிறது என்பதைத் தான் இந்தப் பிள்ளை யார்…? என்ற நிலையை நிலைப்படுத்தி அதை அறிந்திடும் நிலையாக இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் தன்மையைக் கார்த்திகேயா என்று அழைக்கின்றார்கள்.
அந்த ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தி “மகரிஷிகளுடன் என்றும் ஒன்றியே வாழ்வோம்…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று எடுத்துக் கொண்டால் மதத்திற்கு என்று குருக்கள் உண்டு. உயர்ந்த தத்துவத்தை எல்லாம் பேசுவார்கள்.
1.ஆனால் அந்தத் தத்துவங்கள் மற்றவருக்குத் தானே தவிர
2.அந்தத் தத்துவம் தனக்கில்லை என்று நிலைகளில் தான் நடந்து கொள்வார்கள்.
அந்தத் தத்துவத்தின் கீழ் நடக்காதிருந்தாலும் அந்தத் தத்துவத்தை வளர்க்கப்படும் போது மற்ற மதங்களைப் பழித்துப் பேசுவதும் பகைமை ஊட்டுவதும் போன்ற நிலைகள் தான் இன்றும் உண்டு. எல்லோரையும் இணைத்துச் சேர்க்கும் நல்ல பண்புகள் இல்லை.
ஆனால் அந்த உயர்ந்த பண்பு நம் நாட்டில் நம் காலத்தில் வளர்ந்த தவறு செய்த ஒரு மகானுக்கு எப்படி வருகிறது…? தன் சுகபோகங்களுக்கும் சிற்றின்பங்களுக்கும் மது வகைகளுக்கு அடிமையான அந்த மனிதன் காந்திஜி தான்…!
காந்திஜி அரசியல் சட்டங்களை உணர்ந்தவர். BHARAT LAW மேல் நாட்டிலே படித்துணர்ந்தார். மேல் நாட்டின் அறிவையும் அவர் உணர்ந்தார். மேல் நாட்டில் செய்யும் அநாகரிகத் தன்மையெல்லாம் இங்கேயும் வந்து செய்தார்.
இவர் தனக்குள் இன்பத்தையும் சுகபோகத்தையும் குடிப்பதையும் தன் தாய் தந்தையையும் மீறியும் செயல்பட்டவர். மேலை நாட்டினர் நாகரீகத்தையும் மேலை நாட்டார் செய்யும் செயல்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டவர்.
ஏனென்றால் செல்வத்தின் செழிப்பில் ஜமீன்தார் என்ற முறையில் அவர் வளர்ந்து வந்ததனால் பல சுக போகங்களையும் அனுபவித்து வந்தவர் அவர்.
ஆனால் இவருக்கு எப்படி இந்த ஞானம் கிடைத்தது…?
ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலுக்காகச் செல்லும் பொழுது அவர் தன் கண் முன் பல தவறுகள் நடப்பதைக் கண்டுணர்ந்தார். அங்கே நீக்ரோக்கள் வேதனைப்படும் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உணர்கின்றார்.
மதத்தை அடிப்படையாகப் படிப்பதும் மற்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற சட்டத்தைப் படித்த அவர் தீமையில் இருந்து இந்த மக்களை எப்படி விடுவிக்க வேண்டும் என்ற நிலையைத் தனக்குள் நாளுக்கு நாள் வலு பெறச் செய்கின்றார்.
காந்திஜி தனது வாழ்க்கையில் தவறுகள் பல செய்து இருப்பினும் அந்த தவறுகளில் இருந்து தான் எவ்வாறு மீள வேண்டும் என்ற உணர்வுகள் படிப்படியாக அவருக்குள் மேலோங்குகின்றது.
பிரிட்டனிடம் இருந்து ஒரு மதத்தின் அடிப்படையில் சிக்கி அவனுக்குக் கீழ்
1.தர்மத்தை அழித்துக் கொண்டு இருக்கும் அதிலிருந்து நீதி வேண்டும்.
2.உலக மக்கள் மற்றோர் அடிமையில் இருந்து மீள வேண்டும்.
3.அருள் ஞானிகள் காட்டிய அருள் செயல்கள் தனக்குள் வளர வேண்டும் என்ற பேருண்மையைத் தனக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றார் காந்திஜி.
அதே சமயத்தில் தான் படித்த படிப்பின் நிலைகள் கொண்டு உலக நிலைகளை அறிவதற்கு தன் எண்ணங்களைப் பரவவிட்டு உலக நூல்களை அனைத்தும் படிக்கின்றார்… படிக்கின்றார்…!
படிப்பின் நிலைகள் கொண்டு
1.நாட்டில் நடக்கும் அரசியல் வாழ்க்கையும்
2.மதங்கள் சேர்ந்து மத வாழ்க்கையும் மக்களை எப்படித் திசை திருப்புகின்றது..?
3.மக்களுடைய மன நிலைகள் எப்படி மாறுகின்றது…?
மதத்திற்கு மதம் போர் செய்வதும் மதத்திற்குள் இனங்கள் ஒன்றொன்று போர் செய்தும் உண்மையில் மகான்கள் கொடுத்த ஞானிகள் கொடுத்த மனித வாழ்க்கைக்கு உண்டான நிலைகள் சிதறுண்டு உண்மையைப் பெற முடியாது எவ்வாறு போகின்றது இந்த நாடு…? என்ற நிலையைத் தெளிவாகக் கற்றுணர்கின்றார் மகாத்மாஜி.
வான்மீகி இயற்றிய இராமாயணத்தைக் காந்திஜி தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் அந்த வான்மீகி மகரிஷியைத் தான் தன் எண்ணத்தில் எடுத்துக் கொண்டார்.
அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் பெற்று விட்டால் நம்மை அறியாமல் இயக்கும் தீமை உணர்வுகளை அடக்கித் தீமை செய்வோர் உணர்வுகளிலிருந்தும் நாம் விடுபட முடியும் என்று அதை முழுமையாக உணர்கின்றார்.
சுதந்திரம் என்றால்… “நம்மை ஒருவர் ஆட்சி புரியக்கூடாது…” அதற்காக காந்திஜி
1.ஆங்கிலேயர்களை… “அந்நியர்கள்…” என்று சொல்லவும் இல்லை.
2.கொடூர உணர்வு கொண்டு நம்மை ஆட்சி புரிவதை விடுத்து விட்டு
3.”சகோதரத்துவத்தைத் தான்…” நாம் வளர்க்க வேண்டும்
4.அதைத் தான் நமக்குள் ஆட்சி புரியச் செய்ய வேண்டும் என்று தான் காந்திஜி சொன்னார்.
“மகிழ்ச்சி…” என்ற உணர்வுகளை என்றுமே நமக்குள் சுதந்திரமாக இயங்கச் செய்வதே (கல்யாணராமா…!). வான்மீகி மாமகரிஷி காட்டிய இராமாயணக் காவியத்தின் மூலக் கரு அது தான்.
அந்த உணர்வை அவர் வைராக்கியமாகக் கடைப்பிடித்ததால்… அவருடைய எண்ண வலுவால்… நம் நாட்டுக்குச் சுதந்திரத்தையும் பெற்றுத் தர முடிந்தது. உலக மக்கள் மனதிலும் அவர் இடம் பிடித்தார்.
நாம் அனைவரும் சகோதரர்களே…! என்றார் காந்திஜி. அவர் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க உணர்வுகள் நமக்கு முன் பரவியுள்ளது. அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
அவர் உணர்த்திய சகோதரத்துவத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் பகைமைகளிலிருந்து விடுபடலாம். மன பலமும் மன வளமும் பெறலாம்.


துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்
பூமிக்குள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது… கொதிக்கும் தருணத்தில் இருப்பதால் கடல்கள் பெருகுகின்றது. நிலங்கள் குறையப் போகின்றது.
மனிதனுடைய உணர்வுகள் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக… நஞ்சு கொண்ட பிராணிகள் மற்றொன்றைக் கொன்று புசிப்பது போன்று
1.இரக்கமற்ற உணர்வுகள் நஞ்சின் தன்மையாக மனித உணர்வுக்குள் கலந்து
2.மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.
இத்தகைய நஞ்சினை நாம் பிளக்க வேண்டும்.
ஞானிகள் உணர்வை நுகர்ந்து விண் செல்லும் மார்க்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அழியாச் சக்தியான அந்த ஞானிகள் உணர்வைச் சேர்த்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளை இந்த வாழ்க்கையிலே பெற வேண்டும்… பெற முடியும்.
அகஸ்தியன் எல்லாவற்றையும் தெரிந்து சக்தி பெறவில்லை வியாசகன் அறிந்து பெறவில்லை. எல்லாமே சந்தர்ப்பம் தான்…!
1.இதைப்போன்று தான் சந்தர்ப்பத்தால் நீங்கள் இந்த உபதேசத்தைக் கேட்டறிகின்றீர்கள்.
2.உங்களுக்குள் பதிவாந பின் அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.அந்த ஞானிகள் உணர்வை நிச்சயம் பெற முடியும்.
உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்.
ஏனென்றால் எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றான்… உணர்வினை ஜீவனாக்குகின்றான்… அணுவாக மாற்றுகின்றான்… அணுவின் மலமாக உடல் ஆக்குகின்றான்.
அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெறும் பொழுது அதையே அணுவாக மாற்றுகின்றான். அணுவின் தன்மை ஒளியாக உருப்பெறுகின்றது. ஆகவே நாம் ஒளியாக வளர்த்துக் கொள்ள முடியும்.
அருள் ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்து நாம் இணைத்துக் கொண்டே வந்தால் தீமைகளை அகற்றும் உணர்வாக விஞ்ஞானத்தினால் வரக்கூடிய எத்தகைய நஞ்சுகளை மாற்ற முடியும்.
சூரியன் தான் சுழலும் பொழுது தன் மீது மோதும் நஞ்சினைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிச் சுடராக ஆக்குவது போன்று உலகையே காத்து இரட்சிப்பது போன்று… இனி வரக்கூடிய எத்தகைய நஞ்சினைப் பிளந்திடல் வேண்டும்.
ஞானிகள் உணர்வை உள் புகுத்தி அதைப் பிளக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
1.ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று
3.திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது உடலுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகள் சென்று
4.கேட்டறிந்த பார்த்துணர்ந்த காற்றுக்குள் மறைந்து வரும் தீய உணர்வுகளை “நம்முடன் இரண்டறக் கலக்காது…” அதைப் பிரித்து விடுகின்றது.
அது ஓங்கி வளரும் பொழுது பிறிதொரு உணர்வு ஆன்மாவாக இருப்பதைப் பிளந்து விடுகின்றது. இதைத்தான் மடி மீது வைத்து நாராயணன் வாசல்படி மீது அமர்ந்து இரண்யனைப் பிளந்தான் என்று நரசிம்ம அவதாரமாகக் காட்டியுள்ளார்கள்.
அத்தகைய நரசிம்ம அவதாரமாக ஒவ்வொருவரும் மாறினால் தான் இனி வரும் இருளான நிலைகளிலிருந்து நம்மை மீட்க முடியும்… மற்றவர்களையும் மீட்கும் சக்தியாக நாம் வளர முடியும்.
ஆகவே
1.உயிருடன் ஒன்றி ஒளியாக என்றுமே நிலைத்திருப்போம்
2.அந்த ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம்… அனைவரும் செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தொழில் செய்யும் பொழுது அடிக்கடி நீங்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணத்துடன் வியாபாரத்தில் அமர்கின்றீர்கள். அந்த நேரத்தில் “வேதனைப்படுத்தக் கூடியவர்கள் தான்…” கடைக்கு வந்து நம்மை அணுகுவார்கள்.
வியாபாரத்திற்குத் தான் வந்தார்கள் என்ற நிலையில் நியாயமான உணர்வுகளைப் பற்றி நாமும் பேசுவோம்… அவர்களும் அதையே பேசுவார்கள். அப்படிப் பேசப்படும் பொழுது அவருக்குள் நாம் இணைந்து விடுவோம்.
1.ஆனால் அவர் ஏமாற்றுபவராக இருப்பார்…
2.நம்மை ஏமாற்றத் தெரிந்து கொண்டவர். அதனால் அவருக்குப் பயனாகின்றது.
3.பார்… நான் எல்லாம் செய்தேன்… நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவனே… என்னை மோசம் செய்துவிட்டான்…! என்போம்.
வேதனை உணர்வுகளால் நம் சிந்திக்கும் தன்மை இழந்து எப்படி இந்தக் கஷ்டத்திலிருந்து மீளலாம்…? என்ற உணர்வு தான் முதலில் நமக்குள் தூண்டப்பட்டிருக்கும்.
இருந்தாலும்… நாம் வேதனையுடன் இருக்கும் இந்தச் சமயத்தில் ஏமாற்றுபவர்கள் இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
1.அத்தகைய ஆள்கள் தான் அந்த நேரத்தில் நம்மிடம் வருவார்கள்.
2.நல்லவர்கள் வருவதோ… நமக்கு நல்ல யோசனை சொல்வதோ வராது.
3.நல்லவர்கள் அப்படி வந்து யோசனை சொன்னாலும் “இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்…” என்ற எண்ணம் தான் நமக்கு வரும்.
4.நம்முடைய வேதனை நல்லவரை நம்பாதபடி செய்துவிடும்.
ஆனால் வேதனையான குணத்திற்குத் தக்கவாறு நினைக்கும் பொழுது நம்மை ஏமாற்றும் நோக்கத்தில் வந்தவர்… நல்லவராகவே தோன்றும். ஏமாற்றிய பின் தான் நாம் உணர்வோம்.
இதைப் போல் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே பல சூழ்நிலைகள் உருவாகி நம்மை இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்…?
“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அதிகாலையில் கண் விழித்தவுடன் துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கும் சக்தியின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இந்த வாழ்க்கையில் எத்தகைய நிலை ஆனாலும் சரி
2.தொழில் செய்யும் பொழுதும் சரி
3.உறங்கும் பொழுதானாலும் சரி
4.உணவை உட்கொள்ளும் பொழுதும் சரி
5.வெளியிலே போகும் பொழுதும் சரி
6.வியாபாரத்தில் ஒரு பொருளைக் கையில் எடுத்துக் கொடுக்கும் பொழுதும் சரி…!
7.”ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
8.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இணைத்தே வாழ வேண்டும்.
நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாடிக்கையாளரும் அவர் குடும்பத்தாரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
இப்படிச் செய்தால் உங்கள் வேதனைகள் அகலும். மனமும் அமைதி ஆகும்… மகிழ்ச்சி தேடி வரும். அதனால் தொழிலும் நன்றாக இருக்கும்.
அதே மாதிரி நம் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று மிகுந்த வேதனைப்படுகின்றோம். அதற்குக் காரணம் என்ன…?
உதாரணமாக ஒரு சந்தர்ப்பத்தில் தேள் வருகிறது என்று அதை அடித்துக் கொன்று விடுகின்றோம். அந்த உயிர் நம் உடலுக்குள் உறைவிடமாக வந்து விடுகின்றது.
வந்த பின் அந்த அணுவின் தன்மை கருவிலே விளையப்படும் பொழுது கருவுக்குள் வரப்படும் பொழுது தான் அந்தச் சந்தர்ப்பத்தையே உருவாக்கும்.
தேளைக் கொன்ற அந்த உணர்வின் தன்மை நமக்குள் வரப்படும் பொழுது அந்த வேதனையின் அணுவின் கருவாக இங்கே நமக்குள் “மனிதனாக உருவானாலும்…!”
1.இது கருப்பையில் தங்கப்படும் பொழுது
2.அந்த வேதனை உணர்ச்சிகள் தோன்றும்… அந்த அலைகளை இழுக்கும்…!
3.வேதனையின் உணர்வின் தன்மை நம் உடலில் இருக்கும்.
(ஏனென்றால் அந்த அணுக்களின் தன்மை)
அப்பொழுது அந்த அணுவிற்குண்டான நிலைகள் “வேதனைப்படுத்தியே பிழைக்க வேண்டும்…!” என்ற உணர்வு அதற்குள் வந்து அப்படிப் பிறந்த பின் அடுத்தவர்களை வேதனைப்படுத்திக் கொண்டே இருப்பான்.
அவனைத் திருத்த வேண்டும் என்றால் எப்படிச் செய்வது…?
நாம் சமையல் செய்யும் பொழுது எவ்வளவு காரலாக காரமாக கசப்பாக இருந்தாலும் அதை எல்லாம் வேக வைத்துச் சுவையாக மாற்றுகின்றோம். சுவையாகச் சமைத்துத் தானே உட்கொள்கின்றோம்….!
அதைப் போல “நம் குழந்தை அப்படி இருந்தாலும்…” அவனைப் பற்றி வேதனையாக எண்ணி
1.நமக்குள் நம் எண்ணத்தை எமனாக்கிவிடக் கூடாது (இது முக்கியம்)
2.மாறாக நம் எண்ணத்தை நாம் கடவுளாக்க வேண்டும்.
3.அதாவது அருள் ஒளி கொண்டு இருளை அகற்றும் கடவுளாக… நம் எண்ணத்தை மாற்றுதல் வேண்டும்.
அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்டே வர வேண்டும். பின் குழந்தையை எண்ணி
1.அவன் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்.
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவன் அருள் ஞானம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகின்றது, அந்த எண்ணத்தின் தன்மை நம் உடலில் இணைந்து
1.உள் நின்று இயக்கும் பொழுது உயிர் கடவுளாகின்றது.
2.அதை மீண்டும் செயலாக்கும் பொழுது அதுவே தெய்வமாகக் காக்கின்றது.
3.அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதுவே குருவாகின்றது.
ஆகவே அத்தகைய குருவின் செயலாக நன்மையின் நிலையையே நாம் மனதில் கொள்ள வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறுவோம்.


எம்முடைய உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டால் உங்களுக்கு நல்ல நேரம்
டாக்டருக்குப் படிக்கச் செல்கிறார்கள் என்றால் “படிக்க வேண்டும்…” என்ற அக்கறை உள்ளவர்கள் படித்து முன்னுக்கு வந்து விடுகின்றார்கள். ஏதோ நான் படித்துக் கொண்டேன் என்று போகிறவர்களுக்குப் படிப்பு ஏறுவதில்லை… சரியான நிலையில் மருத்துவமும் பார்க்க முடிவதில்லை.
அதே மாதிரித் தான் உங்கள் குடும்பத்தில் எத்தனையோ நடக்கின்றது. நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பார்த்து அதற்குத் தக்க காலங்களை நிர்ணயித்துக் காரியங்களைச் செயல்படுத்துகின்றீர்கள்.
1.உங்கள் உடலுக்குள் எதை வலுவாக எடுத்துக் காரியத்தைச் செய்ய முயற்சிக்கின்றீர்களோ அது நல்ல நேரம்.
2.ஜோதிடம் பார்ப்பவர்களோ அல்லது மற்றவர்களோ… “என்ன இந்த நேரத்தில் போய் உன் காரியத்தைச் செய்யப் போகின்றாயா…?” என்று
3.அவர்கள் உணர்வை உள்ளே விட்டு விட்டால் அவர்கள் எண்ணிய உணர்வுப்படி அது கெட்ட நேரமாகி விடுகின்றது.
நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாமே நம் எண்ணத்திற்குள் தான் இருக்கின்றதே தவிர வேறு எதுவும் இல்லை.
ரோட்டில செல்லும்போது ரெண்டு பேர் கோபமாகப் பேசித் தாக்கிக் கொள்கிறார்கள். அதைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது… பார்த்து விடுகின்றோம். அந்த உணர்வினை நுகர்ந்தால் வெறுப்பான உணர்வு நமக்குள் வருகின்றது. அது கெட்ட நேரம்.
ஆனால் அடுத்த கணமே யாம் உங்களிடம் கொடுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி என்று நினைவை அங்கே செலுத்த வேண்டும்.
1.ஏனென்றால் இந்த கண் கருவிழி கருமணி துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்குகின்றது…
2.சண்டை போட்ட உணர்வைத் தள்ளிவிட்டு விடுகிறது… இதைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.
சண்டை போடுபவர்களையும் வேதனைப்படுபவர்களையும் பார்த்து அதைப் பதிவாக்குகின்றோம். அது நம்மை இயக்கத் தொடங்குகிறது.
செல்ஃபோனில் முந்திரி பருப்பு அளவு தான் உள்ளே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான பதிவுகளை ஏற்றும்படி வைக்கின்றார்கள்.
அந்தப் பதிவுகளை வைத்து எத்தனையோ வேலைகளை இன்று மிகவும் எளிதாகச் செய்யும்படி வைத்துள்ளார்கள். யார் பேசுகின்றார்கள்…? என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது… அவர்களுக்கும் காட்டுகிறது.
பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டுள்ளோம். விஞ்ஞான அறிவில் இதைச் செய்கிறார்கள்.
1.இதே போன்றுதான் நம் கண்ணின் கருவிழி விலா எலும்புகளுக்குள் உள்ள ஊனுக்குள் பதிவாக்கி விடுகின்றது.
2.அதை வைத்துத் தான் நாம் பேசுவதும் எண்ணுவதும் இயக்குவதும் எல்லாமே நடக்கிறது.
3.இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டால் அவ்வப்போது வரும் தீமைகளை நீங்கள் உடனுக்குடன் நீக்க முடியும்.
அதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.
ஆனால் மற்ற ஸ்தாபன்ங்களில் இதை எல்லாம் எப்படிச் சொல்லிக் கொடுப்பார்கள் தெரியுமா…?
தன்னுடன் சீடர்களாக வந்து… தான் சொன்னதை எல்லாம் கேட்பவர்களுக்கு… ஒழுக்கமாக வருகின்றார்களா…? இல்லையா…! என்று பார்த்து அதற்கு அப்புறம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இப்படி எல்லாம் வரம்புகளை விதித்து… கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து அந்தக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றார்களா…? இல்லையா…! என்பதை எல்லாம் பார்த்துச் சரியானபடி நடப்பார்களா மாட்டார்களா…? என்று பல தடவை இழுத்தடித்து
1.அதற்குப் பின் மெம்பர் ஆக்கி சத்தியம் வாங்கி…
2.இனிமேல் இதிலிருந்து மாற மாட்டேன் என்று சொல்லிக் கடைப்பிடித்து வருபவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.
ஒரு ஸ்தாபனத்திற்குள் சென்றால் அவர் சொல்வதெல்லாம் கேட்டுப் பதிவாக்கி சத்தியம் செய்ய வேண்டும்… முதலில் இதைத் தான் வாங்குவார்கள். அதற்குப் பின் சொல்லிக் கொடுப்பார்கள்.
1.உங்களிடம் இது எதையுமே நான் வாங்கவில்லை.
2.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உடலை ஆலயமாக மதிக்கின்றேன்.
3.ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் புனிதமாக வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறேன்.
இயற்கையின் இயக்கத்தின் உண்மையை அறிந்து கொண்டேன். குருநாதர் கொடுத்தார். அதை அப்படியே உங்களுக்கும் கொடுக்கின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம்மை ஒருவன் துன்பப்படுத்துகின்றான். அப்பொழுது “இப்படிச் செய்கின்றானே…!” என்று எண்ணுகிறோம். திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது
1.அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.
2.கருவாகி 48 நாள் ஆனபின் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது
3.அது வேதனையை உருவாக்கும் அணுவாக அது உருவாகின்றது.
4.அணுவாகி உடல் உறுப்புகளில் ஒட்டி விட்டால் நம் இரத்தங்களிலிருந்து தான் ஆகாரம் எடுக்கும்.
சூரியன் மற்ற தாவர இனச் சத்துக்களை எல்லாம் தனக்குள் எடுத்துக் காற்றுகளாக மாற்றியமைத்து வைத்துக் கொள்கிறது. ஒரு செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றும் பொழுது
1.காற்றுடன் காற்றாகக் கலந்து வரும்
2.தன் இனமான சத்தின் உணர்வைப் பிரித்தெடுத்து அந்தச் செடி விளையும்.
டி.வி ரேடியோ இவைகளில் ஒலி ஒளி அலைகளாக ஒலி பரப்பு செய்கிறார்கள், எத்தனையோ இடங்களிலிருந்து பரப்புகின்றார்கள். இருந்தாலும் நாம் எந்த அலை வரிசையில் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ இந்தக் காற்றிலிருந்து அந்த ஸ்டேசனிலிருந்து வருவதை மட்டும் பிரித்து நமக்குக் காட்டுகின்றது.
இதைப் போல நாம் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மை நமக்குள் எடுக்கும். நமக்குள் அதை இழுத்தே கவர்கின்றது.
1.வேதனைப்பட்டோம் என்றால் வேதனையைக் கவரும்.
2.கோபத்தை எண்ணினால் கோபமான உணர்வைக் கவரும்.
இப்படி எந்தெந்த எண்ணத்தின் உணர்வை கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மை நமக்குள் கரு முட்டையாக மாறும். இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகங்களில் இது இணைகின்றதோ அந்தக் காலப் பருவமாகும் பொழுது அது அணுவாக மாறுகின்றது. கூட்டை விட்டு வெளி வருகின்றது.
நத்தைகளைப் பார்த்தால் அந்த ஓட்டுடன் ஒட்டி இருக்கும். அந்த ஓடு அதற்குப் பாதுகாப்பு. அதே போல் நாம் கவர்ந்த உணர்வுகள் அனைத்தும் அணுக்களாகப் பாதுகாப்பாக நம் உடலின் உறுப்புடன் ஒட்டி உருவாகின்றது.
அது எந்த உணர்வு கொண்டு உருவானதோ அதனின் சத்தை இரத்தத்தின் மூலம் வருவதை உறிஞ்சி உணவாக எடுத்து அதன் மலத்தை இட்டு உறுப்புகளாகச் சேர்க்கின்றது.
1.ஏனென்றால் அணுவை நாம் பார்க்க முடியாது.
2.ஆனால் அந்த அணுவின் மலம் தசையாக உடலாக மாறும் பொழுது காண முடிகின்றது.
உறுப்புகளில் சேர்க்கும் பொழுது என்ன ஆகின்றது…?
ஏற்கனவே நல்ல அணுக்களால் ஆன உறுப்புகள் உடல் நன்றாக அழகாக இருக்கும். ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிலே சேர்த்து இணைந்து விட்டால்
1.உதாரணமாக நுரையீரலிலோ கல்லீரலிலோ அந்த மாதிரி அணுக்கள் தேங்கி விட்டால்
2.விஷத்தின் தன்மை பாய்ந்த பின் அந்தந்த உறுப்புகள் நலிகிறது.
அடுத்து நம் இரத்தங்களைப் பிரிக்கும் இருதயத்தில் உட்புகுந்து அங்கிருந்து பல உட்பிரிவுகளாகச் செல்கின்றது. இருதயத்தில் இயற்கையாகவே மூன்று வால்வுகள் இருக்கின்றது.
அதிலே இiந்த வேதனைப்படும் அணுக்கள் உருவாகினால்
1.மூன்றில் ஒன்று அடைபட்டாலும் இரண்டு எடுக்கும்
2.இரண்டில் அடைபட்டாலும் ஒன்று எடுக்கும்.
3.ஆனால் ஒன்றில் எடுக்கப்போனால் திணறல் அதிகமாகும்.
4.கடைசி அந்த ஒன்றிலும் அடைபட்டால் அவ்வளவு தான்.
விஞ்ஞான அறிவில் இதை எல்லாம் எத்தனையோ காட்டுகின்றார்கள். வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் நாம் எடுக்கும் எண்ணத்திற்குத் தக்கவாறு தான் இந்த உறுப்புகள் உருவாகின்றது, மற்ற மிருக இனங்களில் இத்தகைய நோய்கள் வருவதில்லை.
இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் (ஞானகுரு) என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு உணர்வுகளை எடுக்கப்படும் பொழுதும்
1.நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது…?
2.உறுப்புகளுக்குள் என்ன மாற்றங்கள் நடக்கின்றது…?
3.அணுக்களுக்குள் என்ன நடக்கின்றது…? என்று குருநாதர் ஒவ்வொன்றாகக் காட்டினார்.
4.அதை நேரடியாகப் பார்த்ததால் தான் உங்களிடம் சொல்கிறோம்.
சாமிக்கு ஈஸ்வரபட்டர் எல்லாச் சக்திகளும் கொடுத்தார். நாம் இதையெல்லாம் பார்க்க முடியுமா…? என்று எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நிலைகளை நீங்களே தடைப்படுத்திக் கொள்கின்றீர்கள் என்று தான் பொருள்.
யாம் உபதேசம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே
1.நாம் இதை எல்லாம் என்றைக்குப் பெறப் போகின்றோம்…? என்று
2.உங்கள் எண்ணத்தை இப்படிக் கொண்டு போனால்
3.நான் சொல்வது உங்களுக்குள் பதிவே ஆகாது – அந்த ஆற்றல்களை எடுக்கவும் முடியாது.
ஏனென்றால் நம் எண்ணத்தால் எப்படி நமக்கு நோய் வருகின்றதோ… அதே எண்ணத்தால் அந்த நோய் நமக்கு வராமலும் தடுக்க முடியும். ஆகவே தீமைகள் தாக்கும் பொழுது நீங்கள் அதிலிருந்து விடுபட வேண்டும்.
அதற்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் கொடுத்த சக்திகளை பல கோணங்களில் உங்களுக்கும் சொல்லி அந்த ஆற்றல்களை ஆழமாகப் பதிவாக்குகின்றோம். எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆவது தான் “சைவ சித்தாந்தத்தின் மூலம்…”
சூரியனின் காந்த சக்தி எதனைத் தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொண்டதோ அதனின் உணர்வின் இயக்கமாக இயங்குவது காயத்ரி. அன்று ஏழு ரிஷிகள் இந்த உணர்வின் இயக்கங்களைப் பற்றி எழுதியிருந்தார்கள்.
அதற்குப் பின் வந்த வேதாந்தத்தின் நிலைகள் கொண்டு வேதத்தின் தன்மைகள் தாவர இனத்தின் உணர்வுகள் இயங்குவதை ரிக் வேதம் சாம வேதம் யஜுர் வேதம் அதர்வண வேதம் என்று பிரித்தார்கள்.
அதிலே ஒரு தாவர இனம் மற்றொன்றைப் புசிக்கும் பொழுது இந்த உணர்வின் மாற்றங்கள் ஆகும்பொழுது அது அதர்வண வேதம்.
அதையே உயிரினம் மற்றொன்றைக் கொன்று பூசிக்குமே என்றால் உதாரணமாக மானின் உணர்வுக்குள் புலியின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது… புலி கொன்று அதைச் செயலற்றதாக ஆக்குகின்றது. இது அதர்வண வேதம்.
வியாசகருக்கு அன்று எழுத்தறிவு இல்லை என்றாலும் வெளிப்படுத்திய உணர்வுகள் அது விரிவாக இல்லை.
1.வேதங்கள் என்பது சுருதியின் இயக்கங்களைக் கண்டுணர்ந்து எழுத்து வடிவில் கொண்டு வந்து
2.மீண்டும் அந்த உணர்வின் ஆற்றலாக இயக்கச் செய்வது தான் அது.
இப்படிப் பிரித்துக் கொடுத்த உணர்வின் இயக்கங்கள் தான் வேதங்கள். ஆக “சைவ சித்தாந்தம்…!” தாவர இனங்கள் எவ்வாறு வளர்ந்தது…? என்றும் உணர்வின் ஆற்றலால் எவ்வாறு நிலை கொண்டது…? என்பதை அகஸ்தியன் அன்று காட்டினான்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவன் காட்டிய உணர்வை எல்லோரும் அறிந்திடும் அறிவானாலும்
1.தன்னுடன் இணைந்திடும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மகிழ்ந்திடும் உணர்ச்சியைக் கூட்டி
2.அந்த உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும் நிலைகள் தான் சைவ சித்தாந்தம்.
3.தீமைகள் வரும் பொழுது அதிலிருந்து அகன்றிடும் முறைகளைத் தெளிந்த நிலைகள் கொண்டு சைவ சித்தாந்தம் காட்டியது.
ஆனால் இதையெல்லாம் அன்றைய அரசர்கள் தான் ஆட்சி புரியும் காலத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு… இந்த சித்தாந்தத்தில் உண்மை நிலைகளை வேதங்களாக மாற்றப்பட்டு… சுருதியின் தன்மைகளை எழுத்தின் நாதங்களை மாற்றப்பட்டு மாற்றிய நிலைகளைத் தான் இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம்.
அன்றைய அரசர்கள் ராமன் என்றும் கண்ணன் என்றும் சிவன் என்றும் ஈசன் என்றும் காளி என்றும் மாரி என்றும் மாற்றி
1.அதைத் தனது குலதெய்வங்கள் என்று சித்தாந்தங்கள் பிரிக்கப்பட்டு
2.அரசன் தன்னுடைய ஆட்சிக்காக குலதெய்வங்களாக உருவாக்கப்பட்டு அதனின் நிலையில் தான் ஆட்சி பீடங்கள் வழி நடத்தி வந்தது.
அரசனுக்குக் கீழ் குடிமக்கள் அவன் காட்டியதைப் பதிவு செய்து அந்த உணர்வின் இயக்கங்கள் தான் மதங்களாக அதற்குப் பின் இனங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்படிப் பிரித்த நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் கொன்றும் ரசிக்கும் உணர்வின் தன்மை வந்து விட்டது
அதாவது…
1.அதர்வண வேதத்தின் அடிப்படையில் எது பரவப்பட்டதோ எவ்வாறெல்லாம் அதைப் பெற முடியும்…?
2.தீமைகளை எவ்வாறு உருவாக்க முடியும்…? என்ற அடிப்படையில்
3.நாட்டு மக்களை எல்லாம் அழிவின் வழிக்குக் கொண்டு சென்றது தான்.
வேதங்கள் உலகம் முழுவதற்கும் உண்டு. அது இல்லாத மதம் இல்லை. மதத்தால் உருவாக்கப்பட்ட உணர்வின் நாதங்களும் அந்த சுருதிகளும் எவ்வாறு நமக்குள் இயக்குகின்றதோ…? அதன் செயலாக்கங்கள் தான் இன்றும் வழி தொடர்ந்து கொண்டுள்ளது.
இதையெல்லாம் உங்களுக்குத் தொட்டுக் காட்டியுள்ளேன். “சிலவற்றைச் சொல்லக்கூடாது…” என்பதற்குத் தான் அதை மறைத்து வெளிப்படுத்துகின்றேன்.
ஆனால்
1.உண்மைகளை உணர்ந்திட வேண்டும்… தெளிந்த நிலையில் மெய் வழியினைப் பெற வேண்டும் என்று எவர் எண்ணுகின்றார்களோ
2.அவர்களுக்கு இது கிடைக்கப் பெற்று… இருளைப் போக்கிப் பொருள் காணும் சக்தியாக விளையும்.
காரணம்… அதர்வண வேதத்தைப் பற்றிய உண்மைகளைச் சுட்டிக் காட்டி விட்டால் மற்றொன்றை அழித்துச் சுகபோகத்தின் அடிப்படைக்கே கொண்டு செல்லும்.
அன்று அரசர்கள் செய்த நிலைகள் தான் “இன்றும் உலகில் போர் முறையாக நடக்கின்றது…!” அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
1.அகஸ்தியன் காட்டிய பேருண்மையின் நிலைகளை
2.அந்த மூலத்தின் இயக்கங்கள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை அறிந்து கொண்டால் “அதுவே போதுமானது…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விண்ணிலே தோன்றிய ஒரு உயிரணு நம் பூமிக்குள் வந்தது என்றால் அது தாவர இனத்தில் விழுந்து புழுவாக உடல் பெறுகிறது. அப்படி உடலாகத் தோன்றியவுடனே முதலில் அதற்குக் கண் இருக்காது. கண் இல்லாத புழுவாகத்தான் இருக்கும்.
கண் இல்லை என்கிற பொழுது “பார்க்க வேண்டும்…!” என்ற உணர்வுகள் புதிதாகத் தோன்றித் தான் அதற்குக் கண் வர வேண்டும். ஆனால் இப்படிக் கண்ணில்லாத புழுவாகப் பிறந்தாலும்
1.கண்ணுள்ள மற்ற உயிரினங்கள் அதை உணவாகக் கொத்தித் தின்றால்
2.இந்த உணர்வின் தன்மை (கண்களின்) கலந்து
2.கண்ணுள்ள உயிரினமாக அது மிகவும் சீக்கிரம் வந்துவிடும்.
ஆனால் ஆரம்பத்திலே இந்த உயிரணுக்கள் வளர்ச்சி இல்லாத பொழுது “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…!” என்ற உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து உடலில் எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி ஒளியின் கதிராக வருகின்றது,
இப்படிப்பட்ட உணர்வுகளை ஒளியின் கதிரைப் பல சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தான்…” கண்ணாக உருவாகின்றது. (ஆரம்பத்தில்)
ஆனால்
1.மனிதனின் மலத்தில் வெளிப்படும் உணர்வும் மற்ற உணர்வுகளும் சேர்ந்து உருவாகும் கொசுவிற்குக் கண் வந்துவிடுகின்றது.
2.சாக்கடையில் உருவாகும் புழுக்களுக்குக் கண் இருப்பதில்லை.
3.ஆனால் ஒரு குருவி அதைக் கொத்தித் தின்றால் அதற்குக் கண் வந்துவிடும்.
4.ஒரு எறும்பு அதைக் கடித்தது என்றால் இறந்த பின் எறும்பின் உடலுக்குள் அந்த உயிர் வந்து அதற்குக் கண் வந்துவிடும். மிகவும் சீக்கிரம் கண் வந்துவிடும்.
இறந்த மனித உடலைப் புதைத்து விட்டால் அதிலிருந்து பல விதமான குணங்களுக்கொப்ப பல விதமான அணுக்களும் வளரும். அது வெளியில் வந்த பிற்பாடு என்ன செய்கிறது…? அது கண் உள்ளதாகத் தான் உருவாகின்றது.
ஆனால் நம் மலத்திலேயே கண் இல்லாத புழுவைப் பார்க்கலாம். வெளியில் வந்த அந்தப் புழுவை மற்ற பட்சிகள் கொத்திச் சாப்பிட்டால் அதனுடைய உணர்வை எடுத்துக் கண்ணுள்ளதாக அடுத்துப் பிறக்கும். இப்பொழுது இருக்கக்கூடிய மாற்றங்கள் இது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்பதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
இன்று இந்தப் பூமி முழுவதும் மனிதனாக உருவாக்கிய பின்
1.மனிதனுக்குள் உருவாக்கிய உணர்வின் தன்மைகள் அனைத்தையும்
2.கருவாக உருவாகும் அணுவின் தன்மையாக
3.இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.
(ஒரு சேமிப்புக் கிடங்கு போல்)
மனிதன் வேதனைப்படும் உணர்வுகளைப் பரப்பி வைத்திருந்தால் இன்னொரு மனிதன் வேதனைப்பட்டால் இந்த வேதனை அணுக்களை அங்கே இரையாக்கி சீக்கிரம் அந்த உணர்வின் தன்மை அவனையும் வேதனைப்பட வைக்கும்.
அதே போல மனிதனுக்குள் எத்தகைய நோய்கள் உருவானதோ இவனின்று வெளிப்பட்டது காற்று மண்டலத்தில் இந்த விஷத் தன்மை கொண்டதாகத் தான் இருக்கும். அந்த உணர்வுகளை இன்னொரு மனிதன் நுகர்ந்தான் என்றால் அவனையும் நோயாக்கும்,
1.இதைப் போன்ற நிலைகளை நீங்கள் அனைவரும் தெளிந்து கொள்ளுங்கள்..
2.தெரிந்து கொள்ளுங்கள்.
இதே காற்றிலே மெய் ஞானிகள் தீமையை நீக்கிய உணர்வுகளும் உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற உணர்வுகளும் அலைகளாகப் பரவி உள்ளது. சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துள்ளது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) அதைப் பதிவு செய்து… எப்படி அதைக் கவர வேண்டும்…? என்பதையும் உணர்த்தினார். அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை மக்களை எப்படிப் பெறச் செய்ய வேண்டும்…? என்பதையும் காட்டினார்.
அவர் காட்டிய அந்த அருள் வழிப்படித்தான் உங்களுக்குள்ளும் உணர்த்துகின்றோம். அந்த மெய் ஞானியான… “அகஸ்தியனின் ஸ்டேசனைப் பதிவாக்குகின்றோம்…!”
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் என்று அடிக்கடி எடுத்துப் பழகிக் கொண்டாலே போதுமானது,
உங்களுக்குள் அது வளர்ச்சியாகும் பொழுது அந்த ஞானிகள் எதன் வழியில் தீமைகளை அகற்றினார்களோ… மகிழ்ந்து எப்படி வாழ்ந்தார்களோ… அதை நீங்களும் பெற முடியும்.
கண் இல்லாத புழு கண் உள்ள உயிரினத்தின் உணர்வுகளை நுகர்ந்து கண் உள்ள உயிரினமாக மாறுவது போல்
1.நாமும் மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து
2.மெய் ஞானியாக நிச்சயம் ஆக முடியும்.
உங்களை நீங்கள் நம்புங்கள்…!


எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்
தியானம் என்றாலே சாமியாராகப் போய்விடுவோம்… சாமி கும்பிடுவோர் நாங்கள் எப்படித் தியானம் செய்வது…? என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள்.
தியானம் என்பதே உயர்ந்த எண்ணங்களைப் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுவது தான்.
நம்மிடம் யாராவது சண்டையிடுகிறார்கள் அல்லது திட்டுகின்றார்கள்… என்றால்
1.அப்பொழுது என்ன நினைக்கின்றோம்…?
2.என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்று எண்ணுவது இது தியானம் தான்.
அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் இது தியானம்தான்.
காரணம்…
1.நாம் எண்ணியது நமக்குள் உடலாகின்றது
2.எண்ணியதை உயிர் இயக்குகின்றது
3.எண்ணியதை உடலாக்குகின்றது உயிர்.
4.எண்ணியதை உடலுக்குள் விளைய வைக்கின்றது
5.விளைந்ததைத் தான் உடலை விட்டுப் பிரியும் சமயம் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது
6.நமக்குள் இருக்கும் எண்ணங்களை… உயிரே அதைப் படைக்கின்றது
7.நம்மை ஆளும் ஆண்டவனும் உயிரே
8.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
9.எண்ணியதை இயக்கி இறை ஆக்குவதும் இறைவன் ஆக்குவதும் உயிரே
10.எண்ணியதை ஓ என்று ஜீவன் ஆக்குவதும் உயிரே
11.எண்ணி உடலுக்குள் பதிவு செய்தாலும்… அது அனைத்திற்கும் குருவாக இருப்பதும் உயிரே.
நாம் எந்தெந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அதைத் திரும்ப எண்ணி அதற்குக் குருவாக நின்று நல்வழி காட்டுவதும் உயிரே.
1.ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் பொழுது
2.மீண்டும் அதை எண்ணுவீர்கள் என்றால் குருவாக நின்று உங்களுக்கு அது நல்வழி காட்டும்.
தீமை செய்த உணர்வுகளை எண்ணினால் அது “ஓ” என்று ஜீவனாக்கி உடலுக்குள் “ம்” என்று பதிவு செய்தால்… திரும்ப எண்ணினால் தீமை செய்யும் எண்ணமாகக் குருவாக நின்று தீமையை விளைவிக்கும் நிலைக்கே அது உங்களை அழைத்துச் செல்கின்றது.
நோய் என்ற நிலைகள் பதிவானால் அந்த நோயைப் பற்றிப் பேசினாலும் அந்த நோயே ஜீவனாகி அதுவே குருவாகி நோயாக உடலுக்குள் உருவாக்கி விடும்.
ஆனால் நோயை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதனை உங்கள் உயிர் ஜீவனாக்கி இந்த உணர்வின் தன்மை நோயற்றவனாக ஆக்கி
2.ஞானத்தின் தன்மை கொண்டு பொருளறிந்து செயல்படும் திறனாக நமக்குள் அதை வளர்க்க
3.அந்த உணர்வின் எண்ணம் குருவாக நின்று இந்த வாழ்க்கையை தீமை அற்றவனாக்கி
4.தீமைகளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் அது விளையும்.
5.அப்படி விளையச் செய்யும் சக்தி இதைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் பெற முடியும்.
உங்களுக்குள் ஊழ்வினையாக அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் ஆழமாகப் பதிய வேண்டும். உங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும். நீங்கள் நன்மை செய்த நிலைகள் அந்தத் தெய்வ குணங்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்திட வேண்டும்… உங்கள் மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக மலர்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை யாம் உபதேசித்தது.
கேட்டுணர்ந்தோர் அனைவருக்கும் இது பதிவாகி இதன் வழி கொண்டு உங்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும். அந்தச் சிறந்த எண்ணங்கள் உங்களுக்குள் பதிவாகி ஞானத்தின் வழித்தொடராக வளர வேண்டும்.
1.எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்.
2.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து மக்களை மீட்டிடும் சக்தியாக விளைந்து
3.உங்கள் மூச்சும் பேச்சும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதனுக்கு மனிதன் கொன்று ரசிக்க வேண்டும் என்ற சிந்தனையை எடுத்துப் பல கருவிகளை உருவாக்குகின்றார்கள்.
1.கொல்லும் பொழுது கொல்பவனோ அதை ரசிக்கின்றான்.
2.கொல்லப்பட்டவனோ துடிக்கின்றான்… பதறுகின்றான்.
இந்த இரண்டு உணர்வும் இங்கே உருவாக்குகின்றது.
பதட்டமடைவனின் உடலில் பதட்டத்தை உருவாக்கும் அணுக்களாக உருவாகின்றது, அவன் வெளி விடும் மூச்சலைகள் பதட்டமான உணர்வலைகளாகக் காற்றிலே பரவுகிறது.
அதே சமயத்தில் கொல்லும் உணர்வுகளை நுகரப்படுவனின் உடலில் மற்றவர்களைக் கொன்று போட்டு மனதில் மகிழ்ச்சி பெறும் நிலையாகி அத்தகைய மூச்சலைகள் காற்றிலே பரவுகிறது.
1.இத்தகைய அலைகள் தான் இன்று காற்று மண்டலத்தில் அதிகமாகப் படர்ந்துள்ளது.
2.இந்த உணர்வுகளை நுகரும் மற்ற மனிதனுக்குள்ளும் அத்தகைய அணுக்கள் விளையத் தொடங்குகின்றது.
ஏனென்றால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டுத் தன் இரையைத் தேடி நுகரும் பொழுது அதே காரியத்தையே செய்யும். நாளடைவில் இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாகி விட்டது.
1.இப்படிப்பட்ட நஞ்சின் தன்மைகள் உருவாகாதபடி தடுப்பதற்குத்தான்
2.அன்று விநாயகர் சதுர்த்தியை ஏற்படுத்தினார்கள் ஞானிகள்.
3.அதாவது “தீமையான உணர்வுகளை வளராது தடுக்கும் நாள்…!” என்று வைத்தார்கள்,
மனிதனுக்கு மனிதன் நாம் பேசுகின்றோம். பேசித் தொடர்பு கொள்ளும் பொழுது உதாரணமாக நான் வேதனைப்பட்டால் அதைக் கேட்டு நீங்களும் வேதனை உனர்வுகளை எடுத்துக் கொள்கின்றீர்கள்.
ஏனென்றால் வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு அதே உணர்ச்சியாக இயக்கப்பட்டு நமக்குள் வந்துவிடுகின்றது.
மனிதனுக்கு மனிதன் யாரும் பிரிவில்லாதபடி அதை வளர்த்து வைத்திருக்கின்றோம். இப்படி இரண்டு பேர் பேசிய உணர்வையும் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.
இப்பொழுது நல்ல மனிதனாக இருக்கின்றான் என்று ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்கிறீர்கள். அவரிடம் நெருங்கிப் பழகுகின்றீர்கள் அடுத்து அந்த மனிதனுக்கு நோயாகிவிட்டது…! என்று சொல்கிறார்கள்… நீங்கள் அதைக் கேள்விப்படுகின்றீர்கள்.
கேள்விப்பட்ட உடனே
1.அந்த நல்ல மனிதனின் உணர்வு நமக்குள் இருந்தாலும்
2.அடடா… நல்ல மனிதனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று நாமும் வேதனையைச் சுவாசிக்கின்றோம்.
3.அவர் மேல் உள்ள பாசத்தால் நாம் எண்ணும் பொழுது
4.அவர் உடலில் உருவான அதே நோயின் உணர்வுகளை நாமும் எண்ணி இழுத்துக் கவர்ந்து விடுகின்றோம்.
5.அதே நோயின் தன்மை இங்கே நமக்குள்ளும் உருவாகின்றது.
6.நாம் தவறு செய்யவில்லை… ஆனால் நமக்கும் நோயாகின்றது.
சந்தர்ப்பவசத்தில் அவர் இறந்தால் அவரின் பற்று எவ்வளவு நமக்கு இருந்ததோ அந்த உடலை விட்டு இறந்த ஆன்மா நம் எண்னத்தின் வலு கொண்டு நம் உடலுக்குள் வந்துவிடும்.
பார்க்கலாம்… நீங்கள்…! நேற்று வரையிலும் நன்றாக இருந்தார்… திடீரென்று எபப்டியோ மனமாற்றம் ஆனார்..! என்று பார்க்கின்றோம். இது எல்லாம்
1.மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட உணர்வுகள்
2.வரிசையாக இப்படித்தான் இயக்குகிறது…! நாம் தவறு செய்யவில்லை…!
இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாவதை நாம் எப்படித் தடுக்க வேண்டும்…? தடுக்க ஒரு சக்தி வேண்டுமல்லவா…!
நண்பரோ உறவினரோ யாராக இருந்தாலும் வேதனைப்படுகின்றார்கள் அல்லது நோயால் வாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டால்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று
2.நாம் இந்த உணர்வைப் பல முறை எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்.
அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நல்ல நிலை பெற வேண்டும்… அவர் அருள் ஒளி பெற வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணி நமக்குள் மாற்றிவிட வேண்டும்.
இது தான் சதுர்த்தி என்பது. தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக உருவாகாமல் தடுப்பது தான்.. “விநாயகர் சதுர்த்தி…!”
இப்படி ஒவ்வொரு மனிதனும் எண்ணி எடுத்தால் இந்தக் காற்று மண்டலமே தூய்மையாகின்றது. தீய வினைகள் நமக்குள் சேர்வதில்லை. தீமை செய்யும் உணர்வுகள் அனைத்தும் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு இந்தப் பரமாத்மாவும் தூய்மையாகின்றது.
தீமை செய்யும் உணர்வுகளை இங்கே உள்ள மனிதர்கள் யாரும் நுகரவில்லை என்கிற பொழுது பிடிப்பில்லாத அந்த அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்தச் செய்கின்றது.
அதை உணர்த்தும் விதமாகத் தான் விநாயகரைக் களிமண்ணில் செய்து அதைக் கடலிக் கரைக்கச் சொன்னது. தீய வினைகளை நமக்குள் சேர்க்காமல் எல்லோரும் சேர்ந்து அந்தக் கடலில் கரைக்க வேண்டும்.
ஞானிகள் சொன்னதில் எதுவும் தவறில்லை… அந்தக் கருத்தினை நாம் அறிந்து வழி நடக்க வேண்டும். அதற்காகத்தான் சொல்கிறோம் (ஞானகுரு).


நாம் தெய்வமாக ஆவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்
முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடல் பெறும் பொழுது
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதை ஜீவனாக்கும் திறன் பெற்றது.
2.ஒவ்வொரு பொருளையும் தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றது.
3.அதனால் தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா என்று சொல்வது.
மனிதனின் ஆறாவது அறிவு சரஹணபவா…! நாம் சாப்பிடும் ஆகாரத்தில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு ஆறாவது அறிவாக நம் உடலில் அந்த மணம் வருகின்றது.
இந்த ஆறாவது அறிவின் மணம் கொண்டு சரஹணபவா குகா கந்தா பல பொருள்களை எண்ணினாலும் கடம்பா அதை உருவாக்கி கார்த்திகேயா என்று சொல்லும் பொழுது தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றவன்.
அருள் ஞானிகள் உணர்வை எண்ணி அதை நமக்குள் ஜீவன் செய்யப்படும் பொழுது ஓ… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் ஜீவனாக்கி அதை ம்… என்று நம் உடலாக ஆக்கும்போது அது ஓம் நமச்சிவாய…!
1.எல்லாவற்றையும் அடக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் கணங்களுக்கு அதிபதியாக்கி
2.நமக்குள் சிறுமை ஊட்டும் உணர்வின் தன்மையை அடிமைப்படுத்தி மெய் ஞானிகள் உணர்வை நமக்குள் அதிபதியாக்கி
3.இந்த வாழ்க்கையில் தீமை அகற்றிடும் உணர்வாக விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொன்னார்கள் ஞானிகள்.
குடும்பத்தில் அறியாது சலசலப்பு சஞ்சலமும் வெறுப்பு வேதனைகள் வந்தாலும் இதை அகற்றிட ஆலயத்தை அருள் ஞானிகள் காட்டினார்கள். அங்கே விண்ணை நோக்கி ஏங்கிவிட்டுக் கோவிலுக்குள் சென்ற பின் தீப ஆராதனை காட்டப்படும் பொழுது பொருள்கள் தெரிகின்றது.
பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற வேண்டும் இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். இந்த உண்மையை உணர்த்திய அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் மலரின் மணம் பெற வேண்டும். இவை அனைத்தும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னைப் பார்ப்போருக்கு அந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அங்கே வைத்திருக்கும் கனியைப் பார்க்கும் பொழுது கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என் சொல்லைக் கேட்போர் வாழ்விலே இனிமை பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
1.ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இந்தத் தெய்வ குணம் பெற வேண்டும்
2.அவர் குடும்பம் நலம் பெற வேண்டும்… அந்தக் குடும்பங்கள் அனைத்தும் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
தொழில் நடத்தினால் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். தெய்வ குணங்களைப் பெற வேண்டும் வாடிக்கையாளர் குடும்பங்களில் எல்லா நலங்களும் பெற வேண்டும். எங்கள் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும். என்னைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
இப்படி எண்ணி… நம் உயிரான ஈசனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை இந்த ஆலயத்தில் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து நடக்கும்படி தான் அன்று ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.
நம்மையறியாது நமக்குள் வரும் வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் என்ற தீமையான உணர்வுகள் அழுக்காக உடலுக்குள் சென்று நல்ல குணங்களை மாசுபடச் செய்யும் நிலையில் இருந்து நம்மைத் தூய்மைப்படுத்த விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள்.
நற்குணங்களின் தன்மையை… நறுமணத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து நம்மைப் பிறர் பார்க்கும் பொழுது இந்த நறுமணங்கள் அங்கே வர வேண்டும். என் சொல்லைக் கேட்கும் பொழுது அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற இந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும் இடம் தான் ஆலயம்.
அபிஷேகம் ஆராதனைகளை இன்று செய்கிறோம். செய்துவிட்டு நமக்குள் கொதிப்பையும் வேதனையையும் தான் எண்ணுகிறோம்.
நல்லதைச் செய்தேன் ஆனால் தீமையே செய்கின்றான்…! என் குழந்தை நன்றாக வர வேண்டும் என்று விரும்பி உன்னைத்தான் வணங்கினேன். ஆனால் அவன் தவறு செய்கின்றானே எதிர்த்து பேசுகின்றானே…! என்று வேதனைப்பட்டு
1.அந்தத் தெய்வம் தான் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்.
2.ஆனால் அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்தால் அந்த எண்ணம்
3.நம் செயலின் தன்மை அந்தத் தெய்வத்தின் தன்மையாகச் சொல்லால் இயக்கும்.
4.நாம் எண்ணிய தெய்வ குணத்தின் உணர்வுகள் நமக்குள் அந்தச் சக்தியாக மலரும்.
5.நாம் அந்தத் தெய்வமாக ஆவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தார்களே தவிர
6.அந்தத் தெய்வம் செய்யும் என்று யாரும் சொல்லவில்லை.
ஆனால் தெய்வம் செய்யும் என்ற நம்பிக்கையில் தான் செல்கின்றோமே தவிர
1.அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்தால்
2.அந்தத் தெய்வ சக்தி நமக்குள் இருந்து நம் சொல்லையும் செயலையும் அது இயக்கும் என்ற நிலை காலத்தால் மறைந்து விட்டது.
நம்மை நாம் அறியாமலே நமக்கு நாமே நல்ல குணங்களுக்கு அடிக்கடி தீங்கு விளைவிக்கின்றோம்.
மனிதனை உருவாக்கிய… அனைத்தையும் அறிந்திடும் சக்தியாக இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனுக்கு வேதனையும் சோர்வையும் எண்ணி எண்ணி
1.அந்த ஈசனுக்குச் சரியான நிலைகள் பணிவில்லாதபடி அவனுக்குண்டான சேவைகள் செய்யாதபடி
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு அடிக்கடி வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் என்ற
3.தீமையின் உணர்வின் சக்தியைத் தான் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஈசனை வணங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஞானிகள் காட்டிய விநாயகத் தத்துவப் பிரகாரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை வினைக்கு நாயகனாக இந்த உடலுக்குள் ஆக்கிட வேண்டும்.
அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி நமக்குள் தீமை விளைய வைக்கும் அந்த உணர்வினை அடக்கி ஞானிகள் உணர்வின் தன்மையை “ஒளியின் சுடராக…” நாம் உருவாக்க வேண்டும்.
வைரம் எப்படி நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை… நஞ்சினை மகரிஷிகள் சக்தி கொண்டு ஒடுக்கினால்
2.நமக்குள் அறிந்திடும் ஆற்றலும்… உணர்வுகள் ஒளியாக மாறும் நிலையும் வருகின்றது.
இதைத்தான் ஞானிகள் நமக்கு ஆலயத்தில் தெளிவாக வழிகாட்டி உள்ளார்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நமது உயிர் ஒளியின் தன்மை பெற்ற நட்சத்திரங்களின் சக்தி கொண்டது தான். கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆண்பால். ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால்.
இது இரண்டுமே மோதலில் வரப்போகும் போது பெண்பால் என்ற நிலைகள் அந்த உயிருடன் மோதிய துடிப்பின் தன்மை ஏற்பட்டால் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் ஆண்பாலாகத் தான் உருவாகும்.
அதிலே ரேவதி நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாகி விட்டால் பெண்பாலின் உணர்வுகள்… அதாவது ஒன்றைக் கவர்ந்து அது வளர்க்கும் தன்மை பெறும் கருவாக வருகிறது.
ஆகையால் தான் இந்த உயிரின் துடிப்பின் நிலையை கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர். ரேவதி நட்சத்திரம் என்று கொண்டவர் என்று ஒரு உயிரினுடைய நிலைகளுக்குப் பெயர் வைத்தாலும் இங்கே ரேவதி நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக வளரப்படும் போது பெண்பாலுக்கு அந்த மற்றதைக் கவரும் சக்தி வருகிறது.
ஆண்பால் பெண்பால் என்ற நிலைகள் பெற்றாலும் இரண்டு எண்ணங்கள் கலக்கப்படும் போது தான் ஒன்றைத் தனக்குள் கலந்து உருவாக்கும் சக்தி பெறுகின்றது.
ஆண் செடி பெண் செடிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காற்றிலே இதன் அலைகள் படர்ந்தாலும்
1.ஆண் செடியின் உணர்வுகள் பெண் செடியின் மீது பட்ட பின் அந்த உணர்வுகள் கருவுற்று
2.தன் இனத்தை உருவாக்கும் சக்தி பெறுகிறது… ராசி ஜாஸ்தி வரும்.
3.ஆண் செடிகள் இல்லை என்றால் பெண்பால் செடியின் ராசி குறைவாகவே இருக்கும்.
4.ஆண் செடியின் தன்மை கம்மியாகி விட்டாலே போதும்… பயிர் இனங்கள் வளர்ச்சி குன்றிவிடும்.
இதைப் போன்று தான் இந்த மனிதன் வாழ்க்கையில் எடுத்துக் கொண்டாலும் கணவன் மனைவி என்ற நிலையில் வாழ்கிறோம். சில வீடுகளில் பார்த்தால் என்ன செய்வார்கள்…?
மனைவி தன்னுடைய கணவனை “எப்போது பார்த்தாலும் அவர் இப்படித் தான் செய்வார்…!” என்று குறையாகவே நினைத்து அதையே சொல்லிக் கொண்டிருப்பார்.
அதே போல் கணவனும் தன் மனைவியை “நான் எதைச் சொன்னாலும் மனைவி கேட்க மாட்டேன் என்கின்றது…! என்று குறையாகச் சொல்லிக் கொண்டிருப்பார்.
இப்படி இந்த வெறுக்கும் உணர்வின் அணுக்கள் இருவருக்குள்ளும் முனித் தன்மையாக அடைகின்றது.
1.முனி என்றால் ஒன்றைத் தனக்குள் எடுத்து மற்றொன்றைத் தாக்கும் நிலைகள்.
2.ஆகவே இரண்டு பக்கமும் என்ன செய்யும்…?
3.இந்தப் பகைமை உணர்வுகள் தான் இருக்கும்.
4.இருவர் உடலிலும் இரண்டறக் கலந்து நல்ல குணங்களைப் பேணிக் காக்கும் சக்தியும் இழக்கச் செய்துவிடும்.
இந்த முனித் தன்மை என்பது விஷத்தின் தன்மை கொண்டது. அது ஒன்றை ஊடுருவிக் கொல்லும் சக்தி பெற்றது. தனித் தன்மையாக அந்த ஊடுருவும் தன்மை பெற்றாலும் பெண்பால் என்ற நிலைகள் இணைந்து விட்டால் ஒடுங்கி விடும்.
விஷத்தின் தன்மையை ஒடுக்கி உணர்வின் துடிப்பின் நிலையாக அணுவின் சக்தியாகப் பெறக்கூடிய தகுதி பெறுகிறது. இதை எல்லாம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.
கணவன் மனைவி இரண்டு பேரும் அன்பாகப் பேசி நல்ல நிலை பெற வேண்டும் என்று இரண்டு பேரும் ஏகோபித்து எண்ணினால் அந்த எண்ணங்கள் கை கூடி காரியங்கள் எல்லாம் சித்தியாகும்.
ஆனால் சிலர் ஆலோசனை சொல்கிறேன் என்ற நிலையில் “உன் கணவன் நன்றாக இருக்கும் போது நீ செய்தால் பரவாயில்லை…! அப்படி இல்லாமல் இருக்கும் பொழுது நீ எதற்குப் போய் உதவி செய்து கொண்டே இருக்கின்றாய்…? என்று மனைவியிடம் சொன்னால் போதும். இது ஊடே கலந்து விடும்.
அடுத்து நீங்கள் எந்த நிலைகள் செய்தாலும் கூட இந்தக் குறை உள்ள உணர்வுகளே கணவன் மனைவிக்குள் அதிகமாக வளரும். சில குடும்பத்தில் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாகச் சொல்லைப் பயன்படுத்தல் வேண்டும்.
ஏனென்றால் இந்தப் பெண்பால் என்ற உணர்வுகள் எதிலே கலந்ததோ அந்த உணர்வின் கலவை கொண்டு உணர்வின் அணுத் தன்மை பெறும் தகுதி பெற்று விடுகின்றது. ஆகவே ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இதைப் போன்ற நிலையில் இந்த வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் ஏராளம் உண்டு. ஏனென்றால்
1.பல கோடி உணர்வுகள்
2.பல குடும்பங்களில் பல நிலைகள்
3.பல வித்தியாசமான நிலைகள் உண்டு.
கணவன் நல்லவராக இருக்கலாம். அதே சமயத்தில் மனைவி தன் அறியாமையினால் வேதனைப்படும் செயல்களைச் செய்து விட்டால் வேதனையும் வெறுப்பையும் கணவனுக்குள் உருவாக்குகின்றது
அந்த வேதனை என்ற விஷத் தன்மை கூடப்படும் போது மனைவியை நினைக்கும் போதெல்லாம் வெறுக்கும் தன்மையும் வேதனைப்படும் தன்மையும் கணவனுக்கு வருகின்றது.
1.அப்பறம் மனைவி தன் நிலைகளில் நல்லதைச் சொன்னாலும்
2.கணவனுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு வருவதில்லை.
அதே சமயத்தில் மனைவிக்கும் இந்த விஷத்தின் தன்மை கூடி கணவனில் விளைந்த வெறுப்பின் உணர்வு இங்கே சாடிய பின் இவர் செய்யும் அந்தத் தவறின் உணர்வே அங்கே விளைகின்றது.
இருவரும் இந்த உணர்வின் தன்மைகளை வளர்க்கப்படும் போது
1.இருவருக்குமே நோய் வருகின்றது.
2.இரண்டு பேருக்குமே கை கால் குடைச்சல் மேல் வலி தலை வலி எல்லாம் வரும்.
வேதனையை வளர்த்துக் கொண்ட நிலையில் இருவருமே ஒன்று சேர்த்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சரி…! இதை வாங்கலாம்…! என்று எண்ணி ஒரு பொருளை வாங்குவார்கள்,
1.ஆனால் வாங்கியபின் இரண்டு பேருக்கும் அந்த வேதனையாகிப் பகைமை தான் வரும்
2.பொருளைப் பாதுகாக்கும் சக்தியும் இழந்து விடுகின்றது.
3.இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகளில் உணர்வுகளின் இயக்கம் தான் இது.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் கணவனும் மனைவியும் ஒன்றி வாழும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தியை ஒருவருக்கொருவர் பாய்ச்சி இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றாகி ஒளியின் உணர்வாக மாற்றுங்கள்…!
கணவன் மனைவி ஒன்றி வாழ்ந்தால் அதுவே சொர்க்கலோகமாகின்றது…!


ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு விண்ணுலகம் சென்றானோ அந்த வழியில் நாமும் செல்ல வேண்டும்
அன்னை தந்தையர் அருளாசி பெற வேண்டும் என்று அனு தினமும் நாம் எண்ணி அவர்களிடம் அதைப் பெற வேண்டும்.
1.பேரண்டமும் பேருலகமும் உன் அன்னை தந்தையர் தான் என்ற உணர்வு கொண்டு
2.இந்த இணைப்பின் பிணைப்பின் நிலைகள் வரப்படும் பொழுது தான் முழுமை அடைய முடியும் என்று
3.அதை முதலில் வினையாகச் சேர்க்கச் சொல்லி… நமக்குள் ஊழ்வினையாக
4.”அந்த வினைக்கு நாயகனாக நீ ஆக வேண்டும்…” என்று நாரதன் ஞானக் கனியைக் கொடுக்கின்றான் என்று ஞானிகள் அன்று காட்டினார்கள்.
நம் அன்னை தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் விநாயகரைப் பார்க்கப்படும் பொழுது எவ்வாறு எண்ண வேண்டும்…? என்ற நிலையையும் அன்று ஞானிகள் உணர்த்தி உள்ளார்கள்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற என் அன்னை தந்தையரின் உயிரான்மாக்கள் எங்கள் குலதெய்மான உயிரான்மாக்கள்
1.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் வட்டத்திலே இணைந்து
2.என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை அங்கே உந்தி
3.இன்னோரு உடல் பெறும் நிலைகளை மாற்றிப் பிறவாநிலை பெறச் செய்வதற்கு
4.அந்த இணைப்பின் தன்மையைக் கொண்டு வரச் சொன்னார்கள்.
இதை உணர்த்திய ஞானி விண்ணிலே இருக்கின்றான். அவன் உணர்வை நமக்குள் கூட்டி இந்த உணர்வினை நினைவுபடுத்தி இணைத்துக் கொண்டபின் இந்த உயிரான்மா பிறவா நிலை பெற வேண்டும் என்று முதலில் செயல்படுத்தும் முறையைச் சொன்னான்.
1.ஆகவே அந்த வினையை வினைக்கு நாயகனாக ஆக்கி அதனின் உணர்வு கொண்டு
2.”ஒளியின் சரீரமாக வினைக்கு நாயகனாக நீ ஆகு…” என்ற நிலையை உணர்த்தினார்கள்.
உடலை விட்டுச் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும். என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும். குழந்தையாக வாழும் காலத்தில் எங்களுக்கு வழி காட்டியது போன்று
1.பொருளறிந்து செயல்படும் உணர்வின் சுடராக எங்கள் உணர்வுக்குள் நின்று
2.”எங்களுக்கு என்றென்றும் வழி காட்ட வேண்டும்…” என்று இப்படித்தான்… இந்த வினையை வினைக்கு நாயகனாக்க வேண்டும்.
மனித வாழ்வில் விண் சென்ற மெய் ஞானி எங்கே அடைந்தானோ எங்கள் அன்னை தந்தையர் அந்த எல்லையை முதலில் அடைய வேண்டும் என்று காட்டி… “அதற்குப் பின் தான் நாம் அங்கே செல்ல முடியும்…” என்பதையும் உணர்த்தினார்கள்.
அன்னை தந்தையர் முதலிலே மனிதனாக ஆனார்கள். அடுத்து நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். மனிதனான பின்
1.மனித நிலையிலிருந்து உணர்வினை ஒளியாக மாற்றித் தான் முதல் மனிதன் அகஸ்தியன் விண் சென்றான்.
2.அணுவின் ஆற்றலை அறிந்தான்… உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான்.
அதே வினையைத் தன் அன்னை தந்தையருக்கு அது வினைக்கு நாயகனாக ஆக்க வேண்டும் என்று அவர்களையும் இணைத்தே விண் சென்றான்… ஒருக்கிணைந்து செயல்படும் தன்மையை அங்கே உருவாக்கினான்.
விநாயகரைக் காட்டப்படும் பொழுது அருகிலே அரச மரத்தையும் வைத்திருப்பார்கள். அந்த அரச மரம் விண்வெளியில் தன்னிச்சையாகத் தன் சத்தை எடுத்து வளர்கின்றது. அதே போல்…
1.மனிதன் நீ அரசைப் போல் என்றும் நிலையான நிலையில் நீ ஒங்கி வளர வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் ஒளி வட்டத்தில் நீ இணைய வேண்டும் என்று உணர்த்துவதற்கு
3.சூட்சும நிலையில் நடப்பதை உருவத்தைக் காட்டிச் சொல்லின் உணர்வு கொண்டு வினையாகப் பதிவு செய்து
4.வினைக்கு நாயகனாகச் சுவாசித்து அதை உடலாக உனக்குள் சேர்த்துக் கொள் என்று காட்டினான்.
ஓ…ம் நமச்சிவாய சிவாய நம ஓ…ம் என்று மனிதன் எண்ணிய உணர்வுகள் இங்கே இயங்கினாலும் அதைச் சிவமாக்கி சிவத்தின் தன்மை ஒளியின் சுடராக என்றும் நிலையாக ஒளியின் சரீரம் பெற வேண்டும்.
அன்னை தந்தையரை நினைத்து நீ இதைச் செயல்படுத்த வேண்டும் என்று காட்டுகின்றார்கள். கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.அன்னை தந்தையர் அங்கே ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணினால் தான் அது சரியாக இருக்கும்.
2.அவர்கள் முன் செல்கிறார்கள்… அவர்கள் வழியில் அடுத்து நாமும் ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு வேப்ப மரம் இருக்கின்றதென்றால் அது கசப்பின் உணர்வு கொண்டது. ஆனால் ரோஜாப்பூவோ துவர்ப்பு உணர்வு கொண்டு நறுமணங்களைக் கூட்டும் உணர்வு கொண்டது. ஆனால் இதைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அதனதன் அலைகளாகப் படரச் செய்கின்றது.
ஏனென்றால் சூரியனிலிருந்து வெப்பமும் காந்தமும் விஷம் என்ற மூன்று நிலைகள் தான் வருகிறது. காரணம் பிற மண்டலங்களில் இருந்து கவர்வதை நட்சத்திரங்கள் கவர்ந்து அந்த விஷத் தன்மையைத் தூசிகளாக மாற்றுகின்றது.
அப்படித் தூசிகளாக மாறி வருவதை இந்தச் சூரியன் தனக்குள் இழுக்கும் போது தன் உணர்வில் பெற்றதைப் பாய்ச்சுகிறது.
ஒரு நூலாம்படைப் பூச்சி நூலாம்படையால் தன் கூட்டினைக் கட்டித் தனக்குள் எவ்வாறு இருக்கின்றதோ இதைப் போலத் தான் பிற மண்டலங்களின் சக்தியை நட்சத்திரங்கள் கவர்ந்தாலும் இதனில் உருவான அந்த உணர்வின் மலம் தான் அது – பால்வெளி மண்டலம்.
பால்வெளி மண்டலமாக மாற்றினாலும் அதிலே சிக்குண்டு வருவதை நட்சத்திரங்கள் அது சுழலும் போது தூசியாக மாற்றிப் நம் பிரபஞ்சத்திலே பரவச் செய்கின்றது. தூசியாக வருவதைச் சூரியனுடைய காந்தப்புலன் அறிவு அதைக் கவர்கின்றது.
ஏனென்றால் இதிலிருந்து வெளிப்படும் உணர்வை வெப்பம் காந்தம் என்ற நிலைகள் மோதலின் தன்மை ஆகும் பொழுது அது வெப்பமாக மாறுகிறது. வெப்பமாக மாறும் போது நகர்ந்து ஓடும் சக்தியும் ஈர்க்கும் காந்தத்தின் செயல் அதிகமாகின்றது.
மோதலில் சூரியன் விஷத்தின் தன்மைகளைப் பிரிந்தாலும் பிரிந்து செல்லும் விஷத்தின் தன்மையை இந்தக் காந்தம் இழுத்து வைத்துக் கொள்கின்றது.
இதை எல்லாம் நாம் சாதாரணமாக எளிதில் புரிந்து கொள்வதற்காக
1.சூரியனை நாராயணன் என்றும்
2.மறு அவதாரமாக உயிரின் துடிப்பிற்குள் வெப்பமாக வருவதை விஷ்ணு என்றும்
3.வெப்பத்தினால் ஈர்க்கும் தன்மை வருவதை அந்தக் காந்தத்தை லெட்சுமி என்றும்
4.பிரிந்து சென்ற விஷத்தை அந்தக் காந்தம் தனக்குள் இணைத்து கொளளும் பொழுது அதை லட்சுமணா என்றும் காட்டுகிறார்கள் ஞானிகள்,
இராமயாணத்தில் பார்த்தோம் என்றால் ராமனும் லட்சுமணனும் சீதையும் இருக்கும். இதெல்லாம் நமக்கு தெளிவாகவே தெரியச் செய்கிறார்கள். இந்தக் காந்தம் ஒரு மணத்தின் தன்மையை நுகர்ந்த பின் எப்பொருளை இந்தக் காந்தம் இழுக்கின்றதோ அந்த மணத்தை…
1.உணரச் செய்யும்
2.உணர்த்தச் செய்யும்
3.உணர்வை வளர்க்கச் செய்யும் சக்தி பெற்றது இந்த விஷம்
4.அது தான் “லட்சுமி… லட்சுமணா…” (எல்லாமே காரணப் பெயர் தான்)
ஒரு செடியின் சத்தை இந்தக் காந்தம் இழுத்துத் தன்னுடன் மோதலாகும் பொழுது வெப்பமாகின்றது. இரண்டறக் கலந்து விடுகிறது. மோதலில் ஏற்படும் இதனுடன் இணைந்த விஷத்தின் தாக்குதலால் வெப்பத்தின் தன்மை கூடும் தன்மை வருகிறது.
ஆனால் இணைந்து கொண்ட பின் அதற்குள் இருக்கும் விஷம் இந்த மணத்தை வெளிப்படுத்துகின்றது. அதாவது ஒரு செடியின் சத்தை இவ்வாறு நுகர்ந்து விட்டால் சீதா… “சீதா லட்சுமி” என்று சொல்வார்கள்.
ஆனால் அதே சமயம் அதே செடியின் சத்தை மனிதனான நாம் நுகர்ந்தால் நம் உயிருக்குள் பட்ட பின் “சீதா ராமா” எண்ணங்களாகத் தோன்றுகிறது. அந்த உணர்ச்சிகள் நமக்குள் இந்த உயிர் என்ற விஷ்ணு மோதலில் ஆனபின் ஒலி அலைகளை உடலிலே பரப்புகின்றது.
அந்த உணர்வின் சக்தியை நம் உடலிலே சுழலச் செய்கிறது. அந்த உணர்ச்சியின் தன்மை ஒவ்வொன்றிலும் தாக்குகிறது. எதன் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உண்ரச்சியின் தன்மை நம் உடலிலே உருவாக்குகின்றது.
நமது ஞானிகள் இதை எல்லாம் இணைத்துக் காவியமாக நமக்கு எவ்வாறு கொடுத்தார்கள்…? என்ற நிலையைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் “மனிதனான பின்”
1.நாம் எதை நுகர வேண்டும்…?
2.நாம் எதை வளர்க்க வேண்டும்…?
3.நாம் எவ்வழி செல்ல வேண்டும்…?
4.நாம் எதனை நமக்குள் பெருக்க வேண்டும்…? என்ற சிந்தனை வந்து விடும்.
ஆகவே சுழலப்படும் போது இந்த உணர்வின் சத்து… “சீதா” என்பது உடலாகி விடுகிறது. அதில் உள்ள மணம் ஞானமாகின்றது. எந்த மணத்தின் தன்மை இதில் உணர்ச்சிகளாகின்றதோ அந்த ஞானத்தின் தன்மை கொண்டு
1.இந்த உடல் இயக்கும்.
2.அந்தச் சொல் வரும்.
3.அந்தச் செயல் இருக்கும்.
சீதா என்ற நிலையின் அந்தச் சுவையின் சொல்லாக வரப்போகும் போது அந்த உணர்வின் மணமாக அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நம் எண்ணம் செயல்படும்.
ஆகவே இந்த விஷம் எதனுடன் கலக்கின்றதோ அதனின் உணர்ச்சியைத் தூண்டும் செயல் பெற்றது. ஆகையினாலே உணர்ச்சி என்பது மனிதனுக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்வது. உணர்வு என்பது ஒன்றுடன் இணைந்து அணுவின் தன்மை பெற்றது.
ஒரு மனிதனுக்குள் விளைந்து வெளிப்பட்ட உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் “உணர்வு…” என்ற நிலைக்கு மாறுகிறது. அந்த உணர்வின் தன்மையை மனிதர்கள் நுகர்ந்தால் “உணர்ச்சி…” என்ற உணர்வுகளே அது இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
1.ஒரு திடப்பொருளாகும் போது உணர்வு.
2.ஆனால் நாம் நுகரப்படும் போது உணர்ச்சி.
உதாரணமாக மிளகாயை எங்கேயோ வறுக்கிறார்கள். சூரியனின் காந்த சக்தி அந்த மணங்களை எடுத்துக் கொள்கிறது. சுவாசித்தவுடன் நாம் என்ன செய்கிறோம்..?
அந்த நெடி கலந்த உணர்வால் “நச்சு…நச்சு…” என்று தும்முகின்றோம். அப்போது அந்த உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்கின்றது. அது தும்மலாக வருகிறது.
உணர்வு இயக்கி உணர்ச்சியாக ஆன பின் அதைச் சொல்லாகச் சொல்லும் பொழுது “இந்த நேரத்திலே போய் மிளகாயை வறுக்கிறார்கள் பார்…!” என்ற சொல்லைத் தான் சொல்ல வைக்கின்றது.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா..!
இயற்கையின் நிலைகளில் “நாம் இயங்குகிறோமா…?” என்றால் இல்லை. நாம் நுகரும் உணர்வு எதுவோ அது தான் இந்த உடலை இயக்குகின்றது. இதைத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.
அப்பொழுது நாம் நுகரும் உணர்வுகள் எதுவாக இருக்க வேண்டும்…?
நம் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்று காட்டி அந்த மெய் ஞானிகள் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளைச் சுவாசித்து அதனின் இயக்கமாக நாம் வளர வேண்டும்… வாழ வேண்டும்…!
மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என்றும் வாழ்ந்திட வேண்டும் என்பதே நம் குருநாதர் காட்டிய அருள் வழி.
