
துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த நேரத்திலும் பெற நாம் பசித்திருக்க வேண்டும்
இந்த மனித வாழ்க்கையில் நாம் விழித்திருப்பது மிகவும் நலம். இந்த நினைவாற்றல் கொண்டு தெளிவாக்கி அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கச் செய்ய வேண்டும்.
நாம் போகும் பாதையில் தவறு செய்யாமலேயே பிறருடைய நிலைகளை நுகர்ந்தறிய நேருகின்றது. தீமையிலிருந்து விடுபடும் நிலைகள் வருகின்றது.
1.ஆனால் தீமையிலிருந்து விடுபட்டுச் சென்றாலும் நுகர்ந்த தீமையான அணுக்கள் நமக்குள் வளர்ந்து
2.தீமையை உருவாக்கும் நிலையாக தீமையையே உணவாக ஏங்கி எடுத்துத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.
3.அந்த இனத்தைப் பெருக்காது நாம் தடைப்படுத்த நாம் விழித்திருப்பதே நல்லது.
தனித்திரு… நீ விழித்திரு…! என்று சொல்வார்கள். எப்பொழுதுமே பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் கலக்காது “தனித்த அந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது” பிறருடைய உணர்வுகள் நமக்குள் கலந்திடாது அந்த மகரிஷியின் உணர்வுடன் ஒன்றி நாம் தனித்து வாழ முடியும்.
இல்லையென்றால் பிறருடைய தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்கிவிடும். அதனால் தான் ஒவ்வொரு நிலைகளிலும்.. நீ விழித்திரு நீ தனித்திரு என்று காரணங்களைச் சொல்லி ஞானிகள் கூறுகின்றார்கள்.
அருள் ஞானிகள் உணர்வை விழித்திருந்து அந்த உணர்வினைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் பிறிதொரு தீமை செய்வோர் உணர்வுகள் நம்மை இயக்காது.. நாம் தனித்து தனித்தன்மையில் வாழ்கின்றோம்.
தனித்தன்மை கொண்டு துருவ நட்சத்திரம் அந்த ஒளியின் சுடராக
1.மற்றொன்று இதை இயக்கிடாது… அதைத் தனக்குள் இயக்கப்பட்டு ஒளியின் தன்மையாக “தனித்தன்மையாக அது எப்படி வளர்கின்றதோ…”
2.இந்த மனித வாழ்க்கையில் எவரொருவர் அதனைப் பின்பற்றி அதைப்போல விழித்திருந்து செயல்பட்டாரோ
3.இன்றும் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சுடராக
4.அவரவர் நிலைக்கொப்ப தனித்தே வாழ்கின்றார்கள் தனித்தன்மை கொண்டு.
ஆகவே நாம் இந்த மனித வாழ்க்கையில் நாம் எதனின் தன்மை கொண்டு நுகர்கின்றோமோ அடுத்தவர்களுடன் தொடர்பு கொண்டு தான் நாம் வாழ்கின்றோம்.
ஒருவருக்கொருவர் இணை சேர்த்து ஒருவருக்கொருவர் ஒன்றி வாழுகின்றோம். கோள்களும் அதே போன்று தான் அதனதன் நிலைகள் வளர்ந்து அதனதன் தனித்தன்மையில் வளர்ந்தாலும்… அதனின் விஷத்தன்மைகள் வளர்கின்றது.
1.ஆனாலும் சூரியன் தனித்தன்மை கொண்டு வரும் நஞ்சினை எல்லாம் பிரித்து விட்டு ஒளியின் சுடராக மாற்றுகின்றது.
2.இதைப் போன்று தான் நாம் தனித்திருந்து விழித்திருத்தல் வேண்டும்.
எத்தகைய தீமையான உணர்வாக இருந்தாலும் ஒவ்வொரு நொடியிலும் அது உள் சேராது சூரியன் நஞ்சினைப் பிரித்து அதனுடைய தனித் தன்மையை எப்படிக் காட்டுகின்றதோ… தனித்த நிலைகள் அதனுடைய ஒளியின் தன்மையாக அது எப்படிச் செயல்படுகின்றதா இதைப் போன்று தான் நமக்குள் தனித்து இருத்தல் வேண்டும்… விழித்திருத்தல் வேண்டும்.
1.இந்த மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நல்லவர்களுடைய உணர்வுகளை அறிந்தாலும்
2.அவர்கள் உணர்வுக்குள் சிக்கி நாம் அடிமையாகாது தனித்திருப்பது நல்லது… தனித்திருப்பது என்றால் நாம் விழித்திருப்பது நல்லது.
தீமைகள் நமக்குள் ஊடுருவாது மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கித் தனித்தன்மையாக… நமது நிலைகள் உணர்வுகள் பிறருடைய தீமைகளிலிருந்து விடுபட்டுத் “தீமையற்றவராக வாழும் நிலை பெற வேண்டும்…”
மகரிஷிகள் தனித்திருந்து விழித்திருந்ததனால் தனித்திருக்கும் நிலை பெற்றார்கள். அதனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நமது வாழ்க்கையில் விழித்திருக்கும் உணர்வும் தனித்து வாழும் நிலைகளும் தீமையற்ற நிலைகளும் நமக்குள் வளர்ந்திடும் நிலை பெறுகின்றது.
அதை நினைவுபடுத்தும் நன்னாள் தான் சிவன் ராத்திரி.
1.நம் உடலுக்குள் இருளாக இருப்பதை அருள் ஞானிகள் ஒளிச்சுடரைச் சேர்த்து
2.இருள் சூழும் நிலையை நீக்கி இருளற்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.மெய் உணர்வுடன் ஒன்றிய நிலைகளை நமக்குள் பெருக்க வேண்டும்.
4.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று யானைகள் வரும் இடமாக என்னைப் போகச் சொல்கின்றார்.
1.யானையின் மணத்தை நுகர்ந்து உனக்குள் வலுவாக்கினால்
2.யானையின் மணம் உனக்குள் வந்த பின்
3.மணத்தால் நுகர்ந்து அறியக்கூடிய அந்த மிருகங்கள் உன்னை ஒன்றும் செய்யாது.
4.நீ பயம் கொண்டு சென்றால் யானைகள் நிச்சயம் அடிக்கும்
5.ஆகையினால் பயத்தின் உணர்வு இல்லாதபடி அதனின் மணத்தினை நுகர்ந்து செல்ல வேண்டும் என்றார்.
உதாரணமாக யானைப்பாகனாக இருந்தாலும் அவனும் யானையைக் கண்டு பயந்தான் என்றால் அந்த யானை அவனைத் திருப்பி அடிக்கும். உணர்வின் தன்மை யானையின் மணத்தின் வலுவைக் காட்டப்படும் பொழுது தான் அது அடங்கும்.
ஆகவே குருநாதர் சொன்ன முறைப்படி காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானை அருகே நான் சென்று விட்டேன். யானை தன் காதை விடைத்து விட்டால் அடுத்து மனிதனை அடிக்கத்தான் செய்யும். ஏனென்றால் ஏற்கனவே வேட்டைக்குச் சென்று எனக்குப் பழக்கம் உண்டு.
அப்போது காதை விடைத்தவுடன் எனக்குப் பயம் வருகின்றது. குருநாதர் சொன்னபடி யானையின் மணத்தை நுகர்ந்தேன்… இருந்தாலும் அடுத்து… “யானை என்னை அடித்து விடுமே…” என்ற பயத்தைத் தான் நுகருகின்றேன்.
யானையின் உணர்வின் மணம் எனக்குள் வரவேண்டும்… அந்த வலுப்பெற வேண்டும் என்று நான் எண்ணவில்லை. அது என்னை அடித்து விடும் என்ற மணம் வரப்படும் பொழுது எனக்குள் நடுக்கம் ஆகிறது.
அப்பொழுதுதான் “முன் வைத்த காலைப் பின் வைக்காதே…!” என்று குருநாதர் சப்தமிடுகின்றார். நான் கூறிய உணர்வை நினைவில் வை…! என்றார்.
அவர் சொன்னபடி
1.பயம் வரும் பொழுது அந்த யானை உணர்வின் மணத்தை நுகர்வதற்கு அவர் சொன்ன சில முறைகள் உண்டு
2.அதை வைத்து அதனுடைய மணத்தை எடுக்கப்படும் பொழுது யானை என்னை ஒன்றும் செய்யவில்லை.
யானையை விரட்டக்கூடிய பச்சிலையையும் குருநாதர் கையிலே எனக்குக் கொடுத்து இருக்கின்றார். அதை எல்லாம் நான் மறந்து விட்டேன் இந்த உணர்வின் நினைவே எனக்கு வரவில்லை. யானை அடித்து விடும் என்று நினைவு தான் ஓங்கி வந்தது
இதை மாற்றப்படும் பொழுது அவர் சொன்ன உணர்வுகள் நுகரப்பட்டு அந்த மணம் அங்கே ஆகும் பொழுது அது தன்னுடைய வலுவை இழக்கிறது.
1.அதாவது துப்பாக்கியையும் கையில் வைத்துக் கொண்டு
2.புலி வருகிறது… புலி வருகிறது…! என்று நடுங்கிக் கொண்டிருக்கின்ற மாதிரி…
3.அந்த இடத்தில் அவ்வாறு எனக்குக் காட்டுகின்றார்.
சுடும் மார்க்கத்தைக் காட்டியிருந்தாலும்… அதை அடக்கும் தன்மை இருந்தும்… இல்லாதபடி ஆகிவிட்டது. இதை எல்லாம் அனுபவரீதியிலே குருநாதர் கொடுத்தது.
அவர் சொன்ன முறைப்படி நுகர்ந்த பின் யானை என்னை ஒன்றும் செய்யவில்லை ஆனால் அந்த கூட்டத்தோடு வந்து ஒரு குட்டி என்னைத் இடித்துத் தள்ளுகின்றது… தொடுகின்றது… என்னை இழுக்கின்றது.
பெண் யானை என்ன செய்கின்றது…? அப்படியே முறைத்து நிற்கின்றது. என் மனதைக் கொண்டு… உள்ளபூர்வமாக நீ போ சாமி…! என்று இந்த உணர்வலைகளை வெளிப்படுத்தும் போது… அந்தக் குட்டி யானை அதனின் தாய் இழுத்துக் கொண்டு சென்று விட்டது.
இயற்கை உண்மை நிலைகளை அறிவதற்குத் தான் என்னை இப்படிக் காடு மேடலாம் குருநாதர் என்னை அலையச் செய்தார்… சாதாரணமாக அல்ல…!
உங்களிடம் இப்போது பேசுகிறேன் என்றால் அந்தக் குரு வழியினை நான் கடைப்பிடிக்கவில்லை என்றால் இருளுக்குள் தான் நான் சிக்க முடியும். உடலின் ஆசை தான் எனக்குள் வளரும்.
இந்த உடலில் ஆசை ஆனால் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது பல மிருகங்கள் இருந்தும் மரணம் அடைய வேண்டி வரும்.
இதற்கு அடுத்து என்னைத் திருப்பதிக்குச் செல்லும்படி சொல்கின்றார். நாரதர் மன்றம் என்று ஒன்று உண்டு அதையும் கடந்து தாண்டி செல்லச் சொல்கின்றார்.
பழங்கள் காய்க்கும் மரங்கள் ஏராளமாக அங்கே உண்டு. வருடம்தோறும் ஒவ்வொரு காலத்திற்கு எத்தனையோ கனிகள் அதிலே உருவாகும். கொய்யா… நவாப்பழம் போன்று எத்தனையோ வரும். அத்தனையும் அங்கே உருவாகின்றது.
துறவறம் பூண்டு தவத்திற்காகச் செல்பவர்களுக்கு அது தான் அங்கே உணவு. பழங்களை உண்டு தான் அங்கே தவத்தை மேற்கொண்டார்கள். அந்த இடத்திற்கு என்னைப் போகச் சொல்கின்றார்.
கனிகளை பறித்துச் சாப்பிட்டு அங்கே இருக்கலாம் என்றாலும் அந்தக் கனிகளை உட்கொள்ள அதைத் தேடி கரடி போன்ற மிருகங்கள் வருகின்றது… குரங்குகளும் வருகின்றது…!
அவைகள் அதைப் பறித்துச் சாப்பிடுகின்றன. நான் மரத்தில் ஏறித் தான் சாப்பிட வேண்டும் அல்லது கீழே விழுந்ததை எடுத்துச் சாப்பிட வேண்டும்.
ஒரு கரடிக் கூட்டம் அங்கே வருகின்றது.
1.முதலில் பயம் வந்தது..
2.பின் குருநாதர் சொன்ன முறைப்படி அந்த மணத்தை எடுத்தவுடன்… பேசாமல் முர்ர்…முர்ர்…முர்ர்.. என்று உறுமிக் கொண்டே போய்விட்டது.
எல்லாமே அனுபவ ரீதியில் தான் குருநாதர் கொடுக்கின்றார்.
பகலிலே குரங்குகள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றது. ஒரு ரவுடிக் குரங்கு எல்லாவற்றையும் துரத்தி அடித்து விரட்டுகின்றது. ஆனால் அங்கே இன்னொரு குரங்கு குட்டி போடுகின்றது.
அதனுடன் சேர்ந்த குரங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குழந்தை பிறந்த பிற்பாடு முத்தம் கொடுக்கின்றது. ரவுடிக் குரங்கிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்கின்றது.
ஆனால் அது ரவுடித்தனம் செய்தாலும் குழந்தைப் பாசத்தால் “குட்டிக்கு அதுவும் முத்தம் கொடுக்க ஆசைப்படுகின்றது…” அதனுடைய பாசத்தால் இச்.. இச்.. என்று குழந்தையை நாம் கொஞ்சவது போன்று கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தையை நோக்கி நகர்ந்து வருகின்றது.
அது நகர நகர… மற்ற குரங்குகள் அனைத்தும் உஷாராகின்றது. ஆனால் தாய் குரங்கு வெவ்வேவ்வே… என்று கத்த ஆரம்பிக்கின்றது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி… குட்டியிடம் சென்று தொட்டு முத்தம் கொடுக்கின்றது.
ஏதாவது ஆனால் எல்லாக் குரங்குகளும் அதைத் தாக்குவதற்கு உஷாராக இருக்கின்றது. ஆனால் குட்டிக்கு ஒன்றும் தெரியாது. இதை குருநாதர் பார்க்கும்படி செய்கிறார்.
குரங்கு தன் குட்டியை எவ்வாறு பாதுகாக்கின்றது…? அதனுடைய இனங்கள் எல்லாம் எப்படிப் பாதுகாப்பாக இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.
அப்பொழுது குடும்பத்தின் பால் என் நினைவுகள் செல்கின்றது மனைவியை விட்டு விட்டு வந்தோம்.. பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு வந்தோம். ஒரு பிள்ளையை மட்டும் தான் கட்டிக் கொடுத்தது. பாக்கி யாரையும் கட்டிக் கொடுக்கவில்லை. ஒரு கைக்குழந்தையும் இருக்கின்றது.
குரங்கையும் அதன் குட்டியையும் பார்த்தவுடன் என் ஞாபகம் அங்கே செல்கின்றது
1.அந்த ஆசை வரப்படும் போது என்னைப் பாதுகாக்கும் உணர்வு போய்விடுகின்றது… பயமும் மற்ற நிலைகளும் வருகின்றது.
2.கரடி அடித்து விடுமோ… பாம்பு கொத்தி விடுமோ… புலி அடித்து விடுமோ…! இந்த உணர்வெல்லாம் வருகிறது.
ஆனால் அந்த உணர்வை நுகராது இருக்கும் வரை பயமில்லை. என் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்த பின் பயம் எல்லாம் வருகின்றது. இந்த உணர்ச்சியை ஊட்டி அனுபரீதியாக எனக்கு அங்கே காட்டுகின்றார்.
1.நான் கொடுத்த சக்தியை நீ எப்படிப் பயன்படுத்துகின்றாய்…?
2.நான் எப்படிப் பயன்படுத்தும்படி சொன்னேன்…? என்று வினாக்களை எழுப்பி எனக்கு உண்மைகளை உணர்த்துகின்றனர்.
அது மட்டுமல்ல. இன்னொரு வேலையும் குருநாதர் செய்கின்றார். சிறிது நகர்ந்து ஒரு இடத்தில் உட்கார்ந்தேன். உட்கார்ந்த இடத்திலே அந்தக் காலத்து அரசர்கள் மண்ணிலே புதைத்து வைத்த காசு அங்கே வெளியே வருகிறது.
அதுவாக வந்ததா…! அல்லது குருநாதர் அப்படி வரும்படி வரவழைத்தாரா…? அது எப்படி…? என்று எனக்குத் தெரியாது. பார்த்தால் தங்கக் காசாக இருக்கின்றது. மொச்சைப் பயர் அளவு தடிமனாகவும் வட்டமாகவும் நீளமாகவும் இருக்கின்றது.
அதை எடுத்தவுடன் ஆசையை ஊட்டுகிறார். இது எதற்காகச் சோதிக்கின்றாரோ… தெரியவில்லை…! எனென்றால் குழந்தையை அந்த நேரத்திலே நினைக்கின்றோம் அல்லவா…!
இதை எடுத்துக் கொண்டு போய்க் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு வரலாமா என்ற இந்த எண்ணத்தை ஊட்டுகின்றார்.
1.அப்பொழுது அந்த இடத்தில் எனக்குள் மனப்போராட்டமாகின்றது.
2.குருநாதர் சொன்ன வழியில் ஞானத்தின் வழியில் செல்வதா அல்லது காசைப் பார்த்த பின் இந்த ஆசையின் வழி செல்வதா…?
3.குடும்பத்தில் குழந்தைகளைக் காக்க வேண்டுமே…!
குரங்கு தன் குட்டியைப் பாதுகாத்தது. அது போல் இதை எடுத்து என் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு வரலாமா…? என்று மனப் போராட்டத்தைக் கொடுக்கின்றார்.
இத்தனையும் நான் ஜெயித்து வர வேண்டி இருக்கின்றது. பின் அதற்கப்புறம் நான் அதை எடுத்து அந்தக் காசை எல்லாம் திருப்பதி உண்டியலில் கொண்டு போய்ப் போட்டேன்.
இது நடந்தது 1972 அல்லது 1973ல் இருக்கும். பத்திரிகைகளில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால் குருநாதருடைய பரிசோதனை
1.“அவர் கொடுத்த சக்தியைச் சீராக நான் பயன்படுத்துகின்றேனா…? என்று
2.பல வகைகளிலும் மனப் போராட்டங்கள் வருகின்றது.
3.இத்தனையும் வென்று தான் நான் வர வேண்டி இருக்கிறது.
இதைக் கடந்த பின் மூன்று லட்சம் பேரைச் சந்தித்து ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு துன்பப்படுகின்றான்…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.
இப்படி எத்தனையோ சிரமப்பட்டு அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு ஞானத்தின் வழித் தொடராக மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
உங்கள் நினைவினை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பால் செலுத்தி அவர் நமக்குக் கொடுத்த அருளும்… ஞானிகள் பெற்ற உண்மையையும் நாம் அறிந்து இந்த வாழ்க்கையைச் சீர்படுத்தவும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவும்… அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளைப் பெறத் தகுதி உடையவர்களாகவும் உங்களை நீங்கள் மாற்ற வேண்டும்.
அதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக வணங்கி உடலைக் கோவிலாக எண்ணி அவனால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் ஈசனுக்கு நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).
1.அதன் வழியில் நல்ல உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் பாதுகாத்தால்
2.உயிரான ஈசனுடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள்.
இந்த ஆசையைத்தான் குருநாதர் எனக்கு ஊட்டினார்…!


நாம் எதை எண்ணுகின்றோமோ “அதைத் தான்… அதுவாகத் தான்…” உயிர் நம்மை ஆக்கிவிடும்
பிறர் தீயவர்களாக இருப்பினும் அவர்கள் நல்லவராக மாற வேண்டும் என்ற இந்த உணர்வினை நுகர்ந்தால் நமக்கு நல்லது.
1.ஒருவர் தீயதைச் செய்கின்றார் அவர் நல்லவராக மாற வேண்டும் என்று நாம் எண்ணினால்
2.நமக்குள் அந்த நல்ல உணர்வைக் கொண்டு வருகின்றது… நல்ல உடலாக அது மாற்றுகின்றது.
3.நல்ல சொல்லாகவும் நம்மைச் சொல்லும்படி வைக்கின்றது.
ஆனால் நல்லவர் என்று எண்ணினாலும் அவரின் கோபமான உணர்வை நாம் நுகரப்படும் பொழுது அது தீமை ஆகி விடுகின்றது. பாலிலே பாதாமைப் போட்டாலும் அதில் ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்தப் பாதாமிற்குச் சக்தி இல்லை.
நாம் நல்லதை எண்ணிச் செயல்பட்டாலும் கெட்டவன் என்று இருந்தால் அவனைக் கேட்டுத்தான் நாம் உணர்கின்றோம். அப்படி உணரப்படும் பொழுது அந்த வலிமை நம் உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது.
ஆகவே தான்
1.தீயவர்கள் என்பது எவரும் இல்லை.
2.சந்தர்ப்பம் தான் தீய செயலைச் செயல்பட வைக்கின்றது.
3.அந்தச் சந்தர்ப்பம் உடலில் தீய உணர்வுகளாக விளைகிறது.
தீய அணுக்கள் விளைந்து இந்த உடலிலேயே தீயவனாக மாற்றி இந்த உடலுக்குப் பின் மனிதன் அடுத்து மனிதனல்லாத உடலாக உருவாக்கி விடுகின்றது.
எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாகப் பிறந்த பின் மனிதன் எப்படி வாழ வேண்டும்…? என்பதற்குத்தான் சாஸ்திரங்களை ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.
ஆதிமூலம் என்ற உயிர் தான்… பல கோடி உடலில் தீமைகளை நீக்கி நீக்கித் தீமையிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வை எடுத்து இப்படிப் பல கோடி உடல்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது..
ஆகையினால் தான்… முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக நம்மை மனிதனாக உருவாக்கியது விநாயகா. வினைக்கு நாயகனாக நல்ல உடலாக உருவாக்குகின்றது.
மனிதனான பின் தீய உணர்வை நுகர்ந்து விட்டால்…
1.அந்தத் தீய உணர்வு வினைக்கு நாயகனாகித் தீய செயலும் செயல்பட வைத்து விடுகின்றது…
2.தீய சொல்களையும் சொல்ல வைத்துத் தீய உடலாக மாற்றி விடுகின்றது.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதை நமது உயிர் இயக்கிக் காட்டுகின்றது… உடலாக்குகின்றது… அதையே ஆளுகின்றது நமது உயிர்.
1.ஆண்டவனாக இருப்பதும் உயிர்
2.எண்ணியதை இயக்குவதும் உயிர்…
3.எண்ணியதை உருவாக்குவதும் உயிர்
4.எண்ணியதை உடலாக்குவதும் உயிர்
இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு சமயம் எதிரி என்ற நிலை உருவாக்கப்படும் பொழுது ஒரு மரத்தைக் காட்டுகின்றார் குருநாதர். ஒரு சொல்லைச் சொல்லும்படி சொன்னவுடன் அந்த மரம் தூக்கி வீசப்பட்டுப் பறந்து போய் விழுகிறது.
யாராவது எதிரிகள் வந்தால்… இப்படி எண்ணினால் அவனைத் தூக்கி எறிந்து விடலாம்… வெற்றி பெறலாம்… நம்மை யாரும் எதிர்க்க முடியாது…! என்ற உணர்வுகள் எனக்கு வருகின்றது.
ஒருவன் சிறிது தவறு செய்தாலும் இதே உணர்வை நீ பாய்ச்சப்படும் போது அந்த வலிமை தான் வரும். “உனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை… அது அடித்துச் சென்றுவிடும்…!” என்றார் குருநாதர்.
காற்று வேகமாக வீசினால் என்ன செய்யும்…?
1.தனியாகக் கெட்டதை மட்டும் தூக்கிச் செல்லுமா…?
2.சேர்த்து நல்லதையும் தான் தூக்கிச் செல்லும்.
3.அந்த நல்லதையும் குப்பையுடன் சேர்த்துக் கலக்கத்தான் செய்யும்.
இதைப் போன்ற நிலைகளைக் காட்டி நீ எடுத்துக் கொண்ட உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்யும்…? என்பதை அங்கே தெளிவாக்குகின்றார்.
குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்த பின்… ஆஹா…! என்னை யாரும் எதிர்க்க முடியாது என்ற நினைவு வருகிறது. பல முறை அதைச் சோதித்துப் பார்க்கும்படி சொன்னார். இன்னும் சோதித்துப் பார்…! என்றார்
பல முறை செய்த பின்… அந்த வேக உணர்வு தான் தோன்றுகின்றது
1.அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது தீமைகளை உருவாக்கும் உணர்வுதான் உனக்குள் வரும்.
2.அப்போது இந்தத் தீமைகளை யார் அடக்குவது…? யார் நீக்குவது…? என்று நிலைகளை வினா எழுப்புகின்றார்.
உன் ஆறாவது அறிவைக் கொண்டு…
1.தீமையை நீக்கும் உணர்வை எடுத்து அதனுடைய செயலாக்கங்களை மாற்று…!
2.அப்பொழுது தான் அது அடங்கும் என்றார்.
அடுத்து இன்னொரு வேலையும் குருநாதர் செய்தார்.
ஒரு இரும்புக் கரண்டியை வாங்கி வரச் சொன்னார்… ஈயக்கட்டியையும் வாங்கி வரச் சொன்னார். மலைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவருக்குத் தெரிந்த பல பச்சிலைகளையும் குப்பைகளையும் எல்லாம் “இதிலே கொஞ்சம்… அதிலே கொஞ்சம்…” என்று எடுத்து வரச் சொன்னார். அங்கங்கே உள்ள தூசிகளையும் போடச் சொன்னோர்.
ஒட்டு மொத்தமாகக் கரண்டியில் போட்டு அதைத் தீயை வைத்து எரிடா..! என்றார்.
1.எரிந்த உணர்வுகள் அதில் வரும் வெப்பத்துடன் கலக்கின்றது.
2.அது கலந்த பின் என்ன செய்கிறது…? ஈயம் “பள… பள…” என்று மின்னுகிறது.
எப்படிடா இருக்கிறது…? என்று கேட்டார். சாமி…! தக…தக… என்று இருக்கின்றது…! என்று சொன்னேன்.
மீண்டும் எப்படிடா இருக்கின்றது என்றார்…? தக…தக… என்று இருக்கிறது என்று சொன்னேன்.
விட்டார்… ஓங்கிப் “பளார்…” என்று ஒரு அடி கொடுத்தார். எப்படி இருக்கிறது…? சொல்லுடா…! என்றார்.
மீண்டும் தக…தக… என்றேன். என்னடா தக…தக…?
அப்புறம் “தங்கம் போல இருக்கின்றது சாமி” என்று சொன்னேன்.
தூ…! என்று சொல்லி அது எல்லாவற்றையும் மூடுடா என்றார். சூடு எல்லாம் ஆறிய பின்பு பார்த்தால் நல்ல “சொக்கத் தங்கமாக” இருக்கிறது.
இதைக் கொண்டு போய்க் கடையில் விற்கச் சென்றால்.. “நீ பைத்தியக்காரிடம் சுற்றிக் கொண்டிருந்தது எதற்காக…? என்று இப்பொழுது தான் தெரிந்தது…! தங்கம் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டாய். தங்கம் எவ்வளவு வேண்டுமானால் கொண்டு வா… உனக்குக் காசு தருகிறேன்…! என்றார்.
இன்னொருவர் என்ன சொல்கின்றார்…! நீங்கள் செய்து கொடுத்தால் உங்களுக்கு மாட மாளிகை கட்டித் தருகிறேன். நீங்கள் விற்க வேண்டாம்…! என்று இப்படிச் சொல்லிக் கொண்டு என் பின்னாடி சுற்றித் திரிந்தவர்கள் ஏராளம்.
விற்றுவிட்டு வந்த பின் குருநாதர் என்ன செய்தார்…? காசை எல்லாருக்கும் ஒவ்வொரு ரூபாயாகக் கொடுத்து விட்டார்.
முதலில் அவர் தங்கம் செய்யச் சொல்லும் போது எல்லாவற்றையும் நான் பார்த்தேன் அல்லவா. அவர் இல்லாத பொழுது நான் தனியாகத் தங்கம் செய்து பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்
அதே மாதிரித் தங்கம் வந்துவிட்டது.
ஆசை வந்துவிட்டது அல்லவா…! இரண்டாவது இதை விற்று விட்டு வரலாம் என்று கடையிலே சென்று கொடுத்தேன். எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா என்றார்கள்.
குருநாதர் அங்கிருந்து வந்தார். உனக்கு இப்பொழுது எப்படி இந்த ஆசை வருகின்றது…?
1.உன் மனதைத் தங்கமாக்குவதற்கும் அதே சமயத்தில் பாதரசத்தில் மணியைச் செய்யும்படி சொன்னேன்.
2.எல்லா உணர்வுகளையும் சேர்த்து உயிர் எப்படி ஒளியானதோ அது போன்று உணர்வின் தன்மை ஒளியாக்கச் சொன்னேன்
3.தங்கத்தை போன்று மனம் ஆகி மங்காத நிலையாக உருவாகி உணர்வின் தன்மை தெளிவாக்கி
4.அந்தத் தெளிவின் தன்மை உயிர் ஆக்கப்படும் பொழுது இது பாதரசங்களாக மாறும்.
இதன் உணர்வை எல்லாம் சேர்த்து… இங்கே ஈயத்திற்குள் எப்படித் தங்கமாக மாறியதோ… இதைப் போன்று தான் தாவர இனங்களைச் சாரணையாக்கி உணர்வின் தன்மை ஒளி ஆனது. மனித உடலை உருவாக்கக் காரணமானது என்று அறிந்தவன் போகன்.
உணர்வின் தன்மை சிலையாக உருவாக்கி அதிலே சாரணை ஏற்றி மணத்தை வெளிப்படுத்தும் போது…
1.வரும் மக்கள் தீமைகளிலிருந்து விடுபடுவதற்கு அந்த முருகன் சிலையைப் பார்த்து நுகரும் போது
2.நல்ல நிலைகள் உருவாகி… மகிழ்ச்சி என்ற உணர்வு வரும்.
3.அதன் நினைவாக இதை எடுத்து “தன் மனதைத் தெளிவாக்க” இப்படி ஒரு உபாயத்தைச் செய்தான் போகன் அன்று…!
ஆனால் நீ என்ன செய்கின்றாய்…? உன் ஆசை தங்கம் செய்து அதை விற்றுக் காசை சம்பாதிக்கலாம் என்று வந்துவிட்டாய். இந்த ஆசை வந்தால் நீ அடுத்து எதை எடுப்பாய்…? உன் உடலுக்கு உதவும். எல்லோரும் வரவேற்பார்கள் ஏகபோகத்தில் செயல்படுத்துவார்கள். நீ எங்கேடா போகிறாய்…? என்று கேட்டார்.
தங்கம் மங்காது என்று சொன்னீர்கள்… தங்கத்தை நோக்கிச் செல்கிறேன் என்றேன்.
1.உன் ஆசை என்ன செய்கின்றது…? தங்கம் செய்து செய்து விற்கத்தான் செல்கிறது…?
2.அப்போது உன் மனது தங்கம் ஆகுமா…? ஆகாது…!
3.தங்கத்தின் மீது ஆசை அதிகமாகும்…!
4.விற்று வளர்ந்துப் பல தவறுகளைச் செய்யும்படிச் செய்யும்
5.கடைசியில் இந்த மனித உடலை அது அழிக்கத்தான் உதவும்.
இரண்டாவது தரம் தங்கம் செய்தவுடன் இதைத்தான் எனக்கு உபதேசித்தார். தங்கம் எப்படிச் செய்ய வேண்டும்…? என்பதைக் காட்டவும் செய்தார். அதனால் வரும் பின் விளைவுகள் என்ன…? என்பதையும் காட்டினார்.
ஆகையினால் அவர் சொன்ன முறைப்படி நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… அந்த உயர்ந்த மனம் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தில் நான் செயல்படுத்தும் போது… நீங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி எனக்கு உயர்ந்த சத்தாகிறது.
எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நீங்களும் அதே போன்று எண்ணினால் உங்களுக்கும் அது உயர்ந்த சத்தாகும்.
1.நான் ஒருவன் மட்டும் செய்து பெருமையைக் காட்டினால் நல்லது நடக்குமா…?
2.அருளைப் பெருக்கினால் தான் இருள் விலகும்… அந்த உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.
உன்னுடைய ஆசைகள் அதனதன் வழியில் செல்லப்படும் பொழுது அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகின்றது…? கடைசியில் நிராசையாக எப்படி மாறுகிறது…?
1.அந்த நேரங்களில் எல்லாம் உன் மனதை எப்படிப் பண்படுத்த வேண்டும்…? என்று
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படித்தான் அனுபவமாக எனக்குக் கொடுத்தார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வுகளை வைத்து அதில் எதன் அதிர்வோ அதை வைத்து மாற்றி அமைக்கும் பல வேலைகளை விஞ்ஞானி கொண்டு வருகின்றான்.
பாஷைகளை எழுதினால்… அல்லது பேசினால்…
1.எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலையில் அதனுடைய மோதல்களுக்கு ஒப்ப உணர்வின் அறிவாக எழுத்தின் ரூபத்தைக் கொடுத்து
2.ஒரே நிலையில் ஒரே அழுத்தத்தின் தன்மை கொண்டு தமிழ் இந்தி தெலுங்கு ஆங்கிலம் என்று
3.உலகில் உள்ள எத்தனையோ நூறு பாஷைகளில் அதை மொழி பெயர்த்து
4.அதனுடைய உருவத்தின் அமைப்பைக் கொடுக்கின்றான் கம்ப்யூட்டரின் துணை கொண்டு.
“அதிர்வின்” நிலைகள் கொண்டு தான் அதைச் செயல்படுத்துகின்றான். இதையெல்லாம் நாம் இன்று கண்கூடாகப் பார்க்கின்றோம் அல்லவா.
எதன் விஷத்தின் தன்மை அதிலே கலக்கின்றானோ அந்த உணர்வுக்கொப்ப அதில் இணைத்தால் இன்ன ரூபமாகும் என்று ஒரு நொடிக்குள் கொண்டு வருகின்றான்,
ஆனால் நாம் அந்த பாஷைகளை எல்லாம் கற்றுணர்ந்து மொழி பெயர்ப்பை எல்லாம் தெரிந்து அதை எழுத்து வடிவிற்கு நாம் கொண்டு வருவதற்கு முன்பு… அதிவேகமாக மொழி பெயர்க்கக் கூடிய சக்தி பெற்றிருக்கின்றான் விஞ்ஞானி.
இதே போன்றுதான்
1.அருள் உணர்வின் தன்மை பெற்று ஒரு நொடிக்குள் எதையும் ஒளியாக மாற்றிடும் திறன் நாம் பெற வேண்டும்.
2.அத்தகைய திறன் பெற்றவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவர்கள்… சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றனர்.
மனிதனானவன்… தன் இனமாக வாழப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உணர்வைப் பெற்று நம் முன்னோர்களை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.
தாய் தந்தையர்… மூதாதையர்கள்… அவர்களின் குல வழியில் வந்தவர்கள் தான் நாம் அனைவருமே. அவர்கள் சப்தரிஷி மண்டலம் செல்லவில்லை என்றாலும்
1.அவர்கள் பெறத் தவறிய சக்திகளை நாம் பெற்று
2.அந்த ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும்… அல்லது செல்லவில்லை என்றாலும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலுக்குள் செலுத்தி… அந்த வலுவின் தன்மை கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.
எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்களின் உயிரான்மக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று அவர்களை உந்தித் தள்ளி… பிறவி இல்லாத நிலையை அடைய வைக்க முடியும்.
நம் மூதாதையர்கள் தங்களைக் காக்க எத்தனையோ வேதனைகள் பட்டனர். பரிவு கொண்டு நம்மையும் காத்தார்கள். நம்மை வளர்ப்பதற்காக எத்தனையோ வேதனைகளை அவர்கள் நுகர்ந்தார்கள்.
அவருடைய கிளை வழி விழுதுகள் நாம் அவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க வேண்டும்.
ஆனால் இன்று பிள்ளை இல்லை என்றால் “எங்களுக்குக் கொள்ளி வைப்பதற்கு ஆள் இல்லை… அதனால் தத்துப் பிள்ளை எடுக்கின்றோம்…” என்று செயல்படுத்துகின்றார்கள். ஏனென்றால் “இவன் தான் கொள்ளி வைத்து என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவான்…” என்று எண்ணுவார்கள்.
முதலில் எனக்குப் பிள்ளை இல்லையே என்றிருப்பார்கள். ஆனால் வளர்த்துக் கொண்டு வரப்படும் போது… அந்தப் பிள்ளை சுகமாக வளர்ந்த பின் “அதைக் கெஞ்ச வேண்டும்…”
1.பிள்ளையை எண்ணி வேதனை உணர்வுகளை எடுத்து வளர வளர அவன் மீது இருக்கும் பற்றே அற்றுவிடும்
2.கடைசியில் நான் வளர்த்து ஆளாக்கினேன்… எல்லாம் செய்தேனே… என்று வேதனைப்பட்டு இறந்த பின்
3.அங்கே கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளை என்பதற்கு மாறாக அவன் உடலில் இந்த ஆன்மா புகுந்து அவன் நிலையே தான் ஆகும்.
4.மீண்டும் பிறவிக்குத் தான் வர முடியும்
நன்றாக யோசனை செய்து பாருங்கள். இதிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டுமாக இல்லையா…?
காற்று மண்டலமே இன்று நச்சுத்தன்மையாக உள்ளது. மனிதனுக்கு மனிதன் சிந்தனை இழந்த நிலையில் உள்ளான். தீவிரவாதம் என்றும் கொலை கொள்ளை என்றும் மனிதனை மனிதனே இரக்கமற்று அழித்திடும் நிலைதான் இருக்கின்றதே தவிர மனிதனைக் காக்கும் நிலை இல்லை.
1.மனிதர்களைக் காத்திடும் நல்ல உணர்வுகளைப் பெறுவதற்கு ஆலயங்களை ஞானிகள் உருவாக்கிக் கொடுத்திருந்தாலும்…
2.அதிலேயும் ஏமாற்றித் தன் பிழைப்புக்காக நல் வழி பெறக்கூடிய தகுதியை இழக்கச் செய்யும் நிலை தான் இன்று உள்ளது.
அல்லது ஆண்டவன் பெயரைச் சொல்லி நரபலி கொடுத்து அதிலே சக்தி பெற்று விடுவோம் என்று இப்படி மந்திர தந்திரங்களில் வருகின்றார்கள். ஏமாற்றித் தந்திரமாக அழைத்துச் சென்று “நரபலி கொடுத்தால்” மெச்சித் தனக்கு அந்தத் தெய்வம் கொடுக்கும் என்று…!
1.ஆனால் அப்படி நரபலி கொடுத்தாலும் அந்த உடலை விட்டு பிரிந்த ஆவி
2.கொன்றவன் உடலுக்குள்ளே வரும் என்பதை மறந்து விட்டான்.
அதாவது… எவன் கொலை செய்கின்றானோ அவன் உடலுக்குள்ளே தான் அந்த ஆன்மா செல்லும். பின் அதே நிலைகளில் “அவனையும் ஆட்டிப் படைத்து வீழ்த்தும்…” என்பதை மறந்து விட்டான்.
ஏனென்றால் எந்தெந்த வழியில் இன்று உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.ஊரை ஏமாற்றலாம்… உலகை ஏமாற்றலாம்…
2.இந்த உயிரிடம் மட்டும் யாரும் ஏமாற்ற முடியாது… யாரும் இதை மறந்து விடக்கூடாது.
3.நான் அதைச் செய்வேன்… யானையைச் செய்வேன்… பூனையைச் செய்வேன்… என்று ஏமாற்றலாம்
4.ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவு எதுவோ… அதன் வழி நமக்குள் அணுவாக உருவாக்கி
5.உடலில் அதைச் சேர்த்து வளர்த்துக் கொண்டே இருப்பான் உயிர்.
கீதையிலே நீ எதை எண்ணுகின்றயோ நீ அதுவாகின்றாய்…! பிறரைக் கொலை செய்ய வேண்டும் என்றால் அந்தக் கொலை செய்யும் உணர்வு வளர்ந்து மனிதனாக உருவாக்கிய அணுக்களை எல்லாம் அது கொன்று விடும்.
1.கொலை செய்து அவனைக் கொன்று போட்டேன் என்று எண்ணலாம்
2.ஆனால் அவன் வேறு எங்கும் போக மாட்டான்
3.கொலை செய்தவன் உடலுக்குள் வந்துவிடுவான்.
நுகர்ந்த கொன்றிடும் உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து பிரம்மம் ஆகின்றது. அதன் உணர்வு கொண்டு துரித நிலையில் கடைசி நேரத்தில் இந்த உடலிலே மாற்றங்கள் ஏற்படும். இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது…!
1.நானும் இப்பொழுது உபதேசிக்கின்றேன்
2.உபதேசித்து விட்டுத் தவறான வழியில் சென்றால் நானும் என் உயிரிடமிருந்து இருந்து தப்ப முடியாது.
ஆகவே… குரு இட்ட கட்டளைப்படி உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதிக்கின்றேன்… உங்களை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறேன்.
நான் கொடுத்த சக்தியை அதற்குத் தான் பயன்படுத்த வேண்டும் என்று “குருநாதர் இப்படித்தான் எனக்கு அதை உணர்த்தினார்…”


குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானியாக நீங்கள் மாறியே ஆக வேண்டும்
1.இவ்வளவு பெரிய உண்மையைச் சொல்கிறேன்…! எவனும் என் சொல்லைக் கேட்க மாட்டேன் என்கிறான் என்று
2.நீங்கள் இப்படிச் சொல்லி மற்றவர்களைக் கோபித்துக் கொண்டால் என்ன ஆகும்…?
3.இந்த உணர்வை அவர்களால் ஏற்க முடியவில்லை…. நம்மால் நல்லதை வளர்க்க முடியவில்லை…! என்ற இந்த நிலை தான் வருகின்றது.
அதைப் போன்ற நிலை இல்லாதபடி குருநாதர் சொன்ன அருள் வழிப்படி
1.அவர் கண்ட அகண்ட நிலையைப் போல்
2.நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக மாறியே ஆக வேண்டும்.
யாம் கொடுக்கும் அருள் சக்திகளை நீங்கள் எடுத்தால் உங்களுக்குள் சிந்திக்கும் ஆற்றல் வரும். வாழ்க்கையில் கஷ்டமோ நஷ்டமோ வந்தால் அதை ஈடுகட்டும் உணர்வின் வலு வரும்.
சிந்தனையுடன் செயல்படும் சக்திகள் பெருகும்… குடும்பத்தில் அன்புடன் பண்புடன் வாழும் இந்த உணர்வுகள் வளரும். ஞானத்தின் தன்மை பதிவாக்கி உணர்வின் தன்மை செயலாக்கப்படும் பொழுது அன்புள்ள குடும்பமாகவும் அருள் ஞானத் தெய்வீக குடும்பமாகவும் நாம் மாற முடியும்.
ஆக நீங்கள் எல்லோரும் பிறருக்கு எடுத்துக்காட்டாக வளர வேண்டும். கஷ்டத்தையும் நஷ்டத்தையும் விடுத்து விட்டு அருள் செல்வத்தைக் கூட்டி இருளைப் போக்கும் சக்தியாக வளர்ந்து அருள் வழியில் பண்புடன் வாழ்வோம்.
நீங்கள் தான் அனைவருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். காரணம்
1.உங்களை வழி நடத்துவதற்கு அனைத்தையும் எடுத்துச் சொல்லி விட்டேன்.
2.நீங்கள் அதை எடுத்து வளர்த்துக் கொள்வதில் தான் இனி இருக்கின்றது.
3.வளர்த்தால் நாம் வளர்கின்றோம்… நஞ்சின் தன்மையிலிருந்து மீளலாம்…. பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.
நல்லதைப் பேசினேன்… தெரிந்து கொண்டேன்… என்ற நிலையில்
1.நான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன் என்று எண்ணினால் ஏமாந்து விடுவோம்.
2.தெரிந்து கொண்டே தான் இருக்கின்றோமே தவிர முழுமையாக நான் தெரிந்து கொண்டேன் என்று எவருமில்லை.
சொல்லின் உணர்வின் தன்மை அறிந்து கொண்டாலும் முழுமையாக நாம் ஒரேடியாகத் தெரிந்து கொள்ள முடியாது… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் இயக்கும். அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு நாம் அருளைச் சேர்த்துச் செயல்படுத்த வேண்டும்.
1.வெயில் அடிக்கும் பொழுது ஒரு உணர்வு
2.மழை பெய்யும் பொழுது ஒரு உணர்வு
3.குளிர் அடிக்கும் போது ஒரு உணர்வு
4.காற்று அடிக்கும் போது ஒரு உணர்வு
கால நிலைகள் இப்படி நமக்குள் மாறிக் கொண்டே தான் இருக்கும். “எந்த நேரத்தில் எதைச் செயல்படுத்த வேண்டும்…?” என்ற உணர்வினை அறிந்து அந்த ஞானத்தின் வழிப்படி நாம் வாழ்வோம்.
அனைவரையும் அந்த அருள் வழியில் வாழ வைப்போம். அருள் வழி செல்வோம் இந்த உடலுக்குப் பின் ஒளியின் உணர்வாக முழுமையான நிலையை நாம் அடைவோம். ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம்… பத்தாவது நிலையான கல்கி அடைவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆண்டவன் பெயரைச் சொல்லி… சாமி பெயரைச் சொல்லி…
1.நான் அதைச் செய்து தருகின்றேன் ஆண்டவனயே என் கையில் வைத்திருக்கிறேன்… தெய்வத்தைக் கைவல்யப்படுத்தி வைத்திருக்கின்றேன்
2.உனக்குப் பல கோடி கிடைக்கும் என்று ஆசைகளை ஊட்டுவோர் வழியில் சிக்கி மனித ரூபத்தையே இன்று சிதறடித்துக் கொண்டுள்ளோம்.
ஏனென்றால் கடைசி நிலையாக இருக்கக்கூடிய நாம் இன்று எதைப் பெறுகின்றோம்…? என்று சிந்தித்துப் பாருங்கள். மனித உடலில் சகலத்தையும் உருவாக்க முடியும் என்று அரச நிலைகள் கொண்டு சாகாக்கலை ஆகின்றோம்.
ஆனால்
1.ஞானிகள் வேகாநிலை பெற்றவர்கள்.
2.மீண்டும் ஒரு உடலுக்குள் புகாது ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
வேகாக்கலை என்றால் நாம் தீயிலே குதித்தாலும் இந்த உயிர் அது வேகுவதில்லை. உணர்வுகள் கருகுகின்றது… உணர்ச்சிகள் மாறுகின்றது உடல்கள் கருகுகின்றது.
உடலை விட்டுச் சென்ற பின் அந்தக் கருகிய உணர்வை உயிர் எடுத்துக் கொண்டு அந்த உணர்வுக்குத் தக்கவாறு “எரி பூச்சியாக” அடுத்து உருவாக்கி விடுகிறது.
ஆனால் அதே சமயத்தில் இறக்கும் தறுவாயில் நண்பா..! நான் போகின்றேன்…! என்று பாசத்துடன் எண்ணப்படும் பொழுது அந்தப் பற்று கொண்ட உடலுக்குள் சென்று… எரிச்சல் தாங்காது நண்பனையும் கருக்கும் நிலைகளுக்கே கொண்டு சென்று விடுகிறது… தற்கொலை செய்யும்படி ஆகிவிடுகின்றது.
நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!
இந்த வாழ்க்கையிலே நம்மால் தாங்க முடியவில்லை என்றால் உடனே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வருகின்றது செய்யும் போது நண்பன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தால் அந்த உடலுக்குள் சென்று அவனையும் தற்கொலை செய்யும்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
சில வீடுகளில் ஆக்ஸிடென்டுகள் ஆகட்டும்.
1.ஐயோ…! இப்படி ஆகிவிட்டதே… இறந்து விட்டாரே…! என்று சொல்லப்படும் பொழுது
2.விபத்தான அதே உணர்வுகளை எடுத்தால் மீண்டும் மீண்டும் விபத்துக்களை அங்கே உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.
என்ன வாழ்க்கை…? என்று தாங்க முடியாது தற்கொலை செய்து இருந்தால் அந்த உணர்வின் தன்மை வந்து குடும்பத்தில் எதிர்பாராத நிகழ்வுகளும் விபத்துக்களும் வந்து கொண்டிருக்கும்.
இதெல்லாம் சில குடும்பங்களில் இன்று பார்க்கலாம். இதையெல்லாம் தடுப்பது யார்…? மந்திரம் தந்திரம் எந்திரம் செய்து மாற்றிவிடலாம் என்றால் முடியுமா…?
சம்பாதித்த காசை எல்லாம் அவனுக்குக் கொடுத்து விட்டு “எல்லாவற்றையும் செய்தேன்… ஒன்றும் முடியவில்லை” என்ற உணர்வு கடைசி முடிவாகித் தற்கொலைக்கு அழைத்துச் செல்கின்றது.
உயிரால் வளர்க்கப்பட்ட மனித உடலின் வளர்ச்சியைக் கொன்று விட்டு நாம் எங்கே தப்ப முடியும்…?
இந்த உணர்வினைத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் உயிர் கடைசியில் ஆனபின் இதே உணர்வின் நிகழ்ச்சிகள் வரும். அடுத்து அதற்குத்தக்க அடுத்த உடலாக மாறும்.
பாம்புகளை எடுத்துக் கொண்டால் அதனின் கடைசிக் காலத்தில் “தாங்க முடியவில்லை” என்றால் தன் உடலில் தானே கொத்திக் கொண்டு மரணம் அடைகின்றது. அதாவது
1.விஷத்தின் ஆற்றலை அது உருவாக்கப்படும் பொழுது தன்னால் முடியவில்லை என்றால்
2.கடைசி நிமிடம் இந்த உடலிலே வேதனைப்படுவதற்கு மாறாக தன்னையே கொத்தித் தீண்டி விடும்
3.விஷங்கள் பட்டபின் மடிந்துவிடும்.
விஷத்தின் தன்மை உணவாக உட்கொண்டு உணர்வின் தன்மை அந்த விஷமே ஜீரணிக்க உதவினாலும்… உடலில் மேல் இந்த விஷத்தன்மை பட்டபின் அது விஷத்தன்மைகள் ஊடுருவி அந்தப் பாம்பும் மரணம் அடைகின்றது.
நல்ல பாம்பின் விஷத்தை நாம் சாப்பிட்டால் நம்மை ஒன்றும் செய்யாது. அதே சமயத்தில் நம் உடல் மீது எங்காவது புண் இருந்து… அந்த விஷம் இதிலே லேசாகப்பட்டால் போதும்… ஊடுருவி நம்மைக் கொன்று விடும்.
இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்று ஞானிகள் கண்டுணர்ந்தனர். அதைப் பின்பற்ற வேண்டுமா இல்லையா…?
யாரும் தவறு செய்யவில்லை. அன்பு கொண்டு பரிவு கொண்டு பண்பு கொண்டு பாசம் கொண்டுதான் வாழுகின்றோம்.
1.அந்தப் பாசத்தால் பிறர்படும் துயரத்தை நுகர்ந்து அறிகின்றோம் நம் உயிரிலே படுகின்றது.
2.அவன் உணர்வு இரத்தத்தில் கருவாகி இந்திரலோகமாகின்றது
3.பின் இங்கே அதை உருவாக்கி விடுகின்றது.
அவன் உடலில் விளைந்த விஷத்தின் உணர்வுகள் எல்லா அணுக்களிலும் ஊடுருவி இதன் உணர்வின் தன்மை கருவாக்கி நல்ல அணுக்கள் மாற்றமாகும் தன்மையே பெறுகின்றது.
இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?
சர்வ தீமைகளையும் நஞ்சினையும் வென்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. உயிர் தோன்றி மனிதனாக வளர்ச்சி பெற்ற பின்… அகஸ்தியன் என்றும் ஒளிச் சரீரமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அந்தத் “துருவ நட்சத்திரத்தின் சக்தி” – இன்றும் என்றும் பூமிக்குள் நமக்கு முன் வந்து கொண்டே உள்ளது.
2.அதைக் கவர்ந்து அந்த நம் உடலில் சேர்த்துக் கொண்டால்… இருளை அகற்றி நாம் ஏகாந்தமாக வாழ முடியும்
இந்த விஞ்ஞானிகள் பல மருந்துகளை மனித உடலுக்குள் செலுத்தப்பட்டு மனிதனை 1500 வருடங்கள் வாழ வைக்க முடியும் என்று சொல்கின்றார்கள்.
ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.பல ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக வாழ முடியும்
2.இந்தச் சூரியன் அழிந்தாலும்… பிரபஞ்சமே காணாமல் போனாலும்
3.இந்தப் பிரபஞ்சத்திலிருந்து… அகண்ட அண்டத்தில் வரும் தூசிகளை நுகர்ந்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று விடுகின்றோம்.
மனிதனான பின் அந்த வளர்ச்சிக்கு நாம் போக முடியும்.


என் குடும்பத்தைச் சிரமப்பட வைத்துத் தான் உலக மக்கள் வாடுவதைப் பற்றி எனக்கு உணர்த்துகிறார் குருநாதர்
ஆரம்பத்திலே என் மனைவி நோயால் வாடியது… பின் குரு அருளால் நலம் அடைந்து எழுந்தது. அதற்கு அப்புறம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உலக அனுபவம் பெறுவதற்கு நான் வெளியிலே சென்று விடுகிறேன்.
ஆனால் குடும்பத்தில் எத்தனையோ கஷ்டங்கள் வருகிறது. இந்த உணர்வுகள் உன்னை எப்படித் தாக்குகிறது…? நான் கொடுத்த சக்தி கொண்டு அதிலிருந்து குடும்பத்தை எப்படி மீட்ட வேண்டும்…? என்று குரு காட்டுகின்றாற்.
நான் வெளியில் சென்ற பின் என் குடும்பத்தில் எத்தனையோ அவஸ்தைகள் பட்டார்கள். ஆனால் அன்று அவர்களுக்கு நான் எதையும் செயல்படுத்த முடியவில்லை.
1.ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் எத்தனையோ அவஸ்தைகள் படுகின்றார்கள்.
2.அது எல்லாம் எப்படி ஏற்படுகின்றது…? அதிலிருந்து அவர்களை மீட்டும் வழி என்ன…? என்பதைத் தெரிந்து கொள்வதற்குத்தான்
3.என் குடும்பத்தை இப்படிச் சிரமப்பட வைத்து… அதை வைத்து எம்மை அறியும்படி செய்கின்றார் குருநாதர்.
ஆசை என்ற நிலையில் என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் குருநாதர் கொடுத்த சக்தியை நான் சுயநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும்… மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். ஆனால் அப்படி நான் செய்யவில்லை…!
வீட்டிலே பட்டினியாக இருக்கின்றார்கள். இன்றைக்கும் அதையெல்லாம் யாம் எண்ணினோம் என்றால் அழுகை தான் வரும்.
சுற்றுப்பயணம் செய்துவிட்டு வீட்டிற்கு வருகின்றேன்.
1.பார்த்தால் மூன்று நாட்கள் நான்கு நாட்கள் பட்டினியாக இருக்கின்றார்கள்.
2.அனைவருமே அப்படியே இறுகிப் போய் இருக்கின்றார்கள் யாரிடம் பணம் கேட்பது…? என்ற நிலை இல்லாதபடி…!
நான் மங்களூரில் இருந்து வரும் பொழுது அங்கே எனக்கு உதவி செய்பவர்கள் பணத்தைக் கொடுப்பார்கள். பஸ்ஸிலே வந்து கொண்டிருந்தேன். ஒருவன் பணம் இல்லை என்றான்.. அவனிடம் அதைக் கொடுத்து விட்டேன்.
மற்றவர்கள் கேட்கும் பொழுது கொடுத்து விடுகின்றேன்.
1.என் வீட்டுக்குப் போக வேண்டும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு வரவில்லை.
2.ஏனென்றால் குரு அவ்வாறு செயல்படுத்திக் காசை அங்கேயே கொடுக்கும்படி செய்கின்றார்.
நான் வீட்டிற்கு வந்தால் வெறும் பாக்கெட்டாகத் தான் வருகின்றேன். வீட்டிற்கு வந்து தான் நான் சாப்பிட வேண்டும்.
வெளியிலே நான் எந்த வீட்டிற்குச் சென்றாலும் சாமி வாருங்கள்.. நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்கின்றார்கள். எனக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.
1.ஆனால் என் குடும்பத்தில் பட்டினியாக இருக்கின்றார்கள்… எல்லோரும் வாடுகின்றார்கள்.
2.அப்பொழுது இதை வளர்ப்பதா…? அதை வளர்ப்பதா…? நான் எதைச் செய்வது…? என்று சிக்கலான நிலையை குருநாதர் கொண்டு வருகின்றார்.
பட்டினியாக இருப்பதைப் பார்த்தபின் என் உறவினர்களிடம் நண்பர்களிடம் சென்று “வீட்டிலே பட்டினியாக இருக்கின்றார்கள் ஒரு ஐந்து ரூபாய் கொடுங்கள்…” என்று கேட்கின்றேன்.
எங்களுக்கும் அவர்கள் பணம் தர வேண்டும். இருந்தாலும் என்ன சொல்கிறார்கள்…?
ரூபாய் என்றால் நீ என்ன நினைக்கின்றாய்…? ஐந்து ரூபாய் என்றால் சும்மா வந்துவிடுமா…?
நாங்கள் நன்றாக இருக்கும் போது எங்களிடம் பணம் வாங்கி இருக்கின்றீர்கள். அதிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து உதவி செய்யலாம் அல்லவா என்று கேட்கின்றேன்.
நீ நினைத்தவுடன் ஐந்து ரூபாய் வந்துவிடுமா என்று இப்படிக் கேட்கின்றார்கள். (குருநாதர் அங்கே உணர்த்துகிறார்)
குழந்தைகள் பட்டினியாக இருக்கிறார்கள்… ஒரு வேளை சோறாவது சாப்பிட வேண்டும் அல்லவா. நான் வந்து இப்பொழுது தான் அதைப் பார்க்கின்றேன் என்று சொல்கின்றேன். எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரிடம் இப்படிக் கேட்கின்றேன்.
நீங்கள் கேட்கும் பொழுது எங்களிடம் கொடுப்பதற்குப் பணம் இல்லையே என்று இப்படித்தான் சொல்கின்றார். நீங்கள் கேட்டவுடன் ரூபாய் வந்துவிடுமா…?
நன்றாக இருக்கும் பொழுது எங்களிடம் வாங்கினீர்கள். இந்தக் கஷ்டமான நேரத்தில் அதைக் கொடுத்து உதவி செய்யலாம் அல்லவா என்று கேட்டால் இதெல்லாம் எங்களிடம் நீங்கள் கேட்கக் கூடாது என்கிறார்கள்.
நாங்கள் கொடுக்கிறோம் என்று தான் சொல்கிறோம். ஆனால் இப்பொழுது எங்களிடம் பணம் இல்லை. நீங்கள் ஏன் சும்மா அதைக் கேட்கிறீர்கள்…?
யாராவது இதற்கு சிபாரிசு செய்து பணத்தைக் கொடுங்கள் என்று சொன்னால் நீங்கள் யார் இவருக்குப் பணம் கொடுக்கச் சிபார்சு செய்வது…? என்று அவர்களுடன் சண்டைக்குச் செல்கின்றார்.
காரணம்
1.இது எல்லாம் குருநாதர் அனுபவத்தில் காட்டிய நிலைகள்.
2.ஒரு மனிதன் இயற்கையில் வாழ்க்கையில் வலுப் பெறும் பொழுது எப்படி வாழ்கின்றார்கள்…?
3.ஆனால் அதிலே தாழ்ந்த பின் என்ன நடக்கிறது…?
4.மனிதன் வாழ்க்கையில் உண்மையின் உணர்வின் தன்மை தெளிவாக வேண்டும் என்றால் அது எப்படி…? என்று எம்மை அறியும்படி செய்தார்.

தற்கொலை செய்த ஆன்மாவைக் கூட நாம் விண் செலுத்த முடியும்
நம் முன்னோர்களின் உயிரான்மக்களை இதற்கு முன் விண் செலுத்தவில்லை… பழகவில்லை. ஆகையினால் அந்த உயிரான்மாக்கள் இன்னொரு உடலில் இருக்கும்.
அப்படி… மற்ற உடலில் இருந்தாலும்
1.அவர்களை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் முறைப்படுத்தி விண்ணிலே
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்ற உணர்வலைகளைப் பாய்ச்சப்படும் போது
3.எந்த உடலுக்குள் இருந்தாலும் இந்த உணர்வுகள் அங்கே வட்டமிடும்.
ஏனென்றால் அவர்கள் உணர்வு தான் நமது உடல். ஒரு நண்பன் நமக்கு நன்மை செய்தான் என்றால் அந்த உணர்வுகள் விக்கலாகப் பாய்கிறது. இதே போல உடலை விட்டுப் பிரிந்தவர்கள் இன்னொரு உடலில் இருந்தாலும் “நாம் செலுத்தும் உணர்வுகள் அங்கே போய் இயக்கும்…”
அந்த உடலில் ஆவியாகத்தான் இருக்கும். ஆனால் “மனிதனல்லாத உடலுக்குள் சென்று விட்டால்… நாம் ஒன்றும் செய்ய முடியாது…!”
பொதுவாக… இறந்த பின் யார் மீது பற்றிருக்கின்றதோ அந்த உடலுக்குள் தான் ஆன்மா செல்கின்றது.
1.உடலுக்குள் சென்றாலும் ரத்த நாளங்களில் தான் அது சுழன்று கொண்டிருக்கும்.
2.நாம் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணினால்
3.எந்த உடலில் இருக்கின்றார்களோ அந்த உடலுக்கு முன்னாடி நம்முடைய உணர்வுகள் சுற்றும்.
சந்தர்ப்பத்திலே அவர்கள் இறக்கப்படும் பொழுது முன்னோரின் ஆன்மாவும் வெளிவரும்.
1.நாம் தினசரி எண்ணி அவர்களை விண் செலுத்திய உணர்வுகள் கொண்டு
2.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
இதுகள் எல்லாம் ஒரு சிலருக்குத் தெரிய வரும்.
காரணம் அந்த இன்னொரு உடலில் இருந்து இந்த ஆன்மா வெளிவந்த பின்… நம்முடைய உணர்வு தாக்கப்பட்ட பின் நினைவு வரும். “என்னை ஏன் விண் செலுத்தவில்லை…? விண் செலுத்து…! என்று அந்த உணர்ச்சிகள் உந்துவதைக் கூடத் தெரிந்து கொள்ளலாம்.
அவருடைய உணர்வு நமக்குள் இருப்பதால் நினைவுபடுத்தி அந்த ஆன்மாக்களை விண் செலுத்தும்படி செய்யும்.
ஒருவர் நோயுடன் சென்று இருக்கலாம்… திடீரென்று அகால மரணத்துடன் சென்றிருக்கலாம்… வெறுப்பின் தன்மை கொண்டு தற்கொலை கூட செய்து இருக்கலாம்.
1.அப்படித் தற்கொலை செய்திருந்தாலும் கூட அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்த முடியும்.
2.காரணம் மனிதன் தான் அதைச் செயல்படுத்த முடியும்.
சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்கள் இணைக்கப்பட்டு உடல் பெறும் உணர்வு கரைக்கப்பட்டு அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும்.
வான் வீதியில் தோன்றிய உயிரணுக்கள் தான் நம் உடலில் சேர்கிறது. மனிதனான பின் உணர்வுகளை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரம் பெற்றது துருவ நட்சத்திரம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெறும் போது நாமும் அந்த நிலை பெறுகின்றோம். அந்த வலுவின் துணை கொண்டு நம் முன்னோர்கள் மூதாதையரின் உயிரான்மாக்களை அங்கே ஒளிச்சரீரம் பெறச் செய்ய வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளரும் பொழுது அவர்கள் பிறவியில்லா நிலை அடைகிறார்கள். இதை நாம் வளர்த்துக் கொண்டே வந்தால் அந்த வலுக் கொண்டு நாம் எப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும். காரணம்…
1.எந்த உணர்வின் தன்மை வலுப் பெறுகின்றதோ அதனுடைய தொடர் வரிசை பூமியில் இருப்பதால்
2.அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் வளர்க்கச் செய்வது தான் ஆத்ம சுத்தி
மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஏங்கி எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நான் எடுத்தேன்… ஆனால் மீண்டும் வரவில்லை என்று எண்ண வேண்டாம்.
துணிகளில் அழுக்குப் பிடித்து விட்டது என்றால் சோப்பைப் போட்டு அதை நீக்குகின்றோம். அதைப் போல் ஒரு பொருளைச் செய்யும் போது சரியாக வரவில்லை என்றால் அதைச் சீர்படுத்துகின்றோம்.
உதாரணமாக ஒரு உலோகத்தை உருக்கிக் கொண்டு வரும் பொழுது சரியாக அது வரவில்லை என்றால் மீண்டும் அதை உருக்கிச் சரியான பருவத்திற்குக் கொண்டு வருகின்றான் மனிதன்.
இதைப் போலத் தான்
1.அந்த மெய் ஞானிகள் உணர்வைத் திரும்பத் திரும்ப எடுத்து ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு உடலுக்குள் செலுத்தி
2.அதைச் சீராக வளர்த்திடும் அந்த எண்ண வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
அதற்குத்தான் கூட்டுத் தியானங்களை ஏற்படுத்துகின்றோம். அதன் வலு கொண்டு எண்ணிக் “காற்றிலிருந்து அந்தச் சக்திகளை எடுக்கப் பழகுவதற்கு ஆத்ம சுத்தி…”
தையல் கலையைக் கற்றுக் கொள்கின்றார்கள். அப்படிக் கற்றுக் கொண்டவர்கள் மற்றவர்களுடன் பேசிக் கொண்டே சீராகத் தைக்கின்றார்கள். ஆனால் புதிதாகக் கற்றுக் கொள்ள நாம் அதைக் கூர்ந்து கவனித்தாலும் நம்மால் நேராகத் தைக்க முடியாது.
ஆனால்…
1.நம்முடைய கூர்மையான உணர்வை அதற்குள் செலுத்தி
2.அது சீராக வைக்கும்படி நம் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
3.அந்த வேலை செய்யும் எண்ணமே அதைச் சீராக நம்மைச் செயல்படுத்தும்படி செய்துவிடும்.
உதாரணமாக கண் பார்வை இழந்தவர்கள் தன் உணர்வின் ஆற்றலால் பிளாஸ்டிக் வயர்களை வைத்துப் பின்னிப் பழகுகின்றார்கள். அந்த உணர்வின் இயக்கமே அளவுகோலைக் குறித்து…
1.கண் தெரிந்தவர்கள் நாம் அதைப் பின்னுவதைக் காட்டிலும்
2.கண்ணற்றவர்கள் பழகி அழகாகக் கலரையும் இணைக்கின்றார்கள்… பின்னலையும் தெளிவாக உருவாக்குகின்றார்கள்.
கண்ணற்றவன் தடவிப் பார்த்துக் கலரைப் பார்க்கின்றான்.
இதைப் போல நமது உணர்வின் ஆற்றலைத் தெளிவாக்கிப் பெருக்கிக் கொள்வதற்குத் தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்று பழகிக் கொடுக்கிறோம்.
உங்கள் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் அதை நீக்க உங்கள் எண்ணத்தால் கவர்ந்து உங்கள் உயிருடன் இணைக்கச் செய்யும் பொழுது அதைப் பாய்ச்சி ஜீவன் பெறச் செய்து அந்தச் சக்தியை வளர்த்து விடுகின்றது.
ஒவ்வொரு நொடியிலும்
1.உங்களுக்குள் குறை உணர்வோ அல்லது பலவீனமான எண்ணங்களோ வந்தால் அதை மனதில் ஏற்றுக் கொள்ளாது
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம சுத்தி செய்து
3.உங்களுக்குள் இணைந்த தீமை விளைவிக்கும் உணர்வுகளைத் தணித்து
4.மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் வளர்க்கச் செய்வது தான் ஆத்ம சுத்தி.
இதுதான் உண்மையான தியானம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும்… நவக்கோளின் உணர்வுகளையும்… நவக்கோள்களால் விளைந்த தாவர இனங்களையும் சேர்த்து… சிலையாக போகன் உருவாக்குகின்றான்.
சூரியனிலிருந்து வெளிப்படும் பாதரசம் தான் எல்லாவற்றிலும் கலக்கிறது. பாதரசம் எதனைக் கவர்கின்றதோ அது விந்தாக மாறி அதன் உணர்வே கருவாகி உருவானது என்பதை சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
பாதரசத்தை வைத்து நவக்கோள்களில் உருப்பெற்ற பாஷாணத்தையும் இணைத்து ஒரு உருவமாக மனிதனைப் போன்று வடிக்கின்றான். இதன் உணர்வைக் கவர்ந்த பின் ஒவ்வொரு தாவர இனங்களிலும் இந்த ரசங்கள் உண்டு. அதை எல்லாம் அந்தச் சிலைக்குள் “சாரணையாகக்” கொடுக்கின்றான் போகன்.
தாவரங்களை ஆடு மாடுகள் தின்றாலும்… புலி அதை அடித்துச் சாப்பிட்டாலும்… இந்த உணர்வு அதிலே எப்படியும் அதற்குள் கலக்கின்றது. அதனின் உணர்வுகள் சிறுகச் சிறுகக் கலவைகள் ஆகி… தீமைகளை நீக்கும் மனித சரீரமாக உருவாக்குகிறது என்பதனை உணர்ந்தவன் அருள் ஞானி போகன்.
1.ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதை உணர்ந்தவன்.
2.ஆனால் ஆதியில் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்
அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருப்பினும் அவனுடைய அறிவு கொண்டு போகன் செயல்படுத்தினான். அதன் வழி முருகன் சிலையை உருவாக்கிப் பழனி மலையில் ஸ்தாபித்தான்.
1.அந்தச் சிலையின் மீது சிறிது நீரை விட்டால் போதும்
2.அது வெப்பமாகும்.. ஒரு ஆவியின் தன்மை கிளம்பும்…
3.”அதை நுகர்ந்து நமது ஆன்மாவாக ஆக்கிடல் வேண்டும்…”
அதாவது… நாம் கீழிருந்து மேலே படியில் ஏறும் போதே அதைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் “முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் அந்த மணங்களைச் சுவாசிக்க நேர்கின்றது…”
இடையிலே இடும்பன் மலை என்றும் வைத்திருப்பார்கள்
காரணம்… மேலே ஏறிச் செல்ல வேண்டும் என்கிற போது வேதனையென்ற உணர்வாகி விட்டால் கை கால்களை முடங்கச் செய்து விடுகின்றது… அப்படி இடைமறித்துத் தடுப்பதை இடும்பன் என்று காட்டினார்.
மீண்டும் ஏக்க உணர்வுகளை மேலே செலுத்தி… களைப்பை நீக்கி அவன் அருளைப் பெற வேண்டும் என்று கிரிவலம் வந்தால் அங்கே தூப ஸ்தூபி இருக்கும்.
1.அதற்கு நேராக நின்று வானை நோக்கி எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்வதற்காக அதை வைத்தார்கள்.
அந்த உணர்வுடன் ஆலயத்திற்குள் சென்று அவன் அறிவின் தொடர் கொண்டு… முருகன் சிலையிலிருந்து வரும்… தீமைகளை நீக்கிடும் ஆவியின் தன்மையை நுகர்தல் வேண்டும்.
1.சிலையைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து நாம் பதிவாக்கப்படும் பொழுது கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்.
2.சிலையைப் பதிவாக்கிய பின் அதிலிருந்து வரக்கூடிய மணத்தைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்கின்றது
3.நுகர்ந்து உயிரிலே பட்டபின்… இந்த உணர்ச்சியின் தன்மை தீமையை நீக்கும் சத்தாக
4.போகன் வடித்த உணர்வை… அந்த வெண்ணையை…
5.நம் கண் திருடி… நம் உடலுக்குள் தீமையை நீக்கிடும் சக்தியாகப் பரவச் செய்கின்றது.
வெண்ணை என்றால் நெய்யாக நம் உடலுக்குள் அது எப்படிச் சத்தாக ஆகின்றதோ… அதே போல் சிலையிலிந்து வரும் மணத்தின் சத்தை நாம் வடிக்கப்படும் பொழுது… நம் உடலில் தீமையை நீக்கும் அருள் சக்தி கிடைக்கின்றது.
கண்டுணர்ந்த மெய் ஞானியான போகன்… கண்ணின் இயக்கமும் உயிரின் இயக்கமும் உடலின் அமைப்பும் என்ற நிலையில்
1.சாதாரண மக்களும்… தன்னைத் தான் தனக்குள் இயக்கும் நிலைகளை அறிந்து கொள்ள
2.தீமையை நுகரும் பொழுது என்ன நடக்கின்றது…? என்றும்
3.தீமையை நீக்கிய அருள் ஞானிகள் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
4.இந்த உடலில் என்ன விசித்திரங்கள் நடக்கிறது…? என்பதையும் காட்டினான்.
ஏனென்றால் தீமையான உணர்வுகளை நல்ல குணம் கொண்டோர் நுகரும் பொழுது அது எத்தகைய விஷத்தன்மையாக மாறுகிறது…? நல்ல குணங்கள் எப்படி மாறுகின்றது…? உடல்கள் எப்படி நலிகின்றது…? என்பதை அறிந்த போகன் தன் இன மக்களுக்கு அதிலிருந்து மீட்டிக் கொள்ளும் உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று அன்று செயல்பட்டான்.
தன் இன மக்கள் என்றால் சாதாரணமாக எண்ணவில்லை…!
ஒவ்வொரு மனிதனின் உயிரும் கடவுள்.. அவனால் அமைக்கப்பட்ட ஆலயம் அந்த உடல். அந்த ஆலயத்தைத் தூய்மைப்படுத்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தவே அதைச் செய்தான் போகன்.
ஏனென்றால் உயிரே கடவுள்… அவனே உள்ளிருந்து ஆளுகின்றான்… “பிறருடைய நிலைகளை அந்த ஆண்டவன்…” என்று எண்ணிச் செயல்படும் பொழுது… மகிழ்ச்சி என்ற உணர்வை வெளிப்படுத்தும் போது… எல்லோரும் அதன் உணர்வின் தன்மை பெறுவதற்க்காக போகன் அந்த வழியில் செய்தான்.
1.யாரெல்லாம் போகனை எண்ணி அதைச் செயல்படுத்துகின்றனரோ
2.ஆயிரக்கணக்கானோருக்கு அந்த ஆலயத்தில் நலம் பெறும் சக்தியாகக் கிடைக்கின்றது.
மனித உடலில் இருக்கும் போது தான் இத்தகைய வேலைகளைச் செய்தான்.
தீமைகளை நீக்கிய உணர்வின் தன்மை பெற்று… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி… ஒளியின் சரீரமாக… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக போகன் இன்றும் உள்ளான்.
1.அவன் ஒளியான உணர்வை நாம் நுகரப்படும் பொழுது
2.அவன் சென்ற பாதையில் நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகி
3.இருளை நீக்கிடும் அருள் சக்தி பெற்று இந்த உடலுக்குப் பின் அவன் வழியிலே அங்கே (சப்தரிஷி மண்டலம்) செல்ல முடியும்.
4.போகன் அதைப் பெறவே… அதன் உணர்வைப் பெற்று அங்கே பெற்றான்.
5.அவன் வழியில் செல்லப்படும் போது… நாமும் அங்கே செல்ல முடியும்.
போகன் காட்டிய தூப ஸ்தூபியின் முன் நின்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதை வட மேற்காக வைத்திருப்பார்கள். விநாயகரை வைத்தது போலேயே முருகன் சிலையையும் போகன் அவ்வாறு தான் வைத்துள்ளான்.
1.நாம் வட கிழக்காகப் பார்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணும் பொழுது
2.அவன் காட்டிய முறைப்படி நாமும் நஞ்சை வென்று… அவன் அடைந்த எல்லையை அடைய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
முருகனுக்குப் பல பழங்களைப் போட்டுப் பஞ்ச அபிஷேகம் செய்கின்றோம் ஐந்து கனிகளைப் போடும் பொழுது வெப்பம் காந்தம் விஷம்… இதெல்லாம் சேர்ந்து தான் சத்தின் தன்மை (பொருளை) எடுத்துக் கனியின் தன்மை அடைந்தது.
அதாவது எதன் பொருளை எடுத்துக் கவர்ந்து கொண்டதோ புலனறிவு ஐந்தாகின்றது.
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அங்கே முருகனுக்குப் பஞ்சபிஷேகம் நடக்கிறது என்றால்
2.அதைப் போன்ற மணங்கள் பெற வேண்டும்… அந்தச் சுவையின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி
3.அந்த உணர்ச்சிகளை நம் உயிரில் இணைத்து அபிஷேகம் செய்தால்
4.அது எப்படி ஐந்து விதமான சுவைகளை ஊட்டிப் பஞ்சாமிர்தமாக ஆனதோ
5.அந்த ஐந்து வகையான அமிர்தங்களாக நமக்குள் சுவை ஊட்டுகின்றது.
நம்முடைய ஐந்து புலனறிவினாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து கொண்டால் இவை அனைத்தும் “பஞ்ச அமிர்தம்” என்று வருகின்றது. அது தான் காயத்ரி.
துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று அந்த எண்ணத்தை இயக்கினால் இதற்குப் பெயர் வசிஷ்டர்…! அந்த உணர்வின் தன்மை உயிரிலே படும் பொழுது அந்த உணர்ச்சிகளின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.
உடலுக்குள் செல்லப்படும் போது…
1.அன்று அகஸ்தியன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதை எப்படி வென்றானோ
2.அந்த உணர்வின் ஆற்றல் நம் உடலில் சேர்கின்றது.
தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு… தீமைகளை வென்றிடும் சக்தி பிரம்மமாகிறது. அதனின் இயக்கமாக நம்மைத் தீமையிலிருந்து விடுபடச் செய்யும். அதன் சக்திக்கு அருந்ததி என்று காரணப் பெயர் வைக்கிறார்கள்.
இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பத்தாவது நிலை அடையக்கூடிய மனித உடலில் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் எப்படி எல்லாம் சேருகின்றது என்று.
அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி உடலாக ஆனதோ… அதனுடன் இணைந்து வாழும் சக்தி என்று தெளிவாக்கப்படுகின்றது.
ஆறாவது அறிவு கொண்ட மனிதன் – முருகு மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவன். எப்படி…?
கருணைக்கிழங்கு இருக்கிறது என்றால் அதை வேக வைத்து அதில் உள்ள விஷத்தை நீக்குகின்றோம். புளி உப்பு காரம் என்று பல பொருட்களைச் சேர்த்து அதைச் சுவையாக உருவாக்குகின்றோம்.
1.சுவையாக அதை உணவாக உட்கொள்ளும்போது…
2.நம் உணர்ச்சிகள் அது பஞ்ச அபிஷேகமாக அந்த உணர்வுகள் நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.அந்த உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அமிலங்களாக உருவாக்குகின்றது
4.அந்த அமிலங்கள் உமிழ் நீராக மாறுகின்றது.
உணவாக உட்கொள்ளும் சக்திக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது அது நம் இரத்த நாளங்களில் கலந்து அந்த அணுக்களின் மலமாகி நம் உடலில் நல்லதாகி… நம்மை ஆரோக்கியமாக்கும் நிலை வருகின்றது.
ஆகையினால்
1.ஆறாவது அறிவால் விஷம் அடக்கப்படுகின்றது… மகிழ்வாகனா (மயில்வாகனா)
2.மயில் தோகை விரித்து அது மகிழ்ச்சியாக ஆடுகின்றது… நஞ்சினை விழுங்குகின்றது
3.அது உடலில் உள்ள உறுப்புகள் அந்த நஞ்சை அடக்குகின்றது.
விஷத்தைக் காலடியில் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக “உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டி…” அதனுடைய இயக்கத் தொடர் பரிணாம வளர்ச்சியில் எப்படி எல்லாம் நாம் வளர்ந்து வந்தோம்…?
1.பல கோடிச் சரீரங்களில் ஒன்றன் பின் ஒன்றாகத் தீமைகளை நீக்கி நீக்கி
2.இன்று மனிதனாக வளரக் காரணமானது என்பதைக் காட்டுவதற்கு
3.மயிலின் காலடியில் பாம்பைப் போட்டு உணர்த்துகின்றார்கள்… இந்த உண்மையைக் கண்டுணர்ந்த ஞானிகள்.
நாம் இந்த உண்மைகளை உணர்ந்தறிவதற்காக வேண்டி எல்லாவற்றுக்கும் காரணப் பெயர்களை வைத்து
1.எது எதனுடன் இணைக்கப்படும் பொழுது
2.எதன் வழியில் நாம் எப்படி நல்லதாக உருவாக்க வேண்டும் என்று காட்டினார்கள்.
விஞ்ஞானி ஒரு பொருளைக் கண்டுபிடித்த பின் அவன் அதற்கென்று ஒரு காரணப் பெயரை வைத்து… அதில் இன்னென்ன பொருள்கள் கலக்கப்படும் பொழுது இன்னது இன்னது தான் செய்யும் என்று அனுபவ ரீதியிலே தெரிந்து அதைச் செயல்படுத்துகின்றான்.
இது இதற்குக் காரணம் ஆகும்…. இது மற்றதை இப்படி உருவாக்கும் என்று பல வகையிலும் அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகின்றான்
அதே போல் பல பல திரவ(க)ங்களை விஞ்ஞான அறிவில் புதிதாக உருவாக்குகின்றார்கள். சிறுநீரில் அதை இணைத்துக் காய்ச்சப்படும் பொழுது சிறுநீரில் உள்ள சர்க்கரைச் சத்தின் அளவைக் காட்டுகின்றது. அதே போன்று இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தையும் காட்டுகின்றது.
விஞ்ஞான அறிவு கொண்டு இதையெல்லாம் காணுகின்றார்கள் அது போன்றுதான்
1.இயற்கையின் இயக்கத்தின் உண்மையின் உணர்வைச் சாதாரண மக்கள் அறிந்து உணர்வதற்காக
2.ஒவ்வொன்றுக்கும் ஞானிகள் காரணப் பெயரை வைத்து நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலையில் வாழும்படி வழி காட்டுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் தன்னைக் காத்திடும் உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து
2.நூறு குணங்கள் ஒன்றாகித் தீமைகளை நீக்கிடும் உடலாக்கியது.
நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினை மலமாக வெளியேற்றி… நல்ல மகிழ்ச்சி பெறும் உணர்வின் தன்மையை அறியும் அறிந்திடும் அறிவாக வைத்தது. இது ஆண்பால்… முருகா…!
பல கோடித் தீமைகளை நீக்கிடும் சக்தியாக… தீமைகளை நீக்கிடும் வலிமை பெற்றது இந்த மனித உடல். தீமைகளை நீக்கிடும் அந்த உணர்ச்சிகள் அது பெண்பால்… வள்ளி…! (வலிமைமிக்க சக்தி – வல்லி)
மனித உடலில் இருந்து நஞ்சை மலமாக்கும் தன்மை வரப்படும் பொழுது அது ஆண்பால். அதிலிருந்து அந்த உணர்வின் அறிவாக இயக்கப்படும் பொழுது பெண்பாலாக. ஆகின்றது.
அதற்குக் காரணப் பெயர் என்ன வைக்கின்றார்கள்…? “வள்ளி” அந்த வலிமைமிக்க சக்தியைப் பெண்பாலாக அப்படி வைக்கின்றனர்… வள்ளி.
1.அந்த வலிமைமிக்க சக்தி கொண்டு தான்
2.(அடுத்து) வலிமைமிக்க சக்திகளை நாம் பெற முடியும்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி… தீமைகளை நீக்கிடும் அந்த வலிமைமிக்க சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரமாக ஆனான் என்பதனை மனிதனின் அறிவில் தெரிந்து கொண்ட ஞானிகள்…
1.இதை நமக்கு அறிவிக்க அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள்.
2.அதை நாம் பதிவாக்கி விட்டால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடிகின்றது.
ஞானிகள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை முருகனாக வடிவமைத்து… அருவத்தின் சக்திகளை நாம் பெறுவதற்கு வழி காட்டினார்கள். ஏனென்றால் உயிரணு தோன்றி பல தீமைகளையும் கொடுமைகளையும் வென்று விஷத்தின் ஆற்றலை மாற்றி ஒளியின் சரீரமாகப் பெற்றது துருவ நட்சத்திரம்.
பாம்பினங்களோ தன் உடலில் உருவான விஷத்தை இன்னொரு உடலிலே ஊடுருவச் செய்து… அந்த விஷத்தின் இயக்கமாக அந்த உடலில் உள்ள விஷத்துடன் இதைப் பாய்ச்சி அதனுடன் ஐக்கியமாக்கி… அதை விழுங்குகிறது.
விழுங்கிய பின் ஜீரணித்து…
1.இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து மீண்டும் விஷத்தின் சேமிப்பாகி
2.அதன் உணர்வின் தன்மை வலிமையாக்கப்படும் போது… அது உறையும் தருணம் வந்தால்
3.சேமிக்கப்பட்ட அந்த விஷமே “நாகரத்தினமாக” மாறுகின்றது…!
பாம்பு பல உயிரினங்களின் விஷத்தினை அடக்கி… அதை எப்படி நாகரத்தினமாக (ஒளியாக) மாற்றுகின்றதோ… இதைப் போன்று பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி நாம் எடுத்துப் பழகிக் கொண்ட உணர்வுகள்… நஞ்சினை மலமாக மாற்றிடும் உடல் அமைப்பாக உருவாகியது.
ஆக…
1.வலிமைமிக்க சக்தி கொண்டு நஞ்சினை நீக்கிடும் அந்தச் சக்தி பெற்றது மனிதச் சரீரம்.
2.அதனால்தான் அந்த வலிமை மிக்க சக்தியை வள்ளி என்று காட்டினார்கள் ஞானிகள்.
இதைப் போல் அகஸ்தியன் தன் வாழ்நாளில் நஞ்சினை வென்று உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான். அகஸ்தியன் ஒளியாக ஆன ஆற்றலை வலிமைமிக்க சக்தி கொண்டு தான் நாம் அதைப் பெற முடியும்.
1.அதைப் பெற வேண்டும் என்று இப்போது நாம் ஏக்கம் கொண்டால்
2.நமக்குள் அந்தச் சக்திகள் அதிகமாகச் சேருகின்றது
அது தான் வசிஷ்டர்… கவர்ந்து கொண்ட சக்தி.
எந்த்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் இச்சைப்பட்டுக் கவர்கின்றோமோ… அது நமக்குள் இணைந்து அருந்ததியாக
1.அவன் எப்படி நஞ்சினை ஒளியாக மாற்றினானோ
2.அதே வழியில் நாமும் அந்த அகஸ்தியனைப் போன்று ஒளியின் தன்மை பெற முடியும்.


நஞ்சாக எது வந்தாலும்… அது எனக்குள் ஒளியின் அறிவாக மாற வேண்டும் ஈஸ்வரா
“ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…” என்றால் ஆதியில் விஷத்தின் தன்மை வலிமையாகும் பொழுது… தாக்குதலில் வெப்பமும் காந்தமும் உருவாகி ஒரு இயக்கச் சக்தியாக மாறியது.
நமது உயிரும் அவ்வழியிலே சக்தியாக உருவானாலும்
1.நமது உயிரின் இயக்கம் எதிர் நிலையாகி
2.ஆதி சக்தியின் அருள் பெற்று அனைத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றது.
அதனால் தான் ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா கருணைசொரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா…!
எல்லாவற்றையும் உணர்வின் அறிவாகத் தெரிந்து நடக்கும் அறிவின் உணர்வாக எனக்குள் நீ எப்படி அறிவிக்கின்றாயோ அதைப்போல இருளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
1.நஞ்சன்ற நிலைகள் வரப்படும் பொழுது அதன் தாக்குதலால் ஒளியான பின்
2.எந்த நஞ்சு என்றாலும் உணர்வின் தன்மை எனக்குள் ஒளியின் அறிவாக மாறுதல் வேண்டும்.
விஷத்தின் தன்மை தாக்கினாலும் சூரியன் தனது பாதரசத்தால் மோதி வெப்பத்தின் தன்மை கொண்டு அந்த விஷத்தை எப்படிப் பிரிக்கின்றதோ இதைப் போல உணர்வின் தன்மை கொண்டு “இருளை நீக்கி உணர்வின் அறிவாக நான் தெளிவாக வர வேண்டும்…” என்பதுதான் ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா கருணைசொரூபா.
இப்படி ஏங்கி அந்த அருள் உணர்வை நுகர்ந்தால் அந்த உணர்வின் அறிவாக நம் உயிர் நம்மை இயக்கும்.
ஆனால் வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தால் வேதனை உணர்வின் அறிவாக வேதனைப்படுபவனாக நம்மை மாற்றிவிடும்… வேதனைப்படும் தன்மையைத் தான் உடலில் உருவாக்கும்.
வேதனையான அணுக்கள் உடலில் உருவான பின் இந்த உடலைச் சிறுக்கச் செய்யும். உடல் சிறுத்த பின் உறுப்புகள் சிறுக்கின்றது. உறுப்புகள் சிறுத்த உணர்வு கொண்டு மற்றதை வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் அத்தகைய உடலாக உயிர் உருவாக்கி விடும்.
ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா கருணைசொரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா.
1.நீ ஒளியாக இருக்கின்றாய்… அதைப்போல என் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக ஒளியின் மயமாக
2.இருளை விலக்கிச் செல்லும் சக்தி நான் பெற வேண்டும் என்பது தான் இந்தப் பாடலின் உள்நோக்கம்.
என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்…!
நான் எதை எண்ணுகின்றேனோ அந்த உணர்வின் செயலாக என்னை இயக்குகின்றாய். எப்போதுமே நீ அறிவாக இயக்கித் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் உயிராக நீ இருப்பதனால்
1.உன் நினைவு எப்படி இருக்கின்றதோ எதனின் உணர்வை நீ அறிவிக்கின்றாயோ
2.அதைப் போல தெளிந்த மனம் பெறும் “அந்த உணர்வின் இசை” எனக்குள் வரவேண்டும்.
என் சொல்லைப் பிறர் கேட்கப்படும் பொழுது இருளை நீக்கி ஒளியின் தன்மையாகப் பெறுதல் வேண்டும். எதன் உணர்வை நான் நுகர்கின்றேனோ இருளை நீக்கிடும் அருளைப் பெறும் அந்தச் சக்தி பெற வேண்டும்.
அது தான் என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்.
நீ எப்படி ஒளியாக இருந்து உணர்வின் தன்மை அறிவாக அறியும் ஆற்றலை எனக்குள் தெளிவாக்குகின்றாய அதன் வழி…
1.என் உணர்வு
2.என் நினைவுகள் அனைத்தும்
3.என் உடலின் அணுக்களும் அவ்வழியே
4.உன்னைப் போன்றே ஒளியாக மாற வேண்டும் என்பதுதான்
5.என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய் உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்து விட்டேன் என்பதன் பொருள்.
எப்படி உலகையெல்லாம் அறியும் தன்மையாக நீ அறிவிக்கின்றாயோ இதைப் போல
1.உலக இருளை நீக்கிடும் ஒளியின் உணர்வாகப் பெறப்படும் அனைத்தையும் “உன்னிடமே விட்டு விடுகின்றேன்…”
2.அந்த அருளால் நீ என்னை இயக்குவாய்… இருளை அகற்றிடும் அரும்பெரும் சக்தியாக மாற்றுவாய்.
அந்த நிலை தான் எனக்கு வேண்டும்.
நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா. நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் என்றால் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் நான் ஏது…? உயிர் இல்லாத உலகில் நாம் வாழவே முடியாது… உடல் நிலையாக இருப்பதில்லை.
எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்றால் இந்த உயிர் எத்தனை வகை உடல்களைப் பெற்றதோ உடலைக் காக்கும் சக்தியினைப் பெற்றுத் தான் வளர்ந்து வந்தது.
அந்தந்த உடலைக் காக்க வேண்டும் என்று உணர்வின் தன்மை கொண்டு மனிதனான நிலையில் இந்த உடலைக் காக்கும் சக்தி பெற்றுள்ளது.
தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மை பெற்ற பின் தீமையை நீக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். ஒவ்வொரு உடலிலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினை நுகர்ந்தோம்.
1.அந்தத் தீமையிலிருந்து விடுபடும் மனித உடலாக அமைத்தாய்.
2.இதைப்போல எல்லா உடல்களில் இருந்தும் தீமைகளை நீக்கிய அந்த அரும் பெரும் சக்தி எனக்கு வேண்டும்.
காரணம்… இந்த வாழ்க்கையில் எல்லாவிதமான உணர்வுகளும் வருகின்றது அந்தத் தீமைகள் நம்மைத் தாக்கப்படும் பொழுது அதிலிருந்து விடுபடும் இந்த அருள் சக்தி பெற வேண்டும்.
ஒவ்வொரு உடலிலும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்துச் சேர்த்து உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி எப்படி அடைந்ததோ… தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மை முழுமை அடைந்த நான் “கடந்த கால நினைவுகள் கொண்டு… தீமைகள் வராது தடுக்கும் அந்தப் பேரருளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…”
பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
நம் குழந்தையைச் செல்லமாக வளர்ப்போம். செல்லமாக வளர்க்கும் போது அந்த உணர்வுக்குத் தக்க அவன் தவறு செய்வான். அப்பொழுது அவனைப் பரிபக்குவமான நிலைகள் கொண்டு திருந்தி வாழச் செய்ய வேண்டும்.
ஆனால் பக்குவம் தவறினால்… அவனுடைய தீமை நமக்குள் விளைந்து அவனைத் “தொலைந்து போடா…” என்று தான் சொல்ல வரும். அவனைக் காப்பதற்கு மாறாகச் சாபமிட்டு அவன் நல்ல குணங்களைச் செயலிழக்கச் செய்யும் தன்மையும்… அதனால் வெறுக்கும் தன்மை தான் வருகின்றது.
என் பையனுக்கு அப்படிச் செய்தேன்… இப்படிச் செய்தேன்… ஆனால் இப்படி இருக்கின்றானே…! என்போம். கோவிலுக்குச் சென்று உனக்கு இத்தனையும் செய்தேனே… உன்னை நான் தினமும் வணங்கிக் கொண்டு வருகின்றேனே… என் குழந்தை தவறு செய்கின்றானே…! என்று தான் எண்ணுகின்றோம்.
ஆனால் அந்தக் கோவிலில் காட்டப்பட்ட நல்ல குணங்களை… அந்தத் தெய்வீக பண்புகளை என் குழந்தை பெற வேண்டும் என்ற இந்த உணர்வு மட்டும் நமக்கு வருவதில்லை.
1.சாமியிடம் முறையிட்டுக் குறைகளைச் சொல்லி நீ செய் என்று தான் சொல்கின்றோமே தவிர
2.அவன் அறியாமல் செய்யும் தீமை நமக்குள் வராதபடி அவனும் திருந்தி வாழ வேண்டும் என்ற நிலை வருவதில்லை.
ஒருவர் நம்மிடம் பணம் கேட்டிருப்பார்… நாம் கடன் கொடுத்து உதவி செய்திருப்போம். ஆனால் அவன் பணத்தைத் திரும்பத் தரவில்லை என்றால் எல்லா வகையிலும் அவன் தீமை செய்கின்றான் என்று தான் சொல்ல முடிகிறது.
சரி… ஏதோ சந்தர்ப்பத்தால் அவனால் கொடுக்க முடியவில்லை…! அவனுக்கு அந்த வலுவான நிலையில் வருமானம் வர வேண்டும். தெளிந்த மனம் பெற்று தொழிலில் முன்னேற்றம் அடையும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வு அவனை ஊக்குவிக்கும்.
அவன் சோர்வு வேதனையாக நமக்குள் வராதபடி அப்போது தடுக்கப்படுகிறது. அவன் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நல்ல வளர்ச்சி பெறும் தன்மை வந்தால்
1.நமக்குள்ளும் நல்லது நடக்கின்றது.
2.இந்த உணர்வுகள் அவரைச் சிந்திக்கவும் செய்கின்றது.
நல்ல நிலையில் வாழ வேண்டும்… அந்த அன்பு பெருக வேண்டும்… தொழில் முன்னேற்றம் அடைவீர்கள் என்று சொல்லிப் பாருங்கள். இந்த ஊக்கத்தால் பணம் திரும்ப வரும்.
ஆனால் சகஜ வாழ்க்கையில் கடன்காரனைப் பார்த்த பின் வாங்கிய பணத்தை இவன் கொடுப்பானா…? என்று எண்ணும் பொழுது அவன் நம்மைப் பார்த்த பின் உடனே பொய் பேசத் தொடங்குவான்.
பணத்தைத் திரும்பக் கொடுக்கலாம் என்று தான் வந்தேன்… ஆனால் அதற்குள் பையன் பணத்தை வாங்கிச் சென்று விட்டான். எனக்கு வர வேண்டிய பணத்தைத் தருகிறேன் என்று சொன்னார்கள்… ஆனால் அவர்கள் தரவில்லை என்று தான் பொய் சொல்வார்கள்.
காரணம்… இந்தப் பக்குவம் தவறும் பொழுது நமது வாழ்க்கையும் யாருக்கு நாம் பணத்தைக் கொடுத்தோமோ அவர்கள் வளர்ச்சியும் நம்மால் தடைப்படுத்தப்படுகின்றது.
அதனால் தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல்… என்று சொல்கிறோம்.
நான் எல்லோருக்கும் நன்மை செய்தேன். பார்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான் என்று நிலையைத்தான் நாம் சொல்ல முடிகின்றது.
1.ஆக சோதிப்பது யார்…?
2.நமது எண்ணம்தான்.
எதன் உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றதோ அந்த உணர்வின் தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த வாழ்க்கையில் எந்த நிலையைச் செய்தாலும் பக்குவமாக நடந்து கொள்ளும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்.
ஒரு கம்ப்யூட்டரில் தப்பு என்ற நிலைகள் வந்தால் உடனே அதைத் திருத்தும் நிலை அங்கே வருகின்றது.
இதைப் போன்று தான் நம் உயிரிலே படும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக். உயிரிலே பட்ட பின் அந்த உணர்வு தவறு என்ற நிலைகளை உணர்த்துகின்றது.
1.ஆனால் அந்தத் தவறிலிருந்து திருந்தி நல்ல வழி வர வேண்டும் என்ற உயர்ந்த உணர்வை எடுத்தால்
2.நமக்குள்ளும் நன்மையாகின்றது அவர்களையும் நல்லதாக்கச் செய்கிறது.
இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா.
இந்த உடல் ஆசை எனக்குள் வளராதபடி என்னுள்ளே இருந்து விடு ஈஸ்வரா.
1.நீ ஒளியாக இருக்கிறாய் இந்த உணர்வின் தன்மை என் உணர்வெல்லாம் ஒளியாக மாற்ற வேண்டும்.
2.நீ ஒளியாக இருப்பது போன்று என் உணர்வெல்லாம் ஒளியாக இருத்தல் வேண்டும்.
உடல் ஆசை வராதபடி உயிர் ஆசை வேண்டும் என்று… உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்த ஒளி என்ற தன்மை வரப்படும் பொழுது இருள் அண்டிடாது ஒளியின் உணர்வாகப் பெருக முடியும்.
ஆக மொத்தம் உயிர் நாம் எண்ணியதைத்தான் உருவாக்குகின்றது. நாம் இப்பொழுது எடுத்துக் கொண்ட அந்த உயர்ந்த எண்ணங்கள் அனைத்தையும் கருவாக்கி அதுவாக நம்மை உருவாக்குகின்றது.
“உயிரான ஈசனிடம் வேண்டியபடி…” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ஒளியின் தன்மை பெற்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றோம் என்றால்… அகஸ்தியன் அகண்ட அண்டத்தின் உணர்வைக் கண்டறிந்து இருண்ட உலகை நீக்கி ஒளி என்ற அறிவாக அந்தத் தெளிந்த நிலைகள் அவன் மனைவிக்கு ஊட்டியதை…
1.இருவருமே அதைக் கருவாக்கி ஒன்றென இணைந்து அந்த ஒளியான உணர்வுகளை
2.துருவத்தில் இருந்து வரும் ஒளியின் கதிர்களை நாம் அனைவரும் பெறுவோம்.வ்

நாம் எடுக்க வேண்டிய பெரு மூச்சு (பெரும் மூச்சு)
விண்ணிலிருக்கும் அருள் ஞானிகளைப் பற்றி உங்களிடம் அடிக்கடி உபதேசிக்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி மேல் நோக்கிச் சுவாசியுங்கள்.
1.எதையெல்லாம் உயர்வாக எண்ணுகின்றீர்களோ… அப்படி எண்ணும் போது…
2.உங்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்ற (பெரும் ஏக்கமான) பெரு மூச்சாகக் கிடைக்கும்.
ஆனால் எம்மைச் சந்திக்க வரும் பொழுது என் காலிலே விழுந்து பாத நமஸ்காரம் செய்யும் போது… என்ன…? இப்படிச் செய்கிறார்களே…! என்று பார்க்கும் பொழுது
1.மேலிருந்து உயர்ந்த சக்தியை எடுத்து உங்களுக்குக் கொடுப்பதற்குப் பதில் நான் கீழ் நோக்கியே பார்க்க வேண்டி இருக்கின்றது.
2.அதைச் சாதாரண மனிதனின் உணர்வைத் தான் நானும் அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
ஆனால் விண்ணின் ஆற்றல் எல்லை கடந்து பரவி உள்ளது.
ஆகவே அதை நோக்கி எண்ணி ஏங்கி எடுத்து அந்த சக்தி உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும்… உங்களை உயர்ந்த நிலைகள் கொண்டு நான் பார்ப்பதற்கும் அது சரியாக இருக்கும்.
பாத பூஜை… பாத நமஸ்காரம்… என்று சாதாரண வாழ்க்கையில் நாம் அடிபணிந்தே பழகி விட்டோம். நமக்குள் வரும் ஆசை… நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் “இந்த வினையின் தத்துவத்தை” நாம் அடிபணியச் செய்ய வேண்டும்.
அதாவது… மெய் ஒளியைப் பெறும் உயர்வான எண்ணங்களை நாம் எடுத்து எடுத்து தீமைகளை அடிபணியச் செய்யப் பழக வேண்டும்.
நான் யார் வீட்டுக்காவது சென்றால்… “சாமி உங்களுக்குக் கும்ப அபிஷேகம் செய்கிறோம்…” என்று குடத்தைத் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள். அந்த உயர்வு தேவையில்லை.
நமக்குள் உயர்ந்த உணர்வுகளை எடுக்க வேண்டும் அதுதான் நமக்குத் தேவை. நாம் உயர்ந்த உணர்வின் தன்மையைச் சுவாசிக்கின்றோமோ அந்த உயர்ந்த நிலைகளைப் பெறும் ஆர்வத்தின் உணர்ச்சியை நாம் தூண்ட வேண்டும்.
1.பிறரைப் போற்றுவதற்கோ… அந்தப் போற்றுதலால் தன்னை மதிக்க வேண்டும் என்ற நிலைகள் நமக்கு அறவே கூடாது.
2.விண்ணிலிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைந்து
3.பேரானந்தப் பெருவாழ்வாக வாழும் அந்த மேல் நோக்கிய சுவாசமே…
4.நமக்குள் உயர்ந்த மூச்சாக… பெரும் மூச்சாக அமைய வேண்டும்.

தொழில் ரகசியம்
தொழிலைப் பற்றிய ரகசியங்களை உங்களுக்கு வேண்டிய நண்பர்களுக்குச் சொல்வதற்கு முன்பு “அவர் எப்படி உங்களுடன் பழகுகின்றார்…?” என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
தொழிலில் என்றைக்குமே கை மூடியே வைக்க வேண்டும். வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஓரளவுக்கு வருவாய் வந்து கொண்டிருக்கின்றது என்று இதை மட்டும் சொல்லலாம்.
நடப்பது அனைத்தையும்…
1.நான் இந்தப் பக்கம் போய்த் தொழில் செய்தேன்… பின் இந்தப் பக்கம் சென்றேன்…
2.எனக்கு அதில் வருமானம் இப்படி எல்லாம் வந்தது என்று சொல்லக் கூடாது.
ஆனால் உங்கள் கூட்டாளியாக இருப்பவரிடம் போகும் பாதைகளை இப்படி இருக்கின்றது… இதை எப்படி வழி நடத்தலாம்…? என்று இரண்டு பேரும் சிந்தனை செய்து செயல்படுத்துவது நல்லது.
இருவரும் கூட்டாளியாக இருந்து செயல்படுத்தும் போது ஒரு சிறு விஷயத்தை மறைத்து விட்டால் அவருக்கு உடனே நம்மிடம் மறைக்கின்றார் என்ற சந்தேகம் வந்துவிடும். ஆகவே அவரிடம் விஷயங்களைச் சொல்லக்கூடிய கடமைகள் உண்டு.
அதே சமயத்தில் மனைவியிடம் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு சந்தோஷத்தை ஊட்டலாம்… தொழில் உயர வேண்டும் என்ற உணர்வை ஊட்டலாம்.
ஆனால் மிக முக்கிய நண்பராக இருந்தாலும்
1.ஏதோ உங்கள் ஆசியினால் தொழில் நன்றாக இருக்கின்றது…
2.உங்கள் ஆசி மீண்டும் தேவைப்படுகிறது என்று அவர்களை உயர்த்தி நாம் இப்படிக் கொண்டு வர வேண்டும்.
ஆனால் பப்ளிக்காக நாம் இதைச் சொல்ல தொடங்கினால் ஒருத்தருடைய உணர்வு விஷத் தன்மையாக இருக்கும். நாம் சொல்லும் பொழுதே அப்படியா…! என்று அவர்கள் கண்ணின் பார்வையும்… உற்று நோக்குவதும் இந்த நினைவாற்றலை அதற்குள்ளேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆகவே தொழிலின் ரகசியங்களை நாம் சொல்லவே கூடாது.
உலகிலேயே ஒரு புதிய தொழிலில் ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அதில் என்னென்ன சரக்கைப் போட்டிருக்கின்றோம்…? என்று விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் முக்கியமான பொருளைக் காட்டவே மாட்டார்கள்.
1.அரசாங்கம் கட்டாயப்படுத்தினாலும் அதில் ஒரு முக்கியமான பொருளையும்
2.அதனுடைய கலவை விகிதம் எவ்வளவு என்று சொல்ல மாட்டார்கள்.
3.மற்றதையெல்லாம் இன்னென்ன அளவு என்று எழுதியிருப்பார்கள்.
ஆனால் முக்கிய பொருளை மாற்றி விடுவார்கள். அதிலே போட்டிருப்பது போன்று மற்றவர்கள் கலவை செய்து பொருளை உற்பத்தி செய்தால் தரம் சரியாக வராது… வித்தியாசமாகிவிடும்.
அரசின் சட்டப்படி சொன்னாலும் அதற்காக வேண்டி இவர்கள் அளவுகோல்களை மாற்றி விடுவார்கள். அதிலே இல்லாத சரக்கையும் சேர்த்து விடுவார்கள். மற்றவர்கள் செய்து பார்த்தால் கடைசியில் வராது. அவர்கள் கொண்டு வரும் தரத்தை இங்கே கொண்டுவர முடியாது.
தொழில் ரீதியிலே நாம் மறைத்துச் சொல்ல வேண்டி இருக்கின்றது.
ஆன்மீக ரீதியிலே நீங்கள் வளரக்கூடிய உண்மை நிலைகளைச் சொல்லலாம். அந்த ஆன்மீகத்திலும் கூட
1.எனக்கு இவ்வளவு பெரிய காட்சிகள் கிடைத்தது… சக்திகள் கிடைத்தது என்று சொன்னால்
2.பார்…! அவருக்குக் கிடைக்கின்றது… எனக்குக் கிடைக்கவில்லை…! என்று இதிலும் பொறாமை உணர்வு வரும்.
உங்களுக்கு எப்படி இவ்வளவு கிடைக்கிறது…?
1.சாமி உங்களுக்கு ஸ்பெஷலா கொடுக்கின்றாரா…? என்று ஒருவர் கிண்டலாகவும் கேட்பார்.
2.உனக்கு மட்டும் தெரிகின்றது… எனக்கு ஏன் தெரியவில்லை…? என்று பொதுத் தன்மையில் வருபவர்கள் சிலர் இப்படியும் வந்து விடுவார்கள்
ஆகவே எதைச் சொல்ல வேண்டும்…? எதைப் பேச வேண்டும்…? என்று உணர்வின் தன்மை முழுமை அடைய நம் எண்னத்தைச் செலுத்துதல் வேண்டும்.
நாம் தெரிந்து கொண்ட உணர்வுகளைப் பக்குவப்படுத்த நாம் இப்படி இருக்க வேண்டும்… இப்படிச் செய்ய வேண்டும் என்று
1.உங்களுக்குள் தெரிந்த கருத்தை… நீங்கள் சொல்வதாக இருக்க வேண்டுமே தவிர
2.இந்தக் கருத்துக்கள் எனக்குத் தெரிந்தது என்று சொல்லக்கூடாது.
இதனால் பெரும் பிழைகளும் சந்தேகமும் அவமதிப்பும் சில நிலைகள் எல்லாம் ஏற்படும். இன்றைக்கு இருக்கும் சமுதாயத்திற்கு மத்தியில் இப்படி எல்லாம் நாம் வழி நடத்திச் செல்ல வேண்டி இருக்கின்றது.
பார்… அவருக்கு மட்டும் எல்லாம் தெரிகிறது…! அவர் என்னமோ உளறுகின்றார்… எல்லாம் தெரிந்த மாதிரிப் பேசுகிறார்…! என்று மற்றவரிடம் சொல்வார்கள்.
இதை நீங்கள் கேட்டால் என்ன செய்வீர்கள்…? ஆகவே உண்மை நிலைகள் தெரிந்தால்
1.அவர்களைப் பக்குவப்படுத்தக்கூடிய ஒரு ஞானத்தின் வழிகளிலே நீங்கள் சொன்னால்…
2.நீங்கள் சொல்வதாகத் தெரிந்து கொள்வார்கள்.
எனக்குத் தெரிந்தது இப்படி நீங்கள் நடந்து பாருங்கள்…! என்று சொன்னால் பிழையாகும். ஆன்மீகத்திலும் இப்படி ஒரு நிலை. மனிதனின் உணர்வுகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் உணர்வின் தன்மை அழுத்தமான பின் இன்னொரு மனிதன் இதைத் தாங்கும் நிலை இல்லை.
அவருக்கு அதைத் தாங்க முடியவில்லை என்றால் எதிர்மறை பொறிகளாகிவிடும்… அவர் உடலுக்குள் அந்த எதிர்ப்புகள் ஏற்படும். ஆனால் அவர்களுடைய குற்றம் அல்ல.
யாரும் வேண்டுமென்று அவ்வாறு சொல்வதில்லை.
ஆனால் இந்த உணர்வின் அழுத்தங்களாகும் பொழுது உணர்ச்சிகள் மாறுபட்டுவிடும். அழுத்தமாகும் போது அவர் உடலுக்குள் எதிர்ப்பு நிலைகள் உருவாகும் பொழுது வித்தியாசமாக வந்துவிடும். இது எல்லாம் உணர்வின் இயக்கம் தான்.
ஆகவே நீங்கள் பக்குவப்படுத்தி நடந்து கொள்ளுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் பார்த்து கேட்டு நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நம்மை இயக்காதபடி தடுக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை துரிதமாக எடுத்து உடலுக்குள் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்க உதவும்.
இதை எல்லாம் அதிகாலையில் நாம் அதிகமாகப் பெருக்கி வர வேண்டும்
1.அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் அதிகரிக்கிறது.
2.இந்தப் புவியின் பற்றை நாம் தகர்த்துக் கொண்டே வருகின்றோம்.
3.இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கின்றது.
இந்த உயிர் உடலில் சேர்த்த தீமையின் உணர்வுகளை… துருவ நட்சத்திரத்தின் அருகில் இந்தத் தீமைகள் செல்லப்படும் பொழுது
1.உடலில் பெற்ற தீமையின் உணர்வுகளைக் கருக்கிவிட்டு இருளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது
2.எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அது மாற்றி விடுகின்றது.
பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக உட்கொண்டாலும்… அந்த விஷம் அதற்குள் மீண்டும் சேமிக்கப்பட்டு நாகரத்தினமாக மாறுகின்றது.
அது போல் நமது வாழ்நாளில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க… நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.
மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்.
மிருகங்கள் தான் வாழ தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது அந்த உணர்வை வளர்த்து… அந்த உடலுக்குப் பின் மாற்று உடலாகப் பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.
மனிதரான நாம் அன்பும் பரிவும் கொண்டிருப்பினும் பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் அந்த நோயின் வலிமை மிக சக்தி வாய்ந்தது… விஷம் கலந்தது.
அதை நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தின் உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது… பின் அந்த நல்ல குணங்களையும் வீழ்த்தி விடுகின்றது.
இத்தகைய உணர்வுகள் கலக்கக் கலக்க மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நலிந்து அந்த அணுக்கள் மடியத் தொடங்கும்… உடல் உறுப்புகளும் குறையத் தொடங்கும்.
குறைந்த உணர்வின் தன்மை இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது உயிர் உடலை விட்டுச் செல்லும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும்.
ஆனால்
1.அருள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலை விட்டுச் செல்லும் ஆன்மா
2.எதன் வலுக் கொண்டதோ அதன் அருகில் அழைத்துச் செல்லும்.
3.அங்கே வெளிப்படும் தீமைகளைக் கருக்கிடும் உணர்வுகள் பட்ட பின்
4.இந்த மனித வாழ்க்கையில் நம் ஆன்மாவில் பட்ட தீமைகளைக் கருக்கி விட்டு
5.உயிரின் ஈர்ப்பு துருவ நட்சத்திரத்தின் பால் சென்று… பேரருள் பேரொளியாக அழியாத ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.
இந்த உயிர் தோன்றி மனிதனாக ஆன பின் தான் உயிர் முழுமை அடைகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றது. ஆகவே
1,நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
2.அந்த மகரிஷிகள் பெற்ற அழியா ஒளிச் சரீரத்தை நாமும் பெறுவோம்.
வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் பெற்று இல்லற வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்று நீங்கள் வாழப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
“சப்தரிஷிகள்” தனது வாழ்க்கையில் தன்னை அறிந்து இருளை அகற்றிப் பேரருள் பெற்று பேரொளி என ஆன அவர் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வெளி வந்த அனைத்தும் இங்கே பரமாத்மாவாக நமக்கு முன் பரவி இருக்கின்றது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளிய அந்த அருள் வழியில் நானும் (ஞானகுரு) அதைக் கண்டுணர்ந்து… அந்த அருள் உணர்வை எனக்குள் வளர்த்து சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்துகின்றேன்.
சொல்லாக அப்படி வெளிப்படுத்தும் போது இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் படர்கின்றது.
1.சொல்லாகச் சொல்லும் போது யாரெல்லாம் இதைக் கவர வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தறிகின்றனரோ
2.கவர்ந்த உணர்வுகள்… அந்த உணர்வுகள் அனைத்தும் ஞான வித்தாகப் பதிவாகின்றது.
வித்துக்களைப் பண்படுத்தி நிலத்திலே ஊன்றிச் சீராக எப்படி வளர்க்கின்றோமோ… இதைப் போன்று மகரிஷிகளின் வித்துக்களை உணர்வுகளைப் பெறக்கூடிய சத்தாக உங்களுக்குள் “ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்…”
1.”எந்த அளவிற்கு” நீங்கள் அதைப் பெற வேண்டுமென்று கவர்கின்றீர்களோ “அந்த அளவிற்கு” ஆழமாக உங்களுக்குள் பதிவாகின்றது
2.பதிவான நிலையை நினைவுக்கு கொண்டு வந்து மீண்டும் அந்த அருள் உணர்வை நீங்கள் கவர்ந்தால்
3.அருள் ஞானிகள் பெற்ற உணர்வினை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
வளர்த்த உணர்வின் துணை கொண்டு… அந்தச் சப்தரிஷிகள் எப்படி இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து வாழ்ந்து… பிறவியில்லா நிலையை அடைந்தனரோ… அந்த அருள் உணர்வை நீங்களும் பெற முடியும்.
எமது குருநாதர் எப்படிப் பல உண்மையின் உணர்வுகளை அறிந்தாரோ அதை எல்லாம் எமக்குள் பாய்ச்சி…
1.அந்த அருள் வழி வெளிப்படும்படி செய்து
2.அனைவருக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்து
3.அவர்களுக்குள் அறியாது சேரும் தீமைகளிலிருந்து விடுபடும் மார்க்கத்தைக் காட்டும்படி சொன்னார்.
அவர்கள் அவ்வாறு வளர்த்திடும் அந்தப் பேரருளை இந்தப் பூமியில் பரமாத்மாவாக பரவச் செய்ய வேண்டும். இங்கே வாழும் மக்கள் அனைவரும் வாழ்க்கையில் அவர்கள் சந்தர்ப்பத்தில் ஏற்படும் இருளை அகற்றி அவர்கள் அருள் வழி வாழ்ந்திட வேண்டும்.
இந்த உயிர் எத்தனை கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக எப்படி வந்ததோ
1.உயிரைப் போன்றே உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி
2.ஒளியின் சரீரம் பெறக்கூடிய உணர்வைப் பெறச் செய்வதே
3.நமது குருநாதர் காட்டிய அருள் வழி நெறி தியானம்.
உங்களில் இப்போது பதிவு செய்ததை… அந்தச் சக்திகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் “அதுவே தியானம் ஆகிறது…”


வியாழன் கோளிலிருந்து பூமிக்கு வந்தவர்கள் தான் நாம் (விஞ்ஞானிகள் கண்டு இனி சொல்வார்கள்)
நாம் வாழும் இந்த பூமி சீக்கிரம் அழியப் போகின்றது. காரணம் விஞ்ஞான உலகின் அணுக்கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவி விட்டது. சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து விட்டது. பூமியின் நடு மையத்திற்குள் இது ஊடுருவிச் சென்று கொண்டிருக்கின்றது.
அணுக் கதிரியக்கங்கள் சூரியனின் வெப்ப காந்தத்தில் கலந்த பின்
1.இந்த உணர்வுகள் அதில் இருக்கக்கூடிய காந்தமும்
2.பூமியிலிருக்கும் காந்தமும் உலோகத்தில் இருக்கக்கூடிய காந்தங்களுடன் மோதிய பின்
3.புயலடித்த மாதிரி இரும்பும் உருகுகின்றது… கதிரியக்கங்கள் மீண்டும் அது வளர்ச்சி பெறுகின்றது.
மற்றதெல்லாம் பிளந்து விட்டு ஊடுருவி அனைத்தையும் அழித்துவிட்டு
1.அதில் இருக்கக்கூடிய வீரிய சக்தி அடங்கும் வரையிலும் சுழிக் காற்று போன்று
2.செடி கொடி கல் மண் மரம் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு செல்கின்றது.
3.பூமியில் இருக்கும் அணுவினைப் (கதிரியக்கம்) பிளந்து விஞ்ஞானிகள் செய்து கொண்ட நிலைகள் இது.
அதை வைத்து மின்சாரத்தை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். எத்தனையோ பல வேலைகள் செய்கிறோம் என்று சொல்லலாம். அதனுடைய தணிந்த உணர்வின் நிலைகள் வந்தாலும் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தே இருக்கின்றது.
பூமிக்குள் இருந்தால் தான் இதனால் விபத்து என்ற நிலை இருந்தாலும் பூமியைக் கடந்து பிரபஞ்சத்திலே பரிசீலனைக்காக வெடிக்கச் செய்தாலும் வான வீதியிலே இந்த அணுக்களின் தன்மை படர்ந்து “பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஓசோன் திரையைக் கிழித்து விட்டு…” இந்த விஷத்தின் தன்மை பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றது.
இது அனைத்தும் பூமியின் நடு மையம் சென்றடைந்து விடும். வெப்பத்தின் தணல்கள் கூடும்… பனிப்பாறைகள் அனைத்தும் உருகும். உருகிய நீர்கள் நிலங்களைக் குறையச் செய்யும்.
நீர்கள் கூடினாலும் வெப்பத்தினால் பனிப்பாறைகள் கரைய நீரின் தன்மை பரவிப் படர்ந்தாலும்
1.சூரியனை விட்டு இந்த பூமி நகர்ந்து செல்லும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
2.அப்படி நகர்ந்து சென்ற பின் பூமிக்குள் நீர்கள் அனைத்தும் பனிப் பாறைகளாக உறைந்து விடும்.
3.நம் உயிர்கள் எல்லாம் அதற்குள் அமுங்கிவிடும்.
கோழி முட்டையை ஐஸ் பெட்டிக்குள் வைத்துத் தேவை ஏற்படும் போது அதை எடுத்துக் குஞ்சாகப் பொரிப்பது போன்று ஆகிவிடும்.
ஏனென்றால் “வியாழன் கோளில் நம் உயிரணுக்கள் அனைத்தும் சிக்கப்பட்டு…” அதிலிருந்து மீண்டும் தெறிக்கப்பட்டு வான் வீதிக்கு வந்து இப்பொழுது மனிதனாக நாம் இங்கே இந்தப் பூமியில் பிறந்து இருக்கின்றோம்.
அதனால் தான் வியாழன் கோளைக் குரு என்று சொல்வது.
அதில் மனிதர்கள் வாழ்ந்து வளர்ச்சியாகி தவறு செய்து போர் முறையாகி அவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் எல்லாம் அங்கே உண்டு.
1.வியாழன் கோளில் இப்போதும் மண்ணைத் தோண்டி எடுத்தோம் என்றால்
2.இங்கிருக்கும் விஞ்ஞானிகள் செய்ததற்கெல்லாம் அப்பனாக அவர்கள் செய்து வைத்த ஆயுதங்கள் அங்கே அடியில் பதிந்துள்ளது.
இதை எல்லாம் குருநாதர் எமக்குக் காட்டி இருக்கின்றார்.
அங்கே ஏற்பட்ட பிரளயத்தால் பனிப்பாறைகளாக ஆகி அதிலே சிக்கிய உயிர்கள்… எடுத்துக் கொண்ட நிலைகள் தான் கதிரியக்கச் சக்தியாக மாறிப் பல நிலைகள் மாறியது.
பின் இதிலே வந்த ஒவ்வொரு உயிரணுவின் தன்மை மீண்டும் ஜீவன் பெற்று பல நிலைகள் வந்தது. வியாழனின் நிலைகள் நட்சத்திர நிலைகள் கொண்டு சில நிலைகள் வந்தது என்று எமது குருநாதர் காட்டியுள்ளார்.
1.விஞ்ஞானிகள் இதையெல்லாம் கண்டு கொள்வதற்குப் பல காலமாகும்.
2.ஆனால் இப்பொழுது யாம் சொல்வதைப் பின்னாடி ஒரு காலத்தில் சொல்வார்கள்.

பிறருக்கு உதவி செய்தாலும்… மறைமுகமாக வரும் தீமையிலிருந்து நம்மைக் காக்க வேண்டும்
குருநாதர் எமக்குச் சொன்னது…! வாழ்க்கையில் நீ நல்லதை எண்ணி ஏங்கினாலும் பிறர் செய்யும் தவறைப் பார்க்கப்படும் பொழுது
1.அதற்காக இரக்கப்பட்டோ… பரிவு கொண்டோ ஏங்கி அதைச் சுவாசித்து
2.ஏராளமான பணங்களைக் கொடுத்து… உடலைக் காக்க பொருளைக் கொடுத்து நீ உதவி செய்தாலும்
3.உனக்குள் வந்த அவரின் வேதனையான உணர்வின் தன்மையைத் துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…?
இந்த மனித வாழ்க்கையில் புகழ் கிடைக்கும் பேர் கிடைக்கும் இரக்கமானவர் நல்லவர் என்று போற்றுவார்கள்.
1.ஆனால் அதே சமயத்தில் நலிந்து போகும் பொழுது யாரும் நம்மைப் பார்க்க மாட்டார்கள்.
2.பின்… வேதனையான நிலைகள் கொண்டு நான் நல்லதைச் செய்தேன் எனக்கு இப்படி ஆகிவிட்டது…! என்று
3.வேதனைக் குரலைத் தான் எழுப்ப முடியுமே தவிர நல்லதைச் சிந்திக்க முடியாது.
இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் மனித இனத்தையே வெறுக்கும் நிலை வந்துவிடும்.
ஆனால் மனித உடலுக்குள் மீண்டும் சென்றாலும் அந்த உடலையும் அழித்து விட்டு வேதனை என்ற விஷத்தை அதிகமாகக் கூட்டி உடலை விட்டுச் சென்ற பின்… பரிணாம வளர்ச்சியில் வந்த விஷத்தைத் தாங்கிடும் மற்ற உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று அந்த உடலாக உயிர் மாற்றிவிடும்.
இதையெல்லாம் குரு இயற்கையாக எனக்குக் காட்டினார். அதையெல்லாம் கண்டு தான் இந்த உண்மைகளை உங்களுக்கு உணர்த்துகிறோம்.
நீங்கள் செய்த நன்மையின் நிலைகள்… உங்களைக் காக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டுத் தியானங்களை வலுப்படுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.
பின் தியானத்தில் அமர்ந்திருக்கக்கூடிய அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
1.அவர்கள் உடல் முழுவதும் அந்த அருள் சக்தி படர வேண்டும்
2.அவர்கள் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெற வேண்டும்
5.என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உங்களுக்குள் செலுத்தினீர்கள் என்றால்
6.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பாய்ச்சப்படுகின்றது.
இந்தச் சொல்லின் வாக்கும் உங்களுக்குள் விளைகின்றது. உங்கள் மூச்சு அவரை நலம் பெறச் செய்கின்றது. இதைத்தான் மனிதர்களுக்குள் பொறுமையாக இருந்து செயல்படுத்த வேண்டும்.
வயலிலே காய்கறிகளை விதைத்த பின் உடனடியாக அதைச் சமைக்க முடிவதில்லை. அது விளைந்த பின் பறிப்பவர் ஒருவர்… கடையில் வியாபாரம் செய்பவர் ஒருவர்… கடைசியில் நாம் கடைக்குச் சென்று அதை வாங்கிச் சமைக்கும் நிலையாக இருக்கின்றது.
இதைப் போல அந்த உணவைப் பக்குவமாகச் சமைத்துச் சாப்பிடுவது போன்று நாம் எண்ணியதைக் கொண்டு அந்த உணர்வுகளை எல்லாம் சீர்படுத்திக் கொண்டு வருவது தான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.
1.அதற்கு அந்த மெய்ஞானிகள் அருள் சக்திகளைப் பெற்று அதை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அதுவே நம்மைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக அமையும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு காரியத்தை மனமுவந்து செய்ய விரும்பினோம் என்றால் அதை எளிதில் செயல்படுத்த முடியும்.
1.ஒருவரைக் கட்டாயப்படுத்தி “நீங்கள் இதைச் செய்யுங்கள்…” என்று சொன்னால் அங்கே அந்த மனம் குறையும்.
2.இவர் என்ன சொல்வது…? நான் என்ன செய்வது…? என்று வந்துவிடும்.
3.சொல்லும் பொழுது அழுத்தமாகி… அதிர்வாகி… அந்த நிலை ஆகிறது.
ஆனால்… மனதை ஒன்று சேர்த்துச் செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த இயக்கம் வலிமை பெறுகின்றது.
ஒரு காரியத்திற்கு நண்பர்களாகச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். “அவர் செய்கின்றார்… நாமும் செய்வோம்…” என்று எண்ணம் கொண்டு செயல்படுத்தத் தொடங்கினால் அங்கே மகிழ்ச்சி வருகின்றது.
நீங்கள் இருங்கள்… நான் செய்கிறேன்…! என்று சொல்வார். அது அல்லாதபடி நான் இதைச் செய்கிறேன்… நீ இதைச் செய்…! என்கிற பொழுது “நீ என்ன சொல்வது…?” என்ற அந்த உணர்வு வந்து விடுகிறது.
1.இருங்கள்… நான் செய்கிறேன் என்று சொல்லப்படும் பொழுது
2.இல்லை… நானும் செய்கிறேன்…! என்று சொல்ல வருகின்றது
3.அப்பொழுது ஒன்றுபட்டு இயங்கும் நிலை வருகின்றது.
4.தியானம் இருப்போர் நம் எண்ணங்களை இவ்வாறு சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் கணவன் மனைவி இந்த உணர்வு கொண்டு ஒன்றி வரப்படும் பொழுது இந்த உணர்வின் நினைவாற்றல் பெருகப் பெருக… குடும்பப் பற்றும் வரும். கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்
அவ்வாறு வந்துவிட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் தொழில் வளமும் மற்ற அனைத்துமே சீராக வரும். அனைவரையும் மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியாக… நம்மையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வரும்.
1.இத்தகைய நல்ல உணர்வலைகள் வீட்டிற்குள் பரவப் பரவ நம் வீட்டின் தரைகளிலும் சுவர்களிலும் புவிஈர்ப்பிலே பதிந்து
2.நாம் பேசிய அந்தப் பேச்சு மூச்சும் அவ்வாறு பரவும் போது “நம்முடைய உணர்வே நமக்குப் பாதுகாப்பாக (ஓசான் திரையாக) மாறும்…”
நாம் வெளியில்… ரோட்டிலோ அல்லது வாகனங்களிலோ செல்லும் போது அசம்பாவிதங்களைப் பார்க்கின்றோம்… அல்லது பத்திரிக்கை டிவி வாயிலாக அதைப் பார்க்கும் போது அந்த விஷத்தின் தன்மை அதிகமாகக் கவர்ந்து விடுகிறோம்.
“அதே உணர்வுடன்” வீட்டிற்குள் வரும் பொழுது அத்தகைய அசுத்தமான உணர்வுகள் நம் வீட்டில் பதிவாகி விடுகின்றது.
அதே சமயத்தில் ஒரு அசுர உணர்வு கொண்டவர் பேசுவதைப் பார்ப்பதையும் கேட்பதையும் நுகர்ந்து… அந்த அறிவின் தன்மை வந்தால் நம் உடலுக்குள் வரப்படும் பொழுது இதே போன்ற மூச்சலைகளாக வீட்டிற்குள் பதிவாகி விடுகிறது.
அப்படிப் பதிவாகி விட்டால்…
1.வீட்டிற்குள் நாம் நுழைந்தாலே நம் நல்ல உணர்வைத் திசை மாற்றிவிடும் “நம்மை அறியாமலே…”
2.நாமல்ல…! சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் அவரவர்கள் சந்திக்கும் நிலைகளுக்கொப்பத் தான் இதனுடைய நிலைகள் வருகின்றது.
இதை எல்லாம் மாற்றிட… ஒவ்வொரு நாளும் கூட்டுத் தியானம் இருந்து கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ்ந்திடும்… ஒன்றான இயக்கத்தை உருவாக்கி விட்டால்… நம்மைச் சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்லும்.
இல்லை என்றால் நுகர்ந்த உணர்வின் இயக்கமாக… பற்றென்ற நிலை வரப்படும் போது… நம்மை அறியாமலே விஷத்தின் தன்மையாகக் கவர்ந்து… கணவன் மனைவிக்குள் வேற்றுமை உருவாகி… நம் நல்ல உணர்வுகளை… ஒன்று சேர்த்து இயக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
மன வேற்றுமை கொண்டு அடுத்து செயல்பட்டால் தொழிலும் சீராக வராது. நஷ்டமாகும் போது மீண்டும் அதிகமான சோர்வும் வேதனையும் தான் வரும்.
இதே உணர்வுகளைக் குழந்தைகள் மேல் பாய்ச்சப்படும் பொழுது இந்த குழந்தைகளும் நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை வரும்…. ஒன்று சேர்த்து வாழும் நிலை இல்லாது போய்விடுகிறது.
இதைப் போன்ற நிலைகள் இருந்தெல்லாம் நாம் விடுபடுவதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருவது.
1.அதன் வழியில் அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்டு வாருங்கள்…
2.அதற்குண்டான முயற்சிகளை எடுங்கள்… முயற்சி எடுத்தால் தான் தீமைகளிலிருந்து மீள முடியும்.
ஒரு கட்டிடமே கட்ட வேண்டும் என்றால் மேடு பள்ளங்களைச் சமப்படுத்தித் தான் கட்டுகின்றோம். ஒரு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றாலும் சமமான நிலைகள் கொண்டுதான் அதை இயக்க முடியும்.
இதே போன்று ஒரு குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றால் “நமது முயற்சி” கணவன் மனைவி ஒன்று சேர்த்து வாழ வேண்டும் என்ற நிலையில் இருவரும் ஒன்றி… அப்படி வளரச் செய்யும் பருவத்தைக் கொண்டு வர வேண்டும்.
1.அப்படிக் கொண்டு வந்தால் தான் குடும்பத்தில் வரும் சிக்கல்களை நீக்க முடியும்…
2.எதிர்நோக்கி வரும் சில தீமைகளையும் அகற்ற முடியும்
3.எத்தகைய நிலைகள் இருந்தாலும் அதை வெல்லும் சக்தியாக இருவருக்குள்ளும் வருகிறது.
பெண்களின் உணர்வுகளும் கணவனுடைய உணர்வுகளும் ஒன்றி வாழ்ந்தால் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…”
இப்படிப்பட்ட ஒன்றுபட்ட உணர்வு வரும்பொழுது தீமை என்ற உணர்வு குடும்பத்திற்குள் வந்து இருவரையும் பிரிக்கும் நிலையோ நோயாக மாறும் நிலையோ வராது.
ஆனால் என் மனைவி இப்படி இருக்கிறதே அல்லது என் கணவர் இப்படி இருக்கின்றாரே…! என்று எண்ணினால் வேதனையான உணர்வுகள் நமக்குள் ஊடுருவி அதீதமான தீமைகளாக விளைந்து அதுவே நோயாகிவிடும்.
இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். அருள் வழியில் பற்றை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று இருவருமே ஒன்று சேர்த்து
1.கணவன் ஒளி பெற்று உயர வேண்டும்
2.மனைவி அந்த அருள் ஒளி பெற்று உயர வேண்டும்
3.எங்கள் இரு மனமும் இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எண்ணிப் பழக வேண்டும்.
இவ்வாறு “எவரொருவர்” குடும்பத்தில் செயல்படுத்துகின்றனரோ அவர்களுடைய வாழ்க்கையில் எல்லா உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் வரும். குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக வளருவார்கள்.
நம்முடைய சொல் அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வரும். எந்தச் செயல்கள் செய்தாலும் அது எல்லாம் வளர்ச்சியின் பாதையிலே செல்லும் சீராக வரும். விவசாயம் செய்தாலும் பயிர்கள் நல்ல மகசூல் தரும்.
இதையெல்லாம் நாம்
1.குடும்பத்தில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்து நிரூபித்துக் காட்ட வேண்டும்
2.குரு கொடுத்த அருளின் துணை கொண்டு எல்லாவற்றையும் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அன்றாடம் நம் வீட்டை எவ்வாறு தூய்மைப்படுத்துகின்றோமோ அது போன்று நம் ஆன்மாவையும் அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும்.
1.வீட்டைத் திறக்காது சில காலம் பூட்டி வைத்து விட்டால் நெடி ஏறிவிடும்
2.அடுத்து அங்கே உள்ளே செல்ல வேண்டும் என்றால் “நுழையும் பொழுதே சங்கடமாக இருக்கும்…”
அதே போன்று நாம் தினசரி குளிக்காமல் இருந்தால் உடலில் அசுத்தங்கள் ஏறிவிடும்… மேலெல்லாம் அரிப்பாகிவிடும். நம்முடைய உடைகளையும் அவ்வப்போது தூய்மைப்படுத்தவில்லை என்றால் அழுக்கு ஏறி… துணியே இத்துப் போகும்.
அதைப் போன்று தான் நம் ஆன்மாவையும் அடிக்கடி அந்த அருள் ஞானிகள் உணர்வைக் கொண்டு அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.எந்த அளவிற்கு நாம் தூய்மைப்படுத்துகின்றோமோ இவை அனைத்தும் நமக்குள் “பேரருளாக மாறும்…”
2.எதையுமே நல் சொல்லாகும் நல் செயலாகவும் நாம் செயல்படுத்தும் அந்த அருளாக மாறும்.
3.நமது வாழ்க்கை பிறருடைய தீமைகளை அகற்ற உதவும்.
4.நம் சொல்லின் உணர்வுகள் பிறருக்கு நன்மை செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும்.
பிறருடைய நிலைகளை மகிழச் செய்யும் பொழுது தான் “பேரொளி…” ஆக… அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்ந்து பேரொளி என்ற நிலை அடைகின்றது. ஒவ்வொருவரும் இதனை மனதில் வைத்து இல்லற வாழ்க்கையில் அருள் வழி வாழுங்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழும் நிலைக்கு வரவேண்டும். அதற்குண்டான வழிகளை… உபாயங்களைக் கூட்டுங்கள்.
கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் அந்த ஊருக்கு மட்டுமல்ல… தெருவுக்கு மட்டுமல்ல… வீட்டுக்கு மட்டுமல்ல… எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாக வருகிறது.
இது போன்று
1.ஒரு பத்துக் குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழும் நிலை வந்தால் அந்தத் தெருவே பரிசுத்தமாகும்..
2.அங்கிருக்கக்கூடிய மக்களும் தெளிவடைவார்கள்.
3.ஒருவருக்கொருவர் அறியாது சேரும் பகைமை உணர்வை மாற்றிடும் சக்தி பெற முடியும்.
அந்த வீடோ தெருவோ ஊரோ சொர்க்கலோகமாக மாறும். மற்றவர்கள் அங்கே வந்தாலும் அவர்களுக்கும் அங்கே ஒரு மகிழ்ச்சி ஊட்டும் சக்தியாக வரும். ஆகவே… தெளிந்த மனதுடன் வாழ்ந்திடும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் குடும்பங்களில் முதலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் “இரண்டு பேரும் ஒன்று சேர்த்து வாழ வேண்டும்…” என்று முயற்சிகளைக் கொண்டு வாருங்கள்.
மனித வாழ்க்கையில் எத்தனையோ அன்பும் பண்பும் கொண்டு வளர்ந்த நாம்… பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்து அதைப் பதிவாக்கி இருப்பதனால் பிறருடைய ஆன்மா… அதாவது உடலை விட்டு சென்ற பின் அது நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
1.வந்த பின் அதனின் உணர்வை நம்மை அறியாமலே இயக்குகின்றது
2.நல்லதைப் பேசும் உணர்வுகளை அது மாற்றி விடுகின்றது.
ஆகவே எல்லோரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு கூட்டுத் தியானம் இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுத்து “மன உறுதி” வரும்படி செய்ய வேண்டும்.
பின்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அந்த ஆன்மா பெற வேண்டும்… அந்த உடலில் இருந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
யாருடைய உடலிலாவது இப்படி வித்தியாசமான மன நிலை இருந்தால் கூட்டுத் தியானங்கள் அமைத்து அவரை எண்ணி ஒரு பாலை வைத்துத் தியானம் இருக்கச் செய்ய வேண்டும்.
தியானித்து முடிந்த பின் அவருக்கு அதைக் கொடுத்து… பாலைப் போன்ற தெளிந்த மனம் பெற வேண்டும்… அந்த உடலில் இருக்கக்கூடிய ஆன்மா தெளிந்த மனம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை வளர்த்து அங்கே பாய்ச்சிப் பாருங்கள்.
இவ்வாறு செய்தால்
1.நமக்குள் எத்தகைய நிலை இருந்தாலும் அருள் வழியில் வலிமை பெற்ற அணுக்களாக மாற்ற முடியும்
2.உங்களை நீங்கள் நம்புங்கள்.
உங்கள் உயிர் ஈஸ்வரலோகமாக இருக்கின்றது… எண்ணியது எதுவோ அதன் உணர்வினைக் கருவாக உருவாக்கி வளர்க்கும் சக்தியாகச் செயல்படுகின்றது. மீண்டும் எண்ணும் பொழுது அதன் உணர்வையே வளர்க்கிறது
ஆகவே இந்த இல்லற வாழ்க்கையில் அருள் வாழ்க்கை வாழ்ந்து நாம் அனைவரும் பிறவியில்லா நிலை அடைவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களும் விஷத்தன்மையான செயல்களையும் நாம் நுகரப்படும் பொழுது… அது நமது ஆன்மாவை… இந்த உடலுக்குப் பாதுகாப்பாக இருப்பதை… சுத்தமாக அதை வலு இழக்கச் செய்து விடுகின்றது.
காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்திகள் என்று உண்டு. அந்த எதிர்ப்பு சக்தி கொண்ட அணுக்களை… அந்த அமிலத்தின் தன்மைகளைக் குறைந்து விடுகின்றது. ஆக…
1.எதிர்ப்பு சக்தி இல்லாததனால் தீமை செய்யும் உணர்வுகள் ஒரு நொடிக்குள் ஊடுருவி
2.உடலில் சீக்கிரம் நோய் வருவதும்… பல தொல்லைகள் கொடுப்பதுமாக வந்துவிடுகிறது.
இன்று உலகெங்கிலும் நடக்கும் மத பேதம் இன பேதம் மொழி பேதம் இது போன்ற அசுர உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்ததனால்… நாம் கண் கொண்டு பார்த்து அவைகள் நமக்குள் பதிந்த பின் என்ன நடக்கிறது…?
விஷத் தன்மை கொண்ட கதிரியக்கங்கள் பரவி பூமியில் எப்படி ஓசான் திரை கிழிந்ததோ… இது போன்று மனித உடலுக்குள் நம்மைக் காக்கும் நமது ஆன்மா பாதுகாப்பான நிலைகளிலிருந்து அதுவும் பிளக்கப்பட்டுவிடுகிறது.
அதனால் மனிதனுடைய நல்ல சிந்தனைகளைச் சீர்குலைக்கச் செய்து விடுகிறது. மனிதன் உறுதியான உடல் பெற்று இருந்தாலும்
1.தீமைகளை எதிர்க்கும் சக்தி கொண்ட அந்த அமிலங்கள் குறைத்து விட்டதனால்
2.நம் உடலில் உள்ள பாதுக்காப்புக் கவசத்தை அது மறைந்து விடுகிறது.
அதை எல்லாம் மாற்றிடக் கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றச் செய்து… அதிலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை ஏங்கிப் பெற்று நமக்குள் சேர்த்துக் கொண்டால் “நம் ஆன்மாவை… அந்தப் பாதுகாப்பு கவசத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்…” தீமைகள் புகாது ஆன்மாவை வலுவாக்கிக் கொள்ளலாம்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் விதமாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை ஆங்காங்கு இந்த ஒளி அலைகளைப் பரப்பப்படும் பொழுது
1.எல்லோருக்கும் “அவருடைய உயர்ந்த சக்தி” கிடைக்க ஏதுவாகின்றது.
2.ஒன்று சேர்க்கும் உணர்வுகள் வருகின்றது
3.பகைமை உணர்வுகள் மாற்றப்பட்டு அன்பு கொண்டு அரவணைத்து வாழும் நிலைகள் வருகின்றது.
4.உயிரைக் கடவுளாக மதிக்கச் செய்கின்றது… உடலைக் கோவிலாக மதிக்கச் செய்கிறது
5.மனிதனுக்குள் உள்ள பண்பு கொண்ட உணர்வுகளைத் தெய்வமாக மதிக்கும் தன்மை வருகிறது
6.இன பேதம் அகற்றப்படுகின்றது… மன பேதம் அகற்றப்படுகிறது…
7.வெறுப்பு வேதனை போன்றவைகள் நமக்குள் நெருங்காது தடுக்க முடிகிறது.
8.அருள் உணர்வுகளை வளர்த்து நாளடைவில் பகைமை உணர்ச்சிகளை அறவே அழித்திடும் சக்தியாக நமக்குள் வளர்கின்றது.


எதையுமே உணர்வால் அறியும் ஆற்றலாக… அந்த அறிவின் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்
இந்த மனித வாழ்க்கையில் எல்லோராலும் சில இதுகளை நாம் உணர்வால் உணர முடிகின்றது. ஆனாலும்
1.இந்தத் தியான வழியில் பெரும்பகுதி இந்த உடலுக்குள் செல்லும் நிலைகளை உணர வேண்டும்.
2.உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகிறது என்று…?
நம் உடலுக்குள் சேர்ந்த உணர்வுகள்… மற்ற உணர்வு நம் மீது மோதிய பின் “எதனால் நம்மை இயக்கப்படுகின்றது…?” என்ற இந்த அறிவின் ஞானத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.
இதை எல்லாம் நமக்குள் நுகர நுகர நம் உடலுக்குள் நாம் நுகரும் உணர்வுகள் இரண்டும் “ஒரு எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…”
1.உயிரிலே மோதி உணர்வின் தன்மை நினைவுடன் இருக்கப்படும் பொழுது…
2.மற்றொரு உணர்வு சேர்ந்த பின்
3.அதனுடைய அழுத்தமும்… அதனுடைய இயக்கமும்… நம்முடைய உணர்வும்…
4.அதற்குக் கீழ் எப்படி இருக்கிறது…? என்ற நிலையை நாம் அறிந்து உணர முடிகின்றது.
இதைப் பழக்கப்படுத்துவதற்குத் தான்
1.எது நம்மை இயக்குகிறது…?
2.எதனால் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்…?
3.எதை நாம் வளர்த்துக் கொள்கின்றோம்…? என்ற உண்மையை நீங்கள் அறிந்து கொள்வதற்குத் தான்
4.தியானத்தில் காட்சியாகக் கொடுக்கப்பட்டதன் உண்மை நிலைகள்.
இது உங்களுக்குள் வளர்ந்தால் நல்லதாகும்.

உலக மக்களை அருள் ஒளியின் சுடராக மாற்றும் சக்தி பெறுங்கள்
எந்தச் செல்வமும் நமக்குச் சொந்தமாக வருவதில்லை. ஆனால்
1.அருள் ஞானத்தை நமக்குள் சொந்தமாக்கி விட்டால் இருளை வென்று ஒளியின் உணர்வாக ஆக்கும் தன்மை பெறுகின்றோம்.
2.அதையே இந்த மனித வாழ்க்கையில் நாம் சொந்தமாக்கிப் பயன்படுத்த வேண்டும்.
எந்த நிலையில் வாழ்ந்தாலும் இந்த உடலும் சொந்தம் ஆவதில்லை. இந்த உடலால் சம்பாதித்த செல்வமும் நிலைத்ததில்லை.
கோடிக் கோடிச் செல்வங்களைப் பெற்றாலும் பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்து நான் சுகமாக வாழ்வேன் என்றாலும் அப்படிப்பட்ட அரசனும் இன்று இருந்ததில்லை.
பேய் மனமாக அவன் சென்று விட்டான். அவன் உணர்வுகளும் பேய் மனமாக மாறி விட்டது.
1.அவன் ஆசையைப் பின்பற்றிய அனைவரும் அவன் வழியிலே சென்று மதம் என்ற வெறி கொண்டு
2.மனிதனை மனிதனே அழித்துக் கொண்டு கொன்று குவித்து அதைக் கண்டு மகிழும் நிலையை இன்று உருவாகிவிட்டது.
அரசன் சென்ற நிலையை இன்று உருவானது. அதன் உணர்வு கொன்று குவிக்கும் உணர்வாக வளர்ந்து விட்டது. மதம் என்ற போர்வையை அவன் உருவாக்கினான்.
அதே மதத்தின் அடிப்படையில் இன்று நஞ்சு கலந்த உணர்வாக மதத்திற்குள் இனமென்று வளர்ந்து விட்டது. தன் இனமே பெரிது என்றும் மற்ற இனத்தைப் பழித்துப் பேசினான். பழி தீர்க்கும் உணர்வுகளே இங்கு வளர்ந்தது.
மனிதனுக்கு மனிதனே உருக்குலையச் செய்யும் நிலையாகச் சிந்தித்து வாழும் நிலைகள் செயலிழந்து சிந்தனையற்ற செயலாகவே செயல்பட்டு… சிந்தனையற்ற செயல்களை நாம் நுகரும் பொழுது நஞ்சான உணர்வுகளை வளர்த்து நஞ்சை உணவாக உட்கொள்ளும் நஞ்சின் செயலாக்கங்களாக உருப் பெற்றுவிட்டது.
நஞ்சை வளர்த்திடும் நிலையே நமக்குள் வளர்கின்றது. இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் மீள வேண்டும்.
1.அதற்குத்தான் எனது குரு அருளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்… நமது குரு என்ற நிலையில் அனைவரும் வாழ வேண்டும்.
2.முதலில் எமது குருவாக இருந்தார். இந்த உணர்வின் தன்மையை நீங்கள் நுகர்ந்தறிந்து இந்த உணர்வின் வழி சென்றால்
3.”நமது குரு…” என்று நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் நிலை வரும்.
சாமியையும் குருவையும் பிரித்து விடாதீர்கள்…! நமது குரு என்று அருள் வழியில் ஒன்றி வாழ்தல் வேண்டும்.
இந்த உணர்வின் துணை கொண்டு உலக மக்கள் நஞ்சிலிருந்து விடுபட வேண்டும். அருள் ஞானம் பெறுதல் வேண்டும். இந்த உணர்வைத் தியானித்து அதை நாம் பெருக்க வேண்டும்.
பகைமை கொண்ட உணர்வுகள் இங்கே வந்தாலும் இந்தப் பகைமை வளராது தடுக்க அருள் ஒளியைப் பெற்று உலக மக்கள் அருள் ஞானத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.
1.இந்தப் பூமியை அருள் ஞானத்தை வளர்த்திடும் பூமியாக ஆக்கிட வேண்டும்.
2.அருள் ஞானிகள் பிறந்த பூமியில் அருள் ஒளியின் சுடரை எண்ணி வளர்த்து
3.இந்த இந்தியா என்ற எல்லையை எண்ணும் பொழுதெல்லாம் உலக மக்கள் மனம் மாறி
4.அருள் ஒளியின் சுடராக மாறும் நிலைக்கு வர வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் எந்தெந்த உணர்வின் ஒலியைப் (மொழி) பெருக்குகின்றோமோ அதற்குத்தக்கவாறு நம்முடைய நினைவாற்றலும் பல சக்திகளும் நமக்குள் உருமாறுகின்றது.
ஆகவே…
1.எந்த வகையிலும் எத்தகைய நிலை வந்தாலும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை விடாது அதை எடுக்கப் பழகிக் கொண்டால்
3.இந்த வாழ்க்கையில் நமக்கு அது பேருதவியாக இருக்கும்.
ஏனென்றால் ஒருவர் அவர் பேசுவதை எங்கிருந்து எண்ணினாலும் அந்த உணர்வுகள் அலைகளாக நமக்குள் வருகின்றது… கவரப்படுகிறது.
அது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ததனால்… அதை நீங்கள் மனதில் எண்ணி… உங்கள் வாழ்க்கையில் எப்போது சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ கோபமோ பயமோ மற்ற எந்த உணர்வை நுகர நேர்ந்தாலும்
1.அப்படி நுகர்ந்த அந்த சக்தி உங்களுக்குள் பெருகுவதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை உடலுக்குள் செலுத்தித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.நாளை நடப்பதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்… நல் செயலாக இருக்க வேண்டும் என்று அந்த உணர்வுகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
4.ஒவ்வொரு நாளும் இதைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையே தியானம் ஆகின்றது.
வராகன் தன் உணவுக்காகச் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்வது போன்று… தீமையான உணர்வுகள் உள் செல்லாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனித்துப் பிரித்து நமக்குள் சேர்ப்பிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று செல்லும் போதோ உணவு உட்கொள்ளும் பொழுதோ இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுதோ மற்றவர்களுடன் கலந்து பேசும் பொழுதோ அல்லது பேசிய பின்போ
1.ஒரு நொடி துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து
2.அதைக் கலந்து மாற்றிக் கொண்டே வந்தால் நமது உணர்வுகள் பூராமே தூய்மைப்படுத்தும் சக்தியாக வளர்கின்றது.
வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்தது போன்று… வெளியிலிருந்து வரக்கூடிய மற்ற தீமைகளைப் பிளந்து விட்டுத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடத்திலும் பெற முடியும்.
துருவ நட்சத்திரத்தின் வலுவை நமக்குள் நுகர்ந்து கொண்டே இருந்தால் கசடான உணர்வுகளைப் பிளந்து விட்டு நம் உயிர் ஒளியின் தன்மையாக மாறும்… பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல இது உதவும்.
அன்று மெய் ஞானிகள் எப்படி இயற்கையின் இயக்கங்களைக் கண்டறிந்தார்களோ… அந்த இயற்கை வழியிலேயே தான் செயல்படுத்த வேண்டும். அதைத்தான் தியானம் என்று சொல்வது.
வரும் தீமைகளை அகற்றி அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்கிப் பேரருளைப் பெற்று பேரொளியாக மாற முடியும். பேரருள் என்றால் இருளைப் போக்கும் சக்தி.
1.ஒவ்வொரு நொடியிலும் இப்படி எண்ணிப் பழகி விட்டால்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி தன்னாலே தன்னிச்சையாக வந்து சேரும்.
இதில் ஒன்றும் சிரமமில்லை.
கோபமோ சலிப்போ வரும் போது நம்மை அறியாமலே அதன் வழிக்கு இழுத்துச் செல்லும். அதே போன்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொண்டால் தீமைகளை எளிதில் மாற்றிவிடலாம்.
ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் தீமைகள் புகாது தடுத்து இந்த வாழ்க்கையை அருள் வாழ்க்கையாக வாழ முடியும்.
1.உங்களுக்கு மன பலம் கிடைக்கின்றது.
2.உடல் பிடிப்பு வராது… செல்வத்தின் பிடிப்பும் அதிகமாக வராது.
3.அந்தப் பிடிப்பு வராது என்றாலும்… செல்வம் நம்மைத் தேடிக் கொண்டு வரும்… மகிழ்ச்சி வரும்…!
4.ஒளியான உணர்வைக் கொண்டு நம்மை காக்கும் சக்தியாக வளரும்
ஆனால் உடலை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று வேதனைகளைச் சுவாசித்தால் அந்த வேதனை வந்த பின் மகிழ்ச்சி பெறும் உடலாகக் கூட நாம் காண முடியாது.
அடிக்கடி “துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு” நம்மைக் காத்திடும் சக்தியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்… பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
குரு அருள் உறுதுணையால் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சு மூச்சும் புனிதம் பெறும்… இந்த உலகையும் நீங்கள் காக்க முடியும்.
ஏனென்றால்
1.சிறுகச் சிறுக அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அதைப் பல லட்சம் பேர் குவிக்கப்படும் பொழுது
2.துருவத்தை நோக்கி ஒன்று சேர்த்து அந்தப் பகுதியில் ஓட்டையாகப் பிளந்திருந்ததை நாம் அடைக்க முடியும்.
3.விஷத் தன்மைகள் பூமிக்குள் புகாது தடுக்கவும் முடியும்
எப்படி நம் ஆன்மாவில் தீமைகள் புகுவதைத் தடுத்து ஒரு பாதுகாப்புக் கவசம் உருவாக்குவது போன்று நம் எண்ணத்தைக் கொண்டு இந்த பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரை கிழிந்ததையும்” நாம் அடைக்கவும் முடியும்.
ஏனென்றால் அணு குண்டுகளும் கதிரியக்கங்களும் பல விஷமான உணர்வுகளும் பரவியதால் ஓசோன் திரை கிழிந்தது அதே சமயத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் எண்ணத்தை அந்தத் திசை நோக்கிச் செலுத்தினோம் என்றால் அது நாளடைவில் நல்லதாகும்.
1.குருநாதர் இட்ட கட்டளைப்படி நம் அனைவரது எண்ணங்களையும் ஒருங்கிணைத்து
2.அந்தத் துருவத்தை எண்ணி குறித்த காலத்தில் அது அடைபட வேண்டும் என்று செயல்படுத்த முடியும்.


“பிராணன்…” (சுவாசம்) பற்றி ஞானிகள் சொன்னதன் உண்மை நிலைகள்
பிராணயாமம் என்று சொல்லி மூச்சை எடுத்து உடலுக்குள் அதிகமாகச் செலுத்தப்படும் பொழுது உடலில் எதன் வேக உணர்வுகள் அதிகமாகின்றதோ அதைக் கவர்ந்து விடும்.
சுவாசித்த உணர்வுகள் உயிரிலே ஃபில்டர் பண்ணக்கூடிய சளி அதை வடிகட்டும்… அதிகமானால் வெளியே தள்ளிவிடும். வடிகட்டிய நிலையில் தான் வருகின்றது.
ஆனால் சுவாசித்து உள்ளே செலுத்தும் போது உந்து விசை அதிகரிக்கப்படும் பொழுது சுவாசப் பைகள் மூலம் உடலுக்குள் அதிகமாகச் சென்று விட்டால் ஒரு பக்கம் உணர்த்தச் செய்து… செயல்படும் போது நாளடைவில் இந்த உறுப்புகளில் பலவிதமான இருமல்கள் வரும்.
1.இதே உணர்வு நுரையீரலில் அழுத்தப்பட்டு உடல் முழுவதற்கும் இந்த வாயுவை உந்தப்படும் பொழுது
2.வாயு மண்டலத்தை இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்களுக்குள் சென்றவுடன்
3.இவர்கள் எதை எடுத்தார்களோ அதன் உணர்வின் தன்மை விஷத்தன்மையாக மாறிக் கடு கடு… கிடு கிடு.. என்று ஓடும்.
பிராணயாமம் செய்பவர்களைக் கடைசியில் கேட்டால் இதையெல்லாம் சொல்வார்கள்.
பிராணயாமம் செய்வதை இவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால் வேதனைப்படும் நேரங்களில் என்ன செய்கிறது…? என்று எடுத்துச் சுவாசித்துப் பார்ப்பார்கள். அந்த உணர்வு உடலுக்குள் வரும் பொழுது வேதனையை உருவாக்கும் உணர்வின் தன்மை வந்து விடும்.
பிராணயாமத்தின்படி இதை எடுத்துப் பிறருடைய உணர்வுகளைச் சுவாசித்துப் பார்ப்பது சரம்.
1.அவர் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன மோதுகின்றது…?
2.அவர் என்ன நினைக்கின்றார்…? அவர் உடலில் என்ன இருக்கின்றது…? என்ற நிலையைச் சுவாசித்துப் பிராணயாமம்
3.உயிரிலே பட்டு உணர்ந்து கொண்டாலும் பிறருடைய எண்ணங்களைக் கவர்கின்றது.
இதைக் கவர்ந்து இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் சென்றால் வாயு மண்டலங்களில் விஷத்தன்மையாகிக் கை கால் குடைச்சல் என்ற நிலையாகிவிடும்.
இதே உணர்வுகள் வாயுவாக நேரடியாகச் சென்று ரத்த நாளங்களில் கலப்பதற்கு முன் சுவாசப்பை வழி சென்று உடலுக்குள் விஷத்தைப் பரப்புவது தான் இதெல்லாம்.
குருநாதர் இதை எல்லாம் தெளிவாகக் காட்டுகின்றார்.
நேரடியாகச் சுவாசித்து (வழக்கமான வழி) உமிழ் நீராகி அந்த உமிழ் நீர் உணவுடன் கலந்து அந்த உணவுக்குள் உயர்ந்த நிலை ஆன பின் இரத்தமாக மாறி
1.அந்த ரத்தத்தின் தன்மை வரப்படும் பொழுது எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வு வழி பிராணயாமம்.
2.அந்த உணர்வுகள் பிராணனை உருவாக்கி அதன் வழி நமக்குள் உருவாக்குதல் வேண்டும் என்பதுதான் முறைகள்.
இவர்கள் சொன்ன மாதிரி வடகிளை தென்கிளை என்று சுவாசித்து வடிகட்டும் திறனை இழந்து சூரிய கலை சந்திர கலை என்று அல்ல.
நுரையீரலில் பம்ப் ஒரு பக்கம் பிஸ்டன் இருக்கின்றது இன்னொரு பகுதியில் அடைக்கின்றது. சுவாசப்பைகளில் ஒன்று இழுத்துத் தள்ளியபின் அடைக்கும். மீண்டும் அது இழுத்து அதைத் தள்ளும்.
ஆகவே நமக்குள் பம்ப் செய்யும் முறைகளைப் பற்றி அந்த ஞானிகள் சொல்லி இருந்தாலும் அடைத்து இழுக்கிறது என்றால் “இவர்கள் மூக்கை அடைத்து இப்படிச் செய்கின்றார்கள்…”
கீதா உபதேசத்தினைக் கண்ணன் கூறுகின்றான் என்பார்கள். கண்களால் பார்க்கும் பொழுது எதன் உணர்வை நுகர்கின்றோமோ உயிரிலே படுகிறது. அப்போது கண்ணன் குருச்சேத்திரப் போரை வழிநடத்துகின்றான்.
உதாரணமாக…
1.ஒரு தீமையான உணர்வை நுகர்ந்தால் நம் கண் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது.
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் தீமையான உணர்வைக் கவர்கின்றது.
அது கவர்ந்து கொண்ட பின் உயிரிலே பட்ட பின் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் வலு குறைகின்றது. தீமையான உணர்வு உயிரிலே மோதியபின் உடலுக்குள் இருக்கும் உயிரே அதற்குக் குருவாக இருக்கின்றது.
அதைத்தான்
1.கண்கள் தீமை என்ற உணர்வை எடுத்து உயிரிலே பட்டுத் தீமை என்று அறிவிக்கச் செய்கின்றது.
2.கண்ணால் பார்த்தாலும் உணர்வால் உயிரிலே மோதும் பொழுது தான் கண்ணனின் சகோதரி திரௌபதை.
எதைக் கொடுத்தாலும் அதை வழிநடத்திச் செல்லக்கூடிய உயிர்… திரௌபதை என்று ஏனென்றால் கண்ணால் பார்க்கின்றோம் உயிரால் உணர்கின்றோம் என்பதைக் கண்ணனின் சகோதரி… திரௌபதை.
கண்கள் பார்ப்பதால்… அதை உணர்வால் நமக்குள் அறிவிக்கின்றது என்பதை நாம் உணர்வதற்காக இவ்வாறு செய்தனர்.
எல்லாவற்றிற்குமே காரணப் பெயரை வைத்து ஒவ்வொரு நிலைகளிலும் நம் உணர்வுகள் என்ன செய்கின்றது…?
1.உயிரின் இயக்கமும் கண்களின் இயக்கமும் உடலின் இயக்கமும் என்ற நிலைகளில்
2.இந்த உணர்ச்சிகளால் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குச் சாஸ்திரங்கள் பல உண்டு.
ஆனால் அதைத் தவறான வழிகளில் இன்று மனிதனின் வாழ்க்கைக்காக “எத்தனையோ நீடித்த நாள் வாழலாம்…” என்று பிராணயாமம் செய்து தீமையின் நிலைகள் கொண்டு மீண்டும் எதை வளர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க “இன்னொரு உடல் பெறுவது திண்ணம்…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
யாம் (ஞானகுரு) உபதேசிப்பதை எல்லாம் புரியவில்லை என்று யாரும் எண்ணி விடாதீர்கள்.
குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது… ஆனால் சந்தர்ப்பத்தால் டிவியைப் பார்த்து அதற்குள் பதிவாகி விட்டால் அதன் உணர்வின் நினைவு கொண்டே குழந்தைகள் பாடவும் ஆடவும் செய்யும்.
மிருகங்களுக்கும் தெரியாது… ஆனால் நாம் சொல்லும் உணர்வுகள் பதிவாகி விட்டால் பின்… இங்கே வாடா…! என்றால் வருகின்றது போ…! என்றால் போகின்றது. நாயோ பூனையோ பெரிய மிருகங்கள் கூட மனிதனுடைய உணர்வைப் பாய்ச்சிய பின்… நம் பார்வையில் வைத்துக் கொண்டால் அதற்குத் தக்க அந்த மிருகங்களும் இயங்குகிறது.
இதைப் போன்று தான்
1.அருள் ஒளிகளை… மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்
2.அந்தப் பதிவான உணர்வுகளை நினைவு கொண்டு… உங்கள் எண்ணத்தால் அதைப் பெற முடியும்… தீமைகளை அகற்ற முடியும்.
உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!
காரணம்… எண்ணியதை இயக்குவதும் உங்கள் உயிரே…! எண்ணியதை உடலாக்குவதும் உங்கள் உயிரே…! ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீங்கள் பெறுங்கள்.
எத்தகைய விஞ்ஞான விஷத்தன்மைகள் உலகில் பரவி இருந்தாலும் அருள் உணர்வின் தன்மை பதிவான பின் தீமையை ஈர்க்கும் நிலைகள் மறந்து… பதிவு செய்த உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கினால் நமக்குள் விஷத் தன்மை வராதபடி தடுக்க முடியும்.
ஆகவே… இருளான உலகிலிருந்து நீங்கள் மீளுங்கள். இருளிலிருந்து அனைத்து மக்களும் மீள வேண்டும் என்று “ஒன்று சேர்த்த உணர்வை” வளர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் காற்று மண்டலத்தில் பரவி இருக்கும் நச்சுத்தன்மைகளை அகற்ற… அதற்குண்டான வலிமையைப் பெறுங்கள்.
1.கூட்டமைப்பாக அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
2.அந்த உணர்வின் அதிர்வுகளை நாம் அனைவரும் ஒன்று சேர்த்து இந்தப் பூமியில் பரப்புவோம்.
3.நமக்கு முன் பரவிருக்கும் நச்சுத்தன்மைகளை அகற்றும் சக்தியாக நாம் செயல்படுவோம்.
அப்போது தீமை செய்யும் உணர்வுகளை நாம் ஈர்க்க மறுக்கப்படும் போது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும்.
அதே சமயத்தில் விஞ்ஞான அறிவில் வந்த தீமைகளையோ அசம்பாவிதங்களையோ கொலைகளையோ கேட்டறிந்த உணவுகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி… காலை துருவ தியானத்தில் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று வலுவாக்கிக் கொள்ளும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அனைவரும் ஒன்று சேர்த்து இழுக்கப்படும் பொழுது
2.காலை ஆறு மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த தீமை செய்யும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து மேலே எடுத்துச் சென்று விடுகின்றது.
எந்தச் சூரியனிலும் சிக்காது இருப்பதை… வெகு தொலைவில் இருக்கும் “வால் நட்சத்திரம்” என்று சொல்வதை… சூரியன் கவரப்படும் பொழுது அதை எடுத்து எவ்வாறு மாற்றிக் கொள்கின்றதோ… அதைப் போல் மனிதர்களாக இருக்கும் நாம் “தீமைகளை ஈர்க்கத் தவறினால்” அதைச் சூரியன் கவர்ந்து சென்று தனக்குள் இருக்கும் உணர்வு கொண்டு அதை மோதி அந்த நஞ்சினைக் கரைத்து “மாற்றுப் பொருளாக” உண்டாக்கி விடுகின்றது.
குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒவ்வொரு மனிதரும் ஆறாவது அறிவால் செயல்படும் உணர்வுகள் கொண்டு இந்த வாழ்க்கையில் தெளிந்த மனதுடன் வாழ்வோம்.
இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… உடலால் தேடிய செல்வங்களும் சொந்தமல்ல.
1.இந்த மனித உடலில் நாம் தேடும் அருள் உணர்வுகளே நமக்குச் சொந்தமாகின்றது… இருளை அகற்றுகின்றது.
2.நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி ஊட்டும் சக்தியாக வளர்கின்றது
3.அந்த மகிழ்ச்சி என்ற உணர்வுகளை நமக்குள் சேர்த்து இனி அடுத்து என்றும் பேரானந்த நிலை என்ற
4.பெருவீடு பெருநிலை என்ற பெருவாழ்வு என்ற நிலை அடைய “இந்த மனித உடல் தான் சிறந்த இடம்…”
5.இதிலிருந்து தான் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்
குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வாக வாழ்வோம்.


யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்
உங்களுக்குள் ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.
1.யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
2.அந்த நேரத்தில் உங்களுக்குள் அந்த உண்மையின் உணர்வுகள் வளர்ச்சியாகும்.
யாம் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். எது தீமை…? எது நன்மை…? என்பதை அறிந்து கொண்டீர்கள். எல்லோருக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள். கோவிலுக்குச் சென்றால் எப்படி வணங்க வேண்டும் என்று வழிகாட்டுங்கள்…?
தாய் தந்தையரைத் தெய்வமாக வணங்குங்கள். குறைகள் இருந்தால் அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் ஞானியாக வேண்டும்… நல்லவனாக வேண்டும் என்ற உணர்வைச் சொல்லிப் பழகுங்கள்.
அவர்கள் சொல்லும் கஷ்டத்தைக் கேட்டால் அது உங்களுக்குள் வளராதபடி அவர்களுக்கு ஞானத்தை ஊட்டித் தெளிவாக்குதல் வேண்டும்.
ஆகவே தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள்
1.உங்களை யாம் எப்படிக் குரு வழியில் சீர்திருத்தம் செய்கின்றோமோ இதைப் போல
2.மற்றவர்களுக்கு இந்த வாழ்க்கையின் உண்மை நிலைகளை எடுத்துக் கூறி அவர்களைத் தெளிவானவர்களாக நீங்கள் மாற்ற வேண்டும்.
3.ஞானிகளைப் போன்று மாற்றும் சக்தி உங்களுக்குள் வந்தால் தீமைகளை மாற்றி அமைத்து
4.நன்மையின் நிலைகளை உங்களுக்குள்ளும் விளையச் செய்ய முடியும்.
கஷ்டம் என்று மீண்டும் மற்றவர்கள் சொன்னால் “நாம் சொல்வதை அவர்கள் கேட்கவில்லையே…” என்று வாதத்திற்கும் போக வேண்டாம் வேதனைக்கும் போக வேண்டாம்.
1.எப்படியும் அவர்கள் பெறுவார்கள் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2.சந்தர்ப்பம் வரும் பொழுது அவர்களும் அதைப் பெறுவார்கள்.
3.அவர்கள் அதைப் பெறும் பொழுது அந்த மகிழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்.
நான் சொல்லியிருந்தோம்… இன்று அவர்கள் அதை உணர்ந்து வந்து விட்டார்கள். அந்தச் சந்தர்ப்பங்கள் கஷ்டம் என்று வரும் பொழுது நல்வழியில் வழி நடத்தும்.
ஆக மொத்தம் கடவுள் செய்வார் சாமி செய்வார் சாமியார் செய்வார் என்று மற்றவர்களை எண்ணாதபடி உங்களை நீங்கள் நம்புங்கள்.
நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ அந்த உணர்வினை உங்கள் உயிர் உருவாக்கும். மற்ற யாரும் செய்து கொடுக்க மாட்டார்கள். நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் செயல்படுத்திக் கொடுக்கும்.
1.நான் (ஞானகுரு) செய்வேன் என்றால்… நல்லதாக வேண்டும் என்று சொல்லும் பொழுது எனக்குள் அந்த நன்மையின் தன்மை உருவாகின்றது.
2.அதே போல் நல்லது பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் உங்கள் உயிர் தான் அதை உருவாக்கிக் கொடுக்கின்றது.
வேறு யாரும் உருவாக்குவதில்லை…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
திட்டியவர்களைப் பற்றியோ வேதனைப்படுவோரைப் பற்றியோ உங்களுக்குள் பதிவானால்
1.அவர்களை நினைக்கும் போது கோபம் வருகின்றது
2.அதே சமயத்தில் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று கோபத்துடன் வெறுப்புடன் எண்ணினால் அங்கே புரை ஓடுகின்றது
3.நன்மை செய்தவனைப் பற்றி உயர்வாக எண்ணினால் அங்கே விக்கலாகி அவனுக்கு நன்மை ஆகின்றது… நமக்கும் நல்லதாகிறது.
பாசத்தால் தன் குழந்தையை எண்ணுகின்றோம். அவன் வெளிநாட்டில் இருக்கின்றானே… அவன் என்ன செய்கின்றான்..? என்று பதட்டத்துடன் குழந்தையைத் தாய் வேதனையான நிலையில் எண்ணிப் பார்க்கப்படும் பொழுது
1.கெட்டிக்காரனாக இருந்தாலும் அங்கே அவன் சிந்திக்கும் திறன் இழந்து அவன் தோல்வியைத் தழுவும் நிலை வந்து விடுகிறது.
2.தாய் வேதனையுடன் எண்ணும்போது இந்த உணர்வு தாக்கப்பட்டு அவன் நடந்து சென்று கொண்டிருந்தால் எதிரில் வரும் வாகனங்களை அறியாதபடி விபத்துகள் ஏற்பட்டுவிடும்
3.அல்லது வாகனத்தை ஓட்டிச் சென்றால் தாய் வேதனையாக எண்ணிய உணர்வுகள் குறுக்காட்டி… எதிரில் வரும் வாகனத்துடன் மோதி விபத்தாகிவிடும்.
இப்படி… மனிதனுக்கு மனிதன் நாம் தொடர்பு கொண்டு தான் வாழுகின்றோம். அதிலே நம்மை அறியாது வரும் தீமைகளிலிருந்து மீள வேண்டும் அல்லவா. அதற்குண்டான சிந்தனையாக உங்களுக்கு விட்டு விடுகின்றேன்.
“குருநாதர் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எம்மை (ஞனாகுரு) எப்படிப் பெறச் செய்தாரோ” அதே போல் அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி உங்களைக் காத்திடும் சக்தியாக அது வளர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன். இந்தப் பதிவை நீங்கள் நினைவாக்கினால் உங்கள் உணர்வே உங்களைக் காக்கும்.
அகஸ்தியன் தீமைகளை வென்று இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து நம் பூமியின் துருவ எல்லையில் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கின்றனர்.
அதிலிருந்து வெளி வரும் ஒளிக்கற்றைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதை அலைகளாக மாற்றுவதும்… நம் பூமியின் துருவப் பகுதி வழியாக நாம் வாழும் பகுதிக்குள் கொண்டு வருவதும்… அதை நாம் இப்போது நுகர்வதும் ஓர் நல்ல சந்தர்ப்பம் தான்.
கடலுக்குள் செல்வோர்…
1.இரவாகி விட்டால் இந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பார்த்துத் தான் பாதைகளை அறிந்து செல்வார்கள்
2.துருவ நட்சத்திரம் எந்தத் திசையில் தோன்றுகிறதோ வடக்கு தெற்கு கிழக்கு என்ற நிலைகள் என்று திசைகளை அறிந்து செல்வார்கள்.
நிலப்பகுதியில் உள்ளது போன்று அங்கே ரோடு இல்லை… வழி காட்டி இல்லை. துருவ நட்சத்திரத்தைப் பார்த்துத் தான் அவர்கள் போக வேண்டிய திசைகளில் செல்வார்கள். நாம் எந்த ஊரிலிருந்து வந்தோம்…? எங்கே செல்ல வேண்டும்…? என்பதைக் கப்பலில் செல்வர் அனைவரும் இதை வைத்துதான் செயல்படுத்துகின்றனர்.
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு வடக்கு தெற்கு என்ற நிலையில் பாதரசத்தை வைத்து ஈர்க்கும் சக்தி கொண்டு தெற்கு வடக்கு என்ற நிலையில் இயந்திரத் துணை கொண்டு காணுகின்றார்கள்.
ஆனால் அன்று இயந்திரத் துணை இல்லாத பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை உற்று நோக்கி
2.அதையே எல்லையாக வைத்து வாழ்ந்தவர்கள் தான் பலர்
3.துருவ நட்சத்திரம் தான் அன்று அவர்களுக்கு வழிகாட்டி…!
ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ வினாக்கள் தோன்றுவதை… அதற்குண்டான விடைகள் கிடைக்க வேண்டும்… எதிர்படும் தீமைளிலிருந்து விடுபட்டு உங்களுடைய சிந்தனைகள் தெரிந்து தெளிவாக செயல்பட வேண்டும்… தெளிந்த மனதாக மாற்றிப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத் தான் இதைக் காட்டுவது.
தீமை என்ற உணர்வுகள் மோதி அதனின் இயக்கமாக நீங்கள் மாறிடாது உங்கள் உணர்வை உங்களை இயக்கும். உங்களில் அது வளரும் அந்த தன்மை பெற வேண்டும் இனி வரும் எத்தகைய தீமையில் இருந்தும் உங்களை மீட்டிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவாக்குவது
வானை நோக்கி நீங்கள் உற்றுப் பார்க்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருள் பேரொளியை ஏங்கிப் பெற முடியும்.


இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”
குருநாதர் எம்மைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது…? உயிரணுக்கள் உயிரினங்கள் எவ்வாறு விளைகின்றது…? கோள்கள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு வளர்கின்றது…? என்ற நிலையைச் சாப்பாடு இல்லாதபடி காட்டிலே அமர்த்தி அதை எல்லாம் அறியும்படி செய்தார்.
விஞ்ஞானிகள் இயந்திரத்தின் துணை கொண்டு பல நிலைகளைக் கண்டு கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் முழுமையும் அவர்கள் காணவில்லை.
அன்று மெய் ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு
1.நம் குருநாதரும் அதை அறிந்து… அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச் செய்கின்றார்.
2.பதிந்த உணர்வினை நினைவு கொண்டு நான் விண்ணை நோக்கும் பொழுது விண்வெளியில் நடக்கும் அதிசயங்களை உணரும்படி செய்கின்றார்.
3.சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச் செய்கின்றார்.
குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு ரூபத்திலும் அவர் பதிய வைத்த உணர்வை… ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது இதை உணர்த்தி
2.அவரே தான் இந்த உடலை வழி நடத்துகின்றார்… ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!
நாடாக்களில் பதிவு செய்தது போன்று அவர் உணர்வுகள் எனக்குள் பதிவானது…!
1.அதை நான் எண்ணும் போது அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு
2.அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று அவர் செய்த உணர்வைத் தான் நான் செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னை இவ்வாறு செயல்படுத்த வைக்கின்றது.
ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். அவர் காட்டிய அருள் வழியில் செல்வோம்.
இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்வோம். இந்த உடல் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரையும் மகிழச் செய்வோம். மகிழ்ந்த உணர்வுடனே வாழ்வோம்.
1.என்றும் பேரானந்த நிலை பெற்ற அந்த மகரிஷிகளுடன் ஒன்றி வாழ்வோம்
2.அவர்களுடன் ஒன்றி வாழும் நிலையை உருவாக்குவோம்… அவர்களுடனே வாழ்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
உங்களிடம் இதற்கு முன்பு படிப்படியாகச் சிறுகச் சிறுக சொல்லிக் கொண்டு வந்தேன்… இப்பொழுது விளக்க உரைகளைக் கொடுக்கின்றேன். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான கால நேரம் இல்லை.
1.குருநாதர் பதிவு செய்தது எண்ணிலடங்காதது.
2.அனைத்தையும் நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.
அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். அதை எல்லோரும் நீங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் அவ்வப்போது துணுக்குத் துணுக்காகக் கொடுத்து அந்த நினைவுகளை உங்களுக்குள் ஊட்டுகின்றோம்.
1.அவ்வாறு ஊட்டி உங்கள் உணர்வை ஒளியாக்கி அதனை எண்ணமாக்கி
2.உங்களுக்குள் இயக்கும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நமது உயிரின் தன்மை இயக்கப்படும் போது பிறரின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் (நல்லதோ கெட்டதோ) சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்தாலும்
1.கண்ணின் புலனறிவு நமது ஆன்மாவாக இங்கே மாற்றுகின்றது.
2.இதைத் தான் நாம் நட்சத்திரங்கள் என்று சொல்வது.
எதன் தன்மை வருகின்றதோ ஒன்றுக்கொன்று கலவையாகும் பொழுது அந்தக் கலந்த உணர்வுடன் நாம் சொல்வோம் “எனக்குப் பதட்டாமகிறது என்று…!”
தீமை செய்கின்றான் என்று அவன் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள்… கண் அவனைப் பதிவாக்கி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் இழுக்கப்படும் பொழுது… அதாவது துருவம் எந்தப் பகுதியில் இருக்கின்றதோ அதனின் நேர் வரிசையில் தான் இழுக்கும்… அதே போன்று
1.நமது கண்ணின் பார்வை எதன் பாதையில் இழுக்கின்றதோ நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது
2.அதை இழுக்கும் அந்தப் பகுதி வழியாக அதன்வழி பதிவான பின் அந்த உணர்வுகள் ஆன்மாவாக மாற்றுகின்றது.
எந்த மனிதனை நாம் உற்றுப் பார்க்கின்றோமோ அந்த உணர்வு அந்த உடலில் இருந்து வெளி வருவதை இழுத்து நம் ஆன்மாவாக நம் ஈர்ப்பு வட்டதிற்குக் கொண்டு வந்து சேர்ப்பிக்கின்றது.
அப்படிச் சேர்ப்பிக்கும் போது பல விதமான உணர்வும் உள் அடங்கி உணர்வுகள் எதிர்த்து வந்த பின் கலக்கங்கள் வருகின்றது.
1.நல்ல உணர்வுகளும் அவருடைய தீமையான உணர்வுகளும் இங்கே கலக்கப்படும் பொழுது
2.நுகர்ந்த பின் நமக்குள் பதட்டம் ஆகின்றது.
இது எல்லாம் இயற்கையில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகள் தான்.
அகஸ்தியன் இந்த உண்மைகளை உணர்ந்தவன். அவன் தன்னுடைய வளர்ச்சியின் பருவத்தில் வரப்படும் போது அவனுக்குத் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள்.
திருமணமான பின் தன்னுடைய மனைவிக்குத் தான் பெற்ற உணர்வுகள் அனைத்தையும் செவி வழி ஓதுகின்றான். உண்மையின் இயக்கம் இதுதான்… இதையெல்லாம் நீயும் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றான்.
அதைக் கேட்டறிந்த மனையாளும் அதை ஏற்றுக் கொண்டு அதே வழியில் வழி நடந்து வருகிறது.
கணவனால் கண்ட உண்மைகள் தனக்குள் வளர்ந்து அதையெல்லாம் தன் கணவன் பெற வேண்டும் என்று எண்ணுகிறது.
தான் சொன்ன உணர்வுகள் மனைவி கண்டுணர்ந்ததை அகஸ்தியன் தன் மனைவி மீண்டும் உயர வேண்டும் என்று இரு உணர்வுகளும் ஒன்றாகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
1.இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான்.
2.இவ்வாறு இருவரும் இணையப்படும் பொழுது உயர்ந்த உணர்வாக அங்கே வளருகின்றது.
காரணம் ஆண் பெண் என்ற செடிகள் இருந்தால்தான் அது விளைகின்றது… நல்ல பலனைக் கொடுக்கின்றது.
நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் தான் உண்டு. ரேவதி கார்த்திகை ரோகிணி என்று ஆண் பெண் என்ற நிலையில் வரப்படும் பொழுது… அது மின்னலாக உருவாகி சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிப் பல அணுக்களாக மாறினாலும்… எந்த நட்சத்திரத்தின் துகள்கள் எதனுடன் எது கலக்கின்றதோ… அதற்கொப்ப தான் வளர்ச்சியும் இயக்கங்களும்.
பெண்பாலின் நட்சத்திரம் ஆனால் அது மற்றொன்றைக் கவர்ந்து செடிகளையோ பாறைகளையோ வளர்க்கும் தன்மை வருகிறது. அதன் வழி வளர்ந்த பின் மற்றதுடன் கலந்து இந்த உணர்வு வளர்ச்சி பெறும் தன்மை வருகின்றது.
இதைப் போன்று தான் நமது உயிரும்…!
கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை ஆண் பாலாக இருந்தாலும் ரோகிணி நட்சத்திரம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதன் உணர்வின் துகள்கள் தூசிகள் மோதப்படும் பொழுது இந்த மோதலில் அதனைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும்… வியாழன் கோளிலிருந்து வரக்கூடிய சத்து “குரு” – விஷத்தன்மையான கதிரியக்கங்கள் வரும்பொழுது இதைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும் கார்த்திகை நட்சத்திரத்துடன் மோதும் பொழுது அதற்குத்தக்க மோதி “ஒன்றுக்கொன்று துடிப்பின் நிலைகள் வருகின்றது…”
1.துடிப்பின் நிலை வரும் பொழுது மற்ற கோளிலிருந்து வரும் தூசிகளை இதை ஈர்க்கும் சக்தி வருகின்றது
2.ஈர்க்கும் சக்தி வந்த பின் அது அடைபட்டுவிடுகிறது… அந்தத் துடிப்பின் நிலையே உயிர்…!
எந்தெந்தக் கோளின் தன்மை அடைபட்டிருக்கின்றதோ துடிப்பால் ஈர்க்கும் நிலை வரும் பொழுது… உராய்ந்து.. அதே உணர்வின் தன்மை தனக்குள் இணைந்து அது அணுவின் தன்மையாக உருவாக்கி… அதன் மலத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வுக்கொப்ப உடலை மாற்றி அமைத்து விடுகிறது.
இதைப் போல் இந்த உணர்வின் தன்மை உருவான இந்த நிலைகளை அன்று அகஸ்தியன் தெளிவாகத் தெரிந்து கொண்டான். இப்படித்தான் உயிர் உருவானது என்று…!
மற்ற துகளின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது எதன் ஈர்ப்புக்குள் வருகின்றதோ சூரியன் ஒளிக்கற்றைகளால் தாக்கப்படுகின்றது.
அந்த உணர்வு பொறியாக மாறி அதன் உணர்வுக்கொப்ப பாறைகள் விளைகின்றது என்பதை அகஸ்தியன் அறிந்த அந்த உண்மைகளை நாமும் அறிந்து கொள்வது நல்லது.
விஞ்ஞான அறிவில் எத்தனையோ பாட நிலைகளை புரட்டிப் பார்த்து அவர்கள் படித்துணர்கின்றார்கள். ஒரு இன்ஜினியரிங் என்றால் நான்கு வருடம் படிக்கிறார்கள் பௌதீகத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்… டாக்டர் என்ற நிலைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு ஐந்து வருடம் என்று படிக்கின்றார்கள்… தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.
ஆனால் இப்பொழுது உபதேசிப்பது அனைத்தும்
1.நான் படித்து வரவில்லை… கற்று வரவில்லை…
2.குரு காட்டிய உணர்வின் தன்மையை மோதலில் உணர்வின் உணர்ச்சியாக நான் அறிய முடிகின்றது.
குரு எனக்குப் பதிவாக்கியது போன்று… அதை நான் அதை நுகர்ந்தது போன்று…
1.அந்த இயற்கையின் உணர்வுகள் உங்களுடன் மோதப்படும் பொழுது அதை அறிந்திடும் அறிவாக உங்களுக்குள் வரும்.
2.ஞானம் என்ற நிலையில் உங்களுக்குள் வளர்ச்சியாகும்
விஞ்ஞானத்தால் வரக்கூடிய எத்தகைய விஷத்தன்மையிலிருந்தும் மீட்டிட… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் அதைப் பிளந்து நமக்குள் அறிவின் தன்மை கொண்டு காக்கும் தன்மையாக உங்களை மாற்றி அமைக்கும்.
அத்தகைய நிலை நீங்கள் பெற வேண்டும் என்றும் வளர்ச்சியின் பாதையில் நீங்கள் வரவேண்டும் என்று தான் என்பதற்குத்தான் இதை உங்களுக்கு தெளிவாக ஊட்டிக் கொண்டு வருகின்றேன்.
மனிதனாக உயிர் உருவாக்கிய பின் பிறவி இல்லாத நிலையை நீங்கள் அடைய வேண்டும். அப்படிப்பட்ட நிலை அடைந்தவன் தான் அகஸ்தியன்.


“உணர்வு… உணர்வு…” என்று எண்ணிலடங்காத தடவை சொல்கிறோம்… அதனின் சூட்சமம்
விஞ்ஞான அறிவு கொண்டு கரண்டினை உற்பத்தி செய்கிறோம் என்றால் அதிலே எத்தகைய நிலைகளை நாம் இணைக்கின்றோமோ…
1.வண்ண விளக்குகள் என்றால் அந்தக் கலர் வெளிச்சம் வருகின்றது.
2.மற்ற கருவிகளுக்குள் எதிலே இணைத்து இயக்குகின்றோமோ அதற்குத் தக்கவாறு இயந்திரங்கள் இயங்குகின்றது.
இதைப் போன்றது தான் நமது உயிரின் வேலையும்.
இயக்கச் சக்தி கொண்டு கரண்டை உற்பத்தி செய்தாலும் நாம் எண்ணிய உணர்வின் சத்தை உயிர் தனக்குள் எடுத்து ஜீவ அணுக்களாக அதை உருவாக்கும் தன்மை வருகின்றது.
இவ்வாறு நமது உயிர் நம் உடலுக்குள் இருந்து செயல்பட்டு வரும் இந்த நிலையில்
1.நம்மை அறியாதபடி சூட்சுமத்தில் மறைந்திருக்கும் நிலைகளைக் கண் கொண்டு பார்க்க முடிவதில்லை.
2.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள்… நாம் சுவாசித்து உயிரிலே உராயப்படும் பொழுது தான் அந்த உணர்வின் தன்மையை “உடலில் காண்பிக்கின்றது…”
கண் கொண்டு திடப்பொருளைக் காணுகின்றோம்… அதனை அறிகின்றோம். ஆனால் கண்ணின் காந்தப்புலனறிவோ… ஒரு மனிதன் தவறு செய்யும் உணர்வுகள் வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் யாரை உற்று நோக்குகின்றோமோ அவனின்று வெளிப்படும் உணர்வின் தன்மையை நம்மை நுகரச் செய்கின்றது.
1.நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டபின் அகக்கண்ணாக உடலுக்குள் பரப்பி நம்மை அறியச் செய்கின்றது.
2.கண்ணால் திடப்பொருளைக் கண்டாலும்… உணர்வால் உடலுக்குள் அது சென்று அதை உணரும் தன்மை வருகின்றது.
அத்தகைய உணரும் தன்மை வந்தாலும் நாம் சுவாசித்த உணர்வின் தன்மை நம் உயிர் அதை இயக்கியே காட்டுகின்றது. இயக்கிய உணர்வின் தன்மை உடலில் அதை இணைத்து விடுகின்றது.
இவ்வாறு தான்
1.சூட்சமத்தில் இருப்பதைப் பார்க்க முடியவில்லை என்றாலும்
2.உடலாக திடமான பின்… அதைக் காண முடிகின்றது.
எப்படி…?
இன்று நல்ல மனிதர்களாக நாம் காணுகின்றோம் அடிக்கடி வேதனை சோகம் என்று வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவர்கள் உடலில் பாய்ந்து… அந்த உணர்வின் இயக்கத்தால் அவர்கள் உடல்கள் சோர்வடைவதும்… நோயால் வேதனைப்படுவதையும் நாம் காணுகின்றோம்.
இது திடப்பொருளில் காணும் நிலைகள் தான். அதாவது
1.வேதனையான உணர்வு என்பது கண்ணுக்குத் தெரியாத சூட்சமம் என்றாலும்
2.உடலுக்குள் விளைந்த பின் நோயாக அதைக் காண முடிகிறது.
ஒரு சிலர் நன்றாக இருப்பார்கள்… உடல் நலமாக இருப்பினும் சந்தர்ப்பத்தால் தான் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் அதிகரிக்க தான் சுவாசித்த நிலைகள் அவர் உடலிலே நிம்மதியற்ற நிலைகளாக அது ஓடிக்கொண்டே இருக்கும்.
காரணம்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது எந்த வித்தின் தன்மையாக அடைகின்றதோ இந்த வேதனை என்ற நஞ்சு கொண்ட வித்து
1.குழம்பைச் சீராக வைத்து அதில் நஞ்சான நிலைகள் கலந்தால் அதனின் சுவைகள் மறைந்து விடுவது போல
2.நம் உடலில் எத்தனையோ உணர்வுகள் இந்த எண்ணங்களாகப் பதியச் செய்து அது உடலாக சதாசிவமாக்கி கொண்டிருக்கும் இந்த நிலையில்
3.எந்தெந்த குணங்கள் எண்ணங்கள் அதிகரிக்கின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாக முன் நிற்கின்றது.
4.காரணம் அது எல்லா குணத்தையும் அடைக்கிடும் நிலைகள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஞ்ஞான அறிவால் இந்த உலகமே நச்சுத்தன்மை அடைந்து கொண்டுள்ளது. ரேடியோ டிவி ஒலி/ஒளிக் கற்றைகளாக அது பரவிக் கொண்டுள்ளது. மனிதன் உற்றுப் பார்த்துக் கேட்டறியும் போது தனக்குள் பதிவாகி விடுகிறது.
எப்படி…?
1.கெமிக்கல் கலந்த உணர்வுகளை இயந்திரத்துணை கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்று ஒலி/ஒளிக்கற்றைகளாக மாற்றுகின்றனர்..
அதன் மூலம் உருவங்களைப் பார்த்து அந்த உணர்வின் ஒலிக்கற்றைகளை நாம் செவி வழி கேட்டு
3.உணர்வின் தன்மை நுகரும் பொழுது நம் உடலுக்குள்ளும் இது கலந்து விடுகின்றது.
ஒளிக்கற்றைகள் பரவப்படும் பொழுது கண்ணுற்று இந்த உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாகத் தெரிகின்றோம். “எந்தக் கெமிக்கலில் கலந்து” இதைச் சேர்த்தானோ நிச்சயம் இது இயக்கும்.
எதிலே கலக்கின்றதோ விஷத்தின் உணர்ச்சிகளாக அது இயக்கப்படும் பொழுது இரத்த நாளங்களிலே சிறுகச் சிறுக… சிறுகச் சிறுகச் சேருகின்றது.
நம் உடலில் உள்ள அணு செல்களுக்கும் இந்த உணர்வின் விஷத்தன்மைகள் கலந்து விடுகின்றது
1.அதிகமாக டிவி கம்ப்யூட்டரைப் பார்த்தவர்களுக்கு தலைவலி நிச்சயம் வரும்
2.அதே சமயத்தில் கை கால் குடைச்சலும் அதிகமாக இருக்கும்.
3.சில நேரங்களில் அதைப் பார்த்த பின் இந்த உணர்வின் அழுத்தங்கள் ஆகி மோதலாகும்போது
4.நடந்து போகும் போது சில பேருக்கு தலை சுற்றும்… கீழே தள்ளுகின்ற மாதிரிக் கொண்டு போகும்.
ஆனால் டாக்டரிடம் சென்றால் இரத்தக் கொதிப்பு… அது… இது… என்று எதையெதையோ பரிசீலனை செய்து காசைப் பறிக்கும் நிலைகள் தான் வரும்.
ஏனென்றால் டி.வி. கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளை “நெருங்கி உற்றுப் பார்க்கப்படும் போது” இத்தகைய நிலை வருகிறது.
பார்க்கலாம்…! ஆனாலும் பார்த்த பின் மாற்றி அமைக்க துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து அந்த வீரியத்தைத் தணித்துப் பழகுதல் வேண்டும்.
சாதாரணமாக… அசுத்தமான இடங்களை நம் கையை வைத்துத் தான் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். ஆனால் அதற்குப் பின் அந்தக் கையில் இருக்கக்கூடிய அழுக்கைத் துடைக்கின்றோம் அல்லவா.
அதைப் போன்று
1.நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை அதை எல்லாம் மாற்றி அமைத்த
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
இயற்கையின் இயக்க நிலைகளை ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்தான். நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றான். விஷத்தை ஒடுக்கிடும் சக்தியாக அவன் வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலன் கவர்கின்றது.
அவன் எதை எதை எல்லாம் கண்டுணர்ந்து அந்த அறிவின் உணர்ச்சியாக மாற்றி அமைத்தானோ அதன் உணர்வுகள் இங்கே பரவிக் கொண்டுள்ளது. அதை எல்லாம்
1.நமது குரு துணை கொண்டு அவர் ஊட்டிய அந்த உணர்வின் தன்மையை உற்று நோக்கி
2.அதன் உணர்வைக் கவர வேண்டும் என்ற ஏக்கத்தால் அதைப் பெற்றுக் கொண்டதனால்
3.அகஸ்தியன் கற்றுணர்ந்த உணர்வின் அறிவும் எனக்குள்ளும் (ஞானகுரு) வருகின்றது.
4.அதை நீங்களும் பெற வேண்டும்… உங்களுக்குள்ளும் அது வளர வேண்டும்.
5.அவன் நஞ்சை ஒளியாக மாற்றிய ஆற்றலை நீங்களும் பெற வேண்டும்.
6.விஞ்ஞானத்தால் வரும் நஞ்சுகளை எல்லாம் வென்று அதை ஒளியின் சுடராக மாற்ற வேண்டும்.


பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தும் பூமிக்குள் பெருக்காகப் பெருகுவதே “ஆடி பதினெட்டு…”
1.ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு மாதத்திலும் மனிதன் எவ்வாறு தன் நினைவுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும்…?
2.தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்…? உயர் ஞானத்தை எப்படித் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதற்குத் தான் ஆடிப் பெருக்கு.
வருடத்திற்கு 12 மாதம் என்றால் அந்த 12 மாதத்திலும் 12 ராசிகள் என்று சொல்வார்கள். 12 மாதங்களையும் 12 ராசிகளாகப் பிரித்தனர் ஞானிகள்.
ஒவ்வொரு மாதத்திலும் அந்த மாதத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்கள் மற்ற கோள்களில் இருந்து வெளிப்படுத்தும் உணர்வுகளையும் மற்ற நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் “ஒவ்வொரு நட்சத்திரத்தின் தொகுதி… தொகுப்பு…” என்ற நிலையில் கொண்டு வருகிறது.
12 மாதங்களிலும் இதே போன்று தான்.
1.எந்தெந்த நட்சத்திரங்கள் அந்தந்த மாதங்களில் அருகிலே ஒன்றாகக் கலந்து
2.அது கவர்ந்து கொண்ட சக்திகளை மற்ற கோள்கள் கவர்ந்து அது நமது பூமிக்கு எவ்வாறு கிடைக்கின்றது…? என்ற நிலையும்
3.அதே உணர்வின் சக்தியை நாம் எவ்வாறு நமக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்…? என்ற நிலைப்படுத்தித் தான் மாதங்களை 12 ராசிகளாகப் பிரித்தனர்.
12 ராசிகள் என்றாலும் அதிலே ஒவ்வொரு ராசிக்கும்… இரண்டு நட்சத்திரம் மூன்று நட்சத்திரம் நான்கு நட்சத்திரம் என்ற அந்த அலைவரிசைகளில் அது கலந்து அது மற்றொரு நிலைகளில் கலந்து ஒவ்வொரு கோள்களும் தனக்குள் அதை கவர்ந்து வரும்.
அப்படித் தனித்தனியாக (தொகுப்பு) வரும் நேரத்தில் நமது பூமி அந்தந்த மாதத்தில் 12 மாதங்களிலும் அதை எவ்வாறு கவர்கிறது…? என்ற நிலையைத் தான் ராசி என்று பிரித்தனர்.
அவ்வாறு பூமிக்குள் வரும் அந்த அணுக்களின் தன்மையை தாவர இனங்கள் தனக்குள் எதைச் சேர்த்துக் கொண்டதோ
1.அதனதன் வளர்ச்சிகள் அந்த மாதங்களில் வரும் பொழுது அதனுடைய பெருக்குகள் பெருகி வருகின்றது.
2.தான் கவர்ந்து கொண்ட சக்திகளைப் பெருக்கிக் கொள்கிறது என்ற நிலையை நிலைப்படுத்துவதற்குத் தான்
3.12 விதமான ராசிகளாகப் பிரித்து காட்டினார்கள்.
27 நட்சத்திரங்களும் அதற்குள் ஒன்பது கோளின் நிலைகளையும் இப்படிப் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு… நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளும் ஒன்பது கோள்களும் அதை எடுத்து வெளிப்படுத்தும் போது சூரியன் தனக்குள் கவர்ந்து அதனுடைய ஒளிக்கதிர்களை வெளிப்படுத்துகிறது.
அவ்வாறு கலந்து அது வெளிப்படுத்தியதை
1.நமது பூமி சுழலும் போது பூமியின் துருவப் பகுதி (வடக்கு) எந்தெந்த நட்சத்திரத்திற்கு நேர்முகமாக இருக்கின்றதோ
2.அந்தச் சக்திகளை அதன்வழி கவர்ந்து நம் பூமிக்குள் கொண்டு வருகிறது.
அதிலே வளர்த்துக் கொண்ட நிலைகள் தான் தாவர இனங்களுக்கு ராசியாகப் பெறுகின்றது.
நட்சத்திரங்களின் சத்தை மற்ற கோள்கள் எடுத்தது ஒவ்வொரு தொகுதியும் தொகுப்புகளுக்கு எவ்வாறு…
1.அதாவது எல்லை வகுப்பு… மத்திய கோடு என்ற கோடு வரிசையில் வைத்து
2.இன்னென்ன பகுதிகளில் இன்னென்ன ராசிகள் இவ்வளவு வருகின்றது…
3.இன்னென்ன வகைகளில் இன்னன்ன நட்சத்திரங்களின் சக்திகளும் கோள்களின் சக்திகளும் இந்த அளவுக்குப் பெறும் தகுதியாகப் பரவுகின்றது என்று
4.கோள்களின் சக்தியும் நட்சத்திரங்கள் சக்தியும் அது கலந்து வந்து நமது பூமியில் தாவர இனங்களில் கலவை ஆகி
5.அதே சமயத்தில் பூமிக்குள் கலவைகளாகி பாறைகளும் மற்ற கல்களும் உருவாகி… பற்பல உலோகங்களாகி
6.உலோக சக்தியிலிருந்து பூமியிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஆவியாக வெளியாகி
7.அப்படி வெளிப்படும் உணர்வுகளை மீண்டும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
8.நமது பூமியில் எவ்வாறு அதனுடைய பெருக்கங்கள் வருகிறது…? என்ற நிலையே “ஆடி பதினெட்டு…”
இப்படி… பூமி முழுவதிலுமே எல்லா வகைகளிலும் இசைந்து ஆடி வருகின்றது.
ஆக… இயக்கத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று அசைந்து சென்று… ஒன்றுடன் ஒன்று மோதி… மோதலுக்குத் தக்க இசைகள் ஒவ்வொன்றும் மாறுகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வேதனை என்ற உணர்வு உட்புகுந்து உடலுக்குள் சென்று தீமைகள் செய்யாது தடுத்தல் வேண்டும். அவ்வாறு தடுக்க வேண்டும் என்பதற்காகத் துருவ நட்சத்திரம் ஒளியின் கற்றையாக இருக்கும் அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவாக்கி உள்ளேன்.
1.அதை எடுக்கும் திறன் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் உபதேசித்து
2.ஒவ்வொரு உணர்வின் மாற்றங்களை நீங்கள் அறிந்திடவும்
3.அறிந்த உணர்வு (ஞானம்) உங்களுக்குள் பதிவாகவும்
4.அதனின் நினைவு கொண்டு தீமைகளை அகற்றிடும் அந்த வலிமை பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.
எப்பொழுது தீமை என்ற உணர்வுகள் வருகின்றதோ அப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பதிவாக்கிக் கொண்டால் இந்த உணர்வை எண்ணும் போது உயிர் எலக்ட்ரிக்… எண்ணங்கள் எலக்ட்ரானிக்.
கோபமான உணர்வைப் பதிவாக்கி விட்டால் அதை நினைக்கும் பொழுது அது எலக்ட்ரானிக்காக மாறி… கம்ப்யூட்டரில் இயக்குவது போன்று அவன் உணர்ச்சி கொண்டு நமது உணர்வின் குணங்கள் அப்படி இயங்கி விடுகின்றது.
ஆகவே தான் தீமை என்ற உணர்வு நமக்குள் உட்புகாதபடி தடுக்க உயிரான ஈசனை எண்ணிக் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
பல முறை துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்துள்ளேன். அந்த உணர்வினை மீண்டும் எண்ணி… காற்றுக்குள் மறைந்திருக்கும் உணர்வின் தன்மை நீங்கள் கவர்ந்து இங்கே இடைமறித்தால் இந்த வேதனை உள்ளே புகாதபடி தடுத்து நிறுத்தப்படும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு தனக்குள் பாதுகாப்புக் கொடுத்து…
2.தீமை செய்யும் அணுக்கள் அந்த அருள் ஒளி கண்ட பின் அது அடைபட்டு விடுகிறது.
ஒவ்வொரு அணுவின் தன்மையும் நம் இரத்தத்தில் சுழன்று வரும் போது தீமை செய்யும் உணர்ச்சிகளை உந்தினால் தான் அது தன் உணர்வை அதிகமாகக் கவரும்.
ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரரொளி பெற வேண்டும் என்று உள் செலுத்தினால்
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை எல்லாம் இது மறைத்து விடுகின்றது.
தீமையான உணர்வு உள்புகாதபடி தடுத்து நின்ற பின் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் யார் துன்பப்படுகின்றாரோ வேதனைப்படுகின்றாரோ அவர்கள் உடலில் அது படர்ந்து அவருடைய துன்பங்கள் அகல வேண்டும் என்று நம் உணர்வின் சொல்லால் அவர் செவிகளில் பாய்ச்ச வேண்டும்.
அப்பொழுது அவர் நம்மை உற்றுப் பார்த்தால் நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வு உயிரிலே பட்டு அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக மாறும்.
இதைச் செய்… நீ துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறுவாய்…! என்றால் அந்த நினைவைக் கூட்டினால் அவர்களும் காக்கப்படுவார்கள்.
நடைமுறை வாழ்க்கையில் வேதனைப்படுகிறான் என்று நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவானால்… அந்த உணர்ச்சிகள் உந்தி… கண் வழி ஆன்மாவாக மாற்றி… உயிருடன் இணைக்கச் செய்து… இரத்தத்தில் கலக்கச் செய்து… அதை உணவாக எடுத்து வேதனைப்ப்டும் அணுக்களாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களுக்கு இடமில்லாது போய்விடுகிறது.
அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்ற ஆசையில் இதைச் சொல்கிறேன்.
1.குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
2.அவரால் தான் நாம் இதை அறிய முடிகின்றது.
3.அவரின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்
அதை நீங்கள் ஏங்கிப் பெறும் போது நீங்கள் நுகர்ந்ததை உங்கள் உயிர் அதைக் கருவாக்கி உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கிவிடும்.
1.அதன் துணை கொண்டு உங்களைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக
2.குரு அருள் உங்களில் வளர வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.


உன்னைப் போலவே ஆகும் அந்த ஆசைதான் எனக்குள் வரவேண்டும் ஈஸ்வரா…!
நான் எல்லோருக்கும் உதவி செய்தேன்… இந்த வியாபாரம் செய்தேன்… எத்தனையோ தொழில் செய்தேன் என்றெல்லாம் அடிக்கடி நாம் எண்ணுகிறோம். இருந்தாலும் அதிலே சிறு தடைப்பட்டால் என்ன நினைக்கின்றோம்…? வேதனையைத்தான் எண்ணுகின்றோம்.
நல்லதை நினைக்கின்றோம்… நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். பையனுக்கு நல்லது செய்கிறோம் சொன்னபடி நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.
கடன் கொடுக்கின்றோம்… கொடுத்தவர் திரும்பத் தரவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். அப்பொழுது எந்த ஆசை வருகிறது…? வேதனை தான் வருகிறது… அதுவே இயக்குகிறது.
1.என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு.
2.நீ உயிராக இருக்கின்றாய்… ஒளியாக இருக்கின்றாய்… இருளை அகற்றுகின்றாய்… பொருளைக் காண செய்கின்றாய்.
3.நீ எப்படி உயிராக இருக்கின்றாயோ ஒளியாக இருக்கின்றாயோ என் உணர்வெல்லாம் ஒளியாக இருக்க வேண்டும்.
4.இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தியாக இருக்க வேண்டும்
5.உன்னைப் போல் நான் ஆகும் அந்த ஆசைதான் எனக்குள் வரவேண்டும்.
நீ உயிராக இருக்கின்றாய் என் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக வேண்டும். அந்த ஒளியின் சரீரம் தான் நான் பெற வேண்டும்… கடைசி நிலையாக.
தட்டான் பூச்சி இருக்கின்றது பூவிலே முட்டையிடுகின்றது. முட்டையிட்ட பின் பட்டாம் பூச்சியாக வளர்கின்றது. பூச்சி வளர்ந்த பின் பூவைப் போன்றே மாறுகின்றது.
பட்டாம் பூச்சியாக ஆன பின் அதில் இருக்கும் தேனை உட்கொண்டு வேறு ஒரு இலை மீது உட்கார்கிறது. வெயில் காலத்தில் அந்த இலையிலே வெயில் அடித்த பின் இந்த வெயிலின் கடுமை அதற்குள் படுகின்றது. அதை அதிகமாகச் சுவாசிக்கின்றது.
1.சுவாசித்த பின் அதே உணர்வாகி அந்த இலையிலேயே ஒட்டிக் கொள்கின்றது… பார்க்கலாம்.
2.அந்த இலைகளுடன் ஒட்டியபின் இந்த உணர்வுகள் சேர்த்து அதனுடைய துடிப்பும் எல்லாம் சேர்ந்த பிற்பாடு அது ஒரு வண்டாக உருவாகின்றது.
அந்த உடலே பாம்பு சட்டையை உறித்த மாதிரி அதற்குள் இருந்தே கருவாகிறது. வேறு ஒரு பூச்சியாக மாறுகிறது.
இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் சேர்த்துச் சேர்த்து
2.இந்த உடலில் உயிர் எப்படி ஒளியாக இருந்ததோ அதைப் போன்று நாமும் ஒளியாக ஆக வேண்டும்.
அதனால் தான் என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றுமே இருந்து விடு ஈஸ்வரா என்று பாடுகிறோம். நீ எப்படி இருக்கின்றாயோ என் உணர்வெல்லாம் ஒளியாக வேண்டும்.
பூச்சிகளைக் குருவி கொத்தித் தின்றது என்றால் குருவின் உடலுக்குள் சென்று குருவியாக மாறுகின்றது.
உணவுக்காக நாம் ஆட்டின் மாமிசத்தை உட்கொண்டோம் என்றால் ஆட்டின் உணர்வு நமக்குள் வருகின்றது.. ஆட்டின் மணமே வரும். உடலை விட்டுச் சென்றால் ஆட்டின் ஈர்ப்புக்குள் தான் செல்ல வேண்டி வரும். நாம் எதை எதைச் சாப்பிடுகின்றோமோ அதற்குத்தக்க அது வேலை செய்து கொண்டே இருக்கும்.
இந்த உயிரின் வேலை அது தான்.நாம் சேர்க்கக்கூடிய உணர்வுக்குத் தக்கவாறு அடுத்த உடலை மாற்றிக் கொண்டே இருக்கும். ஆகவே நாம் எதை மாற்ற வேண்டும்…?
1.பிறவியில்லா நிலை அடைந்த அந்த அருள் ஒளியை நாம் பெற வேண்டும்
2.அந்த அருள் ஒளி பெற நமக்குப் பொறுமை தேவை.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.கிராமப்புறங்களில் இன்று படிக்காத மக்களாக இருந்தாலும்… கவனித்து ஒரு நிலை பெற்று…
2.சிலருடைய உண்மைகளைப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளும் தன்மைகள் கொண்டுள்ளார்கள்.
கல்வி கற்றோரைக் காட்டிலும் கிராமத்தில் உள்ளவர் ஒரு சொல்லை கேட்ட பின் இவன் திருடன்… இவன் திருடன் அல்லாதவன்… என்ற நிலைகளைப். புரிந்து கொள்வார்கள்.
ஆனால் திருடன் என்ற நிலை வரப்படும் பொழுது அவனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உணர்வு வந்து விடுகிறது..
1.அந்தத் திருடும் அறிவை நீக்க வேண்டும்…
2.அவனை நல்லவனாக்க வேண்டும் என்று வந்தால் ஒழித்துக்கட்டும் உணர்வுகள் இங்கே வராது.
ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வரும் பொழுது அவன் அழிகின்றான். ஆனாலும் அவன் அழிந்த பின் அவன் வேகத்தின் உணர்வுகள் பரவுகின்றது. அதனால் தான் ஒரு அசுரன் இறந்தால் அதிலிருந்து பல அசுரர்கள் வருகிறார்கள் என்று காவியங்கள் காட்டுகின்றது.
ஒரு அசுரச் செயல் வளர்ந்து…
1.அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விளைய வைத்து விட்டால்
2.அந்த அசுர உணர்வின் அணுக்கள் அதை நுகர்வோரையெல்லாம் அதே செயல்களைச் செயல்படுத்த ஆரம்பித்துவிடும்.
மகாபாரதத்தில் இராமாயணத்திலும் இது காட்டப்பட்டுள்ளது.
அந்த அசுரன் இறந்த பின் அவனுடைய உணர்வின் அலைகள் எவ்வாறு பரவுகின்றது…? கேட்டுணர்ந்தோருக்கும் இதே செயல்களை எப்படிச் செயல்படுத்துகின்றது…? இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…? என்று காவியப் படைப்பாக நமது ஞானிகள் கொடுத்துள்ளார்கள்
அதனை நாம் சற்றும் சிந்திக்கவில்லை.
இன்று நான் என்ன செய்தாலும் நாளை என்னவோ…! என்ற நிலையில் நாளைக்காகச் சேமிக்க வேண்டும் என்றால் மற்றவர்களை இம்சித்துத் தன்னைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.
நாளை என்னவோ…? சரி நடப்பது நடக்கட்டும்…! என்று இருப்போரும் உண்டு. ஆனால் “நாளைக்குச் சேமிக்க வேண்டுமே” என்ற ஏக்கத்தில் உள்ளவர்கள் தன்னிடமிருந்து பறித்துச் சென்றுவிடுவார்களே… என்ற துன்பத்தைக் கொண்டு… அந்த பணத்தைச் சேமிக்கும் நிலை வருகிறது.
அப்படிச் சேமிக்கும் தன்மை வரும் பொழுது… அதை மற்றவன் பறிக்கும் தன்மை வருகிறது. இதைப் போன்ற உணர்வுகள் மனிதனுக்குள் மாறி மாறி… மனிதனுடைய சிந்தனையை அழித்திடும் நிலைகள் பரவி வருகின்றது.
ஆகவே இத்தகைய நேரத்தில் குருநாதருடைய உணர்வுகளைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.
1.அவருடைய உணர்வுகள் தான் செயல்படுத்துகிறது… நான் பேசவில்லை…!
2.குரு அருளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
3.அவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்… அதையே தான் உங்களுக்குள்ளும் உணர்த்துகிறோம்
இன்று நல்லதை எண்ணி ஏங்கும் நிலைகள் அனைவர் உள்ளங்களிலும் தீமையான உணர்வுகள் புகுந்து அவருடைய நல்லதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டுள்ளது… வேதனையில் துடிக்கின்றனர்.
1.நல்லதுக்காக ஏங்கும் அனைவரும் பிறர் செய்யும் தீமைகளை நுகர்ந்து நல்லதை வளர்க்க முடியாதபடி தடுக்கப்பட்டு
2.அதனால் கடும் நோயும் வேதனையும் வெறுப்பும் கொண்டு
3.என்ன வாழ்க்கை…? என்று கடைசி நிமிடத்தில் ஒதுக்கும் தன்மையை வருகின்றது.
அசுர உணர்வு கொண்டவர்களோ… மற்றவரைத் தாக்கித் தான் வாழ வேண்டும் என்று பிறரைத் துன்புறுத்தும் நோக்கிலேயே செயல்படுகின்றனர். மிருகங்கள் தன் பசிக்கு மற்றவைகளைக் கொன்று பூசிப்பது போன்று மனிதன் இரக்கம் இல்லாத மிருகமாக இன்று மாறிக் கொண்டுள்ளான்.
பிறரைத் தாக்கி அவரைக் கொன்று விட்டு அவன் செல்வத்தை அபகரித்து அதைக் கண்டு ரசித்து வாழுகின்றார்கள்… அவர்கள் மகிழ்ந்தே வாழ்கின்றார்கள்… அப்படி இருந்தால் மகிழ முடியும் என்ற நிலை தான் உருவாகி உள்ளது.
இது போன்ற நிலைகள் தான் இன்று அதிகரித்துள்ளது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
அதிலிருந்து காத்துக் கொள்ளும் சக்தியாகத்தான் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். பதிவான நிலைகளை நீங்கள் எண்ணி ஏங்கி அந்தச் சக்திகளைப் பெற முடியும்.
1.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய கொடிய துன்பங்களையும் அகற்ற முடியும்.
அதற்காகத்தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக உபதேசித்துக் கொண்டு வருவது.


எமது ஆசியைத் தாள் பணிந்து நீங்கள் பெறுவதல்ல… கண் கொண்டு நேர்முகமாகப் பார்த்துக் கவர வேண்டியதே அது…!
தீமையை விளைவிக்கும் சக்திகள் உங்களை அடிபணியும் நிலையாக உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்றே ஆசீர்வதிக்கின்றேன்.
உங்கள் தாய் தந்தையரைத் தாள் பணிந்து அவருடைய அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.என்றைக்கும் உங்களுக்குக் குரு அவர்களே தெய்வமும் அவர்களே தாயின் உயிரே கடவுள்
2.ஒருக்கிணைந்து அவர்களை அடிபணிந்தால் உங்களுக்கு வழிகாட்டிய உணர்வின் தன்மை அவர்கள் சொல்லும் வாக்கை நாம் ஏற்றிடும் நிலையும்
3.நம்மைக் காத்திடும் உணர்வுகள் பதிவு செய்தது ஓங்கி வளர்ந்து தீமைகளை அடிபணியச் செய்து
4.மெய் உணர்வைப் பெறும் தகுதியாக நாம் உருவாக்க வேண்டும்.
குருவிடம் கேட்பதெல்லாம்… உபதேசித்த உணர்வுகள் எனக்குள் ஓங்கி வளர்ந்து என்னை அறியாது இருள் சூழ்ந்த நிலைகளுக்கு அழைத்துச் செல்லும் அந்தத் தீமைகள் அடிபணிந்து
1.மெய் உணர்வைக் காணும் நிலையாகக் குரு அருள் பெற வேண்டும் என்று கண்ணைத் திறந்து
2.நான் ஆசி கொடுக்கும் போது நீங்கள் என்னை நேர்முகமாகப் பார்ப்பதுதான் முறை.
கொடுக்கும் அருள் வாக்கின் நிலையை “நேரடியாகக் கண்கொண்டு பார்த்தால்…” கண்ணின் காந்தப் புலன் என்னைப் படம் எடுத்தாலும் கண்ணின் கருவிழி அதனுடன் இணைந்த காந்தப்புலன் யாம் வெளிப்படுத்தும் அலைகளைக் கவர்ந்து உங்களுக்குள் சுவாசிக்கச் செய்து அருள் மகரிஷிகளின் சக்தியைப் பெறச் செய்யும்.
இந்த முறைப்படி தான் நீங்கள் ஆசி பெற வேண்டும்.
ஆனால் பெரியவரை நாம் வணங்காது எப்படி இருப்பது…? என்ற தவறான வழிகள் காட்டப்பட்டதை விடாது பிடித்துக் கொண்டுள்ளார்கள். பாத நமஸ்காரம் செய்யத் தான் வருகிறார்கள். அதை விடுத்துவிடுங்கள்.
யாம் உபதேசம் கொடுக்கும் பொழுதெல்லாம்
1.யாம் கொடுக்கும் அந்த அருள் சக்திகளை
2.கண் கொண்டு பாய்ச்சும் உணர்வலைகளை
3.உபதேச வாயிலாகச் சொல்லாகச் சொல்வதை நீங்கள் உற்று நோக்கி
4.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
5.கூர்ந்து கவனித்து எடுத்தால் தான் அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.
ஆகவே தயவு செய்து அதன் வழி செயல்படுத்துங்கள்.
யாம் கொடுக்கும் வாக்குகள் அந்தச் சக்தி வாய்ந்த எண்ண வித்தாக விளைந்து… உங்கள் எண்ணத்தால் தீமைகளை அகற்றி… உங்களுக்குள் நன்மை பெறும் நிலையும்… அருள் ஞானம் பெறும் தகுதியையும் பெறுகின்றீர்கள்.
அந்தத் தகுதியை நீங்கள் இழந்து விடக்கூடாது என்பதற்குத் தான் படிப்படியாகச் சொல்கின்றேன்.
உபதேசிக்கும்போது அதை ஏங்கிப் பெற வேண்டும் என்ற நினைவுடன் வரும் பொழுது தான்
1.என்னுடைய ஆசீர்வாதம் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்து உயர்ந்த ஆற்றலாகப் பெருகும்
2.மறவாது நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று பிராத்தித்துக் கொள்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஞ்ஞான அறிவு கொண்டு டிவிக்களில் மனித உருக்களைப் படமாக்கிக் காட்டுகின்றார்கள்… ஒலி/ஒளி அலைகளாகப் பரப்புகின்றார்கள். எந்த அலைவரிசையில் திருப்பி வைக்கின்றோமோ அந்தப் படக் காட்சிகளையும் அதிலிருந்து வரும் சொல்களையும் காண்கின்றோம்.
இதைப் போன்று தான் ஒரு தெய்வத்தை வழிபட்டு வருகிறோம் என்றால்… அதை நமக்குள் பதிவாக்கி விட்டால்
1.பதிவான உணர்வுகள் அங்கு இருப்பது கல் சிலை தான்
2.அதிலே பல நிறங்கள் பல ஆடைகள் பல ஆபரணங்கள் எத்தனையோ விதமான அலங்காரங்கள் எல்லாவற்றையும் கண்களால் உற்றுப் பார்த்து
3.அந்த உணர்வின் அலைகளாக மாற்றித்தான் நாம் நுகர்ந்து அதை அறிகின்றோம்.
அதாவது அதன் மீது சூரியனுடைய ஒளிக் கதிர்கள் படப்பட்டு எத்தகைய கலர்கள் இருந்ததோ அந்த உணர்வலைகள் கவரப்பட்டு அந்த அலைகளாகக் கவர்ந்து வெளி வருகின்றது.
அதன் உணர்வைத் தான் நம் கண்ணின் கருவிழி தனக்குள் இதைப் பதிவாக்குகிறது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ சூரியனால் கவரப்படும் இந்த அலைகளைத் தனக்குள் எடுத்து இந்த பூமியில் பரவுவதைக் கருவிழி இங்கே பதிவாக்கியதனால் இதைக் கவர்ந்து கொள்கிறது.
கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி நம் உயிரிலே இணைக்கச் செய்து இந்த உணர்வின் அலைகளை உடலில் பரப்பச் செய்து அதன் உணர்ச்சிகள் எதுவோ அதன் செயலாக்கங்களை நம்மை அறியச் செய்கிறது.
மனிதனாக இருக்கக்கூடிய நாம் அறிந்து இதை கொள்ள வேண்டும்.
நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! குரு அருளைப் பதிவு செய்து அதன் வழி உணர்ந்து கொண்ட… தெரிந்து கொண்ட நிலையைத் தான் என்று வெளிப்படுத்துகின்றேன்.
சாமி என்னமோ சொல்கின்றார்…! விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.
1.விஞ்ஞான அறிவு கொண்டு எதைச் செய்கின்றார்கள்…? என்று குரு அருளால் இங்கிருந்து அதை நான் காண முடிகின்றது.
2.அந்த அலைகள் பரவி இருப்பதை என்னால் நுகரவும் அறியவும் முடிகின்றது.
காரணம்… விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் தீமைகள் பயக்கின்றது. அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களில் இதைப் பதிவாக்குகின்றேன்.
நீங்கள் நினைவு கொண்டு அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து “விஞ்ஞான விஷத்தன்மையால் வரும் பேரழிவிலிருந்து… உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள வேண்டும்…”
எப்படிப் பல ஸ்டேஷனில் இருந்து அலைகள் வந்தாலும் டிவி.யைத் திருப்பி வைத்தவுடன்… அந்த ஸ்டேஷனுக்குரிய அலைகளை மட்டும் பிரித்து எப்படி எடுக்கின்றதோ… அதைப் போல்
1.துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலைகளைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வருவதை
2.இப்பொழுது பதிவாக்கிப் பதிவு கொண்ட நிலையை நினைவைக் கூட்டி அந்த வலுவினை எடுத்துக் கொண்டால்
3.நாளைக்கு எத்தனை விபரீதங்கள் விஞ்ஞானத்தில் வந்தாலும் அதிலிருந்து பிரித்து
4.நீங்கள் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உங்களைக் காக்க முடியும்
5.உங்கள் சார்புடையோரையும் நஞ்சிலிருந்து மீட்க முடியும்.
அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் குரு இட்ட ஆணையை… அந்த வழிப்படி செய்கின்றேன்
சூரியன் வாழ வேண்டும் என்றாலும் தனக்கு ஒத்த கோள்களின் தன்மை சமப்படுத்தினால் தான் இதுவும் வாழ முடியும். தனக்கொத்த நிலைகளில் வந்தால் தான் சூரியக் குடும்பமே ஜீவனுடன் இருக்க முடியும்.
உதாரணமாக குடும்பத்தில் குழந்தை பிறந்து வளர்ச்சியடைந்து திருமணமான பின் தனிக் குடும்பமாக செல்கின்றார்கள்.
இது போன்றுதான் இந்தச் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று நிலையில் வரப்படும் பொழுது… கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து ஏனைய நான்கைந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு குடும்பமாகச் சூரியக் குடும்பமாகப் பிரிந்து சென்று விட்டது.
1.அவை எடுத்துச் சமைத்து நம் சூரியனுக்குக் கொடுக்கும் உணர்வுகள்
2.சூரியனுக்குக் கிடைக்காது போய் விட்டது (அதனால் மங்கல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது).
இருப்பினும் நட்சத்திரங்களால் வெளிப்படுத்தப்பட்டு மின்னல்களாக வருவது… அதன் உணர்வுகள் பல நிலைகள் மாறினாலும் நமது பூமிக்குள் அந்த மின்னல்கள் தாக்கப்படும் பொழுது செடி கொடிகள் கருகி விடுகின்றது.
அதே மின்னல்கள் பூமிக்குள் ஊடுருவினால் எதிர் நிலையான நட்சத்திரங்களின் அலைகள் ஒரு இடத்தில் குவியப்படும்போது இங்கு எதிர் நிலைகள் உருவாகின்றது.
சாந்த குணங்களும் நல்ல பண்புகள் கொண்டிருக்கப்படும் பொழுது ஒருவன் பயமுறுத்தும் உணர்வினை வெளிப்படுத்துகிறான் என்றால் அதை நுகர்ந்தால் உடலையே அது எப்படிக் கலக்குகின்றதோ நம்மை அஞ்சச் செய்கின்றதோ… சிலருக்கு பேதி கூட ஆகிவிடும். அவன் தன்னைக் கொன்று விடுவான் என்றால் அந்த உணர்வின் தன்மை வந்தபின் பேதியாகி விடுகிறது.
இதைப் போன்றே நட்சத்திரங்களுடைய மின் கதிர்கள் ஊடுருவி விட்டால்
1.எதிர்நிலை கொண்டு கொதிக்கலனாக மாறுகிறது… பாறைகளை உருக்கி விடுகின்றது.
2.இந்த பாறைகள் உருகி வரும்பொழுது நட்சத்திரங்கள் தாக்கிய ஒளிக்கற்றைகள் அது பலவீனமாகும் வரையிலும் குழம்பாகி
3.ஒரு நொடிக்குள் ஒரு குலுக்கு குலுக்கி விட்டு நின்றுவிடும் (நிலநடுக்கம்).
அதன் பின் பார்த்தால்… சில பாறைகளில் வெடிப்பாக இருக்கும். உருகிக் குழம்பான ஆவியின் கற்றைகள் வெளிச் செல்லும் பொழுது பாறைகளில் பல பல உலோகத் தன்மைகளும் மருந்துத் தன்மையும் பாறைகளின் நிறங்கள் மாற்றம் கைரேகை போன்று இருக்கும்.
எங்கே வெடித்ததோ அந்த ஆவியின் தன்மை சேர்ந்து மறுபடியும் அந்த சந்தை அடைத்துக் கொள்ளும்.
இவைகள் எல்லாம் இயற்கையின் நியதிகள்… ஆதியிலே கண்டவன் அகஸ்தியன்.
1.அவனுடன் சேர்ந்து விஞ்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைத்துப் பார்த்து
2.உலகம் எப்படி இருக்கின்றது…? என்று உங்களை நீங்கள் அறிந்து
3.இனி வரும் விஷத்தன்மைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும்.
அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் அதற்கு உதவும். எந்தச் சாமியாரும் எந்தக் கடவுளும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இயற்கையின் உண்மையின் நிலைகளை எல்லாம் குருநாதர் என்னை (ஞானகுரு) அறியும்படியும் செய்தார். பல கஷ்டங்களைக் கொடுத்து வேதனைப்படவும் செய்தார். பல சிரமப்பட்டுக் கஷ்டப்பட்டு அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
1.வேதனைப்பட்டதைச் சொல்லிக் கொண்டு வந்தால் என்ன ஆகும்…? வேதனை தான் வளரும்.
2.ஆனால் நல்லதாகும் என்று சொன்னால் நல்லதாகும்.
இதே மாதிரித் தான் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் நலம் பெற வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும் என்று உயர்ந்ததாக எண்ண வேண்டும்.
ஆனால் பையன் படிக்கப் போனானே… என்ன ஆச்சோ…? போனானா வந்தானா… என்ன ஆனது…? என்று தெரியவில்லையே…! என்று எண்ணி அவன் சரியாகப் படிக்கவில்லையே… படிக்கவில்லையே…! என்று இந்த உணர்வை எடுத்தோம் என்றால் “அங்கே அவனால் சரியாகப் படிக்க முடியாது…”
பையன் சுட்டித்தனம் பண்ணுகின்றான்… அவன் செய்யும் குறும்புத்தனம் தாங்க முடியவில்லை…! என்று இப்படியே எண்ணினால்
1.அவனுக்குள் குறும்புத்தனம் செய்யும் உணர்வைத் தான் வளர்க்க முடியும்.
2.அவனைக் காணும் பொழுதெல்லாம் வெறுப்பு தான் வளரும்.
அதற்குப் பதிலாக… அவனுக்கு அருள் கிடைக்க வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் அவனுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். “நாளடைவில் அவன் ஞானமாக வருவான்…”
ஏனென்றால் குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும் இன்றைக்கு இருக்கின்றோம்… நாளை எங்கே செல்கின்றோம்…? என்று யாருக்குத் தெரியும்…! என்ற நிலை தான் இருக்கின்றது.
சேர்த்து வைத்த சொத்துக்களோ சம்பாதித்து வைத்த பணமோ நம்முடன் வருகின்றதா…? இல்லையே.
1.ஆக நமக்கு அழியாச் சொத்து அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தான்…
2.அதை வளர்த்தால் அங்கே போகின்றோம்.
என் பிள்ளை இப்படி இருக்கின்றானே… என் பிள்ளைக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்களே…! என்று
1.இது போன்று உணர்வுகளை யாரை எண்ணி அதிகமாக வளர்த்தோமோ
2.இந்தச் சொத்தை தேடி வைத்த நிலைகள் கொண்டு அவன் உடலுக்குள் தான் செல்ல முடியும்.
அவர்களையும் தரித்திரமாக்கி உணர்வின் தன்மை மாற்றிவிட்டு ஆடாகவோ மாடாகவோ பிறக்கத்தான் நேரும். இல்லையென்றால் அடுத்த உடலுக்குள் பேயாகச் சென்று அந்தக் குடும்பத்தையும் அழித்துவிட்டு நாயாகவோ பாம்பாகவோ தேளாகவோ பிறக்க வேண்டி வரும்… மீள முடியாது.
ஏனென்றால் இதைத்தான் குருநாதர் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று பல நிலைகளைக் காட்டி அந்த உண்மைகளை உணரும்படி செய்தார்.
இன்றைய விஞ்ஞான உலகில் கடுமையான விஷத்தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. எந்தக் காரணத்தை கொண்டும் அந்த விஷம் நம்மை அழித்து விடக்கூடாது. உலகம் அழியப் போகிறது என்கிறார்கள்… விஷ உலகம் தான் அழிகின்றது
எம்மைச் சந்தித்த ஏராளமான குழந்தைகளுக்கு அருள் ஆசி கொடுத்துள்ளேன்… கருவுற்ற தாய்மார்களுக்கு ஆசி கொடுத்துள்ளேன்.
அந்தக் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று அவர்கள் ஆர்வத்தில் வரும் பொழுது இதைக் கொடுத்துள்ளேன். அந்த மாதிரிக் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக வருவார்கள்.
1.அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு எப்படி உலகை அறிந்தானோ உலகைக் காக்கும் சக்தியாக வளர்ந்தானோ
2.அவன் உணர்வை எடுத்து இங்கே கர்ப்பமான பெண்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அந்த அறிவின் ஞானம் வளர்கின்றது
3.விஞ்ஞான உலகில் இருந்து மீட்கக் கூடிய சக்தியாக அவர்கள் வளர்வார்கள்
4.விஷத் தன்மைகள் அழிந்துவிடும்.. அரும் பெரும் ஞானிகள் தோன்றுவார்கள்.
காரணம் தென்னாட்டில் தோன்றியவன் தான் அகஸ்தியன். அதே தெற்கிலிருந்து தான் இந்த உலகை மீட்டிடும் சக்திகளும் வரப்போகின்றது.
விஞ்ஞானத்தால் பல பேரழிவுகள் வந்தாலும்… அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே பரப்பப்பட்டுப் பேரழிவிலிருந்து தப்பும் மனிதர்களாக உருவாக்கும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.
இனிமேல் இதை எல்லாம் காணலாம்.
இன்றைய உலகம் எங்கோ போவதாகத் தெரிந்தாலும்… நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.
ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய துன்பங்கள் வந்தாலும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை மட்டும் கூட்டிக் கொள்ளுங்கள்.
நோயுற்றவர்களைக் காண நேர்ந்தால் அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.அது தான் நாம் சொந்தமாக்க வேண்டியது
2.என்னை இப்படிப் பேசினானே… அவனைச் சும்மா விடுவதா…? என்று இதைச் சொந்தமாக்க வேண்டாம்.
அதைச் சொந்தமாக்கினால் மீண்டும் பிறவிக்குத் தான் அந்த உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்.
ஆகவே அருளை நாம் சொந்தமாக்குவோம். இருளை அகற்றுவோம்… மெய்ப்பொருளைக் காண்போம்… மெய் வழி வாழ்வோம்… அருள் ஞானம் பெறுவோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்.
