ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வாழ்க்கையில் கடுமையான தீமைகள் வந்தால் அவைகளை எப்படி வெல்வது..? என்பதைக் காட்டுவதற்காக… குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
“மின்னலைப் பாருடா…!” என்றார். அதனால் அப்போது எனக்கும் அவருக்கும் சண்டை கூட வந்தது.
மின்னலைப் பார்த்து என் கண்கள் பறிபோய்விட்டால் என்ன செய்வது… நான் பிள்ளை குட்டிக்காரன்… எங்கே செல்வது…? என்று மின்னலைப் பார்க்க மறுத்தேன்.
நான் சொன்னதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா… மின்னலைப் பார்…! என்று கட்டாயப்படுத்தி என்னை நிர்பந்தப்படுத்துகின்றார்.
27 நட்சத்திரங்களின் உணர்வுகள் மின்னல்களாக வந்தாலும்
1.அதை அடக்க வல்லமை பெற்ற தாவர இனங்கள் உண்டு…
2.ஆனால் அந்தத் தாவர இனங்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்…?
3.அவர் கையிலே அதை வைத்திருக்கின்றார்… மின்னலைப் பாருடா…! என்று சொல்கின்றார்…
4.நான் பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன்… இரண்டு பேருக்கும் தர்க்கம் வருகிறது
நான் பார்க்கின்றேன் அல்லவா… நீ(யும்) பாருடா…! என்று மீண்டும் சொல்கின்றார். பின் நான் பார்க்கும் பொழுது கண்களை அது ஒன்றும் செய்யவில்லை குளு…குளு… என்று இருந்தது எரிச்சலோ இருளடையச் செய்யும் நிலையோ… எதுவும் இல்லை.
அந்த ஒளிக்கற்றைகள் என் உடலுக்குள் செல்கின்றது…!
அவர் கையில் வைத்திருந்த பச்சிலையைத் தான் பார்க்க முடிந்தது… மீண்டும் நான் மின்னலைப் பார்த்து எடுக்க வேண்டும் என்றால் அது மீண்டும் வேண்டும் அல்லவா…!
அப்போது தான் குருநாதர்
1.இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்கின்றேன்… நான் பதிவு செய்ததை மட்டும் எடு…
2.பச்சிலையைத் தேட வேண்டும் என்று நீ அதற்குச் சென்று விடாதே…! என்று சொல்கின்றார்.
ஏனென்றால் அப்படிச் சென்றால் உடலுக்குப் பிழைப்புக்குத் தேட ஆரம்பித்து விடுவாய். ஆகவே
1.நான் சொன்ன பதிவை உணர்வாக நினைவாக எடுத்து வளர்த்து அதை அருள் ஒளியாகப் பெருக்கி
2.மற்றவர்களுக்கு இருளைப் போக்கும் உபாயத்தைக் காட்டு…! என்று சொல்கிறார்
அகஸ்தியன் எத்தனையோ கோடி மின்னல்களை அவன் நுகர்ந்தவன்… தனக்குள் பேராற்றல்களைப் பெற்றவன்.
எப்படி…?
வியாழன் கோள் தன்னுடைய உபகோள்களை வைத்து 27 நட்சத்திரங்களுடைய சக்தியைக் கவர்ந்து ஒன்றாக்கி… உணர்வின் தன்மை தனக்குள் மற்றதுடன் இணைத்து “ஒளியாகும் தன்மையாக அது எப்படிப் பெறுகின்றதோ…” அதைப் போன்ற ஆற்றலை அகஸ்தியன் பெறுகின்றான்.
இந்த உணர்வுகளை எல்லாம் அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுதே பெறப்பட்டு… பல தாவர இனங்களின் சக்திகளை மணத்தால் நுகர்ந்து விஷத்தை ஒடுக்கும் தன்மையாகப் பெறுகின்றான்.
1.ஒளியின் மின் கதிர்களைத் தனக்குள் தாங்கும் சக்தியும்
2.மின் கதிர்கள் செல்லும் இடங்களை அறிந்துணரும் சக்தியும் பெறுகின்றான்.
இன்று எப்படி…
1.எலெக்ட்ரானிக் என்று நுண்ணிய அலைகள் கொண்டு ஆணையிட்டு இயந்திரங்களைத் தன்னிச்சையாக இயக்குகின்றார்களோ
2.செல்ஃபோன் கம்ப்யூட்டர் இவைகள் எல்லாம் வெகு தூரத்தில் இருக்கும் அலை வரிசைகளைக் கவர்ந்து இயங்குவது போன்று
3.அகண்ட நிலைகள் வருவதை எல்லாம் கவரக்கூடிய திறன் அகஸ்தியனுக்கு வருகின்றது
4.மின் கதிர்கள் எங்கெல்லாம் செல்கின்றதோ… எதை எதை நுகர்கின்றதோ
5.அந்த உணர்வின் அதிர்வுகளை எல்லாம் அகஸ்தியன் காண்கின்றான்.
அகஸ்தியன் பெற்றதையெல்லாம் “நீ உனக்குள் எப்படி உருவாக்கிக் கொள்ள முடியும்…” என்ற நிலையை உணர்த்தி அதை எனக்குள் வித்தாகப் பதிவு செய்தார் குருநாதர்.
உங்களுக்குள்ளும் அதை இப்போது வித்தாகப் பதிவு செய்கின்றேன்… அந்த உண்மை நிலைகளை நீங்களும் பெற முடியும்.
இதை எல்லாம் எதற்காகப் பதிவாக்குகிறேன்…? இந்த உடலுக்குப் பின் என்ன வேண்டும்…? என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குத் தான்.… அது உங்கள் அபிப்ராயம் தான்…!
குருநாதர் அனைத்தையும் எனக்குக் காட்டினார். டிவி அலைகளும் மற்ற கம்ப்யூட்டர் உணர்வலைகளும் என்னவெல்லாம் செய்யும்…? (மேலே முதலில் சொன்னபடி) என்று காட்டினார்.
டி.வி. பெட்டியில் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ வீட்டில் இருந்த இடத்திலிருந்து படத்தைக் காண முடிகின்றது இன்ன இடத்தில் இருந்து வருகின்றது என்று தெரிந்து… அதைத் திருப்பி வைத்தால் உடனே அதை நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது… “எங்கிருந்தாலும் அதைக் காண முடிகின்றது…”
அதே போன்று தான்
1.நீங்கள் எங்கே… எந்த இடத்தில் இருந்தாலும்… அந்த இருந்த இடத்திலிருந்து
2.அகண்ட அண்டத்திற்கும் எண்ணத்தைப் பரப்பிய உணர்வின் ஒளிக் கற்றைகளை
3.குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள் நான் பாய்ச்சுவதை நீங்கள் எண்ணி அதை எடுக்க முடியும்.
நம்பிக்கை இருந்தால் நிச்சயம் எடுக்கலாம்…!
ஆனால் நம்மால் முடியுமா…? குருநாதர் சக்தி கொடுத்தார்… சாமி எல்லாவற்றையும் பார்த்தார்… நான் எப்படிப் பார்ப்பது…! என்று எண்ணத்திற்கு நீங்கள் செல்லக்கூடாது.
குருநாதர் பைத்தியக்காரராகத் தான் தெரிந்தார்… அகண்ட அண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் சொன்னார். நான் அதைப் பதிவு செய்தேன்… பார்த்தேன்… அறிந்தேன்…!
அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்…! ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தைச் சுத்தம் செய்… நீ அந்தச் சேவையைச் செய் என்றார் குருநாதர்.
அதைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன். ஆனால்
1.நான் சேவை செய்ய வரும் பொழுது நீங்கள் கதவை இறுக்கி மூடிக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.
2.நீங்கள் கதவை (மனக் கதவு) மூடி கொள்கின்றீர்கள்.. நான் என்ன செய்வது…!
சற்று சிந்தித்துப் பாருங்கள்.


“சாமி மாதிரி பெரிய சக்தி பெற்று…” உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்
உதாரணமாக… வேதனை என்ற உணர்வுகளை அதிகமாக நுகர்ந்தால் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் சண்டை வருகிறது. தொழில் செய்யும் இடங்களில் நிம்மதி இல்லை.
ஆனால் நாம் அருள் உணர்வுகளைப் பெற்று வளர்த்தால்
1,நாம் போகும் இடமெல்லாம் அனுசரனையாக நம்மைப் பாதுகாக்கும் நிலையாக வருகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெற்றோமென்றால் அதுவே “நமக்கு ஒரு பெரிய பாதுகாப்பாக…” வருகின்றது.
சந்தர்ப்பத்தால் தடைகள் வருகிறது என்றால் ஓரளவுக்கு அதிலிருந்து நம்மை மீட்டிடும் நிலையாக
1.“ஏதாவது ஒரு ரிமோட் பண்ணி…” வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்
2.அதற்கு தகுந்தாற் போல் ஒளியாக மாற்றக்கூடிய சக்தி கிடைக்கும்.
ஆகவே… உங்களை நீங்கள் நம்புங்கள்.
எல்லாமே சாமி தான் என்று எண்ணுவதற்குப் பதிலாக “சாமியைப் போன்று பெரிய சக்தி பெற வேண்டும்…!” என் பேச்சால் மூச்சால் பிறருடைய நோய்கள் அகல வேண்டும் அனைவரும் நன்மை பெற வேண்டும்… என்ற உணர்வை எடுத்து வளர்த்து வாருங்கள்.
இந்த அருள் உணர்வுகள் உலகம் முழுவதற்கும் பரவும்.
உங்களைத் தெளிவாக்கி எல்லோருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தான் சதா தியானம் இருக்கின்றேன். அருள் வழியில் நீங்கள் தயாரானால் அனைவருக்கும் இது நல்லதாகும்.
இந்த உடல் தான்… நாம் செய்யும் தொழில் தான்… சொத்து தான்… என்று இல்லாதபடி இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதே நமக்கு அழியாச் சொத்து என்பதை உணர்ந்து அதன் வழி வளர்வோம்.
1.துருவ நட்சத்திரத்தினை மறந்து விடாதீர்கள்… எந்த நிமிடமானாலும் அதனின் சக்தியை எடுங்கள்…
2.அந்த உணர்வை உங்களுக்குள் சேர்த்துப் பழகுங்கள்… எந்த இருளும் உங்களை நாடாது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இதை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது… அதன் வழி உங்களைக் காக்கின்றது, அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.
எல்லோருக்கும் நன்மையைத்தான் நான் செய்தேன்… இப்போது இப்படி ஆகிவிட்டது என்று வேதனையாக எண்ணினால் நாம் அதுவாகி விடுகின்றோம்.
ஆனால்… அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… அந்த அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால் நாம் அதுவாகின்றோம்.
எல்லோருடைய உணர்வுகளும் நமக்குள் கலக்கப்படும் பொழுது எல்லோரையும் காக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றது. அதை நாம் அனைவரும் இணைந்து செயல்படுத்துவோம்.
1.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்…. உலகத்தைக் காப்போம் என்ற நிலையில்
2.நீங்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் உங்கள் ஊரிலும் இந்த உணர்வுகள் நல்ல சக்தியாக மாறும்.
3.அது உங்களையும் காத்து ஊரையும் காக்கும்.
4.நீங்கள் உங்களைச் சாதாரண மனிதனாக எண்ண வேண்டாம்.
5.உலகையே காக்கும் திறன் உங்களிடமிருந்து வெளிப்பட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றைய உலகில் நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… யுத்த மேகங்கள் கூடிக்கொண்டே வருகின்றது… பயங்கர விளைவுகள் வருகிறது.
1.நாம் நப்பாசை வைத்து இந்த உடல் இச்சை தான் பெறுகின்றோம்
2.உயிர் இச்சையை யாரும் கொள்ளவே இல்லை.
உடலுக்குப் பின் உயிரோடு சேர்ந்து தான் வாழப் போகின்றோம். மீண்டும் உடல் பெறும் உணர்வுகள் பெறப்படும் பொழுது… எந்த வேதனை கொண்டு நுகர்ந்து… வாழும் இந்த உடலில் நாம் தப்ப வேண்டும் என்று எண்ணினோமோ… வேதனைகள் அதிகரித்து…
1.இந்த உடலில் இருந்து தப்பி… அடுத்து இன்னொரு வேதனைப்படும் உடலுக்குள் தான் போக வேண்டி இருக்கும்
2.உயிர் அதைத்தான் பெறச் செய்யும் என்பதை நாம் மறந்தே இருக்கின்றோம்.
அக்காலங்களில் உலகம் முழுவதற்கும் உள்ள எல்லா இடங்களிலுமே அதிகாலையில் நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற நிலையில் அந்தந்த மதங்களுக்குத் தக்க வேதங்களை ஓதி… மனித உடலில் பதியச் செய்து… அரசின் பற்றும்… நாட்டின் பற்றும் வந்தது.
இருந்தாலும் அப்படி வளர்த்துக் கொண்ட பின் அந்தந்த நாட்டின் அரசன் இறந்தால் அவன் பிள்ளைகளில் மாற்றம்.
1.பின் அதிலே பல பிரிவுகள் ஆகி ஒருத்தருக்கு ஒருத்தர் பகைமையாகி
2.முதலில் உருவான தத்துவங்களை மாற்றி அவரவருக்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டனர்.
இன்றைய நம் நாட்டு அரசியலில் எடுத்துக் கொண்டால் காங்கிரசிலிருந்து எத்தனை கட்சிகள் புதிதாக உருவாகி இருக்கிறது…? என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளை அதிலே சேர்த்து “ஆட்சியைப் பிடிக்க வேண்டும்… தான் அரசாள வேண்டும்” என்று தான் எண்ணினர்.
ஆனால் அன்று காந்திஜியின் சாந்த உணர்வுகள் அதிகரித்ததனால் தான் நம் நாடு விடுதலை அடைந்தது. அவர் வழி நடத்திய தத்துவம்
1.ஒரு மனிதனைக் கோபமாகத் தாக்குவது கோழை
2.ஆனால் நம்மைத் தாக்க வரும்பொழுது மன உறுதி கொண்டு அவருடைய நிலைகளைச் சீர்படுத்திக் காட்டுவது மன பலம்
3.”அமைதி கொண்டு நல் உணர்வை ஊட்டுவது தான் மன வலிமை” என்று தெளிவாகக் காட்டினார்.
அத்தகைய மன வலிமை கொண்டு மக்கள் அனைவரையும் ஊக்குவித்து எல்லோரும் ஒரே நிலையில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற உணர்ச்சியைத் தட்டியெழுப்பினார்.
இந்த உணர்வின் தன்மை கொண்டு வரும்போது பிரிட்டிஷ் ஆட்சி பணியும் தன்மை வந்தது. இலண்டன் சபையிலே காந்திஜியைப் பேசும்படியும் செய்தது… சுதந்திரத்தைக் கொடுத்தார்கள்.
உலகம் முழுவதும் அன்று பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும்… மக்களை அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தாலும் காந்திஜியின் சாந்த வீரியமே உலகம் முழுவதற்கும் சுதந்திரத்தைக் கொடுக்கும்படி செய்தது.
ஆனால் அந்தச் சுதந்திரம் இன்று எப்படி இருக்கின்றது…?
அன்று பிரிட்டிஷ்… அரக்க உணர்வுகள் கொண்டு மக்களை அடக்கி ஆட்சி புரிந்தான்.
1.அதே உணர்வு வளர்ந்து ஒவ்வொரு மனிதனும் மற்றதை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்ற தன்மைக்கு
2.இன்று அரசியல் அமைப்புகள் உலகெங்கிலும் வந்துவிட்டது.
நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்பதற்கு மாறாக… நல்ல பண்புகளை அறியாதபடி “தான் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு மாறாக யார் சென்றாலும் அவனைத் தொலைக்க வேண்டும்…” என்று வந்துவிட்டது.
இப்படிக் கொள்கைகள் வித்தியாசமாகி ஒருவருக்கொருவர் உண்மையை அறியும் தன்மைகள் இழக்கப்பட்டு
1.மக்கள் மத்தியில் குழப்பங்கள் உருவாகி
2.தான் எப்படிப் பிழைக்கப் போகின்றோம்… எப்படி வாழ போகிறோம்…? என்று
3.நம் நாடு மட்டுமல்ல… உலக ரீதியிலே இந்த விஷத்தன்மைகள் பரவி
4.மனித இனத்தையே முழுமையாக அழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.
ஆகவே உலகம் அழியும் தருணம் வரும் பொழுது இந்தப் பிரபஞ்சத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அதன் உணர்வுகளை நாம் பெற்றால் தான் தப்ப முடியும்.
உயிர்ப் பற்றை வளர்த்தவர்கள் தான் உயிருடன் ஒன்றி அழியாத் தன்மை கொண்டு துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.
நமது எல்லை அது தான்…!


நம் எண்ணத்திற்குள் நம்மை அறியாமலே புகும் சில தீமைகள்
தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி “கராத்தே…” கற்றுக் கொள்வார்கள். இரண்டு தட்டுத் தட்டினால் அடுத்தவர்களை விழுத்தாட்டி விடலாம்… ஓங்கி ஒரு உதை விட்டேன் என்றால் போதும் என்பார்கள்.
ஆனால் அந்தக் கராத்தேயின் உணர்வுகள் உடலுக்குள் வந்தபின் உடல் வலுவால் தாக்கும் தன்மை வருகின்றது.
1.ஆனால் நுகர்ந்த உணர்வோ “தாக்க வேண்டும்” என்ற உணர்வுகள் உடலுக்குள் கூடிய பின் உடலில் அழுத்தங்கள் அதிகமாகும்.
2.கூடுமான வரையிலும் இதுபோன்று கராத்தே கற்றுக் கொண்டவருடைய கடைசி நிலைகள் அழுத்தமாகி ரத்த அழுத்தம் அதிகமாகும்.
3.அழுத்தம் அதிகமான பின் அவர்களால் அந்தக் கலையைச் செயல்படுத்த முடியாது.
உடல் வலிமை இருக்கும் வரை செயல்கள் இருக்கும். சிறிது காலம் எல்லாம் நன்றாக இருக்கும். இந்தக் கலையை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்கள் அதைச் சீராகச் செயல்படுத்தும் பொழுது மகிழ்ச்சி வரும்… புகழ் வரும்.
ஆனாலும் அடுத்தவர்கள் குறைபாடுகளோ தவறுகளோ அல்லது பிடிக்காத செயல்களையோ செய்தால்
1.”இரு நான் உன்னைப் பார்க்கிறேன்… ” என்று வீரியத்தைத் தான் கூட்டும்…!
2.ஆனால் அவன் செய்யும் உணர்வைத் திருத்தி அமைக்கும் உணர்வு வராது.
அடித்தே திருத்த வேண்டும் என்று எண்ணம் தான் வரும். அவரை அறியாது செயல்படும் தீமைகளிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய வேண்டும் என்ற உணர்வு வராது.
சகஜ வாழ்க்கையில் நம்மை அறியாமலே உடல் வலுப்பெற்றாலும்
1.நம்முடைய எண்ணங்களுக்குள் தீமை வருவதை அடக்கத் தவறினால்
2.உடலுக்குள் புகுந்து நம் நல்ல குணங்களை அது அடக்கியே தீரும்.
பரிணாம வளர்ச்சியில் இந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி வேதனையுடன் வாழும் நிலையே நமக்குள் வரும். இதையெல்லாம் மாற்றுவதற்குத்தான் விநாயகர் தத்துவத்தினைக் கொடுக்கின்றார்கள்.
உடல் வலுப்பெற்றது யானை… எனவே யானை உடலைப் போட்டு விநாயகரைக் காண்பித்துள்ளார்கள். தன் எண்ண வலுவால் பாதுகாக்கும் உணர்வு கொண்டு வளர்ந்தது.
1.அதாவது உடல் வலிமை கொண்டு தான் தன்னைப் பாதுகாக்கும் நிலை வந்தது.
2.அதன் வழி மனித உடலைப் பெற்றோம் என்பதற்குத்தான் யானையைப் போட்டுக் காண்பித்தார்கள்.
அவ்வாறு வளர்ந்த நாம்… மனிதனான பின் எண்ண வலு பெற்றவர்கள். நம் எண்ணத்தைக் கொண்டு எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.
ஆறாவது அறிவு கொண்டு பல கோடித் தீமைகளை அறிந்தாலும்… சிந்தித்து அதிலிருந்து விடுபட்டு “நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால்…” அதன் வழி நுகர்ந்து தீமைகளை அகற்றும் வலிமையும் வருகின்றது.
சில மருத்துவர்கள் நோய்களைப் போக்கப் புதிதாக மருந்து கண்டுபிடிப்பார்கள். நோயை நீக்கி பேரும் புகழும் பெற்றுச் சம்பாதித்து விடலாம் என்று செயல்படுத்துகின்றார்கள். சம்பாரித்த பின் அதிலே சந்தோசமும் படுகின்றார்கள்.
இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வரும் பொழுது தன்னுடைய பையனைச் சரியாக வளர்க்கவில்லை என்றால்… அவன் தவறுகள் செய்வான்… கண்டபடி பணத்தைச் செலவழிப்பான்.
இவரோ சிரமப்பட்டு மருந்தைக் கண்டுபிடித்துச் சம்பாதித்து வைத்திருப்பார்கள். ஆனால் பையனோ வளர்ப்பின் நிலைகள் கொண்டு சேர்க்கையின் காரணமாக சில தாறுமாறான செயல்களைச் செயல்படுத்துவார்.
இந்த மருத்துவர் மற்றவர் நோய்களை எல்லாம் நீக்குவார்.
1.சம்பாதித்த காசைத் தேவை இல்லாமல் பையன் செலவழிக்கிறான் என்றால்
2.”கஷ்டப்பட்டுச் சாம்பாரித்தேன்… இப்படிச் செய்கிறானே…” என்று எண்ணி வேதனைப்படுவார்.
ஆனால் பையனுடைய தாயோ பாசமாக இருக்கும் நிலையில்… பையனை ஏன் சீறிப் பாய்கின்றீர்கள்…? நல்ல வார்த்தையைச் சொல்லுங்கள்…! என்று கணவனிடம் சொல்லும்.
நீ இப்படிப் பேசிப் பேசித்தான் அவனைக் கெடுத்து விட்டாய்…! என்று இந்த உணர்வின் வேகம் பையனின் தாயாரையும் திட்டும்படி செய்யும்.
தாய்ப் பாசம் கொண்டு கொஞ்சம் பொறுமையாகச் சொல்லுங்கள் என்று தாய் ஞாபகப்படுத்தும். “எல்லாம் உன்னால் தான் அவன் கெடுகின்றான்…” என்ற நிலை வந்துவிடும்.
1.எப்படிப் பார்த்தாலும் இந்த உணர்வுகள் நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது.
2.அதை அடக்கக்கூடிய சக்தி தெரிந்தும் நாம் அதை விட்டு விடுகின்றோம்.
நாம் அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டுமல்லவா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.ஒவ்வொரு நாளும் உபதேச வாயிலாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து
2.ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் இணைத்துக் கொடுக்கப்படும் பொழுது இதுவே தியானமாகிறது.
அதன் வழி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெரிந்து செயல்படும் அருள் ஞான சக்தி கிடைக்கும்.
ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்குவதற்கு விஞ்ஞான அறிவுப்படி எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற அமைப்பை அதனுடன் இணைத்து வைக்கின்றார்கள்.
இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் சமயம்… ஒன்று அழுத்தம் அதிகமாகி விட்டால் உடனே மோதி அதை மாற்றி அமைத்து இயந்திரத்தைச் சீராக்குகின்றது.
அதே போன்று தான் எலக்ட்ரானிக் என்ற ஞானிகள் உணர்வின் பவரைச் உங்களுக்குள் செருகேற்றுகின்றோம்.
1.எதிர் நிலையான உணர்வு தாக்கப்படும் பொழுது உடனே அதை விலக்கி
2.உங்களைச் சிந்தித்து செயல்படுத்தும் தன்மைக்கு அது இயக்கிக் காட்டும்…!
விஞ்ஞானிகள் இன்று நிரூபிக்கின்றார்கள். கெமிக்கல் கலந்ததில் ஒரு காந்தப்புலன் அறிவை இணைத்து அதனுடைய சுருதிகளைத் தட்டி எழுப்பப்படும் (KEY BOARD) பொழுது அந்த உணர்வுகள் இயக்குகின்றது.
அதே போன்று மனிதனுக்குள்ளும் எலக்ட்ரானிக்…! ஒவ்வொரு புலனறிவுக்குள்ளும் எலக்ட்ரானிக் என்ற இந்த உணர்வின் அறிவாகும் பொழுது
1.அவன் எண்ணிய உணர்வு அதிர்வாகி இவன் எண்ணியபடி கண்களால் பார்க்கின்றான்.
2.ஒரு உருவத்தின் தன்மை “இன்னது இப்படித்தான் இருக்கும்…” என்ற நிலையை எலக்ட்ரானிக்… எண்ணங்களை எண்ணும் பொழுது
3.அதற்குத்தக்க அந்த உருவத்தையே கம்ப்யூட்டர் போட்டுக் காட்டுகின்றது
4.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று அதிர்வாக்கும் போது அதிலே பூசிய “கெமிக்கல்” அதைக் காட்டுகின்றது.
உண்மையின் உணர்வின் தன்மை அளவுகோலின்படி இவன் எடுக்கப்படும் பொழுது “மனிதனுடைய சிந்திக்கும் சக்தி”
1.எலக்ட்ரான் என்ற முறைப்படி அவன் எண்ணும் கூர்மை இதைக் கவர்ந்து
2.தட்டெழுத்தால் அடிக்கச் செய்த பின் (KEY BOARD) ஆணைகளாக அதற்குள் பதிந்து சில தத்துவங்களைக் கொண்டு வருகின்றது.
3.கம்ப்யூட்டருக்குள் இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் இயக்கம்… அதிலே பதிவான கெமிக்கல் தான்.
இதைப் போன்று தான்
1.பல கோடி உடல்களில் நாம் சேர்த்துக் கொண்ட சத்துக்கள் “ஊழ்வினையாக…” எலும்புகளுக்குள் (இந்த கெமிக்கல்) உண்டு
2.ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே வருகிறோம்
3.பதிவான உணர்வின் தன்மைகளை மீண்டும் எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் உணர்வின் இயக்கமாக நாம் இயங்கி வருகின்றோம்.
இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் புலஸ்தியன் வம்சத்தில் வந்த மெய் ஞானி அகஸ்தியன்… “அவன் கண்ட புலனின் இயக்கத்தை” (எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்)… அவன் அருள் பெற்று நாமும் அதை அறிவோம்.
1.அகஸ்தியனுடைய அருள் சக்திகளைப் பெறுவோம்
2.இருளை அகற்றிப் பேரருள் பேரொளியாக நாம் மாறுவோம்.
3.அகண்ட அண்டத்தையும் அறியும் பேராற்றல் பெறுவோம்
4.உலகைக் காத்திடும் மெய் ஞானியாக வாழ்ந்து வளர்வோம்.
நம்மால் நிச்சயம் முடியும்…!


நாம் உருவாக்க வேண்டிய கூட்டமைப்பு
விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்களைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து வைத்திருக்கின்றது. எந்தெந்த நாடுகளில் இதைச் செய்து கொண்டார்களோ
1.இந்த உணர்வு “நியூட்ரான் என்ற விஷத்தன்மைகளின் அழுத்தம்” கதிரியக்க உணர்வினைக் கண்ட பின் அது அஞ்சி ஓடுவதும்
2.மற்றொன்றுடன் மோதிச் சுழல் காற்று போலப் புயலாக மாறுகின்றது அல்லது சூறாவளியாக மாறுகின்றது.
அணுகுண்டை வெடித்தால் கட்டிடங்களுக்குள் ஊடுருவித் தன் இனமாக மாற்றி அது புகை மண்டலங்களாக மாறுகின்றது. ஆனால் அதே சமயத்தில் இந்த நியூட்ரான் என்ற உணர்வுகள் பூமியிலே கலந்தால் விஷத் தன்மை கொண்டு மடியச் செய்யும்.
ஆனாலும் விஷத்தின் தன்மை கொண்டு கதிரியக்கப் பொறிகள் அஞ்சி ஓடும் பொழுது மற்றொன்றுடன் மோதியவுடன் சூறாவளியாக மாறி கடலிலே பட்டால் அதையும் அள்ளி எடுத்துக் கொண்டு புயல் போல் மாறும்.
இது கட்டிடங்களிலே படர்ந்தால் பலவீனப்படுத்தித் தரைமட்டமாக்கிவிடும்… மனிதனாக இருந்தாலும் தூக்கிச் சென்று விடும்.
கடலில் பட்டால் அலைகளாக மாறுகிறது. சனிக் கோளின் உணர்வு படடால் நீரை ஆவியாக மாற்றி மேகங்களாகக் கூடி மழை பெய்ய வைக்கின்றது.
ஆனால் விஷத்தன்மையான உணர்வுகள் மாறி கடலோரம் உள்ள நகரம் எல்லாம் அழியும் தன்மை வருகின்றது விஞ்ஞான அறிவால். இதைப் போன்ற பாதிப்புகளில் இருந்து நாம் தப்ப வேண்டும்.
1.கூட்டு ஐக்கியமாகத் தியானங்களைச் செய்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் வாழும் இடங்களிலே பரவச் செய்து
2.அந்த உணர்வலைகளை மோதும்படிச் செய்து அதைப் பெருக்கச் செய்யப்படும் பொழுது நம்மையும் காக்கலாம்… நாம் வாழும் ஊரையும் காக்கலாம்.
துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வு அழுத்தமாகும் பொழுது அந்தத் தீமைகளை விலக்கிவிடும். நம் நாட்டிலே அத்தகைய சூறாவளியோ புயலோ வராதபடி காக்கலாம்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்த அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை… காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்.
தியானத்தைக் கடைபிடிக்கும் குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் அந்த அருள் சக்தியைப் பெற்று
1,தியானமிருக்கும் அனைத்துக் குடும்பங்களில் இது படர வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும்
3.மகிழ்ச்சியான நிலைகள் பெற வேண்டும் மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்
4.நாம் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடத்திலும் இதைப் படரச் செய்ய வேண்டும்.
அது தான் கோடிக்கரை… இராமன் என்ன செய்தான்…? மணலைக் குவித்துச் சிவலிங்கத்தைப் பூஜித்தான் என்று காட்டியிருப்பார்கள். காரணம்… மனிதனின் கடைசி எல்லையில் இருக்கின்றோம்.
மனதைக் குவித்து ஒன்றுபட்டு வாழும் நிலையில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை ஒன்றாகக் கூட்டி
2.ஒருங்கிணைந்த நிலையில் கூட்டமைப்பாக வலுவான நிலைகள் கொண்டு
3.விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளை விலக்கித் தள்ளி ஊரையும் நாட்டையும் காக்கும் நிலைக்கு வர வேண்டும்.
எங்கிருந்தாலும் சரி…! விஞ்ஞானப் பேரழிவுகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள
1.கூட்டமைப்பாகத் துருவ தியானத்தை மேற்கொண்டு அருள் உணர்வுகளைக் கவர்ந்து நாம் வாழும் இடங்களில் இந்த உணர்வுகளைப் பரவச் செய்வோம்.
2.ஒவ்வொரு நாளும் நாம் இதை வலுப்படுத்திக் கொண்டே வருவோம்.
3.உலகைக் காக்கும் சத்தியாக நாம் செயல்படுவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் உருவாக்கி ஞானிகள் அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகிறோம்.
கூர்ந்து கவனித்துப் பதிவானால் அடுத்து அதை வளர்த்துக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் பொழுது உங்கள் நினைவைக் கூட்டினால் நிச்சயம் அதைப் பெறுகின்றீர்கள்.
திட்டியவனை எண்ணியவுடன் என்ன செய்கிறது…? இருக்கட்டும்… அவனைப் பார்த்துக் கொள்கிறேன்…! என்று நினைத்தால் அவனும் கெடுகின்றான் நாமும் கெடுகின்றோம்… பகைமை உணர்வு தான் வளர்கின்றது.
இதைப் போன்ற உணர்வுகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
உங்கள் உணர்வின் குணங்களுக்கெல்லாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரருளையும் ஞானிகள் பெற்ற நிலைகளையும் கலந்து சொல்லாக யாம் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொழுது
1.உங்கள் செவி அதைக் கவர்கின்றது
2.உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது
3.சுவாசித்த பின் உயிரில் படுகின்றது.
4.உயிரின் இயக்கம்… கண் அதைக் கவர்ந்து இந்த உணர்ச்சிகளை உடலுக்குள் சேர்க்கின்றது
5.கருவிழி பதிவாக்குகின்றது… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்கிறது… அந்த உணர்ச்சிகளை இரத்தங்களிலே அது பரப்புகின்றது.
6.மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் அணுவின் தன்மை கருத்தன்மை அடைகின்றது.
7.இதை வளர்த்துக் கொண்டே வந்தால் பிரம்மமாகின்றது
8.பிரம்மானது கருவாகி உருவாகும்போது துருவ நட்சத்திரத்தின் இனமாக (அணுவாக) உங்கள் இரத்தத்தில் பெருக்கிக் கொள்ள உதவும்
மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் என்ன செய்கின்றார்கள்…? 1500 ஆண்டு காலம் மனிதனை வாழ வைக்கலாம் கண்டுபிடித்துள்ளார்கள். ஒவ்வொரு மருந்தினையும் உடலுக்குள் செலுத்தி இரத்தங்களில் அதைக் கலக்கச் செய்து மாற்றிக் கொண்டே வந்தால் 1500 வருடம் மனிதனை வாழ வைக்கலாம் என்று செய்கிறார்கள்.
1.1500 ஆண்டுகள் வாழ்ந்தால் மனிதனுடைய நிலைகள் என்ன ஆகின்றது…?
2.உறவினர்களோ சொந்த பந்தங்களோ யாருமே அறிந்து (அடையாளம்) கொள்ள முடியாதபடி இந்த ஊரே பிடிக்காது போய்விடும்.
காரணம் 50 கோடி மக்கள் தொகை இருந்தது இன்றைக்கு 700-800 கோடியாக மாறிவிட்டது 100 வருடத்தில் இதே மாதிரி மக்கள் தொகை கூடக் கூட உணவுக்கு எங்கே செல்வது…?
வளர்ச்சி அடைந்த நாடுகளாக இருந்தாலும் சரி வளர்ச்சியே இல்லாத நீக்ரோ நாடுகளாக இருந்தாலும் சரி… கையில் பணம் இல்லை… உணவுக்கு இல்லை என்கிற பொழுது மனிதனை அழித்து அந்த மாமிசத்தை உட்கொள்ளலாம் என்று “விஞ்ஞான உலகத்திலே இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது…!”
அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.புலஸ்தியர் வம்சத்தில் வந்த அகஸ்தியன் அருளைப் பெறுவோம் இருளை அகற்றுவோம்
2.கல்கி என்ற முழுமை அடைவோம்… பிறவியில்லா நிலை அடைவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு நோயாளியின் உணர்வை நாம் நுகர்ந்து
1.”அவருக்கு நோய்” என்று அறிந்த அடுத்த கணம் நமக்குள் அது வராதபடி மாற்றுவதற்கு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நம் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து அங்கே அடைத்த பின் அந்த நோயின் உணர்வு அனாதையாகி விடுகிறது.
கூடக் கொஞ்ச நேரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்க்க நோயாளியை உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே கொண்டு சென்று விடுகிறது.
அதாவது… செடி கொடிகளில் (வெயில் தாக்கப்படும் பொழுது) அதில் விளையும் சத்தின் மணங்களை ஆவியாக மாற்றிச் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்வது போன்று இதையும் எடுத்துக் கொள்கின்றது.
நம் வீட்டிலே சமையல் செய்கின்றோம். எல்லாப் பொருளையும் சேர்த்துக் கலந்து வேக வைத்த பின் ஆவியாகப் போவது எங்கே செல்கின்றது…?
1.நீரை எடுத்தவுடன் கனமான சத்தைச் சூரியன் எடுத்துக் கொள்கின்றது
2.மேலே கொண்டு சென்று மேக மண்டலத்துடன் ஆவியாக நின்று விடுகின்றது.
3.உப்புச் சத்துக்கள் அதிலே கலந்தால் மழையாகப் பெய்கின்றது.
இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.
இது போன்றுதான் நோயாளியைப் பார்த்த பின் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் ஆத்ம சுத்தி செய்யும் போது நம் உடலில் இருந்து வெளிப்படக்கூடிய வேதனையான (நோயாளியின்) அந்த உணர்வின் ஆவியை சூரியன் எடுத்துக் கொள்கிறது… நமது ஆன்மா பரிசுத்தம் ஆகின்றது.
புருவ மத்தியிலே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி நிலை நிறுத்தப்படும் போது உடலுக்குள் போகாது தடைப்படுகின்றது. ஆனால் அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளிக்குக் கிடைக்க வேண்டும்
2.நோய் நீக்கும் சக்தி அவர் பெற வேண்டும்.. அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
3.இந்த உணர்வை எடுத்து அவருக்குள் இணைக்கப்படும் பொழுது “அஞ்சனை” (பெண்பால்)
சீதா என்ற சுவையை அங்கே உருவாக்குகின்றோம். நோயை எண்ணாதபடி அந்த நோயுற்றவர் நன்றாக வேண்டும்… அவர் நோய் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் சொல்லும் பொழுது சீதாராமா.
துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும்… என் நோய் நீங்க வேண்டும் என்று அந்த நோயாளியால் எண்ண முடியவில்லை.
1.நாம் எண்ணி இவ்வாறு சொல்லப்படும் பொழுது அது இராமனின் பக்தன் “ஆஞ்சநேயன்” என்று ஆகிறது.
2.அருள் உணர்வுகளை “அவருக்குள் நேயமாக இணைத்து” தீமைகளை நீக்கி நல்லவைகளாக உருவாக்கும் தன்மை.
அது தான் ஆஞ்சநேயன். அவன் வாயு புத்திரன்…! உயிரிலே பட்டபின் வாயுவாக மாறுகின்றது அவர் (நோயுற்றவர்) உடல் முழுவதும் சுழன்று வருகின்றது. உடலில் எந்த இடத்தில் நோய் இருக்கின்றதோ அந்த உணர்ச்சிகள் அங்கே போய்த் தாக்குகிறது.
சுக்ரீவனின் மந்திரி ஆஞ்சநேயன்…! துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்து நாம் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவன் உடலில் தீமையை நீக்கும் இந்த உணர்வுகளை ஊட்டுகின்றது; வேதனை என்ற நினைவை மாற்றுகின்றது; தீமையான நிலைகளுக்குள் இந்த வலுவின் தன்மை சென்று நோயை நீக்குகின்றது…!
இது எல்லாம் சூட்சுமத்தில் நடப்பதை உருவம் அமைத்து இராமாயணம் (எண்ணம்) எதன் சுவை சீதாராமனாக எண்ணங்களாக வருகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.
வேதனைப்படும் உணர்வுகள் அதுவும் சீதா… வேதனைப்படுத்தும் சுவை. அதை நாம் நுகரும் போது எண்ணமாக வருகின்றது அதுவும் சீதாராமன் தான். அந்தச் சுவையின் நிலைகள் நுகரப்படும் போது நாம் வேதனைப்படுகின்றோம்.
ஆனால் வேதனையை நீக்கி சந்தோஷத்தை ஊட்டுவது “துருவ நட்சத்திரத்தின் சக்தி… அந்த சீதா…!” நோயை நீக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது இராமனின் பக்தன் ஆஞ்சநேயன். அவன் வாயு புத்திரன்… சுக்ரீவனின் மந்திரி.
இராமனுக்கு சுக்ரீவன் துணை செய்கின்றான் என்று காவியம் காட்டுகின்றது. துருவ நட்சத்திரம் தான் இங்கே சுக்ரீவன். அந்த சுக்ரீவன் என்ற உணர்வைச் செயல்படுத்தும் போது எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை நீக்கும் வல்லமை பெறுகின்றோம்.
1.எல்லா இடங்களுக்கும் ஊடுருவி – இலங்கைக்குள் (நம் உடலுக்குள்) வேதனை என்று சீதா அடைபட்டு இருப்பதை மீட்டு
2.சந்தோஷத்தை ஊட்டும் நிலையாக மாற்றுவதற்காக அவ்வாறு காட்டுகின்றார்கள்.
ஏனென்றால் நோயாளியின் உணர்வை இந்த உடலுக்குள் (இலங்கைக்குள்) நுகர்ந்தால் சந்தோஷம் தீவுக்குள் (சிறு இடத்திலே) அடைபட்டு விடுகிறது. தீமை என்ற உணர்வுகள் சந்தோஷத்தை அடைய விடாதபடி இலங்கேஸ்வரன் (அரக்க உணர்வுகள்) அடைத்து வைத்திருக்கின்றான் என்று காட்டுகிறார்கள்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று சொல்லும் போது…
1.இராமன் சுக்ரீவன் துணை கொண்டு படைக்களத்துடன் சென்று இந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் போது
2.வாயுவாகப் பல நிலைகளுக்குத் தாவிச் சென்று அவன் சுவாசிக்கும் உடலுக்குள் சென்று
2.சீதாவுக்கு ஊக்கம் ஊட்டி… இராமனின் உணர்வுகளை ஊட்டி… அதே உணர்ச்சியின் உணர்வுகளை
3.சுக்ரீவன் (துருவ நட்சத்திரம்) எதைச் செய்தானோ அதன் உணர்வின் தன்மை இங்கு ஊட்டப்படும் பொழுது
4.வாயு புத்திரனாக உள்ளே சென்று வலுவான உணர்வுகளை ஊட்டி மகிழ்ச்சி உருவாக்குவதாகக் காட்டுகின்றார்கள்.


மெய் ஞானம் பெறும் ஆற்றல்
ஒருவருக்கொருவர் துணை இல்லாது யாரும் வாழ முடியாது. துணையில்லாத உயிரினங்கள் சுத்தமாகவே அழிந்து விடுகின்றது… அது மடிய மடிய அந்த இனத்தின் ரூபங்களே முழுவதுமாக மடிந்து விடுகின்றது.
கடந்த காலங்களில் மனிதர்கள் உருவாவதற்கு முன் வலிமைமிக்க மிருகங்கள் வாழ்ந்திருந்தாலும்…
1.அந்தந்த இனத்தின் வலிமை அதிகமாகும் பொழுது அதற்குள்ளேயே ஒன்றை ஒன்று கொன்று புசிக்கும் நிலை விளைந்து
2.இறந்த அலைகள் வந்த பின் அதை நுகர்ந்த… பற்றுடன் வாழ்ந்த அந்த இனம் பூராமே அழிந்துவிட்டது.
பல இனப் பெருக்கங்களும் தடைப்பட்டு கடந்த கால ரூபங்கள் எல்லாம் எப்படி மறைந்தது…? என்பதை குருநாதர் இமயமலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது சில பகுதிகளிலும் சூட்சும நிலைகள் கொண்டு சில பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்றும்
1.அன்று வாழ்ந்த மிருகங்கள் அதன் இனமே இல்லாது எப்படி அழிந்தது…?
2.அது வாழ்ந்த நிலைகள் அங்கே எப்படிப் பதிவாகியுள்ளது…?
3.அந்த அலைகள் எப்படி உள்ளது…? அதனுடைய ரூபங்கள் எப்படி இருக்கிறது…? என்பதை குருநாதர் காண்பித்தார்.
இதை நீ வெளியிலே மற்றவர்களிடம் சொன்னாய் என்றால் போற்றலுக்கு உண்டான நிலை வரும். அந்த ரூபத்தை வரைந்து கொடுத்தால் பணமும் கிடைக்கும்.
ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உணர்வை வைத்து அந்த அலைகளை கம்ப்யூட்டர் மூலம் பிரித்து எடுப்பார்கள். அதனுடைய எண்ண அலைகள் தொடர்பு கொண்டதைக் காற்றில் இருப்பதையும் பிரிப்பான்.
உனக்குள் விளைந்த உணர்வின் தன்மையைக் கம்ப்யூட்டரில் இணைக்கப்படும் பொழுது அந்த அலைகளின் தொடரை வைத்து அந்த ரூபத்தை அறிவான். அதைக் காணும் நிலையும் வரும்.
ஆனால் அது ஜீவனுள்ளதாக வராது.
கம்ப்யூட்டர் மூலமாக உருவத்தைக் கொண்டு வந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் மீண்டும் அந்தக் கடந்த கால நிலைகள் எதுவோ இந்த உணர்வுகள் வளர்க்கப்பட்டு விஞ்ஞான அறிவு கொண்டு கண்டறிந்தாலும் அவன் கொண்ட நினைவாற்றல் மனித ரூபத்தை விட்டு
1.அந்த அகோரமான உணர்வுகள் இணைக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை வெளிவந்த பின்
2.இன்றைய சூழ்நிலைக்குமில்லாது கடந்த காலச் சூழ்நிலைக்கும் இல்லாது இந்த உயிர் இதற்கு இணையான ரூபத்தை மாற்றிக் கொடூர மிருகமாக மாறும்.
விஞ்ஞான அறிவால் அந்த நிலை தான் வரும். அந்த ரூபங்களைப் பார்க்கும் பொழுது உடல் இச்சைக்காக அதைச் செய்தாலும் அதனுடைய பின் விளைவுகள் இப்படி இருக்கும் என்று அதையும் குருநாதர் காட்டுகின்றார்.
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பூமிக்கடியில் மண்ணைத் தோண்டுகின்றார்கள். அந்த மணலை எடுத்து
1.நுண்ணிய அலைகள் கொண்டு அதிலே திரவகத்தை இணைக்கப்படும் பொழுது மேல் எழுந்தவாறு ஆவிகளாக மாறி
2.அதிலே வலிமை பெற்றதும்… ஒவ்வொரு நிலையாகப் படிப்படியாக அந்த திரவகத்தின் அடர்த்தியைக் கூட்டக் கூட்ட
3.இன்னென்ன காலங்களில் இவ்வளவு வலிமை பெற்றது… அந்த வலிமையை இவ்வளவு காலத்தில் பெற்றது என்று
4.அந்த திரவகத்தை ஊற்ற ஊற்ற அந்த வலிமை கொண்டு கரைந்து கரைந்து செல்வதை
5.அதனுடைய காலகட்டத்தை விஞ்ஞான அறிவால் அறிகின்றார்கள்… இந்தப் பாறை இத்தனை காலத்திற்கு முந்தையது…! என்று.
இதைப் போன்றுதான் குருநாதர் விண்ணுலக ஆற்றலின் உணர்வுகளை இன்னென்ன காலங்களில் விளைந்தது என்பதை நீ நுகர்ந்து பார். அந்த உணர்வின் ஒலி அலைகள் எப்படி வருகிறது…? என்று அதனை நீ அறிந்து கொள்.
ஆனால் அதற்காக வேண்டி காலத்தைச் செலவழிக்காதே. நீ அறிந்து கொள்ளவே இதை உனக்குக் கொடுக்கின்றேன்.
இந்த அறிவின் தெளிவை மற்றவர்களுக்கு நீ ஊட்டினால் விஞ்ஞான அறிவிக்கே அடிமையாகி மனித உடலில் இச்சைகள் உருவாக்கப்பட்டு அதன் வழியில் அழியும் பருவத்தைப் பெறுவாயே தவிர… என்றும் உயிருடன் ஒன்றி நிலை கொண்டு ஒளியின் சரீரமான அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் நீ இணைய முடியாது என்று தெளிவாகக் காட்டினார்.
ஆகவே அதன் வழிப்படி நான் அந்த வழிக்குச் செல்லவில்லை.
1.மெய்ஞான உணர்வுடன் வளர்ந்து கொண்டிருக்கும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வுடன் உங்களை ஒன்றச் செய்து
2.அந்த உணர்வுகளை உங்களுக்குள் விளையச் செய்து இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை அகற்றச் செய்ய வேண்டும்.
என் ஒருவனால் அது முடியாது. நீங்கள் அனைவரும் அந்த அருள் உணர்வுகளை எடுத்து உங்களுக்குள் நினைவு கொண்டு அந்த மகரிஷியின் ஆற்றலைப் பெற வேண்டும்.
மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் பெற வேண்டும்… என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற உணர்வினை உங்கள் எண்ணத்தால் பரப்பினால்
1.இது சிறுகச் சிறுக வளர்ந்து ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விளைந்து உணர்வலைகளைப் பெருக்கி
2.அதன் வலு கொண்டு இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் வரும் நச்சுத்தன்மைகளை மாற்ற முடியும்.

சாஸ்திரங்கள் கூறியுள்ள உண்மை நிலை
விஷத் தன்மைகள் பரவினால் பூண்டோடு அழியும் நிலை வருகின்றது. காரணம் தீமைகள் விளையும் சந்தர்ப்பங்களே இன்று உருவாகிக் கொண்டுள்ளது அதிலே சிக்காது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1.எல்லாச் சாஸ்திரங்களும் இதைத்தான் கூறுகின்றது… தென்னாட்டில் உள்ளவர்கள் கொஞ்சப் பேர் தப்பிப்பார்கள் என்று…!
2.மற்றவர்கள் அசுர உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொல்லும் நிலையே வருகின்றது.
மனிதனாக இருப்பான்… விஷத்தன்மை மோதும் பொழுது அழிந்திடும் நிலையே வருகின்றது. மனிதனுக்குள் ஆசை அதிகமாகும் பொழுது இரக்கமற்றுத் தட்டிப் பறித்துச் செல்கின்றான்.
இதிலிருந்து நாம் மீண்டு பழகுதல் வேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள்.
1.உங்கள் உயிரான ஈசனைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
2.அந்தப் பேரருள் என்ற உணர்வைச் சேர்த்து ஒளியாக ஆக வேண்டும்.
3.அவனுடன் அவனாக அவனாகவே ஆகும் நிலையை நாம் பின்பற்றுதல் வேண்டும்.
அதைப் பெறும் வழியைக் குருநாதர் சொன்னார். அவர் காட்டிய வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… ஈசனாக மதிக்கின்றேன்… ஆண்டவனாக மதிக்கின்றேன்… இறைவனாக மதிக்கின்றேன்.
அவனால் உருவாக்கப்பட்ட உடலைக் கோவில் என்று மதிக்கின்றேன்… சிவம் என்று மதிக்கின்றேன்… சிவசக்தி என்று மதிக்கின்றேன். பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனான அரும்பெரும் சக்திகள் உங்கள் உடலில் உண்டு என்று மதிக்கின்றேன்.
மனிதனின் நிலைகள் தீமைகளை அகற்றிடும் கார்த்திகேயா… எதனையுமே அறிந்திடும் அறிவு உடலுக்குள் கிடைத்துள்ளது. அறிவின் தன்மை அறிந்திடும் உணர்வை உயிரின் தன்மை எனக்குள் உருவாக்கினார் குருநாதர்.
நீங்கள் ஒவ்வொருவரும் அந்த நிலை பெற வேண்டும் என்று நான் எண்ணினால் உங்கள் பகைமைகள் எனக்குள் வராது. இதையெல்லாம் நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் சில தவறு செய்வோரும் உண்டு. நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணுவோரும் உண்டு. அத்தகைய நிலை பெறுவோர் உணர்வுகளை அவர்கள் உயிரே அதை மாற்றிவிடும்.
1.அவர்கள் எதை நுகர்ந்தார்களோ அதையே உயிர் உருவாக்கிவிடும்.
2.அதன் விளைவை அவர்கள் பின்னாடி தெரிந்து கொள்வார்கள்.
3.அது தான் தெய்வம் நின்று கேட்கும்… அரசு அன்று கேட்கும் என்று சொல்வது.
பிறரைக் கெடுக்க வேண்டும் என்ற உணர்வை வளர்த்தால் அந்தக் கெடுக்கும் உணர்வே தெய்வமாகின்றது. இந்த உணர்வைப் பெருக்கப்படும் பொழுது எந்த அளவிற்குப் பிறரைத் துன்பப்படுத்த வேண்டும் என்று எண்ணினார்களோ அந்தத் துன்பப்படுத்திடும் உணர்வுகள் அங்கே விளைந்தே தீரும். அதிலிருந்து எவரும் தப்ப முடியாது.
1.அதிலிருந்தெல்லாம் நாம் மீள்தல் வேண்டும்
2.பேரருளைப் பெறுதல் வேண்டும்… அந்த அருள் சக்திகளை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
யாம் (ஞானகுரு) சொல்லக்கூடிய உபதேசங்களை… புரியவில்லை என்று விட்டு விடாதீர்கள். ஏனென்றால்
1.நான் படித்து வந்ததவன் அல்ல
2.குரு சொன்னதைப் பதித்து வந்தவன்
3.பதிந்த நிலைகளை எடுத்தவன்
4.எடுத்த உண்மைகளை உணர்ந்தறிந்து அதை நீங்களும் பெற வேண்டும் என்பதற்கே உபதேசிக்கின்றேன்.
இது உங்களுக்குள் பதிவானால்… உங்கள் நினைவு மகரிஷிகள் பால் சென்று… இருளை நீக்கி ஒளியான உணர்வைப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்
உங்கள் பார்வை பிறருடைய தீமைகளை… நோய்களை நீக்கக்கூடிய சக்தியாகத் தான் வர வேண்டும். ஆனால்
1.கோவிலுக்குச் சென்று தெய்வத்தைப் பார்த்து “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…” என்று எண்ணுவது போல்
2.என்னையும் நீங்கள் அப்படி எண்ணி… “சாமி என்னைச் சோதிக்கிறார்…” என்று எண்ணுவதற்கு அல்ல
3.அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் “சக்திமானாக” நீங்கள் மாற வேண்டும்
4.இந்தப் பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகளை உங்கள் மூச்சலைகளால் துரத்த வேண்டும் அல்லது அதை அடக்க வேண்டும்
3.உங்கள் உடலில் மட்டுமல்ல…! (எல்லாம் சேர்த்துத் தான்…!
அதைப் பெறச் செய்வதற்கு தான் எல்லோருக்கும் இந்தச் சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஏனென்றால் நீங்கள் எல்லாம் தீமைகளை நீக்கும் வல்லுனர்களாக ஆகிவிட்டால்… இந்தப் பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் தீமைகளையும்… நாட்டுக்கு நாடு போர் என்று பரவி வரும் அசுர உணர்வுகளையும்… நிச்சயம் உங்கள் மூச்சலைகள் அடக்கும்… நல்ல உணர்வுகளை உருவாக்கும்.
அதே சமயத்தில் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு அருள் உணர்வின் தன்மையைப் பிறப்பிலிருந்தே பெறச் செய்ய வேண்டும்.
1.அகஸ்தியன் பெற்ற பேரருளை எல்லாம் கருவிலே வளரும் சிசுக்கள் பெற வேண்டும்.
2.அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்த துருவனின் ஆற்றலை குழந்தை பெற வேண்டும்
3.அணுவின் இயக்கத்தை உணர்ந்த அகஸ்தியனின் உணர்வு கருவில் வளரும் சிசுக்கள் பெற வேண்டும் என்று
4.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஏங்கிப் பெற்றால் குழந்தையின் கருவிலேயே அந்த சக்தி உருவாகின்றது.
இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் அந்தப் பதிவு உண்டு. இந்த நினைவு கொண்டு கர்ப்பமுற்ற தாய் இதை எண்ணி எடுக்க வேண்டும். காற்றிலே அந்தச் சக்திகள் உண்டு… அதை எடுக்கும் போது துருவ நட்சத்திரத்திற்கே உங்களை எட்டும்படிச் செய்யும்.
அகஸ்தியன் எப்படி உயர்ந்த சக்திகளைப் பெற்றானோ அதைப் போன்று கருவில் வளரும் குழந்தைகளை ரிஷிகளாக நாம் உருவாக்க வேண்டும். இனி வரக்கூடிய தீமைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக உங்கள் மூச்சு கருவில் வளரும் குழந்தைகளுக்கு இதைப் பெறக்கூடிய தகுதியாக வருகிறது.
விஞ்ஞான அறிவால் காற்று மண்டலமே விஷத்தன்மையாக மாறியதை அந்த ஞானிகள் வளர்ந்த பின் “இதே உணர்வுகள் தாவர இனங்களுக்குப் போய்ச் சேரும்…”
நறுமணம் வீசும் ரோஜாப்பூவின் உணர்வுகள் பட்டபின் நாம் நுகர்ந்தால் நறுமணங்களாக மாறுகின்றது. இதைப் போன்று மனித உணர்வுகள் விளைந்து வெளிப்படும் பொழுது மற்ற தாவர இனங்களுடன் சேர்க்கப்பட்டு பழையது மறைந்து மீண்டும் புது விதமான நல்ல தாவர இனங்களாக உருவாகும்.
அப்படி உருவான பின் பல உணர்வுகள் இன்று காற்றிலே படர்ந்து இருப்பினும் புதிதாக நம்மால் உருவாக்கப்படக்கூடிய இந்த தாவர இனங்கள் அந்தக் கசடுகளைக் கவர்ந்து இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தும்.
பின் ஞானிகள் என்று நாம் சொல்லும் கருவில் வளரக்கூடிய சிசுக்கள் ஞானக் குழந்தைகளாக உருவானபின் உலகைக் காக்கும் சக்தியாக வருகின்றது.
இந்தப் பிரபஞ்சத்தில் மாசுபட்ட காற்று மண்டலத்தை நல்லதாக மாற்றும் உணர்வுகள் பெற்ற பின்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ
2.அதன் உணர்வின் அருள் வழியில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலைபெற்ற உணர்வுகளுக்கு
3.இங்கிருந்து சென்று ஒளியின் உணர்வாக அங்கே மீண்டும் பெருகும் (சப்தரிஷி மண்டலம்).
இதை எல்லாம் உங்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாழ்வது சிறிது காலமே… அதற்குள் நாம் எடுப்பது எத்தனையோ அகண்ட அண்டங்கள் வாழும் அந்தச் சக்திவாய்ந்த உணர்வுகள். அத்தகைய ஆற்றலைத் தான் பதிவு செய்கிறேன்.
இந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் பெருக்கும் பேரின்ப நிலையை… ஏகாந்த நிலை அடையும் பருவத்தைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிப்பது.


வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம்
மனிதனாக இருக்கும் பொழுது ஒன்று சேர்த்த உணர்வுகள் நமக்குள் இல்லை. பலவிதமான உணர்வுகள் மோதும் பொழுது தான் மேல் வலி தலைவலி காய்ச்சல் இடுப்பு வலி தசைவலி வருகின்றது. ஒன்றிணைந்த உணர்வுகள் இல்லாததால் தான் கடும் நோய்கள் வருகின்றது.
1.அந்த ஒன்று சேர்த்த உணர்வின் தன்மையை வளர்க்க உணர்வுகளை ஒன்றென இணைக்க
2.ஒவ்வொருவர் உயிரையும் ஈசனாக நாம் மதித்தல் வேண்டும்… உடலை ஆலயமாக மதித்தல் வேண்டும்.
3.மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் குணங்களை மிக மிக சக்தி வாய்ந்த நிலையாக மதித்தல் வேண்டும்.
உங்களை நான் துதிக்கிறேன் என்றால் என்னை நான் மதிக்கின்றேன் என்று பொருள். அதற்குத் தான் ஆலயத்திலே தெய்வ குணங்களைப் பெற வேண்டும் தெய்வ நிலையாக இருக்க வேண்டும் ஆலயம் வருவோர் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணும்படி ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
தீப ஆராதனை காட்டுகின்றார்கள் என்றால் அப்போது அந்த வெளிச்சத்தால் அங்கிருக்கும் பொருள்கள் தெரிகின்றது. “பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெற வேண்டும்…” என்று அப்போது நாம் எண்ண வேண்டும்.
1.பொருளறிய வேண்டிய நிலைகள் இந்த வாழ்க்கையில் ஏராளம் இருக்கின்றது.
2.ஆனால் “அறிந்து விட்டோம்…” என்ற நிலையில் தான் நாம் இருப்போம்.
நம் குழந்தை மீது அன்பும் பண்பும் பாசத்தையும் செலுத்தி இருப்போம். அவனை எங்கேயாவது ஒரு வேலைக்கு அனுப்பி… அவன் வரத் தாமதம் ஆனால் ஏன்டா இப்படி நேரமாகிவிட்டது…? என்று கேட்கின்றோம். அந்த இடத்திலே “அழுத்தம்” அதிகமாகக் கொடுக்கின்றோம்.
ஆனால் வாங்கி வருவதற்கு முன் இப்படிச் சத்தம் போடுகின்றார்கள் என்று அவனுடைய உணர்வு மாறுகின்றது. அப்படி மாறினால் இருவருக்குமே நிச்சயம் பொருளறியக்கூடிய நிலை இல்லாது போகின்றது.
ஆகவே நாம் சொல்லக்கூடிய சொல்லில் பொருளறியும் நிலைக்கு வர வேண்டும். நமது சொல் அவனைத் தெளிவாக்கும் நிலைக்கு வர வேண்டும்.
1.சிறிது நேரத்திற்கு முன்பாக நீ வந்திருந்தாய்…! என்றால் நன்றாக இருந்திருக்கும்.
2.ஏனென்றால் வந்த விருந்தளிகள் ஊருக்குப் புறப்பட்டார்கள்… என்று சொன்னால் இந்த உணர்வுகள் தெளிவாகும்.
அதற்குப் பதிலாக… கடைக்குப் போய் எவ்வளவு நேரம் ஆனது… ஏன்டா இப்படிச் செய்கிறாய்…? என்று விருந்தாளிகளுக்கு முன் சொல்லும் பொழுது அவனுக்கு அவமரியாதை ஆகி விடுகிறது.
இப்பொழுது அப்படிச் சொல்லிவிட்டாலும் அடுத்து… நாம் எதையாவது சொல்லி விடுவோமோ…! இது எதற்கு வம்பு…? வரவில்லை என்றால் திட்டுவார்கள்…! என்று அவனுக்குள் இந்த மனநிலை வந்து விடும்.
அதனால் தான் கோவில்களில் தீபத்தை வைத்து ஆராதனையாகக் காட்டுகின்றார்கள். எந்த நிலையாக இருந்தாலும் “பையன் வெளியிலே சென்றான்… சரி நேரம் ஆகிவிட்டது…” என்று அந்தப் பொருளை அறிய முடியும்.
விருந்தாளிகள் வந்துள்ளார்கள் என்ற அன்பு மிகுதியால் அவர்களைக் கவனிக்க வேண்டும் என்று பொருளை வாங்கச் சொல்லிப் பையனை அனுப்புகின்றோம். சீக்கிரம் வாங்கிக் கொண்டு வா…! என்று தான் சொல்லி அனுப்புகின்றோம்.
ஆனால் நேரமாகி விடுகிறது.
நேரம் ஆகிவிட்டது நாங்கள் ஊருக்குப் போகிறோம்…! என்று விருந்தாளிகள் சொல்கின்றார்கள். அப்படிச் சொல்லும் போது நமக்கு உணர்வு மாறுகின்றது. அந்த நேரம் வெறுப்பு வருகின்றது… நம் பையன் மீது கடுகடுப்பாகிறது.
எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் செய்கின்றான் என்று இந்த உணர்வு வருகின்றது.
1.வந்தவர்களைப் பார்க்கும் பொழுது பாசம் வருகின்றது.
2.ஆனால் பையன் மீது வெறுப்பு வருகின்றது.
அவன் தாமதமாக வந்த பின் ஏண்டா இந்த மாதிரி நேரமாக்குகின்றாய்…? என்று இவர்களை நாம் மெச்சப் பார்க்கிறோம்.
நான் வேகமாகத் தான் வாங்கி வரச் சென்றேன். கடைக்காரன் தாமதப்படுத்தி விட்டான்… ஆனால் என்னை வீட்டிலே இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அவனுக்கு நம் மீது வெறுப்பு வருகிறது.
அந்த இடத்தில் நாம் பொருளை அறிய முடியாது போய் விடுகின்றது… வெறுப்பு வளர்கின்றது. அதற்குத்தான் கோயிலில் விளக்கைக் காட்டுகின்றார்கள்.
இந்த வாழ்க்கையில் எத்தகைய நிலை வந்தாலும் பொருளறிந்து செயல்படும் அந்த உயர்ந்த ஞான சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும். அப்படி எண்ணினால் அந்த விளக்கின் வெளிசத்தால் பொருள் தெரிவது போன்று நல்ல உணர்வு கொண்டு நாமும் செயல்பட முடியும்.
1.பையன் போன இடத்திலே என்னமோ தெரியவில்லை… ஏதோ நேரமாகிவிட்டது… சரி பரவாயில்லை…! என்று சொல்லிவிட்டு
2.விருந்தாளிகளிடம் “நேரம் ஆகிவிட்டால் நீங்கள் போய் வரலாம்…” என்று சொன்னால் அது உசிதமாக இருக்கும்.
ஆனால்… பையன் வரட்டும்… வரட்டும்…! என்றே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் விருந்தாளிகளைத் தடைப்படுத்துவது போன்று ஆகிவிடும். ஏனென்றால் இப்படி ஆக்கிவிட்டால்… அடுத்தாற்போல் “இந்த வீட்டிற்குச் சென்றாலே நம்மைத் தாமதப்படுத்துவார்கள்…” என்ற எண்ணம் தான் அவர்களுக்கு வரும்.
ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்களில் வெறுப்பாகாதபடி
1.அந்த உயர்ந்த பண்பினை வளர்க்க வேண்டும்.
2.அன்பினைப் பேணிக் காக்க வேண்டும்.
3.பரிவான உபகாரத்தைப் பன்புடன் செயல்படுத்த வேண்டும்
ஆகவே வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில்… நாம் எப்படித் தெரிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு செயல்பட வேண்டும்…? என்பதை “ஞானிகள் காட்டிய அந்த அருள் வழிப்படி நாம் செயல்படுவதே மிகவும் நல்லது…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உலக ரீதியிலே இன்று விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு விஷக் கதிரியக்கங்களால் உருவாக்கப்பட்ட எத்தனையோ ஆயுதங்களையும் குண்டுகளையும் ஒவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கின்றார்கள்.
எதிரிகள் போர் தொடுக்க வருகின்றார்கள் என்றால் இதை வெடிக்கச் செய்து அவனை அழித்து விடுகின்றான். என்னை அழித்தான் என்றால் அவனும் அழிந்து விடுவான் என்று ஒவ்வொரு நாட்டிலும் முகப்புகளில் இப்படி வைத்துள்ளார்கள். நம் நாட்டிலும் கூட உண்டு.
காரணம்…
1.விஷமான குண்டுகளை வெடிக்கச் செய்துவிட்டால் இங்கே வந்து அவனும் ஆட்சி புரிய முடியாது என்று (எல்லாம் சூனியமாகும்)
2.இதே மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் மனிதன் கடைசி முதிர்ந்த நிலைகள் கொண்டு பிரபஞ்சத்தையே அழித்திடும் நிலைக்கு வந்து விட்டனர்.
3.நிச்சயம் இந்த உலகம் அசுர உணர்வுகளுக்குள் சிக்கும்… மனிதன் அசுரனாக மாறுகின்றான்… அரக்கனாக மாறுகின்றான்…!
பாம்பினங்கள் தன் இனத்தையே உணவாக எப்படி உட்கொள்கிறதோ அதே போல் மனிதனுக்கு மனிதன் விஷம் கொண்ட உணர்வுகளாக தன் இனத்தையே உட்கொள்ளும் நிலை வந்துவிட்ட்து.
ஆடு மாடுகளைக் கொன்று தின்றான். இப்பொழுது மனிதனையே கொன்று தின்றால் நல்லது என்று நிலைக்கு வந்து விட்டார்கள். நீக்ரோ நாடுகள் அனைத்திலுமே மனிதப் பிரேதத்தை புதைத்தால் அது நல்ல சரீரமாக இருந்தால் தோண்டி எடுத்து சமைத்து உணவாக உட்கொண்டு கொண்டிருக்கின்றார்கள்.
மண்ணுக்குத் தான் போகின்றது நான் சாப்பிட்டால் என்ன…? என்று இப்படி நியாயத்தை கற்பித்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.
நம் பூமியின் ஆரம்ப நிலை வளர்ச்சியில் அதனுடைய உருவம் நீள வடிவில் பாறைகளாக கூடி வளரப்படும் பொழுது கவிழ்ந்து விடும் சூழ்நிலை வந்தது…!
ஒரு பக்கம் எடை கூடினால் திசை மாறும். அப்படிப்பட்ட திசை மாற்றங்கள் நம் பூமியில் ஏராளம் நடந்துள்ளது. பண்டைய கால நிலைகளில் கடல்களிலும் திசை மாறிய நிலைகள் உண்டு.
அப்படிக் கடல் மாற்றமடையும் போதுதான்… அங்கே வாழ்ந்த உயிரினங்கள் தரை வாழ் நிலைகளுக்கு வந்தது. பல பல உயிரினங்களாக மிருகங்களாக இங்கே உருப்பெற்றது.
அதே சமயத்தில் கடலுக்குள் மறைந்த நிலைகள் அங்கே பல நிலங்களும் உண்டு. பூமியில் பல காலங்களில் திசை மாறியது உண்டு.
1.இப்போது. இன்னொரு திசை மாறும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.
2.சர்வத்தையும் கூழாக மாற்றும் தன்மை வந்து கொண்டுள்ளது.
3.இந்தப் பிரபஞ்சம் பூராவுமே சிதைந்து போகும் நிலை வருகின்றது.
இந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் பிற மண்டலத்தின் விஷத்தின் தன்மைகளை எடுத்துக் கொடுத்ததால் தான் நம் பிரபஞ்சமே உருவாகும் நிலைக்கு முதலில் வந்தது.
இருந்தாலும் இப்போது அவைகள் அனைத்தும் நம் சூரியனைப் போன்று தனித் தனிப் பிரபஞ்சமாக உருவாக்கும் நிலையாக உருமாறிக் கொண்டுள்ளது.
அப்போது சூரியனுக்கு உணவில்லை என்கிற போது சூரியனும் பூமியும் கூழாகி விட்டால் சிதைந்துவிடும்..!
இதற்கு முன்… ஒரு சமயம் வேறொரு பிரபஞ்சத்தைச் சேர்ந்த ஒரு சிதைந்த கோள் நம் பிரபஞ்சத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றது என்று சொல்லியிருந்தேன் (ஞானகுரு).
ஆனால் பிரபஞ்சத்திற்குள் சுழன்ற நிலைகளில் இருக்கும் போது முட்டை வடிவில் இருக்கும்… சிதைவதில்லை. ஆனால் இன்னொரு மண்டலத்திற்குள் வரப்படும் பொழுது அமிலமாக வருகின்றது.
நாலைந்து துணுக்குகளாக வருகின்றது. நம் பூமி மீது நேரடியாக வந்து தாக்கி இருந்தால் பூமியே சிதைந்து இருக்கும்.
40 வருடத்திற்கு முன்பு வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னோம் பின்னாடி விஞ்ஞானிகளும் அதைத் தெரியப்படுத்தினார்கள்.
1.அந்த உடைந்த பாகங்கள் வியாழன் கோளில் விழுந்து அமிழ்ந்து விட்டது.
2.அது போல் நம் பிரபஞ்சமும் மாறும் நேரம் வந்துவிட்டது.
பூமியோ மற்ற மண்டலங்களாக எதுவாக இருந்தாலும் எல்லாமே ஆவியால் உருவானது தான். ஆனால் கடைசியில் கரைந்து கூழாக மாறும் பொழுது சூரியனின் சுழற்சி வேகம் கூடி… அதை ஆவியாக மாற்றுகின்றது.
தன் ஈர்ப்பில் உள்ள அனைத்தையும் ஆவியாக மாற்றச் செய்த பின்… 27 நட்சத்திரங்கள் தனித் தனி பிரபஞ்சமாக மாறுகிறது அல்லவா… அதற்கு இதை எல்லாம் உணவாகக் கொடுத்துவிடும்.
சூரியனும் பிரபஞ்சத்தின் நிலைகள் அந்தச் சுழலில் சிக்கி ஆவியாக மாறிவிடும். விஞ்ஞானிகள் ஒரு காலம் இதை நிச்சயம் சொல்வார்கள்.
1.இது எல்லாம் இயற்கையின் நிலைகள் எப்படி மாறுகின்றது…? மாறப் போகின்றது…? என்று குருநாதர் தெளிவாக எனக்குக் கூறியிருந்தார்
2.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் யாம் இதைச் சொல்வதுண்டு… கேட்போர் யாரும் இல்லை…!
3.ஆக கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் நஞ்சை வென்றான்… உணர்வை ஒளியாக மாற்றினான்…!
கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்தார்கள்… இரு உயிரும் ஒன்றாகி ஒளியின் உணர்வாக உருவாக்கினார்கள்.
துருவத்தின் எல்லையை நோக்கி அதன் வழி வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றினார்கள்… அந்த எல்லையிலேயே துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.
அந்த அகஸ்தியன் உணர்வை எந்நாட்டவரும் பெறலாம் என்று அக்காலங்களில் இதைச் சொல்லி உள்ளார்கள்.
1.காரணம் திசை மாறிய நம் பூமியை அன்று சமப்படுத்தியவன் அகஸ்தியன் தான்.
2.அவன் வழி சென்றால் வரும் மாற்றத்திலிருந்து நாம் தப்பலாம்…!


மின்னலுக்குள் இருக்கும் வீரிய சக்தியும்… நம் உயிரின் இயக்கச் சக்தியும்
எதிர்நிலையான நட்சத்திரங்கள் மோதலாகும் பொழுது மின்னலாகிறது. அந்த மின்னல் மரத்திலே பட்டால் அதற்குள் ஊடுருவித் தன் இனத்தை எடுத்துக் கருக்கி விடுகின்றது.
நிலத்தில் பட்டால் பூமியின் நடுமையம் சென்று அடைகின்றது. இப்படி அதீதமான நிலைகளில் உள் சென்று எதிர்மறையான நிலைகள் கொண்டு பூமியின் நடு மையத்திற்குள் சென்றால் எந்தப் பகுதியில் ஆகின்றதோ அங்கே கொதிகலாகி அங்கே பாறைகள் உருகுகின்றது.
மேல் பகுதி உருகி ஆவியாக மாறும் போது பூமி வெடிக்கின்றது. மேல் பாறைகள் கீழே வருகின்றது. நிலநடுக்கம் என்று அடிப்பாகத்தில் செல்கின்றது. இதற்குள் அடக்கி விடுகின்றது.
1.இந்த மின் அணுக்களின் கதிர்கள் கடலிலே பதியப் படும் பொழுது மணலாக மாறுகின்றது.
2.கடல் நீருக்குள் இருக்கும் ஹைட்ரஜன்… உப்பின் சத்து அதனுடைய வீரியத்தைத் தணிக்கிறது.
3.கடல்களில் பாயும் நிலைகள் மணலாக மாறி வருவது… மின் அணுக்களின் துகள்கள் வரப்படும் பொழுது யுரேனியம் என்று எடுக்கிறர்கள்.
4.எந்தெந்த நட்சத்திரத்தின் கலவையாகி எதிர்நிலையாக ஆனதோ அந்த மணலில் உருவாக்கப்படுகின்றது.
அந்த மணலை எடுத்து அணுவைப் பிளக்கின்றான் விஞ்ஞானி. அது மற்றொன்றை அடக்கப்படும் பொழுது அதிலே வருவதைப் பிளந்து எடுக்கின்றான். அதிலே சிதைந்த உணர்வின் தன்மையைத்தான்
1.கம்ப்யூட்டரில் இந்த உணர்வைப் பாய்ச்சி ஒலி அதிர்வுகளைக் கண்டு உணர்வின் செயலாக்கங்களுக்கு
2.அந்த நுண்ணிய கதிரியக்கப் பொறிகளை மாற்றும் போது தான் கம்ப்யூட்டர் என்று வருகின்றது.
அது அவரவர்கள் கண்டறிந்த உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் எப்படி வருகிறது…? என்பதை
1.மின் அணுவின் கதிரியக்கங்களின் நிலைகளை ஒரு காந்தப் புலன் அறிவால் கவரப்பட்டு
2.அதையே கம்ப்யூட்டர் காந்தத்தால் கவரும் உணர்வின் தன்மையைப் பதியச் செய்து உணர்வின் அறிவான பின் எதிரொலி
3.மின் அணுவைப் போன்று தோன்றும்… அந்த உணர்வுக்கு ஒப்ப எது ஆகின்றதோ அந்த ஒவ்வொரு உணர்வுக்கொப்ப உருவத்தையும் காட்ட முடியும்.
100 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்றால் அந்த வம்ச வழிகளிலே இருந்தால் “அந்த உருவங்கள் எப்படி இருக்கின்றது…?” என்பதைக் காணலாம்.
இந்த உணர்வின் தன்மை பதிவாக்கிக் கம்ப்யுட்டரில் எதிர் அலைகளை எடுத்துக் கொண்டால் ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.
மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது அவர்கள் வாழ்ந்த உணர்வுகள் அங்கே பதிந்ததை எடுத்து மனித ரூபத்தையே கொடுக்கின்றது… விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.
இதைப்போன்று அன்றைய மெய் ஞானிகள் உணர்வையும் நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்த உணர்வைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை இங்கே வந்து
3.அவன் ஒளியான உணர்வைப் பெற்று நீங்களும் ஒளியாக முடியும்.
விஞ்ஞான அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது… சாமி எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்…! என்று சிலர் நினைப்பார்கள்.
விஞ்ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? மெய்ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? குருநாதர் இந்த இயற்கையின் நிலைகளை அதனுடைய இயக்கத்தை எப்படி…? என்று எமக்கு உணர்த்தியதைத் தான் உபதேசிக்கின்றோம்.
1.காலம் வரும்போதெல்லாம் உங்கள் உணர்வுக்கொப்ப… காலத்தின் மாற்றத்திற்கொப்ப அதை நுகர்ந்து வரும் போது
2.அந்தந்தக் காலத்தின் உணர்ச்சிகள் அதைக் கவர்ந்து உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
முந்திச் சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும். இந்த உணர்வின் வளர்ச்சி வரப்படும் பொழுது இயற்கையின் நிலைகள் உங்களை நீங்கள் அறியும் நிலைக்கு வர வேண்டும் என்பதற்குத்தான் இப்போது இதை உணர்த்துகின்றோம்.
என்றைக்கும் நிலையானது இந்த உயிர்.
1.அந்த உயிருடன் ஒன்றிய ஒளியான உணர்வின் தன்மை ஆக்கப்பட வேண்டும்.
2.பிறவியில்லா நிலை அடைந்த அருள் ஞானிகள் உணர்வைச் சேர்ப்பிக்கத்தான் இதை உபதேசிக்கின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம்…! எத்தனையோ வேதனைகள்; எத்தனையோ வெறுப்புகள்; எத்தனையோ சங்கடங்கள்; இதைப் போன்ற உணர்வுகளை அறியாமலே நமக்குள் நாம் பதியச் செய்து விடுகின்றோம்.
இது இரத்தத்தில் கலந்து அணுக்களாக விளைகிறது. விளைந்த அணுக்கள் அதனதன் உணர்வுகளைக் காற்றிலிருந்து பிரித்து உணவாக எடுத்து உடலிலே வளரத் தொடங்குகின்றது.
சூரியன் கவர்ந்து வைத்திருக்கக்கூடிய செடி கொடிகளின் சத்துக்கள் பூமியின் காற்று மண்டலத்தில் படரப்படும் போது அதே இனமான அந்த உணர்வைக் கவரக்கூடிய செடி கொடிகளின் வித்துகள் அதனதன் சத்தைக் கவர்ந்து கொள்வது போன்று
1.எந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுத்து வினையாக (அணுக்களாக) உருவானதோ
2.அதனதன் உணர்வை எடுத்து நம்மை அதன் வழிக்கு இயக்கி விடுகின்றது.
உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்பாகும் உணர்வலைகளை நாம் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதே அலைவரிசையில் டிவியை இயக்கினால் அதைக் கவர்ந்து காட்சியாகவும் இசையாகவும் காட்டுகின்றது.
அதைப் போன்று தான்
1.திட்டியவனை எண்ணிய உடனே நமக்குள் அந்த வேகமும் துடிப்பும் கொண்டு கோபம் வருகின்றது
2.வீட்டிலே குழந்தைகளாக இருந்தாலும் கோபமாகப் பேசி விடுகின்றோம்.
3.அந்தக் கோபத்தினால் நம் வியாபாரத்தையும் சீராகச் செயல்படுத்த முடியாதபடி போகின்றது.
ஆக… பதிவான உணர்வுகள் நம்மை மீண்டும் இவ்வாறு இயக்குகின்றது… நம்மை அறியாமலே பல தீங்குகளைச் செய்யச் செய்கின்றது.
“சந்தர்ப்பம் தான் இது எல்லாம்…!”
எதன் வலு அதிகமாகின்றதோ நாம் சோர்வடையப்படும் பொழுது நம் சிந்தனைகள் மாறுகின்றது. விஷம் என்ற நிலை வரும் போது நல்லதுக்காக ஏங்கும் பொழுது நமக்கு இன்னும் கோபம் வருகிறது.
அந்தக் கோபத்தால் சிந்தனை இழந்து… தன்னையோ அல்லது மற்றதையோ அழித்திடும் உணர்வே வருகின்றது. ஏனென்றால் அதிக வேதனையாகும் பொழுது முழுமையாக நினைவிழந்து விடுகின்றோம்
நாம் தவறு செய்தோமா…? எல்லாமே சந்தர்ப்பம் தான்… சந்தர்ப்பத்தால் தான் இன்று இயக்கப்பட்டு வருகின்றோம்…!.
ஆனால் நல்ல சந்தர்ப்பத்தை மனிதனால் (நம்மால்) ஏற்படுத்த முடியும்… எப்படி…?
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாக இருக்கும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நமக்குள் நாம் உருவாக்க முடியும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க முடியும்
சூரியனின் இயக்கங்கள் அது எதை எதைக் கவர்கின்றதோ சந்தர்ப்பத்தால் மோதும் பொழுது மரம் செடி கொடிகள் (இனங்கள்) மாறுகின்றது.
காட்டிலே ஒரு முயல் நரியைச் சந்திக்க நேர்ந்தால் அதனின் சந்தர்ப்பம் அது அதற்கு இரையாகிறது. ஆனாலும் முயல் தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நரியின் வலுவான உணர்வை எடுக்கின்றது.
இருந்தாலும் நரி முயலை அடித்துக் கொல்கிறது உடலை விட்டுப் பிரிந்த பின் முயலின் ஆன்மா நரியின் ஈர்ப்புக்குள் சென்று நரியின் உருவமாக மாறுகின்றது.
முயலாக இருப்பது அடுத்து நரியாக மாறுவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…!”
இன்று நாம் ஒரு தீமையைச் சந்திக்க நேரும்போது அதை நுகர்ந்து விடுகிறோம். நமக்குள் தீய வினையாக அது உருவாகி விடுகின்றது… ஆக தீய வினைகளாக உருவாவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…”
சந்தர்ப்பத்தால் நாம் பல நல்லதுகளைச் செய்தாலும் தீமையின் வலுவைச் சுவாசிக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்லவைகள் மறைகின்றது… உடலில் நோய்கள் வருகின்றது.
1.இப்படி மாறக்கூடிய “இந்தச் சந்தர்ப்பத்தை” நாம் மாற்ற வேண்டுமா இல்லையா…?
2.நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!
காலையில் நம் உடல் அழுக்கைப் போக்கித் துணியில் உள்ள அழுக்கைப் போக்கினாலும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வுகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி… நம் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க வேண்டும்..
பல கோடிச் சரீரங்களில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து மனிதனாக உருவாக்கியது ஆதிமூலம் என்ற நம் உயிர்தான்…! இந்தப் பிள்ளை யார் நீ சிந்தித்துப் பார் என்று நம்மைச் சிந்திக்கும்படி செய்வதற்குத் தான் ஆற்றங்கரையோரம் எல்லாம் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.
காரணம்… இயற்கையின் பேருண்மைகளை அறிந்தவன் அன்றைய அகஸ்தியன். அகண்ட அண்டத்தையும் அவன் அறிந்தான்… நம் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்றான்.. நஞ்சினை ஒளியாக மாற்றிக் கொண்டான்…
1.தான் பெற்ற சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுத்தான்.
2.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்தான்
3.இரு உயிரும் ஒன்றாக ஆனது… இரு உணர்வும் ஒன்றாக ஆனது
4.துருவத்தை எல்லையாக வைத்து அதில் வரக்கூடிய நஞ்சினைக் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
இப்படி ஆதியிலே தோன்றிய (நம்மைப் போன்ற மனிதனான) அந்த அகஸ்தியன் விண் சென்றபின் அதே (தன்) மனித இனத்திற்கு அவன் பெற்ற வழியைப் பெறுவதற்காக… விநாயகர் தத்துவம் என்ற நிலையில் யானைத் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டி
1.இந்த வாழ்க்கையில் நாம் எதைப் பெற வேண்டும்… எந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்…? என்று
2.விநாயகரைப் பார்க்கும் போதெல்லாம் அதை எண்ணி எடுக்கும்படி செய்தான்.
சந்தர்ப்பத்தால் தான் அகஸ்தியன் உயர்ந்த சக்திகளை எடுத்தான்.. ஒளி உடலைப் பெற்றான். அதைப் போன்று தான்
1.இப்பொழுது உங்களுடைய சந்தர்ப்பம் உயர்ந்த கருத்துக்களைக் கேட்கின்றீர்கள்.
2.இந்த உபதேசத்தைப் படிப்பது “இதுவும் சந்தர்ப்பம்தான்…!”
இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திப்பது… குடும்பமாக இருந்தாலும் சரி வியாபாரமாக இருந்தாலும் சரி உறவினர்களாக இருந்தாலும் சரி மத இனங்களாக இருந்தாலும் சரி அரசியல் அமைப்புகளாக இருந்தாலும் சரி… அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நம்மை அறியாமலே எத்தனையோ வழிகளில் பகைமை வந்து சேர்கின்றது.
ஆனால் நம்முடைய இந்தச் சந்தர்ப்பம்…
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை நுகர்ந்து நம்மை அறியாமல் இயக்கக்கூடிய இருளை அகற்றுவது தான்
2.இது சிறுகச் சிறுக நமக்குள் முழுமையாகப்படும் பொழுது மகரிஷிகள் உணர்வினை நமக்குள் உருவாக்கும் சந்தர்ப்பமாக மாறுகிறது.
3.இப்படி உருவாக்கி விட்டால் தீமையை நீக்கும் சக்தியை நாம் பெறுகின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் நாம் பெறப்படும் பொழுது… எந்த நேரத்தில் எத்தகைய தீமை வந்தாலும் வலிமை கொண்டு அதை மாற்றிப் பிறவி இல்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம்.
நாம் உருவாக்கும் நல்ல சந்தர்ப்பங்கள்… அகஸ்தியன் எங்கே சென்றானோ… நிச்சயம் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.
ஆனால் எனக்குத் துரோகம் செய்தான்… தொல்லை கொடுத்தான்… அவன் உருப்படுவானா…! என்ற பகைமையான உணர்வை எடுத்தால் அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல வேண்டி வரும்.
எந்தப் பக்தியால் தெய்வத்தை வணங்கினோமோ உடலை விட்டுச் சென்ற பின் மந்திரங்களைச் சொல்லப்படும் பொழுது அவனுக்கு அடிமையாகி விடுகின்றோம்.
காலத்தால் ஞானிகள் கொடுத்த உண்மை நிலைகள் இப்படித் தான் மாறிவிட்டது. ஆகையினால்
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைக்குத் தான் இதை உபதேசிப்பதும் அருள் உணர்வைப் பதிவாக்குவதும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிர் வழி சுவாசித்து… எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று… கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வந்து அதன் வழி ஈர்த்து உடலுக்குள் செலுத்தி இரத்தங்களில் அதை கலக்கச் செய்யப்படும் பொழுது எல்லா அணுக்களிலும் இந்த வலுப்பெறுகின்றது.
காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்த எத்தனையோ விதமான தீமையான உணர்வுகளை உடலுக்குள் விளையாதபடி தடுத்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் நிலைநிறுத்தி
2.வரும் தீமைகளை அனாதையாக்க முடியும்.


“சாமி சொல்லும் வழியில் நடந்தால்” நம்மை நாம் காக்க முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும்
மற்றவர்களைக் காக்க நாம் உதவி செய்தாலும்… அவருடைய துயரத்தை வேதனையை நுகர்ந்த நிலையில் அது விஷமான உணர்வாக நம் உடலுக்குள் சென்று… நம்மை ஆபத்தான நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.
ஏனென்றால் நன்மை செய்தாலும் அதைத் தடுக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குத் தான்
1.உங்கள் வாழ்க்கையில் எந்த நிமிடமும் எந்த நேரத்திலும் நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம்…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும்படி தகுதியை ஏற்படுத்துகின்றோம்… அடிக்கடி நினைவு படுத்துகின்றோம்.
3.அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
4.24 மணி நேரமும் நான் சதா தியானத்தின் மூலம் எடுத்துப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.
எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாலே உங்கள் தலை வலி மேல் வலி குறையும்… இடுப்பு வலி இருந்தால் அதுவும் குறையும். ஏனென்றால் இதைக் கேட்கப்படும் பொழுது அந்த நஞ்சுகள் அகல்கின்றது.
ஆனாலும்… சாமி உபதேசிக்கின்றார்…! அதைக் கேட்க விடாது “மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்களே…” என்று அதன் பால் நினைவச் செலுத்தி விட்டால் அடுத்த நிமிடம் மேல் வலி தலை வலி… வெறுப்பு எரிச்சல் கை கால் குடைச்சல் நிச்சயம் வரும்.
காரணம்… “நாம் நுகர்வதைத் தான் நமது உயிர் இயக்குகிறது…” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்தாலும் அதை மாற்றும் வழி வேண்டும்.
அதை மாற்றுவதற்குண்டான சக்தி உங்களுக்குக் கிடைப்பதற்குத் தான் இதை உபதேசிப்பதும் அருள் உணர்வுகளைப் பதிவு செய்வதும்.
உபதேசக் கருத்துக்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும் சக்தியாக அது வரும். ஆனால் அதற்குப் பதில் சாமி தான் செய்து கொடுப்பார் என்று நம்பினால்… “அது மிகவும் பிழையானது…”
1.சாமி சொன்ன உணர்வைப் பதிவாக்கி கொள்ள வேண்டும்.
2.”அதன் வழி நடந்தால் நம்மை நாம் காக்க முடியும்… ” என்ற அந்த நம்பிக்கை வர வேண்டும்.
ஏனென்றால் சாமியார் செய்வார் கோவிலில் இருக்கும் தெய்வம் செய்யும் என்ற இந்த நம்பிக்கையில் தான் வாழ்கின்றோம்.
அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். அந்தத் தெய்வ நிலை பெற வேண்டும்… அந்தத் தெய்வச் செயலாக நாம் செயல்பட வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
1.அந்த உணர்வு நமக்குள் அத்தகைய செயலாக உருவாக்குகின்றது.
2.ஆக நாம் எண்ணியதைத் தெய்வமாக்குகின்றது.
அனைவரும் நல்லவராக வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் தெய்வீகப் பண்புகள் பெற வேண்டும் என்று எண்ணினால் நாம் அதுவாக ஆகின்றோம்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் சொல்லி வருகின்றோம். ஆனாலும் நான் படிக்காதவன் தான்.
1.அனைத்துச் சக்திகளும் காற்றில் இருக்கின்றது… குரு காட்டிய வழியில் அதை நான் நுகர முடிகின்றது.
2.வியாசகன் எப்படி அகஸ்தியன் உணர்வை நுகர்ந்து உண்மைகளைக் கண்டறிந்தானோ அதைப் போன்று தான் குருநாதர் எம்மை நுகரும்படி செய்தார்.
3.அதைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
நீங்கள் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும் என்று எண்ணினால் எந்தத் தீமையும் உங்களை சாடாது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
உங்களை நீங்கள் நம்புங்கள.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குரு வழியில் வாயை மூடி மௌனம் சாதித்து… வலுக் கொண்ட உணர்வுகளைச் சுவாசித்து வேதத்தின் தன்மை கொண்டு அவர்கள் எடுத்துக் கொண்ட சில முறைகள் “ஜைன மதத்தில்” உண்டு.
ஜைன மதங்களுக்கும் புத்த மதங்களுக்கும்
1.குரு வழியில் சுட்டிக் காட்டப்படுவது மலைப்பகுதியில் பாங்காகும் துருவ நட்சத்திரம்.
2.குளிர் பிரதேசமாக இருந்தாலும் காலையில் அந்தப் பகுதியை உற்று நோக்கும்படி செய்து
3.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைத் தனக்குள் பெறச் செய்தனர்.
4.அந்த அகஸ்தியன் துருவன் ஆகித் துருவ நட்சத்திரம் ஆன உணர்வின் தன்மைகளை நுகரப்படும் பொழுது அவன் வழியைப் பின்பற்றுகின்றனர்.
அகஸ்தியனைப் பின்பற்றினாலும்… மதத்தின் அடிப்படையில் குருக்களாக வருகின்றனர். அதை எடுத்துக் கொண்டாலும் உடலின் இச்சைக்கு அதைச் செயல்படுத்தி… தலை கீழாக மாற்றி அதர்வண வேதம் என்று கொண்டு சென்று விட்டார்கள்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக ஆகும் நிலை ஜைன மதத்திலும் புத்த மதத்திலும் கொண்டு வந்தாலும் அதிலே சில கட்டுப்பாடுகள் உண்டு.
அந்த மதத்தின் தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தலையை மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிக்க வேண்டுமென்றாலும் தலை முடிகளை வேதனைப்படுத்தித் தான் நீக்குவார்கள். கையிலே தான் பிடுங்குவார்கள்… பல இம்சைகள் வரும். அவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
புத்த துறவிகள் “உலக பந்தம் எனக்கு வேண்டாம்…” என்று சென்றாலும் தலை முடியைப் பிடுங்குவார்கள்…. ஒன்றல்ல… பத்து இருபதைச் சேர்த்துப் பிடுங்குவார்கள். பிட்சுவாக வருவதற்கு அத்தனை வேதனையையும் பொறுத்துக் கொள்வார்கள்.
சில நேரங்களில் உடலில் ஆயுதப் பரிசோதனையும் உண்டு.
உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட பின் ஊசியால் நகத்தில் குத்துவார்கள். ஆ…! என்று சப்தமிட்டால் உன்னால் இதைச் செயல்படுத்த முடியாது என்று விலக்கி விடுவார்கள். ஆ…! என்று சப்தமிடாதபடி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதத்தின் அடிப்படையில் சிசுக்களில் இருந்து இவ்வாறு வளர்த்து இந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டி வளர்க்கின்றனர். வளர்த்து அதன் வழி வந்தாலும் அவர் சொன்ன வேதங்கள் இங்கே இயக்கப்பட்டு இந்த வலு எடுத்துக் கொண்டு வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் இறந்த பின் “இறப்பிற்கு ஒரு மந்திரத்தைச் சொல்வார்கள்…”
மந்திரத்தைச் சொல்லப்படும் பொழுது அதன் வழி பிரியும் அந்த ஆன்மாவை இவர்கள் பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். அதாவது பல வகையிலும் கட்டுப்படுத்தப்பட்டு… மந்திர ஒலிகளைக் கூறி “இறைவனை அடையக்கூடிய நிலை” என்று கொண்டு செல்கிறார்கள்.
அவர்கள் எண்ணிய உணர்வுகள் தான் இங்கே இறைவனாகிறது. எதன் உணர்வின் தன்மை உனக்குள் வலுவோ அதையே நீ அடைகின்றாய் என்று கீதையிலே கூறப்படுகிறது.
காரணம் யாராக இருந்தாலும் எப்படியும் கடைசியில் இறந்து தான் ஆக வேண்டும். உடலில் விளைந்தது எதுவோ அது சாகாக்கலையாகிறது. ஆகவே இறைவனை அடையும் தன்மை இங்கே இல்லை. மீண்டும் உடல் பெறும் நிலை தான் வருகிறது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இவர்கள் எடுத்துக் கொண்டாலும்
2.இறந்த பின் மனித உடல்களுக்குள் பகிரச் செய்து அதன் வழியில் தான் கொண்டு வந்து விட்டார்கள்.
மனிதனுக்கு மதத்தின் தன்மை முக்கியம். அந்த மதத்தின் அடிப்படையில் நாட்டை ஆட்சி புரிவது உண்மை என்று மடாதிபதிகளாக மாற்றப்பட்ட நிலையிலேயே சென்றனர்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாலும்
2.”ஆட்சி… நிர்வாகம்…” என்ற நிலையில் செல்லும் போது விண் செல்லும் நிலை தடையாகின்றது.


கூட்டமைப்பின் மூலம் நாம் உருவாக்க வேண்டிய பேரருள் பேரோளி
கூட்டுத் தியானத்தின் மூலம் “அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்ற உணர்வினைக் கூட்டமைப்பாக நாம் வெளிப்படுத்தும் போது
1.அனைவரது செவிகளிலும் அது பட்டு இந்த உணர்வுகள் உயிருக்கு எட்டிக் கண்ணுக்குப் பாய்ச்சப்பட்டு
2.கண்ணின் துணை கொண்டு இந்தப் பூமியில் பரவி இருப்பதையும்… சொல்லும் உணர்வையும் கவர்ந்து
3.அத்தகைய வலுக் கொண்ட அணுவாக உடலுக்குள் உருவாக்குவது தான் கூட்டுத் தியானத்தின் அமைப்பு.
பல பொருள்களைப் போட்டுச் சுவைமிக்க குழம்பாக உருவாக்குவது போன்று பலரும் ஒன்றாகச் சேர்த்து அனைவரும் நலம் பெற வேண்டும்… இருளில் இருந்து மீள வேண்டும்… நஞ்சில் இருந்து விடுபட வேண்டும்… பேரருள் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வைச் சொல்லப்படும் பொழுது இந்தக் கூட்டமைப்பின் உணர்வின் சக்தி நமக்குள் “பேரருள் சக்தியாக மாறுகின்றது…”
இப்படி…
1.ஒவ்வொரு மனித உடலிலும் விளையும் அந்த அருள் உணர்வுகளை ஒன்றாக இணைத்துக் கூட்டுத் தியானத்தினை வளர்ப்போம் என்றால்
2.கடும் தீமைகளை வெல்லும் ஆற்றலை நாம் அனைவருமே பெறுகின்றோம்.
ஆகவே இந்தக் கூட்டமைப்பை நாம் ஒழுங்குப்படுத்தி அதைப் பற்றுடன் செயல்படுத்தி பேரருளை நமக்குள் கூட்டுதல் வேண்டும்.
அந்தப் பேரருள் என்ற உணர்வே துருவ நட்சத்திரத்திலிருந்து பெற்றது தான். அதன் உணர்வை நமக்குள் கவர்ந்து பேரருள் என்ற இயக்கச் சக்தியை… தீமைகளை அகற்றும் வல்லமை பெற வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.
ஒவ்வொரு உயிரும் ஈசனாக இருந்து… ஒவ்வொரு உடலும் கோயிலாக இருந்து… அந்தக் கோவிலுக்குள் மனிதனாக இருக்கும் நற்பண்புகளையும் நற்செயல்களையும் நல்ல உணர்வுகளையும் தீமையை அகற்றும் உணர்வாக விளையச் செய்துள்ளது.
ஆகவே…
1.நஞ்சினை வென்று உணர்வைப் பேரருளாக மாற்றும் இந்த மனித உடலுக்குள் இருக்கும் பேருண்மைகளை நாம் உணர்ந்து
2.பகைமை உருவாகாது அருள் ஒளியைப் புகுத்தி… அருள் ஞானத்தைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி
3.நமது சொல்லும் செயலும் கேட்போர் உணர்வுகளில் மகிழ்ச்சி பெறச் செய்வதும்
4.அவர்கள் பேரானந்த நிலைகளில் வாழும் பொழுது அதை நுகர்ந்து அரும்பெரும் சக்தியாக நமக்குள் மாற்றி அமைப்பது தான் கூட்டுத் தியானத்தின் நோக்கம்.
இதை எல்லாம் அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும். பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். பேரானந்த நிலை பெற வேண்டும்.1.
1.அந்தப் பேரருளைப் பெற்று அனைவரும் பேரொளியாக வாழ வேண்டும்
2.அனைவரும் பேரருளைப் பெற்று பேரொளியின் இயக்கமாக இருக்க வேண்டும் என்ற
3.இந்த உயர்ந்த நோக்கத்துடனே நாம் அனைவரும் செயல்படுவோம்… கூட்டமைப்பின் மூலமாக நாம் இதை உருவாக்குவோம்.
அவரவர்கள் பெற்ற உண்மைகளைத் தெளிவாக்கி அனைவரையும் தெளிவாக்குவோம்… மற்றவர்கள் இருளைப் போக்கிடும் சக்தியாக இது வளரட்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக நூறு சதவீதம் வேம்பின் சத்தும் பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்தும் மூன்று சதவீதம் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பத்தால் இரண்டறக் கலந்தால் எடை கூடி புவியில் படிந்து விடுகிறது.
அப்படிக் கலந்த சத்தில்
1.விண்ணிலிருந்து வரக்கூடிய மின்னல் தாக்கப்படும் பொழுது துடிப்படைந்து அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுக்கத் தொடங்குகிறது.
2.துடிப்பின் நிலை ஆனபின் அந்தந்தச் செடிகளில்… அந்தப் பங்கின் (100/10/3) விகிதாச்சாரப்படி அதைப் பிரித்து எடுக்கின்றது
3.கருவேப்பிலையாக மாறுகிறது
விஞ்ஞான ரீதியாகவும் இதைப் போன்று தான் அணு உலைகளில் கடலில் இருந்து எடுத்த வந்த மணலை வேக வைத்துப் பிரிக்கப்படும் பொழுது யுரேனியமாகவோ அல்லது மற்ற எத்தனையோ விதமான தனிமங்களாகவோ எடுக்கின்றார்கள்.
அதே சமயத்தில் பூமிக்குள் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய்… குரூடு ஆயிலை (CRUDE OIL) அதைக் கொதிக்க வைத்துப் பிரிக்கின்றார்கள்.
1.முதலில் எடையற்று வேகமாகப் பிரிந்து செல்வது கேசலின் (GASOLINE) விமானங்களுக்கு அது எரிபொருளாகவும்
2.அடுத்து பெட்ரோல்; கெரசின்; டீசல் என்று இப்படி வரிசையாக எடுத்து
3.கடைசியில் எடை கூடியதாக கல் மண் மற்றவர்களுடன் கலந்து இருப்பதைத் தாராகப் பிரித்து எடுக்கின்றார்கள்.
விஞ்ஞானிகள் இயற்கையில் உருவானதைத் தனித்துத் தனித்துப் பிரிப்பதற்காக வேண்டி இப்படிப் பல வேலைகளைக் கையாளுகிறார்கள்.
இந்த வேலைகள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் நான் (ஞானகுரு) சென்றதும் இல்லை… அதைப் பார்த்ததும் இல்லை. ஆனால் சினிமா படம் காட்டுவது போன்று இதையெல்லாம் குருநாதர் எனக்குக் காண்பிக்கின்றார்
அதைப் பார்த்துப் பழகுவதற்காக வேண்டி சினிமா தியேட்டருக்கு என்னை அழைத்துச் செல்கிறார் குருநாதர்.
தியேட்டரில் படம் நடந்து கொண்டிருக்கும்… கதவுகள் எல்லாம் மூடி இருக்கும். வெளியில் இருந்து கொண்டே சினிமா எப்படி நடக்கிறது…? பாருடா…! என்பார் குருநாதர்.
எப்படி சாமி அதைப் பார்க்க முடியும்…? என்று கேட்டேன்.
நீ பாருடா…! என்று மீண்டும் சொல்கிறார். அப்போது அங்கே நடக்கின்ற காட்சிகள் தெரிய ஆரம்பிக்கின்றது… நான் பார்க்கிறேன்.
அவரும் கூட வந்து “பாருடா பாருடா…” என்பார். அதையெல்லாம் அப்போது பார்க்கிறேன். இதைப் பார்த்த பின்னாடி என்னுடைய குறும்புத்தனம் சும்மா விட்டதா…?
குழந்தைகளை எல்லாம் அமர வைத்து எந்தெந்தச் சினிமாக் கொட்டகையில் எந்தெந்தப் படம் நடக்கிறது…? என்று கேட்டு “அதைப் பாருங்கள்” என்று அங்கேயே காண்பிக்க ஆரம்பித்தேன்.
அங்கே நடப்பது இங்கே அவர்களுக்குத் தெரிய வருகின்றது… வீட்டில் உட்கார்ந்து கொண்டே சினிமாவைப் பார்க்கின்றார்கள்
1.இயற்கையின் உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்தப் பதிவின் அலைகளை… அதை எப்படிக் கவர முடிகின்றது…?
3.இதைத் தெளிவாக்குவதற்காக குருநாதர் பல பயிற்சிகளை எனக்கு இப்படிக் கொடுத்தார்.
இதை எல்லாம் சாதாரணமாக யாரும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் தெரிந்ததை உங்களுக்குள் பதிவாக்கப்படும்பொழுது
1.சந்தர்ப்பத்தில் அந்த மகரிஷியின் அருள் சக்தி எடுத்து “நல்லதாக வேண்டும்” என்று சொன்னால் இந்த சக்திகள் உங்கள் உடலில் ஊடுருவும்.
2.உடல் நலமடைந்த பின் “நான் சொன்னேன்… நன்றாக ஆனது…!” என்று ஒரு சந்தோஷம் வரும்
ஏனென்றால்
1.நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கித் தீமையை நீக்கும் உணர்வின் ஆற்றலைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்
2.தீமைகள் புகாது தடுக்கும் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதையெல்லாம் சொல்கின்றேன்.
உதாரணமாக மனித உடலில் ஏற்படும் உணர்வுகள் ஒருவனைச் சாடிப் பேசிப் பதிவாக்கி விட்டால்… “எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணினால் அமெரிக்காவில் இருப்பவனைக் கூட அது இயக்குகின்றது… புரையோடச் செய்கின்றது வாகனம் ஓட்டிச் சென்றால் குறுக்காட்டித் தாக்கி அவனைச் செயலிழக்கும்படியும் செய்கிறது.
இதெல்லாம் சந்தர்ப்பம் தான்..!
அவனைப் பற்றி எண்ணும் போது இவன் நிலையும் அதே ஆகி இவனும் தவறி விழுகின்றான்… மேடு பள்ளம் தெரியாது கீழே விழுவான். அவனும் கெடுவான்… இவனும் கெடுவான். அவன் மேல் மீது இருக்கக்கூடிய உணர்வுகள் அந்தத் தவறு என்ற உணர்வு இங்கே வந்துவிடும்
அந்த உணர்வு இயக்க வருவது போல் தான்
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகின்றேன்.
2.இது வெறும் சொல் அல்ல…! பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!


“உங்களுடைய வாக்கு” எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?
1.தியானத்தில் வந்தால் மட்டும் பத்தாது.
2.உங்கள் அனுபவத்தை எடுத்துத் தைரியமாக மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
குருநாதர் காட்டிய அருள் வழியினைக் கடைப்பிடித்து எந்த நோயிலிருந்து விடுபட்டு நீங்கள் நன்றாக ஆகின்றீர்களோ உங்களுடைய வாக்கால் “நோய் இல்லை” என்று அடுத்தவர்களுக்குச் சொன்னால் அவர்கள் நோய் நீங்கும்.
1.சாமி மட்டும் தான் என்று அல்ல.
2.நீங்கள் நலமான பின் மற்றவர்களுக்கும் இந்த வாக்கினைக் கொடுக்க முடியும்.
உதாரணமாக மற்றவர்கள் அவர்கள் கஷ்டத்தை நம்மிடம் சொன்னால் அதை நாம் கேட்டுணர முடிகின்றது. இரக்கத்துடனும் ஈகையுடனும் கேட்கப்படும் பொழுது அந்தக் கஷ்டம் நம்மையும் இயக்கி நமக்குள்ளும் விளைகிறது.
அதே சமயத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று உடல் நலமான பிற்பாடு… நீங்கள் யாருக்குச் சொன்னாலும் அங்கே நோய் நீங்கி நலமாகும்.
விபூதியைக் கொடுத்தாலோ… வெறும் பச்சைத் தண்ணீரைக் கொடுத்தாலோ… அல்லது ஒன்றுமே இல்லை என்றாலும் அங்கிருக்கக்கூடிய மண்ணை எடுத்து அவர்கள் மேல் தூவினாலும் அவர்கள் நோய் நீங்கும்.
1.இவ்வாறு நீங்கள் சொல்லி மற்றவர்களுக்கு அது நல்லதனால்
2.”உங்களுக்குள் எந்தத் தீமையும் வராது…”
இந்தக் காற்று மண்டலமே விஷத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இதிலிருந்து எல்லாம் நம்மைக் காக்க வேண்டும்.
டி.வி. ரேடியோ இவை எல்லாம் அலைவரிசையில் தான் இயக்குகின்றது. இதே காற்றிலிருந்து தான் கவர்ந்து படமாகக் காட்டுகிறது.
இதே போல நம் வாழ்க்கையில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் அந்தச் சிக்கல்களை நீக்கக் கூடிய சக்தியை நாம் எடுக்க முடியும்… அந்தச் நமக்கு உண்டு.
“அதைப் பயன்படுத்தும் முறை கொண்டு செயல்படுத்தினால்” நல்லதாக இருக்கும்.
உதாரணமாக நெருப்பை எடுத்துக் கொண்டால் அதை வெளிச்சமாகவும் பயன்படுத்துகின்றோம்… பொருள்களை வேக வைக்கின்றோம்… பதார்த்தங்களை ருசியாகச் சமைக்கின்றோம். இரும்பைக் கூட அந்த நெருப்பை வைத்து உருக்குகின்றோம்.
இதைப் போன்று தான்
1.நமது உயிர் ஒரு நெருப்புக்குச் சமம்.
2.அதிலே உயர்ந்த உணர்வின் தன்மையை இணைத்துக் கொண்டால் நமக்குள் அறிவு என்ற “ஒளியான அணுக்களை” உருவாக்குகின்றது.
கோப குணத்தை எடுத்தால் மற்றவரைச் சொல்லால் சாபமிடச் செய்து பொசுக்கவும் செய்கின்றது. வேதனையைக் கவர்ந்தாலும் அதே போல் இயக்குகிறது.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…? என்ற நிலையில்
1.ஆத்ம சுத்தியைக் கடைப்பிடித்து அருள் ஞானத்தைப் பெறக்கூடிய சக்தியாக
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நினைவு கொண்டு எடுத்து நல்லதாக்கிக் கொள்ள முடியும்.
அந்த நம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்.

இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம்… இது பெரிதாக வளரும்
இன்று பார்க்கலாம்… அரசியல் பேதத்தால் எத்தனையோ பேரழிவுகள் வந்து கொண்டிருக்கின்றது இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் அழிவுகள் வந்து கொண்டுள்ளது. இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
1.மக்களைக் காக்க வேண்டும். உலக மக்கள் அமைதி கொண்டு வாழ்ந்திட வேண்டும்
2.ஒவ்வொருவரும் கடவுளின் தன்மை அடைய வேண்டும்.
3.மனிதனுக்குள் அறியாத புகுந்த தீமைகளை அகற்றிட வேண்டும்.
4.இத்தகைய உணர்வுகளை நமக்குள் ஓங்கி வளர்த்திடல் வேண்டும்.
அதுவே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.
இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம்… இது பெரிதாக வளரும். கர்ப்பமான தாயின் கருவிலே வளரும் சிசுக்களுக்கு மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஊட்டினால் உலகை காத்திடும் மகரிஷிகளை “உங்களால் சிருஷ்டிக்க முடியும்…”
1.இந்த நாட்டிலே வரும் தீமைகளைப் போக்க முடியும்… நல்ல அரசியலையும் கொண்டு வர முடியும்.
2.நம் எண்ணத்திற்குள் அத்தகைய உயர்ந்த மாற்றங்கள் வேண்டும்.
ஏனென்றால் இன்று உலகெங்கிலும் ஒருவருக்கொருவர் குறை கூறும் நிலைகளே வளர்ந்து கொண்டுள்ளது. அதைக் கேட்டுப் பதிவாக்கி அதன் வழி சென்றால் நாமும் குறையைத் தான் வளர்க்க முடியும்… தீமையைத் தான் பெருக்க முடியும் பகைமைகளைத் தான் உருவாக்க முடியும். பகைமையற்ற உலகை நாம் சிருஷ்டிக்க முடியாது.
ஆகவே தயவு செய்து இதைக் கேட்டுணர்ந்தோர்… “சாமி ஏதோ அரசியல் பேசுகிறார்…” என்று எண்ண வேண்டாம்.
மனிதனில் விளைய வைக்கும் உணர்வுகள் எதுவயே அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாகப் பெருக்குகின்றது. மனிதனின் உணர்வுக்குள் எது பெருகுகின்றதோ அந்த அலைகள் படரப்படும் பொழுது
1.எதை எதை மனிதனுடைய ஆசையால் பெருக்குகின்றானோ… எதை எதையெல்லாம் எண்ணத்தால் அழிக்க எண்ணுகின்றானோ
2.அந்த உணர்வுகள் வெளியிலிருந்து வருவது அதுவே பதிவாகின்றது… கேட்போர் உணர்வுகளிலும் பதிவாகின்றது… அதுவே விளைகின்றது.
3.காற்றலைகளும் அதனால் மாறுகின்றது… மனிதனை அழித்திடும் உணர்வுகள் மனிதனுக்குள்ளேயே விளைகின்றது.
இதையெல்லாம் மாற்ற வேண்டும்… இதை நீ செய்வாய்… செய்யக் கடவாய் என்றார் குருநாதர். உனக்குள் இதை விளையச் செய்… காத்திடும் உணர்வுகள் அனைவருக்குள்ளும் விளையட்டும். தீமைகள் அகலட்டும்… “மகிழ்ந்திடும் நிலைகளில் அருள் உலகம் மலரட்டும்…!” என்று தான் குரு சொன்னார்.
அதைத்தான் உங்களிடமும் உணர்த்துகின்றோம். ஆகவே பேதங்கள் அனைத்தையும் அகற்றுங்கள்… நாடு நலம் பெற வேண்டும் என்ற உணர்வை உயர்த்துங்கள்.
இங்கே தோன்றும் மெய் ஞானிகளின் ஆற்றல்கள் அது உலகெங்கிலும் எல்லோருக்குள்ளும் தோன்றும்… நிச்சயம் இது பரவும்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது போன்று
1.ஞானிகள் உணர்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படுத்துங்கள்.
2.அந்த நல்ல நிலைகளை நிச்சயம் நாம் பெற முடியும்… அதை நாம் உருவாக்க முடியும்.
3.அதையெல்லாம் உங்கள் வாழ்க்கையிலே பார்க்கலாம்… உங்கள் அனுபவத்திலும் பார்க்கலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆபீசில் உட்கார்ந்து பணி செய்பவர்கள்… வேலைக்குச் செல்லாமல் இருப்பவர்கள்… சிறிது நேரம் மண்வெட்டியை எடுத்து வெட்டினால் உடனே சோர்வடைந்து விடுகின்றார்கள்… களைப்பு வந்து விடுகின்றது.
ஆனால் விவசாய வேலை செய்பவர்கள் அவர்கள் உணவுக்காக வேண்டிக் கஷ்டப்பட்டுக் கடுமையான வேலைகளைச் செய்கின்றார்கள்.
1.எப்படியும் சம்பாரிக்க வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்கும் உணர்வுகள்
2.அவர்கள் உடலில் உள்ள எல்லா நரம்புகளுக்கும் வலிமை ஊட்டும் உணர்வாக வருகின்றது.
3.அது உமிழ் நீராக மாறி அவருடைய உணவுக்குள் வீரிய உணர்வு உருவாக்கப்பட்டு
4.இரத்தங்களில் கலக்கப்படும் போது நல்ல அணுக்களுக்கு வீரிய சத்து கிடைக்கின்றது.
அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் விடாது கடின உழைப்புகளைச் செய்கின்றனர்… அவர்களுக்கு மூச்சு வாங்குவதில்லை.
ஆனால் சாதாரண மனிதராக இருக்கக்கூடிய நமக்கோ ரெண்டு நிமிடம் அல்லது ஐந்து நிமிடம் தொடர்ந்து வேலை செய்தால் மூச்சு வாங்குகின்றது… உடல் பலவீனம் அடைகின்றது.
ஆனால் கடுமையாக வேலை செய்பவரும் இந்தக் காற்று மண்டலத்தில் வரும் உணர்வுகளைச் சுவாசித்துத் தான் வாழ்கின்றனர் வளர்கின்றனர்.
அவருடைய எண்ணமோ… இந்த வேலையை நாம் செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் வலிமையாகச் செயல்படுத்தப்படும் பொழுது… அந்த எண்ணத்தின் வலிமை அவர்கள் சுவாசித்து அவருடைய ஆகாரத்திற்குள் வலிமை கிடைக்கின்றது.
சில வசதி உள்ளவர்கள் சந்தர்ப்பத்தினால் வசதி குறைந்த பின் அந்த வயிற்றுப் பிழைப்புக்காக எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்று “மண்ணைத் தூக்கிச் சுமக்கலாம்…” என்று அத்தகைய வேலைக்குச் செல்வார்கள்.
1.வசதி இருந்து வசதி குறைந்த பின் இந்த வேலையைச் செய்யும் பொழுது வலுவான எண்ணங்கள் வருவதில்லை
2.வலுவிழந்த உணர்வுகளைச் சுவாசிக்கும்போது நான்கு நாளைக்கு அவர்கள் இப்படி வேலை செய்தார்கள் என்றால் அவர்களுக்கு கடுமையான நோய் வந்துவிடுகிறது.
வசதி இருந்து செல்வம் குறைந்த நிலையில் இந்த மாதிரி ஆகின்றது. ஆனால் எப்படியும் வேலை செய்து வாழ வேண்டும் என்று எண்ணுவோருக்கு இந்த நோய் வருவதில்லை.
ஆகவே “நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ… அதற்குத் தக்க அந்த வலிமை கிடைக்கின்றது…!”
கடினமாக வேலை செய்பவரிடம் சென்று யாராவது கவலையாகச் சொன்னால் ”
1.ஹும்…! உங்கள் விதி எப்படியோ அப்படித் தான் நடக்கும் என்று அதை அவர்கள் கவலையை நுகர்வதில்லை.
2.கஷ்டத்தையும் வேதனையும் எடுத்துக் கொள்வதில்லை… அதாவது மற்றவர்கள் கஷ்டங்களை அவர் எடுத்துக் கொள்வதில்லை
இப்படி இயற்கையின் சந்தர்ப்பங்கள் அவரவர்
நுகர்ந்த உணர்வை வைத்துத் தான் செயலாக்கங்கள் நடக்கின்றது.
அதே சமயத்தில் தொழிலின் நிமித்தம் வசதியைப் பெருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நாம் பிறரை ஏவித்தான் வேலை வாங்க வேண்டி இருக்கின்றது.
வேலை ஏவி அவர்கள் அதைச் செயல்படுத்தும் போது பொருளைக் கொடுக்கிறோம் என்று எண்ணினாலும்… தான் நினைத்த அளவுக்கு அவர்கள் வேலை செய்யவில்லை என்றால் “பணம் கொடுத்தோம்… சரியாக வேலை செய்யவில்லையே…” என்று மனதில் வேதனை வருகின்றது.
தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றனர். அந்த வேதனையை அதிகமாக எடுத்து.. அதே வேதனையோடு வேலையைச் சொல்லப்படும் பொழுது அவரிடம் வேலை செய்பவர்களையும் சோர்வடையச் செய்து விடுகிறது. அப்போது இன்னும் கொஞ்சம் வேதனை அதிகமாகின்றது.
செல்வத்தைச் சேமிக்க வேண்டும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று செயல் பட்டாலும்… பின்னணியில் பணம் இருக்கின்றது மற்றவர்கள் வேலையைச் செய்கின்றார்கள் என்றாலும்…
1.எண்ணியபடி நடக்கவில்லை என்கிற பொழுது வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்து உடல் பலவீனம் அடைகின்றது
2.வெறுப்பு அதிகரிக்கும் போது சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டுக் கோபம் வருகிறது.
3.கோபம் அதிகமாகிக் கார உணர்ச்சிகள் ஆனால் இரத்தக் கொதிப்பாகிவிடுகிறது
4.வேதனை வித்தாக உருவானால் பின் எப்படிப் பேசுவது என்ற சலிப்படையும் போது உடலில் சளித்தொல்லை வருகின்றது.
இது எல்லாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் தான்… யாரும் தவறு செய்யவில்லை.
அவரவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் உடலில் அது முதிர்வடையப்படும் பொழுது “விதி…” என்ற நிலையாக மாறி விடுகின்றது.
இந்த விதியை மதி கொண்டு மாற்ற முடியும்…!
அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைச் சுவாசமாக அடிக்கடி எடுத்தால் நம் எண்ணங்கள் வலிமையாகும்.
1.துருவ நட்சத்திரத்தின் எண்ணம் வலுவாக வலுவாக… நரம்புகளில் அதற்குத் தக்க ஆசிட் உருவாகும்…
2.உடல் உறுப்புகளைச் சீராக இயக்க முடியும்.
எத்தகைய கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கும்.


நல்லது கெட்டது என்ற நிலை உயிருக்கு இல்லை… அது யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை
நாம் ரத்தப் பரிசோதனைக்குச் செல்கிறோம். பார்த்த நிலையில் ரத்தங்கள் அனைத்தும் சீராக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
தொழிலின் நிமித்தம் செயல்படும் போது அதில் மிகவும் நஷ்டமாகின்றது. கடன் வாங்கியிருக்கின்றோம்… அதைத் திரும்பக் கொடுக்க வேண்டி வருகிறது. குடும்பத்திலோ பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை… வருமானமும் வருவதில்லை.
இப்படி எல்லாம் எதிர்மறையாக நடக்கப்படும் பொழுது
1.அந்த அதிர்ச்சி தரும் உணர்வுகளைச் சுவாசித்து எடுத்துக் கொண்ட பின் அடுத்த ரத்தப் பரிசோதனைக்குச் சென்றால்
2.சிவப்பு அணுக்கள் குறைந்திருக்கும்… வெள்ளை அணுக்கள் அதிகமாக உருவாகி இருக்கும்.
3.ரத்தம் காணாமல் போகின்றது… சிவப்பு அணுக்களை உருவாக்கும் சக்தி குறைந்து விடுகின்றது…
4.அந்த அணுக்கள் மடிந்து விடுகின்றது… ரத்த சோகை வருகின்றது… பலவீனம் அடைகின்றது… ரத்தக் கொதிப்பு ஆகிறது.
தீமையான உணர்வுகள் அதிகமாகும் பொழுது ரத்தக் கொதிப்பாகி உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அதற்குரிய உணவு இல்லாது போய் விடுகின்றது. சரியான உணவு கொடுக்கவில்லை என்றால் சுருங்கத் தொடங்கும். கை கால்களைச் சுருங்க வைத்துவிடும்.
நேற்று வரை நன்றாக இருந்தோம்…! என்றாலும் இப்படி எல்லாம் உடலுக்குள் ஆவதைப் பார்க்கலாம்.
வேறு ஒன்றும் வேண்டாம். சப்… என்று இருக்கக்கூடிய பொருளைச் சாப்பிட்டாலும் சர்க்கரைச் சத்து உள்ளவருக்கு திடீரென்று கவலையோ சோர்வையோ நுகர்ந்து விட்டால் இந்த உணர்வுகள் அதிகரித்து சர்க்கரைச் சத்து கூடி விடும். சர்க்கரையை உருவாக்கும் அணுக்கள் அதிகமாகின்றது.
அதே சமயத்தில் அதிகமாகச் சந்தோஷப்பட்டாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடி விடுகின்றது.
இப்படி… சோர்வு சஞ்சலம் சலிப்பு என்று நாம் எண்ணும் போதெல்லாம் அது அணுக்கருக்களாக ரத்தத்திலே உருப்பெற்றுச் சுழலத் தொடங்குகிறது.
உதாரணமாக… நாம் பூமியில் காற்று மண்டலததில் கலந்து வரும் சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவருமே என்றால் அது அலைகளாக மாறும். அலைகளாக வரப்படும் பொழுது தாவர இனங்கள் அதனதன் இனமான சக்தியை அதிலிருந்து கவர்ந்து தன் இனமாக வளர்கின்றது.
இதைப் போன்று
1.நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட வேதனை சஞ்சலம் சலிப்பு என்ற உணர்வுகள் அணுக்களாக உடலில் வளர்ந்து விடடால்
2.தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது உயிர் அந்தந்த உணர்வைக் கவர்ந்து உணவாகக் கொடுக்கின்றது.
சூரியன் தாவரங்களின் சத்தினை எடுத்துக் கொண்டால்… தாவர இனத்தில் விளைந்த வித்தைப் பூமியிலே ஊன்றி விட்டால் பூமியின் துணை கொண்டு அதை ஈர்க்கும் போது அதனாதான் இனமாக வளர்ந்து விளைகின்றது. அது அது தன் இன வித்தை மீண்டும் வளர்க்கின்றது.
இது இயற்கையின் நிலைகள்.
இதைப் போல
1.வேதனைப்பட்ட மனிதரின் உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் நமது உயிர் உடலில் அணுக்களாக மாற்றுகின்றது.
2.அணுக்கள் ஆன பின் அதனுடைய பசிக்கு… எந்த குணத்தால் அது உருவானதோ அந்த உணர்வுகள் கிளர்ச்சிகளை உண்டாக்கும்.
அதே உணர்வின் தன்மையை உயிர்
1.நம் முன் பாகம் கண்கள் வழியாகவோ தசைகள் வழியாகவோ செவிப் புலன் வழியாகவோ எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி
2.உயிர் வழி நுகரப்பட்டு உடலுக்குள் பரப்பச் செய்கின்றது.
3.எந்த வழியிலும் அதற்கு உணவைக் கொடுத்து அதைக் காக்கும்.
சூரியன் தாவரங்களுக்கு உதவுவது போன்று நமது உயிர் உடலில் விளையும் அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுத்தே தீரும்.
1.அது யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை.
2.நல்லது கெட்டது என்ற நிலை உயிருக்கு இல்லை.
உணர்வுக்கொப்ப உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. சுவாசத்திற்கொப்ப நம் எண்ணங்கள் இயங்குகிறது. அந்தச் சத்து ஈர்க்கப்பட்டு அணுக்கள் விளைகின்றது… இயக்குகின்றது. ஆக இந்த வாழ்க்கையில் எந்தக் குணததை அதிகரிக்கின்றோமோ அதன் வழி ரத்தத்தில் கருக்களாக உருவாக்கிக் கொண்டே உள்ளது.
இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்… உயிரை ஈசனாக மதிக்க வேண்டும். உடலை அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று மதிக்க வேண்டும்.
ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
1.தீமைகள் புகாது… தீமையான அணுக்களாக உருவாகாது
2.அருள் ஒளியின் அணுக்களாக நாம் நமக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல் இராமேஸ்வரம்… பரம்… ஒரு எல்லை…! அதை இராமேஸ்வரம் என்று ஸ்தல புராணமாக ஞானிகளால் காட்டப்பட்டது.
கோடிக்கரை…!
1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பெற்றுப் பெற்று…
2.அந்த எண்ணத்தால் மனிதனான உடலை… ஈஸ்வரலோகத்தை உருவாக்கியது.
உயிர் எப்படி இதை உருவாக்குகின்றதோ இதைப் போன்று அணுவின் தன்மையும் உயிரைப் போல உணர்வைப் பெறும் தகுதி பெற்றது. ஆகவே நாம் பல கோடி உடல்களைக் கடந்து… கடைசிக் கரையில் இந்த மனித உடலில் கோடிக்கரையாக இருக்கின்றோம்.
தனுசுகோடி…!
1.மனித வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றோமோ
2.அப்பொழுதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து
3.அந்த விஷத்தை நிறுத்திக் கொண்டே வர வேண்டும்… நமக்குள் வளராது தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மனிதனின் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ விதமான கோப உணர்வுகளையும் வெறுப்புணர்வுளையும் எடுக்கின்றோம். இதைப் போன்று வரும் உணர்வுகளை எல்லாம் தனுசுகோடி…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத் தாக்கி
2.அத்தகைய கோடிக்கணக்கான உனர்வுகளையும் உயிரைப் போன்று ஒளியின் பிளம்பாக… ஒளியின் கதிராக நாம் மாற்ற வேண்டும்.
எண்ணத்தால் தான் இது உருவானது… இது இராமலிங்கம் உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது இது சீவலிங்கம்… ஜீவனூட்டும் லிங்கம் ஜீவிக்கும் லிங்கம்.
எண்ணத்தால் உருவாக்கும் உணர்வுகள் உயிர் என்று “இராமலிங்கம்” என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.
1.(இராமேஸ்வரத்தில்) உடலில் நேரம் ஆகிவிட்டது…!
2.எண்ணத்தால் நாம் ஒளியை உருவாக்க வேண்டும்
3.காரணம்… உடலில் கொஞ்ச நாள் தான் நாம் வாழுகின்றோம் அதற்குள் “மனதை ஒன்றாக்க வேண்டும்…!”
அதாவது மனதில் எல்லாவற்றையும் ஒன்றாக்கிப் பகைமையற்ற உணர்வுகளாக நமக்குள் வளர்க்க வேண்டும். எத்தனை நிலைகள் வந்தாலும் பகைமையாக உருவாகாதபடி அருள் உணர்வினை இணைத்து ஒளியாக்கிட வேண்டும்.
ஆனால் ஞானிகள் நமக்குக் கொடுத்ததை
1.பூஜை செய்ய நேரமாகி விட்டது…
2.ஆகையினால் இராமன் மணலைக் குவித்துப் பூஜித்தான் என்று இப்படிப் பிரித்து மாற்றி விட்டார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்குவோர் குடும்பத்தில் அதிகமான கஷ்டங்கள் வந்தால் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே… உனக்காக நான் அக்கினிகுண்டம் இறங்குகின்றேன்…” என்று செல்கின்றார்கள்.
1.ஆனால் அதற்கெல்லாம் சில மந்திர ஒலிகள் உண்டு…!
2.அதாவது “மாரியம்மன்…” என்று அதர்வண வேதத்தில் காட்டிய மந்திர ஒலிகளை ஒரு மனித உடலில் சேர்த்த பின்
3.அவன் இறந்து விட்டால் அந்த அக்கினியைத் தாங்கும் உணர்வின் தன்மை வருகின்றது.
4.அதை எண்ணி எடுத்துக் கொண்டு மந்திரத்தை ஜெபித்து அக்கினியில் இறங்கினால் அந்தத் தீ ஒன்றும் செய்யாது
அதர்வண வேதத்தில் இந்த உணர்வின் தன்மை குவிக்கப்படும் பொழுது “அக்கினிக்கட்டு” என்று சொல்வார்கள்.
மனித உடலில் ஜீவ அணுக்களுக்குள் சேர்த்துப் பரம்பரையாக இந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வார்கள். அதைச் செயல்படுத்தும் கால கட்டத்தில் அந்தக் கோவில் பூசாரி இந்த மந்திரத்தையே ஜெபித்துக் கொண்டிருப்பார்… அவர் சாவகாசமாக அக்னியில் இறங்கி வருவார்.
ஆனால் மற்றவர்கள் வீரிய எண்ணத்தோடு போனாலும் உஷ்…தஷ்…புஷ்.. என்று இறங்கி வேகமாக ஓடி விடுவார்கள்.
பூசாரியை மாரியம்மன் காப்பாற்றுவதால் அவர் தாராளமாகப் போகின்றார். எந்த மாரியம்மன்…?
மாரியம்மனை எண்ணி மந்திரத்தை ஜெபித்து இந்த உடலை விட்டு சென்றவர்களின் ஆன்மாக்கள் அதே மந்திரத்தை ஜெபிக்கப்படும் பொழுது இங்கே வந்துவிடும்.
1.ஜெபித்தவர் உடலில் அந்த ஆன்மாக்கள் குடிகொள்ளும்
2.ஆவிகள் தான் அங்கே செயல்படுகின்றது
உதாரணமாக… தெய்வத்தையே வணங்கி வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் (தெய்வத்தை எண்ணி வேதனைப்பட்டு) “மருந்தைக் குடித்து இறந்து விடுகிறார்…” எனறு வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த மந்திரத்தை இந்த ஆன்மா ஜெபித்ததோ அதே மந்திரத்தை இன்னொருவர் ஜெபிக்கப்படும் பொழுது இங்கே இவரின் ஈர்ப்புக்குள் வந்துவிடும்.
அல்லது அதே எண்ணத்தை கொண்டு இறந்தபின் ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகி திடீரென்று எதிர்பாராத நிலைகள் இறந்து விட்டால் பழகிய அந்த நண்பர் உடலுக்குள் சென்று விடும்.
நேற்றெல்லாம் என்னிடம் பழகினாரே… இப்போது இறந்து விட்டாரே…! என்று எண்ணும் போது இந்த ஆவி இங்கு வந்துவிடும். அது வந்த உடனே அது அதனுடைய நிலைகளை எல்லாம் இங்கே காட்டும்.
1.எத்தனை வேதனை இருந்தாலும் அந்த ஆன்மா தாங்கிக் கொள்ளும்
2.எத்தனை இம்சை செய்தாலும் இவர்களுக்குத் தெரியாது.
சில பேய் பிடித்தவர்களைப் பாருங்கள். “என்ன தான் அடியுங்கள்… அது அடி வாங்கிக் கொண்டே இருக்கும்…!” அது நோகுமா என்றால் நோகாது…! அடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்கின்றது. ஆவி விலகிய பிற்பாடு தசைகளில் அடிபட்டதல்லவா… இரண்டு நாளைக்கு அது எழுந்திருக்காது.
இது எல்லாம் ஆவியின் செயல்கள் தான்…!
காளியம்மன் மாரியம்மன் என்று ஜெபத்தால் எடுத்துக் கொண்ட ஆன்மாக்கள்… இன்ன மந்திரத்தைச் சொன்னால் காளி உன்னைக் காப்பாற்றுவாள் என்று சொல்லும்போது அதன் உணர்வை விளைய வைத்த வழி தான் வந்துள்ளார்களே தவிர “இறந்தபின் இன்னொரு ஆவி நிலைக்குத்தான் செல்கின்றோம்.
1.இது சாகாக்கலைக்குத் தான் கொண்டு செல்லும்… மீண்டும் பிறவிக்குத் தான் வரவேண்டும்
2.அடுத்த உடலுக்குள் சென்று அதையும் காயப்படுத்தி அந்த உடலை விட்டு வந்தபின்
3.விஷம் கொண்ட உடல்களுக்குள் தான் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.


அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்… குரு அருள் உறுதுணையாக இருக்கும்
உலகில் நடக்கும் எத்தனையோ நிகழ்ச்சிகளை… நடப்புகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். டி.வி. மூலம் அந்தந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கும்போது அந்த அலைவரிசையில் இருந்து அதை நாம் காண முடிகின்றது.
இதைப் போல
1.மனித வாழ்க்கையில் தீமை நன்மை என்ற நிலையில் நாம் பதிவு செய்துள்ளோம்.
2.தீமை செய்வோரை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது… தீமையின் செயலாக ஆக்குகின்றது
3.தீமையின் உணர்வே நமக்குள் உருவாகின்றது… நோயாகவும் மாறுகின்றது.
அவ்வாறு ஆகாதப்படி தடுக்க தீமை அகற்றிய அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அதை நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெறுவோம்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த வாழ்க்கையைத் தொடருங்கள்.
1.துன்பமோ நஷ்டமோ கஷ்டமோ வந்தாலும் அதை மனதில் பதிவு செய்யாதீர்கள்.
2.மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…
3.உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று அதை வலுவாக்குங்கள்.
நோயாளியைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்றும் அந்த நோய் நீங்க வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்றும் எண்ணுங்கள். பின் மகரிஷிகள் சக்தியால் அவர் நோய்கள் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று சொல்லுங்கள்.
அவர்களையும் இதைப் போன்று மகரிஷிகள் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணும்படி சொல்லுங்கள். அவ்வாறு அவர்களைப் பெறச் செய்தால்
1.முதலில் அவர்களை உற்றுப் பார்த்து நாம் பரிவுடன் நுகர்ந்து அவருக்கு உதவி செய்திருந்தாலும் அந்த உணர்வு நமக்குள் வராது தடுத்து
2.அருள் ஒளியை அவருக்குள் பாய்ச்ச முடியும்… இருளை அகற்ற முடியும்.
இந்த முறைப்படி செயல்பட்டு வாருங்கள்… எந்தத் தீமையும் நமக்குள் வளராது தடுக்க முடியும். தொழிலில் நஷ்டம் வந்தாலும் நஷ்டத்தைப் பற்றி எண்ணாதீர்கள்.
ஒரு வீட்டைப் புதிதாகக் கட்ட வேண்டும் என்றால் எத்தனையோ நிலைகளை அதற்குத் தயார் செய்கின்றோம். அதிலே குறைபாடுகள் வந்தால் திருத்திக் கொள்கின்றோம்.
இது போன்று புறநிலையில் குறைகள் வரும் போது அவைகளை நாம் திருத்திக் கொள்கின்றோம்.
1.எத்தகைய சூழ்நிலையிலும்… வாழ்க்கையில் நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் வேதனைப்பட வேண்டியது இல்லை.
2.நாளை இதைச் சீர்படுத்துவோம்… உயர் ஞானத்தால் அதை மாற்றியமைப்போம்… தொழில் வளம் பெறுவோம்
3.எல்லா நலமும் வளமும் பெறுவோம் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.
4.உங்கள் எண்ணம் அதை ஈடேற்றும்… செயலாக்கும்.
5.மகரிஷிகள் உணர்வுகளுடன் ஒன்றியே நீங்கள் இதைச் செயல்படுத்துங்கள்.
எம்முடைய உபதேசங்களை எல்லாம் நீங்கள் கேட்கின்றீர்கள். விடிய விடிய அதைக் கேட்டுவிட்டுக் காலையில் எழுந்த பின் இராமனுடைய சகோதரி சீதையா…? என்பது போன்று மீண்டும் கேட்டு விடாதீர்கள்.
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருளை நீங்கள் ஒவ்வொருவரும் பரப்புங்கள். அறியாது வரும் இருளைப் போக்குங்கள். உங்கள் அருகில் உள்ளோருக்கும் உங்கள் பார்வையால் அவர்கள் தீமையைப் போக்கும் சக்தியாக நீங்கள் வளருங்கள்.
அந்தச் சக்தியை நீங்கள் பெறவே அடிக்கடி உபதேசிக்கின்றோம். அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.
டி.வி.யில் நாம் குறிப்பிட்ட ஸ்டேஷனைத் திருப்பி வைத்த பின் அதன் மூலம் கவர்ந்து படங்களை நாம் காணுவது போன்று அருள் ஞானிகள் உணர்வுகளைக் காற்றில் இருந்து எளிதில் பெற முடியும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கினால் அந்த அருளை உங்களுக்குள் பெற ஏதுவாகும். உங்கள் சொல் பிறர் தீமைகளை அகற்றும். உங்கள் எண்ணம் உங்கள் தொழிலை உயர்வாக்கும்… வாடிக்கையாளர்களை உயர்வாக்க உதவும்.
ஆகவே… தியானத்தின் மூலம் உங்களுக்குள் அருள் சக்திகளைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
1.இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க யாம் உதவி செய்கின்றோம்.
2.அருள் வழியில் வாழுங்கள்… அருளானந்தம் பெறுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக வீட்டில் கணவன் மனைவிக்குள் சிறு சண்டை ஆகிவிட்டது என்றால் என்ன நடக்கிறது…?
நான் ஒன்றுமே செய்யவில்லை… “எதைச் செய்தாலும் கணவர் கோபப்படுகிறாரே…” நான் சும்மா தான் இருக்கின்றேன் என்று மனைவி சொல்கிறது
எதற்கெடுத்தாலும் நான் கோபப்படுகிறேன் என்று இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் நான் என்ன தான் செய்வது…? என்று கணவர் சொல்வார். இப்படிச் சுவாசிப்பார்.
ஆலயத்தில் காளிக்கு முன்னாடி புலியை போட்டுக் காண்பித்து இருக்கின்றார்கள். எதற்காக…?
கோபமான உணர்வை மனைவி முதலில் சுவாசிக்கப்படும் பொழுது கோபம் வந்துவிடுகிறது. அப்போது சும்மா இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே…! என்று திருப்பிச் சொன்னவுடன் கோபம் வருகிறது… கணவருக்கு…!
அப்போது என்ன நடக்கிறது…?
1.நமக்கு முன் எது இருக்கின்றதோ அது தான் இயக்குகின்றது… காளியாகி விடுகின்றோம்.
2.உடலான சிவம் ருத்ர தாண்டவம் ஆகிறது
3.இரு நான் உன்னை என்ன செய்கிறேன் பார்… உன்னை அடித்தால் தான் சரியாக இருக்கும் என்று வருகின்றது.
அவரவர்கள் உணர்வுக்குத் தகுந்த மாதிரி இப்பபடிப்பட்ட இயக்கங்கள் வருகின்றது. அதற்குத்தான் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.
ஆனால் ஒரு போக்கிரியைப் பார்த்தால் நமக்கு உடனே பயம் வருகின்றது அவன் எத்தனை திட்டினாலும் என்ன செய்தாலும் பேசினாலும் நம்மை ஏதாவது செய்து விடுவான் என்று பயப்படுகின்றோம்.
போக்கிரி… அவன் அடித்து விடுவான் என்று தெரிந்த பின் நாம் அவனிடம் திருப்பி ஏதாவது சொல்கிறோமா… இல்லை. பயந்து ஒடுங்கி விடுகின்றோம்… கூடுமான வரை விலகிச் சென்று விடுகின்றோம்…! அவன் போக்கிரிப்பயல் நம்மை அடித்து விடுவான் என்று.
இங்கே வீட்டில்
1.நாம் கோபமாகப் பேசுகின்றோமே… வீட்டுக்காரர் பதிலுக்கு நம்மைத் திட்டுவார் என்ற எண்ணம் மனைவிக்கு இல்லை.
2.கோபித்துப் பேசுகின்றோமே… மனைவி பயந்து எதையாவது செய்து விடுமோ… எங்கேயாவது போய்விட்டால் என்ன செய்வது…? என்று
3அதற்கு உண்டான வழியைக் கணவனும் சொல்வதில்லை.
இது எல்லாம் நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் குணங்கள் உடலுக்குள் மறைந்து எப்படிச் செயல்படுகிறது…? என்று இதையெல்லாம் காட்டுவதற்குத் தான் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.
ஆனால் கோபம் அதிகமாக ஆன பின் கணவனுக்கு இரத்தக் கொதிப்பாகி விடுகின்றது. வீட்டிலே கணவன் மனைவி சண்டையாகி இரத்தக் கொதிப்பான பின் அதைப் போக்குவதற்காகக் காளிக்கு நான் பூக்குழி இறங்கி “நேர்த்திக் கடன் செலுத்தப் போகிறேன்…” என்று வேண்டிக் கொள்கின்றார்கள்.
ஆனால் அக்கினி குண்டம் இறங்கினாலும் அது நிவர்த்தி ஆகின்றதா…? அதுவும் இல்லை. பற்றாக்குறைக்குச் சாந்தமாக இருக்கக்கூடிய ஒரு ஆட்டையும் அதற்குப் பலி கொடுத்து… அதைச் சமைத்துப் படையல் செய்து நாமும் சாப்பிடுகின்றோம்.
இது எல்லாம் என்ன செய்கிறது…? கோபம் என்ற உணர்வுகள் வளர்ந்த பின்பு அது நம் நல்ல குணங்களை எல்லாம் கொல்கின்றது.
கோபமான உணர்வைச் சுவாசித்தவுடனே உயிரிலே அபிஷேகம் ஆகி இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் சென்று இரத்தக் கொதிப்பாகிறது… கை கால் அங்கங்களை எல்லாம் சுருக்கி விடுகின்றது.
சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். “அப்பாவுக்கு உணவு கொடுத்து வா…” என்று குழந்தையிடம் கொடுத்து அனுப்பும் போது சிறிது நேரம் ஆகி விட்டால் போதும்.
நான் இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்… எனக்குச் சாப்பாட்டை நேரத்தில் கொண்டு வருவதற்கு முடியவில்லையா…? என்று கோபம் அதிகமாக வரும். உணவை உட்கொள்வதற்கு முன் பயங்கரமான கோபம் வரும்.
புலி ஆட்டை அடித்து உட்கொண்டாலும் உர்ர்ர்…உர்ர்ர்… என்று உறுமிக் கொண்டு தான் சாப்பிடும். அதைப் போல் புலிக்கு உண்டான குணங்கள் எல்லாம் இங்கே வந்துவிடும்.
1.கோபத்தின் உணர்வு உச்சகட்டம் அடைந்த பின் இப்படித்தான் இயக்கம் ஆகின்றது
2.இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?
கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ அவருடைய உணர்வை நுகர்ந்தால் உயிரான ஈசனிடம் பட்டு இங்கே அது அபிஷேகமாகி அந்த உணர்ச்சிகள் இயக்கப்படும் பொழுது நமக்கும் கோபம் வருகிறது.
நம் உடல் ஒரு அரங்கம்… சுவாசித்தது உயிரிலே பட்டபின் அரங்கநாதன்… அந்த நாதம் வருகின்றது அந்த உணர்ச்சிகள் உடலை ஆளுகின்றது ஆண்டாள்.
1.அத்தகைய கோப உணர்ச்சி அடுத்தவரை உதைக்கத் தான் சொல்லும்
2.அது தான் ஆட்சி புரியும்.
சூட்சமத்தில் நடக்கும் இயக்கங்களை உருவமாக்கி… மனித வாழ்க்கையில் “நாம் எப்படித் தெளிந்து நடக்க வேண்டும்…?” என்பதைக் காட்டுவதற்குத் தான் ஆலயத்தில் பல உருவ அமைப்புகளைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
அடிக்கடி நாம் கோபித்தால் நம்முடைய நல்ல குணங்களை அது கொன்றுவிடும் என்பதற்காகக் கோபம் வரும் பொழுதெல்லாம் அதை மாற்றி அமைக்க… அக்கினி குண்டம் இறங்கச் சொல்கின்றார்கள்.
ஏன்…? அக்கினி குண்டம் எது…?
இதையெல்லாம் வென்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்.
1.அதிகாலையில் 4:00 மணிக்கு எழுந்து குளித்த பின்
2.அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும்படி சொல்கின்றார்கள்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணச் செய்து பகைமைகளை அகற்றும்படி செய்கிறார்கள்
ஆனால் காலத்தால் அது எல்லாம் மாறிவிட்டது யாரும் அதை எடுப்பதில்லை.
1.காலையில் குளித்த பின் உன் இஷ்ட தெய்வத்தைக் கும்பிட்டுப் பூஜை செய்து கொள்… போ…
2.நெய்வேத்தியங்கள் வைத்து மந்திரத்தைச் சொல் போ…!
3.காலையில் இப்படிச் செய்தால் உனக்கு அந்தத் தெய்வம் சக்தி கொடுக்கும் என்று இப்படித்தான் சொல்லி மாற்றிவிட்டார்கள்.
பூஜையில் மந்திரத்தைச் சொல்லும் பழக்கம் தான் வளர்ந்திருக்கிறது. அந்த நேரத்தில் யாராவது தொல்லைப்படுத்துபவனோ தவறு செய்தவனோ வந்தால்
1.நான் உனக்காக வேண்டி இவ்வளவு செய்கின்றேன் தாயே
2.நீ இதைப் பார்க்கின்றாயா… இல்லையா…! உனக்குக் கண் தெரிகிறதா…? என்று அந்த நேரத்தில் இதைத்தான் வளர்க்கின்றோம்
3.தவறைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்… ஆலயத்தின் பண்புகளை நாம் மதிக்கின்றோமா…?


துருவ நட்சத்திரத்தின் “உணர்வு “- அழுத்தம்
தையல் கடையில் துணி தைப்பவர் லேசாகத் தைக்கிறார் என்றால் நாமும் அவ்வாறு தைக்க முடியுமா…? அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டே மற்றவரிடம் பேசிக் கொண்டே சீராகத் தைத்து விடுவார். அந்த உணர்வின் இயக்கம் சீராக வேலை செய்கின்றது.
ஆனால் நாம் கூர்மையாகப் பார்த்துச் செய்தாலும் கூட தையல் கோணல் மாணலாக நெளிந்து கொண்டே போகும்.
1.அது போல் தான் இந்தத் தியானத்தினை நாம் சீராகப் பழகிக் கொண்டால்
2.வாழ்க்கையில் எதிர்நிலை வந்தால் “டக்…” என்று அதை மாற்றி விட முடியும்.
கம்ப்யூட்டர் மூலமாக இன்று எத்தனையோ வேலைகளைச் செய்கின்றார்கள். ஒரு வேலை செய்கிறார் என்றால் அதிலே தவறுகள் வந்து விட்டால் “ஏன் அவ்வாறு வந்தது…?” என்று அதைச் சரி செய்வதற்கு “மாற்று அழுத்தத்தைக் கொடுத்து விடுகிறார்கள்…”
1.அந்த மாற்று அழுத்தம் வந்தபின் தவறுகளை மாற்றி மறுபடியும் அதைச் சீராக்குகின்றது.
2.தவறு என்று வந்தாலே அதைக் காட்டிலும் அழுத்தமான உணர்வு கொண்டு அதை அழித்து விட்டு நல்ல உணர்வுகளைப் பதிவு செய்கின்றான்.
நாம் காகிதத்தில் தவறாக எழுதினால் அழித்து அதைத் திருத்துகின்றோம்.
ஆனால் உணர்வின் இயக்கம் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக். ஒரு பொருளின் ரூபத்தைக் கொண்டு வரும் பொழுது அழுத்தத்தின் தன்மை கொண்டு அது சீராகவில்லை என்றால் அழுத்தத்தை மாற்றி அந்த உணர்வுக்கொப்ப கொண்டு வருகின்றார்கள். கெமிக்கல் கலந்த உணர்வுகளில் உணர்வின் தன்மை அழுத்தம் எதுவோ அதன்படி அது கொண்டு வரும்.
1.விளக்குகள் சிறிதாகவோ பெரிதாகவோ எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் எந்த உணர்வுக்கொப்ப எப்படி அது எரிகின்றதோ
2.இது போன்று அந்த உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றி இந்த ஒலியின் நிலையை உருவாக்குகின்றார்கள்.
அப்போது எழுத்தின் வடிவம் வருகின்றது. விஞ்ஞானிகள் இதைச் செய்கின்றார்கள்.
இதைப் போன்று தான் நாம் கண் கொண்டு பார்க்கும் போது ஒருவன் வேதனைப்படுகிறான் என்று பார்த்தால் நல்ல உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றி அதை அழித்து அந்த (வேதனை) உணர்வைக் கொண்டு வருகின்றது.
ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் செலுத்தி “அந்த உணர்வின் அழுத்தத்தை நாம் கொண்டு வந்தால்”
2.அது அந்த வேதனையை மாற்றி தெளிந்த உணர்வின் தன்மையை நமக்குள் கொண்டு வரும்.
ஏனென்றால் நமது உயிரும் எலக்ட்ரிக் தான். நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்.
விஞ்ஞானி காட்டுகின்றான் இன்று அகண்ட அண்டத்தையும். அன்று மெய்ஞானியோ தன் உணர்வின் தன்மையைப் பாய்ச்சினான்… உணர்வுகளை அறிந்தான்.உணர்வுக்கொப்ப எண்ணத்தை வளர்த்தான். அந்த உணர்வின் ஆற்றல் அது செயல்படும் நிலைகளை அகண்ட அண்டத்தையும் அகஸ்தியன் அறிந்தான்.
1.அகஸ்தியன் உடலில் விளைந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் கலந்துள்ளது.
2.குருநாதர் கண்டார்… அதைப் பெற்றார் அந்த உணர்வை எனக்குள் பதிவாக்கினார்… அதை நினைவு கொள் என்றார்… அதன்படி நடக்க வேண்டும் என்று சொன்னார்.
3.அதை அறிந்து தான் நான் பேசுகின்றேன். கல்வியால் கற்றுணரவில்லை… எழுத்து வடிவில் நான் பார்க்கவில்லை.
4.குரு காட்டிய உணர்வைப் பதிவாக்கினேன்… நினைவு கொண்டேன்… அதை அறிய முடிகின்றது. அதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன்.
அதை நீங்கள் பதிவாக்கிவிட்டால் நினைவு கொண்டால்… அருள் ஞானி பெற்ற உணர்வை நீங்களும் பெறலாம். உங்களுக்குள் அறியாது வந்த இருளை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆலயத்தில் குறைகளை எல்லாம் சொல்லிவிட்டால் “எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்…!” என்ற எண்ணத்தில் தான் பெரும்பகுதியானோர் ஆலயத்திற்குச் செல்கின்றோம்.
அதற்காக வேண்டி அர்ச்சனையும் அபிஷேகமும் செய்கிறோம். அப்படிச் செய்துவிட்டால் “அந்தத் தெய்வம் நமக்கு எல்லாம் செய்யும்…!” என்று சொல்கின்றனர். பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் சந்தன அபிஷேகம் எல்லாம் செய்கின்றோம்.
சாமிக்கு இதை எல்லாம் செய்கின்றோம்…
1.ஆனால் அபிஷேகம் நடக்கும் பொழுது என்ன எண்ணுகிறோம்…? வீட்டில் என்ன நடக்கிறது…?
2.என் வீட்டுக்காரர் நோயுடன் வேதனைப்படுகின்றாரே…! என்று தான் எண்ணுகிறோம்
3.அங்கே தெய்வத்திற்கு பால் அபிஷேகம் செய்கிறோம்… இங்கே தன் உயிரில் வேதனையான உணர்வுகள் அபிஷேகம் நடக்கிறது.
என் வீட்டுக்காரருக்கு “உடல் நலம் சரியில்லையே…!” என்று வேதனையை எண்ணி எடுக்கும் நிலை தான் வருகின்றது. கோயிலுக்குச் சென்று மனைவி இப்படி வேதனையுடன் எண்ணினால் “இந்த எண்ணம்…”
1.வீட்டுக்காரர் ஓரளவுக்கு எழுந்து நடமாடக்கூடிய நிலையில் இருப்பவரை
2.வீட்டிற்குள் பாத்ரூமுக்கு அப்போது நடந்து சென்று கொண்டிருக்கின்றார் என்று வைத்துக் கொண்டால்
3.அந்த நேரத்தில் வீட்டுக்காரருக்கு உடனே நடுக்கமாகிக் கீழே விழுந்து விடுவார்.
அதே போல் ஒரு திடமான குழந்தையாக இருக்கட்டும். நாம் அமெரிக்காவிற்குப் படிக்க அனுப்பி இருக்கின்றோம். ஒரு மாதம் அல்லது பத்து நாட்கள் குழந்தையிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என்றால் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ…? ஏது ஆயிற்றோ…? என்று உடனே வேதனைப்பட ஆரம்பிக்கின்றோம்.
ஏனென்றால் குழந்தையின் உணர்வு நம் உடலில் இருக்கின்றது. இங்கே தாய் இப்படி வேதனையாக எண்ணும் போது அங்கே பிள்ளை படித்துக் கொண்டிருந்தால் .”இந்த எண்ணம்”
1.அங்கே குறுக்காட்டி… குழந்தைக்குப் படித்தது நினைவுக்கு வராது… தலையைப் பிய்த்துக் கொள்ளும்
2.சரி… கொஞ்சம் நடந்து கொடுத்து வரலாம்… என்று வெளியே செல்லும்
3.அப்போது சிந்தனை குறைந்து… மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து கையிலோ காலிலோ அடிபட்டுக் காயம் ஆகி விடுகின்றது.
4.படித்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படி ஆகிவிட்டதே… தாயிடம் எப்படிச் சொல்வது…? என்று குழந்தையும் வேதனைப்படும்.
பத்து நாட்கள் கழித்து ஓரளவுக்குச் சரியான பிற்பாடு… இந்த மாதிரி அன்று கீழே விழுந்ததால் தான் தபால் எழுத முடியவில்லை என்று தபால் வரும்.
தாய் இதைப் படித்ததும் “நான் நினைத்தேன்… நினைத்த மாதிரியே தான் நடந்திருக்கிறது…!” என்று சொல்லும். ஆனால்
1.தாய் தன் குழந்தையை வேதனையாக எண்ணிய “அந்த எண்ணம் தான்” இயக்கி
2.”கீழே விழக் காரணமாக இருந்தது” என்று தெரிவதில்லை.
காரணம்… இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய சக்திகள்.
ஆலயத்திலே உயர்ந்த அபிஷேகங்கள் நடந்தாலும் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது “கணவருக்கு இப்படி இருக்கின்றது… குழந்தைக்கு இப்படி இருக்கின்றது…” என்று எண்ணும் பொழுது உயிரிலே வேதனை தான் அபிஷேகம் ஆகின்றது.
ஆக அப்போது அங்கே தெய்வத்தின் மீது பாலை ஊற்றினாலும் தேனை ஊற்றினாலும் சந்தனத்தை ஊற்றினாலும் அதை எல்லாம் எண்ணுவதில்லை.
இப்போது இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கின்றோம்… உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த நேரத்தில் உங்கள் குழந்தை எண்ணி அவன் படிக்கச் சென்றானே… அங்கே என்ன ஆனதோ…? சாப்பாட்டுக்கு என்ன செய்வானோ…? என்று இங்கே இதைக் கவனிக்காது அங்கே நினைவைச் செலுத்தினால் “இந்த எண்ணம்” அவனை குறுக்காட்டி அவனுடைய சிந்தனையைக் குறைத்துக் கீழே விழும்படி செய்யும்.
அப்போது நான் தியானத்திற்கு வந்தேன்… என் பையனுக்கு இந்த மாதிரி ஆகிவிட்டது என்று எண்ணுவார்கள் ஏனென்றால் நம்முடைய நினைவு… இந்தப் பழக்க வழக்கம் வளர்ந்தது… இப்படித்தான் வருகின்றது.
ஆனால் அதையெல்லாம் விடுத்து விட்டு…
1.யாம் உபதேசிக்கும் போது இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கினால் இது உயர்ந்த சத்தாக உங்களுக்குள் சேர்கின்றது.
2.நுகர்ந்தபின் இது உங்கள் உயிரிலே நல்ல உணர்வாக… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக… உயர்ந்த அபிஷேகமாக அமைகிறது.
3.இந்த உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலக்கின்றது… அறியும் ஞானத்தையே ஊட்டுகின்றது
4.இரத்தத்தின் வழி உடல் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த சக்திகள் கூடுகின்றது.
சிறிது காலம் இப்படிப் பழக்கப்படுத்தி விட்டால் உயர்ந்த நிலை பெற முடியும்.
மனைவி கணவனை எண்ணி வேதனைப்படும் பொழுது அந்த எண்ணம் அவரைக் கெடுதலாக இயக்குகின்றது. அவருக்குக் கஷ்டம் அதிகமான பின் இங்கேயும் சேர்த்து இயக்க ஆரம்பிக்கிறது.
காரணம்… நம்முடைய வழக்கத்தில் ஆலயத்திற்குச் சென்று
1.கஷ்டத்தை எல்லாம் சொன்னால் “அவன் பார்த்துக் கொள்வான்…” என்று இப்படித்தான் வழியைக் காட்டி விட்டார்கள்
2.எவன் பார்ப்பான்…?
3.எதை நுகர்கின்றோமோ அதைத்தான் நம் உயிர் பார்க்கும்… அந்த உணர்வைத் தான் ஊட்டும்.. அதையே இயக்கிக் காட்டும்.
அங்கே பால் அபிஷேகம் செய்யும் போது பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்… அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று அதை எண்ணி எடுக்கச் சொன்னால்… “கஷ்டத்தைச் சொன்னால் அவன் பார்ப்பான்…” என்று ஞானிகள் கொடுத்த வழி முறைகளை மாற்றித் தீமைகளைத் தான் நமக்குள் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆலயத்திற்கு சென்று கஷ்டத்தை எல்லாம் வேதனையுடன் சொல்லி முறையிட்டு வந்தபின் “நடந்து சென்றேன்… கீழே விழுந்து விட்டேன்…!” என்று ஆன பின்
1.”அட தெய்வமே…” இப்பொழுது தானே உனக்கு நான் பாலாபிஷேகம் செய்தேன்
2.எத்தனை தான் நீ என்னைச் சோதிப்பாய்…? என்று சாமியைத் திட்டும் நிலையில் தான் இருக்கின்றோம்.
எத்தகைய குறைபாடாக இருந்தாலும் தெய்வத்தைத் தான் நினைக்கின்றோம்…! ஆனால் வேதனையுடன் எண்ணுகின்றோம்… கோவிலுக்குள் போனாலும் வேதனையுடன் தான் போகிறோம்.
ஞானிகள் காட்டிய நிலைகளோ… அங்கே காட்டிய தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்… தெரிந்து தெளிவான நிலைகள் நாங்கள் பெற வேண்டும். என் கணவருக்கு பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்; பன்னீரைப் போன்ற தெளிந்த எண்ணங்கள் வர வேண்டும்; சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இந்த நல்ல மணங்களை எண்ணி எடுத்து அதை உயிருக்கு அபிஷேகம் செய்து… அனைவருக்கும் அது கிடைக்கும்படி… அந்த உயர்ந்த உணர்ச்சிகளை ஊட்டும்படி தான் அங்கே ஆலயத்தில் காட்டினார்கள்.
ஏனென்றால் உடலில் வலி வந்து விட்டால் எப்பா… எம்மா…! என்று சொல்லி வேதனைப்படுகின்றோம். இதை அடுத்தவர்கள் சுவாசித்தால் என்ன நடக்கின்றது…? அவருக்கும் அந்த வேதனை வருகிறது.
அதை எல்லாம் மாற்றி அமைக்கத் தான் நோயுற்றவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் உடலிலே தெய்வீக குணங்கள் வளர வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த உயர்ந்த உணர்வுகளைக் கிடைக்கச் செய்வதற்கு அபிஷேகங்களையும் ஆராதனைகளையும் ஆலயத்தில் காட்டினார்கள்.
காரணம் நாம் நுகர்வது தான் நம் உயிரிலே அபிஷேகம் ஆகின்றது
1.சூட்சமத்தில் நடப்பதை ஞானிகள் நமக்கு இப்படித் தெரியப்படுத்துகின்றார்கள்… நாம் தெரிந்து கொண்டோமா…?
2.இனியாவது தெரிந்து… ஞானிகள் காட்டிய வழியில் நாம் நடந்து பழக வேண்டும்…!


நல்லதைக் காக்கும் சக்தி அவசியம் நமக்குத் தேவை
1.சக்தி இருக்கின்றது என்ற நிலையில் “நான்…” என்ற திமிர் வந்தால் அது முதலில் உன்னை அடக்கிவிடும்…
2.உன் நல்ல குணங்களை அது கொன்று விடும் என்று குரு சொல்கின்றார்.
இதே போன்று எம்மைப் பார்ப்போரும் ஒரு சிலர் சாமி நம்மை ஒன்றும் செய்ய மாட்டார் என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அது தான் உங்களுக்குள் விளையும்.
ஆனால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று நான் எண்ணும்போது எனக்குள் அது நல்லதாக விளைகின்றது.
சில பேர் நினைப்பார்கள் சாமியிடம் நிறையச் சக்தி இருக்கின்றது… எல்லோருக்கும் நல்லது தான் செய்கின்றார். ஆனால் சாமியை இத்தனை தூரம் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பார்த்துக் கொண்டு அவர் சும்மா இருக்கின்றார் என்று நினைத்தால் கெடுதலுக்கு அல்ல.
1.அவர்கள் உணர்வு நம்மைப் பாதித்து விடக்கூடாது.
2.அவர்களுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.
3.அவரவர் எடுக்கும் உணர்வுகளுக்கு அவரவர் உயிரே தண்டனை கொடுக்கின்றது. நாம் ஏன் தண்டனை கொடுப்பானேன்…?
நாம் விலகிச் சென்று விட்டால் பாதகம் இல்லை.
வெள்ளம் வருகின்றது… வீட்டை அடித்துச் சென்று விடும் என்றால் வீட்டுப் பக்கம் வராமல் மறித்து வேறு பக்கம் திசை திருப்பி விடலாம். கரையைப் போட்டுக்கொள்ள வேண்டும். விட்டு விட்டால் கட்டிடத்தைச் சாய்த்து விடும்.
1.இது போன்று ஒரு உணர்வின் தன்மை நம்மைப் பாதிக்கிறது என்றால் அது நம் மீது மோதாதபடி திசை திருப்ப வேண்டும்.
2.இத்தனை பழக்கமும் வேண்டி இருக்கின்றது.
குளத்திலே தண்ணீர் முழுவதும் நிறைந்துவிட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு என்ன செய்கின்றார்கள்…? அந்த இடத்திலே மணலை மூடடைகளாகக் கட்டி மொத்தமாகப் போட்டால் அந்தத் தண்ணீரை ஓரளவுக்கு நாம் தடுக்க முடியும். அடுக்கடுக்காக மேலே போடப் போட வலுவாகி விடுகிறது. தண்ணீர் மேலே ஏறி வருவதில்லை.
இந்தத் தந்திரம் இல்லை என்றால் வேறு எந்தப் பொருளைப் போட்டாலும் தண்ணீர் அரித்துக் கொண்டு சென்று விடும். கற்றுக் கொண்டவர்கள் இந்த நிலையைச் செயல்படுத்துகின்றார்.
இதைத்தான் மெய்ஞானியான நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.
ஒருவன் வேதனைப்படுகிறான் என்று காணுகின்றோம் சக்தி இருந்தாலும் அதைக் கொண்டு தாக்கினோம் என்றால் நம்முடைய நல்ல நிலைகள் சிதைந்து விடும்
ஏனென்றால் நல்லது கெட்டது எப்படி நடக்கிறது…? என்று இயற்கையில் அனுபவபூர்வமாக எல்லாவற்றையும் தெரியும்படி செய்தார்.
1.சக்தி கொடுப்பார்.
2.ஆனால் அதைப் பயன்படுத்தக்கூடிய முறைகள் இப்படி இருக்கிறது.
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒருவர் மீது நாம் கோபப்பட்டு “அவரைத் தொலைந்து போக வேண்டும்…” என்று சொல்லலாம். சந்தோஷமும் படலாம். ஆனால் அந்தச் சந்தோஷம் உங்கள் உடலில் உள்ள நல்ல குணங்களைத் தொலைத்து விடும்.
சந்தோஷத்தை ஊட்ட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.மகரிஷிகள் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து இருளை நாடாதபடி தடுத்துப் பழகினால் என்றும் பேரருள் பேரோளியைப் பெறலாம்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.எல்லாமே சந்தர்ப்பத்தால் நாம் நுகரக்கூடிய நிலைகளுக்குத் தக்கவாறு தான் இயங்குகின்றது.
2.யாரும் தவறு செய்யவில்லை
3.அவரவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் படும் பொழுது அது முதிர்வடையப்படும் பொழுது “விதி” என்ற நிலை அடைகின்றது.
ஒருவருக்குக் கேன்சர் என்ற நோய் வந்தால் விதிப்படி அது கடுமையான விஷம். மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்கள் அது இலகுவான விஷத்தால் இயங்கும் தன்மை பெற்றது. ஆனால் இந்தக் கேன்சர் நோய் உடலில் வந்த பின் நல்ல அணுக்கள் இயங்குவதற்குண்டான விஷத்தை எல்லாம் அது எடுத்து வளரும்… தன் இனத்தை அது பெருக்கும்.
நல்ல அணுக்களை எல்லாம் மடியச் செய்துவிடும். மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் கேன்சரால் பாதிப்படைந்து… உடலை விட்டுப் பிரியும் நிலை வருகின்றது.
இப்படிப் பிரியும் அந்த ஆன்மா நிச்சயம் பாம்பாகவோ விஷத்தை உணவாக உட்கொள்ளும் ஜெந்துக்களாகவோ தான் அடுத்து பிறக்க நேரும். ஆக விதிப்படி இன்று மனிதனாக இருந்தாலும்
1.உயிரில் விஷத்தின் தன்மை அதிகமான சேமிப்பாகும் பொழுது
2.அத்தகைய உயிரினங்களுக்குத் தான் அடுத்து செல்ல வேண்டி வரும்.
கேன்சர் வந்தவர்களைப் பாருங்கள். அவர்களுக்கு எல்லாமே இருக்கும் ஆனால் அந்தக் கடைசி முடிவு எண்ணங்கள் அனைத்தும் விஷம் தோய்ந்து உடலை விட்டுச் செல்லும் பொழுது பாம்பின் ஈர்ப்புக்குச் சென்று விஷத்தை உணவாக உட்கொள்ளும் அதை ஏற்றுக் கொள்ளும் உடலாக அமைத்து விடுகிறது.
எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக வந்தாலும் இப்படி மாற்றங்கள் ஆகி விடுகிறது அது மட்டுமல்ல…
1.மனிதனால் உருவாக்கப்பட்ட கேன்சர்
2.இன்று ஏராளமானவர்களைத் தாக்குகிறது
ஏனென்றால் விஞ்ஞானக் கதிரியக்கப் பொறிகள் மற்றதுடன் தாக்கப்பட்டு அது உடலுக்குள் சென்ற பின்… எந்த உறுப்பில் இந்த அணுவின் தன்மை அதிகமாக உருவாக்கப்பட்டதோ அந்த அணு பெருக்கிய பின் அந்த உடல் உறுப்பு கெடுகின்றது.
அதன் வழி கிளைகளைப் பெருக்கி விஷத்தின் தன்மை கூடுகின்றது அது விளைந்து விடுகின்றது.
இதைப் போல் நம் பூமியிலும் கதிரியக்கப் பொறிகள் பரவித் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது தாவர இனத்தை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களில் இத்தகைய விஷத்தன்மைகள் அதிகமாகின்றது.
அதாவது தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் அந்த உயிரினங்களும் விஷம் தோய்ந்து மடிகிறது.
1.அது எடுத்து வெளிவிடும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனால் கவரப்படுகின்றது
2.மீண்டும் விஷத் தன்மைகளை இங்கே பரவச் செய்கின்றது.
இருப்பினும் இந்த விஷத்தின் தாக்குதல் அதிகமாகி நம் பூமியில் பரவப்படும் பொழுது சூரியனால் கவரப்பட்டு… காந்த அலைகள் தொடர்பு கொண்டு பூமிக்குள் பரவப்படும் பொழுது பூமி சுழற்சி அடையப்படும் பொழுது “நடு மையம் ஈர்ப்பு அதிகமாகி விடுகின்றது…!”
அந்த ஈர்ப்பின் தன்மை அதிகரித்து இதே கதிரியக்கப் பொறிகளைத் தனக்குள் சேர்க்கின்றது. உள்ளே சேர்ந்த பின் கொதிகலனாக உருவாகின்றது.
1.கொதிகலனாக உருவாக்கப்படும் போது கல் போல் இருக்கக்கூடிய பாறைகள் எல்லாம் உருகும் தன்மை வருகின்றது…
2.கரையும் தன்மை வருகின்றது… சேறைப் போல் ஆகிறது.
இரும்பு கெட்டியாக இருப்பினும் நெருப்பை அதிகமாகக் கூட்டும் பொழுது அது கூழாக எப்படிக் கரைகின்றதோ… நம் பூமிக்குள்ளும் கரையும் தன்மை அதிகரித்து… நல்ல பொருள்களைப் பாழாக்கி… “விஷத்தின் தன்மை தோய்ந்ததாகிறது…”
பூமிக்குள் வெடிப்பாகும் போது அந்த விஷத்தின் தன்மையை மீண்டும் வெளிப்படுத்தி
1.தாவர இனங்கள் ஏற்கனவே மண்ணில் உருவான சத்தை எடுத்தாலும்
2.பூமிக்குள் கலவையாகி வெளிப்பட்ட அந்தக் கதிரியக்கங்கள் தாவர இனங்களில் சரியான கரு உருவாகாதபடி…
3.அந்த வெள்ளாமை வராதபடி தடுத்து நிறுத்துகின்றது.
இப்படி விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத் தன்மைகள் எல்லா வகையிலும் பெருகிக் கொண்டே செல்கிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இப்பொழுது மனிதர்களில் அவரின் உடல் நன்றாக இருக்கும். சந்தர்ப்பத்தில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை அவர்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால்
1.அதனால் அவர்கள் அடிக்கடி சோர்வடைவதும் சஞ்சலமான நிலைகளிலே இருப்பதும்
2.அவர்கள் பேசும் பொழுது ஒரு விதமான வாசனையும் வரும் அவர் உடலில் இருந்து ஒருவிதமான நாற்றமும் வரும்.
காரணம் அடிக்கடி சலிப்பையும் சஞ்சலத்தையும் அவர்கள் சந்திக்கப்படும் பொழுது சலிப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது சிலருக்கு அந்த உடலில் “ஈர்” போன்று தோன்றி மேலெல்லாம் அரிப்பாகின்றது.
ஒரு சிலருக்கு அது தலையிலே ஈரும் பேனுமாக உருவாகி விடுன்றது. அப்படிப் பேன்கள் உருவாகி விட்டால் அதை இவர்கள் எவ்வளவுதான் சீவி எடுத்தாலும் மறுபடியும் அது வந்து கொண்டே இருக்கும்.
1.என்னதான் மருந்தைப் போட்டு அதைப் போக்கினாலும் இரண்டு நாட்களுக்கு இருக்காது
2.மீண்டும் உடலில் வரக்கூடிய மணத்தால் கரு முட்டையாகிப் பேன்கள் வரத் தொடங்கும்.
ஆனால் யாரும் தவறு செய்யவில்லை…!
இதே மாதிரித் தான் மரங்களில் அதன் அருகில் இதைக் காட்டிலும் வீரிய மரங்களின் மணங்கள் அடித்தால்… உதாரணமாக அது வேப்ப மரமாக இருந்தால் அடுத்த மரத்தின் மணத்தினை அது எதிர்கொள்ளும் பொழுது அதனால் வாடி அதிலே பார்த்தால் “பிசின்கள்” அதிகமாக வரும் அல்லது “வாடல் நோய்” வந்து கருகிவிடும்.
பார்க்கலாம்… சில மரங்களிலே…!
1.வெயில் அதிகமாகும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின்
2.மனிதனுக்கு நோய் வருவது போன்று சில கிளைகள் அப்படியே அது வாடி காய்ந்து மரத்திலிருந்து கீழே விழுவதை நாம் காணலாம்.
இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.
இது போன்று தான் நாம் அடிக்கடி கோபப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால்… இனம் புரியாத நிலைகளில் நமக்கும் கோபம் அதிகமாக வரும். சில மனிதர்களைப் பார்த்தால் நமக்குத் தீய சிந்தனைகளும் வரும்
மனித உடலில் இருந்து வரக்கூடிய மணமும் அவர் எந்தெந்த அளவிலே உடலில் குணங்களைச் சேர்த்து நல்ல குணங்களை அது செயலற்றதாக மாற்றுகின்றதோ அந்த உடலில் உறுப்புகளில் நோயாகவும் காரணமாகின்றது
அதே சமயத்தில் அவர் சொல்லாக வெளியில் சொல்லப்படும் பொழுது கேட்பவர் உணர்வுகளிலும் பட்டு அவர்களுக்கும் நோய் வரத் தொடங்கும்.
இதெல்லாம்
1.சந்தர்ப்பத்தால் நுகரும் இந்த சக்திகள் மனிதனுக்கு மனிதன் உபகாரமும் நல்ல பண்புகளும் பரிவுடன் உதவி செய்யக்கூடிய மனிதனாக இருப்பினும்…
2.பிறர் படும் கஷ்டங்களைக் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது… அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது நுகர நேர்கின்றது.
3.சுவாசித்த உணர்வுகள் இரத்தங்களிலே கலந்து உடலிலே நோயாக வந்து விடுகிறது.
எப்படி மரம் செடி கொடிகளில் எதிர் நிலையான மணங்கள் தாக்கிய உடனே கிருமிகளோ பூச்சிகளோ வண்டுகளோ வந்து விடுகிறதோ… வாடல் நோய் வந்து விடுகின்றதோ இதைப் போன்று மனிதனுக்கு வந்துவிடுகிறது
ஆனால் செடி கொடிகளுக்கு மற்றதை நுகரும் சக்தி இல்லை தன்னுடைய வலுவின் தன்மை கொண்டு மற்றது அருகில் வராதபடி தள்ளிவிடுகின்றது.
உதாரணமாக பருத்திச் செடி அடர்த்தியாக இருந்தது என்றால் அடுத்த பக்கத்தில் இருக்கும் புகையிலைச் செடியில் புழுக்களைக் கொல்ல மருந்துகளை தூவப்படும் பொழுது அங்கே என்ன நடக்கிறது…?
புகையிலைச் சத்தை எடுத்து அதில் அணுவாகிப் புழுவாகி அதை உணவாக உட்கொண்டாலும் மருந்தைத் தூவிய நிலையில் அந்த விஷங்கள் தாக்கப்படும் பொழுது புழுக்கள் இறந்து விடுகிறது… ஆவியாகக் கரைகின்றது… சூரியனும் அந்த ஆவியைக் கவர்ந்து கொள்கின்றது.
ஆவியாகக் கரைந்த பின் காற்று எந்தப் பக்கமாக வீசுகின்றதோ அதற்குத் தக்கவாறு… அதனுடைய உணர்வுகள் பட்டபின் மற்ற சாதாரண தாவர இனச் சத்தைக் கவர்ந்த அலைகள் அஞ்சி ஓடும்.
அப்படி ஓடும் பொழுது
1.பருத்திச் செடிகள் இருக்கும் பக்கம் இது சென்றால் அது தன்னுடைய உணர்வை எடுக்கக்கூடிய சக்தி இழந்து விடுகிறது
2.தன் சத்தைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்தி குறையப்படும் பொழுது அந்தச் செடி வாடுகிறது…. அதிகமான மோதல்கள் ஏற்பட்டால்…!
ஆனால் புகையிலையில் அடித்த விஷத்தின் தன்மை அதில் இருக்கக்கூடிய விஷக் கிருமிகளைக் கொன்றாலும்… கிருமிகள் செத்த உணர்வு வெளிவரப்படும் பொழுது அது உடல் பெற்ற நிலைகள் அந்த முட்டையில் படுகின்றது.
ஆனால் முட்டை சாவதில்லை. விஷத்தின் தன்மை அதை ஏற்றுக் கொண்டு அடுத்து மருந்துகளை அடித்தாலும் அது சாவதில்லை.
முதலில் பூச்சிகள் செத்தால் ஆவியாக வருகின்றது சூரியனால் கவரப்படுகின்றது. விஷத் தன்மை பூச்சியின் உடலில் பட்டபின் ஆவியாக மாறுகின்றது… அது வீரியமடைகின்றது.
பூச்சியின் விஷத் தன்மைகள் சூரியனால் கவரப்பட்டுக் காற்றலைகளில் அது போகும் பக்கத்தில் பருத்திச் செடியில் மோதப்பட்டுத் தேங்கி விடுகின்றது.
1.தேங்கிவிட்டால் அந்த இலையை உணவாக எடுக்கக்கூடிய நிலையில் எதிர் நிலையாகி
2.பருத்திச் செடியின் இலையின் நுனிகள் கருகி விடுகின்றது
3.நுனியில் இவ்வாறு ஆன பின் வளர்ச்சி குறைந்து பருத்திச் செடி கருக நெரும்.
4.அதனுடைய காய்களில் பார்த்தோம் என்றால் பூச்சிகளும் விழுந்து விடுகின்றது.
இயற்கை நியதிகள் இப்படி மாறிக் கொண்டே உள்ளது. இவை எல்லாம் எதனால் வருகிறது…?
1.மனிதன் விஞ்ஞானத்தால் எடுத்து விரிய விஷ வித்துக்களை உருவாக்கப்பட்டு
2.அந்த விஷத்தன்மைகளைப் பவுடராகவும் நீருடன் கலந்து தூவப்படும் பொழுது காற்றிலும் வருகின்றது… செடிகளிலும் சேர்ந்து விடுகின்றது.
இப்படி மனிதன் இயற்கையில் விளைவதைக் கடினமான விஷ உணர்வுகளை உருவாக்கப்படும் பொழுது பலவாறு மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவுப் பயிர்களில் சேர்ந்து விடுகிறது.
நெல் செடி என்றால் அதிலே பால் பிடித்துத் தான் அரிசி உருவாகும். சோளமானாலும் பால் பிடித்துத் தான் சோளம் உருவாகும்.
1.ஆனால் விஞ்ஞானத்தால் தூவிய விஷங்கள் காற்றலைகளில் இது கலந்த பின்
2.அந்தப் பாலுக்குள்ளும் விஷத்தின் தன்மை புகுந்து விடுகின்றது.
3.மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் நஞ்சின் தன்மை பாய்ந்து விடுகிறது.
அதை மனிதன் உணவாக உட்கொள்ளும் போது சிந்தித்துச் செயல்படும் இரத்த நாளங்களில் விஷத்தன்மை கலந்து உடல் முழுவதும் சுழல்கிறது. காற்றில் எப்படிப் பரவிப் படர்கின்றதோ
1.மனித உடலுக்குள் இந்த விஷங்கள் சுழன்று நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் செயலிழந்து விடுகின்றது
2.உறுப்புகள் சுருங்குகின்றது… அதனால் இருதய வலி நுரையீரல் வலி கல்லீரல் வலி சிறுநீரகம் செயலிழத்தல் போன்ற நோய் வருகிறது.


“இறந்து விடுவோம்…!” என்ற பய உணர்ச்சி நமக்கு வரக் காரணம் என்ன…?
பாசத்தால் பண்பால் குடும்பத்திலோ நண்பர்களிடமோ உறவினர்களிடமோ நாம் மற்றவருடன் பிரியமாகப் பழகி இருக்கப்படும் பொழுது… உடலை விட்டு அவர்கள் திடீரென்று பிரிய நேர்ந்தால் அதைக் கேள்விப்பட்ட பின் “போய்விட்டார்களே என்று ஏங்கினால்” நமக்குள் அந்த ஆன்மா வந்து நம்மை அறியாமலே எத்தனையோ பாடுபடுத்துகின்றது (முதலில் எதுவும் தெரியாது).
அப்போது என்ன செய்ய வேண்டும்…?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்…
1.எனக்குள் இருந்து அந்த ஆன்மா பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற
2.இந்த உணர்வை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
ஏனென்றால் அந்த ஆன்மாவினால் முடியாததை நாம் அந்த உயர்ந்த சக்தியை எடுத்து ஊட்டும் பொழுது நம் இரத்தத்திலே கலந்து
1.அந்த ஆன்மாக்களும் நமக்கு ஒத்த நிலையாகி தொல்லை கொடுப்பதை மறந்து
2.உடலை விட்டுப் பிரியும் போது அதுவும் நம்மிலிருந்தே புனித நிலை (பெறும் தகுதி) பெறுகின்றது.
இது நம்முடைய சாஸ்திரங்கள் காட்டிய பேருண்மைகள்.
இதை விடுத்து விட்டு உடலிலே புகுந்த ஆன்மாக்களை உடுக்கை அடித்தோ கோடாங்கி அடித்தோ மந்திரங்களைச் சொல்லியோ “நான் பேய் ஓட்டுகிறேன்…!” என்று அப்படி யாராலும் ஓட்ட முடியாது.
உடலில் இருக்கக்கூடிய அந்த ஆன்மாக்களுக்கு அருள் உணர்வின் சத்தைக் கொடுத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தால் “அது நமக்குள் இருந்து நன்மை செய்யும்…”
இல்லையென்றால்… இரத்தத்தில் அது சுற்றி வரும் போது
1.உயிரிலே (புருவ மத்தியில்) வந்து மோதப்படும் பொழுது அது பட்ட வேதனை உணர்ச்சிகள் நமக்குள்ளும் வரும்.
2.ட்ரான்சாக்ஷன் என்ற உயிர் அருகிலே சென்றபின் அதே உணர்ச்சிகளைத் தான் ஊட்டும்.
கிராமஃபோன் பெட்டியில் ஒரு இசைத் தட்டைச் சுழலச் செய்து ஊசியை உராயச் செய்தால் அந்தப் பாகம் வந்த பின் அதனதன் இசைகளை வரிசயாக எப்படிக் கொண்டு வருகின்றதோ… அதைப் போன்று நமது உயிர்
1.இரத்தத்தில் கலந்த அனைத்து நிலைகளுக்கும் (ஆன்மாக்கள்) இவ்வாறு செயல்படுத்தப்படும் பொழுது
2.அந்தப் பாகம் சென்ற உடனே அந்த ஆன்மா என்னவெல்லாம் சங்கடப்பட்டதோ அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
3.கை கால் குடைச்சல் மற்றும் எத்தனையோ உடல் உபாதைகளைக் (தொல்லைகளை) கொடுக்கும்.
அதைக் கடந்து உடலுக்குள் அந்த ஆன்மாக்கள் போகிற பக்கம் எல்லாம்… இரத்தத்தின் வழி எங்கெல்லாம் செல்கின்றதோ
1.இருதயத்திலே சென்றால் இருதய வலி
2.கல்லீரலுக்குள் சென்றால் கல்லீரல் வலி
3.நுரையீரலுக்குள் சென்றால் நுரையீரல் வலி
4.அந்த ஆவியின் நிலைகளால் நம் உடலுக்குள் பல விதமான வலிகளைத் தோற்றுவிக்கின்றது.
இதையெல்லாம் வைத்தியம் செய்து ஒன்றும் சீர்படுத்த முடியாது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உடலில் இரத்தத்தில் வலுப்பெறச் செய்தால் அதனுடைய வீரியம் தணியும்.
அறியாது வரும் இப்படிப்பட்ட தீமைகளை நீக்க அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் செருகேற்றினால் தீமைகள் புகாது ஞானத்தின் தன்மை பெறலாம்.
அதற்காக வேண்டித் தான்
1.இந்த உபதேச வாயிலாக அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவு செய்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.
தியானித்து அதை வலுப்பெறச் செய்து கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்த நம் முன்னோர்களின் ஆன்மாக்களை நாம் விண் செலுத்த வேண்டும்.
எத்தனை பேரை விண் செலுத்துகின்றோமோ அத்தனை பேரின் ஆற்றலும் நமக்குக் கிடைக்கின்றது. அவர்கள் முன் செல்ல பின்னாடி நாமும் அந்த நிலையை அடைய முடியும்.
ஏனென்றால் மீண்டும் இந்த உடல் பெற்றால் அது நரகலோகம் தான். அது போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுவோம். பேயாகவோ நோயாகவோ நாம் உருவா(க்)க வேண்டாம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நியூட்ரான் ஆயுதம் என்று கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள் கம்ப்யூட்டர் சாதனத்தின் மூலம் சில அதிர்வுகளைக் கொடுத்து அதை அடுத்த நாட்டிலே பரப்பினார்கள் என்றால் எந்தெந்த இயந்திரங்களைச் சேமித்து வைத்திருக்கின்றார்களோ அதை எல்லாம் அது செயலற்றதாக ஆக்கிவிடும்
இராக்கெட்டின் மூலமாக அடுத்த நாட்டில் ஒரு ஊரைத் (ஒரு இலக்கை) தாக்கும்படி வைக்கிறார்கள் (எதிரி நாட்டின் முகப்பு). ஆனால் அது தவறான பாதைகள் போகிறது என்றால் திசைகளை மாற்றி எவன் அனுப்பினானோ அவன் ஊரிலேயே வந்து விழுகும்படி செய்வார்கள். அதாவது
1.எவன் செய்தானோ அவன் ஊரிலேயே விழுந்து அவனை அழிக்கும்படி செய்வான்
2.செய்து வைத்த அனைத்து ஆயுதங்களுமே வெடிக்கும் நிலை ஏற்படலாம்.
3.அப்போது இந்த உலகமே விஷத்தன்மையாக மாற கூடிய வாய்ப்புகள் உண்டு
4.பத்து உலகத்தை அழிக்கக்கூடிய அளவிற்கு இந்த ஆயுதங்களைச் சேமித்து வைத்திருக்கின்றனர்
5.எப்படியும் இது வெடிக்கத்தான் செய்யும்… வெளியிலே வந்துவிடும்.
மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கடலிலே மணலாக மாறுகின்றது அதைப் பிரித்து யுரேனியமாக எடுக்கின்றார்கள். அணுகுண்டாகத் தயார் செய்து அதை வெடிக்கச் செய்யப்படும் பொழுது பல கட்டடங்களையும் மற்ற இடங்களையும் நொறுக்கித் தள்ளுகின்றது.
ஆனால் நியூட்ரான் என்ற ஆயுதம் என்ன செய்கிறது…?
“வைரஸ் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது…” என்று அடிக்கடி சொல்கிறோம் அல்லவா. அதைப் போன்று காற்றிலே அதைக் கலக்கி வைத்து விட்டால் மனிதனுடைய சிந்தனைகள் அனைத்துமே இழந்துவிடும்.
என் பிள்ளை எது…? என் வீடு எது…? என்று தெரியாமல் போய்விடும். அந்த அளவிற்கு அதைப் பரப்பி வைத்து இருக்கின்றார்கள்.
இந்த விஷத்தன்மை (நியூட்ரான்) கடலோரத்தில் போனது என்றால்…
1.நட்சத்திரத்தினுடைய கதிரியக்கப் பொறிகள் கடலிலே மணலாக இருப்பதுடன்…
2.மின் கதிர்களுடன் மோதிய உடனே வெப்பமாகி… சூறாவளியாக சுழல் காற்றாக மாறுகின்றது.
3.வெகு வேகமாகச் சுற்றி அடர்த்தியாக மாறும்…! கடலோரப் பகுதியில் தான் முதலிலே உற்பத்தியாகும்.
இப்படி உருவான இந்தச் சூறாவளி நகருக்குள் புகுந்து பெரிய பெரிய கட்டிடங்களை எல்லாம் துவம்சம் செய்து கொண்டு போகின்றது
உலகில் எங்கெல்லாம் விஞ்ஞான ஆராய்ச்சி செய்து கதிரியக்கங்களையும் நியூட்ரானின் வெடிப்புகளையும் செயல்படுத்தினார்களோ அங்கெல்லாம் இப்பொழுது இது நடந்து கொண்டே வருகின்றது.
இந்த உடல் நமக்கு என்றுமே சொந்தமில்லை…! இனி நாம் சொந்தமாக்க வேண்டிய அழியாத செல்வம் எது…? என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி தான்.
1.இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அதை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்
2.அது தான் நமக்குப் பெரிய சொத்து.
மனிதனாக மீண்டும் பிறவிக்கு வந்தால் அவஸ்தைகளைத் தான் பட வேண்டி இருக்கும் அத்தகைய நிலை இல்லாதபடி அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் சந்தர்ப்பமாக நாம் உருவாக்க வேண்டும்.
சூரியனே அழியும் காலம் உண்டு.
1.அதற்கு முன் அழியாத அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று இணைய வேண்டும்.
2.பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் அதனுடன் இணைந்து சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
ஆனால் இன்று பெரும்பகுதி மகான் (சாமியார்) என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் ஊரை ஏமாற்றுவதற்கும் உடலைக் காப்பதற்கும் உடலில் சுகங்களை அனுபவிப்பதற்கும் தான் ஞானிகள் ஆகின்றனர்.
தெய்வத்தின் பெயரைச் சொல்லியும் ஆன்மீகத்தைச் சொல்லியும் சொத்து சுகத்தைத் தேடுவதற்கும் தான் பார்க்கின்றனர். அத்தகைய நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.


எல்லோரையும் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்… முடியவில்லை… அந்த ஆசையிலே போகிறது
ஆரம்பத்தில் குருநாதர் என் மனைவி உயிரைக் காப்பாற்றினாலும்… என் (ஞானகுரு) மனைவிக்கு நோய் இல்லை என்று தான் நினைக்கின்றேன். சந்தர்ப்பத்திலே அனுபவத்திற்குத் தான் கடைசி நேரத்திலே குருநாதர் ஏதோ உண்டு பண்ணி… “எப்படியோ அவர் வழியில் என்னை இழுத்திருக்கின்றார்…” என்று நினைக்கின்றேன்.
1.என் மனைவியின் சந்தர்ப்பம்… எனக்கு ஞானம் பெறும் ஒரு சந்தர்ப்பமாகக் கிடைத்தது.
2.இந்த உபதேச வாயிலாக இப்பொழுது சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.
3.இப்படி “எல்லாமே சந்தர்ப்பம் தான் காரணம்” என்கிற வகையிலே குருநாதர் விபரத்தைச் சொல்கிறார்.
ஏனென்றால் பல அவஸ்தைகள் பட்டுத் தான் யாம் மீண்டு வந்தோம். வந்த பிற்பாடு எல்லோரையும் தேடி வந்து நான் இதைச் சொல்லப்படும் போது எத்தனை பேர் இதைப் பின்பற்றுகின்றார்கள்…?
எத்தனையோ பேர்களுக்கு நோய்களையும் துன்பங்களையும் நீக்கிக் கொடுத்தோம். அதை எத்தனை பேர் திரும்பிப் பார்த்திருக்கின்றார்கள்…!
கடுமையான நோய்களைக் கூட நிவர்த்தி செய்ய முடிந்தது. அது எல்லாம் நடந்த பிற்பாடு… நன்றிக்கடனாக…
1.கடைசியில் ஆண்டவனுக்குக் கொண்டு போய்க் காணிக்கை செலுத்தக்கூடிய நிலையில் தான் இருக்கிறார்கள்
2.நம்முடைய பழக்க வழக்கங்கள் அப்படித் தான் இருக்கிறது.
ஆனால் யாம் சொல்வது… நீங்கள் இந்தத் தியானத்தைக் கடைப்பிடித்து அதன் வழி மற்றவர்களுக்கு நன்றாகி விடும் என்று சொன்னாலே போதும். அவர்கள் இதை எடுத்தால் அவர்கள் நோய் விலகுகின்றது… துன்பம் விலகுகிறது.
1.விலகிய பின் அதிலே விளைந்த அந்த நல்ல வாக்கை அவர்கள் அடுத்தவர்களுக்குச் சொன்னால்
2.அவருடைய கஷ்டமும் போகின்றது… இப்படி நாம் கொண்டு வருகின்றோம்.
அதற்காக வேண்டித் தான் ஆரம்பத்தில் யாம் எல்லாவற்றையும் நேரடியாகச் செய்தோம். ஆனால் அது எல்லாம் “தோல்வி அடைந்தது…” காரணம்… அவரவர்கள் இஷ்டத்திற்கு அதை எடுத்து விளையாடுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள்.
எதை…?
கொஞ்சம் விஷயம் தெரிந்த பின்… தனது வசதிக்குத் தான் கொண்டு செல்கின்றார்களே தவிர மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
1.ஏதோ பெரிய அபூர்வ சக்தி…! நான் தான் கடவுள்…! எனக்குள் எல்லாமே இருக்கின்றது… இதை நான் தான் செய்கின்றேன்
2.ஏதாவது ஒன்றைச் செய்தால் “நான் செய்தேன்…!” என்று நீ போய்ச் சொல்
3.”என்னால் நல்லது ஆனது…” என்று சொல் என்று இப்படி விளம்பரப்படுத்த விரும்புகின்றார்கள்.
பெரும்பகுதி இப்படித்தான் ஆகின்றார்கள்
தனித்தன்மை வைத்து உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் மனமார அதைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அப்படி வந்ததெல்லாம் “தோல்வி அடைந்த பிற்பாடு” இனி காலம் இல்லை என்ற நிலையில் இப்பொழுது
1.எல்லாமே வெட்ட வெளிச்சமாகக் கொடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏற்றிக் கொடுக்கின்றோம்…
2.எல்லோரும் வளரட்டும்…! என்ற இந்த ஆசையிலே நான் இதைச் சொல்கிறேன்.
ஆக… தியானத்தைச் செய்தால் நல்லதாகும் என்ற இந்த முடிவுக்கு யாம் வந்தது. தியானம் செய்யாதபடி நல்லதாகாது. அப்போது அந்த ஆசையிலாவது வரட்டும்…!
யாம் சொன்ன முறைப்படி ஒருவர் தயாரானால்… தொழிலில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றீர்கள் என்றால் உங்கள் பார்வையால் அந்த 100 பேருக்கும் நன்மையாகின்றது.
ஆனால் அதே சமயத்தில் நீங்கள் ஒரு ஆள் நல்லவராக இருக்கின்றீர்கள். 100 பேர் கஷ்டம் என்று உங்களிடம் சொல்கின்றார்கள். அந்த நூறு பேரின் கஷ்டம் என்ன செய்யும்…?
நீங்கள் நல்லவராக இருந்தாலும் உங்களுடைய நல்லதை அது மாற்றி விடுகின்றது. இந்த மாதிரிச் சில சூழ்நிலைகளிலிருந்து மாற்றுவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
1.அதைக் கடைப்பிடித்து எந்த வகையில் அவர் நல்லவராகிறாரோ
2.அவர் மற்றவருக்கு அதைச் சொன்னால் அவர்கள் தீமைகளும் போகிறது.
சாதாரண நிலையில்
1.பிறரைப் பார்க்கும் பொழுது இங்கே நமக்கு நோய் ஆகிறது.
2.ஆனால் அருள் வழியினை எடுத்து நாம் செயல்படுத்தும் பொழுது நம் பார்வையில் மற்றவர்களுக்கு நோய் போகின்றது.
அந்த அளவுக்கு நீங்கள் வளர வேண்டும். உங்களைப் பார்த்தாலே மற்றவர்கள் நோய் போக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் உங்கள் நோய் அகலும்… துன்பங்கள் அகலும்… உங்கள் தொழில் சீராகும்… என்று
1.இப்படி ஆர்வமாகச் சொல்லி விட்டால் அதை எடுக்கும் போது
2.எல்லோருமே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்கு வருகின்றார்கள்.
தனியாக யாரையும் போற்றுவதில்லை. குரு அருள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோரும் எடுத்து வளர்க்கும் நிலை வருகின்றது நான் எடுத்த பங்கிற்கு அந்த நல்ல நிலையைப் பெறுகின்றேன்… அதே போல் அவரவர்கள் எடுத்த பங்கிற்கு அந்தப் பலனை அடைய முடியும்.
1.எல்லோரையும் அந்த உயர்ந்த நிலைக்குத் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்
2.ஆனால் அது முடியவில்லை… அந்த ஆசையிலே போகின்றேன்.
எத்தனையோ வருடங்கள் சிரமப்பட்டு அதிலிருந்தெல்லாம் மீட்டி “எல்லோருக்கும் அந்த உயர்ந்த நிலை கிடைக்க வேண்டும்…” என்ற அந்த ஆசையில் தான் உங்களிடம் வருகின்றேன்.
1.குரு உணர்வு தான் இங்கே இயக்குகின்றது… அவரால் தான் நாம் வளர்கின்றோம்…
2.அத்தனை பேருக்கும் அந்த சந்தர்ப்பம் தான்… நான் செய்தேன் என்று சொல்வதற்கு இல்லை.
அருளைத்தான் நான் தேடி வைத்திருக்கின்றேன். அந்த அருளால் உங்களுக்கு நன்மை செய்ய முடிகின்றது. எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற அந்த ஆசை உங்களிடம் இருந்து தான் நான் பெறுகின்றேன். அந்த வழியைத்தான் உங்களுக்கும் காட்டுகின்றோம்.
உங்களுடைய ஊக்கம் தான் இதை வலுப் பெறச் செய்கின்றது. நீங்கள் அந்த குரு அருளைப் பெறும் பொழுது அந்த ஊக்கத்தால் நானும் அதை வலு கொண்டு செயல்படுத்த முடிகின்றது.
நீங்களும் அந்த நிலையை வளர்க்க முடியும்.. அந்தப் பக்குவத்திற்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும். இந்த உலகை அருள் வழியில் அழைத்துச் செல்லலாம்.
1.நான் சொல்வது லேசாகத் தெரியலாம்
2.ஆனால் மிக மிகச் சக்தி வாய்ந்த அந்த ஆற்றல்களை நீங்கள் வளர்க்க முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் ஆன்மாவில் எது அதிகமாக இருக்கிறதோ… “அதுவே நம்மை இயக்கக்கூடிய சக்தியாக இருக்கும்”
வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். ஆனால் ஆண்கள் வெளியிலே வேலைக்குச் சென்று விட்டு வந்து வீட்டில் வெறுப்புடன் இருக்கின்றார்கள். அப்போது பெண்கள் ஏதாவது கேட்டால் உடனே வெறுப்பாகப் பதில் சொல்வார்கள்.
எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்வது…! கொஞ்சம் அன்பாகச் சாந்தமாகச் சொல்லலாம் அல்லவா… என்பார்கள் பெண்கள்.
நானா கோபமாகப் பேசுகின்றேன்… நீ தான் எனக்குக் கோபத்தை உண்டாக்குகின்றாய்…! என்று மீண்டும் சண்டையைத்தான் ஆண்கள் போடுவார்கள்.
சண்டை போட்டவுடன்… சரி… கோபமாக இருக்கிறார்…! கொஞ்சம் பார்த்துச் செய்யலாம் என்று பெண்கள் வேலையைச் செய்தால் அடுத்து என்ன நடக்கும்…?
கணவர்… அவர் எண்ணிய வேகத்தில் அங்கே வேலை நடக்கவில்லை என்றால் “நான் சொல்வதை விட்டு “விட்டு ஏறுக்கு மாறாகச் செய்கின்றாய்…!” என்று பழையபடி சண்டை வரும்.
இதெல்லாம் உணர்வின் இயக்கங்கள்…! நம்மை அறியாமலே இயக்குவது.
இப்படிக் கணவர் கோபமாகப் பேசிய உணர்வுகள் என்ன செய்யும்…? அடுத்து அவர் சம்பாதிக்கப் போகும் இடங்களிலும் இதே உணர்வுகள் அங்கே தடையாக வந்து சேரும். அப்போது சம்பாதிக்கக்கூடிய நிலையைச் சரியாக வைத்துக் கொள்கிறோமா…?
காரணம்… இதெல்லாம் சந்தர்ப்பம் தான். “மோதலினால் உராய்வாகி” இப்படி வரப்படும்போது “இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் நம்மை மாற்றி அமைக்கின்றது…?” என்று நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
இப்படி ஆனபின்…
1.எனக்கு எல்லாமே மீண்டும் மீண்டும் கஷ்டமாக வருகிறது
2.என் மனதில் நிம்மதியே இல்லை என்ற எண்ணத்தில் தொழிலை விட்டு விடுவார்கள்.
3.சிந்தித்துச் செயல்படவில்லை என்கிற போது வேலையிலும் எதிர்ப்பு… வீட்டிற்கு வந்தாலும் எதிர்ப்பு…!
இது எல்லாம் எதனால் வருகின்றது…?
கோபத்தையும் வெறுப்பையும் விளைய வைக்கின்றேன்
1.வீட்டிற்குள் வந்து பொறுமை இல்லாதபடி சொன்ன பின்… அங்கேயும் வருகின்றது
2.அதே சமயத்தில் பொறுப்பு இழந்து தொழிலே சொல்லப்படும் போது அங்கே நாம் பார்க்கும் வேலையை மட்டமாக்குகின்றது
3.மேலதிகாரியோ அல்லது நம்மிடம் வேலை பார்ப்பவர்களோ நம்மிடம் எதிர்மறையாகச் செயல்படும் நிலை வந்து விடுகின்றது
இது எல்லாம் எங்கிருந்து… எப்படி.. வருகிறது…?
குடும்பப் பற்றில் ஒருவர் இப்படி ஆகிவிட்டால் இந்த உணர்வுகள் குடும்பம் முழுவதும் பரவுகிறது. இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?
அப்பொழுது அந்த இடத்திலே சுதாரித்து… நமக்குக் கோபம் வருகின்றது… அது எதனால் வருகின்றது…? என்று அறிதல் வேண்டும். தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்து வந்தால் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முடியும்.
1.நம்முடைய உணர்ச்சிகள் ஏன் மாறுகின்றது…? என்று அதை மடக்கித் திருப்பி
2.அடுத்த கணமே அதை மாற்றி அமைக்க… ஆத்ம சுத்தியும் செய்யச் சொல்லும்.
இதையெல்லாம் உங்கள் அனுபவத்திலே தெரிந்து கொள்ளலாம்
ஆனால் அந்தப் பழக்கம் இல்லை என்றால் மீண்டும் சண்டைக்குத் தான் செல்வோம். அதற்குப் பின்
1.வீட்டில் சண்டை வருகின்றது…
2.எங்கே போனாலும் ஒரே பிரச்சினையாக இருக்கின்றது…
3.நான் சொன்னால் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்…! என்று அப்படித்தான் போகும்
அதே சமயத்தில் முழுமையாகத் தெரியாதபடி “இந்தத் தியானத்தைத் தான் கடைபிடிக்கிறேன்” என்று ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் எனக்குத் தொல்லையே வருகிறது… தொல்லை விடமாட்டேன் என்கிறது…! என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
காரணம்… இது எல்லாம் தாய் கருவிலே பூர்வ புண்ணியத்தால் வருவது. அப்படிப் பூர்வ புண்ணியத்தில் வந்தாலும் கூட துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இந்த உணர்வைக் கூட்டி நாம் அதையும் மாற்ற முடியும்
நம்மை அறியாமல் இயக்கக்கூடிய அத்தகைய நிலைகளை அடக்குவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியே கொடுக்கப்படுகின்றது. செய்து பார்த்தேன் முடியவில்லை என்று விட்டுவிடக்கூடாது.
அடுப்பில் சமையல் செய்கின்றோம் என்று “அவசரத்துக்கு வேக வைத்தால்” எப்படி ஆகும்…?
1.நெருப்பைக் கூட்டியவுடன் அடியில் உள்ளது கருகிவிடும்.
2.நடுப்பகுதியில் உள்ளது ஒரு மாதிரி இருக்கும்
3.மேலிருப்பது வேகாமலே போய்விடும்.
இப்படி மூன்று நிலை ஆகிவிடும். நெருப்பை வைப்பதில் இத்தனை நிலைகளும் இருக்கிறது.
அதாவது கனமாக இருக்க கூடிய பொருள்கள் கீழே சென்று விடுகின்றது.. கருகிவிடுகிறது. அதற்கு மேல் இருப்பது குழைந்து விடுகின்றது அதற்கு மேல் அப்படியே அரிசியாக இருக்கின்றது. சூட்டினுடைய இயக்கங்கள் இப்படி மூன்று விதமாக வருகின்றது. சமையலில் பக்குவம் இல்லை என்கிற பொழுது சாப்பிட முடியாது போய்விடுகின்றது.
கோபமாக இருக்கும் பொழுது பாருங்கள்… அடுப்பிலே சூட்டை அதிகமாக்கிக் கொண்டே செல்வார்கள். அப்போது (வேகமாக) கொதித்து வரும் பொழுது கோபத்துடனே மூடியை “வெடுக்…” என்று எடுப்பார்கள்.
1.துணியை வைத்து எடுப்பதற்கு மாறாக அப்படியே கையில் எடுப்பார்கள்
2.சூடு கையில் தாக்கியவுடன் சனியன்…! எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தேன்
3.கடைசியில் என் கையில் சுட்டு விட்டது…! என்று யாரால் இவர்கள் கோபமானார்களோ அவர்களைத்தான் குற்றமாகச் சொல்வார்கள்.
காரணம்… இது எதைச் செய்கிறது என்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான். இயக்கச் சக்தியாக மாறி நம்மை அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா
இந்த மாதிரி உணர்வுகள் வந்தாலும் நம்மை அது ஆட்சி புரியக்கூடாது. ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
1.எதனால் அந்தக் கோபம் வந்ததோ அந்த நிலையை மாற்ற
2.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
3.என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
4.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… சிந்திக்கும் ஆற்றல் வர வேண்டும் என்று
5.இதை நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.
நம் சொல் அடங்கி அடுத்து மற்றவர்களுக்கு நாம் தெளிவான ஆலோசனைகளைச் சொல்லக்கூடிய… பக்குவமான நிலையாக அது வெளிப்படும்.
ஆண்கள் கோபமாகப் பேசினாலும் பெண்கள் இந்த முறைப்படி செய்து தன்னையும் சாந்தப்படுத்தி… கணவரையும் சாந்தப்படுத்த முடியும்
இல்லையென்றால் ஓம் நமச்சிவாய… சிவாயநம ஓம்… அதாவது அவர்கள் உணர்வு இங்கே இயக்கி “என் கணவர் என்னைப் பார்த்துக் கோபமாகவே பேசுகின்றார்… என்னை பார்த்தாலே அவருக்கு ஆக மாட்டேன் என்கிறது…! என்று இப்படி வந்துவிடும்
அதற்குப்பின் கணவரிடம் என்னதான் திருப்பிச் சொன்னாலும் அந்தச் சொல் அங்கு எடுபடாது. சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.
அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். ஒவ்வொரு நொடிப்பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுத்து… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று இந்த உணர்வை வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்
1.என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
2.இதை நாம் ஒரு கவசமாக ஆக்கி… நம் ஆன்மாவிலே அதை அதிகமாக்கி… முன் பகுதிக்குக் கொண்டு வர வேண்டும்.

கிரகணம்
இந்த வாழ்க்கையில் பிறிதொரு தீமையான உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு நம் ரத்தங்களிலே கலந்து விடுகின்றது.
1.அப்படிக் கலந்த உணர்வுகள் நம் நல்ல அணுக்களின் செயலை… அது நல்லதை நுகர விடாது தடுத்து விடுகின்றது.
2.அந்தத் தீமை பெறுகப் பெறுக நல்ல அணுக்களும் கெட்டதாக மாறத் தொடங்குகிறது.
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சிறுகச் சிறுகத் தெரிந்திடும் நிலையாக அனைத்தையும் தெரிந்திடும் நிலையாக மனிதனாக இப்பொழுது வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.
அப்படி வந்தாலும் மனிதன் தன்னுடைய அன்பால் பண்பால் பரிவால் பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தால்… அந்தத் துயர உணர்வுகள் அனைத்துமே நம் ரத்த நாளங்களிலே கலந்து விஷத்தின் தன்மையாகி உடலில் உள்ள நல்ல அணுவின் செயலை மறைத்து விடுகின்றது.
சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டு வெளிச்சமாகத் தெரிந்தாலும் மற்ற மற்ற கோள்கள் அதை மறைக்கத் தொடங்குகிறது. பூரண நிலவாக இருப்பது பூமி மறைக்கத் தொடங்கியபின் சிறுக சிறு இருளாகின்றது. அதே சமயத்தில்
1.இன்னொரு கோளின் தன்மை மறைத்து சந்திரனின் ஒளி பூமிக்குக் கிடைக்காது இருக்கும் பொழுது அதைக் “கிரகணம்” என்று சொல்கின்றோம்.
2.இப்படி ஒரு கோளின் தன்மை இடைமறித்தால் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பெறாதபடி விஷத்தின் தன்மை கலந்து விடுகின்றது.
அத்தகைய கிரகண காலங்களில் அதை நாம் நேரடியாக உற்றுப் பார்த்தால் கண் கருவிழிகளில் விஷம் பாய்ந்து விடுகின்றது. அது பதிந்து விட்டால் கண்களில் கோளாறும் வருகின்றது.
அந்த விஷம் நுகரப்பாட்டு நம் ரத்தங்களிலே கலந்து அணுக்களிலும் சேர்ந்து கொள்கிறது. கிரகணம் அன்று அவ்வாறு சாப்பிட்டால் ஜீரணிக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
1.காரணம் இன்னொரு விஷமான கோளின் தன்மை மறைக்கப்படும் பொழுது
2.சந்திரனின் குளிர்ச்சி ஊட்டும் சக்தி அது நமக்குக் கிடைக்காதபடி தடுக்கப்படுகின்றது.
அது அந்த விஷமான கோள் மறைவாகும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை சந்திரனுடன் கலந்து நாம் பார்க்கப்படும் பொழுது சுவாசித்து உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது. நம்மை அறியாமல் விஷத்தன்மைகள் பாய்ந்து விடுகின்றது.
இது போன்று நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ கிரகணங்கள்… அதாவது மற்ற மனிதர்களின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது. அந்த உணர்வுகள் நம் ரத்தங்களிலே கலக்கக் கலக்க அது மாசுபடுகின்றது.
இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் ஞானிகள் எத்தனையோ வழிகளைக் காட்டி உள்ளார்கள்.
அகஸ்தியன்… அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு “நஞ்சினை வென்று விஷத்தை முறிக்கும் ஆற்றலாக வளர்ந்து” அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக உள்ளான்.
1.அதனின்று வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்து நம் இரத்தங்களில் அடிக்கடி கலக்கக்கச் செய்தோம் என்றால்
2.நம்மை அறியாது இப்படி உள் புகும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!
சமையல் கூடத்தில் பல காய்கறிகளையும் பல வகையான பொருட்களையும் இணைத்துக் கூடடமைப்பாகச் (சமையல் மாஸ்டர்) சமைக்கின்றார்கள். அவர்கள் செய்கின்றார்கள் என்று அதே மாதிரி நாமும் செய்தால் என்ன ஆகும்…?
அவர்கள் அதையெல்லாம் பக்குவப்படுத்தி
1.வேக வைக்கும் நேரம் பார்த்து எதனுடன் எதைச் சேர்க்க வேண்டும்…? எப்பொழுது சேர்க்க வேண்டும்…? என்று செயல்படுத்துவார்கள்
2.ஒரு பகுதி வெந்த பின் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள்.
அதாவது கடினமான காயாக இருக்கும். அதைத் தனியாக வேக வைத்துத் தாளித்து எடுத்து வைத்துக் கொள்வார்கள். சீக்கிரம் வேகுவதைத் தனியாகப் போட்டு எடுத்து வைத்துக் கொள்வார்கள் அதற்குப்பின் இதை இரண்டையும் சமமாகக் கலக்கும் பொழுது ஒன்று போல இருக்கும்.
ஆனால் நாமும் செய்கிறோம் என்று இரண்டு காயையும் ஒன்றாக வைத்து வேக வைத்தால் என்ன ஆகும்…? நேரம் கழித்து வேகுவதும் சீக்கிரம் வேகுவதும் ஒன்றாகச் சமைக்கப்படும் பொழுது ருசி இல்லாமல் போய் விடும்.
அவர்கள் செய்தார்கள் ருசியாக இருக்கின்றது. நாம் செய்தோம் ருசி வரவில்லை என்பர்கள்.
அதே போல அந்த கொதித்து வரும் பருவத்தைப் பார்த்து உப்பைச் சேர்ப்பார்கள்… அது மேல் பருவமாக இருக்கும்.
1.ஆனால் ஒரு சிலர் குழம்பில் முதலிலேயே உப்பைப் போட்டு விடுவார்கள் காய்கறி அந்த உப்பை எல்லாம் எடுத்துக்கொள்ளும்.
2.குழம்பில் உப்பு இல்லை என்று மீண்டும் சேர்ப்பார்கள்… எல்லாமே மாறி விடும்.
சில பெண்கள் அந்தந்த சமயம் பார்த்து குழம்பைக் கிளறி விடுவார்கள். அந்தக் காலப்பருவங்களைப் பார்த்து அது கொதிக்கும் நிலையினைக் கண்டு அந்த நெருப்பை அவர்கள் கூட்டிக் குறைத்து வைப்பார்கள்.
1.குழம்பு வைக்கும் போது நெருப்பைக் கூட்டுவதிலும் குறைப்பதிலும் அத்தனை வித்தியாசம் இருக்கின்றது. அந்தக் குழம்பின் மணமும் நன்றாக இருக்கும் சுவையும் நன்றாக இருக்கும்.
இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள் என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக… ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கின்றார். “அ” என்று சொல்கின்றார். ஆனால் ஆ என்று குழந்தை திருப்பிச் சொன்னால் அப்படிக் கிடையாது அ என்று சொல்ல வேண்டும் என்று திருப்பிக் கற்றுக் கொடுப்பார்.
1.குழந்தை “ஆ…” என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
2.இவனுக்குப் படிப்பு வராது என்று சொல்லி பள்ளியை விட்டு ஆசிரியர் அவனைப் போகச் சொல்ல முடியுமா…?
3.பள்ளியிலே கற்றுக் கொடுப்பவர்கள் அந்த நெறிப்படித் தான் சொல்லி வழி நடத்துகின்றார்கள்.
அது போலத் தான் நம் குழந்தையாக இருந்தாலும் அவன் சுட்டித்தனம் செய்யும் போது அவர்களை நெறிப்படுத்தும் நிலையாக தாய் தந்தையர் ஞானத்தைக் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். “என்ன சொன்னாலும் இப்படியே செய்கிறான்… இவன் உருப்பட மாடடான்…!” என்று சொல்லி விடக்கூடாது.
1.என் குழந்தை அருள் ஞானியாக வரவேண்டும் உலகைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக வளர வேண்டும் என்று கருவிலேயே இந்த உணர்வுகளை ஊட்டினால்
2.தெய்வக் குழந்தைகளாக நிச்சயம் உருவாக்க முடியும்… அந்தச் சக்திகளைத் தாயும் பெறுகின்றது குழந்தையும் பெறுகின்றது.
கடப்பாரையைக் கொடுத்துள்ளார்கள். அதை வைத்துப் பூமிக்கடியில் செல்லும் எலெக்ட்ரிக் வயரை எடுக்க வேண்டும் என்றால் சூதானமாகத் தோண்ட வேண்டும். வேகமாகத் தோண்டி விடலாம் என்று கடைப்பாரையால் குத்தினால் வயரிலே பட்டால் உடனே எர்த் ஆகும். அதுவும் பழுதாகி விடும்… நம்மையும் தூக்கி எறிந்து விடும்.
இதை எல்லாம் ஏன் சொன்கிறோம் என்றால்
1.குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!
2.நன்மை செய்வதற்குத்தான் குருநாதர் சக்தி கொடுக்கின்றார்.
அதை நாம் சீராகக் கையாள வேண்டும். அதற்குத்தான் தான் இத்தனை பக்குவங்களையும் சொல்லிக் கொடுக்கின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உடல் ஆசையை (முதன்மையாக) வைத்து “ரெக்ரியேசன் கிளப்” (RECREATION CLUB) என்று அதில் ஆயுள் மெம்பராகச் சேர்வார்கள். தண்ணீ குடிப்பது (மது) போன்று எத்தனையோ பல தீய பழக்க வழக்கங்களை வைத்து அதிலே நாங்கள் ஒவ்வொருவரும் மெம்பராக இருக்கிறோம் என்கிறார்கள்.
வியாபாரமும் மற்றதுகளையும் அங்கே பேசுவார்கள். ஆனால் அதிலே ஏதாவது நஷ்டமாகிவிட்டால் என்ன ஆகும்…?
தவறான வழியில் சென்று… “எனக்குக் கெடுதல் செய்தான்… எனக்குத் துரோகம் செய்தான்…” என்று ஒருவருக்கொருவர் பகைமைகளை உருவாக்கி வெறுப்பையும் வேதனையையும் (அந்த ஆயுள் மெம்பர்கள்) வளர்த்துக் கொள்வார்கள்.
வேதனையை வளர்த்துக் கடைசியில் உடலை விட்டுப் பிரிந்த பின் ஆவியாக யார் கெடுதல் செய்தானோ அந்த உடலுக்குள் சென்று அவனையும் வீழ்த்தும்.. அதற்குப் பின் நாயோ நரியோ பாம்போ தேளோ அத்தகைய உடலைத் தான் பெற முடியும்.
இத்தகைய ஆயுள் மெம்பர் நமக்குத் தேவையில்லை…!
1.எப்பொழுதும் குருவுடன் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) நாம் இணைந்தே வாழ வேண்டும் என்ற நிலையில்
2.குரு காட்டிய அந்த அருள் வழியைப் பின்பற்றி
3.இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் உடலுக்குள் உட்புகுந்த தீமைகள் இயக்காது தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆயுள் கால மெம்பர்கள் இதை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும்.
1.குருவுடன் ஆயுள் கால மெம்பராக நான் (ஞானகுரு) இருக்கின்றேன்
2.அவர் எதையெல்லாம் பெற்றாரோ அவர் வழியினைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
3.குரு எனக்கு எதையெல்லாம் போதித்தாரோ… எவ்வாறு எனக்குள் அதைப் பதிவு செய்தாரோ.. அதைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
குருவுடன் இணைந்து ஆயுள் மெம்பராக இருக்கின்றேன் நீங்களும் என்னைப் போல் அவருடன் இணைந்து ஆயுள் மெம்பராக இணைதல் வேண்டும்.
குடும்பத்துடன் தான் நாங்கள் குருவுடன் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தோம். நீங்களும் குடும்பத்துடன் குருவுடன் இணைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
நம் குருநாதர் காட்டிய அருள் வழிகளை குறைந்த காலமாவது உபதேசங்களைக் கேட்டிருப்பீர்கள். குருவின் அருள் வழியைக் கடைப்பிடிப்பதை நீங்கள் ஒரு கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மெய் ஞானத் திருச்சபையின் அங்கத்தினர்களாக நாம் இருக்கின்றோம்.
1.நம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை நீக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாக வேண்டும்
2.அதற்குத் தான் அருள் ஞானச் சக்கரத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.
மாமாகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு… பேரருள் பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் அதில் ஆயுள் மெம்பராக நாம் சேர வேண்டும்.
அருள் ஞானச் சக்கரத்தைப் பார்க்கும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அதன் பின் உங்களுக்கு எதுவெல்லாம் நல்லதாக வேண்டுமோ…
1.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்; நண்பர்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.நோய்கள் நீங்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்;
3.தொழில் செய்யும் இடத்தில் குற்றம் குறைகள் நீங்க வேண்டும்;
4.துருவ நட்சத்திரத்தின் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்;
5.பொருளறிந்து செயல்படும் திறன் எல்லோரும் பெற வேண்டும்
6.உண்மையை உணர்ந்து… தெளிந்த நிலை எல்லோரும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
7.புருவ மத்தியில் உயிரை வேண்டி சக்கரத்திற்கு முன் இப்படி எண்ணும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.
குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தி என் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று தியானித்தால் நோய் நீங்கும்.
நோய் நீக்கும் சக்தியை எடுத்து நமக்குள் விளைய வைத்து அதன் வழி செயல்பட்டால் எல்லாம் நல்லதாகும். உங்களால் அடுத்தவருடைய நோய் போகும்… ஆனால் அவருடைய நோய் உங்களுக்கு வராது.
1.ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக “அருள் ஞானச் சக்கரம்” கொடுக்கின்றோம்.
2.உலகில் படர்ந்து கொண்டிருக்கக்கூடிய நச்சுத்தன்மையிலிருந்து உங்களை மீட்டிடும் சக்தியாக வரும்.
ஆகவே துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக என்றுமே நாம் இணைந்து இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதை ஒரு தலையாகக் கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து அதிலே நாம் ஆயுள் மெம்பராகச் சேரும் போது “நம்முடைய ஆயுள்” (வாழ்க்கை) அங்கே செல்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உயிரைக் கடவுளாக வணங்கி உடலை ஆலயமாக நாம் மதித்துப் பழக வேண்டும். மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வமாக மதிக்க வேண்டும்.
பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்… உடல் சிவமாக இருக்கின்றது நம் கண்கள் கண்ணனாக இருக்கின்றது.
இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் வேதனை கோபம் போன்ற குணங்கள் அதிகமானால் இரத்தக் கொதிப்பாகி விடுகிறது.
அந்தக் கோபத்துடன் ஒரு கணக்கைப் பார்த்தால் அது சரியாக வராது. சரியாக வரவில்லை என்றால் “எவன் எழுதி வைத்தானோ…?” என்று அடுத்தவன் மேல் தான் இந்தக் கோபம் செல்லும்.
நாளாக நாளாக இந்தக் கோபம் பெருகி….
1.சிறு மூளையில் இருக்கும் ட்ரான்சாக்சன் செய்யக்கூடிய அந்த நரம்புகள் வெடித்தால் மூக்கு வாய் வழியாக இரத்தம் வரும்.
2.அதே சமயத்தில் இருதயத்தை இயக்கக்கூடிய நுண்ணிய நரம்புகள் செயலிழந்து இருதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்) வரும்.
வேதனை வேதனை என்று எண்ணினால் கண்ணுக்குள் விஷத்தன்மை பாய்ந்து அது ஈர்க்கும் தன்மை இழந்து இருள் சூழும். கருவிழி நன்றாக இருந்தாலும் பார்வை மங்கிவிடும்…. மருத்துவரிடம் சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள்.
1.அப்படிப் பண்ணிவிட்டான்… இப்படிப் பண்ணி விட்டான் என்று அடிக்கடி வேதனைப்படும் பொழுதெல்லாம்
2.அந்த (வேதனை) நஞ்சு கண்ணிலே படர்ந்து அதை இருளாக்கிவிடுகிறது
3.இப்படி எல்லாம் கண்ணுக்கும் நாம் கெடுதல் செய்கின்றோம்.
ஆரம்பத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் புழு உடலாக இருக்கும் போதே துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக… “பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும்…” என்று எடுத்துக் கொண்ட உணர்வு தான் வளர்ச்சியாகிக் கண்களாக உருப்பெற்றது.
கண்கள் உருப்பெற்ற பின் பார்த்து
1.தீமை என்ற உணர்வை எடுத்து… உணர்ச்சியைக் கூட்டி எண்ணங்கள் வருகிறது
2.அந்த எண்ணத்தின் உணர்ச்சி கொண்டு “தன்னைக் காக்கும் நிலை…” வருகிறது.
3.இது எல்லாம் நாம் நுகர்ந்த உணர்வு எண்ணங்களாக வந்து…
4.இந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி அதன்வழி நம் உடலாகி…
5.அதன்வழி நம்மை (உரு)மாற்றிக் கொண்டே வருகின்றது.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் குரு காட்டிய அருள் வழியில் செயல்பட வேண்டும். காரணம் குறுகிய காலமே இந்த மனித உடலில் வாழ்கின்றோம்.
கோடிக் கோடி சொத்துகளைச் சேர்த்து வைத்தாலும் அதைப் பார்த்த பின் மற்றவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டு விடுகிறது. பொறாமைகள் வந்த பின் என்ன நினிக்கின்றோம்…?
1.இவன் எனக்குத் தொல்லை கொடுக்கின்றான்… திரும்பத் திரும்ப இடைஞ்சல் செய்கின்றான்
2.என் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் இப்படிச் செய்கின்றான் என்று
3.செல்வம் குவிந்திருந்தாலும் அதன் வழி விரோதிகளைத் தான் வளர்க்க முடிகிறது… பகைமைகளைத் தான் உருவாக்குகின்றோம்.
4.பகைமைகளை உடலில் சேர்த்து அந்த உணர்ச்சியோடு தான் ஒவ்வொரு நாளும் வேதனைப்பட்டு ஆத்திரப்பட்டு வாழுகிறோம்
5.அதனால் உடலில் பல தொல்லைகள் தான் வளர்கின்றது
இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு நீங்கள் முயற்சி எடுங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும்
1.யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து… துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழகுங்கள்.
2.“எங்கே வெளியே சென்றாலும் அதை உற்று நோக்கிப் பார்த்து ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள்…”
பிறரின் துன்பங்களைக் கேட்டறிய நேர்ந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இதன் வழி அதை அடக்கி… அறியாது வந்த தீமைகளிலிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்; பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எடுத்து மாற்றிக் கொண்டே வேண்டும்
அது தான் தனுசுகோடி…! கோடிக்கரை என்ற மனித உடலில் இருக்கின்றோம்…. உடலை விட்டுச் சென்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி நாம் விண் செல்கின்றோம்… கல்கி.
1.இந்த உடலைக் கழட்டிவிட்டு
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றோம்
ஏனென்றால் விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷ அணுக்களாகப் பரவி “வைரஸ் என்ற கிருமிகள்” பல விதமான காய்ச்சல்களாகப் பரவிக் கொண்டிருக்கிறது சில உடலில் சில குடும்பங்களில் சில நாடுகளில் இது அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.
ஒருவருக்கொருவர் சண்டையிடுதலும் வேதனைப்படுதலும் மந்திர ஜாலங்கள் செய்வதும் போன்ற செயல்கள் நடந்து கொண்டுள்ளது. மாயாஜாலங்களைச் செய்து அது நடக்கவில்லை… ஒன்றும் முடியவில்லை என்றால் சாப அலைகளை விட்டு உடலை விட்டுப் பிரிந்துவிடுகிறது.
இப்படி வெளிச் செல்லும் ஆன்மாக்கள் குடும்பத்தில் தெருக்களில் ஊர்களில் பல தொல்லைகள் கொடுக்கக்கூடியதாக மக்களுக்குத் துன்பம் விளைவிப்பதாக வந்து கொண்டிருக்கிறது.
1.அதிலிருந்து மீண்டிட நம் வீட்டிலும் சரி தெருவிலும் சரி ஊரிலும் சரி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை “அடர்த்தியாகப் பரவச் செய்ய வேண்டும்…”
3.மக்களை மீட்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்
4.ஒவ்வொரு உயிரும் கடவுள் என்றும் ஆண்டவன் என்றும் ஈசன் என்றும் நம் குருநாதர் உணர்த்திய வழியில் செயல்படுத்த வேண்டும்
இவ்வாறு செய்தால் உயிர் வீற்றிருக்கும் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிலையாக வருகிறது. மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களுக்கு நல்ல அமுதாகக் கிடைக்கிறது.
எல்லா உயிரையும் கடவுளாக மதிக்கும் பொழுது… ஈசனாக மதிக்கும் பொழுது… அவர்கள் குறைகள் நீங்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நமக்குள்ளும் அது பெருகுகிறது. இந்த வழியில் வளர்த்து நாம் ஆனந்தப்பட வேண்டும்.
கோடிக்கரையிலிருக்கும் நாம் தனுசுகோடியாக ஒளியாக…
1.எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்.
2.எதிலுமே இருள் என்ற நிலை வராதபடி பேரருள் பேரொளியாகப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.


எம்மிடம் ஆசி பெற்றாலும் யாம் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம்
சாமியாரிடம் ஆசி வாங்கினால் போதும் என்ற நிலையில் என்னிடம் ஆசி வாங்கினால் அன்றைய தினத்திற்கு நன்றாக இருக்கும்.
1.அடுத்து நீங்கள் யாம் சொன்ன வழியைக் கடைப்பிடித்தால்
2.நிலையாக உங்களுக்குச் சரியாகும்.
அப்படி இல்லாது “சாமியிடம் ஆசி வாங்கினேன்… நன்றாக இருந்தது..!” என்று ஒரு சொல்லில் சென்று விட்டால் அடுத்து என்ன ஆகின்றது…?
சண்டை போடுபவன் வேதனைப்படுபவன் சங்கடப்படுபவன் இவர்களை எல்லாம் இரக்கத்துடன் உற்றுப் பார்த்தால்… அடப் பாவமே நல்ல மனிதன் இப்படி ஆகிவிட்டார் என்று வேதனையான உணர்வை உணர்ந்தால் அந்த உணர்ச்சிகள் உங்கள் ரத்தத்தில் தான் கலக்கின்றது.
1.கலந்த பின் நல்ல அணுக்கள் பிடிக்காது அதை விட்டு விடுகிறது.
2.நல்ல
3. அணுக்கள் ஏற்கவில்லை என்றால் சிந்திக்கும் தன்மை குறைகிறது… வியாபாரம் செய்தால் மன வலிமை இல்லாது போய் விடுகின்றது.
மன வலிமை இல்லை என்றால் நல்ல சரக்கைத் தேர்ந்தெடுக்க முடியாது. நல்ல சரக்கை எடுத்தாலும் கூட நம் சொல் வெளிப்படும் பொழுது அதனுடன் வேதனை கலந்து வருகின்றது.
1.நம் கடையில் துணியை எடுக்க வருபவர்கள் இந்தச் சரக்கைப் பார்த்த பின் அவர்களுக்கு அதிலே வெறுப்பு வருகின்றது.
2.ஏனென்றால் நம் உணர்வுகள்… அந்த மணம் அதில் பட்டபின் அவர்கள் அதை நுகரும் பொழுது துணியை வாங்குவதில்லை.
வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி வருகின்றது. இதை எல்லாம் துடைக்க வேண்டும் அல்லவா. இது போன்று நம்மை மறைக்கும் “சிறு திரைகளை” அவ்வப்போது தூய்மைpபடுத்த வேண்டும்.
ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்தியை உடலுக்குள் சேர்த்து ரத்தத்தில் கலந்து இருளை மாற்றிப் பழக வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் இதைச் செய்து பழக வேண்டும்.
ரோட்டில செல்கின்றோம்… உடையில் தூசி படுகின்றது. துணியை அடுத்து துவைத்து விடுகின்றோம். நாம் ஒரு வேலை செய்கின்றோம்… கையிலே அழுக்குப் படுகின்றது. உணவை உட்கொள்ளும் முன் கையைத் தூய்மைப்படுத்துகின்றோம்.
இதே போன்று தான் ரோட்டில செல்கின்றோம்… ஒருவர் வேதனைப்படுபவதைப் பார்க்கின்றோம்.
1.அது அழுக்காக நம் ஆன்மாவிலே படுகின்றது… ரத்தத்தில் கலக்கின்றது.
2.ரத்தத்தில் அசுத்தமாவதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.
நல்ல உணர்வுகள் இருந்தாலும் பிறருடைய வேதனை உணர்வுகள் அந்த நல்ல குணத்திலே சித்திரை சிறு திரையாக மறைத்து விடுகின்றது… மூடி விடுகின்றது. இந்த வேதனை தான் முன்னணியில் வருகின்றதே தவிர நீக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.
இதைப் போன்ற தீமையெல்லாம் நீக்கி ஒளியாக இருப்பது துருவ நட்சத்திரம்.
1.அதை நாம் நுகர்ந்து எடுத்து நம் ரத்தத்திலே கலந்து தூய்மைப்படுத்த வேண்டும்.
2.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தீமையை நீக்கிய அனுபவங்கள் இல்லையென்றால் தியானத்தைச் செய்து பலனில்லை
படித்ததை மட்டும் வைத்துக் கொண்டு இன்ஜினியர் வேலை பார்த்தால் அவர் காரியத்திற்கு ஆகாது. அனுபவ சித்தி அவசியம் வேண்டும்.
அதைப் போன்று தான் யாம் சொன்னதை எல்லாம் வெறும் பாடமாக வைத்துக் கொண்டு “சாமி சொன்னார்…!” என்று மட்டும் எண்ணக் கூடாது.
உபதேசிப்பதை எல்லாம் முதலில் ஆழமாகப் பதிவு செய்து ஞாபகத்தில் வைத்து… அதை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்திலே குறைபாடுகள் எப்படி வருகின்றது…? என்று அறிந்திடும் அந்த அனுபவம் வேண்டும்.
2.யாம் சொன்னதை எடுத்துப் பயன்படுத்தி அந்தக் குறைகளை மாற்றி அமைக்கக்கூடிய அனுபவம் பெற வேண்டும்.
3.”எது வந்தாலும்” அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து… நல்லதாக வேண்டும் என்று அதைத் தூய்மைப்படுத்தி…
4.அப்படித் தூய்மையாக்கிய அனுபவங்கள் கட்டாயம் வேண்டும்.
படித்துப் பட்டம் பெற்ற இன்ஜினியர் என்றாலும் அனுபவம் இல்லை என்றால் படித்த பாடத்தால் பலன் இல்லை. மருத்துவர்களாக வருபவர்கள் முதலிலே மருத்துவம் பற்றியதை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்கின்றார்கள்.
படித்த படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு “நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது…” அவர்களுக்கு அனுபவத்திற்கு என்று தனியாகப் பயிற்சி கொடுப்பார்கள்.
ஏனென்றால் ஒருவருக்கு ஒரு நோய் இருக்கிறது என்றால் படித்ததன் பிரகாரம் மட்டும் மருந்து கொடுக்க முடியாது. காரணம்…
1.அவர் உடலில் மற்றொரு உபாதை இருக்கும்…
2.அதற்கு இந்த மருந்து எதிர்ப்பதம் ஆகிவிடும்.
அதாவது ஒருவருக்கு ஆஸ்த்மாவும் இருக்கும்… இரத்தக் கொதிப்பும் இருக்கும். ஆஸ்துமாவுக்கு மருந்து கொடுத்தால் இரத்தக் கொதிப்புக்கு ஆகாது. இரத்தக் கொதிப்புக்கு மருந்து கொடுத்தால் ஆஸ்துமாவுக்கு ஒத்துக் கொள்ளாது.
மீண்டும் அவருக்கு நோய் அதிகமாகும்… வேதனையாகி பாதிப்புகள் அதிகமாகும்.
ஆனால் இது இரண்டையும் சமப்படுத்தும் நிலையாக
1.அதற்கு எப்படிப்பட்ட மருந்து கொடுக்க வேண்டும்…? என்று அந்த மருத்துவர் சிந்தனை செய்து
2.தன்னுடைய அனுபவத்தால் செயல்படுத்தி இரண்டையும் சீராக்கினால் தான் அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.
ஆனால் “இன்ன நோய்க்கு… இன்ன மருந்து தான்” கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அந்த ஆஸ்துமாவிற்கு என்று அவர் தனித்து மருந்து கொடுத்தால் சீராக வராது இரத்தக் கொதிப்புக்குக் குளிர்ச்சியான நிலை உருவாக்கும்படி செய்தால் ஆஸ்துமாவுக்கு அதிகமாகிவிடும். கர்…புர்… என்று இழுத்துக் கொண்டிருக்கும்.
அப்பொழுது எந்த நோயை நீக்குவது…?
ஆகவே அனுபவரீதியிலே இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தித்து
1.ஆஸ்துமாவுக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த உஷ்ணத்தை மேலே ஏற்றி
2.அதனுடன் இரத்தக் கொதிப்பிற்கு குளிர்ச்சிக்குண்டானதைக் கொடுத்துச் சமப்படுத்திக் கொண்டு வந்தால் இரண்டும் சமமாகும்.
3.ஆஸ்துமாவையும் குறைக்கும்… இரத்தக் கொதிப்பையும் குறைக்கும்.
ஆனால் சமப்படுத்த முடியாத மருந்தைக் கொடுத்தால் அது வேலையாகாது. குளிர்ச்சியைக் கொடுத்துத்தான் கொதிப்பை அடக்க முடியும். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான செயலாக்கங்கள் வரும். அதனுடைய செயலாக்கங்களை அறிந்து அனுபவரீதியிலே கொண்டு வர வேண்டும்.
அதற்குத்தான்…
1.எம்முடைய (ஞானகுரு) அனுபவத்தை உபதேச வாயிலாக உங்களிடம் சொல்கின்றேன்.
2.அனுபவத்தைச் சொல்லி எந்த நிமிடத்தில்… அந்தக் குறைகள் எப்படி உங்களை இயக்குகின்றது…? என்றும்
3.அதை மாற்றி அமைக்க ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை எண்ணி அருள் சக்திகளை அங்கே நிலை நிறுத்தி
4.உங்கள் உடலுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்று வாக்கினால் அதைப் பதிவு செய்கிறேன்.
அந்தப் பதிவை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி நான் சொன்னதை எல்லாம் நீங்கள் கடைப்பிடித்து…
1.நான் செய்தேன் என்று செயல்படுத்தி அனுபவபூர்வமாக ஒவ்வொன்றாக்க் கொண்டு வந்தால்
2.அதன் வழி தான் இதை மாற்றியமைக்கக்கூடிய நிலையைக் கொண்டு வர முடியும்.
தொழிற்சாலையிலும் சரி… ஒரு இயந்திரத்தைச் சீராக்குவதிலும் சரி… அதைப் பற்றி அனுபவரீதியாகத் தெரிந்த பிட்டர்கள் (FITTER) இருப்பார்கள். படித்தவர்களைக் காட்டிலும் அவர்கள் அனுபவ அறிவு கொண்டவர்கள்.
ஆனால் இன்ஜினியரோ நான் சொன்னபடி செய்ய வேண்டும் என்று சொல்லலாம். அதன்படி செய்தும் விடலாம் ஆனால் அந்த இயந்திரம் வேலை செய்யும் போது அங்கே தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.
தேய்மானம் ஆகும் போது அங்கிருக்கும் பிட்டருக்கு அதை பற்றி அனுபவம் இருக்கிறது. இந்த இடத்தில் சாய்வாக இருக்கின்றது… சமமாக்கி நேராக்கினால் தேய்மானம் ஆகாது… சரியாகிவிடும் என்று அவன் சொல்கிறான்.
ஆனால் படித்தவன் நான் சொல்கின்றேன்..! பிட்டர் நீ இந்த மாதிரிச் சொல்கிறாயே என்று இஞ்சினியர் சொன்னால் சரியாக வருமா…?
சில பேர் இப்படித்தான் நான் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கின்றேன்… தியானம் எல்லாம் கற்றுக் கொண்டிருக்கின்றேன். குண்டலினி யோகா செய்திருக்கின்றேன் என்றெல்லாம் சொல்வார்கள்.
1.ஆனால் “அந்த நுணுக்கம்…” எதிலிருந்து வருகின்றது…? என்று இல்லாதபடி சொன்ன பாடத்தை ஒப்படைக்கின்றார்கள்.
2.எப்படி மாற்றிக் கொண்டு வருவது…? என்பதை ஒதுக்கி அதை விட்டு விடுகிறார்கள்.
படித்தவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். படிக்காதவர்கள் தியானத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது நான் எத்தனையோ படித்திருக்கின்றேன் எனக்கு எல்லாம் தெரியும் என்னிடம் வந்து நீ சொல்கின்றாயா…? என்று சொல்வார்கள்.
இப்படிச் சொன்னால்
1.படிக்காதவர் கண்டுபிடித்துச் சொன்னதை
2.படித்தவர் அறிய முடியாது போய்விடும்.
இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.
(அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகள் கொண்டு செய்தோம் என்றால் அது பக்குவமாகும்).
வீட்டில் வடை சுடுவார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு நாமும் சொல்லலாம். அட.. அடுப்பில் சட்டியை வைத்து எண்ணை காய்ச்சுகிறார்கள்… மாவைத் தட்டிப் போடுகிறார்கள்… அவ்வளவு தான்…! என்றும் நினைக்கலாம்.
தண்ணீரைத் தெளித்து அவர்கள் எண்ணையின் சூட்டைக் கணிப்பார்கள் அது சுய்… என்று சப்தமிடும். ஓ… இவ்வளவுதானா…! என்று இவர்களும் அதே போன்று செய்து பார்க்கும் போது சுய்… என்று சப்தமிடும்.
1.ஆனால் அந்தச் சப்தத்தின் வித்தியாசங்கள் அவர்களுக்குத் தெரியும்
2.எந்த அளவிற்கு எண்ணெய் காய்ந்திருக்கிறது என்று…!
அதற்குத் தகுந்தது போன்று அவர்கள் மாவை பிசைந்து கொண்டே இருப்பார்கள். அல்லது மற்ற வேலை செய்வார்கள். அதற்குப்பின் இந்த வடையைப் போடுவார்கள். சமமாக அவர்கள் 10 வடையைப் போட்டர்கள் என்றால் அந்தப் பத்திற்கும் சூடு சரியாக இருக்கும். வெந்து சீராக வரும்… ருசியாகவும் இருக்கும்.
ஆனால் புதிதாக வடை சுடுபவர்கள் தட்டிப் போட்டால் ரெண்டு அல்லது மூன்று வடையைப் போட்டதும் எண்ணையிலிருக்கும் சூட்டை எல்லாம் அது எடுத்துக் கொள்ளும். அடுத்து வடையைத் தட்டிப் போட்டால் சரியாக வேகாது. எண்ணை எல்லாம் மாவிற்குள் புகுந்து விடும்… எண்ணெய் காணாது போய்விடும்.
ஆனால் அனுபவம் பெற்றவர்கள் சுட்டுப் போட்டால் வடையில் எண்ணெய் இல்லை… வடை மொறு… மொறு… என்று ருசியாக இருக்கிறது.
ஆனால் அவர்கள் சுட்டதில் எண்ணை இருக்கிறது. மாவாக இருக்கிறது என்று சூட்டைக் கூட்டினால் மேலே கருகிவிடும். ஐய்யய்யோ கருகிவிட்டதே…! என்று எடுத்தால் இந்தப் பக்குவம் தவறும் போது என்ன ஆகிறது…? சாப்பிட்டால் ருசி இல்லை.
காரணம் அந்தப் பக்குவம் தெரிய வேண்டும்…!
ஆக எதுவுமே… ஒரு சிறியதாக இருந்தாலும் எல்லாவற்றிலும் அந்தப் பக்குவம் வேண்டும்
1.ஆன்மீகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் “பக்குவ நிலை பெறுவதற்குத் தான்” உணர்வுகளை அனுபவித்துச் சொல்கின்றோம்.
2.எம்மைப் போன்று நீங்களும் அனுபவரீதியில் தியானத்தை எடுத்து வளர்ந்தால் “உங்களைக் காப்பதற்கு உங்கள் எண்ணம் உதவும்…”


உடல் உறுப்புகள் சீராக இயங்க அடிக்கடி ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்
இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி சஞ்சலம் சலிப்பு சங்கடம் என்ற உணர்வுகளை நுகர நேர்ந்தால் ரத்தங்களில் அத்தகைய தீமைகள் அதிகரித்து விடுகின்றது. சலிப்பு சஞ்சலம் என்று வரும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.
1.சிறிது நேரத்தில் புளிப்படைந்து உடல் வலு குறைந்து எண்ணங்கள் குறைந்து நமது செயலும் சீராகச் செயல்படுத்த முடியாது போய் விடுகின்றது.
2.புளிப்பின் தன்மை அதிகரிக்கும் பொழுது வாயுவின் தன்மை உருவாகி சோர்வடைகின்றோம்… சிந்திக்கும் தன்மையும் குறைகின்றது
3.தொழில் செய்ய வேண்டும் என்றாலோ மற்ற வேலை செய்ய வேண்டும் என்றாலோ ஒரு கணக்கைப் பார்க்க வேண்டும் என்றாலோ நம்மால் முடியாது போய் விடுகின்றது.
இப்படி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாதபடி உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினைப் பிரித்துப் பரிசுத்தமாக்கும் நிலையை ரத்தம் சுத்தமாவது இழந்து விடுகின்றது.
பாலில் சிறிதளவு உப்புப் பட்டால் எப்படிப் பிருத்து விடுகின்றதோ கெட்டுப் போய் விடுகின்றதோ இதைப் போல ரத்தங்களில் தீமையின் நிலைகள் அதிகரிக்க சுத்திகரிக்கும் சிறுநீரகங்கள் பாழடைந்து விடுகிறது.
அதே சமயத்தில் உணவுக்குள் கலந்து வரும் பித்த சுரபி விஷத்தின் தன்மையை அதிகரித்து விட்டால் வாந்தி மயக்கம் தலை சுற்றல் போன்று அதிகரித்து விடுகின்றது.
காரணம் விஷத்தைப் பிரிக்கும் நிலை இழந்து பித்தம் அதிகமாகி ரத்தத்துடன் அதிகமாகக் கலந்து விட்டால் மயக்கம் வருகின்றது.
1.பித்தத்தை உறிஞ்சும் அந்த உறுப்புகளுக்கு கவலை சோர்வு என்ற நிலை அதிகரிக்கப்படும் பொழுது
2.பித்த சுரப்பி சரியாக இயங்கும் நிலை குறைந்து விடுகின்றது. ரத்தங்கள் மாசுபடத் தொடங்குகிறது.
இதைப் போன்று நமது வாழ்க்கையில் வேதனை கோபம் வெறுப்பு ஆத்திரம் போன்ற உணர்வுகளை அடிக்கடி நுகர நேர்ந்தால் கல்லீரல் வீக்கம் அடைகின்றது. பல உணர்வுகளை வடித்துத் தெளிவாக்கும் விரிவாக்கம் தன்மை இழக்கப்படுகிறது.
இதே போன்று உடலில் உள்ள உறுப்புகளில் விஷத்தின் தன்மை அதிகரிக்கும் போது உடல் உறுப்புகள் சீராக இயங்காத நிலை ஆகிறது. நஞ்சினைப் பிரிக்கும் செயலை இழந்து விடுகின்றது.
அப்பொழுது நல்ல ஆகாரங்களை உட்கொண்டாலும் உயர்ந்த சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும்
1.அந்தச் சத்தை நஞ்சாகத்தான் மாற்றுகின்றதே தவிர அந்த சத்தினை உடலுக்குள் நல்லதாக மாற்றுவதில்லை.
2.காரணம் அதை ஜீரணிக்கும் திறன் கொண்ட நல்ல அமிலங்கள் இயங்கது போவதால் ஜீரணிக்கும் இயல்புகளை மாறி விடுகின்றது.
3.உடல் உறுப்புகள் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.
இதைப் போன்ற நிலைகள் வராது தடுக்க உடனுக்குடன் நாம ஆத்ம சுத்தி செய்ய வேன்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நிறுத்த வேண்டும். அடுத்து கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று “இப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட வேண்டும்…”
நம் உடல் உறுப்புகளை இப்படி வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் உடனே ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி
2.துருவ நட்சத்திர்த்தின் வலுவை ஏற்றித் தீமை உள்ளே போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு தாய் கர்ப்பமுற்றிருக்கும் பொழுது… சர்க்கரைச் சத்து நோய் உள்ளவரை ஒன்றில் இருந்து தொண்ணூறு நாட்களுக்குள் உற்றுப் பார்த்தாலே போதும். இந்த உணர்வு தாயின் இரத்தத்தில் கலந்து கருவில் இருக்கும் குழந்தைக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.
இது தாய்க்கு அதிகமாகச் சேர்வதில்லை. ஆனால் இந்த உணர்வு கருவுக்குள் சென்ற பின் குழந்தைக்கு இணைத்து விடுகின்றது. குழந்தையாக இருக்கும் போதே அதற்கு சர்க்கரைச் சத்து நோய் வந்து விடுகிறது.
அந்தக் குழந்தை தவறு செய்ததா…? இல்லை.
எங்கள் குழந்தைக்குச் சர்க்கரைச் சத்து நோய் இருக்கிறது.. சரி செய்ய வேண்டும் என்று சொல்லி என்னிடம் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள்.
1.தாய் உற்றுப் பார்த்து எடுத்துக் கொண்ட உணர்வினால் தான் குழந்தைக்கு அது வந்தது
2.ஆகையினால் தாய் தான் எண்ணி அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொன்னேன்
3.மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் குழந்தை உடல் முழுவதும் படர்ந்து சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் என்று
5.”குழந்தையின் கண்களைப் பார்த்து” அந்த உணர்வுகளைப் பாய்ச்சும்படி சொன்னேன்.
அப்படித்தான் அதைக் குறைக்க முடியும்… மருந்து கொடுத்து அல்ல. சிறிய வயதிலேயே இன்சுலின் இன்ஜெக்க்ஷன் போட்டுச் சர்க்கரை சத்தை மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்றால் முடியாது
காசு இருக்கிற வரைக்கும் செய்வார்கள். இன்சுலின் போட்டுக் குழந்தையைக் காக்க வேண்டும் என்று செய்தாலும் ஒரு நாளைக்கு இல்லை என்றால் மயக்கப்பட்டு அது கீழே விழுந்துவிடும்.
தாயின் கருவில் உருவாகக்கூடிய குழந்தைகளின் நிலை இன்று இப்படித்தான் இருக்கின்றது.
ஏனென்றால் வீட்டில் டிவி மற்ற எல்லாமே இருக்கின்றது. விளையாட்டுகளையும் கேளிக்கை நிகழ்ச்சிகளையும் எத்தனையோ அதிலே காட்டுகின்றார்கள்.
தாய் இதை எல்லாம் உற்றுப் பார்க்கும் போது பதிவாகி விடுகின்றது கருவிலே இது இணைந்து… குழந்தை பிறந்த பின் டிவி மற்ற சாதனங்களை சிறு வயதிலேயே அதைச் சீராக இயக்குவதும்… விளையாட்டுகளை ஆனந்தமாக விளையாண்டு ரசிப்பதும்… இதையெல்லாம் இன்று நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
1.ஆனால் படிப்பையோ மற்ற நல்ல பழக்க வழக்கங்களையோ எளிதாகக் கொண்டு வர முடியவில்லை.
2.பெரும்பகுதி குழந்தைகள் டிவி மற்றும் அதைப் போன்ற சாதனங்களிலேயே இன்று நாட்டமாக இருப்பார்கள்.
காரணம்… தாய் கருவில் பதிவானது இப்படி வந்து விடுகின்றது. ஆனால் பார்த்தது வேடிக்கைதான்… குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அது அமைந்து அதன் வழியே அந்தக் குழந்தையை வழி நடத்துகின்றது
அதே போல் தான் காக்காய் வலிப்பு வந்த ஒரு குழந்தையை கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் அதே நோய் வருகின்றது.
1.வாழ்க்கையில் இது போன்று சுவாசிக்கும் உணர்வுகள் நம்மையும் பாதிக்கின்றது
2.எதிர்காலக் குழந்தைகளையும் பாதிக்கின்றது.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனோ தாய் கருவிலே நஞ்சை முறிக்கும் ஆற்றல் பெற்றான். அகண்ட அண்டத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகளை அறியும் ஆற்றலும்… அதில் இருக்கக்கூடிய நஞ்சுகளை வெல்லக்கூடிய சக்தியும் அவனுக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கிறது.
1.இது அவனுடைய சந்தர்ப்பம்… நஞ்சை வெல்லக்கூடிய சக்தி அவனுக்குக் கிடைக்கின்றது
2.மற்ற மனிதர்களைக் காட்டிலும் இவன் அறிவில் வளர்ச்சி கொண்டவனாக வருகின்றான்.
வான் வீதியை உற்று நோக்குகின்றான். 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின்னலாக மாறுகின்றது… அந்த ஒளிக்கற்றைகளை அவன் தனக்குள் நுகர்கின்றான்.
நம் பிரபஞ்சத்தைக் காட்டிலும் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய சக்திகள் இந்தப் பூமிக்குள் வந்தால் அது கடுமையான விஷத்தன்மையாக இருப்பதால் பல தீங்குகளைச் செய்கின்றது என்பதனை அறிகின்றான்.
ஆனால் அவன் உடலிலே அந்தத் தீங்கை மாற்றும் சக்தி இருப்பதால் அதை எல்லாம் நுகர்ந்து… தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இரத்தத்தின் வழி அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்குகின்றான்.
1.மின் கதிர்களை ஜீரணிக்கக் கூடிய சக்தி அவனுக்கு வருகின்றது… அது வளர்ச்சி அடைகிறது
2.உயிரைப் போன்றே உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிடும் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் வளர்ச்சி அடையத் தொடங்குகிறது.
27 நட்சத்திரங்கள் 27 விதமான நிலைகள் மோதும் போது அந்த மின் கதிர்கள் வெளிப்படுவதை அகஸ்தியன் சுவாசிக்கின்றான்… அது அவனுக்குள் அடங்குகிறது.
புறத்திலிருந்து வருவதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதிலுள்ள விஷத்தை ஒடுக்கிப் பாதரசமாக மாற்றி உமிழ்த்தப்படும் போது… “இந்த உலகிற்கே ஒளி தருவது போல…” 27 நட்சத்திரங்களின் ஆற்றலை அகஸ்தியன் நுகரப்படும் போது… இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் அறிவாக… அண்டத்தை அறியும் சக்தியாக அவனுக்குள் வந்து சேர்கின்றது
துருவத்தின் வழி இதையெல்லாம் அவன் உற்றுப் பார்த்துத் தனக்குள் அடக்கியதால் துருவன் என்ற காரணப் பெயரையும் வைக்கின்றார்கள். அந்த ஆற்றல்களை அவன் பெருக்கி வளர்ச்சியாகும் போது பதினாறாவது வயதில் அவனுக்குத் திருமணம் ஆகிறது..
செடி கொடியாக இருந்தாலும் கல் மண்ணாக இருந்தாலும் உயிராக இருந்தாலும் எல்லாமே “ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரம் என்ற இயக்கத் தொடர்கள் கொண்டது தான்” என்பதை உணர்கின்றான்.
தான் பெற்ற சக்திகளையும்… கண்ட பேருண்மைகளையும் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான்… உணரும்படி செய்கிறான். அதன் வழி அவன் மனைவியும் நுகர்ந்தறிகிறது.
கணவன் மனைவியாக இருவருமே விண்ணின் ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து இரு உயிரும் ஒன்றாகி ஒளி உடலாகப் பெற்று துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்.
1.அந்த அகஸ்தியனைப் போன்று எல்லோரும் பேராற்றல்கள் பெற வேண்டும்…
2.அத்தகைய ஞானியாக நாம் உருவாக வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றோம் (ஞானகுரு).


மனிதனின் எண்ண வலு
நாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்…? தீமையை நீக்கும் உணர்வை நாம் இச்சைபட்டால் உயிரிலே பட்டு அது கிரியை ஆகித் தீமையை நீக்கும் ஞானங்கள் வந்து அதுவாக நாம் ஆவோம்.
அதனால் தான் வலிமை மிக்க சக்தி வள்ளி. எத்தனையோ கோடி உடல்களில் பெற்ற தீமையை நீக்கும் அந்த வலிமையான சக்தி நம் ஆறாவது அறிவிற்கு உண்டு. தெரிந்து தீமையை நீக்கும் வலிமையான நிலை பெற்றது.
ஒரு விஞ்ஞானி ஆறாவது அறிவை வைத்துத் தான் எத்தனையோ வேலைகளைச் செய்கின்றான். ஒரு கல்லை நம்மால் தூக்க முடியவில்லை
1.ஆயிரம் டன் 2000 டன் எடையுள்ள பொருளைத் தூக்கிச் செல்லும் அளவிற்கு ராக்கெட்டைச் செய்து மேலே பறக்க விடுகின்றான்.
2.அது அவனின் எண்ண வலு தானே.
தன் எண்ண வலுவைச் செலுத்தி அதனால் தூக்கக் கூடிய சக்தியை கண்டுபிடித்து இருக்கின்றான். அப்போத்து அந்த எண்ண வாலு தானே காரணம் ஆகிறது.
1.நமக்குள் அந்த எண்ண வலுவைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அந்த வலுவைக் கூட்டப்படும் பொழுது
2.எத்தகைய நிலையையும் நாம் சமாளிக்க முடியும்.
3.அதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி பழக்கப்படுத்துவதற்கு ஆத்ம சுத்தியைக் கொடுக்கின்றோம்.
4.எந்த நிமிடம் எது வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
இந்த உடலுடன் யார் இருக்கின்றார்கள்…? நம் குருநாதர் இருக்கின்றாரா…? திருமூலர் இருக்கின்றாரா…? ஆதிசங்கரர் இருக்கின்றாரா…? சொல்லுங்கள் பார்க்கலாம்.
ராமலிங்க அடிகள் இருக்கின்றாரா…? உலகுக்கெல்லாம் போதித்தாரே விவேகானந்தர் அவர் இருக்கின்றாரா…? அவருடைய குரு எல்லாத் தத்துவத்தையும் தெரிந்தாரே ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர் இருக்கின்றாரா…?
யாரும் உடலுடன் இல்லை. இன்றைய செயல் நாளைய சரீரம் இன்றைய நிலையில் ஒளியின் உணர்வாக நாம் பெறப்படும் பொழுது நாளை ஒளி உடல் பெறலாம்.
அதை விடுத்து விட்டு
1.நாளைக்கு என்ன செய்யப் போகின்றோம்…?
2.இத்தனை ஆசை வைத்திருக்கிறேன்… உடலை விட்டுச் சென்று விட்டால் என்ன ஆவது…? என்று எண்ணினால் மீண்டும் இங்கேதான் சுழல வேண்டி வரும்.
இந்த உயிர் என்றுமே அழிவதில்லை வேகாநிலை பெற்றது இந்த உடல் மாறி மாறி வரும். உணர்வுக்குத் தக்க உயிர் உடலை மாற்றிக் கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு ரூபத்திலும் தான் எடுக்கும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உடலை தான் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது.
உயிருக்கு வேறு வேலை இல்லை ஆக இந்த ஆறாவது அறிவு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றினால் என்றைக்கும் நிரந்தரமான நிலையாக விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி கிடைக்கும்.
1.ஆறாவது அறிவு ஏழாவது ஒளி என்ற நிலை அடைவதை விஜயதசமி
2.வான் வீதியிலே தோன்றிய உயிர் மனிதரான பின் பத்தாவது நிலை பெற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் அன்று சூரியனைப் பார்க்கும்படி சொல்லியிருந்தார். அதைத் தான் நானும் சொல்லியிருந்தேன். காரணம் அன்று கதிரியக்கங்கள் ஜாஸ்தியாக வெளிப்படவில்லை.
ஆனால் மனிதன் செயற்கைக்காக வேண்டி அதை அதிகமாகப் பயன்படுத்தி அதனின் கசிவுகள் வெளிப்பட்ட பின்
1.அது எல்லாமே சூரியன் ஈர்ப்புக்குள் சென்றுவிட்டது… அதனால் அது கரும்புகைகளைக் கக்க (SUN SPOTS – SUN FLARES) ஆரம்பித்தது.
2.அப்படிக் கக்கும் நேரத்தில் அதைப் பார்த்தோம் என்றால் நம் உடலில் அதனின் விஷத் தன்மைகள் புகுந்துவிடும்
3.அதனால் தான் யாரும் சூரியனைப் பார்க்கக்கூடாது என்று யாம் பின்னாடி சொன்னது.
அதே சமயத்தில் அன்று ஆரம்பத்தில் 27 நட்சத்திரங்களையும் பார்க்கும்படி சொல்லி இருந்தேன்.
1.முதலில் நான் (ஞானகுரு) நேரடியாக அதை எடுத்துக் கொள்வது… அதற்குப் பின் உங்களுக்குள் அதைப் பாய்ச்சுவது
2.நான் எடுத்து அலைகளாக அனுப்பியதை… நீங்கள் எண்ணி எடுக்கப்படும் பொழுது உங்களுக்கு ஒரு தொந்தரவும் செய்யாது.
ஆனால் விட்டுவிட்டு… நேரடியாக நட்சத்திரங்களின் சக்தியை நாங்கள் எடுக்கிறோம் என்றால் உடம்பெல்லாம் அரிப்பு ஆகிவிடும்… எதிர் நிலையாகிவிடும்.
ஆரம்பத்தில் நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னவுடனே “எம்மை விட்டுவிட்டு…” பவானியில் சில பேர் அதை எடுக்கப்படும் பொழுது அவர்களுக்கு உடல் எல்லாம் அரிப்பு ஆகிவிட்டது.
பவானியிலிருந்து நான் வெளியே சென்றவுடன் நிறையப் பேருக்கு அது உண்டானது. ஏனென்றால் “நாம் சொன்னோம்” என்று சொல்லிக்கொண்டு எடுக்க ஆரம்பிக்கின்றார்கள்.
1.ஆனால் நட்சத்திரங்களின் சக்தியை நான் எடுத்து அதனுடைய வீரியத்தைத் தணித்து
2.உங்களிடம் அதை வாக்காகச் சொல்லிப் பதிவு செய்து… அந்த உணர்வை எடுக்கும்படிதான் சொல்லிக் கொடுக்கின்றோம்.
3.அதாவது என்னிடம் விளைந்ததை நீங்கள் எடுத்தால் அது உங்களைப் பாதிக்காது
4.அந்தச் சக்தியைப் பெருக்க ஏதுவாக இருக்கும்… தொல்லை கொடுக்காது.
இப்படி எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஒத்தாசையாக அந்த உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தொடர்ந்து இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
நோயினால் அவதிப்படுபவர்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சமயத்தில் நோய்களை மாற்றிடும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து… முறைப்படி சொல்லுங்கள்… உங்கள் நோய் நீங்கிவிடும்..! என்று இதன் வழி செயல்படுத்தினால் உங்களை அந்த நோய் பாதிக்காது.
சாமி தான் சொல்லிவிட்டார் அல்லவா…! ஈஸ்வரா குருதேவா என்று எண்ணிவிட்டு
1.அடுத்தவர் உடலில் இருக்கக்கூடிய நோயெல்லாம் போக வேண்டும் என்று சொன்னால் அல்லது பிரார்த்தனை செய்தால்
2.அவர்களின் நோய் உங்களுக்கு வந்துவிடும்… தெரியாமல் அதிலே போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது
3.அதற்குத்தான் ஆயிரம் தடவை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.
எதைக் கேட்டாலும் அடுத்த கணம் “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்…” என்று யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சக்தி செய்து தூய்மையாக்க வேண்டும்.
அதற்குப் பின் நோயாளியைப் பார்த்து துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி நீ பெறுவாய்…! அந்தச் சக்தியால் உனக்குள் இருக்கக்கூடிய நோயை உன்னால் நீக்க முடியும்…! என்று இப்படித்தான் அவர்களுக்குத் தெளிவாக்க வேண்டும்.
ஆனால்
1.வேதனைப்படுகின்றார் மிகவும் சிரமப்படுகின்றார் ஈஸ்வரா…! என்று நீங்கள் எண்ணி
2.அவர் நோயெல்லாம் குறைய வேண்டும் என்று “ஏங்கினால்” அவர் நோய் உடனடியாக உங்களைத் தாக்கும்.
இப்படிச் செய்யக்கூடாது…!
சில பேர் இது போன்று தெரியாமல் உள்ளே சென்று சிக்கிக் கொள்கின்றார்… அவசரத்தில் இப்படிச் செய்து விடுகின்றனர். இப்படி வரக்கூடாது என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.
பாசமாக இருக்கும் நண்பரோ உறவினரோ குழந்தைகளோ திடீரென்று அவர்களுக்கு எதிர்பாராது ஒரு விபத்தாகி விட்டது என்றால் உடனே
1.“நேற்றெல்லாம் நன்றாக இருந்தாரே… நல்ல மனிதருக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று தான் எண்ணுகிறார்கள்.
2.ஆத்ம சுத்தி செய்வதை மறந்து விடுகின்றார்கள்;
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுவதை மறந்து விடுகின்றார்கள்.
4.அவர் அடிபட்டு விட்டாரே என்று எண்ணி அந்த உணர்வைத் தான் “நேரடியாக” எடுத்துக் கொள்கின்றார்கள்.
ஆனால் அது நமக்குள் வராதபடி முதலில் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அது படர வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
விபத்தில் அடிபட்டவரின் உணர்வு முதலில் நம்மை இயக்கி விடாதபடி இப்படித் தடைப்படுத்தியே ஆக வேண்டும்.
பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அடிபட்டவர் உடல் முழுவதும் படர வேண்டும். வேதனையிலிருந்து அவர் மீண்டு நல்ல உணர்வு பெறக்கூடிய தகுதி பெற வேண்டும். அவருக்குப் பூரண குணம் கிடைக்க வேண்டும் என்று நம்மைத் தூய்மைப்படுத்திய பின் இப்படிச் சொல்ல வேண்டும்.
1.இது சாதாரணமானது இல்லை…
2.உயர்ந்த சக்தியாக அவர் நுகர ஆரம்பிக்கும் பொழுது இது அவருக்குள் இயக்கச் சக்தியாக மாறும்.
3.அடிபட்டதிலிருந்து சீக்கிரமே விடுபடக்கூடிய சக்தியும் அந்த நம்பிக்கையும் அவருக்கு வரும்.
இதை நீங்கள் செய்து பார்க்க வேண்டும்.
கடினமானதாக இருந்தால்… கூட இரண்டு தடவை செய்தால் அவருடைய நோய்களையோ குறைகளையோ வேதனைகளையோ நீக்குவதற்கு நிச்சயம் இது உதவும்.
“உங்களுக்கு இந்தச் சக்தி உண்டு” என்று சொல்கின்றோம்…!
ஆனால் தவறிப் போய் அவருடைய வேதனையையும் துன்பத்தையும் நீங்கள் எண்ணி எடுத்து விடக்கூடாது. ஆத்ம சக்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்; இந்தச் சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி விட்டு
1.இதே மாதிரி நீங்கள் செய்யுங்கள்
2.உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கும்… உடல் நலமாகும் என்று
3.இப்படித்தான் நாம் நோயுற்றவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இது போன்ற ஒரு பழக்கத்திற்குக் கட்டாயம் நாம் வந்தே ஆக வேண்டும்.
ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையில் பிறரின் கஷ்டங்களை எல்லாம் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டி இருக்கின்றது. அப்போது உடனே சோர்வடைந்து விடுகின்றோம்.
ஆனால் இதை மாற்றி உங்களுக்குள் திருத்தி அந்தச் சோர்வை நீக்க வேண்டும். “அந்தச் சக்தியைத் தான் யாம் இப்போது கொடுக்கின்றோம்…”
நல்லதாகக் கூடிய சக்தியை நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதற்குத் தான் இவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி அதைப் பெறக்கூடிய தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.
இந்தப் பழக்கத்தை நீங்கள் சீர்படுத்திக் கொண்டு வருதல் வேண்டும்.


அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்
விஷத்தன்மைகள் பூமியில் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது. சாயப்பட்டறைகள் மூலமாகக் கெமிக்கல்கள் பரவிக் கொண்டுள்ளது. அதே போல கரும்பு ஆலைகளிலும் கரும்புச் சாற்றில் உள்ள அழுக்குகளை நீக்க அதிலும் கெமிக்கலைப் போடுகின்றார்கள். அந்தக் கெமிக்கலை நம் துணியில் போட்டால் துணி வெந்து ஓட்டையாகிவிடும். ஆனால் அந்த கெமிக்கலை உபயோகித்து அதிலே உருவான சர்க்கரையைத் தான் நாம் உட்கொள்கிறோம்.
1.பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது… ருசியாக உள்ளது. ஆனால் விஷத்தன்மைகள் கலந்து வருகின்றது
2.இப்படி விஞ்ஞான அறிவு கொண்டு பொருள்களை தெளிவாக்கினாலும் இந்த நிலை ஆகிறது.
குடி தண்ணீரிலும் இதைச் செயல்படுத்தினார்கள். நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய்களையும் தூய்மைப்படுத்த இது போன்றே செயல்படுத்துகின்றார்கள். எண்ணையில் இருக்கும் கொழுப்புச்சத்தை எடுக்கின்றோம் என்று சொல்கின்றார்கள்.
அதை எடுக்கின்றது… ஆனால் அந்த எண்ணெயை நாம் உபயோகப்படுத்தும் பொழுது இந்தக் கெமிக்கல் நம் உடலுக்குள் இணைந்து விடுகின்றது… அணுக்களிலும் சேர்கின்றது.
இதிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்த்து மேலே சொன்ன தீமையான விளைவுகள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும்.
விஞ்ஞான அறிவால் பல வகைகளிலும் நச்சுத்தன்மைகளைப் பரவ விட்டுள்ளார்கள். அதனால் அஞஞான வாழ்க்கையாகச் சிந்தித்து செயல்படும் திறனை பெரும்பகுதியானவர் இழந்து விட்டோம்.
1.அதனால் திடீரென்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைகளும் தவறு செய்யக்கூடிய உணர்ச்சிகளைத் தூண்டுவதும் சிந்தனை இல்லாது செயல்படுத்தும் நிலைகளும் வருகின்றது.
2.இதைப்போல் வரும் பொழுது தான் போக்குவரத்திலும் விபரீத விபத்துகள் ஏற்படுகின்றது.
3.மனிதனுக்கு மனிதன் என்ற நிலை இல்லாதபடி பல விபரீத செயல்களும் இரக்கம் ஈகையற்ற நிலைகளும்
4.ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்றிடும் நிலைகள் வந்து விடுகின்றது.
காரணம் ஒரு பொருளிலே விஷம் பட்டு விடடால் அதை நாம் உட்கொள்ளும் பொழுது நம்முடைய சிந்தனைகள் இழக்கப்படுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
அதே போலத்தான் நம்மை அறியாமலே விஷத்தன்மைகள் சிறுகச் சிறுக உடலில் உள்ள அணுக்களில் சேர்க்கப்படும் பொழுது தவறு செய்யும் இயல்புகளாக மாறி விடுகின்றது. கடும் நோய்களும் வருகிறது.
இதிலிருந்து நாம் மீள வேண்டும்.
1.காலையில் கண் விழித்த உடனே துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலு சேர்த்துக் கொண்டு
2.அந்தச் சக்தி கணவன் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்றும்
3.குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அந்த குழந்தைகளும்
4.இதைப் போன்று எண்ணக் கூடிய ஒரு பழக்கத்திற்கு நாம் கொண்டு வர வேண்டும்.
அந்தக் குழந்தைகளுக்கு ஒரு இரண்டு நாள் மூன்று நாள் சொல்லிப் பதிவாக்கி அவர்களையும் பழக்கிக் கொண்டு வந்தால் சீராகும். அவர்களுக்கும் நல்ல படிப்பு வரும் ஞானங்கள் வரும் என்று சொல்லிப் பழக்கப்படுத்திக் கொண்டு வர வேண்டும்.
அதிகாலை ஒரு ஐந்து ஐந்தரைக்குள் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
1.நம் உடலை உருவாக்கிய எல்லா அணுகளுக்கும் வலு சேர்த்துப் பழக வேண்டும்.
2.அந்தச் சக்திகளை நாம் அவசியம் பெருக்கிப் பழக வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதனின் வாழ்க்கையில் தொழிலில் முன்னேற்றம் அடைந்தால் “அது சந்தர்ப்பம் தான்…”
ஆனால் வளர்ச்சி அடையும் பொழுது நான்கு பேர் வந்து ஏதாவது ஆசையைக் காட்டியோ அல்லது நம் மீது வெறுப்பாகிக் கேவலமாகப் பேசும் நிலையோ வந்தால் அந்தச் சந்தர்ப்பம் நம் நினைவுகள் அனைத்தும் அவன் மீது சென்றுவிடுகிறது.
அந்தச் சந்தர்ப்பம் என்ன செய்கிறது…?
1.அவன் மீது கோபம் வெறுப்பு உண்டாகிறது.
2.நம் தொழிலைச் சீராகப் பார்க்க முடியாது போய் விடுகிறது
3.நல்ல குணங்களையும் பாதுகாக்க முடியாது போய் விடுகிறது.
வேதனை என்ற உணர்வுகளை உடலில் அதிகமாகச் சேர்த்த பின் நல்ல அணுக்கள் மயக்கப்பட்டு விடுகின்றது… சிந்திக்கும் வலிமை இழந்து விடுகின்றது
இந்த உணர்வுகள் அதிகமாகி இருதயம் பலவீனம் ஆகிறது. இருதயம் பலவீனமான பின் அடுத்து எதையுமே வலுவாக எண்ண முடியாது போய் விடுகிறது.
இப்படி வரக்கூடிய நிலைகளை மாற்றுவதற்குத் தான் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றும்படி சொல்கின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.முதலில் கண்ணின் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்த வேண்டும்.
2.உயிரான ஈசனிடம் வேண்டி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதன் வழி ஈர்க்கும் தன்மையாகக் கொண்டு வர வேண்டும்.
பின் கண்ணின் நினைவை உடலில் உள்ள இரத்தங்களிலே செலுத்தி இரத்தம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்.
அதற்குப் பின் சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கொஞ்சம் கொஞ்சமாக உறுப்புகளுக்கு அந்தச் சக்தியை வலு சேர்க்கும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.
2.ஏனென்றால் எல்லா உறுப்புகளுக்கும் உடனடியாக அதை எடுக்கக்கூடிய பவர் கொடுக்கின்றோம்.
உணவாக உட்கொள்ளும் சாப்பாட்டுடன் சேர்த்த கொழுப்புச் சத்து சர்க்கரைச் சத்து உப்புச் சேர்த்து அதை பிரிக்கும் சக்தி பெற்றது நம் கணையங்கள்.
ஆனால் அது சரியாகப் பிரிக்கவில்லை என்றால் கொழுப்புச் சத்து இரத்தத்துடன் கலந்து… இரத்தக் குழாய்கள் எல்லாம் அடைத்து விடுகின்றது.
சர்க்கரையும் உப்பையும் சீராகப் பிரிக்கவில்லை என்றால் உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகிறது… வலுவான அணுக்களாக இருந்தால் அதையெல்லாம் சீராகப் பிரிக்கும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணையங்கள் முழுவதும் படர்ந்து அது சீராகப் பிரிக்கும் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
குளத்தில் இருந்து எடுக்கக்கூடிய தண்ணீரை… பெரிய கற்கள் அப்புறம் சிறிய கற்கள் அப்புறம் குறு மணலைப் போட்டு வடிகட்டிச் சுத்தமான நீராகக் கொண்டு வருவது போல் தான் நம் கல்லீரலின் இயக்கமும்.
நாம் சாப்பிடும் ஆகாரம் கணையங்களில் இருந்து வடிகட்டி வரும் ரசத்தைக் கல்லீரல் மண்ணீரல் பிழிந்து வடிகட்டி நல்ல இரத்தமாக மாற்றுகின்றது. அது சீராக வடிகட்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.
1.சுவாசித்தது… நுரையீரலில் எது படுகின்றதோ
2.”அந்த மூச்சு” அதற்குத் தகுந்த மாதிரித் தான் வெளியில் இருந்து இழுக்கும்.
வேதனை வெறுப்பு எல்லாம் சுவாசத்தின் வழி வந்தது என்றால் கல்லீரல் மண்ணீரலைத் தாண்டி நுரையீரலுக்கு வந்தால் “படக்..படக்…” என்று அடிக்கும்.
அப்பொழுது மூச்சுத் திணறலாகும்…! காரணம் நாம் “சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம்…”
ஒரு நண்பர் வந்து… என் பையன் சொன்னபடி கேட்காமல் சேட்டை செய்கின்றான்… தொழிலில் என்னை ஏமாற்றுகிறார்கள்… உடம்பு சரியில்லை… என்று அவர்கள் கஷ்டத்தை எல்லாம் சொல்லட்டும்.
அதை எல்லாம் உ..ம் கொடுத்துக் கேளுங்கள். அடுத்த உங்கள் மனதில் என்னென்னவெல்லாம் ஓடுகிறது…? என்று பாருங்கள்.
1.தியானத்திற்கு முன்னாடி இதெல்லாம் தெரியாது
2.தியானத்தில் இப்பொழுது உணர முடியும்… நம்மை எது இயக்குகின்றது…? என்று அறிந்து கொள்ளலாம்.
நண்பர் தன் கஷ்டத்தைச் சொல்கிறார்கள் என்றால் உடனே சுதாரித்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
இந்தப் பழக்கம் அவசியம் நமக்கு வரவேண்டும்.
1.மேலே அழுக்குப் பட்டபின் குளித்துச் சுத்தமாக்குவது போன்று…
2.துணியில் உள்ள அழுக்கைச் சோப்பை போட்டு நீக்குவது போன்று
3.ஆன்மாவில் உள்ள அழுக்கை நாம் தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்
துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் வலு ஏற்றி நம்மை அறியாது உட்புகும் அசுத்தங்களை வடிகட்ட வேண்டும்.
நம் எண்ணம் சொல் செயல் தூய்மை பெறும்… வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.


நாம் செய்யும் தியானத்தைச் சீர்படுத்ததும் முறை
மனித வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளை நாம் பதிவாக்கி வைத்துள்ளோம். கோபப்பட்டவரை வேதனைப்பட்டவரை நோய்வாய்ப்பட்டவரை இது போன்று எத்தனை வகையான மனிதர்களை நாம் பார்க்கின்றோமோ அவையெல்லாம் நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாறிவிடுகின்றது.
இருந்தாலும் அவரிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அனைத்தும் அலைகளாக நம் புமியிலே பரவுகின்றது.
1.அவ்வாறு பரவி இருப்பது நம் உடலில் அணுக்களாக மாறிவிட்டால் அது உணவுக்காக நம் உடலில் உணர்ச்சிகளை உந்தும்.
2.அப்படி உணர்ச்சிகளை உந்தினால் நம் முன் இருப்பதை அது கவரும்.
அதாவது செடி கொடிகள் தன் சத்தினை எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ இதைப் போல நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்ந்தால் நாம் சுவாசிக்க நேர்கின்றது.
1.சுவாசித்தால் அவர்கள் என்னென்ன சங்கடப்பட்டார்களோ அது எந்தெந்த நிலையோ நம்மை அறியாதபடியே சோர்வடையும் நிலைகள் வரும்.
2.அத்தகைய சோர்வடையும் நிலைகள் வந்தால் இரத்த நாளங்களில் கலந்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்.
3.இப்படி நம்மை அறியாமலே சில நேரங்களில் சிந்தனை இல்லாதபடியே இது போன்ற சிந்தனைகள் வரும்… தியானம் செய்யும் பொழுது.
சிலரிடம் அதிகப் பற்றுடன் பழகி இருப்போம். சந்தர்ப்பத்தில் அவர்கள் கஷ்டப்பட்டு இருப்பார்கள். அதை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அணுக்கள் நமக்குள் விளைந்து விட்டால் நாம் தியானிக்கும் நேரத்திலே நம்மை அறியாமலே அவருடைய எண்ணங்கள் நமக்குள் வரும்.
வியாபாரத்தில் ஏமாற்றி இருந்தால் கொடுக்கல் வாங்கலில் அவருடைய உணர்வுகளை நாம் பதிவு செய்திருப்போம். அப்படிப் பதிவு செய்திருந்தால் நமக்குள் ஏமாற்றம் அடைந்த உணர்வுகள் இருப்பினும் இந்த உணர்வுகளுக்கு எல்லாம் வலு அதிகம்.
தியானத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலும்… இந்த விஷம் கொண்ட உணர்வுகள் இந்த உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் உணவுக்காக உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது “நம் ஆன்மாவில் அதிகமாகச் சேர்கின்றது…”
அதைச் சுவாசித்தோம் என்றால் நம்மை அறியாமலே இயக்கும். நாம் நினைப்பது துருவ மகரிஷி என்று…! ஆனால் அவருடைய உணர்வுகள் தான் அதிகமாக வரும்.
1.அந்த மாதிரி நினைவு வந்தாலும் கண்களை மூடித் தியானித்துக் கொண்டிருக்கிருக்கும் பொழுது உடனடியாக கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவை இணைக்க வேண்டும்.
2.கண்களைத் திறந்து சிறிது நேரம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று அப்படியே கண்களை மூட வேண்டும்.
இப்படி அந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துவிட்டால் மற்றவருடைய உணர்வுகளை இழுப்பது குறையும். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் நாம் தியானிக்கும் போது இத்தகைய நிலை வந்தால் இதைப் போன்று நாம் சமாளித்துப் பழக வேண்டும்.
தீமை விளைவிக்கும் உணர்வுகளுக்கு நாம் நுகர்ந்த உணர்வு ரத்த நாளங்களிலே கலக்கப்படும் பொழுது இது அதிகரித்து… அதாவது
1.நம் உடலில் உள்ள வெறுப்பான உணர்வுகளைச் சுவாசிக்கும் அந்த அணுக்களுக்கு
2.இரத்த நாளங்களில் துருவங்கள் நட்சத்திரத்தின் பேரருள் பேரோளியைக் கலக்கப்படும் பொழுது அந்த அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும்.
நல்ல குணங்களுக்கொ மற்ற நிலைகளுக்கோ பிற உணர்வு நம்மைத் தடைப்படுத்துவது போல நாம் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை கண்ணைத் திறந்து ஏங்கி சிறிது நேரம் உள்ளே செலுத்தினோம் என்றால்… ரத்தங்களிலே கலந்த பின் அந்த அணுக்களின் செயலை இந்த வலுவான நிலைகள் அதைத் தடைப்படுத்தும்.
இப்படி நாம் மாற்றிப் பழக வேண்டும்.
பலருடைய உணர்வுகள் இருக்கும் பொழுது இந்த உணர்வுகளைக் கவர்ந்த பின் அந்த அலைகளை எடுத்து நமக்குள் ஆன்மாவாக ஆனபின் இதுதான் முன்னணியில் வருகின்றது. நாம் தியானிக்கும் நிலையை மாற்றிவிடும்.
நாம் தியானித்துக் கொண்டே இருப்போம். திடீரென்று திசை மாறிச் சென்றுவிடும்.
இதே போலத் தான் நம் ரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தினோம் என்றால் அதனுடைய உணர்வுக்கு உணவு கிடைக்கவில்லை என்கிற பொழுது அது ஒடுங்கிவிடும்.
1.இப்படி நாம் அதை ஒடுக்கி ஒடுக்கி அருள் உணர்வுகளை பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
2.தியானம் செய்யும் பொழுது நாம் பழக வேண்டியது முக்கியமான பயிற்சி இது.
3.தீமை செய்யும் அணுக்கள் அனைத்தும் நல்லதாக மாறத் தொடங்குகிறது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும்… எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை மாற்றுவதற்கு முதலில் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அந்தத் தீமைகளை நாம் தூக்கி எறிந்து விட வேண்டும்.
காரணம்… நாம் (எதையுமே) கண்களிலே பார்க்கின்றோம்… நினைக்கின்றோம்… இழுத்து மூக்கின் வழி சுவாசிக்கப்பட்டு உயிரிலே படுகின்றது… அதனின் உணர்வாக நம்மை இயக்குகிறது.
ஆகவே…
1.அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்கின்றோம்.
2.இழுத்தவுடனே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே இணைகின்றது
3.இணைத்தவுடன் துருவ நட்சத்திரத்தின் சக்தி அங்கே வலுப்பெறுகின்றது.
நாம் சங்கடப்பட்டது வெறுப்புபட்டது அது எல்லாம் ஏற்கனவே உடலுக்குள் பதிவாகி இருந்தாலும்… அதற்கு உணவு கிடைக்காதபடி இங்கே தடையாகிறது.
இப்படித் தான் தீமைகளை நிறுத்திப் பழக வேண்டும். ஏனென்றால் பிறிதொரு தீமை நம்மை இயக்கி விடக்கூடாது… சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நிறுத்த வேண்டும். அடுத்து கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று “இப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட வேண்டும்…”
நம் உடல் உறுப்புகளை இப்படி வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் உடனே எச்சரிக்கை செய்து ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி
2.துருவ நட்சத்திர்த்தின் வலுவை ஏற்றித் தீமை உள்ளே போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளையும் வென்றது அதை வைத்து நாம் தூய்மைப்படுத்துகிறோம். உடல் உறுப்புகள் இரத்தத்திலிருந்து தோல் மண்டலம் வரை இப்படி வலு ஏற்றும் பொழுது “காற்றிலிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பிரித்து இழுத்து” நமது ஆன்மாவாக மாற்றி விடுகின்றது.
இது பழக்கத்திற்கு வந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்…!
1.சிரமப்பட்டு (அர்த்தம் புரியாத) மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
2.ஆயிரம் தடவை இரண்டாயிரம் தடவை இலட்சம் தடவை என்று சொல்ல வேண்டும்
3.மந்திரத்தை மறந்து விட்டாலோ… தப்பாகச் சொல்லி விட்டாலோ… எல்லாமே போய்விடும் என்ற நிலை இல்லை.
உடனுக்குடன் நம்முடைய நினைவைச் செலுத்தி
1.“எது நல்லதாக வேண்டுமோ அதை எண்ணி” அந்த ரெக்கார்டை (பதிவை)
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
“துருவ நட்சத்திரத்தின் கணக்குகளை” இப்படி கூட்டிக் கொண்டே வர வேண்டும். உடலில் இருக்கும் அணு செல்களிலும் இந்தப் பதிவுகள் கூடிக் கொண்டே வருகின்றது… எல்லா அணுக்களிலும் இந்தச் சக்தி கூடி கூடுகின்றது.
இப்படிக் கூடும் பொழுது உயிரைப் போன்றே உடலில் இருக்கும் ஜீவ அணுக்களை ஒளியாக மாறிக் கொண்டே வருகிறது.
வயலிலே விதைக்கின்றோம் என்றால் முளைத்த பின் அந்தந்தக் காலகட்டத்திற்கு உரத்தையோ மற்ற மருந்துகளையோ இட்டோம் என்றால் நல்ல தரமான மகசூல் கொடுக்கும்.
இது போன்று நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகளுக்கு துருவ நட்சத்திரத்தின் சக்தியை உரமாக… சத்தாக… நாம் ஏற்றிக் கொடுக்க வேண்டும்.
இப்போது… சொல்லாக யாம் சொல்லப்படும் பொழுது இது சாதாரணமாகத் தெரியலாம் ஆனால் இந்த உண்மைகளை நான் அனுபவித்து உங்களிடம் சொல்கிறேன்..
சொல்கிறேன் என்றால் என்னிலே அது விளைந்தது… சொல்லும் போது நீங்கள் அதைக் கேட்கின்றீர்கள்… உங்களுக்குள் பதிவாகிறது. நினைவு மீண்டும் அதை இழுக்கும் சக்தியாக வருகின்றது
1.இவ்வளவு தான்… இதில் வேறு சிரமம் ஒன்றுமில்லை
2.பெரிய அதிசயமும் இல்லை.
திட்டியவனைப் பதிவு செய்தால்… அவனை நினைக்கும் போதெல்லாம் குழப்பம் வருகிறது. வியாபாரத்தில் ஒருவன் நம்மை ஏமாற்றி விட்டான் என்றால் உடனே நமக்கு ஆத்திரமும் கோபமும் வருகிறது.
இது போன்று தான்… எல்லாமே அந்தப் பதிவின் தொடர் வைத்துத் தான் நினைவாகி இயங்குகிறது.
ஆகையினால்…
1.மிக மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்… இதை எண்ணி நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தாலே போதுமானது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
1.ஒரு கஷ்டமான நிலைகளைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.உடனே இதைத்தான் நான் தியானிக்க வேண்டும்.
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
இரண்டு பேர் ஒருவருக்கொருவர் கோபத்துடன் சண்டையிடுவதைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… அவர்கள் சண்டையிடும் உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருள் சக்தியை உள்ளே செலுத்தி வலுவாக்க வேண்டும்.
சண்டை போட்டார்கள் அல்லவா… அவர்கள் இருவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் அந்தத் திறன் பெற வேண்டும்; என்று அவருடைய உணர்வுகளை நாம் நமக்குள் மாற்றி விட வேண்டும்.
அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று “நாம் எண்ணுகின்றோம்…” அவர்கள் அப்படி எண்ணினால் அவருக்கும் நல்லதாகும். ஆனால்
1.அவர்களிடம் போய்ப் புத்தி சொன்னால் கேட்பார்களா…? இல்லை
2.இரண்டு பேர் சண்டையிடுகின்றார்கள் என்றாலும் ஒருவரைப் பார்த்து “நீ கொஞ்சம் பொறுத்துப் போ…!” என்று நாம் சொன்னால்
3.நீ அவனுக்குச் சாதகமாகப் பேசுகின்றாய்… எனக்கு நீ உதவியாக இல்லை…! என்று சண்டைக்கு வருவார்கள்
4.இருவரில் யாரிடம் சொன்னாலும் இருவருமே இப்படித்தான் சொல்வார்கள்… சமாதானப்படுத்த முடியுமா…!
5.அவர்கள் உணர்வுக்குத் தக்க நாம் வரவில்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக்கி விடுவார்கள்.
ஆகையினால் அதை நாம் நுகர வேண்டியதில்லை. யாம் சொல்லிக் கொடுத்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
அதைச் செய்து… சண்டையிட்ட அந்த இருவருமே மகரிஷிகளின் அருள் சக்தியால் சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்; ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் நமக்குள் அது தீமையைத் தடுக்கும் சக்தியாக மாறுகின்றது.
அடுத்து சாந்தமான பிற்பாடு நாம் என்ன செய்ய வேண்டும்…? அவர்களிடமிருந்து சமைத்த உணர்வு நம்மிடம் இருக்கிறது
1.நீங்கள் இந்த மாதிரிச் செய்தீர்கள் அதனால் தான் உங்களுக்குக் கஷ்டம் வந்தது
2.அதற்குப் பதிலாக மகரிஷிகளின் அருள் சக்திகளை இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள் நன்றாகிவிடும்…! என்று சொல்லலாம்.
அவர்கள் அமைதியாக இருக்கும் போது நாம் சொல்வதைக் கேட்க வைத்து உண்மைகளைச் சொன்னால் அவர்கள் நல்லதை எடுப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது.
அட என்ன…? நீதானப்பா முதலில் அவனிடம் சண்டை போட்டாய்…! என்று சொல்லக் கூடாது. சந்தர்ப்பத்தினால் உணர்ச்சி வசப்பட்டீர்கள்… சண்டையிட்டுக் கொண்டீர்கள்.. அதனால் அன்பை இப்படிக் கெடுத்துக் கொண்டீர்கள்…! சற்று சிந்தியுங்கள் என்று இந்த ஞானத்தோடு சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வருகின்றது.
ஈர்க்கும் சக்தி அங்கு இல்லை என்றால்…
1.என்னப்பா இப்படி எல்லாம் செய்கின்றாய் என்று புத்திமதி சொல்வது போல் சொன்னால்
2.எல்லாம் தெரிந்த மாதிரி… இவர் பெரிதாகச் சொல்ல வந்து விட்டார் என்பார்கள்.
3.சொன்னாலும் கேட்க மாட்டார்கள்… நமக்கு எதிர்ப்பதமாக வரும்.
ஆகவே அருள் உணர்வுகளை நாம் வளர்த்து அந்தப் பண்போடு சொல்லிப் பழகுதல் வேண்டும். எப்படி…? இருவரும் சண்டை இட்டீர்கள். அதனால் உடலில் நோயாக மாறியது… சிந்திக்கும் தன்மையும் இழக்கிறது. அதனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் பொறுப்பாக இருந்து இரண்டு பேரும் ஒன்று சேர்த்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இருவருமே பெறுங்கள் உங்கள் உடலில் அதை வளர்த்துக் கொள்ளுங்கள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் அந்த தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இப்படிச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.
இது அவர்களுக்குள் ஏற்றுக் கொள்ளும் பருவமாக மாறுகின்றது… கொஞ்சமாவது கேட்பார்கள்… “கேட்டால் தானே உள்ளே செல்லும்…” சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.
இப்படிப்பட்ட உணர்வை நாம் சேர்த்துக் கொண்டால் அவர் சண்டையிட்ட உணர்வோ வெறுப்படைந்த உணர்வோ நமக்குள் வருவதில்லை. அவர்களும் ஒன்றுபட்டு வாழும் நிலைக்கு வருகின்றார்கள்… பகைமைகளை அகற்ற முடிகிறது.
இப்படித்தான் நாம் மாற்றிக் கொண்டு வர வேண்டும்… இதைச் செயல்படுத்த வேண்டும்
தியானம் என்பது…
1.அந்த ஞானிகளின் அருள் சக்தியை எடுத்துச் சமைத்து ஞானத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
2.தீமை நமக்குள் வராதபடி எல்லாம் தெளிந்த மனமாக வளர்கின்றது
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.
கோடிக்கரையில் (கடைசி மனித உடல்) இருக்கும் நாம் இதையே செய்து கொண்டு வந்தால் தனுசு கோடி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒளியாக மாறுகின்றோம். இது தான் இராமேஸ்வரத்தின் தத்துவம்
இராமன் என்றால் எண்ணம்… நாம் நுகர்ந்தது எண்ணத்தால் உருவா(க்கு)கின்றது. எதை உருவாக்கினோமோ அதுவே ஈசனாக இயக்குகிறது. அது தான் இராமேஸ்வரம்.
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமலிங்கம்…
2.உயிருடன் ஒன்றி ஒவ்வொருவரும் நாம் ஒளியாக மாற வேண்டும்…!


அருள் பற்று… குடும்பப் பற்று
அருள் உணர்வுகளை நாம் பற்றுடன் பற்ற வேண்டும். அதன் வழி சென்றால் அருள் வழி வாழ முடியும். இருந்தாலும் குடும்பப் பற்றினை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றினைக் குறைக்கப்படும் பொழுது சிந்தனையை இழக்கும்படி ஆகிவிடுகின்றது.
1.என் குழந்தைக்கு இப்படியாக வேண்டும் மற்றவர்களுக்கு இப்படியாக வேண்டும் என்ற உணர்வு வந்து விட்டாலே
2.நமக்குள் பதிந்திருந்த பழைய உணர்வுகள் அனைத்தும் முன்னுக்கு வந்துவிடும்.
3.அது முன்னுக்கு வந்துவிட்டால் அதைக் காப்பது என்பதே மிகவும் சிரமம்.
ஆகவே நாம் ஒவ்வொரு நொடியிலும் ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று “அதை வலுவாக்கித் தெளிந்த நிலை பெற வேண்டும்…” என்ற இந்த உணர்வை அடிக்கடி கூட்டி வந்தால் சரியாக இருக்கும்.
அதற்குக் கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணி வாழ்க்கையில் எது குறையாகத் தென்படுகின்றதோ அது நிறைவேற வேண்டும். குழந்தைக்குத் திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் அது எதிர்காலம் சிறந்த நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஆனால் பெண்ணுக்கு வயதாகிவிட்டது… திருமணமாகவில்லையே…! என்ற ஏக்கம் வருகின்றது. ஆனால் அந்த ஏக்கம் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிலையாக இருந்தால் அதில் வேதனை வராது.
சில குடும்பங்களில் வேலையில் இருந்து அவர்கள் பணி ஓய்வு பெற்று இருப்பார்கள்.
1.அந்த வயதான காலகட்டத்தில் சம்பாத்தியம் இல்லாததால் உணர்வுகள் மாறி விஷத்தின் தன்மையாகிப் புவியின் பற்று அதிகரித்து விடுகின்றது.
2.உடலின் பற்று அதிகரித்து அருள் ஞானிகள் பற்று தணிக்கிறது.
ஆனால் ஞானிகள் பற்றினைக் கூட்டினால் இந்த வாழ்க்கையில் வரும் பற்றுகள் எதையும் வெல்ல முடியும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வுகள்… அது ஆர்வமாக வேகமாக இருக்கும் பொழுது நலமாகிறது. ஆனால் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மை கூடி விடுகின்றது ஆனால் இத்தகைய உணர்வுகள் கூடிவிட்டால் அருள் ஞானத்தை இழக்கும் சந்தர்ப்பம் ஆகி விடுகிறது.
ஒரு சிலருக்குத் தாய் கருவில் இருக்கும் பொழுது ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள்
1.ஒருவருக்குத் திருமணம் ஆகவில்லை என்ற இத்தகைய குறைவான உணர்வுகளைக் கேட்டு நுகர்ந்துதிருந்தால்
2.அந்த அதிர்ச்சியின் உணர்வு கருவிலே பதிவாகி விளைந்து விடுகின்றது.
3.இது பூர்வ புண்ணியமாக அமைந்து அதனால் சில தடைகள் வருகின்றது.
ஆனால் இத்தகைய தடைகள் வந்தாலும் நாம் அந்த அருள் உணர்வுகளைப் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும். திருமணம் ஆகி அது செல்லும் குடும்பத்தில் செல்வம் செல்வாக்கு பெற வேண்டும் என்று நாம் இத்தகைய உணர்வைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.
மாறாக “வயதாகி விட்டதே…” என்று சோர்வை எடுத்தால் அதனால் வேதனையும் வருகிறது. பாலிலே பாதாமைப் போட்டு விஷத்தைப் போட்டது போன்று சக்தி இழந்து விடுகின்றது.
பக்தி மார்க்கத்தில் வந்த நிலையில் நல்லது நடக்கும் பொழுது மகிழ்ச்சி வருகின்றது. அதிலே சிறிது தடை ஆகிவிட்டால் அந்தக் குறையைத் தாங்கும் நிலை அற்றுப் போய் விடுகின்றது. அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்குத் தான் இந்த தியானமே உங்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்
வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது போன்று
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளான உணர்வுகளை மாற்றிட அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அந்த உணர்வுகளை வலுவாக்கி
2.நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
நம் காரியங்களை அதன் வழி கொண்டு சித்தியாக்க முடியும்.

காற்று மண்டலத்தில் நாம் அனைவரும் பரப்ப வேண்டிய அருள் சக்திகள்
இன்றைய உலகில் ஆசையில் செல்கின்றார்கள். எந்த ஆசையை எடுத்துக் கொண்டார்களோ அதன் தன்மையில் தான் செல்கின்றார்கள்.
1.ஆனால் நாம் அருள் ஞானிகள் காட்டிய உணர்வினை… காவியத் தொகுப்பினை மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
2.நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானிகள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணி எடுக்கப்படும் பொழுது அது நமக்குள் வளர்கின்றது.
குறைகளைக் காணும் பொழுது குறை வளர்கின்றது.
அதே போன்று அந்த அருள் உணர்வுகள் எல்லோருக்குள்ளும் வளர வேண்டும் என்றால் துருவ தியானத்தில் நாம் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களையும் அதைக் கேட்க வைக்க வேண்டும்.
1.அந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ளவும்
2.சொல்லாக வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொள்ளவும்
3.கேட்போர் உணர்வுகளில் பதிவாகவும்
4.அதை அவர்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அவர்களை அதை நுகரும்படி செய்ய வேண்டும்.
ஏனென்றால் நமக்குள் உருவான அருள் ஞானிகள் உணர்வின் தன்மையை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்.
எம்மைச் சந்திக்க இரண்டு பேர் வந்தாலும் மூன்று பேர் இருந்தாலும் நான் இந்த அருள் உணர்வுகளைச் சொல்லிக் கொண்டே இருப்பேன்.
இருவருக்குப் பதிவு செய்தாலும் அவர்களுக்குள் அந்த அருள் உணர்வுகளை வளர்த்து
1.அவர்கள் அடுத்து அதைச் சொல்லால் சொல்லும் பொழுது காற்றில் பெருகி
2.அந்த அருள் சக்திகளை மற்றவர்கள் எடுக்க ஏதுவாக இருக்கும்… அவர்களையும் காக்க உதவும்.
அதற்காக வேண்டித் தான் அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை எனக்குள் இந்த உடல் வாழ்க்கையில் வளர்த்துக் கொண்டே உள்ளேன். எல்லோரும் அந்த அருள் ஞான உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன். இதே வழியினை ஒவ்வொருவரும் செயல்படுத்தும் படி வேண்டிக் கொள்கின்றேன்.
அருள் ஞானத்தை ஒவ்வொருவரும் வளர்த்து வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி நோய்களைப் போக்கி அந்த அருள் உணர்வுகளை வளர்த்திடும் சந்தர்ப்பமாக அமைக்க வேண்டும்.
ஆகவே
1.அருள் ஞானத்தை நாம் அழியாச் சொத்தாகச் சேமிப்போம்.
2.இருளை வென்று ஒளியினை உருவாக்கும் தன்மையை நாம் அனைவரும் பெறுவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ கெட்டதைப் பார்க்கிறோம் சங்கடப்பபடுவோரைப் பார்க்கின்றோம்… அது பற்றிச் சொல்வதையும் கேட்கிறோம்.
1.இது எல்லாம் கண்ணில் உள்ள கருமணியில் பட்டுத் தான் உடலுக்குள் போகும்.
2.வேதனைப்பட்ட உணர்வுகள் கருமணிகளிலே பட்டு இழுத்து அதில் உள்ள வயர் (WIRE) எல்லாவற்றுக்கும் அனுப்புகிறது
3.கருமணிகளில் பட்டுத் தான் அந்த வீரியத் தன்மை போகிறது.
வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இது போன்ற உணர்வைக் கேட்டோம் என்றால் கூடக் கொஞ்ச நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… அது எங்கள் கருமணிகளிலே படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
இப்படி எண்ணியவுடன் அங்கேயும் ரெக்கார்ட் ஆகின்றது கருமணிகளும் சுத்தம் ஆகின்றது கண்ணிலே ஒரு ஒளி அலைகள் வந்து அது தூய்மைப்படுத்துவதைக் காணலாம்.
ஆனால் தூய்மைப்படுத்தாதபடி வேதனை அதிகமாகச் சேரப்படும் போது சிறுநீர் கழிக்கும் போது எப்படி உறைகின்றதோ (உப்பு) இது போன்று அந்த மேக நீர்கள் கூடப்பட்டுக் கருமணியின் மேல் தோலில் படர்ந்து விடுகின்றது.
மேல் தோலில் இருந்தாலும் பரவாயில்லை…
1.அதற்குள் கருமணிக்குள் ஒரு சிறிய நிலை இருக்கின்றது
2.அதற்குள் அழுக்கு படிந்து விட்டது என்றால் அதை நோண்டிக் கழுவித்தான் இப்பொழுது வைக்கின்றார்கள்.
3.மேல் படலம் வேறு… கருமணி உள்ளே இருப்பது வேறு…! அதை எடுத்துத் தூய்மைப்படுத்திவிட்டு தான் இப்பொழுது வைக்கின்றார்கள்.
அதாவது கண்களை இரவல் கொடுக்கின்றார்கள் என்றால் ஐஸ் பெட்டியில் வைத்து… கருமணி பழுது இல்லாமல் இருந்தால் அதைத்தான் எடுத்து அடுத்தவர்களுக்கு வைக்கின்றார்கள்.
கண்ணை எடுத்து அப்படியே பொருத்துவதில்லை. சரியாக இருந்தால் கருமணியைத் தான் எடுத்துப் பொருத்துகின்றார்கள் (பேங்கில் இருந்து).
காரணம்… கண்ணின் கருமணியில் விஷத்தின் தன்மை அதிகமாக அங்கே தோய்ந்து விட்டால் அது எதுவும் இழுக்க முடியாதபடி… கிரகிக்க முடியாதபடி… மக்காகி விடுகின்றது…! பார்வை குறைந்து விடுகின்றது… திருத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.
அப்பேர்ப்பட்ட கண்களுக்கு இந்த கருமணிகளைப் பொருத்தி பார்வை உண்டாக்குகின்றனர்… “அது தனித்தன்மை வாய்ந்தது…”
காரணம் புழுவாக இருக்கும் போது தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து கண்கள் உருவாகி
1.அதற்குப் பின் ஒவ்வொன்றாகக் கவர்ந்து கவர்ந்து வந்து
2.மனிதனாகும்போது இந்தக் கண்ணின் கருமணிகளிலே வலுவான நிலை வருகிறது.
மனிதர்களால் இருட்டிலே மற்ற பொருளைக் காண முடிவதில்லை. ஆனால் மிருகங்களுக்கோ விஷம் அதிகம்… அதிலே எக்கோ உருவாகி இருளிலே பார்க்கும் சக்தி பெற்றது. காரணம்…
1.ஆதியிலே விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி ஒளியாக மாறியது
2.அதே மாதிரி இதில் உள்ள விஷமும் எதிரிலே மற்றதுடன் மோதிய பின் வெளிச்சம் ஆகின்றது.
3.மிருகங்களுக்கு இரவிலே கண் பார்வை தெளிகாகத் தெரிகிறது.
ஆனால் இன்று விஞ்ஞான அறிவு கொண்டு இரவிலே படம் எடுப்பதற்காக “கேமராக்களில் மெர்க்குரியை வைத்த பின் இதற்குள் வெளிச்சமாகி அந்தப் படத்தை எடுக்கின்றது…”
விஞ்ஞானிகள் செய்வது எனக்கென்ன தெரியும்…? குருநாதர் அதையெல்லாம் காண்பிக்கின்றார். இருந்தாலும் விஞ்ஞான அறிவிலே மிகவும் வளர்ச்சியானதை நான் (ஞானகுரு) அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.
ஏனென்றால் விஷக் கதிரியக்கங்கள் அது மிகவும் கடினமானது..! அதிலே ஆபத்துகள் வருவதை “எப்படி…?” என்கிற வகையில் கேட்டுத் தெரிந்து ஆபத்தை நீக்குவதற்ண்டான வழியை மட்டும் செய்கிறேன்.
குருநாதர் இட்ட கட்டளைப்படி ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து; ஒவ்வொரு உடலையும் கோயிலாக மதித்து; மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வங்களாக மதித்து
1.எத்தனை கோடி மக்கள் இதிலே தெளிந்து திருந்தி வாழ்கின்றார்களோ
2.அவர்களுக்கெல்லாம் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று ஈசனுக்குச் சேவை செய்கிறேன்.
இராமலிங்க அடிகள் சொன்னது போன்று “அருட்பெருஞ்ஜோதி நீ தனிப்பெரும் கருணை…” எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதையெல்லாம் உயிர் நமக்கு அறிவிக்கின்றது.
கோபப்படுவனை உற்றுப் பார்த்தால் நம்மையும் கோபப்படச் செய்கின்றது. தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்தால் அந்தத் தவறை நமக்குள் தெரியப்படுத்துகிறது.
1.நான் தீயதைப் பார்க்கக் கூடாது… தீயதை நுகரக்கூடாது
2.தீய செயல்களுக்குப் போகக்கூடாது… அதைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பே வரக்கூடாது
3.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! என்று இராமலிங்க அடிகள் பாடுகிறார்.
அதாவது கூர்மையாக உணர்வின் தன்மை பிளந்து… எனக்குள் அறிவென்ற உணர்வை ஊட்டுகின்றாய்…! என்று அவருடைய பாடலுக்குள் மூலக்கூறுகள் எத்தனையோ உண்டு. சொல்லுக்குள் எத்தனையோ அர்த்தங்கள் உண்டு.
குருநாதர் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்து என்னைத் தெளிவாக்கினார். ஒரு பைத்தியக்காரன் போலத் தான் இருந்தார். ஆனால் பேருண்மைகளை எமக்குத் தெளிவாக்கினார்
அதைத்தான் உங்களிடம் இப்பொழுது யாம் சொல்லிக் கொண்டு வருவது…!


உடல் உபாதைகளை அகற்ற உங்களுக்கெல்லாம் சில நிலைகளை உணர்த்துகின்றேன்
1.வெள்ளாடு நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்றது.
2.விஷத்தைத் தன் உடலாக்கி நல்ல நிலையை அது வெளிப்படுத்துகின்றது.
அதன் புழுக்கையை எடுத்து நன்றாகக் காய வைத்து ரொம்பக் கொதிகலனாகாதபடி சிறு வெப்பத்தின் நிலைகள் கொடுத்து அந்த ஆவிகள் வெளிவரும் பொழுது அதை நுகர்ந்து பாருங்கள். அதைச் சுவாசித்து உடலுக்குள் அந்த மணம் செல்லும் பொழுது மருந்து சாப்பிடுவது போன்று விஷத்தை ஒடுக்கும் வல்லமை பெறுகின்றது.
டி.பி. ஆனாலும் கேன்சர் ஆனாலும் கடும் நோயாக இருந்தாலும் இருதய வாயில்களில் அடைப்பானாலும் சிறிது நேரம் அதிகமாகச் சுவாசித்துப் பழகுங்கள். இரத்த நாளங்களில் இது கலக்கும்.
அதனுடன் சேர்த்து உங்கள் உயிரான ஈசனிடம் ஈஸ்வரா என்று வேண்டி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் ரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்.
3.எங்கள் உடலுக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் அகன்று அந்த அருள் சக்திகள் வளர வேண்டும்.
4.எங்களை அறியாமல் இயக்கும் இந்த உடல் உபாதைகள் நீங்க வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்.
ஆஸ்மா போன்ற நோய்கள் எல்லாம் பரம்பரையாக வருவது. சர்க்கரைச் சத்தும் இது போன்று பரம்பரையாக வந்து கொண்டிருக்கின்றது.. பிறந்த குழந்தைக்கும் சர்க்கரைச் சத்து இருக்கிறது என்று சொல்கின்றார்கள்.
நான்கு வயது மூன்று வயது குழந்தைகளுக்குக் கூட இன்சுலின் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் தாய் வழியில் பரம்பரையாக. வருவதனால். காசு பண வசதி இருக்கும் வரை போடுகின்றோம். காசு இல்லை என்றால் விட்டு விடுகின்றோம்.
அதற்குப்பின் இந்த மாதிரி ஆகிவிட்டதே என்று இறந்து விடுகின்றார்கள். இதே உணர்வை மீண்டும் எண்ணி எடுக்கப்படும் பொழுது அடுத்தவர் உடலிலும் இப்படி வளர்ந்து கொண்டே இருக்கின்றது. இதைக் குறைக்கும் வழி இல்லை.
கோவிலுக்குச் சென்றேன் சாங்கியங்களைச் செய்தேன். பாவத்தை போக்கக் காசைக் கொடுத்துவிட்டு செய்யும் நிலைகள் தான் இருக்கின்றது. இது எல்லாம் நம் வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
வளர்ச்சி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
மற்ற உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுவானதை நுகர்ந்து நுகர்ந்து… அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அதனின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டதோ
1.அந்த உணர்ச்சிகள் வளர்ச்சியான பின் அந்த வலுவான உடலில் அது புகுந்து அந்த ரூபமாக மாறுபட்டு எப்படி வருகின்றதோ
2.இதே போல் மனிதனின் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற ஞானிகள் அருள் உணர்வுகளை எடுத்து நாம் வளர்த்துக் கொண்டால்
3.இதன் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் சென்று உணர்வை ஒளியாக மாற்றிவிட்டு பத்தாவது நிலையான முழுமை அடைகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உடலுக்கு நம் கண் ஆண்டென்னாவாக இருக்கிறது எப்படி…?
ஒருவர் ஒன்றைச் சொல்லும் பொழுது நாம் அவரை உற்று நோக்குகிறோம்… அவரைப் படமாக்குகின்றோம்… பதிவாக்குகின்றோம்.
அதே சமயம் அவர் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து இழுக்கின்றது. சுவாசித்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகிறது.
அது எங்கே…? எப்படிப் பதிவாகின்றது…?
1.உடலில் இருப்பது – காந்தம் “எலும்பு”
2.நாம் எண்ணிய சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் வடித்து எதையும் கிரகிக்கக் கூடிய சக்தியாக
3.”ஊழ்வினை” – நம் எலும்புக்குள் ஊனாக இருக்கிறது… உடல் அனைத்திலுமே இந்த ஊன் இருக்கும்.
காந்தம்… உடலில் இப்படி இருக்கும் போது “எதையாவது நாம் உற்றுப் பார்க்கிறோம் என்றால்… அந்த உணர்வை எடுத்து ரெக்கார்ட் செய்து விடுகின்றது….!”
1.மற்றவர்கள் சொல்வது போன்று மூளையில் பதிவாக்குவதில்லை
2.உடலில் தான் பதிவாக்குகின்றது…!
ஒரு மைக்கை வைத்து நாம் பேசுகிறோம் என்றால் ஒரு டேப் (TAPE) அதைப் பதிவாக்குகிறது. அந்த நாடாவிலே தான் அது பதிவாகின்றது.
மைக்கில் பேசுகிறோம்… இருந்தாலும் அதற்கு முன்னாடி ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய வயர் வழியாகப் பிரித்து (AMPLIFIER)… ஒலி பெருக்கிக்குக் கொண்டு செல்கின்றது. அப்பொழுது பேச்சை நாம் கேட்க முடிகின்றது.
உதாரணமாக நீங்கள் என்னைத் திட்டுகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால்… “உடனே” நான் உங்களைக் கூர்ந்து கவனிக்கின்றேன்.
அப்பொழுது உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் அந்த எண்ணங்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ருக்மணி… உங்களுடைய உருவத்தை எனக்குள் படமாக்குகின்றது.
உங்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ண அலைகளைச் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொள்கின்றது. அப்பொழுது பார்க்கப்படும் பொழுது எதைக் கண் படம் எடுத்ததோ அதை இழுக்கப்படும் போது சத்தியபாமா…! என்னைத் திட்டுகின்றீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.
இப்படிப் படம் எடுக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய செல்கள் அதைப் பதிவாக்குகின்றது. அதாவது ஒரு நாடாவிலே பதிவாக்குவது போல்
1.ஊழ்வினை என்று உடலில் உள்ள எலும்புக்குள் பதிவாக்கி விடுகிறது.
2.இப்படி ஆயிரக்கணக்கானவரை நாம் பார்த்துப் பதிவாக்குகின்றோம்.
இதிலே ஒருவர் திட்டுகிறார் என்றால் கூர்மையாக அதை உற்று நோக்கிய பின் “இரு நான் பார்க்கிறேன்…!” என்றால் அதை மறக்க முடியாது.
ஆனால் சாதாரணமாக சந்தர்ப்பத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது “நாளைக்கு இந்த இடத்திற்கு வாருங்கள்… இன்னதைத் தருகிறேன்…” என்று சொன்னால்
1.அது நமக்குத் தேவைப்பட்ட முக்கியமான பொருளாக இருந்தால்
2.”அவரிடம் போய் வாங்க வேண்டும்” என்ற எண்ணம் இருக்கும்.
அப்படி இல்லாது இருந்தால்… நாளைக்குப் பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னாலும் அது நமக்குள் சரியாகப் பதிவாகாது… நினைவும் சரியாக வராது. இரண்டு நாட்கள் கழித்து “நான் வரச் சொன்னேன்… வரவில்லையே…” என்று அவர்கள் கேட்பார்கள்.
ஆனால் இந்தப் பக்கம் வந்தால் உன்னை உதைத்து விடுவேன்…! என்று சொன்னால்
1.அது “சுருக்…” என்று பட்டு விடுகின்றது… ஆழமாகவும் பதிவாகி விடுகிறது
2.இப்படிப் பதிவான பிற்பாடு அவரை நினைத்தவுடனேயே அந்த ஆத்திரம் வருகிறது
இந்த இடத்திற்கு வா பார்க்கலாம்… என்று சொன்ன பிற்பாடு
1.அங்கே போன பின் உணர்ச்சி வேகம் திக்..திக்.. என்று அடிக்கும்.
2.ஆனால் போக்கிரியாக இருக்கிறான் என்றால் நம் மனது பட..பட..பட.. என்று அடிக்கும்.
போக்கிரி இல்லாதபடி நம்மைப் போன்று சமமானவர்களாக இருந்தால் அவர் பேசிய பேச்சுக்கு (அவரின் உணர்வு தாக்கியவுடன்) நம்முடைய வலு கொண்டு “என்ன செய்வான் அவன் பார்க்கலாம்…!” என்ற நினைவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்… மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.
1.அவர்களை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நினைத்த உடனே அதைக் குவிக்கும்
2.டிவி.க்களிலே படம் எப்படித் தெரிகின்றதோ அதே மாதிரி அந்த நினைவலைகளை இழுத்து உருவமாகக் காட்டும்… உடனே அது தெரியும்
3.பரவலாக இருக்கக்கூடிய அலைகளை இழுத்துக் கண்ணுக்கு முன்னாடி புலனறிவுக்குள் “அதைக் காட்டிக் கொண்டே இருக்கும்…”
அதே உணர்வின் செயல் உயிருக்குள் பட்டு அதனுடன் தொடர் கொண்ட சிறு மூளைக்குள் சென்றவுடன்
1.ட்ரான்சாக்ஷன் ஆகி… எந்த உணர்வோ… நமக்குள் பதிவானது அந்த செல்களில் எடுத்து… அது இயங்க ஆரம்பிக்கும்.
2.அதே அலைகளை எடுத்து எடுத்து… நாம் பேசும் பொழுது தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
நாம் சுவாசத்தின் வழி எடுக்கக்கூடிய உணர்வுகள் உயிரிலே பட்டு
1.எடுக்கக்கூடிய காற்றை… காந்தத்தைப் பிரித்து… உணர்வின் சத்தைப் பிரித்து
2.அந்த அலைகளை ட்ரான்சாக்சன் செய்து சிறுமூளை உடலுக்குள் உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.
ஆனால் அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை உமிழ் நீராக மாற்றி விடுகின்றது… சாப்பிட்ட ஆகாரத்துடன் அது கலந்து விடுகிறது.
1.நம் கண்ணுக்கு “நாம் எண்ணுவது தெரிவதில்லை…!”
2.நினைவுகள் எடுக்கும் பொழுது அது உமிழ் நீராக அது மாறுகின்றது.
எப்படி…?
வெயில் காலத்தில் மாங்காயையும் உப்பையும் தொட்டுச் சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்தப் புளிப்பு அவர்களுக்கு மிகவும் ரசிப்பாக இருக்கின்றது. மாங்காய் புளிப்பு தான்… ஆனாலும் அதை ரசிக்கின்றார்கள்.
அதைப் பற்றிச் சொன்னாலும்… மாங்காயை இப்பொழுது நீங்கள் பார்க்கவில்லை… ஆனால் உமிழ் நீர் உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…?
மாங்காய் என்று சொன்னவுடனே கப..கப.. என்று உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…! அந்தப் புளிப்பின் நிலைகள் கொண்டு உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… நினைவலைகளைத் தூண்டுகின்றது.
மாங்காயைப் பார்க்கவில்லை ஆனால் அந்த சுவையின் தன்மை கொண்டு உமிழ் நீரைக் குவிக்கின்றது.
இதற்கு முன்னாடி உமிழ் நீர் ஊறவில்லை..! ஆனால் சொன்னவுடனே எப்படி உமிழ் நீர் ஊறுகின்றதோ இதே மாதிரித் தான் எரிச்சலாக ஒருவர் பேசுகிறார் என்றால் அதைப் பார்த்து நுகர்ந்ததும் அதே உணர்வு நமக்குள் வருகிறது. சொல்கிறது அர்த்தமாகிறதல்லவா…!
எரிச்சலான உணர்வு கொண்டு பேசுகிறார்… நாம் உற்றுப் பார்க்கின்றோம் அந்த எரிச்சலான உணர்வு நமக்குள் வருகின்றது
1.”சுழி முனை” என்பதற்கு விளக்கம் சொல்கின்றேன்
2.சுவாசித்த உடனே அதை ட்ரான்சாக்ஷன் செய்கின்றது
3.கண்ணினுடைய நினைவுகள் வரப்படும் பொழுது “மேக்னெட்… அந்த சுவிட்சைக் கிளைத்து விடுகின்றது…”
4.நம் உடல் மொத்தமாக அதை இழுக்க ஆரம்பிக்கும்
5.எந்த குணத்தி(ன்)ல் சுவிட்சைப் போடுகின்றமோ அதை இழுக்கின்றது
ரேடியோ டிவி பெட்டிக்குள் பல ஸ்டேஷன்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசயைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலையைக் காற்றிலிருந்து பிரித்து இங்கே எடுத்துக் கொண்டு வருகிறது.
இதே மாதிரி நம் உடலில் ஆயிரக்கணக்கான அலைவரிசை உண்டு. எந்த அலையை இழுத்துப் பேசுகிறோமோ… அந்த அலைவரிசை “தன்னாலே பேசும்…”
எண்ணும்போது அந்த அலைகளை எடுத்து நம்மால் உணர முடிகின்றது… நுகர முடிகின்றது… செயல்படுத்த முடிகின்றது.
1.அந்த உணர்வின் அலைகளைச் சுழி முனை சுழற்றி
2.சிறு மூளை ட்ரான்சாக்ஷன் செய்து பிரித்து அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சுற்ற வைக்கின்றது.
அப்போது அதே உணர்வு தான் நமக்குள் வேலை செய்யும்…!


எனது வேலை ஞான வித்தை உங்களுக்குள் வளர்ப்பது தான்
மீனுக்கு இரையைப் போடுகின்றோம். அது வந்து சாப்பிடுகின்றது. உடனே தூக்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கின்றோம்.
இதே மாதிரித் தான் உங்களுக்குள் இருக்கக்கூடிய ஆசையின் உணர்வுகளுக்கு அந்த இரைகளைப் போட வேண்டும் என்று வருகின்றேன்.
1.தொழிலில் லாபம் வேண்டும் என்று வருகிறீர்கள்.
2.அப்படி வந்த பின் அந்த வழிகளில் எடுத்து அந்த அருள் ஞான வித்தை உள்ளுக்குள் செலுத்தி விடுகின்றேன்.
3.அந்த அருள் வழியை அடுத்து நீங்கள் பின்பற்றினால் இந்த ஆசையின் நிலைகள் எதுவோ
4.அடுத்து நீங்கள் தேடாமலே செல்வங்கள் தேடி வரும். தேடாமலே உங்களுக்குள் மகிழ்ச்சி வரும்.
அந்த மகிழ்ச்சி என்று உருவாக்கப்படும் பொழுது அந்தச் செல்வம் வந்தாலும் தாராளமாக அதைச் செலவழிக்க வேண்டி வரும்.
செல்வம் இருந்தாலும் பொதுவாக அதைப் பாதுகாக்கும் ஞானம் இருக்காது. சிக்கனம் செய்வோம்… சாப்பிடாமல் கூட செய்வோம்… ஒருவரை வெறுத்துப் பேசுவோம்… சண்டைக்குப் போவோம். அதற்குச் செலவழிப்போம்.
அதே சமயத்தில் அன்புடன் இருப்போம் பரிவுடன் இருப்போம்… இருந்தாலும் அதைத் துடைக்க முடிவதில்லை.
1.வேதனைப்பட்டவரை நுகர்ந்தால் நோயாகி விடுகின்றது.
2.இந்தப் பணத்தைச் செலவழித்தாலும் அது போய் விடுகின்றது.
3.இது எல்லாம் போன பிற்பாடு அந்த நோயை நீக்க முடியுமா என்றால் முடியாது.
காசை வைத்து ஆன்மாவை விலைக்கு வாங்க முடியாது…!
அருள் ஞானிகள் உணர்வை அழியாச் செல்வமாக துருவ நட்சத்திரம் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வினை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும். வாழ்க்கையே தியானம் ஆக்க வேண்டும்.
உட்கார்ந்து தியானம் செய்து கொண்டேயிருந்தால் சக்தி கிடைக்கும் என்றால்… அடுத்து சாப்பாட்டுக்கு எங்கே செல்வது…? உட்கார்ந்து கொண்டே இருந்தபின் சாப்பாடு இல்லை என்றால்… அதை யாரும் கொடுக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் நாம் ஏங்கிக் கொண்டிருக்க வேண்டி வரும்.
ஆகவே
1.நமக்குள் அந்த மன வலு கொண்டு தொழிலையும் பார்க்க வேண்டும் உடலையும் காக்க வேண்டும் அதற்குப் பொருளும் வேண்டும்.
2.அதற்குத் தான் ஞாபகப்படுத்துவதற்கு உங்களுக்குப் பிரசாதம் கொடுக்கும் பொழுது அதில் காசைச் சேர்த்துக் கொடுக்கின்றோம்.
3.அந்தச் செல்வம் உங்களுக்கு வரும்… மகிழ்ச்சி கிடைக்கும்.
அதையாவது எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் செல்வம் தன்னாலே வரும் என்று சொல்கிறோம்.
ஆனால் அதை விடுத்துவிட்டு… நான் தொழில் செய்கின்றேன். கஷ்டம் என்ன விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது. வாங்கியவன் பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறான். அதனால் நான் வாங்கியவனுக்குக் கொடுக்க முடியவில்லை என்று இந்த ராகத்தைத் தான் பாடுகின்றோம்.
ஆகவே… அந்த அருள் ஞானத்தை வளர்க்க வேண்டும். அந்த அருளொளியைக் கூட்டி வளர்த்தால் காலத்தால் அந்த மகிழ்ச்சியை ஊட்டும். அருள் செல்வம் வளரும்.
அருள் செல்வம் வளர வளர யார் நம்முடன் பகைமையாக இருப்பினும் இந்த உணர்வுகள் சேரச் சேர உண்மைகளை அங்கே உணர்த்தும். தவறு என்ற உணர்வுகளை அவர் உணர்வார்.
உணரவில்லை என்றாலும் இந்த உணர்வின் தன்மை அவர் வலுவை இழக்கச் செய்யும். அவர் செய்யும் தவறுகளால் மற்ற இடங்களில் சிக்க வைக்கும்.
ஆக…
1.நம்மைப் பாதிக்கும் நிலை வராது.
2.நம்மைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது நல்லதைக் காக்கும் நிலை உருபெறுகின்றது
இதையெல்லாம் நாம் வழிப்படுத்துதல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.நமக்கு முன் பரவிக் கிடப்பது பரமாத்மா.
2.எண்ணி எடுப்பது ஆத்மா.
3.இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் விளைந்தால் ஜீவாத்மா.
விளைந்த உணர்வுகள் எதன் எதனுடன் இணைத்து எதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வினுடைய ஆற்றலின் நிலைகள்
1.உயிருடன் சேர்த்து நினைவுடன் சேர்ந்து இயக்கக்கூடிய ஆற்றலாக
2.ஒரே இயக்கமாக வருவது நான்காவது – காயத்ரி.
நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அது சிருஷ்டிக்கப்படுகின்றது. ஆனால் உயிரின் ஓட்டத்திற்குள் தான் இது நிலைத்திருக்கின்றது என்ற நிலையை காயத்ரி – சூரியன் என்று சொல்வது. சூரியன் என்றால் நம் உடலுக்கு “உயிர்” சூரியனாகின்றது.
குருக்ஷேத்திரம் என்பது நம் உடலுக்குண்டான நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் இந்தக் குருவான (உயிர்) நிலைகள் கொண்டு அது வளர்த்துக் கொண்ட நிலைகள் தான்.
நாம் எதை எடுக்கின்றோமோ அந்த நிலைக்கொப்ப ஞானத்தை உருவாக்கி அது உபதேசிக்கும் உணர்வின் நிலைகளில் தான் குருவுடன் அணுகி
1.நமக்கு எப்பொழுது துன்பம் வருகின்றதோ
2.அவனை நினைக்கும் பொழுது
3.அந்த ஆற்றல்மிக்க சக்திகள் நமக்கு உறு துணை செய்கின்றது.
4.இதைத் தான் அன்று கீதா உபதேசத்தின் நிலைகள் கொண்டு கண்ணன் சொன்னது.
நாம் கண்ணிலே பார்க்கப்படும் பொழுது “பிறர் செய்யும் தவறின் தன்மை தெரிகின்றது…, உணர முடிகின்றது”, அது உணர்த்திய நிலைகள் கொண்டு தவறு செய்தவரை எண்ணியே என்னை இயக்குகின்றது.
என்னுடைய நல்லதைக் காக்க வேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகள் என் உடலுக்குள் சென்று தீய விளைவுகள் உருவாக்காதபடி அதைத் தடைப்படுத்த வேண்டும்.
அதைத் தடைப்படுத்தும் நிலைகளுக்குத்தான் கீதா உபதேசம் காட்டப்பட்டது.
1.”ஒ…ம்” என்ற உணர்வின் உணர்ச்சி “ஒங்கார” .நாதம் கொண்டு வானை ஏகுகின்றான்.
2.இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய பல எண்ண அலைகளை அடக்கி
3.அந்த “ஓ…ம்” என்ற நாதத்தை உயிருடன் சுருதியை ஏற்றி இந்த உணர்வை
4.வலு கொண்டு சுவாசிக்க (இழுக்க) வேண்டும்.
ஏனென்றால் கண்ணன் (கண்களால்) இங்கே தவறு செய்பவர்களைப் பார்க்கும் பொழுது இந்த நிலை ஆகின்றது.
இந்த உடலுக்குக் குருவான உணர்வின் தன்மை கொண்டு அங்கே விண்ணை நோக்கி ஏகி “ஓ…ம்” என்ற ஓங்கார உணர்ச்சியைச் செலுத்தி மனித உடலுக்குள்ளிருந்து வரும் சிற்றலைகளை அடக்கிடல் வேண்டும்.
பின் இந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி மெய் உணர்வை ஊட்டிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு
1.எங்கே எண்ணித் தாக்க வேண்டும் (எனக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும்) என்று எண்ணினார்களோ
2.அந்த எண்ணத்தை “அங்கேயே” நிறுத்த வேண்டும்.
3.அம்பைக் கொண்டு அல்ல.
4.புறத்தால் காட்டிய இந்த அம்பை எய்து அந்த உடலைத் தவறு செய்பவர்களை வீழ்த்துவது அல்ல.
உடலை வீழ்த்த வேண்டும் என்ற அந்த உடலுக்குள் நின்று அந்தத் தீமையான உணர்வை இயக்கியதை அந்த ஆற்றல்களை அங்கே நிறுத்தி “அவனை நல்லவனாக்க வேண்டும்”.
(மகாபாரதத்தில்) குருவே எதிரியின் பக்கம் இருந்து அந்த விஷத்தின் தன்மை சிக்கியபின் குருவாகக் காட்டப்பட்ட அந்த மெய் உணர்வின் சக்திகளை எப்படி மீட்டுவது?
குருவிற்குள் தன்னை அறியாது வந்தாலும் அந்தக் குருவின் நிலையை அவரை அறியாது ஏனென்றால் அந்தப் பாசத்தின் வலைகளில் சிக்கும் பொழுது
1.குரு என்ற நிலையில் மரியாதை
2.இங்கே சகோதரர் என்ற மரியாதை
3.ஆனால் அவர்கள் செய்வதோ தவறு.
எனக்குள் இருக்கக்கூடிய வலிமை கொண்டு “அவரை வீழ்த்தி விட்டால்…” நான் யாருக்காக வேண்டி வாழ்கிறேன் என்ற இந்த உணர்வின் சோகங்கள் இங்கே தூண்டும் பொழுது அப்பொழுது தீமையை வளரவிடும் நிலையாகி “நல்லதைக் காக்கும் திறன் இழக்கின்றது”.
மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இந்தப் பாசத்தின் நிலைகள் எல்லை கடந்து செல்லும் பொழுது நம்மால் அதை மீட்டும் நிலை அது பலம் இழந்து நம்மையே வீழ்த்தி விடுகின்றது.
இத்தகைய நிலையைத்தான் அர்ச்சுனனுக்கு (அர்ச்சுனன் என்பது சகல வலிமையும் கொண்ட உணர்வின் நிலைகள்) தன் உயிரான நிலைகள் கீதா உபதேசத்தின் தன்மை உபதேசிக்கும் பொழுது
1.நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் வருகின்றாய்.
2.எதை நினைத்தாலும் அந்தக் கண்ணின் வழி கொண்டு தான் அறிய முடியும்.
3.நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலிலே விளைகின்றது.
4.நீ எதை நினைக்கின்றாயோ அதனின் நிலைகள் யார் எதைச் செய்தாலும் என்னிடமே நீ வந்து சேர்வாய்.
5.என் நிலையையே நீ அறிவாய் என்று
6.இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு காட்டப்பட்டது.
ஆனால் கண்ணின் நினைவுகள் என்னாகின்றது? கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்கிறபோது அவர் அறியாத நிலைகள் அங்கே வருகின்றது.
அவர் எடுக்கும் உணர்ச்சிகள் இந்த உடலை ஆட்டிப்படைக்காதபடி இந்தக் கண்ணின் நிலையை அவருடன் ஒன்றி கண்ணா…! என்று நாம் எண்ணும் பொழுது
1.இந்தக் கண்ணின் நிலைகள் உயிருடன் எண்ணி
2.நினைவை நாம் இங்கே புருவ மத்தியில் செலுத்தி
3.நமக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் குருவான – உயிருடன் அங்கே ஏங்குவது.
அதைத் தான் குருக்ஷேத்திரப்போர் என்பது.


உடல் பெறும் உணர்வுகளைக் கரைப்பது என்றால் அதனின் உப்பொருள் என்ன…?
கூட்டுத் தியானங்களில் அருளுணர்வைப் பெற்று அதன் வழியில் சார்புடாயோர் நிலைகள் கொண்டு நாம் முன்னோர்களை விண் செலுத்துகின்றோம்.
ஏனென்றால் இதற்கு முன் நம்மிடம் இந்தப் பழக்கங்கள் இல்லாததால் இப்போது நம் குரு காட்டிய அருள் வழியில் அந்தந்தக் குடும்பத்தார் உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை காலை துருவ தியான நேரங்களில் அந்த வலுவை ஏற்றுக் கொண்டு எளிதில் விண்ணுக்கு அனுப்ப முடியும்.
உடல் பெறும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த பின் இந்த உணர்வுகள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.
1.காரணம் உடல் பெறும் உணர்வுகளைSAP அவர்கள் கரைத்தவர்கள்.
2.அங்கே கரைத்து வெளிவருவது என்றால் அடுத்து காலை சூரிய உதயம் வருகின்றது
3.அடுத்து வரப்படும் பொழுது இந்த உடலில் இருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை விஷத்தை அது கவர்ந்து செல்கின்றது
4.ஏனென்றால் அது பிரித்தது
உதாரணமாக கருணைக்கிழங்கை நாம் வேக வைக்கின்றோம். இந்த விஷத்தின் தன்மை பிரிந்து சென்ற பின் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இயற்கையில் விளைந்த உணர்வு தான்.
ஆனால் நாம் வேகவைத்து நீக்கினாலும் எதன் கலவையுடன் கலந்து இந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றோமோ இந்த உணர்வலைகள் வெளிப்படுத்தி நாம் அதை உணவாக உட்கொண்டால் அந்த உணர்வின் தன்மை எடுத்து வைத்திருப்பதை உணவின் அணுக்கள் ஆக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து அதை நமக்குள் வளர்க்கின்றது.
எந்தப் பொருளானாலும் நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது இந்த உணர்வின் தன்மை கொண்டு அணுக்களாக்கப்படும் பொழுது அதை நமக்குள் உருவாக்கி
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தை பதிவு செய்கின்றோமா அந்த பதிவின் நிலை கொண்டு அந்த அணுக்கள் மாற்றம் அடைகின்றது.
2.இதை நாம் செயல்படுத்த வேண்டும்.
இதைப் போல ஒவ்வொன்றும் நாம் எடுத்த உணர்வைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது
ஆனால் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியே செலுத்தப்படும் பொழுது காலை சூரிய உதயம் வரப்படும் பொழுது மேலே கொண்டு செல்கிறது. அங்கே ஓசோன் திரை என்பது விஷத்தின் அடர்த்தியாகி தன்னுடன் விஷத்தை இணைத்துக் கொள்ளும் நிலை பெற்றது.
அதாவது சூரியானிலிருந்து மற்ற பிரபஞ்சங்களுலிருந்து வரக்கூடியதை நம் பூமியின் சுழற்சி வட்டத்திற்குள் இந்த அடர்த்தியான ஒசான் தான் விஷத்தை உள்ளே போகாது தடுக்கின்றது.
சூரியனிலிருந்து வரக்கூடியது அல்ட்ரா வயலட். விஷத்தின் தன்மை கொண்டது அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக் கதிர்கள் வெகு தூரத்தில் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது. நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத்தன்மைகள் பிரிகின்றது.
ஆனால் இந்த மோதலில் வெப்ப மின் அணு போன்று ஆகும் பொழுது ஈர்த்துத் தனக்குள் அந்த விஷத்த்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மை அடைகின்றது
ஆகவே இந்த இயற்கை நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வருவது பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியான பின் (ஒசான்) பூமிக்குள் ஜீவணுக்கள் மற்ற உயிரினங்கள் வாழும் தகுதி பெறுகின்றது. நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையில் நமக்குள் அடக்கச் சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.
இதைப் போன்று தான்
1.நாம் உயிரான்மாக்களை விண் செலுத்தும் போது பிரபஞ்சத்தை விட்டு வெளியே சென்ற பின்
2.அந்த விஷத்தின் உணர்வுகள் ஓசான் திரையுடன் அதன் அடர்த்தியில் கலந்து விடுகின்றது.
3.மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் மீண்டும் இந்த உயிரின் தன்மை இதன் உணர்வின் தொடர் கொண்ட உடலைத்தான் உருவாக்கும்.
4.இந்த உடலில் எத்தகைய உணர்வு எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வுக்கொப்பத் தான் உடலைத் தேடிச் சென்று இந்த உணர்வின் தன்மை உடல் ஆக்கும்.
ஆகவே உயிருடன் ஒன்றி ஒளியாக்கும் நிலைகளை ஆக்க அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க “காலை துருவ தியானத்தில் எவர் ஒருவர் அந்த அரும்பெரும் சக்தி எடுத்துச் செயல்படுத்துகின்றார்களோ… அவருடைய சார்புடையவரை எளிதில் விண் செலுத்த முடியும்…”

அகஸ்தியனின் புலன்
ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான். சந்தர்ப்பத்திலே அதைப் பார்க்கின்றோம். அந்த வேதனையை நாமும் நுகர நேர்கின்றது… நம்மையும் அது இயக்குகிறது.
அதே போன்றுதான் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற சந்தர்ப்பம் அகஸ்தியனின் தாய் தந்தையருக்குக் கிடைத்தது. எப்படி…?
1.மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகப் பச்சிலை மூலிகைகளைப் பயன்படுத்தினார்கள்.
2.அந்த மணங்களைச் சுவாசித்த பின் அந்தச் சந்தர்ப்பம் பல விஷத் தன்மை முறிக்கும் நிலை வந்தது.
3.அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்… ஏனென்றால் மிருகங்கள் தங்களைக் கொன்று விடும்… தன்னைக் காக்க வேண்டும் என்று.
4.அந்தச் சந்தர்ப்பத்தால் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றார்கள்.
நுகரும் உணர்வுகள் புலனறிவாக எப்படி இயக்குகிறது…? என்று “புலஸ்தியர்…” என்று அக்கால மக்களைச் சொல்வார்கள்.
இன்று விஞ்ஞானிகள் மெய் ஞானிகள் என்று சொல்கிறோம் அல்லவா. அது போல
1.புலனின் உணர்வுகளைத் தெரிந்து கொண்டவர்கள்… புலஸ்தியர்… பூமியின் முதல் மனிதர்கள்.
2.ஒரு தாவர இனத்தைத் தனக்குள் சேர்த்துக் கொண்டால் அதனின் அறிவு என்ன செய்கிறது…? என்ற உண்மையின் இயக்கத்தை அறிந்தவர்கள்.
அந்த ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் காலை துருவ தியான நேரத்திலே அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்தச் சக்தியைத் தொடர்ந்து எடுக்கும்படி சொல்கின்றோம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து “உங்கள் உடலுக்குள் அது அணுவாகும் தத்துவத்தைத் தான்…” குரு வழியில் உபதேசிக்கின்றோம்.
எல்லா நேரமும் நாம் தியானம் செய்யலாம். இருந்தாலும் இந்த அதிகாலை நேரத்தில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த உணர்வுகளைக் கலந்து உங்களுக்குள் அந்த உண்மையின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ள ஏற்படுத்துகின்றோம்.
உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது…? நாம் ஏன் கோபப்படுகின்றோம்…? நாம் ஏன் வேதனைப்படுகின்றோம்…? நாம் ஏன் தீமை செய்கின்றோம்…? என்று சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்.
ஒருவன் தவறு செய்கிறேன் என்றால் அவனை நாம் குற்றவாளியாக ஆக்குவதற்கு மாறாக அவன் உணர்வை நாம் எடுத்தால் பல தடவை அதைக் கேட்டறிந்தால் சந்தர்ப்பம் நம்மையும் குற்றம் இழைக்கக்கூடிய நிலையாக… குற்றம் செய்பவனாக வளர்த்து விடுகின்றது.
நான் தவறே செய்ய மாட்டேன் என்பார்கள். ஆனால் தவறு செய்தவர்களை அடிக்கடி உற்று நோக்கினார்கள் என்றால் இவர்களும் அதைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.
1.எல்லாமே சந்தர்ப்பம் தான்.
2.ஆகவே நல்ல சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.
பகைமையோ வெறுப்பையோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ வரும் பொழுது துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தித் தீமையை வலுவிழக்கச் செய்து அந்த உணர்வினை நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.
தெளிந்து தெளிவான நிலைகள் கொண்டு வாழ்ந்து தீமைகளை அகற்றி வாழ்வதற்குத் தான் குருநாதர் சொன்ன வழியினைப் போதிக்கின்றோம்.
1.அகஸ்தியன் அருளை… அவன் எப்படிப் புலனின் நிலையை அறிந்தானோ
2.அந்த புலனின் தன்மையை நுகரச் செய்து உங்கள் நல்ல புலனாக அறிந்திடும் அறிவின் புலனாக
3.அகஸ்தியனின் புலனை… அவன் ஒளியான உணர்வின் புலனை உங்களுக்குள் செவி வழி கேட்கும் படிச் செய்து
4.உங்களை நுகரச் செய்து உங்கள் ஆகாரத்தின் வழி ரத்தத்தில் கலக்கச் செய்து கொண்டிருக்கின்றேன்.
இதை நீங்கள் தொடர்ந்து வளர்த்துக் கொண்டால் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து கல்கி என்ர நிலையை அடைய முடியும்.
ராமேஸ்வரம் – எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இந்த உடல்…! தனுசு கோடி – ஒவ்வொரு நிமிடமும் தீமை என்ற உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு மாற்றிக் கொண்டே வரவேண்டும்.
1.கோடிக்கணக்கான உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.
2.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து கொண்டே வந்தால் தனுசு கோடி.
எத்தனை கோடி உணர்வுகள் வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொள்ளும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம்.
1.அந்த ஆற்றலை நாமும் நிச்சயம் பெற முடியும்
2.அகஸ்தியனின் புலன் கொண்டு அந்த முழுமையை அடைய முடியும்.

பிறருக்கு உதவி செய்தாலும்… அவரிடமிருந்து வரும் இருளான உணர்வுகள் நம்மை இயக்கி விடக் கூடாது
பெரும்பகுதியான மக்கள்… மகான்களை நேரடியாகச் சந்திக்கும் பொழுது தங்களுக்குப் பொருள் வேண்டும் செல்வம் வேண்டும் என்று தான் அணுகுகிறார்கள். மகான்கள் கூறும் உண்மையின் உணர்வைப் பெறுவதில்லை… அதைக் கடைப்பிடிப்பதில்லை.
தன் வாழ்க்கைத் தேவைக்குத் தான் மகான்களைச் சந்தித்தார்கள். தன் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்குமா…? என்று பார்க்கிறார்கள்.
இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது.
பிழைப்புக்குக் கிடைக்க வேண்டும் என்றாலும் ஞானம் இல்லை என்றால் அப்படி வந்த பணத்தைச் சீராகப் பாதுகாக்க முடியாது.
1.செல்வங்கள் வந்தாலும் அந்த ஞானம் இல்லை என்கிற பொழுது ஆசையினால் “கடைசியில் இப்படி ஆகிவிட்டதே…” என்று வந்துவிடும்.
2.காரணம் ஒன்று கிடைத்தாலும் கூட அந்த ஆசை அதோடு திருப்தி அடைவதில்லை.
3.இதைப் பெற்றால் பரவாயில்லை என்று முதலில் நினைப்போம்.
4.நன்றாக வந்தது என்று அதை வைத்து இன்னொன்றைப் பெருக்கலாம் என்று ஆசை வரும்.
5.அதில் நஷ்டமாகி விட்டால் வேதனை…!
6.வேதனை வந்தபின் முதலில் வந்து கொண்டிருந்ததும் போய் விடுகின்றது… அடுத்து வளர்வதும் போய் விடுகின்றது.
7.இரண்டும் சேர்த்து வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்து உடலில் நோயாக உருவாக்கத்தான் தயாராகின்றது.
8.நோயான பின்… “நான் இப்படி எல்லாம் செய்தேனே… நன்றாக முயற்சி செய்தேனே…” என்று சொல்வார்கள்.
பணம் அதிகமாக இருந்தால் தாராளமாகச் செலவழிப்பார்கள். பிறருக்கு உதவியும் செய்வார்கள். ஆனால் அந்தக் கஷ்டப்பட்டவர்கள் வேதனை எல்லாம் நுகர்ந்து விடுவார்கள். அதைத் துடைக்கத் தெரிவதில்லை.
நான் எல்லாம் செய்தேன்… ஆண்டவன் கடைசியில் என்னை இப்படி ஆக்கிவிட்டான்…! என்று புலம்புவார்கள்.
ஆலயங்களுக்குச் சென்றால் “தர்மம் செய்ய வேண்டும்… ஆண்டவன் அப்போது தான் மெச்சுவான்” என்று எல்லா மதங்களுமே சொல்லுகின்றது. அதன் வழி நாமும் தர்மம் செய்கின்றோம்.
ஆனால் அப்படிச் செய்யும் பொழுது என்ன நடக்கிறது…?
அவனோ பாவத்தின் எல்லையில் இருக்கின்றான்… தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
1.ஆனால் நம்மிடம் உதவி பெற்ற பின் ஆ…! “ஆஹா…!” இன்று அந்த ஆசையிலே அவன் உணர்ச்சிகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றான்.
2.அவனை உற்று நோக்கி அவன் ஏங்கிப் பெறும் உணர்வுகளை நாமும் நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.
நல்லது தான் செய்கின்றோம்… ஆனால் அவருடைய உணர்வுகள் இங்கே வந்து “அவனுடைய தரித்திரத்தை” இங்கே கொண்டு வந்து விடுகிறது. அதை நீக்கத் தெரிவதில்லை.
இதைப் போன்று பிறரது இருள் சூழும் உணர்வுகள் நமக்குள் வருவதைத் தூய்மைப்படுத்தாதபடி “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்” என்று தான் எண்ணுகின்றோம்.
ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன்…? நமது உயிர் தான்.
1.ஈகை பண்புடன் தான் உதவி செய்தோம்
2.ஆனால் அவருடைய இருள் சூழ்ந்த உணர்வுகள் இங்கே நமக்குள் விடுகின்றது.
3.அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.
உதாரணமாக எத்தனையோ உணவுப் பொருள்களைச் செய்கின்றோம் அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி மற்ற அசுத்தங்கள் படத்தான் செய்யும்.
அப்போது அதை மூடி வைக்க வேண்டும் அல்லவா.
மூடி வைக்காதபடி நான் நன்றாகத் தான் செய்தேன். அதிலே மண் தூசி எல்லாம் வந்து விட்டதே…! என்று சொன்னால் எப்படிச் சரியாகும்…?
இதைப் போன்று தான்
1.அந்தப் பாதுகாப்பு நிலை இல்லை என்றால் நம் ஆன்மாவில் மற்றவருடைய இருளான உணர்வுகள் புகுந்து
2.உடலுக்குள் அணுக்களாக விளைந்து கடும் விளைவுகளை உண்டாக்கி விடும்.
அதனால் தான் அடிக்கடி ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து ஞாபகப்படுத்துகின்றோம்.
எந்தக் காரியத்தைச் செய்தாலும் காரியத்தைச் செய்வதற்கு முன்பும் பின்பும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று இதை உடலுக்குள் வலுவாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.
1.நம் பார்வை சொல் செயல் அனைத்தும் அந்த மகரிஷிகள் உணர்வின் தன்மையாகவே நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.எத்தகைய நிலையிலும் பிறரின் உணர்வு நம்மை இயக்கி விடக்கூடாது… அது உடலுக்குள் அணுக்களாக விளைந்து விடக்கூடாது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனித வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமைகளை நாம் பார்க்க நேர்கிறது. அவருடைய குறைகளை நினைக்கும் போதெல்லாம் அந்தக் குறை தான் நம்மை இயக்குகின்றது.
1.பிறருடைய தவறு தான் நம்மை இயக்குகின்றது என்பதும் அப்போது நமக்குத் தெரிகின்றது
2.அதாவது அவர் மீது நாம் கொள்ளும் கோபமோ ஆத்திரமோ அது வெளியில் இருந்து வந்து தான் நம்மை இயக்குகிறது.
அத்தகைய நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதைத் தடுக்க வேண்டும்.
பின் அந்தக் குறை எங்கிருந்து யாரால் வந்ததோ அவர்களை எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்; அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் பக்குவமும் அந்த நல்ல உணர்வுகளும் வளர வேண்டும்; நல்லது செய்யும் அந்த உணர்வுகள் வளர வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்து “நமக்குள் அதை விளைய வைக்க வேண்டும்…”
இத்தகைய உணர்வுகளுடன் கலந்து நம் சொல் மூச்சலைகள் வெளிப்படும் போது அவரையும் அது மாற்றுகிறது. இப்படி ஒவ்வொருவரும் பழகிக் கொண்டால்
1.பிறருடைய தீமைகள் நம் வீட்டுக்குள் வருவதில்லை
2.நம் தெருவிற்குள் தீமை செய்யும் உணர்வலைகள் படர்வதில்லை
3.பகைமைகளை மாற்றி நல்ல உணர்வாக இங்கே படரச் செய்கின்றது… ஊருக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.
ஆகவே நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் கிளைகளாக வளர்வோம். அனைவரையும் பொருளறியச் செய்வோம். இருளைப் போக்கும் அருள் சக்தியைப் பெறுவோம்.
கணவன் மனைவி குழந்தைகள் குடும்பம் என்று… அருள் வழியில் ஒன்றுபட்டு வாழ்ந்து மக்களுக்கு எடுத்துக்காட்டாக நாம் வளருவோம் குறைகளை எண்ணாதபடி குடும்பத்தை உயர்த்திடும் நிலையாக நாம் செயல்படுவோம்.
யாம் உங்களுக்குக் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன்னாடி நின்று… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் இதை எடுத்து வளர்த்துக் கொண்டே வாருங்கள்.
அதற்குத்தான் அருள் ஞானச் சக்கரத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்
1.அது உங்களைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துக் கொண்டே வரும்
2.ஆறாவது அறிவை “ஏழாவது நிலை ஒளியாக…” உருவாக்கிக் கொண்டே வரும்.
அதை வெறும் சக்கரமாக எண்ண வேண்டாம். துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுப்பதற்கு “உங்களுக்கு ஏதாவது வேண்டும்” என்பதற்குத் தான் அருள் உணர்வைப் பதிவு செய்து அதைக் கொடுத்தது.
அருள் செல்வம் உங்களுக்குள் வளரும்… அருள் ஞானம் பெருகும்; இருளை அகற்றும்; மெய்ப்பொருளை காணச் செய்யும். அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக அமையும்.
1.நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரமாக மாற வேண்டும்
2.அந்த ஒளியின் உணர்வாக மாற வேண்டும்
3.நம் பார்வையால் பேச்சால் மூச்சால் பிறருடைய தீமைகள் அகல வேண்டும்.
நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… எல்லாவற்றையும் உருவாக்கிய அவருடைய அருளால் இதை நான் (ஞானகுரு) அறிந்து கொண்டேன்.
குருதேவரை நினைத்து துருவ நட்சத்திரத்தை நினைத்து அந்த அடிப்படையில் இந்த வாழ்க்கையை நாம் கொண்டு சென்றால் என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்கின்றோம். இருளை அகற்றும் சக்தி பெறுகின்றோம்.
நாம் இருக்கும் இடங்களில் நல்ல மழை பெய்யச் செய்ய முடியும். விஷத்தன்மைகளால் உருவாகும் நோய்க் கிருமிகளால் புதிய நோய்கள் நம்மைத் தாக்காது காத்துக் கொள்ள முடியும்.
எல்லா உயிரும் கடவுள்;
எல்லா உடலும் கோவில்
எல்லா உடலும் சிவம்;
எல்லோருடைய கண்களும் கண்ணன்;
எண்ணும் எண்ணங்கள் இராமன்;
கல்யாணராமா – மகிழ்ச்சி என்ற உணர்வு நமக்குள் தோன்ற வேண்டும்.
எண்ணங்கள் எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தும் உணர்வுகளாக நமக்குள் வளர்ப்போம். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவோம் என்ற இந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்.
குரு காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்தி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கி
2.எல்லாமே ஒளி என்ற உணர்வுடன் ஒன்றி வாழ்வோம்… மற்றவர்களையும் அதிலே ஒன்றச் செய்வோம்.
3.துருவ நட்சத்திரமாக நாம் ஆவோம்.
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்கள் இணைந்து ஒன்றுடன் ஒன்று துணையாக வாழ்ந்து வளர்வது போன்று அந்த அருள் வழியை நாமும் பெற்று பேரானந்த நிலை பெறுவோம்.


”நான் உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை
நாம் ஒரு பாம்பைக் கொன்றால் பாம்பின் உயிரான்மா நமக்குள் வந்து விடுகின்றது. ஆனால் ஒரு பாம்பு நம்மைத் தீண்டி விட்டால் அந்த விஷம் உடல் முழுவதும் பரவும் பொழுது பாம்பின் நினைவே நமக்குள் வருகின்றது. அந்த விஷம் அதன் நினைவுக்கே அழைத்துச் செல்லும்.
எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நாம் மனிதனாக வந்தாலும் அதன் உணர்வு… நம் நினைவாற்றல் அனைத்தையும் மறையச் செய்து விடுகின்றது.
1.உடலை விட்டுச் சென்றால் அதனின் ஈர்ப்புக்குள் சென்று
2.நாம் பாம்பாகத்தான் பிறக்க நேரும்.
எத்தனையோ காலம் பல உடல்களைக் கடந்து மனிதனாக உருப்பெற்று வந்திருந்தாலும்
1.இத்தகைய விஷத்தை வென்ற… விஷத்தை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அந்த நிலைகளை நாம் நுகர்ந்தோமென்றால்
3.பாம்பின் நினைவு மறந்து நஞ்சை வென்ற நினைவு வரும்.
அந்தப் பாம்பினத்திற்குள் செல்லாது தடைப்படுத்த நம் உணர்வின் நினைவலைகளும்
1.கண் எதைக் கடைசியில் நினைவு கொண்டதோ
2.அங்கே இந்த உணர்வின் துணை கொண்டு நாம் விண்ணுக்குச் செல்ல முடியும்.
அதனால் தான் கண்ணன் முதலில் பார்த்தசாரதி. பின்… எதன் வலுவைப் பெற்றதோ அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது பாம்பின் உணர்வு வலுவாகிவிட்டால்… நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கும் பொழுது இந்தக் கண் எது தன்னைத் தீண்டியதோ அந்த உணர்வும் அந்த விஷத்தின் தன்மை பட்டபின் அதன் வலுவின் தன்மை கொண்ட பின்… இதே கண்கள் பாம்பின் உடலுக்குள் அழைத்துச் சென்று விடுகின்றது.
அது தான் கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாகச் சென்றான். கண்களின் நினைவு… அதாவது அந்தப் பாம்பின் உணர்வுகள் நம் உடலுக்குள் வலிமை ஆகிவிட்டால் அர்ஜுனன்.
அந்தப் பாம்பிடமிருந்து தப்பிக்க நம் கண் எத்தனை உபாயங்களைச் சொல்கின்றது. இருப்பினும் இந்தக் கண் அந்தப் பாம்பின் உணர்வை வலுவாக்கி விட்டால் அர்ஜுனன் ஆகின்றது.
அர்ஜுனன் ஆனபின் எந்த உடலின் தன்மை கொண்டதோ இது தீண்டினாலும் அதன் உடலுக்குள் சென்ற பின் அது பாதுகாப்பு தருகின்றது.
1.ஆகவே கண்கள் எதனின் உணர்வை நுகர்ந்ததோ
2.அதன் வழியிலேயே நம்மை அழைத்துச் சென்று அதன் வழியிலே நம்மைப் பாதுகாக்கின்றது.
மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைந்தது துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும். இதைப் போன்று ஒன்று தீண்டி விட்டால் அந்த வலுக்கொண்ட எண்ணத்துடன் நாம் அதை எண்ணும் பொழுது
1.இந்த உடலில் நஞ்சுகள் பாய்ந்தாலும் நஞ்சின் உணர்வு இதற்குள் கலந்தாலும்
2.நாம் பாதுகாப்பான இடங்களை (துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும்) எண்ணும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை வலுப் பெற்று உடலை விட்டு வருகின்றோம்.
உடலை விட்டு வந்தாலும் இது அர்ஜுனன் ஆகி அந்த உணர்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும். இங்கே நஞ்சினை ஒடுக்குகின்றது.
1.ஆனால் உடலை விட்டுச் செல்லும் பொழுது
2.அதன் அருகிலே (ஈர்ப்பு வட்டத்திற்குச்) செல்கின்றோம்.
நஞ்சின் உணர்வுகள் கரைகின்றது மனிதன் என்ற உணர்வின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகின்றது. அது தான் “பிறவி இல்லாத நிலை…”
எந்தச் சந்தர்ப்பத்தில் இந்த உடலை விட்டு உயிரான்மா சென்றாலும்
1.எது நம்மைத் தாக்கியதோ அந்த உணர்வின் வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.இந்த வலுவை இழக்கச் செய்து “அருள் ஒளியின் உணர்வை” நாம் பெறும் தகுதியைப் பெற வேண்டும்.
அந்தத் தகுதியை நாம் காலையில் துருவ தியானத்தில் நாம் வலுப்பெறச் செய்ய வேண்டும்.
நாம் எப்படி எந்த நிலையில் ஒளியின் உணர்வை எடுத்தாலும் ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அந்த ஒளி பட்டு “இந்த உடலும்” கரையத்தான் செய்யும்.
1.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்.
2.”நான் இந்த உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை.
3.அவன் எதனின் உணர்வு கொண்டு உடலை விட்டுச் சென்றானோ ஒளியின் சரீரமாக மாறுகின்றான்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
முந்தி எல்லாம் தியானத்தில் சூரியனைப் பார்க்கும்படி சொல்லி இருந்தேன். ஆனால் இப்பொழுது சூரியனுக்குள் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. அதைப் பார்த்தோம் என்றால் நம் கண்களுக்கும் மனதுக்கும் விஷத் தன்மைகள் தான் பரவும்…!
விஷத்தன்மையான நிலைகள் அதிலிருந்து நம் பூமிக்குள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது. அதனால் சிந்தனையற்ற நிலைகளும் புதிய நோய்களும்… ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் உணர்வுகளும் வளர்ந்து கொண்டுள்ளது.
1.மற்றவரைக் கொல்ல வேண்டும் என்ற உணர்வு தான் மனிதர்களுக்கு வருகின்றதே தவிர “காக்க வேண்டும்…” என்ற உணர்வு உலகெங்கிலும் இல்லை
2.எந்தக் கோவிலுக்கு யார் சென்றாலும் இவன் உருப்படுவானா…? என்று சாபம் விடும் நிலை தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது
எந்த மதமானாலும் அவர்கள் ஆலயங்களுக்குள் சென்று தெய்வத்தை வணங்கினாலும் தன் குடும்பங்களைப் பற்றிய சிந்தனைகள் வரப்படும் பொழுது ஒருவருக்கு ஒருவர் சாபம் விட்டு… அவர் கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வுகளைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.
ஆனால் வெளியிலே சொல்லும் பொழுது… “நான் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள் அவர்கள் உருப்படுவார்களா…?” என்று குறைகளை வளர்த்துக் கொள்ளும் நிலை தான் வருகிறது.
அப்படி எல்லாம் இல்லாதபடி
1.எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.எங்கள் பார்வையில் தீமைகள் அகல வேண்டும்
3.எங்கள் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக வளர வேண்டும்
4.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
5.நாங்கள் பார்க்கும் அனைவருக்கும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.
இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.
காரணம் விஞ்ஞான அறிவில் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது. பல வகையான வெடி குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள்.
கடலிலிருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து அணுவைப் பிளந்து மற்றொன்றுடன் அதாவது நியூட்ரான் புரோட்டான் என்ற நிலைகள் சில இதுகளைக் கலந்து வைத்துள்ளார்கள்.
சாதாரணமாக… நட்சத்திரத்தின் துகள்கள் வெளி வரப்படும் பொழுது சூரியன் இழுத்து அதைக் கவர்ந்து விட்டால் “நியூட்ரான்…” அது அழுத்தமாகச் செல்லும் பொழுது இந்த விஷத்தன்மையைக் கண்டபின் மற்ற அனைத்துமே பயந்து ஓடுகின்றது.
1.அப்போது ஒன்றோடு ஒன்று மோதி பல கலவைகளாக மாறிச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
2.அதை எடுத்து இராக்கெட்டில் இணைத்து விண்ணிலே செலுத்துகின்றான் விஞ்ஞானி.
3.அதை வைத்து நியுட்ரான் குண்டு என்று தயார் செய்துள்ளார்கள்.
அந்த நியூட்ரான் குண்டுகளை வெடிக்கச் செய்தால்… மனிதன் இருக்கும் பக்கம் பட்டால் சிந்தனை இழந்து பைத்தியம் பிடித்த மாதிரி மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
கட்டடங்கள் மற்றும் எல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் இங்கு மனிதர்கள் வாழ முடியாது. அத்தகைய புத்தி பேதமாக்கும் உணர்வலைகள் காற்றிலே பரவுகின்றது.
நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் கதிரியக்கச் சக்திகள் தான் பூமிக்குள் உருவான கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மூல காரணம். அனைத்திலுமே அந்தச் சக்தி உண்டு.
அதே சமயத்தில் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள்… அணு மின் நிலையம் மற்றும் அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் போது அந்தக் கதிரியக்கங்களின் கசிவுகள் அனைத்தையுமே சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.
இது காற்றலையில் பரவிப் போகும் போது ஆரம்ப நிலையில் “நியூட்ரான்” என்று அழுத்தம் ஆன பின் தன் அருகிலிருப்பதை எப்படி அது விரட்டிச் சென்றதோ அதே மாதிரி
1.அதுவும் இதுவும் (இயற்கையில் உருவானதும் செயற்கையின் கசிவுகளும்) மோதிய பின் பெரும் சுழிக்காற்றாக மாறுகின்றது
2.கல்லுக்குள் மண்ணுக்குள் கட்டடத்திற்குள் இது பாய்ந்து அதனுடைய அழுத்தம் வீரியமடைந்து
3.பெரிய காற்றாடி போல போகும் பாதையில் உள்ள அனைத்தையும் பிய்த்து எறிந்து கொண்டு செல்கிறது.
அமெரிக்காவில் இது அதிகமாக நடக்கிறது… பத்திரிகையில் நீங்கள் படித்திருப்பீர்கள்… மற்ற நாடுகளிலும் நம் நாட்டிலும் இப்பொழுது சிறுகச் சிறுக வந்து கொண்டிருக்கின்றது.
எங்கெங்கே செயற்கையில் அணுக்கதிரியக்கங்களை உற்பத்தி செய்து பரவச் செய்துள்ளார்களோ அந்த நாடுகளில் எல்லாம் இது சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. பெரிய பெரிய கட்டிடங்களும் சுக்கு நூறாகித் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கின்றது.
அதே சமயத்தில் அத்தகைய சுழிக் காற்று
1.கடல் பக்கம் செல்லும் போது அங்கிருக்கும் நீரைக் கவர்ந்து பெரும் பெரும் மேகங்களாகக் குவித்து
2.நகரத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்து பெரும் மழை நீராக… ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை
3.சில மணி நேரங்களிலேயே கொட்டு கொட்டு என்று கொட்டி ஊர்களையே நாசம் பண்ணுகின்றது.
எதிர்பாராதபடி அழிக்கக்கூடிய சக்தியாக உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது. நீங்கள் டிவியிலும் பத்திரிகைகளிலும் பார்த்திருப்பீர்கள்.
இன்று…
எந்த நிமிடம்…
எந்த இடத்தில்…
என்ன நடக்கும்…? என்று தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
இது போன்ற சூழ்நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி இருந்தால்
1.நாம் இருக்கும் பக்கம் அத்தகைய சுழிக் காற்றுகள் வராது தடுக்கும்
2.அல்லது நம்மை ஒதுக்குப் புறமான இடத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.
