ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
டாக்டருக்குப் படித்தவர்கள் உடல் கூறில் எந்தக் குறைபாடு வந்தாலும் அந்த நோயைக் கண்டுபிடிப்பார்கள். ஸ்கேன் வைத்து அதிர்வுகள் மூலம் பார்ப்பார்கள். அதன் மூலம் உடலிலுள்ள உறுப்புகளையும் பார்க்கின்றார்கள். நாமும் தெரிந்து கொள்கிறோம்.
அதே சமயத்தில் உங்களிடம் நான் (ஞானகுரு) உபதேசம் சொல்லும் போது வைத்திய ரீதியாகத்தான் பேச வேண்டும். அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு உங்களை நீங்கள் அறிய விரும்பினால் உடலின் ஓட்டத்தினை நீங்களும் பார்க்கலாம்.
ஆனால் இது நமக்குத் தேவையற்றது.
என்ன பார்க்கலாம்…? என்றால்
1.என்னவெல்லாம் தெரிகின்றது என்ற நிலையில்
2.சில பேர் எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
3.அப்படிப் பார்க்கும் போது பார்த்த நிலைகள் கொண்டு அங்கிருக்கும் தீமையைத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.
சில பேர் என்ன செய்கின்றார்கள்…?
மந்திரத்தால் பில்லி சூனியங்கள் ஏவப்படுகிறது அதனால் சில விலை உயர்ந்த பொருட்கள் கூட காணாமல் போகின்றது. குடும்பத்திலும் முடக்கங்கள் ஏற்படுகின்றது.
சாமிக்கு (ஞானகுரு) சக்தி இருக்கின்றதல்லவா…! சாமி எங்களுக்கு இதை எல்லாம் சரி செய்து கொடுக்கலாம் அல்லவா…! என்று கேட்கின்றார்கள்.
குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எல்லாச் சக்திகளையும் எமக்குக் கொடுத்தார் என்று சொன்னோம் என்றால் அதை வைத்து “மந்திர தந்திரம் செய்பவர்களை நான் அடக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.
நான் செய்வேன் என்று சொன்னால் நானா…?
1.குருநாதர் உபதேசித்த உணர்வுகளை நான் எடுத்தேன்
2.அந்த உணர்வின் வழிப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடிய நிலை வந்தது.
குருநாதர் ஞான வித்தை எனக்குள் விதைத்தார்… வளர்த்துக் கொண்டேன்.
1.அதே வழிப்படி உங்களுக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
2.அதற்குண்டான சக்திகள் அனைத்தும் இந்தக் காற்றில் இருக்கின்றது.
3.அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
4.உங்களுக்குள் தீமையைப் போக்கக் கூடிய சக்தியாக அது வரும் என்று தான் சொல்கிறோம்.
நான் செய்தேன் என்றால் இதை நான் செய்யவில்லை…! குருநாதர் காட்டிய வழியில் அருளைப் பெருக்கும் போது அது அந்த வழியை உங்களுக்குள் காட்டும். அதன் வழியில் நீங்கள் செல்லலாம்.
ஏனென்றால் ஆரம்பத்தில் சில பேருக்கு இதைச் செய்யும்போது எனக்கு அந்தக் கடவுள் தெரிகின்றது உடலில் இருப்பது எல்லாம் தெரிகின்றது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
1.காட்சி என்று தெரிந்தாலே “எனக்கு எல்லாம் தெரிகின்றது…” என்று
2.அடுத்தவருக்குக் குறி சொல்வது போல் சொன்னார்கள்.
கடைசியில் வீணாக அடுத்தவர்கள் கஷ்டங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வம்பிலே போய் மாட்டிக் கொள்கிறார்கள். கஷ்டத்தைத் தான் வாங்கிக் கொள்கின்றார்கள்.
தெரிந்ததைச் சொல்லப்படும்போது இதில் வருவதைக் கழிக்கத் தெரிய வேண்டுமல்லவா…? அது மிகவும் முக்கியம்…!
ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின்… அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஆனால் அப்படி எடுக்கவில்லை என்றால் அந்த விஷம் இங்கே வந்து விடுகின்றது. அங்கிருக்கும் தீமைகளைத் தான் மீண்டும் தனக்குள் வளர்க்க முடியுமே தவிர நல்லதை வளர்க்க முடியாது.
அருள் சக்திகளைப் பெறும் பொழுது அந்த உணர்வை நாம் நுகர்கின்றோம்…. தெரியச் செய்கிறது. தெரிந்து கொண்டாலும் அந்த தீமைகள் வருவதை அறிகின்றோம்.
அடுத்த கணமே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் நுகர்ந்த பிறர் உணர்வுகளை உடனடியாக நீக்க வேண்டும். அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் புகாது விழிப்புடன் இருக்க வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளால் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
2.அவ்ர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்.
4.அவர்கள் தொழில்கள் நன்றாக இருக்க வேண்டும்
5.அவர்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று
6.நம் உணர்வை இந்த மாதிரி அவர்களுக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.
இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு நாம் அவசியம் வர வேண்டும்.
சகுனியின் சூதாட்ட சூழ்ச்சி
உதாரணமாக (பிறரிடம்) நம் காரியத்தைச் சாதிக்க வேண்டும்… பணம் வாங்க வேண்டும் என்றால்… நண்பன் (அல்லது அதற்குண்டானவர்கள்) எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை வரும். அப்படி ஏற்றுக் கொள்ளும் தன்மை வரப்படும் பொழுது சாந்தமாகும்.
சாந்தமான நிலைகள் வரப்படும் பொழுது “தர்மன்” என்ற நிலை அடைகிறது.
சாந்தமான நிலை வருவதற்கு முன் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளின் தன்மை எது இருந்தாலும்
1.காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு…
2.நம் மனதை அடக்கிச் செயல்படுத்தும் பொழுது
3.நம் எண்ண வலுவில் தன்மைக்குள் நண்பனின் உணர்வு நமக்குள் திணிக்க்கப்படுகிறது… அப்பொழுது அதன் வலு தான் “அர்ஜுனன்…”
நமக்குப் பணம் தேவைப்படுகின்றது (நண்பனின் தயவு) என்று கண் கொண்டு நண்பனை உற்றுப் பார்க்கின்றோம். ஆறாவது அறிவால் மனதை அடக்கி… அவர் சொல்வதை எப்படியும் நாம் கேட்டாக வேண்டும். ஏனென்றால் கேட்டால் தான் நமக்குச் சலுகை கிடைக்கும். அவன் சொல்லும் உணர்வுகள் அர்ஜுனன் வலிமையானது.
ஏனென்றால் அந்த நண்பன் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் என்ற நிலையில் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அதை நுகர்ந்தால் அர்ஜுனன்.
நண்பன் பேசும் உணர்வுகளைக் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்ற அணுத்தன்மை அடைகின்றது. அந்த உணர்வின் சத்தி அதை இயக்கக்கூடிய பரப்பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து சரஸ்வதி ஆகின்றது… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
அந்த அணு இப்படிக் கவர்ந்து கொண்டால் அந்த ஞானத்தின் வழியே அதனின் வித்தாகிறது.
இருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளாத மனமாக இருக்கப்படும் பொழுது
1.பணம் வாங்கும் காரியத்திற்காக ஏற்றுக் கொள்கின்றோம்.
2.ஆனாலும் அதை இந்த மனது ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் ஏற்றுக் கொள்கின்றது.
இதைப் பார்த்து மற்றவர்கள்… என்ன…? அவருடன் இப்படிக் கூடிக் குழாவுகின்றாய் என்று கேட்பார்கள். என்ன செய்வது…! அவரிடம் காசு வாங்க வேண்டி இருக்கின்றது அல்லவா. இல்லை என்றால் எப்படிக் கிடைக்கும்…? என்ற நிலையில் இருக்கின்றோம்.
அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
1.அதைத்தான் சூழ்ச்சி என்பதாக… சூதாட்டம் ஆடுவதாக
2.சூட்சும நிலைகள் கொண்ட “சகுனி” என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.
சகுனி தாயக் கட்டைய உருட்டுவது போல் நம் காரியத்தை எண்ணி அதை நாம் உருட்டி எடுக்கின்றோம். அதாவது நாம் என்ன செய்கின்றோம் என்றால்
1.நம் காரியத்தைச் சாதிப்பதற்காக அவருடைய எண்ணத்தை “உருட்டி” எடுக்கின்றோம் “சூதின் மூலமாக…!”
2.அப்போது நாம் ஜெயித்து விடுகின்றோம் (பணத்தை வாங்கிவிடுகின்றோம்)
முந்தி அவர்கள் நல்லதைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள்… அப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பணம் வாங்குவதற்கு மட்டும் உள்மனதாக வைத்து இதைக் கலந்து ஏற்றுக்கொள்ளும் அந்த உணர்வு ஆகிறது.
பணம் வாங்கி ஓரளவுக்கு வசதியாக ஆன பிற்பாடு என்ன செய்கின்றோம்…? சமயம் வரும்பொழுது அவருக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வோம்…! (எல்லோருமே இதை அனுபவத்தில் பார்த்திருப்போம்)
சகுனி தாயம் போட்டு சூதாட்ட விளையாட்டிலே தோற்கடித்து விட்டேன் என்ற நிலை வருகிற மாதிரி நமக்குள் சூதின் உணர்வுகள் வந்து விடுகிறது.
முதலிலே அந்த நண்பனின் உணர்வுகள் அர்ஜுனன் ஆகின்றது. அவன் எதையுமே குறிவைத்துத் தாக்கும் தன்மை பெற்றவன். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் “நகுலன்” உடலுக்குள் அது இணைந்து செயல்படும் தன்மை வருகின்றது.
நாம் எண்ணும் ஆந்த உணர்வை உயிரிலே சேர்த்து… சேர்த்துக் கொள்ளும் உணர்வாக எண்ணும் போது அதற்கு இடம் கொடுக்கின்றோம். அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது “சகாதேவன்…” ஆகின்றது.
ஆனால் அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஏற்றுக்கொண்டால் “பீமன்” ஆகின்றது. அவர் சொன்ன உணர்வு அந்த வலுவும் நமக்குள் வருகின்றது. பீமன் என்ற அந்த வலுவான உணர்வுகள் ஆனால் அதன் வழி தர்மன் ஆகின்றது
நம் உடலுக்குள் இத்தனை போர் நடந்து கொண்டிருக்கின்றது
இருந்தாலும்… நம் எண்ணங்கள் அவரை ஏமாற்றும் விதமாகச் செயல்படும் பொழுது
1.”சகுனி…” நமக்குள் இருந்து அதன் உணர்வாகக் கலந்து தான் நமக்குள் ஏற்றுக்கொள்கிறதே தவிர
2.நண்பன் நமக்கு நல்லதைச் சொன்னார் என்ற நிலையில் ஏற்கும் பருவமில்லை.
இப்போது இங்கே தியானம் செய்கின்றோம் என்றால்… பல வகைகளிலும் பலவிதங்களை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றோம்.
எப்படியோ தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும்… தியானம் செய்தால் நமக்கு நல்லதாகும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் வருகிறோம்.
அவ்வாறு ஆசைப்பட்டு சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகள் தான் .வரும். நாம் எண்ணிய அந்த உணர்வுகள் பதிவாகிறது. பதிவின் உணர்வு மீண்டும் நினைவாகும் பொழுது நம்மை இயக்குகின்றது.
நாம் எந்தத் தொழிலின் நிமித்தம் இணைத்து “இந்தத் தியானத்தைச் செய்தால் நாம் நன்றாக இருப்போம் என்று எண்ணினோமோ…” அதன் எல்லை வரை இது வளரும்.
தான் எதிர்பார்த்த நிலைகள் இல்லை என்றால் உடனே குருக்ஷேத்திரப் போராகிறது. எங்கே…? இந்த உயிருக்குள்…!
1.இவ்வளவு நாளும் என்னத்தைத் தியானத்தைச் செய்து என்ன பலன் கிடைத்தது…? என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.எண்ணியபடி நடக்கவில்லை என்றால் இந்தப் போர் நடக்கின்றது.
3.தியானத்திற்குப் போவோமா வேண்டாமா…!
4.தியானத்தைச் செய்வோமா வேண்டாமா…? என்ற இந்த உணர்வு வந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்கும் நமக்குள் உயிரிலே இந்த குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டே உள்ளது. ஏனென்றால் நம் உணர்விற்கும் புறத்திலிருந்து வரக்கூடிய நிலைகளுக்கும் இந்த வித்தியாசம் ஆகிறது.
அதனால் தான்… நாம் நம் மனதைக் குவிக்க வேண்டும்… அனைத்து உணர்வுக்குள்ளும் பகைமைகளை அகற்றிய ஞானிகளின் உணர்வுகளைச் சேர்த்து உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டும்… ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வருகிறோம்.
“மனம் தான் நம்முடைய பகைவன்…!”
காலம் குறுகியது என்று பல முறைகள் உரைத்திட்டோம் அதை எத்தனை பேர் அறிவில் தெளிந்து கொண்டனர்…?
பேரண்ட சூட்சும இரகசியத்திற்குள்… காலத்தின் நிலையால்
1.இதுவரை கடந்து சென்றிட்ட வெகு நீண்ட கால நிகழ்வுகள்…
2.எதிர் கொள்ள இருக்கின்ற வெகு நீண்ட காலத்தின் நியதிகள்…
3.இதிலே உன்னுடைய பங்கு எவ்வளவு என்று கூற முடியுமா…?
பேரண்டத்தின் அளவீட்டில் மானிடப் பிறப்பு என்பது அணுவிற்குள் அணுவே. ஈர்த்து உயர்த்திக் கொண்டிடும் செயல் வேகம் கண்டாயா…?
மனிதன் என்ற ஜீவ பிம்ப வாழ்க்கையின் குறுகிய காலத்தினை அறிந்து கொண்டு காலச்சக்கரத்தில் அனைத்தும் மறைந்துவிடும் மாயை…! அதுவே புனிதமாகத் தோன்றும் செயலின் சித்து. சித்து என்பது எதுவப்பா…?
ஜடப்பொருளாகப் புறப்பொருள் காட்டுவது சித்து விளையாட்டு.
சிருஷ்டியின் சித்து சகலமாய்ச் சகலமும் தோன்றிடும்… ஜீவ பிம்பம் காட்டிடும் அனைத்து பொருட்களும்… மற்றும் அதனுள் அடங்குவது ஜடப்பொருள்களும் தான்.
சித்தன் நிலை பெற்றால் சித்து நிலை விளங்கும்.
சகலமும் பொருள்கள் என்றே உரைத்திட்டோம். காலம் குறுகியது என்பதை உணர்ந்து விட்டால் நாம் உரைத்த சகல பொருட்களின் தன்மையும் விளங்கும்.
தோன்றி மறையும் அனைத்தும் வேகம் வேகம் வேகம் தான்…! நிலை பெற்றிடும் பொருள் எது…?
மனித மனத்தின் சிந்தனை ஓட்டம் செயல்படுவதை ஊன்றிப் பார்த்திருப்பாய். இந்தப் புற உலகத்தில் வாழும் வாழ்க்கைக்கே பொருள் தேடுகின்ற மனிதனின் ஆசைக்கு எல்லை உண்டா…?
1.பொருள் தேடும் சிந்தனையில் பேராசை வயப்படுகின்றான்… அந்தப் பொருளுக்காக உலகினை நேசிக்கின்றான்.
2.பொசுக்… என பொருள் மறைந்தால்…? உலகின் கண் பகைமை காட்டுகின்றான்.
3.மனித மனத்தின் முரண்பாடே ஒரு பொருளாக இரு செயல் நிகழ்வுற்று
4.அந்த இரண்டிலும் பாதிப்புக்கு உள்ளாவது பகைதான்… “மனது தானப்பா பகை…!”
இவைகளில் உழலுகின்ற மனிதன் “நிற உலகு…” ஒன்று இருப்பதை அறியவா போகின்றான்…? அந்த வட்டச் சுழற்சியில் இருந்து விடுபட்டு உயரவே இவ்வளவு “கடுமையாக உரைக்கின்றோம்…”
நிற உலகு என்பது “ஒளிதானப்பா…”
இகழ்ந்துரைக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். உலகம் பழிக்கின்ற செயல் இது என வழிகளாக நெறிமுறைகள் வகுத்துத் தந்த மாமகான்கள்… நன்நெறியில் வளர்ப்பாக்கும் செயலில் மனிதன் தெய்வநிலை பெற்றிட மெய்ஞானச் சுடராக விளங்கிட போதனைகள் உரைத்திட்டனர்.
இகழ்ந்துரைக்கும் நிலை மாற்றுகின்ற மனம் வேண்டி உறுதியாக நிலை நின்று மனிதன் செயல் கொண்டால் “உட்பொருள்… தன் பகை நீக்கும்…”
பாடநிலையின் ஆரம்பத்தில் கொடுத்த வினாவிற்கே வருகின்றோம்.
1.மனிதன் புறப்பொருளைப் பிரிந்த ஏக்கத்தால் பேராசையின் அதிர்வு கொண்டிட்ட ஆவேசம்
2.வெறுப்பின் சிந்தனையில்… புற உலகினைப் பகைப்பதாக எண்ணித் தன் மனதையே தான் பகையாக்கி
3.வாசம் செய்திடும் இறை சக்தியை… உட்பொருளை… அகத்தின் அருட் சிந்தனையை… பகை உணர்வு கொண்டுவிடுகின்றான்.
அப்படிப் பகை கொள்கின்ற (தனக்குள்… தனக்குத் தானே) செயலின் வீரியம் எந்த நிலை பயக்கும்…? என உணர்ந்திருப்பாய்.
1.”உட்பொருள்…” தன் பகை நீக்கும் வழி வகைதனைக் காட்டி விட்டோம்
2.தியானத்தின் மேன்மையை அக உணர்வால் உண்ணல் வேண்டும்
சித்து… சடம்… இரண்டிலும் “ஈஸ்வர ரூபம்…” மனித மனத்தின் அகலவொண்ணா பொருள் அதுவே. அதைப் பெற்று உயர்ந்திட எனது ஆசிகள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாந்த குணங்கள் கொண்ட நாம் பிறரின் கோபிக்கும் உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் காண நேர்கின்றது. அப்பொழுது அவர் வெளிப்படுத்தும் அந்தக் காரமான உணர்வை நுகர்கின்றோம் (சுவாசிக்கின்றோம்).
அவர் வெளிப்படுத்தும் கோப உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றினாலும்… நாம் உற்றுப் பார்த்து அதை நுகரும் போது நம் சுவாசத்திற்குள் வந்து… உயிரிலே பட்டு அந்தக் காரமான உணர்வின் சத்தாக உமிழ் நீராக மாறி… ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் இணைகிறது.
இணைந்து இரத்தத்துடன் கலந்து உடலிலே சுழன்று வரும் பொழுது முட்டையாக மாறி அந்தக் கார உணர்ச்சியைத் தூண்டும் அணுவின் கருவாகின்றது.
இது எல்லாம் சந்தர்ப்பம் தான்.
சாந்தமான உணர்வு கொண்டு நாம் இருக்கப்படும் போது அந்த வேகத் துடிப்பு வருவதில்லை. ஆனால் அந்தக் கோபித்தோரின் உணர்வை நுகர்ந்த பின் அது ஓமுக்குள் ஓ…ம் ஆகி சாந்த உணர்வுகளுக்குள் எதிர்மறையாகத் தாக்குகின்றது. துடிப்பு அதிகமாகின்றது… உணர்ச்சி வசப்படுகின்றோம்.
1.இயல்பாக ஒரு கடினமான பொருளை வைத்து மற்றொன்றோடு தாக்கப்படும் பொழுது
2.அங்கே அந்த வெப்பம் உருவாகின்றது
3.அந்த உணர்ச்சியின் வேகத்தினால் வலியும் வேதனையும் அதிகரிக்கின்றது.
இதைப் போன்று தான்
1.அந்த வேகத்தின் உணர்வுகள் (கோபம்) நம் சாந்த உணர்வில் தாக்கப்படும்பொழுது
2.இந்த அணுவிற்குள் ஊடுருவி இது அணுவின் தன்மை அடைந்து
3.அந்தச் சாந்தத்தை அடக்கும் வல்லமை பெறுகின்றது.
4.ஓமுக்குள் ஓமாகி மாறி அதனை இது அடக்கும்
5.அதற்குள் இது அடங்கி சாந்தத்தின் செயலாக்கத்தைக் குறைக்கின்றது.
ஏற்கனவே இருக்கும் சாந்த குணமும் சாந்த எண்ணங்களும்… “தன்னை வளர்க்கும் தன்மை இழந்து…” இந்தக் காரத்தின் உணர்வை இதற்குள் வளர்க்கப்படும் போது அதற்குள் நாம் பார்க்கும் இனத்தை எல்லாம் (மற்ற குணங்களை) அது அடக்கிவிடும்.
ஓமுக்குள் ஓ…ம்… ஓமுக்குள் ஓ..ம்… ஓமுக்குள் ஓ..ம்…! என்ற நிலைகளில் இந்தக் கார உணர்வுகள் இதற்குள் ஒடுங்கி… ஒடுங்கி… ஒடுங்கி… வருகின்றது. நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.
இப்படி நல்ல மணத்தை உருவாக்காத நிலைகள் கொண்டு வரப்படும்பொழுது தான் மனிதனுக்கு இரத்தக் கொதிப்பே வருகின்றது.
1.இரத்தக் கொதிப்பு வந்தோரை டாக்டர் பரிசோதித்தால்
2.அவரின் துடிப்பின் நிலையும் கொதிக்கும் நிலையும் இரத்தத்தில் அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்.
நேரடியாகச் சுவாசித்திருந்தாலும் சரி… அல்லது வேடிக்கை பார்த்திருந்தாலும் சரி… அதை நுகர்ந்தால் இது போன்று ஆகிவிடுகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
1.அதைத் தூய்மைப்படுத்துவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுத்து
2.அடிக்கடி உங்கள் இரத்தங்களில் அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துத் தூய்மைப்படுத்தும்படி சொல்கிறோம்.
பிள்ளைகளும் சந்ததியினரும் நன்றாக வாழ… செல்வத்தைத் தேடினாலும் கடைசியில் நமக்குள் எதைச் சேர்க்கின்றோம்…?
எல்லோரும் அன்புடன் பண்புடன் சகோதர தத்துவத்துடன் பழகுகின்றோம். நம் முன்னோர்கள் மூதாதையருடன் பழகுகின்றோம்.. நம்மைக் காத்திட அவர்கள் எத்தனையோ சிரமங்கள் பட்டார்கள்.
நம்மைக் காப்பாற்றுவதற்காக சொத்தையும் செல்வத்தையும் அவர்கள் தேடி வைக்கின்றார்கள். ஆனால் செல்வத்தைத் தேடும் போது அதற்காக வேண்டி “எனக்கு இப்படிச் செய்தானே…” என்று எத்தனையோ நிலைகளில் வேதனைள் பட்டு… பல அவஸ்தைப்பட்டுகள் பட்டுத் தான் சேர்த்து வைக்கின்றார்கள்.
1.அந்த வேதனை அவர் உடலுக்குள் நோயாக மாறுகிறது
2.அவர் உடலில் விளைந்த வித்து அது.
கடைசியிலே நாம் என்ன செய்கின்றோம்…? “இப்படி நோயாகி விட்டாரே…” என்று எண்ணங்களை எண்ணும் பொழுது அவருடைய உணர்வுகள் “நம் உடலில் பரம்பரை நோயாக வருகின்றது…”
சேமிக்க வேண்டும் என்பதற்காக (மிச்சம் பிடிக்க வேண்டும் என்று) எவ்வளவோ கஞ்சத்தனமாக இருந்து… தான் சாப்பிடாமல் இருந்து நம்மையெல்லாம் ராஜாவாக வளர்த்தார். ஆனால் அதே உணர்வுகள் நமக்குள் வந்து செயல்படத் தொடங்குகின்றது.
அவர் சரியாகச் சாப்பிடுவதில்லை… தன் பேரப்பிள்ளைகள் எல்லாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றார். தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் அவர் கஞ்சத்தனமாக இருக்கின்றார்.
இருந்தாலும் இந்த உணர்வு கடைசியில் நோயின் தன்மை ஆகி பாசத்துடன் நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வு நமக்குள் வந்துவிடுகிறது.
தன் பிள்ளையைக் காக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அந்த நிலையில் வியாபார நிமித்தம் ஒருவருக்குக் கடன் கொடுக்கின்றார். ஆனால் அவரோ ஏமாற்றி விடுகின்றார்.
பாவிப்பயல் என்னை ஏமாற்றி விட்டான். நான் எத்தனையோ கஷ்டப்பட்டேன் என் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று. இந்த மாதிரிச் செய்து விட்டானே என்று வேதனை வந்தால்
1.சாகப் போகும் போது அவன் மீது தான் நினைவெல்லாம் செல்லும்.
2.எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என் பிள்ளைகளைக் காக்க முடியாதபடி தெருவிலே விட்டான் என்ற இந்த நினைப்பு தான் வரும்
காக்கும் உணர்வு கொண்டு நம்மையெல்லாம் அவர்கள் காத்தாலும் அவர் உணர்வு நமக்குள் வந்தபின் வேதனையாகி உடலை விட்டுச் செல்லும் பொழுது எங்கே செல்வார்…?
பழி தீர்க்கும் உணர்வுடன் தன்னை ஏமாற்றியவன் உடலுக்குள்ளே தான் செல்வார். அப்போது இருப்பிடம் எதுவாக மாறுகின்றது…? அங்கே மாறி விடுகின்றது.
ஆகவே நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்கள் இன்னொரு உடலுக்குள் போகாமல் தடுப்பதற்கு நாம் என்ன வைத்திருக்கிறோம்…?
விநாயகர் தத்துவத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அதை வைத்து முன்னோர்களை நாம் விண் செலுத்த வேண்டும்.
3.அவர்களைப் பிறிதொரு உடலுக்குள் போக விட்டுவிடக் கூடாது.
கடன் வாங்கியவர்கள் திரும்பத் தரவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று தனக்குள் வலுவாக்கிய பின்… அவர் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் அந்த வலிமை பெற வேண்டும் நல்ல ஞானம் அவருக்குள் வளர வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சமைத்து இந்தச் சொல்லாக சொல்ல வேண்டும்.
ஆனால் அதே சமயத்தில் நமது எண்ணங்கள் மாறிவிட்டால்… வாங்கிச் சென்றவனுக்கு “நான் கொடுக்க மாட்டேன்…” என்று கூட சிந்தனை வரும்.
ஏன்… எதனால்…?
உதாரணமாக… தீமை செய்கின்றான்… எனக்குக் கடும் துரோகம் செய்தான் என்று நாம் எண்ணினால் இந்த உணர்வு அவனைத் தாக்கி எப்படி அவனுக்குப் புரையோடுகின்றது.
எனக்கு துரோகம் செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணினால் தொழில் செய்யும் இடத்தில் இயந்திரத்தில் அவன் வேலை செய்தால் ஆபத்தில் சிக்கி விடுகின்றான்.
உணவு உட்கொள்ளும் பொழுது ஈதே உணர்வுகள் ஊடுருவினால் அது புரையோடி அந்தச் சந்தர்ப்பம் அவனுக்குத் திக்கு முக்காடலாகி ஆகிறது
இதே போன்று அருள் ஞானிகளின் உணர்வை நாம் எடுத்து
1.கடன் வாங்கியவன் உணர்வை நமக்குள் மாற்றி… நமக்குள் வராது தடுத்து
2.இப்படித்தான் அவன் இருக்க வேண்டும்…
3.பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடிய சக்தி அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த வலுவின் தன்மை அங்கே ஊட்டி
4.நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பண்புகளை எண்ணினால் உதவி செய்யும் பண்புகளை நிச்சயம் அங்கே வளர்க்க முடியும்.
5.இத்தகைய சிந்திக்கும் தன்மையை அவனுக்கு ஊட்டி நம் பணத்தைத் திரும்பப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தையும் உண்டாக்கலாம்.
ஆனால் சாபமிடும் உணர்வுகளும் வெறுக்கும் உணர்வுகளும் கொண்டு நாம் எண்ணினால் அவனால் வளர முடிவதில்லை. அவன் கடனைத் திரும்பக் கட்ட முடியாத நிலையாகி விடுகின்றது.
கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும் ஆனால் திட்டும் போது ரோசம் வரும். ஏன்டா…! பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுகின்றாயா…? என்று நாம் திட்டுவோம்.
இந்த உணர்வின் தன்மை பதிவான பின் அவன் வாழ்க்கையில் தொழிலே நஷ்டமாகிவிடும். அப்படி ஆகி விட்டால் பணத்தை எப்படி நமக்குத் திரும்பக் கொடுப்பான்.
நான் கொடுத்தேன் அவன் ஏமாற்றி விட்டான் என்று தான் நாம் பேச முடியுமே தவிர அவனுக்கு நல்ல பண்புகளை ஊட்ட முடியாது. தீமையான உணர்வுகள் அவனுக்குள் அறியாமல் இயக்குவதை நமக்குள் சேர்ப்பதா அல்லது அதைச் சேராமல் தடுப்பதா…?
ஆகவே அருள் உணர்வை எடுத்து நம்மைத் தூய்மைப்படுத்தி
1.அவனுக்கு வருமானம் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வு நமக்கு நிம்மதி கிடைக்கும்.
2.பத்து ரூபாய் கொடுத்தாலும் 100 ரூபாய் கிடைக்கின்ற மாதிரி செய்ய முடியும்.
3.இந்த வலிமை கொண்டு நம் வியாபாரமும் பெருகும்.
அதே சமயத்தில் இந்த உணர்வு அவனுக்குள் பாயும் போது கடன் வாங்கி இத்தனை நாள் ஆகிவிட்டது என்று அவனும் நினைப்பான். பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அவனுக்கும் வரும்.
இது எல்லாம் வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்துப் பழக வேண்டிய “நுணுக்கமான விஷயங்கள்…”
ஏனென்றால் மனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா.
1.தீமை என்று தெரிந்தாலும் தீமையை நீக்கக் கற்றுக் கொள்வதே அதனுடைய சிறப்பு.
2.அதைச் செயல்படுத்துவதற்குத் தான் உபதேச வாயிலாக ஞானத்தைப் போதிக்கின்றேன் ஞானகுரு).
மனிதனுடைய விதியும்… ஞானியரின் விதியும்…!
பூமியின் இயக்கச் சுழற்சி அது கதியுறும் ஓட்ட அமைப்பு தொடர்பு கொண்ட கோளங்களாக சூரியக் குடும்ப அமைப்பில் அவை அவை ஈர்த்திடும் நிலைக்கொப்ப வளர்க்கும் வளர்ப்பாக்கி… காலத்தின் சுழற்சியாக இயற்கையின் நிகழ்வில் பூமியில் நடைபெறும் மாற்றங்களை… மனிதன் “விதி” என்று உரைக்கின்றான்.
உடல் நலக் குறைவுபடும் காலத்தை நோய் என்று பெயரிட்டு மருத்துவர் அளிக்கும் சிகிச்சையுடன் நோயின் குணம் நாடிப் பத்தியமும் இருக்கின்றோம்.
1.மருத்துவர் அளித்திடும் மருந்தினைக் “கசப்பு” என்று விலக்கிடுவோமா…?
2.இங்கு நோயைப் போக்க வேண்டும் என்ற கருத்தே முதன்மையாகின்றது.
மனிதச் சரீரமும் பூமியும் ஒன்றே. கருத்தொன்றும் செயல் என விலக்கிடுவோமா…? ஆனால் கருத்தொன்றும் செயல் என்பான் மெய் ஞானி.
பூமியின் இயற்கை மாறுதல்களில் பூமித்தாயின் நலன் கருதி…
1.அதை ஏற்றுக் கொண்டிடும் பக்குவ மனது வேண்டும்
2.இவை அனைத்தும் மன வலிமை கொண்டு ஈர்த்திடும் செயலாக…
3.ஜெபத்தின் வளர்ப்பில் வளர்ப்பாக்கவே உரைப்பதெல்லாம்.
கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் வண்ணம் கலந்த நீர் அது எந்த வண்ணமோ அந்த வண்ணத்தையே குடுவையில் காண்கின்றோம். இது மனித மனத்தின் நிலை.
ஆனால் மெய் ஞானிகளுக்கோ ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது.
இந்தக் கலியின் மனித மனத்தின் நிலை உயிர் ஆத்ம சக்தியைக் கேடுறுத்தும் செயலுக்கே செயல்படுகிறது என்று பல முறை கூறிவந்துள்ளேன்.
சாயம் ஏறிய நூல் போல் இன்றைய மனிதன் தான் கொண்டிட்ட தீய எண்ணத்தின் வலுவால் தன் ஆத்மாவையே கொடுமைக்கு உள்ளாக்குகின்றான்.
இதை எந்த வார்த்தையில் உரைப்பது…?
தனக்கு உகந்த இரையை நாடிச் செல்லும் நாரையானது செல்கின்ற தூரம் எவ்வளவு இருப்பினும் அந்தத் தூரத்தைப் பறந்தே கடந்து செல்கின்றது.
1.பறந்தே ஏகுகின்ற அதன் வலிமையை மனதில் கொள்…!
2.”பார்வையின் கூர்மை… அது இரையை நாடுகின்ற நாட்டம்…”
மனிதனுக்கு நரை திரை நாட்டம் ஏற்படுகின்றது பார்வையின் ஒளியும் குன்றுகின்றது. நரை திரை நாட்டத்தின் செயலே உலகோதயம்.
1.அத்தகைய குறைவு நிலைகளை… “போ…!” என்றால் போகும்படி செய்வார்களா…! மெய் ஞானியர்… இல்லை…!
2.”ஆத்ம பலம் நாடும்… சிந்தனா சக்தி அன்றோ இங்கே முதன்மை வழி…”
குருநாதர் எனக்குக் கொடுத்ததை… நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா…!
ஒருவருக்கொருவர் பற்று கொண்டவர்கள் நாம் என்ன செய்கின்றோம்…?
ஆசை வைக்கின்றோம்… ஆனால் சமயத்தில் “என்னை அவமதித்து விட்டான்…” என்று ஆத்திரப்படுகின்றோம்
1.ஆத்திர ஆவேச உணர்வு கொண்டு அவன் செய்யும் தவறான உணர்வை நமக்குள் சேர்த்து விடுகின்றோம்.
2.நம்முடைய வளர்ச்சியை நாமே தடைப்படுத்தி விடுகின்றோம்
இப்படித்தான் இயற்கை நிலையிலிருந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளை எப்பொழுது மாற்றுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
ஆக… ஒவ்வொன்றிலிருந்தும் தான் தப்பிக் கொள்ளும் உணர்வுகள் பெற்று வளர்ச்சியாகி வந்ததுதான் இந்த மனிதச் சரீரம்.
பலவற்றில் இருந்து தப்பிக்கும் ஞானத்தின் தன்மை வளர்த்துக் கொண்ட இந்த மனித உடலில் இவ்வளவும் தெரிந்து கொண்ட பின் உடலைக் காக்க நாம் எதைச் செய்ய வேண்டும்…?
உடலைக் காக்கும் ஆசை தேவை ஆனால்
1.உடலைக் காப்பதற்கு முன் அதீத ஆசை கொண்டு செயல்பட்டால்
2.உடலைக் காக்கும் தன்மையை இழக்கப்பட்டு வேதனை என்று உணர்வைத்தான் வளர்க்க முடிகின்றது.
இதையெல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாக காட்டிய நிலைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அனுபவரீதியிலே தான் இதையெல்லாம் தெரியும்படி செய்தார்.
சில இடங்களுக்கு அழைத்துச் செல்வார்…
1.இது நல்லதா கெட்டதா என்று கேட்பார்
2.நல்லது என்று சொன்னால் அது எப்படிடா… சொல்…? என்பார்
3.இல்லை இது கெட்டது… இப்படித்தான்…! என்று சொன்னால் அது எப்படிக் கெட்டது…? என்று அதற்கும் கேள்வி கேட்பார்.
ஏனென்றால் நீ நுகர்ந்த உணர்வுகள் உனக்குள் எப்படியெல்லாம் இயக்குகின்றது…? “என்னுடைய அதிர்வான சொல்கள்” வரும் பொழுது பதட்ட நிலைகள் உனக்குள் ஆகி உன்னைச் சிந்திக்கச் செய்கிறதா…?
இல்லை.
ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி தப்பிக்கலாம்…! என்ற எண்ணம் தான் உனக்கு வருகின்றது. இப்படியெல்லாம் விளக்க உண்மைகளைக் கொடுத்து அறிவின் இயக்கமாக இயக்கச் செய்து என்னை (ஞானகுரு) அனுபவபூர்வமாகத் தெளிவாக்கினார் குருநாதர்.
அதை நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமா இல்லையா…!
முதலிலே நான் சொல்லிக் கொண்டு வந்தேன்
1.பல வருட காலமாக ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்
2.இப்பொழுது மனிதனுடைய இயக்கங்களை முழுமையாக தெரிந்து கொள்ளும்படி செய்கின்றோம்.
முதலிலே பதப்படுத்தி பக்குவப்படுத்தி… உங்களிடம் அதை வலுப்படுத்தி… அதற்குப் பின் விளக்க உரைகளைக் கொடுத்தால் நீங்கள் கேட்பீர்கள்.
1.உங்களுக்கு அந்த உயர்ந்த சிந்தனைகள் வரும்
2.உங்களைக் காத்திடும் உணர்வுகளும் வரும்
ஆனால் புதிதாக இதைக் கேட்பவர்களுக்கு “சாமி எதையோ சொல்கின்றார்…” என்ற தலையைச் சொறிவார்கள்.
முன்னாடி கேட்டுப் பழகியவர்களுக்கு ஞானத்தை வளர்க்கும். புதிதாக வந்தவர்கள்… சாமி என்னமோ சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே தெரியாது என்று சொல்வார்கள். சாமி சொல்கின்றார்… நான் கேட்டுக் கொண்டிருந்தேன்… எனக்கு அர்த்தமே ஆகவில்லை…! என்பார்கள்.
ஆனால் பழைய ஆள்கள் உபதேசக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் சேர்த்துச் சேர்த்துத் தெளிவான மனதாக
2.எப்படி மனதைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்று செயல்படுத்திக் கொள்வார்கள்.
சந்தர்ப்பங்களில் இருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அந்த உபாயங்களும் வரும்.
இப்போது ஒன்றைச் சொல்கின்றேன் என்றால் அடுத்து அதைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது உங்கள் சாமி நேற்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கின்றார். சாமி என்ன சொல்கின்றார்…? என்று கேட்பார்கள் ஒரு சிலர்.
ஆனால் பற்றுள்ளவர்கள் என்ன சொல்கின்றார் என்று கூர்ந்து கவனித்துக் கேட்பார்கள்.
1.இன்றைக்கு ஒன்று சொன்னாலும் அந்தச் சொன்ன உணர்வுகள்
2.எதிலே எது எப்படி இயக்குகின்றது என்று விளக்கவுரையைக் கொடுக்கப்படும் பொழுது
3.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதங்கள் எத்தனையோ வரும்.
செடி கொடிகளின் வித்துகள் சந்தர்ப்பத்தில் மோதும் போது ஒரு ஜாதி இனத்தைப் போன்று மற்றொன்று உருவாகி இருக்கும் ஆனால் அதனுடைய மணமும் குணங்களும் வேறாக இருக்கும்… செயலாக்கங்களும் வேறு.
புல்லைப் போன்றே மற்ற கோரைப் புல்களும் உண்டு. ஒவ்வொன்றையும் பார்த்தால் அதைப் போன்றே இருக்கும். ஆனால் சுவை இருக்காது.
இதைப் போன்று இயற்கையின் நியதிகள் எது எதனுடன் சேர்க்கின்றதோ அதற்கொப்ப இயக்குகின்றது. இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.
பஞ்ச பூதங்களின் இயக்கமும்… நாம் தீர்க்க வேண்டிய ஞானப் பசியும்
உயிரணுவின் ஈர்ப்பின் செயலால் ஆத்ம நிலை பெற்று ஜீவ பிம்பம் பெற்றிடும் செயலில் சரீரத்தினுள் அடக்குவது பஞ்சபூதங்கள் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்.
இவற்றின் கூறுகள் மூலசக்தியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலில்… அளப்பரியா அவைகளின் செயல் நிகழ்வுகள் இயல்பாக இயங்கிடும் சக்தி அண்டசராசரம் முழுவதிலும் உண்டு.
மனிதன் என்ற சரீரத்தினுள்ளும்… சரீரம் பெற்றிட்ட உயிர்த்தொகைகள் அனைத்தினுள்ளும் அந்தப் பஞ்சபூதங்களே கட்டுக்குள் அடங்கிச் செயல் புரிகின்றன.
ஆனால் பகுத்தறிவு கொண்ட மனிதன்…
1.அந்த ஆற்றலின் துணையினால் மனதின் இயக்க சுதந்திரம் பெற்று வாழும் வகைகள் அறிந்த பின்னும்
2.பஞ்சபூத சக்தியைத் தன்னுள்ளே கொண்டுள்ள மனிதன் உரைக்கின்றான்… “மனதினை அடக்க இயலவில்லை என்று…”
பிறர் தர்ம செய்கையால் ஞானத்தின் வழியில் நிற்போர் மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது. ஏனென்றால்
1.மற்றவர்களின் காரியங்களால் நாம் பாதிக்கப்படும் நிலை பெறுவதல்ல.
2.பிறர் மேல் நாம் கொண்டுள்ள கருத்துக்களால்… “அவர்களின் செயல்கள்…” நம்மைப் பாதிப்பதாக எண்ணுகின்றோம்.
ஆவேச உணர்வுகள் நீக்கம் பெற்று ஜெபநீர் ஆடிடவே அழைக்கின்றோம்
1.”வலைஞன்” வீசுகின்றான் வலை. அந்த வலையினுள் படுகின்ற மீன்களைத் தன் ஆகார நியதிக்கே கொண்டு செல்கின்றான்.
2.அவன் பற்றியது ஒன்று அப்பற்றும் பொருளினால் அவனுள் குடிகொண்ட குறிக்கோள் மற்றொன்று.
இடையில் நடைபெறும் காரண காரியங்களின் சூட்சுமப் பொருளை அறிந்து கொண்டவனப்பா நீ.
1.தன்னுள் சுரந்து வெளிவரும் ஓர் பசையினால் வலையைப் பின்னுகின்றது “சிலந்தி…” அதுவும் வலை விரித்தே காத்திருக்கின்றது.
2.தன் வலையில் விழும் சிறு உடல் ஜீவன்களை நேரடியாகத் தன் நிலைக்கே புசிக்கிறது.
மனக்கருவைக் குணங்களாகக் காணல் வேண்டும். ஆவேச நிலையின் இயக்கத்தைக் காட்டிடவே பாடங்கள்,
ஆகாரத்தின் நிலைக்கு மற்றொரு பொருள் காட்டுவோம்.
1.”திகம்பரன்” (சந்நியாசி) செய்யும் பூஜை… அவனும் ஆகார நியதியை அளித்தே
2.அறிந்து கொண்ட வழிமுறைகளால் “ஏதோ” ஒன்றினைப் பெற்றிட முயல்கின்றான்.
மேலே சொன்ன மூன்று நிலைகளையும் (வலைஞன், சிலந்தி, திகம்பரன்) விளங்கிக் கொள்…!
ஜெபத்தின் தன்மையாகச் சிந்தனையில் கொண்டு பார்… ஆவேச நிலைகள் நமக்கு உரியனவன்று.
தாகவிடாய் கொண்டவன் அருந்த நீர் கேட்பான்… தாகம் தீராமல் நீராட முயல்வானா…? ஞானமும் அத்தகையது தான்…!
1.தவசியே ஆனாலும் “அருந்த வேண்டிய பசி” ஒன்று உண்டு
2.ஞான தாகம் தீர்ப்பதே மகரிஷிகள் வழி காட்டிய போதனைகள்.
3.அதைப் பெற்று அந்தப் போதனையின் வழி நடந்து முனைவது மனக்குளத்தின் ஜெபநீர் ஆடிடவே.
உணர்வுகளை மாற்றிடும் ஆவேசம் நீக்கு…! என்றே இங்கே இந்தப் பாட நிலையில் பகர்கின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பிற மண்டலங்களிலிருந்து வருவதை 27 நட்சத்திரங்கள் நவக்கோள்கள் கவர்ந்து வெளிப்படுத்துவதை சூரியன் கவர்ந்து தன் சுழற்சி வேகத்தால் அந்த அணுக்களில் உள்ள விஷத்தினைப் (அல்ட்ரா வயலட்) பிரித்து விடுகின்றது.
மனிதனுடைய ஆறாவது அறிவோ நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றி அதை நீக்கிவிடுகின்றது.
இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ பேருடன் நாம் பழகுகின்றோம்… பார்க்கின்றோம். ஆனால் சந்தர்ப்பத்தால் அவர்கள் படும் வேதனைகளைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுக்க வேண்டும்.
1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.அந்த அருள் உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக்கிடும்… அந்த அறிந்திடும் தெளிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.
ஆனால் வேதனை கொண்ட நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மையை இதிலே கலந்து விட்டால் இங்கே மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது. நுகர்ந்தாலும் அதை வைத்து உங்கள் வேதனைகளை நிவர்த்தி செய்ய முடியாது.
1.அதாவது பிறிதொரு மனிதன் வேதனைப்பட்ட உணர்வு நம் நல்ல அறிவை மறைக்கும் போது
2.இன்னொரு சாதாரண மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அதை மாற்ற முடியாது.
மாற்ற வேண்டும் என்றால் “வேதனை என்ற நஞ்சினை நீக்கி… அதை ஒளியாக மாற்றிடும்…” அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று உடலுக்குள் இணைக்க வேண்டும்.
மீண்டும் இதைத் தெளிவாக்குகின்றேன்…!
உங்கள் வாழ்க்கையில் நல்லது செய்வதாக எண்ணி ஒரு வேதனைப்படும் மனிதனை உற்றுப் பார்த்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்கின்றீர்கள்… உதவி செய்கின்றீர்கள்…!
ஆனால் உங்களிடமிருக்கும் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவரின் வேதனைப்பட்ட அந்த விஷமான உணர்வு இணைந்து உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது… மறைத்து விடுகின்றது. இதுதான் சிறு திரை – “சித்திரை…” என்பது.
அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும். அதற்குத்தான் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் அடிக்கடி பதிவாக்குகின்றோம்.
1.உங்கள் நினைவாற்றலை அங்கே ஞானிகளின் பால் ஒன்றச் செய்து
2.இங்கே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கின்றோம்.
உங்கள் நினைவாற்றலை அந்த மகரிஷிகளுடன் இணைத்து விட்டால் அந்த வேதனையான உணர்வினை நுகர்வதைத் தவிர்த்து அருள் உணர்வுகளை வலுப் பெறச் செய்யும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவீர்கள்.
ஈஸ்வரா…! என்று உயிரின் ஏக்கத்துடன் விழிப்பார்வை இருக்க வேண்டுமப்பா…!
மனித நேயமனம் அன்பினுக்குகந்த அறவழி நடக்கலுற்று… பகுத்தறியும் ஆற்றல் வழி பண்பு கொண்ட தவமயர் இல்லறத்தின் வழி நடந்தே… மகோன்னத முனைப்பாற்றல் சக்தியை நிறைவாகப் பெற்று… அந்த ஆற்றலின் சிறப்பாக வளர்ச்சியில் வளர்ந்திட முடிந்திடும்.
பகல் இரவு என்று எண்ணாத எறும்பு ஊர்ந்து சென்று தன் இனங்களுக்கு ஊட்டும் சேமிப்பாகவே உணவினைத் தேடுகின்றது. அது போல்
1.அகம் ஜெபித்திடும்… (தனக்குத் தானே – உயிருடன்)
2.ஆத்ம பலம் கூட்டிடும்… (தன்னை வளர்ப்பதற்கு)
3.மெய்ப் பொருள் செல்வம் எனும் சேமிப்பின் சூட்சுமம் கொண்டு வளர்ந்திட… (உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அழியாச் சொத்து)
4.வழி நடத்தும் வழி முறைகள் காட்டியதே வல்லார் (மகரிஷிகளின்) தம் ஞான நிலை.
5.தவமாக வாழ்வின் நிறைவு பெற்ற மாமகான்களே அவர்கள்…!
அதை எண்ணி ஈர்த்திடும் பக்குவத்தில் வளரும் நம் ஞான நிலை.
1.நம் ஒளி காந்த சக்தியுடன் அந்த மகரிஷிகள் ஒளி காந்த சக்தியாக ஒன்றிச் செயல்படுகின்ற
2.அந்தத் தவப்பயன் வழியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அகத்தின் அழகு பற்றி வழக்கில் உரைக்கும் உரையைச் செவி வழியாக அறிந்திருப்பாய். எது அகத்தின் அழகு…?
1.அல்லார் எனும் நிலை விடுகின்ற பொழுது அக மலர் மலர்ந்து மணம் வீசுகின்றது.
2.விருப்பு வெறுப்பற்ற தன்மை அக வாழ்வினோடு புற வாழ்க்கைக்கும் அது பொருந்தும்.
அந்த நிலை பெற்ற மனத்தின் மாண்பு செயலுறும் விதம் என்ன…?
அத்தகைய அக அழகு பெற்றவனும் ஏங்குகின்றான்… அது உயர்வு எண்ண ஏக்கமப்பா…!
1.அக அழகின் கண் ஏங்கும் வழிப்பாதை… விழிப்பார்வையில் உண்டு.
2.ஈஸ்வரா…! என்ற எண்ணமுடன் ஈர்ப்பின் நிலை ஏக்கமாகப் பெற்றிருத்தலே “விழிப் பார்வையின் காப்பு…”
இந்த நிலையால் மனத்தின் மாண்பு உயர்ந்து கொண்டிடும்.
நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்று “நீங்கள் எண்ணினால் அது தப்பு…”
ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் மன வலிமையை நாம் எப்படிக் கொண்டு வருதல் வேண்டும்…?
1.அருளைப் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற மன வலிமை பெற்றால்
2.சிந்தித்துச் செயல்படும் வலிமையாக இயக்கச் செய்யும்.
3.நம்மைக் காக்கும் உணர்வுகளும் வளரும்.
திரும்பத் திரும்ப இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை நினைவு கொண்டால் சிந்தித்துச் செயல்படும் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்.
உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர “நான் காப்பாற்றுவேன்…” என்று எண்ணத்தை நீங்கள் எண்ணினால்
1.தனக்குள் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும் தகுதியை
2.நீங்கள் இழந்து விடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம்.
இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடும் விளைவுகள் வருகின்றது. இந்த விளைவில் இருந்து நாம் தப்ப வேண்டும்.
உங்களுக்குள் உபதேசித்த உணர்வின்படி அருளை நீங்கள் பெருக்கிக் கொண்டால் தீமை நீக்கும் சக்தி பெறுகின்றீர்கள் அதைப் பெருக்கக் கூடிய ஞானம் உங்களுக்கு வர வேண்டும்.
அந்த ஞானம் உங்களுக்குள் வரவேண்டும் என்றால் இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களுக்குள் அந்த அருள் உணர்ச்சிகளைத் தூண்டி உங்களை அதன் வழியில் சுவாசிக்கச் செய்கின்றோம்.
1.சுவாசிக்கும் பொழுது உங்கள் இரத்தங்களில் புது விதமான உணர்ச்சிகளின் ஓட்டங்கள் இருக்கும்
2.அந்த உணர்வுகள் பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அத்தகைய கருத் தன்மை உங்கள் இரத்தத்தில் உருப்பெறுகின்றது
இதை வளர்த்துக் கொண்டே வந்தால் அந்த அருள் ஞானத்தை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.
அத்தகைய அணுக்கள் உடலில் உருவாகிவிட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரும் போது உயிரில் படுகின்றது சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது நல்ல உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றது. நல்ல அணுக்கள் உங்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது அருளைப் பெருக்குகின்றது அருள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது.
1.இந்த உடலுக்குப் பின் அந்த ஞானியின் அருள் வட்டத்திலே செல்கின்றோம்
2.”எந்த ஞானி இருளை நீக்கினானோ” அவன் ஈர்ப்பு வட்டத்திற்கு… துருவ நட்சத்திரத்துடன் நாம் செல்ல முடிகின்றது.
இது தான் நமது கடைசி எல்லை உயிர் ஒளியானது… அந்த உயிரோடு ஒன்றி ஒளியின் தன்மை நாம் பெற வேண்டும்
ஆனால் நான் (ஞானகுரு) சாமியாராக இருக்கின்றேன்… உங்களைக் காப்பாற்றுவேன் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தப்பு. சாமி சொன்ன உணர்வின் தன்மையைப் பெற்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மைக் காக்கும் என்று எண்ணினால் அது தான் சரி.
ஏனென்றால் பல கோடிச் சரீரங்களில் எல்லா வகையான தீமைகளிலிருந்தும் தப்பிக்கும் உணர்வு பெற்று இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.
உயிர் மனித உடலை உருவககிய பின் பல கோடித் தீமைகளையும் வென்று உணர்வை ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
1.குருநாதர் காட்டி அருள் வழியில் எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்ததை உங்களுக்குள் பதிவாக்கி நினைவாக்கும்படி செய்கின்றேன்
2.உங்களை காக்க அந்த அருள் ஞானம் கிடைக்கும்.
3.இருளை நீக்கிடும் ஞானிகளாக நீங்கள் உருவாக முடியும்
யாம் உங்களுக்குக் கொடுப்பது “சிந்தித்துச் செயல்படும் ஞான சக்தி தான்”
குருநாதர் காடு மேடு மலைகள் எல்லாம் அலையச் செய்து சில உணர்வுகளைச் சந்தர்ப்பவசத்தால் நுகரும் பொழுது
1.உன் உடலுக்குள் மாறுபாடான உணர்வுகள் எப்படி எல்லாம் வருகின்றது…?
2.பயத்தின் எல்லை கடந்த நிலை செல்லும் பொழுது எப்படி இயக்குகின்றது…?
3.உன் உடலிலே பதட்டம் எப்படிக் கூடுகின்றது…?
4.உன் சிந்தனைகள் எப்படிச் சிதறுகின்றது
4.உன் உடலிலே எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றது…?
5.அதனால் உடலுக்குள் இரத்த அழுத்தங்கள் எப்படிக் கூடுகின்றது என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்.
ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் பெற்ற அனுபவத்தைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு). விளையாட்டுக்காக நான் பேச வரவில்லை.
குரு வழியில் அந்த உயர்ந்த உணர்வுகளைக் கொஞ்சம் நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் உயர்ந்த சிந்தனைகள் உங்களுக்கு வரும். நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்ற நிலைகளை நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு ஒரு நல்ல வழியாக உருவாகும்.
ஏனென்றால்
1.அந்த ஞானத்தை யாம் புகட்டும் போது அதன் வழியில் வாழ்க்கையை நீங்கள் வழி அமைத்தால்
2.தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.
3.அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.
எனக்கு குருநாதர் எப்படி இந்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்தாரோ அதே வழியில் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து நீங்கள் இதை பதிவு செய்ய வேண்டும்.
சாமி எதை எதையோ சொல்கின்றார்… என்னால் சகிக்க முடியவில்லை… அறுவைக் கேஸ் என்று கூட நினைப்பவர்கள் பலர் உண்டு.
கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம்…! கண்கள் கொண்டு கூர்மையாக சாமி என்ன சொல்கின்றார் என்று உற்றுப் பார்த்தால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகளை யாம் அழைத்துச் செல்லும் பொழுது
2.இந்த கணக்கின் பிரகாரம் உங்கள் உடலில் அந்த உணர்வின் தன்மை வலிமையாகி
3.அதன்படி உங்களை வாழச் செய்து தீமையிலிருந்து விடுபடும் சக்தி உங்களுக்குள் பெருக்க முடியும்
துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நமது பூமியின் துருவப் பகுதியின் எல்லையிலே இது அதிகமாகின்றது.
1.துருவத்தின் வழி பூமி அதை இழுக்கிறது… இழுத்து துருவத்தின் பகுதியில் அடர்த்தி அதிகமாகின்றது.
2.இந்த நேரம் பார்த்து அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வைச் சுவாசித்து
3.நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு கணங்களுக்கு அதை அதிபதியாக வேண்டும் – அந்த உயர்ந்த குணங்களை.
நந்தீஸ்வரன்… நாம் சுவாசித்த உணர்வு அதன் இயக்கமாகத் தீமைகளை நீக்கிடும் சக்தியாக நமக்குள் உருவாக்குகின்றது அடிக்கடி இதை எடுத்தால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை தீமையை நீக்கும் அந்தக் கணக்கின்படி “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிற்கு நாம் செல்கின்றோம்…”
“முதல் பண்ணவனிடத்தில்” நற்றேன் பருகிடல் வேண்டும்
நரலாகும் (மண்ணிலே விளையும்) பொருள் உணவாகும் பொழுது அதைச் சுவைக்கின்றோம். எப்படி…?
மனிதன் எண்ணுகின்ற எண்ண ஓட்டத்தில் உலகோதய நடைமுறைச் செயலுக்கு கவனத்தைச் செலுத்தி உணவை உட்கொண்டிடும் பொழுது அது சுவைபட அருந்தும் நிலையன்றி இப்பரு உடலினுள் அமைவு பெற்றிருக்கின்ற பை “இரைப்பை…!”
அந்தப் பையினுள் எரிகின்ற நெருப்பு தன்னில் இடப்படுகின்ற எரியைச் செரித்திடும் முன்பாக
1.நாசியில்… சுவாச ஓட்ட கதியில்… எண்ண ஓட்ட வாசனைக்கொப்ப சமைப்பின் சமைப்பு தொடங்கப் பெற்றே
2.இரசமாகிய சக்தி நரம்புகளின் சுவாச ஓட்டச் செயலில் ஈர்த்துக் கொண்டிடும் துடிப்பு அலைகளாக ஓடி
3.இரைப்பையில் இடப்பட்ட எரிவைப் பயனுறும் செயலாக்கி
4.கழிவையும் நீக்குகின்ற உடல் தொழில் சூட்சுமத்தில் “ஆத்ம பலம் கூட்டுமப் பொருள் காண வேண்டும்…”
நரல் என்று தேனை உரைத்தோம். முதல் பண்ணவன் (உயிர் – குரு)) இடத்தில் நற்றேன் பருகிடல் வேண்டும். நேற்றைய பாடத்தின் தொகுப்பில் மறைபொருளாகக் காட்டியதையே விண்டு உரைக்கின்றோம்.
நாத நாதாந்தம் காட்டிடும் எண்ணக் குவிப்பாக உயிரான்ம சக்தியை ஜெபிக்கின்ற வழிதனில்
1.உயிரே குரு என அழைத்திடும் முதல் பண்ணவன்
2.”உயிரை எண்ணி,,,: அகம் விடாது ஜெபித்திடும் ஜெப நிலையில்
3.நாதவாகினி அமுதமாகப் பெருகிடும் ஜெபத்தின் சக்தியே “நாம் கூற வந்த நரல்…” (உயிருடன் ஒன்றும் நாதம்)
புற உடல் பயனுறச் செயல் கொள்ளும் நிலை போல் அக உடல் அருந்தும் ஞானத்தேன் எந்த நிலை பெறும்…?
அனைத்துமே அவரவர்களின் எண்ணத்தின் செயல்பாட்டில் இயங்குகின்றதப்பா…!
காட்சி:- வெற்றிடமான இடம்… பின்பு தென்னங்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து தோப்பாகின்றது. தன் இனத்தைக் கூவி அழைத்து உணவு உண்ணும் காக்கை. உணவினை எடுத்துச் செல்கின்ற சிற்றெறும்புகளும்.
இதன் பொருளைக் கூறும் முன் தெரிய வேண்டியது… எரிகின்ற அக்கினியில் போடப்படுகின்ற பொருள்கள் எல்லாமே ஒரு நிலை பெற்று “கனன்று…” உருமாறி பொருள் தன்மையே மாறி விடுகின்றது.
ஆனால் பரு உடலில் இயங்கிடும் மறைமுக அக்கினி பொருளின் ரசத்தினைப் பிரித்து உடல் செயல் கொண்டிடச் சேமிப்பாக்குகின்றது.
சேமிப்பின் நிலையைப் பற்றிக் காட்டிடவே காட்சியின் விளக்கம்…!
நீர் நிலை கொண்ட இடமாகத் தேர்வு செய்து பயிர் வளர்த்து வளர்ந்த பின் அது தோப்பாகின்றது. அதையே தனக்கு உகந்த இடம் எனத் தேர்வு செய்து கூடு கட்டுகின்றது காகம்.
தன் இனத்திற்கு உணவை ஊட்ட… அரற்றியே கரைகின்றது… உணவை உண்கின்றது… தன் குஞ்சுகளுக்கும் ஊட்டுகின்றது. உணவாம் சேமிப்பு செயல் கொண்டிட அது கொண்டிட்ட உணர்வால் சேமிப்பின் வழிமுறைகள் இன்றி உலவுகின்றது.
ஆனால் எறும்போ ஊர்ந்து கொண்டிருக்கும். தன் தொழிலின் நிலையில் தன் இனத்திற்கு ஊட்டும் சேமிப்பையும் பெற்று விடுகின்றது.
அப்படி என்றால் நமக்கு இனமூட்டும் சேமிப்பு எது…?
ஜீவ ஆதார சக்தி வலு கொண்டிடும் ஜெபமாக…
1.சரீர உயிரணுக்கள் அனைத்திலும் ஒளியை ஊட்டமாகப் பெற்று
2.அதை வழி நடத்தும் தன்மையாக தொழில் படவே இனமூட்டும் சேமிப்பை உரைத்தோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கும் போது உங்கள் மனம் இருண்டு விடுகின்றது. உங்களுடைய செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்லறிவின் செயலே முழுமையாக இழந்து விடுகின்றது.
அதை மாற்றுவதற்குத்தான் சப்தரிஷிகளின் அருளையும் துருவ மகரிஷியின் அருளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வலைகளையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை நுகரச் செய்து உங்கள் கண்ணின் வாயிலாகப் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).
1.உங்கள் ஆறாவது அறிவை…
2.எதனையுமே அறிந்து தெளிவாக்கிடும் அந்த ஞானத்தின் நிலையைக் காத்திடவே இதை உபதேசிப்பது.
உங்களை அறியாமலேயே பதியச் செய்கின்றோம்.
பதிவானதை மீண்டும் எண்ணும் போது உங்களை அறியாமலே பல அற்புதங்கள் நடக்கும். தீமைகளை நீக்கிடும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.
அதைப் பெறச் செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானியின் உணர்வை நுகரும்படி செய்கிறோம். மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றோம்.
உங்களை அறியாது நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும் சிறு திரையை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களின் நல்ல குணங்களுக்குள் ஆழமாக இணைக்கச் செய்கின்றோம்.
எல்லா குணங்களுக்குள்ளும் உணர்வுகளுக்குள்ளும் அதை இணைக்க இணைக்க உடலில் உள்ள அணுக்கள் ஒளியாக மாறும்… உயிருடன் ஒன்றும் நிலை பெறும்.
ஒளியாக மாறிய பின் இந்த உடலை விட்டுச் சென்ற பின் இந்த உயிராத்மா பிறவியில்லா பெரு நிலைகள் அடையும்.
1.அத்தகைய நிலை பெறச் செய்வதற்கும்
2.இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை அகற்றிடவும்
3.தீமையற்ற செயலாக நம் உடலுக்குள் வளர்த்திடவும்
4.நம் எண்ணத்தால் நம்மைக் காத்துக கொள்வதற்கும் தான் இதை உபதேசிப்பது.
இப்போது பதிவு செய்ததை நீங்கள் ஒவ்வொரு நொடியிலேயும் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவினைச் செலுத்தினாலே போதும்…!
அந்தந்தச் சந்தர்ப்பத்தில் உங்களைக் காத்திடும் சக்தியாக அது வரும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றைய சூழ்நிலையில் காலையிலிருந்து இரவு வரையிலும் பண்பு கொண்ட மனிதன்… அன்பு கொண்ட மனிதன்… பரிவு கொண்ட மனிதன்… ஈகை கொண்ட மனிதன்… பிறருடைய துயர்களைக் கேட்கப்படும்போது அதை நுகரப்படும்போது உயிரிலே அந்த உணர்வுகள் உராய்ந்து அந்த உணர்ச்சிகள் தான் உடல் முழுவதும் சுழல்கின்றது.
அதனால் துயரப்படும் உணர்ச்சிகளே இயக்குகின்றது. ஆக.. மனிதன் தனது வாழ் நாளில் கேள்விக்குறியாகவே இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளோம்.
ஏனென்றால் இன்று உலக நிலைகளில் அரசியல் நிலைகள் பூராமே மனிதனை முழுமையாக அறவே அழிக்கச் செய்து அரக்க உணர்வுகள் பெறும் சக்தியே விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்டு விட்டது.
நாம் செல்வத்தைத் தேடினாலும்…
1.அந்தச் செல்வத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்று சொன்னாலும்
2.அதற்கு வேண்டிய உத்திரவாதமும் இன்று இல்லை.
அதே சமயத்தில் உயர்ந்த குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் நமது நல்ல பண்புகள் நமக்குள் நிலைத்திருக்குமா…? என்று பார்த்தால் “அதுவும் இல்லை…” என்ற நிலை தான் உள்ளது.
பண்பு கொண்டு வாழ வேண்டும்… அன்புடன் வாழ வேண்டும்… அரவணைத்து வாழவேண்டும்… என்ற எண்ணங்களை மக்கள் எண்ணினாலும் “வேதனை… வேதனை…” என்று அதைத்தான் அதிகம் சுவாசிக்க நேருகின்றது.
சீரிய பண்பு கொண்டு வாழவேண்டுமென்று இருப்பினும் இன்று அத்தகைய பண்பு கொண்ட மனிதர்கள் அனைவரும் வேதனை… வேதனை… வேதனை… என்ற உணர்வினையே சுவாசிக்க நேருகின்றது.
அந்தப் பண்பும் பரிவும் பாசமும் தன்னுடன் நிலைத்து இருப்பதில்லை…! அன்புடன் பண்புடன் பரிவுடன் பேசுபவர்கள் என்றால் ஏதோ கொஞ்சம் ஓரளவுக்கு வசதியாக இருப்பவர்கள் தான் அவ்வாறு பேசிக் கொள்வார்கள்.
ஆனாலும் அப்படி வசதியாக இருப்பவர்கள் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணத்தில் உதவி செய்தாலும்… அவர்கள் படும் வேதனை… வேதனை… என்ற சொல்லைக் கேட்டுக் கேட்டு… அதை நுகர்ந்து அறியக்கூடிய நிலைகள் வருகின்றது.
ஆக… வேதனைப்படுத்துவோரைப் பார்த்து “இப்படி நடக்கின்றதே…!” என்று அந்த வேதனை உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது. அதைத்தான் அதிகமாக நேசிக்க முடிகின்றது.
பத்திரிக்கைகளைப் படித்தாலே “உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றது…” நாம் எப்படி நாளை இங்கே வாழ முடியும்…? என்ற நிலைகள் வருகின்றது.
1.பத்திரிக்கையைப் பார்த்தாலே மனிதன் வேதனைப்படும் உணர்வே வருகின்றது
1.இந்த சகஜ வாழ்க்கையில் அன்பு கொண்ட உள்ளங்கள் அனைத்தும்
2.அரவணைக்கப்பட வேண்டுமென்ற உள்ளங்கள் அனைத்தும்
3.கடும் வேதனையைத்தான் அவர்கள் நுகர நேருகின்றது.
4.அந்த வேதனையைத்தான் அவர்கள் உடல்களில் உருவாக்க முடிகின்றது.
இதிலிருந்து விடுபட வேண்டாமா…? என்று சற்று சிந்தியுங்கள்.
நான் தவறு செய்துவிட்டேன் என்று உணர்வதுமில்லை… ஒத்துக் கொள்வதுமில்லை
ஒரு சமயம் குருநாதரும் நானும் (ஞானகுரு) பழனிக்குப் போவதற்காகப் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகிலே வந்து கொண்டிருந்தோம். அப்போது குருநாதர் என்ன செய்தார் தெரியுமா…?
ஒரு பஸ் வேகமாக வந்து கொண்டிருக்கின்றது. திருப்பத்திலே (CORNER) அது திரும்பும் பொழுது குறுக்கே புகுந்தால் எப்படி இருக்கும்…? என்ன பண்ண முடியும்…?
நாங்கள் இரண்டு பேருமே பஸ்ஸின் குறுக்கே புகுந்தோம். ஆனால் இவருடைய சக்தியால் பிரேக் போட வைத்து விடுகின்றார்… டிரைவரும் பிரேக் இடுகின்றான்… வண்டி நின்று விடுகின்றது.
அடுத்தாற்போல் அந்த டிரைவர் என்ன சொல்கிறார்…? யோவ் கிழட்டுக்… என்று கெட்ட வார்த்தையாகச் சொல்லி குருநாதரை திட்டுகின்றார்.
நீ வயசுப் பையனாக இருக்கின்றாய்… கிழவனுக்குத் தான் புத்தி இல்லை நீயாவது புத்தி சொல்லலாம் அல்லவா…! என்று டிரைவர் என்னையும் திட்டுகின்றான்.
கொச்சை வார்த்தைகளில் குருநாதரும் டிரைவரும் மாறி மாறிப் பேசுகின்றார்கள்… ஒருவரை ஒருவர் திட்டுகின்றார்கள்.
பாருடா…! டிரைவர் என்னை எப்படித் திட்டுகின்றான் என்று…! குருநாதர் சொல்கின்றார்.
அந்தத் திட்டும் உணர்வுகள் “நாம் செய்தது தப்பு” என்று தெரிகின்றது. ஆனால் டிரைவர் அசிங்கமாகத் திட்டும் பொழுது மட்டும் ரோஷம் வருகின்றது. இதைக் காட்டுகின்றார் குருநாதர்.
நாம் செய்தது தப்பு… இருந்தாலும் கௌரவப் பிரச்சினை…! பஸ்ஸில் இருக்கும் அத்தனை பேர் முன்னாடி கேவலமாகப் பேசுகின்றான் என்ற நிலையில் “என்னய்யா செய்ய வேண்டும் என்று சொல்கின்றாய்…?” என்று நானும் கோபமாக டிரைவரிடம் பேசுகின்றேன்.
டிரைவர் அதற்குப்பின் பஸ்ஸை ஸ்டார்ட் செய்கின்றான். வண்டி நகரவில்லை… நகர மாட்டேன் என்கிறது.
என் புத்தியைப் பார்த்தாய் அல்லவா… அவனை வண்டி எடுக்க விடாமல் நான் நிறுத்தி விட்டேன் அல்லவா. உன் புத்தி என்ன செய்கின்றது…? அவனை உதைக்க வேண்டும் என்று விரும்புகின்றாய்.
என்னிடம் சக்தி இருக்கின்றது என் புத்தியில் அவனை நிறுத்துகின்றேன் நீ உன் புத்தியில் அவனை உதைக்க வேண்டும் என்று திட்டுகின்றாய் ஆனால் நாம் இரண்டு பேரும் குறுக்கே சென்றது தவறா இல்லையா…?
இதையெல்லாம் அனுபவத்தில் கொண்டு வருகின்றார் குருநாதர்.
“தப்புதான் சாமி…” என்று நான் சொல்கின்றேன். ஆனால் நான் என்ன சாமி செய்தேன்…? நான் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் தானே என்னைக் குறுக்கே இழுத்தீர்கள் என்று சொல்கின்றேன்.
நான் எப்பொழுதடா உன்னை இழுத்தேன்…? நீ தான்டா என்னை இழுத்தாய்…! என்று மீண்டும் வம்பிழுக்கின்றார்… மடக்கிப் பேசுகின்றார்.
பஸ் நகரவில்லை என்று சொன்னவுடனே அவன் ஸ்டார்ட் செய்து பார்க்கின்றான் முடியவில்லை. குருநாதர் சிரிக்கின்றார்.
என்னைத் திட்டினான்… அதனால் என் சக்தியால் வண்டியை நிறுத்தி விட்டேன். அதே போன்று நீயும் இன்னொரு வண்டியை நிறுத்துகின்றாயா…? என்று என்னிடம் கேட்கின்றார். நீ இன்னொரு பஸ்சுக்கு முன்னாடி போடா…! பஸ் நிற்கின்றதா இல்லையா பார்க்கலாம்…! என்கிறார்.
என்னைக் கட்டாயப்படுத்தி இன்னொரு பஸ்சுக்கு முன் குறுக்கே போகும்படி தள்ளுகின்றார். அடுத்த பஸ்ஸுக்குக் குறுக்கே நான் சென்றதும் அதுவும் நின்று விட்டது. அதுவும் நகர மாட்டேன் என்கிறது.
இப்படிச் செய்துவிட்டார் குருநாதர். நீ எப்படிடா அதைச் செய்தாய்…? என்று என்னிடம் கேட்கின்றார். அவரே செய்துவிட்டு என்னை இப்படிக் கேட்கின்றார்.
வண்டியை எடுக்க முடியாது… ஓட்ட முடியாது…! நீ அவனிடம் சொல் என்று சொல்கின்றார். ஸொன்ன பின் அந்த வண்டியும் ஓடவில்லை.
வண்டி ஓடவில்லை என்ற உடனே… அந்த இரண்டு டிரைவரும் இது என்னடா…? இரண்டு கிரகங்களும் சேர்ந்து கொண்டு ஏதோ மந்திர வேலை செய்கின்றார்கள். வண்டி நகரவில்லை என்று பயப்படுகின்றனர்…!
ஒரு பக்கம் எனக்கு பஸ்ஸை நிறுத்தி விட்டோம் என்று சந்தோஷம் வருகிறது. இன்னொரு பக்கம் அவர்கள் இருவருமே திட்டுகின்றார்கள் ஏதோ மந்திர தந்திரங்கள் செய்து பாவிகள் நம்மை வேதனைப்படுத்துகின்றார்கள் என்று திட்டுகின்றார்கள். காதிலே அதுவெல்லாம் கேட்கின்றது.
சந்தோஷமாக வரும் பொழுது இப்படி வருகின்றது ஆனால் அவர்கள் திட்டும் பொழுது அதைக் காதிலே கேட்ட பின் அவர்கள் கை கால் வராதபடி செய்தால் என்ன…? என்ற வேகம் எனக்கு வருகிறது.
நாம் செய்தது தப்பு…! ஆனாலும் அவர்களைக் கை கால் வராதபடி நாம் செய்தால் என்ன…? என்று எனக்கு இந்த உணர்வு வருகின்றது.
அப்போது தான் என்னிடம் கேட்கின்றார் குருநாதர். ஏண்டா…? தப்பு நீ செய்கின்றாய் ஆனால் உன்னுடைய எண்ணம் எப்படிப் போகின்றது பார்…! இப்படி ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் உணர்ச்சிகள் எப்படி ஓடுகின்றது…?
1.தன் உடலைக் காக்க… கௌரவத்தைக் காக்க
2.இந்த உணர்வின் எண்ணங்கள் தவறைத் தயங்காதபடி செய்யச் சொல்கின்றது.
இதே உணர்வின் தன்மை உன் உடலில் ஏற்பட்டால் அவர்கள் இடும் சாப அலைகள் சாதாரணமானதல்ல.
அவன் படும் வேதனை உணர்வுகள் அவனில் விளைந்தது உன் செவிகளில் பட்டு இப்படிப் பேசுகின்றானே என்று வேகமாகத் தாக்குகின்றது உன்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது… கலந்தது அணுக்களாக விளைகின்றது.
இன்று உனக்குத் தெரியாது… ஆனால் அடுத்து என்ன ஆகும் தெரியுமா…? என்று இந்த உணர்ச்சியின் போர் முறைகள் உள்ளுக்குள் கலக்கங்கள் ஏற்படுவதை அப்படியே உணர்த்துகின்றனர் இன்றைய செயல் நாளை என்ன ஆகும்…?
1.உடலுக்குள் நல்ல அணுக்களுக்கும் நுகர்ந்த அணுக்களுக்கும் போராட்டங்கள் ஆகி
2.உன் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அது பலவீனம் அடையப்படும் பொழுது
3.மூச்சு இழுக்கின்றது… திணறலாகின்றது நடக்க முடியவில்லை ஓட முடியவில்லை வேலை செய்ய முடியவில்லை என்று
4.இத்தனை நிலையும் உனக்குள் நாளை வரும் என்று சொல்கின்றார்… அங்கே அப்படியே காட்டுகின்றார்.
இது எதனால் வருகின்றது…?
நீ தவறு செய்தாயா…? அவன் தவறு செய்தானா…? இந்தச் சந்தர்ப்பம் உன்னைத் தவறு செய்யும்படி நான் தூண்டினேன். அதன் உணர்வின் தன்மை இவ்வாறு ஆகிவிட்டது.
இப்படி வரும் பொழுது அவருடைய நிலை என்ன ஆகிறது…? நம்முடைய சந்தர்ப்பங்கள் பின் விளைவு என்னென்ன ஆகிறது…? இதற்கு நான்கு மணி நேரம் உபதேசங்களைக் கொடுக்கின்றார் குருநாதர்.
பதட்டமும் பயமும் எனக்குள் வருகின்றது.
1.தான் பேசியது சரியா இல்லையா என்று
2.உள் மனதில் இப்படி வினாக்கள் தூண்டும்படி உணர்த்திக் காட்டுகின்றார்.
ஏன் இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நாம் நல்லதைத் தான் செய்து கொண்டிருப்போம். திடீரென்று ஏதாவது ஒன்று வந்துவிடும்.
நாம் தவறு செய்திருப்போம் ஆனால் நாம் தப்பிப்பதற்காக அடுத்தவனைக் குற்றவாளி ஆக்குவதற்கு என்ன வேலையோ அதை எல்லாம் செய்வோம்.
1.அடுத்தவனைக் குற்றவாளி ஆக்கத் தான் பார்ப்போமே தவிர
2.நாம் தவறு செய்தோம் என்பதை உணர முடிவதில்லை.
ஆக சக்தி இருக்கிறது என்றால் அதை வைத்து நீ அடுத்தவர்களுக்குத் தப்பு செய்யத்தான் முடியுமே தவிர நல்லதை உன்னால் உருவாக்க முடியாமல் போகின்றது என்று அங்கே உணர்த்திக் காட்டுகிறார்.
இந்த உடலைக் காக்க உணர்வின் தன்மை ஆனால் தவறை நீக்கி அவன் நல்வழி வரவேண்டும் என்று தான் தவறு செய்து விட்டோம் என்ற இந்த உணர்வை மாற்றி
1.என்னை அறியாத நிலைகள் இருந்து விடுபட வேண்டும்.
2.அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணினால் நமக்குள் வளரும் தீமையை முதலில் தடுக்கலாம்.
சாதாரண மனிதனாக இருந்தால் இது முடியாது.
நல்ல நிலைகளை உருவாக்க வேண்டும் என்றால் தியானத்தின் வழிகளில் வரப்படும் போது இது போன்ற சந்தர்ப்பம் நிகழ்ந்தால் ஒருவனுக்குத் தொல்லை கொடுக்கவோ… பிறரை இம்சிக்கவோ அல்லது இது போன்ற மற்ற உணர்வுகள் தோன்றினால் அதை எதைக் கொண்டு அடக்க வேண்டும்…?
அங்குசபாசவா…! துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த நஞ்சை வென்ற உணர்வுகளை வைத்துத்தான் அடக்க வேண்டும். இப்படித்தான் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார் குருநாதர்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் நமக்குள் வரும் தீய விளைவுகளையும் நம்மை அறியாத உடலில் ஆட்டிப்படைக்கும் நோய்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.
1.பண்பு உள்ளவர்களாகவும் நாம் மாற முடியும்
2.பிறரைக் காத்திடும் சக்தி பெற்றவர்களாகவும் வாழ முடியும்.
எரியடி தண்டம்
இன்றைய மனித வாழ்க்கை புற வாழ்க்கைச் செயலில் அதி ஆவல் எனும் பற்று கொண்டு… பிறப்பு எனும் சுழற்சி வட்டத்தில் உழல்கின்ற தன்மையாக உழன்று கொண்டுள்ளது.
ஆனாலும்… “உயிர் துடிப்பு எனும் ஜீவன்…” வலுக்கொண்டிடும் வளர்ப்பைச் செயலாக்கிடும் அக வாழ்வு இன்பத்தின் சுரப்பாகப் பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்திட… வானியலாக வழி அறிந்து உயர்ந்திடும் செயலாக்கம் தான் என்ன…?
உடல் கடந்து… அகம் ஜெபிக்கும் உணர்வெண்ணத் தியானத்தில்… மேலும் ஓர் படி அறிந்ததைத் தெளிதலே சிறப்பு.
காட்சி:- மதகு நீர் வற்றிய வண்டல் மண்ணும்… கோடையின் வெப்பத்தில் ஆற்றின் மணல் ஊற்றில் சுரக்கின்ற நீரை மக்கள் கொண்டு செல்லுதல்.
இது ஆத்ம பலம் அறிவுறுத்தும் பாடம்…!
மதகு நீரடி மண் கோடையின் வெப்பத்தில் மண்ணின் உள்ளிட்ட நீரும் வரும் வழியாகக் காய்ந்து அந்த மண்ணில் நீ சுரந்திடாத தன்மையாக வெடிப்பு ஓடிக் காணப்படுகின்றது அல்லவா.
இதுவே இந்தக் கலியில் வாழும் மனிதன் கொண்ட மன எண்ண நிலையப்பா…!
கோடையிலும் மேன்மை சிறப்பு உருவாய் என்று உரைத்திட வந்ததே…
1.வாழும் வாழ்க்கையில் கோடையின் அதி வெப்பம் போல் எண்ணத்தின் மோதல்கள் இருந்திட்டாலும்
2.நாம் கொண்ட அன்பு எனும் ஊற்று மனத்தின் நிறைவாகத் தன்னுள் ஆத்ம பலம் கூட்டிடும் தேவையின் பூர்த்தியைச் சிறக்கச் செய்வதோடு
3.அது மற்றவருக்கும் அமுத நீராகிய ஞானத்தைப் போதனையாக வழங்கிடும் ஆசான் என்று அழைக்கப் பெறும் போதினியாக
4.தன்னை உயர்த்திக் கொள்தலே மெய்ஞான விழிப்பின் பலனாகப் பெற்றுச் சுடர்ந்திடும் ஞானத்தின் அமுத ஊற்று.
இந்த நிலையின் வழியறிந்து பெறுகின்ற மனத்தின் திறன் எத்தன்மையாக விளங்கிடல் வேண்டுமோ… அதுவே எரியடி தண்டம்…!
மனத்தின் சஞ்சலம் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். எண்ண ஓட்டத்தின் வேகம் நிலை பேர் அறியாத செயலாகக் கொள்கின்ற வழித்தொடர் ஈர்ப்பின் நிலை கொண்டு நாம் அளித்திட முடியும்.
கரவுகின்ற (வஞ்சனை கொண்ட) மனம் எண்ணத்தின் செயலால் அன்பின் சிறப்பு அற்றுப்போய்விடும்.
மதகு நீர் குறைந்து விட்டால் நீர் வற்றிய பின் ஆங்கு படிந்துள்ள வண்டல் மண்… சூரியனின் வெப்பத்தால் இறுகி வெடிப்பு ஓடிக் கெட்டிப்பட்ட தன்மையாக ஆன பின்… அந்த மண்ணைத் தோண்டினால் நீர் சுரந்திடும் ஊற்று நிலை காணுவது அரிது.
அதுவே கரவுகின்ற மனம் மதகின் நீரடி மண்ணாக அன்பின் சிறப்பு அற்றுவிடும் என உரைத்திட வந்தோம்.
கோடை எனும் வாழ்க்கையாக ஆற்றின் நீரடி மணலாகத் தோண்ட சுரந்திடும் ஊற்று நீர் போல் “அன்பின் சிறப்பு” கொள்கின்றாய். அத்தகைய மனத்தின் பாங்கையே மேன்மை சுரப்பு உருவாய் என்று அழைக்கின்றோம்.
1.உயர் ஞானத்தின் வழி உயர்வெண்ண செயல் வான் தொடர்பாகப் பெற்றால்
2.அந்த அன்பின் சிறப்பு… எரியடி தண்டமாக்கும் உன்னை.
அக்கினியை அக்கினியால் அணைத்திட முடியாது…! எரிகின்ற அக்கினியை எரிகின்ற கைப்பந்தம் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக வீசிப்பார்.
1.மேலும் அக்கினியின் சுடர்தான் பிரகாசிக்குமே தவிர அது குறைவு படாது.
2.அந்த நிலையே உடல் கடந்து அகம் ஜபித்திடும் சூட்சும நிலை…!
இன்னும் விளங்கக் கூற வேண்டும் என்றால் இயேசுநாதரை சிலுவையில் அறையப்பட்ட பொழுது… உடல் துன்பம் உணர்ந்திடாத நிலையில் புற உடல் தவிர்த்து… அவர் உடல் வாழ்ந்த விதம் என்ன…?
அக்கினியில் போடப்படும் பொருள்கள் எல்லாமே சருகாகி அக்கினியை மேலும் அது வளர்க்கும். அது போல் தான் எத்தகைய துன்பங்களும் ஆத்ம ஞானிகளைத் தாக்கிடாது.
1.அவர்கள் கொண்ட எண்ணத்தின் வலு வீரியம் உடல் கடந்து…
2.அக உடல் வாழ்வாங்கு வாழ்ந்ததைப் போல் அன்பு கொண்டே உங்களையும் அழைக்கின்றோம்.
சுவரினை நோக்கி வீசப்படும் பந்து சுவற்றில் மோதுண்டு… எய்தப்பட்ட செயல் எய்த இடத்திற்கே திரும்புகின்ற செயல் போல்… அழுக்காறு எனும் பொறாமை குணமும்… சினம் என்று உரைக்கின்ற கோபத்தின் குணமும் கொண்ட உலகோதய நடைமுறை வாழ்க்கையில் உள்ள மக்கள் வெளிப்படுத்தும் அத்தகைய உணர்வுகள்… உண்மையான உயர் ஆத்ம ஞானத்தை வளர்த்திடல் வேண்டும் என்று செயலுறும் ஆத்ம ஞானிகளை அது நெருங்கிடாது.
உறுதியாக உரைக்கின்ற வாசகம் இது.
இன்றைய மனிதர்களின் மனோபாவனை… நடைமுறை வாழ்க்கை எவ்வாறு இருக்கின்றது…?
பாலைவனத்தில் மணல் குன்றைப் பார்த்து இருக்கின்றாய் அல்லவா…! இன்று ஓர் இடத்தில் இருக்கும் அந்த மணல் குன்று மறுநாள் வேறொரு இடத்தில் தோன்றுகின்றதே அது எப்படி…?
காற்றால் இடம் மாறும் மணல் குன்று போல் தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை.
ஆனால் நாம் உரைத்திட வந்திட்ட உயர் ஞானம் கடைபிடிக்கும் மனித மனத்தின் நிலை அதுவே உறுதி மலை.
1.மனத்தின் திடத்தைத் தான் உரைக்கின்றோம்
2.உறுதி மலை மேல் நின்று அகன்றிடாத் தொடர் ஜெபத்தால்
3.வானியலாகச் சக்தி பெற்று உயர்ந்திட எமது ஆசிகள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தன் குழந்தையைக் காக்கத் தாய் தந்தையர்கள் எத்தனையோ வேதனைகள் படுகின்றார்கள். பிள்ளைகளுக்காக வேண்டிச் சேமித்து வைக்க வேண்டும் என்ற நிலை தான் வருகின்றது.
நாம் கஷ்டப்பட்டோம் ஆனால் பிள்ளைகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.. ஆரோக்கியமாக இருக்க வேண்டும். என்று விரும்புகின்றனர்.
பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணும்போது
1.பிறர் வேதனைப்படுத்தும் உணர்வுகளையோ வேதனையான செயல்களையோ பார்க்கப்படும்போது
2.தன் குழந்தையைக் காக்க வேண்டுமென்ற உணர்வு தான் வருகின்றது
3.இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வு முதலில் உள்ளே நுழைந்து விடுகின்றது.
அதே போல் நாம் எண்ணியபடி குழந்தை வளர வேண்டும் என்று விரும்புகின்றோம். பள்ளியில் அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே… எதிர்காலத்தில் எப்படித்தான் இவன் வாழப்போகின்றானோ…! என்ற வேதனை வருகின்றது.
வேதனை வரும்போது அடுத்து கோபம் வரும். இந்த உணர்வு உடலிலே பட்டபின் சிவ தனுசு (உடலைக் காக்கும் உணர்வு) என்ன செய்யும்…?
1.இப்படிச் செய்கின்றானே…! என்று சொல்லி நாம் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது
2.அது அவனைப் போய்த் தாக்கும்.
எது…?
நம்மை அறியாமலேயே நாம் இந்த ஆயுதத்தைப் (சிவ தனுசை) பயன்படுத்துகின்றோம்.
அப்போது நமக்குள் உருவானது ஓ…ம் நமச்சிவாய…! உடல் சிவமாகின்றது. மீண்டும் சிவாய நம ஓம்…! “இப்படிச் செய்கின்றானே…!” என்று அவனைச் சொல்லப்படும் போது அதே உணர்ச்சிகள் அங்கே பாய்கின்றது.
ஆக…
1.அவனைத் திருத்துவதற்கு மாறாக அவன் செயலையே மீண்டும் ஊக்குவிக்கும் நிலைக்குத்தான் நாம் செல்கின்றோமே தவிர
2.அவன் செயலை நல்லதாக மாற்றும் தன்மை இல்லாது போய்விடுகிறது.
குழந்தை படிக்கவில்லை என்றால் உடனே என்ன செய்கின்றோம்…?
அவன் எதிர்காலத்தைப் பற்றி வர்ணிக்கின்றோம். அவன் படிக்கவில்லையே என்ற உணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்துக் கொண்டபின்… இப்படி இருக்கின்றான்… எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்ற வேதனை வருகிறது.
வேதனையின் தன்மை வரப்படும்போது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம். அந்த சிந்திக்கும் தன்மை இழந்தபின் திருப்பிப் பேசுகின்றோம். அதுதான் ஓ…ம் நமச்சிவாய சிவாய நம ஓ…ம்.
வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வரப்படும்போது வாலி ஆகின்றது.
1.வாலி என்ற உணர்வுகள் உள்ளே சென்று
2,நம் நல்ல குணங்களைச் செயலிழக்கச் செய்து அது வலிமை பெறுகின்றது.
அது வலிமை பெற்ற பின் “நம் குழந்தை தான்…” என்று காக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட அந்தச் சந்தர்ப்பத்தில் அவனை உதைக்கத்தான் சொல்லும்…. அல்லது அவனைத் திட்டச் சொல்லும்… அவனைச் சாபமிடச் செய்யும்…!
இதை எல்லாம் அவன் நுகர்ந்தால் என்ன செய்யும்…? அவன் என்ன செய்வான்…?
நம்மைப் பார்த்தாலே ஜிர்…! என்று வருவான். ஓ…ம் நமச்சிவாய சிவாயநம ஓ…ம். அதாவது இராமன் அம்பை எய்தால் தன் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்வான்.
1.நாம் எதைச் சொல்கின்றோமோ
2.திருப்பி அந்த பதில் தான் நமக்கும் வரும்.
எவ்வளவோ சொத்து வசதி எல்லாம் இருந்தாலும் நீங்கள் ஒரு தடவை உங்கள் பையனைத் திட்டிப் பாருங்கள். அங்கிருந்து என்ன பதில் வரும்…! என்று தெரியும் உங்களுக்கு.
இரண்டாவது தடவை மூன்றாவது தடவை திருப்பிச் சொல்லிச் சொல்லி இரண்டு பேரும் கடைசியில் எதிரி ஆகிவிடுவார்கள்.
என் பிள்ளையாவது..? என் அம்மாவாவது என் அப்பாவாவது..! என்று இப்படித்தான் வரும். இது தான் சிவதனுசு… தன் தன் உடலைக் காக்க இந்த உணர்வின் நிலைகள் எதைப் பெற்றதோ இந்த உடலைக் காக்கத் தான் (நுகர்ந்த உணர்வுகள்) அது எண்ணுகின்றது.
ஆனால் விஷ்ணு தனுசு…! இந்த உயிரின் நினைவு கொண்டு உடலில் வந்த தீமைகளை நீக்கி ஒளியானது துருவ நட்சத்திரம். வாழ்க்கையில் வந்த இருளை அகற்றிப் பேரொளியாக ஆனது தான் அங்கே…!
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் பொழுது விஷ்ணு தனுசு. உயிருடன் ஒன்றி ஒளியாகவே இருக்கின்றது. எதையும் அது வென்றிடும் ஆற்றல் பெற்றது.
நம் வாழ்க்கையில் எந்தத் தீமை வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று
1.அதை எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி
2.நம் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.அந்த விஷ்ணு தனுசைப் பாய்ச்சுதல் வேண்டும்.
4.அப்பொழுது நமக்குள் வந்த கோபத்தையும் வேதனையையும் அது அடக்குகின்றது.
நற்குணங்களின் வலுக் கொண்டு தீயகுணங்களை விழுங்க வேண்டும்
நதி ஜீவ நதி – புதுப்புனல் பெருகிடும் மகா நதியின் மூலம் – சிறு துளி பெருவெள்ளம்.
சுரந்திடும் நீர்த்திவலைகள்… ஒன்று ஆயிரமாகப் பல்கிப் பெருகி ஓடிடும் சிற்றாறாக… ஓடி அதனுடன் இணைந்து கொண்டிடும் பல சிற்றோடை நீர் நிலைகள் மாநதியாக உருவெடுத்துக் கடலுக்குள் சங்கமிக்கின்றது.
ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் செயலும் அதே நிலைதான்…!
ஞான ஆற்றல் கொண்டிடும் அறிவின் கருவூலம் ஆத்ம பலம் எனும் சேமிப்பு நிலையைக் காட்டிடவே… மனித அறிவின் விஞ்ஞானம் பகுத்தறிவின் ஆற்றலின் வளர்ப்பால் இயற்கையை வென்று காட்டிடும் மதிநுட்பம்… நதி ஓட்டத்தின் குறுக்கே அணையை நிறுவி நீரின் சேமிப்பால் பயிர்களை வளர்க்கும் முறைகள் கண்டது.
மெய்ஞானத்தின் நெறிப்பயிர் வளர்க்கும் பக்குவம் உயிராத்மா பலம் பெற்றிடும் அமில முலாமை ஜீவகாந்த ஒளி சக்தியின் வலுவை உலகோதய உணர்வுகள் மோதிடும் எந்த நிலையிலும் விழிப்பாற்றல் குறைவுபடும் செயலுக்கே செயல் கொண்டிடும் மன எண்ணத்தின் நிலையை விளக்கிடவே முன்பு காட்டிய நிலைகள். ஆனால்
1.வானியல் தன்மைக்கே செயலுறுருங்கால்
2.மெய்ஞான விழிப்பாக வளர்த்திடும் சேமிப்பே “அதி உன்னதமான பொக்கிஷமாகும்…”
மலருக்குள் தேன் இருக்கும் வரை அது மது. தேனீக்கள் அதனை உண்டு உமிழ்கின்ற செயலில் அதுவே மருந்து. அது செயல்படும் தொழிலோ இயற்கை… அதன் செயல்பாட்டின் பொருளை நடத்திடும் மாற்று குண நிலைகள் செயற்கை.
மரத்தின் உச்சியில் தேன் கூட்டின் அடையில் சேமிப்பாகிடும் மருந்து போல் நாம் செயல் கொள்ளும் “மெய்ஞான விழிப்பாக்கும் ஈஸ்வர தியானத்தால் பெற்றிடும் உயர் நுண் மின்காந்த ஒலி அலைகள்…” சமைப்பின் ஒளியாக ஆத்ம முலாமின் சேமிப்பாகச் செயல்படுவதே ஆக்கம்.
1.நற்குணங்களும் அசுர குணங்களும் கொள்ளப்படும் செயலில்
2.அறிவை அறிவுறுத்தும் ஞானம் உலக நடைமுறையில்
3.சராசரி மனிதனுக்குப் பிடர்தலின் குணங்களாக அவன் வலுக் கொண்டிடும் எந்தக் குணங்களோ
4.அவன் சிந்தனை வசமாகும் வரை சுவைகள் வெளித் தோன்றாது.
ஆனால் ஆத்ம பலம் பெற்றிட எண்ணி ஏங்கிடும் ஆத்ம ஞானிகளுக்கு அறிவின் விவேகம் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் தெய்வீக குணங்களால் தன் உயர்வைத் தானே கூட்டிக் கொள்ள… “அல்லாதவைகள் (தீமைகள்) தானே விலகும் என்பதே மாண்பு….”
உணர்வுகள் கூட்டிக் கொள்ளும் செயலுக்கு ஒரு உவமானம்.
மது வண்டின் தேன் ஒரு துளி பாறை மேல் சந்தர்ப்பத்தில் படர்ந்திட… மலையில் வாழ்ந்து வரும் ஓர் கரடி அதனைச் சுவைத்துவிட… மேலும் துளித்திடும் தேனால் கவரப்பட்டுக் கரடி அந்தத் தேன் கூட்டையே கேடாக்கத் துணிந்த செயலுக்கு இருவித நிலைகளை உரைத்தோம்.
1.தீதெண்ண குணங்கள் நற்குண சேமிப்பின் சக்தியைச் சுவைத்திட்டால்
2.நாம் வளர்த்துக் கொள்ளும் அந்த குணங்களுக்கே வலு வீரியமாகச் செயல் கொண்டு
3.மனித ஞானம் வளர்ப்பில் தேக்கத்தைப் பெறும்.
ஆனால் தீதெண்ண உணர்வுகள் மோதிட்டாலும்… ஜெபித்திடும் தியான வழியில் நற்குணங்களின் வலு வீரியம் செயல் கொண்டு தீதெண்ண நிலைகள் நீக்கிட…
1.கூட்டையே சிதைத்திடும் கரடியை… தான் கொண்ட வீரியத்தால் தேனீ கொட்டி வீழ்த்திட்ட நிலை போல்
2.அல்லாதென அமில நிலைகள் அகல… நல்லவை பெருகிடும் அமுதமாக
3.சேமிப்பின் ஆற்றல் பெருகி வழிகாட்டிடும் உபாயமாக அதுவே “வான் திறப்பின் திறவுகோலாகின்றது…”
நோயை நீக்குவதற்கு யாம் கொடுப்பது “வாக்குகள் தான்…” மருந்து அல்ல…!
அடிக்கடி யாம் (ஞானகுரு) வற்புறுத்துவதெல்லாம் நாம் தேட வேண்டிய அழியாச் சொத்து “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைத்தான்…”
அதை எடுத்துக் கொண்டால் எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் அதை மாற்றும் தன்மை உண்டு
நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் அந்தந்த உணர்ச்சியை ஊட்டி நம்மை இயக்கி அது செயலாக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.
1.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ நம் உடல் ஒரு அரங்கம்… உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் இயங்குகின்றது
2.ஆகவே நாம் பேரருள் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால்
3.அந்த உணர்ச்சிகள் அரங்கநாதனாக மாறி தீமைகளை அகற்றிடும் உணர்வின் தன்மை நம்மை ஆளும்.
4.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தியையும் நாம் பெறுகின்றோம்
பல முறை உங்களுக்கு இதைச் சொல்லி உள்ளேன்.
நீங்கள் எம்மை எண்ண வேண்டிய முறையே… இந்த உபதேசத்தை மீண்டும் மீண்டும் கேட்கின்றீர்கள். அதன் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எனக்கு உடல் நலம் ஆக வேண்டும் என்று “மனதில் எண்ணி ஏங்கி இருந்தாலே போதுமானது…”
இந்த உணர்வுகள் உங்கள் உயிரான அரங்கத்தில் பட்டு அது நாதங்களாக உடல் முழுவதும் பரவுகின்றது. ஏங்கிப் பெறும் பொழுது அந்த சக்திகள் உங்களுக்குள் அதிகமாகப் பெருகுகின்றது.
இந்த உணர்வு வளர நிச்சயம் உங்கள் நோய்கள் அகலும்
ஆனால் எம்மை எண்ணும் பொழுது “இப்படி இருக்கின்றதே… வேதனையாக இருக்கின்றதே…” என்று இப்படித்தான் சில பேர் எண்ணுகின்றார்கள்.
ரொம்ப நாளாக இந்த நோய் இருக்கின்றது…! என்று எம்மிடம் இப்படிக் கேட்டால் எந்த வாக்கு உங்களுக்குள் பதிவாகும்…? இப்படிக் கேட்பதையே ஒரு பழக்கமாகவும் வைத்திருக்கின்றனர்.
ஏனென்றால் உங்கள் தீமைகள் அகல வேண்டும் நீங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று தான் நான் உங்களுக்கு அந்த வாக்கினைக் கொடுக்கின்றேன்.
அந்த அடிப்படையில் நீங்கள் எண்ணி எடுத்தால் உங்களுக்குள் அது சரியான முறையில் வேலை செய்யும். நோய் நீங்க வேண்டும் என்றால் நான் உங்களுக்கு மருந்து சொல்வதற்கு வரவில்லை.
1.சொல்லின் வாக்காலே உங்களுக்கு அந்த நோய் போகும் உடல் நலம் பெறுவீர்கள் என்று தான் கொடுக்கின்றேன்.
2.உங்களுக்குள் பதிவாகி அதை மீண்டும் எண்ணினால் அதுதான் நல்லதாக வேலை செய்யும்.
மருந்து கொடுத்து அல்ல…!
1.மருந்துக்கு முன்னாடியே இந்த வாக்கு உள்ளே சென்று வேலை செய்யும்.
2.யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…! என்பது போல் யாம் கொடுக்கும் வாக்கை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
3.இந்த உணர்வு அந்த நோயைத் தீர்க்கும் வலிமையாக உங்களுக்குள் கூடுகின்றது.
அந்த வலிமை கொண்டு நீங்கள் எத்தகைய தீமையையும் நீக்கிடும் சக்தி பெறுகின்றீர்கள். அதைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை உபாயங்களையும் யாம் சொல்கின்றோம்.
கோவிலுக்குச் சென்று சாமிடம் வரம் கேட்பது போல் தான் எம்மிடமும் கேட்கும் பழக்க வழக்கங்கள் வந்து விடுகிறது. இதையெல்லாம் முழுவதுமாக மாற்றிப் பழகிடல் வேண்டும்.
எம்மிடம் கேட்க வேண்டிய முறையே நோயிலிருந்து விடுபட வேண்டும் அதற்குண்டான அருள் சக்தி வேண்டும் அதற்குண்டான உபாயங்கள் வேண்டும்… என் பையன் நல்லவனாக வேண்டும் என்று தான்…!
அதன்படி நடக்கும் என்று வாக்கினைக் கொடுத்துப் பதிவு செய்தால் உடனடியாக அது நல்லதாகும்.
ஆகவே எதுவாக இருந்தாலும் அது நல்லதாக வேண்டும் நலம் பெறக்கூடிய சக்தியாக வரவேண்டும் அந்த அருள் வழியை நாம் பெற வேண்டும் என்று இந்த அடிப்படையில் எடுத்துக் கொண்டால் அதன்படியே நடக்கும். நீங்கள் எண்ணியபடி அது நல்லதாக அமையும்.
1.நான் பதிவு செய்தால்… உங்கள் எண்ணம் அதனுடன் இணைந்து
2.அந்த உணர்வினை இயக்கி உங்களுக்கு நிச்சயம் நல்லதாகும்.
பல முறை இதைச் சொல்கின்றேன். யாரும் இதை அதிகம் சட்டை பண்ணுவது இல்லை.
ஏனென்றால் நீங்கள் எண்ணுவது எதுவோ உங்கள் உயிர் அதைத் தான் இயக்குகின்றது. இந்த உணர்வுகள் தான் உடலில் படர்கின்றது. அது தான் உங்களை ஆட்சி புரிகின்றது என்று பல முறை நான் சொல்கின்றேன். நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று தான் பெரும் பகுதியானவர்கள் எண்ணுகின்றார்கள். ஆகவே “அருள் வழியில் வாழ்க்கை நடத்துவோம்…” என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அருள் வழியில் வாழக் கற்றுக் கொள்தல் வேண்டும்.
எத்தனையோ செல்வங்களை நாம் தேடி வைத்திருந்தாலும் நம்முடன் அது வருவதில்லை. இந்த உடலுக்குப் பின் என்றுமே ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை அடைவதே முழுமை…!
1.இந்த உயிர் தோன்றி எத்தனையோ கோடி இன்னல்களில் இருந்து தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்து மனிதனான பின்
2.இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் கோடி உணர்வுகளையும் வெல்லும் சக்தி இந்த மனிதனுக்குத் தான் வருகின்றது.
3.அதை வென்று விட்டால் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.
அதற்கு நாம் தயாராக வேண்டும்.
இதன் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றால் நமக்கு எண்ண வலு கிடைக்கின்றது. சிந்தித்து வாழும் அருள் சக்தி கிடைக்கின்றது தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது… அருள் ஒளியைப் பெருக்கச் செய்கின்றது அருள் வாழ்க்கை வாழச் செய்கின்றது நம் பார்வையில் சர்வ தோஷங்களும் போக்கப்படுகின்றது பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும் சக்தியும் வருகிறது.
ஆகவே இதைச் சீராக வளர்த்துக் கொள்ளுங்கள்
1.அருள் வழியில் வாழ்வோம்
2.அருள் வழியில் அனைவரையும் வாழச் செய்வோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் குழந்தை தவறு செய்கின்றான். அதனால் நமக்கு வேதனை வருகின்றது. அந்த வேதனை நம் உடலுக்குள் போனால் இது ஓ…ம் நமச்சிவாய என்று உடலாகின்றது (சிவமாகின்றது).
அந்த உணர்ச்சியின் உணர்வுகள் அங்கே எண்ணங்களாகின்றது சொல்லாக வரப்படும் பொழுது இந்த உணர்ச்சிகள் அங்கே எப்படித் தூண்டுகின்றது…? உணர்வின் தன்மை அணுவாகும்போது நமக்குள் அந்த அணுத்தன்மை எப்படி இயங்குகின்றது…? என்பதைத்தான் அங்கே இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றான்.
இதெல்லாம் நான் (ஞானகுரு) எதற்குச் சொல்கின்றேன் என்றால் பெண்கள் குடும்பப் பற்றுடன் இருக்கப்படும் போது இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாசத்தால் நாம் எப்படியோ நினைக்கின்றோம். ஆனால் சில குழந்தைகளால் எத்தனையோ சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றது.
இதே மாதிரி தொழில் நடத்தும்போது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நன்றாக நடக்க வேண்டுமென்று நினைக்கப்படும்போது நம்மை அறியாமலேயே வியாபாரம் கம்மியாகிவிட்டது என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.
1.இந்த வாலி உள்ளே புகுந்துவிடுகிறான்.
2.இது நம் நல்ல குணத்தையே கெடுக்கின்றது.
வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். ஒருத்தர் மேல் அதிகமான அன்பையும் பண்பையும் பெற வேண்டும்… சிநேகிதமாக வாழ வேண்டும்… ஒருத்தருக்கொருத்தர் கொடுத்து வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம்.
ஆனால் அது சரியாக வரவில்லை என்றால் வேதனை என்ற உணர்வு வந்துவிடுகின்றது. அந்த வாலி என்ற நிலைகள் புகுந்து விடுகின்றான். அந்த வலிமை உடலுக்குள் சென்றபின் நம் நல்ல குணத்தைப் பாதுகாக்கும் நிலை இல்லை.
ஆக பாதுகாக்க முடியவில்லை என்றால்…
1.நாம் நுகர்ந்த உணர்வோ அது நம் உடலுக்குள் வேதனைப்படுத்தும் கருவாக உருவாகி
2.வேதனை என்ற உணர்வு பிரம்மமாகி அது தன் வேதனையை உருவாக்கும் அந்தச் சக்தியாக
3.தன் இனத்தைப் பெருக்கும் சக்தியாக மாற்றிவிடுகின்றது.
இயற்கையின் நியதிகள் இவ்வாறு தான் இருக்கின்றது. ஆனால் நாம் இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது இராமயாணம்.
ஒரு பாறையை வைத்து மேலே கல்லை வைத்திருப்பான். படம் போட்டுக் காண்பித்து அதாவது துவைதம் உருவ நிலையைக் காட்டி அருவ நிலையை நமக்குள் புரிய வைக்கின்றான்.
குகைக்குள் இருக்கின்றான் வாலி…! அரக்கர்களிடம் இருந்தான் அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். எதையும் அடக்கி ஆளும் வல்லமை இருக்கின்றது.
அப்போது இராமன் என்ன செய்கின்றான்..?
அவன் (வாலி) செயலைப் பார்க்கவில்லை. அந்தக் குகைக்கு மேல் இருக்கும் பாறையை எடுத்து மூடிவிட்டான். மூடி விட்டால் வாலி வெளியில் வருவானா…? முடியாது…!
நம் குழந்தை தவறு செய்கின்றது அல்லது கடையில் நஷ்டமாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கே வேதனை என்ற உணர்வு வரப்படும்போது அது வலிமை பெற்றுவிடுகிறது.
1.அப்பொழுது சிந்திக்கும் திறமை வருகின்றதா…? வியாபாரத்தைச் சீராக நடத்த முடிகின்றதா…?
2.இந்த உணர்வின் தன்மை நாளை என்ன ஆகுமோ…! என்ற பயம் வருகின்றது
3.நடுக்கம் ஆகின்றது… சிந்தனை இல்லாமல் போகின்றது…!
இந்த எண்ணங்கள் நமக்குள் எப்படி உருவாகின்றது…? நமக்குள் தீமையின் வலிமை எப்படிக் கூடுகின்றது…? நம் மகிழ்ச்சி என்ற உணர்வு எப்படித் தடைப்படுகின்றது…?
நாம் இதை எல்லாம் எப்படி மாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டித் தான் இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் கூறுகின்றார்கள்.
அதாவது வேதனையை நுகர்ந்தால் அடுத்த கணமே கண்ணின் நினைவு கொண்டு
1.ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தினை அங்கே நிலை நிறுத்தினால்
3.அந்த வேதனை என்ற உணர்வு உட்புகாது நின்றுவிடும்.
நாம் ஈர்க்கத் தவறிய வேதனைகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து சென்று விடும்.
நம் உடலுக்குள் போகவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் வராது… வேதனை என்ற அணுவும் நமக்குள் உருவாகாது. வேதனையை உருவாக்கும் அணுவின் தன்மை கருவாகவும் ஆகாது…! நம் சிந்தனையும் தெளிவாகும்.
அப்போது தொழிலைச் சீராக்கும் உணர்வுகளும் குழந்தைக்கு எப்படி நல் வழி காட்ட வேண்டும் …? என்ற தெளிந்த உணர்வுகளும் நமக்குள் தோன்றும்.
குருதேவரின் விளையாட்டு…! என்று எண்ணலாமா…?
மனிதன் என்றே பெயர் பெரும் ஜீவ பிம்ப சரீரம் பெற்ற உயிராத்மா தான் தன் சுய வளர்ப்பால் வளர்ந்து… உயர் ஞானத்தின் தொடரில் தன்னைத்தான் உணரும் பக்குவ கதியால்… தன்னை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலில் உணரும் அனுபவ உயர் ஞானமாகத் தன்னுள் தெளிந்து… மனித குல சமுதாய நன்மைக்குத் தான் கண்ட பேரின்ப அனுபவ லயத்தை உவப்புடன் உலகினுக்கு ஈந்து… மனித மனத்தின் திறன் எண்ண வலுவால் உயர்ந்திட… உயர்வெண்ண மனித குலத்தின் நலன் நாடும் அன்பு இராஜ்ஜியமாக இக்கலியில் மனிதன் வாழ்ந்து காட்டிவிட்டால்… “சப்தரிஷிகளின் செயல்களுக்கே சக்தி அளித்திடும் மெய்ஞான விழிப்பு ஏற்பட்டு விடுமப்பா…!”
1.”உற்றுறுத்துக் கேட்டலும் அதிசயத்து நோக்கலும்…” எப்படி எல்லாம் நம் ஆத்மாவை கேடுறுத்தும் என்று ஏற்கனவே படிப்படியாக்க் கூறி வந்துள்ளேன்
2.நாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் மெய் வித்துக்களே இந்தக் கலியில் தேவையப்பா.
இதை அறிவுரை என்றே எடுத்துக் கொள்தல் வேண்டும்.
அனுபவங்கள் கொண்டே அறிவுறுத்தும் தன்மைகளில் மெய்ப்பொருளை உணரல் வேண்டும் (இது மிகவும் முக்கியம்). குருதேவரின் விளையாட்டு…! என்ற எண்ணம் கொண்டால் அங்கே நடந்த அனுபவத்தைப் பார்த்தாய் அல்லவா.
தாய் தன் நகையைக் கழற்றி மகனிடம் கொடுக்கின்றாள். மகன் அதைத் தரையில் வைத்து விட்டுத் தியானத்தில் ஈடுபடுகின்றான். ஒரு சிறு எலி ஆனது அதைத் தன் வளைக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது.
திரும்பி வந்த தாய் நகை எங்கே…? என்று கேட்கிறாள். மகன் தேடுகிறான்… தாயும் தேடுகிறது…! தியானத்தின் சக்தியில் வலுக்கொண்ட குடும்பம் தாய் தன் மகனைச் சந்தேகிப்பாளா…?
மகன் சிரித்துவிட்டு “இது குருதேவரின் விளையாட்டு…” என்று கூறுகின்றான். தியானத்தின் மூலம் காட்சியில் எலி வளையில் நகை இருப்பதை இருவரும் பார்க்கின்றார்கள்.
தேடும் பொழுது நகையை வளையில் கண்டு எடுக்க மீண்டும் “இது குரு தேவரின் விளையாட்டு…” என்றே கூறுகின்றான்.
ஆக விவேக உணர்வு கொண்டு நிதானத்தைக் கூட்ட வேண்டுமப்பா. அவனும் மெய்ப்பொருள் நாடும் நன்னிலை பெற்றவன்தான்.
1.எதையும் அலட்சியப்படுத்தி விடாமல்
2.சிறு பிராணியின் செயலை எமது விளையாட்டு என்று உரைத்திடாதே…! (புகழ்ந்து விடாதே)
நாம் உரைக்கும் கருத்தின் வழி நிற்றல் தான் உலகத் தேரில் பவனி வரும் ஆரம்ப அனுபவமப்பா. மறு சமைப்பை பற்றி வினா எழுப்புகின்றாய்
ஒலிப்பதிவை (செயற்கைத் தன்மை) மீண்டும் அதே ஒலி நாதத்தைக் கேட்டிடும் சமைப்புத் தன்மைகள் பற்றி அறிய நினைக்கின்றாய். ஒலி நாத வேறுபாட்டில் கருப்பொருள்தான் முதன்மையப்பா (இயற்கைத் தன்மை).
கண்டத்தில் எழுப்பும் ஒலி… ஒலி அலைகளாக மாறுவதை உணர்ந்துள்ளாய். எண்ணுகின்ற அத்தனை எண்ணங்களும் ஒலி அலைகளாகச் சமைக்கப்படும் சமைப்பை… அவைகள் ஓடிக்கொண்டே இருக்கும் ஓட்ட கதியை உணர்ந்து கொண்டாயா…? உணர்ந்து கொள்…! மன எண்ணத்தின் அசைவு தெளிவுபடும்.
கண்ணாடிக் குடுவையில் காய்ச்சப்படும் நீர் வெப்ப சக்தி கொண்டு நீராவி அமில நிலை பெற்றுப் பின் குளிர்ச்சி நிலை பெறும் பொழுது… மாற்றுக் குடுவையில் சேமிக்கும் நீராக ஏற்கப்படுகின்றது.
பரிணாம தத்துவப்படி… கொள்ளப்படும் பொருளும் ஏற்றுக்கொண்டிடும் மன நிலையும் தான் முக்கியம். கருத்துக்களில் தீய உணர்வுகளை ஏற்றிடும் அமில அணுக்களின் தன்மைகள் ஜீவ ஆதாரம் அற்ற தன்மையாக சமைப்பின் சமைப்பில் உராய்வு கொண்டு… கருத்தின் தன்மையும் ஜீவனற்று ஆத்ம பயிர் வளர்ச்சி உறாத செயலுக்கே செயல் கொண்டிடும்.
1.உயிரணுக்களை மாய்த்திடும் விஷப்பொருளில் விஷத்தையே உண்டு வாழும் உயிரணுக்கள் வாழ்வதைப் போல்
2.ஒலிபெருக்கியில் ஒலி நாதத்தைக் கேட்டிடும் செயல் எல்லாம் நோய் உண்டவன் வாழ்வதைப் போல்
3.ஒலி நாத வேறுபாட்டால் தாக்குண்ட இந்தக் காலகட்டத்திலும்
4.அமுதம் கொண்டிட்ட உயர் ஞான கருத்துக்களின் தன்மைகள் எந்த ஒலி சமைப்பின் மறு சமைப்பிலும்
5.உயர்நிலை அணுக்கள் தன் சுவாசத்தைக் கொண்டு தன்னைத்தான் காத்துக் கொள்ளும்.
அறிந்ததைத் தெளிவதே உயர் ஞானத்தின் வழி பெற்றே உயர்ந்திட ஆசிகள்.
அக்கினி குண்டத்தின் தத்துவம் என்ன…?
நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று ஞானிகள் ஆலயத்திலே உருவத்தைக் காட்டி அருவ நிலைகள் நாம் உணர்ந்து இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்…? என்று தெளிவாகக் கூறியதை நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்…?
ஆலயப் பண்புகளை மறந்து தன் சுயநலத்தைக் கொண்டு நடந்து கொள்கிறோம்…! யாராவது நமக்குத் தொல்லை கொடுத்தால்
1.உடனே அவன் குடும்பம் நாசமாக வேண்டும்
2.அவன் குடும்பம் பிள்ளை குட்டி எல்லாம் சாக வேண்டும்
3.அவன் தொழில் எல்லாம் நாசமாக வேண்டும் என்று கருப்பணசாமி ஆலயத்திலோ மாரியம்மன் ஆலயத்திலோ
4.மண்ணை வாரித் தூற்றி எனக்குத் தொல்லை கொடுக்கின்றான் என்ற நிலையில் அவர்கள் நாசமாக வேண்டும் என்று தான் கும்பிடுகின்றோம்…
ஆக ஆலயத்திற்குச் சென்று நாம் எதை வளர்க்கின்றோம்…?
பிறிதொருவன் தவறு செய்யும் உணர்வை நாம் நுகர்ந்தால்… அந்த உணர்வுகள் மாறி அவன் செய்யும் தவறையே நமக்குள் செய்யும் நிலை வருகின்றது (சொல்வது அர்த்தமாகிறதல்லவா).
ஒரு உடலிலே நோய் அதிகமாக இருந்தால் பாசத்துடன் அவனை நுகரப்படும் பொழுது அதே நோய் நமக்குள் வந்து நம்முடைய நல்ல சிந்தனையை இழக்கச் செய்கின்றது.
அது தான் மாரியம்மாள்…! (அடுத்தவர் உணர்வு மாறி நமக்குள் வருவது).
ஆனால் மாரியம்மனை வணங்கி வரும் பொழுது ஆகாதவர்கள் இருந்தால் என்ன செய்கிறோம்…? அவர் குடும்பத்தைக் கெடுப்பதற்காக உனக்கு ஆட்டைக் கொண்டு வந்து வெட்டிப் பலி கொடுக்கின்றேன்…! என்று ஆலயப் பண்புகளை இப்படித்தான் கொண்டு வருகின்றோம்.
பிறிதொரு வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தால் அதே உணர்வு நமக்குள் மாறி (மாரி) அவன் உடலில் வந்த நோய்கள் நமக்குள்ளும் வருகின்றது.
இந்தத் தீமைகளை நீக்குவதற்கு நோயை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று பச்சையாகவே அங்கே காட்டுகின்றார்கள்… அக்கினி குண்டம் இறங்க வேண்டும் என்று…!
ஆனால் அக்கினி குண்டம் நாம் எப்படி இன்று இறங்குகிறோம்…?
1.தீ மிதித்தால் “தீ நம்மைச் சுடும்…!” என்று தெரிகின்றது ஆனாலும் மிதிக்கின்றோம்
2.ஏனென்றால் நேர்த்திக் கடனுக்காக நான் மிதித்துச் செல்கின்றேன் என்று செல்கின்றார்கள்
3.ஆனால் ஒருவனுடைய தீமை நம்மைக் கொல்கிறது என்று தெரிகின்றது
4.அந்தத் தீமையை நீக்கும் (சுட்டுப் பொசுக்கும்) நல்ல உணர்வுகளை எடுக்கின்றோமா என்றால் இல்லை.
நெருப்பைக் கொண்டு எப்படி மற்ற பொருளை வேக வைக்கின்றோமோ ஒன்றைக் கருக்குகின்றோமோ இதைப் போன்று நம் உயிரான நெருப்பிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள இணைத்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் நுகர்ந்து
1.நம் உடலுக்குள்ளே அதைப் பரப்பினால் இது ஒரு குண்டம்.
2.தீமையை நீக்கிய அந்த அருள் உணர்வு நமக்குள் வந்தால் தீமைகளைப் பொசுக்கி விடுகின்றது.
பின்… யார் நமக்குத் தீமை செய்தார்களோ அவனுக்குச் சிந்தித்து செயல்படும் சக்தியும் பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் வரவேண்டும் என்றும் இத்தகைய எண்ணங்களை நாம் எண்ணினால் அவனுடைய தீய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
தீமை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் நம் உடலில் இரத்தத்தில் கலந்து தீமை என்ற உணர்வை மாற்றுகிறது.
நாம் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல உணர்வுகள் வரவேண்டும்… நல்லது செய்யும் எண்ணங்கள் வரவேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வு உயிரிலே பட்டு… அந்த உணர்ச்சிகள் நம் உடலில் நல்லதாக இயங்குகின்றது.
அதனால் தான் நாம் எதை எண்ணுகின்றோமோ நம் உடல் ஒரு அரங்கம்.
1.பிறர் நல்லவராக வேண்டும்… தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று உணர்வுகளை நுகர்ந்து
2.உயிரிலே பட்டால் அந்த உணர்ச்சிகள் நாதங்களாக மாறி அதற்கொப்ப எண்ணம் சொல் செயல் நம்மிடமிருந்து வருகின்றது
3.இந்த உணர்ச்சிகள் தான் நம்மை ஆளுகின்றது ஆண்டாள்…!
இப்படி இன்று நாம் வழக்கப்படுத்த வேண்டிய தெய்வீகப் பண்புகளைக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள். நாம் அதன்படி நடக்க வேண்டுமல்லவா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஞானிகள் தெய்வங்களை உருவமாக்கி அதன் மூலம் அருவத்தின் நிலைகளை நாம் எப்படி நுகர்தல் வேண்டும்…? இருளை எப்படி அகற்றுதல் வேண்டும்…? என்று தான் ஆலயங்களை அமைத்தனர்.
இந்த உடலின் இச்சைக்குத் தான் அர்ச்சனை அபிஷேகம் இதை எல்லாம் நாம் செய்கின்றோமே தவிர ஞானிகள் சொன்ன வழியை நாம் எடுக்கவில்லை.
1.அருள் ஞானத்தை நாம் நுகர்ந்து
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கி அதை அர்ச்சனையாக்கி
3.அந்த ஒளித் தன்மையை நமக்குள் கூட்டி நம்மை அறியாது வரும் இருளைப் போக்கி
4.மெய்ப் பொருள் காண வேண்டும் என்ற உணர்வை நீங்கள் ஆலயங்களிலே தியானியுங்கள்.
இந்த அருள் ஒளியின் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உயிரான ஈசனிடம் படப்படும் பொழுது இருளை அகற்றுகின்றது. மெய்ப் பொருளை உணர்த்துகின்றது.
இந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள்.
ஆனால் அந்த ஆலயத்தை இன்று நாம் அவமதிக்கின்றோம். எவருக்கோ காசைக் கொடுத்து அவர் எல்லாம் செய்து கொடுப்பார்… வாங்கித் தருவார்…! என்ற நிலையில் தான் நம்பிக் கொண்டிருக்கின்றோமே தவிர ஞானத்தின் வழி எட்டிப் பார்க்கும் நிலை இல்லை… அதைப் பெறும் நிலையும் இல்லை…!
உயர்ந்த நிலைகளைச் சொன்னால்… அதைப் பின்பற்றி அந்த உயர்ந்தது எனக்குள் வளர வேண்டும் என்ற இதைத் தான் நாம் பெறுதல் வேண்டும்.
ஒருவன் தீமை என்ற நிலையைச் செய்கின்றான்… நாம் பார்க்கின்றோம். அவன் தீமை செய்கின்றான் என்று எண்ணும் போது
1.அதே தீமையை எண்ண எண்ண நமக்குள்ளும் அது வளர்கின்றது.
2.நாமே தீமை செய்வோராக மாறிவிடுகின்றோம்.
அதைத் தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.
ஞானிகள் காட்டிய வழி சென்றால் நாம் தெளிவான வாழ்க்கை வாழ முடியும். வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும்.
கடலிலே நீந்திச் செல்லப்படும் பொழுது எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது. நாம் எந்தக் கரையை எல்லையாக வைத்தோமோ அதை அடைய வேண்டும் என்ற மன உறுதி கொண்டால் நாம் அங்கே செல்கின்றோம்.
எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் நம் எல்லை எது…?
உயிருடன் ஒன்றி இனி உடல் இல்லை என்ற நிலை கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ஒளியான அந்த சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைதல் வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வுடன்
2.ஒவ்வொரு நொடியிலும் இங்கே வரும் துன்பங்களை அந்த அருள் ஞானம் என்ற துடுப்பை வைத்துத் தள்ளிவிட்டு
3.நம் எல்லை அந்தத் துருவ நட்சத்திரம் தான் என்ற நிலை வரும் பொழுது சங்கடங்களோ மற்ற துயரங்களையோ நாம் நீக்க முடியும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பற்றுடன் பற்ற வேண்டும்.
அத்தகைய அரும் பெரும் சக்தியை நம் குருநாதர் அருளால் உங்களுக்குள் பதிக்க முடிந்தது. அந்த ஞானத்தை உங்களுக்குள் விதிக்க முடிந்தது. இதைப் பெற வேண்டும் என்ற அந்த மதி கொண்டு தீமைகளை மாற்றிட முடியும்.
வாழ்க்கையில் சங்கடம் வேதனை என்று இது அதிகமானால் இந்த விதிப்படி மீண்டும் பிறவிக்குச் செல்கிறது.
1.மதி வழி இனி உடல் வேண்டாம்.
2.மதி என்றாலே ஒளி…! அந்த மதி கொண்டு விதியை வெல்லுங்கள்
3.இனி உடல் என்ற விதிக்குச் செல்ல வேண்டாம்…!
மதி கொண்டு என்றும் நிலையாக இருக்கச் செய்யும் ஒளி என்ற நிலைக்கு வாருங்கள். உங்களால் அதைப் பெற முடியும்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவோம். இந்தக் காற்றிலே மகரிஷிகள் உணர்வுகள் உண்டு. அதை நாம் நுகரப் பழக வேண்டும். அந்த வலுவைப் பெறுவோம்.
நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம். அவர்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்வோம். அந்த உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தியைப் பெறுவோம்.
மற்றவர்களின் தீமைகளை நீக்கி அவர்களையும் மெய்ப் பொருளைக் காணச் செய்வோம்…!
பதட்டத்தையும் பயத்தையும் போக்கத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தே ஆக வேண்டும்
துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்ற நினைவை நம் உடலுக்குள் செலுத்தினால் தீமைகளை அடக்கி நமக்குள் சிந்திக்கும் ஆற்றலாக உருவாகின்றது.
அதற்குப் பின் நோயாளியைப் பார்த்து “நீ நன்றாகி விடுவாய்…” என்று இந்த உணர்வைச் சமைத்து இந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவனுக்கு ஊக்கமூட்டும் உணர்ச்சிகளாக இது அமைகிறது. அதே சமயத்தில்
1.நோயை நீக்க அவன் உட்கொள்ளும் மருந்தைச் சீராகப் பயன்படுத்தும் நிலையும்
2.அந்த மருந்து உடலுக்குள் சென்று நன்கு வேலை செய்யும் தன்மையும் வருகிறது.
ஆனால்… இப்படி ஆகிவிட்டதே என்று அவன் வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்து… வேதனையும் பதட்டத்தையும் பட்டு… பயத்துடன் நாம் அந்த மருந்தினைக் கொடுத்தால்
1.இதே உணர்வுகள் இயக்கப்பட்டு
2.அந்த மருந்துக்கே வேலை இல்லை என்று ஆகி எதிர் நிலையாகிவிடும்.
ஒரு சிலர் பாருங்கள்… நோயான பின் பதட்டத்தோடு மருந்தினைக் கொடுப்பார்கள். இப்படி எத்தனை மருந்து கொடுத்தாலும் அந்த நோயிலிருந்து அவர்கள் விடுபட முடியாது.
ஏனென்றால்… பாசத்தாலோ அல்லது நண்பர் என்ற நிலையிலோ பழகிய நிலைகள் கொண்டு இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே…! என்று தியானிப்பார்கள்.
1.அவர்கள் உடலிலும் இத்தகைய தீமைகள் விளையும்
2.அதே சமயத்தில் அந்த நோயாளி உடலிலும் அதே உணர்வுகள் விளையும்.
இதுவும் தியானம்தான்…!
இதையெல்லாம் மாற்றிட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நம் உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமை என்ற நிலைகளை நாம் அடக்கிப் பழக வேண்டும்.
அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோயுற்றவர் உடலில் படர வேண்டும்
1.அவர் நோய்கள் நீங்க வேண்டும்
2.அவர் மன உறுதி பெற வேண்டும்
3.நல்ல உணர்வுகள் அவருக்கு கிடைக்க வேண்டும்
4.சிந்திக்கும் ஆற்றல் அவருக்குள் பெருக வேண்டும்
5.மன வலிமையுடன் வளரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்தால் இந்த வலு நமக்குக் கிடைக்கின்றது.
அந்த உணர்வோடு அவரிடம் சொல்லி “சீக்கிரம் நலமாகி விடுவீர்கள் உடல் நலம் பெறுவீர்கள்…” என்ற உணர்வினை இங்கே சமைத்தால்… அந்த உணர்வின் சொல் அவர் செவிகளிலே பட்டு நல்ல உணர்ச்சிகளைத் தூண்டி… அவருடைய இரத்தங்களிலே கலந்து அவர் தீமையின் உணர்வை அடக்கி நல்ல உணர்ச்சிகளை அவருக்குள் ஊட்டும்.
உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் அவர் எடுத்த வேதனையை நமக்குள் எடுத்து உனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணினால் நமக்குள்ளும் அதே பயமும் பதட்டமும் வேதனையும் வருகின்றது.
திருப்பி இதையே வலுவாக்கிச் சொல்லப்படும் பொழுது நோயே வலிமை பெறுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நீக்குவதற்குத் தான் ஆலயங்களிலே சிலைகளை வடித்து… அதன்படி நாம் எப்படி நல்ல குணங்களைச் சேர்க்க வேண்டும்…? தீமையிலிருந்து எவ்வாறு விடுபடுவது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.
இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…! என்று ஸ்தல புராணங்களை வடித்து வைத்துள்ளார்கள்
ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…?
அங்கே அபிஷேகங்களையும் ஆராதனையும் செய்துவிட்டு… இப்படி நோயுடன் இருக்கின்றார்களே… தெய்வமே…! கஷ்டமாக இருக்கின்றதே… நீ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றாயே…! என்ற வேதனை கலந்த உணர்வைத்தான் நாம் எடுத்து வளர்த்து
1.அவர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணினாலும்
2.விஷத்தைக் கலந்து பாலைக் கொடுத்தது போன்றாகி விடுகின்றது.
ஏனென்றால் வேதனை (நஞ்சு) கலந்த பின் இப்படித்தான் ஆகும். ஆகவே கோவிலுக்குச் சென்றால் நான் எப்படிச் செயல்பட வேண்டும்…?
மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும்… வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும் என்ற உணர்வைத் தனக்குள் படைத்து… இந்தத் தெய்வீக பண்புகள் அவருக்குள் வளர வேண்டும்.. தீமைகளை அகற்றிடும் அருள் சக்தி அவர் பெற வேண்டும் அருள் வழி வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எந்த நோயாளியை பார்த்து நாம் எண்ணினோமோ
1.அருள் உணர்வை எண்ணிச் சுவாசித்து இங்கே படைத்தால் நம் உயிருக்கு இது அபிஷேகம் ஆகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் நம் இரத்தங்கள் முழுவதும் கலக்கின்றது
3.தீமையை அகற்றிடும் நல்ல அணுக்கள் நமக்குள் விளைகின்றது.
இந்த உணர்வின் சொல்லை வெளிப்படுத்தும் போது… எந்த ஆலயத்தில் நாம் இதை உற்றுப் பார்த்து எண்ணுகின்றோமோ அங்கே “நாம் தெய்வமாகின்றோம்…!”
அவ்வாறு நாம் தெய்வமாகி அவன் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இது தான் ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திரம்.
“மனத்தை தேவன் வசம் ஒப்படையுங்கள்… தேவனின் இராஜ்ஜியம் சமீபத்தில்…!”
1.சரீரமில்லா செயல் நிலை உடைய உயிரணுக்கள் (ஆவி ஆத்மாக்கள்) சரீர கதிச் சுழல் காந்த அமில ஈர்ப்பின் குணத்தின் வசம் அகப்பட்டு
2.தனது சுவாச அமில நிலைக்கொப்ப சரீர செயல் சமைப்பு முறை அமில குண சுவாச நிலையில் குணத்துடன் ஒன்றி
3.தனது சரீரமற்ற ஆவித்தன்மையின் வீரிய குண எண்ணத்தை செயல் நடத்திட
4.சரீரமுடைய காந்த அமில குண சுழற்சியில் அகப்பட்டுச் சுவாச கதி அலையில் உட்சென்று தான் செயல் கொண்டிட
5.தனக்கு என்று ஓர் வாய்ப்பு நிலை ஏற்படுத்தும் “நரம்பு மண்டல செயல் நிலைகளில் நகர்ந்து ஓடி…” அதே கதியில் செல்லும் அவைகள்
6.தங்கள் எண்ணத்திற்கொப்ப ஆங்குள்ள உயிரணுக்கள் செயலை விட மிக வீரியமான தம் குண எண்ண நிலை கொண்டு வெற்றி உலா வந்து
7.தன் எண்ணம் கொண்டு சரீர கதியையே மாற்றி அமைத்துத் தமது எண்ணத்தின் வலுவை வலுவாக்கி
8.அதன் செயல் கொண்டு செயலுறும் இயந்திரகதி சரீரமாக்கி
9.தனது இச்சைகளை பூர்த்தி செய்து கொள்கின்ற பாங்கில் துர் ஆவிகள் புகுந்த உடலில் செயல்படும்.
ஆவிகளின் துர்க்கதி வினைச் செயலை நீக்கிட… மார்க்கம் காட்டிய அன்பு நிலை வெளிக்காட்டும் மாமகரிஷியின் தொடர்பு பெற்ற “தேவகுமாரன் இயேசுபிரான் அவர்கள்” துர் ஆவிகளை விரட்டிச் சொஸ்தப்படுத்தியது அறிய வேண்டிய சூட்சுமம்.
“பன்றிகள்” என்று துர்க்குணங்களைச் சுட்டி காட்டிய இயேசுபிரான் அந்தப் பன்றிகள் வாசம் செய்யும் இடம் சைத்தான் என்று மனித சரீரத்தைக் காட்டினார். ஏன்…?
துர்குண எண்ணமாகிய பன்றியின் குணங்கள் கொள்ளும் பொழுது… பன்றி கழிவை உண்டு அந்தக் கழிவின் தீய செயல் குண அமிலங்களைத் தனது சரீரத்திற்கு ஏற்றுக் கொண்டு அப்பன்றியியின் கழிவில் நல்ல நிலைகளை வெளித்தள்ளும் செயல் சரீர செயலிலும் நடைபெறுதல் போலவே (பன்றியின் மலம் துர்வாசனை வீசுவதில்லை)…
1.அதே பன்றி குணம் கொள்ளும் மனிதன் தன் ஈர்ப்பின் செயலுக்குத் துர் ஆவிகள் அவன் உடலில் ஏறி (சைத்தான்)
2.சரீரம் கிடைத்தவுடன் மனித சரீரத்திற்குள் அவை நுழைந்து
3.மனிதர்களை ஆட்டுவிக்கும் செயலாக… தன் இச்சைகளை அங்கே பூர்த்தி செய்து கொள்ளும் செயலுக்கு
4.எந்தச் சரீரத்தில் ஏறியதோ அங்கே பயமுறுத்தும் காரியார்த்தவாத செயல் நிலைப்படுத்தி
5.தங்கள் இஷ்டம்போல் அச்சரீர உயிர் ஆத்மாவையும் அடிமை கொண்டிட அதி ஆவேச செயல் நிலைப்படுத்தும் என்பதை
6.அந்த ஆவிகள் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் செயல் திறத்தால் அறியலாம்.
ஆனால் அந்தத் துர் ஆவிகளை இயேசு பிரான் கடலில் சென்று விழச் செய்து மாள வைத்தார் என்பதன் பொருள் என்ன…?
அத்துர் ஆவி ஆன்மாக்கள் மனிதச் சரீர செயலில் தன் தனது நடைமுறைகளுக்கொப்ப செயல் கொண்டிடும் விதம்… நாத குணங்கள் போக்கி… தான் செய்யுறும் குணநலன்படுத்தி ஆட்டுவிக்கும் செயலில்…
1.உயரிய சக்தி பெற்ற ஆத்ம ஞானிகள் அவைகளை நீக்கச் செய்திட்ட சூட்சுமப் பொருள் என்ன…?
2.அவைகளை விரட்டிட்ட செயல் சூட்சுமத்தை நாம் அறிந்திட வேண்டும்
“துர் ஆவிகள் பன்றிக்குள் நுழைந்து…
கூட்டம் கூட்டமாகக் கடலுக்குள் விழுந்து செத்தொழிந்தன…
நீங்கள் சுகம் அடைந்தீர்கள்
இனி மனத்தை தேவன் வசம் ஒப்படையுங்கள்
தேவனின் ராஜ்ஜியம் சமீபத்தில்…!” என்று
ஏசுபிரான் போதனைப்படுத்தி வழிகாட்டிய அந்தச் செயல் முறையால் ஆவி ஆத்மா வசம் அகப்பட்டவன் எப்படிச் சுகம் அடைந்தான்…?
பன்றிக்குள் நுழைந்தன ஆவிகள் என்பது… எப்படி அவைகள் பன்றியின் செயல் நிலையில் ஒன்றி ஒடுங்கின…? என்பதை அத்துர் குணங்களின் வசம் உள்ள ஆவி ஆன்மாக்கள் அக்குணங்களையே ஆட்கொள்தல் என்பதே… “பன்றியின் உள் நுழைதல் என்று சூட்சுமம் காட்டி…” அவைகளைக் கடலுக்குள் தள்ளியதாகக் கூறும் விதம்… அத்துர் குணங்களாகிய பன்றிகள் மாய்க்கப்பட்டுக் கடலுக்குள் தானே விழுந்து விட்டன…! என்ற தத்துவ ஞான போதனையை யார் ஏற்றுக் கொண்டார்கள்…?
தங்கள் மனம் போல் வியாக்கியானப்படுத்தும் இந்த உலகம் அந்த உண்மையை அறிந்து கொண்டதா…? அதன் செயல் நிகழ்வு எப்படி நடைபெறுகின்றது…?
இச்சரீர கதியில் என்பது துர்குணம் வாழும் ஆவி ஆத்மாக்களை ஞானக்கடலிலே விழச் செய்தான் தேவகுமாரன்.. ஞானக்கடல் எங்கிருந்து வந்தது…?
1.தன் சக்தியின் சக்தியை அவர்களுக்கு (ஆவிகளுக்கு) ஊட்டுவித்து
2.தன்னையே அவர்களிடம் ஒப்புவித்து… தானே அவர்களானான் என்பதே
3.அன்பால் வசப்படுத்தும் மனதினன் அவ் அன்பு நிலை எம் மக்கள் செயலில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ
4.அதே நடைமுறைச் செயலில் நல்வினை ஆக்கும் செயலுக்குப் போதனைப்படுத்திய ஞானவான்
5.தன் மன நிலையுடன் அவர்களின் மன நிலையை ஒன்றச் செய்து
6.தன் வசமாக்கி… தெளிவுபடுத்தி… மனங்களின் அன்பை அருந்த “ஞான நிலை போதனை கொடுத்து…”
7.குரு காட்டிய வழி (உயிரான்மா அறிந்த சொல்) என்ற மந்திரச் சொல்லைப் பயன்படுத்தும் பொழுது
8.அவனுள் ஏற்படும் மாற்ற நிலையானது மனம் அன்பின் வசப்படும் தன்மையும்
9.அதனுள் சுரக்கும் ஞானக்கடல் நிலை என்பது ஞானத்தின் பரிமாணத்தைக் கூறும் சூட்சும செயல்படுத்தி
10.அந்தச் செயல் முறையின் நடைமுறையைக் காட்டினான் தேவகுமாரன் அன்று.
ஆகவே… ஞானத்தின் வசம் ஒப்புவிக்கப்படும் மனமானது… “அன்பின் வசம் உற்று…” நல்வினைப் பயன் ஏற்பட நற்குண வழிகாணும் செயல் நிலை வந்தது. (அன்பால் தான் ஆன்மாக்களை நல்வழிப்படுத்த முடியும்… நம் வசத்திற்குக் கொண்டு வர முடியும்)
எந்தெந்த நற்குண செயல் போதனைப்படுத்தப்படுகின்றதோ… அவைகளைத் தனக்குகந்த போதனையாக ஏற்று… அந்தப் போதனைகள் வழி மனம் செலுத்தப்பட முயற்சி என்ற நம்பிக்கை வேண்டும்.
அந்த முயற்சி தானே உருவாகும் செயலுக்கு முன்பு யார் போதனைப்படுத்துகின்றார்களோ “அவர்களின் காந்த வீரிய எண்ணச் சுழற்சி செயலில்…” மனம் நாட்டம் கொண்டிடல் வேண்டும்.
எண்ண வலுவின் செயல் கொண்டிடும் நிலையானது எந்த நிலையானாலும் அது பக்தியோ ஞானமோ அல்லது வேறு உபாய காரியச் செயல் முறையோ “அந்தத் துர் ஆவிகள் விலகும்…” என்பது அவைகள் குணங்களுடன் (துர்க்குணங்கள்) ஒன்றி வாழும் பொழுது… அக்குணங்களையே களைவிக்கும் மந்திர ஜெபம் என்ற சூட்சமப் பொருளானது… நாம் எடுக்கும் தியானத்தின் வழியில் தான்.
தியானத்தின் மூலம்… நற்குண வீரிய சொல் ஏற்கும் மன ஜெப நிலை வசம் உயரும் முறையாக அது மாறி தன் நற்குணத்தில் சுகம் பெறும் என்பது
1.அந்த ஆவி ஆத்மாக்களின் வீரிய குணம் நற்குண அதி வீரிய ஜெப குணம் ஞானத்தால் அடக்கப்பட்டு
2.அந்தத் துர்குணங்கள் மாய்க்கப்படுவதையே ஞானமாம் கடலில் பன்றிகள் விழும் பொழுது
3.அதனுள் வாசம் செய்த துர் ஆவிகளும் செத்தொழிந்தன (அதன் வீரியத்தை அடக்குதல்) என்கின்ற சூட்சுமம்.
மனநிலையை ஞானத்தால் உயர்த்திக் கொண்டால்… நற்குணத்தின் வீரியத்தால் சுகம் பெறலாம்…! என்பது தேவகுமாரன் காட்டிய அன்பின் தத்துவம்
உங்களால் நான் நன்மை அடைகின்றேன்… என்னால் நீங்கள் நன்மை பெறுகிறீர்கள்…!
அருள் மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் பதிவாக வேண்டும் என்று தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன். அந்தப் பதிவின் துணை கொண்டு உங்களை நான் (ஞானகுரு) பிரார்த்திக்கும் பொழுது உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்தவும் உங்கள் உயிரான ஈசனுக்கு அமுதைக் கொடுப்பதும் அது அபிஷேகிக்கும் நிலையாகவும் அடைகின்றது.
அதை நீங்கள் சுவாசிக்கப்படும் பொழுது உங்கள் உடலுக்குள் சென்று நல்ல உணர்வுகளைச் சேர்ப்பிக்கும் சந்தர்ப்பமாக இப்போது உருவாகின்றது.
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலைக் கோவிலாக மதித்து நான் தியானிக்கின்றேன்.
2.உங்களை எண்ணி நல்லதாக வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது எனக்குள்ளும் அது உமிழ் நீராகி அருள் சக்தியாக மாறுகின்றது
3.அருமருந்தாக மாறுகின்றது. அருள் வழி வாழவும் முடிகின்றது.
4.உங்களால் நானும் நன்மை அடைகின்றேன்… என்னால் உங்களுக்கும் நன்மை ஏற்படுகிறது.
ஆகவே நாம் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுவோம்.
இந்தப் பிரபஞ்சத்தில் எது இருந்தாலும்… இந்த உலகம் முழுமைக்குமே தீவிரவாதம் என்ற நிலைகளில் மனிதனுக்கு மனிதனே கொன்று புசிக்கும் நிலையாக வந்துவிட்டது.
1.கருவில் இருக்கும் பிண்டங்களை அழித்து
2.அதையே உணவாக உட்கொள்ளும் நாகரீகம் உலகமெங்கும் பரவி விட்டது.
தாய்லாந்து அமெரிக்கா சைனா ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் கருச்சிதைவாக்கப்பட்டு கருசிதைவான அந்தக் குழந்தைகளை உணவாக எடுக்கப்படும் பொழுது “முதுமையானவன் இளமையாக முடியும்…” என்று விஞ்ஞான அறிவில் கூறப்பட்டு… தவறான வழிகளில் நடந்து கொண்டிருக்கின்றது.
இப்படி நடந்து கொள்வோர் நாளை எங்கே செல்வார்கள்…?
நரமாமிசத்தை உட்கொள்ளும் அகோரிகள் இங்கே இந்தியாவில் இருக்கின்றார்கள் சுடுகாட்டில் வெந்து கொண்டிருக்கும் உடல்களை “அதைத் தள்ளி விட்டு எனக்குக் கொடு… என்பார்கள்.
அவருடைய தசைகளைத் தின்று சொர்க்கத்துக்கு அவனை அனுப்புகிறேன் என்று சொல்லும் அகோரி என்ற சாமியார்களும் உண்டு.
இதைப் போன்ற அசுர உணர்வுகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த உலகைக் காக்க நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து
2.உடலுக்குள் அருள் ஞான சக்திகளைப் பெருக்கி
3.உங்கள் மூச்சும் பேச்சும் உலக இருளை நீக்கிடும் சக்தியாக நீங்கள் அனைவரும் பெற வேண்டும்.
தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் துருவனான்… துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.
அந்த அருள் சக்தியை நாம் பெற்று எந்நாட்டரையும் பெறச் செய்தால் அவர்கள் அறியாத நிலையில் இருந்து அவர்களும் மாறுபட்டு மனிதன் மனிதன் என்ற நிலைகள் உணர்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
இந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்… எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன்.
உபதேசிகன்
ஜெபத்தின் சூட்சும ரகசியங்கள் என்ன…?
தன்னைத்தான் உணர்ந்து… தன்னைத்தான் நம்பி… தன்னுள் இறை குணத்தன்மைகளைத் தாய்மை குழந்தையைச் சுமப்பது போல சுமந்து கொண்டிட வேண்டும்.
உலகோதய நடைமுறை வாழ்க்கையில் தனக்கு எத்தகைய இன்னல்கள் பிறரால் ஏற்படுத்தப்பட்டிருப்பினும்… இறை குணத் தாய்மையைச் சுமந்து… அன்பு கொண்டு குழந்தை போல் நேசிக்கும் மனம் கொண்டவன்…
1.ஈசன் வேறல்ல… தான் வேறல்ல என்ற வகையில்
2.தோற்றத்தில் பணிவும் சொல்லில் கனிவும் கொண்டவனே “உபதேசிகனாக” வளர முடியும்
அப்படிப்பட்ட நிலையில் இந்த உலகம் உய்ய வேண்டும்… அனைத்து உயிர்களும் இன்புற வேண்டும்… என்ற முழுமையாக நிலை நிற்றல் போல… அன்பு கொண்ட குருவாகத் தன்னை வெளிப்படுத்தியவர் இயேசு.
1.உள்ளொன்றும் புறம் ஒன்றும் கொண்டு சாதாரண நடைமுறையில் தூசிக்கும் மாக்கள் போல்
2.தன் உணர்வில் தான் வலு கொண்டிட்ட எண்ணத்தை வெளிக்காட்டி
3.உயர்ஞானம் வலுக்கொள்ள வேண்டிய வளரும் ஞானப்பயிர்களின் ஊடே – சூட்சுமமாகப் பேதமையை ஏற்படுத்தி
4.தன்னையே எண்ணித் துதிக்கும் திருக்கூட்டங்களை ஏற்படுத்தி அந்த ஆத்மாக்களைத் தனக்கு அடிமை கொண்டு
5.தன் உயிராத்மா வலுக் கொள்ள வேண்டும் என்ற சுய தேவை காரணமாகத் தான் சக்தி ஈர்த்திட்டே
6.உங்களுக்கு அளித்திடுவேன் என்ற சொல் வாக்கினால் நம்பிக்கையை ஊட்டி
7.அவ்வாய் வார்த்தையே சதம் என்று நம்பி
8.பேரருள் சக்தி பெற்றிட வேண்டிய தன் உயிராத்மாவை எண்ணிடாத ஜீவர்களின் எண்ணங்களை வசப்படுத்தி
9.குரு என்ற பெயரில் உலவிடும் எத்தனையோ ஆத்மாக்கள் போல் அல்லாதபடி
10.உண்மையின் ஜெபத்தை ஊட்ட வந்த அன்பு மகான் இயேசு.
அந்த மகானின் போதனைகளைத் தியான வழியில் கைக் கொள்வோரைக் காண்பதுவும் அரிதாகிவிட்டது.
ஆணவத்தில் இருந்து பேச்சும் மூச்சும் என்று… பற்பல தத்துவ விளக்கங்கள் ஞானவான்கள் என்று கூறிக் கொள்வோர்… “உயர் நிலை பெற வேண்டிய ஜீவர்களைப் பாவிகள் என்று அழைத்து…” ஆவேச உணர்வுகளை ஊட்டும் வழியாகத் தேனிற்குள் மறைந்த கசப்பாக ஊட்டுபவர்கள்… உண்மையின் சாரத்தை உணர்ந்து கொண்டார்களா…?
சிலுவையைச் சுமந்ததும் சிலுவையில் அறையப்பட்டதும்… பின் உயிர்த்தெழுதலும் தான் கொண்ட அனுபவ அவஸ்தையே.
மனித ஆத்மாக்கள் பிறப்பு வளர்ப்பு சாக்காடு என்ற வகையாக உலகினுக்குப் பேருண்மைகளைப் போதனையாக்கிடவே தன்னையே ஆட்படுத்தி உரைத்ததில்…
1.உடல் என்ற சிலுவையில் ஆணவத்தன்மையால் ஆத்ம அறிவு அறையப்பட்ட பின்
2.மரித்தல் என்ற செயலுக்கு ஆணவமும் அகப்பட்டு மாய்ந்து
3.உயிர்த்தெழுதலாக மெய்யறிவும் தோன்றுதல் என்பதிலும்
4.”அறையப்படும் அவஸ்தை வேண்டுமோ…?” (மீண்டும் மீண்டும் உடல் பெறுதல்)
வினாவின் விடையைத் தெளிந்து கொள்…!
1.ஐந்து அப்பங்கள் என்பதே பஞ்சேந்திரியங்கள் செயல்படும் இந்த உடலப்பா…
2.இணை மீன்கள் இரண்டு என்பதே பஞ்சேந்திரியங்களில் செயல்படும் சுவாசமப்பா.
தன்னையே எண்ணி ஜெபித்திடலே சூட்சமம்….!
நானே அப்பமுமாக இருக்கின்றேன்… என்னைப் புசிப்பவனுக்கு எந்தவிதப் பசியும் இல்லை…! என்று உரைத்தவற்றில் தியானமே முதன்மையாக்கப்பட்டது.
உபதேசம் கொள்வோனிடம் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டை விளக்கிட வேண்டாமா…? அதுவும் உண்டு.
என்னையே காட்டிக் கொடுக்கும் சீடன் என்னிடத்திலிருந்து அப்பம் பெறுவாண் என்று காட்டிக் கொடுக்கும் அந்தச் சீடனுக்கு அப்பத்தையும் அளித்து… அந்தச் சீடன் கொண்டிட்ட எண்ணத்தையே சைத்தான் தன் செயலைத் தொடங்கி விட்டான் என்று கூறியதன் பொருள் என்ன…?
ஞானம் கொள்ள வந்தோர் பெற்றது அப்பம். ஞானம் கொண்ட சீடன் பெற்றதும் அப்பம்.
1.உபதேசம் ஒன்று தான்…
2.கொள்ள வேண்டியவன் கொண்டிட்ட “எண்ணத்தின் மாறுபாடு புரிந்ததா…?”
நீரில் மறைந்துள்ள காற்றைக் கொண்டு வாழும் மீனின் தன்மை போல் மனிதன் “தியான எண்ணத்தின் வழி… சுவாசத்தின் வழி…” ஈர்த்திடும் பக்குவம் கூறப்பட்டது.
ஒலி கொண்டு ஒளி பெறும் சூட்சுமமாகச் சப்த ஒலி நாதங்கள் செயல் கொண்டிடும் ஆத்மாவின்… உள் நிறைவாகச் சேமிப்பாகக் காட்டவே “ஏழு” கூடைகளுக்குள் நிரப்பப்பட்ட ஆகாரம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சில ஜோதிடம் பார்ப்பவர்கள் என்ன செய்வார்கள்…? வருவோரை உற்று நோக்கி நுகர்ந்து நுகர்ந்து பார்ப்பார்கள். ஏதாவது உணர்வு ஒன்றைச் சொல்வார்கள்.
1.சொல்லும்போது நம் தலை அசைவதைப் பார்ப்பார்கள்.
2.“ஓ… இப்படியெல்லாம் இருக்கின்றது…!” என்று (அறிந்து கொண்டு) ஒரு கேள்வியைப் போடுவார்கள்.
3.உங்கள் வீட்டில் இப்படியெல்லாம் கஷ்டம் இருக்கின்றது என்று தொடர்வார்கள்.
அதாவது வாஸ்து சாஸ்திரக்காரர்கள் வீட்டிற்கு வந்தவுடன் அப்படியே உங்கள் முகத்தைப் பார்ப்பார்கள். சில மந்திரங்களைச் சொல்லி… முகத்தைப் பார்த்து… வீட்டைப் பார்த்தவுடன் என்ன செய்வார்கள்…?
வீட்டில் பையன் ஏதாவது தொல்லை செய்கிறானா…? என்பார்கள்.
ஆமாம்…! என்று சொன்னால் போதும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அப்படியே வரிசையாக எடுத்துச் சொல்லிவிட்டுக் கடைசியில் இரண்டு வார்த்தையைச் சொல்லி விட்டுக் காசைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.
அவர் சொன்னதைக் கேட்டு உங்கள் வீட்டை மாற்றி அமைப்பீர்கள்…!
ஆனால் வீட்டில் பத்துப் பேர் இருப்பார்கள். அதிலே ஒருவன் இனம் புரியாதபடி ஒரு ஆக்சிடண்ட்டைப் பார்க்கின்றான். அதிர்ச்சியால் புத்தி பேதலித்துப் போகின்றது.
அப்போது அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்போது இந்த வேதனை எல்லோருக்கும் வந்தால்… அவன் சொன்ன வாஸ்து என்ன செய்கின்றது…?
வாஸ்து என்றால் யார்…?
1.உயிர்…! வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
2.நாம் நுகர்வதையெல்லாம்… சுவாசித்ததை எல்லாம்… உருவாக்கக் கூடியது “நம் உயிர் தான்…” என்று இந்த இடத்தில் காட்டுகின்றார்கள்.
தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வு உடலுக்குள் வரப்படும்போது வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான். “பார்க்க வேண்டும்…” என்ற இந்த உணர்வுகள் கொண்டு கண்கள் தோன்றுகின்றது என்று காட்டுகின்றார்கள்.
ஜோதிடக்காரன் சொன்னதைக் கேட்டால் வாசுதேவன் (உயிர்) என்ன செய்கின்றான்…? அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் உருவாக்கிவிடும்.
உங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றதா…? என்றால் ஆமாம்…! என்று சொல்கின்றோம்.
அடுத்தாற்படி இந்த வீட்டின் வாசலை உடைத்தால்தான் சரியாக இருக்கும் என்பான். வீட்டின் நிலையை இப்படி மாற்றி வை என்பான் அல்லது இந்த ஓரத்தில் ஏதாவது ஒன்றை வை என்பான்.
அவன் சொன்னபடி வைத்துவிட வேண்டும். வைக்கவில்லை என்றால் நான் அன்றைக்கே சொன்னேன்… நீ வைக்கவில்லை என்ற நிலையானால்… அந்த வேதனையால் என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ…? என்று இந்த உணர்வின் தன்மை மீண்டும் அதையே வளர்த்துக் கொள்ளும்.
இன்னொன்றும் சொல்வார்கள். நியுமராலஜி…! அம்மா அப்பா வைத்த பெயரெல்லாம் ஒழுங்காக முழுதாக இருக்கும். உங்கள் பெயரில் இந்த எழுத்தை இப்படிப் போட்டீர்கள் என்றால் உங்கள் எதிர்காலம் நியுமராலஜிப்படி நன்றாக இருக்கும் என்பார்கள்.
இந்த எழுத்துக்களை அந்த நம்பர்கள் பிரகாரம் இப்படிப் போட்டால் ராசியாக வரும் என்று அவன் சொன்னதைக் கேட்டுப் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கின்றோம்.
ஏனென்றால் நமக்குள் இருக்கும் வேதனை உணர்வை நீக்க வேண்டும் என்றால் அதை எல்லாம் நீக்கிய அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.
காரணம்… எப்படி இருந்தாலும் இந்த உடல் மடியத் தான் செய்கின்றது. ஆனாலும் உடலிலே வாழ்வதற்குத்தான் செல்வங்களைக் கோடிக் கோடியாக வைத்துள்ளார்கள்.
இராமயாணத்தில் என்ன செய்கின்றார்கள்…? என்றால் தனுசுகோடி. தனுசு என்றால்
1.இப்பொழுது நான் சொல்லும் உணர்வுகள் உங்களைத் தாக்குகிறது… தனுசு.
2.அதே நேரத்தில் இந்த உபதேசங்கள் உங்களை மகிழச் செய்யும் தனுசு.
தனுசு என்றால் அம்பு சமஸ்கிருதத்தில்…!
கோடிக்கரை என்ற கடைசி எல்லையில் மனிதப் பிறவியில் இப்பொழுது நிற்கின்றோம்.
1.இந்த மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் அகற்றினால் தனுசுகோடி.
2.ஒளி உடல் பெற வேண்டும் என்ற நிலையில் அந்தth துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று அடைய வேண்டும்.
அது தான் நம் சாஸ்திரங்கள் கூறும் உண்மைகள்.
இந்த உலகையே காக்கப் போகும் “மகரிஷிகள் நாடான இந்தியா”
துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நாளும் வளர்க்க
1.நாம் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு மட்டுமல்லாதபடி…
2.அது வலுவாகும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் இன்னொரு பிறவிக்கு வராதபடி
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதிற்கு நாம் சென்று இந்த உடல் பெற்ற நஞ்சுகளை அங்கே கரைத்து
4.பிறவி இல்லா நிலை அடையவும் இது உதவும்.
அதற்கு நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களை விண் செலுத்தினால் அவருடைய தொடர் கொண்டு நாம் அந்த சக்தி எளிதில் பெற முடியும். துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி தீய உணர்வுகளை நல்ல அணுக்களாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.
எப்படி ஊசி மூலம் மருந்தை ஏற்றி அதை இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்தில் கலக்கச் செய்து நோய் உருவாக்கும் அணுக்களை மாற்றி அமைக்கின்றார்களோ அதைப் போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் எண்ணி
2.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.
உடலை உறுப்புகளை உருவாக்கி அணுக்களில் எல்லாம் காந்தம் உண்டு. இதை இணைத்து அங்கே பெருக்கச் செய்ய வேண்டும். உடலில் இருக்கக்கூடிய தீமைகள் அனைத்தும் நீங்கும். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.
கஷ்டம் என்பதைத் தள்ளி விடுங்கள். குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணுங்கள்.
நீங்கள் இடும் மூச்சலைகள் அனைத்தும் இந்தக் காற்று மண்டலத்திலே பரவி இந்தப் பூமியும் பரிசுத்தமாகும் ஊரில் வாழும் மக்கள் அனைவரும் தெளிவாக இது உதவும்.
ஆகவே இந்தத் தியானத்தை மேற்கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பரப்புங்கள்
1.இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை அகற்றிடுங்கள்
2.அருள் ஞானத்தின் உணர்வைக் குவியுங்கள்… எல்லா இடங்களிலும் பரவச் செய்யுங்கள்
3.இந்த பூமியில் மன பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற நிலைகளை மாற்றி அமையுங்கள்.
அருள் உணர்வு கொண்டு சகோதர உணர்வை வளர்த்து ஒன்றுபட்டு வாழும் சக்தியைப் பெருக்குங்கள் இதை நாம் செய்தோமென்றால் சகோதர உணர்வுகள் வளரும். அருள் ஞானம் பெருகும்.
1.அருள் வாழ்க்கை வாழும் இந்தியாவாக… மகரிஷிகள் நாடாக மாற்றலாம்
2.இதை வைத்து உலகையே மாற்ற முடியும்.
ஏனென்றால் அணுவிசையால் இந்த உலகையே அழித்திடும் தன்மைகள் வரப்படும் பொழுது அந்த அணுக்கதிரியக்கங்கள் பரவாதபடி தடுத்து நிறுத்தும் சக்தி
1.இந்தியாவில் உள்ள நாம் அனைவரும் பெறுவோம் என்றால்
2.உலகையும் நாம் காக்கும் திறன் பெற முடியும்… அணுகுண்டுகள் வெடிக்காதபடி நாம் செய்ய முடியும்.
3.விஷத்தன்மை பரவாதபடி கதிரியக்கங்கள் வெளிப்படாதபடி செய்ய முடியும்.
முழுமையாக இதை நம்புங்கள் உங்களுக்கு அந்தத் திறன் உண்டு உலக இருளைப் போக்குவோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம். விஞ்ஞானத்தின் செயலினால் வரும் தீமைகளில் இருந்து மக்களை விடுவிப்போம்.
ஆகவே… அருள் உணர்வுடன் வாழ்க்கையை நீங்கள் தொடருங்கள் என்று பிராத்திக்கின்றேன்.
தட்டியவன் திறப்பான்… கேட்பவன் கிடைக்கப் பெறுவான்… தேடியவன் கண்டு கொள்வான்…!
ஸ்தூல தேகம் கடந்து சூட்சும தேகத்தில் வாழும் தன்மை நிலை பெற்று விட்டால் சரீரம் கொண்டு துன்பங்களாக உணரும் தன்மைகள் அனைத்தும் துன்பங்களாகத் தோன்றிடாது.
அத்தகைய பாக்கியம் பெற்ற மகான் தான் இயேசு.
வாழ்க்கை நடைமுறை மோதலில் ஏற்படும் உரையாடலில் உணர்ந்திடும் குணங்களையே பெரும் துன்பங்களாகப் பெரிதுபடுத்தியே… எண்ணத்தின் கடுமையாகச் சொற்களின் விஷ வித்துக்களை விதைத்திட்டால்… அதை உரைப்பவனும் அந்த உரையைக் கேட்பவனும் விதைத்திட்ட விதையின் பலனை அறுவடை செய்வானப்பா…!
அதைத் தான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்று சொல்வது.
இயேசு மகான் சுட்டிக் காட்டியது அன்பு வழி வாய்மை. சொல்லும் சொல்லிலும் நிதானம் தேவை.
1.உலகோதயத் துன்பங்கள் ஞானிகளுக்கு மக்களால் ஏற்படுத்தப்படும் தன்மைகளில்
2.தேகம் கடந்து வாழும் தன்மையால் ஞானிகளுக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.
மெய்ஞானத்தின் முழுமைத்துவம் பெற்றிடும் செயலில் மனத்தின் பக்குவமே மெய்ஞான விழிப்பாகச் செயல் கொண்டு நல்லாக்கம் பெறுதலே உண்மை ஞானத்தின் சிறப்பு.
தனக்கு இழைத்திட்ட துன்பச் செயல்களைக் கூட… கல்வாரி மலை மீது சிலுவையில் அமைக்கப்பட்ட காலத்தில் கூட…… மன்னிக்கும் மனம் படைத்த இயேசுவின் செயலை
1.அவர் பெற்று வளர்ச்சிப்படுத்திக் கொண்ட அவரின் சக்தியை
2.தாமும் பெற்றிட முடியும் என்ற எண்ணத்தைக் கொள்வோர் யாரும் இல்லை.
சூட்சும உடல் வாழும் வாழ்க்கை வாழ்ந்து காட்டிட்ட மகான்தான் இயேசு. தியானத்தின் வழியைச் சூட்சுமமாக மறைபொருள் தன்மையில் உரைத்திட்ட போதனைகள்… அவரால் கொண்ட கருத்தின் தெளிவு.
எழுத்தின் வடிவத்தில் சமுதாய நலத்திற்கு அவர் கொண்டிட்ட எண்ணத்தின் சப்த அலைகளை… நேரடியாக ஈர்த்திடும் பக்குவச் செயல் அனைத்தும்… காற்றினில் ஓடிடும் ஒலி அலைகளை… அவர் காட்டிய போதனைகளைப் பெறுவது என்பதெல்லாம் “தியான ஈர்ப்பின் மூலம் தான் பெற முடியும்…”
“உயிர்த்தெழுதல்” தத்துவத்தையே சூட்சும உடல் வாழும் தன்மை கொண்டிட்ட செயலாகத் தத்துவத்தின் உண்மைப் பொருள் உணர்த்தப்பட்டது. அது எந்த வகை…? என்ற வினாவுக்கு “ஆத்ம வலு கொண்டிடும் மூலசக்தியே” நிலைக்களன் (சான்று).
உயிர் ஜீவன் கொண்டிட்ட இந்தச் சரீரமே சிலுவையாக…
1.உடல் என்ற சிலுவையில் பொருந்த அமைவு பெற்ற ஆத்மா
2.சக்தி வலுக் கொண்டு மூல சக்தியாகக் கலந்துறவே எழுதல் என்பது சூட்சுமம்.
தான் கொண்ட எண்ணத்தின் வலுவைப் பிறர்க்கும் ஊட்டிடவே… தான் தேடிக் கண்டு கொண்ட நல்லது போன்றே மற்ற மனித ஜீவன்களும் தேடிக்கொள்ள வேண்டும் என்று
1.ஆத்மாவை மறைபொருளாகச் சுட்டிக்காட்டி…
2.தேடிக் கண்டு கொள்பவன் கொள்ள வேண்டிய எண்ணத்தில் சிரத்தை இருந்தால்
3.“தட்டியவன் திறப்பான்…
4.கேட்பவன் கிடைக்கப் பெறுவான்…
5.தேடியவன் கண்டு கொள்வான்…” என்பதில்
6.எண்ணத்தின் செயல்பாட்டிலே “சிரத்தையே அதிமுக்கியம்…” என்று உரைத்தவர் இயேசு.
அவரைக் கூட்டம் கூட்டமாகப் பின் தொடர்ந்து வந்து சூழ்ந்தவர்களுக்கு அவரால் போதனை அளிக்கப்பட்டது என்றும்… குழந்தைகளும் பெண்களும் ஆடவர்களும் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் பசியோடு இருந்தவர்களுக்காக அப்பமும் மீனும் அதை இரண்டையும் தூபப்படுத்தி ஆசீர்வதித்து… அனைவரும் உண்ணும் மட்டும் பகிர்ந்தளித்து… சாப்பிட்ட உணவின் மீதம் ஏழு கூடைகளில் நிரப்பப்பட்டது என்று “விவிலிய நூல்…” கூறுகின்ற பொருளின் உண்மையை அறிந்தவர்கள் யார்…?
அதைப் பின்பற்றுபவர்களும்… அதைக் கடைபிடிக்கிறோம் என்று சொல்பவர்களும்… பெற்றிடும் திறன் இல்லாது அது மாற்று நிலை பெற்று விட்டதப்பா.
1.நானே அப்பமாக இருக்கின்றேன்… என்னைப் புசிப்பவன் நித்திய ஜீவனுமாக இருப்பான்…! என்று
2.அவர் உரைத்திட்ட சொல்லிலும் மறைபொருளாகவே கூறப்பட்டது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கல்வியில் சிறந்தவன் ஆனாலும் “ஞானம் இல்லை” என்றால் கல்விக்காக நாம் கொடுத்த செல்வம் பாழாகிவிடும்.
ஏனென்றால் கற்றவன் மற்றவர்களை ஏமாற்றும் நிலைகள் கொண்டு சாதுர்யமாகத் தன் தாய் தந்தையரையும் ஏமாற்றுவான். மற்றவரை ஏமாற்றத்தான் இந்தக் கல்வி பயன்படுகின்றது.
மற்றவரை வாழ வைக்க வேண்டும் என்ற ஞானங்கள் இந்தக் கல்வியில் வரவில்லை.
1.இன்றைய கல்வியின் நிலைகள் பார்த்தோம் என்றால்
2.தன் தாய் தந்தையரை ஏமாற்றிக் காசை வாங்கி
3.ஞானத்தைப் பேசும் நிலைகள் கொண்ட குழந்தைகளும் நிறைய உண்டு.
குழந்தை நன்றாகப் படித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தாய் தந்தை நினைக்கின்றனர். ஆனால் காசை வாங்கிவிட்டு அங்கே தவறான வழிகளில் செலவழித்துவிட்டு
1.நான் அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்… என்று பொய் பேசி
2.இங்கே கல்வி கற்கும்போதே தவறான உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.
அது மட்டுமல்லாது.. கல்வியில் மேற்படிப்புக்குச் செல்பவர்களை
1.முதல் நாள் உள் புகும் மாணவனை முகப்பிலேயே ஆண்பால் ஆனாலும் பெண்பால் ஆனாலும்
2.எவ்வளவு அசிங்கத்தை உருவாக்க முடியுமோ (ராகிங்) அதைச் செய்து
3.படிக்க வருபவர்களைத் தீமையின் உணர்வோடு ஒன்றி வரத் தான் செய்கின்றனர்.
இதையும் அனுமதிக்கின்றது அரசு. பல ஆசிரியர்களும் அனுமதிக்கின்றனர். ஆனால் நாட்டைக் காக்கவும் மனித பண்பைக் காக்கவும் தான் கல்வி…! என்பதை மறந்து விட்டனர்
கல்வியில் மேற்படிப்பிற்குச் செல்லும்போது இப்படி அநாகரீக நிலைகளைச் செயல்படுத்துகிறார் என்றால் கல்வி கற்ற ஜட்ஜுகளோ கல்வி கற்ற வக்கீல்களோ இதற்கென்ற சட்டங்களை வைத்து நியாயத்தையும் தர்மத்தையும் வளர்க்கக்கூடிய நிலையில் இதை ஏன் ஒன்றுப்பட்டு நிறுத்த முடியவில்லை…?
எதிர்கால மாணவ மாணவிகளை அசுத்த வழியில் செலுத்தினால் அவன் நாட்டைக் காப்பானா…? அல்லது குடும்பத்தைக் காப்பானா…?
1.அவன் சுதந்திரத்திற்கு நல்ல குணங்களை அழிப்பான்
2.அவன் சுகத்திற்குத் தீய வழிகளிலே தான் செல்வான்
3.தீய மார்க்கங்களில் தான் செல்வார்கள்.
தீய மணத்தை நுகரும்போது நல்ல மணத்தை நுகர முடியாதபடி அந்த உணர்வுகள் மடியத்தான் செய்யும். வாழ்க்கையில் இழி நிலை கொண்டு பேயாகவும் பூதமாகவும் இந்த நிலைகள் உருவாக்கப்பட்டு மனிதனைச் சிதறச் செய்யும் உணர்வே பரவும்.
இது போன்ற நிலைகள் நாட்டில் இருந்து விடுபட வேண்டுமென்று மக்கள் எவராக இருப்பினும் கல்விச் சாலைகளுக்குச் சென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அருள் ஞானத்தினைப் போதியுங்கள்.
நீ என் வழியில்தான் வர வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவதும் அப்படி அவன் கேட்கவில்லை என்றால் தனித்துக் கூப்பிட்டு உதைக்கும் நிலைகள் வருகின்றது.
அப்படிப்பட்ட அசுர உணர்விலிருந்து மீட்கப் பழக வேண்டும். கல்விச் சாலைகளுக்குள்ளே அது போன்று செய்பவர்களை நுழைய விடாமல் செயல்படுத்த வேண்டும்.
ராகிங்… என்ற நிலைகளில் அசுர உணர்வு கொண்டு உதைப்பதும் தவறான நிலையில் செயல்படுவோரையும் நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருக்கலாம்.
தன்னுடன் இணைந்து ஒன்றி வரவில்லை என்கிற போது டாக்டர் படிப்புக்காகக் கற்றுக் கொண்ட மாணவன் ஒருவன் எவருக்கும் தெரியாமல் அவனுக்கு ஆபரேஷன் செய்து அங்கங்களைத் தனித்தனியாக பெட்டிக்குள் போட்டு நான்கு மூலையில் தூக்கி வீசி எறிந்துவிட்டான்.
ஏனென்றால் அவன் கற்ற கல்வியின் ஞானம் பிறரைக் கொலை செய்து தான் தப்பும் நிலைகளுக்கே வருகிறது. பெரும்பாலான நிலைகளில் கலாச்சாரம் எல்லாம் அநாகரீகக் கலாச்சாரங்களாகத் தான் மாறுகின்றது.
ஆகவே இதைப்போல நாட்டில் வரும் தீய பண்புகளில் இருந்து நாம் மாற்றி அமைத்து மக்களைக் காக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள் உருவாகும் அணுக்களை அருள் ஞானமாக மாற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.
ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்…!
யாம் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை தியானத்தின் மூலம் பெற்றுக் கொண்டே வருகின்றீர்கள்.
அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்கு நீர் எப்படிக் குறைகின்றதோ அது போல் இதற்கு முன்னாடி அறியாது சேர்த்துக் அசுத்தமான உணர்வுகளை நாம் நீக்க முடியும்.
ஆனால்… குறைகளைச் சொல்லித் திருத்தவே கூடாது (இது முக்கியம்).
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண் வழி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
2.ஏனென்றால் அனைத்துமே நம் கண்கள் வழி தான் பதிவானது
3.கண் வழியாகத் தான் நம் உடலுக்குள்ளும் சென்றது
4.அதே கண் கொண்டுதான் மீண்டும் உடலுக்குள் உயர்ந்த சக்திகளைச் செலுத்தவும் முடியும்.
5.அப்படிச் செலுத்தப் பழகிவிட்டால் மீண்டும் இந்த நினைவுகள் கண்களுக்கே வரும்
6.அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடலுக்குள் பெருக ஆரம்பிக்கும்.
அது பெருகப் பெருக உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள்… பரிவுடன் பார்த்துப் பிறருடைய வேதனைகளை நுகர்ந்தது போன்ற உணர்வுகளை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்த ஞானிகள் பெற்ற அருளை நீங்கள் பெறும் போது தீமை நீக்கக்கூடிய சக்தியாக வரும். உங்கள் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் இருளை அகற்றும்.
1.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உங்களால் முடியும்.
2.தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்து… பிறர் தீமைகளைப் போக்கும் அருள் ஞானிகளாக நீங்கள் வாழ முடியும்.
3.ஆக… ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.
ஏனென்றால் உங்களுக்கெல்லாம் அந்த அருள் சக்தி பெருக வேண்டும் இருளை நீக்கும் அருள் ஞானம் பெருக வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும்… என்று தான் எண்ணி நான் சதா தவமிருக்கின்றேன்.
இதை நான் எண்ண எண்ண… என் உயிரிலே இது பட்டு… எனக்குள் அந்த உமிழ் நீராக மாறுகிறது… அந்தச் சக்திகள் எனக்குள் கூடுகின்றது. உங்களுடைய கஷ்டம் நஷ்டங்கள் எத்தனை நான் கேட்டிருந்தாலும் இதை வைத்து நான் அதை மாற்றி விடுகின்றேன்.
அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற தகுதியை ஏற்படுத்துகின்றேன். ஏனென்றால் உங்கள் உயிர் கடவுள்… உங்கள் உடல் ஒரு கோவில்… உங்கள் ஆலயத்தை நான் சுத்தப்படுத்துகின்றேன்.
1.உங்களைச் சுத்தப்படுத்த நான் எண்ணும் பொழுது என் உடலான ஆலயமும் எனக்குள் சுத்தமாகின்றது
2.என்னை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் எனக்குள் அந்தத் தெய்வீக பண்பு கொண்டு
3.அந்த அருளைக் கொண்டு… இருளைப் போக்கும் உணர்வு கொண்டு… “என்றும் ஒளி” என்ற உணர்வைப் பெறச் செய்கின்றது.
4.என்னுடைய எண்ணமே உயிருடன் ஒன்றி… என்றும் ஒளியின் தன்மை பெறுகின்றது
அதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரம் அந்த அருள் சக்தி நீங்கள் அனைவரும் பெற்று… உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்… அருள் வழி வாழும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற்று… இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி பெற்று… அருள் வாழ்க்கை வாழ்ந்திட எமது அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்
அன்பு தானப்பா கடவுள் – LOVE IS GOD
1.அன்பு வழி காட்டி… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாகச் செயல்படுபவன் …
2.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
3.பிற உயிர்களையும் தன் உயிர் போல நேசிக்கும் செயல்பாடு உடையவனாக இருத்தலும்
4,தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாக வெளிப்படும் பொழுதே
5.போதனையை ஏற்றுத் தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அந்த உபதேசத்தை ஏற்றவன்
6.அந்த நன் நெறியில் பிறழாமல் “அந்த அன்பையே பற்றுக்கோடாகக் கொண்டிட்ட எண்ண செயலினால்…”
7.நல்வழி வகைச் செயலைக் கடைப்பிடிப்போன்… மனிதன் என்ற முழுமை பெறுகின்றான்.
அன்பும் பரிபூரணத்துவம் பெறுகின்றது.
இயேசு காட்டிட்ட அன்பு வழி அதனுடைய நிலைகள் இன்று ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. யாரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம்முடைய வழி…!
மனித எண்ணத்தையும் அன்பு சாமராஜ்யத்தையும் ஆள வந்த அந்த மகானுக்கே தந்த பரிசு “சிலுவையில் ஏற்றப்பட்டதுதான்…” இன்றும் உண்மைகளைப் புகட்டினாலும் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா.
அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை இந்த உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?
குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
1.உலக மக்கள் படும் இன்னல்களுக்காகத் தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு
2.தாய்மையின் உணர்வு கொண்டே ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி
3.உயர்நிலை பெறவே ஊட்டிட்டார் ஊட்டிட்டார் அன்பு கொண்டே ஊட்டிட்டார்.
தாய் முகம் கண்ட குழந்தை தாயிடம் தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களைச் செவிமடுத்தனர்.
ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயல்படாதொழிந்த அந்தக் குழப்ப சூழ்நிலையில்… உண்மையை உணர்த்தி அவர் அளித்திட்ட போதனைகள் மக்களுக்குத் தெளிந்த சிந்தனை அளித்து… அதனால் ஈர்க்கப்பட்டனர் என்றால் “அந்த அன்பின் திறத்தை என்னவென்பது…?”
அன்பு தானப்பா கடவுள்…!
சத்திய நிலை கடைப்பிடித்த அந்த மகான்களுக்கே அவச்சொல் என்றால் சிந்தனா சக்தி செல்லும் வழி தான் என்ன…?
1.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா… கூட்டங்களை அவர் கூட்டினார்…?
2.இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகின்றது.
ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுபவர்… எண்ணிக்கையில் பலர் இருப்பினும் அவர்களும்… வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.
உண்மை வழியை அறிந்து அந்த மகான் காட்டிய வழிதனைக் கடைப்பிடிக்க முயல்வோர் முயலட்டும்.
அன்பு கொண்டு குணங்களின் செயலைத் தன்னில் கண்ட இயேசுபிரான் “சைத்தான்” என்று காட்டியது தீய குணங்களைத்தான்.
தீய குணங்களுக்கு மனம் ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி… அவைகளைப் பக்குவமாக விலக்கிடவே தியானத்தின் வழியாக காட்டப்பட்டது தான் அப்பமும் மீனும்.
வழி தவறிச் செல்லும் ஆடுகளை மீட்க வந்த மேய்ப்பர் என்று அவரை அழைக்கின்றார்கள். நேசிக்கும் மனோபாவத்தை அன்பு நிலையைக் கூற வந்த மகான் இயேசு உபதேசித்த நெறிமுறைகள் அனைத்தும் ஒலி அலைகளாக இந்தப் பூமியின் நாதத்தில் கலந்து சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த அரிய போதனைகளைத் தியான வழி ஈர்ப்பின் செயலில் ஈர்த்தே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ண வலுவிற்குச் சிந்தனை வசப்பட்டு அதை முயற்சி செய்வோர் இல்லையப்பா.
1.நாம் சொல்வது யார் மனதையும் வேதனைப்படுத்துவதற்காக அல்ல.
2.உண்மைகளை கூறினாலும் ஏற்றுக் கொள்வோரும் மிக அரிதாகவே உள்ளனரப்பா
3.அவைகள் மறைபொருளாகவே இருக்கட்டும்…
4.தியானத்தின் வழிதனில் அதை அறிய முயல்வோர்கள் முயலட்டும்.
இருளை நீக்கிடும் முயற்சி இருந்தால் “ஒளியை நிச்சயம் காணுவாய்…”
குணங்களை உள் அடக்கும் மறை பேராம்
1.மனித ஆற்றலின் மகோன்னத சக்தியாக வழியறிந்து கொண்டவன்
2.அவன் வழிப்பயணாமாகும் செயலில் தடை எதுவும் கிடையாது.
ஆசையும் மோகமும் வாழ்க்கை அனுபவத்திற்குள் அடங்கும். அவைகளைக் காட்டிலும் சினத்தின் குணமே வலிமை உடையது. மனிதன் சினத்தின் வசம் ஆட்படும் போதெல்லாம் உலக சிருஷ்டியை பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1.நாம் ஏனையோரை வழி நடத்த வந்துள்ளோம் அல்லவா…?
2.நாமே கோபப்பட்டால் தகுமா…? என எண்ணிடல் வேண்டும்.
யானைக் கூட்டங்களை வழி நடத்தும் வலிமை கொண்ட மன்மத யானை பக்குவமாக மேய்ச்சல் இடம் காட்டி… அருந்துவதற்கு நீர் நிலையையும் காட்டித் தன் குழுவைப் பாதுகாப்பது போல்… நல் நிலையில் செயல்படுவோம்… உயர்வோம்…! என்ற சிந்தனை கொள்ளல் வேண்டும்.
சகல சிருஷ்டிகளும் அணுத் திறளால் ஆனது. மனிதனும் ஓர் பொருள். “வளர்ந்து கொண்டிருக்கும் உயிராத்ம சக்தியால்…” மனிதன் உயர் நிலை பெறுகின்றான்.
1.மரணத்தை வென்றிடும் மனோதிடம் கொள்ளுதல் தான்
2.சித்தனாகும் உயர்வுக்குப் படிக்கட்டு.
மனத்தினை மெய்ஞானத்தின் பால் செலுத்திவிட்டால்… அது மீண்டும் மாற்று நிலை பெற்றிடா வலிமை கொண்டு விடும். பஞ்சு திரி ஆவதைப் போல்…!
காற்றினால் உந்தப்படும் பஞ்சு அலைக்கழிந்து ஓடுகிறது. அந்தப் பஞ்சானது நீரினை உண்டு விட்டால் விழும் நிலையும்… அதே பஞ்சு நெருப்பினை உண்டு விட்டால்… தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
1.இதை அழியும் நிலை பாடம் என்று எண்ண வேண்டாம்
2.வானுறப் பறக்கும் பருந்துக்கும் பாடமுண்டு
3.சுட்டிக் காட்டுதல் எல்லாமே மனத்தின் பக்குவத்திற்கே.
“வராமல் வந்துற்ற மாமணியை… உயிராத்ம சக்தியை… மெய் உணர்வால் அறிந்து கொண்டிட்ட பின்… அதைச் சாராமல் நீ போவாயோ…?”
இரு வித செயல்நிலைகள் ஒவ்வொரு குணத்தின் செயல்படு நிலையில் சாந்த குணத்தை வளர்க்க… சமமான நிலை நிலைக்க… யாம் சுட்டிக் காட்டிடும்
1.மனத்தின் கரு விழித்து விட்டால்
2.சித்தன் நிலை (உன்) கை வசமே…!
ஆற்றெடுத்த மன வாழ்வில் இரு நிலை தவிர்த்திருத்தல் (நன்மை/ தீமை… இன்பம்/துன்பம்) என்பது
1.ஞானத்தின் பால் திருப்பப்படும் மனமே
2.திரியான பஞ்சு. எண்ணத்தை மறைந்திருக்கும்
3.மாயை எனும் மூட மேக இருள் நீக்கப்படும் போது தான் மனிதன் உயர்கின்றான்.
சூரியனை மறைத்திடும் மேகக்கூட்டம் விலகிடும் செயலில்
1.முன்பாகவே ஒளிக்கதிர்கள் காட்டிடும்
2.அவ்வாதவனின் நிலையை மனத்தின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்.
மேக இருள் விலக்குதல் என்பதே முயற்சி…!
ஞானச்சுடராம் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சூட்சமப் பொருளைச் சுவாசித்திடும் பொழுதே “உணர்ந்து கொள்வீர்கள்…”
உலகைக் காக்க… உலக மக்களைக் காக்க… நம்மைக் காக்க… நாம் செய்ய வேண்டியது
அந்தந்தக் கால கட்டங்களில் குருநாதர் காட்டிய மெய் உணர்வுகளை அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காகத் தான் யாம் (ஞானகுரு) சொல்லி வந்தது. அதை ஒன்று சேர்த்துப் பதிவாக்கிக் கொண்டு வந்தால் உங்களுக்குள் உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தியானத்திற்கு முன்
1.பாலோ அல்லது தண்ணீரோ அல்லது ஒரு பதார்த்தத்தை வைத்து
2.தியானம் முடிந்த பின் அந்தப் பொருளை எடுத்து அதில் என்ன வாசனை வருகிறது என்று பாருங்கள்…?
3.நல்ல மணங்கள் அதிலிருந்து வரும். சுவாசிக்கும் பொழுது உங்களுக்குள்ளும் அருள் மணம் கிடைக்கும்.
ஒவ்வொருவரும்… ஒவ்வொரு ஊரிலும்… துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை உலகம் முழுவதும் பாய்ச்சி உலக மக்கள் மன பேதமின்றி இன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகள் அருள் சக்தியும் துருவ மகரிஷிகள் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களிலே படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் நலம் பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது
1.ஆங்காங்கே இருக்கக்கூடியவர்கள்… உலகில் எங்கிருந்து தியானம் செய்பவர்களும் இந்த உணர்வுகளை வானிலே பாய்ச்சுங்கள்.
2.மேகங்களைக் கூட்டி மழை பெய்ய வேண்டும் என்று தியானியுங்கள்
3.இப்பொழுது உபதேசிக்கக் கூடிய உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் படரப்பட்டு
4.அந்த மழை நீர் மூலமாக தாவர இனங்களிலே இணைந்து அருள் தாவர இனங்களாக விளையும்.
ஆனால் அதே சமயத்தில் மனித உடலில் எத்தனை வேதனைப்பட்டோமோ நோய்களாக வந்து நம் உடலை வேதனைப்படச் செய்கின்றதோ இந்த உணர்வெல்லாம் என்ன செய்கிறது…?
நாம் எந்தத் தாவர இனத்தை உணவாகப் புசித்தோமோ… நம் உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படும் உணர்ச்சிகள் தாவர இனங்களில் பட்டு அந்தத் தாவர இனத்தையே உண்டு விடுகின்றது. நமக்கு உணவில்லாது ஆக்கி விடுகின்றது.
உரத்தைப் போட்டுப் பூச்சி மருந்தைப் போட்டு பயிர்களை வளர வைத்து மகசூல் எடுக்கலாம் என்று கொண்டு வருவதற்கு முன்
1.நாம் வெளிப்படுத்தக்கூடிய வேதனை என்ற விஷத்தின் தன்மை
2.தாவரங்களில் அதிகமாகப் படர்ந்து விஷத் தாவரங்களாக அது விளைந்து
3.அதையே நாம் மீண்டும் உணவாக உட்கொள்ளும் நிலை ஆகிவிடும்.
ஆகையினால் இதை மாற்றி அமைக்க முதலில் சொன்ன மாதிரி அகஸ்திய மாமகரிஷிகள் உணர்வுகளை வானிலே பாய்ச்சி மேகங்களைக் கூடச் செய்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்று மேகங்களில் எண்ணத்தைச் செலுத்தினால் அந்த மழை நீர் தாவரங்களில் பட்டு இணையும்
1.காரணம் எல்லாவற்றிலும் காந்தப் புலனறிவுகள் உண்டு.
2.அந்த அலைகளை எடுத்து நாம் பாய்ச்சி அதற்குள் இணைக்க முடியும்.
எப்படி ஒரு அணு பட்டு அந்தச் சத்தினை நுகர்ந்து அதை வைத்து உடல் பெற்றதோ இதைப்போல இதே சத்தினை நுகர்ந்து அதன் உணர்வின் தன்மை மலமாக்கி அந்தத் தாவர இனங்களுக்கு நாம் பாய்ச்சும் போது நல்ல சத்தாக மாறும்.
பயிரினங்களில் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று இது ஒரு கூட்டமைப்பாகப் பாய்ச்சிப் பாருங்கள்.
1.உங்கள் வயலை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்… பயிரினங்களை நினையுங்கள்
2.அதற்குள் அருள் சக்திகளைப் படரச் செய்யுங்கள்… நல்ல அணுக்கள் உருவாகி நல்ல வளர்ச்சி பெறும்.
வைரஸ் என்ற அணுக்கள் நம் உடலில் பாய்ந்தால் நம்மைக் கொல்கிறது. நம் உறுப்புகளைக் கொல்லக்கூடிய அந்தத் தீய அணுக்களைக் கொன்று நல்ல உறுப்புகளை உருவாக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு “அத்தகைய வைரஸ்களாக… மாற்று மருந்தாக உருவாக்குகின்றார்கள்….”
இதே போல் மனிதனான நாம் அருள் உணர்வுகளை மழை மேகத்துடன் கலந்து விட்டால் நல்ல அணுக்களாக உருவாக்க முடியும்.
ஆனால் நாம் இன்று உலகெங்கிலும் என்ன செய்கின்றோம்…?
தவறான உணர்வுகளையும் வேதனைப்படும் உணர்வுகளையும் மனிதனுக்கு மனிதன் அழிக்க வேண்டும்… மற்றவனைக் கொன்று அவனை வீழ்த்தி விட்டு அவன் செல்வத்தை அபகரித்துத் தான் வாழ வேண்டும்… என்ற உணர்வுகள் தான் அதிகமாகப் படர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த உணர்வுகள் எல்லாம் தாவரங்களில் பட்டால் பயிரினங்களும் அழிகின்றது. உரத்தையும் மருந்தையும் போட்டு விளைய வைத்தாலும் அதை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலுக்குள் விஷத் தன்மை பெருகி நல்ல குணங்களைக் கொன்று குவித்துவிடும் (அது தான் இன்று இயங்கிக் கொண்டுள்ளது)
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் மீள்தல் வேண்டும்.
1.மற்றவர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி மேகங்களைக் கூடச் செய்து அருள் மழையாக பொழிய வேண்டும்…
2.ஊர் செழிக்கட்டும் நாடு செழிக்கட்டும் என்று இது போன்று நாம் செய்து பழக வேண்டும்.
விவசாயம் செய்பவர்கள் இதைப் போன்று செய்து பழக வேண்டும் உங்கள் நிலத்தை உற்றுப் பார்த்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
2.உங்கள் கண்ணின் நினைவை அங்கே உற்றுப் பார்த்து அந்தச் சக்திகளைப் பாய்ச்சுங்கள்.
3.பயிரினங்கள் செழித்து வளர வேண்டும் என்று நினைவை உணர்வை பாய்ச்சுங்கள்… உங்கள் எண்ணம் அங்கே ஊடுருவும்.
ஏனென்றால் தாவரங்களில் விளைந்ததை உணவாக எடுத்துத் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். அந்த உணர்வின் சத்து தான் நமக்குள் எண்ணங்களாக இருக்கின்றது அந்த எண்ணத்தைக் கொண்டு அருள் உணர்வுகளை நாம் பாய்ச்ச முடியும்
மனிதர்கள் நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்… அவசியம் நாம் இதைச் செய்ய வேண்டும்.
குரு காட்டிய நெறிப்படி தியானிக்க வேண்டும்
யாம் ஞானகுரு) சொன்ன முறைப்படி யார் இந்தத் தியான வழியினைச் சீராகக் கடைப்பிடித்து வழி நடக்கின்றார்களோ “அவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்…”
ஆனால் தீமை என்ற அடிப்ப்படையில் ஆசை நிலையில் அதைக் கொண்டு வந்தால் பாலிலே பாதாமைப் போட்டு பல சத்துக்களைப் போட்டு விஷத்தைப் போட்ட மாதிரி ஆகிவிடும்.
அதாவது செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆசையுடன் தியானத்திற்கு வந்தார்கள் என்றால்… நிச்சயம் அவர்களுக்குக் கெடுதலாகும் அவர்கள் வார்த்தையைக் கேட்டு வழி நடப்பவர்களுக்கும் கெடுதலாகும்.
ஏனென்றால் அவர்கள் ஆசையைக் கூட்டப்படும் பொழுது அதை ஆசை அடுத்தவர்களுக்கும் வந்து சேர்ந்து விடுகின்றது கடந்த காலங்களில் இப்படித்தான் யாம் கொடுத்த பல உயர்ந்த சக்திகளை எல்லாம் கெடுத்து விட்டார்கள்.
அதையெல்லாம் எவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்தேன்… ஆனால்
1.நல்லதை எண்ணி ஏங்கி வருபவர்களுக்கு அது எப்படியும் தனித் தனித் தன்மைகளில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று
2.இப்பொழுது விளக்கமாகச் சொல்லி வருகின்றேன்… அருள் உணர்வுகளைக் கிடைக்கும்படி செய்து கொண்டிருக்கின்றேன்..
என்னை நீங்கள் தேடுவதற்குப் பதில் எங்கிருந்தாலும் அங்கே அமர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் பெற வேண்டும்.
1.எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும்
2.சர்வ தோஷங்களையும் நீக்கக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.மறுபடி மறுபடி இந்த உணர்வைக் கூட்டிக் கொண்டே வாருங்கள்.
உட்கார்ந்து தியானியுங்கள்.. இதையே எண்ணி ஒரு பழக்கமாகக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களைப் போக்க முடியும்.
நீங்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
2.உங்களை எண்ணி சதா நான் தவம் இருக்கின்றேன்.
நண்பன் என்று அவன் அமெரிக்காவில் இருந்தாலும் எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்றால் எப்படிப் புரையோடி அவனை இயக்குகின்றதோ… அதே சமயத்தில்… நன்மை செய்தான் என்று எண்ணினால் எப்படி விக்கலாகிறதோ அதைப் போன்று உங்களை எண்ணி நான் தவம் இருக்கும் பொழுது அந்தச் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.
ஏக்கமாக இருக்கும் பொழுது உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது… ஆகவே ஏங்கித் தியானிக்க வேண்டும்.
ஆனால் “ஆசையை வேறு பக்கம் வைத்து” அவன் இப்படிச் செய்கின்றான்… இவன் ஏன்னைக் கேவலமாகப் பேசுகின்றான்… இவன் என்னைத் தவறாகச் சொல்கின்றான்… என்ற இந்த உணர்வு வரும் போது கலக்கமாகிறது.
1.என்னா சாமி…? எல்லாம் செய்தேன் ஒன்றும் நடக்கவில்லையே…! என்பார்கள்.
2.ஏனென்றால் இந்த ஆசையோடு கலக்கப்படும் பொழுது இந்தக் கலக்கம் தான் வரும்.
ஆகவே… தியானத்தைச் சீராகக் கடைபிடித்து வாருங்கள்… பேரருளைப் பெறக்கூடிய தகுதி பெறுவீர்கள்.
நீங்கள் எல்லோருமே துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி இந்தக் காற்று மண்டலத்திலே சூழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நச்சுத்தன்மைகளை விரட்டக் கூடியவர்களாக நீங்கள் வளர்ச்சி பெற வேண்டும்.
எல்லாருக்கும் அதைக் கிடைக்கக் கூடிய சக்தியாக நீங்கள் பெற்று… விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து மீட்க வேண்டும்.
மெய்ஞானத்தின் முதிர்ச்சி எது…?
1.மனதில் கொள்ளப்படும் குண நலன்களால்
2.நான் எனும் உயர் நிலையைச் சிறக்கச் செய்திடும் மனிதன்
3.கனிவுறும் ஞான தேசிகனாகின்றான்.
உலகத்தின் இயக்கம் போல் உடலின் இயக்கம்… சமைப்பின் குணம் காட்டும் உணர்வின் அலைகள்… எங்கிலும் ஜீவன் கொண்டே இயங்குகிறது. காலத்தின் இயக்க கதி ஓட்டத்திலிருந்து மனிதன் தன்னைப் பிரித்துக் காணல் என்பது ஒவ்வாத செயல்…!
ஆதி சக்தியின் சக்திக்கே சக்தி அளித்திடும் இணக்க இயக்கமாக… ஆத்ம பயிர் வளர்த்தல் என்பதே…
நற்குண…
நன்னெறி கொள்ளும்…
மனத்தின் திட சங்கல்ப…
“உறுதி நிலை…”
மோகம்… கோபம்… அதி ஆசை… என்கின்ற குணங்களின் வளர்ப்பு மனிதனை இயற்கையின் இயக்கத்தில் இருந்து தனிமைப்படுத்திக் காட்டும்.
குணங்களின் முற்றுதல் என்பது
1.நெருப்பைத் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற விறகு போல்
2.”அதிக ஆசையே – வீசும் காற்றாக…” வளர்த்துக் கொண்ட குணங்களின் உராய்வால்
3.மனம் ஆகிய பெருங்காட்டில் அதுவே பற்றிக் கொள்ளும் அக்கினியாகிவிடும்.
நல்ல நிலை வளர்ப்பாக்கும் செயல் இருநிலை தவிர்த்திருத்தல் என்பது சூட்சுமம். உலகின் கண் உற்பாதங்கள் பெருகி வரும் இந்தக் காலகட்டத்தில் உரையின் பொருள் மறைத்து உரைப்பதில் பொருள் கிடையாது என்றே மெய்ஞானச் சுடர் ஆக்கும் பக்குவத்தின் பாகமாய் உரைக்கின்றோம்.
ஞானம் என்பது எது…?
பகுத்தறியும் அறிவு பெற்ற மனிதன் அந்த அறிவின் முதிர்வின் பக்குவத்தில் நன்மை தீமைகளை உணர்கின்றான்.
1.நாம் கூறிடும் பக்குவம்…
2.இதற்கும் மேலாக “சமமான நிலை…”
உயிராத்ம சக்தியின் தெய்வீக நிலையை உணர்ந்தே “அதைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று செயல்படுவதில் இருக்கின்றதப்பா ஞானம்…” தீய குணங்கள் விலக்கி நற்குணத் தன்மைகளை கடைப்பிடிக்கும் போது தான் ஞானம் வெளிப்படுகிறது.
1.தன் மனத்தின் உறுதியால்
2.பிறருக்கு நாம் செய்திடும் சேவையாக விளங்கி
3.பிறர் நமக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தவிர்த்திடுதல் எதுவோ… அதுவே மெய் ஞானத்தின் முதிர்ச்சி…!
மெய் ஞானப் பாடத்தைப் புகட்டும் வழி
மனிதன் ஏடறிவால் கற்கின்ற கல்வி…
1.புவியியல் எனப்படுகின்ற உன்னதத் தன்மைகள்
2.உயிரியல் எனப்படுகின்ற சூட்சும நிலைகள்
3.வானியல் என்கின்ற மூலபிரக்ருதி ஆதியின் அந்தம் உணர்ந்து கொள்கின்ற செயல் தன்மைகள் அனைத்தும்
4.மெய்ஞானத்தைக் கூட்டி போதனையின் வழி அறிந்ததைத் தன்னுள் தான் தெளிந்து
5.பெற வேண்டிய உண்மை நிலை எதுவோ அந்நிலையாய் விளங்கிடவே
6.அன்று சித்தர்கள் காட்டிய சீரிய உண்மைகளை இன்றைய புத்தக அறிவால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியுமா…?
கற்கின்ற கல்வியின் சாரங்கள் எந்நிலையாயினும் தொடருமா…? கற்பவை கற்ற நிலையில் வராது.
செவி வழியாக அறிந்து கொண்டிடும் காரிய உண்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு உரைத்திட சொல்லின் கோர்வைகள் மாறுபடா நிலையாக உரைத்திட இயலாத கல்வியின் தன்மை… அறிந்து கொண்டதை கொண்ட வழியிலே உரைத்திட வழி உண்டு.
மெய்ஞானத்தின் வழி உற்றவைகள் (உகந்தவைகள்) நற்குணங்களாகப் பரிணமிக்க நன்னெறி வளர்ப்பில் திட மனது கொள்கின்ற நிலையும்… அற்றவைகள் (ஆகாதவைகள்) என்று உரைக்கின்ற மனிதனின் நடைமுறை வாழ்க்கை செயலில் அதை எண்ணிச் செயல்படும் பொழுது உற்ற பயனே வரும் என்ற எண்ணிடாத் தன்மையாக… அற்றவைகளின் செயலில் அந்நிலையையே மீண்டும் எண்ணி ஏக்கமாகச் செயல்படும் பொழுது அந்த வினையின் தொடரே “விதி…” என யார் தான் உணர்கின்றனர்…?
மெய்ஞானத்தின் சுடராக நீக்கமற விளங்கும் மெய்ஞானச் செல்வங்களே…!
1.”முக்தி…!” என்று பக்தி வழியாக அதை உரைத்திட்டால் உரைக்கின்ற உரையின் முழுமை (உங்களுக்கு) விளங்கிடாது.
2.குழந்தைக்கு மருந்து புகட்டிடும் தாய் சுவையான பதார்த்தங்களைக் காட்டி நோய் அகலக்கூடிய அந்த மருந்தை அளிப்பதை போல்
3.இன்றைய மனித குலத்தையே மனித குணத்தையே பீடித்துள்ள எண்ணத்தில் செயல்படுகின்ற வினைகள் அகல
4.மாமகரிஷிகள் உவந்து (மகிழ்ந்து) ஊட்டுகின்றனர்… இவை அனைத்துமே பாட நிலை தான்.
ஆத்ம பலம் பெற்று… உயிர் ஆத்மக் கலப்பாக… ஆதிசக்தி எனும் “ஜோதித்துவ சங்கமத்தின் சங்கமேஸ்வரனாய்” சிறப்புற விளங்குதலே… சித்தன் சூட்டிய சொல்… அகம் காட்டிடும் அழகு… என்றும் அகலா “ஞான முறுவலாகப் (மகிழ்ச்சிக் குறி) பூத்திட வேண்டுமப்பா…!”
ஞான முறுவல் காட்டிடும் முகம்… அகம் வாழ் ஜெபமாய் சித்தி நிலை பெற்றிருக்கும்…! என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.
1.ஞான முறுவல் கொள்கின்ற மனத்திற்குள் கோபம் ஏது…?
2.கோப குணம் தவிர்த்திட நந்தி ஞான முறுவல் கொள் என்பார்கள் சித்தர்கள்
3.உள்ளன்போடு உவந்து சினம் தவிர்க்கும் உபாயம் விருப்பமோடு செயல் நிலை ஆக்கிடவே இதை உரைக்கின்றோம்.
தியானப் பயிற்சி
1.எம்மை நேரடியாக நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.
2.இருக்கும் இடத்திலிருந்து எண்ணினாலே என்னுடைய (ஞானகுரு) அருள் உங்களுக்குக் கிடைக்கும்.
அந்தப் பயிற்சியைத் தான் இங்கே கொடுக்கின்றேன்.
ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். அம்மா அப்பா தான் முதல் தெய்வங்கள் அவர்களால் தான் நாம் உடல் பெற்றோம். அவர்களின் நல்லாசி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
அதே போன்று இந்தப் பேருண்மைகளை எல்லாம் எனக்கு உணர்த்தியது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கண்ணிலே ஏங்கி நேராக உற்றுப் பார்த்துத் தியானியுங்கள்.
இப்போது கண் வழியாக அதை இழுத்துக் கவர்கின்றீர்கள் அடுத்து கண்ணின் நினைவு புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
அங்கே காந்தம் இருக்கின்றது அதிலே நாம் துருவ நட்சத்திரத்தினைச் சேர்த்து இணைத்து விடுகின்றோம்.
ஆனால் வழக்கமாக நாம் மூக்கு வழியாகச் சுவாசிக்கின்றோம். நுகர்கின்றோம் உயிரிலே மோதி அந்த உணர்ச்சிகள் நம்மைத் தெரிய வைக்கின்றது… இயக்குகின்றது.
ஆனால் அதை முதலில் சொன்ன முறைப்படி புருவ மத்தி வழியாகத் துருவ நட்சத்திரத்தை அந்தக் காந்தத்தின் வழி கவரும் பொழுது பிற தீமைகள் சுவாசத்தின் வழி உள்ளே புகாதபடி துருவ நட்சத்திரத்தில் உணர்வுகள் அடைப்பாகி விடுகிறது.
ஆகவே தீமைகள் நமக்குள் போகாது நாம் தடைப்படுத்தி விடுகின்றோம்.
ஆனால் உள்ளே சென்றுவிட்டால் இரண்யன். நல்ல அணுக்களை அது கொன்றுவிடும் அது வேதனை கடும் நஞ்சு அதை நாம் குரு காட்டிய வழியில் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தினை கண்களிலே நினைத்து இங்கே கொண்டு வருகின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா கண்ணைத் திறந்தே தியானியுங்கள். பின் கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் என்று அப்படியே திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கிக் கொண்டே இருங்கள்.
பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த இரத்தங்களில் அதனைக் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள்
சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் கலக்க வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று செலுத்தி விட்டு அடுத்து அந்த இரத்தம் போகும் பாதைகள் அனைத்துமே அந்த இரத்தங்கள் முழுவதுமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி படர வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.
அது உடல் முழுவதும் சுழன்று எல்லா உறுப்புகளுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடிய எல்லா ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.
நாம் மற்றவருடன் பிரியமாக பழகி அன்புடன் இருந்து அவர் திடீர் இறந்து விட்டால் நம் மீது பாசமாக இருந்தால் அந்த ஆன்மா நம் இரத்தத்தில் தான் இருக்கும்.
அவருடைய கெட்டதெல்லாம் இரத்தத்தில் இருந்து கொண்டு நமக்கு அது தொல்லைப்படுத்தும் நிலையாக வரும். நம்முடைய சிந்தனைகளைக் குறைக்கும். அது உடலுக்குள் வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.
அதனால் அந்த ஜீவான்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற அவசியம் நாம் அந்த நினைவினைச் செலுத்த வேண்டும்.
உடலில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பரவ வேண்டும் என்று நினைவைச் செலுத்த வேண்டும்.
அடுத்து இந்த வாயு மண்டலங்கள் அதாவது அந்த நரம்பு மண்டலங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அதில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்துங்கள்.
நாம் சர்வ காலம் கண்களில் எத்தனையோ உற்றுப் பார்க்கின்றோம். எக்ஸ்ரே எப்படி ஊடுருவிச் செயல்படுத்துகின்றதோ அது போன்று கண்களால் பார்த்த்து எலும்புக்குள் ஊனாக இருக்கும்.
நான் எதையெல்லாம் பார்க்கின்றோமோ வரிசையில் அங்கே பதிவாக்கிக் கொண்டே இருக்கும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து அதில் இருக்கக்கூடிய ஊனில் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.
மீண்டும் புருவ மத்திக்குக் கண்ணின் நினைவைக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே நினைவைச் செலுத்துங்கள்.
இப்படியே மாற்றி மாற்றி எல்லா இடங்களுக்கும் நினைவைச் செலுத்தி பல முறை தியானியுங்கள்.
1.இப்படிச் செய்ய இது என்ன காசா பணமா…? ஒன்றும் இல்லை.
2.உங்கள் நினைவு மட்டும் தான். இதைச் செய்வதற்கு என்ன வந்தது…?
3.சிறிது நாளைக்குப் பழகிக் கொண்டால் தன்னாலே வேலை செய்யும்.
நல்லது திட்டியவனையோ அல்லது உடல்நிலை பற்றிய வேதனையோ திரும்பத் திரும்ப எண்ணுவதற்குப் பதிலாக அருளைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலே போதுமானது.
ஏனென்றால் இனி வரக்கூடிய காலங்கள் மிக விஷத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் அதையெல்லாம் மாற்றி அமைக்கக்கூடியவர்களாக நீங்கள் வரவேண்டும்… அந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு பல வகைகளிலும் எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
கடவுளின் அவதாரம் வராக அவதாரம் பன்றி எப்படிச் சாக்கடைக்குள் உள்ள நாற்றத்தைப் பிளந்து அதில் இருக்கும் நல்ல மணத்தை நுகர்கின்றது.
அதே போன்று நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அதன் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து எத்தகைய விஷத்தன்மையாக இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு உங்கள் சிந்தனை கலையாது உங்கள் வாழ்க்கையை அருள் ஞானத்தை போதிக்கும் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும்.
1.இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தோடு இணைய வேண்டும்
2.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று அதைப் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேசம்.
“அருள் வழியில் வாழ்ந்து காட்டுவோம்…” என்ற உறுதி கொள்ளுங்களப்பா…!
வாழும் வாழ்க்கையின் இயல்(பு) கொண்டு… வானியல் அறிந்திடும் செயலுறும் எண்ணத்தின் உயர்வால்… ஞானத்தின் சுடர்தல் தெளியும்.
வாழ்வேனும் சமுத்திரம் கண்டாய்…!
1.ஞானச்சுடர் வாழ்வியல் ஆக்கும் தெளிவின் வழியை அறிவுறுத்தி
2.எது செயல்படும் ஆக்கமோ அவ்வழி நிற்றல் “மனத்தின் திறன்” என்றே
3.செயலுறும் செயல்பாட்டின் வேகம் “வானியல் (விண்ணுலக ஆற்றல்) பெற்றிடும் விவேகத்தில் நிலைநிற்றல் வேண்டும்…”
பால்வெளியின் உவர் அமில அடர்வு செயலுறும் தன்மைகள் கண்டோம். நீரமில சக்தியில் கலந்திட்ட அந்நிலை உருக்கோலம் கொண்டிட்ட செயலில் மாமகான்கள் தத்துவங்களாகக் காட்டியதில் உருக்கோலம் கொண்ட உவர் அமில அடர்வு நீரின் ஆழம் காணச் சென்றதாக உரைப்பதும் உண்டு.
பக்தியின் தொடர் காட்டும் செயலில் பெற்று உயர்வது எக்காலம்…?
உயிரணுவைச் சுவாசமாகச் சூழ்ந்திட்ட நல் உணர்வெனும் ஆத்ம முலாம் சுடர்ந்திடும் செயலுக்கு எல்லாமே எண்ணம் தான்.
ஞானத்தின் செயலுக்குக் காட்டிடும் வேகம் உணர்வெண்ணத்தின் மாற்றத்தில் முன்பு கூறிட்ட “அதே விவேகம்” தியானத்தின் வழியாக மெய்ஞானச் சுடர் எனும் விழுமிய வேதப் பொருளாக நன்நிலையை உயிர் ஆத்ம சக்தி பெற்று வளர்த்து உயர்த்திக் காட்டும்.
மாமகான்கள் உரைத்திட்ட நல்ல நெறிகள் வெறும் போதனை மாத்திரம் அன்று. வாழ்க்கையின் நிலைகாட்டி உயர் ஞான வலுவில் மெய்ஞானியாய் வாழும் வகை காட்டியதே போதனாமூர்த்திகளான அப்போதினிகள் கைக்கொண்ட செயல் நிலையை “எளிமையாக உரைக்கின்றோம்…”
வாழ்க்கையே மணல் குன்று…!
1.ஏற சறுக்கும் மணல் குன்று…
2.சாணுக்கு முழம் சறுக்கும் என்று மெய்ஞானியர் சுட்டிக்காட்டுவதில்
3.மெய்ஞானத்தின் விழிப்பு விவேகமாகத் தன்னைத்தான் வளர்த்துக் கொண்டிடவே இந்த எளிய தியான முறை.
“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?
1.”வாழ்ந்து காட்டுவோம்…” என்ற மனதின் உறுதிக்கு
2.அந்தப் புறச்சான்றுகளைக் காட்டினோமப்பா.
அகத்தின் உயர்வு கூட்டும் அதே மன உறுதி தான் தியான நிலையில் ஆத்ம பலம் கூட்ட எண்ணுகின்றோம். பிறப்பறுக்கும் உயர்வாம் ஆத்ம கலப்பாக எண்ணுகின்றோம்.
1.உணர்வலைகள் தொழில்படும் ஜீவ சரீர பிம்பத்தில்
2.“சகல உயிரணுக்களும்… சக்தியின் வலு கூட்டிக் கொள்ள எண்ணுகின்றோம்….”
சித்தன் நிலையைப் பெறச் செய்யும்… சித்தத்தின் சிந்தனா சக்தி குவிக்கப் பெறும் ஓர்முக நினைவோட்ட குணத்தன்மைகளில்… “பிடர்தல்” எனும் எண்ணத்தின் பாங்கு வான் இயல்பு காட்டிடும் முறைகள் முறையாக உரைப்போம்.
நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய்…!
நம் உடல் ஒரு கோவில்… எதன் உணர்வை நாம் எண்ணுகின்றோமோ அது இறையாகின்றது. உணர்வின் தன்மை இறையான பின் மீண்டும் அதை எண்ணும் பொழுது இறையின் உணர்வு செயலாகும் பொழுது அதுவே தெய்வமாகின்றது.
1.வேதனை என்ற உணர்வாகும் பொழுது வேதனைப்படுத்தும் செயல்களையே சேர்த்து…
2.வேதனைப்படுத்தும் தெய்வமாக நமக்குள் குடிகொள்கின்றது.
அதை மாற்ற வேண்டும் அல்லவா. இதற்காகத்தான் ஞானிகள் கோவிலை அமைத்தது.
நமக்குள் இருக்கக்கூடிய நூறு உணர்வுகளை ஆலயமாக மாற்றுகின்றனர். கோவிலுக்குச் சென்ற பின் இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று சொல்கின்றனர்.
நமக்குள் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது இங்கே அசுரனாக மாறி விடுகின்றது. பத்துத் தலை இராவணன் என்ன செய்கின்றான்…? சீதாவைச் சிறைப் பிடித்து விடுகின்றான்.
இப்பொழுது கோவிலுக்கு சென்று நீங்கள் சந்தோஷமாக இருங்கள் பார்க்கலாம். என்னிடம் (ஞானகுரு) வருவோர்களை இங்கே நல்லதை எண்ணிக் கேட்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்…!
என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்… என் தொழில் நஷ்டமாகிக் கொண்டே போகின்றது… எல்லாம் கஷ்டமாக இருக்கின்றது என்று இதைத்தான் சொல்கின்றார்களே தவிர…
1.சீதா என்ற அந்தச் சந்தோஷத்தை ஏதாவது நீங்கள் இயக்குகிறீர்களா…?
2.கஷ்டத்தை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றீர்கள்.
எவ்வளவுதான் நான் சொல்லிப் பார்த்தாலும்… இங்கே பிரசாதம் கொடுக்கும் போது பாருங்கள். என் பையன் இப்படி இருக்கின்றான். எல்லாம் நான் நல்லதைத் தான் செய்தேன் ஆனால் என் குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது என்று தான் சொல்கிறார்கள்.
1.கஷ்டத்தை நீக்குவதற்குச் சக்தி கொடுங்கள்…
2.கஷ்டத்தை நீக்கக்கூடிய வழியைக் கொடுங்கள்… என்று யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள்.
கீதையிலே சொன்னது… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்
கஷ்டம் என்ற உணர்வு வரும் பொழுது கண்ணின் நினைவு பையனிடத்தில் செல்கின்றது. நான் சொல்லும் நல்ல எண்ணத்திற்கு இங்கே வருவதில்லை… விலக்கி விட்டு விடுகிறது. அப்பொழுது வேதனையைத்தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள்
கோவிலிலே சிலையைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோம்… “இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…” என்ற எண்ணத்தை எண்ணும் பொழுது…
1.நல்லதைச் செய்யக்கூடிய அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் அந்த நன்மை பெற வேண்டும்
3.இந்தக் கோவிலுக்கு வரும் குடும்பம் எல்லாம் அந்த நல்ல நிலை பெற வேண்டும் என்று எண்ணினால்
4.நம் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் அதுவாக (நல்லதாக) ஆகின்றோம்.
எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் கண்ணிலே காட்டுகின்றது பையனுடைய எண்ணங்களை வைத்துக் கண்ணை அங்கே கொண்டு போய் வைத்துவிட்டுச் சிலையை பார்த்தால் என்ன நடக்கும்…?
அழுகை தான் வரும்
அப்பொழுது நாம் அதுவாக ஆகின்றோம்… மீண்டும் நாம் வேதனையைத் தான் சேர்க்க முடிகிறதே தவிர நல்லதை நாம் பெற முடிகிறதா…? கோவிலை நாம் யாராவது மதிக்கின்றோமா…?
நமக்குள் சூட்சமாக இருப்பதை அறிந்து… அதை எவ்வாறு சீராகச் செயல்படுத்த வேண்டும்…? என்று ஞானிகள் காரணப் பெயரை வைத்து ஸ்தல புராணங்களைக் காட்டி “இந்தக் குணத்தைச் சுவாசித்தால் உனக்கு அது நன்மை செய்யும்…! என்று சொல்கிறார்கள்.
நன்மை பெறுவதற்காகச் சிலையை வடித்துக் காட்டியுள்ளார்கள். பக்தி என்றால் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்… அந்தக் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
நாம் கடன் கொடுத்திருப்போம். அவருக்கு நல்ல வருமானம் வேண்டும்… திருப்பிக் கொடுக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பணம் வந்து சேரும்.
ஆனால் மாறாக நாம் எப்படி எண்ணுவோம்…?
கடன் கொடுத்தேன்…! பாவிப்பயல் என்னை ஏமாற்றுகின்றானே… மோசம் செய்கின்றானே…! என்று கோவிலில் வந்து இப்படிச் சொன்னால் என்ன ஆகும்…?
யாருக்கு நாம் கடன் கொடுத்தோமோ… அவனை மேலே எழுந்திருக்க விடாதபடி… சம்பாதிக்க விடாதபடி… கடனைத் திருப்பிக் கட்ட முடியாதபடி… நம்முடைய எண்ணமே அங்கே தடையாகிறது.
அதுதான் நடக்கின்றது… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றது அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது. உங்களால் வாங்க முடிகிறதா…?
இது எல்லாம் கண்ணின் இயக்கங்களைப் பற்றி…
1.நாம் நுகரும் உணர்வுகள் ஆதன் வழி வாழ்க்கை எப்படி நடக்கின்றது…? என்பதை
2.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நீங்கள் ஒவ்வொருவரும் காலை துருவ தியான நிலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று அந்த சக்தி மனைவிக்குப் பெற வேண்டும் என்றும் மனைவி கணவனுக்குப் பெற வேண்டும் என்றும் தங்கள் தாய் தந்தையருக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் இப்படி யாரெல்லாம் தியானிக்கின்றீர்களோ அப்பொழுது பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.
ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்…!
இந்த மனித உடல் கிடைத்த பின் இந்த உடலிலிருந்தே சொர்க்க பூமி என்றும்
1.நம் உயிர் சொர்க்கவாசல் என்றும்
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதன் வழி (உயிர்) சென்று
3.பிறவியில்லா நிலை அடையும் அருள் ஞானத்தை நாம் பெறுதல் வேண்டும்.
இந்த வாழ்க்கையில் நமக்கு எதுவுமே சொந்தமானது இல்லை… “நிரந்தரமானது” என்று எதுவும் இல்லை.
உயிருடன் ஒன்றிய இந்த உணர்வை ஒளியாக மாற்றுவதுதான் நமக்குச் சொந்தம். பேரின்பப் பெருவாழ்வு என்ற பேரானந்த நிலை கிடைக்கின்றது. அதுவே ஏகாந்த நிலை என்று ஆகின்றது.
இதைத்தான் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.
நாம் அனைவரிடமும் பழகுகின்றோம். பழகும் போது ஒவ்வொருவர் உடலிலும் பகைமை உணர்வுகள் சலிப்பு உணர்வுகள் குரோத உணர்வுகள் கோப உணர்வுகள் கொதித்தெழும் உணர்வுகள் இதைப் போன்று எத்தனையோ உணர்வுகளை நாம் கேட்டறிகின்றோம்.
இந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி தடுப்பதற்காகத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
1.நாம் பார்ப்போர் உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் தொழில்கள் வளம் பெற வேண்டும்.
4.அவர் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
5.எங்கள் பார்வையில் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.
6.எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.
7.எங்களைப் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று
8.இந்த முறைப்படி எண்ணினால் இது தான் ஏகாதசி விரதம்…!
சரியான நேரத்தில் நல்லதைச் செயல்படுத்த முடியாதபடி போவதன் காரணம் என்ன…?
அன்றைக்கு எனக்கு வரம் கொடுத்தீர்கள் அல்லவா… அந்த வரத்தை இப்பொழுது கேட்கின்றேன். என்று கைகேயி தசரதனிடம் கேட்கின்றது அந்த வரத்தை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் உலகம் உங்களைத்தான் தூற்றும். சத்தியத்துக்கு விரோதமானவர் என்று உங்களைத் தான் சொல்லும் என்று சத்தியம் பேசுகிறது.
தசரதன் பல வகைகளிலும் யோசிக்கின்றான் என்ன செய்வது என்று…!
வரத்தைக் கொடுத்த பின் இப்படிக் கேட்கின்றாளே…! இராமனுக்குப் பட்டம் சூட்ட முடியாது போகின்றதே…! என்ற வேதனை அதிகரிக்கிறது.
1.ஆனால் அன்று வெற்றி பெற உதவியாக இருந்தது.. அப்போது மிகவும் சந்தோஷப்பட்டான்.
2.தன் உடலிலே இருந்து அது என்ன செய்கின்றது…?
3.தன் மகனுக்கே (பரதனுக்கு) பட்டம் சூட்ட வேண்டும் என்று அதன்படி அங்கே வேதனையைத் தான் உருவாக்குகின்றது.
தசரதன் பல வகைகளிலும் சிந்திக்கின்றான். அவனால் ஒன்றும் பேச முடியவில்லை… மௌனியாகின்றான்.
இதைப் போன்று தான் உங்கள் உடலில் வெறுப்பும் வேதனையும் அதிகமாகி விட்டால்
1.உங்களால் ஏதாவது பேச முடிகின்றதா…? நல்லதை ஏதாவது செயல்படுத்த முடிகின்றதா…?
2.வேதனை உணர்வுகள் எடுக்கப்படும் பொழுது நல்லதைச் செயல்படுத்த முடிகின்றதா..?
3.வேதனை என்ற உணர்வு வந்து விட்டாலே நல்ல பட்டாடைகளை… புதுத் துணிகளைக் கொடுத்து அணியச் சொன்னால் முடியுமா…?
4.அதை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா…? இல்லை.
உடலுக்குள் வேதனை அதிகமான பின் நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை. பல உணர்வுகள் நமக்குள் வந்து புலஸ்தியர்… புலனறிவைக் கொண்டு வரப்படும் பொழுது சந்தோசம் என்ற நிலையை உருவாக்க முடியவில்லை.
தன்னால் செயல்படுத்த முடியவில்லையே…! என்ற அந்த வேதனை உணர்வு தான் முன்னணியில் வருகின்றது.
1.அங்கே வேதனைப்படுத்தினான் முதலிலே
2.அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்தான்… ஏனென்றால் அதை இச்சைப் பட்டான்
3.மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்று பல கொலைகளைச் செய்தான்… அதை ரசித்தான்
4.அந்த உணர்வின் தன்மை பிரம்மகுருவாக ஆகி அதன் உணர்வே இங்கே செயல்படுத்துகின்றது.
5.தன் உடலுக்குள் இருந்து நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை…!
அவன் எண்ணியதை அங்கே செயல்படுத்த முடிகின்றதா…? அதற்கு மாறாகக் கைகேயி என்ன செய்கின்றாள்…?
இராமனைக் கூப்பிட்டு… “உன் தந்தை சொல்கின்றார்… நீ காட்டிற்குச் செல்… துறவறம் பூண்டு செல்…” என்று சொல்கிறது.
அதன்படி “தந்தை சொல்லிவிட்டார்” என்று தாய் என்ற நிலையில் தட்டாது அவன் சென்று விடுகின்றான்.
அவன் காட்டிற்குச் சென்ற பின் கைகேயி தன் மகன் பரதனைக் கூப்பிட்டு அனுப்புகின்றாள். அவனை வரும்படி செய்தபின் அங்கிருந்து வருகின்றான்.
நகருக்குள் வந்தபின் நாடே சூனியமாக இருக்கின்றது. ஒருவரும் பேசவில்லை… ஊமையாக மௌனமாக இருக்கின்றார்கள் சோர்வாக இருக்கின்றார்கள்…? ஏன்…? என்று வினாக்களை எழுப்புகின்றான்.
ஒருவரும் வாய் திறக்கவில்லை ஏனென்றால் நடந்த நிகழ்ச்சிகளைச் சொன்னால்… யார் செய்தது…? என்று சொல்லும் போது அதனால் பெரும் வெறுப்பாக வளர்ந்து விடும்…! என்று குற்றத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை.
எல்லோரும் அதனால் மௌனமாக இருக்கின்றார்கள்.
இராமனின் தாயாரிடம் கேட்டால் அதுவும் மௌனமாக இருக்கின்றது. மற்ற உறவினர்களைக் கேட்டாலும் அவர்களும் மௌனமாக இருந்து விட்டார்கள். யாரும் பதில் சொல்லவில்லை. மக்களிடத்திலோ சேனாதிபதிகளிடமோ யாரிடம் கேட்டாலும் எல்லாருமே மௌனமாக இருக்கின்றார்கள்.
கடைசியில் தன் தாயிடமே கேட்கலாம் என்று வருகின்றான்.
அப்பொழுதுதான் தாய் சொல்கின்றது. அன்று போர் செய்யப்படும் பொழுது எனக்கு வாக்குகளைக் கொடுத்தார். அந்த வாக்கின்படி தான் கேட்டேன் அவர் கொடுத்தார் கொடுத்த பின் வேதனையால் அவர் மடிந்து விட்டார்.
நான் தவறு செய்யவில்லை..!
இராமனுக்குப் பட்டாபிஷேகம் சூட்ட முடியவில்லை என்று ஏக்கத்திலே இறந்து விட்டார். உனக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்ற நிலை வந்து விட்டது ஆகவே நீ இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்…! என்று தாய் சொல்கின்றது.
அப்போதுதான் பரதன் சொல்லுகின்றான் உன் தாயார் வீட்டிலும் இது தான் நடந்தது…!
யாரிடத்தில் அந்த வேதனை (முதலில்) உருவாகின்றதோ அது தாயாகின்றது. அதன் உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…? என்று உணர்வின் எண்ணங்கள் எதன் வலுவோ அதன் வழி எப்படி இயக்குகின்றது…? என்பதை இராமாயணத்தில் தெளிவாக காட்டுகின்றது.
1.உன் தாயார் வீட்டில் இதே தான் நடந்தது.
2.அதனின் மகளாக இருந்து நீ இங்கே வந்ததனால் எங்கள் சாம்ராஜ்யத்தையும் நீ சூனியம் ஆகிவிட்டாய்
3.அன்றே உன்னைக் கொன்றிருந்தால் இந்த நிகழ்ச்சிகள் இங்கே நடந்திருக்காது.
அதாவது எந்தத் தீமை என்ற நிலையை இச்சைப்படுகின்றோமோ அன்றே நாம் அதை அழித்திருத்தல் வேண்டும் என்று இங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
பத்தாவது நிலை அடையக்கூடிய தகுதி பெற்ற நாம்
1.அந்த உண்மையின் உணர்வை எடுக்காதபடி உடலுக்குள் தீமை புகுந்து விட்டால்
2.அது விஷம் என்ற நிலையில் அதனுடைய கடுமைகள் எப்படிச் செயல்படுகின்றது…? என்ற
3.உணர்வின் இயக்கத்தின் வலிமையை இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது
“ஈஸ்வர அனுபூதி…” பெற வேண்டுமப்பா…!
உலக நடைமுறை வாழ்க்கையினை உணர்ந்து செல்லும் வழி… நிதான நடைமுறையைக் குறிக்கும்.
1.ஊருடன் ஒன்றி வாழவும் வேண்டும்
2.நாம் கொள்ளும் “ஈஸ்வர அனுபூதியால்” பெற்று வளர்த்துக் கொண்டிட்ட “தனித்துவ மெய்ஞானச் சுடராக”
3.மற்றவர்களுக்கு வழிகாட்டிடவும் வேண்டும்.
பேரருள் ஜோதியாக நம் உயிர் ஆத்ம சக்தியை வலு கூட்டிக் கொள்வதின் “பயன் இது…” என்று அன்பு மகரிஷிகளும் இயற்கையில் ஒன்றி வழி நடத்திடும் விதம்தான் என்னப்பா…?
ஆசையுடன் வாழும் மேன்மையையே ஆரம்ப நிலையிலிருந்தே உரைத்துக் கொண்டு வருகின்றோம்.
1.வாழ்வேனும் சாகரத்தில் அலைகள் ஓய்ந்தபின்
2.படகில் பயணம் செய்ய நினைக்கின்ற மனிதன் “பித்து நிலை பெற்றவனப்பா…”
அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற எத்தனையோ விஷமான ஜீவஜந்துக்களும் அனைத்தும் உள்ளிட்ட சாகரம் தான் மனிதன் வாழுகின்ற வாழ்க்கையின் நிலை.
தத்துவம் உரைத்திட நான் வரவில்லை…!
வள்ளுவச் சித்தன் உரையே “பிறவிப் பெருங்கடல்… அதனைக் கடந்திடும் காப்பெனும் கவசம் ஈஸ்வர தியான வழிமுறை…!” அதுவே ஒளி தந்து ஒளியாக்கும் செயலுறும் நிலை.
நூல் வழியில் அதை அறிந்து கொண்டவனப்பா நீ.
நீர்க்கரை ஓரம் வேரோடு வளர்ந்திட்ட விருட்சம் புதுப்புனலில் கரை கரைந்து தலை சாய்த்த விதமும்… நீர்க்கரை கொடி நிலை நின்ற விதமே…
1.இவ்வாழ்வின் சாதுரிய வாழ்க்கையின் நடைமுறை என்பதிலும்
2.ஜெபத்தின் வழி தியானமாகத் தன் உயர்வைத் தான் கூட்டி…
3.கிளர்ந்தெழும் ஐந்தடக்கிச் (அதி ஆசை நிலை விடுத்தல்) செயல்படும் காலத்தே
4.சிந்தனையில் உணர்ந்திட்ட “சித்தன் நிலை பெற்றிடும் வாய்ப்பு…”
“உவர் அமிலம்” என்பது மூலகப் பொருளாக பால்வெளியின் தன்மையாக மூலக்கூறுகள் இணைவதும் அந்த உவர் அமில அடர்வு நம் பூமியின் வட தென் துருவங்களாக ஈர்ப்பில் செயலுறும் குளிர்விப்பாக… அம் மூலக அடர்வுகள் நீர் சக்தியின் முத்தொழில் தன்மைகளில் ஒன்றாகச் செயலுறுகின்றது.
திடம் கொண்டிட்ட நீர் சக்தி (பனிப்பாறைகள்) திரவ நிலை பெற்றிடும் நீராக செயலுறுங்கால்… ஈர்ப்பின் செயலில் உவர் அமிலம் நீரினுள் கரைந்து அடர்ந்து விட்டால்… உவர் அமில அடர்வில் மிதக்கும் உடல் நீர் மேல்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் அணுக்களுக்குள் இணைக்கும் முறை
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
ஏனென்றால் புருவ மத்தியில் இப்படி எண்ணி விட்டால்… இதற்கு முன்னாடி நம்மை அறியாது சேர்ந்த தீய வினைகளுக்கு ஆகாரம் போகாதபடி தடுக்கின்றோம்.
அருள் ஞானத்தின் உணர்வுகளை உயிர் வழி நமக்குள் பரப்புகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி உயிரிலே மோதும் போது ஒளிக்கற்றைகள் தோன்றும்.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப் போன்று
3.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரப்படும் பொழுது… அது நமக்குள்
4.அறியாமை என்ற இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையை உருவாக்கும்.
உங்கள் நினைவு அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி… உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.
கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
எப்படி ஊசி மூலம் மருந்தை எடுத்து உடலுக்குள் செலுத்திய உடனே இரத்தங்கள் முழுவதும் அந்த மருந்து பரவுகின்றதோ அதேபோன்று
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று
2.உங்கள் கண்ணின் நினைவு கொண்டு உள்ளே செலுத்துங்கள்.
எங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறும்படியாகக் கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.
உறுப்புகளை எவ்வளவு தூரம் என்ன முடியுமோ உறுப்புகளில் அந்த சக்தி படர வேண்டும் என்று ஏங்கி நினைவைச் செலுத்துங்கள்.
உங்கள் உடல் உறுப்புகளில் இப்பொழுது புது விதமான உணர்ச்சிகள் தோன்றும்… அதை உணரலாம்.
1.தீமையான அணுக்கள் இருந்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தி அதிலே படும் பொழுது அது பலவீனமடையும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுப்பெறுகின்றது.
உடல் உறுப்புகளில் எத்தகைய தீய அணுக்கள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது அது வலு இழக்கின்றது.
கண்ணின் நினைவை அவ்வாறு செலுத்தப்படும் பொழுது…
1.அந்த ஜீவ அணுவின் காந்தமும் உங்களுடைய உணர்வின் நினைவும் செலுத்தப்படும் பொழுது
2.எளிதில் உங்கள் உடல் உறுப்புகளுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் செய்ய முடியும்.
ஒரு நல்ல மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளில் உருவாகும்.
தியானம் எடுப்பவர்களுக்கு வேக குணம் ஆகாத ஒன்று…!
மண்ணிற்குள் மறைந்திருக்கின்றது கிழங்கு. பசியின் வேகம் இருந்தாலும் அந்தக் கிழங்கினை அகழ்ந்து எடுக்கின்ற செயல் மிருக இனங்களில் ஒன்றான காட்டுப்பன்றி மூர்க்க குணம் கொண்டே வளர்ந்தது அதன் செயல்.
பூமிக்குள் மறைந்து கிடக்கும் கிழங்கை அறிந்து கொண்டு தன் கொம்புகளால் மண்ணை அகழ்ந்தது அந்தக் கிழங்கைப் பற்றி எடுக்கின்றது. காரணம் பசியின் வேகம்…!
காட்டுத் தீ பற்றி எரிகின்றது. பிறகு பெய்கின்ற மழைக்குப் பின் மண்ணிற்குள் மறைந்து கிடக்கும் கிழங்கு துளிர்விட்டுத் தழைத்து வளர்கின்றது.
பெரும் நெருப்பாகப் பற்றி எரிகின்ற காட்டுத் தீ… மரம் செடி கொடிகள் பசும்தளிர்கள் அனைத்தையும் பஸ்பமாக்கிப் பின் ஒருவாறு அடங்குகின்றது.
காய்ந்த மரம் பற்றி எரிகின்ற பொழுது பசுமை நிறைந்த மரங்களையும் தன் வெப்ப நாக்குகள் வெளிப்படுத்திடும் உஷ்ணத்தினால் தகித்து… பின் அதுவும் கனன்று பற்றிக் கொள்கின்றது.
அந்த வனத்திற்குள் வாழ்கின்ற கொடிய ஜந்துக்கள் அப்பொழுது வாழ்வது எங்கே…?
மண்ணிற்குள் மறைந்த கிழங்கை அகழ்ந்து எடுத்திடும் காட்டுப்பன்றியானது பசியின் வேகத்தால் கிழங்கினை அறிந்து கொள்ளும் அறிவு பெற்றது தான்.
இருந்தாலும்…
1.காட்டுத் தீயின் பெரும் நெருப்பில்… பன்றி தன்னைக் காத்துக் கொள்ள ஓடிடும் வேகத்தைக் காட்டிலும் நெருப்பின் வேகம் அதிகம்.
2.மூர்க்கத்தனமான அறிவு அங்கே செயல்படாது ஒழிந்தது.
3.குணங்கள் அறிவுறுத்தும் தன்மைகள் அனைத்திலுமே மனத்தின் பக்குவம் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
திருமுல்லைவாயில் என்னும் இடத்தில் பௌர்ணிகர் ஒருவர் காட்டு வழிப் பாதையில் தாகத்திற்கு அருந்த நீர் கிடைத்திடாத வனப்பகுதியில் நீருக்காக அலைந்து ஏங்கி ஓடிய பொழுது பற்றிக்கொண்ட காட்டுத் தீயானது விரட்ட… ஓடி அலைந்து அவருடைய உயிர் நீங்கப் பெறும் தருவாயில் “வேதாள மாமகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டார்…!”
அவர் அன்று ஒலித்த ஞானத்தின் சுடர்தல்… இன்றும் இந்தக் காற்று மண்டலத்தில் ஓடி உலவுகின்ற கருத்தின் கோர்வைகளப்பா.
1.அப்பொருள்களையே இங்கே உரைக்கின்றோம்…
2.உரைத்துக்கொண்டே வருகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எம்முடன் (ஞானகுரு) 20 வருடம் பழகியவர்களும் அவர்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் இங்கே வந்தால் (தபோவனம்) தீட்டு…! உள்ளே போகக் கூடாது…! என்று எண்ணுகின்றார்கள்.
1.இறந்த பின் இன்னொரு இடத்திற்குப் போகக் கூடாதா…?
2.கோயிலுக்குப் போகக் கூடாதா…?
3.கோயிலுக்குப் போகாமல் நல்ல நிலை பெறச் செய்வது எது…?
நல்ல நிலை பெறச் செய்வது தான் ஆலயம்…! அனைவரும் கூடி உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாவை ஒளி நிலை பெறச் செய்ய வேண்டும். இது தான் ஞானிகள் காட்டியது.
தீட்டு… தோஷம்… என்று சொல்லிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா 48 நாட்கள் கழித்து இன்னொரு உடலுக்குள் போன பிற்பாடு தான் இங்கே வரப்போகின்றார்கள்.
இது எல்லாம் எந்த நல்ல நிலையைச் செய்தாலும் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை பெற்றாலும் யாம் சொன்ன நிலைகளை மறந்து விடுகின்றார்கள்.
இங்கிருந்து திருப்பதிக்குப் போனவுடனே உண்டியலில் காசு போடுகின்றோம் அல்லவா…? போகும் போது என் சார்பாக நீங்கள் என் காசையும் உண்டியலிலே போட்டு விடுங்கள்…! என்பார்கள்.
ஏனென்றால் இப்படித் தேடிக் கொண்டு வந்து போடச் சொன்னால் அதற்காக வேண்டி நமக்குச் “செல்வத்தைக் கொடுப்பான்…” என்ற நிலைகளில் அந்தப் பழக்கத்தில் தான் சிலர் உள்ளார்கள்.
அதே பழக்கத்தில் தான் இங்கே என்ன செய்கின்றார்கள்…?
“இறந்து விட்டார்…” என்று சாங்கியம் செய்து சாம்பலை எடுத்துக் கரைத்து விட்டு ஆற்றுக்குச் சென்று எல்லாரும் குளித்துவிட்டு மந்திரத்தைச் சொல்லி வீட்டிற்கு வந்து எண்ணெய் தேய்த்து முழுகி விட்டுச் சுற்றமும் உறவும் புத்தாடைகள் கொடுத்து அணிகின்றனர்.
பின் மாவிளக்கு செய்து நெய் தீபம் இட்டு விநாயகருக்குக் கொண்டு அர்ச்சனை செய்து மோட்சத்திற்கு அனுப்பும் பழக்கம் தான் உள்ளது.
1.இந்தப் பக்குவம் பெற்ற அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற்று
3.அவர் (இறந்தவர்) உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நேரடியாக விண் செலுத்த வரவில்லை.
ஏனென்றால் என்னுடன் (ஞானகுரு) நீண்ட நாள் பழக்கமான சித்தையைன் என்ற அன்பரின் ஆன்மா திடீரென்று மறைந்து விட்டது. தகவல் கொடுத்தார்கள். தியானத்தின் மூலம் உந்தி மோட்சத்திற்கு அனுப்பி விட்டோம்.
பழனிச்சாமி இங்கே வருகின்றார். எல்லாம் இருக்கின்றது… ஆனால் மருமகன் இறந்து விட்டார்…! என்றால் உடனே அழுகை வருகின்றது.
ஏன் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு வரக் கூடாதா..? என்றேன்.
“தீட்டு…! என்று சொல்கின்றார்கள்…” என்கிறார்.
நாம் அனைவரும் மோட்ச லோகம் போக வேண்டும்… நாம் அதற்காக மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துத் தியானிக்க வேண்டும்…! என்ற நிலைகள் இல்லை.
செய்த பாவங்களை நீக்குவதற்காகச் சாங்கியங்கள் செய்யும் நிலைக்குத் தான் வருகின்றார்கள். இந்த உணர்வுகள் அடிப்பட்டால் மந்திரத்திற்குள் சிக்கி இன்னொருவனின் ஏவலுக்கு ஆளாகி ஆவியின் நிலையாகத் தான் இயக்க முடியுமே தவிர “உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது…”
நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு இதைத் தெளிவாக்குகின்றோம்.
1.நாம் எதனின் வளர்ச்சியில் குரு காட்டிய வழியில் அருள் உணர்வைப் பெறுகின்றோமோ
2.அதன் வழியிலேயே தான் செல்ல வேண்டும்.
ஏனென்றால் இன்று விஷம் கொண்ட உலகில் வாழுகின்றோம். அதனை அகற்றிடும் நிலைகள் பெற வேண்டும்.
குடும்பத்தைச் சார்ந்தோர் அந்த ஆன்மாவை உந்தி விண் செலுத்தினால் உடல் பெறும் உணர்வை… அந்த இருளை அகற்றிவிட்டால் “அவர் நினைவு வரும்போதெல்லாம்..” நமக்குள் வரும் நஞ்சினை மாற்றும் அரும் பெரும் சக்தியாக வரும்.
1.உடலை விட்டுப் பிரிந்தவர்கள் யாரையும் இனி நாம் இங்கே இந்தப் பூமிக்குள் இழுக்கக் கூடாது.
2.அவர்களை அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி அந்த உடல் பெறும் உணர்வுகளை அங்கே கருக்க வேண்டுமே தவிர
3.“சுட்ட சாம்பலை இங்கே கருக்கிவிட்டால் பாவம் போய்விடும்…” என்றால்
4.அசாத்தியமான நிலைகள் கொண்டு நமக்குள் தவறின் வழிகளிலே நாம் பிழை கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்.
என்னிடம் சொன்னவுடனேயே அந்த உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்தில் யாம் இணைத்து விட்டோம். ஆனால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒரு ஈ கூட வரவில்லை.
ஏனென்றால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமாம்…!
கோயிலுக்குள் போகக் கூடாது… போனால் பாவமாம்…! ஆனால் கோவிலுக்குள் ஒருவர் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்…? “கோவிலையே தூக்கிப் பேர்த்து எடுத்து விடுவார்களா…?”
நல்ல ஒழுக்கம் கொண்டு நல்ல உணர்வுகளை வளர்ப்பதற்கு யாம் சொன்னாலும் இந்தத் தியான வழியில் என்னுடன் பழகி 20 வருட காலத்தில் அனுபவப்பட்ட குடும்பமே இந்த நிலையானால் இன்று வருவோர் என்ன நிலை ஆவார்கள்…?
1.அருள் ஒளி பெற வேண்டும் என்ற நிலையையும்
2.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் நிலையையும்
3.என்றுமே பிறவியில்லா நிலை பெற வேண்டும் என்றும்
4.நாம் எண்ணியதைத் தான் உயிர் உருவாக்குகிறது என்றும் தெளிவாகச் சொல்கிறோம்.
ஆனால் இவர்கள் வழிபடும் தெய்வம் தான் இவர்களைக் காப்பாற்றும் என்றால் “அவர்கள் குடும்பத்தில் ஏன் சிக்கல் வருகின்றது…?”
ஏனென்றால் இதைப் போன்ற நிலையில் ஒன்றை நாம் வளர்த்துக் கொண்டால்… “நான்…” என்ற நிலைகளில் மற்றவர்களை அடக்க வேண்டுமென்ற உணர்வுகள் அங்கே வரப்படும் பொழுதுதான் பகைமை என்ற உணர்வுகளாகின்றது.
அதனால் ஒருவருக்கொருவர் வேதனை என்ற உணர்வுகள் வந்து… கடும் நோயாகி மனிதனல்லாத உருவாக மாற்றும் நிலையே வருகின்ற்து.
மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய அந்த மறைந்த நிலைகளைத் தான் மீண்டும் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
இன்று விஞ்ஞான உலகில் மனிதனுடைய உருவே முழுமையாக அழியும் தன்மையிலிருந்து மீண்டிடும் நிலையைப் பெற வேண்டும் என்று சொல்கிறேன்…!
கேட்பார் யாருமில்லை…!
ஏனென்றால் 20 வருடம் பழகியவர்களே இந்த மாதிரி இருக்கின்றார்கள் என்றால் அப்புறம் எப்படி இருக்கும்…? விடிய விடிய உட்கார்ந்து எல்லா உண்மைகளையும் அவர்களிடம் சொல்லியிருக்கின்றேன்.
நான் ஞானம் பெற்ற நிலை… வளர்ந்த நிலை…! என்று எல்லாமே சொல்லியிருக்கின்றேன். அவர்களே இந்த நிலையில் இருக்கின்றனர் என்றால் அப்புறம் அதில் வேறு என்ன இருக்கின்றது…?
ஏனென்றால் எல்லாரும் அருள் ஞானம் பெற வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கின்றது. என் ஆசை என்றும் குறைந்ததில்லை…! எல்லாரும் பெற வேண்டுமென்ற ஆசையின் உணர்வு இருந்தால் நிச்சயம் அந்த அருள் ஒளியை நாம் பெறுகின்றோம்.
ஆனால் இப்படிச் சாங்கியத்தை செய்து பாவத்தைப் போக்கும் ஆசை இருந்தால் அவர்கள் அந்த வழியிலே போகட்டும்.
ஒவ்வொரு நொடிகளிலும் இந்த மனித வாழ்க்கையில் நாம் எதனின் நிலையை எடுக்கின்றோமோ நம்மை அறியாது சில குறைகள் எடுத்தால் அருள் ஒளி பெற்று நம்மை நாம் திருத்தி கொள்ளப் பழகுதல் வேண்டும்.
பிறரின் குறைகளைப் பற்றிச் சொல்லும் போது தனக்குள் இருக்கும் குறை வருவதில்லை. குறைகளை உணர்ந்தாலும் குறையைத் தான் திருப்பி வளர்க்க முடிகின்றதே தவிர குறையை நீக்கும் மார்க்கம் இல்லை.
1.ஆகவே நம்மை அறியாது இயக்கும் இது போன்ற அறியாமையிலிருந்து மீள்தல் வேண்டும்.
2.அப்படி மீள்வதற்கே இந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிப்பது…!
அசுர குணங்களிலிருந்து நாம் மீளக்கூடிய நன்னாள் தான் தீப ஒளித் திருநாள்
தீப ஒளி என்றால் ஒரு தீபத்தைப் பொருத்தினால் அந்த வெளிச்சம் மற்ற தன் அருகில் இருக்கக்கூடிய பொருள்களை எல்லாம் காணச் செய்கின்றது.
இதே போன்று நமது உயிர் நமக்குள் ஒளியாக இருந்து… நாம் எதை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தை இந்த ஒளி கொண்டு அந்த உணர்வின் குணத்தையும் மணத்தையும்… “உணரும் வழியில் – மணத்தின் வழியில்” நமக்கு உணர்த்துகின்றது… அறியச் செய்கின்றது.
அதாவது
1.உணர்வின் வழியில் உணர்த்துகின்றது
2.மணத்தின் நிலையில் அறியச் செய்கின்றது.
நமது உயிர் நமக்குள் தீபமாக இருந்து… சுடராக இருந்து… நாம் எதை எண்ணுகின்றோமோ அப்பொருளை நுகர்ந்த உணர்வு கொண்டு உணர்வின் துணை கொண்டு அந்த உணர்ச்சியை ஊட்டி
1.உணர்வால் நம்மை அறியச் செய்கின்றது
2.மணத்தால் தன் அறிவைக் காக்கச் செய்கின்றது.
இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் அறிதல் வேண்டும் அதை நினைவுபடுத்தும் நன்னாள்தான் தீப ஒளி நன்னாள்
அதே சமயத்தில் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… கூட்டுத் தியானங்களிலிருந்து மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறக்கூடிய நன்னாளாக நாம் அமைத்திடல் வேண்டும்.
இன்றைய நாள்… எப்படி நாம் புத்தாடையைப் போர்த்தி அணிந்து மகிழ்கின்றோமோ… இதே போன்று தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் நல்ல குணத்துடன் இணைத்து… இந்த வாழ்க்கையில் அந்த தூய்மைப்படுத்தும் உணர்வினை…
1.அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் தெளிந்த மனதுடன் தெளிந்திடும் சக்தியாகப் போர்த்தச் செய்வது தான்
2.இந்த உபதேசமும் அதன் வழியில் தியானத்தின் மூலம் பெறக் கூடிய சக்தியும்.
பகைமை உணர்வுகள்… பாசத்தால் கேட்டறிந்த பார்த்துணர்ந்த வேதனை உணர்வுகள்… சந்தர்ப்ப பேதத்தால் எடுத்துக் கொண்ட கொதித்தெழும் கோப உணர்வுகள்… இவையெல்லாம் அசுர குணங்கள் கொண்டது.
அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிகளை நாம் அனைவரும் ஒருக்கச் சேர்ந்து… ஏகோபித்து அந்தச் சக்தியைப் பெற்று… நம்மை அறியாது இயக்கும் அத்தகைய அசுர குணங்களிலிருந்து மீட்டிடும் நன்னாளாக நாம் நினைவு கொண்டு… அதனின் வலு துணை கொண்டு… அசுர குணங்கள் தாக்காது நம்மைப் பாதுகாத்து வரவேண்டும்.
எண்ணத்தில் உதயம் வேண்டுமப்பா…!
மண்ணினால் பாண்டங்கள் செய்கின்றான் கலைஞன். அந்தக் குயக்கலைஞன் பாண்டங்கள் வடித்திடும் பொழுது
1.தன்னுடைய ஆகாரத்திற்காகத்தான் அந்தத் தொழிலைச் செய்கின்றான் என்றாலும்
2.“மனக்கருவின் திருவை” (திருவை – பானை செய்யும் சக்கரம்) செய்தொழில் கலையாகச் சிறக்கச் செய்கின்றான்
(பானைகள்) குயக்கலங்கள் வடிவத்தில் சிறிதாக இருந்தாலும்… அந்த உருவம் தந்திடும் எண்ணத்தின் சிறப்பு… “எண்ணுவதால் கலத்திற்கும் சிறப்பு…!”
குயக்கலத்தின் சிறப்பை… செயலின் திறத்தை எண்ணுகின்ற மனம்… உயிர்த்தொகைகள் வடிவு எடுக்கின்ற எண்ணற்ற பிறவிகளில் மானிடப் பிறப்பே பகுத்தறியும் ஆற்றலின் வன்மையால் காணச் சிறப்பு எது…?
குரல் – உடல் என்றும்… குருமுனி என்றும் அழைக்கப் பெறுதலின் குரல் உடல் கொண்ட மனிதன் குருமுனிவன் ஆன விதம் என்ன…? குரல் உடல் பெற்ற சிறப்பு.
குயக்கலம் போல்…
1.குரல் உடல் பெற்றுக் கொண்டிட்ட மனிதன்… வளர்த்துக் கொண்டிட்ட விதம்
2.“காணாச் சிறப்பே கண்ணுறும்…” என்ற சொல்லுக்கொப்ப செய்தொழில் செய் திறத்தால் அமைவது என்னும் பாங்கில்
3.மெய்ஞானம் மெய்ஞான விழிப்பாகி… முகிழ்ந்த பின் மெய்ஞானச் சுடர் எனும் சுடர்தல் தன்மையாக
4.குரல் உடல் குருமுனியாகி… மாமகரிஷியாகி சப்தரிஷிகளுடன் கலந்து வாழ்ந்திடும் இயக்க நிலையை…
5.ஞானச் செல்வங்கள் அறிவால் அறிந்துணர்ந்து அதைப் பெற்று உயர்ந்திடவே அழைக்கின்றோம்.
சூரியன் தன் முகம் காட்டிய பின்பே உயிர்த்தொகைகள் உருக்காட்டுகின்றன (கண்ணுக்குப் புலப்படுவதாக) என்றால் என்னப்பா…?
சகல ஜீவன்களும்… ஜீவ ஆதார வித்துக்களும்… உயிரணுக்கள் தன்மையில் வளர்ந்த ஆத்மாக்களும்… ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு உயர்நிலை வளர்ப்பாக்கும் மெய் ஒலி… ஒளியின் கூட்டுறவாம் இயக்க சுருதி நாத லய மறைபொருள் தன்மைகள் என பல பல உரைத்தாலும்
1.இருளுக்குப் பின் ஒளி கண்டு இருளினில் மறைந்த பொருள்கள் புலப்பட்டு
2.கட்புலனாய்க் (நமக்குத் தெரியக்கூடியதாக) காணப்பட்டு உணர்கின்றோம்.
ஆக… எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!
1.உணர்கின்ற தன்மையே (தன்னைத் தான் அறிதல்) மனத்தின் ஒளியாகும்
2.அந்த ஒளியினால் கருக்கொள்ளும் மனத்தின் திரு ஆத்ம முலாமாகச் சுடர்ந்திடவே…
3.மறைபொருள் தன்மைகளை (மறைக்கப்பட்ட… மறைந்து போன… உண்மைகளை) இங்கே உணர்த்துகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கண்ணின் நினைவு கொண்டு பிறர் வேதனைப்படுவதை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் நமக்குள் அணுவானால் நரகாசுரனாகி விடுகின்றது.
இருவர் சண்டை இடுகின்றனர்… அதிலே ஒருவன் கொலை செய்கின்றான்…! என்பதை நாம் உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாக மாறி நம் நல்ல குணங்களைக் கொன்று தின்று கொண்டே இருக்கும்.
1.கண்களால் பார்த்துத் தான்
2.நமக்குள் நுகர்ந்தறிந்து “அதைத் தீமை” என்று உணர்கின்றோம்.
3.இருந்தாலும் நம் உயிர் நுகர்ந்த உணர்வினை உடலுக்குள் அணுவாக மாற்றி விடுகின்றது.
இதிலிருந்து நாம் மீள வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
துருவ நட்சத்திரம் அருள் ஒளி பெற்று உணர்வின் ஒளியாக இருக்கின்றது. சூரியனின் காந்தப் புலனறிவு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அதிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தாங்கி அலைகளாகப் பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது.
நம் பூமியோ துருவத்தின் நிலைகள் கொண்டு அந்த அலைகளைக் கவருகின்றது. நமக்கு முன் பரவி வருகிறது.
தீப ஒளித் திருநாள் அன்று அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு ஒன்று கூடி அந்த அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் அனைவரது உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று அந்த வலுவைக் கூட்ட வேண்டும்.
உதாரணமாக நம் பிள்ளை சேட்டை செய்திருப்பான். அவனை வெறுத்துப் பேசுவதற்கு மாறாக அவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவனுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அவன் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் அன்னை தந்தையருடன் ஒன்றுப்ட்டு வாழ வேண்டும் என்று இப்படி நாம் எண்ணுதல் வேண்டும்,
அதே போல் மற்றவர்களிடம் முதலில் நண்பராகப் பழகி இருப்போம். ஆனால் சந்தர்ப்பத்தால் பகைமை உணர்வு வந்து ஒருவருக்கொருவர் வெறுப்படைந்திருப்போம்.
அதை எல்லாம் தடுப்பதற்காக நாம் பார்த்த நண்பர்கள் குடும்பங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும். அவர் குடும்பத்தில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் சாப அலைகள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அவர் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இப்படி எல்லோரும் ஏகோபித்த நிலைகள் எண்ணுதல் வேண்டும்.
பிறிதொருவர் என்று சொன்னாலும் அவரின் உணர்வுகள் நமக்குள் உண்டு…! உதாரணமாக
1.ஒருவர் நம்மைத் திட்டினார் என்றால் அவர் உணர்வு நமக்குள் வந்து
2.நாமும் பதிலுக்குத் திட்டும்போது அவரின் உணர்வு உடலில் வந்துவிடுகின்றது.
3.(அவர் உணர்வு இயக்கித் தான் நாமும் பதிலுக்குத் திட்டுகிறோம்).
அவன் திட்டிய உணர்வுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. அது நமக்குள் வந்து விடுகிறது. ஏனென்றால் உற்றுப் பார்க்கின்றோம்… பதிவாகிறது. பதிவானதை மீண்டும் எண்ணும் போது அந்த அலைகள் நமக்குள் வரத் தொடங்குகிறது.
ஒரு செடியில் வளர்ந்த சத்தினைச் சூரியன் எடுத்து வைத்துக் கொண்டால் அதிலே விளைந்த வித்தினை மீண்டும் நிலத்தில் ஊன்றும் போது நிலத்தின் துணை கொண்டு சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அந்தச் சத்தினை எடுத்துத் தான் அது செடியாக அது வளர்கின்றது. அந்தச் செடியின் இனப்பெருக்கங்கள் அதிகமாகின்றது.
இதே போல் தான் நமக்குள்ளும் பிறர் திட்டியது வேதனைப்பட்டது போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால்… உடலுக்குள் வந்து அந்த அணுவின் தன்மையாக அடைந்து விட்டால் அது அது தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.
நம்மைக் காக்க அல்லது மற்றவருக்கு உதவி செய்ய என்று நாம் பரிவுடன் கேட்டறிந்தாலும் பிறர்படும் வேதனை உணர்வுகள் நமக்குள் அணுவாகின்றது.
1.ஏற்கனவே சொன்ன மாதிரி அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை எல்லாம் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது.
2.அது நமக்குள் புகாதபடி தடுக்கவில்லை என்றால் அதே வேதனை அதே கோபம் நமக்குள்ளும் விளைந்து
3.அசுர குணங்களாக நமக்குள் மாறத் தொடங்கும்.
ஆகவே நாம் கண்களால் பார்த்து நுகர்ந்து இது போன்ற அசுர உணர்வுகளாக வளர்வதைத் தடுக்க வேண்டும்.
அதற்குத் தான் அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்த அருள் ஒளி பெற வேண்டும் எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்.
அப்பொழுது அந்த வேதனையான உணர்வைத் தணிக்கச் செய்கிறது. அதே சமயத்தில் அது போன்ற தீமைகளை நீக்கக்கூடிய சக்தியும் நாம் பெறுகின்றோம்.
இப்படி எல்லோரும் எண்ணும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வுகளை (அலைகளை) காலை ஆறு மணிக்கெல்லாம் சூரிய உதயம் வரும் பொழுது அது கவர்ந்து பூமியின் காற்று மண்டலத்தைக் கடந்து லேலே பிரபஞ்சத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றது…. அங்கே கரைத்து விடுகின்றது.
அதனால் பகைமை ஊட்டும் உணர்வுகள் நம் பூமியில் தணிகின்றது இப்படி நம்மை நாம் காத்துக் கொள்ளும் வழிகளைத்தான் அன்று ஞானிகள் தெளிவாகக் கூறி உள்ளார்கள்.
நீங்களும் என்னைப் போன்றே ஞானத்தின் வழியில் வளர்ந்து வர முடியும்
வான் வீதியில் ஜீவணுக்கள் உருவாகின்றது… “வைரஸ் உருவாகின்றது” என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர் இங்கிருந்து செயற்கைக்கோள்களை விண்ணிலே அனுப்பி அங்கே பார்க்கப்படும் பொழுது இதையெல்லாம் காணுகின்றார்கள்.
சுமார் நாற்பது வருடத்திற்கு முன்பு நான் (ஞானகுரு) ஏற்கனவே இதை எல்லாம் வெளிப்படுத்தி உள்ளேன்.
சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகளும்… இரண்டு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கங்களும் அந்த அலைகள் உள்ளே வந்தால்… வியாழன் கோளின் கதிரியக்கமும் அதனுடன் சேர்ந்தால் இந்த உணர்வின் தன்மை சேர்ந்து உயிர்த் துடிப்பாகி உயிரணுவாக உருவாகும் என்று ஏற்கனவே குரு வழியில் விளக்கம் கொடுத்துள்ளேன்.
1.துடிப்பாகும் பொழுது இயக்கமாகிறது…
2.அதனுடைய இயக்கத்தை “ஈசன்” என்று ஞானிகள் பெயரை வைத்துள்ளார்கள்.
ஆனால் வைரஸ் என்ற நிலையானால் எதன் உணர்வைக் கவர்ந்ததோ அதை வளர்க்கும் அந்த அணுவாகின்றது.
உயிரணு தோன்றுவது அங்கே பால்வெளி மண்டலத்தில். பூமி இழுத்துக் கொண்டால் மற்ற சத்தினைக் கவர்ந்து கொள்ளும் பொழுது வைரஸ்.
அதே சமயத்தில் பூமிக்குள் வந்தால் இதன் உணர்வை எடுத்து… அடுத்து இதைக் காட்டிலும் வலுவான தாவரங்களை எடுத்து உடலாக மாற்றிக் கொள்கிறது. கவர்ந்து கொண்ட தாவரத்தின் உணர்வுக்குத் தக்க புழுவாகவோ பூச்சியாவோ உருப் பெறுகின்றது
மனித உடலுக்குள் வந்தால் இந்த உணர்வை உட்கொள்ளும் விஷத்தன்மையாக மாறுகிறது. விஷத்தின் தன்மை எடுக்கப்படும் பொழுது (புதிய வைரஸ்கள்) எந்தெந்த நிலை ஆகின்றது…? என்பதை முன்பே நான் சொல்லி உள்ளேன்.
ஆனால் “ஆராய்ச்சியில் இன்று கண்டுபிடித்தார்கள்” என்று சொல்கின்றார்கள்.
ஏனென்றால் குருநாதர் காடுகளிலும் மேடுகளிலும் மலைகளிலும் பல இடங்களுக்கு என்னை அனுப்பி இந்தக் காற்று மண்டலத்தில் என்னென்ன இருக்கின்றது…? என்ன உருவாகின்றது…? என்று தெளிவாகக் காட்டினார்.
1.நான் கண்ட உண்மைகள் அதிகம்…
2.ஒரே தடவையில் அனைத்தையும் சொல்ல முடியாது
3.சிறுகச் சிறுக அதைச் சொல்லி வருகின்றேன்.
4.சிறுகச் சொன்னால்… சாமி சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை என்று விட்டுவிடாதீர்கள்.
ஒரு நாடாவிலே டேப் மூலம் பதிவாக்கி விட்டால் திருப்பி அதை இயக்கப்படும் பொழுது… எது பதிவோ அதை அப்படியே பேசுகின்றது.
அதே போன்றுதான் யாம் சொல்லக்கூடியதைக் கூர்ந்து கவனித்து நீங்கள் பதிவாக்கி விட்டால் சந்தர்ப்பம் உங்களுக்கு மீண்டும் அது (எம்முடைய பேச்சு) நினைவுக்கு வரும்.
ஒரு தீயவனைப் பார்த்தால் அவனுடைய உணர்வு வராதபடி தடுக்க வேண்டும் என்றால்… ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற புருவ மத்தியில் எண்ணிவிட்டால் அந்தத் தீய உணர்வு நமக்குள் புகாது தடுக்கப்படுகிறது.
அவ்வாறு தடுத்து நிறுத்தி விட்டு… அடுத்து நல்லதை எண்ணி நமக்குள் கலக்க வேண்டும். அதைச் செய்யப் பழக்கப்படுத்துவதற்குத் தான் இந்த உபதேசம்.
ஆக மொத்தம் நீங்கள் எல்லோருமே என்னை நம்புகின்றீர்கள்… இல்லையா…!
1.ஏன்..? நானும் மனிதன்தான்… நீங்களும் மனிதன் தான்…!
2.குரு வழியில் நான் எந்த உணர்வைப் பெற்றேனோ அதே உணர்வை நீங்களும் பெற்று ஏன் இதை வளர்த்துக் கொள்ளக் கூடாது…?
“சாமி செய்து தருவார்…” என்று மட்டும் எண்ணுகின்றீர்கள் ஆனால் “சாமி சொன்ன வழியினை…” நாம் பின்பற்றினோம் என்றால் நிச்சயம் அந்த நன்மை பெற முடியும் என்ற அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்.
என்னுடைய பார்வை என்னுடைய பேச்சு பிறருக்கு எப்படி நல்லதாகின்றதோ “அதே உணர்வை ஒத்து” நீங்களும் உங்கள் பார்வையால் உங்கள் பேச்சால் வெளிப்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கு நல்லதாக்கலாம் அல்லவா… தீமைகளைப் போக்கலாம் அல்லவா…!
பிறர்படும் கஷ்டங்களைப் பாசத்துடன் கேட்கின்றோம் அந்த உணர்வு வந்தபின் உடலுக்குள் வேதனையைத் தான் கொடுக்கின்றது நோயையும் உண்டாக்குகின்றது. இதைப் போன்ற தீமை உங்களுக்குள் வரக்கூடாது
1.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எத்தனை வகையான வேதனைகள் வரலாம்.
2.அதை எல்லாம் தவிர்த்துக் கொள்வதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால்
3.அந்த உணர்வின் தன்மை இங்கே நிறுத்தப்படுகின்றது.
இந்தப் பயிற்சியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
அன்னத்தின் மேல் அமர்ந்துள்ள “கலைமகளின் மறைபொருள்”
மொழி வளர்ச்சி உற்ற விதத்தில் எண்ணுகின்ற எண்ணத்தை வெளியிடும் விதமாக வளர்ந்து… முதிர்வின் மூலமே சப்தஸ்வர நாதலயமாக (இசை) மொழி அமைப்பின் கோர்வை கொண்டு… உள்ளக்கிடக்கையை வெளியிடும் ஏற்றதோர் அமைப்பாக்கி வெளியிடும்… கருத்தின் பாங்கை இரசனையாக உணர்ந்து கொண்ட இடம்… செயலை… யாதென உரைக்கலாம்…?
பாணன் இசைக்கின்றான்… அந்த இசைக் கலைஞன் ஸ்வர பேதமின்றி உள்ளன்போடு இசைக்கின்ற பொழுது “அந்த இசை… உயிரைப் பற்றி நிற்கின்றது…”
இப்படி உரைக்கின்ற பொருளின் உண்மை நிலையே…
1.உணர்வின் எண்ணத்தை மாற்றிக் கொண்டிடும் நிலையால்
2.தீமையான எண்ண குணங்களின் வசம் ஆட்படும் மனது
3.உயர் தன்மையின்… உயர்வு எண்ண நிலை பெற்றிட முடியாது.
நற்குணத் தன்மைகளின் செயல்பாட்டில் “தெய்வீக இசை…” உடல் கடந்து “உயிரைத் தொடுகின்றது” என்ற சொல்லில் ஈர்த்துக் கொண்டிடும் குணச் சிறப்பு விளங்கும்.
மோகத்தின் பால் சிக்குண்ட மனம்…
1.அக்கணையால் தாக்கப் பெற்று… அந்த மோகக் கனலால் தகிக்கப் பெற்று
2.ஆத்ம நிலையே அதனால் தேய்ந்துவிடும் நிலைக்குச் சென்று விடுகிறது.
அதே சமயத்தில் இந்தப் பேருண்மையை உணர்ந்து கொண்டு செயல்படுகின்ற அறிவின் ஆற்றலாக… மோக குணத்தை விலக்கிக் கொள்ள வேண்டிய ஆகார ஜெப ஆற்றலை அருந்துவதே… சித்தன் சுட்டிக்காட்டிய “அன்னம்”
1.மெய் ஞான விழிப்பைச் செயல்படுத்திடும் அறிவாகிய அன்னம்
2.தீதெண்ண குணத்தன்மைகள் விலக்கி… நற்குணத் தன்மைகள் சுரந்திடும் ஈர்ப்பின் அமுதத்தை அருந்த வேண்டிய செயலையே
3.பாலுடன் கலந்த நீரை விலக்கிப் “பாலை மட்டும் அருந்தும் அன்னம்” என்று உரைக்கப்பட்டது
அத்தகைய பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட அறிவாகிய “அன்னத்தின் மேல் பிரம்மனுடன் சரஸ்வதியாகக் காட்டப்பட்டது மறைபொருள்…”
அந்த நிலையே சிவ சக்தியின் கலப்பாக… ஓங்கார நாதத் தொனியாக… “நாதத்தின் தலைவியாம் கலைமகள்…” பிரம்மத்துடன் கலந்து செயல்படும் சக்தியாக… ஓ…ம் என்ற ஓங்கார நாதம் கேட்பது எங்கே…?
ஊன் உயிர் கலந்திட்ட ஒன்றிய மனத்தின் செயல் தன்மையாக…
1.நாம் உரைக்கின்ற தியானத்தின் வழியாகக் கடைப்பிடிக்கும் ஞானச் செல்வங்கள்
2.அந்த ஓ…ம் என்ற ஓசை கேட்கும் நிலை அடைவர்… மெய்ஞானச் சுடராக விளங்குவர்.
மகரிஷிகளின் செயலை அறிந்து… “அவர்கள் வழி செயல்பட முயல்வோர் முயற்சிக்கட்டும்”
தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலால்… தன்னை வளர்த்துக் கொண்டிடும் “ஒலி மின் நுண்காந்தப் புலமாய்”
1.தனக்குள் ஆட்டுவிக்கும் சக்தியைத் தன்னை ஆட்கொண்ட “ஈஸ்வரரின் அருள்” என்றே உரைக்கின்றாய் அல்லவா.
2.அந்த வார்ப்பினைக் காத்துக் கொண்டிருக்கும் செயலில் “காட்டும் உறுதி”
2.சகல மகரிஷிகளினாலும் அன்பு சப்தரிஷிகளினாலும் அருள் நோக்கால் கணிக்கப்படுகின்ற செயலை அறிந்து கொண்டே
3.இத்தியான வழியில் பெற்றிடும் பக்குவத்தில் பெற்று வளர்த்திட “முயல்வோர்கள் முயற்சிக்கட்டும்…!”
“ஈர்ப்பின் கனி” ஈர்த்துக் கொண்டிடும் செயல் பற்றிக் கூறியவை போல் “விளத்தின் கனி” பற்றி அறிந்திடும் ஆக்கம் கூறுவேன்.
ஜீரணிக்கக் கூடிய செரிமானத் தடையைப் பற்றிப் பேசுகின்றாய்.
1.மனத்தின் பரிமாணம் கொள்ளும் உணர்வுகள்
2.தமக்குகந்த “சலனத்தின் நிலை” ஏற்பட்டு விடாத மனத் திறனே
3.உடலைக் காத்திடும் கவசம் ஆகும்.
ஓடு நெகிழ்ந்து அக்கனியின் சேமிப்பாம் சக்தியே… அந்த ஓடு உடைந்து விடாத வண்ணம் வெளிக்கொண்டு வரும் செயல் நிகழ்வு எப்படி உண்டானது…?
வேழம் தன்னுள் கொண்டிட்ட ஈர்ப்பின் வலு வீரிய சக்தி கொண்டுதான்…! தன் ஜீவனைப் பற்றிச் சிந்திக்கும் செயலற்ற நிலையாக இருந்தாலும்… “மாற்று நிலைகள் உட்பகுந்திடாதபடி” அந்த வேழத்தின் வலு வீரியம் நாம் வழிநடத்தும் இந்த தியான வழியிலே செயல்படுமப்பா.
1.மனச்சோர்வினுக்கு மருந்து எது…”
2.மனத்தினைத் தெளிவுபடுத்திடும் இந்தத் தியானமே ஆகும்.
வரும் வேக அப்பொருளைக் காப்பது யார்…?
உன் உயிர் குரு வழி நடந்திடும் பக்குவத் தன்மையில்தான்…! என்றே அதை உரைத்திடல் வேண்டுமோ…?
மாலைக்குப் பின் இருள் வரும்…! ஆனால்
1.மாலை வருவதற்கு முன்பே நம் பார்வையில் இருள் காட்டினால்
2.நாம் கொள்ள வேண்டிய பக்குவம் இன்னும் அதிகமாக வலுவாக்கப்படுதல் வேண்டும் என்பதே “அப்பொருள்…!”
அருள் வழியில் தன்னுள் வளர்ப்பாக்கும் சகல சக்திகளையும் செயல்பாட்டில் உலகினுக்கு வழிகாட்டி… சோர்வு நிலை நீக்கி… திண்மையின் மனம் ஏந்தி… ஞானச் செல்வங்கள் (நீங்கள்) நிலைபெற்று வளர்ந்து வலுவாகி… சிவ சக்தியாக ஆதி சக்தியின் கலப்பாக வேண்டும். அதுவே எமக்கு மகிழ்ச்சி.
எமது ஆசிகள்.
“துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம்” நமக்குள் பெருக வேண்டும்
கொடூரமான புலி மற்ற சாந்தமான உயிரினங்களை அடித்துக் கொல்வது போல்… சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடலின் உறுப்புகளையும்… அதை உருவாக்கிய அணுக்களையும் கொன்று புசித்துவிடும்..
இதிலிருந்து மீள்வதற்கு நம்முடன் வாழ்ந்து வளர்ந்த முன்னோர்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தி… அந்தப் பேரருள் உணர்வுகளை நம் உடலுக்குள் உள் செலுத்தித் தீமையான நிலைகளை மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.
கோடிச் செல்வம் தேடினாலும்… அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை. ஏன்…! இந்த உடலும் நம் கூட வருவதில்லை. ஆனால்
1.பேரருள் என்ற உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றப்படும் பொழுது
2.ஒளியின் உணர்வாக நாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்.
3.”இதை விரும்புவோர் தான் செயல்படுத்த முடியும்…”
உடல் இச்சை கொண்டால் பலன் இல்லை…!
அருள் உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் எடுத்து வளர்த்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்து செயல்படும் தன்மையும்… தேடிய செல்வத்தைக் காத்திடும் நிலையும்… இந்த உடலைச் சீராக வைத்துக் கொள்ளும் நிலையும் வரும்.
“செல்வத்தை நாம் தேட வேண்டியதில்லை… அந்தச் செல்வமே நம்மிடம் வந்து சேரும்…” ஆனால் செல்வம் குவிகின்றது என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால் நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் உடலின் பற்றுக்கே வந்து விடுகின்றது.
ஞானத்தினை நாம் வளர்க்கும் பொழுது அருள் ஞானத்தின் வழிகளில் நாம் சென்று இருளை அகற்றி மெய்ப்பொருளைக் காண முடியும்
ஆகையினால் காலையில் ஐந்தரைலிருந்து ஆறரை மணிக்குள்
1.தினசரி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுத் தீமைகளை நீக்கிப் பழகுதல் வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நாள் முழுவதும்… மற்றும் அவ்வப்போது சேரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாக… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி அருள் வழியில் நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மையாக… இந்த இல்லற வாழ்க்கையில் தெளிந்த மனம் கொண்டு வாழ முடியும்.
வேதனை என்ற விஷமோ கோபம் என்று கார உணர்வோ பகைமையான உணர்வுகளோ சாபம் என்ற உணர்வுகளோ நம்மைத் தாக்கப்படும் பொழுதெல்லாம்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து நம் உடலுக்குள் அதை உட்செலுத்தித் தீமைகளை அவ்வப்பொழுது மாற்றிக் கொண்டால் பகைமைகள் வளராது.
தீமை என்ற நிலையே நம் உடல் அணுக்கள் பெறாதபடி தடுத்துக் கொள்ள முடியும். துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடலில் அணுக்களாக உருவாக்கிக் கொண்டால்… நம் சொல்லும் செயலும் புனிதம் பெறவும்… நம் உடலில் தெளிந்த நிலையும் உருவாகும்.
1.அந்தத் துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம் நமக்குள் பெருகும் போது
2.உடலில் விளைந்த சூட்சும சரீரம் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
3.நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வது உறுதி.
எத்தகைய குறைபாடுகளையும் நீக்கும் பயிற்சி தியானம்
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானம் இருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்களது இரத்த நாளங்களில் கலந்து அவர்களது உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று அவர்களது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த சாப வினைகளால் விளைந்த தீய வினைகளால் விளைந்த பாவ வினைகளால் விளைந்த பூர்வ ஜென்ம வினைகளால் விளைந்த கேன்சர் டிபி இரத்தக் கொதிப்பு சர்க்கரைச் சேர்த்து ஆஸ்த்மா இருதய நோய் மூலநோய் சரவாங்கி நோய் வாத நோய் போன்ற சர்வ நோய்களையும் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.
தியானத்தில் இருப்பவர்கள் எல்லோரது உடல்களிலும் சர்வ தோஷங்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அவரவர்கள் உடலில்… இடுப்பு வலியோ கை கால் வலியோ தலை வலியோ வயிற்று வலியோ கிட்னி கோளாறோ இருதயத்தில் கோளாறோ மூல நோயோ இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள அந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இப்பொழுது ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது உங்கள் உடலில் சர்வ நோய்களையும் நீக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகின்றது. எல்லோரும் இந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.
நோய் நீக்கும் அரும்பெரும் சக்தி இப்போது நீங்கள் பெறுகின்றீர்கள்
1.உங்கள் உடலில் கரண்ட் பாய்வது போல் இருக்கும்
2.சர்க்கரைச் சத்தோ வாத நோயோ ஆஸ்த்மாவோ மூலநோயோ இருதய நோயோ இருந்தால்
3.அங்கெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தி மின்சாரம் போல் பாய்ந்து அந்த உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.
4.உங்கள் உடலில் எந்த வலியாக இருந்தாலும் குறையும்… வேதனைகள் அகலும்.
கேன்சர் டிபி போன்ற கடுமையான நோய்களும் குறைய தொடங்கும் அது உங்கள் உடலில் இருந்து கலைந்து கீழே இறங்குவதை நீங்கள் உணரலாம்.
எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் அதிலே மகரிஷிகளின் உணர்வுகள் படர்ந்து உடல் நலம் பெறும் உணர்ச்சிகள் இப்பொழுது தோன்றும்.
நீங்கள் சுவாசிக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கப்பட்டு உடலில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகள் கலைந்து சென்று அது விலகும்.
1.உடலில் நோய்கள் குறைந்து அருள் உணர்வுகள் பெருகும் சக்தி பெறுகின்றது
2.அகஸ்தியன் அறிந்த… தீமைகளை அகற்றிடும் அருள் உணர்வு உங்கள் உடல்களில் இப்போது படரும்.
சர்வ பிணிகளும் நீங்கும்… இருதயம் சீராக இயங்கும்… எந்த நோயாக இருப்பினும் அது மாறும். உடலில் இருக்கக்கூடிய சிக்கல்கள் மாறும். உடலில் நல்ல ஜீரண சக்தியும் கிடைக்கும்.
புத்திர பாக்கியம் பெற தியானிக்க வேண்டிய முறை:-
புத்திர பாக்கியம் வேண்டுவோர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.தன் உடலிலே புத்திர பாக்கியம் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
2.கணவருக்கு அது கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
3.மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் ஏங்கித் தியானியுங்கள்.
உங்களுக்குள் புத்திர பாக்கியம் பெறும் அருள் உணர்ச்சிகள் உங்கள் உடலில் உருவாவதைக் காணலாம்.
உங்கள் இரத்த நாளங்களில் புதுவிதமான உணர்ச்சிகள் தோன்றி
1.கருப்பைகளிலே கரு உருவாகும் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதும்
2.விந்துகளிலும் அந்த அருள் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
3.குழந்தைகள் உருவாகும் உணர்வின் அணுக்கள் உருப்பெறுவதை உங்கள் உடல்களில் உணரலாம்.
ஈஸ்வரபட்ட(ருடன்)ரின் நேரடித் தொடர்பு
மான் இனம் தனது குட்டிக்கு ஊட்டுகின்ற பாலானது அது ஊட்டுகின்ற செயலை… மாற்று குணம் பொருந்திய எதிரி விலங்கினங்களைக் கண்டுவிட்டால்… ஈர்ப்பின் அலை செயல் புரிந்திடும் விதமாக…
1.அந்த அலையானது மானின் சுவாசத்திலே பட்டவுடன்
2.பால் ஊட்டுகின்ற சுரப்பை சட்டென நிறுத்தித்
3.தன்னைக் காத்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றுவிடும்.
அதே போன்றது தான் நீங்கள் தியானத்தில் எடுக்கும் சக்தியும்… அதை உங்களுக்குக் கொடுக்கும் நிலையும்.
அதாவது… மகரிஷிகளின் பேரருள் பேரொளி சக்தி உங்களுக்குள் பாயப் பெற்றிடும் நிலையில்… அந்த மகான்களின் சப்த அலைகள் நுண் ஒலி காந்த அலைகளாகப் பரவ விட்டுச் சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் ஓட்ட கதியில்
1.ஈஸ்வரராய் அளிக்கப்படும் (உயிர் வழி சுவாசம்) சுரக்கும் அமுதமாகிய அருளாசி கொண்டு உரைக்கப் பெறும் அருள் உபதேசங்கள்
2.எண்ணத்தின் கூர்மை மாற்று அலையின் சிந்தனையில் சிறிது மோதியவுடன் (சந்தர்ப்பத்தில் தீமைகள் மோதும் போது)
3.காட்சியின் ஒளிப்பதிவு நிலைகள்… ஒலி அலைகளாக மாறு கொண்டிடும் நிகழ்விற்கே “சற்று தடங்கலும் காட்டி…”
4.இப்படியும் நிகழ்ந்தனவா…? என்ற அதிசயப் பொருளாக வினா தொடுத்தால் (ஞானத்தின் வழியில் அறியும் எண்ணம் கொண்டால்)
5.காட்சிப் புலனறிவு பதிவு பெற்ற ஒலி அலைகளை நேரிடையாக உணர்ந்து கொண்டிடும்
6.ஞான திருஷ்டி எனும் விழிப்பார்வை கொண்டு காலத்தின் நிகழ்வுவை எம்மால் உணர்த்தப்படும். (ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு).
எமது (ஈஸ்வரபட்டர்) சர்வ ஆக்ஞையில் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஞானச் செல்வங்களுக்காகக் (உங்களுக்காக) காரண காரிய செயல்முறைகள் இதிலே காட்டப்பட்டுள்ளது.
மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று ஏன் சொல்கிறோம்…?
நம் சூரியக் குடும்பத்தில் ஞானத்தில் பகுத்தறிவைப் பண்படுத்தும் மனிதத் தன்மை எப்படிச் செயல் கொள்கின்றதோ அதைப் போன்ற நிலை ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் உண்டு.
நம் பூமியில் ஞானமும் விஞ்ஞானமும் வளர்ந்துள்ளதைப் போன்று மற்ற சூரியக் குடும்பத்தில் நமக்கு மேல் வளர்த்த ஞானத்தின் அலை நிலையின் தொடர்பை நம் பூமியிலும் “ரிஷிச் சக்திகள்” தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளார்கள்.
தன்னைத் தான் உணரும் சக்தியால் தன் சக்தியைக் கொண்டு ரிஷிகளின் சக்தியுடன் நம் ஆத்மாவின் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.
ரிஷிகளின் சக்திக்கும் நம் சக்திக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் முறைதான் இந்தத் தியான முறை. ரிஷிகளின் சக்தி அனைத்தும் பால்வெளி மண்டலத்தில் (பரம்பொருளாக) படர்ந்துள்ள செயலில் எல்லோருக்கும் கிடைக்கும்படியாகத்தான் படரவிட்டுள்ளார்ககள்.
அத்தகைய மாமகரிஷிகள் தன் தன் இயக்கத்திற்கொப்ப… தன் வளர்ச்சிக்கொப்ப வலுவை வலு கூட்டிக் கொள்வதற்காக… தன் குணத்தை… மணத்தை… ஒளித் தன்மையில் நட்சத்திர ஒளியாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் எண்ணிலடங்காத நிலையில் இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சியில் சுழன்று கொண்டே உள்ளனர்.
அந்தச் சுழற்சியின் கதியின் இயக்கத்தைச் செயல்படுத்தக்கூடிய வளர்ச்சிக்கு அறிவின் ஞானத்தை எடுக்கவல்ல எண்ணம் கொண்ட மனிதர்களை எல்லாம் தன் வலுவின் தொடரில் ஈர்க்கின்றார்கள்.
1.அத்தகைய மெய் ஞான வித்து ஓங்கி வளரத்தான்
2.தெய்வ குணங்களும் தெய்வ சக்தியும் இன்றும் சூட்சம கதியில் செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.
3.மலர் விரிந்து மணம் பரப்பி எப்படிக் காற்று மண்டலத்தை இனிமையாக்குகின்றதோ
4.அதைப் போன்று இன்றும் ரிஷி சக்திகளின் செயல் செயல்பட்டுக் கொண்டே தான் உள்ளது. (அருள் மணங்களாக)
தெய்வ குணத்தையும் தெய்வ சக்தியையும் வளர்க்கக்கூடிய மெய் ஞானிகளின் சிந்தனையால் தன் அறிவின் வளர்ச்சியைச் சூட்சமத்தின் துணை கொண்டு மேலோங்கி வளர்த்ததின் தொடரில் தான் இன்றைய உலகில் இருக்கும் மருத்துவம் விஞ்ஞானம் எல்லாமே வளர்ந்தது.
இருந்தாலும் இன்று மக்கள் தொகையின் பெருக்கத்தைப் போன்றே மனித அறிவின் பெருக்கமும் “ரிஷிகளின் சிந்தனை சக்தியுடன் தொடர்பு கொண்டு…!” தன்னை உணர்ந்து ஆத்ம பலம் பெற்றிருந்தார்கள் என்றால் இந்தப் பூமியில் உள்ள மனிதனின் சிந்தனைகள் வேதனை பயம் கோபம் குரோதம் அச்சம் என்ற விபரீத வினையினால் வரக்கூடிய பல கொடிய வியாதிகளினாலும் கொடிய விபத்துக்களினால் வேதனைப்பட்டு இறக்கும் நிலையிலிருந்து தப்பியிருக்கலாம்.
1.ஏனென்றால் இன்று ரிஷிகளின் அலையைக் காட்டிலும்
2.வேதனை ஒலி கொண்ட ஆவி உலக ஆத்மாக்களின் அலைத் தொடர் அதிகமாக மனிதனைச் சாடிக் கொண்டிருக்கின்றது.
இதிலிருந்து விடுபடும் நிலையாக யாம் சொல்லக்கூடிய தியான முறையின் தொடர்பில் ரிஷிகள் வழி காட்டிய துருவ மகரிஷியையும் சப்தரிஷி மண்டலத்தை இயக்கும் துருவ நட்சத்திரத்தினையும் எண்ணி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தை புருவ மத்தியின் வழியாக எண்ணித் தியானம் எடுக்கும் பொழுது
1.நம் எண்ணத்தின் ஒலி செலுத்தக்கூடிய தொடரில்
2.அந்தத் தொடரின் அமில ஒலியின் உயிர் ஒளித் தொடர்பு ஜீவ உயிர் காந்த சுழற்சியில்
3.நம் ஆத்மாவில் ரிஷிகளின் தொடர்பலைகள் ஈர்க்கப்பட்டு
4.அவ்வாறு அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் தியானத்தின் சிந்தனை சக்தியால் (அதனால் தான் மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று சொல்கிறோம்)
5.இந்தப் பூமியின் பிடிப்பலையிலிருந்து நம் ஆத்மாவை ரிஷிகளின் சக்தியுடன் இணைத்து விடுகின்றோம்.
இப்படிப்பட்ட தியானத்தின் மூலம் ரிஷிகளின் தொடர்பில் நம் ஆத்மாவும் கலக்கும் பொழுது
1.அந்த இறைத் தன்மை கொண்டோரின் இறைக்கு நாம் உட்படுத்தப்பட்டு
2.நம் ஆத்மாவும் தெய்வ நிலை பெறும்.
3.பிறப்பின் பலனை ஒவ்வொரு உயிராத்மாவும் பெறும்.
செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?
நாம் எடுக்கும் எண்ணங்கள் கொண்டு அவை உணர்வாக ஆனாலும் உடலுக்குள் சென்று அணுவின் தன்மையாக ஆன பின்
1.சுவாசித்த உணர்வுக்குள் மோதல்கள் எப்படி…?
2.இந்த உடலில் மனக்கலக்கங்கள் சஞ்சலங்கள் வெறுப்புகள் வேதனைகள் எப்படி எல்லாம் வருகின்றது…?
வீட்டில் செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?
தசரதன் (கைகேயியின் துணையால்) மற்றவர்களை அடக்கித் தன் சாம்ராஜ்யத்தை வெற்றி பெறச் செய்தான். இருந்தாலும் அதே உணர்ச்சிகள் இங்கே “கூனி” கைகேயியிடம் என்ன சொல்கிறது…?
1.இராமனுக்குப் பட்டம் சூட்டி விட்டால்… நீ வேலைக்காரியாக ஆகிவிடுவாய் என்று “உள் மனது… உணர்த்துகிறது…!” என்பதை
2.அதாவது அப்படித் தோன்றும் உணர்வுகளை உருவமாக்கிக் காவியங்களைப் படைத்து
3.கருத்தினை மக்களைத் தெளிவாக்குவதற்காகக் கூறப்பட்ட இந்த உபாயத்தை
4.அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்துத் தெளித்து விட்டனர்
5.அந்த உண்மையின் மூலக்கூறை அறிந்தோர் இந்த உடல் இச்சைக்குத் தான் பெற முடிந்தது.
தான் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும்… மற்றவர்களை அடக்க வேண்டும்… என்ற உணர்வை இவரகள் எப்படிப் பெற்றானோ அதே உணர்ச்சி தான் தசரதச் சக்கரவர்த்திக்கும் வருகின்றது.
தன் மகனை நல்லவனை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆனால் தன் உடலுக்குள் மற்றவர்களை துன்புறுத்திய உணர்வுகள் இந்த உயிரோடு வளர்ந்து… பத்தாவது நிலை அடையும் மனிதனாகத் தான் இருக்கின்றது.
ஆனால் எல்லாம் இணைந்து வரப்படும் போது என்னாகின்றது…?
இரண்டு மனைவி இருக்கக்கூடிய வீட்டிலே சக்களத்திப் போராட்டம் வருகின்றது. ஆனால் உயிரோடு (உயிர் தான் தசரதச் சக்கரவர்த்தி) சேர்த்துப் பலவிதமான உணர்வுகள் வரும் பொழுது போராட்டம் எத்தனை வரும் எப்படி இருக்கும்…?
ஒரு கணவனுக்கு இரண்டு மனைவி இருந்தால் எப்படி இருக்கும்…? மூன்று மனைவி வைத்திருந்தால் எப்படி இருக்கும்…?
அது போல் தான்
1.உயிர் என்று நிலைகள் வரும் பொழுது இதனோடு சேர்த்து
2.அத்தனை சக்திகளும் (மனைவியாக) சேர்த்து….இந்த உடலையே இயக்குகின்றது
3.அதனதன் உணர்வுகள்… அது அது பெறுகின்றது… அதிலே எதன் உணர்வு வலு ஓங்குகிறதோ அதன் வழி தான் நடக்கின்றது.
இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றான் தசரதன்.
ஏனென்றால் இராமன் அன்பு கலந்தவன் அரவணைக்கக்கூடியவன் பண்பு கொண்டவன் பரிவானவன் அறவழியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பொறுப்புடையவன் பொறுமையுடையவன் சிந்தித்து செயல்படுபவன் என்ற நிலையில் இருப்பினும் இராமனுக்குப் பட்டம் சூட்டுவதைக் கைகேயி விரும்பவில்லை.
அவனுக்குப் பட்டம் கிடைத்தால் என் மகன் பரதன் வேலைக்காரன் ஆகிவிடுவான். அவன் வேலைக்காரன் ஆனால் நானும் வேலைக்காரியாக ஆகிவிடுவேன் என்ற உணர்வுகள் அங்கே தோன்றுகின்றது
தசரதனுடைய எண்ணம் என்ன…? அடுத்த இராஜ்யம் வளர்ந்து விட்டால் அது தன்னை அடக்கிவிடும். அதற்குப் பதில் அவனை வலு இழக்கச் செய்து விட்டால் தனக்கே அந்த சாம்ராஜ்யம் சொந்தமாகின்றது.
1.அவன் எண்ணிய இந்த உணர்வின் சக்தி மனைவியாக இப்படி வருகின்றது
2.சாம்ராஜ்யத்தை ஆள்வதற்காக தசரதன் அதைச் செய்தாலும்
3.இவனுக்குள் இருக்கும் சாம்ராஜ்யத்தை இதுவே வந்து ஆளத் தொடங்குகிறது.
மற்றவர்களைத் துன்புறுத்தும் உணர்வு கொண்டு அதை ரசித்தான். ஆனால் இவன் உடலுக்குள் இவனைத் துன்புறுத்தும் தனமையாக அந்த “மனப்போராட்டம்” வருகின்றது.
ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் உணர்வுகளால் உடலுக்குள் எத்தனை போர் முறைகள் வருகின்றது என்பதை இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது
அந்தக் காவியத்தின் கருத்தின்படி
1.ஒரு அணுவின் தன்மை எவ்வாறு செயல்படுகிறது…? என்பதை
2.பல உபதேசங்கள் வாயிலாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இணை சேர்த்து உங்களுக்கு விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
இது உங்களுக்குள் வளர்ந்தால் அதற்குண்டான ஞானம் கிடைக்கும். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியாக உருவாக்குகிறேன்.
பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்றால் இந்த உடலுக்குள் எத்தனை போர் முறைகள் வருகின்றது…? அதைச் சமாளிக்கக்கூடிய சக்தியும் அதற்குண்டான அருள் ஞானமும் உங்களுக்குத் தேவை.
அதற்குத் தான் இந்த உபதேசம்..!
எம்முடைய உபதேசங்களை வெறுமனே… கேட்பதையோ படிப்பதையோ விட “பதிவாக்க வேண்டியது மிக முக்கியம்”
தீமை என்றால் அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி கார்த்திகேயா என்றும் சேனாதிபதி… தீமைகளைத் தடுக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது.
தீமை புகாமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?
தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இந்நேரம் வரையிலும் பேசுகின்றேன் என்றால் அதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். தியானப் பயிற்சியாகவும் கொடுக்கின்றேன்.
இதை எல்லாம் பதிவாக்கிய பின் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்தால் அந்தச் சக்தி “எண்ணியவுடன் உங்களுக்குக் கிடைக்கும்…”
ஆனால் சிலர் என்ன செய்கின்றார்கள்…?
உபதேசம் கேட்கும் வரையிலும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் இங்கே நாம் சொன்ன உணர்வுகளைப் பதிவாக்காது விட்டு விடுகிறார்கள். (பதிவானால் தான் மீண்டும் நினைவுக்கு வரும்)
“தியானம்…” என்று சொன்னதும் நினைவுகள் எங்கெங்கோ போகிறது என்பார்கள். என் பையன் இப்படிச் செய்கின்றான்… தொழிலில் நஷ்டம் என்று பல எண்ணங்கள் வருகிறது. தியானத்தில் உட்கார்ந்தாலும் என்னால் முடியவில்லை என்பார்கள்.
ஏனென்றால் தியானத்தில் இருக்கும் பொழுது பாருங்கள்… மனக்குடைச்சல் வரும்… இல்லாத சங்கடம் எல்லாம் வரும்.
அதற்குத் தான் இங்கே உபதேசிக்கும் போது கூர்ந்து பதிவாக்குங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம். உபதேசத்தன் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை இழுப்பதற்காக வேண்டி இதைச் சொல்கின்றோம்.
இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானிக்க வேண்டும்.
இப்படித் தியானித்து நாம் பழகிக் கொண்டோமென்றால் பிறர் சாபமிடுகின்றார்கள் சண்டையிடுகிறார்கள் என்று பார்க்கும் போது அதை நுகராமல்
1.உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்தச் சக்திகளைக் கவர்ந்து
3.மீண்டும் கண்ணின் நினைவை உயிரிடம் புருவ மத்தியில் கொண்டு வந்து அதன் வழியாக இழுங்கள்.
அப்போது தீமை செய்வோர் உணர்வு நமக்குள் ஈர்க்காது… நம்மை இயக்காது…! இந்த மாதிரித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீய வினைகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி நோயாகாதபடி தடுக்க வேண்டும்.
மனிதனின் நினைவாற்றல் எப்படி இயக்குகிறது…? எப்படி இயங்குகிறது…? எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?
மனிதச் சரீர ஆற்றலின் உண்மையைச் சிந்தனையில் (விஞ்ஞான அறிவு கொண்டு) சீர்படுத்திப் பார்த்தோம் என்றால்… விஞ்ஞானத்தால் காந்த அமிலம் பூசப்பட்ட நாடாக்களில்… மின் ஒளியைக் கொண்டு ஒலி அதிர்வால் பேசுபவற்றை எப்படிப் பதிவு செய்து மீண்டும் இயக்கச் செய்கிறார்களோ அதைப் போன்று…
1.இச்சரீரத்தின் காந்த ஒலியானது நாம் எண்ணி எடுக்கும் செயல் கொண்டு
2.ஆத்மாவின் பதிவான நினைவின் ஓட்டம் ஏற்கும் செயல் நிகழ்வால் “மனிதனின் நினைவாற்றல் இருக்கின்றது…”
ஆனாலும்…
1.சுவாச கதியில் “கணம் கொண்டு” எடுக்கப்படும் எண்ண ஓட்டங்கள்தான்
2.பதிவின் நினைவில் மீண்டும் மீண்டும் நினைவு பெற “எண்ணத்தில் மோதுகிறது…”
ஜீவ உற்பத்தி முதற்கொண்டு ஒவ்வொரு செயலுக்குமே… காந்த ஒளி நிகழ்வால் செயல்படும் உண்மைகளை… இன்று விஞ்ஞான அறிவால் (எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்) உணர்ந்த நாம்…
1.எப்படி மனோதத்துவத்தால் அன்று மந்திரவாதிகள் மட்டும் உபயோகப்படுத்தினார்களோ அதே வழி முறை போன்று
2.ஓர் மனிதனின் எண்ணப் பதிவு நிலையை எடுக்கும் ஆற்றல் கொண்ட கருவியாக
3.விஞ்ஞான முறை கொண்டு செயலாகின்றது “விஞ்ஞான யுகமாக…”
1.ஒலி நாடாக்கள் பேசும் உண்மையை விஞ்ஞானம் வழிப்படுத்தியது.
2.“மெய்ஞானத்தில் விழிப்படையும் – மகோன்னத சக்தியை” நம் ஒவ்வொருவருக்குள்ளும் நாம் அறிதல் வேண்டும்.
அதாவது… மெய்ஞான ஒலியால் காந்த அமிலத்தைத் தியானத்தின் நிகழ்வால் ஆத்மாவில் பதிவுபடுத்தும் முறை கொண்டு… மனித சக்தியின் உயர்ந்த ஒளி காந்த சக்தியாக மனித ஆற்றலின் விழிப்பை விவரிக்க முடியாத அளவுக்கு உண்மையின் செயல்திறன்… “எண்ணத்தால் எடுக்கும் ஆத்ம தியானத்தால்” அறியவும் உணர்வும் முடியும்.
நமது வளர்ச்சிக்கு… சூட்சுமத்தின் ஒளியான ரிஷிகளின் எண்ணமுடன் ஒன்றிய தெய்வ குண எண்ணமாக… நம் எண்ணத்தைச் செலுத்தும் பக்குவ முறையைக் கைக்கொள்ள வேண்டும்.
பேரருள் பேரொளி சக்தி கொண்ட மகரிஷிகளின் எண்ண ஓட்ட உணர்வுடன்… இச்சரீர உணர்வுடன் கொண்ட எண்ணத்தைச் செலுத்தும் நம் மூச்சலையின் நிகழ்வால்… ஆத்மாவில் பதிவானது மகரிஷிகளின் ஒளி அலை அமிலங்கள்.
ஜீவகாந்த சரீரத்தில் (நமது உடலில்) சாந்த உணர்வு கொண்டு…
1.பேரருள் பேரொளி பெற்ற மகரிஷிகளின் அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று…
2.அந்த மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்.
அம்மகரிஷிகள் பெற்ற ஞானத் தொடர்பின் அலைகள் நம் உணர்வில் மோதும் பொழுது… காற்றலையில் பரவியுள்ள உன்னத தத்துவ ஞானத்தை ஒலியாகவும் ஒளிப்படங்களாகவும் (உணர்வுபூர்வமாக) நாம் காண முடியும்.
நிகழ்ந்த ஒளியும்… ஒளிப்படங்களும்… வலுக்கொண்ட செயல்கள் எவையுமே… ஜீவகாந்த சரீரத்தில் பதிவு செய்யப்பட்டு வெளிப்பட்ட நிலைகள் அழிவதில்லை.
பல வருடங்களுக்கு முன் சிறு பிராயத்தில் நமக்கேற்பட்ட சில நிகழ்வுகள்… அதாவது அந்த நேரத்தில் கனமாக எடுக்கப்பட்ட எண்ணங்களை… வயது முதிர்ந்த பிறகும் நம்மால் நினைவு கொண்டு எடுக்க முடிகிறது.
அதைப் போன்று
1.ஞானிகள் மகரிஷிகளின் ஒளி காந்த தத்துவங்களை… அவர்கள் உடலில் விளைய வைத்த பேராற்றல்களை…
2.விஞ்ஞானத்தின் பதிவால் ஒலியையும் ஒளிப்படங்களையும் காண முடிவது போல… காண முடியும்.
அதே சமயத்தில்… இந்த மனித ஆற்றலின் உண்மையில்… ஜீவகாந்த சரீரப் புலனில் எடுக்கும்… ஒலி காந்த மின் அலையின் செயல் கொண்டு வளர்க்கும் வழித்தொடருக்கு… ரிஷி சக்திகளின் ஒளி சக்தியின் எண்ணத்தால் (அவர்கள் எண்ணமும் நம் எண்ணமும் ஒன்றுபட வேண்டும்) ஆத்ம சக்தி வலுப்பெற சிவசக்தியின் (கணவன் மனவியாக) தொடர்பாக எடுக்கும் தியானத்தின் சூட்சுமத்தில்… பல ஆற்றல் மிக்க உண்மைகள் உண்டு
நான் ஓர் ஓடக்காரனப்பா…!
பிறப்பு வளர்ப்பு இறப்பு (எல்லாவற்றிலும்) எனும் உண்மைகளை உணர்ந்து… தம் ஆத்ம நிலையைக் காத்துக் கொள்ள… உள்ளபூர்வமாக… இதயத்தின் ஒளியாக…
1.யாம் சுட்டிக் காட்டிய தியானத்தின் வழித் தொடராக
2.பயணம் செய்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனரப்பா…!
ஆனாலும் பிறவி என்னும் மகா சமுத்திரத்தில் வாழ்க்கை என்னும் ஓடத்தில்… இக்கலியின் மக்கள் “மாக்களாக மாறிடும் நிலையை நீக்கிட”
1.அறிவு பூர்வமான ஆக்க செயல்களை உணர்த்தி
2.மாய தளைகளை அகற்றி
3.”விழிப்பாக உணர்ந்திடும்” – ஞானச் செல்வங்களை (உங்களை)
4.பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்லும் “யாம் (ஈஸ்வரபட்டர்) ஓர் ஓடக்காரன்…”
கால தேச வர்த்தமானம் எண்ணிடாதபடி… என் கடமையின் வினைச் செயலாக… இரவு பகல் “எந்த நேரமும் நான் காத்திருக்கின்றேன்…”
1.இரவிலோ… இன்னும் பேரருள் பிரகாசம் என்னும் ஜோதியைக் கையில் ஏந்தி
2.உங்கள் வாழ்க்கையின் பயனைக் காட்டிடவே சூட்சுமத்தில் செயல் கொள்கின்றேன்.
பயன் கொள்ளுங்களப்பா…!
“குரு வழியில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுதல் வேண்டும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைத் தான்
2.குரு வழியில் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏகமாக எண்ணி
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பிக் கொண்டே உள்ளோம்.
4.மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்
குரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது எல்லோரும் சேர்ந்து… தியானத்தின் மூலம் தவமிருந்து வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே உண்டு… அது உங்களுக்குக் கிடைக்கின்றது.
அது மிகவும் வலிமை மிக்க சக்தி…!
யாம் சொன்ன முறைப்படி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம்.
எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் இந்த முறைப்படித் தான் எண்ணி அதைச் செயல்படுத்த வேண்டும். ஆனால்…
1.நமது ஆசை நல்ல உணர்வின் தன்மை கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்.
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய இச்சையில் நாம் செயல்பட வேண்டும்
3.அதன் வழி ஏங்கித் தியானித்தால் உங்களுக்கு அது கிடைக்கும்.
ஆகவே எந்தத் திசையில் எங்கிருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் மிகவும் எளிதாக கிடைக்கும்.
1.அது வலிமைமிக்க சக்தியாக உங்களுக்குள் வரும்
2.உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய ஆசைகள் எல்லாம் “குரு வழியில்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதாக இருக்க வேண்டும். குரு துணை கொண்டு அதைத் தான் பரப்புகின்றோம்.
எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது நம் பூமி முழுவதும் அது படர்கின்றது
உலகின் எந்த மூலையிலிருந்து நீங்கள் எண்ணினாலும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைப் பெற முடியும் (வாக்காகக் கொடுக்கின்றேன் – ஞானகுரு)
2.ஏனென்றால் அவர் உணர்வுகளைப் பெற்றுத் தான் நான் வளர்ந்தது
3.அவர் உணர்வை எடுத்துத் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்…
4.அவர் இன்று ஒளியின் உடலாக இருக்கின்றார்… அவருடைய உணர்வை எளிதில் பெற முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வை எனக்குள் விளைய வைத்து அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்கும் கொடுக்கின்றேன்.
ஆகவே…
1.ஞானகுரு கூறிய வழிப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்றால்
3.இது தான் முறை… முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றோம்.
குரு காட்டிய உணர்வுகள் எனக்குள் விளைந்தாலும்… ஒளியின் உடலாக இருக்கும் அந்தக் குருவின் அருளை எளிதில் பெற முடியும்.
ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தில் அவர் உள்ளார்…! அவர் உடலுடன் இங்கே இருந்த காலத்தில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் ஆழமாகப் பதிவானது. அதை உங்கள் எல்லோருக்குள்ளும் பதிவு செய்து… ஒருக்கிணைந்து அந்த உணர்வின் தன்மை அலைகளாகப் பரப்பி வைத்திருப்பதனால் அதனை நீங்கள் எளிதில் பெற முடியும்.
சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் “துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்”
நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அது தான் நம்மை இயக்கிக் காட்டும்.
உதாரணமாக… தீமை என்று தெரிகின்றது… அப்போது அதை அகற்றப் பழக வேண்டும் அல்லவா…! அதாவது ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வைச் சேர்த்தால் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…! என்று தீமை உருவாகாதபடி தடுக்கப்படுகிறது.
ஆனால் தீமை என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்
1.இது உடல் இச்சை…! கௌரவப் பிரச்சினையாக மாறிவிடுகின்றது
2.கௌரவ பிரச்சனைகள் வரும் பொழுது உடல் பற்று வருகின்றது.
3.உடல் பற்று வரும் பொழுது தீமை என்ற நிலையே வருகின்றது
ஆக இந்த உடல் பற்று வரும் பொழுது சிவம்… இந்த உடலைக் காக்கத் தான் நம் எண்ணங்கள் வருகின்றது.
ஆனால் “ஓ..ம்” என்ற பிரணவத்தைச் சிவனுக்கே ஓதினான் தகப்பன் சாமி என்று சாஸ்திரங்கள் காட்டுகிறது.
1.தீமையை நீக்கும் அருள் உணர்வை ஜீவனாக்கினால் பிரணவம்
2.அது தான் தகப்பன்சாமி…! (உடல் சிவம் – ஆறாவது அறிவு முருகன்)
தீமையை நுகர்ந்து விட்டால் உடனே சங்கடப்படுகின்றோம்… சலிப்படைகின்றோம். அப்போது ஆறாவது அறிவு கொண்டு என்ன செய்ய வேண்டும்…?
1.சங்கடத்தை நீக்க வேண்டும் சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.
2.இருளை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் கார்த்திகேயா…! (கார்த்தி என்றால் வெளிச்சம்)
பல கோடிச் சரீரங்களில் எத்தனையோ தீமைகளிலிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று எண்ணி எடுத்துத் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.
மனித உடல் பெற்ற பின் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சை இந்த உடல் மலமாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை அறிகிறது.
உயிர் ஈசனாகின்றது… உடல் சிவமாகின்றது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்க வேண்டும் என்ற வினைகளைச் சேர்த்தது வினைக்கு நாயகனாக மனித உடலை உருவககியது (விநாயகா) மனித உடலை உருவாக்கிய பின் நஞ்சை மலமாக மாற்றுகின்றது.
அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது. சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.
இருந்தாலும்… உடல் பற்றின் தன்மை வரப்படும் போது
1.கௌரவக் குறைவாக என்னைப் பேசினான் என்ற உணர்வான பின்
2.அது “ஓ… ம்…” என்று நமக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது.
3.அவனுடைய தவறை நீக்குவதற்கு மாறாக அவனுடைய தவறை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்
அந்தத் தவறு நமக்குள் பிரணவமாகி விடுகின்றது… உடலுக்குள் வரும் பொழுது வேதனை வருகின்றது. வேதனை வரும் பொழுது சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது… சிந்தனை இழந்து கார உணர்ச்சிகள் அதிகமாகி எரிச்சலாகின்றது.
உதாரணமாக…
1.ஒரு கல்லுடன் கல் மோதினால் (உராய்ந்தால்) நெருப்பாகின்றது
2.அந்த இடத்திலே தொடும் பொழுது சுடுகின்றது.
அதே போன்றுதான் இந்த உணர்ச்சிகள் மோதலாகும் பொழுது அதற்குத் தகுந்த மாதிரி வேகங்கள் வருகின்றது. அப்பொழுது அதை மாற்ற முடிகின்றதா…? இல்லை…!
அத்தகைய கார உணர்ச்சிகளை மாற்றுவதற்குத் தான்
1.நம் குருநாதர் காட்டிய வழியிலே அவர் கொடுக்கக்கூடிய அரும்பெரும் சக்திகளை
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து நாம் பயன்படுத்திப் பழகுதல் வேண்டும்.
உயிரை நாம் உணர வேண்டியதன் அவசியம்
இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின் கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின் தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.
உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.
இஜ்ஜீவிதத்தில் அதாவது மனிதனாக உருப் பெற்ற நிலையில் உயிர் என்ற சூட்சம ஒளிச் சரீரத்தின் இயக்கத்தில் சுழலும் தன்மையில்
1.தன் எண்ணத்தின் உணர்வை
2.எந்தச் சுவையின் தொடரில் சுவைப்படுத்துகின்றோமோ
3.அதற்கொத்த செயலாக உயிரும் ஆத்மாவும் வலுத் தன்மை கொண்டு
4.இந்தப் பிறப்பின் தொடரிலிருந்து பிறவா நிலை பெற முடியும்.
5.உங்களால் முடியும்.. உங்களை நீங்கள் நம்புங்கள்…!
இந்தச் சரீர இயக்கத்தின் கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில் மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
(1.அதாவது வெளியிலிருந்து சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்)
இப்படிப்பட்ட மனித இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது…
1.எந்த உணர்வுக்கொப்ப வாழ் நாள் செல்கிறதோ
2.(வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல)
3.அதன் சுழற்சியில் சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.
இதிலிருந்து மனிதனில் மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்…?” என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம் “ரிஷித் தன்மை” பெற முடியும்.
நம் ஆத்மாவின் வலு “திடம் பெற வேண்டியது” மிகவும் முக்கியம்
பூமியின் சுழற்சியுடனே பல வார்ப்பில் வளர்ந்த நாம் நம்முடைய இந்த மனித வாழ்க்கையின் தொடரில்
1.தன் உயிராத்மாவின் வளர்ச்சியை வளர்க்காதபடி
2.உடலின் இயக்கத்துக்கு மட்டும் அடிமைப்பட்டு வாழ்ந்தால்
3.இந்தப் பூமியின் இயக்கச் சுழற்சியில் மட்டும் தான் சிக்கிக் கொண்டிருக்க முடியும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். ஏனென்றால் இந்தப் பூமியின் வளர்ச்சியில் வலுப் பெற்ற வளர்ச்சியே மனிதனின் நிலை தான். பூமியின் செயல்பாட்டிலேயே உயர்ந்த நிலை கொண்டதும் மனிதனின் நிலை தான்.
மனிதன் தன்னைத் தானே உணரும் ஞான ஒலியை… அதாவது அந்த “ஆத்மாவின் விழிப்பையும்…” அதன் மூலமாகப் பெறும் ஆத்ம ஒளியின் செயல்பாடு கொண்ட சக்தியினால் தான் சூட்சம இயக்கம் சுழல்கிறது.
1.கனம் கொண்ட கயிறைச் சுற்றி முறுக்கும் பொழுது “திடம்” பெற்று விடுகின்றது.
2.சில பொருள்களை வேக வைக்கும் பொழுது அதனுடைய “மணம்” வெளிப்படுகின்றது.
3.சில பொருள்கள் எரியும் பொழுது அதனுடைய மணமும் எண்ணமும் “ஆவியாக” புகை நிறத்தில் வெளிப்படுகின்றது.
அந்தந்தச் செயல்பாடுகளுக்கொப்ப அடுத்த நிலையின் மாற்றத்தில் (வேக வைத்தலோ அல்லது எரித்தலோ) திடமாகும் பொழுது
1.அதனுடைய வார்ப்பு நிலை
2.கயிறைத் திரித்தவுடன் முறுக்குவதைப் போன்று
3.கெட்டித் தன்மை ஏற்பட்டு விடுகின்றது.
பொருளை வேக வைக்கும் பொழுது ஆவி வெளிப்பட்டுப் பொருள் திடப்படுகின்றது. பொருளை எரிக்கும் பொழுது நீர்ச் சத்து வெளியேறி அந்தப் பொருள் பஸ்பமாகிச் சாம்பல் தான் திடமாகின்றது.
அதைப் போன்று இந்த ஆத்மாவின் இயக்கம்…
1.சரீரத்தின் ஓட்டத்தில் வாழும் காலத்தில்
2.ஆத்மாவின் வலு வளர்ச்சியைத் திடமாக்கிக் கொள்ள வேண்டும்
3.ஏனென்றால் ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்.
மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான ஞான நிலை எய்திட அந்த மெய்யை அறியும் மெய் அறிவிற்கு முலாமாக்கும் நிலையாக (சக்தியைச் சேமிக்கும்) ஆத்மாவின் முதிர்வு நிலையை “விழிப்பு…” நிலையாக்கினால் தான் முடியும்.,
அத்தகையை ஆத்ம விழிப்பு நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்
1.அந்த ஆத்மாண்டவனை..
2.நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி
3.மெய் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும் சகல ரிஷிகளின் நேரடி அலைத் தொடர்பில்
4.உயிர் வழிச் சுவாசமாக ஈர்த்தெடுக்கும் பேரருள் பேரொளி வளர்ப்பினால் தான் முடியும்.
திடீரென்று இருதய அடைப்பு (அட்டாக்) ஏன் வருகிறது…?
நாம் சாப்பிடுகின்ற ஆகாரத்திற்குள் நல்ல வாசனையான பொருளைப் போட்டு. ருசியாகத் தான் சாப்பிடுவோம். சத்துள்ளதை எல்லாம் அதிலே போடுகின்றோம். ஆனால் அதற்குள் மறைந்து இருக்கும் அந்த விஷமான சத்தை நம் உயிர் என்ன செய்கிறது…?
அந்த நஞ்சை எல்லாம் பிரித்து மலமாகக் கொண்டு வருகின்றது நம் உடல். அதாவது உணவிற்குள் மறைந்திருக்கும் நஞ்சைப் பிரிக்கக்கூடிய சக்தியாக நமது ஆறாவது அறிவு இருக்கிறது.
நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று இப்படி இருக்கப்படும்போது அதை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?
உதாரணமாக… வியாபாரத்தில் நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை… ஏமாற்றுகின்றான்…! என்று தெரிகின்றது. இது கார்த்திகேயா.
ஏமாற்றுகிறான் என்று சொன்னவுடனே நாம் வேதனைப்படுகின்றோம். நம் தலை சுத்துகின்றது. கொடுத்தேனே என்னை ஏமாற்றுகின்றானே…! என்று இதுவும் தெரிகின்றது கார்த்திகேயா.
ஏமாற்றுகின்றான் என்று சொல்லும்போது நாம் இன்னொன்று என்ன நினைக்கின்றோம்…? அந்த நேரத்தில் இன்னொருவருக்கு நாம் காசு கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம்.
ஏனென்றால் கடனுக்கு வாங்கித் தான் நாமும் தொழில் செய்கிறோம். பொருள் வாங்கியவரிடம் பணம் கொடுக்கின்றேன் என்று சொல்லிவிட்டுத் தான் நாமும் வாங்குகின்றோம். அந்த நாணயத்தைச் செலுத்த வேண்டும்.
ஆனால் பொருளை விற்கும் போது நம்மிடம் வாங்கியவன் பணத்தைக் கொடுத்தால் தான் நாம் வாங்கியவருக்குக் கொடுக்க முடியும் என்ற நிலையில் நாமும் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது…?
அதை நினைத்தாலே கோபம் வரும்… கண்கள் சிவக்கும்…! நரம்பு மண்டலமெல்லாம் விடைக்கும். இப்படி ஆகின்றதே என்று அந்த நேரத்தில் வேதனையும் விஷமும் சேர்த்தால் எப்படி இருக்கும்…?
இந்த உணர்வுகள் எல்லாம் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலிலே கை கால் குடைச்சலை உண்டாக்கும். சில பேருக்கு மூட்டு மூட்டிற்கு வலி இருக்கிறது… என்று சொல்வார்கள்.
அதாவது “சரவாங்கி நோயாகி விட்டால் மூட்டு மூட்டுக்கு வலி வந்துவிடும். அதே சமயத்தில் எவ்வளவு திடமாக இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வு வரப்படும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால் இந்த கோபமும் வேதனையாக ஆன பிற்பாடு நமது கவன நரம்பில் சென்று அங்கே இந்த அழுத்தம் ஆன பிற்பாடு என்ன செய்கின்றது…?
1.பலூன் மாதிரி உப்பிவிடும்
2.பலூன் மாதிரி உப்பிவிட்டது என்றால் நம் இருதயத்தைச் சரியாக இயக்க முடியாது
3.மூச்சு இழுத்தது கீழே இறங்காமல் நிற்கும்.
4.அப்படியே ஹார்ட் அட்டாக் ஆகிறது… உடனே இறந்தவர்களும் இருக்கின்றார்கள்.
அதே சமயத்தில் இரத்தம் போகும் நுண்ணிய நாளங்கள் வெடித்து விட்டதென்றால் அப்படியே சுத்தமாவே நின்றுவிடும்.
1.நாம் நினைக்கின்றோம் சாதரணமான நிலைகள் என்று….!
2.ஆனால் நாம் பார்க்கின்ற உணர்வெல்லாம் நம் உடலிலே இப்படிச் செய்து கொண்டே இருக்கும்
அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?
நாம் சம்பாரிக்க வேண்டும் என்று நினைத்தோம் தொழிலில் லாபம் வரும் என்று நினைத்தோம். நாம் ஏமாற்றவில்லை…! இங்கே வாங்கிக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கடன் வாங்கினோம்.
கொஞ்சப் பணம் இருந்தாலும் கடனுக்கு வாங்கி வியாபாரம் செய்து இதிலே லாபம் வரும் என்று தான் ஆசையுடன் இருக்கின்றோம். கடையில் நம் வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்றும் கார்த்திகேயா அது நமக்குத் தெரிகின்றது.
ஆனால் பணம் திரும்ப வரவில்லை என்று தெரிகின்றது. நாம் பொருள் வாங்கியவர்கள் நம்மிடம் பணத்தைக் கேட்பார்களே…? அவர்களுக்கு என்ன சொல்வது…? என்கிற பொழுது நாம் மயங்கி விடுகின்றோம்.
அந்த மாதிரி நேரத்தில் யாம் (ஞானகுரு) உங்களுக்கு உபதேசித்த அருள் வழிப்படி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்யுங்கள்.
1.கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2,அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
4.அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும்
5.நமக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.
இவ்வாறு செய்தால் பணம் வந்து சேரும். வேதனையோ கோபமோ வராது… நோயாகவும் மாற்றாது.
நமக்குள் மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க வேண்டும்
ஜீவன்கள் வாழ இந்தப் பூமியின் ஜீவ நாடியாக நீர் உள்ளதற்குப் பூமியில் எப்பொழுதுமே மழை பெய்து கொண்டிருப்பதில்லை. மேகங்கள் கருத்து இடியும் மின்னலும் தோன்றுகிறது. அப்பொழுது பல இடங்களில் பெய்யக்கூடிய அந்த மழை வெள்ளமாகின்றது.
வெள்ளமே ஆறாகக் கரை புரண்டு ஓடி நீர் நிலைகள் பூமியில் நிறைகிறது. அந்த நீரைக் கொண்டு தான் பல ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. ஒரு இடத்தில் பெய்யும் மழை ஆறாகும் பொழுது பல இடங்களுக்குச் செல்கிறது.
இதே நிலை போல் மீண்டும் மீண்டும் அந்தந்த இடங்களுக்கொப்ப ஏற்படக்கூடிய நிலைகளைக் கொண்டு ஜீவராசிகளின் நிலையும் தாவர இனங்களின் வளர்ச்சியின் பயனாகக் கனியும் பூக்களும் (புஷ்பங்களும்) வளர்கிறது.
1.கனியும் பூக்களும் வருவதைப் போன்று தான்
2.மனித உணர்வில் மெய் ஒலி பெற.. மெய் ஒளி பெற… மெய் ஞானமாக்க..
3.பல நிலைகளில் நம் உணர்வின் எண்ணமுடன் மோதிடும் இன்னல்கள் ஏற்படுத்தும் காலங்களை
4.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த ஜீவித உணர்வில் எடுக்கும் ஒலி கொண்டு தான் ஒளியாக மாறும்…!
5.அதாவது இடி மின்னலைப் போன்றே ஒலி ஒளி செயல் ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படக்கூடிய எண்ணத்தின் மோதலை இடி மின்னலைப் போன்று உணர்வின் சமைப்பாக நாம் மாற்றும் பொழுது
1.நீரான பெருக்கம் மழையாகி ஜீவன்களை வளர்க்கப் பூமிக்கு வலு ஏற்படுகின்றதோ
2.அதைப் போன்று எண்ணத்தில் எதிர்படும் பல மாற்றங்களையும் உணர்வில் எடுத்து
3.நம் உணர்வுடன் எந்த எண்ணத்தின் மாற்று நிலைகள் மோதினாலும்
4.மேகத்தின் கருமை கொண்டு இடி மின்னல் வெடித்து மழை வருவதைப் போன்று
5.நாம் போகும் மார்க்கத்தில் ஞானத்தின் மெய் ஞானம் அறிய…
6.மோதிடும் எதிர் தன்மைகளை உணர்வின் எண்ணத்தால் மாற்றி உயர்ந்த ஞானத்தின் ஒலியாக நாம் எண்ணினால்தான்
7.அந்த ஒலியே (எந்த ஒலியாக இருந்தாலும்) ஒளியாகும்… நம் ஆத்மா பேரொளியாக ஆகும்.
மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க… மெய் ஞானிகள் அன்று
1.வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதிய “எண்ணத்தின் ஓட்டத்தின் கதியைக் கொண்டுதான்…”
2.எண்ணத்தால் எதிர்படும் எதிர் நிலைகளை ஞானத்தின் பகுத்தறிவால் உணர்ந்து
3.மெய் ஒலி மெய் ஒளி பெற்று… மெய் ஞானியாகும் குணங்களைத் தன் ஆத்ம ஞானத்தால் வளர்த்து
4.ஆத்ம சக்தியின் சூட்சமத்தை… ஆதிசக்தியின் ஒளி சக்தியாக..
5.அகிலத்தில் படர்ந்துள்ள பரமாத்மாவின் பரம்பொருளை
6.”தனக்குள்ளேயே…!” மெய் ஞானிகள் அன்று கண்டார்கள்.
மெய் ஞானத்தின் ஒலி கொண்டு… ஒளி பாய்ச்சும் ஏக்கத்தில்… மெய் ஞானி பெற்றான் “ரிஷிச் சக்தி…!”
அந்த ரிஷிச் சக்தியின் செயல் நிலை தன் தன் கதியின் சுழற்சிக்குச் செயலாக்குவதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைந்துள்ள ஞானத்தைக் கொண்டு
2.வலுவை வளர்க்க வழியமைக்கும் நிலையைத்தான் இங்கே உணர்த்துகின்றேன் (ஈஸ்வரபட்டர்).
யாம் உபதேசிப்பது வெறும் சொல் அல்ல… அகஸ்தியனின் பேராற்றல் அது…!
இன்று யாகத்தை எப்படி நடத்துகிறார்கள்….?
நெருப்பை உருவாக்கி அதில் பல புஷ்பங்களையும் நறுமணங்களையும் மணங்களையும் போட்டு… மந்திரத்தைச் சொல்லி இப்படித்தான் யாகத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் உண்மையான யாகம் எது…?
நமது உயிர் ஒரு நெருப்பு. நாம் எடுக்கக்கூடிய (சுவாசிப்பது) உணர்வுகள் புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே மோதுகிறது. மோதிய பின் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகிறது.
ஒவ்வொரு குணங்களையும் பற்றி அதனின் இயக்க நிலைகளைத் இந்த உபதேசத்தின் வாயிலாகத் தெளிவாகச் சொல்கின்றோம். அதற்குள் தீமை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளைக் கலக்கும்படி சொல்கிறோம்.
அப்போது தீமையை நீக்கும் அந்த மெய் ஞானியின் உணர்வுகள் யாகத்தீயிலே… அதாவது உங்கள் உயிரிலே படுகின்றது.
அந்த அருள் உணர்வை இயக்கச் சக்தியாக மாற்ற வேண்டும்… துருவ நட்சத்திரத்திந் உணர்வு உங்கள் உடலில் படரப்படும் பொழுது ஒளியின் அறிவாக… உணர்வின் ஞானமாக வளர்கின்றது
ஆக… இப்பொழுது அந்த உண்மையான யாகத்தை நாம் அனைவரும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
எம்முடைய அருள் உபதேசத்தைக் கேட்டு உங்களுக்குள் அதை வளர்த்து நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் வெளியிலே பரவும் பொழுது எல்லோருக்கும் நல்லதாகிறது.
உதாரணமாக என் உடலில் மேல் வலி தலைவலி கை வலி கால் வலி இடுப்பு வலி என்று சொல்வார்கள். இடுப்பு வலி இருக்கும் போது இங்கே குருநாதர் சொல்வதை “உட்கார்ந்து கொண்டு நான் எப்படிக் கேட்பது…? நான் எப்படி அமர்ந்து தியானம் செய்வது…?” என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் அவர்கள் எல்லாம் இப்பொழுது இந்த உபதேசத்தைக் கேட்க ஆரம்பித்தால்… நேரம் ஆக ஆக அந்த வலி எல்லாம் காணாமலே போய்விடும்… உட்கார்ந்து தாரளமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
வலியே தெரியாதபடி இருக்கும். அடுத்தது ஒன்றுமே இல்லை என்று சொல்வார்கள்.
ஆனாலும் ஏற்கனவே இடுப்பு வலியால் வேதனைப்பட்டுத் தனக்குள் பதிவான உணர்வுகள் என்ன செய்யும்…? “அந்த ஞாபகம்” வந்தவுடனே என்னிடம் (ஞானகுரு) வந்து இடுப்பு வலிக்கின்றது என்று தான் மீண்டும் கேட்பார்கள்.
முதலில் வரும்போது வலி இருந்தது… உபதேசம் கேட்கும் பொழுது இடுப்பு வலி இல்லையே… ஆகையினால் இப்பொழுது இல்லை அல்லவா…! என்று நான் திருப்பிச் சொன்னால் ஏற்கனவே பதிவான நினைவோடு தான் மீண்டும் கேட்கின்றார்கள்.
அது போல் ஒரு சிலருக்குக் கை கால் குடைச்சல் இருக்கும். இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட பின்… அவர்கள் உடலில் இருக்கும் அந்தப் போர் முறை மாறுகின்றது… கலக்கங்கள் நீங்குகின்றது.
மகரிஷிகள் உணர்வுகளைச் சுவாசித்த பின்… தீமைகளை அது நீக்குகின்றது. வலி நீங்கி… உங்கள் உடல் வெடுக்கென்று “சொடக்கு எடுத்தது போன்று…” இலகுவாக இருக்கும்.
நீங்கள் கதைப் புத்தகம் படிக்கின்றீர்கள்… அல்லது சினிமா பார்க்கின்றீர்கள் என்றால் ஊங்கள் உடல் ஏதாவது நெளிகிறதா…? கையையோ காலையோ நெளித்து அசைக்கின்றோமா…? இல்லை. கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோம்… கவனிக்கின்றோம். இடுப்பு வலி தலைவலி எதையுமே நினைப்பதில்லை… கால் வலியைக் கூட நினைப்பதில்லை.
அது போல் தான் எம்முடைய உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்கக் கேட்க இருதயத்தில் படபடப்பு இருந்தாலும் கூட துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தச் செலுத்த… அதை நீக்கி இதயத்தை வலுவாக்குகின்றது…. வேதனை குறைகிறது.
ஏனென்றால் நான் வெறும் சொல்லாக உபதேசிக்கவில்லை. அகஸ்தியன் பெற்ற அருள் ஆற்றலை அவன் கண்ட… அவன் பெற்ற… அவன் வளர்த்துக் கொண்ட பேராற்றல்களை… செவி வழி கூடி இந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் உந்தச் செய்து அதை நுகர வைக்கின்றோம்.
நுகரும் போது அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வெல்லாம் உங்கள் இரத்தங்களிலே கலந்து அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகிறது. தீமைகளை நீக்கக்கூடிய சக்தி உங்கள் உடலில் அது எப்படியும் ஊடுருவ வேண்டும்… நீங்கள் நலம் பெற வேண்டும் என்பதற்குத்தான் இப்படிச் செய்கிறேன்.
வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்தால் தன்னாலே வேதனை வருகிறது அல்லவா. அடுத்து இரவிலே கெட்ட கனவு வருகிறது…! மேல் வலிக்கிறது… உடம்பை அமுக்குகிறது… வயிறு வலிக்கின்றது… கண் வலிக்கின்றது எல்லாமே வரும்.
காரணம்… நாம் நுகர்ந்த அந்த வேதனைப்பட்ட உணர்வு ஆகாரத்துடன் கலந்த பின் அதற்குத்தக்க உடலுக்குள் சென்று உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கும் அதற்கும் எதிர்மறையாகி ஒன்றுக்கொன்று போராகிறது.
நுரையீரலுக்குச் சென்றால் வலி கல்லீரலுக்குச் சென்றால் வலி இதயத்துக்குச் செல்லும் பொழுது வலி… என்று இப்படி அந்தந்த உறுப்புகளுக்குச் செல்லும் பொழுது போராட்டமாகி… எதிர்மறையான உணர்வின் இயக்கங்களாக வலியாக வேதனைப்படும்படி செய்கின்றது.
இரத்தம் செல்லும் இடமெல்லாம் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு போர் நடந்து கொண்டு இருக்கின்றது.
இதைப் போன்ற நிலையிலிருந்து மீள்வதற்குத் தான் அன்று அகஸ்தியன் பெற்ற உணர்வை உங்கள் செவிகளிலே கேட்கும்படி செய்து… கண்ணின் நினைவாற்றலுக்குக் கொண்டு வரச் செய்து… அதை நுகரும்படி மூக்கின் வழியாகச் சுவாசிக்கும்படி செய்து… உயிர் வழி இந்த உணர்ச்சிகளை உடலுக்குள் பரப்பும்படியாகச் செய்து… இந்த உபதேசத்தின் உணர்வுகளை உமிழ் நீராக உங்கள் ஆகாரத்துடன் கலக்கும்படி செய்து… அதை நல்ல இரத்தமாக மாற்றும்படி செய்து… இரத்தத்தில் கலந்த பின் தீமைகளை நீக்கும்படியாக… உங்கள் தீமைகளைப் போக்கும் அரும்பெரும் சக்தியாகக் கிடைக்கச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).
அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்…! நான் சும்மா வேடிக்கையாகச் சொல்லவில்லை… எல்லாம் தெரிந்து கொண்டேன் என்று சொல்ல வரவில்லை.
காரணம்… நமக்குள் எத்தனையோ விஷங்கள் இருக்கிறது. இதை ஒவ்வொரு நிமிடமும் மாற்றி எடுத்துக் கொண்டு வந்தால் அந்த விஷமே வலுவாகி உயர்ந்த சக்திகளைப் பெற (சரியான) வழியாகும்.
பாம்பிற்கு “விஷம் எப்படி வலுவாகிறதோ” இதைப் போன்று விஷத்திற்குள் மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாகச் சேர்க்கப்படும் போது… நமக்குள் வீரிய சக்தியாகக் கிடைக்கின்றது… அதை நீங்கள் பெற முடியும்.
ஏனென்றால் குருநாதர் எனக்குக் கொடுத்ததை உங்களுக்குத் தொட்டுத் தொட்டுக் கொடுக்கின்றோம். அடுத்து அடுத்து வரும் போது ஒவ்வொரு நிலையிலும் நல்லதை உருவாக்குவதற்கு… ஞானத்தின் வழியில் வளர்வதற்கு இது உதவும்.
உங்கள் உயிர் கடவுள்… அவனால் உருவாக்கப்பட்ட உங்கள் உடல் ஆலயம்… அதில் அசுத்தங்கள் சேராது அந்தக் கோயிலை சுத்தப்படுத்த வேண்டும் என்ற சேவையாக… குரு சொன்ன நிலைகளைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன்.
ஆகவே நீங்கள் எல்லாம் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும்…!
நம்மைச் சித்தனாக்கும் “சிந்தனா சக்தி”
“ஒருமையுள் ஆமை போல் ஒன்றடக்கல்…” என்ற வள்ளுவச் சித்தனாரின் வேதம் உரைக்கும் பொருளின் உண்மை என்ன…?
1.பஞ்சேந்திரியங்கள் எனச் சொல்லப்படும் மெய் கண் மூக்கு செவி வாயினால்
2.உடல் இயக்கும் எண்ணத்தின் வழியாகச் செயல்படும் இந்த உறுப்புகளையா…?
3.அல்லது காற்று நூல் உரைத்த பஞ்சேந்திரியங்களின் உட்செயல் காட்டும் பஞ்சபூதங்களையா…?
அதாவது அடக்கப்பட வேண்டியது ஐம்புலன்களையா… அல்லது அவைகளை இயக்கும் காற்றையா…? (மூக்கு வழி புகும் காற்று)
குதிரையைச் செலுத்துபவன் அதற்குக் கண் முகப் படலமிட்டு… அதற்கு மேல் கடிவாளமிட்டு… தான் அமர்ந்து செல்வதற்காக வேண்டிய சேணத்தையும் இட்டு… இத்தனை அமைப்புகளுக்கும் பிறகு
1.எங்கே செல்ல வேண்டும்…? என்று உதித்திடும் எண்ணத்திற்கொப்ப
2.கடிவாளத்தின் தூண்டுதலை உணர்ந்து… நேர் பாதையாகத் தன் வழி உணர்ந்து செல்லுதலுக்கொப்ப
3.மனித சரீரத்தில் செயல்படும் பஞ்சபூதங்களின் செயலையே
4.உயர்ந்த நன்மார்க்க சிந்தனையாக… ஆத்ம பலம் பெற வேண்டும் என்ற சிந்தனையாக
5.சித்தின் நலம் பெற விளையும் சிவசக்தி தத்துவ சாரமாக…
6.(தன்) மன எண்ணத்தின் இலயிப்பு விளங்கிடல் வேண்டும்.
அதுவே சித்தனாக ஆகும் சீரிய வழியாகும்…!
அப்படி அல்லாதபடி… பஞ்சபூத புரவிகள் இயங்கிடும் இயக்கம்… செயலுறும் செயலில்… “மன எண்ணத்தின் எழுச்சி சிந்தனையை மாற்றிவிடும் கருத்தாக இருந்து விட்டால்…”
1.அப்புரவிகளின் வலு கட்டுக்கடங்காத செயல் நிலையாக
2.பஞ்சபூதங்களாய் வழி நடத்தும் “உயிரான்ம சக்தியின் உயர் நோக்க செயல்” என்ன ஆவது…?
ஆகவே…
1.சிந்தனை சக்தியின் கூர் பார்க்க… (பார்த்து)
2.சிந்திப்பின் அவலங்கள் நீக்கப்பட்டு…
3.தர்மத்தின் செயலுறும் வழியில்… சத்தியம் என்ற மெய்ப்பொருளை உணர வைத்து (தனக்குத் தானே உணர்ந்து)
4.அதிலே உவகை மகிழ்ச்சி தரும் பேரின்ப நிலையை அனுபவித்தலே சித்தின் நிலையப்பா…!
தாய் தந்தையரிடம் தினமும் ஆசீர்வாதம் (நல்ல வாக்குகள்) வாங்கும் பழக்கம் நம்மிடம் இருக்கின்றதா…?
நாம் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்கச் சொல்கிறோம்…!
ஆனால் திடீரென்று கேட்பார்கள்… என் அம்மா என்னைச் சும்மா தினமும் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா எப்படி எப்படியோ செய்து என்னை என்னமோ என்னைச் சொல்கிறது…! என்று இப்படியெல்லாம் பேசுவார்கள்.
தாயைக் கடவுளாக மதிக்கச் சொல்கிறாயே… எங்கள் அம்மாவுக்காக வேண்டச் சொல்கிறாயா…? என்றெல்லாம் இப்போது சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.
ஆனால் நாம் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது தாய் எத்தனை அவஸ்தைப்பட்டிருக்கும்…? அது நமக்குத் தெரிகின்றது.
இப்பொழுது நாம் பார்க்கின்றோம். கர்ப்பமாக இருக்கின்ற தாய் எத்தனை அவஸ்தைகள் படுகின்றார்கள்… எத்தனை வேதனைப்படுகின்றார்கள்… என்று.
அன்னை தந்தை நமக்காக வேண்டி நம்மை வளர்த்திட எத்தனையோ வேதனைகளையும் சிரமத்தையும் அனுபவித்தார்கள். அது அனைத்தும் அவர்கள் உடலில் தீய வினைகளாக இருக்கும்.
அது அனைத்தையும் நீக்க…
1.மகரிஷிகளின் அருள்சக்தி என் அன்னை தந்தை பெற வேண்டும்.
2.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைய வேண்டும்.
3.மகரிஷிகளின் அருளுணர்வு என் அன்னை தந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.என்னை வளர்த்திட்ட என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட… நான் பார்க்க வேண்டும்
5.அந்தப் பேரானந்த பெருநிலையான நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று
6,இதை வினையாக ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டும்.
இப்படித் தான் அம்மா அப்பாவை வணங்கச் சொல்லி சொல்கின்றார்கள். அதை யாரும் நினைக்கவில்லையே…!
தன் பிள்ளை கருவில் இருக்கப்படும்போது எந்த நிலையை அந்தத் தாய் செய்ய வேண்டும்…?
கருவில் வளரப்படும்போதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று தாய் எண்ணுதல் வேண்டும்.
அதே போல் கர்ப்பமான அந்தத் தாயைப் பார்ப்பவர்களும் இதை எண்ணி அந்தக் கருவில் வளரும் சிசு
1.இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.உலகையே காத்திடும் உணர்வுகள் அதிலே விளைய வேண்டும் என்று
3.அந்த உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்றும்
4.அந்தக் கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு இந்த அருள் சக்திகள் எல்லாம் வினையாகச் சேர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.
அதே தாய் உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வு பெற வேண்டும் என்று அதை எண்ணும்போது இந்த உணர்வுகள் அனைத்தும் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.
பிறக்கும் குழந்தை ஞானக் குழந்தையாகப் பிறக்கும். அனைவரும் போற்றும்படியாக ஞானவானாக வளரும். இப்படித்தான் அன்று ஞானிகள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.
நாம் இதைச் செய்கின்றோமா…?
சர்வத்தையும் அமுதமாக்கிடும் திறன்
1.வாழ்க்கையின் எல்லா நேரங்களும் நல்ல நேரம் தான்
2.நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது இல்லையப்பா…!
3.விஷ அமில குணங்களையே (துன்பங்களையும் இன்னல்களையும்) அமுதமாக்கிடும் திறன் நாம் செய்யும் தியானத்திலேயே கிடைக்குமப்பா.
நம்முடைய எண்ணத்திலும் சுவாசத்திலும் மாற்றம் கொண்டு விடக் கூடாது…! என்று கூறுவதெல்லாம்
1.விஷத்தின் அமிலத் தன்மையில் ஒலி பிறப்பதைப் போல் (ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது)
2.நம் மீது மோதும் அனைத்திலுமே நம் உயிராத்மா வலுவான சக்தியைப் பெறுவதற்குண்டான
3.அத்தகைய செயற்பாடுகள் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.
நவக் கோள்களின் விஷத்தையே “நவபாஷாணச் சிலையாக” முருகனின் சிலையாக உருவாக்கியவர் போகர். ஜோதி நிலை பெறுவதற்காக
1.தன் எண்ணத்தின் தன்மையை ஞானவேல் என்ற ஆறாவது அறிவை உயர்த்தி
2.வான இயல் சக்திகளைப் புவியியலில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெற்றிட 5300 ஆண்டுகளுக்கு முன்பே வழி காட்டினார் அந்தப் போகமாமகரிஷி.
அதே தத்துவத்தை… அதாவது நவக் கோள்களின் சக்தியை தியான வலு ஈர்ப்பு கொண்டு
1.ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவின் முலாம் பிரகாசித்துச் சக்தி பெறுவதற்காக
2.நீல வண்ண இராமனாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.
3.அனைத்துமே ஆத்ம வலு பெற்றிடும் செயல் முறைகள் தான்.
நாம் சுட்டிக் காட்டும் தியான வழிகளில் உயர் ஞான சிந்தனை வசம் நிலைப்போர் ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவை வளர்ச்சி கொண்டதாக ஆக்கிட
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை
2.நவஜோதிகளாக உங்கள் உயிரான ஆத்ம ஜோதியில் கலக்கச் செய்யுங்கள்.
அந்த ஆதிசக்தியில் (இயற்கை) ஒன்றிட வேண்டும் என்று எண்ணம் கொண்டு உயர்ந்திட வேண்டும் என்று எண்ணுவோர் அனைவருக்கும் எமது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.
ஞானிகள் வழியில் சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்
மனித ஆத்மா ஒன்றுக்குத் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல அமில நிலைகளில் தனக்குகந்த அமில சக்தியை ஈர்க்கும் பக்குவ நிலை பெறலாம் “தாவர நிலையைப் போல…!”
மற்ற ஜீவ ஜெந்துக்களின் நிலையில் இத்தகைய சக்திநிலை இல்லை. மனித ஆத்மாவில் அது நிறைந்துள்ளது.
ஆனால் சாதாரண வாழ்க்கையில் பார்த்தும் கேட்டும் சுவாசத்தில் உணர்ந்தும் பேசியும் வரும் நாம்… “நமக்குகந்த சக்தியை உணராமல் செயல் கொள்கின்றோம்…”
இயந்திரத்தின் துணையுடன் சில கருவிகளை “அதற்குகந்த அமிலத்தைச் செலுத்தி…” ஒளிப்படங்களைப் பிம்பப்படுத்திக் காண்கின்றோம்.
1.அந்த அமில சக்தியையே நம் உணர்வுடன் ஈர்த்து
2.இக்காற்றினில் கலந்துள்ள அச்சக்தியை ஒருநிலைப்படுத்தி
3.எங்குள்ள நிலையையும் உள்ள நிலையிலேயே நாம் கண்டிடலாகாதா…? என்றுணரல் வேண்டும்.
இவ்வுடல் என்னும் கோளத்திற்குகந்த காந்த சக்தியினால்… காற்றில் கலந்துள்ள எந்த அமில சக்தியையும்.. ஒலி ஒளி இவற்றின் சக்தி நிலையையும்… நம் உயிராத்மாவினால் செயல்படுத்தி ஈர்த்திட முடிந்திடும்.
வானொலியின் துணையுடனும்… தொலைக்காட்சியின் துணையுடனும்… இயந்திரத்தின் துணையுடனும் (கம்ப்யூட்டர்)… செயல் கொள்ளும் இந்த நிலையை மனிதனால் செயல்படுத்திய அந்தச் செயற்கையை “நம் இயற்கை ஆத்மாவினால் அனைத்து சக்திகளுமே அறிந்திட முடிந்திடும்…!”
1.மனித உடல் என்னும் இப்பிம்ப நிலை பெற்று இன்று நாம் வாழ்ந்திடும் நிலையில்
2.ஆதியிலே முதல் உயிரணுவாய்த் தோன்றிய நாள் முதற்கொண்டு
3.பல நிலைகளை எடுத்துப் பல சுவாச நிலைகளின் தொடருடன் வாழ்ந்து
4.நம்முடனே கலந்து வந்துள்ள அமில சக்தியில் நம் ஆத்மாவுடன்
5.பல நன்மை தீமை கொண்ட பல கோடி அணுக்களைச் சேமித்தே தான் வழி வந்துள்ளோம்.
ஆனால் இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில்… நம்முள் உள்ள… நாம் பழக்கப்படுத்தி அடிமை கொண்டு வாழ்ந்து வந்த தீய சக்திகளின் நிலைக்கு அடிபணிந்திடாமல்…
1.நல்லுணர்வைச் சேமித்து… நம் நியதியையே ஞானிகள் வழியில் சென்றிடும் தன்மைக்கு
2.சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்தே செயல்படல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி உமிழ் நீராக உடலுக்குள் சேரச் சேர “உணவு உட்கொள்வது குறையத் தொடங்கும்”
சூரியன் தனக்குள் இருக்கும் பாதரசத்தால் அருகில் வரும் நஞ்சினை விரட்டுகின்றது. அதைப் போன்று மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமை தனக்குள் புகாதபடி அதை விலக்கிக் காட்ட வேண்டும்.
மேலே ஏழு லோகம்… கீழே ஏழு லோகம்… ஆக… கலர் ஆறு ஏழாவது ஒன்று (ஒளி). மனிதநின் அறிவு ஆறு ஏழாவது ஓன்று (தெரிந்து செயல்படும் ஒளி). இந்த ஏழு லோகங்களை வென்ற மனிதன் தான் விண் செல்ல முடியும் என்பார்கள்.
ஆனால் மகாபாரதத்தில் மேலே ஏழு லோகம் இருக்கிறது. மூன்று லோகத்திலும் பார்த்தேன். நஞ்சு கொண்ட… விஷங்கள் கலந்த நாகலோகத்திலும் சென்று பார்த்தேன்… காணவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்.
இப்படி விரிவாக்கிக் காட்டும் நிலை என்ன…?
மனிதன் அறிவு ஆறு… ஆனால் அதே சமயத்தில் விஷத்தின் தன்மை அதனின் அடுக்குகள் வேறு. அதை நாம் ஒளியாக மாற்றும் சக்தி பெற வேண்டும்.
இது எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் காட்டிய நிலைகள்.
யாம் (ஞானகுரு) உபதேசிக்கப்படும் போது இப்பொழுது உங்களுக்குள் உமிழ் நீர் சுவை மிக்கதாக ஊறும். உங்கள் ஆகாரத்துடன் இந்த உமிழ் நீர் கலக்கின்றது.
இது சேரச் சேர சாப்பாடு அதிகமாக உட்கொள்ளும் நிலைம் உங்களுக்கு இருக்காது. ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை அமுதாக… மிக சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் சேருகின்றது.
அதாவது… ஞானிகள் உணர்வு கலந்த உமிழ் நீர் உங்களுக்குள் சேர்ந்து கொண்ட பின் சாப்பிட்ட உணவைச் சத்துள்ளதாக… “அமுதாக” மாற்றுகின்றது நல்ல ஜீரணிக்கும் சக்தி கிடைக்கும்… நல்ல அணுக்களாக உருவாக இது உதவும்.
எந்த அளவுக்கு இந்த உபதேசங்களைத் திரும்பத் திரும்பக் கேட்கின்றீர்களோ… உங்களுக்குள் இது சக்தி வாய்ந்ததாக மாறிக்கொண்டே வரும்.
வெயில் காலத்தில் மாங்காய் சாப்பிட்டிருக்கின்றீர்களா…? காரத்தையும் உப்பையும் தொட்டுத் தின்றால் அது எப்படி இருக்கும்…? இப்பொழுது சொன்னவுடனே உமிழ் நீர்கள் எப்படி ஊறுகிறது.
அந்த உணர்வினை நுகர்ந்தவுடனே அந்தப் புளிப்பை இழுத்துக் கவர்கிறது அல்லவா. இது போன்றுதான் நாம் எண்ணும் உணர்வுகள் எதுவோ நம் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து கொண்டே வரும்.
அந்தந்த ஆகாரம் சாப்பிடும் பொழுது எனக்கு அஜீரணம் ஆனது… எனக்கு நெஞ்சைக் கரித்தது…! என்றெல்லாம் நாம் சொல்வோம்.
நல்ல ஆகாரத்தைச் சாப்பிட்ட பின்… ஒரு மனிதன் வேதனைப்படுவதை அந்த விஷமான உணர்வை நுகரப்படும் பொழுது சாப்பிட்ட ஆகாரத்தை அது அஜீரணமாக்குகின்றது.
அதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் மணிக்கணக்காக உபதேசிக்கின்றோம்.
உங்கள் உடல் இருக்கக்கூடிய அனைத்து குணங்களுக்கும்… மனிதனாக உருவாக்கிய அந்தத் தெய்வங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் உணர்வை இந்த உபதேச வாயிலாக “யாம் அமுதாகப் படைத்தது… நல்ல உணவாகக் கொடுத்தது…”
உங்கள் உடலில் உள்ள அணூக்களுக்கு அமுதாகக் கிடைக்க வேண்டும் என்று என்று முதலில் பிரார்த்தனை செய்துவிட்டுத் தான் உபதேசத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன்..
சந்தர்ப்பம்… உங்கள் உடலில் அந்த அமுது இப்போது கிடைத்திருக்கின்றது. மீண்டும் இதைப் போல் எண்ணி எடுத்து அமுதாகக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்
வேதனை என்ற விஷத்தின் தன்மையைக் கொடுத்து விடாதீர்கள்.
அந்த அருளைப் பெற வேண்டும் இருளை நீக்கி மெய்ப்பொருளைக் காண வேண்டும் என்று அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை அமுதாகச் சேர்த்துப் பாருங்கள். உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை அருள் சக்தியாகப் பெருக்கும் தகுதியை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த உடலுக்கு பின் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டு பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தவும் முடியும்.
மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெற முடியும்.
அமிர்தவர்ஷினியின் ஆசி வேண்டுமப்பா…!
சித்தன் காட்டிய சொல்லில்…
1.எதிலுமே அதனின் ஆரம்ப நிலை கொண்டு
2.”முடிவு இதுதான்…” என்று நாம் கணித்து விடக்கூடாது.
ஞான வளர்ச்சியின் பாதையில் இருப்போர்… சித்தர்கள் என்னும் நிலையைப் பெற… வாழ்வியல் அனுபவ ஞானம் பெறும் போது வெறுப்பு மிகுதியாக இருக்கும் காலங்களில் எல்லாம் தங்களைக் காத்துக் கொள்ள
1.உண்மைகளை உணர வேண்டும் என்று மறைபொருள் சூட்சும சூத்திரங்கள் கொண்டு
2.அந்த அறிவின் மயக்கத்தை நீக்க அவர்கள் கூறி வெளிப்படுத்திய பாடல்களில் சிறிது கடுமையும் உண்டு.
சிவசக்தி நிலை கலப்பாக மேன்மையுறும் செயல்களைத் தம்முள் கண்டு தெளிந்து… தங்களை வளர்த்துக் கொள்ளும் பக்குவத்தில்… மௌனத்தின் செயல்பாடாகச் சாந்த நிலையை ஏற்றிட… அதை “ஊக்குவிக்கும் செயல் சக்தியை…” சித்தர்கள் தமக்குள் எப்படி கூட்டிக் கொண்டார்களப்பா…?
1.“ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே…” என்று கூறுவதெல்லாம்
2.பிறர் பால் நாம் கொண்டிடும் எண்ணத்தின் உயர்வைக் கூட்டுவதற்குத் தான்.
மாமகரிஷி போகப்பெருமான் தன்னை வளர்த்து உயர்த்திக் கொள்வதற்காகத் தாய் சக்தியினைப் பெற்ற பேறைச் சொல்லால் விளக்கிட முடியுமா…?
தாய்மையின் சக்தியை விளக்குதல் என்பது என்றால் இந்த பூமியின் (புவனேஸ்வரி) உயர்வு நிலையைத் தான் முதலில் காட்டப்பட வேண்டும். பல முறையும் இதைக் கூறி வந்துள்ளேன்.
என் நிலையோ அந்த நிலை…? நன் நிலையே நமக்கு.
அம்மன் சக்திகள் அனைத்தும்… “ஆவியின் நிலைகள்…” என்று உரைத்திட்டால்… எந்த வகையில் தெளிந்திட்ட உண்மை அது…?
1.சகலமும் ஆவி தான்
2.இந்தப் பூமியும் ஆவி தான்
3.அண்ட சராசரங்களும் ஆவி தான்
4.”ஆவியான உன்னை…” (நீ) அறிந்து கொள்ள காட்டப்படும் நெறிமுறைகளில் தெளிவினைக் காட்டுவது எது…?
அம்மன் சக்திகளில் “பெயர் சொல்லி உலவக்கூடிய ஆவிகள்” – மை போட்டுக் குறி கூறுபவன் நிலையாக வளர்ந்து… அவைகளின் வளர்ச்சி நிலையைப் பற்றிச் சிறிது கோடிட்டுக் காட்டிடவும் முடிந்திடும்.
அது எல்லாம் மனிதனின் எண்ணத்தை வயப்படுத்தும் செயலுக்கே உபயோகப்பட்டுக் கொண்டுள்ளது. பத்திரிக்கை உலகையும்… மற்ற எத்தனையோ வெளி உலகத் தொடர்புகளையும் (MEDIA) விட்டுவிடவில்லை…. “வசியம் என்ற பேரில்” எல்லாவற்றையும் பீடித்திருக்கிறது.
மனித மனத்தினைத் தாக்கிடும் சக்தியாகச் செயலுறும் அவைகளின் பிடியிலிருந்து… தங்களைக் காத்துக் கொள்ள எண்ணம் கொள்வோர் அரிதாகிக் கொண்டே வருகின்றனரப்பா.
சத்தியம் என்பது உன்னுள் நிலைபெற்று இருத்தலே சாஸ்வதமானது.
1.எந்தச் சிறு சக்தியின் எதிர்ப்பின் நிலையும் தமக்குகந்த வேகத்தை காட்டும்
2.அந்த நிலை நமக்கு எதற்கு…?
“அம்மன் சக்திகள்” அக்கினி போல் சுடர்கின்றதப்பா. அருளாசி வேண்டுவது நம்மை வளர்த்துக் கொள்வதற்குத் தான்… புரிகிறதா…? அந்த நிலையில் நமது எண்ணம் உயர்வு அடைவதற்குத் தடைக்கல்லாக இருப்பது எது…? என்று உணர்ந்து கொண்டாயா…?
“சக்தி புராணம்” என்று கூறப்பட்டதே வான இயல்புகளைக் காட்டுவதற்குத். தான்.
1.”ஆகாய கங்கை” பாகீரதன் தவத்திற்கு எங்கிருந்தப்பா இறங்கி வந்தாள்…?
2.நாம் கூறுவது நம்முள் வளர்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டிய “தாய் சக்தியின்” உயர்வைத் தான்.
3.எண்ணத்தின் உயர்வு உயர் ஞானம் என்றால்… அந்த மெய் ஞானம் விழிப்பாகி அது சுடராகப் பிரகாசிக்கும்
4.அமிர்தவர்ஷினியாக அது பெருகிடுமப்பா.
ஜோதித்துவ பொருளுக்கும் – உயிர் சக்தியின் தொடர்பிற்கும் மறைபொருள் உண்மையை நீ உணர்ந்து பார். சக்தியின் கலப்பாகப் பொருள் காட்டும் எந்த நிலையாக இருந்தாலும்
1.“அதிலே குறை காண்பது நம் நோக்கம் அல்ல….!”
2.நாம் கொண்ட உண்மையில் வளர்ந்து காட்டுவதே விவேகம்
3.வாய்ச்சொல் தவத்தைக் காட்டும்… மொழியின் உயர்வையும் காட்டும்.
4.ஆனால் நாவடக்கம் நம்முள் உயர்வைக் காட்டி தவத்தைக் கூட்டும்.
“நம்முடைய இச்சை” எதுவாக இருக்க வேண்டும்…?
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்த அரும் பெரும் சக்தியை… என்னை எப்படி அதைப் பெறச் செய்தாரோ நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும். அவர் கண்ட உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்பதை நீங்கள் சிந்தனை செய்து அந்த தவறு செய்யும் உணர்ச்சிகளைத் தடுக்கப் பழக வேண்டும்.
அதற்கு வேண்டிய கடும் ஆயுதமாகத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆயுதமாகப் பயன்படுத்தும் போது… தவறென்ற உணர்வு உங்களுக்குள் வராதபடி… உங்கள் உடலுக்குள் தீமையை விடாதபடி தடுக்கும். அது தான் கார்த்திகேயா…!
ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நம் ஆறாவது அறிவால் தான் தெரிந்து கொள்கின்றோம். தெரிந்து கொண்டாலும் அந்த வேதனை உடலுக்குள் புகாதபடி தடுக்கும் சக்தியாக… நம் ஆறாவது அறிவை சேனாதிபதியாக மாற்ற வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைப்படுதல் வேண்டும். அதை நுகர்ந்தால் நமக்குள் கிரியை ஆகின்றது. கிரியை ஆகும் போது “தீமையை நீக்கும் அந்த ஞான சக்தியாக” வருகின்றது.
முதலில் சொன்ன மாதிரி நண்பன் என்ற நிலையில் ஒருவர் மீது பாசமாக இருக்கின்றீர்கள். நோயுடன் வேதனைப்படுகின்றான் என்று உற்றுப் பார்க்கின்றீர்கள்.
அதை இச்சைப்பட்டுக் கேட்டறியப்படும் போது உங்களுக்குள் கிரியையானால் அந்த வேதனை உணர்வு தான் ஞானமாக உங்களை இயக்கும். அந்த நண்பருடன் சேர்ந்து நீங்களும் வேதனையில் தான் உழல முடியும்.
நோயால் வேதனைப்படுகின்றான் என்று தெரிந்து கொண்டாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று “அதை இச்சைப்பட வேண்டும்…” உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்..
அடுத்து அந்த நண்பன் உடலில் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இச்சைப்படுங்கள்… அவன் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று இச்சைப்படுங்கள்.
இப்படி இச்சைப்படும் போது அந்த அருள் சக்தி இங்கே கிரியை ஆகின்றது. தீமை நீக்கும் உணர்வு உங்களுக்குள் வலிமை ஆகின்றது.
அதற்குப் பின் அவன் செவிகளில் படும் படியாக… நீ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற இச்சைப்படு. அவ்வாறு நீ இச்சைப்பட்டால் அது உன் தீமைகளை நீக்கும்… நீ நன்மை பெறுவாய்…! என்று சொல்லிப் பழக வேண்டும்.
இது எல்லாமே நம் புராணங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.
மனிதனாக ஆனபின் எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட கார்த்திகேயா என்று நம் உணர்வுகளை ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வானால் உயிர் எல்லாவற்றையும் தெரிவிக்கின்றது… உணர்வுகள் ஒன்றாகின்றது தெளிவாகின்றது… பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது.
காரணம்… நாம் இந்த உடலில் “நீடித்த காலம் இருப்போம்…” என்று எண்ண வேண்டாம் முழுமையான நிலையில் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தாலும் உலகில் விஷத்தன்மை இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.
அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி எடுத்து வலு சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கே உபதேசிக்கும் அருள் ஞானக் கருத்துக்களை திரும்பத் திரும்பப் படித்து உங்களுக்குள் பதிவாக்குங்கள்.
ஜாதகமோ ஜோதிடமோ வாஸ்து சாஸ்திரமோ மற்ற நியூமராலஜியோ “நமக்கு எல்லாம் செய்யும்” என்று அதை நம்பிக் கொண்டு… நேரத்தையும் காலத்தையும் வீணாக்காதபடி… காலத்தால் வரும் தீமைகளை அகற்றும் அருள் ஞான சக்தி நமக்கு உண்டு என்று “உங்களை நம்பிப் பழகுங்கள்…”
அத்தகைய அருள் சக்தி தான் இப்பொழுது உங்களுக்குள் கொடுக்கப்படுகிறது. அதைப் பெருக்கி வாழ்க்கையிலே பேரின்பம் பெறுங்கள்… ஏகாந்த நிலை என்ற பகைமயற்ற உணர்வை உடலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.
இதை உங்களுக்குள் உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.
புதுப் புது மருத்துவத்தை விஞ்ஞானம் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை இல்லை
இன்றைய இவ்வுலக நியதியிலே “நீதி…” என்னும் சொல்லே
1.இக்காலத்திற்குகந்ததாக
2.இன்றைய மனிதர்களின் எண்ணத் தொடரினால்
3.மாறி மாறி வரும் இவ் அரசியலின் நிலைக்கொப்ப சாதகப்படுத்தி
4.அநீதியையே நீதி என்ற சொல்லாக்கி நிலை நாட்டுகிறார்கள்.
இன்றைய இவ்வுலக நியதியில் நீதியும் சத்தியமும் எங்கு ஓங்கி நிற்கின்றது…? தனக்குகந்த பொருளாதாரத்தின்… “செல்வத்திற்கு அடிபணிந்த நிலையில்தான் இன்றைய உலக நீதியே உள்ளது…!”
சத்தியமும் ஜெயமும் ஒன்றுமறியா பாமர மக்களுக்குத் தான்…! இன்றைய உலக நியதிப்படி சொந்தமில்லா நிலையில் அடிமைப்படுத்திட்ட நிலையில்தான் நீதியும் சத்தியமுமே நிலைத்துள்ளன.
இச்செல்வத்திற்கு அடிமைப்பட்டும் செயற்கையில் வாழ்ந்திடும் இவ்வுலக நியதியில் தர்மமும் நியாயமும் தலை நிமிர்ந்திட வழியுமில்லை… இன்றைய நிலைக்கொப்ப நீதியுமில்லை.
அவரவர்களே தான்…
1.தன் உணர்வை நல் நிலையாக தன் எண்ண ஜெபத்தில் வழிப்படுத்தி
2.தம்முள் உள்ள பல கோடி அணுக்களையும் பல நிலை கொண்ட அணுக்களையும்
3.தன் ஜெபத்தினால் நல்லணுவாய் அடக்கச் செய்து… தன் ஆத்மாவை வளர்ச்சி கொண்டிடல் வேண்டும்.
நம்மையே நாம் ஓர் ஆண்டவனாய்… அனைத்து சக்திகளுமுள்ள கோளமாய் உணர்ந்து…
1.நம்முள் உள்ள மற்ற அணுக்களின் உந்தலுக்கு அடிபணிந்திடாமல்
2.நம் உணர்வே ஒரு நிலை கொண்ட நீதியாய் சத்தியமுடன் செயல்படல் வேண்டும்.
இன்றைய இவ்வுலகின் ஜீவஜெந்துக்களின் எண்ண நிலையே மாறு கொண்டு தீய சக்திகளுக்கு அடிபணிந்தே இந்நிலையின் தொடரின் எண்ண சக்தியால் “காற்றில் அசுத்த அணுக்கள் நிறைந்து பரவி வருகின்றது…”
இன்றைய நிலைக்கொப்ப புதிய புதிய வியாதிகளின் தொடர் நிலை பரவும் நிலையும் வெகு துரிதமாக உள்ளது.
விஞ்ஞானத்திலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் பல பல புதிய மருத்துவத்தைக் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் இக்காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை எங்குள்ளது…?
இச்சுவாசத்தின் எண்ண சக்தியின் நிலைதான் இன்றைய இவ்வுலகின் நிலையுடன் கலந்துள்ள நிலை.
இவ்வுலகின் மேல் கலந்துள்ள சுவாசத்தையேதான் நம் பூமியும் ஈர்த்துச் சுவாசமெடுத்து வெளிப்படுகின்றது.
1.இந்த அசுத்தக் காற்றை உயிராத்மாக்கள் மட்டும் சுவாசித்து வெளிப்படுத்தவில்லை
2.இப்பூமியும் அக்காற்றையேதான் தன் சுவாசத்தில் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.
இக்கலியில் மாறு கொண்டதுதான் இக்காற்றின் அசுத்த நிலையெல்லாம். கலியில் வந்த மனிதர்களின் பேராசையினால் தான் இவ்வுலகின் நியதியே மாறு கொள்ளப் போகின்றது…!
இப்பூமியில் மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் நாம்… நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தினாலன்றி மாறப் போகும் கலியின் பிடியில் சிக்கி மீள வழி பெற முடியாது.
அத்தகைய அல்லல்படும் நிலையில் இருந்து மீண்டு சூட்சும நிலை பெறவில்லை என்றால்…
1.இன்று மனிதராய் வாழும் இப்பாக்கியத்தை
2.நாமே நசியவிடும் நிலைதான் நமது நிலையாகிவிடும்.
ஒவ்வோர் ஆத்மாவுக்கும் நல் சக்தி உண்டு…!
வாழ்க்கையில் நடந்த பல தீய நிலைகளை எண்ணி… சோர்வை அண்ட விடாமல் இனி நடக்கும் நிலையை உணர்ந்து செயல்பட்டு… ஒவ்வோர் ஆத்மாவுமே சக்தி ஜெபம் பெற்று…
1.சக்தியுடன் சக்தியாய்… ஒளியுடன் ஒளியாய்க் கலந்துள்ள…
2.நம் சப்தரிஷிகளின் நிலையுடனே கலந்திடலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஞ்ஞானிகள் எந்தக் கோள் எங்கே… எந்தத் திசையில் செல்கின்றது…? என்ற உணர்வினை தொலைநோக்கிகள் மூலம் கவர்ந்து ஒரு கம்ப்யூட்டரில் பதிவாக்குகின்றார்கள். பின் ஆயிரம் மடங்கு அதைப் பெருக்குகின்றார்கள்.
பெருக்கிய பின் என்ன செய்கின்றனர்…?
இந்த உணர்வின் அதிர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டபின் எந்தக் கோளின் உணர்ச்சிகள் (FREQUENCY WAVES) வருகின்றதோ அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.
1.நாடாக்களில் பதிவு செய்து
2.இராக்கெட்டை உந்து விசையால் விண்ணிலே உந்தச் செய்து அதனின் முகப்பில் வைக்கின்றான்
3.திசை… எல்லை… பாதை… எதுவுமே அமையாமல் இருக்கும்போது
4.எந்த கோளின் உணர்வலைகள் அங்கே பரவிக் கொண்டுள்ளதோ
5.அந்த திசைப் பக்கம் வந்தபின் அழுத்தமானபின் இராக்கெட் அதனுடன் சேர்ந்து செல்கின்றது
6.அதன் உணர்வின் ஒலி அதிர்வுகள் ஆனபின் தரை மார்க்கத்தில் இருந்து எடுக்கின்றான்.
இதைப் போலத்தான் அன்று மெய் ஞானி தனது மனிதனின் வாழ்க்கையில் நாம் எதை எப்படிப் பெற வேண்டும்…? என்று உணர்ந்து மனிதன்… பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்ற நிலைகளைத் தெளிவாக்கினான்.
இந்த உயிரின் தன்மை பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனை எப்படி உருவாக்கியது…? என்ற நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காக விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்க்கும்படி செய்து நீர் நிலைகள் இருக்கும் பக்கம் விநாயகரை வைத்தான்.
விநாயகருக்கு முன்னாடி எலியை வைத்தான்… மூஷிகவாகனா..! (சுவாசநிலை).
1.நாம் சுவாசித்த உணர்வுகள் கொண்டு வாழ்க்கையில் நடந்து வந்த ஒவ்வொரு நிலைகளும்
2.கணங்களுக்கு அதிபதியாகி இன்று பரிணாம வளர்ச்சியாகி நாம் மனிதனாக வந்தோம்
3.நாம் உணவுகளை எப்படி உட்கொள்கின்றோம்…? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
4.இந்தப் பிள்ளையார் (பிள்ளை யார்…?) என்று கேள்விக்குறி வைத்து நம்மைச் சிந்திக்கச் செய்கின்றனர்.
காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஆற்றிலே குளித்து உடல் அழுக்கைப் போக்குகின்றோம்… துணி அழுக்கைப் போக்குகின்றோம். அன்றைய கால வழக்கத்தில்…!
கரையேறி வந்தபின் விநாயகரை உற்றுப் பார்த்து… ஆதிமூலம் என்ற (நம்) உயிர் பல பல உணர்வின் தன்மைகளை இந்த உயிர் ஈசனாக இருந்து மனிதனாக நம்மை எப்படி உருவாக்கியது…? என்ற உண்மையை அறிவதற்காக இந்தக் கணங்களுக்கு எல்லாம் ஈசா “கணேசா…” என்று உயிரை வணங்கச் செய்கின்றனர்.
பின்… அன்று வாழ்ந்த அகஸ்தியன் இந்த உலக உண்மைகளை எல்லாம் உணர்ந்து… தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி… கணவனும் மனைவியுமாக இரண்டறக் கலந்து விண்ணுலகை உணர்வினை ஒளியாக மாற்றி…
1.இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதை நினைவாக்கிப் பதிவாக்கிக் கொள்ள
2.நம் நினைவினை விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார்.
இந்த உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கி அந்த அகஸ்தியன் நஞ்சினை எப்படி வென்றானோ அதே வழியில் நாமும் நஞ்சை வெல்லும் சக்திக்காக விநாயகரை இங்கே வைத்தான். ஆகவே
1.காலையில் எழுந்தவுடனே அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா… என்று
3.அவனிடம் வேண்டி அந்தச் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.
ஏனென்றால் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ பகைமை உணர்வை நாம் கண்டிருப்போம். அதன் வழி தொடர்ந்து நம் உறுப்புகளில் அந்த அணுக்கள் சேர்ந்திருக்கும்.
ஏனென்றால் நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து தான் உணர்வின் தன்மையை மற்ற அணுக்கள் பகிர்ந்து கொள்கின்றது.
நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த விஷத்தின் தன்மை இங்கே வராதபடி நமக்குள் நட்பின் தன்மை வர வேண்டும் என்பதற்குத்தான் இரத்தங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நேரடியாகச் சேர்க்கச் சொல்கிறோம்.
ஆக இராமன் காட்டிற்குள் செல்லும்போது எப்படிக் குகனை நண்பனாக்கிக் கொண்டானோ அது போல்
1.அருள் மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் சேர்க்கப்படும் போது
2.நமக்குள் பகைமை உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைக்கப்பட்டு
3.உடலில் உள்ள அனைத்து அணுக்களையும் நண்பனாக்கும் நிலையைக் கொண்டு வருகின்றது.
இத்தகைய சுவையின் உணர்வுகளை ஒளியின் தன்மையை மனிதன் தனக்குள் எப்படி உருவாக்க வேண்டும்…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரம்.
இராமாயணத்தில் உள்ள மூலங்களை இது போல் தெரிந்து கொண்டால் மனிதன் தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்…? என்ற உண்மையை உணர முடியும்.
இவ்வாறு மனிதர்களான நாம் இனி எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைப்படுத்திக் காட்டினான் அருள் ஞானி.
ஓடம் தேரில் செல்லுமா…! அல்லது தேர் ஓடத்தில் செல்லுமா…!!
இராமன் குகன் மீது நட்பு கொண்டான்… குகனின் துணை கொண்டு கங்கையில் ஓடத்தில் இராமன் சென்றான் என்றாலும்…
1.இராமன் கொண்ட பாசம் சகோதர நயமாக…
2.தன் மனத் தேரில் குகன் பவனி வரும் பாங்காக வந்தது என்பது… அது அன்பில் சிறந்தது
ஒரு தேரை (தவளை) ஆற்றின் கரையில் வாழும் பொழுது ஆகாரம் புசிப்பதற்காக சிறு சிறு பூச்சிகளை விழுங்குகின்றது. அந்தப் பூச்சிகளின் உயிர் தேரைக்குள் சென்று தேரையாகப் பிறக்கும் நிலை பெறுகின்றது.
ஆனால் இராமன் தன் பாணத்தால் “அறிந்திடாத் தன்மையால்” அதன் மீது எய்த பொழுது அவ் உயிர் சக்திகளின் பிறப்பின் நிலை மனித உடலுக்குள் வந்து உயிரணுக்களாக… மனிதனாகப் பிறக்கும் (உயர்ந்த நிலையாக) விமோசனம் பெறுகிறது.
ஆனாலும்…
1.சந்தர்ப்பத்தின் வசம் வினைப் பயன் காரியார்த்த நடைமுறைகள் அதை உணர்ந்து கொண்டிடும் உயர் ஞானம் போல
2.அதிவேக உணர்வுகள் கூட்டிக் கொண்டிடும் உணர்வுகளால்
3.எண்ணத்தால் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பத்தின் வசம் “இராமன் கொண்ட அனுபவமாக”
4.தெய்வீக புருஷன்… அரக்க குணம் கொண்ட (இராவண) பிறப்பின் நிலை எண்ணத்தால் வரு(ந்)த்திட்டான் என்று காட்டி
5.”இராமபாணம் துளைத்தது” என்று கொண்டிட்ட உயர்வான எண்ணம் எடுத்துத் தன்னைத்தான் காத்துக் கொண்டு
6.சாப நிலையை மாற்றி விமோசனத் தன்மையாகத் தன்னை உயர்த்தியது என்பதுதான் இராம காவியத்தின் சூட்சுமம்.
அன்பின் வசம் தான் அனைத்துமே (அகண்ட அண்டத்தில்) அடங்கும்…!
உலக நிலையில் ஒன்றை அறிந்து கொள்தல் என்பது இன்றைய அனுபவ நடைமுறையாக இருக்கலாம். ஆனால் இயற்கை என்ற “வசுக்கள் சக்தியை…”
1.மனிதன் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னில் தெளிந்து
2.ஆத்ம பலம் பெற்றிடும் வழியாகத் தன்னைத்தான் வளர்த்து
3.ஈர்ப்பின் செயல் (எங்கே செல்ல வேண்டும் என்ற) சூட்சுமம் அறிந்து கொள்ள வேண்டும்
புயலால் கடல் மிகவும் கொந்தளிக்கும்… அது போல் கோப குணத்தால் மனிதனின் மனம் தத்தளிக்கும்….! ஞானச் செல்வங்கள் அத்தகைய உணர்வுகளில் சிக்கிடாத நிலைக்கு வானவியல் தத்துவ செயல் குணம் கொள்ள வேண்டும்,
மேகத்தின் ஊடே சூரிய ஒளியைக் கவர்ந்து பல வண்ணம் காட்டும் “ஸ்படிக நீர்…” வான்வெளியில் செயலுருவாக கருப்பொருள் காட்டுவதைப் போன்று
1.ஒளியின் சக்தியைப் பெற்றுப் பெற்று உயர்ந்திடுவேன் என்ற எண்ணம் வளர வளர…
2.அந்த மேன்மையான நிலையில் வழி நிற்றலே சம்பூரணம்
ஆக…
1.தானாக வளர்வது இயல்பு நிலை…
2.பலனாய் வளர்ப்பது “நம் நிலை…!” (ஞானிகள் வழி)
இதிலே பொருள் உண்டு… உணர்ந்து கொள்…!
ஞானவனம்… தபோவனம்…!
நீங்கள் தான் உங்களைக் காத்துக் கொள்ள முடியுமே தவிர “மற்றவர்கள் உங்களைக் காப்பாற்ற வேண்டும்…” என்ற நிலைக்குப் போகாதீர்கள்.
ஏனென்றால் நாம் எதை நல்லதாக எண்ணுகின்றோமோ உயிர் நம்மை அதன் வழியே இயக்குகின்றது… அந்த நல்ல உணர்வை உருவாக்குகின்றது.
இன்று மனித உடலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் முழுமையாக இதிலேயே இருக்க முடியுமா…? இல்லை…! மிகக் குறுகிய காலமே இந்த உடலில் நாம் வாழுகின்றோம்.
அந்தக் குறுகிய காலத்திற்குள் என்றும் ஏகாந்த நிலை பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்க வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத் தான் உபதேச வாயிலாக அதைப் பதிவாக்குகின்றோம்.
பதிவானதை நீங்கள் மீண்டும் எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குள் வளர்ந்து… தீமைகள் புகாது தடுத்து அது உங்களைக் காக்கக்கூடிய அரும்பெரும் சக்தியாக வரும்.
அதை நீங்கள் எப்படியும் பெற வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சுகின்றேன்.
அதை எடுத்து உங்கள் எண்ணத்தால் தீமைகளை நீக்கி… உங்களைக் காத்து வாழ வேண்டும். சாமி (ஞானகுரு) செய்து தருவார்…! என்று அல்ல. சாமி சொன்ன வழியிலே “அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க முடியும்… நம்மால் தீமையை நீக்க முடியும்… நம்மால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்…!” என்ற இந்த நம்பிக்கைக்கு நீங்கள் வரவேண்டும்.
நாம் யாருமே கெட்டவர்கள் அல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வேதனைப்படும்படி ஆக்கிவிடுகிறது.
உதாரணமாக… ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதபடி திடீரென்று ஒரு நாய் குறுக்கே விரட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். நாய் விரட்டும் போது நமக்குப் பதட்டமாகிறது.
அந்தப் பதட்டத்திலே நல்லதை எண்ண முடியாது போகின்றது நாய் விரட்டுகின்றது ஐய்யய்யோ… நாய் கடித்து விடுமே…! என்று பயப்படுகின்றோம் யாராக இருந்தாலும் அப்படித்தான் சொல்வோம்.
அந்த மாதிரி நேரங்களில் நாய் நம் பக்கத்தில் வந்தாலும் கூட ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்தப் பதட்டத்தைத் தணித்து அமைதிப்படுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… இரத்த நாளங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்முகமாக இதைச் சுவாசித்துச் சுத்தப்படுத்த வேண்டும்.
மற்றவர்களுக்குச் (அவர்களை நாய் விரட்டினால்) சொல்லும் போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீ பெறுவாய். உனக்குள் அந்த வலுவான நிலை கிடைக்கும்… இனிமேல் நாய் உன்னை விரட்டாது என்று சொல்லிவிட்டு… மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த நாய் என்னைக் கடிக்காது இருக்கக்கூடிய சக்தியாக அது பெற வேண்டும் என்று எண்ணும்படி நாம் வழி காட்ட வேண்டும்.
அதே சமயத்தில் மேலே சொன்ன எதையும் சொல்ல முடியவில்லை என்றாலும் கூட உன் தாயை எண்ணி “அம்மா…..” என்று நீ சொல்லப்பா… நாய் கடிக்காது… உன்னை விரட்டாது.
“அம்மா…” என்ற சொல்லைச் சொல்லும் போது தாய் நம்மை காத்த்திட்ட உணர்வுகள் அங்கே குவியும். நம்மைக் கககும் சக்தியாக அது அப்போது வரும். அம்மா… என்று சொன்னாலே போதுமானது… பதட்டப்பட வேண்டியதில்லை…! என்று தெளிவாக்க வேண்டும்.
ஏனென்றால் நாயைக் கண்டு பயத்தையும் பதட்டமான உணர்வையும் எடுத்துக் கொண்ட பின் அது உடலுக்குள் எல்லா அணுக்களிலும் சேர்ந்து விடுகின்றது.
அப்படிச் சேர்ந்து விட்டால் அவன் எப்பொழுது பார்த்தாலும் பதட்டம் அடைபவனாகவே…. எந்த வேலையைச் செய்தாலும் பதட்டத்துடன் செய்வதும்… சரியாகச் செய்யாதபடி “குற்றவாளியாக” மாற்றிக் கொண்டே இருக்கும்.
காரணம்… அது அவருடைய குறை அல்ல…!
அதற்கு முன்னாடி அவன் கெட்டிக்காரனாக இருந்தாலும் கூட… இது போன்று சந்தித்த பின்… எதிர்பாராதபடி நாய் விரட்டிய நிலைகள் “கடிக்க வந்து விடுமே…” என்று எடுத்த உணர்வுகள் பதட்டம் பயமும் ஏற்பட்டபின் இந்த உணர்ச்சிகள் உடலில் சேர்ந்து மாற்றி விடுகின்றது.
காரணம்… எல்லா அணுக்களிலும் இந்தக் காந்தம் உண்டு. அப்படி ஆகாதபடி தடுப்பதற்குத் தான் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அடிக்கடி சொல்கிறோம்.
தீமைகளை நீக்கக்கூடிய ஞானவனமாக இந்த உடலை தபோவனமாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் பிறருடைய தீமைகளைப் பார்க்கும்போது நம் நல்ல உணர்வுகளை அந்த விஷத் தன்மையான உணர்வுகள் மறைத்து விடுகின்றது. (ஒரு திரை போல்)
அப்படி மறைத்ததைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்து
2.அவ்வப்போது நம்மை மறைக்கும் அந்தச் சிறு சிறு திரைகளை அகற்றிட வேண்டும்.
3.அன்றன்று அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிவாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
எதன் துணை கொண்டு…?
அதற்குத்தான் இப்போது இடைமறித்து இடைமறித்து உங்களுக்குள் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்ப உபதேசிகின்றேன். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என்றால் உங்களுடைய உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுடன் இணைக்கச் செய்கின்றேன் (ஞானகுரு).
1.உங்கள் ஒவ்வொரு அறிவிலும் (உணர்விலும்) இணைத்த பின்
2.தீமைகளைக் கவராது “அந்தந்த அறிவு” அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.
அத்தகைய நிலைகளை உருவாக்கினால்தான்… இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளும் காற்று மண்டலத்தில் இருக்கும் நச்சுத் தன்மைகளும்… பிற மனிதன் செய்யும் தவறான உணர்வும்… விஞ்ஞான அறிவால் ஏற்படும் தீமைகளும் நமக்குள் புகாது… நம்மை இயக்காது… தடுக்க முடியும்.
பகுத்தறிவு கொண்டு படித்திடும் விஞ்ஞான அறிவை எழுத்து வடிவில் உற்றுப் பார்த்து அதன் உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் பதிவு செய்து கொண்டாலும்… இங்கே பூமியிலே பரவிக் கொண்டிருக்கும் உணர்வுகளை நாம் கவர்ந்தாலும்… அது எல்லாம் நம் ஆன்மாவில் இணைந்து கொண்டே உள்ளது.
அதாவது… எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் தீமைகள் படர்ந்துள்ளதோ அது நம் பூமியான இந்த பரமாத்மாவில் (காற்றிலே) வளர்ந்துள்ளதோ இதைப் போல நம் ஆன்மாவிலும் இது உண்டு.
அதே சமயத்தில் நம் உடலுக்குள் எண்ணிலடங்காத அணுக்கள் ஜீவான்மாக்களாக வாழுகின்றது. ஆகவே இந்தப் பூமியில் எந்த அளவுக்குத் தீமைகள் பரவி உள்ளதோ அந்தத் தீமையின் உணர்வுகளை நம் எண்ணத்தால் (நம் சந்தர்ப்பம்) பதிவாக்கி இருந்தால் அந்தத் தீமையின் அணுக்கள் உடலுக்குள்ளும் விளையும். அந்த அணுக்கள் தீமைகளைத் தான் விளைவித்துக் கொண்டே இருக்கும்.
ஏனென்றால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் எலும்புக்குள் ஊனாக இருக்கின்றது. அந்த எலும்புக்குள் ஊனாக இருக்கப்படும் பொழுது அதனின் வளர்ச்சி
1.ஒரு மனிதனைக் கண் கொண்டு பார்க்கும்போது அவர் தவறு செய்கின்றார் என்று பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் அதே நினைவு கொண்டு கண்ணுக்கு வரப்படும்போது
3.எந்த மனித உடலிலிருந்து தவறு செய்யும் உணர்வுகள் அலைகள் வந்ததோ
4.அந்த உருவத்தை நமக்குள் நுகரச் செய்து அதே கோபத்தின் உணர்வுகளையோ அல்லது
5.அவனைக் கண்டு அஞ்சியிருந்தால் அந்த அச்சத்தையோ நமக்குள் செயலாக்குகின்றது.
நமக்குள் பதிவு செய்த இந்த வித்து… “ஊழ்வினை” என்ற நிலையில் வினைக்கு நாயகனாக அந்த உணர்வின் இயக்கமாக்கி நம்மை அதன் வழிகளில் வளர்த்துக் கொண்டுள்ளது.
1.அதைப் போன்ற தீமைகளை (வினைகளை) மாற்றுவதற்குத்தான் திரும்ப திரும்பச் சொல்லி
2.உங்கள் உணர்வின் ஈர்ப்புகளை ஞானிகளின் பால் கொண்டு வரச் செய்கிறோம்.
எந்த அளவுக்குக் கூர்ந்து பதிவாக்கி அந்த அருள் சக்திகளை எண்ணி உங்களுக்குள் எடுக்கின்றீர்களோ முந்தைய நிலையில் உங்களுக்குள் சேர்ந்த தீய விளைவுகளையும் இதன் மூலம் மாற்றி அமைக்க முடியும்.
“தன்னுடைய பிழைப்புக்கு” ஞானகுருவின் ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்
இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் இனத்துக்குள் ஒன்றுடன் ஒன்று தன் இரைக்காக மோதுவதும் உண்டு.
அதே சமயத்தில்
1.தன் இனத்தின் தன்மை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு.
2.ஞானிகள் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளனர்.
இதைப் போன்று உயர்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் உணர்வின் தன்மைளை உடலிலிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் செலுத்தப்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்து விண் சென்றுள்ளார்கள்.
அதிலே விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதனான அகஸ்தியன் ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.
அதிலிருந்து உணர்வின் அலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் அது பரவச் செய்து கொண்டுள்ளது.
இதைப்போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும்போது அதைச் சூரியன் கவர்ந்து தனது உணவாக உட்கொண்டு வெப்ப காந்தங்களாக அதன் அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.
சிலருக்கு எம்முடைய (ஞானகுரு) உபதேசங்களை படிக்கும் போதும் கேட்கும் போதும் சில வித்தியாசமான நிலைகள் ஏற்படலாம்.
1.நமக்கு இது எல்லாம் எதற்கு…?
2.நாளைக்கு விடிந்தால் சோறு இருந்தால் போதும்.
3.குருடனுக்குக் கண் தானே தேவை…
4.நாளைக்கு என்ன ஆகப்போகின்றதோ…? ஏது ஆகப்போகின்றதோ…! இன்றைக்கு எனக்கு இரண்டு சோறு கிடைத்தால் போதும்
5.ஞானகுரு ஆசீர்வாதம் இருந்தால் போதும்
6.தொழில் கிடைத்தால் போதும். தொழில் நல்ல முறையில் நடந்தால் போதும்.
7.என் உடல் நோய் தீர்ந்தால் போதும் என்ற இந்த உணர்வில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
8.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலுள்ள அணுக்களில் சேர்க்கப்பட்டு
1.“நம்மை அறியாமல் வேதனையை உருவாக்கி…” நல்லவைகளை எண்ண விடாதபடி
2.நமக்குள் வேதனையை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
இதை நாம் மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அடைந்து மீண்டும் நாம் உயிரணுக்களின் தோற்றங்களில் ஆரம்பத்தில் விஷ அணுக்களாகத் தோன்றியது போல் நம்மை இந்த உணர்வுகள் அனைத்தும் விஷ அணுக்களாக மாற்றப்பட்டுவிடும்.
மீண்டும் புழுவாக… பூச்சியாக… பாம்பாக… தேளாகத்தான் மீண்டும் பிறக்க வேண்டிய நிலை வரும். எனென்றால் இந்த இயற்கை மாற்றங்களில் அதனுடைய இயக்கம் எது…? என்ற நிலைகளில்
1.எதனுடைய கலவைகள் அதிகமாகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு தான் மாறுகின்றது… மாற்றம் அடையச் செய்கிறது.
இன்று மனிதனாக இருக்கின்றோம்… விஷத் தன்மைகள் உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து தப்புவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?
மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற்றால் தான் விஷத் தன்மைகளிலிருந்து மீட்டிக் கொள்ள முடியும். அதற்குத் தான் தொடர்ந்து இதைச் சொல்கிறோம்.
அன்று நாம் அரசனுக்கு அடிமை… இன்று இயந்திரங்களுக்கு (ARTIFICIAL INTELLIGENCE) நாம் அடிமை
இன்றைய மனிதனின் பல எண்ண சக்தியினால் கணிதத்தின் (கம்ப்யூட்டர்) தொடர்பு கொண்டு…
1.செயற்கையினால் இயந்திரத்தின் துணை கொண்டு
2.ஒருவர் இருவர் அறிந்த சக்தியை இயந்திரங்களின் வழியில் செயல்படுத்தி
3.மற்ற ஆத்மாக்களின் சக்தியை இவ்வியந்திரத்தின் கணிதத் தொடர்பு கொண்டு சக்திக்கு அடிமைப்படுத்தி
4.செயலற்ற சோம்பேறி நிலையில் சென்று கொண்டுள்ளது இன்றைய உலகம்.
உலகம் எப்படித் தோன்றியது…? எந்நிலையில் உயிரினங்கள் வளர்ச்சி கொண்டன…? என்ற நிலையை அறியவும் ஆராயவும் இன்றளவும் இம் மனித எண்ணங்களின் நிலையுள்ளது.
பிறரின் தொடர்பை மட்டும் இயக்கி உள்ள நிலை இது…!
1.தான் பிறந்து வளர்ந்து செயல் கொண்டு வாழ்ந்திட… தனக்குள்ள சக்தியையும்…
2.தான் வாழவே தன்னுள் உள்ள தன் ஆத்மாண்டவனையும் வணங்கிடல் வேண்டும்…! என்று உணராமல்
3.பிறரின் சக்தியில் அடிமை கொண்டு வாழ்ந்து என்ன பயன்…?
நாம் பிறவியெடுத்த பயனை உணர்ந்து ஆத்ம ஜெபம் கொண்டால் நம் சக்தியுடன் அனைத்து நற்சக்திகளையும் ஈர்த்துச் செயல்படுத்தி வாழ்ந்திடலாம்.
நம் ஆத்மாவான நம் சக்தியை நாம் உணர்ந்து செயல் கொண்டால்தான் இம் மாறப்போகும் இக்கலியின் மாற்றத்திலிருந்து நம் ஆத்மாவை ஒளிரச் செய்திட முடிந்திடும்.
ஆத்ம சக்தியை உணர்ந்து கொண்டால் அவரவர்களிடத்திலுள்ள இவ்வெண்ண சக்தியின் தொடரைக் கொண்டு இக்கோளம் மட்டுமல்ல… இப் பிரம்மாண்ட அனைத்துக் கோளங்களையுமே நமதாக்கும் சக்தி ஒவ்வோர் ஆத்ம சக்திக்கும் உண்டு.
அனைத்துக் கோளங்களுமே நமக்குச் சொந்தமானவைதான்.
இப்பூமியில் உயிரணுவாய் உயிராத்மாவாய் வாழ்ந்திடும் நாம் நம் சக்தியைச் செயல் கொண்டதாக்கி வாழ்ந்து காட்டிடல் வேண்டும். ஜீவன் பிரிந்த பிறகு ஆவி உலகில் இவ்வுடலில்லாமல் நம் சக்தியை வளர்த்திட முடியாது.
மாறப் போகும் கலியிலும் பிறகு வரும் கல்கியிலும் ஆவி உலகில் ஆத்மாக்களாய்ச் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.இவ்வுடலில் இருந்து பிரிந்து சென்ற நிலையிலுள்ள எண்ண நிலைக்கொப்ப…
2.பிறவி எடுத்திடும் நாள் வரை இவ்வாவி உலகில் சுற்றிக் கொண்டேதான் எண்ணத் தவிப்புடனே இருந்திடல் வேண்டும்.
இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உயர் ஞானத்தால் கிடைக்கும் “விமோசனம்”
1.ஆதிசக்தியின் (ஆவியாக இருக்கும் இருண்ட உலகில்) அகண்ட பேரண்டத்தில் காந்தத்தின் புலமாய் (BLACK HOLE)
2.அண்டத்தின் செயலில் காந்தத்தின் உள் நிகழ்வாகச் சிருஷ்டியின் அளப்பரிய செயலுறும் வளர்ச்சியாக
3.எண்ணிலடங்காத கோடானு கோடி உயிரணுக்களின் ஜீவிதமாகத் துடிப்பும் வெப்பமும் கொண்டு
4.அநித்திய மறைபொருள் சூட்சுமக் கலப்பே பிரம்மமாகப் படைப்புகள் உருவாகி… பின் மாற்றமாகி…
5.சுருதியின் ஆதார நாதமய செயல் உருவாக… குணங்களாக உள்ளடக்கும் ஓர் மறை பேரும் உன்னுள் அறிந்திடவே (ஒலி மொழி சொல் உணர்வு)
6.காந்தப்புலனின் ஈர்ப்பாக சரீரத்தையே சுற்றி ஓடும் ஓங்கார நாத இலயத்தில் கலந்து (ஆன்மா)
7.அதே துடிப்பின் நிகழ்வுகளை அறிந்திட முடியும்.
மகரிஷிகளின் சக்திகளை எடுத்துத் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களும்… இஜ்ஜீவபிம்ப சரீரம் கொண்டே உணர்ந்து கொள்வதோடு மட்டுமின்றி… உண்மையின் நெறி முறைகளைக் கருத்தினுள் தெளிந்து கொள்ள முடிவதே… “உயர் ஞான வளர்ப்பின் துவக்கமப்பா…”
ஒன்றுக்குள் செயல்படும் கருத்தின் வழிமுறைகளை…
1.வினா (விடை) என்ற பாங்கில் எண்ணி எடுக்கப்படும் போது…
2.அதிலே தெளிவுபடுத்திக் கொள்ளும் விடையே “அறிவின் தெளிவு…”
தெளிந்ததைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும் போது அதுவே உயர் நிலை பெறுவதற்கு வழி வகுக்கும்.
“சிரசின் உச்சியே ஆகாயம்…” என்று உணர்த்திய பொழுது… தொழில்படு வினையின் “கட்டளைக் கேந்திர மூளையின் செயலிலும்” இருவிதமான செயல்கள் உண்டு (இடது வலது).
சுவாசம் கொண்டு கவன ஈர்ப்பு நரம்பின் மூலம் எடுக்கும் நாதம்… (உயிர் வழி சுவாசம்) அந்த எண்ணத்தின் பாங்கைச் செயல் நடத்திடும் அமைப்பின் கருத்து உயர் ஞானம் என்றால்
1.அவ்வளர்ப்பின் ஆக்கம் வினைப் பயன் களைந்திட… வேரற நீக்கிடும் செயலுக்கு…
2.மனித சரீரத்தின் கட்டளைக் கேந்திர மூளையின் வலப் பக்க செயலைச் சிவமாகக் காட்டினான் சித்தன்.
அதே போல்
1.தாய்மையின் மேன்மையை… சக்தியாகச் சுடர்விடும் ஒளியே
2.மகரிஷிகளின் பாசப் பிணைப்பில் கட்டுண்டு செயல்படும் நிலையைக்
3.கட்டளைக் கேந்திர மூளையின் இடது புறமாகக் காட்டினான்.
ஒன்றின் செயலில் கொள்ளப்படும் அறிவு உயர் ஞானம் என்றால்… அது வினைப் பயன் களைவதோடு மட்டுமின்றி எண்ணம் சொல் உள்ளடங்கிய செயல் உயர் ஞானத் தெளிவைக் காட்டி மேலாம் அறிவாகச் சித்திக்கும்… பரப்பிரம்ம லயத்தில் (மகரிஷிகளுடன்) அது கலக்கச் செய்யும்.
பூமியின் நிகழ்வுகளை ஊன்றி அறிந்திருப்பாய், மழை பெய்த அடுத்த நாளே… நீரின் சக்தியில் அணுக்கள் பச்சை வண்ணமாகப் “பாசி பிடித்தல்” என்ற நிலையைக் காட்டும்.
வண்ணத்தின் பகுப்பைக் காட்டும் சந்திரனின் காந்த ஒளி அலைகள் பூமியில் படரும் பொழுது… நீரின் ஊடே பாய்ந்திடும் அந்த ஒளிக் கிரணங்கள் பூமியின் ஒத்த நிலையாக… பூமியின் ஈர்ப்பின் செயலிலும் ஜீவத் துடிப்பு ஏற்பட்டு… சூரியக்கதிர்களின் வெப்ப அலைகள் தணிவுற்றுச் சமைத்திடும் காலங்களில் ஏற்படும் அதே ஜீவத்துடிப்பு மரகதக் கற்களாக பூமியில் விளைகிறது.
அது போல்…
1.நீரமில சக்தியை உண்டு சூரியக் கதிர் சமைப்பு நிலைகளாக வளர்ந்திடும் அனைத்துத் தாவர இனங்களும்
2.”பச்சையம்” என்ற ஜீவரசத்தைத் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்கு உள் நடத்துவதைப் போல்
3.புவியியலில் நாம் பெற்றிடும் ஞானம் வானவியலில் தொடர்பு கொண்டு
4.அவ்வண்ணம் கடந்த உயர்வு… சுடரில் மறைந்துள்ள வண்ணமாக (ஆறு வண்ணம் – ஏழாவது வெண்மை ஒளி)
5.வான் காட்டும் திறப்பில் படர்ந்துள்ளதை அறிந்து கொள்ள வேண்டும்.
மண்டலக் கணக்கு – 48 நாள்கள்
மனிதர்கள் இந்த உடல் இச்சைக்குத் தான் செல்கின்றனரே தவிர “உயிரின் இச்சைக்கு” யாரும் செல்வதில்லை. ஆனால் அவனுடன் தான் நாம் ஒன்றி வாழுகின்றோம்.
எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப உடலாகிறது. உடலாகும் போது “வேதனை.. வேதனை…” என்று எடுத்தால் வேதனைப்படும் நிலை தான் வருகிறது..
வேதனை அதிகமாகி விட்டாலோ அந்த வேதனைக்கொத்த உடலாக… அடுத்து உயிர் நம்மை மாற்றிவிடும். ஆகவே இது போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்.
இந்த உண்மைகளை எல்லாம் இப்போது அறியக்கூடிய தகுதி பெற்றிருக்கிறோம் என்றால் அது யாரால்…?
நம்முடைய மூதாதையர்கள் முதலில் மனிதனாக உருவானார்கள். அவர்கள் வழியில் நம் தாய் தந்தை உடல் பெற்றார்கள். அவர்கள் வழியில் நாம் மனித சரீரத்தை இப்போது பெற்றுள்ளோம்.
ஏனென்றால் “மனிதன் ஒருவன் தான் இறந்த பிற்பாடு அவர்களை (முன்னோர்களை) விண் செலுத்த முடியும்…”
ஒருவருக்கொருவர் நாம் மனதில் நினைக்கின்றோம்… “எனக்குத் துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் அவன் உருப்படுவானா…? என்று…!”
நாம் இப்படி எண்ணினால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் கூட இந்த உணர்வு அங்கே சென்று அவனை இயக்குகின்றது… அவன் செய்யும் காரியத்தைக் கெடுக்கிறது.
அதே போன்றுதான் நம்முடைய மூதாதையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது. அதை வைத்து அவர்களை நாம் விண் செலுத்த முடியும்.
அருள் சக்திகளை இப்போது குரு வழியிலே நமக்குள் பெருக்குகின்றோம். அதற்குண்டான சக்தி கிடைக்கின்றது… காற்றிலே அந்த உணர்வுகள் உண்டு.
நம் முன்னோரின் ஆன்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இருந்தாலும் கூட நாம் விண் செலுத்த முடியும். முன்னாடி செய்ய மறந்து விட்டோம். இப்பொழுதாவது நாம் செய்யப் பழக வேண்டும்.
உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று சொல்லி 48 நாட்களுக்குள் அனுப்பி விட்டால் அங்கே சென்று முழுமை அடைகின்றார்கள்… ரிஷியாகின்றார்கள்.
உதாரணமாக ஒருவருக்கொருவர் பிரியமாக இருக்கின்றார்கள் அதிலே ஓருவர் திடீரென்று இறந்து விட்டால் பற்றுடன் எண்ணும் போது அந்த உடலுக்குள் தான் போகும். அந்த உடலில் ஆவியாக இருக்கும்.
ஆனாலும் இறந்த ஆன்மா திடீரென்று உடலுக்குள் புகுந்த உடனே முதலில் தெரியாது. அதனால்தான் ஒரு மண்டலம் என்ற கணக்கை வைத்து ஞானிகள் நமக்குக் காட்டினார்கள்.
எது எது எந்தப் பொருளாக இருந்தாலும் “ஒரு மண்டலத்திற்குள் கருத்தன்மை அடைவது” மாறும் தன்மை வருகிறது. இதைத் தெரியப்படுத்துவதற்குத் தான் மண்டலக் கணக்கை ஞானிகள் கொடுத்தார்கள்.
உடலை விட்டுப் பிரிந்து சென்றார்கள் என்றால் அந்த ஒரு மண்டலத்திற்குள் (48 நாட்களுக்குள்) சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்து வளர்த்து இலேசாக அங்கே விண் செலுத்தி விடலாம்.
அங்கே சென்ற பின் உடல் பெறும் விஷத்தன்மைகள் எல்லாம் கரைந்து விடுகிறது. துருவ நட்சத்திரம் சமைத்துக் கொடுக்கும் உணர்வுகளை எடுத்து ஒளி உடலாகப் பெறுகிறது.
மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்…!
இதற்கு முன்னாடி நமக்குப் பழக்கம் இல்லை. இப்போது தெரிந்து கொண்டோம். அடிக்கடி இதைப் போன்று செய்து பழகினால் இன்றைய விஷ உலகில் அடிக்கடி வரும் தீமைகளை நீக்க முடியும்.
மூதாதையர்களை விண் செலுத்திய வலுக் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் அதிகமாகப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்த உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் நம்மையும் அது அங்கே இழுத்துச் சென்றுவிடும்.
மாறாக… “ஐய்யய்யோ இந்தக் காசை எல்லாம் என் பிள்ளை கண்டபடி செலவழிக்கின்றானே… நாளை அவன் என்ன செய்வான்…? என்று பிள்ளை மீது நினைவு அதிகமானா அந்த உடலுக்குள் தான் வர வேண்டும்
காசு சம்பாரித்துக் கொடுத்தேனே… நாளை என் பிள்ளை என்னை எங்கே ஏமாற்றப் போகின்றானோ…? என்று எண்ணினால் அவன் உடலில் புகுந்து விடுவோம். அங்கே பேயாகப் போய் அவனையும் வேதனைப்படுத்தத்தான் செய்யும்
ஆகவே எந்த நிமிடம்… எந்த நிலை… ஆனாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வந்துவிட்டால் நம் உயிரின் இயக்கம் எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்… அங்கே கவர்ந்து சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
அந்த உணர்வுக்குத் தக்க இருளை நீக்குகின்றது உணர்வின் அறிவு எப்பொழுதுமே சந்தோஷமாகப் பேரானந்த நிலையாகப் பெற முடியும். அது தான் விஜய தசமி. உயிர் தோன்றி பத்தாவது நிலையாக முழுமை அடையும் சந்தர்ப்பம்… பிறவி இல்லா நிலை…!
ஒவ்வொரு மாதத்திலும் ஞானிகள் தெளிவான காரணங்களைக் காட்டி நம்மை நல்வழியில் வாழச் செய்ய வழிவகுத்துக் கொடுத்தார்கள். மக்களுடைய எண்ணங்கள் தடுமாறும் இந்தக் காலகட்டத்தில் குரு வழியில் இதை நாம் செயல்படுத்துவோம்.
தீமையிலிருந்து மீட்டிடும் சக்தியைப் பெறுவதற்கு “எத்தனையோ துன்பத்திற்கு என்னை ஆளாக்கினார் குருநாதர்…”
விஞ்ஞான அறிவு… எட்டாத தூரத்தில் இருக்கக்கூடிய கோள்கள் வெளிப்படுத்தும் உணர்வினை லேசர் என்ற இயக்கத்தைக் கொண்டு அதைக் கவர்ந்து எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று கம்ப்யூட்டரில் பதிவாக்கி அதனின் உணர்வின் ஓசைகளைக் கவர்ந்து கொள்கின்றார்கள்.
அதைப் பதிவாக்கி இராக்கெட்டை உந்து விசையால் செலுத்தப்படும் பொழுது வான் வீதியிலே பறக்கின்றது. எதன் உணர்வின் தன்மையோ அந்த ஒலிக்கொப்ப அந்தக் கோள் இருக்கும் இடத்திற்கு இழுத்து அழைத்துச் செல்கின்றது. அதாவது இந்த இராகெட்டை அங்கே இழுத்துச் செல்லும் தன்மை வருகிறது.
அந்தக் கோளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைத் தரையில் இருந்தே மனிதன் விஞ்ஞான அறிவால் தெரிந்து கொள்கின்றான். அந்தக் கோளிலே என்னென்ன நடக்கின்றது என்று அறியும் ஆற்றல் வருகிறது.
அன்றைய மெய்ஞான அறிவுக்கும் இன்றைய விஞ்ஞான அறிவிற்கும் உங்களுக்கு தொடர்பு கொடுத்துச் சொல்கின்றோம். சாமிக்கு என்ன தெரியும்…? என்று விட்டு விடாதீர்கள்…!
இதை எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாகக் கொடுத்ததை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை உங்கள் சுவாசத்திற்குள் மறுக்கும் சக்தியாக அது வர வேண்டும்… அத்தகைய ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.
இல்லை என்றால் அந்த விஷத்தின் தன்மை ஈர்க்கப்பட்டு மனிதனுடைய ரூபத்தை மாற்றும் சக்தியாக வந்துவிடும். குருநாதர் அதைத்தான் சொன்னார்.
அவர் காட்டிய வழியில் உயர்ந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் பதிவு செய்கின்றேன். பதிவானதன் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுதல் வேண்டும்
பத்தாவது நிலை பெற்றது… வசிஷ்டர்…! அதாவது கவர்ந்து கொண்ட உணர்வுகள். நமக்குள் அது பதிவாக்கப்படும் பொழுது பிரம்ம குருவாக வருகிறது.
அதன் வழி ஞானத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது பிரம்மம் ஆகி அதனுடன் இணைந்து அருந்ததி… எதன் சக்தியின் ரூபம் பிரம்மம் ஆனதோ… அதன் மணத்தின் உணர்ச்சியாக அது இயக்கும்.
பெண்கள் இதையெல்லாம் அவசியம் கூர்ந்து… கவனித்து… அதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்களுக்குள் ரெக்கார்ட் ஆகி விடுகின்றது பெண்களுக்கு அணுத் தன்மையாக மாற்றும் சக்தி அதிகம் உண்டு.
தன் கணவருக்குத் தொழிலில் சிக்கல் ஏற்பட்டு விட்டது என்று அந்த உணர்வுகள் மோதும் பொழுது என் கணவர் அந்த அருள் சக்தி பெற வேண்டும்; சிந்தித்து செயல்படும் திறன் அவர் பெற வேண்டும்; அவர் பார்வையில் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று பெண்கள் உங்களுக்குள் இதை உருவாக்கி கணவருக்குப் பாய்ச்சினால் உங்கள் எண்ணம் நிச்சயம் அவரைக் காக்கும்.
ஏனென்றால் செல்வத்தைத் தேட என்று அவர் வெளியிலே தொழிலுக்குச் செல்லும் பொழுது எத்தனையோ எதிர்ப்புகள் வரும்… மாறுபட்ட உணர்வுகளைச் சந்திக்க நேரும்.
என் கணவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினால் அவரை தெளிந்த மனிதனாக மாற்ற முடியும்.
என் கணவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும்… அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்… அனைவரும் போற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று பெண்கள் நினைக்க வேண்டும்.
அதே சமயத்தில் சம்பாதித்துக் கொடுத்தால் “என் கணவர் மாதிரி இல்லை…” என்று மெச்சுவோம். அதிலே சிறிது குறைவானால் எல்லாவற்றையும் இப்படியே விட்டுவிடுகின்றார் என்று வேதனை வரும்.
இரண்டு தடவை இப்படி ஆனால் போதும். அடுத்து… இப்படிச் செய்து கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆவது…? எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு என்ன செய்வது…? என்று சந்தேகங்கள் வந்துவிடும்.
காரணம்… உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சிகள் எழும்ப… உணர்வின் செயல்களாக அது வருகின்றது. எதைப் பதிவு செய்கின்றோமோ உயிர் கவர்கின்றது… உயிரிலே படுகின்றது… இரத்தத்தில் கலக்கின்றது தீமையின் உணர்வாக உடலுக்குள் அணுவாக விளையத் தொடங்குகிறது.
அவ்வாறு ஆகாது தடுப்பதற்காக வேண்டித் தான் வாழ்க்கையில் எவ்வாறு தெரிந்து வாழ வேண்டும் என்று எவ்வளவவோ சாஸ்திரங்களைக் கொடுத்துள்ளார்கள். நல்லதை எண்ணி எடுத்து அதன்வழி செயல்படுத்தும் போது அதுவே தெய்வமாக வந்து இயக்குகிறது.
ஆனால் இந்த வாழ்க்கையில் ஆசையின் பால் செல்லப்படும் பொழுது எத்தனையோ துயர்கள் வந்து சேருகின்றது… தன்னைக் காக்கும் சக்தியையும் இழந்து விடுகின்றோம்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இது போன்று சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது. இந்த உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு குருநாதர் என்னை 20 வருடம் காடு மேடெல்லாம் அலைய வைத்து “எத்தனை துன்புறுத்தினார்…?” என்று எனக்குத் தெரியும்.
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சந்தர்ப்பம் நுகர்ந்த உணர்வால் கொண்டு எப்படி எல்லாம் துன்பப்படுகின்றனர்… வேதனைப்படுகின்றனர்… வேதனை வந்த பின் எத்தனை நோய்கள் அவருக்கு வருகின்றது…? அதிலிருந்து மீட்டிட என்ன செய்ய வேண்டும்…? என்று தான் காட்டினார்.
அவர் எனக்குப் போதித்ததைத் தான் உங்களுக்கும் வாக்காகச் சொல்லிப் பதிவு செய்து உங்களை மீட்டிடும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
காலத்தை விரயம் செய்யாது ஆத்ம சக்தியை உயர்த்திக் கொள்ளுங்கள்
எல்லா மண்டலமும் ஒரே நிலை கொண்டு வளர்ச்சி பெறும் என்பதல்ல…!
வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாகவும்… சிறு சிறு கோளமாக உள்ள மண்டலங்களும்… ஜீவனற்று உள்ள மண்டலங்களும்… பெரிய மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியில்
1.அதன் சக்தி நிலையும் (அமில நிலை) பெரிய மண்டலங்களின் அமில நிலையும் ஒன்றுபடும் பொழுது
2.இதன் ஈர்ப்புடன் வந்து சேர்ந்து அந்நிலையிலேயே கலந்து சுழல்கின்றது.
மண்டல வளர்ச்சி கொண்ட சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாய் சுற்றிக் கொண்டுள்ள கோளங்கள் எல்லாம் பெரிய மண்டலங்களின் பிரளய நிலையின் காலங்களில்தான் வந்து சேருகின்றன.
பூமியின் பூமத்திய ரேகையின் இன்றுள்ள நிலை… நடக்க இருக்கும் பிரளயத்தின் போது பிரளயத்தின் அசைவினால்… சிறிது மாறுபட்ட இடத்தில் வரப்போகின்றது.
1.இன்று நீர் நிலைகளாய் ஆழ்கடலாய்ச் சூழ்ந்துள்ள இடமெல்லாம்
2.சமமான தரையாகச் (நிலங்களாக) செயல் கொள்ளப் போகின்றது.
இம்மனித ஆத்மாக்கள் ஜீவராசிகள் மட்டும் மாறப்போகின்றன என்பதல்ல. இன்று வளர்ச்சியில் உள்ள தாவர வர்க்கங்களின் நிலையும் மாறப் போகின்றது.
இன்று ஆத்மீக நெறியை அறியும் சக்தி நிலையே குறைந்துள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ள ஆத்மாக்கள் எல்லாம் இயற்கையின் சீற்றத்திலிருந்து தப்பும் நிலையை உணர்ந்திடல் வேண்டும்.
வாழும் வாழ்க்கை செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ளதை மாற்றி இவ் இயற்கையின் கால மாறுதலை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.
1.பல சித்தர்கள்… பல ரிஷிகள்… வாழ்ந்து செயலாக்கி இன்றும் ஆண்டவன் ரூபம் கொண்டு
2.நம் கோயில்களின் மூலமாகப் பல சக்தி நிலைகளை உணர்த்திக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்ற நாம்
3.நம் ஆத்மாவிற்கு உயர்ந்த சக்தியின் நிலையைச் சேமிக்கும் சக்தி பெற்றிட வேண்டும்.
நம் சக்தியைச் செயற்கைக்கும் விளையாட்டிற்கும் வீண் விவாதத்திற்கும் இன்றைய அரசியம் ஆட்டத்திற்கும் அடிபணியச் செய்திடக் கூடாது.
1.நம்மைப் பற்றிக் கொண்டுள்ள அடிமைப்படுத்திடும் எத்தகைய நிலையிலிருந்தும் மீளும் நிலையில் நம் சக்தியை ஓங்கச் செய்தே
2.இக் குறுகிய காலத்தில் அன்பு என்ற ஜெபத்தின் செயல் கொண்டு
3.ஆத்ம சக்தியை வளர்க்கும் பரிபக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக கோழி விஷமான உணவுகளை (ஜெந்துக்களை) உணவாக உட்கொண்டாலும் அந்த விஷத்தின் தன்மையை ஒடுக்கி தன் தசையாக மாற்றித் தன்னிலை அடைகின்றது. அதே போல் மயில் போன்ற பெரும்பகுதி பறவை இனங்களும் விஷத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி கொண்டவைகள்.
இதைப் போலத்தான் மனித வாழ்க்கையில் வந்த கடும் தீமையினுடைய நிலைகளையும் அதனுடைய செயலாக்கங்களை ஒடுக்கித் தன் இணைப்பின் நிலையாகச் செயல்படுகின்றார்கள் மகரிஷிகள்.
அப்படி செயல்பட்டவர்கள்… தன் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளனர்.
1,துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட பேரருள் உணர்வுகளை…
2.அதன் பின் வந்த மனிதர்கள் கவர்ந்து தன் உடலில் அது ஒவ்வொன்றிலும் இணைக்கப்படும்போது
3.மீண்டும் மனித உடல் பெறும் நிலைகளை மாற்றி அமைத்தனர்.
அவ்வாறு உயிருடன் ஒன்றி ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிச் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலம் என்பது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே அவர்கள் சுழன்று கொண்டுள்ளார்கள்.
அதாவது உணர்வின் தன்மை ஏழாவது நிலை அடைவதுதான் சப்தரிஷி என்பது. மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு தீமைகளைத் தனக்குள் செயலாக்காது தடுத்து ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் அடக்கி ஒளியின் உணர்வாகத் தன் உடலிலே வளர்த்துக் கொண்டால்
1.இந்த உடலைவிட்டுச் சென்ற பின்
2.எந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ
3.அதன் உணர்வுகள் நமக்குள் வலுப்பெறப்பட்டு
4.துருவ மகரிஷி எப்படித் துருவ நட்சத்திரமாகி வளர்ந்து கொண்டுள்ளோரோ
5.அந்த ஈர்ப்பு வட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் அடுத்து உடல் பெறும் விஷத்தன்மைகளை அது ஒடுக்கிவிடும். பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றி விடுகின்றது. அதன்பின் நமக்குப் பிறவி இல்லை.
சுவாசிப்பது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சென்று என்ன செய்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்
குருநாதர் என்னை மலைப் பகுதிகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்று 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய மின்னல்கள் ஒளிக்கற்றைகளாகப் பூமிக்குள் பரவுவதை “எது எது எப்படிக் கவருகிறது…?” என்று காட்டினார்.
அதிலே ஜோதிப்புல் என்றும் காட்டினார்… ஒளிக்கற்றைகளை தன் விழுதுகளில் கவர்ந்து கொண்ட பின் மோதும் போது வெளிச்சத்தை எப்படிக் கொடுக்கின்றது…? இயற்கையினுடைய நிலைகள் எப்படி சந்தர்ப்பங்கள் வருகிறது என்று அனுபவத்திலே காட்டினார்.
குருநாதருடன் அலைந்து தான் இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். காட்டிற்குள் சாப்பாடு வெறும் பேரீச்சம்பழம் தான். இல்லை என்றால் ஒரு பச்சிலையைக் காண்பிப்பார். அதைச் சாப்பிட வேண்டும். தண்ணீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். இதுதான் உணவு.
அதே சமயத்தில் அரிசியையும் மோரில் ஊற வைத்த கத்திரிக்காய் மிளகாய் மாங்காய் ஒரு டப்பா இதையும் எடுத்துச் செல்லும்படி சொல்வார். டப்பாவில் தண்ணீரை ஊற்றி அதிலே எல்லாவற்றையும் போட்டு வேக வைத்துக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார்.
சோறு கிடையாது…! வெறும் தண்ணீராகக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார். ஏனென்றால் அரிசி சாதம் சாப்பிட்டுப் பழகியதனால் அந்த உணர்வின் சத்து உடலிலிருக்கும் அணுக்களுக்கு அத்தகைய உணவு கிடைக்கவில்லை என்றால் அது மாறிவிடும்.
ஆகையினால் உன்னை இப்படிச் சாப்பிடும்படி சொன்னேன் என்று அதிலேயும் விளக்கம் கொடுப்பார்.
காரணம்… பச்சிலையைச் சாப்பிடுகின்றாய்…! இதே உணர்வு உடலில் விளைந்தால் அதற்குண்டான வித்தியாசங்களாக வந்துவிடும். அதை மாற்ற வேண்டும் என்பதற்காக இதையும் சொல்லி அதையும் சொல்லி ஒவ்வொரு வகையிலும் அதைச் சீராக்கிக் கொண்டு வருவார்.
சக்தி இருக்கிறது என்று காட்டுக்குள் எடுத்தாலும் உணவுப் பழக்கத்தால் எப்படி மாற்றங்கள் ஏற்படுகின்றது…? என்று காட்டுவார்.
அப்போது அவர் என்ன முறைப்படி கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கப்படும் பொழுது அது தேவாமிர்தமாக இருக்கும். வெயில் காலங்களில் நீர் மோரைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…? ஒரு மாங்காயை உப்பைத் தொட்டுத் தின்றால் எப்படி இருக்கும்…?
இப்பொழுது வாயில் உமிழ் நீர் சுரக்கின்றது அல்லவா… இது எங்கிருந்து வருகின்றது…? ஒன்றுமே உங்களுக்குக் கொடுக்கவில்லை… ஆனால் மாங்காயைப் பற்றிச் சொன்ன உணர்வுகள் செவிகளில் படுகிறது… உங்களுக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகின்றது.
நுகர்ந்த உடனே அந்தப் புளிப்பு கலந்த உமிழ் நீராகச் சுரக்கின்றது. இது சாப்பாட்டுடன் கலக்கின்றது
இதே போன்றுதான் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் கண்ணுற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள்… எதைக் கேட்டறிந்தாலும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது.
ஆனால் அது தீமை என்ற நிலையில் இருந்தால் விஷத்தன்மையாக மாறிவிடுகின்றது ஆக வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு அடுத்துப் பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் கேட்டால் இந்த விஷங்கள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து ஆகாரத்துடன் கலந்து வயிற்றிலே “கட…புடா… கட…புடா…! என்று ஆகிறது.
இது ஏன்… எதனால்…? என்று நாம் அறிவதில்லை வயிறு நிறையச் சாப்பிட்டபின் சஞ்சலமாகச் சலிப்பாகப் பேசுவதைக் கொஞ்ச நேரம் கேட்டுப் பாருங்கள்.
அது எல்லாம் உமிழ் நீராக மாறி அடுத்து நெஞ்சு எரிகிறது கப கப என்று எரிகிறது என்பார்கள். பேசிய உணர்வு கவரப்பட்டு இப்படி உமிழ் நீராக மாறி நல்ல ஆகாரத்தையும் கூட நுகர்ந்த உணர்வுகள் மாற்றி விடுகின்றது.
இதை எல்லாம் குருநாதர் அனுபவத்தில் கொடுத்தார். நான் இதைப் புத்தகத்திலோ மற்ற நிலைகளிலோ பார்த்துப் படித்துச் சொல்லவில்லை. நம் உடலுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது…? என்று காட்டிற்குள் வைத்து இதை எல்லாம் அறியும்படி செய்வார்.
“இந்தப் பக்கம் வா…” என்று அங்கே வேறு ஒரு செடியைக் காண்பிப்பார்… அதனின் மணத்தை நுகரு…! என்பார் நுகர்ந்தவுடன் அந்த உணர்வுகள் சேரும்… உமிழ் நீர்கள் எனக்குள் மாறும்.
நீ சாப்பிட்ட தண்ணீரின் சத்து இப்போது எப்படி வருகிறது பார்…! என்று காட்டுவார். நீ நுகரும் இந்த மணத்திற்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று நுகரச் சொல்லி… அறியச் செய்து… உணரும்படி செய்வார்.
இதையெல்லாம் முழுமையாக உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்குத் தான் சொல்கிறேன். காரணம் உங்கள் சந்தர்ப்பம் அந்தந்த நேரமோ அப்போது இந்த உண்மைகளை நீங்கள் அறிந்து… ஞானத்தின் வழியிலே சீராகச் செல்வதற்கு இது உதவ வேண்டும் என்பதற்காகத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
ஆகவே இந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
சாதாரண எண்ணத்துடன் ஆராய்ச்சி செய்தால் மெய் உணர்வைக் காண முடியாது
பூமி தோன்றிய நிலையை… சூரியனிலிருந்து சிதறி வந்த கோளங்கள் பல ஒன்று சேர்ந்து ஆரம்ப நிலையில் ஆவியாய்க் குளிர்ந்து ஒன்றுபட்டு இப்பூமியாகச் சுழல்கின்றது என்ற யூக நிலையில் உள்ளனர்.
பூமி தோன்றிய நிலையை ஆரம்ப நிலைப்படுத்திப் பல நிலைகளில் செப்பிவந்துள்ளேன். வரிசைத் தொடரை இன்று உணர்த்துகின்றேன்.
இந்தப் பூமியே “ஆண்பால் பெண்பால் கொண்ட இரண்டு ஆத்மாக்களின் ஜோதிக் கலப்பினால்…” உற்பத்தியானது.
இந்தப் பூமியைப் போன்ற… இன்று வாழ்ந்திடும் வளர்ந்த அறிவு நிலை பெற்ற… ஆத்ம உடல் கொண்ட மனித இனம் இப்பூமியில் வளரும் நிலைக்கும் முதலே…
1.நம் சூரியனைச் சார்ந்துள்ள 48 மண்டலங்களில்லாமல்
2.மற்ற சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட நிலையில் வாழும் மண்டலங்களில்
3.பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித ஆத்மாக்கள் உண்டு.
நம் பூமியில் இம்மனித இன வர்க்கங்கள் தோன்றியதெல்லாம் மூன்று மாற்றங்களுக்குப் பிறகு தான் மனித இன வர்க்கமே அறிவு நிலை பெற்று வளர்ச்சி நிலையில் வாழ்ந்து வருகின்றது.
அதுவும் இக்கலியினால் மாற்றம் கொண்டு கல்கியில் இன்னும் மாற்றம் கொண்ட நிலையில்தான் செயல்படப் போகின்றது.
ஆனால் இந்நிலையில் செப்பியபடி மனித ஆத்மாக்கள் வளர்ச்சி கொண்ட மண்டலங்கள் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகின்றன.
அத்தகைய மண்டலங்களில் வாழ்ந்த அறிவு நிலை பெற்ற ஆத்ம உடல் கொண்ட சூட்சும நிலையைக் க