ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் கதிரியக்கச் சக்திகளை ஒலிப்பேழைகளிலே விஞ்ஞானிகள் கவர்கின்றார்கள். அதே அலைவரிசையில் அனுப்பி 27 நட்சத்திரங்களின் நிலைகளை
1.இராணுவ ரகசியமாகவும் அந்த நாட்டினுடைய ரகசியமாகவும் வைத்துக் கொண்டுள்ளார்கள் விஞ்ஞான அறிவால்.
2.இதையெல்லாம் பத்திரிக்கை வாயிலாக நீங்கள் காண்பது மிகவும் கடினம்.
ஏற்கனவே இத்தகைய கதிரியக்கச் சக்திகளை நட்சத்திரத்திலிருந்து கவர்ந்து கொண்டுள்ளார்கள் என்று பல முறை சொல்லியும்… அதை ஏற்றுக் கொள்வார்கள் இல்லை.
ரஷ்யாவில் மனிதனின் உணர்வுக்குள் இயந்திரத்தினைப் பதிவு செய்து அந்த உணர்வின் ஓட்டத்தால் மனிதனின் கண்ணின் நிலைகள் கொண்டு விண்ணிலே பறந்து செல்லும் ராக்கெட்டினை அன்று வீழ்த்தினார்கள்.
ஆரம்பத்தில் அமெரிக்கா ராக்கெட்டுகளை விண்ணிலே ஏவும் போது அது மேலே சென்று கீழே இறங்கி வரும் நிலைகளில்
1.உடலில் பதிந்து கொண்ட உணர்வின் துணை கொண்டு மனித உணர்வால் பாய்ச்சப்பட்டு
2.அந்த ராக்கெட்டைச் செயலிழக்கச் செய்தார்கள்…. இவ்வாறு தான் வீழ்ச்சி அடைந்தது.
முதலிலே வெற்றிகரமாக ஏவினார்கள்… அதைக் கொண்டாடவும் செய்தார்கள். அதற்கு அடுத்து இரண்டாவது ஏவப்படும் பொழுது அதை வீழ்ச்சி அடையச் செய்தார்கள்… அதற்கடுத்து செலுத்தப்பட்டதும் வீழ்ந்தது… வெற்றி பெற முடியவில்லை.
முதலில் வெற்றி பெற்ற இயந்திரம் பழுதடைந்த பின் தான் அமெரிக்கா சிந்திக்கத் தொடங்கினான். அந்த நுண்ணிய அலைகளை… கதிரியக்கச் சக்தியால் கண்டறிந்த பின் ரஷ்யாவில் அணு உலைகள் வைத்திருக்கும் இடங்களை லேசர் கதிரியக்கங்களைப் பாய்ச்சி… அந்த அணு உலைகளை இவர்கள் தகர்த்தார்கள்.
அது வெடித்தபின் அதிலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கங்கள் பூமிக்குள் பரவி… அதிக நிலநடுக்கங்கள் உருவாகி அந்த நகரமே குலுங்கி கட்டிடங்களும் சிதைவுண்டது… அந்த நாடே மிகவும் அல்லல்பட்டது.
இதைப் போன்று ஒன்றல்ல… இரண்டாவது அணு உலை அங்கே சிதறப்பட்ட பின்பு தான் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஏனென்றால்…
1.“நட்சத்திரப் போர்…” உருவாகி அணு உலைகள் வெடிக்குமேயானால்
2.அந்த கதிரியக்கத் துகள்களால் மொத்த நாடே அழிந்துவிடும் என்ற நிலையில்
3.இவர்களுக்குள் கம்யூனிசமா சோசியலிசமா போர் முறைகள் ஓய்ந்து சமாதான முறைகளுக்கு வந்தார்கள்.
இப்படிப்பட்ட யுத்தங்கள் தன் நாட்டைக் காக்க மதத்தின் அடிப்படையில் இயக்கப்பட்டது.
அதே சமயத்தில் முகமதியர்களும் போர் செய்து உலகம் முழுவதும் மதப்போராகி ஒவ்வொரு நாட்டையும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மக்களைத் தன் இனத்தில் சேர்த்துக் கொண்டால் கடவுள் உனக்கு எல்லாம் தருவார் என்று உலகம் முழுவதும் பரப்பி இந்த நிலையை உருவாக்கினார்கள்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் “எங்கள் கடவுள் உங்களுக்கு இன்னது செய்வார்…” என்று அவர்களும் இப்படிப் பறைசாற்றினார்கள். யூத மதத்தைச் சேர்ந்தவர்களும் மந்திரத்தின் நிலைகள் கொண்டு “கடவுள் உங்களுக்கு இதைச் செய்வார்…” என்று அவர்களும் செயல்படுத்தினார்கள்.
யூத மதத்திலிருந்து வந்ததுதான் முகமது மதமும் கிறிஸ்தவ மதமும் இப்படிப் பிரிக்கப்பட்டு உலகம் முழுவதும் மதப் போராக மாறி இந்தியாவுக்குள்ளும் பரவியது.
முகமதியர்கள் முதலில் இங்கே ஆட்சி செய்ய வந்தார்கள் அது உருவானாலும் அதற்கடுத்து வந்த கிறிஸ்தவ மதம் ரோமானிய மதம் என்று உலகம் முழுவதும் அப்படிப் பரவும் நிலை வந்தது. இஸ்ரேல் நாடும் ரோமானியர்களுக்கு அடிமைப்பட்டுத் தான் இருந்தது.
அரசர்களால் உலகம் முழுவதும் இப்படி ஏற்பட்ட நிலைகள் தான்… மதத்திற்குள் புகுந்த கடவுளும்… எல்லாமே.
அரசர்கள் மதத்தை உருவாக்கிக் கடவுள் என்று பெயரில் சட்ட நீதிகளையும் ஒழுக்க நெறிகளையும்
1.அந்த நாட்டு அரசனுக்கு ஏற்றவாறு இதைப் பதிவு செய்து அவர்கள் உடல்களிலே பதிவான பின்
2.யார் யாரெல்லாம் இதைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கினார்களோ
3.ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் பதிவாகி விடுகின்றது.
அதாவது… “ஓ” என்று பிரணவமாக்கி அவர்கள் கூறிய உணர்வின் சத்தை “ம்” என்று உடலாக்கி… இந்த உடலிலிருந்து மீண்டும் நினைவைக் கூட்டும் போது அது இயக்கி… அந்த மதத்தின் அடிப்படையில் அவனைக் காத்திடும் உணர்வு வருகிறது.
அதையே கடவுளாக மதித்துக் கொண்ட பின்…
1.மற்றவர்கள் சொல்வதை எதிர்நிலை கொண்டு மற்ற மதங்களைச் சாடுவதும் தாக்குவதும் அழிப்பதும் தான்
2.அன்றைய அரசர்களால் உருவாக்கப்பட்டது… உலகம் முழுவதும் பரவி வந்தது.
இன்றைய படித்த விஞ்ஞானிகளாக இருந்தாலும் சாஸ்திரங்கள் தெரிந்த சாஸ்திரவாதிகளாக இருந்தாலும் அனைவருக்கும் இது தெரியும். ஆனால் இதனுடைய உண்மைகளை வெளிப்படுத்த முடியவில்லை.
விஞ்ஞான அறிவில் கற்று வளர்ச்சி அடைந்து இருந்தாலும்… மதத்தைச் சார்ந்த நிலையில்
1.தன் மதமே பெரிது என்றும் எங்களுடைய சாஸ்திரங்களே பெரிது என்றும்
2.மதத்தின் அடிப்படையில் தான் இன்று உலகம் முழுவதும் பரவி… அதுவே ஓங்கி வளர்ந்து கொண்டுள்ளது.


எலெக்ட்ரானிக்கின் இயக்கம் – முகப்பு பற்றிய உண்மை
சூரியனிலிருந்து வரக்கூடியது எலக்ட்ரிக். அதைக் கடந்து வரும் பொழுது காந்தம் இழுத்துக் கொண்டால் நியூட்ரான். அது ஓடும் ஓட்டத்தில் இரண்டற இணைந்து உணர்வின் தன்மை ஒரு அணுவாக மாறப்படும் பொழுது புரோட்டான்… சத்தாக மாறுகின்றது… விஞ்ஞானிகள் சொல்வது.
ஞானிகள் சொல்வது… சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது.
1.அது ஒரு செடியின் சத்தைக் கவர்ந்தால் எலக்ட்ரானிக். அதை நாம் நுகர்ந்தால் அதே எலக்ட்ரானிக் நம்மை இயக்கும்.
2.நம் உயிர் எலக்ட்ரிக்… அதே சமயத்தில் நாம் உருவாக்கும் உணர்வலைகள் வெளிப்படும் பொழுது
3.சூரியன் எடுத்துக் கொண்டால் எலக்ட்ரானிக் ஆக மாறுகிறது.
4.இவ்வாறு வெளிப்படுவதை இன்னொருவர் நுகர்ந்தால் அதே எலக்ட்ரானிக் அங்கேயும் இயக்குகின்றது.
இப்படித்தான் எலக்ட்ரானிக் என்பது மனித உணர்வின் தன்மை எடுத்து மனித உணர்வை விஷத்தன்மை கொண்ட நாடாக்களில் பதிவு செய்கின்றார்கள்.
இந்த உணர்வின் அழுத்தம் வரும் பொழுது எதனுடன் கலக்கப்படுகின்றதோ அந்த அறிவே அதிலே இணைகிறது.
1.நோயாகி விட்டால் அது கம்ப்யூட்டரில் உள்ள நாடாவில் இணைந்து விட்டால் அடுத்தவருக்கும் இந்த நோய் வரும்.
2.குடும்பத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அதே உணர்வுகள் இணைந்து
4.அந்த நாடாவின் மூலமாக அடுத்த குடும்பத்திலும் இந்தச் சண்டை வரும்.
ஆகவே… கம்ப்யூட்டர் இயக்குபவர்கள் தவறான பாதையில் செல்வது… தவறான நிலைகள் செயல்படுவது இதற்கும் அதற்கும் சம்பந்தம் உண்டு.
ஏனென்றால் இந்த உணர்வு எலெக்ட்ரானிக்காக மாறப்படும் பொழுது இதே உணர்வுகள் நாடாக்களில் பதிவாகும். பல நோய்கள் வருவதற்கும்… சில வைரஸ் என்று இவர்கள் சொல்வார்கள்… அதெல்லாம் உருவாவதற்கும் காரணமாகின்றது.
இதே போன்று தான் கம்ப்யூட்டரின் பயன்பாட்டால் கோள்களின் உணர்வின் தன்மையை முகப்பில் இணைக்கின்றான். இவர்கள் விண்வெளிக்கு அனுப்பும் சாதனங்களிலே அதைப் பொருத்துகின்றார்கள்.
அவ்வாறு முகப்பில் வைத்து இணைத்து அனுப்பப்படும் பொழுது எதைப் படமெடுத்து இந்த உணர்வைப் பதிவாக்கினானோ அதனின் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்படும் பொழுது குறிப்பிட்ட எல்லைக்கு ராக்கெட் மூலமாக அனுப்பும் பொழுது கம்ப்யூட்டர் பதிவு செய்த நிலையில் அந்த எல்லைக்குச் செல்கின்றது.
இதே போன்று தான்
1.நல்ல குணங்கள் கொண்டிருக்கும் பொழுது ஒரு தீயவனின் உணர்வு பதிவான பின்
2.அந்த எல்லைக்கு இந்த உணர்வு நம்மை அழைத்துச் செல்கின்றது.
பிற உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம். இந்த உடலுக்குள் பதிவாகி அது முகப்பான பின் உடலை விட்டுச் சென்றால் அங்கே அழைத்துச் செல்கின்றது.
அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களின் ஒவ்வொரு முகப்பிலும் இணைத்து விட்டால்
2.உடலை விட்டுச் செல்லும் பொழுது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்.
3.கணவன் மனைவி இருவரும் அதை எடுத்து ஒன்றாக்கி விட்டால் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.
விஞ்ஞான அறிவுப் பிரகாரம் உங்களுக்கு இதை நிரூபித்துச் சொல்கிறேன்.
இதை எல்லாம் குருநாதர் எமக்குத் தெளிவாகக் காட்டினார். விஞ்ஞானிகள் எப்படிச் செயல்படுத்துகின்றார்கள்…? புதிதாக எப்படிக் கண்டுபிடிக்கிறான்…? எப்படி எல்லாம் அதை இணைக்கிறார்கள்…? எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது எப்படியெல்லாம் உருவாகின்றது…?
படிக்காததனால் தான் இந்த அளவிற்குச் சொல்கின்றேன். ஆங்கில அறிவு எனக்கு இல்லை… இருந்திருந்தால் “தூள் கிளப்பி இருக்கலாம்…” ஆனால் குருநாதர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
குருநாதர் எல்லா பாஷைகளும் பேசுவார். எனக்கு அது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
பாஷைகள் கற்றவர் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். பற்று கொண்டோர் வரும் பொழுது அதன் வழிகளில் இதைக் கொண்டு செல்லலாம். உன் நேரத்தை வீணாக்காதே… நீ இதைச் செயல்படுத்து…! என்று சொல்லிவிட்டார். அதன் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை முகப்பில் நீங்கள் வைத்துக் கொண்டால் அது உங்களை அங்கு அழைத்துச் செல்லும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெருக்கும்பொழுது அது வளர்ச்சி அடையும்.
இதிலே வித்தையும் இல்லை ஒன்றும் இல்லை…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மகரிஷிகள் தன்னைத்தான் கண்டுணர்ந்த முறைப்படி
1.மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு உயர்வு பெற வேண்டும்…?
2.உயர்ந்த சக்திகளை எவ்வாறு பெற முடியும்…? என்ற நிலையை
3.தெளிவாக உணர்த்தி உள்ளார்கள் கடவுளின் அவதாரம் பத்து என்று.
அதே சமயம் சிவ தத்துவத்தின் பிரகாரம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வை நம் உயிர் ஓ…! என்று இயக்கி… நாம் எண்ணிய குணங்களை ம்…! என்று தன் உடலாக்கும் பொழுது சிவமாகின்றது.
நாம் எந்த குணத்தினை எண்ணுகின்றோமோ அந்த குணத்தின் தன்மை உடலுடன் இணைந்து இயக்கப்படும் போது “வினை என்றும்… விநாயகா என்றும்…” காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள் ஞானிகள்.
நாம் கடவுளாக வணங்குவது எல்லாமே…
1.ஒவ்வொரு இயக்கப் பொருள்களுக்கும் மகரிஷிகள் காரணப் பெயர்களை வைத்து
2.நாம் அறிந்து கொள்வதற்காகச் செயல்படுத்தப்பட்டது தான் அவை அனைத்துமே.
3.கடவுள் என்று தனிச் சக்தியாக எதுவும் இயங்கவில்லை.
நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் உடலாகும் பொழுது சிவம் என்றும்… உடலுக்குள் அது இணைந்து செயல்படத் தொடங்கி விட்டால் வினை என்றும்… இந்த வாழ்க்கையில் நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த குணமே கணங்களுக்கு அதிபதியாகின்றது கணபதி…!
ஒருவரைக் கோபிக்கிறோம் என்றால் அந்தக் கோப உணர்வை நாம் சுவாசிக்கப்படும் போது “ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம். அந்தக் கோபத்தின் வழிதான் நாம் செயல்படுத்த வேண்டி வரும்.
கோப உணர்வுகளை அதிகமாகச் சேர்த்து விட்டால் கணங்களுக்கு அதிபதியாகி அதன் வழிகளில் இந்த உடலில் இயற்கையில் இருந்த நிலையைக் காட்டிலும் மாற்றமாகித் தேய்பிறையாக மாற்றுகின்றது.
கோப குணம் வளர்ச்சி அடைந்து… நல்ல குணங்களைத் தேய்பிறையாக மாற்றுகின்றது. ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்.
இந்த வாழ்க்கையில் எந்தக் குணங்களை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதன் உணர்வுப்படி கணங்களுக்கு அதிபதியாகி அதனுடைய செயலை இந்த உடலுக்குள் உருவாக்கும்.
நம் உயிர் ஈசனாக இருக்கும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்கள் உடலுக்குள் உணர்வாகி உணர்வின் அணுவாகி
2.உடலுடன் இணையப்படும் பொழுது இறை… “இறைவா…”
3.அந்த உணர்வின் சக்தி உடலுக்குள் இயங்கத் தொடங்கினால் “தெய்வம்”
4.அந்த உணர்வின் சக்தி இயங்கி மீண்டும் அதைத் திரும்ப எண்ணினால்
5.அந்த குணத்தின் செயலாக நம்மை இயக்கும் “குரு…” என்று இவ்வாறு காரணப் பெயர்களை வைத்து
6.நாம் இயங்க வேண்டிய முறைகள் எது…? நாம் எப்படி இயங்க வேண்டும்…? நம்மை எப்படி இயக்க வேண்டும்…? என்ற முறைகளை வகுத்து
7.ஞானிகள் நமக்கு அதைக் காவியங்களில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.
அதாவது இயற்கையின் உணர்வின் தன்மையைக் காவியமாக்கி… அந்தக் கருத்தினை எண்ணத்தால் எண்ணி அந்த உணர்வை நுகர்ந்தால்… நம் உயிர் அதை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றுகின்றது.
ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை நுகர வேண்டும்…? எதை நாம் வழிப்படுத்த வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது நமது சாஸ்திரங்கள்.


இரண்யன் மூன்று லோகத்தை அடக்கினான் என்றால் பொருள் என்ன…?
மனிதனான பின் அசுர உணர்வுகளைச் சந்தர்ப்பவசத்தால் நாம் எடுத்துக் கொண்டால்…
1.நாம் எண்ணத்தால் எடுத்துக் கொண்ட அந்த நிலைப்படி இந்திரலோகத்தை மாற்றி அமைத்து
2.அதை அந்த அசர உணர்வுகளே ஆட்சி புரியும் நிலைக்கு வருகின்றது.
3.இந்திரலோலகம் என்பது ரத்த நாளங்கள்.
இதைத் தான் காவியங்களில் இரண்யன் மூன்று லோகத்தையும் அடக்கினான் அடிமைப்படுத்தினான் இந்திரலோகத்தில் உள்ள அனைவரையும் தனக்குக் கீழ் அடிமைப்படுத்தினான் என்று சொல்வது.
உடலான இந்திரலோகத்திற்குள்ளும் இவன் அடக்குகின்றான் காற்றுப் பகுதியில் உள்ள உணர்வுகளையும் இவன் செயல்படுத்துகின்றான்… காற்று மண்டலத்தையும் அதுவாக மாற்றுகின்றான்.
சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்விலும் இந்த உணர்வுகள் இணைந்து மற்றவர்களை இது அடக்கிடும் சக்திகளாகப் பரப்புகின்றான்.
இப்படி மூன்று நிலைகளாகப் பரவுவதை “மூன்று லோகம்” என்று காரணப் பெயரை வைத்து அழைத்தனர் ஞானிகள்.
1.உடலான ஒரு லோகமும்
2.புறத்தால் தன் சுற்றுப்புற சூழ்நிலையில் உள்ள உணர்வுகளும்
3.சூரியனிலிருந்து வரும் உணர்வின் தன்மை விஷத்தின் தன்மை உமிழ்த்தப்படும் போது இவனிடும் உணர்வுகளே அதனின் செயலாகச் செயல்படுகிறது.
அசுர குணங்கள் கொண்டு நாம் பேசினால் சுற்றுப்புற சூழ்நிலைகள் இந்த லோகத்தையே இது கவர்ந்து விடுகின்றது. அதற்குள் வாழும் மக்களும் சிறிதளவு நுகர்ந்தபின் உடலுக்குள் அந்த உடலையும் அடக்குகின்றது. அச்சுறுத்தி வாழும் நிலை வருகின்றது.
ஒரு இடத்திலே போக்கிரி இருக்கிறான் என்றால் அவன் கடுமையாகப் பேசப்படும் பொழுது அவன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை அடக்குகின்றான்.
நல்ல உணர்வின் தன்மை அடங்கிச் சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்போர் உடலுக்குள்ளும் இந்த உணர்வுகளே உள் புகுந்து அவர்களை அச்சுறுத்தும்படிச் செய்கின்றது.
அதே சமயத்தில் சூரியனால் கவரும் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தத்திலும் மற்றவைகளுடன் இணைந்து… உணர்வின் அலைகளாகப் படரப் படும் பொழுது “அந்தச் சூரியனின் வெப்ப காந்தமும் இவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வைக் கலந்து” அதனின் உணர்வாக ஆட்சி செய்யும் நிலையாக அமைந்து விடுகின்றது.
இவனின் ஆக்கிரமிப்புத் தன்மைகள் வரும்போது இவனின்று விளையும் தன்மையே
1.உடலையும்
2.காற்று மண்டலத்தையும்
3.சூரியனுடைய உணர்வுகளையும்
4.இந்த மூன்று மண்டலங்களையும் வீரியத்தன்மை கொண்டு ஆட்சி புரியத் தொடங்கி விடுகின்றது.
இதை நுகர்ந்தோர் அனைவரும் மடியும் நிலையும் அசுர உணர்வுகள் கொண்டவர்களாகவே வந்து விடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
ஆனால் நஞ்சினை வென்றிட்ட அஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் மெய்ப் பொருளைக் காணச் செய்யும் நிலையாக.. இருளைப் போக்கிடும் அருள் ஒளியாக வளர்த்திடும் அரும்பெரும் சக்தியாக இது அமையும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்த்துத்தான் நம்மை அறியாது வரும்
2.அந்த அசுர உணர்வினை நாம் மாற்றி அமைக்க முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.அரசியல் ரீதியிலும் சரி… பாட நிலைகளில் தத்துவங்களைப் போதித்துக் கொண்டிருப்போரும் சரி…
2.ஞானிகள் காட்டிய அறநெறிகளைக் கடைப்பிடித்து அதன் வழியில் இன்று செயல்படுகிறார்களா…! என்றால் இல்லை.
யாரையும் தவறாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். “நான் அல்ல இதைச் சொல்வது…!” குருநாதர் காட்டிய அருள் வழியில் தான் இதை உணர்த்துகின்றேன்.
காரணம்… இன்றைய உலக மக்கள் நல்லதை ஏங்கித் தவிக்கும் போது அந்த நல்ல உணர்வின் செயல்கள் எவ்வாறு மறைந்து கொண்டிருக்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.
மதங்களில் தவறில்லை…! மதத்தின் தன்மை வகுத்து நல்ல ஒழுக்கங்களை ஞானிகள் கொடுத்திருந்தாலும் பிற்காலங்களில் தவறின் நிலைகளுக்கு வருகின்றது.
அகஸ்தியன் வழியில் வியாசகர் அண்டத்தின் தன்மையைக் கண்டறிந்து அதை உணர்த்தினாலும் அவருக்குப் பின் வந்தவர்கள்…
1.ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து முழுமையின் தன்மையை அறிய முடியாது
2.காலத்தால்… அரசு… அரசியல் என்ற நிலையில் இது மறைந்து விட்டது.
3.தன் நாட்டைக் காக்க தன் மதத்தைக் காக்கப் போர் முறைகள் உருவாக்கப்பட்டதால் உண்மைகள் மறைந்து விட்டது.
அன்று “மந்திரவாதிகளால்” மக்களை அடிமைப்படுத்தும் நிலைகள் இருந்தது. மனிதன் மடிந்த பின் அவன் உணர்வைக் கவர்ந்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல் பில்லி சூனியம் என்று அன்றைய காலங்களில் அரசர்கள் செய்தார்கள்.
இஸ்ரேல் நாட்டில் அன்று போர்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் குறி வைத்து அம்பை எய்து “ஜோதிடம் பார்த்துத் தான்” அதனைச் செயல்படுத்துவார்கள். அம்பு எய்த நிலைகள் கொண்டு அரசனின் வலுவின் நிலை அறிந்து தான் செயல்படுவார்கள்.
நமது நாட்டிலும் அரசனாக இருந்த கட்டபொம்மனும் மந்திர ஒலியால் “ஜக்கம்மா” என்ற நிலையில் குலதெய்வமாக வளர்க்கப்பட்டு… அதனை ஈர்க்கப்பட்ட கருவின் தன்மை கொண்டு எதிரிகளைக் கண்டுணர்ந்து… எதிரிகளிடமிருந்து தப்பிக் கொள்ளும் உணர்வின் தன்மை கொண்டு செயல்பட்டான்.
மற்ற நாடுகளிலும் இதே போன்று மந்திர ஒலிகளால் தனக்குள் கவரப்பட்டு தன்னையும் தன் நாட்டையும் காத்திடும் நிலையாக மனிதர்களுக்குள் மதங்களை உருவாக்கினார்கள்.
1.மதத்தால் சொன்ன நிலைகளை ஏற்படுத்திய பின் அதையே மந்திரம் ஆக்கி
2.அந்த மந்திரத்தின் நிலைகள் கொண்டு மனிதன் இறந்து விட்டால் அதைக் கவர்ந்து சக்தி வாய்ந்ததாக மாற்றி
3.தன் நாட்டினுடைய நிலைகளுக்கு மதங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
எந்த மதமாக இருந்தாலும் ஞானிகள் காட்டிய நிலைகள் மனிதர்களுக்குள் படர்ந்த பின்… பதிந்த நிலைகள் எவ்வாறு இயக்குகிறது…? என்ற நிலையை மந்திர ஒலிகளாக மாற்றித் தான் செயல்படுத்தி வந்தார்கள்.
அந்த மகான்கள் காட்டிய நிலைகளை யாரும் இப்போது கடைப்பிடிக்கவில்லை. எந்த மதத்தின் நிலைகள் கொண்டு பிரிவுகள் பிரிந்ததோ அந்த ஞானிகள் சொன்ன உண்மை நிலைகள் மறைக்கப்பட்டது.
நான் பெரிது… அவர்கள் செய்வது தவறு… இவர்கள் சொல்வது பொய்… என்று மதத்திற்குள் இனங்களாகப் பிரிக்கப்பட்டு அதனின் நிலைகள் கொண்டு
1.உலகெங்கிலும் மகான்கள் கொடுத்த நிலைகள் மக்களுக்குக் கிடைக்க முடியாதபடி
2.இன்று உண்மைகளைத் தேடிச் சென்றாலும் பெற முடியாது நிலைகளாக மடிந்து கொண்டுள்ளது “விஞ்ஞான அறிவு கொண்டு…”


ஃபோன் எல்லோருடைய கைகளிலும்… எப்போதும்… நீங்காது இடம் பிடித்திருப்பதன் காரணம் என்ன…?
கம்ப்யூட்டரை எலக்ட்ரிக் இயக்குகின்றது.
1.அதில் உள்ள நாடாக்களில் உள்ள காந்தப் புலனறிவில் கெமிக்கல் கலந்த உணர்வினைப் பதிவாக்குகின்றான்.
2.எலக்ட்ரிக்கல் இதனுடைய தட்டெழுத்தின் தன்மை வரப்படும் பொழுது எலக்ட்ரானிக் ஆக மாற்றுகின்றது.
3.அதனுடைய அழுத்தம் எதுவோ அதனின் நிலையை இயக்குகின்றது.
இதை உருவாக்கியவன் நினைக்கலாம் இதிலே பதிவு செய்து கொண்ட நிலைகளால் தான் அது இயங்குகிறது என்று. அது மட்டுமல்ல…!
மனித உயிரின் தன்மை எலெக்ட்ரிக். ஒரு உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது எலக்ட்ரானிக்.
1.அதற்குத் தக்க தான் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் இவருடைய கைகளும் இயங்குகின்றது.
2.இந்த உணர்வின் காந்தப் புலன் இணைகிறது.
3.இவன் நினைவின் ஆற்றலுக்குள் ஜீவணுக்களாக அங்கே படங்களாகக் காட்சி தருகின்றது.
இவனுடன் இணைந்த நிலை தான் அங்கே வருகிறது.
நாம் நினைக்கின்றோம் அது இயந்திரம் என்று. இவனை அறியாது இயக்கக்கூடிய நிலைகளை மனிதனின் எண்ண உணர்வுகள் இங்கே பதியப்படும் பொழுது இவனுடைய உணர்வின் நினைவலைகளும் அதிலே வைத்திருக்கும் நாடாவிலும் இது பதிவாகின்றது… ஆனால் மனிதனின் மூளை என்பான் கம்ப்யூட்டரை.
தட்டெழுத்தின் மூலமாக ரிக்கார்டை இயக்கப்பட்டு காந்தப்புலனறிவுகள் இயக்கப்படும் பொழுது மனிதனைப் போன்று செயல்படும்.
1.மனிதன் சொல்வது போல் சொல்லும்… வருவோரைப் பற்றிக் கேட்டுப் பதிலும் கொடுக்கும்.
2.கம்ப்யூட்டர் மூலமாக இன்று எவ்வளவோ நுண்ணிய நிலைகளை (CHATGPT.. GEMINI… SIRI) இவ்வாறு தான் செயல்படுத்துகின்றார்கள்.
ஆனால் மனிதன் நோய்வாய்ப்பட்டோ அல்லது வெறித்தனமாகவோ உணர்வுகள் மாற்றப்பட்டு வீட்டில் சண்டையோ சங்கடமோ வெறுப்புடன் வந்து செயல்பட்டால்… இந்த உணர்வின் தன்மை அழுத்தத்தின் தன்மை இயக்கும்.
அதனின் இயக்கம் நாடாக்களில் பதிவு செய்து மற்றொருவர் இயக்கப்பட்டு படங்களாகப் பதிவாக்கப்பட்டால் இதனுடைய நிலைகள் இவன் உடலுக்குள் இவருடைய உணர்வுகளும் மாறும். கம்ப்யூட்டர் இப்படித்தான் வேலை செய்கிறது.
அதனால் தான்
1.கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் ஒரு சிலர் தன் நிலையையே இழந்திருப்பார்கள்.
2.இன்னொருவர் கம்ப்யூட்டரில் இயக்கத்தின் தன்மை கொண்டு சரியாக வேலை செய்திருந்தாலும்
3.வீட்டிலே வெறுப்பு குடும்பத்தில் வேதனை போன்ற உணர்வுகளை எடுத்தால் அது கலந்துவிடும்.
4.அதை இயக்கப்படும் பொழுது… இவன் (அடுத்தவன்) பார்த்தான் என்றால் இவனும் பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடுவான்.
5.இது எல்லாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதால் வரக்கூடிய விளைவுகள்.
6.(சிறு குழந்தைகள் முதல் கொண்டு பெரியவர்கள் வரை இதனால் தான் அதிலிருந்து வெளி வர முடிவதில்லை).
ஆகவே… காந்தப் புலனறிவு எதனுடன் இயக்குகின்றதோ அதனின் இயக்கமாக மாறுகின்றது.
கம்ப்யூட்டர் திருடர்களும் இன்று நிறையவே வருகிறார்கள். பேங்கில் இருக்கும் கணக்கை மாற்றி கண்டுபிடிக்காதபடி உணர்வுகளைக் கொண்டு வந்து திருட்டுத்தனத்தைப் பாய்ச்சுகிறார்கள்.
இவன் எந்தக் கணக்கைப் போட்டாலும் அது காட்டாது.
1.அதற்காக அமெரிக்காவில் கண்டுபிடித்து என்ன செய்கின்றார்கள்…?
2.எவன் திருடுகிறானோ அவனுக்கே உத்தியோகம் கொடுக்கின்றார்கள் கம்ப்யூட்டர் திருடர்கள் (HACKERS).
பல கோடிக்கணக்கான பணங்களை பரிவர்த்தனை செய்யக்கூடிய நிலையில் இவ்வாறு ஏமாற்றி வேலைகளைச் செய்கின்றார்கள். பணம் காணாமல் போகிறது… ஆனால் யார்…? என்று தெரிவதில்லை.
விஞ்ஞான அறிவால் வந்திருந்தாலும் மனித உணர்வுகள் கலந்து தான் அது இயக்குகின்றது.
1.மனித உணர்வில் இருந்து பல கோடி உணர்வுகள் எடுக்கப்பட்ட பின் இந்த உணர்வலைகள் மாறுகின்றது.
2.அதை நுகர்கிறான்… அதற்குள் கலக்கின்றான்.
3.அடுத்தடுத்து… எதனைப் புதிதாக உருவாக்குகின்றானோ அந்த செல்களில் இந்த உணர்வுகள் இழுக்கப்படுகின்றது.
4.பதிவாக்கி மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது மனிதனால் இயக்கப்படுகின்றது.
மனிதன் இன்று எதை இப்படி உருவாக்கினாலும் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகளே அங்கே இயக்குகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாதாரண ஆண்டன்னாவை வைத்து அருகிலே ஒலி/ஒளிபரப்பப்படும் அலைளை டிவி ரேடியோவில் படமாக ஒலிகளாகக் காணுகின்றோம். அதே சமயத்தில் வெகு தொலைவில் இருந்து ஒளிபரப்பப்படும் அலைகளைக் கவர்வதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்துக் கவர்கின்றோம்
தொலைவில் இருந்து வருவதை எளிதில் காணுவதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களைப் பொருத்துகின்றார்கள். அப்பொழுதுதான் அதைக் குவித்து திரைப்படங்களாக டிவிக்களில் நாம் காண முடிகின்றது.
இதைப் போன்று தான் பழகியவர்களின் உணர்வுகளை நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொண்டுள்ளோம்… “அவருடைய ரூபங்களை… அவருடைய சொல்களை… அவருடைய செயல்களை…!”
அதே சமயத்தில் காவியங்களைப் படிக்கப்படும் பொழுது அதிலே சித்தரிக்கும் உணர்வின் தன்மையையும் இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.
1.இவ்வாறு நாம் எதை எதை எல்லாம் எண்ணிப் பதிவு செய்து கொண்டோமோ…
2.பின் கண்கள் வழி கூடித் தான் நினைவாற்றல் (அந்த அலைகள்) வருகிறது
3.கண்கள் தான் நமக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.
என்னை ஒருவன் திட்டுகிறான் என்றால் அவன் உருவைப் பார்த்துப் பதிவாக்குகின்றோம். ஆனால் அவனின்று வெளிப்படும் உணர்வுகள் அலைகளாகப் படர்கின்றது.
அவன் சொல்லும் உணர்வைப் பதிவாக்கி விட்டால்… நான் இங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்தாலும் அயோக்கியன்…! என்னைத் திட்டினான்… பேசினான்… என்று திரும்ப எண்ணினால்
1.அந்த உருவங்கள் நினைவலைகளாகத் தெரிய வருகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை என் உணர்வுக்குள் விழிகளில் இருக்கும் திரைகளில் பட்டு உணர்த்துகின்றது… கண்கள்.
3.உணர்வின் நினைவாற்றலாக எனக்குள் இயக்கி அந்தக் கோப உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
விஞ்ஞான அறிவால் டிவி ரேடியோ மூலம் மற்றவைகளைக் காணுவது போன்று… மெய் ஞான அறிவால் பார்க்கப்படும் போது…
1.நுகர்ந்து பதிவு செய்து கொண்டது அது தான் கண்ணன்… கண்கள்
2.நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
3.எதைப் பதிவு செய்கின்றாயோ… அதனையே தான் நீ நினைக்கின்றாய்
4.பதிந்த உணர்வுகளை நினைக்கப்படும் பொழுது அதன் நினைவைக் கூட்டும் பொழுது அதுவாகவே நாம் மாறுகின்றோம் என்று தான்
5.அன்று வியாசகர் இதை எல்லாம் நமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.
சாதாரண மனிதனிடம் பழகும் பொது திட்டியவன் தவறுகளைச் செய்தவன் இடையூறு செய்தவன் என்று எண்ணத்தால் பதிவு செய்து கொண்ட பின் அந்த நினைவுகள் எதிர்கொண்டு வருகின்றது. நோயுற்றவர்களைப் பரிவுடன் பார்க்கப்படும் பொழுது அதுவும் பதிவாகி… நமக்குள் அந்த அலைகளும் வரத் தொடங்குகின்றது.
நம் பிள்ளைகள் மீது பாசம் கொண்டு இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அவன் தவறு செய்கின்றான் என்றால் அந்த உணர்வைப் பதிவு செய்து கொள்கின்றோம்.
1.நல்லவனாக இருக்கும் பொழுது ஒரு பதிவு
2.ஆனால் தவறு செய்யும் போது அது ஒரு பதிவு
3.அவன் செய்த தவறினைப் பற்றி நாம் எண்ணப்படும் பொழுது
4.“நல்லவனாக இருந்தான்… இப்போது இப்படி ஆகிவிட்டான் என்ற உணர்வு நம்மை இயக்குகின்றது.
இதை எல்லாம் நாம் எளிதில் காணுகின்றோம்.
இத்தகைய உணர்வலைகள் படரும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்கள் தடைப்படுகின்றது…. நம் செயல்களும் மாறாக வரத் தொடங்குகிறது. தீமையின் உணர்வுகளை நுகரும் பொழுது நமக்குள் அது நோயாகி விடுகின்றது நல்ல சிந்தனைகள் அழிந்து விடுகின்றது.
இதைப் போன்று நம் எண்ணத்தால் நமக்குள் பதிவு செய்து கொண்ட நிலை எதுவோ கண்ணின் நினைவுக்கு வரும் பொழுது புவியிலிருந்து கவர்ந்து,,, ஆன்மாவாக மாற்றி… உயிரின் தன்மை நுகர்கிறது.
எப்படி ஆண்டன்னா அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி ரேடியோக்களில் பரப்பப்படும் பொழுது அந்த இயந்திரங்கள் ஒளி ஒலியாகப் பரப்பிப் படமாக ஒலிகளாகக் காட்டுகின்றதோ அதைப் போன்று தான் நம் கண்ணின் நிலைகளும்.
விஞ்ஞான அறிவுப்படி இந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் நம்மை அறியாது பதிவாகும் தீமையின் இயக்கங்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அருள் சக்திகளை எவ்வாறு பெற வேண்டும் என்பதற்குத் தான்…!
சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்து வெகு தொலைவில் இருப்பதை விஞ்ஞான அறிவு கொண்டு கவர்வது போன்று தான்
1.விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்வதற்கு உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
2.பதிவானதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் கண்களுக்கு ஆற்றல் மிக்க சக்திகள் கூடி…
3.நினைத்தவுடன் ஞானிகள் அருள் சக்திகளைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகிறீர்கள்… வரும் தீமைகளை அகற்றிட முடியும்.


மிக மிக நுண்ணிய வேலைகளை எல்லாம் செய்யும் கம்ப்யூட்டரின் செயல்பாடு (INTELLIGENCE) எப்படிப்பட்டது…?
எதிர் நிலையான நட்சத்திரங்களின் மோதலில் மின்னலாகி அது ஒரு மரத்தின் மீது பட்டால் அதற்குள் ஊடுருவித் தன் இனத்தைப் பிரித்துவிட்டு அதைக் கருக்கி விடுகின்றது.
நிலத்திலே பட்டால் பூமியின் நடு மையம் சென்று அடைகின்றது. அதீதமான நிலையில் சென்று எதிர்மறையான உணர்வுகள் பூமியின் நடு மையத்திற்குள் ஏற்பட்டால் எந்தப் பகுதியில் இது நடக்கின்றதோ கொதிகலனாகி பாறைகள் இளகுகின்றது.
மேல்நிலை இளகி ஆவியாக மாறும் பொழுது பூமி வெடிக்கின்றது. மேலே உள்ள பாறைகள் கீழே செல்கின்றது. நிலநடுக்கம் என்று அடிப்பாகமாகப் போய் உள்ளே சென்று அடக்கி விடுகின்றது.
ஆனால் அதே சமயம்
1.இந்த மின் அணுக்களின் கதிர்கள் (மின்னல்கள்) கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகின்றது.
2.ஹைட்ரஜன் என்ற உப்பின் சத்து இந்த மின்னலின் வீரியத்தைத் தணிக்கின்றது.
கடல்களில் பாய்வது மணலாக மாறி அந்த மின்னணுக்களின் துகள்கள் வரப்படும் பொழுது உருவாகும் இத்தகைய மணல் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
1.ஒவ்வொரு மண்ணிற்கும் எந்த நட்சத்திரத்தின் சக்திகள் கலவையாகி எதிர்நிலையாகிப் பதிவாகின்றதோ இப்படி உருவாகின்றது.
2.இதைத் தான் யுரேனியம் என்று பிரித்து எடுக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் அந்த மணலை எடுத்துப் பிரித்தெடுத்து அணுவைப் பிளக்கின்றார்கள். அணுவைப் பிளந்து அந்த ஆற்றலைச் சேமிக்கின்றார்கள்.
இதில் சிதைந்த உணர்வின் தன்மைகளைத் தான்
1.கம்ப்யூட்டரில் இந்த உணர்வுகளைப் பாய்ச்சி ஒலி அதிர்வுகளைக் கொண்டு
2.பல செயல்களுக்கு அந்த நுண்ணிய கதிரியக்கப் பொறிகளைச் செயலாக்கும் போது கம்ப்யூட்டர் என்று வருகின்றது.
அவர்வர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை இயற்கை நிலையில் எப்படி வருகிறது…? இப்படி மின் அணுவின் கதிரியக்க நிலைகள் ஒரு காந்தப் புலனறிவால் கவரப்பட்டு… காந்தத்தைக் கவரும் உணர்வின் தன்மை பதிவு செய்து உணர்வின் அறிவான பின்…
1.எதிரொலிகளின் தன்மை மின்னணுவைப் போன்று உணர்வின் தன்மை தோன்றும்.
2.இந்த உணர்வுக்கொப்ப எதுவாகின்றதோ உருவத்தையும் காட்ட முடியும்..
ஒரு மனிதன் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்தான் என்றால் அதனுடைய வம்ச வழி வந்திருந்தால் அவரின் ரூபங்கள் எப்படி இருக்கிறது…? என்று இந்த கம்ப்யூட்டர் மூலம் காணலாம்.
அதைப் பதிவாக்கிக் கம்ப்யூட்டரில் எடுத்துக் கொண்டால் அந்த ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.
மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது
1.அவர்கள் வாழ்ந்த உணர்வுகள் இங்கே பதிந்திருப்பதை அலைகள் கவிழ்ந்திருப்பதைக் கவர்ந்து
2.அந்த மனிதனின் ரூபத்தைக் கொடுக்கின்றது கம்ப்யூட்டர்… விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.
இதே போலத் தான் அன்றைய மெய் ஞானிகளை நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றறிந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வந்து
3.அவன் ஒளியான உணர்வின் தன்மை நீங்களும் ஒளியாக முடியும்.
ஒரு சிலர்… விஞ்ஞான அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது… சாமி எங்கோ ஒரு மூலையில் இருக்கின்றார் என்று எண்ணுவார்கள்.
விஞ்ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? மெய் ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? என்று குருநாதர் அந்த இயற்கையின் நிலைகளை அதனின் இயக்கம் எப்படி…? என்று காட்டியதைக் கற்றுணர்ந்த பின்பு தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.
காலம் வரும் பொழுது எல்லாம் அந்த உணர்வுபட்டால்
1.காலத்தின் மாற்றத்திற்கு ஒப்ப அதை நுகர்ந்து வரும் பொழுது…
2.அந்தந்தக் காலத்தின் உணர்ச்சிகளைக் கவர்ந்து உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.
இதற்கு முன் சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும்.
1.ஆனால் அதனின் வளர்ச்சி உங்களுக்குள் வரப்படும் பொழுது இயற்கையின் தன்மையை
2.உங்களை நீங்கள் அறியும் உணர்வைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் தெரியப்படுத்துகின்றேன்,
எத்தனை காலம் நாம் இந்த உடலில் வாழப் போகிறோம்…? என்றைக்கும் நிலையாக இருப்பது உயிர். உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக்கப்பட வேண்டும். உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைய வேண்டும்.
பிறவி இல்லா நிலை அடைந்த அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிப்பது தான் எமது உபதேசம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்திருந்தாலும் நமது ஞானிகள் உணர்த்திய தத்துவங்களை எடுத்துரைத்து
1.எந்த மனிதனுக்கு நீ பூரண சேவை செய்கின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக நின்று அதுவே உனக்கு நன்மை செய்கின்றது.
2.உன் ரூபத்தில் அவர்களுக்குள் கடவுளாக நின்று அது செயலாக்குகின்றது.
3.நீ கடவுளை எங்கே தேடுகின்றாய்…? உன்னுள்ளே கடவுள் உண்டு…! என்று உணர்த்தினார்.
ஆனால் ஆரம்பத்தில் கடவுளைத் தேடி விவேகானந்தர் அலையும் நிலையில் இராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டு கடவுள் எங்கே இருக்கின்றார்…? நான் பார்க்க வேண்டும்…! என்று கேட்கின்றார்.
ஆனால் அந்தச் சமயத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர் முள் படுக்கையின் மீது படுத்திருக்கின்றார். விவேகானந்தர் அதை உற்றுப் பார்த்து “இங்கே முள் அல்லவா இருக்கின்றது… அதிலே படுத்திருக்கின்றீர்களே…!” என்று கேட்கிறார்.
1.நீ முள் என்று பார்க்கின்றாய்… அதனால் உனக்கு வேதனை (வேதனையின் உணர்வை உனக்குள் நின்று உனர்த்துவது கடவுள்) தெரிகின்றது.
2.நான் முள் என்று நினைக்கவில்லை… எனக்கு வேதனை இல்லை…! என்று சுருக்கமாகச் சொல்லிப் பாடத்தை முடிக்கின்றார்.
விவேகானந்தர் நம் நாட்டின் தத்துவங்களை… பக்தியின் நல்ல ஒழுக்கங்களை அமெரிக்காவிற்குச் சென்ற போது சுட்டிக் காட்டினார். உலக நிலைகளில் இந்தியாவின் நிலைகளைப் பரப்பவும் செய்தார்.
மனிதனுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும்…? ஏனென்றால் அதுவே கடவுள் ஆகிறது.
1.நீ எண்ணும் எண்ணமே உனக்குள் கடவுள் ஆகிறது
2.அதனின் உணர்வின் செயலாக கடவுள் செய்கின்றது
3.கடவுளுக்குச் செய்யும் சேவையாக இது ஆகிறது என்ற இந்தத் தத்துவத்தை அவர் கொடுத்தார்.
இதை எல்லாம் குருநாதர் என்னிடம் (ஞானகுரு) சொன்னார். நான் புத்தகங்களைப் படிக்கவில்லை.
இந்தியா முழுவதும் யாத்திரை செய்த விவேகானந்தர் இமயமலைச் சாரலில் செல்லும் சமயம்… மந்திரவாதியிடம் சிக்கிக்கொண்ட ஒரு சீடன் “இங்கே மகான் வருகின்றார்…” என்று தேடி ஓடி வந்து விவேகானந்தர் காலிலே பாத நமஸ்காரம் செய்கின்றான். உங்களுடைய அருள் தேவை என்று கேட்கின்றார்… அவரின் சொற்பொழிவுகளையும் கேட்கின்றான்.
ஆனால் சீடனின் குருவான அந்த மந்திரவாதியியோ “நான் கடவுளையே கைவல்யம் செய்துள்ளேன் என்று சொல்லும் சக்தி பெற்றவன். அவனிடம் சிக்கியவன் தான் விவேகானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்கின்றான் அவரிடம் ஆசீர்வாதம் கேட்க வருகின்றான்.
இதற்கு முன்னாடி எத்தனையோ நடந்த நிகழ்ச்சிகள் வேறு…! கடைசியிலே நடந்த நிகழ்ச்சிகளை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.
1.இதையெல்லாம் புத்தகத்தைப் படித்துவிட்டு நான் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்
2.புத்தகத்தைப் படிக்கக்கூடிய சரியான நிலை எனக்கில்லை.
3.ஒரு பத்திரிகையைப் படிக்க வேண்டும் என்றாலும் நண்பர்கள் தேவை.
4.என்னுடைய படிப்பறிவு அவ்வளவுதான்…!
தான் விவேகானந்தரின் ஆசி பெற்றதைத் தன்னுடைய மந்திரவாதியிடம் அந்தச் சீடன் சொல்கின்றான்
ஆனால் அந்த மந்திரவாதியோ… நாளை அவன் பேசப்படும் பொழுது இரத்த இரத்தமாகக் கக்கப் போகின்றான்… அவருடைய பாதத்தை நீ நமஸ்காரம் செய்து வருகிறாயே…! என்று அவனை அச்சுறுத்துகின்றான்.
மந்திரவாதி தனக்குள் இருக்கும் ஆவியின் நிலைகள் கொண்டு ஏவல் செய்து விவேகானந்தர் மறுநாள் பேசப்படும் பொழுது… இரத்த இரத்தமாகக் கக்க வைக்கின்றான்.
அதைக் கடந்து சென்ற பின் விவேகானந்தர் குருவை எண்ணிப் பார்க்கின்றார். இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக இருக்கின்றது.
2.அந்த உணர்வின் செயலாக்கமே உன்னுடைய செயலாக்கமாக வருகின்றது
3.முள் படுக்கையில் நான் படுத்திருக்கும் பொழுது “நீ கடவுளைக் காண வேண்டும் என்று வந்தால்
4.அப்போது நீ எண்ணிய உணர்வின் தன்மையை உன் உயிர் தான் அதை (அந்த வேதனையை) எவ்வாறு இயக்குகின்றது.
5.அந்த உணர்வின் செயலாக செயல் எவ்வாறு இருக்கின்றது என்று காட்டுகின்றார்
அதைக் கண்டு கொண்ட பின்பு தான் “நான் கடவுளைக் கண்டு கொண்டேன் எனக்குள்ளேயே…!” என்று அவர் உணர்ந்து ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த உணர்வின் எண்ணங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்று கால்நடையாக இந்தியா முழுவதும் பறைசாற்றினார்… பாத யாத்திரையாகச் சென்று.
ஆனால் வட இந்தியாவில் மந்திர ஒலிகள் அதிகம்… தென்னாட்டில் இங்கே சுழன்று வந்தார். இங்கிருக்கும் அறிவுகளைக் கண்டார்… மக்களுக்குத் தெளிவான நிலைகளை வழி காட்டினார்.
ஆனால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளதில்லை. புத்தகங்களைப் படிக்கின்றோம்… அறிவின் ஞானத்தைப் போதிக்கின்றோம். தன் நிலையில் அவர் போதிப்பதைக் கடைப்பிடிப்பதில்லை.
காரணம்… நாட்டில் நடக்கும் நடப்புகளில் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும் அரசியல் பேதம் மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று சாடும் பொழுது… இதை அதிகமாகச் சுவாசித்த பின்… தன் எண்ணங்களில் அதைக் கவரப்படும் போது உண்மையின் நிலையைத் தன்னுள் செயல்படும் நிலைகளை இழந்தே நிற்கின்றோம். அதை மாற்றும் நிலைகள் அற்றே போய்விட்டது.
குருவை எண்ணுகின்றார்…
1.எண்ணியதுதான் கடவுள் என்று நீ உணர்த்தினாய்… அதன்படி உயர்ந்த நிலைகளை எண்ணினேன்
2.ஆனால் இந்த ஏவல் என்ற நிலைகள் “என்னைச் சாடுகின்றதே…” என்று விவேகானந்தர் வேதனைப்படுகின்றார்.
நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே… உயர்ந்த எண்ணத்தைத் தானே எண்ணினேன்…! என்று சாதாரண மனிதன் பலருக்கு உபகாரம் செய்துவிட்டு அதன் நிலைகள் என்னைக் கடவுள் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் என்று வேதனையைச் சுவாசிப்பது போன்று இவரும் அவ்வாறே சுவாசிக்கின்றார்… நான் எந்தப் பிழையும் செய்யவில்லையே என்று…!
குரு அருளால் மந்திரவாதி ஏவல் பண்ணுகின்றான் என்று உணர்ந்து கொள்கின்றார். அதைப் புரியும் ஆற்றல் வந்துவிட்டது.
எனது உயிர் எனக்குள் இருந்து படைக்கின்றது என்று நீ சொன்னாயே. நான் நன்மைகளைத் தானே செய்கின்றேன். ஆனாலும் அவனுடைய தீமையின் நிலைகள் எனக்குள் வருகின்றதே… ஏவல் செய்கின்றானே…! என்று அவர் சிந்திக்கின்றார்.
மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்த மந்திரத்தின் ஒலிகள் அவன் ஏவல் செய்யும் பொழுது “எந்தத் தீமையும் செய்யும் என்று” இதைப் பிற்காலங்களில் உணர்த்துகின்றார்.. தீமைகளிலிருந்து மீள வேண்டும் என்று.
இதையெல்லாம் என் குருநாதர் சொன்னதை உங்களுக்கு அப்படியே சொல்கின்றேன்
பரமஹம்சர் காட்டிய நிலையில் கடவுளைக் காண என்று உண்மை நிலையில் தன்னை நாடி வந்தவருக்கு அந்த உணர்வின் தன்மை ஊட்டி தனக்குச் சரியான சீடனாக விவேகானந்தரை எடுத்து… இந்த உணர்வின் வேட்கைகளை உலகிற்குப் பரப்பச் செய்தார்.
ஆனாலும் அந்தத் தத்துவ ஞானி இத்தனை இன்னல்கள் பட்டார்.
அங்கே நகர்ந்து செல்லப்படும் பொழுதுதான் அடுத்தடுத்து அடுத்தடுத்து இந்தத் தீமைகள் வரப்படும் பொழுது “வெறுத்திடும் நிலைகள்” அவருக்குள் வருகின்றது.
1.இந்த உலகின் நிலைகள் நடப்பதை நான் என்னவென்று சொல்வேன்…! என்று தன் மூச்சின் உணர்வின் தன்மையை ஏங்கி…
2.தவறு செய்வோர் நிலைகளை இவருக்குள் அடக்கி அடக்கி அதனால் “தனக்குள் கொதிக்கும் நிலையே” அவருக்குள் வருகின்றது.
நான் தவறு செய்யாது இருந்து… மந்திரவாதியின் சீடன் இங்கே வந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்ற பின் நடந்த நிகழ்ச்சியால்… இவருக்குள் கொதிப்புகள் எழுந்து
1.தீமைகளைச் செய்கின்றானே…! இந்தப் பாழடைந்த உலகத்தை நான் என்னவென்று சொல்வேன்…?
2.இனி நான் எதை எதிர்த்துப் போராடுவது…? என்ற நிலையில்
3.குறுகிய நேரத்தில் “இந்த உடலை விட்டு அகன்றால் போதும்…” என்ற அந்த உணர்வின் நிலையே அவருக்குள் வருகின்றது.
நன்மைக்காகச் செயல்படுத்திய நிலையில் கடைசியில் இந்த உடலை விட்டுப் போனால் போதும்… “சேவை…” என்ற நிலை இருப்பினும் எல்லோரும் இந்த உண்மைகளை உணரட்டும்…
1.அருள் உணர்வுகள் என் உடலில் நிலைத்திருக்கட்டும்…
2.தீமைகளில் நான் சிக்காது இந்த உடலை விட்டு இந்த ஆன்மா பிரிந்தால் போதும்…! என்று கதறுகின்றார்.
இந்த உணர்வுகள் வேட்கை அதிகமாகும் போது தான் தன்னை அணுகி உள்ள சிஷ்யர்களிடம் “எனக்குக் கொதிக்கின்றது… வீசுங்கள்…” என்று தன் ஆன்மாவை அங்கே பிரிக்கின்றார்.
இவரைக் குண்டலினி யோகம் கற்றவர் என்று சொல்கின்றார்கள். எந்தக் குண்டலினியை அவர் செய்தார்…?
அவர் பள்ளியிலே படிக்கும் காலத்தில் குண்டலினி யோகம் இருந்தால் அதைப் பெற வேண்டும் என்று படிக்கும் பொழுது தான் யோகத்தை மரத்தடியில் செய்து கற்றுக் கொண்டார்.
ஆனால் பிற்காலத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்கப்படும் பொழுது
1.யோகம் என்பது அது அல்ல…
2.நீ எதை நினைக்கின்றாயோ… இந்த உணர்வு தான் உனக்குள் யோகமாக அமைந்து
3.உணர்வின் செயலாக்கங்களாகச் செயலாற்றுகின்றது என்று பரமஹம்சர் சொன்னார்.
உணர்வினை நுகரும் நிலைகள் கொண்டு “உயிரின் இயக்கத்தால் உணர்வின் நிலை உனக்குள் எவ்வாறு வருகின்றது…?” என்ற இந்த யோகத்தைத் தான் இராமகிருஷ்ண பரமஹம்சர் கற்பித்தார்.


“நம் எண்ணத்தின் முகப்பில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே வைத்திருக்க வேண்டும்
ஒவ்வொரு நேரத்திலும் யாம் உங்களுக்கு உபதேசிக்கும் உணர்வுகள் கொண்டு தீமைகள் வந்தால் தீமைகளைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் அந்தத் தீமை வளராது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு எல்லோருக்கும் நீங்கள் ஞானத்தைப் போதிக்க முடியும். அவர்கள் தீமைகள் உங்களுக்குள் புகாது தடுக்க முடியும்.
1.ஒரு கம்ப்யூட்டரில் பதிவாக்கி ஆணையிட்டு அதைச் செயல்படுத்துவது போல்
2.வீட்டை விட்டு நீங்கள் எங்கே சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இதை எண்ணி எடுத்துக் கொண்டால் “இது நமக்கு முன்னாடி வந்து…” வலிமை பெறுகின்றது.
எதிரிலே ஒரு பஸ்ஸோ மற்ற வாகனங்களோ வந்தாலும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணவுகள் அதிலிருந்து உங்களை ஒதுக்கிச் செல்லச் செய்யும்.
ஆனால் காலையில் எழுந்து நாம் தினசரி அலுவல்களைச் செயல்படுத்தும் போது பையன் இப்படி எல்லாம் செய்தான்… பக்கத்தில் உள்ளவர்கள் தொல்லை செய்கின்றார்கள்… வேலை பார்க்கும் இடத்தில் தொல்லையாக இருக்கிறது என்று
1.காலையில் எழுந்திருக்கும் பொழுதே இப்படிச் சோர்வாக எண்ணி இந்த உணர்வுகள் முன்னணியில் வந்து விட்டால்
2.நாம் ரோட்டில் நடந்து சென்றால் முன்னாடி சைக்கிள் வருவதும் தெரியாது அல்லது பஸ் வருவதும் தெரியாது.
3.நம்மை அறியாமலே விபத்தாகிறது.
எதன் உணர்வு நம் சிந்தனையைக் குறைக்கச் செய்கிறதோ அந்த உணர்வின் செயலே வாழ்க்கையில் நடந்து விடுகிறது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அது முன்னணியில் வந்து விடுவதால் இவ்வாறு இயக்கி விடுகின்றது.
அதையெல்லாம் மாற்றி வாழ்க்கையில் வெளியில் செல்லும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் வலிமையான உணர்வுகளை எடுத்து முன்னாடி செலுத்திக் கொள்ளுங்கள்.
1.தீமை வந்தால் மற்ற இடர்பாடுகள் வந்தால் விலகி செல்லும் உணர்வுகளாக வரும்.
2.சிந்திக்கும் ஆற்றலும் தெளிந்து வாழக்கூடிய உணர்வுகளை ஊட்டிக் கொண்டேயிருக்கும்.
அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் பதிவு செய்து கொண்டே இருக்கின்றேன். எழுத்திலே படித்தாலும் புரியவில்லை என்று சென்று விடுவார்கள்.
ஆனால்
1.எமது உபதேசத்தைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது உங்களுக்குள் இது பதிவாகின்றது.
2.அப்படிப் பதிவாக்கி விட்டால் நிச்சயம் உங்களால் நல்ல குணங்களைக் காக்க முடியும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்… அதற்கு குரு அருள் உறுதுணையாக இருக்கும்.
என்றும் தெளிந்த நிலையினை நீங்கள் பெற முடியும்… பெறுவீர்கள் நிச்சயம் பெற்று விடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் இந்த அருள் வாக்குகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அன்றைய காலங்களில் இஸ்ரேல் நாட்டில் கிழக்கே பார்த்து வணங்கும் நிலை தான் உண்டு… நமது நாட்டிலும் கிழக்கே பார்த்து வணங்கும் நிலைகள் உண்டு.
ஆனாலும் அன்று நபிகள் நாயகம் மேற்கே பிறைச் சந்திரனைப் பார்க்கின்றார். அது தேய்ந்து வளர்வதையும் பார்க்கின்றார்.
அதாவது சந்திரன் தேய்ந்த நிலைகள் கொண்டு அமாவாசைக்குப் பின் கண்ணுற்றுப் பார்க்கப்படும் போது
1.சூரியனின் ஒளிக்கதிர்கள் அதன் மீது படும்பொழுது எப்படி அது வளர்கின்றதோ
2.இதைப் போல மனிதனுடைய எண்ணத்தில் தீமைகள் அகற்றிடும் தன்மை வளர வேண்டும் என்று
3.பிறைச் சந்திரனைக் காட்டி… ஆரம்பத்தில் அது வளர்வது போன்று
4.ஒளி கண்டு இருள் மறைவது போன்று “மனிதன் தனக்குள் எவ்வாறு தெளிந்த நிலைகள் பெற வேண்டும்…?” என்று
5.உபதேசக் கருத்துக்களை அங்கே மதீனாவில் பரப்பினார்.
அதன் வழியில் அக்காலங்களில் கிழக்கே பார்த்து வணங்குவதற்குப் பதில் மேற்கே பார்த்து வணங்கும்படி செய்தார்.
ஆரம்பத்தில் மக்காவில் நடந்த அதர்மங்களையும் தெய்வீகப் போர்வையில் தவறான நிலைகள் பல செய்ததையும்… தடுக்கத் தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துப் போர் முரசு கொண்டு நபிகள் செயல்படுத்தினார்.
காரணம்… ரோமானியர்கள் (கவர்னரின்) ஆட்சிக்கு கீழ் இருந்தாலும் அங்கே தீமை கொண்ட கொள்ளையர்கள் பெரும் சொத்துகளைச் சேர்த்து… மற்றவர்களை அடக்கி ஆண்டு… ஆங்காங்கு இருக்கும் நிலைகள் கொண்டு போர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
1.சட்டங்கள் இருப்பினும் மதத்தின் கீழ் கடைப்பிடிப்பதில்லை. அந்த மதங்களின் மீது ஏதும் கை வைப்பதில்லை.
1.அவர்களுக்குக் கப்பம் கட்டுவதும் தன்னை எதிர்க்காத நிலைகள் இருந்தால் போதும் என்ற நிலைகள் இருந்ததனால்
2.இனப்போர்களும் மற்ற போர்களும் வந்தது.
இப்படி… மதத்தின் கீழ் தெய்வீகப் போர்வையில் அங்கே கொள்ளை அடிப்பதும் கொலைகள் செய்வதும் பல தவறுகள் செய்யும் அந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்று நபிகள் நாயகம் போர் செய்து அந்த மக்காவைக் கைப்பற்றினார்.
அவருக்குள் செயல்பட்ட மகானின் அந்த ஞானத்தின் தொடர் கொண்டு அங்கே மக்காவில் இருக்கும் நிலைகளைச் சீராக்கினார்.
அங்கே 4000 ஆண்டுகளுக்கு முன்…
1.போகரால் உருவாக்கப்பட்ட முருகனும்
2.மனித உணர்வின் நிலைகள்… பல குணங்களின் சிறப்பு கொண்ட விநாயகர் தத்துவமும் “சிலைகளாக” மக்காவில் உண்டு.
3.அதிலே இருக்கும் விநாயகர் சிலையைத் தான் இன்றைய நிலைகள் திருப்பி வைத்து (போகருடைய நிலைகள் கொண்டு) முத்தமிடுகின்றார்கள்.
4.அங்கே யானை மீது லிங்கமும் உண்டு.
இது குருநாதரால் காட்டப்பட்ட நிலைகள். ஏனென்றால் இந்த உலகில் நடக்கும் இரகசிய நிலைகளை குருநாதர் தெளிவாக்கினார்… உலக மக்கள் அனைவரும் தெளிந்திட வேண்டும் என்ற நோக்கத்தில்…!
உணர்வின் எண்ணங்கள் கொண்டு உடல் எப்படி இயங்குகின்றது என்பதையும்… உயிரின் இயக்கங்களையும் உணர்வின் செயலாக்கங்களையும் இப்போது யாம் சொல்வது போன்று தான் அக்காலங்களில் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.
அதே சமயத்தில் மனிதனுக்கு மனிதன் எவ்வாறு உதவ வேண்டும்…? என்றும் தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்… குடி போதையோ மற்ற தவறான நிலையில் இருந்து அறவே நீக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
1.மனிதனை உருவாக்கிய உயிரைக் கடவுளாக மதித்து
2.உடலுக்குள் தீங்கு விளைவிக்காது காத்திட வேண்டும் என்று உணர்த்தினார்.
அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு தான் அங்கே மற்ற பழைய சிற்பங்களையும் சிலைகளையும் நீக்கிவிட்டு “உண்மையின் பொருளை மக்கள் பெற வேண்டும்” என்று செயல்படுத்தினார்.
