தினசரி உபதேசம்

இரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்

 

சிறுநீர் கழிக்கின்றோம் என்றால் இந்த உடலில் மோதலால் ஏற்படும் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து சுண்ணாம்புக்கல் மாதிரி ஆகிறது. சிறுநீரகம் கழித்த இடங்களில் பார்த்தால் இது தெரியும்.

இதே போன்று நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மையும் ரத்த நாளங்களில் இது கலக்கும்.. இதைத்தான் கிட்னி என்ன செய்கிறது…?
1.விஷங்கள் வந்தால் அந்த ரத்தங்களைச் சுத்திகரிக்கின்றது.
2.அதிகமான வேதனை உணர்வுகள் வடிகட்டப்படும் பொழுது விஷங்கள் அதிகமாகத் தாக்கித் தாக்கிச் சிறுநீரகம் பலவீனமடைகிறது.
3.அப்படிப் பலவீனமடையப்படும் பொழுது ரத்த நாளங்களில் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றது.
4.அதன் வழி கெட்ட அணுக்களுக்கு ரத்தத்தின் வழி கொண்டு சேர்க்கின்றது.

வேதனையை மீண்டும் சுவாசிக்கப்படும் பொழுது அது ரத்தத்திலே கலக்கின்றது. வடிகட்டி அனுப்பினாலும் இந்த வேதனை உணர்ச்சிகள் அதிகமாகும் போது அந்த உணர்ச்சிகள் தாங்காது விரிவடைந்து “வடிகட்டும் தன்மை இழக்கப்படுகிறது…”

ஒரு சல்லடையில் ஓட்டை விழுந்து விட்டால் தொப்… தொப்… என்று அதன் வழியில் எல்லாம் இறங்கி விடும். அதைப் போல்
1.இயக்கச் சக்தியைப் பிழியும் தன்மை இழக்கப்படுகின்றது.
2.வடிகட்டாத உணர்வுகள் உடல் முழுவதும் செல்லப்படும் பொழுது நல்ல உணர்ச்சியைத் தூண்டும் நல்ல அணுக்களுக்கும்
3.மனித உடலை உருவாக்கிய அணுக்களுக்கும் நல்ல சத்து கிடைப்பதில்லை.

நாம் ஆகாரம் உட்கொண்டாலும் அதிலும் சில விஷத்தன்மைகள் வரும். அதையும் கிட்னி வடிகட்டும். நுகர்ந்த உணர்வுகள் ரத்தத்தில் கலக்கப்படும் போது சிறுநீரகம் அதையும் வடிகட்டும்.

ஆனால் வடிகட்டும் தன்மை இழக்கப்படும் பொழுது எல்லாம் தாராளமாகச் சென்று விடும்.

அப்பொழுது இருதய வால்வுகள் உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்பப்படும் (PUMP) நிலையில் என்ன ஆகிறது…?
1.கிட்னி கழிவுகளைக் கழிக்க தவறப்படும் பொழுது
2.அந்த இடத்திலே அவைகள் சிறுக சிறுக உறையத் தொடங்கும்.

அந்த உறையின் தன்மை ரத்தம் போகும் பாதையில் அதிகமாகி ஒன்றுக்கொன்று வடிகட்டிச் செல்லப்படும் பொழுது இருதயத்திலே தொல்லைகள் வரும். அங்கே உணர்வின் அழுத்தம் ஆகி இதயத்தில் லேசாக வலிக்கிற மாதிரி இருக்கும்.

அழுத்தம் அதிகமாகும் பொழுது இரத்தத்தை ஈர்க்கும் சக்தியும் குறைகின்றது. பம்பில் சிறு ஓட்டை இருந்தால் எப்படியோ அது போல் உறுப்புகளில் இருதய வாயிலை மிகவும் பலவீனப்படுத்தும்.

அடிக்கடி மூச்சுத் திணறலும் நடந்து சென்றாலும் கூட எத்தனையோ தொல்லைகள் வரும்.

வேதனை உணர்வு வரப்படும் போதெல்லாம் சிறுநீரகத்தால் வடிகட்டத் தவறும் போது அதை மாற்ற முடியாது இப்படி ஆகிவிடுகிறது. வைத்திய ரீதியாக உங்களுக்குத் தெளிவாக்குகின்றேன்.

இதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால்
1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.நம்முடைய எல்லா குணங்களிலும் எல்லா எண்ணங்களிலும் எல்லா உணர்வுகளிலும் அதை இணைக்க வேண்டும்.

அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஆத்ம சுத்தி செய்து கொண்டால் உடல் உறுப்புகளைச் சீராக இயக்கி நல்ல வடிகட்டும் திறன் பெற்றுத் “தீமைகளை அகற்றிடும் சக்தி வாய்ந்த உறுப்புகளாக அமையும்…”

நாம் என்றுமே அந்த அருள் வழியில் வாழ இது ஏதுவாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பத்திரிக்கையை எடுத்துப் பார்த்து அன்றாடம் நடக்கும் சம்பவங்களைப் படிக்க நேர்ந்தால் நம்மை அறியாமலே அச்ச உணர்வுகள் நம்மை வாட்டிக் கொண்டு இருக்கும்.

அதே சமயத்தில் அரசியல்வாதிகளைப் பற்றிய கருத்துக்களைப் படிக்கும் பொழுதும் வன்முறை… தீவிரவாதம் சம்பந்தமாகப் படிக்கும் பொழுதும் சிலருக்குப் பகைமையின் உணர்ச்சிகளையே தூண்டிக் கொண்டு இருக்கும்.

அதைப் பதிவாக்கிய பின் வீட்டிலோ அல்லது நண்பர்களிடமோ சிறிது குறைகள் பட்டாலும் பகைமை உணர்வுகள் தூண்டிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில்
1.நாம் எந்தத் தொழில் செய்தாலும்
2.ஒவ்வொரு தொழிலும் பகைமை உணர்வுகளை ஊட்டிக் கொண்டு இருக்கும்.

இப்படி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்திலும் பகைமை உணர்வைச் சேர்த்துக் கொண்டு இருந்தால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் இயங்காது போய்விடும்.

பகைமை உணர்ச்சிகள் அனைத்தும் நம் உடலுக்குள் விளைந்து மிகவும் கடினமான நிலைகள் வளர்ந்து நஞ்சின் தன்மையாக அடைந்து விடுகிறது். பின் நம் சிந்தனைகள் அனைத்தும் செயலற்றதாகி நம்முடைய நல்ல செயலையே மாற்றி விடுகிறது.

நல்ல உணர்வுகள் மறைந்த பின் வாழ்க்கையில் இருண்ட நிலைகள் கொண்டு உடலை விட்டு நாம் சென்றால்
1.பொருள் அறிந்து செயல்படும் நிலைகள் இல்லாது
2.அன்றன்று தன் வாழ்க்கைக்கு உணவுக்கு மட்டும் தேடிச் சென்று உடலைக் காத்துக் கொள்ளும் உடலுக்குள் அழைத்துச் சென்று
3.நம் மனித உடலையே மாற்றி அமைத்திடும் சக்தியாக உருவாக்கி வேறோரு ரூபமாக நம்மை மாற்றி விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள வேண்டும். ஏனென்றால் விஞ்ஞான உலகம் ரொம்பவும் விஷத் தன்மை கொண்டதாக வந்து விட்டது. நாளை நாம் இப்படி இருப்போமா…? என்ற நிலை இருக்கிறது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் நிலைக்காக நம்முடைய உணர்வின் தன்மை
1.இப்போது இருந்தே நாம் தயார் செய்து
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை நம்முடைய ஆன்மாவில் பெருக்கி
3.நம் ஆன்மாவை வலுக் கொண்டதாக ஆக்கிடல் வேண்டும்.

இந்த உடலிலிருந்து எந்தத் தருணத்தில் வெளியே சென்றாலும் நமது ஆன்மா இன்னொரு உடலில் புகும் நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாகப் பெற்று நாம் மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் இணைந்திடல் வேண்டும்.

ஏனென்றால் பூமியின் கடைசி நிலையாக அமைந்திருக்கும் இத்தருணத்தில் நம்முடைய அடுத்த நிலை ஒளியின் சரீரமாகத் தான் இருக்க வேண்டும்.
1.சப்தரிஷி மண்டல எல்லையை அடைவதையே
2.நம் வாழ்க்கையின் அடிப்படையாக வைத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் உலகில் நடக்கும் அசம்பாவிதங்களும் அச்சுறுத்தும் நிலையில் வெறி உணர்வுகளைத் தூண்டிக் கொண்டு இருக்கும் இந்த அலைகளும் பூமி முழுவதும் அனுதினமும் படர்ந்து கொண்டிருக்கின்றது.

1.பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்தவுடன் பூச்சிகள் எப்படி இறந்து விடுகின்றதோ இதைப்போல
2.மனிதனுடைய உணர்வின் செல்கள் அனைத்தும் இழந்திடும் நிலையாக
3.எண்ணிலடங்கா அணு ஆயுதங்களையும் இரசாயணங்களையும் ஒவ்வொரு நாட்டிலும் தயார் செய்து வைத்துள்ளார்கள்.

வல்லரசுகளுக்கு மத்தியில் சிறிதளவு போர் ஏற்பட்டாலுமே உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை படர்ந்து மனித உணர்வுகள் அனைத்தும் நஞ்சின் தன்மையே அடைந்து மனித உருவே சரியான உருவாக இல்லாதபடி நம் பூமியின் தன்மை செயலற்றதாக மாறப் போகிறது.

இதைப் போன்ற காலமாக இருக்கும் இந்த நிலையில் நம்முடைய குழந்தையினுடைய எதிர் காலம் – பின்னாடி நிலையும் இதுவாகவே இருக்கிறது.

ஆகவே இந்த உலகில் சிறிதளவேனும் மக்களைக் காக்க வேண்டும் என்றால் நம்முடைய குழந்தைகளையும் கூட்டுத் தியானங்களில் அமரச் செய்து அவர்களைப் பக்குவப்படுத்தி அந்த மெய் ஞானிகளின் அருளாற்றலைப் பெறச் செய்தல் வேண்டும்.

குடும்பத்திற்குள்ளும் சரி ஊருக்குள்ளும் சரி ஒற்றுமையாகும் இந்த உணர்வின் தன்மையை நாம் வலு பெறச் செய்யும் நிலையாக கூட்டுத் தியானங்களைக் கண்டிப்பாக அமைத்தே ஆக வேண்டும்.

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது…! பல நூல்களை ஒன்றாகச் சேர்த்தால் வலு கொண்ட கயிறாக மாறுவது போல்
1.நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அருள் உணர்வுகளைக் கவர்ந்து
2.நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் மூலம்
3.நாம் வாழும் பகுதியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் காக்க வேண்டும்.

அதற்குத்தான் உங்களுக்குள் பல பல கோணங்களில் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றோம் (ஞானகுரு).

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்

 

இரண்டு நண்பர்கள் சேர்ந்திருக்கும் நிலையில் அதிலே ஒரு நண்பன் தவறு செய்தாலும் அதைப் பற்றி நாம் சொல்லப்படும் பொழுது… “கூட இருக்கும் அந்த நண்பன்” அதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

காரணம்…
1.அவருடைய உணர்வு அவனுக்குள் அது முன் பகுதியில் வலுவாகச் சேர்ந்திருக்கப்படும் பொழுது
2.நம் உணர்வை நுகர்ந்தவுடனே குற்றப் பெருக்குகளைக் கூட்டி நம்மைத் தான் குற்றவாளியாகச் சொல்லச் செய்யும்.

அப்போது நாம் நுகர்ந்த உணர்வு… அவன் உணர்வை வலு சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வுகள் அதை ஏற்பதில்லை. இருந்தாலும் நம் ரத்தங்களில் இதைப் போன்ற உணர்வுகள் இணைந்து விடுகின்றது.

இதனால் நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுக்களுக்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து ஒடுங்குகின்றது.
1.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தி இழக்கின்றது.
2.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் பொழுது ஒடுங்குகிறது… அதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஏற்கவில்லை என்றாலும் உணர்வின் அழுத்தம் அதிகமாகும் பொழுது… கூட கொஞ்ச நேரம் நிலைநிறுத்தி விட்டால் அதற்குச் சாப்பாடு தேவை.

நாம் எப்படிச் சுவாசத்தின் மூலம் “மூச்சு விடுகின்றோமோ…” அதே மாதிரி
1.அந்த இயக்கத் தொடருக்கு பிரணவம்… அந்த இயக்கம் வேண்டும் என்றால்
2.உடலில் ஏற்படும் உஷ்ணத்தினால் வாயு உண்டாகின்றது… அதனுடைய அழுத்தம் உண்டாகிறது.

சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனைகள் வருகிறது…? எந்தெந்தப் பொருளை அதிகமாகப் போடுகின்றோமோ அந்த மாதிரி வாசனைகள் அதிலிருந்து வருகின்றது.

அது போலத் தான்
1.உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் நெளிகிறது… உடலில் மாறுபட்ட உணர்ச்சிகள் தோன்றும்… இதையெல்லாம் எது இயக்குகின்றது…?
2.நம் உயிர் எலெக்ட்ரிக்காக இருக்கிறது. நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்காக எதிர்நிலையான அந்த உணர்ச்சியை ஊட்டுகின்றது.

இப்படி எதன் உணர்வை நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் ஆகின்றதோ… ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் நம் ரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பல விதமான அணுக்களின் மாற்றங்கள் ஆவதும் நிகழ்கிறது.

நல்லவரிடம் பேசப்படும் பொழுது அதற்குத்த நிலையில் அமைதியாகிறது. ஆனால் அடுத்து ஒரு சண்டை போடுபவர்… வெறுப்பாகத் தாக்குபவர்… திட்டிப் பேசியவர்களின் உணர்வை நுகர்ந்தால்
1.மிகவும் இக்கட்டான நிலைகள் ஆகி இந்த உடலுக்குள் ஒன்றுக்கொன்று போர் முறையாகின்றது.
2.நம் உடலிலே சலனங்களும் சஞ்சலங்களும் ஏற்படுகிரது.

ஆக… நல்ல அணுக்கள் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படும் பொழுது உடல் சோர்வடைகின்றது… உணர்ச்சிகள் மாறுவதையும் பார்க்கலாம்.

எந்த உணர்ச்சியின் தன்மையைக் கூட்டுகின்றோமோ… கண் வழி எந்த உணர்வை அதிகமாக்குகின்றமோ… கண்கள் நுகர்ந்து உயிரிலே மீண்டும் அநத உணர்ச்சிகள் அதிகமாக ரத்த நாளங்களில் சேர்க்கப்படுகின்றது.
1.அதனால் பதட்டமும் பயமும் வருகின்றது… அவர்கள் இருவருக்குள்ளும் எப்படிச் சண்டை போட்டுக் கொள்ளப் போகின்றார்களோ என்று…!
2.சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இந்தப் பதட்டம் வரும்.

நல்லதைச் சொல்லத் துணிவு வந்தாலும் அவர்களைச் சிந்திக்கும்படிச் செய்யும் பதிலைச் சொல்லத் தெரியாது. அப்போது நம்மை அறியாதபடி பகைமை உணர்ச்சிகள் உடலிலே வந்து விடுகின்றது.

இது அனைத்துமே இரத்தங்களில் தான் முதலில் கலக்கின்றது.

நாம் நுகரும் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவி அதன் வழியே நம்மை வாழச் செய்து… அந்த உணர்வுகளே நம்மை ஆளுகின்றது என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு என்ன செய்ய வேண்டும்…?
1.நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்.
2.நம் உடல் முழுவதும் இந்த உணர்ச்சிகளைப் பரவச் செய்யப்படும் பொழுது
3.நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு நிம்மதியும் சாந்தமும் இயக்க முடிகின்றது.

அந்த உணர்வுகள் உணர்ச்சிகளை உயிர் உடலுக்குள் பரவச் செய்து தீமையான உணர்வுகளை அமைதிப்படச் செய்கின்றது.

ஆனால் “சாதாரண மனிதனின் உணர்வை வைத்து…” அதை அமைதிப்படுத்த முடியாது.

உங்களுக்குள் பதிவு செய்த அந்த மகரிஷிகள் உணர்வை எண்ணி எடுத்து ஈஸ்வரா என்று உயிரிடம் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் கண்ணின் நினைவு உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது…
1.ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை என்ற அந்த வித்திலே (தீமையான வித்தில்) இணைக்கப்படும் பொழுது
2.கொஞ்சம் கொஞ்சமாக இதனுடைய வலு கூடும் பொழுது அதை அடக்கக் கூடிய சக்தியாக அது மாறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது பூமி சுழலும் போது அந்தச் சுழற்சியால் காந்தப்புலன்கள் ஏற்பட்டு அதன் மூலம் தான் கவரும் சக்திகள் அனைத்தும் துருவப் பகுதியில் பனிப் பாறைகளாக உறைகின்றது.

1.அப்படி அந்த உணர்வின் தன்மை நுகரும் போது பார்வதி பஜே… நமச்சிவாய…!
2.இந்த உடலாக (பூமியாக) மாறுகின்றது… பார்வதிக்கும் சிவனுக்கும் கல்யாணம் என்ற நிலைகள்.

அதாவது பூமியின் ஓடு பாதையில் தன் பார்வையில் பட்ட (விண்ணிலிருந்து வரும்) சக்திகளை நுகரப்படும் பொழுது இந்த உடலான சிவனுடன் சேர்த்து இரண்டற இயங்குகிறது என்று வியாசகர் காட்டுகிறார்.

உலகமே இங்கு திரளும்… அதனால் பூமியில் மாற்றங்கள் வந்து விடும் என்பதற்காக வேண்டி நீ தெற்கே போ…! என்று சிவன் சொன்னான். ஏனென்றால் தெற்கே தோன்றியது தான் பூமியைச் சமப்படுத்தும் உணர்வு…!

பூமியைச் சமப்படுத்த அகஸ்தியனைத் தெற்கே போ…! என்று சொல்லும் பொழுது தெற்கிலே (தென்னாட்டிலே) தோன்றியவன் தான் அந்த அகஸ்தியன்.

அந்த அகஸ்தியன் உணர்வுகளை ஒவ்வொருவரும் எடுத்தால் தனக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும் என்ற “அந்தக் காரணத்துடன் தான்…” வியாசகர் சொல்லியிருக்கிறார். அதை நாம் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

1.மனித உடலுக்குள் வருவதை மாற்றி அமைக்கும் திறன் பெற்றவர்…
2.தன் உணர்வின் வலிமை கொண்டு இந்தப் பூமியின் திசையைத் திருப்பியதும் அவர் தான்
3.நம் பூமியைச் சமப்படுத்தியவரும் அந்த அகஸ்தியன் தான்.

அது ஒரு காலம் துருவப் பகுதியில் வளர வளர இது வளர்ந்து கொண்டே இருக்கும். இது எடை கூடி விட்டால் மாறிவிடும். அப்பொழுது கடல் அலைகள் மாறும்.

தென் துருவம் வட துருவம் எல்லாம் மாறி அதிலே மாற்றங்கள் வரப்போகும் போது நீக்ரோக்கள் வாழும் பகுதி எல்லாம் கடல் அலைகளுக்குள் திருப்பிவிடும்.

கருப்பர்கள் என்ற நிலைகள் வரப்போகும் போது வளர்ந்த நிலைகள் கொண்டு காட்டு விலங்குகளாக மாற்றி விடும். இன்றைக்குச் சக்திவாய்ந்த செயற்கைக் கோள்கள் மூலமாகவும் விமானங்கள் மூலமும் பறந்து
1.கடலுக்கடியில் புதையுண்டிருக்கும் ஊர்களை எல்லாம்
2.விஞ்ஞானம் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றது.

ஆதியிலே பூமி கவிழும் நிலை வரும் பொழுது அதை மாற்றிப் பூமியைச் சமப்படுத்தியவர்… அணுவின் ஆற்றலைப் பெற்றவர் விண்ணின் ஆற்றலைப் பெற்ற அந்த அகஸ்தியர் அவர் அன்றைக்குச் செய்ததால் தான் இப்போதும் இந்நேர வரையிலும் பூமி ஒரு சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் அபரிதமான விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.விஞ்ஞானிகளோ அல்லது அரசை நடத்துபவர்களோ இதைச் திசை திருப்பப் போகிறார்கள்.
2.நாம் எங்கெங்கே போகப் போகிறோம் என்று தெரியவில்லை.
3.இதற்குள் எத்தனையோ ஆசை வைத்திருக்கின்றோம்.
4.பூமிக்குள் பதுக்கி வைத்திருக்கும் சில விஷத் தன்மைகள் (குண்டுகள் ஆயுதங்கள்) வெடிக்கப் போகிறது.
5.அதனால் ஏற்படும் புகை மண்டலம் அடர்த்தியின் தன்மை அடையப் போகிறது.
6.அத்தகைய புகை மண்டலத்தால் சூரியனின் ஒளிக் கதிர்கள் மங்கி நம் பூமியே ஒரு பக்கம் பனியாக உறையப் போகிறது.
7.அப்படி உறைந்தால் பூமி தலைகீழாகப் போகும்

இரண்டு மூன்று வகையில் விபத்து வரப்போகிறது. அதில் எந்த விபத்து என்று… எதிலே வந்து தாக்கப் போகிறது…! என்று யாரும் சொல்ல முடியாது.

மனிதனால் உருவாக்கப்பட்ட நஞ்சின் தன்மை பரவுகிறது. அந்த நஞ்சின் தன்மை வரப்போகும் போது மனிதன் செய்து வைத்தது வெடிக்கத்தான் போகிறது. வெடித்த பின் அதை நுகரத்தான் போகின்றோம். மனித உருவையே மாற்றும் தன்மையாக வந்து கொண்டிருக்கிறது.

ஞானிகள் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அவர்கள் பெற்ற அருள் ஆற்றல்களை எடுத்து நமக்குள் அருள் ஒளிச் சுடராக வரப்படும் போது “இதை எல்லாம் நாம் பார்க்கலாம்…”
1.அப்படி நாம் வளரவில்லை என்றால் அந்தச் சுழற்சிக்குள் சிக்கி
2.காணாத நிலைகளில் போய்த் திரும்பவும் முதலிலிருந்து வளர்ச்சிக்கு வர வேண்டும்…!

நாட்டுக்கு நாடு போர் செய்யும் இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டியது

 

இன்றைய நிலையில் பூமியில் வாழும் நாம் மிகவும் சிரமமான காலகட்ட்த்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.

அதே சமயம் மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நாம் மீள வேண்டும்.

நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்று அவர்கள் அருள் வட்டத்தில் இணைந்து நம்மையறியாது சேர்ந்த தீமைகளை நீக்கி நம்முடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக உருவாக வேண்டும்.
1.நாம் எண்ணும் அந்த உயர்ந்த உணர்வுகள் தீமையை அடக்கும் சக்தியாகவும்
2.நம்முடைய உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தும் உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும் சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும்
3.உலக மக்களுக்கு நன்மை பயக்கும் சொல்லாகவும் செயலாகவும் அது வளர்ந்திட வேண்டும்.

1.அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு பேரன்பு கொண்டு ஒருவருக்கொருவர் கலந்து உறவாடினார்களோ
2.அதே போன்று நாம் வெளியிடும் அனைத்து உணர்வுகளும் பேரன்பு கொண்ட உணர்வாகப் படர வேண்டும்.

நமக்குள் ஆகாத உணர்வுகள் வந்தாலும் சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டுச் சேர்த்து அதைப் பகைமையற்றதாக ஆக்க வேண்டும்.

நாம் தனித்த சரீரங்களாக இருந்தாலும் சகோதர உணர்வுகளுடன் வாழ்ந்திடும் உணர்வாக
1.நாம் இடும் அத்தகைய மூச்சலைகள் இங்கே படர்ந்து
2.அதன் வழிகளில் நம் பூமியான பரமாத்மாவும் பரிசுத்தப்படும் நிலை ஏற்படும்.
3.இந்தப் பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து எடுக்கும் அனைத்து மக்களும் “மெய் வழி பெறும் நிலைகள் ஏற்படும்…”

நாம் எந்தத் தாவர இனச்சத்தை நுகர்ந்து உணவாக உட்கொண்டு உடலாக ஆனோமோ… இந்த மனித உடலுக்குள் எண்ணிய அருள் மகரிஷிகளின் உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து…
1.நாம் செல்லும் இடங்களில் பரவியுள்ள நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தாக்கி
2.நஞ்சு கொண்ட தாவர இனமே வளராது… மனிதனை வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.
3.நீங்கள் இடும் அந்த மூச்சலைகள் மூலம் தாவரங்களும் சத்தான நிலைகளில் வளரட்டும்
4.அதை உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும் மெய் உணர்வைப் பெறும் தகுதியாக உங்களுடைய மூச்சுகள் அமையட்டும்.
5.கேட்டுணர்ந்த உணர்வுகள் இங்கே படர்ந்து மெய் உலகைப் படைக்கும் உணர்வாக உங்களுக்குள் விளையட்டும்
6.நீங்கள் இடும் மூச்சலைகள் உலகில் உள்ள பகைமைகளை நீக்கி மெய் உணர்வைப் பெறும் சக்தியாக மலரட்டும்.
7.எல்லாம் வல்ல குருநாதர் அருள் வழியில் அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்திற்குள் உங்கள் அனைவரின் எண்ணங்களும் செல்லட்டும்…!

அதன் வழிகளிலே தீமையை நீக்கி நல்வினைகளைச் சேர்த்து… நல் வினைக்கு நாயகனாக மெய்ப்பொருள் கண்டுணர்ந்த அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்தில் உலக மக்கள் அனைவரும் இணைவோம்.

என்றும் நிலையான பெரு வீடு பெரு நிலை என்ற நிலையடைந்து… என்றும் மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அந்த அருள் வழியை, நீங்களும் பெற வேண்டுமென்ற ஆசையினால்தான் இதை உபதேசிக்கின்றோம்.

நம் குருநாதர் காண்பித்த உணர்வுகளை உங்களுக்குள்ளும் விளையச் செய்து
1.அதை நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற்று
2.உங்களை அறியாது புகுந்த தீமைகளை நீக்கி நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும்

அத்தகைய நிலை அனவரும் பெற வேண்டும் என்று பிரார்த்தித்து… அதனின் சத்தை “ஒருங்கிணைந்து விளையும் சத்தாகச் செயல்படுவோம்…” என்று வேண்டிக் கொள்கிறேன்.

மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்தால் தான் எத்தகைய நல்ல மாற்றத்தையும் நாம் கொண்டு வர முடியும்

 

இன்று “மதப்போர்…” என்ற நிலைகள் உலகம் முழுவதற்குமே இயக்கிக் கொண்டுள்ளது.

ஒரு நாடு தன்னிடம் இருக்கக்கூடிய விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் “லேசர் கதிரியக்கத்தால்” அடுத்த நாட்டின் ஆழத்தை அறிந்து கொண்டு அவனைத் தொலைக்க முடியும் என்று எண்ணுகின்றான். ஆனால் அந்த நாடோ
1.நீ கண்டுபிடித்து வைத்திருக்கும் நிலையைக் காட்டிலும் வலிமையானது எண்னிடம் உண்டு..
2.நான் சாகும் போது நீயும் சாவாய் என்ற நிலைகள் கொண்டு இறப்பைப் பற்றி சிந்திக்கவில்லை.
3.தன் கௌரவத்தைக் காக்க நான் இறந்தாலும் உன்னைக் கொல்வேன் உன்னை மடியச் செய்வேன்
4.உன்னை மடியச் செய்த பின்பு தான் நான் இறப்பேன் என்ற மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்று உலகெங்கிலும் பரவி
5.மனிதன் என்ற சிந்தனை இழந்து மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த மார்க்கங்களைத் தடைப்படுத்தி
6.மனிதனுக்கு மனிதன் கொன்று அதை ரசிக்கும் உணர்வே இன்று வந்துவிட்டது.

இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

ஆனால் நான் இதைப் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். இது எனக்குத் தெரியவே தெரியாது…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்… அந்த மகரிஷிகள் கண்டறிந்த மெய் உணர்வுகள் மக்கள் அனைவருக்கும் அது எட்ட வேண்டும் என்று சொன்னார்.

உலகில் ஏற்படும் அந்தத் தீமைகளிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற நிலைகள் கொண்டு இந்த ஸ்தாபனத்தை (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்) யாம் அமைத்த்து அவரின் உணர்வின் செயலே…! என்னால் அது முடியாது.

அவர்களின் இயக்கத்தால் தான் இது அனைத்துமே உருபெற்றது பொருள்கள் எப்படி வந்தது…? என்று நமக்கும் தெரியாது. ஒருக்கிணைந்த உணர்வின் செயலாக்கங்கள் கொண்டுதான் இதை அமைக்கவும் முடிந்தது.

குரு அருள் அதன் வழி தான் வழிபடுகின்றது.

1.நாம் அனைவரும் நம் குருவின் அருள் துணை கொண்டு எந்த மதத்திலும் சிக்காது
2.இன பேதமோ மொழி பேதமோ அரசியல் பேதமோ இல்லாது உலகைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்த்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவதே தலையாயக் கடமை ஆகும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் நம்முடைய மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.

தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சான நிலைகளைச் சேர்த்துக் கொண்ட அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்த நஞ்சுகளை அந்த ஒளிக் கடலிலே கரைத்து உயிருடன் ஒன்றிய ஒளிச்சரீரமாக அவர்களை நாம் நிலை பெறச் செய்ய வேண்டும்.

1.அவர்கள் முன் சென்றால் அவர்களின் துணை கொண்டு அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற முடியும்.
2.நமது குரு அருள் இதைத்தான் திரு அருளாக உபதேசித்தது.

உலகில் உள்ள ஒவ்வொருவரையும் காத்திட வேண்டுமென்றால் “அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை…” நாம் முதலில் பெற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கேட்டறிந்தாலும் அந்தத் தீமை தனக்குள் பதியாது தடுக்க வேண்டும்.

அப்படித் தடுக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த தீமைகள் மறைய வேண்டும்… மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… என் சொல்லால் கேட்பவர்கள் இருள்கள் நீங்க வேண்டும்… அவர்களும் பொருள் காணும் நிலை பெற வேண்டும்… அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இதை எல்லாம் எண்ண வேண்டும் என்றாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி பெற வேண்டும்.
2.இல்லை என்றால் இது வெறும் சொல்லாகத்தான் அமையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சோமாலியா நாட்டில் பார்த்தோம் என்றால் அங்கே வாழும் மக்களுக்குக் கிடைக்கும் உணவைக் கொள்ளையடித்துச் சாப்பிடுவோர் திடமாக நன்றாக இருக்கின்றனர்.

அங்கே இருக்கும் ஆணும் பெண்ணும் அனாதையாக நடந்து சென்று தங்களுக்குச் சொந்தமான உணவை எடுத்து உட்கொள்ளும் நிலை கூட இல்லாதபடி மிருகத்திலும் மிருகமாகக் கேடான நிலைகளில் அங்கே செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

மனிதர்களாக இருந்தும் பல விஞ்ஞான அறிவுகள் இருந்தாலும் அங்கே அப்படித்தான் இன்று உள்ளது. அங்கே எவ்வளவு மோசமான நிலைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று டி.வி. யில் பார்த்தால் தெரியும்.

அந்தச் சோமாலியா நாட்டில் “அமெரிக்கா…” தான் கண்டுபிடித்தவற்றைப் பரீட்சாந்திரமாகச் செயல்படுத்தி
1.தாவர இனங்கள் வளராத நிலைகளை உண்டாக்கியும்
2.அங்கிருக்கக்கூடிய மனிதனுடைய சிந்தனைகளைச் சீர்கெடச் செய்தும்
3.விஷமான உணர்வுகள் உட்புகுந்து அந்த நாட்டையே காக்க முடியாத நிலைகளாக ஆக்கி
4.அங்கே உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு கடுமையான பஞ்சமாகத் தாண்டவமாடிக் கொண்டுள்ளது.

மற்ற உலக நாடுகள் எத்தகைய உதவிகளைக் கொடுத்தாலும் அவர்கள் பஞ்சத்தை நிவர்த்திக்க முடியாத நிலைகள் கொண்டு மிருகத்தை ஒத்த நிலைகளாக வாழ்ந்து மடிந்து கொண்டிருக்கின்றனர்.

இதை எல்லாம் நான் (ஞானகுரு) கண்ணிலே பார்த்து இதைச் சொல்கிறேன். அமெரிக்கா சோமாலியாவில் செய்தது போல் நம் நாட்டிலேயும் சில வேலைகளைச் செய்துள்ளார்கள்.

நெல்லைப் பயிரிட்டு வளர்க்கும் பொழுது சிறு பூச்சி வகைகளை அதற்குள் உண்டாக்கி உள்ளார்கள். கடைசியில் நெல்லை அறுப்போருக்கு உடலிலே அரிப்புகள் தோன்றி அதனால் பல தீமையான விளைவுகள் வருகின்றது.

வாழைத் தோட்டத்திலும் சும்மா உள்ளே புகுந்து வந்தாலே போதும். உடலின் மேலே தோலில் கருப்பான நிலைகள் ஆகி அரிப்புகள் அதிகமாகின்றது. மேலே போட்டிருக்கும் இந்தத் துணியை மற்றவர்கள் தொட்டாலும் அதே அரிப்பு அவர்களுக்கும் வருகின்றது.

சோமாலியா நாட்டில் உருவாக்கப்பட்ட அந்த விஷத் தன்மைகள் படர்ந்து அதனின் காற்று மண்டலமாக மாறுகிறது.
1.புயல்கள் அங்கே திசை மாறும் நிலையில் அந்த விஷங்களைக் கவர்ந்து சுழன்று மழை நீருடன் கலந்து
2.அந்த விஷமே இன்று உலகம் முழுவதும் படரும் நிலைக்கு வந்துவிட்டது.

புயல் வரப்படும் பொழுது அதிலே கலந்த இந்தத் தீமையின் நிலைகள்
1.எந்த நாட்டில் இந்த விஷத் தன்மைகளைச் செய்தனரோ அதிலே சிக்கப்பட்டு மேகங்களில் கலந்து
2.எங்கெங்கெல்லாம் இந்த மேகங்கள் கலைந்து சென்று அது நீராக வடிகின்றதோ
3.அந்த நாட்டில் எல்லாம் விஷத் தன்மையாக வளர்கின்றது.
4.இன்று உலகெங்கிலும் புது விதமான பெயர்களுடன் வைரஸ் நோய் பரவுவதன் காரணமும் இது தான்.

அந்த விஷத் தன்மைகள் மனித உடலுக்குள்ளும் ஊடுருவி மனிதன் இறந்தாலும் அவனுடன் பழகிய உணர்வுகள் கொண்ட அடுத்த மனிதனுக்குள்ளும் இறந்த உயிராத்மா சென்று அந்த உடலுக்குள்ளும் விஷமான உணர்வுகளை உந்தச் செய்கின்றது.

விஷ உணர்வுகள் உந்தி அந்த உணர்வின் சக்தியாக இயக்கி விஷத்தைக் கவரும் நிலையாக உடலிலுள்ள அணுக்களை எல்லாம் மாற்றி விடுகின்றது. உடலெல்லாம் அரிப்பாகித் தீமைகளை விளைவிக்கும் நிலைகளை உருவாக்கி விடுகின்றது.
1.இவ்வாறு இது மனிதனுக்குள் கலந்து கலந்து
2.தீய விளைவுகளாக வளர்ந்து கொண்டே வருகின்றது.

அன்றைய அரசனுடைய ஆட்சி போல் இல்லாமல் இன்று மக்கள் ஆட்சி என்றாலும் “மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும்” காலமாக மாறும் நிலை வந்து விட்டது.

ஒரு நல்ல பொருளுக்குள் விஷத்தை ஊட்டினால் அந்த நல்ல பொருளின் சத்தின் தன்மை எப்படி இழக்கப்படுகின்றதோ இதைப் போல
1.மனிதனுடைய உணர்வுகள் அனைத்தும் முழுமையாக நஞ்சாகிக் கொண்டுள்ளது.
2.சிந்திக்கும் தன்மையே அற்றுப் போய் விட்டது.

விஷத்தைப் பாய்ச்சி மற்ற நாட்டினரை எளிதாக வீழ்த்தலாம் என்ற எண்ணத்தில் செயல்படுத்தப்பட்ட செயல்களின் விளைவால் மனிதர்கள் இனி இங்கே வாழ முடியாத நிலைக்குச் சென்று கொண்டுள்ளது.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அக்காலங்களில் எல்லாம்… அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம் சிவ புராணம் விநாயக புராணம் போன்றவைகளைக் கற்றுணர்ந்தவர்கள்.

ஒரு மனிதன் எப்படி ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்…? என்ற நிலைகள் கொண்டு அன்று செயல்படுத்தி வந்தார்கள்.

மார்கழி மாதம் வந்து விட்டதென்றால் அது குளிர் காலமாக இருந்தாலும் அந்தக் காலங்களில் தெய்வீகப் பண்புகளை அந்த மாதம் முழுவதும் எண்ணும் வண்ணம் கதைகளாகச் சொல்வார்கள்.

மற்றவர்கள் அதை அமர்ந்து கேட்டுணர்ந்து
1.தங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும்
2.தன்னுடைய எண்ணங்களைச் சரிபடுத்திக் கொள்ளவும்
3.இந்த மார்கழி மாதத்தைப் பயன்படுத்தினார்கள்.

தை மாதத்தை எடுத்துக் கொண்டால் அந்த அறுவடை காலத்திற்கு ஒப்ப அந்த நாம் விளைய வைத்த மணிகள் வெளி வருவதைக் கண்டு அதை எண்ணி மகிழ்ந்து… அதைப் போல நமக்குள் உயர்ந்த எண்ணங்களை எவ்வாறு எடுக்க வேண்டும்…? என்ற அந்த மகிழ்ச்சியைப் பெருக்கினார்கள்.

இதே போல் ஒவ்வொரு மாதத்திலேயும் அதற்குத் தகுந்த காவியங்களைச் சொல்லி அமர்ந்து கேட்கும்படி செய்து ஓரளவுக்குச் சீராக மக்களுடைய மனதைப் பண்படுத்தும் நிலையாகச் செயல்படுத்தினார்கள்.

அக்காலங்களில் ஒவ்வொரு கிராமங்களும் தோறும் சரி… இந்தக் காவியங்களைக் கதைகளாகச் சொல்லி ஒவ்வொரு மாதத்தையும் தேர்ந்தெடுத்து அந்த ஒவ்வொரு மாதத்திலும் அருள் ஞான உணர்வுகளை முழுமையாக அந்த மக்களுக்குப் பெறும் நிலைகளாகச் செய்தார்கள்.

இன்று அது எல்லாம் அறவே இல்லை…!

ஒரு கல்யாணம் நடந்தது என்றால் டி.வி. பெட்டியை வாங்கி விட்டு தையா…தக்கா…! என்று ஆட்டம் போடுவதும்… சண்டை போடும் நிலைகளையும் வேடிக்கையாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதே போல் மக்கள் வாழும் ஊர்களில் இருக்கும் தெய்வங்களை வணங்க வேண்டும் என்ற நிலையில் திருவிழா காலங்கள் வநநால்
1.நான்கு மூலைக்குப் டி.வி.யைப் போட்டு எந்தெந்த அதர்மங்கள் இருக்கிறதோ
2.அதை எல்லாம் பார்த்து ரசித்து வெறுப்புணர்வுகளைத் தோற்றுவிக்கும் நிலையாக எல்லாமே மாறி விட்டது.
1.ஒவ்வொரு மாதங்களிலேயும் தெய்வீகப் பண்புகளை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று
2.தெளிவாக எடுத்துக் காட்டிய காலங்கள் அனைத்தும்
3.இன்று நம் இந்தியா முழுவதற்கும் மறைந்து விட்டது.

அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் மறைந்து கொண்டே போய் மனிதனுக்குள் உயர்ந்த ஞானத்தைப் பெறும் தகுதிகள் இழந்து விட்டு இன்று நாம் “எங்கேயோ தேடிக் கொண்டிருக்கின்றோம்…!”

ஆக யாரோ செய்வார்..! என்ற நிலைகளில் ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் தூண்டிக் கொண்டு
1.ஆலயங்களுக்கு ஒரு சுற்றுலா (PICNIC) செல்வது போல
2.வெறி உணர்வைத் தூண்டிக் கொண்டு தான் ஆலயங்களுக்குச் செல்கின்றோம்.

ஆலயங்களில் காட்டிய நெறிகளின் அடிப்படையில் நமக்குள் அந்தத் தெய்வம் எந்த நல்லதைச் செய்கின்றதோ
1.அந்தத் தெய்வ நிலைகள் நாங்கள் பெற வேண்டும்…
2.எங்களுக்குள் சகோதர உணர்வுகள வளர வேண்டும் என்ற
3.அந்த ஞானிகள் காட்டிய உணர்வை அங்கே வழிபடுவதில்லை.

ஆலயத்திற்குச் சென்றாலும்… நான் என்னுடைய புகழைத் தேடினாலும்… என் அருகிலே இருப்போரை நான் நிந்திக்கும் நிலையும்… தொல்லை கொடுக்கும் நிலைகளாகத் தான் நாம் செய்து கொண்டு வருகிறோம்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாவற்றையும் விடுத்துப் பழக வேண்டும்.

நம் அருகிலே உள்ளவரை நாம் சாந்தப்படுத்தி நமக்குள் உயர்ந்த நிலைகளாக மாற்றும் நிலையாக வர வேண்டும். அந்த நிலைகள் ஏற்படுத்துவதற்குத் தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்தனர்.

கார்த்திகை மாதத்தை எடுத்துக் கொண்டால் கந்த புராணம் என்ற நிலையில்
1.ஆறாவது அறிவு கொண்டு உணர்வின் எண்ண ஒலிகள் எப்படி உருவானது…? என்ற நிலையும்
2.அந்த முருகன் எப்படிப் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான்…? என்பதையும்
3.மற்ற தீயதை வளராது (பிரம்மாவைச் சிறைப் பிடித்து) நல்லது விளைய வைக்கும் நிலையை முருகன் எப்படிச் செய்தான்..? என்று காட்டினார்கள்.

ஆறாவது அறிவு கொண்டு நாம் ஒவ்வொன்றையும் இந்த எண்ணங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்பதற்காக வேண்டித் தான் கார்த்திகை மாதங்களில் முருகனைப் பற்றித் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்கள்.

சிவனைப் பற்றிச் சொல்லும் பொழுது ஜோதியை (திரு அண்ணாமலை) ஏற்றும் நிலைகளைக் காட்டினார்கள்.

நம் உடல் சிவம்.
1,உடலான சிவத்திற்குள் நம்முடைய எண்ணங்கள் ஒவ்வொன்றையும்
2.பளிச்சிடும் எண்ணங்களாக எவ்வாறு உருவாக்க வேண்டும்…? என்று தான்
3.பண்டைய கால காவியங்கள் அனைத்தும் உண்டு.

ஆனால் அதைப் பூராமே திசை திருப்பி அந்த உண்மையினுடைய நிலை அறியாது நமது உடலில் இயக்கும் தன்மையை உணர்த்துவதற்காகக் காட்டப்பட்ட “உண்மைத் தத்துவங்கள்…” காலத்தால் மறைந்து விட்டது.

மறைந்த அந்த உண்மைகளைத் தான் சிறுகச் சிறுக உங்களுக்குள் உணர்த்தி அந்த மெய் ஞானிகள் சென்ற அருள் வழியில் பேரின்பப் பெரு நிலை அடைய வேண்டும் என்று வேண்டி யாம் (ஞானகுரு) விரும்புகின்றோம்.

விஷத்தை ஒளியாக மாற்றும் “நுண்ணிய உணர்வுகளை” உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்

 

விஷத்தால் தாக்கப்படும் பொழுது தான் “நகர்ந்து ஓடும் நிலை” பெறுகின்றது… வெப்பமும் காந்தமும் உருவாகின்றது. மூன்று சக்தியாக இயங்குகின்றது…
1.வெப்பம் காந்தம் விஷம் மூன்று தான் ஆதியிலே உருவானது.
2.இயக்கத்திற்கு மூலம்… வெப்பம் உருவாவதற்கு மூலம்… விஷம் தான்.

அதே சமயத்தில் விஷம் வெப்பமாகி… வெப்பமாகும் போது உணர்வின் சுழற்சியாகும் போது சூரியனாகி விஷத்தைப் பிரிக்கின்றது. அது மற்றதுடன் கலந்து ஓர் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான் “விஷத்தின் தாக்குதலால்…” ஏற்பட்டது தான் உயிர்.

நாம் நுகரும் உணர்வுகள் அதனின் இயக்கத்திற்கு ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷம் உண்டு.
1.விஷத்தின் இயக்கம் தான் என்றாலும் உணர்வின் சத்து அதிகரித்து
2.அதன் உணர்வின் உணர்ச்சியின் எண்ணங்களைத் தூண்டச் செய்யும் நிலைதான் இது.

சூரியனால் கவரப்பட்ட வெப்பம் காந்தம் விஷம் என்று இருந்தாலும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைக் கவர்ந்து கொண்டால்
1.இந்த விஷ இயக்கத்தை அடக்கிய உணர்வுகள் அடக்கும் உணர்ச்சியை நமக்குள் கூட்டுகின்றது.
2.கவர்ந்து கொண்ட காந்தம் லட்சுமி அதனுடன் இணைக்கப்படும் பொழுது அதைப் பிரிக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஏனென்றால் முக்கியமாக உங்களுக்குள் நுண்ணிய உணர்வுகளைப் பதிவாக்குகின்றேன்.

“சிந்தனை கொண்டு…” உங்கள் வாழ்க்கையில் உங்களைக் காக்கும் உணர்ச்சிகள் வர வேண்டும் என்பதற்குத் தான் உங்களுக்குள் இதை இணையச் செய்து அதைப் பதிவாக்குகின்றேன்.

சந்திக்கும் சந்தர்ப்பங்கள்
1.அதிலே இக்கட்டான நிலை வரும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அதிலிருந்து விடுபடுவதற்கு இது உதவியாக இருக்கும்.

ஆகவே ஒளியின் சரீரம் பெறக்கூடிய நிலையில் ஆயுள் மெம்பராக நாம் இருக்கப்படும் பொழுது அதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

நம்மைச் சங்கடப்படுத்தியவர்கள் வேதனைப்படுத்தியவர்கள் சலிப்புப் படுத்தியவர்கள் நம்மிடம் சண்டையிட்டவர்கள் இவர்களைப் பற்றித் தான் அதிகமாக எண்ணம் வருகின்றது.

ஏனென்றால் அதனுடைய “அழுத்தம்…” அதிகம்…!

இதையெல்லாம் மாற்றும் சக்தி கொண்டது தான் துருவ நட்சத்திரம். அதை உங்களுக்குள் இணைக்கின்றேன். அப்படி இணைக்கப்படும் பொழுது ஒவ்வொரு உணர்விலும் சேர்ந்து கொள்கின்றது.

பல சரக்குகளைப் போடுகின்றோம் அதிலே காரத்தை இணைத்த பின் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் சுவைமிக்கதாக அந்த உணர்ச்சியை எப்படிக் கூட்டிக் கொண்டு வருகின்றதோ இதைப் போன்று
1.விஷத்தை அடக்கிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைக்க வேண்டும்
2.எப்போது தீமையைப் பார்த்தாலும் கேட்டாலும் நுகர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் காலை துருவ தியானத்தில் அதை மீண்டும் மீண்டும் உங்களை எண்ணி எடுக்கும்படி சொல்கின்றோம்.

“மெய் ஞானம் பெற வேண்டும்” என்று விரும்புபவர்கள் தான் இங்கே இருப்பார்கள்

 

யாம் எல்லா இடங்களுக்கும் சுற்றி அனுபவங்கள் பெற்ற பிற்பாடு தான்
1.இந்தச் சக்தியை உங்கள் அனைவருக்கும் எப்படிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொண்டேன்.
2.குரு வழியில் இப்பொழுது அதைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆனால் எம்மைப் போற்ற வேண்டும் என்று யாம் விரும்பினால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அடேயப்பா… எங்கள் சாமி பெரியவர்…! என்று சொல்ல வைக்கலாம்… இங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் எதற்கு வரும்…?

இப்பொழுதும் கூட்டங்கள் வருகின்றது… ஆனால் அதை நான் கழித்து விட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன். உண்மையான நிலைகள் பெற வேண்டும் என்று விரும்புவர் இதிலே தங்கி இருப்பார்கள்.

உடல் இச்சைக்கு என்று கேட்டு வருபவர்கள் குறைத்தே தான் இருக்கும்.

1.அருள் வழியில் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று விரும்புவர்களுக்கு
2.அந்தச் சத்தை ஏற்றிக் கொடுத்து கொண்டே இருப்பேன்.

முழுமையாக இந்த உடலுக்கு வேண்டும்… தன் வாழ்க்கைக்குக் தான் வேண்டும் என்று எண்ணி வருபவர்களை நான் “சிறிது சிறிதாகக் கழித்து விட்டு விடுவேன்…”

இந்த உடலை வைத்துத் தான் நாம் உயர்ந்த சக்தி பெற வேண்டும்… அருள் ஞானத்தைப் பெற வேண்டும். நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவரையும் பெறச் செய்யலாம். நீங்கள் வளர்ந்தால் தானே…!

நான் ஒருவன் என்ன செய்ய முடியும். என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது. நான் நினைக்கலாம் யானையைப் பண்ணலாம் பூனையைச் செய்யலாம் என்று. அப்படிச் சொன்னால் “அது வெறும் திமிர்தான்…! அப்படி ஒன்றும் செய்ய முடியாது…”

ஒரு நெல்லை எடுத்துப் பல நெல்களாக அதை விளைய வைத்து எல்லோரையும் பெறச் செய்யலாம்.
1.இந்த அடிப்படையில் வலுவைக் கொடுத்துத்தான் எல்லோருக்கும் உயர்ந்த சக்தியைக் கொடுக்க முடியும்.
2.குரு எனக்குக் கொடுத்தது அது தான்… அதைத் தான் உங்களையும் செய்யச் சொல்கிறேன்.

நான் அதைச் செய்கிறேன் என்று “அந்த நான்” வந்து விட்டால் அதற்குப்பின் வளர்ச்சி இல்லை… தீர்ந்துவிடும்…!

நீங்கள் வளர வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் உங்கள் பார்வை அனைவரையும் நல்லவராக்க வேண்டும்… என்ற இந்த எண்ணத்தை நான் எப்பொழுது கொண்டு வருகின்றேனோ
1.நீங்களும் வளர்கின்றீர்கள் நானும் வளர்கின்றேன்.
2.உலகத்தையும் வளர்க்க முடிகின்றது… நானும் அந்த வளர்ச்சி பெற முடியும்.

சூரியன் எதனின் துணை இல்லாதபடி தான் மட்டும் சக்தி பெற வேண்டும் என்றால் முடியாது. 27 நட்சத்திரங்கள் பிற மண்டலத்திலிருந்து வருவதை எடுத்து இங்கே கொடுக்கவில்லை என்றால் சூரியன் இயங்க முடியாது.

பிற மண்டலங்களின் சக்தி வரவில்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்திற்கும் சக்தி இல்லை. அண்டத்தில் இருப்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் சேர்க்கப்பட்டுப் பிண்டத்திற்குள்ளும் இருக்கின்றது.

1.உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றி விட்டால் அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம்…
2.என்றும் பதினாறு என்று வளர்ச்சி அடையும்… அது வேகாநிலை… எதிலுமே வேகாது.
3.2000 சூரியக் குடும்பத்தை முதலில் வட்டமிடும். பின் அதைக் கடந்து அகண்ட அண்டத்திற்கும் செல்லும்.
4.அப்படி அடைந்த ஒரு கூட்டமைப்பாகச் செல்லும்.

இருண்ட உலகமாக இருப்பது ஒளியின் சிகரமாக அகண்ட அண்டம் விளையும். அது எத்தனையோ கோடி வருடங்கள் ஆகும்.

அனைத்தும் ஒளியாக மாறிவிட்டது என்றால் அதற்குப் பின் மனித இனங்களைச் சீக்கிரமாக மாற்றும் நிலை வரும். ஒளியின் சுடராக ஒளிக்குள் எல்லாமே ஒளியாகும்.

இப்படி எத்தனையோ ஆண்டுகள் நாம் வளர்ச்சி பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உலக மக்கள் அனைவரும் அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நாம் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் தவமிருப்போம்.

1.எந்தத் தென்னாட்டிலிருந்து உலகம் முழுவதற்கும் மெய் ஞானத்தின் தத்துவங்கள் பரவியதோ
2.அதே தென்னாட்டிலிருந்து மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருளால் உலக மக்களை எல்லாம் ஒன்று சேர்த்திடும்…
3.மனித இனத்தைக் காத்திடும் சக்தியாக வெளிப்பட வேண்டும் என்று
4.குருநாதரின் அருளாற்றலை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம் (ஞானகுரு).

உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உலகைக் காப்பீர்… உங்களையும் காப்பீர்… உங்கள் ஊரைக் காப்பீர்… உலக மக்களைக் காப்பீர்கள்..! என்று வேண்டுகின்றேன்.

நிறைந்த மனதுடன் வாழ்வோம். எல்லோரையும் நிறைவான நிலைகள் பெறச் செய்வோம். அந்த நிறைவின் நிலைகள் கண்டு மகிழ்வோம்.

அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு எல்லோரும் பேரானந்தப் பெரு நிலையை இந்த வாழ்க்கையிலே அடைவோம். பேரின்பப் பெரு மகிழ்ச்சியை இந்த உடலிலிருந்தே வளர்ப்போம்.

பிறவி இல்லா நிலைகள் என்ற பெரு வாழ்வு வாழ்வோம். என்றும் அழியாத நிலையான ஒளிச் சரீரம் பெறச் செய்யும் வாழ்க்கை வாழ்வோம்.

உலக மக்கள் அனைவரும் மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி அரசியல் பேதமின்றி வாழ்வோம். சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்வோம்.

1.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை நாட்டு அரசுடன் இணைந்து நாம் எடுத்துக் காட்டினோம் என்றால்
2.அந்த நிலையே நம் அரசும் ஆகின்றது.
3.நாமே அரசாகின்றோம். அரசே நாம் ஆகின்றோம்.

இந்த உயர்ந்த நிலைகள் கொண்டு நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் இந்த அரசும் நலமானதே. அரசே நாம் – ஆக நலமாகின்றோம்.

1.நாம் தான் அரசு
2.அரசு தான் நாம் என்ற நிலைகளில்
3.தீமைகளை வென்று ஞானத்தின் நிலையை வளர்த்த நம் பாரத நாட்டில் அரசியல் பேதமின்றி வளர்ப்போம்.
4.பேதமற்ற வாழ்க்கை நாம் வாழ்வோம்.

நாம் அனைவரும் ஒருக்கிணைந்து நம் தமிழ்நாடு உலகிற்கே எடுத்துக் காட்டாக வரவேண்டும் என்ற நிலையில் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வருவோம்.

உலக மக்கள் அனைவரும் பேதமற்ற நிலைகளில் வாழ வேண்டும் என்று “தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…!” என்று போற்றப்படும் இங்கே தெற்கிலே வளர்ந்த அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வுகளை இந்த உலகிலே பரப்புவோம்.

அந்த மெய் ஞானியின் உணர்வை நாம் ஒருக்கிணைந்து நமக்குள் வளர்ப்போம். உலகம் அனைத்தும் நலம் பெற வேண்டும் என்ற நமது மூச்சலைகளைப் பரப்புவோம்.

நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்வோம். பகைமையற்ற உணர்வுகளுடன் வாழ்வோம்… வளர்வோம். எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று அந்த அகஸ்திய மாமகரிஷிகளை வேண்டிப் பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக வணங்கச் சொன்னார். அந்தக் கடவுளால் அவன் அமைத்துக் கொண்ட கோட்டை தான் உடல் என்று அந்த உடல்களை “ஈசன் வீற்றிருக்கும் கோவில்…” என்று மதிக்கச் சொன்னார்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த உடலான ஆலயத்திற்குள் அரும் பெரும் சக்தியாக உலகைப் படைத்திடும் சக்தியாக அதாவது தெய்வங்களாக ஒவ்வொரு உணர்வுகளும் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்று சொன்னார்.

அங்கே நீ வரம் பெறும் நிலையாக
1.ஒவ்வொரு மனிதனுக்குள் அறியாது விளைந்த தீயதுகளை மறந்து விட்டு
2.அந்த உடலை வளர்த்த உயர்ந்த உணர்வின் எண்ணங்களை நீ எண்ணி
3.அது உயர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீ எண்ணுவாய் என்றால்
4.அந்த உயர்ந்த நிலையின் சக்தியை நீ பெறுகின்றாய் என்று குருநாதர் தெளிவாக எனக்குக் (ஞானகுரு) காட்டினார்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஒவ்வொரு கோயிலும் (உடல்கள்) பரிசுத்தமாக வேண்டும். அங்கே இயக்கிக் கொண்டு இருக்கும் ஈசன் நல்ல உணர்வுகளை அங்கே படைக்கச் செய்ய வேண்டும் என்ற இந்த உணர்வில் தான் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் தியானித்து வருகின்றேன்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தியான மண்டபத்தை அமைத்திருக்கிறோம். அங்கே அமர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்களை உலகம் முழுவதற்கும் படரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உலகத்தையே அழித்துக் கொண்டு இருக்கும் விஷத் தன்மை ஒரு பக்கம் படர்ந்து மனிதனுடைய எண்ணத்தையும் அது அழித்துக் கொண்டு இருந்தாலும்
1.அந்த விஷத் தன்மையிலிருந்து எல்லோரையும் மீட்ட வேண்டும் என்ற நிலையில்
2.அந்த மெய் ஞானிகள் கற்பித்த நிலைகள் நான்கு திசைகளிலும் பரவி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உலக மக்கள் அனைவரும் பெறும் தகுதியாக இப்போது அதுவும் வளர்ச்சியாகிக் கொண்டே வருகிறது.

தியானத்தை நாம் மட்டும் செய்யவில்லை…! உலகில் எல்லாப் பாகங்களிலும் இதைப் போன்ற தியானத்தின் உண்மைகளை உணர்ந்து “உலகைக் காக்கும் சக்தியாகத் திசை திரும்புகிறது…!”

அந்த மாமகரிஷிகள் ஒவ்வொரு பாகங்களிலேயுமே இதைப்போல அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

நமது மனதை வலு பெறச் செய்யும் சக்தியாக நமது எல்லையில் நம்மை அணுகி உள்ளவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் செயல்படுத்தியது.

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்குள் வந்தாலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற்று
1.நீங்கள் இடும் மூச்சுகள் அனைத்தும் உலக நன்மை பயக்கும் அருள் சக்தியாகவும்
2.மற்றவர்களின் தீமையை அகற்றி அவர்களுக்குள் நல் உணர்வின் சக்தி விளையும் தன்மையாகவும்
3.அதைச் செயல்படுத்தும் நிலையாகத் தான் இங்கே அமைத்திருக்கின்றோம்.

இந்தத் தபோவனத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டாலே
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து விட்டு
3.அடுத்து உங்களுக்கு எது எல்லாம் நல்லதாக வேண்டுமோ அதை எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
4.உங்களுக்கு அந்தச் சக்தி கிடைத்து நல்லதே நடக்கும்.

சில சந்தர்ப்பங்களில் உங்கள் வீட்டிலிருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லை என்றாலும் இங்கே வந்து அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்டால் அதன் பின் உங்கள் வீட்டிலிருந்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பழக்கம் வந்து விடும்.

அந்தப் பழக்கம் வந்து விட்டால் “நம்மை நாமே காத்திடும் சக்தியாக…” அது வரும். அதனின் வளர்ச்சியில் எத்தகைய நஞ்சு கொண்ட உணர்வுகள் இங்கே பூமியிலே படர்ந்தாலும் அது நம்மைத் தாக்காத வண்ணம் நம்மைக் காத்துக் கொள்ளும் ஆற்றலை நிச்சயம் எல்லோரும் பெற முடியும்.

ஆகையால் சாமியார் காப்பாற்றுவார் ஜோதிடம் காப்பாற்றும் ஜாதகம் காப்பாற்றும் மந்திரம் காப்பாற்றும் என்ற நிலையை விடுத்து உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனின் துணை கொண்டு மெய் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பேரொளியாக மாற்றச் செய்யவே இந்தத் தியான மண்டபம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியை நாம் பெற்று அவரின் துணையால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.இந்த மனித உடலிலே வந்த தீயதை நீக்கி
2.மெய் ஒளியின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலையை அடையும் ஆற்றலை இந்தச் சரீரத்தில் வளர்த்து
4.என்றும் அழியாத ஒளிச் சரீரமாக நாம் நமக்குள் வளர்ப்போம். நலம் பெறுவோம்… வளம் பெறுவோம்…!

சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் நாம் ஒன்ற வேண்டும்

 

நான் படிக்காதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். இயற்கையின் பேருண்மைகளை அறியும் தகுதியை குருநாதர் எமக்குக் கொடுத்தார்.

நீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உணர்வினைப் பதிவாக்கிக் கொண்ட பின் உங்கள் நினைவாற்றல் கொண்டு
2.அண்டத்தையும் அளந்தறிந்த அகஸ்தியனின் உணர்வினை உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்.
3.இருளை அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியையும் நீங்கள் பெற முடியும்

அந்த நம்பிக்கையில் தான் இதைப் போதிக்கின்றேன். கேட்டறிந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… திரிந்தேன்… அறிந்தேன்… துன்புறுத்தப்பட்டேன்… துன்பத்திலிருந்து மீண்டிடும் உணர்வை குருநாதர் உணர்த்தினார்… அதைக் கவர்ந்தேன்.

துன்பத்தை அகற்றும் உணர்வுகளை வளர்க்கும் படி செய்தார். அதில் வளர்த்த உணர்வின் ஞானத்தைத் தான் உங்களுக்குப் போதிக்கின்றேன்.
1.நீங்கள் இதை நினைவு கொண்டு வந்து வளர்த்தால்
2.உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்க முடியும்.

இந்த உடல் நீடித்த நாள் நம்முடன் இருக்கப் போவதில்லை. ஆகவே உடலில் இருக்கும் பொழுதே அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். நாம் பார்ப்போர் நம் சொல்லைக் கேட்டோர் அனைவரையும் நலம் பெறச் செய்ய முடியும்.

நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களும் அதைப் பெறுவார்கள். எடுத்துக் கொள்ளவில்லை என்றால் வளர்ச்சிக்கு வர முடியாது.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்று அருள் ஞானத்தைப் போதியுங்கள். அருள் ஒளியை நுகருங்கள். அருள் ஞான அணுக்களை உருவாக்குங்கள். பிறவி இல்லா நிலையை அடைய முற்படுங்கள். நம் எல்லை எது…? என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதை மையமாக வைத்து வாழுங்கள்.

மையம் எது…?

1.இந்த உடலுக்குப் பின் நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… மனிதனின் கடைசி எல்லை அது தான்.
2.அங்கே ஒளியாக மாறிவிட்டால் அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் சுழலாம்… என்றும் 16 என்று நிலை அடையலாம்.

மனித உடல் பெற்ற நிலையில் அறியும் ஆற்றல் ஆறாவது அறிவாக உள்ளது கார்த்திகேயா…! உயிர் தான் இதையெல்லாம் உருவாக்குகின்றது. அவனுடன் நாம் ஒன்றிட வேண்டும்.

உயிர் எப்படி நம்மைத் தெளிவாக்குகின்றதோ இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவுக்கு உண்டு. அதன் துணை கொண்டு அருள் சக்திகளை வளர்த்துக் கொண்டால் அடுத்துப் பிறவி இல்லை.

சொர்க்க பூமி சொர்க்கவாசல் என்று நாம் எண்ணும் உணர்வின் தன்மை அருள் ஒளி கொண்டு இங்கே வளர்த்தால் அங்கே விண் செல்ல முடியும்… சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

1.சொர்க்க பூமியாக இருக்கும் இந்த நிலையை சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.
2.சொர்க்க வாசலை நாம் நாட வேண்டும்.
3.சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் ஒன்ற வேண்டும்
4.அருள் ஒளிச் சுடரை நாம் வளர்க்க வேண்டும்… அதன் வழி அது நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக யாரும் தவறு செய்யவில்லை என்றாலும் சந்தர்ப்பத்தால் ஒவ்வொரு மனிதனும் எதிர்நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கின்றது. ஏன்…?

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நிலைகள் பெற்றது. இரண்டு நட்சத்திரத்தின் சக்திகள் எதிர் நிலையாகி அதனால் துடிக்கும் இயக்கமாக ஒரு உயிராக உண்டாகின்றது.

அந்தத் துடிப்பின் இயக்கத்திற்குள் அது கவர்ந்து கொண்ட உணர்வினை உடலுக்குள் ஜீவ அணுக்களாக மாற்றும் நிலைகள் பெற்றது தான் ஒவ்வொரு உயிரும்.

கார்த்திகை நட்சத்திரம்… அறிந்திடும் அறிவாற்றல் மிக்க நிலைகளில் ஒளி கண்டு உணர்ந்திடும் உணர்வின் அறிவாகப் பெற்றது.
1.ஆக 27 நட்சத்திரங்களிலும் 27 விதமான வைரக் கற்கள் உண்டு.
2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதமான வலுவின் தன்மை பெற்றது.
3.ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாத நிலைகள் கொண்டது

27 நட்சத்திரத்தின் உணர்வின் இயக்கங்கள் இவவாறாக இருக்கும் இந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் இயக்கமும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டது.

இருப்பினும் ஒரு கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டவர்கள் அவர்கள் உடலிலே எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு அவருக்கு ஒத்ததாக விளைந்த எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர்.

அவர்கள் நல்லவராகத் தோன்றினாலும் அதே சமயத்தில் எதிர் மறையான நட்சத்திரத்தின் சக்தி கொண்ட நாம் அவருடன் நட்புடன் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

27 நட்சத்திரத்திங்களுக்குள் ஒன்றுக்கொன்று எதிர் நிலை மறைகள் உருவாகி அதனின் இயக்கத்தால் தான் தாவர இனங்களே விளைகின்றது.

அந்தத் தாவர இனத்தில் விளைந்ததை உணவாக உட்கொள்ளும் போது ஒரு சிலது கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒத்து வரும். அவருக்கு அதனால் அங்கே மகிழ்ச்சியின் தன்மை வரும். வலுக் கொண்ட நிலைகளும் அவருக்குள் வரும். (ஆனால் மற்ற நட்சத்திரத்தின் சக்தி கொண்டவருக்கு எதிர் நிலைகளாக வரும்)

அப்பொழுது அவர் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் சொல்லால் நமக்குள் வரப்படும் போது நம்மை அறியாமலேயே தீமை விளைவிக்கும் நிலையாக இங்கே வரும்.

இருப்பினும்
1.நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாது அதனின் உணர்வு எதிர்மறையாகி
2.ஒன்றுடன் ஒன்று எதிர்நிலை ஆகும்போது தான்
3.விண்ணுலகிலே ஆற்றல் மிக்க இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதே போல ஒன்றுடன் ஒன்று ஒன்றும் நிலைகள் வரப்படும் போது எதிர் மறையான உணர்வுகள் வரும்போது தான் அதனுடைய இயக்கமும் வருகின்றது.

ஒரு “எலக்ட்ரானிக்” என்ற நிலை வரப்படும் போது அதை இயக்க வேண்டும் என்றால் அதற்கு எதிர்மறையான நிலைகள் இருந்தால் தான் அது இயக்கமாகும்.

அந்த எலெக்ட்ரானிக் போல் தான் நம்முடைய உணர்வுகளும் எண்ணங்களும்…!

ஒரு உணர்வின் சக்தி நம் உடலுக்குள் அது ஒத்துக் கொண்ட உணர்வாக இருந்தாலும் எதிர் மறையான நிலைகள் இருக்கும் போதுதான் நமக்குள் “உந்தி இயக்கும் நிலைகளாக…” நாம் செயல்படுகின்றோம்.

மின்சாரத்தை எடுத்துக் கொண்டாலும் POSITIVE NEGATIVE என்ற எதிர் மறையான நிலைகள் வரும்போது தான் மின் அணுவின் நிலைகளும் இயங்கி மின் அணுவின் அழுத்தத்தைக் கொண்டு மோட்டார்களையும் மற்ற எல்லா மின் சாதனங்களையும் அது இயக்கச் செய்கின்றது.

இதைப் போல்தான் மனிதனின் உணர்வுக்குள்ளும் நாம் நண்பராகப் பழகினாலும் அந்த நட்சத்திரத்தின் இயக்கத்தால் எதிர்மறையான இயக்கங்கள் உண்டு,

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடப்படும் பொழுது இரண்டு குழந்தைகள் ஒத்து வரலாம், ஒரு குழந்தை ஒத்து வராத நிலைகள் வரும். இப்படி எதிர்மறையான நிலைகள் வரும்போது எதிர்ப்பின் நிலைகளே வருகின்றது.

நாம் பலருடன் பழகினாலும் எண்ணத்தால் கவர்ந்து நட்பு கொண்டு மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுணர்ந்தாலும் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் எதிர்மறையை உண்டாக்கி நோயாக உருவாக்கும்.

சந்தேகம் இருந்தால் பார்க்கலாம்…!
1.நண்பர்கள் பலருடன் சந்தித்துப் பேசும் போது
2.இன்னொரு நண்பருடன் நாம் பேசினாலே தன்னை அறியாமலேயே ஒரு கலக்கம் ஏற்படும்
3.வியாபார ரீதியாக நீங்கள் சென்றாலும் அத்தகையவர்கள் உறவாடிவிட்டுச் சென்றாலே நமக்குள் இனம் புரியாத கலக்கங்கள் ஏற்படுவதைக் காணலாம்.
4.இவை எல்லாம் நம்மை அறியாது இயக்கக்கூடிய நட்சத்திரங்களில் எதிர்மறையான இயக்கங்களே.

நமது உயிர் கார்த்திகை நட்சத்திரமாக இருப்பினும் மற்றவருடைய நட்சத்திரம் எதிர்மறையாக இருந்தால் அதனால் எதிர் நிலையான உணர்வுகளாக இயக்குகின்றது.

இதை எப்படி மாற்றிச் சமப்படுத்துவது…? அதற்கு வழி வேண்டுமல்லவா…!

அன்று வாழ்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோளின் சக்தியையும் தனக்குள் அடக்கி அதை எல்லாம் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அழியாத நிலைகள் கொண்டு ஏகாந்தமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அந்த உணர்வின் சத்தைக் கவரும் திறனாகத்தான் வசிஷ்டாத்வதைம்…! என்ற நிலைகளில் தியானத்தை அமைத்துக் கொடுக்கின்றோம். (வசிஷ்டர் – அருந்ததி)
1.எதனையுமே தனக்குள் கவரச் செய்து அருந்ததியாக
2.இணைந்தே வாழும் நிலைகளும்
3.இணைத்து அறிந்திடும் நிலைகளும்,
4.இணைந்தே தெரிந்திடும் நிலைகளும்,
5.இந்த வலுவினில் இணைந்திடும் நிலைகள் நாம் என்று கொள்கின்றோமோ
6.இதனை இணைத்திடும் நிலைகள் ஆக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அது பருக வேண்டும்.
7.அதைப் பருகினால் எதிர்நிலைகளைச் சீராக்கிச் சமப்படுத்தி நன்மை பயக்கும் சக்தியாக உருவாக்க முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பருகும் நிலையைக் உருவாக்குவதற்குத் தான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த உபதேசத்தின் நோக்கம்.

விண்ணுக்குப் போகும் உந்து விசை

 

விண் வெளியில் உள்ள கதிரியக்கப் பொறிகள் மற்ற மண்ணுடன் கலந்திருப்பதைப் பிரித்து அணுக்கதிரியக்கமாக மாற்றி அதன் உணர்வின் வலிமை கொண்டு அதன் சேர்க்கையில் பல கலவை கொண்டு “உந்து விசையாக மாற்றி” விண்ணிலே ராக்கெட்டை ஏவுகின்றார்கள்.

அதனின் தொடர் கொண்டு… பூமியின் ஈர்ப்பின் அழுத்தத்தைப் பிளந்து பூமியைக் கடந்து சென்று… ஈர்ப்பற்ற நிலைகளில் சுழன்று கொண்டிருக்கின்றது ராக்கெட்டின் செயலாக்கங்கள் விஞ்ஞான அறிவால்.

இதைப் போன்று தான்
1.விண்ணுலகில் எவ்வாறு உயிரின் தன்மை உருப்பெற்றதோ மண்ணுலகில் அது ஈர்க்கப்பட்டு
2.பல நட்சத்திரங்களில் இயக்கப்படும் பொறிகள் கோள்களாக மாறி அந்த உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைத் துருவத்தின் வழி பூமி நுகர்ந்து
3.அதன் வழி தாவர இனங்களாக வளர்ச்சி பெற்று அதன் உந்து விசையாக அதனின் உணர்வு இயக்கப்பட்டு
4.அதன் தொடர் வரிசையில் அதனதன் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மனிதனான பின் மனிதன் தன்னிலை அடைகின்றான்.
5.துருவத்தை நுகர்கின்றான்… நுகர்ந்ததைத் தனக்குள் ஒளிசுடராக மாற்றுகின்றான்.

அகஸ்தியன் இதையெல்லாம் பெற்ற பின் தன் மனைவிக்கும் இதை ஓதுகின்றான்… மனைவி பெற வேண்டும் என்று விரும்புகின்றான்.

மனைவியோ தன் கணவனுக்குப் பெற வேண்டும் என்று அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி… அது கருவாகி ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றார்கள் அகஸ்தியனும் அவன் மனைவியும்.

அதன் வழி விண் சென்ற அவர்கள் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். ஆகவே கடவுள் எப்படி இருக்கின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதனை நாம் நுகர்ந்தால் அதன் வழியில் நாமும் அங்கே செல்ல முடியும்.

அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லாம் உங்களுக்குள்ளும் இப்பொழுது பதிவாக்கும் நிலை வருகின்றது.
1.பேரண்டத்தைக் கண்டுணர்ந்த அகஸ்தியன் உணர்வை நமது குரு தனக்குள் கவர்ந்தார்.
2.ஒளியின் சுடராக விண்ணின் ஆற்றலை அவன் கண்டான்… பூவுலகின் நிலையையும் அறிந்தான்… உயிரியலின் தத்துவத்தை அறிந்தான்.
3.பேரண்டத்திலிருந்து எவ்வாறு நுகர்ந்தது என்று மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அகஸ்தியன் தொடர்வரிசையை அறிந்தான்.
4.அதைத் தனக்குள் உருவாக்கினான்… கருவின் வித்தாக உருவாக்கினான்.
5.அந்த வித்தினைத் தான் எனக்குள்ளும் பதிவு செய்தான்
6.அவன் உணர்வின் துணை கொண்டு அந்த எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது விண்ணின் ஆற்றலை நான் நுகர முடிகின்றது.

அதில் விளைந்த உணர்வின் எண்ணங்களை வித்தாக ஊழ்வினையாகப் பதிவு செய்ய முடிகின்றது.

இதை நீங்கள் நினைவு கொள்வீர்கள் என்றால் அந்த உணர்வின் துணை கொண்டு மண்ணுலகை வென்று வானுலகின் உணர்வை நீங்கள் நுகர்ந்து கணவன் மனைவியாக இதை வளர்த்துக் கொண்டால்
1.உடலை விட்டுச் சென்ற பின் அதே விண்ணுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
2.இது நிச்சயம்…!

இன்று நல்ல நினைவு இருக்கும் போதே அருள் உணர்வை வளர்க்கும் பருவத்திற்கு நாம் வர வேண்டும்

 

இந்த மனித உடலில் நாம் வாழும் இந்தச் சிறிது காலத்திற்குள்ளேயே நாம் ஒளியான நிலைகள் பெற வேண்டும். ஏனென்றால் இந்த உடலில் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது தெரிகின்றது.

அதற்குள் எத்தனையோ நிலைகளில் நாம் ஆசை வைக்கிறோம். எல்லாவற்றையும் செலவழிக்கின்றோம்… ஆடம்பரத்திற்கும் செலவழிக்கின்றோம்.
1.ஆனால் எதுவும் நிற்கின்றதா…?
2.செல்வத்தைச் சம்பாரித்து அழகாக வீட்டைக் கட்டி உடலையும் அழகு படுத்தினாலும்
3.நோய் என்ற நிலை வந்து விட்டால் அது எல்லாவற்றையும் தூக்கி எறி…! என்று சொல்கின்றோம்.
4.அந்த நேரத்தில் நல்லதை எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறோம் அல்லவா.

இன்று நன்றாக மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். யாராவது ஒரு சொல் தவறாகக் கேவலமாக சொல்லிவிட்டால் உடனே மனது சோர்வடைந்து விடுகின்றது.

என்னைக் கேவலமாகப் பேசினார்கள்… கேவலமாகப் பேசினார்கள்…! என்று வேதனை வருகின்றது. இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் அவர் மீது வெறுப்பும்… அவர் என்னென்ன சொன்னார்களோ அதை எல்லாம் எடுத்து இந்த உடலில் விளைய வைக்கத் தொடங்குகின்றோம்.

அதாவது… கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்பது போல் அவர்கள் உணர்வு இங்கே உருவாகிறது.

1.அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகின்றார்கள்
2.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று சொன்னால் அந்த உணர்வு நம்மை இயக்காது.

இப்படிப்பட்ட உணர்வை எடுத்து நாம் அதைத் தடுத்துப் பழக வேண்டும். அதனால்தான் ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்று சொல்கின்றோம்.

அதைத் தடுக்கக்கூடிய வல்லமை எப்படிப் பெற வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்திகளை… அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கப்படும் பொழுது அது பாதுகாப்பாக வரும்.
1.அந்த மகரிஷியின் உணர்வுகளைப் புருவ மத்தியில் நம் உயிருடன் இணைக்கப் பழக வேண்டும்.
2.அங்கே உருவாக்கும் திறனாக அது அமையும்… அது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்.
3.அருள் ஒளியின் உணர்வை அணுக்களாக நமக்குள் பெருக்கினால் அது நம்மைக் காக்கின்றது.

வேதனையான உணர்வை நுகர்ந்து விட்டாலோ தீமையின் விளைவாகவே நம்மை மாற்றிவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருள் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிப் பெருக்கிக் கொண்டு பெரிய தத்துவ ஞானியாக வளர வேண்டும். எல்லோரையும் காத்திடும் சக்திகளாக நாம் வரவேண்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குள் இந்த உணர்வைப் பதிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால் நான் படிக்காதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். படித்துக் கொண்டிருப்பவர்கள் ஆழமாகப் பதிவாக்கி இந்த ஆற்றலை நீங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் பார்வை இருளை அகற்றும் உயர்ந்த சக்தியாக வளரட்டும்.
1.அருள் ஞானத்தைப் பெறும் கருவின் தன்மை உருவாக்க வேண்டும்.
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அரசாங்க நிர்வாகத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் பெற வேண்டும். அவர்கள் மன பலம் பெற வேண்டும்.
1.மக்களுக்கு நல் உணர்வு காட்டும் அந்தச் சக்தி
2.அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
3.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி இந்த அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.

அப்பொழுது நம்முடைய எண்ணம் அவர்களுக்கு நல் வழி காட்டவும் சகோதர உணர்வுடன் வளரவும் இது உதவும். இதைப் போல மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் “ஓர் குடும்பம்…!” என்று நாம் செயல்படுத்த வேண்டும்.

மனித உடலுக்குள் நல்ல குணங்களும் உண்டு கெட்ட குணங்களும் உண்டு. இருந்தாலும் உயர்ந்த உணர்வு கொண்டு தியானிக்கும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்த்திட இது உதவும்.

ஆகவே அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற அந்த ஒருக்கிணைந்த நிலைகளில் இணைந்திடும் போது
1.நமது அரசே உலகிற்கு எடுத்து காட்டும் அரசாகவும்
2.அதன் கீழ் வாழும் மக்கள் நாம் உயர்ந்தவர்களாகவும் இருக்க முடியும்.

ஏனென்றால் விஞ்ஞான முறையால் மத பேதத்தாலும் இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் இன்று உலகம் அழிந்திடும்… மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் இத்தருணத்தில்
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி
2.நாம் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் இந்த முறைப்படி நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலையும்
3.ஆட்சி புரிந்து கொண்டு இருக்கும் நமது அரசும் வளமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணுங்கள்.
4.இப்படி ஒருக்கிணைந்தால் கட்சி பேதமும் வராது… இன பேதங்களும் வராது… மத பேதங்களும் வராது…!

ஏனென்றால் நாம் அனைவரும் ஆட்சி சீரானதாக அமைக்க வேண்டும் என்று எண்ணி அந்த ஆட்சி சீராக அமைந்தால் “யாருக்கும் தொல்லை இல்லை…!”

அப்படி எண்ணாது என்னுடைய வழியில்… “நான் உயர்ந்து இருக்க வேண்டும்…!” என்று எண்ணி விட்டால் அடுத்து தொல்லைகளே வருகிறது. ஆகவே இந்த எண்ணங்கள் நமக்குள் வளராதபடி ஞானிகள் காட்டிய அருள் உணர்வு கொண்டு அரசை ஒத்தே நாம் வாழ வேண்டும்.

நமது சக்தி எல்லாம் ஒருக்கிணைந்து ஒன்றாகச் சேர்ந்து நம்முடைய ஓட்டைப் பெற்றுத்தான் ஆட்சிக்குச் செல்கிறார்கள். ஓட்டு அதிகமாக வாங்கி வென்று அங்கே சென்றாலும் அவர்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னால் “நம்மைக் காக்கும் உணர்வுகள் அவர்களுக்குள் வளர்கின்றது…!” பின் நாம் இந்த எண்ணங்கள் பகைமை இல்லாத நிலைகள் வளர்கின்றது.

இது போன்ற நிலைகளை நாம் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்து…
1.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும்.
2.நமது நாட்டு மக்கள் அனைவரும் மத பேதம் இன்றி இன பேதம் இன்றி ஒருக்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தியால் வாழ வேண்டும்.
3.ஆட்சி புரியும் அந்த ஆட்சி நிர்வாகிகள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.தலையாயக் கடமையாக இது ஒவ்வொரு நாளும் நாம் எண்ண வேண்டும்.

மனித உடலுக்குள் எப்படி நல்ல குணமும் கெட்ட குணமும் இருப்பது போன்றே நம் நாட்டுக்குள்ளும் இருக்கும் அனைவரும் (நல்லவராக இருந்தாலும் சரி கெட்டவராக இருந்தாலும் சரி) ஒருக்கிணைந்தால் தான் இந்த நாடும் நலம் பெறும். மக்களும் ஒருக்கிணைந்து வாழ்வோம்.

ஆகவே தீமையை விளைவிக்கும் சக்திகளிலிருந்தும் மக்களைக் கலக்கமுறச் செய்யும் தவறான செயல் கொண்ட இந்த உணர்வுகளிலிருந்தும் அனைவரையும் காத்திடும் சக்தியாக
1.நாட்டில் பிறந்த அனைத்து மக்களும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்களை அறியாது தவறு செய்யும் நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
3.மக்கள் பேரானந்த பெருநிலைகள் பெற வேண்டும்
4.மனிதனாகப் பிறந்த முழுமையின் உணர்வுகள் பெற வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள்.

கட்சி பேதம் இல்லாத மத பேதம் இல்லாத இன பேதமில்லாத மொழி பேதமில்லாத அரசியல் பேதமில்லாத உலகைச் சிருஷ்டிக்க “நாம் எண்ணும் எண்ணமே தான்…” அத்தகைய உலகைச் சிருஷ்டிக்கின்றது.

மத பேதத்தால் போர்கள் நடக்கின்றது. கட்சி பேதத்தால் உண்மையினுடைய நிலைகள் அறியாது சீராக செயல்படும் தன்மைகள் காலத்தால் உலக நிலைகளில் இருந்து இன்று மறைந்து கொண்டு வருகிறது.

இதைப் போன்ற நிலைகளை நாம் வாழும் நாட்டிலே விளையாது
1.கட்சி என்ற பேரை அகற்றி விட்டு
2.இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சியின் நிலைகள் சீராக வர வேண்டும் என்று ஒருக்கிணைந்தால் “எல்லோரும் நல்லவரே…!”
4.எல்லோரும் நல்ல ஆட்சியை நிச்சயம் பெற முடியும்…!

ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தின் மேல் நாம் குறைகளை எண்ணி வளர்த்துக் கொண்டேயிருந்தால்
1.அவர்கள் எதைச் செய்தாலும் நாம் குறைகளைக் கூறி கொண்டே தான் இருப்போமே தவிர
2.குறையை நிவர்த்திக்கும் எண்ணமே நமக்குள் வராது.
3.நாம் குறையைச் சொல்லி விட்டு நாமும் குறையைச் செய்து கொண்டு இருப்போம்.

ஆகையால் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற சொன்ன நிலைகளில் நமது நாட்டில் ஆட்சி புரியும் அந்த நிலைகளுக்கு
1.மகரிஷியின் அருள் சக்தி படர்ந்து
2.நாடு சீராக வளர்ச்சி பெற வேண்டும் என்று நாம் அனைவரும் ஒருக்கிணைவோம்.
3.யார் ஆட்சிக்கு வந்தாலும் அது நல்ல ஆட்சியாக அமைய வேண்டும் என்று பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்…!

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்

 

மற்ற சூரியக் குடும்பத்திலும் நம்மைப் போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்கள்.
1.நம்மைக் காட்டிலும் வளர்ச்சி இல்லாத மனிதர்களும் உண்டு… வளர்ச்சி அடைந்தவர்களும் உண்டு.
2.இங்கே நமக்கு முடி உண்டு… முடி இல்லாது மொட்டைத் தலையாக உள்ளவர்களும் சூரியக் குடும்பங்களில் உண்டு.

நம் சூரியக் குடும்பத்தில் ஒரு பூமி இருக்கிறது என்றால் இரண்டு பூமி இருக்கக்கூடிய குடும்பங்களும் உண்டு. ஒன்று வளர்ச்சி உள்ளதாகவும் உண்டு… சிலது வளர்ச்சி இல்லாததும் உண்டு. இரட்டைக் குழந்தை என்று சொல்கிறோம் அல்லவா அது போல…!

இதையெல்லாம் விரிவாக்கமாக குருநாதர் ஒரு நாள் காட்டுகின்றார்.

சூரியக் குடும்பத்திற்குள் எல்லா இடத்திற்கும் பயணம் செய்வது வருடக் கணக்காகும் என்று சொல்கின்றார்கள். அகண்ட நிலையில் 2000 சூரியக் குடும்பத்திற்கும் போக வேண்டுமென்றால் எப்படி இருக்கும்…?

2000 சூரியக் குடும்பம் என்பது அகண்ட அண்டமாக இருக்கிறது, இதைக் காட்டிலும் எத்தனையோ அண்டங்கள் இருக்கின்றது.

அதனுடைய விரிவடைந்த நிலைகளை நீங்கள் பார்க்கப் போனால் மனிதனுக்கு ஆயுள் பத்தாது. ஆயுள் பத்தாது என்று மட்டுமல்ல… போகவும் முடியாது.
1.ஆனால் போக வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய வழியில்
2.இந்த அருள் உணர்வுகளைப் பெற்றால் அதுபாட்டுக்குப் போய்க் கொண்டே இருக்கும்.

வான்வெளியில் நட்சத்திரங்களாக நம் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் 2000 சூரியக் குடும்பத்தின் ஈர்ப்பில் உள்ளது தான்.

நம் சூரியனைக் காட்டிலும் வலுவடைந்த பெரிய அளவில் உள்ள சூரியனும் சில பிரபஞ்சத்தில் இருக்கின்றது. ஒரே அளவாக இல்லை.

நீங்கள் ஒரு சமயம் இதையெல்லாம் பார்க்க நேர்ந்தால்
1.இரவிலே படுத்திருக்கும் பொழுது உங்களை மேலே அழைத்துச் செல்லும்.
2.எந்த உணர்வு பதிவானதோ ஆன்மாவிலே கலக்கும். பறப்பது போல் இருக்கும்.

ஒரு சிலர் பயந்து போய் எங்கேயோ போய் விடுவோமோ என்று எண்ணிப் பிடித்துக் கொண்டவர்களும் உண்டு. இதெல்லாம் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் இயக்கப்படும் போது
1.உங்கள் ஆன்மா அதனுடன் தொடர்பு கொண்டு வட்டமிடும்.
2.அதனுடைய உணர்வுகள் அறிவாக இங்கே உங்களுக்குள் வளரும்.
3.ஒரு விழுது பாய்ந்து தான் தாவர இனங்களுக்குள் வளர்ச்சி அடைகிறது…
4.அது போல் அகண்ட அண்ட்த்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்

நீங்கள் இரவிலே கனவு காண்கிறீர்கள் என்றாலும் மற்ற மனிதர்கள் உடலிலிருந்து வரக்கூடியது… மற்றவர் சொல்லும் பொழுது அதைக் கேட்டிருந்தால் இரவில் உயிரிலே படும்.

இந்த உணர்வு அங்கே அழைத்துச் செல்லும். எங்கேயோ இருக்கின்ற மாதிரி இருக்கும்… பள்ளத்திலேயோ மேட்டிலேயோ மலை மீதோ எங்கெங்கோ செல்வதாகத் தெரியும்.

அந்தந்த பகுதியில் எந்தெந்த மனிதனுடைய உணர்வு விளைந்து அந்த நினைவாற்றல் இருந்ததோ அப்படி இயக்கப்பட்டு கனவுகளாக வருவதும் உண்டு.

இது எப்படியோ அப்படித்தான்…
1.அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையப்படும் போது
2.அது உங்களை அங்கே அவர்கள் வாழும் எல்லைகளுக்கு அழைத்துச் செல்லும்…!

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

 

“அருட்பெரும் ஜோதி நீ… தனிப்பெரும் கருணை நீ…” என்று உயிருடன் ஒன்றினார் இராமலிங்க அடிகள். அருள் ஞானம் பெற வேண்டும் என்று விரும்பிய ஆன்மா பல அற்புதங்களைச் செய்கிறது… அவருக்கே தெரியாமல் தான் இயங்குகிறது. அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது ஒளியாகின்றது.

1.”அன்பே சிவம்…” என்ற அரவணைக்கும் உணர்வுகள் எனக்குள் அன்பாகி உடலில் சிவமாக வேண்டும்.
2.எல்லாவற்றையும் அரவணைத்துக் கொண்டால் அந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை
3.தனக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மை ஒளியாக மாறும்.

அது தான் அருட்பெருஞ்ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ.

பிறர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சந்தோஷத்தை எனக்குள் உருவாக்கி விட்டால் இருள் இங்கே வருமோ…? ஆக… இருண்ட நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்ற நிலையைத் தான் அவர் உணர்த்துகின்றார்.

அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ. எண்ணியதைத் தான் உருவாக்குகின்றாய் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! யார்…? நம் உயிர் தான்.

பல விதமான உணர்வு அமைந்துள்ள கோட்டை இது. வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்துத் தான் இந்த உடல் உருவானது… கந்தக்கோட்டம்.
2.உயிருடன் எண்ணப்படும் பொழுது கூர்மையின் நிலைகளில் அதை உணர்த்துகின்றது.
3.அருட்பெரும் ஜோதி நீ தனி பெரும் கருணை அங்கே அமர்ந்து துடிப்பாகி உயிரின் துடிப்பாகி
4.கூர்மையாக உணர்வின் தன்மை அறியச் செய்து ஒவ்வொன்றையும் ஒளியாக எனக்குள் உணர்த்துகின்றாய்
5.அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய் என்றார்.

உயிர் தான் அங்கே இருந்து இவ்வாறு செயலாக்குகின்றது.

இராமலிங்க அடிகள் உயிருடன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக ஜோதியாக… விண்ணிலே இருக்கின்றார். உடல் பற்றை அவர் வைக்கவில்லை. இந்த உடலுடன் வந்தது உடலுடனே போகட்டும் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி அவர் விண் சென்று விட்டார்.

தனக்குள் தீமை வராது தடுக்கும் சேனாதிபதி… ஆறாவது அறிவு கார்த்திகேயா. பல கோடிச் சரீரங்களில் தீமைகளை உணர்ந்து உணர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.தீமையிலிருந்து விடுபடச் செய்து அனைத்தையும் அறிந்திடும் அறிவாக மனித உடலில் உள்ளது.
2.அது தான் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…! எப்பொழுதுமே ஜோதியாக இருக்கின்றாய் தனிப்பெரும் கருணையாக இருந்து என்னை இயக்குகின்றாய். ஆக எண்ணியதைத் தான் அது உருவாக்குகின்றது.

1.யாரிடமும் நான் யாசிக்கக் கூடாது… யாருக்கும் இல்லை என்றும் சொல்லக்கூடாது,
2.அருள் தாகத்துடன் வருபவருக்கு அந்த அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும்
3.இருளை அகற்ற வேண்டும் என்பது தான் அவருடைய தத்துவம்…!

யாம் இப்பொழுது உங்களுக்குக் கொடுப்பதெல்லாம் அந்த அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான்…! ஏங்கி வரக்கூடியவர்களுக்கு அந்த அணுக்களுக்கு அந்த ஞானத்தை ஊட்டுகின்றோம். ஏங்கி வருவோர் தான் இங்கே வருவார்கள்.

பசியைத் தீர்க்கும் போது அருள் ஒளியாக அங்கே வளர்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்காக…” இந்த உணர்வுகளை உங்களுக்குப் போதிப்பது.
1.மற்ற எண்ணங்களைத் திருப்பாதபடி மற்ற உணர்வுகளை எல்லாம் ஒடுங்கச் செய்து சொர்க்கலோகத்திற்கே அழைத்துச் செல்வது.
2.மற்ற உணர்வை மறக்கச் செய்வதற்குத் தான் அப்படிப் பேசுவது.

எனக்குள்ளும் அந்த அருள் வளர்கின்றது… இந்த உணர்வை நீங்கள் கேட்கப்படும் பொழுது அருளானந்தம் உங்களுக்குக் கிடைக்கிறது. தீமையிலிருந்து நீங்கள் நிச்சயம் விடுபடுகின்றீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாராவது இருவர் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் மற்றொருவரைக் கோபமாக ஆத்திரமாகத் தாக்குகிறார்… தாக்கிப் பேசுகின்றார்…! என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது நாம் கண் கொண்டு அந்த இருவரையுமே பார்க்கின்றோம். தாக்கிப் பேசும் அந்தக் கோப உணர்வுகளும் அந்தத் தாக்கிப் பேசும் பேச்சைக் கேட்டுணந்தோர் வேதனைப்படும் இந்த இரண்டு உணர்வலைகளும் வெளிப்படுகின்றது.

அவர்கள் இருவரையும் நாம் பார்க்கப்படும் போது
1.வேதனை கலந்த உணர்வும்
2.கோபம் கலந்த அந்த உணர்வும் இந்த இரண்டையும் நாம் சுவாசிக்க நேர்கின்றது.

அவ்வாறு சுவாசித்த இந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டதும்
1.கோபப்படுவோர் யார்…? என்று தெரிய முடிகின்றது.
2.வேதனைப்படுவோரையும் யார்…? என்று அறிந்து கொள்ளச் செய்கின்றது நமது உயிர்.

கண் கொண்டு பார்த்தாலும் “உயிருடன் ஒன்றிய உணர்வுகள்… அது இயக்கிக் காட்டும் போது தான்…!” நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு உடலிலே விளைந்த இந்தக் காரமான உணர்வு அது யார் வேகமாகக் கோபத்துடன் பேசுகின்றாரோ இந்த உணர்வுகள் அடுத்தவர் உடலிலே பட்டு அவர் உடலிலே வேதனையாக மாறுகின்றது.

இந்த இரண்டையும் நாம் சுவாசித்தோம் என்றால் அந்த இரண்டு உணர்வுகளும் நமக்குள் உமிழ் நீராக மாறி விடுகின்றது. அது நம் ஆகாரத்துடன் கலந்து கோபப்படும்… வேதனைப்படும் அந்த உணர்வின் சத்தாக இரத்தங்களில் மாறுகின்றது.

அதே சமயம் நாம் கண் கொண்டு பார்த்த இந்த உணர்வுகள் நம் எலும்புக்குள் அமைந்திருக்கும் ஊனிலே பதிவாகின்றது. நாம் கண் கொண்டு பார்க்கும் உணர்வுகளை எல்லாம் எலும்புக்குள் இருக்கும் ஊன் தான் பதிவு செய்து கொள்கின்றது.

யாரை நாம் உற்றுப் பார்த்தோமோ அவர் உடலிலே இருந்து வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து அலைகளாகப் பரவி வருவதை கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
1.அந்த எண்ண அலைகள் நம் ஆன்மாவில் வரும்போது தான் அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
2.சுவாசிக்கும் பொழுதெல்லாம் அந்த நினைவலைகள் நமக்குள் மீண்டும் மீண்டும் வருகின்றது.

ஆக இவ்வாறு எலும்புக்குள் ஊன்றிய பின் நாம் வேடிக்கை பார்த்த உணர்வுகள் நம் சுவாசித்தன் ஈர்ப்புக்குள் வந்து நம் உடலிலே அது விளையத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக நாம் ஒரு பருத்தி விதையை நிலத்தில் ஊன்றினோம் என்றால் அந்த வித்துக்குள் எந்தச் சத்து இருக்கின்றதோ அதைக் காற்றிலிருந்து கவர்ந்து செடியாக விளைந்து மீண்டும் பருத்தியின் வித்தை வித்தாகவும் பருத்தியாகவும் அது உருவாக்குகின்றது.

இதைப் போல ஒரு சோள வித்தை விதைத்தால் சோளத்தின் தன்மை கொண்டு அது சோளத் தட்டையாக விளைந்து மீண்டும் சோள வித்தாகவும் சோளமாகவும் விளைகின்றது.

இதைப் போன்று தான் ஒருவர் கோபமாகப் பேசுகிறார் என்றால் அது காரம். தனிக் காரத்தைச் சாப்பிட்டால் எரிச்சலடைவது போல் கோபமாகப் பேசினால் நமக்கு அது எரிச்சலாகின்றது.

வேதனைப்படுகிறார் என்றால் அது நஞ்சு கொண்டது. ஒரு நஞ்சான பொருளை உட்கொண்டால் எப்படி மயக்கமாகின்றதோ அது போல் வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தாலே நமக்கு மயக்கம் ஆகி சிந்தனைகள் குறைகின்றது.

ஒரு நிலத்தில் – நிலம் முழுவதற்கும் பல விதமான வித்துக்களைப் போட்டால் அதனதன் வித்தின் சத்தைக் கவர்ந்து அது அது முளைப்பது போல
1.நமது உடலுக்குள் நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் பதிவாகி
2.வித்துக்களாக ஆன பின் அந்தந்தக் குணமாக (வினையாக) முளைத்து
3.தன் இனமான உணர்வுகளைக் காற்றிலிருந்து கவர்ந்து வளரத் தொடங்குகிறது.

வேடிக்கையாக நாம் பார்த்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறி அதை நாம் சுவாசிக்கும் போது உயிரிலே இணைக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக “ஓ…!” என்று அது ஜீவன் பெறுகின்றது.

சுவாசித்த அந்த உணர்வின் சத்து நம் இரத்தத்துடன் கலந்து ஒரு செடி வளர்வது போல இந்த உணர்வுகள் அனைத்தும் ஜீவ அணுக்களாக விளைகின்றது.

அப்படி அந்த உணர்வுகள் இரத்தத்தில் விளைந்த பின் கை கால் குடைச்சல்… எரிச்சல்… அசேர்க்கை போன்ற நிலைகள் ஆகி நோயாக உருவாகின்றது.

நோயாக ஆனது எந்த உறுப்புகளின் பாகத் தொடர்புகளில் இது இணைந்ததோ அங்கே அந்தக் கார உணர்ச்சியை தூண்டும் நிலைகளில் குடல் புண்ணோ… இருதயங்களில் வலியோ… அல்லது இரத்த நாளங்களில் குடைச்சலோ இவ்வாறு பெருக்கத் தொடங்கும்.

1.அப்பொழுது இந்தக் கார உணர்ச்சிகள் தாங்காது நமது சிறு மூளையின் பாகங்கள் அது புடைத்து நிற்கும்.
2.கை கால் அங்கங்களைச் சுருக்கும்.
3,இதனால் அடிக்கடி நமக்குள் கோபங்களும் எரிச்சலும் வரத் தொடங்குகின்றது.

இந்த எரிச்சல் தாங்காதபடி வேதனை அதிகமாகி மேல் வலியாகி நரம்புகளிலும் இணைந்து புண்ணாகவோ இரணங்களாகவோ மாறி விடுகின்றது.

அப்படி நரம்புகளிலே ஆன பின் அதனின் தொடர் கொண்ட நிலையில் அந்த நுண்ணிய உணர்வலைகள் சிறு மூளையிலே தாக்கப்படுகின்றது.

விஷத்தால் தாக்கப்பட்டால் நாம் எப்படிச் செயலிழந்து விடுகின்றோமோ வேதனை என்ற விஷத்தின் தன்மை மூளையில் உள்ள நுண்ணிய பாகங்களில் பட்ட பின் நம் நரம்பியல்கள் உணர்ச்சியற்ற நிலை ஆகி உடலைச் சீராக இயக்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

உடல்களிலே உணர்ச்சி அற்ற நிலையும் நாம் உணர்வு இழந்ந நிலையில் அதாவது நரம்புகளில் உள்ள அனைத்தும் சுருங்கப்பட்டு முடக்கு வாதங்கள் போன்று வந்துவிடுகின்றது. பிரசர் (PRESSURE) வந்தவர்களை எல்லாம் பார்த்தால் கை கால் அங்கங்களை எல்லாம் சரியாக இயக்கவிடாதபடி அப்படியே குறுக்கிவிடும்.

ஏனென்றால் சிறு மூலையில் தாக்கபட்டால் அதனின் செயலற்ற நிலைகள் வரும்போது கை கால் அங்கங்கள் அனைத்தும் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. அடுத்து
1.அதே உணர்வுகள் பித்த சுரபிக்குள் வந்த பின்
2.பித்தம் அதிகமாகி விட்டால் தலை சுற்றி எப்படிக் கீழே விழுகின்றோமோ இதைப் போல
3.ஒவ்வொரு உணர்வும் செயல் அற்றதாகி நம் உடலே வீழ்ச்சி அடைந்தது போல் ஆகின்றது.

அதே சமயத்தில் சுவாச உறுப்புகளுக்குள் இத்தகைய கோபமும் வேதனையும் சென்று விட்டால் அந்த உறுப்பைப் பலவீனம் ஆக்கி விடுகிறது. அதனால் சரியாகச் சுவாசம் எடுக்க முடியாத நிலைகளும் ஆகின்றது.

வேதனையான உணர்வுகளை நாம் சுவாசிக்கச் சுவாசிக்க நம்முடைய சுவாச நாளங்களில் உள்ள அனைத்தும் பலவீனமாகி அதனில் ஏற்படும் உராய்வின் தன்மை சரியாக இயங்காதபடி ஆஸ்மா மூச்சுத் திணறல் போன்ற நோய்களும் உருவாகி விடுகின்றது.

இவ்வாறு ஆன நிலையில் நாம் எண்ணும் எண்ணங்கள் அதாவது கூர்ந்து சிந்திக்கும் நிலையில் கண்களிலே கொதிப்படைந்த உணர்வும் வேதனையான உணர்வும் கலக்கப்படும் போது
1.ஒரு பொருளை நாம் காண்பது என்பது
2.அந்தப் பொருளின் தெளிவான நிலைகளை அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைத்து விடுகின்றது.

இருந்தாலும் அந்தப் பொருளை நாம் சிறிது நேரம் காண்போம் என்று முயற்சித்தாலும் முடியாத நிலையில் சோர்வடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால் கண்ணில் உள்ள கரு விழியால் அந்த உணர்வுகளை நாம் கவர்ந்திருந்தாலும்
1.அதிலே எடுத்த அமில சக்தி உடல் முழுவதும் ஊடுருவச் செய்து
2.அறியச் செய்யும் நரம்புகளையும் இரதத நாளங்களையும் மங்கச் செய்து விடுகின்றது… செயலற்றதாக்கி விடுகின்றது.

ஆக கரு விழிகளிலே படும் பட உணர்வுகளை அது தெளியாக எடுத்துக் காட்டாதபடி மங்கும் நிலை அடைந்து விடுகிறது. நம் பார்வையில் படும் பொருளின் ரூபத்தைக் கவர்ந்து கரு விழிகளில் உள்ளே உள்ள விழித் திரையைப் பலவீனம் அடையச் செய்கின்றது.

நாம் பிறரைப் பார்த்தாலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையும் உருவாகி விடுகின்றது. இது சிறுகச் சிறுக விளைந்து இதனின் பலனாக
1.நமக்குள் கோபமும் வேதனையும் வந்து
2.குடும்பத்தில் அவசர உணர்வுகள் உந்தப்படும் நிலைகளும்
3.குடும்பத்தை உற்று நோக்கினாலே நம்மை அறியாது கோபமும் வேதனையும் படச்செய்யும்.

இதைப் போன்ற உணர்வுகள் நம் ஆன்மாவாக வரும்போது
1.நமக்குள் இனம் புரியாத மனக் கலக்கங்களும்
2.கோபமும் வெறி கொண்ட உணர்வுகளும் செயல்படுத்திக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் அவ்வப்பொழுது சந்திக்கும் நிலைகள் கொண்டு நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் மாறுபட்ட நிலைகள் ஆகி அதனால் உடலிலே பல பிணிகளை ஏற்படுத்தும் நிலையே உருவாகி விடுகின்றது.

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு எதிர்நிலை ஆகும் போது கிட்னிக்கோ கண்ணுக்கோ கல்லீரலோ நுரையீரலோ இதைப் போன்ற நிலைகள் மாசுபடும் நிலைகள் வரும்போது அந்தந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகின்றது.

நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் தவறே செய்யவில்லை என்றாலும் இப்படி ஆகிவிடுகின்றது. இதை எல்லாம் மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்..?

எந்தத் தீமையைக் கண்டாலும் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உடனே கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று உயிருடன் ஒன்றி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
3.ஒரு ஐந்து நிமிடம் அருள் உணர்வுகளை உயிர் வழி சுவாசித்தால் நம் ஆன்மாவில் புகுந்த தீமைகள் அகற்றப்படுகின்றது.

அதற்குப் பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி சண்டையிட்டவர்கள் பெற வேண்டும் அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணினால்
1.அவர்களைப் பற்றிய நினைவலைகள் நமக்கு அடுத்து வராது.
2.அவர்களை நினைத்தாலும் நாம் தியானித்தது தான் நினைவுக்கு வரும்.
3.நோயாக நமக்குள் மாற்றாது… மாறாது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் வருடா வருடம் நினைவு நாள் வைத்து வணங்குகிறோம். ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் அதைச் செய்கின்றோமா…?

நினைவு நாள் அன்றைக்கு அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தோ மற்ற அவர்களுக்கு விருப்பமானவற்றைப் படைத்து வைத்தோ அவர்களைக் கூப்பிடுகின்றோம்.

அப்படிக் கூப்பிட்டுக் கவர்ந்தோம் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்கள் நம் உடலில் தான் வந்து சேரும்.
2.அவர்கள் கடைசிக் காலத்தில் அவர்கள் உடலில் அனுபவித்த நோய்களும் நமக்குள் வந்து சேரும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அவர் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று ஏகோபித்த நிலையில் விண்ணிலே உந்தித் தள்ள வேண்டும்.

இப்படி எல்லோரும் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் உந்தித் தள்ளினால் அவர் உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கு கரைக்கப்படுகின்றது. அவர் அங்கே ஒளி உடல் பெறுகின்றார். இது தான் ஞானிகள் காட்டிய வழி.

1.அவர் ஆன்மா ஒளி உடல் பெற்று சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து வந்தாலும்
2.வருடா வருடம் நாம் நினைவு நாள் கொண்டாடினாலும் இதே முறைப்படித்தான் செய்ய வேண்டும்.

ஏன்…?

அவருடன் நாம் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ வகையான வேதனைகள் வெறுப்புகள் இருக்கும். அதே சமயத்தில் கடைசி நிமிடத்தில் அவர் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நேரத்திலும் கடும் விஷத் தன்மையாகி மடிந்தபின்தான் அந்த ஆன்மா வெளியேருகின்றது.
1.இதை எல்லாம் நமக்குள் அவர் உணர்வாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம் அல்லவா…!
2.அவருடைய நினைவு நாள் என்று அவரை எண்ணி ஏங்கும் பொழுது
3.அவரின் உணர்வுகள் நம் உடலுக்குள் இருப்பதற்கு மீண்டும் ஜீவன் கிடைத்து
4.அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கும்.

பின் அவர் எப்படிச் சிரமப்பட்டு நோய்வாய்ப்பட்டு உடலை விட்டு வேதனையுடன் பிரிந்தாரோ அதே நிலை தான் நமக்கும் ஏற்படும்

மாறாக நாம் நினைவு நாள் அன்று கூட்டுத் தியானங்களை அமைத்து
1.அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த அந்த உணர்வை ஏங்கிப் பெறும் போது
2.அது நம் இரத்த நாளங்களில் கலந்து
3.நம் உடலில் அவர் உடலில் சேர்த்த தீய வினைகள் நமக்குள் வளராது தடுக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள அவர்கள் உணர்வுடன் பழகிய அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் இருந்தால்
1அந்தப் பேரருள் என்ற அந்த ஒளியான உணர்வினை
2.நம் உடலுக்குள் இருக்கும் அவரின் உணர்வு அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றோம்.

திரும்பச் சொல்கிறோம் என்று எண்ண வேண்டாம்…!

முதலிலே… அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் அவர்கள் ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இந்த நஞ்சின் உணர்வைக் கரைத்து விட்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக உருவாக்கி விடுகின்றோம். நாம் தியானித்த உணர்வின் வழிப்படி சப்தரிஷி மண்டலத்துடன் சப்தரிஷி மண்டலங்களாக ஆகிவிடுகின்றனர்.

பின் அவர்களும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வருவதை உணவாக உட்கொண்டு அந்த உணர்வினை அவர்களுக்குள் வளர்த்து அழியாத ஒளி உடலாக அவர்கள் வாழ்ந்து வரத் தொடங்குகின்றர்கள்.

அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வினை நாம் குரு காட்டிய வழியில் நாம் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கும் போது அவர் ஒளியின் உடல் பெற்ற அந்த உணர்வுகளை நுகர்கின்றோம்.

அவருடன் வாழ்ந்த காலங்களில் வெறுப்போ வேதனையோ சலிப்போ நோயோ இதைப் போன்ற உணர்வுகள் அவருடைய உணர்வு நமக்குள் இருப்பதனால் அந்தப் பேரருள் என்ற ஒளிச் சரீரம் பெற்ற அவருடைய உணர்வை நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது தீமைகளை நீக்கிடும் உணர்வின் உணர்வாக நாம் பெறுகின்றோம்.
1.அது தான் நினைவு நாள் என்பது.
2.நினைவு நாள் அவருக்காக அல்ல.
3.நமக்குள் இருக்கும் அவர் உணர்வின் அணுக்கள் ஒளியாக மாற வேண்டும்
4.சப்தரிஷி மண்டலங்களில் அவர் ஒளியாக வாழ்வது போல் நாமும் பேரொளியாக வேண்டும்
5.இந்த உடலுக்குப் பின் நாமும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்பதற்குத்தான்.

ஆகவே உடல் பெறும் உணர்வுகளை அது உணவாகக் கொடுக்கும் போது நோய்களாக வருகின்றது. ஒளியாக மாற்றிய உணர்வுகளை உணவாகக் கொடுக்கும் பொழுது பேரொளியாகின்றது. அழியாத நிலைகள் அவர்களும் பெறுகின்றார்கள். நாமும் பெறுகின்றோம்.

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

 

தியானத்தின் சக்தி கொண்டு இந்த உடலை நலமாக்கி நலமாக்கி நாம் வாழ்ந்து வந்தாலும் “எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

உடல் நலத்திற்காக நாம் எண்ணினாலும்
1.என்றும் நீடித்த ஆயுளாக இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.உடல் வேதனைகளை நீக்கிவிட்டு சிறிது காலமாவது மகிழ்ந்து வாழ முடியும்.
3.அந்தக் குறுகிய காலத்திலே உயர்ந்த சக்தியினைப் பெற்று வெளிவரும் பொழுது
4.எதைப் பற்றுடன் பற்றி நாம் அந்தச் சக்தியை எடுத்து வளர்த்தோமோ அங்கே செல்ல முடியும்.

அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால்… தன் வாழ்க்கைக்கு இந்த உடலுக்கு யார் உதவி செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தினால் அந்த உடலுக்குள் தான் ஆன்மா செல்லும்.

சொத்தைச் சம்பாதித்து வைத்தேன்… என் பிள்ளை எப்படிச் சமாளிக்க போகின்றானோ…? என்று தன் பையன் மீது குறை கூறி எண்ணத்தைச் செலுத்தினால் அங்கே தான் செல்லும்.

இப்படிப் பல நிலைகள் கொண்டு மனிதனின் ஈர்ப்புக்குள் சிக்கி விடுகிறது. அங்கே சென்றாலும் நோயைத்தான் உருவாக்குவோம்… அடுத்து மனிதனல்லாத உருவை உயிர் உருவாக்கும்.

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.

விஷத்தின் தன்மை எதிலே ஊடுருகின்றதோ அதன் நிலையாகத் தான் அது மாற்றும். ஆனால்
1.விஷத்தை வென்றவன் அருள் ஞானி.
2.அந்த உணர்வினை எடுத்து உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் பாய்ச்சப்படும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.

பாம்பினங்கள் தனக்குள் இருக்கும் விஷத்தினை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதில் உள்ள விஷத்தினையும் தனக்குள் எடுத்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ… இதைப் போலத் தான் எத்தகைய நஞ்சையும் அடக்க வல்லமை பெற்றவன்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவன் சப்தரிஷி.

“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று நம் எண்ணத்தைக் கூட்ட வேண்டும்.

எத்தகைய துயரைக் கேட்டறிந்தாலும் சலிப்படைந்தாலும் சங்கடப்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் அங்கிருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று நாம் சொல்லி விட வேண்டும்.

நாம் சொல்வதை யார் எண்ணி எடுக்கின்றார்களோ அவர்களுடைய கஷ்டங்களும் நிச்சயம் நீங்குகின்றது. அப்போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க முடியும்.
1.உங்களுடைய வாக்கு அங்கே செயலாகும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ முடியும்… உணர்வுகள் ஒளியாக மாறுகிறது.

ஆனால் நாம் சொல்லியும் கேட்கவில்லையே என்று அவர்கள் உணர்வை நுகர்ந்து மனதை இருளச் செய்து விடக்கூடாது.
1.எப்படியும் அந்த அருள் உணர்வைப் பெறுவார்கள்…
2.வாழ்க்கையில் தெளிந்து செயல்படுவார்கள் என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆறாவது அறிவின் தன்மையில் மனிதன் என்ற நிலைகளில்
1.நமக்குள் தீமையின் நிலைகள் பொங்கிடாது
2.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து மகாமகமாக…
3.எல்லா இடத்திலும் பிணிகளை நீக்கும் அருள் ஞானியின் உணர்வைப் பொங்கச் செய்வதே “மகாமகம்…!” என்பது.

மாசி மாதம் தான் மகாமகத்தின் ஆற்றல் மிக்க சக்தியினைச் சாதாரண மக்களும் பெறும் வண்ணம் அருள் ஞானிகள் இதைக் கூட்டினார்.

மாசியில் தான் “உத்தராயணம்…” என்ற நிலைகளும் வருகின்றது. அதாவது
1.இந்த மனித வாழ்க்கையில் உடல் பெறும் நிலையை மாற்றிவிட்டு – திசையை மாற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று
3.அடிக்கடி நாம் தியானிப்பது தான் உண்மையான தியானம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று உங்களால் எத்தனை தடவை எண்ண முடியுமோ எண்ணுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துக் கொண்ட பின்
1.எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்,
2.எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும்,
3.எங்கள் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்,
3.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும்,
4.எங்கள் தொழில்கள் அனைத்தும் சீராக வேண்டும்,
5.எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்,
6.எங்களுக்குள் ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும்,
7.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் அமைதி பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள்.

இப்படி ஒவ்வொரு நாளும் செய்தால் மகிழ்ச்சி பெறும் நிலையாக “உத்தராணயம்…!” உங்கள் திசை மாறி அந்த மெய் ஞானி உணர்வுடன் செல்லத் தொடங்கும்.

நாம் இது வரையில் அறியாத நிலைகள் கொண்டு வளர்ந்து வந்திருந்தாலும்
1.இனிமேல் நமக்குள் தீமைகள் வளராது
2.மீண்டும் உடலுடன் உடல் பற்று கொண்டு புவியின் ஈர்ப்புக்குள் வராது
3.புவியைக் கடந்து சென்று உத்தராயணம் – ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக
4.நாம் அந்த மகரிஷியுடன் ஒன்றி வாழும் நிலையாக
5.என்றும் பதினாறு என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

முழுமையின் நிலையாக உத்தராணயம் என்ற நிலையை நாம் பெறுவோம் என்று இதை எல்லோரும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வயலைப் பன்படுத்தி நல்ல வித்தினை விதைத்து நீர் ஊற்றி அதற்கு வேண்டிய உரத்தை இட்டு வந்தால் அதனுடைய ராசிகளை நாம் பார்க்க முடிகின்றது.

மனிதனின் வாழ்கையில் நாம் கேட்டறிந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் பொறாமை கோபம் வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் தீய வினைகளாக நம்மை அறியாமலே வந்து சேர்ந்து விடுகிறது.

அந்தத் தீயவினைகளை (களைகளை) அகற்றிட ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பல முறை செலுத்துங்கள்.

அதிகாலையில் கண விழித்ததும் (சூரிய உதயம் ஆவதற்கு முன்) உங்களால் முடிந்த மட்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி வாருங்கள்.

இது உங்களுக்குள் கூடக் கூட உங்கள் வாழ்கையில் வந்த தீமைகளை அது அகற்றி விட்டுத் திசை மாறி ஞானியின் உணர்வு கொண்டு உத்தராயணம் என்ற நிலையில் செல்லும்.

இவ்வாறு நீங்கள் ஜெபித்து வந்தீர்கள் என்றால்
1.உங்களை அறியாது சேர்ந்த நோய்கள் போகும்,
2.உங்கள் அறியாது வந்த தீயவினைகள் மறையும்
3.உங்களை அறியாது உட்புகுந்த சாப வினைகள் நீங்கும்
4.உங்கள் அறியாது வந்த பூர்வ புண்ணியத்தால் அமைந்த தீமைகளும் அகலும்.

மெய் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக என்றுமே நாம் முழுமையின் நிலை அடைய முடியும்.