தினசரி உபதேசம்

குருநாதர் கொடுத்தது எக்கச்சக்கமாக எனக்குள் இருக்கின்றது… கொஞ்சம் தான் சொல்கின்றேன்

 

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரில் எண்ணிலடங்காதவைகளைப் பதிவு செய்கின்றார்கள். பதிவு செய்த பின் மீண்டும் இயக்கப்படும் பொழுது அனைத்தும் தெரிய வருகிறது.

இன்றைய நவீன நிலைகள் கொண்டு அதனுடைய இயக்கங்களில் தவறுகள் வந்தாலும் கூட “தன்னாலேயே அதைத் திருத்திக் கொள்ளும்படியாக அதில் வைத்திருக்கின்றார்கள்…”

அதே போன்று
1.அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் நாம் காலையிலிருந்து இரவு வரை
2.எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்… நமக்குள் சேமிக்கப்படுகின்றது.

கம்ப்யூட்டர்களில் பார்த்தோம் என்றால் பல கோடி நிலைகளைப் பதிவாக்கி அதை இயக்கும் வசதிகளையும் (CAPACITY) இன்றைய நவீன நிலைகள் கொண்டு உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அதே போன்று நமது மனித உடலில் எத்தனையோ விதமான ரெக்கார்டுகள் உண்டு.

அனுபவம் பெறுவதற்காக நான் காட்டிற்குள் சென்று மிருகங்களை எல்லாம் பார்த்தேன் என்றால்
1.அங்கே பெற்ற அனுபவங்களை எல்லாம் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகிறேன் என்றால்
2.நான் சென்ற இடமெல்லாம் இப்பொழுது நினைவலைகளில் வந்து (அது தெரிந்து தான்) தான் சொல்ல முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் ரோட்டிலே செல்கின்றீர்கள். யாராவது திட்டினார்கள் என்றால்… சண்டை போட்டு அவர்கள் மோசமாகத் திட்டியிருந்தார்கள் என்றால்… ஒருவருக்கொருவர் தாக்கியிருந்தால்… அதை ஒரு தரம் நாம் பதிவாக்கி விட்டோம் என்றால்
1.அந்த இடத்திற்குச் சென்ற பின் இருவர் சண்டையிட்டால்
2.அவருடைய நினைவலைகள் அங்கே தெரிய வரும்… உடனே தெரிந்து கொள்ளலாம்.

ஏனென்றால் நம் உடலில் இது போன்று கண் கருவிழி ருக்மணி பதிவாக்கி விடுகின்றது. மீண்டும் அந்த மனிதர்களை எண்ணும் பொழுது அது இயக்குகின்றது.

இதே போன்றுதான்
1.இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்காக குருநாதர் எண்ணிலடங்காத பதிவுகளைக் கொடுக்கின்றார்…
2.எக்கச்சக்கமாக எனக்குள் இருக்கின்றது.
3.கொஞ்சம் மட்டும் தான் உங்களிடம் சொல்லி வருகின்றேன்
4.அந்தந்தச் சமயத்திற்குத் தக்கவாறு.

காரணம்… ஒரு உடலில் விளைந்ததை அடுத்த உடலுக்குள் பாய்ச்சினால் அதன் நிலைக்கே மாற்றும்.

அது போல் தான் அகஸ்தியன் தான் கண்டறிந்த உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். இருவரும் ஒன்றாகிறார்கள்.

நம் பூமி துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றலை எவ்வாறு கவர்கிறது…? என்பதை உற்று நோக்குகின்றார்கள். அதிலிருந்து வரக்கூடிய சக்தியை நுகர்கின்றார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட சக்தியால் கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாகின்றது… உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாக்குகின்றார்கள்.
1.மின்னல்கள் வரும் பொழுது ஒளிக் கற்றைகளை இவர்கள் சுவாசிக்கின்றார்கள்
2.இரண்டு பேர் உடலிலும் ஒளியான அணுக்கள் உருவாகின்றது.

துருவப் பகுதியை எண்ணி வளர்த்துக் கொண்ட நிலையில் இரு உயிரான்மாக்களும் வெளி வரும் பொழுது எதைக் கூர்மையாக உற்று நோக்கினார்களோ அங்கே செல்கின்றார்கள். இரு உயிரும் ஒன்றாகிறது.

1.அகஸ்தியன் உடலில் இரண்டு நட்சத்திரத்தினுடைய சக்தி கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம்
2.அவன் மனைவி உடலில் அதே போன்று இரண்டு நட்சத்திரம் வேறு ஒரு ஆண் நட்சத்திரம் வேறு ஒரு பெண் நட்சத்திரம்
3.அவர்கள் இரு உயிரும் ஒன்றான நிலையில் “அந்த நான்கும் சேர்ந்து பிரம்மமாகின்றது…”
4.மின்னல் எப்படி ஆகின்றதோ… அதை உருவாக்கக்கூடிய சக்தி பெறுகின்றார்கள்.

அப்படியானது தான் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரம் நம் பூமியின் வடகிழக்குப் பகுதியில் துருவப் பகுதியின் ஈர்ப்புக்கு நேராக இருக்கின்றது. அதன் வழி தான் அதனுடைய சக்திகள் இங்கே உள்ளே வருகின்றது
1.அதை நுகர்ந்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்குத் தான்
2.இத்தனை உபதேசங்களையும் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரில் ரெக்கார்டு செய்து கொள்கின்றார்கள். தட்டி விட்ட பின் அதனுடைய இயல்புகளைத் தெரிந்து கொள்கின்றனர்.

மனிதர்களாக இருக்கும் நாமும் இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்றால் உற்று நோக்கி… அதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.
1.(கம்புயூட்டரில் பதிவானதைத் தட்டுவது போல்) சண்டையிட்டவர்களை மீண்டும் எண்ணியுடன் நமக்குக் கோபம் வருகிறது.
2.அந்த நேரத்தில் நம் நல்ல காரியங்களைக் கெடுக்கின்றது.

கோவிலுக்குச் சென்று வணங்குகின்றோம். எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அதைப் பதிவு செய்து கொள்கின்றோம். எப்படி…!
1.“என்னத்தைச் சாமி கும்பிட்டோம்…? ஒன்றும் நடக்கவில்லையே…!” என்று அதை எண்ணுகின்றோம்
2.அந்த ரெகார்டைத் தட்டியவுடன் சோர்வடைந்து… நல்லதையே எடுக்க முடியாது போய் விடுகின்றது

ஏனென்றால் எண்ணிய உணர்வுகளைத் தான் எலும்புகளில் (கம்ப்யூட்டர் போல்) ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்கிறது. இப்படி எண்ணிலடங்காத பதிவுகள் நமக்குள் உண்டு.

ஒன்று விஞ்ஞானம் அதை எல்லாம் நிரூபிக்கின்றது…!

அதே போன்று தான் சண்டை போடுவதையும் பதிவாக்குகின்றீர்கள்… குடும்பத்தில் வந்த கஷ்டங்களையும் பதிவாக்குகின்றீர்கள்,,, அந்தந்தப் பதிவை எண்ணும் பொழுது அதன் வழியே நடக்கிறது.

அதே சமயத்தில்… அத்தகைய கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்று நிலை வரும் போது…
1.“கஷ்டங்களை மறந்து…” அந்த மகரிஷிகளை அருள் சக்தி பெற வேண்டும் என்று உணர்வை எடுத்தால் அருளைப் பெருக்குகின்றோம்…
2.சிந்திக்கும் ஆற்றலையும் அது கொடுக்கின்றது. “சிரமங்களை மீட்டுத் தருகின்றது நம்முடைய எண்ணம்…”

நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

உதாரனமாக துணி எடுக்க ஜவுளி கடைக்குச் செல்ல வேண்டும் என்று போகும் போது அந்த நேரத்தில் குழந்தை வந்து அடம்பிடித்தால் என்ன நடக்கிறது…?

ஏன்டா… இப்படி வெளியே போகும்போது அடம்பிடிக்கின்றாய்…? என்று இந்த வெறுப்படைந்தால் போதும். கடைக்குச் சென்று சரியான துணியை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்…!

1.இந்தச் சங்கடம் தான் அங்கே வேலை செய்யும்… வெறுப்புணர்வு தான் முன்னாடி கண்களில் வரும்.
2.நல்ல துணியை எடுத்துப் போட்டாலும் “இது வேண்டாம்… இது வேண்டாம்…” என்று சொல்லிக் கொண்டிருப்போம்.
3.கடைசியில் வெறுப்பு அதிகமாகிச் “சடைத்துக் கொண்டு… சரி இதையாவது கொடுங்கள்…” என்று எடுத்து வருவோம்.

வீட்டில் மற்றவர்களோ சந்தோஷமாக இருப்பார்கள். துணியைக் காண்பிப்போம். “என்னங்க…? போயும் போயும் இந்தத் துணியைப் போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்களே…!” என்பார்கள்.

இல்லைங்க… இதுதான் நல்லது என்போம். நன்றாகப் பாருங்கள் என்பார்கள். பார்த்தாலும் அன்றைக்கு அது தெரியாது.

ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால்…
1.சனியன்…! போகும்போது குழந்தை குறுக்கே வந்து அடம்பிடித்தான். எத்தனையோ தொல்லை கொடுத்தான் என்று
2.மீண்டும் “சனியன்…” என்று தான் நாம் சொல்வோம்.

இந்த உணர்வுகள் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த வெறுப்பு வரும். இந்த உணர்வோடு அன்றைக்கு மற்ற காரியங்கள்… ஒரு சமையலையே செய்தாலும் (துணி எடுத்ததை எண்ணி) சனியன் என்று எண்ணிக் கொண்டு காயை அறுத்துக் கொண்டிருந்தால் போதும். அந்த உணர்வு என்ன செய்யும்…?

கையில் எடுத்து இப்படிப் பிடித்து அப்படி அறுப்பதற்குப் பதில் அது சிறிதளவு சாய்ந்தால் போதும் கையிலே அறுபட்டு விடும். என்ன கிரகமோ…? என்று சொல்வோம். இதைப் பார்க்கலாம்.

ஆக… கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். மனித வாழ்க்கையில் இயக்கப்படும் உணர்வின் இயக்கங்கள் தான்.

ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் வாழுகின்றோம்…? இன்றைய செயல் நாளைய சரீரம்.

ஆகவே
1.இது போன்ற தீமைகளை நீக்க அருள் ஞானிகள் உணர்வுகளை… உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான்
2.இந்த உபதேச வாயிலாக தொடர்ந்து “ரெக்கார்ட் செய்கின்றேன்…”
3.எந்த அளவிற்கு நீங்கள் இதைக் கூர்ந்து பதிவு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு…
4.அது திரும்ப எண்ணும் பொழுது “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”

குருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்றேன். அதை உங்களில் பதிவாக்குகின்றேன்… நீங்கள் இந்தப் பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

1.பையனோ குடும்பமோ தொழிலோ சரியில்லை என்றால் அதை ரெக்கார்ட் செய்கின்றீர்கள்.
2.எப்போது பார்த்தாலும் இப்படியே நடக்கின்றது என்றும் பதிவு செய்து கொள்கிறீர்கள்.

உதாரணமாக… மனைவி மீது கொஞ்சம் வெறுப்பு இருந்தால் அதைப் பதிவு செய்து விட்டால் போதும். “தண்ணீர் கொண்டு வா…” என்போம்.

அவர்கள் வேலையில் கவனமாக இருக்கும் போது சரியாகக் காதில் விழுகாது. “எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்…! நான் சொன்னால் என் மனைவி கேட்பதே இல்லை…! என்று கோபமாகத்தான் அடுத்துப் பேச வரும்.

அதே போன்றுதான் மனைவியும் கணவனைப் பார்த்து…
1.“ஏதாவது ஒன்று என்றாலும் பொறுமை இல்லாதபடி உடனே இவருக்குக் கோபம் வந்து விடுகிறது.
2.என்னைக் குற்றவாளியாகவே இவர் பார்க்கின்றார் என்ற இந்த உணர்வு தான் குடும்பத்தில் வளர்கின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பங்கள் தான்…!

அதை மாற்றி அமைப்பதற்குத் தான் அந்த ஞானிகள் உணர்வினைப் பெறச் செய்வதற்கு உபதேசமாக “ரெக்கார்ட்…” செய்கிறோம்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. நீங்கள் அதை இச்சைப்பட்டு வளர்த்துக் கொண்டால் அது கிரியையாகி அந்த ஞானமாக நல்வழியில் உங்களை வழி நடத்தும்.
1.ஆகவே அந்தத் தெய்வீகப் பண்புகளை வளர்த்துப் பழக வேண்டும்.
2.அருள் ஞானிகள் உணர்வை வளர்த்தால் நாம் தெய்வமாகின்றோம்.

நாம் எல்லாம் தெய்வமாக ஆவதற்குத் தான் ஞானிகள் இத்தகைய தத்துவங்களைக் கொடுத்தார்கள்.

நஞ்சை ஒளியாக மாற்றுவது தான் நமது தியானத்தின் நோக்கம்

 

1.நல்லதைக் காக்க நமக்கு அந்தத் திறன் வேண்டும்…
2.அந்தத் திறனை இழந்து விட்டால் நல்லதைத் தீமை மறைத்து விடுகின்றது.

ஒரு மரம் வளர்வதற்கு எத்தனையோ வருடங்கள் ஆகிறது. ஆனால் மரத்தை உடனடியாக நாம் வீழ்த்த முடிகின்றது. இதே போல மனித உடலைப் பல வருட காலம் நாம் வளர்த்து வந்திருந்தாலும் “இனி என்ன வாழ்க்கை…?” என்று வெறுப்பாகும் பொழுது தற்கொலை செய்து… தன் உடலையும் ஒரு சிலர் அழித்து விடுகின்றார்கள்.

எத்தனையோ ஆசாபாசங்கள் கொண்டு இவ்வளவு காலம் வாழ்ந்து வந்திருக்கின்றோம். ஆனாலும்…
1.இந்த விஷத்தின் துடிப்பு ஒரு நொடிக்குள் இயக்கி விடுகின்றது.
2.அத்தகைய விஷத்தை வென்றவர்கள் தான் மெய் ஞானிகள்
3.அது அனைத்தையும் வென்று அந்த விஷத்தின் ஆற்றலைத் தனக்குள் அடிமைப்படுத்தி
4.அதையே தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள்,

வைரம் தன்னிச்சையாக ஒளி கொடுக்கிறது என்றால் அந்த விஷத்தைத் தன்னுள் அடக்கி விஷத்தின் ஆற்றல் மிக்க நிலையைத் தன்னிச்சையாக ஒளிச் சுடராகக் காட்டுகிறது.
1.அதை ஒளியாக… இனிமையாக… நம் கண்ணிலே குளிர்ச்சியாக… காண முடிகின்றது.
2.அந்த விஷங்கள் அனைத்தும் ஒடுங்கி அந்த இயக்கச் சக்தியே ஒளியாக மாறுகின்றது.

ஆனால் வைரத்தைத் தட்டி விழுங்கினாலோ அது நம்மை மாய்த்து விடும்.

இதைப் போன்று
1.விஷத்தினைத் தனக்குள் எடுத்து இனிமை கலந்த செயலாக இயக்கவல்ல ஆற்றல்மிக்க… வலிமை மிக்க அந்த எண்ண ஒளிகள்
2.மகரிஷிகள் உடலில் விளைய வைத்த அந்த உணர்வின் எண்ண அலைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.
3.அதைக் கவர்வதற்குத் தான் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

ஒரு குழம்பு வைக்கும் பொழுது காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு அனைத்தும் கலந்து அதைச் சுவை மிக்கதாகச் சமைக்கின்றோம்.

இதைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ந்து நெகிழ்ந்து சலித்து… வெறுப்பு விருப்பு வேதனை இது போன்ற எத்தனையோ எண்ணங்களுடன் நாம் இங்கே கூடி உள்ளோம்.

குரு காட்டிய அருள் வழிப்படி மெய் ஒளியைக் காண வேண்டும் அந்த மெய் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகளைத் தூண்டும் படிச் செய்கிறோம்.

அப்போது உங்கள் எண்ணங்கள் ஒருமித்த நிலைகள் கொண்டு ஏக்க உணர்வுடன் விண்ணை நோக்கி ஏகி அந்த மெய் ஞானிகளுடைய அருள் பெற வேண்டும் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து தியானிக்கிறோம்.

1.இங்கு வந்திருப்போர் அனைவரும் தியானத்தில் இருப்பவர் அனைவரும் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஒருங்கிணைந்த எண்ணங்களுடன் நாம் படரச் செய்யும் பொழுது
3.இங்கு வந்திருந்தோர் துன்ப நிலைகள் கொண்டு வந்திருந்தாலும் அனைவரும் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் ஒன்று சேர்ந்து
4.எந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்று ஏங்கி வந்தோமோ இந்த உணர்வின் அலைகள்
5.அந்த ஒளி அலைகளுடன் ஈர்க்கப்பட்டு “அந்தச் சுவாசம் உங்கள் உயிரிலே சுழன்று கொண்டிருப்பதைக் காணலாம்…”

மகரிஷிகளின் அருள் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி இந்த மூச்சலைகளை வெளிவிடும் பொழுது உங்களுக்குள் உயர்ந்த “உமிழ் நீராகச் சுரந்து இருப்பதையும்” காணலாம்.

இப்பேற்பட்ட “அமுத சுரபிகள்” நமக்குள் சேர்ந்து அந்த ஞானிகள் அருள் வித்தைச் சீராக வளர்க்கச் செய்யும்.

அப்போது நம்மை அறியாது சேர்ந்த வேதனையை உருவாக்கும்… நோய்களை உருவாக்கும்… நம் சொல்லின் இனிமையைக் கெடுக்கும் உணர்வுகள் தணிந்து
1.வைரம் எப்படி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றதோ அதைப் போன்ற நிலைகளை நாமும் பெற முடியும்.
2.நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் இதைப் பெற முடியும்

குழம்பை நாம் சுவைமிக்கதாக உருவாக்குவது போன்று குருநாதர் காட்டிய அருள் வழிப்படி இந்தத் தியானத்தின் மூலம் மெய் ஒளியை அனைவரது உள்ளங்களிலும் படரச் செய்கின்றோம்.

1.ஒவ்வொருவரும் கோபமோ வெறுப்போ வேதனையோ சலிப்போ சங்கடமோ எத்தனையோ மாறுபட்ட நிலைகள் கொண்டிருந்தாலும்
2.அதைச் சமமாகச் சமைக்கும் நிலைகள் கொண்டு சுவைபடும் சக்தியாக உருவாக்கி
3.அதைத் தெளிந்த நிலையில் உருப் பெறச் செய்யும் சக்தியாக
4.அந்த அருள் ஞானிகள் வித்தாக உருவாக்கச் செய்வதுதான் எமது உபதேசத்தின் நோக்கம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் காட்டிற்குள் செல்கின்றான்… அங்கே வாதாபி என்று அரக்க சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் ரூபத்தை மாற்றக் கூடியவர்கள். (இன்றும் இது போன்ற ரூபத்தை மாற்றக்கூடிய புலையர்கள் காட்டுக்குள் இருக்கின்றார்கள்). வாதாபி சகோதரர்கள் அகஸ்தியனை விருந்தாளியாக வரவேற்கின்றார்கள்.

விருந்தாளியாக வருபவர்களுக்கு மாமிச உணவு கொடுப்பது தான் எங்களுடைய வழக்கம் என்று சொல்கிறார்கள்.

நான் மாமிசம் சாப்பிடுவது இல்லையப்பா…! என்று அகஸ்தியர் சொல்கின்றார்.

இல்லைங்க… எங்கள் ஊருக்கு யார் வந்தாலும் நாங்கள் இதைக் கொடுக்கத் தான் செய்வோம்… அது தான் எங்களுடைய வழக்கம் என்று சொல்கின்றார்கள்.

நடைமுறையில் பார்த்தோம் என்றால் எங்கள் வீட்டுக்குச் சாமி நீங்கள் வந்திருக்கிறீர்கள்… சிறிதளவு காபி சாப்பிடுங்கள் என்பார்கள். ஆனால் சர்க்கரைச் சத்தாக இருக்கும்.

எனக்கு எதிரியாகும்… வேண்டாம்…! என்று சொன்னாலும்… பாசத்தால் நான் சாப்பிட்டேன் என்றால் என்ன ஆகும்…? சர்க்கரைச் சத்து அதிகமாகும்.

அல்லது முதலில் சாப்பிட்டு வந்திருப்பேன்… இங்கே மீண்டும் குடிக்க வற்புறுத்தும் பொழுது சாப்பிட்டால் அஜீரணம் ஆகிறது அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்…? தள்ளாட்டமாகும்.

“வேண்டாம்…” என்று சொன்னாலும் கூட… கொஞ்சமாவது அதைச் சாப்பிட வேண்டும் என்று அன்பால் கட்டளை இடுவார்கள். சாப்பிடவில்லை என்றால் மனவருத்தம் ஆகிறது.

“வருத்தப்படுகிறார்களே…” என்று எண்ணி நான் அதை உட்கொண்டால் என் உடல் தான் நலிவடைகின்றது.

அதே போல் கல்யாணத்திற்கு மற்ற விசேஷத்திற்கோ பத்திரிக்கை கொடுக்கப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

ஒரு முறை தான் வருகின்றீர்கள்… நீங்கள் கண்டிப்பாகக் காபி சாப்பிட வேண்டும் அல்லது கொஞ்சம் பலகாரத்தையாவது சாப்பிடுங்கள் என்று சொல்கின்றார்களா இல்லையா…!

நாம் அதைப் பற்றி சிந்திக்கிறோமா என்றால் இல்லை. போற்றுவதற்கு அந்த நிலையைச் செய்கிறோம்.

அதே மாதிரித் தான் அக்காலத்தில் வாதாபி என்ற அரக்க சகோதரர்கள் அகஸ்தியனைக் கட்டாயப்படுத்தி… “மாமிசம் சாப்பிட வேண்டும்” என்று சொல்கின்றார்கள்.

எங்கள் விருந்தாளிக்கு நாங்கள் செய்து தான் ஆவோம். நீங்கள் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றார்கள்.

அகஸ்தியர் சரி என்று சொல்கிறார்… ஏனென்றால் அப்பொழுது அவர் புரிந்து கொள்கின்றார்.

வாதாபி ஆடாக மாறுகின்றான்… மற்றவன் அறுத்துச் சமைக்கின்றான் அகஸ்தியனுக்குக் கொடுக்கின்றான்.

சாப்பிட்டு முடிந்தபின் ஏ…வ்வ்வ்…! என்று அகஸ்தியன் ஏப்பம் விடுகின்றான்… ஏனென்றால் அவர் புரிந்து கொள்கின்றார். கணங்களுக்கு அதிபதியாகித் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் தான் அந்த அகஸ்தியன்.

அதனால் ஏ…வ்… என்று ஏப்பமிட்டபின் “வாடா வாதாபி…!” என்று தன் சகோதரனை அழைக்கின்றான்.

அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிவிட்டானப்பா…! என்று அகஸ்தியர் சொல்கின்றார்.

ஆஹா அப்படியா…! உன்னை நான் இப்போது கொன்று சாப்பிடப் போகின்றேன் பார்… என்று அடுத்தவன் சொல்கின்றான். அகஸ்தியன் தன் பார்வையிலேயே அவனைச் சுட்டு பொசுக்கி விடுகின்றான்.

இராமாயணத்தில் படித்துப் பாருங்கள்… இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் புராணங்களில் இதை எப்படி மாற்றுகின்றார்கள் என்றால் “அகஸ்தியன் கணபதியை வணங்கிச் சென்றதால்தான்…” அரக்கனைக் கொன்றான். ஆகையினால் அந்தக் கணபதியை “வாதாபி கணபதி” என்று சொல்கின்றனர்.

அரக்க உணர்வு கொண்டு மற்றவர்களை வேதனைப்படுத்திய அந்த அரக்கனைக் கொன்றவன் அவன்…! ஆகையினால் “அந்தக் கணபதிக்கு” நீங்கள் அபிஷேகம் அர்ச்சனை செய்தால் உங்கள் பாவம் தோஷம் எல்லாம் போகும் என்று காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைதான்.

யாரும் தப்பாக நினைக்காதீர்கள்…!

1.அகஸ்தியன் தீமைகளை வெல்லும் வலிமை பெற்றான்… அரக்க உணர்வுகளை அடக்கினான்.
2.திருமணமான பின்… தான் கண்ட அகண்ட அண்ட்த்தின் உண்மைகளை எல்லாம் மனைவிக்குப் பாய்ச்சினான் அகஸ்தியன்.
3.இருவருமே ஒருவரை ஒருவர் உயர்த்திடும் நிலையாக… மனைவி உயர வேண்டும் என்று கணவனும்
4.கணவன் உயர வேண்டும் என்று மனைவியும் அருள் உணர்வென்ற கருவை உருவாக்கச் செய்தனர்.

வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து இரு மனமும் ஒன்றாகி… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிப் பேரருள் உணர்வை உருவாக்கி… உயிரைப் போன்றே உணர்வுகளை எல்லாம் ஒளியாக்கும் தனமை பெற்றனர்.

அவருடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்தில் இருந்து வந்து கொண்டேயிருக்கின்றது.
1.அந்த உணர்வை வலுவாக்கிக் கொண்டால் நம்மை அறியாமல் வரும் தீமைகளைச் சுட்டு பொசுக்குமா இல்லையா…?
2.இந்த வழியை யாரும் காட்டவே இல்லையே…!

ஆனால் இப்பொழுது நான் (ஞானகுரு) இந்த விளக்கத்தைச் சொன்னால் “சாமி ஏதோ புதிதாகச் சொல்கின்றார்… கதை விடுகிறார்…” என்று தான் நினைக்கின்றார்கள்.
1.இயற்கையின் உண்மை நிலைகளை குரு எனக்குக் காட்டினார்…
2.அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல முடிகிறது.

நம் ஆன்மாவிற்குள் கொண்டு வர வேண்டிய சக்தி

 

வீட்டில் பெண்கள் கோலமிடுகின்றார்கள். கோலமிடும் போது புள்ளிகளை வைத்து இணைக்கப்படும் போது
1.எங்கள் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்…
2.இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தில் உற்றுப் பார்த்து
3.இந்த உணர்வுகளை அந்தக் கோலத்திலே பதிவாக்க முடியும்.
4.ஏனென்றால் அந்தக் கோலப் பொடியிலும் மேக்னெட் உண்டு.

ஆகவே குடும்ப ஒற்றுமைக்காக உயர்ந்த எண்ணங்களை எண்ணி அருள் ஞானம் பெருக வேண்டும் நல் வாழ்க்கை வாழ வேண்டும். குடும்பத்தில் எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை எல்லாம் எண்ணிக் கோலமிடலாம்.

நமக்குள் இது பதிவாகிறது… நல்ல இயக்கச் சக்தியாக மாற்றுகிறோம். நீங்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் நம் வீட்டுக்கு வருவார்கள். இங்கே வந்து அவருடைய கஷ்ட நஷ்டங்களை எல்லாம் சொல்ல ஆரம்பிப்பார்கள். நாம் “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்போம்.

எந்த இடத்தில் நின்று பேசினோமோ அந்த இடத்திலே பதிவாகிவிடும்… இருவர் உடலிலும் பதிவாகிவிடும்.
1.அடுத்தாற்போல் அந்த இடத்திற்கு மீண்டும் வந்தாலே அந்த வாசனை இயக்கி
2.உங்களை அறியாமலே “ஏதோ சங்கடமாக இருக்கின்றது…” என்ற நிலையில்
3.அந்த கவலையாகப் பேசிய அதே இடத்திலே அமர்ந்து மீண்டும் எண்ணி அதை வளர்க்கும்படி செய்யும் (பதிவு அப்படி இயக்கும்).

அதே போல ஊரிலிருக்கும் குறைகளைப் பற்றிப் பேசியிருந்தால் வேறு பாதையில் செல்ல மாட்டார்கள். ஒற்றைக்காலில் நிற்கக்கூடிய இடமாக இருந்தாலும் கூட அங்கே தான் செல்லும்படி அதை எல்லாம் கவரும்படி இந்த உணர்வு இயக்கும்.

இந்த நினைவுகள் அவ்வாறு தான் இயக்கும். அதே எண்ணத்துடன் வீட்டிற்குள் வந்தால் வீட்டிற்குள்ளும் இது வரும்.

அதாவது…
1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று மனிதனுக்குள் இருக்கக்கூடிய நிலைகள் எப்படி உருமாறுகிறது…?
2.நம்மை அறியாத செயல்கள் சூட்சுமத்தில் எப்படி நடக்கிறது…?
3.இதையெல்லாம் எப்படி மாற்ற வேண்டும்…? என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.
4.எல்லாம் நேரடியாக அனுபவித்துச் சொல்கின்றேன்… புத்தகத்தைப் பார்த்துப் படித்துச் சொல்லவில்லை.

குருநாதர் காட்டிய வழிப்படி இந்தியா முழுவதற்கும் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலும் சுற்றித் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் இதை எல்லாம் சொல்கின்றோம்.

ஒரு மனிதன் அவன் தெரிந்து தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பம் சூழ்நிலை தான் அவனைக் குற்றவாளியாக்குகின்றது. அதே சந்தர்ப்பம் சூழ்நிலை அவனை நோயாளியாக மாற்றுகின்றது… அதே சந்தர்ப்பம் சூழ்நிலையால் தான் குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்களும் வருகின்றது…!

1.இதிலிருந்து மீளும் வழி என்ன…? என்பதைத்தான் கோவிலில் வைத்து ஞானிகள் காட்டியிருக்கின்றார்கள்.
2.ஆனால் காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைகளுக்கு இன்று அது மாறிப் போய்விட்டது.

இயற்கையின் உண்மை நிலைகளை நாம் நுகர்ந்தால் நமது உயிர் என்ன செய்யும்…? நாம் எண்ணியதை நமது உயிர் உருவாக்கிக் கொடுக்கும். அதற்குத் தான் அதிகாலையில் அந்த பிரார்த்தனையைச் செய்யும்படி எல்லோருமே சொல்கின்றார்கள்.

ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அதை வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் தான் இருக்கின்றது.
1.அந்த அதிகாலை நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணி எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்… குளிக்க வேண்டாம்…!

ஆனால் குளித்துவிட்டு மறுபடியும் நீங்கள் ஆடைகளை அணிந்து பாருங்கள். குளித்த வியர்வை வெளியில் வரும். ஆடையை இரண்டவது தரம் நுகர்ந்து பாருங்கள். ஆடையில் நாற்றம் வரும்.

ஆனால் அதிகாலை விழித்தவுடன்… படுக்கையிலே எழுந்து அமர்ந்து
1.அல்லது படுக்கையிலேயே துருவ நட்சத்திரத்தை எண்ணி நினைவுகளை அங்கே செலுத்தித் தியானித்த பின்
2.ஐந்து நிமிடம் கழித்து உங்கள் ஆடையை நுகர்ந்து பாருங்கள்.

நல்ல வாசனையாக இருக்கும். அந்த அருள் மணங்கள் தீமைகளை அகற்றும். ஆக… ஆடையில் படிகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து
1.நம் எண்ணத்தால் உயர்ந்த சக்திகளை நம் ஆன்மாவிற்குள் கொண்டு வரக்கூடிய பழக்கத்தை அவசியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்…
2.நம் ஆன்மாவை வலுவாக்க வேண்டும்… தீமைகள் புகாது தடுக்க வேண்டும்.

“சப்தரிஷி மண்டலம் அடையப் போகிறோம்…” என்ற இந்த உணர்வுகள் தன்னாலேயே வரும்

 

நம் உடலான இந்தப் பிரபஞ்சத்தை உயிர் இயக்குகிறது. இதற்குள் எத்தனையோ கோடி அணுக்கள் இருக்கிறது.
1.அதிலே தீமை என்ற உணர்வு வளராது
2.அதே தீமையான உணர்வுகளை “ஊக்கச் சக்தியாகக் கொடுக்கும் இரையாக…” நாம் மாற்றிக் கொள்தல் வேண்டும்.

தீமை என்ற உணர்வுகளைக் குறைத்து நல்ல அணுக்களைக் கூட்டும் போது தீமையான அணுக்கள் குறைகிறது. ஆகவே நமக்குள் அந்த மகரிஷிகள் உணர்வைப் பெருக்க வேண்டும்.

இந்த உடலை விட்டு எந்த நிமிடம் நாம் போவோம் என்று சொல்லவே முடியாது. ஆகவே அந்த அருளைப் பற்றுடன் பற்றினால் இந்த வாழ்க்கையில் வரும் மற்றது அனைத்தும் பற்றற்றதாக மாறும்.

இதற்கு முன்னாடி நமக்குத் தெரியாது. தெரிந்து கொண்ட பின்
1.நாம் இந்த உடலை விட்டுச் செல்லும் போது நம் உணர்வுக்கே தெரியும்.
2.நாம் சப்தரிஷி மண்டலம் அடையப் போகிறோம் என்று…!
3.இந்த உணர்வுகள் தன்னாலேயே வரும்… “எங்கே செல்கிறோம்…” என்று நிச்சயம் தெரியும்.

காட்டிற்குள் சென்று எத்தனையோ அனுபவங்களைப் பெற்று அறிந்து கொண்டு வந்தேன். நீங்கள் எல்லோரும் அந்த உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று வீடு தேடி வந்து சொல்கின்றேன்.

உங்களுடன் ஒன்றித்தான் நானும் வாழ்கின்றேன். நான் பெரியவன் என்று சொல்லவில்லை. யார் பெரியவர் யார் சிறியவர் என்று சொல்ல வரவில்லை

உயர்ந்த ஞானத்தை வளர்த்துக் கொண்டால் அதுவே பேரருள் என்ற அழியாச் சொத்தாக வளர்க்க முடியும் அந்தச் சக்தியை அனைவரும் பெற வேண்டும்.

ஆகவே
1.ஒருவருக்கொருவர் அன்பை வளர்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்…
2.அரவணைக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்…
3.இருளை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்…
4.வரும் தீமைகளை அகற்றும் வலிமை நாம் பெற வேண்டும்
5.அதையெல்லாம் வளர்த்துக் காட்டி நாம் இந்த உலகிற்கே எடுத்துக்காட்டாக வளர வேண்டும்.

நம் குருநாதர் துருவ நட்சத்திரத்துடன் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றார். அவருடைய அருளைப் பெற்று அந்தச் சக்திகளை எளிதில் பெறலாம். இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணலாம்… ஒளியான நிலையை அடையலாம். அந்த நிலை பெறுவதற்குத் தான் உபதேசிக்கின்றோம்.

ஆகவே அனைவரும் பேரன்பைப் பெருகி “எல்லோருடைய மனதும் ஒன்றாகி… எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…!” என்ற உணர்வை வளர்ப்போம்.

1.உலகம் நலம் பெறத் தியானிப்போம்
2.உலக மக்களைக் காக்கும் உணர்வுகளை நமக்குள் விளைய வைப்போம்.
3.நம்மையும் காப்போம்… உலக மக்களையும் காப்போம்.

விஞ்ஞான அறிவினால் வரும் தீமைகளை அகற்றும் வல்லமையை நாம் பெறுவோம்.
1.உலக மக்கள் அனைவருக்கும் அருள் ஞானிகள் உணர்வைப் பதிவு செய்து
2.தீமைகள் புகாது தடுக்கும் சக்தியை… அந்தப் பாதுகாக்கும் நிலையைச் செயல்படுத்துவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரணுக்கள் ஆரம்பத்தில் தேடியது எந்த நிலையோ இதைப் போன்று பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு என்ற உணர்வினை நம் உடலில் சந்தர்ப்பவசத்தால் சேர்த்துக் கொண்டே வருகிறோம்.

அதை எல்லாம் நுகரப்படும் போது பல கலக்கங்களும் சிந்தனையற்ற நிலைகளும் உருவாகி இந்த உடலைக் காக்கும் செயலையே நாம் இழந்து இருக்கின்றோம்.

1.இன்று இந்த கோயிலுக்குச் சென்றால் நல்லதாகுமா…?
2.அந்தக் கோவிலுக்குச் சென்றால் நல்லதாகுமா…?
3.இந்த ஜோசியம் பார்த்தால் நல்லதாகுமா…? ஜாதகத்தை பார்த்தால் நல்லது நடக்குமா…?
4.அல்லது மந்திரத்தைச் சொன்னால் நன்றாக இருக்குமா…? என்று இதையெல்லாம் எடுத்து
5.அதைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோமே தவிர
6.“நமக்குள் உயிர் எப்படி இயங்குகின்றது…? என்று அறியாது இருக்கின்றோம்.

விஞ்ஞானம் சர்வத்தையும் மெய்ப்பிக்கும் இன்றைய காலத்தில் நம்மை அறியாமலே “பித்தனாக…” இருக்கின்றோம்.

இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டிக் கொண்டிருப்பார்.

என்ன சாமி…! சும்மா இருக்கும் போஸ்டில் கல்லைக் கொண்டு எறிகின்றீர்களே…! என்று நான் (ஞானகுரு) கேட்டேன்.

நீ தான்டா என்ன…? என்று கேட்டாய் மற்றவர்கள் கேட்கவில்லை. ஆனால் “என்னைப் பைத்தியக்காரன்…” என்று நினைக்கின்றார்கள்.
1.ஆனால் ஒவ்வொரு மனிதனும் எதன் மீது ஆசைப்பட்டானோ அந்தப் பித்து பிடித்து…
2.அதைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றான்.
3.தன் அருகிலே நல்ல பொருள் இருந்தாலும் கூட அதை எடுக்கும் வழி இல்லை.
4.தன் உடலில் நல்லது இருந்தாலும் அதை வளர்க்கும் வழி இல்லை.
5.இப்படிப் பித்தனாக அலைந்து கொண்டிருக்கின்றான்.

ஆனால் நான் போஸ்டில் தட்டும் ஓசை வெளி வருகின்றது. இந்த ஓசையைக் கேட்டு “ஏன்…” என்று நீ கேட்டாய். அதற்கு நான் விளக்கம் கொடுக்கின்றேன்.

நான் தட்டுவதைப் பார்த்து ஒருவன் “இவன் பைத்தியக்காரன்… தட்டிக் கொண்டிருக்கின்றான்…” என்று எண்ணுகின்றான். நான் தட்டும் இந்த ஓசையை அவன் கேட்டு… அவன் உணர்வுகள் பைத்தியக்காரனாக எண்ண வைக்கிறது.

என்னைப் “பைத்தியக்காரன்” என்று அவன் அவ்வாறு எண்ணும் பொழுது அவன் அதைச் சுவாசிக்கின்றான்… அவன் உயிரிலே படுகின்றது… அதை உணர்த்துகின்றது.

அவன் எதை (பைத்தியம் என்று) எண்ணினானோ அந்த உணர்வின் தன்மை அவன் உடலில் ஓடுகின்றது. அப்போது “அவன் பித்துப் பிடித்திருக்கின்றான்…” என்று அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் இந்த பித்தின் நிலைகள் அவனுக்குள் விளையத் தான் செய்கின்றது.

ஏனென்றால்
1.நம் உடல் ஒரு அரங்கம்…
2.சுவாசித்த உணர்வு உயிரில் பட்டபின் அரங்கநாதன்… அந்த உணர்ச்சிகள் நம்மை அப்படி ஆளுகின்றது.

பைத்தியக்காரன் பைத்தியக்காரன் என்று அதையே எண்ணிச் சுவாசிக்கும் போது அந்த உணர்வு நம்மை ஆளத் தொடங்குகிறது… நாம் அதுவாகின்றோம். (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!)

இதை ஞானிகள்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அதற்குண்டான காரணப் பெயர்களை வைத்து அதை அறியச் செய்கின்றார்கள்.

என் செயலைப் பார்த்தாய்… நீ சுவாசித்தாய்… நுகர்ந்து என் அருகில் வந்தாய்…! என்ன…? என்று கேட்டாய். நான் உனக்கு விளக்கம் சொல்கின்றேன்.
1.நீ புரிந்து கொண்டாய். அப்போது தீமையிலிருந்து மீளும் உபாயத்திற்கு “உன் அறிவு இங்கே வந்தது…”
2.ஆனால் மற்றவனுடைய அறிவு… நான் என்ன செய்கிறேன்…? என்று தெரியாதபடி அவன் பித்தாக இருக்கின்றான்.

அதே சமயத்தில் “அவன் என்ன தப்பு செய்தான்…?” என்ற எண்ணத்தில் நான் வந்தால் “நான் பித்தனாகத்தான் வளர முடியும்…” அவன் பித்தன் என்று நான் எண்ணினால் நான் பித்தனாகத் தான் ஆக வேண்டும்.

நான் தட்டி எழுப்பும் இந்த ஓசையின் எதிரொலிகளைத் திரும்பிப் பார்க்கப்படும் பொழுது… ஏன்…? என்று கேட்கும் பொழுது… இந்த நிலையை நீ செய்தால் உனக்கு நல்லதாக இருக்கும் என்று நான் சொன்னால்… “அந்த உணர்வை அவன் நுகர்ந்தால் அவனுக்குள் நன்மை பயக்கும்…”

அவன் என்னைப் பித்தனாக எண்ணுகின்றான் அவன் பித்தன் என்று அவனே உணர முடியவில்லை.

1.குருநாதர் போஸ்டிலே கல்லைக் கொண்டு தட்டி அதனால் வரும் ஓசைக்கு இத்தனை வியாக்கியானங்கள் எனக்குக் கொடுக்கின்றார்.
2.மனித இயல்பில் “உயிரின் உணர்வுகள் எப்படி வருகின்றது…?” என்று…!

பிறருடைய இருளை நமக்குச் சொந்தமாக்காமல் அருளை நமக்குச் சொந்தமாக்க வேண்டும்

 

சகஜ வாழ்க்கையில் நாம் என்ன செய்கின்றோம்..? எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவுக்குச் சென்று விடுகின்றோம்.

உடல் ஆசை… பிள்ளை இப்படிச் செய்கின்றான்… அவன் இப்படி இருக்கின்றான்… கடன் வாங்கியவன் ஏமாற்றுகிறான்… பணம் தரவில்லை…! என்று நினைவுகளை எல்லாம் பலவாறு இப்படி மாற்றி விட்டால் என்ன ஆகும்…?

ஆக… இத்தகைய நிலைகளை எண்ணினால் நமது உயிர் என்ன செய்யும்…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான்… பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் “பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…” என்று பாடுகின்றோம்.

காரணம்…
1.பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் நாம் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தாலும்
2.அந்த உணர்வை நாம் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.

உதாரணமாக… கருணைக்கிழங்கு என்றாலும் அதை வேக வைத்து அதில் உள்ள விஷத்தை நீக்குகின்றோம்… காரமாக இருக்கும் மிளகாயை மற்ற பொருள்களுடன் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோம். உப்பை மற்ற பொருள்களுடன் இணைத்துச் சுவையாக மாற்றுகின்றோம்.

இதைப் போன்று… இந்த வாழ்க்கையில் தீமை என்று வந்தாலும் அந்தத் தீமை நமக்குள் வளராதபடி அருள் ஒளி என்ற உணர்வைச் சேர்த்துப் பக்குவமான நிலைகள் கொண்டு வளர வேண்டும் என்று உணர்த்தி அனைவரும் நல்ல நிலைகள் அடைய வேண்டும் என்று எண்ணினால் பிறர் குறைகளோ துன்பங்களோ நமக்குள் வராது… நமக்கு நல்லதாக மாறும்.

ஒருவன் நமக்குக் கெடுதல் செய்கின்றான் இருந்தாலும் அந்தக் கெடுதலை எண்ணாமல் ஈஸ்வரா…! என்ற உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அவனை அறியாது இயக்கும் இருளிலிருந்து விடுபட்டுப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்தால் பரிபக்குவம் ஆகின்றது.

அவன் செய்யும் கெடுதல் நமக்குள் வராது.

அவன் ஏமாற்றுகின்றான் தொல்லை கொடுக்கின்றான் நம்மைக் கேவலப்படுத்துகின்றான் என்று இதை எண்ணி எடுத்தால் அது எல்லாம் நமக்குள் விளைகின்றது.

ஆனால்
1.ஏமாற்றுபவன் உண்மையை உணர வேண்டும் அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணினால்
2.நாம் எண்ணிய இந்த அந்த உணர்வு நமக்குள் சேர்ந்து நல்ல உணர்வாக “அத்தகைய அணுவாக…” உயிர் கருத்தன்மையை அடையச் செய்கின்றது.
3.நமக்குள் பக்குவம் பெறும் தன்மையும் தீமை விளையாது தடுக்கும் நிலையும் வருகிறது.

இந்தப் பக்குவ நிலையை நாம் பெற வேண்டும்.

ஆனால் அவன் தவறு செய்கிறான் என்றால் அவன் எதை எண்ணிச் செயல்படுத்துகின்றானோ… அந்த ஈசன் வீற்றிருக்கும் உடலான ஆலயத்திற்குள் அந்த உயிர் அதை உருவாக்கி “அதையே அவனை அனுபவிக்கும்படிச் செய்யும்…”

அவன் திருந்த வேண்டும் என்று நாம் எண்ணினால் அந்த உணர்வு நமக்குள்ளாகி அவன் தீமையாக எண்ணினாலும் “நம்முடைய உணர்வுகள் அவனைத் திருந்தும் வழியாக இயக்கும்…”

திருந்தாத நிலை இருந்தாலும்
1.அந்தக் கெடுதலான உணர்வுகள் அவனுக்குத் தான் சொந்தம்,,,
2.ஆனால் நமக்கு அருள் சொந்தமாகின்றது… அவனுக்கு இருள் சொந்தமாகின்றது.

ஆகையினால் பிறர் படும் உணர்வுகளையும் அந்த இருளான உணர்வுகளை நமக்குள் விடாதபடி நாம் அந்தப் பக்குவ நிலை பெற வேண்டும்.

பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.நம் உயிரான ஈசனிடமே அந்தப் பரிபக்குவ நிலை பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் அதையே உயிர் உருவாக்குகின்றது.
2.நம்மை அந்தப் பக்குவ நிலையைப் பெறச் செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நோயாளியையோ ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்தாலோ உங்களால் தாங்க முடியவில்லை. நான் (ஞானகுரு) அத்தனை பேர் கஷ்டத்தையும் கேட்க வேண்டி இருக்கின்றது… எல்லாவற்றையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கின்றது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

காட்டிற்குச் சென்று தவமிருந்தோ… அல்லது மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி ஜெபித்தோ ஆண்டவனை நான் அடையப் போகின்றேன் என்று செய்வார்கள்.

மந்திரங்களை ஜெபிக்கலாம்… அந்த உணர்வுகள் உடலில் பெருகும்… உடலை விட்டு ஆன்மா போகும். எங்கே…?
1.இதே மந்திரத்தை மீண்டும் எவன் ஜெபிக்கின்றானோ அங்கே அந்த உடலுக்குள் தான் செல்லும்.
2.சாகாக்கலையாக அந்த உடலில் விளையும்… விளைந்த பின் அவன் பெரிய மேதை ஆகி விடுவான்… ரிஷியாகக் கூட ஆகிவிடுவார்
3.எல்லாம் தெரிந்தவராகின்றார்… அவர் பிழைப்புக்குப் போக ஆரம்பிப்பார்.

என்னிடம் வந்து கஷ்டங்களை நீங்கள் சொல்கின்ற மாதிரி அய்யா… சாமி… கஷ்டமாக இருக்கின்றது என்று எல்லோரும் அவரிடம் சொல்வார்கள். அவர் அதற்குப் பக்குவம் சொல்லி… பதிலுக்கு “நான் செய்தேன்…!” என்ற புகழுக்கு ஏங்குவார்.

விஷத்தைத் தான் சேர்ப்பார்… விஷத்தின் சேமிப்புகள் அதிகமாகும்… அவர் ஆசை அந்த உடலில் பெருகும்… கடைசியில் அதனால் அவர் மடிவார்.

ஆன்மா வெளி வரும். வந்த பின் சாகாக்கலையாக மீண்டும் எந்த விஷத்தின் அளவுகோல் அந்த உடலில் அதிகமானதோ அதற்குத்தக்க உயிரினங்களாகத்தான் உயிர் பிறக்கச் செய்யும் உயிர்.

இதைத் தான் குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

இப்படி
1.அடுத்தவருக்கு நல்லது செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு உடலுக்குப் புகழ் தேடி வாழ்கிறோம் என்றால்
2.மனிதனுடைய ஈர்ப்புக்குள் தான் மீண்டும் வர முடியும்.

ஏன்…?

புகழுக்காக ஏங்கி அதனால் பிறர் போற்றும் நிலை வரும் போது அடுத்தவர்கள் துயரங்களை எல்லாம் கேட்டால் என்ன ஆகும்…?

வீட்டிலே தன் மனைவி பிள்ளைகளை எல்லாம் விட்டு விட்டு இவர்கள் “சாமியாராக” வெளியே வந்து விடுவார்கள். வெளியில் மற்ற இடத்திலே நல்ல வரவேற்புகள் இருக்கும்.

ஆனால் அந்தக் குடும்பத்தில் இருக்கக்கூடிய சகல கஷ்டங்களையும் இவரிடம் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

1.நுகர்ந்த உணர்வுகள் இவர் உயிரிலே படும்.. பட்டதும் அந்த உணர்ச்சிகள் வருகின்றது
2.வேண்டாம் என்று தடுத்தால் அங்கே கோபம் வரும்.

ஏனென்றால் “சும்மா தொல்லை கொடுக்கின்றார்கள்…!” என்று அதைக் கேட்டவுடனே “சொல்ல வேண்டாம்…” என்று இவர் சொல்வார்… மனதிற்குள் இங்கே போர் ஆகி இவருக்குக் கோபம் வரும்.

ஆனாலும் இவர் இல்லை என்று சொன்னால் மற்றவர்கள் விடுவார்களா…? என்றால் விடமாட்டார்கள்.

இங்கே எத்தனை பேர் என்னிடம் (ஞானகுரு) வந்து கஷ்டம்… கஷ்டம்… நஷ்டம்… என்னால் முடியவில்லை…! என்று அதைத்தான் சொல்கின்றார்கள்
1.எனக்கு அந்த அருள் பெற வேண்டும்
2.இருளைப் போக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா என்றால் “சுத்தமாகக் கிடையாது…”

நானும் பலமுறை சொல்லிப் பார்த்தாகிவிட்டது…!

அவர்கள் படும் கஷ்டத்தை எல்லாம் நான் என் செவிகளில் கேட்டு அந்த உணர்வினை நான் நுகர வேண்டும்… அவர்கள் கஷ்டத்தை என் உடலில் நான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய சக்தியை குருநாதர் வழியில் பெற்றிருந்தாலும் கூட
1.கஷ்டத்தைச் சொல்பவர் நிலைக்குத் தான் நான் செல்ல வேண்டி இருக்கின்றது
2.நான் சொல்வதை அவர்கள் பின்பற்றும் நிலை இல்லை

என் பையன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்; என் பையன் ஞானியாக வேண்டும்; சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்; எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும் அந்த அருள் சக்தி எங்களுக்கு வேண்டும்… என்னுடைய நிலத்தில் விவசாயம் நன்றாக நடக்க வேண்டும் நான் தொழில் செய்யும் இடங்களிலே என்னுடைய வாடிக்கையாளர் அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… என்னிடம் வாங்கிச் சென்ற பணத்தை அவர்கள் திரும்பக் கொடுக்கும் சக்தி வர வேண்டும் என்று எண்ணி கேட்கின்றோமா…!
1.யாராவது ஒருவர் சொல்லுங்கள் பார்க்கலாம்
2.யாரும் நினைப்பதில்லை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் கடுமையான தீமைகள் வந்தால் அவைகளை எப்படி வெல்வது..? என்பதைக் காட்டுவதற்காக… குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

“மின்னலைப் பாருடா…!” என்றார். அதனால் அப்போது எனக்கும் அவருக்கும் சண்டை கூட வந்தது.

மின்னலைப் பார்த்து என் கண்கள் பறிபோய்விட்டால் என்ன செய்வது… நான் பிள்ளை குட்டிக்காரன்… எங்கே செல்வது…? என்று மின்னலைப் பார்க்க மறுத்தேன்.

நான் சொன்னதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா… மின்னலைப் பார்…! என்று கட்டாயப்படுத்தி என்னை நிர்பந்தப்படுத்துகின்றார்.

27 நட்சத்திரங்களின் உணர்வுகள் மின்னல்களாக வந்தாலும்
1.அதை அடக்க வல்லமை பெற்ற தாவர இனங்கள் உண்டு…
2.ஆனால் அந்தத் தாவர இனங்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்…?
3.அவர் கையிலே அதை வைத்திருக்கின்றார்… மின்னலைப் பாருடா…! என்று சொல்கின்றார்…
4.நான் பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன்… இரண்டு பேருக்கும் தர்க்கம் வருகிறது

நான் பார்க்கின்றேன் அல்லவா… நீ(யும்) பாருடா…! என்று மீண்டும் சொல்கின்றார். பின் நான் பார்க்கும் பொழுது கண்களை அது ஒன்றும் செய்யவில்லை குளு…குளு… என்று இருந்தது எரிச்சலோ இருளடையச் செய்யும் நிலையோ… எதுவும் இல்லை.

அந்த ஒளிக்கற்றைகள் என் உடலுக்குள் செல்கின்றது…!

அவர் கையில் வைத்திருந்த பச்சிலையைத் தான் பார்க்க முடிந்தது… மீண்டும் நான் மின்னலைப் பார்த்து எடுக்க வேண்டும் என்றால் அது மீண்டும் வேண்டும் அல்லவா…!

அப்போது தான் குருநாதர்
1.இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்கின்றேன்… நான் பதிவு செய்ததை மட்டும் எடு…
2.பச்சிலையைத் தேட வேண்டும் என்று நீ அதற்குச் சென்று விடாதே…! என்று சொல்கின்றார்.

ஏனென்றால் அப்படிச் சென்றால் உடலுக்குப் பிழைப்புக்குத் தேட ஆரம்பித்து விடுவாய். ஆகவே
1.நான் சொன்ன பதிவை உணர்வாக நினைவாக எடுத்து வளர்த்து அதை அருள் ஒளியாகப் பெருக்கி
2.மற்றவர்களுக்கு இருளைப் போக்கும் உபாயத்தைக் காட்டு…! என்று சொல்கிறார்

அகஸ்தியன் எத்தனையோ கோடி மின்னல்களை அவன் நுகர்ந்தவன்… தனக்குள் பேராற்றல்களைப் பெற்றவன்.

எப்படி…?

வியாழன் கோள் தன்னுடைய உபகோள்களை வைத்து 27 நட்சத்திரங்களுடைய சக்தியைக் கவர்ந்து ஒன்றாக்கி… உணர்வின் தன்மை தனக்குள் மற்றதுடன் இணைத்து “ஒளியாகும் தன்மையாக அது எப்படிப் பெறுகின்றதோ…” அதைப் போன்ற ஆற்றலை அகஸ்தியன் பெறுகின்றான்.

இந்த உணர்வுகளை எல்லாம் அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுதே பெறப்பட்டு… பல தாவர இனங்களின் சக்திகளை மணத்தால் நுகர்ந்து விஷத்தை ஒடுக்கும் தன்மையாகப் பெறுகின்றான்.
1.ஒளியின் மின் கதிர்களைத் தனக்குள் தாங்கும் சக்தியும்
2.மின் கதிர்கள் செல்லும் இடங்களை அறிந்துணரும் சக்தியும் பெறுகின்றான்.

இன்று எப்படி…
1.எலெக்ட்ரானிக் என்று நுண்ணிய அலைகள் கொண்டு ஆணையிட்டு இயந்திரங்களைத் தன்னிச்சையாக இயக்குகின்றார்களோ
2.செல்ஃபோன் கம்ப்யூட்டர் இவைகள் எல்லாம் வெகு தூரத்தில் இருக்கும் அலை வரிசைகளைக் கவர்ந்து இயங்குவது போன்று
3.அகண்ட நிலைகள் வருவதை எல்லாம் கவரக்கூடிய திறன் அகஸ்தியனுக்கு வருகின்றது
4.மின் கதிர்கள் எங்கெல்லாம் செல்கின்றதோ… எதை எதை நுகர்கின்றதோ
5.அந்த உணர்வின் அதிர்வுகளை எல்லாம் அகஸ்தியன் காண்கின்றான்.

அகஸ்தியன் பெற்றதையெல்லாம் “நீ உனக்குள் எப்படி உருவாக்கிக் கொள்ள முடியும்…” என்ற நிலையை உணர்த்தி அதை எனக்குள் வித்தாகப் பதிவு செய்தார் குருநாதர்.

உங்களுக்குள்ளும் அதை இப்போது வித்தாகப் பதிவு செய்கின்றேன்… அந்த உண்மை நிலைகளை நீங்களும் பெற முடியும்.

இதை எல்லாம் எதற்காகப் பதிவாக்குகிறேன்…? இந்த உடலுக்குப் பின் என்ன வேண்டும்…? என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குத் தான்.… அது உங்கள் அபிப்ராயம் தான்…!

குருநாதர் அனைத்தையும் எனக்குக் காட்டினார். டிவி அலைகளும் மற்ற கம்ப்யூட்டர் உணர்வலைகளும் என்னவெல்லாம் செய்யும்…? (மேலே முதலில் சொன்னபடி) என்று காட்டினார்.

டி.வி. பெட்டியில் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ வீட்டில் இருந்த இடத்திலிருந்து படத்தைக் காண முடிகின்றது இன்ன இடத்தில் இருந்து வருகின்றது என்று தெரிந்து… அதைத் திருப்பி வைத்தால் உடனே அதை நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது… “எங்கிருந்தாலும் அதைக் காண முடிகின்றது…”

அதே போன்று தான்
1.நீங்கள் எங்கே… எந்த இடத்தில் இருந்தாலும்… அந்த இருந்த இடத்திலிருந்து
2.அகண்ட அண்டத்திற்கும் எண்ணத்தைப் பரப்பிய உணர்வின் ஒளிக் கற்றைகளை
3.குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள் நான் பாய்ச்சுவதை நீங்கள் எண்ணி அதை எடுக்க முடியும்.

நம்பிக்கை இருந்தால் நிச்சயம் எடுக்கலாம்…!

ஆனால் நம்மால் முடியுமா…? குருநாதர் சக்தி கொடுத்தார்… சாமி எல்லாவற்றையும் பார்த்தார்… நான் எப்படிப் பார்ப்பது…! என்று எண்ணத்திற்கு நீங்கள் செல்லக்கூடாது.

குருநாதர் பைத்தியக்காரராகத் தான் தெரிந்தார்… அகண்ட அண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் சொன்னார். நான் அதைப் பதிவு செய்தேன்… பார்த்தேன்… அறிந்தேன்…!

அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்…! ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தைச் சுத்தம் செய்… நீ அந்தச் சேவையைச் செய் என்றார் குருநாதர்.

அதைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன். ஆனால்
1.நான் சேவை செய்ய வரும் பொழுது நீங்கள் கதவை இறுக்கி மூடிக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.
2.நீங்கள் கதவை (மனக் கதவு) மூடி கொள்கின்றீர்கள்.. நான் என்ன செய்வது…!

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

“சாமி மாதிரி பெரிய சக்தி பெற்று…” உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்

 

உதாரணமாக… வேதனை என்ற உணர்வுகளை அதிகமாக நுகர்ந்தால் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் சண்டை வருகிறது. தொழில் செய்யும் இடங்களில் நிம்மதி இல்லை.

ஆனால் நாம் அருள் உணர்வுகளைப் பெற்று வளர்த்தால்
1,நாம் போகும் இடமெல்லாம் அனுசரனையாக நம்மைப் பாதுகாக்கும் நிலையாக வருகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெற்றோமென்றால் அதுவே “நமக்கு ஒரு பெரிய பாதுகாப்பாக…” வருகின்றது.

சந்தர்ப்பத்தால் தடைகள் வருகிறது என்றால் ஓரளவுக்கு அதிலிருந்து நம்மை மீட்டிடும் நிலையாக
1.“ஏதாவது ஒரு ரிமோட் பண்ணி…” வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்
2.அதற்கு தகுந்தாற் போல் ஒளியாக மாற்றக்கூடிய சக்தி கிடைக்கும்.

ஆகவே… உங்களை நீங்கள் நம்புங்கள்.

எல்லாமே சாமி தான் என்று எண்ணுவதற்குப் பதிலாக “சாமியைப் போன்று பெரிய சக்தி பெற வேண்டும்…!” என் பேச்சால் மூச்சால் பிறருடைய நோய்கள் அகல வேண்டும் அனைவரும் நன்மை பெற வேண்டும்… என்ற உணர்வை எடுத்து வளர்த்து வாருங்கள்.

இந்த அருள் உணர்வுகள் உலகம் முழுவதற்கும் பரவும்.

உங்களைத் தெளிவாக்கி எல்லோருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தான் சதா தியானம் இருக்கின்றேன். அருள் வழியில் நீங்கள் தயாரானால் அனைவருக்கும் இது நல்லதாகும்.

இந்த உடல் தான்… நாம் செய்யும் தொழில் தான்… சொத்து தான்… என்று இல்லாதபடி இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதே நமக்கு அழியாச் சொத்து என்பதை உணர்ந்து அதன் வழி வளர்வோம்.

1.துருவ நட்சத்திரத்தினை மறந்து விடாதீர்கள்… எந்த நிமிடமானாலும் அதனின் சக்தியை எடுங்கள்…
2.அந்த உணர்வை உங்களுக்குள் சேர்த்துப் பழகுங்கள்… எந்த இருளும் உங்களை நாடாது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது… அதன் வழி உங்களைக் காக்கின்றது, அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

எல்லோருக்கும் நன்மையைத்தான் நான் செய்தேன்… இப்போது இப்படி ஆகிவிட்டது என்று வேதனையாக எண்ணினால் நாம் அதுவாகி விடுகின்றோம்.

ஆனால்… அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… அந்த அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால் நாம் அதுவாகின்றோம்.

எல்லோருடைய உணர்வுகளும் நமக்குள் கலக்கப்படும் பொழுது எல்லோரையும் காக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றது. அதை நாம் அனைவரும் இணைந்து செயல்படுத்துவோம்.

1.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்…. உலகத்தைக் காப்போம் என்ற நிலையில்
2.நீங்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் உங்கள் ஊரிலும் இந்த உணர்வுகள் நல்ல சக்தியாக மாறும்.
3.அது உங்களையும் காத்து ஊரையும் காக்கும்.
4.நீங்கள் உங்களைச் சாதாரண மனிதனாக எண்ண வேண்டாம்.
5.உலகையே காக்கும் திறன் உங்களிடமிருந்து வெளிப்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய உலகில் நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… யுத்த மேகங்கள் கூடிக்கொண்டே வருகின்றது… பயங்கர விளைவுகள் வருகிறது.
1.நாம் நப்பாசை வைத்து இந்த உடல் இச்சை தான் பெறுகின்றோம்
2.உயிர் இச்சையை யாரும் கொள்ளவே இல்லை.

உடலுக்குப் பின் உயிரோடு சேர்ந்து தான் வாழப் போகின்றோம். மீண்டும் உடல் பெறும் உணர்வுகள் பெறப்படும் பொழுது… எந்த வேதனை கொண்டு நுகர்ந்து… வாழும் இந்த உடலில் நாம் தப்ப வேண்டும் என்று எண்ணினோமோ… வேதனைகள் அதிகரித்து…
1.இந்த உடலில் இருந்து தப்பி… அடுத்து இன்னொரு வேதனைப்படும் உடலுக்குள் தான் போக வேண்டி இருக்கும்
2.உயிர் அதைத்தான் பெறச் செய்யும் என்பதை நாம் மறந்தே இருக்கின்றோம்.

அக்காலங்களில் உலகம் முழுவதற்கும் உள்ள எல்லா இடங்களிலுமே அதிகாலையில் நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற நிலையில் அந்தந்த மதங்களுக்குத் தக்க வேதங்களை ஓதி… மனித உடலில் பதியச் செய்து… அரசின் பற்றும்… நாட்டின் பற்றும் வந்தது.

இருந்தாலும் அப்படி வளர்த்துக் கொண்ட பின் அந்தந்த நாட்டின் அரசன் இறந்தால் அவன் பிள்ளைகளில் மாற்றம்.
1.பின் அதிலே பல பிரிவுகள் ஆகி ஒருத்தருக்கு ஒருத்தர் பகைமையாகி
2.முதலில் உருவான தத்துவங்களை மாற்றி அவரவருக்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டனர்.

இன்றைய நம் நாட்டு அரசியலில் எடுத்துக் கொண்டால் காங்கிரசிலிருந்து எத்தனை கட்சிகள் புதிதாக உருவாகி இருக்கிறது…? என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளை அதிலே சேர்த்து “ஆட்சியைப் பிடிக்க வேண்டும்… தான் அரசாள வேண்டும்” என்று தான் எண்ணினர்.

ஆனால் அன்று காந்திஜியின் சாந்த உணர்வுகள் அதிகரித்ததனால் தான் நம் நாடு விடுதலை அடைந்தது. அவர் வழி நடத்திய தத்துவம்
1.ஒரு மனிதனைக் கோபமாகத் தாக்குவது கோழை
2.ஆனால் நம்மைத் தாக்க வரும்பொழுது மன உறுதி கொண்டு அவருடைய நிலைகளைச் சீர்படுத்திக் காட்டுவது மன பலம்
3.”அமைதி கொண்டு நல் உணர்வை ஊட்டுவது தான் மன வலிமை” என்று தெளிவாகக் காட்டினார்.

அத்தகைய மன வலிமை கொண்டு மக்கள் அனைவரையும் ஊக்குவித்து எல்லோரும் ஒரே நிலையில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற உணர்ச்சியைத் தட்டியெழுப்பினார்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வரும்போது பிரிட்டிஷ் ஆட்சி பணியும் தன்மை வந்தது. இலண்டன் சபையிலே காந்திஜியைப் பேசும்படியும் செய்தது… சுதந்திரத்தைக் கொடுத்தார்கள்.

உலகம் முழுவதும் அன்று பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும்… மக்களை அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தாலும் காந்திஜியின் சாந்த வீரியமே உலகம் முழுவதற்கும் சுதந்திரத்தைக் கொடுக்கும்படி செய்தது.

ஆனால் அந்தச் சுதந்திரம் இன்று எப்படி இருக்கின்றது…?

அன்று பிரிட்டிஷ்… அரக்க உணர்வுகள் கொண்டு மக்களை அடக்கி ஆட்சி புரிந்தான்.
1.அதே உணர்வு வளர்ந்து ஒவ்வொரு மனிதனும் மற்றதை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்ற தன்மைக்கு
2.இன்று அரசியல் அமைப்புகள் உலகெங்கிலும் வந்துவிட்டது.

நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்பதற்கு மாறாக… நல்ல பண்புகளை அறியாதபடி “தான் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு மாறாக யார் சென்றாலும் அவனைத் தொலைக்க வேண்டும்…” என்று வந்துவிட்டது.

இப்படிக் கொள்கைகள் வித்தியாசமாகி ஒருவருக்கொருவர் உண்மையை அறியும் தன்மைகள் இழக்கப்பட்டு
1.மக்கள் மத்தியில் குழப்பங்கள் உருவாகி
2.தான் எப்படிப் பிழைக்கப் போகின்றோம்… எப்படி வாழ போகிறோம்…? என்று
3.நம் நாடு மட்டுமல்ல… உலக ரீதியிலே இந்த விஷத்தன்மைகள் பரவி
4.மனித இனத்தையே முழுமையாக அழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.

ஆகவே உலகம் அழியும் தருணம் வரும் பொழுது இந்தப் பிரபஞ்சத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அதன் உணர்வுகளை நாம் பெற்றால் தான் தப்ப முடியும்.

உயிர்ப் பற்றை வளர்த்தவர்கள் தான் உயிருடன் ஒன்றி அழியாத் தன்மை கொண்டு துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

நமது எல்லை அது தான்…!

நம் எண்ணத்திற்குள் நம்மை அறியாமலே புகும் சில தீமைகள்

தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி “கராத்தே…” கற்றுக் கொள்வார்கள். இரண்டு தட்டுத் தட்டினால் அடுத்தவர்களை விழுத்தாட்டி விடலாம்… ஓங்கி ஒரு உதை விட்டேன் என்றால் போதும் என்பார்கள்.

ஆனால் அந்தக் கராத்தேயின் உணர்வுகள் உடலுக்குள் வந்தபின் உடல் வலுவால் தாக்கும் தன்மை வருகின்றது.
1.ஆனால் நுகர்ந்த உணர்வோ “தாக்க வேண்டும்” என்ற உணர்வுகள் உடலுக்குள் கூடிய பின் உடலில் அழுத்தங்கள் அதிகமாகும்.
2.கூடுமான வரையிலும் இதுபோன்று கராத்தே கற்றுக் கொண்டவருடைய கடைசி நிலைகள் அழுத்தமாகி ரத்த அழுத்தம் அதிகமாகும்.
3.அழுத்தம் அதிகமான பின் அவர்களால் அந்தக் கலையைச் செயல்படுத்த முடியாது.

உடல் வலிமை இருக்கும் வரை செயல்கள் இருக்கும். சிறிது காலம் எல்லாம் நன்றாக இருக்கும். இந்தக் கலையை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்கள் அதைச் சீராகச் செயல்படுத்தும் பொழுது மகிழ்ச்சி வரும்… புகழ் வரும்.

ஆனாலும் அடுத்தவர்கள் குறைபாடுகளோ தவறுகளோ அல்லது பிடிக்காத செயல்களையோ செய்தால்
1.”இரு நான் உன்னைப் பார்க்கிறேன்… ” என்று வீரியத்தைத் தான் கூட்டும்…!
2.ஆனால் அவன் செய்யும் உணர்வைத் திருத்தி அமைக்கும் உணர்வு வராது.

அடித்தே திருத்த வேண்டும் என்று எண்ணம் தான் வரும். அவரை அறியாது செயல்படும் தீமைகளிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய வேண்டும் என்ற உணர்வு வராது.

சகஜ வாழ்க்கையில் நம்மை அறியாமலே உடல் வலுப்பெற்றாலும்
1.நம்முடைய எண்ணங்களுக்குள் தீமை வருவதை அடக்கத் தவறினால்
2.உடலுக்குள் புகுந்து நம் நல்ல குணங்களை அது அடக்கியே தீரும்.

பரிணாம வளர்ச்சியில் இந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி வேதனையுடன் வாழும் நிலையே நமக்குள் வரும். இதையெல்லாம் மாற்றுவதற்குத்தான் விநாயகர் தத்துவத்தினைக் கொடுக்கின்றார்கள்.

உடல் வலுப்பெற்றது யானை… எனவே யானை உடலைப் போட்டு விநாயகரைக் காண்பித்துள்ளார்கள். தன் எண்ண வலுவால் பாதுகாக்கும் உணர்வு கொண்டு வளர்ந்தது.
1.அதாவது உடல் வலிமை கொண்டு தான் தன்னைப் பாதுகாக்கும் நிலை வந்தது.
2.அதன் வழி மனித உடலைப் பெற்றோம் என்பதற்குத்தான் யானையைப் போட்டுக் காண்பித்தார்கள்.

அவ்வாறு வளர்ந்த நாம்… மனிதனான பின் எண்ண வலு பெற்றவர்கள். நம் எண்ணத்தைக் கொண்டு எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.

ஆறாவது அறிவு கொண்டு பல கோடித் தீமைகளை அறிந்தாலும்… சிந்தித்து அதிலிருந்து விடுபட்டு “நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால்…” அதன் வழி நுகர்ந்து தீமைகளை அகற்றும் வலிமையும் வருகின்றது.

சில மருத்துவர்கள் நோய்களைப் போக்கப் புதிதாக மருந்து கண்டுபிடிப்பார்கள். நோயை நீக்கி பேரும் புகழும் பெற்றுச் சம்பாதித்து விடலாம் என்று செயல்படுத்துகின்றார்கள். சம்பாரித்த பின் அதிலே சந்தோசமும் படுகின்றார்கள்.

இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வரும் பொழுது தன்னுடைய பையனைச் சரியாக வளர்க்கவில்லை என்றால்… அவன் தவறுகள் செய்வான்… கண்டபடி பணத்தைச் செலவழிப்பான்.

இவரோ சிரமப்பட்டு மருந்தைக் கண்டுபிடித்துச் சம்பாதித்து வைத்திருப்பார்கள். ஆனால் பையனோ வளர்ப்பின் நிலைகள் கொண்டு சேர்க்கையின் காரணமாக சில தாறுமாறான செயல்களைச் செயல்படுத்துவார்.

இந்த மருத்துவர் மற்றவர் நோய்களை எல்லாம் நீக்குவார்.
1.சம்பாதித்த காசைத் தேவை இல்லாமல் பையன் செலவழிக்கிறான் என்றால்
2.”கஷ்டப்பட்டுச் சாம்பாரித்தேன்… இப்படிச் செய்கிறானே…” என்று எண்ணி வேதனைப்படுவார்.

ஆனால் பையனுடைய தாயோ பாசமாக இருக்கும் நிலையில்… பையனை ஏன் சீறிப் பாய்கின்றீர்கள்…? நல்ல வார்த்தையைச் சொல்லுங்கள்…! என்று கணவனிடம் சொல்லும்.

நீ இப்படிப் பேசிப் பேசித்தான் அவனைக் கெடுத்து விட்டாய்…! என்று இந்த உணர்வின் வேகம் பையனின் தாயாரையும் திட்டும்படி செய்யும்.

தாய்ப் பாசம் கொண்டு கொஞ்சம் பொறுமையாகச் சொல்லுங்கள் என்று தாய் ஞாபகப்படுத்தும். “எல்லாம் உன்னால் தான் அவன் கெடுகின்றான்…” என்ற நிலை வந்துவிடும்.

1.எப்படிப் பார்த்தாலும் இந்த உணர்வுகள் நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது.
2.அதை அடக்கக்கூடிய சக்தி தெரிந்தும் நாம் அதை விட்டு விடுகின்றோம்.

நாம் அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டுமல்லவா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.ஒவ்வொரு நாளும் உபதேச வாயிலாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து
2.ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் இணைத்துக் கொடுக்கப்படும் பொழுது இதுவே தியானமாகிறது.

அதன் வழி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெரிந்து செயல்படும் அருள் ஞான சக்தி கிடைக்கும்.

ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்குவதற்கு விஞ்ஞான அறிவுப்படி எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற அமைப்பை அதனுடன் இணைத்து வைக்கின்றார்கள்.

இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் சமயம்… ஒன்று அழுத்தம் அதிகமாகி விட்டால் உடனே மோதி அதை மாற்றி அமைத்து இயந்திரத்தைச் சீராக்குகின்றது.

அதே போன்று தான் எலக்ட்ரானிக் என்ற ஞானிகள் உணர்வின் பவரைச் உங்களுக்குள் செருகேற்றுகின்றோம்.
1.எதிர் நிலையான உணர்வு தாக்கப்படும் பொழுது உடனே அதை விலக்கி
2.உங்களைச் சிந்தித்து செயல்படுத்தும் தன்மைக்கு அது இயக்கிக் காட்டும்…!

விஞ்ஞானிகள் இன்று நிரூபிக்கின்றார்கள். கெமிக்கல் கலந்ததில் ஒரு காந்தப்புலன் அறிவை இணைத்து அதனுடைய சுருதிகளைத் தட்டி எழுப்பப்படும் (KEY BOARD) பொழுது அந்த உணர்வுகள் இயக்குகின்றது.

அதே போன்று மனிதனுக்குள்ளும் எலக்ட்ரானிக்…! ஒவ்வொரு புலனறிவுக்குள்ளும் எலக்ட்ரானிக் என்ற இந்த உணர்வின் அறிவாகும் பொழுது
1.அவன் எண்ணிய உணர்வு அதிர்வாகி இவன் எண்ணியபடி கண்களால் பார்க்கின்றான்.
2.ஒரு உருவத்தின் தன்மை “இன்னது இப்படித்தான் இருக்கும்…” என்ற நிலையை எலக்ட்ரானிக்… எண்ணங்களை எண்ணும் பொழுது
3.அதற்குத்தக்க அந்த உருவத்தையே கம்ப்யூட்டர் போட்டுக் காட்டுகின்றது
4.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று அதிர்வாக்கும் போது அதிலே பூசிய “கெமிக்கல்” அதைக் காட்டுகின்றது.

உண்மையின் உணர்வின் தன்மை அளவுகோலின்படி இவன் எடுக்கப்படும் பொழுது “மனிதனுடைய சிந்திக்கும் சக்தி”
1.எலக்ட்ரான் என்ற முறைப்படி அவன் எண்ணும் கூர்மை இதைக் கவர்ந்து
2.தட்டெழுத்தால் அடிக்கச் செய்த பின் (KEY BOARD) ஆணைகளாக அதற்குள் பதிந்து சில தத்துவங்களைக் கொண்டு வருகின்றது.
3.கம்ப்யூட்டருக்குள் இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் இயக்கம்… அதிலே பதிவான கெமிக்கல் தான்.

இதைப் போன்று தான்
1.பல கோடி உடல்களில் நாம் சேர்த்துக் கொண்ட சத்துக்கள் “ஊழ்வினையாக…” எலும்புகளுக்குள் (இந்த கெமிக்கல்) உண்டு
2.ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே வருகிறோம்
3.பதிவான உணர்வின் தன்மைகளை மீண்டும் எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் உணர்வின் இயக்கமாக நாம் இயங்கி வருகின்றோம்.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் புலஸ்தியன் வம்சத்தில் வந்த மெய் ஞானி அகஸ்தியன்… “அவன் கண்ட புலனின் இயக்கத்தை” (எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்)… அவன் அருள் பெற்று நாமும் அதை அறிவோம்.
1.அகஸ்தியனுடைய அருள் சக்திகளைப் பெறுவோம்
2.இருளை அகற்றிப் பேரருள் பேரொளியாக நாம் மாறுவோம்.
3.அகண்ட அண்டத்தையும் அறியும் பேராற்றல் பெறுவோம்
4.உலகைக் காத்திடும் மெய் ஞானியாக வாழ்ந்து வளர்வோம்.

நம்மால் நிச்சயம் முடியும்…!