
“புலனறிவால்…” மெய்ப் பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி
ஒரு பயிற்சி:-
ஆறாவது அறிவின் உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட “முருகனின் காட்சியைக் காண வேண்டும்…” என்று வானை நோக்கி உற்றுப் பார்த்து உங்கள் நினைவினைச் செலுத்துங்கள். சிறிது நேரம் மேல் நோக்கிப் பாருங்கள்
அந்த அலைகள் குவிந்து உங்களுக்கு முருகனாகக் காட்சி தெரியும்..
பூமியில் வாழ்ந்த மனிதர்களுக்குள்
1.எந்தெந்த முருகன் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாகப் பரவப்பட்டதோ
2.அதை மீண்டும் நாம் குவிக்கப்படும் பொழுது இந்த உருவத்தை நாம் காண முடியும்.
அதாவது… டிவிக்களில் எப்படிப் படக்காட்சிகளைக் காணுகின்றோமோ… அதே போல்… மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது அலைகள் குவிந்து முருகனாகக் காட்டும்.
எதற்காக இதைச் சொல்கிறோம்…?
அன்று வாழ்ந்த அகஸ்தியரும் வியாசகரும் வானுலக ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து உடலில் அதைப் பெருக்கப்பட்டு அந்த உண்மையின் உணர்வுகள் அருள் ஞான ஒளியாகப் படர்ந்திருப்பதை
1அதை எண்ணி நுகரப்படும் பொழுது வியாசகர் கண்டதை நாம் காண முடியும்.
2.விஷத் தன்மையால் நம் பூமி சுழல்வதும்
3.துருவப் பகுதி வழி விண்ணுலக ஆற்றலைக் கவர்வதும் அதனால் தனக்குள் மாற்றம் அடைவதையும்
4.தாவர இனங்களாக உருப்பெற்றதையும் அதை எடுத்து உயிரினங்கள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதையும் நீங்கள் காண முடியும்.
5.மேரு என்ற மலையை மத்தாக வைக்கப்பட்டு என்று சொல்லும் பொழுது
6.மேலே சொன்ன பூமியின் இயக்கத்தைக் காட்சியாகத் தியானம் செய்யும் பொழுது பார்த்திருக்கலாம்.
இவையெல்லாம் அன்று வியாசகரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள்.
காரணம்… அகஸ்தியன் கண்டறிந்த உணர்வுகளை வியாசகர் கவர்ந்து பூமியின் செயலாக்கங்களை உணர்ந்ததை
1.அக்கால மொழி கொண்டு அதனை வெளிப்படுத்திய உணர்வுகள்
2.அவனில் விளைந்த உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.
ஆகவே நாம் காண வேண்டியது எது…?
அகஸ்தியன் துருவ மகரிஷியாகி உணர்வினை ஒளிச் சரீரமாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளி அலைகளாகப் பரவிக் கொண்டிருப்பதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.
துருவ மகரிஷியாகும் பொழுது அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் பாய்ச்சி இருவரும் அதைப் பரிமாறிக் கொண்ட நிலையை அவர்கள் உடலில் விளைந்த அலைகள் இங்கே பாய்ந்து கொண்டிருப்பதை நாம் காண்போம்.
மீண்டும் வானை நோக்கி உற்றுப் பாருங்கள்..!
அகஸ்தியன் துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில்
1.கணவனும் மனைவியும் துருவத்தின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
2.ஒருவருக்கொருவர் என்று ஏங்கிய உணர்வுகள் அது பரவி வரும் பொழுது
3.அந்தக் காலத்தில் வாழ்ந்த “அவர்கள் இருவரின் உடல் அமைப்பு…” அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.
துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக இருவருக்குள்ளும் இணைந்து இந்த உணர்வின் தன்மை ஒளிச் சரீரமாகி எந்த எல்லையில் நிலை கொண்டார்களோ
1.அங்கே சென்று துருவ நட்சத்திரமாக உருப்பெற்ற உணர்வை நீங்கள் காணலாம்.
2.அகஸ்தியனும் அவர் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி ஒளி சரீரமாக இணைந்து துருவப் பகுதிக்குச் சென்றதை நீங்கள் காணலாம்
3.துருவ நட்சத்திரமாக ஒளியாக இருப்பதையும் காணலாம்.
இப்பொழுது இதைக் கண்டவர்களும் சரி… மற்றவர்களுக்குள் பதிவானதும் சரி… அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற நினைவுடன் இரவிலே நீங்கள் படுத்து உறங்கினால்
1.அந்த உணர்வுகள் கிளர்ந்து உயிருடன் ஒன்றி உங்களுக்குள் பெருகி
2.அதனின் ஆற்றலை உங்கள் புலனறிவிலே காண முடியும்.
ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி என்ற நிலையில் அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு அதைக் கவர்ந்து வீட்டிலேயே அதைக் காணும்படிச் செய்கின்றார்கள்.
அதைப் போலத் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த உடலிலிருந்து வெளி வந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கலந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வினை எமக்குள் பதிவாக்கி அந்த நினைவினை எடுக்கும்படிச் சொல்லி
2.அதனின் அருள் ஞான வித்தாக இதைக் கேட்போர் உணர்வுகளில் ஊழ் வினையாகப் பதிவு செய்து
3.வினைக்கு நாயகனாக வளர்ந்ததை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
4.காற்றில் படர்ந்திருப்பதை அதன் வளர்ச்சியாகக் கவர்ந்து அந்த உணர்வினை கண் புலனறிவிலே காண முடியும்.
இருந்தாலும்… சில உண்மைகள் படக்காட்சிகளாக உங்களுக்குத் தெரிய ஆரம்பித்தால்
1.திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது
2.அந்த உருவங்கள் தெரிந்தால் அதைக் கண்டு அஞ்சி ஓடுபவர்களும் பலர் உண்டு… பயந்து விடுவார்கள்.
ஆகையினால்… அந்த உணர்வின் தன்மை “அப்படிக் காட்சியாகக் கிடைக்கக் கூடாது…” என்பதற்கும் ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின் உணர்வை “ஒளியின் உணர்வாக…” உங்களுக்குள் வளர்ப்பதற்குத் தான் இதைச் செயல்படுத்துவது.
சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று நீங்கள் எண்ணவே வேண்டியதில்லை. “நாம் காண வேண்டியது அந்த ஒளியான உணர்வுகள் தான்…”
அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் திறன் பெறுவது தான் நம்முடைய கடைசிக் கடமை. இதை எல்லாம் நீங்கள் அனைவரும் பெறுவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.
முந்தி எல்லோருக்கும் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தேன் சில உண்மைகளை அறியும்படியும் செய்தேன் புவியின் ஈர்ப்புக்குள்.
1.ஆனால் அதனுடைய பலன் மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டது.
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.
அவ்வாறு ஆகாதபடி உங்களுக்குள் மெய் ஒளியைப் பெறும் ஆற்றலாகத் தான் அதை இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்.
விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலம் கடும் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது… அதை மனிதன் நுகர்ந்து சிந்தனையற்றவனாக ஆக்கும் நிலைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்… அதிலிருந்து நம்மை மீட்டி நம் சிந்தனையை விண்ணிலே செலுத்த வேண்டும்.
அப்போது நம் அருகிலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் வரும் போது மனிதன் தீமைகளிலிருந்து விடுபட
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் தன்னைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப் பெருக்கவும்
2.இந்த உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய இது உதவும்.
அதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுத்தது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கடலுக்குள் ஒடங்களில் செல்லப்படும் போது எதை எல்லையாக வைக்கின்றனரோ எத்தனையோ அலைகள் வந்தாலும் அதிலிருந்து மீட்டு அந்த எல்லையைப் போய் அடைகின்றனர்.
அதைப் போல தான் மனித வாழ்க்கையில் எத்தனையோ விதமான கோபம் சலிப்பு வேதம் குரோதம் வேதனை போன்ற அலைகள் மோதிக் கொண்டே இருக்கிறது.
அப்பொழுது எந்தக் குணத்தைக் கவர்ந்து கொள்கிறோமோ அந்தக் கவர்ந்து கொண்ட சக்தி தான் “வசிஷ்டர்…” என்பது. அது நம் உடலாக ஆகப்போகும் போது “அது நம்முடன் இணைந்து வாழ்கின்றது…!” என்று பொருள்.
1.வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை நாம் நுகர்ந்தால் “வசிஷ்டர்…!”
2.அதாவது வேதனையான சக்தியை நாம் அருந்தப்படும் பொழுது
3.நம்முடன் இணைந்து (அருந்ததியாக) வேதனை என்ற உணர்வைத்தான் உருவாக்கும்.
அதே போல ஒரு குடும்பத்தில் தாயோ தந்தையோ உடலை விட்டுச் சென்றால் விட்டால் நாளை என்ன செய்யப் போகிறோம்..? என்று வேதனையைத் தான் நாம் படுகிறோம்.
இதைப் போன்ற துன்பங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற அருள் ஒளி கொண்டு அதைப் பிளக்க வேண்டும்.
கணவனும் மனைவியும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தீமைகள் தமக்குள் உருவாகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என்ற உணர்வைப் பெற்று வசிஷ்டர் அருந்ததி போல வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
நளாயினி போன்று கணவன் மனைவியை மதித்து நடப்பதும் மனைவி கணவனை மதித்தும் நடத்தல் வேண்டும். இவ்வாறு நடந்தால் இரு மனமும் ஒன்றுகின்றது.
சாவித்திரி என்ன செய்கின்றாள்…? எமனிடம் இருந்து தன் கணவனை மீட்டினாள். ஆக இன்னொரு பிறவிக்குப் போகாதபடி இரு உயிரும் ஒன்றென இணைந்தவர்கள் தான் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.
1.இரு மனமும் ஒன்றி…
2.இரு உணர்வும் ஒன்றி…
3.இரு உயிரும் ஒன்றி…
4.அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து
5.இல்லற வாழ்கையில் இருள் என்ற நிலையை அகற்றி
6.நஞ்சு என்ற நிலைகளை அகற்றி நஞ்சை அகற்றிடும் பெரும் சக்தி பெற்று
7.இனிப் பிறவி இல்லா நிலைகள் அடையும் அருள் மார்க்கத்தைத்தான் அன்று ஞானிகள் நமக்குக் காட்டினர்.
எங்கள் குடும்பத்தில் மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது தீமைகள் அகல வேண்டும். எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும். கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். உலக ஞானம் பெற வேண்டும். உலகைக் காத்திடும் அருள் ஞான குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அந்த அருள் ஒளி கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகள் எல்லாவற்றையும் விலக்கி அருள் உணர்வை வளர்த்து பிறவி இல்லா நிலை என்ற நிலையை அடைய நாம் பிராத்திப்போம்… தியானிப்போம்…!


ஓம் ஓம் ஓம் ஓம் – சிவ சக்தி என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக இயக்கக்கூடிய நிலை
ஒவ்வொருவரும் சிவ சக்தியாகத் தான் இயங்குகின்றார்கள்.
1.உடல் சிவமாகின்றது
2.உடலுக்குள் இயங்குவது சக்தியாக இருக்கின்றது… இப்படித் தான் சிவ சக்தி.
உருவம் சிவம் தனக்குள் இயங்குவது சக்தி. இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிச் சக்தியாக இயக்க முடியும். உணர்வின் தன்மை எந்தச் சக்தியாக இயக்குகின்றோமோ மறு உருவைக் கொடுக்கும்.
1.உருவமல்லாது சக்தியை நாம் சேர்ப்போம் என்றால் உயிருடன் ஒன்றி என்றும் சிவ சக்தியாக ஒளியின் சரீரமாகும்.
2.அது தான் எண்ணத்தால் வருவது… எண்ணத்தால் உருமாற்றிய நிலைகள் இராமலிங்கம்… உயிருடன் ஒன்றிய நிலைகள்…!
சீவலிங்கம்… உறைந்த உடல் கொண்டு தான் நாம் இப்பொழுது இயக்குகின்றோம். எண்ணத்தால் இருளைப் போக்கி ஒளியாக உயிருடன் ஒன்றினால் இராமலிங்கம்.
எங்கே சென்றாலும் சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை. பெருக்கும் சக்தியின் நிலைகள் கொண்டுதான்… அந்தச் சக்தியின் துணை கொண்டு தான் எண்ணத்தால் சீவலிங்கமாக இந்த உடல் ஆகிறது.
எண்ணத்தால் இராமலிங்கமாக உருவாக்க வேண்டும். ஒளியின் சரீரம்…! இது தான் சிவசக்தி என்பது. கணவன் மனைவி அல்ல.
நாம் கவர்ந்து கொண்ட சக்தி வசிஷ்டர். கவர்ந்தது எதுவோ அதனுடன் இணைந்தே வேலை செய்யும். எண்ணிய எண்ணங்கள் எதிர்நிலை ஆகிவிட்டால் என்ன செய்யும்…? அதனால் தான் சிவ சக்தி என்பது. சக்தி தான் சிவம் ஆகிறது. சிவம் தான் சக்தியாகிறது.
1.சக்தியான நிலைகள் மறைமுகமானது.
2.உறைந்துவிட்டால் சிவம் ஆகின்றது… சிவசக்தி என்று பொருள்
ஒன்றுக்குள் ஒன்று ஜீவன் பெற்று ஒன்றின் அணைப்பில தான் இயங்குகின்றது. முதலில் ஓ… என்று பிரணவம் ஆகின்றது… மற்றொன்று அதற்குள் இருந்து ஒவ்வொரு உணர்வும் தன் தன் நிலைகளை இயக்கும்.
ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம். இதைப் போன்று பல கோடி உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஓ …என்று பிரணவமாகி ம்… என்ற உடல் ஆகிறது.
உயிரணுவின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது எத்தனையோ கோடி உணர்வு கொண்டுதான் எண்ணத்தின் தன்மை வருகின்றது.
உயிர் ஓ என்று இயக்கினாலும் நாம் எண்ணிய உணர்வுகள் ஓமுக்குள் ஓம்… அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்கும். எதிலேயும் ஓ என்ற பிரணவம் இயக்கம் இல்லை என்றால் உடல் உருவாகாது.
1.ஜீவன் ஆனால் தான் மலம் உடலாகின்றது. உறைந்திடும் நிலைகள் உடல்.
2.அதாவது திரேதா யுகம்… உடலுக்குள் உயிரணுவின் தோற்றமான பின்
3.எண்ணத்தின் உணர்வு கொண்டு ஓ… என்று இயக்குகின்றது. உணர்வின் தன்மை ம்… என்று மலமாகிறது.
அதே போல செடிகளில் ஒன்று இணைந்த பின் ஓ என்று குவித்த நிலையில் இயக்குகின்றது ம்… என்று உணர்வின் சத்து உறைகின்றது… சிவமாகிறது.
சக்தியாக இருப்பது செடியாக்கப்படும் பொழுது துவைதம். அதனின் மணம் வெளி வரப்படும் போது சக்தி ஆகின்றது. அதற்குள்ளும் எந்தெந்த உணர்வுகள் உள்ளதோ அதனின் ஜீவன் இயக்கவில்லை என்றால் வளர்ச்சி ஆகாது.
ஒரு கசப்பின் தன்மை வரவேண்டும் என்றால் பல உணர்வுகள் சேர்த்துத் தான் அது உருவாகின்றது. அந்தப் பல உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்றாகி ஒன்றின் உணர்வு கொண்டு இணைந்து அது ஓ என்று ஜீவனாகி ம் என்று உடலாகிறது.
இதைத்தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம். ஒன்றுடன் இணைந்து இயக்கவில்லை என்றால் அது இல்லை என்றே பொருள்.
1.ஆக மொத்தம் எதிலுமே ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு அது இயக்கச்சக்தியாக மாறினால் தான் “ஓம் ஓம் ஓம் ஓம்…”
2.நாம் எதை எண்ணி “ஓம்…” என்று இப்பொழுது தனக்குள் சேர்க்க வேண்டும்…?
3.மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து அதை ஜீவன் பெறச் செய்து ஒளியாக மாற்ற வேண்டும்.
அதைத் தான் இந்த உபதேச வாயிலாக உணர்த்துகின்றோம்.

கண் பார்வை… உணர்ச்சி… ரூபம்… இயக்கம்…!
குருநாதர் ஒரு சமயம் ஒரு வேடிக்கையைக் காட்டுடா…! என்று சொன்னார். ஒரு வாழை மட்டை குப்பைத் தொட்டி அருகே நல்ல பாம்பு படம் எடுத்தது போன்று இருந்தது.
ஐயோ… நல்ல பாம்பு…! என்று நீ சொல் என்றார். சொன்னேன்…! எல்லோரும் பார்த்து ஆமாம் என்கிறார்கள். இது நடந்த நிகழ்ச்சி.
1.மனிதனின் உணர்வுக்குள் எதை ஏற்றுகின்றோமோ அந்த உணர்ச்சியின் இயக்கங்கள் எப்படி ரூபமாகக் காட்டுகிறது…?
2.வாழை மட்டை தான்…! நாகப்பாம்பு போன்று தெரிகின்றது.
இதை ஏற்றுக் கொண்ட பின் மனிதனுக்குள் இந்த உணர்வு எப்படி இயக்குகின்றது…? பாம்பின் ரூபமாக எப்படிக் காட்டுகிறது…? என்று காட்டுகின்றார்.
ஐயோ பாம்பு…! என்று சொன்னேன் எல்லோரும் ஆமாம் என்கிறார்கள். அது அந்தி நேரம். வாழை மட்டையிலே லேசாக மினு மினு என்று மின்னிய பின் அந்த நேரத்திலே அப்படித் தெரிகின்றது. சுருக்கம் சுருக்கமாக இருப்பதால் நிஜமாகவே அது நாகப் பாம்பு போலவே தெரிகின்றது.
எல்லாம் விழுந்து அடித்து ஓடுகின்றார்கள். பாம்பை அடிக்க வேண்டும் கட்டையை எடு… கம்பை எடு…! என்கிறார்கள். ஒருவன் பெரிய கம்பால் அதை அடிக்கின்றான். கம்பிலே அடித்தவுடன் சுற்றி எங்கேயோ சென்று விட்டது… தெரியவில்லை.
காலுக்குள் சென்றது… இல்லை அங்கே போய்விட்டது என்று அலறிக் கொண்டுள்ளார்கள். ஆனால் அடித்தவுடன் சுற்றி மேலே சென்று தூரத்தில் விழுந்து விட்டது.
ஆனால் அந்தப் பக்கம் போனால் அது வாழை மட்டையாகத் தான் இருக்கின்றது. அவன் அதை அடிக்கவில்லை. எங்கேயோ போய்விட்டது… இல்லை இந்தப் பக்கம் போய்விட்டது…! என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த உணர்வுகள்… “நாம் சமைத்த உணர்வுகள் கண்ணிலே எதைக் காட்டுகின்றது…?” என்று இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
வேறு ஒன்றும் வேண்டியதில்லை. ஒரு பொருளை உங்களுக்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
1.கண்ணிலே சிறிது நேரம் அப்படியே உற்றுப் பாருங்கள்.
2.பார்த்துவிட்டுத் திரும்பி வேறு பக்கம் பாருங்கள்.
3.அந்தப் பொருள் சுவரிலே தெரியவரும்.
புள்ளிப் புள்ளியாக ஓட்டையிட்டு ஒரு பொருளை வைத்துக் கொள்ளுங்கள்… அடையாளம் தெரிந்து கொள்வதற்கு…! சிறிது நேரம் அதை உற்றுப் பாருங்கள்
பார்த்துவிட்டு அந்தப் பக்கம் பாருங்கள் அதே ஓட்டை அந்தப் பொருள் எல்லாம் தெரிய வரும்.
1.அதே பொருளைப் பார்த்து விட்டு நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
2.சுவரிலே பார்த்தால் அப்படியே தெரியும்.
இந்த உணர்வுகள் நம் கண்ணிலே அதனுடைய பிரதி பிம்பமாக அப்படித் தெரிய வருகிறது.
கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வார்கள்.
1.அந்த உணர்வின் தன்மை தனக்குள் வரும் போது
2.குவித்து… உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.
பல கோடிச் சரீரங்கள் கடந்து மனிதனான பின்
1.உணர்வின் நோக்கங்கள் கவர்ந்து கொண்டது எதுவோ…
2.அந்த உணர்ச்சிகளைத் தனக்குள் நுகரச் செய்து
3.இந்த உணர்வுக்கொப்பவே “ரூபத்தைக் காட்டுகின்றது…”
இதையெல்லாம் அனுபவித்துச் சொல்லுகின்றேன். குருநாதர் கொடுத்த சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்பதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பூமியில் உள்ள நீர் எங்கோ ஆழத்திற்குப் போய்க் கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் பூமியின் நீர் வளங்கள் ரொம்ப மோசமாகப் போவதால் நம்முடைய நினைவுகளை எல்லாம் மேகங்களில் படரச் செய்து கரும் மேகங்களைக் கூடச் செய்து மழைகளை பெய்ய வைத்தே ஆக வேண்டும். அது நம்மால் முடியும்…!
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இந்த உணர்வை ஊட்டி உங்கள் நினைவினை மேகங்களில் செலுத்தச் செய்து அதன் உணர்வின் துணை கொண்டு மழை பெய்யத் தியானிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.
நீங்கள் எல்லோரும் தியானத்தில் இருந்து… தியானித்த அந்த உணர்வுகளை மேகங்களில் கலக்கச் செய்து
1.நல்ல மழை பெய்ய வேண்டும்
2.இந்த நாடு செழிக்க வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.
நாம் தியானிக்கும் இந்த உணர்வின் வழி இங்கே மழை பெய்தாலும்
1.இங்கே நாம் வாழும் பகுதிகளில் கடும் தீமைகளை விளைவிக்கும் தீய அணுக்கள் வளராது அதைத் தடைபடுத்தவும் உதவும்.
2.இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளையும் குறைக்கச் செய்யும்.
3.ஏனென்றால் உங்களுக்குண்டான திறமைகளை நீங்கள் இதிலே பார்க்கலாம்.
மனிதனான நாம் “எதை அழுத்தமாக எண்ணுகின்றோமோ…” அந்த வலிமையின் தன்மை கூடி இந்த எண்ண அலைகளை நாம் எங்கே நினைவைச் செலுத்துகிறோமோ அங்கே இது பாய்கின்றது. அந்த உணர்வுகள் படர்கின்றது. மழை பெய்ய வைக்கின்றது.
மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் விண்ணிலே நினைவைச் செலுத்தி அவர்களின் அருள் வட்டத்தில் இருந்து நம் உடலைக் காக்கவும் நம் நாட்டைக் காக்கவும் முடியும். ஏனென்றால் ஆதியிலே……
1.வானவியல் தத்துவம் பூவியியலாக மாறினாலும்
2.புவியியலின் உணர்வு கொண்டு தான் மனிதன் உயிரியலாக மாற்றிக் கொண்டது.
3.ஆகவே வானவியல் உணர்வு நமக்குள் வரும் போது அதை வைத்து
4.இந்தப் புவியியல் நிலைகளை மனிதர்கள் நம்மால் சீராக வைக்க முடியும்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அக்காலத்தில் வாழ்ந்த அகஸ்தியன் இந்த பூமியினைத் திருப்பிth தனக்குகந்த நிலைகள் வைத்தது தான் இன்று வரையிலும் இந்தப் பூமி சீராக ஓடிக்கொண்டு இருக்கின்றது.
இருந்தாலும் விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் பூமியின் மையப் பகுதியில் விஷக் கதிரியக்கங்கள் அதிகமாக ஊடுருவிச் சென்று விட்டது. அதனால் சிறிது காலத்தில் பூமியிலே திசை மாற்றம் வரப் போகிறது…!
1.ஒரு டிகிரி மாறி விட்டாலே போதும்….
2.கடல் நீரும் மாறும்.
3.நிலப் பகுதிகளில் நீர்கள் அரிக்கும்.
4.மனித உணர்வுகள் மாறும்.
5.இந்த மனிதனின் நிலைகளில் பெரும் பகுதி மாற்றங்கள் வரும்.
6.அதற்குள் நீங்கள் தியானித்து பூமியின் திசை மாறாது சீராக வைக்க முடியும்.
அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியை நீங்கள் கவர்ந்து மழை பெய்யக்கூடிய ஆற்றல் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வின் ஆற்றல்களை ஒன்று சேர்த்துக் கலக்கப்படும் போது வரும் அதே ஆவியின் நிலைகள்
1.உங்கள் உணர்வின் அலைகளாக மேகங்களாகக் கூட்டப்பட்டு
2.அது பெரும் மழையாகப் பொழியும்.
அதே வழி கொண்டு
1.இந்த பூமியின் (டிகிரி) திசை மாற்றத்தையும் மாற்றலாம்.
2.அன்று அகஸ்தியன் செய்தது போன்று மீண்டும் இந்தப் பூமியில் வாழும் மக்களை நீங்கள் சீராகவும் வைக்க முடியும்.


உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது
ஒரு ஆடு புலியைப் பார்க்கின்றது… புலியோ அதைக் கொன்று தின்னும் நிலை பெற்றது. அதனிடமிருந்து தப்பிக்கும் சிந்தனை ஆட்டிற்கு வருகிறது.
புலியின் உணர்வே நினைவாகின்றது. நினைவின் உணர்வே உடலாகின்றது… ஆட்டின் உடலில் அது வலுப்பெறுகின்றது. அந்தச் சிந்தனை கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க அதனின் வலுப்பெறுகின்றது… அதுவாகின்றது.
மனிதர்களான நாம் இந்த உடலிலிருக்கும் போது
1.எனக்கு இப்படிச் செய்தானே… துன்பம் கொடுத்தானே என்ற இந்த சிந்தனை இந்த உணர்வின் தன்மை வருகிறது.
2.இந்த இடத்தை நாம் வலுவாக்குகின்றோம்… அந்த உடலுக்குள் சென்று விடுகின்றோம்.
ஆனால் உடலிலே வந்த தீமைகளை அகற்ற “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று
1.அந்த உணர்வின் தன்மை… நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
2.அதனின் உணர்வாகி அதனின் நிலைகள் கொண்டு மனித உடலில் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
இந்த உடலிலிருந்து தான் ஒளியாக மாற்றி அமைக்க முடியும். இன்னொரு உடலுக்குள் இழுக்கப்பட்டு விட்டால் மீண்டும் வேறு ஒரு உருவாக உயிர் நம்மை மாற்றிவிடும்.
ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை பெறுகின்றோம்.
1.அங்கே… உடல்கள் உருவங்கள் மாறுகின்றது.
2.இங்கே… ஒளியின் தன்மை பெறுகின்றோம்.
உயிர் ஒளியானது… மனிதனான பின் அறிவாக அறிந்து கொள்கிறோம். அறிந்திடும் ஒளியின் உணர்வாக விளைகின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலில் “சிந்தனை வந்த பின்பு தான்…” இதிலே உறைந்த உணர்வுகள் அதனின் இயக்கத்திற்கு வருகின்றது.
நான் கோபமாக இருக்கின்றேன் என்று வைத்துக் கொண்டால் எனக்கு அது சாதகமாக இருந்தால் நல்லது. நான் தவறு செய்கின்றேன்… நண்பன் என்னுடைய தவறுக்கு ஒத்துழைத்தால் இது நல்லதாகின்றது.
ஆனால் மாறாக… என் தவறைச் சுட்டிக் காட்டும் நிலை வந்தால் எனக்கு எதிரியாகின்றது. ஆக நல்லது நல்லதாக எண்ண முடியாது… கெட்டது கெட்டதாக எண்ண முடியாது.
1.தனக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்…
2.ஒத்து வரவில்லை என்றால் எதிரியாக்குகிறோம்.
மிளகாய் காரமானது தான். அதை அளவுடன் இணைத்தால் நல்லதாகிறது அதிகமாகப் போட்டுவிட்டால் ஏற்றுக் கொள்வதில்லை… குறைத்துப் போட்டு விட்டால் சப்… என்று ஆகிவிடுகிறது.
நல்லது நல்லதும் அல்ல… கெட்டது கெட்டதும் அல்ல.
1.ஒளியின் சரீரம் பெற்ற… என்றுமே நிலையாக இருக்கும் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.
2.உயிர் ஒளியாக நின்று எதையெல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ “உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது…”

புறநிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள்… விண் செல்லும் மார்க்கத்தை அறிய முற்படுங்கள்
அன்று… ஆதிசங்கரரும் கோலமாமகரிஷியும் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு தங்களுக்குள் விளைய வைத்ததைத் தன் சீடர்களுக்குள் பதிவு செய்தார்கள்.
அவர் மீது பற்று கொண்ட சீடர்கள்…
1.அவர்கள் எதை உணர்த்தினார்களோ அதைக் கொண்டு அந்த ஆன்மாவை உந்தித் தள்ளுகின்றார்கள்…
2.இருவரும் சப்தரிஷி மண்டலம் அடைந்தார்கள்.
நமது குருநாதர் எத்தனையோ கோடி நிலைகள் பெற்றிருந்தாலும்… “எனக்கு அந்தக் குருவின் ஆசி இருந்தால்…” மாட மாளிகைகளை… கூட கோபுரங்களைக் கட்டி விடுவேன்
1.”அவருடைய நாமத்தை உலகமெல்லாம் பரப்புவேன்…!” என்ற பக்தர்கள் தான் சிஷ்யர்கள் தான் இன்று பெரும்பகுதி உண்டு.
2.அதனால் பலன் இல்லை…!
அறிந்து கொள்ளும் ஆற்றல்கள்…. இந்த வாழ்க்கையில் அவர் எப்படி மந்திரம் செய்கிறார்…? இவர் என்ன செய்கிறார்…? அவர் என்ன செய்கிறார்…? என்ற நிலைகளை அறிய உங்கள் நாட்டத்தைச் செலுத்த வேண்டாம்.
காரணம்… எம்மை நாடி வருவோரின் ஏக்கம் எதுவோ அதன் வழி தான் அவருக்குள் உணர்வுகள் பதிவாகின்றது.
மந்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால் அதிலே தான் நோக்கம் இருக்கும்… மந்திரத்தின் செயலைக் கேட்க வேண்டும் என்றால் அது ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று தான் பொருள்.
அதன் மேல் எண்ணம் கொண்டு விவரங்களைத் தெரிந்து கொண்டால் அது தான் வளரும். இதிலிருந்து விடுபடும் வழிமுறைகள் எப்படி…? என்று கேட்டால் விடுபடும் உணர்வுகள் வளரும்.
அதாவது…
1.என்னிடம் கேட்ட உணர்வு கொண்டு தான் உங்களுக்குள் அது பதிவாகும்.
2.“கஷ்டமாக இருக்கிறது…” என்று சொல்லிக் கேட்டால் அந்தக் கஷ்டத்தையே வளர்க்க உதவும்.
3.கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டறிந்தால் “கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் விளையும்…”
கேட்டறிவோர் உணர்வின் தன்மை அது எதுவோ அதுதான் வளரும். அதனால் தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய் என்று சொன்னது.
என் கஷ்டம் என்ன விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…! என்றால்… அது வந்து விடும்.
1.இந்த மனித வாழ்க்கையில் இருந்து “நான் நல்ல நிலை பெற முடியுமா… மீள முடியுமா…? சந்தேகம்…!
2.மீள முடியாது என்ற நிலைகளில் “வலு இழந்து விட்டால்…” மீள முடியும் என்ற நிலை வராது.
ஆனால் மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்பெற்றுக் கொண்டால் அந்த எண்ணம்… கொடுக்கும் வாக்கின் தன்மையைப் பதிவு செய்தால் அதன் வளர்ச்சிக்கு நிச்சயம் வரும்.
பெரும்பகுதியானவர்கள் இன்று கஷ்டத்தைப் பற்றித் தான் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது எப்படி ஆனது…? என்ன ஆனது…? என்று கேட்கிறார்கள்.
உணர்வின் தன்மை இயக்கம் எப்படி ஆகிறது…! என்பதைப் பற்றி பல விளக்கவுரைகளை… பல முறைகளில் கொடுத்துள்ளேன். இது அவர்களுக்குள் பதிவாகவில்லை என்று தான் பொருள்.
1.இதிலிருந்து விடுபட்டு… நாம் மேற்கொண்டு விண் செல்லும் மார்க்கங்களை எண்ணி ஏங்கி… அதைப் பெற்று
2.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் அது பதிவாகும்.
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் உடலுக்குள் அந்த நற்சக்திகள் விளையும் தன்மை வரும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மின்னல் ஒரு மனிதனைத் தாக்கினால் அந்த உடல் கருகி விடுகின்றது. ஆனால் உயிர் கருகுவதில்லை. அது துடித்துக் கொண்டே தான் இருக்கும். (உயிருக்கு அழிவே இல்லை…!)
பின் உடலை விட்டுச் சென்ற பின் இந்தக் கருகிய உணர்வு கொண்டு மீண்டும் புழுவாகப் பூச்சியாகத் தான் அது பிறக்கும். மனித உருவுக்கு வர முடியாது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் வலு ஏற்றிக் கொண்டால்
1.அந்த மின்னலையும் நமக்குள் மின் கதிராக மாற்றி
2.மின்னலில் வரும் எதிர் நிலையை மாற்றி நமக்குள் தீமைகளை வென்றிடும் சக்தியாகப் பெற முடியும்.
அதாவது மின்னல் பட்ட பின்… உடலையோ மரத்தையோ மற்றதைக் கருகச் செய்கிறது. மின்னல் பூமியின் நடு மையம் ஊடுருவிச் சென்றால் அங்கே கொதிகலன்களாக மாறிப் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
அத்தகைய மின்னலின் தன்மையும் தனக்குள் கவர்ந்து எதனையுமே வென்றிடும் அருள் சக்தியாகப் பெற முடியும். அத்தகைய பேரருள் உணர்வைத்தான் ஞானத்தின் உணர்வாக உங்களுக்குள் பதியச் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).
பேரருள் என்றால் “அனைத்தையும் இயக்கக்கூடிய.. அறிந்து கொள்ளக்கூடிய சக்தி…!” என்று பொருள். அப்படி ஆனது தான் துருவ நட்சத்திரமும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் வளரும் சப்தரிஷி மண்டலமும்.
சூரியன் எப்படி மற்ற கோள்களையும் நட்சத்திரங்களையும் தன்னுடன் இணைந்து வாழச் செய்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வினை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொண்டால் அதன் அரவணைப்பில் சென்று நாமும் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
1.இனம் இனத்தைத் தான் சேரும்.
2.இனம் இனத்தைத்தான் வளர்க்கும்.
வேதனை என்ற உணர்வை விளைய வைத்தால் அந்த வேதனைப்படுத்தும் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த இனத்தின் ரூபத்தைப் பெற உயிர் அங்கே அழைத்துச் சென்று அந்த உடலைப் பெறச் செய்கிறது.
அதைப் போல துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும்
1.பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டால்… அதன் வலுவைப் பெற்றால்
2.அந்த இனத்தோடு நாம் சேர்க்கப்பட்டு
3.நம் உடலில் வரும் இருளை அகற்றி மெய் வாழ்க்கை வாழ முடியும்.
உங்களை நம்புங்கள். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ உயிர் உங்களை அதுவாகவே உருவாக்குகின்றது அதன் வழியே உங்களை வழி நடத்துகின்றது. பேரருள் பெற்றுப் பேரொளியாக மாறுங்கள்…!


பெண்கள் துணை இல்லையென்றால் சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்
தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதைப்போல உயிருடன் ஒன்றி இணைந்து வாழ்வதே வசிஷ்டரும் அருந்ததியும் என்பது.
உடலில் இருக்கும் பொழுது தான் ஆண்பால் பெண்பால். உடலை விட்டுச் சென்று விட்டால் உறைந்தது ஆண்பால் தான்.
1.பெண்பால் என்பது உணர்வின் உணர்வுகள் இங்கே வருவது தான்.
2.அது இரண்டற இணைந்து விட்டால் ஆண்பால் பெண்பால் சேர்ந்து கலந்தே செயல்படும்… “சிவசக்தி…” என்பார்கள்.
ஆகவே பெண்கள் தான் ஆண்களைக் காட்டிலும் பெரும்பகுதி தனக்குள் சக்தி வாய்ந்த நிலையை உருவாக்கி ஏழாவது நிலை பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.
ஆண்களைப் பற்றித் தான் பெரும்பகுதி சொல்கின்றார்கள்… பெண்கள் ரிஷித் தன்மை பெற்றது பற்றிச் சொல்லவில்லையே…! என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காரணம்… சாஸ்திர விதிகள் அனைத்துமே பெண்களைப் பற்றி இழுக்குப்படுத்தித் தான் வெளிப்படுத்தி இருப்பார்களே தவிர உயர்ந்த நிலைகளைச் சொல்வதில்லை.
பதிவிரதையாக இருக்க வேண்டும் உத்தமியாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்குத் தான் கட்டுப்பாடு… ஆண்களுக்கு அப்படி இல்லை. எல்லா மதத்திலும் அப்படித்தான்… பெண்களைத்தான் பழித்து பேசியிருப்பார்கள்.
இன்று ஆணாக இருக்கலாம்…
1.ஆனால் உருவம் ஆகப்படும் போது பெண்கள் மீது மோகம் கொண்டால் அடுத்து இவர் பெண்ணாகத்தான் பிறப்பார்.
2.இன்று ஆண் பெண்ணாகப் பிறக்கின்றான்.
இதைப் போல சக்தி என்பது பெண்பால் தான். எது கவர்ந்து கொண்ட சக்தியோ வசிஷ்டரும் அருந்ததி போல கவர்ந்து கொண்ட சக்தியாகத்தான் இந்த உணர்வுகள் ஈர்க்கும்.
1.பெண்கள் தான் ஏராளமானோர் சப்தரிஷி மண்டலத்தில் (ஆண்பால் பெண்பால்) சிவசக்தியாக உணர்வின் இயக்கமாக இயக்கி வருகின்றனர்.
2.தன் கணவனின் எண்ணம் கொண்டு இணைந்திட்ட உணர்வுகள் சிவ சக்தியாக இயங்கிக் கொண்டுள்ளார்கள்.
3.தான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக சிவசக்தியாக இன்றும் இருக்கின்றார்கள்.
ஆண்கள் அங்கே குறைவுதான்… பெண்கள் தான் அங்கே அதிகமாக இணைந்துள்ளார்கள். ஆண்கள் ஒளி நட்சத்திரமாக ஆன நிலைகள் குறைவுதான். பெண்களுடைய சக்தி உறுதி கொண்டு தான் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள்.
தங்கள் உடலிலே ஒரு கஷ்டம் வந்தாலும் பெண்கள் அதை எண்ணுவதில்லை. விட்டுக் கஷ்டத்தைப் போக்க மில்லில் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் காலையில் எழுந்து குடும்பத்திற்கு வேண்டிய அனைத்தையும் சமைத்து எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அவர்களும் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு முதலிலே வந்து உற்பத்தியையும் அதிகமாக எடுத்து விடுகின்றனர்.
பெண்களுக்கு வலிமை அதிகம் ஆண்களுக்குக் குறைவுதான். நான் தவறாகச் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை…! இயற்கையின் உணர்வின் சக்தி அதுதான்.
அவர்கள் உடலில் முடியவில்லை என்றாலும் வலுவான எண்ணங்கள் கொண்டு சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறக்கூடிய தகுதி அவர்களுக்குத் தான் உண்டு.
1.எந்த அளவுக்குப் பெண்கள் தனக்குள் அதை வளர்க்கின்றார்களோ இந்த எண்ணம் உலகைக் காக்கும் நிலைக்கே வரும்.
2.சக்தி இல்லை என்றால் சிவம் இல்லை.
மற்றதை வளர்த்திடும் நிலையாக தன் இனத்தை வளர்த்திடும் காத்திடும் நிலைகள் பெற்றவர்கள் தான் பெண்கள். எதனின் உணர்வு கொண்டு கருத்தன்மையாகிக் குழந்தையை உருவாக்குகின்றார்களோ அந்த மெய் உணர்வை வளர்க்கும் ஆற்றல் அவர்களுக்குத்தான் அதிகமாக உண்டு.
எதனின் பற்று அதிகமாகின்றதோ அதனின் தன்மை கொண்டு வளர்த்திடும் சக்தியும் சக்தி அதிகமாகின்றது. பெண்கள் தான் அதிக அளவில் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்துள்ளார்கள்.
வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இந்த உடல் தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுதான் விசிஷ்டாத்வைதம் என்று சொல்வது. எந்த உணர்வின் தன்மையை உடலாக ஆக்கியிருக்கின்றதோ… சக்தியாக எடுக்கின்றோமா… இது இணைந்தே அங்கே செயல்படும்.
ஆக பெண்களுக்கு தான் அதிகச் சக்தி உண்டு…! ஆனால் இதனின் விளக்கம் மதங்களிலே காண முடியாது… தரம் குறைத்துத் தான் காட்டி இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடிமையாக்கித் தான் காட்டியிருப்பார்கள். ஆனால்
1.அவர்கள் துணை இல்லை என்றால்
2.சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த மனித உடல் வாழ்க்கையில் சிறிதளவு நாம் பிசகினாலும் இன்னொரு உடலைத்தான் பெற முடியுமே தவிர மீண்டும் வேறு ஒரு உடல் பெற்றாலும் மனிதனாக அடுத்து வர முடியாது.
ஏனென்றால்… “இன்று விஞ்ஞான உலகில் காற்று மண்டலமே நச்சுத் தன்மை அடைந்திருக்கப்படும் பொழுது…” நாம் சப்தரிஷி மண்டலத்தை அடையத் தவறினால் நாம் இந்தப் பூமியில் மீண்டும் விஷத் தன்மைகள் பரவி இருக்கும் இந்த நேரத்தில் வேதனை என்ற உணர்வு அதிகரித்து மனிதனுக்குப் பின் பாம்பினங்களாகப் பிறக்கும் தன்மையே வருகின்றது.
ஆனால் மனிதனாக உருவான நிலையில் இந்த உயிர் எத்தனையோ கோடி உடல்களிலிருந்து
1.“தீமைகளை நீக்க வேண்டும்… தீமைகளை நீக்க வேண்டும்…!” என்று
2.அந்தந்த உடல்களிலிருந்து எண்ணி ஏங்கிய உணர்வுக்கொப்ப
3.தீமையிலிருந்து விடுபடும் மனித உடலாக உருவாக்கியுள்ளது.
4.ஆகவே இந்த உடலில் நம்மை அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பது நமது கடமைகளாக இருக்க வேண்டும்.
இந்த உயிரின் இயக்கம் தான் நமது உடல். வாழ்க்கையில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கொப்ப எந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தோமோ இந்த உயிர் அந்தந்த உணர்வுக்கொப்பப் பரிணாம வளர்ச்சி அடையச் செய்தது.
ஆகவே மனிதனான பின் நமது பரிணாம வளர்ச்சி எதுவாக இருக்க வேண்டும்…?
உயிர் ஒளியானது. நம் உணர்வுகளை ஒளியாக்கி என்றுமே ஒளியின் உடலைப் பெறுவது தான் நமது பரிணாம வளர்ச்சியின் கடைசி எல்லை. ஆனால் அந்த ஒளி உடலை நாம் பெற முயற்சிக்கின்றோமா…?
மனிதனை உருவாக்கிய இந்த உயிருக்கு வேதனை என்ற உணர்வை ஊட்டினால் வேதனைப்படும் உணர்ச்சிகளாக வளர்த்து வேதனைப்படச் செய்யும் அந்த உயிருடன் ஒன்றித் தான் நாம் வாழ்கின்றோம்.
1.வேதனை உணர்வுகளை முழுமையாக்கிய பின்
2.இந்த உடலை விட்டு உயிர் வெளிவரப்படும் பொழுது
3.வேதனையை அனுபவிக்கும் உடலாகத்தான் அடுத்து மாற்றுகின்றது.
ஆகவே
1.வேதனையற்ற உணர்வு கொண்டு அவனுடன் அவனாக நாம் சேர்வதே நமக்கு நல்லது… அது தான் கல்கி.
2.ஏனென்றால் உயிர் ஒளியாக இருக்கின்றது.
3.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
4.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை வேதனையாகவோ பகைமையாகவோ வெறுப்பாகவோ மாற்றக் கூடாது.
ஒளியாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
இந்தப் பிறவிக்கடனை நீங்கி நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே பேரொளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு நிமிடமும் நுகர்ந்து பழக வேண்டும். அப்பொழுது நம் உடலில் வரும் அந்த இருளை நீக்கும் வலிமையைப் பெறுகின்றோம்.
இதைப் போல் நாம் தியானத்தின் மூலம் அடுக்கடுக்காக எடுத்துக் கொண்ட வலிமை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து
2.அந்த நஞ்சுகளைக் கரைக்கும் தன்மைகள் வளர வேண்டும்.
3.அவர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.
நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலம் அடைந்தால் அங்கிருந்து வரும் பேரருள் உணர்வை நாம் எளிதில் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றோம்.
உயிர் எப்படி ஒவ்வொரு உணர்வையும் தெளிவாக்குகின்றதோ அதே போல அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையை நம் உடலிலே வளர்க்கப்படும் பொழுது அந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் உடலாகவே நிலை பெறுகின்றது.
ஆக
1.என்றுமே ஏகாந்த நிலையாக
2.எதிர்ப்போ விருப்போ இல்லாத உணர்வை இந்த உடலில் வளர்த்து
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சேர வேண்டும்.
அது தான் கடைசி நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மகரிஷிகள் அருள் சக்தியைப் பெற்று இந்த உடலுக்குப் பின் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும் என்று என்னுடைய சகோதரன் அதிகமாகப் பற்று வைக்கவில்லை.
அப்படி இருக்க வேண்டும்… இப்படி இருக்க வேண்டும்…! என்று இந்தக் கணக்கை தான் அவர் போட்டுக் கொண்டு இருந்தார்.
ஏனென்றால் நம்முடன் பழகிய அந்த உணர்வு வந்த பின் இந்த தியான வழி அன்பர்களின் உணர்வு துணை கொண்டு தான் அந்த ஆன்மாவை விண் செலுத்தி இந்த உணர்வின் தன்மை கரைத்தல் வேண்டும்.
ஏனென்றால் எனது சகோதரர் எனக்கு மூத்தவர் இங்கே தபோவனத்திலிருந்து பிரிந்தாலும் அவருக்கு இந்த எண்ணமில்லை.
என்னிடம் அவர் கேட்பார். எனக்கு அது இல்லை… இது இல்லை…! பையன் இப்படி இருக்கிறான்… அப்படி இருக்கிறான்… என்று சொல்லிக் கொண்டு இந்த உணர்வைத் தான் அதிகமாக வளர்த்தார். ஆனால் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும் என்ற பற்று அவருடன் இல்லை.
கடைசியில் “எனக்கு நெஞ்சு வலிக்கிறது…! என்று என்னிடம் சொன்ன போது நான் (ஞானகுரு) சொன்னேன்.
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
2.அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்…! என்று சொன்னேன்.
3.எனக்கு வலி இல்லை….! அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று எண்ணி
4.உடலுக்குள் அதைச் செலுத்துங்கள்..! என்று சொன்னேன்.
அவர் எங்கே…? நான் நெஞ்சு வலிக்கிறது என்று சொல்கிறேன்… நீ இப்படிச் சொல்கிறாயே என்கிறார்…!
யார்…? என்னுடன் கூடப் பிறந்தவர். நான் சொல்வதை இதை அவரால் எண்ண முடியவில்லை. காரணம் இந்த “உடல் பற்று தான்…” அவருக்குள் அதிகமாகியது.
80 வயது ஆகிவிட்டது…! நான் போகிறேன்… என்று
1.இனி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அங்கே போங்கள்…! என்று சொன்னேன்.
2.அந்த உணர்வு அவர்களுக்குள் கொஞ்சம் கூட எட்டவில்லை.
காரணம்… அவர் என் தாய் தந்தைக்கு ரொம்பத் தொல்லை கொடுத்து விட்டார். அதன் உணர்வு வரப்போகும் போது அந்த எண்ணங்கள் அந்த உறுதியான நிலைகள் மீண்டும் அவரைப் பிறவிக்கு இழுக்கும் தன்மை வந்தது.
இருந்தாலும் நம்முடன் அவர் வாழ்ந்த அந்த பழக்கத்தில் இருந்ததனால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் அவரை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விண் செலுத்த முடிந்தது. ஒளிச் சரீரம் பெறச் செய்ய முடிந்தது.
இதைப் போலத் தான் குடும்பங்களில் பற்று இல்லாமல் போனாலும் ஆன்மீக வழியில் அதாவது இந்தத் தியான வழி பற்றிலேயே இல்லாமல் இருந்தாலும் கூட உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்களை
1.அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் யாம் சொல்லும் (ஞானகுரு) இந்தத் தியானத்தை வழிப்படுத்தி
2.அந்த உயிரான்மாக்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
3.அவர் எப்படி இருந்தாலும் அந்த ஆன்மாக்களை… அந்தச் சூட்சம சரீரத்தை விண் செலுத்தி
4.இந்த உடலில் உள்ள நஞ்சுகளை அங்கே சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்திலே கரைத்து விடவேண்டும்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நாம் அவசியம் விண் செலுத்தியே ஆக வேண்டும்.


போற்றுதல் என்பது புறத்திலே தள்ளுவது… “ஏங்குவது என்பது தன் அகத்திற்குள் விளையச் செய்வது…”
பல செடிகளின் உணர்வுகள் காற்றிலே படர்ந்து வரப்படும் பொழுது… சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது எதன் அளவுகோல் அதிகமாக ஏற்கின்றதோ அது கருவாகி ஒரு வித்தாகிறது.
மனிதனுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் கொண்டு மற்றவர்கள் தீமை விளைவிக்கும் செயல்களை உற்றுப் பார்க்கப்படும் போது
1.அது நம் நல்ல குணத்துடன் இணைந்து விட்டால் அடுத்து இந்த உணர்வின் இயக்கம்
2.எங்கே சண்டை போடுகின்றார்களோ அதை எல்லாம் பார்க்கும்படி செய்யும்.
3.அடிக்கடி அதனை எண்ணினால் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அது விளையும்.
ஒருவன் கொடூரமான செயல்களைச் செய்கின்றான் என்று பார்த்து அவனை வெறுக்கின்றோம். நல்லதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் இருந்தாலும் அந்தக் கொடூர உணர்வுகள் அந்த நல்லதுடன் இணைந்த பின் “நல்ல உணர்வைக் காக்கக் கொடூரச் செயலைச் செயல்படும் உணர்வுகள்” நமக்குள் விளைந்து விடுகின்றது.
ஆன்மாவிலே இது அதிகமாகப் பரவப்படும் பொழுது இந்த உணர்வின் செயலாக்கமாக இது உருவாக்கப்பட்டு அதனின் உணர்வின் குணங்கள் நமக்குள் விளைகின்றது.
இதைப் போலத் தான்
1.தினந்தோறும் அடிக்கடி… மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்களைக் காத்திடும் உணர்வுகளில் இணைத்துக் கொண்டே வருகின்றோம்.
2.உங்கள் வாழ்க்கையில் இடர்படும் உணர்வுடன் எமது உபதேச உணர்வுகள் இடைமறித்து இணைக்கப்பட்டு
3.அந்த உணர்வின் நினைவாற்றல் கொண்டு அதிலே துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைத்து இணைத்து
4.தாவர இனங்களுக்கு உரமிடுவது போல உங்கள் நல்ல எண்ணங்களைக் காத்திட… அதை இணைத்து இணைத்துப் பதிவு செய்கின்றேன்.
அப்படிப் பதிவு செய்த நிலைகள் கொண்டு உங்களுக்குள் அது வளர்ச்சியாகும்.
ஒரு செடி தழைத்து வளர்ந்தாலும் அது குறுகிய காலத்தில் இறந்து விடுகின்றது. ஆனால் அதற்குள் விளைந்த வித்துக்கள் அந்தச் செடி மடிந்தாலும் விளைந்த வித்து காற்றிலே கலந்திருக்கும் தன் இனமான சத்தைக் கவர்ந்து இனத்தை மீண்டும் பெருக்குகின்றது. அது மடிவதில்லை…!
ஆனால் வித்து முழுமையாக மடிந்து விட்டால் செடியை மீண்டும் நாம் கொண்டுவர முடியாது.
இதைப்போல நமக்குள் இருக்கும் தீமையான உணர்வின் சத்தை முழுமையாக மடியச் செய்ய முடியும். அருள் ஞானிகள் உணர்வை இணைத்து விட்டால் தீமைகள் மறைகின்றது. முளைக்காத நிலைகள் தடைப்படுத்த முடியும்.
1.தடைப்படுத்தும் அந்த அருள் ஞானிகள் உணர்வைத் தான் உங்களுக்குள் இணைத்துக் கொண்டே வருகின்றேன்.
2.அவ்வாறு இணைத்திடும் நிலைகள் கொண்டு தீமைகளுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்திக் கொண்டிருந்தால் அது விளையாது.
ஒரு மனிதன் நம் மீது கோபப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். இரு நான் உன்னை என்ன செய்கின்றேன்…? என்ற நிலையில் அந்த உணர்வினை எனக்குள் இணைத்து விட்டால் என்னை இப்படிச் சொன்னான்… சொன்னான்…! என்று அதுவும் சேர்ந்து வளர்கின்றது.
அவனை அழித்திடும் உணர்வே செல்கிறது. நம்மைக் காத்திடும் நினைவுகள் நமக்குள் வளர்வதில்லை. அவ்வாறு காத்திடும் நிலைகளை இழந்து அழித்திடும் நிலையாகச் சென்று விட்டால் தனக்குள் இருக்கும் நல்ல குணத்திற்கு ஊட்டம் கொடுக்காது அதைத் தடைப்படுத்தி விடும்.
அழித்திடும் உணர்வுகளே மேலோங்கி மற்றொன்றை அழித்து உணவாக உட்கொள்ளும் மிருக உணர்வுகள் இங்கே விளைந்து விடும். உடலை விட்டுச் சென்றால் அடுத்து மனிதனல்லாத உடலாகத்தான் பிறக்க நேரும்.
அதே சமயம் மகரிஷிகள் மனித உடலிலேயே இருளைப் போக்கி ஒளியின் தன்மையாகச் சேர்த்து வளர்த்துக் கொண்டவர்கள். அதை இப்பொழுது உங்களுக்குள் இணைக்கின்றோம்.
சிறிது காலத்திற்கு உங்களுடைய நினைவை
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி
2.பதிவான உணர்வின் சக்திக்கு ஊட்டம் கொடுத்து அதனை நாம் கூட்டிப் பழகுதல் வேண்டும்.
3.அவ்வாறு சேர்த்தால் சிறிது காலத்தில் கவரும் சக்தியை அது பெற்றுவிடும்.
4.அவ்வாறு பெற்று விட்டால் நமது ஞானம் அதன் வழியிலேயே செயல்படுத்தும்.
செடிக்கு… அதற்குண்டான சத்தான நிலைகள் கொடுத்து உரமிட்டு அந்த வித்தினைத் திறன்பட உருவாக்கி விட்டால் அதை ஊன்றினால் மீண்டும் அதனுடைய இனமாக அது வளரத் தொடங்குகிறது.
இதைப் போலத்தான் அருள் ஞானிகளுடைய வித்தினை உரமாக உங்களுக்குள் இடப்பட்டு… உயர்ந்த சக்தியினை அவர்கள் பெற்ற நிலையினை உங்களுக்குள் இணைக்கச் செய்து வளர்க்கின்றோம்.
அதிலே உங்கள் நினைவு கூர்மையாக இருந்தால் தான் அது நன்றாக முளைத்து வளரும்.
மேலெழுந்த வாரியாகப் போட்டுவிட்டால் எறும்புகளோ மற்ற பறவைகளோ தின்றுவிடும்.
1.கேட்ட உபதேசங்களை மேல் மட்டத்தில் மட்டும் ஆகா…! என்று போற்றி விட்டால் அது முளைக்காது.
2.போற்றுதலை விடுத்து விட்டு அதைப் பெற வேண்டும் என்று ஏக்கத்தினைக் கொண்டு வந்தால் அது நன்கு வளர்ச்சி பெறும்.
போற்றுதல் என்பது புறத்திலே தள்ளுவது. ஏங்குவது என்பது தன் அகத்திற்குள் விளையச் செய்வது.
இதைக் கேட்டுணர்ந்தோர் எந்த அளவுகோல் கொண்டு நீங்கள் இதை ஏற்றுக் கொள்கின்றீர்களோ அந்த அருள் ஞானிகளின் வித்துக்கள் உங்களுக்குள் இணைந்து அதன் சத்தைக் கவரும் நிலையாக வளர்ச்சி பெற்று… உங்களுக்குள் நல்ல முறையில் இது பலன் தரும்.
சாமியைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் புகழ்ந்த நிலைகள் கொண்டு ஏற்றுக் கொள்ளும்… கவர்ந்திடும் நிலையற்றுப் போய்விடும்.
1.தனக்குள் கவர்ந்திடும் அந்த நிலை இருந்தால்தான் அது ஆழப் பதியும்
2.அந்த உணர்வின் துணை கொண்டு புவியின் ஈர்ப்பால் அந்த ஞானிகள் உணர்வினைக் கவர முடியும்.
இந்த உடலின் ஈர்ப்புக்குள் நாம் பதிந்து கொண்ட உணர்வு எதுவோ அதைக் கவர்ந்து அதன் நிலைகளில் இது விளையச் செய்யும். அதன் வழி செல்வது தான் சிறந்த நிலைகள்.
மகரிஷிகள் உணர்வை இணைத்து இணைத்துச் சிறிது காலம் செயல்படுத்தினால் தன்னிச்சையாக வளரும் தன்மையும் உடலை விட்டு அகன்ற பின் அந்த உணர்வின் வித்துக்கள் தீமை அகற்றி மெய் ஒளியின் உணர்வாக நம்மை அடையச் செய்யும்.
இந்த உடலில் இருந்து தான் நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.
யாம் உபதேசித்ததை
1.நாள் முழுவதற்கும் உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.சந்தர்ப்பத்தால் கேட்டறிந்த தீமைகள் விலக வேண்டும்
3.தூய்மையான நிலைகள் நமக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
வேலை செய்யும் போது அழுக்குப்பட்டால் எப்படி உடனுக்குடன் அதைக் கழுவுகின்றோமோ அதைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி கொண்டு எண்ணத்தால் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தச் சத்தைக் கூட்டினால் தான் இது விளையும்.
ஒரு தரம் எண்ணினேன் பதிவாக்கிக் கொண்டேன் என்று தன்னிச்சையாக விளைவது வேறு. அதற்குப் பதில் எண்ணத்தால் நாம் கவர்ந்து அதை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உணர்வின் இயக்கமாக செடியில் கலந்த பின் (உரங்கள் இணைந்த பின்) அது எப்படி வளர்ச்சிக்கு வருகின்றதோ அதைப்போல
1.நம் உடலில் அது முழுமையாக விளையும் பருவம் எட்டும் வரையிலும்
2.எண்ணத்தால் நாம் மகரிஷிகளின் சக்திகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.
3.அதற்கு உணவை ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த உணர்வின் தன்மை கொண்டு தன் இனமாக அது பெருக்கி விட்டால் அதற்குப் பின் உங்கள் எண்ணம் தேவையில்லை… தன்னிச்சையாக வளரத் தொடங்கும். தூய்மையான ஒளியின் உணர்வாக நமக்குள் அது விளைந்து விடும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஞ்ஞானி என்ன செய்கிறான்…?
மனிதனை 1500 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழ வைக்கலாம்…! என்று சொல்கிறான். மற்ற உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களைச் சேர்த்துக் கவர்ந்து மனித உடலில் நீடித்த நாள் வாழும் வழிக்கு அந்த அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வருகிறான்.
இந்த அணுக்களின் பெருக்கத்தை இப்படிக் கொண்டு வரப்போகும் போது 1500 ஆண்டுகள் நாம் வாழலாம் என்று சொல்கிறான்.
அதர்வண வேதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டவன் என்ன செய்கிறான்…?
இன்னொரு மனித உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை மந்திரங்களாகப் பிரித்து எடுத்து அந்த உணர்வை வலிமையாக்கி எந்த உடலுக்குள்ளும் போய் இருந்து அது சாகாக் கலையாக அடுத்த அடுத்த உடலுக்குள் சென்று “ரொம்ப நாள் நீடித்து வாழலாம்…” என்று சொல்கிறான்,
மானை ஒரு புலி அடித்துச் சாப்பிட்டால் அந்த மானின் உயிரான்மா புலியின் உடலுக்குள் போகின்றது. அதைப் போல அன்றைய ஒவ்வொரு அரசனும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை கற்றுக் கொண்டவர்கள்.
ஒரு உடலுக்குள் இந்த உணர்வு வலுவாகி விட்டது என்றால் அந்த உடலுக்குள் சென்று அதை அடக்கி அங்கே ஆட்சி புரிவது.
அப்படிப் போனாலும் அந்த உடல் ரொம்ப பின்னமாகித் தாங்கவில்லை என்றால் அதிலே சேர்த்துச் கொண்ட உணர்வு போய் அடுத்து இன்னொரு உடலுக்குள் போகும். சாகாக் கலையாக சுகத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.
மனித உடலில் இருந்தே சர்வத்தையும் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்கிற நிலைகளில் போனவர்கள் தான் அந்த அரசர்கள்.
இப்படி வந்தது தான் எகிப்தில் எடுத்துக் கொண்டால் இறந்தவர்களின் உடல்கள் அழிந்து போகாதபடி பத்திரப்படுத்தி வைக்கின்றார்கள்.
அதாவது இந்த உடலில் இருந்து போய் விட்டோம் என்றாலும் மறுபடியும் இந்த உடலிலே புகுந்து நாம் வர வேண்டும் என்ற நிலைகளுக்குப் பத்திரமாக வைக்கின்றார்கள்.
உதாரணமாக… குருமார்கள் என்று சொல்லக் கூடியவர்களை எடுத்துக் கொண்டாலும் மந்திரங்களைச் சொல்லி முழுமையாக்கிக் கொள்வார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட மந்திரத்திற்குப்பின் அதே கூடுவிட்டு கூடு பாயும் நிலைகளுக்கு அதற்கென்று தன் சீடர்களை நியமித்து அவர்களை மந்திரம் சொல்லச் சொல்வார்கள்.
தனக்கு வயதாகிப் போய் விட்டது என்றால் அந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்லி அதற்கு என்று மயக்க மருந்து கொடுத்துச் சிறுகச் சிறுக குறைத்துக் கொள்ள வேண்டும்.
அப்படிக் குறைத்த பின் உச்சி வழியாக உயிர் வெளியே போக வேண்டும் என்ற நிலையில் மண்டையில் தேங்காயை உடைக்கச் சொல்வார்கள். தேங்காயை உடைத்தால் அது “கபால வழி மோட்சம்…!’ என்பார்கள்.
யார் அடிக்கிறாரோ இறக்கிற பொழுது அந்த எண்ணம் இங்கே வந்ததும் அந்தச் சீடன் உடலுக்குள்ளே வந்து விடும். வந்த பின்னாடி அவர் உடலிலிருக்கும் பொழுது அவர் நடத்திய வழியை எல்லாம் இந்த உடலிலிருந்து மீண்டும் நடத்தும்.
1.இறந்த உடலைச் சமாதியாக வைத்துக் குரு பூஜை செய்வார்கள்.
2.அந்தக் குருவையே வணங்கி அவருடைய அணுக்களைப் பெருக்கிக் கொண்ட பின் அந்த அணுக்கள் பூராம் சீடனின் உடலுக்குள் சேர்ந்து கொள்ளும்.
3.விஞ்ஞானி அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வந்து எப்படி 1500 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கொண்டு வருகின்றானோ
4.அதே மாதிரித் தன் அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வந்து இங்கே இந்தச் சீடனின் உடலுடன் சேர்த்து இரண்டும் ஐக்கியமாகின்றது.
இவன் போன பின் அடுத்து ஒரு சீடன் வந்தான் என்றால் இதற்கு அடுத்து அதைச் சேர்த்து அந்த உடலையும் ஆட்சி புரியும். இதைத்தான் “குரு ஐக்கியம்…!” என்று சொல்வார்கள்.
இப்படிச் சாகாக்கலையாகப் போய்ச் சுகத்தை எப்படி அனுபவிக்கின்றார்கள் என்றும் பல உடல்களில் விஷத்தின் சேமிப்பு அதிகமான பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன மாதிரி மலைப் பாம்பின் உடலாகவும் சில விஷ ஜெந்துக்களாகவும் எப்படி ஆகிறார்கள்…? என்றும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் தெளிவாகக் காட்டுகிறார்.
ஆகையினால் இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.
1.முதலில் உயிரின் இயக்கம் ஆவது கல்கி ஒளி.
2.அதிலிருந்து பல உடல்களை எடுத்துத் தீமைகளை நீக்கி நீக்கி
3.அந்த அந்த உடல்களில் அந்த அறிவின் தெளிவாகி அந்த உடலைக் காக்கும் உணர்வுகள் வளர்ந்து
4.இப்படிக் கோடிக்கணக்கான உடல்களை எடுத்து எடுத்து மனிதனாக வரப்படும் போது எல்லாவற்றையும் அறிந்திடும் கார்த்திகேயா
நமது பிரபஞ்சத்தின் முழுமையும் நம் உடலிலே இருக்கிறது. அதில் எதை முன்னணியில் கொண்டு வருகிறோமோ அது நமக்குள் அறியும் சக்தியாகப் பெறுகின்றது.
இந்தப் பிரபஞ்சம் பிற மண்டங்களிலிருந்து மற்ற சக்திகளை எடுக்கிறது. பிற மண்டலங்களில் இருந்து வருவதை 27 நட்சத்திரங்களும் கவருகிறது.
அந்த 27 நட்சத்திரங்களும் வெளிப்படுத்துவதைச் சூரியன் கவருகிறது. அந்த அணுக்களின் தன்மை வரும் போது உயிரணுக்கள் தாவர இனங்களின் சத்தை எடுத்து நம் உடலாக மாற்றுகின்றது.
1.இதே உணர்வின் இயக்கம் நம் உடலிலும் பெருகுகிறது.
2.ஆகவே இந்தப் பிரபஞ்சம் எப்படியோ இந்த உயிர் இந்த உடல் ஒரு பிரபஞ்சம் என்ற நிலையிலே இயக்குகிறது.
இவை எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் கண்ட பேருண்மைகள். அவன் அகண்ட அண்டத்தின் ஆற்றல்களைப் பெற்று உயிரைப் போலவே தன் உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.
1.சூரியக் குடும்பமே அழிந்தாலும் மற்ற எது அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலமும் அழியாது.
3.அது தான் வேகா நிலை – கல்கி் என்பது.
ஆகவே நாம் அந்த அகஸ்தியனைப் போல வேகா நிலை அடைய வேண்டுமே தவிர சாகாக்கலை அடையக் கூடாது. ஞானிகளும் மகரிஷிகளும் எப்படி ஒளியாக வாழ்கின்றார்களோ அதைப் போல நாமும் உயிருடன் ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.
இன்னொரு உடலுக்குள் சென்று மீண்டும் உடல் பெறும் நிலைக்கு வரக் கூடாது. இது முக்கியம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சூரியன் எல்லாவற்றிற்கும் பொதுவானதே…! எது எது பூமியில் உருவாகியுள்ளதோ அதிலிருந்து வெளிப்படும் அனைத்தையும் அலைகளாக மாற்றி (பூமியில் உள்ள காற்று மண்டலத்தில்) எடுத்து வைத்துக் கொள்கிறது.
பின் பூமியிலே வளரும் வித்துக்களுக்கு… தான் கவர்ந்து வைத்திருக்கும் அலைகளை உணவாகக் கொடுத்து… அதனின் இனத்தை வளர்த்துக் கொடுக்கும் திறன் பெற்றது சூரியன்.
இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்தும் கோள்களிலிருந்தும் வரும் உணர்வுகளில் கலந்துள்ள நஞ்சினை மாற்றி அவைகளை ஒளியாக மாற்றும் போது
1.எல்லாவற்றையும் அறிவுடன் வளர்த்திடும்
2.அதாவது அதனதன் உணர்வு கொண்டு அறிவுடன் வளர்த்திடும் நிலையைச் செய்கின்றது சூரியன்.
இதைப் போலத் தான் மனிதன் சுவாசிக்கும் உணர்வுகள் எவையோ அவை எல்லாம் அந்தந்த உணர்வின் வித்தாக மாறுகின்றது. ஒரு மனிதன் கோபமாகப் பேசுகின்றான் என்றால் அதை உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அதுவே உடலுக்குள் “கோபம் என்ற ஒரு வித்தாகின்றது…!”
ஒரு மனிதன் தன் உடலில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்றால் அவன் வெளிப்படுத்தும் அந்த வேதனையான சொல்லை நாம் கேட்கும் போது அது “வேதனை என்ற வித்தாக நமக்குள் பதிவாகின்றது…!”
முதலில் சொன்ன மாதிரி சூரியன் எப்படி ஒன்றைக் கலவையாகி வித்தின் தன்மை அடைந்து பூமியில் செடியாக முளைத்த பின்
1.அந்தச் செடியிலிருந்து வெளி வரக்கூடிய உணர்வினைத் தனக்குள் அலைகளாக எடுத்து
2.மீண்டும் அதே செடியில் விளைந்த வித்துக்கு அதை உணவாக எப்படிக் கொடுக்கின்றதோ
3.இதை போலத் தான் நம் உயிரும் மற்ற மனிதன் உடலில் விளைந்த உணர்வின் அலைகளை நமக்குள் வித்தாக மாற்றிய பின்
4.அதற்கு – அந்தந்த உணர்வுகள் உந்தப்படும் போது (கோபம் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் அன்பு பரிவு பாசம் மகிழ்ச்சி)
5.நம் உயிர் காற்றிலிருந்து அதே இனமான அலைகளைச் சுவாசிக்கச் செய்து
6.நம் இரத்த நாளங்களில் வழியே உடலுக்குள் இருக்கும் அந்த வித்துக்களை (அணுக்களை) வளர்க்கச் செய்கின்றது.
உதாரணமாக கோபமான உணர்ச்சிகளையோ வேதனைப்படும் உணர்வுகளையோ நாம் நுகரப்படும் போது அந்தந்த உணர்ச்சிகள் கொண்டு தான் நாம் சொல்லும் வருகிறது… செயலையும் செயல்படுத்தச் செய்கின்றது.
அப்போது வேதனைப்படும் உணர்வுகள் அதிகரித்து அந்த அணுக்களைப் பெருக்கப்படும் போது நமது உடலுக்குள் இருக்கும் நல்ல உறுப்புகளை மாற்றி விடுகின்றது… நோயாக உருவாகின்றது.
இதனால் மனிதன் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் சுவையாக உருவாகும் உணர்வும் மறைந்து விடுகின்றது. பின் மனிதன் அல்லாத நிலையையே உருவாக்கி விடுகின்றது.
சூரியன் எப்படித் தனக்குள் மோதும் விஷத்தை நீக்குகின்றதோ… அதனதன் கவர்ந்து கொண்ட உணர்வு கொண்டு அது இயங்குகின்றதோ… அதைப் போல நம் உடல் இயங்கினாலும் மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடல் வேண்டும்.
1.மனிதனின் வாழ்கையில் தீமை என்று அறிந்து கொண்டால்
2.உடனே மெய் ஞானிகளின் உணர்வினை நாம் நுகர்ந்து அதனுடன் கலந்து
3.தீமைகளை அடக்கி தீமையற்ற நிலையாக மாற்றி மகிழ்ச்சி என்ற உணர்வினைக் கூட்டிக் கொள்ளும் பொழுது
4.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் அது நன்மையாகின்றது
5.நம்மிடமிருந்து வெளிப்படும் சொல்லைக் கேட்போர் உணர்விலும் அந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.
நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு இவ்வாறு நமக்குள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வு பெறும் சக்தியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
ஆகவே மனிதனாக இருக்கும் நாம் பிறருடைய துயரங்களையோ மற்ற சங்கடங்களையோ வெறுப்பையோ வேதனைகளையோ கேட்டு அறிந்தாலும் நமக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக நல்ல அணுக்களாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்… மகிழ்ந்து வாழ முடியும்.


மனிதன் அன்று காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தது போன்றே தீமைகள் இப்பொழுது வளர்கின்றது
பிற மண்டலங்களில் இருந்து வால் நட்சத்திரமாக நகர்ந்து வரப்படும் பொழுது விஞ்ஞான அறிவால் அதைக் கணக்கிட்ட முறை கொண்டு அதனின் ஓடு பாதையில் நம் வியாழன் கோள் வருகின்றது. அதனுடைய ஈர்ப்பின் சுழற்சிக்குள் சிக்கி இணைந்து விட்டது என்று விஞ்ஞானிகள் காட்டினார்கள்.
இதே போன்று தான்
1.விஞ்ஞான அறிவு உலகில் பரவினாலும் அது அனைத்தும் மனிதனின் உணர்வுக்குள் பரவி…
2.மனிதனுடைய சிந்தனைகள் சீர்குலையும் நிலையாக வந்துவிட்டது.
சில நாடுகளில் பார்க்கலாம்… அங்கே மனிதருக்குள் பல பல இனங்களாகப் பெருகி வெறி கொண்ட உணர்வு கொண்டு அழித்திடும் உணர்வாக மற்றவர்களை அழித்துக் கொண்டுள்ளார்கள். உகண்டாவில் இதெல்லாம் அன்று நடந்தது.
இங்கே நம் நாட்டிலும் இனத்திற்கு இனம் மோதிக் கொண்டார்கள். ஒரு நொடிக்குள் மனிதனை அழித்திடும் உணர்வே வெளி வருகின்றது. இந்த உணர்வுகள் அதிகமாகப் பெருகி விட்டால்
1.மனிதனுக்கு மனிதன் அழிக்கும் உணர்வே பெறுகின்றது.
2.மனிதனாக வாழும் நிலைகள் அறுத்து விடுகின்றது.
இன பேதங்கள் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிடும் நிலைகள் வரும் பொழுது… அதை நேரடியாகக் கண்டுணர்ந்து நுகர்ந்தால் நம்முடைய நிலைகளும் “அஞ்சிடும் உணர்வாக…” விளைந்து விடுகின்றது.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவன் எந்தச் செயல்களைச் செய்தானோ அதே செயல்கள் கொண்டு “அவனைக் கொன்றால்தான் நாம் மீள முடியும்…” என்ற உணர்வுகள் வளர்ந்து விடுகின்றது.
இந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் மனிதன் எங்கே வாழ்வது…? மனிதனுக்கு மனிதன் அன்று காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தது போன்றே தீமைகள் இப்பொழுது வளர்கின்றது.
அப்படிப்பட்ட தீமைகள் வரப்படும் பொழுது மனிதன் என்ற உலகத்திற்குள் தீமை அகற்றிடும் நிலைகள் அழிந்து விட்டால் என்ன ஆகும்…? இது போன்ற நிலைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் புகுத்தி எந்தத் தீமையும் நம்மை அழித்திடாது
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலைகளில் இந்த உலகை விட்டு எப்பொழுது அகன்றாலும்
3.மெய் ஒளியாக வீசிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய வேண்டும்.
இது இல்லை என்றால் மீண்டும் இங்கே வந்தால் பாம்பாகவோ தேளாகவோ பிறக்க நேரும். இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதனின் உணர்வுகள் அழிந்திடாத நிலைகளில் நம்மைக் காத்திடல் வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியினை உபதேசிக்கின்றோம்.
இனிமேல் இந்த உலகில் தீமைகள் அதிகமாக ஊடுருவும். அதனால் நமக்குள் அஞ்சிடும் நிலையையே உருவாக்கும்.
பாலிலே பாதாமைப் போட்டாலும் நஞ்சு கலந்தால் எவ்வாறு நஞ்சின் செயலாக்கமாக அது மாறுவது போன்று
1.எவ்வளவு திடகாத்திரமாக இருப்பினும்
2.எவ்வளவு உயர்ந்த குணங்கள் இருப்பினும்
3.எவ்வளவு திறமையாக இருப்பினும்
5.தீமை செய்வோரின் உணர்வுகள் நமக்குள் புகுந்தால்… மனிதனின் சிந்தனைகளை அழித்திடும் நிலையே வருகின்றது.
ரஷ்யா எவ்வளவோ கட்டுப்பாட்டுடன் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் அங்கேயும் மனிதனுக்கு மனிதன் கொன்று தின்னும் நிலை வருகின்றது.
உணவு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் மனிதன் இறந்தாலும் அந்த உடலை அறுத்து உணவாக உட்கொள்ளும் நிலை வந்து விடுகின்றது.
இவ்வாறு மாறும் பொழுது இங்கே மனிதர்கள் மிஞ்சுவது எப்படி…?
உலகிலேயே உயிரினங்கள் பெருகிப் பெருகி ஒன்றை ஒன்று கொன்று புசிக்கும் உணர்வு வரப்படும் பொழுதுதான் உலகில் தன் இனத்தையே தான் புசிக்கும் நிலைகள் வளர்ந்து அந்த இனங்களே (அன்று வாழ்ந்த மிகப் பெரிய மிருகங்கள்) முழுமையாக அழிந்துவிட்டது.
தன் இனத்தையே கொன்றிடும் நிலை வரும் பொழுது அதே அசர உணர்வுகள்… மனித இனத்தைக் கொன்று புசிக்கும் உணர்வுகள் வளர்ந்து விட்டால் யாரும் மிஞ்ச முடியாது.
ஆகவே சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இதையெல்லாம் நம்முடைய காலத்திற்குள்ளேயே உலகில் இன்று பார்க்கலாம்.
ஆனால் எப்படித்தான் இருந்தாலும் உடலை விட்டு உயிர் வெளியே செல்கின்றது. எப்பொழுது வெளியேறினாலும் நஞ்சு கொண்டோர் உணர்வுகளால் நமக்குள் அஞ்சிடும் நிலை வந்தாலும் இந்த உணர்வே வெளிப்படும்.
1.எவர் மேல் வெறுப்பு கொண்டோமோ அங்கே தான் நாம் சென்று இணைய முடியும். இந்தக் கணக்கு தான் கூடும்.
2.ஆனால் சப்தரிஷிகளின் கணக்கை நமக்குள் கூட்டினால் அது பெருகும்… இது சிறுத்துவிடும்.
விண்ணின் ஆற்றலைப் பெருக்கி உயிர் ஒளியாக உருப் பெற்றது. எதைக் கவர்ந்ததோ அதன் அறிவால் அதைக் காத்திட்டது. காத்திட்ட அறிவின் தன்மை விளைந்தது. விளைந்திட்ட உணர்வின் தன்மை கொண்டுதான் மனிதனானது.
1.மனிதனான பின் உயிருடன் ஒன்றிடும் ஒளியின் தன்மையாக ஒளியின் சிகரமாக மாற்றிவிட்டால்
2.என்றுமே ஒளியின் நிலையாக நிலை கொண்டு வாழ்ந்திட முடியும்.
அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் சென்றால் அவன் நிலை கொண்டு வாழ்வது போல… இனம் இனத்தைத் தான் காத்திடும். எத்தகைய நிலையில் இருந்தாலும் தன் இனத்துடன் இணைந்தே தீரும்.
ஆகவே… எந்த இனத்துடன் நாம் இணைய வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த இனத்துடன் நாம் இணைகின்றோம்.
எந்தக் கோபத்தின் நிலைகள் எண்ணினானோ அதன் உணர்வு கொண்டு மற்றொன்றைக் கொன்று புசிக்கின்றதோ அதிலே இணைந்தால்… அதன் இனத்துடன் இணைந்து அதன் ரூபமாக மாற்றிவிடும். அந்த ஈர்ப்புக்குள் சென்று அத்தகைய உடலாக நம்மை உயிர் மாற்றிவிடும்.
ஆகவே நாம் ஒளியின் சரீரமாக வாழ்ந்திடும் அந்த அருள் மகரிஷிகளுடன் இணைந்து கொண்டால் நாம் அருள் வாழ்க்கை வாழ்ந்திட முடியும். இன்றைய உலகின் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து அதைப் பிளந்திட வேண்டும்.
மனிதர்கள் இருப்போம்… இருந்தாலும் இந்த உலகில் தினசரி எத்தனை மாற்றங்கள் ஏற்படுகின்றது…? மாற்றங்கள் ஆகிக் கொண்டே இருக்கும் நிலையில் தன் இனம் என்று கொண்டு சென்றாலும் இருண்ட நிலையில் வாழும் நிலை தான் வருகிறது.
மனித உலகில் அந்த மகிழ்ச்சி இருக்காது.
இருண்ட உலகில் வாழ்ந்து கொன்று பசித்திடும் உணர்வாக வளரப்படும்போது மனித இனமே தன் இனத்தைக் கொன்று புசிக்கும் நிலையாகச் சிறுகச் சிறுக உருமாறிக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
1.நாம் உடலுடன் வாழும் இந்த நல்ல நேரத்திலேயே மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து இருளைப் போக்கி
2.என்றும் உயிருடன் ஒன்றி ஒளி சுடராக பேரருள் பேரொளியாக அடைவது தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழி.
3.அதை நாம் பெற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சுவாசித்தது நம்மை இயக்கினாலும் நாம் எதை இயக்க வேண்டும்…?
நம்முடைய மனித வாழ்கையில் எத்தனையோ விதமான உணர்வுகளை ஒவ்வொரு நாளும் சந்திக்க நேருகின்றது.
உதாரணமாக… நம்மை யாரும் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை…! ஒருவர் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஏசிப் பேசுவார். நாம் அதைப் பார்த்துக் கேட்டுக் கொண்டு நுகர்ந்து கொண்டிருப்போம். அதன் உணர்வை நாம் நுகர்ந்த பின் நமக்குள் என்ன நடக்கிறது…?
1.அவர்களுக்குள் ஏசிப் பேசிய உணர்வே நம்மை ஆட்சி புரியத் தொடங்குகிறது.
2.அதனின் உணர்வின் தன்மை நாம் வளர்க்க நேர்கின்றது.
3.“இப்படிப் பேசுகின்றான்… இப்படிப் பேசுகிறானே..!” என்று நாமும் உணர்ச்சி வசப்படுகின்றோம்.
பிறர் கெட வேண்டும் என்ற உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் ஏசிகின்றார்கள்.
1.நாம் காது கொண்டு கேட்கின்றோம்.
2.மூக்கின் வழி சுவாசிக்கின்றோம்.
3.நுகர்ந்த உணர்வு உயிரிலே படுகின்றது.
4.உயிரிலே படும் அந்த உணர்ச்சிகள்தான் அப்பொழுது நம்மை ஆளுகின்றது.
எப்படிப் பேசுகிறான் பார்…! இவனை எல்லாம் நாம என்ன செய்ய வேண்டும் தெரியுமா…? என்கிற அந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே அவர்களின் உணர்வுகள் நம்மை இயக்கச் செய்கின்றது… நம்மை ஆளுகின்றது… நம் உடலாக்குகின்றது.
ஆகவே இத்தகைய தீய உணர்வுகளை அடிக்கடி நாம் எண்ணினோம் என்றால்… அது நம் உடலிலே பெருகி விட்டால் என்ன செய்யும்..?
அதே தீமையின் செயலாகத் தான் நம் சொல்லும் வெளிப்படத் தொடங்கும்.
1.அடுத்து நம் சொல்லைக் கேட்போரிடத்திலும் நம்மை எதிரியாக்கும்.
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள்ளேயே எதிரி ஆகும்.
3.நம்முடைய நல்ல அணுக்களை இது கொல்ல நேரும்.
ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் என்ன செய்கிறது…? தீமைகளின் உணர்வை வளர்க்கச் செய்கின்றது. நன்மையின் உணர்வை அது இழக்கச் செய்கின்றது.
அதே போல் நாம் ரோட்டில் சென்று கொண்டிருப்போம். நமக்கு முன்னாடி ஒருவன் போய்க் கொண்டிருப்பான். அவன் சிந்தனை எங்கோ இருக்கும்.
எதிர்த்து வரும் வண்டியைப் பார்க்காதபடி அதன் மேலே மோதப் போவான். போகிறான் பார்…! ரோட்டிலே எப்படிப் போகிறான்…? என்று அவன் செயலைக் கண்டு நாம் நுகர்ந்து அறிகின்றோம்.
அதை நுகர்ந்து அறியப் போகும் போது அதே உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது… நம்மை ஆளுகின்றது…! அவன் அருகிலே சென்று “ஏனப்பா கொஞ்சம் பார்த்துப் போகக் கூடாதா…” என்று நாம் சொல்ல நேரும்.
1.அப்பொழுது அங்கே எது நம்மை ஆட்சி புரிகின்றது…?
2.அவனுடைய சிந்தனையற்ற உணர்வு நம்மையும் இயக்கி ஆள்கிறது.
ஒரு குடும்பத்தில் சண்டையிடுகின்றனர். அதைக் கேட்டு நுகர்கின்றோம் நுகர்ந்த பின் என்ன சொல்கிறோம்…?
1.பக்கத்து வீட்டிலே பார்…!
2.எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் சண்டை போட்டு கொண்டே இருக்கிறார்கள்…! என்று சொல்லி விட்டு
3.அவர்கள் சண்டையிடும் உணர்வை எடுத்துக் கொள்கிறோம்.
இந்த உணர்வை எடுத்து அடுத்தவர்களுக்குச் சொல்லப்படும் போது அதை நமக்குள் வளர்த்து அதிகமாகப் பெருக்கிக் கொள்கின்றோம். இப்படி நமது வாழ்கையில் ஒவ்வொரு உணர்வையும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு நாளும் நமக்குள் உருவாக்குகின்றோம்.
ஆனால் நாம் எதை உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கின்றோமா…?
ஆகவே மனிதனின் வாழ்கையில் நம்மை அறியாமல் இயக்கும் இதைப் போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து
2.அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாக
3.அருள் ஒளியின் உணர்வுகளாக நமக்குள் உருவாக்கிடல் வேண்டும்.


ஞானிகள் சொல்லும் ஓசோன் என்ற பாதுகாப்புக் கவசம்
ஞானிகள் மகரிஷிகள் நஞ்சினை நீக்கிடும் உணர்வினைத் தனக்குள் விளைய வைத்துத் தீமைகளைப் பிளந்திடும் சக்தியாக இந்த மனித உடலில் இருந்து தான் அவன் பெற்றான். அந்த நிலை நமக்குள்ளும் உண்டு.
நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் குணங்களுக்குள் அதைக் கலந்து இணைக்கச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.
சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கண்டுணர்ந்து தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக விளைந்து அதனின் செயலாக்கமாக வருவது போல்
1.மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்களுடன் இணைத்து
2.அந்த இணைத்த சக்தி கொண்டு சப்தரிஷிகளின் இயக்கமாக அதை மாற்றும்.
3.உருப்பெற்ற நிலையாக உங்களைச் சப்தரிஷிகளாக ஆக்குவது.
4.சப்தரிஷி மண்டலங்களாக அவர்களுடன் இணையும் பொழுது எதனையும் வென்றிடும் நிலைகள் வருகின்றது.
நாம் வாழும் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் அதுவும் மடிந்திடும் சமயம் வரும்… அத்தகைய நிலை அதற்கு உண்டு. அதனுடைய வயது முதிர்ச்சி அடையும் பொழுது மடிந்திடும் நிலையே வருகின்றது.
காரணம் இதற்கு உறுதுணையாக இருந்த நட்சத்திரங்கள் தனது தனது நிலைகள் விளையச் செய்யும் பொழுது இதற்குக் கிடைக்கும் உணவு தடைப்பட்டால் சூரியன் ஒளி மங்கும்… பின் இருள் சூழும்.
இது கரைந்து இதனின் உணர்வுகள் திக்கற்று இதனுடன் விளைந்த கோள்கள் அனைத்தும் திசை மாறிச் சென்று விடும்.
அப்படிக் கரைந்து வந்த ஒரு கோள்… அது ஓடிவரும் பாதையில் ஊடுருவி நம் வியாழன் கோளில் கோளுக்குள் பாய்ந்து அதனின் சுழற்சி வட்டத்தில் கரைந்தது (சுமார் 30 வருடங்களுக்கு முன்).
இதைப் போல பேரண்டத்தில் விளைந்த மற்ற கோள்கள் திசை மாறி வந்து விட்டால் சூரியன் ஈர்ப்புக்குள் வரும் பொழுது பூமியை இடைப்பட்டால் இந்தப் பாறைகள் பூமியில் விழுந்து விடும்…. விழுந்தால் பூமி சுக்கு நூறாக ஆகிவிடும்.
இருப்பினும்… பூமியின் சுழற்சி வேகத்திற்குள் கரைந்த வெப்பம் போக மிச்சங்கள் அதற்குள் கரைந்து விடும். கரைந்தது போல மீதி இருக்கும் நிலைகள் பூமியிலே சாற்றிவிடும்.
1.இதைப் போன்று பிற சூரிய குடும்பங்களில் ஏற்படும் விபத்துக்கள் ஏராளம் ஏராளம்.
2.பேரண்டம் 2000 சூரியக் குடும்பம் என்றால் அதில் வீழ்ச்சி அடையும் பல சூரியன்களும் உண்டு.
3.அதிலிருந்து திசை மாறி வரும் கோள்கள் எதனின் பிடிப்பும் இல்லாது நகர்ந்து வரும் போது அதனின் வேகத் துடிப்புகள் இருக்கும்.
4.எதனின் ஈர்ப்பின் துணையிலிருந்ததோ அந்தக் காந்தப் புலனறிவு இல்லை என்றால் அது தன் சக்தியை இழந்து விடும்.
இதைக் கண்டுணர்ந்துதான் ஞானிகள் ஓசோன் திரை என்ற நிலையில் எந்தத் தீமையும் தன்னைத் தாக்கிடாத நிலைகள் கொண்டு பாதுகாப்புக் கவசமாக அமைத்தார்கள்.
அது தான் விநாயகர் சதுர்த்தி…!
நாம் கேட்டுணர்ந்த மற்ற மனிதர்களின் நஞ்சின் உணர்வுகள் பதிவானாலும் அந்தப் பதிவின் ஈர்ப்பைத் தடைப்படுத்திட வேண்டும்.
மனிதரிலிருந்து வெளிப்பட்ட பிறரை அழிக்க வேண்டும் என்று எண்ணிய உணர்வுகளோ… பழி தீர்க்கும் உணர்வுகளாக ஒருவருக்கொருவர் விளைந்து வந்ததோ… அதையெல்லாம் அகற்றிடும் நிலையாகத் தடைப்படுத்தும் நந்நாள் தான் விநாயகர் சதுர்த்தி.
ஆகவே… மற்ற மனிதர்கள் மேல் உள்ள வெறுப்பின் நிலைகளைத் தடைப்படுத்திட வேண்டும்.
அவ்வாறு எல்லோரும் நிறுத்திவிட்டால்…
1.அத்தகைய உணர்வலைகள் இங்கிருந்து விலகி… திக்கற்றுச் சென்று…
2.பூமியின் சுழற்சி வட்டத்தில் இருக்கக்கூடிய கடலின் ஈர்ப்புக்குள் சிக்கி
3.நமக்குள் பதிவான பகைமை உணர்வுகளை மனிதனை வீழ்த்திடச் செய்யும் அந்தச் சக்திகள் கடலுக்குள் அமிழ்த்தி அங்கே பொசுங்கிவிடும்.
நாமும்… நாம் வாழும் இந்தப் பூமியும் பரிசுத்தம் ஆகும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் மனிதராக வாழும் அனைவரும் நாம் ஒருவருக்கொருவர் அருள் ஞானத்துடன் வாழ்தல் வேண்டும். ஒருவருக்கொருவர் மகிழ்ந்து வாழும் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எல்லோரும் பெற வேண்டும்.
2.அவர்கள் வாழ்கையில் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும்.
4.அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்.
5.அவர்கள் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். அருள் ஞான வாழ்க்கை வாழ்தல் வேண்டும்.
6.இருளை அகற்றிடும் மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி நம் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று
7.நாம் எல்லோரும் தியானிக்க வேண்டும்.
இவ்வாறு நாம் தியானிக்கும் எல்லோருடைய உணர்வுகளும் ஒன்றாகச் சேர்த்தால் என்ன ஆகும்…?
தீமையான உணர்வுகளை மனிதர்களான நாம் ஈர்க்கும் சக்தி குறைந்தால் இந்தக் காலையில் 6 மணிக்கு எல்லாம் சூரியன் தனக்குள் இழுத்துச் சென்று அதை எல்லாம் அங்கே கரைத்து விடும். ஒளியாக மாற்றும்.
1.நம்முடைய ஆன்மா தூய்மையாகின்றது.
2.நாம் வாழும் இந்தப் பூமியான பரமாத்மாவும் தூய்மையாகின்றது.
உதாரணமாக… அடுப்பிலே வைத்து எரிக்கப்படும் ஒரு விறகானது பல விதமான உணர்வுகள் வைத்து அது எரிகின்றது. விறகு எரிந்து நெருப்பாக மாறுகின்றது… ஒளியாக மாறுகின்றது.
விறகோ கருகிவிடுகிறது. ஆனால் அதற்குள் இருக்கும் அந்த மணங்கள் பிரிந்து விடுகின்றது. அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் சூரியன் கவர்ந்து ஒளியாக மாற்றிக் கொள்கின்றது.
அந்த விறகிலிருந்து வந்த ஆவியின் தன்மை எதன் உணர்வு பெற்றதோ புவியின் ஈர்ப்பின் தன்மை கொண்டு எந்த வித்தின் தன்மை இங்கு பெறுகின்றதோ அதே மரத்தின் அதே வித்தாக (அந்த விறகின் மணங்கள்) இணைந்து மீண்டும் விளைகின்றது.
ஆகவே எதன் எதன் உணர்வின் தன்மை எது எது விளைகின்றதோ அது எல்லாம் இயற்கையில் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது. (ஆவியாக இருப்பது திடப்பொருளாகின்றது… மீண்டும் அது ஆவியாகிறது… மீண்டும் திடப்பொருளாகிறது)
ஆனால் நாம் “என்றுமே மாறாத நிலைகள் பெற வேண்டும்…!” என்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஆறாவது அறிவு பெற்ற மனிதன் நஞ்சினை வென்று ஏழாவது நிலையாக உணர்வுகளை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலை அடைந்த
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் அனைவரும் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
2.நம் உடலுக்குள் அதைப் பெருக்குதல் வேண்டும்.
3.அதை அழியாச் செல்வமாக நமக்குள் மாற்றி அமைத்தல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும்… சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைதல் வேண்டும்.


கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி
விஷமான உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி…! என்றார்.
அதாவது எங்கேயோ தோன்றிய… பேரண்டத்தில் இருந்த நிலைகள் கோடிக் கோடியாக மாறுகின்றது.
1.பல கோடிக்குள் மற்ற உணர்வின் அணுக்கள் சேர்த்து
2.மனிதனாக வருவதற்குக் கோடியில் கோடி… எத்தனையோ கோடியில் கோடி… கோடியில் கோடி… கோடி கோடி…!
நான் எண்ணமாகப் பேசுகிறேன் என்றால் வான் வீதியில் இருக்கக்கூடிய உணர்வுகள் இங்கே வருகின்றது. இதைத்தான் மனித உணர்வுக்குள் இது பட்டபின் அதனின் நிலை தனக்கொத்ததாக மாறுகின்றது.
1.இதை உணர்த்துவதற்குத் தான் குருநாதர் எனக்கு அடியைக் கொடுத்து
2.பிரமை பிடித்த மாதிரிச் செயல்படுத்தி விண்ணை நோக்கி ஏகும்படிச் சொன்னார்.
குருநாதர் எனக்கு அடி கொடுத்தார்… உங்களுக்கு சொல்லடி கொடுக்கின்றேன். இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிகின்றது… சீதாராமா. அந்த ஞானியின் உணர்வுகள் அம்பாகப் பாய்கின்றது.
கோபத்தால் சொல்லும் பொழுது இந்தச் சொல் உங்கள் உணர்வுகளைத் தூண்டுகின்றது. எதிர் பதிலாக அதுவே வருகின்றது.
இதைப் போல் தான் கோடியில் கோடி என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் உணர்வினை ஒளியாக மாற்றி… குருநாதர் கண்டுணர்ந்த உணர்வை அடியால் கொடுத்து… உணர்வின் தன்மை அங்கே உந்தச் செய்து உணர்வின் அளவுகோலை அறியும்படிச் செய்தார்.
1.எனக்கு அடி கொடுக்கும் பொழுது அவருடைய சக்தி எப்படி எனக்குள் உறைகின்றதோ இதைப் போன்று தான்
2.அந்த விண்ணின் ஆற்றலும் அது உருவாகும் மாற்றமும்
3.மண்ணுலகில் வரப்படும் பொழுது “கோடி கோடி கோடி கோடி…” என்ற இந்த நிலையைக் கொண்டாருகின்றார் குருநாதர்.
விண்ணின் ஆற்றலை எனக்குள் அவர் பதிவு செய்த பின்… உடல் எங்கே இருக்கின்றது… உதைத்த உணர்வுகள் அவருடன் ஒன்றும்… ஒன்றிய உணர்வுகளை விண்ணிலே பறக்கச் செய்வார்…!
பரவிய உணர்வுகள் அங்கே அடையும்.
1.அடைந்த உணர்வுகளும் இங்கே அடித்த உணர்வுகளும் இழுக்கும்… இழுத்த உணர்வு கொண்டு தான் எனக்கு அறிவித்தார்.
2.நீ யார்…? எப்படி வந்தாய்…? எந்தெந்த வழிகள் எல்லாம் வந்தாய்…? என்று கனா காண்பது போன்று
3.அணுவாகத் தோன்றி உயிரணுவாக… உன் உயிரே எப்படி உண்டானது…? என்று அறியச் செய்தார்.
விண்ணிலே உயிர் உண்டாவதற்கும் இதிலேயும் பல கோடி கோடி கோடி கோடி. பார்த்தால் உயிரின் துடிப்பு ஒன்றாக இருக்கும். ஆனால் எத்தனை கோடி உணர்வுகள் கலந்து உயிரின் துடிப்புக்குள் இணைந்து அது இயக்கமாக உருவாகின்றது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார்.
ஒரு அணுவின் தன்மை மற்ற கோளின் தன்மை வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை கோடி… கோடி கோடி… கோடி கோடி.
காரத்தின் தன்மையோ கசப்பின் தன்மையோ அதுஎப்படி வந்தது…? எத்தனை கோடி சேர்ந்து கசப்பானது…? காரமானது…? என்று சுவையின் உணர்வுகளும் மணத்தின் நிலைகள் எது இணைந்ததோ அது மணமாக எப்படி மாற்றுகின்றது…?
இவையெல்லாம் சேர்த்துத் தான் கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் நல்ல நறுமணங்கள் கொண்ட உணவுகளை உட்கொண்டாலும் அந்த நறுமணத்தை வீரியமாக இயக்கச் செய்யும் நஞ்சு அதிலே உண்டு. அத்தகைய நஞ்சினை எல்லாம் நம் உடல் பிரிப்பதனால் நம் மலம் நாற்றமான நிலையில் வருகின்றது.
நம்முடைய ஆறாவது அறிவு… நல்ல உணர்வின் சத்தை எல்லாம் நம் உடலாக மாற்றி நஞ்சை நீக்கிடும் நல்ல உணர்ச்சிகளாகத் தூண்டுகின்றது ஆகவே தான் இதைப் பரசுராம் என்று கூறுகின்றார்கள்.
மனிதனாக இருக்கும் நாம் இன்று விஷமான பொருள்களை நாம் உட்கொண்டாலும் அதன் சக்திக்குத் தகுந்தவாறு
1.நம்முடைய கிட்னி (KIDNEY – சிறுநீரகங்கள்) என்ற உறுப்பு இரத்தத்தில் வரும் அந்த நஞ்சினை வடிகட்டி விடுகின்றது.
2.அதைப் போல நம் குடல் உறுப்புகளிலும் சில நஞ்சினைப் பிரிக்கும் தன்மை வருகின்றது.
3.இரத்தத்தில் வரும் நஞ்சினைப் பிரிக்கப்படும் பொழுது விஷ அணுக்கள் உருவாக்காதபடி தடுத்துவிடுகின்றது.
அதே சமயம் நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் நஞ்சு கலந்த உணர்வு வந்தாலும் அது உடலுக்குள் செல்வதற்கு முன் நமது பெரு மூளை வடிகட்டிவிடுகின்றது. அதைச் சளியாக மாற்றிவிடுகின்றது.
நமக்குள் தீமைகளை அகற்றிடும் சக்தி இப்படி விளைந்தாலும் சம அளவாக இருக்கும் பொழுது எல்லாமே சீராக இயங்குகின்றது. ஆனால் விஷத்தின் அளவு அதிகரித்துவிட்டால் நம் கிட்னி சரியாக வேலை செய்யாது.
அது சரியாக வேலை செய்யவில்லை என்றால்
1.விஷத் தன்மை கொண்ட அணுக்கள் அதிகமாகப் பெருகத் தொடங்குகின்றது.
2.நம் உடலில் சர்க்கரைச் சத்து அதிகரித்து விடுகின்றது
3.வாத நோய் அதிகரித்து விடுகின்றது… உப்புச் சத்தும் அதிகமாகின்றது.
கிட்னி பிரிக்கும் தன்மை இழந்த பின் உப்புச் சத்து அதிமாகி விட்டால் நம் உடலில் உள்ள எலும்புகள் அனைத்திலும் அது ஊடுருவிவிடும். எலும்புகளைப் பலவீனப்படுத்திவிடும்.
சாதாரணமாக உப்பை வெளியிலே ஒரு இடத்தில் வைத்திருந்தால் அது கசியும் தன்மை வரும்.
இதைப் போல் நம் உடலுக்குள் அந்த அதிகப்படியாக இருக்கும் உப்பு கசியும் தன்மை வந்துவிட்டால் சுவாசப்பைகளில் மூச்சுத் திணறல் அதிகரித்துவிடும். சுவாசிப்பதே மிகவும் கடினம் ஆகின்றது.
இதைப் போன்று நமக்குள் வந்துவிடுகின்றது. இதை மாற்றுவதற்கு என்ன சக்தி வைத்திருக்கின்றோம்…?
மிருகங்கள் அனைத்துமே நஞ்சின் தன்மை கொண்ட வலுவான உடலாகப் பெற்றிருக்கின்றது. நஞ்சின் தன்மையைத் தன் உடலாக்கும் நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பான நிலைகளாக மாறுகின்றது.
1.ஆனால் மனிதனுக்கோ நஞ்சை நீக்கினால் தான் பாதுகாப்பு.
2.நஞ்சு அதிகரித்து விட்டால் நம் உடலுக்கு பாதுகாப்பற்ற நிலையாக ஆகிறது.
ஆனால் அருள் மகரிஷிகள் அனைவருமே தன் வாழ்க்கையில் இத்தகைய நஞ்சுகளை எல்லாம் வென்று உணர்வை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக்கியவர்கள்.
வைரம் எவ்வாறு நஞ்சினை உள்ளடக்கி ஒளியின் சிகரமாக இருக்கின்றதோ இதைப் போல மகரிஷிகள் தன் உயிரின் நிலைகள் கொண்டு தன் வாழ்க்கையில் வந்த…
1.நஞ்சினை ஒடுக்கிடும் ஆற்றல்மிக்க சக்தியினை தனக்குள் எடுத்துப் பொருள் அறிந்திடும் நிலையும்
2.இருள் நீக்கிடும் நிலையும் தனக்குள் மகிழ்ந்திடும் ஆற்றல் மிக்க ஒளியின் சிகரமாக உணர்வினை மாற்றியமைத்து
3.இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்கள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகளை குருநாதர் காட்டிய வழியில் உபதேசித்து உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.
அந்தப் பதிவின் துணை கொண்டு அருள் ஞானியின் உணர்வின் சத்தைப் பெறும் வித்தாக உங்கள் எண்ணங்களில் பதிவு செய்து உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அதைப் பருகும் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.
இதை நீங்கள் செம்மையாகப் பயன்படுத்தினால் உங்கள் உடலுக்குள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஊடுருவி நஞ்சான வித்துகளை எல்லாம் வலுவிழக்கச் செய்ய முடியும்.
நோயிலிருந்து விடுபடவும் முடியும்…!


நம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்ய வேண்டும்…! – ஞானிகள் சொன்ன உட்பொருள்
பக்தி என்பதை எதிலும் பொருதலாம். நான் கறி (மட்டன்) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் கறி மேல் பக்தி இருக்கின்றது. ஆனால் காய்கறிகளைச் சாப்பிடுகிறேன் என்றால் அதன் மேல் பக்தி வருகின்றது. எதை விரும்பிச் சாப்பிடுகிறோமோ அதன் வழி அந்த பக்தி வருகிறது.
இதைப் போன்று தான்
1.ஞானிகளால் காட்டப்பட்டது தான் பக்தி என்பது.
2.அதாவது மகரிஷிகளால் உணர்த்தப்பட்ட நிலை ஞானிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.
அரசன் மதங்களாக உருவாக்கினாலும் அதில் பக்தி நல்ல ஒழுக்கங்களைக் கடைபிடிக்கச் செய்கின்றது.
பெண்கள் கோலமிடுகின்றார்கள் என்றால் தன் உணர்வைச் செலுத்தி… தவறு இல்லாதபடி எத்தனையோ அழகாக அதைப் போடுகின்றார்கள். ஆனால் அவர்கள் செய்கிறார்கள் என்று ஆண்கள் நாம் செய்ய முடியுமா…?
ஒவ்வொரு புள்ளிக்கும் ஒவ்வொன்றையும் இணைத்து எப்படி அதை அழகுபடுத்துகின்றோமோ அதைப் போல்
1.மனிதனின் வாழ்க்கையில் ஒரு புள்ளி…! ஒரு கோபம் ஒரு வெறுப்பு ஒரு சாந்தம் என்ற நிலையில் எத்தனையோ புள்ளிகள் உண்டு.
2.இதை அனைத்தையும் இணைத்து அலங்காரமாக எடுத்துப் போடுவதற்கு…
3.அதாவது மனதைச் சாந்தப்படுத்திப் பொறுமைப்படுத்தி பக்தி கொண்டு கோலமிடுவது என்ற அந்த நிலை.
அதே போல்… பொதுவாக மார்கழி மாதம் எடுத்துக் கொண்டால் அதிகாலையில் சூரிய ஒளிக்கு முன் எழுந்து உடலைத் தூய்மைப்படுத்தி
1.வீட்டு வாசலை மெழுகிச் சுத்தப்படுத்துகின்றோம்.
2.ஆக… வீட்டையும் அதன் வாசலையும் மட்டும் தூய்மை செய்வதல்ல
3.நமது வீடு உடல்… நமது வாசல் என்பது ஆன்மா…!
4.இதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதை ஞானிகள் அன்று உணர்த்தினார்கள்… இது பக்தி…!
உடலைத் தூய்மைப்படுத்துவது போல நம் உணர்வுகளை எண்ணங்களை மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
வீட்டு வாசலைத் தூய்மைப்படுத்துவது போன்று
1.மற்றவர்கள் தீமையான செயல்களை நமக்குச் செய்தாலும்
2.அந்தத் தீமை தனக்குள் வராதபடி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.நம் ஆன்மாவையும் உடலையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
4.பக்தி என்பது இது தான்…!
ஏனென்றால் இதை எல்லாம் அடிக்கடி உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். ஞானிகள் கொடுத்த உண்மை நிலைகள் இது தான்.
அதனால் தான் உங்களை அடிக்கடி ஆத்ம சுத்தி (ஆன்மாவைச் சுத்தம்) செய்யச் சொல்கிறோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதன் தவறு செய்வதில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு அவனை இயக்கி விடுகின்றது. அதுதான் அவனை ஆட்சி புரிகின்றது. ஆனால் “சந்தர்ப்பத்தை…” ஏற்படுத்தக் கூடிய நிலை பெற்றவன் தான் மனிதன்.
மற்ற உயிரினங்கள் வலு கொண்ட மிருகத்தைக் கண்டு “அது தன்னத் தாக்கிவிடும்…!” என்று அதையே நினைத்து அதனிடமிருந்து தப்ப வேண்டும் என்று எண்ணுகின்றது.
அதே போல நமக்கு யாராவது தொல்லை செய்கிறார்கள் என்றால் அவர்களையே நினைத்து “எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றான்…!” என்று எண்ணி வாழுகிறோம்.
1.அவன் தொல்லை கொடுத்த உணர்வு நமக்குள் வரும் போது
2.அந்தத் தொல்லையே மீண்டும் மீண்டும் வருகின்றது.
தொழிலின் நிமித்தம் நாம் கடன் கொடுத்து வாங்குகின்றோம். ஒருவருக்குக் கொடுத்த பின் சந்தர்ப்பம் அவர்களால் திரும்பக் முடியவில்லை என்றால் “நான் கொடுத்தேன்… எனக்குத் திரும்பக் கொடுக்கவில்லை…!” என்ற வேதனையைத் தான் எடுக்கின்றோம்.
அந்த வேதனை உணர்வை எடுத்து இங்கே நம் உடலுக்குள் சமைத்து வேதனையை வளர்க்கப்படும் போது அடுத்து யாரிடம் பேசினாலும் அந்த வேதனை உணர்வுடனே பேசுகிறோம்.
அப்பொழுது அவர்கள் நல்ல மனதையும் கெடுக்கச் செய்கின்றது… நம்மையும் கெடுக்கின்றது. ஆக மொத்தம் அந்த வேதனை என்ற உணர்வே நம்மை ஆட்சி புரியத் தொடங்குகின்றது.
நம்முடைய திறமைகள் எவ்வளவு இருப்பினும்… முதலில் நல்ல குணங்கள் இருக்கும் போது செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த வேதனை அதிகமான பின் “அந்தச் செல்வத்தையே காக்கும் திறன் அற்றுப் போகிறது…”
செல்வத்தில் சுகமாக வாழ்ந்த நிலையில் அடுத்தவர்களுக்குப் பணத்தைக் கொடுத்திருந்தாலும் அது திரும்ப வரவில்லை என்றால் அவர்களிடம் கேட்டுச் சண்டைக்குப் போகிறோம்.
கடன் வாங்கிவரோ… என்னிடம் பணம் இல்லையே… நான் எப்படிக் கொடுப்பேன்…? நான் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று தானே நினைக்கின்றேன்… நான் என்ன தரமாட்டேனா…? என்ற வாதம் அவரிடமிருந்து வரும்.
ஆனாலும் பணம் வரவில்லையே…! என்ற நிலையில் வேதனை உணர்வுகளை எடுத்து எடுத்து அது நம்மை அறியாமலேயே பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும்.
அப்பொழுது வேதனையான அணுக்கள் நமக்குள் வளரத் தொடங்கி விடுகின்றது. அது நல்ல உணர்வை நமக்குள் அணுக விடாது செயல்படுத்தும்.
அதிலிருந்து நாம் எப்படித் தப்புவது…?
இதைத் தான் மகாபாரதத்தில் கௌரவர்கள் என்று காட்டியிருப்பார்கள். ஒவ்வொரு செயலிலும் நல்லது செய்து கொண்டு இருப்பீர்கள்.
1.வேதனை என்ற வந்த பின் அந்த வேதனையோ மிகவும் வலு பெற்றது.
2.அதையே அடிக்கடி எண்ண வேண்டியது வரும்.
3.நல்லதை யார் சொன்னாலும் உங்களால் கேட்க முடியாது.
4.அவர் சொல்வார்…! அவருக்கென்ன தெரியும்…? நான் படுகிற கஷ்டம் எனக்குத் தானே தெரியும்…! என்று நல்லதை எண்ண விடாது.
அந்தக் கௌரவர்கள் வலு கொண்ட நிலையில் நாம் நல்லதைச் செய்ய விடாதபடி சிந்தனை இல்லாத சில செயல்களைச் செயல்படுத்தச் செய்கின்றது.
ஆகவே… இதிலே நாம் எத்தகைய நல்லதை எண்ணினாலும் நம் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் இவைகள் எல்லாம் நம் உடலில் வளர்ந்து விளைந்து விட்டால் அவைகளுடைய வலுவால் “நம்மை நல்லதை நுகர விடாது…”
அதாவது நமக்குள் இருக்கக்கூடிய கௌரவர்கள்… “என்னை இப்படித் திட்டினான்… திட்டினான்…!” என்ற உணர்வு வரும் போது
1.நல்லதை உள்ளுக்குள் விடுவது இல்லை.
2.நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை.
3.கோபம் வந்தால்.. நீங்கள் நல்லது யார் சொன்னாலும் கேட்கின்றீர்களா…?
4.கோபமான உணர்வுகள் உங்களுக்குள் தூண்டப்பட்டிருந்தால் அந்த நேரத்தில் நல்லது ஏதாவது கேட்பீர்களா…?
கோபமான உணர்வுடன் நீங்கள் இருக்கப்படும் போது ஒரு சந்தோசமான உணர்வையோ ஒரு ஆடல் பாடலையோ ஒரு நல்ல சம்பவங்களையோ சொன்னால் என்ன ஆகும்…? அந்த உணர்வின் தன்மை கொண்டு இதை அழிக்கத்தான் செய்யும்… அழிக்கத்தான் உதவும்.
அதைத்தான் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்…! எனறு சொல்வது.
ஏனென்றால் நமக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குதான் அது செயல்படுத்தும். ஆகவே அதிலிருந்து நாம் மீள்வதற்கு என்ன செய்வது…?
சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பமும் காந்தமும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வைக் கவர்கின்றது.
1.நாம் அந்த அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் பெருக்க வேண்டும்.
நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவால் நுகர்ந்தோமோ ஒளியின் சுடராக நமக்குள் இங்கே விளைகின்றது. இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அந்தச் சக்தியை நமக்குள் பெறச் செய்கின்றது.
1.அதிலே அர்ஜுனன் என்பது துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிரின் வலிமை.
2.நாம் நுகர்ந்த பின் அந்த ஒளியின் உணர்வை ஊட்டுவது பீமன். அதாவது வலுக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு எதையுமே அலட்சியமாகத் தூக்கும்…! என்பது.
3.நகுலன் என்பது நாம் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் (உடலிலே) ஒவ்வொன்றுடன் இணைந்து அதனுடன் “தன் உணர்வை உயர்த்தும்…!” என்று பொருள்.
4.சகாதேவன் என்பது இருளை அகற்றி அதைத் “தன்னுடைய பண்புடன் அரவணைத்துக் கொள்வது…!”
5.தர்மன் என்பது அந்த அருள் உணர்வின் தன்மையைத் “தனக்குள் ஏற்றுக் கொள்வது…!” என்பது பொருள்.
அப்படி ஏற்றுக் கொண்ட நிலையில்
1.நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றும்…
2.“நம்மைப் பேரொளியாக மாற்றும்…!” என்பது பொருள்.


மகரிஷிகள் உணர்வை நமக்குள் புகுத்தி… அவர்களுடன் இணைந்திருப்பதே மேல்…!
சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது.
நாம் எதனை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது பதிவாகி அதனின் கணக்குப் பிரகாரம் தான் நமக்குள் வளர்கிறது. ஆகவே எதனின் கணக்கை நாம் கூட்ட வேண்டும்…?
1.நாம் மெய் ஞானிகள் உணர்வு கொண்டு என்றும் பிறவா நிலையை அடைந்திட
2.அவன் அருளுடன்… அவன் உணர்வை நமக்குள் புகுத்தி… அவனுடன் இணைந்து இருப்பதே மேல்…!
அந்த நிலைகள் எல்லோரும் பெற வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகள் எத்தனையோ எத்தனையோ…! அதற்கு மத்தியில் அந்த மகரிஷிகளின் உணர்வை இணைத்து வலு ஏற்றுகின்றேன்.
தாவர இனங்களுக்கு நாம் உரச் சத்தை ஏற்றும் பொழுது ஒரு முறை முதலிலே ஏற்றுகின்றோம். அதை ஏற்றுக் கொண்ட பின் அடுத்த முறை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வருகின்றோம்.
இப்படி அது இணைத்துக் கொண்ட்தற்குத் தக்கவாறு தான் “புது வித்துக்களாக…” நாம் உருவாக்க முடியும். ஏனென்றால்
1.ஒரு வித்தினை நேரடியாக மாற்றிக் கொண்டு வர முடியாது.
2.அதனைப் பல முறைகள் கொண்டு இணைத்து இணைத்து
3.மாற்றுப் பொருளாக மீண்டும் மீண்டும் உருவாக்கி
4.சீராக அதனுடன் ஒன்றி இயக்கும் நிலைகள் கொண்டு தான் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வர முடியும்.
காரணம் நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்… பகைமை உணர்வால் வளர்த்துக் கொண்ட வித்துக்கள் ஏராளம் ஏராளம்… தன்னை காத்துக் கொள்ளும் கோப குணம் ஆக இருந்தாலும் அதுவும் ஏராளம் ஏராளம்…!
இத்தகைய வித்துகள் நமக்குள் அதிகமாகப் பெருக்கி இருக்கும் நேரத்தில் இது அனைத்தும் ஒருக்கிணைந்து
1.இதையெல்லாம் இணைத்து அரவணைத்து அதை அடக்கிடும் நிலைக்காக
2.அருள் ஞானிகள் உணர்வினை உங்களிடம் இருக்கும் குணங்களுடன் இணைத்து இணைத்து
3.அதை இரண்டு முறை மூன்று முறை பிணைத்துப் பிணைத்து உங்கள் குணங்களுடன் ஒன்றச் செய்து
4.நினைவு கொண்டு அதை நீங்கள் பெறும் ஆற்றலை… அந்தத் தகுதியைப் பெறச் செய்கின்றோம்.
அது அல்லாதபடி நாம் செய்தோம் என்றால் அது முழுமை சேர்க்க முடியாது.
பாடப் புத்தகத்திலே படித்துவிட்டு “ஆகா நன்றாக இருக்கிறது…” என்று சொல்லிவிட்டு அதற்குப்பின் அதை நாம் ஓரம் கட்டி விடுகின்றோம். அடுத்து அதை மீண்டும் படிப்போம் என்ற நிலை வராது.
அதைப் போன்று அல்லாதபடி யாம் பதிவு செய்யும் உணர்வுகள் உங்கள் நினைவாற்றலுக்குள் அது ஓங்கி வளர வேண்டும். ஆகவே இதைக் கேட்டுணர்ந்த அனைவரும் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு எது சொந்தம்…?
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெருக்குங்கள்… அதைச் சொந்தமாக்குங்கள்.
2.பிறருடைய குறைகளை உங்களுக்குச் சொந்தமாக்க வேண்டாம்.
3.அந்தச் சொந்தத்தை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சபையில் வைத்துத் தன் மனைவியை திரௌபதையை அவமானப்படுத்தினாலும் அதே சமயத்தில் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை வரவில்லை. “அவர்களும் அறிந்து உணரட்டும்…!” என்ற உணர்வு பெறுகின்றது.
ஏனென்றால் இவை அனைத்துமே கண்களால் கவர்ந்த உணர்வுகள் தான். திரௌபதி யார்…? கண்ணனின் சகோதரி தான்.
1.கண்கள் தான் மற்றதைக் கவர்ந்து நமக்குள் உணர்த்துகின்றது.
2.நாம் கண்ணால் பார்கின்றோம்…
3.கண்ணின் நிலைகளில் காந்தப்புலன் அறிவு கவர்ந்து உயிருடன் இணைக்கப்படும் போது திரௌபதி
4.புலனறிவு ஐந்தின் வலு எதுவோ அதற்குத் தக்கவாறு அது இயக்கிக் காட்டுகிறது (ஐந்து பேருக்கு ஒருத்தி).
இவைகளை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கண்ணனின் சகோதரியை அர்ச்சுனனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அர்ச்சுனன் வலிமையான நிலைகள் கொண்டாலும் அதன்படி இந்தப் புலனறிவு ஐந்தும் கண்களால் நுகர்ந்த வலுவான உணர்வுப்படி உடலாக்கப்படும் போது பீமன் ஆகின்றான்.
அடுத்து நகுலன் ஆகும் பொழுது மற்ற உணர்வுகளைச் சிந்திக்கும்படி செய்கின்றான். சகாதேவன் ஒன்றுக்கு உதவி செய்யும் தன்மைக்கு வருகின்றான்.
நுகர்ந்தது அனைத்தும் சாந்தத்தின் நிலைகள் கொண்டு உள் அடங்கி அதன் வழி தீமைகளை எண்ணாதபடி தனது உணர்வின் தன்மை பெறுகின்றான் தர்மன். தீமைகளை நுகரவில்லை… நல்ல உணர்வின் தன்மையை அவன் நுகர்கின்றான்.
இந்தப் பஞ்ச பாண்டவர்கள் தீமை என்ற எண்ணம் உட்புகாதபடி தடுத்து நிறுத்திப் போர் முறை கொண்டு அவைகள் எந்த வகையிலும் செயல்படாதபடி மற்ற தீமைகள் எதுவோ அது வராதபடி தடுத்து நிறுத்துகின்றார்கள்.
அதாவது நம் வலிமையை எதிலே கொண்டு வரவேண்டும்…? என்பதைத்தான் மகாபாரதத்தில் அங்கே காட்டுகின்றனர்.
திரௌபதியை சூதிலே வைத்து ஆடிவிடுகின்றான். ஏனென்றால் வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலிலேயும் மனிதன் சிக்கி விடுகின்றான். சிக்கிக் கொண்டபின் என்ன ஆகின்றது.
அங்கே அவமானப்படுத்துகின்றான். யாரை…? திரௌபதியை…! சபையில் வைத்து நிர்வாணப்படுத்துகிறார்கள். அப்பொழுது தன் உணர்வின் தன்மை கொண்டு எண்ண செய்கிறது..?
1.அங்கே நிர்வாணப்படுத்துவதை திரௌபதி எண்ணவில்லை
2.உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை அங்கே செலுத்துகின்றது
3.தன்னை அவமதிக்கிறார்கள்…! என்று திரௌபதி எண்ணவில்லை.
எதற்காக இப்படிக் காட்டுகிறார்கள்…?
நமது வாழ்க்கையில் யார் நம்மை அவமதித்தாலும் “நம்மை அவமதிக்கிறார்…!” என்ற உணர்வின் தன்மையை நமக்குள் வகுத்தால்
1.அதன் உணர்வே நமக்குள் விளைந்து விடும் என்பதையும்
2.அதை நாம் எப்படி மறுத்துப் பழக வேண்டும்…? என்று அங்கே தெளிவாகக் காட்டப்படுகின்றது.
இதையே இராமாயணத்திலேயும் காட்டுகின்றனர். அதாவது இராமன் வாலியை நேரடியாகப் பார்க்கவில்லை.
அதே சமயத்தில் அவன் அருள் உணர்வைத் தனக்குள் எடுத்துக் குகை மேல் இருக்கும் பாறையை வைத்து வாலி வெளி வராதபடி மூடி விடுகின்றான். வாலியின் உணர்வை வலு குறைக்கச் செய்கிறான்.
மகாபாரதத்தில் திரளபதை – நாம் நுகரும் சக்திகள் அவமதிக்கும் உணர்வுகள் இருப்பினும்
1.அந்த அவமதிப்பவன் உணர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.
2.ஏனென்றால் ஒருவர் நம்மை அவமதித்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ளாத வரையிலும் நம்மை ஒன்றும் பாதிக்காது.
3.ஆனால் உள்ளே விட்டு விட்டால் என்றுமே அது நம் நல்ல குணங்களை மூடி மறைத்துவிடும்.
ஆகவே வலு கொண்ட உணர்வு கொண்டு நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்குதான் இவ்வாறு மகாபாரத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.
மகாபாரதத்தின் இறுதியில் கண்ணனும் அவனுடைய வலு இழந்து விடுகிறான். பீமனும் என்ன செய்கின்றான்..? இந்த உயிரான நிலைகள் கண்ணன் இறந்த பின் இவனுக்கு உணவு கிடைக்காது இவனும் மடிகின்றான்.
தர்மனுடன் எது சேர்ந்து செல்கின்றது…? கடைசியில் அந்த நாய் தான் கூடப் போகின்றது என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள். ஆகவே எது விசுவாசமாக இருந்தது…? வளர்த்த நாய் தான் செல்கின்றது.
நாயை ஏன் அங்கே மோட்சத்திற்குக் கொண்டு போகவேண்டும்…?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நம்முடைய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுகின்றோம்.
நம்மை அறியாது வந்த தீமைகளை எல்லாம் அடக்கி நல்ல உணர்வுகளாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கின்றோம்.
1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் போது அங்கே போகின்றோம்.
2.நுகர்ந்த உணர்வுகள் நம்முடன் இணைந்து பிறவி இல்லா நிலை அடைகின்றது.
3.தன்னுடன் அது விசுவாசமாக இருந்ததால் அது தன்னைப் பாதுகாத்தது.
4.”நாம் சுவாசித்ததே.. நாம் நுகர்ந்ததே.. அந்த மோப்பம் தான் நம்மைக் காக்கின்றது…”
5.(அதனால் தான் நாய் என்று அதைக் காண்பித்து… தன்னுடன் கூடவே மோட்சத்திற்கு வருகிறது என்று தெளிவாக்குகின்றார்கள்.)
நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மைப் பாதுகாக்கின்றது. அந்த உணர்வின் தன்மை வலு இழக்காதபடி தன்னைப் காக்கின்றது. வீரிய தன்மை எடுக்கப்படும் பொழுது பிறருடைய துயரங்களை இது எடுத்துக் கொள்வது இல்லை. யாருடைய ஈர்ப்புக்கும் செல்லாதபடி “ஏகாந்தமாக விண் செல்கிறது…” என்று தெளிவாக்குகின்றார்கள்.


இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்களுக்குச் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி
ஒருவர் மிகவும் கடினமாக வேதனைப்படுகின்றார் என்று நாம் பார்க்க நேருகின்றது. அப்போது நன்மை செய்யும் பருவத்தில் அவருக்கு உபகாரம் செய்கின்றோம்.
1.இப்படிப் பதிவான உணர்வுகள் சித்திர புத்திரன். அதாவது…
2.அவருடைய எண்ணம் நமக்குள் பதிவாகின்றது… நம்முடைய எண்ணம் அவர்கள் உடலில் விளைகின்றது.
சந்தர்ப்பத்தால் அந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் அவர் உடலில் விளைந்த உணர்வுடன் நம் உடலுக்குள் அது வந்து விடுகின்றது.
உடலுக்குள் வந்தபின் அவர் உடலில் விளைந்தது நமக்குள் ஊன்றிப் பதிவாகி விடுகின்றது. ஒன்றிய குணங்கள் இருப்பதனால் நம்மை அறியாமலே இப்படி ஆகின்றது.
மனித வாழ்க்கையில்… இதைப் போன்று இன்னொரு ஆன்மா மனிதனுக்குள் வந்து தான் அடுத்து அது மனிதனாகப் பிறக்க வேண்டும்.
பரிவால் பண்பால் இரக்கத்தால் ஈகையால் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்தாலும் அவர்களிடம் விளைந்த நஞ்சின் தன்மை…
1.நாம் கேட்டறிந்த அந்த உணர்வுகள் பதிவான பின்… தன் இனத்தால்
2.நம் உடலில் இருப்பது அந்த நினைவாற்றல் வெளி வரும் பொழுது
3.இந்த உணர்வின் துணை கொண்டு நம் உடலுக்குள் வந்தே தீருகின்றது.
எவ்வளவு பழகினாலும் சரி… இந்த உணர்வின் துணை கொண்டு இங்கே வந்து விடுகிறது. வந்து விட்டால் கோடாங்கியோ ஜோதிடமோ மற்ற மந்திரங்களாலோ அதை வெளியேற்ற முடியாது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்றால் உங்களுடைய எண்ணத்தை அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பால் செலுத்தி
1.அதனின்று வெளிப்படும் அருள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்
3.எனக்குள் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஜீவான்மா என்பது இன்னொரு உயிரில் விளைய வைத்த அது நமக்குள் சுவாசம் செய்யும் நிலை. ஜீவ அணு என்பது எந்தக் குணத்தை நாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் ஜீவித்து அந்த அணுவின் மலமாக நம் சரீரம் ஆகிறது.
எந்த உடலில் இருந்து ஜீவான்மா வந்ததோ அந்த நோயின் தன்மை கொண்டு நமக்குள் பரப்பி… அந்த உணர்வின் நினைவாற்றல் ஆக நம் ஜீவணுக்களையும் அதுவாக மாற்றிவிடும்.
அதைப் பெருக்க விடாது தடுக்க வேண்டும்.
1.நம் உடலில் எத்தகைய ஆன்மாக்கள் புகுந்திருந்தாலும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற நாங்கள் வேண்டும்…
2.எனக்குள் இருக்கும் ஜீவான்மாக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று “அடிக்கடி…” எண்ணுதல் வேண்டும்.
ஜீவான்மா என்கிற பொழுது உயிருடன் ஒன்றிய அந்த நிலைகள் ஒன்று சேர்ந்து இயங்கும் நிலை. மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
எனக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் அந்த ஆன்மாக்களுக்கு “அந்தச் சக்தியை ஏற்றிக் கொடுக்க வேண்டும்…”
ஒருவர் சாபமிடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்… அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
1.எந்த மனித உடலில் இருந்து அந்தச் சாப அலைகள் தொடர்ந்ததோ அதை அந்த அணு உணவாக எடுக்கும்.
2.அந்த உடல் இல்லை என்றாலும் அலைகள் இங்கே இருக்கும்… அதை எடுக்கும்.
ஒரு மரம் பட்டுப் போய்விட்டாலும் அதில் விளைந்த சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்திருப்பது போல மனிதன் வெளிவிட்ட அந்த சாப அலைகள் இந்தக் காற்றில் பரவியே இருக்கும்.
அதில் விளைந்த வித்து… மீண்டும் அந்தச் சத்தை எடுத்து அது வளர்ந்து கொண்டே இருக்கும்.
நம் மூதாதையர்கள் ஒருவருக்கொருவர் பிடிக்காது சாபம் இட்டிருப்பார்கள். அதை நாம் கேட்டறிந்தால் வம்சத்தில் அது வரும். பின் தொடர்ந்து இங்கே வம்ச வழியில் வந்து கொண்டே இருக்கும். அது வளர வளர அதனுடைய தீமைகளைச் செய்து கொண்டிருக்கும்.
மரம் அழிந்தாலும் அதிலே விளைந்த வித்து மீண்டும் தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து வளர்வது போல மனித உடலில் விளைந்த சாப அலைகள் வித்துக்களாகப் பெருகிக் குடும்பத்தில் வளர்ந்து கொண்டே இருக்கும்.
அதையெல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி யாம் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஞ்ஞானி வான்வீதியில் எந்தக் கோள் எங்கே செல்கின்றது…? என்பதைப் பதிவாக்குகின்றான். கம்ப்யூட்டர் மூலம் ஆயிரம் மடங்கு அதைப் பெருக்குகின்றான்.
பெருக்கிய பின் அந்த உணர்வின் அதிர்வுகளை எடுத்துக் கொண்ட பின் எந்தக் கோளின் உணர்ச்சியோ “அதை எலக்ட்ரானிக்காக…” மாற்றுகின்றான்.
அதை நாடாக்களில் பதிவு செய்து ஒரு ராக்கெட்டின் முகப்பில் வைத்து உந்து விசையால் உந்தச் செய்து விண்ணுக்குச் செலுத்துகின்றான்.
1.வேறு பாதையில் செல்லாதபடி…
2.எந்தக் கோளின் உணர்வலைகளைப் பதிவாக்கி வைத்துள்ளனரோ அந்த அலைகள் வான்வீதியில் வரும் பொழுது
3.அதன் திசைப் பக்கம் அழைத்துச் செல்கிறது.
அந்த உணர்வின் அழுத்தமான பின் ராக்கெட் அதைத் தொடர்ந்து செல்கின்றது. அந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் அனைத்தையும் தரை மார்க்கத்தில் இங்கிருந்து அதை எடுக்கின்றனர்… பார்க்கின்றனர்.
இதைப் போலத் தான் அன்றைய மெய் ஞானிகள் மனிதனின் வாழ்க்கையில் நாம் எதைப் பெற வேண்டும்…? பிறவி இல்லா நிலைகள் அடைந்து எப்படி விண் செல்ல வேண்டும்..? என்ற நிலையைத் தெளிவாக்கினான்.
இதை உணர்த்துவதற்குத்தான் விநாயகர் தத்துவத்தையே காட்டினார்கள். ஒரு உயிரின் தன்மை பல கோடிச் சரீரங்களை எடுத்து அதிலே வளர்ச்சி அடைந்து மனிதனாக எப்படி உருவாக்கியது…? என்றும் அதிலே உணர்த்தினார்கள்.
சிலையை மேற்கே பார்த்து வைத்து… நாம் கிழக்கே பார்க்கும்படி வைத்து நீர் நிலை இருக்கும் பக்கம் விநாயகரை வைத்தார்கள்.
நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் சென்று கணங்களுக்கு அதிபதியாகிப் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வளர்ந்து வந்தோம்.
மனிதனான பின் நாம் உணவுகளை எப்படிச் சுவைமிக்கதாகப் படைத்து உட்கொள்கிறோம்…? என்ற உணர்வுகளைக் காட்டி இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விகுறி வைத்துச் சிந்திக்கும்படி செய்கிறார்கள்.
காலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் நாம் குளித்து உடல் அழுக்கைப் போக்குகின்றோம். துணி அழுக்கைப் போக்குகின்றோம். கரை ஏறி வந்த பின் இந்த விநாயகரை உற்று பார்க்கும்படி… நீர் நிலை இருக்கும் இடத்தில் விநாயகரை வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.
ஆதிமூலம் என்ற இந்த உயிர் பல பல உணர்வின் தன்மை தனக்குள் விளைந்து உயிர் ஈசனாக நின்று மனிதனை எப்படி உருவாக்கியது…? என்று தன்னை அறிவதற்காக்க் கணங்களுக்கெல்லாம் ஈசா.. “கணேசா…!” என்று நம் உயிரை வணங்கும்படி செய்தார்கள்.
வான இயல் புவியியல் உயிரியல் அடிப்படையில் பேருண்மைகளை எல்லாம் உணர்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியும் ஒன்றென இணைந்து விண்ணுலக ஆற்றலை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை நினைவாக்கி அதைப் பதிவாக்கி “நினைவினை விண்ணை நோக்கி ஏங்கும்படிச் செய்கின்றார்கள்…”
1.இங்கே டி.வி ரேடியோவை அது எந்த ஸ்டேசனோ… எந்த அலைவரிசையோ அதை வைத்து எப்படிக் கவர்கின்றோமோ
2.அதைப் போல் அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பதிவாக்கி
3.நம் எண்ணத்தால் அதைக் கவரும்படி செய்தார்கள் ஞானிகள்.
அந்த அகஸ்தியன் தனக்குள் வரும் நஞ்சினை எல்லாம் அவன் வென்றான். நாமும் அந்த நஞ்சினை வெல்லும் சக்தியைப் பெறுவதற்காக விநாய்கரை வைத்தான்.
காலையில் எழுந்த உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்கச் செய்ய வேண்டும்.
ஏனென்றால் நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ பகைமை உணர்வுகளையும் தீமைகளையும் துன்பங்களையும் பார்த்து… கேட்டு… நுகர்ந்திருப்போம்.
நுகர்ந்தது அனைத்தும் நம் உறுப்புகளில் அந்த அணுக்களில் இருக்கும். இரத்தத்தில் இருந்து தான் அந்த உணர்வின் தன்மையைப் பகிர்ந்து கொள்கின்றது. அந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் வராதபடி நல்லதாக்க வேண்டும்.
இராமாயணத்தில் காட்டியிருப்பார்கள். இராமன் காட்டுக்குள் செல்லும் போது குகனை நண்பன் ஆக்கிக் கொண்டான் என்று.
அதைப் போல அருள் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் சேர்த்து நம் இரத்தங்களில் கலக்கச் செய்து உடல் முழுவதும் சுழலச் செய்தால் பகைமை உணர்வுகள் ஈர்க்கும் தன்மை குறைக்கப்பட்டு அனைத்து அணுக்களையும் நண்பனாக்கும் நிலையைக் கொண்டு வருகின்றது.
இராமாயணத்தின் நிலைகளை நீங்கள் தெரிந்து கொண்டால் மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்ற உண்மையை உணர முடியும்.
இந்த உடலுக்குப் பின் இனி நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை அதிலே நிலை நிறுத்திக் காட்டினான் அந்த மெய் ஞானி.


உங்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்
நாம் செய்ய வேண்டிய அற்புதம் எதுவாக இருக்க வேண்டும்…?
1.நமது பார்வை பிறருடைய தீமைகளை நீக்க வேண்டும்
2.நமது பார்வை அவர்களுக்குள் ஞானத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.
இதை நாம் வளர்த்தோம் என்றால் என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற முடியும்.
அந்த மகரிஷிகள் அருள் ஒளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். என்னைப் பார்ப்பவருக்கு மன மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று நாம் செயல்படுத்த வேண்டும்.
“மன மகிழ்ச்சி” கிடைக்க வேண்டும் என்றால் வேதனைப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி பெறுவதல்ல.
1.என் (நம்முடைய) சொல்லால் பேச்சால் செயலால் பார்வையால்…
2.நான் நல்லதானேன்… எங்களுக்கு நல்லதானது…! என்று அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வர வேண்டும்.
3.உங்கள் பார்வை பிறரைப் புனிதப்படுத்தும் நிலையாக வர வேண்டும்.
4.உங்கள் உணர்வின் தன்மை தூய்மைப்படுத்தும் உணர்வின் ஆன்மாவாக மாற்ற வேண்டும்.
சப்தரிஷி மண்டலம் என்பது தீமை தனக்குள் வராதபடி ஒளியாக மாற்றிக் கொண்டது தான்.
நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்ற பிற மண்டலங்களில் வருவதை ஒடுக்கி துகள்களாக பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.
அது தூசிகளாக மாறுவதைக் கோள்கள் எடுக்கின்றது. அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து துகள்களாக மாற்றுகின்றது… பின் அதனின் ஓட்டத்தில் தூசிகளாக மாறுகின்றது. அதனைச் சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகின்றது.
இதைப் போன்று தான்
1.மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் வலுக் கொண்டதாக மாற்றி…
2.பால்வெளி மண்டலங்களாக உங்களிடம் இருக்கும் எண்ணிலடங்காத குணங்களில் இணைத்து இணைத்து
3.எத்தகைய நிலையிலும் அது உங்களுக்குள் தூய்மைப்படுத்திடும் சக்தியாக நீங்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் தான்
4.எமது குருநாதர் காட்டிய அருள் வழியினை உங்களுக்குக் காட்டுகின்றேன்.
ஆகவே… தீமையை அகற்றித் தூய்மை பெறும் உணர்வின் தன்மையை நீங்கள் விளைய வைத்து இந்த உடலை விட்டு அகன்றால் அழியாச் செல்வமான பேரருள் பேரொளியாக நீங்கள் நிச்சயம் வருவீர்கள் என்ற “தன்னம்பிக்கையைக் கொடுக்கத்தான் இதைச் செய்கின்றேன்…”
அருள் செல்வம் நீங்கள் பெறுவீர்கள்… அருள் ஞானம் பெறுவீர்கள்… இந்த அருள் உணர்வு உலகம் முழுவதும் பரவட்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நமக்கு கடவுள் யார்…? நம்மை உருவாக்கியது யார்…? நமது அன்னை தந்தை உயிரே ஈசன். அவர்களுடைய எண்ணங்களால் தான் தனக்குள் எடுத்து நம்மை உருவாக்கினர்.
தாய் தந்தையர் கடவுளாக இருந்து தெய்வமாக நம்மைக் காத்தார்கள்…! எப்படி…?
1.நாம் பாம்பாக இருந்திருப்போம் அல்லது கொசுவாக இருந்து அவர்களின் இரத்தத்தை குடித்திருப்போம்.
2.அடித்த பின் அவர்கள் உடலுக்குள் போயிருப்போம்.
3.வீட்டில் எறும்பு தொல்லை கொடுத்தது என்று நசுக்கி இருப்பார்கள்.
4.நம் உயிர் அந்த உடலுக்குள் போயிருக்கும். அந்த உடலிலிருக்கும் உணர்வை எடுத்து மனிதனாக பிறக்கும் தகுதி பெறும்.
ஆகவே மனிதனாக நம்மை உருவாக்கியது யார்…? கடவுள் எங்கே இருக்கின்றான்…? நமது தாய் தந்தை தான் கடவுள். நம்மை மனிதனாக உருவாக்கிய அவர்கள் தான் கடவுள்.
இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் அவர்கள் மனிதன் ஆனார்கள். பல இன்னல்களைக் கடந்து வந்து இன்னலிலிருந்து மீண்டிடும் நிலை பெற்றார்கள். இன்னலிலிருந்து மீள்வதற்காக ஒன்றை அடித்துக் கொன்றார்கள். அந்த உயிர் அங்கே சென்றது. மனிதனாக உருவானது.
ஆகவே நமக்கு மனித உரு கொடுத்தது யார்..? நம்முடைய தாய் தான். தெய்வமாகக் காத்ததும் நம் தாய் தான்.
கர்ப்பிணியாக இருப்பவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகிறார்கள்…? குழந்தை பிறந்த பின் அந்தத் தாய் படுகிற அவஸ்தையைப் பார்த்தால் தெரியும். குழந்தைக்குத் தலை வலிக்கிறது என்றால் தாய் என்ன செய்கிறது…?
1.உடனே பதறுகின்றது… குழந்தைக்கு என்ன ஆயிற்றோ…? என்ற உணர்வை நுகர்கின்றது,
2.காக்கும் உணர்வைக் கொண்டு வருகின்றது.
3.அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலேயும் பதிவாயிருக்கின்றது.
குழந்தைப் பருவத்தில் அதை எண்ண முடியவில்லை என்றாலும் வளர்ந்த பின் “தாயின் காக்கும் உணர்வை எண்ணினால்… எத்தகைய தீமையாக இருந்தாலும் நாம் காக்கப்படுவோம்…”
1.“தாயின் உணர்வு நம்மைக் காக்கும்…!” என்ற நிலையை நாம் மறந்தே விட்டோம்.
2.விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாகக் கூறப்படுகின்றது.
இன்று தாயைத் திட்டுவதும் பேய் என்று விரட்டுவதும் அவஸ்தைப் படச் செய்வதும் தான் பெரும்பகுதிக் குடும்பங்களில் இருக்கிறது.
வேதங்களைக் கற்றுவந்த பின் யாக சாலைகளில் மந்திரங்கள் ஓதி பல உணர்வுகளைத் தீயிலே போட்டுப் பொசுக்கிப் பிற ஆன்மாக்களைத் தனக்குள் கைவல்யம் ஆக்கி மந்திரமாக்கிக் கொண்டு நான் கடவுளையே கை வசம் வைத்திருக்கிறேன் என்று தான் உலக மதங்கள் கூறுகின்றது.
இதிலிருந்தெல்லாம் நாம் என்று மீளப்போகிறோம்…? முழுமையாக அழியும் தருணத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்..!
இன்று கடலில் உள்ள மணலில் இருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து அணுகுண்டாகவும் ஹைட்ரஜன் குண்டுகளாகவும் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை எல்லாம் பரீட்சாந்திரமாக விண்வெளியிலும் வெடிக்கச் செய்துள்ளார்கள்.
வான் வீதியில் உள்ள நிலைகளைத் தெரிந்து கொள்ள இராக்கெட்டுகளை உந்து விசையால் அனுப்புகிறார்கள். அவைகள் வெளிப்படுத்திய கதிரியக்கச் சக்திகள் அனைத்தும் அங்கேயும் கலக்கப்பட்டு விட்டது.
1.சூரியன் அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றும் போது
2.நம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களிலும் அந்த விஷக் கதிரியக்கங்கள் கலந்து விட்டது.
உதாரணமாக இரண்டு மின்சாரம் (PHASE TO PHASE) ஒன்றானால் என்ன ஆகும்…? வீட்டில் உள்ள பல்புகள் பீஸ் ஆகிறது. அதைப் போன்று மனிதனின் சிந்தனைகள் அனைத்தும் சிதறப் போகின்றது. அந்த ஒரு நொடிக்குள் மனிதர்கள் மிருகம் ஆகிறார்கள்.
அதாவது மனித உடலாக இருந்தாலும் சிந்தனைகள் சிதறி மிருகங்களைப் போன்ற இயக்கமாகிவிடும். (ஏற்கனவே சில இடங்களில் அப்படித்தான் இருக்கிறது)
இந்த நிலையில் தான் நாம் அனைவரும் இருக்கின்றோம். ஒரு நொடிக்குள் மாறி விடுகிறது. நமக்கே தெரியாது. மனிதனுக்கு மனிதன் கொல்லும் நிலை வருகின்றது.
கடவுளின் அவதாரம் வராக அவதாரம் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வின் தன்மையை எடுப்பது போல் விஷமான உணர்வுகள் கலந்திருக்கும் இந்த உலகிலிருந்து மீண்டிட அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். அத்தகைய தீமைகள் வருவதற்கு முன் நுகர்ந்து பழகுங்கள்.
காலையில் விழித்தவுடன் “வானை நோக்கி ஏங்கி”
1.தன் கணவருக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.
2.தன் மனைவிக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.
3.அவர் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்.
4.அந்த அருள் என்றும் எனக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று “இருவருமே எண்ண வேண்டும்…”
இந்த மனித வாழ்க்கையில் நாம் என்றுமே தீமைகளைப் பற்றிடாமல் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி… பிறவி இல்லா நிலைகள் அடைதல் வேண்டும்.


குருநாதரும் மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்ததைப் பதிவு செய்கின்றேன்
மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் அதை வளர்த்துக் கொள்ளுங்கள். அருள் ஞானச் செல்வமான ஞானிகள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அழியா ஒளி உடலைப் பெறுங்கள்.
1.பூமியில் மீண்டும் உடல் பெறும் உணர்வுகள் நமக்கு வேண்டாம்.
2.காரணம் இந்தப் பூமி நிலை தடுமாறும் நிலைகள் வந்துவிட்டது… ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள்.
ஆயிரம் ஆண்டு நாம் வாழ்வதில்லை. ஆனாலும் இந்த உயிரின் தன்மை கொண்டு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால்
1.மனித நினைவு இருக்காது…. அதிலே சிக்கினால் நரக வேதனையைத் தான் அனுபவிக்க நேரும்.
2.1000 ஆண்டுகளில் சூரியன் பிரிந்து சென்று விட்டால் பிரபஞ்ச வாழ்க்கையும் முடிந்தது.
3.பூமி பனிப் பாறைகளாக மாறி… வியாழன் கோள் போல் ஆகிவிடும். இந்தச் சூரிய குடும்பம் சிதறுண்டு ஓடி விடும்.
இதிலே இருக்கக்கூடிய 27 நட்சத்திரங்களும் அதனுடைய குடும்ப நிலைகளாக வளர்ச்சிக்குப் போகும். அது முழுமை பெற்று சரி பகுதிக்கு மேல் பிரிந்து சென்று விட்டால் சூரியக் குடும்பங்களாக மாறி “ஒரு வட்டமாக 2000 சூரியக் குடும்பத்துடன் இணைந்து விடும்…”
1.நமது குருநாதரும் மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்ததை உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.
2.என்றும் அழியா பெரு வாழ்வு என்ற… நிலையான ஒளிச் சரீரம் பெறுவோம்.
நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றி என்றும் நாம் நிலைத்திருப்போம்… அந்த எல்லையை அடைவோம் என்று சபதம் எடுப்போம்.
இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும்
1.எத்தகைய தீமைகளையும் உங்களுக்குள் அணுக விடாதீர்கள்.
2.அருள் ஞானிகள் உணர்வைக் கொண்டு அதைத் துரத்தி அடியுங்கள்… அந்தப் பழக்கத்திற்கு வாருங்கள்.
ஆகவே அருள் ஞான உணர்வை அழியாச் சொத்தாக நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். அது என்றுமே நிலைத்திருக்கும்.
குணச் செல்வம் இருப்பினும் கூட சிறிது காலம் தான் இருக்கும்… அதுவும் அழிந்துவிடும். ஆனால் அழியா ஒளிச் சரீரம் பெற்று விட்டால் அது என்றுமே அழிவதில்லை. அதன் வழியில் நாம் அனைவரும் செல்வோம்.
கேட்டுணர்ந்தவர்கள் இதைப் பெற முயற்சி செய்யுங்கள்… நிச்சயம் பெறுவீர்கள். வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துங்கள். நம் அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் வர வேண்டும்.
ஒரு பிரபஞ்சம் எவ்வாறு இயக்குகின்றதோ அதை போல்
1.நாம் அனைவரும் குரு வழியில் குருநாதரின் இயக்கத்திற்குள் ஒரு பெரிய பிரபஞ்சமாகி
2.உலகில் உள்ள தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் நமக்குள் விளைந்து
3.தீமை வராது நம்மைக் காத்திடும் உணர்வுகளாக வளர வேண்டும்.
ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். உலகைக் காத்திடும் உணர்வை விளைய வைப்போம். இந்த உலகைத் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் நிலையாக வளர்ப்போம்.
நீங்கள் இதைக் கடைப்பிடியுங்கள். வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் தூசியாக மாறிவிடும் எத்தகைய நஞ்சானாலும் தூசியாக மாறிவிடும். அருள் ஞான சக்திகள் என்றுமே உங்களுக்குள் விளைந்து விடும். பேரானந்த நிலைகள் பெறும் தகுதியை இந்த உடலிலேயே பெற்றிடுவோம்.
1.அருள் செல்வம்… அருள் ஞானம் இந்த உலகம் முழுவதும் பரவட்டும்
2.மகரிஷிகள் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் பரவட்டும்… மெய் உணர்வுகள் மலரட்டும்.
இந்த மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு உலகைக் காத்திடும் உணர்வுகள் எல்லா இடங்களிலும் பரவட்டும். அதை நமக்குள் விளைய வைப்போம் என்று எல்லோரையும் வேண்டிக் கொள்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மாட்டை நாம் வீட்டில் வளர்க்கின்றோம். உதாரணமாக ஒருவர் அந்த மாட்டைப் பார்த்து “அதை மிரட்டுகின்றார்…!” என்று வைத்துக் கொள்வோம்.
மாடு அவரைப் பார்த்த உடன் அந்த மிரட்டும் உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு “மிரண்டு துள்ளும்…!”
ஆனால் அதே சமயத்தில் சாந்தமான நிலைகளில் அந்த மாட்டைப் பார்த்துப் பேசப்படும் போது “வாடா ராஜா… நீ இப்படிப் போ.. உட்கார்…! என்று சொல்லிப் பதிவாக்கினால் அந்த மாடு சாந்தமாக வரும். ஏனென்றால்
1.மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகளும் எண்ணங்களும் மிகச் சக்தி வாய்ந்தது.
2.மற்றொன்றை இயக்கக் கூடிய சக்தி பெற்றது.
புலி மற்றதைப் பார்க்கும் போது கொடூர நிலை கொண்டு இயக்கப்படும் சக்தி பெற்றது. அதை நாம் நுகரப்படும் போது அஞ்சி ஓடுகின்றோம் அல்லவா…!
இதைப் போல மனிதன் கோபமான உணர்வுடன் பார்க்கப்படும் போது மாடு அந்த உணர்வை நுகர்ந்த பின் அதற்குள் வலுவாகின்றது. வலுவான பின் நம்மைக் கண்டு அஞ்சி ஓடும் உணர்வுகள் வந்து அதுவே கூர்மையாகின்றது.
அந்தக் கோபப்பட்டோரின் உணர்வுகள் மாட்டிற்குள் பதிவாகி விளைந்த பின் அந்த மாடு இறந்தாலும் அதே மனிதனின் உடலுக்குள் தான் போகும். (மாட்டின் உயிரான்மா கோபித்தோர் உணர்வின் வலிமையை எடுத்து மனித உணர்வுக்குள் வரும்)
1.மனித உடலுக்குள் வந்து
2.மனிதனாகப் பிறக்கும் கருத் தன்மை பெறுகின்றது.
மாட்டின் ஆன்மா கருவாகி இந்த உடலுக்குள் வரப்படும் போது இங்கே விளைந்து அந்தக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும் அணுவின் தன்மை அடைகின்றது.
முதலில் அந்த மனிதர் கோபமாகப் பேசியிருந்தாலும் இந்த மாட்டுக்குள் விளைந்த கோப உணர்வுகள் இங்கே மீண்டும் தோன்றி இவருக்குள் வந்து இந்த உணர்வுகளைத் தூண்டி அதே உணர்ச்சியின் தன்மை கொண்ட மனிதனாகப் பிறக்கும் உருத் தன்மை பெறுகின்றது.
அது மனிதனாகப் பிறக்கும் தகுதி பெற்றாலும் இந்த வீரிய உணர்வுகள் அதற்குள் பட்ட பின் அது பிறக்கும் போதே குழந்தையின் நுண்ணிய நாளங்களை அது இழந்துவிடும். பிறக்கும் போதே அந்தக் குழந்தை இறந்துவிடும்.
உங்களுக்குள் தெளிவாக்குவதற்காக மீண்டும் சொல்கிறோம்.
1.ஒருவர் கோபமான நிலையில் மாட்டை அதிவேகமாகத் தாக்கியிருந்தால்
2.அதனுடைய உணர்வுகளை எடுக்கப்படும் போது மாடு இறந்தபின்
3.யார் விரட்டினார்களோ அதே உடலுக்குள் வந்து அவருடைய உணர்வை எடுத்து இங்கே கருவாகும்.
4.மனிதனாகப் பிறக்கும் தகுதி ரொம்ப சீக்கிரமாக வருகின்றது.
இப்படி உருவான அந்தக் கருவின் உந்து வேகம் மற்றதைத் தள்ளிவிட்டு முதலில் கர்ப்பத்திற்கு வரும் தகுதியும் வருகின்றது. அப்படிப் பெற்றதனால் கருவிலேயே அதனுடைய நுண்ணிய நாளங்கள் இழந்து பிறக்கும் பொழுதே இறந்து விடுகின்றது.
இவையெல்லாம் இந்த உணர்வுகளுடைய இயக்கங்கள் எவ்வாறு…? என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டினார்.
ஆக மாட்டிடம் கோபமாகப் பேசிய உணர்வுகள் இப்படி வருகிறது. ஆனால் அந்தக் குழந்தை இறந்து விடுகின்றது. அந்தக் குழந்தை இறந்து விட்டால் அந்தத் தாயின் ஈர்ப்புக்குள்ளே வந்து விடுகின்றது.
குழந்தை இறந்துவிட்டதே…! என்று தாய் பாசத்தால் எண்ணும் பொழுது அந்தக் குழந்தையின் உயிரான்மா தாயின் ஈர்ப்புக்குள் வந்து அது தன்னுடைய சுழற்சியில் இன்னொரு பிறவிக்கு வருகின்றது.
சாந்தம் கொண்டு இந்தப் பாசமான உணர்வுகள் அடுத்து வரப்போகும் போது அது மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது. இதில் இத்தனை வித்தியாசங்கள் இருக்கின்றது…!
ஆனால் அதே சமயத்தில் அந்த மாட்டைச் சாந்தமான நிலைகள் கொண்டு வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மாடு இறந்த பின் பாசமாகப் பழகிய அந்த மனித உடலுக்குள் மாட்டின் உயிரான்மா சென்று கருவாகி மனிதனாக உருபெரும் தகுதியைப் பெறுகின்றது.
இந்த உணர்ச்சிகள் அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு நல்ல ஞானத்தின் நிலைகள் கொண்டு பிறக்கும் அந்தக் குழந்தையாக வருகின்றது.
இவர் வளர்ந்து கொண்டு இருந்தாலும் அல்லது இறந்து விட்டாலும் இவர் யாரிடம் நட்புடன் பண்பு கொண்டு அதிகமாகப் பழகுகின்றாறோ அந்த உடலை விட்டுச் சென்றபின் அந்தப் பண்பு கொண்ட மனிதனின் ஈர்ப்புக்குள் மாட்டின் உயிரான்மா செல்லும்.
1.பின் அதனுடைய வரிசைத் தொடரில் வளர்ச்சி பெற்று
2.ஏழு சரீரங்களுக்குச் சென்ற பின் அது மனித உருவைப் பெறும் தன்மையாக முழுமை பெறுகின்றது.
3.ஏழு ஜென்மங்கள் என்று சொல்வார்கள்.
இதையெல்லாம் ஞானிகள் தெள்ளத் தெளிவாகக் கண்டு உணர்ந்து உணர்த்திய பேருண்மைகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை உணர்த்துகின்றோம்.


உங்களை அகண்ட பேரண்டத்துடன் இணைத்து… “அந்த மகரிஷிகளுடன் ஒன்றும்படி செய்கிறோம்…”
ஒரு வாடிய செடிக்கு எப்படி உரம் இடுகின்றோமோ அதைப் போலத் தான்
1.அந்த மகரிஷிகளின் உரச் சத்தை
2.அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வினை உங்களுக்குள் உரமாக இணையச் செய்கின்றோம்.
சாதாரணமானதல்ல…! அகண்ட அண்டத்தின் விரிவான நிலையை அறிந்த ஞானி தனக்குள் அதை தெளியச் செய்து அந்த உணர்வால் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு முழுமை அடைந்துள்ளான்… கல்கி.
அந்த நிலையை நாம் அனைவரும் பெற முடியும். அதை நாம் எல்லையாக வைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.
1.உங்கள் வாழ்க்கையில் வாடிய உணர்வுகள் எத்தனையோ எத்தனையோ…!
2.அப்படிப்பட்ட நிலையில்… கோடிக்கணக்கான குணங்கள் உங்களுக்குள் இருப்பினும்
3.அவை எவ்வாறு உருவானது…? என்ற நிலையை உங்களுக்குள் நினைவுபடுத்தி
4.அதை அண்டத்துடன் பேரண்டத்துடன் இணைத்து
5.மனிதனான நாம் அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் இணைத்து இணைத்து
6.அவ்வாறு இணையும் தன்மையைத் தனக்குள் பெருக்கப்படும் பொழுது தான் அது வலுப் பெறும்.
ஒவ்வொரு செடிகளுக்கும் அதற்குண்டான உரத்தை இடுவது போன்று தான் அருள் ஞானிகளுடைய உணர்வுகளை மிகச் சக்தி வாய்ந்த உரமாக உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.
இந்த உணர்வின் துணை கொண்டு என்றும் அருள் ஞான உணர்வின் தன்மை கொண்டு “இருளைப் பிளந்து பொருள் காணும் பொறிகள்…” உங்களிடத்தில் உருவாக வேண்டும் என்பதற்குத்தான் இதை இணைத்து இணைத்துத் தொடர்ந்து இணையச் செய்கின்றேன்.
காரணம்… இந்த உடலில் யாரும் நீண்ட நாள் இருப்பது இல்லை. யாரும் இருந்தது இல்லை. ஆனால் நீண்ட நாள் என்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.
1.இந்த உடலை வைத்துத் தான் உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
2.விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக நிலை கொண்டுள்ளார்கள்.
3.பேரானந்த பெரு நிலை என்ற நிலையில் முழுமை அடைந்தவர்கள் அவர்கள்.
4.நாம் அனைவரும் அதைப் பெற வேண்டும்.
மனிதனான பின் தீமையை நீக்கி விட்டு தனக்குகந்ததாக பல பொருள்களை உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள் தான் நாம். இதையெல்லாம் உங்களுடன் இணைத்து இணைத்துப் பேசுகின்றேன். மெய் ஞானிகளின் உணர்வுகளை அறிந்து கொண்டால் போதும்.
மெய்ஞானி உயிருடன் ஒன்றி என்றுமே அழியாத நிலை கொண்டான்…!
ஆஅனால் விஞ்ஞானியோ இந்த உடலுக்காக வேண்டி சகல சொர்க்கத்தையும் கொடுத்தான். பேரின்பத்தைக் கொடுக்கக்கூடிய நிலைகளுக்கும் அந்த விஞ்ஞான அறிவு வந்தாலும்… அது உடலுடன் சரி.
உடல் மடிந்த பின் எத்தகைய அறிவு கொண்டாலும் பூதகணமாக இயங்கி இன்னொரு மனித உடலுக்குள் கொண்டு போய்… பேயாக உருவாக்கும் நிலையே வருகின்றது.
எந்த மனித உடலில் எந்த வேதனையைக் கடைசியிலே வளர்த்துக் கொண்டானோ எதனைக் கொண்டு அழிக்கத் துணிந்தானோ அந்த உணர்வுகள் மனித உடலில் விளைந்து சிறிது கோபம் வந்தால் போதும்.
என்ன வாழ்க்கை…? என்று உடலை அழிக்கச் செய்து விடுகின்றது. மற்றவனை எப்படி அழிக்க வேண்டும்…! என்று வருகின்றது.
கோடிக்கணக்கான சொத்துகளைச் சம்பாதித்தாலும் அனைவரையும் அழித்துக் காலி பண்ணுகின்றேன் பார்…! இந்த ஊரை அழிக்கின்றேன்… அனைத்தையும் உருக்குலையச் செய்கின்றேன்…! என்ற உணர்வு தான் விஞ்ஞானத்தினால் இன்று வருகின்றது.
அதையெல்லாம் மாற்றிட
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் மீண்டும் மீண்டும் விண்வெளி சென்ற அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பருகிப் பருகி
2.வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றிடும் திறனை உரமாக ஊடடுவதற்குத் தான் இந்த உபதேசமே…!.
வீண் என்ற பேச்சு இல்லை… விரயமாகும் தன்மை இல்லை…!
அருள் ஞானிகள் அவர்கள் எவ்வாறு விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்தார்களோ “அந்த மகரிஷிகளின் சக்தியை உங்களுக்குள் இணைத்து இணைத்து இணைத்து…” இந்த இணைப்பின் வலு கொண்டு உரமாக்கி விட்டால்…
1,எண்ணத்தால் வளரும் பருவம் வந்து விட்டால்… உங்கள் நினைவின் ஆற்றல் அகண்ட அண்டத்திற்கு வருகின்றது.
2.பேரானந்தப் பெரும் செல்வத்தை உங்களில் வளர்த்திட இது உதவும்.
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான நிலைகள் இருப்பினும்…
1.அந்த மகரிஷிகள் உணர்வுகளை உங்கள் ஏங்கிடும் உணர்விற்குள் இணைத்து
2.அதை உற்று நோக்கி அந்த மகரிஷிகளுடன் ஒன்றச் செய்வது தான் இந்த உபதேசத்தின் நோக்கம்.
அதைத்தான் தொடர்ந்து யாம் செய்து கொண்டு வருகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் தன் தாய் கருவிலே சிசுவாக இருக்கும் பொழுது நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெற்றான்.
ஏனென்றால் அவனுடைய தாய் காடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் மிருகங்களிடமிருந்தும் மின்னல்களிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள பல தாவர இனங்களையும் மூலிகைகளையும் பச்சிலைகளையும் தன் உடலிலே அரைத்துப் பூசிக் கொண்டது.
தன் உடலிலே பூசிய அந்தத் தாவர இனங்களின் மணங்களை அந்தத் தாய் சுவாசிக்கும் பொழுது இரத்தத்தின் வழியாகக் கருவிலிருக்கும் சிசுவுக்கும் போய்ச் சேர்கின்றது.
அத்தகைய சத்துக்களைப் பெற்ற அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்தபின் வானத்தை நோக்கிப் பார்த்துப் படுத்திருக்கின்றது. ஆனால் சூரியனுக்குள் நடக்கும் அதிசயங்களைப் பார்க்கின்றது… அந்த உணர்வை நுகர்கின்றது.
ஏனென்றால் அந்தக் குழந்தையின் தாய் தந்தையர்கள் மிருகங்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றச் “சூரியன் கடவுளாக வருகிறான்…!” என்று சூரியனை அக்காலத்தில் வணங்கியவர்கள்.
அது விஷத்தின் தன்மை உமிழ்த்திக் கொண்டிருக்கும் அந்தச் சக்தியை அவர்களால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்தக் குழந்தையால் பார்க்க முடிகின்றது.
அவர்கள் சூரியனைக் கடவுள் என்று வணங்கினார்கள். இங்கே அந்தச் சூரியனின் அதிசயங்களைக் காணுகின்றது இந்தக் குழந்தை.
1.இருப்பினும் இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடையப்படும் போது
2.அகஸ்தியன் அருகிலே வரும் எந்த விஷ ஜந்தும் மற்ற மிருகங்களும் அவனைக் கண்டு அது அஞ்சியே நிற்கின்றது
3.இதைக் கண்ணுற்ற தாயும் தந்தையும் இது கடவுளின் அவதாரம் என்ற நிலைகளில் அந்தக் குழந்தையைப் போற்றித் துதித்தார்கள்.
4.அங்கிருந்த அந்தக் காட்டுவாசி மக்களும் குழந்தையைக் கண்டு அதிசயிக்கின்றார்கள்.
ஏனென்றால் அந்தக் காலங்களில் மிருகங்களிடமிருந்து தப்பிக் கொள்ள இந்த மனிதனுக்கு ஒரு சிறு புத்தி உண்டு.
தன் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் தான் கண்டுபிடித்த உணர்வைக் கொடுப்பார்கள். அடுத்தவர்களுக்குக் காண்பிக்க மாட்டார்கள். இதைப் போன்ற நிலைகள் இன்றும் உண்டு… அன்றும் உண்டு…!
ஆகவே அந்த அகஸ்தியன் குடும்பத்தில் மட்டும் இந்த நிலைகள் பெற்றபின் அந்தச் சுற்றுள்ள வட்டாரங்கள் அனைத்தும் இதனுடைய அதிசயங்களைப் பார்க்கின்றது. இதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.
இருந்தாலும் அந்த வட்டாரங்களில்
1.அகஸ்தியன் நுகர்ந்த உணர்வுகள் வெளிவரப் போகும் போது
2.அதை உற்றுப் பார்த்தபின் இந்த உணர்வின் தன்மை
3.அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கும் இது தெரிந்திடும் அறிவாக விளைகின்றது.
இவனுக்குள் விளைந்த அலைகள் உற்றுப் பார்த்துக் கூர்மையாக பார்க்கப்படும்போது “இவன் காணும் அதிசயங்கள்…” மற்றவர்களுக்கும் இந்த உணர்வுகள் உணர்ச்சியைத் தூண்டும் நிலை பெறுகின்றது.
அன்று அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த ஆற்றல்கள் இன்றும் உண்டு. அதை எல்லோரும் பெற முடியும்.
அதற்காக வேண்டித்தான் அந்த அகஸ்தியன் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் பெரும் பகுதி நான் (ஞானகுரு) சுற்றுப் பயணம் செய்து வந்தது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் சுமார் பத்து வருடம் காடு மேடெல்லாம் அலைந்தது.
1.அகஸ்தியர் எந்தப் பகுதிக்குச் சென்றாரோ அந்தப் பகுதி எல்லாம் என்னை அலையச் சொன்னார் குருநாதர்.
2.அவர் பதித்த அந்த உணர்வினை அங்கங்கு சென்று அதைப் பதிவாக்கியபின்
3.எது உண்மை…? எது பொய்…? என்ற நிலையில் அறியும் அந்தப் பருவத்தைக் கொடுத்தார்.
இன்று நீங்கள் எல்லோரும் அதை நுகர முடியும்.
இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டு அந்த அகஸ்தியனை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தியானித்தால் அதைப் பெற முடியும்.
அதை நுகர்வதற்குதான் மீண்டும் மீண்டும் அந்த அகஸ்தியர் பெற்ற உணர்வுகளை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
