தினசரி உபதேசம்

மகாலட்சுமி

 

ஒரு புதுப் பெண் (மருமகள்) திருமணம் ஆகி வீட்டிற்கு வந்தாலும் வீட்டில் உள்ள மாமியார் அந்த வீட்டில் உள்ள நிலையை அது இப்படி இருக்கிறது…? என்று பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

1.அந்தப் பெண்ணிற்குத் தெரியவில்லை என்றாலும் இந்த ஞானத்தை ஊட்ட வேண்டும்.
2.இந்தக் குடும்பம் இப்படி இருக்கின்றது… “நமது குடும்பம்…” என்று நினைக்க வேண்டும் என்று வழிகாட்ட வேண்டும்.

ஏனென்றால் புதிதாக வரும் பொழுது கூச்சம் இருக்கும்… தனது வீட்டில் இருப்பது போல் சீராகச் செயல்படுத்தத் தெரியாது. அந்தக் கூச்சத்தினால் ஒரு பொருளையோ டம்ளரையோ கொடுக்கும் போது அதைச் சரியாக வாங்காது கீழே போட்டு விடும்.

அதைப் பார்த்தவுடன் இப்பொழுதே இந்தப் பெண் இவ்வாறு செய்கின்றது… இனி என்ன நடக்குமோ…? என்று மாமியார் இந்த எண்ணத்தை மனதில் பதிவு செய்து கொள்கின்றது.

1.இந்தப் பதிவு உடலுக்குள் சேர்ந்த பின் பார்வையும் மாறும்.
2.கருவிழி உந்தி அந்த பெண்ணைப் பயப்படச் செய்யும். ஏனென்றால் வெளி வரும் சொல் கடுமையாக இருக்கும்.
3.உற்றுப் பார்க்கும் பொழுது “நம்மை ஏதாவது சொல்லிவிடுவார்களோ…?” என்று மருமகளுக்குப் பயம் வந்துவிடும்.
4.மாமியாரின் கடும் சொல் பதிவான பின் அடுத்து இந்தப் பயம் வரும்.

அதே போல் மருமகள் சமையலில் அடுப்பிலே ஏதாவது ஒரு பொருளை வைக்கப்படும் பொழுது கீழே போட்டு விடும்… அல்லது கையைச் சுட்டு விடும். எனக்கு அப்போதே தெரியும் நீ இப்படித்தான் செய்வாய் என்று…! மாமியார் உடனே சொல்லும்.

ஆகவே புதுப் பெண் வீட்டிற்குள் வரும் பொழுது அவர்களை எப்படி வழி நடத்த வேண்டும்…? என்று மாமியார் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது உன் வீடு… உனக்குப் பொறுப்பு இருக்கின்றது. வீட்டில் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து விட்டோம். நீயும் அவர்களை ஞானமாக வளர்க்க வேண்டும்.
1.நீ தான் எங்களைக் கவனிக்க வேண்டும்… எங்களுக்கு வயதாகி விட்டது… பொறுப்புடன் இருந்து வேலைகளைச் செய்ய வேண்டும்,
2.நாங்கள் எங்கள் பிள்ளைகளைக் காத்தோம்… அதே போல் அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வரவேண்டும்
3.இந்த வீட்டையும் காக்க வேண்டும் அந்த சக்தி வர வேண்டும்.
4.நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள்… ஒன்றுபட்டு வாழும் உணர்வுகள் நமக்குள் வளர வேண்டும்
5.பெண்ணாக இருக்கின்றோம்… நாம் இப்படித் தான் வழி நடத்த வேண்டும் என்று மாமியார் பக்குவமாகச் சொன்னால்
6.மருமகளிடம் இருக்கும் அந்தக் கூச்சம் போய்விடும்.

தன்னுடைய அத்தையைப் பார்க்கும் பொழுது அந்தப் பெண்ணிற்கு பயம் நீங்கிவிடும். வேலைகளைச் செய்ய அந்தத் துணிவு வரும்… சீராகவும் செய்ய முடியும்

ஆனால் ஒரு சில வீடுகளிலே புதுப் பெண் சென்றால் அங்கே எப்படியெல்லாம் அவஸ்தைப்படுகிறது…? என்பதைப் பார்க்கலாம்.

முதலில் பெண் பார்க்கச் செல்லும் பொழுது “எங்கள் வீட்டிலே இப்படி எல்லாம் செய்வோம்… இருப்போம்…” என்று சொல்வார்கள். ஆனால் பெண்ணோ அவர்கள் வீட்டிலே செல்லமாக வளர்ந்து இருக்கும்.

புகுந்த வீட்டிற்குள் வரப்படும் பொழுது முதலில் கொஞ்சம் வித்தியாசங்கள் வரும். ஆனால் வித்தியாசம் வரும் பொழுது இந்த வீட்டிலிருக்கும் மாமியார் அதைப் பக்குவப்படுத்த வேண்டும்.

மருமகள் என்றாலும் தன் மகனை எப்படிப் பார்க்கின்றோமோ… தன் மகளை எப்படி பார்க்கின்றோமோ… அந்த நிலை கொண்டே மாமியார் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு மருமகளாக வருகின்றார்கள். மாமியாரின் கடுமையான உணர்வுகள் வளர்ந்து விட்டால் இந்தப் பழக்கம் வரும் பொழுது… பின்னாடி அவர்களுக்கு வரக்கூடிய மருமகளையும் “தன் மாமியார் எப்படித் தன்னை நடத்தினார்களோ… அதே செயலைத்தான் தன் மருமகளுக்கும் செயல்படுத்தும்,..”

1.தாய் என்ற நிலையில் தான் நாம் வளர்க்கின்றோம்
2.ஆனால் அந்தத் தாய்மை என்ற நிலையில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காரணம்… இயற்கையில் முதலில் பெண்பாலாக இருந்து தான் படைப்பின் சக்திகள் வளர்கிறது.

ஆகவே
1.திருமணமாகி வீட்டிற்கு வரும் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக மாற்ற வேண்டும்.
2.சர்வத்தையும் அறிந்திடும் நிலையும் சர்வத்தையும் வளர்த்திடும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வீட்டில் பையன் ரொம்ப சேட்டை செய்கிறான்… அவனுக்குப் புத்தி வரட்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் சொல்லும் பொழுது
1.எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் செய்து கொண்டிருக்கின்றான்.
2.இவன் அடங்கவே மாட்டான் என்று தான் அடுத்தவரிடம் சொல்கின்றோம்

“எப்பொழுது பார்த்தாலும் சேட்டை செய்து கொண்டே இருப்பான்” என்று அவனுடைய உணர்வை எடுத்து அதிகமாக விளைய வைத்துக் கொள்கின்றோம்.

அவனுடைய உணர்வை எடுத்து விளைய வைத்தபின் கண்ணில் பார்க்கின்றோம். அடுத்தாற்போல் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் “சேட்டைக்காரன்…” என்று தான் அவனை மாற்றுகின்றோம்.

அதே உணர்வை நாம் எடுத்துக் கொண்ட பின் “எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் செய்வான்” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

அவன் சும்மா இருந்தால் கூட நாம் மிரட்ட ஆரம்பிப்போம் இத்தகைய மிரட்டல் என்ன செய்யும்…? அங்கே இருப்பதைத்தான் நாம் நமக்குள் சமைத்து விளைவிக்கின்றோம்.

அதே சமயத்தில் நம் நினைவு எல்லாம் எப்படி இருக்கும்…?
1.இப்படிக் குறும்புத்தனம் செய்கின்றானே… என்ன செய்வது என்று தெரியவில்லையே…!
2.அவனுக்கு இப்படிச் செய்தால் பரவாயில்லையா…! அப்படிச் செய்தால் பரவாயில்லையா…! என்று இந்த கவலை இருக்கும்.

கவலை கலந்த உணர்வுகள் வந்தவுடன் வெறுப்புடன் தான் பையனிடம் பேசுவோம். வெறுப்புடன் சொல்லப்ப்படும் போது
1.இந்த வெறுப்பு அவனுடன் கலந்து அவனுக்குள் உருவான வித்திற்கு உரம் போட்ட மாதிரி ஆகிவிடும்
2.அடுத்து அவன் கெடுதல் தான் அதிகமாகும்…. அதைத் தான் உருவாக்கும்.

அவனுக்கு இந்த உணர்வு தான் அதிகரிக்குமே தவிர நல்லது உருவாகாது. அவனிடம் விளைந்ததை நமக்குள் எடுத்து மீண்டும் நமக்குள்ளும் அதைத்தான் கூட்ட முடியும்.

இவனை பார்த்துப் பார்த்து… பேசிப் பேசி என் கை கால்கள் எல்லாம் ஓய்ந்து விட்டது… எனக்கு இப்படி ஆகிவிட்டது அப்படி ஆகிவிட்டது… என்று இத்தனை உணர்வுகள் வரும்பொழுது அடுத்து சமையலுக்குப் போனால் அங்கே சீராகச் செயல்படுத்த முடியாது.

ஒரு துணியைச் சுத்தம் செய்து துவைக்க வேண்டும் என்றால் கூட கை ஓய்ந்துவிடும். அதில் இருக்கக்கூடிய அழுக்கைப் போக்க முடியாது

ஏனென்றால் இந்த உணர்வுக்குத் தக்கவாறு அந்தச் செயல் வரும். ரொம்ப அழுக்காக இருந்ததைப் பார்த்த உடனே ஒரு விதமான சடவு வரும்… அதை நீக்க முடியாது.

அதே போன்று ஒருவர் நல்லது சொல்கின்றார் என்று நாம் அதைக் கேட்கும் பொழுது நம்மை அறியாமலேயே ஒரு சோர்வும் சஞ்சலமும் வரும். என்னுடைய பையன் நன்றாக இருக்கின்றான் என்று அவர் சொன்னவுடனே அதைக் கேட்க விடாது. சோர்வும் சஞ்சலமும் தான் வரும். அப்பொழுது
1.மீண்டும் நமக்கு வேதனை தான் உருவாகின்றது… நல்லதை விடுவதில்லை
2.அந்த உணர்வே ஆட்சி புரியத் தொடங்குகின்றது… நல்லதை விடாதபடி நமக்குள் தடுதலாகின்றது
3.இதைத்தான் மகாபாரத்தில் கௌரவர்கள் என்று சித்தரித்துக் காட்டுகின்றார்கள்.

நல்லதாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் கௌரவப் போராகின்றது. நல்லவர்களைப் பார்க்கும் போதெல்லாம் என்ன செய்கிறது…? நல்லதைச் சொன்னார்கள் என்றால் மீண்டும் வெறுப்பாகி அந்த நல்லதை உள்ளே விடாதபடி கௌரவர்கள் போர் செய்கின்றார்கள்.

கண் இழுத்து உண்மையைச் சொல்கிறது. கண்ணுடன் சேர்ந்தவுடனே திரௌபதி உயிர் அந்த உணர்வை எடுத்து உள் உணர்வை ஊட்டுகின்றது ஊட்டிய உடனே நல்லது என்று சொன்னவுடன் அதை அவமதிக்கின்றது.

உடனே கோபமான உணர்வுகளைத் தூண்டி… திரௌபதியை நாம் கேவலப்படுத்தத் தொடங்குகிறோம் நல்ல உணர்வுகள் இல்லாதபடி கேவலமான வார்த்தைகளைப் பேசுகின்றோம்… நல்லதை இயக்க விடுவதில்லை.

அப்பொழுது எது செயல்படுகின்றது…?

நம் பையன் மீது நினைவு வரும் போது
1.இப்படிச் சேட்டை செய்கின்றானே…! என்று இந்த உணர்வுகள் தான் வருமே தவிர
2.கண்கள் நுகர்ந்து நல்ல உணர்வின் தன்மை ஊட்டினாலும் உள்ளுக்கே விளைந்த உணர்வின் தன்மை (கௌரவர்கள் – பையனைப் பார்த்து நுகர்ந்தது)
3.சிந்தனையற்ற நிலையில் கொண்டு நமக்குள் போர் முறையே வருகின்றது.

இதனுடைய வலு எது…?

நம்முடைய கூர்மையான எண்ணங்கள் அர்ஜுனன். நுகரப்படும் போது நகுலன்… காந்தப்புலன் மாற்றி அமைத்து அதன் தெளிவான நிலைகளை நமக்கு ஊட்டும். நுகர்ந்த உணர்வு உடலுக்குள் இணைந்து விட்டால் சகாதேவன். நுகர்ந்த உணர்வின் சத்து உடலுக்குள் வலுவாகும் போது பீமன் வலுவின் தன்மை கொண்டு இயக்கும் சக்தியாக வருகின்றது.

மகாபாரதத்தில் திரௌபதை கண்ணனுடைய சகோதரி பெண்பால் இது ஆண்பால் ஆனால் கண்…! கண்ணுடன் சேர்ந்த கருவிழிக்குப் போகும் பொழுது தெரிவதில்லை… அந்தச் சக்தி மனைவியாகின்றது ருக்மணி.

கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா தவறு செய்யும் உணர்வை நுகர்ந்து நம் உயிரிலே சேர்த்து உண்மையை உணர்த்துகின்றது தனதாகவே மாற்றுகின்றது. சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கண்ணனுடைய சகோதரி உடலுக்குள் நமக்கு உணர்த்துகின்றது.

பகைமை என்ற நிலையில் பையனைப் பற்றி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கப்படும் பொழுது நல்லவர் வந்து சொல்கின்றார்கள் என்று சொன்னால் அந்த வலிமைமிக்க நிலைகளைச் சொல்லப்படும் பொழுது அதை (அர்ஜுனனை) விடுவதில்லை. அதாவது நல்லதை வலுவாக்கும் அந்த உணர்வுகளை விடுவதில்லை..

நீங்களே ரொம்ப சங்கடமாக இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நேரத்தில் ஈஸ்வரா…! என்று சொல்லி உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கலாம் என்றால்
2.அந்தச் சங்கடம் அதை எடுக்க விடுமா…? என்று பார்க்கலாம்.

அப்போது எது செய்கிறது…? அந்தக் கௌரவர்கள்… “என்னை இப்படிப் பேசினார்களே…” என்ற இந்த உணர்வு முன்னணியில் வரும் பொழுது நல்லதை விடுவதில்லை.

நல்லதை விடுவதில்லை என்கிற பொழுது
1.அதை மாற்றுவதற்குண்டான அந்த வலுவான சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
2.உபதேசத்தினை மீண்டும் மீண்டும் உங்களுக்கு “அழுத்தமாகக் கொடுப்பது…”

இந்த உணர்வின் தன்மை நீங்கள் ஆழமாகப் பதிவு செய்து அதைத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை எடுத்துக் கலந்த பின் உங்களுக்குள் வலுவாகின்றது. அதை எடுத்துச் சங்கடத்தை நீக்க முடியும்.

“அழுத்தமாகப் பதிவாக்கவில்லை…” என்றால் அடுத்தவர்கள் நல்லதைச் சொன்னால் அதை ஏற்க விடாதபடி மீண்டும் கவலை அதிகமாகும். உயிர் நல்ல உணர்வுகளை விளையச் செய்யப்படும் பொழுது கௌரவர்கள் அவமதிக்கின்றார்கள்.
1.கௌரவர்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டு அதை அவமதிக்கின்றார்கள்
2.திரௌபதியின் துகிலை உறிகின்றார்கள் சபையில் வைத்து.

சூதாட்டம் ஆடி சூதிலே ஜெயித்த பிற்பாடு பாண்டவர்கள் ஐந்து பேரையும் அடிமையாக்கி விடுகின்றார்கள் அவர்களின் மனைவியையும் அடிமையாக்கி விடுகின்றார்கள். இந்த உணர்வின் தன்மை என்ன ஆகிறது…?

எதை இயக்கியதோ அது மற்றதை அடிமையாக்கப்படும் பொழுது இவர்கள் வேலை ஒன்றும் ஆவதில்லை. அவனுக்குக் கீழ் அடிபணிந்து தான் அவர்களால் இருக்க முடிகிறது.

சபையில் வைத்து திரௌபதியின் துகிலை உறிகின்றார்கள். துகிலை உறியும் போது திரௌபதி என்ன செய்கின்றது…?
1.கண்களைத் தான் எண்ணுகின்றது. கண்ணா…! என்று கண்களை எண்ணுகின்றது
2.அவர்கள் செய்யும் அவமதிப்பை எண்ணுவதில்லை.
3.தெளிவாக நமது சாஸ்திரம் காட்டுகின்றது… மகாபாரதத்தில் வியாசகன் கொடுத்த உண்மைகள் இது.

பின்னாடி வந்தவர்கள் அதை எப்படி எப்படி எல்லாம் திருத்தி விட்டார்கள் சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

திரௌபதி சபையில் மற்றவர்கள் யாரையும் எண்ணவில்லை
1.கண்ணனை (கண்களை) மட்டும் தான் எண்ணுகின்றது… தன்னுடைய அண்ணனை.
2.அவன் எனக்கு ஆபத்திலிருந்து காப்பாற்றுவான்… எனக்கு அவன் உதவி செய்தான் என்ற உணர்வை எடுக்கின்றது.
3.அப்பொழுது உள்ளுக்கே அவமதிக்கும் தன்மை தடைப்பட்டு ஓய்ந்து விடுகின்றது.

எவ்வளவு அழகாக மகாபாரதத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள். நன்றாக யோசனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்…! வியாசகன் கொடுத்த அந்தப் பேருண்மையைத் திரித்துக் கூறி எப்படி எப்படியோ இன்று மாற்றிவிட்டார்கள்.

குறிப்பு:-
1.தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போதும் நம் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்று சொல்வதன் தத்துவமே இதற்குத் தான்.
2.நம்முடைய கண்களால் மற்றதை எண்ணாது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் தான் உயிரிலே படும் அந்த அவமதிப்பை மாற்ற முடியும்.
3.ஞானகுரு அவர்கள் கண்களைத் திறந்து பின் கண்களை மூடி மீண்டும் கண்களைத் திறந்து மூடி இப்படி மாற்றி மாற்றித் துருவ நட்சத்திரத்தினை எண்ணச் சொல்வதும் இதற்குத் தான்.
4.எந்தக் கண்ணால் நம்மை அறியாதபடி தீமைகள் உள்ளே வந்ததோ அதே கண்களால் தீமைகளை நீக்கிய சக்தியை உள்ளே கொண்டு வர வேண்டும்.
5.நம் எண்ணத்தை இப்படி மாற்றினால் தான் எதையும் மாற்றி அமைக்க முடியும்.
6.எண்ணத்தை மாற்றாதபடி கண்களில் தீமைகளைப் பற்றியே அழுத்தமாக எண்ணிக் கொண்டிருந்தால் அது தான் மீண்டும் வலுவாக இயக்கும்.
7.பின்… என்னால் ஒன்றும் முடியவில்லை என்ற சொல் தன்னாலே வரும்…!

நாம் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இணைக்கும் சக்தியான வியாழன்

 

சூரியனுக்கு உபகோள்கள் எத்தனை இருக்கின்றது…? வியாழன் செவ்வாய் புதன் பூமி சந்திரன் சனி கேது ராகு என்று எல்லாம் இருக்கின்றது.

நம் உடலிலும் இதே மாதிரித் தான்.

1.கேது என்று சொன்னால் பித்த சுரப்பி…
2.ராகு என்கிற பொழுது உடலின் மேல் தோல் பகுதி.
3.உயிரின் இழுக்கக்கூடிய பாகம் குரு… எல்லாவற்றையும் எடுத்து சமைக்கக் கூடியது.

அந்த உணர்வின் தன்மை வந்தவுடன் இரத்தத்தில் கலந்து எதை எதற்கு மாற்ற வேண்டுமோ மாற்றுகின்றது. கடைசியில் உடலில் சுற்றி வந்த பிற்பாடு என்ன செய்கிறது…?

1.உயிரைப் போலவே உணர்வின் தன்மை…
2.இந்த உடலைப் போலவே உணர்வின் தன்மை… என்ற இரண்டு நிலைக்கு வருகின்றது.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை எப்படி இயக்குகின்றதோ நம் உயிர் எடுத்துக் கொண்ட உடலுக்குத் தக்க மாதிரி உறுப்புகளாக மாறுகின்றது.

மனிதனான பின் தீமைகளைச் சமப்படுத்தும் சக்தியாக நஞ்சை மலமாக மாற்றும் தன்மை வருவதால் பரசுராமன் ஆகி… பலருடைய உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம்மை அறியாமலே பிறருடைய கஷ்டமெல்லாம் இரத்தத்திலே வந்து விடுகின்றது. அது சேராதபடி தடுக்க வேண்டும்.

அது தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் பிளந்தான். தீமைகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்.

நமக்குத் துரோகம் செய்பவன் அமெரிக்காவில் இருந்தாலும் இடைஞ்சல் செய்தான் பாவி என்று எண்ணினால் அங்கே புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால் அங்கே விக்கலாகிறது. பாசத்தால் என்ன ஆனதோ என்று வேதனைப்பட்டால் அங்கே சிந்தனையைக் குறைக்கின்றது.

எந்தெந்த வகையில் நாம் எடுத்து இப்படிப் பதிவாக்குகின்றோமோ நமக்குள் இந்த உயிர் இயக்குகின்றான்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று முதலில் உள்ளே செலுத்துகின்றோம்.
1.ரத்தத்தில் கலந்து வெளியே வரும் பொழுது உள்ளே சுற்றும்.
2.உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி அதிலே அமுக்கி விடுகின்றோம்
3.அந்த வேதனையான உணர்வை இங்கே தடைப்படுத்துகின்றது… உந்தித் தள்ளுகின்றது.
4.தள்ளியவுடன் வேதனையை இழுக்கும் சக்தி இல்லை என்றால் சூரியன் பிடிப்பில்லாத அந்த உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றது
5.நம் ஆன்மாவை அப்பொழுது தூய்மைப்படுத்திக் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு பேர் இருக்கின்றார்கள் அங்கே கிழங்கு இருக்கின்றது… இதைச் சாப்பிட்டால் “நன்றாக இருக்கும்…!” என்று ஒருவர் அடுத்தவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அங்கே வருகின்றார். ஐய்யய்யோ…! இந்தக் கிழங்கை அன்றைக்கு ஒருவர் சாப்பிட்டார்… அதனால் அவருக்கு வயிற்று வலியே வந்து விட்டது…! என்று சொல்கின்றார்.

ஆனால் அவர் சாப்பிட்ட நேரம் எது…?

1.கிழங்கு சத்து அதிகமுள்ளது
2.உடலில் நோய் இருக்கும் போது… ஜீரணிக்க முடியாத அந்த நேரத்தில் கிழங்கைச் சாப்பிடும் பொழுது வயிற்று வலியானது.
3.அன்றைக்கு அவர் பட்ட அவஸ்தை அதிகமாகி விட்டது.
4.அந்த உணர்வை இங்கே ஊட்டியவுடன் என்ன செய்யும்…?

கிழங்கைப் பார்த்தவுடனே இவருக்கும் இங்கே அதே பலவீனமாகிவிடும். சாப்பிட்டால் அடுத்து என்ன செய்யும்…? அதே உணர்வுகள் அந்த உமிழ் நீரைக் கூட்டி இயக்கிவிடும்… வயிற்று வலியாகிவிடும்.

அந்த ஆள் சொன்னார்.. சொன்னது சரியாகப் போய்விட்டது என்று நாம் சொல்ல ஆரம்பிப்போம். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

1.உணர்வின் இயக்கங்கள்… நம் உயிர் எப்படி இயக்குகின்றது…?
2.எதை எண்ணுகின்றோமோ அதுவே… அந்த எண்ணமே நம்மை ஆட்சி புரிகின்றது.
3.நன்றாக யோசனை செய்து பாருங்கள்… சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் இது தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்று தான் இங்கே சாக்கடை உபதேசமாகக் கொடுக்கப்படும் போது அந்தப் பன்றி வந்த பின் சாக்கடைக்குள் இருக்கும் நல்லதை அது எப்படி நுகர்ந்து சாப்பிடுகின்றது பார்த்தாயா…? என்று கேட்கிறார் குருநாதர்

ஆனால் குருநாதருடன் சுற்றிக் கொண்டிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் நான் வேலைக்கும் சரியாகச் செல்வதில்லை. வீட்டில் என் மனைவி அப்போது தான் நோயிலிருந்து மீண்டு எழுந்து வந்திருக்கிறது.

ஏனென்றால் இயற்கையிலேயே ஒவ்வொரு சந்தர்ப்பமும் மனிதனுக்கு எப்படி எல்லாம் வருகின்றது…? என்று தெரிந்து கொள்வதற்கே இதைச் சொல்கிறேன்.

குருநாதர் என் மனைவியைக் காப்பாற்றினார் என்ற நிலையில்
1.வாக்கு வாங்கியவுடன் நான் அவரிடம் போய்ச் சிக்கிக் கொள்கின்றேன்.
2.சாக்கடை அருகே அமரச் செய்து இத்தனை வேஷத்தையும் அங்கே போடச் சொல்கின்றார் குருநாதர்.

சாக்கடை அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்கின்றார்கள். நயினாவிற்குப் (ஞானகுரு) பைத்தியம் பிடித்து விட்டது என்கிறார்கள்.

காதில் இதை எல்லாம் கேட்டால் என் மனம் எப்படி இருக்கும்…? ஆனால்
1.என் மனதை உறுதியாக்குவதற்காக வேண்டி
2.அந்த இடத்திலே குருநாதர் பரீட்சை வைக்கின்றார்.

மனைவியைக் காப்பாற்றிய உடன் நான் சொல்வதைச் செய்கிறாயா…? என்றார்.

நான் செய்கிறேன் என்று சொன்னேன் (மனைவியை அவர் எழுப்பி விட்டதால்)

காரணம் டி.பி. நோயால் என் மனைவி அவதிப்பட்ட போது டாக்டர்கள் எல்லாம் கைவிட்ட நிலை. குருநாதர் வந்த பின் என் மனைவி பிழைத்து எழுந்து விட்டது. அப்போது என்னிடம் வாக்கு வாங்குகின்றார்.

என்னை நம்புகின்றாய் அல்லவா…! நம்புகிறேன் என்று சொன்னேன் சொல்வதைக் கேட்பாய் அல்லவா…! கேட்கிறேன் என்று சொன்னேன். இதை எல்லாம் கொடுத்த பின் சாக்கடை அருகே உட்கார வைத்து “என்னை வாட்டுகிறார்… வறுத்து எடுக்கின்றார்…”

எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள்… என் மாமியார் காதிற்கும் செய்தி போகிறது.

“தொலைந்து போகிறவன்…” என் பிள்ளையை இங்கே படுக்க வைத்துவிட்டுப் பைத்தியத்தோடு இவன் சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்று என்னைச் சாடிப் பேசுகின்றது.

எப்படி இருக்கும் பாருங்கள்…? இயற்கையின் உணர்வுகள் நம்மை எப்படி எல்லாம் இயக்குகின்றது…? என்று அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்கு கொடுக்கின்றார் குருநாதர்.

அப்போது தான் கேட்கிறார்…. கடவுளின் அவதாரம் யார் தெரியுமாடா…? வராகன் (பன்றி) என்று சொன்னார்.

வராகன் கடவுள்… என்று சொன்னால் அவதாரங்கள் பற்றிய கதைகளை எல்லாம் நான் அதிகமாகப் படித்தவன் இல்லையே… எனக்குத் தெரியாது.

வராகன்… அது தான்டா கடவுள்…! என்றார் குருநாதர்.

என்ன சாமி…? பன்றியைப் பார்த்துக் கடவுள் என்று சொல்கின்றீர்கள் சாக்கடைக்குள் சுற்றுகிறது… கடவுள் இப்படியா இருக்கும்…! என்று குருநாதரிடம் நான் கேட்கின்றேன்.

பன்றி என்ன செய்யும் தெரியுமாடா…? என்று கேட்டார். உன் காபியிலே சாக்கடையை அள்ளிப் போட்டதும் ஓய்… என்று நீ வாந்தி எடுத்தாய். ஆனால் பன்றி சாக்கடைக்குள் உள்ள நாற்றத்தைப் பிளக்கின்றது. நாற்றத்தைப் பிளந்து விட்டு நல்லதையே அது நுகருகின்றது.
1.தீமையை நீக்கி நல்லதை உருவாக்கக்கூடிய நிலைகள் வராகன் என்று
2.பன்றித் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டுகின்றான் ஞானி…!
3.மனிதர்கள் நாம் புரிந்து கொள்வதற்கு.

கண்களிலே பார்க்கிறோம் அல்லவா. குழந்தை வெளிக்குச் சென்றால் பன்றி வேகமாக அங்கே செல்லும் முட்டித் தள்ளிவிட்டு அதற்குள் ஜீரணமாகாத பருப்பு இருந்தால் அதைச் சாப்பிடும்.

ஆனால் நன்றாக ஜீரணித்து மாவாக வெளியில் போயிருந்தால் அதை நுகர்ந்து பார்த்து… விட்டு விட்டு வந்துவிடுகிறது. ஆனால் ஜீரணிக்காத நிலையாகி அதில் பருப்பு இருந்தால் அதைக் கிளைந்து எடுத்துச் சாப்பிடுகின்றது.

இத்தனையும் நான் பார்க்க வேண்டும்.. குருநாதர் கட்டாயப்படுத்தி இதை எல்லாம் பார்க்க வைக்கின்றார். இப்படி எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…? என்னை அப்படித்தான் அந்தந்த இடங்களுக்கு குருநாதர் இழுத்துக் கொண்டு செல்கிறார்.

எல்லாரும் இதைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். ஆனால் இதுதான்டா கடவுள் என்று சொல்கின்றார். அந்தப் பன்றி தான் உன்னை மனிதனாக உருவாக்கியது என்று சொல்கின்றார். அதற்கு என்ன சொல்வது…?

பன்றி தான் உங்களை மனிதனாக உருவாக்கியது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா…!

பன்றி தான்டா உன்னை மனிதனாக உருவாக்கியது… வேறு யாருடா உன்னை உருவாக்கியது…? அவன் தான்டா கடவுளின் அவதாரம்…! என்று சொல்கின்றார்.

குருநாதர் சொல்லச் சொல்ல நான் மறுக்க… அடுத்தாற்படி எனக்கு அவருக்கும் வாக்குவாதம் வந்து விட்டது. கன்னா…பின்னா… என்று என்னைத் திட்டுகின்றார்.

டேய் தெலுங்கு இராஜ்யம்… உன்னைக் கொன்றுவிடுவேன்டா…! என்று சொல்கின்றார். என்னை எதிர்க்கின்றாயா…? அந்த அகத்தை அடக்கி விடுவேன்டா என்றார்.

ஏனென்றால் நாம் இந்த அறியாமையில் இருக்கக்கூடிய அந்த அகத்தை அழித்து விடுவேன் என்று அவர் சொல்கிறார்.

தெலுங்கு இராஜ்யத்தைத் திட்டுவார்… என்னைத் திட்ட மாட்டார். நான் தெலுங்கு பேசுகின்றேன் அல்லவா… அந்தத் தெலுங்கு இராஜ்யத்தை அப்படிச் சொல்கிறார் குருநாதர்.

தெலுங்கு இராஜ்யம் என்றால் வெங்கடாஜலபதி படுத்து இருக்கின்றார் அவருக்குச் செல்வம் தான் தேவை என்று இங்கிருந்து கொண்டு போய்க் கொட்டுகின்றார்கள்.

1.உனக்கு வேண்டியது மரியாதையும் செல்வமும் தான்
2.மரியாதையை வைத்துச் செல்வத்தை நீ தேடுகின்றாய் அதிலே இருக்கின்றதடா தெலுங்கு இராஜ்யம்.
3.பார்… உன் அகந்தையைக் கொன்று விடுவேன் என்று சொல்கின்றார்… “மறைமுகமாகச் சொல்கிறார்…”

கொன்று விடுவேன் என்று அவர் சொன்னவுடன் நான் திருப்பிக் கேட்டேன். ஏன் சாமி…? கொன்று விட்டால் உங்களுடைய வார்த்தையை நான் எப்படிக் கேட்பேன்…? என்றேன்.

உன்னை யாருடா கொல்வேன் என்று சொன்னது…! அந்தத் தெலுங்கு இராஜ்யம்… அவனைத் தான் நான் கொல்வேன் என்று சொல்கிறார்.
1.ஒவ்வொன்றுக்கும் அழுத்தங்கள் கொடுத்து என்னை அவர் வழியில் அது கேட்கும்படி செய்து பல அர்த்தங்களைக் காட்டுகின்றார்.
2.அப்படித் தெரிந்து வந்து தான் உங்களிடம் இதை எல்லாம் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்

 

ஒரு நண்பன் நம்மிடம் துன்பம் என்று சொல்லும் பொழுது அதைக் கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர்வுகள் உங்களுக்குள் சேராத வண்ணம் தடுக்க வேண்டும்.

1.இரும்பைப் புடம் போட்டு எப்படிப் பஸ்பமாக்குகின்றோமோ
2.அதனின் வலுவான சத்தை இழக்கச் செய்யாமல் அதனின் ஆற்றலை ஆக்கச் சக்தியாக மாற்றுவது போல
3.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டறிந்த துன்ப உணர்வுகள் உங்களுக்குள் தீய விளைவுகளை உருவாக்காதபடி
4.இருளைப் போக்கி விஷத்தைப் புடமிட்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கிய மாமகரிஷிகளின் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் சேர்த்த உடனே
5.புடம் போட்டு எடுத்தது போன்று உங்களைப் பரிசுத்தப்படுத்துகின்றது.
6.நீங்கள் எண்ணிய பொழுதெல்லாம் அந்தச் சக்தியை பெற முடியும்.

ஆண்டனாக்களைச் சரியான முறையில் பொருத்தி வைத்த பின் வெகு தொலைவில் இருந்து வரும் அலைகளை டிவி கவர்ந்து தெளிவாகக் காட்டுகிறது.

அதைப் போன்று உங்கள் நினைவால் மகரிஷிகளை எண்ணி ஏங்கும் பொழுது அந்த உணர்வின் சக்தியை நீங்கள் கவர்ந்து நீங்கள் செய்த நன்மையின் சக்தியை “என்றுமே நிலைத்திருக்கச் செய்ய முடியும்…”

1.உங்களை அறியாது புகுந்த விஷத்தின் தன்மை அதனுடைய தீய விளைவுகளை இயக்காது உங்களுடன் ஒத்துழைத்து
2.மெய் உணர்வுகள் மெய் ஞானிகளின் அருள் உணர்வுடன் இயக்கச் செய்யும் நிலையே இந்த ஆத்ம சுத்தி.

ஆகவே ஒவ்வொருவரும் கெட்டதைக் கேட்டாலும் கெட்டதைப் பார்த்தாலும் கெட்டதை எண்ணினாலும் கெட்டதைப் பேசினாலும் அடுத்த கணமே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்துங்கள்.

1.ஒரு நிமிடம் கண்களிலே அவ்வாறு ஏங்கிப் பெறுவதும்
2.அதற்குப்பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒரு நிமிடம் உங்கள் உடலுக்குள் செலுத்தித் தியானிக்கும் போது
3.இதற்கு ஆத்ம சுத்தி என்று பெயர்.

வீட்டை விட்டு வெளியே எங்கு சென்றாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள்.

எந்தக் காரியத்திற்குச் செல்கின்றோமோ அவர்களை எண்ணி என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என் சொல் இனிமை பெற வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுது “நன்மை செய்யக்கூடிய எண்ணங்கள்” அவர்களுக்கு வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உங்கள் கடைக்குச் செல்கிறீர்கள் என்றால் ஆத்ம சுத்தி செய்து விட்டு என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.இதைப்போல் ஆத்ம சுத்தி செய்து அந்த உணர்வோடு கடையில் இருக்கும் பொருள்களைப் பார்த்து
2.இதைப் பயன்படுத்துவர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் மன வளமும் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணிக் கடை வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.

தொழில் செய்யும் இடத்திலும் அங்கே அமர்ந்து ஆத்ம சுத்தி செய்துவிட்டு நம்மிடம் வேலை செய்பவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் பார்வையால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் செய்யும் தொழிலைத் திறம்படச் செய்யும் சக்தியாகவும் என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும். என் சொல் அவர்களை இனிமை பெறச் செய்ய வேண்டும்… அவர்களைப் புனிதப்படுத்தும் செயலாக அமைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேல் அதிகாரிகளுக்கும் இதே போன்று எண்ணும் பொழுது என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என் செயல் அவரைப் போற்றும் நிலையாக வர வேண்டும். என் சொல் அவருக்கு இனிமை பெற வேண்டும் அவர் என்னைப் பார்க்கும் பொழுது நல்ல செயல்கள் செய்து தர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு நாம் தொழிலைச் செயல் படுத்த வேண்டும்.

நோயாளிகளைப் பார்த்தால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்… மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் நோய் நீங்கும் நலம் பெறுவீர்கள் என்ற இந்த வாக்கினை அங்கே பதிவு செய்யுங்கள்.

குழந்தைகள் செயலைப் பார்த்து வெறுப்பு வரும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி குழந்தைகள் பெற்று அதன் வழி அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்கும்
2.கல்வியில் சிறந்த குழந்தைகளாக வளர்வார்கள்
3.என் பார்வை அவர்களை அந்த நிலைக்கு உயர்த்தும் என்று எண்ணிச் செயல்படுத்துங்கள்.
4.இந்த உணர்வோடு குழந்தைகளிடம் பேச முற்படுங்கள்.

கணவனும் மனைவியும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒருவருக்கொருவர் பாய்ச்சுங்கள்.

பெண்கள் சமையல் செய்யும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு நான் சமைக்கும் ஆகாரம் அதை உணவாக உட்கொள்ளும் அனைவருக்கும் உடல் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும் என்று எண்ணிச் செயல்படுத்துங்கள்.

ஆகாரத்தைப் பரிமாறும் பொழுதும் நான் பரிமாறும் இந்த ஆகாரத்தை உட்கொள்ளும் அனைவரும் மன பலம் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பரிமாறுங்கள்.

சாப்பிடுபவர்களும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு நான் சாப்பிடும் ஆகாரம் என் உடலில் நலம் பெறும் சக்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியாக அது மலர வேண்டும் என்று எண்ணி உட்கொள்ளுங்கள்.

இரவிலே படுக்கச் செல்லும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு எதையெல்லாம் நல்லதாகப் பெற வேண்டுமா
1.உங்கள் உணர்வின் வட்டம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும்.
2.சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்.
3.என்றுமே அந்த உணர்வின் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று எண்ணிவிட்டுப் படுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் பொழுது ஆத்ம சுத்தி செய்து என் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும் என் சொல் கேட்போர் அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். என் பேச்சைக் கேட்போர் மெய் ஒளியாகப் படர வேண்டும் நாம் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் எண்ணி அந்த உணர்வோடு எழுந்து வேலைகளைச் செய்யுங்கள்.

நம்மிடம் பொருள் வாங்கிச் சென்றவர்கள் பாக்கியைத் திரும்பத் தரவில்லை என்றால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் வியாபாரம் செழித்து வளர வேண்டும் அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும் நமக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் பால் செலுத்துங்கள்.

இது போன்று வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைச் சந்தித்தாலும் கோபமோ வெறுப்போ வந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளராது தடுக்க ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

பின் யார் மேல் கோபமோ வெறுப்போ வருகின்றதோ என் பார்வை அவரை நல்லதாக வேண்டும் அவர் செயல்கள் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.ஆத்ம சுத்தி என்ற நிலையில் அடிக்கடி நாம் விண்ணை நோக்கி ஏங்கி வரும் பொழுது
2.இந்த வாழ்க்கையில் சப்தரிஷி மண்டல உணர்வுடன் நாம் கலக்கின்றோம்… அதை நம் உடலுக்குள் சேர்க்கின்றோம்.

நம் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் அந்த நோயை மறந்து விடுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும் உடல் நோய் நீங்க வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்னைப் பார்ப்பவர் எல்லாம் நலம் பெற வேண்டும் அந்தச் சக்தி எனக்குள் ஓங்கி வளர வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி என்றுமே என்னுள் நிலைத்திருக்க வேண்டும் நோய்கள் அனைத்தும் நீங்கிட வேண்டும் என்று எண்ணுங்கள்.

எந்த இடத்தில் உடலில் அந்தப் பாதிப்புகள் இருக்கின்றதோ அங்கே நினைவைச் செலுத்தி “நோய் நீங்க வேண்டும்… நீங்க வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் உடல் நலம் பெறும் சக்தியாக வளர்கின்றது
2.இப்பொழுது நான் நலம் பெற்று வருகிறேன்
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என் எண்ணங்கள் சுழல்கின்றது
4.என் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறுவேன்
4.என் உடலில் மகிழ்ச்சி பெறுவேன் என்று இது போன்று எண்ணங்களை அடிக்கடி எண்ணிப் பாருங்கள்.

இவ்வாறு நாம் எண்ணிக் கொடுப்பது அனைத்தையும் இந்த உயிர் படைக்கின்றது இயக்குகின்றது உடலாக்குகின்றது விளைய வைக்கின்றது… இந்த உணர்வையே தன்னுள் இணைத்துக் கொள்கின்றது. அதனுடைய வளர்ச்சியில் நம்மை ஒளிச் சரீரமாக நிலைக்கச் செய்கின்றது.

ஒவ்வொரு நிமிடமும் நாம் வெளிப்படுத்தும் இத்தகைய மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. இந்தக் காற்று மண்டலத்தில் அது பெருகுகின்றது. அனைவருக்கும் நன்மை பெறும் சக்தியாக அமைகின்றது.

இதைத் தொடர்ந்து செய்து வர சப்தரிஷி மண்டல அலைகள் நமக்குள் பெருகிக் கொண்டே வருகின்றது.

1.இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது வெளியில் செல்வோம் என்று தெரியாது.
2.ஆகவே உடலில் இருக்கும் பொழுதே நம் வாழ்க்கையைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டால்
3.இந்த நினைவுடனே நாம் அங்கே செல்ல முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ரோட்டில் ஒருவன் செல்கின்றான். அவன் நடையையும் மற்ற நிலையும் பார்க்கிறோம்… அவன் ஒரு தினுசாக நடந்து போவான். நாம் என்ன செய்கின்றோம்…? அவனைப் பார்த்தவுடன் இவன் டான்ஸ் ஆடிக்கொண்டு போகின்றான்… நடக்கிற நடையைப் பார்…! என்ற வகையிலே அந்த நடிப்பு போன்ற செயலைப் பார்த்ததும் “வெறுப்பு” வருகின்றது.

இன்னொருவன் அங்கே பிக்பாக்கெட் அடிக்கும் நோக்கத்துடன் செல்கின்றான். பர்ஸ் வைத்திருப்பவனைப் பார்த்ததும்… அப்படியே அவன் காலைத் தட்டி விட்டு அவனைக் காப்பாற்றுகிற மாதிரி பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றான்.

பார்க்கின்றோம் ஆனால் சொல்ல முடியவில்லை. அடுத்த தடவை அவன் வரும் பொழுது பார்த்தவுடனே நமக்குப் பதட்டம் வருகிறது

இன்னொரு பக்கம்… ஒருவன் உதைக்கும் நோக்கத்துடன் செல்கின்றான்… அடுத்தவனை உதைக்கின்றான். அந்த உணர்வை நுகர்கின்றோம். இவன் போக்கிரிப் பயல்… எல்லாரையும் அடிக்கின்றான்… இவனைக் கண்டு எல்லோரும் பயந்து ஓடுகின்றார்கள் என்று நாமும் பார்த்துவிட்டு அந்தப் பக்கம் செல்லாமல் வேறு பக்கம் சென்று விடுகின்றோம்.

ஏனென்றால்
1.கடைவீதியில் நாம் நடந்து செல்லும் போது இப்படி ஒரு தடவை நடந்து விட்டால்
2.அந்த உணர்வு பதிவாகி விட்டால் அந்த உணர்வு நம்மை இனம் புரியாதபடி பயப்பட வைக்கிறது.

இரண்டு பேர் நண்பராகச் சந்தோஷமாக இருக்கிறோம். சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை வந்து விடுகிறது… ஏமாற்றி விட்டார் என்று…!

அடுத்தாற்போல் அவனைப் பார்த்தவுடனே என்ன நினைக்கின்றோம்…? அந்தத் திருட்டுப் பயல் போகின்றான் பார்… ஏமாற்றுகிறவன் போகின்றான் பார்…! என்போம்.

அவன் அங்கே நல்லதைப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால்
1.நாமோ அவன் ஊரை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகின்றான் என்று
2.நம்மை அறியாமலேயே இந்தச் சொல்களைச் சொல்லும்படி வைக்கும்.

அப்பொழுது எது இயக்குகின்றது…?

நாம் பார்வையில் பார்த்து எடுத்துக் கொண்ட பிறிதொருவரின் உணர்வு… அவன் செயல் காற்றிலிருக்கின்றது; அதை நாம் நுகர்கின்றோம்.

அவன் இல்லாத பொழுது… அவன் இந்த மாதிரியான ஆள்…! என்று யாராவது சொன்னால் “ஆமாம்…” அன்று நான் பார்த்தேன் என்று அந்த உணர்வை எடுத்து அவனுடைய செய்கைகளை நம் இரத்தத்திலே கலந்து விடுகின்றோம்.

இந்த உணர்வுகள் எல்லாம் என்ன செய்கின்றது…?

இரத்தத்தில் கலந்த பின் அந்த அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த உணர்வை எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கின்றது.

நான்கு பேரிடம் இதைச் சொன்னால்… தட்டி விட்டான்…! பிட்பாக்கெட் அடித்தான்…! உதைத்தான்…! என்று இந்த உணர்வுகளை எடுத்து வளர்த்து விட்டால் அடுத்து நம்முடைய நினைவின் எண்ணங்கள் என்ன செய்யும்…?

கண்ணிலே அந்தப் பர்ஸ் யாரிடமாவது தெரிந்தால் போதும்… பிட்பாக்கெட்டாக அதை எடுக்கலாமா…? மற்றவர் எதாவது நமக்கு இடைஞ்சல் செய்தால் உடனே உதைக்கலாமா…? என்று இந்த மனம் போகும்.

ஏனென்றால்
1.நாம் அந்தத் தவறு செய்தோரின் உணர்வுகளைப் பார்த்து நுகர்ந்து அதை வளர்த்துக் கொள்கிறோம்.
2.இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்
3.நாம் எதை எண்ணுகின்றோமோ அது நமக்குள் அதிகமாக…
4.அதன் உணர்வே அதன் வழிக்கு நம்மை வளர்த்து விடுகின்றது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

மனிதனான பின் பிறிதொருவர் செயலைப் பார்க்கின்றோம். தவறு என்று பார்த்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.அதைத் தடுப்பதற்காக அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.
2.இப்போது அதைத் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

பிறிதொரு மனிதனின் உணர்வு இயக்கினால் அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவன் அறியாது செய்யும் தவறிலிருந்து விடுபட வேண்டும்…
2.பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்.
3.அவன் பொருள் திருடு போனால் அவன் எப்படிப் பதறுவானோ…! அதை உணர்ந்து அதற்குத் தக்க சிந்திக்கும் ஆற்றல் வரவேண்டும் என்று
3.நாம் இந்த உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

இப்படிச் செய்தால் நாமும் நம்முடைய நிலைகளில் நல்ல உணர்வுகளைச் சேர்த்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு நல்ல சாப்பாட்டைக் கொடுத்துச் சிந்திக்கும்படியான செயலுக்கு வருகின்றோம்.

ஆனால் தவறு செய்கிறார்கள்… தவறு செய்கிறார்கள் என்று சொன்னால் அந்தத் தவறு செய்யும் உணர்வே நம்மை இயக்கி விடுகின்றது. நாம் இதிலெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

யாம் (மறைமுகமாக) உங்களுக்குக் கொடுக்கும் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகள்

 

நாம் என்ற நிலைகளில் தான் பேசுகின்றேனே தவிர நான் என்ற நிலை எனக்கு இல்லை.
1.நாம் என்ற நிலைகளில் அனைவரும் சேர்ந்தால்தான் இயக்க முடியும்.
2.காரணம்… சக்தி வாய்ந்த அந்த ஞானிகளின் அருள் ஆற்றல்மிக்க சக்தியை நாம் அனைவரும் பெற வேண்டும்.

கனமான பொருளைத் தூக்க வேண்டும் என்றால் ஒரு நூலால் முடியாது. பல நூல்களை ஒன்றாகத் திரித்து அனைவரும் ஒன்று சேர்ந்து தூக்கப்படும் பொழுது தான் அந்தப் பொருளைத் தூக்க முடிகின்றது.

அது போன்று நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது
1.அந்த ஞானிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை… பிறவா நிலை அடைந்த அந்த ஆற்றல்களை நாம் பெற முடியும்.
2.அவர்கள் பெற்ற ஆற்றல்கள் நெருப்புக்குச் சமம்… நெருப்பு என்றாலும் பரவாயில்லை…! அதைக் காட்டிலும் வலுக் கொண்டவர்கள்.

அணுவைப் பிளந்தான். பிளந்து அதனை வெடிக்கச் செய்யும் பொழுது அது இரும்பு உலோகத்தையும் அதற்குள் இருக்கும் இயக்கத்தின் தன்மையும் மற்றதை உருக்கி விட்டுத் தன் அணுவின் தன்மையாக வளர்த்துக் கொள்கின்றது.

அத்தகைய ஆற்றல்மிக்க சக்தி கொண்டவர்கள் தான் ஞானிகள்.

சாதாரண மனிதர்கள் நாம் வெளிவிடும் எண்ணங்கள் கொண்டு
1.அத்தகைய ஞானிகள் உணர்வின் அருகிலே இருப்போம் என்றால்
2.அந்த உணர்வுகள் பட்டால் நம் எண்ணங்கள் சுக்குநூறாக ஆகி
3.இந்த உணர்வின் ஒலிக்குள் இருப்பதை அது கவர்ந்து அது தான் வளருமே தவிர
4.அதை நுகர்ந்து நமக்குள் சேர்த்து நமக்குள் இருளை நீக்கும் சக்தி கிடையாது.

இருந்தாலும் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்தியை உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம்.

1.ஞானிகளின் பால் உங்கள் நினைவின் தன்மை சிறுகச் சிறுகக் கூட்டி
2.அந்த ஆற்றலைப் பெருக்கும் நிலைகளுக்கு ஏக்க உணர்வு கொண்டு
3.உங்களுக்குள் விளைந்திடும் விளைந்திட்ட அந்த உணர்வின் எண்ண அலைகளுக்குள் ஒவ்வொன்றும்
4.ஒவ்வொரு குணத்தால்… ஒவ்வொரு குணத்தின் செயலையும் உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் பொழுது
5.அதிலே ஞானிகள் உணர்வின் நிலைகளைப் பிணைக்கச் செய்து
6.பிணைத்த உணர்வின் நிலைகள் கொண்டு அதிலேயும் தொட்டுக் காண்பித்து அதைப் பதியச் செய்து
7.பதிந்த நிலைகளை நீங்கள் எண்ணும் பொழுது அந்த எண்ணத்தின் தன்மை விளைந்து
8.உங்களுக்குள் விளைந்த தீய உணர்வினைப் பிளந்து அதை ஒளியாக மாற்றும் திறனாக நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்கு… நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் எண்ணங்களை யாம் உங்களுடன் சேர்த்து… நாம் அனைவரும் சேர்த்து ஏக்க உணர்வு கொண்டு அதைக் கவரப்படும் பொழுது இங்கே அலைகளாகப் படர்கிறது.

சிறு நிலையாக இருந்தாலும் அந்த வலுவின் தன்மை வரும் பொழுது
1.நம்முடைய எண்ணங்கள் அவரை ஒத்த நிலையாக வரும் அந்த நினைவினை உங்களுக்குள் கூட்டச் செய்து…
2.கூட்டிய உணர்வை ஓங்கச் செய்து… இந்த உணர்வின் அலைகளைப் பெருக்கச் செய்து…
3.இந்த நினைவினைக் கூட்டச் செய்து… அதை இயக்கும் தன்மையாக தியானத்தை நாம் கொண்டு வந்து
4.வலுக் கட்டாயமாக நம் எண்ணங்கள் அனைத்தும் சேர்த்து அவர்களை ஒத்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
5.நாம் எத்தனை குணங்கள் கொண்டிருந்தாலும் அதை மறந்து மெய் வழியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியைக் கூட்டி வளர்த்து
6.கதிரவனின் காந்த அலைகள் கொண்டு காற்றிலே படர்ந்துள்ள ஞானிகள் உணர்வினைக் கவரும்போது
7.அவரவர்களுக்குச் சிறிதளவேனும்… சிறிது பங்கு கிடைக்கும்.

பெரிய மீனை எடுத்தாலும் அதனுடைய பசிக்கு நாம் சிறுகச் சிறுக எடுத்து நிறைய நாம் விளைய வைத்தாலும் நம்முடைய உணவுக்கு அது சிறிதளவாவது பெருகும்.

அது போல
1.ஆற்றல்மிக்க சக்தியைக் கவரச் செய்து உங்களை நுகரச் செய்து உங்களுக்கு அது கிடைக்கச் செய்ய
2.உங்களை எண்ணி நான் பிரார்த்திக்கும் பொழுது உங்களுக்கு அந்த வலு கிடைத்து
3.ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் புகுரச் செய்து ஒவ்வொரு குணத்திலும் ஊடுருவச் செய்து
4.அதை விளையச் செய்ய இதே தியானத்தை மேற்கொண்டு
5.தீயவை எவை ஆனாலும் அது நினைவில் வராது அருள் உணர்வினைப் பெற வேண்டும் என்று ஏங்கும்போது பெறச் செய்து
6.இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் விளையச் செய்து உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வைச் சிறுக்கும்படி செய்து
7.அந்த மெய் ஒளியை உங்களுக்குள் வளர்ச்சி பெறச் செய்வதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

அதன் வழிப்படி உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனுக்கு எதைக் கொடுக்கின்றீர்களோ அதை அவன் படைக்கின்றான் ஆகவே உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.

அனைத்திற்கும் பாத்திரமாகி அனைத்தையும் அணைத்துக் கொண்டு அது நினைவு கொண்டு இயக்கும் சக்தியாக நமக்குள் அவன் இருக்கின்றான். அந்த ஞானிகள் உணர்வினை விளைவிக்கும் போது ஈசனுடன் ஒத்த நிலையாக ஒளியின் சரீரமாக நாம் ஆகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல கோடிச் சரீரங்களில் துன்பங்களை நீக்கி நீக்கி அப்படி வலுப்பெற்றது தான் பன்றி… அந்த உடலை உருவாக்கியது. இதே உயிர் தான்.

பன்றியின் உடலாக உருவான பின்… பன்றியோ சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து விடுகின்றது… அதில் உள்ள நல்லதை எடுத்து உட்கொள்கிறது.

நல்ல பருப்பைச் சாக்கடைக்குள் போட்டால் நாம் அதை நுகர்ந்தால் அங்கே நல்ல வாசனையா வருகின்றது…? இல்லையே…!

இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் என்னைச் சாக்கடைப் பக்கமாக அழைத்துச் சென்றார்… அங்கேயே உட்காரச் சொன்னார்.

முறுக்கு நிலக்கடலை பொரிகடலை மூன்றையும் கடையில் வாங்கி வரச் சொன்னார் சாக்கடைக்குள் அதைப் போட்டுவிட்டு அந்த மூன்றையும் சாக்கடையிலிருந்து நுகர்ந்து “பிரித்து எடு…” என்று சொல்கின்றார்.
1.சாமி சாக்கடை நாற்றம் தான் வருகின்றது என்று சொன்னேன்.
2.நுகர்ந்தால் சாக்கடை வாசனை தானே வரும்…! என்று சொன்னேன்.

ஆனால் அதற்கு முன்னாடி குருநாதர் என்ன செய்தார்…? கடைக்குச் சென்று காபி வாங்கிக் கொண்டு வா என்றார். அவருக்கு டீ எனக்குக் காபி. நான் டீ சாப்பிட மாட்டேன்.

சாக்கடையிலிருந்து எடுத்து வெளியிலே குப்பைகளைப் போட்டிருப்பார்கள் அல்லவா. அதை எடுத்து என் காப்பியிலே போட்டு கலக்கிச் சாப்பிடுடா… ஜோராக இருக்கும் என்று சொல்கின்றார்… குருநாதர்.

எனக்கு எப்படி இருக்கும்…?

“ஜோராக இருக்கும்…” என்று அவர் சொல்கின்றார்.

இதைப் பார்த்தாலே எனக்கு வாந்தி வருகின்றது சாமி…! உள்ளுக்குள் எப்படிப் போகும்…? என்று நான் சொல்கின்றேன்.

நான் எப்படிச் சாப்பிடுகிறேன் என்று பாருடா…! போட்டேன் ரசித்தேன்… ஆகா…! என்று சாப்பிடுகின்றார்.

சாக்கடையில் அந்த வரிசையில் கக்கூஸ் எல்லாம் போயிருக்கின்றார்கள்… கழுவியது எல்லாம் தான் வருகின்றது. ஆனால் அவர் சாப்பிடுகிறார்.

அந்த நேரத்திற்குச் சரியாக பன்றியும் வருகின்றது. ஆனால் இவர் வரவழைத்தாரோ… எல்லது என்ன கிரகமோ தெரியாது…! தள்ளிக் கொண்டு முட்டிக்கொண்டு வருகின்றது.

நடந்த நிகழ்ச்சி இது..! சாக்கடை உபதேசமாக குருநாதர் எனக்குக் கொடுத்தது.

அந்தப் பக்கம் போவோர் வருவோர் அனைவரும் என்னைப் பார்த்து… நைனாவிற்கு (ஞானகுரு) நல்ல பைத்தியம் பிடித்து விட்டது…! என்று என் காது படப் பேசுகின்றார்கள்.

இவருக்கு ஏன் இந்த ஆசை…? பைத்தியத்தோடு சேர்ந்து கொண்டு சாக்கடையில் அமர்ந்து… இப்பொழுது அரைப் பைத்தியமாக இருக்கின்றது அடுத்து முக்கால் பைத்தியம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள்.

காரணம்… நான் அவர் சொல்வதை எல்லாம் கேட்டு ஆடுகின்றேன் அல்லவா.. நான் என்ன செய்வது…? எனக்கு வேறு வழி இல்லை.

வருவோர் போவோர் அனைவரும் என்னைக் கேலி பேசுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள். நல்லய்ய நாயக்கர் மருமகனுக்கு ஏன் இப்படி ஒரு புத்தி வந்துவிட்டது…? என்று என் மாமனாரைச் சாடிப் பேசுகின்றார்கள்… என்னையும் திட்டுகின்றார்கள்.

இப்படித்தான் நிகழ்ச்சி அங்கே நடக்கிறது.

பன்றி வருகிறது. முகர்ந்து கொண்டு வந்தபின் ஓடுடா…! என்று சொல்கின்றார் கடலைப்பருப்பு முறுக்கு பொட்டுக்கடலை மூன்றையும் சாக்கடையிலே போடச் சொல்கின்றார்.

முறுக்கு ஒரு பக்கமும் கடலைப்பருப்பை ஒரு பக்கமும்… பன்றி முன்னாடி வரக்கூடிய பாதையிலே பொரிகடலையைப் போட்டேன். அவர் சொன்னபடி நான் போட்டேன்.

இதை மார்க் செய்து கொள்…! என்று சொன்னார். கோட்டைப் போட்டு வைத்துக் கொண்டேன்.

முதலில் பொரிகடலை இருக்கும் பக்கம் நுகர்ந்த பின் அதை விட்டுவிட்டு இந்தப் பக்கமாக வருகின்றது… நிலக்கடலைப் பருப்பு இருக்கும் இடத்திற்கு வருகின்றது.

வேகத்தில் அந்த வாசனையை நகர்ந்து அதை முதலில் எடுத்துச் சாப்பிடுகிறது… போட்ட பருப்பு அனைத்துமே சாப்பிடுகின்றது.

அடுத்து முறுக்கை எடுக்க வருகிறது. அதில் எண்ணெய் வாசனை இருப்பதால் அதை எடுத்துச் சாப்பிடுகின்றது.

கடைசியிலே திரும்பி வந்து இதை ஏன் விடுவானேன்…! என்று பொரிகடலையையும் சாப்பிடுகின்றது. ஏனென்றால் வறுத்தது… வாசனை இல்லை. அதையும் சாப்பிடுகின்றது.

பார்த்தாயா…?
1.நான் சாக்கடையைச் சாப்பிடேன் என்றால் அதையா சாப்பிட்டேன்…?
2.நல்லது என்று நினைத்தேன்… அதாவது சாக்கடைக்குள் நல்லதை நினைத்தேன்
3.காப்பியில் இருக்கும் நல்லதை நினைத்தேன்
4.சாக்கடை வாசனை எனக்கு வரவில்லை…. அதனால் வாந்தி வரவில்லை.
5.நீ நல்லதை நினைக்கவில்லை… ஆனால் சாக்கடையை நுகருகின்றாய்…
6.அதனால் அந்த வாசனை வருகிறது… உனக்கு வாந்தி வருகிறது…! என்று
6.எனக்கு அந்த இடத்திலே உபதேசமாக்க் கொடுத்து இதைத் தெளிவாக்குகின்றார்.

உன்னுடைய உணர்வுகள் எதைச் செய்கின்றது…? எதை இயக்குகின்றது…? நீ எப்படி வாழ்கின்றாய்…? நீ எப்படி எல்லாம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தாய்…?

நுகர்ந்து பார்த்துத் தன் இரைக்குத் தேடி வந்தது. முகர்ந்து பார்க்கும் வலுவைப் பெற்றுக் கெட்டதை நீக்கிவிட்டு நல்லதை நுகர்கின்றது பன்றி.

ஏனென்றால் அந்த மாதிரிச் சேர்த்து ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட உறுப்புகள் இப்படி விளைந்தது… பன்றியிலிருந்து மனிதனாக வந்திருக்கின்றோம்.

இதை எல்லாம் நான் சாக்கடையில் அமர்ந்து தான் கேட்டேன் நீங்கள் நல்ல இடத்திலே நன்றாக அமர்ந்து கேட்கின்றீர்கள்…!

1.நான் அனுபவித்துச் சொல்கின்றேன்.
2.இலேசாக இருக்கிறது என்று அலட்சியப்படுத்திக் கேட்டீர்கள் என்றால் இந்நேரம் வரை கேட்ட உபதேசமும் வீணாகிவிடும்.

இயற்கையின் நியதிகள்… இந்த உயிர் எதைக் கவர்கின்றது…? எதன் உணர்வின் தன்மை கொண்டு வருகிறது…? என்று தான் எனக்கு அனுபவத்தைக் கொடுத்தார்.

முன்னோர்களை விண் செலுத்தும் வீரிய சக்தி

 

1.ஈஸ்வரா என்று தன் உயிரை எண்ணி வானை நோக்கி ஏகி அந்த உணர்வின் ஏக்கத் துடிப்பிற்குள் சக்தி வாய்ந்த நிலைகளை உருப்பெறச் செய்து
2.இது அனைத்தும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
3.இந்த உணர்வுகளை ஆழமாகப் பதியச் செய்தான் அன்று அகஸ்தியன்…
4.அதைப் பதிவு செய்வதற்கு அந்த நிலைகளைச் செய்தான் அந்த மகரிஷி.

அதனை நாம் நினைவு கொண்டு விண்ணை நோக்கிய ஏகிப் பழகி அந்த மகரிஷியின் உணர்வைப் பருகும் நிலைகளுக்கும் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் இந்த நிலைகளை அதை வினையாக சேர்க்கும் தன்மையாக உருவாக்கினார் அகஸ்தியன்.

நம்மை ஈன்று நம்மை வளர்ப்பதற்காக வேண்டித் துன்ப நிலைகளைப் பெற்று எத்தனையோ வீழ்ச்சிகளைக் கண்டு உடலுக்குள் வேதனையாகிச் சிந்தனையற்ற நிலைகள் சீரழிந்து நாம் வாழ்ந்திட… நம்முடைய மூதாதையர்கள் எத்தனையோ இன்னல்கள் பட்டிருப்பார்கள்…! என்று பார்க்கலாம்.

தன்னைக் காத்திட… நம்மைக் காத்திட… அவர் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் விஷமாக நஞ்சாக மாறி அவருடைய நிலைகள் தன் உணர்வின் தன்மை இழக்கச் செய்து உடலை விட்டுச் சென்ற பின்… தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப இன்னொரு உடலில் புகுந்திருப்பார்கள்.

அந்த உடலில் புகுந்தாலும்…
1.அங்கே தீய விளைவுகளை விளைவிக்காது தடுப்பதற்குத் தன் இனமான இந்த உணர்வின் சக்தி கொண்ட நாம்
2.அவர்களை எண்ணாது மறந்திருந்தாலும் அவர்களை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
3.குலதெய்வமான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து என்றும் பிறவா நிலையும் உடல் பெறாத நிலையும்
4.விஷத்தை நீக்கி மெய் வழி காணும் மெய் அருள் பெற்ற மெய் ஞானியின் அருள் வட்டத்தில் சுழன்று அதனின் சக்தியை உணவாக எடுத்துக் கொண்டு
5.என்றுமே ஒளியின் சுடராகச் சுழன்று கொண்டிருக்க வேண்டும் என்று அவர்களை உந்தித் தள்ளி விண்ணிலே செலுத்தினார்கள் அன்று.

இன்று விஞ்ஞான நிலைகள் கொண்டு ரிமோட் கண்ட்ரோல் என்று தன் இனமான உணர்வின் அலைகளைக் கொண்டு செயற்கைக் கோள்களை விண்ணிலே செலுத்தி இயக்கிக் காட்டுகின்றார்கள்.

அதைப் போல உடலை விட்டு முன்னோர்கள் பிரிந்து சென்றாலும்… நம்மை வாழ்த்திட்ட வளர்த்திட்ட பார்த்திட்ட காத்திட்ட நம்மை வளர்த்திட்ட இந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்தி “நமக்குள் அந்தப் பதிவு இருக்கின்றது…”

அந்தப் பதிவின் நினைவு கொண்டு ஆற்றல் மிக்க மகரிஷிகளின் அருள் உணர்வைச் சேர்த்துக் காந்த உணர்வின் அலையைத் தனக்குள் இணையச் செய்து இணைத்த உணர்வின் தன்மை கொண்டு
1.மூதாதையர்கள் உயிருடன் இருக்கும் அந்த சூட்சம சரீரத்தை தன் உணர்வுடன் இணைக்கப்பட்டு
2.இதனுடைய கண்ட்ரோல்படி அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் அவர்களைச் சுழலச் செய்து
3.இருளை மாய்த்து விஷத்தை முறித்து… விஷத்தை அடக்கிடும் ஒளியாக மாற்றிடும் இந்த உணர்வின் சக்தி பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி ஏகி
4.இந்த உணர்வின் சக்தியைப் பரப்பும் நிலைகளுக்கு அன்று செய்தான் அகஸ்தியன்.

இதை எல்லாம் தெளிவுற உணர்த்தினார்கள் அன்று மகரிஷிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ நிலைகளைக் கடந்து வந்த மனிதர்கள் நாம்…
1.உயிரை நாம் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
2.உயிரைச் சிக்கனெப் பிடித்து… அது எப்படி ஒளியாக இருக்கின்றதோ
3.அதே அறிவின் தன்மையாக நாம் பெற வேண்டும்.

ஆதியிலே தோன்றிய மனிதன் அகஸ்தியன் தன் உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கோண்டிருக்கும் அந்த உணர்வை எடுத்து
1.நம் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தங்களிலே கலக்கப்பட்டு
2.நம் உடலுக்குள் அதைச் சேர்க்கப் பழக்கப்படுத்த வேண்டும்.

இப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டால் நாளடைவில் இந்த உடலை விட்டுச் செல்லப்படும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தோமோ உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்று விடும்.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை.

காட்டிற்குள் போய்த் தவம் இருந்து தனித்து ஜெபம் இருந்து ஆண்டவனின் அருளைப் பெறப் போகின்றேன் என்று அங்கே சென்றால் என்ன நடக்கும்…?

காட்டுக்குள் அமர்ந்து எந்த ஜெபத்தின் தன்மை எடுக்கின்றானோ… அந்த உணர்வு… நம்மை ஆள்பவன் எவனோ அங்கே தான் சென்றடையும்.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்று அதே உணர்வுகள் எவன் ஒருவன் பிரமை பிடித்து இதே மாதிரி ஆனானோ
1.வாக்கிலே ஒன்றை எடுத்துக் கொண்டு வரும் பொழுது அவன் ஒன்றைப் பார்த்தாலே போதும்.
2.இது வலுவானால் அவருடைய நிலைகள் சாபமாக… நீ தொலைந்து போடா என்று போக வைத்துவிடும்.
3.இந்த உணர்வுகள் வலுவாகி அவனை இறக்க வைத்துவிடும்.

ஆக “இவர் பெரிய முனியப்பா” என்று வரும்… ஆனால் நல்ல நிலைகளில் வளரப்பா…! என்ற நிலைகளுக்கு வருவதில்லை.

கணவன் மனைவியாக ஒன்றிணைந்து நல்ல உணர்வினை இருவரும் சேர்த்து வளர்த்துப் பழகினால் நல்ல உணர்வுகள் வளரும்.

ஆனால் தெரியாத நிலைகள் கொண்டு தவமிருந்து நான் ஆண்டவனை அடையப் போகின்றேன் என்று… மனைவி இல்லாது இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது “முனி” தான். அந்த முனி என்ற வீரியத் தன்மை மற்றதை அழிக்கச் செய்யும்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வு எதுவோ நம்மை ஆள்வது நம் உயிர் தான். அது தான் ஆண்டவன். அவனிடம் எதைச் சேர்க்கின்றோமோ அதன் வழி தான் செல்கிறது.

ஆனால் கணவன் மனைவியாக ஒன்றி வாழ்ந்த அகஸ்தியன்… உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றினான்… நஞ்சினை வென்றான்… நஞ்சையே ஒளியாக மாற்றினான்.

சூரியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பாதரசமாக உருவானாலும் தன் அருகே வரக்கூடிய விஷத்தன்மையுடன் மோதப்படும் பொழுது அந்த நஞ்சு பிரிந்து சென்று ஒளியின் உணர்வாக வருகின்றது.

ஆக அந்த ஒளியின் உணர்வுக்குள் நஞ்சின் தன்மை கவர்ந்து விட்டால் அதை நுகர்ந்தால் நம்மை இருள் சூழச் செய்து விடும்.

அதாவது ஒளியாக மாற்றுகின்றது…. ஆனாலும் ஒரு விஷத் தன்மையைக் கவர்ந்தால் அதை மனிதன் நுகர்ந்தால் மற்றவருடைய உணர்வின் இயக்கத்தை இருளச் செய்கின்றது. ஏனென்றால் இதே சூரியன் தான்.

ஒரு பக்கம் விஷத் தன்மை பரவுகிறது என்றால் சூரியனுடைய காந்த சக்தி கலந்தால் அதனின் அலைகளாகப் படர்கிறது. அதை நாம் நுகர்ந்தால் நம் உடலில் உள்ள அணுக்களை இருளச் செய்து விடும்.

1.அந்த இருளை மாற்றிய உணர்வின் தன்மை ஒளியாகப் பெற்ற அனைத்திலும் உயர்ந்தது துருவ நட்சத்திரம்
2.அதை நாம் அனைவரும் பெற வேண்டும்.

மனிதனான பின் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். ஆகவே ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுங்கள்.

நம் ஜீரண உறுப்புகளுக்குள் நடக்கும் சில அதிசயங்கள்

 

சங்கடமான வார்த்தைகளை நாம் கேட்டு விட்டு வீட்டிலே வந்து அமர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்…? எவ்வளவு தூரம் அவர்கள் வேதனைப்பட்டார்களோ அந்த உணர்வுகள் சாப்பாட்டுடன் கலந்து இரைப்பைக்குச் செல்கின்றது.

1.வேடிக்கையாகத்தான் நாம் கேட்டிருப்போம்… பார்த்திருப்போம்.
2.கேட்டு விட்டு வந்து நாம் சாப்பிடும் போது இந்த உணர்வு உள்ளே சென்று விடுகின்றது.

இரைப்பையிலே சென்று அந்த வேதனையான உமிழ் நீரும் நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் உள்ள சத்தும் இரண்டும் அங்கே இருக்கும்.

கோழி குருவி இவைகள் எல்லாம் தன் உணவை எடுக்கின்றது. கோழி கொத்தித் தின்னும்… கூப்பிட்டு குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.

குருவி மற்ற பறவைகள் எங்கேயோ சென்று அந்த இரையை எடுத்துத் தன் கூட்டிற்கு வருகின்றது. குஞ்சுகள் “ஆ…” என்று வாயைத் திறக்கும். எடுத்து வந்த இரையைப் போடும்… போட்ட பின் குஞ்சுகள் வாயை மூடிக்கொள்ளும். அந்த உணவால் வயிறு நிரம்பி விடுகின்றது.

இதைப் போன்று தான் சிறுகுடல் அதனுடைய பசியின் நிலையில் உந்தப்படும் பொழுது இரைப்பையில் இருந்து வாயைத் திறக்கும். அந்த நேரத்திற்குத் தகுந்தாற் போல் இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குள் “சொத்…” என்று விழும்… டபக் என்று மூடிக்கொள்ளும்.

அது மூடி ஜீரணித்து ரசத்தை வடிக்கும். கீழே இருப்பதற்குப் பசிக்கும்போது இதைத் தள்ளி விடும். அதிலே வடித்து எடுத்துக் கொள்ளும். இப்படி வடித்துக் கொண்டே இருக்கும்.

சத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு விஷத்தை வடித்து வெளியே அனுப்பும். விஷத்தை வடிக்கும் அந்தத் திறன் இருந்தாலும் நல்ல சத்துள்ள ஆகாரத்தை உட்கொண்டோம்
1.சாப்பாட்டில் கலந்துள்ள விஷத்தைத் தான் அதற்குப் பிரிக்கத் தெரியும்.
2.ஆனால் சாப்பாட்டுடன் சேர்த்து நாம் நுகர்ந்த வேதனையான அந்த உணர்வை… (விஷம்)
3.நாம் கேட்டறிந்து நுகர்ந்த இந்த உணர்வு இரைப்பையுடன் சேர்ந்து விட்டால் அந்த உணர்வான சத்தை சிறுகுடல் கீழே இழுக்கும் திறக்கும்.
3.ஆனால் கோபமாகப் பேசியதைப் பார்த்து இருந்தால் ஆ…! என்று வாயைத் திறந்து விடும்.

மிளகாயை வாயிலே போட்ட பின் நம் வாயை மூட முடியுமா…? காரத்தை நீங்கள் வாயிலே போட்டு வாயை மூடிப் பாருங்கள். மூட முடியுமா…? ஸ்… ஆ… என்று வாயைத் திறந்து அலறிக் கொண்டுதான் இருப்போம்… மூட மாட்டோம் முடியாது.

அதே மாதிரி அந்த எரிச்சலான உணர்ச்சிகள் சிறு குடலை விரித்து விடும்.

அப்படி ஆ…! என்று அலறும் போது “கட புடா…” என்று உடலுக்குள் ஒரு விதமான உணர்ச்சிகள் தோன்றும். சத்தைப் பிரிக்காதபடி அப்படியே விட்டுவிடும். சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வந்த பின் இந்த நிலை ஆகும்.

ஒருவர் கோபமாகப் பேசுவார்… இன்னொருவர் வேதனைப்படுவார்… இரண்டும் இருக்கும். ஆனால் அந்த உணர்வை நுகர்ந்த பின் நம் குடலுக்குள் இந்த உணர்ச்சிகள் தோன்றுவதை நிச்சயம் பார்க்கலாம்… தெரிய முடியும்…!

நான் சொல்வது அனைத்தையுமே நீங்கள் காண முடியும்.

இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கின்றேன்.
1.புறத்தில் நாம் எப்படிச் செயல்படுகின்றோமோ அதைப் போன்று தான்
2.அகத்திற்குள்… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளின் இயக்கமும்… அணுக்களின் இயக்கமும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி… “கண்களைத் திறந்து தியானியுங்கள்…”
1.இப்பொழுது உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “திரும்பத் திரும்ப” எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி உடலில் உள்ள ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது
1.உங்கள் உடலில் புது விதமான உணர்வுகள் படரும்.
2.இரத்தங்களில் மிகச் சக்தி வாய்ந்த அந்த உணர்வுகள் கலக்கும்.
3.உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் உற்சாகம் பெறும்… வலிமையும் பெறும்.

மேலே சொன்ன மாதிரி இப்படி எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும். பழகிக் கொண்டபின்… உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது சலனமும்… சஞ்சலமும்… வெறுப்பும்… வேதனையும்… பகைமையான உணர்வுகளூம் உங்களுக்குள் தோன்றுகின்றதோ
1.அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று கண்களைத் திறந்து ஏங்கித் தியானியுங்கள்.

அடுத்து கண்களை மூடி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.கண்களை மூடி உங்கள் நினைவை உடலுக்குள் தலையிலிருந்து கால் வரை மீண்டும் காலிலிருந்து தலை வரை செலுத்துங்கள்.
2.இப்படி ஒரு ரெண்டு மூன்று தடவை செய்தால் உங்கள் கவலைகள் அனைத்தும் நீங்கும்
3.அருள் உணர்வுகள் பெருகும் அதன் வழி உங்களுக்குள் மன வலிமை கிடைக்கும்
4.சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்… பகைமைகளை அகற்றும்… மகிழ்ச்சி என்ற உணர்வுகளை தோற்றுவிக்கும்

தியானத்தில் எடுத்தவர்கள் இதே மாதிரி அவசியம் செய்து பழக வேண்டும்.

குறிப்பு:-
கண்களைத் திறந்து… அடுத்து கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஞானகுரு எடுக்கச் சொல்வதில் ஒரு முக்கியமான சூட்சமம் உள்ளது.
1.கண்களைத் திறந்து செய்யும் போது கேமராவில் படம் எடுக்கிற மாதிரி புருவ மத்திக்கும் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் நினைவு செல்ல வேண்டும் (அதாவது படம் பிடிக்க வேண்டும்)
2.படம் பிடித்ததை… அந்த நினைவை… அப்படியே கண்களை மூடி… கண்ணால் சுவாசத்தின் வழி கூடி தலையிலிருந்து கால வரை செலுத்த வேண்டும்.

மேலே சொன்ன SL NO 1, 2யும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் செய்து உடலுக்குள் செலுத்த செலுத்த… வட துருவத்தின் வழி விண்ணிலிருந்து வரும் ஆற்றல்கள் பனிப் பாறைகளாக உறைவது போல் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடலுக்குள் இருக்கும் சகலத்திற்குள்ளும் உறையத் தொடங்கும்… அதாவது முலாம் பூசுவது போல் படரும்.

படரச் செய்யும் போது மூக்கு வழி செல்லும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சுவாசம்… உடல் முழுவதும் சுழன்று வருவதும்… அது வாயிலே உமிழ் நீராக மாறி… நம் அன்னக் குழாயிலிருந்து… ஜீரண உறுப்புகளிலிருந்து… தோல் மண்டலம் வரை கண்ணைத் திறந்து மூடி இப்படி மாறி மாறிச் செய்ய வேண்டும்.

இப்படி ஒரு பழக்கம் வந்து விட்டால்
1.“எத்தகைய கடுமையான நிலைகள் இருந்தாலும்… அதை நல்லதாக மாற்ற முடியும்…”
2.ஆத்மாவைச் சுத்தம் செய்ய வேண்டிய சரியான முறை இது தான்.
3.ஆத்மா மட்டுமல்ல உடலும் நலம் பெறும்… “மன பலம் மன நலம் அதிகமாகக் கிடைக்கும்…”

கை கால் வலி வயதின் முதிர்வினால் வருவதில்லை… தீய உணர்வுகள் விளைந்ததன் முதிர்வால் வருவது

 

தபோவனத்தில் சவுண்டால் மரத்தை அதிகமாக வைத்தோம். அதற்குப் பக்கத்தில் வேப்ப மரத்தை வைத்தோம். சவுண்டாலின் சத்து அதிகமான பின் வேப்ப மரம் வளரவே இல்லை
1.அந்தச் சவுண்டால் மரத்தை வெட்டியவுடன்
2.இதற்கு ஜீவன் கிடைக்கின்றது… வேப்பமரம் நன்றாக வளர்கின்றது.

இதைப் போல நமக்குள் தீய உணர்வின் விளைவுகள் அது ஓங்கி வளரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர விடாதபடி தடுத்து இது அதிகமாகப் படரும் நிலை வந்து விடுகின்றது. அப்பொழுது நல்ல குணங்கள் அனைத்தும் வளர்ச்சி குன்றுகிறது.

இந்தப் பூமியில் மரம் செடி, கொடிகள் வளர்வது போன்று
1.நாம் எண்ணிய உணர்வின் வித்துகள் எதுவானாலும் அந்த உணர்வின் சக்தி உந்தப்பட்டு
2.நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் இந்தப் பூமிக்குள் படர்வது போல இரத்தத்துடன் கலந்து
3.அந்த அணு செல்களாக வளர்ந்து நம் உடலின் தன்மை ஆவியாக மாறி அதனதன் உணர்வுக்கொப்ப அது கூடி…
4.உடலுடன் உறைந்து தசைகளாக மாற்றி அதில் விளைந்த உணர்வின் சத்து “வித்தாக வெளிப்படும்…”

ஒரு வித்தின் தன்மை உருவான பின் செடியாக மாறுகின்றது. அப்போது “அந்த வித்தைக் காண முடிவதில்லை…”

ஆனால் வித்தின் சத்து செடியாக ஆவது போல அதனின் முதிர்வுக்குத் தக்கவாறு பூ பூத்துப் பிஞ்சாகிக் காயாகி முதுமையாகும் பொழுது அந்த வித்தின் தன்மையை மீண்டும் நாம் கண்களிலே பார்க்கின்றோம்.

அந்த வித்தின் தன்மை போல் எந்த வேதனையை நாம் கண்ணுற்றுப் பார்த்து அதைக் கேட்டுணர்ந்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அது விளைந்து விடுகிறது.

அந்த வேதனையை அடிக்கடி நாம் எண்ணும் பொழுது அதை நுகர்ந்து உடலுக்குள் வரும் பொழுது அந்தச் செயலும்… ரத்தத்தில் இருந்து ஆவியாக மாறி அதன் முத்துக்களை விளைய வைத்து
1.நமக்குள் முழுமையாகும் போது தான் கேன்சர் ஆஸ்த்மா ரத்தக் கொதிப்பு கை கால்களில் புண் இருதயத்திலே வீக்கம் என்று
2.அந்த உணர்வுகள் எங்கே அதிகமாகப் படர்கிறதோ
3.எந்தெந்த குணத்தின் தன்மை இயங்கும் பொழுது அந்தந்த உறுப்பில் தேங்கி விடுகின்றதோ அவை அங்கே ஓங்கி வளர்க்கப்படும் பொழுது
4.உந்திக் கோபத்துடன் ஒரு பொருளைத் தூக்கினோம் என்றால்
5.ஆத்திரமும் வேதனையும் கொண்டு “இரு நான் பார்க்கிறேன்…” என்ற வேகத்துடன் குனிந்து நிமிர்ந்தால்
6.இந்த வேதனையான உணர்ச்சிகள் உடலில் அழுத்தமாகி… முழங்காலிலும் மூட்டுகளிலும் விஷத் தன்மை கூடிவிடும்.

ஆனால் முதலில் ஒன்றும் தெரியாது…! கடைசியில் அங்கே மடக்கி இயங்கும் இடங்களில் விஷம் பட்டுவிடும். காலைத் தூக்கினால் மடக்கினால் கால் வலிக்கின்றது மேல் வலிக்கின்றது என்று வரும்.

காரணம்…
1.மடக்கும் போது நல்ல ரத்தங்கள் பிரிந்து விடுகின்றது.
2.அந்த உணர்ச்சியின் தன்மை நீரை இழுத்து வளர்த்துக் கொள்ளும் இரத்தம் தங்குவதற்கு வழி இல்லை.
3.மூட்டு வலி கை கால் வலி என்று வந்துவிடும்.

வேதனையான உணர்வை எண்ணி இந்த உணர்வின் சக்தி வரப்படும் பொழுது அங்கே எதை வளர்த்ததோ இந்த உணர்வின் சக்தி தன்னாலே வரும். நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் நம் உயிரின் இயக்கங்கள் இந்த உணர்வுக்குத் தக்க இந்தப் பூமியில் எப்படி நடக்கின்றதோ அதைப்போல நம் உடலில் சேர்த்து விடுகின்றது.

இதை நீக்குவது யார்…?
1.அதை நீக்கச் செய்வதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்தி
2.ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு வருகிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அறிவுகளையும் தெளிவாக்கும் நாள் தான் கார்த்திகை தீபம்… கார்த்திகை ஜோதி
2.அதாவது எல்லா அணுக்களுக்கும் தெளிவான (ஒளியான) உணர்ச்சிகளை ஊட்டும் நாள் இது.

கோபப்படுபவரை நாம் எண்ணினால் நம் மனம் இருண்டு விடுகின்றது. நோயோடு வாடுகின்றான் என்று பார்த்து அதை மீண்டும் எண்ணினால் நம் மனம் இருண்டு விடுகின்றது. சிந்தனை இழக்கச் செய்து நம்மைச் சோர்வடையச் செய்கின்றது.

ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது… அத்தகைய இருண்ட நிலைகளை எல்லாம் தெளிவாக்கிச் சிந்தித்துச் செயல்படும் சக்தியை நமக்கு ஊட்டுகின்றது.

நமது சாஸ்திரங்கள் கூறிய தத்துவத்தின்படி விதியை மதி கொண்டு மாற்ற முடியும்.
1.நமது உயிரின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.உடலில் இருக்கும் எல்லாவற்றையும் அருள் ஜோதியாக இருள் சூழாத நிலைகள் கொண்டு
3.ஏகாந்த நிலையாக… என்றும் ஏகாதசி என்ற பத்தாவது நிலையை அடைய முடியும்.

மனிதன் ஒருவன் தான் இதைச் செயல்படுத்த முடியும்…! இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் அழைத்துச் சென்று
2.அது வெளிப்படுத்தும் உணர்வுகளை கவரச் செய்து
3.அதை நீங்கள் நுகரப்படும் போது உங்கள் இரத்தத்திலே அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகள் சேருகின்றது.
4.உங்கள் உடலில் சோர்வோ எங்கேயாவது வேதனையோ இருந்தாலும் அது குறையத் தொடங்குகின்றது.
5.இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அந்த உணர்வுகள் குறையத் தொடங்கும்

அது மீண்டும் குறைய… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கிக் கொண்டால் நமக்குள் இருக்கும் பிணிகளை மாற்றி… சிந்தித்துச் செயல்படும் வலுவைக் கூட்டி… அருள் உணர்வின் தன்மை கொண்டு இந்த வாழ்க்கையைத் தெளிவாக்கி ஒளியின் சுடராக நாம் மாற முடியும்.

ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டாலும்
1.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அந்த அணுக்கள் நல்லதாக மாறும் பொழுது உடலிலே வலி தெரியும் …!
2.தீய உணர்வுகளை நுகரப்படும் பொழுது… அந்தத் தீயது நல்லதாக மாறும் பொழுது வலிகள் வரும்

நல்லதாக்க வேண்டும் என்ற நிலையில் ஆத்ம சுத்தியோ தியானமோ செய்து… அந்தந்தச் சந்தர்ப்பங்களில் மாற்றும் பொழுது
1.எல்லாம் மாற்றினேன்… ஆனால் வலிக்கிறது என்று கொஞ்சம் சங்கடம் இருக்கும்… வெறுப்பு கூட இருக்கும்.
2.ஆனாலும் ஒளியின் சுடராகும் பொழுது நம்மைத் தெளிவாக்கும்.
3.ஓரளவுக்கு மாற்றிக் கொள்ளும் வலுவும் கிடைக்கிறது.

ஆகையினால் எப்படி இருந்தாலும் நம் உணர்வின் அணுக்களை ஒளியாக மாற்றப்படும் பொழுது தீமையின் உணர்வாக வளர்த்த… “இந்த உடலும் கரைகின்றது…”

அதே சமயத்தில் ஒளியின் சுடராக மாறி உயிருடன் ஒன்றி உயிரான்மா வெளி செல்லும் பொழுது பேரருள் பேரொளியாக ஏகாந்த நிலை அடைகின்றது.

ஆனால்… இந்த மனிதனின் வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் கொதிப்பும் அதிகமானால்… அதனதன் உணர்வுகள் கலக்கப்பட்டு அதற்குத் தக்க உடலாக… புலியோ நரியோ நாயோ பாம்போ தேளோ இதைப் போன்ற உடல்களுக்கு அழைத்துச் சென்று “நம்மை உருமாற்றிவிடும் நமது உயிர்…”

இன்றைய செயல் நாளைய சரீரமாக மாற்றிக் கொண்டே உள்ளது உயிர். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்திந் உணர்வுகளைக் கலக்கும்படி செய்தோம்.
1.இந்த உபதேசத்தின் உணர்வுகள் உங்களை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு அமுதாகச் சேர்கிறது…
2.”அருள் வழியில் வளரும்” அத்தகைய அணுக்களாக மாற்றும்.

அந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டும் அதற்கே இதைச் செயல்படுத்துகின்றேன் (ஞானகுரு).

வெறும் சொல்லாக யாம் சொல்லவில்லை… அது மிக உயர்ந்த சக்தி

 

யாம் உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து வந்து சாமி…! என் உடம்புக்குச் சரியில்லை என்று ஒருவர் கேட்டால் எப்படி இருக்கும்…? வெளியில் வேலைகள் எப்படி நடக்கிறது…? என்று பார்த்து வரலாம் என்று யாம் சுற்றிப் பார்க்கும் பொழுது அங்கே வந்து என்னிடம் இடைமறித்து “என் கஷ்டம் போக வேண்டும் என்று நீங்கள் கேட்டால் எப்படி இருக்கும்…?”

சாதாரணமாக… ஒருவர் தன் கஷ்டத்தை உங்களிடம் சொல்கிறார் என்றாலே அதைக் கேட்கும் பொழுது உங்களால் சமாளிக்க முடியவில்லை… அந்தக் கஷ்டம் உங்களுக்கு வந்து விடுகின்றது.

1.ஆனால் எத்தனையோ பேர் எம்மைச் சந்தித்து கஷ்டம்… கஷ்டம்… என்று சொல்லி
2.அதையெல்லாம் நான் காதில் கேட்டால் எப்படி இருக்கும்…?
3.நான் உங்களைக் கவனிக்க வேண்டும்… நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.

அதற்கப்புறம் அதை நான் உணர வேண்டும். பின் உங்கள் தீமை நீங்க வேண்டும் உங்கள் கஷ்டம் நீங்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டும்.

நீங்கள் சொல்லும் கஷ்டமான உணர்வையெல்லாம் எனக்குள் இயக்காமல் அதை நீக்கித் தூய்மைப்படுத்தி விட்டு உங்களுக்கு நல்ல வாக்காகக் கொடுக்க வேண்டும் என்றால் நான் எத்தனையோ சிரமப்பட வேண்டி வரும்…?

1.நீங்கள் சொல்லும் கஷ்டத்தை எல்லாம் எனக்குள் வராது
2.அதைச் சமாளிக்கக் கூடிய அந்தச் சக்தி இருந்தால்தான் உங்களுக்கு நல்ல வாக்கையே நான் கொடுக்க முடியும்.

அந்த உயர்ந்த சக்தி வாய்ந்த வித்தை யாம் உங்களுக்குக் கொடுக்கும் பொழுது நீங்கள் அதை விளைய வைத்தால் உங்களுக்கு அந்தப் பலன் கிடைக்கும்.

இல்லாமல் போனால் என்னுடைய சொல் வெறும் சொல்லாகத்தான் இருக்கும்.

ஞானிகளும் மகரிஷிகளும் நம்மைப் போன்று மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தான். வாழ்க்கையில் வந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உயர்ந்த எண்ணங்களை எடுத்து அந்தக் கெட்டதை எல்லாம் பஸ்பம் ஆக்கியவர்கள்.

1.தன் உடலுக்குள் வந்த நோய்களை மாற்றி மெய் ஞானத்தின் தன்மை வளர்த்து
2.தன் உடலில் இருக்கும் உணர்வுகளை ஒளியாக மாற்றி
3.தன் உடலில் இந்த வாழ்க்கையில் வந்த அனைத்தையுமே புடம் போட்டு அதை மாற்றி உயிரணுவோடு சேர்த்து உயிருடன் சேர்த்து
4.உயிராத்மாவை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதற்குப் பின்னாடி வந்தவர்கள் அவர் உடலில் விளைய வைத்த அந்த உணர்வின் சக்தியை எடுத்து அதைச் சுவாசித்து தன் உடலில் வந்த கஷ்டங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து அதைப் புடம் போட்டு சங்கடத்தையும் சலிப்பையும் மாற்றிவிட்டு தன் உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாகச் சென்றிருக்கின்றார்கள்.

தனக்குள் வந்த துன்பத்தையெல்லாம் மாற்றி விண் செல்ல வேண்டும் என்ற நிலைகள் கொண்டு அங்கே சென்றார்கள். அவர்கள் மனிதனாக இருக்கும் பொழுது வெளிப்பட்ட அந்த உயர்ந்த சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியிலும் பரவச் செய்துள்ளது.

விண்ணிலே அவர்கள் இன்று சப்தரிஷி மண்டலங்களாக இருந்தாலும் அதிலிருந்து வெளிப்படும் ஒளி உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றவர்கள் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக இருக்கின்றார்கள்.
1.பூமி சுற்றுகிறது என்றால் வட துருவத்தில் இருக்கும் பொழுது
2.சப்தரிஷி மண்டலம் வானிலே தெரியும் போது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசமாகத் தெரியும்.

இரவில் இன்று ஏழு மணிக்கு நாம் இருக்கும் இடத்தில் சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்க முடிகிறது என்றால் அதே ஏழு மணி அளவில் ஒரு வாரம் கழித்து மற்ற இடங்களில் மாறி வரும் பொழுது அங்கே தெரியும். அந்த ஒரு வார வித்தியாசத்தில் அங்கே அதே நேரத்தில் பார்க்க முடியும்.

துருவ நட்சத்திரம் இருந்த இடத்திலேயே இருக்கும். அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தின் ஒளியான உணர்வுகள் அனைத்தும் இப்படி பூமியைச் சுழன்று கொண்டு வருகின்றது.

ஆனால் சூரியனுடைய வெப்ப காந்தம் அதிலிருந்து வரும் சக்திகளைக் கவர்ந்து நம் பூமிக்குள் இங்கே நமக்கு முன் கொண்டு வருகின்றது… பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கின்றது.

1.அந்தச் சக்தியைத் தான் குருநாதர் எம்மை எடுக்கும்படி செய்தார்.
2.அதை எடுத்துத் தான் தீமைகளை மாற்றி உணர்வுகளை ஒளியாக மாற்றுகின்றேன்.
3.அதிலே விளைந்த அதே வித்தைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாக வாக்காக ஊன்றுகின்றேன்.
4.அதை வளர்த்துக் கொண்டால் அவர்கள் சென்றடைந்த எல்லையை நீங்களும் அடைய முடியும்.

எனது சுயநலம்

 

தங்கத்திலே செம்பும் பித்தளையும் வைத்து பற்ற வைத்துத் தான் நகையாகச் செய்கின்றோம். அதற்குப்பின் அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தை ஊற்றி அதைப் புடம் போட்டு நீக்கி விட்டு அதைச் சுத்தத் தங்கமாக்கி மீண்டும் நகை செய்கின்றோம்.

இதைப் போன்று
1.இந்த வாழ்க்கையில் கெட்டது எதைப் பார்த்தாலும் அந்த அழுக்குகளை நீக்கிவிட்டு அதைப் புடம் போட்டு
2.ஞானிகள் சக்தியை நமக்குள் போட்டு தீய விளைவுகளைப் புடம் போட்டு
3.மனிதனாகப் பிறந்த நாம் அந்த மகரிஷிகளின் வாழும் எல்லைக்குச் செல்ல வேண்டும்.

பௌர்ணமி முதலில் பிரகாசிக்கின்றது. அது போல் மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது. அடுத்து உடலை விட்டுச் சென்றபின் ஜீவன் போகின்றது… எல்லாம் மறைந்து விடுகின்றது.

அதற்கு பின் அந்த நிலவிலே சிறிதளவு வெளிச்சம் தெரியும். இந்த உயிரின் தன்மை வரும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் கூடிப் பௌர்ணமியாக வரும். இப்படித்தான் நாம் தேய்ந்து தேய்ந்து வளர்ச்சிக்கு வருகின்றோம்.

அது பௌர்ணமி ஆகி உயிர் ஒளியாக முழுமை பெறக்கூடிய நிலை எப்படி ஆனமோ எல்லாவற்றையும் தெரிந்து கொண்டோமோ அதை நிலையாக்கு.
1.நிலையான அவனின் உணர்வை எடு என்பதற்காக வேண்டித்தான் எனது குருநாதர் இதை எல்லாம் ஞாபகப்படுத்தி
2.எல்லோரும் அதைப் பெற வேண்டுமென்று எண்ணு… நீ அதுவாகு என்று சொன்னார்.

இது என் சுயநலம்.

நீங்கள் எல்லோரும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் அதுவாகின்றேன்… என்னுடைய சுயநலமாகின்றது…! என் குருநாதர் அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்.

மக்கள் அவர்களை அறியாது வந்த இருள்கள் மாய வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணினால் நீ அதுவாகின்றாய்.

ஆகையினால்
1.இந்தச் சக்தியை உனக்கு நான் கொடுக்கிறேன் என்றால் அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணு.
2.அவர்கள் மகிழ்வதைப் பார்த்து நீயும் மகிழ்ச்சியாக இரு.
3.அவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்து நீயும் சந்தோஷமாக இரு என்ற நிலையைத் தான் சொன்னார்.

இருந்தாலும்… சிலர் திடீரென்று என்னிடம் கேள்வியும் கேட்பார்கள். சாமி என்னைக் கோவிக்கின்றாரே… ஏன் என்று…?

காரணம் உங்கள் கஷ்டம் எனக்குள் வராதபடி நரசிம்ம அவதாரமாக வந்து விடுகின்றது.
1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று வானை நோக்கி எண்ணும் பொழுது
2.என் உடலுக்குள் அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் வந்து பாய்கின்றது.
3.அப்பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் வீரியமாகப் பார்த்தீர்கள் என்றால் அந்த நல்ல வாசனை வரும்.
4.நீங்கள் துன்பப்பட்டுச் சொல்லும் வார்த்தை இங்கே வராது.
5.டபார்…! என்று அதைப் பிளந்து விட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி ஊடுருவும்.

ஆகவே திடீரென்று யாம் உங்களைக் கோபித்தாலும் இந்த வார்த்தை உங்களுக்குள் போய் உங்கள் துன்ப அலைகளைப் போக்கிவிடும். இந்த உணர்வுகள் ஊடுருவிய பின் கவலையாகச் சொல்லக் கூடாது என்ற நினைப்பு வரும்.

அதற்காக வேண்டித் தான் “இந்த உணர்ச்சியைத் தூண்டும் நிலைகளாக வெளிப்படுத்துவது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்று குருநாதர் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டி… ஒலிகளை எழுப்பி அது எப்படி வருகிறது…? எதற்காக அதைச் செய்கிறேன்…? என்று எனக்கு உணர்த்தினார்.

போஸ்டில் நான் கல்லைத் தட்டுவதைப் பார்த்து “என்னைப் பித்தன்…” என்று சொல்கின்றார்கள். ஆனால் பித்தன் யார்…? என்று நீ சிந்தித்துப் பார் என்ற நிலையைத் தெளிவாக்கினார்.

ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். எண்ணியபடி அந்தக் காரியம் நடக்கவில்லை… அதைத் தடைப்படுத்துகிறார்கள் என்றால்
1.எத்தனாகவே மாறி விடுகின்றோம்… எதிரிகளாக மாற்றுகின்றோம்.
2.உன்னால் என்ன செய்ய முடியுமோ… செய்து பார்…! என்று வீம்பாகப் பேசுகின்றோம்…!

அப்பொழுது எத்தனாகவே மாறி விடுகின்றோம்.

அங்கே அப்படி மாற்றியது யார்…? சந்தர்ப்பம் தான் அப்படி மாற்றுகின்றது.
1.சிந்திக்கின்றோம்… தவறு செய்யக்கூடாது என்றும் எண்ணுகின்றோம்.
2.ஆனால் சந்தர்ப்பம் நம்மைச் செய்ய வைக்கின்றது… அதிலிருந்து மீள வேண்டும் அல்லவா.

அதற்குத்தான் அதிகாலை துருவ தியானத்தின் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளி… சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

அங்கே இணைத்து இந்த உடலில் பெற்ற நஞ்சுகள் கரைய வேண்டும் என்று செயல்படுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் கரைக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் எல்லோரிடமும் அன்புடன் பண்புடன் தான் நாம் பழகி இருக்கின்றோம்
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களை யார் யார்…? என்று நாம் தனித்து எண்ண வேண்டியதில்லை.
2.அவர்களுடன் ஒரு நாள் பழகி இருந்தாலும் அவருடைய உணர்வு நம்முடன் கலந்து தான் உள்ளது.
3.இதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களையும் நாம் விண் செலுத்த முடியும்.

குருநாதர் இதைத்தான் எனக்குக் காட்டினார்

அறியாது செய்த தவறினால் நோயின் தன்மை ஆகி இறந்தால் அவர்கள் மீண்டும் பிறவிக்கு இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி விண் செலுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுக் கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

அந்த உடலில் உருவான இருள்களை அங்கே கரைக்கப்படும் போது சூரியனின் காந்த சக்தியினால் கவரப்பட்டால்… அதன் உணர்வை மாற்றி… மாற்றுப் பொருளாக உருமாற்றி விடுகின்றது.

இது போன்ற நிலைகளை நாம் செய்து பழகினோம் என்றால் “கூட்டுப் பிரார்த்தனை” என்பது இதுதான்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து “மொத்தமாகவே…” எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள்… சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து… பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியாத ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் விண் செலுத்த வேண்டும்.

உடலுடன் இருக்கக்கூடிய நண்பனும் நாமும் ஒருவருக்கொருவர் அன்புடன் கலந்து உறவாடினால் “எனக்கு நன்மை செய்தான்” என்று எண்ணும் போது விக்கலாகிறது. “தீமை செய்தான் பாவி…!” என்று எண்ணினால் அங்கே புரையோடுகிறது.

இந்த மனித உடலையே இப்படி இயக்கிடும் நிலை வரும் பொழுது மனிதனுடன் பழகி இருக்கும் உணர்வு கொண்டு அந்த உயிரான்மாக்களை அங்கே விண் செலுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளிச் சரீரம் பெறும்.

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து விளைகின்றது… அந்த உணர்வுகளும் இந்தப் பூமியில் பரவுகின்றது

அதன் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினால் அவர் வாழ்ந்த காலத்தில் எத்தனை கஷ்டப்பட்டாரோ அதையெல்லாம் நீக்கி அவரால் நமக்குள் உருவான பரம்பரை நோய்களை… பரம்பரை குணங்களை… மாற்றி நாமும் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

இதைத்தான் நமது குருநாதர் அருள் வழியாகக் காட்டினார்.

நான் தட்டியது வெறும் போஸ்ட் அல்ல…!
1.அங்கே தட்டி “என் உயிரான ஈசனிடம் வேண்டினேன்”
2.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று எண்ணினேன்
3.அந்தப் பித்து பிடித்து அதைச் செய்தேன்.

ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் கடவுளே.. அவன் தான் அந்த உடலை ஆளுகின்றான். உயிர் எப்படி ஒளியாக இருந்து இந்த உலகை அறிவிக்கின்றதோ “அதன் உணர்வு நான் பெற வேண்டும் என்று இந்தப் பித்து தான் என்னிடம் உள்ளது…” என்றார் குருநாதர்.

அதைத் தான் நானும் (ஞானகுரு) இன்று உங்களுக்குச் சொல்வது

எனது குருநாதர் சொன்னது போல நானும் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உணர்வுகள் ஒளியாக மாற வேண்டும்… உங்கள் உடலில் அறியாது சேர்ந்து தீமைகள் அகல வேண்டும்… அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று
1.என் குரு வழியில் “நானும் பித்தனாக இருக்கின்றேன்…”
2.நீங்கள் அந்த அருள் ஒளி பெற வேண்டும் அந்த ஏக்கத்தில் இருந்தாலே போதுமானது

இப்படி நாம் ஒவ்வொருவரும் அந்த அருளைப் பெற்றால் இந்தப் பூமிக்குள் வரும் இருள்களை நீக்க முடியும்.
1.அருள் வழி நாம் வாழ முடியும்
2.மற்றவரை நாம் வாழ வைக்கவும் முடியும்.

ஆகையினால் உங்கள் உயிரான ஈசனை மதித்துப் பழகுங்கள் உடலை ஆலயமாக உங்கள் மதியுங்கள். உங்களை உருவாக்கிய தாய் தந்தையைக் கடவுளாக மதியுங்கள். தெய்வமாகக் காத்த தாய் தந்தையரை மதித்து நடங்கள். நம்மைக் காத்த முதல் தெய்வங்களும் அவர்கள் தான்.

நமக்கு நல் வழி காட்டிய அந்த நல் உணர்வுகளைப் பதிவாக்கிக் குருவாக மதியுங்கள். நல்ல உணர்வை எப்போதுமே நம் தாய் நமக்குள் பதிவாக்கியிருக்கின்றது. ஆகவே… எந்த நிமிடத்திலும்
1.அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த நல்ல உணர்வுகளை எளிதில் பெற முடியும்… நமக்குள் அறியாது சேர்ந்த இருளை நீக்க முடியும்
3.அந்தப் பேரருளைப் பெற முடியும்… நாம் பேரொளியாக மாற முடியும்.

குருநாதர் எனக்கு அனுபவம் கொடுத்த முறை

 

நான் ரெஸ்ட் இல்லாமல் சொல்லிக் கொண்டு வருகின்றேன்… இதை எதற்காகச் சொல்கின்றேன்…?
1.எனக்கு ரெஸ்ட் எது…? என்றால்
2.நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கும் போது தான்
3.அது எனக்கு ரெஸ்ட் ஆகின்றது.

நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்களுக்குள் இருக்கும் துன்பங்கள் அகல வேண்டும் உங்கள் மூச்சலைகள் இந்த நாட்டிலே படர வேண்டும் நல்லதாக நினைப்பது அனைத்தும் இந்த நாட்டிலே நடக்க வேண்டும். அது உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டே இருக்கின்றேன்… அந்தச் சொத்தைப் பெறுகின்றேன்…! வேறு ஒன்றும் இல்லை.

உங்களுக்குள் நல்லதாக வேண்டும் என்று நான் சொல்வதை நீங்களும் கொஞ்சம் மனது வைத்துச் செயல்படுத்த வேண்டும்.

யாம் உங்களுக்குக் கொடுக்கும் வாக்கு சாதாரணமானதல்ல.
1.ஒரு வார்த்தையை நான் சொல்ல வேண்டும் என்றால் எத்தனையோ கஷ்டப்பட்டு விளைய வைத்து
2.அதிலே வளர்த்ததைத் தான் சொல் வடிவில் கொண்டு வருகின்றேன்.

வாக்கு என்பது நல்ல வித்து. அதைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.

யாரும் தவறு செய்யவில்லை. நல்லதைத் தான் எண்ணுகின்றீர்கள். ரோட்டிலே சண்டை போடுபவரை வேடிக்கை பார்க்கின்றீர்கள்… வேதனைப்படுவரைப் பார்க்கின்றீர்கள்… உங்களுக்குள் அந்த உணர்வுகள் வந்து விடுகின்றது.

அதையெல்லாம் நீங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

எத்தனையோ வகைகளில் குருநாதர் எம்மைக் கஷ்டப்படுத்தினார். மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார்.
1.அவர்களுடைய கஷ்டங்களை எல்லாம் பார்க்கச் சொன்னார்… அந்தக் கஷ்டத்தை எனக்குள் உண்டாக்கினார்.
2.அந்தக் கஷ்டம் எப்படி வருகின்றது…?
3.அந்தக் கஷ்டம் எப்படி உனக்குள் உண்டாகிறது…? நீ ஒன்றும் செய்யவில்லை உதவி தான் செய்கின்றாய்.
4.ஏனென்றால் இரக்கமாகப் பார்க்கச் சொல்வார்… அப்பொழுது அது எனக்குள் வந்து விடுகின்றது.
5.இரவு பூராம் அந்த நினைவுகள் வரும்…! சண்டை போட்டதைப் பார்த்த்து அனைத்தும் இரவிலே கெட்ட கனவுகளாக வரும்.

திடீரென்று விபத்துகளை நேரடியாக பார்க்கச் சொல்வார். அதிலே ஒருவருக்கொருவர் அடிபட்டு இறந்திருப்பார்கள். அப்படி இறந்த ஆவிகளைக் காண்பிப்பார்.

எமக்கு முதன் முதலில் எப்படி அனுபவம் கொடுத்தார்…? என்றால் தற்கொலை செய்து கொண்டது… அடித்துக் கொன்றது… பயந்து கொண்டு ஓடியவர்கள்… போன்ற அது அனைத்தையும் எனக்குக் காட்டுகின்றார்.

இதையெல்லாம் பார்த்த பின்
1.இரவிலே என்னை எங்கேயோ இழுத்துக் கொண்டு போகிற மாதிரி இருக்கும்.
2.அடிக்கிற மாதிரி இருக்கும்… உதைக்கிற மாதிரி இருக்கும்… எனக்குத் தூக்கமே வருவதில்லை.

இந்த உணர்வுகள் எனக்குள் வந்தபின் என்ன செய்கிறது…? என்பதைத் தெளியச் செய்வார்.

இதையெல்லாம் மாற்றி மந்திரங்களைச் சொல்லி அக்காலங்களில் இந்த உணர்வை எடுத்து அவன் எப்படி இயக்கினான்…? அந்த மந்திர சக்தி கொண்டு அரசர்கள் எப்படி எல்லாம் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள்…? என்று வரிசைப்படுத்திக் காண்பிக்கின்றார்.

அதை எடுத்தாலும் கூட அதை மாற்றி அமைக்கும் சக்தியும் கொடுக்கின்றார்.

அதற்குப் பின் அரசர்களால் செய்யப்பட்ட சில வினைகள் ஏவல் பில்லி சூனியம் அதை எப்படி அவர்கள் செய்தார்கள்…? என்றும் அது எதிலிருந்து வருகின்றது…? இந்த உணர்வின் சக்தி எப்படி இருக்கின்றது…? கூடு விட்டுக் கூடு எப்படிப் பாய்வது…? இதையெல்லாம் கொடுக்கின்றார்.

இதையெல்லாம் அந்த நினைவைக் கொடுத்து எண்ணச் சொல்லும் பொழுது குவித்து கொண்டு வருகின்றது. பல நிலைகள் என் உடலிலே செய்கின்றது. இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார்.
1.அதையெல்லாம் நான் மாற்றி அமைத்த சக்தி வாய்ந்த உணர்வுகளைத் தான்
2.அருள் ஞான சக்தியாக உங்களுக்குள் போதித்துக் கொண்டு வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் ஒரு மனிதனுக்கு வயிற்று வலி வருகிறது என்றால்
1.சில பச்சிலைகளை எடுத்துக் கையிலே உரசித் தேய்ப்பார்கள்.
2.தேய்க்கும் போது அந்த உணர்வுகள் இரத்தங்களுடன் கலந்துவிடுகிறது
3.அதாவது இன்று இன்ஜெக்ஷன் போடுகிற மாதிரி மேலே அரைத்துத் தேய்ப்பார்கள்.
4.அந்தப் பச்சிலையின் உணர்வுகள் இரத்தத்துடன் கலந்து அவன் வயிற்று வலிக்குக் காரணமானதை நீக்கி விடுகின்றது.
5.அந்த விஷத்தை ஒடுக்குகின்றது… வலி நீங்குகிறது.

அனுபவத்தில் அப்படி அறிந்தவர்கள் தான் அன்றைய மனிதர்கள். புலஸ்தியர் (புலனறிவால் நுகர்ந்தறிபவர்கள்) என்பார்கள்.

அறிந்ததைப் பதிவு செய்யும் போது தான் பதிவு செய்ததை மீண்டும் நினைவாக்கிக் கொள்கின்றான். அந்த நினைவின் தன்மை கொண்டு
1.தனக்கு எப்பொழுது ஆபத்துகளோ விபத்துக்களோ வருகின்றதோ
2.மிருகங்களிலிருந்தும் அறியாது வரும் நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள இம்முறையைக் கையாண்டு வருகின்றனர்.

ஏனென்றால் காட்டு விலங்குகளுடன் இருக்கும் போது அந்த விஷத் தன்மை கொண்ட மிருகங்கள் தன்னைத் தாக்கிடாது பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

இப்படி அந்த விஷத்தை முறித்திடும் சக்திகள் தனக்குள் தெரியப்படும் பொழுது… இரவிலே உறங்கச் செல்லப்படும் பொழுது
1.விஷத்தை முறித்திடும் பல மூலிகைகளை அவர்கள் அரைத்துப் பூசி கொள்வதும்
2.தாங்கள் படுத்து இருக்கும் குகைகளுக்கு முன் அதைப் பரப்பி வைத்துக் கொண்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள்.

சில காடுகளில் அத்தகைய புலையர்கள் இன்றும் இருக்கின்றார்கள். இவர்களின் மணத்தைக் கண்ட பின் யானைகள் விலகிச் செல்லும்… புலிகள் விலகிச் செல்லும்… விஷ ஜந்துக்களும் விலகிச் சென்று விடும்.

அது போன்றுதான் அக்காலத்தில் இத்தகைய பச்சிலைகளை அவர்கள் பாதுகாப்புக்காக வைத்துக் கொண்ட பின்… கணவன் மனைவியாக வாழ்பவர்கள் கர்ப்பமுற்றால் அந்தக் கருவில் இருக்கும் குழந்தைக்குத் தாய் நுகரும் உணர்வுகள் அனைத்தும் விஷத்தை முறிக்கும் ஆற்றலாகப் பெறுகின்றது.

அதே சமயத்தில் மின்னலை அடக்கிடும் சில பச்சிலைகளும் உண்டு. மின்னலால் தாக்கப்படும் போது அந்தப் பச்சிலைகளை அவர்கள் வைத்திருப்பதினால் அதன் மணத்தால் அதிலிருந்து காக்கப்படுகிறார்கள்.

1.யார் இதை அனுபவத்தால் கண்டுபிடித்தார்களோ
2.மின்னலின் நிலைகளை மாற்றிடும் பச்சிலையை யார் அந்தக் காலங்களில் வைத்தனரோ
3.மின்னலின் தாக்குதலை அடக்கிடும் அந்தப் பச்சிலைகளை
4.அகஸ்தியன் என்று சொல்லும் அவருடைய தாய் தந்தையர்கள் உடலில் அரைத்துப் பூசியதனால்
5.தாய் அந்த மணத்தை நுகரப்படும் போது கருவிலிருக்கும் அகஸ்தியனுக்கு வீரிய சக்தியாக அது கிடைக்கின்றது

இரவிலே படுத்திருக்கும் போது பாதுகாப்பிற்காக அதைப் பரப்பி வைத்திருந்தாலும் மிருகங்களிடமிருந்து மட்டுமல்ல… மின்னல் தாக்கினால் அந்த விஷத்திலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள்.

அப்படிப் பாதுகாக்கப்பட்ட அந்தப் பச்சிலையின் மணத்தை நுகர்ந்ததனால் தான் கர்ப்பமாகும் பொழுது கருவில் இருக்கும் அகஸ்தியனுக்கு அது கிடைக்கின்றது.
1.மின் கதிர்கள் வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து
2.அதன் உணர்வின் அறிவும் கருவிலேயே அவனுக்குள் விளைகின்றது
3.இப்படி விளைந்தது தான் அவனுக்குள் பேராற்றலாக வளர்கின்றது

இந்த மின்னல்கள் கடலில் தாக்கப்பட்டால் அது மணல்களாவதும் அதன் கீழ் ஒரு மீன் இனம் சென்றால் மின்னலின் அழுத்தம் தாக்கப்பட்டு அதற்குள் ஊடுருவி இது ஒரு கருத்தன்மை அடைந்து எலக்ட்ரிக் மீனாக மாறுகிறது.

எலக்ட்ரிக் மீனாக உருவான பின் “அதன் உணர்வின் அறிவாகி” அது பல வகைகளையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற மீனாக எப்படி வளர்ந்ததோ அதைப் போல் தான்
1.அகஸ்தியனும் அறிவின் ஆற்றலாக உருப்பெற்றான்.
2.மிகச் சக்தி வாய்ந்தவனாக மாறுகின்றான்.

இதை இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). இதை நீங்கள் நினைவு கொண்டால்… உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் “சில கடுமையான விஷத் தன்மைகளிலிருந்தும்… நோய்களிலிருந்தும்… உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனித உடலில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போர் முறைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. மகாபாரதப் போரைக் கண்ணன் (கண்கள்) வழி நடத்துகின்றான் என்று காட்டுகின்றார்கள். ஏன்…?
1.கண்கள் தான் ஒன்றைப் பார்த்து அதன் வழி நுகர்ந்து
2.உயிரிலே பட்ட பின்… நாம் எண்ணியதை உயிர் இயக்குகின்றது.

எண்ணத்தினால் தான் கண்கள் உருவானது. நாம் எதை நினைக்கின்றோமோ அதைக் கவர்ந்து அந்த எண்ணத்தை ஊட்டுகின்றது கண்கள்.

பரிணாம வளர்ச்சியில் கண் இல்லாத பொழுது. “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…” என்ற எண்ணங்களை எடுத்தது அதன் உணர்வின் தன்மை வளர்ந்து அப்படித் தான் கண்கள் உருவானது.

கண்கள் உருவான பின் ஒன்றைப் பார்க்கப்படும் போது அதைக் கவர்ந்து அந்த உணர்வின் எண்ணங்கள் வருகிறது. நாம் எதை எடுத்து அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றோமோ அதன் நிலையே வருகிறது.
1.ஒருவனை நாம் ஏமாற்ற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அவனைக் கண்டதும் ஏமாற்றுகின்றோம்.
2.அதே சமயத்தில் நண்பனை ஏமாற்றினால் அவன் நம்மை விடமாட்டான் என்றால்
3.அதற்குத் தகுந்த மாதிரித் தான் நாம் நடந்து கொள்வோம்.

இப்படி நம் மனதிற்குள் எத்தனையோ போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஆறாவது அறிவு கார்த்திகேயா பல சூதுகளிலும் பல நிலைகளிலும் மாறி மாறி வளர்ந்து வந்தது.

உதாரணமாக பூனை எலியைப் பிடிக்கத் தந்திரமான வேலை செய்கின்றது. தந்திரமாகப் பிடிக்கும் நிலைகள் அதற்கு வருகின்றது எலியும் பூனையிடமிருந்து தப்பிக்க எத்தனையோ வழிகளைச் செய்கின்றது.

பூனையின் மணத்தை எலி கண்டபின் உற்றுப் பார்க்கின்றது மணத்தால் நுகர்கின்றது…. அங்கே பூனை இருக்கிறது என்றால் தப்பி விலகி ஓடுகின்றது.

ஆனால் பூனை என்ன செய்யும்…?

1.அந்த எலியின் மணத்தை வேகமாக நினைத்து இழுத்து வைத்துக் கொள்ளும்
2.சப்தமில்லாதபடி அந்த வாசனையை அது ஏங்கிப் பெறும் பொழுது பூனையின் பக்கம் அந்த மணங்கள் வருகின்றது… பூனை ஒளிந்து கொள்கிறது.
3.மறைந்திருக்கும் போது எலியின் மணம் அங்கிருந்து (பூனையிடமிருந்து) வருகிறது
4.எலியோ தன் கூட்டாளி அங்கே இருப்பதாக எண்ணி வேகமாக வரும்.
5.வேகமாக வந்த பிற்பாடு லபக் என்று பிடித்துக் கொள்கின்றது.

பூனை இதே மாதிரித் தான் அதை உணவாக உட்கொள்கின்றது. இயற்கையின் சில நியதிகளில் அதனதன் உணர்வுக்கு உணவு தேட இப்படி வேலை செய்கிறது.

இது போன்று புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொன்றும் அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு… அணுக்கள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டு அதன் வளர்ச்சியின் தன்மை பெற்றுத் தான் இன்று மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனான பின் இந்த உடலின் இச்சை தான் வருகின்றது உடலைக் காக்க எத்தனையோ உபாயங்களை நாம் கையாளுகின்றோம்.

ஒருவர் நீதிப்படி நல்ல முறையில் ஒன்றை வளர்க்க வேண்டும் என்றால்… சூதின் வழி தான் அவரைக் கவர்ந்து கொள்கின்றோம்.

நல்லவரைப் பார்த்தாலும் நல்லது செய்தார் என்று எண்ணமே நமக்கு வருவதில்லை.
1.நமக்கு நல்லதே அவர் செய்திருந்தாலும் வெறுப்பின் உணர்வுகள் கவர்ந்திருந்தால்
2.அவர் என்ன நல்லது செய்தார்…? என்று தான் கேட்போம்.

காரணம்… அவர் செய்த உண்மையின் இயக்கத்தை நாம் எந்தக் கண்களால் பார்த்து
1.எத்தகைய உணர்வைப் (அன்போ வெறுப்போ பகைமையோ) பதிவாக்கினோமோ அந்த எண்ணங்கள் தான் வருகின்றது.
2.அந்த எண்ணத்தை நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் தான் இயக்குகின்றது.

இந்த உணர்ச்சியின் வழி தான் அந்தந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது என்பதை “மகாபாரதப் போரைக் கண்ணன் வழி நடத்துகின்றான்…” என்று காட்டுகின்றார்கள்.

இத்தகைய போராட்டங்களை மாற்ற வேண்டும் என்றால் நம் கண்ணின் நினைவு எங்கே இருக்க வேண்டும்…?

சில நேரங்களில் யாம் அழுத்தமாக உபதேசிக்கக் காரணம் என்ன…?

 

என் உடலில் இன்ன நோய் இருக்கின்றது… அது நீங்கி என் உடல் நன்றாக வேண்டும் என்று தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று ஒவ்வொரு உபதேசத்திலும் சொல்லிக் கொண்டு வருகின்றேன்… ஒவ்வொரு சமயத்திலும் ஞாபகப்படுத்துகின்றேன்.

ஆனால்… ஐயோ… என்னுடைய கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்…! என்று தான் திரும்பவும் கேட்கின்றார்கள்.

காரணம் என்ன…?
1.ஏற்கனவே பதிவான உணர்வுகள் உங்களைப் பேச விட மாட்டேன் என்கிறது என்பதற்காக அதைச் சொல்கின்றேன்.
2.ஏனென்றால் இந்தக் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் மட்டும் ஓங்கி வளர்த்திருக்கின்றோம்.

பாலுக்குள் இனிப்பு காப்பித்தூள் இவற்றை இணைத்தால் சுவையாக இருக்கின்றது. ஆனால் காரத்தைப் போட்டால் ஐயோ காரம்… ஐயோ காரம்… என்று சொல்வது போன்று
1.உங்களிடம் இருக்கும் நல்ல குணத்திற்குள் மற்றவர்கள் கஷ்டத்தை எல்லாம் போட்டு
2.அந்தக் கஷ்டத்தைத் தான் முன்னாடி சொல்ல முடிகின்றதே தவிர அதை நிவர்த்திப்பதற்கு இல்லை.
3.தவறு நீங்கள் செய்யவில்லை.

சில நேரங்களில் நான் கோபமாகச் சொல்கிறேன் என்று நினைப்பீர்கள். கோபம் அல்ல அது.

உதாரணமாக ஒரு சாமானைத் தூக்க முடியவில்லை. “தம் கட்டி…” அதை நான் தூக்குகின்றேன். அந்த மாதிரி… உங்களால் சமாளிக்க முடியவில்லை…
1.நான் வேகமாகச் உங்களிடம் சொல்லும் பொழுது ஆழமாகப் பதிவாகி விடுகிறது.
2.பார்… சாமி இப்படிச் சொல்கிறார்…! என்று அந்த நேரத்தில் சாமியை நினைக்க வேண்டி வரும்.
3.நான் சொன்ன ஞாபகம் உங்களுக்கு வரும்.
4.அப்பொழுது உங்கள் கஷ்டத்தை விட்டு விட்டு நல்லது பெற வேண்டும் என்ற எண்ணம் வரும்.
5.அப்படி எண்ண வைப்பதற்குத் தான் இதைச் செய்வது.

என்னிடம் எத்தனையோ பேர்கள் வரிசையாக வந்து கேட்டாலும் ஒவ்வொருவரிடம் நல்லதைப் பெற வேண்டும் என்று தான் சொல்கின்றோம். ஆனால் பின்னாடி வருபவர்கள் மீண்டும் அதே குறையச் சொல்லிக் கேட்கப்படும் பொழுது “என்ன சாமி… நம்மைக் கோவிக்கின்றாரே…? என்ன ஆனதோ…?” என்று நீங்கள் எண்ணுவீர்கள்.

1.சாமி கோவித்தாரே…! நாம் திருத்த வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த உணர்வு உங்களுக்குள் பதிவாகும்.

ஆக… அது கோபம் அல்ல…! அழுத்தமான சொல்லாகச் சொல்லும் பொழுது உங்கள் உடலில் நல்ல முறையில் பதிவு செய்வதற்குத் தான் அவ்வாறு சொல்வது.

காரணம் எதை எடுத்தாலும் தெய்வத்திடம் வரம் கேட்க வேண்டும் என்பது போன்று தான் சென்று கொண்டிருக்கின்றோம்.

ஒரு வேப்பமரம் அதனிடம் இருக்கும் மணத்தால் ரோஜாவின் மணத்தைத் தன் அருகிலே வராது தள்ளி விடுகின்றது. தன் இனமான கசப்பான சத்தைக் காற்றிலிருந்து அந்த மரத்திற்குள் இருக்கும் உணர்வை வைத்து இழுத்துத் தனக்குள் பெருக்கிக் கொள்கின்றது. அந்த வாசனையை வெளிப்படுத்துகின்றது.

தனக்குள் அந்தக் கசப்பை எடுத்து வளர்த்துக் கொண்ட பின்பு தான் அந்த வாசனையைக் கொடுக்கிறது.

அதே மாதிரி நம்மிடம் கசப்பான குணங்கள் இருந்தது என்றால் நாம் எதையாவது எண்ணிச் சொல்ல வேண்டும் என்றால் அதை (கசப்பை) எடுத்துத் தான் பேச முடியும். அது இல்லையென்றால் நாம் பேச முடியாது.

ஆனால் நீங்கள் எல்லோரும் நலமாக வேண்டும் மகிழ்ந்து வாழ வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த உணர்வை எடுத்துக் கொண்டு தான் நான் பேசுகிறேன்… பேசும் பொழுது உங்களிடம் பதிவாகும்.
2.நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எண்ணும் பொழுது முதலில் நான் அதுவாகின்றேன்.

நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்… உங்கள் சிரமங்கள் அகல வேண்டும்… உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அதை எண்ணுகின்றேன்… அதைச் சொல்கின்றேன்.

1.நீங்கள் கேட்கும் பொழுது முதலில் நான் அதுவாகின்றேன்… என் சொல்லும் அதுவாகின்றது.
2.இதையே நீங்களும் செய்து பழகிக் கொண்டீர்கள் என்றால் நீங்களும் அதுவாகின்றீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்குவோம். அவர்கள் தான் கடவுள் நம்மை மனிதர்களாக உருவாக்கிய தெய்வங்கள்… அவர்கள் உடலில் தான் நாம் வளர்ந்தோம்… “குடியிருந்த கோவில் அது…!”

பிறந்த பின் தெய்வமாக இருந்து நம்மைக் காத்ததும் அவர்கள் தான். நம்மைக் காத்த முதல் தெய்வங்கள் அவர்கள். எதை எடுத்தாலும் இது நன்றாக இருக்க வேண்டும்… நீ இப்படி இருக்க வேண்டும்… ஒவ்வொரு நிமிடத்திலும் குறிப்பறிந்து நம்மைக் காப்பாற்றி வந்தது நமது தாய் தான்.

தாயிற் சிறந்த கோவிலுமில்லை… தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று அன்று சொல்லி இருக்கின்றார்கள். தாய் தான் நாம் குடியிருந்த கோவில்.

1.தெய்வமாகக் காத்ததும் அதுதான்
2.கடவுளாக இருந்து உருவாக்கியதும் அதுதான்
3.அந்த நல்வழி காட்டும் குருவை நாம் அடைதல் வேண்டும்

ஏனென்றால் நம் தாய் நம்மை எப்பொழுதுமே நீ நல்லவனாக இருக்க வேண்டும்… எல்லோரும் போற்றும்படியாக நீ வளர வேண்டும் நீ நலமாக இருக்க வேண்டும்… என்று எத்தனையோ நல்ல வழிகளைக் காட்டுவது அவர்கள் தான்.

இதைச் செய்தால் தவறு… ஆபத்து… என நம்மை அறிவுறுத்துவது தாய் தான். நாம் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது தவழ்ந்து செல்லும் பொழுது அறியாது ஒரு நெருப்பைப் பார்த்ததும் அதை ஆனந்தமாக போய்த் தொட முயற்சிப்போம்.

டேய்…டேய்…டேய்… நெருப்புடா…! அது உன்னைச் சுட்டுவிடும்… என்று நம்மை அந்த இடத்தில் காப்பது நமது தாய் தான். நாம் ஆனந்தமாக அதைத் தொடப் போகின்றோம்.

ஆனால் தாயோ பதறிப் போய் “குழந்தை நெருப்பிலே பட்டால் என்ன ஆகும்…?” என்று வேகத்துடன்… அவ்வளவு தூரம் நம்மை அரவணைத்து உடனடியாகக் காப்பாற்றுகின்றது.

அந்த இடத்தில் நம்மைக் காக்கக்கூடிய தெய்வம் நம் தாய் தான்….! பிறந்து விட்டாலும் வளரப்படும் பொழுது எத்தனையோ வகைகளில் நம்மைக் காக்கின்றது.

அறியாத பருவத்திலே மண்ணை அள்ளித் தின்றால் வயிறு வலிக்க ஆரம்பிக்கும். அப்படி ஆகிவிட்டால் நாம் அதற்குப் பின் நலமுடன் வாழ முடியுமா…?

இது போன்று எத்தனையோ நிலைகளைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி… நம்மை மனிதனாக ஆளாக்கி…
1.இன்று இந்த அருள் உபதேசங்களை கேட்கக்கூடிய அளவிற்கு வைத்தது நம் தாய் தந்தையர் தானே…!
2.அவர்களை நாம் மறக்கலாமா…? நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
3.இப்பொழுது இவ்வளவு தூரம் என்னுடைய இந்த அருள் உபதேசங்களைக் கேட்கின்றீர்கள் அல்லவா…!

உங்களைப் பள்ளியிலே படிக்க வைத்து பல நல்ல வழிகளைக் காட்டி நல்லதைச் சொல்லி நல்ல ஆடைகளைக் கொடுத்து… தான் எல்லா கஷ்டங்களையும் பட்டுச் சம்பாதித்து வளர்த்து நம்மை ஆளாக்கிக் காப்பாற்றியது யார்…? நம் தாய் தந்தை தானே…!

இப்பொழுது இதை எல்லாம் சொல்கிறோம். எத்தனை பேர் நம் தாய் தந்தையரை மதித்துச் சரியான முறையில் வழி நடக்கின்றோம்…?

“இத்தனையும் இப்பொழுது கேட்கின்றீர்கள்…” என்றால் தாய் தந்தையரால் நாம் மனிதர்களாக உருவாக்கப்பட்டுத் தெய்வமாக நம்மைக் காத்து எல்லா வழிகளையும் நமக்கு நல்வழி காட்டிய அதை மறந்து விட்டால் என்ன ஆகும்…? அப்படி இருக்கக் கூடாது
1.எப்பொழுதுமே அந்த ஞானிகள் காட்டிய வழியிலே தாய் தந்தையரை நாம் முதலிலே மதித்துப் பழக வேண்டும்
2.இது மிகவும் அவசியமான ஒன்று

அவர்கள் உயிர் கடவுள். நம்மை உருவாக்கிய முதல் தெய்வங்கள் அவர்கள் தான். தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றியதும் நல் வழி காட்டியதும் அவர்கள் தான்.

ஆகவே அத்தகைய குரு (தாயின்) காட்டும் வழியில் நாம் நடப்போம்… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிப்போம். குருவின் துணையால் அதாவது தாய் தந்தையரின் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்த அருளை நாம் பெறுவோம்.

1.தாயின் துணை கொண்டு அன்று அகஸ்தியன் அவன் எப்படி அந்த உயர்ந்த சக்தியைப் பெற்றானோ
2.அந்த உணர்வை எல்லாம் நாமும் நம் தாய் தந்தை அருளால் பெற வேண்டும் என்று அடிக்கடி நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

அந்தக் குருவின் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை நாம் வேண்டித் தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற்று
1.அவர்கள் என்றென்றும் மன மகிழ்ச்சியுடன் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
2.நம் தாய் தந்தையருக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தியானிப்போம்.

குழந்தையைப் படிப்பில் “நாம் தான் மக்காக ஆக்குகிறோம்” என்றால் அதை ஏற்றுக் கொள்வோமா…?

 

நம் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அதிலே சிறிது குறைவாகி விட்டால் நாம் என்ன செய்கிறோம்…?

1.எப்பொழுது பார்த்தாலும் படிக்காமல் கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்…
2.எதைப் பார்த்தாலும் மறந்து மறந்து போகின்றாய்…! என்று தான் குழந்தையிடம் சொல்கின்றோம்.

இந்த உணர்வை ஜாஸ்தி கூட்டிக் கூட்டி நமக்குள் சேர்த்து
1.குழந்தையை அதையே சொல்லிச் சொல்லித் திட்டும் போது என்ன ஆகின்றது…?
2.இப்படி அவனைச் சுத்தமாக மக்காக ஆக்கி விடுவதே நாம் தான்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து என் குழந்தை உடல் முழுவதும் அது படர வேண்டும்… சிந்திக்கும் ஆற்றலும் கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் சக்தியும் பெற வேண்டும்…! என்று நாம் எண்ண வேண்டும்.

குழந்தையைப் பற்றிப் பாசமாக எண்ணும் பொழுதெல்லாம் அந்த அருள் பெற வேண்டும் என்று நாம் எண்ணினோம் என்றால் அந்தக் குழந்தை நிச்சயம் முன்னுக்கு வருவான்.

ஆனால் அவனை நினைக்கும் போதெல்லாம்…
1.இங்கே போனான்… யாரையாவது சொல்கின்றான்… அவர்களுடன் அவன் சுற்றிக் கொண்டேயிருக்கின்றான் என்று
2.இதையே ஞாபகமாக வைத்து அவனை நாம் எண்ணிக் கொண்டிருந்தால்
3.அவன் படிக்கும் நேரத்திலோ பள்ளியில் படிக்கும் போதோ அவனுக்கு ஞாபக சக்தி வராது.
4.ஞாபக சக்தி குறைவதற்குத் தாய் தந்தையரே காரணம் ஆகின்றோம்.

நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. ஆனால் நாம் பக்குவமான உணர்வைப் பதிவு செய்வதில்லை.

நண்பருக்குள் அன்புடன் பண்புடன் உதவி செய்தான் என்று எண்ணி ஏங்கும் பொழுது அது விக்கலாக மாறுகின்றது. ஆனால் அதே சமயத்தில் துரோகம் செய்தான் பாவி உருப்படுவானா…? என்றால் புரையோடுகின்றது.

இதைப் போன்று தான்
1.பாசத்தால் இப்படி இருக்கின்றானே என்று குழந்தையைப் பற்றிக் குறைவான எண்ணங்களைச் செயல்படுத்தும் போது
2.இந்த உணர்வு அவனைத் தாக்கி… அவனைச் சிந்தனையற்றவனாகத் தான் மாற்றும்.

ஆக… வரும் சந்தர்ப்பங்களை நாம் சீராக அமைக்கவில்லை என்றால் அது நம்மையும் நாம் எண்ணிய எண்ணத்தையும் மாற்றி நமக்குள் பகைமை உணர்வைத் தான் ஊட்டுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும் அல்லவா.

ஆகவே அதைத் தூய்மைப்படுத்த இராமாயணத்தில் சுக்ரீவனைக் காட்டுகின்றார்கள். சுக்ரீவன் என்றால் துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி எடுத்துப் பரப்புகின்றது.

1.குழந்தையை எண்ணும் பொழுதெல்லாம்… அவனைப் பற்றிக் குறையாக எண்ணும் பொழுதெல்லாம்…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.“இதை வைத்து” நாம் இணைத்துப் பழக வேண்டும்.

அந்தத் துருவ துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இது சிறுகச் சிறுகக் கூட அவனைப் பற்றி நமக்குள் வளர்த்துக் கொண்ட குறையான உணர்வுகளை விலக்கிவிடும்.

அவன் நல்லவனாக வேண்டும் நல்ல நிலையாக இருக்க வேண்டும் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் அவன் ஒற்றுமையான நிலையில் வாழ வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் இன்று நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஆனால் முதலில் சொன்னது போன்று அவன் செய்யக்கூடிய குறும்புத்தனங்களையும் சேஷ்டைகளையும் நாம் நுகரும் பொழுது ஆத்திரமும் கோபம் வருகிறது.
1.அவன் செய்வது நம் உணர்வுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் உயிரில் பட்டு வெறுப்பு வருகின்றது.
2.அந்த வெறுப்பு நமக்குள் சென்று இயக்கிடாதபடி ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கொண்டு அதை நாம் தடைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் அந்த உணர்வின் நாதங்கள் (வெறுப்பு) நமக்குள் எழும்பக்கூடாது. காரணம்… நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் நம்மை ஆள்கிறது. அரங்கத்தில் எழும் நாதமே இங்கே வருகிறது.

1.இந்த உடலான அரங்கத்திற்குள் ஞானிகள் உணர்வுகளை நாதங்களாக
2.அதாவது அதனின் இயக்கச் சக்தியாக மாற்றிக் கொண்டு வர வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாத(மய)மாக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ரோட்டிலே ரெண்டு பேர் சண்டை போடுகின்றார்கள்… அநாகரீகமாகப் பேசவும் செய்கிறார்கள்… நாம் பார்க்கின்றோம்… அந்த உணர்வின் தன்மை அறிகின்றோம் இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அடுத்து வேதனைப்படுகின்றோம்.

அதைத் துடைக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஈஸ்வரா என்று நமக்குள் நம்மை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும்.

பின்… அவர்கள் இருவரும் ஒன்று பட்டு வாழ வேண்டும் நல்ல உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அவர்கள் சண்டையிட்ட தீமையின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை… மாற்றப்படுகிறது..

சந்தர்ப்பத்தில் இதைப் போன்று வரும் நிலைகளை மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

சாமி (ஞானகுரு) சொல்கின்றார்… தியானம் தான் செய்கின்றேன்…! என்று நீங்கள் இருந்தாலும்
1.அந்தந்தச் சந்தர்ப்பத்தில் (இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது) பார்த்து ஏமாந்து விடக்கூடாது.
2.ஏமாந்து விட்டால் அந்தந்த நேரத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் வலுப்பெற்று விடும்
3.அதைத் துடைக்காமல் விட்டு விட்டால் இரத்தத்தில் கருவாகிவிடும்…
4.பின் அணுவாகி அதனின் தீமையை உருவாக்கத் தொடங்கும்.

தனி மிளகாயை உட்கொண்டால் என்ன செய்யும்…? ஆ…! என்று எப்படி அலறுகின்றோம். தனியாக உப்பை வாயில் வைத்தால் ஓ…ய் என்று உமட்டலாகின்றது. ஆனால் அதே மிளகாயையும் உப்பையும் மற்ற பொருள்களுடன் கலக்கப்படும் பொழுது அந்த உணவு சுவையுள்ளதாக மாறுகின்றது.

இது போன்று
1.பிற உணர்வுகளை நாம் பார்த்து நுகர கவர நேர்ந்தால்
2.அதற்குள் நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து கலவையாக்கி ருசியாக மாற்ற வேண்டும்
3.இது தான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…” என்று சொல்வது.

நம்முடைய ஆறாவது அறிவால் இப்படி நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமை என்ற நிலை நமக்குள் வராதபடி தடுக்கும் சேனாதிபதி ஆறாவது அறிவு தான்.

அது நம்மைப் பாதுகாக்கக் கூடிய சேனாதிபதியாக இருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்தினோம் என்றால் நமக்கு எப்பொழுதுமே பாதுகாப்பாக வரும்.

ஆறாவது அறிவு எனக்கு இருக்கின்றது… நான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றேன்… தெரிந்து கொண்டேன்…! என்றால்
1.அறிய வேண்டும் என்ற நிலையில் கெட்டதெல்லாம் உள்ளுக்குள் புகுந்து
2.வேதனை வெறுப்பு சஞ்சலம் பயம் எல்லாமே நமக்குள் வந்துவிடும்.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் அவசியம் விடுபட வேண்டும்.

இதையெல்லாம் சுருங்கச் சொல்லி உங்களுக்குள் அருளைப் பெருக்கச் செய்து… இருளை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படியும் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நான் கண்ட உண்மைகள் அனைத்தையும் உங்களிடம் மொத்தமாகச் சொல்லி
2.சிறுக்க முடிவுக்கு (கடைசியில்) வருவதற்கு முன்னாடி உங்களுக்குக் கஷ்டம் வந்து விடும்… உட்கார முடியாது.
3.நான் பட்ட கஷ்டங்கள் ஏராளமானது… அதை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தால்
4.உங்களுக்கு மனக் கஷ்டம் தான் வருமே தவிர அந்த அருளைப் பெற முடியாது.
5.ஆகையினால் அந்தந்தச் சமயத்திற்கு உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

ஆகவே கார்த்திகேயா… என்ற நிலையில் ஆறாவது அறிவைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் “எந்தத் துயரம் வந்தாலும்” அதை வளர விடாதபடி தடுக்க வேண்டும். அப்படித் தடுப்பதற்குத் தான் இதை எல்லாம் “துணுக்குத் துணுக்காக” உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

ஈஸ்வரா… என்று புருவ மத்தியில்ல் உங்கள் உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

கஷ்டமோ நஷ்டமோ துன்பங்களோ வேதனைகளோ வந்தாலும் அதை மாற்றி மறந்து… சந்தோஷத்தை ஊட்டும் நிலையாக…
1.தனித்த உப்பை… தனித்த மிளகாயை… தனித்த கசப்பை.. மற்ற பொருள்களுடன் சேர்த்து சுவையாக எப்படி மாற்றுகின்றோமோ
2.அது போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் எல்லாவற்றையும் சுவையாக மாற்ற முடியும்.
3.எது வந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து அதற்குள் கலக்க வேண்டும்.

என் குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும் நல்ல பண்புகள் வளர வேண்டும் அவர்கள் நல்லவர்களாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம்மை யாராவது திட்டினால்… அவர் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற வேண்டும்… அவர்களுக்குத் தெளிவான எண்ணங்கள் வர வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி எடுத்து
1.பிறருடைய தனித்த உணர்வு நமக்குள் வராதபடி
2.நம் உடலுக்குள் வளராதபடி இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால் மாற்றி அமைக்காதபடி அந்தந்த உணர்வுகள் பதிவாகி விட்டால் இப்படிப் பேசுகின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்ற இந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளுக்குள் கலந்து.. நம் நல்ல குணங்களைச் சுத்தமாகக் கெடுத்துவிடும்.

நல்ல குணங்கள் அப்படி மாறிய பின் பிறரை எண்ணி வேதனைப்படுவோம்… அடுத்து கோபப்படுவோம்.
1.அது எல்லாம் நமக்குள் நோயாக மாறிவிடும் (உடல் நோய்)
2.உடல் உறுப்புகள் கெடும்… நினைவுகள் எண்ணங்கள் மாறும் (மன நோய்).

இதைப் போன்ற நிலையில் இருந்து நீங்கள் விடுபட்டு “வாழ்க்கையே தியானம் ஆக்கக் கற்றுக் கொள்ளுங்கள்…”

பகைமைகளை மாற்றி அருள் உணர்வைப் பெருக்கி அருள் ஞானத்தைப் பெருக்குவதற்குத் தான் உபதேசமாகக் கொடுக்கின்றோம். சுருங்கச் சொல்லி பதிவாக்குகின்றோம்.

இதை நீங்கள் அடிக்கடி நினைவு கொண்டு தியானம் ஆத்ம சுத்தி செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

வியாழன் கோளின் சூட்சமம்

 

வியாழன் கோள் 27 நட்சத்திரங்களின் உணர்வைக் கவருவதற்கு 27 உபகோள்களை வைத்திருக்கிறது. அந்த 27 உபகோள்களும் 27 நட்சத்திரங்களின் சக்தியைக் கவர்ந்து கலவையாகித் தனக்குள் ஒன்றாக இணைக்கும் அந்தச் சக்தியாக மாறுகின்றது.

காரணம்
1.வியாழன் கோளின் சுழற்சியின் வேகம் அதிகம்.
2.எதனையும் வெகு தூரத்தில் இருந்து கவரும் சக்தியும் அதிகம்.

அது கவர்வதை உபகோள்களாக இருப்பது ஒவ்வொன்றும் அதனதன் தன்மையை வடிகட்டிக் கொள்கின்றது.
1.அதனதன் பருவத்திற்குத் தக்க சிறிது சிறிதாக உமிழ்த்தி
2.இதை ஒன்றாக இணைத்து அந்த எல்லாவற்றையும் இணைக்கும்
3.எதனுடன் எது சேர்த்தாலும் அந்த அணுக்களை ஒன்று சேர்த்துப் புதுப்புது உருக்களை உருவாக்க
4.இது உபயோகப்படுத்துகின்றது வியாழன் கோள்.
5.அதே சமயத்தில் வியாழன் கோளில் உள்ள உபகோள்களில் ஒன்று இந்தப் பக்கம் சுற்றும்… இன்னொன்று வேறு பக்கம் சுற்றும்.

விஞ்ஞானிகள் இதையெல்லாம் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள். அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையில் வருகின்றதா… அது என்ன…? என்கிற வகையில் இன்றும் ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளார்.

வியாழன் கோள் 27 நட்சத்திரங்களின் சக்தியைக் கவர்ந்து இதற்குள் ஒரு கலவையாகி புது விதமான கதிரியக்கமாக மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படித் தனக்குள் உறை பனியாக மாற்றுகின்றதோ இதை போல வியாழன் கோளும் தனக்குள் உறை பனியாக மாற்றும் சக்தி பெற்றது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
1.எதிர்காலத்தில் நீங்கள் இந்த உண்மைகளை எல்லாம் அறிய வேண்டும். நான் மட்டும் அறிந்தால் பத்தாது.
2.இதில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை நீங்கள் உணர்ந்து நீங்களும் தெளிந்து
3.இந்த உலக இருளை மாய்க்கக்கூடிய சக்தியாக வரவேண்டும். அதற்குத்தான் சொல்கிறேன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று எனக்குத் தெரியாமலே ஒரு பச்சிலையைக் கொடுக்கின்றார்… குருநாதர். மின்னலைப் பாருடா…! என்கிறார். உடனே அவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது.

அவர் கையிலே பச்சிலையை வைத்துக் கொண்டார்… என்னைத் தொடுகின்றார்… தொட்டுக் கொண்டு இப்போது மின்னலைப் பார்…! என்கின்றார்.

சாமி…! நான் பிள்ளை குட்டிக்காரன்… நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று உங்களுடன் வந்து விட்டேன். மின்னலைப் பார்த்து என் கண்கள் பறிபோய் விட்டால் நான் என்ன செய்வது…? என்றேன்.

நான் சொல்வதைக் கேட்கின்றேன் என்று தானே என்னுடன் வந்தாய். இறக்கும் தறுவாயில் இருந்த உன் மனைவியை உடல் நலம் பெறச் செய்தேன் அல்லவா..! அந்த நேரத்தில் நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று தானே சொன்னாய்.

அப்படி என்றால் நான் சொல்வதை நீ இப்போது கேட்க வேண்டுமா இல்லையா…? என்று இப்படிக் கேட்கின்றார்.

அப்பொழுது நான் என்ன செய்வது…! வேறு வழி இல்லை.

அப்பொழுது தான் அந்த இடத்திலே என்னைத் தொடுகின்றார்… மின்னல் பாய்கின்றது… அதைப் பார்…! என்று சொல்கின்றார்.

உதாரணமாக
1.வான் வீதியிலே விஷங்கள் ஓன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது தான் மோதலாகின்றது
2.விஷம் தாக்கப்பட்ட பின் தான் வெப்பம் ஆகின்றது
3.விஷத்தின் தாக்குதலால் தான் நம் உயிரிலும் வெப்பம் உண்டாகிறது… அதனால் இயக்கமும் ஆகிறது.
4.ஆனால் அதிக விஷம் தாக்கப்படும் பொழுது இருளாகின்றது

நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் அதற்குண்டான விஷங்கள் உண்டு. ஆனால் விஷம் அதிகமாகி விட்டால் நாம் செயலையே மறக்கச் செய்துவிடும்.

நாம் உணவு உட்கொள்வதில் உப்பு சேர்த்தால் நன்றாக இருக்கும். உப்பு அதிகமாகி விட்டாலோ ஓ…ய் என்று வாந்தி வந்துவிடும்… சாப்பிட முடியாது. அளவை அறிந்து அதன் உணர்வு கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

அதைப் போன்று… மனிதன் இந்த வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும்…? என்பதற்காக இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

பின் அவர் சொன்ன முறைப்படி மின்னலைப் பார்க்கும் பொழுது ரொம்ப ஆனந்தமாக இருக்கின்றது.
1.அறிந்து கொள்ளக்கூடிய உணர்வுகள்… அறிவின் தன்மையாக எனக்குள் வருகின்றது
2.அந்த மின் கதிர்கள் எங்கெங்கே ஊடுருவிச் செல்கின்றதோ… வான மண்டலத்தையே பூராம் அறியும்படி செய்கின்றார்.
3.அதையெல்லாம் தெரியப்படுத்துகின்றார்… அறியக்கூடிய சக்தியும் எனக்கு வருகிறது.

ஆனால் முதலில் பச்சிலையைக் காண்பிக்கவில்லை… அவரிடம் வைத்துக் கொண்டுதான் என்னைத் தொடுகின்றார். மின்னலைப் பார் என்று சொல்கின்றார்… நான் மாட்டேன்…! என்று சொல்கிறேன்.

1.உனக்குச் சக்தி கொடுப்பதற்காகத்தான் நான் இதைச் செய்கின்றேன்
2.இந்தப் பச்சிலையால் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியனுக்குச் சக்தி கிடைத்தது
3.அதன் துணை கொண்டு தான் அவன் ஒளியாக மாறினான்.
4.அதே பச்சிலையின் உணர்வுகளை நீ எடுக்கப்படும் பொழுது…
5.அவன் பெற்ற உணர்வை நீ பெறும் பொழுது உனக்குள்ளும் தீமைகள் வளராது…
6.அந்த விஷத்தை முறிக்கும் சக்தி உனக்கும் கிடைக்கின்றது…! என்று என்னைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

அதன் பின் நான் மின்னலைப் பார்க்கின்றேன்… அவர் சொன்னபடி நான் பார்த்து அந்த மின்னல்கள் இயக்கக் கூடிய உணர்வை நான் நுகரப்படும் பொழுது
1.என் இரத்தங்கள் முழுவதும் அது கலந்து… உடல் முழுவதும் அந்த இரத்தம் சுழலச் தொடங்குகின்றது.
2.என் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறை கொண்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு “டைனோசர்” என்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களை அது புதையுண்ட இடங்களை எப்படிக் கண்டுபிடித்தார்களோ அதைப் போன்று
1.அகண்ட அண்டமும் அதனின் நிலைகளும் எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் அன்று கண்டான்…
2.அதன் உணர்வை நீ அறிய வேண்டாமா…? என்று கேட்கின்றார் குருநாதர்.
3.அதற்காக வேண்டித் தான் உன்னை மின்னலைப் பார்க்கச் சொன்னேன்
4.அதன் வழி நீ நுகர்ந்து கொண்ட பின் அந்த உணர்வு உனக்குள் வருகின்றது என்றார்.

இப்பொழுது என்னுடைய எண்ணங்கள் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது இந்தக் காற்றில் இருப்பதை அறிய முடிகின்றது… அந்த உணர்வை வைத்து நான் இப்போது பேசவும் முடிகின்றது.

பேசிய உணர்வுகளை இப்பொழுது நீங்கள் செவி வழி கேட்டு… அல்லது படித்துத் தெரிந்து கொள்கின்றீர்கள். இதைச் சொல்லிக் கொண்டு வரும் பொழுது
1.அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால்… வசிஷ்டர்..
2.இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு பிரம்மம் (சிருஷ்டி) ஆகின்றது..

பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்தி தான் நமது உயிர்… இந்த மனித உடலை உருவாக்கி அதை ஆட்சி புரிகின்றது. மனித உடலில் விளைந்த ஆறாவது அறிவை வைத்து எப்படி இயக்க வேண்டும்…? என்று அந்த இடத்திலே விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.

அந்த உயர்ந்த சக்தியை நீ கவரப்படும் பொழுது வசிஷ்டர் பிரம்மகுரு… கவர்ந்து கொண்ட சக்தி… மனைவி அருந்ததி.
1.எந்த உணர்வின் சக்தி உனக்குள் அறிவாக வந்ததோ அந்த அறிவின் உணர்வுகள் உனக்குள் உருவாக்கப்பட்டு
2.அந்த அறிவின் துணை கொண்டு தீமைகளை நீக்கி “உள்பொருளின் உணர்வின் ஞானத்தை நீ அறிய முடியும்…” என்று காட்டுகிறார் குருநாதர்.

குருநாதர் காட்டியதை நீங்களும் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகிறேன். காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் என்னை அலையச் செய்து இந்த உண்மையை அறியும் பழக்கத்தைக் கொண்டு வந்தார். ஒவ்வொன்றாக அனுபவத்தைக் கொடுத்தார்.

எத்தனையோ பேர் குருநாதரிடம் பழகினார்கள். இருந்தாலும் இந்த மாதிரித்தான் எனக்குக் காண்பித்தார். தெரிந்து கொண்டேன்… அதை வளர்த்தேன்… உங்களிடமும் அதை இப்போது பதிவு செய்கின்றேன்.

நான் காட்டிற்குள் அலைந்து திரிந்து பார்த்தேன். குருநாதர் வெளிப்படுத்திக் காட்டினார். துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறுவதற்கு உங்களுக்குள் இதைப் பதிவு செய்கின்றேன்.

பதிவு செய்த பின் மீண்டும் எண்ணும் போது உங்களுக்குள் அந்த அறிவாக வந்து அகஸ்தியன் அக்ண்ட உண்மைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அது மட்டுமல்ல…!
1.அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கே நீங்கள் போக முடியும்.
2.அவன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆனது போன்று நீங்களும் ஆவதற்கு இது உதவும்.
3.அவன் செய்த அறிவுகள் எல்லாமே உங்களுக்கு வரும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ இது உதவும்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் “ட்ரான்சாக்ஷன் நடக்கும் இடமான உயிரில் மோதும் போது” ஏற்படும் சில விசித்திரங்கள்

 

ஒருவர் மற்றவரை வேதனைப்படுத்துகின்றார் தொல்லைப்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம். வேதனைப்படுத்துவனும் அதை நுகர்கின்றான். ஆனால் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவனைப் பார்த்த பின் நமக்கும் கோபம் வருகிறது. வேதனைப்படுவதைப் பார்த்து நாமும் வேதனைப்படுகின்றோம்.

அந்த வேதனைப்படுபவன் அழுகும் போது என்ன இப்படிச் செய்கின்றான்…? என்று தொல்லைப்படுத்துபவன் மீது கோபம் வருகிறது.

இந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்த பின் இது நம் ரத்தத்திலே கலந்து விடுகின்றது. இந்த உணர்ச்சிகள் அதிகமானால் மனித உடலை… உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களிலும் போய்ச் சேர்ந்து விடுகின்றது.

1.நல்ல அணுக்களுக்குள் இது சேரும் பொழுது அதன் ரூபம் மாறி உறுப்புகளும் குறையத் தொடங்குகிறது…
2.குறைந்தால் உடலும் நலிகின்றது. உடல் நலியும் பொழுது நம் சிந்தனைகள் குறைந்து விடுகின்றது.

இந்த உணர்ச்சியின் தன்மை எதையும் கோபமாகவே பேசும் தன்மை வருகின்றது.
1.அந்த இரத்தம் சுழன்று வரும் பொழுது ட்ரான்ஷாக்ஷன் செய்யக்கூடிய உயிரில் மோதும் பொழுது விரிவடைகின்றது.
2.சிந்தனைகள் குறைந்து கண்கள் சிவக்கின்றது.

அந்த கோபமான நேரத்தில் கண்கள் சிவக்கப் படும் பொழுது ஒரு பொருளை நாம் பார்ப்பதோ அல்லது கணக்கு வழக்குகளைச் சீராக பார்ப்பதோ நம்மால் முடியுமா…? கணக்குகள் தவறாகிவிடும். அதைச் சீராகப் பார்க்க முடியாது.

யார் கணக்கை எழுதினார்களோ எவன்டா இதை எழுதியது…? என்று அவனைக் கோபிக்கச் செய்யும். யாராவது ஒரு நல்ல பொருளைச் செய்து கொண்டு வந்து நமக்கு முன் அதைக் காட்டினால் அந்த கோபத்தின் தன்மைப்கொப்ப பொருளைப் பார்த்தால் அது தப்பாகத் தான் தெரியும்.

காரணம்
1.இந்த உணர்ச்சியின் தன்மை ரத்த நாளங்களில் கலந்து
2.கருவிழிக்கு இந்த உணர்ச்சியின் மோதலை உண்டாக்கப்படும் பொழுது நல்லதைக் காண முடியாது.

அந்த நேரத்தில் தரமான பொருளைப் பிரித்துப் பார்க்க முடியாது. அதை அதைத் தூக்கி அந்தப் பக்கம் போட்டுப் போ…! என்று தான் வரும்.

இரண்டாவது தரம் கேட்டால்… நான் என்ன பார்க்காமலா பேசுகின்றேன்…? பார்த்துத் தான் சொல்கிறேன்… என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்…? கோபத்தை உண்டாக்காதே…! என்று தான் சொல் வரும். சீரான நிலையில் பார்க்கும் நிலைகள் வராது. தவறின் நிலைகள் அதைத் தான் காட்டும்.

இங்கே தவறு செய்வது யார்…? நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்யும்படி வைக்கின்றது.

1.இப்படி இந்த கோபமான உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க
2.நம் உயிரிலே மோதி அந்த உணர்வை ஈர்க்கும் அனைத்தும் பலூன் போன்ற உப்ப ஆரம்பித்து விடும்.
3.அப்படி உப்பினால் அதற்கு மேல் சிந்தனை இருக்காது.
4.கிர்…! என்று அதற்குண்டான அழுத்தம் அந்த வாயு இது போகவில்லை என்றால் அடுத்த உணர்வின் துடிப்பு அதிகமாகும்…
5.நுரையீரலிலும் அழுத்தம் அதிகமாகும்… வலி எடுக்க ஆரம்பிக்கும்.

நாம் தவறு செய்யவில்லை… இந்த உணர்வு நமக்குள் இவ்வாறு இயங்குகின்றது. இதே மாதிரி அடிக்கடி செயல்பட்டால் வீட்டில் சாப்பாட்டைக் கொண்டு வரச் சொன்னால் சிறிது நேரமானால் அவசரப்படுவோம்… கோபம் வரும்.

கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்க்கப்படும் பொழுது பொருள் வேண்டும் என்று கேட்பார்கள். அந்தச் சாமானை எடுத்து வா என்போம். அதன் படி கடைப் பையன் அவன் எடுத்து வரும் பொழுது “பொருளை எடுத்துட்டு வர “இவ்வளவு நேரமா…?’ என்று அவனைக் கோபிக்கச் சொல்லும்.

இது எதனால் வருகிறது…?
1.நாம் நுகர்ந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு அது நம்மை இயக்குகின்றது…
2.அதன் வழி உடலை இயக்குகிறது. அதன் படி நம் எண்ணம் சொல் செயல் இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக (பிறரிடம்) நம் காரியத்தைச் சாதிக்க வேண்டும்… பணம் வாங்க வேண்டும் என்றால்… நண்பன் (அல்லது அதற்குண்டானவர்கள்) எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை வரும். அப்படி ஏற்றுக் கொள்ளும் தன்மை வரப்படும் பொழுது சாந்தமாகும்.

சாந்தமான நிலைகள் வரப்படும் பொழுது “தர்மன்” என்ற நிலை அடைகிறது.

சாந்தமான நிலை வருவதற்கு முன் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளின் தன்மை எது இருந்தாலும்
1.காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு…
2.நம் மனதை அடக்கிச் செயல்படுத்தும் பொழுது
3.நம் எண்ண வலுவிற்குள் நண்பனின் உணர்வு நமக்குள் திணிக்க்கப்படுகிறது… அப்பொழுது அதன் வலு தான் “அர்ஜுனன்…”

நமக்குப் பணம் தேவைப்படுகின்றது (நண்பனின் தயவு) என்று கண் கொண்டு நண்பனை உற்றுப் பார்க்கின்றோம். ஆறாவது அறிவால் மனதை அடக்கி… அவர் சொல்வதை எப்படியும் நாம் கேட்டாக வேண்டும். ஏனென்றால் கேட்டால் தான் நமக்குச் சலுகை கிடைக்கும். அவன் சொல்லும் உணர்வுகள் அர்ஜுனன் வலிமையானது.

ஏனென்றால் அந்த நண்பன் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் என்ற நிலையில் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அதை நுகர்ந்தால் அர்ஜுனன்.

நண்பன் பேசும் உணர்வுகளைக் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்ற அணுத்தன்மை அடைகின்றது. அந்த உணர்வின் சத்தி அதை இயக்கக்கூடிய பரப்பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து சரஸ்வதி ஆகின்றது… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

அந்த அணு இப்படிக் கவர்ந்து கொண்டால் அந்த ஞானத்தின் வழியே அதனின் வித்தாகிறது.

இருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளாத மனமாக இருக்கப்படும் பொழுது
1.பணம் வாங்கும் காரியத்திற்காக ஏற்றுக் கொள்கின்றோம்.
2.ஆனாலும் அதை இந்த மனது ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் ஏற்றுக் கொள்கின்றது.

இதைப் பார்த்து மற்றவர்கள்… என்ன…? அவருடன் இப்படிக் கூடிக் குழாவுகின்றாய் என்று கேட்பார்கள். என்ன செய்வது…! அவரிடம் காசு வாங்க வேண்டி இருக்கின்றது அல்லவா. இல்லை என்றால் எப்படிக் கிடைக்கும்…? என்ற நிலையில் இருக்கின்றோம்.

அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
1.அதைத்தான் சூழ்ச்சி என்பதாக… சூதாட்டம் ஆடுவதாக
2.சூட்சும நிலைகள் கொண்ட “சகுனி” என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

சகுனி தாயக் கட்டைய உருட்டுவது போல் நம் காரியத்தை எண்ணி அதை நாம் உருட்டி எடுக்கின்றோம். அதாவது நாம் என்ன செய்கின்றோம் என்றால்
1.நம் காரியத்தைச் சாதிப்பதற்காக அவருடைய எண்ணத்தை “உருட்டி” எடுக்கின்றோம் “சூதின் மூலமாக…!”
2.அப்போது நாம் ஜெயித்து விடுகின்றோம் (பணத்தை வாங்கி விடுகின்றோம்)

முந்தி அவர்கள் நல்லதைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள்… அப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பணம் வாங்குவதற்கு மட்டும் உள்மனதாக வைத்து இதைக் கலந்து ஏற்றுக் கொள்ளும் அந்த உணர்வு ஆகிறது.

பணம் வாங்கி ஓரளவுக்கு வசதியாக ஆன பிற்பாடு என்ன செய்கின்றோம்…? சமயம் வரும் பொழுது அவருக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வோம்…! (எல்லோருமே இதை அனுபவத்தில் பார்த்திருப்போம்)

சகுனி தாயம் போட்டுச் சூதாட்ட விளையாட்டிலே தோற்கடித்து விட்டேன் என்ற நிலை வருகிற மாதிரி நமக்குள் சூதின் உணர்வுகள் வந்து விடுகிறது.

முதலிலே அந்த நண்பனின் உணர்வுகள் அர்ஜுனன் ஆகின்றது. அவன் எதையுமே குறிவைத்துத் தாக்கும் தன்மை பெற்றவன். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் “நகுலன்” உடலுக்குள் அது இணைந்து செயல்படும் தன்மை வருகின்றது.

நாம் எண்ணும் ஆந்த உணர்வை உயிரிலே சேர்த்து… சேர்த்துக் கொள்ளும் உணர்வாக எண்ணும் போது அதற்கு இடம் கொடுக்கின்றோம். அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது “சகாதேவன்…” ஆகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஏற்றுக் கொண்டால் “பீமன்” ஆகின்றது. அவர் சொன்ன உணர்வு அந்த வலுவும் நமக்குள் வருகின்றது. பீமன் என்ற அந்த வலுவான உணர்வுகள் ஆனால் அதன் வழி தர்மன் ஆகின்றது

நம் உடலுக்குள் இத்தனை போர் நடந்து கொண்டிருக்கின்றது

இருந்தாலும்… நம் எண்ணங்கள் அவரை ஏமாற்றும் விதமாகச் செயல்படும் பொழுது
1.”சகுனி…” நமக்குள் இருந்து அதன் உணர்வாகக் கலந்து தான் நமக்குள் ஏற்றுக் கொள்கிறதே தவிர
2.நண்பன் நமக்கு நல்லதைச் சொன்னார் என்ற நிலையில் ஏற்கும் பருவமில்லை.

இப்போது இங்கே தியானம் செய்கின்றோம் என்றால்… பல வகைகளிலும் பலவிதங்களை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றோம்.

எப்படியோ தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும்… தியானம் செய்தால் நமக்கு நல்லதாகும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் வருகிறோம்.

அவ்வாறு ஆசைப்பட்டு சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகள் தான் .வரும். நாம் எண்ணிய அந்த உணர்வுகள் பதிவாகிறது. பதிவின் உணர்வு மீண்டும் நினைவாகும் பொழுது நம்மை இயக்குகின்றது.

நாம் எந்தத் தொழிலின் நிமித்தம் இணைத்து “இந்தத் தியானத்தைச் செய்தால் நாம் நன்றாக இருப்போம் என்று எண்ணினோமோ…” அதன் எல்லை வரை இது வளரும்.

தான் எதிர்பார்த்த நிலைகள் இல்லை என்றால் உடனே குருக்ஷேத்திரப் போராகிறது. எங்கே…? இந்த உயிருக்குள்…!
1.இவ்வளவு நாளும் என்னத்தைத் தியானத்தைச் செய்து என்ன பலன் கிடைத்தது…? என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.எண்ணியபடி நடக்கவில்லை என்றால் இந்தப் போர் நடக்கின்றது.
3.தியானத்திற்குப் போவோமா வேண்டாமா…!
4.தியானத்தைச் செய்வோமா வேண்டாமா…? என்ற இந்த உணர்வு வந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்கும் நமக்குள் உயிரிலே இந்த குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டே உள்ளது. ஏனென்றால் நம் உணர்விற்கும் புறத்திலிருந்து வரக்கூடிய நிலைகளுக்கும் இந்த வித்தியாசம் ஆகிறது.

1.அதனால் தான்… நாம் நம் மனதைக் குவிக்க வேண்டும்…
2.அனைத்து உணர்வுக்குள்ளும் பகைமைகளை அகற்றிய ஞானிகளின் உணர்வுகளைச் சேர்த்து உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டும்…
3.ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வருகிறோம்.

நம் குருநாதர் ஜோராகச் சமையல் செய்வார்

 

எப்பொழுது துயரம் என்று வருகின்றதோ அப்பொழுதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தீமைகள் புகாது தடுத்து நிறுத்துங்கள்… அந்தச் சக்தி பெற ஏங்குங்கள்.

அது வேதனையை உடனே அடக்கிச் சிந்தனையைக் கொடுக்கும்.
1.உங்கள் உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…? என்ற பொறுமையும் அதற்கு என்ன உபாயம்…? என்ற உணர்ச்சிகளும் உங்கள் கூட வரும்.
2.வாழ்க்கையில் வரக்கூடிய ஒவ்வொன்றையும் சமாளிக்கக் கூடிய தன்மையும்
3.நல்ல உணர்வுகளை நமக்குள் விளைய வைக்கும் சக்தியும் நாம் பெற முடியும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

சீக்கிரமாகச் சமையல் செய்ய வேண்டும் என்று அரிசி பருப்பு காய் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டால் சுவை வருமா…?

கூடுமானவரை அரிசியை வேக வைத்த பின்பு மற்ற பொருள்களைச் சேர்த்தால் சுவையாக இருக்கும். ஆனால் அரிசி வேகுவதற்கு முன் மற்ற பொருள்களைப் போட்டால் அரிசி ஒரு பக்கம் வேகாதபடி இருக்கும்.

ஏனென்றால் சமையலில் பக்குவம் மிகவும் அவசியம் தேவை.

1.சில காய்கறிகள் உப்பை எடுத்துக் கொள்ளும்… சிலது எடுக்காது… அதற்கு நாம் போடும் உப்பு பத்தாது.
2.அந்தப் பக்குவம் தெரியாதபடி உப்பைச் சேர்த்தால் ருசி கெட்டுவிடும்.

காயாக இருந்தாலும் குழம்பாக இருந்தாலும் அது அது ஈர்க்கும் சமமான பருவம் பார்த்து உப்பைப் போட வேண்டும். சமைக்கத் தெரிந்தவர்கள் அந்தப் பக்குவத்தை அறிந்து செயல்படுத்துவார்கள்.

சில பேர் காயைப் போட்ட பின் உப்பையும் சேர்த்துப் போட்டு விடுவார்கள் வெந்த பின் பார்த்தால் உப்பை எல்லாம் காய் எடுத்துக் கொள்ளும்… குழம்பு சப் என்று இருக்கும். காரணம் சில காய்கறிகளில் உப்பை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கும்.

ஆகவே அந்தப் பருவம் தெரிந்து உப்பை இணைத்தால் தான் இரண்டும் ஒன்று போல இருக்கும்.
1.சமையல் வேலையெல்லாம் குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.
2.எந்தெந்த நேரத்தில் எப்பொழுது எதைச் சேர்க்க வேண்டும் ஜோராகச் சமையல் செய்வார் குருநாதர்.
3.நீ இப்படிச் சமைத்துக் கொள்ளடா என்று சொல்வார்.

அதாவது… நீ உன் உடலுக்குள் சுவை மிக்க உணர்வுகளைச் சேர்த்துச் சமைத்துக் கொள் என்பார்.

சமையல் கலையைப் பற்றிச் சொல்லும் பொழுது இன்னென்ன பருவத்தில் எதை எதைச் சேர்த்தால் அது எப்படி ருசி கொடுக்கின்றதோ இதைப் போல உன் உயிர் ஒரு நெருப்பு.
1.அதிலே எந்தெந்த உணர்வுகளைப் போட்டு எந்தெந்த நேரத்தில் அதைச் சேர்க்க வேண்டும்…? என்று இணைத்தால்
2.அந்த உணர்வுப்படி சுவை மிக்க உணர்வுகளை உனக்கு ஊட்டும்.
3.அந்தச் சுவை கொண்ட நிலையில் எல்லோரையும் மகிழக்கூடிய சொல்லாகச் செயல்படும் என்று சொல்வார்.

இதற்கும் அதற்கும் சொல்லி அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.

இயற்கை எவ்வாறு செயலாக்குகின்றது…? செயற்கை எப்படி உருமாறுகின்றது…? மனிதனான பின் எதை உருமாற்றுகின்றோம்…? என்று இப்படி குருநாதர் தெளிந்த நிலைகளை எமக்கு உபதேசித்தார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எல்லோரும் அன்புடன் பண்புடன் சகோதர தத்துவத்துடன் பழகுகின்றோம். நம் முன்னோர்கள் மூதாதையருடன் பழகுகின்றோம்.. நம்மைக் காத்திட அவர்கள் எத்தனையோ சிரமங்கள் பட்டார்கள்.

நம்மைக் காப்பாற்றுவதற்காக சொத்தையும் செல்வத்தையும் அவர்கள் தேடி வைக்கின்றார்கள். ஆனால் செல்வத்தைத் தேடும் போது அதற்காக வேண்டி “எனக்கு இப்படிச் செய்தானே…” என்று எத்தனையோ நிலைகளில் வேதனைகள் பட்டு… பல அவஸ்தைகள் பட்டுத் தான் சேர்த்து வைக்கின்றார்கள்.
1.அந்த வேதனை அவர் உடலுக்குள் நோயாக மாறுகிறது
2.அவர் உடலில் விளைந்த வித்து அது.

கடைசியிலே நாம் என்ன செய்கின்றோம்…? “இப்படி நோயாகி விட்டாரே…” என்று எண்ணங்களை எண்ணும் பொழுது அவருடைய உணர்வுகள் “நம் உடலில் பரம்பரை நோயாக வருகின்றது…”

சேமிக்க வேண்டும் என்பதற்காக (மிச்சம் பிடிக்க வேண்டும் என்று) எவ்வளவோ கஞ்சத்தனமாக இருந்து… தான் சாப்பிடாமல் இருந்து நம்மையெல்லாம் ராஜாவாக வளர்த்தார். ஆனால் அதே உணர்வுகள் நமக்குள் வந்து செயல்படத் தொடங்குகின்றது.

அவர் சரியாகச் சாப்பிடுவதில்லை… தன் பேரப்பிள்ளைகள் எல்லாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றார். தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் அவர் கஞ்சத்தனமாக இருக்கின்றார்.

இருந்தாலும் இந்த உணர்வு கடைசியில் நோயின் தன்மை ஆகி பாசத்துடன் நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வு நமக்குள் வந்து விடுகிறது.

தன் பிள்ளையைக் காக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அந்த நிலையில் வியாபார நிமித்தம் ஒருவருக்குக் கடன் கொடுக்கின்றார். ஆனால் அவரோ ஏமாற்றி விடுகின்றார்.

பாவிப்பயல் என்னை ஏமாற்றி விட்டான். நான் எத்தனையோ கஷ்டப்பட்டேன் என் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று. இந்த மாதிரிச் செய்து விட்டானே…! என்று வேதனை வந்தால்
1.சாகப் போகும் போது அவன் மீது தான் நினைவெல்லாம் செல்லும்.
2.எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என் பிள்ளைகளைக் காக்க முடியாதபடி தெருவிலே விட்டான் என்ற இந்த நினைப்பு தான் வரும்

காக்கும் உணர்வு கொண்டு நம்மையெல்லாம் அவர்கள் காத்தாலும் அவர் உணர்வு நமக்குள் வந்தபின் வேதனையாகி உடலை விட்டுச் செல்லும் பொழுது எங்கே செல்வார்…?

பழி தீர்க்கும் உணர்வுடன் தன்னை ஏமாற்றியவன் உடலுக்குள்ளே தான் செல்வார். அப்போது இருப்பிடம் எதுவாக மாறுகின்றது…? அங்கே மாறி விடுகின்றது.

ஆகவே நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்கள் இன்னொரு உடலுக்குள் போகாமல் தடுப்பதற்கு நாம் என்ன வைத்திருக்கிறோம்…?

விநாயகர் தத்துவத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அதை வைத்து முன்னோர்களை நாம் விண் செலுத்த வேண்டும்.
3.அவர்களைப் பிறிதொரு உடலுக்குள் போக விட்டுவிடக் கூடாது.

கடன் வாங்கியவர்கள் திரும்பத் தரவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று தனக்குள் வலுவாக்கிய பின்… அவர் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் அந்த வலிமை பெற வேண்டும் நல்ல ஞானம் அவருக்குள் வளர வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சமைத்து இந்தச் சொல்லாக சொல்ல வேண்டும்.

ஆனால் அதே சமயத்தில் நமது எண்ணங்கள் மாறிவிட்டால்… வாங்கிச் சென்றவனுக்கு “நான் கொடுக்க மாட்டேன்…” என்று கூட சிந்தனை வரும்.

ஏன்… எதனால்…?

உதாரணமாக… தீமை செய்கின்றான்… எனக்குக் கடும் துரோகம் செய்தான் என்று நாம் எண்ணினால் இந்த உணர்வு அவனைத் தாக்கி எப்படி அவனுக்குப் புரையோடுகின்றது.

எனக்கு துரோகம் செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணினால் தொழில் செய்யும் இடத்தில் இயந்திரத்தில் அவன் வேலை செய்தால் ஆபத்தில் சிக்கி விடுகின்றான்.

உணவு உட்கொள்ளும் பொழுது இதே உணர்வுகள் ஊடுருவினால் அது புரையோடி அந்தச் சந்தர்ப்பம் அவனுக்குத் திக்கு முக்காடலாகி ஆகிறது

இதே போன்று அருள் ஞானிகளின் உணர்வை நாம் எடுத்து
1.கடன் வாங்கியவன் உணர்வை நமக்குள் மாற்றி… நமக்குள் வராது தடுத்து
2.இப்படித்தான் அவன் இருக்க வேண்டும்…
3.பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடிய சக்தி அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த வலுவின் தன்மை அங்கே ஊட்டி
4.நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பண்புகளை எண்ணினால் உதவி செய்யும் பண்புகளை நிச்சயம் அங்கே வளர்க்க முடியும்.
5.இத்தகைய சிந்திக்கும் தன்மையை அவனுக்கு ஊட்டி நம் பணத்தைத் திரும்பப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தையும் உண்டாக்கலாம்.

ஆனால் சாபமிடும் உணர்வுகளும் வெறுக்கும் உணர்வுகளும் கொண்டு நாம் எண்ணினால் அவனால் வளர முடிவதில்லை. அவன் கடனைத் திரும்பக் கட்ட முடியாத நிலையாகி விடுகின்றது.

கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் திட்டும் போது ரோசம் வரும். ஏன்டா…! பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுகின்றாயா…? என்று நாம் திட்டுவோம்.

இந்த உணர்வின் தன்மை பதிவான பின் அவன் வாழ்க்கையில் தொழிலே நஷ்டமாகிவிடும். அப்படி ஆகி விட்டால் பணத்தை எப்படி நமக்குத் திரும்பக் கொடுப்பான்.

நான் கொடுத்தேன்… அவன் ஏமாற்றி விட்டான் என்று தான் நாம் பேச முடியுமே தவிர அவனுக்கு நல்ல பண்புகளை ஊட்ட முடியாது. தீமையான உணர்வுகள் அவனுக்குள் அறியாமல் இயக்குவதை நமக்குள் சேர்ப்பதா…? அல்லது அதைச் சேராமல் தடுப்பதா…?

ஆகவே அருள் உணர்வை எடுத்து நம்மைத் தூய்மைப்படுத்தி
1.அவனுக்கு வருமானம் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வு நமக்கு நிம்மதி கிடைக்கும்.
2.100 ரூபாய் கொடுத்தாலும் 1000 ரூபாய் கிடைக்கின்ற மாதிரி செய்ய முடியும்.
3.இந்த வலிமை கொண்டு நம் வியாபாரமும் பெருகும்.

அதே சமயத்தில் இந்த உணர்வு அவனுக்குள் பாயும் போது கடன் வாங்கி இத்தனை நாள் ஆகிவிட்டது என்று அவனும் நினைப்பான். பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அவனுக்கும் வரும்.

இது எல்லாம் வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்துப் பழக வேண்டிய “நுணுக்கமான விஷயங்கள்…”

ஏனென்றால் மனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா.
1.தீமை என்று தெரிந்தாலும் தீமையை நீக்கக் கற்றுக் கொள்வதே அதனுடைய சிறப்பு.
2.அதைச் செயல்படுத்துவதற்குத் தான் உபதேச வாயிலாக ஞானத்தைப் போதிக்கின்றேன் ஞானகுரு).

தீமையை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நமக்குள் உருவாக்கும் நேரமே பிரம்ம முகூர்த்தம்

 

ரத்தத்தை உறிஞ்சும் சில கொடிகள் காட்டுக்குள் இருக்கின்றது. அந்தக் கொடியின் அருகில் ரத்தம் உள்ள உயிரினங்கள் வந்தால் அழுங்காமல் அதை எடுத்துக் கொள்ளும். ரத்தத்தை உறிஞ்சிய பின் “சொத்…” என்று கீழே விழுந்து இறந்து விடும்.

அந்த மாதிரிக் கொடிகள் வளர்ந்திருக்கும் இடத்திற்குக் குருநாதர் எம்மை அழைத்துச் சென்றார். அந்தக் கொடி நம் மீது பட்டால் சுரீர் என்று மின்சாரம் தாக்கியது போல் இருக்கும். உடலிலிருக்கும் ரத்தத்தை உறியும். மயக்கம் வந்துவிடும்.
1.ஆனால் குருநாதர் எம்மிடம் ஒரு கத்தியைக் கொடுத்திருந்தார்.
2.முதலில் எனக்கு அந்தக் கொடியே தெரியவில்லை.
3.என்னைத் தொட்டவுடன் தான் தெரிந்தது… உடனே அதை வெட்டினேன்.

இப்படி எல்லாம் காட்டிற்குள் பல நிலைகளைத் தெரிந்து கொண்ட பின்பு தான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லி வருகின்றேன். என்னை இப்படித்தான் பல வகைகளிலும் பழக்கினார்.

எம்மிடம் வருபவர்கள்… எம்மைச் சந்தித்த உடனே தலைவலி போக வேண்டும் என்ற எண்ணத்தில் வருகிறார்கள். தலைவலி போய் விடுகின்றது.

தலை வலி போனாலும் எதனால் வந்தது…? என்று அறிந்து அந்தத் தப்பை மட்டும் திருத்த மாட்டார்கள்.
1.ஏனென்றால் அறியாமல் தவறு செய்யும் நிலைகளை நீக்குவதற்குத் தான் தியானம் செய்யுங்கள்
2.எது உங்களை இயக்குகிறது…? தவறு செய்ய வைக்கிறது என்பதைத் தெரியச் செய்கிறோம்.
3.தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் நீங்களே மாற்றி அமைக்க முடியும் என்றும் சொல்கிறோம்.

அதன்படி நன்றாகிறது…!

ஆனால் இதை வீட்டில் உள்ளவர்கள் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று என்னிடம் வந்து சொல்வார்கள்… திட்டுவார்கள்.
1.இது எல்லாம் எதைக் குறிக்கின்றது…?
2.நம்மை அறியாமல் நாம் எடுத்துக் கொண்ட அந்தக் குறை உணர்வுகள் தான் மீண்டும் இயக்குகின்றது.

அதனால் உருவாகும் நோயை நீக்க மருத்துவர்களிடம் சென்று மருந்தை உட்கொண்டாலும் அந்த மருந்தின் விஷத்தன்மைகள் ரத்தத்தில் கலந்து வீரியத் தன்மை காட்டப்படும் பொழுது… இதைச் சுத்தப்படுத்தும் கிட்னி பெயிலியர் ஆகி விடுகிறது.

அடுத்து… உப்புச் சத்து வந்து விட்டது சர்க்கரைச் சத்து வந்து விட்டது என்று சொல்வார்கள். சர்க்கரையைப் பிரிக்கும் நிலை இழந்து அந்த உணர்வின் இயக்கமாகி விட்டால் ரத்தத்தில் சர்க்கரை கலந்து விடுகின்றது… நீரிலும் பிரிகின்றது.

அவர்கள் சிறுநீர் கழித்தால் ஈயோ எறும்போ மொய்க்கத் தொடங்கும், அதைச் சீர்படுத்தும் உறுப்புகள் பலவீனம் அடைகின்றது. வேதனை அதிகமாகி பித்த சுரப்பிகள் அதிகமாகி விட்டால்… அந்த நஞ்சு அதிகமாக ரத்தத்தில் கலந்து விடுகிறது. அதனால் தலைசுற்றல் வரும்.

1.அந்தத் தலை சுற்றலுக்கு என்று மீண்டும் மருந்துகளை உட்கொள்ளும் பொழுது உடலில் விஷத்தன்மை தான் அதிகமாகின்றது.
2.தலை சுற்றல் குறையவில்லை என்பார்கள்.
3.ஏனென்றால் மீண்டும் விஷ அணுக்களாக உடலுக்குள் மாறும்.
4.அந்த நிலையில் அரிப்பு வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகமாகும். சிந்திக்கும் தன்மை இழக்கப்படும்.

காரணம்… இது எல்லாமே நாம் நுகரக்கூடிய உணர்வுகளினால் வரும் விளைவுகள் தான். இதை மாற்ற வேண்டும் அல்லவா.

இதைப் போன்ற உணர்வுகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அதிலிருந்து வெளிப்படும் அலைகள் மிகவும் சக்தி வாய்ந்தது.

1.துருவ நட்சத்திரம் பூமியின் அச்சுக்கு நேராக இருப்பதால்
2.மற்றது வருவதற்கு முன்பாக அதிகாலையில் நம் பூமி துருவத்தின் வழி அதைக் கவர்கின்றது… நமக்கு முன் பரவச் செய்கின்றது.
3.அந்த நேரத்தில் அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால் பிரம்ம முகூர்த்தம்
4.அதாவது நமக்குள் புதிதாக அந்த உயர்ந்த சக்தியை உருவாக்க முடியும் என்று ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

பிரம்மம் என்றால் மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் அரும்பெரும் சக்தியை நமக்குள் பிரம்மாக்குகிறோம் என்று இப்படி அதை மறைமுகமாகச் சொல்கிறார்கள்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து வாழ்க்கையில் வரும் தீமைகளை உங்களால் நீக்க முடியும். அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது அந்த உயர்ந்த சக்தியை எடுத்து உடலுக்குள் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

1.எல்லா ஆலயங்களிலும் அந்த அதிகாலையில் வணங்கும் முறைகளை ஞானிகள் கொடுத்தது இந்த அடிப்படையில் தான்.
2.நல்ல குணங்களை வளர்ப்பதற்கும் தெய்வீகப் பண்புகளை நாம் வளர்ப்பதற்கும் ஞானிகள் அன்றே காட்டியுள்ளார்கள்.

பச்சிலைகளின் மகிமை

 

டேய் இந்தப் பச்சிலை பேசுமாடா…? என்றார் குருநாதர்.

என்ன சாமி…? பச்சிலைக்கு வாய் இல்லையே…! அது எப்படிப் பேசும்…? என்றேன். ஒன்றல்ல… இரண்டல்ல… எத்தனையோ பச்சிலைகளைக் காண்பித்துப் பேசுமாடா…? என்று அவர் கேட்பார். எப்படி சாமி பேசும்…? என்று நான் கேட்பேன்.

முதலில் ஒரு நல்ல பச்சிலையைக் கொடுத்து என்னை நுகரும்படி செய்தார். எப்படி இருக்கிறது…? என்றார்.

1.சாமி…! “கம…கம…” என்று இருக்கிறது. உடல் “ஜம்” என்று இருக்கின்றது என்று சொன்னேன்.
2.இப்போது யாருடா பேசியது…? என்கிறார்.
2.இந்த வாசனை உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை உன்னைப் பேச வைக்கிறதா இல்லையா…? என்றார்.

இப்படியே சொல்லிக் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு செல்கிறார்.

அடுத்து… வேறு ஒரு பச்சிலையை நுகரச் சொன்னார். நுகர்ந்தேன்… தலை சுற்ற ஆரம்பித்தது. சாமி…! தலை சுற்றுகிறது… எங்கேயோ என்னைக் கொண்டு செல்கின்றது என்றேன்.

1.இப்போது யாருடா அதைச் செய்வது…?
2.அந்தப் பச்சிலை தானே…! என்று கேட்டார்.

உயிரினங்களில் பச்சிலைகளைச் சாப்பிடுகின்ற வெள்ளாட்டைப் பாருங்கள். எருக்கலையைச் சாப்பிட்டால் வயிறு வெந்துவிடும். அதே சமயத்தில் விஷ முள் பச்சிலையை எடுத்து அரைத்து மேலே தேய்த்தால் கை கால் எல்லாம் சரியாக வராது செயலிழந்து விடும். தலையில் தேய்த்தால் பித்துப் பிடித்தது போல் ஆகிவிடும்.

என் தலையிலே அதைத் தேய்த்தார்…! பாருடா என்ன செய்கிறது…? என்றார். தலை சுற்றிக் கொண்டே இருக்கின்றது புத்தி பேதமாவாது போன்று ஆனது.

1.மீண்டும் உனக்கு நல்ல நினைவு வருவதற்கு நினைவூட்டச் செய்வது யார்…?
2.அந்தப் பச்சிலை தானே…! என்றார் குருநாதர்.

பரிணாம வளர்ச்சியில் புழுவில் இருந்து மனிதனாக வரும் நிலையில் ஒன்றை ஒன்று கொன்று தின்று கொன்று தின்று ஒன்றுக்கு இரையாகி இப்படித் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்.

உதாரணமாக பல்லியினுடைய மூத்திரம் நம் மீது பட்டால் மேலெல்லாம் பொறிகளாகிக் கொப்புளமாகிவிடும். உணவுப் பொருளில் பல்லி விழுந்து விட்டால் அதை நாம் சாப்பிட்டால் நம்மைக் கொன்று விடும்.

ஆனால் அந்த விஷத்தன்மை உருவாகி அந்தப் பல்லிக்கு அது பாதுகாப்பு ஆகிறது. இருந்தாலும் அந்தப் பல்லியைக் கோழி உட்கொள்கின்றது… மற்ற சில பறவைகளும் சாப்பிடுகின்றது. அதனின் உறுப்புகள் இந்த விஷத்தை அடக்கக் கூடிய சக்தி இருப்பதால் அதை ஒன்றும் செய்வதில்லை.

நீ சாப்பிடுடா பார்க்கலாம்…! என்று என்னைச் சாப்பிடச் சொல்கின்றார்.

சாமி…… என்றேன்.

நான் சொல்வதை எல்லாம் கேட்கிறேன் என்று சொன்னாய் அல்லவா கேளு…! என்கிறார்.

நான் பிள்ளை குட்டிக்காரன்… என் உயிர் போய்விடும். என்று சொன்னேன். ஆனால் அவர் விடவில்லை. அதைச் சாப்பிடும் படிச் செய்து அந்த உணர்வு என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார்.

1.அதற்குப் பாதுகாப்புக்காகப் பச்சிலை ஒன்றை உனக்குக் கொடுக்கிறேன்
2.கையில் கொடுத்து… இந்த பச்சிலையைச் சாப்பிட்டால் உன்னை அந்த விஷம் எதுவும் செய்யாது என்றார்.

இப்படி அந்தப் பச்சிலைகளுக்கு உண்டான மகிமையைக் காட்டுகிறார். அந்தப் பச்சிலையை நுகர்ந்து பார்த்த பின் விஷங்களை அது முறிக்கின்றது.

ஆக… அந்தப் பச்சிலைகளின் சக்திகளை எல்லாம் நான் சுவாசிப்பதற்காக வேண்டி
1.ஒரு கட்டுக் கணேஷ் பீடியை வாங்கிக் கொடுத்துப் பற்ற வைத்து ஊதுடா…! என்கிறார்.
2.கணேஷ் பீடி என்றால் கணேசன்…! கணங்களுக்கு எல்லாம் ஈசன் என்று அவன் உணர்வுகளை நீ நுகர்ந்தால்
3.கணங்களுக்கு ஈசனாக உற்பத்தி செய்வான்டா…! என்று சொல்லி… ஒரு கட்டுப் பீடியைக் குடிடா என்று சொல்கின்றார்.

நீ அப்படிச் செய்தால் கணங்களுக்கு ஈசனாக மாறும் என்கிறார். ஏனென்றால் பைத்தியக்காரத்தனமாகத் தான் சொல்வார்.

அந்த உணர்வுகளை எடுத்து நுகர்ந்தவுடன்…
1.யாரெல்லாம் உடல் நலமில்லாதபடி நோய்வாய்ப்பட்டுள்ளார்களோ
2.அவர்களுடைய நோயெல்லாம் போக வேண்டும்…! “ஊதுடா…” என்று சொல்கின்றார்.

அவர்களை நினைத்து இதைச் செய்த பின் அவர்கள் வீட்டிலே இந்த பீடி வாசனை வருகிறது. அந்தச் சமயத்தில் நான் சுற்றுப்பயணம் செல்லும் பொழுது சாமி வந்து விட்டார் என்று சிறிய குழந்தைகள் எல்லாம் சொல்வார்கள்.

1.அங்குள்ளவர்களுக்கு நோய் இருந்தால் அது உடனே நீங்குகிறது.
2.இப்படித் தான் பச்சிலைகளின் ஆற்றலை எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவருக்கொருவர் பற்று கொண்டவர்கள் நாம் என்ன செய்கின்றோம்…?

ஆசை வைக்கின்றோம்… ஆனால் சமயத்தில் “என்னை அவமதித்து விட்டான்…” என்று ஆத்திரப்படுகின்றோம்
1.ஆத்திர ஆவேச உணர்வு கொண்டு அவன் செய்யும் தவறான உணர்வை நமக்குள் சேர்த்து விடுகின்றோம்.
2.நம்முடைய வளர்ச்சியை நாமே தடைப்படுத்தி விடுகின்றோம்

இப்படித்தான் இயற்கை நிலையிலிருந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளை எப்பொழுது மாற்றுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆக… ஒவ்வொன்றிலிருந்தும் தான் தப்பிக் கொள்ளும் உணர்வுகள் பெற்று வளர்ச்சியாகி வந்ததுதான் இந்த மனிதச் சரீரம்.

பலவற்றில் இருந்து தப்பிக்கும் ஞானத்தின் தன்மை வளர்த்துக் கொண்ட இந்த மனித உடலில் இவ்வளவும் தெரிந்து கொண்ட பின் உடலைக் காக்க நாம் எதைச் செய்ய வேண்டும்…?

உடலைக் காக்கும் ஆசை தேவை. ஆனால்
1.உடலைக் காப்பதற்கு முன் அதீத ஆசை கொண்டு செயல்பட்டால்
2.உடலைக் காக்கும் தன்மையை இழக்கப்பட்டு வேதனை என்று உணர்வைத்தான் வளர்க்க முடிகின்றது.

இதையெல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாக காட்டிய நிலைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அனுபவரீதியிலே தான் இதையெல்லாம் தெரியும்படி செய்தார்.

சில இடங்களுக்கு அழைத்துச் செல்வார்…
1.இது நல்லதா கெட்டதா என்று கேட்பார்
2.நல்லது என்று சொன்னால் அது எப்படிடா… சொல்…? என்பார்
3.இல்லை இது கெட்டது… இப்படித்தான்…! என்று சொன்னால் அது எப்படிக் கெட்டது…? என்று அதற்கும் கேள்வி கேட்பார்.

ஏனென்றால் நீ நுகர்ந்த உணர்வுகள் உனக்குள் எப்படியெல்லாம் இயக்குகின்றது…? “என்னுடைய அதிர்வான சொல்கள்” வரும் பொழுது பதட்ட நிலைகள் உனக்குள் ஆகி உன்னைச் சிந்திக்கச் செய்கிறதா…?

இல்லை.

ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி தப்பிக்கலாம்…! என்ற எண்ணம் தான் உனக்கு வருகின்றது. இப்படியெல்லாம் விளக்க உண்மைகளைக் கொடுத்து அறிவின் இயக்கமாக இயக்கச் செய்து என்னை (ஞானகுரு) அனுபவபூர்வமாகத் தெளிவாக்கினார் குருநாதர்.

அதை நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமா இல்லையா…!

முதலிலே நான் சொல்லிக் கொண்டு வந்தேன்…
1.பல வருட காலமாக ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்
2.இப்பொழுது மனிதனுடைய இயக்கங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளும்படி செய்கின்றோம்.

முதலிலே பதப்படுத்தி பக்குவப்படுத்தி… உங்களிடம் அதை வலுப்படுத்தி… அதற்குப் பின் விளக்க உரைகளைக் கொடுத்தால் நீங்கள் கேட்பீர்கள்.
1.உங்களுக்கு அந்த உயர்ந்த சிந்தனைகள் வரும்
2.உங்களைக் காத்திடும் உணர்வுகளும் வரும்

ஆனால் புதிதாக இதைக் கேட்பவர்களுகள்… “சாமி எதையோ சொல்கின்றார்…” என்ற தலையைச் சொறிவார்கள்.

முன்னாடி கேட்டுப் பழகியவர்களுக்கு ஞானத்தை வளர்க்கும். புதிதாக வந்தவர்கள்… சாமி என்னமோ சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே… தெரியாது என்று சொல்வார்கள். சாமி சொல்கின்றார்… நான் கேட்டுக் கொண்டிருந்தேன்… எனக்கு அர்த்தமே ஆகவில்லை…! என்பார்கள்.

1.ஆனால் பழைய ஆள்கள் உபதேசக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் சேர்த்துச் சேர்த்துத் தெளிவான மனதாக
2.எப்படி மனதைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்று செயல்படுத்திக் கொள்வார்கள்.

சந்தர்ப்பங்களில் இருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அந்த உபாயங்களும் வரும்.

இப்போது ஒன்றைச் சொல்கின்றேன் என்றால் அடுத்து அதைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது உங்கள் சாமி நேற்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கின்றார். சாமி என்ன சொல்கின்றார்…? என்று கேட்பார்கள் ஒரு சிலர்.

ஆனால் பற்றுள்ளவர்கள் என்ன சொல்கின்றார் என்று கூர்ந்து கவனித்துக் கேட்பார்கள்.
1.இன்றைக்கு ஒன்று சொன்னாலும் அப்படிச் சொன்ன உணர்வுகள்
2.எதிலே எது எப்படி இயக்குகின்றது…? என்று விளக்கவுரையைக் கொடுக்கப்படும் பொழுது
3.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதங்கள் எத்தனையோ வரும்.

செடி கொடிகளின் வித்துகள் சந்தர்ப்பத்தில் மோதும் போது ஒரு ஜாதி இனத்தைப் போன்று மற்றொன்று உருவாகி இருக்கும். ஆனால் அதனுடைய மணமும் குணங்களும் வேறாக இருக்கும்… செயலாக்கங்களும் வேறு.

புல்லைப் போன்றே மற்ற கோரைப் புல்களும் உண்டு. ஒவ்வொன்றையும் பார்த்தால் அதைப் போன்றே இருக்கும். ஆனால் சுவை இருக்காது.

இதைப் போன்று இயற்கையின் நியதிகள் எது எதனுடன் சேர்க்கின்றதோ அதற்கொப்ப இயக்குகின்றது. இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

சந்தர்ப்பத்தால் நுகரும் வேதனையை நாம் நீக்கவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகள்

 

இந்த வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் நாம் எல்லோருமே ஆசைப்படுகின்றோம். அதில் தோல்வி அடைந்தால் வேதனைப்படுகின்றோம்.

கடை வைத்துத் தொழில் செய்யலாம் என்று நடத்துகின்றோம். ஆனால் வியாபாரம் குறைவாகிச் சந்தர்ப்பத்தில் நஷ்டம் வந்து விட்டால் லாபத்தைக் குறிக்கோளாக வைத்த நமக்கு வேதனை என்ற உணர்வு கூடவே வருகின்றது.

வேதனையை நுகர்ந்து விட்டால் சிந்தித்துச் செயல்படும் தன்மை இழக்கப்பட்டு இதை எப்படிச் சரிக்கட்டுவது…? என்ற நிலை தடுமாறச் செய்கின்றது.

அப்போது ஒரு கனமான பொருளைத் தூக்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நேரத்தில் பலவீனமான எண்ணங்களாக இருக்கும் பொழுது
2.வலுக் கொண்டு முட்டுக் கொடுத்துத் தூக்க வேண்டியதைத் தூக்க முடியாத நிலை வரும் பொழுது
3.நம் மீதே அந்தப் பொருள் விழுந்து நசுக்கி விடும்.

அந்த நேரத்தில் வலுவிழந்து அதனுடைய நிலைக்குக் கீழ் நாம் போய்விடுவோம்.

இதைப் போன்று தான் இயற்கையின் தன்மைகளில் வேதனையான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது “நல்ல வலுவின் தன்மை இழக்கப்பட்டு நம் செயலும் குன்றி விடுகின்றது…”

அப்படித் தூக்கும் நேரத்தில் வலுவிழக்கப்பட்டால் அந்தப் பொருள் கீழே விழுந்தால் சிதைந்து விடுகின்றது. இன்னும் அதிகமான கஷ்டங்களை ஏற்படுத்துகின்றது.

இது எதனால் வருகிறது…? சந்தர்ப்பத்தால் இந்த நிலை வருகின்றது.
1.வலு இழந்திருக்கின்றோம்… அதிலிருந்து சிறிது விலகி நிற்போம்.
2.வலு உள்ளவர்களைத் தூக்கச் சொல்லலாம் என்று ஆள்களை அனுப்புகின்றோமா என்றால் இல்லை.

அதை நாம் தூக்கி விடுவோம் என்ற ஆர்வ துடிப்புடன் செய்கின்றோம். அடுத்தவர்களை உதவிக்குக் கூப்பிடுவதில்லை. அப்படித் தூக்கப்படும் பொழுது…
1.”சிந்தனை இல்லாதபடி” அடுத்தவர்களை எதற்குக் கூப்பிட வேண்டும்…?
2.நாமே ஏன் தூக்கக் கூடாது…? என்ற இந்தக் கௌரவப் பிரச்னை வந்து விடுகின்றது.
3.ஆக அப்போது அந்தப் பொருளை நாசமாக்கும் நிலை வருகின்றது… நமது உயர்ந்த பலனும் குறையத் தொடங்குகிறது.

அடுத்து நம்முடைய எண்ணங்கள் மிகவும் பலவீனம் அடைகின்றது.

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் உயிரிலே பட்டு உணர்ச்சிகள் ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நாம் எந்தத் தொழிலை வலுவாகச் செய்வோம்…?

சந்தர்ப்பங்கள் இவ்வாறு நம்மைப் பலவீனப்படுத்துகின்றது. அதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கிறோம்…?

ஒரு நோயாளியைப் பற்றிப் பரிவுடன் கேட்டறிகிறோம். அந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. நோயினால் உண்டான வேதனை மிகவும் வலுக் கொண்டது. அது நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

அடிக்கடி அந்த வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது இந்த வித்தின் தன்மை அதற்குண்டான உணர்வினைக் கலக்கச் செய்து இந்த உணர்வுக்கொப்ப நம் உடலில் (ஒரு செடி வளர்வது போல) இந்த உணர்ச்சிகள் உடல்களில் அது பரவுகின்றது.
1.அப்படிப் பரவும் பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் மாற்றும் தன்மை வருகின்றது.
2.காரணம்… அந்த வேதனை தன் இனமான வித்தாக உடலுக்குள் மாற்றுகின்றது.

உதாரணமாக… வயலில் நல்ல பயிர்களை நடுகிறோம். அதிலே களைகள் முளைக்கப்படும் பொழுது நல்ல பயிர்களுக்குச் செல்லும் சத்தினை இது கவர்ந்து தாவர இனங்கள் விஷத்தன்மையாக மாற்றி நல்ல பயிரினங்களை வாழ விடாது அதனுடைய பலனைக் குறைத்து விடுகின்றது.

இதைப் போலத் தான் வேதனை என்ற உணர்வு ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி விட்டால் வினைக்கு நாயகனாக அதன் உணர்ச்சியின் வேகங்கள் கூடி நம் ரத்தங்களிலே கலக்கச் செய்து… ரத்த ஓட்டம் எங்கே செல்கின்றதோ மற்ற நல்ல அணுக்கள் அதை ஏற்க மறுக்கப்படும் பொழுது போர் முறை வருகின்றது.

அப்படிப் போர் முறை வரப்படும் பொழுது ரத்தம் எங்கெங்கே செல்கின்றதோ
1.நல்ல அணுக்களின் பக்கம் சென்ற பின் அது ஏற்க மறுக்கும் பொழுது பளீர்… பளீர்,,, என்று உடலுக்குள் ஒரு பக்கத்தில் மின்னல் ஆகும்.
2.அந்த மின்னலாகும் பொழுது கடினமான சாமானைத் தூக்கினால் உடலில் இடுப்பு பிடித்துக் கொள்ளும்.
3.கையில் தூக்கப்படும் பொழுது முடியாத நிலை ஆனால் கையிலே சுளுக்குப் பிடித்துக் கொள்ளும்.
4.அல்லது வலுவான நிலையில் தூக்கப்படும் பொழுது நரம்பு மண்டலங்கள் பிசகி விடுகின்றது.

இப்படி எத்தனையோ தொல்லைகள் வருகிறது. ஆனால் தவறு செய்யவில்லை.

ஆக நாம் நுகரும் உணர்வுகள் உணர்ச்சிகள் நம்மை என்னவெல்லாம் செய்கின்றது என்று அறிந்து நாம் அதைத் திருத்தி அமைக்க வேண்டும் அல்லவா…! இதிலிருந்து தப்ப வேண்டும் அல்லவா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் மன வலிமையை நாம் எப்படிக் கொண்டு வருதல் வேண்டும்…?
1.அருளைப் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற மன வலிமை பெற்றால்
2.சிந்தித்துச் செயல்படும் வலிமையாக இயக்கச் செய்யும்.
3.நம்மைக் காக்கும் உணர்வுகளும் வளரும்.

திரும்பத் திரும்ப இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை நினைவு கொண்டால் சிந்தித்துச் செயல்படும் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்.

உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர
1.“நான் காப்பாற்றுவேன்…” என்று எண்ணத்தை நீங்கள் எண்ணினால்
2.தனக்குள் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும் தகுதியை நீங்கள் இழந்து விடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடும் விளைவுகள் வருகின்றது. இந்த விளைவில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

உங்களுக்கு உபதேசித்த உணர்வின்படி அருளை நீங்கள் பெருக்கிக் கொண்டால் தீமை நீக்கும் சக்தி பெறுகின்றீர்கள் அதைப் பெருக்கக் கூடிய ஞானம் உங்களுக்கு வர வேண்டும்.

அந்த ஞானம் உங்களுக்குள் வரவேண்டும் என்றால் இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களுக்குள் அந்த அருள் உணர்ச்சிகளைத் தூண்டி உங்களை அதன் வழியில் சுவாசிக்கச் செய்கின்றோம்.
1.சுவாசிக்கும் பொழுது உங்கள் இரத்தங்களில் புது விதமான உணர்ச்சிகளின் ஓட்டங்கள் இருக்கும்
2.அந்த உணர்வுகள் பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அத்தகைய கருத் தன்மை உங்கள் இரத்தத்தில் உருப்பெறுகின்றது

இதை வளர்த்துக் கொண்டே வந்தால் அந்த அருள் ஞானத்தைக் கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.

அத்தகைய அணுக்கள் உடலில் உருவாகி விட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரும் போது உயிரில் படுகின்றது… சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது… நல்ல உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றது. நல்ல அணுக்கள் உங்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது… அருளைப் பெருக்குகின்றது… அருள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது.

1.இந்த உடலுக்குப் பின் அந்த ஞானியின் அருள் வட்டத்திலே செல்கின்றோம்
2.”எந்த ஞானி இருளை நீக்கினானோ” அவன் ஈர்ப்பு வட்டத்திற்கு… துருவ நட்சத்திரத்துடன் நாம் செல்ல முடிகின்றது.

இது தான் நமது கடைசி எல்லை. உயிர் ஒளியானது… அந்த உயிரோடு ஒன்றி ஒளியின் தன்மை நாம் பெற வேண்டும்

ஆனால் நான் (ஞானகுரு) சாமியாராக இருக்கின்றேன்… உங்களைக் காப்பாற்றுவேன்…! என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தப்பு.
1.சாமி சொன்ன உணர்வின் தன்மையைப் பெற்றால்
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மைக் காக்கும் என்று எண்ணினால் அது தான் சரி.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களில் எல்லா வகையான தீமைகளிலிருந்தும் தப்பிக்கும் உணர்வு பெற்று இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.

உயிர் மனித உடலை உருவாக்கிய பின் பல கோடித் தீமைகளையும் வென்று உணர்வை ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்ததை உங்களுக்குள் பதிவாக்கி நினைவாக்கும்படி செய்கின்றேன்
2.உங்களைக் காக்க அந்த அருள் ஞானம் கிடைக்கும்.
3.இருளை நீக்கிடும் ஞானிகளாக நீங்கள் உருவாக முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காடு மேடு மலைகள் எல்லாம் அலையச் செய்து சில உணர்வுகளைச் சந்தர்ப்பவசத்தால் நுகரும் பொழுது
1.உன் உடலுக்குள் மாறுபாடான உணர்வுகள் எப்படி எல்லாம் வருகின்றது…?
2.பயத்தின் எல்லை கடந்த நிலை செல்லும் பொழுது எப்படி இயக்குகின்றது…?
3.உன் உடலிலே பதட்டம் எப்படிக் கூடுகின்றது…?
4.உன் சிந்தனைகள் எப்படிச் சிதறுகின்றது…?
4.உன் உடலிலே எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றது…?
5.அதனால் உடலுக்குள் இரத்த அழுத்தங்கள் எப்படிக் கூடுகின்றது…? என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் பெற்ற அனுபவத்தைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு). விளையாட்டுக்காக நான் பேச வரவில்லை.

குரு வழியில் அந்த உயர்ந்த உணர்வுகளைக் கொஞ்சம் நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் உயர்ந்த சிந்தனைகள் உங்களுக்கு வரும். நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்ற நிலைகளை நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு ஒரு நல்ல வழியாக உருவாகும்.

ஏனென்றால்
1.அந்த ஞானத்தை யாம் புகட்டும் போது அதன் வழியில் வாழ்க்கையை நீங்கள் வழி அமைத்தால்
2.தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.
3.அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

எனக்கு குருநாதர் எப்படி இந்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்தாரோ அதே வழியில் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து நீங்கள் இதைப் பதிவு செய்ய வேண்டும்.

சாமி எதை எதையோ சொல்கின்றார்… என்னால் சகிக்க முடியவில்லை… அறுவைக் கேஸ் என்று கூட நினைப்பவர்கள் பலர் உண்டு.

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம்…! கண்கள் கொண்டு கூர்மையாக சாமி என்ன சொல்கின்றார் என்று உற்றுப் பார்த்தால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகளை யாம் அழைத்துச் செல்லும் பொழுது
2.இந்த கணக்கின் பிரகாரம் உங்கள் உடலில் அந்த உணர்வின் தன்மை வலிமையாகி
3.அதன்படி உங்களை வாழச் செய்து தீமையிலிருந்து விடுபடும் சக்தி உங்களுக்குள் பெருக்க முடியும்

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நமது பூமியின் துருவப் பகுதியின் எல்லையிலே இது அதிகமாகின்றது.
1.துருவத்தின் வழி பூமி அதை இழுக்கிறது… இழுத்துத் துருவத்தின் பகுதியில் அடர்த்தி அதிகமாகின்றது.
2.இந்த நேரம் பார்த்து துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வைச் சுவாசித்து
3.நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு கணங்களுக்கு அதை அதிபதியாக வேண்டும் – அந்த உயர்ந்த குணங்களை.

நந்தீஸ்வரன்… நாம் சுவாசித்த உணர்வு அதன் இயக்கமாகத் தீமைகளை நீக்கிடும் சக்தியாக நமக்குள் உருவாக்குகின்றது. அடிக்கடி இதை எடுத்தால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை… தீமையை நீக்கும் அந்தக் கணக்கின்படி “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிற்கு நாம் செல்கின்றோம்…”


கண் கருவிழிக்குள் இருக்கும் லென்ஸ் பற்றிய பேருண்மை

 

உதாரணமாக… ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டான் என்றால் அதிலே பொருள் அறிதல் வேண்டும்.

காரணம்… பாசத்தால் அவருடைய துயரைக் கேட்டறிந்தோம். கேட்டறிந்த உணர்வுகள் அந்த நோயின் வலிமை நம் நல்ல குணத்தைச் செயலற்றதாக மாற்றி உடலுக்குள் அதே பலவீனமான நிலைகள் வருகிறது என்று இந்தப் பொருளை நாம் அறிதல் வேண்டும்.

தெய்வம் நல்லதைச் செய்யும் என்று ஆலயத்தில் வரப்படும் பொழுது
1.அந்தத் தெய்வ குணத்தைக் காட்டுவதற்காகத் தீப ஆராதனை காட்டப்படுகின்றது.
2.அவ்வாறு காட்டப்படும் பொழுது தெய்வமும் தெரிகின்றது.
3.தெய்வத்திற்குக் கனி வைத்திருப்பதும் மலர் மாலைகளைச் சூட்டியிருப்பதும் தெரிய வருகின்றது.
4.தெய்வத்தின் மேல் வைர கிரீடம் வைத்திருப்பதும் தெரிகின்றது.

ஆக… பொருளை அறியக்கூடிய தன்மை அந்த வெளிச்சத்தினால் வருகின்றது.

1.நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது அங்கிருக்கும் நல்ல நறுமணங்களும் நல்ல மணங்களும் பார்க்க அல்லது நுகர முடிகின்றது.
2.ஆனால் வேதனை என்று வந்துவிட்டால் குடும்பத்தில் ஒரு நல்ல பொருளைப் பார்த்துச் சந்தோஷப்படுகின்றோமா…?
3.நல்ல குணம் கொண்ட நம் பையனைப் பார்த்தால் சந்தோஷம் வருகின்றதா…? இல்லை…!

நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ கண் வழி தான் பாய்ச்சுகின்றோம். கண் வழி பாய்ச்சப்படும் பொழுது ஒரு கண்ணாடியில் எந்தக் கலரின் தன்மை போடுகின்றோமோ அதன் வழி தான் முன்னாடி இருக்கக்கூடிய பொருள் தெரிய வரும்.

எக்குகுணத்தை எண்ணி எடுக்கின்றோமோ
1.நம் கருவிழிக்குள் கண்ணாடி என்ற ஒரு பொருள் உண்டு.
2.அந்தந்த உணர்வுக்கொப்பக் கலர்கள் மாறும்… இந்த உணர்ச்சிகள் மாறும்.
3.அதைப் போன்று தான் நாம் அறிந்திடும் தன்மை வருகின்றது… இயற்கையின் நியதிகள் இது.

அதாவது எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அதற்குத் தக்க தான் எண்ணங்கள் வருகின்றது.

கோவிலில் தீபாராதனை கொடுக்கப்படும் பொழுது…
1.வீட்டில் நம் பையன் இப்படிச் செய்கின்றானே என்று வேதனைகளை எண்ணினால்
2.இந்த இருள் சூழ்ந்த நிலையே கண் பார்வையில் தெரிய வரும்.

அங்கிருக்கும் பொருளைக் காண முடியுமா…? நல்லதைச் சொன்னால் கேட்க முடியுமா…? என்றால் முடியாது. அந்த விஷத்தின் தன்மை கரு விழியிலே படப்படும் பொழுது அழுகையும் வேதனையும் வருகின்றது.

நான் தெய்வத்தை வழிபட்டேனே… எல்லோருக்கும் நன்மை செய்தேனே எனக்கு ஏன் இந்தத் தொல்லைகள் வருகின்றது…? என்ற இந்த உணர்வு தான் வரும்.

இந்த உணர்வை ஏற்றுக் கொண்ட பின் கருவிழியின் தன்மைகள் அந்தச் சிலையின் ரூபத்தையோ அங்கே அலங்காரமாகப் போடப்பட்டுள்ள மலர்களையோ ஆபரணங்களையோ வைரக்கல்களையோ ரசிக்காது… ரசிக்க விடாது. வேதனை என்ற உணர்வே மீண்டும் வரும்.

1.இருளில் நாம் பார்த்தால் பொருளின் ரூபத்தைக் காண முடியாது…
2.ஒளி கொண்டு தான் பார்க்க முடியும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஆலயப் பண்புகளாக அங்கே வெளிச்சத்தைத் தான் காட்டுகின்றனர். அதனால் பொருட்கள் தெரிகின்றது… அப்பொழுது
1.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
2.நாம் சுவாசித்த உணர்வு கண்ணில் இந்த உணர்ச்சிகள் படப்படும் பொழுது இந்த வெளிச்சத்தின் உணர்வு நமக்குள் வருகின்றது.
3.அப்பொழுது தெளிந்த மனம் வருகின்றது.

அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்….?

இந்த ஆலயம் வருபவர்கள் எல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ண வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதரும் நானும் (ஞானகுரு) பழனிக்குப் போவதற்காகப் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகிலே வந்து கொண்டிருந்தோம். அப்போது குருநாதர் என்ன செய்தார் தெரியுமா…?

ஒரு பஸ் வேகமாக வந்து கொண்டிருக்கின்றது.
1.திருப்பத்திலே (CORNER) அது திரும்பும் பொழுது குறுக்கே புகுந்தால் எப்படி இருக்கும்…?
2.என்ன பண்ண முடியும்…?

நாங்கள் இரண்டு பேருமே பஸ்ஸின் குறுக்கே புகுந்தோம். ஆனால் இவருடைய சக்தியால் பிரேக் போட வைத்து விடுகின்றார்… டிரைவரும் பிரேக் இடுகின்றான்… வண்டி நின்று விடுகின்றது.

அடுத்தாற்போல் அந்த டிரைவர் என்ன சொல்கிறார்…? யோவ்…! கிழட்டுக்… என்று கெட்ட வார்த்தையாகச் சொல்லி குருநாதரைத் திட்டுகின்றார்.

நீ வயசுப் பையனாக இருக்கின்றாய்… கிழவனுக்குத் தான் புத்தி இல்லை நீயாவது புத்தி சொல்லலாம் அல்லவா…! என்று டிரைவர் என்னையும் திட்டுகின்றான்.

கொச்சை வார்த்தைகளில் குருநாதரும் டிரைவரும் மாறி மாறிப் பேசுகின்றார்கள்… ஒருவரை ஒருவர் திட்டுகின்றார்கள்.

பாருடா…! டிரைவர் என்னை எப்படித் திட்டுகின்றான் என்று…! குருநாதர் சொல்கின்றார்.

அந்தத் திட்டும் உணர்வுகள் “நாம் செய்தது தப்பு” என்று தெரிகின்றது. ஆனால் டிரைவர் அசிங்கமாகத் திட்டும் பொழுது மட்டும் ரோஷம் வருகின்றது. இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

1.நாம் செய்தது தப்பு… இருந்தாலும் கௌரவப் பிரச்சினை…!
2.பஸ்ஸில் இருக்கும் அத்தனை பேர் முன்னாடி கேவலமாகப் பேசுகின்றான் என்ற நிலையில்
3.“என்னய்யா செய்ய வேண்டும் என்று சொல்கின்றாய்…?” என்று நானும் கோபமாக டிரைவரிடம் பேசுகின்றேன்.

டிரைவர் அதற்குப்பின் பஸ்ஸை ஸ்டார்ட் செய்கின்றான். வண்டி நகரவில்லை… நகர மாட்டேன்…! என்கிறது.

என் புத்தியைப் பார்த்தாய் அல்லவா… அவனை வண்டி எடுக்க விடாமல் நான் நிறுத்தி விட்டேன் அல்லவா. உன் புத்தி என்ன செய்கின்றது…? அவனை உதைக்க வேண்டும் என்று விரும்புகின்றாய்.

என்னிடம் சக்தி இருக்கின்றது என் புத்தியில் அவனை நிறுத்துகின்றேன்… நீ உன் புத்தியில் அவனை உதைக்க வேண்டும் என்று திட்டுகின்றாய். ஆனால் நாம் இரண்டு பேரும் குறுக்கே சென்றது தவறா இல்லையா…?

இதையெல்லாம் அனுபவத்தில் கொண்டு வருகின்றார் குருநாதர்.

“தப்புதான் சாமி…” என்று நான் சொல்கின்றேன். ஆனால் நான் என்ன சாமி செய்தேன்…? நான் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் தானே என்னைக் குறுக்கே இழுத்தீர்கள்…! என்று சொல்கின்றேன்.

நான் எப்பொழுதடா உன்னை இழுத்தேன்…? நீ தான்டா என்னை இழுத்தாய்…! என்று “மீண்டும் வம்பிழுக்கின்றார்… மடக்கிப் பேசுகின்றார்…”

பஸ் நகரவில்லை என்று சொன்னவுடனே அவன் ஸ்டார்ட் செய்து பார்க்கின்றான் முடியவில்லை. குருநாதர் சிரிக்கின்றார்.

என்னைத் திட்டினான்… அதனால் என் சக்தியால் வண்டியை நிறுத்தி விட்டேன். அதே போன்று நீயும் இன்னொரு வண்டியை நிறுத்துகின்றாயா…? என்று என்னிடம் கேட்கின்றார். நீ இன்னொரு பஸ்சுக்கு முன்னாடி போடா…! பஸ் நிற்கின்றதா இல்லையா பார்க்கலாம்…! என்கிறார்.

“என்னைக் கட்டாயப்படுத்தி” இன்னொரு பஸ்சுக்கு முன் குறுக்கே போகும்படி தள்ளுகின்றார். அடுத்த பஸ்ஸுக்குக் குறுக்கே நான் சென்றதும் அதுவும் நின்று விட்டது. அதுவும் நகர மாட்டேன் என்கிறது.

இப்படிச் செய்துவிட்டார் குருநாதர். நீ எப்படிடா அதைச் செய்தாய்…? என்று என்னிடம் கேட்கின்றார். “அவரே செய்துவிட்டு என்னை இப்படிக் கேட்கின்றார்…”

வண்டியை எடுக்க முடியாது… ஓட்ட முடியாது…! நீ அவனிடம் சொல் என்று சொல்கின்றார். சொன்ன பின் அந்த வண்டியும் ஓடவில்லை.

வண்டி ஓடவில்லை என்ற உடனே… அந்த இரண்டு டிரைவரும் இது என்னடா…? இரண்டு கிரகங்களும் சேர்ந்து கொண்டு ஏதோ மந்திர வேலை செய்கின்றார்கள்… வண்டி நகரவில்லை என்று பயப்படுகின்றனர்…!

ஒரு பக்கம் எனக்கு பஸ்ஸை நிறுத்தி விட்டோம் என்று சந்தோஷம் வருகிறது. இன்னொரு பக்கம் அவர்கள் இருவருமே திட்டுகின்றார்கள். ஏதோ மந்திர தந்திரங்கள் செய்து பாவிகள் நம்மை வேதனைப்படுத்துகின்றார்கள் என்று திட்டுகின்றார்கள்.

காதிலே அதுவெல்லாம் கேட்கின்றது.

சந்தோஷமாக வரும் பொழுது இப்படி வருகின்றது ஆனால் அவர்கள் திட்டும் பொழுது அதைக் காதிலே கேட்ட பின் அவர்கள் கை கால் வராதபடி செய்தால் என்ன…? என்ற வேகம் எனக்கு வருகிறது.

நாம் செய்தது தப்பு…! ஆனாலும் அவர்களைக் கை கால் வராதபடி நாம் செய்தால் என்ன…? என்று எனக்கு இந்த உணர்வு வருகின்றது.

அப்போதுதான் என்னிடம் கேட்கின்றார் குருநாதர். ஏண்டா…? தப்பு நீ செய்கின்றாய் ஆனால் உன்னுடைய எண்ணம் எப்படிப் போகின்றது பார்…! இப்படி ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் உணர்ச்சிகள் எப்படி ஓடுகின்றது…?

1.தன் உடலைக் காக்க… கௌரவத்தைக் காக்க
2.இந்த உணர்வின் எண்ணங்கள் தவறைத் தயங்காதபடி செய்யச் சொல்கின்றது.

இதே உணர்வின் தன்மை உன் உடலில் ஏற்பட்டால் அவர்கள் இடும் சாப அலைகள் சாதாரணமானதல்ல.

அவன் படும் வேதனை உணர்வுகள் அவனில் விளைந்தது உன் செவிகளில் பட்டு இப்படிப் பேசுகின்றானே என்று வேகமாகத் தாக்குகின்றது உன்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது… கலந்தது அணுக்களாக விளைகின்றது.

1.இன்று உனக்குத் தெரியாது… ஆனால் அடுத்து என்ன ஆகும் தெரியுமா…? என்று
2.இந்த உணர்ச்சியின் போர் முறைகள் உள்ளுக்குள் கலக்கங்கள் ஏற்படுவதை அப்படியே உணர்த்துகின்றார்
3.இன்றைய செயல் நாளை என்ன ஆகும்…?
4.உடலுக்குள் நல்ல அணுக்களுக்கும் நுகர்ந்த அணுக்களுக்கும் போராட்டங்கள் ஆகி
5.உன் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அது பலவீனம் அடையப்படும் பொழுது
6.மூச்சு இழுக்கின்றது… திணறலாகின்றது… நடக்க முடியவில்லை… ஓட முடியவில்லை… வேலை செய்ய முடியவில்லை… என்று
7.இத்தனை நிலையும் உனக்குள் நாளை வரும் என்று சொல்கின்றார்…
8.அங்கே அப்படியே காட்டுகின்றார்.

இது எதனால் வருகின்றது…?

நீ தவறு செய்தாயா…? அவன் தவறு செய்தானா…? இந்தச் சந்தர்ப்பம் உன்னைத் தவறு செய்யும்படி நான் தூண்டினேன். அதன் உணர்வின் தன்மை இவ்வாறு ஆகிவிட்டது.

இப்படி வரும் பொழுது அவருடைய நிலை என்ன ஆகிறது…? நம்முடைய சந்தர்ப்பங்கள் பின் விளைவு என்னென்ன ஆகிறது…? இதற்கு நான்கு மணி நேரம் உபதேசங்களைக் கொடுக்கின்றார் குருநாதர்.

பதட்டமும் பயமும் எனக்குள் வருகின்றது.
1.தான் பேசியது சரியா இல்லையா என்று
2.உள் மனதில் இப்படி வினாக்கள் தூண்டும்படி உணர்த்திக் காட்டுகின்றார்.

ஏன் இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன்…? என்றால் நாம் நல்லதைத் தான் செய்து கொண்டிருப்போம். திடீரென்று ஏதாவது ஒன்று வந்துவிடும்.

நாம் தவறு செய்திருப்போம் ஆனால் நாம் தப்பிப்பதற்காக அடுத்தவனைக் குற்றவாளி ஆக்குவதற்கு என்ன வேலையோ அதை எல்லாம் செய்வோம்.
1.அடுத்தவனைக் குற்றவாளி ஆக்கத் தான் பார்ப்போமே தவிர
2.நாம் தவறு செய்தோம் என்பதை உணர முடிவதில்லை.

ஆக “சக்தி இருக்கிறது…” என்றால் அதை வைத்து நீ அடுத்தவர்களுக்குத் தப்பு செய்யத்தான் முடியுமே தவிர நல்லதை உன்னால் உருவாக்க முடியாமல் போகின்றது…! என்று அங்கே உணர்த்திக் காட்டுகிறார்.

இந்த உடலைக் காக்க உணர்வின் தன்மை ஆனால் தவறை நீக்கி அவன் நல்வழி வரவேண்டும் என்று…
1.தான் தவறு செய்து விட்டோம் என்ற இந்த உணர்வை மாற்றி
2.என்னை அறியாத நிலைகள் இருந்து விடுபட வேண்டும்.
3.அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணினால் நமக்குள் வளரும் தீமையை முதலில் தடுக்கலாம்.

“சாதாரண மனிதனாக இருந்தால்…” இது முடியாது.

நல்ல நிலைகளை உருவாக்க வேண்டும் என்றால் தியானத்தின் வழிகளில் வரப்படும் போது இது போன்ற சந்தர்ப்பம் நிகழ்ந்தால் ஒருவனுக்குத் தொல்லை கொடுக்கவோ… பிறரை இம்சிக்கவோ அல்லது இது போன்ற மற்ற உணர்வுகள் தோன்றினால் அதை எதைக் கொண்டு அடக்க வேண்டும்…?

அங்குசபாசவா…! துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த நஞ்சை வென்ற உணர்வுகளை வைத்துத்தான் அடக்க வேண்டும். இப்படித்தான் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் நமக்குள் வரும் தீய விளைவுகளையும் நம்மை அறியாத உடலில் ஆட்டிப்படைக்கும் நோய்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.
1.பண்பு உள்ளவர்களாகவும் நாம் மாற முடியும்
2.பிறரைக் காத்திடும் சக்தி பெற்றவர்களாகவும் வாழ முடியும்.