தினசரி உபதேசம்

முழுமுச்சாக நாம் செய்ய வேண்டியது…!

 

வாழ்க்கையிலே வரக்கூடிய குறைபாடுகளையோ மற்ற தீமைகளையோ வேதனைகளையோ கேட்க நேர்ந்தால் நுகர நேர்ந்தால் அது நம் உடலுக்குள் வராதபடி தடுக்க… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் என்று நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அதற்குப் பின்
1.”எது நல்லவையோ அது நடக்க வேண்டும்…” என்று எண்ணத்தை நாம் செலுத்த வேண்டும்
2.அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

இந்த வழியில் நாம் வாழ்ந்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்.

உலகெங்கிலும் எத்தனையோ கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்… நம் பூமி மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சமே உருமாறும் நிலை இருக்கின்றது… கடும் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டும் என்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தை மேற்கொண்டு
1.அவர் கொடுக்கும் உபாயங்களை நாம் கடைப்பிடித்து
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லை என்ற நிலை அடைய
3.அதை முழுமூச்சாக நாம் செயல்படுத்த வேண்டும்.

கடலில் படகை ஓட்டிச் சென்றோம் என்றால் அதிலே அலைகள் எதிர்த்து வரும் பொழுது அதைப் பிளந்து நாம் செல்ல வேண்டிய எல்லையை அடைகின்றோம்.

அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரம் தான் நமது எல்லை என்று முடிவுகட்டி இந்த வாழ்க்கையில் எத்தனை விதமான சங்கடமோ சலிப்போ வெறுப்போ அல்லது பாசத்தால் வரக்கூடிய உணர்வுகளோ வந்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று வரும் அலைகளைப் பிளந்திடல் வேண்டும்.

நமது எல்லையான துருவ நட்சத்திரத்தை அடையக்கூடிய சக்தியாக… வாழ்க்கை என்ற ஓடத்தைச் சீர்படுத்தி வாழ வேண்டும்.

காட்டிற்குள் சென்று தவம் இருந்து அந்தச் சக்தியைப் பெறுவதல்ல. இந்த நாட்டுக்குள் வாழும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற வேண்டும். “இது தான் உண்மையான தவம்…”

அந்த தவத்தை நாம் எடுத்துக் கொண்டால் துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் வலுப்பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கும் வல்லமையும் பெறுகின்றோம்.

இன்று வாழ்வது கனவு தான்…! நிலைத்தது அல்ல…!

நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!

நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!
1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,

அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான்…! ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”

கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.

நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி… பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.

இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.

இதிலிருந்து விடுபட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் கற்ற கல்வி இந்த உடலுக்கல்ல. நாம் எதைக் கற்றாலும் உலகை அறிந்து கொள்ள உதவும்… இந்த ஆறாவது அறிவு அல்ல…! மெய் ஞானத்தின் உணர்வு கொண்டு தான் கற்ற கல்வியையும் சீராக்க முடியும்.

தேடிய செல்வம் சிறிதாக இருப்பினும் அதைப் பக்குவத்துடன் காத்து… பகைமை உணர்வு உடலுக்குள் சேராது அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வளர்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

1.ஆக… வெறும் கல்வி என்பது ஏட்டுச் சுரைக்காய் தான்.
2.கல்வி கற்றாலும் இந்த மெய் ஞானத்துடன் ஒன்றி மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலை வேண்டும்.

மனித உடலை உருவாக்கியது உயிர் தான். மனிதான பின் ஆறாவது அறிவை உருவாக்கியதும் உயிர் தான். இந்த ஆறாவது அறிவின் தன்மையால் தான் உயிரைப் போல் உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக நாம் வளர்க்கும் நிலை பெற முடியும்.

ஆகவே இதை நாம் சீராகப் பயன்படுத்துவோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் ஏங்கித் தியானியுங்கள்.

குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெற வேண்டும்,.. குழந்தைகள் ஞானிகளாக வளர வேண்டும்… விவசாயம் செழிக்க வேண்டும்… வியாபாரம் பெருகி எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் நலம் பெறவேண்டும்…! என்று நீங்கள் இப்படித் தியானித்துப் பாருங்கள்.

1.அமர்ந்த இடத்தில் வீட்டிலிருந்தே இவ்வாறு தியானித்து எல்லா இடங்களுக்கும் அந்த அருள் சக்திகளைப் பரவச் செய்ய முடியும்…
2.அந்த அலைகள் அங்கே படரும்
3.அதை நுகரும் மற்றவர்களுக்கும் சிந்திக்கும் ஆற்றல் வரும்.
4.உங்கள் வாழ்க்கையை உயர்த்தவும் முடியும்.
5.இருளை அகற்றும் நிலையும் பண்படும் உணர்வுகளும் நமக்குள் ஒன்றுபட்டு வாழும் அணுக்களும் நம் உடலில் வளரும்.

ஆகவே… இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நடசத்திரத்துடன் இணைந்து வாழ முடியும் என்ற இந்த நம்பிக்கையுடன் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.

1.எந்த நிமிடம்… எந்த நிலைகள்… எதுவாக இருந்தாலும்… உடலை விட்டு உயிர் சென்றால்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குத் தான் நாம் செல்ல வேண்டும்.

மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டியிருக்கும்.

ஆகவே அதிலிருந்து விடுபட்டு அருள் உணர்வைப் பெருக்கி அருள் வாழ்க்கை வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு பெற்று என்றுமே ஏகாந்த நிலையை அடைந்திட “எம்முடைய அருளாசிகள் (ஞானகுரு) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்….”

கோடீஸ்வரன்

 

நாம் எத்தனையோ கோடித் தவறுகளைப் பார்த்தாலும் அந்தந்த சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உடலுக்குள் உள் செலுத்தித் தூய்மைப்படுத்தி இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதற்குத்தான் இராமேஸ்வரத்தைக் காட்டினார்கள். நாம் பல கோடி உடல்களில் மற்றொன்றைக் கொன்று தின்று இன்று மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் கோடிக்கரையாக வந்திருக்கின்றோம்… தனுசு கோடி.

தீமை என்று தெரிந்த பின்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத் தாக்கி அதனின் வலுவை இழக்கச் செய்ய வேண்டும். அதுதான் விஷ்ணு தனுசு.
2.உயிரைப் போன்றே உணர்வின் அணுக்களை ஒளியாக உருவாக்குதல் வேண்டும்.
3.எத்தனை கோடி விதமான உணவுகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும் அத்தனையும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஏனென்றால் கோடிக்கணக்கான (எண்ணிலடங்காத) உணர்வுகளையும் ஒளியாக மாற்றி அமைத்தது அந்தத் துருவ நட்சத்திரம். அதன் உணர்வை அவ்வப்பொழுது நமக்குள் எடுத்துத் தீமைகளை நீக்குதல் வேண்டும்.

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லும் பொழுது ஒருவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்
1.உள்முகமாக இந்த உணர்வின் வலுவை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.வேதனைப்படும் உணர்வு நமக்குள் வலுவாகச் சேர்வதற்கு முன் அதைத் தடுத்து நிறுத்திவிட்டு
2.வேதனைப்படுபவனுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிடைக்க வேண்டும்
3.அவன் அவன் நலமாக வேண்டும் என்று எண்ணிச் சொல்லிவிட வேண்டும்.

அவன் உணர்வு நமக்குள் வராது…!

அதே போன்று இரண்டு பேர் கொடூரமாகத் தவறு செய்கின்றார்கள். சண்டையிடுகின்றார்கள். அதைப் பார்த்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்ட வேண்டும். அவர்களுடைய தவறுகள் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்… அந்த உணர்வுகள் உள் புகுவதில்லை.

1.பின் அந்த உணர்வை ஈர்க்காது ஒதுக்கிவிட்டு
2.அவர்கள் இருவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் பண்புடன் வாழும் தன்மையும் பெற வேண்டும் என்று
3.நாம் விலகி விட வேண்டும்… அந்தத் தீமை நமக்குள் விளையாது.

ஏனென்றால் தவறு செய்கின்றார்கள் என்றால் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது கேட்காமல் இருக்க முடியாது.

ரோட்டிலே செல்லும் போது ஒரு வாகனம் வேகமாக வருகிறது என்றால் பார்த்தவுடனே “பயம்” என்ற நிலை வந்து விலகுகின்றோம்.

பார்க்கின்றோம்… பஸ் திடீரென்று நம் பக்கமாகத் திரும்புகின்றது. அந்த அதிர்ச்சியின் வேகத்தில் நாம் ஒதுங்கி விடுகின்றோம்.
1.அப்படி அதிர்ச்சி கொடுக்கவில்லை என்றால்
2.நாம் அங்கிருந்து விலக முடியாது.

அதிர்ச்சியை ஊட்டுவது எது…?

அதன் வேகத் தொடரை நம் கண் நுகர்ந்து உயிரிலே மோதப்படும் போது உணர்ச்சிகள் தெரிய வருகின்றது. ஆனாலும் அடுத்து அதிர்ச்சியின் தன்மை கூட்டி உடலில் பதட்டமாகி வேகமாக விலகிச் செல்ல வைக்கின்றது.

விலகிச் சென்றாலும் அதிர்ச்சியின் உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சேர்ந்து விட்டால் அடிக்கடி பய உணர்வும் மற்ற நிலைகளும் ஏற்பட நேர்கின்றது.

பயம் அதிகமானால் சிந்திக்கும் தன்மை கூட சில நேரங்களில் முடியாது போய் விடுகின்றது. இப்படி…
1.நம் சந்தர்ப்பம் நாம் நுகர்ந்த நிலைகள் நம் இரத்தங்களிலே மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது.
2.சந்தர்ப்பத்தில் தப்பினாலும் அடுத்த கணமே… ஈஸ்வரா என்று
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அந்த அதிர்ச்சியின் உணர்வைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

இப்படி வாழ்க்கையில் எத்தனையோ விதமான உணர்வுகள் நமக்குள் வரும்…! அதை அதை அவ்வப்பொழுது தடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து மாற்றிக் கொண்டே வந்தோம் என்றால் அதுதான் “தனுசு கோடி…”

ஆகவே… உயிரின் தன்மை ஒளியாக்கிய அந்த உணர்வை… அந்தந்த நேரத்தில் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் தீமை சேராதபடி தடுத்து நிறுத்துகின்றோம்.

உடலில் விளைந்த அந்த உணர்வுகள் கொண்டு
1.“இந்த உயிர்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டதால் நேராக நம்மை அங்கேயே அழைத்துச் செல்கின்றது.
2.தொக்கிய உணர்வின் அணுக்களை அங்கே தூய்மைப்படுத்தி விடுகிறது

அப்போது ஏகாந்தமாக… எத்தகைய எதிர்ப்பும் இல்லாது என்றும் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்…!

நம்முடைய வைராக்கியம் எதிலே இருக்க வேண்டும்…?

 

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.
1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும் உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

அந்நிலை கொண்டு தான் இந்தக் கலியில் கண்ட பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகாநந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளைக் கொண்டு நாம் அதைக் காசாக்கிக் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும் ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால் அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்டிவும் முடியும்.

வளரும் முறையிலிருந்து தான் இந்நிலை எல்லாமே வருகின்றது. வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற்றிட முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.
1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்டிட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இங்கே கொடுக்கப்படும் உபதேசத்தின் மூலம் மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வின் தன்மையை நீங்கள் கேட்டறிகின்றீர்கள். கூர்ந்து கவனித்தால் இது உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

ஆக… விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும்…
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை
2.உங்கள் கண்கள் மூலம் நுகர்ந்தெடுக்கும் அந்த உணர்வின் சக்தியாக
3.உங்கள் கண்களை ஆற்றல்மிக்க உணர்வின் ஈர்ப்பு சக்தியாக வளர்க்கச் செய்வதற்குத்தான் இதை உபதேசிப்பது.

இந்த உபதேசத்தை நீங்கள் எந்த அளவுக்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ பதிவாக்குகின்றீர்களோ… அதனின் ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.

அப்படிப் பெருகச் செய்து உங்கள் எண்ணத்தால் விண்ணை நோக்கி ஏகும் பொழுது… அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் அலைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் எளிதில் சுவாசிக்க முடியும். அதன் மூலம் உங்களை அறியாது வந்த தீய வினைகளைத் துடைத்திட முடியும்.

மனிதர்களுக்குள் பழகிய நிலைகள் கொண்டு பத்திரிக்கை வாயிலாகப் படிக்கப்படும் போது ஒவ்வொரு நாளும் எங்கெங்கோ நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டறிகின்றோம்.

நம் எண்ணத்தை அதிலே கூர்ந்து செலுத்தி விட்டால்…
1.எங்கோ விபத்தான நிலைகள் அதனின் உணர்வின் நிலைகளைப் படித்தறியப்படும் போது
2.அதிர்ச்சி… பயம்… வேதனை… இது போன்ற உணர்வுகள் உடலிலே விளைந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள என்று நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கிவிடுகின்றது.

இதுகள் எல்லாம்…
1.சாதாரண ஆண்டென்னாவை உபயோகப்படுத்துவது போல் தான்
2.எதைப் பத்திரிக்கையில் படித்தோமோ… டி.வி.யில் பார்த்தோமோ அந்த உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவாகி
3.அதை நாம் மீண்டும் எண்ணும் போது நம் எண்ணத்தால் படித்து நுகர்ந்து விடுகின்றோம்.

ஆனாலும் நாம் படித்த… பார்த்த அந்த உணர்வலைகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.
1.மீண்டும் (தினசரி) எண்ணும் போது நமக்குள் பதிவான அதே அலைகள் காற்றிலிருந்து குவித்து நம்மை உணரச் செய்கின்றது
2.அதனின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகின்றது.
3.எந்த வேதனைப்பட்டோமோ… எப்படி ஆத்திரப்பட்டோமோ… அதுவே நமக்குள் விளையும் தருணம் வந்து விடுகின்றது
4.உடலில் விளைந்தால் கடும் நோயாக மாறும் சந்தர்ப்பமும் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்குத் தான் அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை எடுத்து இதைத் துடைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்று உபதேசிக்கின்றோம்.

1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை எல்லாம் பருகினேன்.
2.அவரைக் கூர்ந்து கவனிக்கும் போது அதனின் உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக எனக்குள் பதிவானது.
3.அவரை நினைவு கொள்ளும் போதெல்லாம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தி வாய்ந்த உணர்வுகளை நுகர்ந்து
4.அதனின் ஆற்றலை எனக்குள் பெருக்கி வளர்த்துக் கொண்டேன்.

அப்படிப் பெருக்கிய ஆற்றலின் துணை கொண்டு தான் நீங்கள் துயரப்பட்டு வரும் போது “உங்கள் துன்பங்கள் நீங்கிப் போகும்…” என்று வாக்கால் சொல்லி உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன்.

அதை மீண்டும் நீங்கள் நினைவு கூறுவீர்கள் என்றால் உங்கள் துன்பங்கள் நீங்கி மெய் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையத் தொடங்கும்.

1.ஒவ்வொரு நிமிடமும் துன்புறும் உணர்வுகளை எனக்குள் பாய்ச்சி
2.அந்தத் துன்பப்படுத்தும் உணர்வின் தன்மையை நீக்குவதற்காக
3.விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று உபதேசித்து
4.அதனின் அனுபவபூர்வமான செயலைத் தான் குருநாதர் எனக்கு ஊட்டினார்.

அந்தப் பக்குவத்தின் தன்மையைத் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

அறியாது வரும் தீமைகளை நீக்குவதற்கு “ஒரு பழக்கத்தை” ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

 

துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளி அலைகள் வரும் நேரத்தில் அதனுடன் இணைத்து உங்கள் நினைவாற்றலைச் செலுத்தப்படும் பொழுது… சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் கலந்து…
1.மீண்டும் எண்ணும் பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் பதிவாகின்றது.
2.கம்ப்யூட்டரில் எப்படி ரெக்கார்ட் செய்கின்றனரோ அதைப் போன்று பதிவினை உங்களுக்குள் கூட்டப்படும் பொழுது
3.அடுத்து… தீமை வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் உடனடியாக அந்த துருவ நட்சத்திரத்தினைப் பற்றிய சிந்தனைகள் வரும்
4.தீமைகளை அகற்றி ஒளியாக மாற்றும் சக்தியாக வளரும்.

உதாரணமாக கராத்தே விளையாடுகின்றார்கள். அந்த விளையாட்டிலே அதற்குத்தக்க தன் அங்கங்களை அசைப்பதும்… எதிராளியைக் கண்டால் தடுப்பதும்… இயக்கங்களை மாற்றுவதும்… விலகிச் செல்வதும்… இது எல்லாமே பழக்கத்தால் வருவது தான்.

அதே போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதற்குச் சந்தர்ப்பத்தினை உருவாக்கி அதனைப் பதிவாக்குகின்றோம்.
1.அந்த உணர்ச்சிகள் அவ்வப்பொழுது தூண்டப்பட்டு
2.அந்தந்த நிமிடம் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் சக்தியாக உங்களுக்குள் பெறச் செய்கின்றது.

அதற்குத் தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் யாம் உபதேசிப்பது. அதன் வாயிலாக உபாயங்களையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்… அதைப் பதிவாக்கவும் செய்கின்றோம்.

உதாரணமாக பூப்பந்து ஆடுகின்றார்கள் என்றால் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் இணைத்துப் பதிவாக்கப்படும் பொழுது
1.அந்தப் பந்து வீச்சின் தன்மையை நாம் உற்றுப் பார்க்கும் பொழுது
2.அதற்குத் தக்க அங்கங்களை அசைத்து இந்த விளையாட்டை நாம் சீராக விளையாடுகின்றோம்
3.அதில் கெட்டிக்காரராகவும் ஆகின்றார்கள்.

அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை உங்களுக்குள் இணைத்து பதிவாக்கிக் கொண்டால்
1.சந்தர்ப்பத்தில் உங்களுக்கு எத்தகைய விபத்தோ மற்ற நிலைகளோ மாறுபடும் பல தீமைகளையோ நுகர நேர்ந்தால்
2.அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் நுகர்ந்து அதை மாற்றி அமைக்கும் திறனைக் கொண்டு வர வேண்டும்.

அதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று தான் உங்களுக்குள் ரெக்கார்ட் செய்கின்றேன். “இந்தப் பதிவு” உங்களைக் காக்க வேண்டும்..

பள்ளிகளில் ஆசிரியர் கற்றுக் கொடுக்கப்படும் பொழுது முதலில் ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்று கொண்டு செல்கின்றார்கள். ஆனாலும் அடுத்தடுத்து அவர்கள் கற்பித்த நிலைகளை… அவரவர்கள் பதிவாக்கிய நிலைகளுக்குத் தக்க வளர்ச்சியில்… டாக்டருக்கோ இன்ஜினியருக்கோ மற்ற துறைகளுக்கோ அவருடைய உணர்வுக்கொப்ப தான் அவருடைய முன்னேற்றம் அமைகின்றது.

இப்படித்தான் மனிதனின் வாழ்க்கையில் இந்த உடலை வளர்க்க பல உபாயங்களைத் தேடி… செல்வங்களைத் தேடுவதற்குத் தான் மனிதன் இன்று செயல்படுகிறான்.

ஆனால் நமது குருநாதர் காட்டிய வழியில்
1.அருள் உணர்வுகளைப் பெருக்கி அருள் செல்வத்தை நமக்குள் பெருக்கி
2.அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து
3.தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டுள்ள மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து
4.என்றும் மகிழ்ந்து வாழும் நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்

அதற்குண்டான வழி முறைகளைத் தான் பதிவு செய்ய வேண்டும்.

வீணாகவும் உபயோகமற்றதாகவும் எதுவுமே இயற்கையில் இல்லை…!

 

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகாள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…! இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவு கொண்டு ரேடியோ நிலையங்களிலிருந்தும் டி.வி. நிலையங்களிலிருந்தும் ஒளி… ஒலிபரப்பு செய்கின்றனர்.

வீட்டிலிருக்கும் ஆண்டென்னா மூலம் அந்த அலைகளை நாம் கவர்ந்த பின் ரேடியோ பெட்டிக்குள் அல்லது டி.வி. பெட்டிக்குள் அது ஒவ்வொரு பாகங்களுக்கும் அது அனுப்பச் செய்கின்றது. ஒலி பெருக்கிக்கு வருகின்றது.

அங்கே அந்த அலைகள் வரும் போது அதிலே அதிகமான அழுத்தம் இருந்தல் கிர்….ர்ர்.. என்று சப்தத்துடன் இரைய ஆரம்பித்து விடுகின்றது. நாம் இதை எல்லாம் பார்த்திருக்கின்றோம்.

அதைப் போன்று தான் மெய் ஞானிகள் கண்டுணர்ந்த வழிப்படி பார்த்தோம் என்றால்…
1.உதாரணமாக ஒரு கோபப்படுவோரின் உணர்வுகளையோ
2.கோபத்தைத் தூண்டும் உணர்ச்சிகளை உண்டாக்குவோரை
3.நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதை நாம் நுகராமல் இருக்க முடியாது.
4.நம் கண் கரு விழி அந்த மனிதனை நம் உடலில் பதிவாக்கி விடுகின்றது.

இதற்கு முன்னாடி அவன் சந்தோஷமாகப் பேசி இருந்தாலும் அவன் உடலிலிருந்து வரும் அந்த உணர்வினையும் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்துவிடுகின்றது.

ஆக நண்பன் கோபமான நிலையில் இருக்கும் போது நண்பன் என்று நெருங்கிப் பார்த்தால் அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை நம் கண்ணில் உள்ள கரு விழி பதிவாக்குகின்றது.

அது பதிவான பின்பு தான் அந்தக் கோபப்படும் உணர்வுகளை கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

நம் ஆன்மாவாக மாற்றிய பின்… உயிரின் காந்தப்புலன் அதைக் கவர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது. அப்பொழுது அவன் பட்ட கார உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது.

1.ஏனென்றால் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் போன்று
2.இந்த உடலில் உணர்ச்சிகள் பட்ட பின் வாயு வேகத்தில் உடல் முழுவதும் பரவுகின்றது.

நெருப்பில் ஒரு மிளகாயைப் போட்ட பின் அந்தக் காரமான நெடி குறைந்தது 100 அடி வரையிலும் கூட காற்றிலே பரவும். இதே மாதிரித் தான் நம் உடலுக்குள் இந்த உணர்ச்சிகள் வேகமாகப் பரவத் தொடங்கும்.

அப்படிப் பரவும் போது நம் இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றப்படும் போது…
1.நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்தக் காரத்தை ஏற்றுக் கொள்ளாதபடி சில அணுக்கள் படபடக்கின்றது.
2.ஒரு சில அணுக்கள் மயக்கம் அடைகின்றது

அதைப் போன்ற அணுக்கள் எந்தெந்த உறுப்பில் இருக்கின்றதோ… நுரையீரலிலோ இதயத்திலோ உள்ள சாந்தத்தையும் நல்ல நிலையைக் கிரகிக்ககூடிய அணுக்களுக்கு… இந்தக் கார உணர்ச்சிகள் பட்ட பின் ஒரு படபடப்பும்… வேகமாகத் துடிக்கும் நிலைகளும் வருகின்றது.

நாம் துடிக்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வுகள் இதயத்தைத் துடிக்கச் செய்கின்றதா…? என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படித் துடிக்கும் உணர்வுகள் இதயத்தில் ஏற்படும் போது நம் சிந்தனைகள் குறைகின்றது. நம்முடைய அன்றைய செயல்களும் தடைபடுகின்றது.

சிந்தனை குறைந்திருக்கும் சமயம் நம் குழந்தைகள் என்று பாசமாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் நம்மிடம் வந்து ஏதாவது கேட்டால்… “கிரகம்… தொலைந்து போ…!” என்று வெறுத்துத் தள்ளும் நிலைகளே வருகின்றது.

இது எதனால் வருகின்றது…? நாம் கோபப்படுகின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகின்றதா…? என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனும் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உணர்வுகள் தான் அவனை இயக்குகின்றது.

1.இருந்தாலும் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து
2.அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்தால்
3.மனிதன் அதை இயக்க முடியும்… நல்லதாக்க முடியும் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதரை ஒரு பைத்தியக்காரர் என்று தான் நானும் ஆரம்பத்தில் எண்ணினேன்

 

நம் மீது அழுக்குப்பட்டாலோ தூசி பட்டாலோ மற்றது பட்டாலோ அதை உடனே தூய்மைப்படுத்துகின்றோம். அதைப் போன்று அந்தந்த நிமிடம் நம் ஆன்மாவில் அறியாது புகும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும். நம் இரத்த நாளங்களையும்த் தூய்மைப் படுத்த வேண்டும்.
1.அப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு நல்ல சக்தி வேண்டும்.
2.நல்ல சக்தி வேண்டுமென்றால் நல்ல சக்தி பெற்ற குரு தேவை.
3.குரு வழியில் அருளை நமக்குள் பதிவு செய்து கொண்டு… குரு காட்டிய வழியினை நினைக்கப்படும்போது நாம் அதைப் பெற முடியும்.

வான்மீகி வியாசக பகவான் போன்ற மகரிஷிகள் கண்டுணர்ந்தது போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும்… அவருடைய சந்தர்ப்பம் அகஸ்தியன் பெற்ற அருளையும் அவன் துருவ நட்சத்திரமான உண்மையும் அறிந்தவர்.

அவர் வழியில்… அறிந்த உணர்வு கொண்டு மற்றவர்களுக்கு அவர் எடுத்துச் சொல்லச் சென்றாலும் கூட அவரை அலட்சியப்படுத்திய மக்கள்தான் உண்டு.
1.சில உண்மைகளை அவர் சொல்லும் பொழுது பித்தன்… என்றும் பைத்தியக்காரன்…! என்றும் அவரை எண்ணினார்கள்.
2.என்னிடம் அவர் பழகும் பொழுதும் நானும் (ஞானகுரு) அவ்வாறு தான் எண்ணினேன்… பைத்தியம் பிடித்தவர் என்று.

ஆனால் எம்மை அடிக்கடி அணுகி இந்த வித்தைகளை எல்லாம் நீ கற்றுக் கொள் உனக்கு நல்லதாக இருக்கும் என்பார்.

வித்தை என்றால் “மந்திரவாதிகள் செய்வது போல்” ஏதோ செய்து கோளாறாகி அதனால் இப்படிப் பைத்தியமாக இருக்கின்றார்…! என்று தான் என்னுடைய எண்ணங்கள் இருந்தது முதலில்.

இருந்தாலும் அடிக்கடி ஆவர் எம்மைச் சந்திப்பதும் டீ வாங்கிக் கொடுப்பதும் நான் குடிக்கவில்லை என்றால் திட்டுவதும்… குடித்தால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்பதும்… இந்த நிலை தான் நடந்து கொண்டிருந்தது. குருவை ஆரம்பத்தில் சந்தித்த பின் நடந்தது இது தான்.

அவருக்குத் தெரியாதபடி நான் ரோட்டுக்கு அந்தப் பக்கம் சென்றாலும் அங்கே வந்து பிடித்து விடுவார், எங்கே ஒளிந்து செல்கின்றாய்…? நான் பார்க்கிறேன்…! என்பார்.

எப்படி விலகிச் சென்றாலும் கூட அவர் என்னை விட்ட பாடு இல்லை…!

அந்தச் சந்தர்ப்பத்தில் என் மனைவிக்கு உடல் நலம் குறைவானது. ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்… டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள்…! கடைசியில் “தேறாது…” என்று கூறி விட்டார்கள்.

வீட்டிற்கு அழைத்து வந்த பின்… அதைக் கண்டு மாமனார் இறந்து விட்டார் காரணம் ஒரே பெண். அந்த சமயத்தில் குருநாதர் வந்து “நீ வா…“ என்று என்னைக் கூப்பிடுகின்றார்.

குருநாதர் கூட்டத்தில் சத்தம் போடுகின்றார் இதற்குப் பயந்து அவர் பின்னாடி சென்றேன்.

அப்பொழுதுதான் எனது வாழ்க்கை முழுவதையும் சிறு குழந்தையாக நான் இருந்ததிலிருந்து விவரம் தெரிந்த காலம் வரை நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்துகின்றார்… அத்தனையும் அப்படியே சொல்கின்றார்.

அப்பொழுதுதான்… “அவர் பைத்தியம் இல்லை” என்று நான் தெரிந்து கொள்கின்றேன்.

ஆஸ்பத்திரியில் என் மனைவிக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று டாக்டர்கள் முயற்சித்தாலும் மயக்க மருந்து கொடுக்கும் பொழுது மனைவிக்கு எடுக்கவில்லை. அதனால் ஆபரேஷன் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள் குருநாதர் அதையும் என்னிடம் சொல்கின்றார்

உண்மைகளை அறிந்து கொண்ட பின் பைத்தியம் இல்லை…! என்று உணர்கின்றேன்.

பின்… ஒரு எலுமிச்சம் பழத்தையும் விபூதியும் என்னிடம் கொடுக்கின்றார் உன் மனைவிக்கு இதைக் கொடு… நன்றாக ஆகிவிடுவார் …!என்று சொல்கின்றார்.

இங்கே மாமனார் இறந்து விட்டார்… நான் குருவுடன் சென்று விட்டேன். ஆனால் வீட்டிற்கு மாமனார் இறந்ததைக் கேட்க வந்தவர்கள் எல்லாம்
1.மனைவி இப்படி இருக்கின்றது
2.மாமனாரோ இறந்து விட்டார்
3.அவருடைய மருமகன் பைத்தியம் போல சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்று என்னைப் பேசுகின்றார்கள்.

ஏனென்றல் என் மனைவி இடுப்புக்குக் கீழ் சுத்தமாகக் கால் வரவில்லை படுக்கையில் இருந்ததால் புண்ணும் வந்துவிட்டது.. ஒரு விரல் கூட காலிலே அசையாது.

குருநாதர் சொன்னபடி எலுமிச்சையையும் விபூதியையும் கொடுத்தேன்…! மறுநாள் பார்த்தால் விரல்கள் மற்ற எல்லாம் அசைய ஆரம்பிக்கின்றது.

மனைவி ஆஸ்பத்திரியில் இருந்த போது உடலில் பேண்டேஜ் ஒன்று போட்டிருந்தார்கள். உள்ளுக்குள் பார்த்தால் மூட்டைப் பூச்சிகள் ஏராளம் உடலிலே சொரணை இல்லை இரத்தத்தைக் குடிக்கின்றது. என் மனைவி எழுந்த பின்… பேண்டேஜ் கழட்டும் போது தான் மூட்டைப்பூச்சிகள் உள்ளே இருப்பது தெரிந்தது.

குருநாதர் சக்தி வாய்ந்தவர் என்ற நிலைகளை நான் நம்புகின்றேன். அதற்கப்புறம் குருநாதர் என்னைக் கூப்பிட்டு
1.என்னை நம்புகின்றாய் அல்லவா என்று கேட்கின்றார்
2.கேட்கின்றேன்… நம்புகிறேன் என்று சொன்னேன்.

உன் உயிர் எத்தனையோ கோடி உடல்களை உருவாக்கிய நிலையில் இப்பொழுது நீ மனிதனாக வந்திருக்கிறாய் என்பதை குரு உபதேசிக்கின்றார். பல கோயில்களுக்கு அழைத்துச் சென்றார்.

ஒவ்வொன்றாக்க் காண்பித்து இது எந்த தெய்வம்…? இது என்ன தெய்வம்…? என்று கேள்வி கேட்கின்றார். பின் விளக்கம் கொடுக்கின்றார்.

அதே போல் எறும்பு பூச்சிகள் இவைகளுக்கெல்லாம் சாப்பாடு யார் போடுவது…? என்று கேட்கின்றார். மரம் செடி கொடிகளுக்கு யார் சாப்பாடு கொடுப்பது…? அது எப்படி…? என்று கேட்கின்றார். பின் அதற்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டு வருகின்றார்.

இப்படி அவருடன் நான் சேர்ந்து சுற்றி வரும் பொழுது எல்லோருமே “என்னைப் பைத்தியக்காரன்…” என்று சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

அதே போன்று இரவிலே நகரங்களிலே சுற்றச் சொல்வதும் “சில மோசமான பகுதிகளுக்கு” எல்லாம் கூட குருநாதர் கூப்பிட்டுச் செல்வார்.

துர்மரணம் அடையும் மனிதன் அவன் இறந்தபின் (அவன் இறக்கும் தருணத்தில்) மண்ணிற்குள் பதிந்த இரத்தம் அந்த உணர்வலைகள் பதிவாகியது என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார்.
1.துர்மரணம் அடைந்த அந்த இடத்தில் மீண்டும் அவன் வெளிப்படுத்தும் ஓசைகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த ஆன்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றது…?
3.இன்னொரு உடலுக்குள் எப்படி வருகிறது…? என்று உணர்த்துகின்றார்.

அதே சமயத்தில் மனிதன் மற்ற உயிரினங்களைக் கொல்லும் பொழுது அந்த உயிர்கள் மனிதனின் ஈர்ப்புக்குள் எப்படி வருகிறது…? வந்த பின் மனிதனாகப் பிறக்கும் தகுதி எப்படி வருகின்றது…? என்று காட்டுகின்றார்.

மனிதன் ஒருவனைக் கொலை செய்கின்றான்… துன்புறுத்துகின்றான் என்றால்… அதன் வழியில் அந்த ஆன்மா எவன் துன்புறுத்துகின்றானோ அவன் உடலுக்குள் சென்று… அதே உணர்ச்சிகளை மீண்டும் இங்கே எப்படி இயக்குகின்றது…?

துன்புறுத்தாதபடி நோய்வாய்ப்பட்டு ஒருவன் இறந்தால் அவனிடத்தில் பாசமாக இருக்கும் பொழுது அந்த ஆன்மா பாசம் கொண்டவருடைய உடலில் எப்படிச் சேர்கின்றது…? என்று இதையெல்லாம் எனக்குள் தெரியப்படுத்துகின்றார்.
1.எத்தனையோ கோடி உடல்களை மாற்றி மாற்றி மனிதனாக வந்தபின் நாம் எந்த நிலை பெறுகின்றோம்…?
2.ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் எந்த நிலை பெற வேண்டும்…? என்பதை
3.இப்படித்தான் ஒவ்வொன்றாகப் பல அனுபவங்களை எனக்குக் கொடுத்து உண்மைகளை எல்லாம் தெரியும்படி செய்தார் குருநாதர்.

முன் ஜென்மத்தின் தொடர்

 

பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்
1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ வருவதல்ல அந்தக் குண நிலைகள் எல்லாம்…!

இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும் கோப நிலையில் உள்ளதும் மற்ற எல்லாமே.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அவ்வாண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.

குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அவ்வாண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.

1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.

முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.

அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.

இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனாகப் பிறந்த அகஸ்தியன் தாய் கருவிலிருக்கப்படும் போதே உயர்ந்த சக்திகளைப் பெற்றான்.

அகஸ்தியனின் தாய் மிருகங்களிடமிருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் மின்னல்களிலிருந்தும் தப்ப வேண்டும் என்ற நிலையில் விஷத்தை முறிக்கும் பல பல பச்சிலை மணங்களை நுகர்ந்தது… உடலிலே பூசிக் கொண்டது.

நஞ்சினை வென்றிடும் தாவர இனத்தின் மணங்களை நுகரும்போது அது தாயின் இரத்தத்திலும் அது கலந்து கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்கும் (அகஸ்தியனுக்கும்) அதே விஷத்தின் தன்மை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது.

மின்னல்கள் தாக்கினாலும் அவைகளிலும் கடும் விஷம் உண்டு. அந்த விஷமான சக்தி மனிதன் மீது தாக்கினால் நல்ல அணுக்கள் மடியும் அல்லது மயக்கம் அடையும்.
1.ஆனால் அந்த விஷத்தை முறிக்கக்கூடிய பச்சிலைகளை அகஸ்தியன் தாய் நுகர்ந்ததனால்
2.அந்த மின்னலையும் அடக்கி இவனைக் காக்கும் உணர்வுகளை அந்த உணர்ச்சிகள் அங்கே தோற்றுவிக்கின்றது.

இப்படித் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் அவன் பிறந்த பின் இவனைக் கண்டாலே விஷ ஜெந்துக்கள் அருகிலே வருவதில்லை. மின்னல் பாய்ந்தாலும் அந்த விஷங்கள் இவனைத் தாக்குவதில்லை.

நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக எப்படி உருவானது…? என்றும் அந்த மின்னல்கள் எவ்வளவு தூரத்திற்கு ஊடுருவிப் போகின்றது…? என்றும் அறியும் தன்மை அப்பொழுது அவன் பெறுகின்றான்.

1.அந்த மின்னலின் உணர்வுகளை வைத்து ஒரு செடியை இவன் உற்றுப் பார்க்கும் போது
2.அதனின் உணர்ச்சியின் மணங்களைப் பற்றியும்… உணர்வின் இயக்கங்களைப் பற்றியும் அறிகின்றான்.
3.இப்படி எல்லாம் கண்டுணர்ந்ததால் தான் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயர் வந்தது.

ஏனென்றால் தாயின் கருவிலே பெற்ற உணர்வுகள் வளர்ச்சியாகி இந்தப் பிரபஞ்சத்தையே கண்டுணர்ந்து நஞ்சினை நீக்கக் கற்றுக் கொண்ட முதல் மனிதன் தான் அந்த அகஸ்தியன்.

வான இயலைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் திருமணமாகும் போது தான் பார்த்த உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கும் எடுத்துச் சொல்கின்றான்.

மனைவியும் கணவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு அதை எல்லாம் தானும் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குகின்றது. அப்பொழுது இரண்டு மனதும் ஒன்றாகின்றது.
1.ஒன்றான பின் கணவன் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று மனைவியும்
2.மனைவி உயர வேண்டும் என்று கணவனும் இருவரும் எண்ணுகின்றனர்.

இப்படி இருவரும் ஒரு மனமாக எண்ணி எடுத்த உணர்வுகள் தான்
1.அந்தத் துருவத்தின் வழியாக வரக்கூடிய சக்தியை எடுத்து இரு உயிரும் ஒன்றாகி
2.உயிரைப் போல் உணர்வின் ஒளிக் கற்றைகளை உருவாக்கும் அணுக்களாக விளைந்து
3.இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்கின்றனர்.
4.பிரபஞ்சத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

மனிதனாக உருவான நிலையில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்தால் அந்தக் கருத் தன்மைகள் கொண்டு குழந்தையாக உருவாகின்றது.

குழந்தையை உருவாக்கினாலும் பிறந்த பின் தன் பிள்ளைக்கு உடல் நலம் இல்லை என்றால் வேதனைப்பட நேர்கின்றது. “பிள்ளை நோயால் அவதிப்படுகின்றானே…” என்ற அந்த உணர்வினை தாய் நுகர்ந்தால் அந்தப் பையனுக்குள்ளும் இதே உணர்வுகள் சேர்கின்றது.

அதே போல் குடும்பத்தில் யாராவது வேதனையை எடுத்து வளர்த்துக் கொண்டால் வேதனைப்பட்டே கடைசியில் இறந்தால் அவர்களுடன் பற்றுடன் வாழ்ந்த நிலையில் அதே உணர்வை நாம் எண்ணினால் அந்த இறந்தவரின் ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அதே போல் ஒரு நோயாளியாக இருப்பவனின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அந்த நோயாளியின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால் அதே வேதனை மீண்டும் நமக்குள் வந்து அவனில் விளைந்த நோய் நமக்குள்ளும் விளைகிறது.

இதைப் போல் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நம்மை அறியாமல் நமக்குள் நடக்கின்றது.

இதிலிருந்தெல்லாம் மீண்டிட வேண்டும் என்பதற்குத்தான்…
1.அந்த அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்ற ஆற்றலையும்
3.துருவ நட்சத்திரமான ஆற்றலையும் உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. துருவத்தின் வழி கவர்ந்து நம் பூமி நமக்கு முன் பரவச் செய்கின்றது.

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பழக வேண்டும்.

நுகர்ந்த உணர்வின் வழியில் உயிர் நம்மை இயக்கிவிடக் கூடாது

 

இந்த உலகம் இருள் சூழ்ந்த நிலையினை நோக்கி ரொம்பவும் நெருங்கிச் சென்று கொண்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் இதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.

அணுகுண்டுகளுக்கு மனிதர்கள் தப்பித்தாலும் அதில் வெளி வரும் அணுக் கதிரியக்கங்களும் அதிலே கருகிய விஷத் தன்மைகளும் பூமியின் நடுமையும் அடைந்து பூராவுமே கொதிகலனாக ஆகி…
1.மேலே இருக்கக்கூடிய நிலப்பகுதிகளில் எல்லாம் வெப்பங்கள் அதிகமாகி
2.தீயில் வேக வைத்தது போன்று நம்மைப் பூமிக்குள் கொண்டு சென்று வேக வைத்துவிடும்
3.குண்டுகளுக்குத் தப்பினாலும் கூட… இதிலிருந்து யாரும் தப்ப முடியாது

ஏற்கனவே 30 40 வருடங்களுக்கு முன் சொல்லி உள்ளேன் இத்தகைய கதிரியக்கங்கள் நம் பூமிக்குள் என்ன செய்யும்…? என்று…!

இந்த பூமி மட்டுமல்ல பிரபஞ்சத்தில் மற்ற கோள்களிலும் அணுக் கதிரியக்கங்கள் வளர்ந்து விட்டது. அதை துருவத்தின் வழி கவரும் பொழுது நம் பூமி வேகமாக உருகும் தன்மை வருகின்றது. பூகம்பங்கள் ஏற்படுகின்றது நில நடுக்கங்கள் வருகின்றது.

இதிலிருந்து தப்புவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

எந்த நிமிடம் எதுவாக இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடைதல் வேண்டும்… பிறவி இல்லாத நிலையை நாம் அடைய வேண்டும்.

தீமைகள் புகாது தடுக்கும் சேனாதிபதி நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா… பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்.

உதாரணமாக வேதனை என்ற உணர்வை எடுத்தால் நமது உயிர் அதை நமக்குள் பிரம்மமாக உருவாக்கி அடிக்கடி வேதனைப்படும்படி வைத்து விடுகின்றது.

ஆனால் நாம் சொன்னபடி இந்த உயிரை இயக்க வேண்டும்…!

நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது… அப்போது அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று முன்னிலைப்படுத்தி… தீமையை நீக்கும் உணர்வாக பிரம்மமாக்கி நமக்குள் அதை உருவாக்க வேண்டும்.

நம்முடைய எண்ணம் தீமைகளை நீக்கும் உணர்வாக வளர்ச்சி பெறும்…
1.ஆகவே பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்
2.அதாவது நான் சொன்னபடி இந்த உயிர் கேட்க வேண்டும்
3.அதன் வழி இந்த உடலை இயக்க வேண்டும்
4.நுகர்ந்த உணர்வுகள் வழி… உயிர் நம்மை இயக்கக் கூடாது.

தீமை நமக்குள் சிருஷ்டியாகக் கூடாது…! என்பதைத் தான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்… ஆறாவது அறிவு…” என்ற நிலை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

இதை மனதில் வைத்து அருள் வழி வாழ்ந்து இருளைப் போக்கி பேரருளைப் பெற தியானித்து அந்த அரும் பெரும் சக்திகளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பல பல எண்ணங்களை எண்ணியே… நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்

 

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்நிலை தான் நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் ஒருநிலைப்படுத்தி
3.பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூடவே வருகின்றது.

1.அவ்வாண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அந்நிலையை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே…
2.நாம் நம்மையையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இந்நிலையைப் புரிந்து கொண்டு இந்நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அச்சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.
3.உயிர் என்னும் ஆத்மாவிற்குப் பெரும் நிலையைத் தேடிடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வீட்டில் ஒரு நல்ல காரியமோ அல்லது திருமணமோ நடக்க வேண்டும் என்றால்… சாமி மேல் மலரை வைத்து ஜோதிடம் கேட்கப் போவார்கள்.

சாமி வரம் கொடுத்தால் மனதுக்கு மகிழ்ச்சியாகும்…! என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த உணர்வு என்ன செய்யும்..? இது தாக்கப்பட்டுச் சிவப்புப் பூ வந்தது என்றால் ஆகாது…!

பூ போட்டுக் கேட்கும் அந்த நேரத்தில் மாப்பிள்ளையைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்கள். மோசமான ஆளாக இருக்கின்றான்… என்று “அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள்…” என்ற மனதில் ஓடிக்கொண்டிருந்தால்
1.எனக்கு நீ சிவப்புப் பூவைக் கொடுத்துவிடு
2.நான் என் பெண்ணைக் கொடுக்கவில்லை என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் முதலிலே ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்… ஜாதகத்தையும் பார்ப்பார்கள்.. கடைசியில் “சாமி மீது பூ போட்டுப் பார்க்கும்…” இந்த ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்.

ஜாதகம் பார்த்துச் செய்தால் தான் எல்லாம் நல்லது…! என்று சொல்வார்கள். இருந்தாலும் இங்கே பார்க்கும் போது பூ விழுந்து விட்டது என்றால் “நான் நினைத்தேன் நடந்து விட்டது…!” என்பார்கள்.

அதே போல் இந்த மாப்பிள்ளையை எப்படியும் முடிக்க வேண்டும்… வெள்ளைப் பூ விழுந்தால் மனதுக்கு நல்லது…! என்று நினைப்பார்கள்.

இவர்கள் மாப்பிள்ளையை நல்லவன் என்று கருதிக் கொண்டு போனால் இந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு கண்ணிலிருந்து பாயும் அலைகள் கீழே விழுத்தாட்டும்.

இது தான் நாம் பார்க்கும் ஜோதிடங்கள். நாம் எல்லோரும் தான் இதை எல்லாம் செய்து பார்க்கின்றோம்.

வெள்ளைப் பூ விழுகின்றது.

ஆனால் மாப்பிள்ளையிடம் அழுக்கு இருக்கும். இருந்தாலும் அவர்கள் மீது பற்றிருக்கும். இந்த எண்ணத்துடன் வரும் போது கண்ணில் பார்க்கும் போது இந்தப் பூ தான் விழுக வேண்டும் என்று நினைபபார்கள்.

அதன்படி அங்கே இயக்குகிறது.

எல்லாம் ஒத்துக் கொண்டு இவர்கள் விருப்பத்திற்குத் தகுந்த மாதிரி திருமணம் ஆன பின் கடைசியில் என்ன ஆகிறது…?

என் பெண்ணைக் கட்டிக் கொடுத்ததிலிருந்து ஒரே தொல்லையாக இருக்கின்றது… சங்கடமாக இருக்கிறது… வேதனையாக இருக்கின்றது…! தெய்வம் வரம் கொடுத்த பின் கூட இந்த மாதிரிச் சோதிக்கின்றது என்பார்கள்.

1.ஆக மொத்தம் இவர்கள் எண்ணத்தைத் தான் அங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
2.இருந்தாலும் “சாமி சோதிக்கின்றது…” என்று சொல்லும் இந்த நிலை தான் வருகிறது.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் ஆலயத்தில் வழி நடந்து அதை மதித்து நாம் நடத்தல் வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அறியாது சேர்ந்த இருளைப் போக்கும் இடம் தான் அந்த ஆலயம். உயர்ந்த உணர்வுகளையும் தெய்வீகப் பண்புகளையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்.

1.நாம் கண்ணுற்றுச் சிலையைப் பார்க்கும் போது துவைதம்…
2.அதில் காட்டிய தெய்வ குணத்தை எண்ணி எடுத்தால் அத்வைதம்…
3.தெய்வ குணத்தை நுகர்ந்தறிந்து தனக்குள் அது உருவாக வேண்டும் என்றால் விசிஷ்டாத்வைதம்…
4.அங்கே காட்டப்பட்ட தெய்வ குணங்கள் உடலுக்குள் உறைந்தால் துவைதம்
5.நாம் தெய்வமாகின்றோம்…!

அதைப் போல் அங்கே அபிஷேகம் செய்யும் பாலையும் கனிகளையும் சந்தனத்தையும் பார்க்கும் போதும் துவைதம். அந்த நறுமணங்களை எண்ணி எடுத்தால் அத்வைதம் நுகர்ந்து உயிரிலே படும் பொழுது விசிஷ்டாத்வைதம். உணர்வின் தன்மை உடலாகும் பொழுது துவைதம்.

உயர்ந்த குணங்களை உன் உடலில் நறுமணங்களாக்கும் சக்தியாக நற்குணங்களை உருவாக்கும் அந்த உணர்வை நீ பயன்படுத்து… என்று தான் ஞானிகள் ஆலயத்தை அமைத்தனர்.

“ஆலய வழிபாடு” என்பதே இன்றைய காலத்தில் எப்படி எப்படியோ மாறிவிட்டது…!

சூட்சமத்தில் நடப்பதை நாம் எப்படி அறிந்து செயல்பட வேண்டும்…? என்று
1.அன்று அகஸ்தியன் உருவ வழிக்கு (தெய்வ) உணர்வுகளை ஊட்டி அருவ நிலைகளை நீ எப்படி நுகர்வது…?
2.அந்த அருவத்தை உனக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த ஞானத்தின் வழி உன்னை எப்படிக் காக்க வேண்டும்…? என்று
3.ஆலயங்களிலே சிலைகளை வடிவமைத்தான்.

ஆனால்… சிலையை வைத்து இன்று பூஜை செய்பவரும் சரி ஆலயத்திற்குப் பக்தி கொண்டு செல்வோரும் சரி… துயரத்தைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர “துயரத்தை நீக்கும்… ஒரு சொல் கூட வருவதில்லை…”

கேட்டால் நான் அப்படியெல்லாம் கும்பிடுவதில்லை என்று சொல்வார்கள் பெரும்பகுதியானவர்கள். நான் அப்படிக் கும்பிடுவதில்லை இப்படித்தான் கும்பிடுகிறேன் என்பார்கள் சொல்லுக்குப் பதில் வரும் அவ்வளவு தான்…!

ஆனால் உண்மையின் இயக்கங்கள் நமக்குள் அது வளரும் முறைகளை நாம் கையாள்வது எப்படி…? என்பதைச் சூட்சுமத்தில் நடப்பதைத் தான் உருவத்தை அமைத்துக் கொடுத்தனர் ஞானிகள்.
1.உருவத்தை அமைத்துக் கொடுத்த அந்த ஞானிகளை
2.சிறிதளவாவது நாம் மதிக்கின்றோமா என்றால் இல்லை

அன்று கல்வி அறிவு இல்லை என்றாலும் தெய்வ நிலைகளை எளிதாக எடுத்துக் கொண்டார்கள் அது எல்லாம் படிப்படியாக மாறி இன்று அனைத்துமே வேறு வழிகளில் திரும்பி விட்டது.

அன்றைய பக்தியின் நிலைகள் ஆலயத்திற்குச் சென்றால் அந்தத் தெய்வீக குணத்தைப் பெற வேண்டும் என்று “தெய்வத்திற்கு முன் நின்று… தவறு செய்யக் கூடாது…!” என்ற எண்ணம் இருந்தது.

இன்று தெய்வத்திற்கு முன் நின்று தவறைச் சொல்லிவிட்டு “பார் என்னை என்னைஸ் சோதிக்கின்றாய்…” என்ற நிலை தான் வருகின்றது. கல்வி அறிவு கொண்டு இன்று வளர்ந்து கொண்டவர்கள்
1.தவறையும் செய்துவிட்டு… தெய்வத்திடம் சென்று தன்னை நியாயப்படுத்தி
2.அந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்பவர் தான் பலர் உண்டு.

ஞானிகள் காட்டிய உணர்வுகளை இதுவரை நாம் பெறவில்லை…! கொலை செய்பவனும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கின்றான்
1.என்னை இப்படியே தொல்லை படுத்திக் கொண்டிருக்கின்றான்… நீ கேட்க மாட்டேன் என்கிறாய்.
2.அதனால் அவனைத் தொலைத்து விட்டு உனக்கு வந்து நான் காணிக்கை செலுத்துகிறேன் என்று போடுகின்றார்கள்… இப்படியும் உண்டு.

நான் காளியாக மாறுவேன் பேயாக மாறுவேன் அதன் வழியில் நான் செயல்படுத்துவேன் ஏனென்றால் காளி கோவிலில் ஆட்டையும் கோழியையும் கொடுத்துவிட்டு… பார்…! எனக்கு அவன் இடைஞ்சல் செய்தான்…! அதற்காக வேண்டி ஆட்டைப் பலியிட்டு அவன் நாசமாகப் போக வேண்டும் என்று இப்படித்தான் கும்பிடுகின்றார்கள்.

“ஒன்றுமறியாத ஜீவன்களை அங்கே கொல்கின்றோம்…” என்பதை மறந்து விடுகின்றார்கள்

இதைப் போன்று எத்தனை துயரின் நிலைகளைத் தான் தெய்வம் என்ற நிலையில் வளர்க்க முடிகின்றதே தவிர அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற முடியவில்லை.

சாதாரண பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தான் ஆலயத்திலே சிலைகளை வைத்தார்கள் ஞானிகள். இது இந்த குணம் கொண்டது என்று ஸ்தல புராணங்களை வடித்து நீ முதலில் எதை எடுக்க வேண்டும்…? என்ற நிலையில் அதைக் காட்டுகின்றார்கள்.

அது மட்டுமல்லாமல்…
1.அங்கிருக்கும் சிலைக்கு எத்தனையோ அபிஷேகங்களைக் காட்டி
2.உயிரான ஈசனுக்கு நாம் ஊட்ட வேண்டிய நல் உணர்வுகளை… அருள் மணங்களை… அங்கே உணர்த்துகின்றார்கள்.

ஞானிகள் காட்டிய வழியில் உயிரான ஈசனுக்கு நல் மணங்களை ஊட்டினால் மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்… தெய்வீகப் பண்புகளை வளர்க்க முடியும். மனிதன் என்ற முழுமை அடைய முடியும்.

நிலையான சொந்த பந்தம்

 

இந்த உலகில் தோன்றிய மனிதர்கள் தன் எண்ணத்திலும் சுவாசத்திலும் பல துவேஷங்களையும் ஆசைகளையும் வளர்த்து
1.நாம் இருக்கும் காலம் வரை எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்…
2.இறந்த பின் நமக்கு என்ன தெரிகிறது…? என்ற மனப்பான்மையிலே தான் ஊறி வாழ்கிறார்கள்.

நாம் இறந்த பிறகு தான் நம் ஆத்ம நிலை நாம் இந்தப் பூமியில் வாழ்ந்த நாட்களைக் காட்டிலும் “அதிகக் காலங்கள்” ஆவி உலகில் சஞ்சரிக்கின்றது.

பூமியில் வாழ்ந்த காலங்களை வைத்தே அவ்வெண்ணத்தில் ஒரு சிறு அணுவும் தான் விட்ட சுவாச நிலை மாறிடாமலே சுற்றி வருகின்றது.

தன் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த உடல் கிடைக்கும் நாள் வரை
1.எந்த ஆசையில் இந்த உடலை விட்டு ஆவி பிரிந்ததோ அந்த ஆசை நிலை கொண்டே
2.பல நூறு வருடங்களும் தன் எண்ணத்திற்கு ஏற்ற பிறப்பிடம் கிடைக்கும் நாள் வரை இருந்து தான் பிறக்கிறது.

நாம் நம் தாய் தந்தையரை முதலில் வணங்குவதும் இந்நிலை வைத்துத்தான். முதல் ஜென்மத்தில் விட்ட குறையை வைத்து ஆவி உலகில் பல காலம் சஞ்சரித்து
1.நம் எண்ணத்தைச் செயல்படும் இடமாக வந்து சேருமிடம் தான்
2.நம் முதல் தெய்வமாக வணங்குவதின் உண்மை நிலையும் அதுவே.

யாரும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லோருமே அந்த ஆண்டவனின் சக்தியில் அச்சூரியனின் சக்தியில் வந்து உதித்த தனித் தனி பிம்பங்கள் தான்.

1.நாம் பல பிறவிகள் எடுத்து
2.ஒவ்வொரு பிறவியிலும் பல வகைச் சொந்தங்களை அடைந்து
3.”சொந்த பந்தங்களுடன் வாழ்கிறோம்…” என்பதல்ல சொந்தமும் பந்தமும்…!

எல்லோருக்குமே ஒரே சொந்தம்… “அவ்வாண்டவனின் சக்தி தான்…!”

சொந்தம் பந்தம் எல்லாம் கூடும் நாள் ஒரே நாள்… அவ் ஈஸ்வர சக்தியில் இருந்து இம்மனித வாழ்க்கையில் வாழ்ந்துவிட்டு.. நிறைவுடன் வாழ்ந்து விட்டு.. அந்தச் சூட்சம உலகிற்குச் சென்றிடல் வேண்டும்.

அங்கே சென்று அந்நிலையில் சகல நிலையையும் பெறும் பாக்கியம் பெற்று… அந்த சப்தரிஷிகளின் சக்தியுடன் சக்தியாகக் கலந்து
1.இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் ஞானிகள் இந்நிலை உள்ளவர்களுடன் நாமும் கலந்து
2.அவர்களுடன் வாழும் நாட்கள் தான் நாம் சொந்த பந்தங்களுடன் வாழும் வாழ் நாட்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நம் கண்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக எப்படி உருவாகிறது…? என்றும்
3.உருவான அணு தன் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உயிருக்கு எட்டி
4.உயிரின் தன்மை ஆணையிடும் போது சிறுமூளையின் பாகம் செல்லப்படும் பொழுது
5.உயிரிலே இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பி… கண்ணுக்கும் உடலுக்கும் செவிக்கும் நம் மனதிற்கும்
6.அதே உணர்வுகளை ஈர்த்து நமக்குள் எப்படி அறிவிக்கச் செய்கிறது…? என்ற நிலையை
7.வியாசகர் இதைத் தெளிவாக உணர்த்தி உள்ளார்.

மகாபாரதப் போர் என்றும் குருக்ஷேத்திரப் போர் என்றும் அந்த குருக்ஷேத்திரப் போரைக் கண்ணன் தான் வழி நடத்திச் செல்கின்றான் என்றும் காட்டியுள்ளார்.

ஒருவர் செய்யும் தீமையான உணர்வுகளை ஒரு தரம் நாம் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மையைப் பதிவாக்கி விட்டால் மீண்டும் அதனின் நினைவை எடுக்கப்படும் பொழுது… நம் உயிருடன் சேர்ந்து அந்த உணர்வுகள் சங்கநாதமாக அந்த ஒலிகளை எழுப்புகின்றது… குருக்ஷேத்திரப் போராகின்றது.

அதாவது கண்களால் அவர்களை நினைத்து நாம் சுவாசித்தபின்
1.உயிரிலே படும்பொழுது அந்த உணர்வுகளை இயக்குகின்றது.
2.ஒலி அலைகள் கிளம்பிய பின் நம்மைக் காத்திடும் உணர்வுகள் எழும்பி
3.நாம் எதை எண்ணினோமோ அந்த வலுவின் தன்மை கொண்டு எதிர்த்து உள்ளே போராடச் சென்று விடுகின்றது.

வேதனைப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் நம்மைப் பலவீனப்படுத்தச் செய்கின்றது. நம்முடைய செயல்களைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி போகின்றது.

உதாரணமாக நம் பையன் மீது ஒரு கடுமையான வெறுப்பு வந்து விட்டால்… பையனுக்காக வேண்டிச் சேர்த்த சொத்தையும் அல்லது நாம் சேமித்து வைத்த சொத்தையும் கூட… அந்தப் பொருள்களை எல்லாம் எடுத்து அடித்து நொறுக்கும் உணர்வு தான் வரும்.

இந்த நொறுக்கும் உணர்வுகள் வரும் பொழுது நாம் எதை எண்ணினோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். அதைத்தான் கீதையிலே கண்ணன் கூறுவது போன்று வியாசகர் அதைத் தெளிவாகச் சொல்கின்றார்.

வியாசகர் என்றால் அவன் மூடனாக இருக்கும் பொழுது
1.வியாபித்திருக்கும் உணர்வுகளை எல்லாம் தனக்குள் அந்த உணர்வின் தன்மையை அறிந்துணரும் சந்தர்ப்பம் பெற்றான்
2.அனைத்தையும் அறியும் நிலை வந்ததால் அவனுக்கு வியாசகன் என்று காரணப் பெயரை வைத்து அழைத்தார்கள் அக்காலங்களில்…!

பகவான்… தனக்குள் இருக்கும் எல்லாவற்றையும் அந்த உணர்வை நுகர்ந்தறிந்தான். அதைப் பரமாத்மா என்று ஒரு பெயரை வைத்தான் அதாவது தனக்கு முன் பரத்தில் (பரவி) இருக்கக்கூடிய ஆன்மாவைத் தனக்குள் எடுத்தான். அந்த உணர்வின் தன்மை வளர்த்தான் என்பதற்குத்தான் அவருக்கு வியாசக பகவான் என்று இப்படி ஒரு பெயரை வைத்தார்கள்.

உதாரணமாக ஒருவர் அடிக்கடி நமக்குத் தொந்தரவு செய்கிறார் என்று எண்ணினால் இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அதே சமயத்தில் எதிரியினுடைய உடல்களிலும் இதே உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

1.தொந்தரவாகும் போது நாம் வெறுக்கும் உணர்வுகளைத் தூண்டுகின்றோம்
2.அப்போது அந்த வெறுக்கும் உணர்ச்சிகளை அங்கேயும் தோற்றுவிக்கின்றது.

ஆக… நமக்குள் அந்த உணர்வு அது தன் உணவுக்கு அது போராடுகின்றது. அதே போல் அதனதன் உணவுக்கு அங்கேயும் (எதிரியிடமும்) போராடும்.

எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்… அங்கேயும் எதிரிகளை வளர்க்கும் சக்தி வருகின்றது.

ஆனால் இதைத் தடைப்படுத்தும் உணர்வுகளை எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தப் பகைமைகளை வென்றவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வெளிப்படும் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்தது என்றால் நாரதன் என்று காரணப் பெயர் என்று வைக்கின்றார்கள்.

1.அந்த அலைகளை நாம் நுகர்வோம் என்றால் நமக்குள் அது நாரதனாக இயக்கத் தொடங்குகின்றது
2.நாரதராக நமக்குள் சென்றபின் நாம் எதைப் பிடிவாதமாக வைத்தோமோ அந்த உணர்வைத் தணிக்கச் செய்து விடுகின்றது.

நாம் யார் மேல் வெறுப்பு அடைந்தோமோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தி நம் கண்களை அங்கே செலுத்தப்படும் பொழுது
1.நமது கண்கள் நாரதனுக்குண்டான செயல்களை இங்கே (நமக்குள்ளும்) சொல்லி
2.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது எதிரியின் உடலுக்குள்ளும் அந்த உணர்வின் தன்மை பாய்ந்து
3.அந்த நாரதன் வேலையைச் செய்வான்.

நம்முடைய உணர்வுகள் பகைமையாக்கும் உணர்வை மாற்றிடும் தன்மையாக இந்த அருள் ஞான உணர்வுகள் அங்கே ஊடுருவி… சற்று சிந்திக்கச் செய்யும் சக்தியாகவும் வருகின்றது.

அது தான் நாரதன் கண்ணனிடம் சென்றபின்…
1.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
2.இந்த கண்களுக்கும் நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு இயக்கச் செய்கிறது…? ஒன்று சேர்ந்து வாழச் செய்கிறது…? என்று
3.இவ்வளவு தெளிவாக வியாசகர் உணர்த்தி இருக்கிறார் என்ற நிலையை நாம் தெரிந்து கொண்டால் போதும்…!

நீங்கள் ஒன்றுமே தெரியாதவர்களாக இருப்பினும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்

 

நான் (ஞானகுரு) ஒன்றும் அறியாதவனாக இருக்கப்படும் பொழுது குருநாதர் அருள் உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார்.
1.அவர் கூறியதை எல்லாம் உற்று நோக்கினேன்… உணர்வுகளைப் பதிவாக்கினேன்.
2.அந்தப் பதிவினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது
3.காற்றலைக்குள் இருக்கும் பல தீமைகளை அறியக்கூடிய பக்குவங்களை குரு ஏற்படுத்தினார்.

அந்தப் பக்குவங்களை எல்லாம் நீங்களும் பெறுதல் வேண்டும்…!

ஏனென்றால் நீங்கள் படித்து உணர்ந்து வருவதற்கு முன்
1.உபதேசக் கருத்துக்களை உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்தால்
2.உங்களுக்குள் அது நுண்ணிய நிலையில் வேலை செய்யும்.

ஒரு கம்ப்யூட்டரில் நாம் பதிவாக்கியதை எல்லாம்… அது சீராக இயக்கிக் காட்டுவது போன்று தான் உங்களுக்குள்ளும் யாம் பதிவாக்குகின்றோம். அதன் வலுக் கொண்டு… நாளை வரும் விஞ்ஞான அறிவால் விஷத்தன்மைகள் தாக்கினால் அதிலிருந்து மாற்றி அமைத்து அதற்குத்தக்க நீங்கள் வாழ முடியும்.

அதனை மாற்றி அமைக்கவில்லை என்றால் விஷத்தன்மைகளாக மாறி விஷப் பூச்சிகளாக ஆகிவிடுவோம். அது போன்று ஆகாதபடி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்களுடைய நினைவுகளை அழைத்துச் சென்று என்றும் பிறவியில்லா நிலை அடைவது தான் கடைசி நிலை… அதுதான் கல்கி.

இதிலே வீழ்ச்சி அடைந்தால் ஆரம்ப நிலையாகப் புழு பூச்சிகளாக ஆகிவிடுவோம்… அப்போது அது கலியாக மாறுகின்றது.

ஏனென்றால் குருநாதர் இது அனைத்தையும் எனக்குத் தெளிவாக்கினார்.

நினைவினைக் கூட்டி அதை அறிந்து கொள்…! என்று இந்த உணர்வினை எனக்குள் கொடுத்தார்.
1.அவர் பதிவு செய்த நிலை கொண்டு தான் எனது நினைவால் அனைத்தையும் அறிய முடிகின்றது.
2.அறிந்த பின் தீமை நீக்கும் உணர்வுகளை வலுப்பெறச் செய்ய முடிகின்றது.

அதைப்போல உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறோம். எந்தச் சந்தர்ப்பத்தில் பூமிக்குள் கடும் விஷத்தன்மைகள் பரவினாலும் அந்த விஷத்திற்குள் நீங்கள் சிக்கிடாது
1.உங்கள் நினைவாற்றல் அந்தக் கடைசி நினைவு
2.துருவ நட்சத்திரத்தின் பால் வரட்டும்.

ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள். தீமைகளை அகற்றுங்கள் அருள் உணர்வைப் பெருக்குங்கள்.

எந்த நிமிடம் உயிர் வெளியே சென்றாலும் இந்த உடலுக்குப் பின் இன்னொரு பிறவி இல்லை என்ற நிலையில் உயிருடன் ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் செல்ல வேண்டும்..

குருநாதர் எனக்குள் இதைப் பதித்ததினால் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன் உங்கள் நினைவுகள்…
1.கடைசி நிமிடத்திலேயாவது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் போதும்.
2.அதன் ஈர்ப்புவட்டத்தில் செல்லலாம்
3.அப்படி எண்ணக்கூடிய வலிமை நீங்கள் பெற வேண்டும்…!

அத்தகைய வலிமையான எண்ணம் (நினைவாற்றல்) வந்தால் அதன் துணை கொண்டு உயிர் உங்களை அங்கே அழைத்துச் செல்லும்… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அமையும்படி செய்யும்.

“மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை…”

 

சூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ
2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்
3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.

அதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.

மனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது. யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருந்து அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்
1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ
2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.

உங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…? என்று எண்ணக்கூடும்.

அற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…!

ஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலை பெற்ற நாம் எல்லோரும்
1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து
2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி
3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…!

அந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.

இந்தப் பூமியில் உள்ள
1.இயற்கைத் தன்மையும்…
2.செயற்கைத் தன்மையும்…
3.நம் உடல்..
4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே
5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.

அழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே
1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்
2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.இந்த உலகில் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருந்தாலும்
2.அதன் வழி அவர்கள் உணர்வை நுகர்ந்தறிந்தாலும்
3.நுகர்ந்த உணர்வை நம் உயிர் அணுவாக மாற்றி நம் உடலுக்குள் இணைத்து விடுகின்றது.
4.அதிலே தீங்கு விளைவிக்கும் நிலையாக இருந்தால்
5.அந்தத் தீமை செய்யும் அணுக்களிலிருந்து நாம் விடுபட்டே ஆகவேண்டும்.

அதைத் தான் வாலி என்று சொல்வது.

இப்படி அனைவரின் உணர்வுகளும் நமக்குள் வரப்படும் போது நம்மை அறியாது விளையும் அந்த அணுக்களை அருள் மகரிஷிகளின் உணர்வக் கொண்டு அந்த இருளை அகற்றிடும் சக்தியாக அந்த வாலியை வென்றிடும் தன்மை பெற வேண்டும்.

ஏனென்றால் “ஒரு நோயாளியின் உணர்வை” மீண்டும் மீண்டும் பதிவாக்கிக் கொண்டால்… அல்லது “ஒருவன் எனக்குத் தீமை செய்தான்…” என்று அவனை அடிக்கடி நினைவு கொண்டால் அது வாலியாகின்றது…! நம் நல்ல உணர்வின் வலுவைச் சரி பகுதி அது எடுத்துக் கொள்கிறது. அதனால் வேதனப்படுகிறோம் அல்லது ஆத்திரப்படுகின்றோம்.

இந்த வகையில் பிறருடைய எண்ணங்களை நாம் நேரடியாக எண்ணப்படும் பொழுது அந்த உணர்வு வருகின்றது. தீமையோ கஷ்டமோ தொழிலில் நஷ்டமோ உடல் நோயோ நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் இப்படி எத்தனையோ வருகிறது.

இதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே நம் நினைவினை வானை நோக்கிச் செலுத்தி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி… இருளை அகற்றிய அருள் ஒளியை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
1.வாலியை இராமன் நேரடியாகப் பார்க்கவில்லை…
2.மறைந்திருந்தே வாலியைத் தாக்கினான் என்று இராமாயணத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

மறைந்திருந்து என்றால் அருள் மகரிஷிகளின் ஒளியை நமக்குள் சேர்த்து அந்தத் தீமை செய்யும் உணர்வை… அந்த வாலியை நாம் வலுவிழக்கச் செய்ய வேண்டும்.

இராமன் என்றால் எண்ணம். நாம் எடுக்கும் எண்ணங்கள் அந்தச் சுவையின் உணர்வு எதுவோ உயிரிலே பட்ட பின் உணர்வின் ஒலியாக பல பல எண்ணங்கள் நமக்குள் வருவதும்… அதற்குத்தக்க இந்த உணர்ச்சிகள் நம் உடலை இயக்குவதும்… எந்தெந்த உணர்வை எடுக்கின்றோமோ அவை ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது நல்ல குணங்களை மாற்றுகின்றது.

சாயப் பட்டறைகளை எடுத்துக் கொண்டால் பல கலவைகளை (நிறங்கள்) உருவாக்கப்படும் பொழுது அதனதன் சக்திகளை இழக்கின்றது. எதனின் உணர்வு மாறுகின்றதோ அந்த நிறமாக மாறுகின்றது.

சமையல் செய்யும் போது சுவையாகச் செய்ய வேண்டும் என்றால் அதிலே பல சரக்குகளைப் போடுகின்றோம். அது ஒவ்வொன்றும் பல பல சுவை கொண்டது… தனியாகச் சாப்பிட்டால் பல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. இருந்தாலும் அந்த உணர்வுகளை எல்லாம் சமப்படுத்தித் தான் சுவை மிக்கதாக உருமாற்றுகின்றோம்.

இதைப் போல் தான்…
1.நமக்குள் பலருடைய எண்ணங்களும் குவிந்திருப்பினும்
2.அதனதன் எண்ணத்தை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகி இருந்தாலும்
3.அருள் ஒளிச் சுடர் கொண்ட அருள் ஞானத்தின் நிலையை நமக்குள் எடுத்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவரும் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து விட்டால்
5.நமக்குள் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் பலவீனம் அடைகின்றது.

அப்பொழுது அது வாலி என்ற நிலைகளை வீழ்த்துகின்றது. இதைத் தான் இராமன் மறைந்திருந்து வாலியை வீழ்த்தினான் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இராமாயணக் காவியங்களைப் பார்க்கப்படும் போது இராமன் கடவுள் என்றால்… அவன் ஏன் வாலியை மறைந்திருந்து தாக்க வேண்டும்…? என்று சில படித்த வர்க்கத்தினர் வாதம் செய்கிறார்கள்.

ஏனென்றால் தீமை செய்யும் உணர்வை நேரடியாகப் பார்க்கும் பொழுது அந்தத் தீமையின் உணர்ச்சிகள் தான் நமக்குள் தூண்டப்படுகின்றது.

ஆனால் அருள் ஒளி என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அதை மறைத்து விடுகின்றது. அதனின் செயலாக்கங்களைக் குறைத்துவிடுகின்றது.

ஆகவே
1.மனிதன் வாழ்க்கையில் எண்ணங்கள் எப்படி உருவாகின்றது…?
2.எது வலிமை பெறுகின்றது…? எதன் வலிமையில் மனிதன் இயங்குகின்றான்…?
3.மனிதன் என்ற நிலையில் எந்த வலிமை மனிதனை மாற்றுகின்றது…? என்பதை எல்லாம்
4.காவியத் தொகுப்பின் மூலம் தெளிவாக உணர்த்தியுள்ளனர் ஞானியர்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் சேமித்துக் கொண்டே வந்தால் நம் சிந்தனை எப்போதும் தெளிவாக இருக்கும்

 

நஞ்சினை நீக்கிடும் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் வந்த இந்த மனித உடலில்… இப்போது அன்றாட வாழ்க்கையில் வரும் விஷத்தன்மைகளை நீக்கத் தவறினால்… மீண்டும் அந்த விஷத்தினையே சிறுகச் சிறுகச் சேர்த்து விஷம் கொண்ட உயிரணுக்களாக நம்மை அது மாற்றிவிடும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே அந்த விஷத்தை அவ்வப்போது நீக்க வேண்டும் என்றால்
1.விஷத்தை அகற்றி இன்றும் ஒளியின் சுடராக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும்
2.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் அடிக்கடி “துருவ நட்சத்திரத்தைப் பற்றி” உங்களுக்கு யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

துருவ நட்சத்திரமாக ஆவதற்கு முன் அகஸ்தியன் தன் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிய உணர்வுகளும் இந்தப் பூமியில் படர்ந்துள்ளது

அகஸ்தியன் துருவனான பின் வளர்ச்சியில் திருமணமாகி… திருமணமான பின் கணவனும் மனைவியும் இருவரும் ஒன்றாகி… நஞ்சினை அகற்றிடும் அணுக்களைத் தனக்குள் உருவாக்கி… இரு உயிரும் ஒன்றாகித் துருவ நட்சத்திரமாக அமைந்துள்ளார்கள்.

நம் பூமிக்குள் வரும் அல்லது இந்த பிரபஞ்சத்திற்குள் படர்ந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் ஏகாந்தமாக நிலை கொண்டு இருக்கின்றார்கள்.
1.எந்த விஷத் தன்மையும் அவர்களைத் தாக்குவதில்லை…
2.விஷத்தையே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்…
3.அதை நாம் அனைவரும் பெற வேண்டும்.

வைரம்… அதில் விஷத்தன்மை அதிகரிக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் கொண்டு தான் அதனின் (வைரத்தின்) வீரிய சக்தியை வெளிப்படுத்துகின்றது.

வைரத்தைப் போல் விஷத்தை அடக்கி உணர்வை ஒளியாக மாற்றிடும் அணுக்களை உருவாக்குவது தான் நாம் செய்யும் காலை துருவ தியானத்தின் முக்கிய நோக்கம்.

ஏனென்றால் இந்த மனிதனுக்குப் பின் அடுத்த நிலை… பிறவி இல்லா நிலை தான்…!

இந்த மனித வாழ்க்கையில் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம்…! என்றால் வாழலாம். ஆனாலும் நாம் நுகர்ந்தறிந்த விஷத்தின் தன்மை நம் உடல் அணுக்களில் சேர்க்கச் சேர்க்க… இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டி இருக்கும்.

நாம் எடுத்துக் கொண்ட குணங்களின் தன்மை எதுவோ அதுவாக உயிர் மாற்றிவிடும். இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களைப் பெறச் செய்யும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றிக் கொண்டே இருப்பதும்
2.உங்களுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு வீரிய உணர்வை ஊட்டுவதும்
3.பகைமை உணர்வுகள் வராது தடுப்பதும்
4.தீமை தனக்குள் வராதபடி தடுக்கும் சக்தியையும் நீங்கள் பெறுவீர்கள்
5.அதன் உணர்வு கொண்டு சிந்தித்துச் செயல்படும் திறனும் நீங்கள் பெறுவீர்கள்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி உங்கள் இரத்த நாளங்களில் பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

எத்தகைய துயரமோ கஷ்டமோ மற்ற நிலைகளைக் கேட்டு உணர்ந்து வாழ்க்கையை வழிப்படுத்தி நடத்த அவைகளை நாம் உபயோகப்படுத்தினாலும்… அப்படி நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் விஷம் கொண்டதாக மாறிவிடுகிறது.

அத்தகைய விஷத்தினை மாற்றி அமைக்கும் சக்தி நமக்கு வேண்டும். அதற்கு நாம் நுகரும் உணர்வுகள் விஷத்தை முறித்திடும் சக்தியாக வர வேண்டும்.

நமது உடல் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினைப் பிரிக்கின்றது. ஆனால் நஞ்சின் தன்மை நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து விட்டால்… நஞ்சையே நுகரும் நிலையாகி அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

ஆகவே அதைத் தடுக்க
1.நஞ்சினை வென்று ஒளியாக நிலை கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் நிலையும்
2.அதன் தொடர் கொண்ட நஞ்சினை வென்ற உணர்வுகளையும் நாம் நுகர்ந்து
3.நம் இரத்த நாளங்களில்… நம் உடலில்… சேமித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதே சமயத்தில் இன்றைய காற்று மண்டலமே நஞ்சின் தன்மையாக இருக்கப்படும் போது நம் உடுத்தியிருக்கும் ஆடைகளிலும் நஞ்சினை ஈர்க்கும் சக்தி வருகின்றது.
1.ஏனென்றால் ஆடைகளில் விஷம் கலந்த கலர்களைத்தான் இணைத்துள்ளார்கள்.
2.அது நம் உடல் வெப்பத்தினால் அதில் இருக்கும் விஷம் எத்தன்மையோ அதன் உணர்வைக் காற்றிலிருந்து கவர்ந்து
3.நமது ஆன்மாவிற்குள் கொண்டு வருகிறது… அந்த விஷத்தன்மையையே நாம் நுகர்கின்றோம்.
4.நம் உடலில் உள்ள அணுக்களுக்கும் சிறுகச் சிறுக விஷத்தின் தன்மையே சேர்கின்றது.

விஷத்தை வென்றிடும் சக்தியைச் சேர்ப்பதகு மாறாக விஷத்தின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது… விஷத்தையே உணவாக உட்கொள்ளும்… விஷத்தின் துணை கொண்டு வாழ்ந்திடும் நிலையே… இன்றைய காலங்களில் வளர்ந்து கொண்டுள்ளது.

விஷத்தை அடக்கி வைரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போன்று நாம் ஆக வேண்டும் என்றால் காலை துருவ தியானத்தில் கணவன் மனைவி இருவருமே… அந்த சக்தி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் எண்ணுதல் வேண்டும்.

சர்வ நஞ்சுகளிலிருந்தும் நாங்கள் விடுபட வேண்டும் என்று இருவருமே சேர்ந்து
1.குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.எங்கள் குழந்தைகளுக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
4.அமைதி கொண்டு வாழும் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

இதை வளர்த்துக் கொண்டே வந்தால் நமக்குள் விஷத்தின் தன்மை சேராது தடுத்துக் கொள்ள முடியும்.

ஆகவே ஒவ்வொரு நாளும் காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் இரத்த நாளங்களிலே அதிகமாகச் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.

வெளியில் எங்கே சென்றாலும் இது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

எந்த நிலை கொண்டு எப்படிப் புகட்டினாலும் உபதேசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அரிதாக உள்ளார்களப்பா..!

 

இந்த உலகினிலே ஜீவன் பெற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம்
1.தான் ஜீவன் பெற்ற நிலையை அறிந்து
2.ஜீவாதார உண்மையுடன் ஜீவித்து – இந்த ஜீவனை
3.நம் உடலில் ஜீவன் உள்ள பொழுதே நாம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
4.பல வழிகளையும் வழி முறைகளையும் மகரிஷிகள் நமக்களித்தார்கள்.
5.அந்த வழிகளை எல்லாம்… முறைகளை எல்லாம்… பல வழிகளில் மாற்றி விட்டார்கள்.
6.அவரவர்களுக்கு ஒரு மதம் என்ற நிலயில் ஒவ்வொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன் சுற்றத்தார்களுக்கும் ஒவ்வொரு நிலையையும் ஏற்படுத்திக் கொண்டு பல சடங்குகள்… பல சாஸ்திரங்கள்… என்று பார்த்து நம் மூதாதையர்கள் காலத்திலிருந்தே நம் குடும்பத்தில் இந்நிலையில் தான் எல்லா நிலைகளும் நடந்து வருகின்றன…! என்று உண்டாக்கி விட்டார்கள்.

ஒவ்வொரு உண்மை நிலைகளையும் தன் தன் நிலைக்கேற்பத் தன் மதத்தின் வாயிலாக அதையே ஒரு வழக்கமாக்கிக் கொண்டு அதனால் வரும் எண்ணச் சிதறல்களைப் பற்றி எண்ணாமல்
1.ஒவ்வொருவரும் மதம் என்ற ரூபத்தையே கொண்டு வந்து
2.அதனுள் சிக்கிக் கொண்டு மதத்தையே “மதமாக்கி” வாழ்கிறார்கள்.

மதத்தினால் வந்திடும் நன்மைகள் என்னப்பா…? பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அம்மதங்களின் வாயிலாக ஆண்டவனின் சக்தியையே பிரித்துக் கொண்டார்கள்.
1.இவர்கள் பிரித்த நிலைக்கு வருவதல்ல அந்த ஆண்டவனின் சக்தி.
2.அச்சக்தியின் நிலை எல்லோருக்கும் பொதுவானதே.

அன்று ஆண்ட அரசர்கள் தன் நிலைக்கு அடிபணியப் பல மந்திரிகளையும்… அந்த மந்திரிகளுக்கு ஊழியம் செய்ய அதற்கொத்த சேவகர்களையும்.. இப்படியெல்லாம் ஏற்படுத்தித் தன் ஆட்சி நிலை நிலைத்திருக்கத் தன் நிலைக்கு உகந்தபடி அவரகள் செய்த நிலையில் இருந்து தான் “ஜாதி மதங்களே” இன்றைய உலகில் பெருகி உலவி வருகின்றன.

1.அவ்ஈசனின் சக்தியில் இஜ்ஜீவ ஆத்மாக்களை ஜாதி மதங்களாகப் பிரித்து அனுப்பவில்லையப்பா…!
2.எல்லா உயிரணுக்களும் அந்த ஆண்டவனின் சக்தி பெற்று ஒரே நிலையில் தான் உதிக்கின்றன.

இந்நிலை இருக்கும் பொழுது ஜாதி மத வேறுபாடுகளை இவர்கள் உண்டு பண்ணி தன் தன் நிலைக்கேற்ப தான் வாழ… தன் சுற்றத்தார் வாழ… என்ற நிலையை எல்லாம் ஏற்படுத்தி மனித எண்ணத்தையே பெரும் கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்களப்பா…!

1.எல்லோரும் ஓர் மதம்…
2.எல்லோரும் ஓர் குலம்…! என்ற
3.உண்மை நிலையை உணர்ந்து வாழ்பவர்கள் அரிதிலும் அரிது.

எந்த நிலை கொண்டு எப்படிப் புகட்டினாலும் உபதேசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அரிதாக உள்ளார்களப்பா..!

1.அடுத்தவன் நிலையைக் கண்டு ஏங்குபவனும்
2.அடுத்தவனின் புகழுக்காக வாழ்பவனும் தான் இன்றைய நாட்டில் மிகுந்து உள்ளனரப்பா…!

தன் எண்ணத்தையும் சுவாசத்தையும் தான் பெற்ற ஜீவ சக்தியின் நிலையையும் பற்றி இனியும் புரிந்திடாமல்… அந்த நிலையிலேயே வாழ்ந்திடாமல்…
1.நம் எண்ணத்தைக் கொண்டு தான்..
2.நாம் விடும் சுவாச நிலையிலிருந்து தான்..
3.நம் நிலைகள் எல்லாமே நடக்கின்றன…! என்று உணர வேண்டுமப்பா…!

எண்ணத்தையும் சுவாசத்தையும் புரிந்து கொண்டு வாழ்பவர்கள் “அப்புருஷோத்தம ஜெபத்தை” ஏற்ற புனித ஆத்மாவாக என்றுமே இருந்திடலாம்.

நாம் ஈர்க்கும் ஒவ்வொரு சுவாச அலையும் நம் உடலுக்கும்.. நம் உணர்விற்கும்… நம் உயிர் நிலைக்கும்.. எப்படியெல்லாம் எந்தெந்த நிலை ஏற்படுத்தி நம் உடலும்.. உணர்வும்… உயிரும்… எந்த நிலையில் உள்ளன..? என்று நாம் ஜெபத்திலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

இன்றிருக்கும் ஜாதி மதத்திற்கு அடிமையாகாமல்… வழி முறையில் உள்ள பல சடங்குகளுக்கும் சாங்கியங்களுக்கும் நாம் அடிமையாகாமல்…
1.நம் எண்ணத்தையும் சுவாசத்தையும்
2.அவ்வீசனின் சக்திக்கே அடிபணியச் செய்தல் வேண்டுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என்னை வேதனப்படுத்தினான்… துன்பப்படுத்தினான்… என்று ஒரு புறம் நாம் மற்றவர்களை எண்ணினாலும் அன்புடன் பாசத்துடன் ஒருவருடன் பழக்கப்படும் பொழுது “அவர் நோயால் வேதனைப்படுகின்றார்…” என்றால் அந்த வேதனையை நாம் நுகர்ந்தால் வாலியாகி விடுகின்றது.

அந்தச் சமயத்தில் நமக்குள் இருள் தான் சூழ்கிறதே தவிர நல்லதை எண்ண முடியவில்லை. இந்த நஞ்சின் தன்மை நமக்குள் ஆன பின் உணர்வின் ஒளியின் (வெளிச்சத்தை) நிலையை நாம் காணும் நிலைகள் மறைக்கப்படுகின்றது.

1.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எதைப் பெற வேண்டும்…?
2.எந்த வழியில் நாம் வாழ வேண்டும்…?
3.எதன் வழிகளில் இந்த வாழ்க்கை வழி நடத்த வேண்டும்…? என்ற நிலையைத் தெளிவுபடுத்தும் நன்னாள் தான் திரு அண்ணாமலை தீபம்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று நம் உயிரின் தன்மை கொண்டு வேண்டும் போதெல்லாம்
1.மலையின் உச்சியில்… அதாவது உடலின் உச்சியில்… உயிரான அண்ணாமலையிடம் தான் வேண்டுகின்றோம்.
2.அவன் புருவ மத்தியில் தான் அமைந்துள்ளான்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் நாம் பார்ப்போர் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்றும்
1.நம் நினைவாற்றலை இங்கே கொடுக்கப்படும் போது
2.நமக்குள் பகைமையூட்டும் உணர்வின் தன்மைகளை அது மறைத்து விடுகின்றது… அதை அடக்கிவிடுகிறது.
3.இப்படித்தான் நமக்குள் ஒளியின் சுடராக… வளர்க்கும் ஜோதியாக… நாம் தீபமாக முடியும்.

ஆனால் அங்கே (உச்சியிலே) வெறும் ஜோதியைப் பார்த்து அருள் ஒளியாக நாம் மாற முடியாது…!

ஆகவே அனைவரது குடும்பங்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… வைரத்தைப் போன்று அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்… வைரத்தைப் போன்று அவர் செயல்கள் ஜொலிக்க வேண்டும்… வைரத்தைப் போன்று அவர்கள் எண்ணம் ஜொலிக்க வேண்டும்… அவர்கள் சொல்லில் இனிமை பெற வேண்டும்… என்று
1.அனைவருக்காகவும் நாம் இப்படி எண்ணும் போது
2.;அனைவரின் உணர்வுகளையும் நமக்குள் ஒன்றாக ஒளியாக இணைத்துக் கொள்கின்றோம்.

சாதாரணமாக காரம் உப்பு கசப்பு துவர்ப்பு இவை எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சுவைகள் தான் ஆனால் அதே சமயத்தில் சாதமோ ஒன்றாக வெண்மையாக இருக்கின்றது.

மாறுபட்ட சுவை கொண்ட பலசரக்குகளை ஒன்றாக இணைத்து அவைகளைச் சுவையின் உணர்ச்சியாகத் தூண்டி சப்… என்று இருக்கும் பொருளுடன் கலக்கப்படும் போது அது உணர்ச்சியின் தன்மை கொண்டு நாம் உணவாக ஏற்றுக் கொள்ளும் தன்மை வருகின்றது.

இதைப் போன்று தான்…
1.நம் வாழ்க்கையில் பிறருடைய தீமையின் உணர்வுகள் நமக்குள் வந்தாலும்
2.அந்த அருள் ஒளியின் சுடரைக் கொண்டு பகைமை உணர்வை மாற்றி
3.நமக்குள் சுவை கொண்ட உணர்வாக மாற்றியமைத்தல் வேண்டும்.

இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உணர்வின் தன்மை நம் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது… உடலில் உள்ள முந்திய நிலைகள் பகைமை உணர்ச்சிகளைத் தூண்டும் அந்த அணுக்களை… நமக்குள் நோயாக மாற்றி நல்ல அணுக்களைச் செயலற்றதாக ஆக்கும் அத்தகைய நிலைகளிலிருந்து மாற்றிட முடியும். அத்தகைய நன்னாள் தான் கார்த்திகை தீபம்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் கலந்த நிலையில் அது பகைமை ஊட்டும் உணர்வின் அணுக்களாக விளைந்ததனால் தான் நமக்கும் நோய் வருகிறது.

இதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் நாம் பார்த்த அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணங்களைச் சொன்னால் போதும்…!

1.அவர்கள் வாழ்க்கையில் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்… அவர்கள் செயலும் ஜொலிக்க வேண்டும்…
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்
3.எங்கள் செயல் ஜொலிக்க வேண்டும் சொல் ஜொலிக்க வேண்டும்
4.எங்கள் சொல்லைக் கேட்போர் ஜொலிக்க வேண்டும் என்று இந்த உணர்வினைக் கலந்து பாருங்கள்..

வாலி என்ற வேதனைப்படுத்தும் இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் தான் உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களை அழிக்கின்றது… நல்ல செயலையும் ஓடுக்கின்றது.

ஆனால் மேலே சொன்னபடி அனைவரது வாழ்க்கையிலும் ஜொலிக்கும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அந்த வாலியை நாம் நேரடியாகப் பார்ப்பதில்லை.

அருள் ஒளியின் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்… அனைவரும் ஜொலிப்பின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்… அதே சமயத்தில் அவர்கள் உடலிலிருந்து வெளிப்படும் இதே உணர்வுகள் அவர்களும் இதைப் போல அருள் ஒளியின் சுடரை எண்ணும் போது நமக்குள் அறியாது வரும் நோயைத் துரித நிலைகள் கொண்டு மாற்றும்.

எண்ணத்தால் உருவாக்கப்பட்ட… “உடலுக்குள் நடக்கும் இராமாயணம்”

 

ஒவ்வொரு நாளும் எந்தெந்த குணங்களை நாம் நுகர்கின்றோமோ உயிருடன் ஒன்றிய சக்தியாக அது மாற்றுகின்றது
1.நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் அதற்குண்டான சக்தியாக மாற்றுகின்றது.
2.அப்படி இணைந்த நிலைகளில் அது அது… தன் தன் இனத்தைப் பெருக்கத்தான் முயற்சிக்கும்.

இராமனுடைய தாயோ சாந்தமானது. அவளுக்குப் பிறந்தது சாந்தமான குணம் கொண்ட இராமன். அவன் தான் இந்த சாம்ராஜ்யத்தை ஆளக்கூடியவன்… இந்த உடலை… அனைவரையும் அரவணைத்து தனக்குள் வாழும் நிலை பெற்றவன் என்ற உணர்வைத் தாய் எண்ணுகின்றது.

இராமனின் தாய் அப்படி எண்ணினாலும்
1.ஆசையால் நுகர்ந்த உணர்வு… அதே ஆசையின் நிலை கொண்டு…
2.அதாவது பரதனுடைய தாயோ தன் மகனுக்குத் தான் பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறது.

நல்லவனுக்கு… தலைமகனுக்கு… இந்த பட்டத்தைச் சூட்டினால் இந்த சாம்ராஜ்யத்திற்கு நன்றாக இருக்கும் என்ற ஆசை கொண்டு வளர்த்தாலும்
1.சகோதர ஒற்றுமை கொண்ட இவன் அண்ணனே சிறந்தவன் என்று பரதன் சொல்கின்றான்.
2.இதை மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.
3.(அண்ணன் என்று செயலாற்றினாலும்… அவன் வரும் வரையிலும் அவன் காத்திருந்தான் என்று உணர்த்துகின்றார்கள்).

ஆகவே இராமனுடன் சேர்ந்தால் அவருடன் இணைந்து அவன் போக்குக்குச் சென்று விடுவான் என்று பரதனுடைய தாய் எண்ணுகின்றது. அப்போதுதான் இராமனைக் காட்டுக்கு அனுப்புகின்றது.

காட்டிற்குள் 12 வருடம் வனவாசம் சென்றால் “அந்த ஒரு மண்டலத்திற்குள்” பரதன் சிறப்பான நிலைகள் அடைந்து விடுவான். இவனின் ஆட்சி வந்தால் இராமன் வெறுத்து விடுவான் என்று சூழ்ச்சி செய்கின்றது.

இதற்கென்று சூதின் நிலைகளை உபதேசிக்கக் கூடியவர்களின் (கூனி) உணர்வுகளை அந்தத் தாய் செவிகளில் கேட்கின்றது.
1.ஒவ்வொரு உணர்ச்சியும் ஆசை என்ற நிலையில் வரும் போது அந்த உணர்வின் தன்மை எப்படி மாற்றுகின்றது…? என்பதை…
2.ஒருவர் வாழ்வதைப் பார்த்தபின் “அந்த வாழ்க்கை வாழ வேண்டும்…” என்று தன் மகனையே காக்கின்றது.

நமக்குள் எடுத்துக் கொண்ட குணம் எந்தச் சக்தியோ அந்தந்த இனத்தைப் பெருக்கத்தான் நம்முடைய குணங்கள் அது வரும் என்பதனைத் தெளிவாக்குகின்றனர்.

உயிர்… தான் நுகர்ந்ததை எல்லாம் தன் சக்தியாக ஆக்கினாலும் அது மீண்டும் தன் இனத்தையே பெருக்கும் என்ற நிலையை அங்கே தெளிவாகக் கூறுகின்றார் வான்மீகி.

நுகர்ந்த உணர்வின் சத்து உடலுக்குள் இயக்கும் சக்தியாக இருப்பினும் நுகர்ந்த உணர்வுகள் உடலாகிறது… அதன் வழி கொண்டு உருப்புகளாகின்றது அந்த உறுப்புகளின் வளர்ச்சியைக் கொண்டுதான் இராவணன்…! அதாவது
1.அவன் சகலகலா வல்லமை பெற்றவன் எல்லா இசைகளிலும் அவன் வல்லவன் சர்வ வல்லமை கொண்டவன் என்று
2.புழுவிலிருந்து மனிதன் வரையிலும் அதனுடைய உணர்வுக்கொப்ப இசைகள் வளர்ந்தது.
3.அதன் இசைகளுக்கொப்ப மனித உருவைக் கொடுத்தது
4.இசைகளிலே வல்லவன்… இவன் சிவனை வணங்குகின்றான்… “உடல் மீது பற்று கொள்கின்றான்” என்று காட்டுகின்றார்கள்.

ஆதே சமயத்தில்… தசரதன் என்றால் பத்தாவது நிலையை அடையக்கூடிய உயிர்… தான் பல உணர்வுகளை எடுத்தாலும் “சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது…” தன்னுடன் இணைத்துக் கொண்ட சக்தி (கைகேயி) தன் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று
1.நல்லவன் ஆட்சி புரிய வேண்டுமென்று ஆசை வளரப்படும் பொழுது
2.அப்பொழுது எந்த நிலை…? என்று காட்டுகின்றார்கள்.

சிவன் என்ற உடல் வரப்படும் பொழுது இராவணன் தன்னுடன் இணைந்து செயல்படும் சகோதரி சூர்ப்பணகை “மற்றொன்றின்” அழகைக் கண்டு இராமனை அவள் விரும்புகின்றார்.

இராமனைத் தனக்குள் கவர வேண்டும் என்று விரும்பினாலும்… அவன் மனைவி அழகாக இருக்கின்றாள்… அவளை ஒதுக்கினால் தானே இங்கே வருவான். ஆகவே அவனுடைய மனைவியை மற்றவருடன்கு சேர்த்து விட்டால் அதற்குண்டான நிலையில் தனக்குக் கிடைக்கும் என்று அவளுடைய அழகைப் பற்றி இராவணனிடம் வர்ணிக்கின்றாள்.

அவள் அழகாக இருந்ததால் “என்னை இராமன் அவமதித்தான்…” என்று குறை கூறி இந்த உணர்வை இராவணனிடம் ஊட்டுகின்றாள். இதை உற்றுப் பார்க்கும் போது இராவணன் சீதாவை அடைய ஆசைப்படுகின்றான்.

இந்த உணர்வு அவனுக்குள் வரும் பொழுது
1.அவன் சகல வல்லமை பெற்றிருந்தாலும் பத்தாவது நிலையை அடையும் இந்த உணர்வுகள்
2.அதனால் பகைமை உணர்வுகள் உடலுக்குள் எப்படித் தோற்றுவிக்கின்றது…? என்பதை அப்படிக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் அவனுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாம் தூங்குகின்றது… கும்பகர்ணன்…! என்றுமே அந்த நல்ல குணங்கள் தூங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அவன் மிக மிக நல்லவன்…! (தீமையின் நிலை அதிகரிக்கும் போது நல்ல குணங்கள் செயலிழந்திருப்பதை அப்படிக் காட்டுகின்றார்கள்).

தான் நுகரும் உணர்வுகளால் எது உருவாகின்றதோ…
1.வெறுக்கும் உணர்வுகளும் ஆசையின் உணர்வுகளும் வரப்படும் பொழுது
2.இவனுள் விளையும் உணர்வே இவனுக்கு எதிரியாகின்றது.
3.இராவணனை அவன் மகனே எதிர்க்கும் நிலை வருகின்றது.

இயற்கையின் சக்தி நல்லவன் என்று வரப்படும் பொழுது… தீமை என்ற உணர்வு வந்தால் அதை வெறுக்கும் தன்மை வருகின்றது.

இவனுக்குள் விஷத்தின் தன்மை கலந்தபின் இவனுடைய செயலாக்கங்கள் அனைத்தும் எந்த இசைகளைக் கண்டானோ… அனைத்தும் “சோக இசைகளாக மாறுகிறது…!”

தன் உணர்வின் தன்மை… இராமனுக்கு யார் காவலனாக தூதுவனாக இருக்கின்றார்…? ஆஞ்சநேயர்.
1.சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் விஷம்… “இராமா லட்சுமணா” என்றாலும்
2.ஒரு சுவையின் சத்தை… தனக்குள் எதை எடுத்துக் கொள்கின்றதோ (சீதாலட்சுமி) அந்த குணத்தைக் காக்க
3.அந்த உணர்வின் தன்மை ஊடுருவி அதைக் காக்கும் செயலாகச் செயல்படும்.
4.இராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் செயல்படுத்துவான்.

அதாவது வேதனை என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்… அந்த உணர்வின் தன்மை தன்னைப் பாதுகாக்கும் நிலையாக… மற்றதை (நல்லதை) அது அடக்கும்.

எந்த உணர்வின் தன்மை…? அந்த எண்ணங்கள் தான்…!

ஆக எதைக் கவர்ந்ததோ அதன் உணர்வின் தன்மை “சீதா…” என்ற சுவையைக் காக்கும் உணர்ச்சிகளையே அங்கே தூண்டுகிறது. இதைக் காட்டுவதற்கு ஆஞ்சநேயர்… தாவிச் செல்லும் உணர்வுகள்…! என்று காட்டுகின்றார்கள்.
1.ஒரு உணர்வின் உணர்ச்சி எவ்வாறு செயல்படுகிறது…?
2.மற்றவர்களை அது எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையும்
3.எண்ணங்கள் எப்படி உணர்வுகள் ஆகின்றது…?
4.உணர்வுகள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது…?
5.உணர்வுகள் எப்படி உடலாகின்றது…?
6.உணர்வுகள் எப்படி அதனதன் உணர்ச்சியின் தன்மையைத் தூண்டுகிறது…? என்ற நிலையை
7.அன்று வான்மீகி மூடனாக இருந்தாலும் தெளிவாக உணர்த்துகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக உங்கள் காலில் அடிபட்டு வலியுடன் இருக்கும் பொழுது யாராவது உங்களிடம் வந்து “சந்தோஷமாக இருக்க வேண்டும்…” என்று சொல்லட்டும். உங்கள் வலி இன்னும் கொஞ்சம் அதிகமாகும்…!

அதே சமயத்தில் படுக்கையில் நோயுடன் இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஒருவர் வந்து… “உங்கள் பையன் இன்ன இடத்திற்குப் போனான்… அங்கே போய் வீரமான ஒரு செயலைச் செய்தான்…!” என்று சொன்னால் போதும்.

அதைக் கேட்டவுடன் ஆஹா…! என் பையைன் அப்படிச் செய்தானா..! என்று கேட்டவுடனே படுக்கையிலிருந்து எழவில்லை என்றாலும் தன் உடலில் உள்ள வலிகளை எல்லாம் மறந்து விடுவார்கள்.

அல்லது… உங்கள் பையன் படிப்பில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கி இருக்கின்றான். மிகவும் கெட்டிக்காரனாக இருக்கின்றான்…! என்று திடீரென்று உங்களிடம் யாராவது சொல்லட்டும்.
1.உங்கள் வலி எல்லாம் போய்விடும்
2.ஒரு இனம் புரியாத ஆனந்த நிலை வரும்
3.உற்சாகத்துடன் எழுந்து நிற்கச் சொல்லும்…!

இதைப் போன்று தான் உங்கள் உணர்வின் தன்மை கொண்டு “அருள் மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும்…” என்று எண்ணி விட்டு நீங்கள் பார்த்தோர் உணர்வுகளில் வைரத்தைப் போன்று வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் அவர்கள் சொல்லும் செயலும் ஜொலிக்க வேண்டும் நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் வாழ்க்கை வைரத்தைப் போன்ற ஜொலிக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்.
1.அந்தச் சமயத்தில் தீமை செய்யும் உணர்வுகளை நாம் நேரடியாக நுகர்வதில்லை
2.மாறாக நாம் உயர்ந்த உணர்வுகளைத் தான் (மறைமுகமாக) எடுக்கின்றோம்
3.அப்பொழுது வாலி என்ற விஷத் தன்மையான உணர்வு நம்மை இயக்குவதில்லை.

ஆக… மனிதனின் வாழ்க்கையில் அறியாது வரும் இடையூறுகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இந்தத் தத்துவத்தைக் கொடுத்துள்ளனர்.

ஆனால் படித்தவர்கள் என்ன செய்கிறார்கள்…?

ஞானிகள் கொடுத்த தத்துவங்களை வைத்து வாதிடும் திறமைகளைக் காட்டுகின்றார்களே தவிர ஞானிகள் கொடுத்த மூலக் கூறுகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதில்லை.

இராமாயணத்தில் காட்டப்பட்ட குகன் என்பது நம் உடலில் உள்ள இரத்தநாளங்கள் தான்…!

வைரத்தைப் போல் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும் நாம் பார்ப்போர் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று எண்ணினால் நம் இரத்தங்களில் இது எல்லாம் கலக்கின்றது.

நம் இரத்தநாளங்களில் நாம் கவர்ந்த உணர்வுகள் உடல் முழுவதும் படரப்படும் போது ஒரு அமைதிப்படுத்தும் உணர்வாக… புதிய உணர்வாக அமைகின்றது.

இதைத் தான் காட்டிற்குள் செல்லும் போது “இராமன் முதலில் குகனை நண்பனாக்கிக் கொண்டான்…” என்று காட்டுகின்றனர்.

காவியத்திலே குகனைக் காட்டும் பொழுது காடு மலை வனாந்திரம் அனைத்திலும் மிருகங்களிடமிருந்தும் காப்பாற்றும் நிலைகள் கொண்டு பாதுகாப்பாகச் செல்கிறான்… இராமனுக்கு உதவி செய்கின்றான்…! என்று காட்டுகின்றனர்.

1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி உடலுக்குள் செல்லப்படும் போது இரத்தத்திலே கலந்து…
2.நம் உடல் முழுவதும் அந்த இரத்தங்கள் சுழன்று வரப்படும் போது
3.ஏற்கனவே இருக்கும் பகைமை கொண்ட அணுக்கள் இதை உட்கொண்டால்
4.அதனின் வீரியத் தன்மை அந்த வலுவை இழக்கின்றது.

ஆகவே நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்குள் (உடலுக்குள்) எந்த வழியில் செயல்படுகின்றது என்பதை இராமனைக் காட்டுக்குள் போகின்ற மாதிரி காவியங்களைப் படைத்துக் காட்டினார் வான்மீகி.

இராமன் காட்டுக்குள் சென்றாலும்…
1.பகைமைகளை எப்படி மாற்றுகின்றான்…? என்று குகனைக் காட்டி
2.அந்தக் குகனை வைத்து மற்றவர்களை இராமன் எப்படி நட்பாக்குகின்றான்..? என்ற நிலையில்
3.எண்ணங்களின் குவியலும்… இந்த எண்ணத்தின் செயலும்…
4.வாலி என்ற நிலைகள் எவ்வாறெல்லாம் இயக்குகின்றது…? என்ற நிலையையும்
5.உணர்வின் செயலாக்கங்களைத் தெளிவாக்குவதற்குக் காவியமாகப் படைத்து
6.மனிதன் வாழ்க்கைக்குத் தீமையான உணர்வின் செயலாக்கங்களிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…? என்ற நிலையும்
7.அதை அருள் ஒளிச் சுடராக மாற்றும் நிலை அது எவ்வாறு…? என்றும் இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“நேரடியாக” நாம் எடுக்க வேண்டிய சக்தி

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.
3.அது எந்நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்துப் பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

அச்சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அந்நிலையிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.அப்பூமி ஈர்த்து அந்நிலையில் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம் சுவாசத்தை.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அந்நிலையிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.எந்நிலை கொண்டு எப்படி உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விட்டிடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி…? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் அழிக்கும் தன்மை என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் ஒரு காலம் அழிந்தாலும்… இந்த அகண்ட அண்டத்தில் பல விஷத் தன்மைகள் தாக்கினாலும்..
1.அதை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அதன் வழி வாழ்கின்றது… வளர்கின்றது.

ஆகவே இருண்ட உலகமானது… மனிதனான பின் ஒளியின் உணர்வாகப் பரவுகின்றது. அந்த ஒளியின் உணர்வாகப் பரவும்போது அகண்ட அண்டமே ஒளியின் சிகரமாகிறது.

எத்தனையோ கோடி ஆண்டுகள் ஒளியுடன் ஒன்றாக இருக்கும் பொழுது… அதற்குப் பின் இந்த அகண்ட அண்டமும் ஒளியின் உணர்வாக ஆகும் பொழுது என்றும் நிலையான நிலை பெறுகின்றது

எத்தனையோ கோடி ஆண்டுகள் மனிதனாக வளர்ச்சி அடைந்து…
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது… ஒளிக்கற்றைகளாக மாற்றி
2.விஷத்தை மாற்றிடும் தன்மை ஆங்காங்கு ஏற்பட்டால்
3.இந்த அகண்ட அண்டமே முழுமையான ஒளியாக மாறுகின்றது.

இப்பொழுது இருண்ட நிலையாக இருக்கும் உணர்வுகளில் (உடலில்) ஒளியாக அறிந்து கொள்ளும் மனிதன் என்ற நிலைகளில்… எப்பொழுதுமே நாம் இதனை வளர்த்துக் கொண்டால் இனி பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

ஆடு சாந்தமானது… ஆனால் நரியோ வலிமையானது. அந்த வலிமையான உணர்வை நுகர்ந்தால் அந்த ஆடு சிவ தனுசால் தாக்கப்பட்டு அதன் உணர்வுகள் மாற்றப்படுகின்றது… ஆடு நரியின் ரூபமாகின்றது…!

ஆகவே மீண்டும் மீண்டும் உடல் பெறும் சிவ தனுசு என்ற அசுர குணங்களை நாம் மாற்றி… நரகலோகத்திற்குச் செல்வதைத் தடுத்து… விஷ்ணு தனுசு என்ற உணர்வின் தன்மையை நாம் எடுத்து… அருள் உணர்வின் தன்மை கொண்டு சொர்க்க பூமியாக ஆக்கி… மகிழ்ந்து வாழும் தன்மை பெற்று…
1.உயிரான சொர்க்கவாசல் வழி சென்றால்
2.என்றுமே பிறவியில்லா நிலை அடைய முடிகின்றது.

ஆகவே மனிதனின் வாழ்க்கையில் நாம் இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை. அதனால்தான் இராமாயணத்தில் “நேரமாகிவிட்டது…” என்று மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி இராமன் பூஜிக்கத் தொடங்கினார் என்று காட்டுகின்றனர்.

கோடிக்கரை… பல கோடி உணர்வுகள் கொண்டு இன்றைய மனித உடல் பெற்றது கரையாக (கடைசி நிலை) இருக்கின்றது. தனுசுகோடி என்று ஆகும் பொழுது உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகின்றது

விஷ்ணு தனுசைப் பயன்படுத்தினால் என்றுமே நம்முடைய உணர்ச்சிகள் ஒளிமயமாகும்…! என்ற நிலை தான் ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் எப்பொழுதுமே உயிர் வழி மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து பழகுதல் வேண்டும். அது தான் விஷ்ணு தனுசு.

1.அடிக்கடி இதை நினைவுபடுத்துகிறேன்… (ஞானகுரு)
2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்.
3.எந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் இந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது

உடலை விட்டு அகன்றால் நாம் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

எமது உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டால் “அன்று வாழ்ந்த மெய் ஞானிகளை” நீங்கள் காண முடியும்

 

நட்சத்திரங்களின் எதிர் மோதலால் ஏற்படும் மின்னல்கள் (மின் அணுக்களின் கதிர்கள்) கடலிலே பாய்ந்தால் மணலாக மாறுகின்றது அதில் உள்ள… “ஹைட்ரஜன் அந்த உப்பின் சத்து” அந்த மின்னலின் வீரியத்தைத் தணிக்கிறது.

கடலிலே பாயும் மின்னல்…
1.அந்த மின் அணுக்களுடன் தொகுப்புகள் மணலாக வரப்படும் பொழுது உயர்ந்த ஆற்றல்களைப் பெறுகின்றது.
2.இதைத்தான் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகள் இது கலவைகளாக… எது எதிர் நிலையில் வருகிறது…? என்ற நிலைக்கொப்ப மணல்களாக உருவாக்கப்படுகின்றது.

அந்த மணலினை எடுத்து அதிலிருந்து பிரித்து எடுத்து அணுவைப் பிளக்கின்றார்கள்… அந்த அணுவின் தன்மை பிளந்து பல விதமான நிலையாக எடுக்கின்றார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.

1.அதிலே சிதைவடைந்த உணர்வின் தன்மையைத் தான் கம்ப்யூட்டரில் பாய்ச்சி (பல விதமான தனிமங்கள்)
2.உணர்வின் அதிர்வுகளைக் கொண்டு… உணர்வின் செயலாக்கங்களுக்கு…
3.நுண்ணிய கதிரியக்கப் பொறிகளை மாற்றும் போது “கம்ப்யூட்டராக” அது வேலை செய்கிறது,

அதாவது…
1.மின் அணுவின் கதிரியக்கங்களின் நிலைகள் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு
2.அந்தக் காந்தத்தைக் கவரும் உணர்வின் தன்மையை அதற்குள் பதிவு செய்து உணர்வின் அறிவான பின்
3.எதிர் ஒளியின் தன்மைகள் மின் அணுவைப் போன்ற உணர்வின் தன்மை கம்ப்யூட்டரில் தோன்றும்.

அப்படித் தோன்றும் உணர்வின் தன்மை எதுவாகின்றதோ… ஒவ்வொரு உணர்வுக்கொப்ப (எதிலே செலுத்துகின்றோமோ) உருவங்களையும் காட்ட முடியும்.
1.ஒரு மனிதன் 100 ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்ந்தான் என்றால்…
2.இவன் அவன் வம்ச வழியில் வந்தவன் என்றால்
3.அவர்கள் ரூபம் எப்படி இருக்கிறது…? என்று அக்கால உருவத்தைக் காணலாம்.

இந்த உணர்வின் தன்மை பதிவாக்கி இந்தக் கம்ப்யூட்டரின் மூலம் எதிர் அலைகளை எடுத்துக் கொண்டால் ஒளியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.
1.மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது
2.இங்கே வாழ்ந்த உணர்வுகள் “பதிவானதை எடுத்து”
3.அந்த மனிதனுடைய உருவத்தையே கம்ப்யூட்டர் கொடுக்கின்றது.

விஞ்ஞானிகள் அதைக் காட்டுகின்றார்கள்.

இதே போன்று அன்று “வாழ்ந்த மெய் ஞானிகளையும்” நாம் காண முடியும் அவனில் விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் இப்போது பதிவாக்கப்படும் பொழுது
1.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்து அதைப் பெருக்கிக் கொண்டே வந்தால்
2.அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வந்து
3.அவன் எப்படி ஒளியாக ஆனான் என்ற உணர்வை எடுத்து நீங்களும் ஒளியாக ஆக முடியும்.

சில பேர் நினைக்கலாம் விஞ்ஞானம் அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது இவர் என்ன படிக்காதவர் சொல்கிறார்…? (ஞானகுரு) என்று.

ஏனென்றால் விஞ்ஞானிகளுடைய செயல்கள் எப்படி இருக்கின்றது மெய் ஞானிகள் அறிவு எப்படி இருக்கின்றது…? மெய்ஞானிகளுடைய செயல் எப்படி இருக்கிறது…? என்பதை குருநாதர் அந்த இயற்கை நிலைகளை அதனுடைய இயக்கங்கள் எப்படி…? என்பதை அவர் காட்டிய நிலைகளைக் கற்றுணர்ந்த பின் தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

இதைப் பதிவு செய்து கொண்டால் கால பருவம் வரும் போதெல்லாம்
1.அந்தந்த உணர்வுக்கொப்ப அந்தந்தக் காலங்களுக்கொப்ப
2.உணர்ச்சிகள் அது கலந்து அறிவின் ஞானமாக உங்களுக்குள் ஊட்டும்.

முந்தி சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும் அதனின் வளர்ச்சி உங்களில் வரப்படும் பொழுது… இயற்கையின் நிலையாக “உங்களை நீங்கள் அறியும் உணர்வுக்கு வளர வேண்டும்…” என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.

எத்தனை காலம் இந்த உடலில் நாம் வாழப் போகிறோம்…?
1.இந்த உடல் சதமற்றது… என்றைக்கும் நிலையானது உயிர்.
2.அந்த உயிருடன் ஒன்றி ஒளியாக ஆக்கப்பட வேண்டும்.

ஆகவே… உடலுக்குப் பின் பிறவி இல்லை…! பிறவி இல்லா நிலை அடைந்த அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிப்பது தான் இந்த உபதேசத்தின் நோக்கம்.

நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்… பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்

 

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலந்திடும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் இந்நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்…
2.உந்தல்கள்…! தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவரவர் நிலையை அவரவர்கள் உணர்ந்து பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள்.

பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி நான் என்றால் என்ன…? என்பதை அன்றே உணர்ந்து இந்த மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.
3.அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமித்திடல் வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். அந்தச் சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்து நமக்குப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அந்நிலை கொண்டு தான் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.

எதிர்மறையான மோதல் இல்லை என்றால் வளர்ச்சியே (இயக்கச் சக்தி) இல்லை

 

நம் பிரபஞ்சத்திற்கு சனிக்கோள் மிகவும் முக்கியமானது. தனக்குள் வரும் ஆவியின் தன்மைகளை எல்லாம் நீராக மாற்றும் திறன் பெற்றது.

சனிக்கோளின் உணர்வு எது எதில் எல்லாம் கலக்கின்றதோ
1.அந்த அணுவின் தன்மை ஜீவன் பெறுவதற்கு அதுவே மூலமாகும்.
2.சனிக்கோளின் உணர்வுகளை எது பெறவில்லையோ அந்த அணுக்கள் ஜீவன் இழந்துவிடும்.

சனிக்கோளின் சக்தி பெறவில்லை என்றால் வான் வீதியில் உருவாகும் நிலைகள் அது வெறும் பாறை ஆகிவிடும்… கரைந்து விடும். வளர்ச்சி பெறுவதற்குண்டான நிலைகள் அதிலே இருக்காது.

ஆகவே தான் ஜீவன் பெறச் செய்வதற்கு சனிக்கோள் மிகவும் முக்கியமானது. நம் உடல் உறுப்புகளில் எதை எதை எல்லாம் எவ்வாறு மாற்றுகிறதோ அதைப் போல இந்த பிரபஞ்சத்திற்கு… சனிக்கோள் மிகவும் முக்கியமானது.

சனிக்கோள் செயல் இழந்து விட்டால் இந்தப் பிரபஞ்சம் இருக்காது…!

உதாரணமாக 27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று “எதிரியானது…” அந்த மின் அணுக்களின் தன்மை… கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விட்டால் “மின்னலாகப் பாய்கின்றது…” அப்போது அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அது கருகி… துகள்களாக மாறுகின்றது.

ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் எதிர்நிலை. ஆக
1.அந்த அணுக்கள் மோதும் பொழுது தான் பொறிகளாகி
2.மின்னணுவாக அது ஓடும் பாதையில் ஊடுருவி இதனுடைய செயலாக்கங்கள் மாற்றிவிட்டு மற்ற உணர்வின் நிலைகள் மாறுகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களின் மாற்றங்கள்
1.ஒன்று மற்றொன்றுடன்… ஒன்று மற்றொன்றுடன் என்ற நிலையில்
2.இப்படி மாறி மாறி மாறி வருவதைத்தான் உலகில் கல் மண் எல்லாம் உருவாகிறது.

அதாவது வான் வீதியில் உருப் பெறும் மின்னணுக்களை மற்ற கோள்கள் தூசிகளாக மாற்றி விடுகின்றது அது நுகர்ந்த உணர்வு மற்ற கோள்கள் உமிழ்த்தும் உணர்வுடன் கலந்த பின் உணர்வின் மாற்றங்கள் ஆகி பாறைகளாகவும் கல்லாகவும் மற்ற நிலையாகவும் ஆகிறது.

பூமியின் தன்மை நீருடன் கலந்து உணர்வின் சத்தை எடுக்கப்படும் பொழுது
1.தாவர இன வித்தாக உருவாகும் தன்மை வருகின்றது.
2.தாவர இன சத்தை உருவாக்கும் இந்த நிலை பெற்ற பின் “உயிரணு தோன்றி” நுகரும் தன்மை வருகின்றது.

ஆனால் உயிரணு தோன்றி மனிதனாக உருவான பின் சர்வத்தையும் உணரும் நிலையாக இயக்கச்சக்கியாக மாற்றுகின்றான் மனிதன்.

ஆக
1.அறிவின் ஞானம் கொண்டு இந்த உலகையே அடக்கிடும் தன்மை பெற்றவன் என்று
2.விநாயகர் தத்துவத்தில் ஆதிமூலம் என்ற உயிர்… பல கோடிச் சரீரத்தில் சேர்த்துக் கொண்ட நிலைகள் மனித உடலாக ஆனாலும்
3.அங்குச பாசவா…! இந்த பிரபஞ்சத்தை அடக்கி ஆட்சி செய்யும் சக்தி பெற்றவன் என்று காட்டுகின்றார்கள்.

அப்படிப்பட்ட ஆற்றலை முதன் முதலிலே பெற்றவன் அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தில் வருவதை எல்லாம் ஒளியின் உணர்வாக மாற்றி… எதற்கும் அடிமையாகாது ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்.

அகஸ்தியன் பெற்ற அந்த ஆற்றலை நாமும் பெற வேண்டும்.

ஜென்ம நட்சத்திரமும்… கிரகங்களின் பார்வையும்…!

 

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை பல உண்மைகளை அறிந்திட நாம் எல்லோருமே ஆர்வம் கொண்டுள்ளோம்.

1.பிற்கால வாழ்க்கையை எண்ணி
2.இனி நடக்கப் போகும் நிலை என்ன…? என்பதை அறிந்திட எல்லோரும் விரும்புகின்றோம்.

இருந்தாலும் நம்முள் உள்ள பரமாத்மாவை மறந்து விட்டு “பரலோகத்திலுள்ள பரமாத்மா…!” என்று வேண்டி ஜாதகங்கள்… ஏட்டுச் சுவடிகள்.. என்று இப்படிப் பல வழிகளில் ஆரூடம் பார்த்து “அறிதல்” என்றெல்லாம் நம் காலத்தைச் சிதறவிட்டு விடுகின்றோம்.

சூரியனின் சக்தியிலிருந்து அந்தச் சூரியனைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையை வைத்து அம்மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியனில் பட்டு… அச்சூரியனிலிருந்து நம் பூமிக்கு வந்திடும் ஒளியின் தன்மையை வைத்துப் பல நிலைகள் நடக்கின்றன.

அந்தச் சூரிய சக்தியின் பிம்பத்தில் பல மண்டலங்களின் ஒளி பட்டு “அந்நிலை பூமிக்குக் கிடைக்கும் நேரத்தைத்தான்” அன்றைய சித்தர்கள் ஜாதகங்கள் என்ற நிலையில் கண்டனர்.

1.சந்திரனின் பார்வை… சூரியனின் பார்வை என்றும்
2.கேது இராகு என்ற ஒவ்வொரு மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியன் மேல் படும் பொழுதும்
3.அந்த ஒளிக் கதிரின் தன்மை பூமியின் மேல் படும் காலத்தை வைத்துத்தான் சித்தர்கள் ஜாதகம் கணித்தார்கள்.

ஜென்ம நட்சத்திரம் என்கிறார்கள்…! எந்தக் குழந்தைக்கும் ஜென்ம நட்சத்திரத்தை இன்றைய ஜாதகக்காரர்களால் அறிந்திட முடியாது. குழந்தை பிறந்திடும் நேரத்தை வைத்து ஜென்ம நட்சத்திரம் குறிக்கின்றார்கள்.

அதுவல்ல ஜென்ம நட்சத்திரம்…!

1.அது தன் தாயின் வயிற்றில் “என்று உதயம் பெற்றதோ…” அந்த நேரம் தான் அதற்கு ஜென்ம நட்சத்திரம்.
2.அந்த நிலையைக் கணித்திட இன்றைய ஜாதகக்காரர்களால் முடியாது.

இராமர் இராம நவமி அன்று பிறந்தார்… என்றும் முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகம்…! என்றும் கணிக்கின்றார்கள் பாட நிலைப்படித்தான்…!

இராமர்… கிருஷ்ணர்… முருகன்… எல்லாம் பிறவி எடுக்கவில்லை. அவர்களின் குணாதிசயங்களை வைத்துத்தான் நம் சித்தர்கள் அவர்களுக்கு நாமங்கள் இட்டார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இராமர் பிறந்த நேரத்தையும் முருகன் பிறந்த நேரத்தையும் எப்படிக் கொண்டாடுகின்றார்கள்…? என்று நீங்கள் நினைத்திடலாம்.

அன்றையச் சித்தர்கள் மற்ற மண்டலங்களின் ஒளிக்கதிர்கள் சூரியனில் பட்டு பூமியைத் தாக்கும் பொழுது…
1.என்றென்று அந்த நல்ல நிலை பெறும் நாளோ அந்த நாட்களின் குணா அம்சங்களை வைத்து
2.அந்த நாட்களை அந்த ஒளியிலிருந்து வரும் சக்தியின் நிலை கொண்டு
3.முருகருக்கும் இராமருக்கும் பிறந்த நாட்கள் என்று கணித்தார்கள்.

கணித்தார்கள் என்றால் அந்நிலை பெறும் நேரத்தை நல்ல நேரமாக ஏற்று அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் உகந்த நாள்…! என்று மக்களுக்கு ஏற்றுக் கொள்ளப் பல வழிகளைச் சொல்லிச் சென்றார்கள். ஆனால் அந்த உண்மைகளை எல்லாம் காலப்போக்கிலே சிதறடித்து விட்டார்கள்.

மற்ற மண்டலங்களின் ஒளி சூரியனில் எப்பொழுது கிடைக்கப் பெறுகிறது…? மற்ற மண்டலங்களில் உள்ள சக்தி சூரியன் மேல் பட்டு அதன் பின் அச்சூரியன் நமக்கு அளிக்கின்றது.

சந்திரனில் ஒளிக் கதிர்கள் இல்லாவிட்டால் “இன்றைய வண்ணங்கள்… சுவைகள்…” இவை எவையுமே நாம் பெற்றிருக்க முடிந்திடாது.

அதைப் போல் தான் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நமக்குப் பலவித இயற்கைத் தன்மை வாய்ந்த சக்தியெல்லாம் கிடைக்கின்றது.

பெரும் பேறு வாய்ந்த சக்தியுள்ள பூமியப்பா…! இன்று நாம் வாழ்ந்திடும் பூமி. இந்தப் பூமித் தாயின் உயிரோட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு உலகினிலே உதித்த நாம் எல்லோருமே உண்மையுடன்… “உன்னதமாக வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

ஒவ்வொருவரும் அவரவர்கள் கடந்த காலத்தை எண்ணிக் கலங்கிடாமல் நம்முள் உள்ள பரமாத்மாவின் நிலையை அறிந்து வாழ்ந்திடுங்கள்.

1.தவறின் நிலையை எல்லாம் மறந்துவிட்டு
2.இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
3.பிறந்த பயனை இக்கலியின் கடைசியில் கல்கியில் ஒவ்வொருவரும் பிறந்திடத்தான் இதை உணர்த்துகின்றேன்.
4.என்னுடைய (ஈஸ்வரபட்டன்) ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் ஒரு காலம் அழிந்தாலும்… இந்த அகண்ட அண்டத்தில் பல விஷத் தன்மைகள் தாக்கினாலும்.. அதை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அதன் வழி வாழ்கின்றது… வளர்கின்றது.

ஆகவே இருண்ட உலகமானது… மனிதனான பின் ஒளியின் உணர்வாகப் பரவுகின்றது. அந்த ஒளியின் உணர்வாகப் பரவும்போது அகண்ட அண்டமே ஒளியின் சிகரமாகிறது.

எத்தனையோ கோடி ஆண்டுகள் ஒளியுடன் ஒன்றாக இருக்கும் பொழுது… அதற்குப் பின் இந்த அகண்ட அண்டமும் ஒளியின் உணர்வாக ஆகும் பொழுது என்றும் நிலையான நிலை பெறுகின்றது

எத்தனையோ கோடி ஆண்டுகள் மனிதனாக வளர்ச்சி அடைந்து…
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது… ஒளிக்கற்றைகளாக மாற்றி
2.விஷத்தை மாற்றிடும் தன்மை ஆங்காங்கு ஏற்பட்டால்
3.இந்த அகண்டமே முழுமையான ஒளியாக மாறுகின்றது.

இப்பொழுது இருண்ட நிலையாக இருக்கும் உணர்வுகளில் (உடலில்) ஒளியாக அறிந்து கொள்ளும் மனிதன் என்ற நிலைகளில்… எப்பொழுதுமே நாம் இதனை வளர்த்துக் கொண்டால் இனி பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

ஆடு சாந்தமானது… ஆனால் நரியோ வலிமையானது. அந்த வலிமையான உணர்வை நுகர்ந்தால் அந்த ஆடு சிவ தனுசால் தாக்கப்பட்டு அதன் உணர்வுகள் மாற்றப்படுகின்றது… ஆடு நரியின் ரூபமாகின்றது…!

ஆகவே மீண்டும் மீண்டும் உடல் பெறும் சிவ தனுசு என்ற அசுர குணங்களை நாம் மாற்றி… நரகலோகத்திற்குச் செல்வதைத் தடுத்து… விஷ்ணு தனுசு என்ற உணர்வின் தன்மையை நாம் எடுத்து… அருள் உணர்வின் தன்மை கொண்டு சொர்க்க பூமியாக ஆக்கி… மகிழ்ந்து வாழும் தன்மை பெற்று…
1.உயிரான சொர்க்கவாசல் வழி சென்றால்
2.என்றுமே பிறவியில்லா நிலை அடைய முடிகின்றது.

ஆகவே மனிதனின் வாழ்க்கையில் நாம் இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை. அதனால்தான் இராமாயணத்தில் “நேரமாகிவிட்டது…” என்று மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி இராமன் பூஜிக்கத் தொடங்கினார் என்று காட்டுகின்றனர்.

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் பார்க்கின்றோம்… சந்திக்கின்றோம்… பழகுகின்றோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

அப்படி நம்முடன் பழகிய அந்த உணர்வுகள் அனைத்தும்… அதாவது நாம் பழகியோர் அனைவரும்
1.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று பூஜிக்கத் தொடங்கினால்
2.ஒவ்வொரு நிலையிலும் இதன் உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது “இராமலிங்கம்…!”
3.ஆக… எண்ணத்தைக் கொண்டு உணர்வின் தன்மை உயிரை ஒளியாக மாற்றுவது தான் அது..!
4.உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் உயிரைப் போல ஒளியாக மாற்றப்படும் போது தனுசுகோடி.

கோடிக்கரை… பல கோடி உணர்வுகள் கொண்டு இன்றைய மனித உடல் பெற்றது கரையாக (கடைசி நிலை) இருக்கின்றது. தனுசுகோடி என்று ஆகும் பொழுது உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகின்றது

விஷ்ணு தனுசைப் பயன்படுத்தினால் என்றுமே நம்முடைய உணர்ச்சிகள் ஒளிமயமாகும்…! என்ற நிலை தான் ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் எப்பொழுதுமே உயிர் வழி மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து பழகுதல் வேண்டும். அது தான் விஷ்ணு தனுசு.

1.அடிக்கடி இதை நினைவுபடுத்துகிறேன்… (ஞானகுரு)
2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்.
3.எந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் இந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது

உடலை விட்டு அகன்றால் நாம் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

பிறரை வேதனைப்படுத்தி வாழ்ந்தால் அவர்கள் இடும் சாபம்… “நம்மையும் சந்ததியினரையும் தாக்கத் தான் செய்யும்”

 

தீமை என்ற நிலையில் ஒருவன் பேசி விட்டால் அது வாலி என்ற நிலையை அடைகின்றது.
1.அந்தத் தீமையான சொல்லை ஒருவன் கேட்டால் அது அவன் நல்ல குணங்களை வீழ்த்தி விடுகின்றது.
2.திருப்பி அவருடைய எண்ணங்களும் வாலியாகின்றது.

இத்தகைய போர் முறை வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்தும் அந்த நல்ல உணர்வுகள் மடிந்து விடுகின்றது.

அதனால் தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்…! என்று காவியத்திலே காட்டினார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் இன்று உலகில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். ஏனென்றால் குறுகிய காலமே வாழும் நாம் உடலின் இச்சைக்கு அடிமையானால்… கடும் நஞ்சு கொண்ட உணர்வின் தன்மையாக நமக்குள் விளைந்து விடுகின்றது.

உடலின் இச்சைக்கு வாழப்படும் பொழுது வேதனைப்படுத்தி மற்றொன்றைத் துன்புறுத்தி அதில் மகிழ்ந்து இந்த உடலில் வாழலாம்.
1.அடுத்த கணம் இந்த நஞ்சின் தன்மையை கொண்டு பிறருடன் தொடர்பு கொள்ளப்படும் பொழுது
2.அவன் இடும் சாப அலைகளிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்…!

இன்று இவர்கள் இவ்வாறு செய்யலாம் ஆனால் அவன் குடும்பத்தில் கருவில் விளையும் சிசுவிற்கு
1.சாபமிட்ட அலைகளைக் கர்ப்பிணியாக இருக்கும் அந்த தாய் நுகர நேர்ந்தால்
2.அந்தச் சிசுவிற்குள் இந்த உணர்வுகள் விளைந்து
3.இவனால் பட்ட வேதனைகள் அந்த ஒன்றுமறியாத குழந்தையும் நரக வேதனைப்படும் தன்மை வருகின்றது.

இவன் செல்வத்தைச் சம்பாதித்தாலும் அந்த குழந்தை அதை பெறுவதற்கு இல்லை. ஆனால் தட்டிப் பறித்துச் சென்றுவிடும் இவன் அதை அனுபவிக்கப் போவதில்லை.

குழந்தைக்காகத் தான் பணத்தைச் சேமிக்கிறேன் என்று சொன்னாலும்
1.அவனிட்ட சாப அலைகளால் இவனும் வாழ முடிவதில்லை
2.அவன் குழந்தையையும் வாழ முடியாத நிலைகள் செய்து விடுகின்றது.

இப்படி ஒவ்வொரு மனிதனும் ஆசையின் எல்லை கொண்டு தன் நிலைகளிலே விஷம் கொண்ட உணர்வுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலை தான் இன்று உள்ளது.

அன்று ஆண்ட ஒவ்வொரு அரசனும் தான் வாழ… மதம் இனம் என்ற நிலைகளைத் தூண்டிவிட்டு அதிலே நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் மதத்திற்குள் மதம் மதத்திற்குள் இனம் இனத்திற்குள் இனம் என்ற நிலையில் நஞ்சின் தன்மையாகப் பாயச் செய்து விட்டார்கள்.

வழி வழியாக வந்த நிலைகளில் இன்று எது உண்மை…? எது பொய்…? நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற சிந்தனையற்ற நிலையாக… சிதைந்த நிலையில் தான் இன்று அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றால் அருள்
1.யாம் உபதேசிக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்.
2.அடிக்கடி அதை நினைவுக்குக் கொண்டு வந்து உங்கள் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

கஷ்டம் வரும்போது… ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்

 

இன்றைய உலகில் உள்ள பெரும்பகுதியானோர் தன் உயிரின் உண்மை நிலையையும்… கடவுளின் நிலையையும்… தான் வாழும் வாழ்க்கை நிலையையும்… புரியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஈஸ்வர சக்தி பெற்ற… பிறப்பிலிருந்து நல்லவர்… கெட்டவர்… என்ற பாகுபாடு இல்லாமல் அச்சக்தியில் இருந்து அவர்களுக்கு அளித்த மாபெரும் சந்தர்ப்பத்தை “நலமாக வாழ்ந்திடத்தான்” ஒவ்வொருவரும் பிறக்கின்றார்கள்.

பிறவி எடுத்த நிலையில் அவரவர்கள் வளர்ந்த நிலை… மண் வாக்கு… மன நிலை… சுவாச நிலையைக் கொண்டு வாழும் பொழுது “தன் சுவாச நிலையிலே தான்” அவர்களுடைய நிலை எல்லாமே நடக்கின்றன.

1.இன்றைய காலத்தில் மக்கள் ஆண்டவனை வணங்குவது என்பதே
2.தன் கஷ்டங்களுக்கு மீட்கும் வழியை வகுத்துத் தரத்தான் பல கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள்.
3.பல காணிக்கைகளைக் கட்டி பல வேண்டுதல்களையும் செய்து
4.ஆண்டவனையும் இவர்கள் செய்யும் வியாபாரத்தில் பாகஸ்தனாக்கி
5.இவர்கள் செய்யும் பாவத்திற்கும் ஆண்டவனின் பெயரை உபயோகித்துக் கொள்கிறார்கள்.

நான் அள்ளி அள்ளி ஆண்டவனுக்கு அளித்தேன்… எல்லா ஆண்டவனுக்கும் பல நிலையில் பூஜை செய்கிறேன்… அந்த ஆண்டவனுக்குக் கண்ணில்லையா…? என்றெல்லாம்
1.இவர்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது
2.அந்த ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்.

இவர்கள் எண்ணி ஏங்கும் பொருள் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் எந்தக் கோவிலுக்காவது சென்று வந்தால் அந்த நிலையிலிருந்து பொருள் வந்தவுடன் ஆண்டவனை… “எல்லாம் அவன் தான்…!” என்கிறார்கள்.

(ஆனால்) இவர்கள் மன நிலையில் இருந்து தான் அவ்வாண்டவனின் சக்தியே செயல்படுகிறது.

1.அந்தச் சூரிய சக்தியிலிருந்து…
2.இவர்கள் ஈர்க்கும் நிலையிலிருந்து தான் அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை இதைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து
3.அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்…
4.அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது…! என்ற உண்மையை உணருங்கள்.

நம் சித்தர்கள் பல வழிகளில் பல உண்மைகளைச் செய்யுள்களின் (பாடல்கள்) வடிவில் மனிதர்களின் எண்ணத்திற்குப் பதியும்படி முதலிலேயே வெளியிட்டுள்ளார்கள்.

ஆட்டை வெட்டுபவனுக்கு… ஒவ்வொரு நாளும் பல ஆடுகளை அடித்து வியாபார நிலைக்கு அவன் அதை விற்கிறான். ஆட்டை வெட்டுபவனுக்குத் தான் பாவம்… உண்ணுபவனுக்கு அல்ல…! என்று எண்ணுகின்றோம்.

அவன் எதற்காக ஆட்டை அடிக்கின்றான்…?

அவன் எண்ணமெல்லாம் அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்திடத்தான்…! அதைச் செய்கிறான். பாவ புண்ணியத்தை அவன் எண்ணத்தில் கொண்டு வருவதில்லை.

பாவ புண்ணியத்தை அவன் எண்ணி விட்டால் அவன் எண்ணத்திலேயே அது ஊன்றி.. அவன் அந்தத் தொழிலை ஒரு நாளும் செய்திட முடியாது.

பல தண்டனைகள் பெற்ற கைதிகளை ஒருவன் தூக்கிலிடுகின்றான். ஒரே நாளில் அவன் பலரைத் தூக்கிலிட்டாலும்.. அவனுக்கு அந்தப் பாவம் அண்டுவதில்லை.

அவன் பொருள் வாங்க அந்தப் பணியைச் செய்கிறான். தன் மேல் தவறை எண்ணும் பொழுது தான் அவனுக்கு அந்நிலை தோன்றிடும். அவன் தொழில் அது தான்; அவன் ஊதியத்தைப் பெறுகின்றான்; அவன் எண்ணமெல்லாம் அந்த ஊதியத்தின் மேல் தான் உள்ளது.

அவன் ஆத்மாவில் அவன் நல்ல நிலைகள் பெற்றிருந்தால் அவனை எந்தப் பாவ புண்ணியங்களும் அண்டுவதில்லை. அவன் நிலையும் உயர்ந்து நிற்கிறது.

1.பல பாவங்கள் செய்துவிட்டு
2.செய்த பாவங்களைத் தன் எண்ணத்திலேயே கலக்கவிட்டு
3.தன் சுவாச நிலையை மேலும் கடினமாக்கிக் கொண்டு
4.பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் இன்றைய மனிதர்கள்.

இந்நிலையிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் உயிரணுவிற்கு ஊட்டம் தந்து அவ்வுயிரணுவிற்கு அழியாச் செல்வத்தைத் தேடிடத்தான் இந்தப் பாட நிலையை எடுத்து இயம்புகிறோம்.

1.உயிரணுவின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
2.இனி வாழும் நாட்களை நல்ல நிலையில் வாழ்ந்திடுங்கள் என்பதற்கே இதை வெளியிடுகின்றோம்,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் ஒவ்வொருவருமே கூட்டுத் தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் தான் நம் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தத் தியானத்தில் கலந்து கொண்டு..
1.எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற
2.முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று ஏககாலத்தில் இதைச் சொல்லும் பொழுது
3.உடனடியாக அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் விண் செலுத்த முடிகின்றது.

காரணம்…
1.அவர்கள் (முன்னோர்கள்) துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து அறியவில்லை என்றாலும்
2.அவர்கள் சார்புடையோர் அந்தக் குடும்பத்தில் உள்ளோர்கள் நுகர்ந்து அறிந்துள்ளார்கள்.
3.அந்த உணர்வின் வலிமை கொண்டு வரும் பொழுது
4.மேலே சொன்னது போல் எல்லோரும் சேர்த்துச் சொல்லும் போது
5.அந்த உணர்வுகள் அவரவர் செவிகளில் பட்டு… கண் வழி கவர்ந்து… மூக்கு வழி நுகர்ந்து… உணர்வின் தன்மை உடலில் பெருகி…
6.அதனின் வலு கொண்டு நாம் விண்ணில் செலுத்தும் பொழுது எளிதில் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் சென்றடைகிறது.

முன்னோர்களின் உடலில் கடுமையான நோய் இருந்திருந்தாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் படரப்படும் பொழுது அந்த நோயின் உணர்வுகளைக் கரைத்து விடுகிறது. உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அங்கே ஒளியாக நிலைக்கின்றது.

ஆக… குடும்பத்தைச் சார்ந்தவர் அனைவரும் காலை துருவ தியானத்தில் அந்தச் சக்தியை எடுக்கும் பொழுது அடிக்கடி முன்னோர் மூதாதையரின் உயிரான்மாக்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… பேரின்பப் பெரு வாழ்வு பெற வேண்டும்… என்று இந்த உணர்வுகளை எடுத்துக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் அவர்களுடன் பழகிய உணர்வுகள் என்றும் நமக்குள் உண்டு. காலை துருவ தியானத்தில் அடிக்கடி எண்ணி அவர்களை விண் செலுத்தும் பொழுது
1.நம் உடலில் பரம்பரை நோய் வராது மாற்றப்படுகின்றது
2.பரம்பரை குணம் என்ற நிலைகள் மாற்றப்படுகின்றது.

முன்னோர்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுப்பு கொண்டு சாபமிட்டுத் தீய உணர்வுகளை எடுத்திருந்தாலும் அந்தச் சாப வினைகள் நமக்குள் மறையத் தொடங்குகின்றது.

இதைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் இதைப் போன்று எடுத்து அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் அடையச் செய்தால் நம் மூதாதையர்கள்

இதற்கு முன் இதை நாம் செய்யத் தவறி இருந்தாலும் கூட நம் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று நாம் அவசியம் தியானிக்க வேண்டும்.

1.அவர்கள் ஆன்மாக்களை நாம் விண்ணுக்குச் செலுத்தச் செலுத்த
2.நம்முடைய உணர்வுகள் வலுப்பெற இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் பரவப் பரவ
3.முன்னோரின் ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் புகுந்திருந்தாலும்
4.அந்த உடலிலும் தீய சக்திகளை வளர்த்திருந்தாலும்… அந்த உடல் மடிந்து வெளி வந்தபின்
5.நாம் பாய்ச்சும் இந்த அருள் உணர்வுகள் பட்டபின் அங்கே உந்தித் தள்ளினால் இந்த உணர்வு வலுப்பெறுகின்றது
6.ஒவ்வொரு நாளும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
7,காலை துருவ தியானத்தில் செய்தால் அவர்கள் எளிதில் சப்தரிஷி மண்டலம் அடைகின்றனர்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் வாழ்ந்து பிறவியில்லா நிலை அடைதலே நம்முடைய தியானத்தின் நோக்கம்.

ஆக.. இந்த பேரருளைப் பெருக்க… அருள் ஞானத்தைப் பெருக்க… இந்த உடல் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

மற்றவர்களுக்கு அருளைப் பாய்ச்சும் போது… தீமையிலிருந்து விடுபடும் சக்தியை நமக்குள் வலுவாக்க முடியும்

 

அன்றைய அரசர்கள் தன்னுடைய சுகபோகங்களுக்காக மனிதரை மாக்கள் ஆக்கி… அவன் சுகபோகங்களை அனுபவித்தான். அவனுக்குக் கீழ் அடிமையாக்கப்பட்ட நிலையில் மக்கள் இன்றும் நரக வேதனையில் தான் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவன் ஏற்படுத்திய பகைமை உணர்வுகள் மதத்தை அடிப்படையாக வைத்து மக்களைப் போர் புரியச் செய்தான். அதன் விளைவாக… சகோதர உணர்வுகள் இன்று இழக்கப்பட்டுப் போர் முறைகளாக வந்து கொண்டிருக்கின்றது

பகைமை உணர்வுகள் வளர்ந்த பின்
1.அஞ்சி வாழும் நிலைகளாக உண்மையின் உணர்வுகளை அறியும் தன்மை இழக்கப்பட்டு
2.இன்று வாழும் மக்கள் பண்டைய கால வாழ்க்கை நிலை போல
3.மிருகத்தைப் போன்று ஒருவருக்கொருவர் தாக்கிடும் நிலையாக அஞ்சி வாழும் உணர்வுகளே விளைந்து வந்து கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து மனிதன் மீள வேண்டும்.

ஆகவே… நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உண்மையின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த மனித உடலில் இருந்தே அருள் வழியைப் பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களை அணுகியவர்களுக்கும் இந்த அருள் உணர்வை ஊட்டுங்கள்.
1.தவறு செய்வது நாம் அல்ல… சந்தர்ப்பங்களும் அந்த நேரத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் இயக்கச் சக்தியாக இயக்குகின்றது.
2.இதிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்கள் மற்றவர்களுக்கு ஓதும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வலுவாக வளர்த்துக் கொள்ள முடியும்.

உங்கள் சொல்… அந்த அருள் உணர்வுகள்… அங்கே பதிவாக்கப்படும் பொழுது அவர்களையும் தீமையிலிருந்து மீட்டிடும் சக்தியாக மாற்ற முடியும். நீங்கள் இடும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவருகின்றது.

நீங்கள் எண்ணும் பொழுது அகஸ்தியனின் உணர்வை அறியும் நிலையாக அறிய முடியும். நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் அகஸ்தியன் உணர்வையும் நீங்கள் பெற முடியும் உங்கள் வாழ்க்கையும் அந்த நிலை பெறும். அடுத்து பிறவி இல்லா நிலை அடையும் பாக்கியமும் பெறுகின்றீர்கள்.

உங்கள் வாழ்க்கை அனைத்தும் சதா அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே வாழ்ந்திடும் நிலை பெறுங்கள். அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

1.பகைமை என்ற உணர்வோ… அதனால் வந்த நோயோ இருந்தாலும் அதை மறந்து விடுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவேன்… என் இரத்த நாளங்களில் கலக்கச் செய்வேன் என்று இதைப் பெருக்குங்கள்.

அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்… அது வளர அறியாது சேர்ந்த பகைமையால் ஏற்பட்ட கடும் நோய்களிலிருந்து விடுபட முடியும்.

நோய்…! என்று எண்ணத்தை அதன் மீது செலுத்தாதீரக்ள். அதை மறைக்க அருள் உணர்வுகளைச் சேருங்கள்.
1.இதைச் சேர்க்கச் சேர்க்க மகரிஷிகளை எண்ணினாலும் தீமை என்ற நிலைகள் சிறிது கடினமாக இருக்கும்.
2.மேலும் என்னைச் சிந்திக்க விடவில்லையே…! என்று ஏங்க வேண்டாம்
3.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்… எனக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் அணுக்களும் சாந்தமடையும்.
4.என் உடல் நலம் பெறும்…!
5.என் இரத்த நாளங்களில் மகரிஷிகள் உணர்வுகள் பெருகும்… அருள் ஞானம் பெறுவேன்…
6.என் பேச்சும் மூச்சும் கேட்பவரையும் நலம் பெறச் செய்யும் என்று இத்தகைய உறுதியுடன் நீங்கள் செயல்படுத்துங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உடலில் உள்ள கல்லீரல் இருக்கிறது என்றால் அது உப நிலைகளை வைத்து அது மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை வடிகட்டிக் கொடுக்கின்றது.

அதே போல் பித்தப்பை என்றால் அதன் உணர்வுகள் தனக்குள் எடுத்து பித்தத்தை வடிகட்டி மீண்டும் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுடன் கலந்து எடுக்கும் போது ஜீரணிக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றது.

1.பித்தத்தின் சுரப்பு மாறினால் அஜீரணமாகும்
2.அதிகமானாலும் குறைவானாலும் அஜீரணமாகும்
3.சம அளவு கிடைத்தால் தான் ஜீரண சக்தி சீராகும்.

வேதனை என்ற உணர்வு நமக்குள் அதிகரித்தால் அதனால் விஷத்தின் தன்மை அதிகமாக அந்தப் பித்தப்பை உமிழ்த்தினால் அந்த உறுப்பின் தன்மை பாழாகும்.

பொதுவாக… நாம் உணவை உட்கொள்ளும் போது அதற்குத்தக்க பித்த சுரப்பிகள் சுரந்து உணவைச் சீக்கிரம் கரைத்து விடுகின்றது.

ஆனால் விஷத்தை அதிகமாகக் கூட்டும் போது பித்தம் அதிகமாக உற்பத்தியாகும் நிலை வருகின்றது. அதனால் பித்தப்பை சுருங்கி விடுகின்றது.

1.தனக்கு வேண்டியதைக் கவரும் நிலையோ அல்லது அதிகமானதை வடிகட்டும் நிலையோ
2.அந்தச் சமப்படுத்தும் நிலை இல்லை என்றால்
2.அதன் மூலம் விஷத் தன்மை உடலில் சேமிப்பு அதிகரிக்கத் தொடங்குகின்றது.

பயில்வான்கள் எடுத்துக் கொண்டால் பத்துக் கோழி… பத்து முட்டை… என்று இப்படி எத்தனையோ சாப்பிட்டுப் பழகுவார்கள். அவர்களின் கடைசி நிலை என்ன ஆகும்…?

இவ்வளவு கடினமான உணவை உட்கொள்ளும் நிலை வரும் போது அதற்குத்தக்க விஷம் இல்லை என்றால் ஜீரணிக்கும் சக்தி இழந்து அவன் சீக்கிரமே துர்மரணம் அடைந்து விடுவான்.

ஆனால் சமமாக இருக்கும் வரை உற்பத்தியின் நிலைகள் சீராக வருகின்றது.
1.அதிகமாகப் பித்தங்கள் சுரக்கும் தன்மை ஆகிவிட்டால்
2.சிந்தனையற்ற நிலையாகி முரட்டுத்தனமான புத்தியிலே வளர்வான்.

இத்தகைய முரட்டுத்தனமானால் விஷத் தன்மைகள் வளர்ந்து பித்த சுரப்பிகளில் அது அதிகமாகின்றது.

ஒரு யானை தன் உணவுக்காக வேண்டி கடினமான தட்டைகளை எடுத்து அதைத் தன் வாயினால் மென்று உட்கொள்கிறது. அதே சமயத்தில்
1.அதற்குள் ஊறும் உமிழ் நீரின் விஷத் தன்மைகள் பட்ட பின்
2.அந்தத் தட்டைகளில் உள்ள சத்தை ஆவியின் தன்மையாக மாற்றி அதை மிருதுவாக மாற்றுகின்றது. (பிஸ்கட் போல் கரைகிறது)

அதே போல் அந்த மிருகத்தின் நிலைக்கொப்ப விஷத்தின் தன்மை கொண்டு… மனிதன் விஷமான உணவுப் பொருள்களை அதிகமாக உட்கொள்ளும் போது அந்த உடலில் உள்ள அணுக்களை மாற்றிவிடுகின்றது.

1.இன்று “பயில்வான்” என்று சொல்லலாம்
2.ஆனால் நாளடைவில் அவர்களுடைய உறுப்புகள் பாழடைந்து விடுகின்றது…
3.ஜீரணிக்கும் சக்தி இழந்து விடுகின்றது… சீக்கிரம் மரணம் அடைந்து விடுகின்றனர்.

ஆகவே இந்த உடலின் தன்மை எந்த நிலையில் இருந்தாலும் நாம் நீடித்திருக்கின்றோமா…? இந்த உடலில் இருக்கும் பொழுது எல்லாம் சேமிக்கின்றோம்… வளர்கின்றோம்…! ஆனாலும் எத்தனை காலம் வாழ்கின்றோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

என்னை (ஞானகுரு) எடுத்துக் கொண்டால் நான் ஒன்றுமில்லாதவன். இங்கே வந்தேன். இந்தத் தபோவனம் என்ற கட்டிடத்தைக் கட்டி வைத்தாகிவிட்டது.
1.இருந்தாலும் இதை “எனது…” என்று சொந்தம் கொண்டாட முடியுமா…?
2.எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த பண்புடன் நீங்கள் செய்கின்றீர்கள்… செயல்படுத்துகின்றீர்கள்.
3.இதை எனது (ஞானகுரு) என்று சொந்தம் கொண்டாடினால் என்ன ஆகும்…?

நீங்கள் எதற்காக இதைச் செய்தீர்கள்…?

தபோவனம் வரும் அனைவருக்கும் நல் உணர்வு பெற வேண்டும் என்ற அந்த அன்பு கலந்த உணர்வுடன் செய்தீர்கள். ஆனால் ஒரு சிலர் என்ன செய்கின்றார்கள்…?

என்னிடம் (ஞானகுரு) சக்தி இருக்கின்றது என்று சொன்னால் ஏமாற்றி எதையாவது முன்னாடி கொண்டு வந்து தர்மத்தைச் செய்வது போல் சொல்லி “நான் சொல்வதைச் செய்…” என்பார்கள்.

இதனின் செயல்கள் என்ன செய்கின்றது…? இது எல்லாம் சுயநலனுக்காகச் செய்வது…! அவர்களின் ஆசையில் நான் சிக்கினேன் என்றால் எனது ஆசையும் இங்கே கூடும். அப்படி ஆகக் கூடாது என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

ஆகவே… நான் உபதேசித்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு… என்னால் உங்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது…? என்ற உண்மையை உணர்ந்து நீங்கள் நன்மைகளைப் பெற்றீர்கள்.
1.அதன் வழியில் நன்மையைச் செயலபடுத்த நீங்கள் இயல்பாகச் செய்யுங்கள்.
2.அந்த உயர்ந்த பண்புடன் செய்தால் தான் அது எல்லோருக்கும் நல்லதாகும்.

ஒரு சிலர் பொருள்களை அதிகமாகச் செலவழித்து விட்டால் அவருடைய உணர்வு “நான் தபோவனத்திற்குச் செய்தேன்…” என்ற உணர்வுகள் வரும்.

இப்படிப்பட்ட உணர்வுகள் கொண்டு செயல்படுத்தும் பொழுது “நான் செய்தேன்…” என்ற உணர்வுகள் வரும்.
1.நான் செய்தேன் என்றால்…
2.அவர் செய்த அன்பின் தன்மையைப் பெருக்க விடாத நிலை ஆகி
3.நல்லதைச் செய்யத் தடைப்படுத்தும் நிலையாகி விடுகின்றது.

ஆகவே மனம் கனிந்த நிலைகளில் இந்த ஸ்தாபனத்திற்கு எது கொடுத்தாலும் “அந்த உள்ளன்புடன் வரும் நிலைகள் தான்” இந்தக் கட்டிடமோ மற்ற பொருளானாலும் அதைச் செயல்படுத்த முடியும்.

உதாரணமாக ஒருவருக்கு நீங்கள் பணம் கொடுக்கின்றீர்கள். வட்டிக்கு வரவு செலவுக்குக் கொடுக்கின்றீர்கள் என்றால் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வீர்கள்…?

அதை வாங்கும் தைரியம் உண்டு… பணத்தை எப்படித் திரும்ப வாங்க வேண்டும்…? என்று தெரியும்… என்பார்கள்.

இத்தகைய உணர்வின் வலிமை கொடுக்கும் பொழுது வாங்கியவருடைய நிலைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேர்கின்றது. ஆக இதைப் போன்ற நிலைகள் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் பல நிலைகள் வருகின்றது.
1.கடினமான உணர்வின் தன்மை கொண்டு செயல்படுத்தினால்
2.வேதனையும் பகைமையும் பழி தீர்க்கும் உணர்வும் தான் வளரும்.

அதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்று உள்ளன்புடன் செய்தால் தான் “எந்தக் காரியமும் உயர்வடையும்…!”

தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை

 

எண்ணத்திலும்… செயலிலும்… வார்த்தையிலும்… “உயர்வு தாழ்வு” என்ற எண்ணம் தான் மனிதர்களின் மனதிலே ஊன்றியுள்ளது.

உயர்வு எனும் பொழுது நம் உடலுக்கு… நம் உயிருக்கு.. அவ்வழியாகச் செல்வம் என்ற உயர்ந்த நிலை நாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

1.உடல் வாழ்க்கையில் இந்த உலகிலே சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம்.
2.அழியாச் செல்வத்தை நாம் எண்ணுவதில்லை.
3.தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகிறார்கள்.

1.வாழும் நாள் எல்லாம்…
2.மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்
3.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
4.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது.

அந்நிலையில் நம் உயிர் அணுவிற்குப் பெரும் சோர்வைத்தான் நாம் அளிக்கின்றோம். இந்நிலையையே வளர விட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத்தான் நாம் மேலும் மேலும் பெறுகின்றோம்.

இந்நிலை எல்லாம் அறிந்து நம் உயிரணுவிற்கு நாம் பெறும் அழியாச் செல்வமான “ஆத்ம ஜோதி” என்ற நிலையைப் பெறத்தான் இந்த ஜெப நிலையிலிருந்து “ஈஸ்வர தியானங்கள் பெற்று” அந்நிலையில் நமக்குக் கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நம் உயிரணுவிற்குச் சேமித்து வைத்திடல் வேண்டும்.

இந்த உடலில் உள்ள பொழுதே மனிதனாகப் பிறந்த இந்தப் பாக்கியத்தை
1.ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற…
2.நம் ஆத்மாவிற்கு அழியா நிலை பெற…
3.நம் எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே என்றும் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்டால்
5.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் இந்த வாழ்க்கைக்குப் பின் உடலை விட்டுச் சென்றால் இன்னொரு மனிதப் பிறவி எடுப்பது என்றால்… இன்னொரு உடலுக்குள் சென்றால் தான் அது வர முடியும்.

ஆனால் பாம்பு தீண்டினால் உடலுக்குள் விஷமான பின் பாம்பின் நினைவு கொண்டு அதனின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகப் பிறப்போம். பாம்பாகப் பிறந்தாலும்…
1.அந்தப் பாம்பை ஒரு காகமோ கழுகோ கொத்தினால் அது காகமாகவோ அல்லது கழுகாகவோ அடுத்து மாறுகின்றது.
2.மனிதன் அடித்தால் தான் மனிதனாகின்றது.

ஆக… அதனின் சந்தர்ப்பத்திற்கொப்பத்தான் மனிதனாக ஆவதும்… காகமாவதும்… கழுகாக ஆவதும்… நரியாவதும் நாயாவதும்…
1.ஒன்றைக் கொன்று புசிக்க எண்ணும் உணர்வுகள்
2.அது கொன்று புசிக்கும் போது அதனின் நினைவு கொண்டு தான் இப்படி உடல்கள் மாறுகின்றது.

அதே சமயத்தில் மனிதனுக்குள் வந்து மனித உருப் பெறும் கருவானாலும் இப்பொழுது எல்லாம் “குடும்பக் கட்டுப்பாடு” என்று இருக்கிறதல்லவா…!

எத்தனை உயிரினங்களைக் கொல்கிறோமோ அத்தனையும் நமக்குள் இருக்கின்றது. அதில் எது முந்திக் கருப்பைக்கு வருகின்றதோ அது தான் மனிதனாகப் பிறக்கின்றது.

கருப்பைக்கு வரவில்லை என்றால் அதிலே விந்துகள் கசிந்து வீணாகி விட்டால் அந்த விந்துக்குள் கலந்த அந்த உயிரணுக்கள் மனித உடலுக்குள் சென்றாலும்
1.சாக்கடைக்குள் வந்தால் சாக்கடையில் உருவாகும் புழுவாக மாறுகின்றது.
2.மற்ற தாவர இனங்களிலோ செடிகளிலோ பட்டால் தாவர இனத்தின் சத்தை நுகர்ந்து அங்கே கருவாகி புழு பூச்சியாக மாறுகின்றது.
3.கடலில் விழுந்தால் அங்கே கருவாகி அந்த விந்துகளை மீன் விழுங்கினால் அந்த மீனின் ரூபமாக உருவாகின்றது.

மனித உடலுக்குள் கசியும் விந்துகள் வீணானால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அதிலே வரும் கரு முட்டைகள் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது.

மனிதனாகும் தகுதி இருந்தாலும் மனிதனல்லாத பிறவிக்குப் போகும் நிலை வந்து விடுகின்றது. எல்லாமே சந்தர்ப்பம் தான்…! இயற்கையின் நிலைகள் இப்படி எல்லாம் மாறுகின்றது.

ஆககே நாம் எதுவாக ஆக வேண்டும்…? என்று ஒவ்வொருவரும் சற்று சிந்தியுங்கள்.

எத்தனையோ கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அதிலே உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒன்றென இணைந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து நாம் ஒளியாக மாறுதல் வேண்டும்.

வேகா நிலை பெற்ற ஞானிகளின் அருள் உணர்வை நாம் தியானித்து அதை நம் உடலில் பெருக்கி நாமும் வேகா நிலையாகி இன்னொரு பிறவிக்குப் போகாதபடி “போகாப்புனல்…” நாம் இந்த உடலிலேயே உணர்வை ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருடைய உடலுக்குப்பின் உயிர் என்ற உணர்வு கொண்டு அவர் ஒளியானார். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஏகாந்தமாக வாழ்கின்றார்.

அக்காலத்தில் வாழ்ந்த ஞானிகளும் வானுலக ஆற்றலை எடுத்துத் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலங்களின் துணை கொண்டு அங்கே இணைத்தனர்.

அதே வழிப்படி நாமும் நம்மைச் சார்ந்தவர்களை விண் செலுத்தப்படும்போது அந்த உணர்வை நாம் கவர்ந்தால் நாமும் அங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம். இந்த முறைப்படி நாம் வரலாம்.

1.மீண்டும் மீண்டும் மனிதன் என்ற நிலைகள் வரப்படும் பொழுது
2.மனிதனின் ஈர்ப்புக்குள் வந்தால் நாம் இங்கே பிறவிக்கு வந்து விடுகின்றோம்.

ஆனால் அருள் உணர்வுகளைப் பெற்றால் நம்மை அங்கே மிதக்கச் செய்யும். அதன் வழி நாம் செல்ல
1.நம் குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற ஏங்கித் தியானிப்போம்.
2.வேகா நிலை என்ற உணர்வை இந்த உடலிலேயே உருவாக்குவோம்…!

ஏனென்றால் உயிர் வேகுவதில்லை… உயிருடன் ஒன்றி ஒளியாக்கினால் நம் உணர்வுகளும் வேகுவதில்லை என்ற நிலைக்கு நாம் அனவைரும் செல்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

நன்றாகத் தான் இருந்தார்… இப்போது கேன்சர் வந்துவிட்டது…! என்றால் ஏன்…?

 

இன்றைய உலகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது…? காற்று மண்டலம் நஞ்சாக மாறிவிட்டது…! நஞ்சுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றது… விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நிலைகளால் உலகம் மாசுபடும் நிலைகளுக்கே சென்றுவிட்டது.

1.தொழிற்சாலைகளில் வரும் கழிவுகளை எவ்வளவு குழியைத் தோண்டி அதில் புதைத்து வைத்தாலும்
2.அல்லது நீரிலே கலக்கப்பட்டு வடிக்கப்பட்டாலும்
3.அந்த உணர்வுகள் ஆவிகளாக மாறும் பொழுது காற்று மண்டலத்தில் தான் கலக்கின்றது.

பூமிக்குள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் ஆனால் மேலே செல்லப்படும் பொழுது தாவர இனங்களிலே இது படர்ந்து விடுகின்றது அதனால்… கேன்சர் நோய் இன்று அதிகமாக வருகின்றது.

1.இவர்கள் கழிக்கும் நஞ்சுகள் அதிகரிக்கும் நிலையில்
2.எங்கே பார்த்தாலும் கேன்சர் கேன்சர் என்ற நோய்கள் வந்து கொண்டு இருக்கின்றது
3.நன்றாகத் தான் இருப்பார்கள்… திடீரென்று இந்த நோய் வந்துவிடும்.

இதைப் போன்ற கடுமையான நஞ்சின் நிலைகள் வரப்படும் பொழுது உடலில் மூட்டுகளிலும் இந்த விஷத்தன்மைகள் ஊடுருவுகின்றது.

எந்த வலுவின் தன்மை ஏற்கின்றோமோ நரம்பு மண்டலங்களுக்குள் இந்த விஷத்தன்மைகள் செல்லப்படும் பொழுது
1.அங்கே தேங்கி விட்டால் வலு கொண்டு செயல்படுத்தும் நிலைகள் முடியாது போய்விடுகின்றது.
2.நாம் சுவாசித்த உணர்வுகள் இந்த நிலை பெறுகின்றது.
3.இது போன்ற நிலையில் இருந்து மனிதன் மீள வேண்டும்.

இந்த உணர்வுகள் எல்லாம் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலைகளை குருநாதர் 20 வருடம் அனுபவபூர்வமாக தெளியச் செய்தார். தெளிந்து உணர்ந்த பின் தான் உங்களுக்கு இதை எடுத்துச் சொல்கின்றேன் (ஞானகுரு).

எம்மிடம்…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி என்றார்
2.அவன் அமைத்த உடல் அந்த ஆலயம் என்று நீ கருது
3.மனிதனை உருவாக்கிய ஒவ்வொரு உயர்ந்த குணங்களையும் சீர்படும்படி உனக்குள் எண்ணி அதை வளர்த்துக் கொள்.

பிறருடன் பழகிய உணர்வு… அதே உணர்வு வளர்ந்து இருந்தால்
1.அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணினால்
2.உனக்குள் அவர் உணர்வு பதிவாகி இருந்தால்… உன்னை உயர்த்தும் நிலையாக உனக்குள் அது சீர்படுகின்றது.

இது அல்லாது வேறு யாரிடத்திலும் காசைக் கொடுத்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்றால் பாவத்தைத் தான் நீ சேர்க்கின்றாய் எந்த மந்திரத்தைச் சொல்லி யாகத்தைச் செயல்படுத்துகின்றார்களோ பாவத்திற்கு நம்பர் ஒன்றாகின்றாய்…!

இந்த உடலை விட்டுச் சென்ற பின் எந்த உணர்வுகளை நீ பதிவு செய்து கொண்டாயோ இறந்த பின் மந்திரம் தெரிந்தவன் அதைப் பதிவு செய்தான் என்றால் பாவச் செயலுக்கு உன்னைப் பயன்படுத்துவான் என்றார்.

இதிலிருந்து எவரும் தப்ப முடியாது. மனிதன் மீண்டும் புழு பூச்சியாகத்தான் செல்ல முடியும் இதை எல்லாம் தெளிவாகக் கூறுகின்றார் குருநாதர்.

ஆகவே உங்களை நம்புங்கள்…! நீங்கள் எண்ணுவதைத் தான் உயிர் உருவாக்குகின்றது. எதை எண்ணிச் சேர்க்க வேண்டும்…? என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உடலில் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். வளர்க்க வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்குங்கள். அதை வலுவாக்கத் தியானித்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அதை மறந்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன் என்று அதை உறுதிப்படுத்துங்கள்.
2.எதனால் துன்பங்கள் வந்ததோ என் பார்வை அதைச் சீராக்க வேண்டும்…
3.நான் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும்
4.பொறுப்புடன் செயல்பட வேண்டும்… அந்தச் சக்தி எனக்குள் வளர வேண்டும்
5.என் பார்வை அனைத்தையும் நல்லதாக வேண்டும்
6.என் பேச்சைக் கேட்பார் வாழ்வில் நலமும் நலமும் அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி எண்ணிப் பழகுங்கள்.

இப்படி நீங்கள் எண்ணுவது நலம் பெறும் சக்தியாக உங்களை மாற்றும்…!

தியானத்தில் இருக்கும்போது… உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை சித்தர்களுக்கு வருகிறதப்பா..!

 

பல நாள் தவம் இருந்து தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.”தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை” என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம் அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.

இப்படிப் பல நிலைகள் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.

வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.

ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?

என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது – நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.

பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தில் அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!

ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..! அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.

ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும். எண்ண அலைகள் மற்ற அணுக்களுடைய நிலைகள் உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது. நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.

அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது. அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.

அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகளை அடிக்கடி அந்தச் சுவாச நிலையில் நம் உயிரணுவிற்கு உயிருக்குக் கிடைக்கப் பெறுகின்றது.

இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.

1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.

இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!

ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும் உங்கள் ஜெபத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.

நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நஞ்சினை ஒளிக்கதிராக மாற்றிய துருவனின் சக்தியை நாம் பெற வேண்டும்

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் விஷத்தைக் குறைத்துக் குறைத்து… குறைத்துக் குறைத்து… விஷத்தை நீக்கிடும் உடலாக (மனிதன்) இந்த உயிரால்தான் நாம் பெற்றோம்.

அதாவது… ஒவ்வொரு உடலிலும் நுகர்ந்ததை உயிர் உருவாக்கியது
1.உணர்வின் தன்மை கொண்டு நஞ்சினை நீக்கியது
2.நஞ்சினை நீக்கிடும் உடலாக மனிதனாக உருப்பெற்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றிவிட்டு… நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.

இருப்பினும் அதிகமான நஞ்சினை சேர்க்கப்படும் பொழுது குறைந்த நீரை வைத்து அதைச் சுத்தப்படுத்த முடியுமா…? என்றால் முடியாது.
1.அதிக அளவில் எடுக்கும் இந்த உணர்வுகள்
2.நஞ்சினை நீக்கும் சக்தி நமக்குப் போதுமானதாக இல்லை.

இந்த உடல் நஞ்சினை நீக்கும் ஆற்றலாகப் பெற்றாலும்… இந்த உடலில் இருந்து வரக்கூடிய மணம் நஞ்சு என்றும் அறிந்து கொள்ளும் நிலையைப் பெறுகின்றது. இதற்குப் பெயர் கார்த்திகேயா என்று தெளிவாக கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நஞ்சினை நீக்கிடும் ஆற்றலைத் தெரிந்தும்… உணர்ந்தும்… நஞ்சினை அகற்றிடும் சக்தி பெற்ற இந்த மனித உடலில்
1.நம் உடலிலிருந்து வரக்கூடிய மணம் அது வெளிப்படும் பொழுது
2.புறத்திலிருந்து வரும் ஒரு வேதனைப்படும் உணர்வை இதனுடன் கலக்கப்படும் பொழுது
3.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் இருந்தாலும் நஞ்சு கொண்ட (வேதனையை) உணர்வினை நுகரப்படும் பொழுது நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைகின்றது.
4.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைந்தால்… நஞ்சினை வளர்த்திடும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைகின்றது.

இருந்தாலும் மனிதனாக ஆனபின் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி… ஒளியின் சரீரமாக இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பது… “அகஸ்தியன் – துருவ நட்சத்திரமாக ஆனது…”

கருவிலே அவன் இருக்கப்படும் பொழுது நஞ்சை வென்றிடும் தாவர இனங்களை எல்லாம் அகஸ்தியனின் தாய் தன் உடலிலே பூசிக் கொண்டு… நஞ்சு கொண்ட விலங்குகளிலிருந்து காத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றது.

அப்போது… தாய் நுகர்ந்த அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைக் கருவிலிருக்கும் அந்த அகஸ்தியன் என்ற சிசுவும் பெறுகின்றது.
1.அவன் பிறந்த பின் நஞ்சினை வென்றிடும் சக்தி பெறுகின்றான்
2.நஞ்சினை வென்றிடும் சக்தியாக வளர்கின்றன்
3.நஞ்சின் இயக்கச் சக்தியை உணர்கின்றான்.

நஞ்சினை மற்ற பொருள்களுடன் சேர்த்த பின்… அதிலே எந்தெந்த மணம் இருக்கின்றதோ அதை எப்படி எல்லாம் இயக்குகின்றது…? என்பதை “அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் காணுகின்றான்.
1.நஞ்சு இல்லாத தாவர இனம் இல்லை
2.நஞ்சு இல்லாத கோள்கள் இல்லை
3.நஞ்சு இல்லாத அணுக்கள் இல்லை என்ற நிலைகளையும் அறிகின்றான்.

நஞ்சின் அளவுகோல் அதிகரிக்கப்படும் பொழுது… அது ஒரு பொருளை அதிக வீரியமாக மாற்றி விடுகின்றது.

நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது மிளகாயில் காரம் அதிகரிக்கிறது… நஞ்சின் தன்மை அதிகரிக்கும் பொழுது கசப்பின் தன்மை அதிகரிக்கின்றது. எப்பொருளில் இந்த நஞ்சின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்த கசப்பான உணர்ச்சிகளை ஊட்டும் வலிமை பெறுகின்றது.

நெல் வகைகளை எடுத்துக் கொண்டால் அதிலே நஞ்சின் இயக்கச் சக்தி குறைவு. ஆகவே உணர்வின் தன்மை அதற்குள் சுவைமிக்கதாக… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் நிலைகள் அங்கே விளைகின்றது.
1.இப்படி… சாந்தம் கொண்ட உணர்வுகளில் நஞ்சு கலந்தால்
2.நஞ்சினைக் குறைக்கும் நிலைகளில் தாவர இனங்களும் விளைகின்றது.

இந்த உண்மையின் உணர்வுகளை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான் அகஸ்தியன்.

தாய் கருவில் இருந்து வெளிவந்த பின்…
1.அவன் உடல் இவனிடம் நஞ்சு வராதபடி
2.”அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம்” அந்த நஞ்சையே வென்றிடும் சக்தியாக பெறுகின்றது.

“இவனின்று வெளிப்படும் உணர்வுகளோ” மற்ற நஞ்சின் தன்மை வந்தாலும் தனக்குள் அருகில் வராதபடி பாதுகாத்துக் கொள்கிறது. இந்த உணர்வின் துணை கொண்டு உலகில் நஞ்சின் இயக்க உணர்வை முழுமையாக அறிந்தான்.

உலகம் எப்படி இயங்குகிறது…? என்று அதனின் வலுவின் தன்மை அறியும் சந்தர்ப்பம் அவனுக்குள் உருவானது. அப்படி உருப்பெற்ற உணர்வு தான்
1.வானுலகில் இருந்து வரும் மின்னலாக இருந்தாலும்… அதைக் காட்டிலும் இடி மின்னலாக இருந்தாலும்
2.அவன் உற்று நோக்கினால் அது எல்லாம் அவனுக்குள் ஒடுங்குகின்றது
3.ஒடுங்கும் போது உணர்வின் ஒளியின் கதிராக அவனுக்குள் வளரும் தன்மை வருகின்றது.

ஐந்து வயதிற்குள் இதை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான்.

வானுலக இயக்க உணர்வு… நஞ்சின் மோதலால் ஏற்படும் (விஷக்கதிரியக்கத்தால் ஏற்படும்) மின் அணுக்களின் தாக்குதல் தான் மின்னல்…!

அந்த விஷத்தின் மோதலினால் அணுக்கள் பரவலாகச் சிதறும் போது மற்ற கோள்கள் உமிழ்த்தும் உணர்வுடன் கலக்கப்படும் பொழுது
1.அந்தக் கோளின் சக்தியை இயக்கச் சக்தியாக அதற்குள் வலுவூட்டி
2.எதனுடன் எந்த உணர்வின் சத்து கலந்ததோ அதிலே இது கலந்த பின்
3.அந்த உணர்வினை இயக்கும் சக்தியாக மாறுகின்றது என்பதனை அகஸ்தியன் உணர்கின்றான்.

ஏனென்றால் அவனுக்குள் ஒரு மின்னணுவின் தாக்குதல் வரப்படும் பொழுது… அதை அடக்கி அந்த உணர்வின் சத்தை உணரும் பருவம் பெறுகின்றான்.

மின்னல் தாக்கப்படும் பொழுது தாவர இனங்கள் கருகுகின்றது மற்ற பொருள்களும் கரைகின்றது. அது விஷம் கொண்டது
1.ஒன்றுடன் ஒன்று அந்தக் கதிரியக்கப் பொறிகள் தாக்குவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்… அது இவனுக்குள் அடங்கும் சக்தி வருகின்றது.
2.நட்சத்திரங்களின் இயக்க ஓட்டங்களையும் உற்று நோக்கி அதன் உணர்வின் இயக்கங்களை அறிகின்றான்

அப்பொழுதுதான் “துருவன்” என்று அவனுக்கு காரணப்பெயர் வருகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் ஒன்று சேர்த்த உணர்வு கொண்டு வெளிப்படுத்துகின்றோம்.
1.எல்லோருடைய செவிகளிலும் இந்த உணர்வின் ஒலிகள் படுகின்றது
2.அந்த உணர்வுகள் கண்களால் கவரப்படுகின்றது… அதே சமயத்தில் உயிரிலே மோதுகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.

அந்த அருள் சக்தியைப் பெற்று “எல்லோரும் பெற வேண்டும்…” என்று அதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளை மாற்றும் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

கூட்டுத் தியானத்தின் மூலம் இந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது பூமியில் உள்ள காற்று மண்டலத்திலிம் இது அடர்த்தியாகப் பரவுகின்றது.

உதாரணமாக ஒரு நோயாளியை நீங்கள் பார்க்க நேர்ந்தாலும் அடுத்தகணம் ஆத்ம சுத்தி செய்து விட்டு மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து… நோயிலிருந்து விடுபட்டு அவர்கள் குடும்பமும் தொழிலும் நலமாக வேண்டும்…! என்று சொல்லுங்கள்.

இப்படிச் சொல்லப்படும் பொழுது
1.அவர்கள் நோய்களை மாற்றியமைக்கக் கூடிய திறனும் உங்களுக்குக் கிடைக்கின்றது
2.அவர்கள் நோய் உங்களுக்குள் வராது தடுக்கும் சக்தியாகவும் உங்களுக்குள் இது வருகின்றது.

ஏனென்றால் பிறர் படும் துயரங்கள் வேதனைகளை எல்லாம் நாம் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டு அதே வேதனைப்படும் அணுக்களை நமக்குள்ளும் வளர்த்து விடுகின்றது. அதனால் நம் உடலிலும் நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.

கோபப்படுவோரை அடிக்கடி உற்று நோக்கினால் அந்த உணர்வுகள் நமக்குள் இரத்தக் கொதிப்பாக மாற்றி விடுகின்றது. ஆஸ்த்மா நோயால் அவதிப்படுவோர் சொல்வதைக் கேட்டு உணர்ந்தால் நமக்குள்ளும் அந்த ஆஸ்மா நோய் வந்துவிடுகின்றது.

சர்க்கரைச் சத்து உள்ளோர் நிலைகளைக் கேட்டறிந்தால் அவர்களிடம் பேச நேர்ந்தால் அதே சர்க்கரை நோய் உங்களுக்குள் மாறி வந்து விடுகின்றது.

வாத நோய் முடக்குவாதம் போன்றவர் உணர்வுகளைக் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்பட்டு அதே தீமை இங்கேயும் வந்து விடுகின்றது.

அதைப் போன்ற தீமைகள் நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் அவசியம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

பின்…
1.நாம் மொத்தமாக ஒரே உணர்வுடன்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் பெற வேண்டும் என்று சேர்ந்து சொல்லும் பொழுது
3.எல்லோர் செவிகளில் பட்டு இந்த உணர்வலைகள் எல்லோர் உயிர்களிலும் மோதப்பட்டு
4.உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது தீமைகளைப் போக்கிடும் சக்திகளாக நாம் பரப்ப முடிகின்றது.

இப்படிப் பரப்பபடும் இந்த உணர்வலைகள் காற்று மண்டலத்தில் பரவும் போது அந்த உணர்வுகளை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் பெறலாம்.

அந்த வலுக் கொண்ட உணர்வுகள் மூலம்
1.பிறருடைய தீமைகளை போக்கும் வல்லமையும் நீங்கள் பெறலாம்.
2.பிறருடைய தீமைகள் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் அந்த ஆற்றலையும் நீங்கள் பெறலாம்.

ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாருடைய நோய்களையும் நீங்கள் கவர்ந்து விடாதீர்கள். அவர்கள் நோயைப் போக்கிடும் சக்தியாகவே நீங்கள் செயல்படுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… குடும்பத்தில் பற்றுடன் பாசத்துடன் பண்புடன் வளர வேண்டும்… அவர்கள் உணர்வுகள் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்… தொழில்கள் வளம் பெற வேண்டும்…! என்று நாம் இப்படித்தான் எண்ணிச் செயல்படுதல் வேண்டும்

மாறாக… பிறரைப் பழித்துப் பேசுவதோ தவறு செய்வோரை உற்று நோக்கித் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான் என்ற உணர்வுகளை அடிக்கடி எடுத்துக் கொண்டாலோ… நாமும் தவறு செய்வோராக மாறி விடுகின்றோம்.

அந்தத் தவறு செய்வோர் உணர்வுகள் நமக்குள் வராது அருள் உணர்வு கொண்டு நாம் தூய்மைப்படுத்தி அவர்களும் தவறிலிருந்து விடுபட்டு மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நல்லது எண்ணும் பொழுது நல்லது செய்கின்றோம். தக்க சமயத்தில் நண்பன் நமக்கு நன்மை செய்தான் என்றால் அவனைத் தெய்வமாகக் கருதுகின்றோம்.

ஆனால் தொழிலிலோ மற்ற நிலைகளிலோ நண்பருக்குள் குறையானால் “துரோகி…” என்று பழித்துப் பேசி ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகின்றது.

இருவருடைய உணர்வும் இங்கே தான் உள்ளது…!

நல்லது செய்கிறான் என்று எண்ணினால் நல்லவனாக மாற்றுகின்றது. தீமை செய்கிறான் என்ற உணர்வாக மாற்றினால் இருவருடைய உணர்விலும் பகையாகி விடுகின்றது.

நண்பன் எதிரியாக மாறுகின்றான். எதிரியான உணர்வை வளர்க்கின்றது. நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற பகைமையை அகற்றிட ஒவ்வொரு நொடியிலும் அருள் உணர்வைச் சேர்த்து பழக வேண்டும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் அது விஷ்ணு தனுசு. எல்லாவற்றிலும் முழுமையாக அந்த அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் வேகா நிலை அடைகின்றோம். இதைத் தான் தனுசுகோடி என்று சொல்வது.

1.நம் உடலில் எல்லா குணங்களிலும் மற்ற எல்லாருடைய உணர்வுகளிலும்
2.அருள் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக மாற்றிடும் போது எல்லா குணங்களையும் மாற்றி
3.உயிருடன் ஒன்றிடச் செய்யும் போது ஒன்று என்ற நிலையை அடைகின்றது.

அதை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு). அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தான் உங்களிலே தொடர்ந்து பாய்ச்சுகின்றேன்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தீமையிலிருந்து விடுபட்டுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். இருளை அகற்றும் வல்லமை பெற வேண்டும்.

கவலையும் வேண்டாம்… சந்தோஷமும் வேண்டாம்…!

 

மனித உடலில்.. இந்த மனித ஜென்மத்தில்.. பல தவறுகளும் பாவங்களும் நடைமுறையில் எல்லோருமே செய்கின்றோம். அந்தத் தவறைத் தவறு என்று உணர்ந்து கொண்டு “தவறு செய்யாதவர்கள்” யாருமே இருக்க முடியாதப்பா…!

அந்தத் தவறிலிருந்து விடுபட்டு தன் நிலை என்ன..? தான் யார்..? என்ற எண்ணத்துடன் பல நல்ல உணர்வுகளை நற்காரியங்களை எடுத்துக் கொண்டு
1.நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரே எண்ணத்துடன் அவ்வீஸ்வரனை எண்ணும் பொழுது
2.நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்கு.. அச்சக்திதான் ஒரு நிலையில் ஊட்டம் பெறுகிறது,

“அந்த நிலையிலேயே நாம் என்றும் இருந்து கொண்டிருந்தால்…” நம் வாழ்க்கை முறையில் பல இன்னல்களும் பல இன்பங்களும் வந்து மோதும் பொழுதும் நம் உயிர் நிலைக்கு நம் ஆத்மாவிற்கு இவை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாதப்பா..!

ஒரு மனிதனுக்குக் கஷ்டங்கள் கவலைகள் வந்திடும் பொழுது அவற்றிலிருந்து நாம் எப்படி மீண்டு… நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரு நிலைப்படுத்திட வேண்டும் என்று சொல்லுகின்றோமோ அப்படித்தான் இன்பத்திலிருந்தும்… அதி சந்தோஷத்திலிருந்தும்… மீண்டு வர வேண்டுமப்பா…!

1.கவலையிலிருந்து மீண்டு வந்தால் எல்லாமே தீர்ந்தது…! என்று எண்ணிட வேண்டாமப்பா..!
2.நாம் எப்படிக் கவலையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதே போலத்தான்
3.அதி சந்தோஷத்தையும் நம்முள் ஏற்றுக் கொள்ளாமல் மீள வேண்டுமப்பா…!

இன்றைய மனிதர்கள் எல்லோருமே மனித வாழ்க்கையில் உள்ள கஷ்டநஷ்டங்களில் கவலையிலிருந்து மீண்டு சந்தோஷ நிலைக்குச் செல்ல வேண்டும்…! என்று தான் விரும்புகின்றார்கள்.

1.இதிலிருந்து மீண்டு அதற்குச் செல்லும் பொழுது
2.அவ்வெண்ணமும் அந்தச் சுவாச நிலையும் மாறுபட்டு
3.நம் ஆத்ம நிலைக்கே அது பெரும் தீங்காகிறதப்பா…!

இந்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு ஒரு வழிக்குக் கொண்டு வரத்தான் அன்றைய ஞானிகளும் ரிஷிகளும் ஆண்டவனின் ரூபத்தை வைத்துப் பல நூல்களை வடித்தார்கள் “மனிதர்கள் மனதில் பதியும்படி…!”

மனிதர்கள் எண்ணத்தில் சுவாசத்தில் என்றுமே ஒருநிலைப்படுத்தி அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டால் அவர்கள் இருக்கும் ஜெப நிலையிலிருந்து பல உன்னத நிலைகளை அடையலாம்.
1.எண்ணத்திலும் சுவாசத்திலும் தானப்பா நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்திடும் சொத்தெல்லாம் உள்ளதப்பா…!
2.பல ரிஷிகளும் ஞானிகளும் பெற்ற நிலையெல்லாம் அது தானப்பா…!

மனித வாழ்க்கையில் வந்திடும் பல இன்னல்கள் இன்பங்கள் எல்லாவற்றையும்
1.மனிதன் தன் எண்ணத்திலும் செயலிலும் எற்றுக் கொள்ளாமல்
2.பிறரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் தன் மனதைக் கலங்கவிடாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து
3.தன் எண்ணத்தில் வந்து மோதிடும் பல அபிலாஷைகளுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து மீண்டு
4.தன் சுவாச நிலையில் “ஒரு நிலை எய்தி வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

அது தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து…!

புள்ளி விபரம் வைத்துப் பல கணக்குகள் போட்டு நட்சத்திர மண்டலக் கணக்குகளை எல்லாம் மனிதர்களுக்குப் புகட்டிட விஞ்ஞானிகள் பல நாட்கள் தன் அறிவையும் நேரத்தையும் செலவழித்து மக்களுக்குப் புகட்டுகிறார்கள்.

இதிலெல்லாம் பெறும் இலாபம் என்னப்பா…! அதனால் மனித ஆத்மாவிற்குப் பயன் என்னப்பா…?

ஆத்மாவிற்கு எந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும்…? என்ற எண்ணம் மனிதனுக்கு வந்துவிட்டால்
1.அவன் ஆத்ம நிலையில் இருந்து கொண்டே அறிந்திடலாம்
2.அகண்ட அண்டத்தில் உள்ள பல கோடி உண்மைகளை…!

நேரத்தையும் காலத்தையும் எப்போது பார்க்க வேண்டும்…?

 

பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று வேண்டுகின்றோம். அதனின் உட்பொருளை நாம் உணர்ந்து அந்தப் பக்குவத்தைப் பெறுதல் வேண்டும்.

1.நம் பிள்ளையைச் செல்லமாக வளர்க்கின்றோம் என்று சொல்கின்றோம்.
2.அவன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் சொல்கின்றோம்.
3.ஆனால் “அவனுடைய குறும்புத்தனம் மட்டும் போகவே மாட்டேன் என்கிறது…!” என்று இப்படியும் சொல்லி விடுகின்றோம்.
4.அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்கிறோமா என்றால் இல்லை…!

நம் பிள்ளை தான்…! என்ற ஆசையின் நிமித்தம் இருந்தாலும் அவன் நல்லவனாக வேண்டும் என்று சொல்வதற்கு மாறாக
1.நாம் தவறிப் பேசும் பொழுது…
2.அது நல்லதாக ஆவதில்லை…!

எல்லாருடனும் நாம் நன்றாகப் பழகுகிறோம். இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்களிடம் பக்குவமாகப் பேசத் தெரியாதபடி…
1.எதிர் மறையான உணர்வு வந்தபின் கொஞ்சம் விரக்தியாகப் பேசிவிட்டால் போதும்
2.அந்த உணர்வுகள் பகைமையாகி விடுகின்றது.
3.அவர்களுடன் நாம் பழகிய அந்த நல்ல பண்புகளும் அங்கே சீர் கெட்டு விடுகின்றது.

ஆகையினால்தான் பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நாம் இல்லாமல் அந்த பரிபக்குவ நிலை பெற வேண்டும் என்று சொல்லச் சொல்வது.

அந்தப் பக்குவ நிலை பெற வேண்டுமென்றால்…
1.உயிரை ஈஸ்வரா… என்று எண்ணி ஏங்கி
2.நம்மிடம் இருந்து அடுத்து வரக்கூடிய சொல்கள் சிந்தித்து செயல்படும் தன்மையாக
3.நல்ல சொல்லாக எதிர் சொற்களைச் சொல்வதும்
4.சொல்லால் அதை அடக்குவதும் என்ற இந்த நிலையில் செயல்பட்டால் பகைமை அங்கே வராது.

உதாரணமாக ஒருவர் நம்மிடம் வந்து பிறரைப் பற்றி அதிகமாகக் குறை கூறுகிறார் என்றால் உடனே நாம் “ஏம்ப்பா இந்த மாதிரிக் குறை சொல்லிக் கொண்டிருகின்றாய்…? என்று நாம் அழுத்தமாகக் கேட்டால் அங்கே பகைமை வந்து விடுகின்றது.

அப்படிப் பகைமை வராதபடி தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

சரி… என்று அவர் சொல்வது வரைக்கும் அமைதியாக இருந்து… “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் பொறுமையுடன் நாம் இருக்க வேண்டும்.

“சமயம் பார்த்து…” அடுத்து ஒரு நல்ல சந்தர்ப்பம் வரும் பொழுது
1.அப்பா…! மற்றவர்கள் மீது நீ குறை கூறும் உணர்வுகள் எனக்குப் பிடிக்கவில்லை…
2.நீ இதைக் கொஞ்சம் யோசனை செய்து பாரப்பா…! என்று சொல்லி விட்டோம் என்றால் அங்கே சிந்திக்கக்கூடிய தன்மை வருகின்றது.

இப்படி இல்லாதபடி… அந்தந்த நிமிடமே நான் பதிலுக்குச் சொல்லி விட்டால்
1.அவன் சொல்வதை அங்கேயே மறுத்தோம் என்றால் நம்மையும் அவன் வெறுப்பான்
2.யாரைக் குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தானோ… அடுத்து நம் மீதும் இதே குற்ற இயல்புகளைச் சொல்லத் தொடங்குவான்.

ஆகவே சமயம் (நேரம்) வரும் பொழுது… அதை நாம் மாற்றி அமைக்க வேண்டும்.

ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”

 

1.எந்த ஆண்டவனும்… எந்தக் கடவுளும்… நம் ஆயுளை நிர்ணயிக்கவில்லை.
2.அவனவன் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

அவனவன் சுவாச நிலையைக் கொண்டு அவனவனுக்கு வரும் வியாதிக்கும் பிணிக்கும் வித்திட்டவன் ஆண்டவனா…?

இவன் உண்ணும் உணவிலும் சுவாச நிலையிலும் உடல் என்னும் கூட்டிற்கு “இவனே தேடிக் கொள்கின்றான் பல வினைகளை…!”

இவன் உடலில் வரும் வியாதியில் இவன் உடல் படும் அல்லலைக் கண்டு இந்த உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அந்த ஆத்மா.

எந்த நிலையிலும் இவன் அந்த ஆத்மாவை ஆண்டவனாக எண்ணி இந்த உடலில் தங்கி இருக்க வேண்டும் என்ற அவா வைத்து “ஆண்டவனே தான் இவ்வாத்மா…!” என்ற எண்ணம் தோன்றி வேண்டிக் கொண்டால் இந்த உடலை விட்டு இவ்வாத்மா எந்தக் காலத்திலும் பிரிந்து செல்லாது.

1.ஆத்மா என்னும் ஜோதி தான் எல்லா உயிரினத்திலும் உள்ளதப்பா..!
2.பெரும் சித்தர்களும் ரிஷிகளும் அவர்கள் உடலில் உள்ள ஆத்ம சக்தியைப் புரிந்து கொண்டு தானப்பா
3.அவர்கள் அந்த உன்னத நிலையைப் பெற்றார்கள்.

மனித உடலில் தான் அந்த உன்னத நிலையைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. மனித உடலை மாற்றிக் கொண்டால் இன்னும் பல கோடி ஆண்டுகளாகுமப்பா அந்த ஆத்மா ஜோதியுடன் ஜோதியாகக் கலப்பதற்கு…!

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றையக் கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் பார்த்துத்தான் வணங்குகிறார்கள்.
1.இவர்கள் வேண்டுவதெல்லாம்…
2.அக்கல்லின் உருவத்தில் இவர்களுக்கு ஆண்டவன் வந்து அருள் செய்ய வேண்டும்…! என்ற எண்ணம் தான்
3.இன்றும் அப்படித்தான் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் ஆத்மாவின் மூலமாக நாம் ஜெப நிலையில் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

1.நாம் யார்…?
2.நம் ஆத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்து விட்டோம்…! அதனால் நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது…? என்ற எண்ணம் என்றுமே எண்ணிடலாகாதப்பா…!
1.தவறை எண்ணி வருந்தும் பொழுதே
2.நம் ஆத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…!

நம் ஆத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா..! அழியும் யுகத்தில் அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… இவ்வாத்மா தானப்பா…!

கலியின் கடைசியில் கல்கியின் ஆரம்பமான நாளில் “கடைசிச் சந்தர்ப்பத்தை…” ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு தன் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனுடன் கலக்க விட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக அச்சூட்சம உலகத்திற்கு அழைத்துச் செல்லத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இவ்வாத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
1.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
2.இவ் ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”

திரும்பத் திரும்ப எண்ணினால் தான் “நினைவின் ஆற்றல்” நமக்குள் பெருகும்

 

உதாரணமாக நாம் ரோட்டில் செல்லும் பொழுது ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்ற நிலையில் அவனை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால்
1.அடுத்து நாம் அவனைப் பற்றித் திரும்ப எண்ணுவதில்லை.
2.அவன் வேதனைப்பட்டாலும் அந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் கருவுறும் தன்மை பெற்றாலும்
3.”அவனை நாம் திரும்ப எண்ணாததால்…” அவனுடைய வேதனை நமக்குள் வளராது தடைப்படுகிறது.

ஆனால் தொழில் செய்யும் இடங்களில் ஒரு நண்பரிடம் பற்றுடன் நாம் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தில் அவருக்குக் கடுமையான நோய் வந்து விடுகிறது. அவர் மீது நாம் பற்றுடன் இருக்கும் போது அந்த உணர்வினை நான் நுகரப்படும் பொழுது வேதனையை நாம் உணர முடிகின்றது… உடனே நாமும் வேதனைப்படுகின்றோம்.

அந்த உணர்வின் தன்மை நம் இரத்தத்தில் கலந்த பின் அந்த நண்பனைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுதெல்லாம் அந்த வேதனை நமக்குள் கருவாக உருவாகத் தொடங்கிவிடுகிறது.

ஒரு கோழி கருவுற்றால் உடனே அது கேறுகின்றது. கேறும் பொழுது அந்த முட்டையின் தன்மை வலுப் பெற்றுவிடுகிறது. முட்டை பருவமடைந்த பின் பொரிந்து குஞ்சுகளாக வெளி வருகின்றது.

குஞ்சு வெளி வந்தபின் ஆகாரத்திற்காகக் கத்துகிறது தாய்க் கோழியோ சப்தமிட்டு மண்ணைப் பறித்துத் தன் குஞ்சுகளுக்கு உணவைக் காட்டுகின்றது.

இதைப் போன்று தான் நண்பன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்றால்
1.அவனைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் நமக்குள் கருமுட்டையாகி விட்டால்
2.திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது வளர்ச்சி அடைகின்றது.
3.வளர்ச்சி அடைந்து முட்டை வெடித்து அணுக்களாக உருவான பின் தன் உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகிறது
4.அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி அங்கே தூண்டப்படுகிறது.

அப்போது நம் உயிர் என்ன செய்கிறது…?

கண் காது மூக்கு அவைகளுக்கு ஆணையிட்டு எந்த நண்பன் உடலில் இருந்து நோயின் உணர்வு வந்ததோ காற்றிலிருந்து அதைக் கவர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கிறது. அதை உணவாக எடுத்து அந்த அணுக்கள் வளர்ச்சி பெறத் தொடங்குகிறது.

நோயை உருவாக்கும் அத்தகைய அணுக்கள் பெருகிவிட்டால் நண்பனுக்கு எந்த நோய் வந்ததோ அதே நோய் நமக்குள்ளும் அதிகமாகப் பெருகத் தொடங்குகிறது.

நம்ம அறியாமல் தான் இது நடக்கிறது. அதை மாற்றி அமைக்க நாம் எண்ண செய்ய வேண்டும்…? நோய் எப்படி உருவானதோ அதே போல் அதை நீக்கும் சக்திகளையும் நமக்குள் நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

1.நம்முடைய நினைவுகள் அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்த வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிப்பெறும் பொழுது
3.சுவாசித்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலக்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அணுக்கரு முட்டைகளாக வளரத் தொடங்குகின்றது
5.நம் இரத்த நாளங்களில் அது கலந்து குறித்த காலம் வரும் போது அந்த முட்டை வெடித்து அணுக்களாக உருப்பெறச் செய்கின்றது.

எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து அடிக்கடி தியானித்தோமோ அது நமக்குள் அணுத்தன்மை அடைந்த பின்… எதை எண்ணிக் கருவானதோ அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் நிலையாக… “அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது…”

1.அப்போது நம் சிறு மூளை பாகம் அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
2.கண் காது மூக்கு வாய் உடல் இவைகளுக்கு ஆணையிட்டு
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் பூமியில் பரவியிருப்பதை உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு அப்போது வரும்.

மீண்டும் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறும் பொழுது ஒளி பெறும் அணுக்களாக நம் உடலுக்குள் வளரத் தொடங்கும்.

அந்த அணுக்களை நாம் அதிகமாக வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் யாருடைய ஈர்ப்பிலும் (எந்த்த் தீமையிலும்) சிக்க மாட்டோம். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அதிகரிக்கும்… நம்மைப் பிறவி இல்லா நிலைக்கு அது அழைத்துச் செல்லும்.

“பிறருக்காக… பிறருக்காக…!” என்று சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டுள்ளோம்

 

நாம் உண்ணும் உணவை எல்லாம் நம் உடல்… உடலுக்கு ஏற்ற சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை எல்லாம் கழிவுப் பொருளாக ஆக்கிவிடுகின்றது.

1.நம் உடல் அமைப்பையே ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது
2.நம் ஆத்மாவிற்கு நாம் இன்னும் எத்தனை பெரும் தெய்வீக நிலையை ஏற்றுத் தர வேண்டுமப்பா..!

நம்மைச் சுற்றிப் பல பல காரியங்களும் நல்லெண்ணம் உடையவர்களும் தீய எண்ணம் உடையவர்களும் எல்லாம் தான் கலந்துள்ளன.

நம்முள் இருக்கும் பல கோடி அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகாமல் நம் சுவாச நிலையில் நம் ஆத்மாவுக்கு வேண்டிய நல்ல நிலையைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…!

நம் உடல் அமைப்பை ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது நம் ஆத்மாவிற்கு நாம் தானப்பா பெரும் பொக்கிஷத்தைத் தேடி வைத்திட வேண்டும்.

இன்றைய பெரும் பகுதி மனிதர்கள் உள்ளோன்று வைத்து வெளியிலே ஒன்று பேசுபவர்களாகவும் பிறருக்காக… பிறர் மெச்சத் தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும் தான் நாம் பார்க்கின்றோமப்பா..!
1.பிறருக்காக வாழ்பவரும்
2.பிறர் பார்த்துப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவரும்
3.பிறரைத் துவேஷிப்பவரும்
4.பிறரைப் புகழ்பவரும் எல்லோருமே
5.தன் ஆத்மாவை மறந்துவிடுகின்றார்களப்பா…!

இன்றைய உலகில் உள்ள நற்காரியங்கள் செய்பவர்களும் புகழ்ச்சிக்கு ஏங்கித்தான் செய்கிறார்களப்பா…!
1.புகழ்ச்சிக்கு ஏங்கிச் செய்யும் நற்காரியங்களும்
2.ஆத்மாவிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லையப்பா…!

பசித்து வருபவனுக்குப் பசி அறிந்து அன்னமிட்டாலும் இந்தக் காலத்தில் அதையும் ஏமாற்றிப் பிழைக்கத்தான் பார்க்கின்றார்களப்பா…! நல்லவர்களையும் நல்லவர்களாக வாழவிடுவதில்லையப்பா இன்றைய உலகம்.

இன்றைய உலகிலிருந்து மீண்டு வருவதுவே நம் ஆத்மாவிற்குத் தேடித் தரும் பொக்கிஷமப்பா…!

“சதமில்லாததை எல்லாம்” நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை

 

யாம் உங்களுக்கு கொடுக்கும் அரும்பெரும் சக்திகளை நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.. எங்களை அறியாது சேர்ந்த இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… அதை நீக்கும் அரும்பெரும் சக்தி நாங்கள் பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் நண்பர் என்று இருக்கப்படும் பொழுது நண்பனுக்கு நன்மை செய்தான்… என்றால் வெகு தொலைவில் இருந்தாலும் விக்கல் ஆகிறது… துரோகம் செய்தான் என்றால் புரையோடுகிறது.

ஆனாலும் தியானம் எடுத்துக் கொண்ட பின் யாம் உபதேசிக்கும் உணர்வுகள்… உங்களுக்குள் பதிவான அந்த அரும்பெரும் சக்தியை நீங்கள் சீராகப் பயன்படுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.துருவ மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
5.சர்வ நோய்களையும் நீக்கிடும் அரும்பெரும் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
6.எங்களுக்குள் அந்த நோய் நீக்கும் சக்தி விளைய வேண்டும் என்று
7.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப… அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்க வேண்டும்

கணவன்… மனைவிக்கு இது போன்று செயல்படுத்த வேண்டும். மனைவியும்… கணவனுக்கு இதைப் போன்று எண்ணி இந்த உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

கணவர் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… நோய் நீக்கக்கூடிய சக்தி அவருக்குள் வளர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.இப்படி இருவருமே ஒருவருக்கொருவர் எண்ணிப் பழகுதல் வேண்டும்
2.அடிக்கடி இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால் இருவருமே உடல் நலத்துடன் வாழ முடியும்.

சர்க்கரை நோயோ… ஆஸ்த்மாவோ இருந்தால் “அந்த நோய்களை மறந்து விட்டு” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உடல் நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் எந்த நோய் இருந்தாலும் அது நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்…
1.நோய் நீக்கும் அருல் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருக வேண்டும் என்று
2.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப இந்த நினைவுகளை எடுத்து உடலில் செலுத்துங்கள்.
3.நாளடைவில் நோய்கள் நீங்கும்… துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றல் அதிகமாகப் பெருகும்.

இப்படிப் பெருக்கி பழகிக் கொண்டால்தான் விஞ்ஞானத்தால் இனி வரக்கூடிய நஞ்சின் தன்மையை நாம் அகற்ற முடியும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு நாம் செல்லும் போது உணர்வின் ஒளியாக மாறி அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று நாம் வாழ முடியும்.

ஏனென்றால் இந்தப் பூமியில்
1.நமக்கு இந்த உடல் சதம் அல்ல… சேர்க்கும் சொத்தும் நமக்குச் சதம் அல்ல
2.சதம் இல்லாததை எல்லாம் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும்… சதமான நிலைகளைப் பெறுவதற்கு இந்த உடலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த உடலில் இருந்து ஓரளவுக்கு மகரிஷிகள் உணர்வுகளை முழுமையாகப் பெறும் வரையிலும் உடலையும் பாதுகாக்க வேண்டும்.

உடலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாக நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
1.அப்படி வளர்க்கப்படும் பொழுது உடலையும் அது பாதுகாக்கின்றது
2.இந்த உடலில் இருந்து அருள் ஒளி பெறும் தகுதியையும் பெருக்கிக் கொள்ள முடிகின்றது
3.இரு மடங்கு நமக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது.

இந்த தியானத்தை அவசியம் நீங்கள் அனுதினமும் கடைப்பிடித்துப் பழகுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

இதற்கு முன் நம்மை அறியாது சேர்ந்த தீயவினைகள் எதுவாக இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று தான் எண்ணிப் பழக வேண்டும்.

அந்தச் சக்தியை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத் தான் உங்கள் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்து
1.ஒவ்வொரு உயிரும் அந்த சக்தி பெற வேண்டும்
2.அந்த சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று
3.குரு வழியில் ஐக்கிய உணர்வு கொண்டு அருள் உணர்வுகளைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளேன் (ஞானகுரு).

அதை நீங்கள் சீராகப் பயன்படுத்தி… எதிர்காலத்தில் வரக்கூடிய தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்து… உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக நீங்கள் வளர்ந்திட வேண்டும் என்று குருவின் ஆணைப்படி நான் செயல்படுத்துகின்றேன்.

தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை

 

மனிதனாகப் பிறந்து வளர்ந்து சகல சம்பத்தும் பெற்று சௌபாக்கியமுடன் வாழ வேண்டும்… சகல சுகங்களையும் அனுபவிக்க வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு மனிதனும் வளரும் நிலையிலேயே எண்ணுகின்றான்.

1.அந்நிலையிலேயே பேராசை கொண்டும் எண்ணிவிடுகின்றான்.
2.அந்தப் பேராசையினால் வருவது தான் சகல கஷ்டங்களும் பிணிகளும் பீடைகளும்.
3.அவன் எண்ணத்திலேயே தான் அவனுக்கு எல்லாமே வருகிறது.

தான் வாழ வேண்டும்… தன் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்… வறுமை இல்லாத வாழ்க்கை வேண்டும்… தன்னை ஒட்டியுள்ள தன் சந்ததிகள் என்றும் இன்பமுடன் வாழ வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் பல கஷ்டங்கள் பட்டு பல செல்வங்கள் சம்பாதித்து தான் இறந்த பிறகும் தான் குடும்பத்தார் நல்ல நிலையில் வாழ வேண்டும்…! என்று சொத்து சுகத்தைச் சேர்த்து விட்டுச் செல்கின்றான் மனிதன்,

1.ஆனால் தான் பிறந்து தன் ஆத்மாவிற்கு என்ன நிலையைத் தேடிக் கொள்கிறான்…?
2.தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை.

தன் ஆத்மாவிற்கு நல்ல நிலை ஏற்படுத்திவிட்டால்… நல்ல நிலை என்பது இன்று தான் வாழும் வாழ்க்கையில் பல ஜெப நிலைகளைப் பெற்று இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்ற நிலை தெரிந்து இந்த உடலிலேயே தன் ஆத்மாவுக்குண்டான சகல சக்தியையும் தன் ஜெப நிலையில் ஏற்றச் செய்தால்
1.உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.ஆவி நிலையில் அல்லல்படாமல் பெரும் “தெய்வீக நிலையை” அந்த ஆத்மா பெற்றுவிடும்.

இந்த உடலுடன் உள்ள பொழுதே அந்த ஆத்மாவிற்கு அந்தச் சக்தி நிலையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமப்பா…!

1.நம் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தானப்பா
2.நம் ஆத்மாவிற்கு நாம் வழங்கும் ஜெப நிலையை ஏற்றுக் கொள்ளும் தன்மை பெற முடிகின்றதப்பா..!

உடலுடன் உள்ள பொழுது எந்தக் கெட்ட அணுவும் அணுகாதபடி எந்தத் தீய சக்திகளும் அணுகாமல் எந்தத் தீய சக்திகளுக்கும் அடிபணிந்து அடிமையாகாமல்
1.தன் எண்ணத்தில் எவன் ஒருவன் உயர்ந்து நிற்கின்றானோ
2.அவனை எந்தத் தீய சக்திகளும் தீமையான அணுக்களும் வந்து அணுகிடாதப்பா…!

ஏனென்றால்..
1.நலிந்தோன் இதயத்திற்கு மேலும் மேலும் நலிந்த நிலை தான் வந்து அண்டிடும்.
2.நல்லோன் இதயத்திற்கு நல்ல நல்ல நிலைகள் தான் வந்து அணுகிடும் அப்பா…!

ஒருவன் எண்ணத்தில் எந்த நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் உள்ள அணுக்கள் தான் அவனை வந்து தாக்கிடும். (பூவின் வாசனை கருவாடு வாசனை கதை போல் தான்…!)

மனித உடலில் உள்ள பொழுதே இப்பொழுது நாம் உண்ணும் உணவும்.. உடுக்கும் உடையும்… வாழும் வாழ்க்கையும்… அன்றன்று மறைவது தான்..! என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றி நாம் சேமிக்கும் சொத்தெல்லாம் நம் ஆத்மாவுக்கு எந்த நிலை…? என்று புரிந்து சேமித்து வைக்க வேண்டுமப்பா…!

1.நாம் வேறு நம் ஆத்மா வேறு.
2.அந்த ஆத்மாவில் ஆண்டவன் தான் கலந்துள்ளான்.
3.நம் உடலில் அந்த ஆத்மாவுடன் அவ்வாண்டவன் கலந்து குடியிருக்கின்றான் என்ற எண்ணம் மட்டும் ஒவ்வொருவர் மனதிலும் நிலைத்திருக்க வேண்டுமப்பா..!

காலம் அழிந்தாலும் நம் ஆன்மா அழிவதில்லை. இந்த உடலில் நாம் அந்த ஆத்மாவிற்கு எந்த நற்காரியத்தைச் சேர்த்து வைக்க முடியுமோ அந்த நற்பயனை நாம் சேமித்து வைத்திட வேண்டுமப்பா…!

மனப் பொருத்தம் அமைந்தால் அது (திரு)மணப் பொருத்தமாகிறது

 

என் குழந்தை திருமணமாகி எந்த வீடு சென்றாலும் அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும்… அந்த சக்தி என் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் அங்கே செல்வ செழிப்பு வளர வேண்டும் என்று தாய் தந்தை எண்ண வேண்டும்

அதே போன்று தன் மகனுக்குப் பெண் வேண்டுமென்றால் மகாலட்சுமி போன்று குடும்பத்தைக் காக்கும் அருள் சக்தி கொண்ட பெண்ணாக அமைய வேண்டும் என்று இந்த உணர்வினை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு எண்ணினால்…
1.அதற்குத்தக்க இடத்திற்கு அழைத்துச் சென்று நல்ல மணமகனையும் நல்ல மணமகளையும் தேர்ந்தெடுக்க முடியும்…
2.அந்த சக்தி உங்களுக்குள் வளரும்.

ஜாதகம் ஜோதிடம் என்று பார்த்தால் அதற்குள் சிக்கி அதற்குத் தான் நீங்கள் அடிமையாக முடியுமே தவிர அதனால் நல்ல நிலை வரப்போவதில்லை… மெய் உணர்வை அறியச் செய்யாது.

ஆகவே அதை விடுத்து விட்டு மனம் ஒத்துச் சென்றால் அந்த உணர்வின் தன்மை ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

இருந்தாலும் மனம் ஒன்றி இருக்கிறது…
1.ஜாதகம் ஒன்றி வரவில்லையே…” என்றால்
2.இது ஆழமாகப் பதிவாகி கடைசியில் சோர்வின் தன்மை அடைந்து விடுவீர்கள்.
3.அந்தச் சோர்வுக்குத் தக்க தான் மாப்பிள்ளையோ பெண்ணோ பார்க்கும்படி ஆகிவிடும்.
4.அதன் வழியில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒன்று சேர்ந்த பின் “கீரியும் பாம்பும்” போன்று தான்
5.அவருடைய வாழ்க்கை அமையும்… மகிழ்ச்சி பெறும் தன்மை இழக்கப்படுகிறது.

இன்றைய வழக்கில்… ஜாதகம் ஜோதிடம் பார்த்துத் தான் திருமணம் செய்கின்றார்கள்… ஆயுளையுமப்படி நிர்ணையிக்கின்றார்கள். அவர்கள் ஜாதகம் பார்த்த பிரகாரம் நோய் இல்லாது வாழ்கின்றனரா…?

எல்லாப் பொருத்தமும் இருந்தாலும் அவர்களுக்கு நோய் வராது என்பார்கள் ஆனால் நோய் வராது இருக்கிறதா…? ஆகவே ஜாதகப் பொருத்தங்கள் சரியாக அமைவதில்லை…!

1.மனப் பொருத்தம் ஆகி ஒன்றி வாழ்ந்திட வேண்டும்
2.அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் அவருடைய எதிர்காலம் சிந்தித்து செயல்படும் தன்மை பெறும்.
3.அருள் ஞானிகள் வழியில் அருள் ஒளி பெற வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் ஒன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஜாதகம் ஜோதிடம் என்ற நிலையினை விட்டுத் தள்ளுங்கள்…!

அருள் ஒளி பெற வேண்டும் என்ற நிலையில் “குடும்பத்தில் அனைவரும் மனம் ஒத்து வாழ வேண்டும்…” என்ற இந்த எண்ணங்களை கூட்டிக்கொண்டு வாருங்கள்.

பெண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் அவருடைய வாழ்க்கையில் நோயைப் பற்றி விசாரிங்கள்.

ஆண் என்றால் குணத்தை பற்றி விசாரிங்கள். சீரிய பண்பு இல்லை என்றால் இங்கே வந்தாலும் சரியாக வராது… இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்.

நல்ல ஒழுக்கத்துடன் செயல்படுகின்றார்களா…? என்று பாருங்கள். அப்படிச் செயல்படும் பொழுது… முறைப்படி தியாநித்தால் அந்த நல்ல ஒழுக்கம் மீண்டும் வளரத் தொடங்குகிறது… திருமணத்திற்குப் பின் அங்கே தவறுகள் ஏற்படாது.

ஆனால் பெண் இப்படி மாப்பிள்ளை இப்படி என்று ஆசையின் நிலைகளில் உணர்ச்சிகளை ஊட்டி விடுவார்கள். அதைக் கேட்டு ஏமாந்து விட்டால் “ஏமாந்து விட்டேனே…” என்று தீய பழக்கங்கள் கொண்ட நிலைகளுக்கு வந்து விடுகின்றது.

துருவ தியானத்திலிருந்து கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போல வாழ வேண்டும் என்றுதான் எண்ணுதல் வேண்டும்
1.மணப்பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்…
2.மணமகனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்று தியானியுங்கள்.

எங்கள் குழந்தை எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பம் நலமும் வளமும் பெற வேண்டும். அதனுடைய பார்வை குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போல் வீட்டிற்கு வரும் மருமகளும்
1.மகாலட்சுமி போன்று குடும்பத்தை அழகுபடுத்தும்… மகிழ்ச்சி பெறச் செய்யும் அந்த உணர்வைப் பெற வேண்டும்.
2,அத்தகைய பெண் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை தொடர்ந்து செலுத்துங்கள்

அதற்குண்டான சக்தி கிடைத்து நல்ல பெண்ணும் நல்ல மாப்பிள்ளையும் அமையும்…!.

சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாதவர்கள்… “வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்” என்று இருக்கின்றார்கள்

 

ஐம்புலனை அடக்கிடவே அருள் புரியுங்கள் என்று பாடலைப் பாடுகின்றீர்கள். ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன…?

பார்த்தல்… சுவைத்தல்… கேட்டல்… நுகர்தல்… எண்ணல்… எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா…!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்…
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்…” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ் ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ் ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்…! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ் ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா…” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள… தன் உணவைத் தேட… ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்…?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி… ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்…
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா…!

நீங்கள் கேட்கலாம்… தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று…! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா…!

நான் சொல்வதெல்லாம்…
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக… அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்… பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல் மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு…! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை…!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா…!

குறை கூறும் பழக்கமே நமக்கு வரக் கூடாது…!

 

எம்மிடம் (ஞானகுரு) ஆசீர்வாதம் வாங்க வரும் பொழுதெல்லாம்
1.என் குடும்பத்தில் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வரவேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
4.எங்கள் தொழில்கள் சீராக நடக்க வேண்டும்
5.எங்கள் வாடிக்கையாளர்கள் நலமும் வளமும் பெற வேண்டும்
6.எங்கல் குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெற வேண்டும்
7.எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் உத்தமக் குழந்தைகளாக வளர வேண்டும்
8.எங்களுக்கு அந்த அருள் வேண்டும் என்று தான் வேண்டி நீங்கள் கேட்க வேண்டும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு
1.வீட்டில் என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கிறான்… வீட்டை விட்டே சென்று விட்டான்
2.குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும் சண்டையும் சச்சரவும் விட்டே போக மாட்டேன் என்கிறது
3.தொழிலில் நஷ்டம் வந்து கொண்டே இருக்கின்றது
4.கடன் வாங்கிச் சென்றவர்கள் பாக்கியைத் திரும்பக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்
5.(கொடுக்க வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்… கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்…! என்றே சொல்வார்கள்)
6.எப்போது பாக்கியைக் கேட்கச் சென்றாலும் வெறுத்துப் பேசுகின்றார்கள் என்று தான் எம்மிடம் சொல்லிக் கேட்கின்றார்கள்.

ஆக இதைத்தான் வளர்த்து வைத்துக் கொள்ள முடிகின்றதே தவிர “நல்லதைக் கேட்க முடியவில்லை…”

எல்லோரும் நலம் பெற வேண்டும்… கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…! என்று தான் எம்மிடம் கேட்க வேண்டும்.

மனைவி என்ன சொல்கிறது…? என் வீட்டுக்காரர் எப்பொழுது பார்த்தாலும் நச்சு…நச்சு… என்று பேசிக் கொண்டே இருக்கின்றார். அடுத்து கணவரோ… என் வீட்டில் என் பொம்பளை எப்பொழுது பார்த்தாலும் நச்சு…நச்சு… என்று பேசிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்வார்…!

இருவருமே இப்படித்தான் சொல்வார்கள். யார் பேசுவது எவர் செய்வது என்று தெரிவதில்லை.

இந்த உணர்வு ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம். நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் பதிவாகி மீண்டும் அதைச் சொல்கிறது. இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வான்.

அதாவது…
1.நாம் ஒருவரைத் திட்டினோம் என்றால் பதில் அதுவே தான் வரும்…
2.ஒருவரைக் கோபித்தால் அதுதான் திரும்ப வரும்…
3.ஒருவரை வேதனைப்படும்படி சொன்னால் அதே வேதனையின் பதிலாக நமக்கு வரும்.

நாம் பேசும் உணர்வுகள் சீதாலட்சுமி ஆக மாறினாலும் நுகர்ந்த உணர்வுகள் சீதாராமனாக மாறுகின்றது. நாம் ஒருவரைக் கோபிக்கும் பொழுது சீதாலட்சுமி ஆக மாறுகின்றது.

அதை உற்றுப் பார்த்தால்… அந்த உணர்வை நுகர்ந்தால் நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான்… அதாவது அந்த எண்ணங்கள் தோன்றுகிறது.,, திட்டினால் அதுவே திரும்ப பதிலாக வரும்.

காவியங்கள் இதை நமக்குத் தெளிவாக்கியுள்ளன. அதன்படி நமது வாழ்க்கை எப்படி வழி நடத்த வேண்டும்…? மனிதரான பின் நாம் நமக்குள் எதை உருவாக்க வேண்டும்…? மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எம்மிடம் வந்து விட்டாலே
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்
2.வாழ்க்கையில் உடல் நலம் பெறுவேன்
3.குடும்பத்தில் ஒன்று சேர்ந்து வாழ்வோம்
4.கணவன் மனைவியும் வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ்வோம்
5.நளாயினி போன்று மதித்து நடப்போம்… சாவித்திரி போன்று ஒன்றி வாழ்வோம்
6.எங்கள் பார்வை எங்கள் குடும்பத்தில் நலம் பெறும் சக்தியாக மாறும் என்ற உணர்வினை எடுத்து வாருங்கள்.

இது உங்களுக்குள் எவ்வளவு உயர்வைக் காட்டுகிறது…? என்று பார்க்கலாம்.

எம்மைச் சந்திக்க வந்தாலே… தலைவலியோ கை கால் குடைச்சலோ எல்லாமே குறையும்… வயிற்று வலியும் குறையும். வீட்டில் இருக்கும் பொழுது வலி இருந்தது… என்னைச் சந்தித்த பின் அந்த அருள் சக்திகளை எடுத்த பின் நிம்மதி கிடைக்கிறது என்பார்கள்.

இதை எல்லாம் உங்களுக்கு அனுபவபூர்வமாகக் காட்டினால் அதை நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னொன்று மிகவும் முக்கியமானது…
1.யாரையுமே குறை கூறிப் பழகாதீர்கள்
2.குறையைக் கண்டால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலை பெற வேண்டும்
4.அருள் ஞான வழியில் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுத்துக் கொள்ளுங்கள்.

அவருடைய குறை நமக்குள் வளராது. அவர்கள் நல்ல நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் நமக்குள் இந்த வலுவின் தன்மை அவருடைய குறையான அணுக்கள் நமக்குள் அணுக்களாக விளையாது.

அவர்களும் இவ்வாறு எண்ணத் தொடங்கினால் அவர் வாழ்க்கை நலம் பெறும் சக்தியாக வளரும்.

ஆகவே எங்கே எப்படிப்பட்ட குறையைக் கண்டாலும் அடுத்த கணமே…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3.சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

குறை காணுவதையும் குறை சொல்வதையும் விடுத்து விட்டு இதைத்தான் ஒரு பழக்கமாக அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் “தெய்வ சக்தி” பெறுவீர்கள்

 

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்புடன் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.தான்… மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய
5.அந்த மகரிஷிகளின் சக்திகளை நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா…” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய் ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவு கோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞான கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை அவகள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து… வளர்ந்து… விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்.

உணவு உட்கொள்ளும் சமயத்தில் ஏற்படும் சில தவறுகள்

 

உதாரணமாக பிறர் உங்களுக்கு உணவு கொடுத்தாலும் மனம் விரும்பி நீங்கள் அதை உட்கொண்டால் தான் உங்கள் உடல் ஆரோக்கிய நிலை பெறும்.

சில இடங்களில்… கௌரவத்திற்காக “நான் இப்போது தான் சாப்பிட்டு வந்தேன்…” என்று பொய் சொல்லித் தலையைச் சொறிவார்கள். ஆனால் பசியும் இருக்கும்…! சாப்பிடுங்கள்…! என்று சொன்னபின் “எப்படிச் சாப்பிடுவது…?” என்று கௌரவம் பார்ப்பார்கள்.

அப்பொழுது அங்கே சலிப்பான நிலைகள் தான் அவர்களுக்கு வரும்.

ஆனாலும் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று சொன்ன பின் “சரி உங்களுக்காக வேண்டி நான் சாப்பிடுகிறேன்…!” என்று சொல்வார்கள்.

சலிப்பும் சோர்வும் அடைந்தபின் அது புளிப்பின் தன்மை உண்டாக்கும். இந்தப் புளிப்பு கலந்த பின் உணவைத் தட்டிலே போட்டவன்… சிறிதளவு உள்ளே போகும் பின் அதற்குப் பின் உள்ளே விடாது.

புளிப்பின் தன்மை வந்த பின் எதிர்க்கும் தன்மை வந்துவிடும் கொஞ்ச நேரம் ஆனபின் நெஞ்சைக் கரிக்க ஆரம்பிக்கும்.
1.புளிப்பின் சக்தி வரப்படும் போது அடுத்து எதை விழுங்கினாலும் (இந்தப் புளிப்பு) அன்னக் குழாயில் உள்ள அமிலத்தைக் கரைத்து விடும்.
2.பின் உராயும் போது நெஞ்சு எரிய ஆரம்பிக்கும்
3.நம்மை அறியாமலேயே அந்த உணர்வு இத்தகைய அமிலங்களை உருவாக்கி விடுகின்றது.

இதை போன்று தான்… நாம் எண்ணி எடுக்கும் எண்ணங்களில் உருவாகும் உணர்வின் அமிலங்கள் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மடியச் செய்து விடுகின்றது… நல்ல உறுப்புகளையும் மாற்றி விடுகின்றது.

அந்த உணவை உட்கொள்ளும் பொழுது யார் உட்கொள்ளச் சொன்னார்களோ அவர்கள் மீதும் வெறுப்பு வரும். நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்… இப்படி எல்லாம் செய்தார்கள்…! என்று சாப்பாடு போட்டதற்காக அவர்கள் மீது வெறுப்படைவார்கள்.

பெண்கள் பெரும்பகுதியானவர்கள் இப்படி இருப்பார்கள். விருந்துக்கு வந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று இருப்பார்கள் முதலிலே சிறிது சாதம் போட்டிருப்பார்கள் இரண்டாவது லபக்கென்று மறுபடியும் வைத்து விடுவார்கள்… பெரிய பாறையைத் தூக்கி போட்ட மாதிரி ஆகிவிடும்.

ஐய்யய்யோ இப்படிப் போடுகிறார்களே…! என்று இந்த உணர்வுகள் அந்த நிலையில் பட்ட பின் அவர்கள் உடல் எப்படி இருக்கும்…? சாப்பிட முடியாது சாப்பாடு போட்டவர்கள் மீது வெறுப்பு வரும்.

ஆனால் இவர்கள் சிரிப்பார்கள்…! சாப்பிடுபவர்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு வரும். அந்த வெறுப்பான அணுக்கள் பெருகி ஆகாரத்தைப் போட்டவர்கள் மீது “அவர்கள் வீட்டிற்குச் சென்றாலே இப்படித்தான் செய்வார்கள்…!” என்ற இந்த எண்ணங்கள் தொடர்ந்து வரும்.
1.இத்தகைய வெறுப்பின் அணுக்கள் நமக்குள் வளரப்படும் பொழுது
2.நம்மை அறியாமலேயே உடலுக்குள் எத்தனையோ நோய்கள் வந்து விடுகிறது.

வெறுப்பு கொண்டு பார்த்து… இப்படிப் போட்டு விட்டார்களே…! என்று பாய்ச்சப்படும் பொழுது சிரித்துக் கொண்டு அவர்கள் பார்த்தாலும் ஏற்றுக் கொள்ளும் நிலை வருவதில்லை.

ஆக… வெறுப்பை உருவாக்கும் அணுக்களே அங்கே உருவாகின்றது. இப்படி வெறுப்பை உருவாக்கி விட்டால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொந்த பந்தமோ உணவை அவர்கள் சமைக்கும் நேரத்தில்… குழம்பு வைக்கும் பொழுது ஏதாவது ஒன்றை அதிலே அதிகமாகப் போட்டு விடுவார்கள்.

அந்த குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் வெறுக்கும் தன்மையே வரும். உப்பு அதிகமாகி விட்டால் வெறுக்கும் தன்மை வரும். சீரகம் அதிகமாகிவிட்டால் உமட்டல் வரும். காரம் அதிகமானால் எரிச்சலாகி வெறுக்கும் தன்மை வரும்

இதைப் போல் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இந்த உணர்வுகள் இயக்கி பொருள்களை அதிகமாகச் சேர்க்க வைத்துவிடும். நம்மை அறியாமல் இயக்கும் சில நிலைகள் தான் இவை எல்லாம்.

ஆகவே… எப்பொழுதுமே பிறருக்கு உணவு படைக்கும் பொழுது
1.மகரிஷிகளின் அருள் சக்தி அதிலே படர வேண்டும்
2.இதை உட்கொள்ளுவோர் உடல் நலம் பெற வேண்டும் அவர் மகிழ்ச்சி பெற வேண்டும் எண்ணிச் சமைத்து அதற்குப் பின் உணவு போடுங்கள்.

அதே சமயத்தில்
1.மகிழச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எவருக்கும் அதிகமாக உணவைப் போட்டு விடாதீர்கள்
2.போதும்…! என்றால் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இரண்டாவது தரம் போடட்டுமா… போடட்டுமா… போடட்டுமா…! என்று நீங்கள் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த உணவு மீது வெறுப்பு அதிகமாகிவிடும்.

கொஞ்சம் போல வைத்துக் கொள்ளுங்கள்…! இல்லை வேண்டாம்…! இல்லை கொஞ்சம் போல… வேண்டாங்க…! இல்லை கொஞ்சம் தான்…! என்று இப்படிப் பேச பேச…
1.அதிலே வெறுப்பு வளர்ந்து இந்த உமிழ் நீரைச் சேர்த்தால் முதலில் சாப்பிட்ட ஆகாரத்தையும் அஜீரணமாகத்தான் ஆகும்.
2.அஜீரணமானால் சாப்பாடு போட்டும் பயனில்லாது போய் விடுகின்றது.

இது எல்லாம் நம்மை அறியாமல் அன்பால் நடக்கக்கூடிய செயல்கள்.

நாம் உணவு ருசியாக இருக்கின்றது என்று அதிகமாகச் சாப்பிட்டால் உடல் அதை ஏற்றுக் கொள்கின்றதா…? அஜீரண சக்தியை உண்டாக்கிப் புளிப்பின் தன்மை அடைந்துவிடுகிறது. அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களையும் சோர்வடையச் செய்து விடுகிறது.

அன்றைய தொழிலும் சோர்வடையும் நிலை வந்து விடுகிறது நம்முடைய எண்ணங்களும் பிறருடன் பேசும் பொழுது சோர்வின் தன்மையே அடைகின்றது வாழ்க்கையில் இத்தகைய அணுக்கள் பெருகத் தொடங்கி விடுகிறது.

நஞ்சினை முறித்து உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ மகரிஷிகளின் உணர்வலைகள் நமக்கு முன் உண்டு. அதனைப் பெறுவதற்குத் தான் மணிக்கணக்கில் பேசிப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

அந்த உணர்வின் துணை கொண்டு நினைவாற்றலைக் கூட்டி நீங்கள் தான் உங்களுக்குள் பெருக்கி அதைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

நான் சொல்லி அதைக் கேட்டறிந்த பின்
1.அடுத்து உங்களுக்கு மீண்டும் அது நினைவுக்கு வரவில்லை என்றால்
2.உங்கள் உடலில் உள்ள நான் பதிவாக்கிய அணுக்களுக்கு மகரிஷிகள் உணர்வை உணவாகக் கொடுக்க முடியாது.

ஆகவே மேலே சொன்ன பழக்கங்களை எல்லாம் நாம் மாற்றி அமைத்து அருள் மகரிஷிகள் உணர்வு கொண்டு எதையும் செயல்படுத்தப் பழக வேண்டும்.

நடந்ததும்… நடப்பதும்… இனி நடக்கப் போவதும்… நம் நன்மைக்குத் தான்..!

 

வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து சஞ்சலமற்ற… சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்… எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்… எடுக்க வேண்டிய முயற்சி நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெற வேண்டும். மனத் திறன் என்றால் என்ன…?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா…!
6.அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊண் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக… லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்…”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி… “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது…!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைத் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில் தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா…?

1.சுவாசிக்கும் சுவாசமானது… சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் – செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா…!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்…!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

சுபம்… சுபம்… சுபம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த… இந்த மனித உடலில் விஷத்தை வென்றிடும் உணர்வின் ஆற்றல் பெற்ற அகஸ்தியன் சிறு குழந்தைப் பருவத்திலேயே வானுலகை உற்று நோக்கினான்.

1.இந்தப் பிரபஞ்சம் எப்படி இயக்குகின்றது…? என்றும்
2.பிற மண்டலங்களில் இருந்து எவ்வாறு பல சக்திகள் வருகிறது…? என்றும்
3.அது பால்வெளி மண்டலங்களாக… தூசிகளாக எப்படி மாறுகிறது…? என்றும் கண்டுணர்ந்தான்
4.அவனால் அதை உணர முடிகின்றது… அவன் அறிவாக இயக்குகின்றது
5.அந்த வயதில் சொல்லாலோ செயலாலோ அவனால் வெளிப்படுத்த முடியவில்லை.

இருந்தாலும் அவன் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அவனுக்குள் விளைந்து அந்த மூச்சலைகள் வெளிப்படுகின்றது.

நம்முடைய கைக் குழந்தைக்குப் பேசத் தெரியவில்லை என்றாலும் அது அழுகும் போது அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம்.

நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனுடைய முகங்கள் மாறுகின்றது. மகிழ்ச்சி என்ற உணர்வுகளை நுகரப்படும் போது அந்தக் குழந்தை சிரிப்பதையும் (வாய் அசைவுகளை) நாம் காண முடிகின்றது.

இதைப்போன்று தான் இந்த இயற்கையின் இயக்கங்களை உணர்ந்த அகஸ்தியன்
1.வானுலக உணர்வின் ஆற்றலை எல்லாம் உணர்ந்தான்
2.அவனுக்குள் அது விளைந்தது… அந்த உணர்வுகள் மூச்சலைகளாக வெளிப்படுத்தப்பட்டது.

அவன் உடலில் விளைந்த அந்த உணர்வு கொண்டு மற்ற தாவர இனங்களை இவன் கண்ணுற்றுப் பார்த்தால் அதனுடைய மணத்தை நுகர்ந்து அது எவ்வாறு விளைந்தது… என்றும் எதனெதன் இயக்கத்தில் இது கலந்து வளர்ந்தது…? என்றும் அவனால் முழுமையாக உணர முடிகின்றது.

தன் இளம் வயதில் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது வானை உற்றுப் பார்த்து 27 நட்சத்திரங்கள் உமிழ்த்தும் எதிர்ப் பொறிகள் (கதிரியக்கங்கள்) மின்னலாக மாறி அது எவை எவை என்னென்ன செய்கிறது…? என்ற நிலையை உணர்ந்தவன் அகஸ்தியன்.

அது ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து அந்த அதிர்வுகளாக வெளி வருவதை கேது ராகு என்ற கோள்கள் அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விடுகின்றது…. “விஷத் தன்மை கொண்ட கோள்களாக” மாறுகின்றது.

நுகர்ந்ததை ஜீரணித்து தனக்குள் விஷப் பாறைகளாக மாற்றினாலும் அது வெளிப்படுத்தும் தூசி.. (அந்த மூச்சு) அது வெளி வரும்போது சூரியன் கவர்ந்து கொள்கின்றது.

சூரியன் தன் அருகிலே அதைக் கொண்டு வரும் பொழுது தனக்குள் விளைந்த பாதரசத்தால் அதைத் தாக்கிப் பிரித்து
1.ஒளிக் கதிர்களாக (ELECTRIC) நம் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்குகின்றது.
2.வெப்பம் காந்தம் விஷம் என்ற மூன்றும் (ELECTRON) கலந்த நிலையில் காந்தம் தனக்குள் மற்றொன்றைக் கவர்ந்திடும் சக்தியாக
3.எந்த ஆவியின் தன்மை (கோளின் சத்தோ நட்சத்திரத்தின் சத்தோ) இங்கே இருக்கின்றதோ அதைக் கவர்ந்து தன்னுடன் இணைத்துக் கொண்டால் அந்த உணவின் சத்தாக (NEUTRON) இயக்கும் அணுவாக மாறுகின்றது
4.முழுமை அடைந்தால் தன் இனமாக விளையத் தொடங்குகிறது (PROTON).

உதாரணமாக ஒரு விஷத்தின் தன்மை அது அடர்த்தியின் தன்மையாக வரும் பொழுது நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவி நாம் மயங்கி விடுகின்றோம்.

ஆகவே அதைப் போலத் தான் இந்த விஷத்தின் தன்மை (ELECTRON) எதை எதை நுகர்கின்றதோ அதன் அணுக்கதிர்களாக மாறுகின்றது. இப்படித்தான் நம் பிரபஞ்சம் இயக்குகிறது என்ற நிலையை முதன் முதலில் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த பேரின்பத்தை… அவன் எவ்வாறு இந்த உலகில் அந்தப் பேரின்பத்தைப் பெற்றானோ அதைப் போல நாமும் பெற முடியும்.

பேரண்ட மகரிஷிகள்

 

1.”பேரண்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்…”
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்
3.இதுவரையிலும் யாம் உபதேசித்து வருவதும்… உணர்த்தி வருவதும்.

இதைப் பதிவாக்கி மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது துருவ தியானத்தின் மூலம் அனுதினமும் அதைப் பெற்று அந்த அரும்பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் ஞான வித்துக்களைத்தான் ஊன்றுகின்றேன் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ணத்தால் ஏங்கிப் பெறுங்கள்.
1.பேரண்ட மகரிஷிகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அறியாது வரும் இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

உங்களுடைய நினைவுகள் கூர்மையாக அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையும்படியாக நினைவாற்றலைப் பெருக்குங்கள்.

அதை உங்களுக்குள் பெருக்கினால் கூர்மை அவதாரமாக உங்கள் உணர்வுகள் ஒளியின் சரீரமாக மாறுகின்றது. அதுவே மனிதனின் கடைசி எல்லை.
1.மனிதனாகப் பிறந்த நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.. மறவாதீர்கள்…
2.என்னால் சாத்தியமாகுமா…? என்று எண்ணி சோர்வடையச் செய்து விடாதீர்கள்.

யாகங்கள் செய்தோ வேள்விகள் செய்தோ இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியாது.

காரணம்…
1.அதிலே மந்திரங்களை ஓதி அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால் அது “வசியமாகி” விடுகின்றது.
2.இறந்த பின் அதே மந்திரத்தை யார் ஜெபிக்கிறார்களோ அது “கைவல்யம்…”
3.அதை மற்றவர்கள் பயன்படுத்தப்படும் பொழுது “ஏவல்…”

உலக மதங்கள் அனைத்தும் இந்த வழிப்படி தான் சென்று கொண்டிருக்கின்றது. நான் (ஞானகுரு) யாரையும் குறை கூறவில்லை. அரசன் காட்டிய வழிகள் பின் வந்தோர் பதிவு செய்த உணர்வே விளைகின்றது. அதன் வழியிலே இன்று இயங்கிக் கொண்டுள்ளது.

“இன்று வாழும் மக்களுக்கு இது எல்லாம் தெரியாது…”

மதம் என்ற நிலைகள் உருவாக்கப்படும் பொழுது மனிதனைச் சீர்குலைக்கும் நிலையாகப் பகைமை உணர்வுகள் வளர்கின்றது/ மதத்திற்குள் இனம் என்று வரப்படும் பொழுது “என் இனம் பெரிது… இல்லை என் இனம் தான் பெரிது…” என்று ஒன்றை ஒன்று அழித்துக் கொன்று குவித்து அதை ரசித்துக் கொண்டிருக்கும் நிலை தான் இன்று வருகின்றது…

ஞானிகள் காட்டிய அருள் வழியில் அருள் ஒளியைப் பெருக்கும் நிலைகள் காலத்தால் மறைந்து விட்டது. இதை அறிந்து கொண்ட நாம்
1.இனியாவது மகரிஷியின் அருள் உணர்வை நாம் பெறுவோம்.
2.மகரிஷிகள் உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்…
3.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று தியானிப்போம்
4.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்.

நமது பார்வையில் உலக மக்கள் தன்னைத் தான் அறிந்திடும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்று தவமிருப்போம்.

நம்மை உருவாக்கிய அன்னை தந்தையரை மறவாது அவர்களைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய அவர்களைக் கடவுளாக மதித்து… நல்வழி காட்டிய அவர்களை குருவாக மதித்து… அதன் வழியில் எண்ணியதை உருவாக்கும் உயிரை ஈசனாக மதிப்போம்.

நாம் எண்ணியதை உயிரே உடலாக்குகின்றது… நினைவாக்கும் பொழுது அதுவே தெய்வமாகச் செயல்படுகின்றது… மீண்டும் அதை எண்ணும்பொழுது அது குருவாக அதன் வழியிலேயே நம்மைச் செயலாக்குகின்றது. ஆகவே
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் குருவாக்குவோம்… அதனை நினைவாக்குவோம்
2.மகரிஷிகள் சென்ற பாதையில் இந்த வாழ்க்கையில் ஒளியின் சரீரம் பெறுவோம்.

எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம்

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்ளுதல்) என்றிட்ட ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்… அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தத்தம் செயலுக்கு சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்…” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்… உணர்தல்… தெளிதல்… என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால் எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்…?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்…!”

தீமை செய்யும் குணங்களை நுகர்ந்தால் உயிரின் துடிப்பு மாறிவிடும்

 

ஒரு கம்ப்யூட்டரில் மணிக்கணக்குகளைக் காட்டுகின்றார்கள். உணர்வின் தன்மை எலெக்ட்ரானிக்காக அது இயங்கி… அதிலே குறித்த நிலைகள் வரும் பொழுது மணிகளை மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

ஆனால்…
1.அதிலே சிறிது தண்ணீர் பட்டு விட்டால் முழுவதும் மறைந்துவிடும்.
2.எதிர்மறையான உணர்வுகளைப் பதியச் செய்யும் போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அந்தக் கரண்டின் இயக்கம் அதில் உள்ள பேட்டரியின் சார்ஜ் குறைந்தாலும் தப்பான கணக்கைத் தான் காட்டும்.

அதைப் போன்று தான் நம் உயிரின் இயக்கம் சீராக இருக்கப்படும் பொழுது நம் எண்ணம் சொல் செயல் எல்லாம் நன்றாக இருக்கும்.

1.சோர்வு வேதனை போன்ற மற்ற நஞ்சான உணர்வுகள் வந்தால்
2.அத்தகைய எண்ண அலைகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்த பின்
3.நம் உயிர் அந்த உணர்வின் தன்மையை இயக்கப்படும் பொழுது இயக்கத்தின் துடிப்பு குறைந்து விடும்.

அப்படிக் குறையும் பொழுது நம் உடலின் இயல்பான இயக்கங்களும் குறையத் தொடங்குகின்றது. நம் எண்ணும் நிலைகள் சீராக வராது ஒரு கணக்குப் பார்த்தாலும் சரியாக வராது. நம் சொல்லும் சரியாக இருக்காது.

ஏனென்றால் நம் உயிர் எலெக்ட்ரானிக்காக (உணர்ச்சிகள்) அதை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.
1.அதிலே எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்தந்த உணர்வுகளை மாற்றி மாற்றிக் கொண்டே இருக்கும்.
2.அந்த மாற்றம் எதுவோ கண்களில் அந்த நிறங்கள் மாறும்.
3,சொல்லுக்குள்ளும் உணர்ச்சிகள் மாறும்… அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் நிறமும் மாறும்.

இந்த மாதிரி ஒருவரைப் பார்த்தவுடனே அவருடைய நிலைகளைச் சொல்லிவிடலாம். யாம் சொல்லும் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு இது தெளிவாகத் தெரிய வரும். தெரிந்தாலும் இதை ஜோதிடம் போன்று சொல்லி விடக்கூடாது.

1.சில நேரங்களில் உங்களிடம் சில கேள்விகள் கேட்பேன் (ஞானகுரு).
2.அப்பொழுது அந்தச் சமயத்தில் உங்களிடமிருந்து என்னென்ன வருகிறது…? என்று பார்ப்பேன்.
3.பார்த்த பின் அதிலே என்ன நல்ல மாற்றம் கொடுப்பது…? என்று நான் இணைத்துக் கொடுப்பேன்.

நான் வேறு விதமாக மாற்றிச் சொல்லும் பொழுது உங்களிடமிருந்து எல்லாம் வெளியே வந்துவிடும். அப்பொழுது இந்த அலைகளைத் தொடர்ந்தவுடன் “எந்த உயர்ந்த உணர்வை உங்களிடம் கலக்க வேண்டும்…?” என்று சொல்லி உங்களிடம் கலக்கச் செய்வேன்.

1.அந்தச் சமயத்தில் நான் சொல்வதில் விஷயம் அதிகமாக இருக்கும்.
2.ஏனென்றால் குரு வழியில் அதை எதை இணைக்க வேண்டும் என்று இணைத்துத்தான்
3.உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்…? என்று அந்த நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவது.

உதாரணமாக பள்ளியில் ஆசிரியருக்கு ஒரு மாணவன் மீது வெறுப்பாகி விட்டால் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகத் தான் சொல்லிக் கொண்டு வருவார். மாணவனுக்குள் பயம் வந்து விட்டால் ஆசிரியர் என்ன சொன்னாலும் இவனுக்குள் இது பதிவாகாது. இது எல்லாம் அந்த உணர்வின் நிலை.

பார்வை அங்கே இருட்டாகும். எதிரில் எது இருந்தாலும் அதைச் சரியாகக் காண முடியாது. அந்த உணர்வுக்குள் நஞ்சாகும்.

ஆக… விஷத்தில் எந்த நல்ல பொருளைப் போட்டாலும் சிந்தனை வராது. விஷத்தின் தன்மையின் உணர்வாகவே மாறிவிடும். அந்த நேரத்தில் என்ன பதிவு செய்தாலும் அது பதிவாகாது.

அது போல் ஆகாது… குருநாதர் கொடுத்த “கோடி கோடி” என்ற நிலைகள் கொண்டு அந்த உண்மையின் தன்மை வளர்ந்தாலும்… கோடி கோடி என்ற ஒளியான உணர்வின் தன்மையாக உங்களுக்குள் இணைத்தே கொண்டு வருகின்றேன்.
1.இணைத்துக் கொண்ட பின்
2.அது தெளிந்த அறிவை உங்களுக்கு ஊட்டும்.

ஆக… அடுத்தவர்களை நீங்கள் பார்த்த பின் கேட்டறிந்து அதைச் சொல்வதல்ல. கேட்டறிந்து நீங்கள் சொல்ல வேண்டும் என்றால் நானே அப்படிச் சொல்ல முடியாது.

ஆனால் திருப்பிச் சொல்லும் நிலை வந்தால் அது வெறும் பாட நிலையாகத் தான் ஆகும். ஆகவே நாம் ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது அந்த உண்மைகளை நமக்குள் உணர்த்தும்… அங்கிருக்கும் தீமையும் தெரியும்.

அப்பொழுதெல்லாம்…
1.அந்தத் தீமையை நீக்குவதற்குண்டான வழி எது…? என்று நாம் எடுக்க வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நமக்குள் தீமை சேராது.
3.அவர்களின் தீமைகளை நீக்கும் சொல்லாக நம்மிடமிருந்து வரும்.

அந்தச் சொல்லினை அவர்கள் பதிவு செய்து விட்டால்… அவர்கள் கேட்டுணர்ந்தால்… திருப்பி அதை அவர்கள் எண்ணினார்கள் என்றால் அவர்கள் தீமையை அவர்களே போக்க முடியும்….!

ஒருவர் வாய் திறந்து சொன்னால் போதும்… “இப்படித்தான்” என்று நமக்கு அது தெரிய வரும். நமக்குத் தெரிய வந்தாலும் உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

தெரிந்து கொண்டேன்…! என்று உடனே அவர்களிடம் சொல்லக்கூடாது.

1.அவர்களுக்கு நல்ல உணர்வை எப்படிக் கொடுக்க வேண்டும்…? என்ற நிலையில்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வுடன்
3.அவர்கள் கண்களை உற்றுப் பார்க்க வேண்டும்… நாம் எதையும் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பிறிதொன்றை அவர் சொல்லும் போது நமக்குக் கோபம் வரும். ஆனால் இங்கே சொன்ன உபாயத்தின்படி எண்ணிப் பாருங்கள்.

சரி… அப்படியா…! என்று அந்த அருள் உணர்வுகளைக் கண்ணிலே பாய்ச்சிப் பாருங்கள். யாராவது குற்றமாகச் சொல்ல வரும் பொழுது இந்த முறையைக் கையாண்டு பாருங்கள்.
1.அவர்களுக்குள் ப்ரேக் ஆகும்… நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்களை இடைமறிக்கும்.
2.குறைகளையே சிந்தித்துக் கொண்டிருந்தால் இது போய் அங்கே தடையாகும்.
3.ஆனால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் வராது… நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்கள் தீமைகளை அடக்கச் செய்யும்.

ஏனென்றால் யாரும் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு அவர்களை இயக்குகிறது. அந்தக் குறை வளரக்கூடாது என்ற நிலையில் மகரிஷிகளின் அருள் ஒளி அங்கே படர வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இதை மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

இப்படிச் செய்வதற்கு மாறாக நாம் அவர் உணர்வை அப்படியே எடுத்துக் கொண்டால் இரண்டு பங்கு நமக்குக் கோபம் வரும். நீ பெரியவனா…? நான் பெரியவனா…! என்று சண்டை வரும்.

இந்தத் தியான வழியில் உள்ளவர்கள் இதை எல்லாம் கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும்… வலுக் கொண்டு ஓட வேண்டிய “தியான நினைவோட்டம்”

 

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு… “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே…” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான் தெரியாதது இல்லை)

அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால் மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது. அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்… உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது… பல நன்மைகளும் ஏற்படுமப்பா…!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்…
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால் கெட்டது ஜீவன் பெறாது… அதனின் வினைச் செயலை மாற்றி… நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்…!”

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

 

மனிதனான பின் மனிதனின் வாழ்க்கையில் நல்லது செய்யும் போதும் அறியாது எத்தனையோ சிக்கல்கள் வருகிறது…! எப்படி…?

உயர்ந்த குணங்கள் கொண்டோர் பிறருக்குப் பண்பு கொண்டும் பரிவு கொண்டும் உபகாரம் செய்தால் அதன் விளைவாக எதிர் நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கிறது.

அப்போது… பண்பு கொண்ட அந்த மனிதனுக்குள் விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது இவனையும் வேதனைப்படச் செய்து… நரகலோகத்திற்கே அவனை அழைத்துச் சென்று விடுகின்றது.

1.நல்ல பண்புகளை அவன் எண்ணி ஏங்குகின்றான்…
2.நான் நல்லதைத் தான் செய்தேன்… எனக்கு இப்படி வந்து விட்டதே…! என்று ஏங்கி அந்த விஷத்தை வளர்த்துக் கொள்ளும் நிலையில்
3.விஷ அணுக்களை உருவாக்கிக் கொண்டு அந்த வேதனை கொண்டு அவன் மடிகின்றான்.

மடியும் பொழுது எதன் மேல்… யார் மேல் வேதனையாக எண்ணி அவன் வெளி வந்தானோ அந்த உணர்வின் நினைவாற்றல் வந்தபின் அந்த உடலுக்குள் புகுந்து
1.அங்கேயும் இந்த விஷத்தைப் பாய்ச்சி அவனையும் வீழ்த்தி விட்டு
2.விஷமான அணுக்களைப் பெருக்கி முழுமை அடைந்து வெளிவந்த பின்
3.விஷப் பூச்சிகளாக விஷப் புழுக்களாக பாம்பினங்களாக உருமாற்றி விடுகின்றது உயிர்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் ஒன்றுக்கு இரையாகி… அதிலிருந்து மீண்டிடும் உணர்வை எடுத்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… எல்லாவற்றையும் அடக்கிடும் நிலை பெற்றவன் தான் மனிதன்.

ஆகவே… வரும் தீமைகளிலிருந்து மனிதன் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதனை நான் (ஞானகுரு) அறிய… இரவும் பகலும் ஒவ்வொரு நொடியிலும் காடு மேடுகளில் எம்மை அலையச் செய்தார் குருநாதர்.

அனுபவ வாயிலாகப் பேருண்மைகளை அறியச் செய்து தீமையிலிருந்து உன்னை மீட்டுக் கொள்ளும் நிலையாக நீ எதைத் தேர்ந்தெடுக்கின்றாய்…? அதை நீ எவ்வழியில் பெற வேண்டும்…?

தீமைகளை நீ செய்யவில்லை என்றாலும் தீமை செய்வோனை நீ உற்று நோக்கினால் அந்த உணர்வினை நீ நுகரப்படும் பொழுது… அதை அறியும் தன்மை வந்தாலும்…
1.ஓம் நமச்சிவாய என்று உன் உயிர் உனக்குள் அதை ஜீவ அணுவாக… உடலாக உருவாக்கி விடுகின்றதே…!
2.மீண்டும்… சிவாய நம ஓம் அவன் இப்படித் தவறு செய்கின்றான்…! என்று நீ திரும்பச் சொல்கின்றாய்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி பெற அந்த அணுக்களும் உனக்குள் பெருகுகின்றது. மனித இனம் என்ற நிலைகளையே மாற்றி உனக்குள் உணர்வுகள் மாறுகின்றது… உருவங்கள் மாறுகின்றது மனிதன் மீண்டும் தேய்பிறையாகத் தான் போக முடிகின்றது.

1.இதிலிருந்து தேய்பிறை ஆகாது உன்னை நீ எவ்வாறு காத்திட வேண்டும்…?
2.எவ்வழியில் உன்னை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதனை
3.பல அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்தார் குருநாதர்.

அதைத்தான் உங்களுக்கும் சிறுகச் சிறுக சொல்லி வருகின்றோம்.

எனக்கு குருநாதர் தொட்டுக் காட்டியது போன்று உங்கள் உணர்வுகளுக்குள்ளும் ஞானிகளின் உணர்வுகளைத் தொட்டு காட்டி அதை இணைத்து… அதன் மூலம் அவர்கள் பெற்ற அரும்பெரும் சக்திகளை நீங்களும் பெறும் தகுதியாக “இதைப் பதிவு செய்கின்றோம்…”

குரு வழியில் நீங்கள் இதைப் பதிவாக்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்த நன்மை… அது உங்களுக்குள் என்றுமே நிலைத்திருக்கும் நிலையாக
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு
2.உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

 

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ண குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

எல்லோருக்கும் நாம் நன்மை செய்தாலும் “நம்மைக் காத்துக் கொள்ள குருவின் துணை அவசியம் வேண்டும்”

 

குரு உபதேசித்த உணர்வுகளை நமக்குள் பெற்றுள்ளோம். இன்றைய நிலைகளில் அதை எல்லாம் எளிதாக உங்களிடம் சொல்கின்றேன். ஆனால் “அதை வழி நடத்துவதற்குண்டான சிக்கல்” எனக்குத் தான் (ஞானகுரு) அது தெரியும்.

காரணம்… எத்தனையோ இன்னல்களைக் கண்டுணர்ந்த நான் அன்பு கொண்டு பரிவு கொண்டு உயர வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொரு மக்கள் மத்தியிலும் வந்து
1.உயர்ந்த சக்தி பெற வேண்டும் உணர்வுபூர்வமாக நான் ஊட்டினாலும்
2.அந்த உணர்வு பதிவான அவர்களுக்கும்… சந்தர்ப்பம் அந்த உணர்வை அவர்களுக்குள் அதை வளர விடாது தடுக்கின்றது.
3.அதனால் அவர்கள் அறியாது தவறு செய்யத் துணிவாகும் போது
4.எல்லை கடந்து சிரமப்பட்ட நேரத்தில் அவர்களுக்குள் நல்லது உருப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நான் பாய்ச்சிய பின்னும்
5.அவரை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்கிறது
6.அதனைக் கண்டு எனது மனமும் வேதனைப்படுகின்றது.
7.அந்த வேதனை உணர்வுகள் என்னையும் இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்துச் செல்லும் நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை அன்றே குருநாதர் சொன்னார்.

“நீ உருவாக்கும் உணர்வுகள் நல்லதை மற்றவர்களுக்குப் பாய்ச்சிடும் நிலை பெற்றாலும்” தீமையின் நிலைகள் அவருடைய சிந்தனையைச் செயலற்றதாக மாற்றும்.

1.அத்தகைய வேளையில் நீ எதைச் செய்யப் போகின்றாய்…? உன்னை நீ எவ்வாறு காத்துக் கொள்ளப் போகிறாய்…?
2.உனக்கு மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்
3.நீ நகருக்குள் செல்லப்படும் பொழுது எத்தனை வேதனைகளை நீ படப் போகின்றாய் என்று பார்…! என்று இதைச் சொல்கின்றார்.

பலருக்கு பல நோய்களிலிருந்து விடுபடும் அதற்குண்டான உபாயங்களைச் செயல்படுத்தினாலும் அடுத்து அவர்களுக்கு நல்லதான பின் “இவர் என்ன செய்தார்…?” என்று அவர்கள் என்னைச் சொல்லப்படும் பொழுது
1.மனதார பணம் வாங்காது அவர் நல்ல வழி பெற வேண்டும் என்று எண்ணினாலும்
2.நல்லதான பின் நுகர்ந்தறிந்தாலும் அவர் செய்யும் தவறுகளும்…
3.வேதனைப்படுத்தும் சொல்களை அவர் சொல்லப்படும் பொழுது அந்த விஷத்தை நுகர்ந்தபின் நீ செய்த நன்மைகள் எப்படி மறைகின்றது…?
4.அந்த விஷத்தின் தன்மை உனக்குள் எப்படி ஆட்கொள்கின்றது…?
5.உன்னை அறியாமலே வெறித் தன்மை கொண்ட செயல்படும் தன்மைகள் உனக்குள் உருவாகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்

தியான வழிகளில் அமைதியும் பண்பும் கொண்டு நீங்கள் வழி நடந்து வந்தாலும் உங்களைச் சீண்டிப் பார்ப்போரும் தூண்டிப் பார்ப்போரும் துன்புறுத்தி அதை வேடிக்கை பார்ப்போரும் “இப்படி இதிலும் பலர் பெருகுவர்…!”

இதைப் போன்ற நிலைகள் இருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்குத்தான் “எனது குரு காட்டிய அருள் வழியினை” உங்களுக்குள் இந்த உணர்வின் சக்தியைப் பரப்பப்பட்டு இந்த உணர்வின் வலிமையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இதைச் செயல்படுத்துகின்றேன்.

ஆகவே… மனிதனின் பண்புகள் சிறுகச் சிறுக மறைந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தீமையிலிருந்து எப்படி விடுபட வேண்டும்…? என்று உணர்த்தினார்… அதைத்தான் உங்களுக்கு உணர்த்துகின்றேன்.

உங்களை அறியாது வாழ்க்கையில் வந்து தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு நஞ்சினை வென்றிடும் வலிமை பெற வேண்டும்… அந்த அருள் ஞானிகள் உணர்வை நுகரும் வலிமை நீங்கள் பெற வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராது சில தீமையின் உணர்வுகள் உருவாகி விட்டாலும்
1.உங்கள் நினைவாற்றல் அந்தத் தீமையிலிருந்து அகற்றிடும் சக்தியாக
2.உங்களைக் காத்திடும் நிலையாக வர வேண்டும் என்பதற்குத் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உபதேசங்களைக் கொடுக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடும்பத்தில் கஷ்டமோ நஷ்டமோ இதைப் போன்ற தொல்லைகள் இருந்தால்… “கஷ்டம்…” என்ற அந்த வார்த்தைகளை விடுத்து விடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல்கள் முழுவதும் படர்ந்து எங்களை அறியாது சேர்ந்த சாப வினைகள் நீங்கி நாங்கள் உடல் நலத்துடன் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

சாப அலைகள் என்றால்…
1.நம் குடும்பத்தில் உள்ளோர் யாரும் நேரடியாக சாபம் இட வேண்டியதில்லை
2.ரோட்டிலோ அல்லது அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் வேறு யாரோ அவர்களுக்குள் பகைமையாகி சாபமிட்டுக் கொண்டிருந்தால்
3.இப்படிச் செய்கின்றார்களே…! என்று அதனை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்து விடுகின்றோம்.

அவர்கள் இட்ட அந்தச் சாப அலைகள் நமக்குள் பதிந்து இரத்தத்திலே அணுக்களாக விளையத் தொடங்கும்.
1.விளைந்த பின் நமக்குள் பகைமை உணர்வை ஊட்டி
2.நம் வாழ்க்கையே சீர்கெடச் செய்யும் நிலையாக நம் நல்ல எண்ணங்களை இடைமறித்து
3.நம் சொல்லைப் பலவீனப்படுத்தித் துன்பங்களை ஊட்டும் நிலையாக வரும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் விடுபட “அதிகாலை துருவ தியானத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்…”

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுப்படுத்திக் கொண்ட பின்…
1.என் மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.என் கணவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தியாக வளர வேண்டும் என்று
4.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எண்ணி அந்த வலுவான நிலைகள் கொண்டு
5.அந்த நினைவினை உங்கள் குடும்பத்திலும் தொழிலும் செலுத்திப் பழகுங்கள்.

இவ்வாறு இரு மனமும் ஒன்றாகி விட்டால் உங்கள் உடலில் உள்ள பகைமை உணர்வுகளால் விளைந்த அணுக்களின் வீரியம் தணியத் தொடங்கும்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் உருவாக்கும் உணர்வும் அதிகரிக்கும். அடுத்து பிறவி இல்லா நிலைகள் அடையவும் இது உதவும். ஆகவே இதை மறவாதீர்கள்…!

ஏனென்றால் ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் அந்த உணர்வு தன் இனத்தை உருவாக்குகின்றது.

ஆக… உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையை ஒளியாக (ஒளியான இனமாக) உருவாக்க வேண்டும் என்றால் மனிதனான நிலையில் மனைவியின் உயிருக்குள்ளும் கணவனின் உயிருக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி இணைந்திட வேண்டும் அந்த உடல் முழுவதும் படர வேண்டும் என்று இரு உயிரும் ஒன்றாகக் கலக்கப்படும் பொழுது தான் இரு உயிரும் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

1.இப்படி ஒன்றிணைந்த நிலைகள் கொண்டு
2.27 நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளைத் தனக்குள் பெருக்கி
3.அண்டத்தில் வரும் அனைத்து நஞ்சினையும் வென்றது தான் துருவ நட்சத்திரம்… துருவ மகரிஷி…!

அந்தத் துருவ மகரிஷியைப் போல் நீங்கள் கணவன் மனைவி இருவரும் இந்த உணர்வின் தன்மையைப் பெற்றால் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை அது எவ்வளவு கடுமையாக இருந்தாலும்
1.அதை வென்றிடும் சக்தி வருகின்றது.
2.ஒளியாக மாற்றிடும் திறன் வருகின்றது
3.அந்த ஒளியின் உணர்வாகக் கருவாக உருவாக்கும் தன்மை வருகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் இதைச் சீராகச் செய்து வருவோர் அனைவரும் நிச்சயம் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

ஈஸ்வரபட்டர் சொல்லிக் கொடுக்கும் “ஆத்ம சுத்தி”

 

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ… புளிப்போ… உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம்.

நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்…?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்… காரியமாற்றும் நிலையிலும்…
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா “ஆத்ம சுத்தி” என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்… கோபம்… மோகம்… ஆவேசம்… ஆத்திரம்… பழி…. ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்…
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா…! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல கோடிச் சரீரங்களின் வளர்ச்சியில் மனிதனாக உருவாக்கிய நிலைகள் வரப்படும் பொழுது நாம் எண்ணியது எதுவோ அது “பிரம்மகுருவாக” மாற்றுகின்றது.

அகஸ்தியன் தன் உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலை நுகர்ந்து நஞ்சினை வென்றிடும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்து கொண்டதனால்… அவன் எந்த உண்மையின் உணர்வைக் கவர்ந்து கொண்டானோ அது பிரம்மகுருவாக இருந்து ஒளியின் சரீரமாக அவனை உருவாக்கியது.

அவன் தனக்குள் எடுத்துக் கொண்ட தீமைகளை அகற்றிடும் அருள் சக்திகளைத் தன் மனைவிக்கும் பெறச் செய்து தனக்குள் இணைத்துக் கொண்டான்.

1.அவர்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ்ந்து…
2.நளாயினி போன்று கணவன் மனைவியை மதிப்பதும் மனைவி கணவனை மதிப்பதும்
3.சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள் என்ற நிலையாக இரு உணர்வும் ஒன்றி வாழ்ந்த பின்
4.இரு உயிரும் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது…
5.துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.

கணவனும் மனைவியும் இப்படி இரண்டறக் கலந்து… இன்னொரு பிறவிக்குப் போகாது… தன்னுடன் இணைத்துக் கொண்டு… உயிர் எப்படியோ அதைப் போல் உணர்வின் அணுக்களை உருவாக்கிப் “பிறவி இல்லா நிலைகள் அடைவது தான் கடைசி நிலை…!” என்று இராமாயணக் காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

நுகரும் உணர்வுகள் எவ்வாறு எண்ணமாகின்றது…? என்றும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு உருவாக்குகிறது… உருவாகிறது…? என்றும் உருவத்தை அமைத்து
1.நாம் கவரும் நிலைகளும் நாம் நுகர்ந்த உணர்வுகளும் உடலுக்குள் சென்ற பின்
2.அதனால் உடலுக்குள் மாற்றங்களும் போர் முறைகளும் அது எவ்வாறு வருகிறது என்றும்
3.நம் உடலுக்குள் எவ்வாறு போர் முறைகள் நடக்கிறது…? என்றும்
4.அந்த உணர்வுகளால் நமக்குள் எப்படித் தீமைகள் விளைவிக்கிறது…? என்றும்
5.இதிலிருந்து நாம் எவ்வாறு விடுபட வேண்டும்…? என்ற நிலையையும் இராமாயணத்தில் சித்தரித்துக் காட்டினார்கள்.

சீதா… துருவ நட்சத்திரத்திலிருந்து மகிழ்ச்சி பெறும் உணர்வை (அந்தச் சத்தினை) நாம் நுகர்ந்தால் நமக்குள் பகைமை உணர்வை மாற்றிக் கல்யாணராமனாக மகிழ்ந்து வாழும் நிலைகளையும் நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் தன்மைகளும் வருகிறது.

1.அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்து (வசிஷ்டர்) கொண்டால்
2.அதனின் சுவை சீதா (சத்து) தனக்குள் அருந்ததியாக இருந்து
3.நம்மை என்றுமே பிறவி இல்லா நிலை என்ற நிலையை அடையச் செய்யும்… அந்த அருள் சக்திகளை நாம் பெற முடியும்.

அத்தகைய தகுதியை உங்களுக்குள் ஏற்படுத்தும் நிலையாகத் தான் அன்று அகஸ்தியன் கண்ட உணர்வின் உண்மைகளையும் அவனில் இருந்து வெளிப்பட்ட நஞ்சை வென்றிடும் உணர்வுகளையும் நீங்கள் பெற இந்த உபதேசம் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

அதன் மூலம் இந்த உலகையும் உலக இயக்கத்தையும் உங்கள் உயிரின் இயக்கத்தையும் உடலுக்குள் அது எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும் நீங்கள் அறிய முடியும்.

அகண்ட அண்டத்தையும் பேரண்டத்தையும் உணர்ந்த அகஸ்தியன் அவனில் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
1.அகண்ட அண்டத்தில் விளையும் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்ய முடியும்
2.அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சான நிலைகளை வென்றிடும் உணர்வுகளையும் பெற முடியும்.

அதிகாலையில்… “நம் நினைவுகள் இருக்க வேண்டிய திசை”

அதிகாலையில் 4:00 மணிக்கு என்னை (ஞானகுரு) விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார் குருநாதர்.
1.அதிகாலை நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகள்
2.துருவப்பகுதி வழியாகப் பூமிக்குள் வருவதை அறியும்படி செய்கின்றார்.

காரணம்… சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுவதைக் கவர்ந்து ஒளி அலைகளாகப் படரச் செய்கின்றது. அதனின் உணர்வுகள் பரவி வரும் பொழுது
1.நம் பூமியின் சுழற்சி வட்டத்தில் துருவப் பகுதி வழியாக… பூமி எவ்வாறு கவர்ந்து இழுக்கின்றது…? என்பதை குருநாதர் தெளிவாக்குகின்றார்.
2.அந்த நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண்பிக்கின்றார்.

விஷத்தன்மையான உணர்வுகளைக் கவரும் அந்தந்தக் கால கட்டங்களில் (சந்தர்ப்பத்தில்)
1.அந்த விஷத்தின் தன்மையை நுகரும்படி செய்து
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து அந்த விஷங்களை எப்படி முறியடிப்பது…? என்ற நிலைகளையும் காட்டுகின்றார்.

ஆகவே துருவப் பகுதியை உற்று நோக்கி காலை 4 மணியிலிருந்து ஆறுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதை “ஒரு வழக்கமாக” வைத்துக் கொள்ளும்படி சொன்னார்.

1.காலையிலிருந்து இரவு வரையிலும் பல பல தீமைகளைச் சந்திக்கச் செய்கின்றார்
2.அதை நுகரும் பொழுது அதனால் உடலுக்குள் உபாதைகள் உருவாவதையும் காட்டுகின்றார்
3.பின் காலை நான்கு மணிக்கெல்லாம் குரு துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகரப்படும்போது அந்தத் தீமைகள் ஒடுங்குகின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு சுழல்கின்றது…? அதிலிருந்து வெளிப்படும் அலைகள் எவ்வாறு பரவுகின்றது…? அதனை எவ்வாறு நீ நுகர வேண்டும்…? என்பதையும் குரு தெளிவாக எனக்குள் உணர்த்துகின்றார். அதை அறிவதற்காகச் சில சில நிகழ்ச்சிகளையும் என் வாழ்க்கையில் நடத்திக் காட்டுகின்றார்.

சப்தரிஷி மண்டலங்களின் சக்திகளை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது விஷத்தன்மைகள் எவ்வாறு ஒடுங்குகின்றது…? அதை வைத்து… உனக்குள் வரும் தீமைகளில் இருந்து எவ்வாறு நீ மீள வேண்டும்…? என்று இப்படித்தான் அனுபவரீதியில் எனக்குக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

வாழ்க்கையில் வந்த விஷத்தன்மைகளை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக நிலைத்து விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக எவ்வாறு வாழுகின்றார்கள்…? என்றும் பதினாறு என்ற நிலையில் எப்படி வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்…?
1.அதனை நீ பெறுகின்றாயா…? (அல்லது)
2.மூலிகைகளைக் கண்டுபிடித்துப் பிறருடைய துன்பங்களையும் நோய்களையும் போக்கும் “வைத்தியன்” என்ற பெயர் வாங்குகின்றாயா…?

“பல பல தாவர இனங்களைக் கையில் எடுத்துக் கொண்டு” பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்களை ஒடுக்குவதும்… விஷப் பூச்சிகளிடம் காட்டும் போது அவைகள் பம்முவதும்… கடும் விஷம் கொண்ட மிருகங்களையும் அஞ்சி ஓடச் செய்வதும்… போன்ற செயல்களில் ஈடுபட்டு
1.அதன் வழி உன்னுடைய வலிமையைக் காட்டி உன்னுடைய திறமையைக் காட்டி
2.பேரும் புகழும் பெருமையும் அடையும்படி புகழ் தேடச் செல்கின்றாயா…?
3.புகழ் தேடிய பின் அதனின் உணர்வுகள் உன்னை மீண்டும் விஷத்தன்மை அடையச் செய்து அதன் வழி மடிகின்றாயா…? (அல்லது)
4.மனித உடலை மாற்றி விண் செல்கின்றாயா என்று இப்படி பல வினாக்களை எழுப்பினார் குருநாதர்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி… அந்த நெறிப்படி நடந்து உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றேன். அதே உணர்வைத் தான் உங்களுக்கும் இப்போது போதித்துக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்காது…!

 

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி… நாபி நாடி… மார்பு நாடி… கண்ட நாடி… சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி… சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி…. ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்… காது… நாசி… வாய்… கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக…
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலகோதய வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெற வேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

உருவம் அருவம் – அருவம் உருவம்

 

உலகில் உள்ள அனைத்து மதங்களும்
1.தெய்வம் என்ற நிலையில் உருவத்தைக் காட்டி… அருவத்தின் எண்ணங்களைத் தனக்குள் எண்ணும் பொழுது
2.அந்த உணர்வினை உயிர் நுகர்ந்து உணர்வின் எண்ணங்களாக உருவாக்குகின்றது.
3.ஆனால் எந்த உருவத்தைப் பார்த்தோமோ அந்த உருவத்தின் உணர்வலைகளாக வருகின்றது.

இவருடைய எண்ணங்களும் அதுவும் ஒன்றாக வருகிறது. இது இரண்டும் சேர்த்துத் தனக்குள் பதிவாக்கப்படும் பொழுது இந்த உணர்வின் நினைவாற்றல் கொண்டு ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

பதிவாகி… பக்தி கொண்டு வாழ்ந்த பின் அந்த மனிதன் இறக்கின்றான் என்றால் அதே பக்தி கொண்ட நிலைகளில் இன்னொரு மனிதன் எண்ணி ஏங்கும்போது
1.எந்தப் பக்தியின் நிலைகளில் எந்த உருவத்தைக் காட்டினார்களோ
2.அந்த உருவத்தின் உணர்வலைகளும் அதனின் இசையின் உணர்வுகளும் கலந்து
3.அந்தச் சொல்லின் தன்மை உணர்வுகள் உணரப்பட்டு… இந்த உணர்வுகள் “ஒளிகளாக” உருவாகின்றது.

அதைப் (தெய்வத்தின் உருவை) பதிவாக்கப்படும் பொழுது இந்த நினைவுகள் இங்கே அந்த எண்ணங்களைத் தோற்றுவித்து வாழ்க்கையை அதன் வழி நடத்தும்படி செய்கின்றது.

அதே சமயத்தில் அவர் இறந்து விட்டாலோ… எதைக் கண் கொண்டு உணர்வின் தன்மை அலைகளாகப் பாய்ச்சியதோ… எதன் எதன் உணர்வின் எண்ணங்களை இதற்குள் பாய்ச்சியதோ… இந்த உணர்வின் அலைகள் சென்ற பின் இதே மந்திரத்தை அவர் சொல்வார் என்றால்
1.எந்த மந்திரம் இவர் உடலுக்குள் உருவாக்கப்பட்டதோ அது ஈர்க்கப்பட்டு இந்த உணர்வின் ஒளிகளை எழுப்பப்பட்டு
2.அதே ரூபத்தையும் உருவாக்கப்படும்… எனக்குக் கடவுள் காட்சி கொடுத்தான் என்று…!

நமக்குள் உள் நின்று இயக்கப்பட்ட உணர்வுகள் தான் நாம் இறந்த பின் அதே உணர்வலைகளை எழுப்படும் போது இந்த அலைவரிசையில் அவர்களுக்கு அந்தந்த மதத்தின் தன்மை கொண்டு
1.உருவம் அருவமாகி… அருவம் உருவமாகி
2.நமக்குள் அருவமாகி அந்த ஒளி அலைகளாக மாற்றும் பொழுது
3.அதை ஒருவர் நுகர்ந்தார் என்றால் அந்த உருவத்தின் உணர்வுகள் அருவ நிலையாகக் காட்சியாகக் கொடுக்கின்றது.

அந்த உணர்வு உடலுக்குள் இயக்கப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… உடலுக்குள் அது பெருகுகின்றது. இது எல்லாம் இயற்கையின் நிலைகள்.

நம் நாட்டில் மட்டுமல்ல… உலகின் பல நாடுகளிலும் “அவர்கள் தெய்வம்…” என்ற நிலையை உயர்த்திக் காட்டுவதற்காக ஒரு பெண்மணிக்கு மூக்கிலிருந்து “கொம்பு” வருவதாகக் காட்டுவார்கள்… இதுவே தெய்வம்…! என்பார்கள்.

இதை உற்றுப் பார்த்து… காவியப் படைப்புகள் வைத்துக் காட்டப்பட்டு… மந்திர ஒலிகளை எழுப்பி ஜெபிப்பார்கள் என்றால் அதன் வழிப்படி “அந்தக் கடவுள் நம்மைக் காப்பான்…” என்று பதிவாக்கி விடுகின்றார்கள்.

எந்தச் சிலையின் உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றதோ அது நுகர்வோர் உணர்வுகளில் பதிவாக்கப்படுகின்றது. அவர்கள் சொல்லும் மந்திர ஒலிகளும் இதற்குள் கூடி விடுகின்றது.

இவர்கள் இறந்து விட்டால் இதே மந்திரத்தைச் சொல்வார் என்றால்
1.எந்த சிலையின் ரூபத்தைக் காட்டப்பட்டதோ…
2.அதே சிலையின் உருவங்கள் மந்திர ஒலிகளைச் சொல்வோருக்குக் காட்சியாக அளிக்கும்.

“தெய்வம் எனக்குக் காட்சி கொடுத்தது…” என்ற நிலையும் இவர்கள் எண்ண ஒளிகளை அவர்கள் எடுக்கப்படும் பொழுது எந்தெந்த உணர்வுகள் பதிவானதோ அந்த அலைகள் அங்கே படரும்… அதை இவர்கள் அறிய வேண்டியது வரும்

ஆனால் இந்தத் தெய்வம் உன்னைத் தண்டிக்கும்…! என்று அந்த மதத்தின் கீழ் அச்சுறுத்தும் உணர்வு வந்துவிட்டால் தன்னை அறியாது செய்த தவறுக்கு இந்தத் தெய்வம் தண்டனை கொடுக்குமா…? என்ற பயம் வந்து விடுகிறது.

ஏனென்றால் நேர்மையாகச் செல்வோருக்குத் தன்னை அறியாமல் ஒரு தவறு செய்து விட்டால் அச்சுறுத்தும் பய உணர்வுகள் வந்துவிடுகிறது அந்த பயத்தால் “தெய்வம் என்னைத் தண்டித்து விடுமோ…!” என்ற அந்த உணர்ச்சிகள் வந்து விடுகின்றது.

ஓர் வீரிய உணர்வு கொண்டவர்கள் “நீ செய்த தவறுக்குத் தெய்வம் உனக்குத் தண்டனை கொடுக்கும்…” என்று அவரின் வலுக் கொண்ட எண்ணங்களைப் பாய்ச்சுகின்றார்கள்.

கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் இது பதிவாகி விட்டால் இதே உணர்வுகள் அச்சுறுத்தும் உணர்வுகளாகப் பாய்ந்து
1.எந்தத் தெய்வத்தை… எந்த மதத்தின் கீழ்… எதை அடிப்படையாக வளர்த்து வந்தனரோ அவர்கள் ஏற்றிய உணர்வு வந்த பின்
2.அதே உருவத்தின் நிலைகள் இந்த மனித உடலில் வளர்த்துக் கொண்ட சிலையை பார்த்த உணர்வலைகள் இங்கே உருவமாக்கப்பட்டு
3.அருவ நிலைகள் சென்றபின் அதே உணர்வு இங்கே பதிவான நிலை அதே ரூபத்தைக் காட்டும்.
4.ஆனால் “மனிதனுடைய ரூபத்தைக் காட்டாது…” எடுத்துக் கொண்ட உணர்வின் ஒளி அலைகளை அங்கே காட்டும்.

நாம் எண்ணி எடுப்பது தான் தெய்வமாகக் காட்டுகின்றது என்று இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நெஞ்சுப் பகுதியில் “பட படக்கும் துடிப்பலைகள்”

 

கோப குணத்தின் உந்துதலால் நாம் ஈர்த்துக் கொண்டிருக்கும் சுவாசமே கனம் கொண்டதாக மாறுகின்றது. கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இரு பாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி…! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்… அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி… இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம் உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில் உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது…எது எப்பொழுது செயல்படுகிறது…? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி… மோகம்.. தாகம்…” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.
1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்… சுவாசமும்… செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்…!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்… மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்… ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி…
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்…!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே…
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்…!

எம்மிடம் துன்பத்தைச் சொல்லி எதையும் கேட்காதீர்கள்… நல்லதைச் சொல்லி அதைக் கேட்டு வாங்குங்கள்

 

தெரிந்தோ தெரியாமலோ நம் உடலுக்குள் அசுர அணுக்கள் புகுந்து விட்டால் தன் அருகிலே இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கிவிடும்.

நல்ல உடலை உருவாக்கிய அந்த அணுக்கள் மடிந்துவிட்டால் உடலுக்கு இயக்கச் சக்தியாக மற்றும்… “திரவகப் பொருள்கள்” கிடைக்காது போய்விடும்.

1.நரம்புகளுக்குள் ஒரு விதமான ஆசிட் (அமிலம்) உண்டு
2.அந்தத் திரவகம் நமக்குள் இல்லை என்றால் கைகளை மடக்குவதோ மீண்டும் நேராக்குவதோ கடினமாகிவிடும்.
3.மூட்டுகளிலும் இந்தத் திரவங்கள் ஓடப்பபட்டு அது தான் மடக்குவதற்கும் மற்றதுக்கும் இயக்குகிறது.

நாம் பார்க்கின்றோம் விஞ்ஞான அறிவு கொண்டு இயந்திரங்களுக்கு ஒரு திரவப் பொருட்களை (OIL – LUBRICANTS) அதற்குள் கலக்கின்றார்கள் அப்பொழுது அந்த இயந்திரங்கள் தேய்வில்லாதபடி சில காலம் ஓடுகின்றது.

இன்ஜின்களிலும் இதே போன்று திரவங்களைக் கலக்கின்றனர்… அதற்குள் இருக்கும் பேரிங்… பிஸ்டன்… தேய்வில்லாதபடி ஓடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் உயர்ந்த அணுக்களால் உருவாக்கப்பட்டது அந்த அணுக்களின் மலம் திரவமாக மாற்றப்பட்டு நம் உடல் உறுப்புகளில் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகிறது.

உதாரணமாக நுரையீரல் என்று வைத்துக் கொள்வோம். நுரையீரலுக்குள் நுண்ணிய அலைகளாக இயக்கச் செய்யும்
1.அந்த நரம்புகளுக்கும் வாயு நரம்புகளுக்கும்… திரவம் அதற்குள் சென்ற பின் விரிவடைகின்றது.
2.மீண்டும் சுருங்கச் செய்வதற்கு அதில் உள்ள திரவ அணுக்கள் சுருங்கி இழுக்கும்
3.அந்தக் காற்று புகும் பொழுது மீண்டும் விரிவாகும்.

எப்படி ஒரு காற்றினை அழுத்தி இழுக்கப்படும் பொழுது விரிவாகிறதோ… அந்த அழுத்தத்தைக் குறைக்கப்படும் பொழுது எப்படிக் குறைகின்றதோ… இதைப் போன்று தான் நம் சுவாசப்பைகளை நரம்பில் உள்ள திரவம் இயக்குகின்றது.

நுரையீரலை இயக்கச் செய்யும்…
1.அதாவது அனைத்து உறுப்புகளையும் ஒருக்கிணைந்து இயக்கச் செய்யும் ஈரல் மையங்களில் ஆசிட் பவர் குறைந்து விட்டால்
2.அதை இழுத்து விரிவடையச் செய்யும் காற்று நிலைகள் விரிவடைந்து விட்டால் அதிகமாக விரிவடைந்து விடும்.
3.அதே சமயத்தில் அதைச் சுருங்கச் செய்யும் சக்தியும் குறைந்து விடுகின்றது.

அப்படிக் குறைவடையப்படும் போது நம் நினைவாற்றலையும்… இந்தத் திரவகம் சிறு மூளை பாகம் சென்று ஒன்றுடன் ஒன்று இணைந்து இயக்கப்படும் பொழுது அங்கேயும் அதனுடைய அழுத்தக் குறைவுகள் ஆகி விட்டால் அந்த உறுப்புகளை இயங்காது தடைப்படுத்தி விடுகின்றது… மிகவும் நுண்ணிய நிலைகளில் இப்படி ஆகிவிடுகின்றது.
1.இத்தகைய நிலைகள் நமக்குள் ஏற்பட்டு விட்டால்
2.தீய அணுக்கள் உடலுக்குள் புகாது தடைப்படுத்தும் சக்தி இழக்கப்படுகிறது.

இவ்வாறு துரித நிலைகள் கொண்டு இந்த விஷத்தன்மை ஊடுருவி விட்டால் விஷ அணுக்களாக உடலுக்குள் உருவாகி அது வளர்ச்சியாகத் தொடங்குகிறது.

அதனால் பொழுது
1.நல்லதைப் பெற முடியாதபடி
2.நல்லதை எண்ண முடியாதபடி
3.நல்லதைக் கேட்க முடியாது ஒரு தடையாகிவிடும்.

என்னிடம் வந்தீர்கள் என்றால் சாமி…! என்னுடைய நோய் குறையவே மாட்டேன் என்கிறது… கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது… குடும்பத்தில் சும்மா சண்டை வந்து கொண்டே இருக்கிறது…! என்றே சொல்வீர்கள்.

“நல்லதைச் சொல்லிக் கேளுங்கள்” என்று நான் சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள். எங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றது… அதை எப்படி நாங்கள் சொல்லாமல் இருப்பது…! என்று தான் சொல்வீர்கள்.

ஏனென்றால் எந்த உணர்வு இழுக்கின்றதோ அது தான் இங்கே வரும்.
1.கஷ்டம் என்ற உணர்வு அந்த நினைவாற்றல் வந்து விட்டால்
2.உங்கள் ஆன்மாவின் முன்னணியில் அது தான் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள். அது உங்கள் உடலுக்குள் நன்மை பயக்கும் சக்தியாக வரும். அதனால் நீங்கள் நலம் பெறுவீர்கள்… உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி வரும்… தொழில்கள் வளம் பெறும்…! என்று நான் சொன்னாலும்…
1.“இதை உங்கள் உணர்வு ஏற்க மறுக்கும்…”
2.நான் சொல்வது அனைத்துமே விரயம் ஆகிவிடும்

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்; என் குடும்பம் நலம் பெற வேண்டும்; எங்கள் உடல்கள் நலம் பெற வேண்டும்; குழந்தைகள் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்; குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்; வியாபாரம் பெருக வேண்டும்; வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்; அவர்கள் நலம் பெற வேண்டும்…! என்று இதை ஏங்கிப் பெற்றால் அந்த நல்ல அணுக்கள் உங்களில் வளரும்.

1.நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் குடும்பம் நலமும் வளமும் பெறும் என்று
3.இதைத்தான் உங்களுக்குள் ஊழ்வினை என்று வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
3.அதை நினைவாக்கி வளர்ப்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

ஆகவே நான் கொடுக்கும் நல்லதை மறந்துவிட்டுத் துன்பத்தைச் சொல்லி அத்தகைய பதிவை நீங்கள் வளர்ப்பது உங்களுக்கு நல்லதல்ல…!

அதை மாற்றிக் கொள்ளுங்கள்…!

வாய்ச் சொல் வரும் விதம்

 

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் இடும்பன் காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்ம சக்தியைக் கேடாக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்ற விதம் அறிந்துணர வேண்டிய ஒன்று.

தீமைகள் தாக்கும் நிலையில் உயிரான்ம மூலக்கலப்பு (உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும்) இணையாத் தன்மை கொண்டு பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாச் செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு – உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவைத் அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.அதாவது சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்,.. மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்ம சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.
2.பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கண்ணுக்குத் (நிழல் படமாக) தெரியும் “உணர்வுகளின்” இயக்கங்கள்

 

விஞ்ஞான அறிவால் காந்தப்புலனறிவில் இணைத்து ஆண்டனா என்ற சாதனத்தில் பதிவு செய்து திருப்பி வைத்து அந்தந்த ஸ்டேஷன் அலைவரிசையில் வைத்தால் ஒலி/ஒளி அலைகளைக் கவர்ந்து வீட்டிலிருக்கும் டி.வி.பெட்டியில் நாம் தெளிவாகக் காண முடிகின்றது.

விஞ்ஞான அறிவால் “ஆண்டனாக்களைச் சக்தி வாய்ந்ததாக வைக்கப்படும் பொழுது…” இன்று உலகின் எந்தப் பாகத்தில் இருந்து ஒளிபரப்பு செய்தாலும் விளையாட்டு அரங்கில் விளையாண்டு கொண்டிருந்தாலும்
1.அங்கு நடக்கும் நிகழ்ச்சியை ஒளிப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்
2.இங்கே நாம் வீட்டில் இருந்து கண்ணுற்றுப் பார்க்கும் நிலைகளுக்கு அலைகளைக் குவித்து டி.வி.யில் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று தான் விண்ணிலே எட்டா தூரத்தில் இருக்கும் அருள் மகரிஷிகளின் சக்திகளையும் நாம் பெற முடியும்.

சாதாரண மனிதன் அவன் வெளிப்படுத்தக்கூடிய வெறுப்போ கோபமோ பாபமோ தாபமோ அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால்… அவர்களை எண்ணும் பொழுது அந்த உணர்வலைகளை எளிதில் காண முடிகின்றது.

ஒருவன் “நமக்குத் தீங்கு செய்தான்…” என்ற எண்ணத்தைப் பதிவு செய்து கொண்ட பின் அவனை நாம் நினைவுக்குக் கொண்டு வரப்படும் பொழுது… நம்மை அறியாமலே வேதனை என்ற உணர்வுகள் உந்துகின்றது.

அந்த உடலின் உருவம் நிழல் படமாக நமக்குள் தெரிகின்றது. அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது கொதித்தெழும் உணர்வாக இருந்தால்
1.உயிரிலே இயக்கப்பட்டு நாம் அதை உணர முடிகின்றது.
2.அவர் உருவைப் பார்க்க முடியவில்லை… என்றாலும் “உணர்வின் நிழல் படமாக” நாம் பார்க்கின்றோம்.

இதைப் போன்று தான்
1.இருளைப் போக்கிடும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.நாம் எண்ணும் பொழுது உடனடியாக அந்த இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக நாம் தெளிவாக எடுக்க முடியும்.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களும் அதனதன் நினைவைக் கொண்டு வரப்படும் போது நமது தான் தான் ஆண்டெனாவாக இருந்து அதை எடுத்துக் கொடுக்கின்றது.

அதே சமயம் நமக்குள் சக்தி வாய்ந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டால்
1.அந்த நினைவினை மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வரப்படும் போது
2.அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி எண்ணி
3.அந்த மகரிஷிகளின் ஆற்றலை உடலுக்குள் செலுத்தினால் அவர்கள் தீமைகளை அகற்றியது போன்று நமக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கே கூட்டமைப்பின் நிலைகளை யாம் (ஞானகுரு) கொண்டு வருவது.

ஒரு மனிதனுக்குக் கேன்சரோ ஆஸ்த்மாவோ ஹார்ட் அட்டாக்கோ (இதய அடைப்பு) இருக்கிறது என்று… இது போன்ற வழக்கில் நாம் கேட்டறிந்தது.. அதிலே எதனின் உணர்வின் பெருக்கம் அதிகமாகின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகும் பொழுது… அந்த நோயின் வன்மை கூடி மனிதனை வீழ்த்துகின்றது.

வீழ்த்திய பின் எதனின் தன்மை அதிபதியாக ஆனதோ அந்த நோய்க்கு உண்டான உணர்வையே மற்ற உடலுக்குள் விளைய வைக்கச் செய்கிறது.

இதைப் போன்று தான்
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இப்பொழுது உங்களுக்குள் நான் பதிவு செய்யப்படும் பொழுது
2.அதை நீங்கள் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொண்டால்
3.உங்கள் உடலுக்குள் ஊடுருவி இருக்கும் எத்தகைய தீமைகளையும் அகற்றிடும் சக்தியாக அது வரும்.

அருள் செல்வம் என்பது எதுவப்பா…? இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா…?

 

ஐந்து திருமுறைகள் பக்தியின் பரவசமாகக் கொண்ட நிலையை மாற்றி
1.ஆறாம் திருமுறையில் மெய்யொலியாக உண்மை ஞானமாக
2.ஆத்ம தரிசனம்… என்றும் ஜோதி தரிசனம்… என்றும் காட்டினார் இராமலிங்க அடிகள்.

மனிதன் தன் ஆத்ம அறிவைக் கூட்டிக் கொள்ள “மதி ஒளி” என்னும் சிந்திக்கும் திறன் ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்த்தும் என்பதில் “அறிவை அறிவால் அறிவர்…!” என்ற சூட்சமமாக “இராமலிங்கச் சித்தன்” வெளிப் போந்த மெய் அந்த ஞானத்தை மனித சமுதாயம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டது…?

பக்தி கொண்டு பஜனை பாடவும்.. பரவசமாக அந்தச் சித்தன் உரையைப் பேச்சுக்கலை ஆற்றவும்… திருவிழாக்கள் என்ற பேரில் வாண வேடிக்கை வினோதங்கள் கவனத்தை ஈர்க்கவும்.. செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சித்தன் ஸ்தூல சரீரம் கொண்டு உலவிய கால கட்டங்களில் மனிதனின் போக்கு ஆராவாரம் கொள்ளும் செயல்களை விடுத்து மெய் ஞானம் கொண்டு உயர்ந்திடவே மெய்ப் பொருளைக் கொள்ளப்பா… கொள்…! என்று “ஏக்கமுடன் கூவியே அழைத்தான்…!”

ஆறாவது திருமறையை உணர்த்த வந்த செயலை ஒதுக்கித் தள்ளிய சமுதாய நிலையைக் கண்ட பின்…
1.கண்ட பின் “கடை விரித்தேன் கொள்வாரில்லை…!” என்றுரைத்து
2.“மீண்டும் பிறப்பில் வருவேன்… இந்த உலகின்கண் மற்றொரு பாகத்தில்…!” என்ற அந்தச் சித்தனின் சொல் வாய்மை
3.பிறப்பின் தொடரில் “நடைமுறைக்கு வந்துவிட்ட சூட்சமத்தைத்தான்…” இன்றைய மனிதன் அறிந்து கொண்டானா…?

போற்றி…போற்றி…! என்று போற்றிடவே துடிக்கின்ற மனிதனின் செயலில் மெய் ஞான விழிப்படையத் தடுக்கின்ற நிலையின் காரணமே தான் கொண்ட அதி ஆசை நிலை தானப்பா.

1.“பூசத்தில் ஜோதி கண்டேன்… பிறவிப்பயன் பெற்று விட்டேன்…!” என்று
2.தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ்ந்திடும் வழிக்கன்றோ செல்கிறான் மனிதன்.

கண்டவன் விண்டிடுவானா…? பெற்றதின் பயனை…!

ஏதோ மனதிற்கு ஒரு நிறைவு ஹன நேரத்திற்கு என்று உரைப்பவனே மீண்டும் உலகோதயத்தில் அகப்பட்டே தத்தளிக்கின்றான்.
1.அருள் செல்வம் என்பது எதுவப்பா…?
2.இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா…?

ஒரு புறம் சூரியன் மறு புறம் சந்திரன் காணுகின்ற கால கட்டத்தில் நடுவிலே ஜோதி காட்டியதே உயிராத்ம தரிசனம்…! “நான்” என்பதன் கருப்பொருளை உணர்த்தவே… உணர்ந்து கொள்ளவே காட்டப்பட்டது அந்தத் ஜோதித் தத்துவம்.

சூரியன்… சந்திரன்… ஜோதி விளக்கு… அனைத்தும் இருளகற்றும் ஒளிகள். இருளகற்றும் ஒளியை மனிதன் தன் ஐம்புலன்களில் ஒளி கொண்டு கண்டு உணர்வதுவே “கண் ஒளி கொண்டு தான்…!”

கண்ணொளி கொண்டு ஜோதி தரிசனம் காண்கின்றவன் – தான் காண்பது ஜோதியே என்று அறிந்து கொள்ளும் ஒளி… “அறிவின் ஒளியப்பா…!

1.அறிவின் ஒளி கொண்டு காண்கின்ற ஜோதியை
2.நான் ஜோதி தரிசனம் கண்டேன் என்று உரைத்ததில்
3.ஜோதி தரிசனத்தைக் கண்டு கொண்ட “நான்” என்பதே உயிராத்மாவாகிய ஜோதியப்பா…!

“நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…!” என்று கூறாமல் கூறிச் சொல்வித்த இராமலிங்க சித்தனாரின் உண்மை நிதர்சனம் என்றுமே மாறாத சத்தியத்தின் சக்தியப்பா…!

இன்றைய விஞ்ஞான உலகம் ஆத்ம சிந்தனையின் சக்தியை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட கலியின் கடைசிக் காலத்தில் “இராமலிங்க வள்ளல் சித்தன்” கொண்ட ஆத்மாவின் வலுவே
1.உலகின் ஒரு கண்டத்தில் செயல் கொண்டிருக்கும் உண்மையின் பொருள் கண்டு கொண்ட பின்பாவது
2.மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளும் செயலுக்கு ஊக்கமளித்திடச் செயல் கொள்ளட்டும்.
3.அழிவின் பாதையில் மனித சமுதாயத்தையே அழைத்துச் சென்று கொண்டிருக்கும் விஞ்ஞானமும்
4.ஆத்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும்… என் ஆசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

எந்தக் காரியம் செய்யும் முன்னும் பின்னும் “கட்டாயம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்”

 

ஒரு காரியமாக நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் என்று சொன்னால் அப்பொழுது அங்கே எத்தனையோ தவறு செய்வோரைப் பார்க்க நேர்கின்றது.

ஒருவன் நடந்து சென்றால்… நம்மை அறியாது “அவன் நடப்பதைப் பார் என்போம்…!”

அடுத்து ஒரு பஸ்ஸில் ஏறிப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் குறுக்கே வருவான். “அறிவுகெட்டதனமாக வருகின்றான் பார்…!” என்போம்.

இப்படி எல்லாம் நினைக்கின்றோமா இல்லையா…! நம்மை அறியாமல் இந்த உணர்வுகள் இயக்குகிறது. நுகர்ந்த பின் இந்த உணர்வு வருகிறது.

ஒருவர் நம்மை வரச் சொன்னார் என்ற நிலையில் அந்தக் காரியத்திற்காகச் செல்லும் பொழுது இத்தகைய உணர்வுகளுடன் நாம் சென்றால் எப்படி இருக்கும்…?

1.முதலில் அங்கே அவன் எப்படி அவசரமாகக் குறுக்கே வந்தானோ
2.அதே போல் நாமும் அதே வேகத்துடன் (நாமும் நம்மைச் சந்திக்க வேண்டியவரை எண்ணி) அடுத்தவரைத் தள்ளிக் கொண்டு போவோம்.

ஏனய்யா அறிவு கெட்டதனமாக இப்படித் தள்ளுகிறாய்…? என்று அப்படியே அது திரும்ப வரும்.

இங்கே எம்மிடம் (ஞானகுரு) உபதேசம் கேட்பவர்களும் கடைசியில் பிரசாதம் வாங்கும் போது பார்க்கலாம். “பொறுத்திருந்து வாங்குவோம்…” என்ற எண்ணம் இல்லை.

மூன்று மணி நேரம் உபதேசம் கேட்டிருப்பார்கள். ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்து பிரசாத்தை வாங்குவோம் என்றால் இல்லை. அடுத்தவரைத் தள்ளி விட்டு முன்னாடி வருவார்கள். இந்த உணர்வு எதைச் செய்கிறது…?

நாம் என்ன சொன்னாலும் அப்படியே அடுத்தவரை முந்திக் கொண்டு வருவார்கள். இல்லை என்றால் நைசாக இடையில் அப்படியே புகுந்து கொள்வார்கள்.

ஆனால் ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்தால் நாமும் ஒழுக்க நிலை பெறுகின்றோம். மற்றவர்கள் நல்ல மனதையும் கெடுப்பதில்லை… நமக்கும் நல்லதாகிறது.

ஆகவே… எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் அங்கே போனவுடனே முதலில் நாம் ஆத்ம செய்து கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்…
1.நாங்கள் பார்க்கப் போகும் அந்த அதிகாரிக்கு நல்ல மனது வர வேண்டும்…
2.எனக்கு உதவி செய்யும் பண்புகள் வர வேண்டும்.. என்று
3.அங்கே உட்கார்ந்து சிறிது நேரம் அமைதிப்படுத்தி விட்டுப் பின்பு செல்ல வேண்டும்.

நாம் பஸ்ஸில் போகும் பொழுது ஏதாவது அசம்பாவிதத்தைப் பார்க்க நேர்தால் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்ப்டிப்பட்ட நல்ல உணர்வுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இப்படி எடுத்தால் அந்த அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
2.அறிவு கெட்டதனமாகச் செயல்படுகின்றார்கள் என்ற வேக உணர்வு வருவதில்லை.

ஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணி எடுக்கின்றோமோ அந்த உணர்ச்சி தான் நம்மை இயக்குகிறது… நம்மை ஆள்கிறது.

அதாவது எலெக்ட்ரிக்… எலெக்ட்ரானிக்…! நாம் எண்ணிய உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் இயக்குகிறது. ஆக அந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது… எண்ணம் சொல் செயலாக மாறுகின்றது.
1.உயிர் எலெக்ட்ரிகாக இருக்கின்றது
2.சுவாசித்ததை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு வருகின்றோமோ உயிரிலே பட்டால் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. உயிரில் உள்ள காந்தம் தான் (எலெக்ட்ரிக் என்ற உணர்வுகள்) கவர்கிறது. இதை எல்லாம் கம்ப்யூட்டர் நிரூபிக்கின்றது.

ரோட்டிலே சென்றால் அதற்கென்று இயந்திரத்தை (SCANNER) வைத்து எலெக்ட்ரானிக் என்ற முறை கொண்டு நாம் கொண்டு செல்லும் பையிற்குள் (BAG) எதைப் போட்டு வைத்திருந்தாலும் சரி… அதற்குள் தங்கமோ மற்ற வேறு உலோகங்களோ இருந்தால் படத்தில் அதை எல்லாம் காட்டுகின்றது.

பைகள் மூடியிருந்தாலும் எலெக்ட்ரானிக் என்ற முறைப்படி பார்க்கும் பொழுது பைக்குள் இருப்பது ஒவ்வொன்றையும் காட்டுகின்றது. விமான நிலையங்களில் எல்லாம் இதைக் காணலாம். இப்படி எல்லாம் விஞ்ஞான அறிவால் கண்டுள்ளார்கள்.

இதே மாதிரித்தான் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது மற்றவர்கள் செய்யும் தவறுகளைக் காட்டுகின்றது. தவறு செய்கின்றான் என்ற அந்த உணர்வின் மணம் வரும் பொழுது என்ன நடக்கின்றது..?

இங்கே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று பொருள்களைக் காணும் பொழுது எப்படிச் செய்கிறார்களோ…
1.தவறான பொருள் அதிலே இருந்தால் திருடன் என்று கண்டுபிடிக்கின்றார்கள் அல்லவா…!
2.அது போல் நாம் பார்ப்போரின் செயல்களை உற்றுப் பார்க்கும் பொழுது “திருடன்…” என்ற உணர்வு வருகிறது
3.இந்த உணர்வின் தன்மை மாறும் பொழுது அங்கே நமக்குள் பிரித்துக் காட்டுகிறது.

பூமிக்குள் ஒரு வெடிகுண்டையே புதைத்து வைத்திருந்தார்கள் என்றால் வெகு தூரத்தில் இருந்து இந்த உணர்வின் தன்மை மோப்பத்தால் கண்டறிகின்றார்கள். அந்த ஒலிகளை எழுப்பிக் காட்டுகின்றது (எலெக்ட்ரானிக் கருவிகள் பீப்.. பீப்… என்று சப்தமிடும்).

இன்ன இடத்தில் தான் இருக்கிறது என்று அது தெளிவாகக் காட்டுகிறது. ஏனென்றால் அந்தப் பொருளின் மீது இதனின் அலைகள் மோதியவுடன் எக்கோ (ECHO) வருகிறது.

இதைக் கண்டவுடன் அதற்குண்டான பாதுகாப்பான நிலைகள் கொண்டு அது வெடிக்காமல் செய்வதற்குண்டான எத்தனையோ வேலைகளைச் செய்து மணல் மூடைகளை அடுக்கி அந்த வெடிகுண்டை வெடிக்க விடாது செய்து செயலிழக்கச் செய்கிறார்கள்.

இப்படி எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது அது நமக்குள் வராதபடி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அது நமக்குள் அணுவாக உருவாகதபடி
3.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

“சக்கர வியூகம்”

 

“இரத கஜ துரித பதாதி…” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ… அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்… அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்திட தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்…”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்… மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்…! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி…!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே…!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்…” என்பதன் பொருள் என்ன…?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழிமுறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு…!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன்னிஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி… பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்… அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து… உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்… தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு… முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரமத்திற்கு… அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி…
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்…” என்றால் என்ன செய்ய வேண்டும்…?
உணர்தல்…
சுவைத்தல்…
நுகர்தல்…
செவிமடுத்துக் கேட்டல்…
விழியின் செயல் திறன்…
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை… எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் வேதனைப்படுவார்.. ஒருவர் சங்கடப்படுவார்… ஒருவர் நோயுடன் அவதிப்படுவார்… ஒருவர் கோபக்காரராக இருப்பார்…! இவர்களின் உணர்வை எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்க்க நேர்ந்து அதை நுகர்ந்தறிந்தால் இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

சீதா என்றால்… சத்து சுவை என்றும்.. ராமா என்றால் எண்ணங்கள் என்றும்… சீதாராமா என்றால்.. மனிதனுக்குள் நுகர்ந்தால் (சுவாச நிலை) சுவைக்கொப்ப எண்ணங்கள் வருகின்றது என்றும்… நமக்குள் பலவிதமான நிலைகளை (மேலே சொன்னதை) நுகர்ந்தால் அந்த உணர்வின் எண்ணங்கள் “பல ராமனாக (பலராமன்) இயக்குகின்றது…” என்றும் சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.

பலராமனாக வருவதற்குக் காரணம்… நம் கண் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது. கண்களால் கவரப்பட்ட உணர்வை நுகரச் செய்கின்றது. அதன் உணர்வின் எண்ணங்களாக வருகின்றது.

உயிரோ அந்த உணர்வை ஈசனாக இருந்து இயக்குகின்றது. உடலுக்குள் அது பதிவாகின்றது. இவ்வாறு பதிவாக்கிய உணர்வுகளை
1.கண்களால் அந்தந்த உணர்வை அறிய முடிகின்றது
2.நுகர்ந்த பின் அந்தந்த உணர்ச்சி கொண்டு உயிர் நன்மை தீமை என்று அறிவிக்கின்றது.

நன்மை தீமை என்று அறிவதற்குக் கண்ணே கவர்ந்து அந்த உணர்வைப் பதிவாக்கி அந்த உணர்வை நுகரச் செய்கிறது.
1.உயிர் அந்த உணர்ச்சியை ஊட்டி உடல் முழுவதும் அது சக்கரம் போன்று சுழன்று படரச் செய்கின்றது.
2.உடலுக்குள் சென்ற பின் உடல் அதை அரவணைத்துக் கொள்கின்றது.

நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்தாலும் மனிதனான பின் இந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் மறைந்துள்ளது. பல விதமான எண்ணங்கள் நமக்குள் உண்டு,

இந்த உயிர் இங்கே பூமிக்குள் முதலில் வந்த பின் தாவர இனத்தில் விழுந்து உடல் பெற்றாலும் “கண்கள் உருவாவதற்கு முன் எண்ணங்களே இருந்தது…!” அனைத்தையும் (தாவரங்களின் மணங்களை) உணர்ந்து நுகர்ந்து உணர்வுகள் அது எண்ணங்களாக வளர்ந்தது.

ஒரு செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து கொண்டால் அது சீதாலட்சுமியாக மாறுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உயிரணு சூரியன் கவர்ந்த அந்த மணத்தை நுகர்ந்தால் சீதாராமனாக வருகின்றது. உயிரணு நுகர்ந்து உடலாக்கப்படும் பொழுது சிவமாகின்றது.

உயிரோ ஈசனாகின்றது. உயிரின் இயக்கம் விஷ்ணுவாகின்றது. நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு. உயிரின் துடிப்புகள் வெப்பமாக வரப்படும் பொழுது விஷ்ணு என்றும் காட்டுகின்றார்கள்.

நாராயணன் என்றால் சூரியன். தான் எடுத்துக் கொண்ட உணர்வு சீதாலட்சுமியாக மாறினாலும் இந்த உயிரணு நுகர்ந்தபின் சீதாராமனாக அந்த எண்ணங்கள் தோன்றுகிறது. நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான். திரேதா என்றால் உடல்.
1.இதை எல்லாம் ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைத்து
2.நாம் அறியும் தன்மைக்குக் கொண்டு வருகின்றனர் ஞானிகள்.

இப்படி வந்த இந்த உயிர் தான்… நுகர்ந்த பின் இந்த சீதா என்ற அந்தச் சுவை உடலாகும் போது சிவம்..

உடலுக்குள் அந்த உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிப்பதும் நாராயணன் அந்த உடலுக்குள் சீதாரமனாக அந்தச் சுவை எதுவோ அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக அது இயக்குகின்றது என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள்.

கடவுளின் அவதாரத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

இவ்வாறு உருவான அந்த எண்ணங்கள் சீதாராமன் என்று வந்தாலும் அதற்கப்புறம் “கண் இல்லை… என்கிற போது பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு வருகின்றது.

1.பல தீமையான உணர்வுகளை நுகரும் போது அதனால் வேதனைப்படுவதனால்
2.அந்த வேதனையிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்துகின்றது.
3.அதன் அறிவாக மாற்றம் அடைகின்றது… தப்பிக்கும் உணர்வுகள் அங்கே வருகின்றது.

பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்… என்ற உணர்வுகள் பார்த்துத் தெரிந்து உணர வேண்டும் என்ற நிலையில் அதற்குள் அந்த நினைவாற்றல்கள் கூடி அந்த உணர்வின் எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது.

1.அவ்வாறு தோற்றுவித்த உணர்வுகள் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துச் சேர்த்து
2.பல உடல்களில் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் வளர்ச்சி அடைகிறது,
3.அதைத் தான் “துவாரகா…” என்று காட்டுகின்றனர்.

ஒரு சுவையின் சத்தை நுகரப்படும் போது திரேதா யுகத்தில் உணர்வுகள் எண்ணங்களாகிக் கிரேதா உடல் என்று ஆனாலும் அதே சமயத்தில் இங்கே துவாரகா இந்த உடலுக்குள் தான் தன் தேவைக்குகந்ததை (தேவகி) நுகர்ந்த உணர்வுகள் வாசு தேவனாக சுவாசித்த உயிர் அதை உருவாக்குகின்றது.

அதாவது “தேவகி” என்ற உணர்வின் சத்தை
1.தன் தேவைக்கு என்று எண்ணிய அந்த உணர்வுகள் இரண்டும் சேர்ந்து
2.இந்தத் துவாரகா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் இந்த உடலான சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்… கம்சனை வெல்ல..!

கம்சன் என்றால் இருள். இருளை நீக்க அவன் பிறந்தான். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகள் பல சரீரங்களீல் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றித் தோன்றி அந்த எண்ணங்களால் தான் கண்கள் தோன்றியது என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகிறது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக மகாபாரதத்தில் “பலராமன் கண்ணனுக்கு மூத்தவன்…” என்று காட்டுவார்கள்.

பல உணர்வின் எண்ணங்கள் (பல ராமன்) அங்கே தோன்றித் தான் பார்க்க வேண்டும் என்ற கண்கள் தோன்றியது. ஆக…
1.இந்த இயக்கத்தின் நிலைகளை மனிதன் புரிந்து கொள்ளும் நிலைக்கே
2.பல உண்மையின் உணர்வுகளை இயக்கத்தைக் காட்டியிருந்தாலும்
3.காலத்தால் அந்த உண்மைகள் மறைந்து விட்டது.

“நல்ல குணங்களின் வலுவுக்கு வலு சேர்க்கும்” மகரிஷிகளின் அருள் சக்திகள்

 

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு மூலக்கூறைப் பிரிக்கப்பட்டு… அந்த மூலத்தின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்று காணுகின்றார்கள்.

அதைக் கண்டுணர்ந்த பின் “இதனெதன் செயலாக்கங்கள் இப்படித்தான்…” என்று விஞ்ஞானத்தால் பாட நூல்களாகக் கொடுக்கப்பட்டு அதன் வழி தான் எந்த ஒரு இயந்திரமாக இருந்தாலும் இயக்குகின்றார்கள்.

1.அந்த இயந்திரத்திலே பல பல உறுப்புகளை (ACCESSORIES) இணைத்து உருவாக்கினாலும்
2.அந்த இயந்திரத்தின் இயக்க ஓட்டச் சக்திக்கொப்ப “தாங்கும் இயல்பு” அதிலே வர வேண்டும்
3.அப்படித் தாங்கக்கூடிய வலுவைக் கொண்டு வருவதற்காக
3.உலோகக் கலவையினை மாற்றித் தான் அந்த உறுப்புகளை உருவாக்குகின்றனர் (விஞ்ஞான அறிவுப்படி).

அதைப் போல நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணத்தின் தன்மையிலும்… இந்த உடலின் தன்மை தாங்கும் நிலையாக… அதற்குள் இயக்க உணர்வின் வலு பெற வேண்டும்.

இதை ஏன் சொல்கிறேன்…? (ஞானகுரு) என்று நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். காரணம்
1.நமக்குள் பல கோடி எண்ணங்கள் இயக்குகின்றது
2.இது அனைத்தையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பக்குவம் நமக்குள் வருதல் வேண்டும்.

மகரிஷிகள் தனது வாழ்க்கையில் விண்வெளியின் ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெற்றார்கள். அந்த உணர்வின் ஆற்றலை உயிரின் துணை கொண்டு நாம் நுகர்தல் வேண்டும்.

1.நமக்குள் இருக்கும் எந்தெந்த எண்ணங்களுக்கு எவ்வாறு வலுப்பெறச் செய்ய வேண்டுமோ
2.அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
3.கண்ணின் நினைவை விண்ணை நோக்கி ஏகி…
4.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி
5.அந்த உயிர் வழியாக உடலுக்குள் அந்த உணர்வுகளைச் செலுத்தினால்
6.நமக்குள் இருக்கும் குணங்களுக்கு இது நல்ல உரச்சதாக அமைகின்றது.

அப்படி உரமேற்றப்படும் போது தான் “தீமையிலிருந்து விடுபடும் நிலைகளே நமக்குள் உருவாக்குகின்றது” என்பதை நமது குருநாதர் தெளிவாகக் காட்டியுள்ளார்.

ஆகவே இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் எதுவாக இருப்பினும் மெய் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தறிந்து நம் உடலுக்குள்ளே அந்த தீமைகளை அகற்றிடும் உணர்வாகச் சேர்க்க வேண்டும்.

இராக்கெட்டை விஞ்ஞான அறிவுப்படி விண்ணிலே செலுத்திய பின்பு அவர்கள் ஏகும் உணர்வின் தன்மை கொண்டு
1.குறைகளை நீக்கும் உணர்வுகளைப் (TROUBLE SHOOTING) பாட நிலைகளில் கொடுத்து இங்கே எப்படித் தெளிவாக்குகின்றார்களோ அதைப் போன்று
2.மெய் ஞானிகள் அவர்கள் கண்டுணர்ந்த உண்மையினை உணர்த்துவதற்காக
3.ஆலயங்களிலே அதை உருவங்களாக… சிலைகளாக வடிக்கப்பட்டுக் காவியப் படைப்பினை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

ஆலயத்தில் காட்டியுள்ள அந்தத் தெய்வ குணத்தை எண்ணி… அந்த உண்மையை உணர்த்திய அருள் மகரிஷிகளை எண்ணி…
1.அவர்கள் உணர்வினை நமக்குள் பதிவு செய்தால்… வரும் தீமைகளை அகற்றிடும் உணர்வாக
2.”நம் நல்ல குணங்களுக்கு மிகச் சக்தி வாய்ந்ததாக” அது ஆக்கம் கொடுக்கின்றது.

இது சாஸ்திர விதிகளின் மூலம் ஞானிகள் நமக்குக் கொடுத்த பேருண்மைகள். அதைப் புரிந்து நாம் நடக்க வேண்டும்.

வீரியச் சக்தியின் தொடரை “வேகம் கொண்டு” எடுத்துக் கொள்ள வேண்டும் 

 

பரவெளியின் பூதியில் சூரிய மண்டலங்களின் சந்திப்பில் யுகம் என்ற மறைபொருளாக விண்மீன்கள் விண் கோள்கள் அமையப் பெற்று ஓர் ஓட்ட கதியில் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் அந்தக் குடும்பத்தின் சுழல் ஓட்ட கதியில் சுற்றி வரும் சூரியனின் சக்தியில்
1.ஒன்றுடன் ஒன்று பிடர் வழி என்ற உந்தும் வீரிய குண சக்தியைக் கொண்டு
2.சக்தியை ஈர்த்துக் கொண்டும்… சக்தியை அளித்துக் கொண்டும்…
3.ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டு வெளித் தள்ளும் சமைப்பு அமில குணத் தன்மைகளை ஒளி காந்தமாக வீசிக் கொண்டும்
4.தன்னைச் சுற்றி ஓடும் சுழற்சியின் சப்த நாதங்களை வளர்த்துக் கொண்டும்
5.தான் பெறும் சக்தியை ஈர்ப்பு நிலையில் குறைவுபடாத தன்மையாக வளர்த்துக் கொண்டும் உள்ளது.

அவ்வாறு ஓடுகின்ற ஓட்டக் கதியில் எல்லாம் எந்த மண்டலமோ அந்த மண்டலம் தன் சக்தியின் வலுவைக் கொண்டு
1.தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் வரும்
2.தன் வலுவை விடக் குறைந்த சக்தி பெற்ற உருவாகும் கோள்களின் தொடரை
3.தான் ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொள்ளும் ஓர் சூட்சமம் உள்ளது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞான வழியில் முன்னேறி வரும் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சரீரம் உள்ள பொழுதே வீரியச் சக்தியின் தொடரை வேகம் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகம் என்பது என்ன..?

1.எண்ணத்தின் வலு கொண்டு
2.மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சக்தியின் உயிரான்மக் கலப்பின் முலாம் தனக்குள் வலுப் பெற்று விட்டால்
3.ஞானக் கண் திறக்கும் திறப்புச் செயல் வேகம் கொண்டுவிடும்.

அத்தகைய வேகம் கொண்டால் யுகங்கள் தன் சந்திப்பில் ஓர் நட்சத்திரத்தை உருவாக்குவது போல் உருவாக்கும் ஆக்கம் எந்தக் கோளமும் தன் ஈர்ப்பின் வலுச் செயலினால் மூலத்தையே தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும்.
1.சக்தியின் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வீரிய மண்டலமாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் உருக்கோலம் கொள்ள வேண்டும்.

நீங்கள் என்ற சொல் உங்கள் அனைவரின் தொடருக்கு வலுக் கொள்ளும் செயலை… அதாவது “அழுத்தமாகச் சுட்டிக் காட்டும்” அமில குணம் கொண்ட வீரியச் செயலாக… நட்சத்திர அலைகளின் விசேஷ வீரிய குணத் தன்மைகளை அறிந்து கொள்ளும் “உயிரான்மா – ஜீவாத்மா தொடரில்”
1.சரீரத்தின் மூலம் அமைத்துக் கொள்ளும் பக்குவச் செயலாக
2.கரங்களில் வெளிப்படுத்தும் உணர்வு நரம்புகளின் வீரியச் செயல் கொண்டு மண்டலமாக உருவாக்கிடும் உருக்கோலம் கொள்ள
3.”பிடர் வழி” என்றிட்ட மன எண்ணச் செயலில்
4.பரணி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எலும்புகளின் வலுக்கொண்ட சேமிப்பாகக் கூட்டிக் கொண்டு
5.சரீரத்தில் உள்ள உயிரணுக்கள் உயிரின் ஒளி காந்தத்தை நாடி உயிர்ச் சக்தியினை வலுக்கூட்டப்படும் பொழுது
6.சரீரத்தின் கட்டளைக் கேந்திரமான (CONTROL PANEL) சிறுமூளையின் பாகம் திறக்கப்படும் ஞானக் கண் வழியாக
7.எண்ணத்தின் பிடர்வழி உந்தும் குண வீரிய எண்ணமாக ஆக்கப்படும் பொழுது
8.மண்டலத்தின் உருக்கோலத் தன்மைக்கு வித்திடும் வீரிய சக்தியாகப் பரிமளிக்கும்.

ஆக மகரிஷிகள் படைத்த “படைப்பின் படைப்பு” என்பது சூட்சம சரீரம் கொண்டு உயிரான்ம ஒளி காந்த சக்தியுடன் தன் நிகழ்வில் பெறப்படும் சக்திகளுடன் தான் ஒன்றி “ஞானக் கண் திறப்பின்” வழியாகத்தான் தன் வலுவை வீரியமாக்கிக் கொண்டனர்.

பூதியின் வீரிய நட்சத்திரமாகத் தனக்கென்று தன் ஆக்கத்தின் ஆக்கமான படைப்பின் படைப்பான ஒளி காந்த சக்தியைப் பெற்றுச் “சுய வீரிய சக்தி கொண்ட நட்சத்திரமாக உருக்கொண்டார்கள்…!”

உந்து விசை

 

பிறவா நிலை அடைந்து விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால் மனித வாழ்க்கையில் தடைப்படும் உணர்வுகளை நீக்கிவிட்டு நாம் அடைய வேண்டிய எல்லையைச் சீராகச் சென்றடைய முடியும்.

அப்படிச் சீராகச் செல்ல வேண்டும் என்றால் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்தல் வேண்டும்.
1.தவறு எங்கிருந்து வந்ததோ தவறை நீக்கித் தன் வாழ்க்கையைச் சீர்படுத்தவும்
2.தவற்றற நிலையைத் தனக்குள் வளர்க்கவும் முடியும்.

அந்தத் தவறற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான் அது முடியும்.

விஞ்ஞானிகள் செலுத்தும் இராக்கெட் விண்ணை நோக்கி எப்படிச் செல்கின்றதோ அதைப் போன்று அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
1.இந்தப் புவி(யில்) வாழும் வாழ்க்கை நம்மை ஈர்க்காது
2.மெய்யான வாழ்க்கையாக வாழும் சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மைச் செலுத்தும்… இந்த உயிர்…!

மெய் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் சிக்கலைப் பிளந்து… விண் செல்லும் நிலையாக உடல் பெறும் உணர்வுகளைப் பிரித்துவிடும். உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகும்.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி அதனின் எல்லையை அடைந்த பின்… உந்தித் தள்ளிய உணர்வின் சத்தைப் பிரித்து (ROCKET STAGES) விடுகின்றது. அதன் பின் அதனுடைய சுழல் வட்டத்திலே செல்கிறது.

அதைப் போன்று இன்று புவியின் ஈர்ப்பிலே இருக்கும் நாம்
1.விண்ணிலே இருக்கும் மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து அந்த உணர்வின் சத்தாக நமக்குள் வளர்த்துக் கொண்ட பின்
2.அதனின் “உந்து விசைகள்” நமக்குள் அதிகமாகும் பொழுது அதனின் ஆற்றல் நமக்குள் அதிகமாகின்றது.
3.அந்த ஆற்றலின் துணை கொண்டு ஒளி வட்டமான சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வைப் பிரித்து விடுகின்றது
4.உயிருடன் ஒன்றி மகரிஷிகளின் சுழல் வட்டத்திற்குள் சென்று உணர்வின் தன்மை ஒளியாகச் சுடர்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு விண்ணுலக ஆற்றலை அறிய… ஆற்றல்மிக்க சாதனங்களை உருவாக்கி விண்ணிலிருந்து அதைக் கவர்ந்து இங்கே மண்ணுலகில் அனுப்பப்பட்டு… அதனின் சீர் பாதைகளை எந்திரத்தின் துணை கொண்டு காணுகின்றனர்.

இதைப் போன்று உடல் என்ற இயந்திரத்தின் துணை கொண்டு மெய் ஞானிகளின் உணர்வை இணைக்கச் செய்து
1.வரும் தீமைகளைப் பிளக்கும் உணர்வை நாம் உந்து விசையாக ஆக்கி
2.விண்ணுலகம் செல்ல முடியும்… அதற்குத் தான் ஆத்ம சுத்தி…!

ஒவ்வொரு நொடியிலும்… வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நமக்குள் இதை இணைத்திடல் வேண்டும் (ஆத்ம சுத்தி).

ஆகவே… எந்த ஒரு தடையும் இல்லாது அருள் ஞானிகள் உணர்வுகள் நமக்குள் சேரச் சேர… அங்கே சென்றடைந்த பின்
1.இந்த உடலில் பெற்ற உணர்வின் தன்மையை… அதாவது உடல் பெறும் உணர்வுகளைக் கழற்றி எறிந்துவிடும்.
2.அந்த நிலையைப் பெறுவதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியினை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

உடலில் விபூதி (சாம்பல்) பூசுவதன் உண்மை

 

பிடர் வழி என்பதே எண்ணத்தின் உந்தும் குண அமிலச் சக்தியின் வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவ கதிக்கு ஊக்கம் என்ற சொல் நாம முயற்சியை நல்லாக்கத்திற்குப் பயன்படுத்துதலே நல்லது.

ஆனால் குணங்களின் செயல் மாற்றத்தால் ஏற்படும் செயலின் தன்மை சரீர கதியில் எதிர் மோதல் ஏற்படும் நிலையில் வள்ளுவன் சொன்ன வேதப்படி “ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் அதுவல்லது போக்கது இல்லாச் செயல்…” என்ற சொல்லிய உண்மையும் உண்டு.

1.ஆகவே குணங்களில் மாற்றம் கண்டால்
2.பிடருகின்ற வழிகளில் சக்தியும் குறைவுபட்டுப் போகும்…! என்ற உண்மையை உணர்ந்து
3.நல்லாக்கச் சூட்சம கதிக்கே ஞானச் செல்வங்கள் செயல் கொள்ள வேண்டும்.

பால்வெளியில் படர்ந்துள்ள கோடானு கோடி அமில குணச் சக்திகளில் மறைந்துள்ள மறை பொருள் வண்ண குண அமிலமும்… ஒலி நாதத்தின் அமில குணமும்… ஆதிசக்தியின் அமில குண நீர் சக்தியுடன் ஒன்றிச் செயல் கொள்ளும் பொழுது திடமாகின்றது.

“பால்வெளியில் படர்ந்துள்ள பரமாத்மா…” என்ற சூட்சமத்தில் உயிரணுக்கள் செயல் கொள்ளும் செயலின் நிலையால் ஒன்றுடன் ஒன்று குண அமில ஈர்ப்பில் கலந்து பிறிதொன்றை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
1.பிரம்மமாகச் சிருஷ்டியாகின்றது.
2.அதையே பிரம்மத்தின் உள் மறைந்துள்ள “அனித்தியமான சூடு…!” என்று காட்டப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்தச் சரீரம் கொண்டு ஈர்ப்பு நிலை சக்தி பெற்று… “மூல சக்தியில் கலந்துவிடும் செயல்பாட்டின் இரகசியத்தை…!” ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைத் தான் உணர்ந்து கொண்டு தன் வழியில் சக்தியை வலுக்கூட்டி அறிந்து கொள்ள வேண்டும்.

1.சரீர பிம்பத்தில் இரு கரங்களும் இணைக்கப்படும் பொழுது
2.அதன் அமைப்பே ஓர் வட்டச் சுழற்சியின் செயலாக முதலும் முடிவும் அற்ற நிலையில்
3.பால்வெளிப் பூதியில் உருவாக்கும் பிடர் சக்தியின் வழித் தொடரில்
4.பூதியை விபூதி என்ற காட்டிய தத்துவம் – உண்மையை உணர்ந்து கொள்ளத்தானே தவிர
5.அதில் விதிவிலக்கும் ஒன்றுண்டு – சூட்சமப்படுத்தப்பட்ட அந்தச் செயலைத் தவிர
6.சரீரம் முழுக்க வேடமிட்டுக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உண்மையின் பொருளை யார் உணர்ந்தார்கள்…?

(அதாவது ஆவியாக இருப்பது திடமாகிறது… திடமானது மீண்டும் ஆவியாக மாறுகிறது. முதலும் முடிவும் இல்லாது இது நடந்து கொண்டே உள்ளது. பூதி… விபூதி…! திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை அது தான்…!)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் ஆண்பால் பெண் பால் நிலைகள் கொண்டது. அவைகளிலிருந்து வெளி வரும் தூசிகள் ஒன்றுடன் ஒன்று கவரும் போது பெரிதளவாக மோதும் போது… “மின்னலாகப் பாய்கிறது…” அந்த உணர்வின் “ஒளிக்கற்றைகளாக” விரிந்து செல்கிறது.

ஆனால் அதுவே சிறிதளவு மோதலாக வரும் போது நுண்ணிய அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.இதே கதிரியக்கப் பொறியை உருவாக்கும் வியாழன் கோளிலிருந்து வரக்கூடிய இந்த உணர்வைச் சூரியன் கவர்வதும்
2.நட்சத்திரத்தின் கவர்ந்த அலைகள் இதை எதிர்பாராது சந்திக்கும் சந்தர்ப்பம் வரும் போது
3.இந்தக் கதிரியக்கத்தைக் கண்டு ரேவதி நட்சத்திரம் என்ற நிலைகள் அஞ்சி ஓடுவதும்
4.ஆண்பால் என்ற கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியுடன் இது மோதி அந்த உணர்வின் தன்மை சுழலும் போது
5.இந்த வியாழன் கோளின் கதிரியக்கப் பொறியும் சேர்ந்து மூன்றும் இரண்டற இணைந்து விடுகின்றது.

அதனால் இது துடிப்பின் நிலை ஆகி எர்த்..! என்று (அந்த நிலை ஆக்கப்படும்போது) ஈர்க்கும் சக்தி சிறிதளவே வரப்படும் போது தன் அருகிலே மற்ற கோள்கள் வெளிப்படுத்தும் தூசிகளைக் கவர்ந்து அது அடைபட்ட பின் “ஓர் உயிர்” என்ற நிலை வருகின்றது.

இந்த உயிரணு எந்தெந்த உணர்வின் சக்தியை எடுக்கின்றதோ… அதே உயிர் எப்படித் துடிக்கின்றதோ… அதன் உணர்வாகத் தன் உடலாக… உடலில் உருவாக்குகின்றது.

இப்படித்தான் பல பல உடல்கள் மாற்றமானது என்ற நிலையை இந்த உண்மையின் உணர்வை அகஸ்தியன் நுகர்ந்தான். மின்னல் அது எப்படி ஒளிக்கற்றைகளாக மாறுகின்றதோ அதே உணர்வின் தன்மை போல் உயிரும் அதே நட்சத்திரங்களிலிருந்து வந்தது தான்…!

அதே உணர்வைச் சிறுகச் சிறுகச் சேர்த்துத்தான் தாவர இனங்கள் வந்தாலும் அதன் உணர்வின் அடர்த்தியாக வரும்போது… உயிரின் துடிப்பால் இந்த உணர்வின் தன்மைகளை (தாவர இனத்தின் மணங்களை) ஜீவ அணுவாக மாற்றி எதனின் மணத்தைக் கவர்ந்து கொண்டதோ அந்த உணர்வுக்கொப்ப உடலில் அணுக்களாக உருவாகின்றது.

1.இதைத் தான் வேதங்கள் “சாம…” மணம் என்றும் அதனின் இசை என்றும் கூறுகிறது
2.அதாவது உயிர் நுகர்ந்த அந்தந்த உணர்வுக்கொப்ப எண்ணங்களும்
3.அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் அமைப்பும் அதனுடைய குணங்களும்
4.அதனின் செயலாக்கங்களும்…! என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது.

ஏனென்றால் இதற்கு விளக்கம் கூற வேண்டும் என்றால் இரண்டு வருடத்திற்காகவது சொல்ல வேண்டும். ஆனால் உங்களிடத்தில் சுருங்கச் சொல்கிறேன்,

இதனுடைய உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தால்… அகஸ்தியன் கண்ட வழிகளில் நீங்களும் நுகர்ந்தால் இந்த உண்மையின் உணர்வை உணர்ந்து இந்த மனிதனுக்குப் பின் எங்கே… என்ற நிலையில் பிறவி இல்லா நிலை அடையலாம்.

அந்த அகஸ்தியன் தன்னில் உணர்ந்த உணர்வினை ஒளியாக மாற்றினான். அதே உணர்வின் தன்மையை நாம் எடுத்துக் கொண்டால் அந்த ஒளியின் சரீரமாக நாமும் பெற முடியும்.

வானில் வரும் உணர்வின் தன்மையை விஷத்தை ஒளியாக மாற்றி இன்று அகஸ்தியன் தன் வாழ்க்கையில் பெற்றான். இதற்கெல்லாம் எங்கிருந்து உணவு வருகிறது..? என்று கண்டுணர்ந்தான்.

அவன் உற்றுப் பார்த்த நிலைகள்…
1.அந்த மின் கதிர்கள் வலு கொண்ட நிலைகளில் எவ்வளவு தூரம் எட்டுகின்றதோ
2.அதைப் போல் இவனின் நினைவாற்றலும் அங்கே படர்கிறது

ஏனென்றால் மின்னல் என்ற நிலை வந்தாலும் நம் பிரபஞ்சத்தைத் தாண்டிக் கூட இந்த ஒளிக் கற்றைகள் செல்கிறது.

ஒளிக் கற்றைகள் அப்படி ஊடுருவிச் சென்றாலும்… அதே சமயத்தில் அவைகளைக் கவரும் தன்மை கொண்டு நம் பிரபஞ்சத்திற்குள் வருகிறது… பூமிக்குள்ளும் வருகின்றது…! என்பதனை அகஸ்தியன் உணர்ந்தான் இயற்கையின் உண்மையை உணர்ந்தான்.

அவனில் விளைந்த உணர்வுகள் இங்கே பரவியிருப்பதை நான் (ஞானகுரு) நுகரப்படும் போது அதை அறிந்து.. அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகளை நீங்களும் பெற முடியும்…! என்ற உணர்வின் சொல்லாக.. வாக்காக யாம் வெளிப்படுத்துகின்றோம்.

1.இதை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்
2.பதிவாக்கியதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வின் சத்தை நீங்கள் பெற்று
3.உங்கள் உடலில் அறியாது வரும் தீமைகளை வெல்ல முடியும்.
4.உங்கள் உணர்வை எல்லாம் ஒளியாக மாற்ற முடியும்….!

விஷ்ணு பிரம்மா சிவன் – முத்தொழில்

 

ஒரு மிளகாய் வித்தை நிலத்திலே ஊன்றினால் அந்த வித்து… காற்றில் இருக்கும் தன் தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அது மிளகாய்ச் செடியாக வளர்ந்து… அதனின் பருவ நிலை வரும் பொழுது “மிளகாய்களாகக் காய்க்கின்றது…”

இதைப் போன்று தான் ஒரு மனிதன் உணர்ச்சிகளைத் தூண்டும்படியாகக் “கோபமாகப் பேசுகிறான்” என்றால் அவனின்று வெளிப்படும் உணர்வினை நாம் நுகர்ந்தறியப்படும் பொழுது “ஓ…ம் நமச்சிவாய… நம் உடலாக அமைந்து விடுகின்றது…”

அதாவது… உட.லான சிவத்திற்குள் அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டும் அணுவாக விளைகின்றது.

முதலில் மிளகாய்ச் செடியாக இருக்கும் பொழுது காரமில்லாததாக இருக்கின்றது. மிளகாய்ச் செடி வளர்ந்து அந்தக் கார உணர்ச்சிகளைக் குவித்து மிளகாயாக்க் காய்க்கும் பொழுது தான் அதிலே காரங்கள் தெரிகின்றது

அது போல்
1.அந்தக் கோப உணர்வுகள் சிறுகச் சிறுக நமக்குள் பெருகும் பொழுது நமக்கே அது தெரிவதில்லை.
2.ஆனால் அது முதிர்ந்த பின் தான் நமக்குத் தெரிய வருகிறது

எப்படி…?

கோபித்தவர்களைப் பற்றி நாம் கேட்டறிகின்றோம். அந்த மனிதனின் உடலில்
1.அவனுக்கு எந்த வயதில் அந்தக் கார உணர்ச்சிகள் விளைந்ததோ
2.அதே வயதின் தரம் நமக்குள் வரும்பொழுது நமக்குள் மிளகாயாகக் கோபித்துப் பேசும் உணர்வின் தன்மை நமக்குள் விளையத் தொடங்குகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

காரணம்… உற்றுப் பார்த்த உணர்வு உடலில் கார உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக நமது உயிர் உருவாக்கி விடுகின்றது உடலோ அதை ஏற்று அதனை வளர்க்கத் தொடங்கி விடுகிறது.

இதை நமது ஞானிகள் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணமாக
1.விஷ்ணு வரம் கொடுக்கின்றான்
2.விஷ்ணுவின் மகனான பிரம்மா அதைச் சிருஷ்டித்து விடுகின்றான்.
3.சிவனோ சிருஷ்டித்த உணர்வின் அணுக்களைத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றான் என்று பொருள்படும்படியாக
4.நாம் புரிந்து கொள்வதற்கு இவ்வாறு தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

உயிரின் இயக்கம் ஈசன் என்றும்… இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும்… காந்தத்தால் கோபமாகப் பேசுவோமனின் கார உணர்வை நுகரப்படும் பொழுது
1.அதனின் உணர்வுகள் இந்த விஷ்ணுவின் பிள்ளையாக… காரமான சக்தியை வளர்க்கும் அணுவின் சக்தியாக உருப்பெற்று விடுகின்றது.
2.ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான் என்ற நிலையில் கார குணத்தின் வளர்ச்சியை அது உருப் பெரும் சக்தியாக மாற்றுகின்றது.

அவ்வாறு உருவான அந்த அணுவின் சத்து உடலுடன் ஒன்றி அதே கார உணர்ச்சிகளைத் தனக்குள் கவர்ந்து அது வளரத் தொடங்கி விடுகின்றது அதைத்தான் சிவ தத்துவத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நாம் எண்ணியது “சூட்சம நிலைகள்” கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் அந்தக் கார உணர்வுகள் உயிரிலே பட்ட பின் உயிர் நமக்குள் உணர்த்துகின்றது.

கண்கள் அந்த மனிதனைப் படம் எடுக்கிறது அவனுடைய செயலாக்கங்களை நமக்குள் உணர்த்துகின்றது. அவன் செய்யும் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அவன் பேசும் உணர்வினை நமக்குள் அறிவிக்கின்றது.

அறிந்து கொண்டாலும் விஷ்ணுவின் மகனான பிரம்மா அதைச் சிருஷ்டித்து விடுகின்றான். விஷ்ணுவின் மனைவி இலட்சுமி என்றும் கவர்ந்திடும் சக்தி என்றும்… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும்… காட்டியுள்ளார்கள்.

கோபமான குணத்தை நாம் சுவாசித்து விட்டால் அந்த உணர்வின் சத்து சிருஷ்டிக்கப்படும் பொழுது அதனின் சக்தியாக இணைந்து செயல்படுவதை சரஸ்வதி ஞானம் என்று உணர்த்துகிறார்கள்.

அந்த அணுவின் தன்மை நம் உடலுடன் இணைந்து சிவமாக ஆனாலும் அந்தச் சக்தியின் தொடராக அந்த ஞானத்தின் வழியாக அது விளையும்… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

ஆனால்
1.எந்த உயிரிலே பட்டு இது உருவானதோ
2.அது தன் இனத்தை உருவாக்கும் சக்தியாக விஷ்ணுவின் பிள்ளையாக பிரம்மமாக
3.அந்தக் கார உணர்வுகளைத் தன் இனத்தை வளர்க்கும் சக்தியாக உருப் பெறுகின்றது.

சாஸ்திரங்கள் இப்படித்தான் நமக்குத் தெளிவாக கூறுகின்றது.

நீர் சக்தியின் முக்கியத்துவம்

 

எண்ண ஓட்ட கதியையும் நீரோட்டச் சக்தியின் செயலையும் ஒன்றுபடுத்தி அதன் உட்பொருளை வெளிக்காட்டி எண்ணத்தினுள் சிந்திக்கும் கருப்பொருள் தத்துவத்தினால் எண்ணத்தின் வழிச் செயல் நீர் சக்தி பெறும் ஆரம்ப முறை ஞான வழியமைத்தவர் தான் “அகஸ்திய மாமகரிஷி…!”

1.வானத்தில் கன பரிமாணம் கொண்ட நீர் சக்தி… இடி மின்னல் ஒரு புறமும்
2.மறுபுறம் ஆகாயத்தில் சரி பாதி இருக்கும் கோள்களையும் விண்மீன்களையும் காட்டி
3.எண்ண ஓட்ட கதியின் தத்துவத்தை எண்ணி எடுக்க வைத்த அந்த அகஸ்திய மாமகரிஷி தான்
4.நீர் சக்தியை (ஜீவன்) வென்றதாகவும்… பின் அதனுள்ளே தான் ஒன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
5.அகஸ்தியன் ஜீவ சக்தியைப் பெற்றது மிக மிக முக்கியமானது…!

அதாவது சரீரமாகிய திடமும் அந்தத் திடத்திற்குள் உள்ள நீர் சக்தியும் நீரினுள் இருந்த பொழுது நீரோடு நீர் சேர்ந்து ஒருநிலைப்படுத்திட
1.தன் திடச் சரீர நிலை அணுக்கள் அனைத்தையுமே
2.நீரோட்ட நீர் சக்தியின் லேசான தன்மை போல் நீரோட்டச் சக்தியின் கதியையே தன்னுள் அடக்கி
3.நீர் மேல் உலவ… நீர் மேல் அமரும் செயலில்… ஓர் சூட்சமம் கூறப்பட்டது.

எண்ண ஓட்டச் செயல் சக்தியாகும் சூட்சமத்தை… அதனுள் ஏற்படுத்தப்படும் பதிவு… அல்லது ஈர்க்கப்படும் செயல் அனைத்தையும்…
1.ஒருமித்த கருத்தின் விளைச்சல்களாக (மகசூலாக) உருவாக்கிடும் நிலையாக
2.யாம் சொல்லும் தியானத்தின் வழித் தொடர் கொண்டு
3.அந்த எண்ண ஓட்டத்தின் கதியையே நற்கதியாக ஆக்கும்…
4.உயரிய ஞானம் பெறும் முறைகளாக வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

காற்றின் நீரே இளநீராகி… அதனுள் உள்ள விஷ அமில சக்தியே தேங்காய்க்குள் எண்ணையாக இருக்கும்
1.“மறைந்துள்ள அந்தத் தொடர்பை அறிந்து…”
2.அதையும் பயனுற வழிப்படுத்திக் கொள்ளும் செயலே ஞானம் என்பதாகும்..!

ரிஷிக்கு யாராவது தீங்கு செய்தால் உடனே அவர் சாபமிடுகிறார்… பின் சாப விமோசனம் கொடுக்கின்றார் – விளக்கம்

 

நாம் எண்ணியது அனைத்தையும் நம் உயிர் தான் சிருஷ்டிக்கின்றது.
1.நாம் எண்ணியது எதுவோ அதை ஓ… என்று ஜீவனாக்கி…
2.அந்த உணர்வின் சத்தை உடலாக்கி…
3.உடலுக்குள் அந்த எண்ணத்தை மீண்டும் இயக்கச் செய்து
4.இந்த உணர்வினை விளையச் செய்து
5.விளைந்த உணர்வின் சத்தைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.

மனிதனான பின் நல்லவைகளை எண்ணினால் நல்லதே நமக்குள் சேர்ப்பிக்கப்படுகின்றது. ஆனால் நல்லவைகளை எண்ணினாலும் அதற்குள் விஷத் தன்மைகளைச் சேர்க்கப்படும் பொழுது அந்த நல்லவைகளும் கெட்டுவிடுகிறது.

ஆனால் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு… நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றும் திறன் பெற்றது தான் மனித உடலில் உள்ள உணர்வுகள்.

அத்தகைய உணர்வினைப் பெற்றிருந்தாலும்… பிறர் செய்யும் குறைகளோ மற்றதோ இருப்பினும் அந்த நஞ்சினை நீக்கும் உபாயத்தைச் செயல்படுத்தவில்லை என்றால்… முழு நிலவாக (பௌர்ணமி) இருக்கும் சந்திரன் அதற்குப்பின் சிறுக சிறுக எப்படி மறைகின்றதோ… அதைப் போன்று மனித உடலில் இருக்கும் உணர்வின் அறிவுகள் அனைத்தும் மறைந்து… வேதனை என்ற நஞ்சுக்குள் சிக்கி விடுகிறது.

நாம் எவ்வளவு தெளிந்த மனிதனாக இருப்பினும் ஒரு துளி நஞ்சினை உணவுடன் கலந்து உட்கொண்டால் நினைவனைத்தும் மறைந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நமக்குள் சிறுகச் சிறுக நஞ்சு (தீமை செய்யும் குணங்கள்) கலந்துவிட்டால் அடுத்து மனித நினைவில்லாது போய்விடும். மற்ற உயிரின்ங்களின் ஈர்ப்புக்குள் தான் புக நேரும்

எத்தனையோ கோடிச் சரீரங்களை நாம் எடுத்துத் தெளிந்திடும் தெரிந்திடும் தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து விளைந்து விளைந்து…
1.மனிதனாக உருவாக்கிய உயிரைத்தான் “ரிஷி” என்று ஞானிகள் காட்டினார்கள்.
2.காவியங்களில் பார்த்தோம் என்றால் “அந்த ரிஷிக்கு ஒருவன் தீங்கு செய்தான்…” என்று ஒரு நிலையைக் காட்டுவார்கள்.
3.அப்போது அவனை ரிஷி சாபமிட்டார் என்றும்… பின் சாப விமோசனத்தைக் காட்டினார் என்றும் சொல்லியிருப்பார்கள்.

அதனின் உட்பொருள் என்ன…?

மனித உடலுக்குள் இருக்கும் நமக்குக் கெட்டவைகளை நீக்கும் சக்தி இருந்தும்… அதைச் சீராகப் பயன்படுத்தாது விட்டுவிட்டால்… கெட்டதை நீக்கிடும் ஆற்றலைப் பெருகச் செய்த உயிருக்கு நாம் செய்யக்கூடிய நன்றி எதுவாக இருக்கின்றது…?

அதாவது… இந்த உடலின் இச்சை கொண்டு
1.நாம் எடுத்துக் கொண்ட பாசத்தால் வேதனை என்ற நஞ்சினைக் கலந்து
2.ஈசனாக இருந்து ரிஷியாக இருந்து மனித உடலைச் சிருஷ்டித்த உயிருக்கு
3.நாம் செய்யக்கூடிய நன்றி எதுவாக இருக்கின்றது…?
4.அதைத் தான் “ரிஷிக்குத் தீங்கு செய்தான்” என்று காவியத்தில் காட்டுகின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை எடுத்து உயிருக்குள் செலுத்தப்படும் பொழுது உயிர் அதையே ஜீவனாக்கி நல்ல உணர்வுடன் கலந்து விடுகிறது. அப்போது நஞ்சினை நீக்கிடும் இந்த உடலை… நஞ்சினை நீக்கிடும் உணர்வு கொண்டு அதை நீக்கவில்லை என்றால்
1.அதையே உணவாக உட்கொண்டால் அதுவாக நீ ஆகிவிடு… நீ பாம்பாகப் போ…! என்றும்… பேயாகப் போ…!” என்றும்
2.ரிஷி (நம் உயிர்) சாபம் விடுவதாகக் காட்டுகின்றார்கள்… காவியங்களில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது

சாபத்திலிருந்து மீட்டுவதற்கு வழியும் காட்டுகின்றார்கள். எப்படி…?

ஐயனே… அறியாமல் நான் செய்த தவறுக்கு எனக்கு விமோசனம் இல்லையா…! சாபத்திலிருந்து மீண்டிடும் நாள் எது…? எனக்கு அருள் கூர்ந்து நல்ல வாக்கினைக் கொடுங்கள்…! என்று வேண்டிக் கொள்வதாகவும் காட்டியிருப்பார்கள் காவியப் படைப்பிலே…!

நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய். அப்பொழுது அவன் கை படும். நீ மீண்டும் மனிதன் ஆவாய். அதனின் அர்த்தம் என்ன…?

ஒரு நல்லவன் தான் நடந்து போகிற பாதையில் பாம்பைப் பார்க்கிறான். அது தன்னைக் கடித்துவிடும்…! என்று அடிக்கின்றான். “மனிதன் அடித்து விடுவான்…!” என்று அது இவனைப் பார்க்கிறது.

1.பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் இவன் பாம்பு உடலுக்குள் வருவான்.
2.பாம்பை இவன் அடித்தான் என்றால் பாம்பின் உயிர் அவன் உடலுக்குள் போகும்.
3,மனித உடலுக்குள் வரும் பாம்பின் உயிர் மனித உணர்வுகளைக் கவர்ந்து மனிதனாகப் பிறக்கின்றது.

அதே சமயத்தில் நீ பேயாகப் போ…! என்றால் என்ன அர்த்தம்.

என்னை இப்படிச் செய்தானே… அப்படிச் செய்தானே பாவி…! அவன் எல்லாம் பாவி உருப்படுவானா…! என்று நினைப்பார்கள். இந்த உணர்வு வரப்போகும் போது அவன் உடலுக்குள் போகின்றது. அதே உணர்வை வைத்து அங்கே ஆட்டிப் படைக்கிறது.

அப்பொழுது ஐயனே…! இதிலிருந்து தப்பும் வழி எனக்கு ஒன்றுமில்லயா,,,?

நல்லவனுடைய நிழல் உன் மீது படும். நீ உள்ளிருந்து மனிதனாக ஆவாய் என்று ரிஷி சொல்வதாகக் காட்டுவார்கள்.

நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் இதையெல்லாம் உணர்த்தினார்கள் ஆனால் காலத்தால் இது எல்லாம் அறிந்து கொள்ள முடியாதபடி ஆகிவிட்டது ஏதோ கதைகள் அக்காலத்தில் நடந்தது… யாரோ செய்தார்கள்… என்றோ நடந்தது…! என்று இப்படித் தான் எண்ணுகின்றோம்.

நமக்குள் நடக்கும் இந்த உணர்வின் தன்மையை நம் உயிரின் இயக்கங்கள் அது எவ்வாறு…? என்பதை நாம் உணர்தல் வேண்டும். காரணம்… நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தன உயிர் சிருஷ்டித்து விடுகிறது.

1.நல்லதை எண்ணினால் மகிழ்ச்சியின் தன்மை அடைகின்றது
2.அருள் ஞானிகள் உணர்வப் பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் ஒளியின் சரீரமாக நம்மை மாற்றுகின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

“பிரம்ம சூத்திரம்…”

 

“நாபிக் கமலம் என்ற ஜோதி…” தன்னுள் கிளைத்து… எழுந்த மூலப் பொருளாக விளங்கும் தன்மையின் சூட்சமம்… அறிவின் துணை என்னும் சாமரத்தால் வீசப்படும் காற்றும்… காற்று என்று பொருள்பட அறிவை உபயோகிக்கும் பொழுது… சிந்திக்கத் தலைப்படும் பொழுது தான் உயர் ஞானமாக எழும்.

அறிவின் நற்குணம் – சாந்தம் என்ற சாமரத்தால் வீசிப் பெறப்படும் காற்று… வீர குணத்தைக் கொண்டு எழும் ஜோதி…
1.மீண்டும் மீண்டும் இந்தக் குணங்களை எண்ணி வீசும் பொழுது… வீசும் காற்றாகிய எண்ணச் செயலின் செயல்பாடு
2.வீர குணத்தின் விளை நிலமாக ஆக்கும் செயலுக்கு உறுதியாகி
3.படைப்பின் படைப்பாக தைரிய குணத்தால் சாந்த குணத்தால் எண்ணி எழும் செயலுக்கு வித்தாகப் “பிரம்ம ஞானம்” உதிக்கும்.

ஆகவே பிரம்ம சூத்திரமாகவே மாறும் செயல் நிலை என்பது “அடையும் வழி இது தான்…!” என எண்ணித் தெளிந்து… பின் கைக்கொள்ள வேண்டிய செயலாகச் சித்தன் காட்டிய வழியில் எல்லாம் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.மனித எண்ணத்திற்குள் எழும் மதமாகிய வீரியத்தை அடக்க அங்குசமும்
2.எண்ணமே உணர்வாகி அந்த உணர்வுகளின் வழி செல்லும் எண்ணமான செயல் காமத்தின் அடியாக எழும் மோகத்தை
3.அதே எண்ணச் செயல் உயர்வைக் கொண்டு வீழ்த்தும் நிலை கரும்பு வில்லும் கைக் கொண்டு
4.உயிர் ஆன்மப் பிணைப்பையே வலியுறுத்தப் பாசக்கயிறும்
5.தன் நிலை என்றென்றும் மணமாக எண்ணத்தில் நிலை பெறக் கையில் மலரைக் கொண்டு
6.சித்தன் காட்டிய தத்துவ செயலைக் கைக்கொள்ளும் ஞானி தன் சுவாச எண்ண ஓட்ட உயரிய நற்செயலால் அக்கினி ஜோதியாகி
7.நாபிக் கமலத் தாமரை மேல் அமரும் படைப்பின் படைப்பாக அமரலாம் என்பதே “பிரம்ம சூத்திரம்…!”

கர்ப்பமான தாயின் வயிற்றில் உருவாகியிருக்கும் கரு அதாவது அந்தச் சிசு ஆகாரம் எடுக்கும் வழி நாபிக் கொடி ஆகும். அது போல்
1.அமில நிலை ஆகார உயர்வின் சிறப்பாக நாம் எடுக்கும் சுவாசத் தியானத்தால்
2.கரு நிலையின் முதல் நிலையான நம் உயிர் தன்மையையே “ஜோதி ஸ்வரூபமாக்குதல்…” வேண்டும்.

படைப்பின் படைப்பாக இணைக்கும் உயர் தன்மை என்பது…
1.தாய் சக்தியும் அந்தத் தாய் சக்தியின் ஆன்மக் கலப்போ அல்லது
2.இல்லற வாழ்வில் சிவ சக்தி நிலையாக எண்ணத்தால் ஒன்றுபட்டு ஆத்ம ஐக்கிய நிலை பெறும் வழியோ
3.படைப்பின் படைப்பாவது மட்டுமல்லாது அது புரியும் தொழில் தன்மையாகக் “காத்தல்” என்பது
4.தான் முயன்று பெற்ற “உயரிய ஆன்ம சக்தியே” சூட்சமப் பொருள் ஆகும்

அழித்தல் என்பது
1.உயிர்ச் சக்தியின் செயலுக்கு உயர் நிலை எற்படுத்தாமல் மாறுபாடு ஏற்படுத்தப்படும் பொழுது
2.அந்தச் சிவமாகிய சக்தி அழிக்கின்றான்…! என்று பொருள் கண்டு தெளிந்து…
3.ஏனென்றால் அழிக்கப்பட வேண்டியது துர்க்குணங்களே..! என்று அதைச் சம்ஹரிக்கும் நிலையில்
4.உயிர்த் தன்மை ஆதி சக்திக்குள் கலக்கும் பொருளே “மறைத்தல்” என்றும்
5.படைப்பின் படைப்பான உருக்கோலமே… அன்பு நிலைக் குணமாக “அருளல்…” என்பதுவும்
6.இந்தப் பேருண்மையின் சாராம்சங்களை உணர்ந்து அந்த நிலையைப் பெறுதல் வேண்டும்…!

உங்கள் வேதனையைத் தூக்கி எறிந்து விட்டு எமது அருள் வாக்கினை எடுத்துக் கொள்ளுங்கள்

 

மனித வாழ்க்கையில் ஒருவருக்குக் கடுமையான வேதனை என்று வந்து விட்டாலே “வேதனை… வேதனை… வேதனை…” என்று சொன்னால் தான் அடுத்து அவர்களுக்கு அது மகிழ்ச்சியாக இருக்கும்.

என்னை இப்படிச் செய்கின்றார்கள்… அடிக்கடி எனக்குத் தொல்லை செய்கின்றார்கள்… என் உடல் எல்லாம் வலிக்கின்றது… எரிச்சல் ஆகின்றது… வேதனையாக இருக்கின்றது… என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு (அதைச் சொல்லச் சொல்ல) மகிழ்ச்சியாகும்.

உதாரணமாக உடலிலே வலி ஏற்பட்டால்
1.அம்மம்மம்மா…! என்று வேதனையை இணைத்துக் கொடுத்தால் அந்த வலி கொஞ்சம் குறையும்…
2.ஆனால் மகிழ்ச்சியாகப் பேசினால் அதே ஏற்காது மீண்டும் வலி அதிகமாகும்.
3.வேதனைக்குத் தகுந்த உணர்வைக் கூட்டும் பொழுது தான் இந்த உணர்வின் சத்து அதற்குள் ஒடுங்கும்

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் ஒரு தரம் பட்ட வேதனையை அடிக்கடி அந்த வேதனையை ரசித்து “அம்மம்மா… ஐய்யய்யோ…” என்று இதையே சொல்லி வரும் பொழுது… நல்லதை யாராவது சொன்னாலும் அவரால் ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாது போய் விடுகின்றது.

பாலுக்குள் பாதாமைப் போட்டாலும் அதில் நஞ்சு கலந்து விட்டால் அந்தப் பால் முழுவதுமே நஞ்சாகத்தான் மாறும்.

இதைப் போன்று தான் எம்மிடம் (ஞானகுரு) வருபவர்களுக்கு அருள் வாக்குகளைக் கொடுத்து
1.தீமையிலிருந்து விடுபடுவீர்கள் நல்ல நிலை அடைவீர்கள் என்று நான் சொன்னாலும்
2.எங்கெங்கே என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது
2.என் உடல் வலி குறையவே மாட்டேன் என்கிறது… பத்து வருடமாக இருக்கின்றது
3.குடும்பத்தில் தொல்லைகள் போக மாட்டேன் என்கிறது…. விவசாயமே ஒன்றுமில்லை…! என்று இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

பாலில் நஞ்சு பட்ட பின் அதற்குள் பாதாமைப் போட்டாலும் அதையும் நஞ்சாக மாற்றுவது போன்று இந்த உணர்வின் தன்மை நஞ்சாக மாற்றி
1.யாம் சொல்வதை எது என்று கூர்ந்து கவனிக்க முடியாது
2.நல்ல உணர்வுகளை தனக்குள் பதிவு செய்ய முடியாத நிலைகள் ஆகி விடுகின்றது.

அது போன்ற நிலைகளை மீட்டுவதற்குத் தான் கூட்டுத் தியானங்களாக உங்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். அதிலே அனைவருடைய ஒத்துழைப்பு கொண்டு அனைவருடைய எண்ணங்களையும் ஒருங்கிணைத்து
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கச் செய்து அதைப் பெருக்கச் செய்து
2.எல்லோருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் அந்த எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது கூடி இருக்கும் அனைவருக்கும்
1.அந்த (மகரிஷிகளின்) உணர்வின் சத்து செவிப் புலன்களில் தாக்கப்பட்டு
2.அந்த உணர்வின் உந்து விசையால் அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பெரும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

யாம் உபதேசிப்பதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கிக் கொண்டால் அடுத்து நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.

இதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிவமயம்

 

பஞ்ச பூத அமிலத் தத்துவம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் “ஜீவன் என்ற உயிராத்ம சக்தி” மூல சக்தியாக வளர்ச்சி பெற்றுப் “பேரருள்” சக்தியில் கலந்திட வேண்டும்.

பேரருள் சக்தியாக ஆகிட சிவ சக்தி கலப்பாகச் சக்திகளை ஈர்த்துச் செயல் கொண்டிருக்கும் பூமியின் தொடர்பில்
1.ஜீவன் கொண்டே நாம் சகல சக்திகளையும் ஈர்த்து
2.மெய் ஞான சக்தியின் வளர்ப்பாக வளர்ச்சிப்படுத்திக் கொள்ள முடியும்.

சூட்சமமாக ஈர்ப்பின் தொடரில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் பூமியைப் போலவே
1.நாமும் நம் எண்ண வலுக் கொண்ட சுவாச ஈர்ப்பினால்
2.நம் சரீரத்திலேயே அனைத்துச் சக்திகளும் பெற்று
3.மனதின் திறன் என்ற “வைப்பாற்றல்” பெற்றிடலாம்.
(வைப்பாற்றல் என்றால் நாம் எண்ணிய நேரத்தில் எண்ணியபடி செயல்படுத்தும் தன்மை)

உயிரான்ம சக்தியைச் சூழ்ந்திருக்கும் பஞ்ச பூத சரீர சக்தி… ஓர் முகமாகச் சேமித்துக் கொண்டிடும் சக்தியே “மனோ சக்தி…!”

சரீர பிம்பத்தில் ஐந்து இடங்களில் பரவிக் கிடக்கும் அந்தச் சக்திகளை ஆற்றல்மிகு ஓர்மித்த வழி வகைகளின் செயலே நாம் காட்டும் இந்தத் தியானத்தின் மூலமாகச் சித்திக்கும்.

பஞ்ச பூதங்களை – “நமசிவாய” (சிவமயம்) தத்துவமாகக் காட்டப்பட்டதின் செயலையே மாற்று நிலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

1.அந்தச் செயலை நீக்கிவிட்டு
2.பஞ்ச பூத ஆற்றல் சக்தியை வீரத்தில் விளைந்த சாந்தமாக உயிர் சக்திக்குள் கலந்து
3.”ஈஸ்வர ஜோதி” என்ற சுயப்பிரகாச ஜோதியாக நிலையைப் பெற்றிடலாம்.

எண்ணாமலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி

 

நாம் இந்த வாழ்க்கையில் நன்மைகள் எவ்வளவு செய்தாலும் வேதனையைத்தான் அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம். ஆனால் மற்றவருக்கு நன்மை செய்கின்றோம்.

காரணம்…
1.நாம் நன்மை செய்த உணர்வுக்குள் வேதனை என்ற நஞ்சு பட்டு விடுகின்றது
2.அதை நாம் யாராவது துடைக்கின்றோமா…? என்றால் இல்லை.

சுத்தமான கைகளைக் கொண்டு தான் ஒரு பொருளை உருவாக்குகின்றோம் மண்ணைப் பிசைகின்றோம்… சிமென்ட்டைக் கலக்கின்றோம்… அழகான வீட்டைக் கட்டுகின்றோம்.

அழகாக வீட்டைக் கட்டி விட்டோம் என்று அடுத்து கையைக் கழுவாது விட்டு விட்டால்… சாப்பிடும் போது சிமெண்டில் உள்ள கார உணர்வுகள் உடலுக்குள் சென்று விட்டால் அது கொதிகலனாகி குடலுக்குள் புண்ணாக உருவாகிவிடும்.

கையைக் கழுவாது அடுத்த வேலையை இப்படிச் செய்தால் முடியுமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதைப் போன்று தான் ரோட்டிலே நாம் நடந்து செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். காற்றிலே எத்தனையோ தூசிகளும் தீமைகளும் கலந்து பரவி வருகின்றது. சில நச்சுத்தன்மை கொண்ட செடிகளில் விளைந்த “நச்சின் செல்கள்…” அதுவும் தூசுகளாகப் படர்கின்றது.

சூரியனின் காந்த சக்தி அதைக் கவரவில்லை என்றாலும் காற்று மண்டலத்தில் சிக்கப்பட்டு… அது தூசுகளாகப் பரவி வருகின்றது. அதை நுகர்ந்தால் நம் உடலுக்குள் சென்று தீமைகளைத் தான் உருவாக்கும்.

சாதாரணமாக… செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் மணமாக வைத்துக் கொள்கின்றது.
1.அதே செடியில் விளைந்த வித்திற்கு… நிலத்தில் எங்கே அதை ஊன்றினாலும்
2.சூரியனின் காந்த சக்தி… தான் கவர்ந்து வைத்த மணத்தை அதற்கு உணவாகக் கொடுத்து
3.விஷச் செடியாக இருப்பினும் சரி… நல்ல செடியாக இருப்பினும் சரி அவைகளை வளரச் செய்கின்றது…

இதைப் போன்று ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்றால் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது வேதனை உணர்வுகள் இங்கே வித்தாக மாறுகின்றது.

மீண்டும் அந்த மனிதனின் சிந்தனை வருகிறது. அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வருகின்றது. ஆனாலும் அவன் உடலில் விளைந்த வேதனை உணர்வு வித்தாக இங்கே விளைந்து விடுகிறது.

சூரியன் எவ்வாறு காந்த சக்தியால் கவர்ந்து அது மற்ற வித்துக்களுக்கு சத்தைக் கொடுத்து உபகாரம் செய்கின்றதோ இதைப் போன்று பிறிதொரு மனிதன் வேதனைப்பட்டதையும் கவர்ந்து வைத்து… நாம் எண்ணும் போதெல்லாம் அதை எடுத்து உணவாகக் கொடுக்கின்றது.

ஒரு மனிதன் அவன் வேதனைப்பட்டாலும் அவனுக்கு உதவிகளைச் செய்கிறோம். இருந்தாலும் அந்த வேதனையைச் சொல்லக் கேட்டு… உணர்வின் தன்மை பதிவான பின்… மீண்டும் நினைவாகும் பொழுது உடலுக்குள் வித்தாகி விடுகிறது.
1.அந்த உணர்வின் சத்து விளைந்தது மீண்டும் நினைவு வரப்படும் பொழுதெல்லாம்
2.அவன் உடலில் தீமை செய்த விளைவுகளும்… வினைகளும்… நமக்குள்ளே உருவாகி விடுகின்றது.

இப்படித்தான் நமக்குள் சூரியனின் வேலைகள் இருக்கின்றது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆனாலும் நாம் வயலிலே விவாசயம் செய்யப்படும் போது விளையப்படும் பொழுது அவ்வப்போது உருவாகும் “களைகளை அகற்றுகின்றோம்….” நல்ல செடிகளுக்கு நீர் ஊற்றி அதனைப் பக்குவமாக வளர்க்கின்றோம்.

அதைப்போல நமது வாழ்க்கையில் தீமையான உணர்வைக் கேட்டறிந்த பின் வயலில் களைகளை அகற்றுவது போன்று தீமைகள் வளராது உடனே அதைத் தடுத்தல் வேண்டும்.
1.அதைத் தடுப்பதற்குத் தான் மகரிஷிகளின் உணர்வுகளை
2.உங்களுக்குள் உபதேசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்

மகரிஷிகள் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு தனக்குள் வந்த தீமைகளை எப்படி அகற்றினார்களோ… உணர்வுகளை எல்லாம் தூய்மைப்படுத்தி ஒளியின் சரீரமாக எப்படி ஆனார்களோ… அவர்கள் வெளியிட்ட உணர்வின் தத்துவப்படி அதை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து… அந்த உணர்வினைப் பெரும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டால்… அதை நாம் எண்ணும் பொழுது பெற்று… அதனின் துணை கொண்டு தீமைகளை நீக்க முடியும்.

தீமை கொண்டவரை உற்றுப் பார்த்து அந்த உணர்வைப் பதிவு செய்து கொண்ட பின்
1.நாம் எண்ணாமலே அந்த உணர்வுகள் தூண்டப்பட்டு
2.நாம் எண்ணாமலே அந்தந்த எண்ணங்கள் உருவாக்கப்பட்டு
3.நமக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து நோயின் தன்மை எப்படி அடைகின்றதோ அதைப் போல்
4.மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சேர்ப்பித்துக் கொண்டே வந்தால்
5.”நாம் எண்ணாமலேயே” அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து… தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது வரும்.

நம்முடைய ஆறாவது அறிவால் இப்படி உருவாக்குதல் வேண்டும்… உங்களால் முடியும் அதற்குத் தான் அருள் வாக்குகளாகக் கொடுத்து ஆழமாகப் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு).

ஆகவே மகரிஷிகளின் அருள் ஞான வித்துக்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்… வரும் தீமைகளிலிருந்து நிச்சயம் விடுபவீர்கள்.

“குரு” கோளின் சக்தியைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்

 

ஆற்றின் ஆழம் தெரியாமல் கடந்து சென்றுவிட எண்ணுபவன் செயல் போல் இல்லாமல் இலட்சிய நோக்கில் “விழிப்பாக இரு…!”

பால்வெளி மண்டலத்தின் சக்திகளை ஈர்த்து வலுக் கொண்டு பால்வெளிச் சூட்சமத்தின் பூதியை அறிந்து கொள்ளும் முன்
1.மாமகரிஷிகளின் அருளாசி பெறுவது
2.சக்தியின் வலுவை வலுவாக்கிக் கொள்வது
3.புவியின் காந்த நீர் சக்தியை ஈர்த்துச் செயல் கொள்வது என்ற
4.அந்தப் பாடத்தைப் படி… படி… படி… என்று சொன்னதெல்லாம்
5.இந்தப் படி தான்… இந்த வழி தான்… என்று அறிந்து கொள்ளுதலும்…!
6.நீர் சக்தியை வென்று காட்டினேன்… அதனுடன் ஒன்றியும் காட்டினேன்..! என்ற அகத்தியரின் கூற்று தான்.

இதனுடைய சூட்சமம் புரிகிறதா…?

நாம் வாழும் இந்தப் பூமித் தாயின் தொடர்பில் சக்தி பெற்று வலுக் கொண்டு மனிதனாக வளர்ந்த செயலுக்கு அன்று தாயின் பால் அருந்தினாய்.

இன்று சரீர வலுவின் வீரியத்தில் மண்டலங்களின் சுழற்சியினை (விண்ணுலகம்) அறியும் செயலுக்கு… எண்ண வலுவின் நேர் கோட்டில் அறிந்து கொள்ளும் செயலுக்கு
1.பூமித்தாய் புவி காந்த நீர் பாலை அமுதாக்கி அளித்திடக் காத்துக் கொண்டிருக்கின்றாள்.
2.வளர்த்து வலுக் கொண்டு சுயப்பிரகாச தனிச் சக்திச் சுழல் மண்டலமாக ஆக்கிடும் உங்கள் செயலுக்கு நானும் ஊட்டிவிட்டேன்…!

அகத்தியர் கூறிய அந்தச் சூட்சமப் பொருளைக் கூறுகின்றேன்.

1.நம் சூரியக் குடும்பத்தில் சுழன்று ஓடும் கோளங்களில் குரு என்று சிறப்பித்த வியாழன் கோள்
2.ஆதிசக்தியின் நீர் சக்தி அமில முலாமைத் தன் சக்திக்கு வலுக் கொண்ட செயலின் இரகசியம்
3.தன் ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் நெருங்கி வரும் அத்தனை வளரும் சுழல் சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு
4.அந்தச் சக்தியைத் தன்னுள் ஒன்றச் செய்து… தன் வலுவை வலுவாக்கி வீரியம் கொண்டே சுழன்று ஓடிடும் செயலில்
5.அந்த வியாழன் கோள் அலையை ஈர்த்திடும் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அகத்திய மாமகரிஷி அந்தக் கோளின் அலையைத் தன் வீரிய அமில ஈர்ப்பைக் கொண்டு தன் அமில வீரிய முலாமுடன் ஒன்றச் செய்து தன் சக்தியையே வலுக் கொண்டதாக்கிக் கொண்டார்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் என்ற தனித்துவமான மண்டலங்களாகச் செயல் கொண்ட செயலுக்கு ஜெபத்தின் வேகம் என்று சொல்லிய சொல் நாதத்தின் குணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அலை வீசாக்கடல் என்ற பால்வெளி சூட்சமத்தில் இப்படித் தனக்கென ஓர் சுய அமைப்பு மண்டலத்தை உருக்கொள்ளும் செயலின் கதிக்கு ஒவ்வொருவரும் வளர்தல் வேண்டும்.

தன் உயிராத்ம சக்தியின் வலுவிற்கு வலுக் கொண்டிடும் ஜெப நிலையில்
1.ஓர்முகப்படுத்தப்பட்ட எண்ண அம்பு…
2.பிரம்மாண்டமாகப் படைப்பின் படைப்பாக எய்தி
3.பூதியில் உருவாக்கப்படும் தன் ஒளி காந்த வட்டத்திற்குள் “ஒளி தீபம்…” ஏற்றப்பட வேண்டும்.

நோய் நீக்க மருந்தை உட்கொண்டாலும்… “அதற்கு முன்” மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டியது மிக மிக அவசியம்

 

நாம் கோபப்படுவோரையோ அல்லது ஒரு வேதனைப்படுவோரையோ பற்றிக் கேட்டறிந்து அவர்களுக்கு உபகாரங்கள் செய்தாலும்… கேட்டறிந்த உணர்வுகளை நமது உயிர் (நாம் நுகர்ந்ததை) ஓ… என்று இயக்கி ஜீவ அணுவாக மாற்றி உடலுக்குள் இணைத்து விடுகிறது.

அதாவது நாம் பரிவு கொண்ட மனதுடன் பிறர் வேதனைப்படும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்த பின் “வேதனையை உருவாக்கும் அணுவாக” உருப்பெற்று விடுகின்றது.

உதாரணமாக செடிகளில் விழும் புழுவைக் கொல்ல நஞ்சு கொண்ட மருந்தினை அதன் மேல் பாய்ச்சுகின்றோம். புழு இறந்து விடுகின்றது.
1.அது இறந்தாலும்… அதனின் கருவின் தன்மைக்குள் இந்த நஞ்சு இயக்கப்பட்டு
2.அந்த நஞ்சால் இறக்காத உடலாகப் பின்னாடி (அடுத்து) பெறுகின்றது.

அது போல் மனிதன் வேதனைப்படுவதைக் கூர்ந்து கவனித்து அந்த வேதனையான உணர்வின் சத்தை நாம் நுகர்ந்து விட்டால் அது நமக்குள் அணுவாக மறைகின்றது… நோயாகிறது.

விஞ்ஞான அறிவு கொண்டு அந்த நோயை நீக்க அவன் பாய்ச்சும் நிலைகள்… நஞ்சு கலந்த மருந்தாகக் கொடுக்கின்றார்கள். அது நோயினை வலுவிழக்கச் செய்தாலும்… அதனால் விளைந்த அணுவின் தன்மை அந்த நஞ்சே கலந்ததாகவே மாறுகின்றது..

1.நஞ்சான மருந்தைப் பாய்ச்சித் தான் புழுவைக் கொல்கின்றோம்.
2.அது இறந்தாலும் அது இட்ட கரு முட்டையில் இந்த நஞ்சு பரவி நஞ்சின் தன்மையாக எப்படி அடைகின்றதோ
3.நஞ்சு கொண்ட புழுவாக… நஞ்சுக்கும் அஞ்சாது தப்பி அதனுடைய செயலாக்கங்கள் வளர்வது போன்று
4.இன்று வைத்திய ரீதியில் ஆஸ்த்மா கேன்சர் போன்ற கடும் விளைவுகள் கொண்ட நோய்களுக்கு
5.விஞ்ஞான அறிவால் கடும் விஷத்தை நல்ல மருந்துடன் காய்ச்சி அதை இணைத்துத் தான் மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.

மருந்தை நாம் உட்கொள்ளும் போது இந்த விஷத் தன்மை ஊடுருவி அந்த மருந்தினை உடலுக்குள் ஊடுருவிச் செலுத்துகின்றது. மற்ற குணங்கள் கொண்ட உணர்வுடன் இது அதிகமாகக் கலந்த பின் இந்த நோயை உருவாக்கிய அணுக்களைச் சோர்வடையச் செய்கின்றது… அவைகள் மடிகின்றது…! உடலில் வரக்கூடிய வேதனை குறைகின்றது.

ஆனாலும் இந்த உணர்வின் அணுக்கள் உள் சென்று மீண்டும் மீண்டும் இந்த மருந்தின் வேகத் துடிப்பைக் கொண்டு வரும் பொழுது என்ன ஆகிறது.

அப்போது அமைதி கொள்கின்றனர்.
1.பின் அதனுடைய வழிகளில் இதே கலந்த மருந்தினை ஒவ்வொரு டோஸாக (DOSAGE) விஞ்ஞான அறிவுப்படி கூட்டுகின்றனர்.
2.விஷத் தன்மை கொண்டு நோயை அடக்க எண்ணினாலும் கடைசியில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாக முதிர்வடைந்து
3.மீளாத் துயர் கொண்ட நஞ்சாக உடலில் வளர்த்துவிடுகிறது.

அப்போது நஞ்சு கொண்ட உடலாக வெளிவந்த பின்…
1.இறக்கப்படும்போது எவர் மேல் பற்று கொண்டாரோ அந்த உடலுக்குள் சென்று
2.அதே நஞ்சு கலந்த உணர்வினைப் பாய்ச்சி நோயினை உருவாக்கி விடுகின்றது.

ஆஸ்த்மா போன்ற நோய்கள் இதைப் போன்று பரவி வந்தாலும்
1.பற்று கொண்ட உடலில் இந்த ஆன்மா உள் புகுந்து விட்டால்
2.அடுத்து இவர்கள் எந்த மருந்தினை உட்கொண்டாலும் அது ஈடேறுவதில்லை.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்தால் தான் அதிலிருந்தெல்லாம் நாம் தப்ப முடியும்.

“பேரின்ப ரசம் பருகும் சூட்சம கதியைத்தான்” ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்

 

வெயிலின் கடுமை நிறைந்திருக்கும் பாலையில் பூமியில் சூட்சம ஈர்ப்பின் கதி சுழலில் அந்த இடத்து நிலைத் தொடர்கள் ஈர்ப்பின் நிலைப்பில் நீர் சக்தி மறைந்துவிடும் என்பது இயற்கையே…!

ஆனாலும் பாலையின் கதியிலும் நீர் உள்ளே மறைந்திருக்கும் செயல் (சூட்சமம்) என்பது
1.வெயிலின் வெப்பத்தன்மை எவ்வளவு தான் கடுமை ஆனாலும்
2.பாலை நீர்த் தன்மை குளிர்ந்திருக்கும் செயலே “பாலைச் சூட்சமம்…!”

கோடையின் வெப்பத்தால் நீர் நிலையில் மேலே இருக்கும் நீர் வெம்மையுற்றாலும் அதன் உட்புற நீர் குளிர்மையாகத் தான் இருக்கும். அப்படி அந்த நீர் ஓரளவு குளிர்ந்திருக்கும் தன்மை போல் சரீர கதியிலும் உண்டு.

“பாலைச் சூட்சமம்” போல் வாழும் நீர் சக்தியின் தொடரே…! நம் உயிரான்ம சக்தி சூட்சம சரீர கதியில் உடலில் வாழும் தத்துவம்…! என்பதன் கருத்தை ஊன்றி… உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.தத்துவத்தில் “வினோதம்…!” என்பதெல்லாம்… – சூட்சம கதித் தொடர் என்பதில்
2.வெப்பம் என்று பாலைவனம் உஷ்ணம் தகிக்கும் தன்மை போல் சரீரமும் உணர்கின்றது.

வெப்பம் போல் ததித்துறும் செயல் உயிர் ஆன்ம இயக்கத்தில் சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களுக்கும் அதன் அதன் எண்ண ஓட்ட கதிக்குட்பட்டு வாழும் செயல் நிலைத் தொடரில்… சரீர கதிக்கு உண்டாக்கப்படும் வினைச் செயல்களால்
1.எந்த உயிரணுக்களின் எண்ண நிலை தாக்கப்படுகிறதோ
2.அந்தந்த உயிரணுக்களின் எண்ண அமில நிலைத் தொடர்பால்
3.உணர்வின் உந்துதல்களின் வழி பெறப்படும் நிலையே சரீர அவஸ்தை என்னும் உடல் துன்பம்.

எந்தெந்த இடங்கள் தாக்கப்படுகின்றதோ… அந்த இடத்திலுள்ள உயிரணுக்கள் அதனின் எண்ணம் வேதனையாக வெளிப்பட்டு… சரீரம் முழுவதற்கும் அந்த எண்ணம் “தொடர் போல் வியாபித்து…” ஒன்றுடன் ஒன்று அனைத்து உயிரணுக்களின் கதிக்கும் வேதனையை அனுபவிக்கும் செயலாக அமைந்து… “உயிர் ஆன்ம சக்திக்கே பாதிப்பு நிலை ஏற்படுகின்றது…”

ஆக நீரின் உட் தன்மை கோடையிலும் இயல்போடிருப்பதைப் போல் யாம் சொல்லும் தியானத்தின் வழி சூட்சம சக்திகளை எடுக்கும் நிலையில் உயிரானது ஆன்ம வடிவ சூட்சம ஜோதியில் வாழும் தன்மையாகச் செயல் கொள்ளும் திறனை அறிதல் வேண்டும்.

ஆகவே சரீர உயிரணுக்கள் அனைத்தும் ஒளி காந்த சக்தி பெற்று உயிர் ஆன்மத் தொடரில் ஒன்றி வாழும் தொடர் எண்ணங்கள் வருதல் வேண்டும்.
1.கண்ணன் வேய்குழலின் இன்னிசையில் பசுக்கள் எல்லாம் மயங்கின…! என்ற தத்துவச் செயலாக
2.நம் சரீர உயிரணுக்களை மயக்குறும் நாதமாக்க
3.உயிர் ஆன்ம சக்தி (நாம்) செயல்பட வேண்டும்.

ஆத்ம சுடர் ரசமணியாக்கும் வான்மீகியார் தொடர் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் செயலபடும் நிலையை அனைத்து உயிரான்மாக்களும் பெறவேண்டும்.

மூல சுக்கிரன் தொடர்பு கொண்டு தனக்குள் அதைப் பெறப் பெற கண்ணன் இசைக்கும் இசையாகும் உயிர் சக்தி…
1.சரீர கதியில் அனைத்து உயிரணுக்களையும் தன் பால் ஈர்த்து
2.ஜோதித்துவத்தில் மூழ்க வைக்கும்.

அந்தப் பேரின்ப இரகசிய ஆனந்த நிலை என்பது என்ன…?

உயிரணுக்களை எண்ண மேய்ச்சலுக்கு விடும் பொழுது உணர்வுகள் ஒன்றி ஒடுங்கும் செயல் சரீரச் செயலில் தாக்கப்படும் வேதனையை அனுபவிக்காத தன்மை கொண்டு
1.உயிரில் ஆனந்த அமுதைப் பருகி
2.தன் வழியில் எண்ணச் செயல் விடுத்து அந்தப் பேரின்ப ரசம் பருகும்.
3.அந்தச் சூட்சம கதியைத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்.

பாலையாகச் சுடும் வினைச் செயலில் வாடையாகக் குளிர்ந்திருக்கும் எண்ண நினைவில் அச்சம் விலகிடும் பூரணத்துவத்தை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

தீவினைப் பயன் நீக்கும் செயலுக்கு எந்த ஒரு உயிரணுக்களும் சரீரம் தொட்டு வேதனயுறாமல்
1.உயிரான்மா காக்கப்படுவதைப் போல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து
2.சூட்சம உடல் வாழும் “தவ வாழ்வை” மேற்கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நமது உயிரான ஈசனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
2.நம் உடலான சிவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
3.நம் கண்ணான கண்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
4.பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக நம்மை உருவாக்கிய அந்த வினைகளை நாம் போற்றித் துதிக்க வேண்டும் என்றால்
5.நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்.

நமக்குள் தெளிந்த மனதாக “கார்த்திகேயா…” என்ற அறிந்திடும் அறிவு கொண்ட இந்த அறிவின் துணை கொண்டு அதைச் சீராகப் பயன்படுத்தும் நிலைக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

இந்த வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளில் நாம் குறைகளையோ தவறுகளையோ கோபத்தையோ வேதனையையோ வாழ்க்கை என்ற நிலைக்கு நுகர்ந்தறிய உதவினாலும்
1.அடுத்த கணம் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் ஏங்கிப் பெற்று
2.உங்கள் உயிரான ஈசனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளையே காணிக்கையாகச் செலுத்துங்கள்.
3.உடலான சிவனுக்கும் அந்த அருள் சக்தியான அமுதை ஊட்டுங்கள்.
4.உங்களுக்குள் சக்தியாக இயக்கும் ஒவ்வொரு ஞான சக்திகளுக்கும்
5.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை “ஞான விருந்தாக…” கொடுங்கள்.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்துத் தீமைகள் வருவதை எல்லாம் சுத்திகரித்துக் கொண்டால்
1.உங்கள் உயிரான ஈசனுக்கு உதவி செய்கின்றீர்கள்
2.உடலான சிவனுக்கு உதவி செய்கின்றீர்கள்
3.கார்த்திகேயா என்ற அறிவின் தன்மை மங்காது ஒளியின் சுடராக மாற்றிட உதவி செய்கின்றீர்கள்.

முருகா என்றால் மாற்றி அமைக்கும் சக்தி… ஆக நாம் நுகர்வது அனைத்தையும் அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிடல் வேண்டும்.
1.இப்படிப்பட்ட உருவாக்கும் திறன் நம்மிடம் இருந்தும்
2.அதைப் பயன்படுத்தாது விட்டுவிடாதீர்கள்…!”

ஒவ்வொரு நாளும் இங்கே உபதேசிக்கும் இந்த உணர்வின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் எதைப் பார்த்தாலும் தீமைகளை நுகர்ந்தறிந்தால் அது வளராது அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்றும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்றும் அருள் ஒளி என்னிலே வளர வேண்டும் என்றும் இதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நோய் உள்ளவர்களை நாம் சந்தித்தாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்… உங்கள் நோய் அகன்றுவிடும்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முயற்சி எடுத்து ஏங்குங்கள்… அது உங்களைக் காக்கும்… உங்கள் உடல் நலம் பெறும்…! என்று இந்த வாக்கினை அவருக்குள் பதிவாக்குங்கள்.

அல்லது நமக்கே ஒரு நோய் வந்தாலும் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும்
1.எந்த நோய் நம் உடலை வாடச் செய்கின்றதோ
2.அந்த நோய் உடலுக்குள் வளர்ச்சியாகாது தடைப்படுத்த
3.அந்த நோயே நமக்கு அருள் ஞானத்தை ஊட்டும் நிலையாக அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்.

இந்தத் தியானத்தின் பலனை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பெற முடியும்.

வேகாநிலை போகாப்புனல்

 

மகரிஷிகள் தன்னுள் கண்டுணர்ந்ததும்… தன்னை அறிந்ததும்… பேரண்டத்தையும் தன்னுள்ளே கண்டுணர்ந்து…
1.தனக்குள் கண்டுணர்ந்த உணர்வில் இருள் படர்ந்ததை… இருளை நீக்கி வாழ்க்கையில் பொருளறிந்து செயல்பட்டு
2.உணர்வினை ஒளியாக மாற்றி… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இன்றும் நிலை கொண்டுள்ளார்கள்.

அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்து ஆற்றல்மிக்க உணர்வினை தன் உடலிலே வளர்த்து உயிருடன் ஒன்றி… துருவ மகரிஷியாக வளர்ந்து… துருவ நட்சத்திரமாக என்றும் 16 என்ற நிலையை அடைந்தான்,

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வினை எவர் எவர் கவர்ந்தனரோ அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவினை… ஏழாவது நிலையாகப் பெற்று… சப்தரிஷி மண்டலங்களாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதனின் உயர்ந்த நிலையாக… பிறவா நிலை என்ற பெருநிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் வழி… அவர்கள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால்…
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளினை நீக்கி இருளுக்குள் பொருள் கண்டுணர்ந்து
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இந்த வாழ்க்கையில் வாழவும்
3.இருளை நீக்கிடும் உணர்வின் ஆற்றலைத் தன்னுள் வளர்த்திடவும் முடியும்.

மனித வாழ்க்கையில் அதை எவர் பெறுகின்றனரோ அவரே அடுத்த எல்லையாக… இந்த உடலிலிருந்து பிறவா நிலை என்னும் பெருநிலை அடைகின்றனர்.

இதற்குப் பெயர் வேகாநிலை…!

ஆனால் இந்த வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகளை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ… அது சாகாக்கலையாக வளர்ந்து… உடலை விட்டு அகன்றாலும் அந்த (கலையின்) அந்த உணர்வுக்கொப்ப உடலின் அமைப்புகள் அமைகின்றது… மாறுகிறது.

சாகாக்கலை… வேகாநிலை… போகாப்புனல்…! என்று இந்த இருநூறு ஆண்டுகளுக்குள் இராமலிங்க அடிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை சாகாக்கலையாக வளர்த்து
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை வலுவாக்கி உயிருடன் ஒன்றிய ஒளியாக வேகாநிலையாக உருவாக்கி
3.இன்னொரு உடலுக்குள் புகாதபடி போகாப்புனலாக விண் செல்ல வேண்டும்…! என்பது தான் அவர் சொன்ன தத்துவம்.

மனிதன் தீயிலே குதித்தால் அந்த உயிர் வேகுவதில்லை… உடல் தான் கருகுகின்றது. ஆகவே உயிரை போன்றே உணர்வுகள் அனைத்தையும் அழியா நிலை பெறச் செய்து… உடலை விட்டு அகன்றால் இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்பதனைத் தான் அவர் உணர்த்தினார்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு ஓம் ஈஸ்வரா குருதேவா…! என்று உயிரை எண்ணி நாம் சொல்கின்றோம்.
1.நம் உயிரையும்… உயிரின் இயக்கத்தையும்… உயிரால் இயக்கப்பட்டு மனிதனான நிலையும்
2.மனிதனான பின் அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையைச் சீராக்கிக் கொள்வதே நல்லது.

அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

உயிரான்மாவின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்…”

 

உதாரணமாக கரும்பு பயிரிடும் ஒரு விவசாயி தான் பெறும் மகசூலை எத்தன்மை கொண்டு பாதுகாப்பாகப் பெறுவது…? என்பதிலும் நம் உயிரான்ம சக்தியின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்…” உள்ளது.

பூமியைப் பண்படுத்திச் செப்பனிட்டு உரமிட்டுக் காலமறிந்து கரும்பின் வித்தைப் பயிரிடும் செயலில் கரும்பு வளரத் தேவையான நீரைப் பாய்ச்சிப் பாதுகாப்பாக அந்த வித்தை வளர்த்திடும் தொடர் வேண்டும்.

தேவையான நீரை விட்டுக் கரும்பு வளர்ந்து வரும் காலகட்டத்தில் “சோகைகள்…” என்ற கரும்பின் இனத் தன்மைகள் அகற்றப்பட்டுத் தூய்மைப்படுத்தப்படா விட்டால்
1.சிறு உயிரினங்கள் அதனுள் வாசம் செய்து கரும்பின் சுவையைக் கெடுத்துவிடும்.
2.அதனால் நல்ல பலன் பெற முடியாது.

நீர் பாய்ச்சும் செயலிலும் இயற்கையாக அதி தீவிர மழை நீர் பெய்து விட்டால் அவை நிலத்தில் தங்கினால் கரும்பில் நீர் சக்தி கூடி விடும். சுவை குறைவுபடும். ஆகவே தேங்கிய நீரை உடனே அகற்ற வேண்டும்.

பக்குவ காலத்தில் கரும்பை அறுவடை செய்யாமல் நாட்கள் என்ற கணக்கின் தொடர் நீண்டு விட்டால் அந்தக் கரும்பின் சுவை சத்து ஈர்க்கப்பட்டு
1.கரும்பின் பூ என்ற தொடர் வளர்ச்சி ஆக்கும் செயலில்
2.வேண்டோடுதல் என்ற சொல் நாம குணத்திற்கொப்ப
3.அந்தக் கரும்பின் சுவை குணம் நீங்கிப் பலனில் மாற்றம் ஏற்படும்.

ஞானத்தின் வளர்ச்சியில்…
1.மனம் என்ற வயலைப் பக்குவப்படுத்தும் ஞானி… களைகளைக் களைந்து…
2.தன் செயலில் ஒழுக்கம் என்ற பாத்தியிட்டு…
3.நற்பண்பு என்ற ஜெப நீரைப் பாய்ச்சி…
4.ஞான வித்தாம் கரும்பினைப் பயிர் செய்திடும் பக்குவம்…
5.ஞானப் பயிர் காக்கப்பட வேண்டும் என்ற செயலுக்கு… ஞான வித்தை ஈர்த்திடும் செயலே…
6.விவசாயி கரும்பின் பயிரைக் கண்ணும் கருத்துமாகப் பேணுகின்ற வழி முறை போல் இருந்திடல் வேண்டும்.

ஞானப் பயிர் வளர்த்திடும் மனதில் “தேவையற்ற களைகள் அகற்றப்பட்டு…” நல்லொழுக்க நீர் என்ற ஜெபம் என்ற சக்தித் தொடரினால் “நேர் செய்யப்பட வேண்டும்…!”

அப்படிச் செயல்படுத்தினால் பயிர் தனக்குத் தேவையான ஆகாரத்தைப் பூமியிலிருந்து பெற்றுச் சமைத்து வளர்வதைப் போல் நாம் தியானத்தின் மூலம் ஈர்த்திடும் எண்ண ஜெப நீரால் ஞானப் பயிர் நல்லொழுக்க முறைச் செயலுக்கு வளர்ச்சி பெற்றிடும்.

உலகோதய வாழ்க்கை முறை எதிர் மோதல் என்ற… கடும் மழைக் காலம் மிகுந்து விட்டாலும் விவசாயி பயிர் செய்யும் பூமியில் மழை நீர் தேங்கி அந்தப் பயிர் அழுகிப் போகாமல் நீரை நீக்கிட முற்பட்டும் ஓர் வழி அமைத்து வெளியேற்றுவது போல்
1.உலகோதய மழை நீர் தேங்கி
2.ஞானப் பயிர் வளர்ப்பின் முறையில் மாறுபாடு ஆகாதபடி
3.நாம் சுட்டிக் காட்டும் தியான வழித் தொடரில் அந்தத் தீமைகள் அனைத்தும் நீக்கப் பெற்று
4.நல்லாக்கம் பெறும் முயற்சியாக விவசாயி தன் பயிரைக் காத்திடும் செயல் போல் அமைத்திடல் வேண்டும்.

சரீரத்தில் வந்து மோதும் எதிர் அலை மோதல் ஈர்ப்பின் செயல் உடலிலிருந்து கழிவுகள் நீக்கப்படா விட்டால் எதிர் மோதல் குணத் அமிலத் தன்மைகள் சரீரத்தில் தங்கிப் பிணியாக உடலில் மாறிவிடும்.

ஆக உயரிய ஞான வளர்ப்பின் பயனைப் பெறுவதிலும் தடங்கள் ஏற்படாத செயலுக்கு எதிர் மோதல் குணங்ள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.

கரும்பின் கழிவு என்ற சோகைகள் அடர்ந்து வளர்ந்து விட்டால் அதனுள் வாசம் செய்யும் சிறு உயிரினங்கள் தன்மை போல்
1.வாழ்க்கையில் வரும் எதிர் நிலையான குணங்கள் செயல்பட்டு
2.அந்தச் சிறு உயிரினங்களால் கேடுகள் உண்டாகிக் கரும்பின் பயிர் இனிய குணச் சுவையை நீங்கி புளிப்பின் சுவையைப் பெறுவது போல்
3.ஞான வளர்ச்சியின் செயலில் ஆகாதபடி “அதி தீவிர எண்ண வலு என்ற பாதுகாப்பு அவசியம்…!”
4.ஒவ்வொருவரும் “விவசாயி போல்” ஞானப் பயிரைப் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்தல் வேண்டும்.

அறுவடை செய்த கரும்பினைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கரும்பின் சுவை குணத்தில் உண்டாக்கப்படும் பல்பொருள்கள் என்ற செயலுக்கு முன்பே கடும் மழையால் அறுவடை செய்யப்பட்ட பயிர் நீரினுள் மூழ்கி விட்டால்… பயிர் காக்கப்படா விட்டால் பலனை எப்படிப் பெற முடியும்…?

விவசாயினால் காக்க முடியாமல் போன பலனை… பாதுகாப்பற்ற செயலின் தன்மை கொண்டு கேட்பாரற்று நீரில் மூழ்கிவிட்ட பயிரினை… ஒரு வியாபாரி பொருளுக்காக விற்பதின் செயலினால் விவசாயி என்ன செய்ய முடியும்…?

ஏனென்றால் அந்தக் கரும்பின் புளிப்பின் சுவையை ஒவ்வொருவரும் சுவைத்திடும் பொழுது தான் பயிர் செய்த நிலத்தின் பலனை
1.சோர்வு என்ற சலிப்பு என்ற சங்கட அலை உந்தும் செயலினால்
2.தன் முயற்சியில் பாதுகாப்பற்ற செயலினால்
3.தன் பயிரைத் தானே விலை கொடுத்து வாங்கிடும் செயல் நிகழ்வுகளின் வேடிக்கைகளை என்னவென்பேன்…?

அதாவது ஞானப் பயிர் யாருக்கு உரியதோ அவரின் முயற்சி இன்மையினால்… உலகோதய வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது.

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றின் செயல் குண நிகழ்வுகளின் மாற்றம்… எண்ணம் கொண்டு செயல்படுவதால் மனம் என்று கூறுவதெல்லாம் மன எண்ணச் செயல் நிகழ்வால் “மனமே பகை…!”

பகை என்ற தனித்துவம் ஞானத்தில் இல்லை என்ற செயல் உண்மை வாய்ந்தது. எதிர் மோதல் பகை என்ற குணங்கள் தாக்கினாலும் ஞானியின் ஈர்ப்பின் செயலில் உண்மையின் உயரிய உயர் ஞான எண்ண வலு பெற்றிருப்போன் அந்தப் பகை குண அமிலத் தன்மைகள் தன் ஞானத்தில் மோதினாலும் அனைத்தையும் அது துகள்களாக்கிவிடும்.

ஞானச் செல்வங்கள் பெற்றிடும் உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு
1.எந்த வித எதிர் மோதல் குணங்களும் தாக்கிடாத வண்ணம்
2.பக்குவப்படுத்தப்பட்டுச் செயல்படும் நிகழ்வனைத்தும்
3.மகரிஷிகளின் அருள் ஒளி என்ற எண்ண வலுத் தொடரில் நிலை பெற்று நின்று வளர்ப்பின் வளர்ப்பாக்கி
4.பேரண்டக் கோளத்தையே உருவாக்கிடும் செயல் சக்திக்கு… சக்தியின் முயற்சிக்கு… “என்றும் எனது ஆசிகள்…!”

இறந்தவர்களின் துக்கத்தை விசாரிக்கலாமா…?

 

எந்த ஒரு சூழ்நிலையிலும்… “ஒருவர் அகால மரணம் அடைந்து விட்டார்…” என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.தனித்து நின்று அவர்களை எண்ணி
2.“ஐயோ இறந்து விட்டாரே… உயிர் போய்விட்டதே ஈஸ்வரா…!”
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர் போக வேண்டும் என்று “முந்தி விடாதீர்கள்…”

ஏனென்றால் இப்படி எண்ணினால் அந்த ஆன்மா உங்களுக்குள் வந்து விடும்… இதை மறந்து விடாதீர்கள்…!

அதற்குப் பதிலாக… மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.முதலில்… இந்த வலுவை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
2.அதற்குப்பின் அந்த உயிரான ஈசனின்… ஆன்மாவின் முகப்பிலே சப்தரிஷி மண்டல உணர்வினை இணைத்து…
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
4.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று சொல்லி விட வேண்டும்…!

அங்கிருந்து நாம் நகர்ந்து விட வேண்டும்…!

பின் கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டு ஐந்து பேர் சேர்ந்து மேலே சொன்னபடி செயல்படுத்துங்கள். அவ்வாறு செயல்படுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறது.

தனித்த மனிதன் எண்ணி இழுக்கப்படும் போது ஒரு சமயம் ஏமாந்து விட்டால்
1.ஈகையின் நிலைகள் கொண்டு வேதனை கலந்த நிலையில் எண்ணி விட்டால்
2.அந்த ஆன்மா விண் செல்வதற்குப் பதில் நம்முடன் அரவணைத்து விடும்.

ஆகவே கூட்டுத் தியானங்களை அமைத்து ஒரு ஐந்து பேர் சேர்ந்து செய்து ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். ஏனென்றால் மற்றவர்களுடன் இணைந்து வலுப் பெறும் நிலையாக செயல்படுத்தினால் விண் செலுத்த இது உதவுகின்றது.

மறவாது இப்படிச் செயல்படுத்துங்கள்.

1.எங்கே யார் இறந்தாலும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற ஏக்கத்துடன் நுகர்ந்து விடாதீர்கள்
2.ஏனென்றால் அந்த ஆன்மாக்கள் நம் பூமிக்குள் ஈர்க்கும் நிலையே வருகிறது… அல்லது நமக்குள்ளே வந்துவிடும்
3.இதிலே பங்கு விகிதாச்சாரம் எவர் அதிகமாக அவரை எண்ணி ஏங்குகின்றாரோ
4.வேதனை உணர்வு கொண்டு சோகம் அதிகமானால் அதனின் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுவர்.
5.அதன் வழி தான் அந்த ஆன்மா மறு பிறவிக்கு வருகின்றது.

அது போன்று இல்லாது கூட்டுத் தியானத்தின் மூலம் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து… ஆன்மாக்களை இந்த முறைப்படி விண் செலுத்துவதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்

1.பிறிதொரு ஆன்மா ஒவ்வொருவர் உடலிலும் உண்டு
2.ஆன்மா இல்லாத மனிதரே இல்லை
3.எவ்வழியிலும் ஏதாவது ஒன்று நம் உடலில் ஒரு ஆன்மாவது இருந்துதான் தீரும்.

காரணம் மனிதன்… எதன் மீது பற்று கொள்கின்றானோ அதன் துணை கொண்ட உயிரான்மா உடலுக்குள் வந்துவிடும். எந்த மனிதன் தனக்குள் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டானோ எந்த உடலுக்குள் போனாலும் அதே வேதனையைத் தான் உருவாக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆனால்… ஆன்மாக்களை நீக்குவதற்கு ஜோதிடம் பார்ப்பதோ கோடங்கி அடிப்பதோ… மந்திரங்கள் எந்திரங்கள் செய்வதோ… முற்படாதீர்கள். அது ஒன்றும் வேலை செய்யாது… கெடுதலைத் தான் தரும்.

உங்கள் உடலுக்குள் கடின நிலைகள் கொண்டு ஆன்மா செயல்பட்டாலும்
1.உடலில் ஆட்டிப் படைக்கும் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.எங்கள் உடலில் அமைதி கொண்டு நல் வழி காட்டும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆன்மா ஒரு உடலில் இப்படி ஆட்டங்கள் ஆடினால் உள்ளிருந்து இயக்குவதை சப்தரிஷி மண்டலங்களுடன் உங்கள் நினைவின் ஆற்றலைச் செலுத்துங்கள்… அதன் வழி அதை அமைதிப்படுத்துங்கள்… தீமைகள் அகன்றுவிடும்

ஏனென்றால் அதனுடைய உடலில் துடித்த சாப வினைகள் தான் அதற்குக் காரணமாகின்றது. அந்தச் சாப வினைகளை நீக்க இதைப் போன்று நாம் அருள் உணர்வுகளை இணைத்து… ஆத்ம சுத்தி செய்து… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு இந்த எண்ணத்தின் வலுவை உடலில் உள்ள ஆன்மாக்களுக்குப் பாய்ச்சினால் தீமைகள் அகலுகின்றது

ஆகவே குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
1.எத்தனை முறை சொல்கிறீர்களோ
2.அந்த அளவுக்கு உங்களுக்குப் பலன் கிடைக்கும்.

சித்தன் போக்கு சிவன் போக்கு

பூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.

படைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு… ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.

ஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.

சிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.
1.கண்டத்தில் விஷம் – கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது
2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக
3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.

அத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்
1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.
2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந்து தாண்டவமாடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்…!”

அவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.

மான் மழு… புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்… குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்… பாதத்தின் அடியில் முயலகன்…! என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்…!

“சிவ நடனம்…” காண வேண்டும் என்பதே…
1.ஆத்மார்த்தமாக…! இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே
2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே…!
3.அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.

ஆக.. “சித்தன் போக்கு சிவன் போக்கு…!” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே… “தன் உயிராத்மாவையே…” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.

ஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

ஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்… பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்… தன்னகத்தே தெளிந்து… சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே… ஆகாய வெளியாகும்…!

ஆகாய கங்கை என்றால் என்ன…?

நீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே…!” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.

(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்… பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)

சிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..?

பூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப்பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்…” காட்டுகின்றது.

அது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி… பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.

பரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்
1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்
2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்
3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.

பூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக
1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே
2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.

விழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…!

முக்கண் என்று காட்டுவது
1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்
2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்
3.அதே முக்கண் தெளிவா(க்)கும்…!

குரு (ஈஸ்வரபட்டர்) உணர்வு உங்களை இயக்கி” மகிழ்ச்சியை ஊட்டும்

 

ஒருவன் கடுமையான பாவத்தைச் செய்வதை உற்றுப் பார்த்தாலே அவனுக்குள் விளைந்த அந்த வினைகள்… கூர்ந்து கவனிக்கும் போது அந்தப் பாவ வினைகளே நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஒருவன் சாபமிடுவதைக் கூர்ந்து கவனித்தால் அவனிட்ட சாப வினைகள் எதை அழிக்க வேண்டும் என்று எண்ணினானோ அதே உணர்வு நமக்குள் புகுந்து நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.
1.சாபமிட்டோருக்கும் அதே நிலை… கேட்டோருக்கும் அதே நிலை
2.இது போன்ற தீமைகள் நமக்குள் தாக்காது தீய வினைகள் சாப வினைகள் நமக்குள் சேர்ந்திடாது
3.விண்ணின் ஆற்றலைக் கவர்ந்து அதைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

அதற்கே குருநாதர் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு இத்தகைய அருள் உணர்வுகளைப் போதித்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது உள் புகும் தீமைகள் அனைத்தையும் அகற்றும்படியாக வழி காட்டுகின்றார்.

தீய வினைகளை அகற்றி என்று மகிழ்ச்சியான சொல்களை நீங்கள் சொல்கின்றீர்களோ அப்போது எமது குருநாதரை உங்களில் நான் (ஞானகுரு) காணுகின்றேன். தீமைகளை அகற்றி என்று மகிழ்ச்சியுடன் நீங்கள் எம்மைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுது என் குருவை உங்களிடம் நான் பார்க்கின்றேன்.

தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு விண்ணுலகில் மகரிஷிகள் சஞ்சரித்துக் கொண்டிருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்பட்ட ஒளியான அணுக்கள் இங்கே வந்து கொண்டுள்ளது.

குருநாதர் காட்டிய அருள் நெறி கொண்டு அதைத் தான் உங்களை இப்போது பெறும்படி செய்து கொண்டுள்ளோம். அதை நீங்கள் சுவாசிக்கப்படும் போது
1.அந்தச் சப்தரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கி
2.உங்களை அறியாத வந்த பாவ வினைகள் நீங்கி தீயவினைகள் நீங்கி சாப வினைள் நீங்கி
3.உங்களில் மகிழ்ச்சி பெறும் நிலைகளில் அது இருந்தால்
4.எமது குருநாதன் அந்த உணர்வின் இயக்கமாக உங்களுக்குள் இயக்கி
5.தீமைகளை மாய்த்து… மெய் வழி காணும் உணர்வாக மலர்ந்த முகத்துடன் உங்களைக் காண வைக்கின்றார்.

மகிழ்ச்சியுடன் அதை நான் காணும் நிலையாக வருதல் வேண்டும்.

உங்கள் உயிரான ஈசனை மதித்து… அன்னை தந்தையின் உயிரை ஈசனாக மதித்து… அவர்களைத் தெய்வமாக மதித்து அவர்களைக் குருவாகவும் மதித்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் வழிபடுத்திக் கொள்ளுங்கள்…!

எத்தகைய சந்தர்ப்பத்திலும்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி… அதைப் பற்றுடன் பற்றிக் கொண்டால் வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றிடாது (பற்றற்றதாக) செயல்படுத்த முடியும்.

ஆகவே… மறவாதீர்கள்…!
1.ஒவ்வொரு நாளும் கொடுக்கக்கூடிய உபதேசங்களை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி
2.வீட்டிலிருந்தே தியானித்து அந்த அருள் சக்திகளை நீங்கள் பெற முடியும்.
3.அந்த்த் தகுதியை நீங்கள் பெற வேண்டும் என்று என் குருநாதரைப் பிரார்த்திக்கிறேன்

சரீரம் ஒரு பாத்திரம்…! “அதில் நாம் சமைக்க வேண்டியது” மகரிஷிகள் அருள் சக்திகளை

 

இந்தச் சரீரம் சகலத்தையும் ஈர்த்துச் சமைக்கும் திறன் பெற்றது. உயர் சக்தியின் ஆகாரமான “ஆதி நீர் சக்தி என்ற குளிர்விப்புச் சக்தியே…” தியான வழித் தொடரில் வெப்ப நீர் சக்தியாக மாற்றப்படும் பொழுது எண்ணத்தின் வலுவிற்கு எது இலட்சியமோ அதுவே பெறப்படும் ஆகாரமாகின்றது.

அந்த ஆகாரத்தைப் பெறும் மூல சக்தியின் சமைப்பின் முன் போடப்படும் உணவுப் பொருள் என்ற அமில குணங்களும் இந்தச் சரீரமாகிய பாத்திரத்தில் நிறைந்துள்ள ஆதி சக்தியின் நீர் அமிலம்
1.தியானம் என்ற அக்கினியில்… குளிர்விப்பு நீர் சக்தி வெப்பச் சக்தியாகச் செயல்படும் செயலுக்கு
2.இந்தச் சரீரப் பாத்திரம் தன்னுள் ஈர்த்துச் செயல் கொண்டிட வேண்டியது
3.சகல மகரிஷிகளின் அருள் சக்தியே ஆகும்.

விறகிற்குள் மறைந்திருக்கும் நெருப்பின் உணர்வு கொண்டு நல்லாக்கச் செயலை (புறத்திலே சமைக்கும் சமையல் போல்) உண்டாக்கப்படுவது போல்
1.மகரிஷிகளின் அருள் என்ற ஜோதித் தத்துவத்தில் இருந்து
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வளர்த்திடல் வேண்டும்.

அதாவது
1.விறகினுள் உறைந்துள்ள நெருப்பைக் கலயம் ஈர்ப்பது போல்
2.கலயத்தினுள் குளிர்வு நீர் சக்தி அந்த வெப்பத்தை ஈர்ப்பது போல்
3.அந்த நீர்ச் சக்தியிலிருந்து எண்ண குண ஆகாரச் சமைப்பு
4.அந்த அருள் சக்தியின் தொடரை ஈர்த்துக் கொள்கிறது.

ஈர்த்துக் கொண்டாலும்… ஆகாரப் பக்குவம் பெற்றுவிட்ட தன்மையை அறிந்துணர்ந்து தெளிவுபடும் செயலுக்கு
1.மாற்று குண எதிர் மோதல் தன்மைகளை விலக்கிடவும் வேண்டும்.
2.சஞ்சல உணர்வுகளை நமக்குள் மோதவிடலாகாது.

பிறவிக்குக் காரணம் ஆசை தான்…! என்ற தொடரை புத்தன் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாச் சூட்சமம் புத்தன் அறிந்த அனுபவ ஞான ஆத்ம இரகசியம் “பேரின்பப் பிரம்ம ஐக்கிய லயம்…!” என்பது.

தியான வழித் தொடரில் நிலை நின்று தன் உயிராத்ம சக்தியை வலுக் கொண்ட தொடருக்குச் சகலத்தையும் ஈர்த்திடும் சித்தத்துவ ஆனந்த ஈஸ்வர அனுபூதியைத்தான் புத்தர் பெற்றார்.

ஒவ்வொருவரும் அந்த ஈஸ்வர அனுபூதியைப் பெற வேண்டுகின்றேன்…!

“விண் செல்லும்… விண் செலுத்தும் ஆற்றலைத் தான்” குருநாதர் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்

 

கூட்டுத் தியானத்தின் வலு கொண்டு மகரிஷிகளின் ஆற்றலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கவர்ந்து நம் மூதாதையர்களான குலதெய்வங்களின் உயிரான்மாக்களை விண்ணிலே வீசினால்… அவர்கள் முதலிலே விண் செல்கின்றார்கள்… ஒளியின் சரீரம் பெறுகின்றார்கள்.

“நம்மைக் காத்திட்ட உணர்வுகள்” அவர்களுக்குள் விளைந்தது நமக்குள் உண்டு. அதை நினைவு கொண்டு குலதெய்வங்களின் உணர்வுகளை எளிதில் நாம் பருக முடியும்.

அதனின் உணர்வின் துணை கொண்டு மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி…
1.புவியின் பற்றற்ற நிலைகள் கொண்டு விண்ணின் பற்று கொண்டு
2.உத்தராயணம்… விண்ணிலிருந்து வந்தோம்… ஒளியின் சுடராக ஆனோம் என்ற நிலையாக
3.மகரிஷிகளுடன் நாமும் இணைந்திட முடியும்.

இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… ஏதோ கதை சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்…! (ஞானகுரு).

இத்தகைய இயற்கையின் நிலைகளைப் பித்தரைப் போன்று இருந்த நமது குருநாதர் எமக்கு உபதேசித்து அருளினார். அந்த அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார். அதிலே விளைந்த உணர்வினைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றேன்.

இராமலிங்க அடிகள்… மனிதர்கள் தெய்வமாக வேண்டும் தெய்வ நிலை கொண்டு வேகாநிலை பெற வேண்டும் என்று அவர் பேசினார். அவரைப் போன்று மற்ற மகான்களும் அதைச் சொல்லியுள்ளார்கள்.

ஆனாலும் அவரைப் பின்பற்றியவர்கள் எல்லாம்… தன்னுடைய (மனித) வாழ்க்கைக்காக வேண்டித் தான் அவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்த மகான்களின் ஆன்மாக்களை விண் செலுத்துவோர் இல்லை என்று இருந்தது (அந்தக் காலத்தில்.

குருநாதர் இதை எல்லாம் எமக்குக் காட்டினார்.

1.மண்ணுலகில் உள்ளோர் இன்புற்று இருக்க வேண்டும்
2.அவர்கள் அறியாது வந்த தீமைகள் நீங்க வேண்டும்
3.அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
4.ஞானிகள் உணர்வை அவர்களுக்குள் புகுத்த வேண்டும்
5.பகைமை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும்… சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்று பாடுபட்ட
6.மகாத்மா காந்தி போன்ற ஏனைய ஞானிகள் அதை உணர்த்தி இருந்தாலும்
7.மக்களின் பால் பற்று கொண்டு வாழ்ந்த நிலையில் உடலை விட்டுச் சென்ற
8.அந்த மகான்களை விண் செலுத்துவார் யாரும் இல்லாது போய்விட்டது

மக்கள் அனைவரும் மகான்களின் அன்பைப் பெற்றனர்… அதனின் துணை கொண்டு தன் வாழ்க்கைக்குத் தான் பெற்றார்கள். ஆன்மாக்களை விண் செலுத்தவில்லை.

இது எல்லாம் காலத்தால் மறைந்த நிலைகள்.

மகான்கள் மக்களுக்காகப் பாடுபட்டார்கள்… பிறர் தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்று ஐக்கிய உணர்வை ஏற்படுத்தினார்கள். இருந்தாலும்… சூரியன் எவ்வாறு தனக்குள் வருவதை எல்லாம் ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ… மகரிஷிகள் எவ்வாறு உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்களோ அத்தகைய விண் செல்லும் ஆற்றலை மகான்கள் கற்றுணரவில்லை.
1.மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.
2.விண் செல்ல வேண்டும் என்று அவர்கள் யாரும் எண்ணவில்லை.

அத்தகைய மகான்கள் உணர்த்திய உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.அவர்களை முதலில் நீ விண் செலுத்து என்று
2.குருநாதர் சில உபாயங்களை எனக்குக் கொடுத்து அதைச் செயல்படுத்தும் படி சொன்னார்.
3.அதன்படி விண் செலுத்தினேன்.

முதலில் சொன்னபடி… அந்த மகானுடன் தொடர்பு கொண்டவர்கள் தன் உடலைச் சதம் என்று நோக்கத்திலேயே அவருடன் இருந்தார்கள்… சதமற்ற வாழ்க்கைக்கே ஜீவன் கொடுத்தார்கள்… சதமற்ற வாழ்க்கையே இன்று வாழ்ந்து கொண்டு சதமற்ற நிலையில் புழுவைப் போன்று துடித்துக் கொண்டுள்ளார்கள்.

இதிலிருந்து மக்களை மீட்டிட வேண்டும் என்று குருநாதர் உபதேசித்தார்.

ஆகவே நான் கொடுத்த ஞான வித்தை உனக்குள் வளர்த்து விடு. பிறரைக் காத்திட வேண்டும் என்று செயல்பட்ட மகான்களின் உயிரான்மாக்களை அவருடன் இருந்து “தனித்து நின்று நீ விண் செலுத்து…” என்றார். இப்படி…
1.புவியில் சுழன்று கொண்டிருக்கும் ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொடுத்தார்… குரு எம்முடன் இருந்தே…!
2.அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கின்றது…?
3.அதற்கு எதனின் உணர்வை உனக்குள் நீ கவர வேண்டும்…?
4.எதனின் வலு கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்
5.உந்தி விண்ணிலே வீசிய பின் ஞானிகள் அருகே செல்லும்போது உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கி விட்டு
6.ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது…? என்ற நிலையை தெளிவாகக் காட்டினார்.

அதே போன்று நம் குடும்பங்களிலும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையர் பாட்டன் பாட்டி என்று இருந்தாலும் அவருடைய சிரமத்தையும் பாராது நமக்கு எத்தனையோ உதவிகளைச் செய்தார்கள்.

அத்தகைய உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களையும் நாம் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்று குருநாதர் (அவர் உடலுடன் இருக்கப்படும் பொழுதே) நேரடியாகக் காட்டினார்.

நான் இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் நான் அல்ல… குருநாதர் காட்டிய உணர்வின் தன்மை அவரின் செயலே இங்கே இயங்குகின்றது.

1.அவரில் விளைந்த ஆன்ம ஞானத்தை… மெய் உணர்வின் தன்மையை
2.விண்ணிலே இன்றும் வளர்ந்து கொண்டிருக்கும் அவர் உணர்வுகளைப் பருகும் மார்க்கத்தை
3.எமக்கு எப்படிப் போதித்தாரோ அதை அப்படியே உங்களுக்கும் வழி காட்டுகின்றோம்.

அதன் வழியிலேயே… நீங்களும் உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை விண் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

அரூபலிங்கம்… ஸ்வரூபலிங்கம்…!

 

ஆண்டாண்டு காலமாக மனித குல சமூக நெறி வாழ்க்கை அமைப்பில் ஒழுக்கவியலாக வரைமுறை மீறாச் செயலுக்கும் உயர்வெண்ணம் சிதறிடாத் தன்மை பெற்றிட வாழ்க்கை நெறிச் சட்டங்கள் மகரிஷிகளால் உணர்த்தப்பட்டதிலெல்லாம்
1.அறிவின் ஆற்றலும் வைராக்கிய சிந்தனையுமாகத் “தான் யார்…?”
2.இந்த ஜீவ பிம்ப சரீரம் பெற்றதன் நோக்கம் என்ன…? என்று
3.தன்னை உணரக்கூடிய வழி பிறந்து…
4.உயர் நிலை பெற வேண்டிய ஞானம் கொண்டு பெறும் மெய்ப் பொருளை
5.நாம் உணரத் தான் முடிந்திடும்.

மனோசக்தியின் ஆற்றலே இன்றைய விஞ்ஞானத்திற்கும் “புரியாத ஒரு புதிர் தான்…!”

அப்படியானால்… தன்னைத்தான் உணர்ந்து உயர் ஞான சிந்தனை கொண்டு மெய் ஞானத்தின் பொருளாக இயற்கைச் சக்திகளை அறிந்து கொண்டது எந்தச் சக்தியால்…?

1.உயிராத்ம சக்தி பலம் பெற்றிருந்தால்
2.அதை வெளிப்படுத்தும் செயல் தன்மை கொண்டாலே மனோசக்தி என்று பெயர் பெறுகின்றது.
3.ஆனால் இவைகளைக் கண்டு வியப்பு மேலிடுவதைத் தவிர ஆக்கச் சக்திக்கு அது ஒன்றும் பயன் இராது.

பிண்டமாகிய சரீரத்தைக் கொண்டே அண்டத்தை அறிந்து கொள்ளும் செயலில் பூமித்தாய் ஈர்த்திடும் சூரியனின் சக்திகளை சுவைத்து வளம் பெற்ற இயற்கையின் செயலைத் தன் சரீரத்தின் உள்ளேயும் அதே தொடர் நிகழ்வு பெறுகின்ற தன்மைகளை அறிந்து கொண்டாலும்
1.பரவெளியின் சூட்சமத்தில் சூரிய ஒளிக்கதிர் தன்மைக்குள்
2.இருவித உயிரணுக்கள் (சிவசக்தி அணுக்கள்) கலந்து செயல்படும் செயலை
3.ஞான விழிப்பார்வை கொண்டு அறிந்து கொள்வதே “அரூபலிங்கம்…!”

அந்த உயிரணுக்கள் சரீரத்தில் செயல்படும் நிலைகளில் சரீரம் கொண்டு ஆண் பெண் உடல் கூறுகளாக உயிர் தொகைகளாக ஜீவாத்மாக்களாகின்றது.

அரூபலிங்கம் என்ற அந்தப் பால்வெளி சூட்சமத்தைச் சரீர செயலில் கண்டு தெளிந்து அந்த உயர் சக்திகளை வான இயல் தன்மைகளில் உண்மைப் பொருள் காட்டி ஸ்வரூபலிங்கமாகச் சமைத்துப் பேரின்பச் சக்திகளைப் பெற்று “உயர் ஞான வளர்ப்பாக உயர் நிலை பெறவே வழி வகைகளை ஞானிகள் காட்டினார்கள்…!”

அப்படிக் காட்டியிருந்தாலும்.. இன்றோ சிவலிங்க வடிவு (உடலின் ரூபங்கள்) என்றாலே சிற்றின்ப இரசனைக்கே எண்ணத்தைச் செலுத்தித் தன் நிலையையே மறக்கின்றான் மனிதன்…! எண்ணுகின்ற எண்ணம் அன்றோ செயல்படுகின்றது.

இயற்கையின் செயல்பாட்டை உயர் ஞானத்தால் அறிந்த ஞானிகள் பூமியின் சுழற்சியில்
1.ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு என்ற பஞ்சபூதத் தன்மைகளில் ஓசை ஒளி என்ற செயல் நிகழ்வுகளையும்
2.ஞாயிறு கோள் திங்கள் கோள் பூமியின் தொடர்பு கொண்ட செயல்பாட்டையும்
3.உயிரணுக்களின் அசைவு நிலைகளையும்
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட செயல்பாட்டில்
5.தன் எண்ணத்தால் தெளிந்த அந்தப் பேரானந்தப் பெருநிலையை
6.”கூத்தாண்டவன்…!” என்ற உருவச் சமைப்பில் இயற்கையின் தத்துவத்தைக் காட்டினார்கள்.

சிவன் உருவமும்… உருவத்தின் ஆனந்த லயமும்… அலங்கரித்துக் காட்டிய தத்துவங்களும்…
1.“இயற்கையின் பால் ஒன்றச் செய்த தன்மைகளை உணர்ந்து கொண்டால்…”
2.மனித எண்ணத்திற்கு மரண பயமில்லை…!

நஞ்சுக்குள் மூழ்கிடாது நாம் விழித்திருக்க வேண்டும்… நீலகண்டா…!

 

பிற மண்டலங்களிலிருந்து வருவதை… 27 நட்சத்திரங்களும் பால்வெளி மண்டலங்களாக அமைத்திருப்பது போன்று
1.நம்முடைய எண்ணத்தால் அருள் ஞானிகள் உணர்வை நம் முன் பால்வெளி மண்டலங்களாக மாற்றி
2.நமக்குள் தீமைகள் வராதபடி அந்தத் தீமைகளை விழுங்கி
3.தெளிந்த நிலையாக மாற்றி… ஒளியாக மாற்றுவதே உத்தராயணம்… பங்குனி உற்சவம்.
4.முருகனுக்கு உகந்த நாள் என்று அதைக் காட்டியிருப்பார்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

ஞானிகள் உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி விண்வெளியில் எவ்வாறு சுழன்று கொண்டுள்ளார்களோ அவர்களுடன் நாம் இணைய வேண்டும்… உத்தராயணம்.

ஆனால் அப்படி இணையவில்லை என்றால் தட்சிணாயணம். மனிதருக்கு மனிதர் சாபம் இடும் போது அதைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சாப வினைகள் நமக்குள் சேர்ந்து தீயவினைகளாக மாறிவிடுகின்றது.

ஒருவன் தீமை செய்கிறான் என்றால் அதை உற்றுப் பார்த்தால் தீய வினைகளாக நமக்குள் சேர்ந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்று ஒருவன் பாவம் செய்கின்றான் பாவம் விடுகின்றான் என்றால் அந்தப் பாவ வினைகள் நமக்குள் சேர்ந்து பாவம் செய்வோராக நாமும் மாறி விடுகின்றோம். அப்படி மாறி விட்டால்
1.தீமைகளையே (நஞ்சினை) உணவாக உட்கொண்டு மற்றதைக் கொன்று புசித்து ரசித்து வாழும் உயிரினங்களாக
2.“தட்சிணாயணம்” மீண்டும் திரும்பி கீழே வந்து விடுகின்றோம்.

அவ்வாறு ஆகாதபடி நாம் திரும்ப வேண்டும் அது தான் உத்தராயணம்…!

துருவப் பகுதியின் வழியாக விண்ணிலிருந்து வருவதை ஆறாவது அறிவின் தன்மை கொண்டு… அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக மாற்றி அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக எவ்வாறு நிலை கொண்டு உள்ளானோ அதைப்போல நாமும் ஆக முடியும்.

நமது குருநாதர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை உங்களுக்குள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிவு செய்கிறேன். அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து தீமைகளை அகற்றிடும் நிலையாக உங்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்.

அவ்வாறு விளையச் செய்து கொண்ட பின் உடலை விட்டு எப்போது அகன்றாலும்… என்றும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லலாம்.

ஆனால்
1.சாப வினைகளுக்குள்ளும் பாவ வினைகளிலும் சிக்கி விட்டால்
2.தட்சிணாயணம் தான்… மீண்டும் உடல் பெறும் நிலை தான்.

பரிணாம வளர்ச்சியில் மனித உடல் பெற்ற நிலையான மகா சிவன் ராத்திரி… சர்வத்தையும் அறிந்திடும் ஆற்றல் ஆறாவது அறிவு நமக்குள் இருக்கிறது என்றாலும் “சிவன் இராத்திரி நீ விழித்திரு…” என்றால் அதனின் உட்பொருள் என்ன…?

சிவனான இந்த உடலுக்குள் என்றும் விழித்திருக்க வேண்டும்… நஞ்சுக்குள் மூழ்கிடாது விழித்திருக்க வேண்டும்…
1.நீலகண்டா…! என்று சிவனின் தத்துவமாக நஞ்சினைத் தனக்குள் அடக்கி இருப்பது போன்று
2.நஞ்சு உள் செல்லாது என்றும் விழித்திருந்து… ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை ஒடுக்கி
3.வைரம் எவ்வாறு ஒளி வீசுகிறதோ… பாம்பினம் தனக்குள் எடுத்த நஞ்சினை நாகரத்தினமாக ஒளிச் சுடராக எப்படி மாற்றுகின்றதோ…
4.அதைப் போன்று ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “நாம் மாற்றிடும் விழிப்பு நிலையைக் காட்டுவதற்காக”
5.மகா சிவன் ராத்திரி என்று “ஆறாவது அறிவு கொண்டு நாம் விண் செல்ல முடியும்” என்று ஞானிகள் இதை எல்லாம் நமக்குக் காட்டினார்கள்.

காவியங்களில் தெளிவாக இது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது… இருந்தாலும் மகரிஷிகள் காட்டியது காலத்தால் மறைந்து விட்டது. ஆனால் குரு நமக்கு இன்று அதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

விஞ்ஞான உலகில் தன்னையே மறந்துவிடும் நிலை இருக்கும் பொழுது அதிலிருந்து மீண்டு சிந்திக்கும் ஆற்றல் பெற… மனிதன் என்ற முழுமை பெற… குருநாதர் நமக்கு வழி காட்டுகிறார்.

ஓ…ம் என்று பிரணவமாகிய யானைகள்

 

உலகோதய எண்ண ஓட்டத்தில் நாம் செயல்படும் காலங்களில் கீழாம் அறிவு நிலையில் பூவி ஈர்ப்பின் சுவாச ஈர்ப்பில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம். (இதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது).

அலைக்கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாது
1.நம்முடைய எண்ண வலு வீரியமும் கீழான அறிவு என்ற செயலுக்கே ஈர்க்கப்பட்டு
2.அந்தந்த இச்சையின் குணங்களை ஏற்படுத்திக் கொண்டு கலக்கமுறும் காலங்களாக
3.மீள வழியில்லாதபடி மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் கால சகடத்திலேயே (CYCLE) சுழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மை உயர் ஞானத்தைப் பெற விழைவோனுக்கு இதைப் போன்ற பந்தக் கட்டுக்களைத் தகர்த்தெறிய ஞானிகளால் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்டதே “மத்தகமும் கோடும் (கோடாயுதமும்)…!”

1.தீதெண்ணச் சங்கட அலைகளை எல்லாம் தவிர்த்து
2.மனித எண்ணம் என்ற உறுதி… “மலை மேல் நின்று…!”
3.காரிருளாகக் காட்டிய அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்.

சிற்றறிவின் ஆசைகள் எல்லாம் அகன்று பேரின்ப சாயுஜ்யமாக (உயிருடன் கலக்கும் நிலை) மேலாம் அறிவின் ஞானமாகப் பரவெளி ஞானத்தில் கலந்திடும் செயலுக்குத் தத்துவமாகக் காட்டப்பட்டதே “நீல வண்ண ஒளி பெறும் ஆத்மாவின் மறைபொருள்…”

1.மத்தகம் என்றாலே முன் மூளைப்பகுதி இரண்டும் சிறு மூளைப் பகுதி ஒன்றாக
2.ஞான உணர்வின் எண்ணம் ஆட்கொண்ட காலத்தில்
3.நெற்றிப் பொட்டில் ஜோதித் தத்துவமாக அறிந்திட வேண்டிய செயல் ஆகும்.

நீலவண்ண ஆத்மா சூட்சமத்தில் கலந்திடவே பேரின்பப் பெருநிலையில் இணைந்து செயல் கொள்ளும் மேலெழும் சக்தியாகக் காட்டியதே கணங்களின் பதி… “கணபதி…”

1.பரவெளியில் படர்ந்துள்ள ஒளிகாந்த மின் நுண் அணுக்கள் (நடத்திடும்) எண்ணம் கொண்டு (நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள்)
2.ஒன்றுடன் ஒன்று இணையும் செயலில் உயிர் ஆத்மாவாக மேலும் எண்ண வலு கூட்டிக் கொள்ள ஈர்த்திடும் தொடரில்
3.அதன் எண்ணமே வீரியமாகச் செயல் கொண்டிடும் பக்குவத்தில்
4.சரீரத்தில் ஆண் பெண் சங்கமத்தில் கருவாகத் தோன்றி வினையின் நாயகன் விநாயகன் என்ற சொல்லுக்கேற்ப
5.மேற்கொண்டு தான் ஈர்த்து உயிராத்மாவாகப் பின் கருவாக வந்துதித்த செயலில்
6.அதே எண்ண வலுவின் ஈர்ப்பினால் மேன்மேலும் உயிரணுக்களைக் கூட்டிக் கொண்டு
7.கணங்களாகிய சரீர உயிரணுக்களுக்கு.. “உயிராத்மா” – பதி என்ற பொருள்பட கணபதி ஆகின்றது.

அதே நிலை மனிதச் சரீரத்திலும் உயர் ஞான அறிவு கொண்டு விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் ஓ…ம் என்ற ஒலி நாதம் சொல் வடிவ சூட்சமாகச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

1.சிரசைக் காட்டி… சிரசில் மேற் பகுதி அசையா நிலையும்
2.தாடை என்ற கீழ்ப் பகுதி அசையும் நிலையும்
3.ஓ…ம் என்ற பிரணவமாகிய யானைகள் கலந்தன..! என்று சூசகப்படுத்தி
4.வாயிலும் உள் நாக்கில் மேலெண்ண நடுப்பகுதியும் உச்சிக்குக் கீழும் ஒளியின் சுடர்ந்த நிலையைத் தெளிவுபடுத்திக் கூறியவற்றில்
5.கடைவாயின் பற்கள் விநாயக உருவத்தில் கொம்பு என்றெல்லாம் மறைமுகப்படுத்தியதற்குப் பொருள்கள் பல உண்டு.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்திடல் வேண்டும்.

மனிதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உடல் பற்றில் வரும் எத்தனையோ எண்ணங்களையும் உணர்வுகளையும்
1.வைராக்கிய சிந்தனை என்ற கொம்பாயுதம் கொண்டு
2.மத்தகத்தால் தகர்க்கப்பட்டால்
3.மெய் ஞானிகள் பெற்ற மேலாம் அறிவு நிச்சயம் சித்திக்கும்…! என்பதே பொருள்.

விண்ணிலிருந்து வந்த நாம்… (வாழ்க்கையின்) “திசையைத் திருப்பி” மீண்டும் விண்ணுக்கே செல்ல வேண்டும்

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பரிணாம வளர்ச்சியாக… அதாவது மகா சிவன்ராத்திரி கண்ணில் புலப்பட்டது… விண்ணுலகில் கற்று உணர்ந்தது
1.அவை அனைத்தும் நமக்குள் சேர்த்துத் “தட்சிணாயனமாக” விளைந்து வருகின்றது
2.உடலின் ஈர்ப்புக்குள் நாம் இருக்கின்றோம் என்ற நிலையையே அவ்வாறு காட்டப்பட்டது.

அதே சமயம் பங்குனி உத்திரம்… உத்தராயணம் என்பது மனிதனின் ஆறாவது அறிவாக…
1.திசை மாற்றி ஒவ்வொன்றையும் இணைத்து
2.திருப்பி வளர்த்துக் கொள்ளும் நிலை பெற்றது.

அதாவது ஆறாவது அறிவின் துணையால் பிறவி இல்லா நிலை அடையும் தன்மை பெற்றது தான் உத்தராயணம் என்பது.

பங்குனி உத்திரம் (உத்தராயணம்) தினத்தை ஆறாவது அறிவான முருகனுக்கு விசேஷமாகக் காட்டினார்கள் ஞானிகள். அதனின் பொருள் என்ன…?

1.மாற்றி அமைக்கும் சக்தி கொண்டு… தன்னுடைய திசையை மாற்றி
2.உடல் பெறும் நிலையை மாற்றி… ஒளி பெற்ற ஞானியின் உணர்வைத் தனக்குள் இணைத்து
3.ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்திடும் நிலையாக உருவாக்கப்பட்டது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் (முருகன்) என்பது.

ஒவ்வொரு சரீரத்திலும் எதனை எதனை இணைத்து அது உருபெற்றது என்ற நிலையை மனிதனாக ஆனபின் இவை அனைத்தும் அறிவிக்கும் நிலையாக (ஆறாவது அறிவு முருகன்) உத்தராயணம்.

மனிதனான பின்… தான் திரும்பி… மீண்டும் பிறவிக் கடலில் சிக்காதபடி) ஒளியின் சிகரமாக உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மகரிஷிகள் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். அது தான் உத்திரம்…!

பங்குனி உத்திரம் அன்று காவடி ஆட்டம் ஆடி பால் குடம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்தால்… இந்த வாழ்க்கைக்கு அவன் செய்து தரப்போவதில்லை.

தீர்த்தங்களை எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்கிறோம் என்றால்…
1.ஞானிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கள்… நல்ல உணர்வின் இயக்கங்களாக மகிழச் செய்யும் உணர்வின் தன்மையாக
2.சப்தரிஷிகளின் சக்தி நமக்குள் பெற முடியும்… அதனை நாம் நுகர்ந்து எடுக்க வேண்டும்.
3.மயில் நஞ்சானதை உணவாக எடுத்தாலும் தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுவது போன்று நாம் மகிழ்ந்த நிலை பெற முடியும் (மகிழ்வாகனா).

ஞானிகள் காட்டியது ஆடல் பாடலுடன் மகிழ்ந்திடும் நிலையாக மகரிஷிகளின் உணர்வை எடுத்து மனிதனை உற்சாகப்படுத்தும் நிலைகள் வர வேண்டும். ஆனால் மயிலின் தோகையை வைத்துக் காவடி ஆட்டம் ஆடுவார்கள்… இது வெறும் ஆட்டமே…!

உற்சாகத்தில் மறைந்து உடல் சோர்வடைவதும்… ஆடிய ஆட்டங்களால் கால்களில் தொய்வடையும் பொழுது அதனால் வேதனைகள் வருகிறது.

ஆக… பாலில் இனிப்பையும் பாதாமையும் கலந்து விட்டு அதற்குள் நஞ்சினை இணைப்பது போன்று
1.வேதனையைத் தான் நாம் உருவாக்க முடிகின்றதே தவிர
2.ஞானிகள் உணர்வை நாம் பருகுவதில்லை.

“ஐதீகம்…” என்றும் முருகனுக்காக வேண்டி தன் உடலை இம்சித்துக் கொண்டால்… அதாவது உடலில் ஊசிகளைக் கோர்ப்பதும் கொக்கிகளைக் கோர்ப்பதும் அதை வைத்து முருகனை இழுத்துச் சென்றால் அவன் மெச்சி நல்லது செய்வான்…! என்று வேதனையை உருவாக்கித் திசையை மாற்றித்தான் இன்று நாம் வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் உத்தராயணம் என்பது
1.மனித வாழ்க்கையில் இன்னொரு பிறவிக்கு வருவதைத் திரும்பிப் பார்க்காதபடி
2.உயிரின் துணை கொண்டு அருள் உணர்வுகளை இணைத்து
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றி விண்ணுலகம் செல்வது தான்…!.

எந்த விண்ணிலே தோன்றினோமோ (உயிர்) அது கீழே வரும் பொழுது தட்சிணாயணம்…! சூரியனின் ஈர்ப்பின் தன்மைகள் அதனின் ஓட்டத்தில் ஓடும் இதனுடைய சுழற்சி வட்டத்தில் வருவதை
1.மீண்டும் விண்ணை நோக்கித் திசை திருப்பி
2.அருள் உணர்வின் ஆற்றல் கொண்டு ஒளியின் சரீரமாகி
3.விண்ணுலகில் மிதந்து கொண்டுள்ளார்கள்.

மகரிஷிகள் அவருடைய வாழ்க்கையில் துருவப் பகுதியிந் வழி விண்ணிலிருந்து வரும் தீய உணர்வின் தன்மையை ஒளியாகத் தனக்குள் மாற்றி ஒளியின் சிகரமாகி… பிறவியில்லா நிலையாக… என்றும் பதினாறு என்று உயிருடன் ஒன்றி நிலை கொண்டுள்ளார்கள்.

பூமிக்கு(ள்) வரும் நிலைகள் தட்சிணாயணம்…! அது கவரும் நிலைகளை
1.உத்தராயணம் பகுதியில் இருந்துதான் வட துருவப் பகுதியிலிருந்து தான் இது கவர்கின்றது.
2.ஆறாவது கொண்ட மனிதன் அந்த வட துருவப் பகுதியில் நின்று (உத்தராயணம்) தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் இணைத்து… விண்ணிலிருந்து வரும் துகள்களைத் தனக்குள் உணவாக எடுத்து நஞ்சினை ஒடுக்கி
4.வைரம் ஒளியின் சிகரமாக (ஜொலிப்பது) இருப்பது போன்று ஒளி நிலை பெற்றவரே அந்த மகரிஷிகள்.
5.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்த எல்லையை நாமும் அடைதல் வேண்டும்.

விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றும் “நீலகண்டனாக நாம் ஆகவேண்டும்”

 

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று…
அறிவை அறிவால் அறிதலே நன்று…!

1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட
2.மேலாம் அறிவு சித்தித்தது…! என்பது மெய்ப் பொருள் காணும் நிலை.

வழி வழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்…!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது. குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று.

ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது அதை அளிப்பதற்கும்
3.தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

ஆக தான் பெற வேண்டியதைப் பெற்றே உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன் மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெற வேண்டியவன்…
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு…
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து…
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது…!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே.

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்… உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது…!”

ஓ…ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ…ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “{மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி… “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளி காந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கிவிட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்…! (நீலகண்டா…! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும்)

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

 

நீங்கள் எத்தகைய துயர் பட்டுக் கொண்டிருந்தாலும்… அல்லது சாபவினைகளோ பாவ வினைகளோ தீய வினைகளோ உங்களுக்குள் சேர்ந்திருந்தாலும்… அதை எல்லாம் நீக்க
1.யாம் உபதேச வாயிலாக… அருள் வாக்கின் தன்மையாக
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி உள்ளேன்.

ஆனால் வாக்கினைக் கொடுத்த பின்பும் அதை நீங்கள் விரயம் செய்தால் அது உங்களுடைய அதிர்ஷ்டம் தான்.

நீங்கள் எல்லோரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சதா உங்கள் உயிரை ஈசனாகவும் ஆண்டவனாகவும் குருவாகவும் மதித்து நான் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

நீங்களும் அதே போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் தொடர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

காலையில் எழுந்தபின் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் நோயை மறந்து விடுங்கள்… நோயின் தன்மை அது செயலிழந்து விடும்.

1.எந்த அளவுக்கு யாம் கொடுத்த வாக்கினை நீங்கள் கூட்டிக்கொண்டு வருகின்றீர்களோ
2.அது அனைத்தும் உங்களுக்குள் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விடும்பொழுது அந்த நஞ்சின் தன்மை வலு இழப்பது போன்று நீங்கள் “ஆயிரம் தரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் கூட்டினால்” உடலில் உள்ள நோய்கள் தானாகவே போய்விடும் அது செயலிழந்து விடும்.

1.காலையில் படுக்கையில் கண் விழித்த பின் இதைச் செய்யுங்கள்
2.அதற்குப் பின் இடைவெளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள்
3.வெளியிலே வாகனங்களில் சென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்
4.இரவிலே படுக்கையிலே படுக்கும் போதும் அதே மாதிரி எண்ணுங்கள்.

உயர்வான உணர்வுகள் உங்களுக்குள் பெருகத் தொடங்கும்… பின் நினைவின் எண்ணங்கள் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக மாறும்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்களை அறியாது சேர்ந்து தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் நீங்க வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து எங்கள் தொழில்களிலும் படர்ந்து குடும்பத்தில் உள்ளோர் மன பலம் மன நலம் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும்.

எங்களிடம் தொழில் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று… மன பலம் மன நலம் உடல் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும் சீராக வேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று இதைப் போல் எண்ணுங்கள்.

இப்படி எண்ணும் போது இங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் மனமும் உயர்ந்த நிலையில் இருக்கும்.
1.உங்கள் எண்ணங்கள் விண்ணை நோக்கிப் பற்றும்.
2.இதற்கு முன் உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் நசியும்.
3.ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
4.இந்த உணர்வின் தன்மை எட்டா தூரத்தில் இருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகளை எட்டும்படி செய்யும்…
5.உங்களுக்குள்ளேயே அந்த இயக்கங்கள் வருவதைப் பார்க்கலாம்.

பின் எந்த சாப வினைகளும் உங்களை அணுகாது. அதே சமயத்தில் உங்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய சாப வினைகளைப் போக்கும் சக்தியும் பெறுவீர்கள்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதே போன்று நோய்களைப் பற்றி எண்ணாது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.