குரு என்றால் யார்…?

குரு என்றால் யார்…?

உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது. உயிர் ஒளியின் சிகரமாக இருக்கும் பொழுது அதனின் அறிவாக இயக்குகின்றது.

இந்த உடலின் வாழ்க்கையை ஞானத்தின் நிலைகள் கொண்டு சிந்தித்து பாருங்கள். குருவை நாம் எப்படி மதிக்க வேண்டும்…?

1.உங்களைப் பழித்துப் பேசும் உணர்வுகளையோ உங்களைத் துன்பப்படுத்தும் நிலைகளையோ நான் எண்ணினேன் என்றால்
2.அது என் உயிரான குருவிற்கு நான் செய்யும் தீங்கே ஆகும்.

அதாவது இந்த உயிரால் வளர்க்கப்பட்ட உண்மையின் உணர்வை மறந்து… நான் எடுக்கும் உணர்வுகள் எனக்குள் வந்தால் அது “குருவிற்கு நான் செய்யும் துரோகம்…”

எண்ணிலடங்கா நரக வேதனையின் நிலைகள் உயிரால் உருவாக்கப்பட்டு எத்தனையோ நிலைகள் உயர்ந்த நிலைகள் கொண்டு சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டது தான் இந்த உயிர்.

பல சரீரங்களில் பல தீமைகளிலிருந்து விடுபட்டு நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர்.
1.அப்படிப்பட்ட உயிரை மதிக்கத் தவறினால் அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
2.துரோகிளுக்கு உறுதுணையாகப் போனவர்களின் நிலைகள் நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

நமது குரு பைத்தியக்காரர் போல் இருந்தார். காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானையைக் காட்டி அந்த யானையிடமிருந்து தப்பிக்க “யானையுடன் நட்புக் கொள்ள வேண்டும்…” என்றார்.

பூனை எப்படி எலியின் உணர்வை நுகர்ந்து அந்த மணத்தைக் கொண்டு எலியை உணவாக உட்கொள்கின்றதோ அதைப் போல
1.“யானையின் மணத்தை நுகர்ந்து கொள்…”
2.திரும்பத் திரும்ப நுகர்ந்து அந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சு.
3.அதனுடைய எண்ணங்களுக்கு வரும் பொழுது யானை வலுவுடையதுதான் என்றாலும் அதன் வலுவின் தன்மை உனக்குள் சிக்கி
4.அது தாக்கும் நிலையில் இருந்து நீ தப்பிக்கலாம் என்றார்.

சில நேரங்களில் காட்டுக்குள் போகும் பொழுது குருநாதர் எமக்கு அனுபவத்தைக் கொடுத்தார். அந்த அனுபவத்தைத் தான் சொல்கின்றேன். நீங்கள் அலட்சியப்படுத்தினால் எனக்கு ஒன்றும் இல்லை.

அலட்சியப்படுத்துவோர்கள் உணர்வுகளுக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தைத் தவறவிட்டதாக ஆகி விடும்.

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்

 

நாம் எத்தனையோ பேருக்கு உதவி செய்கின்றோம். ஒரு சந்தர்ப்பத்தில் ரோட்டில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். நம்மிடம் நல்ல உதவிகளைப் பெற்றவர் அங்கே செல்கின்றார்… பார்க்கின்றோம். அதே சமயத்தில் அவர் அவசரமாகப் போகின்றார்.

நாம் அவர் பெயரைச் சொல்லி “இங்கே வாப்பா…” என்று கூப்பிடுகின்றோம். இருங்கள்… கொஞ்சம் நான் வந்து விடுகிறேன்…! என்று அவர் சொல்கின்றார்.

1.பார்…! அன்று காசு வாங்குவதற்கு நம்மைத் துரத்தி துரத்தி வந்து வாங்கிச் சென்றான்.
2.இன்று நாம் கூப்பிடுகின்றோம் வரமாட்டேன் என்கிறான்.
3.காசு வாங்குவதற்காக அன்றைக்கு என்னை மதித்தான்.
4.இப்பொழுது கூப்பிடுகிறேன்… அவன் ஓடுகின்றான்…! என்று நாம் சொல்வோம்.

ஆனால் அவருடைய சூழ்நிலை எது…? ஒரு முக்கியமான காரியத்திற்கு இரயிலுக்குச் செல்பவர்கள் அதற்குண்டான டிக்கெட்டை மறந்து வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அந்த நேரத்திற்குள் கொண்டு போய்க் கொடுத்தால் தான் செல்ல முடியும்.

வண்டியில் ஏறிய பின் அங்கே அந்த டிக்கெட் இல்லை என்றால் அவர்கள் முழிப்பார்கள். ஆகையினால் வண்டி கிளம்புவதற்கு முன் அதைக் கொடுக்க வேண்டும் என்று அவசரமாகச் செல்கிறார்.

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்…? கூப்பிட்டதற்கு மரியாதை செலுத்தாமல் செல்கின்றான் பார்…! என்ற இந்த உணர்வு தான் மனிதனுடைய வாழ்க்கையில் தூண்டுகிறது.

ஒரு தடவை நாம் உதவி செய்தால்…
1.இரண்டாவது அவரை நாம் கூப்பிடும் பொழுது வரவில்லை என்றால் உடனே அவர் மேல் பகைமை ஆக்கிக் கொள்கின்றோம்.
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது மாதிரி நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
3.எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் உடனடியாக அங்கே பகைமை ஆக்கி விடுகின்றோம்.

இதற்குக் காரனம் என்ன…?

நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை அப்படி இயக்குகிறதே தவிர “நம் ஆறாவது அறிவை அங்கே சரியாகப் பயன்படுத்தவில்லை…” என்று தான் பொருள்.

அதை எப்படிச் சீராகப் பயன்படுத்த வேண்டும்…? என்பதற்குத்தான் ஞானிகள் எத்தனையோ காவியப் படைப்புகளைக் கொடுத்துள்ளார்கள்.

இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…!
1.தீமையை நீக்கிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால்
2.உயிரிலே பட்டுக் கிரியை ஆகி
3.அந்த ஞானத்தின் வழி நம் உடலை அது இயக்கும்.

சிவனுக்கே ஓதினான் ஓம் என்ற பிரணவத்தை…! இந்த உடலிலே பிறந்தது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா… சிவத்திற்குள் விளைந்தது தான். ஆனால் வேதனை என்ற உணர்வை நுகர்ந்த பின் அந்த உணர்ச்சிகள் பிரணவமாகி அதுவே நம்மை இயக்குகின்றது.

ஆறாவது அறிவு படைத்தவன்…
1.“இது நமக்குத் தீங்காகும் இருள் சூழ்ந்த நிலையாகும் வேதன என்ற நிலையாகும்” என்று தெரியக்கூடிய நிலையான கார்த்திகேயா
2.இந்த உடலில் விளைந்த அந்த உணர்வுகள்… இந்த உடலுக்குத் தீங்கு வராது பாதுகாக்கச் செயல்படுகின்றது.

தீமையை நீக்கிய அருள் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் அதை நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டுக் கிரியை ஆகின்றது. அதன் வழி நம் எண்ணம் சொல் செயலாகி தீமையை நீக்கி வாழ்க்கை ஒழுங்குபடுத்த இது உதவும்.

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நாம் இச்சைப்பட வேண்டும். இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் உயிரிலே பட்டுக் கிரியை ஆகி
1.நாம் சிந்தனை இழந்து இருந்தாலும் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்து அதன் வழி செயல்படும் சக்தி கிடைக்கும்.
2.குறைகள் கூறுவதை விட்டுவிடலாம்… மன நிறைவு என்றுமே நமக்குள் வளரத் தொடங்கும்.

உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்… கொடுக்கின்றேன்.
1.யாருமே செய்யாததை உங்களுக்குச் செய்து கொடுத்துள்ளோம்.
2.எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்தச் சக்தியை நீங்கள் எண்ணி எடுக்கலாம்… தீமைகளைப் போக்கலாம்.

மற்றவர்களை நல் வழியில் வழி நடக்க “நம் சொல்” உதவ வேண்டும்

மற்றவர்களை நல் வழியில் வழி நடக்க “நம் சொல்” உதவ வேண்டும்

 

நம்முடைய குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம். பற்றுடன் நாம் சொன்னாலும் அவனால் ஏற்க முடியாது சந்தர்ப்பத்தால் படிப்பில் மந்தமாகின்றான்.

அப்போது நம் உணர்வு என்ன செய்கிறது…?

1.எண்ணியபடி அவன் படிக்கவில்லை என்கிற போது வேதனை உருவாகின்றது.
2.இவ்வளவு தூரம் படிக்க வைத்து இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்ற வேதனையை எடுத்துக் கொள்கிறோம்.

பாலிலே பாதாமை போட்டு பல சத்துக்களைப் போட்டாலும் விஷத்தைப் போட்ட பின் அதற்குச் சத்து இருக்கின்றதா…? இல்லை.

இதைப் போன்று தான் குழந்தை நல்ல முறையில் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று விரும்பினாலும் அப்படி நடக்கவில்லை என்கிற பொழுது வேதனையாகி அது வளர்ந்த பின்…
1அடுத்து நல்ல முறையில் அவனை வளர்க்க முடியும் என்ற சிந்தனை வருகின்றதா…?
2.உங்கள் நல்ல எண்ணங்கள் வீணாகத் தொடங்குகிறது.
3.நம்மை அறியாமலே குழந்தையைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பு.
4.குழந்தையைப் பற்றி யாராவது பேசினால் அவர்கள் மீதும் வெறுப்பு.
5.வேறொரு குழந்தை நம் குழந்தையுடன் விளையாண்டாலும் அந்தக் குழந்தை மீதும் வெறுப்பு வருகின்றது.

ஏனென்றால் இப்படிப்பட்ட உணர்வுகள் பதிவாகி வளர்ந்த பின் வெறுப்பான உணர்வு தான் அலைகளாக மாறுகின்றது. அப்பொழுது அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்…?

வேதனை என்று வரும் பொழுதெல்லாம்… “யாம் உங்களுக்குள் பதிவு செய்த ஞான வித்தினை எடுத்து” ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஏங்க வேண்டும்.

நாம் எடுக்கும் உணர்வுகள் உயிர் வழி சென்று தான் உடலுக்குள் செல்ல வேண்டும். அங்கே தடைப்படுத்தி விட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.என் குழந்தை கல்வியில் சிறந்த ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும்
2.பொருளறிந்து செயல்படும் அந்த ஞான சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உருவாக்கி
3.”அந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது” அவருடைய செவிகளிலே படுகின்றது.
4.அப்பொழுது நம் சொல்லை ஈர்க்கும் தன்மை அவன் கண்ணுக்கு வருகின்றது.
5.அவன் உடலுக்கு அருகில் அந்த உணர்வலைகள் வந்த பின் மூக்கால் நுகரும் தன்மை பெறுகின்றான்
6.சுவாசித்த பின் அந்தக் குழந்தைக்கு உயிர் வழி உணர்ச்சிகளை ஊட்டும் அந்தப் பருவம் பெறுகின்றது.

இப்படித்தான் அதைத் திருத்த வேண்டும்.

இல்லை என்றால் வேதனை என்ற உணர்வாகி அவன் மீது இருக்கும் நல்ல அன்பு நம்மிடம் முதலில் மறைகின்றது. பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பு தான் வரும்.

ஆகவே இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற ஆயதத்தைக் கொடுத்துள்ளோம்.

எப்பொழுது எந்த நிமிடம் எதை எடுத்தாலும் ரேடியோ டிவி அலைவரிசைகளில் வேலை செய்து காற்றிலிருந்து எடுப்பது போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்தக் காற்றில் கலந்திருப்பதை உடனடியாக எடுத்து உடல் முழுவதும் படரச் செய்தால்
2.அதைப் பிரித்து உங்கள் ஆன்மாவாக மாற்றி இந்த உணர்வின் வலு கொண்டு “அந்த உணர்வின் சொல்லாக”
3.குழந்தை இப்படித்தான் வரவேண்டும் என்று எண்ணினால் உங்கள் வழிப்படி நல்ல உணர்வு பெறுவான்,

ஆனால் இப்படி ஒரு தரம் சொல்லி அவன் கேட்கவில்லை என்றால் மறுபடியும் வேதனையை எடுத்து “என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான்…” என்று எண்ணி விட்டால் மீண்டும் பழைய நிலைக்கு ஆகிவிடும்.

திரும்பத் திரும்ப இந்த அருள் வழியில் நாம் செயல்பட்டு இந்தக் குழந்தை இப்படித்தான் வளர வேண்டும் என்று நிர்ணயித்து அதன் உணர்வை நாம் எடுத்துக் கொண்டு
1.நீ இப்படிச் செய்தால் உனக்கு நலமாகும் என்று உணர்த்திப்
2.பல முறை அவனுக்குச் சொல்லித் திருத்தும் நிலைக்கு வர வேண்டும்.

நீங்கள் மட்டும் அல்ல உங்கள் மனைவியாக இருந்தாலும் அல்லது உங்கள் கணவனாக இருந்தாலும் இதைப் போன்று அவர்களுக்கும் இதைச் சொல்லி ஒன்று சேர்ந்த நிலையில் இந்த முறைப்படி செய்தால் கூடுமான வரையிலும்
1.முதலில் சரியாகவில்லை என்றாலும் கணவன் மனைவி இருவருமே ஒருங்கிணைந்த நிலையில் ஞானத்துடன் செயல்பட்டு
2.உங்கள் வழியில் அந்தக் குழந்தைக்கு அருள் ஞானத்தை ஊட்ட முடியும்.

நமக்கும் நல்லதாகிறது… குழந்தைக்கும் நல்லதாகிறது. குடும்பத்தைச் சீராக்கவும் இது உதவும். அருள் ஞானத்தை ஊட்டி அனைவரும் நல் வாழ்க்கையாக வாழ முடியும்.

“மெய் ஞானம் பெற வேண்டும்” என்று விரும்புபவர்கள் தான் இங்கே இருப்பார்கள்

“மெய் ஞானம் பெற வேண்டும்” என்று விரும்புபவர்கள் தான் இங்கே இருப்பார்கள்

 

யாம் எல்லா இடங்களுக்கும் சுற்றி அனுபவங்கள் பெற்ற பிற்பாடு தான்
1.இந்தச் சக்தியை உங்கள் அனைவருக்கும் எப்படிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொண்டேன்.
2.குரு வழியில் இப்பொழுது அதைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆனால் எம்மைப் போற்ற வேண்டும் என்று யாம் விரும்பினால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அடேயப்பா… எங்கள் சாமி பெரியவர்…! என்று சொல்ல வைக்கலாம்… இங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் எதற்கு வரும்…?

இப்பொழுதும் கூட்டங்கள் வருகின்றது… ஆனால் அதை நான் கழித்து விட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன். உண்மையான நிலைகள் பெற வேண்டும் என்று விரும்புவர் இதிலே தங்கி இருப்பார்கள்.

உடல் இச்சைக்கு என்று கேட்டு வருபவர்கள் குறைத்தே தான் இருக்கும்.

1.அருள் வழியில் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று விரும்புவர்களுக்கு
2.அந்தச் சத்தை ஏற்றிக் கொடுத்து கொண்டே இருப்பேன்.

முழுமையாக இந்த உடலுக்கு வேண்டும்… தன் வாழ்க்கைக்குக் தான் வேண்டும் என்று எண்ணி வருபவர்களை நான் “சிறிது சிறிதாகக் கழித்து விட்டு விடுவேன்…”

இந்த உடலை வைத்துத் தான் நாம் உயர்ந்த சக்தி பெற வேண்டும்… அருள் ஞானத்தைப் பெற வேண்டும். நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவரையும் பெறச் செய்யலாம். நீங்கள் வளர்ந்தால் தானே…!

நான் ஒருவன் என்ன செய்ய முடியும். என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது. நான் நினைக்கலாம் யானையைப் பண்ணலாம் பூனையைச் செய்யலாம் என்று. அப்படிச் சொன்னால் “அது வெறும் திமிர்தான்…! அப்படி ஒன்றும் செய்ய முடியாது…”

ஒரு நெல்லை எடுத்துப் பல நெல்களாக அதை விளைய வைத்து எல்லோரையும் பெறச் செய்யலாம்.
1.இந்த அடிப்படையில் வலுவைக் கொடுத்துத்தான் எல்லோருக்கும் உயர்ந்த சக்தியைக் கொடுக்க முடியும்.
2.குரு எனக்குக் கொடுத்தது அது தான்… அதைத் தான் உங்களையும் செய்யச் சொல்கிறேன்.

நான் அதைச் செய்கிறேன் என்று “அந்த நான்” வந்து விட்டால் அதற்குப்பின் வளர்ச்சி இல்லை… தீர்ந்துவிடும்…!

நீங்கள் வளர வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் உங்கள் பார்வை அனைவரையும் நல்லவராக்க வேண்டும்… என்ற இந்த எண்ணத்தை நான் எப்பொழுது கொண்டு வருகின்றேனோ
1.நீங்களும் வளர்கின்றீர்கள் நானும் வளர்கின்றேன்.
2.உலகத்தையும் வளர்க்க முடிகின்றது… நானும் அந்த வளர்ச்சி பெற முடியும்.

சூரியன் எதனின் துணை இல்லாதபடி தான் மட்டும் சக்தி பெற வேண்டும் என்றால் முடியாது. 27 நட்சத்திரங்கள் பிற மண்டலத்திலிருந்து வருவதை எடுத்து இங்கே கொடுக்கவில்லை என்றால் சூரியன் இயங்க முடியாது.

பிற மண்டலங்களின் சக்தி வரவில்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்திற்கும் சக்தி இல்லை. அண்டத்தில் இருப்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் சேர்க்கப்பட்டுப் பிண்டத்திற்குள்ளும் இருக்கின்றது.

1.உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றி விட்டால் அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம்…
2.என்றும் பதினாறு என்று வளர்ச்சி அடையும்… அது வேகாநிலை… எதிலுமே வேகாது.
3.2000 சூரியக் குடும்பத்தை முதலில் வட்டமிடும். பின் அதைக் கடந்து அகண்ட அண்டத்திற்கும் செல்லும்.
4.அப்படி அடைந்த ஒரு கூட்டமைப்பாகச் செல்லும்.

இருண்ட உலகமாக இருப்பது ஒளியின் சிகரமாக அகண்ட அண்டம் விளையும். அது எத்தனையோ கோடி வருடங்கள் ஆகும்.

அனைத்தும் ஒளியாக மாறிவிட்டது என்றால் அதற்குப் பின் மனித இனங்களைச் சீக்கிரமாக மாற்றும் நிலை வரும். ஒளியின் சுடராக ஒளிக்குள் எல்லாமே ஒளியாகும்.

இப்படி எத்தனையோ ஆண்டுகள் நாம் வளர்ச்சி பெற வேண்டும்.

“யாம் மறைத்துச் சொன்ன உண்மைகளை…” நீங்கள் அறிய முற்பட வேண்டும்

“யாம் மறைத்துச் சொன்ன உண்மைகளை…” நீங்கள் அறிய முற்பட வேண்டும்

 

திருமூலருக்குப் பிற்பாடு சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக யாரும் இணைந்ததில்லை.
1.வெகு காலம் இடைவெளி ஆகிவிட்டது.
2.இப்போது யாம் குருவைச் சந்தித்த பிற்பாடு தான் தொடர்வரிசையாக “ஒவ்வொருவராக நாம் விண்ணுக்குச் செலுத்துகின்றோம்…”

இனம் இனத்தைச் சேர்க்கும். எதை எடுத்தாலும் அந்தக் கூட்டமைப்பிலே சேர்த்து வளர்த்துத் தான் வளர்ச்சியைப் பெற முடியும். ஒன்று தனித்து எந்த மண்டலமும் வளராது.

ஒரு பிரபஞ்சம் இருக்கும் போது பிற மண்டலங்களிலிருந்து வருவதை எடுத்து அனைத்திற்கும் இரையாகக் கொடுக்கின்றது. இதே போன்றுதான் மனிதன் தன் உணர்வின் தன்மை எடுத்து வளர்க்கப்படும் போது அடர்த்தி… மற்றதை இழுத்துத் தனக்குள் உணவாகப் பெருக்கும் நிலை வருகின்றது.

1.தனித்து ஒன்று எங்கும் எதுவும் வேலை செய்யாது.
2.இந்த உண்மையை நாம் தெரிந்து கொண்டால் விலகி நிற்க மாட்டோம்.
3.நீயா… நானா…? என்று போர் செய்து கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

இயற்கையின் உண்மை நிலை இதுதான்.

1.ஏனென்றால் இதில் ஆயிரம் மறைத்திருக்கின்றேன்
2.இந்த உணர்வுகளை ஒவ்வொன்றாக நீங்கள் இணைத்து… உங்களுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தால்
3.குருநாதர் கண்ட அனைத்தையுமே நீங்கள் பார்க்க முடியும்.

சொல்வதை… “வெறுமனே கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தால்…” பலன் இல்லை.
1.அதைப் பெறக்கூடிய தகுதியைத்தான் உங்களிடம் உருவாக்குகின்றேன்.
2.தொடர்ந்து நீங்கள் செயல்பட்டு வந்தால் அது கிடைக்கும்… அது வளர்ச்சி அடையும்.

செடியில் உரத்தைச் சேர்க்கிறோம் என்றால் ஆவியாகச் சேருகின்றது. செடியில் இணைத்துக் கொண்டபின் அந்த ஆவி அதனுடன் இணைந்து உறையப்படும் பொழுது தன் இனமான சக்தியை எடுத்து நல்ல முறையில் வளர்க்க வழி செய்கின்றது.

செடியில் இந்த உரத்தின் சக்தி இணைந்தால் தான் வீரிய சக்தி வரும். இல்லை என்றால் பெற முடியாது. இது போன்று தான்
1.சில உண்மைகளைத் தெரியப்படுத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்…? என்பதற்காக
2.அந்த உரமான உணர்வுகளை இணைத்து உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

ஒவ்வொரு அணுக்களிலும் அதை இணையச் செய்யப் பழக்க வேண்டும். வெறும் வாயிலேயே சொல்லிக் கொண்டு போவது அல்ல…!
1.விண்ணுலக ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்றால் குரு அருளைப் பெற்றிருக்க வேண்டும்.
2.அதை உங்களிடம் கொடுத்துப் பழக வேண்டும்… அந்தப் பாதை தெரியாதது நாம் போக முடியாது.
3.குரு வகுத்துக் கொடுத்த அந்தப் பாதையைத்தான் உங்களிடம் இணைத்துக் கொண்டு வருகின்றோம்.

சூரியனின் செயலாக்கம்

சூரியனின் செயலாக்கம்

 

பிரபஞ்சம் என்பது நமது சூரியக் குடும்பம். நூலாம்படைப் பூச்சி போன்று தான் நட்சத்திரங்கள் அமிலச் சக்தி கொண்டது. அதனின் சுழற்சியில் வெளி வருவது நூலாம்படை போன்று விரிவடையும்.
1.பிரபஞ்சம் சுழன்று வரும் பொழுது நட்சத்திரங்கள் அகண்ட அண்டத்தில் இருந்து வரக்கூடிய துகள்களைச் சேமித்து வைக்கின்றது…
2.தன்னுடைய பால்வெளி மண்டலங்களாக மாறுகின்றது.

கார்த்திகை நட்சத்திரம் முன்னாடி இருக்கின்றது… மீதி நட்சத்திரங்கள் அனைத்தும் அதற்கடுத்து வரிசையில் இருக்கும். எத்தனையோ தூரத்திலே ஒவ்வொன்றும் கீழே இருக்கும்.

சூரியனின் சுழற்சி வேகத்தில் வரும் பொழுது அது மிகவும் பின் தங்கி வரும். இரண்டாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வரும். மூன்றாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வரும்.

சூரியனை ஒட்டி இருக்கப்படும் பொழுது கோள்களும் இதே போன்றுதான் ஒவ்வொன்றும் தன் தன் வித்தியாச நிலைகள் சுழன்று கொண்டிருக்கும்.

பிற மண்டலத்திலிருந்து வரக்கூடிய துகள்கள் நட்சத்திரங்களின் பால்வெளி மண்டலங்களில் ஒட்டிக் கொள்கின்றது. சுழற்சி ஆகும் பொழுது அது எல்லாம் தூசியாகின்றது.
1.அதற்கடுத்து இன்னொரு நட்சத்திரம் அதை இழுக்கும்.
2.இடைமறித்து வரும் பொழுது இதற்கும் அதற்கும் இரண்டு கலவைகள்.
3.இப்படி இந்த 27 நட்சத்திரக் கலவைகள் தூசிகளாக வருவதைத் தான் இடைமறித்து
4.முதலில் வருவதை கேது விஷத்தன்மையை எடுத்துக் கொள்கின்றது.
5.ராகு கருகிய புகைகளை எடுக்கின்றது… கலவையாகி மாற்றங்களை அனுப்புகிறது.

இப்படி ஒவ்வொரு கோளும் இழுத்துத் தன் கலவையாக மாற்றி அமைத்து உள்ளே அனுப்புகின்றது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை உணர்வுகள் கலவை ஆகி… எந்த அணுக்களிலும் எதையும் உருவாக்கக்கூடிய தன்மை பெறுகின்றது.

இந்தக் கலவைகள் வரப்படும் பொழுது மற்ற கோள்களுடன் கலக்கப்படும் பொழுது ஒவ்வொன்றும் மாற்றங்கள் ஏற்படும்.
1.அப்படி மாற்றங்கள் ஏற்பட்டுச் சூரியனுக்கு வரும் பொழுது
2.விஷத்தை எல்லாம் பிரித்துத் தூக்கி எறிந்து விடுகின்றது… ஒளியாகப் பாதரசமாக மாற்றுகின்றது.

நட்சத்திரங்கள் அனைத்தும் முதலில் அமிலமாக இருந்தது தான். இந்த உணர்வு மாற்றங்கள் ஆகி மாற்றம் ஆகிப் பாதரசமாக மாற்றும் நிலை வருகின்றது…
1.ஆக “முழுமையான விந்து… இந்த உலகை உருவாக்குவதற்கு அதுவே மூலமாகிறது…”
2.அதில் எடை கூடிய நிலை வரப்படும் பொழுது தள்ளுகின்றது… பால்வெளி மண்டலத்தில் இது எடை கூடியது…. பாதரசமாகிறது.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு அணுவின் தன்மை ஒவ்வொன்றுக்குத் தகுந்த மாதிரி இருக்கும்.

உமிழ்த்தி வெளியே வரப்படும் பொழுது… பிற மண்டலங்களிலிருந்து இழுக்கக்கூடியதை எதிர் நிலையில் மோதப்படும் பொழுது சூரியனுக்கு வெளிப்புறத்திலே ஏற்படும் வெப்பம் தான் “நாம் காணக்கூடிய வெயில்…”
1.ஆனால் சூரியன் குளிர்ச்சியான பூமி.
2.சூரியனுக்குப் பல ஆயிரம் மைல்களுக்கு அந்தப் பக்கம் தான் இந்த மோதல்கள் நடக்கின்றது.
3.வெப்பமாகிக் கெட்டது அனைத்தையும் தூக்கி எறிந்து விடுகின்றது.

பெட்ரோமாக்ஸ் விளக்கில் பார்த்தோமென்றால் உள்ளே ஒரு துணி தான் இருக்கும். பெட்ரோல் அதிலே ரோலிங் ஆக ஆக நெருப்பாகி வெளிச்சமாகத் தெரிகின்றது. பெட்ரோல் அதிலே வரவில்லை என்றால் உடனே அது கருகிவிடும்.

இதே போல் தான் சுழற்சியின் தன்மையில் அடித்து வீசப்படும் பொழுது மற்றதுகளை எடுத்து விஷத்தைப் பிரிக்கிறது. அந்த மோதல் ஏற்படும் போது ஒரு ஈர்ப்பின் தன்மை வருகின்றது… “அது தான் காந்தம்…!”

இழுத்துக் கொண்டபின் விஷத்தின் தன்மை அதிலே கலந்து விடுகின்றது. கலந்து வெளியே வரப்படும் பொழுது “எலக்ட்ரிக்…” அது இயக்கச் சக்தியாக இயக்க அணுவாக மாறுகின்றது.

இது மெய் ஞானப் பாடம். குருநாதர் இதை எடுத்துக் காட்டி
1.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது எப்படி திடப்பொருளாகின்றது…?
2.இன்னொரு பொருளைச் சேர்த்த பின் இது ஆவியாக எப்படிப் போகின்றது…?
3.ஆவி வெளியே போன பின் பொருள்கள் எப்படி இணைகின்றது…? என்று காட்டுகின்றார்.

ஒன்று அல்ல கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான் கடவுள்

ஒன்று அல்ல கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான் கடவுள்

 

நமது உயிர் நட்சத்திரத்தின் தன்மை பெற்றது தான். ரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் அதனுடைய தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதி “அதிக அழுத்தமாகும் பொழுது” உயிரணுவாக உருவாகிறது.

அதே போல மின்னல்கள் ஒலிக்கற்றைகளாக வீசப்படும் பொழுது பலவாறு கல் மண் இவைகளில் அது கலந்து விடுகின்றது. அவ்வாறு கலந்து விட்டால் மண்ணிலிருந்து விளையும் தாவர இனங்களிலும் அது கலக்கின்றது.

1.நட்சத்திரங்களின் இயக்கம் எப்படி இந்த உயிரணுவிற்குள் ஒன்றுடன் ஒன்று கலவையாகித் துடிக்கின்றதோ இது போல
2.இரண்டு நட்சத்திரங்களின் துடிப்பின் உணர்வலைகள் படரப்படும் பொழுது
3.தாவர இனங்களில் எதனின் உணர்வு… எதனின் உணர்ச்சி கொண்டு அதிகரிக்கின்றதோ அதன் வலு கொண்டு தான் தாவரங்கள் விளைகின்றது.
4.கல் மண்ணும் இப்படித்தான் விளைகின்றது.

இதை நமது உயிர் இந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து உணவாக உட்கொள்ளும் பொழுது உயிரின் துடிப்பு கொண்டு “மூன்று…” என்ற நிலை வரும்.

இரண்டு நட்சத்திரத்தின் உணர்வலைகள் எதிர்நிலையாகும் பொழுது துடிப்பின் இயக்கச் சக்தி பெறுகின்றது
1.அந்தத் தாவர இனத்தை நுகரப்படும் போது உயிரிலே படும் போது தசைகள் உடலாகின்றது.
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் எண்ணம் ஆகின்றது.
3.எண்ணத்தின் உணர்வுகள் அணுத்தன்மையாக நம்மை இயக்கத் தொடங்குகிறது.

இப்படித்தான் இயற்கையின் இயக்கங்கள்… மாற்றங்கள் வருகின்றது.

1.கடவுள் என்ற தன்மை எதுவும் ஒன்று இல்லை…!
2.அதாவது ஒன்று அல்ல கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான் கடவுள்.

அதாவது… மூன்று நிலைகள் கொண்ட உணர்வின் சத்தாகும் பொழுது அது எந்தச் சத்தைக் கவர்ந்ததோ அதனை… அதே உணர்வை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

இப்படிப் பல உணர்வுகள் சேர்த்துத் தனக்குள் வருவதை அகஸ்தியன் தன் வாழ்நாளில் அந்த நட்சத்திரங்களின் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து
1.உயிர் எப்படி உருவானதோ அதே போல
2.அந்த 27 நட்சத்திரங்களின் உணர்வினைத் தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுக ஏற்றி
3.மின்னல்கள் வெளிப்படும்போது அதை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து உடலில் மாற்றினான்.

உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி அமைத்துத் தான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதற்கு உணவு எது…?

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவதைத் தான் உணவாக எடுத்துக் கொள்கிறது. அதன் வழியில் தான் இன்றைக்கும் நஞ்சினை மாற்றி ஒளிச் சுடராக வீசிக் கொண்டுள்ளது.

சூரியனோ தனக்குள் இருக்கும் பாதரசத்தால் நஞ்சினை மோதிப் பிரித்து விடுகின்றது. மனித உடலோ உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது.

1.நஞ்சினை நீக்கிவிட்டால் நல் உணர்ச்சிகளை ஊட்டும் ஒளியின் உணர்வுகள் நமக்குள் மிஞ்சுகின்றது.
2.சர்வத்தையும் அறிந்து கொள்ளும் சக்தி பெறுகின்றது… அது தான் கார்த்திகேயா…!

“நல்லது… கெட்டது…” பற்றிய உண்மை நிலை

“நல்லது… கெட்டது…” பற்றிய உண்மை நிலை

 

உதாரணமாக ஒருவர் தன் மகன் மீது பாசமாகப் பிரியமாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவருடைய மகன் தீய பழக்க வழக்கங்களைக் கொண்டவனாக இருந்தாலும் அவன் மீது பாசம் வைத்திருந்ததால் அவன் எந்தத் தவறு செய்திருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அதே சமயத்தில் அவருடைய இரண்டாவது மகன் நல்லவனாக இருப்பான். தந்தையே தவறு செய்திருந்தாலும் தவறு என்ற வகையில் மகன் தந்தையை வெறுக்கும் பொழுது தந்தையும் அவன் மீது வெறுப்பைக் காட்டுவார்.

“இவன் அயோக்கியன்…!” நம்மையே குற்றம் சாட்டுகின்றானே இவன் மோசமானவன்… அப்பனையே எதிர்க்கிறான் பார்…! என்று தந்தை மகனையே வெறுக்கத் தொடங்கிவிடுவார். அவன் நல்லதையே செய்தாலும் “அவனைக் குற்றவாளி…” என்று தான் எண்ணுவார்.

ஆனால் முதல் மகன் தவறு செய்கின்றான். தவறு செய்தாலும் “மகனே நீ நல்லவன்டா…!” என்று அவனை ஆதரிப்பார்.

ஏனெனில் இந்த உணர்வுகள் இரண்டும் ஒன்றிக் கொள்ளும்.

மற்றவர்கள் முதல் மகன் செய்த தவறுகளைக் குற்றங்களாக அவன் தந்தையிடம் கூறினாலும் அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் “இவன் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டான்… நல்லவன்…” என்று சொல்வார்.

ஆனால் இரண்டாவது மகனைப் பார்த்து “அயோக்கியன்… இவன் தவறு செய்வான்…” என்றுதான் கூறுவார்.

முதல் மகன் மீது பாசம் அதிகமாக இருப்பதால் அவன் செய்த தப்பை ஏற்றுக் கொண்டாலும் “தப்பு இல்லை” என்று தான் அவருக்குச் சொல்ல வரும்.

இது இயற்கையின் செயலாக்கங்கள்…!
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வை நம்முடன் இணைக்கப்படும் பொழுது
2.அதே உணர்வின் தன்மை நமக்குள் செயல்படுகின்றது.

அதாவது… தம் பையனைக் கண் கொண்டு பார்த்து
1.அவன் தப்புச் செய்திருந்தாலும் கூட அவனை நல்லவன் என்று எண்ணும் பொழுது
2.அந்த உணர்வு கொண்டு அவருக்குள் படமாக்கி அவனை அவரிடத்தில் நல்லவனாக்குகின்றது.

இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” என்று உரைக்கப்பட்டது.

தந்தை செய்த தவறுகளையெல்லாம் முதல் மகனும் செய்து வருவான். இந்த நஞ்சின் உணர்வின் தன்மை அவருக்குள் வளரப்படும் பொழுது அது அவரிடத்தில் கடும் நோயாக விளைகின்றது.

ஆனால் அந்த சமயத்தில் தந்தைக்கு உதவ வேண்டிய முதல் மகனோ…
1.தந்தையால் நல்ல பிள்ளை என்று பாராட்டு பெற்றவன் கடும் நோயில் தவிக்கும் தந்தையைப் பார்த்து
2.“நீ செய்த செயல்களுக்கு நீ அனுபவிக்கின்றாய்… நான் என்ன செய்யட்டும்…?” என்று சொல்வான்.

நல்ல பிள்ளை என்று எவனைச் சொன்னாரோ அவனைப் பார்த்து “அடேய்… பாவி…!” என்று தந்தை தம் மகனைப் பார்த்துச் சொல்லும் நிலை பின் நாட்களில் வரும். இதை நாம் பார்க்கலாம்.

சில குடும்பங்களில் உணர்வின் இயக்கங்கள் இப்படி இருக்கின்றது…!

1.எந்த உணர்வுகளைக் காந்தம் (உயிரில் உள்ள காந்தமும் – உடல் அணுக்களின் காந்தமும்) கவர்ந்து தன்னிடத்தில் இணைக்கின்றதோ
2.அதனின் இயக்கமாகத்தான் அது இயக்கும்… வேறொன்றையும் இயக்காது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

“விதி…” உண்டு…! என்றால் அது எப்படி…?

“விதி…” உண்டு…! என்றால் அது எப்படி…?

 

தாய் கருவிலே சிசு வளரப்படும்போது தாய் எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வினைப் பதிவாக்குகின்றதோ அதுவே அந்தக் குழந்தைக்குப் பூர்வ புண்ணியம் ஆகிறது.
1.அந்த உணர்வே விதியாகி வளர்ச்சியாகிக் கொண்டிருக்கும்.
2.அந்தத் தருணம் வரப்படும் பொழுது அதன் பயனாக இயக்கிவிடும்.

உதாரணமாக… ஒரு தாய் நோயாளியை உற்றுப் பார்க்கிறது… அந்த உணர்வுகள் பதிவானது. நோயாளியின் உணர்வுகள் தாய் இரத்தத்தின் மூலமாகக் கருவிலே வளர்ச்சியடைந்து குழந்தையாகப் பிறக்கப்படும் பொழுது அந்த விதிப்படி அவனுக்கு நோய் வந்தே தான் தீரும்.

அதை மாற்ற ஜோதிடம் பார்த்தேன் அதைச் செய்தேன் மருத்துவரிடம் சென்றேன் என்றாலும் விதிப்படி நடக்கத் தான் செய்யும்.

மருத்துவர் கொடுக்கக்கூடிய மருந்துகள் ஒட்டாது. அந்தத் தருணம் வந்தபின் அந்த மருத்துவர் கொடுத்த மருந்தில் உள்ள நஞ்சைத் தன்னுடன் இணைத்து இணைத்து அதுவும் பெருகி அவனை வீழ்த்திய தீரும்.
1.சிறிது நாளைக்கு வலியிலிருந்து வேண்டுமென்றால் தப்பலாம்.
2.அந்த விஷத்தைத் தனக்குள் எடுத்து… மற்ற உறுப்புகளை வீழ்த்தி விதிப்படி அவன் மடிந்தே தீருவான் – விதி…!

விதி என்ற ரூபம் இப்படித்தான் வருகிறது.

பிறந்த பின் வருவதெல்லாம் அது விதியாகாது…! தாய் கருவிலே வளர்க்கப்படும் பொழுது அது எதை எதையெல்லாம் தனக்குள் உருவாக்கி உள்ளதோ “இந்த விதியின் பலனே நடக்கும்…”

தாய் கருவுற்றிருக்கும் போது ஒரு தத்துவத்தைப் பேசி உயர்ந்த ஞானத்தைப் பேசி அதன் வழி “இந்த மகான் உயர்ந்தார்…” என்ற ஏக்கத்துடன் ஏங்கி இருக்கலாம்.

சந்தர்ப்பத்தில்… குடும்பத்திலே சிக்கல்கள் அதிகமாகும் பொழுது
1.தாய் மகான்களை எண்ணி அந்த மகானின் உணர்வு தன் குடும்பத்தில் படர வேண்டும் என்று
2.அந்த எண்ணத்தைத் தாய் ஓங்கிச் செயல்படுத்தி இருந்தால் அந்த உணர்வுடன் இருக்கும் நிலையில்
3.யாரோ ஒரு சாது அன்று அந்த வீட்டிற்கு வரப்படும் பொழுது அந்த மகானின் அருள் பெற வேண்டும் என்று எண்ணும் நிலையில்
4.அவருக்குச் சக்தி இருக்கின்றதோ இல்லையோ…
5.அவரை மகானாக எண்ணி அந்த உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது “அந்த உயர்ந்த உணர்வு…” பதிவாகி விடுகிறது.

யாசகத்திற்கு இந்த தாய் அவருக்கு உணவு கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். “நீ நன்றாக இரம்மா… உன் குடும்பம் நன்றாக இருக்கும்…” என்று அவர் சொல்லி அதை இவர் பதிவாக்கப்படும் பொழுது
1.இந்த உணர்வின் தன்மை கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு “அது விதியாகின்றது…”
2.அந்த விதிப்படி அதனின் வளர்ச்சிகள் அவன் வளர வளர எதிர்பார்க்காதபடி குடும்பத்தில் காரியங்கள் சித்தியாகும்.

ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் ஒருவன் செல்வங்களைத் தொலைத்துக் கொண்டிருப்பான். ஒருவன் வளர்த்துக் கொண்டிருப்பான்.

குடும்பம் தரித்திரமான நிலையில் இருக்கும். தாய் கருவுற்றிருக்கும் போது நோயாளியைப் பரிவுடன் பார்த்து.. அவர் உணர்வை எடுத்துக் கொண்ட பின் குழந்தை பிறந்த பின் நலிந்து கொண்டேயிருப்பான்.

அவனை எண்ணும் பொழுதெல்லாம் தாய் வேதனைப்பட்டு கொண்டிருக்கும். இந்த வேதனை குடும்பத்தில் அனைத்தையும் மாற்றிக் கொண்டேயிருக்கும்.

ஆனால்…
1.மகானின் உணர்வு பதிவாகி வளர்ச்சி பெற்ற குழந்தை தீமைகளை வென்றிடும் சக்தியாக அவன் வருவான்
2.இது எல்லாம் விதிப்படி நடப்பது என்று சொல்வது.

அதனால் தான் மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.

உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் ஒரு தீமையைப் பார்க்கின்றோம் அந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக உருவாகிறது. அந்த வித்து முளைக்காதபடி தடுப்பது மதி.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மதி கொண்டு அதைத் தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
2.அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் வளராதபடி “முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றது…”

புளியங்கொட்டையை நாம் தூக்கிப் போட்டாலும் அது குப்பையில் தான் விளையும். பின்… அது வளர்ச்சி அடைந்து வீட்டின் அருகில் வந்து விட்டால் விழுதுகளைப் பரப்பிப் அது பெரும் விருட்சமாக மாறுகின்றது.

வளர்ந்த பின் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றால்… வெட்டுவதற்கு நிறைய பந்தோபஸ்து செய்ய வேண்டும் பெரிய கோடாலி எல்லாம் வேண்டும்.

வெட்டும் பொழுது தெரியாமல் வீட்டிலே சாய்ந்து விட்டால் கட்டிடத்தை நொறுக்கிவிடும். ஆகவே அதைச் சிறுகச் சிறுக வெட்ட வேண்டும். அதாவது… நாம் மதி கொண்டு வீடு இடியாமல் நாம் வெட்ட வேண்டும்.

மதி கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காகத் தான் ஞானிகள் மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவு செய்து கொண்டு வருகிறோம்.
1.அதை நீங்கள் எந்த நேரமும் எண்ணி எடுத்து
2.அவ்வப்போது தீமைகள் உங்களுக்குள் புகாது… அது உடலில் விதியாக வளர்ந்திடாது மாற்றிட முடியும்.

விதியை மதியால் மாற்ற முடியும்…!

ஆன்மீகத்தில்… ஒன்றுபட்ட கூட்டமைப்பைக் எப்படிக் கொண்டு வர முடியும்…?

ஆன்மீகத்தில்… ஒன்றுபட்ட கூட்டமைப்பைக் எப்படிக் கொண்டு வர முடியும்…?

 

மற்றவர்கள் செயலை நேருக்கு நேர் பார்த்து “நீ தவறு செய்கின்றாய்…” என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? கேட்க மாட்டார்கள்…!
1.சொல்லால் சொல்லி யாரையும் திருத்த முடியாது.
2.மனதிற்குள் வைத்து அவர்கள் திருந்தி வாழ வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட்டி…
3.”நீங்கள் பார்த்துச் செய்யுங்கள்…” என்று கூறினால் சரியாகும்.

டேய் என்னடா செய்கின்றாய்…? இப்படியே நீ தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறாய் என்று சொல்லும் போது அதனின் அர்த்தம் என்ன ஆகிறது…?இத்தனை பேர் இருக்கின்றார்கள்… இப்படியே செய்து கொண்டிருக்கிறீர்கள்… சாமி என்ன சொல்கின்றார்…? என்று இதையும் கலந்து கொண்டே தான் வருவோம்.

இதனால் என்ன ஆகின்றது…? நன்மை விளைவதில்லை.

அறியாத நிலைகள் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும்
1.நாம் அருளைப் பாய்ச்சி அவர்கள் அறியும் தன்மை வரவேண்டும் என்ற இந்த உயர்ந்த உணர்வை நாம் எடுத்துச் செயல்பட வேண்டும்.
2.நிச்சயம் உணர்வார்கள்… வருவார்கள்… என்று இந்த எண்ணத்துடன் தியானித்துப் பாருங்கள். தேடி வருவார்கள்.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

இதைத்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர… நாம் சொல்லும் “நல்லதைக் கேட்க யாரும் வரவில்லை…” என்ற எண்ணத்திற்கு நாம் செல்ல வேண்டியதில்லை.

ஆனால் இத்தனை பேர் இந்தத் தியான வழியில் வந்தார்கள் ஆனால் இப்பொழுது போய்விட்டார்களே…! என்று வேதனையோடு சொல்லப்படும் பொழுது… உங்கள் மேல் “இவர் என்ன…? சும்மா எப்பொழுது பார்த்தாலும் நச் நச் என்று நச்சுப் பிடித்துவராக இருக்கின்றார் என்று வரும்…!

பாலிலே விஷத்தைப் போட்டு அதைச் சாப்பிட்டால் மயக்கம் தான் வரும். இதைக் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்…? சிந்தனை அங்கே சரியாக வராது.

இதைப் போன்று நாம் எடுக்கும் உணர்வுகள் விஷத்தன்மை ஆகும்பொழுது நம்மை அறியாமலே வேதனைப்படும் நிலையும் நாம் செல்ல வேண்டிய மார்க்கத்தைத் தவற விட்டு மற்றவர்களையும் பெற விடாதபடி தடைப்படுத்தும் நிலையாகத் தான் வரும்.

இவர் என்ன எப்பொழுது பார்த்தாலும் சும்மா வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று உங்கள் மீது குறை கூறும் உணர்வுகள் வந்துவிடும்.

ஆனால் உயர்ந்த பண்புகளுடன் வேதனை உணர்வு கலந்து சொல்லும் பொழுது உடலும் பலவீனமாகும். உயர்ந்த மார்க்கமாக இருக்கின்றது… இப்படி இருக்கின்றார்களே அல்லது இப்படிச் செய்கின்றார்களே…! என்று வந்துவிடும்

கண்ணாடி நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் அழுக்குப் படிந்து விட்டால் முகம் தெரியுமா துடைக்க வேண்டும் அல்லவா.

ஆன்மீகம் என்பது
1.வலிமை கொண்ட உணர்வைப் பாய்ச்சி…
2.மற்றவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…! என்று எண்ணினால் நிச்சயம் ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும்.

ஆகவே அருள் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும்… ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எடுத்தால் அது சீராக வரும்.

அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.