தொழில் ரகசியம்

தொழில் ரகசியம்

 

தொழிலைப் பற்றிய ரகசியங்களை உங்களுக்கு வேண்டிய நண்பர்களுக்குச் சொல்வதற்கு முன்பு “அவர் எப்படி உங்களுடன் பழகுகின்றார்…?” என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிலில் என்றைக்குமே கை மூடியே வைக்க வேண்டும். வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஓரளவுக்கு வருவாய் வந்து கொண்டிருக்கின்றது என்று இதை மட்டும் சொல்லலாம்.

நடப்பது அனைத்தையும்…
1.நான் இந்தப் பக்கம் போய்த் தொழில் செய்தேன்… பின் இந்தப் பக்கம் சென்றேன்…
2.எனக்கு அதில் வருமானம் இப்படி எல்லாம் வந்தது என்று சொல்லக் கூடாது.

ஆனால் உங்கள் கூட்டாளியாக இருப்பவரிடம் போகும் பாதைகளை இப்படி இருக்கின்றது… இதை எப்படி வழி நடத்தலாம்…? என்று இரண்டு பேரும் சிந்தனை செய்து செயல்படுத்துவது நல்லது.

இருவரும் கூட்டாளியாக இருந்து செயல்படுத்தும் போது ஒரு சிறு விஷயத்தை மறைத்து விட்டால் அவருக்கு உடனே நம்மிடம் மறைக்கின்றார் என்ற சந்தேகம் வந்துவிடும். ஆகவே அவரிடம் விஷயங்களைச் சொல்லக்கூடிய கடமைகள் உண்டு.

அதே சமயத்தில் மனைவியிடம் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு சந்தோஷத்தை ஊட்டலாம்… தொழில் உயர வேண்டும் என்ற உணர்வை ஊட்டலாம்.

ஆனால் மிக முக்கிய நண்பராக இருந்தாலும்
1.ஏதோ உங்கள் ஆசியினால் தொழில் நன்றாக இருக்கின்றது…
2.உங்கள் ஆசி மீண்டும் தேவைப்படுகிறது என்று அவர்களை உயர்த்தி நாம் இப்படிக் கொண்டு வர வேண்டும்.

ஆனால் பப்ளிக்காக நாம் இதைச் சொல்ல தொடங்கினால் ஒருத்தருடைய உணர்வு விஷத் தன்மையாக இருக்கும். நாம் சொல்லும் பொழுதே அப்படியா…! என்று அவர்கள் கண்ணின் பார்வையும்… உற்று நோக்குவதும் இந்த நினைவாற்றலை அதற்குள்ளேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே தொழிலின் ரகசியங்களை நாம் சொல்லவே கூடாது.

உலகிலேயே ஒரு புதிய தொழிலில் ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அதில் என்னென்ன சரக்கைப் போட்டிருக்கின்றோம்…? என்று விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் முக்கியமான பொருளைக் காட்டவே மாட்டார்கள்.

1.அரசாங்கம் கட்டாயப்படுத்தினாலும் அதில் ஒரு முக்கியமான பொருளையும்
2.அதனுடைய கலவை விகிதம் எவ்வளவு என்று சொல்ல மாட்டார்கள்.
3.மற்றதையெல்லாம் இன்னென்ன அளவு என்று எழுதியிருப்பார்கள்.

ஆனால் முக்கிய பொருளை மாற்றி விடுவார்கள். அதிலே போட்டிருப்பது போன்று மற்றவர்கள் கலவை செய்து பொருளை உற்பத்தி செய்தால் தரம் சரியாக வராது… வித்தியாசமாகிவிடும்.

அரசின் சட்டப்படி சொன்னாலும் அதற்காக வேண்டி இவர்கள் அளவுகோல்களை மாற்றி விடுவார்கள். அதிலே இல்லாத சரக்கையும் சேர்த்து விடுவார்கள். மற்றவர்கள் செய்து பார்த்தால் கடைசியில் வராது. அவர்கள் கொண்டு வரும் தரத்தை இங்கே கொண்டுவர முடியாது.

தொழில் ரீதியிலே நாம் மறைத்துச் சொல்ல வேண்டி இருக்கின்றது.

ஆன்மீக ரீதியிலே நீங்கள் வளரக்கூடிய உண்மை நிலைகளைச் சொல்லலாம். அந்த ஆன்மீகத்திலும் கூட
1.எனக்கு இவ்வளவு பெரிய காட்சிகள் கிடைத்தது… சக்திகள் கிடைத்தது என்று சொன்னால்
2.பார்…! அவருக்குக் கிடைக்கின்றது… எனக்குக் கிடைக்கவில்லை…! என்று இதிலும் பொறாமை உணர்வு வரும்.

உங்களுக்கு எப்படி இவ்வளவு கிடைக்கிறது…?
1.சாமி உங்களுக்கு ஸ்பெஷலா கொடுக்கின்றாரா…? என்று ஒருவர் கிண்டலாகவும் கேட்பார்.
2.உனக்கு மட்டும் தெரிகின்றது… எனக்கு ஏன் தெரியவில்லை…? என்று பொதுத் தன்மையில் வருபவர்கள் சிலர் இப்படியும் வந்து விடுவார்கள்

ஆகவே எதைச் சொல்ல வேண்டும்…? எதைப் பேச வேண்டும்…? என்று உணர்வின் தன்மை முழுமை அடைய நம் எண்னத்தைச் செலுத்துதல் வேண்டும்.

நாம் தெரிந்து கொண்ட உணர்வுகளைப் பக்குவப்படுத்த நாம் இப்படி இருக்க வேண்டும்… இப்படிச் செய்ய வேண்டும் என்று
1.உங்களுக்குள் தெரிந்த கருத்தை… நீங்கள் சொல்வதாக இருக்க வேண்டுமே தவிர
2.இந்தக் கருத்துக்கள் எனக்குத் தெரிந்தது என்று சொல்லக்கூடாது.

இதனால் பெரும் பிழைகளும் சந்தேகமும் அவமதிப்பும் சில நிலைகள் எல்லாம் ஏற்படும். இன்றைக்கு இருக்கும் சமுதாயத்திற்கு மத்தியில் இப்படி எல்லாம் நாம் வழி நடத்திச் செல்ல வேண்டி இருக்கின்றது.

பார்… அவருக்கு மட்டும் எல்லாம் தெரிகிறது…! அவர் என்னமோ உளறுகின்றார்… எல்லாம் தெரிந்த மாதிரிப் பேசுகிறார்…! என்று மற்றவரிடம் சொல்வார்கள்.

இதை நீங்கள் கேட்டால் என்ன செய்வீர்கள்…? ஆகவே உண்மை நிலைகள் தெரிந்தால்
1.அவர்களைப் பக்குவப்படுத்தக்கூடிய ஒரு ஞானத்தின் வழிகளிலே நீங்கள் சொன்னால்…
2.நீங்கள் சொல்வதாகத் தெரிந்து கொள்வார்கள்.

எனக்குத் தெரிந்தது இப்படி நீங்கள் நடந்து பாருங்கள்…! என்று சொன்னால் பிழையாகும். ஆன்மீகத்திலும் இப்படி ஒரு நிலை. மனிதனின் உணர்வுகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் உணர்வின் தன்மை அழுத்தமான பின் இன்னொரு மனிதன் இதைத் தாங்கும் நிலை இல்லை.

அவருக்கு அதைத் தாங்க முடியவில்லை என்றால் எதிர்மறை பொறிகளாகிவிடும்… அவர் உடலுக்குள் அந்த எதிர்ப்புகள் ஏற்படும். ஆனால் அவர்களுடைய குற்றம் அல்ல.

யாரும் வேண்டுமென்று அவ்வாறு சொல்வதில்லை.

ஆனால் இந்த உணர்வின் அழுத்தங்களாகும் பொழுது உணர்ச்சிகள் மாறுபட்டுவிடும். அழுத்தமாகும் போது அவர் உடலுக்குள் எதிர்ப்பு நிலைகள் உருவாகும் பொழுது வித்தியாசமாக வந்துவிடும். இது எல்லாம் உணர்வின் இயக்கம் தான்.

ஆகவே நீங்கள் பக்குவப்படுத்தி நடந்து கொள்ளுங்கள்.

பெண்கள் தான் “ஆதி சக்தி” – தாய்மை

பெண்கள் தான் “ஆதி சக்தி” – தாய்மை

மதங்கள் அனைத்துமே… மதத்தைக் காப்பதற்குப் பல நிர்பந்த ஆற்றல்களைப் பயன்படுத்தி மெய்யுணர்வை அவர்கள் பெறாத வண்ணம் தடுத்து நிறுத்தி அதை எல்லாமே பெண்கள் வழியில் தான் தீட்சனியங்களை அதீதமான நிலைகளில் பாய்ச்சி
1.எந்த மதமானலும் சரி… பெண்களைச் சாடியே தான் இருப்பார்கள்.
2.பெண்களுடைய ஆற்றலை மடக்கித் தடுத்து கொண்டே தான் இருப்பார்கள்.
3.அவர்களைப் பாதகப்படுத்தியே தான் இருப்பார்கள்.

அந்தப் பாதக நிலைகளிலே அவர்கள் எடுத்துக் கொண்ட மூச்சுக்கள் எந்தெந்தத் தாய்மார்களிடம் இது படுகின்றதோ அவரிட்ட மூச்சலைகள் அனைத்துமே அது “அக்னி சக்தி” என்று தெரியாது… ஆதி சக்திதான் அது.

ஆவி அது அண்டத்திலே சேர்ந்தபின் ஒரு திடப்பொருளாகும் பொழுது துவைதம்… அது சிவமாகின்றது. நம் உடலுக்குள் நின்று சக்தியாக இயங்குவதும் அதுவே… கருவின் தன்மை உருவாக்குவதும் அதுவே.

இந்தத் தாய்மையினுடைய நிலைகள், எண்ணத்தாலே இருவருடைய எண்ணங்கள் ஒன்று சேர்க்கவில்லை என்றால் அந்த உணர்வின் எண்ணம் பிரதிபலிக்காது.

கணவன் மனைவியினுடைய நிலைகள் ஒன்று சேர்ந்து யாரொரொவர் இயக்குகின்றனரோ அவர்களைப் “புனித மகான்…” என்றே கூடச் சொல்லலாம்.

மகரிஷிகள் காட்டிய வழிப்படி… அந்த மாமகரிஷி ஆதிசங்கரர் சொன்னது போன்று
1.சிவ சக்தியின் ஸ்வரூபமாகக் கணவன் மனைவி ஒன்று சேர்ந்த நிலையில்
2.ஒருங்கிணைந்த எண்ணத்துடன் அவர்கள் வாழ்க்கையில் தொடரப்படும் போது
3.தனக்குப் பிறக்கும் குழந்தைகளும் மெய்யுணர்வின் தன்மை கொண்டு மெய் ஒளி வளர்க்கப்பட்டு
4.விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை அந்தக் குழந்தைகள் பெறும் போது
5.அந்தத் தாய்மையான நிலைகள் அவர்களுக்குக் கிடைக்கின்றது.

வியாழன் கோளிலிருந்து பூமிக்கு வந்தவர்கள் தான் நாம் (விஞ்ஞானிகள் கண்டு இனி சொல்வார்கள்)

வியாழன் கோளிலிருந்து பூமிக்கு வந்தவர்கள் தான் நாம் (விஞ்ஞானிகள் கண்டு இனி சொல்வார்கள்)

 

நாம் வாழும் இந்த பூமி சீக்கிரம் அழியப் போகின்றது. காரணம் விஞ்ஞான உலகின் அணுக்கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவி விட்டது. சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து விட்டது. பூமியின் நடு மையத்திற்குள் இது ஊடுருவிச் சென்று கொண்டிருக்கின்றது.

அணுக் கதிரியக்கங்கள் சூரியனின் வெப்ப காந்தத்தில் கலந்த பின்
1.இந்த உணர்வுகள் அதில் இருக்கக்கூடிய காந்தமும்
2.பூமியிலிருக்கும் காந்தமும் உலோகத்தில் இருக்கக்கூடிய காந்தங்களுடன் மோதிய பின்
3.புயலடித்த மாதிரி இரும்பும் உருகுகின்றது… கதிரியக்கங்கள் மீண்டும் அது வளர்ச்சி பெறுகின்றது.

மற்றதெல்லாம் பிளந்து விட்டு ஊடுருவி அனைத்தையும் அழித்துவிட்டு
1.அதில் இருக்கக்கூடிய வீரிய சக்தி அடங்கும் வரையிலும் சுழிக் காற்று போன்று
2.செடி கொடி கல் மண் மரம் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு செல்கின்றது.
3.பூமியில் இருக்கும் அணுவினைப் (கதிரியக்கம்) பிளந்து விஞ்ஞானிகள் செய்து கொண்ட நிலைகள் இது.

அதை வைத்து மின்சாரத்தை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். எத்தனையோ பல வேலைகள் செய்கிறோம் என்று சொல்லலாம். அதனுடைய தணிந்த உணர்வின் நிலைகள் வந்தாலும் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தே இருக்கின்றது.

பூமிக்குள் இருந்தால் தான் இதனால் விபத்து என்ற நிலை இருந்தாலும் பூமியைக் கடந்து பிரபஞ்சத்திலே பரிசீலனைக்காக வெடிக்கச் செய்தாலும் வான வீதியிலே இந்த அணுக்களின் தன்மை படர்ந்து “பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஓசோன் திரையைக் கிழித்து விட்டு…” இந்த விஷத்தின் தன்மை பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றது.

இது அனைத்தும் பூமியின் நடு மையம் சென்றடைந்து விடும். வெப்பத்தின் தணல்கள் கூடும்… பனிப்பாறைகள் அனைத்தும் உருகும். உருகிய நீர்கள் நிலங்களைக் குறையச் செய்யும்.

நீர்கள் கூடினாலும் வெப்பத்தினால் பனிப்பாறைகள் கரைய நீரின் தன்மை பரவிப் படர்ந்தாலும்
1.சூரியனை விட்டு இந்த பூமி நகர்ந்து செல்லும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
2.அப்படி நகர்ந்து சென்ற பின் பூமிக்குள் நீர்கள் அனைத்தும் பனிப் பாறைகளாக உறைந்து விடும்.
3.நம் உயிர்கள் எல்லாம் அதற்குள் அமுங்கிவிடும்.

கோழி முட்டையை ஐஸ் பெட்டிக்குள் வைத்துத் தேவை ஏற்படும் போது அதை எடுத்துக் குஞ்சாகப் பொரிப்பது போன்று ஆகிவிடும்.

ஏனென்றால் “வியாழன் கோளில் நம் உயிரணுக்கள் அனைத்தும் சிக்கப்பட்டு…” அதிலிருந்து மீண்டும் தெறிக்கப்பட்டு வான் வீதிக்கு வந்து இப்பொழுது மனிதனாக நாம் இங்கே இந்தப் பூமியில் பிறந்து இருக்கின்றோம்.

அதனால் தான் வியாழன் கோளைக் குரு என்று சொல்வது.

அதில் மனிதர்கள் வாழ்ந்து வளர்ச்சியாகி தவறு செய்து போர் முறையாகி அவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் எல்லாம் அங்கே உண்டு.

1.வியாழன் கோளில் இப்போதும் மண்ணைத் தோண்டி எடுத்தோம் என்றால்
2.இங்கிருக்கும் விஞ்ஞானிகள் செய்ததற்கெல்லாம் அப்பனாக அவர்கள் செய்து வைத்த ஆயுதங்கள் அங்கே அடியில் பதிந்துள்ளது.

இதை எல்லாம் குருநாதர் எமக்குக் காட்டி இருக்கின்றார்.

அங்கே ஏற்பட்ட பிரளயத்தால் பனிப்பாறைகளாக ஆகி அதிலே சிக்கிய உயிர்கள்… எடுத்துக் கொண்ட நிலைகள் தான் கதிரியக்கச் சக்தியாக மாறிப் பல நிலைகள் மாறியது.

பின் இதிலே வந்த ஒவ்வொரு உயிரணுவின் தன்மை மீண்டும் ஜீவன் பெற்று பல நிலைகள் வந்தது. வியாழனின் நிலைகள் நட்சத்திர நிலைகள் கொண்டு சில நிலைகள் வந்தது என்று எமது குருநாதர் காட்டியுள்ளார்.

1.விஞ்ஞானிகள் இதையெல்லாம் கண்டு கொள்வதற்குப் பல காலமாகும்.
2.ஆனால் இப்பொழுது யாம் சொல்வதைப் பின்னாடி ஒரு காலத்தில் சொல்வார்கள்.

எதையுமே உணர்வால் அறியும் ஆற்றலாக… அந்த அறிவின் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்

எதையுமே உணர்வால் அறியும் ஆற்றலாக… அந்த அறிவின் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் எல்லோராலும் சில இதுகளை நாம் உணர்வால் உணர முடிகின்றது. ஆனாலும்
1.இந்தத் தியான வழியில் பெரும்பகுதி இந்த உடலுக்குள் செல்லும் நிலைகளை உணர வேண்டும்.
2.உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகிறது என்று…?

நம் உடலுக்குள் சேர்ந்த உணர்வுகள்… மற்ற உணர்வு நம் மீது மோதிய பின் “எதனால் நம்மை இயக்கப்படுகின்றது…?” என்ற இந்த அறிவின் ஞானத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.

இதை எல்லாம் நமக்குள் நுகர நுகர நம் உடலுக்குள் நாம் நுகரும் உணர்வுகள் இரண்டும் “ஒரு எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…”
1.உயிரிலே மோதி உணர்வின் தன்மை நினைவுடன் இருக்கப்படும் பொழுது…
2.மற்றொரு உணர்வு சேர்ந்த பின்
3.அதனுடைய அழுத்தமும்… அதனுடைய இயக்கமும்… நம்முடைய உணர்வும்…
4.அதற்குக் கீழ் எப்படி இருக்கிறது…? என்ற நிலையை நாம் அறிந்து உணர முடிகின்றது.

இதைப் பழக்கப்படுத்துவதற்குத் தான்
1.எது நம்மை இயக்குகிறது…?
2.எதனால் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்…?
3.எதை நாம் வளர்த்துக் கொள்கின்றோம்…? என்ற உண்மையை நீங்கள் அறிந்து கொள்வதற்குத் தான்
4.தியானத்தில் காட்சியாகக் கொடுக்கப்பட்டதன் உண்மை நிலைகள்.

இது உங்களுக்குள் வளர்ந்தால் நல்லதாகும்.

“பிராணன்…” (சுவாசம்) பற்றி ஞானிகள் சொன்னதன் உண்மை நிலைகள்

“பிராணன்…” (சுவாசம்) பற்றி ஞானிகள் சொன்னதன் உண்மை நிலைகள்

 

பிராணயாமம் என்று சொல்லி மூச்சை எடுத்து உடலுக்குள் அதிகமாகச் செலுத்தப்படும் பொழுது உடலில் எதன் வேக உணர்வுகள் அதிகமாகின்றதோ அதைக் கவர்ந்து விடும்.

சுவாசித்த உணர்வுகள் உயிரிலே ஃபில்டர் பண்ணக்கூடிய சளி அதை வடிகட்டும்… அதிகமானால் வெளியே தள்ளிவிடும். வடிகட்டிய நிலையில் தான் வருகின்றது.

ஆனால் சுவாசித்து உள்ளே செலுத்தும் போது உந்து விசை அதிகரிக்கப்படும் பொழுது சுவாசப் பைகள் மூலம் உடலுக்குள் அதிகமாகச் சென்று விட்டால் ஒரு பக்கம் உணர்த்தச் செய்து… செயல்படும் போது நாளடைவில் இந்த உறுப்புகளில் பலவிதமான இருமல்கள் வரும்.

1.இதே உணர்வு நுரையீரலில் அழுத்தப்பட்டு உடல் முழுவதற்கும் இந்த வாயுவை உந்தப்படும் பொழுது
2.வாயு மண்டலத்தை இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்களுக்குள் சென்றவுடன்
3.இவர்கள் எதை எடுத்தார்களோ அதன் உணர்வின் தன்மை விஷத்தன்மையாக மாறிக் கடு கடு… கிடு கிடு.. என்று ஓடும்.

பிராணயாமம் செய்பவர்களைக் கடைசியில் கேட்டால் இதையெல்லாம் சொல்வார்கள்.

பிராணயாமம் செய்வதை இவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால் வேதனைப்படும் நேரங்களில் என்ன செய்கிறது…? என்று எடுத்துச் சுவாசித்துப் பார்ப்பார்கள். அந்த உணர்வு உடலுக்குள் வரும் பொழுது வேதனையை உருவாக்கும் உணர்வின் தன்மை வந்து விடும்.

பிராணயாமத்தின்படி இதை எடுத்துப் பிறருடைய உணர்வுகளைச் சுவாசித்துப் பார்ப்பது சரம்.
1.அவர் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன மோதுகின்றது…?
2.அவர் என்ன நினைக்கின்றார்…? அவர் உடலில் என்ன இருக்கின்றது…? என்ற நிலையைச் சுவாசித்துப் பிராணயாமம்
3.உயிரிலே பட்டு உணர்ந்து கொண்டாலும் பிறருடைய எண்ணங்களைக் கவர்கின்றது.

இதைக் கவர்ந்து இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் சென்றால் வாயு மண்டலங்களில் விஷத்தன்மையாகிக் கை கால் குடைச்சல் என்ற நிலையாகிவிடும்.

இதே உணர்வுகள் வாயுவாக நேரடியாகச் சென்று ரத்த நாளங்களில் கலப்பதற்கு முன் சுவாசப்பை வழி சென்று உடலுக்குள் விஷத்தைப் பரப்புவது தான் இதெல்லாம்.

குருநாதர் இதை எல்லாம் தெளிவாகக் காட்டுகின்றார்.

நேரடியாகச் சுவாசித்து (வழக்கமான வழி) உமிழ் நீராகி அந்த உமிழ் நீர் உணவுடன் கலந்து அந்த உணவுக்குள் உயர்ந்த நிலை ஆன பின் இரத்தமாக மாறி
1.அந்த ரத்தத்தின் தன்மை வரப்படும் பொழுது எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வு வழி பிராணயாமம்.
2.அந்த உணர்வுகள் பிராணனை உருவாக்கி அதன் வழி நமக்குள் உருவாக்குதல் வேண்டும் என்பதுதான் முறைகள்.

இவர்கள் சொன்ன மாதிரி வடகிளை தென்கிளை என்று சுவாசித்து வடிகட்டும் திறனை இழந்து சூரிய கலை சந்திர கலை என்று அல்ல.

நுரையீரலில் பம்ப் ஒரு பக்கம் பிஸ்டன் இருக்கின்றது இன்னொரு பகுதியில் அடைக்கின்றது. சுவாசப்பைகளில் ஒன்று இழுத்துத் தள்ளியபின் அடைக்கும். மீண்டும் அது இழுத்து அதைத் தள்ளும்.

ஆகவே நமக்குள் பம்ப் செய்யும் முறைகளைப் பற்றி அந்த ஞானிகள் சொல்லி இருந்தாலும் அடைத்து இழுக்கிறது என்றால் “இவர்கள் மூக்கை அடைத்து இப்படிச் செய்கின்றார்கள்…”

கீதா உபதேசத்தினைக் கண்ணன் கூறுகின்றான் என்பார்கள். கண்களால் பார்க்கும் பொழுது எதன் உணர்வை நுகர்கின்றோமோ உயிரிலே படுகிறது. அப்போது கண்ணன் குருச்சேத்திரப் போரை வழிநடத்துகின்றான்.

உதாரணமாக…
1.ஒரு தீமையான உணர்வை நுகர்ந்தால் நம் கண் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது.
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் தீமையான உணர்வைக் கவர்கின்றது.

அது கவர்ந்து கொண்ட பின் உயிரிலே பட்ட பின் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் வலு குறைகின்றது. தீமையான உணர்வு உயிரிலே மோதியபின் உடலுக்குள் இருக்கும் உயிரே அதற்குக் குருவாக இருக்கின்றது.

அதைத்தான்
1.கண்கள் தீமை என்ற உணர்வை எடுத்து உயிரிலே பட்டுத் தீமை என்று அறிவிக்கச் செய்கின்றது.
2.கண்ணால் பார்த்தாலும் உணர்வால் உயிரிலே மோதும் பொழுது தான் கண்ணனின் சகோதரி திரௌபதை.

எதைக் கொடுத்தாலும் அதை வழிநடத்திச் செல்லக்கூடிய உயிர்… திரௌபதை என்று ஏனென்றால் கண்ணால் பார்க்கின்றோம் உயிரால் உணர்கின்றோம் என்பதைக் கண்ணனின் சகோதரி… திரௌபதை.

கண்கள் பார்ப்பதால்… அதை உணர்வால் நமக்குள் அறிவிக்கின்றது என்பதை நாம் உணர்வதற்காக இவ்வாறு செய்தனர்.

எல்லாவற்றிற்குமே காரணப் பெயரை வைத்து ஒவ்வொரு நிலைகளிலும் நம் உணர்வுகள் என்ன செய்கின்றது…?
1.உயிரின் இயக்கமும் கண்களின் இயக்கமும் உடலின் இயக்கமும் என்ற நிலைகளில்
2.இந்த உணர்ச்சிகளால் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குச் சாஸ்திரங்கள் பல உண்டு.

ஆனால் அதைத் தவறான வழிகளில் இன்று மனிதனின் வாழ்க்கைக்காக “எத்தனையோ நீடித்த நாள் வாழலாம்…” என்று பிராணயாமம் செய்து தீமையின் நிலைகள் கொண்டு மீண்டும் எதை வளர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க “இன்னொரு உடல் பெறுவது திண்ணம்…”

யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்

யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்

 

உங்களுக்குள் ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.
1.யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
2.அந்த நேரத்தில் உங்களுக்குள் அந்த உண்மையின் உணர்வுகள் வளர்ச்சியாகும்.

யாம் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். எது தீமை…? எது நன்மை…? என்பதை அறிந்து கொண்டீர்கள். எல்லோருக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள். கோவிலுக்குச் சென்றால் எப்படி வணங்க வேண்டும் என்று வழிகாட்டுங்கள்…?

தாய் தந்தையரைத் தெய்வமாக வணங்குங்கள். குறைகள் இருந்தால் அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் ஞானியாக வேண்டும்… நல்லவனாக வேண்டும் என்ற உணர்வைச் சொல்லிப் பழகுங்கள்.

அவர்கள் சொல்லும் கஷ்டத்தைக் கேட்டால் அது உங்களுக்குள் வளராதபடி அவர்களுக்கு ஞானத்தை ஊட்டித் தெளிவாக்குதல் வேண்டும்.

ஆகவே தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள்
1.உங்களை யாம் எப்படிக் குரு வழியில் சீர்திருத்தம் செய்கின்றோமோ இதைப் போல
2.மற்றவர்களுக்கு இந்த வாழ்க்கையின் உண்மை நிலைகளை எடுத்துக் கூறி அவர்களைத் தெளிவானவர்களாக நீங்கள் மாற்ற வேண்டும்.
3.ஞானிகளைப் போன்று மாற்றும் சக்தி உங்களுக்குள் வந்தால் தீமைகளை மாற்றி அமைத்து
4.நன்மையின் நிலைகளை உங்களுக்குள்ளும் விளையச் செய்ய முடியும்.

கஷ்டம் என்று மீண்டும் மற்றவர்கள் சொன்னால் “நாம் சொல்வதை அவர்கள் கேட்கவில்லையே…” என்று வாதத்திற்கும் போக வேண்டாம் வேதனைக்கும் போக வேண்டாம்.

1.எப்படியும் அவர்கள் பெறுவார்கள் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2.சந்தர்ப்பம் வரும் பொழுது அவர்களும் அதைப் பெறுவார்கள்.
3.அவர்கள் அதைப் பெறும் பொழுது அந்த மகிழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்.

நான் சொல்லியிருந்தோம்… இன்று அவர்கள் அதை உணர்ந்து வந்து விட்டார்கள். அந்தச் சந்தர்ப்பங்கள் கஷ்டம் என்று வரும் பொழுது நல்வழியில் வழி நடத்தும்.

ஆக மொத்தம் கடவுள் செய்வார் சாமி செய்வார் சாமியார் செய்வார் என்று மற்றவர்களை எண்ணாதபடி உங்களை நீங்கள் நம்புங்கள்.

நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ அந்த உணர்வினை உங்கள் உயிர் உருவாக்கும். மற்ற யாரும் செய்து கொடுக்க மாட்டார்கள். நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் செயல்படுத்திக் கொடுக்கும்.

1.நான் (ஞானகுரு) செய்வேன் என்றால்… நல்லதாக வேண்டும் என்று சொல்லும் பொழுது எனக்குள் அந்த நன்மையின் தன்மை உருவாகின்றது.
2.அதே போல் நல்லது பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் உங்கள் உயிர் தான் அதை உருவாக்கிக் கொடுக்கின்றது.

வேறு யாரும் உருவாக்குவதில்லை…!

“உணர்வு… உணர்வு…” என்று எண்ணிலடங்காத தடவை சொல்கிறோம்… அதனின் சூட்சமம்

“உணர்வு… உணர்வு…” என்று எண்ணிலடங்காத தடவை சொல்கிறோம்… அதனின் சூட்சமம்

 

விஞ்ஞான அறிவு கொண்டு கரண்டினை உற்பத்தி செய்கிறோம் என்றால் அதிலே எத்தகைய நிலைகளை நாம் இணைக்கின்றோமோ…
1.வண்ண விளக்குகள் என்றால் அந்தக் கலர் வெளிச்சம் வருகின்றது.
2.மற்ற கருவிகளுக்குள் எதிலே இணைத்து இயக்குகின்றோமோ அதற்குத் தக்கவாறு இயந்திரங்கள் இயங்குகின்றது.

இதைப் போன்றது தான் நமது உயிரின் வேலையும்.

இயக்கச் சக்தி கொண்டு கரண்டை உற்பத்தி செய்தாலும் நாம் எண்ணிய உணர்வின் சத்தை உயிர் தனக்குள் எடுத்து ஜீவ அணுக்களாக அதை உருவாக்கும் தன்மை வருகின்றது.

இவ்வாறு நமது உயிர் நம் உடலுக்குள் இருந்து செயல்பட்டு வரும் இந்த நிலையில்
1.நம்மை அறியாதபடி சூட்சுமத்தில் மறைந்திருக்கும் நிலைகளைக் கண் கொண்டு பார்க்க முடிவதில்லை.
2.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள்… நாம் சுவாசித்து உயிரிலே உராயப்படும் பொழுது தான் அந்த உணர்வின் தன்மையை “உடலில் காண்பிக்கின்றது…”

கண் கொண்டு திடப்பொருளைக் காணுகின்றோம்… அதனை அறிகின்றோம். ஆனால் கண்ணின் காந்தப்புலனறிவோ… ஒரு மனிதன் தவறு செய்யும் உணர்வுகள் வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் யாரை உற்று நோக்குகின்றோமோ அவனின்று வெளிப்படும் உணர்வின் தன்மையை நம்மை நுகரச் செய்கின்றது.

1.நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டபின் அகக்கண்ணாக உடலுக்குள் பரப்பி நம்மை அறியச் செய்கின்றது.
2.கண்ணால் திடப்பொருளைக் கண்டாலும்… உணர்வால் உடலுக்குள் அது சென்று அதை உணரும் தன்மை வருகின்றது.

அத்தகைய உணரும் தன்மை வந்தாலும் நாம் சுவாசித்த உணர்வின் தன்மை நம் உயிர் அதை இயக்கியே காட்டுகின்றது. இயக்கிய உணர்வின் தன்மை உடலில் அதை இணைத்து விடுகின்றது.

இவ்வாறு தான்
1.சூட்சமத்தில் இருப்பதைப் பார்க்க முடியவில்லை என்றாலும்
2.உடலாக திடமான பின்… அதைக் காண முடிகின்றது.

எப்படி…?

இன்று நல்ல மனிதர்களாக நாம் காணுகின்றோம் அடிக்கடி வேதனை சோகம் என்று வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவர்கள் உடலில் பாய்ந்து… அந்த உணர்வின் இயக்கத்தால் அவர்கள் உடல்கள் சோர்வடைவதும்… நோயால் வேதனைப்படுவதையும் நாம் காணுகின்றோம்.

இது திடப்பொருளில் காணும் நிலைகள் தான். அதாவது
1.வேதனையான உணர்வு என்பது கண்ணுக்குத் தெரியாத சூட்சமம் என்றாலும்
2.உடலுக்குள் விளைந்த பின் நோயாக அதைக் காண முடிகிறது.

ஒரு சிலர் நன்றாக இருப்பார்கள்… உடல் நலமாக இருப்பினும் சந்தர்ப்பத்தால் தான் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் அதிகரிக்க தான் சுவாசித்த நிலைகள் அவர் உடலிலே நிம்மதியற்ற நிலைகளாக அது ஓடிக்கொண்டே இருக்கும்.

காரணம்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது எந்த வித்தின் தன்மையாக அடைகின்றதோ இந்த வேதனை என்ற நஞ்சு கொண்ட வித்து
1.குழம்பைச் சீராக வைத்து அதில் நஞ்சான நிலைகள் கலந்தால் அதனின் சுவைகள் மறைந்து விடுவது போல
2.நம் உடலில் எத்தனையோ உணர்வுகள் இந்த எண்ணங்களாகப் பதியச் செய்து அது உடலாக சதாசிவமாக்கி கொண்டிருக்கும் இந்த நிலையில்
3.எந்தெந்த குணங்கள் எண்ணங்கள் அதிகரிக்கின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாக முன் நிற்கின்றது.
4.காரணம் அது எல்லா குணத்தையும் அடைக்கிடும் நிலைகள்.

பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தும் பூமிக்குள் பெருக்காகப் பெருகுவதே “ஆடி பதினெட்டு…”

பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தும் பூமிக்குள் பெருக்காகப் பெருகுவதே “ஆடி பதினெட்டு…”

 

1.ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு மாதத்திலும் மனிதன் எவ்வாறு தன் நினைவுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும்…?
2.தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்…? உயர் ஞானத்தை எப்படித் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதற்குத் தான் ஆடிப் பெருக்கு.

வருடத்திற்கு 12 மாதம் என்றால் அந்த 12 மாதத்திலும் 12 ராசிகள் என்று சொல்வார்கள். 12 மாதங்களையும் 12 ராசிகளாகப் பிரித்தனர் ஞானிகள்.

ஒவ்வொரு மாதத்திலும் அந்த மாதத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்கள் மற்ற கோள்களில் இருந்து வெளிப்படுத்தும் உணர்வுகளையும் மற்ற நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் “ஒவ்வொரு நட்சத்திரத்தின் தொகுதி… தொகுப்பு…” என்ற நிலையில் கொண்டு வருகிறது.

12 மாதங்களிலும் இதே போன்று தான்.

1.எந்தெந்த நட்சத்திரங்கள் அந்தந்த மாதங்களில் அருகிலே ஒன்றாகக் கலந்து
2.அது கவர்ந்து கொண்ட சக்திகளை மற்ற கோள்கள் கவர்ந்து அது நமது பூமிக்கு எவ்வாறு கிடைக்கின்றது…? என்ற நிலையும்
3.அதே உணர்வின் சக்தியை நாம் எவ்வாறு நமக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்…? என்ற நிலைப்படுத்தித் தான் மாதங்களை 12 ராசிகளாகப் பிரித்தனர்.

12 ராசிகள் என்றாலும் அதிலே ஒவ்வொரு ராசிக்கும்… இரண்டு நட்சத்திரம் மூன்று நட்சத்திரம் நான்கு நட்சத்திரம் என்ற அந்த அலைவரிசைகளில் அது கலந்து அது மற்றொரு நிலைகளில் கலந்து ஒவ்வொரு கோள்களும் தனக்குள் அதை கவர்ந்து வரும்.

அப்படித் தனித்தனியாக (தொகுப்பு) வரும் நேரத்தில் நமது பூமி அந்தந்த மாதத்தில் 12 மாதங்களிலும் அதை எவ்வாறு கவர்கிறது…? என்ற நிலையைத் தான் ராசி என்று பிரித்தனர்.

அவ்வாறு பூமிக்குள் வரும் அந்த அணுக்களின் தன்மையை தாவர இனங்கள் தனக்குள் எதைச் சேர்த்துக் கொண்டதோ
1.அதனதன் வளர்ச்சிகள் அந்த மாதங்களில் வரும் பொழுது அதனுடைய பெருக்குகள் பெருகி வருகின்றது.
2.தான் கவர்ந்து கொண்ட சக்திகளைப் பெருக்கிக் கொள்கிறது என்ற நிலையை நிலைப்படுத்துவதற்குத் தான்
3.12 விதமான ராசிகளாகப் பிரித்து காட்டினார்கள்.

27 நட்சத்திரங்களும் அதற்குள் ஒன்பது கோளின் நிலைகளையும் இப்படிப் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு… நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளும் ஒன்பது கோள்களும் அதை எடுத்து வெளிப்படுத்தும் போது சூரியன் தனக்குள் கவர்ந்து அதனுடைய ஒளிக்கதிர்களை வெளிப்படுத்துகிறது.

அவ்வாறு கலந்து அது வெளிப்படுத்தியதை
1.நமது பூமி சுழலும் போது பூமியின் துருவப் பகுதி (வடக்கு) எந்தெந்த நட்சத்திரத்திற்கு நேர்முகமாக இருக்கின்றதோ
2.அந்தச் சக்திகளை அதன்வழி கவர்ந்து நம் பூமிக்குள் கொண்டு வருகிறது.

அதிலே வளர்த்துக் கொண்ட நிலைகள் தான் தாவர இனங்களுக்கு ராசியாகப் பெறுகின்றது.

நட்சத்திரங்களின் சத்தை மற்ற கோள்கள் எடுத்தது ஒவ்வொரு தொகுதியும் தொகுப்புகளுக்கு எவ்வாறு…
1.அதாவது எல்லை வகுப்பு… மத்திய கோடு என்ற கோடு வரிசையில் வைத்து
2.இன்னென்ன பகுதிகளில் இன்னென்ன ராசிகள் இவ்வளவு வருகின்றது…
3.இன்னென்ன வகைகளில் இன்னன்ன நட்சத்திரங்களின் சக்திகளும் கோள்களின் சக்திகளும் இந்த அளவுக்குப் பெறும் தகுதியாகப் பரவுகின்றது என்று
4.கோள்களின் சக்தியும் நட்சத்திரங்கள் சக்தியும் அது கலந்து வந்து நமது பூமியில் தாவர இனங்களில் கலவை ஆகி
5.அதே சமயத்தில் பூமிக்குள் கலவைகளாகி பாறைகளும் மற்ற கல்களும் உருவாகி… பற்பல உலோகங்களாகி
6.உலோக சக்தியிலிருந்து பூமியிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஆவியாக வெளியாகி
7.அப்படி வெளிப்படும் உணர்வுகளை மீண்டும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
8.நமது பூமியில் எவ்வாறு அதனுடைய பெருக்கங்கள் வருகிறது…? என்ற நிலையே “ஆடி பதினெட்டு…”

இப்படி… பூமி முழுவதிலுமே எல்லா வகைகளிலும் இசைந்து ஆடி வருகின்றது.

ஆக… இயக்கத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று அசைந்து சென்று… ஒன்றுடன் ஒன்று மோதி… மோதலுக்குத் தக்க இசைகள் ஒவ்வொன்றும் மாறுகின்றது.

இந்தத் தியான வழியினை யாருக்கும் கட்டாயப்படுத்தி நாம் சொல்லக் கூடாது

இந்தத் தியான வழியினை யாருக்கும் கட்டாயப்படுத்தி நாம் சொல்லக் கூடாது

 

எப்பொழுதெல்லாம் உங்கள் மனம் தெளிய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் எம்முடைய அருள் ஞான நூல்களை எடுத்துப் படியுங்கள் எமது உபதேசங்களைக் கேளுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து ஓதுங்கள்… அவர்களுக்குள் பதிவாக்குங்கள்… நினைவாக்குங்கள். அவர்களையும் அந்த அரும்பெரும் சக்தியைப் பெறச் செய்யுங்கள்.

அந்தத் துணிவு உங்களுக்கு வரவேண்டும்.

1.நீங்கள் கண்ட உண்மைகளை எடுத்துச் சொல்லுங்கள்… கேட்காதவரிடம் சொல்ல வேண்டியதில்லை.
2.ஒரு சிலர் கேட்க மறுப்பார்கள். அவர்களிடம் நாம் இதைப் பேச வேண்டியது இல்லை.
3.அவர்களுக்கும் நல்ல காலம் வரும் நல்வழி நடப்பார்கள்… என்று நாம் அவர்களுக்காகத் தவம் இருக்க வேண்டும்.

மீறிச் சொன்னால் நம்மைக் கிண்டலாகச் சொல்வார்கள். அது தான் நடக்கும். பரவாயில்லை… ஒரு காலம் உங்களை அறியும்… உண்மைகளை அறியும் அந்தச் சக்தி நீங்கள் பெறுவீர்கள் என்று சொல்லி விடுங்கள்.

1.உலக மக்களுக்காக நீங்கள் பேசும் இத்தகைய அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைகின்றது… உங்களுக்குள் பரவுகின்றது.
2.அவர்கள் முதலிலே கேட்க மறுத்தாலும் கூடச் சங்கடம் வரும் பொழுது உங்களை எண்ணுவார்கள்… உடலில் பதிவானது நினைவுக்கு வரும்.

நாம் சொன்னதைச் செய்தால் நல்லது வரும் என்ற சிந்தனை அவர்களுக்கும் வரும். அப்பொழுது அந்த உணர்வுகளை நுகர்ந்து நம்மை அணுகி வருவார்கள்.

முதலில் சொல்கின்றோம் ஆனால் அவரிடம் “விவாதிக்கும் தன்மைக்கு” நாம் போகக்கூடாது… அதை விட்டு விட வேண்டும். நீங்கள் நன்மை பெறுவீர்கள் நல் வழி நடக்கும் நீங்கள் நுகர்ந்த இந்த உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டும் என்று மட்டும் நாம் சொன்னால் போதும்.

1.அடுத்து அழுத்தமாக இதைப் பெற்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
2.யாருக்கும் கட்டாயப்படுத்தி இந்தச் சக்தியைத் திணித்து அவர்களைப் பெறச் செய்ய முடியாது.

அன்புடன் அரவணைத்து உண்மையின் உணர்வை எடுத்துச் சொல்லத் துணிவு வேண்டும்.

இந்தத் தியானத்தை கடைபிடிப்போர் அனைவரும் உலக மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகளை நாம் அடிக்கடி வெளிப்படுத்துதல் வேண்டும். இந்த உணர்வுகள் பூமியிலே படரும்.

ஒருவரிடம் சொல்கின்றோம் அவர்கள் நினைவானால் கவரும் சந்தர்ப்பம் வருகின்றது. சிந்திக்கும் ஆற்றல் அவர்களுக்குள் வரும். உங்கள் சொல்லும் வீணாகாது.

ஆனால் ஏற்கும் பருவம் கொண்டு அவருக்குள் பதிவு செய்து ஏற்க வைத்து விட்டால்
1.நாளைக்கு ஒரு சிரமம் வரும் பொழுது உங்கள் நினைவு வரும்.
2.நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வு இங்கே இருக்கும்… அதைப் பெற வேண்டும் என்ற நினைவு அவருக்கு வரும்.

ஆனால் கட்டாயப்படுத்த கட்டாயப்படுத்த வெறுப்பின் தன்மை தான் வளரும்… ஏற்றுக்கொள்ளும் பருவமே இழக்கப்படுகிறது.

ஒரு பொருளில் விஷம் கலந்தால் அது எல்லாம் விஷமாகத்தான் மாறும். ஆகவே கட்டாயப்படுத்தி யாருக்கும் சொல்ல வேண்டாம்.

அரவணைத்து அன்புடன் ஞானத்தைப் பதிவு செய்தால் சந்தர்ப்பம் வரும் பொழுது மற்றவர்களும் இந்த அருள் ஞானத்தைப் பெறுவார்கள். ஆகவே அந்தத் தகுதியைப் பெறச் செய்யுங்கள்.

மனித உடலாக நாம் வளர்ச்சிக்கு வந்த நிலை

மனித உடலாக நாம் வளர்ச்சிக்கு வந்த நிலை

 

குளவிக்கு உமிழ் நீர் ஊறுகின்றது அந்த உமிழ் நீரைக் கொட்டி மண்ணைப் பிசைகின்றது “ஹொய்ங்… ஹொய்ங்… டுன்… டுன்…” என்று அது எப்படி இரைகின்றதோ அந்த இறக்கைகளில் நாதங்கள் வருவது போன்று தன் உணர்வின் இரைச்சலை அந்த மண்ணிலே கொடுக்கின்றது.

இறக்கையாலும் நாதத்தைக் கொடுக்கிறது உணர்வின் ஒலிகளையும் கொடுக்கின்றது மண்ணை உருண்டையாக உருட்டுகின்றது.
1.மண்ணிற்குள் கலந்திருக்கக் கூடிய காந்த ஈர்ப்புக்குள் அது ஈர்க்கப்படுகிறது.
2.ஏனென்றால் மண்ணும் அது ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் வளர்ச்சியின் தன்மை பெற்றது.

குளவி தன் உமிழ் நீரை அதற்குள் கொட்டி அதைப் பிசைந்து நாதங்களைச் செருகுகின்றது. செருகிய நிலைகள் கொண்டு குளவி கூட்டைக் கட்டுகின்றது. கூட்டைக் கட்டிய பின் புழுவைத் தேடிச் செல்கின்றது. தேடிச் சென்று புழுவைத் தூக்குகின்றது.

கூட்டுக்குள் கொண்டு வந்து வைத்தவுடன் லேசாகக் கொட்டுகின்றது. கொட்டும் போது குளவியின் பால் புழுவின் நினைவு திரும்புகிறது. உயிரின் துடிப்பின் வேகம் அதிகமாகக் கூடுகின்றது.

தேள் கொட்டியுடன் நாம் துடிக்கின்றோம் அல்லவா… குளவியே கொட்டினாலும் துடிக்கின்றோம். இதைப் போல அந்தப் புழுவைக் குளவி கொட்டியபின் உணர்வுகள் தூண்டி எழுந்து உற்சாகத்துடன் வரும் பொழுது வேகத்தின் நிலைகள் அதிகமாகின்றது.

1.கொட்டிய விஷத்தின் தன்மைகள் புழுவின் தோலைச் சீக்கிரம் கருகச் செய்கின்றது… கருகிய பின் சருகு போல் ஆகிறது.
2.சருகு போல் ஆகும் தன்மை வரும் பொழுது இரண்டாவது தரம் கொட்டியவுடன் துடிப்பு அதிகமாகின்றது.
3.சருகு போல் ஆனபின் கொட்டிய வேகத்தில் கோழி முட்டைக்கு எப்படி ஓடு உருவாகின்றதோ
4.அதைப் போல புழுவின் தசைகள் அனைத்தும் அழுகி சருகு போல ஒரு கருவாக உருவாகின்றது.

ஆனால் புழுவை உருவாக்கிய அந்த அணுக்கள் அனைத்தும் துடிக்கும் நிலை பெறுகின்றது. மண்ணை வைத்து அந்தக் கூட்டைக் குளவி மூடிவிடுகிறது.

அந்தக் கூட்டிற்குள் அடங்கிய புழுவினைக் குளவி கொட்டியதால்
1.உயிரின் வேகத் துடிப்பு அதிகமாகி அந்த இயக்கத்தின் நிலைகள் கொண்டு காந்தம் அதிகமாகி
2.விஷத்தின் தன்மை உமிழ்ந்து அதனால் கட்டப்பட்டக் கூட்டின் மூலம்
3.வெளியிலிருக்கும் காந்த அலைகளைத் தனக்குள் ஈர்க்கும் நிலை வருகின்றது.
4.அவ்வாறு ஈர்க்கப்படும் பொழுது இந்த உயிரின் துடிப்பு வேகும் பொழுது காந்தப் புலன்கள் அதிகமாகிச் சூடாகி
5.உடலுக்குள் இருக்கக்கூடிய அழுகிய புழுவின் தசையை ஆவியாக மாற்றி உயிரின் துடிப்புக்குள் கொண்டு வருகின்றது.
6.ஒரு மத்தாப்பை நெருப்பை வைத்துக் கொளுத்தினால் அது பல ரூபங்கள் ஆவது போல
7.குளவியின் நிலைகள் உயிரிலே கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளாகச் சேர்த்து அந்தப் புழுவே குளவியாக மாறுகின்றது.

குளவியாக மாறி குளவி உருப்பெற்ற பின் அதற்கும் உமிழ் நீர் ஊறுகின்றது. கூட்டிற்குள் உமிழ் நீரைக் கொட்டுகின்றது. ஈரமான பின் துவாரமிட்டுத் தன்னிச்சையாக வெளி வருகின்றது.

கூட்டைக் கட்டிய குளவி போய் அதைத் திறப்பதில்லை. புழு குளவியாக ஆன பின் உமிழ் நீர் சுரந்து உமிழ் நீரைக் கொட்டித்தான் குளவி வெளி வருகின்றது.

அப்படி வெளியே வந்த பின் முதல் குளவி எதைச் செய்ததோ புழு குளவியான பின் அதே நிலையைச் செய்கின்றது. ஏனென்றால் அந்த உணர்வுக்கொப்ப வேலையைச் செய்கின்றது.

இதைப் போல் தான் ஒரு மாங்கனி தனக்குள் வித்தாக ஆனபின் அதை மண்ணிலே நடப்படும் பொழுது தன் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி இந்த உணர்வின் தன்மை ஈர்க்கப்பட்டு “அந்த மரத்தின் இலையைப் போன்று ரூபங்களை உருவாக்குகின்றது…”

இவ்வாறு எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல அணுக்களாகச் சேர்த்து வெளியிலே வந்த பல அணுக்கள் கலக்கப்படும் பொழுது “வேறு ஒரு புது வித்தாக…” மாறுகின்றது.

1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இப்படித்தான் அத்தனை சக்திகளும் நமக்குள் விளைந்து
2.இன்று மனிதனாக உருப் பெற்று இருக்கிறோம் என்பதை நாம் அறிய வேண்டும்.