இணைக்கும் சக்தியான வியாழன்

இணைக்கும் சக்தியான வியாழன்

 

சூரியனுக்கு உபகோள்கள் எத்தனை இருக்கின்றது…? வியாழன் செவ்வாய் புதன் பூமி சந்திரன் சனி கேது ராகு என்று எல்லாம் இருக்கின்றது.

நம் உடலிலும் இதே மாதிரித் தான்.

1.கேது என்று சொன்னால் பித்த சுரப்பி…
2.ராகு என்கிற பொழுது உடலின் மேல் தோல் பகுதி.
3.உயிரின் இழுக்கக்கூடிய பாகம் குரு… எல்லாவற்றையும் எடுத்து சமைக்கக் கூடியது.

அந்த உணர்வின் தன்மை வந்தவுடன் இரத்தத்தில் கலந்து எதை எதற்கு மாற்ற வேண்டுமோ மாற்றுகின்றது. கடைசியில் உடலில் சுற்றி வந்த பிற்பாடு என்ன செய்கிறது…?

1.உயிரைப் போலவே உணர்வின் தன்மை…
2.இந்த உடலைப் போலவே உணர்வின் தன்மை… என்ற இரண்டு நிலைக்கு வருகின்றது.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை எப்படி இயக்குகின்றதோ நம் உயிர் எடுத்துக் கொண்ட உடலுக்குத் தக்க மாதிரி உறுப்புகளாக மாறுகின்றது.

மனிதனான பின் தீமைகளைச் சமப்படுத்தும் சக்தியாக நஞ்சை மலமாக மாற்றும் தன்மை வருவதால் பரசுராமன் ஆகி… பலருடைய உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம்மை அறியாமலே பிறருடைய கஷ்டமெல்லாம் இரத்தத்திலே வந்து விடுகின்றது. அது சேராதபடி தடுக்க வேண்டும்.

அது தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் பிளந்தான். தீமைகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்.

நமக்குத் துரோகம் செய்பவன் அமெரிக்காவில் இருந்தாலும் இடைஞ்சல் செய்தான் பாவி என்று எண்ணினால் அங்கே புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால் அங்கே விக்கலாகிறது. பாசத்தால் என்ன ஆனதோ என்று வேதனைப்பட்டால் அங்கே சிந்தனையைக் குறைக்கின்றது.

எந்தெந்த வகையில் நாம் எடுத்து இப்படிப் பதிவாக்குகின்றோமோ நமக்குள் இந்த உயிர் இயக்குகின்றான்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று முதலில் உள்ளே செலுத்துகின்றோம்.
1.ரத்தத்தில் கலந்து வெளியே வரும் பொழுது உள்ளே சுற்றும்.
2.உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி அதிலே அமுக்கி விடுகின்றோம்
3.அந்த வேதனையான உணர்வை இங்கே தடைப்படுத்துகின்றது… உந்தித் தள்ளுகின்றது.
4.தள்ளியவுடன் வேதனையை இழுக்கும் சக்தி இல்லை என்றால் சூரியன் பிடிப்பில்லாத அந்த உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றது
5.நம் ஆன்மாவை அப்பொழுது தூய்மைப்படுத்திக் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

குழந்தையைப் படிப்பில் “நாம் தான் மக்காக ஆக்குகிறோம்” என்றால் அதை ஏற்றுக் கொள்வோமா…?

குழந்தையைப் படிப்பில் “நாம் தான் மக்காக ஆக்குகிறோம்” என்றால் அதை ஏற்றுக் கொள்வோமா…?

 

நம் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அதிலே சிறிது குறைவாகி விட்டால் நாம் என்ன செய்கிறோம்…?

1.எப்பொழுது பார்த்தாலும் படிக்காமல் கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்…
2.எதைப் பார்த்தாலும் மறந்து மறந்து போகின்றாய்…! என்று தான் குழந்தையிடம் சொல்கின்றோம்.

இந்த உணர்வை ஜாஸ்தி கூட்டிக் கூட்டி நமக்குள் சேர்த்து
1.குழந்தையை அதையே சொல்லிச் சொல்லித் திட்டும் போது என்ன ஆகின்றது…?
2.இப்படி அவனைச் சுத்தமாக மக்காக ஆக்கி விடுவதே நாம் தான்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து என் குழந்தை உடல் முழுவதும் அது படர வேண்டும்… சிந்திக்கும் ஆற்றலும் கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் சக்தியும் பெற வேண்டும்…! என்று நாம் எண்ண வேண்டும்.

குழந்தையைப் பற்றிப் பாசமாக எண்ணும் பொழுதெல்லாம் அந்த அருள் பெற வேண்டும் என்று நாம் எண்ணினோம் என்றால் அந்தக் குழந்தை நிச்சயம் முன்னுக்கு வருவான்.

ஆனால் அவனை நினைக்கும் போதெல்லாம்…
1.இங்கே போனான்… யாரையாவது சொல்கின்றான்… அவர்களுடன் அவன் சுற்றிக் கொண்டேயிருக்கின்றான் என்று
2.இதையே ஞாபகமாக வைத்து அவனை நாம் எண்ணிக் கொண்டிருந்தால்
3.அவன் படிக்கும் நேரத்திலோ பள்ளியில் படிக்கும் போதோ அவனுக்கு ஞாபக சக்தி வராது.
4.ஞாபக சக்தி குறைவதற்குத் தாய் தந்தையரே காரணம் ஆகின்றோம்.

நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. ஆனால் நாம் பக்குவமான உணர்வைப் பதிவு செய்வதில்லை.

நண்பருக்குள் அன்புடன் பண்புடன் உதவி செய்தான் என்று எண்ணி ஏங்கும் பொழுது அது விக்கலாக மாறுகின்றது. ஆனால் அதே சமயத்தில் துரோகம் செய்தான் பாவி உருப்படுவானா…? என்றால் புரையோடுகின்றது.

இதைப் போன்று தான்
1.பாசத்தால் இப்படி இருக்கின்றானே என்று குழந்தையைப் பற்றிக் குறைவான எண்ணங்களைச் செயல்படுத்தும் போது
2.இந்த உணர்வு அவனைத் தாக்கி… அவனைச் சிந்தனையற்றவனாகத் தான் மாற்றும்.

ஆக… வரும் சந்தர்ப்பங்களை நாம் சீராக அமைக்கவில்லை என்றால் அது நம்மையும் நாம் எண்ணிய எண்ணத்தையும் மாற்றி நமக்குள் பகைமை உணர்வைத் தான் ஊட்டுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும் அல்லவா.

ஆகவே அதைத் தூய்மைப்படுத்த இராமாயணத்தில் சுக்ரீவனைக் காட்டுகின்றார்கள். சுக்ரீவன் என்றால் துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி எடுத்துப் பரப்புகின்றது.

1.குழந்தையை எண்ணும் பொழுதெல்லாம்… அவனைப் பற்றிக் குறையாக எண்ணும் பொழுதெல்லாம்…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.“இதை வைத்து” நாம் இணைத்துப் பழக வேண்டும்.

அந்தத் துருவ துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இது சிறுகச் சிறுகக் கூட அவனைப் பற்றி நமக்குள் வளர்த்துக் கொண்ட குறையான உணர்வுகளை விலக்கிவிடும்.

அவன் நல்லவனாக வேண்டும் நல்ல நிலையாக இருக்க வேண்டும் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் அவன் ஒற்றுமையான நிலையில் வாழ வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் இன்று நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஆனால் முதலில் சொன்னது போன்று அவன் செய்யக்கூடிய குறும்புத்தனங்களையும் சேஷ்டைகளையும் நாம் நுகரும் பொழுது ஆத்திரமும் கோபம் வருகிறது.
1.அவன் செய்வது நம் உணர்வுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் உயிரில் பட்டு வெறுப்பு வருகின்றது.
2.அந்த வெறுப்பு நமக்குள் சென்று இயக்கிடாதபடி ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கொண்டு அதை நாம் தடைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் அந்த உணர்வின் நாதங்கள் (வெறுப்பு) நமக்குள் எழும்பக்கூடாது. காரணம்… நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் நம்மை ஆள்கிறது. அரங்கத்தில் எழும் நாதமே இங்கே வருகிறது.

1.இந்த உடலான அரங்கத்திற்குள் ஞானிகள் உணர்வுகளை நாதங்களாக
2.அதாவது அதனின் இயக்கச் சக்தியாக மாற்றிக் கொண்டு வர வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாத(மய)மாக்க வேண்டும்.

வியாழன் கோளின் சூட்சமம்

வியாழன் கோளின் சூட்சமம்

 

வியாழன் கோள் 27 நட்சத்திரங்களின் உணர்வைக் கவருவதற்கு 27 உபகோள்களை வைத்திருக்கிறது. அந்த 27 உபகோள்களும் 27 நட்சத்திரங்களின் சக்தியைக் கவர்ந்து கலவையாகித் தனக்குள் ஒன்றாக இணைக்கும் அந்தச் சக்தியாக மாறுகின்றது.

காரணம்
1.வியாழன் கோளின் சுழற்சியின் வேகம் அதிகம்.
2.எதனையும் வெகு தூரத்தில் இருந்து கவரும் சக்தியும் அதிகம்.

அது கவர்வதை உபகோள்களாக இருப்பது ஒவ்வொன்றும் அதனதன் தன்மையை வடிகட்டிக் கொள்கின்றது.
1.அதனதன் பருவத்திற்குத் தக்க சிறிது சிறிதாக உமிழ்த்தி
2.இதை ஒன்றாக இணைத்து அந்த எல்லாவற்றையும் இணைக்கும்
3.எதனுடன் எது சேர்த்தாலும் அந்த அணுக்களை ஒன்று சேர்த்துப் புதுப்புது உருக்களை உருவாக்க
4.இது உபயோகப்படுத்துகின்றது வியாழன் கோள்.
5.அதே சமயத்தில் வியாழன் கோளில் உள்ள உபகோள்களில் ஒன்று இந்தப் பக்கம் சுற்றும்… இன்னொன்று வேறு பக்கம் சுற்றும்.

விஞ்ஞானிகள் இதையெல்லாம் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள். அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையில் வருகின்றதா… அது என்ன…? என்கிற வகையில் இன்றும் ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளார்.

வியாழன் கோள் 27 நட்சத்திரங்களின் சக்தியைக் கவர்ந்து இதற்குள் ஒரு கலவையாகி புது விதமான கதிரியக்கமாக மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படித் தனக்குள் உறை பனியாக மாற்றுகின்றதோ இதை போல வியாழன் கோளும் தனக்குள் உறை பனியாக மாற்றும் சக்தி பெற்றது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
1.எதிர்காலத்தில் நீங்கள் இந்த உண்மைகளை எல்லாம் அறிய வேண்டும். நான் மட்டும் அறிந்தால் பத்தாது.
2.இதில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை நீங்கள் உணர்ந்து நீங்களும் தெளிந்து
3.இந்த உலக இருளை மாய்க்கக்கூடிய சக்தியாக வரவேண்டும். அதற்குத்தான் சொல்கிறேன்…!

“என்னுடைய சீடர்கள்…” படிக்க வேண்டிய மிக முக்கியமான உபதேசம்

“என்னுடைய சீடர்கள்…” படிக்க வேண்டிய மிக முக்கியமான உபதேசம்

 

எமது உபதேசங்களைக் (ஒலி நாடாவில்) கேளுங்கள்.. நூல் வடிவில் வந்த புத்தகங்களைப் படியுங்கள். அதனின் விளக்கத்தைச் சொல்லிப் பழகுங்கள்.
1.சாமி இந்த மாதிரிச் சொல்லி இருக்கின்றார்…
2.ஆகவே இந்த மாதிரி நடக்க வேண்டும் என்று வெளிப்படுத்துங்கள்.

காரணம்… எம்முடைய உபதேசங்களைக் கேட்டாலும் வாழ்க்கை நடைமுறைகளில் அதை வெளிப்படுத்தும் போது ஆழமாகப் பதிவாகும்.
1.அப்படிப் பதிவாக்கி விட்டால் தவறு என்று வந்தால்
2.“டக்…” என்று பிரேக் போட்டு… “திருத்தி வாழச் செய்யும் உணர்வுகள்…” நமக்குள் வரும்.

உதாரணமாக… ஒரு இன்ஜின் ஓடிக்கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். கற்றுக் கொண்ட என்ஜினியர்கள் அதில் வரக்கூடிய சப்தத்தை வைத்தே “இன்ன இடத்தில் குறைபாடுகள் இருக்கிறது…” என்று கண்டுபிடிக்கின்றார்கள். அதே போல மெக்கானிக் இதை எல்லாம் செய்கின்றார்.

இந்த இடத்திலே இன்னென்ன உலோகங்கள் இப்படி இப்படிச் செய்தால் இயந்திரத்தில் அந்த இடத்தில் வலுவாக இருக்கும் என்று இஞ்சினியர் சொல்வார்.

1.அவ்வாறு அதைச் செய்து கொண்ட நிலையில் ஓடும் பொழுது சப்தம் வந்தால்…
2.அதிலே இன்ன இடத்தில் பலவீனமாக இருப்பதால் தான் குறைபாடாகின்றது என்று கண்டறிந்து
3.அந்த மெக்கானிக் அதைச் சரி செய்கின்றார்… இல்லையா…?

அதே போன்று தான் மேலெழுந்தவாரியாக யாம் கண்டுபிடித்த உணர்வுகளை உங்களிடம் உபதேசிக்கின்றேன். நீங்கள் மெக்கானிக்காக ஆக மாற வேண்டுமா இல்லையா…!

அதை எடுத்து
1.“சாமி…!” இன்ன இடத்தில் இந்த மாதிரி இருக்கிறது…
2.எப்படித் திருத்தி வாழ்வது என்று கேட்டால் சொல்ல முடியும் அல்லவா…!

ஆகவே… எமது உபதேசத்தைக் கேட்டுப் பதிவாக்கி அதை வளர்த்துக் கொண்டவர்கள் அனைவருமே இந்த அருள் வழியில் தயாராக வேண்டும்… அருள் சேவைக்கு முன்னுக்கு வர வேண்டும்.

ஏனென்றால் ஆரம்பத்திலே நானும்
1.குருநாதர் காட்டிய வழியில் வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகளை முதன் முதலில் வெளிப்படுத்தும் போது
2.கூட்டத்தைக் கண்டபின் பட…பட… என்று சொல்லக்கூடிய நிலையாகி மறந்து போயிருக்கிறது.

எல்லோருக்கும் அப்படித்தான்…! துணிவுடன் பேசும் பொழுது தன்னாலே வந்துவிடும்.

தியானத்தில் எடுத்து சக்திகளைப் பெறுகின்றீர்கள்… இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று சொல்கிறோம். தியானத்தை மட்டும் செய்து கொண்டிருக்கின்றோமே…! என்று சோர்விலே கொண்டு போய் விட்டு விட்டால் என்ன செய்வது…?

தோசையைச் சுட வேண்டும்… எல்லோருக்கும் அதைக் கொடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. ஆனால் நெருப்பைக் கூட்டி விட்டால் என்ன ஆகும்…? அடிபிடித்து விடும்… நெருப்பு அதிகமாகும் இடமெல்லாம் கருகிவிடும்.

சீக்கிரம் எல்லோருக்கும் செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினோமே… இப்படிக் கருகிப் போய்விட்டது என்று தோசைச் சட்டியைச் சுரண்டு சுரண்டு என்று இப்படி ஒரு இரண்டு தரம் ஆகிவிட்டால் “அந்தச் சட்டியையே தூக்கி எறிந்து விடுவோம்…”

1.தியான வழியில் நம்முடைய மனது அது போல் ஆகிவிடக்கூடாது.
2.ஏனென்றால் தியான வழியில் நாம் நிதானமாகச் செயல்பட வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும்.
3.நாம் சுவாசிக்கும் உணவுகள் அனைத்தையும் ருசியாக மாற்ற வேண்டும்.

அவசர புத்தி என்ன செய்யும்…? தப்புத் தப்பாகப் பண்ணிவிடும். அப்படிப்பட்ட நிலையினை மாற்றி நல்ல முறையில் செயல்பட வேண்டும்.

இதே போன்று வடை சுடும் பொழுதும் அந்தப் பக்குவ நிலை தேவை. முதலில் சூடு ஏறிவிட்டதா…? என்பதைப் பார்ப்பதற்கு நீரைத் தெளிக்கின்றார்கள். சுர்…ர்ர்… என்று சத்தம் கேட்டபின்… சரி என்று சொல்லி வடையைச் சுட ஆரம்பிப்பார்கள்.

ஆனால்… மூன்றாவது வடையில் சூடு குறைந்து விடும். முதல் வடை கருகும் இரண்டாவது ஓரளவுக்கு இருக்கும்… மூன்றாவது வடை அப்படியே மிதந்து கொண்டிருக்கும்… எண்ணெயெல்லாம் கவர்ந்து கொள்ளும்… வடை வேகாது… சுவையே கெட்டுவிடும்.

ஆனால் பதமான நிலைகள் கொண்டு அந்த எண்ணெயின் சரியான சூட்டைக் கணித்து வடையைச் சுட்டுப் பாருங்கள். “கரெக்டாகச் செய்த பின்…” அது மொறு… மொறு… என்று எல்லா வடையுமே ஒன்று போலச் சுவையாக இருக்கும்.

ஆனால் ஒரே நெருப்பு தான்…!
1.காரணம் எது…? ருசியாக்குவது யார்…? மனது…!
2.நம் மனதைப் பக்குவப்படுத்தினால் ருசியாகின்றது… மனதில் சிறிது அவசரப்பட்டால் கருகி விடுகின்றது.

ஆகவே மனம் தானே காரணம். இதை உருவாக்குவது யார்…? நம் மனதினை நாம் தெளிவாக்க வேண்டும். தெளிவானால் பொறுமை வரும். பொறுமையால் ஞானத்தின் வளர்ச்சி வரும்.

ஆனால் அவசரப்பட்டோம் என்றால் எல்லாம் போய்விடும். இதையெல்லாம் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

1.நாம் அனைவரும் ஞானிகளாக மாற வேண்டும்.
2.சாமி மாதிரி நீங்களும் ஞானத்தைப் போதிக்கக் கூடிய வல்லுனர்களாக மாற வேண்டும்.

என்னுடைய உபதேசங்களைக் கேட்டுப் பதிவாக்கி அதனுடைய விளக்கங்களைத் தெரிந்து கொண்டே வரவேண்டும். இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளையும்… அப்படி விளைய வைக்க வேண்டும்.

1.என்னுடைய உபதேசக் கருத்துக்களை நிதானமாகப் படித்து
2.“முத்து…” மாதிரி எடுத்துச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.

கட… கட… என்று படிக்கக் கூடாது. அப்படிப் படித்தால் படிப்பவருக்கும் அர்த்தமாகாது… அதைக் கேட்பவர்களுக்கும் அர்த்தமாகாது. ஆகவே நிறுத்தி நிதானமாகப் படித்து முடிந்த பின்
1.குரு வழியில் அதன் உள் கருத்துக்களை அறிந்து
2.“சாமி இதைத்தான் சொல்கிறார்… நாம் இதைப் பெற வேண்டும்…” என்று விளக்கமாகச் சொல்ல வேண்டும்.
3.ஏனென்றால் அருள் வழியில் உங்களைப் பேச வைப்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

நான்கு வரி நீங்கள் படித்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகளை
1.“சாமி இவ்வாறு வெளிப்படுத்துகிறார்…! நாம் இதைப் படித்துப் பதிவாக்க வேண்டும்…! இந்த மாதிரி நாம் செயல்பட வேண்டும்…! என்று
2.நிறுத்தி நிதானமாக அதை விளக்கமாக எடுத்துச் சொல்லி கொண்டே வந்தால் எல்லோருக்கும் மனதில் பதியும்.

புத்தகத்தை எடுத்து ஒரு பத்து நிமிடத்தில் வேகமாகப் படித்த பின்… அடுத்தாற் போல் “அதிலே என்ன விளக்கம் இருக்கிறது…?” என்று கேட்டால் படித்தது மட்டும் தான் மிச்சமாக இருக்கும்… விளக்கம் தெரியாது.

ஏனென்றால்… யாம் கொஞ்சம் தான் கற்றிருக்கின்றோம்…!
1.என்னுடைய சீடர்கள் இதைக் காட்டிலும் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்.
2.உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லக்கூடிய நிலை வரும்.

பகைமையுடன் அல்ல…! “நான் தெரிந்து கொண்டேன் என்ற நிலை இல்லாதபடி…” உபதேசக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் படித்துப் பதிவாக்குங்கள். அது ஞானத்தின் வழியில் உங்களை அழைத்துச் செல்லும். அதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துகிறேன்.

காரணம் இந்த உடலில் சிறிது காலமே வாழுகின்றோம். அதற்குள் இந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் வெளிப்படுத்தும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்.

குருநாதர் என்னிடம் எவ்வளவோ சக்திகளைக் கொடுத்தார்.
1.ஆசைப்பட்ட உள்ளங்களுக்கெல்லாம் இதைச் செய்யப்பா என்றார்.
2.அதன் வழியில் நான் உங்களைத் தயாராக்க வேண்டும் அல்லவா.

ஆனால் ஒரு சிலர் யாம் கொடுக்கும் சக்திகளைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தி விடுகின்றனர். அது எல்லாம் வேலைக்கு ஆகாது.

நீங்கள் எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வு வரப்படும் பொழுது எல்லோருடைய உணர்வும் ஒன்றாகின்றது. அதைச் சீராக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றாக இருப்பீர்கள்.

1.உங்கள் வீட்டில் கர்ப்பம் என்று தெரிந்தாலே அங்குள்ள அனைவரும் சொந்தக்காரர்களும் ஒன்று சேர்ந்து
2.கருவில் வளரும் குழந்தை ஞானியாக வளர வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள். பெரிய தத்துவ ஞானியாக அவன் வருவான்.

நாம் பாய்ச்சும் அருள் உணர்வை அந்தத் தாய் நுகர்ந்து அந்த உணர்வுகள் தாயின் ரத்தத்தில் கலந்து அதே அருள் உணர்வு கருவிலிருக்கும் சிசுவிலும் விளையும்.

அப்படிப்பட்ட நிலையில் வளர்ச்சி அடைந்து அந்தக் குழந்தை பிறந்தால் போதும்.

எந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சிக் குழந்தையை வளர்த்தீர்களோ அவன் பிறந்த பின் எண்ணம் சொல் வெளி வரும் பொழுது அது நமக்கு சொந்தமாகின்றது.
1.அவனால் பகைமையை நீக்கும் உணர்வுகளைப் பெறுகின்றோம்.
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான்.

பல உணர்வின் தன்மையை எடுத்து நமக்குள் அணுக்களாக உருவாக்கப்படும் பொழுது அதை விளைய வைத்து உணவாக உட்கொள்கிறோம்.

இதே போல தான் ஞானிகளாகப் பிறக்கச் செய்வதற்கு மனிதனுடைய ஆறாவது அறிவால்
1.கர்ப்பிணி “செவி கொண்டு நுகரப்படும் பொழுது…” தான் இதைப் பெற வேண்டும்
2.தன் கருவில் இருக்கும் குழந்தையும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும்
3.உலக ஞானம் பெற வேண்டும் இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நம்மைப் போன்றவர்களின் தூண்டுதல் ஆகி… அந்தத் தூண்டுதலை நல்ல நிலையில் எடுத்துத் தியானித்து ஞானக் குழந்தை உருவாக வேண்டும் என்று செய்தால் மிகவும் நல்லது.

எதிர்காலத்தில் இத்தகைய ஞானிகள் தேவை. தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்வது போல நாம் இதைச் செய்து பழகுதல் வேண்டும். ஞானிகளை உருவாக்க வேண்டும்.

1.நம் தெருவிலே இரண்டு ஞானிகள் வளர்ந்தால் போதும்
2.அந்தத் தெருப் பக்கம் தீமைகள் வராது அருள் ஞானிகள் உணர்வுகளைப் பெறச் செய்யும்.

ஒவ்வொருவரும் இதைப் போன்று ஆங்காங்கு வாழும் இடங்களில் செயல்படுத்தினால் இந்த நாட்டிலேயே உயர்ந்த நிலைகளை உருவாக்கி நீக்கி விஞ்ஞான உலகின் நஞ்சிலிருந்து மீட்டிடும் அருள் சக்தியாகப் பெருகும்.

ஆகவே அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க மறந்து விடாதீர்கள்…!

1.ஒவ்வொருவரும் குரு காட்டிய வழியில் ஞானிகளாக மாறுங்கள்.
2.கூட்டமைப்பாகச் செயல்பட்டு உலகில் வரக்கூடிய தீமைகள் அனைத்தையும் நீங்கள் மாற்றி அமைக்க முடியும்…!

நிச்சயம் நீங்கள் செய்வீர்கள்…!

நம் வாழ்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக்கித் தருவதே… குருநாதர் காட்டிய அருள் வழி

நம் வாழ்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக்கித் தருவதே… குருநாதர் காட்டிய அருள் வழி

 

நம்முடைய குழந்தையை வளர்க்கின்றோம். செல்லமாக வளர்த்துக் கொண்டும் நேரத்தில் “அவன் குறும்புத்தனம் செய்கின்றான் பார்…” என்று சொல்வோம்.

அவனை நல்லவனாக்குகின்றோம்.
1.ஆனால் அவனுடைய குறைகளை நாம் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.
2.அதைப் பரிபக்குவமாக எடுத்துச் சொல்லும் நிலை வர வேண்டும்.

குடும்பம் வீடு என்று இருக்கும் பொழுது சில நேரங்களில் குறைகள் வருகின்றது. அதைப் பரிபக்குவமான நிலைகளில் நிவர்த்தி செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

பக்குவம் தவறி விட்டால் சொல்கள் மாறிவிடும். வாருங்கள் என்று கனிவுடன் வரவேற்பதற்குப் பதில் “வாங்கள்…..” என்ற சொல் அழுத்தமாக வரும். அது குற்றமாகிவிடும்.

ஆகவே பக்குவத்தின் நிலைகள் என்பது
1.ஒன்றை நல்லதாக்குவதும் கெட்டதாக்குவதும்
2.உணர்வுகளை மாற்றுவதும் குணங்களை மாற்றுவதும்
3.எதிரிகளாக்குவதும் நண்பனாக்குவதும்
4.இது எல்லாம் நம்முடைய உணர்வுகள் வெளி வரும் அதனின் பக்குவத்தைப் பொறுத்துதான் இருக்கின்றது.

ஆக நாம் தொழில் செய்தாலும் சரி மற்ற எதிலும் சரி… பக்குவ நிலை அவசியம் தேவை. சில கஷ்டங்கள் வந்து விட்டாலும் ஓரளவுக்கு நாம் பக்குவமான நிலைகள் கொண்டு சிந்தித்தோம் என்றால் அதிலிருந்து விடுபட்டு அதை நிவர்த்திக்கும் தன்மை வருகிறது… பகைமைகளைக் குறைக்கலாம்.

இதைப் போல வாழ்க்கையில் பரிபக்குவ நிலைகளை நாம் கொண்டு வருதல் வேண்டும். மற்றவருடைய குறையான உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அதை வைத்துத் தடுத்து நிறுத்தினால் அதன் வேகத்தையும் துடிப்பையும் நிறுத்தி உணர்வின் அறிவாக நமக்குள் சிந்தித்துச் செயல்படும் சக்தி வரும்.

1.யாரும் கெட்டவர்கள் அல்ல…
2.சந்தர்ப்பத்தில் தான் இத்தனை நிலைகளும் வருகின்றது. அந்தச் சந்தர்ப்பம் கெட்டவராக மாற்றுகின்றது.
3.அதிலிருந்து மீட்டிடும் வழியே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

ஆனால் அதே சமயத்தில் அதற்காக வேண்டி ஒரு முரடனிடமோ குடிகாரனிடமோ பக்குவமாகப் பேசினால் அவன் கேட்பானா…? நாம் அந்த இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்… அது தான் முக்கியம்.

நம்முடைய பக்குவத்தை அங்கே அவனிடம் எடுத்துச் சொன்னால் அவன் கேட்க மாட்டான். அவன் தவறு செய்ய விரும்புகின்றான்… நாம் அதற்குப் பக்குவம் சொன்னால் அவன் கேட்க மாட்டான்.

1.திருடனிடம் சென்று “ஏண்டா இந்த மாதிரிச் செய்கிறாய்…?” என்று பக்குவம் சொன்னால் கேட்பானா…? கேட்க மாட்டான்.
2.அந்த இடத்தில் அவனுடைய உணர்வுகள் நமக்குள் வராதபடி நம்மை நாம் பக்குவப்படுத்த வேண்டும்.

நல்ல பொருள்களை வைத்திருக்கிறோம் என்றால் அதிலே தூசி அதிலே படாதவாறு நாம் பாதுகாக்க வேண்டும். அதைப் பத்திரமாக மூடி வைக்க வேண்டும்.

தீமை நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும். ஆனால் அதற்காக வேண்டிப்
1.போக்கிரியையும் திருடனையும் பார்த்த பின் நாம் பக்குவமாக நடந்து கொண்டிருந்தால் எல்லாம் தலைக்கு மேல் சென்று விடும்.
2.நம்முடைய பக்குவமெல்லாம் தலைகீழாகக் கவிழ்ந்து விடும்.

அவன் செய்யும் தவறு நமக்குள் வந்து விடாது… அதனால் நாம் தவறு செய்யாது பக்குவமாக அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால் “இவன் இப்படித் தவறு செய்கின்றானே…” என்று அந்தத் தவறான உணர்வு நமக்குள் வந்தால் அதைத் தான் நம்மையும் செய்யும்படி வைத்துவிடும்.

இதைப் போல
1.நமது வாழ்க்கையில் நடந்து கொள்ள பரிபக்குவ நிலைகள் தேவை.
2.எந்தெந்த இடத்திற்கு எவ்வாறு தேவையோ… அப்போதெல்லாம் நம்மை நாம் பக்குவப்படுத்திப் பழக வேண்டும்.

அருள் ஞானக் கருத்துக்களைத் துணிவுடன் வெளிப்படுத்த வேண்டும்

அருள் ஞானக் கருத்துக்களைத் துணிவுடன் வெளிப்படுத்த வேண்டும்

 

எம்முடைய உபதேசத்தைக் கேட்டீர்கள். ஆனாலும் அடுத்தவர்களுக்கு இந்த உண்மையை எடுத்துச் சொல்ல அச்சம் ஏற்படுகின்றது. அச்சம் ஏற்படும் போது சொல்ல வேண்டும் என்ற துணிவும் இருக்கின்றது… சொல்ல முடியாமல் போகும் நிலையும் ஏற்படுகிறது.

காரணம்…
1.நம்மைக் கேவலமாக எண்ணுவார்களோ…?
2.அவருடைய பார்வையைப் பார்த்தாலே வித்தியாசமாக இருக்கிறது என்று விலகிச் சென்று விடுவோம்.
3.இந்த உண்மைகள் சொல்லாக வெளி வராது.

நம்முடன் சகோதரர்களாக இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள் குறைகளைக் காணும் பொழுது அந்தக் குறையை நிவர்த்திக்கும் உணர்வின் சத்துக்களை நாம் ஊட்ட வேண்டும்.

இதில் அச்சம் என்பது கூடாது… அச்சமென்று வந்து விட்டாலே “உண்மையை மறைக்கிறோம்…” என்று தான் பொருள்.
1.ஞானிகள் காட்டிய உண்மைகள் இவ்வாறு தான் வேறு வேறு நிலைகளுக்கு மாற்றப்பட்டு
2.உண்மைகள் அறிய முடியாதபடி போய்விட்டது காலம் காலமாக…!

இன்று விஞ்ஞான அறிவில் மனிதனின் குணங்கள் அனைத்தும் அழியும் பருவம் பெற்று விட்டது. அசுரனின் நிலைகளுக்குச் செயலாக்கும் உணர்வுகள் வளர்ந்து கொண்டு வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் துணிவுடன்… உபதேசத்தைக் கேட்பதோடு மட்டுமல்லாதபடி
1.தன் குடும்பங்களில் குறைகள் ஏற்பட்டால் அவர்களுக்குத் தெளிவாக ஞானத்தை எடுத்துரைத்து
2.நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற உண்மையினைத் துணிவுடன் எடுத்துச் சொல்ல வேண்டும்.

குடும்பம் எப்படி ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்…? குறைகள் நம்மை எவ்வாறு சாடுகின்றது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்ற உபாயங்களைச் சொல்லித்தான் அதை மாற்றுதல் வேண்டும்.

நீ தியானம் செய்து கொண்டே தான் இருக்கின்றாய். ஆனால் நீ தவறு செய்யாமல் இருக்கின்றாயா…? என்று அவர்கள் நம்மைக் கேட்கும் நிலை வந்து விடுகின்றது.

1.அதாவது… தியானம் செய்து கொண்டிருப்பவர்களிடம் சிறிது குறைகள் வந்தாலும்…
2.பார்…! இவன் எனக்கு அன்றைக்கு உபதேசித்தான் ஆனால் இப்போது இவன் என்ன செய்கிறான்…? என்று சொல்லக்கூடிய நிலை வந்து விடுகின்றது.

உயர்ந்த குணங்கள் இங்கே மறைக்கப்படுகின்றது.

நாம் செய்து வைத்திருக்கும் உணவுப் பொருள்களிலே ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்த உணவையே இது கெடுத்து விடும்… செயலற்றதாக மாற்றி விடுகிறது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளில்
1.நமக்குள் அறியாது வரும் பிழை உடனே அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.அப்பொழுது நமக்கே புரியும்… நம்மை அறியாமல் இந்த சொல் வந்து விட்டது என்று…!
3.இந்தக் குற்றத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் மனதைப் புண்படுத்தும் என்ற நிலையில் தன்னைத்தான் உணர்தல் வேண்டும்.
4.இதை உணர்ந்த பின் மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று அதை நமக்குள் அடக்கிடல் வேண்டும்.

பின்…
1.என்னை அறியாது இயக்கும் இருள்கள் அகல வேண்டும் மெய்ப் பொருள் காணும் திறன் என்னிலே அது வளர வேண்டும் ஈஸ்வரா…!
2.என் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தி பெற வேண்டும்
3.என் சொல் அனைவரையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் செயலாக வர வேண்டும் என்று இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

“சாமி மாதிரி பெரிய சக்தி பெற்று…” உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்

“சாமி மாதிரி பெரிய சக்தி பெற்று…” உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்

 

உதாரணமாக… வேதனை என்ற உணர்வுகளை அதிகமாக நுகர்ந்தால் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் சண்டை வருகிறது. தொழில் செய்யும் இடங்களில் நிம்மதி இல்லை.

ஆனால் நாம் அருள் உணர்வுகளைப் பெற்று வளர்த்தால்
1,நாம் போகும் இடமெல்லாம் அனுசரனையாக நம்மைப் பாதுகாக்கும் நிலையாக வருகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெற்றோமென்றால் அதுவே “நமக்கு ஒரு பெரிய பாதுகாப்பாக…” வருகின்றது.

சந்தர்ப்பத்தால் தடைகள் வருகிறது என்றால் ஓரளவுக்கு அதிலிருந்து நம்மை மீட்டிடும் நிலையாக
1.“ஏதாவது ஒரு ரிமோட் பண்ணி…” வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்
2.அதற்கு தகுந்தாற் போல் ஒளியாக மாற்றக்கூடிய சக்தி கிடைக்கும்.

ஆகவே… உங்களை நீங்கள் நம்புங்கள்.

எல்லாமே சாமி தான் என்று எண்ணுவதற்குப் பதிலாக “சாமியைப் போன்று பெரிய சக்தி பெற வேண்டும்…!” என் பேச்சால் மூச்சால் பிறருடைய நோய்கள் அகல வேண்டும் அனைவரும் நன்மை பெற வேண்டும்… என்ற உணர்வை எடுத்து வளர்த்து வாருங்கள்.

இந்த அருள் உணர்வுகள் உலகம் முழுவதற்கும் பரவும்.

உங்களைத் தெளிவாக்கி எல்லோருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தான் சதா தியானம் இருக்கின்றேன். அருள் வழியில் நீங்கள் தயாரானால் அனைவருக்கும் இது நல்லதாகும்.

இந்த உடல் தான்… நாம் செய்யும் தொழில் தான்… சொத்து தான்… என்று இல்லாதபடி இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதே நமக்கு அழியாச் சொத்து என்பதை உணர்ந்து அதன் வழி வளர்வோம்.

1.துருவ நட்சத்திரத்தினை மறந்து விடாதீர்கள்… எந்த நிமிடமானாலும் அதனின் சக்தியை எடுங்கள்…
2.அந்த உணர்வை உங்களுக்குள் சேர்த்துப் பழகுங்கள்… எந்த இருளும் உங்களை நாடாது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது… அதன் வழி உங்களைக் காக்கின்றது, அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

எல்லோருக்கும் நன்மையைத்தான் நான் செய்தேன்… இப்போது இப்படி ஆகிவிட்டது என்று வேதனையாக எண்ணினால் நாம் அதுவாகி விடுகின்றோம்.

ஆனால்… அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… அந்த அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால் நாம் அதுவாகின்றோம்.

எல்லோருடைய உணர்வுகளும் நமக்குள் கலக்கப்படும் பொழுது எல்லோரையும் காக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றது. அதை நாம் அனைவரும் இணைந்து செயல்படுத்துவோம்.

1.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்…. உலகத்தைக் காப்போம் என்ற நிலையில்
2.நீங்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் உங்கள் ஊரிலும் இந்த உணர்வுகள் நல்ல சக்தியாக மாறும்.
3.அது உங்களையும் காத்து ஊரையும் காக்கும்.
4.நீங்கள் உங்களைச் சாதாரண மனிதனாக எண்ண வேண்டாம்.
5.உலகையே காக்கும் திறன் உங்களிடமிருந்து வெளிப்பட வேண்டும்.

வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம்

வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம்

 

மனிதனாக இருக்கும் பொழுது ஒன்று சேர்த்த உணர்வுகள் நமக்குள் இல்லை. பலவிதமான உணர்வுகள் மோதும் பொழுது தான் மேல் வலி தலைவலி காய்ச்சல் இடுப்பு வலி தசைவலி வருகின்றது. ஒன்றிணைந்த உணர்வுகள் இல்லாததால் தான் கடும் நோய்கள் வருகின்றது.

1.அந்த ஒன்று சேர்த்த உணர்வின் தன்மையை வளர்க்க உணர்வுகளை ஒன்றென இணைக்க
2.ஒவ்வொருவர் உயிரையும் ஈசனாக நாம் மதித்தல் வேண்டும்… உடலை ஆலயமாக மதித்தல் வேண்டும்.
3.மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் குணங்களை மிக மிக சக்தி வாய்ந்த நிலையாக மதித்தல் வேண்டும்.

உங்களை நான் துதிக்கிறேன் என்றால் என்னை நான் மதிக்கின்றேன் என்று பொருள். அதற்குத் தான் ஆலயத்திலே தெய்வ குணங்களைப் பெற வேண்டும் தெய்வ நிலையாக இருக்க வேண்டும் ஆலயம் வருவோர் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணும்படி ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

தீப ஆராதனை காட்டுகின்றார்கள் என்றால் அப்போது அந்த வெளிச்சத்தால் அங்கிருக்கும் பொருள்கள் தெரிகின்றது. “பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெற வேண்டும்…” என்று அப்போது நாம் எண்ண வேண்டும்.

1.பொருளறிய வேண்டிய நிலைகள் இந்த வாழ்க்கையில் ஏராளம் இருக்கின்றது.
2.ஆனால் “அறிந்து விட்டோம்…” என்ற நிலையில் தான் நாம் இருப்போம்.

நம் குழந்தை மீது அன்பும் பண்பும் பாசத்தையும் செலுத்தி இருப்போம். அவனை எங்கேயாவது ஒரு வேலைக்கு அனுப்பி… அவன் வரத் தாமதம் ஆனால் ஏன்டா இப்படி நேரமாகிவிட்டது…? என்று கேட்கின்றோம். அந்த இடத்திலே “அழுத்தம்” அதிகமாகக் கொடுக்கின்றோம்.

ஆனால் வாங்கி வருவதற்கு முன் இப்படிச் சத்தம் போடுகின்றார்கள் என்று அவனுடைய உணர்வு மாறுகின்றது. அப்படி மாறினால் இருவருக்குமே நிச்சயம் பொருளறியக்கூடிய நிலை இல்லாது போகின்றது.

ஆகவே நாம் சொல்லக்கூடிய சொல்லில் பொருளறியும் நிலைக்கு வர வேண்டும். நமது சொல் அவனைத் தெளிவாக்கும் நிலைக்கு வர வேண்டும்.

1.சிறிது நேரத்திற்கு முன்பாக நீ வந்திருந்தாய்…! என்றால் நன்றாக இருந்திருக்கும்.
2.ஏனென்றால் வந்த விருந்தளிகள் ஊருக்குப் புறப்பட்டார்கள்… என்று சொன்னால் இந்த உணர்வுகள் தெளிவாகும்.

அதற்குப் பதிலாக… கடைக்குப் போய் எவ்வளவு நேரம் ஆனது… ஏன்டா இப்படிச் செய்கிறாய்…? என்று விருந்தாளிகளுக்கு முன் சொல்லும் பொழுது அவனுக்கு அவமரியாதை ஆகி விடுகிறது.

இப்பொழுது அப்படிச் சொல்லிவிட்டாலும் அடுத்து… நாம் எதையாவது சொல்லி விடுவோமோ…! இது எதற்கு வம்பு…? வரவில்லை என்றால் திட்டுவார்கள்…! என்று அவனுக்குள் இந்த மனநிலை வந்து விடும்.

அதனால் தான் கோவில்களில் தீபத்தை வைத்து ஆராதனையாகக் காட்டுகின்றார்கள். எந்த நிலையாக இருந்தாலும் “பையன் வெளியிலே சென்றான்… சரி நேரம் ஆகிவிட்டது…” என்று அந்தப் பொருளை அறிய முடியும்.

விருந்தாளிகள் வந்துள்ளார்கள் என்ற அன்பு மிகுதியால் அவர்களைக் கவனிக்க வேண்டும் என்று பொருளை வாங்கச் சொல்லிப் பையனை அனுப்புகின்றோம். சீக்கிரம் வாங்கிக் கொண்டு வா…! என்று தான் சொல்லி அனுப்புகின்றோம்.

ஆனால் நேரமாகி விடுகிறது.

நேரம் ஆகிவிட்டது நாங்கள் ஊருக்குப் போகிறோம்…! என்று விருந்தாளிகள் சொல்கின்றார்கள். அப்படிச் சொல்லும் போது நமக்கு உணர்வு மாறுகின்றது. அந்த நேரம் வெறுப்பு வருகின்றது… நம் பையன் மீது கடுகடுப்பாகிறது.

எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் செய்கின்றான் என்று இந்த உணர்வு வருகின்றது.
1.வந்தவர்களைப் பார்க்கும் பொழுது பாசம் வருகின்றது.
2.ஆனால் பையன் மீது வெறுப்பு வருகின்றது.

அவன் தாமதமாக வந்த பின் ஏண்டா இந்த மாதிரி நேரமாக்குகின்றாய்…? என்று இவர்களை நாம் மெச்சப் பார்க்கிறோம்.

நான் வேகமாகத் தான் வாங்கி வரச் சென்றேன். கடைக்காரன் தாமதப்படுத்தி விட்டான்… ஆனால் என்னை வீட்டிலே இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அவனுக்கு நம் மீது வெறுப்பு வருகிறது.

அந்த இடத்தில் நாம் பொருளை அறிய முடியாது போய் விடுகின்றது… வெறுப்பு வளர்கின்றது. அதற்குத்தான் கோயிலில் விளக்கைக் காட்டுகின்றார்கள்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய நிலை வந்தாலும் பொருளறிந்து செயல்படும் அந்த உயர்ந்த ஞான சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும். அப்படி எண்ணினால் அந்த விளக்கின் வெளிசத்தால் பொருள் தெரிவது போன்று நல்ல உணர்வு கொண்டு நாமும் செயல்பட முடியும்.

1.பையன் போன இடத்திலே என்னமோ தெரியவில்லை… ஏதோ நேரமாகிவிட்டது… சரி பரவாயில்லை…! என்று சொல்லிவிட்டு
2.விருந்தாளிகளிடம் “நேரம் ஆகிவிட்டால் நீங்கள் போய் வரலாம்…” என்று சொன்னால் அது உசிதமாக இருக்கும்.

ஆனால்… பையன் வரட்டும்… வரட்டும்…! என்றே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் விருந்தாளிகளைத் தடைப்படுத்துவது போன்று ஆகிவிடும். ஏனென்றால் இப்படி ஆக்கிவிட்டால்… அடுத்தாற்போல் “இந்த வீட்டிற்குச் சென்றாலே நம்மைத் தாமதப்படுத்துவார்கள்…” என்ற எண்ணம் தான் அவர்களுக்கு வரும்.

ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்களில் வெறுப்பாகாதபடி
1.அந்த உயர்ந்த பண்பினை வளர்க்க வேண்டும்.
2.அன்பினைப் பேணிக் காக்க வேண்டும்.
3.பரிவான உபகாரத்தைப் பன்புடன் செயல்படுத்த வேண்டும்

ஆகவே வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில்… நாம் எப்படித் தெரிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு செயல்பட வேண்டும்…? என்பதை “ஞானிகள் காட்டிய அந்த அருள் வழிப்படி நாம் செயல்படுவதே மிகவும் நல்லது…”

உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவாக்க வேண்டியதன் முக்கியத்துவம்

உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவாக்க வேண்டியதன் முக்கியத்துவம்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் துணை கொண்டு யாம் இயற்கையின் இயக்கப் பேருண்மைகளை அனுபவ ஞானமாகப் பல சிரமங்களுக்கிடையே தான் பெற்றோம்.

அதை உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் பொழுது அந்த அருள் உணர்வுகளை உங்களுடைய கருத்தில் பதிய வைக்காமல் விட்டு விடுகின்றீர்கள்.

எமது அருள் ஞான உபதேசங்களை நீங்கள் படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் ஆர்வமுடன் இருப்பீர்கள். ஆனால் அருள் ஞான உபதேசங்களைக் கேட்டுப் படித்த பிறகு சில நிமிடங்களில்…
1.சாலையில் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால்
2.அதைப் பார்த்து அதனின் உணர்வை ஈர்த்து உங்களுக்குள் பதிவு செய்து வளர்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.

உதாரணமாக… ஒரு குரு தம் சீடரை அழைத்து அவருடைய கையில் காசைக் கொடுத்துக் “கடைக்குச் சென்று கொழுக்கட்டை வாங்கி வா” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

சீடரும் தாம் கடைக்குச் சென்று கொழுக்கட்டை வாங்கி வருவதற்குக் கிளம்பினார்.

சீடர் கடைக்குச் செல்லும் வழியில் குறுக்கே ஒரு சாக்கடை இருந்தது. சாக்கடையைத் தாண்டித்தான் கடைக்குச் செல்ல வேண்டும். சாக்கடையில் இருந்து வரும் நாற்றமோ சீடரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருந்தது.

சீடர்… “அத்ரி… சீ… தூ…” என்று சொல்லிக் கொண்டு மூக்கைப் பொத்தியவாறு சாக்கடையைத் தாண்டிச் சென்றார். இப்படிச் சென்றவர் நேராகக் கடைக்குப் போய் நின்று “கொழுக்கட்டை தாருங்கள்” என்று கேட்பதற்குப் பதிலாக “அத்ரி… சீ… தூ…” கொடுங்கள் என்று கேட்டார்.

அதாவது… எமது அருள் ஞான உபதேசங்களை நீங்கள் கேட்பீர்கள். பின்னர் என்ன செய்வீர்கள்…?
1.நல்லவைகளை அறிந்து கொண்ட பின் சாலையில் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால்
2.அதைக் கண்களால் பார்த்து அதன் உணர்வுகளை விலைக்கு வாங்கிக் கொள்வீர்கள்.

இதன் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட நிலையில் வீட்டிற்குள் போவீர்கள். வீட்டில் மனைவி மீதும் குழந்தை மீதும் வெறுப்பு இருக்கும். குழந்தை சிறிது குறும்புத்தனம் செய்தால் போதும்.

இவன் இப்படிச் சேட்டை செய்கிறான்…! நாம் எப்படி இருக்க வேண்டும்…? என்று “சாமி” உபதேசம் செய்கிறார்.
1.ஆனால் வீட்டில் மனைவி குழந்தைகள் இப்படி இருக்கின்றார்களே…! என்று
2.தன்னை நியாயப்படுத்திக் கொண்டு தன் மனைவி குழந்தைகளிடம் வேக உணர்வைக் காண்பிப்பார்கள்.

ஏனென்றால் நமக்குள் எதிர்நிலையான உணர்வுகளான பின் நமக்குள் உணர்வுகள் வேகமாகின்றது.

ஆனால் அருள் ஞான உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து வளர்த்து
1.”உங்களுடைய உணர்வுகள் எதிர்நிலைக்கு மாறாதிருந்தால்” உங்களுடைய உடலில் உள்ள நோயை குறைக்க முடியும்.
2.குடும்பத்தில் உள்ள சிக்கலை நிவர்த்திக்கும் ஆற்றலும்… சிந்தித்துச் செயல்படும் தன்மையும் வரும்.

அருள் ஞான உணர்வுகளை நீங்கள் படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் ஊழ்வினை என்ற நிலையில் பதிவாகுகின்றது. யாம் சொல்லிக் கொண்டு வருவதனைத்தையும் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் உங்களுடைய கருவிழி ருக்மணி கவர்ந்த உணர்வலைகளை உங்களுடைய செல்களில் பதிவாக்குகின்றது.

ஒருவரை எமது அருள் ஞான புத்தகங்களைப் படிக்கச் சொல்லி அவரைத் தாம் படித்ததைத் திரும்பச் சொல்லும்படிக் கேட்டால் அவருக்குச் சொல்லத் தெரியாது. ஏனென்றால் புத்தகங்களில் கருத்துகள் அடுக்கடுக்காக வரும்.

தியானத்தில் இருப்பவர்கள் திரும்பச் சொல்கின்றார்கள் என்றால் அவர்கள் தியானத்தில் இருப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்.
1.யாம் தந்தருளிய தியான முறையினைக் கடைப்பிடித்து வருபவர்கள்
2.தாங்கள் படித்த கருத்தினுடைய மூலங்களை அடுக்கடுக்காகச் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

காரணம் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…!
1.பதிவான உணர்வுகள் எலக்ட்ரான் என்ற முறைப்படி அது காற்றில் இருப்பதை எடுத்து
2.நம்முடைய இயக்கச் சக்தியாக்கக் கூடிய ஞானம் நமக்கு வருகின்றது.

ஞானத்தின் தன்மை வந்தால் நமக்குள் தீமை புகாது வலிமை கிடைக்கும். நான் காட்டிற்குச் சென்று ஞானத்தைப் பெறுவேன்… “பெற வேண்டும்” என்று நினைத்தால் முடியாது.

ஒரு விஞ்ஞானி புதிய ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் இருக்கும் பொழுது பல சங்கடங்களை அனுபவிக்கலாம். அப்படி அவர் பல சிரமங்களை அனுபவித்துக் கண்டுபிடித்த இயந்திரத்தை நாம் சரியானபடி ஏற்றுக் கொண்டோமானால் அந்த விஞ்ஞான அறிவு நமக்கு பயன்படும்.

விஞ்ஞான அறிவு கொண்டு கம்யூட்டரை செய்து கொடுக்கின்றார்கள். சிரமப்பட்டுத் தான் அதைச் செய்து கொடுக்கிறார்கள்.

ஆனால் கம்ப்யூட்டரை விளையாட்டிற்குத் தட்டிக் கொண்டிருந்தால் பயன் ஒன்றும் இருக்காது.

அதைப் போன்று யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவு செய்து கொண்டபின்
1.அந்த உபதேசித்த உணர்வுகளை நினைவுபடுத்தி
2.நீங்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை எளிதில் நுகர முடியும்.

உங்கள் உயிர் வழி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை நுகர்ந்து… உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்க முடியும். நாம் அனைவரும் இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு கொண்டு வந்துவிட்டோம் என்றால் நாம் எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க முடியும்.
1.நமக்குள் தீமைகள் வராது தடுக்க முடியும்.
2.மெய் வழி வாழ முடியும்… மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளை நாமும் கண்டுணர முடியும்.
3.மெய் ஞானிகளுடன் இணைந்து வேகா நிலை என்ற நிலையாக அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெற முடியும்.

எமது அருளாசிகள்.

குரு என்றால் யார்…?

குரு என்றால் யார்…?

உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது. உயிர் ஒளியின் சிகரமாக இருக்கும் பொழுது அதனின் அறிவாக இயக்குகின்றது.

இந்த உடலின் வாழ்க்கையை ஞானத்தின் நிலைகள் கொண்டு சிந்தித்து பாருங்கள். குருவை நாம் எப்படி மதிக்க வேண்டும்…?

1.உங்களைப் பழித்துப் பேசும் உணர்வுகளையோ உங்களைத் துன்பப்படுத்தும் நிலைகளையோ நான் எண்ணினேன் என்றால்
2.அது என் உயிரான குருவிற்கு நான் செய்யும் தீங்கே ஆகும்.

அதாவது இந்த உயிரால் வளர்க்கப்பட்ட உண்மையின் உணர்வை மறந்து… நான் எடுக்கும் உணர்வுகள் எனக்குள் வந்தால் அது “குருவிற்கு நான் செய்யும் துரோகம்…”

எண்ணிலடங்கா நரக வேதனையின் நிலைகள் உயிரால் உருவாக்கப்பட்டு எத்தனையோ நிலைகள் உயர்ந்த நிலைகள் கொண்டு சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டது தான் இந்த உயிர்.

பல சரீரங்களில் பல தீமைகளிலிருந்து விடுபட்டு நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர்.
1.அப்படிப்பட்ட உயிரை மதிக்கத் தவறினால் அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
2.துரோகிளுக்கு உறுதுணையாகப் போனவர்களின் நிலைகள் நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

நமது குரு பைத்தியக்காரர் போல் இருந்தார். காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானையைக் காட்டி அந்த யானையிடமிருந்து தப்பிக்க “யானையுடன் நட்புக் கொள்ள வேண்டும்…” என்றார்.

பூனை எப்படி எலியின் உணர்வை நுகர்ந்து அந்த மணத்தைக் கொண்டு எலியை உணவாக உட்கொள்கின்றதோ அதைப் போல
1.“யானையின் மணத்தை நுகர்ந்து கொள்…”
2.திரும்பத் திரும்ப நுகர்ந்து அந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சு.
3.அதனுடைய எண்ணங்களுக்கு வரும் பொழுது யானை வலுவுடையதுதான் என்றாலும் அதன் வலுவின் தன்மை உனக்குள் சிக்கி
4.அது தாக்கும் நிலையில் இருந்து நீ தப்பிக்கலாம் என்றார்.

சில நேரங்களில் காட்டுக்குள் போகும் பொழுது குருநாதர் எமக்கு அனுபவத்தைக் கொடுத்தார். அந்த அனுபவத்தைத் தான் சொல்கின்றேன். நீங்கள் அலட்சியப்படுத்தினால் எனக்கு ஒன்றும் இல்லை.

அலட்சியப்படுத்துவோர்கள் உணர்வுகளுக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தைத் தவறவிட்டதாக ஆகி விடும்.