துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்கின்றாயா…? என்று கேட்டார் குருநாதர்

துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்கின்றாயா…? என்று கேட்டார் குருநாதர்

 

பாம்பினங்கள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது தான். அந்த விஷம் அதிகமாக அதற்குள் வளர்ச்சி அடையப்படும்பொழுது அது வைரக்கல்லாக… நாகரத்தினமாக மாறுகின்றது.
1.ஆண் பெண் என்ற உணர்வுகள் கொண்டு ஈர்க்கப்பட்டால்
2.அது வைரமாக நாகரத்தினமாக மாறுகின்றது.

இதே போன்று தான் மனிதனின் உணர்வுகள் உணர்ச்சியின் தன்மை கொண்டு இரண்டும் ஒன்றான பின் உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்த உயிரணுவாக மாறுகின்றது. மனிதனுக்கு அடுத்து உடல் இல்லை.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இப்படித்தான் உணர்வின் தன்மை ஒன்றாகி ஒளியின் சரீரம் பெற்றுத் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்துடன் குருநாதர் என்னை அங்கத்தினராக இணைத்தார். அங்கத்தினராக இணைத்து அதனைப் பின்பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எப்படி அகற்றுவது…? என்றும் உணர்த்தினார்.

புலி குகைக்குள் சுற்றுவது போல 20 வருடம் காடு மேடெல்லாம் அலைந்து… புலியும் பாம்பும் தாக்கிக் கொள்ளும் இடங்களிலும்… புலியும் பன்றியும் தாக்கும் இடங்களிலும் என்னைச் செல்லும்படி செய்து… காட்டு விலங்குகள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தப்பிக்கின்றது…? என்று சில உண்மை உணர்வுகளை நேரடியாகக் காணும்படி செய்தார். தெரிந்து கொண்டேன்.

அந்த மிருகங்கள் ஒன்றை ஒன்று தாக்கி இறக்கப்படும் போது அதனின் உடல்கள் எப்படி மாறுகின்றதோ இதைப் போன்று
1.மனிதன் பிறிதொரு வேதனையை நுகரப்படும் பொழுது தாக்கி… இந்த உடலை உருமாற்றச் செய்து விடுகின்றது
2.மனிதன் அல்லாத உருக்களாக மாற்றி விடுகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட நீ துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்கின்றாயா…? என்று கேட்டார்.

இருளை அகற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இணைந்துவிடு என்றார்.

1.உன் ஆயுள் முழுவதற்கும்… எப்பொழுதெல்லாம் தீமைகளைக் காணுகின்றாயோ
2.அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நுகர்ந்து அந்த உணர்வை வளர்த்து
3.உன் உடலுக்குள் தீமைகளை மாற்றி அமைக்கும் சக்தியாக நீ பெற வேண்டும்.

ஏனென்றால் எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றி அமைக்கும் சக்தி பெற்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.
1.ஆகவே அதனை நீ பெறு… அதன் வழி நீ வாழ்…! என்று
2.இந்த உண்மையின் தன்மையை குருநாதர் உணர்த்தினார்.

எமது குருநாதர் என்னை எப்படி ஆயுள் கால மெம்பராக அங்கே இணைத்தாரோ… அதன் வழியில் தான் உங்களையும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணையச் செய்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் தவறுகள் வந்தாலும் அதிலிருந்து நீங்கள் மீட்டிக் கொள்ள முடியும்.

பிறர் படும் வேதனைகளையோ துயரங்களையோ கோபங்களையோ நுகர நேர்ந்தாலும் அது உங்களுக்குள் உருப்பெறாதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து புருவ மத்தியில் நீங்கள் எண்ணப்படும் பொழுது தீமைகள் உட்புகாது தடுக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் உள் முகமாகச் செலுத்தப்படும் பொழுது இது வலிமை கூடக் கூட நோயாளியின் உணர்வைக் கேட்டறிந்தாலும் அந்தத் தீமையின் உணர்வுகளைப் பிளந்து விடுகின்றது… ஆன்மாவைத் தூய்மையாக்குகிறது.

துணியில் அழுக்குப்பட்ட பின் அது போகவில்லை என்றால் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அந்த அழுக்கை வெளியேற்றி அதை எப்படித் தூய்மையாக்குகின்றோமோ அதே போன்று தான் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகள் நம் உடலில் இரத்தநாளங்களில் கலந்தாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அதைத் தூய்மையாக்க முடியும்.

அது உடலில் பெருகப் பெருக…
1.இந்த உடலை விட்டு எப்போது பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைய முடியும்
2.அதற்குத்தான் உங்களை ஆயுள் கால மெம்பராக இணைப்பது.

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்ற வேண்டும் என்பதே “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற வான்மீகியின் தத்துவம்

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்ற வேண்டும் என்பதே “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற வான்மீகியின் தத்துவம்

 

உயிரையும் ஆன்மாவையும் இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் சக்தியின் வீரியத்தைக் காட்ட வந்த காவிய மகரிஷியே வான்மீகி ஆவார்.

தன்னுடைய காவியத்தில் அந்த உயிர் ஆன்ம சக்தியின் தொடருக்கு இராமன் சீதை என்று காட்டினாலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் கூட “ஒருவனுக்கு ஒருத்தி…!” என்றபடி வாழும் வாழ்க்கை நியதியைக் காட்டினார்.

அந்த வழியில் நடந்திடும் பரிபக்குவத்தை மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவ ஞான நிலைகளும் கூட
1.தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் வாழ்க்கை நெறி முறையின் கோட்பாடு என்று காட்டி
2.அது சக்திச் சுடரால் காக்கப் பெறும் என்ற சூட்சமத்தையும் காட்டினார்.

அப்படிப்பட்ட வாழ்க்கை நெறி “கற்பு…” என்னும் சுடரால் ஒளி பெற்று விளங்குவதால் அந்தக் “கற்பு நெறி…” என்பது ஒழுக்கம் என்கிற தொடரில் பெறப்படும் உயர்ந்த பண்பு நிலை தான்.

நாம் கைக்கொள்ள வேண்டிய சாராம்சமாக அதையே வழிகாட்டியாக அமைத்து நடை முறைச் செயலாக அதனின் இயக்கம் கொண்டால் அது நல் வினைப் பயனாகப் பெற்று
1.நம் உயிர் ஆன்ம சக்தி என்றும் பிரகாசித்து
2.ஜோதித் தத்துவத்தில் நிலையாக விளங்கும்.

அப்படிக் காக்கப் பெறாத வாழ்க்கைத் தொடர் என்பது காமத்தின் அடியாக எழும் மோகமாகி வாழ்க்கை நெறியை அழித்து உயிர் ஆன்ம சக்தித் தொடரில் குலத்தையும் பூண்டோடு அழித்து மறைத்துவிடும்.

சாந்த குணம் பெற்ற உயிர் சக்தியான இராமன் அகன்றாலும்.. தைரிய குண சக்தியான லட்சுமணனால் காக்கப்படும் நிலை இருந்திருந்தாலும்…
1.சீதை என்ற ஆன்மாவில் பதியப் பெறும்
2.ஆசை என்னும் குண உந்துதல் சரீரத்துடன் ஊட்டப் பெற்றால் என்ன ஆகும்…?

நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வழி நடத்துகின்றோமோ அதுவே ஆன்ம சக்தியாகச் சரீரத்தையும்
1.ஊட்டப் பெற்ற சக்தியின் தொடரில்
2.ஊட்டப் பெற்ற சக்தியின் வாசனை சமைக்கப்பட்டு சரீர கதியில் வெளி வந்து
3.அந்தச் சமைப்பின் தொடரிலே உடலில் உள்ள எல்லா உயிரணுக்களையும் தன் செயலுக்கு (ஆசைக்கு) வழி நடத்துகின்றது.

ஆசை என்ற சிறு தொடரில் இப்படி அறியாது அகப்படும் ஆத்ம சக்தியானது “மோகம்” என்னும் படு குழியில் வீழ்த்தப்படுவதைக் காட்டிடவே
1.இராவணனிடம் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது என்பதாக
2.இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதில்
3.அவன் பூமியோடு பெயர்த்து எடுத்துத்தான் சீதையைக் கவர்ந்தான் என்று காட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால்
1.ஆன்ம சக்தியை வலுவாகப் பெற்றிருந்தால்
2.எத்தகைய தீய குண சக்தியின் வீரியமும் ஆன்ம சக்தியை நெருங்க முடியாது…! என்பதே அதனின் சூட்சமப் பொருள்.

அந்தத் தொடரில் சிந்திக்கத் தலைப்படும் ஞானி அறிய வேண்டிய உண்மையின் சாரம் ஒன்று உண்டு.

நம் ஆத்மாவைக் காக்கும்… காத்துக் கொண்டிருக்கும்.. ஜெப ஆகார அமில குண சூட்சமத்தைக் காட்டவே சீதையைக் காக்க வந்த “பக்ஷிராஜன்…! (ஜடாயு) என்ற ஓர் பாத்திரப் படைப்பில் விளக்கம் தந்தார் வான்மீகி.

ஒரு தந்தை தன் குழந்தையைப் பேணுவது போல் அது நம் ஆன்மாவை எப்பொழுதும் வட்டமிட்டுக் காக்கும் என்றெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார். ஆனாலும்
1.நம் ஆன்ம சக்திக்குச் சக்தியூட்டும் உயிர்ச் சக்தி (இராமன்) இல்லாததால்
2.அசுர குணத் தன்மை வீரிய குணச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்று தெளிவாக்குகின்றார் வான்மீகி.

அந்த ஜடாயு தன் சிறகை இழந்துவிட்டது என்பதே நம் சூட்சமச் சரீரத் தொடரில் சிறகு இழந்து விட்டால் உயிர்ச் சக்தி தன் பறக்கும் தன்மை இழந்து விடுகிறது.

மீண்டும் ஆன்ம சக்தியான சீதையை உயிர்ச் சக்தியான இராமன் அடைய எத்தனையோ கடும் சோதனைகளுக்கு ஆட்படுகிறான்.

பல உயர்ந்தோரின் ஞானத் தொடர்பு பெற்ற பின் உயர் சக்திகளைப் பெற்றுத் தன் எண்ணம் கொண்டு வழி வகுத்த பாதையில் உயர்வில் தான் சீதையை அடைய முடியும்.
1.அதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்ற சூசகப்படுத்தி
2.நம் உயிர் ஆன்ம சக்தி காக்கப் பெறும் தொடர்பை வலியுறுத்துகிறார் காவிய ரிஷியான வான்மீகி.

கணவன் மனைவி தியானத்தின் மூலம் கிடைக்கும் அபூர்வ சக்திகள்

கணவன் மனைவி தியானத்தின் மூலம் கிடைக்கும் அபூர்வ சக்திகள்

 

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தன் குடும்பத்தைப் பொறுத்தவரையிலும் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போலக் கவர்ந்து கொண்ட சக்தியாக… அருள் உணர்வுகளை இணைத்து வாழ்தல் வேண்டும்.

நளாயினை போன்று மதித்து நடக்க வேண்டும் என்றால்
1.கணவனை மனைவி உயர்த்தி எண்ணுவதும்
2.கணவன் மனைவியை உயர்த்தி எண்ணுவதும் தான்.

இந்த ரெண்டு எண்ணங்களும் உயர்த்தி எண்ணும் போது உயர்ந்த உணர்வாக இரண்டு பேரும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஆனால் பெரும் பகுதி குறை சொல்லும் பழக்கத்தில் தான் இன்று வாழ்கின்றோம். நம் உடலிலே இது போன்ற எத்தனையோ உணர்வுகள் உண்டு இருந்தாலும் அதை மாற்றி அமைக்க மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று ஒவ்வொரு நொடியிலும் ஒன்றுபட்டு வாழும் நிலையாக உயர்ந்த நிலை பெறுதல் வேண்டும்.

கணவர் தொழில் செய்யும் இடங்களில் அனைத்தும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று மனைவியும்… அதே போன்று மனைவியின் செயல்கள் அனைத்தும் உயர்ந்து இருக்க வேண்டும்… மனைவி வெளிப்படுத்துவது உயர்ந்த சொல்களாக வர வேண்டும் என்று கணவன் எண்ணுவதும்… கணவன் மனைவி இருவருமே இப்படி எண்ணிப் பாருங்கள்.

நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது என்று இதைத் தான் சொல்வது.

நளாயினி முடமான தன் கணவனைக் கூடையில் அமர்த்தித் தூக்கிச் சென்றாள் என்று உருவ அமைப்பைக் கொடுத்து நமக்குக் காவியத்தைப் படைத்துக் காட்டி உள்ளார்கள்.

கணவன் சொல்லை சிரம் மீது ஏற்று அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இதைப் போன்று கணவன் மனைவியை உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.சக்தி தான் சிவமாகின்றது…
2.பெண்கள் எப்பொழுதுமே உயர்ந்த நிலையில் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் உடலாக மாறுகின்றது.
3.அதே மாதிரி கணவனும் எண்ணி எடுக்கும் பொழுது “அதே சக்தி நிலைகொண்டு”
4.உயிரில் அந்த உணர்வுகளை ஊட்ட உதவுகிறது.

அதுதான் நளாயினி என்று சொல்வது.

எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்றால் பிறரிடமிருந்து தீங்கான உணர்வுகள் வந்தாலும்… மனைவி அருள் உணர்வுகளைத் தனக்குள் பெற்றுக் கணவன் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் “எத்தகைய தீய நிலைகளோ சாப அலைகளோ இங்கே வந்து சாடாது…”

1.உங்களுக்கு முன்னாடி ஒரு துப்பாக்கியை வைத்துச் சுட்டாலும் கூட அந்த உணர்வுகள் திடீரென்று திசை மாறும்.
2.கணவனைக் காத்திடும் சக்தியாக செயல்படுத்த முடியும்
3.அங்கே சக்தி கொடுக்கப்படுகின்றது… துன்பத்திலிருந்து மாற்றப்படுகின்றது.

ஆகவே கணவன் மனைவி ஒவ்வொருவரும் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியையும் “ஒன்று சேர்த்து எடுத்து… ஒருவருக்கொருவர் இணைத்துப் பழகுதல் வேண்டும்…”

இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக இணையும் பொழுது இரண்டு உயிரும் வலுவாகி அடுத்துப் பிறவி இல்லா நிலையை அடைய உதவுகின்றது.

தீய சக்திகளுடன் நேரடியான மோதலைத் தவிர்த்து நாம் விலகித் தான் செல்ல வேண்டும்

தீய சக்திகளுடன் நேரடியான மோதலைத் தவிர்த்து நாம் விலகித் தான் செல்ல வேண்டும்

 

வாலியின் வீரிய குணத்தின் தன்மையின் ஆணவம் எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித் தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.

அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி…!

வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும். வான்மீகி பதம் பார்த்தான். அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.

ஜடாக்கினி மனதிறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான். அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.

ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ…?

இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன…? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்…?

நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளைப் பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு
1.உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால் – அவர்களின் பார்வை அலையை
2.உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.

மற்றவர்கள் மத்தியிலே உலகோதய வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.

தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற அனுபவ நிலை என்பது

அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.

ஜடாக்கினி அனுபவம் ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.

காப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்து ஆத்ம சக்தி பெறும் சக்தி அலைத் தொடர்பில் குறைவுபடும் காரண மூலம் ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயல்படுத்தி எண்ணத் தடையாகும் இராமபாணத்தை எய்ததின் தொடர் ஜடாக்கினி அனுபவ ஞானம்,

எடையிடும் பொருள் எடை காட்டும் கல் ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு ஆவதைப் போல் அந்த அனுபவ ஞானம் தன் நிறை காண சபரியிடம் பதம் பார்த்தான்.

மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் சூட்சம விளக்கம் உள்ளது. இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி.

இந்த ஏக்கத்தில் பூர்த்தி செய்ய எப்படிச் சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்டிட்ட வழி காட்டும் குரு பூரணத்துவம் நிறைவு பெறாத் தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும் வழியமைத்தான்.

தெளிவின் தொடர்பில் மகரிஷிகளின் தொடர்புபடுத்திப் பெறும் ஜடாக்கினி சக்தி ஈர்ப்பிற்குச் செயல் கொண்டிட மனித மனங்களின் ஜீவ ஏக்கம் சிஷ்யர்கள் என்ற தொடர்பில் சங்கடமற்று சமமான பாவனையில் நிலை கொண்டிட்டுச் செயலுறும் பொழுது அந்த உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு உண்மையை உணர்ந்து தெளிந்து சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பில் தொடர்புகளில் தொடர்பு கொண்டு ஈர்த்து வலுக் கொண்டிட்டால் இராமபாணம் பாயும் இலட்சியத்தை எய்தும்.

இராமபாணம் திரும்புவதைப் போல் செயல் கொண்டிட்ட சக்தியும் எண்ண ஈர்ப்பின் வலுவால் வலுத்துத் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.

சபரி மோட்சம் என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.

இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் எப்படித் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டு தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று.

“ஆயுள் மெம்பர்” என்பது நமது வாழ்நாள் முழுவதுமே துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ்வது தான்

“ஆயுள் மெம்பர்” என்பது நமது வாழ்நாள் முழுவதுமே துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ்வது தான்

 

யாராவது நமக்குத் தொந்தரவு கொடுத்தார்கள் என்றால் என்னை இப்படிப் பேசினான்… பேசினான்…! என்று அவர்களுடைய துயரமான ஈர்ப்பு வட்டத்தில் தான் நம் நினைவுகள் சென்றுவிடுகிறது.

அவருடைய உணர்வையே வளர்த்து நமக்குள் தொந்தரவுகளை உருவாக்கிப் பல பல கஷ்டங்களை உருவாக்கிக் கொள்கின்றோம்.

இதை மாற்றி அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நமது வலுவைக் கூட்டி
1.அவர்களுக்கு நல்ல வழிகள் கிடைக்க வேண்டும்
2.என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டோம் என்றால்
3.அவருடைய உணர்வுகளை இழுக்கும் சக்தி இங்கே குறைக்கப்படுகின்றது.

ஆனால் “என்னை இப்படிப் பேசினானே…” என்று எண்ணினால் அது உடனே இங்கே வந்துவிடும். ஒருவர் நம்மைத் திட்டி விட்டால் அல்லது அடுத்தவர்களைத் திட்டும்போது அது பதிவாகிவிட்டால் அதைத் திருப்பி எண்ணும் பொழுது நினைவுக்கு வருகின்றது. அது நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

அதைத் தடுப்பதற்கு ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர்கள் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தவர்கள் அனைவரும் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்து காட்ட வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் ஒரு சூரியக் குடும்பம் போன்று
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
2.ஒரே குடும்பமாக வாழ்ந்து பழக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பரப்பப்படும் பொழுது இனி வரக்கூடிய விஞ்ஞான அழிவுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆகையினால் பிறருடைய சங்கடங்களையோ வேதனைகளையோ அதிகமாகக் கேட்டுப் பழகாதீர்கள்… அதைப் பதிவாக்காதீர்கள். அப்படியே கேட்க நேர்ர்ந்தாலும் அதை உடனுக்குடன் மாற்றி பழகுதல் வேண்டும்.

ஆயுள் கால மெம்பர் என்பது…
1.நமது வாழ்நாள் முழுவதுமே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ்வது தான்
2.அந்த அருள் ஒளியை நமக்குள் பெருக்குவதற்குத் தான் அதிலே சேர்வது.

இதைச் சீராகப் பயன்படுத்தி இந்த வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை அகற்றி நாம் பிறவில்லா நிலை அடைதல் வேண்டும் ஆயுள் மெம்பர் என்றால் என்றும் பேரானந்த நிலை கொண்டு நாம் வாழ்ந்திட முடியும். அந்த வழிகளை நாம் கடைப்பிடித்துப் பழகுதல் வேண்டும்

இந்த உடலும் நம்முடன் வருவதில்லை… தேடிய செல்வமும் நம்முடன் வருவதில்லை. நாம் சேர்க்கும் அந்த அருள் சக்திகளே நம்முடன் இணைந்து வருகின்றது. அதன் வழி கொண்டு என்றுமே ஏகாந்த நிலை பெறுகின்றோம்.

எதுவுமே நமக்கு எதிர்ப்பு இல்லாத நிலையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்திகளைப் பெறுகின்றோம்

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றால் நமது உணர்வுகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகும். அந்த நிலை பெறச் செய்வதற்கு தான் உங்களை ஆயுள் மெம்பராக அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைப்பது.
1.உங்களுக்கு அந்த அருள் சக்திகளைக் கொடுக்கின்றோம்.
2.அதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறவா நிலை பெறச் செய்யும் செயலைத் தவிர நமக்கு இந்தப் பூமியில் வேறு வேலை இல்லை…!

பிறவா நிலை பெறச் செய்யும் செயலைத் தவிர நமக்கு இந்தப் பூமியில் வேறு வேலை இல்லை…!

 

“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலம் “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.

எந்த இலட்சியம் தன் கருத்தோ அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலை பெறுவது அதுவே தான்…! ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.

இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்கின்ற பொருள் எல்லாம் என்ன…?
1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.வான இயலை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதை நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும் என்பதே இராமபாணம் திரும்பும் தொடர்.

ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகிமாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா… என்ன…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?
1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.“வாலி வதம்…! என்ற பாங்கில் இராமன் தலை குனிந்தான்…! என்கின்ற பொருள் என்ன…?

ஆச்சா மரத்தை வெட்டுபவன் அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம் ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா…? என்று…!”

அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?

உலகோதயம் என்னும் பிடிப்பில் “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான். ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்கின்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்
1.உற்றுறுந்து கேட்கவும் வேண்டாம்…
2.அதிசயித்து நோக்கவும் வேண்டாம்….
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.எடுக்கும் வீரிய ஜடாக்கினி முல சக்தி நம்முடைய முக்கியமான சேமிப்பாக இருக்க வேண்டும்.

எந்த நிமிடம்… எது நடக்கும்…! என்று தெரியாத நிலையில் தான் இன்று இருக்கின்றோம்

எந்த நிமிடம்… எது நடக்கும்…! என்று தெரியாத நிலையில் தான் இன்று இருக்கின்றோம்

 

விஞ்ஞான அறிவால் அணுகுண்டுகளையும் மற்ற எத்தனையோ விதமான கெமிக்கல் குண்டுகளையும் உலகில் பல நாடுகளில் தயார் செய்து வைத்திருக்கின்றார்கள்.

மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கடலிலே பாய்ந்தால் மணலாக மாறுகின்றது. அந்த மணலிலிருந்து யுரேனியமாகப் பிரித்து எடுத்து “அணுவைப் பிளக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றார்கள்…”

அதை மற்றதுடன் கலந்து நியூட்ரான் என்கிற நிலையிலும் புரோட்டான் என்கிற நிலையிலும் சில நிலைகளைச் செயல்படுத்துகின்றனர்.

பொதுவாக நட்சத்திரங்களில் இருந்தும் உமிழ்த்தப்பட்டு வரும் கதிரியக்கச் சக்திகள் சூரியனின் ஈர்ப்புக்குள் வரும் போது
1.சூரியன் இழுத்து வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று கலந்தால் அதிகமான அழுத்தங்கள் ஆகும்.
2.அந்த அழுத்தத்தைக் கண்ட பின் மற்றதெல்லாம் அஞ்சி (நியூட்ரான்) ஓடுகின்றது.
3.ஓடினாலும் ஒன்றோடு ஒன்று கலந்து பல மாற்றங்கள் ஆகின்றது… சக்தி வாய்ந்த நிலையாக மாறுகின்றது.

அதை எடுத்துத் தான் இராக்கெட்டை விண்ணிலே செலுத்தினார்கள். நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய துகள்களைப் பிரித்து “நியூட்ரான்” என்று கொண்டு வருகின்றார்கள்.

அதை எடுத்துக் கொண்ட பின் “வெடிக்கச் செய்தால்” சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது.

அத்தகைய உணர்வுகள் மனிதன் இருக்கும் பக்கம் பட்டால் விஷத்தின் தன்மை கலந்து… சிந்திக்கும் தன்மை குறைந்து… மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் மறைந்து விடுகின்றது.
1.மனிதன் இருப்பான்… ஆனால் பைத்தியம் பிடித்தது போன்று ஆகிவிடுவான்.
2.மனிதனை மனிதனே கொன்று சாப்பிடும் நிலைகள் வருகின்றது

அதே சமயத்தில் அணுகுண்டுகளை வெடித்தால் கதிரியக்கங்கள் மோதி அனைத்தையும் பஸ்பமாக்கி விடுகின்றது இது மனிதன் கண்டுபிடித்தது தான். ஆனால் இதில் கட்டடங்கள் ஊரெல்லாம் அழிந்து விடுகின்றது என்று எண்ணி என்ன செய்தான்…?

நியூட்ரான் குண்டுகளை வீசி மக்களைப் புத்தி பேதமில்லாது செய்துவிட்டுத் “தான் ஆட்சிக்கு வரலாம்…” என்று செயல்படுத்துகின்றார்கள்.

இவ்வாறு எத்தனையோ செய்தாலும் அந்த விஷமான கசிவுகளைச் சூரியனுடைய காந்த சக்தி இந்த இரண்டையுமே (கசிவு + கதிரியக்கம்) கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

காற்றலைகளில் இது பரவப்படும் பொழுது இதனுடைய அழுத்தம் எப்படி வான் வீதியில் நியூட்ரான் என்ற அழுத்தம் மற்றதோடு மோதும் பொழுது விரட்டிச் செல்கின்றதோ இதே போல கதிரியக்கச் சக்தியும் இதுவும் இரண்டும் மோதப்படும் பொழுது சுழிக்காற்றாக மாறுகின்றது.

இரண்டும் சேர்ந்த பின் என்ன நடக்கிறது…?

நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள் கலந்து தான் மண்ணோ கல்லோ செடி கொடிகளோ எல்லாமே உருவாகியுள்ளது.

1.சுழிக் காற்றாக மாறி… கல் மண் மற்றும் அனைத்திலும் இருக்கும் கதிரியக்கத்தைக் கவர்ந்து கொண்ட பின் இன்னும் வீரியம் அதிகமாகி
2.காற்றாடி போல (TORNADO) எல்லாவற்றையும் மேலே தூக்கிக் கொண்டு… பிய்த்து எறிந்து கொண்டு போகின்றது.

அமெரிக்கா சீனா ரஷ்யா ஜப்பான் எல்லா நாடுகளும் இது நடக்கின்றது பார்க்கலாம்…! எங்கெங்கே அதை உற்பத்தி செய்தார்களோ அந்த நாடுகளில் எல்லாம் இது சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. பெரிய கட்டிடங்களாக இருந்தாலும் சுக்கு நூறாகத் தவிடு பொடியாகிப் போய்க் கொண்டிருக்கின்றது.

1.கடல்களிலே பட்டால் கடல் அலைகள் பெருகி (TSUNAMI) நகருக்குள் இது பாய்ச்சப்பட்டு
2.ஊரே சின்னாபின்னமாகும் நிலைகளும் வந்து கொண்டிருக்கின்றது.

இதே சுழல் காற்றின் நிலைகள் மேகங்களிலே இழுக்கப்பட்டால்
1.இந்த உணர்வின் தன்மை மோதிய பின் மழை நீராகக் கொட்டு… கொட்டு… என்று கொட்டி… மேக வெடிப்பாகிப் (CLOUDBURST) பெரும் மழையாக
2.ஒரு வருடத்தில் பெய்யும் மழை ஒரு மணி நேரத்தில் பெய்து நகரமே வெள்ளக் காடாக ஆகி விடுகின்றது.

இந்த மாதிரி உலகத்தில் எந்த நிமிடம்… எது நடக்கும்…! என்று தெரியாத நிலையில் தான் இன்று இருக்கின்றோம்.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் எந்த நிமிடம் எந்த நிலை ஆனாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றிப் பிறவி இல்லா நிலைகள் அடைதல் வேண்டும்.

இதை எல்லாம் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). யாம் சொன்ன முறைப்படி வளர்த்துக் கொண்டால் இதில் சிக்க மாட்டோம்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்
2.”ரிமோட் செய்வது மாதிரி…” ஒதுக்குப் புறமான இடங்களுக்கு அழைத்துச் சென்று “நாம் தப்ப முடியும்…”

ஏனென்றால் விஞ்ஞானத்தை மிஞ்சியது அந்த மெய் ஞானம்.

மெய் ஞானத்தின் உணர்வு வளரப்படும் பொழுது அதிலே வளர்ச்சி பெற்றவன்… மனிதனாக முழுமை அடைந்தவன் துருவ நட்சத்திரமாக நம் பூமியின் வடக்குத் திசையில் நிலை பெற்றிருக்கின்றான். மற்ற பிரபஞ்சங்களிலிருந்து எது வந்தாலும் அது ஒளியாக மாற்றும் திறன் பெற்றது.

1.அந்த உணர்வை எடுத்து நம்மைக் காக்கக்கூடிய சக்தியாக வளர்த்து
2.உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலையை அடைவோம்.

ஒலி கேட்டு உணர்ச்சி வசப்பட்டாலும்… “ஒளி கொண்டு” அதைத் தெளிதல் வேண்டும்

ஒலி கேட்டு உணர்ச்சி வசப்பட்டாலும்… “ஒளி கொண்டு” அதைத் தெளிதல் வேண்டும்

 

யானை நீர் மொள்ளும் ஓசையைக் கேட்டே அம்பெய்து சிரவணனைக் கொன்ற தசரதனின் செயலை வான்மீகியார் சுட்டிக் காட்டிய நிலைகளில் “சூட்சமப் பொருள் உள்ளது…!”

அது என்ன..?

பார்வை ஒளியற்ற பெற்றோரைச் சுமந்து செல்பவன் சிரவணன். ஒரு சமயம் அவனுடைய தாய் தந்தையர் தாகம் என்று தண்ணீர் கேட்டதும் அதற்காக நீரைத் தேடி அலைந்தான். ஆனாலும்
1.நீர் கிடைக்கும் வரை அவன் எடுத்த எண்ணம் என்ன…?
2.கடமை என்ற சொல்லும் உண்டு.
3.கடமையின் பால் உணர்வுதனை மாற்றிக் கொண்ட செயலும் உண்டு.

விலங்கினங்கள் நீர் அருந்தும் ஓசையைக் கொண்டே அந்த மிருகங்களைப் பார்க்காமலேயே மறைந்திருந்து குறி தவறாது அம்பெய்யும் ஆற்றல் பெற்றவன் தான் தசரதன்.
1.அதை வீரத்தில் சேர்ப்பதா…?
2.கற்ற வித்தையின் ஞானத்தில் சேர்ப்பதா…?
3.அல்லது உணர்வுகள் கூட்டிக் கொண்ட மோகம் அறிவுக் கண்ணை மறைத்ததாகச் சொல்வதா..?

ஏனென்றால் தசரதன் அவன் இளமையின் ஆற்றலால் கற்றுக் கொண்டதுதான் அந்தக் கலை. அவனுடைய செவிப் புலன் அறிவாக ஓசையைக் கொண்டு குறிப்பறியும் ஆற்றலைக் காட்டியது ஞானம் தான்.

ஆகவே வான்மீகியார் கூற வந்த தெளிந்த பொருள் என்ன…?

காமத்தின் விளைவால் மோகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் செயல்பாடு… சரீர உணர்வின் இயக்கத்தால்… “கருத்தறிய முடியாத அலட்சிய மனோபாவனையக் காட்டியது தான்…” தசரதனின் அந்தச் செயல்.

தண்ணீருக்காகத் தேடிய சிரவணன் அவன் எடுத்த சஞ்சல உணர்வலைகள் பாசத்தின் அடியாக பதைபதைப்பாக அவன் அறிவின் பொறி கலக்கமுற்றது.

அதனால் குறிப்பறியாத ஈர்க்கும் செயலில்… எதிர் மோதல் குணங்கள் உணர்வுகளின் உந்துதலால்… குறிப்பறியாச் செயலுக்கு அறிவின் மயக்கமே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு… “வினைச் செயலின் விளையாட்டாக சிரவணன் நீர் மொள்ளும் சப்தம் அமைந்தது…!”

1.அப்படிப்பட்ட “சிரவணனின் அறிவின் மயக்கமும்”
2.ஒலி கொண்டு அறியும் ஆற்றலின் அலட்சியத்தால் விளைந்த “தசரதனின் அறிவின் மயக்கமும்”
3.சந்தர்ப்பத்த்கால் சந்தித்த சந்திப்பு… அம்பாகச் சிரவணன் உடலில் பட்டுத் தைத்து அவன் உயிரைக் குடிக்க முனைந்தது.

ஆனால் ஞான வழிச் செயல் ஆக்கத்திற்குத் தனித் தன்மையான பொருளும் உண்டு. எப்படி…?

செவிப்புலனால் ஒலி ஈர்க்கும் அறிவு செயல்பட்ட அந்தக் காலத்தில்
1.ஒளி கொண்ட ஒலி நாதத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டால்
2.புற உலகின்கண் எழும் சப்தங்களை உணர்ந்திட முடியாத செயலுக்கு
3.நமக்குள் சேக்கும் மெய் ஒலியின் அந்த ஓங்கார நாதமே அதிர்வுகளாக ஓசையைப் பெருக்கச் செய்து
4.அதே தொடரில் ஆத்ம வலுவைக் வலுக் கூட்டிக் கொள்ளும் உயிர் கலப்பால்
5.மெய்யை அறியும் உயர் ஞானமாக அது அமைந்து தெளிவான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்விக்கச் செய்யும்.

ஆகவே ஒலி கொண்டு புலன்களால் அறிந்தாலும் ஒளி கொண்டு ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும் மெய் ஞானம் பெற்றால் தான் நம் செயல்கள் என்றுமே வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் செயலாக நன்மை பயக்கும்.

உடலை விட்டுப் போவது உறுதி தான்… அதற்காக வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை

உடலை விட்டுப் போவது உறுதி தான்… அதற்காக வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை

ஆயுள் மெம்பராகச் சேரக்கூடியவர்கள் ஒவ்வொருவருமே குருநாதராக மாற வேண்டும். உங்கள் பார்வையில் தீமையைப் போக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும். உங்கள் எண்ணம் உலகத்தை நல்லதாக்கும் அந்த உணர்வுகளாக விளைய வேண்டும்.

அருள் ஞானச் சக்கரம் இருக்கும் வீடுகளில் எல்லாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தச் சக்கரத்தை பார்த்து…
1.யாராக இருந்தாலும் சரி.. அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்…
2.lஅவர் நோய் நீங்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

இதைச் செய்தால் மற்றவருடைய துன்பங்களோ நோய்களோ துயரங்களோ நமக்கு வருவதில்லை.

ஒவ்வொரு உடலிலும் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும்.
1.எப்படி இருந்தாலும் உடலை விட்டுப் போவது உறுதி தான்
2.அதற்காக வேதனைப்பட வேண்டியது அவசியம் இல்லை.

உடலில் நோய் இருந்தால் அது நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள். ஆனால் நோய் நீங்கி அவர்கள் வாழ்ந்தாலும் “எத்தனை வருடம் வாழ்கின்றார்கள்…!”

டாக்டரிடம் சென்று காசைச் செலவழித்து எல்லா மருத்துவமும் பார்க்கத்தான் செய்கின்றோம். உயிருடன் முழுமையாக இருக்கின்றார்களா…? இல்லை…!

நான் அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்… கடைசியில் இறந்து விட்டார்களே…! என்று எண்ணி வேதனைதான் படுகின்றோம்.

அப்படி எண்ணாதபடி…
1“எப்படி இருந்தாலும்” மகரிஷிகளின் அருள் உணர்வு அவர்களுக்குள் வளர வேண்டும்… உயர்ந்த நிலை பெற வேண்டும் மட்டும் எண்ணுங்கள்.
2.உடலை விட்டுப் போய்விட்டார்கள் என்றால் உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்
3.உடலில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நீங்கி அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று “இப்படித்தான் நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்…”

ஏனென்றால் அவர்களுடன் நாம் பழகியிருக்கிறோம். அவர்களுடைய உணர்வுகளும் நமக்குள் பதிவு உண்டு. மேலே சொன்னபடி எண்ணிச் செய்தால் தீமைகள் நமக்குள் வளராதபடி தடுத்துக் கொள்ளலாம்.

ஆகவே சக்கரத்திற்கு முன் நீங்கள் தியானம் செய்து
1.குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
2.தொழில் நன்றாக நடக்க வேண்டும்
3.என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்
4.குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ வேண்டும் என்று வரிசைப்படுத்தி நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்
5.குறை என்ற நிலைகள் வரவே கூடாது.

ஏனென்றால் இந்தச் சக்கரத்தில் அவ்வளவு சக்திகள் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக அது வரும்.

துருவ நட்சத்திரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்த உணர்வோடு நாம் ஒன்றி வாழ வேண்டும்.
1.நம் குருநாதர் அதைக் கவர்ந்தார்… அதன் வழி அங்கே இருக்கின்றார்.
2.அதன் வழியில் நாமும் முயற்சி எடுக்கும் பொழுது அந்த உணர்வுகள் இருளை அகற்றிடும் சக்தியாக வரும்
3.துருவ நட்சத்திரத்தின் பால் நம்முடய பற்று அதிகமாகும்
4.வாழ்க்கையில் ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கும்… சங்கடங்கள் உட் புகாது தடுக்கும்.

அத்தகைய உணர்வுகளை நாம் பெற வேண்டும்.

சமமான நிலை நிலைக்கச் “சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா…”

சமமான நிலை நிலைக்கச் “சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா…”

 

சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?

சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம். முயற்சியும் செய்கிறோம். ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை யார் எப்படிச் செயலாக்கம் செய்வது…?

இதன் பொருள் புரிந்ததா,.?

1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட…பொட…!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்…!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே… நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.

உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்…! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும். அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா…?

ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்…” அவசியம் தேவை.

உணர்வுகளை மாற்றிட முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்… நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.

அப்படியானால் பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?

நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே… தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்…!”

ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன…? எப்படி…?

வாழ்க்கை நடை முறையில் மாற்றமான எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் மோதி அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி
2.அவ்வாறு சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.

தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன…?

இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.

அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ…ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து அதன் வழியில் செயல் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால் அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.

இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்…” என்று காட்டப்பட்ட
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமமான நிலை நிலைக்க வேண்டும் என்ற செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்…!