“சப்தரிஷி மண்டலம் அடையப் போகிறோம்…” என்ற இந்த உணர்வுகள் தன்னாலேயே வரும்

“சப்தரிஷி மண்டலம் அடையப் போகிறோம்…” என்ற இந்த உணர்வுகள் தன்னாலேயே வரும்

 

நம் உடலான இந்தப் பிரபஞ்சத்தை உயிர் இயக்குகிறது. இதற்குள் எத்தனையோ கோடி அணுக்கள் இருக்கிறது.
1.அதிலே தீமை என்ற உணர்வு வளராது
2.அதே தீமையான உணர்வுகளை “ஊக்கச் சக்தியாகக் கொடுக்கும் இரையாக…” நாம் மாற்றிக் கொள்தல் வேண்டும்.

தீமை என்ற உணர்வுகளைக் குறைத்து நல்ல அணுக்களைக் கூட்டும் போது தீமையான அணுக்கள் குறைகிறது. ஆகவே நமக்குள் அந்த மகரிஷிகள் உணர்வைப் பெருக்க வேண்டும்.

இந்த உடலை விட்டு எந்த நிமிடம் நாம் போவோம் என்று சொல்லவே முடியாது. ஆகவே அந்த அருளைப் பற்றுடன் பற்றினால் இந்த வாழ்க்கையில் வரும் மற்றது அனைத்தும் பற்றற்றதாக மாறும்.

இதற்கு முன்னாடி நமக்குத் தெரியாது. தெரிந்து கொண்ட பின்
1.நாம் இந்த உடலை விட்டுச் செல்லும் போது நம் உணர்வுக்கே தெரியும்.
2.நாம் சப்தரிஷி மண்டலம் அடையப் போகிறோம் என்று…!
3.இந்த உணர்வுகள் தன்னாலேயே வரும்… “எங்கே செல்கிறோம்…” என்று நிச்சயம் தெரியும்.

காட்டிற்குள் சென்று எத்தனையோ அனுபவங்களைப் பெற்று அறிந்து கொண்டு வந்தேன். நீங்கள் எல்லோரும் அந்த உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று வீடு தேடி வந்து சொல்கின்றேன்.

உங்களுடன் ஒன்றித்தான் நானும் வாழ்கின்றேன். நான் பெரியவன் என்று சொல்லவில்லை. யார் பெரியவர் யார் சிறியவர் என்று சொல்ல வரவில்லை

உயர்ந்த ஞானத்தை வளர்த்துக் கொண்டால் அதுவே பேரருள் என்ற அழியாச் சொத்தாக வளர்க்க முடியும் அந்தச் சக்தியை அனைவரும் பெற வேண்டும்.

ஆகவே
1.ஒருவருக்கொருவர் அன்பை வளர்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்…
2.அரவணைக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்…
3.இருளை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்…
4.வரும் தீமைகளை அகற்றும் வலிமை நாம் பெற வேண்டும்
5.அதையெல்லாம் வளர்த்துக் காட்டி நாம் இந்த உலகிற்கே எடுத்துக்காட்டாக வளர வேண்டும்.

நம் குருநாதர் துருவ நட்சத்திரத்துடன் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றார். அவருடைய அருளைப் பெற்று அந்தச் சக்திகளை எளிதில் பெறலாம். இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணலாம்… ஒளியான நிலையை அடையலாம். அந்த நிலை பெறுவதற்குத் தான் உபதேசிக்கின்றோம்.

ஆகவே அனைவரும் பேரன்பைப் பெருகி “எல்லோருடைய மனதும் ஒன்றாகி… எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…!” என்ற உணர்வை வளர்ப்போம்.

1.உலகம் நலம் பெறத் தியானிப்போம்
2.உலக மக்களைக் காக்கும் உணர்வுகளை நமக்குள் விளைய வைப்போம்.
3.நம்மையும் காப்போம்… உலக மக்களையும் காப்போம்.

விஞ்ஞான அறிவினால் வரும் தீமைகளை அகற்றும் வல்லமையை நாம் பெறுவோம்.
1.உலக மக்கள் அனைவருக்கும் அருள் ஞானிகள் உணர்வைப் பதிவு செய்து
2.தீமைகள் புகாது தடுக்கும் சக்தியை… அந்தப் பாதுகாக்கும் நிலையைச் செயல்படுத்துவோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply