திரும்பத் திரும்ப எண்ணினால் தான் “நினைவின் ஆற்றல்” நமக்குள் பெருகும்

திரும்பத் திரும்ப எண்ணினால் தான் “நினைவின் ஆற்றல்” நமக்குள் பெருகும்

 

உதாரணமாக நாம் ரோட்டில் செல்லும் பொழுது ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்ற நிலையில் அவனை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால்
1.அடுத்து நாம் அவனைப் பற்றித் திரும்ப எண்ணுவதில்லை.
2.அவன் வேதனைப்பட்டாலும் அந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் கருவுறும் தன்மை பெற்றாலும்
3.”அவனை நாம் திரும்ப எண்ணாததால்…” அவனுடைய வேதனை நமக்குள் வளராது தடைப்படுகிறது.

ஆனால் தொழில் செய்யும் இடங்களில் ஒரு நண்பரிடம் பற்றுடன் நாம் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தில் அவருக்குக் கடுமையான நோய் வந்து விடுகிறது. அவர் மீது நாம் பற்றுடன் இருக்கும் போது அந்த உணர்வினை நான் நுகரப்படும் பொழுது வேதனையை நாம் உணர முடிகின்றது… உடனே நாமும் வேதனைப்படுகின்றோம்.

அந்த உணர்வின் தன்மை நம் இரத்தத்தில் கலந்த பின் அந்த நண்பனைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுதெல்லாம் அந்த வேதனை நமக்குள் கருவாக உருவாகத் தொடங்கிவிடுகிறது.

ஒரு கோழி கருவுற்றால் உடனே அது கேறுகின்றது. கேறும் பொழுது அந்த முட்டையின் தன்மை வலுப் பெற்றுவிடுகிறது. முட்டை பருவமடைந்த பின் பொரிந்து குஞ்சுகளாக வெளி வருகின்றது.

குஞ்சு வெளி வந்தபின் ஆகாரத்திற்காகக் கத்துகிறது தாய்க் கோழியோ சப்தமிட்டு மண்ணைப் பறித்துத் தன் குஞ்சுகளுக்கு உணவைக் காட்டுகின்றது.

இதைப் போன்று தான் நண்பன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்றால்
1.அவனைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் நமக்குள் கருமுட்டையாகி விட்டால்
2.திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது வளர்ச்சி அடைகின்றது.
3.வளர்ச்சி அடைந்து முட்டை வெடித்து அணுக்களாக உருவான பின் தன் உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகிறது
4.அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி அங்கே தூண்டப்படுகிறது.

அப்போது நம் உயிர் என்ன செய்கிறது…?

கண் காது மூக்கு அவைகளுக்கு ஆணையிட்டு எந்த நண்பன் உடலில் இருந்து நோயின் உணர்வு வந்ததோ காற்றிலிருந்து அதைக் கவர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கிறது. அதை உணவாக எடுத்து அந்த அணுக்கள் வளர்ச்சி பெறத் தொடங்குகிறது.

நோயை உருவாக்கும் அத்தகைய அணுக்கள் பெருகிவிட்டால் நண்பனுக்கு எந்த நோய் வந்ததோ அதே நோய் நமக்குள்ளும் அதிகமாகப் பெருகத் தொடங்குகிறது.

நம்ம அறியாமல் தான் இது நடக்கிறது. அதை மாற்றி அமைக்க நாம் எண்ண செய்ய வேண்டும்…? நோய் எப்படி உருவானதோ அதே போல் அதை நீக்கும் சக்திகளையும் நமக்குள் நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

1.நம்முடைய நினைவுகள் அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்த வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிப்பெறும் பொழுது
3.சுவாசித்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலக்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அணுக்கரு முட்டைகளாக வளரத் தொடங்குகின்றது
5.நம் இரத்த நாளங்களில் அது கலந்து குறித்த காலம் வரும் போது அந்த முட்டை வெடித்து அணுக்களாக உருப்பெறச் செய்கின்றது.

எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து அடிக்கடி தியானித்தோமோ அது நமக்குள் அணுத்தன்மை அடைந்த பின்… எதை எண்ணிக் கருவானதோ அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் நிலையாக… “அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது…”

1.அப்போது நம் சிறு மூளை பாகம் அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
2.கண் காது மூக்கு வாய் உடல் இவைகளுக்கு ஆணையிட்டு
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் பூமியில் பரவியிருப்பதை உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு அப்போது வரும்.

மீண்டும் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறும் பொழுது ஒளி பெறும் அணுக்களாக நம் உடலுக்குள் வளரத் தொடங்கும்.

அந்த அணுக்களை நாம் அதிகமாக வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் யாருடைய ஈர்ப்பிலும் (எந்த்த் தீமையிலும்) சிக்க மாட்டோம். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அதிகரிக்கும்… நம்மைப் பிறவி இல்லா நிலைக்கு அது அழைத்துச் செல்லும்.

கண்ணுக்குத் (நிழல் படமாக) தெரியும் “உணர்வுகளின்” இயக்கங்கள்

கண்ணுக்குத் (நிழல் படமாக) தெரியும் “உணர்வுகளின்” இயக்கங்கள்

 

விஞ்ஞான அறிவால் காந்தப்புலனறிவில் இணைத்து ஆண்டனா என்ற சாதனத்தில் பதிவு செய்து திருப்பி வைத்து அந்தந்த ஸ்டேஷன் அலைவரிசையில் வைத்தால் ஒலி/ஒளி அலைகளைக் கவர்ந்து வீட்டிலிருக்கும் டி.வி.பெட்டியில் நாம் தெளிவாகக் காண முடிகின்றது.

விஞ்ஞான அறிவால் “ஆண்டனாக்களைச் சக்தி வாய்ந்ததாக வைக்கப்படும் பொழுது…” இன்று உலகின் எந்தப் பாகத்தில் இருந்து ஒளிபரப்பு செய்தாலும் விளையாட்டு அரங்கில் விளையாண்டு கொண்டிருந்தாலும்
1.அங்கு நடக்கும் நிகழ்ச்சியை ஒளிப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்
2.இங்கே நாம் வீட்டில் இருந்து கண்ணுற்றுப் பார்க்கும் நிலைகளுக்கு அலைகளைக் குவித்து டி.வி.யில் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று தான் விண்ணிலே எட்டா தூரத்தில் இருக்கும் அருள் மகரிஷிகளின் சக்திகளையும் நாம் பெற முடியும்.

சாதாரண மனிதன் அவன் வெளிப்படுத்தக்கூடிய வெறுப்போ கோபமோ பாபமோ தாபமோ அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால்… அவர்களை எண்ணும் பொழுது அந்த உணர்வலைகளை எளிதில் காண முடிகின்றது.

ஒருவன் “நமக்குத் தீங்கு செய்தான்…” என்ற எண்ணத்தைப் பதிவு செய்து கொண்ட பின் அவனை நாம் நினைவுக்குக் கொண்டு வரப்படும் பொழுது… நம்மை அறியாமலே வேதனை என்ற உணர்வுகள் உந்துகின்றது.

அந்த உடலின் உருவம் நிழல் படமாக நமக்குள் தெரிகின்றது. அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது கொதித்தெழும் உணர்வாக இருந்தால்
1.உயிரிலே இயக்கப்பட்டு நாம் அதை உணர முடிகின்றது.
2.அவர் உருவைப் பார்க்க முடியவில்லை… என்றாலும் “உணர்வின் நிழல் படமாக” நாம் பார்க்கின்றோம்.

இதைப் போன்று தான்
1.இருளைப் போக்கிடும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.நாம் எண்ணும் பொழுது உடனடியாக அந்த இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக நாம் தெளிவாக எடுக்க முடியும்.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களும் அதனதன் நினைவைக் கொண்டு வரப்படும் போது நமது தான் தான் ஆண்டெனாவாக இருந்து அதை எடுத்துக் கொடுக்கின்றது.

அதே சமயம் நமக்குள் சக்தி வாய்ந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டால்
1.அந்த நினைவினை மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வரப்படும் போது
2.அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி எண்ணி
3.அந்த மகரிஷிகளின் ஆற்றலை உடலுக்குள் செலுத்தினால் அவர்கள் தீமைகளை அகற்றியது போன்று நமக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கே கூட்டமைப்பின் நிலைகளை யாம் (ஞானகுரு) கொண்டு வருவது.

ஒரு மனிதனுக்குக் கேன்சரோ ஆஸ்த்மாவோ ஹார்ட் அட்டாக்கோ (இதய அடைப்பு) இருக்கிறது என்று… இது போன்ற வழக்கில் நாம் கேட்டறிந்தது.. அதிலே எதனின் உணர்வின் பெருக்கம் அதிகமாகின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகும் பொழுது… அந்த நோயின் வன்மை கூடி மனிதனை வீழ்த்துகின்றது.

வீழ்த்திய பின் எதனின் தன்மை அதிபதியாக ஆனதோ அந்த நோய்க்கு உண்டான உணர்வையே மற்ற உடலுக்குள் விளைய வைக்கச் செய்கிறது.

இதைப் போன்று தான்
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இப்பொழுது உங்களுக்குள் நான் பதிவு செய்யப்படும் பொழுது
2.அதை நீங்கள் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொண்டால்
3.உங்கள் உடலுக்குள் ஊடுருவி இருக்கும் எத்தகைய தீமைகளையும் அகற்றிடும் சக்தியாக அது வரும்.

வழக்கத்தில் நாம் செய்வது ஒன்று… ஆனால் அதையே “நல்லதை உருவாக்கும் பழக்கமாக மாற்ற வேண்டும்”

வழக்கத்தில் நாம் செய்வது ஒன்று… ஆனால் அதையே “நல்லதை உருவாக்கும் பழக்கமாக மாற்ற வேண்டும்”

 

புற உலகில் என்னென்ன வழி (மார்க்கம்) இருக்கிறதோ அது அத்தனையும் இன்று நம்புகின்றோம்… நம்மை நாம் நம்புகிறோமா…?

ஆக… ஒவ்வொரு மனிதனுக்கும்
1.அவனுக்குள் இருக்கும் சக்தி இன்னது தான் என்று யாம் (ஞானகுரு) தெளிவாகச் சொல்லி
2.உங்கள் எண்ணத்திற்கு வலுவையும் கொடுத்து… எண்ணத்தால் ஞானிகள் சக்தியைப் பெறச் செய்து
3.உங்கள் எண்ணத்தாலே உங்களை அறியாது வரும் தீமைகளை அகற்றிட உங்களுக்கு அந்த சக்தியையும் கொடுக்கின்றோம்.
4.ஆனால் இதை நீங்கள் வளர்ப்பதற்கு உங்களுக்கு மனம் வரவில்லையே…!
5.யாரோ செய்வார் எவரோ செய்வார் என்ற எண்ணத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனக்கென்று தனித்து நான் வரவில்லை குரு சொன்ன வழியில் நான் கண்டேன்… அருள் ஞானத்தினை அவர் காட்டிய வழியில் பெற்றேன்…! அதனின் உணர்வின் துணை கொண்டு
1.நீங்கள் அனைவரும் பெற முடியும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்
2.இந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தச் சக்தி உங்களுக்குள் செயல்படும்.

ஒரு திட்டுகின்றார்… நீ கெட்டுப் போ…! என்று நம்மைச் சொல்லிவிட்டால் என்னைக் கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்… கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்…. அவன் உருப்படுவானா…? உருப்படுவானா…! என்று பதிலுக்கு நாம் சொல்வோம்.

அப்படிச் சொல்லும் போது அவன் சொன்ன உணர்வுகள் எல்லாமே உங்களுக்குள் புகுந்து… அவர் சொன்ன அந்தக் கெட்டுப் போகும் உணர்வை உங்களுக்குள் அதிகமாக வளர்த்து நல்ல குணங்களைப் பூராம் சீர் கெடச் செய்து கெட்டுப் போகும் உணர்வே உடலில் விளைகின்றது.

திட்டியவர்களைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எண்ணி அவர்கள் சொன்னதை நமக்குள் உருவாக்கிக் கொள்கின்ற மாதிரி…
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளைப் போக்குவேன்
3.மெய் உணர்வை எனக்குள் வளர்ப்பேன்
4.என் பார்வையால் எல்லோரையும் நலம் பெறச் செய்வேன்
5.என் பார்வையால் என் குடும்பத்தினரை நலம் பெறச் செய்வேன்
6.என் பார்வையால் என் தொழிலை வளரச் செய்வேன்
7.என் வாடிக்கையாளர்கள் நலம் பெறச் செய்வேன் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.

இது தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது. அந்தக் கீதையைச் சொன்னது யார்…? கண்ணன். அந்தக் கண்ணன் யார்…? நம் கண்கள்…!

ஆகவே… “நல்லது செய்ய வேண்டும்…” என்று நாம் திரும்பத் திரும்ப எண்ணினால்
1.அதைப் பார்வையாக ஏற்று நமக்குள் சாரதியாக (கண்கள்) நின்று நல்வழியைக் காட்டுகின்றான்.
2.அந்தப் பாதையில் எந்த இடையூறு இருந்தாலும் விலக்கிச் செல்கின்றான்.
4.நம்மை நல்ல பாதையில் அழைத்துச் செல்கின்றான்
5.தீமையிலிருந்து அகற்றி நம்மைக் காக்கவும் செய்கின்றது

இதை நாம் செய்து பழகிக் கொள்ளலாம் அல்லவா…!

நம் கண்களுக்குண்டான ஆற்றல்

நம் கண்களுக்குண்டான ஆற்றல்

 

1.அருள் ஞானிகள் உணர்வுகளை… அருள் ஒளி பெறும் சக்திகளை…
2.துருவ நட்சத்திரம்… சப்தரிஷி மண்டலங்கள்… என்று வரிசைப்படுத்தி யாம் உபதேசிக்கும் போது
3.கூர்ந்து கவனித்தால் உங்கள் நினைவாற்றல் “அங்கேயே” அழைத்துச் செல்கின்றது.

ஒளியாக உருப் பெற்ற அந்த உணர்வின் தன்மையை… அகஸ்தியன் துருவனாகி நஞ்சினை முறித்த உணர்வுகளை நினைவாக்கப்படும் பொழுது அந்தச் சக்தியைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள்.

உதாரணமாக… ஒரு டிவி ஸ்டேஷனை அமைத்தப் பின் எந்தெந்த அலை வரிசைகளில் அதை ஒளிபரப்ப வேண்டும் என்று
1.அதில் இருக்கக்கூடிய மேக்னட் ஒன்றுடன் ஒன்று கலந்து
2.அதனுடைய இணைப்பின் ஆற்றல் வரப்படும் பொழுது ட்ரான்சாக்சன் ஆக மாற்றுகின்றது.

இந்த உணர்வின் ஒளி அலைகளை இது மாற்றிய பின் “டிவி ஒரே பெட்டியாக இருப்பினும்…” எங்கிருந்தோ ஒளிபரப்பாகும் அலைகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி எல்லாப் பக்கமும் பரவச் செய்தாலும்…
1.அதே அலைவரிசையில் இந்தப் பெட்டியைத் திருப்பி வைத்து
2.ஆண்டென்னா என்ற ஒரு சாதனத்தை வைக்கப்படும் பொழுது
3.அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி பெட்டிக்குள் ஈர்க்கும் சக்தி வருகின்றது.

இதைப் போன்று தான் எல்லாவற்றையும் உணர்ந்து நுகர்ந்து இந்த மனித உடலை உருவாக்கிய “கண்” நமது உடலுக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.

எந்த உணர்வின் தன்மை ஒளி அலைகளாகத் தாக்கப்படுகின்றதோ… அந்தந்த உணர்வின் தன்மை கண்களில் உந்தப்பட்டு…
1.எது என்று அதை அறியும் ஆற்றலும்
2.நுகர்ந்து உயிருடன் உணர்வின் ஒலிகளைப் பரப்பி
3.அதற்குத்தக்க (அலை வரிசைக்குத்தக்க) குணங்களின் அடிப்படையில் உடலை இயக்கச் செய்கின்றது.

ஆனால் எதனின் உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ இந்த உணர்வின் அலைகள் கூடும் பொழுது மனிதனின் உருக்களும் மாறுகின்றது… நினைவுகளும்… செயல்களும் மாறுகின்றது.

மனித உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் அலைகளாக மாற்றி வரும் பொழுது அதைக் கூர்ந்து நாம் கவனித்தோம் என்றால்… இதன் வழி நமக்குள் பதிவானது அதன் வழியே தனக்குள் கொண்டு வருகின்றது.

ஆண்டென்னாவாக இருப்பதும்…
1.ஒரு காந்தப்புலனறிவு பிற நிலைகள் இயக்குவதை இணை சேர்த்து ட்ரான்சாக்சன் ஆக இயக்கப்பட்டு
2.இந்த உணர்வின் தன்மை இரண்டும் கலக்கப்பட்டு இங்கே பதிவாக்கும் நிலைகள் கொண்டு (அது பதிவானால்தான்) ஈர்க்கும் சக்தி வருகின்றது.
3.இணைத்து நாடாக்களில் பதிவாக்கவில்லை என்றால் அது பதிவாகாது…. அலைகளை ஈர்க்காது (ஆண்டென்னாவைத் திருப்பி வைப்பது)

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகளை மனிதன் கண்டுணர்ந்து விஞ்ஞான அறிவால் இதை மாற்றுகின்றான்.

சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது… ஒரு செடியின் சத்தை நுகர்ந்து கொண்டால் அதனின் மணத்தை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உணர்வின் தசைகளாகும் பொழுது (உடலாக) மின் அணுவின் தன்மையை நாம் எந்தத் தாவர இனத்தை உணவாக உட்கொண்டோமோ இந்த உணர்வின் எதிர் அலைகளைப் பாய்ச்சும் பொழுது… தாவர இனத்தின் உண்மையின் உணர்வுகளைக் கவர்வதையும் பார்க்கலாம்.

இதெல்லாம் மனிதனுக்குண்டான ஆற்றல்…
1.மனிதனான பின் எதனையும் கவர்ந்து… அதனைப் பதிவாக்கி நுகர்ந்து விடலாம்
2.இதனின் தன்மை கொண்டு… நாம் இனி பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.

“கண்” தான் நமக்கு ஆண்டென்னா…!

“கண்” தான் நமக்கு ஆண்டென்னா…!

 

சாதாரண ஆண்டன்னாவை வைத்து அருகிலே ஒலி/ஒளிபரப்பப்படும் அலைளை டிவி ரேடியோவில் படமாக ஒலிகளாகக் காணுகின்றோம். அதே சமயத்தில் வெகு தொலைவில் இருந்து ஒளிபரப்பப்படும் அலைகளைக் கவர்வதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்துக் கவர்கின்றோம்

தொலைவில் இருந்து வருவதை எளிதில் காணுவதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களைப் பொருத்துகின்றார்கள். அப்பொழுதுதான் அதைக் குவித்து திரைப்படங்களாக டிவிக்களில் நாம் காண முடிகின்றது.

இதைப் போன்று தான் பழகியவர்களின் உணர்வுகளை நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொண்டுள்ளோம்… “அவருடைய ரூபங்களை… அவருடைய சொல்களை… அவருடைய செயல்களை…!”

அதே சமயத்தில் காவியங்களைப் படிக்கப்படும் பொழுது அதிலே சித்தரிக்கும் உணர்வின் தன்மையையும் இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

1.இவ்வாறு நாம் எதை எதை எல்லாம் எண்ணிப் பதிவு செய்து கொண்டோமோ…
2.பின் கண்கள் வழி கூடித் தான் நினைவாற்றல் (அந்த அலைகள்) வருகிறது
3.கண்கள் தான் நமக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.

என்னை ஒருவன் திட்டுகிறான் என்றால் அவன் உருவைப் பார்த்துப் பதிவாக்குகின்றோம். ஆனால் அவனின்று வெளிப்படும் உணர்வுகள் அலைகளாகப் படர்கின்றது.

அவன் சொல்லும் உணர்வைப் பதிவாக்கி விட்டால்… நான் இங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்தாலும் அயோக்கியன்…! என்னைத் திட்டினான்… பேசினான்… என்று திரும்ப எண்ணினால்
1.அந்த உருவங்கள் நினைவலைகளாகத் தெரிய வருகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை என் உணர்வுக்குள் விழிகளில் இருக்கும் திரைகளில் பட்டு உணர்த்துகின்றது… கண்கள்.
3.உணர்வின் நினைவாற்றலாக எனக்குள் இயக்கி அந்தக் கோப உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

விஞ்ஞான அறிவால் டிவி ரேடியோ மூலம் மற்றவைகளைக் காணுவது போன்று… மெய் ஞான அறிவால் பார்க்கப்படும் போது…
1.நுகர்ந்து பதிவு செய்து கொண்டது அது தான் கண்ணன்… கண்கள்
2.நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
3.எதைப் பதிவு செய்கின்றாயோ… அதனையே தான் நீ நினைக்கின்றாய்
4.பதிந்த உணர்வுகளை நினைக்கப்படும் பொழுது அதன் நினைவைக் கூட்டும் பொழுது அதுவாகவே நாம் மாறுகின்றோம் என்று தான்
5.அன்று வியாசகர் இதை எல்லாம் நமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.

சாதாரண மனிதனிடம் பழகும் பொது திட்டியவன் தவறுகளைச் செய்தவன் இடையூறு செய்தவன் என்று எண்ணத்தால் பதிவு செய்து கொண்ட பின் அந்த நினைவுகள் எதிர்கொண்டு வருகின்றது. நோயுற்றவர்களைப் பரிவுடன் பார்க்கப்படும் பொழுது அதுவும் பதிவாகி… நமக்குள் அந்த அலைகளும் வரத் தொடங்குகின்றது.

நம் பிள்ளைகள் மீது பாசம் கொண்டு இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அவன் தவறு செய்கின்றான் என்றால் அந்த உணர்வைப் பதிவு செய்து கொள்கின்றோம்.
1.நல்லவனாக இருக்கும் பொழுது ஒரு பதிவு
2.ஆனால் தவறு செய்யும் போது அது ஒரு பதிவு
3.அவன் செய்த தவறினைப் பற்றி நாம் எண்ணப்படும் பொழுது
4.“நல்லவனாக இருந்தான்… இப்போது இப்படி ஆகிவிட்டான் என்ற உணர்வு நம்மை இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் எளிதில் காணுகின்றோம்.

இத்தகைய உணர்வலைகள் படரும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்கள் தடைப்படுகின்றது…. நம் செயல்களும் மாறாக வரத் தொடங்குகிறது. தீமையின் உணர்வுகளை நுகரும் பொழுது நமக்குள் அது நோயாகி விடுகின்றது நல்ல சிந்தனைகள் அழிந்து விடுகின்றது.

இதைப் போன்று நம் எண்ணத்தால் நமக்குள் பதிவு செய்து கொண்ட நிலை எதுவோ கண்ணின் நினைவுக்கு வரும் பொழுது புவியிலிருந்து கவர்ந்து,,, ஆன்மாவாக மாற்றி… உயிரின் தன்மை நுகர்கிறது.

எப்படி ஆண்டன்னா அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி ரேடியோக்களில் பரப்பப்படும் பொழுது அந்த இயந்திரங்கள் ஒளி ஒலியாகப் பரப்பிப் படமாக ஒலிகளாகக் காட்டுகின்றதோ அதைப் போன்று தான் நம் கண்ணின் நிலைகளும்.

விஞ்ஞான அறிவுப்படி இந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் நம்மை அறியாது பதிவாகும் தீமையின் இயக்கங்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அருள் சக்திகளை எவ்வாறு பெற வேண்டும் என்பதற்குத் தான்…!

சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்து வெகு தொலைவில் இருப்பதை விஞ்ஞான அறிவு கொண்டு கவர்வது போன்று தான்
1.விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்வதற்கு உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
2.பதிவானதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் கண்களுக்கு ஆற்றல் மிக்க சக்திகள் கூடி…
3.நினைத்தவுடன் ஞானிகள் அருள் சக்திகளைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகிறீர்கள்… வரும் தீமைகளை அகற்றிட முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் சேர்க்கச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் சேர்க்கச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

 

மனிதனின் வாழ்க்கையில் நம்மை அறியாமல் அடிக்கடி வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த விஷத் தன்மைகள் நம் சிறுநீரகத்தைச் சீராக இயக்க விடுவதில்லை.

இரத்தத்தில் கலந்து வரும் அந்த அசுத்தத்தின் தன்மைகளை… அது நீக்கும் சக்தி இழந்து விடுகிறது. இந்த விஷத்தன்மைகள் இரத்தத்தில் கலந்த பின் இருதயத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
1.காரணம் உப்புச் சத்து என்ற நிலைகள் அதிலே உருவாகிவிடுகின்றது.
2.உப்பை வைத்தால் எப்படி ஒரு பசபசப்பாகக் கசிகின்றதோ அதைப் போல் நுரையீரல் கல்லீரலில் கசிவுகள் அதிகமாகி விடுகின்றது
3.அதனால் அடிக்கடி வாந்தி என்ற நிலையும் வருகின்றது.
4.அதே போல் சர்க்கரையை நீக்கும் உடலிலே அதைச் சமப்படுத்தும் சக்தி இழந்து விட்டால் அதுவும் இணைந்துவிடும்.
5.இத்தகைய நிலைகள் ஏற்பட்டால் “உணர்வின் உந்துவிசை அதிகமாகி விடும்…: இரத்தக் கொதிப்பும் இதனுடன் கலந்துவிடும்.

இதைப் போன்ற உணர்வு நமக்குள் தோன்றி நமக்குப் பல தொல்லைகளைக் கொடுக்கும். பின் வேதனை உணர்வு அதிகமாகி… உடலில் இதே உணர்வு கொண்டு உயிரான்மா வெளியில் சென்றுவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபடுவதற்கு காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெறச் செய்ததைச் சீராகப் பயன்படுத்தி… உங்கள் உடலில் எத்தகைய நோய் இருப்பினும் யாம் சொல்லும் முறைப்படி தியானித்து,,, உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்களை நீக்க முடியும்.
1.உங்கள் எண்ணத்தால் தான் நோய் வந்தது
2.அதே எண்ணத்தால் அதை நீக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் எண்ணி ஏங்கிவிட்டு… கண்களை மூடி அந்த அருள் சக்திகள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

1.சிறுநீரகத்தில் குறை இருந்தால் அந்தப் பாகத்தில் நினைவைச் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்பிலே படரப்பட்டு நஞ்சினை நீக்கி…
3.என உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போன்று உங்கள் உடலில் வாத நோயோ கீழ்வாதமோ முடக்கு வாதமோ சர்க்கரைச் சத்தோ ஆஸ்த்மாவோ அந்தந்த நோய்கள் நீங்கி நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்து உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

உங்கள் எண்ணத்தை இவ்வாறு செலுத்தினால் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் படர்ந்து டிபி.யிலிருந்து கேன்சர் வரையிலும் நீக்கும்.

“கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று சொல்வது போல் உங்கள் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அதை உடலுக்குள் செலுத்தி உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

கண்ணின் நினைவை உடலுக்குள் இவ்வாறு செலுத்தச் சொல்வதன் நோக்கம் என்ன…?

நண்பன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்றால்… இரண்டு பேரும் சண்டையிட்டு அவனை நினைத்து “இப்படிச் செய்தானே பாவி” என்று எண்ணினால்… கண்களால் செலுத்தப்படும் போது உடனே அங்கே புரையோடித் தீமையின் செயலாக இயக்குகிறது.

அதே சமயத்தில்… “தக்க நேரத்தில் எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணினால் உடனே விக்கல் பாய்ந்து அங்கே நல்லதாகிறது.

இதைப் போல்
1.நம் உடலுக்குள் கண்களால் பதிவான துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.கண்ணால் நுகர்ந்தறிந்த அந்த உணர்வுகள் அணுக்களாக விளைந்ததை
3.கண்ணின் நினைவை அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்த உணர்வின் சக்தியை உடலுக்குள் பரப்பி
4.நம் உடலில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று எளிதில் இணைத்து… அதைப் பெறச் செய்ய முடியும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தில் நாம் நுகர்ந்த தீமைகள் கருவாகி அணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சியைத் தூண்டி தன் இனத்தைப் பெருக்கும்.

இவ்வாறு அதன் இனத்தைப் பெருக்கும் அந்தச் சக்தியைக் குறைக்கத் தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உடலுக்குள் செலுத்தி அதை வளர்த்துக் கொண்டே வாருங்கள் என்று சொல்கிறோம்.

1.உங்கள் வாழ்க்கையில் உடல் நலம் பெற்று மன நலம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட
2.எமது அருளும் குரு அருளும் உறுதுணையாக இருந்திடப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

நம் நினைவுகளுக்குண்டான “சரியான சுவிட்ச்… கண்கள் தான்”

நம் நினைவுகளுக்குண்டான “சரியான சுவிட்ச்… கண்கள் தான்”

 

சந்தர்ப்பத்தினால்… குடும்பத்தில் கஷ்டமும் நஷ்டமும் நமக்கு அதிகமாக வந்து விட்டால் “எதிரி நமக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்…” என்று அந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் கஷ்டம் அதிகமாகிறது. அடுத்து மந்திரவாதிகளிடம் செல்கின்றோம்.

எனக்கு இப்படியெல்லாம் இவன் கெடுதல் செய்தான் என்போம். சரி யாகத்தை வளர்க்க வேண்டும்… இதற்கு 100… அதற்கு 100… என்று இப்படி வரிசையாக நூறு நூறாகச் சொல்லி அவன் பணத்தை வாங்கிக் கொள்வான்.
1.இதைக் கொண்டு இன்ன இடத்தில் புதைத்து வைத்து விடுங்கள்… அவன் கெட்டுப் போவான் என்று சொல்வான்
2.கெட்டுப் போவதற்காக வேண்டிக் காசு கொடுத்து மந்திரத்தைச் சொல்லி செயல்படுத்துகின்றோம்.

கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…? அலுங்காமல் இன்னும் கொஞ்சம் வேதனையைத் தான் உருவாக்கும்…!

நாம் நினைக்கின்றோம்… அவன் கெட்டுப் போக வேண்டும் என்று.
1.அவனும் கெடுவான்… செய்ய நினைத்தவனும் கெடுவான்.
2.செய்வினை செய்தவர்கள் யாராவது தப்பியிருக்கின்றார்களா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!
3.தீமையைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர நன்மையின் உணர்வுகளை நாம் பெற முடிவதில்லை

இது எல்லாம் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

அதனால்தான் குருநாதர் எம்மைச் சாக்கடையில் அமரச் செய்து உபதேசம் கொடுத்தார். அந்தச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பன்றி எப்படி தள்ளுகின்றதோ… அது போல் உனது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.

ஏனென்றால் இந்தக் காற்று மண்டலமே ஒரு சாக்கடையாக இருக்கின்றது. இந்தச் சாக்கடைக்குள் இருந்து நீ நல்ல பொருளை எடுக்க வேண்டும்.
1.அதற்குத் தானப்பா இந்த உபதேசமே கொடுக்கின்றேன்…!
2.அந்த இடத்திலே அவர் சொன்ன முறைப்படி என்னை எண்ணும்படி சொல்கின்றார் குருநாதர்.
3.அவர் சொன்ன முறைப்படி எண்ணும் போது அந்த நாற்றம் மறைகிறது.

சில நேரங்களில் என்னுடன் யாராவது பேசிக் கொண்டிருந்தாலும் அருகில் நாற்றம் இருந்தால் எனக்குத் தெரிவதில்லை. ஞாபகப்படுத்தினால் தான் எனக்குத் தெரிய வரும். சாக்கடையாக இருக்கின்றது… சாமி இங்கே நின்று பேசிக் கொண்டிருக்கின்றார் என்று கூட நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் அதை நான் நினைப்பதில்லை அது என்னைத் தாக்குவதுமில்லை. ஆனால் கண்ணிலே பார்த்து விட்டால் விலகிச் சென்று விடுகின்றேன்.

சில பேர்… வந்த உடனே நுகர்ந்து பார்ப்பார்கள்… சங்கடம் சலிப்பு எல்லாம் வந்த உடனே ஐயோ நாற்றமாகின்றது என்பார்கள்.

இதுகள் எல்லாம்
1.நம்முடைய உணர்வினை எதிலே செலுத்துகின்றோமோ அதன் வழி தான்
2.இந்த உயிரும்… நம் உடலில் உள்ள காந்தப்புலனும்… கண்ணுக்கு நினைவு வரப்படும் பொழுது…
3.அந்த உணர்வு தான் ஆன்மாவில் முன்னணியில் நிற்கும்… சுவாசித்து அதுவே இயக்கும்.

முன்னிலையில் நம் ஆன்மாவில் இருப்பது எதுவோ இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாக இருக்கின்றது. நம் கண்ணுக்குப் பெயரும் பரமாத்மா என்று தான் ஞானிகள் வைத்திருக்கின்றார்கள். அதனுடன் இணைந்தே நாம் வாழுகின்றோம்.

உணர்வுகள் ஒவ்வொன்றாகச் சேர்த்து நம் ஆன்மாவாக அதை மாற்றி உடலாக மாற்றிவிடும். நமது கண் பரமாத்மாவுடன் கலந்து தான் இருக்கின்றது. எதை நினைவுபடுத்துகின்றோமோ உடனே அது வருகின்றது

டி.வி.க்கு ஆண்டன்னா வைத்து இணைப்பு கொடுக்கின்றார்கள். எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ… காற்றிலிருந்து பிரித்து அந்தப் படக் காட்சிகளைக் காட்டுகின்றது.

1.நமக்கு எது ஆண்டன்னா…? நமது கண் தான்…!
2.அதன் உணர்வின் வழிப்படித் தான் நுகர்ந்து உயிர் வழி உணர்த்துகின்றது.
3.இந்த ஆண்டன்னா பழுதாகிவிட்டால் எந்த ரெக்கார்டை நீங்கள் எடுக்க முடியும்…?

அடிக்கடி வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் விஷத்தின் தன்மை கருவிழி ஈர்க்கும் சக்தி குறைகின்றது அதனால் நல்ல அணுக்களுக்கு வலுவான சக்தி கிடைப்பதில்லை.

கண்ணின் தன்மையிலே விஷத்தன்மை அதிகமாக படர்ந்து விட்டால்
1.விஷத்தின் உணர்வையே மீண்டும் இழுத்துக் கவர்ந்து வேதனை என்ற உணர்வுகளை ஊட்டிக் கொண்டே தான் இருக்கும்.
2.ஏனென்றால் கண்ணின் நரம்பு மண்டலம் அவ்வளவு சீக்கிரம் பாதித்துவிடுகிறது.
3.விஷத்தைக் கவரும் சக்தி தான் வருகின்றது.

அதிகமான வேதனைப்பட்டவர்களைப் பார்த்தால் தெரியும். அவர்கள் வாழ்க்கையில் நலிந்த சொல்லும் நலிந்த செயலும் வரும்… நரக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்ட தீமை வரப்படும் பொழுது கண் பலவீனம் ஆகிறது. அந்தச் சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் சாமானை ஒருவன் திருடிக் கொண்டு போவான் என்றால் அவனை எண்ண வைக்காது… யாரோ செல்கின்றார்கள்…! என்று தான் தெரியும்.

பார்வை நன்றாக இருக்கப்படும் பொழுது ஒருவர் வித்தியாசமாகச் சென்றால் கூடத் தெரிய வருகின்றது. நடையைப் பார்த்த உடனே என்ன… ஏது…? என்று திரும்பிப் பார்க்கின்றோம்.

நம் பொருள் தெரிகின்றது… அது அவன் கையில் இருக்கும். ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது பார்க்க முடியாது. மகாபாரதத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

1.கண்ணன் உபதேசிக்கும் உணர்வின் தன்மைகொண்டு தான் அர்ஜுனனுக்கு வலு.
2.அப்போது அர்ஜுனன் எல்லா வகையிலும் தெளிவாக இருக்கின்றான்

ஆனால் கண்ணன் பரலோகத்திற்குச் சென்று விடுகின்றான் அர்ஜுனனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடி… ஓட்டிக்கொண்டு செல்கின்றார்கள்.

இவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை… ஆக அவனால் பார்க்க முடியவில்லை யாரோ எவரோ…! என்ற நிலையில் தான் இருக்கின்றான். எவ்வளவு தெளிவாக ஞானிகள் நமக்கு உண்மையை அறிந்து கொள்ளும்படியாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

மகாபாரதத்தைப் படித்தவர்கள் இதை வேறு விதமாக அர்த்தம் கற்பிக்கின்றார்கள். “கண்ணன் இறந்துவிட்டான்… அதனால் அர்ஜுனனுக்குச் சக்தி இல்லை…” என்று இப்படித்தான் அவர்கள் சொல்கின்றனர்.

நீங்கள் வேதனையுடனும் சோர்வுடனும் இருக்கப்படும் பொழுது கண்ணின் பார்வைகள் குறைகிறது. கண்ணுக்கு முன்னாடி திருடன் சென்றாலும்… வீட்டில் இருக்கும் பொருளை எடுத்துச் சென்றாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறிது தூரம் சென்ற பிற்பாடு தான் யாராவது பார்த்து… என்ன…? உங்கள் வீட்டிலிருந்து பொருளை எடுத்துப் போகின்றான் திருடன்…! என்று சொல்லும் போது தான். ஆ…! என்று அப்பொழுதுதான் நினைவு வரும்.

1.நம்முடைய உணர்வுகள் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைத் தான் தத்துவங்களும் சாஸ்திரங்களும் தெளிவாக நமக்குக் காட்டுகின்றது.
2.அதைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் அவசியம்

மகாபாரதப் போரைக் கண்ணன் ஏன் வழி நடத்துகிறான்…?

மகாபாரதப் போரைக் கண்ணன் ஏன் வழி நடத்துகிறான்…?

மனித உடலில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போர் முறைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. மகாபாரதப் போரைக் கண்ணன் (கண்கள்) வழி நடத்துகின்றான் என்று காட்டுகின்றார்கள். ஏன்…?
1.கண்கள் தான் ஒன்றைப் பார்த்து அதன் வழி நுகர்ந்து
2.உயிரிலே பட்ட பின்… நாம் எண்ணியதை உயிர் இயக்குகின்றது.

எண்ணத்தினால் தான் கண்கள் உருவானது. நாம் எதை நினைக்கின்றோமோ அதைக் கவர்ந்து அந்த எண்ணத்தை ஊட்டுகின்றது கண்கள்.

பரிணாம வளர்ச்சியில் கண் இல்லாத பொழுது. “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…” என்ற எண்ணங்களை எடுத்தது அதன் உணர்வின் தன்மை வளர்ந்து அப்படித் தான் கண்கள் உருவானது.

கண்கள் உருவான பின் ஒன்றைப் பார்க்கப்படும் போது அதைக் கவர்ந்து அந்த உணர்வின் எண்ணங்கள் வருகிறது. நாம் எதை எடுத்து அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றோமோ அதன் நிலையே வருகிறது.
1.ஒருவனை நாம் ஏமாற்ற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அவனைக் கண்டதும் ஏமாற்றுகின்றோம்.
2.அதே சமயத்தில் நண்பனை ஏமாற்றினால் அவன் நம்மை விடமாட்டான் என்றால்
3.அதற்குத் தகுந்த மாதிரித் தான் நாம் நடந்து கொள்வோம்.

இப்படி நம் மனதிற்குள் எத்தனையோ போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஆறாவது அறிவு கார்த்திகேயா பல சூதுகளிலும் பல நிலைகளிலும் மாறி மாறி வளர்ந்து வந்தது.

உதாரணமாக பூனை எலியைப் பிடிக்கத் தந்திரமான வேலை செய்கின்றது. தந்திரமாகப் பிடிக்கும் நிலைகள் அதற்கு வருகின்றது எலியும் பூனையிடமிருந்து தப்பிக்க எத்தனையோ வழிகளைச் செய்கின்றது.

பூனையின் மணத்தை எலி கண்டபின் உற்றுப் பார்க்கின்றது மணத்தால் நுகர்கின்றது…. அங்கே பூனை இருக்கிறது என்றால் தப்பி விலகி ஓடுகின்றது.

ஆனால் பூனை என்ன செய்யும்…?

1.அந்த எலியின் மணத்தை வேகமாக நினைத்து இழுத்து வைத்துக் கொள்ளும்
2.சப்தமில்லாதபடி அந்த வாசனையை அது ஏங்கிப் பெறும் பொழுது பூனையின் பக்கம் அந்த மணங்கள் வருகின்றது… பூனை ஒளிந்து கொள்கிறது.
3.மறைந்திருக்கும் போது எலியின் மணம் அங்கிருந்து (பூனையிடமிருந்து) வருகிறது
4.எலியோ தன் கூட்டாளி அங்கே இருப்பதாக எண்ணி வேகமாக வரும்.
5.வேகமாக வந்த பிற்பாடு லபக் என்று பிடித்துக் கொள்கின்றது.

பூனை இதே மாதிரி தான் அதை உணவாக உட்கொள்கின்றது. இயற்கையின் சில நியதிகளில் அதனதன் உணர்வுக்கு உணவு தேட இப்படி வேலை செய்கிறது.

இது போன்று புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொன்றும் அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு… அணுக்கள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டு அதன் வளர்ச்சியின் தன்மை பெற்றுத் தான் இன்று மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனான பின் இந்த உடலின் இச்சை தான் வருகின்றது உடலைக் காக்க எத்தனையோ உபாயங்களை நாம் கையாளுகின்றோம்.

ஒருவர் நீதிப்படி நல்ல முறையில் ஒன்றை வளர்க்க வேண்டும் என்றால்… சூதின் வழி தான் அவரைக் கவர்ந்து கொள்கின்றோம்.

நல்லவரைப் பார்த்தாலும் நல்லது செய்தார் என்று எண்ணமே நமக்கு வருவதில்லை.
1.நமக்கு நல்லதே அவர் செய்திருந்தாலும் வெறுப்பின் உணர்வுகள் கவர்ந்திருந்தால்
2.அவர் என்ன நல்லது செய்தார்…? என்று தான் கேட்போம்.

காரணம்… அவர் செய்த உண்மையின் இயக்கத்தை நாம் எந்தக் கண்களால் பார்த்து
1.எத்தகைய உணர்வைப் (அன்போ வெறுப்போ பகைமையோ) பதிவாக்கினோமோ அந்த எண்ணங்கள் தான் வருகின்றது.
2.அந்த எண்ணத்தை நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் தான் இயக்குகின்றது.

இந்த உணர்ச்சியின் வழி தான் அந்தந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது என்பதை “மகாபாரதப் போரைக் கண்ணன் வழி நடத்துகின்றான்…” என்று காட்டுகின்றார்கள்.

இத்தகைய போராட்டங்களை மாற்ற வேண்டும் என்றால் நம் கண்ணின் நினைவு எங்கே இருக்க வேண்டும்…?

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் பால் சென்று அதனின்று வரும் பேரருள் பேரோளியைக் கவர்ந்து உயிரிலே அதை மோதச் செய்ய வேண்டும். அந்த உணர்வு நம்மை இயக்கும்படி செய்ய வேண்டும்.

ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்…!

ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்…!

 

யாம் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை தியானத்தின் மூலம் பெற்றுக் கொண்டே வருகின்றீர்கள்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்கு நீர் எப்படிக் குறைகின்றதோ அது போல் இதற்கு முன்னாடி அறியாது சேர்த்துக் அசுத்தமான உணர்வுகளை நாம் நீக்க முடியும்.

ஆனால்… குறைகளைச் சொல்லித் திருத்தவே கூடாது (இது முக்கியம்).

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண் வழி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
2.ஏனென்றால் அனைத்துமே நம் கண்கள் வழி தான் பதிவானது
3.கண் வழியாகத் தான் நம் உடலுக்குள்ளும் சென்றது
4.அதே கண் கொண்டுதான் மீண்டும் உடலுக்குள் உயர்ந்த சக்திகளைச் செலுத்தவும் முடியும்.
5.அப்படிச் செலுத்தப் பழகிவிட்டால் மீண்டும் இந்த நினைவுகள் கண்களுக்கே வரும்
6.அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடலுக்குள் பெருக ஆரம்பிக்கும்.

அது பெருகப் பெருக உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள்… பரிவுடன் பார்த்துப் பிறருடைய வேதனைகளை நுகர்ந்தது போன்ற உணர்வுகளை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்த ஞானிகள் பெற்ற அருளை நீங்கள் பெறும் போது தீமை நீக்கக்கூடிய சக்தியாக வரும். உங்கள் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் இருளை அகற்றும்.
1.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உங்களால் முடியும்.
2.தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்து… பிறர் தீமைகளைப் போக்கும் அருள் ஞானிகளாக நீங்கள் வாழ முடியும்.
3.ஆக… ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

ஏனென்றால் உங்களுக்கெல்லாம் அந்த அருள் சக்தி பெருக வேண்டும் இருளை நீக்கும் அருள் ஞானம் பெருக வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும்… என்று தான் எண்ணி நான் சதா தவமிருக்கின்றேன்.

இதை நான் எண்ண எண்ண… என் உயிரிலே இது பட்டு… எனக்குள் அந்த உமிழ் நீராக மாறுகிறது… அந்தச் சக்திகள் எனக்குள் கூடுகின்றது. உங்களுடைய கஷ்டம் நஷ்டங்கள் எத்தனை நான் கேட்டிருந்தாலும் இதை வைத்து நான் அதை மாற்றி விடுகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற தகுதியை ஏற்படுத்துகின்றேன். ஏனென்றால் உங்கள் உயிர் கடவுள்… உங்கள் உடல் ஒரு கோவில்… உங்கள் ஆலயத்தை நான் சுத்தப்படுத்துகின்றேன்.

1.உங்களைச் சுத்தப்படுத்த நான் எண்ணும் பொழுது என் உடலான ஆலயமும் எனக்குள் சுத்தமாகின்றது
2.என்னை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் எனக்குள் அந்தத் தெய்வீக பண்பு கொண்டு
3.அந்த அருளைக் கொண்டு… இருளைப் போக்கும் உணர்வு கொண்டு… “என்றும் ஒளி” என்ற உணர்வைப் பெறச் செய்கின்றது.
4.என்னுடைய எண்ணமே உயிருடன் ஒன்றி… என்றும் ஒளியின் தன்மை பெறுகின்றது

அதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரம் அந்த அருள் சக்தி நீங்கள் அனைவரும் பெற்று… உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்… அருள் வழி வாழும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற்று… இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி பெற்று… அருள் வாழ்க்கை வாழ்ந்திட எமது அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் அணுக்களுக்குள் இணைக்கும் முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் அணுக்களுக்குள் இணைக்கும் முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

ஏனென்றால் புருவ மத்தியில் இப்படி எண்ணி விட்டால்… இதற்கு முன்னாடி நம்மை அறியாது சேர்ந்த தீய வினைகளுக்கு ஆகாரம் போகாதபடி தடுக்கின்றோம்.

அருள் ஞானத்தின் உணர்வுகளை உயிர் வழி நமக்குள் பரப்புகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி உயிரிலே மோதும் போது ஒளிக்கற்றைகள் தோன்றும்.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப் போன்று
3.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரப்படும் பொழுது… அது நமக்குள்
4.அறியாமை என்ற இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையை உருவாக்கும்.

உங்கள் நினைவு அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி… உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

எப்படி ஊசி மூலம் மருந்தை எடுத்து உடலுக்குள் செலுத்திய உடனே இரத்தங்கள் முழுவதும் அந்த மருந்து பரவுகின்றதோ அதேபோன்று
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று
2.உங்கள் கண்ணின் நினைவு கொண்டு உள்ளே செலுத்துங்கள்.

எங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறும்படியாகக் கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.

உறுப்புகளை எவ்வளவு தூரம் என்ன முடியுமோ உறுப்புகளில் அந்த சக்தி படர வேண்டும் என்று ஏங்கி நினைவைச் செலுத்துங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளில் இப்பொழுது புது விதமான உணர்ச்சிகள் தோன்றும்… அதை உணரலாம்.
1.தீமையான அணுக்கள் இருந்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தி அதிலே படும் பொழுது அது பலவீனமடையும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுப்பெறுகின்றது.

உடல் உறுப்புகளில் எத்தகைய தீய அணுக்கள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது அது வலு இழக்கின்றது.

கண்ணின் நினைவை அவ்வாறு செலுத்தப்படும் பொழுது…
1.அந்த ஜீவ அணுவின் காந்தமும் உங்களுடைய உணர்வின் நினைவும் செலுத்தப்படும் பொழுது
2.எளிதில் உங்கள் உடல் உறுப்புகளுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் செய்ய முடியும்.

ஒரு நல்ல மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளில் உருவாகும்.