“ஆயுள் மெம்பர்கள்” தெரிந்து கொள்ள வேண்டியது
உதாரணமாக… வேகமாக ஒருவர் நம்மை திட்டி விட்டார் என்றால்… “இப்படித் திட்டினான்…” என்று அதை வலுவாகப் பிடித்துக் கொள்கின்றோம்.
ஒரு நல்ல காரியத்தைச் சாந்தமாகச் சொல்லி இருந்தால் அது சந்தோஷத்தை ஊட்டக்கூடியது தான்.
1.இருந்தாலும் அது நினைவில் இருக்காது… கெட்டது நினைவில் இருக்கும்
2.நல்லதைச் சாந்தமாக சொன்னால் இது உடனே மறந்துவிடும்
3.நறுமணம் அதுதான்… அதில் விஷம் பட்டால் அது மறந்து விடுகின்றது… அதனுடைய செயலை இழக்கச் செய்து விடுகின்றது
நாம் நல்ல குணம் கொண்டிருக்கின்றோம். ஒருவர் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினால்…
1.அதை நாம் கேட்டறிந்தால் நம் நல்ல குணங்களை இது மூடி விடுகின்றது
2.நல்லது செய்வதை மறந்து விடுவதற்கு காரணமே அது தான்
3.இந்த விஷம் எப்பொழுதுமே அதனுடைய வேகத்தை காட்டிக் கொண்டே இருக்கும்.
ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷம் பட்டால் அந்த ஒரு குடம் பாலும் பாழாகி விடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் நூறு குடம் பாலை அதிலே விட்டால்
1.அந்தப் பாலிலே இந்த விஷம் குறைந்து அந்தப் பாலுக்கே ஒரு வீரிய சக்தி உண்டாக்கக்கூடிய சக்தி வருகிறது
2.அதாவது விஷம் அதிகமானால் கொல்கிறது… “விஷம் சிறுத்தால் வீரிய சக்தி உண்டாக்குகின்றது” (முக்கியமானது)
ஏனென்றால் நாம் எப்படி வாழ்கின்றோம்…? எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூடுமானவரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்… “ஆயுள் கால மெம்பராக இருப்பதால்…”
உயிர் தீயிலே பட்டால் அழிவதில்லை. ஆகவே உயிரைப் போலவே உணர்வுகளை ஒளியாக மாற்றுவது தான் நம்முடைய குறிக்கோள். ஆகையினால்
1.உயிரோடு சேர்த்து அவன் ஒளியாக இருப்பது போல் ஆயுள் கால மெம்பராக அவனுடன் இணைந்து
2.அந்த உயிரின் இயக்கமாக நாம் மாறுவதுதான் மெம்பராக இருப்பதனுடைய நோக்கம்.
நமக்குள் இருக்கும் இயக்கத்தை… இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நமக்குள் நாம் அறிந்தாக வேண்டும்.
கெமிக்கல் கலந்த நாடாவில் ஒலி.. ஒளி… என்று பதிவாக்குகின்றார்கள். திருப்பி அதை இயக்கிச் சுழல விடும்பொழுது அந்த உணர்வுகள் வெளி வருகின்றது.
அதே போன்றுதான் இந்த உபதேசக் கருத்துக்களை நீங்கள் இப்பொழுது கூர்ந்து கவனிக்கும் பொழுது… கருவிழி ருக்மணி “ஊழ் வினை” என்ற வித்தாக உங்கள் நெஞ்சின் எலும்புக்குள் பதிவாக்குகிறது.
பதிவாக்கிய பின் கண்ணின் காந்தப் புலனறிவு அதைக் கவர்ந்து அதன் அறிவாக இயக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி மீண்டும் உயிரிலே படும் பொழுது அந்த உணர்வுகள் உணர்ச்சியாக இயக்குகின்றது
இந்த உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அதை நுகர்ந்தோர் உணர்வுகளையும் அதே உணர்ச்சிகள் இயக்கத் தொடங்குகிறது. இதை நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
அதன் வழியிலே தான் அந்த அருள் ஞான வித்தாக உங்களுக்குள் உருவாக்குகின்றேன். எனக்கு குருநாதர் எப்படி உருவாக்கினார்களோ அந்த ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்கி அதை உருவாக்குகின்றேன்.
நமது குருநாதர் காட்டிய வழியில்
1.துருவ தியானத்தில் அதற்குண்டான சத்தைக் கூட்டிக் கொண்டே வந்தால்
2.அருள் ஞானச் சொத்தாக அது உங்களுக்குள் வளர்ந்து கொண்டே வரும்.
அகஸ்தியன் எப்படிப் பெற்றானோ அதே மாதிரி நாமும் இருளை நீக்கி உணர்வுகளை ஒளியாக மாற்ற முடியும் அதற்குத்தான் அருள் ஞான வித்தைக் கருவிழி ருக்மணி மூலம் பதிவாக்குகின்றேன்.
1.நான் (ஞானகுரு) சொன்ன அருள் ஞான உணர்வுகள் இங்கே படர்கிறது.
2.உங்களுக்குள் பதிவாகின்றது… அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது.
“என் குரு ஒரு கசாப்புக்கடைக்காரன்…!” கொல்லாமை போற்றிய வாசுகி கொங்கணரிடம் சொன்னது
கொங்கணர் தன் ஞான வளர்ச்சிக்கு வித்தாக அன்று தேர்ந்தெடுத்து பிட்சை கேட்ட இல்லம் “உலகுக்குப் போதனை தந்த வள்ளுவனார் வாசுகி வாழ்ந்து வந்த இல்லம் தான்…!”
பிச்சாந்தேஹி..! என்று பல முறை கேட்டும் (ஒரு முறை தான் கூப்பிட வேண்டும் என்பது நியதி) அன்னமிட வராத காரணமும் பசியின் ஆதிக்கம் அன்று அதிகரித்து விட்டது.
அதே சமயத்தில் எச்சமிட்ட கொக்கை எரித்த தன் வல்லமையை நினைத்துக் கர்வம் மீண்டும் தலைக்கேற அதன் வழி கோபத்தின் வசமாக ஆவேசத்துடன் படபடத்துப் போன அந்த மகான் விழி சிவந்து நாசி புகை கிளம்ப கோபக் கனலாகத் தகித்து நின்றார்.
தனக்கு அன்னமிட வராத காரணம் அறியாமல் இங்கிருந்து போகக் கூடாது என்ற எண்ணம் கொண்டு விறைத்து நின்றார்.
வெளி வந்த வாசுகி அம்மையும் கோபக்கனலாக ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயலாக நிற்கும் முனிவரின் நிலை கண்டு “எதனால் இந்த நிலை வந்தது…?” என்று சிந்திக்கத் தலைப்பட்டார்.
பின் தன் அறிவின் ஞானத்தால் தெளிந்து முனிவரின் கோபத்தின் மூல காரணத்தையும் அறிந்து அவரின் “நான்” என்ற நிலை கண்டு அமைதியாகச் சிரித்தார்.
வெகுண்டெழுந்த கோபத்தால் முனிவன் வாசுகி அம்மையிடம் “ஆஹா…” ஓர் தபசியைக் காக்கச் செய்த பின்னும்.. பல முறை குரல் கொடுத்தும்.. வெறும் கையோடு வந்த காரணம் என்ன..? என்ன மமதை கொண்டு தாமதமாக வந்தாய் காரணம் கூறு..! என்றார் கொங்கணர்.
வாசுகி அம்மையோ அந்த முனிவரின் கர்வத்தை அடக்கும் விதமாக… முனிவரின் கோபத்தின் மூல காரணத்தை நொடியில் கூறி அவர் தம் கர்வத்தை நீக்கினார்.
“என்னையும் கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே…!” என்றார் வாசுகி.
அந்தச் சொல்லால் திகைத்துப் போன கொங்கணரும் தன் கோப நிலையை மாற்றிக் கொண்டு வீட்டிற்குள் இருக்கும் இந்தப் பெண் பிள்ளை கூறியதைக் கேட்டு அமைதியாகச் சிந்தனையின் வசமானார்…!
ஆற்றோரம் அமைதி பெறவேண்டி எடுத்த நியமன ஜடாக்கினித் தொடரில் தவம் முற்றுப் பெற்று சக்தியின் பரிபூரணத்துத்தை முழுமை பெற வொட்டாமல் என் கோபமே எனக்குத் தடையாகிப் போனது.
காரணம்… அன்று நான் அமர்ந்திருந்த மரக்கிளை மேல் அமர்ந்த கொக்கு தன் எச்சத்தை இட அது என் தலை மேல் விழுந்தது. பகுத்தறிவற்ற ஓர் பறவை அறியாமல் செய்துவிட்ட செயலை என்னால் பொறுக்க முடியவில்லை.
பொறுக்காமல் நான் பெற்ற சக்தியின் செயல் கொண்டு சுட்டெரித்து விட்டேன்.
1.எச்சமிட்ட அந்தக் கொக்கை நான் சுட்டெரித்தேன்.
2.இன்றோ இந்தப் பெண்மணி என் கோபக்கனலையே சுட்டெரித்து விட்டாள்.
3.எம் அகத்தினைக் குளிரச் செய்து எனது “நான்…” என்ற அகங்காரத்தைப் பொடிப் பொடியாக்கி விட்டாள்.
4.வீட்டினுள் இருந்து கொண்டு இல்லறப் பயன் ஒழுகும் இந்தப் பெண்மணி பெற்ற தவத்தின் பேறு தான் என்னே…?
5.நான் காட்டில் தவம் கிடந்து என்ன பயன்…? இவள் அறிவின் ஞானக் கண் திறந்தாள் என்றெல்லாம் சிந்தித்தார் கொங்கணர்.
வாசுகி அம்மையைக் கும்பிட்டு “அம்மா ஞானம்பிகே..!” என் கர்வம் ஒழியப் பெற்றது. புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால் திரும்பும் முன் ஓர் காரணத்தைப் பணிவோடு கேட்கின்றேன். பதில் கூற வேண்டும் என்று பணிவோடு பகர்ந்து அன்னமிடக் காலதாமதமாக வந்த காரணத்தைக் கூற வேண்டும் என்றார்.
வாசுகி அம்மை கூறுகின்றார்கள்…!
1.“மண் சட்டியில் உணவில்லை.
2.ஆதலால் விண் சட்டியில் உணவு உட்கொண்டிருந்தோம்…!”
3.உமது குரல் எட்டா நிலைப் பரவசத்தில் ஆழ்ந்திருந்ததே காலதாமதம் ஆனது என்று சொல்கிறார்.
அம்மா..! இவ்வளவு ஞானத்தையும் உமக்குப் போதித்த குரு யாரம்மா…? என்றார் கொங்கணர்.
அவன் ஒரு “கசாப்புக் கடைக்காரன்…!” என்றார் கொல்லாமை போற்றிய வாசுகி அம்மை.
என்ன…? கசாப்புக் கடைக்காரன் ஞானம் போதித்தானா..? என்று ஆச்சரிய மேலிட்டால் கொங்கணவர் திகைத்து விட்டார்.
ஆம் கொங்கணரே..! கசாப்புக் கடைக்காரன் தான் என் குரு…! உண்மையைக் கூறுவது என்றால் என் உயிர் தான் அந்தக் கசாப்புக் கடைக்காரன். பேரண்ட இரகசியம் தெரியுமா…?
ஓர் உயிர் சக்தி சரீர கதி வளர்ச்சிக்கு உயிரணுக்களை உண்டு உண்டு தான் வளர்ச்சியின் வலுவாகின்றது. ஆனால் அதுவே உணர்வுகளின் அதி ஆவேச செயலுடைய சரீரம் தொட்டுச் செயல்படும் “அணு செல்களின் மாமிசம்… என எண்ண வேண்டாம்….!”
1.உயரிய உயிர் சக்திக்கு வலு ஊட்டும்
2.காற்றின் ஆகார அமில அணுக்களைக் கொன்று சமைத்து உண்ணும் கசாப்புக் கடைக்காரன் – என் உயிர் சக்தி தான்
3.அதுவே என் குரு…! என்று கொங்கணருக்கு சூட்சமப் பொருள் விளங்கக் கூறுகின்றார் அந்த வாசுகி அம்மை.
உட்கொள்ளத் திட ஆகாரம் இல்லை என்றால்… வல்லமை கொண்ட உயரிய சக்தி பெற்ற முனிபுங்கவன் காற்றில் ஆகாரம் உண்ணும் ஞானப்பால் உட்கொண்டே தன் வளர்ச்சிக்கு வித்தாக்க வேண்டும் என்ற இந்தச் சூட்சமத்தை வாசுகி கூறியருள “கொங்கணர் வைராக்கியம் பெற்றார்…! கோபமகற்றி ஞானக்கண் திறந்தார்…!”
“வள்ளுவர் வாக்கு…! (திருக்குறள்) என்னும் உலக வேதத்தைத் தொகுத்தளித்த அம்மை அதைத் தன் பெயர் கொண்டு வெளி உலக அறிவின் செயல்பாட்டுக்கு வெளியிட விரும்பாமல் “வள்ளுவன் வேதம்…” என்று உலகுக்குக் கொடுத்ததற்கு பலமான பின்னணிக் காரணமும் உண்டு. அது என்ன…?
அது தன் கணவர் ஓர் சாதாரண ஆடை நெய்பவர் மட்டுமல்ல. அளவிடற்கரிய சித்து நிலை பெற்ற ஓர் சித்தன் என்று அறிந்து கொண்டதற்கு மூலமும் வறுமைதான்.
பல காலம் வறுமைப் பிடிப்பில் சிக்கி ஆகாரச் செலவாணிக்குத் தக்க பொருள் இல்லாமல் சிறிதளவு பொருள் கிடைத்தாலும் நிறைவாக வாழலாம் என்ற எண்ண ஓட்டம் இருந்தாலும்
1.முழுவதும் காற்றின் ஆகாரம் உட்கொள்ளும் பக்குவச் செயல்பாட்டுக்கு
2.முழுமையாக வந்துவிட்டால் அப்புறம் திட ஆகாரம் எதற்கு..?
3.இல்லறத் தொடரிலோ சரீர கதிச் செயல்பாட்டிற்குச் சிறிதளவு திட ஆகாரமும் தேவை தான்.
காற்றின் ஆகாரத் தொடருக்கு முழுப் பக்குவச் செயல் கொண்டிடக்கூடிய பக்குவமும் கூடி வரும் வரை சிறிதளவு திட ஆகாரமும் கொள்ளுதலும் வேண்டும். அதற்குரிய பொருளும் வேண்டும் என்ற தொடரையே சூசகப்படுத்தி வள்ளுவப் பெருமானிடம் வாசுகி கூறுகின்றார்கள்.
எத்தனையோ புலவர் பெருமக்கள் புரவலர் பெருமக்களை நாடிப் பொருள் பெற்றுச் சிறப்படைந்து வாழ்கின்றார்கள். வள்ளல் தன்மை இன்னும் நம் ஞான பூமியிலே குறைவுபட்டு விடவில்லை என்று அமைதியாகவும் சூசகமாகவும் வாசுகி வள்ளுவரிடம் தெரியப்படுத்துகின்றார்.
1.“பரிசு பெறும் எண்ணம் புலவர்களுக்குத் தான் உண்டு…!
2.அது வாசுகிக்கும் வந்ததன்றோ விந்தை…!” என்று உணர்ந்து கொண்டு
3.வள்ளுவப் பெருமான் அம்மையின் மன எண்ணச் செயலின் விபரீத வழி செல்லும் செயலை மாற்றி
4.நற்செயலுற வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததார்.
பின் அம்மையை வீட்டின் பின்புறம் அழைத்துப் போய் அங்குள்ள சிறு கல்லின் மீது அம்மையைச் சிறு நீர் பெய்யச் செய்தார். வெறும் உடலின் கழிவு நீரைக் கொண்டே தமது சித்தின் திறத்தால் அக்கல்லையே சொக்கத் தங்கமாக மாற்றி அமைத்தார், “தான் ஒரு சித்தன்…!” என்ற சூட்சமத்தை அம்மையிடம் காண்பித்தார் வள்ளுவர்.
“கல்லைக் கூடத் தங்கமாக மாற்றும் செயல் திறன்…” நம்மிடமே உள்ள பொழுது வெறும் உலகோதய ஆசையைத் தூண்டி அந்தச் செயல் வீரியத்தை நாம் பெற எண்ணினால்
1.நமது எண்ணச் செயலிலும் மாற்றுக் கலந்தால் தங்கம் மாசுபடுவது போல் ஆகிவிடும்.
2.நல் வழி ஒன்று அது நன்றாம்.. தியான வழி அதிலேயே ஆகாரம் பெறுவோம்.
3.சரீர நலத் தொடருக்கும் நம்மிடமே தொழில் உள்ளது.
4.எந்த அவதார நிலை சூட்சமமோ அது தொடங்கப் போகின்றது…!
5.ஆகவே அனைத்தும் சேமமாகும்…! என்று கண்டிப்பது போல் எடுத்துரைத்தான் வள்ளுவச் சித்தன்.
இந்தச் சம்பவம் வாசுகியம்மைக்கும் வள்ளுவன் வேதத்தை உலகினுக்கு அவர் பெயரிலேயே வெளியிடக் காரணமாக அமைந்த சம்பவம் ஆகும்…!
வள்ளுவனாரும் வாசுகி அம்மையும் தனது சிந்தனையின் தவத்தை ஆட்கொள்ள தவத்தில் ஆழ்ந்திருந்த கொங்கணரும் வள்ளுவச் சித்தரின் செயல் ஒரு படிப்பினையாக வெளிப்பட்ட கருத்தின் பயன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டார் கொங்கணர்.
அதனால் அவர் தனது வைராக்கியத்தை வளர்த்து சக்தி நிலை பெறக் காரணமாக அமையப் பெற்று சிந்தனையின் வசமாக ஆனார்.
வெளி உலகின் நிகழ் செயல் தன்மையின் முழுப்பயனையும் வீட்டினுள் இருந்து கொண்டு இல்லற ஒழுக்கவியலில் செயல்பட்டுத் தவத்தின் சிறப்பை நல்லறமாக நடத்தி ஒழுகி வரும் “வள்ளுவன் வாசுகி அம்மை பெறுகின்ற ஞானப்பால்…” உலகினுக்கு ஓர் நீதி போதனையாக வெளிப்பட வேண்டும்…!
வாசுகி அம்மை வீட்டில் இருந்து ஞானத்தைப் போதித்தாள். ஆனால் இந்த வள்ளுவரோ உலகம் அறிந்து கொள்ள முடியாத தன்மையில் தான் ஒரு சித்தன் செயல் நிலைக்கும் மேற்பட்ட சக்தி பெற்றவன் என்பதை வாசுகி அம்மையை வைத்துத் தங்கம் செய்வித்து வறுமைப் பிணி விரட்டும் சக்தி மனித எண்ண ஞான வளர்ச்சியின் செயல்பாட்டில் உள்ளது என்ற போதனையைக் காட்டி உண்மையின் சூட்சமம் தெளிவுபடுத்தி விட்டார்.
1.வாசுகி சொல்லால் போதனைப்படுத்தினார்.
2.ஆனால் சொல்லாமல் செய்வித்து வாசுகி அம்மையாரின் ஞானம் வளர் ஞானமாக்கும் தொடருக்கு வள்ளுவர் வித்திட்டு விட்டார்.
3.என்னே இவர்கள் பெற்ற தவத்தின் பயன்…!
4.இனி யான் இந்த வறுமைப் பிடிப்பைப் போக்கச் செல்வ நாயகன் ஆவேன்.
5.என்னை எண்ணும் அலைத் தொடருக்கு சக்தியளிக்கும் செல்வச் சக்தி பெறுவேன்.
6.இத்தகைய “ஞானச் செல்வங்கள்…” வறுமையில் வாடும் கொடுமையை வெல்வேன்.
7.செல்வ நாயக சூட்சமம் பெற்று உலகுய்ய வழி காட்டிடுவேன்…! என்ற உறுதி கொண்டார் கொங்கணர்.
சொல்லாமல் உபதேசிக்கும் வள்ளுவன் வாக்கு…! வீட்டில் உள்ளதோ வறுமை… வீட்டில் உள்ளதுவும் ஒன்றில்லை…!
1.தன் சூட்சம சரீரம் செயல்படும்
2.இந்தத் தூலத்தில் உள்ளதடா அத்தனை செல்வங்களும்…! என்று எனக்கே போதனை தந்துவிட்டார்…!
இவ்வாறு கொங்கணர் எண்ணிக் கடும் தவம் பேற்கொண்டு தனது சரீரத்தைப் புற்று மூட அதனுள் சூட்சம ஜெபத்தில் ஆழ்ந்து விட்டார்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அந்த மெய்ஞானிகள் காட்டிய மெய்வழியில் விண்ணின் ஆற்றலை நாம் பெற வேண்டும். அதன் துணை கொண்டு நம்முடைய குலதெய்வங்களை விண் செலுத்த முடியும். பிறவா நிலை அடையச் செய்யலாம்.
கங்கையில் கொண்டு போய்ச் சுட்ட சாம்பலைக் கரைத்தாலோ அல்லது புதைத்து விட்டாலோ பிண்டம் செய்து வைத்துக் கரைத்து விட்டாலோ அவர்கள் செய்த பாவங்கள் போகாது.
பாவங்களை மீண்டும் “நாம் சுமந்து கொள்கிறோம்” என்று தான் அர்த்தம்.
அமாவாசை அன்று பல உணவுகளைப் படைத்து எங்கள் முன்னோர்களை அழைக்கின்றோம் என்பார்கள்.
அமாவாசை அன்று இருண்ட நிலைகள் கொண்டது. உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை இருண்ட நிலைகளில் திருடர்களைப் போன்று அழைக்கின்றோம்.
அவ்வாறு அழைத்து… அந்த ஆன்மாக்களை மீண்டும் இருள் கடலில்… நமக்குள்… “பிறவிக் கடனுக்கு அழைக்கின்றோமே” தவிர அமாவாசை விரதங்கள் என்பது தவறான முறைகள்.
ஞானிகள் சொன்னது அதுவல்ல.
சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியைக் கூட்டமைப்பாகக் கவர்ந்து அந்த மெய் உணர்வின் தன்மைகளை வலுவான எண்ணம் கொண்டு தியானிக்க வேண்டும்.
பின்… உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விட்டு “உந்திச் செலுத்த வேண்டும்”.
எல்லோரும் ஒன்று சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை “விண்ணிலே வீசி” அங்கே சப்தரிஷி மண்டலத்திற்குள் இணையச் செய்து (இருள் சூழ்ந்த) உடலில் கலந்த நஞ்சினை “அங்கே… கரைக்க வேண்டும்…”
உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டு அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் ஒளியின் சுடராக நிலைக்கச் செய்யும் நிலையே “பௌர்ணமி நாள்…”
இது தான் ஞானிகள் சொன்னது.
இன்று அமாவாசை நாள். இன்றைக்கு நான் “கறி” சாப்பிட மாட்டேன் அதை சாப்பிட மாட்டேன்… இதைச் சாப்பிட மாட்டேன்… என்று சொல்வார்கள்.
எங்கள் அம்மா அப்பாவிற்குப் படைத்துவிட்டு அவர்களின் நினைவாகவே நான் இருந்தேன் என்றால் அது இருள் சூழ்ந்த நிலைகளுக்கே நாம் அவர்களை அழைக்கும் முறை.
ஏனென்றால்,
1.மந்திர ஒலியால் சுவாசிக்கப்பட்ட உணர்வுகள்
2.மீண்டும் ஒலி கொண்டு எழுப்பும் பொழுது அதற்குள் சிக்கப்பட்டு
3.அதை ஆவி வேலைகளுக்குத் தன் பசியைப் போக்குவதற்காக மந்திரவாதிகள் வேண்டிய வேலைகளுக்குத்தான் ஆகும்.
4.ஆக… மந்திர ஒலிகளைக் கூட்டி அந்த ஆன்மாக்களைக் கவர்ந்து கொள்ளும் நிலைதான்… “அமாவாசை… இருளுக்குள் செய்யும் நிலை…”
5.மறைந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும் முறை இது… ஆகவே இது பிழை கொண்டது.
6.இது இல்லை என்று எவராலும் மறுக்கவும் முடியாது.
7.உறுதியாகவே உங்களிடம் சொல்கின்றேன்.
“காரணம்…” மக்களின் நிலைகள் பக்தி என்ற நிலைகளில் “உண்மைகள் மறைக்கப்பட்டு…” தீமையின் செயல்களிலேயே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.
ஏனென்றால் அன்றைய அரசர்கள் “தான் சுகமாக வாழ” உடலுக்குள் விளைந்ததைப் பிரித்தெடுத்து அதன் வழிகளில் மற்றவர்களைச் செயலிழக்கச் செய்வதற்காகச் செய்யப்பட்டவைகள் தான் அது.
அரசர்கள் இன்று இல்லை என்றாலும்
1.“அதன் தொடர் வரிசையில் வந்தவர்கள்”
2.இன்றும் அந்த வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
முன்னோர்களை நாம் இன்னொரு உடலுக்குள் மீண்டும் உடல் பெறும் நிலைகளுக்குச் செல்லவிடாது தடுக்க வேண்டும். அருள் ஒளியின் சுடரை ஏற்றி அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும்.
இது நமது தலையாயக் கடமையாகும்.
மனக் கவலையும் மனக்குழப்பமும் தீரவேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் தொடர்பிலேயே இருக்க வேண்டும்
ரோட்டில் சென்று கொண்டிருந்தேன்… ஒருவருக்கு விபத்து ஆகிவிட்டது… “அடிபட்டார்…” என்று ஒருவர் நம்மிடம் சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
“ஆ…!” என்று கேட்டுக் கொண்டே இருப்போம். இந்த உணர்வுகள் நமக்குள் படப்பட்டு எந்த வகையில் விபத்து ஆனது…? என்று அவர் சொன்னாரோ அதே உணர்ச்சிகள் தூண்டி நம்மை இயக்க ஆரம்பிக்கும்.
என்ன செய்வோம்…?
1.ரோட்டிலே செல்ல ஆரம்பித்தோம் என்றால் ஓரத்திலே ஒதுங்கிப் போகாதபடி
2.நம்மை அறியாமலே நடு ரோட்டிற்கு அழைத்துச் செல்லும்.
3.ஏனென்றால் பதிவான அந்த உணர்வு நம்மை அறியாமலே அங்கே இட்டுச் செல்லும்.
ஆகவே விபத்தோ மற்ற அசம்பாவிதங்களையோ கேள்விப்பட்டால் அடுத்த கணமே ஆத்ம சக்தி செய்து கொள்ள வேண்டும்.
பின் யாருக்கு அந்த விபத்து ஆனதோ மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும பெற வேண்டும் என்ற எண்ணங்களை நமக்குள் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.
ஏனென்றால் நாம் நல்ல குணத்துடன் பார்க்கும் பொழுது தான் பிறருடைய தீமைகளை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டே உள்ளது.
மனக் கவலையும் மனக்குழப்பமும் ஆகி… இனி எப்படி வாழ்வது…? என்ற நிலையில் நம்மைப் பல திசைகளுக்கும் ஆளாக்கி விடுகின்றது.
அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.துருவ நட்சத்திரத்துடன் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு இருக்க வேண்டும்
2.அதைப் பற்றுடன் பற்ற வேண்டும்
3.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் அந்த அணுக்கள் நமக்குள் பெருகிவிட்டால் நம்மை அறியாமலே அந்தச் சொல் வந்துவிடும்.
உதாரணமாக ஒரு பாடலை பாடிக் கொண்டிருக்கின்றோம். நமக்குள் அது பதிவாகிவிட்டது என்றால் அந்தப் பாடல் சரியாக வரும்… முழுமையாகப் பாடவும் முடியும்.
இருந்தாலும் அப்படிப் பாடிக் கொண்டிருக்கும் பொழுது இடைமறித்து… இடையிலே ஒன்றை தனித்துச் சொல்ல வேண்டும் என்று சொன்னால்… இரண்டாவது தரம் அந்தப் பாடல் நமக்கு நினைவு வராது.
அப்போது மீண்டும் முதலில் இருந்து பாடிக்கொண்டு வரவேண்டும்.
1.வரிசைப்படுத்தி வரும் பொழுது நமக்குள் அந்தத் தொடர்வரிசை வருகின்றது
2.இடையிலே சிக்கிவிட்டால் நமக்கு அந்த நினைவு வருவதில்லை.
3.ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி “அடுத்தடுத்து… அடுக்குகளில் வருகின்றது…!”
இதனால் தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது. அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் தீமைகள் உள்புகாதபடி நாம் விழித்திருந்து பழகுதல் வேண்டும்.
சிவன் ராத்திரி… நீ விழித்திரு. தீமைகள் வந்தால் அந்தத் தீமையான உணர்வுகள் புகாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.
இடும்பச் சித்தர்
1.கரங்களைச் சேர்த்து
2.சரீர கதியில் உயிர் சக்தி தலை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை
3.மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் ஓடுகின்ற உயிர்ச் சக்தியின் ஒளி வட்டத்தில்
4.ஈஸ்வர வேதி மூலிகையை அமிலமாக உள் நுழைத்துச் செயல் கொண்டிட்ட செயல் என்ன…?
எந்தத் தொடருக்கு இது ஊக்கம் தருகிறது…? இடும்பன் கூறிய குணத்தை எழுதுவாய். இடும்பன் என்றால் யார்…?
1.நற்குணங்களின் எதிர்மறையாக தீவினைச் செயல்படுத்தும் குணங்கள் என்று எண்ணும் பொழுதே
2.முருக குணம் என்று போகப் பெருமான் நல் வினைப் பயன் காட்டியதைப் போல்
3.தீவினைப் பயன் என்ற தொடரில் உலகிற்குக் காட்டியவனப்பா இடும்பச் சித்தன்.
இடும்பன் என்றாலே ஏன் வெறுக்கின்றாய்…? இடும்பன் சுட்டிக் காட்டிய அந்தக் குணங்கள்
1.போகப் பெருமானுக்குப் போதனையைத் தந்திட்ட
2.அந்த இடும்பச் சித்தன் அகஸ்தியரின் சீடனப்பா…!
இன்றைய பழனியின் அன்றைய பெயர் இடும்பவனம். போகப் பெருமானால் அது கடம்பவனமாகி பூஜித்த தொடருக்குத் திரு ஆவினன் குடி என்று சித்தர்களால் பெயர் நாமம் சூட்சமாகச் சூட்டப்பட்டு இன்றைய வழித் தொடரில்
1.போகமாமகரிஷியின் சப்த அலைகள் பதியப் பெற்றுள்ள அந்த மலையில் இடும்பச் சித்தரின் சப்த அலையும் உள்ளது.
2.அதை எடுக்கும் பக்குவத்திற்கு வர வேண்டும்.
இடும்பனால் தீவினை குணங்களைப் பற்றிக் காட்டப்பட்ட அதைப் போகர் அறிந்திட்ட வழியிலெல்லாம் மும்மலம் (கோபம். ஆணவம். காமம் – சபல குணம்) நீக்கிட்ட முருகா என்ற ஆறு குணம் கொண்ட செயல் சூட்சமம் உள்ளது.
போகர் பெற்றது போல் நாமும் அந்த இடும்பச் சித்தரின் தொடர்பைப் பெற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பிறரை ஏசிப் பேசும் நிலைகள் கொண்டு ஒருவன் சாபமிடும் நிலைக்கு வருவான். அந்த மாதிரி எந்த மனிதன் தன் எண்ணத்தில் துரிதமாக இருக்கின்றானோ மற்றவர்கள் “எவ்வளவு நல்லது சொன்னாலும்… சாபமிடுவதை அவன் நிறுத்த மாட்டான்…”
அதே சமயத்தில் யாரை அவன் சாபமிடுகின்றானோ அந்தச் சாப வினையைக் கேட்டவனும்… “அதை விடுவேனா..,” என்று அதே உணர்வு கொண்டு அவனும் அத்தகைய நிலைகளைச் செய்வான்.
ஓம் நமச்சிவாய…. சிவாய நம ஓம்.., முதலில் சாபமிட்டவன் உடலில் விளைந்த தீமைகளின் வினைகள் இவருக்குள்ளும் பதியப்பட்டு அதே உணர்வுகள் இங்கே எதைப் பேசுகின்றார்களோ அதை எதிர்மறையாகப் பேசச் செய்யும்.
இவ்வாறு அந்த உணர்வின் தன்மைகள் வேகமாக இயக்கப்படும் பொழுது மற்றவர்கள் இதைப் பார்த்துக் கேட்பார்கள். அட… இரண்டு பேரும் ஏன் இந்த மாதிரி ஏசிப் பேசுகின்றீர்கள்… “விட்டுவிடுங்கள்” என்று சொன்னாலும் இந்த உணர்வுகள் எடுக்காது.
“உங்களுக்கு என்ன தெரியும்..!” என்று சொல்வார்கள்.
இருவரில் எவரையாவது… அவன் தான் பேசுகின்றான்.., “நீ ஏன் அதை விட்டுவிட்டுப் போகலாம் அல்லவா… போ…” என்று சொன்னால் என்ன ஆகும்.
“நீ அவனுக்குத்தான்… சாதகமாகப் பேசுகிறாய்” என்ற உணர்வுகள் அங்கே நல்லதைச் சொன்னாலும் எதிர்த்துத் தாக்கும் நிலை வரும்.
இதைப் போல ஒருவர் ஏசுவதைக் கண்டு சரி விட்டு விடுங்கள் போகட்டும் என்று சொன்னால் உடனே அவன் என்ன சொல்வான்…?
“பார்… அவன் எப்படிப் பேசுகின்றான் பார்…” என்பான்
ஆக இவன் ஏசிப் பேசிவிடுவான். அடுத்தவனுக்குள் இது பட்டவுடன் இந்த உணர்ச்சிகள் பொங்கிவிடும்.
1.அவன் ஒரு சொல்லைச் சொல்லி இருப்பான்
2.ஆனால் இவன் பத்து சொல்லைச் சொல்வான்.
இவ்வாறு அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் பொழுது இருவருக்குமே தர்மத்தையோ நியாயத்தையோ மற்ற நல்ல வழிகளைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு மிளாகாய்ச் செடி தனக்குள் காரமான உணர்வை எடுத்துத்தான் அந்த மிளகாயின் வித்து உருவாகும். அந்த வித்தின் தன்மை தன் செடியின் சத்தைக் கவர்ந்து தன் இனத்தின் தன்மையைத்தான் அது விருத்தி செய்யும்.
இதைப் போல ஒருவருக்கொருவர் பேசிய உணர்வுகள் அது வித்தாகும் பொழுது இந்த மனிதன் எவ்வளவு சாபமிட்டுப் பேசினானோ இவனுக்குள்ளும் அதே உணர்வைச் சுவாசித்துச் சாபமிட்டுக் கொண்டேயிருப்பான்.
இந்தச் சாபமிடுவதைக் கேட்டுணர்ந்தோரும் அவர்களும் சாபத்தை விட்டுக் கொண்டேயிருப்பார்கள். இந்த அலைகள் படர்ந்து.. படர்ந்து… இவர்களுக்குள் உள்ள நல்ல குணங்கள் இயங்காது தடைபடுத்திவிடுவார்கள்.
இந்தச் சாப அலைகள் இருவருக்குள்ளும் விளைந்து இவர்கள் எதையெல்லாம் சொன்னார்களோ இவை அனைத்தும் அங்கே படர்ந்து அங்கே இருவருடைய குடும்பங்களிலும் இவர்கள் வீரியமாகப் பேசுவார்கள்.
அதே சமயத்தில் இந்த வீரிய உணர்வுகள் இவர்கள் குடும்பத்தில் பாசத்தையும் பற்றையும் விட்டு அதனால் ஒருவருக்கொருவர் வெறுப்பை உருவாக்கிவிடும்.
பாசத்துடன் இருப்போரின் நிலைகளும் இவருடன் பேசப்படும் பொழுது இந்த வெறுப்பான அந்த உணர்வுகள் பற்று கொண்ட அவருக்குள் ஈர்ப்புக்குள் அதிகமாகிவிடும்.
ஆனால் ஏசியவர் தப்பிவிடுவார்கள். குடும்பத்தில் பாசத்துடன் உள்ளோரின் நிலைகளில் இது படப்பட்டு அந்த உணர்வுகள் அது துரிதமாக விளைந்து நோயாக மாற்றி அவனை முதலில் வீழ்த்தும்.
அண்ணன் தம்பிக்குள் இதைப் போன்று ஒருவருக்கொருவர் பார்த்து விடும் சாப அலைள் உற்று நோக்கப்படும் பொழுது அவர்களுக்குள் தீய வினைகள் ஆகி நோயாக மாறி அவர் குடும்பத்திலேயே வெறுப்பின் தன்மை வந்துவிடும்.
அவர்கள் தாயோ தந்தையோ அவர்கள் “அதை விட்டு விடுடா…” என்று சொன்னாலும் அந்த வேக நிலையில் “நீ பேசாமல் இரு…” என்பார்கள்.
ஆனாலும் அவர்கள் இட்ட சாப அலைகள் அவர்களுக்குள்ளே படர்கின்றது. இது “அவர்களுடன் போனாலும் பரவாயில்லை”.
அதே சமயத்தில் அவர்கள் குடும்பத்தில் கர்ப்பமாக இருந்தால் அதே சாப அலைகள் தன் வீட்டிலிருப்போரின் நிலைகளுக்குள் நுகரப்பட்டு அவரின் “கருவிலிருக்கும் குழந்தைக்கும்” இந்தச் சாப அலை படர்ந்து விடுகின்றது.
நிம்மதியாக வாழும் குடும்பத்திற்குள் சண்டைகளும் சச்சரவுகளும் ஏன் வருகின்றது என்று நமக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி வாயிலாகவும் இன்னும் எத்தனையோ சாதனங்கள் வழியாக பல இடங்களில் ஒருவருக்கொருவர் ஏசிப் பேசும் நிலைகளையும் அசுரத்தனமாகத் தாக்குவதையும் அப்படியே காண்பிக்கின்றார்கள்.
எல்லாவற்றையும் பார்க்கின்றோம்.. கேட்கின்றோம். நமக்குள்ளும் அதே கொதிப்பும் ஆத்திரமும் வருகின்றது. நாமும் அவர்களைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
ஆகவே அவ்வாறு கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த தீமை செய்யும் நிலைகளைச் சுத்தப்படுத்துகின்றோமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
தவறு நாம் யாரும் செய்யவில்லை.
ஒரு இடத்தில் விளைந்த தீமை எல்லோருக்குள்ளும் சென்று அதனின் இயக்கமாக எல்லோரையும் அது இயக்குகின்றது. இதை நிறுத்த வேண்டுமல்லவா.
ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
ஏசிப் பேசுவோர் உடல்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர்கள் உண்மையை உணர வேண்டும். சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெறவேண்டும் என்று நாம் இவ்வாறு எண்ணி நம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
தூய்மைப்படுத்தவில்லை என்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
1.கடுமையான நோய்கள் வரும்
2.குடும்பத்தில் ஒற்றுமை குலையும்
3.பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் இருக்காது
4.தொழில்கள் நசிந்து போகும்
5.வேலை பார்க்கும் இடங்களில் தொல்லைகள் வரும்
6.நிம்மதி இழந்து தவிக்க நேரும்
7.கடைசியில் மனிதனல்லாத உருவைத் தான் பெறச் செய்யும் நம் உயிர்.
நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அருள் சக்திகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலில் அதனின் வலிமையைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
உங்கள் சொல் செயல் புனிதம் பெறும். உங்கள் மூச்சால் மற்றவர்களுக்கும் நல்லதாகும். “இந்தப் பாதுகாப்புக் கவசம்…” நமக்கு அவசியம் தேவை.
வளர்ச்சியின் பாதையில் வந்த மனிதன் நாம் இனி அடுத்த நிலையான “தெய்வ நிலைக்குச் செல்ல வேண்டும்…”
உடலில் வரும் வலிகளை எப்படித் தணிப்பது…?
முந்தைய நிலைகளில் உருவானது இனம் புரியாத நிலையில் வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டாலும் அந்த நிமிடம் என்ன செய்கிறது…? உடலில் இருந்து தான் அந்த வேதனை தோன்றுகின்றது. அந்த வேதனை உணர்ச்சிகள் ஆன பின் நம் உயிருக்கு வருகின்றது
உதாரணமாக
1.முள் குத்திவிட்டால் உடனே உயிருக்குத் தான் வருகின்றது… அப்பொழுது கண் என்ன செய்கின்றது…?
2.எங்கே முள் இருக்கின்றது…? என்று தேடுகின்றது
3.அதைக் கூர்ந்து கவனித்து நுகர்கின்றோம்.
4.ஆ… காலிலே முள் ஏறி விட்டதா… என்ன…? என்கிற அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.
இப்படித் தான் நம் உடலுக்குள் முந்தைய நிலைகள் பெற்ற உணர்வுகள் அந்த அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.
உடலில் வலி இருக்கிறது என்றால் நாம் சந்தோஷமாக இருக்க முடியுமா…?
நம் உடலிலே ஏற்கனவே உருவான அணுக்கள் (முன்னாடி வேதனைப்பட்ட்து) தன் பசிக்கு வேதனையான உணர்வுகளை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த வேதனையை நாம் அறிய முடிகின்றது.
அந்தச் சமயங்களில் நமக்குள் அந்த நினைவு வந்தாலும் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளியும் பெற வேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.
அதாவது…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போய்ச் சேராதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.
பின் கண்களை மூடி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ
2.அங்கே உங்கள் நினைவினைச் செலுத்த வேண்டும்.
உடலில் “வேதனையை உருவாக்கும் அணுவிற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.
இப்படி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வாருங்கள்.
1.இதை இவ்வாறு செய்ய
2.இந்த உணர்வுகள் அந்த அணுக்களில் படர
3.விஷத்தன்மைகள் குறைந்து வலியைக் குறைக்க உதவும்.
இதைப்போல எடுத்து அந்த உணர்வின் தன்மையை நம் உடலில் செலுத்த செலுத்தச் சிறுகச் சிறுக அதனுடைய வீரிய சக்தி இழந்து நல்ல அணுக்கள் வலுப்பெறத் தொடங்கி விடுகின்றது.
இதைத் தான் “கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று சொல்வார்கள்.
நம் உடலில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலைகள் எத்தனையோ விதமான அணுக்கள் இருக்கின்றது. அந்த அருள் ஒளியை நம் கண்ணிலே கவர்ந்து… அதே கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அங்கே “ஊடுருவிப் பாய்கின்றது…”
எங்கே வலி எடுக்கிறதோ அங்கே நேராகக் கண்ணின் நினைவைச் செலுத்தினோம் என்றால் சிறுகச் சிறுக வலிகள் தணியத் தொடங்கும்.
இதே போலத் தான் நம் நரம்பு மண்டலங்களில் கை கால் குடைச்சலோ மற்ற நிலைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் தசைகளில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளில் படர வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்த வேண்டும்.
உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்தி எங்கள் உறுப்புகள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்வுகளை படரச் செய்யும் பொழுது “மின்சாரம்…” பாய்வது போல உடலுக்குள் பரவும்.
சிறுகச் சிறுக எடுத்தோம் என்றால் உடலில் வரக்கூடிய வலிகள் தணிய நேரும்.
பிடர்தல் என்னும் நுணுகி அறிதல்
தியானத்தின் மூலம் மகரிஷிகளின் பேரருள் பேரொளியை ஈர்த்திடும் செயல் முறையில் “விழிப்பார்வை கொண்டு…” வீரிய சக்தியைக் கொண்டு செயல்படுத்தும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
1.நமக்கு முன்னே மறைந்துள்ள திரையை (அறியாமை) நீக்கும் பொருட்டு
2.வேகம் என்ற சொல்லில் – “அறிந்து கொள்ளும் மன எண்ண வீரிய சக்தியாலும்”
3.முயற்சி என்ற ஞான சூத்திரம் கொண்டு “உள் மனத் தெளிவின் ஆற்றல் கொண்டு அறிந்திட வேண்டும்…!’
“பிடர்தல்…” என்ற எண்ண உந்து சக்தியின் துணையால் இலட்சியம் கொண்டு பயணமாகும் மெய் ஞானப் பாதையில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது அதை நம் அறிவின் ஞான எண்ணம் கொண்டு சமைத்து அந்தப் பேரின்பப் பொருளின் சத்தைப் பிரித்தெடுத்து ஆக்கம் கொண்டிடும் செயல் முறைகளில் செயல்படுத்துதல் வேண்டும்.
சிலர் தங்கள் சரீரத்தில் இயற்கையின் ஈர்ப்பு அமிலச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
1.எண்ணத்தின் பிடர்தல் சக்தி கொண்டு அறிந்திடும் வழி முறையெல்லாம்
2.பூமியின் ஊடே செல்லும் நீரோட்ட வீரியத்தை
3.தன் சரீர அமில வீரியம் உடல் சமைப்பில் எழும் எண்ணத்தைக் கொண்டு மூச்சலைகளாக வெளிப்படுத்தும் பொழுது
4.அதில் செலுத்தப்படும் எண்ணம் பூமியின் சுவாச சமைப்பில் வெளிக் கக்கும் அமில அலைத் தொடர்புகளில் மோதுகிறது.
சரீரத்தின் எண்ண ஈர்ப்பில் காந்த வலுவின் வீரியம் கொண்டு சுவாச அலைகளால் தன்னுள் ஈர்க்கப்படும் பொழுது சமைக்கும் சமைப்பெண்ணமும்
1.எந்த இடம் நீர் சக்தி உள்ள இடமோ அந்த இடத்தில் நிற்கும் பொழுது
2.நாம் செலுத்திய உணர்வின் துடிப்பலைகளின் செயல் நிகழ்வாக
3.சரீரத்தைச் சுற்றி ஓடும் சப்த அலைகளின் காந்த வீரிய சுழல் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.
இதைப் போல் மகரிஷிகளின் அருள் ஒளிகளுக்குள் இருக்கும் நிலைகளை ஒலி ஒளி என்ற நிலையில் பிரித்துப் பார்க்கும் பக்குவமாக வழி அமைத்து விட்டால் அனைத்துப் பேருண்மைகளை அறியவும் உணரவும் முடியும்.
குழந்தைகள் படங்களைப் பார்த்த அந்தப் படத்தின் கருத்தை உணர்ந்து கொள்வதைப் போல் நாம் சுவாசிக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிக்குள் இருக்கும் கருத்தாற்றலை உணர்ந்திடும் சூட்சம சக்தியின் ஆற்றலும் பெற முடியும்.
அந்தச் சூட்சமச் செயலின் வீரியமாக அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்த்தெடுத்துத் தன்னுள் சமைக்கும் பக்குவத்தையும் பெற்றிடலாம்.
இந்த வலு வீரியத்தைக் கூட்டிடும் சக்தியின் தொடர் தன்னுள் வலுக் கொள்ள காந்த அமில குண வீரியத் தாய் சக்தியும் ரிஷிபத்தினி சக்தியும் சேர்த்துச் சிவசக்தியாக உயிரான்மாக்களின் கலப்பாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடும் பக்குவம் பெற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பல முறை சொல்லியிருக்கின்றார். நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன். சாமி (ஞானகுரு) நேற்றுச் சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறார். திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பார்கள்.
ஆனால், காலையில் சொன்னதை “சாமி என்ன சொன்னார்…?” என்று மறுபடி கேட்டால் “தெரியாது…” என்பார்கள்.
ஆனால், யாம் திரும்பச் சொல்லும் பொழுதுதான் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றது.
இதற்குத்தான் மறைந்ததை மீண்டும் உங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்து அந்த மகரிஷிகளின் சக்தியை யாம் பெறச் செய்கின்றோம்.
முதலில் பதிவு செய்துவிட்டாலும்
1.சாமி நேற்றுச் சொன்னதைத்தான் சொல்கிறார் என்று (நினைவினை) வேறு பக்கம் திரும்புவார்கள்.
2.தான் கேட்பதைத் தடைப்படுத்திக் கொள்வார்கள்.
3.தனக்குத் தண்டனையே கொடுத்துக் கொள்வார்கள் என்று கூடச் சொல்லலாம்.
4.நன்மைகளைப் பெற முடியாதபடி தீமைக்கே இடமளிக்கும் நிலை வந்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளை விடுத்து நீங்கள் மீண்டும் மீண்டும் பெற வேண்டும் என்றுதான் இதை உபதேசிக்கின்றேன்.
இராமாயணமோ மகாபாரதமோ கந்த புராணமோ விநாயக புராணமோ இவை அனைத்தும் ஒரே கதையாகத் தான் எழுதி வைத்துள்ளார்கள்.
அதற்காக வேண்டி.., “நேற்று நீ அதைப் படித்தாய் இன்றைக்கு ஏன் நீ கந்த புராணத்தை மாற்றிப் படிக்கக்கூடாது…! நேற்றுச் சொன்னது தானே படிக்கின்றோம்… என்று யாராவது கேட்கின்றீர்களா…?”
கேட்கவில்லை.
“சாமி சொல்லும்போது மட்டும்…” நேற்றுச் சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறார் என்கிறார்கள்.
இதே மாதிரி கீதாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் நேற்றுச் சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறார்கள். மகாபாரதப் போர் என்றால் இயற்கையின் உண்மைகளைச் “சொன்னதைத்தான் திருப்பிச் சொல்வார்கள்…”
பள்ளிக்குச் சென்று எஞ்சினியரிங் (ENGINEERING) படிக்கின்றீர்கள் என்றால் அந்தப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்து அதை நீங்கள் படித்துத் தெரிந்து கொள்கிறீர்கள்.
அப்பொழுது.., “நேற்றுப் படித்ததை இன்றைக்கு ஏன் படிக்க வேண்டும்…!” என்று விட்டுவிட்டால் படித்தது மீண்டும் என்றைக்கு நினைவுக்கு வருவது…?
ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். பள்ளியில் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டோம். அப்புறம் ஏன் நீங்கள் படிக்கின்றீர்கள்…?
அங்கே பள்ளியில் சொல்லிக் கொடுத்தவுடன் மீண்டும் என்ன செய்கிறோம்…? புத்தகங்களை எடுத்து மீண்டும் மீண்டும் படித்து மனதில் நிறுத்திக் கொள்கிறோம் அல்லவா.
இதைப் போன்று தான்
1.உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகளை ஆழப்பதியச் செய்து
2.அந்த உணர்வுகளை உங்களை அறியாமல் இயக்கச் செய்து
3.உங்களை அறியாமலே தீமைகளை அகற்றச் செய்வதற்காக இதைச் செய்கின்றோம்.
ஒரு தடவை தீமை செய்வதை உற்றுப் பார்க்கின்றீர்கள். அதனைப் பதிவு செய்து கொண்டால் “அந்த நினைவு வரும் பொழுதெல்லாம்” உங்களுக்குக் கோபம் வருகின்றது… ஆத்திரம் வருகின்றது… அவரை எப்படித் தாக்குவது..? என்ற உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டிக் கொண்டுதான் இருக்கும்.
இதைப் போன்று தான் உங்களுக்குள் “மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்.. மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும்…” என்ற ஏக்க உணர்வுடன் இதை யாம் சொல்லும் பொழுது உங்களுக்குள் உணர்வுகள் பதியப் பதியப் பதிய இந்த நினைவுகள் அது எடுத்துக் கொண்டே இருக்கும்.
அப்பொழுது அதனின் வளர்ச்சியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கு உங்கள் நினைவினைக் கூட்டி அருள் உணர்வுகளைத் தூண்டச் செய்து நமக்கு முன் இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவரும் நிலைக்கே இதைச் சொல்வது.
ஆனால் “என்னமோ” சாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். “நேற்றுச் சொன்னார்.. சொன்னார்… சொன்னார்..!” என்ற நிலைகளில் இல்லாது அதை நாம் “பெற வேண்டும்… பெற வேண்டும்… பெற வேண்டும்..,” என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
நேற்று கோவிலுக்குச் சென்று விநாயகரைப் பார்த்தோம் “இன்று” ஏன் விநாயகரைப் பார்க்க வேண்டும்…? நாளை வேறு ஒருவரைப் பார்க்கலாம் அல்லவா..!
இன்று முருகனைப் பார்த்து வணங்கப்படும் பொழுது நேற்றுப் பார்த்த அதே முருகனை இன்று ஏன் பார்க்க வேண்டும்…? இப்படிப் புதிதாகப் பார்க்கின்றோமா…?
நேற்றே முருகனைப் பற்றித் தெரிந்து கொண்டோம். அபிஷேகம் வேறு செய்தாகிவிட்டது. திரும்ப ஏன் முருகன் கோவிலுக்குச் செல்கின்றீர்கள்…?
ஏனென்றால்..,
1.சில பேர் வினாக்களை ரொம்பவும் எழுப்புவார்கள்.
2.சாமி எல்லாவற்றையும் சொல்கிறார்.
3.திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று மிகவும் சுலபமாகச் சொல்லிவிடுகின்றார்கள்.
4.ஆனால், அவர்கள் ஏன் திரும்பத் திரும்பப் புத்தகத்தைப் படிக்கின்றார்கள்…?
5.திரும்பத் திரும்ப முருகனைப் போய் பார்க்கின்றார்கள்…?
6.திரும்பத் திரும்ப விநாயகரைப் போய் பார்க்கின்றார்கள்…?
7.திரும்பத் திரும்ப மாரியம்மனைப் போய் பார்க்கின்றார்கள்…?
8.ஒரு தடவைதான் பார்த்தாகிவிட்டதே… திரும்ப அதை ஏன் சொல்வானேன்…?
9.ஒரு தடவை தான் அங்கே கோவிலுக்குள் சென்றோம் மறுபடியும் அங்கே ஏன் செல்ல வேண்டும்…?
10.தெரிந்து கொண்டோம் அல்லவா…! இந்தச் சாமி நல்லது செய்யும் என்றார்கள். பார்த்துவிட்டோம். அப்புறம் ஏன் திரும்பப் போய் அதைக் கும்பிட வேண்டும்…?
யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கேட்டு திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று சாதாரண நிலைகளில் “வினாக்கள் எழுப்பிக் கொண்டிருப்போர்… அதிகம் பேர் இருக்கின்றார்கள்…”
ஏனென்றால் யாம் உயர்ந்த நோக்குடன் சொல்லும் பொழுது இப்பொழுது அந்த உபதேசக் கருத்திற்கு அது எதிர்மறையாக வருவது என்ன செய்யும்…?
1.மனிதனின் வாழ்க்கையில் தீமையை விளைவித்துக் கொண்டிருக்கும் உணர்விற்கு
2.இது (அருள் உணர்வுகள்) தடைப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டி கேட்க விடாது தடைப்படுத்தும்.
காரணம் நீங்கள் அல்ல. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் நம்மைக் கடுமையாகத் திட்டினார் என்றால் அதைக் கூர்ந்து பதிவாக்குகின்றோம். பதிவானால் தான் அவரைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்குள் வரும்.
அப்படி அவர் திட்டவில்லை என்றால் அவர்களைப் பற்றிய பதிவு இல்லை, நினைவுக்கு வருவது மிகவும் கடினம்.
ஆகவே தான் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட கட்டளைப்படி” ஒவ்வொரு உயிரையும் கடவுள் என்று யாம் மதிக்கின்றோம். அந்த ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாக யாம் இதைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
தியானமிருப்பதைக் காட்டிலும் அதை எழுத்திலே எழுதிப் பாருங்கள்
ஒரு சமயம் குருநாதர் பழனியில் ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது என்ன செய்தார்…?
டாக்டரிடம் போய் “நோயாளிகள் எல்லோரும் குணமாக வேண்டும், இல்லையென்றால் சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுவேன்” என்று சொல்லி சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வாடா…! என்று என்னிடம் (ஞானகுரு) சொல்கிறார் குருநாதர்.
நான் போய்விட்டு வந்தேன். என்னை “உள்ளே வராதே” என்று டாக்டர் சொல்லிவிட்டார் என்றேன்.
குருநாதர் என்ன சொல்கிறார். “ஏண்டா.. நீ அங்கே போகவே இல்லை.. என்னிடம் பொய் சொல்கிறாய். போய் நிஜமாகவே சொல்லிக் கொடுத்துவிட்டு வா என்கிறார்.
இவர் சொல்கிற வார்த்தையெல்லாம் அங்கே சொன்னால் என்ன செய்வார்கள்…? நீ டாக்டரா… நான் டாக்டரா…? என்று கேட்கிறார்கள்.
ஆனால் “நான் எல்லா சக்தியையும் பெற்றிருக்கின்றேன்” என்று டாக்டரிடம் போய்ச் சொல்லுடா…! என்கிறார் குருநாதர்.
ஐயோ… அவர் செய்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியெல்லாம் சொல்லி அடுத்து என்ன செய்தார்…?
1.நீ போய் அவனுக்கு லெட்டர் எழுதிப் போடுடா.
2.லெட்டர் எழுதிப் போட்டு போஸ்ட் ஆபீசில் கொண்டு போய் போடு.
3.உடனே எல்லோருக்கும் நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி ஆண்டவனுக்கு எழுதிப் போடுடா என்கிறார்.
யார்..? ஆண்டவனுக்கு.
சாமி… விலாசம்…? என்று கேட்டேன்.
எழுதுடா… “ஆண்டவன்” என்று எழுதிப் போஸ்ட் ஆஃபீஸில் கொண்டு போய்ப் போடு…! என்று என்னை எழுதச் சொல்லிப் போடச் சொல்கிறார் குருநாதர்.
இந்த மாதிரி பெரிய கூத்தெல்லாம் பண்ணுவார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அப்புறம் விளக்கமெல்லாம் கொடுப்பார்.
உன்னை ஆள்பவன் யார்…? உன் உயிர் தான்.
“அவனிடத்தில் நீ சொல்லுடா…”
1.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நீ எண்ணு
2.உன் இருள் போக வேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நீ நினைத்து எழுது.
4.அங்கே எண்ணித்தான் நீ எழுதுகிறாய்.
இந்த லெட்டர் என்ன செய்யும்…? நீ போடு.
ஆக உனக்குள் அந்த அருள் சக்தி வருகின்றது. அதே சமயத்தில் அவர்களும் அங்கே அந்த அருள் சக்தி பெறுகின்றார்கள்.
இப்படியெல்லாம் சுருக்கமாக அந்த இயற்கையின் நிலைகளை
1.உயிரின் இயக்க நிலைகளை
2.எனக்குப் புரியும்படி செய்தார் நமது குருநாதர்.
வேறு ஒன்றும் வேண்டியதில்லை… “தியானம் இருப்பதற்கு பதில்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடல் நன்றாக ஆக வேண்டும் என்று எழுதிக் கொண்டிருந்தாலே போதும். இந்த உணர்வுகள் அங்கே பாயும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
2.உடல் நன்றாக வேண்டும் என்று இப்படி எழுதிக் கொண்டேயிருங்கள்.
3.அப்பொழுது அங்கே பாஸாகிக் கொண்டே இருக்கும்
4.உங்கள் எண்ணமே அந்த உணர்வாகும்… மற்ற எண்ணங்கள் கலப்பதில்லை.
என் உடல் நன்றாக வேண்டும். இந்த நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி நீங்கள் லெட்டர் எழுதுங்கள். அப்படி லெட்டர் எழுதும் பொழுது, ஆண்டவனை இங்கே (உங்கள் உயிருக்குள்) போய்ச் சேருகின்றது.
1.அந்த உணர்வை அங்கே சிந்தித்துத்தான் நீங்கள் எழுதுகின்றீர்கள்.
2.அந்த உணர்வு தான் இங்கே வருகிறது…. அந்த எழுத்து எல்லாம் இங்கே வருகின்றது.
இதையெல்லாம் அங்கே காட்டுவதற்காக குருநாதர் எமக்கு இப்படியெல்லாம் ஒரு வழியைக் காட்டினார்.
ஏனென்றால் இன்றிருக்கக்கூடிய விஷ உலகில் உங்களைக் காக்க “இருந்த இடத்திலிருந்து…” இந்தச் சக்திகளை நீங்கள் பெற முடியும். அந்த அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.
நீயே தான் உனக்குக் கடவுள்
1.கோயில் கட்டுபவன் பிழைத்திருப்பதில்லை.
2.கோயில் வேலைக்குச் சென்றிட்டால் பலி வாங்கிவிடும் என்று
3.கதை கட்டியவர்கள் எல்லாம் இக்கலியில் வந்தவர்கள் தான்.
இக்கலியில் வந்த சாமியார்களெல்லாம் மடாலயம், மடம் என்றதன் நிலையை உயர்த்தத் தன் புகழை உயர்த்தத் தான் பெற்ற சிறு அருளையும் சிதறடித்து விட்டார்கள்.
ஆதியில் திருப்பதி மலையில் கோயில் கட்டிய கொங்கணவர் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகி ஏழுமலையான் என்ற நாமத்தில் வரும் பக்தர்களின் எண்ணத்திற்கு அச்சக்தியின் அருளினால் பெற்ற அருள் செல்வத்தை அள்ளி அள்ளி அளிக்கின்றான்.
அவன் நிலைக்கும் பல கோடிச் செல்வங்கள் வந்து குவிகின்றன. அவ் ஏழுமலையானை நினைத்திட்டால் ஏழை என்ற எண்ணமே எந்த மனிதனுக்கும் வந்திடாத வண்ணம் எழுந்தருளச் செய்துள்ளான் அந்தக் கொங்கணவ மாமகரிஷி.
ஏழு ஜென்மங்கள் பெற்றவனும் அவ் ஏழுமலையானை எண்ணி வேண்டிட்டால் தான் பெற்ற சக்தியின் அருளினால் பல ஆற்றல்களை அளிக்கின்றான் அந்தக் கொங்கணவ மகாதேவன்.
இக்கலியில் வந்த மனிதர்கள் அவ் ஏழுமலையானின் கதையையே பல உருவில் பல வழியில் மனிதர்களுக்குப் புரியாத வண்ணத்தில் மாற்றி விட்டார்களப்பா.
நீ எந்த ஊரில் எந்த நிலையில் இருந்து அவ் ஏழுமலையானை எண்ணி ஒரு நிலையில் வேண்டிக் கொண்டாலும்
1.அவனுக்குத் தெரிந்துவிடும் எல்லாமே.
2.அவன் பெற்ற சக்தியின் அருளினால் வந்து குவிகின்றது உன் வேண்டுதலுக்கு உகந்த தன்மை.
இந்நிலையில் வந்தது தான் நம் பழனி மலையும் பர்வத மலையும் வள்ளி மலையும் பெரும் அண்ணாமலையும் திருச்செங்கோடு மலையும் இன்னும் பல சித்தர்கள் ஏற்படுத்திய சில மலைகளும்.
அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித் தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.
1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.
அதை உணர்ந்தார்களா இக்கலியில் உள்ள மனிதர்கள்…? பெரும் பேராசை பிடித்தவர்களப்பா இக்கலியில் உள்ள மனிதர்கள்.
ஒவ்வொரு மனிதனின் எண்ணம் எந்த நிலையில் உள்ளதோ அந்நிலையிலே தான் அக்கடவுளும் உள்ளான்.
1.கல்லென்று திட்டுகிறான்… கண்ணில்லையா…? என்கின்றான். கல்லும் கண்ணுமல்ல கடவுள்.
2.உன்னுள் இருக்கும் அக்கடவுளையே உன் வாயால் நீ திட்டுகிறாய்.
கடவுள் எங்குள்ளான் என்று இப்பொழுது புரிந்ததா…? கால தேவனே தான் கடவுள். காற்றே தான் கடவுள். ஒளியே தான் கடவுள். மழையே தான் கடவுள். உன் மனமே தான் கடவுள். நீ விடும் சுவாசமே தான் கடவுள். நீயே தான் உனக்குக் கடவுள்.
கடவுள் என்பது யார் என்று புரிந்ததா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தாவர இனங்களுக்குண்டான சக்திகளைப் பற்றிய அனுபவம் பெறுவதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
ஒரு இடத்தில் குருநாதர் என்னை நிற்கச் சொன்னார். அப்பொழுது அங்கே ஒரு கொடி.., “தன்னாலே அது நகர்ந்து வருகின்றது”. அதை நான் முதலில் கவனிக்கவில்லை.
அந்தப் பக்கம் ஒரு செடி இருக்கின்றது பார் என்றார் குருநாதர். ஓடிப்போய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தக் கொடி அப்படியே.., நகர்ந்து வருகின்றது.
அந்தக் கொடி நகர்ந்து வரப்படும்போது ஒரு குச்சியை ஊன்றச் சொன்னார். குச்சியை ஊன்றிய உடனே “குச்சியைச் சுற்றிக் கொண்டு… என் கைக்கு வருகின்றது…”
மனித உடலில் உள்ள அந்த உணர்வின் நிலைகள் அந்தச் செடிக்குத் தேவை.
அது பட்டுவிட்டது… கையில் சுற்றி விட்டது என்றால் அதை அறுத்து விட்டால் பரவாயில்லை. இல்லை என்றால் நம் இரத்தத்தை அப்படியே குடித்துவிடும். அப்படியே “சொத்…”என்று விழுக வேண்டியதுதான்.
இது அஸ்ஸாம் மலைப்பகுதிக்கு செல்லப்படும்போது நடந்த சம்பவம். அங்கே சில இடங்களுக்குச் செல்லப்படும் போது சில பூக்கள் பார்த்தால் ரொம்ப அழகான பூக்களாக இருக்கின்றது.
அந்தப் பூக்களில் உள்ள தேனைத் தேனீக்கள் எடுக்கப்போகின்றது. அதனுடைய மூக்கு நீளமாக இருக்கின்றது. தேனை எடுக்கப் போகும்போது அந்தத் தேனீயை அப்படியே கோர்த்து இழுக்கின்றது அந்தப் பூ.
இந்த விஷத்தின் தன்மை அதற்குள் பட்டபின் இது எடுத்து அப்படியே முழுதாகவே செத்துக் கிடக்கின்றது. அந்தப் பூவிற்கு அவ்வளவு வலு இருக்கின்றது.
நான் அதை எடுத்துப் பார்த்தேன். எடுத்து வைக்கும் பொழுது ஒரு விட்டில் பூச்சியை அதற்குப் பக்கத்தில் வைத்தேன். வைத்தவுடன் அந்தப் பூச்சியில் இருக்கும் சத்தை இழுக்கின்றது. பூச்சியை வெறும் சக்கையாக்குகின்றது.
அந்தப் பூவை முகர்ந்து பார்த்தால் நமக்கு ஒன்றும் இல்லை. குருநாதர் நுகரும்படிச் செய்தார். விஷம் இல்லை. ஆனால் இந்த உடலில் இருப்பதை “எப்படி இழுக்கிறது…?” என்பதனைக் காட்டுகிறார்.
சில பட்சி இனங்கள் தன் உணவைக் காயோ அல்லது பழத்தையோ முழுதாக வித்துடன் சேர்த்துத் தன் உணவை விழுங்குகின்றது.
இது அதனின் மலத்துடன் வெளி வந்தபின் அந்த வித்து ரொம்பவும் துரிதமாக விளைகின்றது.
அரச மரத்தை எடுத்துக் கொண்டால் அரசம் பழத்தைக் குருவிகள் சாப்பிடுகின்றது. அது எங்கேயாவது போய் தன் மலத்தை இட்டால் அந்த மலத்திலிருந்து வரக்கூடிய வித்து அரச மரமாக விளைகின்றது.
அத்தகைய வித்து ஒரு கொடி மீது விழுந்து அரச மரமாக விளையப்படும் போது அதற்கு குருவியிடம் இருக்கக்கூடிய ஜீவித சக்தியை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது.
அப்படி அது வரப்படும்போது காற்றிலிருந்து இருக்கக்கூடிய நீரைப் பிரித்தெடுக்கக் கூடிய சத்தை அது பெறுகின்றது. அரச மரத்தின் இலைகளைப் பார்த்தால் இலையின் நுனி ஊசி போன்று இருக்கும்.
அதன் வழியாக நீர்ச்சத்தை இழுத்து உள்ளுக்குள் செலுத்துகின்றது. காற்றில் இருக்கும் நீரை வடித்துத் தனக்குள் ஜீவனாக்குகிறது.
அதை எடுத்து எடுத்து விழுதுகளில் பரப்புகின்றது. விழுதுகளைப் பரப்பியபின் அது நீர் இருக்கும் பக்கம் விழுதுகளைப் பாய்ச்சுகின்றது.
1.தாவர இனங்களில் அதன் உணர்வுகளுக்கு
2.எத்தனை விதமான நிலைகளில் “எதனதன் கலவையில்… எது எது.. சேர்கின்றதோ… அதன் வழி வளர்கின்றது” என்றும்
3.தனக்குப் பாதுகாப்பான நிலைகள் அது எப்படி வருகின்றது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.இதைப்போல அதில் விளைந்ததை உணவாக வித்தாக உட்கொள்ளும் பட்சிகளுக்கும் மற்ற நிலைகளுக்கும்
5.அதற்குண்டான ஞானங்களும் அதற்குண்டான உணர்வுகளும் எப்படி விளைகின்றது…? என்று உணர்த்துகின்றார்.
6.அதே உணர்வுகள் அது கரு முட்டையாக்கப்படும்போது (தன் குஞ்சுகள்) அது ஒவ்வொன்றுக்கும் எந்தெந்த நிலைகள் ஏற்படுகின்றது…? என்பதனையும் உணர்த்துகின்றார்.
ஆகவே, இந்த அணுக்களின் வளர்ச்சியின் உணர்வுகள் அது தான் இயல் இசை நாடகம்.
ஒரு செடியில் உண்டான “இயல்… அந்த வாசனையின் உணர்வுகள் “இசையாக” மாறுகின்றது. அதன் உணர்வுக்குத்தக்க அந்த “உடலின் அமைப்பு” மாறுகின்றது.
அதனால்தான் “இயல் இசை நாடகம்” என்ற நிலையில் அந்த உடலின் தன்மையில் உணர்வுகள் எப்படி என்ற நிலையில் “வேதங்களின் மூலங்கள்” தெளிவாகக் கூறுகின்றது.
“செத்த பிற்பாடு…” யாருக்கு என்ன தெரியப் போகிறது…? என்று சாதாரணமாக நினைக்கின்றனர்
எனக்குத் தொல்லை கொடுக்கின்றான்… என் குடும்பத்தை நாஸ்தி செய்கின்றான்… அவனை விடுவேனா பார்…! என்று எண்ணினால் உடலுக்குப் பின் அவன் உடலுக்குள் சென்று அதே வேலையாக அந்தக் குடும்பத்தையும் கெடுக்கிறது.
குழந்தை மீது மிகுந்த பாசமாக இருந்தால் போதும். வாழ்க்கையின் கடைசியில் உடல் நோயினால் அவஸ்தைப்படும் பொழுது நான் போய்விட்டால் அவன் என்ன செய்வான்…? ஏது செய்வான்…? எப்படித் தன்னைப் பாதுகாப்பான்…? என்று எண்ணி உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று எல்லாவற்றையும் அவனை இழக்கச் செய்துவிடுகிறது.
ஏனென்றால்
1.இப்படி மூன்று லட்சம் பேருடைய உணர்வுகள் அது எப்படி இயங்குகின்றது…?
2.உடலுக்கு பின் என்ன…? என்கிற நிலையை அறிந்த பின்பு தான் உங்களிடம் இந்த உண்மைகளைச் சொல்கின்றேன்.
செத்த பின்னாடி என்ன தெரியப் போகின்றது…? யார் என்ன செய்யப் போகின்றோம்…? என்று தான் பெரும் பகுதியானோர் சொல்வார்கள். பேய் வந்து ஆடுகிறது என்றால் அது எப்படிப் பேய் எப்படி ஆடுகிறது…? என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அது அவர்களைப் பிடித்தது என்றால் சரியாய் போய்விடும்.
ஒருவர் இப்படித்தான் சாமியே இல்லை… பூதம் இல்லை…! என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் குடும்பத்திலே ஒருவர் இறந்த பின் அந்த ஆவி அவர் பெண் குழந்தை மீதே வந்து விட்டது.
வந்த பின் என்னிடம் (ஞானகுரு) ஓடி வந்தார். ஏன் குழந்தை என்னென்னமோ சொல்ல ஆரம்பிக்கின்றது என்றார்.
“நீ தான் கடவுளே இல்லை…” என்று சொன்னாய் அல்லவா என்றேன்.
கடவுளே இல்லை என்று தான் சொன்னேன் ஆனால் இந்தப் பிள்ளை தெரியாத வார்த்தைகளை எல்லாம் பேசுகிறது. குழந்தையின் தலையில் இருந்து குங்குமம் வருகின்றது. அதற்கு ஒன்றுமே தெரியாது ஆனால் வருகின்றது. ஏதாவது பேச ஆரம்பித்தால் நல்ல நறுமணங்கள் வருகின்றது. இது என்னப்பா… விசித்திரமாக இருக்கின்றது…? என்றார்.
நீ தான் பேயும் இல்லை பூதமும் இல்லை என்று சொன்னாய். “சாமி இல்லை…” என்கிற பொழுது இது எப்படி இருக்கும்…? என்கிற நிலையில் நீ தெரிந்து கொள் என்று விளக்கத்தைச் சொன்னேன்.
மந்திரத்தை ஏவியதால் தலையிலிருந்து குங்குமம் வருகிறது. மனித உடலிலிருந்து ஆன்மா பிரிந்து இன்னொரு உடலுக்குள் போனால் என்ன செய்யும்…? என்று நீ தெரிந்து கொள் என்றேன்.
பின்னர் தன் நாஸ்திகத்தையே அவர் விட்டுவிட்டார்.
ஆனால் இதற்காக நீ மந்திரவாதியிடம் செல்ல வேண்டாம். நான் சொல்லும் முறைப்படி தியானத்தைச் செய். அந்த குழந்தையைச் சீராக்க முடியும் என்று சொன்னேன்.
அதே பிரகாரம் அவர் செயல்படுத்தும் போது அந்தக் குழந்தை நன்றாக ஆனது.
குருநாதர் இப்படிப் பல அனுபவங்களை எமக்குக் கொடுத்ததைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன். இயற்கையின் உண்மைகளை அறியும்படி செய்தார்… நுகரும்படி செய்தார். அந்த உணர்வை எனக்குள் ஊட்டினார்.
காடு மேடல்லாம் அலைந்து திரிந்து தான் அதை எல்லாம் அறிந்து கொண்டேன். ஆனால் நீங்கள் உட்கார்ந்து அமைதியாகக் கேட்கின்றீர்கள்.
சிரமப்பட்டுத்தான் நான் இதை வளர்த்தேன் அதன் வழியில் கண்ட உண்மைகளைத் தெரியப்படுத்துகின்றேன்
1.உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்… நீங்கள் நினைவு கொள்ளுங்கள்
2.தீமையிலிருந்து விடுபடுங்கள்… பிறவி இல்லா நிலை அடையுங்கள்
அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்.
அருள் உணர்வுகளைச் சேர்த்து தீமைகள் புகாதபடி அதை அடக்கி அருள் ஞான உணர்வின் கருவாக உருவாக்குங்கள்… இந்திரலோகமாக மாற்றுங்கள்… உடலுக்குள் பிரம்மலோகமாக மாற்றுங்கள்… சொர்க்கலோகமாக உருவாக்குங்கள்… சிவலோகத்தைச் சொர்க்கலோகமாக மாற்றுங்கள்.
1.உயிருடன் ஒன்றி உடலை விட்டு வெளி வரும் போது உயிரைச் சொர்க்க வாசலாக அமையுங்கள்
2.எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்தீர்களோ உயிர் அங்கே அழைத்துச் செல்லும்
3.உங்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும்.
அந்த அருள் பெற வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கின்றேன் உங்கள் உயிரை வேண்டுகின்றேன். அவன் அமர்ந்திருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும்… அவனால் உருவாக்கப்பட்ட சிவனான உடலுக்குள் மகிழ்ச்சிக்குரிய நிலைகள் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
இந்த உபதேசத்தின் வாயிலாகத் தீமை நீக்கும் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் ஒளியான அணுவின் கருக்களாக உங்களுக்குள் எப்படியும் உருவாக வேண்டும் என்று தான் மூச்சு விடாது பேசிக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
துருவ நட்சத்திரத்தை எண்ணி நீங்கள் தியானிக்கும் போது
1.உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது போன்று இந்த உணர்ச்சிகள் உங்கள் உடலில் பரவும்
2.அந்தச் சக்தி தொடர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்.
தவயோகிகள் தான் வாழ… தன் புகழ் ஓங்க… தன் சுற்றத்தாரை வாழ வைப்பதற்காகத் தவமிருக்கவில்லை
சக்தியின் குணங்கள் மூன்று வகைப்பட்டது.
1.ஆக்குபவளும் அவளே… காப்பவளும் அவளே… அழிப்பவளும் அவளே…!
2.காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் உள்ளவளும் அவளே.
3.மூன்று குணங்கள் உள்ள சக்தி தான் இவ்வுலகையே ஆக்கிக் காத்து அழிக்கிறது.
4.”அச்சக்தியின் சொரூபம்.. சக்தியின் வடிவம்… சக்தியின் சுயநிலை… அறிந்தவர்கள் எல்லாம் “பெரும் பாக்கியம் படைத்தவர்கள்…!”
அந்நாளில் வாழ்ந்த தவயோகிகள் இவ்வுலகைக் காப்பதற்காக அச்சக்தியின் சொரூபத்தைத் தன் நிலையில் ஈர்த்துக் கொள்ளவே பெரும் தவமிருந்தார்கள்.
அவ்வழியின் அருளைப் பெறப் பல நாள் தவமிருந்து பல ஜெபங்கள் இருந்து அச்சக்தியின் சொரூப நிலையை அதாவது ஆக்கி… காத்து.. அழிக்கும்… நிலையைத் தன் நிலையில் ஈர்த்துக் கொண்டார்கள்.
சக்தியின் நிலை என்னப்பா…?
1.எதற்காக அவர்கள் கடும் தவமிருந்து அந்த நிலையைப் பெற்றார்கள்…?
2.தான் வாழ… தன் புகழ் ஓங்க… தன் சுற்றத்தாரை வாழ வைக்கவா… அந்த நிலையைப் பெற்றார்கள்…?
இல்லையப்பா…!
அவர்கள் பெற்ற அருள் எல்லாம் தன் நிலையைக் காத்து… தன் ஆசையை அழித்து.. தன்னுள் சக்தியின் ஜீவனை வளர்த்துக் கொண்டார்கள். அந்த நிலை பெறுவதற்காக மிகவும் கடும் தவம் ஜெபம் எல்லாம் இருந்தார்கள்.
ஆனால் இந்தக் கலியில் வந்த சாமியார்கள் – சாமியார்கள் என்ற பெயரில் வந்தவர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் வழியில் உபதேசம் செய்ததைப் பலர் அறியப் பணம் காசுகள் சேர்த்துத் தன் வழியில் வந்தவர்களுக்கு வாழ வழி செய்து விட்டுத் தன் பெயரை நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள்.
1.இக்கலியில் வந்த சாமியார்களுக்கே இந்த நிலை என்றால்
2.இக்கலியில் தோன்றிய மனிதர்கள் நிலை எப்படியப்பா இருக்கும்…?
இக்கலியில் மாமனிதனாகலாம் என்பதெல்லாம் பல கோடிப் பணம் சேர்த்துப் பலர் அறியப் புகழ் எய்தி வாழ்வது தான் மாமனிதன் என்ற எண்ணம்.
அந்த நிலையில் அவனைப் பார்ப்பவனுக்கு என்னப்பா தோன்றும்…?
1.அவன் மேல் பொறாமை எண்ணம் தான் ஏற்படும்.
2.அந்த நிலையில் மாமனிதனாகி என்னப்பா பயன்…?
ஆதியில் வந்த சித்தர்கள் பெற்ற சக்தியின் அருள் எப்படியப்பா…? தன் உயிர் அணுவின் தொடர்பில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் தன் நிலைக்கு இயங்கும்படி அச்சக்தியின் அருளைப் பெற்றார்கள்.
கோபம் வருவதும் மகிழ்ச்சி வருவதும் சம நிலை எய்துவதும் என்ற பாகுபாடு தன் உடலில் இல்லாமல் மன எண்ணத்தில் எந்த நிலையைப் பார்த்தாலும் தன் நிலையை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் ஒரு நிலைப்படுத்தி விட்டார்கள்.
அந்த நிலையில் அவர்கள் ஜெபித்த ஜெபமெல்லாம் அவர்கள் பெற்ற அருள் எல்லாம் ஒரு சிறு அணுவளவு எந்த எண்ணத்தில் ஒருவர் மேல் பாய்ச்சுகின்றார்களோ அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுகிறார்கள்.
இத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் பெரும் மழைக்கும் சுழல் காற்றுக்கும் தன்னைச் சுற்றி எந்த நிலை வந்து தாக்கினாலும் அவர்களின் நிலைக்கு எந்த நிலையும் தெரிந்திடாது.
அவர்கள் எண்ண நிலை ஜெப நிலை எல்லாம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது அவர்கள் உடலுக்கு உணவும் உணர்வும் சுவாசமும் எந்த நிலையும் வேண்டுவதில்லை.
அவர்கள் நிலை எல்லாம் “அச்சக்தியின் நினைவே தான்…!” அச்சக்தியின் நிலையை உணர்ந்து அச்சக்தியின் அருளில் உள்ள பல கோடானு கோடி அணுக்களில் தன் உணர்வுக்கு வேண்டிய அணுவை மட்டும் ஈர்க்கிறார் இச்சித்தாதி சித்தன்.
அந்த நிலையில் உள்ள சித்தன் இவ்வுலக உயர்வுக்காக இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு எந்த வழியில் கற்பித்தால் புரிந்து விடும் என்ற நிலையில் தான் பெற்ற அருளினால் தன் உடல் அழிந்திடாமல் ஒரு நிலையில் அமர்ந்து
1.இவ்வுலக மக்களுக்குப் புரியும் வண்ணம்
2.அச்சக்தியின் உருவ அமைப்பைக் கல்லினாலோ பல உலோகத்தினாலோ செய்து
3.அந்த நிலையில் அச்சித்தன் உடலுடன் அமர்ந்து பல காலம் ஜெபம் செய்கின்றான்.
4.அந்த ஜெபத்தின் பலனைத்தான் நீ அக்கோயிலுக்குச் செல்லும் பொழுது அச்சித்தனின் அருளினால் பெற்று வருகிறாய்.
அக்கால ஆதிகாலச் சித்தாதி சித்தர்களும் பல கோடி ஞானிகளும் ரிஷிகளும் அமர்ந்து அச்சக்தியின் அருளைப் பெற்று எய்திய கோயில்கள் தான் இப்பொழுது நீ சென்று பூஜிக்கும் பல கோயில்களும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றைய உலகில் மனித இனத்தையே பூண்டுடன் அழிக்கும் உணர்வுகளாக மனிதனுக்குள் விளையப்பட்டுச் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நஞ்சு கொண்ட உணர்வுகளாகச் சாக்கடையாக இருக்கின்றது.
இந்தச் சாக்கடைக்குள் பல ஆண்டுகளுக்கு முன் மறைந்திருந்த ஞானிகள் இத்தகைய தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அரும் பெரும் சக்தி நமக்கு முன் உண்டு.
அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். பதிவு செய்ததை நினைவு கொண்டு நீங்கள் எடுக்க முடியும்.
இந்தச் சாக்க்டையான வாழ்க்கையில் சாக்கடையைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து இந்தச் சாக்கடையான உலகில் வாழ்ந்த நம் உடலுக்குள் சாக்கடையைப் பிளந்து உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்ட ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற முடியும்.
இதற்கென்று “விதி” இல்லை.
1.இளம் பிள்ளை என்றோ மற்றவர்கள் என்றோ
2.அறிந்தவன் என்றோ அறியாதவன் என்றோ எதுவுமே இல்லை.
அறியாதவன் அறிய முற்படுகின்றான். அறியாத நிலைகளில் இருக்கும் பொழுது நாம் அறிய முற்படுகின்றோம். அறிந்திடும் ஞானத்தைக் கொண்டு இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை அறியும் பக்குவத்தை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்.
அப்படிக் கூட்டும்போது இதனின் உறுதுணை கொண்டு அறிந்திடும் நிலைகள் கொண்டு இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வினை உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.
உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.
நாம் வீட்டில் இருக்கிறோம் என்றால் எவ்வளவு சுத்தப்படுத்தி வைத்தாலும் வீட்டிற்குள் அழுக்கு வரத்தான் செய்கின்றது. நாம் எவ்வளவு தூய்மையான ஆடையைப் போட்டாலும் அது அழுக்காகத்தான் செய்கின்றது. நம் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அழுக்கு வரத்தான் செய்கின்றது.
1.நாம் தூய்மையான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்தாலும்
2.தூய்மையற்ற நிலைகளைக் கேட்டுத் தூய்மையற்றதை நமக்குள் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.
எவ்வாறு தூய்மையற்ற நிலைகளைத் தூய்மையாக்குவதற்குத் துடைக்கின்றோமோ நல்ல நீரை விட்டு அதைக் கழுவுகின்றோமோ இதைப் போல
1.மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உடலுக்குள் இருக்கும் தூய்மையற்றதைத் தூய்மையாக்கும் உணர்வுகளைச் சேர்ப்பிப்பதே
3.யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானத்தின் வழி.
இந்த உடலுக்குப் பின்னால் நாம் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது
ஒவ்வொரு நிலைகளிலும்
1.”தீமைகளை அகற்றி விட்டேன்…” என்று நீங்கள் சொன்னால் அதை நான் (ஞானகுரு) கேட்கும் போதெல்லாம் எனக்குச் சந்தோஷம்
2.”சக்தி எடுத்தும் விரயமாகி விட்டது…” என்று நீங்கள் எண்ணினால் எனக்கும் அது கஷ்டம் தான்.
நான் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அலைந்து எத்தனையோ சிரமப்பட்டு அருள் ஞானிகள் பெற்ற சக்திகளை உங்களுக்குள் பதிவாக்கியுள்ளேன்.
அதை நீங்கள் எடுத்து வளர்த்துச் சந்தோஷப்பட முடியாதபடி வேதனையாக இருக்கிறது என்று அதை வளர்த்தால் எனக்குள்ளும் அதே உணர்வு வளர்கின்றது. உங்களுக்கு வேதனை நீங்கவில்லையா…? என்ற உணர்வு தான் எனக்கும் வரும்.
ஆனால் நான் அதைத் திருத்திக் கொள்கின்றேன். உங்களுக்குள் அதைத் திருத்த முடிவதில்லை. அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள் அதிலிருந்து மீள முடியாத நிலை ஆகி விடுகிறது.
அப்படி இல்லாதபடி…
1.எப்படியும் அந்த அருள் ஒளியைப் பெறுவேன்
2.என் வாழ்க்கையில் வந்த இருளை அகற்றுவேன்
3.மெய் ஒளியை எனக்குள் பெறுவேன்
4.பேரானந்தம் பெறுவேன்… பெரு வீடு என்ற நிலையை அடைவேன்
5.பிறவி இல்லா நிலை அடைவேன்… என்று உறுதிப்படுத்தி இந்தப் பாதையில் நீங்கள் செல்லுங்கள்.
உயிர் என்றுமே அழிவதில்லை…. உணர்வுகள் மாறுகின்றது எதன் உணர்வைப் பெறுகின்றோமோ இந்த உடலுக்குள்… இருண்ட நிலைக்குள் உயிர் ஒளியாக உள்ளே இருக்கின்றது. அருள் ஞானிகள் உணர்வின் தன்மையை எடுத்து ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
நீங்கள் சீராகத் தியானிக்கும் பொழுது பார்த்தால் உள் ஒளி பெருகும். அப்பொழுது உடலில் இருந்து வெளிச்சம் வரும்.
இதை எல்லாம் பழனியில் ஒருவரிடம் சொல்லும் பொழுது ஆர்வமாகக் கேட்டார்.
கணவன் மனைவி சேர்ந்து இந்தத் தியானத்தைச் செய்தவுடன் அவர் உடலிலிருந்து திடீரென்று பளீர்….ர்ர்… என்று வெளிச்சம் வருகின்றது. வீடே வெளிச்சமாகிறது.
இரண்டு பேரும் அதைப். பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஐய்யய்யோ… ஒளி தெரிகின்றதே… என்னுடைய சந்தோஷம் எல்லாம் போய்விடும் போலத் தெரிகிறதே…! என்று அவர் உடனே மனைவியைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார்.
உடலில் இருந்து ஒளி வருகின்றது… நான் இப்படியே போய் விடுவேனா…? என்ற இந்தப் பயம் அவருக்கு வந்து விட்டது.
“பயப்பட வேண்டியதில்லை…” என்று சாமி (ஞானகுரு) சொல்லி இருக்கின்றாரே என்று மனைவி அவரிடம் சொல்கின்றது. உடலில் இருந்து வெளிச்சம் வருகிறது… எனக்கும் தெரிகிறது…! என்று சொல்கிறது.
இல்லை…! எனக்கு எப்படியோ நடுக்கம் வருகின்றது என்று அதை மாற்றி விட்டு இதை எடுக்கின்றார். பெரும் ஆனந்தம் வந்தாலும் அதை அவரால் எண்ண முடியவில்லை.
வட்டிக்கடை வைத்து அவர் நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பாவம் எல்லாம் எனக்கு வருமே. இதை எல்லாம் எப்படி மாற்றுவது…? என்று சொல்லி என்னிடம் கேட்டார்.
நான் விவரத்தை எல்லாம் அவருக்குச் சொன்னேன். அவருக்குச் சில தத்துவங்களும் தெரிகின்றது… கவிகளையும் பாடுகின்றார்.
1.ஆனால் இந்த ஒளி தெரிந்த பின்
2.உடல் ஆசையைக் கூட்டும் நிலை தான் வருகின்றது.
அடுத்து என்ன செய்கிறார்…?
மந்திரவாதிகளிடம் சென்று இந்தத் தீய நிலைகள் எனக்குள் வராது தடுக்க வேண்டும் என்று கேட்கின்றார் கோழிக்கறியும் சாராயமும் வைத்து நீ சாப்பிடு. தாயத்தை ஒன்றைக் கொடுத்து அதைக் கட்டிக் கொள் என்று மந்திரவாதி சொல்கின்றார்.
கடைசியில் இதற்கு அதற்கும் போராட்டமாகி அவருடைய நிலைகள் மாறிவிட்டது. உடலுக்குள் எதிர்நிலையான பின் நோயாக மாறிவிட்டது
அவருடைய வீட்டிலே தாயும் மற்ற எல்லோரும் சொல்கின்றார்கள். சாமி இவ்வளவு பெரிய சக்தி கொடுத்திருக்கின்றார்…! அட நீ என்னப்பா…? என்று.
ஆனால் அவரோ
1.நான் இத்தனையும் அனுபவிக்க வேண்டுமே
2.அதற்கு முன்னாடி நான் ஒளியாகி விட்டால் என் சுகம் எல்லாம் போய்விடுமே
3.இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது…? என்று சொல்கிறார்.
இது நடந்த நிகழ்ச்சி.
இப்படியும் சிலர் சக்தி கிடைத்தும் நழுவி விடுகின்றார்கள். இந்த உடலில் ஆசை வரப்படும் பொழுது இந்த வழியில் சென்று விடுகிறார்கள்
1.இதைப் போன்று இல்லாதபடி பேரானந்த நிலை என்ற நிலையை நீங்கள் அடையக் கற்றுக் கொள்ளுங்கள்.
2.இந்த உடலுக்குப் பின்னால் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது.
ஒரு உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் எங்கே செல்கின்றது…? எப்படி அல்லல்படுகிறது…? என்று ஏற்கனவே பல உபதேசங்களைக் கொடுத்திருக்கின்றோம். இது தான் சாகாக்கலை என்பது.
சாகாக்கலை நீக்கி வேகாநிலை பெற வேண்டும். ஒவ்வொருவரும் அருள் ஞான சக்தியை வளர்த்து இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுங்கள். என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை அடையுங்கள்… பிறவி இல்லா நிலை அடைய இந்த உணர்வுகள் உங்களுக்கு உதவும்.
நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடைய வேண்டும்
உன் நிலைக்குப் பகர்கின்றேன். எடுத்த பிறவியில் எல்லாம் விட்ட குறையினால் தான் இப்பிறவியில் வந்துள்ளாய்.
இப்பிறவியின் தன்மையில் தியான நிலையில் வந்திடும் ஜோதி நிலை என்னப்பா…? பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் பெற்றிட்ட ஜோதி நிலை என்னப்பா…?
ஜோதி நிலை என்றதன் பொருள் என்னப்பா…? ஜோதி நிலை பெறுவது எப்படியப்பா…? (தியானத்தில் காட்சியாகத் தெரிவது ஜோதி நிலை அல்ல)
குடும்ப நிலையில் உள்ள ஒவ்வொருவரும் அவர் விடும் சுவாச நிலையினாலேயே ஜோதி நிலையைப் பெற்றிடலாம். இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பொழுதிலேயே பெற்றிடலாம் “ஜோதி நிலை…!”
ஜோதி நிலையின் பொருள் உனக்கு பகர்வதற்குப் புதிதல்ல. உன் நிலையிலேயே அஜ்ஜோதி நிலையை ஒளிரச் செய்யலாம். சித்தர்களும் ஞானிகளும் பெற்றிட்ட ஜோதி நிலையை உன் நிலையில் பெற்றிடலாம்.
அதற்காக உன் வழியில் சிறிது மாற்றம் வேண்டும்.
மன நிலையில் உள்ள சோர்வை உன் நினைவில் மறக்கச் செய்து உன் சுவாச நிலையில் நல் சுவாசத்தை எடுத்திடப் பழக வேண்டும். மன அமைதியும் சுவாச நிலையும் ஒன்றுபட்டு ஒரு நிலை எய்திட வேண்டும். (ஏனென்றால் சுவாச நிலையில் சிறு மாற்றம் வந்தாலும் அந்த நிலை மாறுபடுகிறது)
1.மனதில் சோர்வும் கோபமும் வந்திடாமல் நீ எடுக்கும் சுவாச நிலையில்
2.தியான முறையில் உள்ள பொழுது நீ ஈர்ப்பதே உன் கண்ணில் தெரிந்திடும் ஒளிகள் எல்லாம்…!
அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்து உயிரிலே ஜோதிச் சுடராக ஏற்ற வேண்டும். இதை ஒவ்வொரு நிமிடமும் ஏற்ற வேண்டும்.
1.மேல் நோக்கிப் (விண்ணிலே) பார்க்கும் உணர்வின் தன்மையை
2.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்ற வேண்டும்.
இருள் அகற்றும் நிலைகளை ஒற்றுமையாக இருந்து தியானித்து அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெற வேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக ஜோதியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் அன்றைய ஞானிகள்.
மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெருகி ஜோதியாகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.
4.வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம்.
மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஜோதியாக உயிரிலே ஏற்றிக் கொண்டால்
1.“நம் ஆன்மா மெய் ஞான விழிப்பு நிலை பெறும்…!”
2.நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடையும்.
அதன் மூலம் நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்படும் ஞானத்தின் சக்தியாக நம்முடைய செயல்களை எல்லாமே மெய் வழியில் அமைத்துக் கொள்ள முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நல்லதைப் பெற வேண்டும் என்று ஒருவர் ரொம்பவும் பிரியப்படுவார். நல்லதைச் செய்பவர்… வேதனைப்பட்டுக் கஷ்டப்பட்டவருக்கு ரொம்பவும் உதவி செய்கின்றார்.
ஆனால் இவர் உதவி செய்து கொண்டிருக்கும் பொழுது எல்லா உதவியும் வாங்கிக் கொண்ட அந்த ஆன்மா உடலில் பட்ட நோயின் தன்மை கொண்டு இறந்து விட்டால் உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் எவர் உதவி செய்தாரோ அவர் உடலுக்குள் வரும்.
இவர் பக்தி கொண்ட ஆன்மாவாக இருப்பார். இருப்பினும் இந்த (உதவி செய்த) மனிதனை மட்டும் பக்தி கொண்டு இருப்பார். தெய்வத்தை எல்லாம் வேண்டினேன். எல்லாத் தெய்வமும் என்னைக் கைவிட்டது. தெய்வத்தின் மேல் அந்த நல்ல ஒழுக்கத்தின் மேல் வெறுப்பு உணர்வு இருக்கும்.
ஆனால் இவர் நல்லவர் எல்லோருக்கும் உதவி செய்திருப்பார். அந்த உதவியின் தன்மை கொண்டு பிறரிடம் நல்ல பேரும் புகழும் வாங்கியிருப்பார்.
கோவில்களுக்கு வேண்டிய நிலைகளை ஓடி ஓடியும் செய்திருப்பார். கோவிலில் காட்டிய பக்தியின் நிலைகள் கொண்டு ஒரு மனிதருக்கு ஓடிப் போய்… அடடா… முருகா இப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிச் சொல்லி உதவி செய்வார்.
அவர் (உதவி பெற்றவர்) இந்த நல்லவர் செய்த உதவியை மட்டும் தான் எண்ணுவார். முருகனை இவர் சொல்லும் பொழுதெல்லாம் அவர் வெறுப்பார்.
1.அந்த முருகன் என்னைக் கைவிட்டுவிட்டான்
2.நீ தானப்பா என்னைக் காப்பாற்றுகின்றாய்…! என்பார்.
அப்பொழுது இந்த உணர்வுகளை அதிகமாக விளைய வைத்து இவர் மேல் எண்ணமாகி அவர் இறந்தால் இவர் நினைவாகவே யார் உதவி செய்தாரோ செய்த நன்றிக்கு அவரை எண்ணி இந்த ஆன்மா உதவி செய்தவர் உடலுக்குள் வந்து சேர்ந்து விடும்.
எல்லாக் கோவிலுக்கும் பக்தியாகப் போய்ச் செய்து கொண்டிருந்தவர் இதற்கப்புறம் என்ன செய்வார் தெரியுமா…? கோவிலைக் கண்டாலே வெறுப்பு வரும்.
ஏனென்றால் “நோய்வாய்ப்பட்ட அந்த ஆன்மா… இவருக்குள் வந்துவிட்டது அல்லவா…!” அவருக்குள் அது வெறுக்கச் செய்யும். இங்கே நல்ல உபதேசம் கேட்டுக் கொண்டிருந்தால் கூட உட்கார விடாமல் எழுப்பி வெளியில் இழுத்துக் கொண்டு போய்விடும்.
இது தான் பக்தி மார்க்கங்களில்…
1.நாம் செய்த நன்றியை நாம் பெற முடியாத நிலைகளில்
2.நாம் செய்த நன்றியின் உணர்வுகள் அந்த எண்ண வலு எது பெற்றதோ
3.அதன் உணர்வின் துணை கொண்டு நமக்குள் வந்துவிட்டால் இந்த மாதிரி ஆகிவிடுகின்றது.
நாம் அவருக்கு நன்மை செய்தோம். ஆனால் யார் மீது அந்த வெறுப்புப்பட்டதோ அந்த வெறுக்கும் உணர்வு நமக்குள் வரும் பொழுது நல்ல ஒழுக்கத்தை இதுவே தடைப்படுத்தும்.
என்ன நல்லது செய்து… என்ன பிரயோஜணம்…? என் உடலில் நோயாகிவிட்டது…? அந்த உணர்வு கொண்ட ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிட்டால் இந்த வேலையைத்தான் செய்யும்.
1.முன்னாடி எல்லாம் கோவிலுக்கு ஓடி ஓடிச் சேவை செய்தார்.
2.இன்று நல்லது சொன்னாலும் நிற்க மாட்டேன் என்கிறார்.
3.இப்பொழுது சதா வேதனையை சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பார்கள்.
காரணம் அவர் நல்லவர் தான். அவர் அறியாது வந்த தீமைகளிலிருந்து “தான் துடைக்கும் மார்க்கத்தைத் தவறியதனால்…” அந்த உணர்வுகள் வந்து அந்த ஆன்மா நமக்குள் குடிகொள்கின்றது.
ஒரு மான் புலியின் நிலைகளைக் கண்டு கண்டு அது தன்னை இம்சிக்கும் என்ற உணர்வு கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று எண்ணுகிறது.
மானின் ஆன்மா வெளியில் சென்ற பின் புலியின் உணர்வை நுகர்ந்து புலியின் ஈர்ப்புக்குக்குள் சென்று மானின் உயிராத்மா புலியாக மாறுகின்றது.
இதைப் போன்று தான் இவர்கள் நல்ல உணர்வைக் கொண்டாலும் இந்த நஞ்சு கொண்ட உணர்வு வந்தபின் பாலுக்குள் நஞ்சைப் போட்டால் பாதாமிற்குள் நஞ்சைப் போட்டால் கொன்று விடுவது போல்
1.இவர் பட்ட வேதனை (யாருக்காகப் பட்டாரோ) இவர் உடலுக்குள் சென்று
2.இவரின் நல்லதைச் “செயலற்றதாக மாற்றிவிடும்”.
இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் மகரிஷி அவன் உணர்வின் வலுக் கொண்டு இதை அடக்கினோம் என்றால் நம்முடைய எண்ணம் அங்கே போய் அடங்கும்.
சுவாசிக்கும் உணர்வுகளில் அதிர்வுகள் அதிகமானால் டிரான்சாக்ஷன் செய்யும் இடத்தில் ஏற்படும் தீமைகள்
ஒரு சிலருக்கு இந்தப் பேய்… பிசாசு…! என்ற பயந்த உணர்வாகி அதிர்ச்சியாகி விட்டால் அதனால் அடிபட்டுச் செத்தான் என்று சொல்வார்கள்.
ஒரு இலையோ ஏதோ தானாக ஆடி விட்டால் அந்த எண்ணத்திற்குத் தகுந்த மாதிரி அங்கு ரூபங்கள் தெரியும் ஐயோ…! பேய் வந்து விட்டது… பேய் வந்து விட்டது… பேய் வந்துவிட்டது…! என்பார்கள். இவன் எண்ணத்திற்குத் தகுந்த மாதிரியே அங்கே தெரியும்.
இந்த உணர்வின் தன்மை வந்து திடீரென்று ஒரு ஓலை காற்றடித்துக் கீழே விழுந்தது என்றால் ஆ… பேய் வந்து விட்டது என்று எண்ணினால் தீர்ந்தது.
இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்த பின்
1.சிந்திக்கும் நரம்புகளில் இது சென்றால் அது கட்டாகி விடும் (அறுந்து).
2.மூக்கிலே வாயிலே எல்லாம் இரத்தம் வரும். ஆக இரத்த நாளங்கள் வெடித்து விடுகின்றது.
ஆனால் “பேய் அடித்து” இரத்த இரத்தமாகக் கக்கினான் என்று சொல்வார்கள். பேய் வந்து அடிப்பதில்லை.
1.அதிர்ச்சியான பின் அந்த உணர்வுகள் ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய இடத்தில்
2.அதிர்வுகள் அதிகமாகி விரிவடைந்து (பலூன் மாதிரி) அந்த இரத்த நாளங்கள் வெடித்து விடுகின்றது.
நம்முடைய எண்ணங்கள் நம்மை எப்படி எல்லாம் கொண்டு செல்கிறது என்ற நிலையை எல்லாம் அறிந்து கொண்டால் போதும். அந்த அதிர்வின் தன்மை எண்ணும்போது பயத்தில் துடுக்கு… துடுக்கு… துடுக்கு… என்று வந்து கொண்டே இருக்கும்.
உதாரணமாக… ரோட்டிலே சென்று கொண்டிருக்கின்றோம். காக்காய் வலிப்பு வந்து ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான். இரக்கப்பட்டுப் பார்த்தோம் என்றால்
1.ஓரு சிலருக்குப் பலவீனமான உணர்வுகள் ஆனால்
2.சிறு மூளைப் பாகத்திலே தாக்கி விட்டால் வெடுக்கு… வெடுக்கு… என்று சுண்டும்
இதற்கு முன் காக்காய் வலிப்பு இல்லை. ஆனால் இந்த மாதிரி அதிர்ச்சியான பின் அத்தகைய அணு இங்கே தேங்கி விட்டால் அதற்குப் பின் காக்காய் வலிப்பு வரும்.
சிறிய குழந்தையாக இருக்கும் பொழுது இல்லை என்று எண்ணுவார்கள். ஆக இந்த உணர்வின் அறிவு இப்படி வருகின்றது.
சாந்தம் குணம் கொண்டு பரிவான குணம் கொண்ட ஒரு மனிதன் எதிர்பாராத நிலைகள் ஆ… என்று இதைக் கேட்டு விட்டால் ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய உணர்வுகள் ஒலிபெருக்கியாகும் பொழுது விரிவடைந்து விடுகின்றது.
அதனால் மயக்கம் வருகின்றது… அதிர்ச்சியினால் உறுப்புகள் கை கால் அங்கங்கள் வராது கூடப் போய் விடுகின்றது. இது எல்லாம் நம்மை அறியாமலே நாம் நுகரும் உணர்வுகளால் நடக்கக்கூடிய செயல்கள்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
நம் ஆறாவது அறிவைச் சீராக பயன்படுத்த வேண்டும்.
1.ஈஸ்வரா…! என்று உயிருடன் ஒன்ற வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
3.இங்கே புருவ மத்தியில் நிலை நிறுத்தி அதன் வழி உள்ளே புகச் செய்து
4.அதிர்ச்சியால் ஏற்படும் செயலாக்கங்களைத் தடுத்துப் பழக வேண்டும்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவன்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
எந்த மனிதனுக்கு அந்த நோய் இருந்ததோ… துருவ நட்சத்திரத்தின் பேரருளை அவன் பெற வேண்டும். அவன் காக்கப்பட வேண்டும். அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் அவன் உடலில் இருக்கக்கூடிய பிணிகள் நீங்க வேண்டும். அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வுகளை இப்படி நாம் எடுத்து நமக்குள் படைத்து விட்டால் நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை உருவாக்குகிறது…. பிறருடைய தீமைகளோ துன்பங்களோ நமக்குள் வருவதில்லை.
சந்தர்ப்பவசத்தல் வேதனை என்று நாம் நுகரப்படும் பொழுது… அது நமக்குள் பிரம்மம் ஆகின்றது… உடலில் அணுக்களாக உருவாகின்றது.
அதே சமயத்தில் ஆறாவது அறிவு கார்த்திகேயா… சேனாதிபதி..! இதையெல்லாம் பாதுகாக்கும் சக்தி பெற்றது… எல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய சக்தி பெற்றது.
தீமை என்ற உணர்வு வந்த பின்
1.அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்கி… இதை இணைத்து… அதைச் சுவை மிக்க உணர்வாகப் படைத்துப் பழகுதல் வேண்டும்
2.அந்த அணுக்களை மாற்றிப் பழகுதல் வேண்டும்.
இது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் காடுகளில் வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் காட்டிலே செல்லப்படும் போது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலைகளில் தங்களைப் பாதுகாக்கும் அறிவு அவர்களுக்கு வருகின்றது.
காட்டு விலங்குகளிடம் இருந்தும் விஷ ஜந்துக்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தாவர இன மூலிகைகளை அரைத்துத் தன் உடலிலே பூசிக்கொள்கின்றனர்.
சில நேரங்களில் அதே மூலிகைகளைத் தன் உடலில் பூசாதபடி சில மூலிகைகளை அணைப்பாக வைத்துப் போட்டு விடுகின்றனர். ஆக இந்தத் தாவர இனங்களின் மணத்தின் தன்மையை மற்ற உயிரினங்கள் கண்டுணர்ந்தால் புலியோ நரியோ நாயோ இவர்கள் பக்கம் வருவதில்லை.
அந்தச் செடிகளை ஒவ்வொன்றும் பக்குவப்படுத்தி அவர்கள் எப்படி வைத்துக் கொண்டார்கள்…? என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “அக்காலங்களில் நடந்தவைகளை…” எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.
இப்பொழுது கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வலைகளைப் பதிவாக்கி
1.அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட உயிரினங்கள் என்னென்ன ரூபங்களில் இருந்தது…?
2.அது எதை எதையெல்லாம் உணவாக உட்கொண்டது…?
3.அதை உட்கொண்ட உணவுகளின் நிலைக்கொப்ப அதனின் குணங்களின் வளர்ச்சியும் அந்த உடல்கள் எப்படி அமைகிறது…? என்றும் விஞ்ஞான நிலைகள் காண்கின்றனர்.
இதே போல நமது குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று இந்த உணர்வுகள் அதன் நடைப்பாதையில் (நடமாடிய இடங்கள்) எப்படி எல்லாம் சில நிலைகள் ஊர்ந்து சென்றது… பறந்து சென்றது… மனிதனாக வந்தது…? என்று காட்டினார்.
விஞ்ஞான அறிவில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளை இங்கே இயக்கிப் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உருவத்தையும் அமைத்துக் காண்கின்றார்கள். அந்த உயிரினங்களின் குணத்தையும் வெளிப்படுத்துகின்றார்கள்.
மெய்ஞானியின் அறிவை நம் குருநாதர் அன்று கண்டுணர்ந்ததனால் அதை நான் அறியும் பருவம் வந்தது. பின் அதன் வழிகளில் அவை எப்படி ரூபங்கள் பெற்றது…? என்ற நிலையையும் அறியும்படி செய்தார்.
அக்காலத்தில் காட்டு விலங்குகளிலிருந்து தப்பிக்கப் பல தாவர இனங்களைத் தன் அருகிலே போட்டுக் கொள்வார்கள். சில பகுதிகளில் அடுக்கடுக்காகப் போட்டு இருப்பார்கள்.
சில பச்சிலைகளைத் தன் உடலிலே முலாமாகப் பூசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தக்க அந்தப் பகுதிகளில் எப்படி மற்ற நிலைகள் வருகிறது…? என்று அடுக்கு வரிசையில் அதைப் போட்டு இருப்பார்கள்.
அப்பொழுது அவர்கள் வாழ்ந்த காலங்களில் இத்தகைய தாவர இனங்கள் புவியின் நிலைகள் வெப்பத்தினால் காயும் போது ஆவியாகவும் அதன் நீர் சத்து பூமியின் நிலைகள் எப்படி ஈர்த்துக் கொண்டது என்று காட்டுகின்றார்.
இதன் உணர்வின் பதிவு எப்படி இருக்கின்றது…? என்ற நிலையும் அக்காலப் பச்சிலைகளைக் காண்பித்தார்,
1.அன்று உருவான பச்சிலைகளுக்கும்
2.இன்று இருக்கக்கூடிய பச்சிலைகளுக்கும் உள்ள வித்தியாச நிலையையும் காட்டுகின்றார்.
அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அந்தப் பச்சிலைகளைப் போட்டு வைத்தாலும் பின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை இவர்களை அறியாதபடி இவர்கள் சுவாசிக்கின்றனர்.
1.இதைப் பாதுகாப்பாக வைக்கின்றனர்.
2.ஆனால் “பாதுகாக்க வேண்டும்…” என்ற உணர்வுகளை இவர்கள் நுகர்கின்றனர்.
3.அந்த உணர்வின் அறிவாக அவர்கள் வளர்ந்தாலும் அந்தப் பச்சிலை மூலிகைகளின் உணர்வுகள் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.
அவ்வழியில் தான் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அந்தக் கருவுறும் ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் கருவுறும் சிசுக்களில் இந்த மணங்கள் கலந்துவிடுகின்றது.
ஏனென்றால் தாயின் இரத்தத்தில் இருந்துதான் அதற்கு உணவு கிடைக்கின்றது. ஆக இந்த உணர்வின் தன்மை அந்த அணுவின் துடிப்பு வரப்படும்போது நஞ்சினை வென்றிடும் உணர்வாக அணுக்களாக அந்தக் குழந்தைக்குள் விளைகின்றது.
அவ்வாறு நஞ்சினை வென்றிடும் அணுக்கள் விளைந்த குழந்தை பிறந்த பின் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு போனால் போதும். நரியோ பாம்போ நாயோ இவர்களைத் தாக்குவதில்லை.
இவர்கள் செல்லும் பக்கம் பையனை எடுத்துச் செல்லும் போது சில சில விஷச் செடிகள் கூட அப்படியே ஒடுங்கிவிடுகின்றது.
அப்படி ஆற்றல்மிக்க நிலைகளாக ஆதியிலே வளர்ந்த அந்தக் குழந்தைதான் “அகஸ்தியன்…” குருநாதர் இதையெல்லாம் அக்காலங்களில் நடந்தவைகளை அப்படியே பார்க்கும்படி செய்கின்றார்.
1.அந்த அலைகள் காற்றிலே இன்றும் உண்டு.
2.நீங்களும் பார்க்க முடியும். காண முடியும்.
சுவாசத்தில் வருவது தான் பிறப்பும்.. இறப்பும்…
இவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம்.
1.விதி வந்து விட்டது… அதனால் மடிந்து விட்டான்…! என்கிறோம்.
2.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை
3.ஆயுளை ஆண்டவன் அளிப்பதல்ல…!
பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.
எந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.
கலி முடிந்து கல்கி வருகிறது…! என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.
உலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை… மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.
மனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக பூச்சியாக மீனாக நண்டாக…!
ஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.
மனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து…
1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.
2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான். மனிதனில் இருந்து தான் மிருகம்.
3.மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி
4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசிக்கும் வருகின்றான்.
5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.
இந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள்.
இப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.
ஜென்மப் பயனை எடுத்திடுங்கள்… ஈசன் அருளைப் பெற்றிடலாம்…! என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்…!” என்று பல முறை உணர்த்தினேன்.
இறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்…” என்ற பொருளும் இதுவேதான்.
உன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்
1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்
2.பிறவியை இழப்பதும் நீயே தான்.
இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா… எண்ணத்தின் சுற்றலிலே…! சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே.
பாட நிலை புரிந்ததா…?
பரவிக் கொண்டே… வளர்ந்து கொண்டே வரும்… நோய்க் கிருமிகள் பற்றிய உண்மைகள்
விஞ்ஞான அறிவால் வந்த விஷத்தன்மைகள் பலவாறு பரவி… மக்களை இன்று மடியச் செய்யும் நிலையாக வருகின்றது.
மின்சாரத்தை உற்பத்தி செய்ய “அணு உலைகளை” உருவாக்குகின்றோம்.
1.அதிலிருந்து வரும் கசிவுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.
2.இந்த உணர்வுகள் நம் பூமி முழுவதும் படர்கின்றது.
3.அதன் எல்லையில் நுகர்வோர் அனைவருக்குள்ளும் விஷத்தன்மையான கதிர்களைப் பாய்ச்சுகின்றது.
4.அந்தக் கதிர்கள் படரப்பட்ட மனிதர்கள் இறந்த பின் அந்த உடலிலிருந்து அதே அணுக்களின் தன்மை மீண்டும் பெருகத் தொடங்குகிறது.
மனிதனை ஒத்த நிலைகள் வரப்படும் பொழுது “மிகக் கடுமையான நோய்களாகவும்…” மாறுகின்றது.
முதலில் மனித உடலுக்குள் சென்று தீய அணுக்களின் தன்மையாக உருவாகின்றது. இறந்த பின் மனிதனை ஒத்த நிலையில் கொண்டு பரவிப் புது விதமான நோய்களாக வருகின்றது.
1.இதைத் தான் வைரஸ் என்ற நிலையில்
2.”புதிது புதிதாக உருவாகிறது…” என்று கண்டுபிடிக்கின்றார்கள்.
ஒவ்வொன்றையும் என்னென்ன நிலைகள் என்று பரீட்சித்து பார்க்கும் போது சில வைரஸ்களை மாற்ற முடியவில்லை என்று கூடச் சொல்கின்றார்கள்.
ஏனென்றால் இந்த அணு தன்மைகள் உடலிலே நுகர்ந்து விட்டால் அது விளைந்த பின்
1.கேன்சர் எப்படி விஷத்தன்மையான நோயாக ஆன பின் வேறு எந்தக் கடுமையான மருந்தைக் கொண்டும் அதை நீக்க முடிவதில்லையோ
2.இதைப் போன்று வைரஸ் சென்ற அந்தக் கிருமிகள் அதிகமாகி விட்டால் அதை மற்ற மருந்துகள் கொண்டு மாற்றி அமைக்க முடிவதில்லை
எதிர் நிலையான நிலைகள் வரும் பொழுது காய்ச்சல் அதிகமாகவே இருந்து கொண்டிருக்கும். காய்ச்சல் அதிகமாக இருக்கப்படும் பொழுது இதை மாற்றுவதற்காக இரத்தத்தைப் பரிசோதித்து. இதனுடைய மலங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்ற நிலையில் அதைக் கண்டுபிடிப்பதற்குக் குறைந்தது ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் ஆகி விடுகிறது.
இந்த உணர்வின் தன்மை சேர்த்துச் சேர்த்து இதற்கு இது ஒத்துக் கொள்கிறதா… இல்லையா…? இந்த உணர்வின் தன்மை எது…? என்ற நிலையும் இது புதுவிதமான வைரஸ் ஆக இருப்பதால் இதற்கு என்ன கொடுப்பது…? என்று பல மருந்துகளைக் கொடுத்துப் பரிசீலித்துப் பார்க்கின்றார்கள்.
அதற்கு அப்புறம் அது பலவீனமான பின் செயல்படுத்துகிறார்கள். ஆனால் அந்த வைரஸின் வீரியத் தன்மை அதிகமாகிவிட்டால் அந்தக் காய்ச்சலையே போக்க முடியாது… எத்தனையோ பேர் அவதிப்படும் நிலைகளும் இருக்கின்றது.
ஏனென்றால் அணுக்கதிரியக்கங்களால் தாக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை மனிதனுக்குள் வருகிறது…!
அது எப்படி…? என்றால் இன்று சென்னை அருகிலே அணு மின் நிலையத்தில் அணு உலைகளை அமைத்திருக்கிறார்கள் என்றால் அங்கே அருகிலே வீட்டிலே குடியிருக்கின்றார்கள்.
அங்கே இருப்பவர்கள் மற்ற இடங்களுக்கு மாற்றலாகி வந்தார்கள் என்றால்
1.அவர் உடலில் விளைந்த அந்தக் கதிரியக்கங்கள் அவர்கள் இறந்தால்
2.அந்த உடலிலிருந்த அந்த அணுக்கள் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்குகிறது.
3.அவர்கள் பழகிய நண்பர்கள் உடலில் எல்லாம் பரவுகின்றது.
இப்படி வரப்படும் பொழுது தான் இந்த அணுக்களின் தன்மை (வைரஸ்) வளர்ந்து விடுகின்றது.
ஒருவருக்கொருவர் எப்படித் தொடர்பு கொண்டு வருகின்றது…? என்ற நிலையையும் குருநாதர் இந்த உலகம் முழுவதும் சுற்றி உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்.
இதிலிருந்து மீட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
துருவ நட்சத்திரம் சர்வ நஞ்சுகளையும் வென்றது. அந்த உணர்வுகளை எல்லோரையும் பருகச் செய்…! என்றார் குருநாதர். அதைத்தான் உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.
திட்டியவர்களைப் பதிவு செய்த பின் அவர்களை நினைத்தால் கோபம் வருகின்றது. அன்றைக்கு ஒரு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் திட்டியவரை எண்ணினால் கணக்குத் தப்புத் தப்பாகத்தான் வரும்.
துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் அங்கேயும் தவறாகும். ஆக ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தான் இருக்கின்றோம். நம்மை அறியாமல் இத்தகைய நிலைகள் நடக்கின்றது.
இதைப் போன்று தான் உங்களுக்குள் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி விட்டால் தீமை என்ற உணர்வை அறிந்தால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் அதை அடக்கும்.
ஆகவே…
1.ஒவ்வொரு நிமிடத்திலும் தீமையை அடக்கக்கூடிய சக்தி உங்களுக்குள் வர வேண்டும்
2.அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கு தான் திரும்பத் திரும்பச் சொல்வது.
ஒரு சில பேர் சாமி திரும்பத் திரும்பச் சொல்கிறார் ஒரே தலைவலியாக இருக்கிறது என்று கூடச் சொல்லி விடுகின்றார்கள் ஆனால் சாமி என்ன சொன்னார்…? என்று திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது.
கர்ம பயன் என்பது சாதாரணமானதல்ல…! நல்லதுக்கும் அது தான்… கெட்டதுக்கும் அது தான்…!
விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது
மனிதனின் விதி முறை…!”
வினையின் எண்ண\த்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.
அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள ஒரு உடலை எடுக்கின்றான்.
வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.
ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது. காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா.
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்.
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)
வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்
நரகலோகம் என்பதுவே கர்மபயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.
விதி என்பது எதப்பா…?
விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.
வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.
எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!
வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.
வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.
நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.
பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?
சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது…
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”
அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில் ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான் என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.
வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.
அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்…!” என்பது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாதாரணமாக ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு இருக்கிறான் என்றால் அவன் எத்தகைய குணத்தைக் கொண்டிருந்தானோ உதாரணமாக வாழ்க்கையில் அடிக்கடி வெறுப்பும் வேதனையும் சலிப்பும் சஞ்சலமும் இப்படிக் கலவை கொண்டு எடுக்கப்படும் போது அதற்குத்தக்க நோய் வருகிறது.
1.அடிக்கடி “வேதனை” என்ற உணர்வு எடுத்தால் டி..பி. வருகிறது.
2.அடிக்கடி “எல்லாக் குணங்களிலும் வேதனை” என்ற உணர்வுகளை உருவாக்கி விட்டால் அது கேன்சராக மாறுகின்றது.
இந்த டி.பி. என்ற அணுக்கள் தனித்து எந்த உறுப்பில் நாம் பதிவாக்குகின்றோமோ நாம் ஊழ்வினை என்ற பதிவினை நாம் எலும்புக்குள் உள்ள ஊன்களில் இது பதிவாகி விடுகின்றது.
அடிக்கடி நாம் வேதனைப்பட்டால் நாம் எடுக்கும் உணர்வுகள் இரத்த நாளங்களில் அணுக்களாக மாறி அதன் உணர்வின் தன்மை “இரசாயணமாக” மாறுகின்றது.
அது எலும்புகளில் வரப்படும் போது அதில் உறையச் செய்து அதில் வடித்து இந்த உணர்வுக்கொப்ப ஊழ்வினை என்ற ஒரு அமிலத்தை (எலும்புக்குள்) உருவாக்குகின்றது. கண் கொண்டு உற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள் அந்த ஊனுக்குள் பதிவாகின்றது.
எதை உற்றுப் பார்த்தோமோ எண்ணம் அந்த உணர்வுகளைத் தூண்டும் அந்த உணர்வினைப் பதிவாக்கி அதனை ஈர்க்கும் சக்தியாக உடல் முழுவதும் உள்ள எலும்புகளில் (அந்த இடத்தில்) வைத்து விடுகின்றது.
சற்றுக் கவனமாகக் கவனிக்க வேண்டும்.
மண்ணுக்குள் ஒரு செடியில் விளைந்த வித்தினை ஊன்றினால் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு எந்தச் செடியில் விளைந்ததோ அது எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்ததோ அதன் வழி அந்தச் செடியின் உணர்வுக்கொப்ப ரூபமாகின்றது.
இதே போல ஒரு குணத்தின் தன்மை இங்கே பதிவான பின்
1.வேதனை என்ற உணர்வை நாம் நுகரப்படும்போது
2.வேதனையை உருவாக்கும் அந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் கலந்து அது இரசாயணமாக மாறி
3.நரம்பு மண்டலங்களில் கொண்டு இயக்கப்படுகின்றது.
இந்த இரசாயணக் கலவை நம் நரம்பு மண்டலங்களை அது இயக்குகின்றது.
இது சிறு மூளை பாகங்களில் நாம் எண்ணும் உணர்ச்சிக்கொப்ப அந்த இரசாயணக் கலவை அதன் அழுத்தத்தின் உணர்வின் அழுத்தங்களைக் காட்டும் போதுதான் கைகளை மடக்குவதும் மற்ற நிலைகளைச் செயல்படுவதும் இவை அனைத்தும்.
இப்படி இரசாயணக் கலவைகள் வரப்படும் போது அதனதன் அமைப்பு தன்மைப்படி வேதனை என்ற விஷத் தன்மை வரப்படும் போது இந்த எலும்பை அசைக்கும் நரம்பு மண்டலங்களிலிருந்து வரும் இரசாயணத்தில் அந்த விஷத்தின் அணுக்கள் உருவாகி விடும்.
வேதனை என்ற உணர்வின் தன்மை கொண்ட இரசாயணக் கலவையில் வரப்படும் போது இதனில் எதிர்மறையான விஷத் தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.
சாதாரணமான நிலையில் இந்த எலும்புக்குள் இரசாயணக் கலவை ஊடுருவி அதை எடுத்து எலும்பின் வளர்ச்சியும் அதற்குப் போதுமான நிலைகள் கொண்டு வலு கொடுத்துக் கொண்டேயிருக்கும்.
ஏனென்றால் உருவாக்கிய அந்த அணுக்களை வைத்துத்தான் அதன் மலம் எலும்பாகிறது.
ஆனால் அந்த இரசாயணக் கலவையில் வேதனை என்ற விஷ அணுக்கள் உருவாக்கி விட்டால் எலும்பை உருவாக்கிய அணுக்களை இது விழுங்கத் தொடங்கி விடுகின்றது.
இது விழுங்கத் தொடங்கினால் எலும்புக்கு வலு கொடுக்கும் அந்த அணுக்களின் மலங்கள் கிடைக்கவில்லை என்றால் எலும்பு சொத்தையாகி விடும். தொட்டால் கத்தரித்து விடும். இது போன் டி.பி. (BONE T.B.)
இதைப் போல வேதனை உணர்வுகள் கலந்து ஒவ்வொரு உறுப்புக்களில் வரப்படும் பொழுது மூளையில் டி.பி… கண்களுக்கு வரும் நரம்பு மண்டலங்களில் டி.பி. என்று காரணப்பெயர் வைக்கின்றார்.
இன்னென்ன அணுக்களின் செயலாக்கங்களால் இந்த அணுக்கள் மற்ற அணுக்களைக் கொன்று சாப்பிடுகின்றது என்று டாக்டர்கள் சொல்வார்கள்.
விஞ்ஞான அறிவுப்படி டி.பி. அணுக்களைக் கொல்லும் போர் முறைக்காக அதைக் காட்டிலும் அதிகமான அணுக்களைச் சேர்த்து பல கலவைகளைச் சேர்த்து (3-4 மாத்திரைகள) அதை உணவுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.
அதே சமயத்தில் இரத்த நாளங்களில் இஞ்சக்சன் மூலம் கலக்கச் செய்கின்றனர். அல்லது நேரிடையாகவே அமில சக்தி உள்ள நரம்பு மண்டலங்களுக்கு ஆசிட் போன்றவைகளைச் செலுத்தச் செய்கின்றார்கள்.
அப்பொழுது அந்த எலும்புகளில் உள்ள அந்த விஷத்தன்மையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்துகின்றனர்.
தடைப்படுத்தினாலும் அதனுடைய கொடுமையான உணர்வுகள் நாம் சிறுகச் சிறுக வேதனையின் உணர்வுகள் எடுத்திருந்து மற்றவைகளுக்கு இணைத்து அந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அறிவை ஊட்டும் நிலையில் இது மடிந்து விட்டால் சிந்தனை மாறி விடும்.
இதற்காக இந்தச் சிந்தனையின் நிலையை வைத்து இன்னென்ன உறுப்புகளில் இன்னென்ன இராசாயணக் கலவை கொண்டு இயங்குகின்றது என்று காண்கின்றனர்.
விஞ்ஞான அறிவுப்படி ஈரல் என்றால் அதற்குச் சத்து கொடுப்பதற்காக மற்ற தாவர இனங்களைப் புசித்து அந்த நிலையில் நல்ல அணுக்கள் உருவாக்கும் தன்மையை ஆரம்பத்தில் கொண்டு வந்தார்கள்.
இப்பொழுது நேரடியாகவே மாட்டு இனங்களில் இருந்தோ ஆட்டு இனங்களில் இருந்தோ மனிதனுக்கொத்த உணர்வுகள் கலந்த அந்த ஈரலை மற்ற இராசாயணக் கலவையைக் கொண்டு அதைப் பவுடராக்குகின்றார்கள்.
அந்தக் கலவைகளை இஞ்சக்சன் மூலமோ உணவு மூலமோ உட்செலுத்தி நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றார்கள்.
ஆக எலும்பை உருக்கும் அணுக்களிலிருந்து மீட்க மருந்துகளினால் அந்த அணுக்களை உருவாக்கி இதனைக் கலந்து மற்ற அணுக்கள் செத்து விடாது அதற்குகந்த உணர்வின் சத்தைச் சேர்க்கின்றனர்.
இன்னென்ன நிலைகளில் இன்னென்ன உறுப்புகளுக்கு அது பாதிக்காத நிலைகள் கொண்டு இந்த இஞ்சக்சன் செய்கின்றார்கள்.
இதையெல்லாம் நான் பேசுகிறேன் என்றால் விஞ்ஞான அறிவில் படித்தவன் அல்ல. மெய்ஞான அறிவை ஊட்டி அந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்று குரு காட்டிய அருள் வழியில் தான் இதை வெளிப்படுத்துகின்றேன்.
1.காற்றில் கலந்துள்ள உணர்வை நீ நுகர்ந்து
2.உணர்வின் தன்மை அறிந்து
3.அந்த இயற்கையின் செயலாக்கங்களை நீ அறி…! என்று குருநாதர் சொன்னார்.
அவர் கொடுத்த அருள் ஞான வித்தின் துணை கொண்டுதான் இயற்கையின் விளைவு அது எவ்வாறு…? என்ற நிலைகளில் நான் அறிய முடிகின்றது.
இதையெல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சாம வேதத்தின் மூலங்களை குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்தவிதம்
காட்டுக்குள் புலி செத்துக் கிடக்கிறது. அந்த உடலிலிருந்து வெளிப்படும் “அழுகிய உணர்வுகள்…” மணங்களாக வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.
அப்படிக் கவர்ந்து கொண்ட பின் அதனுடைய சக்தி வலிமையாக இருக்கின்றது. அதே சமயத்தில் இயற்கையிலேயே விஷத்தின் தன்மை கொண்ட ஒரு செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி நுகர்ந்து
1.அது அலைகளாக வரப்படும் பொழுது
2.இந்தப் புலியின் உணர்வின் தன்மையை நகர்த்திச் (துரத்தி) செல்கின்றது.
நகர்த்தி வேகமாகச் செல்லப்படும் பொழுது அடுத்துப் பல செடிகளின் உணர்வுகளுடன் மோதி இது கலவையாகி ஒரு சுழற்சி என்ற நிலையை அடைகின்றது.
இப்படி மூன்றும் ஒன்றாகிக் கருத்தன்மை அடைகின்றது. எடை கூடி பூமியின் ஈர்ப்பில் சிக்கி மண்ணிலே பதிகின்றது.
உதாரணமாக… வேப்பமரத்தினுடைய சத்தும் ரோஜாப்பூவினுடைய சத்தும் விஷச் செடியினுடைய சத்தும் சேர்ந்து புது விதச் செடியாகக் கருவேப்பிலையாக மாறியது போன்று…
1.இரத்தத்தை உறிஞ்சி வாழும் புலி (இறந்தது) உடலிலிருந்து வந்த உணர்வுகள்
2.மற்ற விஷச் செடியின் மணத்துடனும்… விஷமற்ற செடியின் மணத்துடனும் இணைந்து
3.புது விதத் தாவர இனமாக மாறுகின்றது
அந்த வித்து முளைத்துக் கொடியாகவோ செடியாகவோ வளர்ந்த பின் இரத்தம் கொண்ட மனிதனோ யானையோ புலியோ குருவியோ அந்த இடத்திலே சென்றால் அதை அப்படியே இழுத்துக் கவர்ந்து இரத்தத்தை உறிஞ்சிவிடும்… மடிய வேண்டியது தான்.
அஸ்ஸாம் காடுகளில் இது நிறைய உண்டு. இது எல்லாம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையைக் குருநாதர் காட்டினார்.
இங்கே நாம் வாழும் பகுதியில் அனேகமாக இல்லை. வைத்தியத்திற்காகப் பறித்து விடுவார்கள்.
1.கேன்சர் நோய் வந்த இடத்தில் இந்தச் செடியின் சத்தை மேலே தடவினால்
2.விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிடும் சக்தி பெற்றது.
இதைப் போன்ற செடிகள் விளைவது மிகவும் கடினம்.
அக்காலத்தில் இதை “ராஜ வைத்தியம்…” என்று சொல்வார்கள். அரசர்களுக்கு இதைப் பயன்படுத்திப் பயன்படுத்தி இந்த வித்தை மீண்டும் வளர்க்காது மறைந்தே போய்விட்டது.
குருநாதர் இத்தகைய செடிகள் எல்லாம் எப்படி உருவாகின்றது…? உருவானது…? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக காடுகளிலும் மேடுகளிலும் எம்மை (ஞானகுரு) அலையச் செய்தார்.
எனக்கு அங்கே சாப்பாடு இரண்டு பேரிச்சம்பழம்… இரண்டு பச்சிலை அவ்வளவுதான்…! அதைச் சாப்பிட்டு விட்டுத் தண்ணீரைக் குடித்துவிட்டு… குருநாதர் சொன்ன வழியில் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
இப்படித்தான் இயற்கையின் நிலைகளைப் பார்க்கும்படி செய்தார்.
1.ஒவ்வொரு நொடிக்கு நொடியும் இந்த காற்று மண்டலம் எப்படி மாறுகின்றது…?
2.எதன் வழி அது இயங்குகின்றது…?
3.செடி கொடிகளின் உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்று அந்த நிலையைப் பார்த்துக் கொண்டே நான் செல்ல வேண்டும்.
ஒரு இடத்தில் சுழிக்க்காற்று வருகிறது என்றால் அங்கு ஓடிச் சென்று நான் பார்க்க வேண்டும். எங்கே நிலை பெறுகிறதோ அங்கே பூமியிலே படரும் இடத்திற்குச் சென்று மணத்தால் அதை நுகரும்படி செய்வார்.
1.மணத்தால் நுகர்ந்து என்னென்ன செடிகள் வந்தது…? எல்லாம் கலந்து எப்படி ஆகிறது…?
2.புதுவிதமான செடிகளாக எப்படி உருவாகிறது…? என்று காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் பார்க்கும்படி செய்தார்.
இதைத்தான் ஆயுர்வேதம் என்று சொல்வார்கள். தாவர இனங்களின் உணர்வுகள் உணர்ச்சியாக இயக்குவதைச் “சாம வேதம்…” என்றும் சொல்வார்கள் .
இயற்கையின் உண்மை… அந்த உணர்ச்சியின் தன்மை எப்படி உருவானது…? ஒரு செடியின் வாசனை அது எப்படி இயக்குகின்றது…? இந்த உணர்ச்சியின் தன்மை எப்படி இயக்குகின்றது…?
ஒரு உணர்வுக்குள் ஒரு உணர்வைச் சேர்த்து ஒரு உணர்வுக்குள் மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது இசைக்கொப்ப இந்த உணர்வுகள் இசையை மாற்றி எவ்வாறு செய்கிறது…? என்று வேதங்களின் மூலங்களில் இது கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த உண்மைகளை நீங்களும் உணர வேண்டும்… உங்களுக்குள் இயக்கும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அறிய வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.
அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே…!
கொங்கணர் ஞானம் பெற்ற நிலைகளை விவரிக்கத் தொடங்கினால் அது எந்த வகை என்றுரைக்க நினைப்பதற்கு அடங்கிடுமோ..?
“மாடி வீட்டு அரசன்… கோடி வீட்டுப் புருஷன்…!” என்ற வகை உண்மை நிலையில் இவர் வேறு… அவர் வேறு…! என்று பிரித்துச் சொல்லும் வகையில் “கோடி வீட்டுப் புருஷார்த்த புருஷனே கொங்கணர்…!” என்றாலும் அவர் எடுத்த அவதார நிலைகளே பாலாஜி… வெங்கடேஸ்வரன்… ஸ்ரீனிவாசன்…!
இருந்தாலும் பின் அவரே மாடி வீட்டு அரசன் ஆக ஆன செயலில் இரு வகைச் சூட்சமங்கள் பெற்ற அவதாரமே ஸ்ரீனிவாசன் என்னும் வெங்கடேசக் கொங்கண மாமகரிஷி.
ரிஷி மூலம் பார்க்காதே… நதி மூலம் பார்க்காதே…! என்று அக்காலங்களில் சொல்வார்கள். அதனின் வகையில்
1.மெய்ப் பொருளைக் கண்டறிந்த அந்த மாமகரிஷிகள் பெற்ற ஞானத்தை மட்டும் நாம் அறிந்து
2.அதைப் பெறுகின்ற ஞானத்தின் வளர்ச்சிக்கு முயல்வோம்.
அறிவின் வளர்ச்சிக்கு வளச்சியூட்டும் செயலாக அந்தக் கொங்கணர் பெற்ற சூட்சமத்தின் தொடர் நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அன்றைய கால கட்டங்களில் ஞானி சித்தனாகி… சித்தன் முனிவனாகி… பின் ரிஷியாகும் தொடர்பில் அனைத்தையும் அனுபவ ஞான வளர்ச்சி என்னும் தொடர்பில் பெற்றவர்கள் தான்.
தனது அறிவின் ஞான வளர்ப்பை மீண்டும் மீண்டும் வளர்ப்பாக வளர்த்திடவும் இந்த உலக மக்கள் உய்வு (பிறவியில்லா நிலை) எய்திடவும் ஏற்படுத்தப்பட்டது தான் ஜெப நிலையும் தியான நிலையும்.
அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய… வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மூச்சலைகளையே ஒவ்வொரு உயிரும் உண்ணும்படியாக தியானத் வழித் தொடரை ஏற்படுத்தினார்கள்.
எந்தெந்த உயிராத்மாக்கள் எண்ணி ஏங்குகின்றதோ அவர்களுக்கெல்லாம்
1.தாங்களே (மகரிஷிகளே) உணவும் ஆகி
2.உணவாக்கிட விறகாகவும் எரிந்து
3.ஆகாரமாகப் புசிக்கும் பக்குவ கதியில் அதாவது நமது உயிரான்மாக்கள் ஆன்ம சக்தியைக் கூட்டிடும் ஆகார கதிக்குத் தானே ஆகாரமாகி
4.பேரருள் பேரொளி சக்தியையே அளித்திட்ட வள்ளல் பெருமக்களே மகரிஷிகள் ஆவர்.
உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே.
நம்முடைய வளர்ச்சிக்கு வழி காட்ட உறுதுணையாக இருந்து… நாம் பெறும் சக்திக்கே சக்தி அளித்திட்ட..
1.அந்தச் சக்தியின் செல்வங்கள் (மகரிஷிகள்) பெற்ற நற்சக்திக்கு வலு சேர்க்கும் விதமாக
2.நம்முடைய ஞான சக்தியை வளர்த்திடும் நிலையாக நாம் அனைத்தையும் அறிந்து உணர்ந்திட வேண்டும்.
கோபம் குரோதம் காமம் ஆசை விருப்பு வெறுப்பு என்னும் தொடரிலே அவசரம் ஆத்திரம் பழி பாவம் என்று வரும் நிலையில் அவை அனைத்தையும் நாம் நீக்கிடும் உயர் ஞான சக்திக்கு அந்தக் கொங்கணவர் பெற்ற… பெற்று அளித்துக் கொண்டிருக்கும் அனுபவப் பாடம் நமக்குப் பேருதவியாக இருக்கும்.
ஏனென்றால் கொங்கணவர் தன் தாய் சக்தியின் தொடர்பு மூலமாகவும் தன் மனையாளின் சக்தி (பத்தினி) மூலமாகவும் தான் துர்க்கதியை அகற்றி நற்கதியை அடைந்தார்.
தாய் சக்தி… மனைவி சக்தி… என்ற ரிஷி பத்தினி சக்தியின் கலப்பு பெற்ற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் ஏங்கிப் பெற்றால் அவர்களின் வளர்ச்சியின் அருள் ஒளி வட்டத்தில் நாம் அனைவரும் கலந்திடலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆயிரம் நல்லது செய்து… என்ன பலன்? “தெய்வம் என்னைச் சோதிக்கின்றது” என்கிறோம் – விநாயகர் தத்துவம் என்ன சொல்கிறது?
வாழ்க்கையில் மனிதர்கள் யாரும் தவறு செய்யவில்லை. பக்தி மார்க்கத்தில் இருப்போர் எவரும் குறைகளைச் செய்யவில்லை.
1.நல்லவைகளைச் செய்ய வேண்டும்.
2.நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்
3.பிறரைக் காக்க வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டிருந்தாலும்
4.”பிறர் படும் துயரங்களைக் கேட்டுணர்ந்த உணர்வுகள்… பதிவான பின்… என்ன ஆகின்றது…?”
நாம் பலகாரங்களைச் சுவையாகச் செய்து வைத்த பின்பு அதிலே சிறிதளவு உப்பு அதிகமாகி விட்டால் அதனின் சுவை கெட்டுவிடுகின்றது.
இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் நல்லவைகளைச் செய்தாலும் பிறர் படும் வேதனைகளை நாம் கேட்கும் பொழுது அவர்கள் கஷ்டமெல்லாம் நமக்குள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே இந்தத் தீமையான உணர்ச்சிகள் வளர்ச்சி அடைகின்றது.
பல பொருள்கள் தனித்தனியாக இருக்கின்றது. பலகாரமாகச் செய்யும் பொழுது எல்லாவற்றையும் ஒருக்கிணைந்து அந்த உப்பையும் இணைத்தால் தான் பலகாரம் சுவையாக இருக்கின்றது.
ஆனால் அந்த உப்பு கூடிவிட்டாலோ சுவையின் தன்மையை மாற்றி விடுகின்றது.
இதைப் போல நம் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் செயல்கள் அதிகமாக இருப்பினும் மற்றவர்களையும் நாம் மகிழ்வடையச் செய்கின்றோம்.
சில பேர் மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் அவர்களை மகிழச் செய்வார்கள். 100க்கு 99 பேர் அந்தக் கொள்கையில் உள்ளவர்கள் என்று கூடச் சொல்லலாம்.
பிறருக்கு உதவி செய்யும் நிலைகளில் அதை மெச்சிச் செய்வார்கள். ஆனால் பின்னாடி “என்ன செய்து… என்ன பலன்…?” என்று வெறுப்பார்கள்.
பிறர் படும் துயரங்களைக் கேட்டறிந்து கேட்டறிந்து ஒருவருக்கு உதவி செய்தால் அவர் மகிழ்கின்றார். மற்றவர்களுக்கு உதவி செய்தால் அவர் மகிழ்கின்றார்.
1.இதைப் போல ஆயிரக் கணக்கோருக்கு உதவி செய்கின்றார்.
2.அவர்கள் எல்லாம் மகிழ்கின்றார்கள்.
3.ஆயிரம் பேரிடம் கேட்டுணர்ந்த கஷ்டத்தின் உணர்வுகள் இவருக்குள் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து
4.இவரின் சுவையைக் கெடுத்துவிடுகின்றது.
இதைத் “தெளிவாகக் காட்டுகின்றார்…” நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
கோவிலினுடைய தத்துவமே “உதவி செய்” என்று தான் சொல்கிறது. ஆனால் உதவி… “எப்படிச் செய்ய வேண்டும்?” என்று நாம் அறிந்துள்ளோமா…?
பக்தி மார்க்கத்தில் இருப்போர் “ஆயிரம் பேருக்கு நன்மை செய்தேன்…” என்ற நிலைகளில் பின்னாட்களில் தெய்வத்தை எப்படி எண்ணுகின்றோம்…?
1.நான் உன் வழியிலே தான் அனைவருக்கும் உதவி செய்தேன் என்னை ஏன் இவ்வாறு சோதிக்கின்றாய்…?
2.உனக்காக நான் எத்தனை காலம் நான் விரதம் இருந்தேன்…?
3.எத்தனை யாகசாலைகளைச் செய்தேன்…? எத்தனை ஆலயங்களை நான் கட்டினேன்… அதற்கு உதவி செய்தேன்…?
4.எத்தனை பக்தர்களை உனக்காக வரவழைத்தேன்…? எத்தனை பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்தேன்…?
5.உன்னை நாடி வருவோருக்கெல்லாம் எத்தனை உணவைக் கொடுத்தேன்…?
6.என்னை ஏன் இவ்வாறு சோதிக்கின்றாய்….? என்று கேட்கும் நிலை வருகின்றது.
இப்படித்தான் பக்தி மார்க்கத்தில் உள்ளோர் நாம் இருக்கின்றோம்.
பக்தி என்றால் நல்ல ஒழுக்கமாக இருந்தாலும் அதைக் காத்திடும் நிலையாக விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.
நல்லதை எண்ணிப் பிறருக்கு உதவி செய்கின்றோம். ஆனால், அவர்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் கேட்டறிந்த பின்பு தானே நாம் உதவி செய்கின்றோம்.
நாம் கேட்டறிந்த கஷ்டங்களையும் துயரங்களையும் நாம் யாராவது தூய்மைப்படுத்துகின்றோமா…? அதைக் கடவுள் வந்து சுத்தப்படுத்துவாரா…?
1.செடிக்குள் விளைந்தால் வித்து
2.மனிதனுக்குள் விளைந்தால் வினை
3.வினைக்கு நாயகனாக விநாயகனாக நாம் மனிதனாக இன்று உருவாகியுள்ளோம்.
மனிதனான பின் கஷ்டங்களையும் துயரங்களையும் நாம் வினையாகச் சேர்த்தால் அந்த வினை நமக்குள் விளைந்தால் நம்மை எங்கே கொண்டு சேர்க்கும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
அதை உணர்த்துவதுதான் விநாயகர் தத்துவமே. மண்ணுலகில் நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி விண்ணுலகில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி வாழ்ந்து கொண்டுள்ளான்.
அதை (துருவ நட்சத்திரத்தை) அரசாகக் காட்டினார்கள். வாழ்க்கையில் நமக்கு முன்னாடி வரும் கசந்த நிலைகளை வேப்பமரமாகக் காட்டினார்கள்.
அன்றாட வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளிலிருந்து விடுபட அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி அதை வினையாகச் சேர்த்து அந்த வினைக்கு நாயகனாக ஒளிச் சரீரம் பெறு…! என்பது தான் விநாயகர் தத்துவம்.
ஒவ்வொரு மனிதரும் இதைப் பெற அன்று செய்து வைத்தான் ஞானி.
சாகாக்கலையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்
மனிதனுடைய வாழ்க்கையில் வரும் ஆசை எல்லாம் சாகாக் கலை…!
1.என்னை அவன் இப்படிப் பேசினான்… இருக்கட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன்…! என்றால் இது சாகாக் கலைதான்
2.காரணம் உடலை விட்டுச் சென்றால் அவனுடைய உடலுக்குள் சென்று இதே வேலையைச் செய்யும் (அழியாதபடி).
எந்த ஆசையின் தன்மையை இந்த உடலில் பெற்றானோ சாகாக்கலையாக அடுத்த உடலில் வந்த பின் அந்த வேலையைச் செய்யும்
ஆனால் நம் குருநாதர் நமக்குக் காட்டியது வேகா நிலை.
இராமலிங்க அடிகள் கூட இதைப்பற்றிப் பாடி இருக்கின்றார் சாகாக்கலை… வேகாநிலை… போகாப்புனல்…! வேகா நிலை பெற்று விட்டால் நாம் இன்னொரு உடலுக்குள் போக மாட்டோம்.
வேகா நிலையைப் பற்றிச் சொன்னால் இல்லை சாகாக் கலைதான் பெரிது…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்
நாடி சாஸ்திரங்களிலோ வைத்தியரீதியிலே பார்த்தோம் என்றால்
1.காயகல்பம் செய்து இந்த உடலை நாங்கள் அழியாது வைத்திருக்கிறோம்
2.போகர் 12000 எல்லாம் படித்துவிட்டு இப்படி வாதம் செய்வர் பலர் உண்டு.
ஆனால் அதை அவர் எழுதினாரா…?
பின்னாடி வந்தவர்கள் அதனுடைய தத்துவத்தை எடுத்து இந்த உணர்வின் தன்மையை நாடிகளாக எழுதி வைத்திருக்கின்றார்கள்.
இயற்கையில் ஒன்றுடன் ஒன்று சேர்க்கும் போது தங்கம் எப்படி உருவாகின்றது…? அதைப் போல் உன் மனதை நீ எப்படித் தங்கமாக்க வேண்டும்…? என்று போகன் அன்று சொல்லி இருந்தால்
1.புறத்தில் தங்கம் செய்வதிலேயே ஆசைகளைக் கொண்டு செல்கின்றார்கள்
2.இருக்கிற சொத்தை எல்லாம் இழந்து ஆண்டியாகச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
3.தங்கம் செய்ய முடியும் என்ற இந்த ஆசை பேய் மனமாக மாறிச் சுற்றுபவர்கள் இன்று நிறைய உண்டு.
செய்து செய்து பார்த்த பின்… என்னிடமே (ஞானகுரு) அதைக் காண்பித்து தங்கமாக வந்து விட்டதா…? பார்த்துச் சொல்லுங்கள்…! என்று என்னைச் சுற்றியவர்களும் உண்டு.
ஏனென்றால் குருநாதர் ஒரு சமயம் ஒரு இரும்புக் கரண்டியும் ஈயக் கட்டியையும் எடுத்து வா என்று சொன்னார். காட்டிற்குள் அழைத்துச் சென்றார். பல குப்பைகளை எடுத்து வரச் சொல்லி அதை எல்லாம் போட்டு வேக வைடா… தீயை வைத்து ஏரிடா…! என்றார்
அவர் சொன்ன இடங்களிலே தேடித் தேடித் தேடி… இந்த இடத்தில் இந்தக் குப்பையை எடு… இன்ன இடத்தில் இந்தக் குப்பையை எடு…! என்று எனக்கும் தெரியாமலே இதைச் செய்தார்.
அவர் சொன்ன இடத்திலிருந்து குப்பைகளை எடுத்துக் கொண்டு வந்தேன். போட்டு எல்லாவற்றையும் எரித்த உடனே இந்த உணர்வுகள் பட்டவுடனே ஈயம் தங்கமாக மாறிவிட்டது
ஆசாரியிடம் கொடுத்து உறைத்து பார்த்த பின் அடேயப்பா… இது உயர்ந்த தங்கமாக இருக்கின்றது இதிலே இன்னும் செம்பைச் சேர்க்கலாம்… உயர்ந்த தங்கமாக இருக்கிறது..! என்று சொல்லுகின்றார்.
அட… நீ இந்தச் சாமியாரிடம் (குருநாதரிடம்) சுற்றிக் கொண்டிருப்பது எதற்கு…? என்று இப்பொழுது தான் எனக்குத் தெரிந்தது நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா என்று அந்த ஆசாரி சொல்கின்றார்.
அதற்குப் பின் நான் என்ன செய்தேன்…?
குருநாதர் எந்தெந்த இடத்தில் குப்பைகளை எடுத்து வந்து அதைச் செயல்படுத்தச் சொன்னாரோ அதே மாதிரி நானாகவே செய்து பார்த்தேன் தங்கமாகிவிட்டது.
தங்கமான பின் கொண்டு போய் விற்று விட்டு வந்தேன் வந்த பின் குருநாதர் என்ன சொன்னார்…?
இங்கே வாடா…! என்றார்.
என்னிடம் இருந்து காசை எல்லாம் வாங்கிக் கொண்டார். இங்கே எத்தனையோ பேர் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் காசைக் கொடு என்றார். எனக்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் கொடுத்தார்
1.இனிமேல் இந்த மாதிரியான வேலையைச் செய்யாதே.
2.இதைத் தெரிந்து கொண்ட பின் உன் எண்ணம் எங்கே செல்கின்றது…? உன் ஆசை எங்கே செல்கின்றது…?
3.உன் மனதைத் தான் நான் தங்கமாக்கச் சொன்னேன்
4.தங்கத்தைச் செய்ய வேண்டும் என்று நீ ஆசைப்பட்டால் உன் மனம் பித்தளை ஆகிவிடும்… இரும்பாகப் போகும்… துருப்பிடித்து விடுமடா…!
5.இந்த வேலையை இனிமேல் செய்யாதடா…! என்று காசை எல்லாம் பிடுங்கிக் கொண்டார்.
ஆசை யாரை விட்டது…! குருநாதர் தங்கத்தைச் செய்தார். நான் பார்த்தேன்… எனக்கும் அந்த ஆசை வருகிறது.
ஏனென்றால் இரண்டாம் தடவை நான் தங்கம் செய்து விற்கும் போது “தங்க நகை செய்பவர்கள்… நீங்கள் எதை எதைச் செய்ய வேண்டுமோ செய்து கொடுங்கள். நாங்கள் விற்றுத் தருகின்றோம்… உங்களுக்கு வேண்டிய கட்டடம் எல்லாம் கட்டித் தருகிறோம்…!” என்று சொல்கின்றார்கள்.
இப்படியும் ஆள்கள் வருகின்றார்கள்… உடலின் இச்சைக்கு நிறையப் பேர் வருகின்றார்கள். காரணம்
1.இந்த ஆசை எப்படித் தூண்டுகின்றது…?
2.மனிதன் எப்படி வாழ்கின்றான்…? என்ற நிலைகளை எல்லாம் அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன்…?
உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் என்ற உணர்வுகளை வளர்த்துப் பிறவில்லா நிலைகள் அடையும் நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேசம்.
அதன் வழி நீங்கள் செயல்பட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கணவனும் மனைவியும் பெற்று வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ்ந்து… நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி… நஞ்சினை வென்று பேரருள் பேரொளி பெற்று… பெருவீடு பெருநிலை என்ற நிலையை அடைதல் வேண்டும்.
உங்கள் பார்வையில் உங்கள் குடும்பத்தில் தீமைகள் அகற்றப்பட வேண்டும். உங்கள் பார்வையில் உங்கள் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும்.
கல்வியில் சிறந்த ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானம் பெற்றிடும் அருள் சக்தி பெற்ற குழந்தைகளாக வளர்ந்திட வேண்டும். அதன் வழி நீங்கள் எல்லோரும் வாழ வேண்டும் என்று நான் (ஞானகுரு) வேண்டிக் கொள்கிறேன்.
உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!”
உலகோதய வாழ்க்கையின் சூழலில் சிக்கிக் கரை காணாது மன மயக்கமுறும் “மனித மனம்” கரையத் தொட்டுவிட எட்டிவிட நினைக்கின்றது. ஆனாலும் அதனுடைய செயல் முறைக்கு வழி வகை அறிய முடியாது எல்லை கடந்த நிலையில் மயக்கமாகி
1.பின் கைக்குக் கிடைத்த பொருள் போதும் என்று கரை சேரலாம் என்ற நினைப்பும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையின் நிகழ்வில் தன் கைக்குக் கிடைத்த ஒரு மிதவையின் துணையினால் தன் முயற்சி கொண்டு கரை காண்பதும் உண்டு.
அதாவது கரை காணாத வாழ்க்கைச் சாகரத்தில் திமிங்கலங்களும் பல பல விஷ ஜெந்துக்களும் உண்டு என்ற போதும் தானே கண்ட வழியாக ஓர் படகைச் செய்வித்து… அதில் அமர்ந்து எதிர் திசைக்குத் துடுப்பிட்டு எண்ண கதி ஓட்ட வாழ்வில் செல்லும்
1.பல வழிப் பாதைகளில் இடம் சேரும் மனிதன்
2.வாழையடி வாழையாக வாழ்க்கை தன் நிலையே தனக்கு இத்தகையது தான்
3.தன் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்… உடல் நலக் குறைபாடுகளும்… மூப்பும் சாக்காடும் (இறப்பு) கண்டு சிந்திக்கத் தொடங்கினால்
4.தன் நிலை உணர்ந்து… பிறவித் துன்பம் நீக்கவும்.. தன் செயலில் தனக்குகந்த எண்ணப் புதிர்களை விடுவிக்கவும்…!
5.தன்னைப் பேரானந்தப்படுத்த ஓர் போதினியைத் (குரு) தேடத் தொடங்கினால்
6.அவனுடைய உண்மையான மனம் அதுவாக இருந்து அத்தகைய தேடுதலும் சிந்தித்தலும் சித்தித்தால்
7.இவன் தேடும் குருவும் இவனைத் தேடித் தானே வந்தடைகின்றார்… அல்லது இவன் வழியில் காத்துக் கொண்டிருக்கின்றார்…!
8.குருவின் அருட் பார்வையில் நனைகின்றான். நனைந்த பின் பிறவித் துன்பம் களையப்படுவதாக உணர்கின்றான்.
உலகோதய வாழ்க்கையிலும் தனக்கு ஒரு பாதை கிடைத்துவிட்ட எண்ணமும் அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு தனக்குப் போதிக்கும் குருவின் வழியைக் கடைப்பிடித்து நடக்கத் தன்னையே அந்தப் போதனைக்கு உட்படுத்தி
1.குறைவிலும் நிறை கண்டு
2.தன் ஞானச் செயலுக்கு வித்திட்டுக் கொள்கின்றான்.
இந்த வழித் தொடரில் குருவை அடையும் சிஷ்யர்கள் “அதிக அளவில் பெருகி…!” குருவை நெருங்கித் தனக்கு வேண்டிய தேவைகளுக்காகவும் தனக்கு ஏற்படும் சிக்கல்ளுக்கு மாற்று வழியைக் கண்டு உண்மையை உணர வேண்டும் என்றும் அந்த ஆர்வத் துடிப்பைக் காட்டுவதும் உண்டு.
1.ஆனால் வருகின்றவன் உலகோதய ஆசைக்கெல்லாம்… குரு சென்றால்
2.குருவின் செயலுக்கே களங்கம் அன்றோ..!
அந்த மெய் குருவோ அந்தச் செயலைக் கண்டித்துரைத்து இவன் அதி ஆசையை வேரறுக்கத் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுக்க பல கலைகளும் பயிற்றுவித்து அதிலே மயக்குறும் சிஷ்யர்களை விலக்குகின்றார்.
தனக்குகந்த சீடர்களைத் தயார்படுத்த சீடனுக்கும் சக்திகள் அனைத்தையும் ஊட்டி வாழ்க்கையின் வழியில் வரும் மோதல்களிலிருந்து தன் நிலை மாற்ற மனப் பக்குவத்தையும் ஏற்படுத்துகின்றார்.
அந்தப் பக்குவத்தை முயற்சி செய்து பெறுவதற்காகத் தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”
தன்னிடம் குருகுல வாசம் செய்ய வரும் சீடர்களுக்கும் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை. “தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கும் மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.
அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்
“காரணம் உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!
குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம். நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே…!”
உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.
மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது…!” என்ற உலகோதய ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.
அடுத்துப் படிக்கும் மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழிதனின் ஏகிவிடுவர்.
இதில் எல்லாம் தெளிந்து
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலகோதய ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.
4.அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள்.
அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது…!
தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.
1.தனக்குச் சக்தி வேண்டியே…! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.
அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.
சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது. வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது…!”
உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல…!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது…? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்துத்
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.
ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலகோதய ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்.
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நான் ஏதோ…; “கதை சொல்கிறேன்” என்று எண்ணி விடாதீர்கள்.
இயற்கை நிலைகளில் பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேச வாயிலாக அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார்
“மனிதனும் தெய்வமாக வேண்டும்… தெய்வ நிலை கொண்டு வேகா நிலை பெற வேண்டும்” என்று இராமலிங்க அடிகள் வெளிப்படுத்தினார்.
1.மண்ணுலகில் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.
2.அவர்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
3.மனிதனை மனிதனாக்க வேண்டும்
4.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் புகுத்த வேண்டும்
5.பகைமை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும்
6.பற்றுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற நிலையை உணர்த்திய
7.இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், மகாத்மா காந்தி போன்ற எத்தனையோ ஞானிகளும் மகான்களும் நம் பூமியிலே வாழ்ந்தார்கள்.
இதைப் போல ஓவ்வொரு மகானும் சொல்லி இருந்தாலும் அவர்களைப் பின்பற்றியவர்கள் என்ன செய்தார்கள்…?
இராமலிங்க அடிகள் இந்த உடலைப் விட்டு பிரிந்த பின் அவரை யாரும் விண் செலுத்தும் நிலை இல்லை. அவரைப் போற்றி துதிக்கும் நிலைதான் இருந்ததை தவிர பற்றுடன் பற்றித் தங்களுடைய வாழ்க்கைக்காகப் பற்றும் நிலை தான் வந்தது.
அவர்களுடைய அன்பைப் பெற்றனர். இந்த மனித வாழ்க்கையைத்தான் எண்ணி அவர்களிடம் வேண்டியிருந்தார்கள். ஆனால் அவர்கள் உடலை விட்டு அகன்ற பின் மகான்களின் ஆன்மாக்களை யாரும் விண் செலுத்தவில்லை.
ஆகவே இது காலத்தால் மறைந்த நிலைகள்.
மகான்கள் மக்களுக்காகப் பாடுபட்டார்கள். பிறர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று ஐக்கிய உணர்வை ஏற்படுத்தினார்கள்.
சூரியன் எவ்வாறு தனக்குள் ஒளியின் சுடராக அனைத்தையும் மாற்றுகின்றதோ அதே போல மகரிஷிகள் எவ்வாறு மாற்றினரோ
1.எல்லோரும் ஒன்றாக வேண்டும் என்று அத்தகையை மகான்கள் எண்ணினாலும்
2.“விண் செல்லும் ஆற்றலை…” அவர்களும் கற்றுணரவில்லை.
மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. “விண் செல்ல வேண்டும்” என்று யாரும் எண்ணவில்லை.
இத்தகைய மகான்கள் உணர்த்திய உணர்வுகளும் நமக்குள் உண்டு. “நீ முதலில் அவர்களை விண் செலுத்து…” என்று அதற்குச் சில உபாயங்களைச் சொல்லி விண் செலுத்தச் செய்தார் குருநாதர்.
காந்திஜி “மதங்கள் இல்லை.., பேதங்கள் இல்லை” என்று உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வெளிப்படுத்தினார்.
மக்களுக்குள் ஐக்கியமாக வாழ்ந்து மனிதன் என்ற ஆறாவது அறிவை கொண்டு நாம் அனைவரும் தீமைகளிலிருந்து விலகி நின்று உலக மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நிலைகள் கொண்டு எடுக்க வேண்டும் என்று உணர்த்தினார்.
அவ்வாறு அவர் உணர்த்தினாலும் இவர்களுடைய வேட்கையின் நிலைகள் கொண்டு வெறி கொண்ட உணர்வு கொண்டு அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சுட்டு வீழ்த்தினார்கள்.
காந்திஜியின் எண்ணங்கள் அப்பொழுதும் மற்றவர் மேல் பகைமை கொள்ளாது “இராமா… இராமா…” என்று உயர்ந்த குணத்தைச் சாந்தம் கொண்டு பிறருக்கு.., “என்னால் தீங்கு வரக்கூடாது” என்றுதான் எண்ணினார்.
அப்படி எண்ணினாலும் அவர் விண் செல்ல வேண்டும் என்ற நிலை அறவே அற்று விட்டது.
அத்தகைய மகான்களை எல்லாம் இன்று போற்றித் துதிக்கின்றோம். ஆனால் அதன் மறைவிலே பல தவறுகள் செய்வோரும் இன்று உண்டாகி விட்டார்கள்.
அவர் செய்த நன்மைகளைப் புகழ்கின்றோம். ஆனால் புகழ்ச்சி நிலைகள் கொண்டு மனிதர்கள் தங்களுடைய சுகபோகங்களுக்காகத் தவறு செய்யும் நிலைகளாக அதை உருமாற்றி விட்டார்கள்.
இதைப் போன்ற நிலையிலிருந்து மீள்வதற்கே எமது குருநாதர் இதையெல்லாம் சொன்னார்.
பிறரைக் காத்திட வேண்டும் என்ற நிலையில் செயல்பட்ட அந்த மகான்களின் உயிரான்மாக்களை அந்த மெய் ஞானிகளுடன் இருந்து தனித்து நின்று “நீ விண் செலுத்து” என்றார்.
அவர்களின் துணை கொண்டு இந்தப் புவியிலே விளைந்த அந்த ஆன்மாக்களைச் “சப்தரிஷி மண்டலத்துடன்… இணைக்கக் கற்றுக் கொடுத்தார்” மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
1.அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கிறது…?
2.எதனின் உணர்வை உனக்குள் கவர வேண்டும்…?
3.எதனின் வலுவின் துணை கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்…?
4.அந்த ஆன்மாக்களை உந்தி விண்ணிலே வீசி விட்டால் அந்த ஞானிகள் அருகிலே செல்லும்போது உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகின்றது.
5.ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது…? என்று
6.அவர் எம்முடன் இருந்தே இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.
இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் “நானல்ல…” குருநாதர் காட்டிய உணர்வின் தன்மையே இது.
ஒரு மரம் எவ்வாறு தன் மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய உணர்வு கொண்டு இயக்குகின்றதோ இதைப்போல ஒரு மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் செயல் எதுவோ அதனின் நிலைகளையே பேசுவர். அதனின் நிலையிலேயே வலுப்படுவர்.
இதைப்போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருக்குள் விளைந்த ஆன்ம ஞானத்தை மெய் உணர்வின் தன்மையை விண்ணில் வளர்ந்துக் கொண்டிருக்கும் உணர்வுகளைப் பரப்பும் மார்க்கத்தைக் காட்டினார்.
1.மக்கள் நலமாக இருக்கவேண்டும் என்று வாழ்ந்த மகான்கள்
2.சாதாரண வாழ்க்கையிலிருந்து அவர்கள் ஆன்மா பிரிந்த பின்
3.மீண்டும் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை முதலில் விண் செலுத்து என்றார்.
4.அவருடன் இருந்து அந்த மகான்களை விண் செலுத்தினோம்.
இராமலிங்க அடிகள் போகர் இராமகிருஷ்ண பரமகம்சர், விவேகாநந்தர் இராகவேந்திரர் ஐயப்பன் இவர்களையெல்லாம் விண் செலுத்தச் செய்தார் குருநாதர்.
அதனின் நிலை கொண்டுதான் அவர்களின் தத்துவத்தை இன்று நாம் பருகும் நிலையாக எமக்குள் அந்த உணர்வின் சத்தை ஊட்டி நீ இவ்வாறு பருக வேண்டும் என்று உணர்த்தினார்.
அவர்கள் முதலில் விண் செல்லும் போது எல்லோரும் ஐக்கிய உணர்வு பெற வேண்டும் என்று எண்ணச் செய்தார்.
1.அவர்கள் விண் செல்லும் போது
2.அவர்களின் உணர்வின் தன்மை உனக்குள் வருவதும்
3.உன் சொல்லைக் கேட்டுணர்ந்தோரும் ஐக்கிய உணர்வும் மெய் உணர்வைப் பெறும் தகுதியையும் பெறுகின்றனர் என்றார்.
இதைப் போல் நம்மை வளர்த்த தாய் தந்தையர்களின் மூதாதையர்களும் நம்மை வளர்த்திட எத்தனை நிலைகள் நாம் சிறு வயதாக இருக்கும் பொழுது தாத்தா பாட்டி என்று சொன்னால் அவருடைய சிரமத்தையும் பார்க்காது நமக்கு எத்தனையோ நிலைகளைச் செய்தார்கள்.
அதே போல் அந்த ஆன்மாக்களையும் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செலுத்த வேண்டும்…? என்று இத்தகைய நிலைகளையும் குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகக் காட்டினார்.
ஆனால் இன்றைய நிலையில் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்கள் குலதெய்வங்கள் குடும்பத்தைக் காத்திட்ட நிலைகள் கொண்டு அவர் ஆன்மாக்கள் பிரிந்து சென்றபின் என்ன செய்கின்றார்கள்…?
அமாவாசை அன்று இருண்ட நாளில் அவருக்கு வேண்டிய உணவை வைத்து அவர்களுக்கு வேண்டிய மற்றவைகளையும் படைத்து அழைக்கின்றார்கள்.
அவர்களை மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே இழுத்துப் பழகி விட்டனரே தவிர ஒளி என்ற சரீரம் கொண்ட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கும் நிலை முழுவதுமே அற்றுப் போய்விட்டது.
ஐதீகம் சாஸ்திரம் என்ற நிலைகள் இருளான அமாவாசை நாள்களில் அவர்கள் உணவாக உட்கொண்ட நிலைகள் கொண்டு அவர்களை ஏங்கி இந்தப் புவிக்குள் இழுக்கும் நிலைகளாகச் சாஸ்திர விதிகளை மாற்றி விட்டனர்.
ஆனால் அவர்களுக்கு உணவு எப்படிக் கொடுக்க வேண்டும்…?
பிறவா நிலை பெற்ற அருள் மகரிஷிகளின் உணர்வை என்றென்றும் அவர்கள் உணவாகப் பெற்று அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு நாம் விண் செலுத்த வேண்டும்.
“அங்கே இணைத்து” உடல் பெறும் உணர்வைக் கருக்கி விட்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக ஒளிச் சரீரம் பெறச் செய்தல் வேண்டும்.
இவ்வாறு தீமையை ஒடுக்கி ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதை நீ பருகு என்றார். “எல்லோருக்கும் அதைக் கிடைக்கச் செய்” என்றார்.
அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் பேசுகின்றேன்… உங்களிடம் அல்ல…!
உண்மையான யாகம் எது…?
நமது உயிர் ஒரு நெருப்பு…! நாம் எந்த உணர்வின் தன்மையை இங்கே சேர்க்கின்றோமோ அந்த உணர்வலைகளை உயிர் நமக்குள் பரப்பும். உணர்வின் சொல்லாக வரப்படும் பொழுது பிறருடைய நிலைகளை அங்கே இயக்கும்.
1.ஒரு மயக்கப் பொடியைப் போட்டால் சுவாசித்தால் மயங்கி விடுவோம்
2.நல்ல நறுமணத்தைச் சுவாசித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
இதைப் போன்று நல்ல உணர்வின் (நல்ல குணத்தின்) தன்மையானால் உயிரிலே பட்ட பின் அது நமக்குள் சுழல்கின்றது
1.அந்த உணர்வுகள் சொல்லாக வருகின்றது
2.கேட்போர் உணர்வுகளை இனிமைப்படச் செய்கின்றது
3.நட்பு என்ற நிலைகள் அதனால் வளர்கின்றது… பகைமைகளை மாற்றுகின்றது
4.அருள் உணர்வை நமக்குள் கூட்டுகின்றது
5.பேரின்பத்தைப் பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம்.
ஆகவே ஞானிகள் காட்டிய ஆலயங்களை நாம் ஒவ்வொருவரும் மதித்துப் பழகுதல் வேண்டும். நம் உடல் தான் ஆலயம் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதிக்க வேண்டும்.
இதை எல்லாம் நான் (ஞானகுரு) சொல்கின்றேன் என்றால் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன் உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன் மனித உடலை உருவாக்கிய நல்ல குணங்களை அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று குரு காட்டிய அருள் வழியில் தான் செயல்படுத்துகின்றேன்.
அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும்… உங்கள் ஆன்மா பரிசுத்தமாக வேண்டும்… நல்ல குணங்கள் இங்கே வளர வேண்டும் என்ற அடிப்படையிலே தான் நான் பேசுகின்றேன்
1.உங்களிடம் அல்ல
2.உங்கள் உயிரான ஈசனிடம்.
அப்போது இந்த உணர்வை நீங்கள் நுகர்கின்றீர்கள். அருள் ஒளி இங்கே பெருகுகின்றது. அது பெருக வேண்டும்… நீங்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் உயிரான ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்ற உணர்வுடனே நான் பேசுகின்றேன்.
அருள் உணர்வைப் பரப்பி உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திடும் நிலையாக செயல்படுகின்றேன். என் ஆன்மாவை நான் தூய்மைப்படுத்திக் கொள்கின்றேன்
நல்லது செய்ய வேண்டும் என்ற நிலையில்
1.நீங்கள் தப்பித் தவறி தவறானதைக் கேட்க நேர்ந்தால் கூட
2.நீங்கள் அதிலிருந்து விடுபட்டு உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுவதால்
3.அது எனக்குள் வருவதில்லை
சூரியன் பல பல உணர்வுகளை எடுத்தாலும் எல்லாவற்றையும் அது எப்படி ஒளியாக மாற்றுகின்றதோ… அது போல் உயிரணு தோன்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிய பின்
1.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்
2.அவனைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.
சூரியனிலிருந்து வரக்கூடிய கலர் ஆறு… உணர்வுகள் மோதும் பொழுது… ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு… உணர்வின் தன்மை அறிந்து (வெளிச்சம் – ஒளி) எடுப்பது.
அதைத் தான் ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான் என்று சொல்வது. அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.
“வாயு ஸ்தம்பம்…”
மனிதன் (ஞானி) தன் அறிவின் ஞானம் கொண்டு ஞானப் பாதையின் வளர்ச்சியில் உயர் ஞான எண்ணச் செயல்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால் அவன் கடைப்பிடிக்க வேண்டிய “சத்தியத்தின் சக்தி” என்பது எதுவப்பா…?
உயர் ஞானத் தத்துவப்படிச் செயல்படும் அனைத்திலுமே எண்ணம் சொல் செயல் செயலில் ஒரே நேர்கோடாகச் சத்தியத்தின் செயலாகப் பரிணமிக்க ஞானி தன் ஆக்கத்தின் ஆக்கமாகிய ஊக்கத்தில் செயல்படும் பொழுது சிவத்தைப் பெறுகின்றான். அந்தச் சிவம் என்பதே அன்பு தான்.
சத்தியத்தையும் சிவத்தையும் (அன்பையும்) கடைப்பிடிக்கும் செயலில் தன் உயிர் ஆன்ம ஜோதியை வளர்த்துக் கொள்ளும் மனப் பக்குவம் கொண்டிட்டால் அத்தகைய அழகு தான் சுந்தரம் என்பது.
சத்தியம் சிவம் சுந்தரம் பெறுதல் என்பதெல்லாம் தான் கடைப்பிடித்து வரும் வழியில் உயர்விற்கு வழி காட்டிடும் மார்க்கம் “இது தான்…” என எண்ணத் தெளிவு கொண்டிடல் வேண்டும்.
உயிரான்மத் தத்துவத்தில்
1.சரீரத்துடன் ஒட்டித் தன்னுள் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் பரிணாமம் தான் “உயிர் சக்தியின் சக்தி ஓட்ட முறை…” என்பதை அறிந்து
2.உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் மேலிருந்து கீழுமாக கீழிருந்து மேலுமாக
3.ஒரே சீரான ஒளி வட்ட அணுவின் சிவ பிம்பமாகச் சரீரத்தின் சுற்று வட்டக் குறுக்கோட்டத்தில் செயல்படும் மெய் ஒலி நாதத் தொடர்பில்
4.உள்ளிருந்து காந்த அமிலம் சக்தியாகச் சுழன்றிடும் ஓட்டச் செயல் உயிர் ஆன்ம ஒளி சக்தி – சுற்றி ஓடும் அந்த ஒளிக் காந்தத்தின் தொடரை அறிந்து
5.தன்னுடைய ஈர்ப்பின் வலுவால் எண்ணத்தின் வீரியம் கொண்டு புவி ஈர்ப்பை விடுத்து
6.காற்றில் எழும் சக்தியின் தொடர் கொண்டு இந்தச் சரீரத்தையே மிதக்க வைக்கும் தன்மை தான் “வாயு ஸ்தம்பம்…!”
சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…!
இந்தச் செயல் முறையில் வானத்தில் ஒரு மண்டலமாக தனித் தன்மை வாய்ந்த… பிரகாசமான சக்தி கொண்டு… ஒளி பெற்று ஈர்த்து வளர்த்து சுழன்று ஓடி… “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொண்டிடலாம்…!”
அலை வீசாத கடல் என்ற பால் வெளி மண்டல சூட்சமத்தில் வாழையடி வாழை என உயிரினங்களை வளர்க்கச் செயும் பூமிகள் உருவாகி அவை தன் ஈர்ப்பின் செயலுக்கு ஞானச் செல்வங்களை (மனிதர்களை) வளர்ச்சிப்படுத்துகின்றது.
தன்னையும் வளர்த்துக் கொண்டு உயர் ஞான ஆன்மாக்களை வளர்ச்சியுறச் செய்வதன் தொடர் நிலை எல்லாம் மூலத்தின் மூலத்தில் கலப்பதற்கே ஆகும்.
உடலில் உள்ள ஒளி காந்த சக்தியின் ஈர்ப்பின் வலுவால் விண் கோள்கள் விண்மீன்கள் அனைத்தையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி ஈர்த்திடும் அந்தச் செயல் முறைக்கும் சூட்சமம் உள்ளது.
1.சரீரம் ஈர்த்துச் சமைத்து வெளித் தள்ளும் சுழல் ஓட்ட வட்டச் செயலில்
2.தன் சரீரத்தைச் சுற்றிலும் ஒரு கவசமாக வீரிய காந்த வலுவை உள் நிறைத்து
3.வெளியிலிருந்து வரும் காற்று நம் சுவாசத்திற்குள் வந்து
4.அத்தகைய எண்ண அலைகள் தன் சரீரத்தின் ஈர்ப்பில் மோதிடாது ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி
5.வெற்றிடமாம் பூதியை (ஆவியாக) உருவாக்கிடும் செயலில் நம் உடலையே அது மிதக்கச் செய்திடுமப்பா.
உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களின் செயல் தன்மையால் பூமியின் ஈர்ப்பின் தொடர்புடன் இருக்கும் நிலையையே புவி ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மிதக்கும் தன்மையாக்க வான இயலின் சூட்சமப் பாடம் உள்ளது.
விண்ணிலே விஞ்ஞானத்தின் செயலில் சுற்றி வரும் மனிதன் தன் உடலைப் பாதுகாத்திட தனக்கென்று ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திச் செல்கிறான் அல்லவா…! அந்தப் பாதுகாப்பு இல்லாமல் அங்கே இருக்க முடியுமா…?
அதே போல் கடலுக்குள் ஆழப்பகுதியில் செல்லும் மனிதன் தக்க பாதுகாப்புக் கவசத்தின் உதவி இல்லாமல் சென்றால் என்ன நடக்குமப்பா..?
நீரின் மேல் உள்ள காற்றழுத்தமும் நீரின் உள் அழுத்தக் கன பரிமாணமும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் இவன் உடலிலே மோதிவிட்டால் சரீரமே வெடித்துச் சிதறிவிடுமப்பா..! எவ்வளவு பாதுகாப்பு…? என்று பார்த்தாயா…!
அதைப் போன்று தான் வாயு ஸ்தம்பம் கொள்ளுதல் என்பது ஒரு பாதுகாப்புக் கவசமப்பா..! நம் உடலில் உள்ள உயிரணுக்களை ஒலி நாதம் கொண்டு தன் வசப்படுத்திடும் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.
அவ்வாறு பெற்று விட்டால் நாம் செயல்படுத்தும் ஞானச் சித்துக்கள் தான் எத்தனை எத்தனை…? எல்லாவற்றையும் கடந்து ஒலியின் ஒளியாகப் பேரொளியாக மாறலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பராசக்தி குளித்த குளத்தில் வேறு யாராவது ஆண்கள் குளித்தால் அது பெண்களாக மாறிவிடுவார்கள் என்று சாபமிட்டதனால் “அந்தக் குளத்தில் யாரும் ஆண்கள் குளிப்பதில்லை…”
இப்படிக் காவியப் படைப்பைப் படைத்து அந்தக் கருத்தினை நாம் தெரிந்து கொள்வதற்காகத் தெளிவாக்குகின்றனர்.
குரங்கு அது தாவிச் செல்லும் நிலையானாலும் அந்தக் குளத்தில் விழுந்து விட்டது. இது ஆண் குரங்காக இருப்பதனால் அந்தக் குளத்தின் உணர்வுகள் இதன் மேல் பட்டுப் பெண்ணாக மாறி விடுகின்றது.
ஏனென்றால் நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் இது ஒரு பெரிய குளம்.
அதிலே நாம் பிறர் படும் கஷ்டங்களையோ வேதனைகளையோ நுகரப்படும் போது நாம் அதிலே விழுந்து விடுகின்றோம் என்பதனை உணர்த்துவதற்காக காவியத் தொகுப்புகளைத் தெளிவாக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.
இப்படி விழுந்த குரங்கு பெண்ணாக மாறிவிடுகின்றது. பெண் என்றால் சக்தி என்று பொருள். ஆகவே அது தனக்குள் கருவாக்கும் தன்மை பெற்றது என்பதனை உணர்த்துகின்றனர்.
நமது பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் இத்தகைய விஷத்தன்மை பெரும் குளமாக இருக்கின்றது. அந்த உண்மைக்கு மாறான நிலைகள் நடப்பவைகளைப் பார்த்து நாம் விழுந்து விட்டால் எப்படி மாற்றம் அடைகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக ஒரு காவியமாகப் படைத்தனர் ஞானியர்கள்.
நம்மை அறியாமலே பிறருடைய நிலைகளைப் பார்த்து அந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் “இப்படி வேதனைப்படுகின்றானே..,” என்று (குளத்தில் பட்டால்) அவன் உணர்வை நாம் எடுத்தால் இந்த உடலுக்குள் என்ன ஆகின்றது…?
நாம் பல வேதனைகள் படுகின்றோம் என்பதனைக் காட்டுகின்றனர்.
இப்படிப் பெண்ணாக மாறியபின் அதைக் கண்டு ரசிக்கின்றனர். யார்…? வாயு. அதைக் கண்ட பின் எப்படியும் அதனின் அழகைக் கண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதனை அணைத்துக் கொள்ள வேணடும் எனறு விரும்புகின்றது.
1.வாயு என்பது நாம் நுகர்வது வாயு (சுவாசக் காற்று),
2.அதன் உணர்வின் தன்மை இங்கே நம் உடலுக்குள் சென்றபின் உமிழ் நீராக மாறுகின்றது.
3.வாயுவுனுடைய நிலைகள் எந்த குணத்தின் உணர்வோ அதனை எண்ணும்போது
4.“அதிலே உருவான கரு தான்” என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.
வேதனைப்படுபர்களைப் பார்த்து அந்த வேதனையான உணர்வை நாம் சுவாசிக்கும் போது நுகர்ந்த உணர்வுகள் வேதனை என்ற உணர்வைக் “கருவாக்கும்” உமிழ் நீராக மாறுகின்றது.
இதை மாற்றி அமைப்பதற்காக “இந்திரன்..,” இரண்டாவது வருகின்றான். இந்த அழகைக் கண்டு தானும் ஆசைப்பட்டு அதை அடைய விரும்புகின்றான்.
1.“இந்திரன்… என்றால் உருவாகும் உணர்வுகள்”.
2.உமிழ் நீராக மாறி அது இந்திரீகமாக மாறுகின்றது.
3.இந்திரீகமாக மாறப்படும் போது அந்த வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக எப்படி உருவாகின்றது…? என்ற நிலையைக் காட்டுகின்றனர்.
இதையெல்லாம் நாம் புரிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளில் தெளிவாக்கியுள்ளார்கள்.
இதையெல்லாம் எதற்காகச் சொல்கின்றேன்…? நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை எல்லாம் நேராகத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்லுகின்றேன்.
இந்த உணர்வை எடுத்து எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் உடலில் எளிதில் சேர்த்துக் கொள்ள இது உதவும்.
உமிழ் நீராக ஆனதால் இந்திரன் என்றால் அவனுக்கும் இரண்டு பேருக்கும் (வாயு, இந்திரன்) சேர்த்துப் பிறந்தது தான்.
ஆகவே வேதனைப்பட்ட உணர்வுகள் வாய்வு. நமக்குள் நுகர்ந்த பின் அது உமிழ் நீராக மாறுகின்றது.
பின் இந்திரன் என்ன செய்தான்…? அதன் உணர்வு கொண்டு அதன் ஆசையிலேயே தான் (உடலாக) உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது என்பதனைக் காட்டுகின்றனர்.
ஏனென்றால் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்து விரும்பித்தான் எடுக்கின்றோம். ஆகவே.., அப்பொழுது நாம் ஆசைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்…?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெற வேண்டும் என்று அதை ஆசைப்படுதல் வேண்டும்.
ஏனென்றால் வேதனையை நுகருகின்றோம். வாயுவாகின்றது. நம் உடலுக்குள் வரும்போது வாலியாகிவிடுன்றது. அந்த வலுவின் தன்மை உமிழ் நீராக மாறுகின்றது.
அந்த வலிமையான நிலைகளை மாற்றியமைப்பதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.தீமைகளை நீக்கிய உணர்வை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கி
2.அந்த உணர்வை நாம் சுவாசிக்க வேண்டும்.
3.அது நமக்குள் கலந்து நம் உயிரிலே பட்டு இயக்கச் சக்தியாக மாறுகிறது… தீமையை நீக்கும் அரும் பெரும் சக்தியாகிறது.
நாம் குழம்பு வைக்கும் போது உப்பு புளி காரம் என்று பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக மாற்றுவது போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இப்படி அதை இணைத்துக் கொள்ள வேண்டும்.
இணைத்தால் அந்த வேதனைகளைத் தடுத்து விடுகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்துகின்றது.
நம்முடைய சகஜ வாழ்க்கையில் பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். பார்த்தபின் அவர்களை நல்லதாக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்களுக்குப் பொருளால் உடலால் வேண்டிய உதவிகளைச் செய்து நல்லதாக்கி விடுகின்றோம்.
ஆனால் நாம் நுகர்ந்த தீய உணர்வுகள் அதனுடைய வலிமையான நிலைகள் நமக்குள் நோயாக வந்து விடுகின்றது. அந்தத் தீமைகளை நுகர நேர்ந்தாலும் தீமையின் உணர்வுகள் நமக்குள் பெருகாது தடைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதைப் போன்ற நிலைகளில் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் சேரும் தீமைகளை “நாம் தடைப்படுத்துவதற்குத் தான்” ஞானிகள் இப்படி காவியங்களைக் கொடுத்துள்ளார்.
இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
குருநாதரின் சங்கேத பாஷை
குருநாதர் எந்தெந்த வழிகளில் எல்லாவற்றையும் தெரிந்து இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு (ஞானகுரு) அது தெரியவில்லை என்றாலும் அறிய வைக்கின்றார்.
குருநாதர் டெலிஃபோன் கம்பத்தை அடிப்பார்… எலக்ட்ரிக் கம்பத்தை அடிப்பார். அடித்த உடனே
1.இந்த லயன் அந்த லயன்…
2.இந்த லயன் இந்த லைன்…! என்று சொல்லிக் கொண்டே வருவார்.
இப்படி என்னத்தைக் கிரகத்தைச் சொல்லுகின்றாரோ…! பைத்தியம் போன்று பேசிக் கொண்டிருக்கின்றார்…! என்று நான் (ஞானகுரு) நினைப்பேன். அவர் சொல்வது ஒன்றும் புரியாது.
டேய்… மிளகாய் ஒரு லட்சம்…! கோடி… கோடி… என்று சொல்வார். அவர் எல்லா பாஷைகளும் பேசுவார்.
நான் என்ன சொல்வேன்…? கோடி (கோழி) இங்கே இருக்கிறது சாமி…! என்பேன் (தெலுங்கிலே).
அந்தக் கோடி இல்லைடா… “ஈகோடி” என்பார். மிளகாய் கோடி… அந்தக் கோடி… காரம் கோடி… அது… இது… என்று என்னென்னமோ கோடி… கோடி… என்று சொல்வார். எனக்கு அர்த்தம் புரிய மாட்டேன் என்கிறது.
இந்த லைன் அந்த லயன் அந்த லயன் அந்த லைன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். அர்த்தமே புரியாது…!
அப்புறம் அந்த உணர்வுகளை எல்லாம் சொன்ன பிற்பாடு…
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று கலந்து
1.உணர்வுகள் எத்தனை கோடியாக மாறுகின்றது…?
2.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது…?
3.எதன் செயலை மாற்றுகின்றது…? – அப்படி என்றால் அந்த லயன்…!
அதாவது நட்சத்திரத்திலிருந்து மின்னலாகப் பாயும் பொழுது
1.இந்த உணர்வுகள் எதனுடன் எப்படிச் சேர்கின்றது…?
2.உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையை உள் உணர்விலே அதை உணர்த்துகின்றார்.
முதலிலே சொல்லிவிடுவார்… பின் புரிய வைப்பார்.
அதே போன்று தான் உங்களிடம் இதைச் சொல்லிப் புரிய வைக்கின்றேன் குருநாதர் எனக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதே போல உங்களிடமும் அதைப் பதிவு செய்கின்றேன்.
சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லாம் இந்த நினைவுகள் உங்களுக்கு வரும்.
காரணம்… தீமைகளை அகற்றக் கூடிய சக்தி உங்களுக்குள் வளர வேண்டும். இந்த உலகம் விஷத்தன்மையாகப் பரவும் நேரத்திலே விஞ்ஞானத்தால் வந்த விஷத்தை வெல்லக்கூடிய சக்தியை நீங்கள் பெற வேண்டும்.
உங்கள் மூச்சு பிறரைக் காக்கும் சக்தியாகப் பரவ வேண்டும் என்பதற்குத்தான் இந்த நேரத்திலே இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை… குருநாதருடைய உணர்வு தான் பேசுகின்றது.
2.அந்த உணர்வு தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றது.
இதை நிலை நிறுத்தி அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களையும் நீங்கள் காக்கின்றீர்கள்… இந்த நாட்டையும் காக்கின்றீர்கள்… மக்களையும் காக்கின்றீர்கள்… இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்.
இப்படிப் பல முறை லயன் லயன் லயன் என்று புரியாத உணர்வுகளைச் சொல்லிச் சொல்லித் தான் குருநாதர் கண்டுணர்ந்த எல்லாவற்றையும் என் உடலுக்குள்ளே பதிவு செய்தார்.
குரு வழியில் நான் எதை எதைப் பதிவு செய்தேனோ அதை மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.
1.பதிவு செய்ததை நினைவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் எண்ணினால்
2.குருநாதர் எனக்கு உணர்த்தியது அனைத்தும் உங்களுக்குள் நிச்சயம் வரும்… வளரும்.
சத்தியம் சிவம் சுந்தரம்
மனிதனான நமக்குள் பல பல எண்ணங்கள் இருந்தாலும் இந்த உடல் வாழ்க்கையில் மோதும் உலகோதய உணர்வுகளிலிருந்து உயர் ஞான வழியின் வழியை உணர்ந்து செயல்படும் பக்குவம் பெற வேண்டும்.
1.நான் என்ற ஆணவம் ஒரு மலம்
2.காமம் என்ற சபல குண மோகம் ஒரு மலம்
3.உலகோதய ஆசை என்னும் மாயை மூன்றாவது மலம்.
இந்த மூன்றையும் அறிந்து அந்த மும்மலத்தையும் நீக்க வேண்டும் என்றால் சத்தியம் சிவம் சுந்தரம் என்ற கருத்தின் பொருளைக் காண வேண்டும்.
மெய் ஞானிகள் உணர்வுடன் தொடர்பு கொண்டு மனத் தெளிவு பெற்று சத்தியம் என்பதன் உண்மைப் பொருள் விளங்கி நம் எண்ணம் சொல் செயல் மூன்றும் நேர்கோடாகப் பரிணமித்தல் வேண்டும். சத்தியம் என்ற அந்த மெய் ஞானமே உண்மை ஞானமாக அறிந்து செயல்பட வேண்டும்.
சத்திய வழி சிவம் பெறுதல் என்பது என்ன..? சிவத்தை எங்கிருந்து பெறுவாய்…?
1.உன்னிடத்தில் உள்ளதடா சிவம்… என்று
2.சித்தன் காட்டிய வழியில் உன்னை உணர்ந்து பாரப்பா…!
காமம் என்பதே உயிர்களுக்கு அன்பு. காமம் சமமான பக்குவத்தில் இருந்தால் அதுவே சிவமாகும். அந்த அன்பு தானப்பா “சிவம்…!”
மனதில் அன்பு கொண்டு விட்டால் உயிரான்மாவின் சக்தியின் வலுவிற்குச் சுலபமான வழி கிட்டிவிடும். அதுவே சுந்தரம்…! சுந்தரத்தைப் பெறுவது என்றால் “அழகு” என்று பொருள் கொள்வாய்.
1.அந்த அழகு என்பது எதுவப்பா..?
2.நீ நினைக்கும் உடல் அழகு அல்ல…!
அழகு என்பது ஆன்ம வலுவின் ஒளி காந்த சக்தி கொண்டு “சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதித் தத்துவம் ஆகும்..!” அதைப் பெற வேண்டும் என்றால் மும்மலம் நீக்கப்பட வேண்டும்.
அதை நீக்கிய பிறகு மெய் வழி கண்டு மெய் வழி அறிந்து மெய் ஞானம் மலர்ந்து
1.விரிந்து மணம் வீசும் ஒரு மலர் போல
2.ஆன்ம சக்தியின் சத்தியம்.. சிவம்… சுந்தரம்… என்ற எண்ணத்தில்
3.கடைப்பிடிக்கும் அந்தச் சத்தியத்தை நிலை நிறுத்தி அதை மேன்மைப்படுத்தினால்
4.அன்பு என்ற சிவத்தைப் பெறுகின்றாய்.
அன்பாம் சிவ ஈர்ப்பின் வலுச் செயலினால்… சுந்தரமாம் ஆன்ம அழகின் ஜோதியாக… ஜோதியின் சக்தியே பிரகாசமாக… பிரகாசத்தின் ஒளி நிகழ்வாக… “மூலத்தின் மூலமாகச் செயல் கொண்டிடலாம்…!”
சிற்றின்ப போகத்தையே பேரின்பப் போகமாக்கிய போகநாதர் சத்தியம் சிவம் சுந்தரத்தைப் பெற்றது… மும்மலத்தை மாற்றியமைத்து நற்குண வழிச் செயல் ஆக்கத்தின் ஆக்கம் பெற்றதால் தான்…!
முருகனுக்கு மயிலையும் சேவலையும் காட்டி நாகம் வேல் என்ற தொடரையும் காட்டுகின்றார்கள். அதன் சூட்சமம் அறிந்தோமா…? போகப்பெருமான் வளர்த்துக் கொண்ட அனுபவ ஞானத்தை நாமும் அறிந்து கொண்டால் நம்முடைய வளர்ச்சி நல் வழி ஆகுமப்பா..!
விநாயகர் ஞானக்கனியைப் பெற்றார். இடும்ப குண வசத்தால் முருகனுக்குக் அது கிடைக்கவில்லை என்ற கதையின் தத்துவத்தில் உள்ள உண்மையையும் தெளிந்து கொள்ள வேண்டும்.
வினையின் நாயகன் அந்த விநாயகனே நாம் தானப்பா…! நாம் எப்படி ஞானக்கனி பெறுவது..?
உயிரின் மூலமாகிய “சிவ சக்தி…!” என்று சொரூபப்படுத்திக் காட்டிய
1.சுழற்சியின் வேகமான சிவத்திற்குள்… சக்தி உருக்கொள்ளும் தன் உயிர் சக்தியை
2.தன்னைத் தான் உணர்ந்து தன்னுள் அந்தச் சிவ சக்தியைக் கண்டு
3.வலுக் கொண்ட செயலின் ஆக்கமாகத் தன்னைத் தான் அறிவதே ஞானக்கனி பெறுவது என்பது.
(சூட்சமப்படுத்திக் காட்டிய நிலையில்) தன்னுள்ளே சிவ சக்தியைக் கண்டு அதைச் சுற்றும் வழித் தொடரில் அதை வலம் வந்து அந்த வினையின் நாயகனாக நாம் பெறுவதே “ஞானக்கனி…!”
அகஸ்திய மாமகரிஷியின் தொடர்பு கொண்டு… போகப் பெருமானின் குரு காளஞ்சி நாதர் (காலிங்கநாதர்) சொன்ன முறைப்படி
1.இருந்த இடத்திலேயே (வெளியிலே தேடிக் கொண்டிருக்காமல்) ஞானக்கனி பெறுதல் என்பதில் அந்த ஞானம் கனிந்து விட்டால்
2.அதனின் சுவையைப் பெற்று விட்டால்
2.அந்தச் சுவையின் “மூலம் அறிய…” வழி பிறக்கும்.
இப்படித் தத்துவங்களையெல்லாம் காட்டி சூட்சமங்களை எல்லாம் உள் புகுத்தி மும்மல நீக்கத்திற்கு வழி காட்டி வாழையடி வாழை என வரும் ஞானச் செல்வங்கள் தன் சக்தியை வளர்த்துக் கொள்வது என்பது மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் வழியாகும்.
கோப குணத்திற்குச் சிறிதளவு சக்தியை ஊட்டிவிட்டால் அது நாம் பெற்ற தியான சக்தியின் சேமிப்பைத் தனக்குகந்த ஆகாரமாகச் சாப்பிட்டுத் தன் வலுவை தன் கோப குணத்தை மீண்டும் வலுக் கொள்ளச் செய்துவிடும்.
கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி. கோபத் தன்மை இருந்தால் மும்மலங்களும் தீய வினைகளுக்கு அடிகோலும்.
ஆணவம்.. மோகம்… உலக மயக்கம் என்னும் மாயை…! இவைகளை ஞானச் செல்வங்களால் வென்று காட்டியதைத்தான்
1.வேலின் வடிவமாக
2.வேல் விண்ணிலே பறந்து சென்றது…! என்று சூட்சமாகக் காட்டப்பட்டது.
முருகன் ஆணவத்தை அடக்கிவிட்டார்… மோக குணத்தை வென்றிட்டார்… உலகோதய மாயை என்னும் விஷ நாகத்தை அடக்கி விட்டார்… என்பதெல்லாம் உலக மக்களுக்குப் படிப்பினையாகச் சொல்லப்பட்டது.
1.அந்த நல் வழியக் கண்டுணர்ந்து செயல் கொண்டால்
2.“வேல் விண்ணிலே பறந்ததின் சூட்சமம் புரிந்துவிடும்…!”
மயிலிற்கும் பாம்பிற்கும் பகை என்ற நிலை போல உலகோதய இன்பம் பெறுபவன் கூட ஆணவம் கொண்டிட்டால் பகை என்ற எதிர் மறை நிலைதான் செயல் கொள்ளும்…! என்ற உண்மையை அறிந்துணர வேண்டும்.
ஆகவே ஆணவ மலத்தை அடக்கிச் செயல் கொண்டாலும் உலகோதயச் செயல் தத்துவத்தில் தேவையை அழித்திடல் ஆகாது. (ஏனென்றால்) “அது தான் உயிர் சக்தி…!”
அதுவும் ஞான வழித் தொடருக்கு வழி காட்ட மயிலிற்கும் பாம்பிற்கும் பகையாக இருந்தாலும் ஆணவத்தை நீக்கி ஞானம் பெற்றுவிட்டால்
1.இரண்டுக்கும் உள்ள பகை நீங்கி
2.மயிலின் காலடியில் பாம்பு எப்படி வாழ்கின்றது…! என்ற உண்மை ஞானம் தெளிவுபடும்.
மோகக் குணத்தைப் பேரின்ப ஞான குணத்திற்கு எப்படி வழி வகுப்பது என்றால் மோக குணத்தை அதன் ஆங்காரக் குணத்தை ஓங்காரமாக்கும் செயலாக சேவல் கூவுகிறது என்ற பொருளில்
1.நம்மைக் காக்கும் சக்தியாக மாற்றி
2.அறிவின் ஞானத்தைப் பெருக்கும் வேலாயுதமாகப் பயன்படுத்தினால்
3.”உலகோதயம் நம் காலடியில்…!” என்ற பொருளை உணரலாம்
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
“நாங்கள் தியானம் செய்கிறோம்…!” என்று சொல்லிவிட்டு சிலர் என்ன செய்கின்றார்கள்…? என்னை அவன் இப்படிப் பேசினானே.., அப்படிப் பேசினானே… நான் எத்தனை நாளைக்குத்தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது..?
கடன் வாங்கிச் சென்றவன் கொடுக்க மாட்டேன் என்கிறானே… எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…? என்று சொல்வார்கள்.
ஏனென்றால் நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது.., உருவாக்குகின்றது. கண்கள் அதன் வழி காட்டுகின்றது.
தீமைகள் உங்களுக்குள் இயங்காது தடுப்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றோம். ஆனால் “தியானம் செய்கின்றோம்” என்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றார்களே தவிர அதைப் “பயன்படுத்தும் நிலை” இல்லை.
இப்பொழுது இதையல்லாம் நீங்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள்… படிக்கின்றீர்கள். எனக்கு அப்படின் எல்லாம் காட்டவில்லை.
திருப்பதியில் ஒரு இடத்தில் தண்ணீர் (நீர் வீழ்ச்சி) கீழே விழுந்து போகின்றது. பள்ளத்தாக்கு மாதிரி இருக்கின்றது. இடையில் ஒரு குகை இருக்கின்றது. அங்கே போகச் சொன்னார் குருநாதர்.
இந்தக் குகைக்குள் போகவேண்டும் என்றால் ஒரு கயிறு கட்டித்தான் போக முடியும். அதற்கு மாறாக அங்கே மரத்தின் விழுதுகள் இரண்டு மூன்று இருக்கின்றது.
என்னிடம் ஏது கயிறு…? அந்த விழுதைப் பிடித்துத்தான் போக வேண்டும். “இந்த விழுதைப் பிடித்துக் கொண்டு… இறங்கிப் போடா…” என்கிறார் குருநாதர்.
போகும் பொழுது… நான் என்ன செய்துவிட்டேன்…! ஒரு பலவீனமான விழுதைப் பிடித்துவிட்டேன். அது என்ன செய்கின்றது…? என் காலை அந்தப் பெரு விரலை வைத்தவுடன் அறுந்துவிட்டது.
அறுந்தவுடன் அங்கே விரிசல் விழுகின்றது. அப்பொழுது மனது இங்கே பதறுகின்றது… “அந்தச் சந்தர்ப்பம்…!” அப்பொழுது பதட்டம் வரும்போது “பிடிப்பை” விட வேண்டி வருகின்றது.
அப்புறம் என்ன செய்தேன்…?
“மன உறுதி கொண்டு…” அடுத்துப் பெரிய விழுதைப் பிடிக்க முயற்சி செய்கிறேன். மற்றொன்றைப் பிடிக்கிறேன். பிடித்து அந்தக் குகைக்குள் போய்விட்டேன்.
அன்று அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப வேண்டும் என்று வரக்கூடிய அரசர்கள் அந்தக் குகைக்குள் வந்து மறைந்து கொள்கின்றார்கள். மறுபடியும் இங்கிருந்துதான் திருப்பதிக்குப் போகின்றார்கள். அந்தப் பாதைகள் இருக்கின்றது.
மற்ற அரசர்கள் தேடி வந்தால் இவர்கள் தப்பிப் போகக்கூடிய நிலைகளாக அது இருந்தது. உள்ளுக்குள் நுழைந்து குகைக்குள் போய் மாடியில் தங்கிக் கொள்கின்றார்கள்.
அந்த இடத்தில் வெறும் விழுது தான் தெரிகின்றது. ஒரு கயிறு போட்டால் கூடத் (குகை இருப்பது) தெரிந்துவிடும்.
ஆனால் அதற்குள் இருந்துதான் நீர் வருகின்றது. இப்படிப் போய்விட்டோம் என்றால் மலைக்கு மேலே போயிடலாம். இதற்குள் போய்விட்டோம் என்றால் தண்ணீர் வரக் கூடிய பாதைதான்.
அதனால் தான் முதலில் விழுது அறுந்தவுடன் பயம் வருகின்றது. அப்புறம் அந்த தைரியத்தை வரவழைக்கும் போது அந்த விழுதைப் பிடித்துக் குகைக்குள் போனேன்.
குகைக்குள் போனவுடன் நான் உள்ளே சென்றுவிட்டேன். விழுதை விட்டுவிட்டேன்.
1.விழுதைப் பிடித்து உள்ளுக்குள் போனேன்.
2.மறுபடி திரும்பி வரவேண்டும் என்றால் என்ன செய்வது…?
3.விழுதோ வெகு தூரத்தில் இருக்கின்றது. இதை எப்படிப் பிடிப்பது…?
அப்பொழுது மன உறுதி இழந்து விட்டேன்.
விழுது வெகு தூரத்தில் இருந்தால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் கீழே அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்று சிந்தனை வந்துவிட்டது.
1.நொடிக்கு நொடி மனித உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் அந்தச் சந்தோஷம் என்ற நிலைகள் எப்படிப் போகின்றது…?
2.பயம்… என்ற “அரக்க உணர்வுகளுக்குச் சென்றவுடன்” அது எப்படி நம்மைப் பலவீனபடுத்துகின்றது…?
3.நல்ல சிந்தனைகளை எப்படி இழக்கச் செய்கின்றது…?
இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார் குருநாதர்.
அப்புறம் என்னாகிவிட்டது..? வேறு வழியே இல்லை அணிந்திருந்த வேஷ்டியைக் கிழித்தேன். கயிறு மாதிரிச் செய்தேன்.
நான் இருக்கும் இடத்தில் தேடுகின்றேன். அங்கே வேறு ஒரு பொருளும் இல்லை. சிறிய கல் இருந்தது. அந்தக் கல்லை எடுத்து வேஷ்டியில் ஒரு முனையில் முடிஞ்சி கயிறு மாதிரி நல்லா திரித்துக் கொண்டேன்.
அந்த நேரத்தில் “ஒரு சிந்தனை” வந்தது.
அதை இலாவகமாக அப்படியே வீசினேன். தூரத்தில் இருந்த விழுதில் அந்தக் கல் அடித்தவுடன் அப்படியே சுற்றிக் கொண்டது.
அப்படியே மெதுவாக இழுத்துக் கையில் பிடித்துக் கொண்டேன். அதைப் பிடித்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தேன்.
முதலில் உள்ளே போகத் தெரிந்தது ஆனால் வரத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வேஷ்டி இல்லாமல் வெறும் ஜட்டி போட்டுக் கொண்டு போனால் என்னாகும்…? ஆபத்து தான்.
இதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் மனிதனின் உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்பதற்குத்தான் இந்த அனுபவம்.
ஏனென்றால் குருநாதர் அங்கே அரசர்கள் தங்கும் குகை இருக்கின்றது. நீ இதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையை ஊட்டுகின்றார். அந்தக் குகைக்குள் “என்னென்னெமோ… இருக்கின்றது…! என்று காட்டுகிறார்.
அதன் வழியில் நான் போகின்றேன்.
முதலில் பிடித்த விழுது பலவீனமானது என்று சிறிது கவனமாகப் பார்த்திருந்தால் அது அறுந்திருக்காது.
அடுத்த விழுதை மறுபடியும் பிடித்து உள்ளுக்குள் போகத் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்றவுடன் அந்த விழுதை முதலில் எங்கேயாவது ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் அல்லவா.
விட்டு விட்டால் போய்விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது…? அதற்குண்டான உபாயம்… “முன் சிந்தனை” இல்லாது போகின்றது.
இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
1.அப்படி இல்லாது என் குருநாதர் உள்ளுக்குள் போகச் சொன்னார்.
2.போகச் சொல்லி வசமாக இப்படிச் சிக்க வைத்து விட்டார் என்று எண்ணினால் எப்படி இருக்கும்…?
3.குருவையே நிந்திக்கக்கூடிய நிலை தான் வரும். அப்புறம் “வலு…” எங்கிருந்து கிடைக்கும்…?
4.குரு வழி காட்டுகிறார். அப்பொழுது அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? என்ற நிலையில் அவரை எண்ணி
5.இதிலிருந்து மீட்டிடும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் அந்தத் தெளிவு அனுபவமாகக் கிடைக்கும்.
இது தான் என்னுடைய அனுபவம்.
அவர் சொன்ன நிலையில் அந்த குகையிலே தியானித்தேன். உள்ளே அரசர்கள் ஒளித்து வைத்த விலை உயர்ந்த எத்தனையோ பொருள்கள் நிறைய இருக்கின்றது.
பல விதமான சுரங்கங்கள் போகின்றது. ஒரு இடத்திற்கு மேல் போகப்படும்போது அதற்கு மேலே “நீ போக வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.
இதே தண்ணீர் மாதிரி தான் இருக்கும். அந்தத் தண்ணீருக்குள் முக்குளித்துப் போக வேண்டும். கிணறு மாதிரி இருக்கும். கிணற்றுக்குள் முக்குளித்துப் போனால் அங்கே ஒரு குகை இருக்கும்.
அதற்கு மேலே போனால் மேடாக இருக்கும். தெரிந்தவன்தான் அங்கே போக முடியும். தெரியாதவர்கள் போக முடியாது. இனிமேல் நீ போக வேண்டாம் என்றார் குருநாதர்.
ஆனால் அன்று அந்த அரசர்கள் தன் எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எந்தெந்த வகை எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள் என்று “பார்” என்று காட்டுகின்றார்.
ஒவ்வொரு அரண்மனையிலையும் வாய்க்காலை வெட்டி வைத்துத் தண்ணீரை விடுகிறார்கள். அதிலே முதலைகளைப் போட்டு விடுவார்கள்.
நீர் ஓடை இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு அரண்மனையும் கட்டியிருப்பார்கள். அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் தண்ணீர் வேண்டுமல்லவா.
ஆறு பக்கத்திலிருந்தால் நீர் எளிதில் கிடைக்கும் அல்லவா.
அதே சமயத்தில் மலைப்பாங்குகளில் செயல்படுத்தப்படும் போது மலையிலேயும் சில குகைகளில் அந்த நீர் ஊற்று இருக்கும்.
ஒரு மழை பெய்தது என்றால் ஒரு வருடத்திற்கு வேண்டிய தண்ணீரை அங்கே எடுக்கலாம். ஏனென்றால் இவ்வாறு அரசனுக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் உண்டு.
காற்றோட்டத்திற்காக வேண்டி நாம் வீடுகளில் ஜன்னல் வைத்திருக்கின்றோம். ஜன்னல் வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.
ஆனால் அந்தக் குகைகளில் பார்த்தால் வெளியில் இருக்கும் மனிதரை நாம் பார்க்க முடியாது. குகைக்குள் இருப்பவரை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அதில் சந்து விட்டிருக்கின்றார்கள்.
சந்து வழியாக வெளிச்சம் வந்தவுடன் அதிலே பாதை தெரிகின்றது. அதே சமயத்தில் அந்த வெளிச்சம் எதிரிக்குத் தெரியாத மாதிரி இங்கேயே ஒரு பட்டன் மாதிரி வைத்திருக்கின்றார்கள்.
தெரியாதவர்கள் உள்ளுக்குள் வர முடியாதபடி வெளிச்சத்தை அடைத்து விடுகின்றார்கள். பாதை தெரியாது. இந்த மாதிரி எல்லாம் அரசர்கள் செய்து வைத்துள்ளார்கள்.
காற்று “ஜம்” என்று ஜிலு… ஜிலு… என்று வருகிறது. ஆனால் அடுத்தவர்கள் பேசுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த மாதிரி அரசர்கள் இராஜதந்திரமான நிலைகளை அரசு ஆட்சி புரிந்தாலும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு “எத்தனை அவஸ்தைப்பட்டு வாழ்ந்தார்கள்” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.
குரு வழியில் உருவாகிக் கொண்டிருக்கும் “பெரும் கூட்டமைப்பு…”
ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் படர்ந்துள்ளது. அதை எடுத்து நான் (ஞானகுரு) மட்டும் பேசுவதில்லை
1.நீங்கள் எல்லாம் அதைத் தெரிந்து கொள்ள முடியும்… “தெரிந்து கொள்ள வேண்டும்”
2.தெரிந்தால் தான் இந்த நாட்டையும் மக்களையும் விஞ்ஞானத்தின் விஷத்தன்மையிலிருந்து காக்க முடியும்
3.காலத்தால் மறைந்து விட்டது மறைந்த நிலைகளை மீண்டும் கொண்டு வந்து நாம் தப்ப வேண்டும்.
காரணம் சூரியன் அழியும் தருணம் வந்துவிட்டது… சூரியன் அழிவதற்கு முன் பூமிக்குள் உயிரினங்களில் மாற்றங்கள் அதிகரிக்கும்.
மனிதர்களாக இருக்கும் நாம் இன்று நல்ல நினைவு இருக்கும் பொழுதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டு… உடலை விட்டுச் செல்லும் போது பிறவியில்லா நிலை அடைந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைய வேண்டும்.
இனம் இனத்தைத் தான் வளர்க்கும். நமது குரு உயர்ந்த உணர்வைப் பெற்றார். அந்த இனம் வளர வேண்டும் என்று எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.
1.அதே குருவின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.குரு வழியில் அருள் ஒளியை நாம் எல்லாம் சேர்க்கப்படும் பொழுது இது பெரும் கூட்டமைப்பாக மாறுகின்றது.
மனித உருவாக ஆன பின் அடுத்து அந்த இறந்த உடலைப் புதைத்தால் அது கரைக்கப்படுகின்றது மீண்டும் மற்றொன்றுக்குத் தான் அது இரையாகின்றது.
அது போல் தான் நம் சூரியனும் தன் செயலை இழந்தால் கரைந்து விடும். மற்றதுக்கு இரையாகிவிடும்.
ஏனென்றால் நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் தனித்தனியாக… ஒவ்வொரு சூரியக் குடும்பமாக மாறிக் கொண்டிருக்கின்றது. கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது. மற்ற ஏனைய நட்சத்திரங்களும் இவ்வாறு சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.
நம் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கின்றது. அதனால் இது முதுமை அடைந்து விட்டது.
1.27 நட்சத்திரங்களுக்குள் சரி பகுதி தனிச் சூரியக் குடும்பமாக மாறிவிட்டால் நம் சூரியனுக்கு இரையில்லை.
2.அப்போது சுழற்சியின் தன்மை சூரியனின் ஈர்ப்பு வட்டம் குறையும்.
3.இந்த ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய நமது பூமியோ அந்தச் சுழலுக்குள் சென்று இதுவும் கரைந்துவிடும்… ஆவியாக மாறும்.
4.27 நட்சத்திரங்களும் சூரியக் குடும்பமாக உருவான நிலைகளுக்குள் இது உணவாகி இதுவும் மாறிவிடும்
2000 சூரியக் குடும்பங்கள் சேர்ந்து ஓர் குடும்பமாக மாறுகின்றது. நமது பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் 27 சூரிய குடும்பமாக மாறினால் இது ஒரு அண்டமாகின்றது… பேரண்டமாகிறது.
இதைப் போன்று வளர்ச்சியின் நிலைகள் மாறி மாறித்தான் தனது பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளர்ந்து வந்தது.
இதை எல்லாம் நான் வெறுமனே சொல்லவில்லை. படிக்காதவன் தான் இதைச் சொல்கின்றேன். படித்திருந்தால் தப்பாகத் தான் சொல்லி இருப்பேன் என்று நினைக்கின்றேன்.
குருநாதர் கொடுத்த அருள் உணர்வின் தன்மையை நினைவு கொண்டு வளர்த்துக் கொண்டேன். வளர்த்துக் கொண்ட உணர்வுகளைத் தான் இங்கே உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.பதிவு செய்தை எண்ணி அந்த உணர்வுகளை நுகர்ந்து நீங்களும் அண்டத்தை அறிய முடியும்
2.உடலான பிண்டத்திற்குள் வளர்க்கவும் செய்யலாம்.
உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும் அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).
ஆனந்தலயமான “பிரம்ம சாயுஜ்யம்…”
சொல்லாக எழுத்து வடிவில் எத்தனையோ சூட்சமங்களை ஈஸ்வரபட்டனாகிய யான் இங்கே வெளிப்படுத்தி வரும் நிலையில் நீங்கள் இதைக் கேட்டுப் படித்து அதைச் செயல்படுத்துவது என்பது மேன்மை தான்,
ஆனாலும் சொல்லப்பட்ட சூட்சமங்களைத் தன்னுடைய சிந்தனைத் திறனால் தன்னில் அறிந்துணர்ந்து தெளிதலே அதி மேன்மையாகும்.
1.”வாயு ஸ்தம்பம்…!” என்றிட்ட
2.ஸ்தூல சரீரத்தையே மிதக்க வைத்திடும் செயலுக்கும் பொருள் உண்டு.
பைராகிகளின் தொடர்பால் போகப் பெருமான் வைத்திய சாஸ்திரங்களை அறிய முற்பட்டார். பல கோடித் தாவரங்களின் சத்துக்களைப் பற்றியும் அதனின் இயல்புகளையும் அறிந்து கொண்டார்.
அது எல்லாவற்றையும் அறிந்த பின் அனுபோக முறை (தனக்குள் அனுபவபூர்வமாக உணர்ந்து) மருத்துவ ஸ்வரூபம் காட்டியது அவர் பெற்ற உயர் ஞான வளர்ச்சியால் தான்,
மூலிகைகளின் சாறு கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கில் வேறு சில மூலிகைகளையும் பதப்படுத்திப் பக்குவமாக இணைத்து திரியைப் போட்டு தீபமாக ஏற்றப்படும் பொழுது அந்தத் தீபத்திலிருந்து புகை வெளி வருகின்றது. (இன்று இராக்கெட்டில் வெளி வரும் அடர்த்தியான புகை போல)
காற்றின் அடர்வைக் காட்டிலும் மெலிதான அந்தப் புகை மேல் நோக்கிக் கிளம்பும் சூட்சமத்தை உணர்ந்து உலோகக் கூண்டுகளில் உள்ளே நிரப்புகின்றார்கள்.
நிரப்பிய அந்தக் கூண்டுகளை வான்வெளியில் பறக்கச் செய்யும் செயலாக அந்தக் கூண்டுகளுடன் இணைக்கப்பட்ட தூளியில் அமர்ந்து காற்றின் போக்கில் வான்வெளியில் சஞ்சரித்தார்கள் அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும்.
இன்று பூமியில் உள்ள கனி வளங்களை எடுத்து அதை எரி பொருளாக எரித்து இராகெட் மூலம் செயற்கைக் கோள்களை அனுப்புவது போல்
1.ஞானிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தின் அடிப்படையில் இயற்கை முறையில் செய்வித்தார்கள்.
2.அதாவது பூமித் தாயின் இயற்கைச் சக்தியை “இன்றைய விஞ்ஞானம் நச்சாக மாற்றிக் கேடாக்கும் செயலைப் போன்று அல்லாமல்…”
3.தன்னுடைய அறிவின் ஞானம் கொண்டு அன்றைய சித்தர்கள் செயல்படுத்தினார்கள்.
அவர்கள் வெளிப்படுத்திய சூட்சமங்களையே இன்றைய விஞ்ஞானிகள் நுகர்ந்து தங்களுடைய கண்டுபிடிப்புகளாக உருவாக்குகின்றார்கள். இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு மூலமே அன்றைய சித்தர்களின் மெய் ஞானம் தான்.
மெய் ஞானம் கொண்டு உயிரான்மாவின் சக்தியை வலுக் கொண்டு சரீரத்தையே மிதக்க வைக்கும் செயலாக
1.சிவஸ்வரூபத்தைத் தன்னுள் கண்டு தெளிந்து
2.சிவஸ்வரூபத்தின் மூலத்தை அறிந்து
3.அதனுள் அதுவாகத் தான் ஒன்றி “தான் வேறல்ல… ஈசன் வேறல்ல…!” என்ற மனப்பக்குவம் கொள்வதே
4.அகத்தின் பொருளை… அந்தப் பரம் பொருளை அறியும் மார்க்கம் ஆகும்.
இதைச் சொல்லால் வெளிப்படுத்துவ்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது…!
1.அறிந்ததை உனர்ந்து கொண்டு
2.தானே ஈஸ்வரனுடன் ஒன்றும் “பிரம்ம சாயுஜ்யம்…!” பெறும்
3.ஆனந்த லயத்தை அனுபவிக்கும் எண்ண வலுவிற்கு ஒவ்வொருவரும் வலுக் கூட்ட வேண்டும்.
(சாயுஜ்யம் என்றால் உயிருக்குள் (ஈசனுக்குள்) புகுந்து அவனை ஆகர்ஷிப்பது)
மிருகங்கள் பறவை முதற் கொண்டு ஐந்தறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் ஞானம் உண்டு. இயற்கையுடன் ஒன்றி அறியும் திறனும் உண்டு.
1.ஆனால் ஐந்தறிவு படைத்த மனிதனோ
2.பகுத்தறியும் அறிவாற்றல் பெற்ற மிகுந்த திறன் உடையவன்.
இயற்கை ஞானத்தை மெய் ஞானமாக வளர்க்கும் பக்குவத்தில் அண்டங்களின் செயல்பாட்டை மூலச் சக்தியை அறிந்து கொள்ளும் செயலுக்கு ஒவ்வொரு மனிதனும் முற்பட வேண்டும்.
அந்த நிலையை அடைவதற்கு மகரிஷிகள் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை உடல் என்ற இந்தப் பிண்டத்தில் பக்குவமாக ஒவ்வொரு நாளும் விளைய வைக்க வேண்டும்.
எப்படி…?
1.உலகோதய ஆசை என்ற வலைக்குள் சிக்காமல்
2.அகத்தின் (தனக்குள்) எண்ணச் செயலில் தூய்மையும் சொல்லிலே அன்பும் கனிவும் கொண்டு
3.பரம்பொருளை அறிந்து கொள்ளும் வைராக்கியத்தைப் பெற்றிடும் பாக்கியமாகத் தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
மூல சக்தி… அது ஆட்டுவிக்கும் மூவுலகம்…!” என்ற செயலை உணரும் பக்குவம்… தன்னைத்தான் உணரும் செயலில் தான் (அது யாராக இருந்தாலும் சரி) அறிந்து கொள்ள முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நீங்கள் எங்கே சென்றாலும் ஜோசியமும் ஜாதகமும் கேட்டு அவர்கள் சொல்லும் நிலையைப் பதிவு செய்தால் அந்த உணர்வே… “அது கடவுள்…” என்ற நிலைகளில் உங்களுக்குள் இறையாகி அந்த இறையின் செயலாக உங்களை இயக்கிவிடும்.
அத்தகைய நிலைகளுக்கு விட்டுவிடாதீர்கள்.
அருள் ஞானியின் உணர்வை நாங்கள் பெறுவோம். எங்களை அறியாத தீமைகளை அகற்றுவோம் என்ற மன பலம் கொண்டு வாருங்கள்.
1.ஜோசியம் கேட்டு… அவர் சொன்னதை மனதில் வேதனை கொண்டு
2.உங்கள் மன நிலையை மாற்றிக் கொள்ளாதீர்கள்.
நல்ல பெண்ணாக இருக்கும். அழகாக இருக்கும். படித்த நிலைகள் கொண்டிருக்கும். சீரான குணங்கள் இருக்கும். ஆனால் ஜாதகப்படி “செவ்வாய் தோஷம்” என்பார்கள்.
செவ்வாய் தோஷத்தின் நிலைகள் கொண்டு நாம் சென்றால்
1.நம் குடும்பத்தில் கலகம் வரும்.
2.அதனால் தீய விளைவுகள் வரும் என்ற ஜாதகத்தின் உணர்வு கொண்டு
3.அவர்கள் சொல்வதையெல்லாம் நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.
ஆக ஜாதகத்தின் பலன் கொண்டு நல்ல பெண்ணாகவும் குணவதியாக இருப்பினும் அதை நாம் “ஏற்க மறுக்கின்றோம்…”
செவ்வாய் தோஷம் இருப்பதனால்
1.தாய் இறந்து விடுவார் தந்தை இறந்து விடுவார்.
2.இங்கு குடும்பம் நலிந்துவிடும்
3.இந்தச் செவ்வாய் தோஷத்தால் குடும்பமே சாபமாகிவிடும் என்பார்கள்.
ஆனால் நற்குணவதியும் நல்ல குணங்களும் நல்ல பேணிக் காக்கும் நிலையும் சிறந்த நிலைகள் இருப்பினும் அதை நாம் ஏற்க மறுக்கின்றோம்.
எதனால்…?
“ஜாதகத்தால்…!”.
1.இந்தத் தோஷங்களைப் பதிவு செய்யாது
2.அருள் ஞானியின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்து இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட்டு
3.நம் எண்ணத்தில் மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம் என்று எண்ணுங்கள்.
4.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று இருளைப் போக்குவோம்
5.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறனைப் பெறுவோம் என்று எண்ணுங்கள்.
ஆலயங்களுக்குள் செல்லும்போது எத்தனையோ பேர் அங்கே வந்தாலும் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞானம் பெற்று அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.
நமக்குள் இருக்கும் வேற்றுமைகளையும் பகைமைகளையும் நீக்கி என்றும் ஒற்றுமையுடன் வாழும் உணர்வைத்தான் ஆலயத்தில் காட்டப்பட்டது.
ஆகவே நாம் நம் மனதைப் பண்படுத்துவோம். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு பண்பட்ட வாழ்க்கையாக வாழ்வோம்.
மனிதனின் சுவாசம் செல்லும் பாதையைச் சீரமைக்காதபடி எந்தச் சாங்கியமோ சாஸ்திரமோ செய்தாலும் அது வேலை செய்யாது
மாற்றி அமைக்கும் சக்தி பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு. ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்…?
வாஸ்து சாஸ்திரத்தைப் பார்க்கின்றோம்… ஜோதிடம் பார்க்கின்றோம்.. நல்ல நேரம் வந்ததா…? கெட்ட நேரம் வந்ததா…? என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
தவறாக நினைக்காதீர்கள்… நம்மை அறியாது எந்தெந்த அளவுக்கெல்லாம் நம்மை இழுத்துச் சென்று இருக்கின்றது…? என்று கவனித்துப் பார்த்தால் தெரியும்.
“வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர்கள்…”
1.உங்கள் வீட்டு வாசல் கொஞ்சம் ஒதுங்கி இருக்கின்றது
2.இதை இடித்துவிட்டு “வாஸ்துப்படி…” நேராக இப்படி வையுங்கள் என்பார்கள்.
3.கஷ்டம் வந்ததற்கு காரணமே இதுதான்…! ஆகவே கட்டிடத்தை இடித்து விட்டு இப்படி மாற்றி வையுங்கள் என்று அவர்கள் சொல்வதைக் கேட்டுச் செயல்படுத்துவோம்.
ஒரு ஓரத்தில் கொஞ்சம் இப்படி மாற்றினாலே… மறைத்து விட்டால் அது நல்லது என்பார்கள்.
அவர் சொல்வதை எல்லாம் நாம் பதிவு செய்து கொள்கின்றோம். அதை ஏற்றுக் கொள்கின்றோம். காசைச் செலவழித்து எல்லாவற்றையும் செய்து வைக்கின்றோம். “இது தான் வாஸ்து சாஸ்திரம்…”
ஆனால் அதற்கு பின் என்ன நடக்கிறது…?
குடும்பத்தில் குழந்தைகள்… உடன் பிறந்தவர்கள் என்று ஏழு பேர் எட்டுப் பேர் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் அன்பாகப் பண்பாக உதவி செய்பவர்கள் தான் நாம்.
இருந்தாலும் சந்தர்ப்பம்… ரோட்டிலே நடந்து செல்கிறோம். அப்பொழுது ஒரு விபத்தாகி ஒரு வாகனம் வேறொருவர் மீது ஏறி விடுகின்றது.
பார்த்த்தும் “ஆ….ஆ…” என்று அலறி விடுகின்றோம். அதனால் பிரமை பிடித்த மாதிரி ஆகி விடுகின்றது. பிரமையானால் என்ன ஆகும்…?
1.இந்த அழுத்தம் கவன நரம்புகளை வீங்கச் செய்து விடுகின்றது.
2.விரிவடைந்த பின் அது பழையபடி அடங்குவதில்லை.
இதைச் சரி செய்ய எத்தனையோ வைத்தியங்கள் நாம் பார்க்கின்றோம் ஆனால் மற்றவர்கள் பாசமாக இருப்பவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். ஐயோ… என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே… பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே… அல்லது என் தம்பிக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று எல்லோரும் எண்ணுவார்கள்.
தொழில் செய்யும் நிலைகளில் தான் இந்தக் குடும்பம் இருக்கின்றது. இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சிக்குப் பின் தொழிலைச் சரியாக அல்லது சீராகக் கவனிக்க முடியுமா…?
இல்லை.
சங்கடமான உணர்வுகள் இங்கே பரவப்படும் பொழுது நன்றாக இருந்த வியாபாரம் இந்தச் சங்கடத்தினால் மந்தமாகும். உடனே நாம் என்ன நினைப்போம்…?
கெட்ட காலம் வாருங்கள்…! ஒரு விபத்து ஆனது எல்லாம் இப்படி ஆகிவிட்டது. வரிசையிலே இப்படியே தொழில் எல்லாம் கெட ஆரம்பிக்கும்.
கஷ்டமாக இருக்கும் அந்தச் சூழ்நிலையில் நாம் கடன் கொடுத்தவர்களிடம் கூடப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பா என்று கேட்டால் நான் தான் தருகிறேன் என்று சொன்னேனே அதற்குள் என்ன…? என்பார்கள்.
1.இல்லை… இங்கே குடும்பத்தில் நோயாகி விட்டது என்று சொன்னால்…
2.எங்களுக்கும் தெரியும்…! பணம் வந்தால் தானே கொடுக்க முடியும்…! என்று அந்த நேரத்திலே “எதிர்ப்புகள்…” வரும்.
அப்போது இந்த வாஸ்து சாஸ்திரம் எங்கே போகும்…?
ஆனால் இந்தக் குடும்பம் முதலிலே நன்றாக இருந்தது தான். ஆனால் இது போன்று சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதனால் குடும்பத்தில் தொழில் நஷ்டம் எல்லாம் வந்து விடுகின்றது.
வாஸ்து சாஸ்திரம் செய்த பின் இப்படி வந்தால் இதையெல்லாம் யார் சரி செய்வது…? அந்தச் சாஸ்திரம் நமக்கு உதவி செய்யுமா…?
ஆகவே… திருத்தி அமைக்க வேண்டும் என்றால் எப்படி…?
வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு அதிர்ச்சியான நிகழ்வு வந்தால் அதை மாற்றிடும் நிலையாக எப்படிச் செயல்பட வேண்டும்… என்ற நிலையில் அதிர்ச்சியை மாற்றி அமைக்கும் “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றால்” இந்த நிலை வராது.
அதை விட்டு விட்டு வீட்டின் வாசல் தெற்கே இருக்கின்றது… வடக்கே இருக்கின்றது… என்று துருவத்தைப் பார்த்து எத்தனையோ சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லை.
1.ஏனென்றால் நமக்குத் துருவம் (திசை) நாம் சுவாசிப்பது (வாசி – வாஸ்து) தான்
2.அதன் வழி நுகரப்படும் பொழுது அத வழிதான் இந்த வாழ்க்கையில் எல்லாமே செயல்படுத்துகின்றது.
3.அதை (சுவாசிப்பதை) எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பது தான் முக்கியம்…!
நியூமராலஜி என்று அதையும் சொல்வார்கள். கடையில் நஷ்டமாகின்றது குடும்பத்தில் சிக்கல் வருகிறது என்றால் உங்கள் பெயரில் உள்ள எழுத்தை இப்படி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்… இது இராசியாக இருக்கும் என்பார்கள்.
அவர் சொல்வதை நம்பிச் செய்தால் நான்கு நாளைக்கு நன்றாக இருக்கும். இப்போது பரவாயில்லையா…? என்று கேட்பார்கள்
அடுத்தாற்போல்
1.நண்பர்கள் யாராவது சங்கடப்பட்டு வந்தால் இந்த உணர்வுகளை நுகர்ந்த பின்
2.கடை சரியாக நடக்கவில்லை என்றால் இந்த நியூமராலஜி எங்கே செல்லும்…?
இது எல்லாம் மனிதர்கள் நமக்கு நாமே ஏமாற்றிக் கொள்கின்றோம் என்று தான் அர்த்தமே தவிர
1.இயற்கையின் உண்மையிலிருந்து
2.நாம் தப்ப முடியாத நிலைகள் கொண்டு தான் வாழ்கின்றோம்.
ஞானத்தின் வளர்ப்பில் நல்லாக்கம் என்பது எது…?
போகம் என்பது உடலியலில் அனுபவித்தல் என்று பொருள்படும்.
உயிரணுக்கள் உயிரின் செயலுக்கு உணர்வுகளின் வழி அனுபவிக்கும் செயல் போகம் சிற்றின்ப போகம் என்றும்… பேரின்ப போகம் என்றும் வழி அமைத்து
1.சிற்றின்ப போகம் சந்ததியின் வளர்ச்சிக்காக மட்டும் என்றும்
2.அந்த வளர்ப்புப் பெற்று விட்டால் மனிதன் பேரின்பப் போகமாக்கும் தன்மைகளை வகைப்படுத்தி
3.உணர்வுகளின் சஞ்சலம் மாற்றியமைத்துப் பெறும் பேறே பேரின்ப போகம் என்று அறிந்ததே “போகநாதர் சொன்ன போகமாகும்…!”
நாம் எடுக்கும் தியானத்தின் பலத்தால் காயகல்ப நிலைக்கு உட்படுத்தி தெய்வீக சக்திக்கு வழியமைத்து உயிரான்மா உயர்ந்த சக்தி பெறும் மார்க்கத்தைப் போகர் உணர்ந்தார்.
வானிலே சுழன்று கொண்டிருக்கும் விண்மீன்களின் அமில சக்திகளையும் நவக்கோள்கள் என்ற நவபாஷாண சக்திகளையும் நம் உயிராத்மா பெறுவதற்காக முருகன் சிலையை நிர்மாணித்தார்.
வானுலக ஆற்றலை… அந்த அமுதத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் யார் யார் எல்லாம் முருகா என்ற ஏக்கத்தில் வருகின்றார்களோ அந்த ஆன்மாக்களையும் தன்னுடைய ஈர்ப்பிலே வளர்ச்சிப்படுத்தி
1.புவியியல் தன்மையை வானியல் படுத்தி போகர் “போகமாமகரிஷி” ஆனார்.
2.பேரின்பப் போகமாகிய ஆனந்தப் பரவச பேரானந்தச் சூட்சம நிலை பெற வழி அமைத்தார்.
3.போகமாமகரிஷியின் அருளாசி வேண்டி வணங்குகின்றேன் ஈஸ்வரா…!
உயிரான்மாவின் தத்துவத்தில் உயிர் சக்தியின் தொடர்பு உச்சி முதல் உள்ளங்கால் வரை மேலிருந்து கீழுமாகவும் கீழிருந்து மேலுமாகவும் ஓடிடும் அமைப்பு உள்ளது.
உயிரணுக்கள் சரீரம் பெற்ற பின்பு உயிரோட்ட ஒளி சக்தி மனிதச் சரீரத்தில் மேலிருந்து கீழுமாக ஓடிடும் நிலையில் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் சுழலச் செய்யும் செயலினால்
1.ஞான விழிப்பார்வை கொண்டு உற்று நோக்கினால்
2.”ஆத்ம லிங்கம்…!” என்ற ஆத்மா புலப்படும். அதுவே “சிவஸ்வரூபம்…!”
விழி படம் எடுத்து நாசியின் சுவாசம் கொண்டு எண்ணத்தின் பிடர்தலில் (மெய் ஞானிகளின் வழியில்) அறிந்திடும் தொடரில் அறியும் செயலுக்கு நாம் வளர வேண்டும்.
ஞானத்தின் வளர்ப்பில் நல்லாக்கம் என்பது எது…?
1.எண்ணம்… சொல்… செயல்…! மூன்றிலும் நேர்கோடாகக் கடைப்பிடிக்கும் தத்துவத்திற்கு வர வேண்டும்.
2.தீவினையான எண்ணங்களை விடுத்துப் பரிசுத்தம் என்ற நிலையில் நல் வினைகளை வளர்க்கும்
3.திடமான – வைராக்கியச் சிந்தனை கொண்டிட்டால் அகத்தின் பொருளை நிச்சயம் அறியலாம்.
அகத்தினை அறிந்திடும் அருள் வழியில் தன்னுடைய சிந்தனையை வீரியமாக்கி…
1.நற்செயலுக்கு வழி அமைத்து…
2.அதைச் சொல்லால் வெளிப்படுத்தும் அன்பிலும்
3.அந்தச் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் நடைமுறைப் பண்பிலும்
4.நிகழ்த்தும் செயலை எவன் ஒருவன் கைக் கொள்கின்றானோ
5.அவன் பரம்பொருள் என்ற சூட்சமத்தில் கலந்திடும் தகுதி பெறுகின்றான்.
நிறம், மணம், நீர் அமிலம் என்ற முத்தொடர் மூலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து கோடானு கோடி உயிரணுக்கள் செயல்படும் அமில குணத் தன்மைகளை பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும் பொழுது காண முடிகிறது.
அதாவது இரவிலே இருள் என்ற கரிய வண்ணமும் (பேரண்ட இருள் பால்வெளி சூட்சமம்) சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் படர்ந்திடும் பகல் பொழுதில் நீல வண்ணக் குணத் தொடரிலும் பார்க்கலாம்.
ஆனால் அவைகளுக்கு அருகாமையில் நெருங்கிச் சென்று… உணர்வால் சுவாசத்தால் ஈர்த்தெடுத்து உணர்ந்திடும் பொழுது
1.உயிரணுக்கள் பெற்றிட்ட நீல வண்ண குணத் தன்மை உட்சென்று
2.உணர்ந்து அறியும் செயலில் தூய வெண்ணிற ஒளி தான் புலப்படும்.
3.மூல சக்தி செயலில் நடை பெறும் கிரியைகளை நாம் உணர்ந்து அறிதலே சிறப்பு.
4.அது தான் தனித்துவ சக்தி நிலை பெறும் “உயர் ஞான வளர்ப்பின் ஆக்கம் ஆகும்…!”
சொல் நாம சூட்சமத்தை விளக்கிடும் செயலில் செவிப்புலன் அறிவு என்பதில் அகத்தின் பொருள் செவிமடுக்கும் நிறத்தில் செயற்படுதல் மேன்மை என்றிட்டாலும் சிந்தனை வசமாகத் தானே தன்னில் அறிந்து உணர்ந்து தெளிதலே அதி மேன்மை..!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி. மூலமாகவோ ஒருவர் பஸ்ஸிலே சென்று கொண்டிருக்கும்போது “இத்தகைய ஆக்சிடன்ட் ஆனார்…” என்று அதனின் உணர்வினைப் பதிவு செய்து கொள்கின்றோம்.
பதிவு செய்து கொண்ட பின் நாம் பஸ்ஸிலே செல்லும்போது இதனுடைய உணர்வே அதிகரிக்கிறது. அதிகரித்த உணர்வு கொண்டு நாம் டிரைவரை உற்று நோக்குகின்றோம்.
அப்படி உற்று நோக்கினோம் என்றால் அவரின் எண்ணத்தில் அதிகரித்து நாம் டிரைவரை உற்று நோக்க நமக்குத் தக்கவாறு டிரைவரின் உணர்வின் தன்மை “தன்னுடைய ஸ்டியரிங்கைத் திருப்ப வைத்துவிடும்”.
பின் நாம் எதை அஞ்சி இருந்தோமோ நாம் எண்ணியது போல அங்கே நிறைவேற்றி ஆக்சிடண்ட் ஆகும்.
அந்த ஆக்சிடண்ட் ஆகும்போது நாம் எதை எண்ணி வலுப் பெற்றோமோ அதன் நிலை கொண்டு
1.மற்றவர்களுக்கு அடி இருக்காது.
2.நாம் எதைப் படித்து அல்லது பார்த்து இப்படி ஆக்சிடென்ட் ஆனது என்று பயந்தோமோ
3.அப்பொழுது நுகர்நது கொண்ட அந்தப் பய உணர்வு அதற்குத் தக்கவாறு விபத்து ஏற்படுவதும்
4.நமக்குக் காயங்கள் ஏற்படுவதும் இருக்கும்.
குழந்தைகள் ஓன்றும் அறியாத நிலையில் இருக்கும்போது எத்தகைய ஆக்சிடண்ட் நடந்தாலும் “குழந்தைகள் தப்பி விட்டது” என்று சொல்வார்கள் இதைப் பார்க்கலாம்.
ஒரு சமயம் திண்டுக்கலில் இரயில்வே நிலையத்தில் நான் (ஞானகுரு) நின்று கொண்டிருக்கும் போது அங்கே ஒரு அம்மா ஒரு குழந்தையை எடுத்து தண்டவாளத்தைத் தாண்டுகின்றது.
கண்ணிலே பார்க்கிறேன்.
அப்போது குருவும் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) கூட இருக்கின்றார். இரண்டு பேரும் சேர்ந்து நடந்தே தான் அங்கே வருகின்றோம்.
அப்பொழுது குருநாதர் காட்டுகின்றார். இந்தப் பெண்ணின் இயல்பின் வழி இதனின் உடலில்.., “விபத்தால் இறந்த ஆன்மா உண்டு”. அது அழைத்துச் செல்வதைப் “பார்” என்றார். இதைக் கண்ணுற்றுப் பார்… என்று காண்பிக்கின்றார்.
அதாவது ஒரு அச்சத்தால் ஆக்சிடண்ட் ஆனதைப் பார்த்தபின் இது உடலிலே பட்டபின்
1.இதற்கு இரயில் வருவது தெரிகின்றது.
2.இரயிலைக் கடந்து செல்ல அதே ஈர்ப்பின் தன்மைக்குக் கொண்டு வருகின்றது (அந்த விபத்தால் இறந்த ஆன்மா).
3.கொண்டு வந்த பின் அது எவ்வாறு அடிப்பட்டதோ அதே நிலையில் கொண்டு சுக்கு நூறாக அந்த அம்மாவின் தசைகள் சிதைந்து விட்டது.
4.இது சிதைந்த நிலையில் இது உடலில் இருந்த இது நுகர்ந்த உணர்வுகள் “அதனுடைய சரீரத்தையும்…” காட்டுகின்றார் எமது குருநாதர்.
அதற்கு முன் அடிபட்ட இந்த உணர்வுகள் இதற்குள் பட்டபின் அது எப்படி அஞ்சி உடல் பதறியதோ…, ஏனென்றால் வண்டி வருவதும் தெரிகின்றது. பதட்டத்தின் விபத்தின் ஈர்ப்பு நிலைகள் எப்படி ஊடுருவிச் செல்கின்றது பார் என்றார்.
ஆனாலும் அது கையில் வைத்திருக்கும் அதன் குழந்தை தண்டவாளத்தின் நடுவிலே விழுந்து விடுகின்றது. இதை கண்ணுற்று பார்க்கச் சொன்னார்.
காரணம் இதனுடைய பிழையின் நிலைகள் இவ்வாறு இருக்கும். அதன் உணர்வின் செயல்கள் எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையை உற்றுக் காண்பிக்கின்றார். ஏனென்றால் இது உங்களுக்கு
1.குருநாதர் உற்று நோக்கி
2.உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்று
3.தெளிவாக எமக்குக் காட்டியதைத்தான் உங்களிடம் அப்படியே நான் சொல்கின்றேன்.
குருநாதர் இதை நான் கண்டுணர வேண்டும் என்பதற்காக… என்னை வேக வேகமாக… அவசரமாக… அழைத்துக் கொண்டு வருகிறார்.
அதைப் பார்க்கப்படும் போது இதனுடைய உணர்வுகள் எப்படி இயங்குகிறது…? என்ற காண்பிக்கின்றார். அது எவ்வாறு அந்த உணர்வுகளை இயக்குகிறது…? என்ற நிலையும் காட்டுகின்றார்.
அப்பொழுது நான் குருநாதரிடம் கேட்டேன். அதே நிலையில் “அந்த அம்மாவைக் காக்க கூடாதா…!” என்று கேட்கிறேன்.
அப்பொழுது குருநாதர் சொல்கிறார்.
1.அதனின் உணர்வின் செயலாக அது செல்கின்றது.
2.இருப்பினும் அதனுடைய உயிரான்மா அது வெளிச் செல்கின்றது.
3.எதைச் செய்தாலும் அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் புகத்தான் செய்யும்.
4.அந்த ஆன்மா இந்த உடலில் புகுந்தது போல இன்னொரு உடலில் புகுந்து அதைச் செய்யும்.
ஆனால் அந்த உடலில் இருக்கும்போதே அந்த ஆன்மா அந்த உடலின் தன்மை “எந்த ஆன்மாவத் தனக்குள் மாற்றிக் கொள்கின்றதோ.., அதைத்தான் அது மாற்ற முடியுமே தவிர… நான் மாற்றுவேன்… நீ மாற்றுவாய்…” என்று இல்லை.
அது தாயின் கருவில் இருக்கும்போது இத்தகைய மாற்றத்தின் நிலைகள் கொண்டு
1.தாய்… தன் எண்ணத்தால் “காத்திட வேண்டும்…” என்று உயர்ந்த ஞானியின் தத்துவத்தை அது எடுத்திருந்தால்
2.அதன் உடலிலே இந்த உணர்வின் தன்மை உடலிலே பதிவாகி இருந்தால் “இன்று அதைக் காக்கும்…”
இன்று நீ அதைச் செய்ய முடியாது என்ற இந்த உண்மையையும் தெளிவாகக் காட்டுகின்றார்.
ஆகவே அப்படியே நீ இன்று செய்ய வேண்டும் என்றாலும் அது உனக்கு முன் இது காத்து இந்த உணர்வின் செயலாகப்படும் போது எதிர்மறையாகி இதைக் காத்திடும் நிலையும் வரும்.
1.அது உன்னிடம் கேட்டிருந்தாலோ
2.அல்லது என்னிடம் பேசியிருந்தாலோ
3.உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கியிருந்தாலோ
4.இந்தப் “பதிவின் தன்மை” இருந்தால் தான்… அதைக் காக்க முடியும்.
இதையெல்லாம் தெளிவாக எடுத்துக் காட்டினார்.
இன்று நம்மில் அதிக பேருக்கு நாம் விபத்தில் சிக்குவது ஏன்…? ஏன் அதைக் காப்பாற்ற முடியாதா… தடுக்க முடியாதா…! என்ற எண்ணங்கள் உண்டு.
1.நீங்கள் கேள்விகள் கேட்பது போன்று தான்
2.நானும் குருநாதரிடத்தில் அந்த இடத்தில் கேள்வியைக் கேட்டேன்.
விபத்தாகிறது என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள். உணர்வின் தன்மையைக் காட்டுகின்றீர்கள். இதை ஏன் நீங்கள் காக்கக் கூடாது…? “காக்க வேண்டும் அல்லவா…” என்று குருநாதரிடம் கேட்டேன்.
1.காப்பது நாம் அல்ல…
2.அறிந்து கொள்ளும் நிலைகள் வரும்.. தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.
3.அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் அந்த உணர்வின் தன்மை அதற்குள் “அவர்கள்… பதிவாக்கியிருக்க வேண்டும்…”
4.தாயின் நிலையிலே அது பதிவாகியிருக்க வேண்டும்.
5.வாழ்க்கையில் இது போல் ஞானிகளுடன் யாராவது நல்ல வாக்கினை கொடுத்தால் அந்த “வாக்கு” காக்கும்.
இதைத்தான் அங்கே தெளிவாகக் காட்டினார்.
அந்தக் குழந்தை அறியாத தன்மையிலிருப்பதால் இதனுடைய நிலைகளும் அதற்குத் தெரியாது. நடுத் தண்டவாளத்தில் கடந்து சென்ற பின் அந்த உணர்வின் தோற்றமும் மற்ற நிலைகளும் அதற்கு எந்த ஆபத்துமில்லை.
ஏனென்றால் அந்தக் குழந்தை அடிபட்டு இறந்த இந்தத் தாயின் கருவிலே இருக்கப்படும் போது அந்தக் குழந்தை ஞானிகளுடைய நிலைகளையும் அது கேட்டுணர்ந்த உணர்வுகளில் பதிவானது.
சிறிது யாசகத்திற்காக வேண்டி ஒரு மந்திரவாதி தான் அங்கே வீட்டிற்கு வந்திருக்கின்றான். ஆனாலும் (அவர்) மந்திரவாதி என்று சொல்ல முடியாது.
சாது என்ற நிலைகள் அவர் வரப்படும் போது இந்தத் தாயும் அப்படி எண்ணியதால் தக்க தருணத்தில் குழந்தை கருவாக இருக்கப்படும்போது அவர் யாசிக்கும் போது அதைக் கொடுத்தது.
அப்படிக் கொடுத்த உணர்வுகள் அந்தக் கருவில் இருக்கும் குழந்தைக்கு உதவியிருக்கின்றது. ஆகவே அந்த அம்மாவின் குழந்தை காப்பாற்றப்பட்டது.
ஆனால் அதே சமயத்தில் அந்த மந்திரவாதி எந்தக் கருவின் தன்மை உருவாக்கினாரோ அந்த உணர்வின் தன்மை “தனக்கு வேண்டிய உணர்வை” (இறந்தவரின் ஆன்மாவை) அது எடுத்துக் கொண்டது.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா….?
ஒரு உடலின் நஞ்சைப் பிரித்தெடுத்து உணர்வின் தன்மை சக்தி பெற்றதோ அந்தச் சக்தியின் தன்மை கொண்டு இவர் ஆசிர்வாதம் கொடுத்தது தாயிற்கு ஊழ்வினையாகின்றது. ஆனால் அவர் கொடுத்த சக்தி கருவுக்குள் இருந்து குழந்தையைக் காத்தது.
அதே சமயம் இதனை எடுத்துக் கொண்ட நிலைகள் “எதை… மந்திர ஒலிகள் கொண்டு எடுத்தாரோ… இது மந்திரவாதியைப் போய்ச் சேரும்…”
இது “அலறிய உணர்வுகள்” கொண்டு இங்கே எடுத்துத் தன் வலுவின் தன்மை கொண்டு “எவ்வாறு செய்கிறார்…” என்ற நிலையும் இதையும் விவரித்துக் காட்டினார்.
ஒரே செயலில்… “எத்தனை நிலைகள் பொருந்தியுள்ளது…” என்பதை எமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டுதான் சொல்கின்றோம். நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.
1.குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் காரத்தின் சுவையாகவும்,
2.உப்பு அதிகரித்து விட்டால் உப்பின் சுவையாகவும் மாறுவது போன்றுதான்
3.நமது வாழ்க்கையில் எதனின் உணர்வுகள் (அதனின் பதிவு) “முன்னிலையில்” அதிகரிக்கின்றதோ
4.அதனின் செயலாக நம் உணர்வின் தன்மையை மாற்றி அதனின் இயக்கமாக நம்மை இயக்கிவிடுன்றது.
5.இதிலிருந்து மனிதர்கள் ஒவ்வொருவரும்… “எவ்வாறு மீள வேண்டும்….” என்றுதான் இதைக் காட்டினார்.
முதுமையாகும் போது… “என்னை யாரும் கவனிக்கவில்லை” என்ற எண்ணத்தில் சாபமிட்டு ஆன்மா பிரிந்தால் எங்கே செல்கிறது…?
நாம் நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் கொண்டு எல்லோரிடத்திலும் பழகுகின்றோம். அன்பாகப் பழகும் பொழுது ஒரு நண்பனுக்கு நோய் என்ற நிலை வந்து விட்டால் அவருக்கு வேண்டிய உபகாரத்தை நாம் செய்கின்றோம்.
பற்றுடன் பாசத்துடன் நாம் அவரைக் காக்க உதவி செய்கின்றோம். உதவி செய்தாலும் அவருடைய உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது. அந்த அணுக்கள் நமக்குள் பெருகத் தொடங்கி விடுகின்றது.
அதே சமயத்தில் நோய்வாய்ப்பட்டவரோ தன் குடும்பத்தில் ஒன்றி இருப்பவர்களிடத்தில் எனக்கு மேல் வலிக்கின்றது… இங்கே வலிக்கின்றது… அப்படி இருக்கின்றது… சங்கடமாக இருக்கிறது… என்று எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்.
ஆனால்…
1.குறித்த நேரத்தில் எதிர்பார்த்தபடி அவருக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்றால்
2.நன்றாக இருக்கும் போது நான் இத்தனை செல்வங்களை இவர்களுக்கு தேடிக் கொடுத்தேனே.
3.பாவிகள் என்னை ஒருவரும் இப்போது கவனிக்கவில்லையே என்ற உணர்வு தான் வரும்.
காரணம் கவனிக்க முடியவில்லை என்ற இந்தச் சந்தர்ப்பம் இத்தகைய உணர்ச்சிகளை இவருக்குள் தூண்டுகின்றது. “பாவிகள்…” என்ற நிலையில் சாப அலைகள் அங்கே தொடர்கின்றது.
இத்தகைய சாப அலைகளாக இவர் தொடரப்படும் பொழுது அந்த குடும்பத்தில் உள்ளவர்களோ…
1.இவருக்கு நாம் இவ்வளவு தூரம் உபகாரம் செய்த பின்பும்
2.”இப்படி எல்லாம் பேசுகின்றாரே…” என்ற இந்த உணர்வுகளை அங்கே அவருக்குள் பரப்புகின்றது.
அவருக்குள் வெறுப்பின் தன்மை வருகின்றது.
வெறுப்பின் தன்மை வர வர அது இவரைக் கவனிப்பவர்களுக்குள்ளும் வளர்ந்து அவர்களிடத்தில் இருக்கும் நல்ல உணர்வுகளை அழிக்கும் தன்மையாக வருகின்றது.
எவ்வளவு நல்லது செய்தாலும் இப்படியே செய்து கொண்டிருக்கின்றார்… நாம் என்னத்தைச் செய்வது…? என்று வேதனைப்படுகின்றார்கள்.
இந்த வகையில் வேதனையான உணர்வின் அணுக்கள் இவர்கள் உடலிலும் உருவாகத் தொடங்குகின்றது. கருவாக உருவான பின் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது இங்கே அவரை நினைத்து வேதனை என்ற உணர்வுகள் வருகின்றது
வேதனையான உணர்வுகள் வரப்படும் பொழுது
1.அவர் எப்படி நோயாக உருவானரோ அதே நோய் இவர்கள் உடலிலும் வளரத் தொடங்கும்
2.அந்த மரபணுக்கள் இங்கே விளையத் தொடங்கி விடுகிறது.
குடும்பத்தில் யாராவது கர்ப்பமாக இருந்தால் இதை எல்லாம் எண்ணிப் பார்த்தாலே போதும்… கூர்ந்து கேட்டால் போதும்…! இதே உணர்வுகள் கருவில் இருக்கும் குழந்தைக்குள் விளைந்து விடும்.
இந்த மரபணு அங்கே ஈர்க்கப்பட்டு அந்த குழந்தைகளுக்கும் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் சக்தி இழக்கப்படுகிறது. அவர்களுக்கும் அந்த நோய் உருவாகத் தொடங்கி விடுகின்றது.
தவறு செய்யவில்லை… நுகர்ந்த உணர்வுகளை அறிகின்றோம் சந்தர்ப்பம் இதை உருவாக்கி விடுகின்றது. ஆனாலும் நண்பன் என்ற நிலைகளில் நுகர்ந்து பார்க்கும் பொழுது பற்று இங்கே வந்து விடுகின்றது.
அத்தகைய பற்று வந்துவிட்டால் இந்த உடலை விட்டு அவர் செல்லும் பொழுது
1.இத்தனை செல்வத்தைத் தேடி வைத்தேன்… என்னைக் கவனிப்பார் யாரும் இல்லை என்ற சாபமும்
2.நண்பன் மீது பற்றும் வரப்படும் பொழுது அந்த உயிரான்மா நண்பனுடைய உடலுக்குள்ளேயே வந்துவிடும்.
உங்கள் நண்பர் போய்விட்டார் என்று கேள்விப்பட்டால் உடனே “ஆ…“ நேற்று கூட நான் பேசினேனே என்ற இந்த உணர்வின் வேகம் கொடுக்கப்படும் பொழுது அந்த ஆன்மா இங்கே வந்து விடுகின்றது.
இந்த உடலுக்குள் வந்தால் அதே உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு அதே நோயை இங்கேயும் மாற்றும்.
மனிதனுடைய எல்லை அது அல்ல…!
மார்க்கண்டேய தத்துவம்
மனிதனின் உடலில் உண்ணும் உணவிற்கொப்ப உடலில் இரத்தம் எப்படி மாறுபாடு கொள்கின்றதோ அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்பவும் உயிரணுக்களின் தோற்றம் உடல் தன்மையில் வளர்கின்றது.
இன்று விஞ்ஞான ரூபத்திலேயே மருத்துவரின் ஆராய்ச்சியில் உணவு உட்கொள்வதற்கு முன்னும்… பின்னும்… மற்றும் இனிப்புப் பதார்த்தங்களைத் தந்தும்.. (SUGAR LEVEL IN BLOOD) ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள்.
அதற்கொத்த விகிதத்தில் இரத்த அணுக்களின் மாற்றத்தைக் காணுகின்றார்கள், அதைப் போன்றே
1.உணர்வின் நிலைக்கொப்ப எடுக்கப்படும் எண்ணத்தால்
2.உயிரணுக்களின் “ஆத்ம பதிப்பு” உடனே இரத்த அணுக்களில் சேர்வதைக் காட்டிலும்
3.ஆத்மாவின் பதிவு எண்ணத்தின் மோதலாக
4.எண்ணத்தின் செயல்பாடு உணர்வைத் தூண்டக் கூடிய நிலையில்
5.உயிரணுக்களின் விகிதத் தன்மை வீரியம் கொள்கின்றது.
புரியாத புதிராகப் படிப்பவர்களுக்கு இது தோன்றும்…!
உணவை உண்ணும் பொழுது உடலுக்குள் இரத்தத்தில் உடனே அது அணுவாகச் செயல் கொள்கிறது. அதுவே “எண்ணத்தில் எடுக்கும் எதுவாகிலும்…!” நம் ஆத்மாவில் பதிவாகிறது.
பதிவான பின் ஆத்மாவின் உந்துதலினால் உணர்வில் மோதுண்டு ஒன்றையே மீண்டும் மீண்டும் எண்ணத்தில் கொண்டு உடலுக்குள் இருக்கும் (ஜீவ) உயிரணுக்களிலும் அச்சத்துக் கூடக்கூடிய சந்தர்ப்பத்தை எண்ணத்தால் எடுக்கும் உராய்வினால் ஏற்படுத்துகின்றோம்.
அப்படி ஏற்படுத்துவதினால் வாழ்க்கையில் மனித ஆற்றலின் செயல் யாவையும் “எண்ணமே தான் கடவுள்..!” என்ற தத்துவத்தில் எண்ணத்திற்கொப்பத்தான் செயல் திறமையின் ஆற்றலின் பரிமாண சக்தியாக வளர்கின்றது.
1.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த ஞான ரிஷிகள் பிருகு முனிவரும் பிருகண்ட ரிஷியும்
2.என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேயத் தத்துவமாக இந்தப் பூவுலகத்திற்குத் தத்துவரீதியாக உணர்த்தினார்கள்
3.அந்த உண்மைகள் யாவையும் ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு வேதங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது
என்றும் பதினாறு என்ற நிலையில் அழியாததாக “உயர்வெய்தும் உயிர் ஆத்மாவின் உயர்வை…”
1.இன்றைய மனித ஆற்றலின் சிந்தனை எல்லாம்
2.சரீர சுகத்தின் செருக்கில்
3.விஞ்ஞானத்தின் இயந்திரக் கதிக்கு அடிமைப்பட்டு விட்டது.
எண்ணத்தைக் கொண்டு எதையும் சிந்தனையில் சீர்படுத்தி உணரக்கூடிய தன்மை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் உண்டு. செலுத்தும் பக்குவத்தில் தனக்குள் இருக்கும் உயிரான ஈசனைச் சூட்சமத்தின் துணை கொண்டு ரிஷி சக்திகளின் சக்தியைக் காண வேண்டும்.
விதியின் கதிப்படி நடப்பதை எல்லாம் மதி கொண்டு மாற்றியமைப்பது போல் ஒவ்வொரு மனித ஆத்மாவில் சரீர விதியின் கதியை மாற்றியமைக்கக்கூடிய செயலை “நான்” என்ற உண்மை உணர்தலில் பெற முடியும்.
விஞ்ஞானத்தில் எப்படி இயற்கை வளங்களைச் செயற்கை முறையால் மாற்றியமைத்து பல உணமைகளை மாற்றும் நிலைப்படுத்துகின்றனரோ அது போன்ற நிலையை மனித தத்துவத்திலும் மெய் ஞானத் தத்துவத்தால் மாற்ற முடியும்.
1.சரீர எண்ண அறிவின் ஆற்றல் கொண்ட மனிதப் பிறப்பின் தொடரில்
2.உயிரணுவின் தோற்றத்தின் நட்சத்திர ஒளி அலை அமிலத்தின் கூறு கொண்டு
3.பிறப்பின் தொடரில் வாழும் விதியின் கதியின் வாழ்க்கையில்
4.பிறப்பின் தொடரில் வாழும் முறையில் அந்தப் பிறப்பின் முடிவும்
5.நட்சத்திரத் தொடர் கொண்ட பூமியின் கதிக்கு
6.பூமி தொடர்பு கொள்ளக்கூடிய நட்சத்திர ஒளிகளின் செயல் தன்மை
7.ஒவ்வொரு இயற்கையின் செயலிலும் நடக்கும் கதி கொண்டு இயற்கையின் சுழற்சியுடன் சுழல்கின்றது.
(அதாவது உயிர் தோன்றி பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து சுழலும் நிலையின் இயல்பு இதுவே)
ஆனால் மதி கொண்ட ஞான ஒளி எடுக்கும் ஆத்ம ஞானிகளின் செயல் எப்படிப்பட்டது…?
உயிர் தோன்றிய அந்த (தன்னுடைய) நட்சத்திரத் தொடரையே தன் எண்ணத்தின் அறிவின் ஆற்றலைக் கொண்டு சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளித் தன்மையை விழிப்புறச் செய்கின்றார்கள்.
எப்படி…?
1.மெய் ஞான ஒளி அறிவின் வேரை வளர்க்கக்கூடிய
2.வான் கோள்களின் விண்மீன்களின் தொடர்பு படுத்தும் ஒளிச் சக்தியால்
3.ஆத்மாவின் விழிப்பால் – பேரண்டத்தின் உண்மையின் வளர்ப்பு கொண்ட விண்மீன்களின் விழிப்பு நிலையை
4.தன் சிந்தனையின் அறிவின் ஆற்றலைக் கொண்டு பெற்று
5.என்றும் பதினாறாக ஒளிரும் நட்சத்திரமாக விண்ணிலே பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.
மனிதனின் முதிர்வு நிலை அதுவே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விநாயகரை வைத்து அதை உற்று நோக்கி உணர்வினைப் பதியச் செய்து விண்ணை நோக்கி ஏங்கிப் பார்க்கும்படி செய்தார்கள் ஞானியர்கள்.
கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஓங்கி எண்ணத்தைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று அதைத் தனக்குள் கவர்ந்து தீமையை அகற்றும்படி செய்து உணர்த்தினார் அகஸ்தியர்.
எதைக் கண்டுணர்ந்து அன்று அகஸ்தியன் விண்ணுலகம் சென்றானோ அதைத் தன் இன மக்களுக்கும் பெற வேண்டும் என்று அவ்வாறு செய்தான்.
அதை யாரும் இப்போது செய்யவில்லை.
அதை இப்பொழுது சொன்னோம் என்றால்
1.“தேங்காய் பழம் உடைக்காமல்… எப்படிச் செய்வது…?
2.அரச மரத்தைச் சுற்றாமல்… எப்படி அந்தச் சாமியிடம் வரம் வாங்குவது? என்று கேட்பார்கள்.
3.எங்கள் மூதாதையர்கள் இறந்து விட்டால் இறந்த பிற்பாடு மோட்ச தீபம் போட்டு அங்கே அர்ச்சனை செய்யாவிட்டால் மோட்சத்திற்கு எப்படிப் போவார்கள்….?
இப்படி இந்த ஐதீகத்திலும் சாங்கியத்திலும் தான் நாம் தொடர்ந்து கொண்டுள்ளோம். நம்முடைய வாழ்க்கையே சாங்கிய சாஸ்திரங்களில் காட்டியபடிதான் போய்க் கொண்டிருக்கின்றது.
1.சாங்கிய சாஸ்திரம் என்பது வேறு
2.ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிகள் வேறு.
ஆக ஒவ்வொரு குணங்களுக்கும் விதி அமைத்து இதை முடக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு மதி கொண்டு விதியை மாற்றும் மார்க்கங்களைக் காட்டினார்கள் மகரிஷிகள்.
நம் விநாயகர் தத்துவமே ஞானவான் என்று விநாயகரைச் சொல்வார்கள். அதாவது அந்த மதி கொண்டு மனிதன் வாழ்வில் வந்த இருளைப் போக்கிய நிலைகள் பெற்றவர்கள் மகரிஷிகள்.
ஒன்றைக் கூர்மையாக உற்றுப் பார்த்தால் கண்ணின் கருவிழி நம் உடலிலுள்ள எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற நிலைகள் பதிவாக்குகின்றது. அதன் கதியில் நமக்குள் விளையப்படும் போது அது விதியாக மாறுகின்றது.
ஓர் வித்தினை நாம் ஊன்றினால் அது மரமாக வளரும் போது அதன் “கதியிலே” வளருகின்றது. வித்தின் தன்மை பெறும்போது “விதியாக” மாறி விடுகின்றது. தன் இனச் செடியை அது “விருத்தியாக்கச்” செய்து விடுகின்றது.
இதைப்போன்று தான் மனிதன் நாம் தீமையான சொற்றொடர்களைக் கேட்டுணர்ந்தால்
1.ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.
2.பின் அந்தத் தீமைகளைப் பற்றிய நினைவுகள் கூடிக் கூடி
3.அதனின் கதியிலே மனிதன் வாழ்க்கை கூடிவிடுகின்றது.
4.ஆக அந்தத் தீமையை விளைவிக்கும் அந்த உணர்வின் நிலையாக விளையப்படும் போது “விதியாக..” மாறி விடுகின்றது.
5.அந்த விதியிலிருந்து மீள முடியாது.., என்ற நிலை சாங்கிய சாஸ்திர விதிகளில் காட்டப்பட்டிருக்கின்றது.
6.விதி வழி நடக்கும் என்கிறார்கள்… அதை மதி கொண்டு மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
எந்த மதி கொண்டு… விதியை மாற்ற வேண்டும்….!
நம் உயிர் நெருப்பு. அருள் மகரிஷிகளின் அருளாற்றலை உயிர் வழி சுவாசித்து உடலில் உள்ள இரத்தங்களிலும் அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களிலும் பாய்ச்சுதல் வேண்டும்.
பின் நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சுதல் வேண்டும்.
ஆக ஊழ்வினையாகப் பதிவாகி அதனால் விளைந்த அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை வலுப் பெறச் செய்யும் பொழுது அந்த விதியின் கதி மாறி நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் மதியாகி “ஒளியின் சுடராக” மாறுகின்றது.
1.நம் உயிரான நிலைகள் கொண்டு
2.அருள் ஞான உணர்வை நம் உடலுக்குள் செலுத்தி
3.தீமையைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்” என்பது தான் மகரிஷிகள் கண்டுணர்ந்த சாஸ்திரத்தின் உண்மைகள்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பயன்படுத்தும் முறை
இந்த மனிதனின் வாழ்க்கையில் அன்பும் பரிவும் பாசமும் கொண்டு வாழும் நிலையில் பிறருடைய துயர்களைக் கேட்டறிந்து தான் அவர்களுக்கு நாம் உதவி செய்கிறோம்.
உதவி செய்தாலும் அவருடைய துயரமான உணர்வுகளை நுகரப்படும் பொழுது துயரத்தை ஊட்டும் அணுக்களாக உடலுக்குள் நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.
மீண்டும் மீண்டும் அவர்களுடைய துயர்களை எண்ணும் பொழுது அந்த அணுக்கள் நமக்குள் பெருகி நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை நம்மை அறியாமலேயே மடியச் செய்து விடுகின்றது.
1.அப்போது நல்ல குணங்களை நாம் காக்க முடியாது போய் விடுகின்றது.
2.உயிரான ஈசனை நாம் மறந்து விடுகின்றோம்
3.மனித உடலில் இருந்து வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்த மறந்து விடுகின்றோம்
4.பற்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளில் இருந்து விடுபடத் தெரியவில்லை.
அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஒவ்வொரு நிலைகளிலும் நீங்கள் தெளிந்து தெரிந்து அந்த அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத் தான் இப்போது உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.
ஆக… ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வதைத்தான் “தொட்டுக் காட்டுவது…” என்று சொல்வது.
1.உணர்வுகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள் அது எப்படி இயங்குகின்றது…? தீமைகள் விளைவது எப்படி…? என்ற நிலையில்
2.தீமையிலிருந்து விலகும் அருள் உணர்வுகளை யாம் (ஞானகுரு) உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது
3.இந்த இரண்டையும் கலந்து நீங்கள் நுகர்கின்றீர்கள்
நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுவாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது. இந்த அணுக்கள் உடலில் பெருகிவிட்டால் இதற்கு முன்னாடி உடலில் உருவான தீமை என்ற உணர்வின் அணுக்களை வளராது இது தடுக்கும்.
நல்ல பண்பு கொண்ட மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் சந்தர்ப்பத்தால் பிறருடைய வேதனையைக் கவர்ந்து கொண்டால் அது வலிமை பெற்று விடுகிறது.
வேதனைப்படுகின்றான் வேதனைப்படுகின்றான் என்று மீண்டும் எண்ணும் பொழுது அந்த வேதனை உணர்வே நமக்குள் இரையாகி வேதனைப்படச் செய்யும் அணுக்களாக வளர்க்கப்படும் பொழுது நல்ல அணுக்கள் வாழ முடியாதபடி கடும் நோயாக வந்து விடுகின்றது.
நோய் வளர்ந்து விட்டால் அந்த நோயை நீக்கும் உபாயம் வேண்டுமல்லவா…!
1.வேதனையால் உருவான நோயின் அணுக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து கலந்து விட்டால்
3.அதே உணர்வு ஓம் என்று பிரணவமாகி இந்த உணர்வின் கருவாக அதை மாற்றுகின்றது.
அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோய்வாய்ப்பட்டவர் உடலில் படர வேண்டும் அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
நமக்குள் அதை வளர்த்துக் கொண்ட பின் அந்த அணுவின் தன்மையாக விளைகிறது. விளைந்த பின் நோயுற்றவரிடம் இதை வாக்காகச் (சொல்லாக) சொல்லி அவருக்குள்ளும் இது விளையப்படும் பொழுது
1.நம்முடைய பார்வையும் நம்முடைய சொல்லும் அவருடைய நோயை நீக்கக்கூடிய தன்மையாக வரும்
2.நமக்குள் நோய் வராது தடுக்கும் சக்தியும் பெறுகின்றோம்.
மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம்மை மாற்றுகின்றது. அதை மாற்ற… கொடுத்த சக்தியைப் பயன்படுத்திப் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற நிலையில் இந்த ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்றி… உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்தச் சக்தியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
மனிதனின் நிலைகளில் உயர்ந்தவன் அகஸ்தியன் அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நமக்குள் சேர்த்துக் கொண்டால் தீமைகளை நீக்கி நோய்களை நீக்கி அது நமது ஆன்மாவைத் தூய்மை ஆக்குகின்றது.
1.அந்தத் தூய்மையான உணர்வுகள் வளர வளரத் துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் வருகின்றது
2.இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் வளர்த்துக் கொண்ட அருள் உணர்வு கொண்டு
3.உயிர் அங்கே துருவ நட்சத்திரத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து… ஆறாவது அறிவு கொண்ட நிலையை ஏழாவது நிலையாக ஒளியாகப் பெறச் செய்யும்.
“நான்…” என்னும் பலனை நாம் அறிந்திருக்கின்றோமா…?
நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா… இந்த உடலா..?
சரீரம் என்பது அழியக்கூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?
1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.
செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.
ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும்
1.மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான
2.”நானின்…” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.
சுவாசம் எடுத்துவிடுவதும்… கண் இமை மூடித் திறப்பதும்… செவி ஒலி கேட்பதும்… சுவை உமிழ் நீர் ஊருவதும்… இவை எல்லாமே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.
கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி… தூக்கம்… மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்… தன் தன் கதியில்
3.நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது. (பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை)
செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ தூங்கவோ வலியை நீக்கவேண்டும் என்றோ
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.
கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.
மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்… சோர்வுக்கு உறக்கத்தையும்… செலுத்தக்கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
அப்பொழுது… இந்த “எண்ணம் தான்…” நானா…?
விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.
தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.
ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில் பொறுக்கி எடுத்த
4.நற்குணம் ஆறு எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!
அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான் விஞ்ஞானியாகவும் ஆகின்றான் அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்.
மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா…!
ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்…!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எத்தனை கோடிச் செல்வங்கள் இருந்தாலும் அது நம்மை மகிழச் செய்கிறதா…! என்றால் இல்லை.
அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால் அது ஒளி பெறும் நிலையிலிருந்து நம்மை என்றென்றும் பிறளாது அந்த மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து என்றும் நம்மைக் காத்தருளும்.
பிற தீமைகளில் நாம் சிக்காது உயிருடன் ஒன்றி பிறவியில்லா நிலைகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும்.
ஆகவே அந்த அருள் ஞானியின் உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களில் விளைவிப்பதற்குத்தான் இந்த உபதேசம். மகரிஷியின் அருளாற்றல் மிக்க சக்திகளைப் பெறுவதற்குண்டான தகுதியை உருவாக்குவதற்குத்தான் இந்த உபதேசம்.
1.ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது
2.அதே போல் தனி மனிதன் “ஒருவரால்” அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தைப் பெறுவதற்கு முடியாது.
அதைப் பெறுவதற்குண்டான தகுதியை அவர்களைப் பற்றிச் சொல்லி அந்தப் பதிவுகளை உங்களுக்குள் ஏற்படுத்தி உங்கள் எல்லோருடைய எண்ணங்களையும் ஒருங்கிணைக்கச் செய்கின்றோம்.
1.நீங்கள் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்களுக்குச் சமமான நிலைகளில் வலுப்பெறுகின்றீர்கள்.
3.அவ்வாறு வலுப் பெறச்செய்து மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து… கவர்ந்து… எடுக்க வேண்டும்.
4.நாம் கவரப்படும்போது நமக்கு முன் அந்த அலைகள் படர்கின்றது.
5.அப்பொழுது நம் ஆன்மாவில் இது கலக்கப்பட்டு தீமைகளைப் பிளக்கின்றது,
6.அவ்வாறு தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை நுகர்ந்து உள் செல்லச் செய்வதே இந்த உபதேசத்தின் நோக்கம்.
என்னமோ… சாமி லேசாகச் சொல்கிறார்… என்று நீங்கள் எண்ண வேண்டாம்.
1.குண்டலினியைத் தட்டி எழுப்பி…
2.மண்டலத்தையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்…
3.தொட்டுக் காண்பித்தார்கள்… பொட்டிலே வைத்துக் காண்பித்தார்கள்…
4.ஐயோ… “இவர் ஒன்றுமே அப்படிச் செய்யவில்லையே…” என்று சொல்வதற்கு இல்லை.
உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வை “அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக மாற்றத்தான்” என்னால் என் குரு காட்டிய நிலையில் முடியும்.
தொட்டுக் காட்டியோ எல்லை அறியாது எல்லை இல்லாத நிலைகள் போகும் மார்க்கங்களையோ உங்களுக்குள் சொல்லவில்லை.
உதாரணமாக… சிறு குழந்தையாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நிச்சயம் விளைய வைக்க முடியும்.
உங்களுக்குள் அருள் ஞானியின் உணர்வை ஆழப் பதியச் செய்து அதனின் அருள் துணை கொண்டு அனைவரும் ஏங்கி அந்த உணர்வின் சத்தைக் கவரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.
1.ஆழ் சக்தியுடைய அந்த மகரிஷிகளின் உணர்வுகள்
2.எட்டாத தூரத்தில் இருக்கும் அவர்கள் உணர்வுடன்
3.உங்களை ஒன்றச் செய்து கொண்டிருக்கின்றோம்.
அவர்களுடன் ஒன்றும் நிலை வரும் பொழுது நம் ஆன்மாவில் கலந்த தீமைகளைப் பிளந்து தீமையைப் பிளந்திடும் உணர்வாக அது விளையச் செய்யும். நமக்குள் அதை வலுப்பெறச் செய்யும்.
இந்த வலுவின் துணை கொண்டு தான் உடலை விட்டு அகன்று சென்ற நம் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்ய முடியும்.
அவர்கள் முன் சென்றால் இன்னோரு உடல் பெறும் உணர்வுகள் அங்கே கருக்கப்படுகின்றது, கருகியபின் அது ஒளியின் உணர்வாக சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளியின் சரீரம் பெறுகின்றது.
ஏனென்றால் அவரின் உணர்வின் தன்மை பெற்றது தான் நமது உடல். அவர்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் நாம் உந்திச் செலுத்தும் பொழுது அவர்களும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறார்கள்.
அதே சமயம் அவர்கள் மூலம் விண்ணின் ஆற்றலை எளிதில் நாம் கவர முடிகிறது. அதன் வழியில் நம் வாழ்க்கையில் வரும் தீமையைத் துடைக்க முடிகின்றது.
அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகள் நமக்குள்ளும் இருள் நீக்கும் அந்த உணர்வாக விளைகின்றது.
1.அதைப் பற்றுடன் பற்றும்போது
2.நமது எல்லையும் “சப்தரிஷி மண்டலமாக”அமையும்.
இறந்தபின் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் (ஆவி) அடுத்த உடலில் எப்படிச் சாடுகிறது…?
நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் இது நடந்த நிகழ்ச்சி. ஒரு ஊரில் இரண்டு பேரில் ஒருவருக்கொருவர் பகைமையில் அடுத்தவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகின்றார்கள்.
எதிரி என்ற நிலையில் இருக்கப்படும் பொழுது இறந்தவருக்கோ தன்னிடம் வேலை செய்யும் ஒரு சாதாரண கூலி ஆளிடம் பேசிப் பழக்கம் இருந்திருக்கின்றது. இறந்த பின் அவருடைய ஆவி அந்த கூலி ஆளின் உடலுக்குள் சென்று விட்டது
அந்த உடலுக்குள் சென்ற பின் “ஐய்யய்யோ… என்னை வெட்டிப் போட்டு விட்டார்களே… வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விட்டார்களே…! என்று சொல்லத் தொடங்குகின்றார்.
ஆனால் இப்படிப் பேச ஆரம்பித்ததும் “இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது…” என்று ஊர்க்காரர்கள் எல்லாம் சொல்கின்றார்கள். அந்த ஆளை என்னிடம் அழைத்து வருகின்றார்கள்.
என்னை வெட்டி விட்டார்கள்… வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விட்டார்கள்… என் துணி எல்லாம் இங்கே இருக்கின்றது… அரிவாள் எல்லாம் இங்கே இருக்கின்றது… புதைத்தவர்கள் இன்னார்…! என்று அந்தப் பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றது இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று சொல்கின்றது.
அந்த நேரத்திலே போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்த்தாற் போல் தான் நான் சைக்கிள் தொழில் செய்து கொண்டிருக்கிறேன் அங்கே இருக்கக்கூடிய சப் இன்ஸ்பெக்டர் இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
காரணம் அவருக்கு ஏற்கனவே இங்கே என்னிடம் பழக்கம் இருந்தது.
அவருடைய கொழுந்தியாளுக்கு ஒரு சிக்கல் இருந்தது. அவர்கள் கேரளாவில் இருப்பவர்கள். அந்தப் பெண்ணிற்கு அங்கே செய்வினை செய்து விட்டார்கள்.
சேலை கட்டினால் சேலை கிழிந்து விடும் வெளியிலே வர முடியாது இரவில் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்து விடும்.
ஆரம்பத்தில் இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு அந்தச் சப் இன்ஸ்பெக்டர் என்னை அது விஷயமாகச் சந்தித்தார். என்னை அவர்கள் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
இந்தப் பெண்ணுக்கு இப்படி இருக்கின்றது… என்ன செய்ய வேண்டும்…? என்று கேட்டார்.
மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்து இருக்கின்றார்கள். சுருட்டையும் மதுவையும் வைத்திருப்பார்கள். ஒரு ரூமில் கொண்டு போய் அந்தப் பதார்த்தங்களை வையுங்கள் என்று சொல்லி வைக்கச் சொன்னேன்.
சொன்ன மாதிரி வைத்தவுடன் அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்று இந்தப் பெண்ணை எதுவும் செய்யவில்லை. சேலை எல்லாம் அப்படியே இருக்கின்றது… முகத்தில் காயமும் இல்லை.
சுயநினைவு வந்த பின் இங்கே என்னிடம் அழைத்து வந்தார்கள். அந்த அம்மாவிடம் சில விவரங்களைச் சொல்லி இந்த மாதிரிச் செய் உனக்கு நன்றாகி விடும்… பாதுகாப்பாக இருக்கும்…! என்று சொன்னேன் செய்தது
அதன் பிறகு அது நன்றாக ஆனது. செய்வினை எதுவும் பாதிக்கவில்லை. அதற்குப் பின் சப் இன்ஸ்பெக்டர் இங்கே வந்தார் என்றால் உள்ளே சிறிது நேரம் உட்கார்ந்து நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.
அப்படி அவர் இருக்கும் நேரத்தில் இந்த ஆள் வந்து இப்படிப் புலம்ப ஆரம்பிக்கின்றான்.
என்னை வெட்டி விட்டார்கள்… புதைத்து விட்டார்கள்…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
அவர் உடனே என்ன…! ஏது…? என்று கவனித்துக் கொண்டே சென்று அது நிஜமா… பொய்யா…? என்று அது எத்தனாவது வாழை மரம்…? என்று விசாரித்து அங்கே சென்று தோண்டிப் பார்க்கின்றார்கள்.
பார்த்தால் அங்கே எல்லாமே இருக்கின்றது.
துணி எங்கே இருக்கிறது என்று சொன்னது…? கொன்ற ஆயுதங்கள் எங்கே இருக்கிறது…? என்று சொன்னது. எல்லாம் தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
எடுத்த பின் மற்றவர்கள் தலைமறைவாகப் போய்விட்டார்கள்…
1.கடைசியில் என்னைக் (ஞானகுரு) கொலை செய்ய வந்து விட்டார்கள்
2.இந்த ஆள்தான் எல்லாம் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்று என்னைத் தேடி வருகின்றனர்.
பின் அவர்களை அரெஸ்ட் செய்து விட்டார்கள். மரண தண்டனை கிடைத்தது.
இருந்தாலும்…
1.சந்தர்ப்பத்திலே இதைச் சொல்லப்படும் பொழுது நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வருகின்றது…? என்ற வகையில்
2.அப்பொழுது குருநாதர் சில உணர்வுகளை உணர்த்துகின்றார்
அவர்கள் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
1.ஆபத்து வந்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இப்படிச் செய்…! என்று சொன்னார்
2.அதனால் அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கின்றது என்ற நிலையை
1.ஒரு ஆன்மா எப்படி வெளியில் செல்கின்றது
2.இன்னொரு உடலுக்குள் சென்ற பின் என்ன செய்கின்றது
3.இதையெல்லாம் அறிந்து கொள்வதற்குத் தான் மூன்று லட்சம் பேரைப் பார்த்தது.
எல்லாம் அனுபவபூர்வமாகக் கண்ட நிலைகள்.
மூலமும் இவனே… மூலக் காரணமும் இவனே…!
1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!”
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.
தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி” என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.
மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.
ஆகவே இந்த ஜென்மத் தொடரில் தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை
1.நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் – செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.
சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.
இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நான்கு நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
நண்பர் என்று பழகிப் பாசத்துடன் ஒன்றிவிடுகின்றோம். அதே சமயத்தில் ஒரு நண்பருக்கு அவர் குடும்பத்தில் சிக்கல் வந்துவிடுகின்றது. அவர் மீது குடும்பத்தில் மிகுந்த வெறுப்பின் தன்மை அடைகின்றார்கள்.
அதைத் தாங்காது குடும்பத்தின் மேல் வெறுப்பு வந்தபின் “என்ன வாழ்க்கை…!” என்று அந்த நண்பர் மருந்தைக் குடித்துவிடுகிறார். தற்கொலை செய்து கொள்கிறார்.
அப்பொழுது அந்தக் குடும்பத்தின் மேல் வெறுப்பும் அதே சமயத்தில் சாப உணர்வுகளும் அங்கே வரும்.
என் குடும்பத்தில் இப்படிச் செய்தார்களே.., “அவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…!” என்ற சாப அலைகளை அங்கே பதிவு செய்கின்றது.
சாப அலைகள் அந்தக் குடும்பத்திலுள்ளோர் மீது பதிவாகி விடுகின்றது. இறந்த பின் அந்த உடலில் எந்த நிலைகள் பதிந்ததோ அந்த வீட்டிலும் பதிவாகின்றது.
அவரைச் சார்ந்தவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது. அதன் உடலில் எவ்வளவு கெடுதல் செய்ததோ அதுவெல்லாம் இங்கே வந்துவிடுகின்றது.
அதே சமயத்தில் நண்பர் என்ற நிலைகளில் பாசமாகப் பழகி இருந்தார் அல்லவா. மருந்தைக் குடிக்கும் பொழுது
1.“நண்பனே…, நாம் இருவரும் எவ்வளவு பழகியிருந்தோம்…! இந்த மாதிரி ஆகிவிட்டதே…
2.நான் உன்னை எப்படி வந்து பார்ப்பது?” என்றே தெரியவில்லை.
3.உனக்குத் தெரியாமல் நான் இப்படிச் செய்துவிட்டேன் என்ற எண்ணத்தை அதிகமாகச் சேர்த்து விட்டால் இந்த ஆன்மா எங்கே போகும்…?
எந்த நண்பன் மேல் பாசமாக இவ்வாறு எண்ணினாரோ அந்த நண்பனின் உடலுக்குள் வரும்.
எப்படி…? ஏன்…?
தற்கொலை செய்த நண்பரைப் பற்றி இவர் கேள்விப்படுவார். கேள்விப்பட்டவுடன் நண்பனைப் பற்றிப் பாசத்தால் எண்ணுவார்.
“அடடா… நேற்று வரையிலும் என்னிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தானே… அதற்குள் இப்படிப் போய்விட்டானா…!” என்று இந்த எண்ணத்தை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது இறந்த ஆன்மா இங்கே வந்துவிடும்.
பாசத்தால் எண்ணும்பொழுது இரண்டு பேரின் எண்ணங்களும் ஒன்றும்போது ஆன்மா நண்பரின் உடலுக்குள் வந்துவிடுகின்றது.
தற்கொலை செய்து கொண்ட ஆன்மா அந்தக் குடும்பத்தில் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்ததோ இவை அனைத்தும் நண்பர் உடலுக்குள் ஆகி… “இல்லாத கஷ்டங்களை எல்லாம்” அவருக்கு உண்டாக்கும்.
இவரும் தவறு செய்யவில்லை… அவர்களும் தவறு செய்யவில்லை. ஆனால் அந்தக் குடும்பத்தில் இந்தச் சாப அலைகள் அதன் தொடர்பு கொண்டு இது வளர்ந்து கொண்டே இருக்கும்.
இது ஒவ்வொரு குடும்பத்திலும் இது இல்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு வகையிலும் இதனுடைய தொடர்பு இல்லாது இருக்காது.
இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்…?
யாராக இருந்தாலும் சரி… “உடலை விட்டுப் பிரிந்துவிட்டார்கள்…” என்று கேள்விப்பட்டாலே உடனே நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
அடுத்து எங்களுடன் நண்பராகப் பழகிய உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
1.உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.உயிருடன் ஒன்றிய “ஒளியின் சரீரம் பெற வேண்டும்”என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.
இதைப் போன்று குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து கூட்டாகத் தியானித்து அந்த உயிரான்மாவை எளிதில் விண் செலுத்தலாம்.
உயிரான “ஈசன்…” நமக்குள் இருக்கின்றான் என்ற பயம் நமக்கு வர வேண்டும்
என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன் உன்னிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணிப் பாடலைப் பாடுகின்றோம்.
அதனின் உட்பொருளே…
1.“உயிரான ஈசன்” நீ எப்படி ஒளியாக இருந்து எல்லாவற்றையும் அறிவிக்கின்றாயோ…
2.இருளை அகற்றி நீ எப்படி என்றுமே ஒளியாக இருக்கின்றாயோ…
3.அதன் உணர்வாக என்னை நீ இயக்குதல் வேண்டும்.
4.அதன் வழியே நான் வாழ வேண்டும்…
5.பொருளறிந்து செயல்படும் தன்மை நான் பெற வேண்டும்
6.இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி எனக்கு வேண்டும்.
ஒளி பட்டால் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப்போல எனக்குள் இருளை நீக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும். ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலான சிவம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
உயிரால் இயக்கப்பட்ட நிலையும்… உணர்வால் என்னை உருவாக்கிய நிலையும்… மகிழ்ச்சி என்ற உணர்வின் சக்தியை நான் எண்ணும் பொழுது என் இசையில் நீ இயக்குகின்றாய்
1.என் நினைவில் நீ எப்பொழுதும் வர வேண்டும்.
2.”நீ இருக்கின்றாய்…” என்ற நிலையில் அந்தப் பயம் எனக்குள் வரவேண்டும்.
3.தவறு என்ற உணர்வு எனக்குள் வராது தடுத்து நிறுத்தும் அந்த ஆற்றல் பெற வேண்டும் ஈஸ்வரா.
என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா…! என்று உயிரே வேண்டுகிறோம்.
ஆனாலும்… அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கின்றோம்.
1.அந்த ஆசையினால் நமக்குள் தீமை என்ற உணர்வுகள் வந்து சேர்ந்து விடுகின்றது.
2.தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகிறோம்
3.இந்த உடலின் ஆசைதான் நமக்குள் வருகின்றது
4.”உயிரான ஈசன் இருக்கின்றான்…” என்ற நிலை மறந்துவிடுகின்றது.
வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் கடும் வேதனை உருவாகின்றது. அவனால் அமைக்கப்பட்ட இந்த உடலான கோவிலில் “அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர…” ஈசனான நிலையை நாம் வணங்க மறுக்கின்றோம். அவன் அறிவை நாம் தெளிவாக்கும் நிலையையும் இழந்து விடுகின்றோம்.
ஆகவே இந்த உடலின் இச்சைக்கு நாம் செல்லாதபடி அருள் ஒளி பெற்று இருளை அகற்றிடும் சக்தி பெற்று… உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும். இருளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.
உயிர் எவ்வாறோ… நீ எப்படி இருக்கின்றாயோ என் உணர்வுகள் அனைத்தும் ஒளிமயமாக மாறுதல் வேண்டும்
தீமையைப் பிளக்கும் நரசிம்மா என்ற நிலையில் வரும் தீமைகளை மாற்றி விட்டால் கல்கி. இந்த உயிர் ஒளியாக உள்ளது. அதைப் போல் நம் உணர்வின் தன்மை பத்தாவது நிலை ஆகும் போது தான் கல்கி.
1.பூமியின் ஈர்ப்பை விடுத்து விண்ணுலகம் செல்கிறது…
2.எதுவுமே தன்னை ஈர்த்து விடாது பறந்து செல்கின்றது.
3.குதிரை மேல் பறந்து சென்று வாளை வீசித் தப்பிச் செல்வதாக உருவம் அமைத்து
4.அருவ நிலையில் நாம் உயர்ந்த சக்திகளை எப்படிப் பெற வேண்டும்…? என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
வான் வீதியில் தோன்றிய “உயிர்” மனிதனான பின் இனி பிறவி இல்லா நிலை அடைவது தான் கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் “துருவ நட்சத்திரம்…”
கண்களுக்கு நாம் கூட்ட வேண்டிய உயர்ந்த சக்திகள்
1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.
நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.
கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.
அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே நம் ஆத்மாவில்
3.நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது – “கற்பனையில்…!”
எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக… அந்தப் படமாக… ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.
சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக – செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்… உடலில் உணரும் உணர்வுகள்…)
கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை… கனவு… வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.
இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.
இந்த ஜீவ காந்தமுடன்… ஆத்ம உயிரில்…
1.ஒலி… ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய ஐந்தாம் நிலையான ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி…!” (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த ஆறாம் நிலையில் அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.ஏழாம் நிலையான படைப்பின் படைப்பாக்கும் செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த உயிரும் ஆத்மாவும் இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (நம் விழிப்பு நிலை) இந்த கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்.
அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான நம் உயிர் ஈர்ப்பது போல் அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.
மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல் ஆன்மாவின் விழிப்பு என்ற அந்தக் கண்கள் வழியாக நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.
இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும். அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
முருகனுக்காக வேண்டி முருகனை எண்ணிக் காவடிகளை எடுத்து வருவார்கள்.
மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டு மந்திர ஒலிகளை எழுப்பிய பின் ஆற்று மணலை எடுத்துக் கொண்டு போய் சட்டியில் போட்டுக் காவடி எடுத்து வருவார்கள்.
30 நாள் அல்லது ஒரு மண்டலம் விரதம் இருந்து பல ஆயிரம் பேர் முன் வைத்துக் காவடியை எடுத்து வருவார்கள். அந்த 48 நாளும் மந்திர ஒலிகளை மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள்.
108, 1008 அல்லது ஒரு இலட்சமோ மந்திர ஒலிகளை எழுப்பி அந்த உணர்வின் தன்மை இவர்கள் ஏங்கி எடுக்கும் பொழுது அந்தக் காலம் உணர்வின் நினைவாற்றல் பருகப்படும் பொழுது எந்தக் கை கொண்டு இவர் தொட்டாரோ அந்த மணல் சர்க்கரையாக மாறும்.
இது நமக்குச் சாட்சியாகின்றது.
முருகனுக்காகக் காவடி எடுத்து வந்தேன் நான் இங்கே போய்த் திறந்து பார்த்தேன். அங்கே போய்த் திறந்து பார்த்தேன். இல்லை.
இரவும் பகலும் இங்கும் அங்கும் சுற்றுவார்கள். அப்புறம் கடைசியில் பார்த்தால் சர்க்கரையாக வரும்.
முருகனின் அருள் கிடைத்தது… சர்க்கரை கொடுத்தான்…! என்று சொல்வார்கள். பார்த்தபின் பக்தியின் நிலைகள் கொண்டு அதற்காக வேண்டி அதிலே சாய்கின்றோம்.
1.சர்க்கரையை விளையவைத்தான் என்ற
2.இந்த மந்திர ஒலிக்குத்தான் நாம் சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிக் கொண்டோமே தவிர
3.நம் உணர்வின் தன்மை இனிப்பாக வரும் சாஸ்திரங்கள் இல்லை.
அதே போல நான் (ஞானகுரு) பழனியில் இருக்கும் காலத்தில் மச்சக் காவடி என்று எடுத்து வருவார்கள். மச்சக்காவடி என்றால் மீனை அறுத்து அதில் மஞ்சள் பொடி போட்டு மற்ற பொருள்களையும் போட்டுக் காவடி எடுத்து வருவார்கள்.
பத்துப் பதினைந்து நாள்கள் சுற்றுவார்கள். நானும் கூடப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கின்றேன். இந்தக் காவடி எடுத்துச் சுற்றும் பொழுதெல்லாம் சில இடங்களில் வரவில்லை.
அப்புறம் மீண்டும் மீண்டும் மீண்டும் அந்த மந்திரங்களைச் சொல்லி அதை எடுத்து வந்தபின் சரியான நிலையில் வந்தபின் அந்த மீன் உருப்படியாகவே (உயிருடன்) வருகின்றது.
அந்த மீன்களை வையாபுரிக் குளத்தில் கொண்டு விடுகின்றார்கள். கோவிலைச் சுற்றியுள்ள ஒரு கிணற்றிலும் அந்த மீன்களை விடுகின்றார்கள்.
இதைப் போன்று சேவல் காவடி என்று சேவலைச் சமைத்து மறுபடியும் வந்தபின் இதைப் போல சேவலும் உருப்படியாக வந்ததைப் பார்த்துள்ளேன்.
ஏனென்றால் இந்த மந்திர ஒலிகளைக் கொண்டு சில நிலைகளைச் செய்கிறார்கள். கந்த புராணத்தில் எதைச் சொல்லியிருக்கின்றதோ அதற்குள் புராண காவியமாக மாற்றியமைத்து வைத்துள்ளார்கள்.
1.மந்திரங்களை ஜெபிக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் அதற்குள் படப்பட்டு
2.இது மீண்டும் சரியான பருவம் வரும் பொழுது இணைந்துவிடும்.
3.இதைக் கரையான் மந்திரம் என்பார்கள்,
ஆனால் பக்தி மார்க்கங்களில் இதையெல்லாம் “முருகன் செயல்” என்று நிலைக்கு வரும் பொழுது
1.அந்த முருகனை வணங்கினால்
2.சாங்கியங்களைச் செய்தால் நமக்கு நல்லது என்ற நிலையில் தான் இன்று நாம் ஆலயங்களுக்குச் செல்கின்றோம்.
ஆனால் அந்த ஞானிகள் சொன்னது பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் அறிவாக வளர்ந்து வந்த மனிதனின் “ஆறாவது அறிவைத் தான்” முருகனாகக் காட்டினார்கள்.
ஆறாவது அறிவின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை உனக்குள் எடுத்து நஞ்சினை வென்று ஒளியின் சுடராக “கார்த்திகேயா” என்று பேரொளியாக மாற வேண்டும்.
“அழியும் சொத்தைச் சேமிப்பதற்காக…” நாம் மன உறுதியைக் கொண்டு வர வேண்டியதில்லை
அகஸ்தியன் நஞ்சினை வென்றான் இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான். அவனில் விளைந்த உணர்வு இந்தப் பூமியில் படர்ந்துள்ளது.
அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வினைப் பெற நாம் ஏங்கித் தியானிப்போம். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்குங்கள்.
கண்களை மூடி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உயிரான ஈசனிடம் “இந்த உணர்வை இயக்குங்கள்… அதை நுகருங்கள்…”
2.நுகர்ந்த உணர்வை… அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் சக்தியை உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உயிர் உருவாக்கும்
3.ஓ… என்று ஜீவ அணுவாக உருவாக்கும் கருத்தன்மை அடையச் செய்யுங்கள்.
உங்கள் உடலுக்குள் அந்த அகஸ்தியனின் அணுக்கருக்கள் பெருகும். அணுக்களாக வளர்ச்சி பெற்ற பின் அகஸ்தியன் உணர்வுகளை உட்கொள்ளும் அந்த உணர்ச்சிகளை உந்தும்.
அப்போது அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகள் நீங்குகிறது… நஞ்சினை நீக்கி… இருளை அகற்றி… மெய்ப்பொருள் காணும் அந்த அருள் சக்தியைப் பெறும் தகுதி நாம் பெறுகின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.அந்தப் பேரருளை உங்களுக்குள் உருவாக்குங்கள்
2.பேரொளி பெரும் கரு உலகமாக… உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
3.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைப் புருவ மத்தியிலே உணரலாம்.
ஒரு நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது… அந்த உணர்வுகள் “மின் கற்றைகளாக… மின்னல்களாக எப்படி வெளி வருகின்றதோ…” இதைப் போன்று உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி இருளினை அகற்றி உடலுக்குள் ஒளியின் நிலையாக உருவாகும்.
1.உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுக்கும்
2.இருளை அகற்றும் அருள் ஒளி என்ற உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே பெருகும்.
ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எடுக்க இப்படிப் பழகிக் கொள்ளுங்கள்.
“டக்… என்று அந்த ஞாபகம் வரும்… நோய் வராது தடுக்க முடியும்
இதற்கு முன்னாடி நோய்கள் இருந்தாலும் அடுத்தடுத்து வேதனை வரும் பொழுது இதைக் கலந்து எடுத்துக் கொண்டே வாருங்கள்.
1.நல்ல உணர்வுகளுக்குள் மற்ற கஷ்டம் என்ற உணர்வுகளைக் கேட்டறிந்த பின் அந்த நல்ல உணர்வை அது எப்படிக் கெடுக்கின்றதோ
2.அதே போன்று தீய உணர்வுகளை அழித்த அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாககச் சேர்த்துக் கொண்டு வாருங்கள்.
அந்த உணர்வுகள் மாறும். ஆகவே துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வரவேண்டும்… வாழ்க்கையில் வரும் நிலைகளை பற்றதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அத்தகைய ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்று ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).
செவிகளில் கேட்கின்றீர்கள்… கூர்ந்து கவனிக்கின்றீர்கள்… நுகர்கின்றீர்கள் இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலில் அணுக் கருவாக மாறுகின்றது கருவானால் உங்களுக்குள் அது விளையத் தொடங்கும்.
உதாரணமாக…
1.கோழி அடைகாக்கத் தவறினால் அந்த முட்டை குஞ்சாகப் பொரிக்காது.
2.அது போல் தீமையான உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த எண்ணத்தை அங்கே இணைத்தால்
4.அந்த பேரருள் என்ற உணர்வின் தன்மை அணுத் தன்மையாக உங்களுக்குள் விளையும்
5.தீமைகள் விளையாது தடுக்கப்படுகிறது… உங்கள் எண்ணமே உங்களைக் காக்கும்.
தொடர்ந்து இதைச் செயல்படுத்துதல் வேண்டும். மனிதனான பின் பிறவி இல்லா நிலை தான் நாம் அடைதல் வேண்டும்.
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ…? பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? மின்னலைப் போல மறைவதைப் பாராய்…! ஏன்று குருநாதர் பாடியது போன்று
1.செல்வத்தை எவ்வளவு தேடிச் சென்றாலும்… அதன் வழி சம்பாரித்து வைத்திருந்தாலும்…
2.அந்தச் சொத்தைக் குழந்தைகள் சீராக அமைக்கின்றனரா…? பாதுகாக்க முடியவில்லை.
3.எத்தனையோ அரசுகளை அரசர்கள் ஆண்டார்கள்… சாம்ராஜ்யத்தை ஆண்ட அந்த அரசர்கள் இருக்கின்றார்களா…? அவருடைய சொத்துக்கள் இருக்கின்றதா… “இல்லை…”
4.இல்லாததற்கு நாம் ஏன் இந்த மன உறுதியைக் கொண்டு வர வேண்டும்…?
5.என்றும் நிலையானதாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
எப்படி அணுவாகிச் சூரியன் ஆனதோ பிரபஞ்சமான பின் உயிரணு ஆக ஆனால் அது என்றுமே அழிவதில்லை. தீயில் குதித்தால் உயிர் வேகுவதில்லை… உணர்வுகள் கருகுகின்றது.
எதிலும் அழியாத உயிரை… அந்த உயிரைப் போன்றே ஒளியான அணுக்களின் தன்மையாக நாம் பெருக்குதல் வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்.
“சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதால்தான் கடைசியில் இறப்பை எய்துகிறோம்
இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியால் பூமி எதை எதை எடுத்து வளர்க்கின்றதோ அந்தத் தொடரின் அமிலக் கலவையின் உயர்ந்த வீரியம் கொண்ட உயிர் நிலை தான் மனிதச் சரீரம் எடுக்கும் உண்மை நிலை.
பூமியின் இயற்கைத் தன்மையிலேயே அறிவின் ஆற்றலைச் செயலாக்கும் திறன் கொண்ட
1.மனித நிலையில் ஜீவித சரீர ஓட்டத்தில்
2.எந்தச் சுவையின் உணவு முறையில் மனிதன் உண்டு வாழ்கின்றானோ
3.அந்த அமிலம் மட்டுமல்லாமல் இந்தப் பூமியிலுள்ள கனி வள அமிலத் தன்மையின் குணமும் மனிதச் சரீரத்தில் உண்டு.
மனிதன் தான் எடுக்கும் சுவாசத்தின் உணர்வால் இந்தப் பிறப்பின் தொடர் வாழ்க்கையில்
1.பிறப்பு… இறப்பு…! என்ற இயற்கையின் கதியில் உட்பட்டு
2.அதையே நியாயப்படுத்தி வாழ்கின்றானே தவிர
3.மனிதனுக்குள் மறைந்துள்ள “நான் என்பது யார்…?” என்ற நிலையை மனிதன் உணரவில்லை.
4.பிறப்பையும் இறப்பையும் ஏற்றுக் கொண்ட நிலை தான் உள்ளது
5.எங்கிருந்து வந்தோம்… எங்கே செல்ல வேண்டும்… ஏன்… எதற்காக.. எப்படி…? என்று அறியும் நிலை இல்லை.
ஆனால் கோள்களில் செயல்படும் எண்ணிலடங்காத தெய்வ சக்திகளின் சூட்சமத்தின் சூட்சமமே “மனித உயிரும்…!”
மனித உயிரின் ஜீவித உடலின் உயிர் அணுக்கள் தான் உயிர்ப்பித்து உணர்வு கொண்ட சுவாச கதியில் செயல் கொண்ட அமில உயிர்ப்புத் தன்மைகள் அதனுடைய கதியின் நிலைக்கொப்பத்தான் வாழ்க்கையின் எண்ண உணர்வு நிலையின் செயலின் கதி ஓட்டம் இன்று மனிதன் வாழும் நிலை.
(அதாவது உயிரால் ஜீவன் பெறும் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்துமே அந்த உயிரின் தொடர்பால் தான் சுவாசிக்கும் நிலையே பெறுகிறது. அப்படி வெளியிலிருந்து உடலுக்குள் வரும் பல சக்திகள் அது எந்த எந்த உணர்வு கொண்டு வந்ததோ அதற்கு ஒப்பத்தான் நம்முடைய எண்ணம் சொல் செயல் இயங்கி நம் வாழ்க்கையே அமைகிறது)
இந்த உலகில் கலந்துள்ள அமிலத்தின் அனைத்துத் தொடர்புகளும் மனித உயிரின் சூட்சமத்தில் அடங்கியுள்ளது. அது எல்லாவற்றையும் பெறும் தகுதியும் உண்டு.
ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின் கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின் தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.
உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.
இஜ்ஜீவிதத்தில் அதாவது மனிதனாக உருப் பெற்ற நிலையில் உயிர் என்ற சூட்சம ஒளிச் சரீரத்தின் இயக்கத்தில் சுழலும் தன்மையில்
1.தன் எண்ணத்தின் உணர்வை
2.எந்தச் சுவையின் தொடரில் சுவைப்படுத்துகின்றோமோ
3.அதற்கொத்த செயலாக உயிரும் ஆத்மாவும் வலுத் தன்மை கொண்டு
4.இந்தப் பிறப்பின் தொடரிலிருந்து பிறவா நிலை பெற முடியும்.
5.உங்களால் முடியும்.. உங்களை நீங்கள் நம்புங்கள்…!
இந்தச் சரீர இயக்கத்தின் கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில் மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
(1.அதாவது வெளியிலிருந்து சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்)
இப்படிப்பட்ட மனித இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது…
1.எந்த உணர்வுக்கொப்ப வாழ் நாள் செல்கிறதோ
(2.வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல)
3.அதன் சுழற்சியில் சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.
இதிலிருந்து மனிதனில் மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்…?” என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம் “ரிஷித் தன்மை” பெற முடியும்.
இந்தப் பூமியில் சில மகான்களின் தத்துவம் எப்படி வளர்ந்தது…?
நம்முடைய உணர்வின் எண்ணம் எதை எண்ணிச் செயல்படுகின்றதோ அதற்கொப்ப குண அமிலங்கள் உடலுக்குள் வந்து சேர்கின்றது. அத்தகைய உயிர் அணுக்களுக்குள் எது பதிவாகியுள்ளதோ அந்தப் பதிவின் தொடர் அலை ஜீவித வாழ்க்கை தான் மனிதனின் வாழ்க்கை.
1.அதன் தொடரில் எண்ணும் எண்ணமே தான்
2.நம்முடைய ஆத்மாவில் பதிவாகி
3.நம் ஆத்ம தொடரின் வளர்ப்பும் செழிப்பும்.
(உடலில் உள்ள உயிரணுக்களின் நிலையும் நமக்குச் சொந்தமான உயிரணுவின் நிலையும் இங்கே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது)
இந்த நிலையில் இருந்து தான் மனிதனில் சிலருக்கு அபூர்வமான உண்மைத் தன்மைகளை உணரும் நிலை ஏற்பட்டது.
இந்தக் கலியிலேயே பிறப்பால் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு சிறுவன் தன் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட சந்தர்ப்பத்தால் தெய்வ குணத்தின்பால் “கிருஷ்ணர்… இராமர்…!” என்ற தன் எண்ணத்தில் ஈர்க்கப்படுகின்றான்.
அதன் தொடர்பால் அந்தச் சிறுவனின் எண்ணம் சர்வ சதா காலமும் கிருஷ்ணனின் நாமத்தைத் தெய்வ குணமாக எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
அப்பொழுது விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் சக்தி ஒளி அந்தச் சிறுவனின் மேல் பட அந்தச் சிறுவனில் இருந்த இருள் அகலுகின்றது.
1.அந்த மகரிஷிகளின் ஒளி சக்தியால்
2.சிறுவனின் ஆத்மா மங்காத நட்சத்திர ஒளியைப் பெற முடிந்தது. (பாலயோகீஸ்வரர்)
எதைத் தொடர்ந்து எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வே தான் ஆன்மா.
1.அந்த ஆத்மாவின் விதி கொண்டு தான் நற்கதியும் துர்க்கதியும்.
2.நற்கதியின் எண்ணத்தை மதி நுட்பமுடன் எண்ணும் பொழுது ஆத்மா நிச்சயம் ஒளித் தன்மையில் பிரகாசிக்கும்.
மனிதன் “நான் என்பது யார்..?” என்பதை உணரக்கூடிய நிலையில் மெய் ஞானத்தில்
1.மகரிஷியாகக் கூடிய உயிர் தான் தன்னுயிரும் என்பதை
2.ஒவ்வொருவரும் உணர்ந்து அந்த நிலையை எய்த முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ – ஆறு திரையிட்டு ஏழாவது திரையை வெள்ளையாகக் காட்டினார் இராமலிங்க சுவாமிகள்
இராமலிங்க அடிகள் சொன்னது “அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ…”
ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் இந்த உயிரின் துணை கொண்டு அவன் தீமை செய்கிறான் என்று அறிந்து கொள்கின்றோம். அவன் செய்யும் தீமைகளை இந்த உயிரே தான் அதைப் பிரித்துத் “தவறு செய்கின்றான்…” என்று உணர்த்துகின்றது.
அதைத்தான் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ என்று சொல்லிவிட்டு “தீமை செய்வோருடன்… என்னுடைய பழக்கம் இல்லாது இருத்தல் வேண்டும்…” என்று அவர் வேண்டுகின்றார்.
எத்தகைய தீமைகள் இருந்தாலும்
1.அவர்களுடன் நான் அணுகாது
2.அவர்கள் பேச்சை நான் பேசாது
3.அவர்களுடைய நினைவுகள் இல்லாது நான் பெற வேண்டும்.
4.அந்தத் தெளிந்த மணங்கள் நான் பெறவேண்டும் என்பதுதான் அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ.
ஏனென்றால் தன் உணர்வின் தன்மை “பிறர் செய்யும் தீமைகளை… உற்றுப் பாராது… இருத்தல் வேண்டும்…” ஆகவே எனக்குள் தெளிந்திடும் அறிவாக நீ அருட்பெரும் ஜோதியாக இருக்க வேண்டும்.
கார்த்திகேயா என்ற நிலையில் ஆறுபடை வீடுகளில் முருகனைப் பற்றி அவர் தத்துவம் பாடி வந்தார். அதைத்தான் இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது திரையிட்டு மனிதனின் உணர்வின் தன்மை ஒளியாக்கி உயிருடன் ஒன்றி ஜோதியின் உடலாக இருக்கும் நிலைகள் என்று காட்டினார்.
அந்தப் பேரருள் பெற வேண்டும் என்ற தத்துவத்தைத்தான் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் இந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் இராமலிங்க அடிகள் கூறினார்.
அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ – நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதையெல்லாம் நமக்குள் தெளிவாக்குகின்றது.
ஒருவன் தவறு செய்கின்றான் என்று கேட்டறிந்தால் அவன் செய்யும் தவறுகளை நுகர்ந்தறிந்து தவறு செய்கின்றான் என்று நம் உயிர் தான் உணர்த்துகின்றது. ஆனாலும்
1.அந்தத் தவறு செய்பவனைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணுவோம் என்றால்
2.அவன் தவறு செய்த உணர்வுகள் நமக்குள் அதிகமாகி
3.அந்த அறிந்திடும் அறிவு செயலிழந்து
4.அவன் தவறு செய்யும் உணர்வே நமக்குள் உள்ள நல்ல உணர்வுகளை இருள் சூழச் செய்துவிடுகின்றது.
அவன் தவறு செய்கின்றன் என்று உணர்த்துவதும் நம் உயிர் தான். அவன் தவறு செய்கின்றான் என்று நாம் பல முறை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் வந்து “உயிரால் உணர்த்தப்படும் இந்த அறிவும் மங்கிவிடுகின்றது”.
அதனால் தான் இராமலிங்க சுவாமிகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ என்று இந்த உயிருடன் ஒன்றி
1.தான் எண்ண வேண்டியது எது…?
2.எவ்வாறு எண்ண வேண்டும்…?
3.எதனை நாம் செய்ய வேண்டும்…? என்ற நிலைகளில்
4.மக்கள் நாம் எப்படித் தெரிந்து கொள்ள வேண்டும்…? என்று அவருடைய பாடல்கள் மூலம் உணர்த்தினார்கள்.
அதே சமயத்தில் அக்காலத்தில் அவர் தெளிந்த நிலைகள் கொண்டாலும் அவர் அறியாது அவருக்குள் பல “அற்புதம்” நடக்கின்றது.
சில நஞ்சினைப் போக்கும் உணர்வுகள் அவர் உடலில் ஆன்மாவில் இருந்ததனால் ஒரு நஞ்சு தீண்டிவிட்டால் இராமலிங்க சுவாமிகளின் பார்வை பட்டால் நஞ்சு தீண்டியவரும் நஞ்சு நீங்கி உயிர் பிழைத்து எழுந்து நடக்கத் தொடங்குகின்றனர்.
ஆனால் அவரவர் இச்சைகள் கொண்டு நமக்குப் பொருள் கிடைக்கும் புகழ் கிடைக்கும் என்ற நிலைகள் தான் மனிதனுடைய சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சென்றதே தவிர
1.பொருளும் புகழும் நமக்கு எத்தனை காலம் நிலைக்கும்..?
2.புகழும் நம்மைத் தேடி வராது.
3.பொருளும் நம்மை நாடி வந்தாலும் நிலைக்காது.
4.நாம் பெறவேண்டியது என்ன…? என்று இராமலிங்க அடிகள் தெளிவாகச் சொன்னார்.
இந்த வாழ்க்கையில் அனைத்தும் தெரிந்து கொண்டாலும் உயிர் ஒளியாக நின்றது போல் உணர்வுகளையும் ஒளியாக மாற்றி
1.என்றும் அருட்பெரும் ஜோதியாக
2.நம் உணர்வுகள் என்றும் சுடராக இருக்க வேண்டும் என்றுதான்
3.அவர் ஆறு திரையிட்டு ஏழாவது திரையை வெள்ளையாகக் காட்டினார்.
ஆனால் அக்காலத்தில் உள்ள மக்கள் இவருடைய அற்புதத்தைப் பெற்றால் எனக்கு உடல் சுகம் கிடைக்கும் பொருளை அனுபவிக்கலாம் புகழ் கிடைக்கும் என்றுதான் அவரை நாடிச் சென்றார்களே தவிர “அவர் உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தாலும்…, யாரும் எடுப்பார் இல்லை…”
இதைத்தான் “கடை விரித்தேன்… கைக் கொள்வார் யாரும் இல்லை…” என்று அவர் விடுபட்டுச் சென்றார்… நொந்து சென்றார்.
துருவ (நட்சத்திர) தியானத்தை லேசாக நினைத்து விடாதீர்கள்
1.உயிரணு தோன்றி… மனிதனாகப் பிறந்து வளர்ந்து
2.27 நட்சத்திர உணர்வுகளை உணவாக உட்கொண்ட பின்…
3.உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது.
துருவத்தை எல்லையாகக் குறி வைத்து அதன் வழி நட்சத்திரங்களின் உணர்வுகளைத் தனக்குள் கவர்ந்து அதனின் எல்லையை அடையும் போது துருவ நட்சத்திரமாகிறது.
நம் பிரபஞ்சம் மற்ற நிலைகளில் அவைகளை எடுத்தாலும் உயிரணு தோன்றிய பின்… நட்சத்திர உணர்வுகளை உட்கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மை வருகிறது… மற்றதைக் கருக்கி விடுகின்றது.
1.நட்சத்திரம் மின் கதிர்களாக வரப்படும் பொழுது எப்படி மாற்றுகின்றதோ அதைப் போன்று தான்
2.இந்த உயிரணுவின் தோற்றங்கள் இப்படி உருவாகித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.
மனிதரான பின் கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றான பின் அந்தத் துருவ நட்சத்திரமாக மாறுகின்றது. அந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உணர்வுகளும் ஒளியாகின்றது.
உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றி “சப்தரிஷி…” சிருஷ்டித்துக் கொண்ட உணர்வு… அந்த மண்டலங்களாக துருவ நட்சத்திரத்துடன் இயங்குகின்றது.
மகாபாரதத்தில் இது தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் காலத்தால் மறைத்து விட்டார்கள். இந்த உண்மைகளை நாம் மறந்தே போய் விட்டோம்.
காரணம்… அரசர்கள் தனக்குத் தெரிந்த “ரகசியம்…” மற்றவர்களுக்குத் தெரிய கூடாது என்ற நிலையில் அவ்வாறு செயல்படுத்தி விட்டார்கள்.
1.வேதங்களை மாற்றப்பட்டு… உண்மையின் இயக்கங்கள் மறைக்கப்பட்டு…
2.மறைந்த உணர்வுகளை… அந்த உண்மைகளைத் தேடிக் கொண்டே இருக்கின்றோம். இன்னும் கிடைத்த பாடு இல்லை…!
ஆனால் இப்பொழுது நீங்கள் அதை தேடிக் கொள்ள வேண்டாம்..! உங்கள் உடலுக்குள் அனைத்தும் உண்டு.
ஒளியாக எப்படி மாற்ற வேண்டும்…? என்று தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு) இருந்தாலும் ஏற்றுக் கொள்வார் குறைவாகவே உள்ளனர்… ஏற்றுக் கொள்வதே மிகக் கடினமாக இருக்கின்றது
காலை துருவ தியானத்தில் எப்படியும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை எல்லாம் தொடர்பு கொள்ளச் செய்கிறோம்.
அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய அந்தப் பேரருளை எடுத்து
1.அந்த இயக்கச் சக்தியை உங்களுக்குள் உருவாக்கப்பட்டு அதன் வழியில் இயங்கிப் “பேரொளியாக…”
2.உயிர் எப்படி ஒளியானதோ உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒளி மயமாக மாற்றி
3.அதற்கப்புறம் எத்தகைய தீமையும் தனக்குள் வராதபடி வேகா நிலையை அடைந்து
4.என்றும் பேரருள் பேரொளியாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதில்
5.வாழக் கற்றுக் கொள்வது தான் இந்தத் துருவ தியானப் பயிற்சியின் நிலைகள்.
உங்களுக்குள் ஆழப் பதிவு செய்த இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வந்து இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி… இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதை அடிப்படை ஆதாரமாக வைத்துச் செயல்படுங்கள்.
1.மனித வாழ்க்கையில் வரும் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ பகைமை உணர்வோ போன்றவைகளை மாற்றி அமைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதைப் பற்றுடன் பற்றுங்கள்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் தனக்குள் புகாத வண்ணம் தடுத்துக் கொள்ளுங்கள்.
சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது அதன் வலிமையை இழக்கச் செய்ய முடியும்.
ஆகவே அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து உடலுக்குள் அதை அணுக்களாக மாற்றிடும் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான் துருவ தியானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.
அதை லேசாக நினைத்து விடாதீர்கள்…!
உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் நாம் பிறப்பு எடுக்கவில்லை
இந்தப் பூமியின் இயற்கைக் கதியுடன் வளர்ந்த பலா மரம் அது வளர்ந்து பலன் தருகிறது. அதனுடைய பலனாக ஒவ்வொரு தருணத்திலும் காய்த்துப் பல ஆண்டுகள் அந்த மரத்தினுடைய பலனை வெளிப்படுத்தியபின் அந்த மரம் பட்டு விடுகின்றது.
1.அந்த மரத்தின் பலனான பலாப் பழத்தின் சுவை பக்குவப்படும் நாள் இரண்டு தினங்களே (அறுத்த பின்)
2.அதனுடைய மணமும் சுவையும் அந்த இரண்டு தினங்களுக்குத் தான்…!
3.அந்த நேரத்தில் அந்தக் கனியை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்கின்றான்.
இரண்டு தினங்களுக்கு மேல் அப்படியே வைத்திருந்தால் அழுகிய துர்நாற்றமும் ஈ கொசு எறும்பு போன்ற பூச்சிகள் மொய்க்கத் தொடங்குகிறது. அதற்குப் பிற்பட்ட நாளில் அந்தக் கனியிலேயே புழுக்கள் புழுத்து விடுகின்றது.
பலாக் கனியின் பயனை இரண்டு நாளில் சுவையாக மனிதன் உட்கொள்கின்றான். அதே சமயத்தில் அந்த இரண்டு நாளிலேயே அதனைத் தன் உணவுக்காகப் பல நாட்கள் கெடாமல் பக்குவப்படுத்தும் வழியையும் மனிதன் செய்து கொள்கின்றான்.
பலா மரத்தின் கனியின் சுவையைச் சுவைப்பதற்காக மனிதன் அதனை மீண்டும் மீண்டும் பயிர் செய்கின்றான். மனித இனத்தின் உணவின் பெருக்கத்திற்கு வித்தாக்கி வளர்க்கின்றான்.
மனிதனின் பக்குவத்தால் பலா மரத்தின் வளர்ச்சியின் விகிதங்கள் பூமியின் இயற்கையில் கூடுகின்றது. ஏனென்றால் பலா மரம் தானாக வளரக்கூடிய நிலை அதிகம் இல்லை.
1.மனிதனின் செயல்பாட்டினால் பூமியின் இயக்கத்தில் தாவரத்தின் இனப் பெருக்கத்தை வளர்த்துக் கொள்வது போல்
2.உலோகக் கனி வளங்களின் வளர்ச்சியை மனிதனின் செயலால் இந்தப் பூமியின் இயக்கத்தில் வளர்க்க முடியவில்லை.
அதே போல் பூமியின் ஜீவ ஜெந்துக்களின் இன விருத்தியையும் நீர் நிலைகளில் வளரும் முத்துக்கள் போன்ற சில இனங்களையும் மனிதனின் செயல்பாட்டால் வளர்க்க முடிகின்றது.
1.பூமியில் உருவாகும் அனைத்துத் தனிமங்களையும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தும் மனிதனால்
2.அந்த உலோகத் தன்மையைத் தன்னுடைய செயலால் வளர்க்க முடியவில்லை விளைய வைக்கவும் முடியவில்லை.
3.ஆனால் இந்தப் பூமியின் ஜீவ நாடியே பூமிக்குள் விளையும் உலோகங்கள் தான்…!
(அதை விஞ்ஞானிகள் இது வரை உணரவில்லை)
ஆக இன்றைய மனிதனுடைய திறமை உயிரினங்களையும் தாவரங்களையும் தனக்கு உணவாக்கிக் கொள்ளும் தேவைக்காகச் செயல்பட்டு
1.அதனுடைய பெருக்கத்தின் வளர்ச்சிக்காகத்தான்
2.இன்றைய மனிதனின் ஞானச் செயலும் விஞ்ஞானமும் இந்தப் பூமியில் வளர்த்து வாழ்கின்றது.
இந்தப் பூமியின் ஜீவ நாடியான உலோகத்தை அழித்து வாழும் மனிதனின் ஞானம் அந்த உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும்
1.மெய் அறிவை மெய் ஞானத்தில் கூட்டினான் என்றால்
2.இந்தப் பூமியையே ஆட்சி செலுத்தும் “உயர் ஞானியாக” ஆகலாம்.
உலோகத்தின் சத்தைக் கொண்டு தான் இயற்கையின் கதியை இந்தப் பூமியின் பெருக்கத்தின் ஜீவ நாடியாக்க முடியும் என்பதனை மனிதனின் மெய் அறிவு இனிமேலாவது விழிப்படைதல் வேண்டும்.
ஏனென்றால் மனிதன் என்பவன் உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் இந்தப் பூமியில் பிறப்பு எடுக்கவில்லை. ஞானத்தின் பகுத்தறிவை மெய்யின் விழிப்படைந்து மனிதன் இந்தப் பூமியின் இயக்கத்தின் செயல் சூட்சமத்தில் சுழல வேண்டும்.
சூரியனும் பல கோள்களும் இந்தப் பூமியின் தொடர்புடன் சுழலும் பொழுது இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியில் வாழும் மனிதன் “இந்த மெய்யை அறிதல் வேண்டும்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நமது உயிர் கடவுளாக நின்று இயக்கினாலும் நாம் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ அதுவே நமக்குள் கடவுளாக நின்று நம்மை இயக்குகின்றது.
இந்தப் பேருண்மையைத்தான் அன்று இராமகிருஷ்ண பரமகம்சரும் எடுத்துச் சொன்னார்.
“கடவுளைப் பார்க்க வேண்டும்..,” என்ற மிகுந்த வேட்கை கொண்டவர் விவேகானந்தர்.
தான் கல்விச் சாலையில் படித்தாலும் அன்று பக்தி மார்க்கங்களில் உள்ள நிலைகள் கொண்டு கடவுளை அறிய வேண்டும் என்று அவருடைய வீரிய உணர்வுகள் கொண்டு பல நிலைகள் எடுத்தாலும் அவருக்குச் சரியான “விடை” கிடைக்கவில்லை.
பித்தரைப் போன்று இருக்கும் இராமகிருஷ்ண பரமகம்சரிடம் செல்பவர்களுக்குத் தக்க விடைகள் கிடைக்கின்றது என்று அறிந்த பின் அவரை அணுகுகின்றார் விவேகானந்தர்.
கடவுள் என்பது எப்படி இயக்குகின்றது…? என்று அவருக்குள் (பரமகம்சர்) அறிந்த சக்தியின் தன்மை கொண்டு
1.விவேகானந்தர் தன்னைத் தேடி வருகின்றார் என்பதை உணர்ந்து
2.தான் படுத்திருக்கும் இடத்திற்குக் கீழ் முட்களையும் வேதனைப்படுத்தக்கூடிய சில பொருள்களையும் பாய்க்கு அடியில் போடுகின்றார் இராமகிருஷ்ணர்.
இதை உற்றுப் பார்த்தபின் விவேகானந்தர் கேட்கின்றார். இது… என்ன..?” முட்கள் போட்டிருக்கின்றது.., இதன் மேல் உட்கார்ந்திருந்தால் வலிக்கவில்லையா…!
அப்பொழுது பரமகம்சர் சொல்கின்றார். (எனக்கு) “வலிக்கின்றது” என்று நீ நினைக்கின்றாய்.
1.நான் இதைப் பார்க்கவில்லை…, அதனால் எனக்கு வலிக்கவில்லை.
2.எனக்கு வலி தெரியவில்லை…! என்கிறார்.
3.அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தினால் தான் “எனக்குள் அது இயக்கும்” என்று விவேகானந்தருக்கு உணர்த்துகின்றார்.
பின் அவரைத் தொட்டுக் காட்டுகின்றார். அவர் உடலைத் தொட்டபின் அந்த உணர்வுகள் விவேகானந்தருக்குள் பாய்ந்தபின் சில உண்மையின் நிலைகளை உணர்கின்றார்.
உனக்குள் நின்று இந்த உணர்வின் செயல்கள் எவ்வாறு இருக்கின்றது என்று ஆக “இது தான் கடவுள்…”
1.என்னை முள் குத்தும் என்று நீ எண்ணுகின்றாய்
2.அந்த உணர்வின் சக்தி உன் உயிரின் தன்மை
3.அது உள் நின்று அது உணர்த்துகின்றது.
4.அந்த உணர்த்திய சக்தி உனக்குள் வந்த பின் “வேதனைப்படுவேன்.., என்று உணர்த்துகின்றது…” இது தான் கடவுள்.
5.நீ எண்ணியது எதுவோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு உள் நின்றே அது உணர்த்துகின்றது.
இவ்வாறு தான் கடவுள் அது செயலாக்குகின்றான் என்ற நிலையை அன்று விவேகானந்தருக்கு தெளிவுபடுத்திக் காட்டினார் இராமகிருஷ்ணர்.
கடவுளின் செயலாக்கங்கள் – உன் உயிர் எவ்வாறு உள் நின்று இயக்குகின்றதோ அதைப் போல எனக்கு வேதனை என்று எண்ணும் பொழுது இந்த உணர்வின் தன்மை உனக்குள் நின்று வேதனை என்ற உணர்வை உணர்த்துகின்றது.
1.கடவுளின் இயக்கம் இதுதான்.
2.கடவுளைக் கண்ணால் பார்க்க முடியாது.
உனக்குள் இருந்து உயிர் இயக்கினாலும் அவனை நீ காண முடியவில்லை. உனக்குள் பல கோடி குணங்கள் இருப்பினும் அதனை நீ காண முடியவில்லை.
நினைவின் ஆற்றல் வரும் பொழுது தான் உனது ஆன்மாவாக மாறுகின்றது. நுகர்ந்தபின்தான் உன் உயிரின் இயக்கங்கள் இவ்வாறு இயக்குகின்றது என்று தெளிவுபடுத்தினார் இராமகிருஷ்ண பரமகம்சர்.
அதன் பின் தான் அப்பொழுது அவர் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு தான் அன்று விவேகானந்தர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்தார்.
நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ அதையே நமக்குள் படைக்கின்றது என்றும் இதைப் போல நாம் எண்ணிய உணர்வுகள் எப்படி வினை என்ற நிலைகளையும் அந்த வினைக்கு நாயகனாக எந்த நிலைகளை இயக்குகிறது என்ற நிலைகளையும் உணர்ந்து கொண்டார் விவேகானந்தர்.
அவ்வாறு உணர்ந்து கொண்ட நிலையில் தான் சிகாகோவில் “சகோதர சகோதரிகளே…” என்று தன்னுடன் இணைத்து (மிஸ்டர்… அது… இது… என்று சொன்னாலும்) வெளிப்படுத்திக் காட்டினார்.
“சகோதர சகோதரிகளே” என்று தன் குரு தனக்கு உணர்த்திய வழியைத் தனக்குள் இணைத்து அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு மேலை நாட்டில் “கடவுளின் அவதாரம்” என்ற நிலைகளையும் வெளிப்படுத்தினார்.
இயேசுவின் தாயார் கணவன் இல்லாமல் பிறந்தது என்ற நிலைகளை அவர்கள் பறை சாற்றிய நிலைகளை இது பொய்மை என்று மறைமுகமாக எடுத்துக் காட்டினார்.
நெகடிவ்… பாசிடிவ்… – VE.., + VE.., என்ற இயக்கம் இல்லை என்றால் இந்த உலக இயக்கம் இருக்காது.
ஒரு மனிதன் நல்ல நிலைகளில் இயக்கப்படும் பொழுதுதான் மற்றவர்களுடைய உணர்வுகள் இயக்கப்பட்டு மற்றவன் தீமை செய்கின்றான் என்று உணர்த்துகின்றது.
அப்படி உணர்த்தினாலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று நல்ல உணர்வு கொண்டு இயக்கினால் தான் அந்தத் தீமைகளை அகற்ற முடியும். இதையெல்லாம் அங்கே உணர்த்துகின்றார் விவேகானந்தர்.
சிகாகோவில் அவர் பேசிய உபதேசங்கள் ஆங்கில வடிவில் பேசினார். நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தமிழ் வடிவில் எனக்கு உபதேசித்தருளினார்.
நான் (ஞானகுரு) எந்தப் புத்தகங்களையும் படித்து இதைச் சொல்லவில்லை.
விவேகானந்தர் தன் குரு காட்டிய வழியினை அங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு எடுத்துக் காட்டினார். நம் நாட்டின் பெருமையை அங்கே நிலைநாட்டினார்.
1.“ஆச்சாரம்… அனுஷ்டானங்கள்..,” என்பதை நீக்கிவிட்டு
2.நாம் அனுஷ்டிக்க வேண்டிய முறைகள் எது என்ற தத்துவத்தைத்தான் விவேகானந்தர் அங்கே தெளிவாக எடுத்துரைத்தார்.
3ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் நம்மைக் காக்காது.
4.”நாம் அனுசரித்து நடக்கக்கூடிய ஆச்சாரம்… எதுவோ…,” அது தான் வழி நடத்தும்.
உங்களுக்கு நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காட்டுவது என்ன…?
ஒரு பயமுறுத்தும் உணர்வை நாம் பதிவாக்கிவிட்டால் என்ன நடக்கிறது…?
இந்த இடத்திலே போனேன்… பார்த்தேன் விபத்தானது என்று ஒருவர் அதை விவரித்துச் சொன்னால் போதும்.
1.நாம் பதிவாக்கிக் கொண்ட பின் அங்கே சென்றாலே இந்த நினைவு வரும்
2.அங்கே சென்று அந்த உணர்வான பின் நம்மை அறியாமலே கிடு…கிடு… என்று நடுக்கம் வரும்.
இதே போன்றுதான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே என்ன செய்கிறோம்…?
எனக்கு (ஞானகுரு) என் குருநாதர் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி அறிமுகப்படுத்தினாரோ இதே போன்று உங்களுக்குள் அந்த அரும் பெரும் சக்திகளைப் பெற வேண்டும் என்ற நிலைகளிலேயே இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.
1.காரணம்… இனம் இனத்தைத் தான் பெருக்கும்.
2.அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளில் எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
ஆகவே குரு எனக்கு ஊட்டிய அந்த அருள் வழிகளை உங்கள் உயிரை ஈசன் என்று மதித்து அந்த அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும் உங்கள் உடலிலுள்ள அணுக்களில் இணைய வேண்டுமென்று தான் இதை உணர்த்திக் கொண்டு வருகிறேன்.
“குண்டலினி சக்தி” என்று சொல்லி “இங்கே தட்டி எழுப்புகிறேன்…” என்று செயல்படுத்தும் போது அவர்கள் உணர்வு இங்கே வந்து விடுகிறது. அவர்களின் ஆசையின் உணர்வு இங்கே வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள்.
1.அந்த மந்திரத்தின் உணர்வு இங்கே வந்தபின் ஆக்கினைக்கு நீ இங்கே தொடு என்று காட்டுவார்கள்
2.அப்போது அவர் ஆசையின் உணர்வுகள் இங்கே இயக்கத் தொடங்கும்… மற்ற மனிதர்களுடைய உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும்.
3.தொட்டவுடன் கிர்ர்ர்… என்று ஏறும்… அந்த உணர்வே தான் அவர்களுக்குப் பழக்கம் வரும்
4.நெற்றி வலிக்க ஆரம்பிக்கும்… பல நிலைகளும் ஆரம்பிக்கும்.
இது அல்ல…!
நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காட்டுவது என்ன…?
உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அது எப்படி உருவானது என்ற உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.
உங்கள் உடலில் விளைந்த அணுக்களில் அதைத் தான் தொட்டுக் காட்டுகின்றோம்.
நான் பேசும் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாயும். அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “நீங்களே உங்கள் எண்ணத்தால் அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்…!
ஒன்றுமே வேண்டாம்… ஒரு பையனைக் கூப்பிட்டு “இங்கே கரண்டு பாய்கிறதா பார்…” என்று உடலைத் தொட்டவுடன் உடலுடன் இருப்பதெல்லாம் வர ஆரம்பிக்கும். இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் விதமும்.
மூலாதாரம் என்றால்… நமக்குள் வரும் ஒரு உணர்வின் தன்மை
1.எலும்பும் இரத்தங்களும் நரம்பு மண்டலமும் இந்த மூன்றும் சேர்த்து
2.அணுத் தன்மை கருத் தன்மையை ஜீவன் பெற செய்யக்கூடிய நிலைகளாகக் கவர்ந்து
3.விந்துடன் கலக்கும் ஜீவணுக்களாக மாற்றுகின்றது.
இதுதான் மூலம் என்பது… மூலாதாரம் என்பது. அங்கே உயிர் அணுக்கள் தோற்றுவிக்கும் நிலை வருகிறது என்றால் “வைத்திய ரீதியிலே” அன்று அகஸ்தியன் கண்டுபிடித்தான்.
“ஆக்கினை…” என்றால் நாம் எதை நுகர்கின்றோமோ உயிரிளே பட்ட பின் இந்த உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது. இதைத் தெரிந்து கொண்டால் பரவாயில்லை. ஆகவே ஆக்கினை என்றால் உணர்வின் தன்மை இதிலிருந்து தான் ஆணையிடுகிறது.
மூலாதாரத்தில்… கீழே மாற்றுகிறது என்று உணர்வின் தன்மை தனக்குள் கொண்டு வரப்படும் பொழுது வித்தியாசமான நிலைகளில் சென்று விடுகின்றது.
1.மூலாதாரம் என்றால் நமது உயிர் மூலம்
2.நாம் நுகரும் உணர்வே ஆதாரம்.
3.எந்த உணவின் தன்மையோ அந்த ஆதாரத்தின் வழி கொண்டு தான் நம் உணர்வுகள் இயக்குகிறது என்று
4.சாஸ்திரங்களும் வேதங்களும் தெளிவாக நமக்கு காட்டும் நிலை.
ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் நம் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்
1.இந்தப் பூமியின் சமைப்பு அமிலத்தின் முதிர்வு நிலையின் முலாம் தன்மை தான்
2.மனித உடலின் அமிலக்கூறின் வார்ப்பு நிலை.
(பூமியின் முதிர்ந்த வளர்ப்பு தான் மனிதன்)
பூமிக்கு அடியில் உருவாகும் உலோகத் தன்மையில் முதிர்வு நிலை வளர வளர பூமியின் முதிர்வின் வலுத் தன்மை கூடுவதைக் காண்கின்றோம். (உலோகத்தின் வளர்ச்சியில் பூமி அடுத்து நட்சத்திரமாகிப் பின் சூரியானாக வளர்ச்சி பெறும்.)
தாவர இனங்களின் வளர்ச்சியில் காய்களாக உருவாகும் பொழுது அந்தப் பிஞ்சு முற்றிப் பழமாகிப் பழுத்து விடுகின்றது. அதற்கடுத்த நிலையாக அதனுடைய கொட்டை மீண்டும் ஒரு வித்தாகப் பயிருக்கு வருகின்றது.
ஆனால் உலோக வளர்ச்சியில் பல மாறுபாடு கொண்டு அதனுடைய வளர்ச்சி முதிர்வின் நிலை பெறுகின்றது. முதிர்வு நிலை பெற்ற உலோகம் தான் செயலுக்கு வருகின்றது.
இந்தப் பூமியின் இயற்கை வளத்தை ஒட்டிய உயிர் அணுக்களின் வளர்ச்சி யாவும் உலோகப் படிவத்திலும் தாவர இன வளர்ச்சியிலும் மாறி மாறி வளர்கிறது. பல உருவங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றது.
அப்படி உயிர் பெறும் அத்தகைய ஜீவ ஜெந்துக்களின் உயிராத்மாவின் பரிமாணம்
1.வலு கொண்ட மனித உருவத்திற்கு வரவும்
2.அதிலே ஞானத்தின் ஒலியை எடுக்கும் செயலாக உருவத்திற்கு வரவும் பல கோடி ஆண்டுகள் ஆகின்றன.
அப்படி வளர்ந்து வந்த மனிதன் ஞானத்தின் முதிர்வு நிலை பெற்றுத் தன் ஆத்மாவின் வலுவின் ஒளியை விழிப்பு நிலைக்கு (ஒளிச் சரீரமாக) வித்தாக ஆக்கவில்லை என்றால் என்ன ஆகும்…?
ஆரம்பத்தில் பூமியில் இருக்கும் முலாம் தன்மையில் (தாவரத்திலும் உலோகத்திலும்) உயர் நிலை பெற்ற வலுவை… அந்த வலுவை வளர்த்த தொடர்ச்சியைப் போல்
1.மீண்டும் மிருக இனத்திற்கும்
2.மற்ற ஜீவ ஜெந்துக்களின் இன நிலைக்கும்
3.புழு பூச்சியாகத் தாவர இனம் மற்ற உலோக நிலைக்கும்
4.பூமியின் சுழற்சி வட்டத்தில் பல கோடி ஆண்டுகளுக்குச் சுழலும் நிலை தான் ஏற்படும்.
(பல கோடி ஆண்டுகளில் வளர்ந்து மனிதனான நாம் மீண்டும் தேய்பிறையாகிக் கீழே போய் விடுவோம்)
பூமியின் சுழற்சியுடனே பல வார்ப்பில் வளர்ந்த நாம் நம்முடைய இந்த மனித வாழ்க்கையின் தொடரில்
1.தன் உயிராத்மாவின் வளர்ச்சியை வளர்க்காதபடி
2.உடலின் இயக்கத்துக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தால்
3.இந்தப் பூமியின் இயக்கச் சுழற்சியில் மட்டும் தான் சிக்கிக் கொண்டிருக்க முடியும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். ஏனென்றால் இந்தப் பூமியின் வளர்ச்சியில் வலுப் பெற்ற வளர்ச்சியே மனிதனின் நிலை தான். பூமியின் செயல்பாட்டிலேயே உயர்ந்த நிலை கொண்டதும் மனிதனின் நிலை தான்.
மனிதன் தன்னைத் தானே உணரும் ஞான ஒலியை… அதாவது அந்த “ஆத்மாவின் விழிப்பையும்…” அதன் மூலமாகப் பெறும் ஆத்ம ஒளியின் செயல்பாடு கொண்ட சக்தியினால் தான் சூட்சம இயக்கம் சுழல்கிறது.
1.கனம் கொண்ட கயிறைச் சுற்றி முறுக்கும் பொழுது “திடம்” பெற்று விடுகின்றது.
2.சில பொருள்களை வேக வைக்கும் பொழுது அதனுடைய “மணம்” வெளிப்படுகின்றது.
3.சில பொருள்கள் எரியும் பொழுது அதனுடைய மணமும் எண்ணமும் “ஆவியாக” புகை நிறத்தில் வெளிப்படுகின்றது.
அந்தந்தச் செயல்பாடுகளுக்கொப்ப அடுத்த நிலையின் மாற்றத்தில் (வேக வைத்தலோ அல்லது எரித்தலோ) திடமாகும் பொழுது
1.அதனுடைய வார்ப்பு நிலை
2.கயிறைத் திரித்தவுடன் முறுக்குவதைப் போன்று
3.கெட்டித் தன்மை ஏற்பட்டு விடுகின்றது.
பொருளை வேக வைக்கும் பொழுது ஆவி வெளிப்பட்டுப் பொருள் திடப்படுகின்றது. பொருளை எரிக்கும் பொழுது நீர்ச் சத்து வெளியேறி அந்தப் பொருள் பஸ்பமாகிச் சாம்பல் தான் திடமாகின்றது.
அதைப் போன்று இந்த ஆத்மாவின் இயக்கம்…
1.சரீரத்தின் ஓட்டத்தில் வாழும் காலத்தில்
2.ஆத்மாவின் வலு வளர்ச்சியைத் திடமாக்கிக் கொள்ள வேண்டும்
3.ஏனென்றால் ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்.
மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான ஞான நிலை எய்திட அந்த மெய்யை அறியும் மெய் அறிவிற்கு முலாமாக்கும் நிலையாக (சக்தியைச் சேமிக்கும்) ஆத்மாவின் முதிர்வு நிலையை “விழிப்பு…” நிலையாக்கினால் தான் முடியும்.,
அத்தகையை ஆத்ம விழிப்பு நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்
1.அந்த ஆத்மாண்டவனை..
2.நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி
3.மெய் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும் சகல ரிஷிகளின் நேரடி அலைத் தொடர்பில்
4.உயிர் வழிச் சுவாசமாக ஈர்த்தெடுக்கும் பேரருள் பேரொளி வளர்ப்பினால் தான் முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இப்பொழுது பக்தி மார்க்கங்களில் வழக்கில் நாம் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தாலும் ஒருவரிடம் க்ஷேமம் விசாரிக்கப்படும் பொழுது எப்படிக் கேட்கின்றோம்…?
நண்பரைப் பார்த்தவுடனே, “குடும்பத்தில் எதுவும் கஷ்டமா..? எதுவும் பிரச்னையா…! ஒரு வாரமாக நீங்கள் வரவில்லையே… ஏன்…?” என்று கேட்பார்.
அதை ஏன் கேட்கின்றீர்கள்…? பையன் இப்படிப் பேசுகின்றான்… நான் அதை அப்படி நினைத்தேன்… கடைசியில் வேறு மாதிரி ஆகிப் போய்விட்டது. மனதுக்கு ரொம்பவும் வேதனையாகப் போய்விட்டது.
அதனால் எனக்குக் கை கால் குடைச்சலாகிவிட்டது… மனதிலும் வலி… உடலிலும் வலி… என்று நண்பரிடத்தில் இப்படிச் சொல்வார். இதையெல்லாம்
1.நான் யாரிடம் சொல்லி இந்த மூட்டையை இறக்கி வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
2.நல்ல வேளை நீ வந்தாய்.
3.உன்னிடம் சொல்லிவிட்டேன்.
4.இப்பொழுது எனக்கு மனது கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றது
நண்பர் என்ற நிலையில் அவரும் இவர் கொடுத்த மூட்டையை வாங்கிக் கொள்கின்றார்.
பின் அவர் கேட்பார். “உனக்குக் கூட இப்படி வந்துவிட்டதா…? நீ எத்தனை பேருக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாய்…! உனக்குமா இப்படி…” என்பார்.
கஷ்டங்களை மூட்டையாக இறக்கி வைத்துவிட்டு ஒருவருக்கொருவர் வேதனைப்படும் நிலையாக “ஒருவர் சுமையை ஒருவர் தாங்கும் நிலையாகத்தான்” இன்று வாழ்கின்றோம்.
ஆனால் கஷ்டங்களைக் கேட்ட பின் “உனக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று எண்ணினால் நாமும் அதுவாகிவிடுகின்றோம்.
கந்த புராணத்தில் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் “கந்தா.., கடம்பா… கார்த்திகேயா…” என்று காட்டப்பட்டிருக்கின்றது.
நண்பர் சொல்வதையெல்லாம் கேட்டறிகின்றோம். கேட்டறிந்த பின் “கந்தா…” கந்தா என்றால் ஒவ்வொரு நிலையும் அறிந்து கொண்டவன் என்று பொருள்.
“கடம்பா…” கடம்பா என்றால் உருவாக்க வேண்டும் என்று பொருள். ஆக எதை உருவாக்க வேண்டும்…?
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அந்த இருளைப் போக்கிடல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து நமக்குள் தெளிந்திடும் நிலையாக ஒளியின் சுடராக அதை உருவாக்க வேண்டும்.
கார்த்தி – “கார்த்திகேயா” என்றால் வெளிச்சம்… இருளைப் போக்கும் நிலை.
அதே சமயத்தில் வேதனைப்பட்டோருக்கு நாம் எவ்வாறு எதை உருவாக்க வேண்டும்…?
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் விலகும்.
3.உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவார்கள்.
4.உங்களை அறியாது புகுந்த வேதனைகள் அனைத்தும் நீங்கும்.
5.நீங்கள் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள் என்று இதை நாம் உருவாக்க வேண்டும்.
இதையெல்லாம் நமக்குள் எண்ணி வளர்த்து அவரிடம் வாக்காகச் சொல்ல வேண்டும்.
செவி வழி அவர் இதைக் கேட்கும் பொழுது நாம் சொன்ன நிலைகள் அந்த உணர்ச்சிகள் அவரை இயக்கும். அதைப் பெற வேண்டும் என்று அவரும் எண்ணினால் அவருடைய இருளைப் போக்கி அவருக்குள்ளும் தெளிந்த நிலைகள் கார்த்திகேயா என்று உருவாக்கும்.
“அப்பொழுது நாம் அதுவாகின்றோம்…” கீதையிலே இதைத்தான் தெளிவாகச் சொன்னார்கள்.
தாய் தந்தையரிடம் எத்தனை பேர் நாம் அருள் ஆசி வாங்குகின்றோம்…?
மனிதனாக வருவதற்கு முன் நாம் பாம்பாக இருந்திருப்போம்… தேளாக இருந்திருப்போம்.. நமது தாய் அவர்களைப் பாதுகாக்க நம்மை அடித்துக் கொன்று இருப்பார்கள்…
1.இந்த (நம்) உயிர் அவர் உடலுக்குள் சென்றிருக்கும்
2.போன உடனே அவர்கள் உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி வருகின்றது.
கருவாக ஆன பிற்பாடு தேளாக இருந்த… பாம்பாக இருந்த நம்மை… மனிதனாக உருவாக்குகின்றது நமது தாய். அப்போது நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்…?
நம் தாய் தந்தையினுடைய உயிர் தான்…! கடவுளாக இருந்து மனிதனாக நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள்தான்.
அம்மா அப்பாவைக் கடவுளாக நாம் மதித்துப் பழகுதல் வேண்டும் யாராவது நாம் நினைக்கின்றோமா…?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தாயைத் திட்டுபவர்கள் தான் உண்டு. எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் உடனே தாயைத் திட்டுவார்கள்.
1.இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்…
2.உண்மையை உணர்தல் வேண்டும்.
பத்து மாதம் நம்மைச் சுமந்து உருவாக்கியவர்கள் தாய். பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும்… ஒரு நாளைக்குத் தலையிலே கல்லை வைத்துத் தூக்கிப் பாருங்கள். சுமக்க முடிகிறதா என்று…!
ஆனால் பத்து மாதம் நம்மைச் சுமக்கின்றது.
சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்… தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வையே எண்ணி எடுக்கின்றது.
இத்தனை அவஸ்தைகளும் பட்டுப் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.
விவரம் தெரிவதற்கு முன் நாம் நெருப்பைத் தொட முயற்சிப்போம். டேய்… டேய்… நெருப்புடா…! என்று நம்மைப் பாதுகாக்கின்றது… அந்தத் தெய்வமாக இருக்கின்றது.
இது நல்லது இது கெட்டது இது அசுத்தம் என்று அனைத்தையும் சொல்லிக் கொடுக்கக்கூடிய குரு யார்…?
நம் தாய் தான். ஆனால் எத்தனை பேர் நாம் தாயை மதிக்கின்றோம்…?
1.தாயை மதிப்பவர்கள் சிறிது பேர்தான்.
2.தாயின் அருள் வேண்டும்… எனக்கு நல்லது நடக்க வேண்டும்…! என்று வேண்டுபவர்கள் கொஞ்சப் பேர் தான்.
அந்த தாயின் உணர்வைப் பெறச் செய்வதற்குத் தான் குருநாதர் காட்டிய வழியில் இதை உணர்த்துகின்றோம்,
எத்தனையோ துன்பங்கள் பட்டு என்னை நீங்கள் வளர்த்தீர்கள். எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் அங்கே மறைய வேண்டும்.
1.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெற வேண்டும்
2.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் அவர் பெற வேண்டும்.
3.தாய் தந்தையர் என்றென்றும் எங்களுக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று
4.தாய் தந்தையரை நாம் வணங்கி எண்ண வேண்டும்.
நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று தாய் தன் எண்ணத்தால் எடுத்துப் பதிவாக்கியிருக்கின்றது. நமக்குள்ளும் அந்தப் பதிவு உண்டு. இந்தக் காற்றிலும் அது உண்டு.
1.எவ்வளவு துயரப்பட்டாலும் சரி…
2.அம்மா… எனக்கு நோய் நீங்க வேண்டும் அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.தாயும் இதே மாதிரி என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றது
4.அந்த உணர்வை நுகர்ந்தீர்கள் என்றால் உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.
உதாரணமாக… காட்டுக்குள் செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். புலியோ யானையோ துரத்தி வரும் நேரத்தில் அம்மா…! என்று சொன்னால் போதும். அந்தப் புலியானாலும் யானை ஆனாலும் உங்களைத் தாக்காது.
என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் போகச் சொல்லி “தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…?” என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர்.
போய்க் கொண்டே இருப்பேன். திடீரென்று புலி வந்தால் உடனே நான் “ஐய்யய்யோ…” என்று சத்தம் போடுவேன்.
அப்பொழுதுதான் குரு உணர்த்துவார்
1.டேய்…! உன் அம்மா எங்கேடா போனது…?
2.உன் அம்மாவை நினைடா…! என்பார்.
நினைத்து நான் அம்மா… என்று சத்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வரும் புலி அப்படியே நின்றுவிடும். இது எல்லாம் அனுபவத்தில் பெற்ற உணர்வு.
நீங்களும் இதே போல் தாயின் அருள் சக்தி பெற்று… ஞானிகள் காட்டிய வழியில் சென்று அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடுங்கள்.
ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்… அழியாத வாழ்க்கை வாழ முடியும்
நம்முடைய எண்ணம் ஓடிக் கொண்டே உள்ளது உடல் உறங்கும் வரை.
உறக்கத்தில் உடலையும் எண்ணத்தையும் மறந்துள்ள தன்மையில் கனவுகள் சில நேரம் நமக்கு வருகின்றது. எல்லாக் கனவுகளும் மீண்டும் நம் நினைவுக்கு வருவதில்லை.
உறக்கம் இல்லாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் உடல் உறங்கும் வரை நம் எண்ணங்கள் ஓடிக் கொண்டே தான் உள்ளது.
சிலருக்குச் சில சமயங்களில் மயக்கம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் எண்ணத்தின் ஓட்டமில்லை. மயக்கம் தந்து (ANESTHESIA) உடல் உபாதைகளை நீக்க அறுவை சிகிச்சைகளைச் செய்யும் வேலைகளில் நம் எண்ணத்தின் ஓட்டம் மறந்து விடுகின்றது.
ஆக விழிப்புடன் உள்ள நேரங்களில் தான் மனிதனின் எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ளது. உடல் உறக்கத்தில் எண்ணத்தின் ஓட்டம் இல்லை. சாதாரண வாழ்க்கை நிலையில் நாம் வாழ்ந்து இறக்கும் வரையிலும் இப்படித்தான் செயலாகின்றது.
1.உறக்க நிலையிலே எண்ண ஓட்டம் இல்லாத பொழுது
2.உடல் இறந்த பிறகு ஆன்மாவின் எண்ணம் செயலாகுமா…?
3.ஆன்மாவின் எண்ணம் செயலாகக் கூடிய வழி முறை யாது…?
சாதாரணமாக இறந்த மனிதனின் ஆன்மா அது உடலை விட்டுப் பிரிந்த பிறகு அந்த ஆத்மாவின் எண்ண ஒலிகள் ஜீவன் பிரிந்த பிறகு செயலாக்கும் சக்தியின் வீரியம் குறைந்து விடுகின்றது.
உடலில் இருக்கும் பொழுது தான் ஏற்படுத்திக் கொண்ட வலு நிலைக்கொப்ப அந்த ஆத்மா
1.இந்தப் பூமியின் சுழற்சியில் அதனுடைய தன்மைக்குகந்த வலுவில் தான் சுழன்று கொண்டிருக்கும்
2.தன் ஆசை நிலைக்கொப்ப…!
3.அதாவது அதனுடைய செயலுக்குகந்த ஆத்ம சந்திப்பு ஏற்படும் காலம் வரை…! (சுழன்று கொண்டிருக்கும்)
உடல் விழிப்பு இருந்தால் தான் எண்ண ஓட்டத்தின் கதியின் செயலாக சரீர இயக்கத்தின் நிலை உள்ளது. அப்படியானால்
1.உறங்கா நிலை…
2.விழிப்பு நிலை… என்பதின் பொருள் யாது…?
உடல் உறக்கமற்ற நிலையில் எண்ணத்தின் விழிப்பு நிலையில் இந்தச் சரீர வாழ்க்கைக்கு ஒத்த அமைப்பு கொண்டது தான் அந்த “எண்ணத்தின் ஓட்டம்…!”
ஆகவே “ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்…” என்றுமே நாம் அழியாத வாழ்க்கையாக என்றும் பதினாறு என்ற பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
இந்த உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உடலுடன் வாழ்ந்தாலும்
1.வாழும் காலத்தில் மெய் ஞானத்தை அறிய விரும்புவோருக்கு
2.உடல் உறக்கத்திலும் ஆத்மாவின் விழிப்பால் எண்ணத்தின் ஓட்டத்தைக் கொண்டு
3.என்றுமே விழிப்பு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
4.ஒளியாக… ஜோதி நிலையாக அறியும் நிலைக்கு
5.ஆத்மாவின் எண்ணச் செயல் செயலாக்கும் அந்தத் தெய்வ நிலைக்கு
6.அஷ்டமாசித்தின் சக்தியைப் பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த உணர்வுகள் கொண்டு புதுப் புது இயந்திரங்களை இன்று உருவாக்கினாலும் அதில் கலந்துள்ள நஞ்சின் புகைகள் வெளிப்படும் பொழுது அதுவே நம்மை மாற்றுகின்றது.
நாம் ஆடைகள் அணிவதற்காக எத்தனையோ நஞ்சு கலந்த வர்ணங்களைக் கலக்கின்றோம். ஆனால் அன்று வாழ்ந்த மெய்ஞானிகள் என்ன செய்தார்கள்…?
சூரியனிலிருந்து விளைந்