தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

 

மிளகாய் காரம் என்றால் தூக்கி எறிந்து விடுகின்றோமோ…? அதைச் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோம் அல்லவா…!

அதாவது காரம் என்ற உணர்வு… கோபப்படுபவர்களை வேதனைப்படுபவர்களை வெறுப்படைபவர்களை துயரப்படுபவர்களை இந்த மாதிரி சங்கடங்களைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது தெரிந்து கொள்கின்றோம்.

தனித்து விட்டால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்த்துக் கார உணர்ச்சிகள் அதிகமாகி நம் அணுக்களில் பெருக்கி விட்டால் இதன் நிலைகளில் ரூபம் மாறிவிடும்.

1.சில வீடுகளில் “இப்படிப் பேசுகிறானே உருப்படுவானா” என்று சொல்லிச் சொல்லி
2.இவர்களே உருப்படாமால் பண்ணிக் கொள்வதைப் பார்க்கலாம்.
3.இந்த மாதிரிப் பேசுகிறவர்கள் உடல்களிலே நிறையச் சங்கடங்கள் வரும்.
4.குடும்பத்தில் சண்டை வரும்… குழந்தைகளிடம் வெறுப்படைவார்கள்.
5.இவர்கள் எண்ணமே உதவி செய்வதற்கு மாறாகப் பிரித்துவிட்டு விடும்.
6.நண்பர்களிடமும் இதே போன்ற உணர்வுகளைத் தோன்றச் செய்து பிரித்துவிடும்.

எப்பொழுது பார்த்தாலும் இதே போல “உருப்படுவானா…?” என்று சொல்வதைக் கேட்டு நண்பர்களுக்கும் இவன் உருப்படுவானா…? என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும்.

அவர் இவ்வாறு காரம் என்ற நிலைகளை எடுத்தால் நோய் என்ற நிலைகள் விளைகின்றது. அதனை நாம் எடுத்தால் நமக்குள்ளும் அதே நிலையாக மாற்றும்.

ஆகையினால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் நமக்குப் பாதுகாப்புத் தேவை.

ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை எடுத்து வளர்த்துக் கொண்டால் இதன் வழி “நமக்கு இந்த உண்மையின் நிலைகள் வரும்…”

நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு “நம்மிடம் வேலை செய்பவர்கள் அனைவரும்…”
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
3.தொழிலில் நல்ல நாட்டம் வரவேண்டும்
4.தெளிவான மனம் பெற வேண்டும்… தெளிவாகத் தொழில் செய்யும் அந்த எண்ணம் வரவேண்டும் என்று
5.உங்கள் இடத்திலே உட்கார்ந்து ஒரு பார்வை பார்க்க வேண்டும்.
6.நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ… அதே போன்று, நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

யாராவது தவறு செய்கிறார்கள் என்றால் இயற்கையில் அவர்களது குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும்… பொருளாதாரத்தில் குறை இருக்கலாம்… சொந்தத்திற்குள் யாராவது குறையாகப் பேசியிருக்கலாம்.

இந்த மாதிரி குறைகளைப் பேசி அவர்களுக்குள் வெறுப்பான நிலைகள் இருந்தால் நம்மிடம் வேலை பார்க்கும் பொழுது சிந்தனையிழந்து வேலை செய்யும் நிலை வரும். அப்பொழுது, நம் பொருள்களுக்கு நஷ்டம் வரும்.

அவ்வாறு வராதபடி செய்ய வேண்டுமென்றால்
1.நாம் அவருக்கு அருள் உணர்வுகளைப் பாய்ச்சி
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் நீ நன்றாக வேலை செய்வாய்
3.மகரிஷிகளின் சக்தியால் நல்ல முறையில் உடல் நலத்துடனும் சிந்திக்கும் சக்தியும் பெற்று நலமாக இருப்பாய்”
4.என்று அவனிடம் சொல்லி அனுப்ப வேண்டும்.

இதைப் போல நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தினம் தினம் அவருக்குச் சொல்ல சொல்ல அவர் காதிலே கேட்கக் கேட்க (தினமும் வேலைக்கு வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட வேண்டும்). “மகரிஷிகள் அருள் சக்தியால் நீ நன்றாக இருப்பாய்… தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்…” என்று வாக்குகள் கொடுத்து இதே போன்று செய்யச் சொல்லிவிட வேண்டும்.

சில வெறுப்பான நிலைகளோ சிந்தனையிழக்கும் நிலைகளோ அதிகம் இருந்தால் “விபூதியைக் எடுத்து கையில் கொடுத்து…” இதே போல சொல்லச் சொல்லி வேலை செய்யச் சொல்லுங்கள்.

இவ்வாறு செய்யச் சொன்னீர்கள் என்றால் தொழில் நன்றாக இருக்கும்.

மேலும் “எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

சில சமயம் இதெல்லாம் மீறி நமது தொழிலில் சில குறைபாடுகளைக் கண்டால் “அந்தக் குறை நம்மை இயக்கிவிடக் கூடாது…”

அந்தக் குறை உணர்வு வந்தவுடன் நமக்குக் கோபம் வரும் அல்லது வேதனைப்படுவோம். நாம் இதை நுகர்ந்தவுடனே நமது உயிர் இந்த உணர்வை, உணர்ச்சியால் உடல் முழுவதும் பரப்புகின்றது. நமது இரத்தநாளங்களில் கலக்கின்றது. அப்பொழுது என்ன செய்கின்றது…?

1.நமது உடலில் உள்ள நல்ல அணுக்களில் விஷத்தன்மை போன உடனே அதை ஏற்க மறுக்கும்.
2.நாம் தைரியமாகச் செய்யக் கூடிய எண்ணங்களும் பலவீனமடையும்.

ஆகையினால் அவ்வாறு விடாதபடி அடுத்த நிமிடம் “ஈஸ்வரா” என்று சொல்லி உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் படர வேண்டும் என்று இரண்டு நிமிடம் எடுத்துவிட்டுப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்… தெளிவான மனம் பெற வேண்டும் தொழிலில் சிந்தித்துச் செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று (குறை செய்தவரை) எண்ணி நாம் இங்கே உருவாக்கிவிட வேண்டும்.

அப்பொழுது அவரின் உணர்வு இங்கே சிறுத்து விடுகின்றது. பின் அவரைக் கூப்பிட்டு “சிந்தனையுடன் செய்வீர்கள்… நன்றாக நீங்கள் செயல்படுவீர்கள்” என்று சொல்லிவிடுங்கள்.

இதனை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

ஏனென்றால் அவர் குடும்பத்தில் இருக்கும் சிக்கலால் அவர் அறியாமல் செயல்படும் பொழுது அவர் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நமது உடலிலும் கலக்கின்றது.

சேற்றில் விழுந்து வருபவர்களைக் கட்டித் தழுவினால் எப்படி இருக்கும்…? நம் உடலிலும் சேறாகிவிடும்.
1.ஆகையினால் அந்தச் சேற்றை நீக்கக் கூடிய அளவிற்கு
2.நம் உடலில் ஒட்டிவிடாதபடி, அதனைச் செயல்படுத்த வேண்டும்.
3.தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு
1.ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுது
2.ஒவ்வொரு கெட்ட குணத்திலேயும் அதை அடக்கக்கூடிய சக்தியாக “நமது எண்ணம்” வருகிறது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உயிரில் பட்டவுடன் இது கலந்து அவர் நல்ல குணம் வளர வேண்டும் என்கின்ற பொழுது இதையே நமது உயிர் நல்ல அணுக்களாக நமது உடலில் மாற்றுகின்றது.

நமது உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்திலுமே அந்த உணர்வு அனைத்தையும் சேர்த்து இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமையின் நிலை வந்தாலும் சமப்படுத்த முடியும்.

மிளகாய் தனியாகக் காரமாக இருந்தாலும் குழம்பில் போட்டவுடன் ருசியாகிவிடுகின்றது. உப்பு தனியாகக் கரித்தாலும் குழம்புடன் சேர்க்கப்படும் பொழுது தணிந்து விடுகின்றது.

1.இதே போல நாம் தொழில் செய்யும் இடங்களில் பலவிதமான நிலைகள் இருந்தாலும் நாம் இது போன்று, செய்து பழக வேண்டும்.
2.தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

சக்தியை எல்லா நேரமும் நான் விரயம் செய்ய முடியாது

சக்தியை எல்லா நேரமும் நான் விரயம் செய்ய முடியாது

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்று லட்சம் பேரைச் சந்தித்து அனுபவபூர்வமாகப் பெற்ற ஞானத்தைத் தான் உங்களிடம் உபதேசித்து வருகின்றேன்.

அன்றைக்கு என் காலிலே ஆணி. குருநாதர் செருப்பு கூடப் போடக்கூடாது என்று சொல்லிவிட்டார். இரண்டு காலிலும் 28 ஆணி இருந்தது. நடக்கும் போது ஒரு சிறிய கல்லிலே மிதித்து விட்டால் போதும். அ…ஆ…! என்று உணர்ச்சிகள் தூண்டப்பட்டு தலையில் உச்சி முடி நட்டமாக நிற்கும்.

வெளியிலே சேர்ந்தாற் போல் அதிக நேரம் உட்கார முடியாது… எரிச்சலாகும். கால் ஆணி உள்ளவர்களிடம் கேட்டால் தெரியும்… இது எப்படி என்று…!

அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு…
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்
2.ஒவ்வொரு குடும்பத்திலும் என்ன நடக்கின்றது…?
3.அதில் உள்ளவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் குடும்பத்தில் என்ன நடக்கின்றது…?
4.இறந்த பின் அந்த ஆன்மாக்கள் என்ன செய்கின்றது…? என்று இதை எல்லாம் அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.

கஷ்டப்பட்டு அதை எல்லாம் தெரிந்து கொண்டு வந்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது அதிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்கு… உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வதற்கு உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

கொடுத்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்வதற்கு ஆள் இல்லை.

எத்தனையே பேர் எம்மைச் சந்திக்க வருகின்றார்கள். உங்களுக்குள் வரும் தீமைகளை மாற்றக்கூடிய சக்தி “உங்களுக்கு உண்டு” என்று கொடுக்கின்றோம்.
1.அதை யாரும் எடுப்பதில்லை.
2.சாமி எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார் என்ற இந்த உணர்வு தான் பெரும்பகுதியானவருக்கு உள்ளது.
3.சாமி சொன்ன வழியில் தியானத்தைச் செய்து என்ன கிடைத்தது…? என்கிறார்கள்.

ஏனென்றால் யாம் சொல்வதைக் கடைப்பிடித்து வழி நடந்தால் தான் நடக்கும். கடைப்பிடிக்கவில்லை என்றால் எப்படி நடக்கும்…?

பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. ஆசை இருக்கின்றது… ஆனால் அதைச் சாப்பிடுவதற்குப் பதில் வேதனையை எடுத்தால் என்ன ஆகும்…?

ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.

ஆனால் ஒரு சமயம் நல்லதானாலும் மீண்டும் அதை வைத்துத் தனக்குகந்த உணர்வை வளர்த்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியை வளர்ப்பதற்கு ஆள் இல்லை.

1.எத்தனையோ பேருக்கு அவருடைய துயரங்களிலிருந்து அவர்களை மீட்டி விடுகின்றோம்.
2.அதை வைத்து மீண்டும் அவர்கள் தெளிந்து தெரிந்து வருவார்கள் என்று தான் அதைச் செயல்படுத்துகின்றோம்.

ஆனால் அப்படிச் செய்கின்றார்களா…?

1.காரணம்… சக்தியை நான் எல்லா நேரமும் விரயம் செய்ய முடியாது.
2.உங்களுக்குண்டான அந்த வழிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கின்றோம்.
3.அதை நீங்கள் எடுத்துக் கரையேறி மீண்டு வரும் “தன் பலம்” வேண்டுமல்லவா.

எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார் என்றால் சாமி எதைப் பார்ப்பார்…? உங்கள் கஷ்டத்தை எல்லாம் நான் கேட்டுக் கொண்டேயிருந்தால் அதிலிருந்து நான் என்னைத் தப்புவித்துக் கொள்வதற்குத் தான் பார்க்க முடியுமே தவிர உங்களை எப்படி நான் காப்பது…?

1.ஒவ்வொருவரும் யாம் கொடுக்கக்கூடிய சக்திகளை வைத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
2.வாழ்க்கையைச் சீர்படுத்தி வழி நடத்திடவும்… வாழ்க்கைக்குப் பின் அடையக்கூடிய நிலையாக
3.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை… சிறிது காலம் செய்து பழகி விட்டால் தன்னாலே வந்துவிடும்.

சந்தர்ப்பத்தால் நம் வியாபாரம் எப்படிக் கெடுகின்றது…?

சந்தர்ப்பத்தால் நம் வியாபாரம் எப்படிக் கெடுகின்றது…?

 

நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்குப் போகின்றோம். ஜவுளி வியாபாரத்திற்குப் போகும் பொழுது கடைகளில் ஆர்டர் சேகரிப்பதற்குச் சில மாதிரிகள் மட்டுமே எடுத்துச் செல்கின்றோம்.

கடைகளுக்குச் சென்று நாம் எடுத்துச் சென்ற “மாதிரித் துணிகளை” (sample) காண்பித்தவுடனே கடைக்காரர்களும் அதைப் பார்த்துவிட்டு ஒன்றிரண்டு மாதிரிகளைப் போன்று சரக்கு அனுப்பும்படி நம்மிடம் கேட்கின்றனர்.

நாமும் கடைக்காரரிடம் ஆர்டர்களைச் சேகரித்துக் கொண்டு, நமது ஊருக்குக் கிளம்பி வந்து, கடைக்காரர் ஆர்டர் செய்த சரக்குகளைத் தயார் செய்து, அவரது கடைக்கு அனுப்புகின்றோம்.

சரக்கை அனுப்பி வைத்துவிட்டு ஓரிரு நாள்கள் கழித்துப் பண வசூலுக்காக அவருடைய கடைக்குச் செல்கின்றோம்.

அவருடைய கடைக்குச் செல்ல வேண்டுமென்றால் (city) பஸ்ஸில் பயணம் செய்துதான் போக வேண்டும். ஆனால் பஸ் கிடைக்கவில்லை… நடந்தே செல்கின்றோம்.

அப்போது சந்தர்ப்பம்… ஒரு குடும்பத்தில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். பலகாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் எண்ணெய் தீர்ந்து விட்டது.

வீட்டிலிருந்த சிறுவனை அழைத்து,ச் “சீக்கிரம் எண்ணெய் வாங்கி வாடா…” என்று அவசரப்படுத்தி அனுப்பி வைக்கின்றார்கள். சிறுவனும் எண்ணெய் வாங்கி வருவதற்காக வேகமாகக் கடைக்குச் செல்கின்றான்.

சிறுவன் கடைக்குச் சென்று “எண்ணெய் கொடுங்கள்… எண்ணெய் கொடுங்கள்…!” என்று அவசரப்படுத்துகின்றான்.

ஆனால் கடைக்காரரோ இவனைப் பார்த்துப், “பொறு… பொறு…” என்று அடுத்தவர்களுக்கே சரக்கைக் கொடுத்து அனுப்புகின்றார். சிறுவனுடைய அவசரத்திற்குச் செவி சாய்க்க முடியாமல் போய் விடுகின்றது.

சிறுவனுக்கோ நேரம் கடந்து கொண்டிருக்கின்றது.

அது சமயம் சிறுவன் “நேரமாகிக் கொண்டு இருக்கின்றது… வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள், ஆகவே எண்ணெய் சீக்கிரம் கொடுங்கள்… தாமதமானால் வீட்டில் என்னைத் திட்டுவார்கள்…!” என்று கூறுகின்றான்.

1.இருந்தாலும், சிறுவனுடைய ஆவேச அவசர உணர்வுகள், அங்கே எதிர்நிலையாகின்றது.
2.“எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…” அதாவது கடைக்காரரின் உணர்வும் சிறுவனுக்குச் சீக்கிரம் சரக்கைத் தந்து அனுப்ப மறுக்கின்றது.

இப்படித் தாமதமாகும் பொழுது… “நேரமாயிற்றே, நேரமாயிற்றே…!” என்ற இந்தப் பதட்டத்திலேயே சிறுவன் இருக்கின்றான். சிறிது தாமதத்திற்குப்பின் சிறுவனும் எண்ணெயை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வேகமாக வருகின்றான்.

இப்படி, சிறுவன் வேகமாக வரும் பொழுது அவனுடைய எண்ணம் முழுவதும் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!” என்றே செலுத்துகின்றான். இதனால் சாலையில் மேடு பள்ளங்கள் தெரியாதபடி சென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றான்.

ஏனென்றால்
1.அவனுடைய எண்ணம் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!” என்று இருக்கின்றது.
2.இதனால் அவனுக்குச் சாலையில் மேடு பள்ளம் தெரிவதில்லை.

எப்படியும் எண்ணெயைக் கொண்டு போய்ச் சீக்கிரம் கொடுத்து விடவேண்டும் என்று எண்ணினான். அந்த அவசரத்தால் போகும் வேகத்தில் இவனும் தவறி விழுந்து பாட்டில் நொறுங்கி எண்ணெயும் வீணாகி விடுகின்றது.

சிறுவன் எண்ணெய் வீணான வருத்தத்தில் உடைந்த பாட்டிலை சாலை ஓரமாகத் தள்ளிவிடாதபடி சாலையில் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றான்.

அதே சமயம் நாம் அதே சாலை வழியில் (ஜவுளி) சரக்கை அனுப்பிய கடைக்கு நடந்து வருகின்றோம். வழியில் நாம் நமது வியாபாரம் பற்றிய எண்ணத்துடனே செல்கின்றோம்.

1.நமது நினைவு முழுவதும் வியாபாரம் பற்றிய சிந்தனையில் இருப்பதால்
2.சாலையில் உடைந்து கிடக்கும் பாட்டிலைக் கவனிக்காமல் உடைந்து கிடக்கும் பாட்டிலை நம்மை அறியாமலே உதைக்கின்றோம்.

உடைந்த பாட்டில் காலில் பட்டவுடன் “பாவிப் பயல்கள்… நடக்கும் ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்துள்ளார்களே…!” என்று வெறுப்பான உணர்வுகள் வருகின்றது.

உடைந்த பாட்டிலில் நம் கால் மோதிய போதும் நமது காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால் “இந்நேரம் உடைந்த பாட்டில் காலில் குத்தியிருந்தால் என்னவாயிருக்கும்…?” என்ற உணர்வுகள் வருகின்றன.

சரி… நாம் தான் உடைந்த பாட்டிலைப் பார்த்தோம். உடைந்த பாட்டில்களை ஓரமாகத் தள்ளிவிடுவோமா…? என்றால் செய்ய மாட்டோம்.

இதே பாட்டில் அடுத்தவரின் காலில் குத்த வாய்ப்பிருக்கின்றது. ஆகவே உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளிவிடுவோம் என்று உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளி விட்டிருந்தால் “நம்மிடம் சிறிது நல்ல மனம் இருக்கின்றது…” என்று இருக்கும்.

1.ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? வியாபார நோக்கத்திலேயே போகின்றோம்.
2.“ரொம்ப அறிவு கெட்டதனமாக இருக்கின்றது…” என்று
3.மற்றவர்களைக் குறை கூறும் உணர்வுகளை எடுத்துக் கொண்டு போகின்றோம்.

இப்படி இதன் உணர்வுகளுடன் கடைக்குச் சென்றபின்… “சரக்கு அனுப்பியிருந்தோம்… சரக்கைப் பார்த்தீர்களா…?” என்று கடைக்காரரிடம் கேட்போம்.

நம்மைக் கடை முதலாளி பார்க்கின்றார். அது சமயம்
1.சாலையில் நடந்த சம்பவத்தால் உண்டான “வெறுப்பின் மணம்” நமது உடலிலிருந்து வெளிப்படும் நிலையில்
2.அதன் மணத்தை முதலாளி நுகர நேருகின்றது.
3.நுகர்ந்தபின் நாம் அனுப்பியிருந்த சரக்குக் கட்டுகளைப் பிரித்துப் பார்க்கின்றார்.

கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். வெறுப்பின் உணர்வுகளை நுகர்ந்து சரக்கைப் பார்க்கும் பொழுது கடைக்காரருக்கு “வித்தியாசமாகத் தெரிகின்றது…”

உடனே கடை முதலாளி “ஜவுளி மாதிரி (sample), அன்று காண்பிக்கும் பொழுது ஒரு விதமாக இருந்தது, ஆனால் இன்று சரக்கு வேறு விதமாக இருக்கின்றதே…!” என்று கூறுவார்.

ஏனென்றால் நுகர்ந்த வெறுப்பின் உணர்வின் மணத்திற்கொப்ப அங்கே வெறுப்பு உணர்ச்சியையே காண்பிக்கின்றது.
1.ஆனால் அன்று காண்பிக்கப்பட்ட மாதிரிப் பொருளும் இன்று காண்பிக்கும் சரக்கும் ஒன்றுதான்.
2.நுகர்ந்த உணர்வுகள் இன்று வேறு விதமாகக் காண்பிக்கின்றது.

“நான் அனுப்பியது நல்ல சரக்குதான்… நன்றாகப் பாருங்கள்…!” என்று நாம் கூறுவோம்.

உடனே கடை முதலாளி, எனக்குக் கண் இல்லையா…? நன்றாகப் பார்த்துவிட்டுத் தான் சொல்கின்றேன்…” என்று கூறுகின்றார்.

நாமும் இரண்டு தரம் “நல்ல சரக்குதான்…” என்று கூறுவோம்.

அதற்குக் கடை முதலாளி “இப்படி நாணயம் (நேர்மை) கெட்டுவிடக் கூடாது…” என்று கூறுவார்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகளின் இயக்கம் இப்படி இருக்கின்றது. இதை மாற்றுவதற்கு வழி என்ன…? சந்தர்ப்பத்தால் வரும் இத்தகைய தீமைகளைத் துடைப்பதற்குச் சக்தி வேண்டுமே.

அதற்குத்தான் தியானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அறியாது வரும் தீமைகளை உடனுக்குடன் நீக்கிப் பழக வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் அருளிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் பெற்று மெய்ப் பொருள் காணும் திறனை நமக்குள் வளர்த்துக் கொண்டால்
1.நமது வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கொப்ப நல் ஞானங்கள் உதயமாகி நம்மை வழி நடத்திச் செல்லும்.
2.இதன் தொடர் கொண்டு அகண்ட அண்டத்தின் இயக்கமும் நமது உடலான பிண்டத்திற்குள் அது எப்படி இயக்குகின்றதென்றும்
3.உணர்வுகள் எப்படி எண்ணங்களாக ஆகின்றதென்றும்
4.எண்ணங்கள் எப்படி உணர்ச்சிகளாக மாறுகின்றதென்றும்
5.உணர்ச்சிகள் எப்படி நம்மை இயக்குகின்றதென்றும்
6.நமக்கு நாமே அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் குரு வழியில் நாம் எல்லோரும் பெற வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியில் உங்களை நீங்கள் அறிந்து அருள் வழி வாழ்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் வழியில் தொழில் வளம் பெற்றுச் செல்வம் செல்வாக்கு பெற்று அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்

 

விஞ்ஞான உலகில் இருக்கின்றோம்… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையை உருவாக்குகின்றனர்.

உதாரணமாக நாம் ரோட்டில செல்லப்படும் போது… அந்தப் பக்கம் அழுத்தமாக மிளகாய் நெடி வந்தால் நுகர்ந்தவுடனே அந்த உணர்ச்சிகள் (அதுதான் எலக்ட்ரானிக்)
1.நாம் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நம் நல்ல குணங்களை மாற்றி அந்த நெடி நம்மைத் தும்ம வைக்கின்றது.
2.சிந்திக்கும் தன்மையைக் கூட அந்த இடத்தில் இழக்கச் செய்து விடுகின்றது.

அது எலக்ட்ரானிக்காக மாறுகின்றது. எதன் உணர்வை இந்தச் சூரியனின் “இயக்க அணுக்கள்” கவர்கிறதோ அதை நுகரப்படும் போது அதன் உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்குகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு தான் அவ்வாறு இயக்குகின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். அந்த உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.

1.சில சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனைப் பார்த்தால் இனம் புரியாது அவர் மேல் வெறுப்பு வரும்… அல்லது சோர்வு வரும்
2.ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது இனம் தெரியாத சிந்தனைகள் வரும்.
3.ஏன்… எதற்கு அவ்வாறு நம் மனம் மாறுகிறது…? என்ற நிலை கூட வந்துவிடும்.

காரணம் மனித உடலிலிருந்து வரக்கூடிய அந்த உணர்வினை நாம் சுவாசிக்கப்படும் பொழுது… “நம்மை அறியாமலே இயக்குவதை நாம் அறியவில்லை…” ஆனால் அது நம்மை இயக்கத் தான் செய்கிறது.

விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்குகின்றார்கள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பேழையில் உருவாக்கி
1.அதிலே காந்தப்புலனும் கெமிக்கலும் கலந்த பின்
2.மோதலின்… அதிர்வு ஒலி அலைகள் எப்படி வருகின்றதோ…? அதற்குத் தக்கவாறு அந்த இயந்திரத்தை இயக்கி
3.அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எதிர் நிலை வரும் பொழுது எலக்ட்ரானிக்காக மாற்றி
4.மற்ற அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்களை எல்லாம் இயக்கத் தொடங்குகிறது.

இதைப் போன்று தான் இந்த உடலான இயந்திரத்தை… பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நாம் நுகரும் பொழுது அதே உணர்வு இயக்கப்பட்டு இனம் புரியாதபடி சோர்வடைகின்றோம்… காண முடியவில்லை.

ஜோதிடம் ஜாதகம் பார்ப்போர் மனிதனைப் பார்த்துப் பார்த்து ஒரு வார்த்தையை வெளிவிட்டு… அடுத்து நம்மிடமிருந்து என்ன வருகிறது…? என்று தெரிந்து கொண்டு அதை வைத்துக் கொண்டு “ஒஹோ… நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்…” என்று சொல்வார்கள்.

அதையே குறிக்கோளாக இருப்பதால் அவ்வாறு அறிய முடிகின்றது. பிறருடைய உணர்வின் அதிர்வுகளை வைத்துச் சொல்லலாம்.

ஆனால் கஷ்டங்களையும் குறைகளையும் நுகர்ந்து சொல்லப்படும் போது அவர்கள் வாழ்க்கையும் பாழாகும். மந்திரங்களை வைத்துச் சொல்வோரும் இதே நிலையாகி அவர்களும் பாழாகும் நிலைக்கே செல்வார்கள்.

இருந்தாலும்… இந்த மனித உடலில் குறுகிய காலமே வாழ்கிறோம். நேரம் ஆகிவிட்டது என்று இராமன் மணலைக் குவித்துப் பூஜிக்கத் தொடங்கினான் என்று இராமாயணத்தில் அதைக் காட்டுகின்றார்கள்.

1.நாம் வளர வளர ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது… உடலின் தரமும் குறைகிறது.
2.அதற்குள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்..

உலக இருளை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக என்றுமே ஏகாந்த நிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.அதற்கு நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்
2.பகைமைகள் வந்தாலும் அது நம்மை இயக்காது (முதலில் சொன்னது போல்) நமக்குள் பகைமையாகாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வுகளை மாற்றி
3.நம் பார்வையால் மற்றவருடைய தீமைகள் அகன்று செல்லும் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

மற்றவரை நல்வழியில் இயக்கும் அந்த எலக்ட்ரானிக்காக நமக்குள் வலிமை பெற்று இந்த உணர்வு அவர்கள் உடலுக்குள் சென்று அவருடைய தீமையை அகற்றி நல் உணர்வாக மாற்றிடும் அந்த உயர்ந்த சக்தியாக நாம் பெறுதல் வேண்டும்.

அதாவது நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி நம் ஈர்ப்பு வட்டத்தில் இந்த உணர்வுகளை வலுவாக்கி அதைப் “பாதுகாப்புக் கவசமாக” நாம் அமைத்திட வேண்டும்.

பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழ முடியும்

பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழ முடியும்

 

ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் தன்மை பேரண்டத்தில் இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சமே இல்லை.

அதே போல் மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் “சகோதரத் தத்துவத்துடன்” வாழவில்லை என்றால் மகிழ்ச்சியும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஒன்றை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
1.ஒருவர் மிகவும் நெருக்கமாக இருப்பினும் அதில் சிறு பகைமை ஏற்பட்டு விட்டால் அது கடும் விஷ வித்தாக நம்முள் பதிந்து
2.நம்மை அறியாமலே அவர்களைப் பகைத்து தீமையின் உணர்வாக நம்முள் வளர்ந்து கொண்டிருக்கும்.

இவ்வாறு பகைமையுணர்வுகள் நம்முள் வளரும் பொழுது அது நம்முள் உள்ள நல்ல குணங்களையும் பகைமையாக்கிக் கொண்டே இருக்கும்.

1.நமது உடலுக்குள் உணர்வுகள் ஒன்றுக்கொன்று பகைமையாகும் பொழுது
2.நமது உடலின் தன்மை குன்றுகின்றது.. நம்முடைய எண்ணங்களும் மாறுகின்றது.

எனவே சூரியக் குடும்பம் ஓர் ஒழுங்குடன் அமைதியாக இயங்குவதைப் போன்று நாமும் பகைமை உணர்வுகள் இல்லாமல் ஒற்றுமை உணர்வுடன் மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வாழும் தெருவில் உள்ள அனைவரையும் நமது குடும்பத்தினரைப் போலக் கருதி
1.அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்,
2.இருள் நீங்கிப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்,
3.வாழ்வில் என்றும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி
4.நமது தெருவில் வாழும் மற்ற குடும்பத்தினருக்காகத் தியானிக்கும் பொழுது
5.அவர்களும் நம்முடன் ஒன்றுபட்டு வளரும் நிலை உருவாகிறது.

நாம் அனைவரும் ஒன்று கூடிக் கூட்டுத் தியானமிருந்து இதனின் எண்ண அலைகளை ஒருமித்த நிலையாக வெளியிடும் பொழுது… “இதனைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்த பூமியில் படரச் செய்கின்றது…”

மேலும் இந்த உணர்வின் அலைகள் இவ்வுலக மக்களின் உணர்வில் கலந்து அவர்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. பகைமையற்ற மனிதர்களாக அவர்களை மாற்றுகின்றது.

பேரண்டத்திலும் பூமியிலும் மனிதரிடத்திலும் நடைபெறும் இயற்கையின் இயக்கங்களை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில் உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம்.

இதில் உங்களின் கருத்தினைச் செலுத்தி உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஊரும் நாடும் உலகமும் என்றும் மகிழ்ந்த நிலையாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஊரும் நாடும் உலகமும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் எனும் பொழுது மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகுகின்றது.

மகிழ்ந்த உணர்வின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் நாங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று
3.இவ்வாறு இந்த உணர்வின் எண்ணங்களை நாளும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நாளும் நல்ல உணர்வுகளை வளர்ப்போர் அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி

விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி

 

விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமா…!
1.உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்தச் சுவைக்கொப்ப ஜீவ அணுவாக மாறி
2.அதனதன் எண்ணங்களை இயக்குகின்றது என்பது காவியத்தின் முக்கியத் தொகுப்பு.
3.அதாவது எந்தச் சுவையோ “அதைப் போல் ஜீவ அணுக்களாக” உயிர் உருவாக்குகின்றது என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.

நட்சத்திரங்களுடைய சக்திகள் பூமியில் மண்ணுடன் கலந்து புவியின் ஈர்ப்பால் சிறுகச் சிறுக விளைந்து வைரமான பின் வெடித்துத் தனித்தன்மையாக வெளிவந்து விடுகிறது.

அதைப் போல் நம் உயிரால் உருவாக்கப்பட்ட ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது
1.அறிவின் வளர்ச்சி அறிந்திடும் வளர்ச்சி இங்கே வருகின்றது.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அதற்குள் பொருள் தெரிவது போல நமது ஜீவணுக்களின் துணை கொண்டு
3.நம் கண்ணின் வளர்ச்சி கொண்டு அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்களுடைய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக மாறி பூமியிலே பட்டபின் சிறுகச் சிறுக வைரமாக விளைகிறது. அது ஜீவ அணு அல்ல… ஒளியின் உடலாகப் பெறுகின்றது… நட்சத்திரம் எப்படி மின்னுகின்றதோ அதைப் போல.

நமது உயிரோ “மின்னணு” போன்று அது இயங்கிக் கொண்டே இருக்கின்றது அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின்னணுவின் துணை கொண்டு இயங்குகின்றது.

எப்படி மின் நிலையத்திலிருந்து வரும் மின்சாரத்தை நம் வீட்டிற்குள் எந்தெந்த இணைப்புகளுடன் சேர்க்கின்றோமோ அந்த மின் அணுக்கள் அதை இயக்கி அதன்வழி நாம் பயன்படுத்துகின்றோமோ இதைப் போல
1.சூரியன் இயக்கத் தொடரில் நாம் வளர்ந்தாலும் நம் உயிரே சூரியனின் தொடர்பு கொண்டு தான் அதுவும் இயங்குகின்றது.
2.நாம் எப்படி ஊருக்கு ஒரு சப்ஸ்டேசனை வைத்திருக்கின்றோமோ அதைப் போன்று நமது உயிரும் அந்த நிலை பெறுகின்றது.
3.சூரியன் துணை கொண்டு அந்த மின் கதிர்கள் உடலில் உள்ள அணுக்களை அது இயக்குகின்றது.

இருப்பினும் பல உணர்வின் தன்மையை அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டு மனித உடலில் வந்த விஷத்தை வென்றவன் அகஸ்தியன்.

அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனதாகி அருள் மணம் பெற்று… உயிரைப் போன்றே உயிரணுக்களை வளர்த்து “விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று” ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது, அதனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்டு அந்த விஷங்கள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.

அந்த வைரத்தை நாம் உட்கொண்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும்… அவ்வளவு கடுமையான விஷம்.
1.ஆனால் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாகக் காண முடிகிறது… வெளிச்சமாகத் தெரிகின்றது.
2.இதைப் போன்று தான் விஷத்தை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக துருவ நட்சத்திரம் இருக்கின்றது.

விஷமே உலகை இயக்குகின்றது. சூரியன் இயங்குகிறது என்றால் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பத்தின் தன்மை கொண்டு அது இயக்குகின்றது.

நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால் தான் துடிப்பின் தன்மை ஏற்பட்டுக் கொண்டுள்ளது. இதைப் போல் ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

1.ஆறாவது அறிவால் ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அந்தப் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டால் நாமும் இந்த விஷத்தை ஒளியாக மாற்ற முடியும்.

இருந்தாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் பெறுவது என்றால் மிகவும் கடினம். “குருவின் துணை…” இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.

1.நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடிந்தது.
2.நமது குரு அந்த விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
3.ஆகவே தான் உங்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படிச் செய்து…
4.விஷத்தை ஒளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்..

நாம் ஒவ்வொரு நாளும் ”உயிரின் முகப்பில்” ஈர்க்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பில்… உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது… அதாவது
1.என் குரு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது
2.நாம் அனைவரும் “ஒளியின் சரீரம்” பெறும் தகுதி பெறுகின்றோம்.

ராம ராஜ்யம்

ராம ராஜ்யம்

 

ஒருவன் குற்றம் செய்தால் அவனைத் தண்டிக்கின்றோம். இது அரசர்கள் காட்டிய வழி. ஒருவன் ஒரு தவறு செய்கின்றான் அல்லது பிறருக்கு இம்சைகளைச் செய்கிறான் என்றால் அவனுக்கு இம்சை தரக்கூடிய தண்டனைகளையே தந்தனர் அன்றைய அரசர்கள்.

ஆனால் மகரிஷிகளோ…
1.ஒருவர் உடலில் அறியாது புகுந்த தீமை விளைவிக்கக் கூடிய உணர்வினை நீக்கி
2.உயர்ந்த கருத்தினை அவரினுள் செலுத்தி அவர்தம் உடலில் வரும் தீமையினை அடக்கி அதற்குத் தண்டனை அளித்து
3.இணைந்து செயல்படும் உணர்வினை வளர்த்துக் கொண்டார்கள்.

அதையே மக்களுக்கு உணர்த்தினார்கள்.

மகாத்மா காந்தி நம்மை இயக்கும் தீய உணர்வுகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்று சொன்னார். அதே சமயம் “ஆங்கிலேயர்களும் நம் சகோதரர்களே” என்று சொல்லி அவர்களிடம் இருக்கும் “மற்றவர்களை அடிமைப்படுத்தும் உணர்வைத்தான் விலக்க வேண்டும்” என்று பாடுபட்டார்.

1.உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.அந்த உடலில் இருக்கும் நல்ல உணர்வின் தன்மையை
3.சகோதர உணர்வுடன் பாவிக்க வேண்டும் என்பதைத்தான் “ராம ராஜ்யம்” என்றார்.

நாம் எடுக்கும் உயர்ந்த குணங்கள் எதுவோ அது மகிழ்ந்திடும் நிலையாக நமது செயல் இருக்கும் பொழுது… நம் உடலில் இருக்கும் சலிப்பு, சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வுகளில் நாம் எண்ணும் பொழுது நமக்குள் அது ஒருக்கிணைந்து நம்மை மகிழ்விக்கச் செய்கின்றது.

இது தான் ராம ராஜ்யம்.

வான்மீகி மகரிஷி கொடுத்தருளிய இராமாயணக் காவியத்தின் உண்மையின் தன்மை கொண்டுதான் காந்திஜி தமது உயிர் உடலை விட்டுப் பிரியும் கடைசி நொடி வரையிலும் வாழ்ந்தார்.

1.எல்லோரையும்… எல்லாவற்றையும் காக்கும் பல உணர்வுகளுடனும் பிறரைத் துன்புறுத்தா நிலைகளிலும்
2.அஹிம்சைத் தத்துவத்தைக் கடைப்பிடித்துத் தென்னப்பிரிக்காவில் வாழும் மக்களுக்கு நீதி பெற்றுத் தந்தபின்
3.இந்திய நாட்டைக் காக்க வேண்டும் என்ற ஆசை காந்திஜிக்கு வந்தது.

இந்திய மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் பல உயிர்கள் பலியாக வேண்டியிருக்கின்றது என்ற உணர்வினை காந்திஜி உணர்ந்து… சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் மக்களை நல்வழிப்படுத்தினார்.

அதாவது… அன்னிய நாட்டிடமிருந்து நமது மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வினை மீட்டு அதை மக்களுக்குக் கிடைக்கச் செய்து மக்களை நல்வழியில் வாழச் செய்ய வேண்டுமென்ற முடிவை காந்திஜி தமக்குள் எடுத்து இந்திய மக்களைப் பண்படும்படி செய்தார்.

1.காந்திஜி “உலக மக்கள் அனைவரும் நம் சகோதரர்” என்பதை தமது எண்ணம் சொல் செயலில் வைத்து
2.இந்திய மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பகைமை உணர்வுகளை நீக்கி
3.அனைவரையும் அரவணைக்கும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணி
4.இந்திய மக்களைச் சீர்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மன உறுதி கொண்டு செயல்படுத்தினார்.

இதனால் காந்திஜி உலக அரங்கில் அனைவருடைய உள்ளத்திலும் இடம் பிடித்தார்.

காந்திஜி “எதிரிகளையும்” கடவுளாக மதித்தார். அவர் தனக்குள் பகைமை உணர்வுகள் இயக்காதபடி தடுத்து… சாந்தம் ஞானம் விவேகம் எனும் நல்லுணர்வுகளைத் தமது உடலுக்குள் சுதந்திரமாக்கினார்.

ஞானத்தின் வழி கொண்டு நல் உணர்வுகளைத் தமக்குள் சுதந்திரமாக்கி அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் காந்திஜி தனக்குள் ஓங்கி வளரச் செய்தார்.

1.காந்திஜியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் உலகைக் காத்திடும் பேரருளை நாம் அனைவரும் பெறுவோம்.
2.காந்திஜியின் வழியில் சென்றோம் என்றால் நமது குடும்பத்தில் பகைமையை அகற்றி ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற முடியும்.

காந்திஜி மதங்கள் இனங்கள் என்ற பேதமில்லாது நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும் “சீதாராமா”என்றும் சொல்லத் தொடங்கினார்.

“சீதாராமா”என்று நாம் மகிழ்ச்சியான உணர்வை நுகர்ந்தால் நம்மிடம் மகிழ்ச்சியின் தன்மை வெளிப்படுகின்றது. மகிழ்ச்சியான சொல் வெளிப்படும் பொழுது கேட்போர் உணர்வுகளிலும் மகிழ்ச்சி அடைகின்றது.

இதைத் தான், காந்திஜி “ஹரே… ராமா…” என்று அடிக்கடி சொன்னார்.
1.“பிறரைத் துன்புறுத்தி வாழ்வதைக் காட்டிலும்
2.அனைவரையும் இன்புறச் செய்து வாழ வேண்டும்” என்ற உணர்வை ஓங்கி வளர்த்தவர் காந்திஜி.

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்தால் அதன் உணர்ச்சிகள் நமது உடலுக்குள்ளும் நல்லதாகச் செய்யும்… மக்களுக்கும் நல்லது செய்யும் என்று காந்திஜி எண்ணினார்.

அதன் வழி அவருடைய சொல்லும் அவருடைய செயலும் ஒன்றாக இருந்தது.

மக்கள் ஏகோபித்த நிலையில் தவறு செய்யும் நிலை வரும் பொழுது காந்திஜி உண்ணாவிரதம் இருந்தார். காரணம் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம்
1.மக்களிடையே தம் மீதான பாசத்தை வரவைத்து
2.அதன் வழியில் மக்களுக்கு உண்மைகளைப் புரிய வைத்து
3.பிறருக்குத் தீங்கு செய்யாத நிலைகளையும்
4.தீண்டாமை என்ற நிலைகளை மறக்கச் செய்து அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மையும் பெற வேண்டும் என்ற
5.“உறுதி கொண்ட உணர்வை” மக்களுக்கு ஊட்டினார்.

நாம் ஒவ்வொரு ஞானியரையும் போற்றித் துதிக்கின்றோம்… காந்திஜியையும் போற்றித் துதிக்கின்றோம். ஆனால் அவர்கள் காட்டிய அற வழிகளை நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை.

ஒவ்வொரு காலத்திலும் மகான்கள் தோன்றுகின்றனர். ஆனால் மகான்கள் இருக்கும் வரை போற்றுகின்றோமே தவிர அவர்கள் மறைந்த பின் அவர்களைச் சுத்தமாக மறந்து விடுகின்றோம்.

இன்று மனிதர் ஒவ்வொருவரும் தனக்குச் செல்வத்தைத் தேட எத்தனையோ வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். செல்வத்தைச் சேர்த்தபின்… அவர்களின் குடும்பத்திற்குள் செல்வத்திற்காகப் போரிட்டுக் குடும்பத்திற்குள் ஒற்றுமையற்ற நிலை உருவாகிச் செல்வத்தைச் சீரழிக்கச் செய்யக்கூடிய நிலையே நடக்கின்றது.

இது போன்ற நிலை பெரிய செல்வந்தர்கள் வீடுகளில் இப்பொழுதும் இருப்பதைக் காணலாம். இப்போர் முறைகளினால் செல்வம் கரைகின்றது. அந்த உணர்வுகள் வளர்கின்றன. அன்பு பண்பு என்ற நிலைகள் மறைகின்றன.

இது போன்ற நிலைகள் உலகம் முழுவதற்கும் இருக்கின்றது.

இவையெல்லாம் யாம் ஏன் சொல்கிறோம் என்றால் நமது நூற்றாண்டில் வாழ்ந்த காந்திஜி ஒரு மகான் என்பதை விட “ஒரு ரிஷி” என்றே சொல்லலாம்.

உலக மக்கள் அனைவரும் தெளிந்த நிலைகள் கொண்டு சகோதர தத்துவத்துடன் வாழ வேண்டுமென்று ஒரே நிலையில் இருந்தவர் காந்திஜி.

காந்திஜியே ஒரு சமயம் “அன்னியனே வெளியேறு…!” என்று சொல்லும் தன்மை வந்து விட்டது. சாந்தமும் விவேகமும் காந்திஜி கொண்டிருந்தாலும் அன்னியருடைய ஆட்சி மிகவும் கடுமையான நிலைகளில் வரும் பொழுது காந்திஜி எல்லா மக்களையும் ஒன்று திரட்டி, “அன்னியனே வெளியேறு” என்ற கோஷத்தை எழுப்பினார்.

அன்னியன் என்றால்
1.தீமை செய்வோர் தீமை செய்யும் சக்திகளை எல்லாம் வெளியேற்றி
2.அன்புடன் அரவணைக்கும் நிலையினை நமது நாட்டில் உருவாக்க வேண்டும் என்று காந்திஜி கூறினார்.

காந்திஜி யாரையும் அன்னியமாக எண்ணவில்லை. மற்றவரை யார் பகைமை உணர்வுடன் பார்க்கின்றனரோ அவர்கள் தான் அன்னியர் ஆகின்றனர். இந்த அன்னியத்தில் இருந்துதான் விடுபட வேண்டும் என்று “அன்னியர்கள் வெளியேற வேண்டும்” என்று சொன்னார்.

நாம் அனைவரும் காந்திஜியின் கொள்கைகளை நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நாட்டைக் காக்கும் பண்புகள் நமக்குள் வளர வேண்டும்.

நாட்டில் அன்பு கலந்த உணர்வுகள் வளர வேண்டும் என்ற அருள் உணர்வுகளைத் தங்களிடத்தில் வளர்க்கும் அன்பர்கள் அனைவரும்
1.மகாத்மா காந்திஜியின் அருள் சக்தி பெற்று… அனைவரையும் அரவணைத்து வாழும் அருள் சக்தி பெற்று
2.இந்த வாழ்க்கையில் சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து
3.தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்றுப் பேரானந்த பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

குறைகளையும் துன்பங்களையும் பற்றி எத்தனை முறை எண்ணினாலும் நமக்கு அதனால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை

குறைகளையும் துன்பங்களையும் பற்றி எத்தனை முறை எண்ணினாலும் நமக்கு அதனால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை

 

ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள்…! அதாவது
1.தன்னிச்சையாகவே… நாம் பார்க்கும் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று
2.நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணத்தை எடுத்துக் கொண்டால் “செய்யும் தொழிலே தெய்வமாகின்றது…”

நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் “பிறர் நலம் பெற வேண்டும்” என்ற அக்கறையே நமக்குள் வளர்கின்றது. இதிலே சுயநலமும் வருகின்றது… அதிலே பொது நலமும் கலக்கின்றது. இரண்டு உணர்வும் சேர்க்கின்றது.

உதாரணமாக நாம் சமையல் செய்யும் பொழுது அரிசியை எடுத்துத் தூய்மைப்படுத்தித் தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்தாலும் அதிலே “ஒரு கல்” வந்து விடுகிறது.

இதைப் போல வாழ்க்கையில் சில நேரங்களில் குறைபாடுகள் வந்துவிடும்.
1.அத்தகைய நிலை வந்தாலும் “அந்த உணர்வு நம்மை இயக்கி விடாதபடி” உடனே ஆத்ம சுத்தி செய்து
2.அத்தகைய உணர்வுகளைச் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் உங்கள் வாழ்க்கைப் பயணம் பகைமை வராதபடி அருள் உணர்வைப் பெருக்கிடும் அருள் வாழ்க்கையாக அமையும். இந்த உடலுக்குப் பின் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே அழைத்துச் செல்லும்.

ஆனால் வாழ்க்கையில் வரும் குறைபாடுகளையே அதிகமாக எண்ணி வளர்த்துக் கொண்டால் எவர் உணர்வு நமக்குள் அதிகமாகின்றதோ இந்த உடலுக்குப் பின்… உயிர் அந்த உடலுக்கு அழைத்துச் செல்லும்.

அங்கே சென்று பேயாக மாற்றும்… நோயாக மாறும். பின் அந்த உடலை விட்டு வெளிவந்த பின் விஷத்தின் அளவுகோலுக்கொப்ப மனிதரல்லாத உடலை உருவாக்கி விடும்… இதே உயிர் தான்.

ஆகவே உயிரை நாம் மதித்துப் பழக வேண்டும்.
1.ஆனால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது…
2.அதைத்தான் உடலாக்குகின்றது… அதைத்தான் ஆளுகின்றது.
3.எண்ணும் பொழுது அதன் வழியாகவே வருகின்றது.

அதாவது… உடலான மணமே நமக்குள் எண்ணமாகி அந்த எண்ணத்தின் உணர்ச்சியே வாழ்க்கையின் செயலாகவும் மாறிக்கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிய அருள் உணர்வை நமக்குள் ஏங்கிப் பெற்று அதை வளர்த்துக் கொண்டால் இன்றைய உலகில் பரவி வரும் விஷத்தன்மை நமக்குள் கவராது மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்கு ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

பத்திரிகையைப் படித்தாலும் சரி… மற்றவைகள் மூலம் உலக நடப்புகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டாலும் சரி…! அறிந்து கொண்ட தீமை நமக்குள் வளராதபடி “மனத்தூய்மையை” நாம் செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.

அப்படிச் செய்தோம் என்றால்
1,நம் வாழ்க்கையில் அந்தக் கணக்குப்படி நமது உயிர் ஜட்ஜ்மெண்டாக தீர்ப்பாக
2.நம்மைப் பிறவி இல்லாத நிலை அடையச் செய்யத் தீர்ப்பளிக்கும்.

அதிலே நாம் தவறினால் விஷத்தன்மை சூழ்ந்துவிடும்… ஏனென்றால் அது வலிமையானது. அந்த உணர்வின் அடிப்படை வளர்ந்து விட்டால் அதனின் தீர்ப்பாக உயிர் மீண்டும் பிறவிக்குக் கொண்டு வந்துவிடும்.

ஆனாலும் இன்றைய விஞ்ஞான உலகம் விஷத் தன்மை வாய்ந்ததாக இருப்பதால் மீண்டும் “மனிதனாக வருவதற்குப் பல காலமாகும்…”
1,நல்ல நினைவு இருக்கும் போதே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
2.அந்த அருள் உணர்வை இப்பொழுதே வளர்த்துக் கொள்ளுங்கள்.

தெய்வச் செயல்

தெய்வச் செயல்

 

தீமையானவற்றை நாம் காணும் பட்சத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது
2.நம்மிடத்தில் உணரப்பட்ட தீமை துடைக்கப்படுகின்றது.

இதைத் தான் “தெய்வச் செயல்” என்பது.

மேலும் யார் நமக்குத் தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றாரோ அவரிடத்தில் “நல்ல உணர்வுகள் வளர வேண்டும்” என்று எண்ணி அதனின் உணர்வை நாம் பரப்பும் பொழுது அங்கே கடும் சொல் வராது,

அது கனிந்திடும் நிலையாகக் கேட்போரின் உணர்வில் இனிமையானதாகப் பாய்ந்து அவரிடத்தில் இருக்கும் தவறை மாற்றி அவர் நம் மீது கொண்ட பகைமையை நீக்கி நட்பினை வளர்க்கும்.

பிறவிப் பெருங்கடல் நீந்தி தன் ஞானத்தால் பிறவி இல்லாப் பெரு நிலையை அடைந்து உயிருடன் ஒன்றி ஒளிச்சரீரமாக இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஏக்கத்துடன்
2.நமது நினைவின் ஆற்றல் அடிக்கடி அவர்கள் பால் செல்லும் பொழுது
3.அவர்களிடம் நமது உயிரான்மா இணைந்து அங்கே சுழலும் சக்தியாக
4.”பிறவா நிலை” என்னும் நிலையை அடையச் செய்கின்றது.

அவ்வாறில்லாமல் நமக்குத் தீங்கு செய்பவரைப் பற்றியே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா இந்த உடலில் வாழ்ந்த காலத்தில் எவரைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தோமோ அவரின் உடலுக்குள் இந்த உயிரான்மாவை அழைத்துச் சென்றுவிடும்,

பின் அந்தத் தீங்கின் விளைவை அனுபவிக்கச் செய்து அதன் மூலம் அவரிடத்தில் விளைந்த உணர்வின் சத்தை இந்த உயிரான்மா கவர்ந்து அவரின் உயிரான்மாவையும் வீழ்த்தி இதுவும் வீழ்ந்து பிறிதொன்றைக் கொன்று புசிக்கும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சிக்கி அதனின் சரீரத்தை இந்த உயிரான்மா பெறுகின்றது.

ஆகவே நாம் தேய்பிறை போன்று இல்லாது வளர்பிறையாக
1.மெய் ஞானத்தை வளர்க்கும் விதமாக மெய் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து வாழ்வில் வரும் தீமைகளை ஒடுக்கி
2.விண்ணில் நிலைத்த ஒளி சரீரத்துடன் இருந்து வரும் மகா ஞானிகளின் ஈர்ப்பில் கலந்து நாமும் அந்த ஓளிச்சரீரமாக வாழ்வோம்

இதன் வழியில் கூட்டுத் தியானங்களில் ஏங்கித் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களுக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

இன்று உலகில் நடப்பதெற்கெல்லாம் மனிதனின் எண்ணமே மூலமாக இருக்கின்றது

இன்று உலகில் நடப்பதெற்கெல்லாம் மனிதனின் எண்ணமே மூலமாக இருக்கின்றது

 

இன்று உலகில் போர்கள் நடந்து கொண்டுள்ளது. சிந்திக்கும் ஆற்றல் மறைந்து கொண்டுள்ளது.
1.நல்ல செய்திகளைக் கேட்க முடியவில்லை.
2.அன்பும் பண்பும் அரவணைப்பும் மறைந்து வருகிறது.

பண்டைய கால மனிதர்கள் விலங்குகளைப் போல் வாழ்ந்தது போன்று இன்று நாம் நகரில் வாழ்ந்தாலும் “காட்டில் வாழ்வது போல் தான் இருக்கிறது…”

ஒருவருக்கொருவர் கொல்லும் உணர்வே வளர்ந்து கொண்டிருக்கின்றது. அத்தகைய தீமையான நிலைகளை அகற்றிடும் சக்தி எங்குமில்லை.
1.எந்த மதக் கடவுளும் அதைக் காக்கவில்லை.
2.இன்றைய உலகில் கடவுளாக வணங்கி வரும் எந்தக் கடவுளும் தீமை செய்பவர்களுக்கு நல்ல போதனையைக் கொடுக்கவில்லை.

நாம் எண்ணிய உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயலே தான் நமக்குள் நடக்கின்றதே தவிர “மனிதனுடைய எண்ணம் தான் இதற்கு மூலமாகிறது…”

எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது. அந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது… அதன் வழியே செயலும் நடந்து கொண்டிருக்கிறது.

தனித்து ஒரு கடவுள் இல்லை…!

1.நாம் எண்ணும் உணர்வுகளில் எத்தகைய தீமைகளை நாம் செய்கிறோம் என்று நம் உயிர் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கும்.
2.அதே சமயத்தில் எந்த வகையில் எந்தெந்தத் தீமைகளை நீக்கினோம் என்று அந்தக் கணக்கையும் உயிர் வைத்துக் கொண்டே இருக்கும்.

ஆக மொத்தம் முடிவில் நமக்கு ஜட்ஜ்மெண்ட் – தீர்ப்பு கூறுவது நம் உயிர் தான். எதன் கணக்காகின்றதோ…
1.நீ இவ்வளவு செய்தாய்… அதற்குண்டான உடலை நீ பெறுவாய்… அதனை நீ அனுபவித்துப் பார்…! என்று தீர்ப்புக் கூறி
2.அதன் வழி அடுத்த வாழ்க்கை தொடர்கின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தின் மூலம் தீமையை அகற்றிடும் அருள் சக்திகளைப் பெற்றுப் பழகி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறருடைய கஷ்டமோ துன்பமோ துயரமோ அதை உற்றுப் பார்த்து அவர்கள் சொல்வதைக் கேட்டு நுகர்ந்திருந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் இயக்கிடாது தடைப்படுத்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி இப் பிறவியில் வரும் இருளை அகற்றி… “உயிருடன் ஒன்றி ஒளி என்ற உடலைத் தான் பெறுவோம்…” என்று உறுதிப்படுத்துங்கள்.

1.எந்த நிலையிலும் இந்த உடலை விட்டுத் தான் உயிர் செல்கிறது.
2.செல்லும் பொழுது இந்த உடலில் எதைச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க மாற்று உடலை உருவாக்குகின்றது உயிர்.
3.உணர்வுக்கொப்ப உடலை உயிர் மாற்றுகின்றது என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் ஏற்கனவே பல முறை உபதேசித்துள்ளேன்.

ஆகவே குரு வழியில் நமக்குள் அருள் சக்தியினைக் கூட்டித் தீமை புகாது தடுத்து… நாம் பார்ப்போருக்குத் தீமை என்று உணர்ந்தால் அது வராது தடுத்து வேதனைப்படும் உணர்வுகளிலிருந்து அவரை நாம் மீட்டு… அவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞானத்தை நாம் பெறவே இந்தத் தியானத்தை அமைத்துள்ளோம்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கும் பொழுது “நீங்களும் அதன் வழியில் அதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்…”

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தியைப் பெற்று அதன் வழியில் உங்கள் உடலில் தீமை அகற்றிடும் சக்தியாக அத்தகைய உறுப்புகளாக மாற்றி ஓர் தெளிந்த மனம் பெறும் சக்தி பெறுவீர்கள்.

1.வரும் இருளை அகற்றி… இந்த வாழ்க்கையை ஒரு புனிதப் பயணமாக வைத்து
2.இந்த வாழ்க்கைக்குப் பின் என்றும் ஏகாந்த நிலையாகப் பகைமையற்ற நிலையில்
3.பிறிதொன்று நம்மைக் கவர்ந்திடாத நிலையை அடையச் செய்யும் மார்க்கம் தான் “நமது குருநாதர் காட்டிய அருள் வழி…”