விண்ணுலகில் “ஒளிச் சரீரமாக வாழும் நிலை” எப்படிப்பட்டது…?

விண்ணுலகில் “ஒளிச் சரீரமாக வாழும் நிலை” எப்படிப்பட்டது…?

 

நமது பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் உண்டு. ரேவதி நட்சத்திரத்திலிருந்தும் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்தும் துகள்கள் வரப்படும் பொழுது சூரியன் தன் உணவுக்காக அவைகளை எடுத்துக் கொள்கிறது. இடைமறித்து மற்ற கோள்கள் கவர்ந்து அதனின் மாற்றங்கள் ஆகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிக வலிமை பெற்றது… ஆண்பால். ஆணைக் கண்டு பெண் எப்படி ஒதுங்கிச் செல்கின்றதோ அதைப்போல ஒதுங்கிச் செல்லும் நிலைகள் பெற்றது ரேவதி நட்சத்திரத்தின் நிலைகள்.

இருப்பினும்… இதன் உணர்வின் அழுத்தம் அதிகமான பின் ரேவதி நட்சத்திரத்தின் உணர்வலைகள் விலகிச் செல்கிறது. விலகிச் செல்லும் மார்க்கத்தில் வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய ஆவியின் தன்மை ஊடுருவி விட்டால் சுழற்சியாகி… வேகம் அதிகமாகின்றது.

சுழற்சியின் வேகம் அதிகமாகும் பொழுது இதன் அருகிலே வந்த அந்தக் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து இரண்டும் மோதி விடுகின்றது.

இப்படி மோதி விட்டால்
1.ஆண் பெண் என்ற உணர்வுகளில் ரேவதி நட்சத்திரத்தின் உண்ர்வுகள் அதிகமானால் பெண்பாலை உருவாக்கும் சக்தி வருகின்றது.
2.கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிகமானால் ஆண்பாலை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஆகவே… ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் உயிரிலே இயக்குகின்றது.

அதைப் போல் இந்த அருள் வழியில் கணவன் மனைவி இருவரும் ஒத்த உணர்வு கொண்டு இயக்கினால் “எதனையும் வெல்லக்கூடிய சக்தி பெறுகின்றது…”
1.இங்கிருந்து நாம் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொன்று தான்…!

இதிலே தெளிவாக்கி உணர்வின் தன்மை இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் சக்தி மனித உடலில் பெற்ற பின் ஆறாவது அறிவு ஏழாவது ஒளியாக மாறுகின்றது. அது தான் சிருஷ்டித்துக் கொண்டது என்று சொல்வது.

தீமைகளை… பகைமைகளை… நஞ்சினைத் தனக்குள் வராதபடி மாற்றியமைக்கும் திறன் மனித உடலில் பெற்றதனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்கின்றோம்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் இணைப்புடன் வாழ்ந்தால்
2.பூமியில் நண்பர்கள்… உறவினர்கள்… என்று இருந்தாலும் அதை அறிந்து கொள்ளும் நிலை இல்லை.
3.ஆனால் ஒன்று சேர்ந்து வாழும் இயக்கச் சக்தியாக மாறும்.
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து துருவ நட்சத்திரத்தில் உணர்வைக் கவர்ந்து வாழும் தன்மை வருகிறது.

நமது பிரபஞ்சம் பிற நிலைகளிலிருந்து எடுத்தாலும் சூரியன் எப்படி வளர்கின்றதோ இதைப் போலத் தான் சப்தரிஷி மண்டலங்களில் நாம் இருக்கப்படும் பொழுது “மனிதனுக்கு மனிதன்…” அறிந்திடும் நிலை வராது.

இருளை அகற்றிடும் வலிமை பெறும்… ஏழாவது ஒளி நிலை பெறும். அதை நாம் நுகர்ந்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் பகைமைகளை அகற்றிச் சிந்திக்கும் தன்மை பெறச் செய்யும்.

அதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது. தான் சிருஷ்டித்து கொண்டது தான் ரிஷி.

கணவனும் மனைவியும் இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அதைப் பின்பற்றிய அனைவரும் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி… சப்தரிஷிகள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள்…! என்று பொருள்… உணர்வின் ஒளி அலைகள் கொண்டு.

வேப்ப மரத்தின் கசப்பை நாம் நுகர்ந்தால் ஓய்… வெளியே வருகின்றது. ரோஜாப் பூவின் மணத்தை நுகர்ந்தால் ஆகா..கா… என்று இணைந்து செயல்படும் உணர்வுகள் வருகின்றது.

அதைப் போல் நாம் ஒளிச் சரீரம் பெற்று விண்ணிலே வாழும் நிலைகளில்
1.அதற்கு மாறான உணர்வுகள் அங்கே சென்றால் இந்த உணர்வைப் பிரித்து விட்டுத் தன் உணர்வினை ஒளி என்று தான் உருவாக்கும்.
2.அங்கே பண்பும் அன்பும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்.
3.துருவ நட்சத்திரத்துடன் இணைத்து வாழும் உணர்வுகள் வரும் போது அதைப் பங்கிட்டு ஒளியின் தன்மை பெறும்.
4.விண் சென்ற பின் தன் நண்பன் என்று அறியாது.

ஆக அப்படி அறியக்கூடிய பருவம் வந்தால் மனித நிலைக்குத்தான் வரவேண்டும்.

விண் சென்ற நிலையில்… என்றுமே இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை ஊட்டி ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும். ஒளிக்குள் ஒளியாகும் பொழுது அகத்தின் ஒளியாகும் பொழுது இருளை வெல்லும் தன்மையும் நஞ்சை வெல்லும் தன்மையும் பெறுமே தவிர “அதற்குப் பின் இங்கே (பூமிக்குள்) வர முடியாது…”

என்றும் ஏகாந்த நிலையாக… எதுவுமே பகைமை இல்லாத நிலையும் பகைமையை மாற்றி அமைக்கும் சக்தியை இந்த மனித உடலில் பெற்றுத்தான் நாம் அங்கே செல்ல முடியும். இது தான் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி சப்தரிஷி – சிருஷ்டித்துக் கொண்டது.

கணவன் உயிராக இருந்தாலும் அதற்குள்ளும் பெண்பால் உணர்வுகள் உண்டு. மனைவி என்ற நிலையில் இருந்தாலும் அந்த உயிரில் ஆண்பால் என்ற உணர்வு உண்டு.

செடி கொடி கல்லானாலும் மலையானாலும் இதைப் போன்று நட்சத்திரத்தின் உணர்வுகள் எது கலவையானதோ அதற்குத்தக்க வளர்ச்சி இருக்கும்.

பெண்பால் உணர்வுகள் அதிகமானால் மலைகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதும் ஆண்பால் உணர்வுகள் இருந்தால் வளர்ச்சி கம்மியாக இருப்பதும் உண்டு.

வெறும் ஆண்பால் என்ற உணர்வு வரப்படும் போது தன் இனத்தை விருத்தி செய்து வளர்க்க முடியாது.

அதே போல் பப்பாளி மரத்தில் ஆண்பால் என்ற உணர்வுகள் செல்லும் பொழுது தான் பெண் பப்பாளி தன் இனத்தை விருத்தி செய்யும் வித்துக்களை உருவாக்குகின்றது. ஆண்பால் என்ற அந்த பப்பாளி மரம் இல்லை என்றால் அந்த அமிலம் படவில்லை என்றால் பப்பாளி மரத்தின் வளர்ச்சி குன்றும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதன் உணர்வு கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக மாற்றப்படும் பொழுது நம் உயிர் அங்கே பகைமை என்ற நிலை இல்லாது ஒருக்கிணைந்த நிலைகளில் வாழ முடியும்.

1.பகைமையற்ற நிலைகள் கொண்டு என்றும் ஒளியாக வாழ…
2.ஒன்று சேர்த்த இயக்கத்தை நமக்குள் உயிர் என்ற நிலை இருக்கும் போது
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது தனுசுகோடி.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளை நீக்கி நீக்கி வந்தது… கோடிக்கரை. ஆகவே அந்த உடல் பெறும் உணர்வுகள் சிவ தனுசு.

ஆனால் அதே சமயத்தில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அந்த உணர்வினை நமக்குள் பெருக்கி விட்டால் தனுசுகோடி. தீமைகளை வென்று உணர்வின் தன்மை ஒன்றாக்கி
1.உயிரைப் போன்ற உணர்வு ஒன்றாக்கப்படும் பொழுது
2.”ஒன்றென்ற நிலைகள் இயக்குவது தான்… தனுசுகோடி…” என்று கூறப்படுகின்றது.

பகைமைகளை அகற்றி அருள் உணர்வைக் கூட்டி உயிருடன் ஒன்றி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது… கணவன் மனைவியாக அதை உருவாக்கப்படும் போது சப்தரிஷி.

இருளை அகற்றி நல்ல உணர்வினைச் சேர்க்கும் தன்மை… அதாவது “விஷத்தை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது…” என்பதனை நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீகத்தில்… ஒன்றுபட்ட கூட்டமைப்பைக் எப்படிக் கொண்டு வர முடியும்…?

ஆன்மீகத்தில்… ஒன்றுபட்ட கூட்டமைப்பைக் எப்படிக் கொண்டு வர முடியும்…?

 

மற்றவர்கள் செயலை நேருக்கு நேர் பார்த்து “நீ தவறு செய்கின்றாய்…” என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? கேட்க மாட்டார்கள்…!
1.சொல்லால் சொல்லி யாரையும் திருத்த முடியாது.
2.மனதிற்குள் வைத்து அவர்கள் திருந்தி வாழ வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட்டி…
3.”நீங்கள் பார்த்துச் செய்யுங்கள்…” என்று கூறினால் சரியாகும்.

டேய் என்னடா செய்கின்றாய்…? இப்படியே நீ தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறாய் என்று சொல்லும் போது அதனின் அர்த்தம் என்ன ஆகிறது…?இத்தனை பேர் இருக்கின்றார்கள்… இப்படியே செய்து கொண்டிருக்கிறீர்கள்… சாமி என்ன சொல்கின்றார்…? என்று இதையும் கலந்து கொண்டே தான் வருவோம்.

இதனால் என்ன ஆகின்றது…? நன்மை விளைவதில்லை.

அறியாத நிலைகள் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும்
1.நாம் அருளைப் பாய்ச்சி அவர்கள் அறியும் தன்மை வரவேண்டும் என்ற இந்த உயர்ந்த உணர்வை நாம் எடுத்துச் செயல்பட வேண்டும்.
2.நிச்சயம் உணர்வார்கள்… வருவார்கள்… என்று இந்த எண்ணத்துடன் தியானித்துப் பாருங்கள். தேடி வருவார்கள்.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

இதைத்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர… நாம் சொல்லும் “நல்லதைக் கேட்க யாரும் வரவில்லை…” என்ற எண்ணத்திற்கு நாம் செல்ல வேண்டியதில்லை.

ஆனால் இத்தனை பேர் இந்தத் தியான வழியில் வந்தார்கள் ஆனால் இப்பொழுது போய்விட்டார்களே…! என்று வேதனையோடு சொல்லப்படும் பொழுது… உங்கள் மேல் “இவர் என்ன…? சும்மா எப்பொழுது பார்த்தாலும் நச் நச் என்று நச்சுப் பிடித்துவராக இருக்கின்றார் என்று வரும்…!

பாலிலே விஷத்தைப் போட்டு அதைச் சாப்பிட்டால் மயக்கம் தான் வரும். இதைக் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்…? சிந்தனை அங்கே சரியாக வராது.

இதைப் போன்று நாம் எடுக்கும் உணர்வுகள் விஷத்தன்மை ஆகும்பொழுது நம்மை அறியாமலே வேதனைப்படும் நிலையும் நாம் செல்ல வேண்டிய மார்க்கத்தைத் தவற விட்டு மற்றவர்களையும் பெற விடாதபடி தடைப்படுத்தும் நிலையாகத் தான் வரும்.

இவர் என்ன எப்பொழுது பார்த்தாலும் சும்மா வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று உங்கள் மீது குறை கூறும் உணர்வுகள் வந்துவிடும்.

ஆனால் உயர்ந்த பண்புகளுடன் வேதனை உணர்வு கலந்து சொல்லும் பொழுது உடலும் பலவீனமாகும். உயர்ந்த மார்க்கமாக இருக்கின்றது… இப்படி இருக்கின்றார்களே அல்லது இப்படிச் செய்கின்றார்களே…! என்று வந்துவிடும்

கண்ணாடி நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் அழுக்குப் படிந்து விட்டால் முகம் தெரியுமா துடைக்க வேண்டும் அல்லவா.

ஆன்மீகம் என்பது
1.வலிமை கொண்ட உணர்வைப் பாய்ச்சி…
2.மற்றவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…! என்று எண்ணினால் நிச்சயம் ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும்.

ஆகவே அருள் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும்… ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எடுத்தால் அது சீராக வரும்.

அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறுங்கள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறுங்கள்

 

பாலில் பாதாமைப் போட்டால் சத்துள்ளது தான். ஆனால் அறியாதபடி ஒரு துளி விஷம் அதிலே பட்டு விட்டால் பாலுக்குச் சக்தி இல்லை.

இதைப் போல்தான் நாம் உயர்ந்த உணர்வு கொண்டு இருந்தாலும்
1.பிறர் செய்யும் தவறுகளையும் பிறர்படும் வேதனைகளையும் இப்படிச் செய்கின்றார்களே என்று அறிந்து கொண்டாலும்
2.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் தெய்வ ஆணை ஆகி அந்த உணர்ச்சிகள் நம் உடலில் சேர்க்கப்பட்டு
3.நம் சொல்லும் செயலும் அதன் வழி அமைந்து “அந்த உணர்வு அமிலமாகி” உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவுகள் பாழ்படுகிறது.
4.நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பகைமை உணர்வு கொண்டு எதிர்நிலையால் தாக்கப்படும் பொழுது சீராக உணவு உட்கொள்ள முடிவதில்லை. ஆனால் பசி எடுக்கும்… உணவை உட்கொள்ள முடியாது.

பசியின் தன்மையால் “பித்தம் அதிகமானால்” உமட்டல் அதிகரிக்கும்.

மனிதனின் சகஜ வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமைகளையோ குடும்பத்தில் ஏற்படக்கூடிய சில வேதனையான நிலைகளாலோ வேதனை அதிகமானால் உடலுக்குள் அஜீரணக் கோளாறு ஆகிவிடும்.

வயிறு உப்புசமாகும்… வாயு அதிகமாக உருவாகும்… ஜீரண சக்தி குறையும்…! அதனால் புளிப்பின் தன்மை ஏற்படும் போது ஜீரண உறுப்புகளில் பாதுகாப்பாக இருக்கும் அமிலங்களைச் செயலற்றதாக ஆக்கி அதனால் எரிச்சலாகி உணவை உட்கொள்ள மறுக்கச் செய்வதும் இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்.

இதை போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமல்லவா.

தவறு செய்கிறார்கள் என்று மற்றவர்கள் உணர்வுகளை எப்படி நுகர்கின்றோமோ அதைப் போல் அதை நீக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். அதை அவ்வப்பொழுது நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுங்கள். அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் நஞ்சினை அவன் வென்றவன். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவன் அருளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

1.மாமமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.
2.அகஸ்தியன் இருளை அகற்றி நஞ்சினை வென்று துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று
3.சிறிது நேரம் இந்தச் சக்தியை உடலுக்குள் கூட்டினால் அந்த உணர்வுகள் நமக்குள் வலுப்பெறுகின்றது.

துணியில் பட்ட அழுக்கை நாம் சோப்பைப் போட்டு நுரையேற்றி அந்த அழுக்கினை எப்படி நீக்குகின்றமோ இதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அதிகரித்து அதை வலுவாக்கி
1.தீமை என்ற உணர்வுகள் சுவாசத்திற்குள் நுழையாதபடி
2.முன் பகுதியில் நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டால்
3.நாம் எடுக்கக்கூடிய உயர்ந்த உணர்வுகளால் சிந்திக்கும் தன்மையும்
4.உடலுக்குள் தொக்கி உள்ள விஷத்தின் தன்மையைத் தணித்து உடல் நலம் பெறச் செய்யும்.

அதற்குத்தான் உங்களுக்குள் அருள் உணர்வைப் பெறச் செய்கின்றோம். எப்போதெல்லாம் குறைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். சிறிது நேரம் அதைச் சுவாசியுங்கள். அந்தத் தீமைகளை அகற்றிடும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அதைப் பெற வேண்டும் என்ற வலுவைக் கூட்டி இதை நீங்கள் பெருக்கிப் பாருங்கள்.
1.உங்களுக்குள் அமைதி கிடைக்கும்… சிந்திக்கும் தன்மை வரும்
2.கோபத்தைக்த் தணிக்கும்… படபடப்பை நீக்கும்.
3.அருள் உணர்வுகள் பெருகும் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.

ஆகவே… இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்

எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்

 

நான் சம்பாதித்தேன்… பிள்ளையை வளர்த்தேன்… நாளை அவன் என்ன செய்வானோ…! இப்பொழுதே என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்…! என்று உணர்வுகளைச் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த “ஏமாற்றும் உணர்வுகள்…” இந்த உடலிலே நோயாக மாறும்.

நோய் முற்றி இறந்த பின் பிள்ளையின் உடலுக்குள் தான் செல்வோம். ஆக… மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டி வருகின்றது. விண் செல்லும் உணர்வை இழந்து விடுகின்றோம்.

அது போன்று ஆகாதபடி
1.இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எத்தகைய சிரமங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பாருங்கள்.
2.அதை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்.
3.எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்.
4.அருளைப் பெறுவேன் இருளை நீக்குவேன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவேன் என் இரத்த நாளங்களிலே அதைக் கலக்கச் செய்வேன்.
5.உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வேன் என்று எண்ணுங்கள்.

அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல பல விஷத்தன்மைகளை முறித்து வலுப்பெற்றவன். அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட அந்தச் சக்திகள் நமக்கு முன் பரவி உள்ளது. உங்களுக்குள் அதைத்தான் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.

அதை உங்கள் எண்ணத்தால் மீண்டும் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற “மூலிகை மணங்களையும் அவன் பெற்ற நஞ்சினை வென்றிட்ட அந்த அருள் சக்தியும்…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்தே ஏங்குங்கள்.

உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். அந்த ஏக்கத்துடன் கண்களை மூடுங்கள்.
1.அப்படி மூடும் பொழுது அந்த அகஸ்தியன் பெற்ற மூலிகைகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகச் சுரப்பதைக் காணலாம்.
2.உடலுக்குள் செல்லப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
3.விஷத்தன்மைகளை மாற்றும் சக்திகளை நீங்களே பெறுகின்றீர்கள். காற்றிலே உண்டு… நீங்கள் அதை நுகர்கின்றீர்கள்.

ஒருவன் வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வுகள் நமக்குள் வந்து இரத்தங்களிலே கலந்து விஷத்தன்மை ஆகி நம் நல்ல அணுக்கள் செயலிழக்கின்றது. அப்பொழுது வெறுப்பும் வேதனையும் வருகின்றது.

இதைப் போலத் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
1.இதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசித்தால் போதுமானது.
2.எத்தகைய தீமையையும் நீங்கள் நீக்க முடியும்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்.
3.தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்… உங்களால் நிச்சயம் முடியும்…!

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

 

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய விஷமான சக்திகளைத் தனக்கு உணவாக எடுத்து அதை மாற்றி அமைத்துத் துகள்களாக அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கொன்று எதிர்மறையானால் பூமிக்குள் வரும் போது மின்னல்களாகப் பாய்கின்றது.

கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகின்றது. அதே விஷத்தின் தன்மை மற்ற தாவரங்களில் எதிர்நிலையாகும் பொழுது அது கருகுகின்றது. இதன் உணர்வுகள் பூமியின் ஈர்ப்புக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது. பின் நிலநடுக்கம் ஆகின்றது. இது எல்லாம் மின்னலால் ஏற்படக்கூடிய நிலைகள்.

1.ஆனால் இத்தகைய நஞ்சையும் தாய் கருவிலே பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்திகளால் அடக்கியவன் அகஸ்தியன்.
2.அவன் கண்ட உண்மையின் உணர்வின் தன்மை மின்னல்களில் இருந்து வரக்கூடிய ஆற்றல்கள் அவனுக்குள் தணிகின்றது.

மின்னல்கள் பிரபஞ்சத்தில் பாயும் பொழுது அதை வெள்ளிக் கோள் கவர்ந்து கொள்கின்றது.
1.அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் நுகர்ந்து உடலுக்குள் பெருக்கி
2.உயிரைப் போன்றே உணர்வின் அறிவை வளர்த்துக் கொள்கின்றான்.

மின்னல் கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகிறது. ஆனாலும் அந்த மின்னலின் வீரிய உணர்வுகள் பாயும் பொழுது… சந்தர்ப்பம் மீன்கள் அதன் அருகில் சென்றால் அந்த ஒளிக்கற்றைகள் அதற்குள் பாயப்பட்டு அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

மின்னல் தாக்கும் பொழுது எப்படி ஒளிக்கற்றைகள் பரவுகின்றதோ மீன் இனங்களுக்குள் இது பட்டபின் அது நீருக்குள் உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.
1.இயற்கையின் நிலைகள் இப்படி மாறுவது போல
2.அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாம் நுகர்ந்தால் “நாமும் ஒளியாக முடியும்…”

அவன் துருவனானான். பின் பதினாறாவது வயதில் திருமணம் ஆகின்றது. தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். மனைவியும் அதையெல்லாம் தனக்குள் பதிவாக்குகின்றது.

பதிவான நிலைகள் கணவன் மேலும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அகஸ்தியன் தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவி பெற வேண்டும் என்று… இப்படி அந்த இரண்டு பேருமே இந்த உணர்வை வளர்த்து ஒரே உணர்வாக எண்ணப்படும் பொழுது ரிஷித்தன்மை பெறுகின்றார்கள்… துருவ மகரிஷியாகின்றார்கள்.

அந்த ரிஷி என்ற நிலை வரவேண்டும் என்றால் “கணவன் மனைவியாக இருந்தால் தான் முடியும்…”

செடி கொடிகளில் ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் தன் இன வித்துக்களை உருவாக்க முடியும். உயிரினங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் இனத்தின் தன்மை விருத்தி செய்ய முடியும்.

தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அகஸ்தியன் எப்படித் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானானோ கணவன் மனைவி ஒன்றி ஒளி நிலை பெற்றார்களோ அதிலிருந்து வெளிப்படும் சக்திகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.

உங்களுக்குள் அதைத்தான் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை எண்ணி நீங்கள் பெற்று உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண்களை மூடிப் புருவ மத்தியில் எண்ணி உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் “மின் அணுக்கள் உருவாகும்…”
3.நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலுக்குள்ளும் ஒளியான உணர்வுகள் தோன்றும்.
4.உடலிலிருந்து வெளிச்சங்கள் வெளி வரும்… சிலருக்கு இது தெரியும்.
5.சிலருக்கு மகிழ்ச்சியான உணர்வுகளை ஊட்டும்.

அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்

அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்

 

சில மலைப் பகுதிகளுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று “அக்காலங்களில் அகஸ்தியன் அமர்ந்த பாறைகளை…”
1.பாபநாசத்தில் பெரும்பகுதி சுழன்ற இடங்களையும்
2.தலைக்காவிரியில் அகஸ்தியன் சுழற்சி வட்டம் ஜாஸ்தி… அந்த இடங்களையும்
3.இமயமலையில் அவன் சுழன்ற இடங்களையும் அகஸ்தியன் வந்து சென்ற இடங்களையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.வேகாக்கலை என்ற நிலைகள் கொண்டு அழிந்திடாத நிலைகளாக அவன் வெளிப்படுத்தியது இன்றும் அங்கே உண்டு.

ஆனால் சாகாக்கலை என்று மந்திர ஒலிகளால் செயல்பட்டவர்கள் உணர்வுகள் பூமிக்குள் படர்ந்திருந்தாலும் அது எல்லாம் அழிந்து விடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலையில் விஷத்தன்மையே படர்கின்றது என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

வேகாநிலை அடைந்த மகரிஷிகள்… உயிர் ஒளியின் துடிப்பாக எப்படி இருக்கின்றதோ…? அதைப் போல தன் உணர்வினை உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக… நஞ்சினை அடக்கி ஒளியாக்குகின்றார்கள்.

வைரம் நஞ்சினை அடக்கி ஒளிச்சுடராக இருப்பது போன்று
1.உடலில் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும்
2.வாழ்க்கையில் வரும் நஞ்சான உணவுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும்
3.அந்த ஞானி விண்ணுலக ஆற்றலை எடுத்து அதன் மேல் “அடுக்கடுக்காகப் பரப்பி…” நஞ்சினை ஒடுக்கி
4.இந்த உணர்வின் தன்மையை மேலோங்கச் செய்து இந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் ஒன்றி
5.துருவத்தைக் கண்டுணர்ந்து… துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
6.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி… அதனின் துணை கொண்டு ஒளியின் சிகரமாகி
7.அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து… அந்தத் துருவத்தில் வரும் உணர்வையே ஒளியாக மாற்றி
8.எந்த துருவத்தின் வழியில் ஈர்ப்பாகச் சக்திகளை எடுத்தானோ பூமிக்குள் வரும்… அந்த நஞ்சினை மற்றது விளையாது
9.அதையே தனக்குள் ஒளியின் சிகரமாக மாற்றி அமைத்து இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றான்…
10.அகஸ்தியன் துருவ மகரிஷியாக… துருவ நட்சத்திரமாக என்று…! இதையெல்லாம் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

அவனைப் பின்பற்றிவர்கள் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கிறார்கள்…? என்பதையும் காட்டுகின்றார்.

மனிதனின் நிலைகளில் முழுமை பெற்று “உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரமாக எவ்வாறு அங்கே சென்றடைந்தார்கள்…?” என்று உணர்த்திவிட்டு அவர்கள் சென்ற எல்லையை நாம் அனைவரும் அடைய வேண்டும் என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

தெய்வீக அன்பைத் தான் நாம் வளர்க்க வேண்டும்

தெய்வீக அன்பைத் தான் நாம் வளர்க்க வேண்டும்

 

பாசத்தால் நாம் அதிகமாக வேதனையைத் தான் நுகர்கின்றோம்… எதை…? விஷத்தை…!
1.எவர் மேல் பாசம் அதிகம் ஆகின்றதோ
2.அப்போது வேதனை என்ற நஞ்சையும் அதனுடன் இணைத்துக் கூடவே சாப்பிடும்.

நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் அவன் சேர்ந்து சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் நமக்குள் கலந்துவிடும்.

அவனை எண்ணி எண்ணி இந்த உடலே கரைந்து விடும். விஷத்தைச் சாப்பிட்டால் எப்படியோ இந்த உணர்வுகள் நோயாக மாறுகின்றது. அந்த நோயின் தன்மை பேயாகவே மாறுகிறது.

1.இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின்
2.உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் ஒரு உடலுக்குள் பேயாகப் போய் நோயாகவே உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.உங்கள் உயிருடன் எப்பொழுதெல்லாம் ஒன்றுகின்றீர்களோ
3.அந்தச் சக்தியை அப்பொழுது நீங்கள் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
4.அதற்குத்தான் இந்த உபதேச வாயிலாக ஆழமாக ஞான வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

விரயமில்லாதபடி எந்த நிமிடமும் நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கலாம்.

யாம் கொடுக்கக்கூடிய சக்தியை நீங்கள் அனைவரும் பெற்று நீங்கள் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வளர்த்துக் கொண்ட நிலையில்
1.உங்கள் பார்வை உங்கள் சொல் உங்கள் மூச்சு காற்றலையில் பரவினாலும்
2.யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.

எதுவும் கெட்டது அல்ல…! எப்படி…?

எதுவும் கெட்டது அல்ல…! எப்படி…?

 

குருக்ஷேத்திரப் போர்…! ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள் அது உடலுக்கு குரு. ஓ…ம் என்பது பிரணவம்…. அதாவது நாம் எண்ணுவது ஜீவன் பெறுகின்றது.

ஆகவே… உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
2.குருக்ஷேத்திரத்தில்… உயிரிடம் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருங்கள்.

நீங்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் கொடுக்கும் வாக்குகள் உங்களுக்குள் அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாகப் பெற்று யாம் உபதேசித்த ஆற்றல்மிக்க சக்தியை… “நீங்கள் எண்ணிய போது… எண்ணிய நிலைகள் கொண்டு…” உங்களுக்குள் கிடைக்கச் செய்கின்றேன்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்தத் துன்ப உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் தான் பணியச் செய்வதே எமது ஆசி.

ஆகவே அந்த உணர்வுடன் நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதி கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மேல் நோக்கி விண்ணிலே நினைவைச் செலுத்தி உயிரிடம் வேண்டுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயல் புனிதம் பெற வேண்டும் நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும் பார்ப்போர் அனைவரும் நல்லதாக இருக்க வேண்டும் என்று இதை மட்டும் எண்ணி ஆசி பெறுங்கள்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டும் சக்திகள் அனைத்தும் தாள் பணிந்து…
1.உங்களுக்குள் ஒத்துழைத்து உங்கள் உயர்வான எண்ணங்களுக்கு வழிகாட்டியாக அது அமையட்டும்.
2.எது…?
3.எதுவும் கெட்டது அல்ல…! உங்களுக்குள் வலுவூட்டவும் வழிகாட்டியாகவும் அது இருக்கும்.

கெட்டது என்று அது தான் நமக்குக் காட்டுகின்றது. அதை நாம் நீக்கிவிட்டுச் செல்ல விரும்புகின்றோம். கெட்டது என்று அது வழி காட்டினாலும் அந்த உணர்வு எனக்குள் சேர்ந்து விடுகின்றது.
1.ஆனால் வழிகாட்டிய நிலைகளும் எனக்குள் அது பணிந்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
2.ஆக… வழிகாட்டிய அந்த விஷமே என்னை ஆட்கொண்டு விடக்கூடாது.
3.ஆகையினால் தான் அத்தகைய நிலைகளை “ஆசீர்வாதம்…” என்பது
4.உயர்ந்த சக்தியாக… ஞானத்துடன் கூடிய… “மெய் வழி பெறும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்…” என்று ஆசி கொடுக்கிறேன்.

அந்த வழியில் ஆசி வாங்கிப் பழகுங்கள்.

இன்றைய மனிதனின் தவறான உணர்வுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்

இன்றைய மனிதனின் தவறான உணர்வுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்

 

குருநாதர் காண்பித்த அருள் வழியில் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அருள் ஞான உணர்வை உங்களுக்குள் இணைத்துப் பெருக்கும் பொழுது உங்களுள் தீமைகளை அகற்றும் சக்தி விளைகின்றது.

குமாரபாளையத்தில் நாராயணசாமி என்பவர் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் ஆஞ்சனேயர் மடத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மாதேஸ்வரன் மலைக்கு யாம் அழைத்துச் சென்றோம்.

நாராயணசாமி மற்றும் அவர்களுடைய பாட்டி குழந்தைகள் அனைவரையும் அழைத்துச் சென்றோம். போகும் வழியானது யானைக் காடு. குறுக்குப் பாதை என்று யானைக் காட்டின் வழியாக அவர்களை அழைத்துச் சென்றோம்.

மலைப்பாதையில் சென்று கொண்டிருக்கும் பொழுது எங்களுக்கு எதிர்த்தால் போன்று ஒரு புதரில் இரண்டு புலிகள் நின்று கொண்டிருந்தன. யாம் அழைத்து வந்தவர்கள் புலிகளைப் பார்க்கவில்லை.

அவர்கள் பார்த்தால் பயந்துவிடுவார்கள் என்று கருதி யாம் அவர்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டோம். யாம் அழைத்து வந்தவர்களில் 10 வயது 12 வயது சிறுவர்களும் இருந்தனர். பின்னால் வயதானவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

1.யாம் அவர்கள் புலியைப் பார்க்காதவாறு மறைந்து நின்று கொண்டு பிரார்த்தனை செய்தோம்.
2.எல்லோரையும் பார்த்துக் குறி வைத்துக் கொண்டிருந்த புலிகள் அவைகளுக்கு எதிரான உணர்வுகளைக் கண்டவுடன்
3.இரண்டு புலிகளும் தாண்டிக் குதித்து ஓடின. எதையோ கண்டு பயந்ததைப் போன்று விருட்டென்று ஓடி மறைந்தன.

புலிகள் ஓடுவதைக் கண்டு யாம் அழைத்து வந்தவர்கள் வெகுவாகப் பயந்து போனார்கள். அதன் பிறகு, அங்கிருந்து அவர்களை அழைத்துச் சென்றோம். அப்பொழுதெல்லாம் அவர்களுக்குக் காட்சிகள் கிடைக்கும்படிச் செய்தோம்.

மாதேஸ்வரன் மலைக்கு அவர்களைப் பழக்கத்திற்காகக் கூட்டிச் சென்றோம். இயற்கை எப்படிச் செயல்படுகிறது…? என்ற நிலைகளை யாம் அறிவதற்காக வேண்டி குருநாதர் எம்மை எல்லா இடங்களுக்கும் செல்லச் செய்து பலரைச் சந்திக்கும்படிச் செய்தார்.

காட்டிற்குள்ளும் மனித வாழ்க்கையிலும் என்ன இருக்கின்றது…? என்பதைத் தெரிந்துதான் சொல்கின்றோம். ஆனால் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம் என்றால் சாமி “கதை சொல்வதாக…” எண்ணக் கூடாது.

இயற்கை எப்படி இயங்குகின்றது…? வாழ்க்கையில் வரக்கூடியது அனைத்தும் என்ன செய்கின்றது…? என்பதை குருநாதர் எம்மை அனுபவரீதியாக உணரும்படி செய்தார்.

1.காட்டிற்குள் சென்றால் மிருகங்கள் கட்டுப்படும்.
2.ஆனால் மனிதர்களிடம் பழகும் பொழுது அவர்களிடம் இருந்து தப்பிப்பதே கடினம் தான்.

அதனால் நாம் இன்று பெரும் காட்டினுள் வாழ்கின்றோம். இங்கே நமது உணர்வுகள் கொண்டுதான் நாம் எதையும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஆகையால் “ஒருவர் தவறு செய்கிறார்…!” என்று எண்ணும் பொழுது நமக்குள் தவறின் உணர்வுகளே விளைகின்றது. ஆகவே
1.ஒருவரிடம் தவறு என்று உணர்ந்த அடுத்த நிமிடமே அவருடைய தவறான உணர்வு நம்மிடம் இல்லாதபடி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.இதனால் அவருடைய உணர்வு நம்மைத் தாக்குவதில்லை.

இப்படித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை தம்முள் பெருக்கித் தீமைகள் வராது காக்கும் நிலையாக… உணர்வை ஒளியாக மாற்றும் நிலையாக… ஞானிகள் காண்பித்த அருள் வழியில் வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவரும்… தம்முள் அறியாது சேர்ந்த சாப வினைகளை பாவ வினைகளை தீய வினைகளை நீக்கி… அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற்று…
1.உங்களுடைய பார்வையில் மற்றவர்களுடைய தீமைகளை நீக்கிடும் நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று
2.நீங்கள் இவ்வாழ்க்கையில் பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக பிறவியில்லா நிலையினைப் பெறும் நிலையாக
3.பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.

ஆயிரெத்தெட்டு… நூற்றியெட்டு… என்றெல்லாம் நாமாவளி சொல்கிறோம்… ஏன்…?

ஆயிரெத்தெட்டு… நூற்றியெட்டு… என்றெல்லாம் நாமாவளி சொல்கிறோம்… ஏன்…?

 

கௌரவர்கள் 100 பேர் என்று மகாபாரதத்தில் காட்டுவார்கள். 100 விதமான கௌரவர்கள் நமக்குள் உண்டு. ஒன்றுடன் ஒன்று என்ன செய்யும்…?
1.நாம் நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அதைத்தான் அது இயக்கும்… கௌரவர்கள்.
2.தான் எடுத்துக் கொண்ட உணர்வு… தனக்குள் ஏற்கனவே இருப்பதற்கு மாறாக வந்தால் அது விடாது.

மந்திரத்தைக் கற்றுக் கொண்டவர்களிடம் நல்லதைச் சொன்னால் மந்திரக்காரன் ஏற்றுக் கொள்வானா…? கௌரவம் என்ற நிலை வருகின்றது.

நல்ல சத்தின் தன்மை எடுத்துக் கொண்டால் நல்லது என்று வராதபடி கௌரவர்கள் அதனதன் வளர்ச்சிக்குத் தான் இயக்கும்.

இப்படி ஒரு மனித உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அவனில் அந்த உடலில் எப்படி 100 குணங்கள் எப்படி இயக்குகின்றது…?

கோவில்களில் நாமாவளி சொல்வார்கள். கடவுளின் அவதாரம் 10 என்றால் தெய்வத்தின் அவதாரம் 10 என்ற நிலை வருகிறது. அது எதனதன் நிலைகள் வளர்ந்தது என்று நிலையும் வரும்.

அன்ன வாகனம் யானை வாகனம் சர்ப்ப வாகனம் மயில்வாகனம் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் வைப்பார்கள் 10 வாகனங்களை. அந்த வாகனங்கள் எதற்கு…?

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உட்கொள்கின்றது. மயிலும் தனக்குள் மற்றதை உட்கொண்டு விஷத்தை மாற்றுகின்றது. இப்படி
1.பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று கொன்று ஒன்றை ஒன்று தின்று
2.பத்தும் சேர்த்து ஒன்றாக ஒரு குணமாக மாறுகின்றது.

அதனால் தான் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்களை வைத்து எதனதன் நிலையில் வளர்ச்சி அடைந்தது…? என்று ஒவ்வொரு சாமிக்கும் இவ்வாறு வைத்திருப்பார்கள்.

இப்படி நூறு விதமான குணங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் பத்து. இந்த நூறும் சேர்த்தால் ஆயிரம் ஆகும். அஷ்டதிக்கும் அறியும் உணர்வு வரப்படும் போது எட்டு…! அதாவது
1.ஆயிரெத்தெட்டு என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள்… அதே போல நூற்றியெட்டு…
2.எதன் உணர்வின் தன்மையோ இதன் உணர்வுக்கொப்ப அஷ்டதிக்கும் அது உணர்வின் தன்மை எப்படி எடுக்கிறது…? என்று
3.இந்த உணர்வின் குணங்கள் மாறுவது எப்படி…? இந்த உணர்ச்சியின் செயல்கள் எப்படி மாறுகின்றது…?
4.இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் எந்தக் குணத்தின் தன்மையை நாம் எடுக்கின்றோமா… உதாரணமாக சர்க்கரைச் சத்து என்ற குணத்தை வைத்துக் கொண்டு சர்க்கரையைச் சாப்பிட்டால் எதிர்நிலையாகின்றது.

சர்க்கரை அதிகமாகி விட்டால் அனைத்தையும் வெள்ளணுக்களாக மாற்றி விடுகின்றது. கோப உணர்வு அதிகமாகி கார உணர்வானால் அந்த உணர்ச்சிகளை அதிகமாகத் தூண்டுகின்றது… பின்னாடி இரத்தக் கொதிப்பால் வாத நோயாகி கை கால்களைச் சுண்டி விடுகிறது.

1.இப்படி ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு எதிர் நிலையாகும் பொழுது உடலுக்குள் எப்படிப் போர்கள் நடக்கின்றது…?
2.மனிதனுடைய நிலை எப்படி இருக்கின்றது…? எதன் வழியில் அது வருகிறது…? என்பதைக் குருநாதர் காட்டுகின்றார்.