“எண்ணியது ஓன்று… நடப்பது வேறு…” என்றால் அது விதியின் செயலா…?
எப்படி ஒவ்வொரு கோளத்தின் சந்திப்பினால் கால மாற்றங்கள் இப்பூமியின் பருவ காலம் பெறுகின்றதோ அதைப் போன்று இச்சரீரமும் பெறுகின்றது.
பூமியின் பருவ காலத்தில் சில அதிர்வு நிலைகளால் கடல் பொங்குவது… சூறாவளி… காற்று வீசுவது… எரிமலை வெடிப்பது… பூகம்பம் வருவது…! இத்தன்மை போன்று மனித உடலின் தன்மைக்கும் ஏற்படுகின்றது.
கால மாற்றத்தில் பிற மண்டலங்களின் சந்திப்பில் பூமி ஈர்க்கும் அலையின் தன்மையில் அதிர்வு ஏற்படுகின்றது. அதைப் போன்றே….
1.இம்மனித ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஏற்காத் தன்மை மோதும் பொழுது
2.அதிர்வு நிலைகளை இச்சரீர இயக்கமும் பெறுகின்றது.
இந்தப் பூமியில் எந்த நிலை கொண்டெல்லாம் கால மாற்ற சீதோஷ்ண நிலை மாறுபடுகின்றதோ அதற்கொப்ப இந்த உடல் பிம்பச் செயல்களில் “உணர்வுகள் மாறும் போது..”
1.இச்சரீர ஆரோக்கியத் தன்மையிலும்
2.எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞான வழியிலும்… பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடனே மனிதன் நான் எண்ணியது ஓன்று… நடப்பது ஒன்றாக உள்ளது… “எல்லாம் விதியின் செயல்…!” என்று எண்ணி விடுகின்றான்.
எண்ணத்தின் வாழ்க்கைத் தொடரில் செயல் கொள்ளும் ஞானம்… ஓர் மாற்று நிலைக்குச் செயல்படும் பொழுது… உணர்வின் உந்தலால் உடலையே பாதிக்காத தன்மைக்குத் தன் ஞானத்தைக் கூட்டி… மதியைக் கூட்டி வென்று
1.சம உணர்வின் சாந்த குணமுடன்
2.இச்சரீர இயக்கத்தின் அணு சக்திகளை வீரியமாக்கி
3.உயிராத்மாவை ஒளிரச் செய்தல் வேண்டும்
மணலை அதி உஷ்ணமாக்கிக் கண்ணாடி செய்து தன் பிம்பத்தையும் எதிர்படும் எதனையும் அக்கண்ணாடியில நாம் பார்க்க முடிகின்றது.
அதைப் போன்று இந்த உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் சம உணர்வுபடுத்தும் செயலில் விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒளி அலையை எடுத்து உணர்வின் எண்ணத்தால் வீரிய சக்தியாக உடலிலே வளர்த்திட வேண்டும்.
1.அத்தகைய உயிராத்மாவின் சமைப்பினால்…
2.மனிதன் “ஞான திருஷ்டி” என்ற சகல சித்து நிலையையும் பெற முடியும்.
ஆறு அறிவு பெற்ற நாம் பத்தாவது அறிவுக்குச் செல்ல வேண்டும்
உங்களை யாராவது திட்டிக் கொண்டிருந்தாலோ அல்லது குற்றமாகப் பேசிக் கொண்டிருந்தாலோ உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
ஆனால் திட்டுகிறார் என்று…
1.என்னை இப்படிப் பேசுவதற்கு ஆகிவிட்டதா…?
2.நான் உன்னை அதற்கு மேல் பார்க்கிறேன்…! என்று எண்ணி எடுத்தால்
3.நமக்குள் ஜிர்…ர்ர்… என்று அந்த வேகம் வந்து விடுகிறது
4.அடுத்து கை கால் குடைச்சல் மேல் வலி எல்லாம் வந்து விடுகிறது
அவ்வாறு ஆகாதபடி தடுக்க நாம் உடனே ஆத்ம சுத்தி செய்யப் பழக வேண்டும். ஆத்ம சுத்தி செய்து கொண்ட பின் என் சொல் அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… நாளை நல்லது செய்யக்கூடிய அந்த உயர்ந்த எண்ணங்கள் அவர்களுக்குள் தோன்ற வேண்டும் என்று அவர் திட்டிய உணர்வை நமக்குள் புகவிடாது தடுத்து… நல்ல உணர்வைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.அவர்கள் எத்தனை திட்டு திட்டினாலும் சரி…
2.நம்முடைய எண்ணங்கள் தான் அவர்களுக்குள் சென்று அவர்களை மாற்ற வேண்டும்.
ஆனால் மாறாக அவர்கள் திட்டியதைக் காதிலே கூர்ந்து கேட்டால் அவர்களை நினைத்துத் திட்டிக் கொண்டே இருப்போம்.
அந்த்த் திட்டை வாங்கி அவர் உணர்வை பெருக்கிக் கொண்டால் கடையில் வியாபாரத்திற்காக பொருளை எடுத்துக் கொடுத்தாலும் வியாபாரம் மந்தமாகிவிடும். ஒரு கைக்குழந்தையை சும்மா தூக்கினாலும் கூட அது விரா விரா… என்று கத்தும்.
நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்டிருந்தீர்கள் என்றால் வயிறு கடா புடா என்று நஞ்சாக மாறி மறு நாள் உடம்பெல்லாம் வலிக்க ஆரம்பிக்கும்.
நாள் முழுவதும் குடும்பத்திற்காக… உடலுக்காக… தொழிலுக்காக… நாம் உழைக்கின்றோம். நம் வீட்டைத் தூய்மைப்படுத்துகின்றோம். நாம் அணிந்திருக்கும் உடையில் அழுக்குப் பட்டாலோ அல்லது அசிங்கமானது பட்டாலோ அடுத்தவர்கள் பார்ப்பார்களே…! என்று சொல்லி உடனே சோப்பைப் போட்டுத் தூய்மைப்படுத்தி விடுகின்றோம்.
அது போல் தான் நாம் நல்ல எண்ணத்துடன் சென்றாலும் தீங்குகள் வருகின்றது… அது உடலுக்குள் சென்று இம்சை கொடுக்கின்றது
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஆத்ம சுத்தி செய்து அதை மாற்றிக் கொள்வது கஷ்டமா…?
மகரிஷிகளின் அருள் சக்திகள் இந்தக் காற்றிலே நமக்கு முன் இருக்கின்றது. அதை எடுத்து தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.சிறிது நாள் அனுபவத்தில் பழக்கப்படுத்தி எடுத்து கொண்டாலே போதுமானது
2.எந்தத் துன்பம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்.
செடி கொடி மரங்கள் வளர்ந்து வரும் போது தன் சத்தை இழந்திருக்கும் வேளையில் அதற்குண்டான உரத்தைப் போட்டுக் காற்றில் இருந்து அதனின் இனமான சத்தை எடுத்து எப்படி அதை வளர்க்கச் செய்கின்றோமோ அது போன்று தான்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் யாம் (ஞானகுரு) உரமாகக் கொடுத்து
2.காற்றிலே படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்கிறோம்.
ஞானிகள் மகரிஷிகள் ஆகி ஒளியாக மாறி விண் சென்ற வழியில்… அதே பாதையிலே நீங்களும் ஒளிச் சரீரம் பெறலாம். அதைப் பெறக்கூடிய தகுதியைத் தான் இப்பொழுது உருவாக்குகின்றோம்.
யாரும் சாவதில்லை… உடல்கள் மாறுகின்றது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மறு உடல் எடுக்கின்றது… மறு உடலை இயக்குகின்றது.
உடல்கள் மாறினாலும் உயிருடன் ஒன்றியே இருக்கின்றோம். ஆனால் அவனுடன் சேர்ந்து நாம் ஒளியாக மாற வேண்டும்… அது தான் விஜயதசமி…!
விண்ணிலே உயிர் தோன்றிய பின் பூமிக்குள் விஜயம் செய்து பல உடல்கள் மாறி மனிதனாக வளர்ச்சி அடைந்த பிற்பாடு “ஆறாவது…” அறிவு என்ன செய்கிறது…?
உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சை மலமாகக் கழித்து விடுகிறது. கெட்டதை நீக்கி நல்லது செய்யக்கூடிய எண்ணத்தை ஊட்டுகின்றது.
அந்த நல்ல எண்ணத்தை எடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் இணைத்து விட்டால் “ஏழாவது…” நிலையான ரிஷி சிருஷ்டிக்கக்கூடிய தன்மை பெறலாம்.
“எட்டாவது…” நாம் நினைத்தாலும் எந்தத் திசையிலிருந்தும் கெட்டது வராதபடி நமக்குள் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
“ஒன்பதாவது…” தீமைகளைப் பிளந்துவிட்டு உயிருடன் உயிராகச் சேர்ந்து உடலை விட்டுச் செல்லும் நிலை.
உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள விஷத்தை மனித உடல் மலமாக எப்படிக் கழிக்கின்றதோ இதே போன்று உடலை விட்டு வெளியே நாம் சென்ற பின்
1.எந்த நிலையும் நம் உயிராத்மாவைக் கவராதபடி விண் செல்வதே பத்தாவது நிலை
2.அழியா ஒளிச் சரீரம் பெறுவதே கல்கி – பத்து…!
“என்று இந்த மனித உடலைப் பெற்றோமோ…” அது முழு முதல் கடவுள். மனித உடல் சிருஷ்டிக்கக் கூடிய சக்தி பெற்றது என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
விநாயகருக்குக் கொழுக்கட்டையை வைத்துக் காட்டியுள்ளார்கள். காரணம்… இயற்கையில் விளைந்த தாவர இனங்களை வேக வைத்து அதைச் சுவையாக மாற்றி உணவாக உட்கொள்ளும் சக்தி பெற்றுள்ளோம்.
அதே போல் வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகளை நீக்கிடும் நிலையாக
1.சுவை கொண்ட ஞானிகள் உணர்வுகளைச் சேர்த்து
2.சுவைமிக்க உடலாகவும்
3.சுவைமிக்க சொல்லாகவும்
4.சுவைமிக்க செயலாகவும்
5.சுவைமிக்க உயிராத்மாவாக மாற்றி
6.வைரம் விஷத்தை அடக்கி ஒளியின் தன்மையாகப் பேரொளியாக எப்படி ஒளி வீசுகின்றதோ
7.சூரியன் விஷத்தை ஒடுக்கி ஒளிச் சுடராக எப்படிப் பிரகாசிக்கின்றதோ
8.அதைப் போல் வருவது அனைத்தையும் நாம் ஒளியாக ஆக்க முடியும்.
பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை தான் “பிறவா நிலை”
தாவரங்களில் எப்படி அதனுடைய முதிர்வுத் தன்மையில் அத்தாவரத்தின் பலன் வெளிப்பட பூவும் பிஞ்சும் பிடிக்கும் தருணத்தில் பால்பிடித்து அதனுடைய முதிர்வின் பலனை அந்தந்த இன வளர்ச்சிக்கொப்ப பலனைத் தருகிறது…?
இதில் தாவரத்திற்குத் தாவரம் மாறுபடுகிறது. இதில் சில மரங்கள் தன் வளர்ப்பின் பலனானக் காய் கனிகளை வெளிப்படுத்துவதில்லை.
ஆனால் தன்னுடைய முதிர்வின் ஈர்ப்பில் விழுதுகளையும் ரோமம் போன்ற முதிர்வின் செயல் வெளிப்பட்டு அதனுடைய வளர்ச்சித் தன்மையின் தொடர் கொண்ட சில மரங்கள்… பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மரமே மலையாகும் ஈர்ப்பு வளர்ச்சி முதிர்வு செயல் கொள்கின்றது.
பலன் தரத்தக்க மா… பலா… இப்படி உள்ள மரங்கள் சில நூறு ஆண்டுகளுக்குப் பலனைத் தந்த பிறகு மரமே பட்டுவிடுகின்றது. ஜீவத்தன்மையில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை பெற்று உடல் மாறும் வரை தன் பிறப்பின் பிறப்புத் தொடரைச் செயல்படுத்தி மடிகின்றது.
இத்தொடரில் இருந்தெல்லாம் சில மிருகங்களின் நிலையும் மனிதனின் நிலையும் மாறு கொள்கின்றன.
ஆனால் பிறப்பிலிருந்து வளர்ச்சி பெற்றுப் பிறப்பு நிலை வளர்க்கும் காலங்களுக்கு எல்லாத் தன்மையிலுமே… எப்படி பூ பிஞ்சில் பால் பிடித்து பலன் தருகின்றதோ… அதைப் போன்று மனித மிருக நிலையிலும் பருவ முற்றலில் பால் உணர்வு கொண்டு இரு நிலை கொண்ட சேர்க்கையில் பிறப்பின் தொடரை (கரு) வளர்க்கும் வழி நிலை பெறுகின்றதல்லவா…!
மனித உணர்வில் பருவம் பெற்று பெண் தன்மையில் கரு வளர்க்கும் வயது வரம்பு காலத்திற்குப் பிறகு இயற்கையின் கர்ப்ப கால தன்மை மாறி மாதவிடாய் நின்று மீண்டும் குழந்தைப் பருவ நிலைக்கொப்ப உடல் நிலை பெறுகின்றது.
இடைப்பட்ட தருணத்தில் கரு வளர்க்கும் காலம் ஆரம்ப வளர்ச்சி வளரும் நிலையும் முதிர்வு நிலைக்கு மீண்டும் எந்த் நிலையுமற்ற தன்மை கொண்டு சரீர இயக்கமே தான் பெற்ற அமிலக் கூறின் வளர்ச்சிக்கொப்ப முதிர்வு நிலை என்ற ஓர் நிலை பெற்ற பிறகு கரு வளர்க்கும் நிலையற்றதாக ஆகிவிடுகின்றது.
இச்செயல் நிலைக்கும் ஓர் அடுத்த நிலை உள்ளதல்லவா…?
மனிதப் பிறப்பு இறப்பில் வயது நிலையற்றுச் சரீர உணர்வில் எடுக்கும் அலை நிலைக்கொப்ப பிறப்பு இறப்பு நிகழ்கின்றன. ஆனாலும்… பிறந்த சிசுவிலிருந்து வயது முதிர்ந்த நிலை வரையிலும் எத்தருணத்திலும் இறப்பு நிலை ஏற்படுகின்றது.
இத்தன்மையின் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா
1.வயது வரம்பு கொண்டு முதிர்வு நிலை பெறுகின்றதா…?
2.ஆத்மாவிற்கு முதிர்வுத் தன்மை எப்படிக் கூடுகின்றது?
மாமரத்தில் பூ பிடிக்கும் தருணத்தில் இம்மரத்தின் இலைகளே தெரியாத அளவிற்கு அதிகமாகப் பூக்கள் பிடிக்கின்றன. ஆனால்… நல்ல கனியாகி பலன் வெளிப்படுத்தும் விகித நிலை “நூற்றில் ஒரு பாகம் கூட… முதிர்வு நிலைக்கு வருவதில்லை…!”
ஆனால் முதிர்வு நிலை பெற்ற கொட்டைகளைப் பதித்தால் தான் மீண்டும் மாங்கன்று வளருகின்றது. கனியில் சொத்தை விழுந்த கொட்டைகள் வளர்ச்சிக்கு வருவதில்லை.
இதைப் போன்று ஒவ்வொரு விதைத் தன்மையிலுமே உள்ளதல்லவா…?
இம்மனித உயிர் ஆத்மாவானது தன் பிறப்பின் கருவைப் பருவ வளர்ச்சிக் காலத்தில் கருவின் தொடரை வளர்க்கின்றது. சில தாவரங்களைப் போன்று தன் வளர்ப்பின் பலன் தந்த பிறகு மரத்தின் நிலை பட்டுப் போவதைப் போன்று கருத்தரித்த பிறப்பு நிலை வளர்க்கும் கால நிலை மாறினாலும் மனித வாழ்க்கையின் செயல் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட… மீண்டும் பல வருடங்களுக்கு வாழ முடிகின்றது.
1.இம்மனித அமிலம் தான் எல்லாத் தன்மையிலும் முதிர்வு பெற்ற உயிராத்மா கொண்டது.
2.இதிலும் அடுத்த நிலை பெறுவதென்பதுதான் ஞானத்தால் ஒளி நிலை பெறும்
3.பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை…”
சிறு வயதில்… தான் எடுத்த உணர்வின் இச்சையை மாற்றாமல்
1.தன் குண வளர்ப்பில் ஆத்ம பலம் பெறாத சிசுக்களோ சிறுவர்களோ
2.அல்லது வாழும் பருவத்தில் பாதி நிலையில் உணர்வின் இச்சையினால் தற்கொலையும் விபத்துக்களும் ஆளானவர்களோ
3,தன்னைத் தான் மறக்கும் குடி வெறிகளிள் சிக்கியவர்களோ
4.கொலை செய்யப்பட்டோ வாழும் பருவத்தில் அதிவேதனையால் உடல் அழுகிய நிலையில் பிரியும் உயிராத்மாக்களோ
5.இவை எவையும் மீண்டும் பிறப்பிற்கு வருவது என்பது…
6.எப்படி சொத்தை விழுந்த மாங்கொட்டையை விதைத்தாலும் அதன் வளர்ச்சி நிலை வளர்வதில்லையோ
7.அதைப் போன்று இம்மனித உணர்வின் எண்ண ஞானத்தின் செயல் உருவ அங்க அவயங்களின்
8.அழகின் பொலிவு கொண்டு பிறப்பு நிலை பெற முடியாது (இது முக்கியம்)
பிறப்பு நிலைக்கு வந்தாலும்.. எத்தொடர்பில் ஆத்மா பிரிந்ததோ அதே நிலையில் அங்ககீனமுள்ள நிலையில் தான் பிறக்க நேரும். ஞானமுடன் கூடிய அறிவு வளர்ச்சியற்ற குழந்தைகளாகத்தான் சாதாரண வழித் தொடரிலேயே பிறப்பு இறப்பு செயல் கொள்கின்றது.
(இன்று அங்ககீனமுள்ள குழந்தைகளும்… மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் அதிகமாகப் பிறப்பதன் காரணம் புரிந்ததா…!)
எண்ணத்தின் வலுக் கொண்ட… “ஆத்ம பலம் பெற்ற ஆத்மாக்கள் தான்..” மீண்டும் தன் இனத் தொடர்பில் பிறப்பு பெற்று… முதிர்ந்த கொட்டைகள் பக்குவமான வளர்ச்சிக்கு வருவதைப் போன்று… மனிதப் பிறப்பு பெற்று வருகின்றது.
1.இதில் அடுத்த நிலை பெறுவது என்பதுதான்
2.இங்கே உணர்த்தப்படுகின்ற மனிதன்… “தெய்வ நிலையாகும்” தன்மை.
யாம் சொல்லிக் கொடுக்கும் இந்த ஜெபத்தை (மந்திரம்) சீராகச் செய்யுங்கள்
1.தாய் தந்தையரை நாம் மறவாது இருக்க வேண்டும்.
2.குரு அருளையும் மகரிஷிகளின் அருளை பெற வேண்டும் என்றால் எப்பொழுதுமே அன்னை தந்தையை வணங்கிப் பழக வேண்டும்.
3.அவர்கள் அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
அதன் வழியில் யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாக்கினை உற்று நோக்கி சீராக உங்களுக்குள் பதிவு செய்தால் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாகிறது.
ஞான வித்தினை நீங்கள் வளர்க்க வளர்க்க… தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்
1.உங்களால் சிரமங்களைப் போக்க முடியும்… அதற்குண்டான வழியையும் காட்டும்
2.அருள் வழியில் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும்
3.அருள் உணர்வை உடலுக்குள் அணைத்துக் காட்டும்
4.எண்ணிய உணர்வின் ஞானமாக உங்களில் உணர்த்தும்
5.உங்களைக் காத்திடும் சக்தியாக வரும்
6.அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
ஆகவே யாம் கொடுக்கும் அருளாசியை நேர்முகமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஏக்கத்திலே… எதைப் பெற வேண்டும் என்று வந்தீர்களோ… உங்கள் துன்பங்கள் நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.
குரு அருள் உங்களுக்குக் கிடைக்கும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களைப் பார்ப்போரெல்லாம் நலம் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லைக் கேட்பவர் வாழ்க்கையில் இனிமை பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்போருக்கும் எங்களைப் பார்ப்போருக்கும் நல்ல எண்ணம் பெற வேண்டும் என்று
11.இதை எல்லாம் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி இருங்கள்
12.பல பல உணர்வுகள் வரும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இணையும்
யாம் கொடுக்கும் இந்த வாக்குகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… “நூறு முறை… ஆயிரம் முறை…” இது போன்று எண்ணி ஏங்கிப் பாருங்கள்.
மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் நோய் நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும். உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.
ஒரு டம்ளரில் நீரை வைத்து இது போன்று தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அதைத் தீர்த்தமாக எடுத்துப் பருகி பாருங்கள். நோய் இருந்தால் அதற்குண்டான மருந்தையும் இதிலே வைத்துத் தியானித்த பின் உட்கொள்ளுங்கள்
1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய சர்வ வேதனைகளும் விலகும்…
2.அதை உங்களால் நிச்சயம் உணர முடியும்
யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை நீங்கள் சீராக வைத்து.. அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்… “நீங்கள் ஏங்கும் பொழுதெல்லாம் இந்தச் சக்தி கிடைக்கும்…”
சித்தர்கள் தெய்வங்களப் பல உருவில் வடித்ததன் காரணம் என்ன…?
ஒவ்வொரு செயலிலும் அதன் வளர்ப்பின் முதிர்வு நிலை (பலன்) எவ்வாறு தெரிகின்றதோ… அதைப் போன்ற மனிதன் பெறும் ஒளி சக்தியைக் கொண்டு…
1.இவ்வெண்ணத்தின் உயர் ஞானத்தால்
2.எதனையும் தெய்வம் நமக்குத் தரும்…! என்ற மனிதனின் உயர்வு குணமாய்
3.எத்தெய்வத்தை மனிதன் எண்ணுகின்றானோ… அத்தெய்வமாய் மனித நிலை ஆக முடியும்.
மனித உணர்வின் எண்ணத்தில் இப்புவியில் வளரவல்ல ஒவ்வொரு தொடரிலும் தன் ஞானத்தைச் செலுத்தி அதன் தொடர் வளர்ப்பின் செயலைப் பார்த்தால்… செயலின் முதிர்வின் தொடர் நிலை வளர்ப்பு முற்றலை அறியலாம்.
நீரின் சுவையே… ஒன்றிலிருந்து வளர்ப்பின் தொடர் பெற்றுப் பிரியும் பொழுது… “உராயும் தன்மையில்” தொடர் நிலை அச்சுவையுடன் ஒட்டி அச்சுவை சக்தியின் ஆவியாகி… அதே தொடரின் பிறிதொன்றில் அந்நீர் ஆவித் தன்மை திடம் கொண்டு… செயல் மோதலின் சுழற்சியில் பல செயல்கள் மாறி மாறி வளர்கின்றன. (நாம் சமைக்கும் நிலையிலிருந்து இயற்கையில் உருவாகும் அனைத்துமே இதற்கு உதாரணம் தான்)
எல்லாச் செயலுக்கும்… காற்று மண்டலத் தொடரில் இந்நீர் ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு மீண்டும் அதிலிருந்து பிரிக்கப்படும் தொடர் நிலையில் “கனம் கொள்ளும் செயல் வளர்ச்சி தான்..!”
“நீரான ஆதி சக்தியின் சக்தித் தொடர்” இஜ்ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து இச்சரீரத்தை இயக்கும் உயிர் பிரிவதற்குள்ளேயே… இச்சரீரத்தின் ஜீவ ஜெனிப்பில் நீர் சக்தியின் வளர்ப்பின் சத்தாய் இச்சரீரத்திலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களும்… இஜ்ஜீவ நீரின் உணவைப் பெற்று வாழும் இதன் உணர்வின் எண்ணத்திலேயே உயர் நிலைபெற… நம் செயல் இருக்க வேண்டும்.
எப்படி நீரை ஊற்றி விதைப் பயிரில் அதன் பலன் மகசூலைத் தாவரம் தருகின்றது…? எப்படி நீர் சக்தியின் தொடர்பில் பூமியில் கனி வளங்கள் அதனதன் வளர்ச்சிக்கொப்ப முற்றிய நிலை பாறையே தன் வளர்ப்பின் முற்றலாய் வைரத்தை வளர்க்கின்றது…?
மண் படிவங்கள் எத்தொடரில் எவ் உலோக வித்து வளர்ந்தாலும் அதன் முற்றலில் படிவங்களாக அதது எடுக்கும் நீர் சக்தியில் தங்கமே மண்ணுடன் கலந்த நிலையும் படிப்படியாகக் குவிந்த தன்மையில் அடர்த்தியாகத் தன் இனத்தைப் பெருக்கும் வளர்ப்பில் அதனதன் இனத் தொடரில் முதிர்வுத் தன்மை பெறுகிறது.
அதனின் தொடர் வளர்ப்பில் கனி வளர்ச்சிக்கு அடுத்த நிலை வளர்ப்பான… மண் வளத்தின் ஆவி அலையில் தாவர இன வளர்ப்பில்… புழு, பூச்சி, ஊர்வன, பறப்பன, இப்படி வளர்ப்பின் முதிர்வுத் தொடர் வரிசையாக வருகின்றது.
இவை ஒவ்வொன்றிலுமே பல மாற்றத்தின் சுழற்சி ஓட்டம் அந்தந்தப் பூமியில் அது எடுக்கும் அலைத் தொடர்புக்கொப்ப ஆதி சக்தியுடன் ஜீவ சக்தியாய் நீர் சக்தியில் சுழற்சி ஓட்டம் சுழலும் முதிர்வில் மனித உரு வருகின்றது.
மனிதனான பின் அறியும் ஞானத்தின் உயர் ஞானப் பகுத்தறிவில் ஜீவநீர் இச்சரீரத்திலேயே முதிர்வின் தொடர் பெற்ற மனிதக்கரு உரு சொல் செயல் எல்லா நிலைகளையும் பெற்ற தன்மையினால் இத்தன்மைக்கடுத்த உயர் செயலுக்கு எண்ணத்தை உயர் காந்த மின் அணுக்களைக் கவரும் ஆற்றல் பெறுகின்றது.
ஆகவே நீருடன் கூடிய இச்சரீரத்தின்
1.ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையுமே வீரிய ஒளி பெறச் செய்ய…
2.எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தி வலுக் கூட்டி
3.எவ்வுணர்வின் அலையும் இச்சரீர இயக்கத்தில் வந்து மோதாமல்
4.இச்சரீர உணர்வின் அலை மட்டும் வீரியத் தன்மை பெற
5.எண்ணத்தின் செயலைக் கொண்டு உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வலுக் கூட்ட வேண்டும்.
அத்தகைய வலுக்கூட்டிக் கொண்ட… வீரிய சக்தி பெற்ற உயர் காந்த வலு ஆத்மாவை… இப்பூமி இயக்கத்தில் பிறருடன் தொடர்பு கொள்ளும்… வார்த்தையோடும்… எந்த எண்ண உணர்வும் அது பாதிக்காது.
இவ்வாத்மாவின் வளர்ப்பும் இச்சரீர ஜீவ காலத்திலேயே ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ணத்தில் ஒளி சக்தியை ரிஷி சக்தியின் சக்தித் தொடர்புடன் வலுக் கூட்டும் செயலுடனே செயல்படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.
1.இப்பூமியின் பிடிப்பிலிருந்தும்… வேறு எப்பூமிப் பிடிப்பிலும் சிக்காமலும்
2.எப்பூமியின் எம்மண்டலத்தின் தொடர்பையும் அறியும் வலுவையும் கூட்டி…
3.கூட்டப் பெற்ற வலுவின் செயலை… இச்சரீர இயக்கத்தின் தொடர்பில்
4.புதிய நிலையை ஜீவப் படைப்பில் படைக்கும் வழித் தொடருக்கு ஞானத்தைச் செலுத்திட வேண்டும்.
அத்தகைய முதிர்வை மனிதனால் தான் படைக்க முடியும்.
அன்று சித்தர்கள்… ரிஷிகள் எழுதிய காவியத்தில்…
1.மனித உருவம் கொண்ட தெய்வத்தைக் காட்டி
2.அத்தெய்வத்திற்கு நெற்றியில் கண்ணும் பல கைகளும்
3.ஒரு பாதி பெண்ணாகவும் மறு பாதி ஆணாகவும் காட்டிய தன்மையின் உள் அர்த்தங்கள் பல உண்டு.
ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் அறிந்து உயர்வு நிலைக்குச் செயல் கொள்ளும் மார்க்கத்தில்… காற்று மண்டலத்தில் தன் வளர்ப்பின் உயர்வை அறியும் ஞானத்திற்குப் பல சக்திகளை சரீர ஜீவிதத்தில் ஒளி பெற்றுப் பல நினைவுகளை அறியலாம்.
ஒரு குடும்பத்திலே எட்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்… அதிலே ஏழு பிள்ளைகள் சொன்னபடி கேட்கின்றார்கள்… நன்றாக இருக்கின்றார்கள். ஒரு பிள்ளை மட்டும் சேட்டை செய்கின்றான்… சொன்னபடி கேட்கவில்லை.
அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று அவன் மீது தான் தாய் தந்தையருக்கு எண்ணம் அதிகமாக இருக்கும். என்ன ஆவானோ…? என்ன ஆவானோ…? என்ற நினைப்பாக இருக்கும்.
இருந்தாலும்
1.அவன் ஏதாவது செய்து விட்டால் உன்னைத் தொலைத்து விடுகிறே\ன் பார்…
2.தொலைந்தே போவாய் பாவிப் பயலே…! என்ற இந்த வேகம் தாய் தந்தைக்கு ஜாஸ்தியாக இருக்கும்.
3.ஆனால் தாய் தந்தையர் இறந்த பின் அதே உணர்வுடன் உடலுக்குள் வந்து இவனைத் தொலைக்கும்.
4.அவன் எந்த வேலையைச் செய்தாலும் அது உருப்படி ஆகாதபடி விஷமாகப் போய் அந்த உடலில் நஞ்சை வளர்த்து
5.உன்னாலே நான் கெட்டேன்… என்னாலே நீ கெட்டாய்…! என்று இந்த விஷத்தை வளர்த்து
6.ஆடாகவோ மாடாகவோ போய்ப் பிறக்க வேண்டியது தான்… இது தான் நாம் கண்ட பலன்.
7.பாசம் எல்லை கடக்கும் போது நஞ்சாக மாறி இத்தகைய வேலைகளைச் செய்துவிடும்.
இதிலிருந்தெல்லாம் உங்களை மீட்டுவதற்குத் தான் “சூரியக் குடும்பம் மாதிரி” வாரத்தில் ஒரு நாள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு முறைப்படி கூட்டுத் தியானங்கள் செய்யுங்கள் என்று சொல்கிறோம்.
அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைக் குலதெய்வமாக எண்ணி அவர்களை விண் செலுத்த வேண்டும்.
காரணம்… அவர்கள் குல வழியில் தான் மனிதனாக நாம் வந்திருக்கின்றோம். தெய்வமாக இருந்து நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள் தான்…! எத்தனையோ நல்வழி காட்டியவர்களும் அவர்கள் தான்… ஞானத்தையும் சொன்னார்கள் நமக்காக வேண்டி எத்தனையோ உதவிகளையும் செய்தார்கள்.
அவருடைய உணர்வு கொண்டவர்கள் தான் நாம். அந்த ஆத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவசியம் நாம் செய்தல் வேண்டும்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க வேண்டும் என்று பௌர்ணமி அன்று பழகிக் கொடுக்கிறோம்.
1.அங்கே தொடர்பு கொண்டு அந்தச் சக்தி பெறுவதற்கும் பழகிக் கொடுக்கின்றோம்.
2.நீங்கள் அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
குருநாதர் இதையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்… நான் எடுத்துக் கொண்டேன். அதை உங்களிடமும் சொல்கின்றேன் நான் (ஞானகுரு) நினைத்ததை எடுக்க முடிகின்றது…!
அதை வைத்து உங்களுக்கு நோய் இல்லை… துன்பம் இல்லை… நன்றாகி விடுவீர்கள்…! என்ற வாக்கினைக் கொடுக்கின்றேன். அதன் பிரகாரம் நீங்கள் எண்ணினால் உங்களுக்கு நல்லதாகின்றது
இதையே நீங்களும் பழகி உங்கள் வாக்கால் மற்றவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்று சொன்னால் அங்கேயும் இது நல்லதாகும். இதே போன்று
1.உங்கள் பிள்ளைகளுக்கு எண்ணி அவர்கள் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று எண்ணினால் ஆது சீராகும்
2.தொழில் நன்றாக நடக்க வேண்டும் எண்ணினால் அதுவும் நடக்கும்.
சாமியாரிடம் சென்று நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் வருகின்றதா…? என்று காசைக் கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆகவே உங்களுடைய மூதாதையர்களை ஐக்கிய மனதாகச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
1.விண் செலுத்தப் பழகுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.
2.விண்ணின் ஆற்றலைப் பெறுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.
அந்த ஆன்மாக்கள் அங்கே போனவுடன் இன்னொரு உடல் பெறாதபடி “அந்த ஒளிக்கதிர்கள் பட்ட பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளியாக மாறுகின்றது…!” சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்களுக்கு ஆகாரமாகக் கிடைக்கின்றது.
உதாரணமாக… ரேடாரை இங்கே கீழே வைத்து… இயந்திரத்திலும் இது அமைக்கப்பட்டு லேசர் ஒளிக் கதிர்களின் இணைப்பின் தொடர் கொண்டு எத்தனையோ இலட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளதை விஞ்ஞானிகள் இன்று இயக்குகின்றார்கள்.
அதைப் போல
1.“(ரேடியோ) ஒலிக் கதிர்கள்” ரேடார் – விண்ணிலிருந்து எடுக்கக்கூடிய ஆற்றலையும்
2.அதற்குள் லேசர் கதிரியக்கமான ஞானிகள் உணர்வின் ஒளியையும் உங்களுக்குள் பாய்ச்சி
3.இந்த இரண்டு சக்திகளையும் பௌர்ணமி அன்று சேர்க்கப்பட்டு… இதைச் செயல்படுத்துகின்றோம்
4.அதை எண்ணிப் பழகிக் கொண்டால் விண்ணின் ஆற்றலை உங்களால் ஈர்க்க முடிகிறது.
அதன் வழி கொண்டு மூதாதையர்கள் ஆன்மாக்களை நாம் விண் செலுத்தினால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறது. அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற பின்
1.ரேடார்…! ஒலிக்கதிர்களுடைய எண்ண அலைகளை நாம் பாய்ச்சப்படும் போது
2.கதிரியக்கச் சக்தி…! அந்த லேசருடைய தன்மை நமக்குள் பவர் கூடுகின்றது.
3.நாம் நினைத்த உடனே உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்
4.அதை வைத்து வாழ்க்கையில் எந்தத் துன்பம் வந்தாலும் துடைத்துக் கொள்ளலாம்
மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துத் தான் துடைக்க வேண்டுமே தவிர மந்திரத்தைச் சொல்லிச் செயல்படுத்த முடியாது. இதைக் கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.
உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி இன்றைய மனிதனுக்குக் குறைந்து விட்டது
விஞ்ஞானத்தில் இன்று வரையிலும் இப்பூமியில் ஒலி அலைகளையும் ஒளிக் காட்சிகளையும் காற்றலையில் கலக்கவிட்டுப் பதிவு செய்கின்றார்கள்.
மேலும் இப்பூமிக்கும் மற்றக் கோள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய… விஷமான அமிலத்தை (CHEMICALS) உலோகத்தில் செலுத்திப் பிற மண்டலங்களிலிருந்து இப்பூமியின் தொடர்பிற்கு வலுவாக்க… வளர்ச்சியுறும் உண்மை நிலை அறிய… விஞ்ஞான சாதனைகளைச் செயல்படுத்தவும்… மனிதனின் எண்ண உணர்வு செயல் கொள்கின்றது.
ஒவ்வொரு மனிதனுக்கும் மனித சரீர ஜெனிப்பில் சாதாரண வாழ்க்கை நிலையில் ஆயுட்காலம் அதது எடுக்கும் தன்மை கொண்டு எப்படியும் சராசரி அறுபதோ எழுபதோ எண்பதோ ஆண்டுகள் தான் இருக்கப் போகின்றது.
விஞ்ஞானத்தால்… பிற மண்டலங்களுக்குச் செல்லவும் அங்குள்ள உண்மை நிலையறியவும் கருவிகளின் நிலையால்
1.இன்றைய கருவியின் செயற்கைக்கு மின் காந்த அலையை
2.இயற்கையில் மனிதனின் உணர்வு எண்ணத்தை வளர்க்கவல்ல உயர்காந்த நுண்ணிய மின் அணுக்களை
விஞ்ஞானிகள் செலுத்தும் செயல் சாதனைக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களினால் கிடைக்கப் பெற முடியாது…!
இன்று மனிதனால் பெறப்பட்டு வளரும் உயர் காந்த மின் அலையின் செயல்… இக்கோள்களில் (SATELLITES) செலுத்தப்பட்டு செயற்கையில் ஒலி பரப்பப்படும் தொலைக்காட்சிகளில் ஒளிப் படங்கள் வண்ண ஒளிப் படங்கள் ஒலி அலை வானொலிப் பெட்டி தொலைபேசி மற்றும் பல மின் ஒளிச் சாதனங்களுக்காகப் பிரித்து எடுக்கின்றனர்.
இவ்வாறு மின் காந்த அலைகளைப் பிரிப்பதினால் மனித எண்ண உணர்விற்கு நேரடியாகக் கிடைக்கப் பெற வேண்டிய… உயர் ஞான எண்ணத்தை அறியவல்ல… தன்னைத்தான் உணர்ந்து செயல்படச் செய்யும் இயற்கையான சக்திகளைப் பெற முடியாத நிலை உருவாகி விட்டது.
தனக்குள் உள்ள இறை சக்தியை.. எண்ணத்தின் உணர்வால் வலுவாக்கி வளரும் ஜீவித சரீரத்தை “இச்செயற்கை அலைகள்… சூழ்ந்து விட்டது…!
ஜீவ சரீரத்தில் ஜீவ சரீரமுடன் மனிதனுக்கு மனிதன் பேசப்படும் உறவு படுத்திக்கொள்ளும் உணர்வின் செயல் வளர்ப்பிற்கு…
1.வானொலியில் கேட்கப்படும் ஒலி அலைக்கும்
2.தொலைக் காட்சியில் காணும் ஒளி அலைக்கும்
3.இச்சரீரத்தின் உணர்வைச் செலுத்தும்பொழுது
4.அதே உணர்வைத்தான் இச்சரீரம் எடுக்க முடியும்.
செடிக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைத் தனக்குச் சத்தாக எடுத்து வளருகின்றது. அதுவே காய்ச்சிய நீரை… ஆற வைத்து ஊற்றினாலும் அச்செடிக்கு வேண்டிய ஜீவ சக்தி கிடைக்காது. அதனால் அத்தாவரம் வளர்வதில்லை.
அதைப் போன்று இச்சரீர உணர்விற்கு செயற்கை மின் காந்த ஒலியைக் கேட்கும் உணர்வினால் இச்சரீர ஜீவ ஆத்மாவானது…
1.தன் உயர்வு நிலைக்குத் தேவையான எண்ணத்தின் உணர்வு எடுக்கும் கவன நரம்பின் பொட்டின் பதிவிற்கு
2.உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி நிலை குன்றி விட்டது.
ஏனென்றால் எண்ணத்தின் உணர்வுகள் எவ்வலையை எடுக்கின்றதோ அதே நிலையைத்தான் இச்சரீர நிலையில் வளர்க்கும் நிலை உள்ளது.
இன்றைய மனித உணர்வின் எண்ணங்களே… செயற்கை அலையை அதிகமாகக் கேட்டு… பார்த்து… பழக்கப்படுத்தி வளர்த்துக் கொண்ட வலுவினால்… எதனையும் உணரும் பக்குவம் மாறி… இவ்வாத்மாவையே செயற்கை அலையுடன் செயல்படுத்தும் முறைக்கு மாறி விட்டது.
ஆகவே..
1.இவ்வாத்மாவை இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு அடகு வைக்கும் வாழ்க்கையையும்…
2.தன்னைத்தான் உணராமல் பித்தனாக வாழும் மனிதச் செயல்களையும்…
3.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு மாற்றி ரிஷிகள் காட்டிய மெய்யை வளர்க்க வேண்டும்.
இப்பூமியின் மண் வளங்கள் அது எடுக்கும் அலை ஒன்று. அதே மண் வளத்தின் தொடர்பில் வளரும் தாவரம்… தன் உணவை எடுத்து வளர்ந்து பலன் தருகிறது. ஆனால் எண்ணமில்லாத உணர்வு… செயலுடன் அது வளருகின்றது.
மிருகத்தின் நிலையோ… தனக்கு வேண்டிய உணவைத் தேடவும் புசிக்கவும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறங்கவும் தன் உணர்வின் இச்சையில் தேவையை அறிந்து கொள்ளவும் தன் ஐந்தறிவைக் கொண்டு வாழ்கிறது.. வளர்கிறது.
ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் இக்குறுகிய நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் பெருக்கத்தால் தன்னைத் தானே உணராத நிலைக்குச் சென்று செயற்கையின் பிடிப்பிலேயே சிக்குண்டு விட்டான்.
1.செயற்கை ஒலி அலைகளையும் தொலைக்காட்சி ஒளி அலைகளையும்
2.தன் எண்ணத்தின் உணர்வில் பதியவிடும் அலையினால்
3.மனிதனுக்குக் கிடைத்துள்ள ஆறறிவு பொக்கிஷமான பகுத்தறியும் உயர் ஞானத்தையே
4.தவற விடும் நிலைக்கு இன்று கொண்டு வந்து விட்டார்கள்.
பதஞ்சலி அரசனாக இருக்கும் போது அறிதல் அழித்தல் காத்தல் என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் பயந்தே வாழ வேண்டியிருக்கின்றது. என்ற இந்த நிலையைச் சிந்திக்கின்றான்.
எப்போது…?
ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர்.
1.ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை.
2.கூடு விட்டுக் கூடு பாயும் போது பிறிதொருவர் கையில் இவன் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.
உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாக பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள்…? என்று பல செயல்களைக் காண விரும்பினார்.
மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.
அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.
எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டித் தன் உடலைப் பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற உண்மையை… பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான் செய்த தவறை உணர்கின்றான்.
2.ஏழ்மையான மாடு மேய்ப்பவனின் உடலில் புகுந்த பின் அதை முழுமையாக அறிகின்றான்
மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.
ஆக… திருமூலர் என்று சொல்பவன் ஒரு அரசனுடைய உயிரான்மா தான். மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் வந்த பிற்பாடு தான் உண்மைகளை எல்லாம் அவன் அறிகின்றான் – நடராஜா…!
நடராஜா என்றால் நமக்குத் தெரியுமா…? தெரியாது. உருவம் கிடையாது… நடராஜாவை வைத்திருக்கின்றார்கள் நம் பூமி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது… இதற்குப் பெயர் நடராஜா.
இதற்குள் தோன்றிய நிலைகள் கொண்டு “நடனங்கள் பல…” சுழற்சியின் தன்மை கொண்டு அது நிற்காமல் ஓடுகின்றது.
அதே சமயத்தில் அது மோதும் நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு உணர்வின் அணுக்களின் செயல்களும் “ஒலி ஒளி என்ற நிலைக்கே…”
2.இந்த பூமிக்குள் வளர்ச்சியின் தன்மை மாறி மாறிப் பல ஆயிரம் உடல்களாக எடுத்து
3.ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்கி – புலிக்குக் கோபம் மானுக்குச் சாந்தம் எருமைக்கு அசுர குணங்கள் என்று
4.ஒவ்வொரு குணத்தின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டதை 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 நடனங்களைக் காட்டினார் திருமூலர்.
நடராஜா என்கிற பொழுது பூமி ஓங்கார நடனம்…! அதாவது சுற்றும் பொழுது சுற்றும் வேகத்தில் “ஓங்காரக் காளி” தீய சக்திகள் அனைத்தையும் அழித்து விடுகிறது. காலிலே அசுரனைப் போட்டு மிதிப்பதாக அதைக் காட்டுகின்றார்கள்
இங்கே சிவத்தைக் காட்டும் பொழுது நடராஜா…! பூமி சுழலும் போது அதில் ஏற்படக்கூடிய விஷத்தின் சக்தி உள்ளே வடிகட்டி வருவதை அசுரனைக் காலிலே மிதித்து அடக்குவதாக இங்கே காட்டப்பட்டுள்ளது.
ஒரு மனிதனின் தவறான செயலைப் பார்த்துக் கோபப்படுகின்றோம். கோபமான உணர்வைச் சுவாசித்து உயிருக்குள் பட்ட பின் எரிச்சலாகின்றது.
ஆனால் அதே சமயம் இந்த உணர்வின் சக்தி உடலுக்குள் பரவி நல்ல குணங்களுக்குள் கலந்தவுடனே அனைத்தும் எரிச்சலாகிறது. அப்போது இந்த உடலான சிவம் என்ன செய்கிறது…?
1.ஓங்கார நடனம்… இரு உன்னை அழித்து விடுகிறேன்…! என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.
2.சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என்றால் அது கோப உணர்வின் சக்தி உடலை இயக்கும் நிலைகள் – ஒலி ஒளி
3.தாவர இனத்தினுடைய மணம்… குணம்… ஆனால் அதனுடைய உணர்வு… இயக்கம்…!
மிளகாயை வாயிலே போட்டால் என்ன செய்கின்றது…? காரம்… ஸ்…ஆ…! என்று அலறுகின்றோம் கசப்பை வாயிலே போட்டால் ஓய்…! உமட்டல் என்ற நிலை வருகிறது.
இதைப் போன்று தான் இந்தப் பூமி நடராஜா… நிற்காமல் சுழல்வதால் அதனின் ஜீவன் கொண்ட நாம் எப்படி இருக்கின்றோம்…? என்பது தான் அந்த ஸ்தல புராணத்தின் தத்துவம்.
சிதம்பரத்தில் தான் இருக்கின்றோம்… இந்த ஸ்தல புராணத்தின் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
அன்று பதஞ்சலி மந்திரங்களைக் கற்றுக் கொண்டு தன்னுடைய சுகபோகத்திற்காக எத்தனையோ பாவங்கள் செய்தாலும் பாம்பு உடலில் வந்த பின் மாடு மேய்ப்பவனைத் தீண்டுகின்றான்.
தீண்டி அந்த உடலில் வந்த பின்
1.அங்கே அந்த ஏழ்மையான குடும்பத்தில் மகிழ்ச்சியான ஆனந்தமான உணர்வைக் கண்ட பின்
2.அரச நிலையின் உண்மைகளை உணர்ந்து அரசைத் துறக்கின்றான்
3.இந்த உடலிலிருந்தே மெய் ஒளியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றான்.
தான் பாம்பாக இருக்கும் போது விஷத்தால் தீண்டி அந்த (மூலனின்) உயிரை வெளியேற்றினாலும்… அதையும் தன் அணைப்பின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மை தான் செயலாக்கி வந்தது தான் “நடராஜன்” என்ற திருச்சிற்றம்பலம்…!
1.உடலுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு இந்த உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்
3.திருச்சிற்றம்பலம் என்பது சிறு உடலுக்குள் நின்று அங்கே இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினார் திருமூலர்
அந்தத் திருச்சிற்றம்பலத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.
நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் “பருப்பு போன்று” சிறு அளவில் செயல்படும் கருவி
நாம் மேல் நோக்கிப் பார்த்து எடுக்கின்ற சமமான உணர்வு கொண்டு வளர்க்கப்படும் எண்ணத்தின் உணர்வைப் புருவ மத்தியில் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணி எடுக்க வேண்டும்.
அத்தகைய நுண்ணிய அலைகளைச் சுவாசித்து எடுக்கும் பொழுது நம் எண்ணங்கள் அனைத்தும் ரிஷிகளின் எண்ணமுடன் கலக்கின்றது.
ஆக… சப்தரிஷிகளினால் இன்று இப்பூமியில்… எப்பூமியிலிருந்து தான் வளர்ந்து வலுக்கூட்டி… இன்றும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக மனித எண்ணத்தின் பகுத்தறிவை வழி நடத்துகின்றனரோ… அவர்களின் எண்ணமுடன் நம் எண்ணத்தைச் செலுத்தி… அனுதினமும் தியானித்து அந்தச் சக்திகளை நாம் ஈர்க்க வேண்டும்.
அத்தகைய தியான ஒளி ஈர்ப்பினால்
1.இச்சரீரத்தை இயக்கவல்ல ஆத்மாவில்…
2.அன்று சித்தர்கள் காட்டிய ஞானக்கண் என்ற கவன நரம்பின் பொட்டுத் தன்மையின் மூலம்
3.நாம் எடுக்கும் சுவாசத்தால் எந்த ரிஷிகளின் அலையை எடுக்கின்றோமோ
4,அவ்வலையைச் சிறு மூளைக்குச் செலுத்தி
5.ஆத்மாவின் செயலுக்கு வலுத் தருகின்ற புருவத்தின் நடு மையத்தில் பொட்டில்
6.கவன நரம்பு செயல்படுகின்ற “பருப்பு போன்று… சிறு அளவில் செயல்படுகின்ற கருவி…”
7.இப்பூமியின் சமைப்புக்கு முன் நாம் எடுக்கின்ற நேரடி ஈர்ப்பால்
8.அதற்குகந்த எண்ணத்தின் வளர்ச்சியின் வலுவை அந்தக் காந்த நுண் அலைகள் மூலம் பெற முடியும்.
இயல்பாக… நம் கண்ணின் ஒளியில் எதிரில் காணும் பொருள்களை எல்லாம் சூரியனின் ஒளியோ மற்ற ஒளிகளோ உள்ள வெளிச்சத்தில் தான் கண் பார்த்துப் படம் எடுக்கின்றது.
ஆனால் இக்கவன நரம்பில் பொட்டின் பதிவு பெறும் காந்த நுண் அலையின் வளர்ச்சி கொண்ட வலுத் தன்மையினால் விழியை மூடிக் கொண்டே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் நிலைகளை
1.இருட்டிற்குள் எப்படி வெளிச்சத்தைக் காட்டி அதிலுள்ள உண்மைகளை இவ்விழி படமெடுத்து அறியும் இன்றைய நிலையை
2.வலுப்படுத்தப்பட்ட ரிஷிகளின் ஒளியிலிருந்து எடுக்கப்பட்ட காந்த நுண் அலைகள் கொண்டு
3.இச்சரீரத்தில் வளருகின்ற பல கோடி அணுக்களின் வீரியத் தன்மை உணர்வையும்
4.இப்பொட்டில் பதிவாக்கப்பட்ட ஒளித் தன்மை வளர்ச்சியினால்
5.விழியை மூடிக் கொண்டே பிரகாசத் தன்மையில் நாம் காணலாம்.
இதன் வலு வளர வளர… நாமிருக்கும் இடத்திலிருந்தே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி மண்டலத்தின் உருத்தன்மையும்… உருப்பெறும் மாற்றுத் தன்மைகளையும் அறிய முடியும்.
நடக்க இருக்கும் நிலைகளையும் முன் கூட்டியே அறிந்திட முடியும்…!
மனப்போரை எல்லாம் “குருக்ஷேத்திரப் போராக” நாம் நடத்த வேண்டும்
ஞானிகள் மகரிஷிகள் அனைவருமே நெருப்புக்குச் சமமானவர்கள்… தீமையைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய சக்தி பெற்றவர்கள். அந்தச் சக்தி நமக்கு முன் இந்தக் காற்றிலே இருக்கின்றது.
நம்மை அறியாது வரக்கூடிய தீமைகளை நீக்குவதற்கு அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… மெய் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று எடுத்து நமக்குள் அந்தத் தீமைகளைப் பொசுக்கிப் பழகுதல் வேண்டும்.
குருக்ஷேத்திரப் போர்…! குரு…! இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது.
நான் பேசுகின்றேன்; நீங்கள் திட்டுகிறீர்கள்; மற்றதைப் பார்க்கின்றேன்; எல்லாவற்றையும் சுவாசித்து… உயிரான குருவிடம் சென்றுதான் அது வேலை செய்கின்றது… உயிர் அதை எல்லாம் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.
உதாரணமாக… வேதனை வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.வேதனை உருவாக்கக்கூடியதைக் காதிலே கேட்டு…
2.அந்த உணர்ச்சிகளைச் தூண்டி சுவாசித்து… உயிரான குருவிடம் சென்ற பின்… (அப்போது மனப் போராகிறது)
3.ஈஸ்வரா…..…! என்று உயிரை எண்ணி (மனப் போரை நாம் குருக்ஷேத்திரப் போராக்க வேண்டும்)
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
5.குருக்ஷேத்திரப் போரில் அவனிடம் (உயிரிடம்) ஒப்படைத்து விட்டால்
6.மற்றவர்கள் திட்டியது… கேலி பேசியது… வேதனைப்படச் செய்தது… உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகிறது.
அதாவது குருவிடம் (உயிரிடம்) சொல்லி தனக்குள் கெட்டது புகாமல் தடுக்கச் செய்வதற்குத் தான் “குருக்ஷேத்திரப் போர்…” என்று நமக்குக் காண்பித்துள்ளார்கள்.
நம்மை ஒருவன் திட்டிக் கொண்டே இருக்கின்றான் என்று அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும். சுவாசித்ததும் ஜிர்.. ஜிர்..ர்ர்.. ஜிர்.. என்று இயக்கிக் கொண்டிருக்கும் (நமக்குள் இரைச்சலாகிறது).
அந்த உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
1.ஈஸ்வரா…….! என்று ஓங்கி (சொல்லி) அந்த ஓங்காரம்… வானை நோக்கி ஏகி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இங்கே குருவிடம் (புருவ மத்தியில்) வந்து விடுகிறது.
3.அப்போது சாதாரண மனிதன் பேசிய (திட்டியதை) உணர்வைச் சுட்டுப் பொசுக்கி விடுகிறது.
இத்தகைய பேருண்மைகளைக் காட்டிய மெய் ஞானியின் உணர்வை எண்ணி அதைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அவனிடம் வேண்ட வேண்டும்.
ஏனென்றால் அவன் தான் சிருஷ்டிக்கின்றான்…!
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும். என்னைத் திட்டியவர்களுக்கு என் சொல் நல்லதாகப் பட வேண்டும்… என் பார்வை அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… என் சொல் அவர்களுக்கு இனிமை ஊட்ட வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் வர வேண்டும்.
இப்படிச் செய்தால் குருக்ஷேத்திரப் போர்… தீமைகள் நமக்குள் வராதபடி தடுக்கப்படுகின்றது.