நம்முடைய வைராக்கியம் எதிலே இருக்க வேண்டும்…?

நம்முடைய வைராக்கியம் எதிலே இருக்க வேண்டும்…?

 

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.
1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும் உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

அந்நிலை கொண்டு தான் இந்தக் கலியில் கண்ட பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகாநந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளைக் கொண்டு நாம் அதைக் காசாக்கிக் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும் ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால் அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்டிவும் முடியும்.

வளரும் முறையிலிருந்து தான் இந்நிலை எல்லாமே வருகின்றது. வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற்றிட முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.
1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்டிட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

எமது உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டால் “அன்று வாழ்ந்த மெய் ஞானிகளை” நீங்கள் காண முடியும்

எமது உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டால் “அன்று வாழ்ந்த மெய் ஞானிகளை” நீங்கள் காண முடியும்

 

நட்சத்திரங்களின் எதிர் மோதலால் ஏற்படும் மின்னல்கள் (மின் அணுக்களின் கதிர்கள்) கடலிலே பாய்ந்தால் மணலாக மாறுகின்றது அதில் உள்ள… “ஹைட்ரஜன் அந்த உப்பின் சத்து” அந்த மின்னலின் வீரியத்தைத் தணிக்கிறது.

கடலிலே பாயும் மின்னல்…
1.அந்த மின் அணுக்களுடன் தொகுப்புகள் மணலாக வரப்படும் பொழுது உயர்ந்த ஆற்றல்களைப் பெறுகின்றது.
2.இதைத்தான் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகள் இது கலவைகளாக… எது எதிர் நிலையில் வருகிறது…? என்ற நிலைக்கொப்ப மணல்களாக உருவாக்கப்படுகின்றது.

அந்த மணலினை எடுத்து அதிலிருந்து பிரித்து எடுத்து அணுவைப் பிளக்கின்றார்கள்… அந்த அணுவின் தன்மை பிளந்து பல விதமான நிலையாக எடுக்கின்றார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.

1.அதிலே சிதைவடைந்த உணர்வின் தன்மையைத் தான் கம்ப்யூட்டரில் பாய்ச்சி (பல விதமான தனிமங்கள்)
2.உணர்வின் அதிர்வுகளைக் கொண்டு… உணர்வின் செயலாக்கங்களுக்கு…
3.நுண்ணிய கதிரியக்கப் பொறிகளை மாற்றும் போது “கம்ப்யூட்டராக” அது வேலை செய்கிறது,

அதாவது…
1.மின் அணுவின் கதிரியக்கங்களின் நிலைகள் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு
2.அந்தக் காந்தத்தைக் கவரும் உணர்வின் தன்மையை அதற்குள் பதிவு செய்து உணர்வின் அறிவான பின்
3.எதிர் ஒளியின் தன்மைகள் மின் அணுவைப் போன்ற உணர்வின் தன்மை கம்ப்யூட்டரில் தோன்றும்.

அப்படித் தோன்றும் உணர்வின் தன்மை எதுவாகின்றதோ… ஒவ்வொரு உணர்வுக்கொப்ப (எதிலே செலுத்துகின்றோமோ) உருவங்களையும் காட்ட முடியும்.
1.ஒரு மனிதன் 100 ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்ந்தான் என்றால்…
2.இவன் அவன் வம்ச வழியில் வந்தவன் என்றால்
3.அவர்கள் ரூபம் எப்படி இருக்கிறது…? என்று அக்கால உருவத்தைக் காணலாம்.

இந்த உணர்வின் தன்மை பதிவாக்கி இந்தக் கம்ப்யூட்டரின் மூலம் எதிர் அலைகளை எடுத்துக் கொண்டால் ஒளியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.
1.மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது
2.இங்கே வாழ்ந்த உணர்வுகள் “பதிவானதை எடுத்து”
3.அந்த மனிதனுடைய உருவத்தையே கம்ப்யூட்டர் கொடுக்கின்றது.

விஞ்ஞானிகள் அதைக் காட்டுகின்றார்கள்.

இதே போன்று அன்று “வாழ்ந்த மெய் ஞானிகளையும்” நாம் காண முடியும் அவனில் விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் இப்போது பதிவாக்கப்படும் பொழுது
1.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்து அதைப் பெருக்கிக் கொண்டே வந்தால்
2.அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வந்து
3.அவன் எப்படி ஒளியாக ஆனான் என்ற உணர்வை எடுத்து நீங்களும் ஒளியாக ஆக முடியும்.

சில பேர் நினைக்கலாம் விஞ்ஞானம் அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது இவர் என்ன படிக்காதவர் சொல்கிறார்…? (ஞானகுரு) என்று.

ஏனென்றால் விஞ்ஞானிகளுடைய செயல்கள் எப்படி இருக்கின்றது மெய் ஞானிகள் அறிவு எப்படி இருக்கின்றது…? மெய்ஞானிகளுடைய செயல் எப்படி இருக்கிறது…? என்பதை குருநாதர் அந்த இயற்கை நிலைகளை அதனுடைய இயக்கங்கள் எப்படி…? என்பதை அவர் காட்டிய நிலைகளைக் கற்றுணர்ந்த பின் தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

இதைப் பதிவு செய்து கொண்டால் கால பருவம் வரும் போதெல்லாம்
1.அந்தந்த உணர்வுக்கொப்ப அந்தந்தக் காலங்களுக்கொப்ப
2.உணர்ச்சிகள் அது கலந்து அறிவின் ஞானமாக உங்களுக்குள் ஊட்டும்.

முந்தி சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும் அதனின் வளர்ச்சி உங்களில் வரப்படும் பொழுது… இயற்கையின் நிலையாக “உங்களை நீங்கள் அறியும் உணர்வுக்கு வளர வேண்டும்…” என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.

எத்தனை காலம் இந்த உடலில் நாம் வாழப் போகிறோம்…?
1.இந்த உடல் சதமற்றது… என்றைக்கும் நிலையானது உயிர்.
2.அந்த உயிருடன் ஒன்றி ஒளியாக ஆக்கப்பட வேண்டும்.

ஆகவே… உடலுக்குப் பின் பிறவி இல்லை…! பிறவி இல்லா நிலை அடைந்த அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிப்பது தான் இந்த உபதேசத்தின் நோக்கம்.

நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்… பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்

நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்… பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்

 

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலந்திடும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் இந்நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்…
2.உந்தல்கள்…! தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவரவர் நிலையை அவரவர்கள் உணர்ந்து பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள்.

பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி நான் என்றால் என்ன…? என்பதை அன்றே உணர்ந்து இந்த மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.
3.அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமித்திடல் வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். அந்தச் சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்து நமக்குப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அந்நிலை கொண்டு தான் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.

நேரத்தையும் காலத்தையும் எப்போது பார்க்க வேண்டும்…?

நேரத்தையும் காலத்தையும் எப்போது பார்க்க வேண்டும்…?

 

பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று வேண்டுகின்றோம். அதனின் உட்பொருளை நாம் உணர்ந்து அந்தப் பக்குவத்தைப் பெறுதல் வேண்டும்.

1.நம் பிள்ளையைச் செல்லமாக வளர்க்கின்றோம் என்று சொல்கின்றோம்.
2.அவன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் சொல்கின்றோம்.
3.ஆனால் “அவனுடைய குறும்புத்தனம் மட்டும் போகவே மாட்டேன் என்கிறது…!” என்று இப்படியும் சொல்லி விடுகின்றோம்.
4.அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்கிறோமா என்றால் இல்லை…!

நம் பிள்ளை தான்…! என்ற ஆசையின் நிமித்தம் இருந்தாலும் அவன் நல்லவனாக வேண்டும் என்று சொல்வதற்கு மாறாக
1.நாம் தவறிப் பேசும் பொழுது…
2.அது நல்லதாக ஆவதில்லை…!

எல்லாருடனும் நாம் நன்றாகப் பழகுகிறோம். இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்களிடம் பக்குவமாகப் பேசத் தெரியாதபடி…
1.எதிர் மறையான உணர்வு வந்தபின் கொஞ்சம் விரக்தியாகப் பேசிவிட்டால் போதும்
2.அந்த உணர்வுகள் பகைமையாகி விடுகின்றது.
3.அவர்களுடன் நாம் பழகிய அந்த நல்ல பண்புகளும் அங்கே சீர் கெட்டு விடுகின்றது.

ஆகையினால்தான் பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நாம் இல்லாமல் அந்த பரிபக்குவ நிலை பெற வேண்டும் என்று சொல்லச் சொல்வது.

அந்தப் பக்குவ நிலை பெற வேண்டுமென்றால்…
1.உயிரை ஈஸ்வரா… என்று எண்ணி ஏங்கி
2.நம்மிடம் இருந்து அடுத்து வரக்கூடிய சொல்கள் சிந்தித்து செயல்படும் தன்மையாக
3.நல்ல சொல்லாக எதிர் சொற்களைச் சொல்வதும்
4.சொல்லால் அதை அடக்குவதும் என்ற இந்த நிலையில் செயல்பட்டால் பகைமை அங்கே வராது.

உதாரணமாக ஒருவர் நம்மிடம் வந்து பிறரைப் பற்றி அதிகமாகக் குறை கூறுகிறார் என்றால் உடனே நாம் “ஏம்ப்பா இந்த மாதிரிக் குறை சொல்லிக் கொண்டிருகின்றாய்…? என்று நாம் அழுத்தமாகக் கேட்டால் அங்கே பகைமை வந்து விடுகின்றது.

அப்படிப் பகைமை வராதபடி தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

சரி… என்று அவர் சொல்வது வரைக்கும் அமைதியாக இருந்து… “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் பொறுமையுடன் நாம் இருக்க வேண்டும்.

“சமயம் பார்த்து…” அடுத்து ஒரு நல்ல சந்தர்ப்பம் வரும் பொழுது
1.அப்பா…! மற்றவர்கள் மீது நீ குறை கூறும் உணர்வுகள் எனக்குப் பிடிக்கவில்லை…
2.நீ இதைக் கொஞ்சம் யோசனை செய்து பாரப்பா…! என்று சொல்லி விட்டோம் என்றால் அங்கே சிந்திக்கக்கூடிய தன்மை வருகின்றது.

இப்படி இல்லாதபடி… அந்தந்த நிமிடமே நான் பதிலுக்குச் சொல்லி விட்டால்
1.அவன் சொல்வதை அங்கேயே மறுத்தோம் என்றால் நம்மையும் அவன் வெறுப்பான்
2.யாரைக் குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தானோ… அடுத்து நம் மீதும் இதே குற்ற இயல்புகளைச் சொல்லத் தொடங்குவான்.

ஆகவே சமயம் (நேரம்) வரும் பொழுது… அதை நாம் மாற்றி அமைக்க வேண்டும்.

மனப் பொருத்தம் அமைந்தால் அது (திரு)மணப் பொருத்தமாகிறது

மனப் பொருத்தம் அமைந்தால் அது (திரு)மணப் பொருத்தமாகிறது

 

என் குழந்தை திருமணமாகி எந்த வீடு சென்றாலும் அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும்… அந்த சக்தி என் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் அங்கே செல்வ செழிப்பு வளர வேண்டும் என்று தாய் தந்தை எண்ண வேண்டும்

அதே போன்று தன் மகனுக்குப் பெண் வேண்டுமென்றால் மகாலட்சுமி போன்று குடும்பத்தைக் காக்கும் அருள் சக்தி கொண்ட பெண்ணாக அமைய வேண்டும் என்று இந்த உணர்வினை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு எண்ணினால்…
1.அதற்குத்தக்க இடத்திற்கு அழைத்துச் சென்று நல்ல மணமகனையும் நல்ல மணமகளையும் தேர்ந்தெடுக்க முடியும்…
2.அந்த சக்தி உங்களுக்குள் வளரும்.

ஜாதகம் ஜோதிடம் என்று பார்த்தால் அதற்குள் சிக்கி அதற்குத் தான் நீங்கள் அடிமையாக முடியுமே தவிர அதனால் நல்ல நிலை வரப்போவதில்லை… மெய் உணர்வை அறியச் செய்யாது.

ஆகவே அதை விடுத்து விட்டு மனம் ஒத்துச் சென்றால் அந்த உணர்வின் தன்மை ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

இருந்தாலும் மனம் ஒன்றி இருக்கிறது…
1.ஜாதகம் ஒன்றி வரவில்லையே…” என்றால்
2.இது ஆழமாகப் பதிவாகி கடைசியில் சோர்வின் தன்மை அடைந்து விடுவீர்கள்.
3.அந்தச் சோர்வுக்குத் தக்க தான் மாப்பிள்ளையோ பெண்ணோ பார்க்கும்படி ஆகிவிடும்.
4.அதன் வழியில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒன்று சேர்ந்த பின் “கீரியும் பாம்பும்” போன்று தான்
5.அவருடைய வாழ்க்கை அமையும்… மகிழ்ச்சி பெறும் தன்மை இழக்கப்படுகிறது.

இன்றைய வழக்கில்… ஜாதகம் ஜோதிடம் பார்த்துத் தான் திருமணம் செய்கின்றார்கள்… ஆயுளையுமப்படி நிர்ணையிக்கின்றார்கள். அவர்கள் ஜாதகம் பார்த்த பிரகாரம் நோய் இல்லாது வாழ்கின்றனரா…?

எல்லாப் பொருத்தமும் இருந்தாலும் அவர்களுக்கு நோய் வராது என்பார்கள் ஆனால் நோய் வராது இருக்கிறதா…? ஆகவே ஜாதகப் பொருத்தங்கள் சரியாக அமைவதில்லை…!

1.மனப் பொருத்தம் ஆகி ஒன்றி வாழ்ந்திட வேண்டும்
2.அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் அவருடைய எதிர்காலம் சிந்தித்து செயல்படும் தன்மை பெறும்.
3.அருள் ஞானிகள் வழியில் அருள் ஒளி பெற வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் ஒன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஜாதகம் ஜோதிடம் என்ற நிலையினை விட்டுத் தள்ளுங்கள்…!

அருள் ஒளி பெற வேண்டும் என்ற நிலையில் “குடும்பத்தில் அனைவரும் மனம் ஒத்து வாழ வேண்டும்…” என்ற இந்த எண்ணங்களை கூட்டிக்கொண்டு வாருங்கள்.

பெண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் அவருடைய வாழ்க்கையில் நோயைப் பற்றி விசாரிங்கள்.

ஆண் என்றால் குணத்தை பற்றி விசாரிங்கள். சீரிய பண்பு இல்லை என்றால் இங்கே வந்தாலும் சரியாக வராது… இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்.

நல்ல ஒழுக்கத்துடன் செயல்படுகின்றார்களா…? என்று பாருங்கள். அப்படிச் செயல்படும் பொழுது… முறைப்படி தியாநித்தால் அந்த நல்ல ஒழுக்கம் மீண்டும் வளரத் தொடங்குகிறது… திருமணத்திற்குப் பின் அங்கே தவறுகள் ஏற்படாது.

ஆனால் பெண் இப்படி மாப்பிள்ளை இப்படி என்று ஆசையின் நிலைகளில் உணர்ச்சிகளை ஊட்டி விடுவார்கள். அதைக் கேட்டு ஏமாந்து விட்டால் “ஏமாந்து விட்டேனே…” என்று தீய பழக்கங்கள் கொண்ட நிலைகளுக்கு வந்து விடுகின்றது.

துருவ தியானத்திலிருந்து கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போல வாழ வேண்டும் என்றுதான் எண்ணுதல் வேண்டும்
1.மணப்பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்…
2.மணமகனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்று தியானியுங்கள்.

எங்கள் குழந்தை எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பம் நலமும் வளமும் பெற வேண்டும். அதனுடைய பார்வை குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போல் வீட்டிற்கு வரும் மருமகளும்
1.மகாலட்சுமி போன்று குடும்பத்தை அழகுபடுத்தும்… மகிழ்ச்சி பெறச் செய்யும் அந்த உணர்வைப் பெற வேண்டும்.
2,அத்தகைய பெண் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை தொடர்ந்து செலுத்துங்கள்

அதற்குண்டான சக்தி கிடைத்து நல்ல பெண்ணும் நல்ல மாப்பிள்ளையும் அமையும்…!.

குறை கூறும் பழக்கமே நமக்கு வரக் கூடாது…!

குறை கூறும் பழக்கமே நமக்கு வரக் கூடாது…!

 

எம்மிடம் (ஞானகுரு) ஆசீர்வாதம் வாங்க வரும் பொழுதெல்லாம்
1.என் குடும்பத்தில் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வரவேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
4.எங்கள் தொழில்கள் சீராக நடக்க வேண்டும்
5.எங்கள் வாடிக்கையாளர்கள் நலமும் வளமும் பெற வேண்டும்
6.எங்கல் குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெற வேண்டும்
7.எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் உத்தமக் குழந்தைகளாக வளர வேண்டும்
8.எங்களுக்கு அந்த அருள் வேண்டும் என்று தான் வேண்டி நீங்கள் கேட்க வேண்டும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு
1.வீட்டில் என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கிறான்… வீட்டை விட்டே சென்று விட்டான்
2.குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும் சண்டையும் சச்சரவும் விட்டே போக மாட்டேன் என்கிறது
3.தொழிலில் நஷ்டம் வந்து கொண்டே இருக்கின்றது
4.கடன் வாங்கிச் சென்றவர்கள் பாக்கியைத் திரும்பக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்
5.(கொடுக்க வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்… கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்…! என்றே சொல்வார்கள்)
6.எப்போது பாக்கியைக் கேட்கச் சென்றாலும் வெறுத்துப் பேசுகின்றார்கள் என்று தான் எம்மிடம் சொல்லிக் கேட்கின்றார்கள்.

ஆக இதைத்தான் வளர்த்து வைத்துக் கொள்ள முடிகின்றதே தவிர “நல்லதைக் கேட்க முடியவில்லை…”

எல்லோரும் நலம் பெற வேண்டும்… கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…! என்று தான் எம்மிடம் கேட்க வேண்டும்.

மனைவி என்ன சொல்கிறது…? என் வீட்டுக்காரர் எப்பொழுது பார்த்தாலும் நச்சு…நச்சு… என்று பேசிக் கொண்டே இருக்கின்றார். அடுத்து கணவரோ… என் வீட்டில் என் பொம்பளை எப்பொழுது பார்த்தாலும் நச்சு…நச்சு… என்று பேசிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்வார்…!

இருவருமே இப்படித்தான் சொல்வார்கள். யார் பேசுவது எவர் செய்வது என்று தெரிவதில்லை.

இந்த உணர்வு ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம். நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் பதிவாகி மீண்டும் அதைச் சொல்கிறது. இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வான்.

அதாவது…
1.நாம் ஒருவரைத் திட்டினோம் என்றால் பதில் அதுவே தான் வரும்…
2.ஒருவரைக் கோபித்தால் அதுதான் திரும்ப வரும்…
3.ஒருவரை வேதனைப்படும்படி சொன்னால் அதே வேதனையின் பதிலாக நமக்கு வரும்.

நாம் பேசும் உணர்வுகள் சீதாலட்சுமி ஆக மாறினாலும் நுகர்ந்த உணர்வுகள் சீதாராமனாக மாறுகின்றது. நாம் ஒருவரைக் கோபிக்கும் பொழுது சீதாலட்சுமி ஆக மாறுகின்றது.

அதை உற்றுப் பார்த்தால்… அந்த உணர்வை நுகர்ந்தால் நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான்… அதாவது அந்த எண்ணங்கள் தோன்றுகிறது.,, திட்டினால் அதுவே திரும்ப பதிலாக வரும்.

காவியங்கள் இதை நமக்குத் தெளிவாக்கியுள்ளன. அதன்படி நமது வாழ்க்கை எப்படி வழி நடத்த வேண்டும்…? மனிதரான பின் நாம் நமக்குள் எதை உருவாக்க வேண்டும்…? மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எம்மிடம் வந்து விட்டாலே
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்
2.வாழ்க்கையில் உடல் நலம் பெறுவேன்
3.குடும்பத்தில் ஒன்று சேர்ந்து வாழ்வோம்
4.கணவன் மனைவியும் வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ்வோம்
5.நளாயினி போன்று மதித்து நடப்போம்… சாவித்திரி போன்று ஒன்றி வாழ்வோம்
6.எங்கள் பார்வை எங்கள் குடும்பத்தில் நலம் பெறும் சக்தியாக மாறும் என்ற உணர்வினை எடுத்து வாருங்கள்.

இது உங்களுக்குள் எவ்வளவு உயர்வைக் காட்டுகிறது…? என்று பார்க்கலாம்.

எம்மைச் சந்திக்க வந்தாலே… தலைவலியோ கை கால் குடைச்சலோ எல்லாமே குறையும்… வயிற்று வலியும் குறையும். வீட்டில் இருக்கும் பொழுது வலி இருந்தது… என்னைச் சந்தித்த பின் அந்த அருள் சக்திகளை எடுத்த பின் நிம்மதி கிடைக்கிறது என்பார்கள்.

இதை எல்லாம் உங்களுக்கு அனுபவபூர்வமாகக் காட்டினால் அதை நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னொன்று மிகவும் முக்கியமானது…
1.யாரையுமே குறை கூறிப் பழகாதீர்கள்
2.குறையைக் கண்டால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலை பெற வேண்டும்
4.அருள் ஞான வழியில் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுத்துக் கொள்ளுங்கள்.

அவருடைய குறை நமக்குள் வளராது. அவர்கள் நல்ல நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் நமக்குள் இந்த வலுவின் தன்மை அவருடைய குறையான அணுக்கள் நமக்குள் அணுக்களாக விளையாது.

அவர்களும் இவ்வாறு எண்ணத் தொடங்கினால் அவர் வாழ்க்கை நலம் பெறும் சக்தியாக வளரும்.

ஆகவே எங்கே எப்படிப்பட்ட குறையைக் கண்டாலும் அடுத்த கணமே…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3.சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

குறை காணுவதையும் குறை சொல்வதையும் விடுத்து விட்டு இதைத்தான் ஒரு பழக்கமாக அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் நாம் நன்மை செய்தாலும் “நம்மைக் காத்துக் கொள்ள குருவின் துணை அவசியம் வேண்டும்”

எல்லோருக்கும் நாம் நன்மை செய்தாலும் “நம்மைக் காத்துக் கொள்ள குருவின் துணை அவசியம் வேண்டும்”

 

குரு உபதேசித்த உணர்வுகளை நமக்குள் பெற்றுள்ளோம். இன்றைய நிலைகளில் அதை எல்லாம் எளிதாக உங்களிடம் சொல்கின்றேன். ஆனால் “அதை வழி நடத்துவதற்குண்டான சிக்கல்” எனக்குத் தான் (ஞானகுரு) அது தெரியும்.

காரணம்… எத்தனையோ இன்னல்களைக் கண்டுணர்ந்த நான் அன்பு கொண்டு பரிவு கொண்டு உயர வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொரு மக்கள் மத்தியிலும் வந்து
1.உயர்ந்த சக்தி பெற வேண்டும் உணர்வுபூர்வமாக நான் ஊட்டினாலும்
2.அந்த உணர்வு பதிவான அவர்களுக்கும்… சந்தர்ப்பம் அந்த உணர்வை அவர்களுக்குள் அதை வளர விடாது தடுக்கின்றது.
3.அதனால் அவர்கள் அறியாது தவறு செய்யத் துணிவாகும் போது
4.எல்லை கடந்து சிரமப்பட்ட நேரத்தில் அவர்களுக்குள் நல்லது உருப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நான் பாய்ச்சிய பின்னும்
5.அவரை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்கிறது
6.அதனைக் கண்டு எனது மனமும் வேதனைப்படுகின்றது.
7.அந்த வேதனை உணர்வுகள் என்னையும் இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்துச் செல்லும் நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை அன்றே குருநாதர் சொன்னார்.

“நீ உருவாக்கும் உணர்வுகள் நல்லதை மற்றவர்களுக்குப் பாய்ச்சிடும் நிலை பெற்றாலும்” தீமையின் நிலைகள் அவருடைய சிந்தனையைச் செயலற்றதாக மாற்றும்.

1.அத்தகைய வேளையில் நீ எதைச் செய்யப் போகின்றாய்…? உன்னை நீ எவ்வாறு காத்துக் கொள்ளப் போகிறாய்…?
2.உனக்கு மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்
3.நீ நகருக்குள் செல்லப்படும் பொழுது எத்தனை வேதனைகளை நீ படப் போகின்றாய் என்று பார்…! என்று இதைச் சொல்கின்றார்.

பலருக்கு பல நோய்களிலிருந்து விடுபடும் அதற்குண்டான உபாயங்களைச் செயல்படுத்தினாலும் அடுத்து அவர்களுக்கு நல்லதான பின் “இவர் என்ன செய்தார்…?” என்று அவர்கள் என்னைச் சொல்லப்படும் பொழுது
1.மனதார பணம் வாங்காது அவர் நல்ல வழி பெற வேண்டும் என்று எண்ணினாலும்
2.நல்லதான பின் நுகர்ந்தறிந்தாலும் அவர் செய்யும் தவறுகளும்…
3.வேதனைப்படுத்தும் சொல்களை அவர் சொல்லப்படும் பொழுது அந்த விஷத்தை நுகர்ந்தபின் நீ செய்த நன்மைகள் எப்படி மறைகின்றது…?
4.அந்த விஷத்தின் தன்மை உனக்குள் எப்படி ஆட்கொள்கின்றது…?
5.உன்னை அறியாமலே வெறித் தன்மை கொண்ட செயல்படும் தன்மைகள் உனக்குள் உருவாகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்

தியான வழிகளில் அமைதியும் பண்பும் கொண்டு நீங்கள் வழி நடந்து வந்தாலும் உங்களைச் சீண்டிப் பார்ப்போரும் தூண்டிப் பார்ப்போரும் துன்புறுத்தி அதை வேடிக்கை பார்ப்போரும் “இப்படி இதிலும் பலர் பெருகுவர்…!”

இதைப் போன்ற நிலைகள் இருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்குத்தான் “எனது குரு காட்டிய அருள் வழியினை” உங்களுக்குள் இந்த உணர்வின் சக்தியைப் பரப்பப்பட்டு இந்த உணர்வின் வலிமையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இதைச் செயல்படுத்துகின்றேன்.

ஆகவே… மனிதனின் பண்புகள் சிறுகச் சிறுக மறைந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தீமையிலிருந்து எப்படி விடுபட வேண்டும்…? என்று உணர்த்தினார்… அதைத்தான் உங்களுக்கு உணர்த்துகின்றேன்.

உங்களை அறியாது வாழ்க்கையில் வந்து தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு நஞ்சினை வென்றிடும் வலிமை பெற வேண்டும்… அந்த அருள் ஞானிகள் உணர்வை நுகரும் வலிமை நீங்கள் பெற வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராது சில தீமையின் உணர்வுகள் உருவாகி விட்டாலும்
1.உங்கள் நினைவாற்றல் அந்தத் தீமையிலிருந்து அகற்றிடும் சக்தியாக
2.உங்களைக் காத்திடும் நிலையாக வர வேண்டும் என்பதற்குத் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உபதேசங்களைக் கொடுக்கின்றேன்.

எம்மிடம் துன்பத்தைச் சொல்லி எதையும் கேட்காதீர்கள்… நல்லதைச் சொல்லி அதைக் கேட்டு வாங்குங்கள்

எம்மிடம் துன்பத்தைச் சொல்லி எதையும் கேட்காதீர்கள்… நல்லதைச் சொல்லி அதைக் கேட்டு வாங்குங்கள்

 

தெரிந்தோ தெரியாமலோ நம் உடலுக்குள் அசுர அணுக்கள் புகுந்து விட்டால் தன் அருகிலே இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கிவிடும்.

நல்ல உடலை உருவாக்கிய அந்த அணுக்கள் மடிந்துவிட்டால் உடலுக்கு இயக்கச் சக்தியாக மற்றும்… “திரவகப் பொருள்கள்” கிடைக்காது போய்விடும்.

1.நரம்புகளுக்குள் ஒரு விதமான ஆசிட் (அமிலம்) உண்டு
2.அந்தத் திரவகம் நமக்குள் இல்லை என்றால் கைகளை மடக்குவதோ மீண்டும் நேராக்குவதோ கடினமாகிவிடும்.
3.மூட்டுகளிலும் இந்தத் திரவங்கள் ஓடப்பபட்டு அது தான் மடக்குவதற்கும் மற்றதுக்கும் இயக்குகிறது.

நாம் பார்க்கின்றோம் விஞ்ஞான அறிவு கொண்டு இயந்திரங்களுக்கு ஒரு திரவப் பொருட்களை (OIL – LUBRICANTS) அதற்குள் கலக்கின்றார்கள் அப்பொழுது அந்த இயந்திரங்கள் தேய்வில்லாதபடி சில காலம் ஓடுகின்றது.

இன்ஜின்களிலும் இதே போன்று திரவங்களைக் கலக்கின்றனர்… அதற்குள் இருக்கும் பேரிங்… பிஸ்டன்… தேய்வில்லாதபடி ஓடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் உயர்ந்த அணுக்களால் உருவாக்கப்பட்டது அந்த அணுக்களின் மலம் திரவமாக மாற்றப்பட்டு நம் உடல் உறுப்புகளில் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகிறது.

உதாரணமாக நுரையீரல் என்று வைத்துக் கொள்வோம். நுரையீரலுக்குள் நுண்ணிய அலைகளாக இயக்கச் செய்யும்
1.அந்த நரம்புகளுக்கும் வாயு நரம்புகளுக்கும்… திரவம் அதற்குள் சென்ற பின் விரிவடைகின்றது.
2.மீண்டும் சுருங்கச் செய்வதற்கு அதில் உள்ள திரவ அணுக்கள் சுருங்கி இழுக்கும்
3.அந்தக் காற்று புகும் பொழுது மீண்டும் விரிவாகும்.

எப்படி ஒரு காற்றினை அழுத்தி இழுக்கப்படும் பொழுது விரிவாகிறதோ… அந்த அழுத்தத்தைக் குறைக்கப்படும் பொழுது எப்படிக் குறைகின்றதோ… இதைப் போன்று தான் நம் சுவாசப்பைகளை நரம்பில் உள்ள திரவம் இயக்குகின்றது.

நுரையீரலை இயக்கச் செய்யும்…
1.அதாவது அனைத்து உறுப்புகளையும் ஒருக்கிணைந்து இயக்கச் செய்யும் ஈரல் மையங்களில் ஆசிட் பவர் குறைந்து விட்டால்
2.அதை இழுத்து விரிவடையச் செய்யும் காற்று நிலைகள் விரிவடைந்து விட்டால் அதிகமாக விரிவடைந்து விடும்.
3.அதே சமயத்தில் அதைச் சுருங்கச் செய்யும் சக்தியும் குறைந்து விடுகின்றது.

அப்படிக் குறைவடையப்படும் போது நம் நினைவாற்றலையும்… இந்தத் திரவகம் சிறு மூளை பாகம் சென்று ஒன்றுடன் ஒன்று இணைந்து இயக்கப்படும் பொழுது அங்கேயும் அதனுடைய அழுத்தக் குறைவுகள் ஆகி விட்டால் அந்த உறுப்புகளை இயங்காது தடைப்படுத்தி விடுகின்றது… மிகவும் நுண்ணிய நிலைகளில் இப்படி ஆகிவிடுகின்றது.
1.இத்தகைய நிலைகள் நமக்குள் ஏற்பட்டு விட்டால்
2.தீய அணுக்கள் உடலுக்குள் புகாது தடைப்படுத்தும் சக்தி இழக்கப்படுகிறது.

இவ்வாறு துரித நிலைகள் கொண்டு இந்த விஷத்தன்மை ஊடுருவி விட்டால் விஷ அணுக்களாக உடலுக்குள் உருவாகி அது வளர்ச்சியாகத் தொடங்குகிறது.

அதனால் பொழுது
1.நல்லதைப் பெற முடியாதபடி
2.நல்லதை எண்ண முடியாதபடி
3.நல்லதைக் கேட்க முடியாது ஒரு தடையாகிவிடும்.

என்னிடம் வந்தீர்கள் என்றால் சாமி…! என்னுடைய நோய் குறையவே மாட்டேன் என்கிறது… கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது… குடும்பத்தில் சும்மா சண்டை வந்து கொண்டே இருக்கிறது…! என்றே சொல்வீர்கள்.

“நல்லதைச் சொல்லிக் கேளுங்கள்” என்று நான் சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள். எங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றது… அதை எப்படி நாங்கள் சொல்லாமல் இருப்பது…! என்று தான் சொல்வீர்கள்.

ஏனென்றால் எந்த உணர்வு இழுக்கின்றதோ அது தான் இங்கே வரும்.
1.கஷ்டம் என்ற உணர்வு அந்த நினைவாற்றல் வந்து விட்டால்
2.உங்கள் ஆன்மாவின் முன்னணியில் அது தான் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள். அது உங்கள் உடலுக்குள் நன்மை பயக்கும் சக்தியாக வரும். அதனால் நீங்கள் நலம் பெறுவீர்கள்… உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி வரும்… தொழில்கள் வளம் பெறும்…! என்று நான் சொன்னாலும்…
1.“இதை உங்கள் உணர்வு ஏற்க மறுக்கும்…”
2.நான் சொல்வது அனைத்துமே விரயம் ஆகிவிடும்

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்; என் குடும்பம் நலம் பெற வேண்டும்; எங்கள் உடல்கள் நலம் பெற வேண்டும்; குழந்தைகள் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்; குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்; வியாபாரம் பெருக வேண்டும்; வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்; அவர்கள் நலம் பெற வேண்டும்…! என்று இதை ஏங்கிப் பெற்றால் அந்த நல்ல அணுக்கள் உங்களில் வளரும்.

1.நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் குடும்பம் நலமும் வளமும் பெறும் என்று
3.இதைத்தான் உங்களுக்குள் ஊழ்வினை என்று வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
3.அதை நினைவாக்கி வளர்ப்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

ஆகவே நான் கொடுக்கும் நல்லதை மறந்துவிட்டுத் துன்பத்தைச் சொல்லி அத்தகைய பதிவை நீங்கள் வளர்ப்பது உங்களுக்கு நல்லதல்ல…!

அதை மாற்றிக் கொள்ளுங்கள்…!

குரு (ஈஸ்வரபட்டர்) உணர்வு உங்களை இயக்கி” மகிழ்ச்சியை ஊட்டும்

குரு (ஈஸ்வரபட்டர்) உணர்வு உங்களை இயக்கி” மகிழ்ச்சியை ஊட்டும்

 

ஒருவன் கடுமையான பாவத்தைச் செய்வதை உற்றுப் பார்த்தாலே அவனுக்குள் விளைந்த அந்த வினைகள்… கூர்ந்து கவனிக்கும் போது அந்தப் பாவ வினைகளே நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஒருவன் சாபமிடுவதைக் கூர்ந்து கவனித்தால் அவனிட்ட சாப வினைகள் எதை அழிக்க வேண்டும் என்று எண்ணினானோ அதே உணர்வு நமக்குள் புகுந்து நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.
1.சாபமிட்டோருக்கும் அதே நிலை… கேட்டோருக்கும் அதே நிலை
2.இது போன்ற தீமைகள் நமக்குள் தாக்காது தீய வினைகள் சாப வினைகள் நமக்குள் சேர்ந்திடாது
3.விண்ணின் ஆற்றலைக் கவர்ந்து அதைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

அதற்கே குருநாதர் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு இத்தகைய அருள் உணர்வுகளைப் போதித்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது உள் புகும் தீமைகள் அனைத்தையும் அகற்றும்படியாக வழி காட்டுகின்றார்.

தீய வினைகளை அகற்றி என்று மகிழ்ச்சியான சொல்களை நீங்கள் சொல்கின்றீர்களோ அப்போது எமது குருநாதரை உங்களில் நான் (ஞானகுரு) காணுகின்றேன். தீமைகளை அகற்றி என்று மகிழ்ச்சியுடன் நீங்கள் எம்மைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுது என் குருவை உங்களிடம் நான் பார்க்கின்றேன்.

தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு விண்ணுலகில் மகரிஷிகள் சஞ்சரித்துக் கொண்டிருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்பட்ட ஒளியான அணுக்கள் இங்கே வந்து கொண்டுள்ளது.

குருநாதர் காட்டிய அருள் நெறி கொண்டு அதைத் தான் உங்களை இப்போது பெறும்படி செய்து கொண்டுள்ளோம். அதை நீங்கள் சுவாசிக்கப்படும் போது
1.அந்தச் சப்தரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கி
2.உங்களை அறியாத வந்த பாவ வினைகள் நீங்கி தீயவினைகள் நீங்கி சாப வினைள் நீங்கி
3.உங்களில் மகிழ்ச்சி பெறும் நிலைகளில் அது இருந்தால்
4.எமது குருநாதன் அந்த உணர்வின் இயக்கமாக உங்களுக்குள் இயக்கி
5.தீமைகளை மாய்த்து… மெய் வழி காணும் உணர்வாக மலர்ந்த முகத்துடன் உங்களைக் காண வைக்கின்றார்.

மகிழ்ச்சியுடன் அதை நான் காணும் நிலையாக வருதல் வேண்டும்.

உங்கள் உயிரான ஈசனை மதித்து… அன்னை தந்தையின் உயிரை ஈசனாக மதித்து… அவர்களைத் தெய்வமாக மதித்து அவர்களைக் குருவாகவும் மதித்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் வழிபடுத்திக் கொள்ளுங்கள்…!

எத்தகைய சந்தர்ப்பத்திலும்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி… அதைப் பற்றுடன் பற்றிக் கொண்டால் வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றிடாது (பற்றற்றதாக) செயல்படுத்த முடியும்.

ஆகவே… மறவாதீர்கள்…!
1.ஒவ்வொரு நாளும் கொடுக்கக்கூடிய உபதேசங்களை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி
2.வீட்டிலிருந்தே தியானித்து அந்த அருள் சக்திகளை நீங்கள் பெற முடியும்.
3.அந்த்த் தகுதியை நீங்கள் பெற வேண்டும் என்று என் குருநாதரைப் பிரார்த்திக்கிறேன்.

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

 

நீங்கள் எத்தகைய துயர் பட்டுக் கொண்டிருந்தாலும்… அல்லது சாபவினைகளோ பாவ வினைகளோ தீய வினைகளோ உங்களுக்குள் சேர்ந்திருந்தாலும்… அதை எல்லாம் நீக்க
1.யாம் உபதேச வாயிலாக… அருள் வாக்கின் தன்மையாக
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி உள்ளேன்.

ஆனால் வாக்கினைக் கொடுத்த பின்பும் அதை நீங்கள் விரயம் செய்தால் அது உங்களுடைய அதிர்ஷ்டம் தான்.

நீங்கள் எல்லோரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சதா உங்கள் உயிரை ஈசனாகவும் ஆண்டவனாகவும் குருவாகவும் மதித்து நான் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

நீங்களும் அதே போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் தொடர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

காலையில் எழுந்தபின் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் நோயை மறந்து விடுங்கள்… நோயின் தன்மை அது செயலிழந்து விடும்.

1.எந்த அளவுக்கு யாம் கொடுத்த வாக்கினை நீங்கள் கூட்டிக்கொண்டு வருகின்றீர்களோ
2.அது அனைத்தும் உங்களுக்குள் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விடும்பொழுது அந்த நஞ்சின் தன்மை வலு இழப்பது போன்று நீங்கள் “ஆயிரம் தரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் கூட்டினால்” உடலில் உள்ள நோய்கள் தானாகவே போய்விடும் அது செயலிழந்து விடும்.

1.காலையில் படுக்கையில் கண் விழித்த பின் இதைச் செய்யுங்கள்
2.அதற்குப் பின் இடைவெளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள்
3.வெளியிலே வாகனங்களில் சென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்
4.இரவிலே படுக்கையிலே படுக்கும் போதும் அதே மாதிரி எண்ணுங்கள்.

உயர்வான உணர்வுகள் உங்களுக்குள் பெருகத் தொடங்கும்… பின் நினைவின் எண்ணங்கள் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக மாறும்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்களை அறியாது சேர்ந்து தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் நீங்க வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து எங்கள் தொழில்களிலும் படர்ந்து குடும்பத்தில் உள்ளோர் மன பலம் மன நலம் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும்.

எங்களிடம் தொழில் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று… மன பலம் மன நலம் உடல் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும் சீராக வேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று இதைப் போல் எண்ணுங்கள்.

இப்படி எண்ணும் போது இங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் மனமும் உயர்ந்த நிலையில் இருக்கும்.
1.உங்கள் எண்ணங்கள் விண்ணை நோக்கிப் பற்றும்.
2.இதற்கு முன் உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் நசியும்.
3.ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
4.இந்த உணர்வின் தன்மை எட்டா தூரத்தில் இருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகளை எட்டும்படி செய்யும்…
5.உங்களுக்குள்ளேயே அந்த இயக்கங்கள் வருவதைப் பார்க்கலாம்.

பின் எந்த சாப வினைகளும் உங்களை அணுகாது. அதே சமயத்தில் உங்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய சாப வினைகளைப் போக்கும் சக்தியும் பெறுவீர்கள்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதே போன்று நோய்களைப் பற்றி எண்ணாது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.