சக்தியை எல்லா நேரமும் நான் விரயம் செய்ய முடியாது

சக்தியை எல்லா நேரமும் நான் விரயம் செய்ய முடியாது

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்று லட்சம் பேரைச் சந்தித்து அனுபவபூர்வமாகப் பெற்ற ஞானத்தைத் தான் உங்களிடம் உபதேசித்து வருகின்றேன்.

அன்றைக்கு என் காலிலே ஆணி. குருநாதர் செருப்பு கூடப் போடக்கூடாது என்று சொல்லிவிட்டார். இரண்டு காலிலும் 28 ஆணி இருந்தது. நடக்கும் போது ஒரு சிறிய கல்லிலே மிதித்து விட்டால் போதும். அ…ஆ…! என்று உணர்ச்சிகள் தூண்டப்பட்டு தலையில் உச்சி முடி நட்டமாக நிற்கும்.

வெளியிலே சேர்ந்தாற் போல் அதிக நேரம் உட்கார முடியாது… எரிச்சலாகும். கால் ஆணி உள்ளவர்களிடம் கேட்டால் தெரியும்… இது எப்படி என்று…!

அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு…
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்
2.ஒவ்வொரு குடும்பத்திலும் என்ன நடக்கின்றது…?
3.அதில் உள்ளவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் குடும்பத்தில் என்ன நடக்கின்றது…?
4.இறந்த பின் அந்த ஆன்மாக்கள் என்ன செய்கின்றது…? என்று இதை எல்லாம் அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.

கஷ்டப்பட்டு அதை எல்லாம் தெரிந்து கொண்டு வந்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது அதிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்கு… உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வதற்கு உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

கொடுத்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்வதற்கு ஆள் இல்லை.

எத்தனையே பேர் எம்மைச் சந்திக்க வருகின்றார்கள். உங்களுக்குள் வரும் தீமைகளை மாற்றக்கூடிய சக்தி “உங்களுக்கு உண்டு” என்று கொடுக்கின்றோம்.
1.அதை யாரும் எடுப்பதில்லை.
2.சாமி எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார் என்ற இந்த உணர்வு தான் பெரும்பகுதியானவருக்கு உள்ளது.
3.சாமி சொன்ன வழியில் தியானத்தைச் செய்து என்ன கிடைத்தது…? என்கிறார்கள்.

ஏனென்றால் யாம் சொல்வதைக் கடைப்பிடித்து வழி நடந்தால் தான் நடக்கும். கடைப்பிடிக்கவில்லை என்றால் எப்படி நடக்கும்…?

பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. ஆசை இருக்கின்றது… ஆனால் அதைச் சாப்பிடுவதற்குப் பதில் வேதனையை எடுத்தால் என்ன ஆகும்…?

ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.

ஆனால் ஒரு சமயம் நல்லதானாலும் மீண்டும் அதை வைத்துத் தனக்குகந்த உணர்வை வளர்த்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியை வளர்ப்பதற்கு ஆள் இல்லை.

1.எத்தனையோ பேருக்கு அவருடைய துயரங்களிலிருந்து அவர்களை மீட்டி விடுகின்றோம்.
2.அதை வைத்து மீண்டும் அவர்கள் தெளிந்து தெரிந்து வருவார்கள் என்று தான் அதைச் செயல்படுத்துகின்றோம்.

ஆனால் அப்படிச் செய்கின்றார்களா…?

1.காரணம்… சக்தியை நான் எல்லா நேரமும் விரயம் செய்ய முடியாது.
2.உங்களுக்குண்டான அந்த வழிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கின்றோம்.
3.அதை நீங்கள் எடுத்துக் கரையேறி மீண்டு வரும் “தன் பலம்” வேண்டுமல்லவா.

எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார் என்றால் சாமி எதைப் பார்ப்பார்…? உங்கள் கஷ்டத்தை எல்லாம் நான் கேட்டுக் கொண்டேயிருந்தால் அதிலிருந்து நான் என்னைத் தப்புவித்துக் கொள்வதற்குத் தான் பார்க்க முடியுமே தவிர உங்களை எப்படி நான் காப்பது…?

1.ஒவ்வொருவரும் யாம் கொடுக்கக்கூடிய சக்திகளை வைத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
2.வாழ்க்கையைச் சீர்படுத்தி வழி நடத்திடவும்… வாழ்க்கைக்குப் பின் அடையக்கூடிய நிலையாக
3.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை… சிறிது காலம் செய்து பழகி விட்டால் தன்னாலே வந்துவிடும்.

அருள் வழியில் நீங்கள் முழுமையாக யாராவது தயாரானால் தான் நல்லது

அருள் வழியில் நீங்கள் முழுமையாக யாராவது தயாரானால் தான் நல்லது

 

முந்தைய காலங்களில் யாம் கொடுக்கும் உபதேசத்தையெல்லாம் யாரும் எட்டிப் பிடிப்பது என்றால் கஷ்டம். எக்ஸ்பிரஸ் மாதிரி ஓடிக் கொண்டேயிருக்கும்…. யாரும் அர்த்தம் காண முடியாது.

ஆனால் இப்பொழுது எல்லோருக்கும் அர்த்தம் புரியும் அளவிற்குத் தான் உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.

காரணம் ஆரம்பத்தில் சில ரகசியங்களை எல்லாம் சொல்வேன்.

மந்திரவாதிகள் அதை எல்லாம் திருடி எடுத்துக் கொள்வார்கள் என்பதற்காகப் பட்டும் படாதபடி அவர்களுக்குப் புரியாமல் இருப்பதற்காகக் கட…கட… என்று உருட்டிக் கொண்டு செல்வேன்.
1.இப்பொழுது அது எல்லாம் இல்லை.
2.உலகம் மிகவும் மோசமான நிலையில் இருள் சூழும் நிலைகளாகச் சென்று கொண்டிருப்பதால்
3.எல்லோருக்கும் இதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் பவரைக் கொடுக்கின்றேன்.

இதைச் சிதற விட்டு விடாதீர்கள்.

1.இந்த உபதேசத்தைக் கேட்டவர்கள் நீங்கள் தயாரானால் போதும்.
2.உலகையும் காக்கலாம் ஊரையும் காக்கலாம் வீட்டையும் காக்கலாம்.

முறைப்படுத்திப் பக்குவப்படுத்திக் கொண்டால் போதும். சிரமப்பட வேண்டியதில்லை… சிரமமான நிலையில் இருந்து விடுபடுவதற்குத் தான் உணர்த்துகின்றேன்.

நான் சிரமப்பட்டேன்… தெளிந்தேன்…! நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன்.
1.இதிலே நீங்கள் முழுமையாக யாராவது தயாரானால் தான் நல்லது.
2.அரையும் குறையுமாக விட்டு விட்டுச் செல்லக்கூடாது.

விஷ உலகமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் காற்று மண்டலமும் நச்சுத்தன்மை ஆகிக் கொண்டுள்ளது. கடவுளின் அவதாரத்தில் வராகன் சாக்கடையில் உள்ள நாற்றத்தை எப்படிப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ இதைப் போல அந்த நச்சுத்தன்மைகளை எல்லாம் நீக்கிவிட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கி உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

இந்தச் சூரியன் அப்படியே இருக்கப் போவதில்லை. அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய இந்தப் பூமியும் எந்த நிமிடத்திலும் தலைகீழாக மாறிவிடும்.

அணுகுண்டுகள் வெடித்தாலே போதும். எந்தப் பகுதியில் இதைச் செயல்படுத்துகின்றார்களோ சரமாரியாக அவைகள் வெடித்தால் சூரியனை ஒளிக் கதிர்கள் அங்கே தடுக்கப்படுகின்றது. வெயில் படவில்லை என்றால் பனிப்பாறைகளாகி அந்த இடத்தில் பூமி உறைந்து விடும்… தலை குப்புறக் கவிழ்ந்து விடும்.

ஆரம்பத்திலே துருவத்தின் வழி பூமி சக்திகளைக் கவரப்படும் பொழுது முட்டை வடிவில் வளர்ந்தது. அப்போது அது திரும்பும் நிலை வந்தது.
1.அந்தச் சந்தர்ப்பத்தில் தான் அகஸ்தியன் இந்தப் பூமியை லேசாகத் திருப்பி வைத்தான்… பூமி சமமானது.
2.இதுவரையிலும் இந்த வண்டி ஓடிக் கொண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞான அறிவு இன்று சென்று கொண்டிருக்கும் நிலையில் பூமி எங்கே போகும்…? எப்படி ஆகும்…? என்று சொல்ல முடியாது. அத்தகைய நிலை இருக்கின்றது… குறுகிய காலமே இருக்கின்றது.

எங்கே பார்த்தாலும் தீவிரவாதம்…! இந்த உணர்வு நமக்குள் பதிவானால் காற்றலைகளில் அது இருக்கிறது. நாம் மீண்டும் எண்ணினால் நம் உடலுக்குள்ளும் அது தீவிரவாதமாக வருகிறது… அறியாமலே பகைமை…! உடலுக்குள் தீமையாக வருகின்றது.

இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.
1.எப்படியும் கொஞ்சம் பேராவது முந்திக் கொண்டீர்கள் என்றால் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய முடியும்.
2.நான் ஒருவன் பெற்றால் போதுமா…? நீங்கள் எல்லோரும் தயாராக வேண்டும் அல்லவா…!

ஆனால் இன்னும் ஒன்றாம் வகுப்பிலே இருந்தது போன்று… அருள் வழியில் பெற்ற அனுபவங்களை ஒவ்வொருவரையும் சொல்லச் சொன்னால் எதை எதையோ சொல்கின்றார்கள். தான் பெற்ற அனுபவங்களைச் சரியாகச் சொல்ல முடியவில்லை.

உங்கள் அனுபவங்களை ஏன் கேட்கிறோம்…? என்றால்
1.நீங்கள் கற்றுக் கொண்ட உணர்வு மற்றவர்களும் அதன் வழி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.
2.அதைத் தெளிவாகச் சொன்னால் போதும்.
3.100 பேர் இது போன்று 100 விதமான கருத்துக்களை அனுபவங்களைச் சொன்னால் 100 விதமான உணர்வுகள் அங்கே வருகின்றது.
4.மற்றவர்கள் அதைத் தெரிந்து கொள்ள உபயோகமாக இருக்கும் என்று சொல்கின்றோம்.

யாம் சிரமப்பட்டுத் தெரிந்து கொண்டு வந்தோம். அதை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு முன் விரயம் ஆகி விடுகின்றது. ஒரு சிலர் அனுபவங்களுக்குப் பதில் கதையைச் சொல்கின்றார்கள்.

ஆகவே எந்தெந்த நேரங்களில் எதை எதைச் செய்ய வேண்டும்…? எப்போது அதைக் கேட்க வேண்டும்…? என்ற பொறுப்புணர்ந்து
1.குருவிடம் எப்படிப் பேச வேண்டும்…?
2.குரு வழியில் நாம் எப்படிச் செல்ல வேண்டும்…?
3.குரு வழியினை எப்படிப் பின்பற்ற வேண்டும்…? என்று நீங்கள் பக்குவப்பட வேண்டும்.

உங்களுக்குச் சக்தி கொடுக்கிறோம் என்றால் அதைப் பயன்படுத்திய நிலையில் அடுத்து அதை வளர்ச்சியின் பாதைக்கு எப்படிக் கொண்டு செல்ல வேண்டும்…? என்று எம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாமியிடம் எப்படிக் கேட்பது…? என்று எண்ண வேண்டியதில்லை. “அதையெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியை நீங்கள் பெற வேண்டும்…”

அதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் வளர்த்துக் கொண்டால் ஆயிரம் பேருடைய தீமைகளை நீங்கள் போக்க முடியும்.
2.உங்கள் அரவணைப்பில் ஆயிரம் பேரைக் காக்க முடியும்.

ஆகவே பழமையை எண்ணாதபடி எதிர்காலத்தில் இதைப் போன்ற ஆக்கபூர்வமான செயல்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தைக் காட்டுங்கள்.

இனி வரும் சந்ததியினரை நாம் ஞானிகளாக உருவாக்குவோம்

இனி வரும் சந்ததியினரை நாம் ஞானிகளாக உருவாக்குவோம்

 

திருஞானசம்பந்தர் குழந்தையாகப் பிறந்த பின் தாய் அவரை ஆலயத்திற்கு எடுத்து வரும் பொழுது
1.கருவில் இருக்கும் போது தாய் எதையெல்லாம் உற்றுப் பார்த்ததோ அதைப் பார்த்து அங்கே தவழ்ந்து செல்கின்றது.
2.நஞ்சை ஈசன் எப்படி நீக்கினானோ அதே போல என் கருவில் வளரும் குழந்தை பிணிகளைப் போக்கும் சக்தி பெற வேண்டும் என்று தாய் எண்ணியது.
3.அதைப் போல் அந்தக் குழந்தையின் பார்வையில் மற்றவர்கள் பிணி போகின்றது.

அதைப் போல கருவுற்ற தாய்மார்களும் அகஸ்தியன் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்… அப்படி வளர்ந்த குழந்தை பிறந்த பின் உற்றுப் பார்த்து கையை மேலே வைத்தால் அந்த உணர்வுகள் தோன்றும். அவர்கள் நோய் நீங்கும்.

கேன்சர் நோயாக இருந்தாலும் அது நீங்க வேண்டும்… என்று குழந்தையிடம் இந்த ஆசியை வாங்கினால் அந்த நோய் போகும்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகள்…
1.அன்று அகஸ்தியனுக்கு எப்படித் தாய் கருவிலே நஞ்சை வென்றிடும் சக்தி பூர்வ புண்ணியமாக விளைந்ததோ
2.அதைப் போன்று கருவுற்ற தாய்மார்களும் எண்ணி அந்த சக்திகளை வளர்த்து அகஸ்தியனைப் போன்ற ஆற்றலைப் பெறச் செய்ய முடியும்.

ஆனால் இன்று கருவுற்ற தாய்மார்களோ மாமியாரோ நாத்தனாரோ இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று “ஒருவருக்கொருவர் சண்டையிட்ட உணர்வுகளைக் கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஊட்டினால்…” அதில் உருப்பெற்ற குழந்தை “வம்புச் சண்டைக்கு” செல்லக்கூடிய குழந்தையாகத் தான் வருவான்.

அதைப் போன்ற நிலைகளை மாற்றி ஒழுக்கமான நிலைகள் வரவேண்டும் என்பதற்குத் தான் அருள் ஞானிகள் “படமாக உருவாக்கி”
1.அதன் மூலம் ஞானத்தின் தன்மை பெறுவதற்காக லட்சுமி சரஸ்வதி விநாயகர் என்ற காவியங்களைப் படைத்து
2.பின் அந்த அருள் ஒளியின் சுடர் என் கருவிலே வளரும் குழந்தைக்குப் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கும்படி சொன்னார்கள்.

ஆனால் காலத்தால் இது எல்லாம் மறைந்து விட்டது. ஞானிகள் காட்டிய வழியில் நாம் யாரும் செல்லவில்லை.

திருமூலர் எப்படிச் சக்தி பெற்றார்…? திருஞானசம்பந்தர் எப்படி அந்த உயர்ந்த சக்தி பெற்றார்…? என்று எண்ணி அதையெல்லாம் கர்ப்பமாக இருப்பவர் உணர்வுகளில் பதிவாக்கிக் கொண்டால்
1.அந்தக் குழந்தை உங்களைக் காக்கும்… குடும்பத்தைக் காக்கும் அருள் ஞானியாக அவன் வளர்கின்றான்.
2.அவன் மூச்சு பட்டால் விஞ்ஞான அறிவினால் இனி வரக்கூடிய விஷத்தன்மையிலிருந்து உங்களைக் காப்பான்.
3.அந்தக் குழந்தையால் அது முடியும்.

ஆகையினால் கர்ப்பமுற்ற தாய்மார்கள் அனைவரும் அந்த அருளைப் பெற்றுக் குழந்தைக்கு அந்தச் சக்தியைப் பூர்வ புண்ணியமாக உருவாக்கி வளர்த்திடுங்கள்.

எது பதிவாகின்றதோ அதுவே நினைவாகின்றது. டி.வி அலைகளை ஒளிபரப்பு செய்தால் அது எந்த ஸ்டேஷனில் வருகின்றதோ அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்த பின் இங்கு வருகின்றது.

அதே சமயத்தில் கோபம் வெறுப்பு என்று நண்பர்களுக்குள் வரப்படும் பொழுது “இப்படி ஆகிவிட்டதே… நாளை என்ன ஆகுமோ…?” என்று அவனுடைய நிலைகள் எண்ணி இணைக்கப்படும் பொழுது நோயாக இங்கே வந்து உருவாகி நம்மையும் வாட்டுகின்றது.

அன்று செய்யக்கூடிய நம்முடைய காரியங்களும் பலவீனம் அடைகின்றது செயலற்றதாகின்றது. குழந்தைகள் பாடம் படிக்கவும் முடியாது போகிறது.

ஆகவே எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அது இப்படி வருகின்றது. அதே உணர்வு நம்மையும் இயக்குகின்றது மற்றவரையும் இயக்குகிறது.

ஆனால் எண்ணும் பொழுதே
1.அருள் ஒளி பெற வேண்டும்… வரும் இருளை மாற்ற வேண்டும் என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்வதற்குத் தான்
2.இந்த ஸ்டேஷனை (ஞானிகள்) உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
3.இந்தப் பதிவை எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் அறிவாக இயக்கப்பட்டு அந்த ஞானமாக உங்களைப் பேச வைக்கும்.
4.பழமையில் உருவான தீமைகளை நீக்கும் அருள் சக்தி உங்களில் விளையும்.

விஞ்ஞான அறிவினால் மனிதன் சிந்தனை இழந்து செல்லும் நிலைகள் வந்து கொண்டுள்ளது. அதிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும்.

ஓசோன் திரை கிழிந்ததால் அதன் வழியாக பல விஷத்தன்மைகள் பூமிக்குள் வருகின்றது. வெப்பத்தின் தணல் கூடுகின்றது,,, துருவப் பகுதியில் பரவி பனிகள் உருகிக் கடல்கள் பெருகுகின்றது. நிலங்கள் குறைகின்றது.

நாடு முழுவதும் விஷத்தன்மை பரவுகின்றது மனிதனின் சிந்தனைகள் குறைந்து கொண்டு வருகின்றது. மனிதன் கடந்த காலக் காட்டு விலங்குகள் போல் செல்லப் போகின்றான்.

ஆகவே விஞ்ஞான அறிவின் வளர்ச்சியின் பின் விளைவுகளாக அழிவின் நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.
1.தன் நாட்டைக் காக்க என்று செய்த இந்த அறிவு
2.மனிதனுடைய சிந்தனையைச் சிதறச் செய்யும் சந்தர்ப்பமாக வந்துவிட்டது.

இதிலிருந்து மீட்ட அருள் ஞானி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் பெற்று ஆறாம் அறிவை… ஏழாவது நிலையாக “சப்தரிஷி” என்ற நிலைக்கு நாம் செல்ல வேண்டும்.

துன்பத்தை நீக்கும் அருள் ஞான வித்துக்கள்

துன்பத்தை நீக்கும் அருள் ஞான வித்துக்கள்

 

நாம் தவறு செய்யவில்லை… ஒவ்வொரு நிமிடத்திலும் பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கின்றோம்… கேட்டுணர்கின்றோம், அவர்களுடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம்..

இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும் போது அடிக்கடி நம்மையறியாமலே வேதனையும் துயரமும் பயமும் நமக்குள் வந்து சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

இதை எப்படிப் போக்கிக் கொள்வது…? எதாவது வழி இருக்கிறதா…?

அதற்குத்தான் அந்த ஞானிகள் சொன்ன உண்மையின் சக்தியை உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே வருகின்றோம்.

யாம் மட்டுமல்ல… கூட்டுத் தியானத்தில் எல்லோருடைய அருள் வாக்கும் உங்கள் அருள் வாக்கும் சேர்க்கப்படும் போது தான் வலு கூடுகிறது என்று குருநாதர் கூறினார்.

‘உன்னிடம் எவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்தாலும் அதை வளர்க்க வேண்டிய முறை தெரிய வேண்டும் என்றார்.

காரணம்…
1.ஒரு விதையைக் கொண்டு போய் விதைத்து அது பல விதைகளாக விளைந்தால் தான் சாப்பாட்டிற்கு உதவும்.
2.இல்லையென்றால் “ஒரு விதை ஒன்றுக்குமே உதவாது’’ என்று குருநாதர் எம்மிடம் கூறினார்.

‘ஒரு நெல்லை வைத்துக் கொண்டு பசியைப் போக்கிவிடுவேன் என்று சொன்னால் முடியுமோ முடியாது. ஒரு நெல்லை வைத்துச் சாப்பிட முடியாது. அந்த நெல்லை விளைய வைத்து அது பல நெல்லான பின் தான் சாப்பிட முடியும்.

அதே மாதிரித் தான் உங்களிடமுள்ள துன்பத்தையெல்லாம் போக்க வைக்கிறோம்.
1.‘நன்றாக இருக்கிறேன்… நன்றாக இருக்கிறேன்… நன்றாக இருக்கிறேன்…” என்று நீங்கள் சொல்ல வேண்டும்.
2.அவ்வாறான சொல் வரவேண்டும்.
3.உங்கள் பேச்சைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்களுக்கெல்லாம் நல்லது விளைய வேண்டும்.
4.அப்படித்தான் அங்கே நல்லதை விளைவிக்க முடியும்.

இதைத்தான் நமது குருநாதர் சொன்னார். ஆக ‘’அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்’’ என்ற எண்ணத்தை உனக்குள் வளர்த்து நல்ல வித்தினை அவர்களுக்குள் பதியச் செய்து அந்த வித்தினை நீ எப்படி வளர்க்க வேண்டும் என்று குருநாதர் சொன்னார்.

ஆகையினாலேதான்
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும்
2.உங்களுக்குள் மெய்வழி வளர வேண்டும்
3.உங்கள் பேச்சும், மூச்சும் பிறருக்கு நன்மை பயக்கும் சக்தியாகப் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டியபடி யாம் தியானிக்கின்றோம்.

அவ்வாறு தியானித்து அந்த சக்தியின் நிலைகளை உங்களுக்கு உபதேசித்து உங்களுக்கு வித்தாகக் கொடுத்து அந்த எண்ணத்தை உங்களுக்குள் தூண்டச் செய்யும்போது நீங்கள் எல்லோ\ரும் பெற வேண்டும் என்று எண்ணும்போது முதலில் நான் பெறுகின்றேன்.

நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் போது அந்த எண்ணத்தின் நிலைகள் அங்கே வளர்கின்றது. இது தான் எமது குருநாதர் காட்டிய அந்த நிலை.

ஆகவே இதை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். அந்த ஞானியரின் அருள் சக்தியை உங்களுக்குள் கிடைக்கச் செய்வதற்குத் தான் யாம் உங்களுக்கு இதைச் செய்தது.

நாம் அத்தனை பேரும் சேர்ந்து
1.தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்களது வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று சொல்லும் பொழுது
3.அனைவருக்கும் அந்தப் பேராற்றல் எளிதாகக் கிடைக்கின்றது.

இவ்வாறு எல்லோரும் சேர்ந்து செயல்படும் பொழுது உலகில் உள்ள மக்கள் அனைவரும் மெய் ஒளி பெறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இந்தப் பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் அதைப் பின்பற்றினால்
1.பிறர் வாழ வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து
2.உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் நிலைகள் அது ஒடுங்கும்.

தீமைகள் அவ்வாறு ஒடுங்கி மெய் உணர்வைக் காணும் நிலைகளில் உங்கள் பேச்சும் மூச்சும் வெளிப்பட்டு இன்று விஞ்ஞான உலகால் ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்று இந்தப் பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றி அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழ முடியும்.

இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச்சரீரம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்திட முடியும்.

குருவினுடைய உதவி அவசியம் தேவை

குருவினுடைய உதவி அவசியம் தேவை

 

27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துச் சூரியன் ஒளியாக மாற்றித் தன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் நட்சத்திரங்களும் வாழ்கின்றது. பிற மண்டலத்திலிருந்து எடுத்துத்தான் இந்தப் பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்கள் கொடுக்கிறது.

அது போல்…
1.நாம் இந்த உடலில் எந்தெந்த உணர்வுகளை எடுக்கின்றோமோ இதில் எது வலுவோ (நாம் எடுக்கும் அருள் சக்திகள்)
2.இரத்தத்திலிருந்து தசை மண்டலத்தில் இருந்து எலும்பு மண்டலத்தில் இருந்து எல்லாவற்றையும் கொண்டு வருகின்றோம்.
3.எல்லாவற்றிலும் அந்த வலுவைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது
4.இந்த வலுவின் தன்மை காற்றிலிருந்து உயர்ந்த உணர்வுகளை எடுத்துக் கொடுக்கின்றது… பிரித்தெடுக்கின்றது.

அதே சமயத்தில் வேதனைப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் எல்லாவற்றிலும் விஷம் கலந்து விடுகிறது. காற்றிலிருக்கக்கூடிய விஷத்தை எடுத்து அடிக்கடி கவலைப்படும்படி செய்வதும் நோயாக்குவதும் வெறுப்படையச் செய்வதும் எல்லாம் செய்கின்றது. மற்ற உயிரினங்களுக்கு இது எல்லாம் தெரியாது.

குருநாதர் இதை எல்லாம் எனக்குள் பதிவு செய்தார்… உணர்த்தினார். அதைத்தான் உங்களிடமும் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.
1.நீங்கள் இதையெல்லாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.அதை வலுப்படுத்திச் செயல்படக்கூடிய சக்திகளாக வளர வேண்டும்.

மற்றவர்கள் என்னிடம் கஷ்டம் கவலை துயரம் நஷ்டம் எல்லாவற்றையும் சொல்கிறார்கள். இதை நான் எதிர்த்துப் போராடிச் சமாளிக்க வேண்டி இருக்கின்றது.

ஏனென்றால் பக்தியில் நாம் வழி வழியாக அதைத் தான் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

உங்களிடம் இதைப் போன்று கஷ்ட நஷ்டங்களைச் சொன்னால் உங்களுக்கும் அந்தக் கவலை வருகிறது அல்லவா. ஆனால் உங்களை அந்தக் கவலை தாக்காமல் நான் பாதுகாக்க வேண்டும்.
1.குருநாதர் எனக்கு எப்படிப் பாதுகாப்பு கொடுத்தாரோ உங்கள் ஒவ்வொருவரையும் நான் பாதுகாக்க வேண்டி இருக்கின்றது.
2.எத்தனை ஆயிரம் பேர் கூடி இருக்கின்றார்களோ அத்தனை பேருக்கும் நான் பாதுகாப்பு கொடுத்தாக வேண்டும்.

நீங்கள் இதை மாதிரிச் செய்யுங்கள் நன்றாக விடும் என்று மற்ரவர்களுக்குச் சொன்னாலும் அவருடைய கஷ்டம்… “அங்கே எப்படி இருக்கின்றது… இங்கே இப்படி நடக்கின்றது… எல்லாம் நஷ்டமாகி விட்டது” என்று சொல்லும் போது கேட்டால் அது உங்களுக்குள் தீமையாக விளைந்து விடாது பாதுகாக்க வேண்டும் அல்லவா.

அவர்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி நாம் நல்வழி காட்ட வேண்டும்.
1.காரணம் பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கின்றது.
2.ஆகவே அந்த அருள் உணர்வுகளை வலுவாக்கி விட்டால் உங்களிடம் எதுவும் வராது.

தங்கத்தில் திரவத்தை ஊற்றிய பின் மற்ற கசடுகள் எல்லாம் ஆவியாக எப்படி மாறுகின்றதோ அதே போல உங்களுக்குள் அந்தச் சக்தி அதிகமான பின் மற்ற தீமைகளை மாற்றிவிடும்.

அது வரையிலும் குருவினுடைய உதவி அவசியம் தேவை.
1.எனக்கு குருநாதர் எவ்வளவு நாள் உதவியாக இருந்து வழி காட்டினாரோ அதே போல
2.அந்தக் குருவின் தன்மையை வளர்க்க வளர்க்க உங்களை அது பாதுகாக்கும்.

மற்றவர்கள் அனைவரும் உடலுக்குத் தான் சொல்கிறார்கள். உடலுக்குப் பின் என்ன…? என்பதை யாரும் சொல்லவில்லை. நாம் இந்த வாழ்க்கையில் நம் எண்ணங்களைப் பரிசுத்தப்படுத்தி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்… கடைசி நிலை,

அது தான் விஜயதசமி… உயிர் விண்ணுலகம் செல்ல வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை உபதேசங்களும் கொடுக்கின்றோம். எல்லோருக்கும் அந்த உற்சாகத்தை ஊட்டிக் கொண்டு செல்கின்றோம்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் ஒவ்வொரு உடலும் கோவில். மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் சக்திகள் காக்கப்பட வேண்டும்.

1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் அதைச் சொல்லும் பொழுது
2.அது உங்களில் வளர்ந்தால் எனக்கும் கிடைக்கின்றது… மற்றவர்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்

 

திருச்சபையின் ஆயுள் மெம்பராக நாம் சேர்ந்திருக்கின்றோம்.
1.குருதேவர் துருவ நட்சத்திரத்துடன் ஈர்ப்பு வட்ட்த்தில் அவர் ஆயுள் மெம்பராக இருக்கின்றார்.
2.அதன் வழி வளர்ச்சி பெற்று இன்றும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
3.அவர் காட்டிய அருள் வழியில் நான் அவருடன் ஆயுள் மெம்பராக இணைந்து இருக்கின்றேன்.
4.அது போல் நாம் அனைவரும் குரு வழியில் அங்கே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைந்திருக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் என்பதே பல மனிதர்களுடன் ஒன்றி… உணர்வின் தன்மை தெளிவாக்கித் தெளிந்த உணர்வுடன் ஒன்றி… ஒன்றிய நிலைகள் கொண்டு “எல்லோருடைய உணர்வும் பகைமையற்ற உணர்வு கொண்டு…” ஒளிச் சரீரம் பெற்றது.

பலவிதமான பல கோடிக்கணக்கான நச்சுத்தன்மைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம் வாழ்ந்து வருகின்றது.

மனிதரான பின் பிறவி இல்லாத நிலை அடைவதே கடைசி நிலை.

அதாவது இந்த உடலில் கோடிக் கரையில் இருக்கின்றோம். தனுசுக்கோடி… இராமேஸ்வரத்தில் இராமன் நேரமாகி விட்டது என்று எண்ணி மனதைக் குவித்து அவர் பூஜிக்கத் தொடங்குகின்றார்.

1.ஏனென்றால் இந்த மனித உடலில் ரொம்ப நாள் நாம் நீடித்து இருப்பதில்லை.
2.அதற்குள் எல்லோருடைய எண்ணங்களையும் ஒன்றாக்கி புவியின் ஈர்ப்பிற்குள் மற்றவர்கள் நம்மை இழுத்து விடாது
3.பேரருள் என்ற உணர்வின் தன்மை எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நமக்குள் அதை ஒன்றாக்க வேண்டும்.

அருள் உணர்வுகள் மற்றவர்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அந்த உணர்வு தான் அங்கே கிடைக்கின்றது.
2.நம் மீது அவருக்குப் பற்று வருவதில்லை.

இப்படி ஒவ்வொரு மனிதனும் நாம் செயல்படுத்தும் போது கடைசி நிலையில்… நாம் துருவ நட்சத்திரத்துடன் ஐக்கியமாகின்றோம்.

ஆனால் என் குடும்பம் இப்படி இருக்கின்றது… பிள்ளைகளுக்கு நாளை என்ன செய்வேன்…? என்ற எண்ணம் வந்தால் புவியின் பற்று வந்து விடுகின்றது. இங்கே யார் மீது பற்று கொண்டுள்ளோமோ அவர் உடலுக்குள் தான் செல்ல நேரும்.

அவர் உடலுக்குள் சேர்ந்து தன் உடலில் ஏற்கனவே சேர்த்துக் கொண்ட உணர்வுகளை அங்கே பாய்ச்சி அந்த உடலையும் வீழ்த்திவிட்டு மனிதனல்லாத உடலுக்குள் தான் அடுத்து செல்ல முடியும்.

ஆனால் இந்த உயிர் என்றுமே நிலையானது. தீயிலே மனிதன் குதித்தால் உயிர் வேகாது. உடல் கருகும். அந்த நெருப்பின் தன்மை கொண்டு கருகிய உணர்வு தான் எல்லா அணுக்களிலும் பெருகும்.

1.உடல் கருகி இந்த உயிரான்மா வெளியே சென்றால் அடுத்து ஏரி பூச்சியாகத் தான் பிறக்கும்.
2.ஏனென்றால் எல்லா சிந்தனைகளும் எரிந்தது… கருகிய உணர்வுக்கொப்ப அத்தகைய பூச்சியாக மாறுகின்றது.

மனித உடல் மீது இந்தப் பூச்சி பட்டால் சூடு போட்டது மாதிரி ஆகிவிடும். தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் இப்படித்தான் ஏரி பூச்சியாக மாறுகின்றார்கள்.

இதிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செல்ல வேண்டும்.
1.அவர் பேரருளைப் பெற்றார்… நமக்கு அந்த பேரருள் பெறும் முறையைக் கொடுத்தார்.
2.என்னை எப்பொழுதுமே அந்த துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து விடு என்றார்.
3.அதே வழியில் தான் உங்களையும் அங்கே இணைத்து நாம் அதன் வழியில் “துருவ நட்சத்திரத்தின் கிளைகளாக இருக்கின்றோம்…”

பற்றும் பாசமும் கொண்டு அது வரும் பொழுது அவர்களுக்கு இதை உபதேசிப்பதும்… அதை ஏற்றுக் கொள்ளச் செய்வதும்… ஏற்றுக் கொண்டவருக்கு அந்த அருள் உணர்வுகளைக் கொடுப்பதும் என்று செயல்படுத்தி வருகிறோம்..

பேருக்கு ஆயுள் மெம்பர் என்று சொல்லிக் கொள்வதில் பிரயோஜனம் இல்லை.
1.ஆயுள் மெம்பராக இருப்பவர்கள் அனைவருமே குடும்பத்தில் ஒவ்வொரு நொடியிலும் ஒன்றுபட்டு வாழும் உணர்வைச் சேர்த்து பழக வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

நகையைத் திருட வந்தவனுக்கு ஏற்பட்ட கதி

நகையைத் திருட வந்தவனுக்கு ஏற்பட்ட கதி

 

பெண்கள் நகையைப் போட்டுக் கொண்டு செல்கின்றார்கள். திருடன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அபகரிக்கும் நோக்கத்தில் அங்கே வரும் சந்தர்ப்பமாக உருவாகிறது.

இது நடந்த நிகழ்ச்சி…! என் காலோ ஆணிக்கால். ஆனால் திருச்சியில் கால்நடையாக நான் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தேன்.

ரோட்டிலே ஒருவன் ஒரு பெண்ணை “அடி…அடி…” என்று அடித்துக் கொண்டிருக்கின்றான்… போக்கிரி அவன்…!

என்ன…? ஏன் இந்தப் பெண்ணை அடிக்கிறாய்…? என்று கேட்டேன்.

அந்தப் பெண் சப்தம் போடுகிறது.
1.நான் பித்தளை நகையைப் போட்டிருக்கின்றேன்.
2.ஏன் தங்க நகையை போட்டுக் கொண்டு வரவில்லை…? என்று இவன் அடிக்கின்றான் என்று சொல்கிறது.

தங்க நகையைப் போடாது நீ எப்படி ரோட்டில் வரலாம் என்று சொல்லி அவன் உதைக்கின்றான்.

நான் என்ன நினைத்தேன்…? என்றால் வீட்டிலே நகைகளப் போட்டு இருக்கின்றார்கள். செலவுக்காக அடகு வைத்து விட்டது… அதனால் உதைக்கின்றான் என்று.

அப்போது திருடன் சொல்கின்றான் நாங்கள் திருட வந்தால் பித்தளை நகையைப் போட்டு ஏமாற்றுகிறாயா…? என்று சொல்லி உதைக்கின்றான்.

நான் போய் அவன் கையைப் பிடித்தேன். ஆளைப் பார்…! உன்னைக் கத்தியால் குத்தி விடுவேன்…! என்றான். ஆமாம் குத்தி விடுவாய் என்றேன் நான்.

பின்… இழுத்து சொத்… என்று கீழே விழுந்தான். கத்தியை எடுக்க முயற்சி செய்தான். கையும் வரவில்லை… காலும் வரவில்லை… கீழே விழுந்து கிடக்கின்றான்.

அங்கிருப்பவர்கள் எல்லாம் அவன் பெரிய ரவுடி. ரோட்டில் போய்க் கொண்டிருக்கும் நீ அவனை என்ன செய்ய முடியும்…? அவன் உன்னைத் தீர்த்து விடுவான் என்று சொல்கின்றார்கள்.

1.அவன் தீர்க்கட்டும்…! அவன் எண்ணம் தீர்ந்து போகும் என்று சொன்னேன்.
2.தவறான எண்ணம் கொண்டால் அவனுக்கு இது தான் கதி.
3.அவன் என்றைக்குத் திருந்துகின்றானோ அன்று அவன் கை வரும் என்று சொன்னேன்.

அந்தப் பெண் சொல்கிறது. ஐயா நீங்கள் இன்று இவனை அடித்து விட்டீர்கள்…! நாளைக்கு என் வீட்டிற்கே வந்து அவன் உதைப்பான் போல் தெரிகிறது. எழுந்து வந்து அடிப்பான்.

ஐயா அந்தக் கூட்டமே பெரிய கூட்டம் பல தடவை இப்படி வந்து திருடுகின்றார்கள். ஒன்றும் கொடுக்கவில்லை என்றால் உதைக்கின்றார்கள் என்று அந்தப் பெண் சொன்னது.

அவன் உன்னை அடிக்க மாட்டான்… கையும் வராது காலும் வராது கெட்டது இத்துடன் போய் விட்டது. நல்லதை நினைத்தால் தான் எழுந்து வருவான். உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான்… உன்னை உதைக்க மாட்டான் என்று சொன்னேன்.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று “இந்த மாதிரி இருக்கின்றதே… நீங்கள் என்ன செய்கிறீர்கள்…? என்று கேட்டேன். நாங்கள் என்ன செய்வது…? புகார் அளித்தால் தானே நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்கள்.

ஆக மொத்தம்
1.நகையைப் போட்டுக் கொண்டு ரோட்டிலே சென்றால் திருடனுக்கு வழி காட்டியது போல் ஆகிவிடுகிறது
2.உலக நடப்பு இவ்வாறு இருக்கின்றது.

நடந்த நிகழ்ச்சி இது.

கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதன் அவசியம்

கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதன் அவசியம்

 

என்னிடம் நினைவைச் செலுத்தி… வினாக்களை எழுப்பும் பொழுது விடைகளைப் பெற்று அனைவரும் அதன் மூலம் அதற்குண்டான விளக்கங்களைப் பகிர்ந்து கொள்ள எதுவாக இருக்கும்.

யாம் பல முறைகளிலும் வகைகளிலும் உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
1.எந்த அளவிற்கு அது உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து இருக்கின்றது…?
2.உங்களுடைய மனோ நிலை என்ன…?
3.எதை அறிந்திருக்கின்றீர்கள்…? அறிய விரும்புகின்றீர்கள்…? என்பதற்குத் தான் “கேள்வி பதில்…” வைப்பது.

உபதேசம் பொதுவாகச் சொல்கின்றோம்… கேட்கின்றீர்கள். சாமி சொல்வது நன்றாக இருக்கிறது என்று ஒரே வரியில் சொல்லி விட்டுச் செல்வோரும் உண்டு.

சிலர் என்ன நினைக்கிறார்கள்…! சாமி சொல்கின்றார் ஆனால் சொன்னதையே திரும்பச் சொல்கின்றார் என்று திருப்பிச் சொல்லி விடுகின்றார்கள்.

ஆனால் நேற்று என்ன சொன்னார்…? அதற்கு முந்தி என்ன சொன்னார்…? இன்று என்ன சொல்கின்றார்…? என்று கேட்டால் முழிக்கின்றார்கள்.

ஆகவே… உபதேசம் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல…!

குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேசம் கொடுக்கப்படும் பொழுது நான் எதையும் முதலில் நினைத்துக் கொண்டு ஆரம்பிப்பது அல்ல.
1.யார் யார் இங்கே முன்னாடி வந்து இதை விரும்புகின்றார்களோ… எதை அறிய வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ…
2.அதன் அடிப்படை ஆதாரமாக வைத்துத் தான் அன்றைய உபதேசமே அமையும்.

ஒரு பத்து பேர் நினைக்கின்றார்கள் என்றால் அவர்கள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய அளவிற்கு இந்த உபதேசம் வரும். “நான் நினைத்துக் கொண்டு வந்தேன் சாமி சொல்லிவிட்டார்…! நான் நினைத்துக் கொண்டு வந்தேன் சாமி சொல்லிவிட்டார்…! என்று எல்லோரும் சொல்வார்கள்.

அத்தகைய நினைவு வந்தாலும் கூட நாம் பதிந்து கொண்ட நிலையும்… இந்த வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்த வேண்டும்…? என்பதையும் அறிய வேண்டும்.

இந்தக் காற்று மண்டலத்தில் “மகரிஷிகளின் அருள் சக்தி எவ்வளவு கலந்துள்ளது…” என்று பல ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன்.
1.அதை எண்ணும் போது நமக்குள் அந்தச் சக்தி எப்படிக் கவரப்படுகிறது…?
2.அதை எப்படி நமக்குள் சேர்த்து வலுப்படுத்துவது…?
3.அதற்கு நாம் எதை நினைவுபடுத்த வேண்டும்…? என்று இதையெல்லாம் அறிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஆகவே உபதேசத்தைக் கேட்டுணர்ந்த நீங்கள் எந்த அளவுக்கு மீண்டும் அதை உயர்த்திக் கொள்ள வேண்டும்…? எப்படி வலுப்பெறச் செய்ய வேண்டும்…? அருள் ஞானத்தை எப்படி வளர்க்க பெற வேண்டும்…? என்பதற்குத்தான் கேள்விகளை எழுப்பும்படிச் சொல்வது.

எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

அருள் ஞானச் சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை

அருள் ஞானச் சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை

 

குருநாதர் பிறவியில்லா நிலையை அடைந்தார். ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நமக்குள் சேர்த்து இருளைப் போக்கிப் பழக வேண்டும். அது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

ஒவ்வொருவரும் துருவ தியானம் முடிந்தவுடன்
1.உங்களிடம் இருக்கும் அருள் ஞானச்சக்கரத்தைப் பார்த்தீர்கள் என்றால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஒளிகள் இதிலிருந்து வரும்.
3.நாளுக்கு நாள் அது வளர ஆரம்பிக்கும்… உங்கள் உணர்வுகளில் ஒரு தெளிவான மனம் கிடைக்கும்.
4.இதனுடைய வரிசையில் சில சமயங்களிலே பிரபஞ்சங்களும் தெரியலாம்.
5.அந்த மகரிஷிகள் யார்…? என்ற நிலைகளும் உங்களுக்குத் தெரியவரும்.

தெரிய வரும் என்று சொன்னவுடன்… தெரியவில்லையே…! என்ற உணர்வுக்குப் போய்விடாதீர்கள். அதை நாம் பெற வேண்டும் என்ற உணர்வை மட்டும் செலுத்திக் கொண்டு வந்தால் போதும். ஏனெனில் அந்த உணர்வு உங்களுக்குள் வளர்ச்சியாகும்.

ஒரு செடியை வைத்துவிட்டு உடனே பூ பூக்கவில்லை… காய் காய்க்கவில்லை என்றால் முடியுமோ…?

எத்தனையோ ஆண்டுகள் பல உடல்கள் பெற்று இப்பொழுது மனிதனாகப் பிறந்துள்ளோம். இவ்வாறு மனிதனாகப் பிறந்ததில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொன்றாகச் சேர்க்கிறோம்.

அந்த நினைவின் ஆற்றலும் ஈர்ப்பும் உங்களுக்குள் வருவதற்காகவே இந்த அருள் ஞானச்சக்கரத்தைக் குறைந்தது “மூன்று வருடமாக…” பூஜை அறையிலே வைத்து அதற்காகத் தியானம் பண்ணியுள்ளேன்.

எங்கே போக வேண்டும் என்றாலும் கொஞ்ச நேரம் சக்கரத்தின் முன் நின்று சக்கரத்தைப் பார்த்து, “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணிப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு நன்றாகப் படிப்பு வரவேண்டும்… நல்ல ஞாபக சக்தி வரவேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழிலுக்குப் போகும் பொழுது என் தொழில் நன்றாக இருக்க வேண்டும். என் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று, எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.

அந்தச் சக்கரத்தினைச் சௌகரியப்படும் இடத்தில் வையுங்கள். உடகார்ந்து பார்ப்பதற்கோ நின்று பார்ப்பதற்கோ தகுந்த மாதிரி செய்து கொள்ளுங்கள்.

1.அதைப் பார்த்து விட்டு… உங்கள் காரியம் ஜெயமாக வேண்டும் என்று
2.இந்த உணர்வை மீண்டும் மீண்டும் வலுப் பெறச் செய்து கொள்ளுங்கள்.
3.மன உறுதி கிடைக்கும்… உங்கள் சொல் கேட்போருக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஊட்டும்.
4.நாமும் நம் குழந்தைகளும் இந்த மாதிரிச் செய்து அதைக் கட்டாயாமாக்கி ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இந்தச் சக்திகளை நீங்கள் அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழ்ந்து… பிறரையும் மகிழ்வித்து வாழ்ந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

எமது உபதேசங்களை நீங்கள் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ள வேண்டிய சரியான முறை

எமது உபதேசங்களை நீங்கள் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ள வேண்டிய சரியான முறை

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்கிற போது வெறும் சொல்லாகச் சொல்வதல்ல.
1.ஓ…ம் என்பது நமது உயிர்… உடலுக்குள் இயங்கிக் கொண்டுள்ளது…
2.ஓ…! நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் சக்தி ம்…! என்று நம் உடலுடன் ஐக்கியம் ஆகிறது.

அதே போல நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் சக்தியை உடலுக்குள் இருக்கும் எலும்பு – மேக்னட் அதற்குள் இருக்கும் ஊன் அது ஊழ் வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

நாம் எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டு நாம் எண்ணக்கூடிய எண்ணத்தை நமது உயிர் “ஜீவன் பெறச் செய்கின்றது…” அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா.

குருதேவா… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் அந்த குணங்களும் நம் உடலில் இயக்கப்பட்டு அதை ஜீவன் பெறச் செய்வதற்கு மூலமாக இருந்தது நமது உயிர். ஆகவே “குருவாக இருப்பதும்…” நமது உயிரே.

அதைத்தான்…
1.ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது உயிரை ஈஸ்வரனாகவும்
2.அதே உயிர் நமக்குள் குருவாக பல உணர்வின் சக்திகளை நமக்குள் பதிவு செய்வதாக எண்ணி
3.அந்த ஏக்க உணர்வுடன் தான் அனைவரும் சொல்ல (எண்ண) வேண்டும்.

ஒரு மைக் நாம் பேசுவதை… நாடாக்களில் உள்ள முலாமும் முலாமுக்குள் மறைந்துள்ள காந்தமும் அதைக் கவர்ந்து எப்படிப் பதிவு செய்து கொள்கின்றதோ அதைப் போல நாம் எண்ணும் பொழுது கண்ணின் நினைவலைகள் புற நிலைகளில் இருந்து அதைக் கவர்கின்றது.

அதே சமயம் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் கிளர்ந்து எழுகின்றது. காற்றிலிருந்து அந்த உணர்வினை நம் உடல் கவர்ந்து தனது ஆன்மாவாக வைத்துக் கொள்கின்றது,

1.தனது ஆன்மாவாக ஆக்க வேண்டும் என்றால் நாம் எண்ணும் எண்ணம் ஊழ் வினையாகப் பதிவாக வேண்டும்.
2.ஊழ் என்பது நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எலும்புக்குள் ஊழாக இது பதிவாக வேண்டும்.
3.அப்படிப் பதிவானால்தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அது நினைவுக்கு வரும்.
4.அந்த உணர்வின் நிலையை நாம் அறிய வேண்டி வரும்.
5.நாம் எண்ணிய உணர்வின் தன்மையைச் சுவாசித்து அந்த உணர்வுக்கொப்ப நம் உயிரின் தன்மை இயங்குகின்றது.

ஆகவே… ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் அந்த உயிருடன் ஒன்றி எண்ண வேண்டும்.

இப்பொழுது யாம் எதை உபதேசிக்கின்றோமோ அதைக் கூர்மையாகக் கவனிப்போர் உணர்வுகளில் ஊழ் வினையாக எலும்புக்குள் பதிவாகிறது. அப்படிப் பதிவாகும் பொழுது நினைவுபடுத்தும் போது அந்த ஆற்றலை நீங்கள் பெற முடியும்.

மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வலைகளை
1.குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நான் எண்ணி… அதை நான் சுவாசித்து
2.அதனை ஊழ்வினையாகப் பதிவு செய்ததை மீண்டும் நினைவு கூர்ந்து விண்ணின் ஆற்றலைப் பெருக்கி சுவாசித்து
3.அந்த உணர்வின் எண்ண ஒலிகளாக இப்போது வெளிப்படுவதை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்கள் என்றால்
4.அந்த உணர்வின் சத்து உங்களுக்குள் ஊழ் வினையாகப் பதிவாகிறது.

உங்களுக்குள் அப்படிப் பதிவாகும் பொழுது மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள் என்றால் எந்த ஞானியின் அருளாற்றல் உங்களுக்குள் பதிவாகின்றதோ அதை நீங்கள் பெற முடியும்.

ஞானிகள் அவர்கள் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் தங்களை அறியாது வந்த தீய வினைகளை அவர்கள் மாற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.
1.அவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி இருளை நீக்கி ஒளியின் தன்மையாக வாழ்ந்தார்களோ
2.அதே உணர்வின் ஆற்றலை நாமும் பெற முடியும்… அதற்குத் தான் இதைத் தெளிவாக்குகிறோம்.