உங்களை எல்லாம் அருள் ஞானியாக ஆக்கும்படி சொன்னார் குருநாதர்

உங்களை எல்லாம் அருள் ஞானியாக ஆக்கும்படி சொன்னார் குருநாதர்

நம் வாழ்க்கையில் நஞ்சான நிலைகள் வேதனை என்ற நிலைகள் வந்தாலும் அதைத் துடைக்க துடைத்திட்ட அருள் ஞானிகளின் உணர்வை நாம் பருக வேண்டும் என்ற இந்த நிலையைத்தான் அன்றைய ஞானிகள் தெளிவுறக் காட்டியுள்ளார்கள்.

1.எந்த உயிர் நம்மை சிருஷ்டித்ததோ அந்த உயிரிடமே வேண்டி
2.என்னை அறியாத பிழைகளை நீக்கி
3.அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று எந்த மனிதன் ஏங்குகின்றானோ
4.அந்த உணர்வின் துணை கொண்டு அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.

நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிரை ஈசனாக மதித்து நடக்க வேண்டும். நாம் எண்ணியது அனைத்தையும் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றது நமது உயிர் என்ற இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான் இராமாயாணம் மகாபாரதம் கந்தபுராணம் என்ற காவியங்களைச் சாதாரண மக்கள் புரிந்து கொள்வதற்குத் தீட்டினர் ஞானிகள்.

நம் முன் சூட்சமத்தில் காற்றலைகளுக்குள் படர்ந்திருக்கும் நிலையும் நாம் எண்ணிய உணர்வுகள் சூட்சமமாக மறைந்திருக்கும் நிலையும் உயிருக்குள் பட்டு “ஓ…” என்று ஜீவனாகின்றது.

அந்த உணர்வின் சத்து “ம்…” என்று நம் சரீரமாகி நம் சரீரத்திற்குள் நின்று நாம் எந்தெந்த குணங்களை எண்ணினோமோ அதனின் சக்தியாக நமக்குள் இயங்குகின்றது.

பின் அதே உணர்வு நமக்குள் இயக்கப்பட்டு அதன் துணை கொண்டு நாம் உயர்ந்த குணங்களை எடுத்தால் உடல் ஆரோக்கிய நிலை பெறுகின்றோம்.

1.ஆனாலும் உயர்ந்த குணங்களை எடுத்துக் கொண்டாலும் வேதனை என்ற உணர்வினை ஒரு துளி எடுத்தாலும்
2.இந்த உடல் அனைத்தும் சோர்வடைந்து நல்ல குணங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

இதையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்காகப் பல காவியங்களை எழுதி மனிதன் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் அதைத் தீமைகளை நீக்கிட முடியும் என்று காட்டினார்கள் ஞானிகள்.

ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. முருகு என்பது மாற்றியமைக்கும் நிலை. முருகா என்பது அழகுபடுத்தும் நிலை.

இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நமக்குள் நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் நிலையாகத்தான் இந்த நிலையைத் தெளிவுற எடுத்து உணர்த்தினார் குருநாதர்.

1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதி என்றார்.
2.அவர்கள் உடலை ஆலயமாக மதி என்றார்.
3.அந்த ஆலயங்களில் அமைந்துள்ள உயர்ந்த குணங்கள் அனைத்தும்
4.மனிதனாக உருவாக்க உதவிய அந்த நற்குணங்களைத் தெய்வமாக மதி என்றார்.

ஒவ்வொரு மனிதனையும் தீமைகளிலிருந்து அகற்றிடவும் மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும் மனித நிலையிலிருந்து விடுபட்டு ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக நிலைத்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “நீ பிரார்த்தனை செய்” என்றார்.

1.உனக்குக் கிடைக்க வேண்டும் என்று எதை நான் பிரார்த்தித்தேனோ
2.எதை உபதேசித்தேனோ
3.அதை நீ எவ்வாறு கூர்ந்து கவனித்தாயோ
4.இந்த உணர்வுகள் உனக்குள் பதிவாகின்றது

அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது நான் கூறிய உணர்வும்… நான் உணர்த்திய உணர்வும் நீ பெறும் தகுதியைப் பெறுகின்றாய்.

“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…”

பிறருடைய தீமைகளை அகற்றி அதன் வழியில் மெய் வழி பெறவேண்டும் என்று ஏங்கி அதனை நீ ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு என்றார்.

நான் உனக்குக் காட்டிய அருள் வழிப்படி அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பருக நீ எண்ணு.

“எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற ஏக்க உணர்வுடன் நீ பெறுவாய் என்றால்
1.எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது.
2.அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியினைப் பெறுகின்றாய்.
3.அது உனக்குள் விளைந்து உன் சொல்லைக் கேட்போர் உடலுக்குள்ளும் விளையும்.

அவ்வாறு விளையச் செய்ய அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை ஆழப் பதியச் செய் என்றார். அவர்களை மீண்டும் நினைவு கொள்ளும்படிச் செய். அவர்கள் நினைவு கொள்ளும் பொழுது அவர்களும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றனர்.

அவர்கள் அறியாது சேர்ந்த தீமைகளிலிருந்து விடுபட
1.நீ கண்டறிந்த உபாயத்தை
2.உனக்கு உணர்த்திய இந்த உணர்வை
3.உணர்த்திய வழியில் நீ கண்டறிந்த அறிவினை
4.எல்லா மக்களுக்கும் உபதேசி என்றார்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படித்தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றேன்.

கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் இந்த அருள் ஞானச் சக்கரம்

கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் இந்த அருள் ஞானச் சக்கரம்

 

ஆயுள் கால மெம்பர்களுக்கு அந்த உண்மையின் உணர்வின் சக்தி பெற கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் அருள் ஞானச் சக்கரம். எமக்கு குருநாதர் முதலிலே அப்படித்தான் கொடுத்தார்.

அதைப் போல அவர் காட்டிய அருள் வழியில்
1.27 நட்சத்திரங்களும்
2.சிவசக்தி விஷ்ணு சக்தி பிரம்ம சக்தி சித்தி விநாயகர் என்ற இந்த உணர்வின் தன்மை இணைத்து
3.அந்த வட்டத்திற்குள் கணங்களுக்கு அதிபதி சித்தி விநாயகர் என்று அதை முறைப்படுத்தியது.

இன்று கம்ப்யூட்டர் நாடாக்களில் எப்படிப் பல விதமான ஆணைகளைப் பதிவு செய்கின்றனரோ அதைப் போன்று தான் அருள் ஒளியின் உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவாக்குகின்றோம். உங்கள் உடலிலும் பதிவாக்கி உள்ளோம்.

1.அந்தச் சக்கரத்தைப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுதெல்லாம்
2.தீமைகளை அகற்றி உங்கள் செயல்களை அது நல்லதாக மாற்றும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் எங்கள் உடலில் படர வேண்டும்… அகஸ்தியரின் உணர்வு எங்களுக்குள் படர வேண்டும்… மெய் ஒளி காணும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று இந்த உணர்வுகளை எடுத்து வலிமை பெறச் செய்து விட்டு…
1.அடுத்து எந்தக் காரியமாக இருந்தாலும் எந்தச் செயலாக இருந்தாலும்
2.அது நல்லதாக அமைய வேண்டும் என்று செயல்படுத்திப் பாருங்கள்.

அதே சமயத்தில் எங்கள் சொல்லும் செயலும் புனிதமாக வேண்டும் என்ற இந்த உணர்வுடன் உங்கள் வாழ்க்கையை வழி நடத்துங்கள். அருள் உணர்வுகளைப் பெறுங்கள்… இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள்.

1.குரு காட்டிய நிலையில் கொண்டு உங்களை ஆயுள் கால மெம்பராக அமைத்து
2.அதன் வழி துருவ நட்சத்திரத்துடன் இனைந்து வாழச் செய்ய
3.கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்வது போன்று இதைப் பதிவு செய்கின்றோம்.

இதன் வழி உங்கள் எண்ணத்தைச் செலுத்துங்கள்… பேரருளைப் பெறுங்கள். இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றுங்கள். நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெறுங்கள்.

எங்கள் சொல்லும் செயலும் இந்த உலகைப் புனிதமாக்கும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அருள் மகரிஷிகள் உணர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் தன்மையை எல்லா இடங்களிலும் பரப்பப்படும் பொழுது இந்த உலகில் வரக்கூடிய தீமைகளிலிருந்து நாமும் மீண்டு மற்றவரையும் மீட்டிட முடியும்.

நாட்டுக்கு நாடு மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் ஊருக்கு ஊர் தெய்வத்திற்குத் தெய்வம் என்று எத்தனையோ பேத உணர்வுகள் இன்று சூழ்ந்து கொண்டுள்ளது.

விஞ்ஞானத்தால் ஏற்படுத்தப்பட்ட கதிரியக்கங்கள் “நியூட்ரான்” என்ற விஷத்தன்மைகளும் பரவிக் கொண்டுள்ளது. இது எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்.

குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று சூழ்ந்திருக்கும் இந்த விஷத் தன்மையிலிருந்து மீண்டு அனைவரையும் மீட்டிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எடுக்கும் போது நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் வலுப் பெறுகிறது.

1.எத்தகைய நஞ்சையும் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றி
2.துருவ நட்சத்திரத்துடன் இணைந்து என்றும் பிறவில்லா நிலை அடைவோம்.

உங்களுக்குத் தெரியாமலே உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றேன்

உங்களுக்குத் தெரியாமலே உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றேன்

கேள்வி:-
ஈஸ்வரபட்டர் உங்களுக்கு எல்லாச் சக்திகளும் கொடுத்தார்… நீங்கள் அதை எல்லாம் பெற்றீர்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கொடுக்கவில்லையே… உபதேசமாகத் தான் சொல்லிக் கொண்டே போகிறீர்கள்…!

யாருக்காவது நீங்கள் கொடுத்து அதைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நாங்களும் ஆர்வமாகச் செய்வோம். இது எங்களுக்குச் சந்தேகமாகவும் ஒரு யோசனையாகவும் இருக்கிறது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் சாமி.

ஞானகுருவின் பதில்:-
நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். “நன்றாகத்தான் இருக்கின்றது…” என்று நான் சொல்லிவிட்டால் மட்டும் போதுமா…?

நல்ல சுவையான சாப்பாடை நான் சாப்பிட்டால்தான் எனக்கு நல்லது. ஆகையினால் போடும் சாப்பாட்டைச் சரியான முறையில் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் அந்த ருசியின் தன்மை தெரியும்

1.இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருந்தது” என்று சொல்கிறார்.
2.எப்படி இருந்தது…? என்று கேட்கும் போது நன்றாக இருந்தது… நன்றாக இருந்தது… என்றே சொன்னால்
3.அது எப்படி நன்றாக இருந்தது…? என்று திரும்பவும் கேட்டால் சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்…!

உதாரணமாக… உடலில் ஒரு இடத்தில் புண்ணாகி விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது நம்மை வேதனைப்படுத்தினாலும் மருந்தைப் போட்டுக் குணப்படுத்த விரும்புகின்றோம்.

ஆனால் அப்போதும் சிறிது வேதனை இருக்கிறது. ஆற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தால் புண்ணுக்கு அந்த மருந்தைப் போட்டுக் கொள்கிறோம்.

ஆனால் மருந்தைப் போட்டுக் கடுகடுப்பாகி விட்டால் என்ன…! இப்படி ஆகி விட்டதே…? என்று மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமா…?

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிலையில் நமக்குள் எத்தனையோ விதமான வேதனைகளைத் தோற்றுவிக்கும்.
1.எத்தனை விதமான வேதனைகளைத் தோற்றுவித்தாலும்
2.அதை மாற்றியமைத்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் அடிக்கடி நுகர்தல் வேண்டும்.

அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது

1.இப்பொழுது என்ன தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுத்தாலும்
2.நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய முறையில்தான் அது இருக்கின்றது.

உங்களுக்குத் தெரியாமலே எவ்வளவோ மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு அது தெரியாது.

ஆனால் அது எப்படி இருக்கிறது…? என்று உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? “ஜீபூம்பா…” வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

அப்படி நடந்ததுதான் முந்திய கால நிலைகள்.
1.எனக்கே சக்தி இருக்கின்றது…
2.சாமி தயவு என்ன வேண்டிக் கிடக்கிறது…? என்று
3.பிய்த்துக் கொண்டு போனவர்கள் தான் பெரும்பகுதியான நிலைகள்.

குருநாதர் மூலம் பெற்ற அரும் பெரும் சக்திகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த அற்புதமான நிலைகளைத் தெரிந்து கொண்டால் “உலகத்திற்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…” என்றும் நினைத்தேன்.

கடைசியில் எல்லோருக்கும் அது ஆசையைத் தூண்டி விடும் நிலையில் தான் முடிந்துவிட்டது. ஆக மொத்தம்
1.ஒருவருக்கு புரியக் கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அடுத்தவர்கள் புரிந்து விடக் கூடாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
3.எல்லாம் தெரிந்த பின் அவர்கள் குருவாகவே மாறி விட்டார்கள்.

நான் கொடுப்பதை விட நீங்கள் எந்த அளவுக்கு அந்தச் சக்திகளை எடுக்கின்றீர்களோ… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிக்கின்றீர்களோ… அதை மற்றவர்களுக்கு அப்படியே பெறச் செய்கிறீர்களோ… அதிலே நீங்கள் இந்தச் சக்திகளைக் காண முடியும்.

குருநாதர் எமக்குச் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் “என்னுடைய ஒரே ஆசை…”

குருநாதர் எமக்குச் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் “என்னுடைய ஒரே ஆசை…”

 

ஒன்றுக்குள் ஒன்று கலந்துள்ள நஞ்சின் தன்மை எதனின் நஞ்சாக அடைகின்றதோ அதனின் நிலையில் நம்மை அடக்கி ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டினார்கள்.

எப்படி…?

விநாயகர் ஆலயத்தில் பார்த்தோமென்றால் இரண்டு பாம்புகளைப் பிணைத்துக் காண்பித்து இருப்பார்கள்.
1.விஷத்தின் தன்மை வரப்படும் பொழுது அது எப்படி ஒடுக்குகின்றது…?
2.ஒரு அணுவின் தன்மை எப்படிப் பிணைந்து கொள்கின்றது…? என்ற தத்துவத்தையும் காட்டி இருக்கின்றார்கள்.

ஆனால் அதில் உள்ள பொருளைக் காணாத நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.

நீங்கள் அனைவரும் அந்த மெய் ஞானிகள் அருள் சக்தி பெற்று இருள் சூழ்ந்த நிலையிலிருந்து மீண்டு
1.சகோதர உணர்வுகளைப் பிரித்தாளும் சக்தியாக வருவதை வெல்லும் சக்தியாக
2.நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள்… உங்கள் மூச்சுலைகள் படர்ந்து
3.இந்த நாட்டிற்குள்ளும் உலகிலும் படர்ந்துள்ள நச்சுத்தன்மைகள் அகல வேண்டும் என்ற நிலைக்குத் தான்
4.குருநாதர் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து ஒளி பெறும் சக்தியாக வளர வேண்டும் என்று வேண்டுகின்றேன்.

உங்களுடைய மூச்சலைகள் இருள் நீக்கிப் பொருள் காணும் அருள் சக்தியாக வளர வேண்டும் என்ற நிலைக்குத்தான் குரு உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

1.கல்வி அறிவில்லாதவனான எனக்கு… மூடனான எனக்குள் இருந்த இருளை நீக்குவதற்கு
2.குருநாதர் கண்டுணர்ந்த பேருண்மைகளை உபதேசித்து என் உணர்வுக்குள் அவர் காட்டிய நிலைகள் கொண்டு
3.கருக்களாக உருப் பெறும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் உபதேசித்த உணர்வு தான்
4.அதற்குள் இருந்து அந்த ஞானத்தின் நிலைகளை நான் நுகர முடிகின்றது… அந்த அலைகளைப் பரப்ப முடிகின்றது.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் இதைப் பின்பற்றிப் பாருங்கள். மனிதன் என்ற தன்னிலை அடைய முடியும்… உங்களால் நிச்சயம் முடியும்… உங்களை நம்புங்கள்.

உயிரை ஈசனாக மதித்துப் பழகுங்கள். உங்கள் உடலை அவன் படைத்த கோவிலாக சிவனாக மதியுங்கள்… ஆலயமாக மதியுங்கள்.

இந்த உடலான ஆலயத்திற்குள் எண்ணிலடங்காத தெய்வங்கள் உண்டு. அந்த உயர்ந்த தெய்வ நிலைகள் அனைத்தையும் சேர்த்து அந்த வலுவின் நிலைகள் கொண்டு வர முடியும்.

குழம்பிற்குள் நாம் பல பொருள்களை இணைத்து அதை ருசியாகக் கொண்டு வருகின்றோம். அதைப் போல்
1.உங்களுக்குள் பலவாறு பல நிலைகள் கொண்ட உணர்வுகள் வந்தாலும் அது அனைத்தையும் அடக்கிட
2.அந்த உணர்வின் தன்மை ஆற்றல் பெற்ற அந்த அகஸ்தியனுடைய அருள் ஒளியை நீங்கள் பருக வேண்டும்.
3.அவன் சமப்படுத்தியது போன்று ஒளியின் தன்மையாக உங்கள் எண்ணங்கள் ஒளியின் சுடராகப் பிரகாசிக்க வேண்டும்.

உங்கள் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் மகிழ்ச்சி தாண்டவமாட வேண்டும். அனைவரும் மகிழ வேண்டும் என்ற இந்த (இச்சை) இச்சா சக்தி தான் என் குரு காட்டிய நிலைகள் கொண்டு அதுவே எனக்குள் கிரியை ஆகி என் உடலுக்குள் இயக்கி அது தான் சொல்லாக வெளி வருகின்றது.

1.இதை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதுதான் என் குருநாதர் ஆசைப்படி எனது ஆசையாக அமைகின்றது.
2.நீங்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
3.நீங்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்
4.உங்களை அறியாது வந்த தீமைகள் அகல வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

நான் எண்ணிய இந்த ஆசையை என் உயிர் எனக்குள் அதைப் படைக்கின்றது.

இதைப் போன்று நீங்களும் ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி வானை நோக்கி ஏகி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குங்கள்.

அதன் வலுக் கொண்டு நீங்கள் பார்ப்போர் அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப் பொருள் கண்டுனரும் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் தீமையை நீக்கிடும் ஆற்றல்மிக்க சக்தியாக உருப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணிச் செயல்படுங்கள்.

1.அப்படிச் செய்தால் அதே உணர்வுகள் உங்களுக்குள்ளும் விளைந்து
2.அதனின் உணர்வாக உங்கள் உயிர் உங்களை ஆண்டு
3.அதனின் உணர்வின் ஒளியாக உங்களுக்குள் சேர்த்து
4.இந்த உடலை ஒளிச் சரீரமாக… உங்களை ஆண்டு கொண்டிருக்கும் உயிர் அதைச் செயல்படுத்துவான்,

நம் எண்ணத்தால் அகண்ட அண்டத்தையும் அளந்தறிய முடியும்

நம் எண்ணத்தால் அகண்ட அண்டத்தையும் அளந்தறிய முடியும்

 

நாம் இந்தச் சூரிய குடும்பத்தில் தான் வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம். இங்கிருந்து ராக்கெட்டிலே நாம் மற்ற கோள்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் எவ்வளவு காலம் ஆகின்றது…?

1.எண்ணத்தின் மனோ நிலை ஆனாலும்
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் எண்ணும் பொழுது உடனடியாக அங்கே டச் (TOUCH) ஆகும்.

குருநாதர் 2000 சூரியக் குடும்பங்களுக்கும் மனதைப் பாய்ச்சும் படி செய்கின்றார். அங்கே மனதைப் பாய்ச்சப்படும் பொழுது
1.ஒவ்வொரு சூரியக் குடும்பமும் என்ன செய்கின்றது…?
2.அதிலே ஒதுங்கிய தூசிகள் என்ன செய்கின்றது…?
3.ஒன்றுடன் தொடர்பு கொண்டு ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து எப்படி வாழுகின்றது…? என்பதை உணர முடிகிறது.

மரம் செடி கொடிகள் இருந்தாலும் எதுவும் தனித்து வாழ முடியாது. ஒரு செடி உருவானாலும் அதனுடன் இணை சேர்த்த தாவரங்கள் மறைந்தால் இதற்குச் சத்து குறைந்து விடும்… இதுவும் வீழ்ச்சியடையும்.

சில தாவர இனங்களுடைய சத்துகள் கலந்து புதுப் புதுச் செடிகள் உருவாகி இருக்கும். அப்படிக் கலந்த செடிகளின் இனங்கள் மறைந்து விட்டால்… இந்தச் செடி சிறிது காலம் தான் வளரும்.

1.காரணம் அந்தச் சத்து தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தால் இதுவும் வளரும்… அது இல்லை என்றால் மடியும்.
2.இதையெல்லாம் குருநாதர் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்.

காட்டுப் பகுதிக்குள் எம்மை அழைத்துச் சென்று காடுகளில் தாவரங்கள் எப்படி வளர்கின்றது…? மடிகின்றது…? இதை போன்ற உணர்வுகளைத் தெளிவாகக் காட்டிக் காட்டி மனிதன் எப்படி வாழ வேண்டும்…? என்று உணர்த்துகிறார்.

மனிதன் சிறிது காலம் வாழ்ந்த பின் அவனுடைய கடந்த கால உணர்வுகள் அழிந்து விடுகின்றது… ஆனாலும் கல் மண் இவைகளில் அது பதிவாகின்றது.

மனிதன் எல்லாவற்றையும் கலந்து சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப வரப்படும் பொழுது பதிவாகிறது. அவ்வாறு பதிவான கடந்த கால மனிதனுடைய உணர்வுகளை மறுபடியும் அதை ஆயிரம் மடங்கு பெருக்கினால் இந்த உணர்வின் அதிர்வும் அவருடைய உருவத்தையும் புகைப்படமாக எடுக்க முடியும்.

கம்ப்யூட்டர் என்ற எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம்
1.ஆஸ்பத்திரி கேட் மேலே தாவி ஒருவன் தப்பிச் சென்றான் என்று அதிலே பதிவான உணர்வு கொண்டு கண்டுபிடித்து
2.அவனுக்கு ஒரு கண் இல்லை (ஓற்றைக் கண் சிவராசன்) என்று உணர்வின் ஒலி அதிர்வுகளை எடுத்து
3.இந்த உணர்வின் அதிர்வுகளைக் கூட்டப்படும் பொழுது அவனுடைய ரூபத்தைக் காட்டுகின்றது… விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.

அதே விஞ்ஞான அறிவு கொண்டு 1500 வருடம் மனிதன் வாழலாம் என்று இதையும் சொல்கின்றார்கள்.

1.ஆனால் அத்தகைய பிழைகள் வந்து வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
2.வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தவறு என்று தெரிகின்றதோ அந்தத் தவறு விளையாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
4.இந்த வாழ்க்கையில் வரும் நிலைகளை தணித்து அருள் உணர்வுகளைப் பெருக்க முடியும்.

இது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

1.நான் சும்மா உங்களிடம் கொடுக்கவில்லை…
2.குருநாதர் எமக்குச் சும்மா கொடுக்கவில்லை.
3.இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவானால்… அந்த நினைவின் தன்மை கொண்டு தான் அதை எடுக்க முடியும்.

ஆனால் இந்த உடலின் இச்சைக்கு வாழக் கற்றுக் கொண்டால்… உடலை வளர்க்கவும் கௌரவத்தை வளர்க்கவும்… “அதை வைத்து என்னை மெச்சிக் கொள்ள வாழ வேண்டும் என்று எண்ணினால்” இந்த உடலுக்காகத் தான் நாம் வாழ முடியும். அப்போது குருநாதர் கொடுத்த சக்திகள் பயனற்றதாக ஆகிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் உடலின் இச்சைக்குச் செல்லாதபடி எல்லோருக்கும் இந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று அந்த ஆசையைத் தூண்டுதல் வேண்டும்.

நீங்கள் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நான் முதலிலே பெறுகின்றேன். உங்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் பெறுகின்றேன்.

அதைத்தான் குருநாதர் எமக்குள் உருவாக்கினார்.

1.இந்தப் பேருண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி…
2.அந்தப் பதிவின் நினைவை உங்களுக்குள் வளர்ப்பதற்குத் தான் இதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
3.வாழ்க்கையையே ஒவ்வொரு நொடிப்பொழுதும் தியானமாக அமைக்க வேண்டும் என்று சொல்கின்றோம்.

இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”

இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”

 

குருநாதர் எம்மைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது…? உயிரணுக்கள் உயிரினங்கள் எவ்வாறு விளைகின்றது…? கோள்கள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு வளர்கின்றது…? என்ற நிலையைச் சாப்பாடு இல்லாதபடி காட்டிலே அமர்த்தி அதை எல்லாம் அறியும்படி செய்தார்.

விஞ்ஞானிகள் இயந்திரத்தின் துணை கொண்டு பல நிலைகளைக் கண்டு கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் முழுமையும் அவர்கள் காணவில்லை.

அன்று மெய் ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு
1.நம் குருநாதரும் அதை அறிந்து… அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச் செய்கின்றார்.
2.பதிந்த உணர்வினை நினைவு கொண்டு நான் விண்ணை நோக்கும் பொழுது விண்வெளியில் நடக்கும் அதிசயங்களை உணரும்படி செய்கின்றார்.
3.சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச் செய்கின்றார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு ரூபத்திலும் அவர் பதிய வைத்த உணர்வை… ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது இதை உணர்த்தி
2.அவரே தான் இந்த உடலை வழி நடத்துகின்றார்… ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!

நாடாக்களில் பதிவு செய்தது போன்று அவர் உணர்வுகள் எனக்குள் பதிவானது…!

1.அதை நான் எண்ணும் போது அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு
2.அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று அவர் செய்த உணர்வைத் தான் நான் செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னை இவ்வாறு செயல்படுத்த வைக்கின்றது.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். அவர் காட்டிய அருள் வழியில் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்வோம். இந்த உடல் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரையும் மகிழச் செய்வோம். மகிழ்ந்த உணர்வுடனே வாழ்வோம்.

1.என்றும் பேரானந்த நிலை பெற்ற அந்த மகரிஷிகளுடன் ஒன்றி வாழ்வோம்
2.அவர்களுடன் ஒன்றி வாழும் நிலையை உருவாக்குவோம்… அவர்களுடனே வாழ்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

உங்களிடம் இதற்கு முன்பு படிப்படியாகச் சிறுகச் சிறுக சொல்லிக் கொண்டு வந்தேன்… இப்பொழுது விளக்க உரைகளைக் கொடுக்கின்றேன். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான கால நேரம் இல்லை.

1.குருநாதர் பதிவு செய்தது எண்ணிலடங்காதது.
2.அனைத்தையும் நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.

அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். அதை எல்லோரும் நீங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் அவ்வப்போது துணுக்குத் துணுக்காகக் கொடுத்து அந்த நினைவுகளை உங்களுக்குள் ஊட்டுகின்றோம்.

1.அவ்வாறு ஊட்டி உங்கள் உணர்வை ஒளியாக்கி அதனை எண்ணமாக்கி
2.உங்களுக்குள் இயக்கும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்.

எமது ஆசியைத் தாள் பணிந்து நீங்கள் பெறுவதல்ல… கண் கொண்டு நேர்முகமாகப் பார்த்துக் கவர வேண்டியதே அது…!

எமது ஆசியைத் தாள் பணிந்து நீங்கள் பெறுவதல்ல… கண் கொண்டு நேர்முகமாகப் பார்த்துக் கவர வேண்டியதே அது…!

 

தீமையை விளைவிக்கும் சக்திகள் உங்களை அடிபணியும் நிலையாக உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்றே ஆசீர்வதிக்கின்றேன்.

உங்கள் தாய் தந்தையரைத் தாள் பணிந்து அவருடைய அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.என்றைக்கும் உங்களுக்குக் குரு அவர்களே தெய்வமும் அவர்களே தாயின் உயிரே கடவுள்
2.ஒருக்கிணைந்து அவர்களை அடிபணிந்தால் உங்களுக்கு வழிகாட்டிய உணர்வின் தன்மை அவர்கள் சொல்லும் வாக்கை நாம் ஏற்றிடும் நிலையும்
3.நம்மைக் காத்திடும் உணர்வுகள் பதிவு செய்தது ஓங்கி வளர்ந்து தீமைகளை அடிபணியச் செய்து
4.மெய் உணர்வைப் பெறும் தகுதியாக நாம் உருவாக்க வேண்டும்.

குருவிடம் கேட்பதெல்லாம்… உபதேசித்த உணர்வுகள் எனக்குள் ஓங்கி வளர்ந்து என்னை அறியாது இருள் சூழ்ந்த நிலைகளுக்கு அழைத்துச் செல்லும் அந்தத் தீமைகள் அடிபணிந்து
1.மெய் உணர்வைக் காணும் நிலையாகக் குரு அருள் பெற வேண்டும் என்று கண்ணைத் திறந்து
2.நான் ஆசி கொடுக்கும் போது நீங்கள் என்னை நேர்முகமாகப் பார்ப்பதுதான் முறை.

கொடுக்கும் அருள் வாக்கின் நிலையை “நேரடியாகக் கண்கொண்டு பார்த்தால்…” கண்ணின் காந்தப் புலன் என்னைப் படம் எடுத்தாலும் கண்ணின் கருவிழி அதனுடன் இணைந்த காந்தப்புலன் யாம் வெளிப்படுத்தும் அலைகளைக் கவர்ந்து உங்களுக்குள் சுவாசிக்கச் செய்து அருள் மகரிஷிகளின் சக்தியைப் பெறச் செய்யும்.

இந்த முறைப்படி தான் நீங்கள் ஆசி பெற வேண்டும்.

ஆனால் பெரியவரை நாம் வணங்காது எப்படி இருப்பது…? என்ற தவறான வழிகள் காட்டப்பட்டதை விடாது பிடித்துக் கொண்டுள்ளார்கள். பாத நமஸ்காரம் செய்யத் தான் வருகிறார்கள். அதை விடுத்துவிடுங்கள்.

யாம் உபதேசம் கொடுக்கும் பொழுதெல்லாம்
1.யாம் கொடுக்கும் அந்த அருள் சக்திகளை
2.கண் கொண்டு பாய்ச்சும் உணர்வலைகளை
3.உபதேச வாயிலாகச் சொல்லாகச் சொல்வதை நீங்கள் உற்று நோக்கி
4.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
5.கூர்ந்து கவனித்து எடுத்தால் தான் அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

ஆகவே தயவு செய்து அதன் வழி செயல்படுத்துங்கள்.

யாம் கொடுக்கும் வாக்குகள் அந்தச் சக்தி வாய்ந்த எண்ண வித்தாக விளைந்து… உங்கள் எண்ணத்தால் தீமைகளை அகற்றி… உங்களுக்குள் நன்மை பெறும் நிலையும்… அருள் ஞானம் பெறும் தகுதியையும் பெறுகின்றீர்கள்.

அந்தத் தகுதியை நீங்கள் இழந்து விடக்கூடாது என்பதற்குத் தான் படிப்படியாகச் சொல்கின்றேன்.

உபதேசிக்கும்போது அதை ஏங்கிப் பெற வேண்டும் என்ற நினைவுடன் வரும் பொழுது தான்
1.என்னுடைய ஆசீர்வாதம் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்து உயர்ந்த ஆற்றலாகப் பெருகும்
2.மறவாது நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று பிராத்தித்துக் கொள்கின்றேன்.

நேரடியாகக் கொடுப்பதைக் காட்டிலும் மறைமுகமாகத் தான் உங்களுக்கு நிறையச் சக்தி கொடுக்கின்றோம்

நேரடியாகக் கொடுப்பதைக் காட்டிலும் மறைமுகமாகத் தான் உங்களுக்கு நிறையச் சக்தி கொடுக்கின்றோம்

 

வாழ்க்கையில் சங்கடம் வருகின்றது… சங்கடம் வந்தாலும் பரவாயில்லை…! பின் வேதனையும் வருகின்றது. வேதனை வந்தால் விஷமாக மாறுகிறது… சம்பாதித்த பணம் எல்லாம் விரயமாகத் தொடங்குகிறது.

பதார்த்தங்களை எல்லாம் சுவையாகச் செய்தாலும் அதிலே சிறிதளவு விஷம் பட்டுவிட்டால் அதனுடைய ருசியை… சத்தை எல்லாவற்றையும் கவர்ந்து கொள்கின்றது… அதற்கு வலு கூடி விடுகிறது.

அந்த விஷத்தை நாம் மாற்ற வேண்டும் அல்லவா.

1.போகர் தன்னுடைய ஏழ்மையிலே எடுத்துக் கொண்டது… ஏக்க உணர்வுக்குள் சிக்கியது… உண்மையை அறிய முடிந்தது.
2.அவர் பெற்ற ஒவ்வொரு சக்தியும் அவருடைய சந்தர்ப்பம் தான்.
3.இராமலிங்க அடிகள் சக்தி பெற்றதும் சந்தர்ப்பம் தான்.
4.எந்த ஞானியும் தெரிந்து எடுக்கவில்லை.

அந்த ஞானிகளுக்கு ஏற்பட்ட சந்தர்ப்பத்தைப் போன்று தான் உங்களுக்கும் இப்பொழுது ஊட்டுகின்றோம்.

ஏதாவது கஷ்டம் என்று வந்து விட்டதா…? அந்தச் சமயத்தில் அதை விட்டுவிட்டு ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தச் சந்தர்ப்பத்தை மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வலுவைக் கூட்டினால் அது மாறும்.

சங்கடத்திலேயே இருந்தால் விஷம் கலந்து விட்டால் நல்ல எண்ணம் எது இருந்தாலும் அது அதற்குள் சிக்கிவிடும்.

அதை நீங்கள் மாற்றை அமைப்பதற்குத்தான்
1.யாம் 12 வருட காலம் காடு மேடெல்லாம் உருட்டி உருட்டி உருட்டி உருட்டி
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி என்ற வாக்கை உங்களுக்குக் கொடுப்பதற்கு அதைப் பெற்றது.

ஆரம்பத்தில் இதை யாருக்கும் பயன்படுத்தவில்லை. பின் இந்த வாக்கினைக் கொடுத்து அந்தச் சத்தினை ஏற்றிக் கொடுக்கும் பொழுது தான்… உங்களுக்கு அந்தப் பவர் எடுக்கும். எத்தனையோ வகையான நிலைகளுக்கு அது எடுக்கும்.

ஆத்ம சக்தி என்ற அந்த ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்த பின்பு தான் “எல்லாவற்றையும் அள்ளி வீசுகின்றோம்…” ஞானிகளைப் பற்றி அதிகமாக உங்களுக்கு எடுத்துரைப்பது.

1.சில நேரங்களில் உபதேசம் கொடுக்கும் பொழுது அதிலே யாம் சிலதை மறைப்பது உண்டு. எப்படி இருந்தாலும் மறைத்துவிடுவேன்.
2.ஒரு சமயம் நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என் நிலையே மாறிவிட்டது.
3.ஏதோ சில ரகசியத்தைச் சொல்லி விட்டேன் போல் தெரிகிறது. பேசும் பொழுது தன் நிலை இல்லை.

வெஜிடபிள் பிரியாணி போட்டது போன்று பேசுகிறார் என்று என் வாயிலிருந்தே பேச வைக்கிறார் குருநாதர். உபதேசம் சொல்லிக் கடைசியில் முடிக்கப்படும் பொழுது வந்துவிட்டது.

என்னென்னமோ சொல்கிறேன்…! அது ரொம்பவும் முக்கியமானது…! அதை மாற்றுவதற்கு என்னென்னமோ போட்டுத் திருப்பி விட்டேன்…!
1.தாராளமாகச் சொல்லலாம் எது வேண்டும் என்றாலும் சொல்லலாம்.
2.ஆனால் இந்த முக்கியத்துவத்தைக் கொண்டு அதைப் பதிவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெறும் சொல்லாக யாம் சொல்லவில்லை… அது மிக உயர்ந்த சக்தி

வெறும் சொல்லாக யாம் சொல்லவில்லை… அது மிக உயர்ந்த சக்தி

 

யாம் உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து வந்து சாமி…! என் உடம்புக்குச் சரியில்லை என்று ஒருவர் கேட்டால் எப்படி இருக்கும்…? வெளியில் வேலைகள் எப்படி நடக்கிறது…? என்று பார்த்து வரலாம் என்று யாம் சுற்றிப் பார்க்கும் பொழுது அங்கே வந்து என்னிடம் இடைமறித்து “என் கஷ்டம் போக வேண்டும் என்று நீங்கள் கேட்டால் எப்படி இருக்கும்…?”

சாதாரணமாக… ஒருவர் தன் கஷ்டத்தை உங்களிடம் சொல்கிறார் என்றாலே அதைக் கேட்கும் பொழுது உங்களால் சமாளிக்க முடியவில்லை… அந்தக் கஷ்டம் உங்களுக்கு வந்து விடுகின்றது.

1.ஆனால் எத்தனையோ பேர் எம்மைச் சந்தித்து கஷ்டம்… கஷ்டம்… என்று சொல்லி
2.அதையெல்லாம் நான் காதில் கேட்டால் எப்படி இருக்கும்…?
3.நான் உங்களைக் கவனிக்க வேண்டும்… நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.

அதற்கப்புறம் அதை நான் உணர வேண்டும். பின் உங்கள் தீமை நீங்க வேண்டும் உங்கள் கஷ்டம் நீங்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டும்.

நீங்கள் சொல்லும் கஷ்டமான உணர்வையெல்லாம் எனக்குள் இயக்காமல் அதை நீக்கித் தூய்மைப்படுத்தி விட்டு உங்களுக்கு நல்ல வாக்காகக் கொடுக்க வேண்டும் என்றால் நான் எத்தனையோ சிரமப்பட வேண்டி வரும்…?

1.நீங்கள் சொல்லும் கஷ்டத்தை எல்லாம் எனக்குள் வராது
2.அதைச் சமாளிக்கக் கூடிய அந்தச் சக்தி இருந்தால்தான் உங்களுக்கு நல்ல வாக்கையே நான் கொடுக்க முடியும்.

அந்த உயர்ந்த சக்தி வாய்ந்த வித்தை யாம் உங்களுக்குக் கொடுக்கும் பொழுது நீங்கள் அதை விளைய வைத்தால் உங்களுக்கு அந்தப் பலன் கிடைக்கும்.

இல்லாமல் போனால் என்னுடைய சொல் வெறும் சொல்லாகத்தான் இருக்கும்.

ஞானிகளும் மகரிஷிகளும் நம்மைப் போன்று மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தான். வாழ்க்கையில் வந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உயர்ந்த எண்ணங்களை எடுத்து அந்தக் கெட்டதை எல்லாம் பஸ்பம் ஆக்கியவர்கள்.

1.தன் உடலுக்குள் வந்த நோய்களை மாற்றி மெய் ஞானத்தின் தன்மை வளர்த்து
2.தன் உடலில் இருக்கும் உணர்வுகளை ஒளியாக மாற்றி
3.தன் உடலில் இந்த வாழ்க்கையில் வந்த அனைத்தையுமே புடம் போட்டு அதை மாற்றி உயிரணுவோடு சேர்த்து உயிருடன் சேர்த்து
4.உயிராத்மாவை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதற்குப் பின்னாடி வந்தவர்கள் அவர் உடலில் விளைய வைத்த அந்த உணர்வின் சக்தியை எடுத்து அதைச் சுவாசித்து தன் உடலில் வந்த கஷ்டங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து அதைப் புடம் போட்டு சங்கடத்தையும் சலிப்பையும் மாற்றிவிட்டு தன் உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாகச் சென்றிருக்கின்றார்கள்.

தனக்குள் வந்த துன்பத்தையெல்லாம் மாற்றி விண் செல்ல வேண்டும் என்ற நிலைகள் கொண்டு அங்கே சென்றார்கள். அவர்கள் மனிதனாக இருக்கும் பொழுது வெளிப்பட்ட அந்த உயர்ந்த சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியிலும் பரவச் செய்துள்ளது.

விண்ணிலே அவர்கள் இன்று சப்தரிஷி மண்டலங்களாக இருந்தாலும் அதிலிருந்து வெளிப்படும் ஒளி உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றவர்கள் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக இருக்கின்றார்கள்.
1.பூமி சுற்றுகிறது என்றால் வட துருவத்தில் இருக்கும் பொழுது
2.சப்தரிஷி மண்டலம் வானிலே தெரியும் போது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசமாகத் தெரியும்.

இரவில் இன்று ஏழு மணிக்கு நாம் இருக்கும் இடத்தில் சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்க முடிகிறது என்றால் அதே ஏழு மணி அளவில் ஒரு வாரம் கழித்து மற்ற இடங்களில் மாறி வரும் பொழுது அங்கே தெரியும். அந்த ஒரு வார வித்தியாசத்தில் அங்கே அதே நேரத்தில் பார்க்க முடியும்.

துருவ நட்சத்திரம் இருந்த இடத்திலேயே இருக்கும். அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தின் ஒளியான உணர்வுகள் அனைத்தும் இப்படி பூமியைச் சுழன்று கொண்டு வருகின்றது.

ஆனால் சூரியனுடைய வெப்ப காந்தம் அதிலிருந்து வரும் சக்திகளைக் கவர்ந்து நம் பூமிக்குள் இங்கே நமக்கு முன் கொண்டு வருகின்றது… பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கின்றது.

1.அந்தச் சக்தியைத் தான் குருநாதர் எம்மை எடுக்கும்படி செய்தார்.
2.அதை எடுத்துத் தான் தீமைகளை மாற்றி உணர்வுகளை ஒளியாக மாற்றுகின்றேன்.
3.அதிலே விளைந்த அதே வித்தைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாக வாக்காக ஊன்றுகின்றேன்.
4.அதை வளர்த்துக் கொண்டால் அவர்கள் சென்றடைந்த எல்லையை நீங்களும் அடைய முடியும்.

எமது உபதேசங்களை அடிக்கடி கேட்க வேண்டும்… நூல்களையும் படிக்க வேண்டும்

எமது உபதேசங்களை அடிக்கடி கேட்க வேண்டும்… நூல்களையும் படிக்க வேண்டும்

 

வக்கீல்கள் எல்லாம் சட்டத்தைப் படித்து விடுவார்கள். ஆனால் அவரிடம் ஏராளமான நூல்கள் இருக்கும். கால நிலை வரும் பொழுது அதனுடைய உணர்வுக்கொப்பப் படித்துக் கொண்டே இருப்பார்கள்.

அதைப் போல நமது குருநாதர் கொடுத்த நூல்களைப் படித்துக் கொள்ளுங்கள். அதைப் படிக்கப்படும் பொழுது நினைவாற்றலைக் கூட்டிப் பகைமைகளைப் புகவிடாது உங்களின் வலிமை கொண்டு பகைமைகளை மாற்றியமைத்து விடலாம்.

1.அதே சமயத்தில் நூல்களைப் படித்து விட்டோம்… தெரிந்து கொண்டோம் என்பதைக் காட்டிலும்
2.“அந்தந்தக் காலங்களில்” புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.
3.நாம் அனைவரும் என்றுமே பேரருளுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

துரித நிலை கொண்டு உங்களை உருவாக்க வேண்டும் என்று தான் இதைச் செய்வது. நீங்கள் அருள் வழியில் தயாரானால் அனைவரையும் காக்கும் நிலை வருகின்றது.

ஒரு நெல்லை வைத்துப் பல நெல் என்று சொல்லிக் கொண்டு சமைக்கலாம் என்றால் அது முடியாது. ஒரு நெல்லைப் பல நெல்லாக உருவாக்குதல் வேண்டும். அதனைப் பெறச் செய்ய எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது.

உங்கள் உயிரான ஈசனை நேசியுங்கள்.
1.உயர்ந்த குணங்களை உங்களுக்குள் எடுக்கும் பொழுது உங்கள் உயிரான குரு மெச்சுகின்றது.
2.அதே சமயத்தில் உயர்ந்த குணங்களை எண்ணும் பொழுது அதுவே குருவாக இருந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் உருவாக்கி மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது “அதுவே குருவாகி” நம்மைத் தெளிவாக்கும் தன்மை பெறுகின்றது.

சாமி நன்றாகப் பேசுகின்றார்… எங்கள் சாமிக்கு எல்லாம் தெரியும்…! என்று சொல்லி அப்படி விட்டு விடக்கூடாது. யாம் எல்லாம் தெரிந்து கொள்ளவில்லை.
1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலேதான் இருக்கின்றோம்.
2.நீங்கள் அனைவரும் இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலேதான் யாம் இருக்கின்றோம்.

அந்த ஆசையினால் காலத்தையும் அறிந்து அந்தப் பருவம் கண்டு உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். ஆகவே இதைப் போன்று நீங்கள் உங்கள் குடும்பத்திலும் இந்தப் பதிவினை ஏற்படுத்துங்கள். பற்றுடன் வாழும் பண்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உபதேசிக்கும் சொற்களை ஏற்கும் பருவம் நமக்கு வரவேண்டும். முதலில் கடினமாக இருக்கும். கால நிலைகளுக்கொப்பச் சொல்லி விட்டால் சிறிது சிந்திக்கச் செய்யும்…! “கேட்க வேண்டும்” என்ற உணர்வுகளை ஊட்டும்.

ஆகையால் நாம் ஒவ்வொருவரும் உயிரை ஈசனாக மதித்து உடலை அவன் வீற்றிருக்கும் ஆலயமாக மதித்து அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்த தபோவனத்தில் வெளியிடப்பட்டுள்ள அருள் ஞானப் புத்தகங்களைத் தனித்த நிலைகளில் படியுங்கள். கூட்டமைப்புடன் இருந்து அந்த அலைகளைப் பாய்ச்சுங்கள்.

குடும்பத்திற்குள் இணைந்து வாழும் நிலைகளை உருவாக்குதல் வேண்டும். இது தான் மனித நேயம் என்பது. ஆன்ம நேயத்தை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

1.உங்களுடைய செயலாக்கங்களைப் பார்த்து நானும் இணைய வேண்டும் என்ற உணர்வை ஊட்டி இணைத்தால் அது நலம் பெறும்.
2.ஆகவே நம்முடைய ஆர்வத்தை இதிலே தான் கூட்ட வேண்டும்.
3.ஆன்ம ஞானத்தைக் கொண்டு நமக்குள் ஒன்றி வாழும் உணர்வுகள் வரவேண்டும்.
கேட்போர் உணர்வுகளில் அருள் ஞான உணர்ச்சிகளை ஊட்டும் உணர்வுகளை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

இயற்கையின் உண்மையின் உணர்வினை அறிய வேண்டும் என்பதற்காக இந்த நூல்களைக் காலப் பருவம் அறிந்து அமைதி கொண்ட நேரத்தில் படித்துக் குடும்பத்தினரைக் கேட்க வையுங்கள்.

குழந்தைகளுக்கும் இதைச் சொல்லுங்கள். தாய் தந்தையருக்குப் படிப்பறிவு இல்லை என்றால் படித்துச் சொல்லுங்கள் கேட்க மறுக்கும் பொழுது படிக்க வேண்டாம். ஏற்புடைய உணர்வு வரும் பொழுது படிக்க வேண்டும்.

இதன் வழியில் தான் அருள் ஞானத்தை வளர்க்க முடியும். ஆர்வத்தின் தன்மை கூட்டும் பொழுது வேகம் கூட்டலாம்.

கண்ணாடி போன்றது ஆத்மா. அதில் எழுத்துக்களைப் பதிக்க வேண்டும் என்றால் சிதையாது பாதுகாக்க வேண்டும். ஆன்மாவிற்குள் இதன் உணர்வுகள் அழுத்தத்தின் தன்மை அதிகமாகி விட்டால் ஆன்மா சிதைந்து வெறுப்பின் தன்மை பெருத்துவிடும். பதியும் தன்மை இழந்து விடுகின்றது.

1.இதையெல்லாம் தெரிந்து அமைதி கொண்டு அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்.
2.உங்கள் வாழ்க்கையில் உங்கள் அனுபவம் பெரிதாகின்றது.
3.அருள் ஞானத்தைப் பெருக்கும் அனுபவமாக மாறுகின்றது.

அருள் வாழ்க்கை வாழும் தன்மை வருகின்றது, இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து இருளை அகற்றிப் பொருள் காணும் நிலைகளை நாம் பெறுகின்றோம்.

குரு வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற நாம் தியானிப்போம்.