
குரு (ஈஸ்வரபட்டர்) உணர்வு உங்களை இயக்கி” மகிழ்ச்சியை ஊட்டும்
ஒருவன் கடுமையான பாவத்தைச் செய்வதை உற்றுப் பார்த்தாலே அவனுக்குள் விளைந்த அந்த வினைகள்… கூர்ந்து கவனிக்கும் போது அந்தப் பாவ வினைகளே நமக்குள் விளைந்து விடுகின்றது.
ஒருவன் சாபமிடுவதைக் கூர்ந்து கவனித்தால் அவனிட்ட சாப வினைகள் எதை அழிக்க வேண்டும் என்று எண்ணினானோ அதே உணர்வு நமக்குள் புகுந்து நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.
1.சாபமிட்டோருக்கும் அதே நிலை… கேட்டோருக்கும் அதே நிலை
2.இது போன்ற தீமைகள் நமக்குள் தாக்காது தீய வினைகள் சாப வினைகள் நமக்குள் சேர்ந்திடாது
3.விண்ணின் ஆற்றலைக் கவர்ந்து அதைத் தடைப்படுத்துதல் வேண்டும்.
அதற்கே குருநாதர் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு இத்தகைய அருள் உணர்வுகளைப் போதித்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது உள் புகும் தீமைகள் அனைத்தையும் அகற்றும்படியாக வழி காட்டுகின்றார்.
தீய வினைகளை அகற்றி என்று மகிழ்ச்சியான சொல்களை நீங்கள் சொல்கின்றீர்களோ அப்போது எமது குருநாதரை உங்களில் நான் (ஞானகுரு) காணுகின்றேன். தீமைகளை அகற்றி என்று மகிழ்ச்சியுடன் நீங்கள் எம்மைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுது என் குருவை உங்களிடம் நான் பார்க்கின்றேன்.
தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு விண்ணுலகில் மகரிஷிகள் சஞ்சரித்துக் கொண்டிருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்பட்ட ஒளியான அணுக்கள் இங்கே வந்து கொண்டுள்ளது.
குருநாதர் காட்டிய அருள் நெறி கொண்டு அதைத் தான் உங்களை இப்போது பெறும்படி செய்து கொண்டுள்ளோம். அதை நீங்கள் சுவாசிக்கப்படும் போது
1.அந்தச் சப்தரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கி
2.உங்களை அறியாத வந்த பாவ வினைகள் நீங்கி தீயவினைகள் நீங்கி சாப வினைள் நீங்கி
3.உங்களில் மகிழ்ச்சி பெறும் நிலைகளில் அது இருந்தால்
4.எமது குருநாதன் அந்த உணர்வின் இயக்கமாக உங்களுக்குள் இயக்கி
5.தீமைகளை மாய்த்து… மெய் வழி காணும் உணர்வாக மலர்ந்த முகத்துடன் உங்களைக் காண வைக்கின்றார்.
மகிழ்ச்சியுடன் அதை நான் காணும் நிலையாக வருதல் வேண்டும்.
உங்கள் உயிரான ஈசனை மதித்து… அன்னை தந்தையின் உயிரை ஈசனாக மதித்து… அவர்களைத் தெய்வமாக மதித்து அவர்களைக் குருவாகவும் மதித்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் வழிபடுத்திக் கொள்ளுங்கள்…!
எத்தகைய சந்தர்ப்பத்திலும்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி… அதைப் பற்றுடன் பற்றிக் கொண்டால் வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றிடாது (பற்றற்றதாக) செயல்படுத்த முடியும்.
ஆகவே… மறவாதீர்கள்…!
1.ஒவ்வொரு நாளும் கொடுக்கக்கூடிய உபதேசங்களை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி
2.வீட்டிலிருந்தே தியானித்து அந்த அருள் சக்திகளை நீங்கள் பெற முடியும்.
3.அந்த்த் தகுதியை நீங்கள் பெற வேண்டும் என்று என் குருநாதரைப் பிரார்த்திக்கிறேன்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.