சக்தி பெற்றால் இறுமாப்பு தான் வருகிறது…!

சக்தி பெற்றால் இறுமாப்பு தான் வருகிறது…!

 

பல வித்தைகளையும் பல சக்திகளையும் குருநாதர் காட்டினாலும் அந்தச் சக்திகளின் துணை கொண்டு எனக்குள் (ஞானகுரு) இறுமாப்பு அதிகமாக விளைகின்றது.

எதையெதையோ எப்படி எப்படியோ செய்யலாம் என்ற பல சக்திகளையும் உணர்த்துகின்றார் அது வந்த உடனே எனக்குள் இறுமாப்பும் வருகின்றது

இறுமாப்பு வரப்படும் பொழுது சில மந்திரவாதிகளைப் போய் அணுகுவது… அவர்களைச் செயலற்றதாக ஆக்குவது. அப்போது அவர்கள் பதிலுக்கு வன்மம் கொண்டு சில நிலைகளைச் செயல்படுத்துவார்கள்

மந்திரவாதிகளுக்குள் ஒருவருக்கொருவர் இந்த மாதிரிப் பழக்கம் உண்டு.

தனக்குள் மந்திரம் இருக்கிறது என்றால் அடுத்தவனை என்னவென்று சுண்டிப் பார்ப்பது… அதே மாதிரித் தான் என் புத்தியும் செயல்பட்டது. ஏனென்றால்
1.மனித வாழ்க்கையில் வந்ததால் குருநாதர்ர் சக்தி கொடுத்திருக்கிறார் என்றாலும்
2.இவன் என்ன பெரியவனா…? என்ற நிலைகள் அகந்தை கொண்டு செயல்படும் உணர்வே எனக்குள் தோற்றுவித்தது.

ஆனால் மாமகரிஷிகள் உணர்த்தியதோ… நமக்குள் செயல்படும் உணர்வின் இயக்கங்களைக் கண்டறிவதற்காகத் தான். அதாவது எத்தகைய வலு இருந்தாலும்… எண்ணத்தின் வலு கொண்டு வரப்படும் பொழுது நம் எண்ணம் தீமைக்கு எப்படி அழைத்துச் செல்கின்றது…? என்பது தான்…!

குருநாதர் எனக்கு உயர்ந்த சக்தியைக் கொடுத்திருந்தாலும்
1.அகந்தை ஓங்கப்படும் பொழுது மற்றவரை எளிமைப்படுத்திப் பார்ப்பது.
2.தான் தான் நான் தான் என்று நான் என்ற அகந்தை கூடும் பொழுது அங்கே நல்ல உணர்வைக் காக்க முடியாதபடி
3.ஆறாவது அறிவின் தன்மையைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி
4.குரு காட்டிய அருள் வழியில் வலுவாகத் தீமையை அகற்றும் நிலைக்கு வருவதற்கு மாறாக
5.தீமையையே தூண்டச் செய்து “இரு நான் பார்க்கின்றேன்…” என்று அவனின் நிலைகளுக்கே என் உணர்வுகள் சென்றது.
6.அந்த உணர்வுகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது என்று பார்…! என்று குருநாதர் உணர்த்துகின்றனர்.

இப்படி உணர்த்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று என்னை அறியாதபடி ஒரு மலை மீது என் இரண்டு கால் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய இடத்திற்கு வந்துவிட்டேன். அங்கே உட்காருவதற்கோ… சரியானபடி நிற்பதற்கோ வழியில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அந்த மலை.

இந்த இடத்திற்கு நான் எப்படிச் சென்றேன்…? எதனால் இங்கே வந்தேன்…? இப்போது என்ன செய்வது…? என்று தெரியாதபடி திகைத்துக் கொண்டு இருக்கின்றேன்.

எந்த மந்திரவாதி நம்மை இப்படிச் செய்தானோ…? என்று நினைக்கின்றேன். மந்திரவாதிகளைத் தொட்டு நாம் பரிசீலனை செய்ததினால்… யாரோ மிக சக்தி வாய்ந்தவர் என்ன இப்படி அழைத்து வந்து விட்டார்…! என்ற எண்ணம் வருகின்றது.

எந்தப் பக்கமும் என்னால் திரும்ப முடியவில்லை. காரணம் மலை உச்சி அது…! எந்தப் பக்கம் பார்த்தாலும் பாதாளமாகத் தெரிகிறது… தலை சுற்றுகின்றது பின்னாடி… சுத்தமாகவே திரும்பிப் பார்க்க முடியவில்லை.

அந்த அளவுக்கு மோசமான இடத்தில் இருக்கின்றேன். அப்போது திகைத்து…
1.எவ்வளவு பெரிய சக்தியை குரு நமக்குக் கொடுத்திருந்தாலும் அந்தக் குருவின் துணை நமக்கு இல்லையே
2.நான் அகந்தை கொண்டு அல்லவா எண்ணிவிட்டேன்
3.யாரோ ஒரு மந்திரவாதி தான் நம்மை இப்படிச் செய்து விட்டான் என்ற எண்ணமே வருகிறது.
4.குருவின் வலுவை நான் எண்ணவில்லை.

அகந்தை கொண்டு நாம் செய்த செயலுக்கு மற்றவர்கள் இவ்வாறு செய்து விட்டார்கள் என்ற உணர்வுகள் தான் தோற்றுவிக்கின்றது இதிலிருந்து எப்படி மீள்வது…? என்ற நிலை இல்லாதபடி நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

அரை மணி நேரம்… ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நேரம் ஆக ஆக என் உடல் எல்லாம் வேர்க்கின்றது சறுக்குப் பாறை போல் இருக்கின்றது உடலில் வேர்வை அதிகமாக்க் கால்கள் தன்னிச்சையாக நகரும் தன்மை வருகிறது

பாதுகாப்பாக எதையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்றாலும் ஒன்றும் முடியவில்லை. முன் பக்கம் போனாலும் மரணம் தான் உயரமான இடமாக இருப்பதால் பின் பக்கம் போனாலும் மரணம் தான்… உடல் சுக்கு நூறாகிவிடும்.
1.இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது
2.குருநாதர் கொடுத்த சக்தியை எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.

சிறிது நேரம் ஆனால் மரணம் ஆகி விடுவோம் என்ற இந்த பய உணர்வு அதிகமாக அதிகமாக உடலில் வெப்பத்தின் தன்மை அதிகரிக்க உடலில் இருந்து வேர்வைகள் கொட்டத் தொடங்கி விடுகின்றது.

ஆக வலு இழந்த நிலையில் இருக்கின்றேன்.

அந்த நேரத்தில் “மனமே இனியாகிலும் நீ மயங்காதே…!” என்ற குரல் வருகின்றது. குருவின் குரலாக அது எனக்குத் தென்பட்ட பின் கொஞ்சம் ஜீவன் வருகிறது.

மனமே இனியாயாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே…!
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

சிறிது நேரத்தில் நீ விழுந்து விடுகின்றாய் என்றால்… உன் குடும்பம் உன் பெண்டு பிள்ளைகள் என்று நீ மனக்கோட்டை கட்டினாய் அல்லவா…! கொஞ்ச நேரத்தில் எல்லாம் மறையப் போகின்றது பார்…!

அதைத் தொடர்ந்து சில உண்மைகளை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனும் செல்வங்களைக் குவித்து வைத்து அதைக் காத்திடும் நிலையாகத் தன் பந்துக்களும் தன் இனங்களும் என்ற நிலையில் மற்றவர்களை இம்சித்து… அவர்களைக் காத்துக் கொள்ளும் நிலை இருந்தாலும் “கடைசி நிலையில்” பொருளைக் காக்காத நிலையில் எப்படி வேதனைப்படுகின்றனர்…?

சம்பாதித்து வைத்த பணம் இருந்தாலும் அண்த நேரத்தில் வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றதே தவிர செல்வத்தைக் காத்திடும் நிலை இல்லாதபடி
1.வேதனையான நஞ்சு உருப்பெறும் நிலையாக
2.நல்ல குணங்கள் அழிந்திடும் நிலையாக சீர் கெட்டு இருக்கும் நிலையை
3.சினிமா படங்களில் காட்டுவது போன்று ஒவ்வொன்றாக அங்கே அந்த இட்த்தில் வைத்துக் காட்டுகின்றனர்.

பலருடைய நிலைகளைக் காட்டுகின்றார்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய் என்று பாடிக் காட்டுகின்றார்.

நேற்று இருந்தவர்கள் எல்லாம் இன்று இருக்கின்றார்களா…? நிலை இல்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? மனமே இனி ஆகிலும் நீ மயங்காதே…! என்று தெளிவாக்குகின்றார்.

குறைந்தது ஒரு இரண்டு மணி நேரம் இருக்கும். இந்த உலகத்தில் உள்ள நான் முன் பின் பார்த்திராத ஒவ்வொரு குடும்பங்களையும் காட்டுகின்றார்.

1.அவர்கள் வாழ்க்கையில் செல்வத்தை எவ்வாறு சம்பாரித்தனர்…?
2.செல்வத்தைக் காப்பதற்காக எத்தனை வேதனைகள் படுகின்றார்கள்…?
3.அதனைத் தொடர்ந்து அந்தக் குடும்பங்களில் சாபங்கள் எப்படித் தொடர்ந்தது…?
4.சாபத்தினால் நலிந்த உடலாக நிம்மதியற்ற நிலைகளில் எவ்வாறு வாழுகின்றனர்…? என்பதைத் தெளிவுர எடுத்துக் காட்டுகின்றார்.

அதன் பின் அந்த மலையிலிருந்து என்னைக் கீழே இறக்கி விடுகின்றார். இனி நீ வலம் வரலாம்… இந்த உலகை அறியலாம்… நான் காட்டிய அனைவரைப் பற்றியும் நீ செல்லும் பாதையில் உனக்கு அந்த உணர்வுகள் வரும்

1.அதன்படி நீ அங்கே சென்று பார்…!
2.அந்தக் குடும்பத்தின் நிலையை ஊன்றிப் பார்
3.அவருடைய செயலைப் பார்… அதிலிருந்து அவர்கள் விடுபட என்னவென்று நீ சிந்தித்துப் பார்…! என்று
4.பல நிலைகளை உணர்த்துகின்றார் குரு.

அதன் வழியில் தான் இன்று வரையிலும் யாரையெல்லாம் காட்டினாரோ அவர்கள் அனைவருக்கும் கன்னியாகுமரியில் இருந்து இமயம் வரையிலும் கால்நடையாகப் பெரும்பகுதி நடந்து அவர் காட்டிய இடங்களுக்கு எல்லாம் அந்த உணர்வுகள் தோன்றி ஆங்காங்கு சென்று அந்தக் குடும்பங்களில் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்…? அவருடைய நிலைகள் என்ன…? என்று அறியும் வண்ணம் அறியச் செய்தார்.

அறிந்த நிலைகளை தான் இன்னும் அறிந்து கொண்டே இருக்கின்றேன்.

குருநாதர் எனக்கு ஊட்டிய ஆசை

குருநாதர் எனக்கு ஊட்டிய ஆசை

 

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று யானைகள் வரும் இடமாக என்னைப் போகச் சொல்கின்றார்.
1.யானையின் மணத்தை நுகர்ந்து உனக்குள் வலுவாக்கினால்
2.யானையின் மணம் உனக்குள் வந்த பின்
3.மணத்தால் நுகர்ந்து அறியக்கூடிய அந்த மிருகங்கள் உன்னை ஒன்றும் செய்யாது.
4.நீ பயம் கொண்டு சென்றால் யானைகள் நிச்சயம் அடிக்கும்
5.ஆகையினால் பயத்தின் உணர்வு இல்லாதபடி அதனின் மணத்தினை நுகர்ந்து செல்ல வேண்டும் என்றார்.

உதாரணமாக யானைப்பாகனாக இருந்தாலும் அவனும் யானையைக் கண்டு பயந்தான் என்றால் அந்த யானை அவனைத் திருப்பி அடிக்கும். உணர்வின் தன்மை யானையின் மணத்தின் வலுவைக் காட்டப்படும் பொழுது தான் அது அடங்கும்.

ஆகவே குருநாதர் சொன்ன முறைப்படி காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானை அருகே நான் சென்று விட்டேன். யானை தன் காதை விடைத்து விட்டால் அடுத்து மனிதனை அடிக்கத்தான் செய்யும். ஏனென்றால் ஏற்கனவே வேட்டைக்குச் சென்று எனக்குப் பழக்கம் உண்டு.

அப்போது காதை விடைத்தவுடன் எனக்குப் பயம் வருகின்றது குருநாதர் சொன்னபடி யானையின் மணத்தை நுகர்ந்தேன்… இருந்தாலும் அடுத்து… “யானை என்னை அடித்து விடுமே…” என்ற பயத்தைத் தான் நுகருகின்றேன்.

யானையின் உணர்வின் மணம் எனக்குள் வரவேண்டும் அந்த வலுப்பெற வேண்டும் என்று நான் எண்ணவில்லை அது என்னை அடித்து விடும் என்ற மணம் வரப்படும் பொழுது எனக்குள் நடுக்கம் ஆகிறது.

அப்பொழுதுதான் முன் வைத்த காலைப் பின் வைக்காதே என்று குருநாதர் சப்தமிடுகின்றார். நான் கூறிய உணர்வை நினைவில் வை…! என்றார்.

அவன் சொன்னபடி
1.பயம் வரும் பொழுது அந்த யானை உணர்வின் மணத்தை நுகர்வதற்கு அவர் சொன்ன சில முறைகள் உண்டு
2.அதை வைத்து அதனுடைய மணத்தை எடுக்கப்படும் பொழுது யானை என்னை ஒன்றும் செய்யவில்லை.

யானையை விரட்டக்கூடிய பச்சிலையையும் குருநாதர் கையிலே எனக்குக் கொடுத்து இருக்கின்றார். அதை எல்லாம் நான் மறந்து விட்டேன் இந்த உணர்வின் நினைவே எனக்கு வரவில்லை. யானை அடித்து விடும் என்று நினைவு தான் ஓங்கி வந்தது

இதை மாற்றப்படும் பொழுது அவர் சொன்ன உணர்வுகள் நுகரப்பட்டு அந்த மணம் அங்கே ஆகும் பொழுது அது தன்னுடைய வலுவை இழக்கிறது.

1.அதாவது துப்பாக்கியையும் கையில் வைத்துக் கொண்டு
2.புலி வருகிறது புலி வருகிறது என்று நடுங்கிக் கொண்டிருக்கின்ற மாதிரி…
3.அந்த இடத்தில் அவ்வாறு எனக்குக் காட்டுகின்றார்.

சுடும் மார்க்கத்தைக் காட்டியிருந்தாலும்… அதை அடக்கும் தன்மை இருந்தும்… இல்லாதபடி ஆகிவிட்டது. இதை எல்லாம் அனுபவரீதியிலே குருநாதர் கொடுத்தது.

அவர் சொன்ன முறைப்படி நுகர்ந்த பின் யானை என்னை ஒன்றும் செய்யவில்லை ஆனால் அந்த கூட்டத்தோடு வந்து ஒரு குட்டி என்னைத் இடித்துத் தள்ளுகின்றது… தொடுகின்றது… என்னை இழுக்கின்றது.

பெண் யானை என்ன செய்கின்றது…? அப்படியே முறைத்து நிற்கின்றது. என் மனதைக் கொண்டு… உள்ளபூர்வமாக நீ போ சாமி…! என்று இந்த உணர்வலைகளை வெளிப்படுத்தும் போது… அந்தக் குட்டி யானை அதனின் தாய் இழுத்துக் கொண்டு சென்று விட்டது.

இயற்கை உண்மை நிலைகளை அறிவதற்குத் தான் என்னை இப்படிக் காடு மேடலாம் குருநாதர் என்னை அலையச் செய்தார்… சாதாரணமாக அல்ல…!

உங்களிடம் இப்போது பேசுகிறேன் என்றால் அந்தக் குரு வழியினை நான் கடைப்பிடிக்கவில்லை என்றால் இருளுக்குள் தான் நான் சிக்க முடியும். உடலின் ஆசை தான் எனக்குள் வளரும்.

இந்த உடலில் ஆசை ஆனால் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது பல மிருகங்கள் இருந்தும் மரணம் அடைய வேண்டி வரும்.

இதற்கு அடுத்து என்னைத் திருப்பதிக்குச் செல்லும்படி சொல்கின்றார். நாரதர் மன்றம் என்று ஒன்று உண்டு அதையும் கடந்து தாண்டி செல்லச் சொல்கின்றார்.

பழங்கள் காய்க்கும் மரங்கள் ஏராளமாக அங்கே உண்டு. வருடம்தோறும் ஒவ்வொரு காலத்திற்கு எத்தனையோ கனிகள் அதிலே உருவாகும். கொய்யா… நவாப்பழம் போன்று எத்தனையோ வரும். அத்தனையும் அங்கே உருவாகின்றது.

துறவறம் பூண்டு தவத்திற்காகச் செல்பவர்களுக்கு அது தான் அங்கே உணவு. பழங்களை உண்டு தான் அங்கே தவத்தை மேற்கொண்டார்கள். அந்த இடத்திற்கு என்னைப் போகச் சொல்கின்றார்.

கனிகளை பறித்துச் சாப்பிட்டு அங்கே இருக்கலாம் என்றாலும் அந்தக் கனிகளை உட்கொள்ள அதைத் தேடி கரடி போன்ற மிருகங்கள் வருகின்றது… குரங்குகளும் வருகின்றது…!

அவைகள் அதைப் பறித்துச் சாப்பிடுகின்றன. நான் மரத்தில் ஏறித் தான் சாப்பிட வேண்டும் அல்லது கீழே விழுந்ததை எடுத்துச் சாப்பிட வேண்டும்.

ஒரு கரடிக் கூட்டம் அங்கே வருகின்றது.
1.முதலில் பயம் வந்தது..
2.பின் குருநாதர் சொன்ன முறைப்படி அந்த மணத்தை எடுத்தவுடன்… பேசாமல் முர்ர்…முர்ர்…முர்ர்.. என்று உறுமிக் கொண்டே போய்விட்டது.

எல்லாமே அனுபவ ரீதியில் தான் குருநாதர் கொடுக்கின்றார்.

பகலிலே குரங்குகள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றது. ஒரு ரவுடிக் குரங்கு எல்லாவற்றையும் துரத்தி அடித்து விரட்டுகின்றது. ஆனால் அங்கே இன்னொரு குரங்கு குட்டி போடுகின்றது.

அதனுடன் சேர்ந்த குரங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குழந்தை பிறந்த பிற்பாடு முத்தம் கொடுக்கின்றது. ரவுடிக் குரங்கிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்கின்றது.

ஆனால் அது ரவுடித்தனம் செய்தாலும் குழந்தைப் பாசத்தால் “குட்டிக்கு அதுவும் முத்தம் கொடுக்க ஆசைப்படுகின்றது…” அதனுடைய பாசத்தால் இச்.. இச்.. என்று குழந்தையை நாம் கொஞ்சவது போன்று கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தையை நோக்கி நகர்ந்து வருகின்றது.

அது நகர நகர… மற்ற குரங்குகள் அனைத்தும் உஷாராகின்றது. ஆனால் தாய் குரங்கு வெவ்வேவ்வே… என்று கத்த ஆரம்பிக்கின்றது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி… குட்டியிடம் சென்று தொட்டு முத்தம் கொடுக்கின்றது.

ஏதாவது ஆனால் எல்லாக் குரங்குகளும் அதைத் தாக்குவதற்கு உஷாராக இருக்கின்றது. ஆனால் குட்டிக்கு ஒன்றும் தெரியாது இதை குருநாதர் பார்க்கும்படி செய்கிறார்.

குரங்கு தன் குட்டியை எவ்வாறு பாதுகாக்கின்றது…? அதனுடைய இனங்கள் எல்லாம் எப்படிப் பாதுகாப்பாக இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

அப்பொழுது குடும்பத்தின் பால் என் நினைவுகள் செல்கின்றது மனைவியை விட்டு விட்டு வந்தோம்.. பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு வந்தோம். ஒரு பிள்ளையை மட்டும் தான் கட்டிக் கொடுத்தது. பாக்கி யாரையும் கட்டிக் கொடுக்கவில்லை. ஒரு கைக்குழந்தையும் இருக்கின்றது.

குரங்கையும் அதன் குட்டியையும் பார்த்தவுடன் என் ஞாபகம் அங்கே செல்கின்றது
1.அந்த ஆசை வரப்படும் போது என்னைப் பாதுக்காக்கும் உணர்வு போய்விடுகின்றது… பயமும் மற்ற நிலைகளும் வருகின்றது.
2.கரடி அடித்து விடுமோ பாம்பு கொத்தி விடுமோ புலி அடித்து விடுமோ இந்த உணர்வெல்லாம் வருகிறது.

ஆனால் அந்த உணர்வை நுகராது இருக்கும் வரை பயமில்லை. என் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்த பின் பயம் எல்லாம் வருகின்றது. இந்த உணர்ச்சியை ஊட்டி அனுபரீதியாக எனக்கு அங்கே காட்டுகின்றார்.

1.நான் கொடுத்த சக்தியை நீ எப்படிப் பயன்படுத்துகின்றாய்…?
2.நான் எப்படிப் பயன்படுத்தும்படி சொன்னேன்…? என்று வினாக்களை எழுப்பி எனக்கு உண்மைகளை உணர்த்துகின்றனர்.

அது மட்டுமல்ல. இன்னொரு வேலையும் குருநாதர் செய்கின்றார். சிறிது நகர்ந்து ஒரு இடத்தில் உட்கார்ந்தேன். உட்கார்ந்த இடத்திலே அந்தக் காலத்து அரசர்கள் மண்ணிலே புதைத்து வைத்த காசு அங்கே வெளியே வருகிறது.

அதுவாக வந்ததா…! அல்லது குருநாதர் அப்படி வரும்படி வரவழைத்தாரா…? அது எப்படி…? என்று எனக்குத் தெரியாது. பார்த்தால் தங்கக் காசாக இருக்கின்றது. மொச்சைப் பயர் அளவு தடிமனாகவும் வட்டமாகவும் நீளமாகவும் இருக்கின்றது.

அதை எடுத்தவுடன் ஆசையை ஊட்டுகிறார். இது எதற்காகச் சோதிக்கின்றாரோ… தெரியவில்லை…! எனென்றால் குழந்தையை அந்த நேரத்திலே நினைக்கின்றோம் அல்லவா…!

இதை எடுத்துக் கொண்டு போய்க் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு வரலாமா என்ற இந்த எண்ணத்தை ஊட்டுகின்றார்.
1.அப்பொழுது அந்த இடத்தில் எனக்குள் மனப்போராட்டமாகின்றது.
2.குருநாதர் சொன்ன வழியில் ஞானத்தின் வழியில் செல்வதா அல்லது காசைப் பார்த்த பின் இந்த ஆசையின் வழி செல்வதா…?
3/குடும்பத்தில் குழந்தைகளைக் காக்க வேண்டுமே…!

குரங்கு தன் குட்டியைப் பாதுகாத்தது. அது போல் இதை எடுத்து என் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு வரலாமா…? என்று மனப் போராட்டத்தைக் கொடுக்கின்றார்.

இத்தனையும் நான் ஜெயித்து வர வேண்டி இருக்கின்றது. பின் அதற்கப்புறம் நான் அதை எடுத்து அந்தக் காசை எல்லாம் திருப்பதி உண்டியலில் கொண்டு போய்ப் போட்டேன்.

இது நடந்தது 1972 அல்லது 1973ல் இருக்கும். பத்திரிகைகளில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால் குருநாதருடைய பரிசோதனை
1.“அவர் கொடுத்த சக்தியைச் சீராக நான் பயன்படுத்துகின்றேனா…? என்று
2.பல வகைகளிலும் மனப் போராட்டங்கள் வருகின்றது.
3.இத்தனையும் வென்று தான் நான் வர வேண்டி இருக்கிறது.

இதைக் கடந்த பின் மூன்று லட்சம் பேரைச் சந்தித்து ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு துன்பப்படுகின்றான்…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

இப்படி எத்தனையோ சிரமப்பட்டு அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு ஞானத்தின் வழித் தொடராக மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உங்கள் நினைவினை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பால் செலுத்தி அவர் நமக்குக் கொடுத்த அருளும்… ஞானிகள் பெற்ற உண்மையையும் நாம் அறிந்து இந்த வாழ்க்கையைச் சீர்படுத்தவும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவும்… அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளைப் பெறத் தகுதி உடையவர்களாகவும் உங்களை நீங்கள் மாற்ற வேண்டும்.

அதற்காக வேண்டும் உங்கள் உயிரைக் கடவுளாக வணங்கி உடலைக் கோவிலாக எண்ணி அவனால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் ஈசனுக்கு நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

1.அதன் வழியில் நல்ல உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் பாதுகாத்தால்
2.உயிரான ஈசனுடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள்.

இந்த ஆசையைத்தான் குருநாதர் எனக்கு ஊட்டினார்…!

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக (மணியாக) மாற்ற குருநாதர் எனக்குக் கொடுத்த பயிற்சி

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக (மணியாக) மாற்ற குருநாதர் எனக்குக் கொடுத்த பயிற்சி

 

ஒரு சமயம் எதிரி என்ற நிலை உருவாக்கப்படும் பொழுது ஒரு மரத்தைக் காட்டுகின்றார் குருநாதர். ஒரு சொல்லைச் சொல்லும்படி சொன்னவுடன் அந்த மரம் தூக்கி வீசப்பட்டுப் பறந்து போய் விழுகிறது.

யாராவது எதிரிகள் வந்தால்… இப்படி எண்ணினால் அவனைத் தூக்கி எறிந்து விடலாம்… வெற்றி பெறலாம்… நம்மை யாரும் எதிர்க்க முடியாது…! என்ற உணர்வுகள் எனக்கு வருகின்றது.

ஒருவன் சிறிது தவறு செய்தாலும் இதே உணர்வை நீ பாய்ச்சப்படும் போது அந்த வலிமை தான் வரும். “உனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை… அது அடித்துச் சென்றுவிடும்…!” என்றார் குருநாதர்.

காற்று வேகமாக வீசினால் என்ன செய்யும்…?
1.தனியாகக் கெட்டதை மட்டும் தூக்கிச் செல்லுமா…?
2.சேர்த்து நல்லதையும் தான் தூக்கிச் செல்லும்.
3.அந்த நல்லதையும் குப்பையுடன் சேர்த்துக் கலக்கத்தான் செய்யும்.

இதைப் போன்ற நிலைகளைக் காட்டி நீ எடுத்துக் கொண்ட உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்யும்…? என்பதை அங்கே தெளிவாக்குகின்றார்.

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்த பின்… ஆஹா…! என்னை யாரும் எதிர்க்க முடியாது என்ற நினைவு வருகிறது. பல முறை அதைச் சோதித்துப் பார்க்கும்படி சொன்னார். இன்னும் சோதித்துப் பார்…! என்றார்

பல முறை செய்த பின் அந்த வேக உணர்வு தான் தோன்றுகின்றது

1.அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது தீமைகளை உருவாக்கும் உணர்வுதான் உனக்குள் வரும்.
2.அப்போது இந்தத் தீமைகளை யார் அடக்குவது…? யார் நீக்குவது…? என்று நிலைகளை வினா எழுப்புகின்றார்.

உன் ஆறாவது அறிவைக் கொண்டு…
1.தீமையை நீக்கும் உணர்வை எடுத்து அதனுடைய செயலாக்கங்களை மாற்று…!
2.அப்பொழுது தான் அது அடங்கும் என்றார்.

அடுத்து இன்னொரு வேலையும் குருநாதர் செய்தார்.

ஒரு இரும்புக் கரண்டியை வாங்கி வரச் சொன்னார்… ஈயக்கட்டியையும் வாங்கி வரச் சொன்னார். மலைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவருக்குத் தெரிந்த பல பச்சிலைகளையும் குப்பைகளையும் எல்லாம் “இதிலே கொஞ்சம்… அதிலே கொஞ்சம்…” என்று எடுத்து வரச் சொன்னார். அங்கங்கே உள்ள தூசிகளையும் போடச் சொன்னோர்.

ஒட்டு மொத்தமாகக் கரண்டியில் போட்டு அதைத் தீயை வைத்து எரிடா..! என்றார்.
1.எரிந்த உணர்வுகள் அதில் வரும் வெப்பத்துடன் கலக்கின்றது.
2.அது கலந்த பின் என்ன செய்கிறது…? ஈயம் “பள… பள…” என்று மின்னுகிறது.

எப்படிடா இருக்கிறது…? என்று கேட்டார். சாமி…! தக…தக… என்று இருக்கின்றது…! என்று சொன்னேன்.

மீண்டும் எப்படிடா இருக்கின்றது என்றார்…? தக…தக… என்று இருக்கிறது என்று சொன்னேன்.

விட்டார்… ஓங்கிப் “பளார்…” என்று ஒரு அடி கொடுத்தார். எப்படி இருக்கிறது…? சொல்லுடா…! என்றார்.

மீண்டும் தக…தக… என்றேன். என்னடா தக…தக…?

அப்புறம் “தங்கம் போல இருக்கின்றது சாமி” என்று சொன்னேன்.

தூ…! என்று சொல்லி அது எல்லாவற்றையும் மூடுடா என்றார். சூடு எல்லாம் ஆறிய பண்பு பார்த்தால் நல்ல “சொக்கத் தங்கமாக” இருக்கிறது.

இதைக் கொண்டு போய்க் கடையில் விற்கச் சென்றால்.. “நீ பைத்தியக்காரிடம் சுற்றிக் கொண்டிருந்தது எதற்காக…? என்று இப்பொழுது தான் தெரிந்தது…! தங்கம் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டாய். தங்கம் எவ்வளவு வேண்டுமானால் கொண்டு வா… உனக்குக் காசு தருகிறேன்…! என்றார்.

இன்னொருவர் என்ன சொல்கின்றார்…! நீங்கள் செய்து கொடுத்தால் உங்களுக்கு மாட மாளிகை கட்டித் தருகிறேன். நீங்கள் விற்க வேண்டாம்…! என்று இப்படிச் சொல்லிக் கொண்டு என் பின்னாடி சுற்றி திரிந்தவர்கள் ஏராளம்.

விற்றுவிட்டு வந்த பின் குருநாதர் என்ன செய்தார்…? காசை எல்லாருக்கும் ஒவ்வொரு ரூபாயாகக் கொடுத்து விட்டார்.

முதலில் அவர் தங்கம் செய்யச் சொல்லும் போது எல்லாவற்றையும் நான் பார்த்தேன் அல்லவா. அவர் இல்லாத பொழுது நான் தனியாகத் தங்கம் செய்து பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்

அதே மாதிரித் தங்கம் வந்துவிட்டது.

ஆசை வந்துவிட்டது அல்லவா…! இரண்டாவது இதை விற்று விட்டு வரலாம் என்று கடையிலே சென்று கொடுத்தேன். எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா என்றார்கள்.

குருநாதர் அங்கிருந்து வந்தார். உனக்கு இப்பொழுது எப்படி இந்த ஆசை வருகின்றது…?
1.உன் மனதைத் தங்கமாக்குவதற்கும் அதே சமயத்தில் பாதரசத்தில் மணியைச் செய்யும்படி சொன்னேன்.
2.எல்லா உணர்வுகளையும் சேர்த்து உயிர் எப்படி ஒளியானதோ அது போன்று உணர்வின் தன்மை ஒளியாக்கச் சொன்னேன்
3.தங்கத்தை போன்று மனம் ஆகி மங்காத நிலையாக உருவாகி உணர்வின் தன்மை தெளிவாக்கி
4.அந்தத் தெளிவின் தன்மை உயிர் ஆக்கப்படும் பொழுது இது பாதரசங்களாக மாறும்.

இதன் உணர்வை எல்லாம் சேர்த்து… இங்கே ஈயத்திற்குள் எப்படித் தங்கமாக மாறியதோ… இதைப் போன்று தான் தாவர இனங்களைச் சாரணையாக்கி உணர்வின் தன்மை ஒளி ஆனது. மனித உடலை உருவாக்கக் காரணமானது என்று அறிந்தவன் போகன்.

உணர்வின் தன்மை சிலையாக உருவாக்கி அதிலே சாரணை ஏற்றி மணத்தை வெளிப்படுத்தும் போது…
1.வரும் மக்கள் தீமைகளிலிருந்து விடுபடுவதற்கு அந்த முருகன் சிலையைப் பார்த்து நுகரும் போது
2.நல்ல நிலைகள் உருவாகி… மகிழ்ச்சி என்ற உணர்வு வரும்.
3.அதன் நினைவாக இதை எடுத்து “தன் மனதைத் தெளிவாக்க” இப்படி ஒரு உபாயத்தைச் செய்தான் போகன் அன்று…!

ஆனால் நீ என்ன செய்கின்றாய்…? உன் ஆசை தங்கம் செய்து அதை விற்றுக் காசை சம்பாதிக்கலாம் என்று வந்துவிட்டாய். இந்த ஆசை வந்தால் நீ அடுத்து எதை எடுப்பாய்…? உன் உடலுக்கு உதவும். எல்லோரும் வரவேற்பார்கள் ஏகபோகத்தில் செயல்படுத்துவார்கள். நீ எங்கேடா போகிறாய்…? என்று கேட்டார்.

தங்கம் மங்காது என்று சொன்னீர்கள் தங்கத்தை நோக்கிச் செல்கிறேன் என்றேன்.

1.உன் ஆசை என்ன செய்கின்றது…? தங்கம் செய்து செய்து விற்கத்தான் செல்கிறது…?
2.அப்போது உன் மனது தங்கம் ஆகுமா…? ஆகாது…!
3.தங்கத்தின் மீது ஆசை அதிகமாகும்…!
4.விற்று வளர்ந்துப் பல தவறுகளைச் செய்யும்படிச் செய்யும்
5.கடைசியில் இந்த மனித உடலை அது அழிக்கத்தான் உதவும்.

இரண்டாவது தரம் தங்கம் செய்தவுடன் இதைத்தான் எனக்கு உபதேசித்தார். தங்கம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் காட்டவும் செய்தார். அதனால் வரும் பின் விளைவுகள் என்ன…? என்பதையும் காட்டினார்.

ஆகையினால் அவர் சொன்ன முறைப்படி நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… அந்த உயர்ந்த மனம் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தில் நான் செயல்படுத்தும் போது… நீங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி எனக்கு உயர்ந்த சத்தாகிறது.

எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நீங்களும் அதே போன்று எண்ணினால் உங்களுக்கும் அது உயர்ந்த சத்தாகும்.
1.நான் ஒருவன் மட்டும் செய்து பெருமையைக் காட்டினால் நல்லது நடக்குமா…?
2.அருளைப் பெருக்கினால் தான் இருள் விலகும்… அந்த உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.

உன்னுடைய ஆசைகள் அதனதன் வழியில் செல்லப்படும் பொழுது அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகின்றது…? கடைசியில் நிராசையாக எப்படி மாறுகிறது…?
1.அந்த நேரங்களில் எல்லாம் உன் மனதை எப்படிப் பண்படுத்த வேண்டும்…? என்று
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படித்தான் அனுபவமாக எனக்குக் கொடுத்தார் குருநாதர்.

எவ்வளவு நன்றாக இருந்தாலும்… கெட்டது வந்தால் அதைத் தான் பிடித்துக் கொள்கிறோம்… நல்லதை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை

`

எவ்வளவு நன்றாக இருந்தாலும்… கெட்டது வந்தால் அதைத் தான் பிடித்துக் கொள்கிறோம்… நல்லதை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை

 

பல கோடிச் சரீரங்களில் துன்பங்களை நீக்கி நீக்கி… அந்த வலுப்பெற்றது தான் பன்றியின் உடலை உருவாக்குகிறது. இதே உயிர் தான்.

பன்றியின் உடலாக உருவாக்கிய பின்… பன்றியோ சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து விடுகின்றது… அதில் உள்ள நல்லதை எடுத்து உட்கொள்கிறது.

நல்ல பருப்பைச் சாக்கடைக்குள் போட்டால் நாம் அதை நுகர்ந்தால் அங்கே நல்ல வாசனையா வருகின்றது…? இல்லையே…!

இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் என்னைச் சாக்கடைப் பக்கமாக அழைத்துச் சென்றார்,. அங்கேயே உட்காரச் சொன்னார்.

முறுக்கு நிலக்கடலை பொரிகடலை மூன்றையும் கடையில் வாங்கி வரச் சொன்னார் சாக்கடைக்குள் அதைப் போட்டுவிட்டு அந்த மூன்றையும் சாக்கடையிலிருந்து நுகர்ந்து “பிரித்து எடு…” என்று சொல்கின்றார்.
1.சாமி சாக்கடை நாற்றம் தான் வருகின்றது என்று சொன்னேன்.
2.நுகர்ந்தால் சாக்கடை வாசனை தானே வரும்…! என்று சொன்னேன்.

ஆனால் அதற்கு முன்னாடி குருநாதர் என்ன செய்தார்…? கடைக்குச் சென்று காபி வாங்கிக் கொண்டு வா என்றார். அவருக்கு டீ எனக்குக் காபி. நான் டீ சாப்பிட மாட்டேன்.

சாக்கடையிலிருந்து எடுத்து வெளியிலே குப்பைகளைப் போட்டிருப்பார்கள் அல்லவா. அதை எடுத்து என் காப்பியிலே போட்டு கலக்கிச் சாப்பிடுடா… ஜோராக இருக்கும் என்று சொல்கின்றார்… குருநாதர்.

எனக்கு எப்படி இருக்கும்…?

“ஜோராக இருக்கும்…” என்று அவர் சொல்கின்றார்.

இதைப் பார்த்தாலே எனக்கு வாந்தி வருகின்றது சாமி…! உள்ளுக்குள் எப்படிப் போகும்…? என்று நான் சொல்கின்றேன்.

நான் எப்படிச் சாப்பிடுகிறேன் என்று பாருடா…! போட்டேன் ரசித்தேன்… ஆகா…! என்று சாப்பிடுகின்றார்.

சாக்கடையில் அந்த வரிசையில் கக்கூஸ் எல்லாம் போயிருக்கின்றார்கள்… கழுவியது எல்லாம் தான் வருகின்றது. ஆனால் அவர் சாப்பிடுகிறார்.

அந்த நேரத்திற்குச் சரியாக பன்றியும் வருகின்றது. ஆனால் இவர் வரவழைத்தாரோ… எல்லது என்ன கிரகமோ தெரியாது…! தள்ளிக் கொண்டு முட்டிக்கொண்டு வருகின்றது.

நடந்த நிகழ்ச்சி இது..! சாக்கடை உபதேசமாக குருநாதர் எனக்குக் கொடுத்தது.

அந்தப் பக்கம் போவோர் வருவோர் அனைவரும் என்னைப் பார்த்து… நைனாவிற்கு (ஞானகுரு) நல்ல பைத்தியம் பிடித்து விட்டது…! என்று என் காது படப் பேசுகின்றார்கள்.

இவருக்கு ஏன் இந்த ஆசை…? பைத்தியத்தோடு சேர்ந்து கொண்டு சாக்கடையில் அமர்ந்து… இப்பொழுது அரைப் பைத்தியமாக இருக்கின்றது அடுத்து முக்கால் பைத்தியம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள்.

காரணம்… நான் அவர் சொல்வதை எல்லாம் கேட்டு ஆடுகின்றேன் அல்லவா.. நான் என்ன செய்வது…? எனக்கு வேறு வழி இல்லை.

வருவோர் போவோர் அனைவரும் என்னைக் கேலி பேசுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள். நல்லய்ய நாயக்கர் மருமகனுக்கு ஏன் இப்படி ஒரு புத்தி வந்துவிட்டது…? என்று என் மாமனாரைச் சாடி பேசுகின்றார்கள்… என்னையும் திட்டுகின்றார்கள்.

இப்படித்தான் நிகழ்ச்சி அங்கே நடக்கிறது.

பன்றி வருகிறது. முகர்ந்து கொண்டு வந்தபின் ஓடுடா…! என்று சொல்கின்றார் கடலைப்பருப்பு முறுக்கு பொட்டுக்கடலை மூன்றையும் சாக்கடையிலே போடச் சொல்கின்றார்.

முறுக்கு ஒரு பக்கமும் கடலைப்பருப்பை ஒரு பக்கமும்… பன்றி முன்னாடி வரக்கூடிய பாதையிலே பொரிகடலையைப் போட்டேன். அவர் சொன்னபடி நான் போட்டேன்.

இதை மார்க் செய்து கொள்…! என்று சொன்னார். கோட்டைப் போட்டு வைத்துக் கொண்டேன்.

முதலில் பொரிகடலை இருக்கும் பக்கம் நுகர்ந்த பின் அதை விட்டுவிட்டு இந்தப் பக்கமாக வருகின்றது… நிலக்கடலைப் பருப்பு இருக்கும் இடத்திற்கு வருகின்றது.

வேகத்தில் அந்த வாசனையை நகர்ந்து அதை முதலில் எடுத்துச் சாப்பிடுகிறது… போட்ட பருப்பு அனைத்துமே சாப்பிடுகின்றது.

அடுத்து முறுக்கை எடுக்க வருகிறது. அதில் எண்ணெய் வாசனை இருப்பதால் அதை எடுத்துச் சாப்பிடுகின்றது.

கடைசியிலே திரும்பி வந்து இதை ஏன் விடுவானேன்…! என்று பொரிகடலையையும் சாப்பிடுகின்றது. ஏனென்றால் வறுத்தது… வாசனை இல்லை. அதையும் சாப்பிடுகின்றது.

பார்த்தாயா…?
1.நான் சாக்கடையைச் சாப்பிடேன் என்றால் அதையா சாப்பிட்டேன்…?
2.நல்லது என்று நினைத்தேன்… அதாவது சாக்கடைக்குள் நல்லதை நினைத்தேன்
3.காப்பியில் இருக்கும் நல்லதை நினைத்தேன்
4.சாக்கடை வாசனை எனக்கு வரவில்லை…. அதனால் வாந்தி வரவில்லை.
5.நீ நல்லதை நினைக்கவில்லை… ஆனால் சாக்கடையை நுகருகின்றாய்…
6.அதனால் அந்த வாசனை வருகிறது… உனக்கு வாந்தி வருகிறது…! என்று
6.எனக்கு அந்த இடத்திலே உபதேசமாக்க் கொடுத்து இதைத் தெளிவாக்குகின்றார்.

உன்னுடைய உணர்வுகள் எதைச் செய்கின்றது…? எதை இயக்குகின்றது…? நீ எப்படி வாழ்கின்றாய்…? நீ எப்படி எல்லாம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தாய்…?

நுகர்ந்து பார்த்து தான் உணர்வின் தன்மை கொண்டு இரைக்குத் தேடி வந்தது. முகர்ந்து பார்க்கும் வலுவைப் பெற்று கெட்டதை நீக்கிவிட்டு நல்லதை நுகர்கின்றது பன்றி.

ஏனென்றால் அந்த மாதிரி சேர்த்து ஒவ்வொன்று சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட உறுப்புகள் இப்படி விளைந்த்து… பன்றியிலிருந்து மனிதனாக வந்திருக்கின்றோம்.

இதை எல்லாம் நான் சாக்கடையில் அமர்ந்து தான் கேட்டேன் நீங்கள் நல்ல இடத்திலே நன்றாக அமர்ந்து கேட்கின்றீர்கள்…!

1.நான் அனுபவித்துச் சொல்கின்றேன்.
2.இலேசாக இருக்கிறது என்று அலட்சியப்படுத்திக் கேட்டீர்கள் என்றால் இந்நேரம் வரை கேட்ட உபதேசமும் வீணாகிவிடும்.

இயற்கையின் நியதிகள்… இந்த உயிர் எதைக் கவர்கின்றது…? எதன் உணர்வின் தன்மை கொண்டு வருகிறது என்று தான் எனக்கு அனுபவத்தைக் கொடுத்தார்.

நான் தவறு செய்துவிட்டேன் என்று உணர்வதுமில்லை… ஒத்துக் கொள்வதுமில்லை

நான் தவறு செய்துவிட்டேன் என்று உணர்வதுமில்லை… ஒத்துக் கொள்வதுமில்லை

 

ஒரு சமயம் குருநாதரும் நானும் (ஞானகுரு) பழனிக்குப் போவதற்காகப் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகிலே வந்து கொண்டிருந்தோம். அப்போது குருநாதர் என்ன செய்தார் தெரியுமா…?

ஒரு பஸ் வேகமாக வந்து கொண்டிருக்கின்றது. திருப்பத்திலே (CORNER) அது திரும்பும் பொழுது குறுக்கே புகுந்தால் எப்படி இருக்கும்…? என்ன பண்ண முடியும்…?

நாங்கள் இரண்டு பேருமே பஸ்ஸின் குறுக்கே புகுந்தோம். ஆனால் இவருடைய சக்தியால் பிரேக் போட வைத்து விடுகின்றார்… டிரைவரும் பிரேக் இடுகின்றான்… வண்டி நின்று விடுகின்றது.

அடுத்தாற்போல் அந்த டிரைவர் என்ன சொல்கிறார்…? யோவ் கிழட்டுக்… என்று கெட்ட வார்த்தையாகச் சொல்லி குருநாதரை திட்டுகின்றார்.

நீ வயசுப் பையனாக இருக்கின்றாய்… கிழவனுக்குத் தான் புத்தி இல்லை நீயாவது புத்தி சொல்லலாம் அல்லவா…! என்று டிரைவர் என்னையும் திட்டுகின்றான்.

கொச்சை வார்த்தைகளில் குருநாதரும் டிரைவரும் மாறி மாறிப் பேசுகின்றார்கள்… ஒருவரை ஒருவர் திட்டுகின்றார்கள்.

பாருடா…! டிரைவர் என்னை எப்படித் திட்டுகின்றான் என்று…! குருநாதர் சொல்கின்றார்.

அந்தத் திட்டும் உணர்வுகள் “நாம் செய்தது தப்பு” என்று தெரிகின்றது. ஆனால் டிரைவர் அசிங்கமாகத் திட்டும் பொழுது மட்டும் ரோஷம் வருகின்றது. இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

நாம் செய்தது தப்பு… இருந்தாலும் கௌரவப் பிரச்சினை…! பஸ்ஸில் இருக்கும் அத்தனை பேர் முன்னாடி கேவலமாகப் பேசுகின்றான் என்ற நிலையில் “என்னய்யா செய்ய வேண்டும் என்று சொல்கின்றாய்…?” என்று நானும் கோபமாக டிரைவரிடம் பேசுகின்றேன்.

டிரைவர் அதற்குப்பின் பஸ்ஸை ஸ்டார்ட் செய்கின்றான். வண்டி நகரவில்லை… நகர மாட்டேன் என்கிறது.

என் புத்தியைப் பார்த்தாய் அல்லவா… அவனை வண்டி எடுக்க விடாமல் நான் நிறுத்தி விட்டேன் அல்லவா. உன் புத்தி என்ன செய்கின்றது…? அவனை உதைக்க வேண்டும் என்று விரும்புகின்றாய்.

என்னிடம் சக்தி இருக்கின்றது என் புத்தியில் அவனை நிறுத்துகின்றேன் நீ உன் புத்தியில் அவனை உதைக்க வேண்டும் என்று திட்டுகின்றாய் ஆனால் நாம் இரண்டு பேரும் குறுக்கே சென்றது தவறா இல்லையா…?

இதையெல்லாம் அனுபவத்தில் கொண்டு வருகின்றார் குருநாதர்.

“தப்புதான் சாமி…” என்று நான் சொல்கின்றேன். ஆனால் நான் என்ன சாமி செய்தேன்…? நான் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் தானே என்னைக் குறுக்கே இழுத்தீர்கள் என்று சொல்கின்றேன்.

நான் எப்பொழுதடா உன்னை இழுத்தேன்…? நீ தான்டா என்னை இழுத்தாய்…! என்று மீண்டும் வம்பிழுக்கின்றார்… மடக்கிப் பேசுகின்றார்.

பஸ் நகரவில்லை என்று சொன்னவுடனே அவன் ஸ்டார்ட் செய்து பார்க்கின்றான் முடியவில்லை. குருநாதர் சிரிக்கின்றார்.

என்னைத் திட்டினான்… அதனால் என் சக்தியால் வண்டியை நிறுத்தி விட்டேன். அதே போன்று நீயும் இன்னொரு வண்டியை நிறுத்துகின்றாயா…? என்று என்னிடம் கேட்கின்றார். நீ இன்னொரு பஸ்சுக்கு முன்னாடி போடா…! பஸ் நிற்கின்றதா இல்லையா பார்க்கலாம்…! என்கிறார்.

என்னைக் கட்டாயப்படுத்தி இன்னொரு பஸ்சுக்கு முன் குறுக்கே போகும்படி தள்ளுகின்றார். அடுத்த பஸ்ஸுக்குக் குறுக்கே நான் சென்றதும் அதுவும் நின்று விட்டது. அதுவும் நகர மாட்டேன் என்கிறது.

இப்படிச் செய்துவிட்டார் குருநாதர். நீ எப்படிடா அதைச் செய்தாய்…? என்று என்னிடம் கேட்கின்றார். அவரே செய்துவிட்டு என்னை இப்படிக் கேட்கின்றார்.

வண்டியை எடுக்க முடியாது… ஓட்ட முடியாது…! நீ அவனிடம் சொல் என்று சொல்கின்றார். ஸொன்ன பின் அந்த வண்டியும் ஓடவில்லை.

வண்டி ஓடவில்லை என்ற உடனே… அந்த இரண்டு டிரைவரும் இது என்னடா…? இரண்டு கிரகங்களும் சேர்ந்து கொண்டு ஏதோ மந்திர வேலை செய்கின்றார்கள். வண்டி நகரவில்லை என்று பயப்படுகின்றனர்…!

ஒரு பக்கம் எனக்கு பஸ்ஸை நிறுத்தி விட்டோம் என்று சந்தோஷம் வருகிறது. இன்னொரு பக்கம் அவர்கள் இருவருமே திட்டுகின்றார்கள் ஏதோ மந்திர தந்திரங்கள் செய்து பாவிகள் நம்மை வேதனைப்படுத்துகின்றார்கள் என்று திட்டுகின்றார்கள். காதிலே அதுவெல்லாம் கேட்கின்றது.

சந்தோஷமாக வரும் பொழுது இப்படி வருகின்றது ஆனால் அவர்கள் திட்டும் பொழுது அதைக் காதிலே கேட்ட பின் அவர்கள் கை கால் வராதபடி செய்தால் என்ன…? என்ற வேகம் எனக்கு வருகிறது.

நாம் செய்தது தப்பு…! ஆனாலும் அவர்களைக் கை கால் வராதபடி நாம் செய்தால் என்ன…? என்று எனக்கு இந்த உணர்வு வருகின்றது.

அப்போது தான் என்னிடம் கேட்கின்றார் குருநாதர். ஏண்டா…? தப்பு நீ செய்கின்றாய் ஆனால் உன்னுடைய எண்ணம் எப்படிப் போகின்றது பார்…! இப்படி ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் உணர்ச்சிகள் எப்படி ஓடுகின்றது…?

1.தன் உடலைக் காக்க… கௌரவத்தைக் காக்க
2.இந்த உணர்வின் எண்ணங்கள் தவறைத் தயங்காதபடி செய்யச் சொல்கின்றது.

இதே உணர்வின் தன்மை உன் உடலில் ஏற்பட்டால் அவர்கள் இடும் சாப அலைகள் சாதாரணமானதல்ல.

அவன் படும் வேதனை உணர்வுகள் அவனில் விளைந்தது உன் செவிகளில் பட்டு இப்படிப் பேசுகின்றானே என்று வேகமாகத் தாக்குகின்றது உன்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது… கலந்தது அணுக்களாக விளைகின்றது.

இன்று உனக்குத் தெரியாது… ஆனால் அடுத்து என்ன ஆகும் தெரியுமா…? என்று இந்த உணர்ச்சியின் போர் முறைகள் உள்ளுக்குள் கலக்கங்கள் ஏற்படுவதை அப்படியே உணர்த்துகின்றனர் இன்றைய செயல் நாளை என்ன ஆகும்…?

1.உடலுக்குள் நல்ல அணுக்களுக்கும் நுகர்ந்த அணுக்களுக்கும் போராட்டங்கள் ஆகி
2.உன் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அது பலவீனம் அடையப்படும் பொழுது
3.மூச்சு இழுக்கின்றது… திணறலாகின்றது நடக்க முடியவில்லை ஓட முடியவில்லை வேலை செய்ய முடியவில்லை என்று
4.இத்தனை நிலையும் உனக்குள் நாளை வரும் என்று சொல்கின்றார்… அங்கே அப்படியே காட்டுகின்றார்.

இது எதனால் வருகின்றது…?

நீ தவறு செய்தாயா…? அவன் தவறு செய்தானா…? இந்தச் சந்தர்ப்பம் உன்னைத் தவறு செய்யும்படி நான் தூண்டினேன். அதன் உணர்வின் தன்மை இவ்வாறு ஆகிவிட்டது.

இப்படி வரும் பொழுது அவருடைய நிலை என்ன ஆகிறது…? நம்முடைய சந்தர்ப்பங்கள் பின் விளைவு என்னென்ன ஆகிறது…? இதற்கு நான்கு மணி நேரம் உபதேசங்களைக் கொடுக்கின்றார் குருநாதர்.

பதட்டமும் பயமும் எனக்குள் வருகின்றது.
1.தான் பேசியது சரியா இல்லையா என்று
2.உள் மனதில் இப்படி வினாக்கள் தூண்டும்படி உணர்த்திக் காட்டுகின்றார்.

ஏன் இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நாம் நல்லதைத் தான் செய்து கொண்டிருப்போம். திடீரென்று ஏதாவது ஒன்று வந்துவிடும்.

நாம் தவறு செய்திருப்போம் ஆனால் நாம் தப்பிப்பதற்காக அடுத்தவனைக் குற்றவாளி ஆக்குவதற்கு என்ன வேலையோ அதை எல்லாம் செய்வோம்.
1.அடுத்தவனைக் குற்றவாளி ஆக்கத் தான் பார்ப்போமே தவிர
2.நாம் தவறு செய்தோம் என்பதை உணர முடிவதில்லை.

ஆக சக்தி இருக்கிறது என்றால் அதை வைத்து நீ அடுத்தவர்களுக்குத் தப்பு செய்யத்தான் முடியுமே தவிர நல்லதை உன்னால் உருவாக்க முடியாமல் போகின்றது என்று அங்கே உணர்த்திக் காட்டுகிறார்.

இந்த உடலைக் காக்க உணர்வின் தன்மை ஆனால் தவறை நீக்கி அவன் நல்வழி வரவேண்டும் என்று தான் தவறு செய்து விட்டோம் என்ற இந்த உணர்வை மாற்றி
1.என்னை அறியாத நிலைகள் இருந்து விடுபட வேண்டும்.
2.அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணினால் நமக்குள் வளரும் தீமையை முதலில் தடுக்கலாம்.

சாதாரண மனிதனாக இருந்தால் இது முடியாது.

நல்ல நிலைகளை உருவாக்க வேண்டும் என்றால் தியானத்தின் வழிகளில் வரப்படும் போது இது போன்ற சந்தர்ப்பம் நிகழ்ந்தால் ஒருவனுக்குத் தொல்லை கொடுக்கவோ… பிறரை இம்சிக்கவோ அல்லது இது போன்ற மற்ற உணர்வுகள் தோன்றினால் அதை எதைக் கொண்டு அடக்க வேண்டும்…?

அங்குசபாசவா…! துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த நஞ்சை வென்ற உணர்வுகளை வைத்துத்தான் அடக்க வேண்டும். இப்படித்தான் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் நமக்குள் வரும் தீய விளைவுகளையும் நம்மை அறியாத உடலில் ஆட்டிப்படைக்கும் நோய்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.
1.பண்பு உள்ளவர்களாகவும் நாம் மாற முடியும்
2.பிறரைக் காத்திடும் சக்தி பெற்றவர்களாகவும் வாழ முடியும்.

சுவாசிப்பது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சென்று என்ன செய்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்

சுவாசிப்பது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சென்று என்ன செய்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்

 

குருநாதர் என்னை மலைப் பகுதிகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்று 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய மின்னல்கள் ஒளிக்கற்றைகளாகப் பூமிக்குள் பரவுவதை “எது எது எப்படிக் கவருகிறது…?” என்று காட்டினார்.

அதிலே ஜோதிப்புல் என்றும் காட்டினார்… ஒளிக்கற்றைகளை தன் விழுதுகளில் கவர்ந்து கொண்ட பின் மோதும் போது வெளிச்சத்தை எப்படிக் கொடுக்கின்றது…? இயற்கையினுடைய நிலைகள் எப்படி சந்தர்ப்பங்கள் வருகிறது என்று அனுபவத்திலே காட்டினார்.

குருநாதருடன் அலைந்து தான் இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். காட்டிற்குள் சாப்பாடு வெறும் பேரீச்சம்பழம் தான். இல்லை என்றால் ஒரு பச்சிலையைக் காண்பிப்பார். அதைச் சாப்பிட வேண்டும். தண்ணீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். இதுதான் உணவு.

அதே சமயத்தில் அரிசியையும் மோரில் ஊற வைத்த கத்திரிக்காய் மிளகாய் மாங்காய் ஒரு டப்பா இதையும் எடுத்துச் செல்லும்படி சொல்வார். டப்பாவில் தண்ணீரை ஊற்றி அதிலே எல்லாவற்றையும் போட்டு வேக வைத்துக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார்.

சோறு கிடையாது…! வெறும் தண்ணீராகக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார். ஏனென்றால் அரிசி சாதம் சாப்பிட்டுப் பழகியதனால் அந்த உணர்வின் சத்து உடலிலிருக்கும் அணுக்களுக்கு அத்தகைய உணவு கிடைக்கவில்லை என்றால் அது மாறிவிடும்.

ஆகையினால் உன்னை இப்படிச் சாப்பிடும்படி சொன்னேன் என்று அதிலேயும் விளக்கம் கொடுப்பார்.

காரணம்… பச்சிலையைச் சாப்பிடுகின்றாய்…! இதே உணர்வு உடலில் விளைந்தால் அதற்குண்டான வித்தியாசங்களாக வந்துவிடும். அதை மாற்ற வேண்டும் என்பதற்காக இதையும் சொல்லி அதையும் சொல்லி ஒவ்வொரு வகையிலும் அதைச் சீராக்கிக் கொண்டு வருவார்.

சக்தி இருக்கிறது என்று காட்டுக்குள் எடுத்தாலும் உணவுப் பழக்கத்தால் எப்படி மாற்றங்கள் ஏற்படுகின்றது…? என்று காட்டுவார்.

அப்போது அவர் என்ன முறைப்படி கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கப்படும் பொழுது அது தேவாமிர்தமாக இருக்கும். வெயில் காலங்களில் நீர் மோரைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…? ஒரு மாங்காயை உப்பைத் தொட்டுத் தின்றால் எப்படி இருக்கும்…?

இப்பொழுது வாயில் உமிழ் நீர் சுரக்கின்றது அல்லவா… இது எங்கிருந்து வருகின்றது…? ஒன்றுமே உங்களுக்குக் கொடுக்கவில்லை… ஆனால் மாங்காயைப் பற்றிச் சொன்ன உணர்வுகள் செவிகளில் படுகிறது… உங்களுக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகின்றது.

நுகர்ந்த உடனே அந்தப் புளிப்பு கலந்த உமிழ் நீராகச் சுரக்கின்றது. இது சாப்பாட்டுடன் கலக்கின்றது

இதே போன்றுதான் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் கண்ணுற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள்… எதைக் கேட்டறிந்தாலும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது.

ஆனால் அது தீமை என்ற நிலையில் இருந்தால் விஷத்தன்மையாக மாறிவிடுகின்றது ஆக வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு அடுத்துப் பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் கேட்டால் இந்த விஷங்கள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து ஆகாரத்துடன் கலந்து வயிற்றிலே “கட…புடா… கட…புடா…! என்று ஆகிறது.

இது ஏன்… எதனால்…? என்று நாம் அறிவதில்லை வயிறு நிறையச் சாப்பிட்டபின் சஞ்சலமாகச் சலிப்பாகப் பேசுவதைக் கொஞ்ச நேரம் கேட்டுப் பாருங்கள்.

அது எல்லாம் உமிழ் நீராக மாறி அடுத்து நெஞ்சு எரிகிறது கப கப என்று எரிகிறது என்பார்கள். பேசிய உணர்வு கவரப்பட்டு இப்படி உமிழ் நீராக மாறி நல்ல ஆகாரத்தையும் கூட நுகர்ந்த உணர்வுகள் மாற்றி விடுகின்றது.

இதை எல்லாம் குருநாதர் அனுபவத்தில் கொடுத்தார். நான் இதைப் புத்தகத்திலோ மற்ற நிலைகளிலோ பார்த்துப் படித்துச் சொல்லவில்லை. நம் உடலுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது…? என்று காட்டிற்குள் வைத்து இதை எல்லாம் அறியும்படி செய்வார்.

“இந்தப் பக்கம் வா…” என்று அங்கே வேறு ஒரு செடியைக் காண்பிப்பார்… அதனின் மணத்தை நுகரு…! என்பார் நுகர்ந்தவுடன் அந்த உணர்வுகள் சேரும்… உமிழ் நீர்கள் எனக்குள் மாறும்.

நீ சாப்பிட்ட தண்ணீரின் சத்து இப்போது எப்படி வருகிறது பார்…! என்று காட்டுவார். நீ நுகரும் இந்த மணத்திற்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று நுகரச் சொல்லி… அறியச் செய்து… உணரும்படி செய்வார்.

இதையெல்லாம் முழுமையாக உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்குத் தான் சொல்கிறேன். காரணம் உங்கள் சந்தர்ப்பம் அந்தந்த நேரமோ அப்போது இந்த உண்மைகளை நீங்கள் அறிந்து… ஞானத்தின் வழியிலே சீராகச் செல்வதற்கு இது உதவ வேண்டும் என்பதற்காகத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

ஆகவே இந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கும் வழி – குரு எனக்குக் காட்டியது

நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கும் வழி – குரு எனக்குக் காட்டியது

 

உதாரணமாக நூறு சதவீதம் வேம்பின் சத்தும் பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்தும் மூன்று சதவீதம் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பத்தால் இரண்டறக் கலந்தால் எடை கூடி புவியில் படிந்து விடுகிறது.

அப்படிக் கலந்த சத்தில்
1.விண்ணிலிருந்து வரக்கூடிய மின்னல் தாக்கப்படும் பொழுது துடிப்படைந்து அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுக்கத் தொடங்குகிறது.
2.துடிப்பின் நிலை ஆனபின் அந்தந்தச் செடிகளில்… அந்தப் பங்கின் (100/10/3) விகிதாச்சாரப்படி அதைப் பிரித்து எடுக்கின்றது
3.கருவேப்பிலையாக மாறுகிறது

விஞ்ஞான ரீதியாகவும் இதைப் போன்று தான் அணு உலைகளில் கடலில் இருந்து எடுத்த வந்த மணலை வேக வைத்துப் பிரிக்கப்படும் பொழுது யுரேனியமாகவோ அல்லது மற்ற எத்தனையோ விதமான தனிமங்களாகவோ எடுக்கின்றார்கள்.

அதே சமயத்தில் பூமிக்குள் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய்… குரூடு ஆயிலை (CRUDE OIL) அதைக் கொதிக்க வைத்துப் பிரிக்கின்றார்கள்.
1.முதலில் எடையற்று வேகமாகப் பிரிந்து செல்வது கேசலின் (GASOLINE) விமானங்களுக்கு அது எரிபொருளாகவும்
2.அடுத்து பெட்ரோல்; கெரசின்; டீசல் என்று இப்படி வரிசையாக எடுத்து
3.கடைசியில் எடை கூடியதாக கல் மண் மற்றவர்களுடன் கலந்து இருப்பதைத் தாராகப் பிரித்து எடுக்கின்றார்கள்.

விஞ்ஞானிகள் இயற்கையில் உருவானதைத் தனித்துத் தனித்துப் பிரிப்பதற்காக வேண்டி இப்படிப் பல வேலைகளைக் கையாளுகிறார்கள்.

இந்த வேலைகள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் நான் (ஞானகுரு) சென்றதும் இல்லை… அதைப் பார்த்ததும் இல்லை. ஆனால் சினிமா படம் காட்டுவது போன்று இதையெல்லாம் குருநாதர் எனக்குக் காண்பிக்கின்றார்

அதைப் பார்த்துப் பழகுவதற்காக வேண்டி சினிமா தியேட்டருக்கு என்னை அழைத்துச் செல்கிறார் குருநாதர்.

தியேட்டரில் படம் நடந்து கொண்டிருக்கும்… கதவுகள் எல்லாம் மூடி இருக்கும். வெளியில் இருந்து கொண்டே சினிமா எப்படி நடக்கிறது…? பாருடா…! என்பார் குருநாதர்.

எப்படி சாமி அதைப் பார்க்க முடியும்…? என்று கேட்டேன்.

நீ பாருடா…! என்று மீண்டும் சொல்கிறார். அப்போது அங்கே நடக்கின்ற காட்சிகள் தெரிய ஆரம்பிக்கின்றது… நான் பார்க்கிறேன்.

அவரும் கூட வந்து பாருடா பாருடா என்பார். அதையெல்லாம் அப்போது பார்க்கிறேன். இதைப் பார்த்த பின்னாடி என்னுடைய குறும்புத்தனம் சும்மா விட்டதா…?

குழந்தைகளை எல்லாம் அமர வைத்து எந்தெந்தச் சினிமாக் கொட்டகையில் எந்தெந்தப் படம் நடக்கிறது…? என்று கேட்டு “அதைப் பாருங்கள்” என்று அங்கேயே காண்பிக்க ஆரம்பித்தேன்.

அங்கே நடப்பது இங்கே அவர்களுக்குத் தெரிய வருகின்றது… வீட்டில் உட்கார்ந்து கொண்டே சினிமாவைப் பார்க்கின்றார்கள்

1.இயற்கையின் உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்தப் பதிவின் அலைகளை… அதை எப்படிக் கவர முடிகின்றது…?
3.இதைத் தெளிவாக்குவதற்காக குருநாதர் பல பயிற்சிகளை எனக்கு இப்படிக் கொடுத்தார்.

இதை எல்லாம் சாதாரணமாக யாரும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் தெரிந்ததை உங்களுக்குள் பதிவாக்கப்படும்பொழுது
1.சந்தர்ப்பத்தில் அந்த மகரிஷியின் அருள் சக்தி எடுத்து “நல்லதாக வேண்டும்” என்று சொன்னால் இந்த சக்திகள் உங்கள் உடலில் ஊடுருவும்.
2.உடல் நலமடைந்த பின் “நான் சொன்னேன்… நன்றாக ஆனது…!” என்று ஒரு சந்தோஷம் வரும்

ஏனென்றால்
1.நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கித் தீமையை நீக்கும் உணர்வின் ஆற்றலைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்
2.தீமைகள் புகாது தடுக்கும் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதையெல்லாம் சொல்கின்றேன்.

உதாரணமாக மனித உடலில் ஏற்படும் உணர்வுகள் ஒருவனைச் சாடிப் பேசிப் பதிவாக்கி விட்டால்… “எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணினால் அமெரிக்காவில் இருப்பவனைக் கூட அது இயக்குகின்றது… புரையோடச் செய்கின்றது வாகனம் ஓட்டிச் சென்றால் குறுக்காட்டித் தாக்கி அவனைச் செயலிழக்கும்படியும் செய்கிறது.

இதெல்லாம் சந்தர்ப்பம் தான்..!

அவனைப் பற்றி எண்ணும் போது இவன் நிலையும் அதே ஆகி இவனும் தவறி விழுகின்றான்… மேடு பள்ளம் தெரியாது கீழே விழுவான். அவனும் கெடுவான்… இவனும் கெடுவான். அவன் மேல் மீது இருக்கக்கூடிய உணர்வுகள் அந்தத் தவறு என்ற உணர்வு இங்கே வந்துவிடும்

அந்த உணர்வு இயக்க வருவது போல் தான்
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகின்றேன்.
2.இது வெறும் சொல் அல்ல…! பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

இம்சைகளைக் கொடுத்துத் தான் உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்தார் குருநாதர்

இம்சைகளைக் கொடுத்துத் தான் உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்தார் குருநாதர்

 

குருநாதர் சொன்னது:-
1.உனக்கு இடைஞ்சலாகும் பொழுது நான் சொன்ன உயர்ந்த சக்தியை நீ சேர்த்துக் கொண்டால்
2.உன் கெடுதல் நீங்கும்… உன் துன்பங்கள் விலகும்
3.அந்தத் துன்பத்தை நீக்குவதற்குத் தான் உனக்குள் இதைப் பதிவு செய்கிறேன்…!

இதைக் கடைசியில் சொல்வார். ஆனால் அதற்கு முன்னாடி என்னை உதைப்பார்… எனக்கே தெரியாது.

“ஏன் தான் இப்படித் தொல்லை கொடுக்கின்றாரோ…” என்று அவர் மேல் எனக்கு வெறுப்பு வரும். அவரிடமிருந்து “தப்பித்து ஓடிப் போய் விடலாமா…!” என்று நினைப்பேன்.

எங்கேயடா நீ தப்பப் போகின்றாய்…? என்பார் குருநாதர்.. பல இம்சை…!

வழுக்கலான பாறையாக இருக்கும் அங்கே போகச் சொல்வார். போனால் கீழே விழுந்து பல்லெல்லாம் உடைந்து விடும். அதிலே ஒரு பொருளைக் காட்டி “நீ எடுத்துக் கொண்டு வாடா…” என்பார்

அதே போன்று பனிப்பாறையாக இருக்கும் இமயமலை போன்ற இடங்களுக்குச் செல்லும்படி சொல்வார் ஆனால் மேலே துணி ஏதும் போடக்கூடாது… கோவணத் துணியை மட்டும் தான் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பார்.

பார்த்தால் பாறைகளாக எல்லாம் உருப்படியாகத் தான் தெரியும் ஆனால் மரத்தின் மேலே பனி உறைந்திருக்கும். ஏமாந்து அங்கே கையை வைத்து விட்டால் “டப்…” என்று உள்ளே போய் பாதாளத்திற்கே போய்விடுவோம். ஆனால் அங்கே போடா… என்பார்.

இதையும் காட்டுவார்… எல்லாவற்றையும் சொல்வார்…!
1.ஆனால் இதில் இருந்து எல்லாம் உன்னைக் காப்பாற்றுவதற்குச் சக்தி வேண்டும்… வலு வேண்டும்…
2.அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா…? என்பார்
3.நான் சொன்னதை நினைக்கவில்லை என்றால் நீ உள்ளே சென்று விடுவாய்
4.நான் சொன்ன முறைப்படி எண்ணினால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஏனென்றால் ஆபத்து வரும் நேரங்களில் இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பார் குருநாதர்.

நான் போய்க் கொண்டே இருப்பேன். ஒரு இடத்தில் மரத்தின் மீது பனிக்கட்டியாக உறைந்து இருக்கின்றது. ஆனால் அந்தப் பக்கம் பார்த்தால் திடு…திடு… திடு…திடு… என்று பனிப்பாறைகள் உடைந்து விழுந்து கொண்டிருக்கின்றது.

இங்கே பனி மலையில் காலை வைக்கின்றேன். பொரு..பொரு.. என்று உள்ளே போகின்றது. என்னுடைய ஒரு கால் “டபக்…” என்று உள்ளே இறங்கி விட்டது. இறங்கியவுடன் என்னுடைய எண்ணம் எப்படி வருகின்றது…?

“செத்து விடுவேன்…!” என்ற எண்ணம் தான் எனக்கு வருகின்றது…!

1.நான் உன்னிடம் என்னடா சொன்னேன்…!
2.நீ இப்போது என்னடா செய்கின்றாய்…? என்கிறார் குருநாதர்

ஆக… என்னுடைய உணர்வு ஏன்ன செய்கின்றது…?

1.குருநாதர் கொடுத்த சக்தியை அந்த இடத்திலே என்னால் பயன்படுத்த முடியவில்லை.
2.புவியின் ஈர்ப்பில் இருக்கப்படும் பொழுது இறந்துவிடுவோம்…! என்ற உணர்வு தான் உடனடியாக வருகின்றது
3.நல்லதை நினைக்கவே முடியவில்லை…!

இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து ஈஸ்வரா…! என்று எண்ணித் தியானத்தில் அமர்ந்தவுடன்… எனக்கு மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை (கான்சன்ட்ரேஷன் பண்ண முடியவில்லை) தியானம் வரவில்லை… என்னால் எண்ணத்தை நிலையாக நிறுத்த முடியவில்லை… சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

நிலையாக அதை நிறுத்த முடியாது… அது பல அலைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இப்பொழுது யாம் சொல்லும் போது கேட்டுக் கொண்டிருந்தால் அது நல்ல அலைகளாக இருக்கும். ஆக… எப்பொழுதெல்லாம் குணங்கள் கெடுகின்றதோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நல்ல உணர்வு எனக்குள் வளர வேண்டும் என்று எண்ணி உங்கள் உடலுக்குள் செலுத்தக்கூடிய நிலையில் ஆத்ம சுத்தியில் தான் இருக்கின்றது.

குருநாதர் காட்டிய வழியில் மிக மிக உயர்ந்த அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி காற்றிலே படர்ந்து இருக்கின்றது.
2.அதை எடுக்கக்கூடிய திறன் உங்களுக்கு வேண்டும் அல்லவா…!
3.நான் பேசுகின்றேன்… நீங்கள் கேட்கின்றீர்கள்… அதற்கு வேண்டிய கரண்ட் தேவை…!
4.இல்லை என்றால் உங்களால் எடுக்க முடியாது… வெறுமனே எண்ணி எடுக்க முடியாது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் தொடர்பு கொண்டு அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

தையல் வேலை பழகியவர்கள் துணியை வெட்டி அழகாக நேர்த்தியாகத் தைக்கின்றார்கள். மற்றவரிடம் பேசிக் கொண்டு கூட தைப்பார்கள்.

ஆனால் புதிதாகத் தைக்க வேண்டும் என்று சென்றால் கவனமாகப் பார்த்துத் தைத்தாலும் கூட சரியாக வராது. அந்தப் பழக்கம் வரும் வரை அது சீராக வராது.

அதைப் போன்று தான் அந்தப் பழக்கத்திற்கு வருவதற்குத் தான் உங்களுக்குத் திரும்பத் திரும்ப… பல கோணங்களில் உணர்த்திக் கொண்டு வருவது.

குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று தான்… “முதலிலே சொன்ன மாதிரி பல இம்சைகளைக் கொடுத்து… ஞானிகள் சக்திகளைப் பெறுவதற்குப் பழக்கிக் கொடுத்தார்…!”

இப்பொழுது உங்களிடம் இதை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லித் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். மரம் செடி கொடிகளுக்கு உரத்தைப் போடுவது போன்று
1.இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அவரவர்கள் மன நிலைக்குத் தகுந்த மாதிரி…
2.எத்தனை பேர் எந்தெந்த வகையில் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்ற நிலையில் தான்
3.என்னுடைய இந்த உபதேசமே அமையும்… உங்களுக்குள் அந்தச் சக்தி கூடும்.

ஞானிகள் உணர்வை இப்படி உரமாக உங்களுக்குள் ஏற்றி வைத்த பின் ஈஸ்வரா…! என்று நீங்கள் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல குணங்கள் வலுவாகி… அடுத்து நல்லதைச் சிந்திப்பதற்கும் நோய்கள் அகன்று… வேதனைகள் அகன்று உங்கள் சொல்லிலே வலிமையும் செயல்கள் புனிதமும் பெறும்.

என் பையன் சொன்னபடி கேட்கவில்லை; என் வீட்டுக்காரர் என்னை எதிர்த்துக் கொண்டேயிருக்கின்றார்; என் நண்பன் வெறுத்துப் பேசுகின்றான்; என் தொழில் சரியாக நடக்கவில்லை என்று இப்படி எல்லாம் சொல்ல வராது.

என் பையன் தெளிந்த நிலை பெறுவான்… என் வியாபாரம் விருத்தியாகும்… கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ்வோம்… நோய்கள் அகலும்… என்று தன்னாலே சொல்ல வைக்கும்.

தீமையாக எண்ண விடாதபடி நல்லதாகவே உங்களை எண்ண வைக்கும்… உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

காக்கும் சக்தியைப் பெறச் செய்வதற்குக் குருநாதர் தேர்ந்தெடுத்த இடம்

காக்கும் சக்தியைப் பெறச் செய்வதற்குக் குருநாதர் தேர்ந்தெடுத்த இடம்

 

ஒரு சமயம் பழனியில் இருந்த என்னை (ஞானகுரு) திடீரென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மலைப்பகுதியில் வெறும் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய ஒரு இடத்திலே குருநாதர் கொண்டு போய் நிறுத்தி வைத்து விட்டார்.

இதற்கு முன் அவர் எத்தனையோ உபதேசங்களை எனக்குக் கொடுத்திருந்தாலும்
1.அந்த இடத்திற்கு வந்த பின் எல்லாவற்றையும் காற்றிலே விட்டுவிட்டேன்.
2.அவர் போதித்ததையெல்லாம் விட்டுவிட்டுச் சிந்தனை இல்லாது இருக்கின்றேன்
3.கீழே பார்த்தால் கிறு கிறு என்று வருகின்றது… இந்தப் பக்கம் காலை வைப்பதற்கு இடமில்லை
4.நிமிர்ந்து பார்த்தால் கீழே சாய்ந்து விழுந்து விடுமோ என்ற எண்ணம் வருகின்றது.
5.குருநாதர் சொன்ன தத்துவங்களை நினைத்துப் பார்க்க நேரமில்லை…
6.குருவை மறந்து என் உடலைப் பற்றிய இச்சைக்கு வந்து விட்டேன்… என் குடும்பத்தை எண்ண ஆரம்பிக்கின்றேன்.

என் குழந்தை என்னுடைய மனைவி அவர்களுடைய சிந்தனை வந்தது. ஏனென்றால் என் மனைவியை நோயிலிருந்து குருநாதர் அப்போது தான் எழுப்பி வைத்தார்.

அது மீண்டும் இறந்து விட்டால் யார் காப்பது…? பிள்ளைகள் அனைத்தும் சிறியவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு யார் நல்லதைச் சொல்லிப் பாதுகாப்பது…? என்று இந்தப் புத்தி எனக்குள் வர ஆரம்பித்துவிட்டது

ஏனென்றால் அவர்கள் மீது வளர்த்துக் கொண்ட பாசம் உடலின் இச்சை வரப்படும் பொழுது தன் இனத்தை வளர்க்கும் நிலைக்காக எனக்குள் வந்துவிட்டது.

பதட்டம் ஆகின்றது… உடலில் வேர்வை அதிகமாகின்றது…! மேலே ஒரு குடம் நீரை ஊற்றிக் குளித்தால் எப்படி நீர் ஓடுமோ அப்படி வேர்வை வருகின்றது.

நான் இருந்த இடம் வழுக்குப் பாறை… செங்குத்தாக இருக்கின்றது அதில் தான் இரண்டு பாதம் மட்டும் இருக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கின்றேன். கால் வழுக்கும் நிலையும் வருகின்றது.

எதையாவது பிடிக்க வேண்டும் என்றாலும்… வழுக்கி விட்டால் என்ன செய்வது…? நான் தொங்கத்தான் வேண்டும். தப்பித்துக் கீழே இறங்கும் பாதையும் இல்லை… குதித்தால்தான் இறங்க முடியும்…! என்று இப்படி என்னுடைய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.

என் வீட்டை நான் எப்பொழுது பார்ப்பது…? என் மனைவி பிள்ளைகளை எப்படிப் பார்ப்பது…? என்று இந்த சந்தேகம் வந்துவிட்டது. தவித்துக் கொண்டிருக்கிறேன்…!

இனி எத்தனை நாள் இப்படி வேதனைப்படப் போகின்றோமோ…? என்று உயிர் பிரியுமோ…? அது வரை இந்த வேதனையை அனுபவிக்கத் தான் வேண்டும் வெயில் அடிக்கின்றது… தண்ணீர் தாகமாக இருக்கிறது… உணவு இல்லை… இதிலே தான் இருக்கிறேன்…!

1.இப்படிப்பட்ட இம்சையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று தான்
2.பல உபதேசங்களையும் உண்மைகளையும் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

இந்த இடத்தில் இப்படி நிற்பதற்கு முன் மந்திரம் செய்வதைப் பற்றியும் மந்திரவாதிகளைப் பற்றியும் அப்பொழுது நிறைய சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.

மந்திரவாதி எப்படியெல்லாம் ஆள்களை இன்னொரு பக்கம் மாற்றுவான்… பெரும் கல்களையும் பாறைகளையும் தூக்கி எறிவான்… எத்தனையோ அமானுஷ்யமான வேலைகளைச் செய்வான்…! என்பதை நேரடியாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

இதை எல்லாம் முதலில் சொல்லி இருந்ததால்
1.எவனோ ஒரு சக்தி வாய்ந்த மந்திரவாதி தான் நம்மை இப்படிச் சிக்க வைத்து விட்டான்
2.மந்திரவாதியிடம் சிக்கி விட்டோம் இது தெரியாமல் போய்விட்டதே.
3.மந்திரவாதிகளிடம் சிக்கினால் எப்படித் தப்புவது…? என்ன செய்ய வேண்டும்…! என்று
4.குருவிடம் கேட்க மறந்து விட்டோமே…! என்று அப்பொழுதுதான் குருவைப் பற்றி எண்ணமே வருகின்றது.

உடலில் கடும் அவஸ்தைகளைக் கண்ட பின் குருவிடம் கேட்காமல் விட்டு விட்டோமே…! என்று அப்பொழுதுதான் அந்த நினைவாற்றல் வருகின்றது

அப்பொழுதுதான் ஒரு பாடலும் வருகின்றது… குருவையும் நான் காண முடிகின்றது…!

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதை பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? என்று இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு வருகின்றார்.

குருநாதரின் குரலைக் கேட்டு அவரை உற்றுப் பார்க்கும் போது என் முன்னே அலையாக வந்து நிற்கின்றார்… அப்போது சிரிக்கின்றார்…!
1.என்னை நீ நினைக்க மறந்து விட்டாய்…
2.நான் உபதேசித்ததை எல்லாம் தெருவிலே விட்டுவிட்டாய் காற்றிலே விட்டாய்.

இத்தகைய சந்தர்ப்பங்கள் வந்தால் உன்னை நீ காக்க முடியாது…
1.பிறரைக் காக்க வேண்டும் என்று நான் சொன்னேனே…!
2.அதை உன்னால் காக்க முடியுமா…? என்று இப்படி வினாக்களை எழுப்புகின்றார்.

குருநாதரிடம் விளைந்த அந்த உயர்ந்த சக்தியை வேண்டி ஏங்கிப் பெறுவோம் என்றால்
1.பதிந்த உணர்வுகளுக்கு ஊக்கமாகி உணர்வின் அலையாக அதைப் பருகி
2.தன்னைக் காத்திடும் நிலையும் பிறரைக் காத்திடும் உணர்வுகளும் அது வரும்…! என்று அங்கே வைத்துத்தான் உபதேசித்தார்.

குருவிடம் யாம் அனுபவபூர்வமாகப் பெற்ற “உயர்ந்த சக்தி”

குருவிடம் யாம் அனுபவபூர்வமாகப் பெற்ற “உயர்ந்த சக்தி”

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் அனுபவம் பெறுவதற்காக யாம் (ஞானகுரு) கன்னியாகுமரியில் இருந்து வடக்கே சைனா பார்டர் வரை சென்று வந்தது தான்.

என் கால்களிலே எத்தனையோ ஆணிகள் உண்டு. இமயமலையின் மீது செல்ல வேண்டுமென்றால் வெறும் கோவணத் துணியுடன் தான் செல்ல வேண்டும்.
1.குருநாதர் சொன்ன முறைப்படி அவர் எதை எண்ணும்படி சொன்னாரோ
2.அதை எண்ணிக் கொண்டுதான் அங்கே செல்ல வேண்டும்.

நடந்து செல்லும் வழியில் ஒரு சுடு தண்ணீர் குளம் இருந்தது. அங்கே சூடு கதகதப்பாக இருந்ததால் அந்த இடத்திலே அமர்ந்து குருநாதர் சொன்னதைச் செய்யலாம்…! என்று நினைக்கின்றேன்.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கின்றார். நீ இங்கே குளிர் காய வரவில்லை… குளிர் அடிக்கும் இடத்திலே போய் உட்கார்…! என்றார்.

விண்ணுலக ஆற்றல் அனைத்தையும் நினைவு கொண்டு எடுத்துக் கொண்டிருந்தேன்.
1.ஒரு முக்கியமான ஒன்றைச் சொன்னார்…
2.அதை நீ எண்ணும் போது இன்ன நிலை இருக்கும். உனக்குக் குளிர் வராது உன்னைப் பாதிக்காது
3.அதே சமயத்தில் உன் நினைவுகள் அனைத்தும் விண்ணை நோக்கிச் செல்லும்… துருவ நட்சத்திரத்துடன் உன்னை இணைக்கும்
4.அன்று அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை ஒடுக்கினானோ அந்த சக்தி உனக்குள் பெருகும்
5.உன் உணர்வின் தன்மை உயர்த்த இது உதவும் என்று சில முறைகளைச் சொன்னார்.

அவ்வாறு செய்து கொண்டிருந்தேன்..!

ஆனால் முதலில் நடந்து செல்லும்போது அது சைனா பார்டராக இருப்பதால் அங்கு இருப்பவர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்னென்னமோ சொல்கிறார்கள்…! எனக்கு ஒன்றும் புரியவில்லை… கண்களை இறுக்கி மூடி விட்டேன்.

நடந்து செல்லும் போது காலை வைத்தால் முழங்கால் வரை உள்ளே செல்கின்றது. பனி முழுமையாக உறையாமல் இறுகலாக இல்லாதபடி கால் உள்ளே செல்லும்படியாக பொல பொல என்று இருக்கின்றது. கால் எல்லாம் கடு..கடு.. என்று இருக்கின்றது.

1.அத்தகைய பனிக்குள் கால் அதிக நேரம் இருந்தால் உணர்ச்சியற்றுப் போகும்
2.உன் கால் அழுகிப் போய்விடும் என்று ஏற்கனவே குருநாதர் சொல்லி இருக்கின்றார்.

அங்கே எப்படிச் சென்றாலும் என் உணர்வு குரு கொடுத்த சக்தியை மறந்து செயல்படும் பொழுது கடுகடுப்பு அதிகம் ஆகிவிட்டது. கடுகடுப்பு அதிகமான பின் என் நினைவுகள் எப்படி வருகிறது…?

இப்படி ஆகிவிட்டதே… ஊரை விட்டு இங்கு வந்து விட்டோமே… என் பையன் அவன் என்ன செய்கிறானோ…? என்று நினைவு வந்து விட்டது. உடனே என் இருதயம் குளிரினால் கிர்… என்று இறைய ஆரம்பிக்கின்றது. சரி… இதோடு எல்லாம் முடிந்துவிடும் போலிருக்கின்றது என்ற எண்ணம் தான் வருகின்றது.

உடலின் பற்று வரும் பொழுது அந்த இடத்தில் இத்தனை இம்சைகளும் வருகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து காக்கப்பட வேண்டும் என்றால்
1.குரு சொன்ன நினைவை எடுக்க வேண்டும்
2.உன்னைக் காக்க வேண்டும் என்றால் நீ அந்த உயர்ந்த சக்தியை எடுத்தே ஆக வேண்டும்.
3.உயர்ந்த சக்தியைப் பெற்றால் தான் உன் குழந்தையைக் காக்க முடியும்
4.உடலில் காக்கும் உணர்வு இருக்கின்றது… அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் உயர்ந்த சக்தி எடுக்க
5.இந்த உடல் தேவை…! என்று இப்படி உபதேசிக்கின்றார்.

குருவை எண்ணி அவர் கொடுத்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

உலக மக்கள் அனைவரும் எத்தனையோ வகையில் சிக்குண்டுள்ளனர்.. வேதனையில் உழன்று கொண்டுள்ளனர். அதிலிருந்து மீட்ட “அந்த அருள் ஞானிகள் உணர்வை எல்லோரும் பெற வேண்டும்…” என்று எண்ணும்படி சொன்னார்.

விண்ணை நோக்கி ஏங்கி அந்தச் சப்தரிஷி மண்டலங்களை ஊற்றுப் பார்த்து… இருளை மாய்த்து உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வை நுகரும் பொழுது இங்கே இருள் மறைகின்றது.

இந்த இடத்திலே
1.எல்லோருக்கும் சேர்த்து வேதனைப்படுவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணு.
2.உன் பிள்ளைக்கு மட்டும் என்று தனித்துக் கேட்காதே…! என்று குருநாதர் சொன்னார்.

பாச உணர்வுகள் என்னை எப்படி இயக்குகிறது என்பதை உணர்த்துகின்றார். பழனியில் அங்கே காட்சி தெரிகின்றது வீட்டில் என் பையன் ரோட்டின் முச்சந்தியில் உட்கார்ந்து நானா… நானா… (நைனா) என்று என்னைச் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

அவனுக்கு மூலம்…! இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கின்றது இமயமலையில் இருந்து பார்த்தால் எனக்கு எப்படி இருக்கும்…? குரு அனைத்தையும் குரு காண்பிக்கின்றார்.

ஆக அவன் வேதனைப்படுவதை எண்ணும் பொழுது தான் எனக்குள் இருள் சூழச் செய்கிறது… இருதயம் இறைய ஆரம்பித்தது. அப்போது என் பையனைக் காக்கும் எண்ணமே எனக்கு வரவில்லை.

அவனை எண்ணி வேதனைப்படும் நிலையில் அந்த வேதனை என்ற நஞ்சு உன்னை எப்படிச் செயலற்றதாக மாற்றுகின்றது…? ஆதை மாற்ற நீ என்ன செய்ய வேண்டும்…? இந்த உணர்வின் இயக்கங்களில் இருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்…? என்ற உண்மையை இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

உங்களிடம் இப்போது லேசாகச் சொல்லுகிறேன்… நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்து தெரிந்து கொள்கின்றீர்கள்.
1.ஆனால் இதைக் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் சென்ற பின் மறந்து விடுகின்றீர்கள்
2.சாமி என்ன சொன்னார் தெரியவில்லையே…! என்று விட்டு விடுகின்றீர்கள்.

குருநாதர் என்னைக் கடுமையான கஷ்டங்களுக்கு உள்ளாக்கித் தான் இந்தப் பேருண்மைகளை உணர்த்தினார்.
1.என்னால் மறக்காது…
2.குரு காண்பித்த அந்த உயர்ந்த சக்தியை எடுக்க முடிகின்றது.

கஷ்டப்பபட்டுப் பெற்ற அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன். ஆனாலும் சாமி பிரமாதமாகப் பேசுகிறார்… இதை என்ன என்று சொல்வது…! என்று பெருமை பேசி விட்டுச் சென்று விடுகிறார்கள்.

உபதேசத்தைக் கேட்டு விட்டு வீட்டிற்குச் சென்றால் அங்கிருக்கக் கூடிய சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி பக்கத்து வீட்டுக்காரர் இவ்வாறு செய்கின்றார் என் அப்பா இப்படிச் சொல்கிறார்… என் பிள்ளை இப்படிச் செய்கின்றான்… எனக்கு ஒரே கஷ்டமாக இருக்கிறது என்ற உணர்வுகள் தான் உங்களுக்குள் வருகின்றது.

அதை எல்லாம் மாற்றுவதற்கு தான் இந்த உண்மைகளை உங்களுக்கு தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். நீங்கள் எங்கு சென்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் யாம் சொல்லிக் கொடுத்த பக்குவம் கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.பார்க்கும் அனைவரையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வேன்
3.எங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
4.என்னை பார்க்கும் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ வேண்டும்
5.அவர்கள் குடும்பங்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
6.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினைக்கும் பொழுதும் அவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
7.இப்படித்தான் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அந்த பனிப்பாறைகளுக்கு மத்தியிலே எனக்கு குருநாதர் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

நீங்கள் இங்கிருந்தே அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும். குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களை அறியாத இருங்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். அனைவருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று
1.ஏகோபித்து நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.
2.குரு இட்ட ஆணைப்படி இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.