ஈஸ்வரபட்டர் சாதாரணமாக எம்மை (ஞானகுரு) விடவில்லை.
1.ஒவ்வொரு நொடியிலும் மனிதரது உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…?
2.அதிலிருந்து நீ எப்படி தப்புவது…? என்று தெளிவாகச் சொன்னார்.
ஒருவர் கடலில் ஒரு தீவைக் குறி வைத்துப் படகைத் துடுப்பின் உதவி கொண்டு செலுத்துகின்றார், கடலில் எதிர் அலைகள் வந்து கொண்டிருந்தாலும் அவர் எதிர் அலைகளை சமாளித்துப் படகைச் செலுத்துகின்றார்.
இதில் “தீவு…! என்பது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்” என்று நாம் கருதிக் கொண்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் துடுப்பாகப் பயன்படுத்திக் கொண்டு
2.இந்த உலக வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் வென்று
3.நமது நல் ஞானப் பயணத்தை நடத்தி வரவேண்டும்.
நாம் உடல் மீது பற்று வைத்தால் மீண்டும் இன்னொரு பிறவியைத் தான் அடைவோம்.
ஆனால் நாம் உயிர் மீது பற்று வைத்தால் பிறவி இல்லாத நிலையை அடைவோம்.
மகரிஷியின் அருளாற்றல் நாங்கள் பெற வேண்டும், எங்கள் பார்வையால் அனைத்தும் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை இணைத்து விட்டால் இந்த உணர்வுகள் பிரம்மம் ஆகின்றது.
1.அது கருவாகின்றது உருவாகின்றது.
2.தீமை என்ற உணர்வின் சக்தி, நமக்குள் வராதபடி பாதுகாப்பாகின்றது.
3.அதற்குக் குரு பலம் வேண்டும்.
நமது குருநாதர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார். அவரின் உணர்வை நுகர்ந்தேன். நுகர்ந்த உணர்வை எனக்குள் வளர்த்தேன். வளர்ந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
பதிவானதை மறந்து ஆசையின் நிலைகளை உங்களுக்குள் கூட்டினால் இந்த அரும்பெரும் சக்தியை நாம் இழந்து ஆசையின் உணர்வுகள் வளர்க்கப்பட்டு கொடுத்த வாக்கினை இழக்கும் தன்மை வரும்.
அருள் ஒளி பெறும் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது, ஆசையின் நிமித்தம் இதில் கூட்டப்படும் பொழுது, யாம் கொடுக்கும் வாக்கும் உங்களுக்குள் சீராக இயங்காது.
யாம் கொடுக்கும் வாக்கின் உணர்வுகள் அது கருவாகி, அணுவாக விளைந்தாலும், அதை வளரவிடாது உங்களின் ஆசையின் உணர்வுகள் தடுக்கும். குரு கொடுத்த வாக்கின் தன்மையையும் இழக்க நேரிடும்.
1.எங்கே சென்றாலும் குரு பெற்ற உணர்வினை, நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது,
2.பகைமையான உணர்வுகளை அகற்றிடும் வல்லமை பெறுகின்றோம்.
நாம் பெற்ற உணர்வின் தன்மையே நமக்குள் தெய்வமாகின்றது. நாம் எண்ணிய எண்ணங்களை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் செயல் எக்குணமோ அந்தத் தெய்வமாகின்றது.
இதைப் போன்று, அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்கினால் மற்றவைகளை அதனின் வலுவை இழக்கச் செய்து சிந்திக்கும் தன்மையைக் கொடுக்கும்.
1.குருவின் வலிமை கொண்டு மற்றவர்களை ஏமாற்றுபவர்கள்தான் உண்டு.
2.குருவின் நிலைகளில் ஏமாற்றிப் பிழைப்போர் நிலைகளில் கடைசி நிமிடம் உயிர் எதையுமே மறக்காது.
3.அந்த உணர்வுகள் கொண்டு உயிர் அதை வளர்த்தேதான் தீரும்.
4.அந்த வினைகளை அனுபவித்தேதான் ஆகவேண்டும்.
குரு பலம் கொண்டு குருவினை நினைத்தால் தீமையின் உணர்வுகள் தனக்குள் வராது தடுக்கலாம். இதை மறந்திடலாகாது.
குருவை எவரொருவர் நிந்திக்கின்றனரோ அருளொளி காட்டும் உணர்வை எவர் இருளச் செய்கின்றனரோ அவர்கள் வாழ்க்கையில் குருவின் தன்மையை இழந்து இருளின் தன்மை அடைவர். வாழ்க்கையின் கடைசி நிமிடத்தில் சிந்திக்கும் தன்மை வந்தாலும், எதுவும் வலிமை பெறாது.
1.குருவின் வலுவை எவ்வாறு இயக்க வேண்டுமென்றும்,
2.குருவின் தன்மை கொண்டு நம்மை அறியாது வந்த இருளை எப்படி நீக்குதல் வேண்டுமென்றும்…?
3.அதைச் செயலாக்குதல் வேண்டும்.
4.எனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் குருவையே மறக்கச் செய்யும்.
நண்பர்கள்பால் நண்பன் என்ற நிலைகள் இருப்பினும் அவன் தவறு செய்கின்றான் என்ற நிலைகள் வரும்பொழுது,
1.தவறென்ற நிலைகளில் குருவின் தன்மை கொண்டு தவறைத் திருத்தத் தவறினால்
2.தவறுக்கே உதவி செய்தால் தவறின் உணர்வின் அலைகள் சிறிது காலம் நிலைக்கும்.
3.பின் அவர் வாழ்க்கையே சீர்கெடுக்கச் செய்யும் என்பதை மறந்திடலாகாது.
மற்றவர்களிடம் குறைகள் இருப்பினும், குருவின் துணை கொண்டு குறைகளைக் களைய வேண்டும்.
புகழ் பாடும் நிலைகள் கொண்டு ஆகா…! உன்னுடைய வலுகள் என்ன…! என்று போற்றுவோர் நிலைகளுடன் இணைந்துவிட்டால், அதன் உணர்வின் நிலைகளை, சிறிது காலத்தில் உயிர் அதனுடைய உணர்வை உணர்த்தியே தீரும்.
உயிரிடமிருந்து எவரும் தப்ப முடியாது.
குரு வாக்கை வாங்கினால் அந்த குருவினுடைய நிலைகள் எளிதில் இருக்கலாம்.
1.ஆனால் குரு வாக்கின் பலன் மிக சக்தி வாய்ந்தது.
2.அதில் எவரொருவர் தவறுகின்றனரோ அந்தத் தவறின் நிலைகள் நிச்சயம் இயக்கிக் காட்டும்.
சித்தர்களும் மகரிஷிகளும் சப்தரிஷிகளும் இந்தக் கலியில் யாரைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்…?
பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த மகா மகான்களும் மகா மகரிஷிகளும் எத்தனையோ பேர் உண்டு.
எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்…?
இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில்
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து… தெளிந்ததை… ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்…!”
எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில் காமத்தின் அடியாக எழும் மோகமாக கீழான ஈர்ப்புச் செயலாகச் சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது உலகோதய நடைமுறை வாழ்க்கையில் கீழாம் ஈர்ப்பாக உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.
ஆனால்
1.இந்த மோகத்தை வென்ற ஞானி.. உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக… அவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும்…!”
மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!
ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது… கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.
ஆனால் ஒளி என்ற விந்து… சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக…”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.
3.இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது…!
நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியவற்றில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்… ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்… வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே…!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெறவேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்…!
குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்…!”
1.அன்பு சித்தர்களும்… அன்பு மகரிஷிகளும்… அன்பு சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வந்தது
2.இந்தக் கலியில் உண்மையான ஞான வித்துக்களைத் தான்…!
3.அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது…?
நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரோ அல்லது கணவன் மனைவியோ அவர்கள் உயிராத்மாக்களை தியானித்தின் மூலம் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைத்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்து விடுகின்றோம்.
ஆனால் அதற்குப் பின் அவர்களைப் பற்றிய நினைவுகள் வரப்படும் போது
1.அவர்கள் இருக்கும் போது நம் குடும்பம் எப்படியெல்லாம் இருந்தது…?
2.அவர்கள் நம்முடன் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களே…?
3.உடலோடு இருக்கும் போது நமக்கு உழைத்துக் கொடுத்தார்களே…! என்ற நினைவுகள் வரக்கூடாது.
அவர்கள் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியின் சரீரமாக இருக்கின்றார்கள். அந்தப் பேரருளுடன் அங்கே வாழ்கின்றார்கள். அந்த அருள் நிலையை நாமும் பெற வேண்டும். குடும்பத்தில் இருளை அகற்றிடும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைத் தான் எடுத்துப் பழகவேண்டும்.
அவர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தாலும் நாம் அருள் ஒளியை எடுத்து நமக்குள் கூட்டி இருளை அகற்றிடும் சக்தியாக ஆக்கிடல் வேண்டும். அந்த நிலையைத் தான் நாம் பெறுதல் வேண்டும்.
இதை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் உடலிலே இருந்த சங்கடங்கள் சலிப்புகள் வெறுப்புகள் வேதனைகள் போன்ற உணர்வுகள் நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாக இருக்கும் போது
1.அவரை எண்ணி நமக்குள் சோர்வான உணர்வுகள் வரப்படும் போது
2.அவர் பட்ட நோயின் உணர்வுகள் நமக்குள் எளிதில் கவரப்பட்டு
3.நம்மை அறியாது வேதனைப்படும் அணுக்களாக மாற்றி நம்மைச் சீர்குலையச் செய்துவிடும்.
4.பண்புடன் வளர்ந்தாலும் அவர் உடலிலே விளைந்த நோயைத் தான் நாம் நுகர முடியும்.
ஆகவே இதை போன்ற தீமைகள் வராது நோய்கள் உள்ளே புகாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று காலை துருவ தியானத்தில் (4 மணியிலிருந்து 6 மணிக்குள்) நமக்குள் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி நாம் தியானிக்கும் போது நம் ஆன்மாவில் மற்ற தீமையான வேதனையான உணர்வுகளை உள்ளே இழுக்கக்கூடிய சக்தி குறைகின்றது.
நாம் எவ்வளவு நேரம் துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவருகின்றோமோ அந்த அருள் ஒளி என்ற உணர்வுகள் நமக்குள் பெருகப் பெருக எந்த தீமையும் வராது தடுக்க முடியும்.
ஆனால் தியானத்தில் அமர்ந்திருந்தாலும் சிலருக்கு எண்ணங்கள் எங்கேங்கேயோ போகும். மற்றவர்கள் திட்டியது… குறையாகப் பேசியது.. கடன் கொடுத்தது… பணம் வராதது… என்று குடும்பப் பற்று கொண்ட உணர்வுகள் எத்தனையோ வரும்.
தியானத்தில் உட்கார்ந்ததும் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகிறது என்றால்
1.உங்கள் உடலில் உள்ள தீமையான உணர்வின் அணுக்கள்
2.அதன் உணவுக்குத் தன் வலுவைப் பெறுகின்றது என்று தான் அர்த்தம்.
நாம் தியானிக்கும்போது இடை மறித்து இத்தகைய நிலை வந்தாலும் உடனே “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரைத் தொடர்பு கொண்டு கண்களைத் திறந்து
1.அந்த அருள் ஒளி பெறவேண்டும்…
2.அது எங்கள் உடலிலே பெறவேண்டும் என்று
3.இதை உடலுக்குள் திணித்தல் வேண்டும்.
அந்த அருள் ஒளியை எடுத்து இபப்டித் திணிக்கப்படும் பொழுது நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அதற்கு ஆகாரம் கிடைக்காதபடி தடுக்கப்படுகின்றது.
அதே சமயத்தில் நாம் வலுக் கொண்டு மீண்டும் மீண்டும் எடுத்துச் செயல்படும் போது அந்தத் தீமைகள் பிடிப்பற்று விடுகின்றது.
1.காலையில் (6 மணிக்கு மேல்) சூரியன் இதை இழுத்துச் சென்று விடுகின்றது.
2.நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.
ஒரு வீட்டில் கொடூர குணம் கொண்ட ஒருவன் வாழ்ந்து இறந்த பிறகு என்னவாகின்றதென்றால் அவன் உடலுக்குள் விளைந்த உணர்வுகள் ஒவ்வொரு உடலிலும் புகுந்து நரக வேதனையை உருவாக்கின்றது.
சில குடும்பகளில்…
1.தீய குணங்கள் மிகுந்த ஒருவனைப் பார்த்து
2.“இவன் எல்லாம் செத்துத் தொலைந்தால் என்ன…!” என்று எண்ணுவார்கள்.
3.ஆனால் அவன் இறந்த பிற்பாடு அவன் விளைய வைத்த தீய உணர்வுகள் எல்லோருடைய உடல்களிலும் பெருகத் தொடங்கி விடும்.
அரக்க உணர்வு கொண்ட ஒருவன் வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் பொழுது அவன் பேசிய பேச்சுக்கள் வெளியிட்ட உணர்வுகள் அனைத்தும், குடும்பத்திலுள்ள அனைவரிடமும் பதிந்திருக்கும்.
வெளி நபர் ஒருவர் அவரிடம் பேசியிருந்தாலும் அவரிடமும் பதிந்து அவரும் இவரின் உணர்வை அடிக்கடி தன்னுள் வளர்த்திருக்கும் நிலையில் அரக்கக் குணம் கொண்ட மனிதன் இறந்து விட்டால் என்னாகும்…?
இதைத்தான் இராமாயணத்தில் பத்தாவது நிலையை அடையக் கூடிய இராவணன் தன் உடலில் வளர்த்துக் கொண்ட குரோத உணர்வின் அணுக்கள் அனைத்தும் மீண்டும் எப்படி அகர குணங்களை வளர்க்கின்றது என்பதைத் தெளிவாக கூறினார்கள்.
இராவணின் மகன் இந்திரஜித் அவன் “மாயமாக மறைந்திருந்து செயல்படுவான்…!” என்று கூறினார்கள். அதாவது அரக்கக் குணம் கொண்ட ஒருவன் கொடூரமாகச் சாகிறான் என்றால்
1.அவனுடைய உயிரான்மா மற்றொருவருடைய உடலுக்குள் புகுந்து கொண்டு
2.”அவருக்குத் தெரியாமலேயே…!” அவரை ஆட்டிப் படைக்கின்றது.
இதைத்தான்… “இவனுடைய உடலுக்குள் ஆவி இறங்கி விட்டது… பேய் ஆட்டுகின்றது…!” என்பது போன்று இப்பொழுது சமூகத்தில் சொல்கிறார்கள்.
எத்தனை ஆசைகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டு அந்த உயிரான்மா உடலை விட்டு வெளியே வந்ததோ அதே ஆசை கொண்டு, மற்றொரு உடலுக்குள் புகுந்து கொண்டு அங்கே பேயாக ஆட்டும்.
“கொல்ல வேண்டும்…!” என்ற உணர்வுகளை எடுத்துக் கொண்ட உயிரான்மா இத்தனை வேலைகளைச் செய்யும். அவனுக்குப் பிறந்த குழந்தையும் இவன் வழியில் வளரப்படும் பொழுது இப்படித்தான் வருகின்றான்.
அன்றாட வாழ்க்கையில், இதனை நாம் சாதாரணமாகக் காணமுடியும்.
உதாரணமாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மிகவும் நட்பாக, நன்றாகப் பழகுவார்கள். ஆனால், பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டால் சிலர் மிகவும் வேதனையடைந்து தற்கொலை செய்து கொள்வதும் உண்டு.
தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவியின் உயிரான்மா யாரை மிகவும் நட்பாக நேசித்து நட்பாகப் பழகியதோ அந்த உடலுக்குள் வந்துவிடும்.
1.இப்படி வந்த பின்
2.இந்த மாணவி பரீட்சை எழுதச் செல்ல வேண்டும் என்றாலே தன்னையறியாது பயப்படும்…!
ஏனென்றால் இந்த மாணவியின் உடலிலுள்ள உயிரான்மா போகவிடாது. தான் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு இந்த உடலில் பல வித செயல்களைச் செயல்படுத்தும். இதை நாம் அனுபவத்தில் பார்க்கலாம்.
மருத்துவப் படிப்பு படிப்பவருக்குக் கூட இதுபோன்ற நிலைகள் ஏற்படுகின்றன.
நண்பர்களாகப் பழகியிருப்பார்கள். ஆனால் நண்பர்களில் ஒருவர் எதிர்ப்பாராத விதமாக ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் என்றால் பற்றின் உணர்வுகள் இங்கே வந்தவுடனே அந்த உயிரான்மா நண்பரின் உடலுக்குள் வந்துவிடும்.
இவைகளெல்லாம் எதனால் வருகின்றது என்பதனை, ஞானிகள் இராமாயாணக் காவியம் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
1.உயிரின் இயக்கங்களையும்
2.உணர்வின் எண்ணங்களின் இயக்கத்தையும்
3.உணர்வுக்கொப்ப நமது உடல் எப்படொ உருவானது என்பதையும்
4.மனித சரீர வாழ்க்கைக்குப்பின் நமது நிலை என்ன..? என்பதையும்,
5.ஞானிகள் இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.
இரவு தூக்கத்தில் நீங்கள் பெற வேண்டிய மிக மிக ஆற்றல் வாய்ந்த சக்தி
நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்று உணர்வின் நிலைகளைச் செலுத்துகின்றீர்கள்.
1.இதற்குக் குரு வழி கொண்டு உங்களைப் பிரார்த்திக்கக்கூடிய குரு வேண்டும்.
2.அப்படிப் பிரார்த்திக்கக்கூடிய குருவினுடைய தன்மை பெற்றால்தான் உங்கள் உணர்வின் தன்மை வலு கூடும்.
நாம் அனைவருமே TV, RADIO மூலமாக அனைத்தையும் பார்த்துக் கேட்டு அறிகின்றோம். இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு எங்கேயோ விண்ணிலே பரவக்கூடிய அந்த உணர்வின் தன்மையை அந்த அலைகளை எடுத்துப் படங்களை அனுப்புகின்றது.
அப்படி அனுப்பும் பொழுது உடனே அந்தப் படங்களை எடுத்துக் கொள்வதற்காக வேண்டி கம்ப்யூடர் சிஸ்டம் என்று அந்த உணர்வலைகளை அது ஒன்றுக்குள் ஒன்று இணையச் செய்து அது விண்ணிலே எத்தனையோ கோடி மைல்களுக்கு அந்தப் பக்கம் பறந்து கொண்டிருந்தாலும் அது எடுத்து அனுப்பும் படங்களையோ அங்கிருக்கும் உணர்வலைகளை அது படமெடுத்து தரையிலிருக்கும் ஆண்டெனாக்களிலே இயக்கப்படுகின்றது, கம்ப்யூடர் அந்த நிலையை இழுத்துப் பதிவு செய்து விடுகின்றது.
1.இதைப் போன்று உங்கள் உடலின் தன்மை அனைத்துமே “இயந்திரம்…!
2.நீங்கள் தியானத்தாலே எடுத்துக் கொண்ட உணர்வின் கண்ணின் புலனறிவு “ஆண்டெனா…!”
3.அந்தப் பவரின் சக்தி நாம் தியானிக்கப்படும்போது நம் உடலுக்குள் எத்தனை உணர்வுகள் இருந்தாலும் கண்ணுக்குள் தொடர்பு உண்டு.
நாம் எந்தெந்த நிலைகளில் நினைவைச் செலுத்துகின்றோமோ அந்த உணர்வின் தன்மை உங்கள் புலனறிவால் ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு “கண்ணுக்குள் இருக்கக்கூடிய கருவிழிக்குள்..” அது தொடர்பு கொள்கின்றது.
அவ்வாறு அது தொடர்பு கொள்ளும் பொழுது நாம் தியானமிருக்கும் பொழுது
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
2.உங்கள் கண்ணுக்குள் இருக்கக்கூடிய அந்தக் கருவிழியான நிலைகளிலே
3.மெய் ஞானிகளின் அருளாற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்று
4.உணர்வை உந்தி அந்த உணர்வைப் பதிவு செய்கின்றோம்.
அதாவது கண்ணாலே பார்ப்பதும்… அந்தப் பார்வையின் நிலைகள் கொண்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்வதும்… எனக்கு (ஞானகுரு) நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் எவ்வாறு காட்டினாரோ அந்த உணர்வின் நிலைகள் கொண்டே
1.உங்கள் கருவிழிக்குள்ளூம் அந்த உணர்வின் திரை ஈர்ப்பின் சக்தியைப் பெறச் செய்யும் போது
2.நீங்கள் இரவிலே படுத்துக் கொண்டிருக்கும்போது இது பதிவு ஆகின்றது.
இவ்வாறு இரவிலே நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டபின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொண்டே நீங்கள் படுக்கும்போது இந்த உணர்வலையின் ஓட்டங்கள் இருந்து கொண்டிருக்கும்.
அப்பொழுது சப்தரிஷி மண்டலங்களில் இருந்தும் துருவ நட்சத்திரத்தில் இருந்தும் வரக்கூடிய அலைகளைப் பெற வேண்டும் என்ற உணர்வுடன் நீங்கள் தொடர்பு கொண்டு செயல்படுத்தும் பொழுது அது தன்னிச்சையாகவே அந்த உணர்வுகளை அது இழுத்துச் செயல்படுத்திவிடும்.
தியானத்தின் மூலம் இயற்கையின் படைப்பையே அறிய முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
பஞ்ச பூதங்களை ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் என்று கூறுகின்றோம். ஆகாயம் என்ற பால்வெளிச் சூட்சமத்தில் பரவிப் படர்ந்துள்ள மற்ற நான்கும் ஒன்றுடன் ஒன்று கூடி
1.காந்தத்துடன் நீரமிலம்
2.காந்தத்துடன் காற்றமிலம்
3.காந்தத்துடன் வெப்பமிலம் என்று
4.இப்படிக் காந்தத்துடன் பிரிதிவியாகும் அமிலங்களின் கலப்பால் பல பல உருவாகின்றன.
கோடானு கோடி நிறங்களாகவும் மணங்களாகவும் அதிலிருந்து உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பின் குணத் தொடரில் இணைந்து உயிராத்மாவாக பஞ்சபூதத் தத்துவமாக உருவாகின்றது.
மனம்… அறிவு… நினைவின் ஆற்றல்… செயலாக்கத்தின் உந்துதல்… என்று இவை அனைத்துமே எண்ணமாகக் காந்தத்தின் நிறைவாக ஆத்மா என்றிட்ட ஜீவனாகத் தான் ஈர்த்துக் கொண்ட அமில வீரியமாகப் பூமியில் பிறப்பிற்கு வருகின்றது.
ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய உயிரணுக்கள் வானத்தில் உதித்துக் கொண்டே தான் உள்ளன.
இருந்தாலும் இந்தப் பூமியுடன் தொடர்பு கொண்டுள்ள “இருபத்தியேழு நட்சத்திர அமிலங்களின்…” நிலைத் தொடர்பு கொண்டு தான் உடல் பெற்றுப் பிறப்பிற்கு வந்திட முடியும்.
1.அண்ட வித்து முட்டையாகப் பிறப்பிற்கு வருகின்ற கரு நிலை உயிரணுக்களும்
2.நீருக்குள் தோன்றிடும் கரு நிலை உயிரணுக்களும்
3.வேர் பகுதியில் தோன்றி கிளைத்தெழும் உயிர் கருக்களும்
4.இந்தப் புவியில் சரீர வியர்வை கொண்டு வாசனைத் தொடர்புடன்
5.இதே தன்மையாக சூரிய வெப்பம் பட்டு உதிக்கும் உயிரணுக்கள் என்றும்
6.பல செயல் நிலைகள் இயற்கையின் கதியில் நடைமுறையில் உள்ளன.
7.உயிரணுக்கள் செயல்படும் தன்மைகளில் உள்ள அனைத்து இரகசிய நிலைகளையும் வகைப்படுத்தியே அளிக்கின்றோம்.
ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உயர் ஞான வளர்ச்சிக்குண்டான வழி முறைகளைச் செயல்படுத்திட உடலுக்குள் செயல்படும் உண்மையின் சாரங்களை
1.அந்த மறைக்கப்பட்ட மறை பொருளை
2.அறியச் செய்யும் நிலைக்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.
3.ஆனால் பாடத்தின் கடினத் தன்மையை விண்டு தருவதில் தான் தாமதம்.
அனைத்தையும் தியானத்தின் வலுவைக் கூட்டியே அறிந்து கொள்ளலாம். ஞானத்தை அறிதலும் அதன் தன்மைகளை உணர்தலும் சிந்தனையில் தெளிதலும் என்ற நிலைக்கு வளர்தல் வேண்டும்.
நாம் எடுக்கும் எண்ணம் நல் எண்ணமாக நல் சுவாசம் கொண்டு தியான வழிதனில் உணர்வுகள் பக்குவப்படுத்தப்பட
1.அதுவே மனத்தின் பக்குவமாக
2.சிந்திக்கும் ஆற்றலை நாம் ஒருமுகப்படுத்திப் பெறவேண்டிய
3.நல் நிலை என்று உணர்தல் வேண்டும்…!
துன்பங்களையும் துயரங்களையும் தணியச் செய்து நல்லதாக மாற்றும் சக்தி…!
காரமான பொருள்களைத் தனியாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சி தான் முன்னிலையில் நிக்கும். காரம்… காரம்… என்று தான் சொல்லிக் கொண்டேயிருப்போம்.
ஆனால் இந்தக் காரத்தை அடக்க “சப்…!” என்று இருக்கும்
1.மற்ற காரம் இல்லாத பொருள்களை இதனுடன் இணைக்கப்படும் போது
2.காரத்தின் தன்மை குறைந்து சுவை மிக்க நிலைகளாக உருவாகின்றது.
நமது வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அவை எல்லாம் உருவாக்கப்படுகின்றது.
ஏனென்றால் பிறருடைய துயரங்களையும் துன்பங்களையும் கேட்டறிந்து
1.அவர்களுக்கு உதவிகள் செய்தாலும்
2.கேட்டறிந்த அந்த உணர்வுகளை நாமும் நுகர நேர்கின்றது.
3.அந்தத் துயரப்படும் உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம்மையும் துன்பப்படச் செய்கிறது
4.அப்பொழுது நாம் நுகர்ந்த அந்தத் துன்பமான உணர்வுகளை தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!
அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் கேட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.
முதலில் சொன்ன மாதிரி தனிக் காரத்தை அடக்கப் பல நல்ல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போன்று
1.நாம் கேட்டறிந்த துன்பமான துயரமான உணர்வின் தன்மையை அடக்க
2.வலுவான அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைக் கூட்டி விட்டால்
3.நாம் நுகர்ந்த தீமைகளைத் தணியச் செய்து நல்ல உணர்வின் அணுக்களாக மாற்றும்.
நாம் நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனைப்படும் உணர்வின் தன்மை அதிகரித்து நல்ல குணத்தின் வலிமையை அது குறைந்து விடுகின்றது.
ஆகவே நம்முடைய நல்ல குணத்தின் தன்மையை நாம் அதிகமாக வலு பெறச் செய்ய வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவசியம் நாம் நுகர வேண்டும்.
அப்பொழுது உயிரான ஈஸ்வராலோகத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உருவாகத் தொடங்குகிறது.
“பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…!” என்ற நிலையில் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உருவாகாதபடி அருள் உணர்வுகளை உருவாக்கிடல் வேண்டும்.
தீமை என்ற உணர்வுகளைக் குறைத்து தீமைகளை அகற்றிடும் வலிமை கொண்ட உணர்வின் அணுக்களாக எடுக்கும் போது
1.ஈஸ்வரலோகத்தில் அந்த உணர்வுகள் உருவாக்கப்பட்டு
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது அது இந்திரலோகத்தில் கருத்தன்மை பெற்று
3.தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக… நல்லதைச் சிருஷ்டிக்கும் பிரம்மலோகமாக (உடலாக) மாறுகின்றது.
இத்தகைய நிலைகளை நம் உடலுக்குள் உருவாக்கினால் தீமையை அகற்றிடும் வலிமை பெற்று இந்த உடலை விட்டுச் சென்ற பின் நமது உயிரான்மா ஞானிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்கிறது.
உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளியின் சரீரமாக நாம் ஆகின்றோம்…!
தீமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது… எப்படி வலுப் பெறுகின்றது…?
குருநாதர் என்ன செய்தார்…? எம்மைக் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய்ப் பல பச்சிலைகளைக் காண்பித்து, இது பேசுமாடா…? பாருடா பச்சிலையை…! என்றார்.
அது எப்படி சாமி பேசும்…? என்றேன். பிறகு நான் பச்சிலை பேசும் என்று சொல்வேன்.
அது எப்படிடா பேசும்…? என்று எம்மைக் கேட்டார். பிறகு எல்லா உண்மையயும் சொல்வார்.
இதே மாதிரி ஒரு புலி செத்துப் போய்விட்டது, இது என்னடா செய்யும்…? என்று கேட்டார்.
சாமி…! அது செத்துப் போய்விட்டது என்றால் எப்படி எதை எதைக் கொன்றதோ அங்கே போய் இந்த உயிர் பிறக்கும்…! என்றேன்.
அது எப்படி என்று நீ சொல்லுடா…! என்பார். அது செத்துப் போய்விட்டது. அதில் இருந்த அது சேர்த்த சத்தெல்லாம் எங்கடா போனது…? என்பார்.
அது செத்துப் போனால் ஆவி எல்லாம் காற்றிலே போகும் என்று யாம் சொன்னால் இரண்டு பேருக்கும் தர்க்கம் ஆகும்.
யாம் இந்த மாதிரிச் சொன்னாலும் உடனே அவர்
1.அது எப்படிக் காற்றில் போகும்…?
2.காற்றில் போனால் என்ன செய்யும்…? என்று கேட்பார் குருநாதர்.
3.இப்படியெல்லாம் விளக்கம் கேட்பார்.
அன்றைக்கு யாம் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லும் பொழுது, சாப்பாடு இல்லை. நடந்து போகக் கூட முடியாது. நாம் ஏதோ நினைக்கின்றோம். ஆனால் காட்டுக்குள் போய் நடந்து போகக் கூடிய சக்தியை இழந்து விட்டால் என்ன செய்ய முடியும்…!
அப்பொழுது அந்த இடத்தில் வேதனை வரும். அந்த வேதனையை எடுக்கப் போகும் போது என்ன ஆகும்…?
1.வேதனை ஏற்பட்ட உடனே குருநாதரை எண்ணி
2.இப்படி இந்த மாதிரி பண்ணிவிட்டாரே…!
3.எப்படியும், அவர் சொன்ன இடத்திற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வரும்.
எமக்கு வேதனை வரும் பொழுது… சொல்கின்றார் குருநாதர். வேதனைப்படுத்தி விட்டார்…! என்று எண்ணினால், நடக்க முடியாது. ஆனால் நடக்க முடியவில்லை என்றால் நீ என்ன செய்கிறாய்…?
அங்கே அந்த இடத்திற்கு நாம் போய்விட்டால் உடனே கொஞ்சம் சௌகரியமாக இருக்கலாம்…! என்ற எண்ணம் வருகின்றதல்லவா?
எப்பொழுது வருகிறது…?
அங்கே. அந்த எண்ணம் வருகின்றது. அப்பொழுது அந்த எண்ணம் வரும் பொழுது
1.இதிலிருந்து எப்படியும் தப்பிக்க வேண்டும்… தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஓங்கி வருகின்றது.
2.இப்படித்தான், தீமைகளை நீக்கும் வலுவான எண்ணத்தை எமக்குக் கொடுத்தார் குருநாதர்.
சரீரத்தில் இயக்கும் சுவாச நாடிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
மனித சரீரத்தில் செயல்படும் சுவாசத்தையே சூரிய சந்திர அக்கினி என்றும் மும்மலங்கள் என்றும்… முக்குணங்கள் என்றும்… உயிராத்மா பிறப்பபிற்கு வரும் தொடர்பில் “மும்மல நீக்கம் பெற வேண்டியதன்…” முக்கியத்துவத்தையும் காட்டினார்கள் ஞானிகள்.
உலகோதய வாழ்க்கை நடைமுறையில் மும்மலங்களின் செயல்பாடே கீழாம் அறிவு என்றும் இந்த முக்குணங்களை அறிந்து தெளிந்து தியான வழித் தொடர்பில் நீல வண்ண ஆத்மாவாகச் சக்தி பெற்றுப் பேரானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று உணர்த்தினார்கள்
சரீரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடிகள் எழுபத்தி இரண்டாயிரத்திலும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் நாடிகளான
1.பொன் போல் நிறம் காட்டிய சூரியன் என்ற வலது நாசித் துவாரமும்
2.சந்திரகலை என்ற இடது நாசித் துவாரமும்
3.அக்கினி என்ற மறைமுக நாடியையும் அறிந்து கொண்ட ஞானிகள்
4.அண்ட சராசரங்களின் செயலை அதாவது அந்த ஆதிசக்தியின் சூட்சமத்தையே
5.மனித உடலான ஜீவ பிரம்ம சரீரத்திலேயே கண்டனர் ஞானிகள்.
உயிராத்மா பிறவி எடுத்து எடுத்துத் தான் எடுத்துக் கொண்ட சரீரம் கடைசியில் மரணத்தின் பிடியில் ஆட்படுவதையே அன்றைய சித்தன் “காளியின் உருவமாக…!” அமைத்துக் காட்டினான்.
1.ஆத்ம சக்தியை வலுக்கூட்டிக் கொள்ளாத ஜீவன்கள்
2.சரீரத்தில் மறைந்துள்ள சக்தியைத் தன் உயிராத்ம வலுவிற்கு ஈர்த்துச் செயல் கொள்ளாத ஜீவன்கள்
3.உலகோதயப் பிடிப்பில் நாத விந்துச் சக்தியின் வலுவை இழந்து
4.எண்ணிறந்த பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்படுவதையே
5.காளி என்ற உருவில் பயமுறுத்தும் தன்மைக்குச் சித்தர்களால் காட்டப்பட்டது.
அதே சமயத்தில் வினைக்கு நாயகன் விநாயகா என்று உயிரை முதன்மைப்படுத்தி உருவகமாகவும் காட்டியுள்ளார்கள். பின்னிப் பிணைந்த நிலையில்
1.இரு நாகர்கள் எழுந்து நின்று ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவமும்
2.இரண்டிற்கும் நடு மையத்தில் சிவலிங்கமும்
3.விநாயக உருவத்திற்கு எதிர்புறம் மூஷிகமும் காட்டினார்கள்.
மனித உடல் பெற்ற பின் தன்னைத் தான் உணர்ந்து மேலான நிலை பெறவேண்டி கீழான நிலையை விலக்கித் தன் உயிராத்மாவை ஜோதி நிலை பெறச் செய்ய ஜோதித் தத்துவமாக உயிரும் ஆத்மாவும் ஒன்றாகக் கலந்து உயர் நிலை பெறவே அனைத்துமே போதனை ஆக்கப்பட்டன.
இந்த மனித சமுதாயம் நல் நிலை பெறவேண்டும் என்று புகட்டப்பட்ட பாட நிலைகளில் எத்தனை உயிராத்மாக்கள் உண்மையின் பொருளை உணர்ந்து கொண்டனர்…?
1.எண்ணத்தைத் தெளிந்து ஒவ்வொரு உயிராத்மாவும்
2.சுயப்பிரகாசமாகச் (ஒளிச் சரீரம்) சக்தி பெற்றிடவே இந்தப் பாடங்கள்…!
மூவுலகம் என்ற சுவாசத்தின் தன்மைகளை அறிந்து வான இயலாகக் காலத்தைக் கணித்த ஞானி சரீர பிம்பத்தைக் கொண்டே உயர் ஞானம் சித்திக்கும் வழியையும் காட்டினான்.
1.வலது சுவாச நாடி வலது கால் பெருவிரல் தொடங்கி மேல் எழுவதைப் போல்
2.இடது சுவாச நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் கிளம்பி
3.கபாலத்தை நோக்கிச் சிரசின் உச்சிக்குச் செல்லும் பொழுது
4.அந்த இரண்டு நாடிகளும் உடலின் குதம் என்ற மூலத்தில் எழும் அக்கினி மண்டலத்தில் பின்னிப் பிணைந்து பிரிந்து
5.மேலெழுந்து அதற்கும் மேல் உள்ள மர்ம ஸ்தானத்தில் சந்தித்து இரண்டு நாடிகளும் பின்னிப் பிணைந்து
6.மேலெழுந்து இரண்டாகப் பிரிந்து இடுப்பின் பகுதியை வட்டமிட்டு சரீரத்தின் வயிற்றுப் பகுதியில் நாபி என்ற இடத்தில் மீண்டும் பின்னிப் பிணைந்து
7.மேல் எழுந்து பிரிந்து மார்புப் பகுதியை வட்டமிட்டு
8.மீண்டும் சிரசின் உச்சிப் பகுதிக்கும் உள் நாக்கின் மேல் பகுதிக்கும் நடு மையத்தில் நெற்றிப் பொட்டின் உள்ளிடத்தில் பின்னிப் பிணைந்து
9.சிரசின் உச்சியில் அந்த இரண்டு நாடிகளும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொள்வதைக் காட்டுவதற்கே
10.விநாயகர் அருகே நாகர்களைக் காட்டியது…!
ஒவ்வொருவரும் ஆத்ம லிங்க ஜோதித் தத்துவத்தை உணர்ந்து வலுப் பெற்றிடுங்கள்…!