அணுக்கதிரியக்க வெடிப்பு நிலைகளைப் பற்றி படிக்காதவன் சொல்கிறேன் – ஞானகுரு

Radioactive power

அணுக்கதிரியக்க வெடிப்பு நிலைகளைப் பற்றி படிக்காதவன் சொல்கிறேன் – ஞானகுரு

 

சாதாரணமாக ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் துகள்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது மின்னலாக மாறுகின்றது.

அதே மின்னலின் தன்மை புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும்போது எந்த மரமோ எந்த நட்சத்திரத்திலிருந்து வருகின்றதோ
1.அந்த இனம் இந்த மரத்திலிருந்தால் பக்கத்தில் உள்ள மரம் அப்படியே இருக்கும்..
2.ஆனால் இந்த மரம் பொசுங்கிவிடும்.
3.தன் இனத்தை எடுத்துப் பூமிக்குள் ஊடுருவிவிடும்.

அது பூமிக்குள் சென்ற பின் வெப்பத்தின் நிலை அதிகமாகி அது கொதிகலனாகும். இதனுடைய சேமிப்பு அதிகமானால் அது நாளடைவில் நிலநடுக்கமாகும்.

அதாவது அந்த வாயுவின் தன்மை அதிகரித்து வெடிக்கும் தன்மை வரும். அந்த இடம் நேராகக் கீழே இறங்கும். அந்த இடத்தில் மட்டும் தான் நிலநடுக்கமாகும். ஒரு சில நிமிடங்களில் அடங்கிவிடும்.

ஆனால் அதே போல் அந்த நட்சத்திரத்தின் மின் அழுத்தங்களின் நிலைகள் கடலில் படும் போது அங்கே உப்புச் சத்து இருக்கிறது. இந்த பூமிக்குள் ஊடுருவாதபடி கடலிலே அந்த உணர்வின் சத்து பட்டபின் அது யுரேனியமாக மாறுகின்றது.

1.எந்தந்தெந்தப் பகுதியில் எந்தெந்த நட்சத்திரத்தின் தன்மை படருகின்றதோ
2.அதற்குத் தகுந்த மாதிரி எத்தனையோ வகையான யுரேனியத் தனிமங்களாக
3.அதனின் வலுவுக்குத் தக்கவாறு அங்கே உறைந்து மணலாக மாறுகிறது
4.அதற்குப் பல பெயர்களையும் (தோரியம் புலுட்டோனியம்) வைக்கின்றனர்.

பின் என்ன செய்கின்றான்…? அதைப் பிரித்து எடுத்து அந்த அணுவைப் பிளக்கின்றான். அந்தக் கதிரியக்கப் பொறிகளை அடக்குகின்றான்.

கடல் நீரில் உள்ள ஹைட்ரஜன் (கண நீர்) அந்த உணர்வின் தன்மை கொண்டு அழுத்தத்தின் தன்மை கொண்டு அதை வெடிக்காத மாதிரிப் பாதுகாக்கின்றான்.

ஆகவே ஹைட்ரஜன் என்ற நிலைகள் வந்தாலும்… அடர்த்தியின் தன்மை கொண்டு ஒளிக்கதிர்களைச் சேர்த்து மீண்டும் வெடிக்கப்படும்போது (ஹைட்ரஜன் வெடிக்கப்படும் போது) என்ன நடக்கிறது…?

சனிக் கோளிலிருந்து வரக்கூடிய நிலைகள் (நீர் சத்து) ஒவ்வொரு அணுக்களிலும் கலந்துள்ளது. அந்தச் சனிக்கோளிலிருந்து வடிக்கப்படுவது தான் கடலாக மாறுகின்றது.

அந்த உணர்வின் தன்மையுடன் ஹைட்ரஜன் வரப்படும்போது வான்வீதியிலே இது வெடித்த பின் தன் இனத்தின் தன்மை ஜீவ சக்தியை இழக்கச் செய்கின்றது.

1.இங்கே வளரும் தாவர இனங்களுக்குள் ஊடுருவி
2.அதற்குள்ளும் கதிரியக்கப் பொறிகள் வெகு தூரம் பரவப்பட்டு
3.அதிலிருக்கும் ஜீவ சக்தியையே எடுக்கச் செய்து விடுகின்றது
4.இதெல்லாம் இந்த ஹைட்ரஜனின் வேலைகள். விஞ்ஞான அறிவால் இதைக் கண்டு கொண்டார்கள்.

மூன்றாம் வகுப்பு முழுவதும் படிக்காதவன் (ஞானகுரு) இதை எல்லாம் உங்களிடம் சொல்கிறேன். நான் பார்த்து இதைச் சொல்கிறேன். நீங்களும் பார்க்க முடியும். “தன்னம்பிக்கை வேண்டும்…!”

எனென்றால் இயற்கையின் உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உள்ளதையும் அதில் உள்ள அதிர்வின் ஒலிகளைக் கொண்டு அதனின் உருவத்தையே விஞ்ஞானி படமாக இன்று வரைகின்றான்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் உணர்வுகள் பாயப்படும் போது உணர்வுகள் எப்படி இயக்கின்றது என்பதை விஞ்ஞானி இப்படிக் காணுகின்றான்.

அதைப் போன்று தான் அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் உணர்வின் இயக்க உணர்ச்சியின் தூண்டுதலைப் பார்த்தான். எண்ணங்கள் கொண்டு எப்படி உருவானது என்ற நிலையை அவன் கண்டுணர்ந்தது தான் பேரண்டத்தின் உண்மை நிலைகள் அனைத்தும்.

அவனுக்குப் பின் வான்மீகி கண்டான். பின் வியாசகன் கண்டான். அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட நிலைகள எடுத்தார்கள் பின் வந்த ஞானிகள் அனைவருமே…!

இனம் இனத்துடன் தான் சேரும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

protected zone of Sages attraction

இனம் இனத்துடன் தான் சேரும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இவ்வுலகம் இன்றுள்ள நிலைக்கொப்ப இக்கலியின் நிலைக்கேற்ப ஆத்மீக நெறியைப் போதிக்கும் நிலையும்… அவ்வழிக்கு வழி நடந்திட வந்திடும் நிலையும்… கால நிலைபோல் மாற்ற நிலையில் உள்ளன.

இப்போதனை நிலையே பல நாட்களுக்கு முதலில் பின் நோக்கிச் சென்றிட்ட அன்று வாழ்ந்திட்ட எண்ண நிலைக்கொப்ப வழி முறைகள்தான் இவ்வாத்மீக நெறி முறையுடன் கலந்துள்ளன.

இன்று நாம் வாழ்ந்திடும் இக்கலியுகத்தில் நாம் வளர்ந்து விட்ட நாகரிகத்துடன் ஒன்றியுள்ள நிலையில் இவ்வாத்மீக நெறியை எந்நிலையில் ஏற்று வழி நடந்திடல் என்பதனை உணர்த்திடவே… இப்பரந்துள்ள உலகில் ஈஸ்வரப்பட்டராகிய யான் “என் பூர்வ ஜென்மத்தின் தொடர்பு கொண்டவர்கள் மூலமாகத் தான்…” இந்தப் பேருண்மைகளை இங்கே போதனைப்படுத்திட முடிந்தது.

இந்த நிலைக்கு ஒப்பத்தான் இவ்வுலகு அனைத்திலுமே…!

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட ஒரு நிலைப்பட்ட சக்திகள்தான் ஒன்றுபடுகின்றன
2.இனம் இனத்துடன் எப்படிக் கலக்கின்றதோ அந்த நிலை போன்றே…!

எந்த இனமும் தன் இனத்துடன் மற்ற நிலை மோதும்போது “சத்ரு… மித்ரு…” நிலை ஏற்பதில்லையோ அந்த நிலை போன்றே இவ் உலகில் இவ்வெண்ண நிலைக்கும் தொடர்பு நிலை உள்ளது.

இத்தொடர் நிலை கொண்டுதான் பிறப்பும் இறப்பும் உள்ளன. இந்த ஜென்மம் மறு ஜென்மம் அனைத்துமே இக்கலியில் மனித ஜென்மங்களாய் அறிவாற்றலும் நற்செயலைச் செயல்படுத்திடும் அங்கங்கள் பெற்றிட்ட நாம் நமக்குகந்த நம் உடலுடன் உள்ள இக்காந்த சக்தியை அறிந்திடாமல் நம் கால நிலையைக் களிப்பு நிலை என்ற உல்லாச நிலைக்கு அடிமைப்படுத்தி நம் ஆத்மாவை அடிமையாக்கி வாழ்கின்றோம்.

இன்று வளர்ந்துள்ள விஞ்ஞான யுகத்திற்கு வேண்டிய சக்தி அனைத்துமே இக்காற்றில் உள்ள காந்த சக்தியை ஈர்த்து இன்றைய மின்சாரமாகவும் இன்னும் இப்பூமியிலிருந்து ஈர்த்தெடுத்த திரவத்தைக் கொண்டு பல மண்டலங்களுக்குச் சென்றிடும் பல கோளங்களைச் செய்வித்தும் செயலாக்குகின்றனர்.

நம் எண்ணத்தில் நம்மையும் விட இயந்திரத்தின் சக்திக்கு அடிமைப்பட்டிடும் நிலையான வாழ்க்கை இக்கலியில் உள்ளது.

பல நிலைகளைப் புகைப்படமாக எடுக்கின்றீர். பல நாட்களுக்குப் பிறகு பழைய நினைவுகளை காண்பதற்கே. பதிவேட்டில் நம் சப்த அலைகளைப் பதித்துக் கேட்கின்றீர்.

ஆனால் இன்று இயந்திரத்தின் உதவியுடன் செயற்கையாகக் காணும் இந்த நிலைகள் அனைத்துமே நம் ஆத்மாவின் சக்தியில் (நம்மிடம்) உள்ளன.

இன்று எடுக்கும் மின்சாரத்திற்கு காந்தத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு அச்சக்திகளை ஈர்த்து நமக்கு ஒளியை அளிக்கின்றது. இவ்வுடல் என்னும் கூட்டில் நாம் அங்கமாகப் பெற்றிட்ட நாம் செயல்படுத்திடும் நம் கைகளுக்கு அக்காந்த சக்தி நிறைந்துள்ளது.

“நம் ஆத்மாவின் நிலையினை நாம் உணர்ந்தால்…” இவ்வுலகனைத்தும் தோன்றிய நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை அனைத்து நிலைகளையுமே நாம் பிம்பமாக எந்த நிலையை எண்ணுகின்றோமோ அந்நிலையின் ஆரம்ப நாள் தொட்டு இன்று நடக்கும் நாள் வரை ஒளிக் காட்சிகளாகக் கண்டிடலாம். சப்த அலைகளையும் அந்நிலையிலேயே கண்டிடலாம்.

1.நம் ஆத்மாவுடன் கூடிய காந்த சக்தியை நாம் எவ்வெண்ணம் கொண்டு ஈர்த்து எடுக்கின்றோமோ
2.அவ்வெண்ணத்தின் சக்தி அனைத்தும் தொடர் நிலையாக நாம் அறிந்திடலாம்.
3.இவ்வெண்ண நிலையின் பிறவி நிலையிலும் இத்தொடர் நிலையுள்ளது.
4.அவ்வெண்ணமேதான் அனைத்து நிலைகளுக்கும் முதல் நிலை.
5.இவ்வெண்ணத்தின் நினைவுடன் நாம் எடுக்கும் சுவாசமேதான் நம் ஆத்மாவின் செயல்நிலை.

ஆகவே… ஒவ்வொருவரும் இவ்வுலக சக்தியினை இவ் உடல் என்னும் கூட்டில் உள்ள நம் ஆத்மாவின் ஜோதியையே நற்சக்தியாக்கிடும் நிலைப்படுத்துங்கள்.

சந்தர்ப்பத்தால் நம்மை இயக்கும் தீமைகளை… நம் எண்ணத்தால் எண்ணி அதை நல்லதாக மாற்ற முடியும்

everything is for good

சந்தர்ப்பத்தால் நம்மை இயக்கும் தீமைகளை… நம் எண்ணத்தால் எண்ணி அதை நல்லதாக மாற்ற முடியும்

 

யாம் உபதேச வாயிலாகச் சொல்லும் ஞானிகளின் உணர்வுகள் உங்கள் உயிரிலே பட்டு… விஷ்ணு சங்கு சக்கரதாரி…! அந்த ஒலியை எழுப்புகின்றது…. ஞானத்தின் உணர்ச்சிகள் உடலிலே படருகின்றது. எந்த உணர்வோ அதன் வழி வழி நடத்துகின்றது உயிர்.

ஆகவே உயிர் வழி நடத்தும் உணர்வின் தன்மை கொண்டு எவர் இதை நுகர்கின்றனரோ அவர் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.

ஏனென்றால் இருண்ட உலகமாக (உடலுக்குள்) விஷத்தின் தன்மை கலந்த… விஷத்தில் கலந்தது தான் மற்ற உணர்வுகள்.

ஆதியிலே… ஆங்காங்கு விஷத்தின் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று உராயும் வலுக்கள் வரப்படும்போது தான் வெப்பம் என்ற உணர்வாகி அங்கே ஆவி என்ற நிலைகள் உருவாகிறது.

ஆவி என்ற நிலைகள் வரப்படும் பொழுது இந்த வெப்பத்தால் தாக்கப்பட்டு உணர்வின் வேகத் துடிப்பாகி நெருப்பாகும் போது நகர்ந்து செல்லும்…! நகரும் போது காந்தமாகிறது. அந்தக் காந்தத்தால் கவர்ந்து ஒன்றை உருவாக்குகிறது.

1.விஷம் இயக்கச் சக்தியாகவும்
2.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்
3.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும் பெற்று
4.காந்தம் அரவணைத்து உணர்வைத் தன்னுடன் மோதப்படும் உணர்வின் சக்தி எதுவோ
5.அதன் வழி பிரம்மம் உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி…! எதன் உணர்வு பட்டதோ அதன் உணர்ச்சிகளுக்கொப்ப அது உருவாக்கும் அதனின் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது என்ற நிலையை நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஆகவே மனிதனானபின் இந்த இருளை அகற்றி எதனையுமே எண்ணத்தால் உருவாக்கும் நிலை பெற்றது தான்…! மற்றது அனைத்தும் சந்தர்ப்பத்தால் மோதும் தன்மை வருகின்றது.

1.சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள் வாழ்க்கையை அமைக்கின்றது.
2.ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை மாற்றி அருளுணர்வு என்ற நிலையை அகஸ்தியன் உருவாக்கி
3.அழியாத நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்

அவன் மாற்றிய உணர்வு கொண்டு… நாமும் சந்தர்ப்பத்தில் தீமை என்ற உணர்வை நுகரும் போது… அதன் வழியில் அழைத்துச் செல்லாதபடி தீமைகளை அடக்கி ஒளியாக மாற்றும் உணர்வைப் பெற முடியும்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம் உணவாக உட்கொள்வதில் மறைந்துள்ள நஞ்சை உடல் மலமாக மாற்றுகிறது. நஞ்சை நீக்கிடும் வலிமைமிக்க உணர்வு கொண்டு கார்த்திகேயா… தெரிந்த உணர்வு கொண்டு வலிமை கொண்டு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்முள் செல்த்தி அதை நாம் அடக்கிப் பழகுதல் வேண்டும்.

நம் வாழ்க்கையில் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் இப்பொழுது உங்களுக்குள் இதைத் தெளிவாக்கியது

ஆகவே அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலிலுள்ள அணுக்களை எல்லாம் ஒளியாக மாற்றுவோம்.

ஞானம் பெற சந்நியாசம் தேவை இல்லை – ஈஸ்வரபட்டர்

Spiritual family

ஞானம் பெற சந்நியாசம் தேவை இல்லை – ஈஸ்வரபட்டர்

 

வளர்ந்து வரும் செயற்கையுடன் கூடிய கால நிலையில் ஆவி உலகின் செயலும் நம்முடனே வருகிறது என்பதனை உணர்ந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

1.இன்று வாழ்ந்திடும் மக்களின் (எண்ணிக்கை) அளவை விடவும் அதிகமாக
2.இவ்வாவி உலகில் ஆத்மாக்களின் தாக்குதலினால் இன்றுள்ள மக்களின் வெறியுணர்வு அதிகரித்துள்ளது.

உயிரணுவாய் உதித்து ஆத்மாவுடன் கூடிய ஜீவ நிலை பெற்று ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்திடும் வாழ்க்கையிலெல்லாம் நாம் உண்ணும் நிலை கொண்டும்… எண்ண நிலை கொண்டும்… நம்முடன் பல உயிரணுக்கள் நம்முள் நம் உயிர் ஜீவ ஆத்மாவுடன் நம் உடலில் ஏறுகிறது.

அதனால் நம் செயல் எல்லாம் நம் ஆத்மாவுடன் கூடியதாக மட்டும் இருந்திடாமல் பல உயிரணுக்களின் நிலைக்கு ஒத்த சக்தியெல்லாம் நம் உடலில் இருப்பதினால் “பல நிலை கொண்ட சக்தி” நம் உடலுடன் வளர்கின்றது.

ஒவ்வொருவரின் உடலிலும் பல நிலைகள் உள்ளன. நம் ஆத்மாவை நாம் செயலாக்கிட…
1.ஒரே வழியான ஜெபம் கொண்ட வழியை நாம் செயலாக்கும் பொழுது
2.நம் உடலில் உள்ள பல நிலைகொண்ட அணுக்களின் சக்தி குறைந்து விடுகின்றது.

நம் உயிராத்மாவுக்கு நம் பூமியின் தொடர்பு கொண்ட சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் சக்திகளை நம் உயிராத்மா தன்னிச்சையில் ஈர்க்கும் பக்குவம் பெற்றுவிட்டால் அதிலிருந்து வருவதுதான் நமக்குகந்த ஜெப நிலை.

1.பல தீய அணுக்களின் சக்திக்கு அடி பணிந்தே வாழும் வரை
2.தெய்வீக சக்தி நிலையை அடையும் நிலைக்கு நாம் வருவது மிகவும் கடினம்.

நம் உயிராத்மாவிற்கு வேண்டிய சக்தியினை ஈர்க்கும் நிலைப்படுத்தி வாழுங்கால் நமக்கு சப்தரிஷி மண்டலங்களின் தொடர்பிலிருந்து சேமிக்கும் நிலையை எளிதில் பெற முடியும். இது தான் தியானம் என்பது.

இத்தகைய தியானத்தின் மூலம் பல எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டுத் தெய்வீக சக்தியை ஈர்க்கும் நிலை பெற்று விட்டால் பல ஞான வழிகளையும் சித்து முறைகளையும் சப்த ரிஷியின் நிலையையும் நம் உயிரணுவே (உயிர்) ஈர்த்துச் செயல் கொண்டிடும்.

இவ்வுயிர் என்னும் ஜீவக்கூட்டை இருந்த இடத்தில் விட்டுவிட்டு நம் ஆத்மாவுடன் கூடிய சத்து (அமில) நிலையை ஈர்த்துக் கொண்டே பறக்கும் நிலை பெறலாம்.

எந்நிலைக்கும் சென்று நம் ஆத்மாவுடன் கூடிய சத்து நிலையுடன் பிம்ப நிலையையும் ஏற்படுத்தி ஒவ்வொரு மண்டலங்களின் நிலையையும் அறியலாம்.

இக்காற்றுடன் எந்தெந்த ஜென்மங்கள் எடுத்து அச் ஜென்மத்தில் நாம் வெளியிட்ட மூச்சு அலையினால் சப்த அலையின் நிலை கொண்டு பல ஜென்மங்களில் வாழ்ந்த நிலையையும் அறிந்திடலாம். இவ்வுலகினிலும் மற்ற மண்டலங்களின் நிலையை அறிந்திடலாம்.

இவற்றினால் யாது பயன் என்றும் கேட்டிடுவீர்…?

இவ்வுயிர் ஆத்மாவின் சக்தியை இக்காலமுடன் காலமாக இவ்வுடலுடன் கூடிய குறுகிய வாழ்க்கையுடன் சுழல விடாமல் இம் மாற்றம் கொண்டு சுழலப் போகும் “இக்கலியின் நிலையிலிருந்து மீளத்தான் இவ்வழியினை வெளியிடுவதெல்லாம்…!”

நம் சக்தியுடன் பல மண்டலங்களின் சக்தியையும் இணைத்துச் செயல்படுத்திட முடியும். இவ்வழியினை யாவருமே அடைந்திடலாம்

இல்வாழ்க்கையென்னும் பிடியில் பேராசையில் வாழ்ந்திட்டால் செயலாக்குவது கடினம். அன்பு கொண்ட ஆண்டவனாய் வந்திட்டாலே இச்சக்தி நிலையை நம் ஜெபமுடன் பெற்றிடலாம்.

இந்நிலையில் வந்த சித்தர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகொண்டு வந்துள்ளனர். வாழ்க்கையுடன் இன்னலில் இருந்து சலிப்புற்ற நிலையில் வந்த பலர் உள்ளனர்.

1.போகரின் நிலையைப் போல் வாழ்க்கையுடன் கூடிய நிலையில் வருவதுவே மகத்துவம்.
2.கோலமாமகரிஷி தன் சக்தியையே ஆதிசங்கரரின் சக்திக்கு அளித்திட்டார்.
3.ஒவ்வொரு ரிஷியும் ஒவ்வொரு நிலை கொண்டு வந்தவர்கள்தான்.
4.புத்தரின் நிலை அனைத்திற்கும் மாறு கொண்ட வெறுப்பற்ற நிலையில் வந்த நிலை.
5.பல ஞானிகள் வந்த நிலையெல்லாம் குடும்பத்துடன் ஒன்றிய ஆத்மீக நெறி கொண்ட அன்பு வழியில்தான்.
6.இவ்வழி அடைவதற்கே சந்நியாசி நிலை உகந்ததல்ல
7.ஆத்மீக நெறி பெறுவதற்கு வயது வரம்பு இல்லை.

இந்நிலைகளை உணர்ந்து ஒவ்வொருவரும் வழி பெற்றிடுங்கள்.

என்றுமே அழியாத துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்

real wealth bliss

என்றுமே அழியாத துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்

 

அகஸ்தியன் எல்லா விஷத்தையும் நீக்கி இருளை நீக்கி ஒளியாகப் போனான். கணவன் மனைவி ஒளியான உடல் எடுத்துத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

நம் சூரியக் குடும்பமே அழிந்தாலும் சரி… இந்தத் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக் கூடிய சப்தரிஷி மண்டலங்களும் அழியவே அழியாது. இது வேகாக் கலை…!

நாம் தீயில் குதித்தால் உடல் கருகுகிறது. ஆனால் உயிர் கருகுவதில்லை.
1.எப்படி உயிர் வேகுவதில்லையோ அதைப் போல்
2.பிரபஞ்சத்தில் எத்தனை விதமான விஷத் தன்மைகள் வந்தாலும்
3.துருவ நட்சத்திரமும் அழியாது அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருப்பதும் அழியாது.

ஏனென்றால் நம் சூரியக் குடும்பம் எல்லாம் நம் உடலைப் போல அழியக் கூடியது தானே தவிர “அது முழுமையானது அல்ல…” என்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…! என்ற நிலையில் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் அலைகளை எல்லாம் சூரியன் எடுத்துக் கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. அதனால் தான் அதை நாராயணனின் அபிமான புத்திரன் என்பது. (நாராயணன் என்றால் சூரியன்)

சூரியன் என்ன செய்கின்றது..?

எந்தெந்தச் செடியில் இருந்து வாசனை வருகின்றதோ அந்த சத்தை எல்லாம் எடுத்து அலைகளாக மாற்றி நம் பூமியில் பரவச் செய்கின்றது. அந்தந்தச் செடியில் விளைந்த வித்தை பூமியில் நாம் ஊன்றினால் அதற்கு சாப்பாடாகக் கொடுத்து அதை வளர்க்கின்றது சூரியன்.

உதாரணமாக இரண்டு பேர் சண்டை போடுகின்றார்கள். ஒருத்தர் வேதனையோடு வருகின்றார். நாம் அதை உற்றுப் பார்த்து நுகர்ந்தால் நம் உடலுக்குள் அது பதிவாகி விடுகின்றது.

சண்டை போடுவோர் உடலிலிருந்து வெளிப்படும் அலைகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக வைத்துக் கொள்கிறது.

நமக்குள் அந்த வேதனைப்படுவோரின் உணர்வு பதிவான பிற்பாடு அவரை எண்ணும் போது சூரியன் கவர்ந்த அந்த வேதனையான உணர்வலைகளை நாம் நுகர்கின்றோம். அதாவது பதிவான அந்த வித்திற்குச் (வினை) சத்தாகச் சூரியன் கொடுக்கின்றது. அவனை நினைக்கும் போதெல்லாம் அந்த வேதனை நம் உடலில் விளைகின்றது.

வேதனைப்படுகின்றார்கள் என்று பார்க்கின்றோம்.. விபரத்தைக் கேட்கின்றோம். ஆனால் நம் உடலில் அது விளைகின்றது. ஆக.. வேதனை என்ற உணர்வை நுகர்ந்து அந்த வேதனையை நமக்குள் வளர்க்க முடிகின்றது.

அதே போல்… வேதனையை நீக்கிய அந்த அருளுணர்வைப் பெறச் செய்வதுதான் ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…!

அதை எடுத்து நாம் சுவாசித்தோமென்றால் அவன் வாழ்க்கையில் எப்படி விஷத் தன்மையை நீக்கினானோ அந்த உணர்வின் சத்து நமக்குக் கிடைக்கும். நாரதன் கலகப்பிரியன்…! கலகமோ நன்மையில் முடியும்.

யாரோ சண்டை போடுகின்றார்கள் என்று தான் நாம் பார்க்கின்றோம். அதிலே யாராவது ஒருத்தர் திட்டுகின்றார்… அடிக்கின்றார்…! ஏனென்றால் அவர் மோசமான ஆள். அந்த இரண்டு பேருக்கும் வெறுப்பு இருப்பதனால் சண்டை போடுகிறார்கள்.

சண்டை போடும் சந்தர்ப்பம் நாம் அதைப் பார்க்கின்றோம். ஒருத்தர் மேல் நாம் பாசமாக இருந்தால்… அந்த நல்ல மனிதனை இப்படித் திட்டுகின்றானே…! என்று நினைக்கின்றோம்.

அவ்வாறு திட்டும்போது நம்முடைய மனது கேட்குமோ…? ஏனப்பா…? இந்த மாதிரி எல்லாம் செய்கின்றாய்…? என்று அந்தத் திட்டுபவரைக் கேட்கிறோம்.

அவர் உடனே உனக்கு என்ன தெரியும்…? என்று நம்மிடம் கேட்டால் அப்பொழுது இல்லாத வம்பு வந்து விடுகிறது. அதைத் திருத்த முடிகின்றதா…? என்றால் நம்மால் முடியவில்லை. அவர்களை எதாவது சொல்ல முடியுமோ…?

1.ஆனால் அதே உணர்வு நமக்கு வந்தால் நாம் சும்மா விடுவோமோ…?
2.சொல்கிறேன்… கேட்க மாட்டேன் என்கிறான்… இரு நான் பார்க்கின்றேன்..! என்று நாமும் வம்பு தான் பேசுவோம்

இது எல்லாம் நமக்குத் தெரிகின்றது… இருந்தாலும் அவனிடம் வம்பை இழுக்கின்றோம். அப்பொழுது அந்தக் கலகம் வருகின்றது.

இதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் சண்டையிடுவோரை எண்ணி… அந்த நல்ல மனிதன் சும்மா இருந்தாலும் இந்த மாதிரிப் பேசுகிறான் பார்…! என்று அதை எடுத்து நமக்குள் வளர்த்து கொள்கிறோம்.

அதாவது… அவர்கள் செய்யும் தவறை நாமும் செய்ய வந்து விடுகின்றோம். (நாம் அவரைத் திட்டத் தொடங்குகின்றோம்)

அதற்குப் பதிலாக… “ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நம் உயிரிலே பட்டு அந்த ஒளியான உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரம் நஞ்சுகளை எல்லாம் கரைத்து ஒளியாக மாற்றும் திறன் பெற்றது.
1.அந்தச் சக்தி உள்ளுக்குள் போனவுடன் நாம் பிடிவாதமாக இருப்பதை உடனே சிந்திக்கச் சொல்லும்.
2.இந்த நேரத்தில் சண்டையிடுவோரிடம் வாயில் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்ற உணர்வையும் பிரித்துக் காட்டும்,

இவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் இரத்தங்களில் கலக்க வேண்டும் என் உடல் முழுவதும் படர வேண்டும் என் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்து பெற வேண்டுமென்று எண்ணி உடலுக்குள் செலுத்தினால் முன்னாடி இந்தப் பாதுகாப்பு கொடுக்கின்றது

அதற்குத் தான் இந்த தியான பயிற்சியாகக் கொடுக்கின்றோம். அதை சேர்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். அதை எடுத்து இரத்தத்தில் கலக்க வேண்டும் என்று சொல்லும் போது நாம் எடுத்த உணர்வுகள் அது உமிழ் நீராக மாறுகின்றது.

சிறு குடல் பெருங்குடலுக்குள்ளே போகின்றது. நல்ல இரத்தமாக மாறுகின்றது நம் உடல் முழுவதற்கும் அது நன்மை செய்யும் பக்குவமாக வருகின்றது.

வேதனைப்படுவோரை பார்க்கின்றீர்கள். உமிழ் நீர் வருகின்றது நம் இரத்தத்தில் வேதனை என்ற விஷமாக வருகின்றது.

அப்பொழுது ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் அவன் கலகப்பிரியன் அப்பொழுது நம்முடைய பிடிவாதத்தை விடுக்கச் செய்து நம் உடலில் வேதனை உருவாகாது தடுக்கின்றது.

நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்கிறபோது நம் உடலில் எத்தனை விதமான கலக்கங்கள் இருக்கின்றதோ அதையெல்லாம் மாற்றிவிடுகிறது. உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

ஞானிகள் காலத்திற்குப் பின் அவரின் போதனைகளை வழி நடத்துவோர் அரிதாகவே உள்ளனர் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

world religions

ஞானிகள் காலத்திற்குப் பின் அவரின் போதனைகளை வழி நடத்துவோர் அரிதாகவே உள்ளனர் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இயேசு கிருஸ்துவைக் கல்லறையில் அடக்கம் செய்த பிறகு அவர் மூன்றும் நாளில் எப்படி வெளிப்பட்டார்…? முன் பாட நிலைப்படி அவ் உடலை ஒரு ஞானி ஏற்றார்…! என்று செப்பியுள்ளேன்.

அவ்வுடலை இவர்கள் அடக்கம் செய்த பிறகு அவ் உடல் என்னும் கூட்டிற்கும் அவ்வுடலில் ஏறிய ஞானியின் ஆத்ம சக்திக்கும் தொடர்பற்ற நிலையில் இவர்கள் இம்சித்ததெல்லாம் உடல் என்னும் கூட்டைத்தான்.

இவர்கள் இம்சித்த நிலையில் இவர்கள் எண்ணத்தில்தான் அத்தீய சக்தி இவர்களையே தாக்கிற்று. இயேசு பிரானின் ஆத்மாவையோ அஜ்ஜீவ சக்தியையோ இவர்கள் செய்த இம்சை நிலை பாதிக்கவில்லை.

எப்படி எப்படி எல்லாம் இம்சைப் படுத்திடலாம் என்ற எண்ணம் கொண்டார்களோ அவ்வெண்ணமுடனே சுவாசித்த சக்தி நிலையெல்லாம் இவர்கள் உடலில் தான் ஏறியது.

அம்மகான் இவர்கள் அடக்கம் செய்திட்ட பூத உடலில் இருந்து அந்த ஞானியின் சக்தி வெளிப்பட்டு ஆவியான அமில நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஆவி பிம்பத்தைத்தான் இயேசு பிரானாய் இவர்கள் மூன்றாம் நாளில் கண்டது.

இந்நிலை பெறுவதற்கு அவ்வுடலில் ஏறிய அம்மகான் இச்சுவாச சக்தியை எங்கும் பிம்பப்படுத்திடும் நிலை பெற்றார்.

ஆனால் அங்கு வாழ்ந்த மக்களிடையே… இன்று அவ்வழியில் வந்திட்ட அந்நிலையைப் போதிக்கும் ஜெப நிலையில்…
1.அவரை ஜெபப்படுத்தும் நிலையே மாறு கொண்ட நிலையில் உள்ளது
2.சக்தியின் ஜெபத்தை ஈர்த்து ஜெபிப்பார் இல்லை.

ஞான ஒளியைத் தன் ஞானமுடன் ஜெபம் கொண்டு ஈர்த்து இயேசுபிரான் நாமத்தில் வந்திட்டவரின் சக்தியை ஈர்த்து அவருடன் தொடர்பு கொண்டு செயல் படுத்திடும் நிலை அவர்களை வழி நடத்துவோருக்கு எட்டவில்லை.

பல ஜெபங்கள் செய்கின்றனர்… வளர்ந்துள்ள நாகரிக நிலைக்கொப்ப…! ஆத்ம ஜெபம் கொண்டு அவரின் தொடர்பைப் பெற்றிடும் நிலை கொண்டிடவில்லை.

பக்தி நிலையை வளரவிட்டு சக்திக்கு அடி பணியும் நிலை உள்ளது. அம் மகானின் தொடர்பைப் பெற்றிருந்தால் இன்று இம் மனித உள்ளங்களின் வெறி உணர்வை மாற்றும் நிலையைப் போதித்திடலாம்.

இன்றுள்ள எண்ண நிலையே வெறி உணர்வும்… காம இச்சையின் நிலையும்… பேராசையின் நாகரிக நிலையும்… “அதி வேகமாக எண்ணமுடன் கலந்து வளர்கின்றன…!”

இந்நிலையின் வளர்ச்சியினால் வரும் அபாயத்தையோ உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்ம சக்தியையோ கடுகளவும் எண்ணுவார் இல்லை.

ஆத்மீகத்தை வழிப்படுத்திட்டால் இன்றுள்ள இவ்வெண்ண நிலைக்கு அமைதி கொள்ளும் அன்பு நிலையைச் செயலாக்கிடலாம்.
1.இன்றும் அங்குள்ள மக்களின் நிலையில் பக்தி என்னும் பய நிலை உள்ளது
2.வழிப்படுத்திடத் தக்க குரு இல்லை.

மற்ற நாடுகளில் தம் தம் எண்ணத்தில் உள்ள கறையை இன்றுள்ள ஜெபாலயங்களில் வெளியிட்டால் எண்ணக் கறையை நீங்கிவிடுவதாகப் போதனை நிலையுள்ளது. இக் கறையுடன் கறையைச் சேர்த்து ஒரே சூனிய நிலையாக்குகின்றார்கள் மனித ஆத்மாக்களை.

சக்தியின் சக்தியாய் ஆத்ம ஜீவன் கொண்ட மக்களெல்லாம் இன்று வாழ்ந்திடும் அன்பு நிலையிலும் பந்த பாசம் கொண்ட ஆத்மீக நெறியும் இல்லாமல் மிகவும் கீழ் நிலை கொண்ட அவல நிலையிலும் வாழ்கின்றனர்.

மாபெரும் முனிவரின் சக்தி பெற்ற இந்நிலையுள்ள அவ்விடம் இன்று சூனிய நிலையாக உள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுப் பேராசைப் பேயின் பிடியில் சிக்கி நாகரிகப் போர்வை போர்த்தியே ஆத்மீக நெறியினை அறிந்திடாமல் இப்பாட நிலையை யாவருக்கும் பொதுவான நிலைப்படுத்தி வழங்கி வருகின்றோம் (ஈஸ்வரபட்டர்).

போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குருநாதரின் செயல்கள்

Eaganthanilais

போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குருநாதரின் செயல்கள்

 

மனிதனுடைய சிந்தனை முழுமையாக மறைந்து போகும் காலம் நெருங்கிக் கொண்டுள்ளது.

உயிரணுக்களாக ஆரம்பக் காலங்களில் தேடியது எந்த நிலையோ அதைப் போல் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு என்ற உணர்வினை நமக்குள் சேர்த்து அதனால் பல கலக்கங்கள் ஆகி சிந்தனை செய்யும் திறன் குறைந்து இந்த உடலை காக்கும் செயலையே இன்று இழந்து கொண்டிருக்கின்றோம்.

1.இந்தக் கோயிலுக்குப் போனால் நன்றாக இருக்குமா…? அந்தக் கோயிலுக்குப் போனால் நன்றாகுமா…?
2.இந்த ஜோதிடத்தைப் பார்த்தால் நன்றாக இருக்குமா…? ஜாதகத்தைப் பார்த்தால் நன்றாக இருக்குமா…?
3.இந்த மந்திரத்தைச் சொன்னால் நன்றாக இருக்குமா…? என்று
4.ஒவ்வொன்றாக எடுத்துத் தேடி நாம் அலைகின்றோமே தவிர
5.நாம் சுவாசிப்பது நமக்குள் எப்படி இயங்குகின்றது…? என்றே நாம் அறியாது
6.விஞ்ஞான உலகில் மெய்ப்பிக்கும் இந்தக் காலத்திலும் நம்மை அறியாமலே இது பித்தனாக இருக்கின்றோம்.

இதைத்தான் குருநாதர் சொன்னார்..! போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருப்பார்.

என்ன சாமி… சும்மா இருக்கின்ற போஸ்ட்டில் போய் கல்லைக் கொண்டு அடிக்கின்றீர்கள் என்று கேட்டேன் (ஞானகுரு).

நீ தான்டா என்ன என்று கேட்கிறாய்..! ஆனால் மற்றவர்கள் எல்லாம் என்னைப் பைத்தியக்காரர் என்று நினைக்கின்றார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவன் எதன் மேல் ஆசைப்பட்டானோ… அதிலே அந்தப் பித்துப் பிடித்துப் போய்… அதையே பெற வேண்டுமென்று எண்ணுகின்றான்.

1.ஆனால் தன் அருகிலே நல்ல பொருள் இருந்தாலும் கூட அதை எடுக்கும் வழியில்லை
2.தன் உடலில் நல்லது இருந்தாலும் அதை வளர்க்கும் வழியில்லை.
3.இப்படிப் பித்தனாக அலைந்து கொண்டிருக்கின்றான்.

நான் இந்தப் போஸ்டில் தட்டும் போது இந்த ஓசை வருகின்றது. அந்த ஓசையைக் கேட்டு ஏன் இப்படித் தட்டுகிறீர்கள்…? என்று என்னை நீ கேட்கின்றாய். அதனால் உனக்கு இப்பொழுது அதற்கு விளக்கம் நான் கொடுக்கின்றேன்.

நான் தட்டுவதைப் பார்த்து… “பைத்தியக்காரன்… தட்டிக் கொண்டிருக்கின்றான்…” என்று மற்றவன் நினைக்கின்றான்.

1.இந்த ஓசையை அவன் கேட்டு அவன் உணர்வுகள் என்னைப் பைத்தியக்காரனாக எண்ணி
2.பைத்தியக்காரன் என்று அவன் எண்ணும்போது அதைச் சுவாசித்து
3.உயிர் அவன் எதை எண்ணினானோ அந்த உணர்வின் தன்மையை அவன் உடலில் ஓடச் செய்கின்றது.

ஆக… அவன் பித்துப் பிடித்து இருக்கின்றான் என்று அவனுக்கே தெரியவில்லை. அந்தப் பித்தின் நிலைகள் அவனுக்குள் விளைகின்றது.

அதாவது நம் உடல் ஒரு அரங்கம்… சுவாசித்த உணர்வு உயிரிலே பட்டபின் அரங்கநாதன் ஆகி ஒலிகளாக எழும்புகின்றது. அந்த உணர்ச்சிகள் நம்மை ஆளுகின்றது என்பதனை ஆண்டாள்…! என்று ஞானிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் காரணப் பெயர் வைத்து இதை அறியச் செய்கின்றனர்.

1.நான் தட்டும் அந்த ஓசையை நீ சுவாசித்தாய்…
2.அதை என்ன என்று கேட்டாய்…? நுகர்ந்து என் அருகில் வந்தாய்…!
3.நான் இதற்கு விளக்கம் சொல்கின்றேன்… நீ புரிந்து கொண்டாய்.
4.தீமைகளிலிருந்து நீ மீளும் உபாயத்திற்கு உன் அறிவு இங்கே அழைத்து வந்தது.

ஆனால் அவன் (மற்றவர்கள்) அறிவு என்ன செய்கின்றது…?

அவன் என்ன செய்கின்றான் என்று தெரியாதபடி அவன் பித்தனாக இருக்கின்றான். இருந்தாலும்…
1.அவன் என்ன தப்பு செய்தான் என்ற எண்ணத்தில் நான் (ஈஸ்வரபட்டர்) வந்தால்
2.நான் அந்தப் பித்தனாகத் தான் வளருவேன்….
3.அவன் பித்தனென்றால் நான் பித்தனாகத்தான் இருக்க வேண்டும்.
4.அதனால் அதை நான் நுகர்வதில்லை…!

போஸ்டில் அடித்து வரும் இந்த ஓசையினைத் திரும்பிப் பார்த்து ஏன்… என்ன..? என்று கேட்கும்போது இதன் நிலையை நீ செய்தால் நல்லதாக இருக்கும் என்று சொல்வதை நுகர்ந்தால் அவர்களுக்குள் நன்மை பயக்கும்.

அவன் என்னைப் பித்தனாக்குகின்றான்…. அவன் பித்தன் என்று அவன் உணர முடியவில்லை..!

போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டிய இந்தச் சத்தத்திற்கு
1.குருநாதர் இத்தனை வியாக்கியானங்கள் சொல்கின்றார்….
2.மனிதன் இயல்பில் உயிரின் உணர்வுகள் எப்படி வருகின்றது என்று..!

முருகேஸ்வர போகநாதரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Murugeswara boganathar

முருகேஸ்வர போகநாதரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் வழக்கத்திலுள்ள சொல் நாமங்கள் நம்மால் வழக்கத்திற்குப் பேசுவதற்காக நம் முன்னோர்களின் ஒவ்வோர் இன வழிப்படி பல நாமச் சொற்களை இவ்வுலகினிலே பல பாகங்களில் பல நிலைகளில் அவரவர்கள் வந்த வழிப்படி பேசி வருகின்றோம்.

ஆண்டவனின் நாமத்தையே பல நாமங்கள் சூட்டி… அவரவர் வழக்கப்படி வேண்டுகின்றோம்.

“முருகா…” என்ற ஜெபம்
1.போகரினால் இவ் ஆறு வகைக் குணங்களை நாம் போற்றி வணங்கிட
2.இக்குணங்களையே முருகனாக்கி… அம் முருகா என்ற நாமகரணம் சூட்டியவர் போகர் தான்.
3.முருகா என்னும் நாமகரணம் சூட்டிக் கொண்ட தனித்த ஆண்டவன் ஒன்றில்லை.

அழியா ஒளி உடல் கொண்ட ஆத்மா நிலை பெற்ற அப்போகர் தன் சக்தியுடன்… இம் முருகா என்ற ஜெபம் கொண்ட நிலைக்கு… அவர் சக்தியில் அவர் உடலிலேயே… அவர் ஆத்மாவுடன்… அவர் உடலிலுள்ள அவர் ஈர்த்துச் சேமித்த முருகா என்ற சக்தியின் நிலையினை ஒளியாகத் தன்னுள் ஈர்த்துக் கொண்டே இன்றும் உள்ளார்.

அந்த நிலையில்…
1.முருகா…! என்ற சொல் எவ்வுள்ளங்களில் இருந்தெல்லாம் எழுகின்றதோ
2.அந்தச் சக்தி போகரின் சக்தியுடன் நினைத்த மாத்திரத்தில் வந்து மோதி ஒளியாக…
3.ஜெபிப்பவரின் உள்ளத்திற்கெல்லாம் போகரின் நிலையிலிருந்து அச்சக்திதனை வழங்கி வருகின்றார்.

அழியா உடல் பெற்ற ஆத்ம சக்தியுடன் தனக்குகந்த நாமத்தையே ஜெபமாக்கி அஜ்ஜெப நாமத்தை எண்ணுபவரின் சக்தியுடன் இன்றும் இந்நிலையில் கலக்கவிட்டு… எண்ணுபவரின் ஆத்மாவிற்குகந்த அவர்களின் நிலைக்கெல்லாம் “தான் பெற்ற சக்தியைப் பகிர்ந்து அளித்து வருகின்றார்…” அம் முருக நாமம் கொண்ட “முருகேஸ்வர போகநாதர்…!”

போகரின் சக்தி அழியா சக்தி. இன்றும் அச்சக்தியினை பலவாக ஈர்த்து அருளிக் கொண்டே உள்ளார். அவர் எடுத்த சக்திப்படி இன்றும் மனிதருள் மனிதராகச் சில நிலைகளில் வந்து செல்கின்றார்.

எந்நிலையில் என்று உணர்ந்தீரா…?

அப்போகநாதரின் உடல் கூடு எந்நிலைக்கும் அவர் ஜெபம் கொண்டு இன்றுள்ள அப்பழனிக் குகை வாசஸ்தலத்தை விட்டு வெளிப்படுவதில்லை.

ஆனால் முருகராகவும் மற்றும் பல நிலைகளிலும் மக்களுடன் மக்களாக அவர்களின் இன்னலைத் தீர்க்க வந்து செல்கின்றார்.

போகரின் ஆத்மாவுடன் அவர் சேமித்த சக்தி சுற்றிக் கொண்டுள்ள நிலையில் ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தி நிலையை… உடல் கூட்டிலிருந்து பிரித்துக் காண்பவருக்கு… அவ்வாவி சக்தியை… இக்காற்றிலிருந்தே பல சக்திகளை ஈர்த்து ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தியைப் பிம்பமாக்கி வந்து செல்கின்றார்.

அதாவது ஆவியான அமில சக்தியை எந்நிலையிலும் விரிந்து கூடும் நிலைப்படுத்தும் நிலையைப் பெற்றுள்ளார் முருக நாமம் கொண்ட நம் போகர்.

ஒரே நாளில் பல இடங்களில் அவரின் பிம்பத்தை அவரால் காணச் செய்திடவும் முடிந்திடும். அம் முருக நாமத்துடன் பல செயல்களைச் செயலாக்குகின்றார் நம் போகர்…!

ஆவியான அமில சக்திகள்தான் அனைத்து சக்திகளுமே. இவ்வுடலும் ஆவியான பிம்பம்தான். இப்பிம்பத்திலிருந்து நம் ஆத்மா பிரிந்து சென்றாலும்… நம் ஆத்மாவுடன்… நம் உடலுடன் கூடிய ஆவியான நமக்குகந்த அமில சத்துக்கள் நம்முடனே… நம் ஆத்மாவுடன் ஈர்த்துத்தான் ஆவி உலகில் நாமும் இருந்திட முடியும்.

1.இவ்வுலக சக்தியையே நம் சக்தியாக்கி நாமும் நிலைத்து வாழ்ந்திட முடியும்
2.இன்று நாம் வாழும் வாழ்க்கை நம் வாழ்க்கையல்ல
3.நம் வாழ்க்கை என்பது இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடும் வாழ் நாட்கள் மட்டுமல்ல
4.இவ்வுடலுடன் வாழ்ந்திடும் வாழ்க்கை நமது அரும்பெரும் பாக்கியத்தை நாடுவதற்கு நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம்தான்.

ஒவ்வொருவரும் இவற்றை உணர்ந்து வாழ்ந்திடும் நாளில் பல நிலைகளுக்கு எண்ணத்தைச் செலுத்தி…
1.வாழ் நாளைத் தன்னிச்சைக்கு (தன் இஷ்டம் போல்) வாழாமல்
2.இவ்வுலக இன்பத்தைத் துறந்து வாழ்ந்திடல் வேண்டும் என்ற எண்ணத்தை வளரவிடாமல்
3.இவ்வுடலுடன் நாம் இன்று பெறும் நிலைக்குகந்த சக்தியே அழியா சக்தியாக நம்முடன் வரும் சக்தி என்பதனை உணர்ந்து
4.நம் போகநாதரின் சக்தியின் அருளை நாம் ஈர்த்து நல் வழியில் வாழ்ந்திடலாம்.

மனிதனாக வாழ்ந்து ரிஷித் தன்மை பெற்றவர்கள் தான் மண்டலங்களை (சூரியக் குடும்பங்கள்) உருப்பெறச் செய்கின்றனர் – ஈஸ்வரபட்டர்

creations-of-humanity

மனிதனாக வாழ்ந்து ரிஷித் தன்மை பெற்றவர்கள் தான் மண்டலங்களை (சூரியக் குடும்பங்கள்) உருப்பெறச் செய்கின்றனர் – ஈஸ்வரபட்டர்

 

இயற்கை சக்தியில்…
1.ஆவியாக இருப்பது அணுவாக உயிர் பெற்று
2.அவ் ஆவியிலே உள்ள சக்தியினை உயிரணுவிற்கு ஊட்டமாக்கி
3.அவ்வாவியின் பிம்பமாய் ஜீவ ஆத்மாவிற்கு வந்து
4.ஜீவனாய் மனித பிம்பம் பெற்று பிம்பமாய் வாழ்ந்திட்டு
5.ஆத்மா பிரிந்து பிறகும் அவ்வாத்மாவுடன் ஆவியான சக்தியை ஈர்த்தே
6.இப்படி மாறி மாறி ஆவி உலகம்… பிம்ப ஜீவன் கொண்ட… ஜீவ ஆத்மா வாழ்க்கை வாழ்ந்திடும் உயிரணுக்கள் யாவற்றுக்குமே
7.அனைத்து சக்திகளும் அடைந்திடும் சக்தி (தகுதி) உண்டு.

எவ்வுயிரணு எவ்வழியில் தன் சக்தியினை வளர்த்துக் கொள்கின்றதுவோ அவ்வழியில் சென்றிடலாம்.

ஆனால் தன் சக்தியைத் தான் உணர்ந்திடாமல் இருந்திடும் மனித ஆத்மாக்களாகத்தான் இன்று வாழ்ந்திடும் வாழ்க்கை நிலைகள். சக்தியினைச் சிதறவிட்டு இப்பேராசை நிலையையே வளர்த்துக் கொண்டு வாழ்வதின் வினையினால் வந்ததது தான் இன்றைய வாழ்க்கையின் நெறி முறைகளாக உள்ளன.

பல மகான்கள் இப்பூமியில் அவதரித்து ஆண்டவனாய் இன்றும் அருள் புரிகின்றனர். ஆனால்
1.இன்றைய மனிதர்களோ தன் சக்தியினை வீண் விரயம் செய்து
2.இந்த உடலுடன் கூடிய ஆத்மார்த்த ஆத்மீக நெறி உடைய அன்பு கொண்ட வாழ்க்கைதனை
3.இம்சையிலும் பேராசையிலும்… பல நெறி கெட்ட காமச் சூழ்நிலையிலும்… தன்னடக்கம் இல்லா வாழ்க்கையிலும்
4.குரோதம் விஷமம் இப்படி நமக்குள் பல தீய சக்தியினை வளர விட்டு
5.நல்லொழுக்கம் எற்றிடும் நற்பயன் கொண்ட வாழ்க்கைதனைச் சிதற விட்டு
6.இவ்வாத்மீக நெறி கொண்ட இல்வாழ்க்கைதனை இன்பமுடன் வாழ்ந்திடாமல் வாழ்ந்து என்ன பயன்…?

நம்மைப் போன்ற உயிரணுவாய் உதித்திட்டு உயிர் ஆத்மா கொண்டு ஜீவ ஆத்மாவாகி இஜ்ஜீவ வாழ்க்கைக்கும் வந்து இவ் உலகில் உதித்ததின் உண்மை சக்தியினை உணர்ந்து தன் ஆத்மாவின் சக்தியினால் இவ்வுலக சக்தி அனைத்தையும் எந்நிலையில் பெற்றனர் பல மகான்கள் என்பதனை இப்பாட நிலையில் வெளியிடுகின்றேன்.

பல ரிஷிகள் நம்மைப் போல் வாழ்ந்த வாழ்க்கையில் பல இன்னல்களில் வாழ்ந்துள்ளார்கள். வாழ்க்கைச் சுற்றலில் குடும்பப் பற்றுடன்தான் வாழ்ந்தார்கள்.

அந்நிலையில் இருந்து கொண்டே அவர்கள் எடுத்த ஜெப நிலையால்
1.ஜெப நிலை என்பது… எவ்வெண்ணத்திற்கும் அடிமை ஆகாமல்
2.எவ்வெண்ணத்திற்கு என்பது வாழ்க்கைக்குகந்த நெறிமுறையில் மாற்றம் காணாமல்
3.வரும் இன்னலுக்குச் சோர்வு நிலைப்பட்டோ சந்தோஷ நிலைக்கு அடிமைப்பட்டோ
4.பாசத்திற்குத் தன்னைக் கட்டுபடுத்தியோ வாழ்ந்திடாமல்
5.இவ்வெண்ண சக்தியினை வாழும் காலத்திலேயே அனைத்து சக்திகளையும் தன்னுள் ஈர்க்கும் பக்குவ நிலை பெற்று
6.ஆத்மீக நெறிக்குகந்த ஞான வழிக்கு வித்திட்ட வழியில் வந்தவர்கள் தான் அனைத்து மகான்களும்.

வாழ்க்கை நிலையில் ஞான நிலை பெற்ற முதல் நிலைக்கு வந்தவர்கள்… அந்நிலையின் தொடர் நிலையை வளர்த்தே சித்து நிலை பெற்றிடலாம்.

சித்து நிலை பெற்றவர்கள் மகரிஷியாய் சப்தரிஷியாய் வந்திடலாம்.

இவ்வழியில் வந்தே தன் உயிரணுவாய் உதித்து ஆத்ம நிலைக்கு வந்தவர்கள் பெற்ற சக்தியினால் எவ் உலகில் உதித்தனரோ அவ் உலகில் இருந்து எவ் உலகிற்கும் (மற்ற சூரியக் குடும்பங்களுக்கு) சென்றிடும் நிலை பெற்றுள்ளனர்.

மேலும் மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களின் நிலையிலிருந்து பல சக்தியினைத் தன் உயிராத்மாவுடன் சேமித்து… தனக்குகந்த பல சக்தியினை ஈர்த்துத் தன்னுள்ளே சுழலச் செய்து… தனி ஒரு மண்டலமாக உருப்பெறச் செய்தும்… அந்நிலையிலிருந்து தனி ஓர் உலகமாகத் தன் மண்டலத்தினுள்ள பல ஜீவன்களின் வளர்ச்சியைத் தானே வளரச் செய்தும் மண்டலங்களாக உருப் பெறுகின்றனர்.

1.இவ்வியற்கையின் சக்தியில் எண்ணில் அடங்காப் பல உண்மைகள் உள்ளன.
2.உயிரணுவாய் நம்மைப் போல் உதித்திட்டவைதான் இன்றுள்ள பல மண்டலங்கள்.

இந்நிலைக்கு வருவதற்கு உயிரணுவாய் இருந்து… உயிர் ஆத்மா கொண்ட செயலாற்றும் நிலைபெற்ற இம் மனித உடலினால் மட்டும்தான் முடிந்திடும்.

இந்நிலையில் இருந்து வந்தவர்கள் தான் நாம் சொல்லும் பல பல ரிஷிகளும்…!

“நல்ல நேரம்…” என்று ஒன்றை ஞானிகள் வைத்ததன் நோக்கம்

Auspicious time

“நல்ல நேரம்…” என்று ஒன்றை ஞானிகள் வைத்ததன் நோக்கம்

 

எத்தனையோ பேருடன் எத்தனை விதமாக நாம் பழகுகின்றோம்.

வியாபாரத்திற்கோ மற்றதுக்கோ போகும்போது அந்த நேரத்திலே நமக்கு வேண்டாதவன் வந்து விட்டான் என்றால் அவனைப் பார்த்துவிட்டுப் போனால் அந்த காரியமே தோல்வியாகும்…! என்று எண்ணுவோம்.

அதே சமயத்தில் வீட்டை விட்டுப் போகும்போது சாங்கிய சாஸ்திரத்தை எல்லாம் பார்ப்போம்.

உதாரணமாக இரண்டு மணிக்கு நல்ல நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் நல்ல காரியத்தை ஜெயித்து விட்டு வரலாம் என்று செயல்படுத்துவோம்.

1.ஏனென்றால் நம் மனதை நல்ல வழியில் மாற்றுவதற்கு இப்படி ஒரு சாஸ்திரத்தை எழுதி வைத்திருக்கின்றார்கள்.
2.அதன்படி நல்லதை முழுமையாக நினைக்கின்றோமா என்றால் இல்லை…?

கல்யாணத்திற்குப் பொண்ணு பார்க்கின்ற காரியத்திற்கோ அல்லது புதிதாக ஒரு தொழில் தொடங்கப் போகும் போதோ நல்ல நேரத்தைப் பார்ப்போம்.

அந்த நல்ல நேரத்தில் மற்றவர்களையும் வாருங்கள் போகலாம்…! என்று அழைத்துச் செல்வோம்.

ஏனென்றால் அதற்கு முன்னாடி ஏதேதோ சங்கடங்கள் சலிப்புகள் எல்லாம் பேசிக் கொண்டிருப்போம். அவன் அப்படிச் செய்தான் இவன் இப்படிச் செய்தான்…! என்ற உணர்வுகள் எல்லாம் நமக்குள் இருக்கும்.

1.இதை மாற்றுவதற்காக வேண்டி அந்த இரண்டு மணிக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்று
2.நம் தீமைகளை எல்லாம் மறந்து நல்லதை எடுக்கும்படி செய்கிறார்கள்.
3.ஆக… தத்துவ ரீதியில் மனிதனை இப்படியெல்லாம் நல்ல வழிக்கு மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை
4.அங்கே நமக்குக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

ஆனால் போகும் பொழுது அந்தப் பாதையில் எதிர்த்தாற்போல் ஒரு விதவை முக்காடு போட்டு வந்தால் போதும்… “தொலைந்தது போ…!” என்று சொல்வோம்.

இந்த உணர்வை வைத்துக் கொண்டு போனால் நல்லதைச் செயல்படுத்தும் எண்ண வருகிறதா…? முதல் முதலில் கடை திறப்பதற்காகப் போனால் இத்தனை சாங்கியம் பார்த்துவிட்டுத் தான் போகின்றார்கள்.

இப்படி ஒரு விதவை முன்னாடி வந்துவிட்டால் நம்மை அறியாதபடி தொலையும் உணர்வை எடுத்துக் கொள்கிறோம். பின் கடைக்குப் போனவுடன் என்ன செய்கின்றது…?

கடையைப் போய்த் திறப்பார்கள். அந்த மனதோடு கடை வைத்து நடத்தினால் என்ன ஆகும்…?

அடுத்தாற்படி ஒன்று எதிர்பாராதது ஆகிவிட்டது என்றால் “நான் நினைத்தேன் இப்படி ஆகிவிட்டது…! என்ற இந்த எண்ணம் தான் வரும்.

நம்முடன் கூட வந்தவர்கள் என்ன சொல்வார்கள்…?

நான் அன்றைக்கே சொல்லலாம் என்று பார்த்தேன். சகுனம் மாறிவிட்டது என்று சொல்லி அப்பொழுது அவர் கெட்டிக்காரர் ஆகிவிடுன்றார்.

லேசாகச் சொல்வார்கள்… முழுவதும் சொல்ல மாட்டார்கள். ஏதோ குறுக்கே போனது பார்த்துச் செய்யலாம்…! என்ற இந்த நினைவை ஊட்டி விட்டுவிடுவார்கள்.

அவர் சொன்னதும் இந்த உணர்வுடன் கடை வைத்தால் என்னாகுமோ ஏதாகுமோ..? என்று அதே ஞாபகம் தான் வரும். கடை திறக்கும் போதே இப்படித் தான் இருந்தது… அதனால் இன்றைக்கும் இப்படி விரயம் ஆகின்றது என்று தொடர்ந்து வரும்.

ஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணுகின்றோமோ “அது தான் நம்மை இப்படி எல்லாம் ஆட்சி புரிகின்றது…!” என்பதை மறந்து விட்டோம்.

1.ஆட்சி புரியச் செய்வது யார்…? இதே உயிர் தான்.
2.உணர்த்துவதும் அவன் தான்… இயக்குவதும் அவன் தான்.
3.நம்மை வளர்ப்பதும் அவன் தான்… நம்மை உருவாக்குவதும் அவனே தான்.

நம் உயிரான ஈசன் தான்….!