மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் – ஈஸ்வரபட்டர்

 

உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இது… ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!

“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.

ஆனால் ஆவி நிலையில்… “பல எண்ண அலையில்” உள்ளவர்களுக்கு என்ன ஆகிறது…?

அவர்களின் எண்ண வீரிய குண நிலைக்கொப்ப அவர்களின் உணர்வுடன் ஒத்த எண்ணமும் தன் எண்ணமும் ஒன்று போல் உள்ள நிலையில் “இவ்வுலகில் வாழ்ந்த பொழுது நிறைவேறா ஆசையுடன் சென்ற ஆவிகள்” (அதன் ஆசையை நிறைவேற்ற) இவர்களின் எண்ணத்தின் ஒத்த நிலை ஈர்ப்பு உள்ளதனால் இவர்கள் உடலில் அவைகள் ஏறிச் செயல்படத் தொடங்கிவிடுகிறது.

அப்படிச் செயல்பட்டாலும் அவ்வாவிகள் வளர்ந்த நிலையும் அவ்வாவிகள் வளர்த்துக் கொண்ட சக்தி அலையும் இவர்களின் உணர்வு ஞான சக்தி அலைக்கும் உகந்த செயல் வடிவ வளர்ச்சி ஓட்டத்தில் தான் “அதுவும்” அந்த உடல் உள்ளவரை தான் செயல்புரிய முடியும்.

1.ஆக… எந்த ஒரு செயல் ஞானம் கொண்ட நிலை கொண்டுள்ளனரோ
2.அதே வட்ட உணர்வு வளர்ப்பில் வாழ்ந்து
3.தன் வாழ்க்கையில் அவர்களின் ஆசையின் மேம்பாடு என்று உணரும் ஒவ்வொரு செயலிலும்
4.அதனின் வளர்ச்சி ஓட்டத்தில் உடலுடன் உள்ளவரையிலும் (இறக்கும் வரை) அந்த ஞானம் செயல்பட்டு
5.உடலை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் இதே உணர்வலை சுற்றலைக் கொண்டு
6.எத்துறையில் உயர்ந்து உழன்று உருப்பெற்று வாழ்ந்ததோ அதே சுழற்சி ஓட்டத்தில்
7.மீண்டும் மீண்டும் அந்நிலைக்குகந்த வளர்ச்சி ஈர்ப்பிற்குத்தான் செல்கிறது.

முன்னேறிய விஞ்ஞானம்… விஷய ஞானம்… இசை ஞானம்…! எதுவாக இருந்தாலும் சரி…
1.ஓர் சுழற்சி வட்ட ஞான ஓட்ட வளர்ச்சி சுழற்றலில் தான் சுழன்று கொண்டே இருக்க முடியுமேயன்றி
2.உயர் ஞானச் செயலுக்கு ஒளி ஞானத்திற்குச் செல்ல முடியாது (இது முக்கியம்)

எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி நம் எண்ணத்தை அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்.

அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுது உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம் சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.

தியானம் செய்தால் தான் பலன்… தியானம் செய்து பலன் கிடைக்கவில்லை என்ற எண்ணத்திற்குப் போகக்கூடாது

தியானம் செய்தால் தான் பலன்… தியானம் செய்து பலன் கிடைக்கவில்லை என்ற எண்ணத்திற்குப் போகக்கூடாது

 

யாம் கொடுக்கும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் உயிரையும் துருவ நட்சத்திரத்தையும் இணைக்கும்படி செய்கிறோம். துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். துருவ தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சுத்தி மூலமாகவும் அந்த அருள் சக்திகளைப் பெறும்படி செய்கிறோம்.

இருந்தாலும்…
1.இத்தனை நாள் தியானம் செய்தேன்… என் தொழில் சீராக வில்லையே…
2.நான் இவ்வளவு தியானம் செய்கின்றேன்… என் குடும்பத்தில் இப்படி இருக்கிறதே…! என்று
3.இப்படித்தான் கலந்து கொண்டு போகின்றோம்.

ஆக பல கேள்விகளை எண்ணிக் கொண்டு “நான் தியானம் செய்தேன்… என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லையே…!” என்று மீண்டும் கலந்து கொண்டே வருகிறோம்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிய பின்பு அதே நஞ்சை மீண்டும் சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்ட மாதிரித்தான் பெரும்பகுதியானவர்கள் இருக்கின்றார்கள்.
1.நஞ்சைக் கழிக்கின்றோம்.
2.ஆனால் மீண்டும் எண்ணத்தால் நஞ்சைச் சேர்க்கின்றோம்.

பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நிலையில் நம் உடல் தன்னிச்சையாக நஞ்சை நீக்குகின்றது. ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…?

வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று இந்த வாழ்க்கையில் வருவதை எண்ணி மீண்டும் இந்த உடலில் நஞ்சாக அதை எல்லாம் சேர்த்துக் கொள்கிறோம். இந்த உடல் எத்தனை நஞ்சைத்தான் கழிக்கும்…?

சொல்வது அர்த்தம் ஆகிறதல்லவா…!

நல்ல உணவுடன் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து நல்ல உணர்வுகள் எல்லாம் பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக ஆன நிலையில் நம் உடல் நஞ்சை மலமாக மாற்றுகின்றது. ஆனால் நாம் நல்ல உணர்வுகளை இன்று நஞ்சாக மாற்றுகின்றோம்.

ஏனென்றால் ஆசையின் நிமித்தம்… உடல் பற்று என்று வரப்படும் பொழுது
1.இது கிடைக்கவில்லையே… அது கிடைக்கவில்லையே…! எல்லாம் செய்தேனே…
2.என் பையனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன்…
3.அவன் சொன்னபடி கேட்கவில்லையே…! காசையெல்லாம் செலவழித்து விட்டானே…! என்ற இந்த உணர்வுகளை வளர்த்து
2.வேதனையைக் கூட்டி நஞ்சாகச் சேர்த்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் மாற்றிவிடுகின்றோம்.

விஞ்ஞானிகள் சொல்கிற மாதிரி எத்தனை வகையான வேதனைகளை இணைத்தோமோ வைரஸ் என்ற கிருமியாகத் தான் நமக்குள் மாற்றுகிறோம்.

மூஷிகவாகனா…! நாம் சுவாசித்த உணர்வுகள் தான் வாகனமாக அமைகிறது. அதன் வழிப்படித் தான் இந்த வாழ்க்கை நடத்துகின்றது. அடிக்கடி கோபப்படுகிறோம் என்றால் நம்மைக் கோபக்காரராக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி ஆகி நம்மைக் கோபக்காரனாக மாற்றுகின்றது.

1.கோபக்காரனாக மாற்றினாலும் பரவாயில்லை.
2.கடைசியில் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
3.எதன் வழியில் கோப உணர்வுகளை நாம் சேர்த்தோமோ அதன் வழி இந்த உடலை மாற்றுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்புடன் சாகிறவர்கள் எல்லாம் பெரும்பகுதி அடுத்துப் புலியாகத்தான் பிறப்பார்கள். வேறு எங்கும் போக முடியாது. அல்லது இன்னொரு மனித உடலுக்குள் சென்றாலும் அங்கேயும் இரத்தக்கொதிப்பாக மாற்றி அவனை வீழ்த்தி விட்டு வெளி வந்துவிடும்.

அதாவது கொஞ்ச நஞ்சம் தொக்கி இருந்தது என்றாலும் இன்னனொரு மனித உடலில் யார் கோபமாக இருக்கின்றார்களோ அந்த உடலுக்குள் சென்று அங்கேயும் கோபத்தை உண்டாக்கி எல்லாவற்றையும் முழுமையாக்கி உயிர் வெளியில் வந்த பிற்பாடு புலியின் ஈர்ப்புக்குள் சென்று புலியாகப் பிறக்கச் செய்யும்.

நாம் ஏதாவது ஒன்றை எண்ணுகின்றோம். அது நடக்கவில்லை என்றால் இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே…! என்று வேதனையைத் தான் அடைகிறோம்.

எந்தெந்த வேதனை உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த வேதனைக்குத் தக்க அடுத்த உடலை உயிர் அமைத்துவிடும்.

கை கால் குடைச்சல் வரும் மூட்டு வாதம் கீழ் வாதம் வரும். இது எல்லாம் நமக்குள் சேர்த்துக் கொண்ட வினைகள் தான் இந்த வினைக்கு நாயகனாக நம்மை இயக்கிய தீரும்.

இப்படி ஆகிவிட்டால் அது சொன்னபடி தான் (நடக்க முடியவில்லை… அசைக்க முடியவில்லை… வலிக்கிறது) நாம் கேட்க வேண்டும் வேதனை அதிகமாகி உடலிலே அனைத்தையும் முழுமையாக்கிவிடும்.

ஆனால் இப்படி நோயாக ஆன பின்பும் கூட மருத்துவரிடம் சென்று நோயை நீக்கினாலும் ஆசை (உடல்) யாரை விட்டது…?

இவன் இப்படிச் செய்கின்றான்… அவனுக்குப் பணம் கொடுத்தேனே…! அவன் ஒன்றும் செய்யவில்லையே…! என்று வேதனை உணர்வை எடுத்து மீண்டும் உடலுக்குள் பல மாற்றங்கள் ஆகின்றது.

கடைசியில் எந்த மருந்து கொடுத்தாலும் அடுத்து ஒன்றுமே வேலை ஆகாது. இதையும் பார்க்கலாம்.

அதற்குத் தான் ஞானிகளைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம்.
1.அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து…
2.அதை வலுக் கூட்டினால் இந்த உணர்வின் தன்மை நம்மை வாழ வழிவகுக்கும்…. அமைதி பெறச் செய்யும்.
3.மன வலிமை கிடைக்கும்… சிந்திக்கும் ஆற்றல் கொடுக்கும்… சிந்தித்து செயல்படும் தன்மையும் வரும்

அந்த அருள் உணர்வைப் பெருக்கினால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை மாற்றும். உடலை விட்டுச் சென்றபின் அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

ஆகவே மெய் உணர்வோடு நாம் ஒன்றிச் செல்வோம்.

இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.. அதற்குத் தான் எமது உபதேசம்

இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.. அதற்குத் தான் எமது உபதேசம்

 

குருநாதர் காட்டிய வழியில் பல அதிசயங்களைச் செயல்படுத்தலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இது எல்லாம் எதற்கு உதவும்…?

1.இந்த உடலுக்குப்பின் என்ன…? என்பதை இங்கே உடைத்துச் சொல்கின்றேன் (ஞானகுரு).
2.பிறவியில்லா நிலை அடையும் அதற்குண்டான சக்தியை நாம் பெற வேண்டும். அது தான் முக்கியம்.

உடலை விட்டுப் பிரிந்தால் நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது…? அந்த அருள் ஒளியின் தன்மையை நீங்கள் பெற வேண்டும். நீங்கள் தயாராக வேண்டும்… அதன் வழி தான் எல்லோரும் தயாராக முடியும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நீங்கள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும். அதை நீங்கள் வலுவாகப் பெற்றால்தான் மற்றவர்களுக்கும் அதைப் பாய்ச்ச முடியும்.

அவர்கள் இந்த உணர்வைப் பெற… ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் மூலமாக… மற்ற எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.

ஒரு நோயாளியைப் பார்த்தபின் அவருடைய நோயைக் கேட்டறிகின்றோம். அதை விசாரித்த பின் அதே நோய் எப்படி வருகின்றதோ இதைப்போல
1.அருள் உணர்வைக் கேட்டபின்
2.அருள் உணர்வைப் பெற செய்யக் கூடிய தகுதி
3.நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

எல்லோரும் மகிழ வேண்டும் என்ற உணர்வை நான் எண்ணும் பொழுது அந்த மகிழ்ந்த உணர்வுகள் எனக்குள் விளைகின்றது. அதே போன்று நீங்களும் செயல்படுத்தி அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்குள்ளும் தோற்றுவிக்க வேண்டும்.

யாரும் எதையும் கொண்டு போக முடியாது. இந்த அருள் ஒளியை… அந்த மகிழ்ச்சியைத்தான் கொண்டு போக முடியும்.

அந்த அரும் பெரும் சக்தியைக் காடுகளில் தவமிருந்து பல அருள் ஞானிகள் பெற்ற அந்தப் பேரின்பத்தை நீங்களும் பெற வேண்டும். இதை நீங்கள் எளிதில் பெற முடியும்.

ஆகவே எது பதிவோ அது மீண்டும் நினைவுக்கு வரும். அதன் வழி இந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டால் இதை நீங்கள் வளர்க்க முடியும்.

உதாரணமாக ஒரு வித்தை உருவாக்குகின்றனர். எந்த வித்தை உருவாக்குகின்றார்களோ அதன் ஊன்றப்படும் போது அது விளைச்சலாகி பல வித்துகளாக வரும்.

அதைப் போன்று தான் இந்த ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதை நீங்கள் பெற வேண்டும்… வளர்க்க வேண்டும்.

ஆனால் தொழிலுக்கும் குடும்பத்திற்கும் இதைச் செய்தேன்… கஷ்டம் நஷ்டம்…! என்று சொல்வதை விடுத்து விட்டு
1.நாங்கள் அந்த அருள் சக்திகளைப் பெறுகிறோம்
2.அதை வைத்துச் சீர்டுத்துவோம் என்று இந்த உணர்வை வலுப் பெறுங்கள்.
3.இந்த வாழ்க்கையை உங்களால் செம்மைப்படுத்த முடியும்.

ஆசை ஒரு பக்கம்… எண்ணம் ஒரு பக்கமாகச் சென்றால் நிறைவேறுவது கஷ்டமாகி விடுகிறது.

அதே சமயத்தில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பதிலும் ஒரு சிலர் குறை காணுவதிலேயே இருப்பார்கள். குறையை ஊன்றும் தன்மை தான் அவர்களுக்கு வருகின்றது.

குறையிலிருந்து மீட்க வேண்டும் என்ற உணர்வு வருவதில்லை அப்போது அந்த வளர்ச்சியும் குன்றுகின்றது.

இதைப் போன்ற நிலையெல்லாம் மாற்றி அருள் வழியில் நாம் வளர்த்துக் காட்டும் தன்மைக்கு வரவேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்திகளைப் பெற வேண்டும். அருள் வழியில் நாம் வாழ வேண்டும்.

இந்த உணர்வை நாம் வளர்த்தால் நிச்சயம் அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

1.குறை கூறுவது எளிது
2.குறையை நிவர்த்தி செய்வது மிக மிகக் கடினம்
3.அது நம்மை அடிமையாக்கக் கூடாது… அதை அடிமையாக்கி அந்த அருள் உணர்வைப் பெருக்குதல் வேண்டும்.

நம்மிடம் உள்ள அரிதான சக்திகளை அறிந்திருக்கின்றோமா…? ஈஸ்வரபட்டர்

நம்மிடம் உள்ள அரிதான சக்திகளை அறிந்திருக்கின்றோமா…? ஈஸ்வரபட்டர்

 

இன்று விஞ்ஞானத்தில் ஒலிப் பதிவு செய்த நாடாக்களில் காந்த அலையை மின்சாரத்தினால் பாய்ச்சி அதனை ஒலிக்கச் செய்து கேட்கின்றனர்.

அதைப் போன்று இவ்வுடல் என்ற கூட்டு அமிலமுடன் உயிர் அணு தோன்றி ஜீவ உணர்வு எண்ண சக்தி வளர்ந்த நாள் தொட்டே பல கோடிச் சரீரங்களில்.. ஒவ்வொரு உயிர் ஜீவனின் உணர்வு எண்ண சுவாசத்தில் எடுத்த நினைவலைகள் அனைத்துமே நம் உடலில் பதிவாகியுள்ளது.
1.அப்படிப் பதிவான உணர்வெண்ண அலையில்
2.பல ஜென்மங்களில் எடுத்த எண்ண நினைவலைகளும் உண்டு.

அதன் குண நிலைத் தொடரில் தான் இன்றைய பிம்ப உடலின் உணர்வு நினைவு எண்ண ஓட்டங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அப்படிப் பதிவாகியுள்ள உடல் கூறு தான் இது.

ஆகவே…
1.இவ்வுடல் உணர்வு எண்ணமுடனே (அந்த ஓட்டத்திலேயே) நம் எண்ணத்தைச் செலுத்தினோமானால்
2.ஆத்ம சக்தி நல்லுணர்வின் வழித் தொடர் பெற முடியாமல்
3.அணைகட்டாமல் செல்லும் நீரைப் போல் தான் அதன் வேக நிலைக்கொப்ப செல்லும்.

உணர்வின் எண்ணம் கொண்டு நற்சக்தியின் ஞான ஒளி அலையை இவ்வுடலில் ஏற்கனவே பதிவாகியுள்ள பலவான உணர்வுகளில் கலக்கச் செய்திட வேண்டும் (இது முக்கியம்).

1.அத்தகைய எண்ணங்களையும் நினைவுகளையும்
2.நற்சக்தியின் நல் எண்ண குணத்தை வழிப்படுத்தக்கூடிய எண்ணத்தில் நம் வாழ்க்கை நடைமுறை இருந்திட்டால்
3.நாம் எச்சக்தியைப் பெற வேண்டும் என்று உணர்வின் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
4.அச்சக்தியின் எண்ணமுடன் நம் வாழ்க்கை செயல் இருந்திட்டால்
5.நம் ஆத்மாவும் நல் ஞானச் சக்தியின் வழித் தொடரைப் பெற முடியும்.

உடலில் மட்டுமல்லாமல் உடலை விட்டுப் பிரிந்தவர்களின் (இறந்தவர்களின்) எண்ண நினைவு சப்த அலைகள் “அந்தந்த உயிராத்மாவின் சுழற்சியுடன்” இக்காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டே அழியாமல் தான் உள்ளது.

இதனை உணர முடியுமா…?

இன்று நாம் பேசியதை நாடாக்களில் அமிலத்தைப் பூசி காந்த மின் அலையின் சக்தியினால் பதிவு செய்து பல காலங்களுக்கு அதனைக் கேட்க முடிகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களின் தொடர்பலையையும் நாம் நம் எண்ணத்தால்… அவர்கள் பால் செலுத்தும் உணர்வு ஞானத்தால்… எந்த ஒரு உடலை விட்ட ஆத்மாக்களுடனும் தொடர்பு கொள்ள ஜீவ பிம்ப மனித உடல் கொண்டோரால் முடியும்.

இம்மனித ஞானத்தில் மட்டும் தான் முடியும் என்பதல்ல…!

நம்முடன் வாழ்ந்த ஜீவன் பிரிந்த ஆன்மாக்கள் அவர்கள் அவர்களால் விரும்பி வாழ்ந்த காலத்தில் அவர்களின் உடம்புடன் தரித்திருந்த பொருள்களில் காந்த மின் அலையின் சக்தியை சில அமிலங்களின் கலப்புக் கூட்டைப் பூசி அவர்கள் பேசிய அலையையும் எடுக்க எடுக்கலாம். அவர்களின் இன்றைய எண்ண ஒலியையும் எடுக்கலாம்.

இவ்வுடல் கூட்டிற்கு ஜீவ நீர் சக்தியினால் எச்சக்தியையும் செயலாக்கவல்ல ஆற்றலுண்டு. “சகல லோகங்களையும் காணவல்ல ஆத்மக் கூடு இது” (நம் ஆன்மா).

1.ஆனால் நம் உணர்வின் எண்ணமெல்லாம் “இவ்வாழ்க்கை” என்ற ஏக்கச் சலிப்பு நிலையுடனே இருப்பதாலும்
2.பெரும்பாலும் தன் சக்தி குண அமிலத்தையே கூட்டும் வழியிலிருந்து
3.குறைக்கும் ஈர்ப்பு ஓட்டமான ஓட்ட கதியில் செலுத்தி விடுவதாலும்
4.நம் ஆன்மாவுக்குண்டான சக்தியை அறியாமலேயே வாழ்கின்றோம்.

இவ்வுணர்வின் எண்ணத்தையே நாம் நல்லெண்ண குண அமில நிலையில் வளர்த்துக் கொண்டோமானால்… ஒவ்வொரு மனித ஆத்மாவும் எந்த ஒரு பேரின்ப நிலை பெற வேண்டும் என்று அன்றைய ஞானிகளும் சபதரிஷிகளும் உணர்த்தி உள்ளார்களோ… அதன் உணர்வெண்ண நினைவுப்படி அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடைய முடியும்.

நம் எண்ணத்திலும் பார்வையிலும் வரக்கூடிய தீமைகளைப் போக்க வேண்டும் என்பது தான் “அஷ்டமி நவமியின் தத்துவமே…”

நம் எண்ணத்திலும் பார்வையிலும் வரக்கூடிய தீமைகளைப் போக்க வேண்டும் என்பது தான் “அஷ்டமி நவமியின் தத்துவமே…”

 

1.கண் வழி தான் நாம் கவர்கின்றோம்… அது தான் பதிவாக்குகின்றது.
2.கண்ணின் காந்தப் புலன் கவர்வது நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.இந்த உடலுடன் இணைந்தது எதுவோ அது பதிவான பின் உயிர் அந்த உணர்வின் தன்மையை இழுக்கின்றது.

அதாவது… நமக்குள் எத்தனையோ உணர்வுகள் அணுக்களாக இருப்பினும் கண் கொண்டு பதிவாகி உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அதைக் காற்றிலிருந்து பிரித்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

மாற்றியபின் சுவாசித்து உயிரால் தான் அது இயக்கப்படுகின்றது… நவமி.
1.எதன் உணர்ச்சிகளை எண்ணுகின்றோமோ அந்த எண்ணம் நவமி,
2.ஆனால் அதே சமயம் அஷ்டமி…! கண்களின் வழி நாம் நுகர்ந்தாலும் ஆன்மாவாகிறது… (தானாக) இயக்கும் சக்தி இல்லை.

நுகர்ந்து உயிரிலே பட்ட பின் அஷ்டமி என்றாலும் உயிருடன் ஒன்றிய பின் அந்த உணர்வின் அறிவாக நாம் தெரிந்து கொள்வது தான்.

அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகள். அந்த இருளிலே எதையும் செய்யாதீர்கள் என்பார்கள். ஆக… அஷ்டமியிலும் நவமியிலும் நல்லது எதையும் செய்யாதீர்கள் என்பார்கள்.

எதன் உணர்வின் தன்மை சேர்த்து அந்த உணர்வை அறிகின்றோமோ அறிந்து கொண்ட உணர்வு அதை அறியச் செய்வது இந்தக் கண்கள் தான்.

1.அறிந்து கொள்ளும் அறிவின் தன்மை கொண்டு நாம் எந்த நல்லதை எண்ணுகின்றோமோ
2.அதன் அறிவாக நம் உயிர் இயக்கும் என்பதைத்தான் அஷ்டமி நவமி… எதன் தெளிவின் தன்மை வருகின்றதோ ஈர்க்கும்.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று பார்க்கின்றோம். இந்த உணர்வின் தன்மை இது அஷ்டமி என்றாலும் அந்த உணர்வுகள் இருள் சூழ்கிறது.

1.வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி இருள் சூழ்ந்தால்
2.அந்தத் தீமையை எண்ணாதே என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறதே தவிர
3.இவர்கள் சொல்வது மாதிரி சாங்கிய சாஸ்திரம் அல்ல.

வேதனை என்ற உணர்வுகள் உயிரில் பட்ட பின் அது இருள் சூழ்ந்து விடுகின்றது. ஒன்பதாவது நிலையில் நவமி என்றாலும் வேதனை என்ற உணர்வுகள் தான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.

ஆகவே அந்த வேதனையை நவமிக் காலங்களில் எண்ணக்கூடாது என்று காட்டுகிறார்கள். அதே மாதிரித் தான் அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகளை எடுக்கக்கூடாது என்று காட்டுகிறார்கள்.

1.அதாவது தீமை என்று தெரிந்து கொண்ட பின் அந்தத் தீமையை நீக்கும் உணர்வுகளை
2.நாம் நுகர்ந்தறிவதற்குத் தான் இந்தக் கண்களைக் காட்டுகின்றார்கள்.

அன்றைக்கு நாம் நல்லது செய்ய வேண்டும்… நல்லவர்களாக வேண்டும்… நல்ல பயன்களை அடைய வேண்டும்…! என்று இப்படி எண்ணினால் அதன் உணர்வின் தன்மையே நமக்குள் அறிவாக அது இயக்குகின்றது.

சாஸ்திரங்களிலும் வேத நூல்களிலும் மூலங்களை இப்படிக் கொடுத்துள்ளனர்.
1.ஆனால் அந்த மூலத்தை மற்றவர் யாரும் அறிந்து கொள்ளாத நிலைகளில்
2.அஷ்டமி நவமி என்ற அந்த இரண்டு நாளும் நல்லதையே எண்ணி விடாதே என்று மாற்றிவிட்டார்கள்.

ஒரு நல்ல காரியத்தை முழுமையாகச் செய்து சந்தோஷப்பட்டு அதை எண்ணினோம் என்றால் நம் உயிர் அதன் உணர்வின் உணர்ச்சியாக இயக்குகின்றது.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று கண் கொண்டு பார்த்தால் அந்த வேதனையை நுகராதபடி எப்படி அவரை நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வின் தன்மை எடுக்க வேண்டும்.

தீமை வரும் நேரத்தில் எப்படி எண்ண வேண்டும் என்று தான் ஞானிகள் காட்டியுள்ளனர்.

இப்படி அந்த அஷ்டமி காலங்களிலும் நவமிக் காலங்களிலும் நாம் நல்ல காரியங்களைச் செய்து அந்த உணர்வின் தன்மை தெளிவாக்க வேண்டும் என்பதையே வேத பாட நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று உள்முகமாக நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

அதன் பின் எந்த நல்ல காரியமோ அது நடை பெற வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் அது நிச்சயம் நல்லதாகும்.

உணர்ச்சி வேகத்தை மனிதன் சமப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் – ஈஸ்வரபட்டர்

உணர்ச்சி வேகத்தை மனிதன் சமப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் – ஈஸ்வரபட்டர்

 

1.உணர்வையும்
2.எண்ணத்தையும்
3.ஒவ்வொருவரும் செலுத்தி வழிப்படுத்தும் முறை கொண்டு தான் “ஞான ஈர்ப்பு” வளரும்.

இவ்வுணர்வையும் எண்ணத்தையும் ஞானத்தில் செலுத்திட நற்குணங்களின் சக்தி அலை ஆறு வகையை உணர்த்தினோம். மனித குண அமிலங்கள் பன்னிரெண்டு இருந்தாலும் அதிலே அந்த ஆறு நற்குணங்களின் அமிலங்களின் சக்தி நிலை மனிதனுக்குள் பெருக வேண்டும்.

ஒவ்வொரு மனிதனின் குண அமிலத்தின் உணர்வு உந்தச் செய்யும் எண்ண ஓட்டம் உடலின் உணர்வைக் கொண்டே மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும். அதனால் ஏற்படும் சலிப்பைச் சாந்தமாக்க வேண்டும்.

இவ்வுடல் பிம்ப உணர்வு கொண்டு வாழும் வாழ்க்கையில்
1.ஒவ்வொரு நிலையையும் காணும் பொழுதே
2.நாம் எடுக்கும் சுவாசத்தினால் அவ்வுணர்வலைகள் இவ்வுடலில் சாடத்தான் செய்யும்.
3.இன்று நாம் காணும் உணரும் எண்ணத்தால் மட்டும் நம் சுவாசம் அத்தகைய நிலையை ஈர்க்கும் நிலை ஏற்படுவதல்ல.

ஏன்… எப்படி…? எதனால்..?

ஜீவ பிம்ப உணர்வு (மனித) உடலில் “எல்லா உணர்வின் நிலையையும் உணரவல்ல ஈர்ப்பு குணங்கள்” இப்பிம்ப உடலின் அமில குணச் சேர்க்கை வடிவெடுத்த ஆரம்பக் காலத்திலிருந்தே…! பல ஜென்மங்களின் கூட்டுக் கலவை வளர்ப்பு அமிலங்கள் இந்த உடலில் உண்டு.

1.முந்தைய காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட உடலின் உணர்வலைகள்
2.இன்று… இப்பொழுது… நாம் எடுக்கும் நற்சக்தியின் அலையின் உணர்வினால் மட்டும் தடைப்படுத்திட முடியாவண்ணம்
3.நம் உடலின் கூட்டு உணர்வமில… முந்தைய சேமிப்பு அமிலத்தில் “உயர்ந்து நிற்கும் குணத் தொடர் உணர்வு” (முன் ஜென்மத் தொடர்)
4.அதன் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நம்மை மாறவிடாமல் தடைப்படுத்தும்.

இயற்கையின் உரு குண நிலையே இதன் அடிப்படை குண ஈர்ப்பு ஓட்டத்தில் தான் இவ்வுலகம் முழுமைக்கும் ஓடிக் கொண்டுள்ளது.

1.அதி மழை காலத்தில் அதன் வேகத்தைக் கொண்டு பெய்யும் மழை நீர்
2.அதே ஓட்டத்தில் சுழன்று அதி வேகமாக ஓடிக் கலக்கின்றது.
3.அதே நீர் தான் அமைதியாகவும் தெளிந்த நிலையிலும்
4.நாம் அணை கட்டி விடும் வேகத்தின் விகிதப்படி நிதானமாக ஓடுகின்றது.

உணர்வின் வேகத்தை மழை நீரானது மழை பெய்யும் வேகத்தைக் கொண்டு அதன் ஓட்ட நிலையில் விட்டு விட்டால் அதே வேகத்தில் பாய்வது போல் நம் உணர்வின் வேகத்தையும் அப்படியே விட்டால் அதனின் வேகத்திலேதான் பாயும்…!

ஆனால் மழை நீரை அணையைக் கட்டித் தேக்கி அந்நீரை நமக்கு வேண்டியபடி வெளிப்படுத்தும் விகிதம் கொண்ட ஓட்டத்தில் திறந்து விடும் பொழுது அதே நீர் அதற்கு உகந்த வேக நிலை ஓட்டத்தில் தான் அது ஓடும்.

ஆக.. இவ்வெண்ணத்தை நம் வாழ்க்கையில் நடத்திடும் எந்தச் செயலுக்கும் அச்செயலை ஈர்க்கவல்ல எண்ண ஓட்ட கதியில் விட்டு விட்டோமானால் என்ன ஆகும்…?

வாழ்க்கையில் நடந்திடும் எந்த ஒரு செயலையும் அணை கட்டி ஒழுங்குமுறைப்படுத்தி விடும் நீரைப் போல் இல்லாமல் விட்டு விட்டால்
1.மழை நீரின் வேகத்தைக் கொண்டு பாய்ந்தோடும் துரிதத்தைப் போலவும்
2.மழையின் தன்மை குறையக் குறைய மழை நின்ற பிறகும் அதன் செயல் நிலைக்கொப்பச் செல்லும்
3.நீரின் வேக நிலையைப் போலவும் தான் இவ்வெண்ண உணர்வும் செயல்படும்.
4.காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற பிறகு அது நிதானப்பட்டாலும் “வெள்ளத்தின் பாதிப்பு பாதிப்புத்தான்…!”

அதைப் போன்று நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நொடிக்கும் நாம் எடுக்கும் சுவாசத்தின் உணர்வு எண்ணம் கொண்டு பல மோதல்கள் வருகிறது.

ஏனென்றால் நம் பூமியின் காற்று மண்டலத்தில் இயற்கையின் அமில சக்திகளுடன் இம்மனித எண்ணத்தின் சுவாச அலையின் குண அமிலங்கள் நிறைந்தே சுழல்வதால்
1.நாம் எடுக்கும் சுவாசத்துடன் இக்காற்று மண்டல அமில சப்தங்கள்
2.நம் உணர்வு எண்ணத்தில் மோதிக் கொண்டே தான் உள்ளன.

ஒவ்வொரு நொடிக்கும் நம் சுவாச நிலைக்கொப்ப உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சக்திகள் இவ்வுடல் பிம்ப அமில சப்த அலையுடன் பதிவாகிக் கொண்டே தான் உள்ளது… அதனின் இயக்கமும் இருந்து கொண்டே தான் உள்ளது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆகவே எதிர் மோதலாகும் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம்… நம் உணர்வையும் எண்ணத்தையும் சமப்படுத்திச் சீராக்கத் தான் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி சொல்கிறோம்.

உபதேசம் கொடுக்கும் போது அதைக் கேட்பவர்களுக்கு அடிக்கடி ஏன் தூக்கம் வருகிறது…?

உபதேசம் கொடுக்கும் போது அதைக் கேட்பவர்களுக்கு அடிக்கடி ஏன் தூக்கம் வருகிறது…?

 

கேள்வி:
சாமிகள் உபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம் சிலருக்குக் கிறக்க நிலைகள் ஏற்படுகிறது. தூக்கம் வருகிறது. அந்த நேரத்தில் சாமிகள் கூறும் உபதேசக் கருத்துகள் அவர்களுக்குள் பதிவாகிறதா என்பது பற்றிய விளக்கம் வேண்டும்.

ஞானகுருவின் பதில்:
உதாரணமாக நல்லதாக நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். அந்த நேரத்தில் ஒருவர் வந்து வேதனைப்படும் சொல்லைச் சொன்னவுடனே என்ன ஆகிறது…?

நல்ல அணுக்கள் சோர்வடைகிறது அல்லவா…!

இதே மாதிரித் தான்
1.அந்த வேதனையை நீக்கிய ஞானிகளின் உணர்வை நுகரப்படும் போது
2.உண்மையிலே அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் போது வசிஷ்டர்… (கவர்ந்து கொண்ட சக்தி) உள்ளுக்குள் போகிறது.
3.இதற்கு முன்னாடி எத்தனையோ கஷ்டங்கள் சங்கடங்கள் எது எல்லாம் இருந்ததோ அதை அடக்கி இந்த உணர்வுகள் மேலோங்கும்.

நன்றாக இருக்கின்றீர்கள்.. ஒருவர் வந்து திடீரென்று வேதனையாகச் சொல்லப்படும் போது என்ன ஆகிறது…? நல்ல மனது எல்லாம் ஒடுங்கி விடுகிறது.

அந்த நல்ல மனதை “வேதனை” என்ற உணர்வு ஒடுங்கச் செய்கிறது. வேதனை நீக்கிய ஞானிகளின் உணர்வைக் கேட்கும் போது என்ன ஆகிறது…?

1.இந்த உணர்வு ஆன பின் உடல் ஆசை எல்லாம் மாற்றிவிடுகிறது.
2.ஒரே நினைவுடன் உங்களைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கிறது.
3.அந்த உணர்வு உங்களுக்குத் தூங்குகிற மாதிரித் தெரியும்.

ஏனென்றால் மற்ற தீமைகளை எண்ணாதபடி ஒரே நினைவாக உங்கள் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறுகிறது.

அப்படிப் பெருகிய நிலையில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சொன்னால் அங்கே கொண்டு போகிறது.

உங்களை மேலே தூக்குகிற மாதிரி இருக்கும்…!

இங்கே உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது இந்தப் புவியின் கனம் இருக்காது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் போது உடல் எடை இல்லாது இருக்கும். சங்கடம் சலிப்பு என்ற நிலைகள் இருக்காது.

தூங்காமல் தூங்கும் காலம் எக்காலம்…? என்று சொல்வார்கள். ஆக தீமை என்ற உணர்வு வராதபடி… அந்த அருள் உணர்வுடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

1.தூக்கம் வருகிறது… மயக்கம் வருகிறது… சாமி சொல்வதைக் கேட்க முடியவில்லை.
2.சாமி சொல்கிறார்… பெரியவர் என்னமோ சொல்கிறார்… என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது.

இதை எல்லாம் கேள்வியாகச் சாமியிடம் கேட்கலாமா…? என்று இருக்கக்கூடாது. கேட்டால் தான் தெளிவு வரும். மற்றவர்களுக்கும் தெளிவு வரும்.

ஏனென்றால் நாளைக்கு அந்த மெய் உலகம் வர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் எப்படி ஒளியாக ஆனானோ அந்த உணர்வுகள் பெருகும் காலம் வரும்.

காரணம்…
1.என்றைக்குமே ஒரு துன்பத்தின் நிலை அது எல்லை கடந்து வரப்படும் போது தான்
2.அதிலிருந்து மீண்டிடும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெருக்க முடிகின்றது… வளர்க்கவும் முடிகின்றது.

இப்போழுது நான் சொல்வது உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியும்.
1.பின்னாடி போகப் போகப் போகத் தான்
2.இந்த அருள் உணர்வுகள் உலகம் முழுவதற்குமே தெரியக்கூடிய தன்மை வரும்.

ஏதோ நான்கு பேர்… பத்துப் பேர் வருகிறீர்கள்… நூறு பேர் வருகிறீர்கள் என்று லேசாக நினைக்கலாம். அந்த நூறு பேரால் இந்த உலகம் முழுவதற்குமே அருள் ஞானமாக மாற்றும் சக்திக்கு வரும்.

நீங்கள் அனைவருமே எதிர்காலத்தில் உலகை வெல்லக் கூடிய சக்தி பெற வேண்டும் என்பது தான் என்னுடைய (ஞானகுரு) பிரார்த்தனை எல்லாம்.

கிருஷ்ணன் வாயிலே காட்டிய அண்டசராசரத்தின் ஆற்றலை நாம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

கிருஷ்ணன் வாயிலே காட்டிய அண்டசராசரத்தின் ஆற்றலை நாம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

பல நிலைகளால் பூமியின் நிலையே பூமியின் சுவாச நிலையே மாறு கொள்ளும் இத்தருவாயில் நம் உணர்வின் எண்ணத்தால் ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தில் மடியப் போகும் உயிரினங்களின் வழித் தொடர் செல்லும் மிகவும் ஈன நிலையிலிருந்து மீள முடியும்.
1.இப்படி உயர் செயல் குணமுள்ளது
2.இன்றைய மனித உடல் உள்ளவர்களுக்கு…!

உடல் இல்லாதவர்கள் (உடலை விட்டுப் பிரிந்தவர்கள்) என்ன செய்வது…?

தன் உணர்வின் எண்ணத்தால் தான் எடுக்கும் ஜெபத்தால் தான் மட்டும் சக்தி பெறுவதோடு அல்லாமல் தன் உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி தான் வணங்கும் தன் முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களையும் உயர் நிலைப்படுத்திட முடியும்.

எவ்வுடலில் இருந்து உடல் பெற்று வழி வந்துள்ளோமோ அவ்வுடலின் முன்னோர்களையும் தம் ஈர்ப்பு ஜெபத்தால் நாம் வணங்கி நாம் செல்லும் சப்தரிஷி மண்டலக் கூட்டுடன் சுழல விட்டுக் கொள்ள முடியும்.

ஏனென்றால் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்குத் தன் உணர்வினால் மனம் சுவை இவைகளைத்தான் எடுக்க முடியும். ஞானத்தை வளர்த்துக் கொள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களால் முடியாது.

அவர்களின் நிலை சிதறாமலும் மாறுபடாமலும் இருக்க உடலுடன் கூடிய ஜீவ பிம்ப உடல் மனிதனால்தான்
1.தன் எண்ண உணர்வில் அவர்களை நினைத்து வணங்கினால்
2.அவர்களின் உயிராத்மா வேறு ஈர்ப்பலைக்குச் செல்லாமல்
3.நாம் பாய்ச்சும் ஞானிகளின் எண்ண உணர்வு ஈர்ப்புக்குள் அவர்களின் நிலையும் சுழன்று கொண்டிருக்கும்.

ஏனென்றால் இன்று விஞ்ஞானத்தால் பூமியினுள் உள்ள நுண்ணிய காந்த அலையையும் காற்றில் கலந்துள்ள இவ்வலையையும் ஈர்த்தெடுத்து “எலெக்ட்ரானிக் காந்த மின் அலை ஈர்ப்புச் செயல் காண்பதினால்…”
1.மிகச் சக்தி வாய்ந்த உடலை விட்ட உயிராத்மாக்களுக்குக் கூட
2.ஈர்ப்புச் சிதறல் நிலை இன்றுள்ளது… உயர் நிலை பெறத் தடையாகி விட்டது.

இன்று விஞ்ஞானத்தில் இவ்வலையைப் பிரித்தெடுத்து பல செயல்களைச் செயற்கைக்கு உணர்த்துகின்றான்.

ஆனால் அதே காந்த நுண்ணிய மின் அலை ஈர்ப்பை ஈர்த்துத்தான் ஜீவன் கொள்கின்றது ஒவ்வொரு ஜீவனும். மனிதனின் உடல் பிம்பச் செயலே இக்காந்த நுண்ணிய மின் அலை ஓட்டம் தான்.

விஞ்ஞானத்தில் உலோகத்தின் இம்மின் அலை ஈர்ப்பைக் கொண்டு பல மண்டலங்களுக்கும் பல சாதனங்களைச் செலுத்தி உணர்ந்து வருகின்றான்.

1.இஜ்ஜீவ பிம்ப உடலிலேயே…
2.இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் சென்று காண வல்ல
3.அமிலப் படைப்பு ஈர்ப்பு காந்த மின் அலைகள் உண்டு.

இக்காந்த மின் அலையை எவ்வெண்ணத்தில் எவ்வுணர்வைக் கொண்டு பாய்ச்சுகின்றோமோ அதன் நிலையை நாம் அறிய முடியும். இவ்வுடலில் எல்லா உணர்வலையையும் ஈர்க்க வல்ல சக்தியுண்டு.

இதனை உணர்த்தத்தான் ஒவொரு கால கட்டத்திலும் கதை வடிவில் இராமனையும் கிருஷ்ணனையும் படைத்தான் அன்றைய ஞானி.

நற்குணங்களின் உருவமாய் இராமனின் கதையைப் படைத்தான். உலகமே இம்மனித பிம்ப ஈர்ப்பில் காண முடியும் என்பதனை உணர்த்த கிருஷ்ணனைப் படைத்துக் காட்டினான்.

கிருஷ்ணன் வாயைத் திறந்தால்… அண்ட சராசரங்களையும் கண்டதாகக் கதை உருக்காட்டினான் அன்றைய ஞானி.

இக்காற்றில் தான் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் அனைத்துச் சக்திகளும் உண்டு.
1.உணர்வுடன் உருவமுடன் உள்ள நாம்
2.இவ்வெண்ணச் சுவாசத்தால் இராமனின் குண அமிலத்தை ஈர்த்துக்
3.கிருஷ்ணனின் வாயில் கண்ட அண்ட சராசரங்களையும் காண முடியும்.

மனித பிம்ப உணர்வு எண்ணச் சுவாசத்தால் காந்த மின் நுண்ணிய அலை ஈர்ப்பை எச்செயலில் செலுத்தி நம் உணர்வு எண்ணச் சுவாசம் செல்கிறதோ அதன் செயலை நாம் செயலாக்க முடியும்.

நம்மைக் காட்டிலும் மிகச் சக்தி வாய்ந்த நம்மையே படைக்க வழி தந்த சப்தரிஷிகளின் தொடரில் இவ்வெண்ண உணர்வு சுவாச ஈர்ப்பிற்குச் செயலாக்க முடியும்.

1.முதலில் இராமனைப் போன்ற குணமாகுங்கள்
2.பிறகு கிருஷ்ணனின் காந்த நுண்ணிய மின் அலை உருவாகுங்கள்.

தியானத்தின் மூலம் பலனைப் பெற்றால் தான் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் உணர முடியும்

தியானத்தின் மூலம் பலனைப் பெற்றால் தான் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் உணர முடியும்

 

கேள்வி:
ஈஸ்வரபட்டர் உங்களுக்கு எல்லாச் சக்திகளும் கொடுத்தார்… நீங்கள் அதை எல்லாம் பெற்றீர்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கொடுக்கவில்லையே… உபதேசமாகத் தான் சொல்லிக் கொண்டே போகிறீர்கள்…!

யாருக்காவது நீங்கள் கொடுத்து அதைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நாங்களும் ஆர்வமாகச் செய்வோம். இது எங்களுக்குச் சந்தேகமாகவும் ஒரு யோசனையாகவும் இருக்கிறது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் சாமி.

ஞானகுருவின் பதில்:
நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். “நன்றாகத்தான் இருக்கின்றது…” என்று நான் சொல்லிவிட்டால் மட்டும் போறுமா…?

நல்ல சுவையான சாப்பாடை நான் சாப்பிட்டால்தான் எனக்கு நல்லது. ஆகையினால் போடும் சாப்பாட்டைச் சரியான முறையில் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் அந்த ருசியின் தன்மை தெரியும்

1.இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருந்தது” என்று சொல்கிறார்.
2.எப்படி இருந்தது…? என்று கேட்கும் போது நன்றாக இருந்தது… நன்றாக இருந்தது… என்றே சொன்னால்
3.அது எப்படி நன்றாக இருந்தது…? என்று திரும்பவும் கேட்டால் சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்…!

உதாரணமாக… உடலில் ஒரு இடத்தில் புண்ணாகி விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது நம்மை வேதனைப்படுத்தினாலும் மருந்தைப் போட்டு குணப்படுத்த விரும்புகின்றோம்.

ஆனால் அப்போதும் சிறிது வேதனை இருக்கிறது. ஆற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தால் புண்ணுக்கு அந்த மருந்தை போட்டுக் கொள்கிறோம்.

ஆனால் மருந்தைப் போட்டுக் கடுகடுப்பாகி விட்டால் என்ன…! இப்படி ஆகி விட்டதே…? என்று மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமா…?

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிலையில் நமக்குள் எத்தனையோ விதமான வேதனைகளைத் தோற்றுவிக்கும்.
1.எத்தனை விதமான வேதனைகளைத் தோற்றுவித்தாலும்
2.அதை மாற்றியமைத்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் அடிக்கடி நுகர்தல் வேண்டும்.

அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது

1.இப்பொழுது என்ன தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுத்தாலும்
2.நீங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில்தான் அது இருக்கின்றது.

உங்களுக்குத் தெரியாமலே எவ்வளவோ மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு அது தெரியாது.

ஆனால் அது எப்படி இருக்கிறது…? என்று உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? “ஜீபூம்பா…” வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

அப்படி நடந்ததுதான் முந்திய கால நிலைகள்.
1.எனக்கே சக்தி இருக்கின்றது…
2.சாமி தயவு என்ன வேண்டிக்கிடக்கிறது…? என்று
3.பிய்த்துக் கொண்டு போனவர்கள் தான் பெரும்பகுதியான நிலைகள்.

குருநாதர் மூலம் பெற்ற அரும் பெரும் சக்திகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த அற்புதமான நிலைகளைத் தெரிந்து கொண்டால் “உலகத்திற்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…” என்றும் நினைத்தேன்.

கடைசியில் எல்லோருக்கும் அது ஆசையைத் தூண்டி விடும் நிலையில் தான் முடிந்துவிட்டது. ஆக மொத்தம்
1.ஒருவருக்கு புரியக் கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அடுத்தவர்கள் புரிந்து விடக் கூடாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
3.எல்லாம் தெரிந்த பின் அவர்கள் குருவாகவே மாறிவிட்டார்கள்.

நான் கொடுப்பதை விட நீங்கள் எந்த அளவுக்கு அந்தச் சக்திகளை எடுக்கின்றீர்களோ… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிக்கின்றீர்களோ… அதை மற்றவர்களுக்கு அப்படியே பெறச் செய்கிறீர்களோ… அதிலே நீங்கள் இந்தச் சக்திகளைக் காண முடியும்.

வியாழனின் ஞானரிஷியின் செயல் என்ன…? ஈஸ்வரபட்டர்

வியாழனின் ஞானரிஷியின் செயல் என்ன…? ஈஸ்வரபட்டர்

 

ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்கின்றது. வளர்ப்பின் படர்… பலவாகிப் பலவின் பல வளர்ந்தே உருவாகி… உருவாகி… உருண்டோடும் உரு குண வளர்ப்புச் செயலில்… தொடர் கொண்ட நிலையில் வளர்வது தான் அனைத்துமே.

ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து ஒவ்வொன்றாக வளரும் வளர்ச்சி கதியில் உருவாகி… உணர்வாகி… செயலாகி… செயலில் வழி பெறுவது பல.

1.இயற்கையின் உண்மை உணர்வில் உருண்டோடும் சக்திகள் எல்லாமே “அவன் படைப்பென்றாலும்”
2.அவன் படைப்பிலிருந்து நல் ஒளி படைப்புப் பெறுவது தான் “இறை ஞானம்..” என்பது.

பலவாக உள்ள இந்த உலகில் இயற்கைப் படைப்பில் மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித ஞானத்தை உயர்வாகச் செயலாக்கும் சக்தி உருவாகியுள்ளது.

1.இறை ஞானத்தின் சக்தியை உணர்ந்து வழி ஞானம் பெறவல்ல ஆற்றல் மனித குண ஞானத்திற்குத் தான் உண்டு.
2.உயர்த்துபவன்… உயர்ந்தவன்…! என்ற வமிசக் கோட்பாட்டை அறியும் ஞானம் மனிதனுக்குண்டு.

மனிதன் வாழ மற்ற இயற்கையும் துணை கொள்கின்றது. தீயது என்ற நிலை உள்ளதினால் தான் நல்லதைப் பிரித்துக் காண முடிகின்றது. நற்சக்தியின் செயலிலே சகல வளர்ப்பும் இருந்ததென்றால் ஞானத்தின் வளர்ப்பு நிலை பெறுவது எப்படி…?

1.சக்தியின் ஸ்வரூபத்தில் சகலமும் உண்டு.
2.சகலமும் இருந்தால் தான்… சகலத்திலும் இருந்து “உயர் உணர்வு எது…?” என்று செயல் கொள்ள முடியும்.

உயர் நிலை உணர்ந்து… உயர் ஞான இறை சக்தி அடைய… ஞானத்தை உணர்ந்து செயல் கொள்ளக்கூடிய நிலை “மனித உரு வளர்ச்சி கொண்ட வழித் தொடரில் தான் உண்டு…!” என்பதை உணர்ந்து இந்தப் பூமியில் மனித இன வளர்ச்சியை ஊக்குவித்தனர் சப்த ரிஷிகள்.

குருவாக இன்று நாம் சொல்லும் “வியாழனின் ஞான ரிஷி” தான் வியாழனின் மனிதக் கரு உரு நிலையிலிருந்து மனிதனின் அமில குண வளர்ச்சி சக்தியை அம்மண்டலத்தில் மனித இனங்கள் வாழ முடியாத வளர்ப்பு நிலை கொண்ட மண்டலமாக வியாழன் மாறும் தருவாயில் இங்கே பூமியில் மனிதக் கரு வளரக் காரணமானவர்.

அதாவது அந்தச் சூட்சம ஞானச் செயல்… மனித இனத்தின் சுழற்சி வட்டம் சப்தரிஷியினால் ஈர்த்தெடுக்கப்பட்டு மீண்டும் மனிதக் கரு உருவாகவும்… மண்டலமாக நம் பூமியின் சக்தி அலையை வளர்க்கவும் செய்து… இப்பூமியின் ஈர்ப்பிற்கு மனித இனக் கருவை வளர்க்க விட்டனர் அன்று சப்தரிஷிகள்.

1.இன வளர்ச்சியில் ஞானத்தை உணர்ந்த அவர்கள் செயல்
2.அந்தந்தக் கால நிலைக்கொப்ப அவர்கள் பதித்த வளர்ச்சியிலிருந்தே
3.தன் வளர்ச்சிக்குப் பலம் கூட்ட தன் வளர்ப்பில் பயிராக்கிய பயிரிலிருந்து
4.மீண்டும் பயிராக்க “விதையைத்தான்” இன்று அவர்கள் சேமிக்கின்றார்கள்.

சப்தரிஷி உருவான அமிலக் கூட்டு இன நிலைக்கொப்ப தன் குண உணவையே தான் எடுத்து தான் வளர்ந்து இவ்வின வளர்ச்சி மங்கா நிலைக்காகத்தான் “சப்தரிஷிகளின் செயல்” இன்றுள்ளது.

இறைவனின் படைப்புத்தான் ஒவ்வொன்றும். படைப்பின் படைப்பெல்லாம் அவனே தான். அவனின் படைப்பில் இறை ஞானம் பெறும் மனித ஞானம் கொள்வது தான் படைக்கப்பட்டவன் படைப்பின் பொருள் காணும் நிலை.

நாம் நம் வாழ்க்கையில் சாதாரண நிலையில் உணர்ந்து வாழ்ந்து ஜீவன் பிரிந்து செல்லும் நிலையில் உள்ள நிலையை அந்தந்தக் காலங்களில் சப்தரிஷிகள் பல உடல்களை ஏற்று பல ஞானிகளை உருவாக்கிச் சென்றார்கள்.

ஆனால் இன்று வளர்ந்து பெருகியுள்ள மனிதனின் குண வழித் தொடர் யாவையுமே விஞ்ஞானம் என்ற உடல் பிம்ப சுகம் காணும் செயல் ஞானமாக வளர்ந்து வேரூன்றி கிளை விட்டுப் படர்ந்து விட்டது.

1.இதனை மாற்றியமைத்து
2.உயர் ஞானமான ஆத்ம ஞானத்தை வளர்த்து
3.இறை ஞானம் என்ற மனித அமில குண சக்தி ஈர்ப்பு வளர்ச்சி தரும் சப்தரிஷியின் ஞானமுடன்
4.நம் உணர்வின் செயல் இன்றுள்ள கால கட்டத்தில் செல்ல வேண்டிய குறுகிய காலமிது…!