ஒருவனுக்கு ஒருத்தி…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒருவனுக்கு ஒருத்தி…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உயிரையும் ஆன்மாவையும் இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் சக்தியின் வீரியத்தைக் காட்ட வந்த காவிய மகரிஷியே வான்மீகி ஆவார்.

தன்னுடைய காவியத்தில் அந்த உயிர் ஆன்ம சக்தியின் தொடருக்கு இராமன் சீதை என்று காட்டினாலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் கூட “ஒருவனுக்கு ஒருத்தி…!” என்றபடி வாழும் வாழ்க்கை நியதியைக் காட்டினார்.

அந்த வழியில் நடந்திடும் பரிபக்குவத்தை மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவ ஞான நிலைகளும் கூட…
1.தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் வாழ்க்கை நெறி முறையின் கோட்பாடு என்று காட்டி
2.”அது சக்திச் சுடரால் காக்கப் பெறும்…!” என்ற சூட்சமத்தையும் காட்டினார்.

அப்படிப்பட்ட வாழ்க்கை நெறி “கற்பு…” என்னும் சுடரால் ஒளி பெற்று விளங்குவதால் அந்தக் “கற்பு நெறி…” என்பது ஒழுக்கம் என்கிற தொடரில் பெறப்படும் உயர்ந்த பண்பு நிலை தான்.

நாம் கைக்கொள்ள வேண்டிய சாராம்சமாக அதையே வழிகாட்டியாக அமைத்து நடை முறைச் செயலாக அதனின் இயக்கம் கொண்டால்
1.அது நல் வினைப் பயனாகப் பெற்று
2.நம் உயிர் ஆன்ம சக்தி என்றும் பிரகாசித்து
3.ஜோதித் தத்துவத்தில் நிலையாக விளங்கும்.

அப்படிக் காக்கப் பெறாத வாழ்க்கைத் தொடர் என்பது காமத்தின் அடியாக எழும் மோகமாகி… வாழ்க்கை நெறியை அழித்து உயிர் ஆன்ம சக்தித் தொடரில் குலத்தையும் பூண்டோடு அழித்து மறைத்துவிடும்.

சாந்த குணம் பெற்ற உயிர் சக்தியான இராமன் அகன்றாலும்.. தைரிய குண சக்தியான லட்சுமணனால் காக்கப்படும் நிலை இருந்திருந்தாலும்…
1.சீதை என்ற ஆன்மாவில் பதியப் பெறும்
2.ஆசை என்னும் குண உந்துதல் சரீரத்துடன் ஊட்டப் பெற்றால் என்ன ஆகும்…?

நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வழி நடத்துகின்றோமோ
1.அதுவே ஆன்ம சக்தியாக சரீரத்தையும்
2.ஊட்டப் பெற்ற சக்தியின் தொடரில்
3.ஊட்டப் பெற்ற சக்தியின் வாசனை சமைக்கப்பட்டு சரீர கதியில் வெளி வந்து
4.அந்தச் சமைப்பின் தொடரிலே உடலில் உள்ள எல்லா உயிரணுக்களையும் தன் செயலுக்கு (ஆசைக்கு) வழி நடத்துகின்றது.

ஆசை என்ற சிறு தொடரில் “இப்படி அறியாது அகப்படும் ஆத்ம சக்தியானது…” மோகம் என்னும் படு குழியில் வீழ்த்தப்படுவதைக் காட்டிடவே
1.இராவணனிடம் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது என்பதாக
2.இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதில்
3.அவன் பூமியோடு பெயர்த்து எடுத்துத்தான் சீதையைக் கவர்ந்தான் என்று காட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால்
1.ஆன்ம சக்தியை வலுவானப் பெற்றிருந்தால்
2.எத்தகைய தீய குண சக்தியின் வீரியமும் ஆன்ம சக்தியை நெருங்க முடியாது…! என்பதே அதனின் சூட்சமப் பொருள்.

அந்தத் தொடரில் சிந்திக்கத் தலைப்படும் ஞானி அறிய வேண்டிய உண்மையின் சாரம் ஒன்று உண்டு.

நம் ஆத்மாவைக் காக்கும்… காத்துக் கொண்டிருக்கும்.. ஜெப ஆகார அமில குண சூட்சமத்தைக் காட்டவே சீதையைக் காக்க வந்த “பக்ஷிராஜன்…! (ஜடாயு) என்ற ஓர் பாத்திரப் படைப்பில் விளக்கம் தந்தார் வான்மீகி.

ஒரு தந்தை தன் குழந்தையைப் பேணுவது போல் அது நம் ஆன்மாவை எப்பொழுதும் வட்டமிட்டுக் காக்கும் என்றெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார்.

ஆனாலும்
1.நம் ஆன்ம சக்திக்குச் சக்தியூட்டும் உயிர்ச் சக்தி (இராமன்) இல்லாததால்
2.அசுர குணத் தன்மை வீரிய குணச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்று தெளிவாக்குகின்றார் வான்மீகி.

அந்த ஜாடாயு தன் சிறகை இழந்துவிட்டது என்பதே நம் சூட்சமச் சரீரத் தொடரில் சிறகு இழந்து விட்டால் உயிர்ச் சக்தி தன் பறக்கும் தன்மை இழந்து விடுகிறது.

மீண்டும் ஆன்ம சக்தியான சீதையை உயிர்ச் சக்தியான இராமன் அடைய எத்தனை கடும் சோதனைகளுக்கு ஆட்படுகிறான்.

1.பல உயர்ந்தோரின் ஞானத் தொடர்பு பெற்ற பின் உயர் சக்திகளைப் பெற்று
2.தன் எண்ணம் கொண்டு வழி வகுத்த பாதையிn உயர்வில் தான் சீதையை அடைய முடியும்.
3..அதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்ற சூசகப்படுத்தி
4..நம் உயிர் ஆன்ம சக்தி காக்கப் பெறும் தொடர்பை வலியுறுத்துகிறார் காவிய ரிஷியான வான்மீகி.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற “விதி…” என்று எதுவும் இல்லை

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற விதி என்று எதுவும் இல்லை

 

இன்றைய உலகில் மனித இனத்தையே பூண்டுடன் அழிக்கும் உணர்வுகளாக மனிதனுக்குள் விளையப்பட்டு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நஞ்சு கொண்ட உணர்வுகளாகச் சாக்கடையாக இருக்கின்றது.

இந்தச் சாக்கடைக்குள் பல ஆண்டுகளுக்கு முன் மறைந்திருந்த ஞானிகள் இத்தகையை தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அரும் பெரும் சக்தி நமக்கு முன் உண்டு.

அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து…
1.இந்தச் சாக்கடையான வாழ்க்கையில் சாக்கடையைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து
2.இந்தச் சாக்கடையான உலகில் வாழ்ந்த நம் உடலுக்குள் சாக்கடையைப் பிளந்து
3.உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்ட ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற முடியும்.

இதற்கென்று “விதி…” இல்லை.

இளம் பிள்ளை என்றோ
மற்றவர்கள் என்றோ
அறிந்தவன் என்றோ
அறியாதவன் என்றோ எதுவுமே இல்லை…!

1.அறியாதவன் அறிய முற்படுகின்றான்.
2.அறியாத நிலைகளில் இருக்கும் பொழுது நாம் அறிய முற்படுகின்றோம்.

ஆகவே.. அறிந்திடும் ஞானத்தைக் கொண்டு இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை அறியும் பக்குவத்தை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்.

அப்படிக் கூட்டும்போது இதனின் உறுதுணை கொண்டு அறிந்திடும் நிலைகள் கொண்டு இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வினை உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.

உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

நாம் வீட்டில் இருக்கிறோம் என்றால் எவ்வளவு சுத்தப்படுத்தி வைத்தாலும் வீட்டிற்குள் அழுக்கு வரத்தான் செய்கின்றது. நாம் எவ்வளவு தூய்மையான ஆடையைப் போட்டாலும் அது அழுக்காகத்தான் செய்கின்றது. நம் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அழுக்கு வரத்தான் செய்கின்றது.

1.நாம் தூய்மையான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்தாலும்
2.தூய்மையற்ற நிலைகளைக் கேட்டு…
3.தூய்மையற்றதை நமக்குள் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.

எவ்வாறு தூய்மையற்ற நிலைகளைத் தூய்மையாக்குவதற்குத் துடைக்கின்றோமோ… நல்ல நீரை விட்டு அதைக் கழுவுகின்றோமோ… இதைப் போல
1.மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உடலுக்குள் இருக்கும் தூய்மையற்றதைத் தூய்மையாக்கும் உணர்வுகளைச் சேர்ப்பிப்பதே
3.யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் வழி…!

நல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய… பக்குவம் தேவை

நல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய… பக்குவம் தேவை

 

நம் குழந்தையைச் செல்வமாக வளர்க்கின்றோம். அப்படி அவன் வளரப்படும் பொழுது “அவன் சொன்னபடி கேட்கவில்லை…!” என்று வைத்துக் கொள்வோம்.

எல்லாம் செய்தேன்… இவன் இப்படிச் செய்கின்றான்…! என்றுதான் கடைசியில் சொல்கின்றோம். அவனுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல மனது நமக்கு வருகின்றதா… என்றால் இல்லை.

1.நல்லதைச் செய்தேன் என்று சொல்லி வேதனையையும் ஆத்திரத்தையும் வளர்க்கும் நிலை தான் வருகின்றது.
2.நல்லதைச் சொல்ல முடியாது போய்விடுகின்றது.

அதே போல் நண்பராகப் பழகுகிறோம். தொழில் செய்யும் போது கடனைக் கொடுக்கின்றோம். இத்தனாவது தேதி பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றோம்.

ஆனால் கொடுக்க வேண்டிய தேதி வந்தபின் பணம் வரவில்லை என்றால் என்ன செய்கிறோம்…?

சொன்ன நேரத்திற்குக் கொடுக்கவில்லையே என்று கேட்கின்றோம். ஒரு இரண்டு தடவை கேட்டு விட்டு மூன்றாவது தடவை கேட்கும் போது நம் சொல்லில் கடினம் வந்து விடுகின்றது. பக்குவமாகச் சொல்லிக் கேட்கும் நிலை இல்லை… அந்தப் பண்பை இழந்து விடுகின்றோம்.

அழுத்தமாகக் கேட்டு வெறுப்பின் தன்மை ஆகும் பொழுது பக்குவம் தவறி விடுகின்றோம்.

1.ஆனால் முதலிலே அவருக்கு நாம் உதவி தான் செய்தோம்.
2.இருந்தாலும் செய்த உதவியை நாம் காக்க முடியாதபடி வெறுப்பின் தன்மை வளர்கிறது.
3.இரண்டு பேருக்கும் இடையே பகைமை ஆகிவிடுகின்றது… உதவி செய்தும் பயனற்றுப் போகின்றது
4.உதவி செய்தோம்… நண்பருடன் மகிழ்ச்சியாக இருந்தோம்… என்று அந்தச் சந்தோஷத்தை எடுத்து வளர்க்க முடியவில்லை.

ஆனால் உங்களுக்கு வர வேண்டிய வரவு வரும், என் பணத்தை எப்படியும் நீங்கள் திருப்பிக் கொடுப்பீர்கள் என்று சொல்லி இருந்தால் அங்கே வெறுப்பாக வராது… பகைமையும் ஆகாது.

ஆகவே பக்குவம் தவறும் பொழுது அதனால் பின் விளைவுகள் எத்தனையோ வருகிறது.

உதாரணமாக நாம் பலகாரம் சுடுகின்றோம். அதைச் சுடும் போது பக்குவமாக எடுத்து வைத்தால் பரவாயில்லை. அப்படிப் போடும் பொழுது தட்டிலே நிறைந்து விட்டால் மேற்கொண்டு போட்டால் கீழே தான் விழுகும்.

கீழே விழுந்தால் மண் ஒட்டிக் கொள்கின்றது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் பக்குவம் தவறும் போது பலகாரம் மண்ணாகி விடுகின்றது.

சுடச்சுட எடுத்துப் போட வேண்டுமென்று தான் விரும்புகின்றோம். ஆனால் கீழே விழுந்த பிற்பாடுதான் எடுத்துப் போடும் நிலை வருவகிறது. சில நேரம் இப்படி ஆகிவிடுகிறது.

அதை நிதானித்துப் பொறுமையாகப் பக்குவமாக நிறுத்தி வைத்து மற்ற பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்தால் இது போன்று ஆகாது. கீழே தரையில் விழுந்த பின்பு தெரிகின்றது.

1.அதற்கப்புறம் எடுக்கின்றோம்… எடுத்தாலும் அதிலே மண் ஒட்டி இருக்கின்றது.
2.மற்ற நல்ல பலகாரத்துடன் இதைக் கொண்டு போட்டால் நன்றாக இருக்கும் அதிலேயும் மண் ஓட்டி விடுகின்றது.
3.சுட்டும் பலன் இல்லாது சுவை கெடும் நிலை ஆகின்றது.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் எந்தச் செயலை எடுத்தாலும்… எந்தச் சொல்களைப் பேசினாலும்… பக்குவம் தவறி விட்டால் நமது வாழ்க்கையில் மீண்டும் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் என்ற உணர்வு வளர்ந்து நம் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது.

ஆகவே…
1.இந்த வாழ்க்கையில் நாம் எல்லாம் நல்லதைச் சொன்னாலும்
2.அந்த நல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய…
3.அந்த உணர்வுகள் நமக்குப் பக்குவம் தேவை.

ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் மற்றவருக்கு உதவி செய்கின்றோம். ஆனால் உதவி செய்த நிலைகள் பக்குவம் தவறி விட்டால் பகைமையாகி விடுகின்றது.. வேதனை வெறுப்பு கோபம் என்று எத்தனையோ உணர்வுகள் வருகிறது.

ஒருவர் கஷ்டமாக இருக்கிறது என்று கேட்டால்… அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட்டு… இந்த நிலை இருக்கின்றது பார்த்துச் செய்கிறேன்…! என்று சொல்லிப் பழக வேண்டும்.

அப்படிப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்கவில்லை என்றால் நம்மை எங்கேயோ கொண்டு போய்ச் செலுத்திவிடும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சங்கடத்துடன் செய்யும் எந்தக் காரியமும் நிறைவு பெறாது – ஈஸ்வரபட்டர்

சங்கடத்துடன் செய்யும் எந்தக் காரியமும் நிறைவு பெறாது – ஈஸ்வரபட்டர்

 

வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்த பொழுது “ஆத்ம சக்தி பெறும்…” சக்தி அலைத் தொடர்பில் குறைவுபட்டது.
1.அந்தக் காரணத்தை அறிந்து அதைச் செயல்படுத்தி
2.எண்ணத் தடையாகும் இராமபாணத்தை மீண்டும் எய்ததின் தொடரே வான்மீகி பெற்ற ஜடாக்கினி அனுபவ ஞானம்,

எடையிடும் பொருளே எடை காட்டும் கல்லாக ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு காட்டுவதைப் போல் தன்னுடைய அனுபவ ஞானம் நிறைவு காண (மீண்டும்) சபரியிடம் பதம் பார்த்தான் வான்மீகி.

மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் “சூட்சம விளக்கம் உள்ளது…!”

இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய
1.சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்ட வழி காட்டும் குருவானவர்
2.பூரணத்துவம் நிறைவு பெறாத தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும் அதற்குண்டான வழியமைத்தான்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து பெறும் உயர்ந்த சக்திகளைத் தன் ஈர்ப்பிற்குக் கொண்டு வர வேண்டும் என்றால் சங்கடமில்லாத சமமான பாவனையில் இருத்தல் வேண்டும்.

அந்த நிலை இல்லாத போது
1.உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு…
2.உண்மையை உணர்ந்து… தான் தெளிந்து..
3.சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பின் தொடர்புகளில் தொடர்பு கொண்டு…
4.உயர்ந்த உணர்வுகளை மீண்டும் ஈர்க்கும் வலுக் கொண்டால் இராமபாணம் பாயும்… தன் இலட்சியத்தையும் எய்தும்.

அதாவது
1.இராமபாணம் எய்தால் மீண்டும் அது எய்தியவரிடமே திரும்ப வருவதைப் போல் செயல் கொண்டிடும் இந்தச் சக்தி
2.நாம் எடுக்கும் எண்ண ஈர்ப்பின் வலுவால் “வலுத்து…”
3.அதன் மூலம் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.

“சபரி மோட்சம்…!” என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.

இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டார்.

ஐயப்பன் தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று…!

உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்திகளை நீங்கள் பதிவாக்கியே ஆக வேண்டும்

உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்திகளை நீங்கள் பதிவாக்கியே ஆக வேண்டும்

 

நமது குருநாதர் கண்ட உண்மையின் உணர்வுகள் அது எப்படி உணர்வுகள் ஒளியாக ஆனது அதன் அறிவாக ஆனது என்ற அந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

நஞ்சு கொண்ட உணர்வினை அந்த அகஸ்தியன் எப்படி வென்றான் என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் வரும் பொழுது அந்தக் கஷ்டத்தை எண்ணாதபடி… அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருளைப் பெற வேண்டும் என்ற நினைவை நீங்கள் கூட்டினால் அவன் கண்ட உண்மை உங்களுக்குள் கிடைக்கும்.

மற்றவர்கள் சொல்லும் துயரத்தையும் வேதனைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுத்து நிறுத்தி
1.அந்த அகஸ்தியன் அருள் அவர்களுக்குக் கிடைக்கட்டும்
2.பிணிகளில் இருந்து விடுபடும் சக்தி அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்று நீங்கள் சொல்லலாம்.

இது தான் நல்லது…!

ஏனென்றால் இப்படிச் செய்யும் போது உங்களை நீங்கள் காத்துக் கொள்கிறீர்கள். பிறரையும் காக்கும் சக்தியாகச் செயல்படுத்துகின்றீர்கள். இந்த இரண்டும் அவசியம் வேண்டும்.

ஆனால் பொதுவாக மற்றவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்குமே வருகிறது. இந்த உணர்வு வேகம் வந்தவுடன் கொஞ்ச நாளைக்கு உதவி செய்கிறீர்கள். பின்னாடி நிலைமை இங்கே தடுமாறும் போது…
1.எல்லாருக்கும் நான் உதவி செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…
2.தெய்வம் சோதிக்கிறது…! என்று அந்த வேதனையைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் பட்ட துன்பம் உங்களில் வராது தடுக்க வேண்டுமல்லவா…!

ஆகவே இது போன்று நல்லது என்று செய்தாலும் அதற்குள் மறைந்து வரும் தீமைகள் என்ன செய்யும்…? என்று நாம் அறிந்து கொண்டபின் அதை நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த ஞானம் வேண்டும்.

விஞ்ஞான அறிவுப்படி ஒரு உலோகத்தை வைத்து இயந்திரத்தை உருவாக்குகின்றனர். ஆனால் இயந்திரம் ஓடும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் ஜாஸ்தியாக இருக்கிறதது என்று அது தாங்கவில்லை என்றால் என்ன செய்கிறார்கள்…?

1,அந்த இடத்தில் வரும் அதிகமான அழுத்தத்தையும் உராய்வையும் தாங்கக்கூடிய சக்தி கொண்ட
2.இன்னொரு உலோகத்தைச் சேர்த்தால் சரியாக வரும் என்று விஞ்ஞானி அதைக் கூட்டிக் கொள்கின்றான்.
3.அந்த உலோகத்தை மாற்றிய பின் இயந்திரம் சீராக இயங்குகிறது.

அதே மாதிரித் தான் மெய் ஞானிகள் கண்ட ஆற்றல்மிக்க சக்திகளை உங்களுக்குள் குருநாதர் காட்டிய வழிப்படி இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகள் வரும் பொழுது அந்த ஞானிகளின் சக்திகளை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டால் அதை மாற்றிடும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எப்பொழுது பார்த்தாலும் வீட்டில் சண்டை… சச்சரவு… வேதனை… என்றே சொல்வார்கள். நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்தேன். அவர்களை எல்லாம் எனக்கு எதிராக இப்பொழுது திருப்பி விடுகிறார்கள்… தொழிலையே செய்யவிடாது என்னைத் தடுக்கிறார்கள்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆக… இத்தகைய தவறான உணர்வுகள் நம்மை இயக்காது நல்லதாக மாற்றிடும் வலுவான சக்திகளை நாம் கொண்டு வர வேண்டுமா… இல்லையா…! அதற்கெல்லாம் இந்தப் பதிவு (உபதேச உணர்வுகள்) இருந்தால் தான் உங்களுக்கு அந்த உதவி கிடைக்கும்.

யாம் உபதேசிப்பதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த காற்றில் இருக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நீங்கள் உங்களைக் காக்கலாம்.

பிறரைக் காத்தாலும் அவர்கள் கஷ்டம் உங்களைத் தாக்காது இருக்க ஒரு வலு உங்களுக்கு வேண்டுமா இல்லையா…! ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான் யாரும் கெட்டவர்கள் இல்லை…!

நல்லதை எண்ணிச் செய்து… செய்து அவர்கள் கஷ்டத்தை எல்லாம் கேட்டுக் கேட்டு இந்த உணர்வு உடலில் வரப்போகும் போது அது வளர்ந்து விடுகின்றது. நம் நல்ல குணம் மறைந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). அதை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிக் கொள்ளுங்கள். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.

தீய சக்திகளுடன் நேரடியாக நாம் மோதவே கூடாது -ஈஸ்வரபட்டர்

தீய சக்திகளுடன் நேரடியாக நாம் மோதவே கூடாது -ஈஸ்வரபட்டர்

 

வாலியின் வீரிய குணத்தின் தன்மை எப்படிப்பட்டது என்றால்
1.ஆணவம் கொண்ட நிலையில்
2.எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித்
3.தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.

அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி…!

வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும்.
1.ஆனால் வான்மீகி பதம் பார்த்தான்… அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.
2.ஜடாக்கினி மன திறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு
3.எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான்.
4.அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.

ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ…?

இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன…? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்…?

நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளை
1.பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால்
2.அவர்களின் பார்வை அலையை உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.

மற்றவர்கள் மத்தியிலே உலக வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.

“தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு…” வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற “அனுபவ நிலை” என்பது

அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.

ஜடாக்கினி அனுபவ ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.

காப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்து ஆத்ம சக்தி பெறும் சக்தி அலைத் தொடர்பில் குறைவுபடும் காரண மூலம் ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயல்படுத்தி எண்ணத் தடையாகும் இராமபாணத்தை எய்ததின் தொடர் தான் “ஜடாக்கினி அனுபவ ஞானம்,..!”

மின்னலைப் பாருடா… என்றார் குருநாதர்

மின்னலைப் பாருடா… என்றார் குருநாதர்

 

அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் பொழுது அவனின் தாய் தந்தையர்கள் விஷத்தன்மை கொண்ட மிருகங்களிடமிருந்தும் மற்ற விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தப்பிக் கொள்ளவும் மின்னல்களில் இருந்து தப்பிக் கொள்ளவும் பல பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் உபயோகப்படுத்தினார்கள்.

குருநாதர் ஒரு சமயம் என்ன செய்தார்…? அவர் கையிலே பச்சிலையை வைத்து இருக்கின்றார். அது எனக்குத் (ஞானகுரு) தெரியாது.

நீ மின்னலைப் பார்…! என்று என்னிடம் சொன்னனார். அந்தச் சமயத்தில் அவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது. அவர் கையில் பச்சிலை வைத்திருந்தது எனக்குத் தெரியாது.

ஆனால் என் கையைத் தொடுகிறார். மின்னலைப் பாருடா…! என்று கட்டாயப்படுத்துகின்றார்.

சாமி…! நான் பிள்ளை குட்டிக்காரன். நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று உங்களுடன் வந்துவிட்டேன். மின்னலைப் பார்த்து என் கண்கள் இல்லாமல் போய் விட்டால் நான் என்ன செய்வது…? என்று சொல்கிறேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய் அல்லவா. “சரி” என்று சொல்லித் தானே வந்தாய். உன் மனைவியை உடல் நலம் பெறச் செய்தேன். அதன்படி நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய். அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டுமா… இல்லையா…? என்று இப்படிக் கேட்கிறார்.

நான் என்ன செய்யட்டும்…? எனக்கு வேறு வழி இல்லை…!

குருநாதர் பச்சிலையை கையில் வைத்துக் கொண்டு என்னைத் தொடுகின்றார். மின்னல் தாக்கப்படும் பொழுது மின்னலைப் பார் என்று சொல்கின்றார்.

விண்ணிலே விஷத் தன்மைகள் தாக்கும் பொழுது தான் மோதலாகின்றது. அப்பொழுது பளீர்… என்று மின்னலாகப் பாய்கின்றது.

1.விஷம் தாக்கப்பட்டுத் தான் வெப்பம் ஆகின்றது…
2.விஷத்தின் தாக்குதலால் தான் நம் உயிரிலும் வெப்பம் உருவாகிறது… அதனுடைய இயக்கமும் ஆகின்றது
3.ஆனால் அதீத விஷம் தாக்கப்படும்போது இருளாகின்றது.

சாதாரணமாக நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விஷம் தேவை. விஷம் அதிகம் ஆனால் நம் செயலையே மறக்கச் செய்து விடுகின்றது.

உப்புப் போட்டால் ருசியாகத் தான் இருக்கின்றது. அதிகமாகப் போட்டால் ஓ…ய்ய்….! என்று வாந்தி வருகின்றது. சாப்பிட முடியாது..!

அளவை அறிந்து போட்டால் தான் சாப்பிட முடியும். ஆகவே அதன் உணர்வுக்கொப்ப மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக இதை எல்லாம் குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

அவர் இதை எல்லாம் விளக்கமாகச் சொன்ன பின்…
1.அவர் சொன்னபடி மின்னலைப் பார்த்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருந்தது
2.அறிவின் தன்மை எனக்குள் வருகின்றது,…
3.அறிந்து கொள்ளக் கூடிய உணர்வுகள் அந்த மின் கதிர்கள் என்னென்ன ஆகின்றதோ அது எல்லாம் தெரிகிறது
4.வான மண்டலத்தில் உள்ளதை எல்லாம் அறியும்படி செய்தார் குருநாதர்.

மின்னல் வரும் பொழுது அது எங்கெங்கெல்லாம் ஊடுருவுகிறது என்று அதையெல்லாம் அறியக்கூடிய சக்தி வந்தது. அதை அப்பொழுது தெரியப்படுத்துகின்றார்.

முதலில் அவர் பச்சிலையைக் காண்பிக்கவில்லை. கையில் வைத்துக் கொண்டு என்னைத் தொடுகின்றார். நான் மின்னலை பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன். பின் தான் விளக்கம் சொல்கிறார்.

ஏனென்றால்
1.உனக்குச் சக்தி கொடுக்கத்தான் நான் இதைச் செய்தேன்
2.இந்த பச்சிலைகளால் தான் அகஸ்தியன் அந்த ஆற்றலைப் பெற்றான்
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் ஒளியாக மாறினான்

அதே பச்சிலையின் உணர்வுகளை எடுக்கப்படும்போது அவன் பெற்ற உணர்வை நீயும் பெறும் பொழுது உனக்குள்ளும் தீமைகள் வராது அந்த விஷத்தை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது என்று அங்கே தெளிவாக்குகிறார் குருநாதர்.

குருநாதர் பார்ப்பது போல நானும் மின்னலைப் பார்த்து அந்த மின்னல்களின் ஒளிக்கற்றைகளை நான் நுகரப்படும் பொழுது அது என்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது.

இரத்தத்தின் வழி உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது எல்லா அணுக்களுக்கும் கிடைக்கும் பொழுது ஒளியின் அணுக்களாக மாறுகின்றது.

இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உபயோகப்படுத்தி எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இறந்த டைனோசர் (DINOSAUR) என்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களையும் அதன் உடல் புதைந்த இடங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.

அதைப் போன்று தான்
1.அகண்ட அண்டமும் அந்த உணர்வும் எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் ஆதியிலே கண்டான்
2.அவனைப் போல் நீயும் உனக்குள் அதை எல்லாம் அறிய வேண்டாமா…? என்று வினா எழுப்புகிறார்
3.அதற்காக வேண்டித்தான் உன்னை மின்னலைப் பார்க்கச் சொன்னேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அவர் சொன்ன வழிப்படி அறிந்து கொண்ட பின் அந்த உணர்வு வருகின்றது. என்னுடைய எண்ணங்களில் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது
1.இந்த காற்றில் இருக்கும் அகஸ்தியரின் உணர்வை எடுத்து நானும் அறிய முடிகின்றது
2.அதன் உணர்வை வைத்து நானும் பேச முடிகின்றது
3.பேசும் உணர்வை செவி வழி நீங்கள் கேட்டீர்கள் என்றால்…
4.அகஸ்தியன் கண்ட உண்மைகளை எல்லாம் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டால்…
5.இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் உங்களுக்குள் பிரம்மமாகி
6.அகஸ்தியன் கண்ட அந்த உண்மைகளை நீங்களும் நிச்சயம் அறிய முடியும்.

ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும் செய்யக் கூடாது – ஈஸ்வரபட்டர்

ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும் செய்யக் கூடாது – ஈஸ்வரபட்டர்

 

“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… மனிதனுக்குள் இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலமே “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.

இந்த மனிதப் பிறவியை எடுத்ததன் பலனாக… “எந்த இலட்சியம் தன் கருத்தோ” அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலையைப் பெறுவது அதுவே தான்…! ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்று விட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.

இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்பதன் பொருள் என்ன…?

1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.விண்ணை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதையே நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும்…! என்பதே
5.இராமபாணம் திரும்ப வரும்…! என்று சொன்னதன் தொடர்.

ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகி மாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?

1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.வாலி வதம்…! என்ற பாங்கில்
3.இராமன் தலை குனிந்தான்…! (மறைந்திருந்து தாக்கியது) என்பதன் பொருள் என்ன…?

ஆச்சா மரத்தை வெட்டுபவனுக்கு அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம்… ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா…? என்று…!”

அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?

உலக இயல் என்னும் பிடிப்பில் (உலகப் பற்று) “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான்.

ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்…
1.உற்றுக் கேட்கவும் வேண்டாம்…!
2.அதிசயித்துப் பார்க்கவும் வேண்டாம்…!.
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.நாம் எடுக்கும் வீரிய சக்தி நம்முடைய உயிராத்மாவிற்கு அழியாச் சொத்தாக இருக்க வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை நீங்களும் முழுமையாகக் காண முடியும்

இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை நீங்களும் முழுமையாகக் காண முடியும்

1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் உமிழ்த்தக் கூடிய கதிரியக்கச் சக்திகள் அவை ஒவ்வொன்றும் கலவையாகும் போது எப்படி மாறுகின்றது…?”
2.அதிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் தங்கமாக எப்படி மாறுகிறது..?
3.செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் அதிலே சிவப்பு நிறமான நிலைகள் எப்படி இருக்கின்றது…?
4.புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகின்றது…?
5.பல நட்சத்திரங்களின் கலவைகள் இதனுடன் (புதன்) கலக்கப்படும் பொழுது எத்தனையோ வகையான உலோகத் தன்மைகளாக அது எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது…?
6.வியாழன் கோள் அந்த 27 நட்சத்திரத்தின் சக்திகளை எடுக்கும் போது அந்தக் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி ஒரு பொருளுக்குள் ஊடுருவி “அதை இணைக்கும் சக்தியாக” எப்படிக் கொடுக்கின்றது…?
7.இதிலிருந்து பிரிந்து செல்லும் ஆவித் தன்மையைச் சனிக்கோள் எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது…? என்று நமது குருநாதர் இது அனைத்தையும் தெளிவாகக் கூறுகின்றார்

அதே சமயத்தில் ஒவ்வொரு கோளும் அது தனக்கென்று பல உபகோள்களை வளர்க்கின்றது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டு பத்து பனிரெண்டு என்ற எண்ணிக்கையில் உபகோள்கள் உண்டு. அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சக்திகளை எடுத்துச் சுழன்று வருகிறது.

வியாழன் கோளுக்கோ 27 உபகோள்கள் உண்டு. இந்த இருபத்தி ஏழும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான நிலைகளை இது கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாகச் சேர்க்கின்றது.
1.அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமாகச் சுழன்று வரும்.
2.அதிலே ஒன்று ஒரு பக்கம் சுற்றி வரும் மற்றோன்று எதிர் பக்கமாகச் சுழன்று வரும்.

இன்றைக்கும் விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையில் வருகின்றதா… அது என்ன…? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் அந்த இருபத்தி ஏழு கோள்களும் அது சுழன்று கொண்டு இருக்கின்றது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து அதற்குள் ஒரு கலவையாக்கி இந்த உணர்வின் தன்மை ஒரு புதுவிதமான கதிரியக்கமாக மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படித் தான் கவர்ந்ததை உறை பனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோளிலும் உறையும் பனியாக மாற்றும் சக்தி அங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதையெல்லாம் உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளை எதிர்காலத்தில் இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான்…!

1.நான் மட்டுமல்ல… உங்களாலும் அதைக் காண முடியும்.
2.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளைக் கண்டுணர்ந்து நீங்களும் தெளிந்து
3.இந்த உலகில் வரும் இருளை மாய்க்க கூடிய சக்தியாக வரவேண்டும்.

ஏனென்றால் நீங்கள் அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றோம் (ஞானகுரு).

மாய ஒலி கேட்டு அறிவினை இழக்காமல் இருக்க மெய் ஒலியை நாம் அவசியம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மாய ஒலி கேட்டு அறிவினை இழக்காமல் இருக்க மெய் ஒலியை நாம் அவசியம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஒரு விலங்கினம் நீர் குடிக்கும் ஓசையைக் கேட்டே அம்பெய்து அதைக் கொல்லக்கூடியவன் தான் தசரதன். அப்படிப்பட்ட செயலாகத் தான் ஒரு சந்தர்ப்பத்தில் சிரவணனைத் தசரதன் கொல்ல நேர்கிறது.

அந்தச் செயலை வான்மீகியார் சுட்டிக் காட்டிய நிலைகளில் ஒரு “சூட்சமப் பொருள் உள்ளது…!” அது என்ன..?

கண் பார்வை இல்லாத பெற்றோரைச் சுமந்து செல்பவன் தான் சிரவணன். ஒரு சமயம் அவனுடைய தாய் தந்தையர் “தாகம்…” என்று தண்ணீர் கேட்டதும் அதற்காக நீரைத் தேடி அலைந்தான்.

ஆனாலும்
1.நீர் கிடைக்கும் வரை அவன் எடுத்த எண்ணம் என்ன…?
2.கடமை என்ற சொல்லும் உண்டு.
3.கடமையின் பால் தன் உணர்வுதனை மாற்றிக் கொண்ட செயலும் உண்டு.

விலங்கினங்கள் நீர் அருந்தும் ஓசையைக் கொண்டே அந்த மிருகங்களைப் பார்க்காமலேயே மறைந்திருந்து குறி தவறாது அம்பெய்யும் ஆற்றல் பெற்றவன் தான் தசரதன்.
1.அதை வீரத்தில் சேர்ப்பதா…?
2.கற்ற வித்தையின் ஞானத்தில் சேர்ப்பதா…?
3.அல்லது உணர்வுகள் கூட்டிக் கொண்ட மோகம் அறிவுக் கண்ணை மறைத்ததாகச் சொல்வதா..?

ஏனென்றால் தசரதன் அவன் இளமையின் ஆற்றலால் கற்றுக் கொண்டதுதான் அந்தக் கலை. அவனுடைய செவிப் புலன் அறிவாக ஓசையைக் கொண்டு குறிப்பறியும் ஆற்றலைக் காட்டியது ஞானம் தான்.

ஆகவே வான்மீகியார் கூற வந்த தெளிந்த பொருள் என்ன…?

காமத்தின் விளைவால் மோகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் செயல்பாடு… சரீர உணர்வின் இயக்கத்தால்… “கருத்தறிய முடியாத அலட்சிய மனோபாவனையக் காட்டியது தான்…” தசரதனின் அந்தச் செயல்.

தண்ணீருக்காகத் தேடிய சிரவணன் அவன் எடுத்த சஞ்சல உணர்வலைகள் பாசத்தின் அடியாக பதைபதைப்பாக அவன் அறிவின் பொறி கலக்கமுற்றது.

அதனால் குறிப்பறியாத ஈர்க்கும் செயலில்… எதிர் மோதல் குணங்கள் உணர்வுகளின் உந்துதலால்… குறிப்பறியாச் செயலுக்கு அறிவின் மயக்கமே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு… “வினைச் செயலின் விளையாட்டாக சிரவணன் நீர் மொள்ளும் சப்தம் அமைந்தது…!”

1.அப்படிப்பட்ட “சிரவணனின் அறிவின் மயக்கமும்”
2.ஒலி கொண்டு அறியும் ஆற்றலின் அலட்சியத்தால் விளைந்த “தசரதனின் அறிவின் மயக்கமும்”
3.சந்தர்ப்பத்தால் சந்தித்த சந்திப்பு…
4.அம்பாகச் சிரவணன் உடலில் பட்டுத் தைத்து அவன் உயிரைக் குடிக்க முனைந்தது.

ஆனால் ஞான வழிச் செயல் ஆக்கத்திற்குத் தனித் தன்மையான பொருளும் உண்டு.

எப்படி…?

செவிப்புலனால் ஒலி ஈர்க்கும் அறிவு செயல்படும் அந்த நேரத்தில்
1.ஒளி கொண்ட ஒலி நாதத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டால்
2.புற உலகின்கண் எழும் சப்தங்களை உணர்ந்திட முடியாத செயலுக்கு
3.நமக்குள் சேர்க்கும் மெய் ஒலியின் அந்த ஓங்கார நாதமே… அதிர்வுகளாக ஓசையைப் பெருக்கச் செய்து
4.அதே தொடரில் ஆத்ம வலுவைக் வலுக் கூட்டிக் கொள்ளும் உயிர் கலப்பால்
5.மெய்யை அறியும் உயர் ஞானமாக அது அமைந்து
6.தெளிவான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்விக்கச் செய்யும்.

ஆகவே…
1.ஒலி கொண்டு புலன்களால் அறிந்தாலும்
2.ஒளி கொண்டு ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும் மெய் ஞானம் பெற்றால் தான்
3.நம் செயல்கள் என்றுமே வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் செயலாக நன்மை பயக்கும்.