“கதிரியக்கப் பொறிகளை நுகர்ந்து… அதை அடக்கி…” ஒளியான அணுக்களாகத் தனக்குள் உருவாக்கினான் அகஸ்தியன்

“கதிரியக்கப் பொறிகளை நுகர்ந்து… அதை அடக்கி…” ஒளியான அணுக்களாகத் தனக்குள் உருவாக்கினான் அகஸ்தியன்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது மிருகங்கள் எல்லாமே அஞ்சி ஓடுகின்றது அதனால் அவனுக்குப் பெயர் காட்டு ராஜா என்று வந்தது.

அவன் குழந்தையாக இருக்கும் பொழுது அவனுக்கு இவ்வாறு பட்டங்களைச் சூட்டி எல்லா நிலைகளையும் கொண்டாடுகின்றனர். அவனுக்கு ஐந்து வயது வரப்படும் பொழுது அவன் எண்ணங்கள் சில நிலைகளைப் பிரதிபலிக்கும் பொழுது தாவர இனங்களைப் பற்றி அறிகின்றான்.

காரணம்… அவன் தாய் கருவில் இருக்கும் போது தாய் நுகர்ந்த நஞ்சினை அடக்கும் பல பல மூலிகை மணங்களையும் பச்சிலை வாசனைகளையும் பூர்வ புண்ணியமாகப் பெற்றவன்… அதன் வழி பிறந்தவன்.

ஆகவே…
1.தாவரங்களில் இருக்கும் சக்திகளை அவன் அறியும் நிலையில்
2.அந்தத் தாவர இனங்களுக்கு எங்கிருந்து உணவு வருகின்றது…? என்று
3.இவனுக்குள் தோன்றும் உணர்ச்சிகள் சிந்திக்கச் செய்கின்றது… உற்று நோக்குகின்றான். வானை நோக்கிப் பார்க்கின்றான்
4.அப்பொழுது துருவப் பகுதியில் இருந்து நம் பூமிக்குள் சக்தி எப்படி வருகிறது…? என்று அறிகின்றான்.

துருவத்திலிருந்து வரக்கூடியது அனைத்தும் விஷத்தின் உணர்ச்சிகளை உருவாக்கும் உணர்வு பெற்றாலும் இவன் அவைகளை நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் ஒளிக்கதிர்களாக மாற்றுகின்றான்.

இன்று நாம் மின்னல்களைப் பார்க்கின்றோம். நட்சத்திரங்கள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அதிலிருந்து உமிழ்த்தப்பட்டு வரும் துகள்கள் எதிர்நிலை ஆகி ஒன்றுடன் ஒன்று மோதும்போது சுக்குநூறாக அதனுடைய அலைகள் மாறும்.

மாறி வருவதைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து அதனுடைய கலவைகளில் வித்தியாசமாக வரும். அதை… அந்த மின்னலாக மாறி வருவதைத்தான்… குருநாதர் என்னைப் பார்க்கும்படி சொல்கின்றார். “என் கண்கள் குருடாகி விடுமே…” என்று எனக்கு அந்தப் பயம் வருகின்றது.

ஆனால் இதை அடக்கிடும் உணர்வுகளை அகஸ்தியன் எடுத்து மின்னல்களை அவன் எப்படிப் பார்த்தான்…? என்று பார்க்கச் சொல்கிறார்.
1.அந்த மின்னலின் அலைகளை அகஸ்தியன் எப்படி எடுத்தான்…?
2.மின்னலின் வீரியம் அது எப்படி அவனுக்குள் அடங்குகின்றது…?
3.அகஸ்தியன் விஷத்தை அடக்கியது எவ்வாறு…? என்று காட்டுகிறார் குருநாதர்.

ஏனென்றால் அது மிகவும் விஷத் தன்மை கொண்டது…!

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வருவது எதில் எதில் இந்தக் கலவைகள் சேருகின்றதோ அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகளை ஊட்டி அதைச் செயல்படுத்தும் சக்தி பெற்றது என்று
1.“மின்னலையும் என்னைப் பார்க்கச் சொல்லி…
2.அகஸ்தியன் அதை எப்படி அடக்கினான்…?” என்பதையும்
3.அந்த மின் அணுவின் தன்மையைத் தனக்குள் எப்படி ஒளியாக்கினான்…? என்பதையும் நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு செடியிலோ மரத்திலோ மின்னல் தாக்கினால் அது கருகி விடுகின்றது… அதிலுள்ள சத்தை எடுத்து விடுகின்றது.

அதைப் போல
1.இந்த விஷத்தை ஒடுக்கிடும் உணர்வு வரப்படும் பொழுது
2.கதிரியக்கப் பொறிகளாக வருவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்
3.அதை ஒ\டுக்கித் தன்னுடன் ஒளியாக மாற்றும் அணுத் தன்மையாக மாற்றிவிடுகின்றான்.
4.அப்படி அவன் உடலில் உருவான அந்த ஆற்றலைக் கொண்டு தான் எதையுமே மாற்றிடும் சந்தர்ப்பம் வருகின்றது.

இது எல்லாம் குருநாதர் அனுபவரீதியில் எனக்குக் கொடுத்தது..

ஆகவே… அகஸ்தியன் துருவன் என்று வரப்படும் பொழுது எல்லா மின்னல்களையும் பார்க்கின்றான். அவன் பெற்ற அந்த உணர்வின் சத்தை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது போல் நாமும் ஒளியாக முடியும்.

அடிமையாக எண்ணி மகான்களைப் பணிந்து வணங்காது மகானுடனே மகானாக நாம் கலந்திட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

அடிமையாக எண்ணி மகான்களைப் பணிந்து வணங்காது மகானுடனே மகானாக நாம் கலந்திட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

எண்ணத்தில் உயர் ஞானத்தையும் நற்செயலையும் ஆத்மீக நெறி கொண்ட அன்பு வாழ்க்கையையும் வழி நடத்திட்டால்… அந்த நிலையில் பெறும் சக்தியின் திறன் தானப்பா நாம் அடைந்திடும் பேரானந்த வாழ்க்கை.

ஆரம்ப வழித்தொடர்…
1.வாழ்க்கையுடனும் பிற எண்ணங்களின் மோதலினாலும் தொடரை வழிப்படுவதற்கு சிரம நிலை கொண்டிடலாம்
2.அச்சிரம நிலையிலிருந்து வழி நடந்து வந்திட்டால் இப்பேரின்ப நிலையை அடைந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தினால் செயற்கைக்கோளை இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களின் நிலையறிய ஏவுகின்றனர்.

இப்பூமியின் காற்று மண்டலத்தையும் இப்பூமிக்கு மேல் சில தூர விகிதத்திற்கு அந்த ஏவுகணையைச் (இராக்கெட்) செலுத்திட இவ்வமிலங்களின் (அணுகாந்த மின் அலை) உதவியினால் செலுத்தி அதற்கு மேல் உள்ள நிலைகளுக்கு எந்த அமில சக்தியின் நிலையில்லாமலே இயக்கிடும் நிலைக்கு அவ் ஏவுகணை செல்கின்றது.

குறிப்பிட்ட தூர விகிதத்திற்குத்தான் மற்ற அமில சக்தியின் நிலையினால் இயங்குகிறது. அந்த ஏவுகணை. பிறகு செல்லும் நிலைக்கெல்லாம் எரிபொருள் செலவு நிலை இல்லாமலே செல்லும் நிலையைத்தான் செய்வித்து அனுப்புகின்றனர்.

அதைப் போலவே நம் எண்ண சக்தியின் வழித் தொடரினை நற்சக்திக்கு வழிப்படுத்திட்டால் ஆத்மீக நெறிக்கு நம்மை வழி நடத்திட நம் உயிராத்மாவின் சக்தியினால் முடிந்திடும்.

1.இவ்வுடல் என்னும் அமிலங்கள் நிறைந்த இப்பிம்பத்தின் காந்த சக்தியின் நிலையை நாம் உணர்ந்திட்டால்
2.இப்பிம்பத்தையே பறக்கும் நிலைக்கும் பதப்படுத்திடலாம்.
3.நம் உடலிலுள்ள அமில சக்தியின் சக்தியே பெரும் சக்தி…!
4.இச்சக்திதனை நாம் உணர்ந்திடாமல் நம்மையே நாம் விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

செயற்கையினால் இன்று காணும் அனைத்து நிலைகளையுமே… அனைத்து நிலையென்பது ஒலி… ஒளி… இவற்றின் ஈர்ப்பு சக்தி கொண்ட நிலையை எல்லாம் இவ்வுடல் என்னும் அமில சக்தியின் தொடபினாலேயே கண்டிடலாம்.

“இவ்வெண்ண சக்தியின் வழித்தொடர் பெற்றோரின்…” சொல் செயல் பார்வை இவற்றின் சக்தி நிலையினால் அவர்கள் சொல்லும் சொல்வாக்கு பலிதம் கொள்ளும்.

ஒருவரைக் காணும் பொழுது அவரின் மேல் எவ்வெண்ணத்தின் நினைவுடன் அவரின் சுவாசக் காற்று பட்டுக் காண்கின்றனரோ அவ்வெண்ண நிலைப்படியே அவர்களைக் காண்பவரின் நிலையும் நடக்கும்.

1.ஆத்மீக நெறியறிந்து சக்தி நிலை பெற்றோரின் சொல்வாக்கும்
2.அவர்கள் எண்ணத்தில் பாய்ச்சிடும் விழியின் ஒளி நிலையும் பலிதம் கொள்ளும்.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பேரின்ப சக்தியுண்டு. மகான்களின் நிலையிலெல்லாம் இந்நிலையுண்டு.

1.மகான்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2.அவர் புண்ணிய பாதம் பட்ட இடமெல்லாம் செழிப்பு
3.அவரின் பார்வை பட்டாலே புண்ணியம்
4.அவரின் ஆசியினால் பேரின்பம் கிட்டும் என்ற வழித் தொடரிலுள்ள நாம் அத்தொடரினையே
5.அம்மகானின் புண்ணிய நிலையை நம் ஆத்மாவுடனும் கலந்து நாமும் அம்மாகனைப் போன்ற மகான்கள் ஆகலாம்.

இந்த உண்மை உணர்ந்து… உயர்ந்த நிலையிலுள்ளோரைத் தாழ்ந்தே வணங்கி… “தாழ்ந்த நிலையிலேயே இருந்திடாமல்…” அவரின் அடிச்சுவட்டைப் பற்றியே உயர்ந்து… அவரின் நிலையுடனே உயர்நிலை பெறும் மகான்களாய் நல் ஆத்மாவாய் நாமும் கலந்திடல் வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திடல் வேண்டும்.

1.அடிமை கொண்டு வணங்கி வாழ்ந்திடுவதல்ல வாழ்க்கை.
2.அன்பு கொண்டே வணங்கிடல் வேண்டும்.
3.அன்புடனே அன்பாய்க் கலந்து வாழ்ந்திடல் வேண்டும்.

ஆனால் நம் வழி முறையும் செயல் முறையும் அடிமை கொண்ட நிலையில்தான் மகான்களின் நிலையையும் பணிந்து பற்றி வாழ்கின்றனர்.

மகானுடனே மகானாய்க் கலக்கும் மனப்பக்குவ நிலையை வளர்த்து இவ்வுலகின் சக்திச் செல்வமான சக்தி ஆத்மாக்கள் அனைவருமே
1.சக்தி ஜோதியாய்த் திகழ்ந்திடும் உண்மையினை உணர்ந்து
2.உன்னத வழி பெற்றே மகாமகான்கள் ஆகிடுங்கள்.

மறதிப் பூடு

மறதிப் பூடு

 

காட்டிற்குள் சில வகையான செடிகள் உண்டு அந்தச் செடிகளின் மீது மிதித்து விட்டால் நம் நினைவையே இழந்து விடுவோம். அடுத்து எங்கே போகின்றோம்…? என்ன செய்கிறோம்…! என்றே தெரியாது.

அந்தச் செடியைத் தூசி போல் ஆக்கி… வீட்டு வாசல்படியில் தேய்த்து விட்டால் உங்கள் நினைவுகள் மறந்துவிடும். உங்கள் கடையில் கொண்டு போய்ப் போட்டால் உங்களுக்குச் சிந்திக்கும் தன்மை வராது. இதை “மறதிப் பூடு…” என்று சொல்வார்கள்

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் எமக்கு (ஞானகுரு) ஞாபகப்படுத்திக் காட்டுகின்றார்.

நாங்கள் ரெண்டு பேரும் செல்லும் பொழுது திடீரென்று அவர் ஒதுங்கிச் செல்கிறார்… என்னைச் செடி மீது மிதித்து விட்டு வாடா…! என்று சொல்கின்றார்.

செடியை மிதித்து நான் கடந்து சென்றவுடன் என் நினைவே இல்லை…! எந்த பக்கம் போகின்றேன்… என்ன செய்கின்றேன்…? என்றே எனக்குத் தெரியவில்லை

செடிகளுக்குச் சத்து எப்படி இருக்கிறது பாருடா…! என்கிறார்.

1.மனிதனான பின் காட்டிற்குள் அவன் அடிபட்டு வேதனையுடன் கீழே விழுந்து தன்னை மறந்த நிலைகள் மடிந்த பின்
2.அவனுடைய உணர்வுகள் செடியுடன் கலந்து அதை அது உணவாக உட்கொண்ட பின்
3.அதன் விழுதுகளில் இப்படி எல்லாம் ஆற்றல் வருகிறது…. அதை மிதித்தால் நம் சிந்தனையை இழக்கச் செய்கின்றது

பிறகு குருநாதர் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே செல்கின்றார். ஆனால் என்ன செய்வது… எந்தப் பக்கம் போவது…? என்று எனக்குத் தெரியவில்லை.

வேகமாக என் கையை பிடித்து இழுத்து… வாடா… வாடா… வாடா… வாடா… என்று என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றார்.

பின் வேறு சில செடிகளைக். காண்பித்து… “அதன் மீது உட்கார்…” என்றார். உட்கார்ந்த பின் அப்புறம் எனக்கு நினைவு வருகின்றது.

இப்படி அனுபவரீதியில் தான் குருநாதர் எனக்குக் கொடுத்தார். வெறும் வாயால் சொல்கிறேன் என்று அல்ல.

1.உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் திரை மறைவாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும்
3.விஞ்ஞான உலகில் வரும் கடுமையான தீமைகள் இருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் இத்தனையும் கற்றுக் கொடுத்தார். இருந்தாலும் இதை எல்லாம் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் விட்டால் என்னவாகும்…! எனக்குள் அது மறைந்து விடுகின்றது.

அப்படி இல்லாதபடி உங்களுக்குள் அதை எல்லாம் உணர்த்தப்படும் போது
1.உங்கள் பார்வையால் மற்றவருடைய தீமைகளைப் போக்க முடியும்
2.சிந்தனை இழக்கச் செய்யும் நிலையிலிருந்து மற்றவர்களை மீட்கும் சக்தியும்
3.அதனை மாற்றியமைக்கும் சக்தியாகத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக
4.அந்த ஞானத்தின் வழிகளில் உங்கள் வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

இதன் வழியில் ஒவ்வொருவரும் சென்றால் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் உங்களுக்குள் கிடைக்கின்றது. ஆகவே… நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும்.

உங்கள் உணர்வைக் கேட்போருக்கும் அருள் ஞானத்தை ஊட்டி மறைத்திருக்கும் தீமையான உணர்வுகளை நீக்கி அருள் ஒளியின் உணர்வை அவர்களும் பெருக்க வேண்டும்… உங்களுக்குள்ளும் அருள் சக்தி பெருக வேண்டும்.

அத்தகைய நோக்கத்தில் தான் குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டிய உண்மைகளை உங்களுக்குள்ளும் தெளிவாக்குகின்றேன்.

“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” – ஈஸ்வரபட்டர்

“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” – ஈஸ்வரபட்டர்

 

“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” இப்படிப் பல மணிகளைத் தன் ஜெபத்தினால் செய்வித்துச் சித்து நிலை பெற்றவர்கள் தம் உடலில் இந்த மணிகளை அணிந்து கொண்டு அவற்றின் ஈர்ப்பு சக்தியின் நிலையினால் தன் ஆத்மாவிற்குச் சில நிலைகளை அறிந்திட இப்படிப் பல நிலைகளை ஜெபம் கொண்டு செய்வித்தனர்.

சந்திர மண்டலத்தில் இருந்தும் சூரிய மண்டலத்திலிருந்தும் நம் பூமியின் தொடர்புடைய மற்ற மண்டலங்களில் இருந்தும் நமக்குக் கிடைக்கும் அணுக்கதிர்களின் சக்தியை உணர்ந்து அமாவாசையில் சந்திரனின் சக்தி இல்லாமல் சூரியனின் ஒளிக்கதிரையே பெற்றிடும் இப்பூமியை நிலைப்படுத்தி மூலிகைகளை வளரச் செய்யும் நாள் கணக்குப்படி அதை நீர் மட்டத்தின் தூர விகிதப்படுத்தி இம் மூலிகைகளை ஒன்றுக்கு நேர்ப்படுத்தி மற்றவற்றை வைத்து அதன் நாள் கணக்கில் வளரும் நிலைப்படுத்தி பக்குவமுடனே இரசமணியுடன் கலந்த ஜெபம் செய்கின்றார்கள்.

துளசி நாமத்தையும் அகஸ்தியர் நாமத்தையும் எம்மணியை உருவாக்குகின்றார்களோ அம்மணிக்குகந்த நாமத்தை ஜெபித்து தம் உடலுடன் ஜெபம் கொண்ட அந்த மணிகளை அணிந்து கொண்டு அதன் ஈர்ப்பு சக்தியின் தொடரினால் பல நிலைகளைச் செய்கின்றார்கள்.

1,இவ்வுடலையே ஒருவர் கண்ணுக்கும் காணாத நிலையெல்லாம் செய்விக்கின்றனர்
2.இவ்வுடலை விட்டு ஆத்மாவைப் பிரித்துப் பல சக்தி நிலைகளை அறிந்திடும் நிலைக்கும் பல நிலைகளைச் செய்கின்றனர்.
3.இயற்கையுடன் வளர்ந்திட்ட இம் மூலிகையின் நிலையறிந்து
4.இயற்கையின் சக்தியினாலேயே ஞான வழியில் சித்து பெற்றவர்கள் செய்திடும் நிலை இவையெல்லாம்.

ஆனால் சூனிய நிலை கொண்ட தீய சக்தியிலும் இந்நிலைகள் செயல்படுகின்றன.

குடுகுடுப்பு ஆண்டிகளும் இன்னும் சில சூனிய சாமியார்களின் நிலையிலும் மை போட்டு மந்திரித்து கறுப்புக் கயிற்றில் தாயத்துக்களை அளித்துப் பல நிலைகளை அவர்கள் செய்கின்றனர்.

இந்தியாவிலும் சீனாவிலும் திபெத்திலும் இன்னும் ஒரு சில நாடுகளிலும் இச்சூனியக்காரர்களின் ஆதிக்க நிலை நிறைந்துள்ளது.

குறைப் பிரசவத்தில் போன சிசுக்களையும் பிறந்த சிசுவையும் அதைப் புதைத்த நிலையிலிருந்து எடுத்துச் சென்று… அதன் ஜீவ சக்தியைத் தன் உடலுடன் ஏற்றிக் கொள்ளும் மந்திர ஜெபங்கள் செய்து தன் உடலுடன் ஏற்றிக் கொள்கின்றார்கள்.

குட்டிச் சாத்தான் வேலையும் இதுவே…!

கூடுவிட்டுப் பறந்து செல்லும் நிலையும் தன் உடலையே பிறர் கண்ணிற்குக் காணாமல் ஆவி உருவப்படுத்தும் நிலையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

இவர்களினால் பல தீய நிலைகள் இன்றும் நடந்து வருகின்றன. தீய எண்ணத்திற்கு இத்தீய சக்தியின் தொடர்பும் கிட்டுகின்றது.

நல்வழிக்கும் தீய வழிக்கும் இந்நாடு கலந்த நிலையில்தான் உள்ளது.

இவ்வெண்ண சக்தியை மேம்படுத்தி இவ்வுலக சக்தியில் ஆத்ம சக்தியை ஒன்றச் செய்தால் நம் ஆத்மாவுடன் நாம் வளர விடும் நற்சக்தியின் பயனால் நாம் வாழ்ந்திடும் காலத்தில் இக் காற்றுடன் கலந்துள்ள தீய சக்திகளின் அணுக்கதிர்களை வளரவிட்டு சோர்வும் நலிவும் இவ்வுடலை அண்டாமல் இவ்வுடல் அகால மரணம் எய்திடாமல் அன்பு கொண்ட ஜீவாதார அறம் கொண்ட நல் வாழ்க்கை வாழ்ந்தே சூட்சும உலகிற்குச் சென்றிடும் பக்குவ நிலைக்குச் சென்று வாழ்ந்திடலாம்.

தீயோரின் சக்தி நிலை வளர்ந்து நற் சக்தியைக் குறைத்துக் கொண்டு வருவதினால் நம் சக்தியையும் நம்மைச் சார்ந்தோரின் சக்தியையும் அவர்களின் தொடர்பு கொண்டோரின் சக்தியையும் கீழான நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தன் இனத்துடன் தன் இனத்தைச் சேர்த்தே ஒவ்வொரு மண்டலமும் ஈர்த்து எப்படி வளர்ந்ததுவோ அந்த நிலை போன்றே…
1.இவ்வுலகில் உதித்த ஆத்மாக்கள் அனைவருமே ஒன்றுடன் ஒன்றை நற்சக்திகளாக்கி
2.இவ்வுலகையே நல் உணர்வு கொண்ட நல் பூமியாக வாழ்ந்திடும் பக்குவம் பெற்ற ஆத்மாக்களாய் வந்திட
3.நல்லுணர்வையே நலமாக்குங்கள் என்றே வழிப்படுத்தி வாழ்த்துகின்றேன் நல் வாழ்த்துக்களை…!

காலமறிந்து… கருத்தறிந்து… ஞானத்துடன்… செயல்பட வேண்டும் என்று தான் நம் சாஸ்திரங்கள் கூறுகிறது

காலமறிந்து… கருத்தறிந்து… ஞானத்துடன்… செயல்பட வேண்டும் என்று தான் நம் சாஸ்திரங்கள் கூறுகிறது

 

சாஸ்திரங்களில் சித்திரை மாதத்தைப் பற்றிய உள் மூலக்கூறைத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் நாம் அந்தச் சித்திரை மாதத்தை எப்படி நினைக்கின்றோம்…!

இந்த வருடம் சித்திரை மாதம் பிறந்திருக்கிறது…
1.இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் அவன் ஓடுகாலியாக வருவான்..
2.குழந்தைகள் அந்த மாதத்தில் பிறக்கக்கூடாது… குடும்பத்திற்கு அது ஆகாது.
3.சித்திரை மாதத்தில் ஏதாவது செய்தால் எல்லாம் சிதறிப் போகும்… ஆகையினால் நல்ல காரியம் செய்யாதே…! என்றெல்லாம் சொல்கிறார்கள்.

சித்திரை மாதத்தில் நாம் உயர்ந்த ஞானத்தைப் பெறும் நிலையாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் போது இந்தச் சித்திரையை நீக்குகின்றோம். நமக்குள் நல்லதை மறைத்திடும் அந்த்த் தீமைகளை அகற்றுகின்றோம்.

ஆகவே “உத்தராயணம்…” என்ற மனிதனின் ஆறாவது அறிவைக் கொண்டு மீண்டும் அது தெளிவு கொண்ட பின் இந்தப் புது வருடம் வரப்படும் போது… ஒவ்வொன்றையும் தெளிந்து தீமைகளை அப்புறப்படுத்தும் நிலை வருகின்றது.
1.அதனால் தான் மாதத்தை இணைத்து… காலத்தையும் இணைத்து…
2.மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று விநாயகர் (தத்துவத்தில்) அகவலில் பாடுகின்றனர்.

மூலாதாரம் என்றால் புருவ மத்தியில் இருக்கும் நம் உயிர்…!

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அது உயிரிலே மூளும் போது மூண்டெழும் கனலை… எந்தக் காரணத்தால் நாம் பார்த்தோமோ அந்த உணர்வின் தன்மை உயிரிலே மோதும் தன்மை கொண்டு அதனின் இயக்கமாக நம்மை இயக்குகிறது.

அதனால் தான் “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலத்தால் அறிந்து கருத்தறிய வேண்டும்” என்று பாடலைப் பாடுகின்றோம்.
1.பாடலைப் படித்தோம்… கருத்தை விட்டுவிட்டோம்.
2.மூலத்தையே விட்டுவிட்டோம்… அந்த உண்மைகளை உணரவில்லை.

காரணம்… நாம் எந்த நிலையைக் காலத்தால் அறிகின்றோமோ… அது நம் மூலமான உயிரில் இது ஆதாரமாக இணைக்கப்பட்டு அது உணர்வின் தன்மை கனலாக எழும்புகிறது.
1.அதைக் காலத்தால் அறிந்து ஆறாவது அறிவால் ஞானம் கொண்டு அறிந்துணர்ந்து
2.மகரிஷிகளின் அருள் உணர்வைக் கணங்களுக்கு அதிபதியாக நம் உடலுக்குள் இணைத்து நாம் செயல்பட வேண்டும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களில் தவறில்லை. சாங்கிய சாஸ்திரங்களில் நாம் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாதபடி துயர்களையே நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

இதைத் தான்…
1.ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் எந்தெந்த நிலைகள் வளர்கிறது என்ற நிலையில்
2.பங்குனி உத்திரம்… திசை மாறும் நிலைகள் கொண்டு
3.மனிதனான பின் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை அகற்றும் நிலையாக நாம் திசை திரும்ப வேண்டும்…
4.ஞானிகள் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்று காட்டுகின்றார்கள்… உத்தராயணம்…!

பங்குனி உத்திரம் முருகனுக்குகந்த நாள் என்று தேரோட்டம்… காவடி ஆட்டம்… என்று ஆடிப் பாடி மகிழ்கின்றோம்.

இருந்தாலும் அதனின் உணர்வின் வேகம் கொண்டு பக்தியில் முருகா… முருகா… முருகா… என்று “அவன் செய்வான்…” என்ற நம்பிக்கையுடன் இருந்து உணர்வின் தன்மை நமக்குள் பேயாக்கி… இந்த ஆசை கூடி… உடலை விட்டுச் சென்ற பின் அதே உணர்வின் தன்மை கொண்டு அடுத்த உடலுக்குள் சென்று… ஆசையின் நிலைகள் பேயாகத் தான் ஆக்க முடியும்… அடுத்த உடலுக்குள் சென்ற பின் ஆசை தான் வளர்கிறது… ஆறாவது அறிவு சூனியமாகிறது.

காவடி ஆடுபவர்கள் உடலை விட்டுப் இறந்த பின் எங்கே செல்கிறார்கள்…? முருகன் மீது பக்தியாக இருந்து அடுத்தவர்கள் காவடி எடுத்தால் போதும்.. அந்த ஆன்மா புகுந்து தன்னாலேயே ஆடத் தொடங்கும்.

இதிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்த அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு உத்தராயணம் என்ற நிலையில் ஆறாவது அறிவு கொண்டு அருள் உணர்வை எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

அதற்குத் தான் இதை உங்களுக்குள் விளக்க உரையாகக் கொடுப்பது.

நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும் – ஈஸ்வரபட்டர்

நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

தீப ஜோதியைக் கண்டிடவே தீபங்களை ஏற்றி வைத்துப் புனித நன்னாளாய்க் கார்த்திகைத் திருநாளைத் தீபத்தின் ஜோதியிலே ஜோதியாய் வணங்குகின்றீர்.

தீபம் ஏற்றி வணங்கிடும் நாளில்…
1.தீப ஜோதியையே உம்முள் ஐக்கியப்படுத்திடும்
2.ஜோதி தீபங்களாய் வாழ்ந்திடும் “எண்ண தீபத்தை ஏற்றிடுங்கள்…!”

எண்ணெயும் திரியும் ஏற்றுவதற்குத் தீக்கோளப் பெட்டியும் செயற்கை கொண்டு தீபம் ஏற்றி தீப விழாவாக்கி மகிழ்ந்திடும் நன்னாளை…
1.என்றுமே தீபமாய்ச் சுடர்விடும் ஆத்ம விளக்கை
2.”எண்ண தீபத்தில் இயற்கையின் சக்தியில் கலக்கவிடுங்கள்…!”

நம் பூமியின் ஒலியினால் ஒளியாகி ஒளியுடனே வாழ்ந்துள்ள நாம் நம்மைப் போன்ற ஒவ்வொரு மண்டலமும் ஒலி கொண்டு ஒளி பெற்று வாழ்வதைப் போல்…
1.மற்றச் சாதனங்களினால் எரிந்து ஒளிவிடும் ஒளியாய் இல்லாமல்
2.தானாய் ஒளிரும் ஜோதி ஒளியை ஒவ்வொருவரும் தன்னுள் ஏற்றி ஒளி பெற்றிடுங்கள்.

சூரியனும் மற்ற அனைத்து மண்டலங்களும் தானாகவே தன்னுள்ளேயே ஒளியினால் ஒளி பெற்றுச் சுற்றிடும் ஜோதி மயம் போல் ஒவ்வோர் ஆத்மாவுமே…
1.அவரவர்களின் ஆத்மாவுடன் ஜோதியின் சக்தியைப் பெற்று
2.ஜோதி மயமான ஜோதியுடனே கலந்தும் தனிப்பெரும் சக்தியினைப் பெற்றிடலாம்.

நம் ஆத்மாவிற்கு உள்ள சக்தியினை நாம் உணர்ந்திடல் வேண்டும். நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும். ஆனால் நம் சக்தியை நாம் அறிந்திடாமல் பல தீய சக்திகளுக்கு நம்மை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்.

1.வாழ்க்கையுடனே தியான வழியின் ஜோதித் தொடரை வளரவிட்டு வாழ்பவருக்கு
2.நம் ஆத்ம ஜோதியின் சக்தியினைப் பூர்ணமாக அறிந்திடும் சக்தி நிலை வந்தடையும்.

வாழும் காலம் குறுகியதுதான்…! “மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் காலத்தில்தான்…” நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் கிட்டுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களுக்கு… ஆத்ம வளர்ச்சி வளர்ச்சி என்பது சக்தி நிலை கூடிடும் நிலையில்லை. உடலுடன் கொண்ட ஆத்மாக்களினால்தான் வாழ்ந்திடும் பக்குவத்தில் ஆத்மாவை ஜோதியாக்கிட முடிந்திடும்.

வாழ்வும் சாவும் என்ற இரண்டு நிலைகளைத்தான் உணர்ந்துள்ளோம்.
1.பிறந்த பின் நம் நிலையை நாம் உணரப் போகின்றோமா…? என்ற பக்குவம் பெறாத நிலையில்
2.நாம் பிறப்பதுவே நம் தாய் தந்தையரின் நிலையினால் வந்தது… நாமாகப் பிறவிக்கு வரவில்லை…
3.ஆகவே வாழும் காலத்தை அனுபவித்து வாழலாம் என்றெல்லாம்
4.நம் ஆத்ம சக்தியைப் புரிந்திடாமல் எண்ணி வாழ்ந்திடும் நாம்
5.இனி வரும் காலத்தை நாம் எடுத்திடும் சுவாச நிலையின் ஒளியினால்
6.நம் ஆத்மாவை ஒளி கொண்ட ஒளியாக்கித் தீப ஒளியாக வாழ்ந்திட வேண்டும்.

எமது அருளாசிகள்…!

ஆறாவது அறிவைப் பயன்படுத்தி நாம் ஒளியாக மாறும் பருவத்தைத் தான் உத்தராயணம் என்றார்கள் ஞானிகள்

ஆறாவது அறிவைப் பயன்படுத்தி நாம் ஒளியாக மாறும் பருவத்தைத் தான் உத்தராயணம் என்றார்கள் ஞானிகள்

 

சித்திரை…! என்றால் ஒவ்வொரு நிலைகளிலும் (சந்தர்ப்பத்தால்) நம் எண்ணத்தால் வரும் பிறிதொரு தீமையின் நிலைகள் நாம் உண்மையை உணர முடியாத நிலைகள் கொண்டு மறைத்துவிடுகிறது… அதனால்தான் சித்திரை.

பங்குனி கடைசியில் உத்தராயணம் பிறக்கின்றது. “உத்தராயணம்…” என்கிற பொழுது புழுவிலிருந்து மனிதனாக வரப்படும் பொழுது
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை மாற்றியமைத்து
2.இயற்கையின் நிலைகளை மாற்றி ஒளியின் சுடராக அறிவின் தன்மையாக
3.தனக்கு வேண்டியதைத் தனக்குள் சேமிக்கும் நிலை

உத்தராயணம் வரப்படும் பொழுது தான் வெயிலின் தன்மையும் அதிகமாகிறது. இந்த பூமியில் விளைந்த உணர்வின் சத்துகள் அது எதுவானாலும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகச் சேமிக்கின்றது,

அந்தத் தருணத்தில் ஒவ்வொரு தாவர இனத்திற்கும்.. மரங்களுக்கெல்லாம் இலை உதிர் காலமாகிறது. ஆனால் செடிகளுக்கோ… வளர்ந்த நிலைகள் கொண்டு அதனுடைய சத்தைக் கவர்ந்து கொள்கின்றது

அதில் விளைந்த வித்துக்களை மறுபடியும் அந்த நேரம்… பருவம்… பார்த்து விதைக்கும் பொழுது
1.மாரிக்காலத்தில் தட்சிணாயணம் என்ற நிலைக்கு வரும் பொழுது
2.மழை நீரும் நீர் மற்ற நிலைகளும் வரும் பொழுது
3.அந்த வெப்பத்தின் தன்மை துடிப்பு கொண்டு தன் இனத்தை விருத்தி செய்கின்றது.

உத்தராயணம் தட்சிணாயணம் என்று இப்படி வரும் போது அந்தக் காலப் பருவத்தில் ஆக… மனிதனான பின் உத்தராயணம் “ஒவ்வொன்றையும் வேக வைத்து மாற்றி அமைக்கின்றோம்….!”

அதாவது மனிதனான பின் ஒரு பொருளை வேக வைத்துத் தனக்கு வேண்டியதை மாற்றி அமைத்துப் புது விதமாக நாம் சமைக்கின்றோம்… உணவாக உட்கொள்கிறோம் அல்லவா…!

உத்தராயண நேரங்களில் அந்த வெப்ப காலங்களில் தாவர இனங்களிலிருந்து கவர்ந்து கொண்ட இந்த உணர்வின் சத்து… அந்த அலைகள் அதிகமாகும் பொழுது பார்த்தால் பெரும் புயல்கள் வரும்… பெரும் அலைகளும் வரும்.

இந்தக் காற்றலைகள் எங்கிருந்து வருகின்றது…? எங்கிருந்து உருவாகின்றது…?

ஒவ்வொரு தாவரமும் தன் உணர்வின் வலுவால் வளர்ந்தாலும்… அதனின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரும் பொழுது
1.ஒரு விஷத்தன்மை கொண்ட நிலையோ
2.ஒரு உணர்வின் உந்து விசை கொண்ட உணர்வுகளையோ எடுத்து அலைகளாக வரப்படும் பொழுது
3.தாழ்ந்த உணர்வு கொண்ட சாந்தமான உணர்வு கொண்ட அலைகள் இதைக் கண்ட பின் அஞ்சி ஓடி வருகின்றது

அஞ்சி ஓடி வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் எதிர்ப்படும் நிலைகள் மோதித்தான் சுழல் காற்றுகளும்… பின் மற்றொன்றைச் சுழலச் செய்வதும்… அதன் உணர்வின் தன்மை அணுக்களின் தன்மைகளை உருமாற்றுவதும்… எல்லாம் ஒன்றாகச் சேர்த்துத் தனக்குள் கவர்ந்து கொள்ளும் போது புதுப் புது வித்தாக மாறுகின்றது.

இதைப் போன்றுதான் ஆறறிவு கொண்ட மனிதன்… “வாழ்க்கை…” என்ற சுழற்சியின் நிலைகளில் வளர்ந்து வரப்படும் பொழுது எத்தனையோ எதிர்மறையான உணர்வுகள் மோதி நமக்குள் புயலாக மாறுகின்றது

மாறினாலும் அந்த ஆறாவது அறிவை வைத்துப் அந்தப் புயலை அடக்க முடியும்.

எப்படி…?

1.வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கித் தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக நிலை கொண்டிருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம் என்றால்
3.அந்தப் புயல்களை நாம் அடக்க முடியும்.

அதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது.

நம் ஆறாவது அறிவை வைத்து ஒளியாக உருவாக்கும் நிலையை நமக்குள் எவ்வாறு வளர்ப்பது…? என்ற உண்மைகளைத் தான் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

புத்தர் ஞானம் பெற்ற நிலை – ஈஸ்வரபட்டர்

புத்தர் ஞானம் பெற்ற நிலை – ஈஸ்வரபட்டர்

புத்தரை ஆண்டவனாய் வழிபடுகின்றனர். புத்தரின் நிலையென்ன…?

சித்தார்த்தராய் அரச குடும்பத்தில் அவதரித்து வாழ்ந்தவருக்கு ஒரே நாளில் துறவு நிலை கொண்ட ஞான நிலை போதி மரத்தடியில் பெற்றார். எந்த நிலையில் அவரின் நிலை இப்படி வந்தது…?

பிறவியின் ஆரம்ப நாள் தொட்டு வாழ்ந்த காலத்தில் அவரின் நிலை எல்லோரின் நிலையை ஒத்த வழியில்தான் வந்தது. ஞான நிலைக்கு அவர் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திடாமல் போதி மரத்தடியில் வந்ததின் நிலையென்ன…?

அவரின் நிலை சித்தார்த்தராய்ப் பிறவி எடுத்து அவர் அரச காலத்துடன் மட்டும் ஏற்பட்டதல்ல.

இவ்வுலகில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி பல ஜென்மங்கள் வாழ்ந்த நாட்கள் தொட்டே…
1.அந்நிலையில் அவரின் தொடர்புடைய ரிஷிகளின் நிலையிலிருந்தெல்லாம் அவர் சேமித்து வைத்து
2.அவருடனே வளர்ந்த ஜீவ சக்தி எந்தப் பிறவியிலும் செயல்படாமல்
3.அவர் கடைசியாக எடுத்த உடலில் ராஜ வம்சத்தில் பிறந்ததின் நிலையினால்
4.வளர்ந்த சூழ்நிலை வளர்ப்பின் நிலை இவற்றினால் அவரின் முன் ஜென்மத்தில் சேமித்த நற்சக்தியுடன் மோதுண்டவுடனே
5.இக்கலவையின் சக்தி கூடி அந்த ஞானி வழிதனை அவரும் வழி நடத்தி ஞானோதயம் பெற்று
6.சூட்சும உலகினில் பலருடன் கலந்து… ஆண்டவனாய் அருள் செய்திடும் அன்பு நிலையில் உள்ளார்.

இவ்வுலகினில் உதித்து… உலகுடனே ரிஷிகளாய் சப்த ரிஷிகளாய்க் கலந்தவர்களின் எண்ணக் கலவைகளின் நற்சக்திகள் அனைத்துமே ஒன்று கூடி இப்பூவுலகிற்கே பூ மழையாய்ப் பல நிலைகளைச் செய்விக்கின்றன.

ஆத்மீக நெறிதனில் ஞானியாய் சித்தனாய் ரிஷியாய் சப்த ரிஷியாய் ஓங்கி நிற்கும் அனைத்து நற்சக்திகள் கொண்ட நல் ஆத்மாக்களின் நிலையில் இன்று நீங்கள் வழிபடும் ஆலயங்களில் இருந்தெல்லாம் அவரவர்களின் எண்ண நிலைக்கேற்ப அவர்களின் சக்தி நிலை ஒன்று கூடிய ஆண்டவனாய்ச் செயல்படுகின்றது.

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று… கோயிலில்லா ஊரில் குடியிருத்தல் வேண்டாம்…!” என்றெல்லாம் உணர்த்தினர் நம் முன்னோர்.

பக்தி நிலையை வளர்க்கவும் ஆத்மீகத்தை நிலைநிறுத்தவுமே இந்நிலைகளை எல்லாம் நமக்குப் போதித்தனர்.

காட்சி:
ஒரு பெரிய யானை விபூதிப் பட்டையுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு பக்தரின் சிரசில் தும்பிக்கை வைத்து ஆசிர்வாதம் செய்கின்றது. அந்த யானையே ஒரு மகா ரிஷியாய் உருமாறிக் காட்சியளித்து ஆசிர்வதிக்கின்றார்.

மக்களின் எண்ணத்தில் அந்த யானையையே ஆண்டவனாய் வணங்கிடும் பொழுது யானையின் நிலையிலும் அந்த ரிஷிகளே வந்து வணங்கிடும் ஆத்மாக்களுக்குச் சில நிலைகளில் பக்தி கொண்டவருக்கு ஆசிர்வதிக்கின்றனர்.

காட்சி:
பாடை கட்டி நான்கு பேர் ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்வது போலவும்… “கோவிந்தா…!” என்ற கோவிந்த ஜெபம் செய்து கொண்டே செல்வது போலவும்… காரியம் முடிந்து வந்து கை கால் அலம்பி ஜோதியைக் காண்பது போலவும் காட்சி தெரிகிறது.

ஆண்டவனின் நிலையை உணர்த்திவிட்டு இந்நிலையின் காட்சியை “ஏன் அளித்தேன்…?” என்று எண்ண வேண்டாம்.

1.புத்தருக்கே இந்த நிலையைக் கண்ட பிறகுதான் ஞான நிலையே வந்தது.
2.எந்த நிலையையும் ஒரு நிலையாய்க் காணும் ஆத்ம ஜெபம் நமக்கு வேண்டும்.

ஆண்டவனின் அருள் ஆலய நிலையில் மட்டும் தான் கிட்டும் என்பதல்ல.

ஆலயங்களுக்குச் சென்று ஆத்ம ஜெபம் பெறும் பொழுது நம் ஆத்மா அமைதி பெறுவதற்குத் தான். வாழ்க்கையுடன் வந்து மோதிடும் பல நிலைகளில் இருந்தெல்லாம் நம் எண்ணப் பயத்தையும் எண்ணச் சோர்வையும் அந்த நிலைக்குச் சென்றிட்டால் அமைதி கொண்டு வந்திடவே நமக்கு வழிப்படுத்தி வைத்தனர் நம்மில் கலந்த ஆண்டவன்கள் எல்லாம்.

காட்சி:
ஜெகஜோதி மயமாய் ஒரு தேர் தானாக ஆடி வருவது போல் காட்சி. அந்தத் தேரே புஷ்பமாய் ஒரு மகா சப்தரிஷியால் அருள் புரிந்து ஆசிர்வதித்திடும் காட்சி தெரிகிறது.

1.காட்சியில் கண்டிடும் இந்த ரிஷியின் அரும் பெரும் சக்திகள் அனைத்துமே
2.இதைக் காண்பவருக்கும் இதை எழுதுபவருக்கும் இவற்றைப் படிக்கும் என் ஆசிகள்.

தேரில் வந்தவர் புத்தர்…!

யாம் கொடுக்கும் உபதேசங்களைப் பதிவு செய்து கொண்டால் மற்ற “எதுவுமே கடினமில்லை…”

யாம் கொடுக்கும் உபதேசங்களைப் பதிவு செய்து கொண்டால் மற்ற “எதுவுமே கடினமில்லை…”

 

உதாரணமாக… பள்ளியில் பாடங்களைப் படிக்கும் போது “விஞ்ஞான அறிவு வந்த பின்…” விஞ்ஞானத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில்லை.
1.பதிந்த நிலைகள் மீண்டும் அதைப் படித்துணரப்படும் போது மூலத்தின் கூறை அறிந்து
2.தன் வாழ்க்கைக்குப் பாட நிலைகள் கொண்டு வாழ வழி வகுக்கின்றது.

இதைப் போன்று தான் இந்த இயற்கையின் நிலைகளை மகரிஷிகள் காட்டிய உணர்வின் அடிப்படையில் அவர்கள் இட்ட காரணப் பெயரை வைத்து (சாஸ்திரங்கள்) நாம் வளர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும்…? என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆகவே அதை நாம் பதிவு செய்து கொண்டால் தான் மீண்டும் நினைவு கொள்ள முடியும்.

பள்ளியில் படிக்கப்படும் போது
1.முதலில் “பதிவாக்கிக் கொள்கின்றோம்…”
2.அந்தப் பதிவின் தன்மை நினைவு வரும் போது தான் படித்த நிலைகளை “உணர முடிகின்றது…”
3.உணர்ந்த நிலைகள் கொண்டு அது “செயலாக்கத்திற்கு வருகிறது…”

அதாவது… தான் படித்த நிலைகள் கொண்டு இணைத்து மற்ற நிலைகளை வைத்து ஒரு புதுப் பொருளை உருவாக்க முடிகின்றது.

ஆக… விஞ்ஞானி தான் படித்துணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு டெக்னிக்கல் (TECHNICAL) என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு இயந்திரத்தின் உறுப்புகளை உருவாக்க முடிகிறது.

மனிதன் பதிவு செய்து கொண்ட உணர்வின் இயக்கம் எதுவோ அதனின் நினைவின் இயக்கமாகத் தான் இயக்குகின்றது.

இதைப் போன்று தான்
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை நீங்கள் பதிவாக்கி
2.அந்தப் பதிவான நிலைகளை இயக்கப்படும் போது இந்த மனித வாழ்க்கையில் தவறில்லாமல் செயல்பட முடியும்.

சந்தர்ப்பங்களில் நமக்குள் தவறுகள் உட்புகுந்து உருப்பெறும் சில நிலைகள்
1.தவறின் நிலையாக இயக்கச் செய்வது எது…? தவறை அடக்குவது எது…? என்ற நிலைகளை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.தவறு வரும் நேரங்களில் யாம் உபதேசிக்கும் உணர்வின் தன்மைகளை நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.அது உங்களுக்குத் தெளிவின் நிலையை ஊட்டும்.

அதனின் அடிப்படையில் கூட்டுத் தியானத்தின் மூலம் எடுக்கும் வலுக் கொண்ட சக்தியால் ஞானிகள் பால் நினைவின் ஆற்றல் நமக்குள் பெருகி தவறின் நிலைகள் நம்மை இயக்காது… அந்தத் தவறைத் தடுத்து அதைத் தவிர்த்து நமக்குள் இயக்காவண்ணம் தடுக்க முடியும்.

அத்தகைய அந்த நிலை பெறச் செய்வதற்கே இந்த உபதேச வாயிலாக ஞானிகள் உணர்வுகளை உணரும் தன்மையை “உங்களுக்குள் ஒவ்வொரு உணர்விலும் தொட்டுக் காண்பிப்பது…”

அதன் வழியில் ஒவ்வொரு உணர்வின் இயக்கத்தையும் அது எவ்வாறு இயக்குகிறது…? என்று அறிகின்றோம்.
1.அந்த உணர்வின் அறிவைக் கிளர்ந்து எழச் செய்து அந்த ஞானிகளின் உணர்வை இணைக்கச் செய்து
2.தீமைகளை அகற்றும் மார்க்கங்களை உங்களில் இணைக்கப்படும் போது தான் இந்த உணர்வின் அறிவாற்றல் பெருகி
3.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி அதனின் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் திறன் பெறுவீர்கள்.

அவ்வாறு பெற்றவர்கள் தான் மகரிஷிகள்…. அவர்கள் பெற்ற உணர்வின் தன்மையைத் தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் பதிவு செய்து உணர்த்துகின்றோம் (ஞானகுரு).

உலக மாற்றத்தைப் பற்றிய உண்மைகளை வெளிட அச்சத்துடன் உள்ளார்கள் – ஈஸ்வரபட்டர்

உலக மாற்றத்தைப் பற்றிய உண்மைகளை வெளிட அச்சத்துடன் உள்ளார்கள் – ஈஸ்வரபட்டர்

 

மாறப் போகும் இக்கலியின் கால நிலைக்காக… இதை உணர்த்துகின்றேன்.

1.இக்கலியுடனும்… இக்கலிக்கு முந்தைய காலங்களிலும்
2.இப்பூமியில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி உங்களுடனே வாழ்ந்த
3.இவ்வுலகுடன் ஒன்றிய நிலை கொண்ட ரிஷிகளின் அருளாசியினால்
4.இவ்வுலகத் தன்மை மாறப் போகும் தற்போதைய காலத்தில்
5.உங்களுடன் கலந்து வாழ்ந்த எங்களின் ஆசையினால்
6.இம்மாற்றத்திலிருந்து அணுவாய்… ஆத்மாவாய்… அனைத்து அறிவும் ஆற்றலும் சக்தி கொண்ட மனித உடல் பெற்ற ஆத்மாக்களை
7.இப்பேறு பெறும் பாக்கிய நிலை அடைந்தவரை நம்முடன் அழைத்திடவே (ரிஷிகளுடன்)
8.இந்நிலையில் இப்போதனை வழியினைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.

பூமியின் பூமத்திய ரேகையின் நிலையைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம். இவ்வுலக நிலை கால நிலைகேற்ப உஷ்ண நிலையும் மாறு கொள்கின்றது. காற்றும் மழையும் பனியும் குளிரும் அனைத்துமே மாறி மாறி வருகின்றன.

அது எவ்வாறு என்ற நிலையில்… இப்பூமியின் பூமத்திய ரேகையின் நிலையில் அதன் சுற்றும் தன்மையில் சூரியனின் நிலைக்கு சூரியனின் தூர விகிதப்படி இவ் இயற்கையின் நியதிகள் மாறுபட்டு வருவதாகப் பண்டைய காலம் தொட்டு இன்றளவும் உணர்ந்து வருகிறீர்கள்.

பல நாட்களுக்கு முதலிலேயே வான சாஸ்திரப்படி என்றென்று சந்திர சூரிய கிரகணங்கள் வருகின்றன என்றும் சரியாக உணர்த்துகின்றனர்.

1.இவ்வான மண்டலங்களில் சுழற்சியில் ஏற்படும் நிலைகளையெல்லாம் பல நிலைகளில் அறிந்துள்ளனர்
2.இருந்தாலும் எல்லாவற்றையும் வெளியிடும் அச்ச நிலையில் உள்ளனர்.

இப்பூமி சுழலும் தன்மையில் ஏற்படும் ஒளி (சூரியனின் ஒளிக்கதிர்கள்) சில இடங்களில் படுவதே இல்லை. என்றுமே இருண்ட பூமியாக சில இடங்கள் உள்ளன.

ஆனால் இப்பூமியின் அசைவு காலத்தில் (மாறப் போகும்) அவ்விருண்ட நிலை கொண்ட இடங்களெல்லாம் ஒளிக்குச் சிக்கிடும் இடங்களாக வந்துவிடும்.

சில இடங்களை இப்பூமியின் மாற்றத்தின்போது ஏற்படும் அசைவுக்குக் குறிப்பிடுகின்றேன்.
1.இன்று மக்கள் நிறைந்து வாழ்ந்திடும் சீனாவும் அமெரிக்காவும் இம் மாற்றத்திற்குச் சிக்கிடும் நிலையில் உள்ளன.
2.அதிக மாற்றம் கொள்ளும் நாடுகள் இவை இரண்டும்தான்…!

மற்ற நாடுகளில் மாற்றம் வந்தாலும் சில நிலைகளில் அந்நீரின் மட்டம் ஏறாமல் நிலமாக இருந்திடும்.

இவ்வுலக மாற்றத்தினால் இன்று இருண்ட நிலையில் உள்ள பூமிகள் எல்லாம் ஒளிக்கு வந்துவிடும்.
1.இன்று செயற்கையுடன் ஒன்றிய வளர்ச்சியடைந்த நாடுகள் என்று நாம் செப்பிடும்
2.பூமிகளில் சில இருண்ட நிலைக்குச் சென்றிடும்.

இம் மாறப்போகும் இப்பூமியின் தன்மையுடன் இயற்கை சக்தியும் இன்றுள்ள நிலையிலிருந்து மாறும் தன்மை படுகின்றது. சித்திரையில் உள்ள வெயிலும் மார்கழியின் குளிரும் இம்மாற்றம் கொள்ளும் இப்பூமியின் நிலையினால் மாற்றம் கொண்டு சுழலப் போகின்றது.

அனைத்து நிலைகளையும் நீங்களும் காணப் போகின்றீர்கள்…!

1.இவ்வெண்ண சக்தியின் செயலைக் கொண்டு ஜெப சக்தியை உயர்வாக்கி
2.ஜெபம் கொண்ட வாழ்க்கையை ஜெயித்தே வந்திடுங்கள்.
3.வழியின் தொடர்பினை அறிந்துள்ளீர்… இனி வருவதற்குச் சிரமம் இல்லை.

ஞானத்தின் வழியறிந்து செயல்பட்டு எல்லோரும் ஞானியாகி… அந்த வழித்தொடரினை வழிப்படுத்தியே “சப்த ரிஷிகளுடன் சங்கமித்தே சகல நிலையுடன் கலந்திடுவோம்…” என்ற ஓ…ம் என்ற நிலையினிலே மன நிலையை ஒன்றச் செய்திடுங்கள்.

இவ்வுலகம் மட்டுமல்ல… அனைத்து உலகங்களுமே நமதாக்கி அனைத்து உலங்கங்களுக்கும் சொந்தமான அவ் ஆதி சக்தியுடனே கலந்திடுவோம்… என்ற “ஒரு நிலை கொண்ட தைரியமுடன் கலந்திடுங்கள்…!”

1.எவ்வாண்டவனும் வந்து நம்மை அழைத்துச் செல்வதல்ல அந்நிலைக்கு…
2.நம்முடன் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனை (உயிரான ஈசனை) நாம் வழி நடத்திட்டால்
3.அனைத்து ரிஷிகளின் அருளைப் பெற்று… அனைத்துடனும் நாமும் கலந்திடலாம்.
4.ஒன்றிடும் பக்குவ நிலையையே அறிந்து… பக்குவப்படுத்தி வளர்ந்து கல்கியின் நிலைக்கே வந்திடுங்கள்.