ஒலி… ஒளி… அலைவரிசையில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்

ஒலி… ஒளி… அலைவரிசையில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்

 

உதாரணமாக ஒரு இடத்தில் விபத்தாகிறது… அடிபடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வின் ஒலி ஒளிகளைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது.

இன்று டி.வி.யில் படங்களை எவ்வாறு பார்க்கின்றோம்…?

இயந்திரத்தின் துணை கொண்டு ஒரு மனிதனைப் படமாகி அதை ஒலிப் பேழைகளில் பதிவு செய்கிறார்கள்… வீடியோ. அப்போது அதனுடைய படச்சுருள்களில் அந்த உருக்களை நாம் பார்க்க முடியவில்லை.

பதிவு செய்ததை மீண்டும் காந்தப் புலனறிவால் ஒரு இயந்திரத்தின் துணை கொண்டு இயக்கப்படும் போது ஒலி/ஒளிப் பேழைகளிலிருந்து அலைவரிசைகளை வெளிப்படுத்துகிறது. அதைத் தான் நம் டி.வி பெட்டி கவர்கிறது.

காந்தப் புலனறிவால் எந்த மனிதனைப் படமாக உருவாக்கப்பட்டதோ அவன் எந்த நிலையில் இருந்தானோ அதைத் திரைகளில் நாம் காணுகின்றோம்.

இதே காந்தப் புலனறிவால் தான் அதுவும் கவர்கின்றது அதனின் உணர்வின் தன்மை ஒலி ஒளி என்ற நிலைகளில் அது பரப்புகின்றது. இது விஞ்ஞானம்.

அதே போன்று தான்
1.அடிபட்ட அந்த மனிதனின் உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படும் பொழுது
2.ஒலி ஒளி என்ற நிலையில் அலைவரிசைகளில் வெளிப்படுகின்றது… சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்கின்றது.
3.அப்போது எந்த மனிதனை நாம் அங்கே உற்றுப் பார்க்கின்றோமோ அதே ஒலி ஒளி என்ற நிலைகளில்
4.நமக்குள் அந்த உடலின் உருவத்தையும் அதிலிருந்து வெளி வரும் சோக நாதத்தையும் நாம் பார்க்கின்றோம்.

அதை நமக்குள் உணர முடிகின்றது.

உயிரில் இருக்கும் காந்தப்புலன் மகாலட்சுமி என்றாலும் நாம் உற்றுப் பார்க்கும் ஒவ்வொன்றையும் லட்சுமி தனக்குள் கவர்ந்து விஷ்ணு என்ற தன் கணவனுடன் இணைந்து அந்த உணர்வின் சக்தியை (விபத்தான) அதே வேதனைப்படும் உணர்வின் அணுவாக மாற்றுகின்றது பிரம்மமாக.

நாம் கண்ணுற்றுத் தான் பார்த்தோம்… ஆனால் உயிர் அதனின் ஜீவ அணுவாக மாற்றுகின்றது விபத்தில் சிதைந்து போன அந்த உணர்வின் தன்மை அது நமக்குள் உருப்பெறப்படும் பொழுது
1.அவன் எத்தகைய வேதனைப்பட்டானோ அதே உணர்வின் தன்மை கொண்டு வரும் போது
2.இரவிலே அவன் சிதைந்த உணர்வின் தன்மை கனவாக வருகின்றது
3.அவன் உடலைப் பார்த்திருந்தாலும் அவனின் உருவம் வராது… வேறு உருவமாகத் தெரியும்.

உடல்கள் சிதைவதையும் சிதைந்து கொண்டே இருப்பதும் போன்ற இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நம் ஆன்மாவிலிருந்து உடலுக்குள் செல்லும் போது ஒவ்வொரு குணத்திலும் இந்தச் சிதைந்திடும் உணர்வுகள் பரவிப் பரவி நாம் மனிதனாக உருப்பெற்ற நிலைகள் மறைந்துவிடுகிறது.

அச்சுறுத்தும் நிலைகளும் அஞ்சிடும் நிலைகளும் நமக்குள் வலுப் பெற்ற நிலைகளாக உருப்பெற்று அந்த அணுவின் தன்மை நமக்குள் பரப்பத் தொடங்குகிறது.

அந்த மனிதன் விபத்தில் அவன் எப்படிச் சிதைந்தானோ அதிலே உருவான அணுவின் தன்மை அதனின் மலத்தை உமிழ்த்தும் போது நம் உடல்கள் சிதைந்து விடுகிறது.

எந்த எலும்பு அவனுக்குள் ஒடிந்ததோ அதிலிருந்து வந்த உணர்வின் அலைகளை நமக்குள் இருக்கும் காந்தப் புலனறிவுகள் நுகர்ந்த பின்
1.அதாவது முறிந்த எலும்பின் உணர்வுகள் நம் எலும்புகளில் இது பட்டுவிட்டால்
2.நம் உடலில் எலும்பை உருவாக்கும் அந்த அணுவின் மலங்கள் அது குறையத் தொடங்கிவிடும்.
3.பின் எலும்புகளிலே சிதைவின் தன்மை ஆகி அடுத்து ஏதாவது பட்டால் உடனே சடக் என்று முறிந்துவிடும்…. ஆக மாவு போல் ஆகும்.

ஆகவே அங்கே எலும்புகள் நொறுங்கியது… நொறுங்கிய உணர்வின் தன்மை வெளி வந்தது.
1.அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகளை இங்கே கவர்ந்தது நமது கண்.
2.இந்த உணர்வின் தன்மை ஓ என்று நமக்குள் ஜீவனாகின்றது… ஜீவ அணுவாகச் சிவமாகின்றது (உடலாகிறது)

சிவத்திற்குள் அணுவின் தன்மை ஆன பின்… அது தன் உணர்வினை ஏங்கிப் பெற்று நொறுங்கிய உணர்வின் மலத்தை நமக்குள் விடும் போது நம் எலும்புகளைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.

இது போன்ற நிலைகளிலிருந்து விடுபட
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்வழிப்படி,
2.அந்த மெய்ஞானியரின் அருள் ஒளியை நமக்குள் கூட்டி
3.இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும்.

நாம் இரவில் படுத்து உறங்கும் பொழுது
1.அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி
2.நம்மைத் தாக்கும் தீமைகளிலிருந்து
3.நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

“நான்…” செய்வது தான் சரி…! என்ற எண்ணத்துடன் இருந்தால் வளர்ச்சியே இருக்காது – ஈஸ்வரபட்டர்

“நான்…” செய்வது தான் சரி…! என்ற எண்ணத்துடன் இருந்தால் வளர்ச்சியே இருக்காது – ஈஸ்வரபட்டர்

 

கேள்வி:
எண்ணத்தில் தூய்மையும் நற்செயலுடனும் இருக்கும் ஒருவருக்குத் தியானம் அவசியமா…?

மற்றவரை நோக வைக்கும் எண்ணமோ செயலோ இல்லை. தான் செய்யும் காரியமும் எண்ணமும் சரியானதாகவும் இருப்பதாக இருக்கின்றது. தான் செய்வது சரியா…? நியாயமா…? என்பது தெரியவில்லை.

1.எனக்கு நியாயம் என்று தோன்றுகிறது.
2.ஆனால் மற்றவர்கள் அதை ஏற்பது இல்லை…!

என் நினைவிலும் செயலிலும் தவறு இருந்தால் அதைத் திருத்திக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

பதில்:
எண்ணமுடனும் உணர்வுடனும் நல் நிலை பெற்றிருந்தாலும் பக்தி என்ற அன்பு நிலையை வளரவிடாமல் “நான்…” என்ற நிலைப்படுகின்றது இந்த வினாவின் நிலை.

கேள்வி கேட்டவர்:
அது சரியா… தவறா..! என்பது தெரியவில்லை. “நான்…” என்று எனக்கு உணரும் நிலை எனக்கு நன்றாகத் தெரிகின்றது.

பதில்:
உணர்வுடனே… “தன் நிலையை நல் நிலை என்றுணர்ந்து.. நான்…!” என்ற உணர்வையும் கலக்கிவிட்டதினால் வந்த நிலை உன் நிலை.

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இவ்வியற்கையின் சக்தியில் எவையுமே இல்லை
2.இந்த நிலையில் தன் உணர்வை நல்லொழுக்கப்படுத்தி அவ்வொழுக்க நிலைக்கே அடிமைப்பட்டு
3.அந்த நிலையையே தெய்வமாக்கித் தன் உணர்வுடன் நானாக இருந்து என்னம்மா பயன்…?

அனைத்து நிலைகளை அறிந்த சப்தரிஷிகளுமே தனித்த நிலையில் இயங்குவதில்லை. உணர்வுடன் உணர்வை ஒன்றச் செய்து தான் செயலாக்குகின்றார்கள்.

1.நீ அமைத்துக் கொண்ட இந்நிலையிலிருந்து விடுபட்டால் தான்
2.உன் உணர்வுடன் சேமித்துள்ள நற்சக்திகள் செயல் கொண்டிட முடியும்.

நல் எண்ணமும் அவ்வெண்ணமுடன் கூடிய உணர்வினால் நம் பார்வையின் சக்தியும்… நாம் செப்பிடும் சொல் அழகும்… அன்பான ஆசை வாழ்க்கை நிலையும் தான் ஜெப வாழ்க்கையம்மா.

“ஜெபம் என்பதுவே வாழ்க்கையுடன் ஒன்றிட்ட நல் உணர்வைப் பெற்றதுவே…”

எண்ண நிலையை ஒரு நிலை கொண்டு உண்மையுடனும் அன்புடனும் அன்பாசையுடனும் உள்ளவர்களுக்குத் தெய்வ நிலை கிட்டும். தெய்வம் என்பதுவே இந்த நிலை பெற்றோரைத்தான்.

1.ஆதிசக்தியின் இயற்கை சக்திகள்தான் அனைத்து சக்திகளும்.
2.நம்மையே நாம் இவ் இயற்கையுடன் தெய்வமாகக் கலக்கவிட்டு வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இப்பேராசைக்கும் வெறி உணர்வுகளுக்கும் மற்றத் தீய சக்திகளின் உணர்வுகளுக்கும் நாம் அடிமையாகாமால் வாழ்வதற்கே “நல் ஜெபம் எடுத்திடுங்கள்…” என்று மீண்டும் மீண்டும் சொல்வது.

நன்றிக் கடனை எப்படித் தீர்ப்பது…?

நன்றிக் கடனை எப்படித் தீர்ப்பது…?

 

நாம் யாரும் தவறு செய்யவில்லை. பிறருக்கு நாம் பல நன்மைகளைச் செய்து இருக்கின்றோம். ஆனால் நாம் நன்மை செய்த நிலைகள்…
1.அந்த உதவி செய்த நன்றிக்காக நண்பன் உடலை விட்டுப் பிரியும் போது
2.நம் மேல் பற்று கொண்டு அந்த ஆன்மா பிரிந்து விட்டால்
3.அந்த ஆன்மா நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் வந்துவிடும்.

நண்பனை நாம் உடலுடன் எப்படிப் பார்த்து உதவி செய்தோமோ அதே போல் நமக்குள் வந்தாலும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் என் உடலில் உள்ள அந்த ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால்
1.இந்த நண்பன் நம்முடன் ஒன்றி வந்தாலும்
2.அந்த நண்பனிடத்தில் விளைந்த தீய வினைகள் நம்மிடத்தில் விளையாது நம்மையும் காக்கலாம்
3.அந்த நண்பனின் உயிர் ஆன்மாவையும் பிறவியில்லா நிலை அடையச் செய்யலாம்.

அதாவது உங்களின் நிலையிலிருந்தே அந்த ஆன்மாவை உயர்ந்த நிலை பெறச் செய்ய முடியும்

ஒவ்வொரு நாளும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி அந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

அந்த இன்னொரு உடலில் தான் வாழும் போது குடும்பத்தில் சங்கடத்தினாலோ வெறுப்பாலோ வேதனையாலோ உருவான உணர்வுகள் அங்கே எப்படி நோயாக விளைந்ததோ… அந்த உடலை வீழ்த்தியதோ… அதே சமயத்தில் “உதவி செய்தான் நண்பன்…!” என்ற எண்ணத்துடன் பற்று கொண்ட நிலையில் அந்த ஆன்மா நம்முள் வந்தாலும் அதைப் போன்ற தீமைகளை அகற்ற சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ண வேண்டும்.

அவ்வாறு பல முறை செய்யச் செய்ய நம் உடலில் இருக்கக்கூடிய நண்பருடைய உயிரான்மா நமக்குத் தீமை விளைவிக்காது அதற்கும் அந்த நன்மைகளைப் பெறச் செய்கின்றது,

ஆகவே பிறர் படும் கஷ்டத்தைக் கேட்டுணர்ந்தாலும் அந்தக் கஷ்டத்தை உருவாக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் விளையாது தடுக்க…
1.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பத்திரிக்கை வாயிலாகப் படித்துணர்ந்த நிலையில்
4.அது நமக்குள் தீமை விளைவிக்கும் வித்தாக விளைந்திடாது தடுக்கவும் நம்மைக் காத்திடவும் முடியும்.

ஆகவே மேல் அழுக்கைப் போக்க நீரை ஊற்றி எப்படிக் குளிக்கின்றோமோ… தங்கத்தில் செம்பும் வெள்ளியும் சேர்ந்து விட்டால் திரவகத்தை ஊற்றி எப்படிச் சுத்தப்படுத்துகின்றோமோ… கைகளில் அழுக்குப்பட்டால் சோப்பைப் போட்டுத் தூய்மைப்படுத்துவது போன்று
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நம் உடலுக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த தீவினைகளை அகற்றி
2.நன்றியின் உணர்வாக எண்ணி… நம்முள் வந்த ஆன்மாக்களுக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்திகளைச் செலுத்தி
3.நமக்குள் தீமையாக விளைவிக்காத அதைத் தடுத்து
4.சப்தரிஷி மண்டலத்துடன் அவர்களை இணையும் நிலையைச் செய்வதே நல்லது.

நாம் அனைவரும் உலகிற்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்ட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

நாம் அனைவரும் உலகிற்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்ட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

1.இயற்கை உணர்வுடனே கலந்திட்ட நல் நிலை பெற்றோரின் எண்ணச் சக்திக்கு
2.இவ்வெண்ணத்துடன் கலந்திட்ட இயற்கை சக்தியும் உறுதுணையாக நிற்கும்

இயற்கையின் தன்மையில் ஒரே நிலை இருப்பதில்லை.

காற்றும் மழையும் குளிரும் உஷ்ணமும் கால நிலைக்கேற்ப மாறிக் கொண்டு வருகின்றன. இயற்கை அனைவருக்கும் பொதுவான சக்தி தான்.

அச்சக்தியின் அருளைச் சாதக நிலைப்படுத்தி எண்ணத்தில் உயர்வு கொண்டோரின் நிலையின் ஜெபத்திற்கு அவர் எண்ண ஜெபத்தின் நிலைக்கு இயற்கையும் ஒத்துழைக்கும்.

எண்ணத்தில் ஏற்றுவித்த இந்நல் சக்தியின் நிலை கொண்டு இயற்கையின் சீற்றத்தையும் நாம் கட்டுப்படுத்திடலாம்.

1.நம் எண்ணமே அத்தெய்வ சக்தியை ஈர்த்து ஜெப நிலையில் உள்ள பொழுது…
2.இவ் இயற்கையில் கலந்திட்ட பல நிலை கொண்ட அமில சக்தியை நம் எண்ணத்தின் சக்தியைக் கொண்டு திசை திருப்பிடவும்…
3.ஜெபப்படுத்தி அவ் இயற்கையின் சக்தியையே நம் எண்ண நிலைக்கொப்ப நிலைப்படுத்திடலாம்.

ஆனால் எண்ணத்தில் கறையுண்டோருக்கு இயற்கையும் ஒத்துழைப்பதில்லை.

இன்றைய மனித ஆத்மாக்கள் தன் நிலை உணர்ந்திடாமல்… தான் பிறவி எடுத்து வாழ்ந்த நிலையையும் மடியும் நிலையையும் எண்ணத்தில் கொண்டு
1.இவ் இடை கொண்ட வாழ் நாட்களில் இருந்தென்ன பயன்…? என்றும்
2.இவ்வுடலுடன் நாம் இருந்து அடையும் நன்மை என்ன…? என்றும்
3.இயற்கை எய்திடும் (இறப்பு) நாம் இவ்வாழ்க்கையில் சிக்கி மனக் கலக்கப்பட்டு வாழ்ந்து என்ன பயன்…? என்றும்
4.எண்ணும் எண்ணத்தில்தான் பல ஆத்மாக்கள் உள்ளன.

எண்ணத்திலேயே தன் நிலையை வினாவாக்கி வாழ்பவருக்கு… இவ்வுடலுடன் மட்டுமல்ல… இவ்வுடலை விட்டுச் சென்றிட்ட ஆத்ம நிலையிலும் “இவ்வினா நிலைதான்…” சுற்றிக் கொண்டே இருக்கும்.

இயற்கையின் சக்தியில் இயற்கையே அளித்திட்ட இயற்கையுடன் ஒன்றிய நம் உயிராத்மாவை இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நாட்களிலும் சரி… ஆத்மா பிரிந்து ஆவியுடன் சுற்றிக்கொண்டுள்ள நிலையிலும் சரி… இவ் இயற்கையுடன் ஒன்றியே தான் உயிரணு உதித்த நாள் முதற் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையும் அமில சக்தியும் நம் எண்ண சக்தியுடன் என்றென்றும் அழியாமல் சுற்றிக் கொண்டுள்ளன.

இப்பிறவிக்கு நம் எண்ணம் கொண்டுதான் வருகின்றோம்… ஈன்றவரின் நிலையினால் மட்டுமல்ல…!

நாம் பிறவி எடுத்த நற்பயனையே நற்சக்தியாக்கி… இவ்வுலகுடன் ஒன்றியே நம் உயிராத்மாவும் தொடர்பு கொண்டு… நம் பிறவிப் பயனைப் பெற்று…
1.நாம் பிறந்திட்ட உண்மை சக்தியினை இவ்வுலகில் நிலை நிறுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.
2.அகஸ்தியனைப் போன்றும் போகனைப் போன்றும் கொங்கணவரைப் போன்றும் ஒவ்வொரு நிலையிலும் நல் உணர்வு கொண்டு
3.நம்முடன் நம்மை வழி நடத்திச் செயல் கொண்டு செயலாக்கிடும் பல ரிஷிகளின் நிலை பெற்று வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இயற்கையின் சக்தி அனைத்திற்கும் பொது சக்தி. அச்சக்தியின் நல் உணர்வை ஈர்த்து நம் ஆத்மாவை நிலைப்படுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

அணுக்கதிரியக்கங்கள் உலகம் முழுவதும் பரவுவது போல் மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பரவச் செய்யுங்கள்

அணுக்கதிரியக்கங்கள் உலகம் முழுவதும் பரவுவது போல் மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பரவச் செய்யுங்கள்

 

இன்று பெரும்பகுதியானவர்கள் என்ன நினைக்கின்றார்கள்…? சாமி (ஞானகுரு) வந்தார்… ஆசீர்வாதம் கேட்டேன்…! என்னைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னார்…! அவர் தான் காப்பாற்ற வேண்டும்… என்று சாமியைத் தான் எண்ணுகின்றார்கள்.

உங்கள் கஷ்டம் எல்லாம் நீங்கிவிடும் என்று யாம் வாக்கைக் கொடுத்தால் அதை யாரும் பிடித்துக் கொள்வதில்லை…!
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெறுவீர்கள்
2.உங்கள் உடலில் உள்ள நோய்களை அது பிளந்துவிடும்
3.நல்லது நடக்கும்… அதை நீங்கள் பெறுங்கள்…! என்று தான் இங்கே உபதேசிக்கின்றோம்.

ஆனால் அதை யாரும் எண்ணுவதில்லை.

விபூதி வேண்டும்… பிரசாதம் வேண்டும்… சாமி காப்பாற்றி விடுவார் என்ற இந்த எண்ணம்தான் வருகின்றது.
1.சாமி சொன்ன வழியினைப் பின்பற்றினால் அந்த எண்ணம் நம்மைக் காப்பாற்றும் என்பது நினைவுக்கு வருவதில்லை
2.சாமி சொன்னதைப் பதிவு செய்து இந்த காற்றிலிருக்கும் நல்லதை எடுத்தால் நான் நல்லவனாவேன்… என்ற எண்ணமும் வருவதில்லை.

காரணம்… எதைக் குறிக்கோளாக வைத்து எடுக்கிறோமோ அது தான் நடக்கும்.

சாமி ஆசிர்வாதம் கொடுத்தார் என்று சிறிது நாளைக்குப் பார்ப்பார்கள்… பின் அடுத்து ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் “என்ன இந்தச் சாமி…?” என்று எண்ணிச் சென்று விடுகின்றார்கள்.

பிறர் படும் கஷ்டத்தைக் கேட்டாலே அது நம் நல்ல உணர்வை மறைத்து விடுகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் இப்படித் தன்னை மறைக்கும் நிலை வந்தால் அது சித்திரை.

அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி இதைப் பிளத்தல் வேண்டும். ஞானகுரு காட்டிய வழியில் அந்த மகரிஷியின் அருள் சக்திகளைப் பெறுவேன் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து ஒருக்கிணைந்து அதை வெடிக்கச் செய்கின்றனர். கல்லுக்குள்ளும் உலோகத்திற்குள்ளும் அணுக் கதிரியக்கம் இருக்கின்றது.

அணு ஆயுதங்களை வெடித்து அதைப் பிளக்கப்படும் பொழுது தன் இனத்தை அது சேர்த்துச் சேர்த்து ஒரு நொடிக்குள் இரும்பாக இருந்தாலும் இரும்பே உருகிக் காணாமல் போய்விடுகின்றது… கல்லாக இருந்தாலும் உருகிக் காணாமல் போய் விடுகின்றது… அதே கதிரியக்கம் தான்.

இதைப் போன்றுதான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை சிறுகச்சிறுக நமக்குள் சேர்த்து அதை நமக்குள் சேமிக்க வேண்டும் (அதுவும் கதிரியக்கச் சக்தி தான்)
2.அதை வளர்த்த பின்… நம் எண்ணத்தால் உணர்வால் எடுத்து வளர்த்த இந்த மனித உடலை… “உடல் பெறும் உணர்வை…” இது காணாது செய்துவிடும்
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நம் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும்.

ஆகவே… அந்த மகரிஷிகள் எதைப் பெற்றார்களோ அந்த வழியினைப் பெறும் நிலைகளுக்கே காரணப் பெயர் வைத்து கருத்தினைக் காட்டி “அதுவே தன்னை வாழ வைக்கும்…” என்று காவியங்கள் மூலம் நமக்குக் காட்டினார்கள்.

அதன் முறைப்படி நம் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்கி உடல் நலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நம் நினைவாற்றல் சென்று… “அவர்கள் வேறல்ல நாம் வேறல்ல…” என்ற நிலையை அடைய வேண்டும்.

அணுகுண்டுகளை வெடித்த பின் மற்றதைப் பொசுக்கி விட்டு அந்த அணுக்கதிரியக்கங்கள் உலகம் முழுவதும் எப்படிப் பரவுகின்றதோ அதைப் போன்று
1.மெய் ஞானிகளின் அருள் உங்களுக்குள் பரவி இருள் சூழும் அந்த நஞ்சினைப் பிளந்துவிட்டு
2.உலகைக் காத்திடும் சக்தியாக உங்கள் நினைவாற்றல்கள் பெருகி
3.உலக இருளைப் போக்கி… மெய்ப் பொருளுடன் ஒன்றி… மெய் ஞானிகளுடன் ஒன்றி… என்றும் பேரானந்தப் பெரு வாழ்வு நீங்கள் பெற்றிட
4.சர்வ மகரிஷிகளின் அருள் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

மனிதன் உயர்ந்த நிலை பெற ஞானிகள் காட்டிய மிக மிக எளிதான வழி – ஈஸ்வரபட்டர்

மனிதன் உயர்ந்த நிலை பெற ஞானிகள் காட்டிய மிக மிக எளிதான வழி – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகில் உதித்திட்ட அனைத்து உயிராத்மாக்களும் உயிரணுக்களும் அனைத்துமே தெய்வம் தான்.

1.தெய்வம் என்று அன்பு கொண்டு நாம் காணும் சிறு துரும்பும்
2.நாம் தெய்வம் என்று எண்ணும் நிலையிலேயே
3.நம் உயிராத்மாவும் அத்தெய்வ சக்தியைப் பெறுகின்றது.

கல்லையும் மண்ணையும் ரூபப்படுத்தித் தெய்வமாக வணங்குவதெல்லாம்
1.நம் ஆத்மாவையே அத் தெய்வ நிலையில் அன்பு கொண்டு வணங்கிடுங்கால்
2.அச்சக்தியின் திறன் நம் ஆத்மாவிற்கே பதிவு கொள்கின்றது.

உருவ வழிபாடெல்லாம்.. குண நிலையை உணர்த்திட நம் முன்னோர்கள் வழி நடத்திட்ட நல் வழி முறைகள் தாம்.

இம்மனித எண்ணங்களில் வாழ்க்கையுடன் கூடிய பல நிலைகள் கொண்ட எண்ணக் கலவையிலிருந்து
1.ஆண்டவனைப் பக்தி கொண்டு பூஜிக்கும் நிலை ஏற்படும் பொழுதே
2.ஒவ்வோர் ஆத்மாவும் அமைதி கொள்கின்றது.

பாட நிலையில் இந்நிலைகள் அனைத்திற்கும் எல்லா நிலைகளையும் புரியும்படி விளக்கியுள்ளோம். வழிப்படுத்தும் முறைக்காகத்தான் இப்பக்தி நிலை.

நாம் வாழ்ந்த… வாழும் இந்த நாட்டில் உள்ள பக்தி நிலையின் தொடர்பினால்தான் இங்குள்ள மக்களின் எண்ணத்தில் அன்பு நிலையும் சில இடங்களில் ஆத்மீக நெறி முறையும் உள்ளன.

ஆனால் இப்பூமியிலேயே மற்ற மேலை நாடுகளில் உள்ள நிலையினை அறிந்திருக்கலாம் எப்படி இருக்கிறது என்று…!

ஏனென்றால் அவரவர்கள் தான் அமைத்துள்ள வழியில்… வந்த தம் தம் தொடர்புப்படி பெற்ற… எண்ணக் கலவையின் வழித்தொடரிலேயே இன்றளவும் எண்ண நிலையுள்ளது.

ஆனால் மனித எண்ணத்தில் அனைத்து நிலைகளையும் அறியும் சக்தித் திறனுண்டு. அதை நல் நிலைப்படுத்தி… எடுத்த பிறவியின் பலனை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும் என்பதற்கே இந்தப் போதனைகள்.

பூமியின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது…?

பூமியின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது…?

 

விஞ்ஞான அறிவால் இன்றைய மனிதன் தன் அறிவைக் கொண்டு மற்ற எதிரி நாடுகளில் எத்தகைய தீங்கான நிலைகள் உருவாக்க வேண்டும் என்று எண்ணத்தால் எண்ணினோ
1.அதற்குண்டான ஆயுதங்களை (அணு, இரசாயண, கிருமிகளை) உருவாக்கியதால்
2.அந்த உணர்வின் அலைகளை எல்லாம் சூரியனுடைய காந்தசக்தி கவர்ந்து இந்தப் பூமியிலே பரமாத்மாவாகப் படரச் செய்துள்ளது.
3.அந்த விஷக்கதிரியக்கங்கள் பூமி ஈர்ப்பின் நடு மையம் அடையப்படும் பொழுது பூமியில் கொதிகலனாக மாறுகின்றது.

கொதிகலனை அதிகமாக உருவாக்கினாலும் அதனின் விளைவுகளை அவர்கள் யாரும் அறியவில்லை. காரணம்… மனிதன் தன் சுகபோகங்களுக்காகப் பல காலம் ஒரு வருடமோ பத்து வருடமோ கடல் நீருக்குள் மறைந்திருந்து (நீர்மூழ்கிக் கப்பல்) எதிரியை வீழ்த்த வேண்டும்… மற்ற நாட்டை அடக்கி ஆட்சி புரிய வேண்டும்… என்று பல ஆயுதங்களையும் அணுக் கதிரியக்கச் சக்தியால் வீரிய உணர்வு கொண்டு செயல்படுத்தினார்கள்.

இதனின் உணர்வுகள் ஹைட்ரஜன் (கண நீர்) என்ற நிலைகள் அங்கே மாறி கடல் வாழ் உயிரினங்களில் அது இணைந்து கொண்டாலும் அது எல்லாம் வீரிய உணர்வின் அணுக்களாகவே மாறுகின்றது.

ஆனால் அதை மனிதன் உணவாக உட்கொண்டு வளர்ச்சி பெற்ற பின் மனித உடலில் இந்த உணர்வுகள் சிதைந்து… மீண்டும் நலிந்திடும் நிலையே அடைகின்றது. உடலைக் காக்கும் நிலை இல்லை…!

விஞ்ஞான அறிவில் இதை எல்லாம் வளர்ச்சி என்று கண்டுணர்ந்தாலும் இயற்கையில் விளைந்த உணர்வின் தன்மை இவ்வாறு தான் அது பதிவாகின்றது.

மனிதன் விஞ்ஞான அறிவால் இத்தகைய நிலைகளைச் செய்து செய்து செய்து நாம் வாழும் இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே நச்சாக மாற்றி விட்டனர்.

இவர்கள் பரப்பிய கதிரியக்கச் சக்திகள் பூமியின் நடுமையத்தில் அடையப்படும் பொழுது
1.ஏற்கனவே இருக்கும் பாறைகளைக் காட்டிலும்
2.விஷத்தன்மை கொண்ட பாறைகளாக மாற்றிடும் நிலை வந்துவிட்டது.

அதனால் பூமியின் உள் பகுதியில் கொதிகலன் அதிகமாக உரு பெற்றபின் துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி நீர் நிலைகள் பெருகிக் கொண்டே உள்ளது.

அணுவைப் பிளக்கும் போது ஹைட்ரஜனை வைத்துக் கொதிகலனாக மாற்றி எப்படி அடக்குகின்றானோ (அடக்கும் நிலையில் வரும் கசிவுகள்) அதனால் நீர் நிலைகள் மாறி (கடல் நீர்)
1.விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட இந்த அணுவின் தன்மை நடு மையம் அடைந்து உருகிடும் நிலையில்
2.ஹைட்ரஜன் என்ற நீரின் தன்மை மீண்டும் மூடி மறைத்து இந்த உணர்வின் தன்மை அதிகமாகும் பொழுது
3.இந்தப் பூமியே மிகத் துரித நிலைகள் கொண்டு குறுகும் நிலையும் (கடல் நீர் பெருகி நிலத்தைக் குறுக்கும்)
4.குறுகிய நிலத்திற்குள் மனிதர்கள் மிகவும் விஷத்தன்மை கொண்டவர்களாகி
5.விஷப்பூச்சிகள் மற்றொன்றைத் தீண்டினால்… அது எதுவாக இருந்தாலும் எப்படி மடிகின்றதோ
6.இதைப்போல விஷத்தின் தன்மை அடையும் காலம் வந்து கொண்டுள்ளது.

ஹைட்ரஜன் எப்படி அடக்குகின்றதோ… இதைப்போல விஷத்தின் தன்மை அடக்கியபின் கொதிகலனில் வெடிப்பது போல இந்த உணர்வின் தன்மை கொண்டு கோளாக இருக்கும் பூமி நட்சத்திரமாக மாறும்.

ஆனால் இயற்கையில் விளைந்த உணர்வின் தன்மை வேறு. இன்று விஞ்ஞான வீரியத்தால் அணுக்களைப் பிளக்கச் செய்து அது எல்லாம் ஒருக்கிணைந்த நிலையில் வரும் போது
1.மற்றதைச் சுட்டுப் பொசுக்கி தன் இனத்தின் தன்மை பெருக்கி
2.அது வளரும் தன்மை வரப்படும் பொழுது “பூமியே நிலைகுலைந்து போகும்…”

அத்தகைய விஷத்தின் தன்மையைச் சேர்த்துக் கொண்ட உயிரணுக்கள் இங்கே அதிக அளவில் பெருகும் போது அது மனிதனின் வளர்ச்சியைக் குன்றச் செய்து
1.நீருக்குள்ளோ அல்லது பனிப் பாறைகளுக்குள்ளோ அடைபட்டு
2.உடலை விட்டுப் பிரிபவர்கள் அனைவரும் நச்சுத் தன்மை கொண்டு வெகு காலம் நரகத்தையே அனுபவிக்க நேரும்.

அதற்குப் பின் இன்னோரு பிரபஞ்சத்திற்குள் சென்று அடுத்த உடலாக உருவாக வேண்டும் என்றால் பல கோடிக் காலம் ஆகும்.

எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம் – ஈஸ்வரபட்டர்

எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம் – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகின் ஈர்ப்பு நிலை போன்றே… எண்ணத்தின் நினைவும் தொடர் நிலை கொண்டதாக ஒவ்வோர் உயிரணுவும் அது தோன்றிய நாள் தொட்டே உயிராத்மாவுடனும் சேர்ந்து வருவது தான்.

இவ்வுலகின் சுழற்சி நிலை வேகத்தின் நிலைக்கொப்ப அது பெற்ற ஈர்ப்பு சக்திதான் இந்த உலகிற்கு உண்டு. அந்த நிலை போன்றே… நம்முடனே வளர்ந்திட்ட அமில நிலைக்குகந்த எண்ண சக்திதான் ஒவ்வொருவருக்கும் உண்டு.

பல நிலை கொண்ட குண நிலைகள் அமைவதெல்லாம்
1.நம்முள் உள்ள நாம் ஈர்த்துச் சேமித்த உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே
2.வளர்ந்த நிலை கொண்ட… குண நிலை கொண்ட நாம்
3.அந்நிலைக்கே… அச்சுழற்சியுடனே… இன்று வரை வழி நடந்தும்
4.எண்ண நிலை பெற்றும் வாழ்ந்து வருகின்றோம்.

எப்பிறவிக்கு வந்தாலும் நாம் நம் உயிரணுவுடன் சேமித்த அமில சக்தியுடன் தான் (உயிராத்மாவில் விளைந்தது) இன்றளவும் வாழ்ந்து வருகின்றோம்.

பல உலோகங்களும் தாவரங்களும் அதனதன் நிலைக்குகந்த அமிலத்தை ஈர்த்து ஒரே நிலை கொண்ட தன்மையில் வளர்கின்றன. பல உலோகங்களும் திரவங்களும் ஆவியான தன் இனத்திற்கு உகந்த இனத்தையே மேன்மேலும் ஈர்த்துச் செயல்படுகின்றன.

வான மண்டலத்தில் இடியும் மின்னலும் ஓர் இனத்துடன் மற்றோர் இன அமில நிலை மோதிடும் பொழுது “சத்ரு… மித்ரு…” நிலையினால் ஏற்காத நிலையில் இடியும் மின்னலும் ஏற்படுவதாக உணர்த்தியுள்ளேன்.

இவ்வுலகினில் மற்ற எல்லா மண்டலமும் அதனதன் இனத்துடன் தான் வாழ்கின்றன. ஆனால்…
1.இம்மனித ஆத்மா நிலை கொண்ட நம்மால்
2.நம் இன நிலையான இவ்வெண்ண நிலையை
3.நாம் எடுத்திடும் சுவாச நிலையினால் நல் நிலைப்படுத்திட முடியும்.

மண்டலங்களுக்கும்… மண்டலங்களில் தோன்றி வளர்ந்திடும் இயற்கை வளங்களுக்கும்… மற்றத் தாவர இன வர்க்கங்களுக்கும் எவற்றுக்குமே இம் மனித உடல் கொண்ட ஆத்மாவுடன் கூடிய நாம்… வாழ்ந்திடும் இந்த மனிதப் பிறவியின் பாக்கியத்தை… நம்மால் நம் நினைவினில் நமக்குகந்த நிலையினை ஈர்த்து வாழ்ந்து காட்ட முடியும்.

ஆனால்…
1.எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம்.
2.வெறி உணர்வுக்கும்… பேராசைக்கும் அடிமை கொண்டு… பக்தி நிலையை வளர்த்தாலும் பலன் பெறுவது கடினம்.
3.பக்தி என்பதனையே அடிமைப்படுத்திடும் நிலையாக்கிடாமல்
4.அவரவர்களின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அன்பாக்கி
5.அந்நிலையின் தொடரினால் ஜெப நிலையில் நல்லுணர்வு கொண்ட அமிலத்தையே நம் ஆத்மாவின் சொத்தாக்கி
6.மாறப் போகும் கலியில் இருந்து மீண்டு பல மகரிஷிகளுடன் கலந்திடலாம்.
7.இன்று இவ்வுடலில் நாம் சேமித்த ஒளி சக்தியின் தொடர்புடனே மனித வாழ்க்கைக்கும் உயர்ந்த வாழ்க்கையான
8.மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழும் நிலை பெற்றிடலாம்..!

இப்பூமியின் அமில சக்தி உன்னத சக்தி. அனைத்து நிலைகளும் கலந்த சக்தி. இப்பூமியின் தன்மை மாறுபடத்தான் போகின்றது. சூரியனின் நிலையும் மாறுபடத்தான் போகின்றது. ஆனால் நம் எண்ணத்தில் எண்ணிடும் நிலையில் இல்லை.

சூரியனையே நெருப்புக் கோளமாக எண்ணுகின்றனர். ஆனால் அது குளிர்ந்த பூமி. எச்சக்தியையும் அறிந்திடும் நிலை இம்மனித ஆத்மா ஒன்றுக்குத்தான் உண்டு.

யாம் உணர்ந்த ஆத்மீக நெறியையே அனைத்து உலக நிலைகளையும் உணர்த்திட்டால் “நான்…” என்ற அந்நான் நிலை வந்துவிடும்.

1.ஆத்மீக நெறியினில் அன்பு கொண்டே ஜெபம் கொண்டு அறிய வருபவர்களுக்கு
2.அந்நிலையின் தொடரை வழிப்படுத்தி
3.அனைவருக்கும் பொதுவான சக்தியின் சக்தியை உணரும் நிலையை
4.எமக்குக் கிட்டிய சக்தியின் வழித் தொடரை வழிப்படுத்துகின்றோம் (ஈஸ்வரபட்டர்).

பனிரெண்டு மாதங்களிலேயும் நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப் பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்

பனிரெண்டு மாதங்களிலேயும் நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப் பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்

 

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை அனைவரும் எளிதில் பெறும் வண்ணம் அருள் ஞான வித்தை உங்களுக்குள் பதியச் செய்கிறோம். ஆக… சித்திரையை நீக்கிக் கனியின் தன்மை அடைய வேண்டும்.

உயிரான அந்த ஒளியின் வித்தைக் கொண்டு நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் அந்த ஒளியின் வித்தாக மாற்றிடல் வேண்டும்.

அது தான் சித்திரைக்கனி என்ற நிலைகள் கொண்டு
1.அந்தக் கனியின் தன்மை அடைந்தால் தான் நாம் முழுமை அடைய முடியும்.
2.உயிரான உணர்வை ஒளியாக நாம் பெற்று என்றும் பேரானந்த நிலை என்ற பெரு நிலையை அடைய முடியும்.

அதைப் பெறச் செய்வதற்கே உபதேசிக்கின்றோம்.

1.சித்திரை என்பது நமக்குள் எடுத்துக் கொண்ட சிறு திரைகளை மாற்றி அமைக்கின்றோம்.
2.வைகாசி… தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளியைக் கொண்டு “தனக்குள் தெளிவாக்கு…” என்பது.

ஒவ்வொரு மாதமும் இப்படித் தெரிந்து தெளிந்து கொள்வதற்காகத்தான் பன்னிரெண்டு மாதங்களிலும் விழாக்களை அமைத்தார்கள் ஞானிகள்,

பன்னிரண்டு இராசிகளையும் ஒவ்வொன்றாகத் தாண்டிப் போகும் போது இந்த இராசியைச் சுத்தப்படுத்தி விட்டு அடுத்த இராசிக்குச் செல்லும் பொழுது மீண்டும் குறைகள் வந்தால் அந்த இராசியைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படிப் பன்னிரண்டு மாதங்களிலேயும்
1.ஒவ்வொன்றையும் சுத்தப்படுத்தி
2.நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப்
3.பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் இதை அறிந்து கொள்ளச் சொன்னார்கள்.

ஆகவே… இந்தப் பனிரெண்டு மாதத்தையும் வீணாக்கி விடாது ஒவ்வொரு காலப் பருவத்திலும் எந்தெந்த நிலைகள் வருகின்றதோ எல்lலோரையும் உண்மைகளை உணரச் செய்…! என்றார் குருநாதர்

அவர்கள் யார்…? என்ற நிலையை அந்த மெய்யை அவர்களை அறியச் செய்து… அருள் உணர்வின் தன்மை பெறச் செய்து… எந்த அளவில் அவர்கள் அதைப் பெறுகின்றனரோ
1.அதைக் கண்டு நீ மகிழ வேண்டும்…
2.அந்த மகிழ்ச்சி பெறும் சக்தியாக உன்னில் நீ வளர்த்திடல் வேண்டும் என்று எனக்கு உபதேசித்தார்.

அவர் உபதேசித்த அந்த உணர்வின் வழிப்படித் தான் குரு அருளை உங்களில் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குள் திரு அருளாக மலர்ந்து
2.மெய்ப் பொருளைக் கண்டுணரும் அருள் சக்தி பெற்று
3.இந்த வாழ்க்கையில் கனியின் பருவம் (ஒளி நிலை) பெறும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்.

சுவாச நிலையின் மகத்துவம் – ஈஸ்வரபட்டர்

சுவாச நிலையின் மகத்துவம் – ஈஸ்வரபட்டர்

 

நாம் ஈர்த்து வெளியிடும் சுவாசத்திற்கு “ஈர்க்கும் நிலையை ஒத்த சக்தியே…” நாம் வெளியிடும் சுவாச சக்திக்கும் உண்டு.
1.நாம் எடுக்கும் சுவாசத்தை நேராக நம் உயிரணு ஈர்க்கிறது
2.உயிராத்மா ஈர்த்த நிலையில் அச்சக்தி நம் நெற்றியில் வந்து பாய்ந்து…
3.இவ்வுடல் அனைத்திற்கும் நாம் ஈர்க்கும் சுவாசம் பரவுகிறது.

எந்த நிலையில் அந்த ஈர்த்த நிலை செயல்படுகின்றதோ அந்நிலை போன்றே நாம் வெளிப்படுத்தும் சுவாசமும் வெளிப்படுகின்றது. நாம் எடுத்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலையினால்தான்… நம் நினைவலைகளும்… சப்த ஒலிகளும்… நாம் காணும் பிம்ப ஒலிகளும்.. நமக்குத் தெரிகின்றன.

இச்சுவாசத்தின் நிலை கொண்டேதான் அனைத்துச் சக்தி நிலைகளையும் நாம் செயல்படுத்துகின்றோம். இந்நிலையில் நாம் செயல்படுத்திடும் நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாச நிலை நம் உயிராத்மாவுடன் கலந்துதான் நம் உடல் நிலையும் நம்மைச் சுற்றியுள்ள ஒலி ஒளி அலைகளும் உள்ளன.

இச்சுவாச நிலை என்னும் பொக்கிஷ நிலையை நாம் உணர்ந்திட வேண்டும். எந்தெந்த நினைவலைகளுடன் நாம் இருக்கின்றோமோ அந்த நினைவலைகளுடன் நம் எண்ண நிலை உள்ள பொழுதில்… நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தில் நம்முடன் ஒலியாகவும் ஒளியாகவும் அனைத்து நிலைகளும் சுற்றிக் கொண்டுதான் உள்ளன.

நம் வாழ்க்கையில் நடந்த பழைய நினைவுகளை நாம் எண்ணிடுங்கால் “அன்று நாம் கண்ட அக்காட்சியின் பிம்பமும்… ஒலி அலைகளையும்…” நாம் கண்டு கொண்டுதான் உள்ளோம்.

நாமாக நினைவுபடுத்திக் கற்பனையாக அக்காட்சியை நம்முள் காண்பதாக எண்ணுகின்றோம். நாம் எண்ணும் நிலைப்படி அல்லாமல்… ஒலி அலைகளைப் போலவே இவ்வொளி அலைகளும் நம் உயிராத்மா தோன்றிய நாள் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையுடன் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளன.

1.நம் நினைவை ஒரு நிலைப்படுத்தி பல எண்ணங்களின் நினைவின் மோதலைத் தாக்கவிடாமல்
2.ஒரே நினைவுடன் நல்லுணர்வு கொண்ட நிலையில்
3.அவரவர்களுக்கு உகந்த அன்புருவம் கொண்ட எவற்றையும் ஒரே நிலையில் நம் எண்ண சக்தியில் செலுத்தி
4.அந்நிலையில் நாம் எடுத்திடும் சுவாசத்தின் சக்தியினால்
5.நம் உயிராத்மாவில் கலந்து வெளிப்பட்ட அனைத்து நிலைகளையும் அறிந்திடலாம்.

நாம் நம் ஆத்மாவுடன் கூடிய நிலையினைத்தான் அறிந்திடும் நிலையை இந்நிலையில் வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்நிலை போன்றே நாம் உள்ள நிலையில் நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இப்பூமியும் இப்பூமியைச் சார்ந்த அனைத்து நிலைகளையும் நம் எண்ண சக்தியையும் ஒரே நிலையில் பாய்ச்சும்போது நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் அக்காந்த நிலை கொண்ட இச்சுவாச சக்திக்கு நம் எண்ணமுடன் நாம் எண்ணிடும் இடத்திலுள்ள நிலைகளையெல்லாம் அறிந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் காந்த நிலை கொண்ட அமிலக் கற்களைப் பதிய வைத்துப் பல அலைவரிசைகளை ஓர் இடத்தில் ஒலிபரப்பப்படும் ஒலியையே இருந்த நிலையில் இவ் வானொலியின் மூலமாக அவ்வலை வரிசையிலேயே மோதவிடும் பொழுது அங்கு நடக்கும் ஒலியின் அலையையே வானொலியின் மூலமாக நாம் கேட்கின்றோம்.

இந்தக் காற்றினில் கலக்கவிட்டுத்தான் விஞ்ஞானியும் பல செயல்களைச் செய்கின்றான்.
1.இக்காற்றையே சுவாசித்து நம் உயிராத்மாவுடன் மோதவிட்டு
2.அந்நிலையிலேயே எம்மண்டலத்திற்கும் நம் எண்ண நிலையைப் பாய்ச்சி
3.நாம் அந்நிலையில் எடுத்திடும் சுவாசத்தின் அலைகள் நாம் வெளிப்படுத்திடும் நிலையில் அங்கும் பாய்ந்து
4.எங்குள்ள நிலையையும் நம் உயிராத்மாவின் சக்தியுடன் நாம் இருந்த நிலையிலேயே அறிந்திடலாம்.

இத்தியான நிலையில் ஆரம்ப பக்குவ நிலையில் ஞானம் கொண்ட நிலைக்கு வந்திட்டால்… நம் விழியை நாம் மூடி அமர்ந்துள்ள நிலையிலேயே அறிந்திட முடியும்.

பக்குவ நிலைக்குப் பதம் பெற்றுச் செல்லச் செல்ல… இவ்விழியைத் திறந்தே
2.உள்ள நிலை அனைத்தையும்… நம் எதிரிலுள்ள பிம்ப நிலைகளையும் தாண்டி
3.எங்குள்ள நிலையையும் நாம் அறிந்திட முடியும்

ஞானமும் சித்தும் இவ்வாத்மீக நெறியிலுள்ள எந்த நிலைக்குகந்த சக்தி நிலை பெறவும் இவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி… “சிறுகச் சிறுகப் பெருகச் செய்து… வழி நடந்திடல் முடிந்திடும்…”