சகுனியின் சூதாட்ட சூழ்ச்சி

சகுனியின் சூதாட்ட சூழ்ச்சி

 

உதாரணமாக (பிறரிடம்) நம் காரியத்தைச் சாதிக்க வேண்டும்… பணம் வாங்க வேண்டும் என்றால்… நண்பன் (அல்லது அதற்குண்டானவர்கள்) எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை வரும். அப்படி ஏற்றுக் கொள்ளும் தன்மை வரப்படும் பொழுது சாந்தமாகும்.

சாந்தமான நிலைகள் வரப்படும் பொழுது “தர்மன்” என்ற நிலை அடைகிறது.

சாந்தமான நிலை வருவதற்கு முன் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளின் தன்மை எது இருந்தாலும்
1.காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு…
2.நம் மனதை அடக்கிச் செயல்படுத்தும் பொழுது
3.நம் எண்ண வலுவில் தன்மைக்குள் நண்பனின் உணர்வு நமக்குள் திணிக்க்கப்படுகிறது… அப்பொழுது அதன் வலு தான் “அர்ஜுனன்…”

நமக்குப் பணம் தேவைப்படுகின்றது (நண்பனின் தயவு) என்று கண் கொண்டு நண்பனை உற்றுப் பார்க்கின்றோம். ஆறாவது அறிவால் மனதை அடக்கி… அவர் சொல்வதை எப்படியும் நாம் கேட்டாக வேண்டும். ஏனென்றால் கேட்டால் தான் நமக்குச் சலுகை கிடைக்கும். அவன் சொல்லும் உணர்வுகள் அர்ஜுனன் வலிமையானது.

ஏனென்றால் அந்த நண்பன் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் என்ற நிலையில் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அதை நுகர்ந்தால் அர்ஜுனன்.

நண்பன் பேசும் உணர்வுகளைக் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்ற அணுத்தன்மை அடைகின்றது. அந்த உணர்வின் சத்தி அதை இயக்கக்கூடிய பரப்பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து சரஸ்வதி ஆகின்றது… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

அந்த அணு இப்படிக் கவர்ந்து கொண்டால் அந்த ஞானத்தின் வழியே அதனின் வித்தாகிறது.

இருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளாத மனமாக இருக்கப்படும் பொழுது
1.பணம் வாங்கும் காரியத்திற்காக ஏற்றுக் கொள்கின்றோம்.
2.ஆனாலும் அதை இந்த மனது ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் ஏற்றுக் கொள்கின்றது.

இதைப் பார்த்து மற்றவர்கள்… என்ன…? அவருடன் இப்படிக் கூடிக் குழாவுகின்றாய் என்று கேட்பார்கள். என்ன செய்வது…! அவரிடம் காசு வாங்க வேண்டி இருக்கின்றது அல்லவா. இல்லை என்றால் எப்படிக் கிடைக்கும்…? என்ற நிலையில் இருக்கின்றோம்.

அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
1.அதைத்தான் சூழ்ச்சி என்பதாக… சூதாட்டம் ஆடுவதாக
2.சூட்சும நிலைகள் கொண்ட “சகுனி” என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

சகுனி தாயக் கட்டைய உருட்டுவது போல் நம் காரியத்தை எண்ணி அதை நாம் உருட்டி எடுக்கின்றோம். அதாவது நாம் என்ன செய்கின்றோம் என்றால்
1.நம் காரியத்தைச் சாதிப்பதற்காக அவருடைய எண்ணத்தை “உருட்டி” எடுக்கின்றோம் “சூதின் மூலமாக…!”
2.அப்போது நாம் ஜெயித்து விடுகின்றோம் (பணத்தை வாங்கிவிடுகின்றோம்)

முந்தி அவர்கள் நல்லதைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள்… அப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பணம் வாங்குவதற்கு மட்டும் உள்மனதாக வைத்து இதைக் கலந்து ஏற்றுக்கொள்ளும் அந்த உணர்வு ஆகிறது.

பணம் வாங்கி ஓரளவுக்கு வசதியாக ஆன பிற்பாடு என்ன செய்கின்றோம்…? சமயம் வரும்பொழுது அவருக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வோம்…! (எல்லோருமே இதை அனுபவத்தில் பார்த்திருப்போம்)

சகுனி தாயம் போட்டு சூதாட்ட விளையாட்டிலே தோற்கடித்து விட்டேன் என்ற நிலை வருகிற மாதிரி நமக்குள் சூதின் உணர்வுகள் வந்து விடுகிறது.

முதலிலே அந்த நண்பனின் உணர்வுகள் அர்ஜுனன் ஆகின்றது. அவன் எதையுமே குறிவைத்துத் தாக்கும் தன்மை பெற்றவன். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் “நகுலன்” உடலுக்குள் அது இணைந்து செயல்படும் தன்மை வருகின்றது.

நாம் எண்ணும் ஆந்த உணர்வை உயிரிலே சேர்த்து… சேர்த்துக் கொள்ளும் உணர்வாக எண்ணும் போது அதற்கு இடம் கொடுக்கின்றோம். அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது “சகாதேவன்…” ஆகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஏற்றுக்கொண்டால் “பீமன்” ஆகின்றது. அவர் சொன்ன உணர்வு அந்த வலுவும் நமக்குள் வருகின்றது. பீமன் என்ற அந்த வலுவான உணர்வுகள் ஆனால் அதன் வழி தர்மன் ஆகின்றது

நம் உடலுக்குள் இத்தனை போர் நடந்து கொண்டிருக்கின்றது

இருந்தாலும்… நம் எண்ணங்கள் அவரை ஏமாற்றும் விதமாகச் செயல்படும் பொழுது
1.”சகுனி…” நமக்குள் இருந்து அதன் உணர்வாகக் கலந்து தான் நமக்குள் ஏற்றுக்கொள்கிறதே தவிர
2.நண்பன் நமக்கு நல்லதைச் சொன்னார் என்ற நிலையில் ஏற்கும் பருவமில்லை.

இப்போது இங்கே தியானம் செய்கின்றோம் என்றால்… பல வகைகளிலும் பலவிதங்களை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றோம்.

எப்படியோ தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும்… தியானம் செய்தால் நமக்கு நல்லதாகும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் வருகிறோம்.

அவ்வாறு ஆசைப்பட்டு சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகள் தான் .வரும். நாம் எண்ணிய அந்த உணர்வுகள் பதிவாகிறது. பதிவின் உணர்வு மீண்டும் நினைவாகும் பொழுது நம்மை இயக்குகின்றது.

நாம் எந்தத் தொழிலின் நிமித்தம் இணைத்து “இந்தத் தியானத்தைச் செய்தால் நாம் நன்றாக இருப்போம் என்று எண்ணினோமோ…” அதன் எல்லை வரை இது வளரும்.

தான் எதிர்பார்த்த நிலைகள் இல்லை என்றால் உடனே குருக்ஷேத்திரப் போராகிறது. எங்கே…? இந்த உயிருக்குள்…!
1.இவ்வளவு நாளும் என்னத்தைத் தியானத்தைச் செய்து என்ன பலன் கிடைத்தது…? என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.எண்ணியபடி நடக்கவில்லை என்றால் இந்தப் போர் நடக்கின்றது.
3.தியானத்திற்குப் போவோமா வேண்டாமா…!
4.தியானத்தைச் செய்வோமா வேண்டாமா…? என்ற இந்த உணர்வு வந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்கும் நமக்குள் உயிரிலே இந்த குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டே உள்ளது. ஏனென்றால் நம் உணர்விற்கும் புறத்திலிருந்து வரக்கூடிய நிலைகளுக்கும் இந்த வித்தியாசம் ஆகிறது.

அதனால் தான்… நாம் நம் மனதைக் குவிக்க வேண்டும்… அனைத்து உணர்வுக்குள்ளும் பகைமைகளை அகற்றிய ஞானிகளின் உணர்வுகளைச் சேர்த்து உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டும்… ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வருகிறோம்.

“மனம் தான் நம்முடைய பகைவன்…!”

“மனம் தான் நம்முடைய பகைவன்…!”

 

காலம் குறுகியது என்று பல முறைகள் உரைத்திட்டோம் அதை எத்தனை பேர் அறிவில் தெளிந்து கொண்டனர்…?

பேரண்ட சூட்சும இரகசியத்திற்குள்… காலத்தின் நிலையால்
1.இதுவரை கடந்து சென்றிட்ட வெகு நீண்ட கால நிகழ்வுகள்…
2.எதிர் கொள்ள இருக்கின்ற வெகு நீண்ட காலத்தின் நியதிகள்…
3.இதிலே உன்னுடைய பங்கு எவ்வளவு என்று கூற முடியுமா…?

பேரண்டத்தின் அளவீட்டில் மானிடப் பிறப்பு என்பது அணுவிற்குள் அணுவே. ஈர்த்து உயர்த்திக் கொண்டிடும் செயல் வேகம் கண்டாயா…?

மனிதன் என்ற ஜீவ பிம்ப வாழ்க்கையின் குறுகிய காலத்தினை அறிந்து கொண்டு காலச்சக்கரத்தில் அனைத்தும் மறைந்துவிடும் மாயை…! அதுவே புனிதமாகத் தோன்றும் செயலின் சித்து. சித்து என்பது எதுவப்பா…?

ஜடப்பொருளாகப் புறப்பொருள் காட்டுவது சித்து விளையாட்டு.

சிருஷ்டியின் சித்து சகலமாய்ச் சகலமும் தோன்றிடும்… ஜீவ பிம்பம் காட்டிடும் அனைத்து பொருட்களும்… மற்றும் அதனுள் அடங்குவது ஜடப்பொருள்களும் தான்.

சித்தன் நிலை பெற்றால் சித்து நிலை விளங்கும்.

சகலமும் பொருள்கள் என்றே உரைத்திட்டோம். காலம் குறுகியது என்பதை உணர்ந்து விட்டால் நாம் உரைத்த சகல பொருட்களின் தன்மையும் விளங்கும்.

தோன்றி மறையும் அனைத்தும் வேகம் வேகம் வேகம் தான்…! நிலை பெற்றிடும் பொருள் எது…?

மனித மனத்தின் சிந்தனை ஓட்டம் செயல்படுவதை ஊன்றிப் பார்த்திருப்பாய். இந்தப் புற உலகத்தில் வாழும் வாழ்க்கைக்கே பொருள் தேடுகின்ற மனிதனின் ஆசைக்கு எல்லை உண்டா…?
1.பொருள் தேடும் சிந்தனையில் பேராசை வயப்படுகின்றான்… அந்தப் பொருளுக்காக உலகினை நேசிக்கின்றான்.
2.பொசுக்… என பொருள் மறைந்தால்…? உலகின் கண் பகைமை காட்டுகின்றான்.
3.மனித மனத்தின் முரண்பாடே ஒரு பொருளாக இரு செயல் நிகழ்வுற்று
4.அந்த இரண்டிலும் பாதிப்புக்கு உள்ளாவது பகைதான்… “மனது தானப்பா பகை…!”

இவைகளில் உழலுகின்ற மனிதன் “நிற உலகு…” ஒன்று இருப்பதை அறியவா போகின்றான்…? அந்த வட்டச் சுழற்சியில் இருந்து விடுபட்டு உயரவே இவ்வளவு “கடுமையாக உரைக்கின்றோம்…”

நிற உலகு என்பது “ஒளிதானப்பா…”

இகழ்ந்துரைக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். உலகம் பழிக்கின்ற செயல் இது என வழிகளாக நெறிமுறைகள் வகுத்துத் தந்த மாமகான்கள்… நன்நெறியில் வளர்ப்பாக்கும் செயலில் மனிதன் தெய்வநிலை பெற்றிட மெய்ஞானச் சுடராக விளங்கிட போதனைகள் உரைத்திட்டனர்.

இகழ்ந்துரைக்கும் நிலை மாற்றுகின்ற மனம் வேண்டி உறுதியாக நிலை நின்று மனிதன் செயல் கொண்டால் “உட்பொருள்… தன் பகை நீக்கும்…”

பாடநிலையின் ஆரம்பத்தில் கொடுத்த வினாவிற்கே வருகின்றோம்.

1.மனிதன் புறப்பொருளைப் பிரிந்த ஏக்கத்தால் பேராசையின் அதிர்வு கொண்டிட்ட ஆவேசம்
2.வெறுப்பின் சிந்தனையில்… புற உலகினைப் பகைப்பதாக எண்ணித் தன் மனதையே தான் பகையாக்கி
3.வாசம் செய்திடும் இறை சக்தியை… உட்பொருளை… அகத்தின் அருட் சிந்தனையை… பகை உணர்வு கொண்டுவிடுகின்றான்.

அப்படிப் பகை கொள்கின்ற (தனக்குள்… தனக்குத் தானே) செயலின் வீரியம் எந்த நிலை பயக்கும்…? என உணர்ந்திருப்பாய்.

1.”உட்பொருள்…” தன் பகை நீக்கும் வழி வகைதனைக் காட்டி விட்டோம்
2.தியானத்தின் மேன்மையை அக உணர்வால் உண்ணல் வேண்டும்

சித்து… சடம்… இரண்டிலும் “ஈஸ்வர ரூபம்…” மனித மனத்தின் அகலவொண்ணா பொருள் அதுவே. அதைப் பெற்று உயர்ந்திட எனது ஆசிகள்.

பிள்ளைகளும் சந்ததியினரும் நன்றாக வாழ… செல்வத்தைத் தேடினாலும் கடைசியில் நமக்குள் எதைச் சேர்க்கின்றோம்…?

பிள்ளைகளும் சந்ததியினரும் நன்றாக வாழ… செல்வத்தைத் தேடினாலும் கடைசியில் நமக்குள் எதைச் சேர்க்கின்றோம்…?

 

எல்லோரும் அன்புடன் பண்புடன் சகோதர தத்துவத்துடன் பழகுகின்றோம். நம் முன்னோர்கள் மூதாதையருடன் பழகுகின்றோம்.. நம்மைக் காத்திட அவர்கள் எத்தனையோ சிரமங்கள் பட்டார்கள்.

நம்மைக் காப்பாற்றுவதற்காக சொத்தையும் செல்வத்தையும் அவர்கள் தேடி வைக்கின்றார்கள். ஆனால் செல்வத்தைத் தேடும் போது அதற்காக வேண்டி “எனக்கு இப்படிச் செய்தானே…” என்று எத்தனையோ நிலைகளில் வேதனைள் பட்டு… பல அவஸ்தைப்பட்டுகள் பட்டுத் தான் சேர்த்து வைக்கின்றார்கள்.
1.அந்த வேதனை அவர் உடலுக்குள் நோயாக மாறுகிறது
2.அவர் உடலில் விளைந்த வித்து அது.

கடைசியிலே நாம் என்ன செய்கின்றோம்…? “இப்படி நோயாகி விட்டாரே…” என்று எண்ணங்களை எண்ணும் பொழுது அவருடைய உணர்வுகள் “நம் உடலில் பரம்பரை நோயாக வருகின்றது…”

சேமிக்க வேண்டும் என்பதற்காக (மிச்சம் பிடிக்க வேண்டும் என்று) எவ்வளவோ கஞ்சத்தனமாக இருந்து… தான் சாப்பிடாமல் இருந்து நம்மையெல்லாம் ராஜாவாக வளர்த்தார். ஆனால் அதே உணர்வுகள் நமக்குள் வந்து செயல்படத் தொடங்குகின்றது.

அவர் சரியாகச் சாப்பிடுவதில்லை… தன் பேரப்பிள்ளைகள் எல்லாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றார். தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் அவர் கஞ்சத்தனமாக இருக்கின்றார்.

இருந்தாலும் இந்த உணர்வு கடைசியில் நோயின் தன்மை ஆகி பாசத்துடன் நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வு நமக்குள் வந்துவிடுகிறது.

தன் பிள்ளையைக் காக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அந்த நிலையில் வியாபார நிமித்தம் ஒருவருக்குக் கடன் கொடுக்கின்றார். ஆனால் அவரோ ஏமாற்றி விடுகின்றார்.

பாவிப்பயல் என்னை ஏமாற்றி விட்டான். நான் எத்தனையோ கஷ்டப்பட்டேன் என் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று. இந்த மாதிரிச் செய்து விட்டானே என்று வேதனை வந்தால்
1.சாகப் போகும் போது அவன் மீது தான் நினைவெல்லாம் செல்லும்.
2.எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என் பிள்ளைகளைக் காக்க முடியாதபடி தெருவிலே விட்டான் என்ற இந்த நினைப்பு தான் வரும்

காக்கும் உணர்வு கொண்டு நம்மையெல்லாம் அவர்கள் காத்தாலும் அவர் உணர்வு நமக்குள் வந்தபின் வேதனையாகி உடலை விட்டுச் செல்லும் பொழுது எங்கே செல்வார்…?

பழி தீர்க்கும் உணர்வுடன் தன்னை ஏமாற்றியவன் உடலுக்குள்ளே தான் செல்வார். அப்போது இருப்பிடம் எதுவாக மாறுகின்றது…? அங்கே மாறி விடுகின்றது.

ஆகவே நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்கள் இன்னொரு உடலுக்குள் போகாமல் தடுப்பதற்கு நாம் என்ன வைத்திருக்கிறோம்…?

விநாயகர் தத்துவத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அதை வைத்து முன்னோர்களை நாம் விண் செலுத்த வேண்டும்.
3.அவர்களைப் பிறிதொரு உடலுக்குள் போக விட்டுவிடக் கூடாது.

கடன் வாங்கியவர்கள் திரும்பத் தரவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று தனக்குள் வலுவாக்கிய பின்… அவர் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் அந்த வலிமை பெற வேண்டும் நல்ல ஞானம் அவருக்குள் வளர வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சமைத்து இந்தச் சொல்லாக சொல்ல வேண்டும்.

ஆனால் அதே சமயத்தில் நமது எண்ணங்கள் மாறிவிட்டால்… வாங்கிச் சென்றவனுக்கு “நான் கொடுக்க மாட்டேன்…” என்று கூட சிந்தனை வரும்.

ஏன்… எதனால்…?

உதாரணமாக… தீமை செய்கின்றான்… எனக்குக் கடும் துரோகம் செய்தான் என்று நாம் எண்ணினால் இந்த உணர்வு அவனைத் தாக்கி எப்படி அவனுக்குப் புரையோடுகின்றது.

எனக்கு துரோகம் செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணினால் தொழில் செய்யும் இடத்தில் இயந்திரத்தில் அவன் வேலை செய்தால் ஆபத்தில் சிக்கி விடுகின்றான்.

உணவு உட்கொள்ளும் பொழுது ஈதே உணர்வுகள் ஊடுருவினால் அது புரையோடி அந்தச் சந்தர்ப்பம் அவனுக்குத் திக்கு முக்காடலாகி ஆகிறது

இதே போன்று அருள் ஞானிகளின் உணர்வை நாம் எடுத்து
1.கடன் வாங்கியவன் உணர்வை நமக்குள் மாற்றி… நமக்குள் வராது தடுத்து
2.இப்படித்தான் அவன் இருக்க வேண்டும்…
3.பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடிய சக்தி அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த வலுவின் தன்மை அங்கே ஊட்டி
4.நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பண்புகளை எண்ணினால் உதவி செய்யும் பண்புகளை நிச்சயம் அங்கே வளர்க்க முடியும்.
5.இத்தகைய சிந்திக்கும் தன்மையை அவனுக்கு ஊட்டி நம் பணத்தைத் திரும்பப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தையும் உண்டாக்கலாம்.

ஆனால் சாபமிடும் உணர்வுகளும் வெறுக்கும் உணர்வுகளும் கொண்டு நாம் எண்ணினால் அவனால் வளர முடிவதில்லை. அவன் கடனைத் திரும்பக் கட்ட முடியாத நிலையாகி விடுகின்றது.

கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும் ஆனால் திட்டும் போது ரோசம் வரும். ஏன்டா…! பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுகின்றாயா…? என்று நாம் திட்டுவோம்.

இந்த உணர்வின் தன்மை பதிவான பின் அவன் வாழ்க்கையில் தொழிலே நஷ்டமாகிவிடும். அப்படி ஆகி விட்டால் பணத்தை எப்படி நமக்குத் திரும்பக் கொடுப்பான்.

நான் கொடுத்தேன் அவன் ஏமாற்றி விட்டான் என்று தான் நாம் பேச முடியுமே தவிர அவனுக்கு நல்ல பண்புகளை ஊட்ட முடியாது. தீமையான உணர்வுகள் அவனுக்குள் அறியாமல் இயக்குவதை நமக்குள் சேர்ப்பதா அல்லது அதைச் சேராமல் தடுப்பதா…?

ஆகவே அருள் உணர்வை எடுத்து நம்மைத் தூய்மைப்படுத்தி
1.அவனுக்கு வருமானம் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வு நமக்கு நிம்மதி கிடைக்கும்.
2.பத்து ரூபாய் கொடுத்தாலும் 100 ரூபாய் கிடைக்கின்ற மாதிரி செய்ய முடியும்.
3.இந்த வலிமை கொண்டு நம் வியாபாரமும் பெருகும்.

அதே சமயத்தில் இந்த உணர்வு அவனுக்குள் பாயும் போது கடன் வாங்கி இத்தனை நாள் ஆகிவிட்டது என்று அவனும் நினைப்பான். பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அவனுக்கும் வரும்.

இது எல்லாம் வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்துப் பழக வேண்டிய “நுணுக்கமான விஷயங்கள்…”

ஏனென்றால் மனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா.
1.தீமை என்று தெரிந்தாலும் தீமையை நீக்கக் கற்றுக் கொள்வதே அதனுடைய சிறப்பு.
2.அதைச் செயல்படுத்துவதற்குத் தான் உபதேச வாயிலாக ஞானத்தைப் போதிக்கின்றேன் ஞானகுரு).

மனிதனுடைய விதியும்… ஞானியரின் விதியும்…!

மனிதனுடைய விதியும்… ஞானியரின் விதியும்…!

 

பூமியின் இயக்கச் சுழற்சி அது கதியுறும் ஓட்ட அமைப்பு தொடர்பு கொண்ட கோளங்களாக சூரியக் குடும்ப அமைப்பில் அவை அவை ஈர்த்திடும் நிலைக்கொப்ப வளர்க்கும் வளர்ப்பாக்கி… காலத்தின் சுழற்சியாக இயற்கையின் நிகழ்வில் பூமியில் நடைபெறும் மாற்றங்களை… மனிதன் “விதி” என்று உரைக்கின்றான்.

உடல் நலக் குறைவுபடும் காலத்தை நோய் என்று பெயரிட்டு மருத்துவர் அளிக்கும் சிகிச்சையுடன் நோயின் குணம் நாடிப் பத்தியமும் இருக்கின்றோம்.
1.மருத்துவர் அளித்திடும் மருந்தினைக் “கசப்பு” என்று விலக்கிடுவோமா…?
2.இங்கு நோயைப் போக்க வேண்டும் என்ற கருத்தே முதன்மையாகின்றது.

மனிதச் சரீரமும் பூமியும் ஒன்றே. கருத்தொன்றும் செயல் என விலக்கிடுவோமா…? ஆனால் கருத்தொன்றும் செயல் என்பான் மெய் ஞானி.

பூமியின் இயற்கை மாறுதல்களில் பூமித்தாயின் நலன் கருதி…
1.அதை ஏற்றுக் கொண்டிடும் பக்குவ மனது வேண்டும்
2.இவை அனைத்தும் மன வலிமை கொண்டு ஈர்த்திடும் செயலாக…
3.ஜெபத்தின் வளர்ப்பில் வளர்ப்பாக்கவே உரைப்பதெல்லாம்.

கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் வண்ணம் கலந்த நீர் அது எந்த வண்ணமோ அந்த வண்ணத்தையே குடுவையில் காண்கின்றோம். இது மனித மனத்தின் நிலை.

ஆனால் மெய் ஞானிகளுக்கோ ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது.

இந்தக் கலியின் மனித மனத்தின் நிலை உயிர் ஆத்ம சக்தியைக் கேடுறுத்தும் செயலுக்கே செயல்படுகிறது என்று பல முறை கூறிவந்துள்ளேன்.

சாயம் ஏறிய நூல் போல் இன்றைய மனிதன் தான் கொண்டிட்ட தீய எண்ணத்தின் வலுவால் தன் ஆத்மாவையே கொடுமைக்கு உள்ளாக்குகின்றான்.

இதை எந்த வார்த்தையில் உரைப்பது…?

தனக்கு உகந்த இரையை நாடிச் செல்லும் நாரையானது செல்கின்ற தூரம் எவ்வளவு இருப்பினும் அந்தத் தூரத்தைப் பறந்தே கடந்து செல்கின்றது.
1.பறந்தே ஏகுகின்ற அதன் வலிமையை மனதில் கொள்…!
2.”பார்வையின் கூர்மை… அது இரையை நாடுகின்ற நாட்டம்…”

மனிதனுக்கு நரை திரை நாட்டம் ஏற்படுகின்றது பார்வையின் ஒளியும் குன்றுகின்றது. நரை திரை நாட்டத்தின் செயலே உலகோதயம்.
1.அத்தகைய குறைவு நிலைகளை… “போ…!” என்றால் போகும்படி செய்வார்களா…! மெய் ஞானியர்… இல்லை…!
2.”ஆத்ம பலம் நாடும்… சிந்தனா சக்தி அன்றோ இங்கே முதன்மை வழி…”

குருநாதர் எனக்குக் கொடுத்ததை… நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா…!

குருநாதர் எனக்குக் கொடுத்ததை… நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா…!

 

ஒருவருக்கொருவர் பற்று கொண்டவர்கள் நாம் என்ன செய்கின்றோம்…?

ஆசை வைக்கின்றோம்… ஆனால் சமயத்தில் “என்னை அவமதித்து விட்டான்…” என்று ஆத்திரப்படுகின்றோம்
1.ஆத்திர ஆவேச உணர்வு கொண்டு அவன் செய்யும் தவறான உணர்வை நமக்குள் சேர்த்து விடுகின்றோம்.
2.நம்முடைய வளர்ச்சியை நாமே தடைப்படுத்தி விடுகின்றோம்

இப்படித்தான் இயற்கை நிலையிலிருந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளை எப்பொழுது மாற்றுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆக… ஒவ்வொன்றிலிருந்தும் தான் தப்பிக் கொள்ளும் உணர்வுகள் பெற்று வளர்ச்சியாகி வந்ததுதான் இந்த மனிதச் சரீரம்.

பலவற்றில் இருந்து தப்பிக்கும் ஞானத்தின் தன்மை வளர்த்துக் கொண்ட இந்த மனித உடலில் இவ்வளவும் தெரிந்து கொண்ட பின் உடலைக் காக்க நாம் எதைச் செய்ய வேண்டும்…?

உடலைக் காக்கும் ஆசை தேவை ஆனால்
1.உடலைக் காப்பதற்கு முன் அதீத ஆசை கொண்டு செயல்பட்டால்
2.உடலைக் காக்கும் தன்மையை இழக்கப்பட்டு வேதனை என்று உணர்வைத்தான் வளர்க்க முடிகின்றது.

இதையெல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாக காட்டிய நிலைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அனுபவரீதியிலே தான் இதையெல்லாம் தெரியும்படி செய்தார்.

சில இடங்களுக்கு அழைத்துச் செல்வார்…
1.இது நல்லதா கெட்டதா என்று கேட்பார்
2.நல்லது என்று சொன்னால் அது எப்படிடா… சொல்…? என்பார்
3.இல்லை இது கெட்டது… இப்படித்தான்…! என்று சொன்னால் அது எப்படிக் கெட்டது…? என்று அதற்கும் கேள்வி கேட்பார்.

ஏனென்றால் நீ நுகர்ந்த உணர்வுகள் உனக்குள் எப்படியெல்லாம் இயக்குகின்றது…? “என்னுடைய அதிர்வான சொல்கள்” வரும் பொழுது பதட்ட நிலைகள் உனக்குள் ஆகி உன்னைச் சிந்திக்கச் செய்கிறதா…?

இல்லை.

ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி தப்பிக்கலாம்…! என்ற எண்ணம் தான் உனக்கு வருகின்றது. இப்படியெல்லாம் விளக்க உண்மைகளைக் கொடுத்து அறிவின் இயக்கமாக இயக்கச் செய்து என்னை (ஞானகுரு) அனுபவபூர்வமாகத் தெளிவாக்கினார் குருநாதர்.

அதை நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமா இல்லையா…!

முதலிலே நான் சொல்லிக் கொண்டு வந்தேன்
1.பல வருட காலமாக ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்
2.இப்பொழுது மனிதனுடைய இயக்கங்களை முழுமையாக தெரிந்து கொள்ளும்படி செய்கின்றோம்.

முதலிலே பதப்படுத்தி பக்குவப்படுத்தி… உங்களிடம் அதை வலுப்படுத்தி… அதற்குப் பின் விளக்க உரைகளைக் கொடுத்தால் நீங்கள் கேட்பீர்கள்.
1.உங்களுக்கு அந்த உயர்ந்த சிந்தனைகள் வரும்
2.உங்களைக் காத்திடும் உணர்வுகளும் வரும்

ஆனால் புதிதாக இதைக் கேட்பவர்களுக்கு “சாமி எதையோ சொல்கின்றார்…” என்ற தலையைச் சொறிவார்கள்.

முன்னாடி கேட்டுப் பழகியவர்களுக்கு ஞானத்தை வளர்க்கும். புதிதாக வந்தவர்கள்… சாமி என்னமோ சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே தெரியாது என்று சொல்வார்கள். சாமி சொல்கின்றார்… நான் கேட்டுக் கொண்டிருந்தேன்… எனக்கு அர்த்தமே ஆகவில்லை…! என்பார்கள்.

ஆனால் பழைய ஆள்கள் உபதேசக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் சேர்த்துச் சேர்த்துத் தெளிவான மனதாக
2.எப்படி மனதைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்று செயல்படுத்திக் கொள்வார்கள்.

சந்தர்ப்பங்களில் இருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அந்த உபாயங்களும் வரும்.

இப்போது ஒன்றைச் சொல்கின்றேன் என்றால் அடுத்து அதைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது உங்கள் சாமி நேற்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கின்றார். சாமி என்ன சொல்கின்றார்…? என்று கேட்பார்கள் ஒரு சிலர்.

ஆனால் பற்றுள்ளவர்கள் என்ன சொல்கின்றார் என்று கூர்ந்து கவனித்துக் கேட்பார்கள்.
1.இன்றைக்கு ஒன்று சொன்னாலும் அந்தச் சொன்ன உணர்வுகள்
2.எதிலே எது எப்படி இயக்குகின்றது என்று விளக்கவுரையைக் கொடுக்கப்படும் பொழுது
3.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதங்கள் எத்தனையோ வரும்.

செடி கொடிகளின் வித்துகள் சந்தர்ப்பத்தில் மோதும் போது ஒரு ஜாதி இனத்தைப் போன்று மற்றொன்று உருவாகி இருக்கும் ஆனால் அதனுடைய மணமும் குணங்களும் வேறாக இருக்கும்… செயலாக்கங்களும் வேறு.

புல்லைப் போன்றே மற்ற கோரைப் புல்களும் உண்டு. ஒவ்வொன்றையும் பார்த்தால் அதைப் போன்றே இருக்கும். ஆனால் சுவை இருக்காது.

இதைப் போன்று இயற்கையின் நியதிகள் எது எதனுடன் சேர்க்கின்றதோ அதற்கொப்ப இயக்குகின்றது. இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

பஞ்ச பூதங்களின் இயக்கமும்… நாம் தீர்க்க வேண்டிய ஞானப் பசியும்

பஞ்ச பூதங்களின் இயக்கமும்… நாம் தீர்க்க வேண்டிய ஞானப் பசியும்

 

உயிரணுவின் ஈர்ப்பின் செயலால் ஆத்ம நிலை பெற்று ஜீவ பிம்பம் பெற்றிடும் செயலில் சரீரத்தினுள் அடக்குவது பஞ்சபூதங்கள் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்.

இவற்றின் கூறுகள் மூலசக்தியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலில்… அளப்பரியா அவைகளின் செயல் நிகழ்வுகள் இயல்பாக இயங்கிடும் சக்தி அண்டசராசரம் முழுவதிலும் உண்டு.

மனிதன் என்ற சரீரத்தினுள்ளும்… சரீரம் பெற்றிட்ட உயிர்த்தொகைகள் அனைத்தினுள்ளும் அந்தப் பஞ்சபூதங்களே கட்டுக்குள் அடங்கிச் செயல் புரிகின்றன.

ஆனால் பகுத்தறிவு கொண்ட மனிதன்…
1.அந்த ஆற்றலின் துணையினால் மனதின் இயக்க சுதந்திரம் பெற்று வாழும் வகைகள் அறிந்த பின்னும்
2.பஞ்சபூத சக்தியைத் தன்னுள்ளே கொண்டுள்ள மனிதன் உரைக்கின்றான்… “மனதினை அடக்க இயலவில்லை என்று…”

பிறர் தர்ம செய்கையால் ஞானத்தின் வழியில் நிற்போர் மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது. ஏனென்றால்
1.மற்றவர்களின் காரியங்களால் நாம் பாதிக்கப்படும் நிலை பெறுவதல்ல.
2.பிறர் மேல் நாம் கொண்டுள்ள கருத்துக்களால்… “அவர்களின் செயல்கள்…” நம்மைப் பாதிப்பதாக எண்ணுகின்றோம்.

ஆவேச உணர்வுகள் நீக்கம் பெற்று ஜெபநீர் ஆடிடவே அழைக்கின்றோம்

1.”வலைஞன்” வீசுகின்றான் வலை. அந்த வலையினுள் படுகின்ற மீன்களைத் தன் ஆகார நியதிக்கே கொண்டு செல்கின்றான்.
2.அவன் பற்றியது ஒன்று அப்பற்றும் பொருளினால் அவனுள் குடிகொண்ட குறிக்கோள் மற்றொன்று.

இடையில் நடைபெறும் காரண காரியங்களின் சூட்சுமப் பொருளை அறிந்து கொண்டவனப்பா நீ.

1.தன்னுள் சுரந்து வெளிவரும் ஓர் பசையினால் வலையைப் பின்னுகின்றது “சிலந்தி…” அதுவும் வலை விரித்தே காத்திருக்கின்றது.
2.தன் வலையில் விழும் சிறு உடல் ஜீவன்களை நேரடியாகத் தன் நிலைக்கே புசிக்கிறது.

மனக்கருவைக் குணங்களாகக் காணல் வேண்டும். ஆவேச நிலையின் இயக்கத்தைக் காட்டிடவே பாடங்கள்,

ஆகாரத்தின் நிலைக்கு மற்றொரு பொருள் காட்டுவோம்.

1.”திகம்பரன்” (சந்நியாசி) செய்யும் பூஜை… அவனும் ஆகார நியதியை அளித்தே
2.அறிந்து கொண்ட வழிமுறைகளால் “ஏதோ” ஒன்றினைப் பெற்றிட முயல்கின்றான்.

மேலே சொன்ன மூன்று நிலைகளையும் (வலைஞன், சிலந்தி, திகம்பரன்) விளங்கிக் கொள்…!

ஜெபத்தின் தன்மையாகச் சிந்தனையில் கொண்டு பார்… ஆவேச நிலைகள் நமக்கு உரியனவன்று.

தாகவிடாய் கொண்டவன் அருந்த நீர் கேட்பான்… தாகம் தீராமல் நீராட முயல்வானா…? ஞானமும் அத்தகையது தான்…!

1.தவசியே ஆனாலும் “அருந்த வேண்டிய பசி” ஒன்று உண்டு
2.ஞான தாகம் தீர்ப்பதே மகரிஷிகள் வழி காட்டிய போதனைகள்.
3.அதைப் பெற்று அந்தப் போதனையின் வழி நடந்து முனைவது மனக்குளத்தின் ஜெபநீர் ஆடிடவே.

உணர்வுகளை மாற்றிடும் ஆவேசம் நீக்கு…! என்றே இங்கே இந்தப் பாட நிலையில் பகர்கின்றோம்.

ஈஸ்வரா…! என்று உயிரின் ஏக்கத்துடன் விழிப்பார்வை இருக்க வேண்டுமப்பா…!

ஈஸ்வரா…! என்று உயிரின் ஏக்கத்துடன் விழிப்பார்வை இருக்க வேண்டுமப்பா…!

 

மனித நேயமனம் அன்பினுக்குகந்த அறவழி நடக்கலுற்று… பகுத்தறியும் ஆற்றல் வழி பண்பு கொண்ட தவமயர் இல்லறத்தின் வழி நடந்தே… மகோன்னத முனைப்பாற்றல் சக்தியை நிறைவாகப் பெற்று… அந்த ஆற்றலின் சிறப்பாக வளர்ச்சியில் வளர்ந்திட முடிந்திடும்.

பகல் இரவு என்று எண்ணாத எறும்பு ஊர்ந்து சென்று தன் இனங்களுக்கு ஊட்டும் சேமிப்பாகவே உணவினைத் தேடுகின்றது. அது போல்
1.அகம் ஜெபித்திடும்… (தனக்குத் தானே – உயிருடன்)
2.ஆத்ம பலம் கூட்டிடும்… (தன்னை வளர்ப்பதற்கு)
3.மெய்ப் பொருள் செல்வம் எனும் சேமிப்பின் சூட்சுமம் கொண்டு வளர்ந்திட… (உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அழியாச் சொத்து)
4.வழி நடத்தும் வழி முறைகள் காட்டியதே வல்லார் (மகரிஷிகளின்) தம் ஞான நிலை.
5.தவமாக வாழ்வின் நிறைவு பெற்ற மாமகான்களே அவர்கள்…!

அதை எண்ணி ஈர்த்திடும் பக்குவத்தில் வளரும் நம் ஞான நிலை.

1.நம் ஒளி காந்த சக்தியுடன் அந்த மகரிஷிகள் ஒளி காந்த சக்தியாக ஒன்றிச் செயல்படுகின்ற
2.அந்தத் தவப்பயன் வழியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அகத்தின் அழகு பற்றி வழக்கில் உரைக்கும் உரையைச் செவி வழியாக அறிந்திருப்பாய். எது அகத்தின் அழகு…?
1.அல்லார் எனும் நிலை விடுகின்ற பொழுது அக மலர் மலர்ந்து மணம் வீசுகின்றது.
2.விருப்பு வெறுப்பற்ற தன்மை அக வாழ்வினோடு புற வாழ்க்கைக்கும் அது பொருந்தும்.

அந்த நிலை பெற்ற மனத்தின் மாண்பு செயலுறும் விதம் என்ன…?

அத்தகைய அக அழகு பெற்றவனும் ஏங்குகின்றான்… அது உயர்வு எண்ண ஏக்கமப்பா…!
1.அக அழகின் கண் ஏங்கும் வழிப்பாதை… விழிப்பார்வையில் உண்டு.
2.ஈஸ்வரா…! என்ற எண்ணமுடன் ஈர்ப்பின் நிலை ஏக்கமாகப் பெற்றிருத்தலே “விழிப் பார்வையின் காப்பு…”

இந்த நிலையால் மனத்தின் மாண்பு உயர்ந்து கொண்டிடும்.

நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்று “நீங்கள் எண்ணினால் அது தப்பு…”

நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்று “நீங்கள் எண்ணினால் அது தப்பு…”

 

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் மன வலிமையை நாம் எப்படிக் கொண்டு வருதல் வேண்டும்…?
1.அருளைப் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற மன வலிமை பெற்றால்
2.சிந்தித்துச் செயல்படும் வலிமையாக இயக்கச் செய்யும்.
3.நம்மைக் காக்கும் உணர்வுகளும் வளரும்.

திரும்பத் திரும்ப இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை நினைவு கொண்டால் சிந்தித்துச் செயல்படும் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்.

உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர “நான் காப்பாற்றுவேன்…” என்று எண்ணத்தை நீங்கள் எண்ணினால்
1.தனக்குள் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும் தகுதியை
2.நீங்கள் இழந்து விடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடும் விளைவுகள் வருகின்றது. இந்த விளைவில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

உங்களுக்குள் உபதேசித்த உணர்வின்படி அருளை நீங்கள் பெருக்கிக் கொண்டால் தீமை நீக்கும் சக்தி பெறுகின்றீர்கள் அதைப் பெருக்கக் கூடிய ஞானம் உங்களுக்கு வர வேண்டும்.

அந்த ஞானம் உங்களுக்குள் வரவேண்டும் என்றால் இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களுக்குள் அந்த அருள் உணர்ச்சிகளைத் தூண்டி உங்களை அதன் வழியில் சுவாசிக்கச் செய்கின்றோம்.
1.சுவாசிக்கும் பொழுது உங்கள் இரத்தங்களில் புது விதமான உணர்ச்சிகளின் ஓட்டங்கள் இருக்கும்
2.அந்த உணர்வுகள் பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அத்தகைய கருத் தன்மை உங்கள் இரத்தத்தில் உருப்பெறுகின்றது

இதை வளர்த்துக் கொண்டே வந்தால் அந்த அருள் ஞானத்தை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.

அத்தகைய அணுக்கள் உடலில் உருவாகிவிட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரும் போது உயிரில் படுகின்றது சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது நல்ல உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றது. நல்ல அணுக்கள் உங்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது அருளைப் பெருக்குகின்றது அருள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது.

1.இந்த உடலுக்குப் பின் அந்த ஞானியின் அருள் வட்டத்திலே செல்கின்றோம்
2.”எந்த ஞானி இருளை நீக்கினானோ” அவன் ஈர்ப்பு வட்டத்திற்கு… துருவ நட்சத்திரத்துடன் நாம் செல்ல முடிகின்றது.

இது தான் நமது கடைசி எல்லை உயிர் ஒளியானது… அந்த உயிரோடு ஒன்றி ஒளியின் தன்மை நாம் பெற வேண்டும்

ஆனால் நான் (ஞானகுரு) சாமியாராக இருக்கின்றேன்… உங்களைக் காப்பாற்றுவேன் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தப்பு. சாமி சொன்ன உணர்வின் தன்மையைப் பெற்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மைக் காக்கும் என்று எண்ணினால் அது தான் சரி.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களில் எல்லா வகையான தீமைகளிலிருந்தும் தப்பிக்கும் உணர்வு பெற்று இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.

உயிர் மனித உடலை உருவககிய பின் பல கோடித் தீமைகளையும் வென்று உணர்வை ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
1.குருநாதர் காட்டி அருள் வழியில் எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்ததை உங்களுக்குள் பதிவாக்கி நினைவாக்கும்படி செய்கின்றேன்
2.உங்களை காக்க அந்த அருள் ஞானம் கிடைக்கும்.
3.இருளை நீக்கிடும் ஞானிகளாக நீங்கள் உருவாக முடியும்

யாம் உங்களுக்குக் கொடுப்பது “சிந்தித்துச் செயல்படும் ஞான சக்தி தான்”

யாம் உங்களுக்குக் கொடுப்பது “சிந்தித்துச் செயல்படும் ஞான சக்தி தான்”

 

குருநாதர் காடு மேடு மலைகள் எல்லாம் அலையச் செய்து சில உணர்வுகளைச் சந்தர்ப்பவசத்தால் நுகரும் பொழுது
1.உன் உடலுக்குள் மாறுபாடான உணர்வுகள் எப்படி எல்லாம் வருகின்றது…?
2.பயத்தின் எல்லை கடந்த நிலை செல்லும் பொழுது எப்படி இயக்குகின்றது…?
3.உன் உடலிலே பதட்டம் எப்படிக் கூடுகின்றது…?
4.உன் சிந்தனைகள் எப்படிச் சிதறுகின்றது
4.உன் உடலிலே எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றது…?
5.அதனால் உடலுக்குள் இரத்த அழுத்தங்கள் எப்படிக் கூடுகின்றது என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் பெற்ற அனுபவத்தைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு). விளையாட்டுக்காக நான் பேச வரவில்லை.

குரு வழியில் அந்த உயர்ந்த உணர்வுகளைக் கொஞ்சம் நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் உயர்ந்த சிந்தனைகள் உங்களுக்கு வரும். நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்ற நிலைகளை நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு ஒரு நல்ல வழியாக உருவாகும்.

ஏனென்றால்
1.அந்த ஞானத்தை யாம் புகட்டும் போது அதன் வழியில் வாழ்க்கையை நீங்கள் வழி அமைத்தால்
2.தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.
3.அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

எனக்கு குருநாதர் எப்படி இந்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்தாரோ அதே வழியில் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து நீங்கள் இதை பதிவு செய்ய வேண்டும்.

சாமி எதை எதையோ சொல்கின்றார்… என்னால் சகிக்க முடியவில்லை… அறுவைக் கேஸ் என்று கூட நினைப்பவர்கள் பலர் உண்டு.

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம்…! கண்கள் கொண்டு கூர்மையாக சாமி என்ன சொல்கின்றார் என்று உற்றுப் பார்த்தால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகளை யாம் அழைத்துச் செல்லும் பொழுது
2.இந்த கணக்கின் பிரகாரம் உங்கள் உடலில் அந்த உணர்வின் தன்மை வலிமையாகி
3.அதன்படி உங்களை வாழச் செய்து தீமையிலிருந்து விடுபடும் சக்தி உங்களுக்குள் பெருக்க முடியும்

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நமது பூமியின் துருவப் பகுதியின் எல்லையிலே இது அதிகமாகின்றது.
1.துருவத்தின் வழி பூமி அதை இழுக்கிறது… இழுத்து துருவத்தின் பகுதியில் அடர்த்தி அதிகமாகின்றது.
2.இந்த நேரம் பார்த்து அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வைச் சுவாசித்து
3.நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு கணங்களுக்கு அதை அதிபதியாக வேண்டும் – அந்த உயர்ந்த குணங்களை.

நந்தீஸ்வரன்… நாம் சுவாசித்த உணர்வு அதன் இயக்கமாகத் தீமைகளை நீக்கிடும் சக்தியாக நமக்குள் உருவாக்குகின்றது அடிக்கடி இதை எடுத்தால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை தீமையை நீக்கும் அந்தக் கணக்கின்படி “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிற்கு நாம் செல்கின்றோம்…”

“முதல் பண்ணவனிடத்தில்” நற்றேன் பருகிடல் வேண்டும்

“முதல் பண்ணவனிடத்தில்” நற்றேன் பருகிடல் வேண்டும்

 

நரலாகும் (மண்ணிலே விளையும்) பொருள் உணவாகும் பொழுது அதைச் சுவைக்கின்றோம். எப்படி…?

மனிதன் எண்ணுகின்ற எண்ண ஓட்டத்தில் உலகோதய நடைமுறைச் செயலுக்கு கவனத்தைச் செலுத்தி உணவை உட்கொண்டிடும் பொழுது அது சுவைபட அருந்தும் நிலையன்றி இப்பரு உடலினுள் அமைவு பெற்றிருக்கின்ற பை “இரைப்பை…!”

அந்தப் பையினுள் எரிகின்ற நெருப்பு தன்னில் இடப்படுகின்ற எரியைச் செரித்திடும் முன்பாக
1.நாசியில்… சுவாச ஓட்ட கதியில்… எண்ண ஓட்ட வாசனைக்கொப்ப சமைப்பின் சமைப்பு தொடங்கப் பெற்றே
2.இரசமாகிய சக்தி நரம்புகளின் சுவாச ஓட்டச் செயலில் ஈர்த்துக் கொண்டிடும் துடிப்பு அலைகளாக ஓடி
3.இரைப்பையில் இடப்பட்ட எரிவைப் பயனுறும் செயலாக்கி
4.கழிவையும் நீக்குகின்ற உடல் தொழில் சூட்சுமத்தில் “ஆத்ம பலம் கூட்டுமப் பொருள் காண வேண்டும்…”

நரல் என்று தேனை உரைத்தோம். முதல் பண்ணவன் (உயிர் – குரு)) இடத்தில் நற்றேன் பருகிடல் வேண்டும். நேற்றைய பாடத்தின் தொகுப்பில் மறைபொருளாகக் காட்டியதையே விண்டு உரைக்கின்றோம்.

நாத நாதாந்தம் காட்டிடும் எண்ணக் குவிப்பாக உயிரான்ம சக்தியை ஜெபிக்கின்ற வழிதனில்
1.உயிரே குரு என அழைத்திடும் முதல் பண்ணவன்
2.”உயிரை எண்ணி,,,: அகம் விடாது ஜெபித்திடும் ஜெப நிலையில்
3.நாதவாகினி அமுதமாகப் பெருகிடும் ஜெபத்தின் சக்தியே “நாம் கூற வந்த நரல்…” (உயிருடன் ஒன்றும் நாதம்)

புற உடல் பயனுறச் செயல் கொள்ளும் நிலை போல் அக உடல் அருந்தும் ஞானத்தேன் எந்த நிலை பெறும்…?

அனைத்துமே அவரவர்களின் எண்ணத்தின் செயல்பாட்டில் இயங்குகின்றதப்பா…!

காட்சி:- வெற்றிடமான இடம்… பின்பு தென்னங்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து தோப்பாகின்றது. தன் இனத்தைக் கூவி அழைத்து உணவு உண்ணும் காக்கை. உணவினை எடுத்துச் செல்கின்ற சிற்றெறும்புகளும்.

இதன் பொருளைக் கூறும் முன் தெரிய வேண்டியது… எரிகின்ற அக்கினியில் போடப்படுகின்ற பொருள்கள் எல்லாமே ஒரு நிலை பெற்று “கனன்று…” உருமாறி பொருள் தன்மையே மாறி விடுகின்றது.

ஆனால் பரு உடலில் இயங்கிடும் மறைமுக அக்கினி பொருளின் ரசத்தினைப் பிரித்து உடல் செயல் கொண்டிடச் சேமிப்பாக்குகின்றது.

சேமிப்பின் நிலையைப் பற்றிக் காட்டிடவே காட்சியின் விளக்கம்…!

நீர் நிலை கொண்ட இடமாகத் தேர்வு செய்து பயிர் வளர்த்து வளர்ந்த பின் அது தோப்பாகின்றது. அதையே தனக்கு உகந்த இடம் எனத் தேர்வு செய்து கூடு கட்டுகின்றது காகம்.

தன் இனத்திற்கு உணவை ஊட்ட… அரற்றியே கரைகின்றது… உணவை உண்கின்றது… தன் குஞ்சுகளுக்கும் ஊட்டுகின்றது. உணவாம் சேமிப்பு செயல் கொண்டிட அது கொண்டிட்ட உணர்வால் சேமிப்பின் வழிமுறைகள் இன்றி உலவுகின்றது.

ஆனால் எறும்போ ஊர்ந்து கொண்டிருக்கும். தன் தொழிலின் நிலையில் தன் இனத்திற்கு ஊட்டும் சேமிப்பையும் பெற்று விடுகின்றது.

அப்படி என்றால் நமக்கு இனமூட்டும் சேமிப்பு எது…?

ஜீவ ஆதார சக்தி வலு கொண்டிடும் ஜெபமாக…
1.சரீர உயிரணுக்கள் அனைத்திலும் ஒளியை ஊட்டமாகப் பெற்று
2.அதை வழி நடத்தும் தன்மையாக தொழில் படவே இனமூட்டும் சேமிப்பை உரைத்தோம்.