எத்தனையோ துயரங்கள் வந்தாலும் அதிலிருந்து “மீளும் மார்க்கங்களைக் காட்டினார் குருநாதர்…”

எத்தனையோ துயரங்கள் வந்தாலும் அதிலிருந்து “மீளும் மார்க்கங்களைக் காட்டினார் குருநாதர்…”

 

உங்கள் உயிரான ஈசனை மதித்து… அவனால் உருவாக்கப்பட்ட எத்தனையோ கோடி உணர்வுகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு செல்ஃபோனில் நம்பரைத் தட்டியுடன் எங்கிருந்து… யாரிடமிருந்து வருகிறது..? என்று எப்படித் தெரிகிறதோ இதைப் போல
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத் தனித்தன்மையாக அமைத்து
2.அதன் உணர்வின் இயக்கமாக உங்களுடைய தொடர் வரிசைகள் இருக்க வேண்டும்.

காரணம்… விஞ்ஞான உலகில் நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து மீள வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) இதை எல்லாம் தெளிவாகக் காட்டினார்… அறிந்தேன்.
1.எத்தனையோ துயரங்களைக் கண்டு அதிலிருந்து விலகும் மார்க்கங்களைக் காட்டினார்.
2.அதைப் போல் உங்களை அறியாது வந்த துயரங்கள் எத்தனையோ…
3.அதை எல்லாம் நீங்கள் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று தான்
4.திரும்பத் திரும்ப உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரும் பயிற்சியைக் கொடுக்கின்றேன்
5.உங்களுக்கு அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்காக தவம் இருக்கின்றேன்.

ஆகவே அடிக்கடி யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சக்தி செய்து அந்தச் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.உங்கள் வீடுகளில் நல்ல நறுமணங்கள் வரும்
2.குடும்பத்தில் அற்புதமான வாசனைகள் வரும்
3.குடும்பத்தில் நற்செய்திகளும் வரும்.

இந்த வாசனைகள் உங்கள் வீட்டில் அடிக்கடி வந்தால் உங்களை அறியாது சேர்ந்து தீயவினைகள் சாப வினைகள் பாவ வினைகளை நீக்கக்கூடிய சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

நீங்கள் தொழில் செய்யும் இடங்களிலும் இதைச் செயல்படுத்தினால் நல்ல நறுமணங்கள் கமழும். வாடிக்கையாளர்களும் நலமும் வளமும் பெறுவார்கள்.

வேலை செய்பவர்களும் அந்த மகிழ்ந்து செயல்படக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும். அங்கே உற்பத்தி செய்யும் பொருள்களிலும் இது படரும். எல்லோரும் நலம் பெறக்கூடிய சக்தியாக இது அமைகின்றது. நாமும் நலம் பெறுகின்றோம்.
1.ஆகவே துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொள்வோம்
2.பிறவி இல்லா நிலை என்னும் அருள் வாழ்க்கை வாழ்வோம்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை ஊற்ற… ஊற்ற அதுவும் நந்நீராக மாறுவது போல் இதற்கு முன் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த முந்தைய வினைகளுக்கு (அணுக்களுக்கு)
1.விஞ்ஞானத்தில் மருந்தினை ஏற்றி இஞ்செக்சன் செய்து உடலில் உள்ள நோயின் வலுவைக் குறைப்பது போல
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சி… ஆழமாகப் பதிவு செய்கிறேன்
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை மகரிஷிகள் உணர்வுடன் ஒட்டும்படி செய்து
4.அதில் இருக்கக்கூடிய பகைமைகளை நீக்கச் செய்து
5.துருவ நட்சத்திரத்தின் ஒளியை பெருக்கிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை இப்போது ஏற்படுத்துகின்றோம்.

பல நூல்களை ஒன்றாகத் திரிக்கும் பொழுது அது எப்படி வலு கூடுகின்றதோ அது போன்று கூட்டமைப்பாகச் செயல்படுத்தும் போது மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகிறது.

ஒவ்வொரு நாளும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று உண்மை நிலைகள் எல்லோருக்கும் தெரியும்படியாகச் செயல்படுத்த வேண்டும்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகள் எல்லோருக்கும் கிடைத்து…
2.சிந்தித்து செயல்படும் சக்திகளையும்… வாழ்க்கையைச் சீர்படுத்தும் ஆற்றல்களையும் அவர்களைப் பெறச் செய்வோம்.

உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…! இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க.. ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவர்வர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால்தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவறவிட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.
3.ஆகவே கால நிலையைத் தவற விட்டிடாதே…!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.

எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

 

செடி கொடிகளுக்கு அதனுடைய வித்துக்களை நிலத்தில் ஊன்றிய பின் அது முளைத்து வருகின்றது. பின் வளர்ச்சியாகி… மீண்டும் தன் இனத்தின் வித்துக்களை உருவாக்குகிறது.

அந்த வித்துக்களைப் பரவச் செய்தால்… மீண்டும் அதனின் வித்துக்கள் நிலத்தில் பட்டால் அதே தாய்ச் செடியின் சத்தை நுகர்கின்றது… இப்படித்தான் வளர்ந்து கொண்டே வருகிறது.
1.செடி கொடிகளுக்குண்டான வித்துக்கள் போன்றது தான்
2.நம் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனும்.

கண்களால் ஒன்றை (அல்லது மற்ற மனிதர்களை) உற்றுப் பார்க்கப்படும் போது “கருவிழி ருக்மணியால்” அது பதிவாக்கப்படுகிறது.

யார் யாரை எல்லாம் பார்த்தோமோ அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பதிவாக்கி அந்தந்த உணர்வுகளை நுகரப்படும் போது உயிரிலே மோதுகின்றது.

உயிரிலே மோதும் போது உயிர் அதனின் உணர்ச்சிகளாக நம்மை இயக்கி நம்மை அறியச் செய்கிறது… அதனின் செயலாகவே நம்மை அது மாற்றுகிறது.

எந்தெந்தக் குணங்களை எடுத்தோமோ அது எல்லாம் நம் எலும்புக்குள் ஊனாக மாறுகின்றது.

உதாரணமாக…
1.வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை அதிகமாகப் பதிவாக்கியிருந்தால் அது வேதனைப்படும் ஊனாகிறது.
2.எலும்புக்குள் வேதனைப்படும் அணுக்களாகப் பெருகி நம்மை வேதனைப்படும் செயலுக்கே கொண்டு செல்கிறது.
3.நாளடைவில் அதுவே நோயாக மாறத் தொடங்குகிறது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா.

வேதனைப்படும் உணர்வைப் பதிவாக்கினால் அது ஊனாகி நம்மை வேதனைப்படும்படி செய்து நோயாக மாற்றுவது போல்
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம் எண்ணங்களைக் கண்ணுடன் இணைத்து
2.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து… உயிருடன் இணைத்து… ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தி
4.அறியாது வந்த வேதனைகளையும் தீமைகளையும் நீக்கிடும் சக்திகளைப் பெறச் செய்வதுவது தான்
5.நம் குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானத்தின் நோக்கம்.

அதன் வழியில் உங்கள் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்தின் பால் சென்று அதனின்று வெளி வரும் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதன் பேரருளை நீங்கள் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற்று உங்கள் உடலிலே பரப்பச் செய்து கொண்டே இருந்தால் உங்கள் உடலில் இருக்கக்கூடிய தீய அணுக்களை மாற்றி உயிரைப் போல உணர்வின் தன்மை என்றுமே ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

மனிதனான பின் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனானோ இதைப் போன்று நமது வாழ்நாளில் நாமும் ஒளியின் சரீரம் பெற முடியும். மனிதனின் கடைசி நிலை பிறவியில்லா நிலை நிலை தான்

உயிரைப் போன்றே உணர்வுகளை ஒன்றாக்கி என்றும் ஒளியின் உடலாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தில் வரும் விஷத்தை ஒளியாக மாற்ற வேண்டும்.

பாம்பினம் தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவுக்காக முழுமையாக விழுங்கினாலும்
1.அந்தந்த உடல்களில் உள்ள விஷத்தினைத் தனக்குள் வடிகட்டி
2.பல விதமான வர்ணங்கள் கொண்ட விஷத்தன்மைகளைத் பாம்பினம் தனக்குள் சேர்த்து நாகரத்தினமாக உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையிலே ஏற்கனவே சொன்னது போன்று வேதனை வெறுப்பு கோபம் பயம் ஆத்திரம் என்ற பல விதமான விஷத்தன்மைகளை நாம் நுகர்ந்தாலும்…
1.பல விதமான விஷத்தின் தன்மை ஒடுக்கி ஒளியின் உணர்வாகப் பெற்ற
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது
3.விஷத்தின் தன்மை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்றுகின்றோம்.
4.எத்தகைய விஷத்தன்மைகள் வந்தாலும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று
5.இந்த உடலை விட்டுச் செல்லும் நிலை தான் கடைசி நிலை.

ஆகவே… பிறிதொன்றின் ஈர்ப்பிற்குள் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறாதபடி உயிருடன் ஒன்றி ஒளியாகின்றோம்.

“இது எல்லாம் ஒவ்வொரு உயிரின் கடமைகள்…”

காரணம்… “இந்த உயிர் தான்…” தன்னைக் காக்கத் தன் உணர்வின் தன்மையைச் செயல்படுத்துகின்றது என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.

மனிதனாக ஆன நிலையில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் சக்தியாக அங்கங்களும் அதற்குத்தக்க உறுப்புகளையும் உருவாக்கியது இந்த உயிரே.

ஆகவே… தீமையிலிருந்து விடுபடச் செய்யும் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை நமக்குள் சேர்த்தோம் என்றால் மனித வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து விடுபட்டு உயிரைப் போன்று உணர்வின் தன்மை ஒன்றி வாழும் திறன் பெற்று… “பிறவி இல்லை” என்ற நிலை அடையலாம்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.

தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

 

அகத்தினை அன்பு கொண்டால்…
“ஜெகத்தினை” வென்று வாழ்ந்திடலாம்.

தங்க வந்த கூட்டினில்…
தரணி ஆண்ட வாழ்க்கையில்…
தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

ஆண்டவன் என்ற ஆத்மாவை அடக்கி ஆளப் பார்க்காமல்
“ஆத்மலிங்க தேவனை” அறிந்தே நாம் வாழ்ந்திடுவோம்

பகவான் படைத்த படைப்பே நாம்…
பகவான் எங்கே உள்ளான்…? என்று
பகுத்தறியும் ஆற்றலைத்தான் “பகவான் அருளால் பெற்றுள்ளோமே…!”

உடல் அழுக்கைப் போக்கத் தண்ணீர்…
உள்ள அழுக்கைப் போக்க எந்நீர்…?

திருமானின் எண்ணத்தை எண்ணுவீர்… திருநீறு அணிந்தே…!

ஈசன் அருளில் உதித்த நாம்…
ஈன்றெடுத்த தெய்வமாக..
“ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்…”

நம்மை ஈன்றவர்.. படைத்தவர் யார்…?
நம் முற்பிறவி இப்பிறவி மறுபிறவியில் யார்…?

நம்மில் பலவும் உள்ள பொழுது “நான்” என்பது யார்…?

ஒன்றில்லாமல் ஒன்றில்லை…
ஒன்றிலிருந்து ஒன்றாக ஓங்கி நிற்கும் சக்தியிலே
ஒன்றியே நாம் வாழ்ந்திடுவோம்.

பல ஆசை நிலைகளிலே பல நிலை அடைவதற்கே…
பயம் என்ற பேய்க்கு நாம் பயந்து வாழ்வது எதற்காக…?

நிலையில்லா வாழ்வினிலே “நித்திய நிலை பெற்றிடவே…!”
நிலையான அன்பைக் காட்டி நிலை பெற்று வாழ்ந்திடுவோம்…!

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்…
ஏற்றமும் தாழ்வும் அமைகிறது…! என்று உணர்ந்தே வாழ்ந்திடுவோம்.

அகஸ்தியரையும் காணலாம்… ஈஸ்வரபட்டரையும் காணலாம்… துருவ நட்சத்திரத்தையும் காணலாம்… உங்களால் முடியும்…!

அகஸ்தியரையும் காணலாம்… ஈஸ்வரபட்டரையும் காணலாம்… துருவ நட்சத்திரத்தையும் காணலாம்… உங்களால் முடியும்…!

 

ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம்.

கண்களைத் திறந்தபடியே நேராக உற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.

இப்பொழுது…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்ற
2.மகரிஷிகள் அனைத்தும் உங்கள் காட்சிக்கு வரலாம்.

சப்தரிஷிகள் அருள் சக்திகள் இங்கே படர்ந்து இருப்பதனால்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் சப்தரிஷிகளின் அருள் சக்திகளை நுகரும் பொழுது
2.சப்தரிஷி மண்டலமும் சப்தரிஷி மண்டலமும் காட்சியாகக் கிடைக்கலாம்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய ஒளி அலைகளும் (நீல நிற ஒளிக்கற்றைகள்)
4.துருவ நட்சத்திரத்தைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்களும் இப்பொழுது கிடைக்கின்றது.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு உணர்த்திய அருள் உணர்வுகள் இப்பொழுது தெளிவாகத் தெரிய வரும்.
6.குருநாதருடைய அருள் உணர்வு கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளைப் பெற முடியும்

அகஸ்தியனை நீங்கள் பார்த்ததில்லை… ஆனால் அகஸ்தியனுடைய பேரருளைப் பார்க்க முடியும். அகஸ்தியன் வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை நீங்கள் எடுத்து வளர்க்க வளர்க்க
1.அகஸ்தியனையும் காணலாம்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரையும் காணலாம்.

ஏனென்றால் டிவி ரேடியோ அலைகளைப் பதிவாக்கிய பின்… அது எப்படி அந்த அலைத் தொடர்களின் மூலம் படங்களையும் ஒலிகளையும் நாம் காண்கின்றோமோ… கேட்கின்றோமோ… அதைப் போல்
1.அருள் மகரிஷிகள் உணர்வுகளை… ஒருங்கிணைந்த அந்த ஆன்மாக்கள் படர்ந்திருப்பதை
2.நாம் நுகர்ந்து வலுப்பெற்றால் நமக்குள் அவர்களின் காட்சியையும் காண முடியும்
3.அவர்களின் அருள் சக்திகளைப் பெற முடியும்…
4.அந்த ஞானிகள் காட்டி வழியில் நாம் வாழ்ந்து இருளை அகற்றலாம்… பேரருளையும் பேரருளையும் பெற முடியும்…!

நீங்கள் எங்கே இருந்தாலும் எந்த நிமிடத்திலும் இந்த அருள் சக்திகளைப் பெற முடியும். கண்ணின் நினைவு கொண்டு உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் அதை வளரச் செய்யலாம்… எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய முடியும்.

இன்று உலகம் கடும் மோசமாக இருப்பதனால் அதையெல்லாம் நாம் மாற்றக் கூடிய சக்தியாக அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை நாம் அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று… காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில்
1.அதற்குள் மறைந்துள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்று
2.அந்தப் பேரருளை நாம் வளர்த்துப் பேரொளியாக மாற வேண்டும்.

இத்தகைய பழக்கத்திற்குத் தான் நாம் வர வேண்டும்.

வாழ்க்கையில் எதையுமே குறையாக எண்ண வேண்டியதில்லை… குறைகளைக் காண வேண்டியதில்லை.

சந்தர்ப்பத்தில் எங்கே யாரிடம் எதிலே குறைகளைக் கண்டாலும் அடுத்த கணம்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அவர்களும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.. தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இது போன்று ஆத்ம சக்தி செய்து செயல்படுத்தி வாருங்கள்.

இவை எல்லாம் குருநாதர் காட்டிய வழியில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய வழி முறைகள்.

ஞானம் பெற வேண்டியது மிகவும் அவசியம்

ஞானம் பெற வேண்டியது மிகவும் அவசியம்

 

அகக்கண் மனக்கண் ஞானக்கண் இப்படி நம்முள்ளே மூன்று வகைத் தன்மைகள் உள்ள நிலைகளைக் கண்களாகக் காட்டினார் பலர் பல நிலைகளில்.

அகக்கண்ணும் மனக்கண்ணும் ஞானக்கண்ணும் இவை எல்லாமே சுவாசக் கண்ணிலிருந்து தான் வருகின்றன.

நம் உடலிலே பல கோடிக் கண்கள் உள்ளன. அக்கண்கள் வழியாகத்தான் இந்த உடலுக்குச் சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை இந்தப் பூமித் தாய் தன்னுள் ஈர்த்து அதை நம்முள் ஈர்த்திடும் செயல் நடக்கின்றது.

1.அகக்கண் மனக்கண் ஞானக்கண் என்பவை
2.நம் மன நிலையை வைத்து ஒவ்வொருவரின் குண நிலையைச் சுட்டிக் காட்ட
3.இந்நிலையில் உள்ள குணக்கண்களுக்குப் பல முன்னோர்கள் இந்த நாமத்தைச் சூட்டினார்கள்.
4.இந்த மூன்று வகைக் குணக்கண்களுக்குமே முதற்கண் இந்தச் சுவாசக்கண் ஒன்று தான்.

அந்தச் சுவாசக் கண்ணினால் நம் உடலுக்கு நாம் எந்தெந்த நிலைகளை ஈர்க்கின்றோமோ அந்த நிலை கொண்டுதான் நம் வாழ்க்கை முறையில்… விழிப்பு நிலையில்… சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் தன்மையை வைத்து… நம் கனவில் வரும் நிலைகளும் ஒன்று சேர்ந்தே கலந்து வருகின்றது.

இந்த மூன்று வகைக் குணக்கண்களை வைத்து ஒவ்வொரு மனிதனின் நிலையையும் தெளிவாக அறிந்திட முடியும்.

இப்படி அகம் புறம் ஞானம் என்ற நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்கு வழி கொண்டு வர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணிப் புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்று உள்ளார்கள்.
2.தான் பெற வேண்டிய ஞானத்தையே மறந்து விட்டார்கள்.

ஞானம் பெற வேண்டியதன் அவசியத்தைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்..

இரவிலே ஜெப நிலையிலேயே உறங்குங்கள்

இரவிலே ஜெப நிலையிலேயே உறங்குங்கள்

 

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் இந்நிலையின் உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இந்நிலையில் இக்காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் கண்டிடும் வண்ணம் “நம் சுவாச நிலையை நாம் ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகைய எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அந்நிலை கொண்டே தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது. அந்நிலையிலிருந்து…
1.நாம் இதை எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருந்திட வேண்டும்.

ஆத்ம சுத்தியின் சூட்சமமே புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “அழுத்தமாக…” நிலை நிறுத்துவது தான்

ஆத்ம சுத்தியின் சூட்சமமே புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “அழுத்தமாக…” நிலை நிறுத்துவது தான்

 

உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பத்திரிகைகளைப் படிக்கின்றோம். ஒரு இடத்திலே விபத்தாகி விட்டது… அடிபட்டனர்… விபரீத நிலைகள் ஆகிவிட்டது என்று அங்கே நடந்த நிகழ்ச்சிகளை… அவர்களுக்குக் கிடைத்த ஆதாரப்படி… அறிந்ததைச் சொல்கின்றார்கள்.

எழுத்து வடிவில் இருப்பதைப் பார்த்து நாம் படித்தாலும் அதே உணர்வுகளை நாம் நுகரக்கூடிய சந்தர்ப்பம் வந்து விடுகின்றது.

இதைப் போன்று பிறிதொரு தீமையின் உணர்வுகளை நாம் அறிந்து தெரிந்து கொண்டாலும் அது நம் உடலுக்குள் உருவாகாதபடி அவ்வப்போது அதைத் தூய்மையாக்க ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

ஈஸ்வரா… என்ற உயிரை எண்ணி…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை நம் புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.நாம் படித்துப் பதிவாக்கிய உணர்வும்… இதற்கு முன் நமக்குள் உருவான தீய வினைகளும் உள்புகாது தடுத்தல் வேண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வைத்து நாம் தடுத்து நிறுத்தினால்
5.அந்த விபரீத உணர்வுகள் உள்புகாது தடுக்கப்படுகின்றது.

ஏனென்றால் அதிர்ச்சியான செய்திகளை நாம் பார்த்தவுடன் நமக்குள் பதிவாகிறது.
1.பதிவான உணர்வுகளை நாம் சுவாசித்து
2.அந்த எண்ணங்கள் அந்த உணர்ச்சிகள் கொண்டு அந்தந்த வாழ்க்கை வாழ்ந்தாலும்
3.இப்போது (அடுத்து அடுத்து) மீண்டும் எண்ணத்தால் அதை எண்ணும் பொழுது
4.அதே உணர்வைக் காற்றிலிருந்து கவர்ந்து அதே உணர்ச்சிகள் இயக்கப்பட்டு
5.அதே செயல்களை நமக்குள் உருவாக்கி விடுகின்றது அல்லது வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்க செய்கின்றது.

இப்படி நாம் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தோம் என்றால் அது அனைத்தும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து இரத்தத்திலே “மாசுபடும் உணர்வுகளாக” மாறுகிறது.

மாசுபட்ட உணர்வுகளை நம் உடலில் மீண்டும் சேர்க்க உடலில் இருக்கும் நல்ல அணுக்களுக்குள் அது சேரும் தன்மை வந்து விடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் வராதபடி தடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்திப் பழக வேண்டும். தடுத்து நிறுத்தவில்லை என்றால் உடலுக்குள் சென்று அந்த நல்ல அணுக்களைக் கெடுத்துவிடும்.

கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று “இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்…”

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறும் பொழுது வலு கொண்டதாக மாறுகிறது. இப்படி “அந்த வலுவை” நாம் ஏற்றி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படிச் சேர்த்துக் கொண்டால் “இதன் அழுத்தம்… துருவ நட்சத்திர வலு” நாம் அங்கே எண்ணும் இதே உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆதாரத்துடன் கலந்து அந்த வெறுப்பு அல்லது வேதனை போன்ற தீமை செய்யும் உணர்வுகளை நுகராது உயிரிலே அடக்கி… ஆகாரத்தைச் சீராக அமைத்து நல்ல இரத்தமாக மாற்ற இது உதவும்.

“ஆத்ம சுத்தி என்பது சாதாரணமானதல்ல…”
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் பதிவாக்கி
2.இதைத் தெளிவாக்கி அந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான் இவ்வளவு காலம் உங்களுக்கு உபதேசித்தது (ஞானகுரு)
3.ஓரளவுக்கு அந்த வலிமை பெறக்கூடிய தகுதியைப் பெற்ற பின் இதை இப்போது முழுமையாகக் கொடுக்கின்றோம்.

காரணம்… உலகம் முழுவதும் விஷத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… உங்களுக்குள் யாம் சொன்ன முறைப்படி வலுக் கொண்டு இந்தக் காற்றுக்குள் மறைந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவர்ந்து உங்கள் உடல் உறுப்புகளில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் இதை அதிகமாகச் சேர்த்துக் கொண்டு வர.. வர…
1.துருவ நட்சத்திரத்தின் வலிமையைப் பெறுகின்றீர்கள்…
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைகின்றீர்கள்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…?

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…?

 

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் அந்நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.
4.வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்..
1.அவன் போடும் கணக்குப்படி தேதியிலும் கைரேகைகளிலும் ஜாதகத்திலும் பெரும் நம்பிக்கை வைத்து
2.தன்னுள்ளேயே அந்த ஆண்டவனின் சக்தியை மறந்து விட்டு இன்று உலகம் முழுவதுமே இந்த நிலையில் தான் நம்பி வாழ்கிறது.
3.நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்…!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டிட்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்ந்து
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..! அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!

முந்தைய வினைகளை நாம் மாற்றி அமைக்க வேண்டியது மிகவும் அவசியம்

முந்தைய வினைகளை நாம் மாற்றி அமைக்க வேண்டியது மிகவும் அவசியம்

 

தாய் கருவிலே நாம் பெற்ற உணர்வுக்கொப்ப மனிதனாக உருப்பெற்றாலும்
1.நமது வாழ்க்கையில் கண் கொண்டு உற்றுப் பார்த்து உணர்வுகளைப் பதிவாக்கி
2.அதன் வழி உணர்வுகளை நுகர்ந்து அறியும் சக்தி பெற்ற நாம்
3.நமது வாழ்க்கையில் எத்தனை பேரைப் பார்த்தோமோ எத்தனை பொருள்களை உற்றுப் பார்த்தோமோ
4.அவையெல்லாம் ஊழ்வினை என்ற வித்தாக நமது உடலில் எலும்புக்குள் இருக்கும் ஊன்களில் பதிவாகி விடுகின்றது.

எப்படி செல்ஃபோன்களில் பதிவாக்கி வைத்துக் கொண்ட பின் அதனின் இயக்கங்களை முழுமையாக நாம் இயக்க முடிகின்றதோ இதைப் போன்று எலும்புகளில் உள்ள செல்களில் இயக்கி எத்தனையோ கோடி உணர்வுகளை நாம் பதிவாக்கிக் கொள்ளலாம்.

“பதிவான நிலைகளில்…” நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த நினைவாற்றலே மீண்டும் வருகின்றது. அதன் வழி அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக நம்மைச் செயலாக்குகின்றது. அதிலே தீமைகளும் பதிவாகி இருக்கிறது.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் எத்தனை கோடி தீமையின் உணர்வுகள் நம் ஊன்களில் உண்டு. அதை இயக்க விடாது தடைப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளை
1.எல்லா உறுப்புகளிலும் படரச் செய்ய வேண்டும்
2.அந்த உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்
3.எலும்புக்குள் இருக்கும் எல்லா ஊன்களிலும் அதைப் பரவ செய்ய வேண்டும்.

எப்படி விஞ்ஞான அறிவு கொண்டு இரத்தங்களில் இன்ஜெக்க்ஷன் மூலமாக மருந்தினைச் செலுத்தி உடலில் உள்ள உறுப்புகளுக்கும் மற்ற அணுக்களுக்கும் சேரும்படிச் செய்கிறார்களோ அதைப் போன்று தான்… துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் கவர்ந்து… இரத்த நாளங்களிலே கவரச் செய்து… உடல் முழுவதற்கும் பரவச் செய்ய வேண்டும்.

நண்பர்கள் என்று ஒருவருக்கொருவர் பழகி அந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் “நன்மை செய்தார்…!” என்று எண்ணும் பொழுது எங்கே இருந்தாலும் அது பாய்ந்து விக்கலாக மாறுகின்றது அதே தொடர்பில் இருவரையும் நல்லதாக அது இயக்குகின்றது.

ஆனால் பகைமையானால்… எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்று வேக உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது சிந்தனை இழக்கச் செய்து விடுகின்றது.
1.உணவு உட்கொள்ளும் பொழுது அது இயக்க மறுத்து புரையும் ஓடுகிறது.
2.வாகனங்களிலோ அல்லது நடந்து செல்லப்படும் பொழுது விபத்தாகிறது.

மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட உணர்வுகள் எப்படி செல்ஃபோன்களில் இயக்கி நாம் ஃபோனில் தொடர்பு கொள்கின்றோமோ அதே போல் அந்தப் பதிவுகள் இயக்கப்பட்டு அந்த மனிதனுக்கும் சரி… நமக்கும் சரி… அதே இயக்க நிலை ஆகி தொல்லைகளுக்கு ஆளாகின்றோம்.

நமக்கும் அந்த வெறுப்புகள் கூடும் போது பள்ளம் மேடு தெரியாதபடி இயக்கி நமக்கும் விபத்துகள் ஏற்படக் காரணமாகி விடுகின்றது.

அல்லது நாம் மற்ற வேலைகளைச் செய்தோம் என்றால் சிந்தனையற்ற நிலைக்குக் கொண்டு சென்று விடுகின்றது. அவர்களுக்கும் அதே போன்று சிந்தனை இல்லாத செயல்களாக இயக்கி விடுகின்றது…
1.விபத்துகள் ஏற்படுவதற்கு இதுவே காரணம் ஆகி விடுகின்றது.
2.இது எல்லாம் நமக்குள் ஏற்கனவே பதிவு செய்த முந்தைய பதிவுகள்.

இது போன்ற முந்தைய வினைகள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்மிடம் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும்
1.நம் கண்ணின் பார்வை கொண்டு அந்த அழுத்தமான நிலைகளில் அதிகமாகச் செலுத்தச் செலுத்த
2.முந்தைய பாவ வினைகளோ தீய வினைகளோ சாப வினைகளோ பூர்வ ஜென்ம வினைகளோ எது இருப்பினும்
3.அதை எல்லாம் சிறுகச் சிறுக நம்மால் குறைக்க முடியும்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற ஊற்ற அந்த அழுக்கு நீர் எப்படி அது குறைவாகின்றதோ இதே போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து முந்தைய (தீமையான) பதிவுகளைத் தூய்மையாக்குதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி உடல் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் இதை இணைக்கக்கூடிய முயற்சிகளை நாம் செயல்படுத்துதல் வேண்டும்…!

நாளுக்கு நாள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரும் ஊன்களாக நமக்குள் உருவாக்க வேண்டும். அவசியம் இதைச் செயல்படுத்த வேண்டும்.