எத்தனையோ துயரங்கள் வந்தாலும் அதிலிருந்து “மீளும் மார்க்கங்களைக் காட்டினார் குருநாதர்…”

எத்தனையோ துயரங்கள் வந்தாலும் அதிலிருந்து “மீளும் மார்க்கங்களைக் காட்டினார் குருநாதர்…”

 

உங்கள் உயிரான ஈசனை மதித்து… அவனால் உருவாக்கப்பட்ட எத்தனையோ கோடி உணர்வுகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு செல்ஃபோனில் நம்பரைத் தட்டியுடன் எங்கிருந்து… யாரிடமிருந்து வருகிறது..? என்று எப்படித் தெரிகிறதோ இதைப் போல
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத் தனித்தன்மையாக அமைத்து
2.அதன் உணர்வின் இயக்கமாக உங்களுடைய தொடர் வரிசைகள் இருக்க வேண்டும்.

காரணம்… விஞ்ஞான உலகில் நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து மீள வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) இதை எல்லாம் தெளிவாகக் காட்டினார்… அறிந்தேன்.
1.எத்தனையோ துயரங்களைக் கண்டு அதிலிருந்து விலகும் மார்க்கங்களைக் காட்டினார்.
2.அதைப் போல் உங்களை அறியாது வந்த துயரங்கள் எத்தனையோ…
3.அதை எல்லாம் நீங்கள் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று தான்
4.திரும்பத் திரும்ப உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரும் பயிற்சியைக் கொடுக்கின்றேன்
5.உங்களுக்கு அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்காக தவம் இருக்கின்றேன்.

ஆகவே அடிக்கடி யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சக்தி செய்து அந்தச் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.உங்கள் வீடுகளில் நல்ல நறுமணங்கள் வரும்
2.குடும்பத்தில் அற்புதமான வாசனைகள் வரும்
3.குடும்பத்தில் நற்செய்திகளும் வரும்.

இந்த வாசனைகள் உங்கள் வீட்டில் அடிக்கடி வந்தால் உங்களை அறியாது சேர்ந்து தீயவினைகள் சாப வினைகள் பாவ வினைகளை நீக்கக்கூடிய சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

நீங்கள் தொழில் செய்யும் இடங்களிலும் இதைச் செயல்படுத்தினால் நல்ல நறுமணங்கள் கமழும். வாடிக்கையாளர்களும் நலமும் வளமும் பெறுவார்கள்.

வேலை செய்பவர்களும் அந்த மகிழ்ந்து செயல்படக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும். அங்கே உற்பத்தி செய்யும் பொருள்களிலும் இது படரும். எல்லோரும் நலம் பெறக்கூடிய சக்தியாக இது அமைகின்றது. நாமும் நலம் பெறுகின்றோம்.
1.ஆகவே துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொள்வோம்
2.பிறவி இல்லா நிலை என்னும் அருள் வாழ்க்கை வாழ்வோம்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை ஊற்ற… ஊற்ற அதுவும் நந்நீராக மாறுவது போல் இதற்கு முன் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த முந்தைய வினைகளுக்கு (அணுக்களுக்கு)
1.விஞ்ஞானத்தில் மருந்தினை ஏற்றி இஞ்செக்சன் செய்து உடலில் உள்ள நோயின் வலுவைக் குறைப்பது போல
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சி… ஆழமாகப் பதிவு செய்கிறேன்
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை மகரிஷிகள் உணர்வுடன் ஒட்டும்படி செய்து
4.அதில் இருக்கக்கூடிய பகைமைகளை நீக்கச் செய்து
5.துருவ நட்சத்திரத்தின் ஒளியை பெருக்கிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை இப்போது ஏற்படுத்துகின்றோம்.

பல நூல்களை ஒன்றாகத் திரிக்கும் பொழுது அது எப்படி வலு கூடுகின்றதோ அது போன்று கூட்டமைப்பாகச் செயல்படுத்தும் போது மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகிறது.

ஒவ்வொரு நாளும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று உண்மை நிலைகள் எல்லோருக்கும் தெரியும்படியாகச் செயல்படுத்த வேண்டும்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகள் எல்லோருக்கும் கிடைத்து…
2.சிந்தித்து செயல்படும் சக்திகளையும்… வாழ்க்கையைச் சீர்படுத்தும் ஆற்றல்களையும் அவர்களைப் பெறச் செய்வோம்.

Leave a Reply