
நாம் செய்யும் தியானம் சரி இல்லையோ…? என்ற எண்ணமே வரக்கூடாது
நமது அன்பர் ஒருவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி வருகிறார். அப்பொழுது அது அவருக்குக் குஷியாகத் தெரிகிறது. ஆனால் தபோவனத்தின் கேட்டின் பக்கம் வரும் போது பிரேக் போட்டவுடன் சரியான நேரத்தில் திருப்பாமல் விட்டதால் கவிழ்ந்து விட்டது. அவர் தப்பி விட்டார்… வண்டியில் இருந்தவர் சிக்கிக் கொண்டார்.
இதற்கெல்லாம் காரணம் நமது உணர்வுகளில் வேகம் எதுவோ அதில் மகிழ்ச்சியைத் தூண்டும்.
1.அதனின் வேகச் செயலாக வேலை செய்யும்.
2.இதன் விளைவு நமக்குள் எப்படி ஊட்டும்…? என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.
இதே மாதிரித் தான் நாம் ஆர்வமாகத் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். ஆர்வமாக இருக்கும் போது முந்தைய நிலைகள் நமக்குள் இயக்கும் போது “என்னத்தை எடுத்தோம்…? இப்படி வருகிறதே…! நாம் ஜெயிக்கவில்லை… நம்மால் முடியவில்லை போலும்…!” என்று விரக்தி அடைந்து விடுவார்கள்.
யாம் நீங்கள் அனைவரும் உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றோம். இந்த உணர்வின் தன்மை மனக்கட்டுப்பாடு இல்லாதபடி இயக்கி வருகிறது.
1.ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் குறுக்கே குறுக்கே வருகிறது.
2.நாம் செய்யும் தியானம் சரியாக இல்லையோ…? என்று எண்ணத் தூண்டும்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு… அதை நாம் அடக்க வேண்டும். இந்த ஆறாவது அறிவிற்குள் அந்த மெய் ஞானிகளின் உணர்வைக் கவரும் திறமையாக வரவேண்டும். இதைப் படைக்க வேண்டும்.
இது தான் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்.
1.இந்த ஆறாவது அறிவால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற வேண்டும்… அதை ஞானமாக்க வேண்டும்.
2.இதைத் தான் உங்களுக்குள் அடிக்கடி பதிவு செய்கிறோம்.
அறியாது வரும் தீங்குகளை எப்படி நீக்கிப் பழக வேண்டும்…? என்று பல வழிகளிலும் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.