உடலுக்குள் வரக்கூடிய கெடுதலை குரு அருளால் நீக்க முடியும்

உடலுக்குள் வரக்கூடிய கெடுதலை குரு அருளால் நீக்க முடியும்

 

ஒரு நாள் இரவு மழையுடன் பக்கத்துக் கிராமத்திலிருந்து, பெண் குழந்தை ஒன்றை இளம்பிள்ளை வாதத்துடன், (இரண்டு காலும் ஆடிக்கொண்டிருக்கிறது) தபோவனத்திற்கு எடுத்துக் கொண்டு வந்தார்கள். காலை 05.30 முதல் 6 மணிக்குள் இருக்கும்.

அழுது கொண்டு வருகிறார்கள். இளம் பிள்ளை வாதம் வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. பெண் குழந்தையாக இருக்கிறது. ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்று பொலபொலவென்று அழுது கொண்டே இருந்தார்கள்.

ஆரம்பக் காலங்களில் இது நடந்தது. அப்பொழுது கொஞ்சம் ரூம்கள்தான் இருந்தது. குழந்தைக்குச் சரி செய்து விட்டோம். எழுந்து நடந்தது. அதன்பின் சாமி எப்படி இருக்கிறார்…? என்று எட்டிக்கூட பார்க்கவில்லை. வைத்தியம் பார்த்தது அவர்களுக்குச் சௌகரியமாக போய்விட்டது.

நாளைக்கு நீங்கள் கஷ்டப்படாதபடி இந்த மூச்சை எடுத்துக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று இதையும் கொடுத்துள்ளோம்.
1.உடல் நலமாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தத் தியானம் செய்வதாலே உடம்பு நல்லதாகி விடும்…
2.வரக்கூடிய கெடுதலை உங்களாலேயே மாற்றிக் கொள்ள முடியும்.

பெரும் பகுதியானோர் இன்னும் சாமியாரைத் தேடிப் போக வேண்டும் ஜோசியம் பார்க்க வேண்டும் என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர தனக்குள் தீமை வராமல் தடுத்துக் கொள்ள இப்படிச் செய்யுங்கள் என்கிறோம்…! இதைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள்.

உடம்புக்கே சௌகரியம் இல்லாமல் போய் விட்டாலும் கூட
1.அப்பொழுது இந்தத் தியானத்தைச் செய்யலாம் என்றாலும் கூட அதற்கும் நேரமில்லை என்றுதான் சொல்கிறார்கள்.
2.காசைக் கொடுத்துத் தான் உடம்பை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.

ஆனால் மனிதனாகப் பிறப்பது ரொம்ப அபூர்வம். நாம் துன்பத்தைச் சுவாசித்தவுடன் நம் உடலில் புண் வருகிறது சிரங்கு வருகிறது அது வருகிறது இது வருகிறது என்றால் இந்த உணர்வின் அணுக்களாகச் சேர்த்து உயிராத்மாவில் சேர்ந்து விடுகின்றது.

1.ஆகவே ஒவ்வொருத்தரும் உங்களை முழுமையாக நம்புங்கள்.
2.உங்கள் அம்மா அப்பாவைத் தெய்வமாக எண்ணுங்கள்.
3.உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உங்கள் உடலை அவன் அமைத்துக் கொண்ட கோயில் என்று நினையுங்கள்.
4.நல்ல குணத்தை வளர்ப்பதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள்.

ஞானிகளின் உடலில் விளைந்த நல்ல சக்தியை எடுப்பதற்கு உபதேசத்தின் வாயிலாகச் சக்தி கொடுக்கிறோம். உடனடியாக அதைப் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற வாக்கையும் கொடுக்கிறோம்.

இதைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டத்தை, நிவர்த்தி பண்ணுங்கள். சுலபமாகக் கொடுக்கின்றோம்… உங்களால் நிச்சயம் தீமைகளை நீக்க முடியும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply