தாய் உணர்வு கைக்குழந்தையை எப்படியெல்லாம் இயக்குகின்றது…?

தாய் உணர்வு கைக்குழந்தையை எப்படியெல்லாம் இயக்குகின்றது…?

உதாரணமாக தாய் ஒருவர் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வந்திருப்பார்கள். இங்கே வீட்டிற்கு வந்து தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுக்கும். கொஞ்ச நேரத்தில் குழந்தை “வீல்… வீல்…” என்று கதறும்.

உடனே அந்தத் தாய் யார் கண் பட்டு விட்டதோ…? “சில்… சில்…” என்று குழந்தை அழுகின்றது என்பார்.
1.தாய்க்குத் “தன் பார்வை பட்டது தான்…!” என்று தெரியாது.
2.ஏனென்றால் சண்டை போடுபவர்களைப் பார்த்த அந்த உணர்வுகள் தாய் உடலில் பதிவாகி விடுகிறது.
3.அந்த நினைவுடன்… பாசத்தால் குழந்தையைத் தாய் அரவணைக்கிறது.
4.ஆனால் குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது…. அதைத் தாங்கக்கூடிய சக்தி குழந்தைக்கு இல்லை.
5.இப்பொழுது குழந்தைக்குச் சீக்காகிவிட்டது என்பார்கள்.

அப்படி வேதனையினுடைய நிலைகள் அதிகமானவுடன் மிகக் கஷ்டமாக இருக்கின்றது என்று பிறர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இதைக் கேட்டுக் கொண்டு வந்த உணர்வுகள் அந்தக் குழந்தைக்குத் தாங்காதபடி வயிற்றுப் போக்கு போய்க் கொண்டே இருக்கும். அந்தச் சங்கடமான உணர்வையே மேலும் மேலும் நினைத்துப் பாய்ச்சிக் கொண்டே இருப்பார்கள்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்…?

ஓ…ம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நன்றாக ஆத்ம சுத்தி செய்யுங்கள்.
1.பின் உங்கள் பார்வையால் உங்கள் எண்ணத்தைக் குழந்தை மேல் செலுத்துங்கள்.
2.“இனி உனக்கு வயிற்றால் போகாது… நன்றாகிவிடும்…!” என்று குழந்தையின் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
3.உங்கள் எண்ணத்தால் பார்வையால் குழந்தைக்கு நன்றாகிவிடும்.

இதை நீங்கள் அனுபவத்தில் கொண்டு வாருங்கள்.

உங்கள் மனதை வலுப்படுத்துங்கள். உங்களுக்கு வரக்கூடிய துன்பத்தைப் போக்கக் கூடிய சக்தி உங்களுக்குள் வரும். இதை நீங்கள் அனுபவபூர்வமாக பார்க்கலாம்.

அடுத்தடுத்து இவ்வாறு நீங்கள் பெறும் அனுபவத்தால் உங்கள் வாக்கினைச் சொல்லும் பொழுது
1.அடுத்தவர்கள் எண்ணங்களில் இது பதிய வேண்டும்.
2.அவர்கள் நோய் “நான் போகிறேன்…” என்று ஓட வேண்டும்.

நான் இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து தீமைகளை நீக்கினேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது பிறர் காது கொடுத்துக் கேட்டவுடன்
1.எங்கள் கஷ்டமெல்லாம் சுலபமாக இனிமேல் விலகிவிடும்
2.எங்களுக்கு நன்றாக இருக்கும்…! என்ற எண்ணங்கள் அங்கே அவர்களுக்குத் தோன்ற வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply