நம் ஜீரண உறுப்புகளுக்குள் நடக்கும் சில அதிசயங்கள்

நம் ஜீரண உறுப்புகளுக்குள் நடக்கும் சில அதிசயங்கள்

 

சங்கடமான வார்த்தைகளை நாம் கேட்டு விட்டு வீட்டிலே வந்து அமர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்…? எவ்வளவு தூரம் அவர்கள் வேதனைப்பட்டார்களோ அந்த உணர்வுகள் சாப்பாட்டுடன் கலந்து இரைப்பைக்குச் செல்கின்றது.

1.வேடிக்கையாகத்தான் நாம் கேட்டிருப்போம்… பார்த்திருப்போம்.
2.கேட்டு விட்டு வந்து நாம் சாப்பிடும் போது இந்த உணர்வு உள்ளே சென்று விடுகின்றது.

இரைப்பையிலே சென்று அந்த வேதனையான உமிழ் நீரும் நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் உள்ள சத்தும் இரண்டும் அங்கே இருக்கும்.

கோழி குருவி இவைகள் எல்லாம் தன் உணவை எடுக்கின்றது. கோழி கொத்தித் தின்னும்… கூப்பிட்டு குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.

குருவி மற்ற பறவைகள் எங்கேயோ சென்று அந்த இரையை எடுத்துத் தன் கூட்டிற்கு வருகின்றது. குஞ்சுகள் “ஆ…” என்று வாயைத் திறக்கும். எடுத்து வந்த இரையைப் போடும்… போட்ட பின் குஞ்சுகள் வாயை மூடிக்கொள்ளும். அந்த உணவால் வயிறு நிரம்பி விடுகின்றது.

இதைப் போன்று தான் சிறுகுடல் அதனுடைய பசியின் நிலையில் உந்தப்படும் பொழுது இரைப்பையில் இருந்து வாயைத் திறக்கும். அந்த நேரத்திற்குத் தகுந்தாற் போல் இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குள் “சொத்…” என்று விழும்… டபக் என்று மூடிக்கொள்ளும்.

அது மூடி ஜீரணித்து ரசத்தை வடிக்கும். கீழே இருப்பதற்குப் பசிக்கும்போது இதைத் தள்ளி விடும். அதிலே வடித்து எடுத்துக் கொள்ளும். இப்படி வடித்துக் கொண்டே இருக்கும்.

சத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு விஷத்தை வடித்து வெளியே அனுப்பும். விஷத்தை வடிக்கும் அந்தத் திறன் இருந்தாலும் நல்ல சத்துள்ள ஆகாரத்தை உட்கொண்டோம்
1.சாப்பாட்டில் கலந்துள்ள விஷத்தைத் தான் அதற்குப் பிரிக்கத் தெரியும்.
2.ஆனால் சாப்பாட்டுடன் சேர்த்து நாம் நுகர்ந்த வேதனையான அந்த உணர்வை… (விஷம்)
3.நாம் கேட்டறிந்து நுகர்ந்த இந்த உணர்வு இரைப்பையுடன் சேர்ந்து விட்டால் அந்த உணர்வான சத்தை சிறுகுடல் கீழே இழுக்கும் திறக்கும்.
3.ஆனால் கோபமாகப் பேசியதைப் பார்த்து இருந்தால் ஆ…! என்று வாயைத் திறந்து விடும்.

மிளகாயை வாயிலே போட்ட பின் நம் வாயை மூட முடியுமா…? காரத்தை நீங்கள் வாயிலே போட்டு வாயை மூடிப் பாருங்கள். மூட முடியுமா…? ஸ்… ஆ… என்று வாயைத் திறந்து அலறிக் கொண்டுதான் இருப்போம்… மூட மாட்டோம் முடியாது.

அதே மாதிரி அந்த எரிச்சலான உணர்ச்சிகள் சிறு குடலை விரித்து விடும்.

அப்படி ஆ…! என்று அலறும் போது “கட புடா…” என்று உடலுக்குள் ஒரு விதமான உணர்ச்சிகள் தோன்றும். சத்தைப் பிரிக்காதபடி அப்படியே விட்டுவிடும். சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வந்த பின் இந்த நிலை ஆகும்.

ஒருவர் கோபமாகப் பேசுவார்… இன்னொருவர் வேதனைப்படுவார்… இரண்டும் இருக்கும். ஆனால் அந்த உணர்வை நுகர்ந்த பின் நம் குடலுக்குள் இந்த உணர்ச்சிகள் தோன்றுவதை நிச்சயம் பார்க்கலாம்… தெரிய முடியும்…!

நான் சொல்வது அனைத்தையுமே நீங்கள் காண முடியும்.

இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கின்றேன்.
1.புறத்தில் நாம் எப்படிச் செயல்படுகின்றோமோ அதைப் போன்று தான்
2.அகத்திற்குள்… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளின் இயக்கமும்… அணுக்களின் இயக்கமும்.

கை கால் வலி வயதின் முதிர்வினால் வருவதில்லை… தீய உணர்வுகள் விளைந்ததன் முதிர்வால் வருவது

கை கால் வலி வயதின் முதிர்வினால் வருவதில்லை… தீய உணர்வுகள் விளைந்ததன் முதிர்வால் வருவது

 

தபோவனத்தில் சவுண்டால் மரத்தை அதிகமாக வைத்தோம். அதற்குப் பக்கத்தில் வேப்ப மரத்தை வைத்தோம். சவுண்டாலின் சத்து அதிகமான பின் வேப்ப மரம் வளரவே இல்லை
1.அந்தச் சவுண்டால் மரத்தை வெட்டியவுடன்
2.இதற்கு ஜீவன் கிடைக்கின்றது… வேப்பமரம் நன்றாக வளர்கின்றது.

இதைப் போல நமக்குள் தீய உணர்வின் விளைவுகள் அது ஓங்கி வளரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர விடாதபடி தடுத்து இது அதிகமாகப் படரும் நிலை வந்து விடுகின்றது. அப்பொழுது நல்ல குணங்கள் அனைத்தும் வளர்ச்சி குன்றுகிறது.

இந்தப் பூமியில் மரம் செடி, கொடிகள் வளர்வது போன்று
1.நாம் எண்ணிய உணர்வின் வித்துகள் எதுவானாலும் அந்த உணர்வின் சக்தி உந்தப்பட்டு
2.நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் இந்தப் பூமிக்குள் படர்வது போல இரத்தத்துடன் கலந்து
3.அந்த அணு செல்களாக வளர்ந்து நம் உடலின் தன்மை ஆவியாக மாறி அதனதன் உணர்வுக்கொப்ப அது கூடி…
4.உடலுடன் உறைந்து தசைகளாக மாற்றி அதில் விளைந்த உணர்வின் சத்து “வித்தாக வெளிப்படும்…”

ஒரு வித்தின் தன்மை உருவான பின் செடியாக மாறுகின்றது. அப்போது “அந்த வித்தைக் காண முடிவதில்லை…”

ஆனால் வித்தின் சத்து செடியாக ஆவது போல அதனின் முதிர்வுக்குத் தக்கவாறு பூ பூத்துப் பிஞ்சாகிக் காயாகி முதுமையாகும் பொழுது அந்த வித்தின் தன்மையை மீண்டும் நாம் கண்களிலே பார்க்கின்றோம்.

அந்த வித்தின் தன்மை போல் எந்த வேதனையை நாம் கண்ணுற்றுப் பார்த்து அதைக் கேட்டுணர்ந்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அது விளைந்து விடுகிறது.

அந்த வேதனையை அடிக்கடி நாம் எண்ணும் பொழுது அதை நுகர்ந்து உடலுக்குள் வரும் பொழுது அந்தச் செயலும்… ரத்தத்தில் இருந்து ஆவியாக மாறி அதன் முத்துக்களை விளைய வைத்து
1.நமக்குள் முழுமையாகும் போது தான் கேன்சர் ஆஸ்த்மா ரத்தக் கொதிப்பு கை கால்களில் புண் இருதயத்திலே வீக்கம் என்று
2.அந்த உணர்வுகள் எங்கே அதிகமாகப் படர்கிறதோ
3.எந்தெந்த குணத்தின் தன்மை இயங்கும் பொழுது அந்தந்த உறுப்பில் தேங்கி விடுகின்றதோ அவை அங்கே ஓங்கி வளர்க்கப்படும் பொழுது
4.உந்திக் கோபத்துடன் ஒரு பொருளைத் தூக்கினோம் என்றால்
5.ஆத்திரமும் வேதனையும் கொண்டு “இரு நான் பார்க்கிறேன்…” என்ற வேகத்துடன் குனிந்து நிமிர்ந்தால்
6.இந்த வேதனையான உணர்ச்சிகள் உடலில் அழுத்தமாகி… முழங்காலிலும் மூட்டுகளிலும் விஷத் தன்மை கூடிவிடும்.

ஆனால் முதலில் ஒன்றும் தெரியாது…! கடைசியில் அங்கே மடக்கி இயங்கும் இடங்களில் விஷம் பட்டுவிடும். காலைத் தூக்கினால் மடக்கினால் கால் வலிக்கின்றது மேல் வலிக்கின்றது என்று வரும்.

காரணம்…
1.மடக்கும் போது நல்ல ரத்தங்கள் பிரிந்து விடுகின்றது.
2.அந்த உணர்ச்சியின் தன்மை நீரை இழுத்து வளர்த்துக் கொள்ளும் இரத்தம் தங்குவதற்கு வழி இல்லை.
3.மூட்டு வலி கை கால் வலி என்று வந்துவிடும்.

வேதனையான உணர்வை எண்ணி இந்த உணர்வின் சக்தி வரப்படும் பொழுது அங்கே எதை வளர்த்ததோ இந்த உணர்வின் சக்தி தன்னாலே வரும். நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் நம் உயிரின் இயக்கங்கள் இந்த உணர்வுக்குத் தக்க இந்தப் பூமியில் எப்படி நடக்கின்றதோ அதைப்போல நம் உடலில் சேர்த்து விடுகின்றது.

இதை நீக்குவது யார்…?
1.அதை நீக்கச் செய்வதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்தி
2.ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு வருகிறேன்.

பச்சிலைகளின் மகிமை

பச்சிலைகளின் மகிமை

 

டேய் இந்தப் பச்சிலை பேசுமாடா…? என்றார் குருநாதர்.

என்ன சாமி…? பச்சிலைக்கு வாய் இல்லையே…! அது எப்படிப் பேசும்…? என்றேன். ஒன்றல்ல… இரண்டல்ல… எத்தனையோ பச்சிலைகளைக் காண்பித்துப் பேசுமாடா…? என்று அவர் கேட்பார். எப்படி சாமி பேசும்…? என்று நான் கேட்பேன்.

முதலில் ஒரு நல்ல பச்சிலையைக் கொடுத்து என்னை நுகரும்படி செய்தார். எப்படி இருக்கிறது…? என்றார்.

1.சாமி…! “கம…கம…” என்று இருக்கிறது. உடல் “ஜம்” என்று இருக்கின்றது என்று சொன்னேன்.
2.இப்போது யாருடா பேசியது…? என்கிறார்.
2.இந்த வாசனை உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை உன்னைப் பேச வைக்கிறதா இல்லையா…? என்றார்.

இப்படியே சொல்லிக் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு செல்கிறார்.

அடுத்து… வேறு ஒரு பச்சிலையை நுகரச் சொன்னார். நுகர்ந்தேன்… தலை சுற்ற ஆரம்பித்தது. சாமி…! தலை சுற்றுகிறது… எங்கேயோ என்னைக் கொண்டு செல்கின்றது என்றேன்.

1.இப்போது யாருடா அதைச் செய்வது…?
2.அந்தப் பச்சிலை தானே…! என்று கேட்டார்.

உயிரினங்களில் பச்சிலைகளைச் சாப்பிடுகின்ற வெள்ளாட்டைப் பாருங்கள். எருக்கலையைச் சாப்பிட்டால் வயிறு வெந்துவிடும். அதே சமயத்தில் விஷ முள் பச்சிலையை எடுத்து அரைத்து மேலே தேய்த்தால் கை கால் எல்லாம் சரியாக வராது செயலிழந்து விடும். தலையில் தேய்த்தால் பித்துப் பிடித்தது போல் ஆகிவிடும்.

என் தலையிலே அதைத் தேய்த்தார்…! பாருடா என்ன செய்கிறது…? என்றார். தலை சுற்றிக் கொண்டே இருக்கின்றது புத்தி பேதமாவாது போன்று ஆனது.

1.மீண்டும் உனக்கு நல்ல நினைவு வருவதற்கு நினைவூட்டச் செய்வது யார்…?
2.அந்தப் பச்சிலை தானே…! என்றார் குருநாதர்.

பரிணாம வளர்ச்சியில் புழுவில் இருந்து மனிதனாக வரும் நிலையில் ஒன்றை ஒன்று கொன்று தின்று கொன்று தின்று ஒன்றுக்கு இரையாகி இப்படித் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்.

உதாரணமாக பல்லியினுடைய மூத்திரம் நம் மீது பட்டால் மேலெல்லாம் பொறிகளாகிக் கொப்புளமாகிவிடும். உணவுப் பொருளில் பல்லி விழுந்து விட்டால் அதை நாம் சாப்பிட்டால் நம்மைக் கொன்று விடும்.

ஆனால் அந்த விஷத்தன்மை உருவாகி அந்தப் பல்லிக்கு அது பாதுகாப்பு ஆகிறது. இருந்தாலும் அந்தப் பல்லியைக் கோழி உட்கொள்கின்றது… மற்ற சில பறவைகளும் சாப்பிடுகின்றது. அதனின் உறுப்புகள் இந்த விஷத்தை அடக்கக் கூடிய சக்தி இருப்பதால் அதை ஒன்றும் செய்வதில்லை.

நீ சாப்பிடுடா பார்க்கலாம்…! என்று என்னைச் சாப்பிடச் சொல்கின்றார்.

சாமி…… என்றேன்.

நான் சொல்வதை எல்லாம் கேட்கிறேன் என்று சொன்னாய் அல்லவா கேளு…! என்கிறார்.

நான் பிள்ளை குட்டிக்காரன்… என் உயிர் போய்விடும். என்று சொன்னேன். ஆனால் அவர் விடவில்லை. அதைச் சாப்பிடும் படிச் செய்து அந்த உணர்வு என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார்.

1.அதற்குப் பாதுகாப்புக்காகப் பச்சிலை ஒன்றை உனக்குக் கொடுக்கிறேன்
2.கையில் கொடுத்து… இந்த பச்சிலையைச் சாப்பிட்டால் உன்னை அந்த விஷம் எதுவும் செய்யாது என்றார்.

இப்படி அந்தப் பச்சிலைகளுக்கு உண்டான மகிமையைக் காட்டுகிறார். அந்தப் பச்சிலையை நுகர்ந்து பார்த்த பின் விஷங்களை அது முறிக்கின்றது.

ஆக… அந்தப் பச்சிலைகளின் சக்திகளை எல்லாம் நான் சுவாசிப்பதற்காக வேண்டி
1.ஒரு கட்டுக் கணேஷ் பீடியை வாங்கிக் கொடுத்துப் பற்ற வைத்து ஊதுடா…! என்கிறார்.
2.கணேஷ் பீடி என்றால் கணேசன்…! கணங்களுக்கு எல்லாம் ஈசன் என்று அவன் உணர்வுகளை நீ நுகர்ந்தால்
3.கணங்களுக்கு ஈசனாக உற்பத்தி செய்வான்டா…! என்று சொல்லி… ஒரு கட்டுப் பீடியைக் குடிடா என்று சொல்கின்றார்.

நீ அப்படிச் செய்தால் கணங்களுக்கு ஈசனாக மாறும் என்கிறார். ஏனென்றால் பைத்தியக்காரத்தனமாகத் தான் சொல்வார்.

அந்த உணர்வுகளை எடுத்து நுகர்ந்தவுடன்…
1.யாரெல்லாம் உடல் நலமில்லாதபடி நோய்வாய்ப்பட்டுள்ளார்களோ
2.அவர்களுடைய நோயெல்லாம் போக வேண்டும்…! “ஊதுடா…” என்று சொல்கின்றார்.

அவர்களை நினைத்து இதைச் செய்த பின் அவர்கள் வீட்டிலே இந்த பீடி வாசனை வருகிறது. அந்தச் சமயத்தில் நான் சுற்றுப்பயணம் செல்லும் பொழுது சாமி வந்து விட்டார் என்று சிறிய குழந்தைகள் எல்லாம் சொல்வார்கள்.

1.அங்குள்ளவர்களுக்கு நோய் இருந்தால் அது உடனே நீங்குகிறது.
2.இப்படித் தான் பச்சிலைகளின் ஆற்றலை எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.

வெள்ளாட்டுப் புழுக்கையின் மருத்துவ குணம்

வெள்ளாட்டுப் புழுக்கையின் மருத்துவ குணம்

 

வெள்ளாடு பல விஷச் செடிகளை உணவாக உட்கொள்கின்றது… அந்த விஷத்தன்மைகளைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றது.

கருவுற்றிருக்கும் ஒரு வெள்ளாடு
1.அந்தச் சமயத்தில் எந்தெந்தத் தாவர இனங்களை உட்கொண்டதோ அந்தக் குட்டி பிறந்த பின் என்ன செய்யும்,…?
2.தாய் கருவுற்ற சந்தர்ப்பத்தில் எத்தகைய செடிகளை உணவாக உட்கொண்டதோ அதையே அந்தக் குட்டியும் உணவாக எடுத்துக் கொள்ளும்.

உதாரணமாக இன்ன இடத்தில் இருக்கக்கூடிய விஷச் செடியை அந்தத் தாய் உட்கொண்டிருந்தது என்றால் அதிலே கருவுற்று வளர்ந்த இந்தக் குட்டியும்
1.இந்த ஆட்டுக்குட்டியை வேறு இடங்களுக்கு விலைக்கு வாங்கிச் சென்றாலும் கூட
2.அதே விஷச் செடியைத் தேடித்தான் செல்லும்… அது இல்லை என்றால் வாடும்.

காரணம் கருவிலே இருக்கும் போது அது நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனுடைய உணர்ச்சிகள் அவ்வாறு இயங்குகின்றது.

இத்தகைய விஷச் செடியை உணவாக உட்கொள்ளும் அந்த ஆடு அதில் உள்ள விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது. ஆனால் அதனுடைய மலம் நல்லதாக வெளி வருகின்றது. அந்த வெள்ளாட்டுப் புழுக்கையை நாம் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

மூட்டு வலி மூட்டு வாதம் சரவாங்கி நோய் என்றெல்லாம் சிலருக்கு இருக்கும். காரணம்
1.பிறருடைய துன்பங்களையும் துயரங்களையும் கேட்டு நுகர்ந்த நிலையில்…
2.வேதனைப்பட்ட மனிதர்களின் உணர்வுகளையும் நுகர்ந்திருந்தால்
3.அதனால் வேதனையை உருவாக்கும் அணுக்கள் உடல் உருவாகி மூட்டுவாதம் முழங்கால் வாதம் போன்ற உபாதைகளும்
3.ஈரக்குலையில் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது வேதனைப்படும் நிலைகளும் உருவாகின்றது.

இதை மாற்றி அமைக்க அந்த வெள்ளாட்டுப் புழுக்கையைச் சிறிதளவு எடுத்து அதை லேசாகச் சூடாக்கி “அதிலிருந்து வெளி வரும் மணத்தை நுகர்ந்தால்…”
1.உடலுக்குள் இருக்கும் விஷத்தன்மையை முறித்து விடுகின்றது.
2.மூட்டு வீக்கத்திற்கு உண்டான அணுக்கள் மடிகின்றது விஷ நீர்களை அகற்றுகின்றது வாத நோய்கள் குறைகிறது.

இப்படி அந்த வெள்ளாட்டுப் புழுக்கையின் மணம் மருந்தாக மனிதனுக்குப் பயன்படுகிறது.

உடல் உபாதைகளை அகற்ற உங்களுக்கெல்லாம் சில நிலைகளை உணர்த்துகின்றேன்

உடல் உபாதைகளை அகற்ற உங்களுக்கெல்லாம் சில நிலைகளை உணர்த்துகின்றேன்

 

1.வெள்ளாடு நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்றது.
2.விஷத்தைத் தன் உடலாக்கி நல்ல நிலையை அது வெளிப்படுத்துகின்றது.

அதன் புழுக்கையை எடுத்து நன்றாகக் காய வைத்து ரொம்பக் கொதிகலனாகாதபடி சிறு வெப்பத்தின் நிலைகள் கொடுத்து அந்த ஆவிகள் வெளிவரும் பொழுது அதை நுகர்ந்து பாருங்கள். அதைச் சுவாசித்து உடலுக்குள் அந்த மணம் செல்லும் பொழுது மருந்து சாப்பிடுவது போன்று விஷத்தை ஒடுக்கும் வல்லமை பெறுகின்றது.

டி.பி. ஆனாலும் கேன்சர் ஆனாலும் கடும் நோயாக இருந்தாலும் இருதய வாயில்களில் அடைப்பானாலும் சிறிது நேரம் அதிகமாகச் சுவாசித்துப் பழகுங்கள். இரத்த நாளங்களில் இது கலக்கும்.

அதனுடன் சேர்த்து உங்கள் உயிரான ஈசனிடம் ஈஸ்வரா என்று வேண்டி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் ரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்.
3.எங்கள் உடலுக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் அகன்று அந்த அருள் சக்திகள் வளர வேண்டும்.
4.எங்களை அறியாமல் இயக்கும் இந்த உடல் உபாதைகள் நீங்க வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்.

ஆஸ்மா போன்ற நோய்கள் எல்லாம் பரம்பரையாக வருவது. சர்க்கரைச் சத்தும் இது போன்று பரம்பரையாக வந்து கொண்டிருக்கின்றது.. பிறந்த குழந்தைக்கும் சர்க்கரைச் சத்து இருக்கிறது என்று சொல்கின்றார்கள்.

நான்கு வயது மூன்று வயது குழந்தைகளுக்குக் கூட இன்சுலின் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் தாய் வழியில் பரம்பரையாக. வருவதனால். காசு பண வசதி இருக்கும் வரை போடுகின்றோம். காசு இல்லை என்றால் விட்டு விடுகின்றோம்.

அதற்குப்பின் இந்த மாதிரி ஆகிவிட்டதே என்று இறந்து விடுகின்றார்கள். இதே உணர்வை மீண்டும் எண்ணி எடுக்கப்படும் பொழுது அடுத்தவர் உடலிலும் இப்படி வளர்ந்து கொண்டே இருக்கின்றது. இதைக் குறைக்கும் வழி இல்லை.

கோவிலுக்குச் சென்றேன் சாங்கியங்களைச் செய்தேன். பாவத்தை போக்கக் காசைக் கொடுத்துவிட்டு செய்யும் நிலைகள் தான் இருக்கின்றது. இது எல்லாம் நம் வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

வளர்ச்சி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

மற்ற உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுவானதை நுகர்ந்து நுகர்ந்து… அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அதனின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டதோ
1.அந்த உணர்ச்சிகள் வளர்ச்சியான பின் அந்த வலுவான உடலில் அது புகுந்து அந்த ரூபமாக மாறுபட்டு எப்படி வருகின்றதோ
2.இதே போல் மனிதனின் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற ஞானிகள் அருள் உணர்வுகளை எடுத்து நாம் வளர்த்துக் கொண்டால்
3.இதன் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் சென்று உணர்வை ஒளியாக மாற்றிவிட்டு பத்தாவது நிலையான முழுமை அடைகின்றோம்.

இரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்

இரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்

 

சிறுநீர் கழிக்கின்றோம் என்றால் இந்த உடலில் மோதலால் ஏற்படும் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து சுண்ணாம்புக்கல் மாதிரி ஆகிறது. சிறுநீரகம் கழித்த இடங்களில் பார்த்தால் இது தெரியும்.

இதே போன்று நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மையும் ரத்த நாளங்களில் இது கலக்கும்.. இதைத்தான் கிட்னி என்ன செய்கிறது…?
1.விஷங்கள் வந்தால் அந்த ரத்தங்களைச் சுத்திகரிக்கின்றது.
2.அதிகமான வேதனை உணர்வுகள் வடிகட்டப்படும் பொழுது விஷங்கள் அதிகமாகத் தாக்கித் தாக்கிச் சிறுநீரகம் பலவீனமடைகிறது.
3.அப்படிப் பலவீனமடையப்படும் பொழுது ரத்த நாளங்களில் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றது.
4.அதன் வழி கெட்ட அணுக்களுக்கு ரத்தத்தின் வழி கொண்டு சேர்க்கின்றது.

வேதனையை மீண்டும் சுவாசிக்கப்படும் பொழுது அது ரத்தத்திலே கலக்கின்றது. வடிகட்டி அனுப்பினாலும் இந்த வேதனை உணர்ச்சிகள் அதிகமாகும் போது அந்த உணர்ச்சிகள் தாங்காது விரிவடைந்து “வடிகட்டும் தன்மை இழக்கப்படுகிறது…”

ஒரு சல்லடையில் ஓட்டை விழுந்து விட்டால் தொப்… தொப்… என்று அதன் வழியில் எல்லாம் இறங்கி விடும். அதைப் போல்
1.இயக்கச் சக்தியைப் பிழியும் தன்மை இழக்கப்படுகின்றது.
2.வடிகட்டாத உணர்வுகள் உடல் முழுவதும் செல்லப்படும் பொழுது நல்ல உணர்ச்சியைத் தூண்டும் நல்ல அணுக்களுக்கும்
3.மனித உடலை உருவாக்கிய அணுக்களுக்கும் நல்ல சத்து கிடைப்பதில்லை.

நாம் ஆகாரம் உட்கொண்டாலும் அதிலும் சில விஷத்தன்மைகள் வரும். அதையும் கிட்னி வடிகட்டும். நுகர்ந்த உணர்வுகள் ரத்தத்தில் கலக்கப்படும் போது சிறுநீரகம் அதையும் வடிகட்டும்.

ஆனால் வடிகட்டும் தன்மை இழக்கப்படும் பொழுது எல்லாம் தாராளமாகச் சென்று விடும்.

அப்பொழுது இருதய வால்வுகள் உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்பப்படும் (PUMP) நிலையில் என்ன ஆகிறது…?
1.கிட்னி கழிவுகளைக் கழிக்க தவறப்படும் பொழுது
2.அந்த இடத்திலே அவைகள் சிறுக சிறுக உறையத் தொடங்கும்.

அந்த உறையின் தன்மை ரத்தம் போகும் பாதையில் அதிகமாகி ஒன்றுக்கொன்று வடிகட்டிச் செல்லப்படும் பொழுது இருதயத்திலே தொல்லைகள் வரும். அங்கே உணர்வின் அழுத்தம் ஆகி இதயத்தில் லேசாக வலிக்கிற மாதிரி இருக்கும்.

அழுத்தம் அதிகமாகும் பொழுது இரத்தத்தை ஈர்க்கும் சக்தியும் குறைகின்றது. பம்பில் சிறு ஓட்டை இருந்தால் எப்படியோ அது போல் உறுப்புகளில் இருதய வாயிலை மிகவும் பலவீனப்படுத்தும்.

அடிக்கடி மூச்சுத் திணறலும் நடந்து சென்றாலும் கூட எத்தனையோ தொல்லைகள் வரும்.

வேதனை உணர்வு வரப்படும் போதெல்லாம் சிறுநீரகத்தால் வடிகட்டத் தவறும் போது அதை மாற்ற முடியாது இப்படி ஆகிவிடுகிறது. வைத்திய ரீதியாக உங்களுக்குத் தெளிவாக்குகின்றேன்.

இதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால்
1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.நம்முடைய எல்லா குணங்களிலும் எல்லா எண்ணங்களிலும் எல்லா உணர்வுகளிலும் அதை இணைக்க வேண்டும்.

அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஆத்ம சுத்தி செய்து கொண்டால் உடல் உறுப்புகளைச் சீராக இயக்கி நல்ல வடிகட்டும் திறன் பெற்றுத் “தீமைகளை அகற்றிடும் சக்தி வாய்ந்த உறுப்புகளாக அமையும்…”

நாம் என்றுமே அந்த அருள் வழியில் வாழ இது ஏதுவாக இருக்கும்.

உடலில் நோய் இருந்தாலும் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

உடலில் நோய் இருந்தாலும் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு… ஒருவருக்குக் கண் இல்லையென்றால் மாற்றுக் கண்ணைப் பொருத்திக் கண் பார்வை கொடுக்கின்றனர்.

செவித் தன்மைக்கு இப்படி ஒரு மாற்று ஏற்பாடு இல்லை என்றாலும் அவர்களுக்கு உணர்வின் உணர்ச்சிகளை (சைகை மூலம்) தெரியும்படிக் கொண்டு வருகின்றார்கள்.

இருதயம் பழுதாகி விட்டால் பழுதான இருதயத்தை அகற்றிவிட்டுச் செயற்கை இருதயம் பொருத்துகின்றனர்.

நோயாளியின் உடலிலும் மற்றவர் உடலிலும் உள்ள சில செல்களைக் கழித்துப் பழுதான உறுப்பு போன்றே “மோல்டு…” செய்யப்பட்டு அந்த உணர்விற்குள் சேர்க்கப்பட்டு அதே போன்ற புது உறுப்புகளை உருவாக்குகின்றனர்.

இந்த உடலுக்கும் மற்ற உடலுக்கும் என்ன இருக்கிறதென்று ஆய்ந்து உணர்வின் செல்களை உருவாக்கி உறுப்புகளை எடுத்து இணைக்கின்றனர்.

இப்படி இணைத்தபின் இரத்தத்தில் வருவதைச் சமப்படுத்த வேண்டும். எதிர் நிலையானால் கழன்று கொள்ளுகின்றது. மாற்று இருதயம் பொருத்தினாலும் அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினாலும் இதே தான்…! இரத்தம் சீராக இருக்க வேண்டும்.

1.இரத்தத்தை வடிகட்டிச் சுத்தப்படுத்துவதற்காகச் சில மருந்துகளை டாக்டர்கள் கொடுப்பார்கள்.
2.கொடுக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டால் தான் இரத்தத்திற்கும் பொருத்தப்பட்ட உறுப்பிற்கும் பொருந்தி வரும்.
3.ஒரு நாளைக்கு மருந்து சாப்பிடவில்லை என்றால் பொருத்தப்பட்ட உறுப்பின் இயக்கம் தோற்றுவிடும்.

ஆகையால் இரண்டையும் சமப்படுத்திச் சீராக இருந்தாலும் ஒருவர் காய்ச்சலுடன் வருகின்றார். அவருடைய காய்ச்சலின் வீரியம் கண்டு அதன் உணர்வை நுகர்ந்து விட்டால் உடலில் கிருமிகளாகின்றது.

அன்றைக்கு இவர்களுக்கு ஆபத்து…! ஆபத்து என்று வந்துவிட்டால் அதற்கென்று மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

அது சமயம் சாதாரண டாக்டரிடம் சென்றால் பொருத்தப்பட்ட உறுப்பு கழன்றுவிடும். இப்படியெல்லாம் விஞ்ஞானிகள் அதற்கென்று பருவத்தைச் பார்த்து செயல்படுத்துகின்றனர்.

ஆனால் இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தும் நாம் எத்தனை நாள் வாழுகின்றோம்…? சிறிது நாள் தான் வாழுகின்றோம்.

1.நமக்கு இப்படி ஆகிவிட்டதே…!
2.மருந்தையும் சுவையில்லா உணவையும் தான் சாப்பிட்டு வாழ்கின்றோம்…” என்ற வேதனை அதிகமாகின்றது.
3.மக்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கின்றார்கள்… நம் காலம் இப்படியாகி விட்டதே…!” என்று
4.நாம் நல்லவர்களாக இருந்தாலும் வேதனையின் உணர்வைத்தான் அதிகமாக்க முடிகின்றதே தவிர… மாற முடிகின்றதா…?

ஆகவே நாம் நமது உடலில் இருக்கும் காலத்தில் எதைச் சேர்க்க வேண்டும்…?

1.உடல் நலக் குறைவாக இருந்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும்.
2.ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று “நம் உணர்வுகளை மாற்றினால்…” நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

இவையெல்லாம் குருநாதர் எமக்குக் காண்பித்த உண்மைகள்.

எதையுமே சீர்படுத்த “துருவ நட்சத்திர தியானம் மிகவும் அவசியம்…”

எதையுமே சீர்படுத்த “துருவ நட்சத்திர தியானம் மிகவும் அவசியம்…”

 

இன்று விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்த நிலையில் மருத்துவ ரீதியில் மனிதனுக்கு வரக்கூடிய நோய்களை மருந்தைக் கொடுத்துக் குணப்படுத்துகின்றார்கள்.

இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதில் என்னென்ன நிலை இருக்கின்றது…? என்று கண்டுபிடித்து அதற்குத் தக்க மருந்துகளைக் கொடுக்கின்றார்கள்.
1.உடலுக்குள் இரத்தத்தின் வழி மருந்து சென்று
2.அந்த நோய்க்குக் காரணமான கிருமிகளை வலு இழக்கச் செய்கின்றது… கொல்கிறது.

ரத்தத்திலே அல்லது உறுப்புகளில் அந்தக் கிருமிகள்… வைரஸ் எவ்வாறு உருவாகின்றது…? எந்த மருந்தினைக் கொடுத்தால் அந்த வைரஸ் செயலிழக்கும்…? என்று அவர்கள் கண்டறிந்து அந்த மருந்தைக் கொடுக்கின்றார்கள்… உடலைச் சரி செய்கின்றார்கள்.

மருத்துவர்கள் நாடி பிடித்துப் பார்த்து… இதைச் சாப்பிட்டால் சரியாக வரும் என்று இப்படி எல்லாமே கொடுக்கின்றார்கள். ஆனால் இதில் சிறிதளவு எதிர்மறை ஆகிவிட்டால் வேறு நோய் வந்து விடுகின்றது.

அதாவது… மருந்தைச் சாப்பிட்டேன் என் வாய் எல்லாம் புண்ணாகி விட்ட்து. உடலில் சில இடங்களில் கொப்புளித்து விட்டது என்றெல்லாம் சொல்வார்கள்.

வீரிய மருந்தைக் கொடுத்துக் கேன்சரை நீக்குகிறேன் என்பார்கள். ஆனால்
1.அந்த மருந்து உடலுக்குள் சென்ற பின் கேன்சர் அணுக்களைக் கொல்வதைக் காட்டிலும்
2.உடலில் இருக்கக்கூடிய மற்ற நல்ல அணுக்களை எல்லாம் கொன்று விடுகின்றது,

காரணம்… நோய் கடுமையான பின் அதனின் நாடித் துடிப்பு பற்றிச் சரியாகத் தெரியாதபடி மருந்தைக் கொடுக்கப்படும் பொழுது என்ன ஆகிறது…?
1.எந்த நோய் முதலில் உண்டானதோ அதைக் குணமாக்கும்.
2.ஆனால் மற்ற நல்ல அணுக்களுக்கு ரியாக்ஷன்… எதிர் நிலையாகி அதை மாற்றி விடுகின்றது.

ஆக… எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் ஒரு நூல் தவறினால் மறு பக்கம் தீமைகளை உண்டாக்கி விடுகின்றது. உடல் நலம் பெறச் செய்ய இது போன்று நாம் செயல்பட்டாலும் கூட அதைச் சமப்படுத்த வேண்டும்.

அதைச் சமப்படுத்துவதற்கு
1.யாம் சொல்லும் தியானத்தை எடுத்துக் கொண்டு
2.ஆத்ம சுத்தியைச் சரியான முறையில் வலு சேர்த்துக் கொண்டால் சீராக்க முடியும்.
3.எதிர்மறையான நிலைகளையும் தடுத்து நிறுத்த முடியும்.

அதற்குத் தான் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் பெறுகின்றோம்.

மனிதனாக இருந்து அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலைப் பெற்றான்… துருவனானான். அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றினான். ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அதிலிருந்து வரும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.துருவ நட்சத்திரம் பூமியின் துருவத்தின் நேர் பகுதியில் இருப்பதால்
2.முதல் பங்காக இங்கே கவர்ந்து நமக்கு முன் கொண்டு வருகிறது.
3.அதைத் தான் உங்களை நுகரும்படி அடிக்கடி சொல்கிறோம்.

ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்தால்… அது நமக்குள் வந்து விடுகிறது. இருவர் சண்டையிடுகிறார் என்று உற்றுப் பார்த்தால் அதை நுகர்ந்தால் நமக்குள் அது வந்து விடுகின்றது.

ஒரு தடவை வந்து விட்டால் மீண்டும் எண்ணமாகி நினைவாகி அது வரத் தொடங்குகிறது. இப்படி மனிதனுக்கு மனிதன் உற்றுப் பார்த்த உணர்வுகள் கவரப்பட்டு இப்படி நமக்குள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. தீமை செய்யும் அணுக்களாக உடலுக்குள் உருவாகின்றது.

ஆனால் இது போன்ற தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்… ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

நம் ஆன்மா மட்டுமல்ல… நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

1.இந்தக் காற்று மண்டலம் விஷத்தன்மை அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி எடுத்து நமக்குள் தீமை புகாது… நோய் வராது… தடுக்க வேண்டும்.

ஒரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் எழுகின்றனர் – விளக்கம்

ஒரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் எழுகின்றனர் – விளக்கம்

 

தயவு செய்து பிறருக்கு ஏற்படும் துன்பங்களையோ வேதனைகளையோ பார்த்துச் சந்தோஷப்படாதீர்கள்.
1.பிறரின் துன்பத்தைப் பார்த்து “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்” என்று சந்தோஷப்படுவீர்களானால்
2.அதனின் உணர்வுகள் உங்களில் விளைந்து நோயாக உருவாகிவிடும்.

விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகளைச் செய்து மனித உணர்வின் செயல்களை அறிகின்றனர். விஞ்ஞானி ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார் பெண்ணை ஆணாக மாற்றுகின்றார்.

அதே சமயத்தில் மனித உடலில் வருகின்ற நோய்களைப் போக்குவதற்குப் பாம்பு தேள் மாடு போன்றவைகளில் பல இரசாயனங்களைக் கலந்து அதில் மருந்தினைத் தயாரிக்கின்றனர்.

நமது நுரையீரல் கெட்டுப் போய்விட்டது… இருதயம் கெட்டுப் போய்விட்டது என்றால் இப்பொழுது அஞ்ச வேண்டியதில்லை. பல நவீனக் கருவிகளின் துணை கொண்டு செயற்கை உறுப்புகளை நமது உடலில் பொருத்திப் பழுதுபட்ட உடல் பாகங்கள் மேலும் சிறிது நாளைக்கு வேலை செய்யும்படியாக அமைத்து விடுகின்றார்கள்.

இத்தகைய விஞ்ஞான நிலைகள் இருந்தாலும் இந்த உடலில் எத்தனை நாள் வாழப் போகின்றோம்…? மேலும் சிறிது காலம் வாழுவதற்கே இதைச் செய்கின்றனர்.

இப்படி மாற்று உறுப்புகளை பொருத்திக் கொண்டவர்கள் மற்றவர்கள் மாதிரிச் சந்தோஷமாக இருக்க முடியாது.

ஏனென்றால் மாற்று உறுப்புகளைப் பொருத்திக் கொண்டபின் முன் போன்று நமது பணிகளைச் செய்ய முடியாது. டாக்டர்கள் சில விதிகளைக் கொடுத்து இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று கூறிவிடுவார்கள். இப்படித்தான் நமக்கு மருந்துகளையும் மற்ற நிலைகளையும் கொடுத்துச் சமப்படுத்துகின்றனர்.

இப்படிச் சமப்படுத்தி வாழும் நாம் மற்றொருவர் கடுமையான காய்ச்சலில் இருக்கும் பொழுது அவரை உற்றுப் பார்த்து அவருடைய வேதனையைக் கேட்டறிந்தால் உடனடியாக நமக்குள் பல நிலைகள் வரும்.
1.ஆகவே நாம் எல்லாவற்றிற்கும் அஞ்சி வாழ்ந்து
2.நம்முடைய நிலைகளில் சோர்வடைந்து நிம்மதி என்பதை இழந்திருப்போம்.

சர்க்கரைச் சத்து வியாதிக்கு இனிப்பைச் சாப்பிடக்கூடாது மற்றும் அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதால் நாம் விரும்பியதைச் சாப்பிட முடியாமல் நமக்குள் வேதனை வளர்ந்து கொண்டே வரும்.

ஆகவே எவ்வளவு நிலையானாலும்
1.மனிதர் துரித நிலையில் மடியும் தன்மைதான் வருகின்றதே தவிர மனிதர் நீடித்த நாள் வாழும் சக்தி உள்ளதா…?
2.இந்த மனித உடலில் நாம் முழுமையாக இருக்க முடிகின்றதா…? இல்லை.

குறுகிய காலம் வாழ்வதற்காகப் பல உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டேதான் வாழுகின்றோம்.

இதே போன்று ஆஸ்த்மா உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிட்டால், உடனே அவர்களுக்கு ஆஸ்துமா தொல்லை அதிகமாகிவிடும். குளிர்ந்த பானத்தைச் சாப்பிட்டாலும் இதே போன்று வந்துவிடும்.

ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊருக்குச் சென்றால் அந்த ஊரின் தண்ணீரைச் சாப்பிட்டால் எதிர் நிலையான கிருமிகள் உண்டாகி ஆஸ்துமா தொல்லை அதிகமாகி விடுகின்றது. ஆகவே மனிதருக்குள் இத்தகைய வினைகள் வந்து கொண்டே இருக்கின்றது.

குடும்பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா நோய் இருக்கிறதென்றால் அந்தக் குடும்பத்தில் மற்றவர்கள் பேசும் பேச்சின் உணர்வுகளை அவர்களது குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண் உற்றுக் கேட்டு நுகர்கிறதென்றால் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் வளரும் சிசுவினிடத்தில் ஆஸ்துமாவை உருவாக்கும் அணுக் கிருமிகள் உருவாகி விடுகின்றன.

குழந்தை தவறு செய்ததா…? இல்லை.

இதே போன்று ஒரு குடும்பத்தில் சர்க்கரைச் சத்து உள்ளவரை ஒரு கர்ப்பிணிப் பெண் அதிகமாகக் கவனித்து அவருடைய சொல்லைக் கேட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சர்க்கரைச் சத்து வந்துவிடும்.

இதனைப் பரம்பரை நோய் என்று சொல்லுகின்றார்கள்.

இன்று உலகில் எடுத்துக் கொண்டால் நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர் ஆஸ்துமாவில் வாடுகின்றனர். நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர் சர்க்கரை வியாதியால் வாடுகின்றனர். நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர் இரத்தக் கொதிப்பால் வாடுகின்றனர்.

இப்படி… குடும்பத்தில் ஒருவருக்கு நோய் இருந்தும் உணர்வின் வழி மற்றவருக்கும் பரவுகின்றது.

இதைத்தான் இராமாயணத்தில் ஒரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் எழுகின்றனர் என்று கூறுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் நிலையாக நமது குருநாதர்
1.ஒரு மனித உடலுக்குள் வேதனை என்ற நிலை உருவாகி
2.அந்த அசுர உணர்வுகளால் அந்த மனிதர் மடிந்தார் என்றால்
3.அந்த உடலில் விளைந்த உணர்வின் அலைகளை நுகர்ந்தவர்கள் எவர் எவரோ
4.அந்த உடல்களைக் கொல்கின்றது…! என்பதை எமக்கு உணர்த்தினார்.

மனித உடலில் எடுத்துக் கொண்ட வீரிய உணர்வுகளுக்கொப்ப தேள் பாம்பு கொசு போன்ற நிலைகள் மனித உடலில் இருந்து பிறக்கும் தன்மை வருகின்றது.

மனிதரை முழுமுதல் கடவுள் என்று விநாயகரை வைத்து ஞானிகளால் காண்பிக்கப்படுகின்றது. மனித உடலில் இருந்து வெளிப்படக் கூடிய உணர்வுகள் எதுவோ அதற்குத்தக்க ஒவ்வொரு உடலிலும் சேர்க்கப்படும் பொழுது இந்த நிலை ஏற்படும்.

சலிப்பும் சஞ்சலமும் ஒருவரிடம் அதிகமானால் அவர்களுடைய தலையில் பேன்கள் உருவாகும். பேன்கள் தலையில் அதிகமாக உள்ளவர்கள் பத்து நாளைக்குத் தொடர்ந்து சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்கள் தலையிலுள்ள பேன்கள் தன்னால் மறைந்து போகும்.

இது போன்று சலிப்பு சஞ்சலம் வேதனை உணர்வுகளால் உருவாகும் தீமைகளில் இருந்து மீள்வது எப்படி…?

மனிதராகப் பிறந்து நஞ்சை வென்றவர் அகஸ்தியர்
1.அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானார்.
2.நமது பிரபஞ்சத்திலிருந்து மட்டுமல்ல… அகண்ட அண்டத்திலிருந்து எங்கிருந்து நஞ்சு வந்தாலும்
3.அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
4.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து நமது உடலில் உருவாக்கி விட்டால்
5.இந்த உடலில் தீமையை நீக்கிடும் சக்தியினை நாம் பெறுகின்றோம்.

மனித உணர்வுகளின் இயக்க உண்மைகளை அறிந்து மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் செயல்பட்டுத் தம்மிடத்தில் அறியாது சேரும் தீமைகளை அகற்றி இருளான உணர்வுகளை நீக்கி… மெய்பொருள் காணும் நிலையாக வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவரும் இருளினை வென்று பேரருள் பெற்று பேரொளி பெற்று… உங்கள் பேச்சால் மூச்சால் பார்வையால் மற்றவர்களின் தீமைகளை நோய்களை நீக்கும் அருளாற்றல் பெற்று… இந்த வாழ்க்கையில் பெருவீடு பெருநிலை பெறும் நிலையாக பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட… எமது அருளாசிகள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறுங்கள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறுங்கள்

 

பாலில் பாதாமைப் போட்டால் சத்துள்ளது தான். ஆனால் அறியாதபடி ஒரு துளி விஷம் அதிலே பட்டு விட்டால் பாலுக்குச் சக்தி இல்லை.

இதைப் போல்தான் நாம் உயர்ந்த உணர்வு கொண்டு இருந்தாலும்
1.பிறர் செய்யும் தவறுகளையும் பிறர்படும் வேதனைகளையும் இப்படிச் செய்கின்றார்களே என்று அறிந்து கொண்டாலும்
2.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் தெய்வ ஆணை ஆகி அந்த உணர்ச்சிகள் நம் உடலில் சேர்க்கப்பட்டு
3.நம் சொல்லும் செயலும் அதன் வழி அமைந்து “அந்த உணர்வு அமிலமாகி” உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவுகள் பாழ்படுகிறது.
4.நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பகைமை உணர்வு கொண்டு எதிர்நிலையால் தாக்கப்படும் பொழுது சீராக உணவு உட்கொள்ள முடிவதில்லை. ஆனால் பசி எடுக்கும்… உணவை உட்கொள்ள முடியாது.

பசியின் தன்மையால் “பித்தம் அதிகமானால்” உமட்டல் அதிகரிக்கும்.

மனிதனின் சகஜ வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமைகளையோ குடும்பத்தில் ஏற்படக்கூடிய சில வேதனையான நிலைகளாலோ வேதனை அதிகமானால் உடலுக்குள் அஜீரணக் கோளாறு ஆகிவிடும்.

வயிறு உப்புசமாகும்… வாயு அதிகமாக உருவாகும்… ஜீரண சக்தி குறையும்…! அதனால் புளிப்பின் தன்மை ஏற்படும் போது ஜீரண உறுப்புகளில் பாதுகாப்பாக இருக்கும் அமிலங்களைச் செயலற்றதாக ஆக்கி அதனால் எரிச்சலாகி உணவை உட்கொள்ள மறுக்கச் செய்வதும் இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்.

இதை போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமல்லவா.

தவறு செய்கிறார்கள் என்று மற்றவர்கள் உணர்வுகளை எப்படி நுகர்கின்றோமோ அதைப் போல் அதை நீக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். அதை அவ்வப்பொழுது நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுங்கள். அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் நஞ்சினை அவன் வென்றவன். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவன் அருளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

1.மாமமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.
2.அகஸ்தியன் இருளை அகற்றி நஞ்சினை வென்று துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று
3.சிறிது நேரம் இந்தச் சக்தியை உடலுக்குள் கூட்டினால் அந்த உணர்வுகள் நமக்குள் வலுப்பெறுகின்றது.

துணியில் பட்ட அழுக்கை நாம் சோப்பைப் போட்டு நுரையேற்றி அந்த அழுக்கினை எப்படி நீக்குகின்றமோ இதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அதிகரித்து அதை வலுவாக்கி
1.தீமை என்ற உணர்வுகள் சுவாசத்திற்குள் நுழையாதபடி
2.முன் பகுதியில் நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டால்
3.நாம் எடுக்கக்கூடிய உயர்ந்த உணர்வுகளால் சிந்திக்கும் தன்மையும்
4.உடலுக்குள் தொக்கி உள்ள விஷத்தின் தன்மையைத் தணித்து உடல் நலம் பெறச் செய்யும்.

அதற்குத்தான் உங்களுக்குள் அருள் உணர்வைப் பெறச் செய்கின்றோம். எப்போதெல்லாம் குறைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். சிறிது நேரம் அதைச் சுவாசியுங்கள். அந்தத் தீமைகளை அகற்றிடும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அதைப் பெற வேண்டும் என்ற வலுவைக் கூட்டி இதை நீங்கள் பெருக்கிப் பாருங்கள்.
1.உங்களுக்குள் அமைதி கிடைக்கும்… சிந்திக்கும் தன்மை வரும்
2.கோபத்தைக்த் தணிக்கும்… படபடப்பை நீக்கும்.
3.அருள் உணர்வுகள் பெருகும் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.

ஆகவே… இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.