
நோய் நீக்க மருந்தை உட்கொண்டாலும்… “அதற்கு முன்” மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டியது மிக மிக அவசியம்
நாம் கோபப்படுவோரையோ அல்லது ஒரு வேதனைப்படுவோரையோ பற்றிக் கேட்டறிந்து அவர்களுக்கு உபகாரங்கள் செய்தாலும்… கேட்டறிந்த உணர்வுகளை நமது உயிர் (நாம் நுகர்ந்ததை) ஓ… என்று இயக்கி ஜீவ அணுவாக மாற்றி உடலுக்குள் இணைத்து விடுகிறது.
அதாவது நாம் பரிவு கொண்ட மனதுடன் பிறர் வேதனைப்படும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்த பின் “வேதனையை உருவாக்கும் அணுவாக” உருப்பெற்று விடுகின்றது.
உதாரணமாக செடிகளில் விழும் புழுவைக் கொல்ல நஞ்சு கொண்ட மருந்தினை அதன் மேல் பாய்ச்சுகின்றோம். புழு இறந்து விடுகின்றது.
1.அது இறந்தாலும்… அதனின் கருவின் தன்மைக்குள் இந்த நஞ்சு இயக்கப்பட்டு
2.அந்த நஞ்சால் இறக்காத உடலாகப் பின்னாடி (அடுத்து) பெறுகின்றது.
அது போல் மனிதன் வேதனைப்படுவதைக் கூர்ந்து கவனித்து அந்த வேதனையான உணர்வின் சத்தை நாம் நுகர்ந்து விட்டால் அது நமக்குள் அணுவாக மறைகின்றது… நோயாகிறது.
விஞ்ஞான அறிவு கொண்டு அந்த நோயை நீக்க அவன் பாய்ச்சும் நிலைகள்… நஞ்சு கலந்த மருந்தாகக் கொடுக்கின்றார்கள். அது நோயினை வலுவிழக்கச் செய்தாலும்… அதனால் விளைந்த அணுவின் தன்மை அந்த நஞ்சே கலந்ததாகவே மாறுகின்றது..
1.நஞ்சான மருந்தைப் பாய்ச்சித் தான் புழுவைக் கொல்கின்றோம்.
2.அது இறந்தாலும் அது இட்ட கரு முட்டையில் இந்த நஞ்சு பரவி நஞ்சின் தன்மையாக எப்படி அடைகின்றதோ
3.நஞ்சு கொண்ட புழுவாக… நஞ்சுக்கும் அஞ்சாது தப்பி அதனுடைய செயலாக்கங்கள் வளர்வது போன்று
4.இன்று வைத்திய ரீதியில் ஆஸ்த்மா கேன்சர் போன்ற கடும் விளைவுகள் கொண்ட நோய்களுக்கு
5.விஞ்ஞான அறிவால் கடும் விஷத்தை நல்ல மருந்துடன் காய்ச்சி அதை இணைத்துத் தான் மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.
மருந்தை நாம் உட்கொள்ளும் போது இந்த விஷத் தன்மை ஊடுருவி அந்த மருந்தினை உடலுக்குள் ஊடுருவிச் செலுத்துகின்றது. மற்ற குணங்கள் கொண்ட உணர்வுடன் இது அதிகமாகக் கலந்த பின் இந்த நோயை உருவாக்கிய அணுக்களைச் சோர்வடையச் செய்கின்றது… அவைகள் மடிகின்றது…! உடலில் வரக்கூடிய வேதனை குறைகின்றது.
ஆனாலும் இந்த உணர்வின் அணுக்கள் உள் சென்று மீண்டும் மீண்டும் இந்த மருந்தின் வேகத் துடிப்பைக் கொண்டு வரும் பொழுது என்ன ஆகிறது.
அப்போது அமைதி கொள்கின்றனர்.
1.பின் அதனுடைய வழிகளில் இதே கலந்த மருந்தினை ஒவ்வொரு டோஸாக (DOSAGE) விஞ்ஞான அறிவுப்படி கூட்டுகின்றனர்.
2.விஷத் தன்மை கொண்டு நோயை அடக்க எண்ணினாலும் கடைசியில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாக முதிர்வடைந்து
3.மீளாத் துயர் கொண்ட நஞ்சாக உடலில் வளர்த்துவிடுகிறது.
அப்போது நஞ்சு கொண்ட உடலாக வெளிவந்த பின்…
1.இறக்கப்படும்போது எவர் மேல் பற்று கொண்டாரோ அந்த உடலுக்குள் சென்று
2.அதே நஞ்சு கலந்த உணர்வினைப் பாய்ச்சி நோயினை உருவாக்கி விடுகின்றது.
ஆஸ்த்மா போன்ற நோய்கள் இதைப் போன்று பரவி வந்தாலும்
1.பற்று கொண்ட உடலில் இந்த ஆன்மா உள் புகுந்து விட்டால்
2.அடுத்து இவர்கள் எந்த மருந்தினை உட்கொண்டாலும் அது ஈடேறுவதில்லை.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்தால் தான் அதிலிருந்தெல்லாம் நாம் தப்ப முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.