நன்மைகளைச் செய்யச் சக்தியும் துணிவும் கொடுக்கின்றோம்… செயல்படுத்திப் பாருங்கள்…!

Guru Tapovanam

நன்மைகளைச் செய்யச் சக்தியும் துணிவும் கொடுக்கின்றோம்… செயல்படுத்திப் பாருங்கள்…!

மனிதனின் வாழ்க்கையில் வேதனை… சலிப்பு… என்ற நிலையில் கஷ்டம்… நஷ்டம்… என்று பேசிக் கொண்டிருந்து அதன் உணர்வையே நாம் செயலாக்கத் தொடங்கினால் கேட்போரையும் அது சோர்வடையச் செய்கிறோம்.

அவர்களுக்கும் நம்மை அறியாது விஷத்தை ஊட்டுகின்றோம். அறியாமலே கஷ்டங்கள் அவர்களுக்குள்ளும் ஊடுருவுகின்றது.

அவ்வாறு ஆகாதபடி தடுக்க.. நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள். இந்த வாழ்க்கையை எப்படி அருள் வழியில் நடத்த வேண்டும்…? என்று உணர்ந்து அதனைக் கடைப்பிடித்து வாருங்கள்.

அனைவரும் வாழ்க்கையில் வந்த கஷ்டத்தை நீக்கிடும் சக்தியைப் பெற்று பார்வையால் சொல்லால் செயலால் எல்லாவற்றையும் நல்லதாக்க வேண்டும்.

இப்படிக் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு
1.“அனைவரும் உயர வேண்டும்…” என்ற நிலையில்
2.தாய்மார்கள் இந்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் அந்த உயர்ந்த சக்திகளைப் பரப்பிப் பழகுங்கள். உலக மக்களுக்கு உங்கள் வாழ்க்கையில் பெற்ற அருள் ஞானத்தை எடுத்துச் சொல்லுங்கள்.

வெறுமனே சொல்லக் கூடாது… சாமியைப் (குரு) பார்த்துப் புகழ் பாடுவது கூடாது…!

உங்களுக்குள் அருள் சக்தியை வளர்க்கப்பட்டு அடுத்தவர்களிடம் அதைப் பேசும் பொழுது நீங்கள் சொன்னதை அவர்கள் கேட்டு நலமானால் அதை எடுத்துச் சொல்லலாம்.

இதைப் போன்ற நிலைகளை நாம் அவசியம் பின்பற்ற வேண்டும்.

1.நம் பார்வை அவர்களின் குறைகளை நீக்கியது
2.நம் பார்வை அவர்களை உயர்த்தியது
3.நம் பார்வை நோய்களை நீக்கியது
4.நம் பார்வையும் சொல்லும் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட உதவியது என்ற
5.இந்த உயர்ந்ததைக் கேட்டு மகிழ வேண்டும்… இந்த நிலை நமக்குள் வர வேண்டும்.

உதாரணமாக ஒரு கடும் நோயாக இருந்தாலும் கூட கணவனும் மனைவியும் இதைப் போன்று செய்து சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ கேன்சரோ இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டு செயல்படுத்த வேண்டும்.

கணவன் மனைவி இருவருமே இந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டால்
1.இந்த உயர்ந்த சக்தி கொண்டு உயர்ந்த சக்தி வளர
2.தீமை என்ற நிலை அகல
3.அருள் ஞானம் வளர… மெய் பொருள் காணும் சக்தி நமக்குள் கூடி
3.உலக மக்களையும் மெய்ப் பொருள் காணும்படிச் செய்ய முடியும்.

ஆக… உங்கள் உணர்வுகள் அனைவரையும் மகிழச் செய்யும் சக்தியாக வர வேண்டும். அதைக் கண்டு நீங்கள் மகிழ்ந்திட வேண்டும்.

ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டு அவர்கள் ஐயோ… உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று மற்றவரையும் சோர்வடையச் செய்து… அவர்களுடன் இதை நாம் பகிர்ந்து கொண்டு… மீண்டும் மீண்டும் சோர்வை வளர்த்து… நோயை வளர்ப்பதல்ல…! (இது மிகவும் முக்கியமானது)

ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருளைப் பெற்று நமக்குள் இருக்கும் இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குரு அருள் துணை கொண்டு இந்தத் தியானத்தின் மூலம் வலு பெற்ற நிலையில் நீங்கள் “துணிவுடன்” சொல்லலாம்.
உங்களுக்கு ஆஸ்த்மா நோய் இல்லை..
சர்க்கரை நோய் இல்லை…
இரத்தக் கொதிப்பு இல்லை
கேன்சர் இல்லை…
இருதய நோய் இல்லை என்று சொல்லலாம்…!

உங்கள் வாக்கு அங்கே பலிதமாகும்…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை அமைத்ததன் முக்கிய நோக்கம் என்ன…?

Guru Tapovanam

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை அமைத்ததன் முக்கிய நோக்கம் என்ன…?

 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக வணங்கச் சொன்னார். அந்தக் கடவுளால் அவன் அமைத்துக் கொண்ட கோட்டை தான் உடல் என்று அந்த உடல்களை “ஈசன் வீற்றிருக்கும் கோவில்…” என்று மதிக்கச் சொன்னார்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த உடலான ஆலயத்திற்குள் அரும் பெரும் சக்தியாக உலகைப் படைத்திடும் சக்தியாக அதாவது தெய்வங்களாக ஒவ்வொரு உணர்வுகளும் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்று சொன்னார்.

அங்கே நீ வரம் பெறும் நிலையாக
1.ஒவ்வொரு மனிதனுக்குள் அறியாது விளைந்த தீயதுகளை மறந்து விட்டு
2.அந்த உடலை வளர்த்த உயர்ந்த உணர்வின் எண்ணங்களை நீ எண்ணி
3.அது உயர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீ எண்ணுவேயென்றால்
4.அந்த உயர்ந்த நிலையின் சக்தியை நீ பெறுகின்றாய் என்று குருநாதர் தெளிவாக எனக்குக் (ஞானகுரு) காட்டினார்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஒவ்வொரு கோயிலும் (உடல்கள்) பரிசுத்தமாக வேண்டும். அங்கே இயக்கிக் கொண்டு இருக்கும் ஈசன் நல்ல உணர்வுகளை அங்கே படைக்கச் செய்ய வேண்டும் என்ற இந்த உணர்வில் தான் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் தியானித்து வருகின்றேன்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தியான மண்டபத்தை அமைத்திருக்கிறோம். அங்கே அமர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்களை உலகம் முழுவதற்கும் படரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உலகத்தையே அழித்துக் கொண்டு இருக்கும் விஷத் தன்மை ஒரு பக்கம் படர்ந்து மனிதனுடைய எண்ணத்தையும் அது அழித்துக் கொண்டு இருந்தாலும்
1.அந்த விஷத் தன்மையிலிருந்து எல்லோரையும் மீட்ட வேண்டும் என்ற நிலையில்
2.அந்த மெய் ஞானிகள் கற்பித்த நிலைகள் நான்கு திசைகளிலும் பரவி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உலக மக்கள் அனைவரும் பெறும் தகுதியாக இப்போது அதுவும் வளர்ச்சியாகிக் கொண்டே வருகிறது.

தியானத்தை நாம் மட்டும் செய்யவில்லை…! உலகில் எல்லாப் பாகங்களிலும் இதைப் போன்ற தியானத்தின் உண்மைகளை உணர்ந்து “உலகைக் காக்கும் சக்தியாகத் திசை திரும்புகிறது…!”

அந்த மாமகரிஷிகள் ஒவ்வொரு பாகங்களிலேயுமே இதைப்போல அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

நமது மனதை வலு பெறச் செய்யும் சக்தியாக நமது எல்லையில் நம்மை அணுகி உள்ளவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் செயல்படுத்தியது.

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்குள் வந்தாலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற்று
1.நீங்கள் இடும் மூச்சுகள் அனைத்தும் உலக நன்மை பயக்கும் அருள் சக்தியாகவும்
2.மற்றவர்களின் தீமையை அகற்றி அவர்களுக்குள் நல் உணர்வின் சக்தி விளையும் தன்மையாகவும்
3.அதைச் செயல்படுத்தும் நிலையாகத் தான் இங்கே அமைத்திருக்கின்றோம்.

இந்தத் தபோவனத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டாலே
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஆத்மசுத்தி செய்து விட்டு
3.அடுத்து உங்களுக்கு எது எல்லாம் நல்லதாக வேண்டுமோ அதை எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
4.உங்களுக்கு அந்தச் சக்தி கிடைத்து நல்லதே நடக்கும்.

சில சந்தர்ப்பங்களில் உங்கள் வீட்டிலிருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லை என்றாலும் இங்கே வந்து அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்டால் அதன் பின் உங்கள் வீட்டிலிருந்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பழக்கம் வந்து விடும்.

அந்தப் பழக்கம் வந்து விட்டால் “நம்மை நாமே காத்திடும் சக்தியாக…” அது வரும். அதனின் வளர்ச்சியில் எத்தகைய நஞ்சு கொண்ட உணர்வுகள் இங்கே பூமியிலே படர்ந்தாலும் அது நம்மைத் தாக்காத வண்ணம் நம்மைக் காத்து கொள்ளும் ஆற்றலை நிச்சயம் எல்லோரும் பெற முடியும்.

ஆகையால் சாமியார் காப்பாற்றுவார் ஜோதிடம் காப்பாற்றும் ஜாதகம் காப்பாற்றும் மந்திரம் காப்பாற்றும் என்ற நிலையை விடுத்து உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனின் துணை கொண்டு மெய் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பேரொளியாக மாற்றச் செய்யவே இந்தத் தியான மண்டபம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியை நாம் பெற்று அவரின் துணையால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.இந்த மனித உடலிலே வந்த தீயதை நீக்கி
2,மெய் ஒளியின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலையை அடையும் ஆற்றலை இந்தச் சரீரத்தில் வளர்த்து
4.என்றும் அழியாத ஒளிச் சரீரமாக நாம் நமக்குள் வளர்ப்போம். நலம் பெறுவோம்… வளம் பெறுவோம்…!

தியான சக்தியைக் கூட்டுவதற்குத்தான் தபோவனம்

 

ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

தியான சக்தியைக் கூட்டுவதற்குத்தான் தபோவனம் 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தங்கிப் பயிற்சி எடுத்துக் கொள்பவர்கள் “எப்படி இருக்க வேண்டும்…? என்ற நிலையைத் தெரிந்து கொள்வது நல்லது.

ஏனென்றால் ஒரு சிலர் இதை சோம்பேறி மடம் மாதிரி ஏதோ வந்தோம் சாப்பிட்டோம் போனோம் என்கிற நிலையில் தியானம் செய்யும் நேரத்தில் கூடத் தூங்குவதற்கு ஆரம்பிக்கின்றார்கள்.

இங்கே வருபவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று அனுமதித்தாலும் அவர்கள் இந்த நிலைகளைச் செய்கின்றனர். அதே சமயத்தில் அவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுத்து ஒரு வேலையைச் செய்யுங்கள் என்றால் என்ன செய்கின்றார்கள்…?

வெளியில் இருக்கும் பொழுது எந்தத் தவறு செய்து அவர்களுடைய வாழ்க்கையிலும் குறைகள் ஏற்பட்டதோ அந்தக் குறையையே இங்கும் உருவாக்கத் தொடங்கி விடுகின்றனர்.

அவர்களை ஆதரித்து நல்ல நிலைகள் பெறச் செய்து அதனால் இங்கே வரக்கூடிய மற்றவர்களுக்கும் நல்ல நிலையைச் சொல்வார் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடக்கவில்லை.

தயவு செய்து இங்கே வருபவர்கள் எல்லோருமே தியானத்தைச் சீராகப் பயன்படுத்தி உயர்வதற்கு இனியாவது முயற்சி எடுங்கள்.

பிறருக்காக என்றும் நண்பர் என்ற நிலைகளில் அனுமதித்தோம் என்றால் அவர்கள் தவறுகளில் இருந்து மீளாத நிலைகள் வருகின்றார்கள். எந்தத் தவறைச் செய்தனரோ அந்தத் தவறையே செய்ய வருகின்றனர்.

திருந்த வேண்டும் என்ற நிலைக்குத்தான் நாம் இத்தனை சிரமமும் படுகின்றோம்.

தபோவன வளர்ச்சியின் தன்மையைப் பேசுவதற்கு மாறாகத் தன் சுயநலத்திற்கு எதிர்பார்த்து வருவதும் அது ஈடேறவில்லை என்றால் தபோவனத்தைக் குறை கூறும் நிலைகளுக்கும் வந்து விடுகின்றனர்.
1.அப்படிப்பட்ட அன்பர்கள் இருந்தால் அது உங்களுடைய பெரும் குற்றமாகும்.
2.அத்தகைய நிலை பெற்றால் நீங்கள் எண்ணியதை உயிர் உங்கள் உடலில் உருவாக்கும்.
3.அதன் பலனை அறிந்த பின்னாவது நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் உணர்வுகளையோ மனம் புண்படும்படி எவரும் இந்த நிலையை உருவாக்கினால் அதன் உணர்வின் தன்மையை உயிர் உங்களுக்குள் உருவாக்கி “நீங்களே அதை அனுபவிக்கும் நிலையை…!” உங்கள் உயிர் உருவாக்கிவிடும்.

1.நல்லதைச் செய்து நல்ல நிலை பெற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கினால்
2.அது உங்களுக்குள் நலம் பெறும் சக்தியாகும்.
3.உங்கள் சொல் மற்றவரையும் நலம் பெறும் சக்தியாகும்.
4.நண்பர் என்ற நிலையில் அரவணைக்கும் தன்மையும் வரும்.

ஏனென்றால் புதிதாக வருவோர் தபோவனம் வந்தால் எப்படி இருக்க வேண்டும் என்ற நிலைகளை அறிந்து கொள்தல் வேண்டும்.

எந்த ஊரில் இருந்தாலும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை அனைவரும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். சந்தர்ப்பத்தில் குறைகள் வந்தால் ஆத்ம சுத்தி செய்து அதை நிவர்த்திக்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அருள் ஞானம் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு இத்தகைய நிலைகளை போதித்துத் தபோவனம் சென்றால் உங்களுடைய நிலைகள் இப்படி இருக்க வேண்டும் அந்தக் கட்டுப்பாட்டிற்கு வர வேண்டும் என்ற நிலையை வழிப்படுத்த வேண்டும்.

இங்கு அருள் நெறிகளை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலைகளும் வெளியூரிலிருந்து வரப்படும் போது அவர்களுக்குத் தபோவனத்தின் நன்மதிகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் பெருக்கி நாம் யாருடன் பழகினாலும் நமது பார்வையில் அவர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்றும் உலகுடன் ஒத்து வாழும் நிலையும் சகோதர உணர்வுகள் வளர்ந்திட வேண்டும் என்ற நிலைகளில் தியானிக்க வேண்டும்.

அன்பர்கள் ஒவ்வொருவரும் தபோவனம் நலமாக இருக்க வேண்டும். அது உயர்ந்த நிலைகள் பெற வேண்டும். உயர்ந்த பண்புகளுடன் விளங்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே உங்கள் பார்வையில் மற்றவருடைய தீமைகளையும் பிணிகளையும் போக்கக் கூடிய சக்திகளாகவும் உலகுக்குக் எடுத்துக்காட்டாக நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும் என்று (ஞானகுரு) வேண்டிக் கொள்கின்றேன்.

மெய்ஞான வளர்ப்புத் தியானத் திருச்சபை 

Eswara Gurudeva

மெய்ஞான வளர்ப்புத் தியானத் “திருச்சபை”

நாம் இந்தத் தியானமும் ஆத்ம சுத்தியும் செய்யும்பொழுது அதன் வளர்ச்சியில் எங்கிருந்து ஒளியான உயிர் துடிப்பு தோன்றியதோ அந்த விண்ணிற்கே செல்வோம்.

அங்கு சென்று விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றலை நாம் பெற்று “என்றும் பதினாறு…” என்ற அந்த நிலையான ஒளிச் சரீரமாகப் பெறவேண்டும்.

பெற்று அந்தச் சரீரத்திலிருந்து வெளிப்படும் ஒளியின் கதிர்கள் உலகத்திற்குச் சிருஷ்டிக்கும் உணர்வின் ஆற்றல்களாகப் பெருக வேண்டும் என்று தியானிப்போம்.

1.நாம் விண்ணின் தொடர்பு கொண்டு
2.அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற நினைவை நிலை நிறுத்திக் கொள்வோம்.

புவியின் வாழ்க்கையின் தன்மையிலே வரக்கூடிய விருப்பு வெறுப்பு ஆசை பாசம் இவைகளை அனைத்தையும் அழித்து “நாம் செய்ய வேண்டியது நல்லது…” என்ற நிலையும் அந்த நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் ஆத்ம சுத்தி செய்து கொண்டு நாம் விண் செல்வோம்.

இந்த வழிகளிலே ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம் என்று உறுதிப்படுத்திக் கொள்வோம். ஒவ்வொருவரும்
1.இதில் முன்னேற்றம் பெறவேண்டும்
2.பயன்கள் பெறவேண்டும் ஒளிச் சரீரம் பெறவேண்டும்
3.அதற்குண்டான ஆற்றல் உங்களுக்குள் வளரவேண்டும்.

அந்த ஆற்றலின் நிலை கொண்டு உங்களுக்குள் வரக்கூடிய துன்பங்களை உங்கள் உணர்வாலே நீக்கி அந்த மெய் ஒளியின் நிலைகள் உங்களுக்குள் பெருக வேண்டும்.

அது உங்களுக்குள் பெருக வேண்டும் என்பதற்காக எல்லா மகரிஷிகளையும் நமது குருநாதரையும் வேண்டி குருநாதருடைய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகள் உங்களுக்குள் பெறவேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

யாம் எப்படிச் சொல்லுகின்றோமோ அதே மாதிரி நீங்கள் தியானத்தில் சொல்ல வேண்டும். யாம் பேசும்போது எப்படிப் பிறருக்கு நல்லதாகின்றதோ அதைப்போல உங்கள் பேச்சும் மூச்சும் பிறருக்கு நல்லதாக வேண்டும்.

நாம் எல்லோரும் ஐக்கியமாக இருந்துதான் இதைச் செயல்படுத்தவேண்டும்.

குருநாதர் எமக்குச் சக்தியைக் கொடுத்தார். குருநாதருடைய சக்தி உங்கள் எல்லோருடைய உள்ளத்திலும் பதிவாக வேண்டும். உங்களுடைய பேச்சும் மூச்சும் பிறருக்கு நன்மைப் பெறச் செய்ய வேண்டும்.
1.இந்த ஐக்கிய மனோபாவத்தை நாம் வளர்க்க வேண்டும்.
2.இதுதான் “மெய்ஞான வளர்ப்புத் தியான சபையாக” இந்த மேடை ஆகின்றது.

இந்த மேடை நம் எல்லோருடைய நல்ல எண்ணத்தால் உருப்பெற வேண்டும். முதலில் நம்முடைய நல்ல உள்ளங்கள் வளரச் செய்வதற்குத்தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.

இன்று சம்பாதித்து நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். உங்களிடம் இருக்கக்கூடிய உயர்ந்த குணத்தை நான் திருடினால் என்னவாகும்?

எனக்குள் உயர்ந்த குணம் வரும்.

ஆகவே திருடுவது எதுவாக இருக்க வேண்டும். அருள் ஞானமாகத்தான் இருக்க வேண்டும். அறிவின் தன்மை கொண்டு நாம் எதைத் திருட வேண்டும்? தீமைகளை அகற்றும் அருள் ஞானத்தை நாம் திருடுதல் வேண்டும்.

அந்த அருள் ஞானத்தை நுகர்ந்தால் நமக்குள் இருக்கும் இந்தத் தீமைகளை அகற்றும் சக்தி பெறுகின்றது. நாம் திருடவேண்டியது எதை…? “திருடன்…” என்று சொல்லப்படும்போது இத்தனை வகையான நிலைகளை எடுத்துச் சொல்கின்றார் நமது குருநாதர்.

ஏனென்றால் சாதாரணமாக அவரிடமிருந்து தப்பி வரமுடியாது.

1.ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால்
2.10 நாட்களுக்கு நம்மை இழுத்து “வாட்டு… வாட்டு…” என்று வாட்டிவிடுவார்
3.அந்த நிலையைச் செய்வார்.

இதைச் சொல்கிறோமென்றால் நீங்கள் எதைத் திருட வேண்டும்? அருள் ஞானத்தைத் திருடி அதைப் பதிய வைத்து அதன்படி நடக்க வேண்டுமென்று அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

திருடியவன் என்ன செய்கின்றான்? பொருளை எடுத்து அவன் சுகத்திற்கு அனுபவிக்கிறான்.

1.அருள் ஞானத்தைத் திருடினால்
2.உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி
3.மகிழ்ச்சி பெறும் உணர்வுகளுக்கு அது பயன்படும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

Image

உயிரே கடவுள்

நம் ஞானகுரு அவர்கள்,  தமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, வானவியல், புவிஇயல், உயிரியல் ஆகியவற்றின் உண்மை நிலைகளைப் பெற்று, அறிந்து, உணர்ந்து. அதை அனைவரும் பெற வேண்டுமென்ற ஆசையினால் தியானத்தின் மூலமாகவும் உபதேசங்களால் மூலமாகவும் உணர்த்தியுள்ளார்கள்.

ஞானகுரு கட்டிய அருள் வழியில், சாமியம்மா தியானப் பயிற்சியும் அருளாசியும் வழங்கி  வருகின்றார்கள்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் தமது குருநாதர் பெயரால் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை உருவாக்கி அதில் “மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை” என்று ஏற்படுத்தி உள்ளதை ஞானகுரு அவர்கள் ஒளிநிலை அடைந்த பிறகு. சாமி அம்மா வழிநடத்தி செல்கிறார்கள்.

தபோவனத்தில் “பௌர்ணமி தியானத்தில்” நாம் விண்ணை நோக்கி துருவ நட்சத்திரத்தை எண்ணி தியானிக்கும் போது, விண்ணிலே துருவ நட்சத்திரத்திளிருந்தும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், பரவெளிகளில் இருந்தும் வெளிப்படும் அருள்ஞான சக்திகளை சாமி அம்மா அவர்கள் காட்டிய அருள்வழி கொண்டு, நமக்கு கிடைக்குமாறு உதவ முடிகின்றது.

பௌர்ணமி நாளில் கூட்டுத்  தியானத்தில் நமது குலதெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களையும், நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற, நண்பர்கள், உற்றார், உறவினர்களது   உயிரான்மாக்களையும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து பிறவி இல்லா நிலை பெறச்  செய்வது சிறப்பு அம்சமாகும்.

அன்றைய தினம் தியானமிருக்கும் அன்பர்களுக்கு அபரிதமான சக்திகளை சாமி அம்மா தியானத்தின் மூலம் பெற உதவுகின்றார்கள். அதைப் பயன்படுத்தி விண்ணிலிருந்து கிடைக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும், சப்தரிஷி மனடலங்களின் பேரருளையும் பேரொளியையும், நாம் அனைவரும் பெற பௌர்ணமி தியானம் ஒரு அறிய வாய்ப்பாகும்.

அதைப் பயன்படுத்தி, பல ஊர்களிலிருந்து தபோவன உறுப்பினர்களும், வெளிஊர், வெளி மாநில அன்பர்களும் தபோவனத்தைச் சுற்றி அமைந்திருக்கும் கிராமங்களிலிருந்தும் அன்பர்கள் கலந்து கொண்டு சாமி அம்மா அவர்கள்  ஆசி பெற்று வருகின்றனர்.

சாமி அம்மாவை தபோவனத்தில் சந்தித்து தியானப் பயிற்சி, உபதேசம் பெறவும் விளக்கங்கள் கேட்டுப் பெற வரும் அன்பர்களுக்குத் தங்கிச் செல்ல தங்கும் அறைகளும்,  உணவு உண்ண உணவு விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

தபோவனம், புஞ்சை புளியம்பட்டியிலிருந்து சத்தியமங்கலம் போகும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. உடனுக்குடன் பஸ் வசதியும் உள்ளது. எண் 6, 6A, N6 ஆகிய பேருந்துகள் தபோவன வழித்தடத்தில் ஓடுகின்றன. கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் பாதை வழியாகவும், ஈரோடு, அவிநாசி, புஞ்சை புளியம்பட்டி பாதை வழியாகவும் தபோவனத்தை அடையலாம்.

தபோவனத்திலிருந்து, “உயிரே கடவுள்” என்ற மெய் ஞான மாத இதழ் ஞானகுருவின் அருள்ஞான உபதேசங்களைத் தாங்கி வெளி வருகின்றது. அதன் வருடச் சந்தா ரூ 100/-  ஆகவும், ஆயுள் காலச் சந்தா ரூ 500/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை ஆயுள்கால அங்கத்தினராக  ரூ 1500/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள ஆயுள்கால உறுப்பினராகவும், உயிரே கடவுள் மாத இதழ் ஆயுள்கால உறுப்பினராகவும் ஆகும் அன்பர்களுக்கு அருள்ஞானச் சக்கரம் சாமி அம்மா நேரடியாக அளித்து ஆசி வழங்குவார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்
வடுகபாளையம்
புஞ்சை புளியம்பட்டி
ஈரோடு மாவட்டம்

Location of Mamakarishi Eswaraya Guruthevar Thapovanam

http://g.co/maps/v3qff

click this link to see the geographical location of  Thapovanam

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் தபோவனம்

tapovanam

1. மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை

உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். நம் மூச்சின் நிலைகள் பிறருக்குத் துன்பத்தைப் போக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

 

ஒவ்வொருவரும் அந்த நிலை பெறவேண்டும் என்றும் நீங்கள் பெற்ற அந்த நிலையை இயற்கையின் உண்மையின் சக்தியைத் தெரிந்துணர்ந்து அந்த ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் வளர்ப்பதற்குத்தான் “மெய்ஞான வளர்ப்பு” திருச்சபையை ஏற்படுத்தியுள்ளோம்.

இதில் அங்கத்தினர்களாகச் சேர விரும்புபவர்கள், குடும்ப சகிதமாகச் சேர்ந்து கொள்ளலாம். சேர்ந்து கொண்டால், கொடுக்கப்படும் அருள் ஞானச் சக்கரத்தில் நம் உடலைப் புனிதமாக்க வேண்டும் என்பதற்கு சில உண்மையின் நிலைகள் போடப்பட்டுள்ளது. 

அதன் வழி நீங்கள் பின்பற்றுவதற்கும், அதிலே நீங்கள் மெம்பராகச் சேர்வதற்கு முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். அதில் மெம்பராக இருப்பவர்கள் குடும்ப சகிதமாக இந்தப் பதிவைச் செய்து, இந்த முறைப்படி கூட்டுக் குடும்ப தியானங்களை மேற்கொள்ளுங்கள்.

 

கணவன் மனைவி ஆத்ம சுத்தி செய்து கொண்டு, ஒருவருக்கொருவர் நலம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். எந்தத் துன்பத்தைச் சந்தித்தாலும், ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்தத் துன்பங்கள் நீங்க வேண்டும் என்ற சொல் தொடரே உங்களுக்குள் வரவேண்டும் என்று இதை வரிசைப்படுத்தி இந்த மெய்ஞான திருச்சபையின் தியான வளர்ப்பின் தன்மையாக அது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சுழற்சி வட்டம்

ஒவ்வொருவரும் இங்கே சந்திக்கும் நிலைகள் கொண்டு, உங்கள் மூச்சும் பேச்சும், இங்கே வருபவர்களுக்கு நலம் பெறச் செய்யும். 

உங்கள் மூச்சும், பேச்சும் உலக மக்களுக்கு நன்மை செய்யும். அதைப் போல ஈஸ்வராய குருதேவர் சுழற்சி வட்டமான அந்த உணர்வுக்குள் ஒரு பிரபஞ்சமாகி, அந்தப் பிரபஞ்சத்திற்குள் மெய் ஒளியின் தன்மையை நாம் சமைக்கும் இந்த ஆற்றல்மிக்க நிலைகளை நாம் தோற்றுவிக்கும் “மெய்ஞான தியான வளர்ப்புத் திருச்சபையாக” தோற்றுவிக்க உங்கள் ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு, நாம் இதுவரையிலும் சொன்ன இந்த உணர்வுகள், உலகத்திற்கு வழிகாட்டியான நிலைகளில், நாம் அனவரும் வரவேண்டும் என்ற நிலைக்குத்தான் ஆரம்பித்துள்ளோம்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கும் பொழுது, காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் மிக்க, ஆற்றல் மிக்க, அருள் ஒலிகள் உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பமோ, வேதனையோ மனக்கவலையோ, சஞ்சலமோ இவைகளிலிருந்து விடுபட்டு, எல்லோரையும் ஓளி நிலை பெறச் செய்யும் நிலைக்கேதான், இந்த மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை.

இயற்கை எவ்வாறு இயங்குகின்றது? அந்த இயற்கையின் நிலையில், சூரியன் எவ்வாறு ஒளி நிலைகள் பெற்றது? என்ற பேருண்மை அது மெய் உணர்வின் தன்மை.

ஆக, சூரியன் ஒளி நிலை பெற்றது போன்று, நாம் உயிரணுவாகத் தோன்றி மனிதனாக வரும் பொழுது, ஒளி நிலை பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றோம்.

எப்படி ஒரு அணு சூரியனாக மாறியதோ, அதைப் போல ஒரு உயிரணு மனிதனாகத் தோன்றியபின், உணர்வுகள் ஒளியாக மாறி விண் செல்வதே கடைசி நிலை.

ஆனால், இந்த வாழ்க்கையின் உணர்வு கொண்டு மனிதனுடைய வேட்கையின் ஆசைகளை நாம் கூட்டிக் கொண்டால், அதிலே சிக்கிக் கொண்டால், அதன் வழிகளிலே நம்மை இட்டுச் சென்றுவிடும். அதிலிருந்து நாம் மீள்வதற்குத்தான் இந்த நிலை.

 

3. மெய் ஒளி, மெய் ஞானம் பெறுவதற்குத்தான் திருச்சபை

அந்த மெய்ஞானிகள் காட்டிய துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றல்மிக்க சக்தியின் நிலையை நாம் பெறுவதற்கே இந்தத் திருச்சபை. ஒருங்கிணைந்த நிலைகளில் நாம் செயல்படும் பொழுது, இது ஆற்றல்மிக்க சக்தியாகின்றது.

ஆகவே இதைக் கேட்டுணர்ந்தோர்கள் “என்னமோ, ஏதோ” என்ற நிலையில் இல்லாதபடி நாம் மெய் ஒளியின் தன்மையைப் பெறுவதற்குத்தான் இதிலே வந்திருக்கின்றோம் அன்று மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

நமக்குள் வரக்கூடிய மேல்வலி மனக்கவலை மனக்க்குடைச்சல் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வு கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெறுவோம், 

அந்த உணர்வின் தன்மை எங்கள் உடலிலே சேர்ப்போம். எங்களை அறியாமல் எங்களுக்குள் சேர்ந்த இருள்கள் நீங்கும்.

 

இருள் நீங்கி எங்கள் பேச்சும் மூச்சும் பிறருக்கு நன்மைகள் செய்யும். நாங்கள் எடுக்கும் பேச்சும் மூச்சும் எங்களுக்கு நல்லதாகும். 

எங்கள் பேச்சின் தன்மை பார்ப்போர் அனைவருக்குமே நல்லதாகும் என்று இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு ஒவ்வொருவரும் நீங்கள் எடுத்து இந்த உணர்வின் தன்மை இங்கே பதிவாக்கி “உலகுக்கு வழிகாட்டிகளாக நீங்கள் உருவாக வேண்டும்…!” எமது அருளாசிகள்.