உங்கள் கரு விழிக்குள் யாம் பதிவாக்கும் உயர்ந்த சக்தி

உங்கள் கரு விழிக்குள் யாம் பதிவாக்கும் உயர்ந்த சக்தி

 

“நீங்கள் மெய் வழி செல்ல வேண்டும்…” என்ற உணர்வின் நிலைகளைச் செலுத்துகின்றீர்கள்.
1.இதற்கு உங்களைப் பிரார்த்திக்கக்கூடிய குரு வேண்டும்.
2.அப்படிப் பிரார்த்திக்கக்கூடிய குருவினுடைய தன்மை பெற்றால் தான் உங்கள் உணர்வின் தன்மை வலு கூடும்.

நாம் அனைவருமே T.V. RADIO மூலமாக அனைத்தையும் பார்த்து… கேட்டு அறிகின்றோம். இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு செயற்கைக்கோள் எங்கேயோ விண்ணிலே பரவக்கூடிய அந்த உணர்வின் அலைகளை எடுத்துப் படங்களை அனுப்புகின்றது.

அந்தப் படங்களை எடுத்துக் கொள்வதற்காக வேண்டி கம்ப்யூடர் சிஸ்டம் என்று வைத்துள்ளார்கள். ஒன்றுக்குள் ஒன்று இணையச் செய்து
1.அது விண்ணிலே எத்தனையோ கோடி மைல்களுக்கு அந்தப் பக்கம் பறந்து கொண்டிருந்தாலும்
2.அது அங்கிருக்கும் உணர்வலைகளைப் படமெடுத்துத் தரையிலிருக்கும் ஆண்டெனாக்களிலே இயக்கப்படுகின்றது.
3.கம்ப்யூடர் அந்த நிலையை இழுத்துப் பதிவு செய்து விடுகின்றது.

இதைப் போன்று
1.உங்கள் உடலின் தன்மை அனைத்துமே “இயந்திரம்…!” நம் கண்ணின் புலனறிவு “ஆண்டெனா…!”
2.அந்தப் பவரின் சக்தி கொண்டு (மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று) தியானிக்கப்படும் போது
3.நம் உடலுக்குள் எத்தனை உணர்வுகள் இருந்தாலும் கண்ணுக்குள் தொடர்பு உண்டு.

நாம் எந்தெந்த நிலைகளில் நினைவைச் செலுத்துகின்றோமோ அந்த உணர்வின் தன்மை ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு கண்ணுக்குள் இருக்கக்கூடிய கரு விழிக்குள் அது தொடர்பு கொள்கின்றது.

அவ்வாறு அது தொடர்பு கொள்ளும் பொழுது நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கக்கூடிய அந்தக் கரு விழிகளிலே
2.மெய் ஞானிகளின் அருளாற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை உந்தச் செய்து அங்கே பதிவு செய்கின்றோம்.

அதாவது கண்ணாலே பார்ப்பதும் அந்தப் பார்வையின் நிலைகள் கொண்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்யும் நிலையாக இது அமைகிறது.

குருநாதர் எமக்கு எவ்வாறு காட்டினாரோ அந்த உணர்வின் நிலைகள் கொண்டே
1.உங்கள் கருவிழிக்குள் அந்த உணர்வின் திரை ஈர்ப்பின் சக்தியைப் பெறச் செய்யும் போது
2.நீங்கள் இரவிலே படுத்துக் கொண்டிருக்கும்போது இது பதிவு ஆகின்றது.

இவ்வாறு நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இரவிலே ஆத்ம சுத்தி செய்து விட்டு நீங்கள் படுக்கும் போது “இந்த உணர்வலையின் ஓட்டங்கள்…” இருந்து கொண்டிருக்கும். அப்பொழுது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்தும் துருவ நட்சத்திரத்தில் இருந்தும் வரக்கூடிய அலைகளை
2.அது தன்னிச்சையாகவே அந்த உணர்வுகளைக் கவர்ந்து இழுத்துவிடும்.
3.இரவு முழுவதுமே தியானமாக அது அமைந்து விடும்.

கண் கருவிழிக்குள் இருக்கும் லென்ஸ் பற்றிய பேருண்மை

கண் கருவிழிக்குள் இருக்கும் லென்ஸ் பற்றிய பேருண்மை

 

உதாரணமாக… ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டான் என்றால் அதிலே பொருள் அறிதல் வேண்டும்.

காரணம்… பாசத்தால் அவருடைய துயரைக் கேட்டறிந்தோம். கேட்டறிந்த உணர்வுகள் அந்த நோயின் வலிமை நம் நல்ல குணத்தைச் செயலற்றதாக மாற்றி உடலுக்குள் அதே பலவீனமான நிலைகள் வருகிறது என்று இந்தப் பொருளை நாம் அறிதல் வேண்டும்.

தெய்வம் நல்லதைச் செய்யும் என்று ஆலயத்தில் வரப்படும் பொழுது
1.அந்தத் தெய்வ குணத்தைக் காட்டுவதற்காகத் தீப ஆராதனை காட்டப்படுகின்றது.
2.அவ்வாறு காட்டப்படும் பொழுது தெய்வமும் தெரிகின்றது.
3.தெய்வத்திற்குக் கனி வைத்திருப்பதும் மலர் மாலைகளைச் சூட்டியிருப்பதும் தெரிய வருகின்றது.
4.தெய்வத்தின் மேல் வைர கிரீடம் வைத்திருப்பதும் தெரிகின்றது.

ஆக… பொருளை அறியக்கூடிய தன்மை அந்த வெளிச்சத்தினால் வருகின்றது.

1.நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது அங்கிருக்கும் நல்ல நறுமணங்களும் நல்ல மணங்களும் பார்க்க அல்லது நுகர முடிகின்றது.
2.ஆனால் வேதனை என்று வந்துவிட்டால் குடும்பத்தில் ஒரு நல்ல பொருளைப் பார்த்துச் சந்தோஷப்படுகின்றோமா…?
3.நல்ல குணம் கொண்ட நம் பையனைப் பார்த்தால் சந்தோஷம் வருகின்றதா…? இல்லை…!

நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ கண் வழி தான் பாய்ச்சுகின்றோம். கண் வழி பாய்ச்சப்படும் பொழுது ஒரு கண்ணாடியில் எந்தக் கலரின் தன்மை போடுகின்றோமோ அதன் வழி தான் முன்னாடி இருக்கக்கூடிய பொருள் தெரிய வரும்.

எக்குகுணத்தை எண்ணி எடுக்கின்றோமோ
1.நம் கருவிழிக்குள் கண்ணாடி என்ற ஒரு பொருள் உண்டு.
2.அந்தந்த உணர்வுக்கொப்பக் கலர்கள் மாறும்… இந்த உணர்ச்சிகள் மாறும்.
3.அதைப் போன்று தான் நாம் அறிந்திடும் தன்மை வருகின்றது… இயற்கையின் நியதிகள் இது.

அதாவது எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அதற்குத் தக்க தான் எண்ணங்கள் வருகின்றது.

கோவிலில் தீபாராதனை கொடுக்கப்படும் பொழுது…
1.வீட்டில் நம் பையன் இப்படிச் செய்கின்றானே என்று வேதனைகளை எண்ணினால்
2.இந்த இருள் சூழ்ந்த நிலையே கண் பார்வையில் தெரிய வரும்.

அங்கிருக்கும் பொருளைக் காண முடியுமா…? நல்லதைச் சொன்னால் கேட்க முடியுமா…? என்றால் முடியாது. அந்த விஷத்தின் தன்மை கரு விழியிலே படப்படும் பொழுது அழுகையும் வேதனையும் வருகின்றது.

நான் தெய்வத்தை வழிபட்டேனே… எல்லோருக்கும் நன்மை செய்தேனே எனக்கு ஏன் இந்தத் தொல்லைகள் வருகின்றது…? என்ற இந்த உணர்வு தான் வரும்.

இந்த உணர்வை ஏற்றுக் கொண்ட பின் கருவிழியின் தன்மைகள் அந்தச் சிலையின் ரூபத்தையோ அங்கே அலங்காரமாகப் போடப்பட்டுள்ள மலர்களையோ ஆபரணங்களையோ வைரக்கல்களையோ ரசிக்காது… ரசிக்க விடாது. வேதனை என்ற உணர்வே மீண்டும் வரும்.

1.இருளில் நாம் பார்த்தால் பொருளின் ரூபத்தைக் காண முடியாது…
2.ஒளி கொண்டு தான் பார்க்க முடியும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஆலயப் பண்புகளாக அங்கே வெளிச்சத்தைத் தான் காட்டுகின்றனர். அதனால் பொருட்கள் தெரிகின்றது… அப்பொழுது
1.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
2.நாம் சுவாசித்த உணர்வு கண்ணில் இந்த உணர்ச்சிகள் படப்படும் பொழுது இந்த வெளிச்சத்தின் உணர்வு நமக்குள் வருகின்றது.
3.அப்பொழுது தெளிந்த மனம் வருகின்றது.

அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்….?

இந்த ஆலயம் வருபவர்கள் எல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ண வேண்டும்.