உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”

உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”

 

நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டோம் என்றால் அந்தப் பொருளின் மணமே அதிலிருந்து வரும். அதைப் போன்று நம் உயிரிலே எந்தச் சத்தைப் போடுகின்றோமோ அந்தச் சத்தின் மணமே வெளிப்படும்.
1.நமது உயிர் நெருப்புக்குச் சமம்.
2.மனிதனான பின் இந்த உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”
3.உயர்ந்த உணர்வு வரும் போது அது நமக்குள் அது திரும்பி வர வேண்டும்.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அந்த உணர்வு தான் நம் உடலுக்குள் பாய்ந்து அந்த வேதனையின் இயக்கமாக இங்கேயும் மாறுகின்றது.

அதே சமயத்தில் வேதனையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தோம் என்றால்… நம் வேதனை நீங்கி ஒளி என்று அறிவாகும் தன்மையாக… நமக்குள் நஞ்சு கலக்காது நஞ்சு வளராது தடுத்துக் கொள்ளும் சக்தியாக அது வருகின்றது.

மனிதனில் இப்படி வளர்ந்தவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது. அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நீங்கள் எடுத்துப் பழகுவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்.
1.”ஏராளமாக…” அங்கிருந்து விளைந்து வருகின்றது.
2.எடுத்துப் பழகினால் உங்களுக்கு நல்லதாகும்.

வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றி… தீமைகளை அடக்கி நமக்குள் மகிழ்ந்து வாழும் சக்தியாக என்றும் ஏகாந்த நிலையாகப் பெறச் செய்யும். ஏகாதசி என்றால் எதுவுமே நம்மைத் தாக்காத நிலை பெறலாம். ஏகாதசி விரதம் என்றும் சொல்வார்கள்.

நாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாம் பார்த்த குடும்பம் எல்லாம் பேரருள் பேரொளி பெற வேண்டும். இருளை அகற்றிப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எல்லோரும் நினைக்கும் பொழுது
1.எல்லோருடைய உணர்வு நமக்குள் இருக்கின்றது.
2.அவர்கள் பகைமையை நாம் எடுப்பதில்லை.
3.நமக்குள் இருக்கும் அந்த அணுக்களுக்கு அருள் உணர்வுகளை இணைத்துக் கொண்டே இருக்கும்.

நோய் என்று வரும் பொழுது எப்படி டாக்டர்கள் இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்தில் கலக்கச் செய்கின்றார்களோ இதைப் போன்றே உயிர் வழி கவர்ந்து நம் உடல் உறுப்புகளில் இணைக்கப்படும் போது அந்த அணுக்களை நாம் நன்மை செய்யக்கூடியதாக மாற்றியமைக்க முடியும்.

எப்படி இன்ஜெக்ஷன் செய்கின்றார்களோ அதைப் போன்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்தால் “அது தான் முக்கண்…!”
1.நாம் புறத்தால் பார்க்கின்றோம் அதையே… உயிருடன் சேர்த்து எண்ணப்படும் பொழுது உயிர் வழி நாம் இயக்க முடியும்.
2.அதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வை இயக்கப்பட்டு எளிதில் பெறுவதற்கு இப்படிக் கொடுப்பது.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை. எனக்கு அந்த நினைவு வருகின்றது இந்த நினைவு வருகிறது என்று எதையும் பற்றி நீங்கள் எண்ண வேண்டியதில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினாலே போதுமானது. இந்த உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும். உடலில் வரும் சிரமங்களைப் போக்க முடியும்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும் இந்த உடல் அழியக் கூடியது தான்.
1.உயிர் அழிவதில்லை…! அழியா உயிருடன் ஒன்றி அழியா உணர்வு பெற்ற அந்த மகரிஷியின் உணர்வுகளை எடுத்து
2.வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தப் பேர்ருள் பேரொளி உணர்வைக் கவர்ந்து நமக்குள் சேர்த்தால்
3.உடலின் ஆசைகளை விடுத்து ஒளி என்ற உணர்வின் தன்மை இணைத்து பிறவி இல்லா நிலை அடையும் சக்தி பெறுகின்றோம்.

Akashic record

Akashic record

All that this earth has got, right from the human beings down to the sceneries and smells including the precious metals and food stuffs are “due to the effect of the 48 numbers of planets of this planetary chain” which have their influence on our earth.

The sun absorbs various types of atoms from these 48 numbers of planets and sends them to us along with its rays.

The world in the beginning…
1.there is no beginning and end for this world in the real sense
2.because it does not die and is not born again and it is only a transformation from one state to another after a pralaya
3.whatever treasures it has absorbed from the rays of the sun remain as it is in its body.

In the beginning of the next Yuga, it absorbs only that type of food that is required by its various parts and the same state as existed in it during the interval – pralaya – continues during its subsequent Yuga.

All the treasures that are required for human beings to live are contained in the air that is around us. Each person takes only that part which he requires from the air.

1.This air contains sound waves, light waves and several types of atoms
2.which are required for the growth of different materials of which we have no knowledge
3.we take only those atoms which are required for maintaining for our life.

All lives connected with this world absorb what each one requires for its survival from this air.

How did our scientists find out recording of sounds and pictures and wireless telephone. The air contains all types of waves in various states. I have already told you that it is through sound waves that we get the smell.

In the same way in which sound is recorded it is possible to record the waves which produce smell. “Everything is contained in the air” in the form of waves.

How our rishis and gnanis of those days were able to know about the states that exist anywhere in this world or in any other planet by sitting in one place…?
1.They did so by their concentration of thought and breath and by meditation
2.through the sound wave that are in the atmosphere.

In this air is recorded all the sound and light waves that have so far been generated by each and every being from the very beginning of this world.

1.This remains as “akashic record” and can be seen and heard at any time
2.by those who are competent to do so
3.that is those who have awakened those senses sleeping in them.

What we hear from our radios and see in our television are only those that take place at that time anywhere else.

If the scientists can find out ways of absorbing these waves that have been recorded in the akashic records then they would be able to hear and see those happenings which took place at any time in the past, that is if they can do by science “what our siddas do by their mental powers…”

We say that it is the soul that is immortal. The soul takes several bodies as its vehicle and all the sound waves and thought waves that were produced by the soul in its various bodies also remain in the air as akashic record for ever.

1.The bodies that we take in succession are only vehicles for our soul
2.to advance in their state and the soul lives forever.

நம்முடைய மோப்ப சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?

நம்முடைய மோப்ப சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?

 

நாம் நன்றாகத்தான் இருக்கின்றோம். இரு நண்பர்களுக்குள் ஆகவில்லை. ஆனால் அவரிடம் நாம் பழகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

என்னங்க…! நீங்கள் இவ்வளவு உதவி செய்கின்றீர்கள்… உங்களைப் பற்றி அவன் கேவலமாகப் பேசுகின்றான்…! என்பார்கள்.

நாம் “அப்படியா” என்போம்.

அவர்களுக்கு அந்த நண்பன் ஆகவில்லை.
1.நாம் செய்யும் உதவி அவனுக்குக் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதற்காக நம்மிடம் இப்படிச் சொல்கிறார்கள்.
2.ஆனால் சொன்னவுடன் நாம் மோப்பம் பிடிக்கின்றோம்.

கருப்பண்ணசாமிக்கு முன் என்ன இருக்கின்றது…? நாய் இருக்கின்றது… கையிலே அரிவாள் இருக்கின்றது.

நம்மைத் தவறாகச் சொல்கிறான் என்று அவர் சொன்ன தீமையான உணர்வுகளை நாம் கேட்டபின் “உடனே நம் மனம் இருண்டு விடுகின்றது…”

நாய் என்ன செய்கின்றது…? யார் அதை வளர்த்தார்களோ அதற்கு விசுவாசமாக இருக்கின்றது.
1.எதன் உணர்வை மோப்பம் பிடித்ததோ உடலுக்குள் சேர்த்துக் கொண்டதோ
2.அதன் உணர்வின் தன்மைக்கு விசுவாசமாக இருக்கின்றது.

இவர்களைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவன் சொன்னான். ஆனால் நாமோ “இருக்கட்டும் பார்க்கின்றேன்…” என்ற இந்த உணர்வை… நல்லதை நீக்கிவிட்டு அந்தப் பகைமையான உணர்வுகளை உருவாக்கி விடுகின்றது.

பரசுராம் என்று வரும் பொழுது தீமைகளை நீக்கிச் சமப்படுத்தும் ஆற்றல் பெற்றவன் மனிதன் என்ற நிலையினை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இருந்தாலும்… மனித வாழ்க்கையில் அவன் சுகத்திற்காக இவ்வாறு தீமைகளைச் செய்யப்படும் பொழுது… நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலேயே நமக்குள்ளும் தீமைகளை உருவாக்கி விடுகின்றது.

அந்த நேரங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவரும் பெறட்டும்… தெளிந்த மனம் பெறட்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர் பெறட்டும் என்று எண்ணி விட்டோம் என்றால்
3.அவர் சொன்ன உணர்வு நமக்குள் குரோதமாக ஆக்காது.

இப்படி மாற்றவில்லை என்றால்… அவர் சொன்னதைப் பதிவாக்கிய பின் அவரைப் பார்த்தாலே மோப்பம் பிடிப்போம். பிறகு எதையாவது பேசினோம் என்றாலும்… இந்த மாதிரிச் சொன்னீர்கள் அல்லவா… என்று அந்தப் பதிவு நினைவாகி “மீண்டும் பகைமையை உண்டாக்கிவிடும்…”

இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாது சந்தர்ப்பத்திலே ஊருவாகுவதைக் காட்டுவதற்குத் தான்
1.கருப்பணசாமியை வைத்து அந்த உணர்வின் இயக்கங்களை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
2.இருண்ட நிலையாக நமக்குள் உருவாகிவிடுகிறது என்பதை இப்படிக் காட்டுகின்றார்கள்… நல்லதைக் காக்க முடியாது போய் விடுகின்றது.

மேலும் கருப்பண்ணசாமிக்கு ஆட்டைப் பலி கொடுப்பதும் மற்றதையும் செய்தால் அவன் நம்மைக் காப்பான் என்று… ஞானிகள் கொடுத்த உண்மையின் உணர்வுகள் எல்லாம் “தலை கீழாக மாறிய நிலையில் தான் இன்று உள்ளது…”

“அபிஷேகத்தின் தத்துவம்” சாதாரணமானதல்ல

“அபிஷேகத்தின் தத்துவம்” சாதாரணமானதல்ல

 

கோவிலில் தெய்வச் சிலையை அலங்காரம் செய்வதற்கு முன்னாடி அபிஷேகம் செய்கின்றார்கள். சிலை மீது பாலை ஊற்றுகின்றார்கள் சந்தனத்தை ஊற்றுகின்றார்கள் கனி வர்க்கங்களைக் கரைத்து ஊற்றுகின்றார்கள் கடைசியில் நன்னீரை விட்டுக் கழுவுகின்றார்… அப்புறம் பன்னீரை ஊற்றுகின்றார்கள்.

சிலைக்கு எதற்காக இதைச் செய்கின்றார்கள்…? ஆனால் அப்போது நாம் என்ன செய்கின்றோம்…?

இங்கே வீட்டிலே கோரிக்கை வைக்கின்றோம். எப்படி…?

என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்று பாலாபிஷேகம் செய்யப் போகிறோம். விவசாயம் சரியாக வரவில்லை… என்னிடம் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பத் தரவில்லை என்று அதற்காக வேண்டி ஆண்டவனுக்குப் பஞ்சாமிர்தத்தை ஊற்றி அபிஷேகம் செய்து… குறைகளை எல்லாம் அங்கே சொன்னால் “அவன் பார்த்துக் கொள்வான்” என்று அவனை (தெய்வத்தை) திருப்திப்படுத்துவதற்காகச் செயல்படுத்துகின்றோம்

இருந்தாலும்… இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று தான் சிலையாக அங்கே வடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை மீது தான் இத்தனையும் ஊற்றுகின்றார்கள்… பார்க்கின்றோம். ஏன்…?
1.ஊற்றுவது பால் என்று தெரிகிறது… பாலைப் போன்ற மனம் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
2.மகிழ்ந்து வாழும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.என் பையனுக்குத் தீமையை நீக்கிடும் பாலைப் போன்ற அந்தத் தெளிந்த மனம் பெற வேண்டும்.
4.கணவன் மனைவிக்குள் சில குறைபாடுகள் இருக்கும். என் கணவருக்குப் பாலை போன்ற தெளிந்த மனம் பெற வேண்டும்.
5.அவர் சொல்லிலே இனிமை வர வேண்டும். சந்தனத்தைப் போன்ற நல்ல நறுமணம் பெற வேண்டும் என் கணவருக்கு.
6.இந்த ஆலயம் வருவோர் குடும்பங்கள் அனைவருக்கும் அந்தப் பாலை போன்ற மனம் பெற வேண்டும் என்று
7.பாலாபிஷேகம் செய்யும் பொழுது யாராவது இப்படி நினைக்கின்றீர்களா…?

ஏனென்றால் அப்படிச் சுவாசித்தால் நம் உயிருக்கு அந்த அபிஷேகம் நடக்கின்றது. இந்த உணர்வுகள் இரத்தத்திலே கலந்து அமுதாக… உடலை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரமாக அது கிடைக்கின்றது. நல்ல வீரிய சக்தியாகக் கிடைக்கின்றது.

1.கண்களிலே பார்ப்பது துவைதம்.
2.அதிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தால் அத்வைதம்.
3.நுகர்ந்து உயிரிலே பட்டால் விசிஷ்டாத்வைதம்.

நாம் எந்த மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணினோமோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு ஆகாரத்துடன் சேர்த்து உடலாக மாறுகின்றது. உயர்ந்த குணங்களை உனக்குள் உருவாக்கு… “துவைதம் உடல்…”

தெரியாத மக்களுக்குத் தெரிய வைக்க… “சூட்சுமத்தில் நடக்கும் உண்மைகளை” உருவம் அமைத்து அந்த உணர்வின் சக்தியை நாம் பெறுவதற்கு ஞானிகள் அதை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

யாராவது கொஞ்ச நேரம் இவ்வாறு எண்ணி எடுக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

என் கணவருக்குப் பாலை போலச் சந்தனத்தைப் போல பன்னீரைப் போன்ற தெளிந்த மணம் பெற வேண்டும். எனக்கும் அந்த தெளிந்த மணம் பெற வேண்டும். கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் இப்படி எண்ணி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த மணம் கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணி எடுக்கும்படி… ஆபிஷேகிக்கும்படிச் சொல்லி உள்ளார்கள்.

யாருக்கு…? “நம் உயிருக்கு…!”

அதற்குத்தான் இந்தத் தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டியுள்ளார்கள். காரணப் பெயரை வைத்துச் சிலையை வைத்து ஊற்றும் பொழுது அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் எண்ணி ஏங்குவதற்குத் தான் நறுமணமானதை அங்கே ஊற்றினார்களே தவிர… ஊற்றி முடித்த பின் அந்தத் தீர்த்தத்தைப் பிடித்துச் சென்று குடிப்பதற்கு அல்ல… அதை பிடித்து நம் வீட்டிற்குக் கொண்டு வருவதற்கு அல்ல…!

இதை நமக்குள் எடுத்து இந்த உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்துவதற்குச் செய்தான் ஞானி.

இன்று டாக்டர்கள் என்ன செய்கின்றார்கள்…? நோய் என்று தெரிந்தால் இன்ஜெக்க்ஷனைப் போட்டு இரத்தத்தில் தான் அந்த மருந்தைக் கலக்கும்படி செய்கின்றார்கள்.

அது ஜிர்ர்… என்று போய் நல்ல அணுக்களுக்கு வீரியத்தை ஊட்டுகின்றது. அதற்குண்டான உணவைக் கொடுத்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது அதனுடன் இணைத்து நோய்க்குக் காரணமான அணுக்களை வலு இழக்கும்படி செய்கின்றார்கள்.

ஆனால் ஞானிகள் என்ன செய்தார்கள்…? அங்கே தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யும் பொழுது
1.உற்றுப் பார்த்து அந்த உயர்ந்த மணத்தை நாம் சுவாசித்து
2.உயர்ந்த சக்திகளை நம் இரத்தத்திலே எப்படிக் கலக்க வேண்டும்…? என்று அபிஷேகம் செய்து காட்டுகின்றார்கள்.

அவ்வாறு அதை நுகர்ந்து எடுத்தால் நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் ஆகின்றது. மகிழ்ச்சியூட்டும் உணர்வின் உணர்ச்சிகளாக அதன் வழி நம்மை இயக்குகின்றான்.

நாம் இப்படி எண்ணும் உணர்வுகள் நினைவாக்கப்படும் பொழுது உயிரிலே படும் பொழுது அரங்கநாதன். எந்த உணர்ச்சியின் உணர்வோ ஆண்டாள். “அந்த உயர்ந்த உணர்வுகள் நம்மை ஆளத் தொடங்குகிறது…”

“நம்முடைய எண்ணமே நம்மை ஆளுகின்றது” என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

1.நமது சாஸ்திரங்களில் பொய்யில்லை.
2.ஆனால் நாம் மெய்யைப் பொய்யாக்கி விட்டு… பொய்யைத் தான் இன்று மெய்யாகச் செய்து வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஞானக்கனியாக நமக்குள் விளைய வைக்க வேண்டும்

ஞானக்கனியாக நமக்குள் விளைய வைக்க வேண்டும்

 

நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகி விடுகின்றது. (வினை – வித்து)

ஆனாலும் நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.

1.நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி
3.அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி
4அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைக் கேட்டறிகின்றோம்.

அவர்கள் சொல்லும் கஷ்டத்தை நாம் கேட்டறிந்தால் நாம் நுகரப்படும் போது அந்த உணர்ச்சிகளே நமக்குள் இயக்கி நம் உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.

1.பரவப்படும்போது நம் உடல் ஒரு அரங்கம்.
2.சுவாசித்த உணர்வுகள் (உயிரிலே மோதினால் நாதம்) நம் உடலிலே படரும் போது “அரங்கநாதன்…”
3.அதே சமயத்தில் அந்த உணர்ச்சிகளே நம்மை ஆளுகின்றது “ஆண்டாள்…”

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அதை அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் மீண்டும் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.

இதைப் போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.

மற்றவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது.

1.ஒரு வித்தை ஊன்றியபின் அதே செடியாக வளர்ந்து
2.பல வித்துகளை உருவாக்குவது போல
3.நம் உடலில் அதீதமான வித்துக்கள் உருவாகி விடுகின்றது.

ஒரு வித்து செடியாகி வளரும் வளர்ச்சியில் மலர்கள் உருவாகின்றது. மலரானபின் மணத்தைப் பரப்புகின்றது. அதே போல பிறர் உடலில் விளைந்த (உணர்வுகளை) வித்துக்களை நாம் கேட்டறிந்து நம் உடலில் நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

பதிவான பின் மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர்கள்படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.

“கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.

நாம் அடுத்தவர்களிடம் போய்
1.இந்த மாதிரி… எல்லாருக்கும் உதவி செய்தேன்… எல்லாம் செய்தேன்…
2.“ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…” என்று
3.நமக்குள்ளே அதே வித்தை நாம் உருவாக்குகின்றோம்.

உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். “நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும் போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகி விடுகின்றது.

1.ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை.
2.அந்த “நல்லது சொல்வது” என்பது சிறிது காலம் இருந்தாலும்
3.அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து
4.அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
5.நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.

ஆக முதலில் நாம் நன்மை செய்பவர்களாக இருப்போம்.

பிறருடைய கஷ்டங்களும் குறைகளும் அவர்களின் கஷ்டத்தினால் ஏற்பட்ட வேதனைகளும் நமக்குள் வித்தாகி வளர்ந்த பின் கனியாகி நம்மையும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் இத்தகைய தீமைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும். அதைத் தான் “விநாயகர் சதுர்த்தி” என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

சதுர்த்தி என்றால் “நிறுத்தி” என்று பொருள்.

1.தீமையான வினைகள் (வித்துக்கள்) நமக்குள் விளையாமல் “நிறுத்தி”
2.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து “அதை வினையாக்கி”
3.”ஞானக்கனியாக” நமக்குள் விளைய வைக்க வேண்டும் என்பதே ஞானிகள் உணர்த்திய விநாயகர் தத்துவம்.

We are connected with everything

We are connected with everything

I have already told you that in this world wind, rain, snow, fall, eruption of volcanoes etc. are coming due to the power of attraction and emission of the earth.

I will now explain them in detail to you.

I told you that the earth absorbs and emits hot states which forms clouds and rain follows.
1.In the same way as the earth emits heat before a rain, all living beings also emit heat from their bodies.
2.All beings know the state before it starts to rain.
3.Every person can know in advance that it is going to rain.
4.Before it rains we find that it is very sultry.
5.All the animals and vegetation also know about this state.

The heat evolved by the earth strikes on other living beings and they also give out heat which makes water vapor forming clouds that give rain. We say that the water in the water spreads like seas, lakes, rivers, tanks etc. become water vapor and forms clouds that give rain.

This is not due to heat falling on the water spreads only but all the lives including rock, earth are responsible for the formation of clouds and thereby rain.

1.Do not think that your body has no connection with other things.
2.Think that you are connected with everything.

You who are in this world which is rotating in combination with the 48 other planets of this planetary chain “do not think that you are alone” and what is the use of your knowing about everything and in which way it is going to help you.

Our life is not an independent one. Without sound waves, light waves, air and water there is no meaning for life.

It is because that I want you to know about all the states that exist and lead a meaningful life, I am telling you some of the truths by means of these lessons.

In places where there is snow fall the state is the same as in the places where there is rainfall. The snow falls in those places in cooperation with the living beings there and the way in which the soil emits its cold in the form of waves.

Earthquakes and cracks in the soil come from the state in which the earth breaths that is, it absorbs and emits the energy.

எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்

எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்

 

1.என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
2.என் பையன் ஞானியாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
3.என் குழந்தைகள் உடல் நலமாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
4.என் தொழில் வளமாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று
5.இதைத் தான் நீங்கள் என்னிடம் வாக்காகக் கேட்டுப் பெற வேண்டும்…. கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

ஆனால் இப்படிக் கேட்பதற்குப் பதில் கஷ்டம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் முதலில் இருளாகிவிடும். அப்போது நான் சொல்லும் உயர்ந்த வாக்குகள் உங்களுக்குக் கிடைப்பது கஷ்டம்.

இதை எதிர்த்துத் தள்ளி விடுகின்றது. கஷ்டம் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நல்ல வாக்குகளை அது உள்ளே விடுவதில்லை. ஏனென்றால் அது வாலியாக மாறி விடுகின்றது.
1.உங்கள் எண்ணமே நல்லதைப் பெற முடியாதபடி தடுக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.
2.இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு நல்லதை வேண்டிக் கேட்டுப் பெறும் ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வீக குணம் பெற வேண்டும் கொவிலுக்கு வரும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். கோயிலை அவமதிக்காதீர்கள்.

நம்மைத் திரிந்து வாழச் செய்யும் நிலையில் நமக்குள் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதும் பகைமையிலிருந்து மாறவும் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் தான் கோவில் என்ற நிலையில் அதை மதித்து நடங்கள்.

ஆகவே நான் சொல்வதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.உங்களுடைய நினைவு கொண்டு தான் மீண்டும் அதை எண்ணி எடுக்க வேண்டும்.

திட்டியவனை நினைத்தவுடன் அவனுடைய உணர்வுகள் உடனடியாக உங்களுக்கு வருகிறது அல்லவா. கோபம் வருகிறது காரியமெல்லாம் கெடுகிறது… அங்கேயும் புரையோடுகிறது காரியங்கள் கெடுகிறது.

பிள்ளை மீது பாசமாக இருந்து என்ன ஆனதோ…? ஏதானதோ…? என்ற துன்பப்பட்டால் அந்த வேதனையால் உங்கள் செயல்கள் தடுமாற்றம் ஆகின்றது.

நீங்கள் அந்த வேதனையுடன் சமையல் செய்தீர்கள் என்றால் சூடாக இருக்கும் பாத்திரம் பொங்கி வரும் போது சரியான முறையில் ஆதைக் கையாளாதபடி உடுத்தியிருக்கும் துணியில் தீ கூடப் பிடித்து விடும்.

காரணம்…
1.சிந்தனை இல்லாத உணர்வு கொண்டு அவசரப்பட்டு இயக்கப்படும் பொழுது நமக்கே அது தீங்கு விளைவிக்கும் சக்தியாக வந்து விடுகிறது.
2.ஏனென்றால் வேதனை என்பது விஷம்… சிந்திக்கும் தன்மையை அது இழக்கச் செய்து விடும்.

ஆகவே அடுத்தடுத்து அடுத்தடுத்து “கஷ்டம் என்ற நிலையினை உள்ளே விடாதபடி” மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நான் பார்ப்பதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமை உணர்வுடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் எங்களுக்குள் அருள் ஞானம் வளர வேண்டும்… என்று அதிகாலையில் இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள்.

பகைமைகள் அகலும்… மனம் ஒன்றாகும். இருளைப் போக்கும் அருளைப் பெருக்கும். பேரருள் பேரொளியாக வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகைய ஆனந்தத்தை நீங்கள் பெறுங்கள்.

நான் பதிவு செய்த நிலைகள் கொண்டு எண்ணி எடுத்துப் பாருங்கள்.

தங்கத்திலே திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் எப்படிக் கரைகின்றதோ அதைப் போல் அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்த்தால் அது உங்கள் கவலையையும் வேதனைகளையும் கரைத்து உங்களைச் சிந்திக்கச் செய்து ஆற்றல் மிக்க வலிமையைக் கொடுக்கும்.

அந்த வலிமை பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு கோவில்
2.அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் வெளிப்படுத்துகின்றேன்.
3.அதே ஆசையுடன் நீங்கள் அருள் சக்திகளை நுகர்ந்தால் அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.
4.சிந்திக்கும் தன்மை வருகின்றது… அருளைப் பெருக்க முடிகின்றது… அருள் வாழ்க்கை வாழ முடிகின்றது…!

Aiyappa

Aiyappa

Noble souls of Rishis, Sages, Siddhas etc. do not take birth from wombs as we all do.
1.When they want to execute some of their wishes they do not take birth from the womb of any mother.
2.They can enter into any body they like, human or animal and the work they want using that body as a tool.
3.The state of Aiyappa whom many people in south India worship is such a one.

Every sage does not rise up to the high state of Sabdha rishis in his first incarnation in a human body. So, to complete the balance of the work they enter into some other bodies.

Astral or spirit world is not a place where a soul can gather some more energy from Sakthi and raise its own state. This can be done in the material world where we are living.

So the great souls utilize the method by which
1.they do not take a rebirth but get their purpose fulfilled
2.by utilizing some other bodies suitable for work that they want to do.
3.Thus they reap the fruits from the material world without taking a rebirth in this world.

It is with the grace of God that we are born as human being in this world. We, who have taken several births in this world, at least in this life know about the states of the great souls like Sabdha rishis, sages and Siddas. That is why I am giving these lessons to you.

The state of Aiyappa whom we worship is such a one. He did not take a birth in this world.

A new born baby which died was placed in a wooden casket by its parents and buried on the bank of a river. There was a heavy rain and floods came in the river which washed off the bank and the casket with the dead body of the baby.

A king who passed that way happened to see the wooden casket floating in the river. He took the casket and on opening it he found a new born baby in it.

At that time the soul of a sage entered the body and the child became alive. As the king had no children he took the child very happily thinking that to be a gift from God.

The king took the child home and gave it to the queen who brought it up as her child. The child was named as Aiyappa.

Since the soul in the child’s body was an advanced soul
1.the sanctity of the place increased and it was doing good to all the people from its childhood.
2.Many souls, that have surrendered to him have gained high states.

He remains in a stern meditative state. He remains in the hearts of all His devotees. He blesses his devotees in whichever state they worship him.

I asked you who is God; all of us are Gods. We who are born with the grace of God should not make ourselves devils and roam about in the astral world. To save yourself from becoming one such devil I am giving you the different states to which a man can go.

The meditative state that I am telling you is not only for those with human bodies “but for all the souls…”

All the souls in the astral world that have spoiled themselves and are roaming about as devils there, should change their bad thoughts, come to a good state, meditate and be born to good parents, realize the fruits of taking human births and have no more births.

This should be the prayer in your meditation.

நஞ்சைப் போக்கும் ஆற்றல் மிக்க ஞானிகள் தான் “இப்பொழுது தேவை”

நஞ்சைப் போக்கும் ஆற்றல் மிக்க ஞானிகள் தான் “இப்பொழுது தேவை”

 

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கின்றேன்.

நம்மால் முடியவில்லை என்றாலும்… வீட்டில் கர்ப்பமானால் அந்தப் பத்து மாதமாவவது அமைதியாக இருந்து
1.அகஸ்தியன் பெற்ற அருள் கருவிலே இருக்கும் சிசு பெற வேண்டும்
2.உலகை அறிந்த அகஸ்தியனுடைய அருள் கருவில் வளரும் சிசு பெற வேண்டும்
3.துருவத்தின் ஆற்றலைp பெற்ற அந்த அருள் சக்தி கருவிலிருக்கக்கூடிய சிசு பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரமாக ஆன அந்த ஒளியான உணர்வுகளைக் கருவிலிருக்கக்கூடிய சிசு பெற வேண்டும் என்று
5.காலையில் 6:30 மணிக்குள்ளாவது ஒரு பத்து நிமிடமாவது எண்ணிப் பாருங்கள்.

வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் பகைமைகளை மறந்து விடுங்கள்… ஞானிகளை உருவாக்குங்கள். அவன் உருவாக உங்கள் குடும்பத்தில் சாப அலைகளோ பாவ அலைகளோ பூர்வ ஜென்ம அலைகளோ அத்தனையும் நீக்கும் மகரிஷியாக அவன் உருவாகின்றான்.

விஞ்ஞான உலகில் காற்று மண்டலத்தில் பரவி உள்ள நச்சுத்தன்மையை நீக்க… பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கியது போன்று… வளர்ச்சியில் மனிதனாக எப்படி அது உருவானதோ…
1.ஞானி அவன் வாழ்க்கையில் தனக்குள் வந்த இருளை நீக்கி ஒளியாக எப்படி மாற்றினானோ அதன் உணர்வை
2.கருவில் வளரும் அந்தச் சிசுவிற்கு ஊட்டினால் அவன் இருளை அகற்றி ஒளியான உணர்வை நமக்கு ஊட்டுவான்… இந்த உலகைக் காப்பான்.

ஆகவே உலகைக் காத்திடும் மகரிஷிகளை நாம் உருவாக்குதல் வேண்டும்

அகஸ்தியன் தெரிந்து அந்த ஆற்றல்களைப் பெறவில்லை. தாய் கருவிலே நுகர்ந்த உணர்வு தான் அவனை இயக்கியது.

அவன் பெற்ற சக்தியை எடுத்துக் கர்ப்பிணியின் செவிகளிலே ஓதுங்கள். கர்ப்பிணியை எண்ணி எடுக்கும்படி செய்யுங்கள்… சுவாசித்து உமிழ் நீராக உருவாக்குங்கள்… அதைக் கருவில் இருக்கும் சிசுவிற்கு ஊட்டுங்கள். அருள் ஞானியை உருவாக்குங்கள்.

இப்படி உருவாக்கினால் விஞ்ஞான உலகில் வரும் அசுரத் தன்மைகளை நீக்க முடியும். காரணம்… இன்று உலகெங்கிலும் நரமாமிசத்தைச் சாப்பிடும் அளவிற்கு மனிதனுடைய எண்ணங்கள் உணர்வுகள் சென்று விட்டது.

குழந்தைகள் கருச் சிதைவானால் சிதைந்த உடலை எடுத்து வியாபாரம் செய்கின்றார்கள் சீனாவிலே. அதை முதியவர்கள் சாப்பிட்டால் வலிமை பெறுவார்கள் என்று இப்படி நம்பிக்கையை ஊட்டி தாய்லாந்து நாட்டிலும் மற்றும் நீக்ரோக்கள் வாழும் நாடுகளிலும் ரஷ்யாவிலும் ஏன் அமெரிக்காவிலும் கூட இப்படி அறிவிலிகளாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால்… இந்த உடல் எத்தனை காலம் வாழ்கிறது…? என்று எண்ணுகின்றான்…! அதே சமயத்தில் விஞ்ஞானி பல உணர்வுகளைச் சேர்த்து மனிதனை 1500 வருடம் வாழ வைக்க முடியும் என்று நினைக்கின்றான்,

அவ்வளவு காலம் வாழ்ந்தால் இவனுடைய எண்ணங்கள் ஆசையின் பால் சென்று நிராசையாகி வேதனையின்பால் செல்லப்படும் பொழுது “அந்த வேதனையைத் தான் வளர்க்க முடியும்…” என்பதை மறந்து விட்டார்கள்.

இது போன்று உலகம் சென்று கொண்டிருக்கும் இத்தகைய நிலையில் இருந்து மக்களை மீட்ட அருள் ஞானிகளை நாம் ஒவ்வொருவரும் உருவாக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அதிகாலையில் எடுத்துப் பழகுங்கள். உங்களுக்குள் பதிவான நிலைகள் கொண்டு கருவிலே இருக்கும் சிசுவிற்கு இந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.அகஸ்தியன் பெற்ற அருளை அவன் பெற வேண்டும்
2.அவன் துருவத்தின் ஆற்றல் பெற்றதை இந்தக் குழந்தை பெற வேண்டும்
3.இருளை நீக்கி ஒளி என்ற உணர்வாகப் பிறவி இல்லாத நிலை அடைந்த அந்த அருள் சக்தி பெற வேண்டும்
4.உலக இருளை நீக்கும் ஞானியாக வரவேண்டும்
5.அனைவரும் தெளிந்த மனம் கொண்டு வரும் அந்த மகரிஷியாக வேண்டும் என்று
5.”இது போன்ற ஆயிரம் அகஸ்தியர்களை நாம் உருவாக்க வேண்டும்…”

அன்று ஒரு சமயம் பூமி நீளவாக்கிலே வளர்ந்து வரும் பொழுது தலைகீழாக்க் குடை சாயும் நேரத்திலே அகஸ்தியன் அவனுடைய திறமையால் பூமியைத் திசை திருப்பிச் சமப்படுத்தினான்… சீராக்கினான்.

தென் துருவம் வட துருவம் சில பகுதிகளில் உறை பனி உருவாவதைச் சமப்படுத்தி இன்று வரை இந்த பூமியைச் சீராக இயங்கும்படி செய்துள்ளார்.

இரண்டு நட்சத்திரத்தினுடைய சக்திகள் எதிர்மறையாகி மோதலாகி மின்னலானால் மரத்தைக் கருக்குகின்றது. கடலில் பட்டால் மணல் ஆகின்றது. பூமிக்குள் ஊடுருவினால் கொதிகலனாக மாறுகின்றது.

ஆனால் கடலில் இவ்வாறு விளைந்த மணலை விஞ்ஞானி எடுத்து யுரேனியமாகப் பிரித்து எதிர்நிலையான உணர்வுகள் மோதம்படி செய்து மீண்டும் மின்னலைப் போல கதிரியக்கங்களை உருவாக்கச் செய்து மின் கதிர்களாக மாற்றுகின்றான்.

மனித உடலுக்குள் இது மோதும்படிச் செய்து மனிதனையே கரைக்கும் தன்மையும் மரத்தைக் கரைக்கும் நிலையம் கல் மண் அனைத்துமே அதற்குள் தாக்கப்பட்டு அதிலிருக்கக்கூடிய கதிரியக்கங்கள் ஒன்று சேர்ந்து கரைந்து போகும் படி செய்கின்றான்.

அந்த அளவுக்கு இன்று விஷத்தன்மைகள் வளர்ந்து விட்டது.

1.மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் நம் பிரபஞ்சத்தில் சூரியனால் அது கவரப்பட்டு
2.பூமி கொதிகலனாகி நிலநடுக்கம் ஆவது போன்று சூரியனுக்குள்ளும் எதிர்நிலையாகிக் கரும் புகைகளைக் கக்கிக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய விஷத்தன்மைகள் மோதப்படும் பொழுது மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் சூரியனுக்குள் பரவி இரு நிலையான மோதலாகி… எப்படி மின்சாரம் செல்லும் வயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் இரு மடங்கு மின்சாரமாகின்றதோ இதைப் போன்று சூரியனுக்குள் அது இரு மடங்கு இயக்கச் சக்தியாகி….
1.இந்த விஞ்ஞானமும் அழியப் போகின்றது.
2.மனிதன் உயிரின் துடிப்பும் அதிகரிக்கப் போகின்றது… சிந்தனைகள் கருகப் போகின்றது.
3.மிருக உணர்வு கொண்ட நிலையில் விஷத்தன்மை கொண்ட மனிதர்களாகத் தன் இனத்தைப் புசிக்கும் அளவிற்கு வந்துவிடும்.

தான் வாழ வேண்டும் என்ற நிலையில் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டு அதைக் கண்டு ஆனந்தப்படும் நிலையாக வந்துவிட்டது.

எங்கே சென்றாலும் இது போன்ற விஷ உணர்வுகள் படர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் எந்தச் செல்வத்தைத் தேடப் போகின்றோம் எதைக் காக்கப் போகின்றோம்…?

அழியாச் செல்வமான அந்தப் பேரருளை நீங்கள் பெற்று இருளை மாய்த்திடும் தன்மை பெற்று வீட்டிலே கர்ப்பமாக இருக்கும் அந்த கருவில் வளரும் சிசுக்கள் மகானாக வேண்டும் என்று அவர்களை மகரிஷியாக உருவாக்குங்கள்.

இது போன்ற ஆயிரம் குழந்தைகளை உருவாக்கினால் நீங்கள் வாழும் ஊருக்குள் விஷத்தன்மை புகாதபடி தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரம் எப்படி விஷத்தை ஒளியாக மாற்றுகின்றதோ இதைப் போன்று இந்தக் குழந்தைகள் விஷத்தை மாற்றிடும் உணர்வின் அறிவாகப் படரச் செய்யும் பொழுது தொக்கி உள்ள மனிதர்களைக் காக்க முடியும்… தப்புவிக்க முடியும்.

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்… நம்பிக்கையுடன் நீங்கள் செயல்படுங்கள்.

கர்ப்பம் என்று தெரிந்தாலே அந்தக் குடும்பத்தில் யாரும் சங்கடமே படக்கூடாது
1.சந்தோசம் வரவேண்டும்… ஞானி உருவாகின்றான் என்று…!
2.உலகைக் காக்கப் போகின்றான்
3.இருளை அகற்றப் போகின்றான்
4.மெய்ப்பொருளைக் காணப் போகின்றான்
5.அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லப் போகின்றான்
6.அவன் பார்வையில் சர்வ பிணிகளையும் நீக்கப் போகின்றான்
7.அத்தகைய கரு குடும்பத்தில் உருவாகின்றது என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்…
8.அந்தக் கர்ப்பிணியிடம் இதைச் சொல்லிப் பாருங்கள்… அற்புதம் நடக்கும்.

இன்றைய உலகம் இருக்கக் கூடிய சூழ்நிலை என்பது தலைக்கு மேல் கத்தியை தொங்க விட்டிருப்பது போன்று தான் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தாலும் அவர்கள் வெடிக்கவில்லை என்றாலும் தானாக வெடிக்கும் வாய்ப்புகள் வருகின்றது.

அவை வெடித்தால் பூமியே முழுமையாக நஞ்சின் தன்மையாகிவிடும். மனிதனுடைய உடலையே மனிதப் பிறவியை அழிக்கக்கூடிய நிலைகளாக வந்துவிடும். மனிதனல்லாத பிறவிக்குத் தான் செல்ல நேரும்.

ஆனால் அதற்குள் ஞானிகளை உருவாக்கி விட்டால்…
1.அவனுடைய நிழலால் நாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்… அவன் மடிய மாட்டான்… நம்மை உந்தித் தள்ளுவான்.
2.நம்மை ஒளியாக்குவான்… பிறவியில்லா நிலையை அடையச் செய்வான் இருளைப் போக்குவான்.

ஆகவே… நஞ்சைப் போக்கும் ஆற்றல் மிக்க ஞானிகள் தான் இப்பொழுது தேவை. ஞானிகள் உலகமாக நாம் உருவாக்க வேண்டும். காலம் குறுகிக் கொண்டிருக்கின்றது.

அன்று அகஸ்தியன் கொடுத்த தத்துவங்கள் பெரும்பகுதி மறைந்து விட்டது. விஞ்ஞான உலகம் அழியும் தருணத்தில் உங்களுக்கு ஞானிகள் அருள் உணர்வுகளை உபதேசமாகக் கொடுக்கின்றேன்.

உடலை விட்டு அகன்று ஒளியாக நான் சென்றாலும்
1.எனக்குக் கிடைத்த சக்தி உங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் .என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றேன்.
2.நீங்கள் அனைவரும் ஞானியாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
3.நீங்கள் அவ்வாறு உருவானால் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் செயலாக அமையும்.

உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… குரு வழியில் நீங்கள் எல்லோரும் அந்த நிலை பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன். அதன் வழி செயல்படுத்துங்கள் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை

எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை

 

ஒரு விலை உயர்ந்த பொருளை வாங்கிக் கொண்டு வருகின்றோம்… திடீரென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றது. உடனே நமக்கு அதிர்ச்சி வருகின்றது… வேதனை வருகின்றது.

சந்தர்ப்பத்திலே இந்த வேதனை அதிகமாக நுகரப்படும் பொழுது இந்த உணர்வு நம் ஆகாரத்துடன் கலக்கின்றது.
1.அந்த அதிர்ச்சியான உணர்வுகள் நம் இருதயத் துடிப்பிலே பட்டு விட்டால் அங்கே படபடப்பு அதிகமாகி
2.நம் சுவாசத்தை கட்டுப்படுத்தும் பயத்தின் தன்மையாக வரும்… பதட்டம் வந்து விடுகின்றது.

பதட்டாமன உணர்வுகள் சிறிது காலம் அது இருந்தால் உமிழ் நீராகி ஆகாரத்துடன் கலந்து அதே உணர்வு வளரப்படும் பொழுது நடுக்கவாதம் வரும்.

இது எல்லாம் நம்மை அறியாமல் வரக்கூடிய நிலைகள். இதைப் போன்ற நிலையில் இருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

கை தவறிப் பொருள் கீழே விழுந்து விட்டாலும் அந்த ஆசையினால் “பொருள் போய்விட்டதே…” என்ற அந்த வேதனை உணர்வைத் தடுப்பதற்கு ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

1.சுவாசத்திற்கு மேலே செல்லாதபடி (உயிரிலே படாதபடி) தடுத்து நிறுத்தும் நிலையாக
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று மன உறுதி கொண்டு அந்தச் சக்தியை எடுத்து
4.சரி… “நாளை சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும்…”

இப்படி நமது வாழ்க்கையில் எத்தனை தீமைகள் வந்தாலும் அதை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமையை நாம் பெறுதல் வேண்டும்.

நம் பிள்ளை மீது பிரியமாக இருப்போம். பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் வேதனைப்படுவோம். அவன் வேதனைப்படுகிறான் என்றால் நமது சிந்தனையும் குறைந்து விடுகின்றது வேதனையுடன் சொல்லப்படும் பொழுது அவனும் சிந்தனை இழந்து விடுகின்றான்.

எல்லாம் ஆனபின் நமக்குக் கோபம் வருகின்றது. இப்படி நமக்குள் ஒன்றின் பின் ஒன்று தொடராக… “நாம் சுவாசிக்கும் உணர்வுகள்” நம் உடலில் தீய விளைவுகளை உருவாக்கும் தன்மையாக வந்து விடுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கிய நாம்… சந்தர்ப்பத்தால் இதைப் போல் வாழ வேண்டும் என்று எண்ணிச் செயல்படும் பொழுது “மேலே சொன்னது போன்ற தீமைகள்” வந்து விடுகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டி விட்டு அந்தச் சக்தி நம் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வைச் செலுத்தி உள்ளுக்குள்ளே வலிமை ஆக்கினால்… தீமை செய்யும் சக்திகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளலாம்.

வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அது வாலி. உடலுக்குள் அந்த வேதனையான அணுக்கள் நல்ல அணுக்களுடன் சேர்ந்து விட்டால் இரண்யன்.

அந்த இரண்யனை மடி மீது வைத்து வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் பிளக்கின்றான். சூரியன் எப்படித் தன் மீது மோதும் நஞ்சினைப் பாதரசத்தால் பிளக்கின்றதோ அதைப் போல்
1.கார்த்திகேயா என்று மனிதன் தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.ஒளியாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவோம் என்றால் தீமைகளைப் பிளக்க முடியும்.

நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தி வலுவாகும் போது தீமைகள் அனாதையாகி விடுகின்றது… ஈர்க்கும் சக்தி குறையும் பொழுது சூரியன் அந்த தீமைகளைக் கவர்ந்து சென்று மாற்றி அமைத்து விடுகின்றது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது…!

ஆகவே நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி நாம் எதையுமே நல்லதாக மாற்றிட முடியும்.