இன்றைய உலகில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதை “நாம் தெரிந்து நடப்பது தான் நல்லது…!”
விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம் ஆனால் அஞ்ஞான வாழ்க்கையே வாழுகின்றோம்.
ஆனால்
1.வாழ்க்கையில் வரும் துன்பங்களை எவ்வாறு நீக்குவது…?
2.மனிதன் ஆன பின் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எப்படிப் பெருக்குவது…?
3.தீமை இல்லாத வாழ்க்கையாக எவ்வாறு வாழ்வது…? என்பதனை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளது.
அவ்வாறு காட்டியிருந்தாலும்… இன்றைய உலகில் அரசர்கள் காட்டிய வழியில் அவர்கள் தத்துப்படித் தான் ஜாதகம் ஜோதிடம் யாகங்கள் வேள்விகள் என்று அனைத்துமே செயல்பட்டு கொண்டுள்ளது.
அரசன் வழியில் எடுத்துக் கொண்டால் “சத்ரிய தர்மம்” என்ற நிலையில் அவன் வாழ்க்கையில் தான் எதை ஆசைப்படுகின்றனோ அந்த ஆசையை நிறைவேற்ற எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று தான் உருவாக்கி வைத்தனர்.
உதாரணமாக ஒரு நாட்டிற்கு சென்று எனக்கு சிறிதளவு இடம் வேண்டும் என்று கேட்பான்.
இல்லை… கொடுக்க முடியாது என்றால் போர் முறை கொண்டு அதை எடுத்துக் கொள்வான். இப்படித்தான் ஆட்சிகள் நடந்து ஓர் அரசன் மற்ற அரசனை அடிமையாக்கி… தன் வாழ்க்கை என்ற நிலை வரும் பொழுது எல்லோரையும் அரசனுக்குக் கீழ் அடிமையாக்கும் நிலைகள் வளர்ந்து வந்தது.
ஆனால் அரசனை மதிக்கவில்லை அரச வழியில் நடக்கவில்லை என்றால் அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும் பின் குற்றவாளியாக ஆக்கி உதைக்கவும் செய்கின்றார்கள். இதற்குச் சாட்சிகள் யாரும் இல்லை (பழைய சரித்திரத்தைப் படித்தால் தெரியும்).
இப்படித்தான் அந்த அரசர்கள் வெளிப்படுத்தியது மக்கள் மத்தியில் பரவி தர்மம் நியாயம் சத்தியம் என்று பேசுவது அனைத்தும் “வெறும் பேச்சு தான்…”
1.தர்மமும் நியாயமும் எல்லாம் எங்கே இருக்கிறது என்றால் அதர்மவாதி கையில் தான் இருக்கின்றது
2.அதர்மம் எவன் செய்கின்றானோ அவன் கை ஓங்கி வலு இருக்கின்ற நிலையில்
3.தர்ம நியதிப்படி ஒருவன் நடந்தான் என்றால் அவனை அதர்மவாதி என்று இவன் குற்றத்தைச் சுமத்தி அவனை அடக்குகின்றான்…
4.அவன் வழியில் தான் இவன் நடக்க வேண்டும்.
விஞ்ஞான உலகமாக இருந்தாலும் இப்படித்தான் இன்று நாம் வாழுகின்றோம்.
ஆனால் எந்த வழியில் வாழ்ந்தாலும் “செல்வம் இல்லை” என்று ஒருவர் வேதனைப்படுகின்றார்… அது ஒரு புறம். அடுத்து அவருக்குச் செல்வம் வந்து விட்டாலோ தேடிய செல்வத்தைப் பாதுகாப்பதற்கு எத்தனையோ பயப்பட வேண்டியுள்ளது.
செல்வம் இல்லாதவன் திடீரென்று செல்வத்தைச் சேர்த்து விட்டால் “நேற்று வரையிலும் இவன் ஓன்றுமில்லாதவனாக இருந்தான்… இப்போது எங்கிருந்தோ கொள்ளையடித்து வந்து விட்டான்” என்று ஒரு சாரார் சொல்கின்றனர்.
இவன் கடுமையாக உழைத்தான்… நல்ல முறையில் சம்பாதித்தான் பரவாயில்லை…! என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.
நேற்று வரையிலும் சாதாரணமாக இருந்தவனுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று இன்னொருவர் சொல்கிறார்.
1.செல்வத்தைத் தேட இப்படிப் பல வகைகளிலும்
2.எதிரிகளை உருவாக்கும் நிலை தான் நடந்து கொண்டிருக்கிறது.
இது எல்லாம் அவருடைய செவிகளில் படும்பொழுது நான் நியாயமாகத்தான் சம்பாதித்தேன்… ஆனால் இப்படிப் பேசுகின்றார்களே என்ற வேதனை உணர்வுகளை நுகர்கின்றார்.
அவர்கள் எவ்வளவு பொறாமைப்பட்டனரோ அந்த உணர்வினை நுகரப்படும் பொழுது உடலுக்குள் பொறாமையின் உணர்வின் அணுக்கள் கருவாகி… அணுவாக உருவாகத் தொடங்கி விடுகிறது.
பிறர் பேசும் அத்தகைய நிலையை உற்றுப் பார்த்தால் அதை நகர நேர்ந்தால்
1.உயிர் அந்த உணர்வை இயக்கிக் காட்டுகின்றது…
2.இயக்கினாலும் அந்த உணர்வின் அணுவாக மாற்றி விடுகிறது.
ஆனால் அணுவின் கருவாக அது உருவாக்கி விட்டால் மீண்டும் அவன் எப்படிப் பொறாமைப்பட்டனோ அதன் உணர்வை மீண்டும் எண்ணி “என்னை இப்படிப் பேசுகின்றார்களே… என்னை இப்படிப் பேசுகின்றார்களே…! என்ற அந்த உணர்வை எடுத்து அதனின் அணுக் கருக்களாக உருவாகின்றது. அதன் வழி பேதமடையச் செய்யும் உணர்வுகள் உடலில் வளரத் தொடங்குகிறது.
நல்லதைச் செய்ய வேண்டும் என்றாலும் அடுத்து என்னை இப்படிப் பேசுகின்றான்… அப்படிப் பேசுகின்றான்… என்ற உணர்வுகளைத் தான் தோற்றுவிக்கின்றது. உண்மையின் இயக்கத்தை அறியாத நிலைகள் கொண்டு மாறுபட்டு வந்து விடுகிறது.
இப்படி இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதை “நாம் தெரிந்து நடப்பது தான் நல்லது…!”
காரணம்…
1.பகைமை உணர்வுகள் உலகெங்கிலும் அதிகரித்து விட்டது
2.எல்லோருடைய உடல்களிலும் அது விளைந்து விட்டது
3.பகைமையினால் ஏற்பட்ட அணுக்கள் அந்த உணர்வைத் தான் உணவாக எடுத்து கொள்ள நேர்கின்றது
4.அதை நுகர நேர்ந்தால் பகை உணர்ச்சிகளும் வெறுப்பு உணர்ச்சிகளும் காழ்ப்புணர்வுகளையும் தான் நமக்குள் தோற்றுவிக்கின்றது.
எந்தெந்தக் குணங்களை நுகர்ந்தோமோ அனைத்தும் உடலுக்குள் அந்த அணுவாக மாறிய பின் அதற்கு இரை தேவை… அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் வழி இந்த உயிர் எடுத்துக் கொடுத்து அந்த வழிக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.
இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில்… அந்த மெய் ஞானிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வுகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.
1.அதை நீங்கள் வளர்த்து தீமைகளை அகற்றிடும் சக்தி பெற்று
2.என்றென்றும் அவர்களின் அருள் வட்டத்திலே வாழ்ந்திட வேண்டும்.
3.விஞ்ஞானத்தால் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்.
மெய் உணரும் தியான முறை
பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது… வேகக்கூடிய உஷ்ணமும்… அவ் இயந்திரம் ஓடக்கூடிய ஓட்டத்திலும்… “ஒரே பக்குவ நிலையில் ஓடும் பொழுது தான்…” ஒன்று போல அம்மிட்டாய்களைச் செய்ய முடிகின்றது. சிறிது பக்குவம் மாறினாலும் அமைப்பின் தன்மை மாறி விடுகின்றது.
அதைப் போன்றே… இயந்திரங்களில் நூற்பாலைகளில் பஞ்சின் தரத்தில் நூற்கப்படும் நூல்கள் ஓட்டத்தின் சமத்தைக் கொண்டு ஒரே போல் தரமுடன் நூல் நூற்கப்படுகின்றது. இயந்திர விசையின் வேகமோ… செயலாக்கும் திறமையில் மாற்றமோ ஏற்படும் பொழுது… நூலின் தரம் மாறுபடுகிறது இது செயற்கை.
ஓர் மரத்தில் காய்க்கும் காய்கள் அனைத்தும் ஒன்று போல் உருவத்தில் இருப்பதில்லை. பெரிதாகவும் சிறிதாகவும் கரடு தட்டியும் பூச்சி புழுக்கள் அரித்தும்… பூக்களானாலும் சரி… காய் கனிகளானாலும் சரி… ஒரே மரத்தின் கனியிலேயே மாறுபாடுகள் அந்தந்தக் கிளைகளில் எடுக்கப்படும் சத்தின் ஈர்ப்பைக் கொண்டு கனியின் வளர்ச்சி பிரிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.
அதைப் போன்று ஒரு தாயின் குழந்தைகள் உணர்வின் தன்மைக்கொப்ப குணங்கள் மாறுபடுகின்றது. ஆனால் ஒரே சூலில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து… தன் எண்ணத்தின் உணர்வு கொண்டு தானாய் வளரும் தருணம் வரை… இரண்டு குழந்தைகளின் உணர்வுகள் ஏறக்குறைய ஒன்று போல் இருக்கின்றன.
சூரியனின் ஒளி ஈர்ப்பில் பூமியின் எந்த நட்சத்திர ஒளிகளின் அலைத் தன்மை அதிகப்படுகின்றதோ அத்தருணத்தில் உருவாகக்கூடிய குணத்திற்கொப்ப… பிறப்பின் நிலை… ஜீவ அணுக்களின் வளர்ச்சி வலுக் கொள்கின்றது.
அந்தந்தத் தருணத்திற்கொப்ப நொடிக்கு நொடி மாறிக் கொண்டுள்ள சுழற்சி ஓட்டத்தில்… உணர்வின் எண்ணத்தில் மெய் அறியக்கூடிய பக்குவத்தை வளர்க்கும் மெய் ஞானியின் தன்மையும்… ஒன்றை ஒத்து ஒன்று இருக்காமல்.. மாறு கொண்ட நிலை இயற்கையின் உணர்வில் வளர்கின்றது.
செயற்கையின் தன்மையில் இயந்திர விசையின் ஓட்டத்தில் ஒன்றைப் போன்ற செயலைத் தரத்தில் செயலாக்க முடிகின்றது.
எப்படி மனிதனின் எண்ண உணர்வு செயற்கையின் விஞ்ஞானத்தில் பல செயல் திறமைகளை வளர்க்க முடிகின்றதோ… அதைப் போன்று இயற்கையில் மெய் உணரும் பக்குவ வழிமுறையை…
1.உணர்வின் எண்ணத்தில் எடுக்கக்கூடிய ஞானத்தை
2.நாம் ஒன்றை எண்ணும் பொழுது… மீண்டும் மீண்டும் அதையே எண்ணிக் கொண்டுள்ள தருணத்தில்
3.அவ் எண்ணத்திற்கு ஜீவித வலுவை ஆத்மாவின் பதிவாகச் செயல்படுத்தி விடுகின்றோம்.
எப்படி தோசையை சுட்டுப் போடும் பொழுது முதலில் சுட்ட தோசைக்கும் மேல் மேலும் அதற்கு மேலேயே சுட்டுப் போடும் பொழுது மேலிருக்கக்கூடிய உஷ்ணத்தை எடுத்து கீழிருக்கக்கூடிய தோசையும் சூடாகவே இருக்கின்றது அல்லவா…!
அதைப் போன்று…
1.நல்ல வழியோ தீயவையோ ஒன்றின் தொடரை எண்ணி எண்ணி
2.அதே தொடரில் எண்ணத்தை ஓட்டும்பொழுது
3.அதன் வலுவின் தன்மைதான் ஆத்மாவின் பதிவு.
ஜீவ ஆத்மாவின் உயிர் காந்தத்திற்கு… உண்மையான நல் உணர்வின் ஒளித் தன்மையை நம்மில் பெறுவதற்கு…
1.உயர் ஞானிகளின் எண்ணத்தை
2.சரீர ஓட்டத்தின் வாழ்க்கைத் தொடர் “கனவில்” அதிகமாக எண்ணத்தைச் செலுத்தாமல்
3.ரிஷிகளின் எண்ணத்தில் நம் எண்ணம் செல்லும் பொழுது
4.அவர்கள் பெற்ற ஒளித் தன்மையின் வலுவின் வட்டத்தில் நம் உயிர் ஜீவ அலைகள் பதிவாகி
5.நம் ஒளி வட்டமே உண்மைத் தன்மையை அறியக்கூடிய மெய் ஞானத் தன்மை பெற்று விடுகின்றது.
உணர்வில் மோதப்படும் வாழ்க்கையின் விருப்பு வெறுப்பற்ற வழித் தொடர் அடைய… நம் ஒளியின் தன்மை வளர்ச்சியின் வலுவினால்…
1.சலிப்பு சோர்வு என்ற வேண்டாத நிலைகள்… தீயவை எதுவாகிலும்…
2.அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கக்கூடிய ஒளித் தன்மையாக
3.ஆத்மாவில் மோதப்படும் எதுவாகிலும் அதை நம் இச்சைக்குக் கட்டுப்படக் கூடிய செயலுக்கு
4.உணர்வின் எண்ணத்தை நாம் செலுத்தி எடுக்கக்கூடிய ஞானத்தின் தன்மை தான் “மெய் உணரும் தியான முறை…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.
அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் பாப வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
தியானமிருக்கும் குடும்பங்களில் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மன நோய் நீங்கி மன பலம் பெற்று உடல் நோய் நீங்கி உடல் நலம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
தியானமிருக்கும் குடும்பங்களில் வாழ்ந்து வரும் கணவனும் மனைவியும்
1.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து
2.நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்து
3.சாவித்திரியைப் போன்று கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றி வாழ்ந்து
4.இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து
5.இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி
6.நஞ்சினை வென்று பேரருள் பெற்று பேரொளி என ஆகிட அருள்வாய் ஈஸ்வரா
தியானமிருக்கும் குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற்று அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
எங்கள் குழந்தைகள் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.கல்வியில் ஞானம் பெற்று
2.கருத்தறிந்து செயல்படும் திறன் பெற்று
3.உலக ஞானம் பெற்று
4.உலகைக் காத்திடும் உத்தம ஞானிகளாக வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
இதை எல்லோரும் ஒன்று போலச் சொல்லி “உணர்வின் ஒலிகளை எழுப்பும் பொழுது..,
1.எல்லோருடைய செவிகளிலும் படுகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டுகின்றது.
3.கண்களுக்கு வருகின்றது.
4.சொன்ன உணர்வுகள் எல்லாம் இந்த பூமி முழுவதும் படர்கின்றது.
5.நம்முடைய கண்களில் உள்ள கருமணிகள் பதிவாக்குகின்றது.
6.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் இந்த அருள் உணர்வுகளைக் கவர்ந்து இழுக்கின்றது.
7.நம்மைச் சுவாசிக்கும்படி செய்கின்றது.
8.நம் உயிரிலே மோதுகின்றது.
9.இந்த உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.
இப்படி “எல்லோரும்.., நன்றாக வேண்டும்” என்று நாம் சொல்லும் உணர்வுகள் வலுப்பெறுகின்றது. அடிக்கடி இந்த மாதிரிச் சொன்னோம் என்றால் “நோயுள்ளவர்கள் கேட்டால் கூட… அந்த நோயெல்லாம் நீங்கிவிடும்”.
மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் குடுமபத்தில் உள்ள சிரமங்களெல்லாம் நீங்கள் வேண்டும் என்று நீங்கள் ஒன்று சேர்ந்து கூட்டாகத் தியானித்துப் பரிசுத்தப்படுத்துங்கள்… சிரமங்கள் நீங்கிவிடும்.
இது ஒரு “பழக்கத்திற்கு..,. வரவேண்டும்.
ஒருவர் மிகக் கொடுமையான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதனின் வீரியத்தைக் குறைக்க முடியும்.
1.ஆனால் அதே சமயத்தில் “இறப்பதை… யாரும் தடுக்க முடியாது”.
2.அவர் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அவர் உயிரான்மா வெளியிலே சென்றாலும்…
3.கூட்டுத் தியானத்தின் அமைப்பு கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ளுதல் வேண்டும்.
4.அங்கே இணைத்து அவரைப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
ஆனால் முழுமையாக ஆயுள் காலம் முழுவதும் தியானம் செய்து “தியானத்தால்.. நோயெல்லாம் நீக்கிவிடுவேன்” என்று சொன்னால்
1.யாரும் முழுமையாக இருக்கப் போவதில்லை… “இருக்கவும் முடியாது”.
2.சிறிது காலம் இந்த உடலிலிருந்து “நல்லதை எண்ணுவதற்காக வேண்டியாவது..,” வாழ வைக்கலாம்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை “அவரைப் பெறச் செய்வதற்காக வேண்டி” வாழ வைக்கலாம்.
முழுமையாக யாரையும் நாம் காப்பாற்ற முடியாது. நம்மையே.. நாம் காப்பாற்ற முடியாது. பிறகு… யாரை நாம் காப்பாற்ற முடியும்…!
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து முழுமை பெறுவதற்காகத்தான் இதை மீண்டும் மீண்டும் உபதேச வாயிலாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
எல்லோரும் நல்லதாக வேண்டும் என்று சொல்லும் பொழுது எல்லா உணர்வுகளும் நமக்குள் நல்லதாகின்றது. நாம் கூட்டமைப்பு கொண்டு எல்லோரும் சேர்ந்து சொல்லப்படும் பொழுது “மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும்…”
வேண்டியதைப் பற்றிக் கொள்ள வேண்டும்… வேண்டாததைப் பிடுங்கி ஏறிய வேண்டும்
காட்சி:
பெரிய குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து எதையோ ஒரு பொருளை விடாப்பிடியாகப் பிடித்து ஆட்டுவது தெரிகின்றது.
மற்றொரு காட்சியில் ஒருவருக்குக் காலில் முள் குத்துவதைப் போன்றும்… முள்ளைக் காலிலிருந்து எடுத்துத் தூர எறிவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்:
குரங்கு ஒன்றைப் பிடித்ததென்றால் ”குரங்குப்பிடி…” என்பதைப் போன்று
1.மதியைக் கொண்டு மெய்யுணரும் பக்குவமற்ற ஜீவனால்
2.எத்தொடரில் எதைப் பிடித்ததோ… அதன் தொடரில் தான் அதனுடைய எண்ணமிருக்கும்.
ஆனால் மெய் என்ற மதியைக் கொண்டு பகுத்தறியக் கூடிய மனிதன் “தான்…” என்ற அகந்தையின் பிடியில் வலுப்படுத்தினால் தன் வளர்ச்சியின் வலுவை இழக்கும் நிலைதான் மனித உணர்வின் ஒளிக்குச் செயல்படும்.
இச்சரீரத்தில் உணர்வுகளினால் வளரும் உயிரணுக்கள் யாவையுமே ஜீவகாந்த மின் அலைச் சக்தியை வளர்க்கவல்லவை.
அவ்வளர்ப்பின் தொடருக்குத் தன்னில் உயர்ந்த ஒளி சக்தி பெற்றிருந்தாலும்…
1.மனித உணர்வின் தொடர்பில் பாசப் பிணைப்புடன்
2.அன்பு பரிவு என்ற அறுகுணத்தின் நற்குணத்தைச் செலுத்தி மெய் உணர்வின் அறத்தை
3.இச்சரீரத்தையே மெய்யுணர்வின் தொடர்பில் செலுத்தும் பொழுது
4.இச்சரீரம் ஆண் பெண் என்ற நிலை மாறி… தாயான ஜீவ சரீரமாக
5.பலவற்றையும் வளர்க்கும் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் வித்துக்களாய்
6.ஒவ்வொரு ஒளித் தன்மை கொண்ட ஜீவாத்ம உயிரும் வளர்ச்சி பெறும்.
இன்றெப்படி சூரியன் பல கோள்களின் ஜீவனை வளர்க்கின்றது…? பூமி எப்படி பல ஜீவன்களை வளர்க்கின்றது…?
அதைப் போன்று ஒளி சக்தி பெற்ற ஒவ்வொன்றும் ஒளியின் உருவப் படைப்பாய்… உருவில் பலவற்றையும் படைத்துப் படைக்கவல்ல தன்மைக்கு… இச்சரீர உணர்வில் எடுக்கும் மெய் உணர்வின் ஒளித் தன்மையைக் கொண்டுதான் அந்த “ஆதிசக்தியின் சூட்சுமமே அடங்கி உள்ளது…”
மனித உணர்வில் வேண்டாத எண்ணங்கள் நம்மைத் தாக்குபவையாக சந்தர்ப்பத்தில் வந்து மோதினாலும்
1.காலிலே முள் ஏறியவுடன் அதைப் பிடுங்கி எறிவதைப் போன்று
2.எண்ணத்திலிருந்து அதை எல்லாம் அப்புறப்படுத்திடும் செயலுக்கு வரவேண்டும்.
முள்ளின் வேதனையை… எடுக்க முடியாமல் காலில் தைத்து விட்டால் அந்த முள் புரையேறி… காலையே எடுக்கவும் ஏன்… சரீர ஜீவனுக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது…!
அதைப் போன்று… நம் உணர்வில் மோதும் எதிர் நிலை எண்ணத்தை ஒளி கொண்ட தெய்வ குணங்களில் எண்ணத்தைச் செலுத்தி… வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல்..
1.மெய் உணர்வின் மெய் ஞானியாகக் கூடிய வழியறியும் பக்குவத்தால்
2.வான மண்டலத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் கோள்கள் வளர்ந்து ஓடுவது போன்று
3.மனித உணர்வின் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருமே
4.ஒளி சக்தி கொண்ட உயர் தன்மை பெற முடியும்.
குருநாதர் என்னை உதைத்தார்… உங்களை நான் அடித்தால் என்ன செய்வீர்கள்…!
என் குருநாதர் சொன்னதை நான் (ஞானகுரு) செய்யவில்லை என்றால் உதை கொடுத்தார். உங்களை நான் அடித்தால் என்ன செய்வீர்கள்…! வாங்கிக் கொள்வீர்களா…?
எனக்குத் திருப்பிக் கொடுப்பீர்கள்…!
என்னடா… சாமி என்னென்னமோ சொல்லிவிட்டுக் கடைசியில் உதைக்கின்றார் என்பீர்கள்…! உங்களை நான் உதைக்க முடியுமா…?
ஒருவர் என்ன செய்தார்…? ஐயோ… என் கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று அலறுகின்றார். நான் என்ன சொன்னாலும் அவர் கேட்க மாட்டேன் என்கிறார்.
போய்யா…… உனக்குக் கஷ்டமும் இல்லை ஒன்றுமில்லை போ…! என்று சொன்னேன்.
என்ன… சாமி இப்படிக் கோபிக்கின்றார்…? என்கிறார். உங்களிடம் நான் இப்படிச் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்…?
1.இந்த அழுத்தத்தைக் கொடுத்த பின் என்ன செய்யும்…?
2.சரி.. இதனுடன் அந்தத் துன்பம் போனது என்று நீங்கள் நினைத்தால் பரவாயில்லை. துன்பம் போய்விடும்.
இது நடந்த நிகழ்ச்சி.. ஒரு அம்மாவிற்கு ரொம்பக் கஷ்டம்… சொத்துக்களை இழந்துவிட்டது. வீட்டையும் கூட எடுத்துக் கொண்டு தொல்லை கொடுக்கின்றார்கள்.
எப்படியாவது இந்தச் சொத்துகள் கிடைத்து விட்டால் நான் பிழைத்துக் கொள்வேன் என்று என்னிடம் கேட்டது.
சரி.. நீ நான் சொல்வது போன்று செய் என்றேன். அவருடைய கஷ்டத்தையும் மற்ற நிலைகளையும் பார்த்துவிட்டு இது போன்ற நிலைகளைச் செய்து வந்தால் உங்களுக்கு அது கிடைக்கும் என்று தெளிவுபடுத்தினேன்.
ஆனால் சொத்தை வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
1.கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள் என்று நீ சொல்லாதே… அதை விட்டுவிடு…
2.”கிடைக்க வேண்டும்…” என்று சொல்லித் திருப்பி எண்ணிப் பாருங்கள்… உங்களுக்குக் கிடைக்கும்…! என்று நான் சொன்னேன்.
எங்கெங்கே… எங்கெங்கே…! என்று அப்படியே கேட்கின்றது.
பின் நான் கோபமாகச் சொல்லி “உங்களுக்குக் கிடைக்கும்மா…” இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று அழுத்தமாகச் சொல்லி அடுத்து நீங்கள் அடுத்து நல்ல செய்தி கொண்டு வருவீர்கள்…! என்று சொன்னேன்.
அப்படிங்களா… சரி…! என்று அதன்படி செய்தது. முதலில் கேஸ் நடத்துவதற்கே பணம் இல்லை என்று சொல்லி இருந்தார்கள். எப்படியோ எல்லாம் கிடைத்து… கேசும் ஜெயித்து விட்டது… வீடும் கிடைத்தது அந்த அம்மாவிற்குச் சந்தோஷமானது.
அதோடு விட்டார்களா என்றால் இல்லை… “விடவில்லை…!” அன்றாடப் பிழைப்புக்குத் தொழில் செய்யலாம் என்றால் அதற்குப் பணம் இல்லையே என்று அடுத்து இதைச் சொல்கின்றது.
அதற்கு நான் என்ன செய்வது…?
திரும்பத் திரும்ப… திரும்ப திரும்ப… பணம் இல்லை… பணம் இல்லை என்று கஷ்டத்தைச் சொல்லி அழுகின்றது. எல்லாம் வந்ததுங்க… இருந்தாலும் இப்பொழுது தொழில் செய்யாமல் எப்படி வாழ்வது…? என்று தெரியவில்லை. வீட்டை வைத்துத் தான் ஏதாவது வாங்க வேண்டும் என்று சொல்கிறது.
முதலிலே கடன் வாங்கி எல்லாம் போனது அல்லவா..! ஆனால் அதிலிருந்து மீண்டு வந்தது அல்லவா…! அதே போன்று
1.இப்போது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்று விரும்பி அதைச் செயல்படுத்துங்கள்
2.“அதற்குண்டான வாய்ப்புகள் வரும்…” என்று சொன்னேன்.
எங்கெங்கே நடக்கப் போகின்றது…? என்று இப்படியே என்னிடம் பேசுகின்றது. இதற்கு நான் என்ன சொல்வது…!
சொத்து இல்லை என்று முதலில் வந்தாய்… அது எப்படி அம்மா உனக்குக் கிடைத்தது…? அதன் வழியில் இதுவும் வரும் அல்லவா…! என்று சொன்னேன்
வரும்…! ஆனால் இன்றைக்குப் பிழைப்புக்குச் சொல்லுங்கள்… நான் என்ன பண்ண வேண்டும்.
ஏனென்றால்
1.நான் சொன்னதை விடுத்து விட்டு
2.அந்தக் கஷ்டத்தை எடுத்துக் கொள்கின்றது அதையே பேசிக் கொண்டிருக்கின்றது.
நடந்த நிகழ்ச்சி.
எனக்குக் கோபம் வந்துவிட்டது ஏனம்மா…! நான் சொன்னபடி செய்யாதபடி மீண்டும் மீண்டும் இந்தத் தரித்திரத்தையே எண்ணிக் கொண்டிருக்கின்றாய்… “இந்தத் தரித்திரத்தை விட்டு விடம்மா… நன்றாக இருப்பாய்…!” என்று சொன்னேன்.
எங்கெங்கே என் தரித்திரம் என்ன விட்டுப் போகின்றது…? என்று மீண்டும் அழுகின்றது.
சீ… போ…! என்று அந்தத் தரித்திரத்தைச் சீ… போ…! என்று நான் சொன்னேன்.
அந்த அம்மா உடனே என்ன சொல்கிறது…!
சாமி என்னைப் போகச் சொல்லிவிட்டார். சாமியைத் தேடி நான் வந்தாலும் கூட அவர் என்னிடம் கோபித்துப் பேசுகின்றார் பாருங்கள்… என்று அதனுடைய உணர்வையே பேசுகிறது.
1.தரித்திரமே – சீ… போ…! நல்ல காலம் வரட்டும்… என்று யாம் கொடுக்கக்கூடிய வாக்கு
2.தீமை என்ற உணர்வை மாற்றுவதற்கு இப்படிச் சொன்னாலும் கூட ஏற்றுக்கொள்ள மனமில்லை.
கோ… என்று அழுக ஆரம்பித்து விட்டது. என் கஷ்ட காலம் பாருங்கள் சாமி கூட என்னைக் கோபமாகப் பேசுகின்றார்கள்.
ஏனென்றால் நான் எதைச் சொல்கின்றேன் என்ற அர்த்தம் கூடப் புரியாதபடி அதனுடைய உணர்வுகளிலேயே தான் நிற்கின்றது.
சாமி போகச் சொல்லிவிட்டார் என்று அழுது கொண்டே செல்கின்றது. அதனுடைய அழுத்தங்கள் அப்படி இருந்தாலும் நான் கொடுத்த வாக்கு எப்படியோ அங்கே நிறைவேறுகின்றது.
வட்டி இல்லாமல் ஒருவர் பணம் கொடுக்கின்றார் கடை வைத்து வியாபாரம் நடந்தது பணம் வந்தது. எல்லாம் நடந்த பின் இரண்டாவது தடவை என்னிடம் வந்து “என்னை நீங்கள் காப்பாற்றுங்கள்…” என்று சொல்கிறது.
அன்று தான் நான் விளக்கத்தைச் சொல்கின்றேன்.
1.உன்னுடைய தரித்திரத்தைத் தான் நான் போகச் சொன்னேன்
2.நீ கோபித்துக் கொண்டு சென்று விட்டாய் அம்மா…! என்று சொல்கின்றேன்.
என்ன பண்ணுவது…! அந்தத் தரித்திர நேரத்தில் என்னால் நல்லதைக் கேட்க முடியவில்லை. ஆனால் இப்பொழுது தரித்திரம் போய்விட்டது கடையில் வியாபாரம் நன்றாக நடக்கின்றது. கஷ்டமெல்லாம் நிவர்த்தியாகி விட்டது என்று சொல்கிறது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.சந்தர்ப்பத்தில் வரும் அந்த தரித்திரத்தைத் தான் உங்களுக்குள் இழுத்துக் கொள்கின்றீர்களே தவிர
2.அதை நான் “போ…!” என்று சொன்னவுடன் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது…?
ஏனென்றால் முதலில் அந்த அம்மாவிடம் நான் இதைச் சொன்ன பின் கோபித்து என்னிடம் ஒன்றும் சொல்லாமலே சென்று விட்டது. போய்… எல்லாம் நன்றாக ஆன பின்பு தான் இங்கு வருகின்றது.
ஆக “நான் மறைமுகமாகச் சொன்னாலும் கூட” ஏற்றுக் கொள்ளும் பண்புகள் இல்லை. சொல்வது அர்த்தமாகின்றது அல்லவா…!
உயிரான்மா ஒளியாக மாறினால் “அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்”
இன்று மனிதனாக இருக்கின்றோம்… இந்தச் சூரியக் குடும்பம் அழிந்துவிட்டால் அணுக்களாகத் தான் செல்வோம்… பிரபஞ்சத்தில் மிதப்போம். பின்
1.ஏதாவது ஒரு கோளுக்குள் இழுத்துக் கொண்டு போகும்
2.அங்கே அதற்குண்டான உணவு (சத்து) இருந்தால் புழுவாக பூச்சியாக அல்லது கிருமியாக வளர வேண்டி இருக்கும்
3.விஷத்தன்மையாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கும்.
தாவர இனங்கள் அழிந்து விட்டால் அதை விட்டு வெளியே சென்று விடும். மற்ற கோளுக்குள் செல்கின்றது. ஆனால் எந்த பிரபஞ்சத்திற்குள் செல்லும்…? என்று சொல்ல முடியாது.
எல்லாமே அகண்ட நிலையிலிருந்து வளர்ந்தது தான். ஆனால் சூரியன் செயலிழந்தால் பூமி நகர்ந்து ஓடிப் போய்விடும். இதிலிருந்து தப்புவதற்குத் தான் நம் குருநாதர் காட்டிய வழியில் இத்தனை வேலையும் செய்கின்றோம்.
காரணம் இன்று நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று தனித்துத் தனித்துச் சூரிய குடும்பங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.
ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ச்சி அடைந்தால் அவர்களுக்குத் திருமணம் ஆகி தனக்கென்று ஒரு குடும்பம் உருவாவது போல்
1.நட்சத்திரங்கள் தன் வளர்ச்சியில் சூரியனாகும் போது பிரிந்து சென்று விடும்.
2.பிரிந்து செல்லச் செல்ல நாளுக்கு நாள் நம் சூரியனும் செயல் இழக்கும்
3.சூரியனின் ஈர்ப்பில் உள்ள பூமி கரைந்து ஓடும்
4.இதில் உள்ள உயிரணுக்கள் மற்ற உயிரணுக்களுக்குக் குருவாக அமையும்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளில் இது போன்றுதான் பிரிக்கப்பட்டு நம் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது. அதிலே இன்னும் உயிரணுக்களின் தன்மைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. ஆனால் இப்போது உயிரினங்கள் அங்கே இல்லை.
அதிலிருந்து வரக்கூடிய உயிரணுக்கள் தான் சிறுகச் சிறுக பிரபஞ்சத்திற்குள் வந்து உயிரணுவாக மாறும் தகுதி கிடைக்கின்றது.
1.வியாழனில் கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதால் தான் உயிரணுக்களே உண்டாகிறது.
2.அந்தக் கரு சேர்ந்த பிற்பாடு தான் உயிரணுக்களுக்கு மூலமாகிறது
3.இல்லை என்றால் உயிரணுக்கள் தோற்றமே இல்லை
(சில இதுகள் அதில் இருக்கின்றது… சுருக்கமாக உங்களுக்குச் சொல்லிப் பதிவு செய்கிறேன்).
ஆகவே… அண்டத்தில் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் உடலான இந்தப் பிண்டத்திற்குள் இருக்கின்றது. மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று உயிருடன் ஒன்றி… நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளியின் சுடராக நாம் மாற்றி விட்டால்
1.அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் நாம் செல்ல முடியும்
2.”என்றும் பதினாறு” என்று இந்த வளர்ச்சி… வேகா நிலை அடைகின்றது… எதிலுமே நம் உயிரான்மா வேகாது.
நம் 2000 சூரியக் குடும்பத்தையும் முதலிலே வட்டமிடும். பின் இதைக் கடந்து மற்ற 1000, 2000, 3000 என்ற சூரியக் குடும்பங்களின் கூட்டமைப்பிற்குள் செல்லும்.
ஆரம்பத்தில் இருண்ட உலகமாக இருந்து அதிலிருந்து வளர்ச்சி பெற்று ஒளியின் சிகரமாக அண்டம் வளர்ந்தது,,, எத்தனையோ கோடி வருஷங்களாக வளர்ந்தது.
எல்லாமே ஒளியாக மாறி விட்டால் அதற்கப்புறம் “மனித இனங்களை ஒவ்வொன்றாகச் சீக்கிரமாக ஒளியாக மாற்றும் நிலை வரும்…” ஒளியின் சுடராக ஒளிக்குள் எல்லாமே இது மாறும். எப்படி எத்தனையோ ஆண்டுகள் வளர்ச்சியின் பாதையிலே வந்து கொண்டிருக்கிறது.
ஆதிமூலம் என்ற உயிர் “மனிதரான பின் முழு முதல் கடவுள்…!” இதை ஞானிகள் நமக்கு தெளிவாக்கி உள்ளனர். உலகில் உள்ள அனைத்துமே அடக்கி ஆளும் சக்தி பெற்றது
1.பிரபஞ்சத்தில் இருப்பதை அடக்கி ஆளும் தன்மையைப் பெற்று ஒளியின் சரீரமாக ஆகிவிட்டால் முழுமை பெறுகின்றது
2.மற்ற அகண்ட அண்டத்திலிருந்து வரும் எதையுமே தனக்குக் கீழ் கொண்டு வர முடியும்
அப்படி ஆனது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்.
எல்லாமே வினைப் பயன்தான் – விதி…! என்ற முத்திரையை… “தானே குத்திக் கொள்ளக் கூடாது”
பருத்தி என்றால் அதிலிருந்து பஞ்சை எடுத்து ஆடைகளை நெய்வதும் பருப்பைப் பதப்படுத்தி உண்ணவும் அதனதன் வளர்ச்சிக்கொப்ப… “இன்னதை இன்னதிற்குப் பயன்படுத்தலாம்…” என்பது மனித ஞானம் அறிந்த உண்மை.
மேலும்… இன்று மனிதன் இயற்கையில் வளரும் தாவரங்களுக்குச் செயற்கையில் உரமிட்டு இயற்கைத் தன்மையின் வளர்ச்சியை மாறுபடச் செய்து அதை வளரச் செய்யக்கூடிய பக்குவத்தை வளர்ப்பவனும் இதே மனிதன் தான்.
ஆனால் அதே மனிதன் தான்…
1.தன் உயிராத்மாவின் ஜீவித வாழ்க்கையை
2.தன் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
3.தன்னைத் தானே தான் உணர்ந்து உயர் நிலை பெறுவோம் என்ற வழியறியாது
4.தன் வாழ்க்கையில் நடப்பவை யாவும் ஊழ்வினை – “விதி” என்ற
5.வினைப் பயனை விதைத்துக் கொள்கின்றான் தன் எண்ணத்தில்.
இயற்கையையும் செயற்கையாக்கி விஞ்ஞானத்தில் பல உண்மைகளை மனிதச் செயல்தான் வளர்த்தது. அதே மனிதன் ஜீவாத்மாவின் உண்மையின் உண்மையை உணர்ந்து தன்னைத்தான் ஆள வேண்டும்.
அறம்… பொருள்… இன்பம்…
1.அறம் – நல்லொழுக்கத்தைச் சத்தியம் என்ற நேர் கோட்டில் உணரவும்
2.பொருள் – அறத்தைச் செயலாக்கி சத்தியத்தை வளர்த்து
3.இன்பம் – என்ற பிறவா ஒளி நிலை ஆனந்த உணர்வை இவ்வாத்மா அடைவதற்காக
4.முந்தைய பல ஆண்டுகளாக ஞானிகள் மகரிஷிகள் உயர் தத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.
இக்கலியிலும் புறநானூறு அகநானூறு திருக்குறள் நல்லொழுக்கம் ஆத்திச்சூடி போன்ற பல நூல்களில் வந்துள்ள தத்துவங்கள் யாவும்… மனித உணர்வின் எண்ணம் நல்லொழுக்கம் பெற்று… அகத்தின் பொருளறிந்து… “அகிலத்தின் பொருளாகும் உண்மையைத் தான் வழிகாட்டின…”
ஆகவே நம் உயிராத்மாவின் உயர் நிலை பெற ஊழ் வினை என்ற வினைப்பயனை எண்ணத்தில் எண்ணாமல்… எண்ணத்தில் நற்குணத்தை ஒவ்வொருவரும் பெற்று… விதியை மதி கொண்டு… ஞானம் கொண்டு செயல்பட வேண்டும்.
1.முதலில்… தன் சரீர உணர்வில் வெளிப்படக்கூடிய இச்சைகளை
2.தன் எண்ணத்தின் சிந்தனை கொண்டு
3.இச்சரீர ஏக்கத்தின் இச்சைகளை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
சரீர ஏக்கத்தின் இச்சை என்பது விருப்பு வெறுப்பு பசி தூக்கம் கோபம் ஆசை இன்பம் துன்பம் காமம் இவை யாவையுமே தன்னில்தான் தன் உணர்வில் தோன்றக்கூடிய உந்தல்கள் தான்.
அதன் இச்சையின் செயலுக்கு நம் உணர்வின் எண்ணம் செல்லும் பொழுது உ
1.உடல் உபாதையினால் உணர்வின் எண்ணம் பாதிக்கப்பட்டுத் தன்னைத் தானே வலுவிழக்கச் செய்து
2.வினைப் பயன் என்ற முத்திரையை… “தானே குத்திக் கொள்ளும் நிலைதான்…”
உடல் உபாதையையும்… உடல் உணர்வுகளினால் எண்ணத்தின் வலுவைக் கொண்டு… இச்சரீரத்தின் எச்செயலையும் தன்னுள் உள்ள “இறை உயிரைக் கொண்டு” நல்லதாக மாற்றிட முடியும்.
இச்சரீரம் எத்தனை கோடி ஆண்டுத் தொடரில் புழுவாய் பூச்சியாய் மனிதனாய் பல உணர்வுகளில் பல உருவில் உருப்பெற்று உயிர் ஜீவனில் இன்றுள்ள நிலைக்கு வினைப்பயனின் வித்தாய் வளர்ந்து வந்துள்ளது.
எவ்விதை ஊன்றப் பெற்றதோ… அச்செடியாக அது வளர்ந்தாலும்…
1.அதை மாற்றி அமைக்கக்கூடிய மெய் ஞானம் என்ற மதி கொண்டு
2.மனித எண்ணத்தின் உயர் ஞானத்தால்
3.அறம் பொருள் இன்பம் என்ற இனிய நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.
அதைப் பெறக்கூடிய பக்குவத்தைத்தான் இங்கே தொடர்ந்து போதனையாக வழங்குகின்றோம்.
இச்சரீரம் உறங்கும் பொழுது “உறக்கம்” என்றும்… செயல்படும் பொழுது “விழிப்பு” என்றும் சொல்கின்றோம். ஆனால்..
1.ஆத்மாவின் செயலில் இச்சரீரத்தை இயக்கக்கூடிய தன்மை பெற்றல்
2.உண்மைத் தன்மை விழிப்பு நிலை பெறுகின்றது.
வாழ்க்கை நடைமுறையில் இச்சரீர உணர்வுக்கொப்ப எண்ணுபவை யாவும் ஆத்மாவில் பதிவு பெறுகின்றது. அதே தொடரின் வாசனைதான் உணர்வு பெற்று இஜ்ஜீவித இயக்கத்தில் காந்த மின் அலையான இச்சரீர இயக்க ஓட்ட ஆத்மாவில் பதிவாகி விடுகின்றது.
எப்பதிவை எண்ணத்தின் உணர்வு கொண்டு நாம் பேசி மகிழ்ந்து வாழ்கின்றோமோ அவ்வலையைத்தான் ஆத்மா பெறுகின்றது.
அவ்வலையைத்தான் நம் உணர்வின் எண்ணமும் பெற்று நம்மையறியாமல் பேசவும் செயல்படுத்தவும் செய்கின்றது. நம்மைச் செயலாக்கும் நிலையும் அதுவேதான். ஆக.. அந்நிலை இச்சரீர ஆத்மாவை இப்பூமியின் பிடிப்பில் உறங்க வைத்த நிலை.
இப்பூமியின் பிடிப்பிலிருந்து விழிக்கும் நிலை என்பது…
1.தன்னைத்தானே தான் உணர்ந்து…
2.இச்சரீர உணர்வின் வாசனையை… இவ்வாத்மாவில் பதிய வைத்து வளர்த்துக் கொண்ட நிலையை…
3.உயர் ஞானத்தைக் கொண்டு தன்னை இயக்கும் ஆத்மாவின் உண்மையை உணர்ந்து
4.ஆத்மாவிற்கு நல் ஒலிகளை… நற்குணமுடன் கொண்ட உயர் தன்மையை…
5.அறம் பொருள் இன்பம் என்று பெரியவர்கள் நமக்குக் காட்டிய உயர் குணத்தின் சத்தியத்தை வளர்க்க
6.மாறிப் போகக் கூடிய இச்சரீரத்தில் உயர் குண சத்தியத்தைக் கொண்டு
7.இஜ்ஜீவ உயிராத்மா – உயர் காந்த மின் சக்தியினால்
8.இச்சரீரத்தில் வாழக்கூடிய வாழ்நாளில் – விழிப்பு நிலை நாம் முதலில் பெற வேண்டும்.
போற்றலுக்காக ஏங்கினால் ஆற்றலை இழந்து விடுவோம்
விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்தால் எந்த நிலை ஆகிறது…? என்று பார்ப்பார்கள். அதைச் செய்து முடித்து ஓட்டும் போது செயலிழந்து விட்டால் அது எப்படி… ஏன் தவறாக ஆனது…? என்று உடனே கண்டுபிடிப்பார்கள்..
உதாரணமாக ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றார்கள் என்றால் கால சூழ்நிலை எல்லாம் பார்த்துத் தான் அனுப்புகின்றார்கள்.
1.போகும் பாதையில் 27 நட்சத்திரங்களுடைய அதிர்வுகள் வரும்.
2.இராக்கெட் செல்லும் பாதையில் இந்த அதிர்வுகள் அதிகமானால் இயந்திரத்தைத் தாக்கும் தன்மை வரும்.
3.அதிர்வுகளிலிருந்து மீட்பதற்காக மேக்னட்டை (காந்தத்தை – SENSOR) வைத்திருப்பார்கள்.
அதிர்வினால் தாக்கப்பட்டு கீழே விழுந்தாலும் அந்த உணர்வின் தன்மையை பூமியில் (தரையில்) தொடர்பு வைத்திருப்பார்கள்.
இராக்கெட்டில் சென்றவன் இறந்தாலும் இது எந்த அதிர்வினால் தாக்கப்பட்டது…? என்று கண்டறிந்து… இதற்கடுத்து பாதுகாப்பான நிலைகள் கொண்டு இராக்கெட்டை அனுப்ப முற்படுகின்றார்கள்.
ஏற்கனவே அனுப்பியது எரிந்து கடலிலே விழுந்து விடுகின்றது. ஆனாலும் அதிலே எதிர்மறையான உணர்வின் எக்கோ (ECHO) அதிலே பதிய வைத்திருப்பான்.
பதிவானதை எடுத்துப் பரிசீலித்து
1.இராக்கெட் எதனால் செயல் இழந்தது…?
2.எதனுடன் எது மோதியது…? ஏன் இவ்வாறு பாழடைந்தது…?
3.எதனால் கீழே விழுந்தது…? என்று கண்டுபிடித்து அதைச் சரி செய்து மீண்டும் இராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புகின்றனர்.
அது ஏற்கனவே நடந்த நிகழ்ச்சி. ஆரம்பத்தில் அமெரிக்கா… இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி அதை மீண்டும் திரும்பத் தரையில் இறக்கலாம் என்று விரும்பினார்கள்.
ஆனால் ரஷ்யா அதை என்ன செய்தது…?
விஞ்ஞானத் தத்துவப் பிரகாரம்
1.மனிதனின் உணர்வுகளை அந்த இயந்திரத்தில் (அமெரிக்க செலுத்திய இராக்கெட்டில்) பின்னாடி அது இணைக்கப்பட்டு
2.எக்கோ (ECHO)… கண்களைக் கொண்டு உடலில் பதிவு செய்து “எர்த்” ஆக்கி
3.இராக்கெட் விண்ணிலே சென்ற பின் உணர்வைப் பாய்ச்சி எரியும்படி செய்தான்.
இரண்டு மூன்று தடவை இவ்வாறு செயல்படுத்தினார்கள். அமெரிக்கா இராக்கெட்டுகள் இப்படி வீழ்ச்சி அடைந்தது.
பின்பு இது எதனால் வந்தது…? அந்த எக்கோ எதிலிருந்து பாய்ச்சப்படுகிறது…? என்று அவன் அறிகின்றான். ரஷ்யாவில் இருந்து தான் இது பாய்ச்சப்பட்டது என்று அறிந்து கொள்கிறார்கள்.
அறிந்த பின் அமெரிக்கா என்ன செய்கின்றது…?
ரஷ்யா தான் தன் இராக்கெட்டுகளை வீழ்த்தியது என்று கண்ட பின் ரஷ்ய அணு மின் நிலையத்தைக் கதிரியக்கங்களைப் பாய்ச்சி அதைச் செயலிழக்கும்படி செய்தான் அமெரிக்கா.
விஞ்ஞானத்தின் இவன் உணர்வுகள் எப்படி வளர்ந்தாலும் இதை எல்லாம் குருநாதர் காட்டிய வழியில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
ரஷ்ய அணு மின் நிலையம் வெடித்த பின் விவசாயம் மற்றது எல்லாம் அங்கே பாழ்பட்டது. விஷத்தின் தன்மை அதிகமான பின் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டது.
அந்த நாட்டிற்குள் கடவுளின் தன்மையைப் புகுத்தி மதப் போர்கள் இனப் போர்கள் அதிகமாகி… மக்களை அதை வைத்துப் பிரிக்கும் தந்திரத்தைக் கையாண்டது அமெரிக்கா.
அதனால் ரஷ்யா வல்லரசாக இருந்தாலும் பிரிந்து… வீழ்ச்சி அடைந்து விட்டது. இருந்தாலும் எல்லாப் பக்கமும் சேர்ந்து நெருக்கடி ஆகும் பொழுது அமெரிக்காவும் இன்று செயலிழக்கும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.
உலகம் சுருங்கிக் கொண்டிருக்கும் இத்தகைய வேளையில் உலகைக் காக்கும் ஞானிகள் நம் நாட்டில் இருந்து வருவார்கள்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எந்தத் தாய் தந்தையர் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டார்களோ அவர்கள் கருவிலே ஞானக் குழந்தைகள் உருவாகி அவர்கள் தான் அதைச் செயல்படுத்துவார்கள்.
மெய் ஞானிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் எடுக்கப் பழக வேண்டும் ஒவ்வொரு நிமிடத்திலும் அதை சேர்த்துப் பாருங்கள்.
1.உடலில் அந்த அணுக்கள் விளைந்து கொண்டே வரும்
2.நீங்கள் எண்ணக்கூடிய காரியங்கள் ஜெயமாகிக் கொண்டே வரும்
3.நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை செல்வம்.. தன்னாலே தேடி வரும்
4.உங்கள் சொல் பேச்சு இவைகளுக்கு மரியாதை கிடைக்கும்
5.பிறருடைய கஷ்டங்களும் நீங்கும்… உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணங்களும் வரும்.
அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் விளைய வைத்து அதை நீங்கள் வெளிப்படுத்தும் போது நண்பர்களுக்குச் சொன்னால் அவர்களுக்கும் நல்லதாகும்.
உங்களிடம் பேசி விட்டுச் சென்ற பின் என் தொழிலில் நன்றாக நடந்தது குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைத்தது என்று சொல்வதை நீங்கள் கேட்க முடியும். இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அருளைப் பெற வேண்டும் என்று சென்றால் நல்ல சிந்தனை வரும் எல்லாமே நம்மைத் தேடி வரும். உங்கள் எல்லோரையும் உயர்த்தும்.
அதைக் கண்டு மற்றவர்கள் போற்றலாம்
1.போற்றலுக்கு ஆசைப்பட்டு அதன் வழி சென்று விட்டால் நம்முடைய ஆற்றல் போய்விடும்
2.நாம் போற்றலுக்காக ஏங்கக் கூடாது.
எல்லோரும் உயர வேண்டும் என்ற அந்த உணர்வைத் தான் நாம் போற்ற வேண்டும். இல்லை என்றால் ஆற்றலை இழந்து விடுவோம்… நல்லதைச் செய்தும் பலன் இல்லாது போகும்.
எதுவாக இருந்தாலும் போற்றலுக்காக வேண்டி அதைச் செய்தால் பின்னாடி வெறுப்பின் தன்மையைத் தான் ஊட்டும். வெறுப்பான பின் நாம் செய்தும் பலன் இருக்காது. வெறுப்பு வளர வளர எல்லார் மேலும் அதிகமாகி கார உணர்ச்சிகள் தான் அதிகமாகும்.
ஆகவே… உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் கார்த்திகேயா என்ற நிலையில் ஞானிகள் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து ஒளியின் சரீரமாக நாம் உருவாக்குதல் வேண்டும்.
1.மீண்டும் இன்னொரு உடல் பெறக் கூடாது
2.இந்தச் சரீரத்திலிருந்தே ஒளிச் சரீரம் பெறுதல் வேண்டும்
3.உயிருடன் ஒன்றும் உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்
விஞ்ஞானத்தால் இன்றைய மனிதன் தன் ஞானத்தால் வெகு வேகமாகச் செயல்படுத்தும் இத்தருணத்தில்…
1.மந்திர ஒலியின் யாகத்தால் தன் ஆத்மாவை
2.இப்பூமியின் பிடிப்பலையிலுள்ள ஆவி ஆத்மாக்களின் ஈர்ப்பு சுழற்சியில் சிக்க விட்டுவிடக் கூடாது.
3.ஆலயத்தில் ஆண்டவனை வணங்கும் வழிமுறையறிந்து வணங்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வமுண்டு…!
யாகத்தின் தொடர்பில் மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆலய வழிபாட்டின் உண்மை நிலை என்ன…? தெய்வத்திற்கு ஓதப்படும் மந்திர ஒலியினால் மனிதன் வணங்கும் தெய்வத்திற்கு என்ன பலன்…? மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆத்மாக்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…?
ஒலியின் நாதம் கொண்டு தான் தன்னுடைய இயக்கத்தின் தொடர்புக்கு ஜீவன் பெற வருகின்றது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலில்..
1.மனிதன் தான் வணங்கும் தெய்வ நிலைக்கு ஜீவன் ஏற்படுத்தக்கூடிய தருணத்தில்
2.மனிதனின் முதல் நிலையான “புகழ்…” என்ற
3.பேராசைக் குணம் ஏற்பட்ட காலத்தில் வளர்ந்ததுதான் மந்திரமும் யாசமும்.
இயற்கையின் தொடர்பில் ஜீவ சரீரத்திற்கு வலு ஏற்படுத்திக் கொள்ள இம்மனிதனின் உடலிலுள்ள மின் காந்த ஒலி அலைக்கு மீண்டும் வலுத் தன்மை கூட்டிக் கொள்ளக் கூடிய வளர்ச்சிக்காக மந்திர தந்திரங்களை வடித்துக் கொண்டார்கள் அரசர்கள்.
மாய உருக்களைக் கொண்டு… தன் ஈர்ப்பு வட்டத்திற்கு இவ் ஒலியையும் ஒளியையும்… ஜீவனற்ற ஆத்ம உயிர் அலைகளைத் தன் சரீர ஆத்ம அலையுடன் ஈர்ப்புப்படுத்தி… மந்திரத்தால் அரசர்கள் மாய வித்தைகள் நடத்தினர்.
அத்தகைய சூட்சுமத்தின் முதல் வித்து தான்… யாகங்களை நடத்தி யாகங்களில் பலியிடும் நிலைகள்…!
யாகத் தீயிலே பலியிடக் கூடிய உயிர் ஜீவனின் ஆத்ம ஒலியைத் தன் சரீரத்தின் ஈர்ப்பு வட்டத்துடன் வளர்த்துக் கொண்ட வழித் தொடரில்தான் யாகங்களும் மந்திர ஜெபங்களும் அரசர்கள் ஆண்ட காலம் தொட்டு வளர்ந்து வந்தது.
அரசன் அதற்கென்று குருமார்களை நியமித்த பின்…
1.குருவிற்கு அரசன் அடிமையா…?
2.அரசனுக்குக் குரு அடிமையா..! என்ற தொடரில்
3.இயற்கையின் உண்மைத் தத்துவத்தை ஆரம்பத்தில் சித்தர்கள் காட்டிய இயற்கைத் தொடரில் வளர்க்காமல்
4.இறைவன் என்ற உருவத்தைக் காட்டி…!
5.மனிதன் தன்னைத் தானே அடகு வைத்திடும் நிலைதான்
6.மந்திரமும் தந்திரமும் யாகங்களும் வேள்விகளும் ஆசார அனுஷ்டானங்களும்.
எவ்வொலியின் ஈர்ப்பில் உணர்வின் எண்ணம் செல்கின்றதோ அதற்கொத்துத் தான் ஆத்ம உயிர் ஜீவன் பெறுகின்றது. அவ்வொலியின் தொடர்பு கொண்டுதான் ஈர்ப்பின் தொடர் வலுக் கொள்கின்றது.
இறைத் தன்மை என்பது எங்குள்ளது.. இறைவன் யார்…? மனிதன் யார்…?
மனிதனின் அறியக் கூடிய உயர் ஞானத்தை மனிதனுக்குள் உள்ள உயிர்த் தெய்வம் பிரிந்ததென்றால் இவ்வுடல் அழியக் கூடியதுதான்…!
இந்தத் தத்துவத்தை தன்னுள் அறிந்த மனிதன் “தான் யார்…?” என்பதை உணராமல்… கலியின் செயலில் தெய்வமென்ற உணர்வில் ஆத்மாவை அடகு வைக்கும் வழித்தொடரிலேயே இன்று உலகம் செல்கின்றதப்பா…!
ஆனால்…
1.மெய் ஞானத்தின் உண்மையின் தத்துவத்தை உணரக்கூடிய பக்குவம்
2.இஜ்ஜீவ சரீரத்தில் இவ் உயிராத்மா இயங்கக்கூடிய காலம்தான் என்பதை உணர்ந்து
3.ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படர்ந்து இந்த உலகில் கலந்துள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பெற்று… மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி அருள் வாழ்க்கை வாழ்ந்து சகோதர உணர்வுடன் உலக மக்கள் அனைவரும் “மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்திட” அருள்வாய் ஈஸ்வரா.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி “நல்ல மழை பெய்து.., ஏரி குளங்கள் நிரம்பி” தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
“இதைப் போன்ற உணர்வுகளை” நாம் எண்ணி எடுத்துப் பழக வேண்டும். ஒவ்வொருவரும் அந்தப் பேரருளைப் பெருக்கி “உங்கள் வீட்டிலும்…” இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெறுங்கள்.
நீங்கள் வாழும் “தெருவிற்குள்ளும்…” உங்கள் மூச்சும் பேச்சும் எல்லோரையும் தெளிந்த மனமாக ஆக்கும் அந்த அருள் பெற வேண்டும்.
உங்கள் தெருவில் படர்ந்தால் “ஊருக்குள்ளும்…” அது பரவத் தொடங்கும். தெருவிற்கு ஒருவர் இந்த மாதிரி இருந்தால் போதும்.
இந்த உணர்வுகளைப் பெருக்கிப் பெருக்கி உண்மைகள எடுத்துச் சொல்லிச் சொல்லி இந்த உணர்வினைப் பெருக்கினால் இந்த “உலகம்…” முழுவதும் பரவும்.
குருநாதர் எம்மைத் துருவ நட்சத்திரத்தில் ஆயுள் கால மெம்பராகச் சேர்த்தார். அவர் காட்டிய அருள் வழியில் உங்களையும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இணைக்கின்றோம்.
1.“அங்கே” என்றுமே நீடித்த ஆயுளாக நாம் பெறவேண்டும்.
2.இனி உடல்கள் மாற்றக் கூடாது.
3.இருளை அகற்றும் ஒளியின் உணர்வுகளாக நமக்குள் வரவேண்டும்.
4.நினைவுகள் அனைத்தும் சிந்திக்கும் தன்மையாகவே இருத்தல் வேண்டும்.
5.உங்களுடைய பேச்சும் மூச்சும் உங்கள் சொல்லும் செயலும் பிறரைப் புனிதப்படுத்தும் சக்தியாக நீங்கள் மாறவேண்டும்.
6.என் ஒருவனால் மட்டும் முடியாது.
நான் உங்களுக்குச் சொல்லும்போது உங்களுக்கு நல்லதாகின்றது. அதே போல நீங்கள் சொன்னால் மற்றவர்களுக்கும் நல்லதாக வேண்டும். அதன் துணை கொண்டு அவர்கள் தீமைகள் மறைய வேண்டும். அவர்களுக்குள் அருள் உணர்வுகள் ஓங்கி வளர வேண்டும்.
“இத்தகையை நிலைகளுக்கு” நாம் வளர்ந்திடல் வேண்டும்.
ஏனென்றால் தீவிரவாதம் என்ற நிலையில் மனிதன் தன்னை மறந்து மற்றவர்களை “நிர்மூடத்தனமாகத் தாக்கும் நிலைகள்” உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது.
அரசாட்சி செய்வோரும் தான் வாழ தன் இனம் என்ற பெயரால் “மற்றவர்களை அடிமைப்படுத்தும் நிலைகளாக” ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
“நாம் எடுக்கும்.., தியானத்தின் வலுக் கொண்டு…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை அவர்கள் எல்லோரும் பெறக் கூடிய தகுதியை ஏற்படுத்திவிட்டால் “அவர்கள் தவறு செய்யும் எண்ணங்களை…” மாற்றியமைக்கலாம்.
1.நம் பூமியின் துருவப் பகுதி இரண்டும் உருகி கடல் நீர் பெருகிக் கொண்டுள்ளது.
2.பூமியின் துருவப் பகுதிக்குள் இப்படி நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு… இன்று விஞ்ஞானிகள் “அஞ்சிக் கொண்டுள்ளனர்…”
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து நாம் நல்ல மாற்றிக் காட்டிடல் வேண்டும்.
4.நாம் அஞ்ச வேண்டியதில்லை.
அருள் உணர்வுகளைப் பெருக்குவோம். உலகம் நலம் பெறப் பிரார்த்திப்போம். எல்லோரும் மன நிறைவுடன் இருக்க வேண்டும்.
நமக்கு இனிப் பிறவியில்லை. நாம் என்றுமே ஒளியாக இருப்போம். ஒளியின் தன்மை பெறுவோம் என்ற உணர்வை வலிமைப்படுத்தி வாழ்வோம்.
நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். குரு அருளால்
1.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை என்றுமே பருகிக் கொண்டேயிருப்போம்
2.இருளை அகற்றிக் கொண்டேயிருப்போம்.
3.அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொண்டேயிருப்போம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா…! ஓம் ஈஸ்வரா குருதேவா…!
சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் சென்றால் என்னவெல்லாம் செய்யும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்
காட்டிற்குள் குருநாதர் அழைத்துச் சென்றார் பல அனுபவங்களைக் கொடுத்தார்… நான் பெற்றேன். அது எப்படி…? என்ன…? என்று அறிந்து கொள்ளும்படி செய்தார்.
ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனையோ வேதனைகளை நான் அனுபவிக்க நேர்ந்தது. வேதனையை நுகர்ந்த பின்
1.என் உடலுக்குள் எப்படி எல்லாம் மாற்றங்கள் ஏற்படுகிறது…?
2.உடலுக்குள் எப்படி எல்லாம் மாறுபடுகின்றது…? என்று அதையெல்லாம் காண்பிப்பார்.
அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் திடீரென்று சில நேரங்களில் வயிற்றால் போய்விடும்… ஒன்றுமே செய்ய முடியாது.
சாமி எனக்குக் கிரக்கமாக வருகின்றது என்பேன்.
1.நீ இதையெல்லாம் பார்த்தாய் அல்லவா… நுகர்ந்தாய் அல்லவா
2.அது உன் உடலுக்குள் சென்ற பின் மற்ற அணுக்களை எல்லாம் அடக்கி
3.உன் உறுப்புகளைச் சீராக இயக்க விடாதபடி எப்படி இயக்குகிறது…? பார்…!
ஆனால் நீ தவறு செய்யவில்லை.
1.நீ நன்றாகத்தானே சுவாசித்துக் கொண்டிருந்தாய்
2.நீ ஆகாரம் ஒன்றும் சாப்பிடவில்லை.
3.சாப்பிடவில்லை என்றாலும் இது எப்படி வயிற்றால் போகின்றது…?
இப்படித்தான் பல வகைகளிலும் என்னைச் சிரமப்படுத்தி அதை அறிந்து கொள்வதற்குச் சூழ்நிலைகளை உருவாக்கினார்.
அதே போன்று உங்களுக்கும் இத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கலாமா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!
சாதாரணமான நிலைகள் நீங்கள் நுகர்ந்த உணர்வு உங்களுக்குள் சென்ற பின் “சாமி எங்களை ரொம்பச் சோதிக்கின்றார்…!” என்று எண்ணுவீர்கள்.
ஏனென்றால் சாமி சொன்னதைக் கேட்டு அதன் வழி நடந்து வரும் பொழுது சாமியை நினைப்பார்கள்.
1.சாமி சொன்னார் என்று நான் பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றேன்
2.ஆனால் என்னை எப்படி எல்லாம் பேசுகின்றார்கள்…?
3.என்னால் பொறுக்க முடியவில்லை… என்னால் தாங்க முடியவில்லை நான் எப்படி இப்படியே பொறுமையாக இருப்பது..? என்று
3.நான் சொன்ன உயர்ந்த கருத்துக்களை விட்டு விடுகின்றார்கள்… பிறர் உணர்வை எடுத்துக் கொள்கின்றார்கள்.
4.நான் சொன்னதை நிறுத்திவிட்டு அதைத் தான் வளர்க்க முடிகிறது.
சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் இயக்குகின்றது. இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.
சில குடும்பங்களில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் பொழுது ஒருவருக்கொருவர் கவலையாக… சங்கடமாக… பேசிக்கொள்வார்கள்… சஞ்சலமாகப் பேசுவார்கள்.
சாப்பிடும் போது இப்படிக் கவலையாகப் பேசுவது எல்லாம் என்ன ஆகும் என்றால் அவர்கள் பட்ட வேதனை எல்லாம் அந்த உணவோடு சேர்த்து உடலில் அணுக்களாக உருவாகும்.
1.ஒருவர் சொல்வதை எல்லோரும் உ..ம் கொடுத்துக் கேட்பார்கள்.
2.இது வளர்ந்த பின் சாப்பிடும் பொழுதெல்லாம் அந்த எண்ணங்கள் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்
3.அந்த அணுக்கள் வளர்ச்சி அடைவதற்கு இதுவே ஏதுவாக மாறிவிடுகின்றது.
ஆனால் சந்தோஷமாகச் செய்து அந்த மகிழ்ச்சியான உணர்வு கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். எல்லாமே சந்தோஷமாக இருக்கும்.
ஆனால் சாப்பிடும் போது வேதனையாகச் சொல்லிப் பாருங்கள். அது எத்தகைய வேதனைகளை உருவாக்குகிறது…? என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதனால் பல நோய்கள் வரக் காரணமாகின்றது.
தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மனிதன் என்ற உயர்ந்த வித்திலிருந்து… எடுக்க வேண்டிய பலன் எது…?
இயற்கையில் அமிலத்தின் ஒளி பெற்று மண்டலக் கோள்களின் ஈர்ப்பு வட்டத்தில் பூமியின் நட்சத்திரக் கோள்களின் அமில வளர்ச்சியால் உருவானது தான் இவ்வுயிர் ஆத்மாக்கள்.
அவை வளர்க்கக் கூடிய வளர்ச்சியும்… உருவான அந்தத் தொடர் நிலையின் வழித் தொடரில்தான் வளர்த்துக் கொள்ள முடியுமேயன்றி
1.வளர்ச்சித் தொடருக்கு எதிர்ப்பு நிலை ஏற்படும் பொழுது
2.வளர்ச்சியின் உருமாறக்கூடிய தன்மை தான் வளர்ப்பில் காண முடியும்.
நம் பூமியின் இயற்கைத் தன்மையின் ஜீவ வித்தின் பலன் நிலையே… மனிதனின் உயர் ஞான ஒளி சக்தி பெறக்கூடிய… “தெய்வ நிலை தான்…”
எந்த வித்தின் தொடரிலும்…
1.ஒரு பயிர் வளர்ந்து அதனின் பலன் தந்தாலும்…
2.அந்தத் தொடரின் மகசூல் பலவாகப் பெருகும் பக்குவத்தில்தான் பலவும் நடைபெறுகின்றன.
அத்தொடரின் தொடரில் தான்… ஆதி மனிதனின் உணர்வில் மனித உரு எண்ண வளர்ச்சி ஞானம் கொள்ளும் உயர்வு நிலை…. மனித வித்தின் உணர்வின் உயர் மண்டலமாம் பூமி மண்டலத்தில் உருவான மனிதச் செயல்.
இருந்தாலும் இதிலே மனிதன் வளர்ச்சி கொண்டு வாழும் காலம் மிகக் குறுகியதுதான்.
ஓர் விதையை நாம் விதைத்து… அந்த விதை வளர்ந்து செடியாகி.. மரமாகி… பக்குவம் பெற்றுப் பலனாய் அதனுடைய மகசூல் திரும்பிப் பெறக்கூடிய காலம் நீண்ட நாட்களாகி விடுகின்றது.
அதைப் போன்று தான் இப்பூமியும் வளர்ந்து வந்தது.
அதனுடைய வளர்ச்சியின் பக்குவ முதிர்வு நிலைக்குப் பிறகு… வளர்ச்சியின் பயனாய் மனித உணர்வின் உயர் ஞானம் கொண்டு செயல்பட்ட காலம்தான்… பூமி வித்தின் பலன் கண்ட காலம்…!
கண்ட பலனை… மீண்டும் பயிராக்கினால்தான் பலனின் தொடர் வளர்ந்து கொண்டே இருக்கும்.
ஓர் மரம் பலன் தரும் காலங்கள் முடிந்து… அம்மரத்தின் வளர்ச்சியை ஒத்து… மரத்தின் முதிர்வைக் கொண்டு பட்டுப் போன பிறகு… அம்மரத்தின் விதைகள் பல கோடியாய் வளர வைக்கக் கூடிய பயனை அம்மரம் தருகின்றது.
அப்படித் தந்ததை விரையமாக்காமல் வளர்க்கும் வளர் தொடர்ச்சியைப் போன்று தான்
1.இப்பூமியின் வித்தின் தொடரில் விதையான நம் ஆத்மாவும்
2.மீண்டும் பல வித்துக்களை வளர்க்கக்கூடிய விதையாகும் பக்குவத் தொடரில் வளர வேண்டும்.
மனிதனுடைய எண்ணத் தொடர் தன்னைத் தானே தான் உணர்ந்து… இயற்கையின் ஒலி ஒளித் தொடர் கொண்டு உயர் ஞானத்தை அறியும் உண்மைத் தத்துவ ஞானியாய் உயர்ந்திட வேண்டும்.
தன் ஆத்ம உயிரின் ஜீவ காந்த மின் தொடருக்கு…
1.இக்காற்றலையில் கலந்துள்ள மகரிஷிகளின் ஒளி அலைகளை
2.தன் உயர்வின் எண்ணத்தால் நுகர்ந்தெடுக்கும் தியான வழி கொண்டு
3.இஜ்ஜீவ ஒளியின் ஒளி நாதத்தால் மனிதன் தெய்வ நிலை பெற வேண்டும்.
நன்மை தீமையைப் பார்ப்பதைக் காட்டிலும்… “வேண்டியவரா… வேண்டாதவரா…” என்று தான் முதலில் பார்க்கின்றோம்
கண் கொண்டு ஒருவரைப் பார்க்கின்றோம்…
1.அவர் தனக்கு வேண்டிய நண்பர் என்று எண்ணும் பொழுது அவர் செய்யும் குறைகளை மறந்து விடுகின்றோம்.
2.அவர் எவ்வளவு குறைகள் செய்யட்டும்… தப்புகள் செய்யட்டும்… அந்தக் குறைகளை எண்ணுவதில்லை.
அவர் செய்யக்கூடிய தவறுகளைப் பற்றி யாராவது நம்மிடம் வந்து சொன்னால் “இல்லைங்க… அவர் நல்ல மனிதர்” என்று நாம் சொல்லி விடுகின்றோம்.
ஆனால் அதே சமயத்தில் “நமக்கு அவரைப் பிடிக்கவில்லை” என்ற உணர்வை எடுத்தவுடன்
1.அவர் நல்லது செய்கிறார் என்றாலும் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பாகத்தான் எண்ணுகின்றோம்
2.அவர் எவ்வளவு நல்லது செய்யட்டும்… வெறுக்கத்தான் செய்வோம்.
இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டப்பட்டது.
பாசத்தால் வரும் போது “வேண்டியவர்” என்று எண்ணும் பொழுது குறைகளை நீக்கும் உபாயத்தைக் காட்டுகின்றோம்.
ஆனால் “நமக்குப் பிடிக்கவில்லை” என்றால் அவர் நல்லது செய்தாலும் அவர் செய்வதைக் கெடுப்பதற்கு என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.
1.ஆக எந்த எண்ணத்தை எடுத்துக் கொள்கின்றோமோ அதுவாக நாம் ஆகின்றோம்.
2.நம் கண் பார்வையும் அதுவாக ஆகின்றது…. அதன் செயலாக்கமாகவே நம் கண்ணும் வழிகாட்டுகின்றது.
ஒன்றைப் பார்க்கப்படும் பொழுது உணர்வின் ஒளியாகக் காட்டுவது கண்களே. அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் குருக்ஷேத்திரப்போர்… அந்த உணர்வின் இயக்கமாகத்தான் நம்மை இயக்குகின்றது.
கண் எதைக் காட்டியதோ அந்த உணர்வின் அணுவாக அது விளைகிறது. அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எண்ணும் போது அதுவே நமக்குள் பார்வையாக வருகின்றது
அதனால் தான்
1.மகரிஷிகள் இத்தகைய தீயவினைகளை நீக்கிடும் விதமாக விநாயகர் சதுர்த்தி என்று காட்டியுள்ளார்கள்.
2.தீமைகள் உனக்குள் விளையாது நிறுத்து… சதுர்த்தி செய்…! என்று சொன்னார்கள்.
3.சந்தர்ப்பத்தால் நமக்குள் வரும் பகைமைகளை உருவாகாதபடி தடுக்க வேண்டும்.
ஆனால் இன்றைய காலகட்டங்களில் விநாயகர் சதுர்த்தி அன்று தீய வினைகளை நாம் ஞானிகள் காட்டிய வழியில் நீக்குகின்றோமா…?
நண்பன் என்று தான் முதலில் பழகினோம். அவர்கள் வாழ வேண்டும் என்று எண்ணினோம். ஆனால் சந்தர்ப்பம் வெறுக்கும் உணர்வுகள் வளர்ந்து விடுகின்றது. இருவருக்குள்ளும் பதிவான பின் இருவரையுமே அது வீழ்த்துகின்றது.
இப்படி நம்மை அறியாமலே நமக்குள் வரும் பகைமைகளை நீக்க வேண்டும் என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றது
வினையெல்லாம் தீர்ப்பவனே… விநாயகனே ஆதி முதல்வனே… ஓம் என்ற பிரணவத்திற்கு உரியவனே…! என்று பாடல்களைப் பாடுகின்றோம் புகழ் பாடுகின்றோம்… பொருளைத் தேடுகின்றோம்…!
1.அகம் காண அறிவின் தன்மை நாம் தேடுவதே இல்லை
2.அகம் காட்டும் அறிவினை அகத்திற்குள் சேர்த்து… அந்த அறிவினை நாம் தேடுவதில்லை
3.அகத்திற்குள் அந்த உணர்வின் அறிவு இருந்தால் தான் பொருளின் உண்மையின் உணர்வை (மெய்ப்பொருள்) நாம் அறிய முடியும்.
நமக்குள் தெளிந்திடும் அறிவை ஊட்டிய அருள் ஞானிகள் உணர்வை வினையாகச் சேர்க்க வேண்டும். இது தான் மகரிஷிகள் காட்டிய உண்மை நிலை. சாஸ்திரங்களில் கூறப்பட்ட உண்மைகளும் இது தான்.
பேரானந்தப் பெரு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்… அதை வினையாக மாற்ற வேண்டும்.
1.என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் மகரிஷிகளின் அருள் உணர்வு கிடைக்க வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
கோவிலில் இதைக் காட்டி இருந்தால் அதை நாம் அவமதிக்கக் கூடாது. ஞானிகள் காட்டிய முறைப்படி இதை எண்ண வேண்டும். ஆலயங்களுக்குச் சென்றால் அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறையைத் தான் இங்கே உணர்த்துகின்றோம்
மனித உணர்வின் சூட்சுமத்தை… “மனிதனே அறியக்கூடிய ஒளி சக்தி வளரும் சுயநலச் செயலினால்தான்…” பொதுநலனின் பரிமாணத்தை விரிவுபடுத்த முடியும்.
மனிதனுக்குகந்த வீரிய மின் காந்த ஒளி சக்தி மிருகத் தன்மையின் சரீர இயக்கத்தில் அதிகப்பட்டிருந்தாலும் உணர்வின் செயலைப் பக்குவப்படுத்தக்கூடிய தன்மை அவைகளுக்குக் குறைவு.
ஆகவே “மனித எண்ணத்திற்குத்தான்” பகுத்தறிவின் சூட்சும ஒளியை வளர்க்கும் தன்மை… இப்பூமியின் சூட்சுமமுடன் வளர்ந்த “ரிஷிகளின் செயலினால் செயல்படுகின்றது…!” ஒன்றின் வளர்ச்சியில் ஒன்றின் பக்குவத்தால்.
மிருகங்களுக்குப் பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதனை ஒத்து இருப்பதில்லை. ஆனால் மிருகங்களும் இப்பூமியின் ரிஷிகளின் சூட்சுமத்தில் வளர்க்கப்பட்ட இறை சக்தி தான்.
அவைகளுக்குக் கழிவும் உணவும்… ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தாலும் மனிதனை ஒத்து அருவருப்பு… நாணம்… முதலியன மிருகங்களுக்கு இருப்பதில்லை.
மனிதனின் பகுத்தறிவால் தனக்குகந்ததை உயர்ந்ததாய்ப் பெற்று மகிழக் கூடிய பக்குவம் கொண்ட செயல் வளர்ச்சி வீரியம் பெற்ற ஜீவ இறையருளின் உன்னதத் தன்மை கொண்டவன்.
தாவரங்களும் மிருகங்களும் மனிதனும் இப்பூமியின் இறை சக்திகள் தான்.
1.இறை சக்தியே இறையுணர்வு பெற்று
2.இறைத் தன்மையில் பக்குவப்படுத்தக்கூடிய குணம் தான் தெய்வ குணம்.
இப்பூமியில் ஆரம்ப மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய மனித வாழ்க்கைக்கும் நிறைய மாற்றங்கள் உண்டு. மனிதத் தேவைக்குகந்த உணவு… உடை… இருப்பிடம்… ஒவ்வொன்றிலும் தன் ஞானத்தால் மனித வாழ்க்கையின் வசதிக்குகந்த பக்குவத்தை மனிதன் இன்று பல வகையிலும் வளர்த்துக் கொண்டுள்ளான்.
அதைப் போன்று… இச்சரீர சுகத்தின் தேவையில் வளர்ச்சியுற்ற மனிதன் ஆத்ம தேவையின் பக்குவத்தை… இறை குணத்தின் வளர்ச்சியை வலுக்கூட்டும் தெய்வத் தன்மையால்… இக்கலியின் மாற்றத்தில் கல்கியில்…
1.இன்றைய மனிதனைக் காட்டிலும்
2.மனித எண்ணத்தின் வீரியத்தின் தெய்வத் தன்மையால்
3.மனிதன் “பறக்கும் நிலை” கொண்ட உயர்ந்த செயல் நிலைக்கு வர முடியும்.
ஒன்றைப் பக்குவப்படுத்தி அப்பக்குவத்தின் பொருளை எப்படி நமக்குகந்ததாக ஏற்படுத்தி சரீர வாழ்க்கையில் இன்பத்தைக் காண்கின்றோமோ அதைப் போன்று… ஆத்மாவின் பக்குவத்தில் அகிலத்திலும் கலந்துள்ள ஆதி சக்தியின் செயல் சக்தியில் “உயர்ந்த தன்மையான சூட்சும ஒளியால் ரிஷி சக்தியை மனிதன் பெற முடியும்…”
மனிதனின் ரிஷி சக்தியைக் கொண்டுதான்… மூவுலக சக்தியான “ஆக்கல் காத்தல் மாற்றல்” என்ற வழித் தன்மையில்… வளர்ச்சியில் வளரும் அண்டக் கோள்களில்… பால்வெளி மண்டலத்தில் எண்ணிலடங்கா இறை சக்தியில் இறையுணர்வாகும் தெய்வ சக்தியில்… ஆண்டவன் என்ற படைப்பின் தன்மைக்குச் செயல் கொள்ளும் ரிஷித்தன்மையால்… அந்தந்த அமிலத்தின் உருத்தன்மையில் உருவாகும் உயிர்த் தன்மையில் பக்குவம் கொள்ளும் படைப்பின் ஒளித் தன்மையை… ரிஷித்தன்மையின் ஒளித் தன்மையால் தனக்கொத்த செயலுக்கு மண்டலங்களை உருவாக்கி… உருவின் உருக்களை உணரும் வளர்ச்சியைத் தன் வலுவாக்கி… அண்டக் கோள்களையும் படைக்கும் ரிஷிகளால்… படைப்பின் பலனாய்ப் பக்குவப்படுத்தப்பட்ட உணர்வின் தெய்வ குணத்தின் “ஆண்டவனாக்கும்” வழிச் செயல்தான்… “அண்டத்தின் சூட்சுமத்தில் ஆதி சக்தியின் உண்மைச் சக்தி – உருப்பெறும் நிலை…!”
இச்சரீரத்தின் உணர்வை… “மின் காந்த ஒளி சக்தியை” இப்பூமியின் பிடிப்பில் இச்சரீர வாழ்க்கையில் அடையும் சுகத்தால் உணர்வின் எண்ணம் ஆத்மாவை வளர்க்க உதவாது.
இச்சரீரத்தை இப்பூமியின் பிடிப்பிற்கு அடகு வைக்கும் மனித உணர்வினால் அடையப் போகும் நன்மை எதுவுமில்லை…!
ரிஷிகளின் சக்தியால் பல கோடி ஆண்டுகளாய் பலவற்றில் வளர்ந்து வலுவாகி உள்ள இவ்வுயிராத்மாவை… ஆத்ம உயிரின் வீரியத்தின் உண்மையை உணரும் எண்ணத்தில்.. மனிதன் தன்னைத் தானே உணரும் பக்குவத்தால்… ஆத்ம உயிரின் சுயநலத்தைக் கொண்டு பொது நலத்தை வளர்க்கும் சூட்சுமத்தை உணர முடியும்.
தான் உண்ணும் உணவிற்கு…
1.நெல்லை எடுத்து அதிலுள்ள உமியை ஊதிப் பிரித்து விட்டு
2.மணியை (அரிசி) எடுத்துப் பக்குவப்படுத்தி உண்ணும் மனிதன்
3.தான் எடுக்கும் எண்ணத்தின் உணர்வைப் பக்குவமாக்கி
4.ஆத்மாவின் ஒளியை வளர்க்கும் தன்மை ஏன் பெற முடியாது…?
தன்னில் உள்ள இறைத் தன்மையை… தெய்வமாக்கும் நற்குணம் கொண்ட பக்குவத்தால்
1.ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறைதான்
2.இங்கே உணர்த்தப்படுவதன் சக்தி நிலையின் உண்மை நிலை.
வாழ்க்கையில் வரும் சிக்கல்களுக்குக் காரணம் தாய் கருவிலே உருவானதும்… சந்தர்ப்பத்தில் நுகரும் சாப அலைகளும் தான்
குடும்பத்தில் குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் வருவதற்கு நாம் காரணம் அல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அது இயக்குவது தான். அதை மாற்றி அமைக்க ஆத்ம சுத்தி செய்து குடும்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.குடும்பத்தில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குக் காரணம் இன்று மட்டும் அல்ல
2.தாய் கருவிலிருந்தே சில நிலைகள் வந்து கொண்டிருக்கிறது
அது மட்டுமல்ல…! ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கின்றோம்… ஒருவருக்கு ஒருவர் சாபம் விடுகின்றார்கள்… அதை நாம் கேட்டிருப்போம்… நமக்குள் பதிவாகி இருக்கும். அதனாலும் குடும்பத்தில் தீமைகள் வரும். நாம் தவறு செய்து அந்த நிலைகள் வரவில்லை.
1.இந்த மாதிரி சாப அலைகள் எத்தனையோ வகைகளில் எத்தனையோ விதமாக நமக்குள் பதிவாகியுள்ளது
2.அதெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தது.
உதாரணமாக ஒரு கேமராவிலே படம் எடுக்கின்றார்கள் என்றால் யாராவது குறுக்கே வந்தால் அந்த0 படம் ஆடும். அதுவும் பதிவாகும் அதே போன்று நாடாவில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்றால் குறுக்கே யாராவது சப்தம் போட்டால் அதுவும் பதிவாகத்தான் செய்யும்.
இது போன்று நமக்குள் ஊழ்வினை என்ற நிலையில் நாம் எண்ணும் அந்த எண்ணங்களுடன் சேர்த்து மற்றதும் (தீமைகளோ குறைகளோ) பதிவாகத் தான் செய்யும்.
அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது சில உணர்வுகள் ஊடுருவி நமக்குள் வருவதும் தெரியவரும். அதே சமயத்தில் அது நம் போகும் காரியங்களுக்குத் தடைப்படுத்தும் உணர்வாக வந்து விடும்.
1.தடைப்படுத்தும் உணர்வோ சாபமிடும் நிலையோ நாம் நுகர்ந்த பின்
2.அடுத்து நாம் ஒரு நல்ல காரியத்திற்குச் செல்கிறோம் என்றால்
3.அங்கே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும் இதுவும் சேர்ந்து அதனுடன் ஜாயிண்ட் ஆகும்
4.எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ இந்த வேலையெல்லாம் நமக்குள் நடக்கும்
இது எல்லாம் உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு இந்த மன(ண)மாகி நமக்கே மீண்டும் எதிரியாக வரும்.
இதைத் துடைப்பது யார்…?
இயற்கையின் நிலைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் நாம். அதுதான் “பலராம்” – பலருடைய எண்ணங்களை அறியும் சக்தி. அந்த எண்ணங்கள் இயக்கவில்லை… நமக்குள் உண்மைகளை உணர்த்துகின்றது.
அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நரசிம்மா…!
எப்பொழுது தீமை என்று உணர்கின்றமோ அது நமக்குள் புகாதபடி பிளக்க வேண்டும் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால்
1.இங்கே புருவ மத்தியிலே… உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்குள் அனுப்ப வேண்டும்.
2.தீமை உள்ளே போகாதபடி இது பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும்
3.இதுதான் ஆத்ம சக்தி என்பது.
இது எல்லாம் காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழியில் நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்து பழகிவிட்டால் தன்னிச்சையாக (AUTOMATIC) வந்துவிடும்.
முந்திய பழக்கத்தில் நாம் இருக்கப்படும் பொழுது… யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அந்த எண்ணத்திலேயே தான் இருப்போம் ஆத்ம சுத்தி செய்ய முயற்சி செய்யும் பொழுது “இடைவெளியில் அதைத் தடுக்கும்… அதைக் கூட நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்…!”
ஆனால் சிறிது காலம் யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொண்டால்
1.உடனே அந்த உணர்வுகள் ஆத்ம சக்தி செய்யும்படி செய்து
2.தீமையைப் பிளக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்.
அழுக்குத் தண்ணீரில் நன்னீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்குகள் எப்படிக் குறைகின்றதோ… அதை ஊற்ற ஊற்ற நல்ல தண்ணீரின் அடர்த்தி கூடுகிறதோ…
1.அந்த அந்த ஞானிகள் உணர்வுகளை நமக்குள் போடப் போட அது பெருகும்
2.அது முழுமை அடைந்து விட்டால் “தன்னிலை அடைந்து விட்டது என்று பொருள்…”
”என்னுள்ளே நான்…” என்ற இறை தெய்வமான “உயிர் தெய்வத்தை ஒளிர வைக்க வேண்டும்…”
1.என்னுள்ளே நான்… என்ற நிலைக்கொப்ப
2.தன்னுள் உள்ள தன் உயிராத்மாவை
3.தன்னை இயக்கும் எல்லாமில் எல்லாமாய்ப் படர்ந்துள்ள இறை உயிரை
4.தன்னுள் உள்ள உயிர்த் தெய்வத்தைத் தான் வளர்க்க
5.இச்சரீரத்தைப் பதராக்கி உயிரை மணியாக்க
6.ஜீவ வளர்ச்சி ஓட்டத்தில் வளரும் காலத்தில்
7.வளர்ச்சியின் முதிர்வு நிலை முற்றிய பிறகு மணியைப் பிரித்து
8.”என்னுள்ளே நான்…” என்ற இறை தெய்வமான உயிர்த் தெய்வத்தை ஒளிர வைக்க முடியும்.
ஜீவ உணர்வின் எண்ண சரீரம் ஆத்ம உயிருக்கு உயர்வு நிலையின் எல்லாவற்றையும் கடந்து ஒளி சக்தியின் தெய்வநிலை பெறத்தக்க வழிக்கு வளர்க்கும் செயல் சரீர உருநிலை.
நெற் பயிர் வளர்ந்து முதிர்ந்து மணியை வெளிப்படுத்துவதைப் போன்று இவ்வுயிராத்மா உடலில் இயங்கும் பொழுதே.. “இவ்வுடலைச் சக்கையாக்கி உயிரை மணியாக்கி வளரும் பக்குவத்திற்கு” நாம் வருதல் வேண்டும்.
மனிதனுக்குக் கிடைத்துள்ள எண்ணத்தின் ஞானத்தை ஒன்றை அறியக் கூடிய வளர்ச்சியை உயர்ந்த எண்ணத்தில் செயல்படுத்த வேண்டும்.
இப்பூமி பிற கோள்களின் துணை கொண்டு சுழன்று கொண்டே ஓடிக் கொண்டே உள்ள ஓட்டத்தில் பிற கோள்களின் தொடர்பு கொண்டு தான் வளர்ந்து வளரக்கூடிய நிலை பெற்றது.
இந்தப் பூமியின் மண்டல ஓட்டத்திற்கொப்ப…
1.இப்பூமியில் வளரக்கூடிய நம் உயிராத்மாவையும் ஓர் மண்டலமாக உருவாக்கக் கூடிய தன்மைக்கு
2.எதையும் வளர்க்கவல்ல எண்ணத்தின் சைவ சித்தம் மனிதனின் உணர்வில் இருக்க வேண்டும்.
“மனிதனின் எண்ணம்தான்” வீரியம் கொண்டு இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் ஒன்றை வளர்க்கவும் அழிக்கவும் செயல் கொள்கின்றது. எதையும் சாதிக்கவல்ல சக்தி மனித ஆற்றல் திறமைக்கு உண்டு.
மனிதன் தெய்வமாகக் கூடிய வழி முறைக்கு எண்ணத்தைச் செலுத்தி இப்பூமிப் பிடிப்பின் இறுக்கத்திலிருந்து இப்பூமியின் சுழற்சியிலிருந்து விடுபடலாம்.
விஞ்ஞானிகள் இன்று தன் ஞானத்தால் கண்டுபிடிக்கும் விஞ்ஞானக் கருவிகளினால் வான மண்டலத்தில் உள்ள இரகசியங்களையும் ஒவ்வொரு கோள்களில் உள்ள உண்மைகளையும் அறிந்து பூமியில் மனித ஆத்மாக்களுக்கு வேண்டிய வளர்ச்சிக்கு மனித அறிவின் ஆற்றலை விஞ்ஞானத்தில் பெருக்க முயற்சிக்கின்றார்கள் அல்லவா..!
அந்தத் திறனைப் போன்று மனிதனும் தன் உயிராத்மாவைப் பிற கோள்களில் எண்ணத்தைச் செலுத்தி
1.அவ் எண்ணத்தின் தொடர்பை இச்சரீர உணர்வுடன் எடுக்க எடுக்க
2.இச்சரீரத்திலுள்ள உயிரணுக்கள் யாவையுமே எவ் அமிலத்தை இச்சரீர உணர்வுடன் அதிகமாக எடுக்கப் பழகிக் கொள்கின்றதோ
3.அத்தொடரின் வலுத் தன்மையால் இச்சரீரம் சக்கையாகி
4.ஆத்ம உயிர் தனித்துச் செயல்படக் கூடிய வளர்ச்சியால் இச்சரீரம் ஒளிச் சரீரமாகி
5.மற்ற ஈர்ப்பின் பிடிப்பில் இவ்வுயிராத்மா சிக்காமல் ஒளி நிலை பெறுகின்றது.
எவ்வித்து வளர்ந்தாலும் அவ்வித்தின் தொடர் அதனதன் ஜீவ வளர்ச்சியில் பலவாகப் பலன் தருகின்றது. மனித சரீரத்தின் வித்தின் உண்மைப் பலன் தன் பிறப்பில் பிறக்கக்கூடிய ஜீவ குழந்தைகள் மட்டுமல்ல… மனித சரீரத்தில் இம்மனிதனாய் ஆத்ம உயிர் ஜீவன் கொண்டு வளர… “பல கோடி கோடி ஜீவ அணுக்கள்” இச்சரீரத்தில் வளர்கின்றன.
ஓர் நெல் செடியாகி அதனின் பலனில் பல நெல்களைத் தருகின்றது. அதைப் போன்று
1.இச்சரீரத்தை இயக்கும்… “உயிராத்மாவை வித்தாக்கி”
2.உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வித்தின் பலன்களாக
3.உயிரின் பருமனை ஒளியாக்கக் கூடிய உயிர் காந்த வளர்ச்சிக்குப் பக்குவப்படுத்துவதுதான்
4.தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய உயர் ஞானத்தின் மனோ வேகத்தை
5.மகரிஷிகள் காட்டிய சைவத்தின் சித்த குணமான நற்குணத்தைச் சம உணர்வுடன் கூடிய எண்ணத்தில் பக்குவபடுத்தி
6.மின் காந்த சக்தியை இச்சரீரம் எடுக்கும் வழிமுறையில்
7.இவ்வுயிராத்மா இவ்வுடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களையும் பலனாக எடுத்து
8.தன் வளர்ச்சியின் வீரியம் பெற முடியும்.
தனக்குள் உள்ள உணர்வின் எண்ணத்தில் இருந்துதான் மனிதன் சக்தியைக் கூட்டி உயர்வு நிலைக்குச் செல்ல முடியும். இதனை உணர்ந்து பக்குவ முறையில் ஒவ்வொருவரும் பலன் பெறலாம்.
உடலின் தரம் உயிராத்மாவின் தரம்
காட்சி:
நெல் குவியல் தெரிவதைப் போன்றும் அக்குவியலில் உள்ள நெல்லை ஒருவர் எடுத்துக் கையில் வைத்துத் தேய்த்துப் பதரை நீக்கி அரிசியான மணியை வாயில் போடுவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்
நெல்லைப் பதம் பார்த்து நெல் காய்ந்து விட்டதா… அதை அரைத்துச் செயலுக்குக் கொண்டு வரலாமா…? என்பதற்காகவும் பதம் பார்த்திருக்கலாம். அல்லது நெல்லிலுள்ள பதரை நீக்கி அரிசியைச் சுவைக்கவும் பார்த்திருக்கலாம்.
முதலில் சொன்னது போல் நெல்லில் உள்ள மணியைப் பிரிக்க வேண்டும் என்றால் அந்த நெல் காய்ந்து பக்குவப்பட்டிருந்தால் தான் அதைச் செயலுக்குக் கொண்டுவர முடியும்.
அதைப் போன்று இவ்வுடலான நெல் பக்குவப்பட்டிருந்தால் தான் இவ்வுடலின் உயிராத்மா செயலுக்குக் கொண்டு வர முடியும்.
காய்ந்த நெல்லில் உள்ள உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகின்றோம்.
1.மணியான அரிசி உள்ளே இருக்கும் வரை நெல் என்று சொல்கிறோம்
2.நெல்லிலிருந்து அரிசி விடுபட்டவுடன் பதர் என்று அந்த உமியை ஒதுக்கி விடுகின்றோம்
அதே போல் தான்
1.உயிராத்மாவானது (உயிர்) இச்சரீரத்தில் இயங்கும் வரை மனிதன் என்ற நாமகரணத்துடன் செயல் கொள்கிறது.
2.உடலை விட்டு உயிராத்மா பிரிந்தவுடன் பதரைப் போன்று உடல் கழிக்கப்படுகின்றது.
உடலில் இருக்கும் உயிராத்மாவின் உண்மையின் ஒளி சக்தியின் செயலை… ஆத்ம உணர்வை அறியாமல்… எண்ணத்தின் ஓட்டம் ஒவ்வொருவருக்கும் தன் தேவையின் செயலுக்காகத்தான் தெய்வங்களை வணங்குவது என்ற நிலையில் இன்று உள்ளார்கள்.
தனக்கு மேல் உயர்ந்த ஞானிகளையும் ரிஷிகளையும் சந்தித்தால் கூடத் தன் உணர்வின் தேவைக்காக மட்டும் தான் அந்தச் சந்திக்கும் நிலையையும் பயன்படுத்த எண்ணுகின்றார்கள்.
அதே சமயத்தில் தனக்கு மேல் உயர்ந்தவர்களுக்கு ஓர் இன்னல் ஏற்பட்டால்…
1.இவர்களுக்கே இந்த நிலை…
2.நாம் எல்லாம் சாதாரணமானவர்கள்… நாம் என்ன செய்ய முடியும்…! என்ற எண்ணத்தில்
3.தன்னையே ஒதுக்கிக் கொண்டு… மீண்டும் பிறிதொரு ஈர்ப்புக்கே தன் எண்ணத்தைச் செலுத்தி
4.உடலே பிரதானம் என்று “தான்… தனது…” என்ற செயலுக்குத்தான்
5.மனித உணர்வின் தத்துவம் செயல் கொள்கின்றது இந்தக் கலியில்.
நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் மற்ற கோள்களின் தொடர்பு கொண்டு… பல விதமான குண அமிலத்தைத் தனக்குள் எடுத்து… அதைத் தன் சக்திக்குகந்தாக்கி… மீண்டும் வெளிக்கக்கித் தன் வளர்ச்சியை வளர்த்து ஓடிக் கொண்டே உள்ளது.
அதைப் போன்று மனிதனின் உணர்வின் எண்ணம் சூரியனைப் போன்று…
1.தன் உணர்வுடன் மோதக்கூடிய எந்த எண்ணத்திற்கும் தான் அடிமையாகாமல் தனக்குள் அதைச் சேர்க்கும் பொழுது
2.தன்னிலிருந்து வெளிப்படும் அலையானது மாற்று எண்ணங்களைத் தனக்குள் பஸ்பமாக்கி
3.தன்னிலிருந்து வெளியாகும் உணர்வின் எண்ணம் “சாந்தம்” என்ற ஒளியுடன் சமைக்கப்படும் பொழுது
4.மனிதன் தெய்வ நிலை கொண்ட செயலுக்கு வந்துவிடுகின்றான்.
நெல்லில் மணி இருக்கும் வரை தான் நெல்லிற்குத் தரமுண்டு. அதைப் போன்று இவ்வுடலில் உயிராத்மா இருக்கும் வரைதான் உடலுக்குத் தரமுண்டு. ஆகவே
1.இவ்வுடலில் இருந்து உயிராத்மாவை ஒளி கொண்ட முத்தாகப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையை
2.நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் கொள்ள வேண்டும்.
நல்லதை வளர்ப்பதற்காக நாங்கள் சேவை செய்கிறோம் என்பார்கள்
மனதில் நாம் எதைப் பதிவு செய்கிறோமோ அது தான் இயக்கும்.
உதாரணமாக… உங்களுக்கு முன்னாடியே நல்லது செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.ஆனால் அதை நீங்கள் மோசமாக எண்ணுகின்றீர்கள்
2.அப்போது நல்லது செய்தார்கள் என்று அதை ஏற்றுக் கொள்வீர்களா…?
3.அதில் எப்படிக் குறை காணுவது…? என்ற உணர்வு தான் வரும்.
4.அது உங்களுக்கே தெரியாது… உங்களுக்குத் தெரியாமல் அது இயக்குவது தான்.
ஆகையினால் குறையான உணர்வுகள் வந்தபின் நல்லது செய்கிறார்கள் என்றால் அதிலே எப்படியெல்லாம் குறைகளைக் காண வேண்டுமோ அப்படி எல்லாம் அதைத் திருப்பிக் கொண்டு வரும். ஆக நல்லதாக்கும் நிலைகளுக்கு வராது. இது எல்லாம் மனிதனுடைய இயற்கையின் நிலைகள்.
எவ்வளவு பெரிய சக்தி எடுத்தாலும் எல்லாம்… எல்லாம் அனுபவித்தாலும் “நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த ஆதங்கம்”
1.மற்றவருடைய நிலைகளைப் பார்க்கப்படும் போது
2.தன்னை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தும் நிலை வருகின்றது.
நன்மை செய்வதற்கு நான் பற்று கொண்டுள்ளேன்… ஆனால் மற்றவருக்குப் பற்று இல்லை என்கிற பொழுது இந்த மாதிரிக் குறைகளை வடிவமைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இதனால் எத்தனையோ பிழைகள் வருகின்றது.
இத்தகைய உணர்வுகள் ஒவ்வொருவருடைய மனதிலும் தோன்றும். நாம் போகும் பாதையை விட்டுவிட்டுத் திசைகளைத் திருப்பும்… ஆனால் சேவை செய்ய வேண்டும் என்ற பற்று இருக்கும்.
எல்லா உணர்விலும் அது சாம்பிள் போட்டுக் கொண்டே இருக்கும் நன்றாக இருக்கின்றது நல்ல ருசியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஸ்ஸ்…ஆ…! காரமாக இருக்கிறது நல்லதைக் காரமாகச் சொல்வது போன்று காண ஆரம்பிக்கும்.
இது எல்லாம் அன்பைக் காட்டுகின்றது ஆனால் பேராசையைக் காட்டுகின்றது ஆனால் கடைசியில் நிராசையாக மாறுகின்றது.
1.இந்தப் பேராசை (நல்லது செய்ய வேண்டும்) என்ன செய்யும்…?
2.நிராசையாக மாற்றிக் கொள்ளும் சக்தி தான் வருகின்றதே தவிர நல்லாக்கும் நிலை இல்லை.
பேராசை என்கின்ற பொழுது எப்படி இருக்க வேண்டும்…?
நீங்கள் (அடுத்தவர்கள்) உயர வேண்டும் என்றால் இது பேராசை.
1.நான் உயர வேண்டும்…
2.நான் உயர்ந்திருக்கின்றேன் என்ற இந்தப் பேராசை வரக்கூடாது.
இதுவும் பேராசை தான்… அதுவும் பேராசை தான்.
மற்றவர்கள் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எப்படியும் தெளிந்த மனம் எல்லோருக்கும் வர வேண்டும் என்ற இந்தப் பேராசை நம்மைக் குறைகளிலிருந்து மீட்கச் செய்யும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் குறை காணும் இயல்புகள் உண்டு எனக்கும் கூட உண்டு உங்களிடம் எல்லாம் சொல்கின்றேன் அந்த மாதிரி உணர்வு… சில நேரங்களில் எனக்குள்ளும் (ஞானகுரு) வரும்.
இதனால் தான் குருநாதர் என்ன செய்தார்…?
ஒரு சந்தர்ப்பம் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரு மரத்தைக் காண்பிக்கின்றார். “தூக்கி வீசுடா…..!” என்றார் அவர் சொன்ன முறைப்படி செய்த பின் மரம் பறந்து போய் அங்கே விழுகின்றது.
1.அடுத்து எனக்குத் திமிரே வருகின்றது
2.யாராவது ஏதாவது செய்யட்டும்… நான் தூக்கிப் பந்தாடுகின்றேன் பார்…! என்று சொல்கின்றேன்.
“இப்போது உனக்குத் திமிர் வந்து விட்டது” என்று குருநாதர் சொல்கின்றார். எதற்காக வேண்டி உன்னை மரத்தைத் தூக்கி எறியச் சொன்னேன் தெரியுமா…?
ஒருவருக்குள் ஆட்டிப் படைக்கும் தீய சக்திகளைத் தூக்கி எறிய வேண்டும்.
சாதாரணமாக ஜீவனுடன் வாழும் அந்த மரத்தைத் தூக்கி எறிந்த உடனே உனக்குத் திமிர் வருகின்றது. அதை வைத்து யாரை வேண்டுமென்றாலும் தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணம் தானே உனக்கு வருகின்றது என்று அந்த இடத்தில் அதைச் சுட்டிக் காட்டுகின்றார்.
அந்தத் திமிர் வருவதனால்… யாராவது கோபித்துச் சொன்னால் அல்லது தவறாகச் செய்தால்
1.இருக்கட்டும்… கொஞ்சம் சுண்டிப் பார்க்கலாம்
2.அப்போதுதான் அவருக்கு அந்த அனுபவம் வரும் என்று நான் இதைச் செய்தால் எப்படி இருக்கும்…?
குறைகள் தான் வரும்.
அதை நிவர்த்திப்பதற்குண்டான வழியைத் தானே நான் சொல்ல வேண்டும்.
1.இன்னென்ன காரணத்தால் குறைகள் ஏற்பட்டது
2.அதனால் அது உங்களை இப்படிப் பாதிக்கின்றது என்று வழி காட்ட வேண்டுமே தவிர
3.அங்கே குறையைக் குற்றமாக ஆக்கி அவரைத் தண்டிக்கும் நிலைகளுக்கு வரக்கூடாது.
குருநாதர் எனக்கு முதலில் இதைத் தான் உணர்த்தினார்.
என்னைப் பெரிய ஆளாகக் காட்டுவதற்கும்… என்னை மெச்சும்படி செய்வதற்கும்… உங்களுக்கும் அந்தச் சக்தியைக் கொடுத்து மரத்தை தூக்கி எறியச் செய்யலாம்.
அப்போது உங்களுக்கும் அதே எண்ணம் தான் வரும். மனிதனுக்குள் இது போன்ற சக்திகள் கிடைத்தால் உடனே… அப்போதே… அந்தத் திமிர் வரும்.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.நல்லது என்ற எண்ணத்தில் மற்றவருக்குச் சேவை செய்யும் நேரங்களில் இது போன்ற சில உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.
2.நாம் அல்ல… நாம் எடுத்துக் கொண்ட ஆர்வத் துணிவு குற்றத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதில் குற்றத்தைப் பெருக்கத்தான் செய்யும்.
குற்றம் என்ற நிலையில் அவர்கள் தாழ்ந்து போனால் “பேசாமல் போகின்றார்கள் பார்…” என்ற நிலை வந்துவிடும். அதைக் கொண்டு குற்றங்களை எப்பொதுமே மாற்ற முடியாது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
ஆகவே சேவை செய்ய நாம் அணுக வேண்டிய முறைகள் எப்படி இருக்க வேண்டும்…?
ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று அவர்களை மதித்து
1.அங்கே அமைதி பெறும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.அமைதி பெறச் செய்யும் அந்தச் சக்தியை கொண்டு வந்தால் தான் அது சீராகும்.
அது அல்லாதபடி மற்ற எத்தனையோ பெரிய நிலைகளைச் செய்தாலும்
1.ஞானத்தின் வழியில் தேர்வு பெறுவது கடினம் தான்…
2.ஒரு சிலர் தான் தேற முடியும்.
கூட்டமாக ஒரு பக்கம் வந்து கொண்டே இருந்தாலும் “இதிலே என்னடா இருக்கின்றது…?” என்று களைந்து வெளியில் போய்க் கொண்டு தான் இருப்பார்கள்…. வர முடியாது… இதை வளர்க்கவும் முடியாது.
உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா…!
ஞான வழியில் வளர்வதற்கு மாறாகத் “தன்னுடைய செயல்கள்தான் உண்மை…” என்று அதை நிலை நாட்டும் போது நல்லதை நிலைநாட்ட முடியாது போய் விடுகிறது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நல்லதை உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் “அஷ்டமி நவமி…”
1.கண் வழி தான் நாம் பெரும் பகுதி அனைத்தையும் கவருகின்றோம்… அது பதிவாக்குகின்றது
2.கண்ணின் காந்தப் புலனறிவு எதைக் கவர்கின்றதோ அதையே நம் ஆன்மாவாக மாற்றுகின்றது
3.இந்த உடலுடன் இணைந்தது எதுவோ அது பதிவானபின் உயிர் அந்த உணர்வின் தன்மை இழுக்கின்றது.
இப்படி நமக்குள் எத்தனை விதமான அணுக்கள் இருப்பினும் கண் கொண்டு பதிவாகி உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ காற்றிலிருந்து அதைப் பிரித்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.
மாற்றிய பின் “இந்த உயிர் தான் அதை இயக்குகின்றது… இது நவமி. அதாவது (உயிர் நுகர்ந்த உணர்வுகள்) எதன் உணர்ச்சிகளை எண்ணுகின்றோமோ “எண்ணம் நவமி…”
1.அஷ்டமி…! கண்கள் வழியாக நாம் ஒன்றை நுகரப்படும் பொழுது அது ஆன்மாவாக மாறினாலும் அது இயக்கச் சக்தி இல்லை…!
2.உணர்வின் தன்மை நுகர்ந்து உயிரிலே பட்டபின் இயக்கமாகிறது… எண்ணங்கள் தோன்றுகிறது நவமி.
3.ஆக… அஷ்டமி என்றாலும் “உயிருடன் ஒன்றி” அந்த உணர்வின் அறிவாக நாம் தெரிந்து கொள்வது தான்.
ஆகையினால் அஷ்டமி என்றால் இருள் சூழ்ந்த நிலைகள். இருளில் எதையும் செய்யாதீர்கள் என்பார்கள்.
ஆனால் இப்போது நாம் என்ன செய்கின்றோம்…? நவமியில் எதுவும் நல்லதைச் செய்யக்கூடாது அஷ்டமியிலும் எதையும் செய்யக்கூடாது… என்று இருக்கின்றோம்.
எதன் உணர்வின் தன்மை சேர்த்து உண்மையின் உணர்வை அறிகின்றோமோ அந்த அறிந்து கொண்ட உணர்வாக… அறியச் செய்வது யார்…? இந்தக் கண்கள் தான்.
ஆகவே
1.அறிந்து கொள்ளும் அறிவின் தன்மை கொண்டு எந்த நல்லதை எண்ணுகின்றோமோ அதன் அறிவாக நம் உயிர் இயக்கும்..
2.”அஷ்டமி… நவமி…” என்கிற பொழுது எதன் தெளிவின் தன்மை வருகின்றதோ அவ்வாறு இருக்கும்.
ஒருவர் வேதனைப்படுகின்றார்… அதை நாம் உற்றுப் பார்க்கும் போது அஷ்டமி என்றாலும் அதன் உணர்வுகள் இருள் சூழ்ந்த நிலைகள் பெற்றது. ஆகவே இருள் சூழச் செய்யும் “அந்தத் தீயதை எண்ணாதே…” என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றதே தவிர இவர்கள் சொன்னது போன்று அல்ல.
வேதனை அந்த இருள் சூழ்ந்த நிலையானால் உயிரில் படும் போது இருள் சூழச் செய்கின்றது. உயிரிலே பட்ட பின் நவமி ஒன்பதாவது நிலைகள் என்றாலும் வேதனை உணர்வுகள் நமக்குள் வருகின்றது. அந்த வேதனையை நவமி காலங்களில் எண்ணக்கூடாது
1.அஷ்டமி… இருள் சூழும் உணர்வுகளை கண் கொண்டு அதைத் தெரிந்து கொண்ட பின்
2.தீமையை நீக்கும் உணர்வுகளை நாம் நுகர்ந்து அறிவதற்குத் தான் இந்தக் கண்கள் பற்றி இங்கே உணர்த்தப்படுகிறது.
ஆனால் அந்தக் காலங்களில் நாம் நல்லது செய்ய வேண்டும் நல்லவராக ஆக வேண்டும் நல்ல பலன்களைப் பெற வேண்டும் என்று இந்த அடிப்படையில் எண்ணினால் அதன் உணர்வின் தன்மை நமக்குள் அதனின் அறிவாக அது இயக்குகின்றது
இதனால் தான் வேத நூல்களில் மூலங்களை இப்படிக் கொடுத்தது…
ஆனால் மூலத்தை மற்றவர்கள் யாரும் அறிந்து கொள்ளாதபடி அந்த இரண்டு நாளும் நல்லதை எண்ணாதே… நல்ல காரியத்தைச் செயல்படுத்தாதே…! என்று மாற்றி விட்டார்கள்.
நல்ல காரியத்தை நாம் முழுமையாகச் செய்தால் அது சந்தோஷப்படஸ் செய்யக்கூடியது. காரணம் நம் உயிர் அதன் உணர்வின் உணர்ச்சியாக அதை இயக்குகிறது.
அதே போன்று
1.ஒருவர் வேதனைப்படுகிறார் என்று கண் கொண்டு உற்று நோக்கினாலும்
2.அந்த உணர்வை நுகராதபடி அவன் நல்லவனாக வேண்டும் என்று அந்த உயர்ந்த உணர்வை எடுக்க வேண்டும்.
அஷ்டமி நவமி காலங்களிலே நல்ல காரியங்களைச் செய்து அந்த உணர்வின் தன்மை தெளிவாக்க வேண்டும் என்று தான் வேத நூல்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா…!
இருண்ட நிலைகளிலிருந்து நம் கண்தான் அங்கே சரியான வழியைக் காட்டுகின்றது உடலுக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை நாம் ஒரு தீமை என்ற நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது உயிர் அகக்கண்ணாக இருந்து அதை வெளிப்படுத்துகிறது.
அதனால் தான் நம் கண்களுக்கு கண்ணன் என்று தெளிவாக சாஸ்திரங்கள் கூறுகின்றது
ஆகவே கண் கொண்டு நாம் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர்தல் பெறுதல் வேண்டும். அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் நல்லதை இப்படி உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் அஷ்டமி நவமி…!
ஒளியாகும் பருவம் பெற்றவர்களப்பா நீங்கள் எல்லோரும்…!
ஒவ்வொரு மனிதனுக்கும்…
1.தன் தன் உடல் தேவைக்குகந்த எண்ண ஓட்டம் தான் ஓடிக் கொண்டே உள்ளதேயன்றி
2.தன் ஆத்மாவின் உயர்வை… உண்மையான சேவையில் உணரும் பக்குவம் இக்கலியில் வளரவில்லை.
இந்தப் பூமியின் சக்திக்கு வலு கூட்டக்கூடிய வலுத் தன்மைக்கு… இன்றைய இக்கலியின் உணர்வில் மனித ஆத்மாவின் சேவை உணர்வு செயல்படல் வேண்டும்.
சேவை என்பது… தான் பெற்ற உயர் ஞானத்தில் அறியும் உண்மை ஒளி சக்தியைக் கொண்டு ஒன்றை உருவாக்கி வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் சேவையை மனிதன் பெற வேண்டும்.
உடலின் சுகத்திற்குச் சேவையும்… புகழின் பேராசைக்குச் செல்லக்கூடிய சேவையும் உண்மையின் வளர்ச்சியின் சேவையல்ல…!
மனிதனின் உணர்வின் எண்ணத்தை ஒளியாக்கக் கூடிய ஆத்ம பலம் பெற வேண்டும்.
1.எந்த மனிதனின் உணர்வையும் பாதிக்கக்கூடிய எண்ணத்தையும்
2.அழிவின் குரோதத்தையும் எடுக்காமல்
3.தன் சரீரத்தையே சம குணம் கொண்ட நற்குணத்தின் சாந்தத்தைப் பெறவல்ல தன்மை பெற வேண்டும்.
இப்படிப்பட்ட செயல் வழியில் இவ்வாத்மாவை வளர்த்திடும் பக்குவத்தில் எந்த ஒரு ஈர்ப்பலைக்கும் ஆத்மா சிக்காமல் ஒளி சரீரமாகக் கூடிய முதிர்வு நிலையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
இப்பூமியில் வளரக் கூடிய தாவரங்களிலும் மற்ற கனி வளம் ஒவ்வொன்றிலுமே முதிர்வு நிலைக்குச் சேருவது மீண்டும் ஆவியாகக் கூடிய திராவக எண்ணை வித்து நிலை.
1.இப்பூமியையே சத்தாக்கி
2.அச்சத்தின் வளர்ச்சியின் முதிர்வு நிலைதான்
3.இப்பூமியில் இருந்து நாம் எடுக்கும் எண்ணை வித்துக்கள் யாவையும்.
4.இப்பூமியின் உலோகங்களான உலோகச் சத்தையும் வளர்ச்சியின் முதிர்வில் எடுத்து வளர்ந்தது தான் அந்த எண்ணை வித்து.
ஆவியாகி… குளிர்ந்து நீராகி… நீரின் தொடர்பு கொண்டு… தான் எடுக்கும் அமிலத்தில் ஓர் செடி வளர்ந்ததென்றால் அந்தச் சத்தை வித்தாக்குகின்றது.
சாதாரணமாக நீரை எடுத்து உறிஞ்சித்தான் கடலைச் செடியே வளர்கின்றது. அதன் வித்தான நிலக்கடலையிலிருந்து எண்ணைச் சத்தைப் பிரித்தெடுத்த பிறகு அந்த எண்ணை நீருடன் ஒட்டுவதில்லை.
மேலும் அந்த எண்ணையில் ஊன்றிக் கவனித்தோமென்றால்
1.நீரின் மேல் சிறிது அந்த எண்ணெயை விட்டால்
2.வானவில்லில் காணக்கூடிய ஏழு நிறங்களையும் இவ் எண்ணையிலும் காணுகின்றோம்.
அதாவது… நீரிலிருந்து உருவான தாவரங்களின் முதிர்வு வளர்ச்சியே
1.மீண்டும் நீருடன் ஒட்டாமல் எண்ணையாகி
2.எரி நிலையில் ஆவியாகிக் கூடிய வலுப் பெற்று விடுகின்றது.
அதைப் போன்று தான் மனிதனின் உணர்வின் எண்ணத்தால்
1.விண்ணிலிருந்து வரும் மின் காந்த சக்தியைச் சம குணமுடன் எடுத்து ஆத்ம பலத்தை வளர்த்து
2.இவ்வாத்மாவையே ஒளியாக்கக் கூடிய உயர் ஞானத்தின் ஒளி ஆத்மாக்களாக ஆக முடியும்
3.ஒளியாகும் பருவம் பெற்றது தான் (மனிதர்கள்) இப்பூமியின் வித்துக்களப்பா…!
இதை அறிந்து நீங்கள் ஒவ்வொருவரும் உயர் ஞான ஜோதிகளாக உருவாகுங்கள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
யாம் உபதேசிக்கும் உணர்வுகளைப் படிக்கும் சமயத்தில் பல உணர்வுடன் இருப்பார்கள்.
1. என் குடும்பத்தில் கஷ்டம்…
2. என் குடும்பத்தில் தொல்லை…
3. என் குடும்பத்தில் சண்டை…
4. என் பையனின் நிலைகள் இப்படி…
5. நான் கடன் கொடுத்தவன் ஏமாற்றுகின்றான்…
6. அவன் தரவே முடியாது என்கிறான்…
7. என் உடல் நிலை சரியில்லை..
8. என் குடும்பத்தில் என்னை எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்று இப்படிப் பல சிக்கல்களின் உணர்வு கொண்டு தான் இதைப் படிக்கின்றோம்.
எம்முடைய அருள்ஞான உபதேசங்களைப் படிக்கும் நேரம் அந்த மாதிரி அணுக்களானால் அந்த அணுவெல்லாம் தன் உணவாக எதைக் கேட்கும்…?
எவர் மேல் பகைமை கொண்டு சிக்கல்கள் ஆகி இந்த உணர்வின் தன்மை அணுவாக ஆனதோ… “அது அது…” தன் உணர்ச்சிகளை உந்தும்.
உபதேசிக்கும் உணர்வை எடுக்கவிடாது… “அது உந்தித் தடைப்படுத்தும்…” “நல்ல உண்மைகளைப் பெற முடியாதபடி… தடைப்படுத்திக் கொண்டிருக்கும்”.
1.தடைப்படுத்தும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்…
2.“எப்படியும் நீங்கள் அதிலிருந்து மீண்டிட வேண்டும்” என்று தான்
3.வலிமையான உணர்வு கொண்டு “உங்கள் கவனத்தை இங்கே திருப்பி”
4.அருள் உணர்வு கொண்டு உங்களுக்குள் பதிவு செய்து கொண்டுள்ளோம்.
அந்த மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் “அணுக்களாக விளைந்து” பகைமையற்ற உணர்வுகள் உங்கள் உடலிலே விளைய வேண்டும் என்ற நிலைக்கு உபதேசிக்கின்றோம்.
உங்கள் பார்வை பகைமையை உட்புகாது தடுக்கும் நிலையாக வர வேண்டும் என்றும்… “உங்கள் பார்வை” எங்கே பகைமை உருவாகின்றதோ “அங்கேயே… அதை அடக்கிடும் சக்தி” பெற வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.
பகைமை என்றால் விஷத் தன்மை கொண்ட விஞ்ஞான அறிவால் வெளிப்படுத்திய உணர்வுகள் “எத்தனையோ… எத்தனையோ…” நமக்கு முன் சந்தர்ப்பத்தால் வந்து கொண்டே இருக்கின்றது.
அத்தகைய தீமை செய்யும் நிலைகளை நாம் காண நேர்கின்றது. செவி வழி கேட்கவும் நேர்கின்றது.
இதைப் போல “செவி கொண்டு கேட்டுணர்ந்த உணர்வுகள் உடலுக்குள் பதிவாகி… கண் வழி கொண்டு நுகர்ந்தறிந்து…” அதன் வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்.. இயற்கையின் செயலாக்கங்களிலிருந்து “நம்மை எப்படி மீட்டிக் கொள்ள வேண்டும்..?” என்பதைத்தான் குருநாதர் காட்டிய வழிகளில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.
சூரியன் எவ்வாறு தன் உணர்வின் தன்மை கொண்டு மற்றவைகளை வளர்க்கின்றதோ அதைப் போன்று குருநாதர் நாம் எல்லோரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற ஆசையில் வளர்க்கின்றார்.
அவர் இன்று சூரியனாக இருக்கின்றார். அகஸ்தியன் பெற்ற உண்மைகளை அவர் கண்டார். அவர் வாழ்க்கையில் அறிந்துணர்ந்தார்.
1.அவர் வழியில் அவர் கண்ட உண்மைகளை எனக்குள் பதியச் செய்தார்.
2.“பதிந்த உணர்வுகளை…” மீண்டும் நினைவு கொண்டேன்.
3.அதை நுகரும்… அறியும்… சந்தர்ப்பத்தை எனக்குள் உருவாக்கினார்.
அதன் உணர்வின் தன்மை பெருகும் நிலைகளில்… “அவர் கவர்ந்து கொண்ட உண்மைகள்… அவர் வெளிப்படுதிய உணர்வுகள் எதுவோ” அதை நான் பருகினேன்.
எனக்குள் அந்த அணுவின் தன்மையை உருவாக்கினார். அது அணுவான பின் தன் உணவுக்காக ஏங்குகின்றது. அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது.
உணர்வை அறிகின்றேன். “அதையே” இங்கே உங்களிடம் சொல் வடிவில் வெளிப்படுத்துகின்றேன்.
அதைப் பெறும் வழியாக நீங்கள்
1.தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி அவர்கள் அருளால் குரு அருள் பெற்று
2.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொருவரும் ஏங்கிப் பெறுங்கள்.
3.அதனின் துணை கொண்டு தீமைகளை ஒடுங்கச் செய்யுங்கள்.
4.மகிழ்ந்து வாழ்ந்திடும் அருளாற்றல் பெறுங்கள்.
5.உங்கள் பார்வை எண்ணம் சொல் செயல் அனைத்தும் புனிதம் பெறும்.
இயந்திரத்தனம் கொண்ட உருக்களை உருவாக்குவதால் எந்த வளர்ச்சியும் கிடைக்காது
காட்சி:
ஓர் மனிதன் முயற்சியால் செயற்கையில் “பல இயந்திர உறுப்புகளைக் கொண்டு ஓர் வாகனத்தை உருவாக்கி…” பின் அதை ஓட்டுவதைப் போன்று தெரிகின்றது.
இன்னொரு மனிதன் “தன் உடலையே” இயந்திரத்தின் நிலைக்கொப்ப சர்க்கஸ் விளையாடுவதைப் போன்று உடலைப் பல கோணங்களில் வளைத்து வித்தைகள் செய்யும் காட்சி தெரிகின்றது.
சூரியனும்… சூரியக் குடும்பத்தின் நாற்பத்தி ஏழு மண்டலங்களும்… சனிக் குடும்பத்தின் பன்னிரண்டும்… பூமியைச் சுற்றியுள்ள இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் அதி தொடர்பு கொண்ட அருகிலுள்ள சில மண்டலங்களின் காட்சிகளும்… பூமியும்… பூமியின் வளர்ச்சியும்… பூமியின் எண்ணத்தின் உணர்வின் எண்ணம் கொண்ட மனிதச் செயலும் காட்சியாகத் தெரிகின்றன.
விளக்கம்:
(முதலில் தெரிந்த) வாகனத்தின் நிலை… மனிதனால் ஜடப் பொருள்களைக் கொண்டு மனிதனின் செயலின் தேவைக்கொப்ப உருவாக்கியது.
மனிதன் தன் எண்ணத்தைச் செலுத்தி எண்ணத்தின் உணர்வைக் கொண்டு தனக்கு இசைவுபட்ட வாகனத்தை உருவாக்க… ஜடப்பொருளைத் தன் எண்ணத்திற்கொப்ப உருவாக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றான்.
தன் தேவையின் உணர்வுக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தும் பொழுது தன் ஞானத்தை வளர்ச்சிப்படுத்தி தனக்குகந்த உருவாக்கும் செயல் தான் அது.
1.அத்தகைய வளர்ச்சியின் செயல் திறமை கொண்டு
2.சரீர உணர்வில் உடலில் ஓடக்கூடிய உயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே தன்னிச்சைக்குச் செயல்படுத்தி
3.ஓர் காரியத்தைக் கூர்மையாகத் தன் ஞானத்தின் வலுவில் பழக்கப்படுத்தும் செயல்படுத்தும் வழிமுறையினால்
4.மனிதனுடைய ஆத்மா குறுகிய நிலைக்கோ வலுவிழந்த தன்மைக்கோ செல்வதில்லை.
(இரண்டாது) அதே சமயம் மனிதனுடைய உடலையே வித்தையாக்கித் தன் உடலைப் பல நிலைகளில் அவ்வுறுப்புக்களைச் செயல்படுத்தும் பொழுது மனிதனுடைய உடலிலும் இயந்திர நிலைக்கொப்பத்தான் அந்தச் செயல் நிலை செல்கின்றது.
ஆகவே…
1.பிறிதொரு பொருளை உருவாக்குகின்ற இயந்திர நிலைக்கும்
2.உடலை இயந்திரம் போன்று சாகசம் புரிந்து… வித்தை காட்டும் வழி முறைக்கும் மாறுபாடு ஏதுமில்லை.
ஆனால் மனிதனின் உணர்வின் எண்ண ஓட்டமானது… இச்சரீர உயிராத்மா ஜீவன் பெற… இப்பூமியின் உணர்வின் எண்ணத்தில் செயல் புரிகிறது என்றால் அச்செயலுக்கு மூலத்தின் வழி முறை சூரியனும் சந்திரனும் சூரியக் குடும்பத்தின் நட்சத்திரக் கோள்களும் தான்…!
அப்படிப்பட்ட வழித் தொடரில்… பல உணர்வின் அமில வழி ஒளி சக்தியின் தொடர்பு கொண்டு இச்சரீரத்தின் உணர்வின் எண்ண ஓட்டம் எப்படிக் கிடைத்தது…? என்பதை மனிதன் தன்னைத் தானே உணர்ந்து… சிந்தனையில் உணரல் வேண்டும்.
ராகு கேது சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி என்ற நவக் கோள்களை எல்லாம் நவக்கிரகமாக அன்றே சித்தன் பூமிக்கும் நவக்கோள்களுக்கும் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் காட்டினான்.
பூமியின் சுழற்சியில் பூமிக்கு அருகிலுள்ள சந்திரனின் தொடர்பைக் கொண்டு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பூமியில் ஏற்படக் கூடிய தொடர் போன்றே நவக்கோள்களின் தொடர்பில் இருபத்தியேழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டு நவக்கோளையும் அதனின் இயக்கங்களையும் காட்டினான்.
1.அதே சமயத்தில் நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்பில் வரும் அமிலத் தன்மைகளையும்
2.அதனால் இப்பூமியின் தொடர்புடன் சுழலுகின்ற காந்த ஒளி அலையில் உருவாகக்கூடிய உயர் சக்திகளின் குண நிலையையும்
3.மனிதப் பிறப்பும் தாவரங்களின் குணம் மணம் சுவை ஜீவன் யாவையுமே உருவாகக்கூடிய தன்மையையும்
4.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று ஈர்ப்பு கொண்டு சுழலக்கூடிய கால மாற்றத்தில் வளரக்கூடிய உண்மைகளை
5.பல ஆயிரம் காலங்களுக்கு முதலிலேயே மகரிஷிகளினால் பூமியின் ஜாதகங்கள் குறிக்கப்பட்டன.
அந்தந்தக் கோள்களின் ஈர்ப்பின் தொடர்புக்கு ஒத்த கால மாற்றங்களினால் நம் பூமியின் செயலில் செயல்படும் வழி முறைதனை “இந்த நாளில்… இந்த நேரத்தில் மழை வரும்…! என்பதையும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்ற கிரகணங்களின் சந்திப்பின் காலத்தையும்…” குறித்தனர்.
அன்றைய மகரிஷிகளால் வானசாஸ்திர உண்மை ஞானத்தில் அறியப்பட்ட வழித் தொடரைத்தான் இன்றைய விஞ்ஞானமும் பேசுகின்றது. ஆனால்… மெய் வழி அறிந்து வந்த அந்த வளர்ச்சி விஞ்ஞான சாஸ்திரத்தால் “தன் ஞானம்” இன்று மறைக்கப்பட்டு விட்டது.
1.உணர்வின் எண்ண ஓட்டத்துடன் கூடிய தன் ஞானத்தின் உயர் ஞானத்தை
2.இப்பூமியில் உணர்வின் எண்ணத்தில் மனித ஆத்மாக்கள் வாழ்ந்த விதத்தை வளர்த்த
3.ரிஷிகளின் வம்சத்தின் தொடரின் ஜீவ நிலை வளரும் சக்தி நிலை வளர்ந்தால்தான்
4.மீண்டும் உணர்வின் எண்ணத்தின் செயல் வளர்ச்சி மனிதச் செயலின்
5.உயர் ஞானம் வளரக்கூடிய ஜீவ உருக்களை உருவாக்க முடியும்.
மனிதன் உருவாக்கிய இயந்திரங்களோ மற்ற தாவரங்களோ எல்லாமே தன் தன் தேவைக்குகந்த… தன் தேவையினால் அழியக் கூடியவை தான். அதனால் இப்பூமியின் சக்திக்கு வலுகூட்டக் கூடிய பலனோ பயனோ இல்லை.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!
இரக்கப்படும் குணத்தைப் பற்றிய உண்மை – “நன்றிக்கடன்”
உதாரணமாக நாம் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். அப்பொழுது பக்கத்திலே ஒருவர் கடுமையாக வேதனைப்படுகின்றார்… பார்க்கின்றோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள்.
இதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் அவரிடம் அதிகமான பழக்கமில்லை. இரயிலில் போகும் பொழுது தான் அவரிடம் நாம் யதார்த்தமாகப் பழகுகின்றோம்.
1.அவர் படும் வேதனையை நாம் மிகுந்த இரக்கத்துடன் பார்க்கின்றோம்.
2.ஆனால் அவருடன் கூட வந்தவர்கள் சலிப்பாக சஞ்சலமாகத் தான் பேசுவார்கள்.
3.ஏனென்றால் அடிக்கடி அவர்களிடம் துயரப்பட்டுப் பழகியதால் அந்த நிலை.
இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இந்த மாதிரி அடிக்கடி அது வேண்டும்… இது வேண்டும்… என்று கேட்கிறாய்…? என்பார்கள்.
ஆனால் நாம் இரக்க மனம் கொண்டு ஏனம்மா…! என்ன செய்கிறது…? உனக்கு என்ன வேண்டும்…? என்று இரக்கத்துடன் கேட்கின்றோம். ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே நாம் பழகியது…!
1.அது அவருக்குள் பதிவாகிறது.
2.அவருக்கு ஆதரவாக நாம் அப்படிப் பேசுகின்றோம்.
3.பண்புடன் நாம் அங்கே சொல்லப்படும் பொழுது அவர்களுக்குக் கொஞ்சம் தணிவாகின்றது.
4.இந்த உணர்வு “அவருடைய உடலில் வலுப்பெற்று விடுகின்றது…”
நாம் என்ன நினைக்கின்றோம்…? அந்த அம்மா இவ்வளவு தூரம் சிரமப்படுகின்றது ஆனால் கூட வந்தவர்கள் கொஞ்சம் கூட இரக்கமில்லாதபடி இப்படிப் பேசுகிறார்கள்… சமுதாயம் இப்படி இருக்கின்றதே…! என்று “அவர்கள் உணர்வை நமக்குள் பதிவு செய்கிறோம்…”
ஆனால் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் அவரை சார்ந்தவர்கள் வரப்படும் பொழுது நோயாளிக்குள் எண்ணங்கள் அதிகமாகிறது.
பார்…! ஆரம்பத்திலிருந்து இவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தோம்… எத்தனை வசதிகள் செய்தோம்… நல்லது செய்தோம்…! நம்மை இவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை…!
ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது அந்த மகாராசி எனக்கு அவ்வளவு ஆதரவாக உதவி செய்தார்… எந்த அளவுக்கு உபசாரம் செய்தார்…! என்று இந்த உணர்வுகள் வலுப்பெறுகின்றது.
நாம் அவர்கள் பட்ட வேதனையை வலுப்பெற்று வைத்திருக்கின்றோம்
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…
2.நம்முடைய உணர்வுகள் பதிவானது அங்கே….
3.அவர் வீட்டில் அவரைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பு.
கடைசியில் உடலை விட்டுச் செல்லும் போது தனக்கு இரயில் பிரயாணத்தில் உதவி செய்த நல்லவர் மீது… அதாவது நம் மீது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது.
விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்…!
அப்படி எண்ணிய உடனே அந்த உயிரான்மா
1.நாம் இங்கே இருந்தாலும் எதனின் வலுப்பெற்றதோ இங்கே இழுத்துக் கொண்டு வந்து விடுகிறது.
2.நம் உடலில் புகுந்து விடுகிறது… நமக்குத் தெரியாது… ஒன்றுமே தெரியாது.
ஆனால் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்படைந்த உணர்வைப் பதிவு செய்தது… “எல்லோரும் பாவிகள்” என்று அங்கே அந்த எண்ண அலைகளைப் பரப்புகின்றது.
அந்தச் சாப அலைகள் அந்தக் குடும்பத்தையே சாடுகின்றது. இந்த உடலில் விளைந்தது அங்கே போகின்றது
தன் மீது பற்று கொண்ட உணர்வின் நினைவுடன் “மகராசி எனக்கு உதவி செய்தார்…” என்று அவர் உடலில் விளைந்தது இங்கே வந்து… விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்குமோ அது போன்று அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வந்து விடுகின்றது.
கடைசி நேரத்தில்
1.என்னென்ன வேதனைப்பட்டுப் புலம்பல் ஆனதோ
2.தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பாவிகள் என்று வெறுப்புடன் எப்படிப் பேசியதோ
3.அது எல்லாம் இங்கே வந்து அவர் செயல்படுத்தியது போன்றே தன் குடும்பத்தில் வெறுப்பாகப் பேசும்.
குடும்பத்தில் சிலருடைய நடவடிக்கைளைப் பார்க்கலாம்…! நேற்று வரை எல்லாம் செய்தார்… இப்பொழுது என்னமோ தெரியவில்லை “கண்டபடி வெறுத்துப் பேசுகின்றார்…! நல்லது செய்தவர்தான்… ஆனால் வெறுத்துப் பேசுகின்றார் என்று அவருடைய செயலாக்கங்கள் திடீரென்று மாறுவதைப் பார்க்கலாம்.
சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா.
இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே ஏற்படக்கூடிய சில தீங்கான நிலைகள்…!
இதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோம்.
1.அறியாமல் வரக்கூடிய தீங்குகளை… அதனின் உண்மையை உணர்ந்து
2.ஞானிகள் காட்டிய வழியில் அதை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.
பிறருக்கு நாம் எப்படி உதவி செய்ய வேண்டும்…? உதவி செய்தாலும் அவர் பட்ட துன்பங்கள வேதனைகளும் நமக்குள் வராதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்…?
1.நம்மையும் காத்து பிறரையும் காக்கும் சக்தியாக
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்பதற்குத்தான்
3.இதை உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).
இராமாயணம் சாதாரணமானது அல்ல
சந்தர்ப்பத்தால் நமக்குள் பதிவான உணர்வுகள்… அது எதன் வலுவோ அதனைக் கொண்டு நம்மை இயக்குகின்றது. எதன் உணர்வு நம் உடலுக்குள் அதிகமாகின்றதோ “உள் நின்று இயக்குவது தான்…” அதன் தன்மை.
அதனைத் தான் தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றனர்.
ஒருவன் சண்டை இடுகிறான் என்றால்
1.அது என்ன…? என்று வேடிக்கை பார்க்க மனதினைச் செலுத்துகின்றோம்…
2.அதனை நாம் கவர்கின்றோம்… அது தான் வசிஷ்டர்.
எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மை கவருகின்றோமோ… கவர்ந்த உணர்வுகள்
1.நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டாலும்…
2.இந்த உணர்வுகள் நமக்குள் பிரம்மமாகி (சிருஷ்டியாகி) விடுகின்றது
கவர்ந்து கொண்ட உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக்கும் தன்மை பெறுகின்றது என்பது தான் வசிஷ்டர் பிரம்மகுரு. பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு.
ஒருவனின் செயலை நாம் பார்க்கும் போது
1.அவன் என்ன செய்கின்றான்… ஏது செய்கின்றான்…?
2.தவறு செய்கின்றானா…? குற்றங்கள் செய்கின்றானா…?
3.ரொம்பவும் பிழைகள் செய்கின்றானா…? பிறரை வேதனைப்படுத்துகின்றானா…? என்று உற்று நோக்கினால்
4.அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகி உயிரிலே பட்டபின் வசிஷ்டர் பிரம்மமாகின்றது.
சூரியனிலிருந்து வெளிப்படக்கூடியது வெப்பம் காந்தம் விஷம். அதிலே காந்தம் ஒரு சத்தினைக் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர்… ஆண்பாலாக மாறுகின்றது.
ஆண்பாலாக மாறும் பொழுது பிரம்மம் என்று பெயர். பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… எந்தச் சத்தின் தன்மை அது இயக்குகின்றதோ “அந்த ஞானத்தின் வழி அந்த அணுக்கள் இயக்கும்…” என்று பொருள்.
1.இந்த உலகம் எப்படி இயக்குகின்றது…? இயற்கை நம்மை எப்படி இயக்குகின்றது…?
2.எதன் வழி நாம் செல்கின்றோம்…?
3.நாம் குற்றவாளியா… குற்றமற்றவர்களா…? குற்றங்கள் செய்வதன் காரணம் என்ன…?
4.குற்றத்தின் இயல்பை உண்டாக்குவது எது…? என்ற நிலையில்
5.நம்மை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் இதை முதலிலே உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்.
இந்த உண்மையின் இயக்கங்களை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம்.
உடலில் தூசி பட்டால் பிசு…பிசு… என்று ஆகிறது. ஒரு பக்கம் மிளகாய் தூற்றுகின்றனர் என்றால் அது நம் மீது பட்டால் எரிகின்றது விஷத்தன்மையான பொருள்கள் நம் மீது பட்டு விட்டால் அரிக்கின்றது.
1.நாம் தவறு செய்கின்றோமா…? இல்லை.
2.ஆனால் காற்றுடன் காற்று கலந்து வந்து நம் மீது மோதும் பொழுது இத்தகைய உணர்ச்சிகளைத் தருகிறது.
இதே போல் தான் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் செல்லப்படும் போது “தீமை என்ற உணர்வுகளும்” நமக்குள் வருகிறது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரைக் குற்றவாளியாக ஆக்குவதற்கு முன்
1.அந்தக் குற்றங்கள் எப்படி எதனால் செயல்படுத்தப்படுகிறது…?
2.அவரா…? சந்தர்ப்பமா… சூழ்நிலையா…? என்று இந்த உணர்வுகளைத் தெரிந்து
3.அந்தக் குற்றத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்…
4.தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான நிலை பெற வேண்டும் என்று உணர்வினை நுகர்ந்து பழக வேண்டும்.
அப்படி அல்லாதபடி அவர் குற்ற இயல்புகள் நமக்குள் வந்துவிட்டால் அதன் உணர்வு நம்மை இயக்கி… அதன் உணர்வினை நாம் அறிந்து… அதன் உணர்ச்சியின் தன்மை நம் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது நாம் கவர்ந்தது அனைத்தும் வசிஷ்டர்.
இரத்தத்தில் கலந்து கொண்ட பின் இந்திரலோகம் என்றாலும்… அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பிரம்மமாகி உடலுடன் ஐக்கியமாகி விடுகிறது.
பிரம்மகுருவின் மனைவி அருந்ததி…! இராமாயணத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. காரணம் இராமாயணம் சாதாரணமானது அல்ல.
1.நாம் நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எண்ணங்கள் எப்படி வருகின்றது…?
2.எண்ணத்தின் உணர்ச்சிகள் உடலை எப்படி இயக்குகின்றது…?
3.அந்த உணர்ச்சியின் உணர்வுகள் நம் உடலில் எப்படி விளைகின்றது…? என்பதை
4.இராமாயணக் காவியத்தில் வான்மீகி உணர்த்தியுள்ளார்.
ஆத்ம சுத்தி செய்வதன் மூலக்கூறு
புலி தன் குட்டிகளுடன் இன்பத்தைக் காணுகின்றது அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தி இம்சித்துத்தான் தன் உணவை உட்கொண்டு வாழுகின்றது.
தன் குட்டியைக் கண்டு மகிழ்ந்து வாழுகின்றது ஆனால் மற்றொன்றை இம்சிக்கும் பொழுது அது இரையாக்கி ரசித்து வாழ்கின்றது இருந்தாலும் தன் இரையை எடுத்து ரசித்து உட்கொள்ளும் பொழுது
1.தனது இனம் அருகே வந்தாலும் கூட வெறுக்கின்றது.
2.பசியின் உந்துதல் வேகம் அதிகமாகும் பொழுது குட்டியாக இருந்தாலும் கூட விரட்டுகின்றது..
இரை உட்கொள்ளும் போது பார்க்கலாம். அதனுடைய குட்டி இரையைத் தன் பக்கம் அதிகமாக இழுத்தால் போதும். குட்டிக்குப் பாலை அரவணைத்துக் கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் இரையை இப்படி இழுக்கும்பொழுது உடனே விர்ர்ர்…” என்று ஒரு தட்டு தட்டும்.
ஏனென்றால் தன்னுடைய வாழ்க்கை என்று நிலை வரும் பொழுது தன் இனமாக இருந்தாலும் தனக்கு இரை கிடைப்பதைத் தடை செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகிவிடுகிறது.
மனிதன் நாம் நம்முடைய குழந்தைகளை வளர்த்தாலும் கூட நாம் சொன்னபடி குழந்தை கேட்கவில்லை என்றால் என்ன வருகிறது…?
1.அவன் மீது வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
2.”இவன் இப்படித்தான் இருப்பான்…” என்ற உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்
அது ஒரு தரம் பதிவாகிவிட்டால் பல காலம் அவன் மீது பேரன்பை வளர்த்து வைத்திருந்தாலும் ஒரு தரம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வு முன்னணியில் வந்து விடுகின்றது.
அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பான எண்ணங்களே வருகின்றது… அது வளர்ச்சியாகும். ஆனால்
1.அவனை நல்லவனாக மாற்றும் நிலைகள் நமக்குள் மாறி விடுகின்றது.
2.நமக்குள் அவன் மீது இருக்கும் பற்றைத்தான் மாற்றும்.
3.ஆனால் அவன் மீது வைத்திருக்கும் பற்றில் தீமையிலிருந்து அவனை மாற்றி நல்வழிக்குக் கொண்டு வரும் எண்ணம் வராது.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!
இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கங்களில் “தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…” ஆக இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் இரவிலே புலன் அடங்கி நாம் தூங்கும் நேரத்தில் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்.
தினசரி காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ தடவை ஆத்ம சுத்தி செய்தாலும் தூங்கப் போகும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது
1.நம் நினைவை துருவ மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து
2.துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து
4.அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
5.அதாவது தீமையான உணர்வுகளுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
6.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பற்றும்படி செய்தல் வேண்டும்
இதுதான் ஆத்ம சுத்தி செய்வதில் உள்ள “முக்கியமான மூலக்கூறு…”
ஒரு மிருகம் முன்னாடி சென்றால் அதன் பின் மிருகக்கூட்டம் செல்வது போல் தான் இன்றைய மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது
இப்பூமியின் காற்று மண்டலமே விஷமாகிக் கொண்டுள்ள இக்கலியின் கடைசியில் மனிதனின் உணர்வுகளெல்லாம்…
1.மனிதன் உண்ணக் கூடிய உணவு முறையாலும்
2.வாழ்க்கை நெறியில் நாகரீகத்தின் வளர்ச்சியாலும்
3.மிருகங்களின் நிலையில் எப்படி ஆடு மாடுகள் ஒன்றைப் போன்றே பிறிதொன்றும் செய்கின்றதுவோ (ஒரு ஆடு போனால் அதற்குப் பின்னாடி எல்லா ஆடுகளுமே செல்வது போல்)
4.அதைப் போன்று மனிதனின் வீரியத் தன்மை தன்னைத்தானே தான் உணராமல்
5.மிருகத்தின் நிலைக்கொப்பத் தான் மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது.
அந்தந்தச் சரீரத்திற்குகந்த அமிலத்தின் வீரிய குணத்தைக் கொண்டு அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்கித் “தன் அறிவால் உயர் தன்மை பெறக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு…!” என்பதை அறியவில்லை… உணரவும் இல்லை.
இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரங்களின் தொடர்பில் உயிர் பெற்ற ஜீவ ஆத்மாக்கள் அனைத்துமே ஒன்று போல இருப்பதில்லை.
எந்தெந்த நட்சத்திரத்தின் வலுவுடன்… எந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு நிலையுடன் தொடர்பு கொண்டு இப்பூமி சுழல்கின்றதோ அத்தருணத்தில் உயிர் பெற்ற ஜீவாத்மாக்கள்
1.குணங்களிலும்…
2.செயல்களிலும்…
3.உருவ மாற்றத்திலும்…
4.வண்ணத்திலும்…
5.ஒருவரை ஒத்து ஒருவரில்லாமல் தான் இருக்கும்.
இதை முதலில் உணர்ந்து கொண்டு… மனிதனுக்குண்டான “உயிர்த் தன்மையின் உயர்வு நிலையை…” உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.
சூரியன் எப்படி நாற்பத்தி ஏழு கோள்களின் தொடர்புடன் தன்னையும் வளர்த்து… தன் குடும்பக் கோள்களின் தொடர்பிலும் வளர்ச்சி பெற்றுச் சுழலும் செயல் நடக்கின்றதோ… அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்துக்கும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சி தொடர் நட்சத்திர மண்டலங்கள் உண்டு.
நம் பூமியின் தொடர் நட்சத்திரம் இருபத்தி ஏழும் பூமியுடன் இருபத்து எட்டாகச் சுழலும் தொடர்ச்சியில் பூமியின் ஈர்ப்பு வளர்ச்சிக்குத் துணைக் கோள்களாக இந்நட்சத்திரங்களின் வலுவைக் கொண்டுதான் “ஜீவ ஞான சரீரங்கள் (மனிதர்கள்)” இந்தப் பூமியில் மட்டுமே உருப்பெற்று உள்ளது.
அதாவது ஜீவ அலையின் ஞான ஒளி உணர்வின் எண்ணத்தின் மையக் கருவின் செயல் வலுப் பெற்று வாழக்கூடிய தகுதி நாற்பத்தி எட்டுக் கோள்களில் இப்பூமிக்கு மட்டும் உண்டு என்றால் இப்பூமியைச் சுற்றியுள்ள வலுக் கொண்ட இவ் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் “ஜீவன் கொடுக்கும் ஜீவ நட்சத்திரங்கள் தான்…!”
ஜீவனை வளர்க்கவல்ல அத்தகைய ஜீவ நட்சத்திரங்களும் நட்சத்திரங்களிலேயே பல மாற்றுச் செயலை நிலைக்கத்தக்க பல கோடி தன்மைகள் கொண்ட நட்சத்திரங்களும் உண்டு.
இப்பூமியின் வடிவ நிலையையும் இப்பூமியின் தன்மையையும் ஆதிகாலத்தில் ஒலி ஒளி தொடர்பு நிலை விஞ்ஞான ரீதியில் பெறாத காலத்தில்…
1.வான சாஸ்திரத்தின் பல உண்மைகளையும்
2.பூமியின் இயற்கை மாற்றத்தின் நிலைகளையும்
3.இப்பூமிக்கும் மற்றக் கோள்களின் சந்திப்பு நிலைகளையும்
4.இவ் இருபத்தி ஏழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டுதான் மனிதன்
5.விஞ்ஞானம் வளராத காலத்தில் தன் ஞானத்தால் அன்றே அறிந்தான்.
பல ஆயிரம் ஆண்டு காலங்களுக்கு முன்பு ஆழ்கடலில் பயணம் செய்தவர்களெல்லாம்
1.துருவ நட்சத்திரத்தையும் விடிவெள்ளி போன்ற சில நட்சத்திரங்களையும்
2.இப்பூமியின் ஈர்ப்புத் தொடர்பில் பூமியின் ஈர்ப்புடனே சுழலக்கூடிய நிலையை அறிந்த ஞானத்தால்
3.இயற்கை நிலைகளை மனிதர்கள் அன்றே அறிந்தார்கள்.
அவர்கள் அறிந்த வழியிலேயே நம் அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்க வேண்டும் என்பதனை உணர்ந்து அந்த ஞானிகள் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.
ஏனென்றால் மனிதனுடைய உணர்வின் எண்ண ஜீவ சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளியை “எந்நிலை கொண்டு அதிலே வீரியத் தன்மையைப் பெற வேண்டும்…?” என்ற பக்குவத்தைத்தான் பல வழிகளில் இது நாள் வரை போதித்துள்ளோம்.
“கலியும்… கல்கியும்”
அன்றைய மெய் ஞானிகளின் செயலால்… மனித ஞானத்தை உயர் ஞானத்தில் மெய் ஞானப்படுத்தச் செயல்படுத்திய சக்தியின் தொடர் இப்பூமியில் உள்ளதனால்தான் மனித அறிவே வளரக் கூடிய வளர்ச்சி இன்றும் உள்ளது.
இருந்தாலும் இன்று… இப்பூமியில் உள்ள பல கோடி ஆத்மாக்களின் உணர்வின் எண்ண சுவாச அலையின் வீரியத் தன்மை…
1.விஞ்ஞான வளர்ச்சித் தொடரில் செயல்படச் செயல்பட
2.மனித உணர்வின் வீரிய காந்த சுவாச அலையின் தொடர் அதிகப்பட
3.அதற்குகந்த உணவான தாவர இன வளர்ச்சி நிலை குறைவுபட்டு விட்டது.
4.அதனால் மெய் ஞானிகளின் செயல் தன்மைக்கு வேண்டிய ஞான வளர்ச்சிக்கு
5.அந்த ஞானிகள் செயல் நிலை யாவும் இப்பூமியின் அடுத்த பிரளயத்தில் கல்கியின் செயலுக்குச் செயலாகப் போகின்றது.
பொருளைச் சமைக்கவல்ல பக்குவமான உஷ்ணத்தைத் தந்தால் அந்தப் பக்குவப்பட்ட பதத்தில் அதைச் சமைத்து உணவாக உட்கொள்ளலாம்.
ஆனால் அதி உஷ்ணம் ஏறும் பொழுது எல்லாமே கருகும் நிலை ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட உஷ்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய காலமாகத் தான் இன்றைய “கலியின் மாற்று நிலை…!”
ஏனென்றால் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.மனித ஜீவாத்மாக்களின் காந்த உணர்வின் ஒளியின் வலுவிற்கு வலுக்கூட்டும் தாவர இனங்களின் வளர்ச்சி குறைந்து விட்டது.
2.இப்பூமிக்குள் இருக்கும் கனி வளங்களையும் செயற்கைக்காக மனிதன் பிரித்தெடுத்து விட்டான்.. அதனுடைய வளர்ச்சியும் குறைந்து விட்டது
3.அதே சமயத்தில் செயற்கை மின் காந்த ஒலி/ஒளி சக்திகளையும் இக்காற்றலையில் அதிகமாக கலக்க விட்டுள்ளனர்
இத்தனை விபரீத பாதிப்புகளால்… மனித எண்ண உணர்வுகள் தன் ஞானத்தை உயர் ஞானமாக்கி… மெய் ஞானத்தால் மனித சக்தியின் வளர்ச்சி நிலை வளரும்… அறிவின் உருவில் உயரும் நிலையைக் காட்டிலும்… குறுகிய நிலை கொண்டு மனிதனின் வீரியத் தன்மை விஷம் கொண்ட நிலைக்கே சென்று கொண்டுள்ளது.
இத்தகைய தருணத்தில்…
1.யாம் சொன்ன தியான முறையால் இக்கலியின் மாற்றத்திற்குள்..
2.தன்னைத்தானே மனிதன் உணரும் பக்குவச் செயலில் பதமாக வேண்டும்.
நற்குணத்தை வளர்க்கும் அந்தத் தியானத்தையும் சகல மாமகரிஷிகளின் தொடர்பு எண்ணத்தையும் தியானத்தால் கூட்டிக் கொள்ளும் வழிக்கு வர வேண்டும்.
இந்தச் சரீரத்தில் இருக்கக்கூடிய காலத்திலேயே இச்சரீரத்தையே மெய் ஞான உணர்வு பெறக்கூடிய ஒளித் தன்மையைச் செயல்படுத்திக் கொண்டோமானால் இச்சரீரத்தையே ஒளிச் சரீரமாக ஒளிரும் நிலையை நாம் நடைமுறையில் காண முடியும்.
1.உணர்வில் முன் கூட்டி அறியக் கூடிய சூட்சுமத்தைப் பெறக் கூடிய செயலினால்
2.ரிஷி சக்திகளின் தொடர்பை இச்சரீரமே ஏற்கும் செயலுக்கு
3.இச்சரீரமே ஆத்மாவின் ஒளியை ஒளிர வைக்கும் இயந்திரமாகவும் செயலாக்க முடியும்.
இந்த உடலுடன் வாழும் நிலையில்… உயர் காந்த மெய் ஞான உணர்வுடன் நாம் எடுக்கக் கூடிய மூச்சலையின் சுவாசக் காற்று இப்பூமியில் பதியும் பொழுது
1.ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு…
2.ரிஷி சக்தியின் செயலுக்காக இச்சரீர உணர்வின் மெய் ஞான மூச்சலையைப் பரவச் செய்தால்
3.இப்பூமி எத்தனை ஆண்டு காலங்கள் செயல்பட்டாலும் ஜீவ உடலுடன் எடுக்கக் கூடிய மூச்சலையில்
4.அந்த மெய் ஞானிகளின் மூச்சலைகள்… அது என்றுமே வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் வித்தாக
5.ஜீவித உணர்வுகளுக்கு ஜீவ உணர்வு செயலாய்ச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு
தியானம் செய்யும் அன்பர்களுக்குள் கொஞ்சம் குறையாக வந்து விட்டால் குறையை வளர்த்துக் கொள்ளத்தான் முடியுமே தவிர “மகரிஷிகள் உணர்வை எடுக்க முடியாது…”
1.கூட்டமைப்பாக இருக்கும் ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்ற நிலை வரும் ஆனால் குறைகள் தான் வளரும்…
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்பது முதலில் வராது.
தன்னுடைய நிலைகள் முன்னணியில் எது போகும்…?
எதன் வளர்ச்சி வந்ததோ நம்மை அறியாமலே ஸ்தாபனத்தின் உணர்வுகள் குரு கொடுத்த உணர்வுகளை பெறாதபடி தடுக்கும் நிலை தான் வருமே தவிர இதை வளர்க்க முடியாது. காப்பதாக நினைப்போம்… அதைக் காக்க முடியாது.
காப்பதாக நினைத்துக் கொண்ட பற்று என்ன செய்யும்…?
1.உயர வேண்டும் என்று ஆசை இருக்கும்
2.ஆனால் காக்க வேண்டும் என்ற நிலை இருக்காது
3.நம்மை அறியாமலே காக்கும் நிலைகள் தவறிவிடும்.
காக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கும் ஆனால் அந்தப் பற்றின் தன்மை என்ன செய்யும்…? அறியாதபடி “பிழைகளாக” வந்துவிடும்.
எப்படி…?
நான் (ஞானகுரு) ஸ்பின்னிங் மில்லுக்குள் இயந்திரம் எவ்வாறு ஓடுகின்றது என்று பார்ப்பதற்குச் செல்கிறேன். அப்பொழுது என்ன நடந்தது…?
வழியில் இருந்த சாக்கடையைத்தான் நான் கவனித்தேன் தலைக்கு மேல் உயர்ந்த இடத்தில் இருக்கும் கம்பியை நான் பார்க்க முடியவில்லை.
ஆனால் உங்களுக்கு நான் எல்லாவற்றையும் உபதேசிக்கின்றேன் அதே சமயத்தில் அந்த அவசர காலம் அதில் மோதுகின்றது மோதும் பொழுது மண்டையில் இடித்து விட்டது.
1.தவறிப் போய் இடித்து இருந்தால் ஆள் அவுட் ஆயிருக்கும் (நான் இறந்திருப்பேன்). அந்த மாதிரியான இடத்தில் தான் மோதி இருக்கின்றது.
2.ஆகவே… தவறுகள் யார் எதைச் செய்தாலும் அந்த சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது…?
3.அதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் செல்லும் பாதைகளில் அது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது அந்த தீமை நம்மை இயக்கி விடாதபடி அந்த நேரத்தில் “நம்மைப் பாதுகாக்கும் உணர்வை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்…”
ஒரு சந்தர்ப்பம் இப்படி நடந்து விட்டது என்றால் உடனே
1.ஈஸ்வரா…! என்று அந்த உணர்வை நுகர வேண்டும். உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நாம் தடைப்படுத்திப் பழக வேண்டும்.
உதாராணமாக சமையலே செய்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பிலே வைத்திருக்கின்றோம்… அதிலே வேறு ஒரு பொருள் தவறி விழுந்து விட்டால் என்ன ஆகும்…? ஒரு பல்லியே விழுந்து விட்டால் சமைத்த பொருள் அனைத்தும் விஷமாக மாறிவிடும்.
நல்ல குழம்பை வைக்கின்றோம் அதிலே கசப்பை அதிகமாகப் போட்டு விட்டால் குழம்பின் ருசி கேட்டுவிடும் அதை நாம் மாற்ற வேண்டும் அல்லவா…?
இதைப் போன்று நாம் நல்ல செயல்கள் செயல்படும் பொழுது
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் “வந்தே தீரும்…!”
2.அப்படி வரும் பொழுது அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.
அதை நீக்குவதற்கு வழி…?
அதற்குத் தான் “குரு வழி” என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடனுக்குடன் தீமைகளைத் தடைப்படுத்த வேண்டும் என்று திரும்பத் திரும்ப உங்களுக்குச் சொல்வது…!
இதை இராமாயணத்தில் தெளிவாகவே காட்டுகின்றார்கள். இராமன் குகை மீது இருக்கும் பாறையைத் தட்டி வாலி வெளியே வர முடியாதபடி பாதையை மூடி விடுகின்றான். வாலி செயல் இழந்து விடுகிறான்.
குகை மேல் என்கிற பொழுது…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இங்கே நம் புருவ மத்தியில் வைத்து மூடி விட்டால்
2.தீமை உள்ளே புகுவதற்கு வாய்ப்பு இல்லை… புறத்தால் தடுக்கப்படுகிறது.
உடலுக்குள் வாலி என்ற (தீமை செய்யும்) உணர்வுகள் அதிகமாகி விட்டால் இரண்யன் நம் நல்ல குணங்களைக் கொன்றுவிடும் ஆகவே தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்து அதை நிறுத்த வேண்டும் என்று சொல்வது.
எல்லோருக்கும் நன்மை செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “சுக்ரீவன்” என்று காரணப் பெயராக வைக்கிறார்கள்.
நம் மீது மோதும் தீமைகளைத் தூய்மைப்படுத்தி ஆன்மாவிற்குக் கொடுக்க வேண்டும்
இச்சரீர இயக்கத்தில் இன்று வாழக் கூடிய காலங்களில்… உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையில்… நாம் எடுக்கக்கூடிய சுவாசத்தின் உணர்வு மற்ற எந்த உணர்வின் அலையுடன் மோதினாலும் அதைச் சீராக ஆக்க வேண்டும்.
இச்சரீரத்தில் பதிவாகக் கூடிய எண்ண அலைகளை…
1.நாம் வண்ணானிடத்தில் அழுக்குத் துணிகளைப் போடும் பொழுது
2.அழுக்கை நீக்கித் தூய்மையான துணிகளை நமக்கு எப்படித் தருகின்றானோ அதைப் போன்று
3.நம்மை எதிர்படும் தீய உணர்வுகளை நம் எண்ணத்தில் எடுத்தாலும்
4.அதை உடனே உணர்வுடன் கலக்க விடாமல் அவ்வழுக்கை நீக்கி
5.தூய்மையான அலையை இச்சரீரத்தில் பதியக் கூடிய நிலைக்குப் பக்குவமாக்கி
6.அழுக்கை நீக்கித் தூய்மையான உடையை வண்ணான் தருவதைப் போன்று
7.நம் உணர்வுடன் மோதக்கூடிய தீய அலைகளைத் தூய்மையாக்கி
8.நம் ஆத்மாவின் ஒளிக்குத் தர வேண்டும்.
இருந்தாலும் வாழ்க்கை என்னும் பொழுது உணர்வுகளில் மாற்றமில்லாத் தன்மை ஏற்படாமல் இருக்காது.
ஆகவே… வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு நொடிப் பொழுதின் உணர்வையும்
1.சரீர எண்ணத்தில் நாம் எடுக்கக்கூடிய சுவாசத்தைக் கொண்டு
2.செயலாக்கத்தக்க அணு வளர்ச்சியின் காந்த ஒளி அலையால்
3.நாம் எடுக்கக்கூடிய சாந்த நற்குணத்தின் சம அலையால்
4.உயர் காந்த மின்காந்த சக்தியால் பெறவல்ல பக்குவத்தில்
5.இவ்வாத்மாவின் ஒளியைக் கூட்டிக் கூட்டி ஆத்மாவின் வீரியத் தன்மை பெற்று
6.வாழ்க்கையில் உள்ள பொழுதும் இச்சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும்
6.தன்னைத் தானே தான் உணர்ந்து தன் வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டே இருக்க முடியும்…!
அப்படி வலுப் பெற்ற ஆத்ம ஒளிகள் தானப்பா… இன்று நாம் வாழும் பூமியும்… நம்மை வாழ வைக்கும் சூரியனும்… மற்ற பல கோடி ஜீவ ஒளி மண்டலங்கள் யாவையுமே…!
ஆனால் அப்படிப்பட்ட உணர்வின் எண்ணத்தின்… ஜீவ வளர்ச்சியின் உண்மையை மனிதன் உணராமல்…
1.இன்றைய மனிதனின் எண்ணம் செயல் எல்லாம்
2.தன்னுள் இருக்கும் ஆத்மாவின் உண்மையை அறியாமல்
3.உடலின் சுகத்தின் உணர்வின் உந்தலின் வாழ்க்கையிலேயே
4.தன்னைத்தானே – இச்சரீரத்தையே உண்மை என்று நம்பி அழித்துக் கொள்கின்றான்.
மனிதனுக்குக் கிடைத்துள்ள பெரும் பொக்கிஷமே இச்சரீரம் தான். இந்தப் பொக்கிஷத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்…? என்பதைத்தான் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும்
அதைத் தான் தொடர்ந்து இங்கே பாடநிலையாகக் கொடுத்துக் கொண்டுள்ளேன் (ஈஸ்வரபட்டர்).
கடிந்துரைக்க எண்ணாதே…!
கடுமையின் உணர்வு உன்னையும் சுடும்கனிந்துரைப்பாய்…!
காரியத்தின் வெற்றியைச் சுவைக்கலாம்மனதின் மமதைக்கு மருந்துண்டால்
மங்கிடும் மமதை மறைந்தே…!
மகரிஷிகளை நாம் எண்ண வேண்டிய வரிசைக்கிரமம்
யாம் உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் அகஸ்தியரும்… அவரைப் பின்பற்றிய நமது குருவும்… சப்தரிஷிகளின் அருளும் அதன் பின் 4000 ஆண்டுகளுக்குள் வியாசகர் பெற்ற நிலையும் தான்.
1.அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் எடுத்து உணர்வின் ஒளியாகப் பெற்றவர் வியாசகர்
2.அவரிடமிருந்து வெளிப்பட்டதை பிருகு அத்திரி இதைப் போன்ற மகரிஷிகள் அந்த உணர்வை தனக்குள் வளர்த்து
3.அதை எல்லோரும் பெற வேண்டும் என்ற உணர்வு கொண்டு எழுத்து வடிவில் பதிவு செய்தனர்
4.எழுத்து வடிவில் இல்லை என்றாலும் கூட சுருதி வடிவிலே தனக்குள் வளர்த்துக் கொண்டவர்கள்
5.அதன் வழியில் அவர்களுக்குள் விளைந்ததும் பின் அவர்கள் பிறர் பெற வேண்டும் என்று எண்ணியதும்
6.மற்றவர்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் நன்மை பெற வேண்டும் என்று அவர்கள் செயல்படுத்தினார்கள்.
ஆனால் பின் வந்தோர் அதை மாற்றி விட்டார்கள் இது எல்லாமே உங்களுக்குத் தெரிய வரும். உபதேசத்தின் மூலக்கூறுகளை அந்தந்தக் காலகட்டத்தில் உங்களுக்குள் எல்லாவற்றையும் தெளிவாக்கிக் கொண்டு வரும்.
நீங்கள் வளர… பிறரைத் தெளிவாக்க தெளிந்த பூமியாக தெளியச் செய்யும் உணர்வாக நமக்குள் வளர்க்க… என்றும் பேரானந்தப் பெருநிலை என்று நிலை அடைய இது உதவும். நாம் எல்லோரும் அதைப் பெறுவோம்.
உதாரணமாக பலசரக்குக் கடையிலே பொருள்களை வாங்குகின்றார்கள். பொருள்களை எல்லாம் விற்றால் வியாபாரம் நன்றாக இருக்கும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.
அதே மாதிரித் தான்
1.அந்த அருள் ஞானிகளின் சக்திகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தால்
2.அவர்கள் அதைப் பெறும்பொழுது மகிழ்ச்சி நிலைகள் உங்களுக்குள் வளரும்.
புறப்பொருளை விற்றுப் பணத்தை வாங்குகின்றீர்கள் ஆனால்
1.அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் எடுத்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று செலுத்தும் போது
2.அதை அவர்கள் பெற்று மகிழ்ந்திடும் உணர்வுகள் வரும் போது பேரானந்தச் செல்வமாக நீங்கள் பெறுகின்றீர்கள்.
ஆகையினால் “எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளைக் கிடைக்கச் செய்யுங்கள். அந்த மகிழ்ச்சியான அரும்பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் இது பேரானந்தப் பெரும் செல்வம்.
ஆகையினால் அதைப் பெறுவதற்கு முயற்சிப்போம் குரு அருளை நாம் என்றுமே பெறுவோம். அவருடைய அருளால் எல்லா நிலைகளையும் நாம் பெறுவோம் எல்லோரையும் நாம் மகிழ்வடையச் செய்ய முடியும்.
நம்மை மனிதனாக உருவாக்கிய நம் அன்னை தந்தை உயிரைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய நிலையும் மனிதன் நல் ஒழுக்கத்தையும் நல் நிலைகள் பெறுவதற்குக் குருவாக வழிகாட்டிய முதல் குருவின் ஆசியை நாம் பெறுவோம். அவர்கள் துணை கொண்டு
1.மெய் உலகின் உணர்வின் தன்மையை வழிகாட்டும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளும்
2.அவரின் அருள் துணை கொண்டு மெய் ஞானிகள் அருளும்
3.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வையும்
4.அதிலிருந்து வளர்ச்சி பெற்ற சப்தரிஷிகளின் அருள் உணர்வுகளையும் நாம் பெறுவோம்.
உலக இருளை மாய்ப்போம்… மெய்ப்பொருள் காணும் அந்தப் பாக்கியத்தைப் பெறுவோம்.
உடலுடன் உள்ள போதே ஆன்மாவை உயர்வடையச் செய்ய வேண்டும்
இச்சரீரத்தில் நாம் பெற்றுள்ள அமிலத்தின் தன்மைக்கும் இப்பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரக் கோள்களின் அமிலத்தின் தன்மைக்கும் தொடர்புண்டு.
சுவை ஏழு… வண்ணம் ஏழு… நாதம் ஏழு… மணம் ஏழு… என்ற நிலையில் இந்த பூமியின் தொடர்பு நிலை மையத்தின் விகித நிலைகள் பலவாக மாறுபட்டாலும்… ஒன்றின் தொடர்பு கொண்ட வீரியத் தொடர்பில்.. பல மாற்றத்துடன் ஒவ்வொன்றும் ஜீவன் பெறுகின்றது.
ஜீவிதத்தின் தொடர்பில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றப்படும் அமிலக் கலவையின் கூட்டு விகிதத்தில் செயல் தன்மை பலவாக மாறு கொள்கின்றது.
1.நொடிக்கு நொடி மாறுகொள்ளும் உணர்வின் செயல் வட்டத்தில்
2.இச்சரீரத்தின் எண்ணத்தை எப்படிப் பக்குவப்படுத்தல் வேண்டும்…? என்ற ஞானத்தைத்தான்
3.நாம் உயர் ஞானமாக்கும் வழிமுறைக்குச் செயல்படல் வேண்டும்.
நாம் வாழக் கூடிய வீட்டிற்கு முன் கதவு வைத்து நமக்குப் பாதுகாப்பிற்கான செயலுடன் வீடு கட்டிக் கொள்கின்றோம். வெளி உலகத் தொடர்பிற்கு நாம் வீட்டின் முன் கதவைத் திறந்துதான் வெளியே செயலுக்குச் செல்கின்றோம்.
உண்ண உறங்க இச்சரீரத்தின் பாதுகாப்பிற்கு வீட்டை அமைத்துக் கொள்கின்றோம். வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படி முன் கதவு இருக்கின்றதோ அதைப் போன்று
1.சரீரம் என்பது நம் ஆத்மாவிற்கு வீட்டைப் போன்றது.
2.இவ்வீட்டிற்குள்ளே ஆத்மா குடியிருக்கக்கூடிய செயலானது
3.ஆத்மாவினுடைய வளர்ச்சியின் செயலுக்கான எண்ணத்தை வீட்டின் கதவைப் போன்று
4.வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படிக் கதவை வைத்துப் பாதுகாப்பு அமைத்துக் கொண்டுள்ளோமோ
5.இக்கதவு என்ற எண்ணத்தைப் பாதுகாப்பின் செயலுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
இச்சரீரத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டுதான்…
1.ஆத்மாவின் ஒளியைப் பிறவா நிலை என்ற
2.ஜோதி நிலைக்குச் செயல்படுத்திடல் முடியும்.
நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்கும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருளையும்… நம் உருவத்தையும் எதிர்படுத்திக் காட்டுகின்றது
அதுவே இரசம் பூசப்படாத கண்ணாடியில் பார்க்கும் பொழுது வெளி உலகைத்தான் பார்க்க முடிகின்றது. நம் உருவமோ நம்மைச் சுற்றியுள்ள நிலையோ எதிர்படுத்தி இரசம் பூசாத கண்ணாடியில் பார்க்க முடிவதில்லை.
1.அதைப் போன்று இச்சரீரமென்பது நம் ஆத்மாவிற்கு இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றது.
2.ஜீவனற்ற ஆத்மாவின் நிலை இரசம் பூசப்படாத கண்ணாடியைப் போன்றது.
தன் பிம்பத்தைத் தானேக் கண்டு… தன்னைச் சுற்றியுள்ள பொருளும் கண்ணாடியில் தெரிவதைப் போன்று… ஆத்மாவின் இயக்கத்தின் செயல் இச்சரீர ஜீவனில் வாழக்கூடிய செயலில்…
1.தன்னைத்தானே உணர்ந்து வளரும் வலுவிற்கு வலுக் கூட்டக் கூடியது
2.இச்சரீரத்தின் இயக்கமுடன் கூடிய ஆத்மாவின் வாழ்க்கை…!
உடலை விட்டு ஆத்மா பிரிந்து விட்டதென்றால் அவ்வாத்மாவிற்கு ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியைப் போன்று எதிர் நிலையைத்தான் உணர முடியுமே தவிர “தன் ஆத்மாவை வளர்த்துக் கொள்ள முடியாது…”
ஆகவே இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு
1.இப்போழுது இருக்கும் இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி…
2.உயர் ஞானத்தை இச்சரீரத்தில் விளைவித்து…
3.ஆத்மாவைப் பேரொளியாக ஆக்கி…
4.மகரிஷிகள் வாழும் இடம் செல்ல வேண்டும்.
5.அழியா ஜோதி நிலை பெற வேண்டும்.
மகரிஷிகளுடன் நாம் ஒன்றும் வழி
1.எத்தனை வகையான உணர்வுகளுடன் இயங்குகின்றோமோ அத்தனை உணர்வுகளையும் தட்டி எழுப்பி
2.அந்தந்த உணர்வுகளுடன் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கச் செய்வதற்கும்
3.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வுக்குள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் செய்வதற்கும்
4.நடைமுறையில் இயக்கும் உணர்வுகளையும் உங்களுக்குள் தூண்டச் செய்து மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்வதும் தான்
5.”இயக்கமும்… உணர்வின் சேர்க்கையும்…” என்ற நிலையில் இப்பொழுது உங்களுக்குள் எம்மால் (ஞானகுரு) உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளது.
அதன் வழியில் வளர்க்கப்படும் பொழுது அது உங்களுக்குள் வளர்ச்சி பெறும். எத்தனையோ விதமான குணங்கள் நமக்குள் இயங்கிக் கொண்டுள்ளது “அத்தனை குணங்களிலும்” நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.
அது மட்டுல்ல…
1.வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் நம்மை மோதும்
2.அக்காலங்களில் மகரிஷிகள் உணர்வுகளை அதனுடன் இணைத்தல் வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் சேர்த்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்க்கையில் இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.
ஏனென்றால் சிறு பிள்ளையாக நாம் வளர்ந்ததிலிருந்து எத்தனையோ உணர்வுகள் நமக்குள் வித்தாக ஊன்றப்பட்டு இருக்கிறது.
“ஊழ்வினை” என்று அவைகள் இருப்பினும் வினைக்கு அந்த உணர்வின் அணுவாக வளரப்பட்டு அதனின் மலமாக நம் உடலுக்குள் அணுக்களாக உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.
1.அப்படி வளர்த்துக் கொண்ட அணுக்கள் அது முதுமை அடைந்து விட்டால் அதனுடைய மலம் குறையும்
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் இணையும்.
3.இணைந்து கொண்ட உணர்வுகள் உடலை விட்டுச் சென்ற பின் உயிருடன் ஒன்றும்
4.எது உயிருடன் ஒன்றுகிறதோ அது தான் நம்முடைய அடுத்த நிலைக்குக் காரணமாகிறது.
அதாவது பரமாத்மாவிலிருந்து நம் ஆத்மாவாகி உடலில் ஜீவாத்மாவாக விளைந்து அதிலே வடித்தது உயிராத்மாவாக மாறுகிறது.
ஏனென்றால் இந்த உடல் பெறும் உணர்வுக்கு அந்த மலம் இல்லை என்றால் அணுவின் தன்மை உடல் குறையும். ஆனால் அந்த உடலின் உணர்வின் தன்மை அணுவின் மலம் (தசைகள் உறுப்புகள்) அது முதுமை அடையப்படும் போது உயிருடன் ஒன்றி நிலைகொள்ளும். அந்த உணர்வின் அணுவே உயிருடன் ஒன்றி வெளி வரும்.
1.மீண்டும் தன் இனத்தைப் பெருக்க அதனின் செயலாக்கத்தை உருவாக்கிவிடும்
2.ஆகையினால் தான் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை எல்லாவற்றிலும் இணைத்தல் வேண்டும் என்று யாம் சொல்வது
வாழ்க்கையில் எத்தனையோ விதமான சந்தர்ப்பங்கள் வரும். அத்தனை சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்போது
1.அந்த மகரிஷிகளுடன் ஒன்றி நாம் ஒளியின் உணர்வாகவே நாம் வளர்கின்றோம்.
2.ஆகவே எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பேராசை கொள்ளுங்கள்.
சம்பாதிக்க வேண்டிய அழியாச் செல்வம்
தொழிலைச் செய்து சொத்தைச் சேர்க்கலாம் என்று விரும்புகிறோம். இருந்தாலும் அது எல்லாம் அழியக்கூடிய சொத்து தான்… காரணம் நம் உடலே அழியக்கூடியது தான்.
உடலால் செல்வத்தைச் சம்பாதித்தாலும் “அது இந்த வாழ்க்கைக்கு தான் உதவும்…!” ஆனால் அதுவும் சீராகப் பார்க்கவில்லை என்றால் அந்தச் செல்வத்தையும் காக்க முடியாது.
சொத்தைச் சம்பாதித்து வைத்திருப்போம். ஆனால் சந்தர்ப்பத்தால் நோயாகி வேதனை வேதனை என்று வந்தால்
1.அப்படி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலே
2.சம்பாதித்த சொத்தை எல்லாம் கையிலே கொடுத்தால் “இது எதற்கப்பா…?” என்று கேட்பார்கள்.
சம்பாரித்த சொத்து அவர்களுடையது தான். அதை விரிவாக்கி அங்கே இவ்வளவு இருக்கின்றது… இங்கே இவ்வளவு இருக்கிறது… இதை எல்லாம் என்ன செய்யலாம்…? எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டால்
1.எங்கேயாவது தொலைந்து போங்கள்…!
2.என்னிடம் ஏனப்பா சொல்கிறீர்கள்…?
இந்த உணர்வின் தன்மை வந்துவிடுகிறது.
சம்பாதித்து வைத்திருந்தாலும் வேதனையாக இருக்கும் பொழுது இந்த சொத்தைப் பற்றிச் சொல்லும் போது என்ன ஆகிறது…?
எங்கேயாவது கொண்டு விடுங்கள்…! என்ற நிலை தான் வரும்.
சொத்தைச் சம்பாதித்து வளர்த்துக் கொண்டிருக்கும் போது உடலிலே நோயான பின் “எனக்கு இப்படி வந்து விட்டதே…!” என்று வேதனையில் உடலின் பற்று தான் வருகின்றது… அதனால் நஞ்சாகி விடுகின்றது.
உடலின் பற்று வரும் பொழுது யார் மேல் நம் நினைவுகள் பற்று அதிகமாக வருகின்றதோ… இந்த உணர்வின் தன்மை வந்தபின் அதைப் பற்றிக் கொள்கின்றோம்… அந்த உடலை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம்… அங்கே சென்றுவிடும்.
இந்த உடலுக்குள் வந்து பிறவிக்கு வரும் பொழுது என்ன செய்கின்றோம்…?
1.இந்த உடலிலே விளைந்தது சாகாக்கலையாக உருவாகி
2.ஆசையை அங்கே தூண்டி அதன் வழியில் அந்த உடலையும் மடியச் செய்யும்
அதன் உணர்வு பேயாக அந்த உணர்வுகள் வளர்ச்சியாகி பூத கணையாக விளைகின்றது… அது தான் பூதங்கள்…! இத்தகைய உணர்வின் தன்மை விளைய வைத்த பின் எதனை அடக்கி அதற்குள் வளர்ந்ததோ அது அந்த உணர்வின் தன்மை வந்த பின் உயிரினங்கள் எதனின் வளர்ச்சி பெற்றதோ அங்கே கொண்டு போய் அதுவாக உருவாகி அதனின் செயலாகவே உருவாக்கிவிடும்.
புலியோ நரியோ பாம்போ இவையெல்லாம் தன் இரையத் தேடி இரக்க்கமற்றுக் கொன்று சாப்பிடுகிறது. மற்ற உயிரினங்களை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. அதைக் கொடூரமாக தாக்கி உணவாக எடுக்கிறது.
இந்த மனித வாழ்க்கையில் இப்படிப்பட்ட நிலைகளைச் செய்பவர் எவரோ அந்த எல்லைக்குத் தான் இந்த உயிர் அழைத்துச் செல்லும். அதனால்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது.
ஆக… பிறர் படும் வேதனையை நாம் எடுத்து விளைய வைத்துக் கொண்டால் இத்தகைய நிலை வந்து விடுகிறது.
நம் குழந்தை மீது நமக்குப் பற்று இருக்கின்றது. குழந்தை வேதனைப்பட்டால் பாசத்தால் நாமும் அதைக் கண்டு வேதனைப்படுகின்றோம்.
ஆனால் எனக்கு பிடிக்காதவர்கள் ஏதாவது வேதனைப்பட்டார்கள் என்றால் வெறுப்பால்… “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று அதை ரசிக்கின்றோம்.
நம் பையன் சரியாக வரவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். ஆனால் பிடிக்காதவர் என்றால் “நினைத்தேன்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… அப்படித்தான் நடக்கும்…!” என்று இந்த விஷத்தை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோம்.
1.ஏனென்றால் எது அதிகமோ அதனின் உணர்வின் வளர்ச்சியைத் தான் நமக்குள் காட்டும்
2.அந்த உணர்வின் செயலாக்கம் தான் நமக்குள் உருவாகும்.
கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!
ஆகவே அதனின் உணர்வின் செயலாகவே அதனின் அறிவாகவே நம்முடைய இயக்கமும் நம் பார்வை எதுவோ இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் கூர்மை அவதாரம்.
எதைச் சிருஷ்டித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ அப்படிப்பட்ட அவதார புருஷனாக இது மாற்றி விடுகின்றது.
ஆனால் தீமையை நீக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்து ஒளியாக ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டால் கல்கியின் அவதாரம்.
எது மற்றவருக்குள் தீமையாக உருவாக்கியதோ அந்த இருளில் இருந்து விலக வேண்டும் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.வெறுமனே சொன்னால் அவர்கள் உணர்வு தான் நமக்குள் புகுந்து விடும்
2.ஈஸ்வரா என்று உயிரிடம் சொல்லி அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.கேட்டறிந்த உணர்வின் தன்மையை ஆன்மாவிலிருந்து முதலில் பிளக்க வேண்டும்… நரசிம்மா…!
இப்படி… அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மையை முதலில் நமக்குள் சேர்க்க வேண்டும். தீமைகளைப் பிளந்து ஒளியாக மாற்றி… நஞ்சினை வென்றிடும் நிலையாக…
1.மற்றவருக்கு வழிகாட்டும் உணர்வின் தன்மையாக
2.இதைத்தான் நாம் கொண்டு வர வேண்டும்.
மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்கே உறுதுணையாக இருக்கின்றது
1.சிவனான ஆண் குண வலுவைக் கொண்டு
2.சக்தியான பெண் உணர்வின் எண்ண அமில ஈர்ப்பின் ஜீவித தொடர்பால்
3.இரண்டு ஆத்மாக்களின் ஈர்ப்பு வட்டம் ஒன்றின் தொடர்பு கொண்டு எடுக்கப்படும் தியான அலையின் வலுவைக் கூட்டக் கூட்ட
4.அவ்வலுவின் வளர்ச்சியால் ஆத்ம ஐக்கிய உணர்வு சரீர வாழ்க்கை பந்தத் தொடர்பில்
5.ஒரே எண்ண குண தொடர்பின் சுழற்சியில் வளர வேண்டும்.
ஏனென்றால் அப்படிப்பட்ட உயர் நிலையில் வளர்ச்சிக்கு வரும் இந்த மனித சக்திகளால் தான் ஒவ்வொரு கோள்களாகவும்.. ஒளி சக்தி கொண்டு ஒளிரும் சக்தியாகவும்… நம் பூமியில் சூரியனின் ஒளி அலைகள் வீசத்தக்க ஈர்ப்பின் தொடர் கொண்டு வளர்ந்துள்ள இயற்கை வள கனி வளங்களும் தாவர இனங்களும் உருவக அமைப்பின் தன்மையும் எல்லாமே உருப்பெற்று உள்ளன.
இன்று ஓர் பலூனை ஊதும் பொழுது… எந்த வடிவ அமைப்பில் அது உள்ளதோ… எந்த அளவுக்குக் காற்றின் அழுத்தத்தைச் சேமித்து உப்பக்கூடிய நிலை அதற்குள் இருக்கின்றதோ… அதனுடைய வடிவை அது பெறுகிறது. அதிகப்படும் பொழுது பலூன் வெடித்து விடுகின்றது.
அதைப் போன்று தான் உயிரணுவின் தோற்றத்தின் உருவ நிலைகள் யாவுமே…! மரம் செடி கொடிகள் மற்ற இன வர்க்கங்கள் ஒவ்வொன்றுமே
1.அதனதன் ஆத்ம அமிலச் சேர்க்கையின் நிலைக்கொப்ப
2.உயிர் பெறும் உருவக அமைப்பில் இப்பூமியின் காற்றழுத்த ஈர்ப்பின் வளர்ச்சி கொண்டு வளரும் தன்மை பெறுகிறது.
3.ஆனால் இது பிற கோள்களின் நிலையில் மாறுபடுகின்றது.
மனித உயிர் ஆத்மாவின் அமிலக் கூறின் உயிர் பெற்று ஜீவ வளர்ச்சியின் பருவக்காலம் வரை சேமிப்பின் அமில உருவக நிலை வளர்ந்தாலும் உருவ வளரச்சி நிலை பருவ காலத்திற்குப் பின் உயரும் நிலை தடைப்பட்டு விடுகின்றது.
இப்பூமியின் எந்தெந்த இடங்களில்… எக்காற்றின் அலைத் தொடர்பில் ஜீவன் பெறுகின்றதோ… அதற்கொப்பத்தான் அங்கங்குள்ள மனித இனங்களும்… மற்ற தாவரங்களும்… பிராணிகளும் உருவகம் பெறுகின்றது.
ஏறக்குறைய இப்பூமியின் அமைப்பின் சுழற்சியிலேயே சிறிது சிறிது மாற்றங்களுடன் உருவக வளர்ச்சி நிலைகள் யாவையும் வளர்கின்றன.
சில அபூர்வமாக உயரமாக வளரக்கூடிய தன்மைகள் மட்டும் அமிலத்தின் சேர்க்கை விகித நிலைக்கொப்பக் கூடியும் குறைந்தும் வளர்கின்றது.
இன்று நம் பூமியின் தன்மைக்கும் மற்றக் கோள்களின் தன்மையும் மாறுபாடான நிலை தான் உண்டு. உதாரணமாக சனி கிரகத்தில் மனித ஜீவனின் உணர்வின் எண்ணம் கொண்டு வாழக்கூடிய தன்மைக்கு சனிக் கோளின் அமைப்பு நிலை மாறுபட்ட தன்மையாக உள்ளது.
ஜீவனுள்ள உயிர் அணுக்கள் அங்கு வளர்ந்தாலும் இங்கு எப்படி கல் மண் மேல் படிந்துள்ள பாசி போன்று அங்கங்கு உள்ள ஜீவ வளர்ச்சி நிலையில் உள்ளது போல் தான் உண்டு. நம் பூமியில் உள்ளது போல் அவைகள் நகரும் தன்மையோ நடந்து பறக்கும் நிலை போன்று அங்கில்லை.
ஓர் ஜீவ உயிர் சனியில் பிறந்ததென்றால் அப்பூமியின் பிடிப்பில் ஒன்றியே பிறப்பெடுத்து இறுகிய நத்தைக்கும் மற்றச் சில பிராணிகளுக்கும் இருப்பதைப் போன்று கெட்டியான ஓடுகளுடன் பிறப்பெடுத்து அப்பிறப்பின் இறப்பிலேயே மாறும் தன்மையும் உள்ளது.
சனிக்கோள் அதி குளிரின் ஈர்ப்புப் பிடிப்பிற்கொப்ப சுழல்வதால் பிற கோள்களின் சந்திப்புச் செயல்நிலை இருந்தாலும் உஷ்ண அலையின் சமைப்பு நிலைக்கு நம் பூமியின் தன்மை போன்ற நிலை இல்லாததினால் மனிதர்கள் யாரும் அக்கோளில் பிறப்பெடுக்க முடியாது.
நம் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் பௌர்ணமி நிலவு தெரிவதைப் போன்று தான்… சனியைச் சுற்றியுள்ள பன்னிரண்டு கோள்களின் நிலையிலும்… சனிக்கோளின் சுழற்சி சந்திப்பிற்கொப்ப இங்கெப்படி அமாவாசை பௌர்ணமி என்று ஒரு சந்திரனின் தொடர்பில் அறிவது போன்ற நிலை உண்டு.
சனிக் கோளின் தொடர்பு கொண்ட பன்னிரண்டு கோள்களும் அவை எடுத்து வெளிக் கக்கும் அலை அமில நிலைக்கொப்ப சனியின் சுழற்சி ஓட்டமும் பூமியைக் காட்டிலும் குறைவான நிலையிலும்
1.இரவில் சந்திர ஒளியின் வெளிச்ச அலையை எப்படி நாம் இங்கு காண்கின்றோமோ அதற்கொப்ப
2.குளிர்ச்சியில்… சனிக்கோளும் சனிக்கோளின் உப கோள்களும் மிகவும் ரம்மியமாய் செயல்படக் கூடிய நிலையில்
3.நம் சூரியக் குடும்பத்தில் ஜீவனைத் தரக்கூடிய மையமாக உள்ளது
4.சனியின் தொடர்பு நமக்குக் கிட்டும் வலுவில்தான் நம்முடைய ஜீவ நாடியே உள்ளது
சனிக் கோள் நம் சூரியக் குடும்பத்தின் ஜீவனான நீர் சக்திக்கே மிகவும் முதன்மையானது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதர்களான நாம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை பெற்றவர்கள். எதனையுமே நமக்குள் எளிதில் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள்.
விஞ்ஞானி விண்ணிலே அண்டத்தின் நிலைகளையும் பூமிக்கடியில் உள்ள நிலைகளையும் ஊடுருவிப் பார்த்துப் பல பொருகளை அறிகின்றான். அதை எல்லாம் இணைத்து எத்தனையோ புதுப் புது இயந்திரங்களை உருவாக்குகின்றான்.
“ஒலி… ஒளி…” அலைகளைப் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை அங்கே விஞ்ஞானத்தின் நிலைகளில் இயக்குகின்றது.
1.கடந்த காலத்தில் ஞானிகள் இதைப் போன்று சப்தமிடுவதில்லை. மனதிற்குள் ஒடுக்கி வைத்துள்ளார்கள்.
2.“தான் பெற்ற ஆற்றல்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்ற உணர்வுகளை உள் நின்று பாய்ச்சப்படும் பொழுது
3.மற்றவர்கள் ஏங்கி நிற்கும் பொழுது அந்த உணர்வலைகளை நுகர நேர்கின்றது,
இவன் எண்ணி வெளிவிடும் உணர்வுகளை “மௌனமாக இருந்து…” உணர்வினை நுகர்ந்து இந்த ஞானியின் உணர்வுகளை அவர்கள் சீடர்களும் உருவாக்கும் தன்மை பெற்றார்கள்.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் அவர்களைப் போன்றே அருள் ஞானத்தில் வளர்ந்திட வேண்டும்,
ஏனென்றால் இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவுகள்… “சூறாவளி – புயல்” போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம்
1.இந்த உடலும் நமக்குச் சொந்தமல்ல…
2.நாம் தேடிய செல்வமும் நமக்குச் சொந்தமல்ல… என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
நாம் சொந்தமாக்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த நிலைகளில் வாழ வேண்டும்… என்ற “இந்த உணர்வை” நமக்குள் சொந்தமாக்க வேண்டும்.
உயர்ந்த நிலைகளில் வாழ வேண்டும் என்றால் அந்த அருள் உணர்வைத் தான் பெற்று ஒவ்வொருவரும் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று எண்ணினால் அதனுடன் கலந்து நமக்குள் தெளிவான நிலையும் பெறுதல் வேண்டும்.
பேரன்பைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
சிலர் தவறு செய்தாலும் அந்த உணர்வு நம்மை இயக்காத நிலையும் அருள் உணர்வை நமக்குள் பெருக்கி வாழ்தல் வேண்டும். ஏனென்றால், குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம்.
இனி எதிர்காலம் மிகவும் சிந்தனையற்ற காலமாகவே மனிதனின் செயல்கள் இருக்கும்.
மனிதன் மனிதனாகத்தான் இருப்பான். ஆனால் மனிதன் பல கொடூரமான செயல்கள் செய்வதும் கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும் ஏமாற்றும் நிலைகளில் செல்வம் வைத்திருந்தாலும் வீடு புகுந்து அடித்துக் கொன்று விட்டு பொருளை அபகரித்துச் செல்லும் நிலை வந்துவிடுகின்றது.
அப்பொழுது நாம் தேடிய செல்வம் எங்கே இருக்கின்றது…?
நாம் எடுக்கும் மூச்சின் அலைகள் கொண்டு எந்தத் தீமையான உணர்வுகளும் நமக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும். இதைப் போன்ற நிலைகளில் நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று தான் வேண்டுகின்றோம்.
குருநாதர் எம்மை எப்படி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தரோ அதே போன்றுதான் “உங்களையும் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம்…”
1.உலகில் இன்று நடக்கும் தீமையின் உணர்வுகளும்…
2.அதை நீக்கிடும் அருள் உணர்வுகள் பெற்றதையும் இணைத்து…
3.இரண்டையும் கலக்கப்படும் பொழுது இணைத்து…
4.“தீமைகளை நீக்கும் அருள் உணர்வுகள்.., உங்களுக்குள் வலுப்பெற வேண்டும்” என்ற நிலைக்குக் கொண்டு செல்கின்றோம்.
அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம். எமது அருளாசிகள்.
“தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து தான்” ஆண் பெண் இருவருமே உயர் ஞான வளர்ச்சி பெற முடியும்
சகலத்தின் சக்தியையும் சகலமாக்கித் தன்னைத்தானே தான் உணரும் உயர் ஞான ஒளி சக்தியாய் உயரும் வழித் தொடருக்கு… எண்ணத்தின் உணர்வு பக்குவ முறை கொள்தல் வேண்டும்.
இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சியில் இருந்து விடுபட எண்ணத்தின் வலுவை முதலில் பக்குவ நிலைக்கு நாம் செயல் படுத்துதல் வேண்டும்.
வாழ்க்கையில் இருந்தே நம் தியான முறையை வழிப்படுத்தும் சமமான நற்குண செயல் வழியை எண்ணத்தின் உணர்வு செயல்படும் முறை பக்குவத்தில்
1.உடல் உணர்வில் உந்தப்படும் இல்லற உணர்வின் வழித் தொடர் உகந்ததா…?
2.அந்த உடல் உணர்வின் உந்தலைச் சமப்படுத்தும் பக்குவத்தில் அடக்கும் பக்குவம் உகந்தந்தா…?
3.உடல் இச்சையின் உணர்வின் உந்தலில் எப்படிச் செயல்படுவது…? என்ற வினா ஒவ்வொருவருக்கும் எழும்பலாம்.
அதாவது தாம்பத்ய வாழ்க்கை உகந்த நிலையா…? பிரம்மச்சர்ய நிலையில் உயர்வு நிலை பெற முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.
ஆரம்ப மனித உணர்வின் வழித்தொடரே தாவர நிலைக்கடுத்த வளர்ச்சி நிலை யாவையும் நீரிலிருந்து உயிர் ஆத்ம ஜீவன்கள் பிறப்பெடுத்து வந்தது.
அதன் பின் (கடல் வாழ்) தாவர இனங்களில் இருந்து வளரும் புழு பூச்சிகள் உடல் உணர்வின் ஆண் பெண் இனச் சேர்க்கையில் வளரும் நிலை இல்லாமல் தாவரங்களின் உஷ்ண அலை வெளிக் கக்கும் அமிலத்தின் பிசின் போன்ற வழுவழுப்பான அமிலத்தின் கெட்டித் தன்மையில் உயிர் அணுக்கள் சிறு புழு பூச்சிகள் உற்பத்தியாகும் நிலை இனச் சேர்க்கையின்றி வளரும் நிலை தான் உண்டு.
நீரிலிருந்து உயிரணு தோன்றும் வளர்ச்சியில் இனச் சேர்க்கையில் ஆண் பெண் என்ற நிலை அபூர்வமாகச் சில இனங்களுக்கு மட்டும்தான் உண்டு.
ஆனால் ஜீவப் பிராணிகள் பெரும்பகுதி இனச் சேர்க்கையின் தொடர்பு கொண்டுதான் இனப் பெருக்கம் செயல் கொள்கின்றது.
இவற்றின் தொடர்பில் மனித உணர்வில் பகுத்தறியும் ஞான வித்தின் முதல் நிலையில்
1.அன்பான உணர்வின் குணம் தான்
2.உந்தப் பெறும் மனித நிலையின் குணத்தின் “முதல் நிலை…”
தன் உணர்வில் உந்தும் இச்சையின் ஆசையில்… உதிரத்தில் பிறக்கும் உயிர் ஜீவனே அந்த அன்பின் உணர்வுத் தொடரில் பிறக்கும். அன்பின் ஆசை நிலை அதற்கடுத்த நிலை.
உதிரத்தில் அன்பின் உணர்வு கொண்டு பிறக்கும் சிசுத் தொடரில்
1.ஆசையும் பாசமும் தன் உணர்வின் இச்சையிலேயே பிறக்கா விட்டால்
2.எஜ்ஜீவ சக்தியையும் எந்த ரிஷிகளாலும்… ஆதிசக்தியாலுமே… வளர்க்க முடியாது.
3.அன்பின் எண்ண உணர்வில் ஆசையின் பாசமில்லை என்றால் மனிதன் என்ற நிலையே உருவாகாது.
உயர் ஞான நிலைக்கு மனித உணர்வின் எண்ணத்தைச் சம குணப்படுத்தக் கூடிய வழி முறைக்கு வயது முதிர்ந்தவர்கள் தான் செயல்படுத்த முடியுமா…? சிறுவர்களும் புதிதாக மணமான தம்பதியர்களும் எப்படி அந்நிலை பெற முடியும்…? என்ற வினா எழும்பலாம்.
நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வின் ஆரம்ப உணர்வே… அன்பென்னும் ஆசையில்… பாசம் கொண்டு வளர வேண்டிய வழித் தொடரில் தான்… சத்திய நிலையின் ஜீவனை வளர்க்க முடியும்,
1.தம்பதியர்களின் உணர்வுகளில் உடல் உணர்வில் அன்பின் ஆசை கொண்டு பிறக்கும் சிசுவின் பாசம் எப்படி வளர்கின்றதோ
2.வாழ்க்கையில் உண்ண உறங்க உடுக்க எப்படி சம நிலை குணங்களைப் பக்குவப்படுத்தச் சொல்லிப் போதனைப்படுத்தினோமோ
3.மணமான சிறு வயது தம்பதியர்கள் அவர்களின் வம்சத்தின் கொழுந்து பிறக்கக்கூடிய காலத்திலேயே
4.எப்படி உடல் உணர்வில் சிசு பிறக்கின்றதோ அதைப் போல் ஆத்ம ஐக்கிய உணர்வு கொண்டு இரு எண்ணங்களும் ஒன்றுபோல் ஆகி
5.உயர்ந்த ஞானத்தின் உணர்வுடன் ரிஷிகளின் தொடர்பால் எடுக்கும் தியானத்தின் மூலம்
6.ஆத்ம ஐக்கிய உணர்வில் இரண்டு ஆத்மாக்களும் இணையக் கூடிய பக்குவ நிலை பெற்று
7.சாதாரண வாழ்க்கை நிலையில் ஆத்ம உயிருக்கு நம் அன்பின் ஆசையின் ஜீவன் தந்து பிறக்கும் குழந்தையைக் காட்டிலும்
8.ஆத்ம ஐக்கியம் கொண்டு ரிஷிகளின் தொடர்பில் எடுக்கும் ஜெபத் தொடர்பின் அலை ஈர்ப்பினால்
9.புது மணம் கொண்ட தம்பதியரின் ஈர்ப்பில் உயர்ந்த ஞான வித்தின் ஆத்ம உயிர்களுக்கு ஜீவன் தரும் பாக்கியத்தைப் பெற முடியும்.
இப்பூமியில் பிறப்பெடுத்து ஞானத்தின் வழியில் சித்து நிலையால் உயர்ந்த ரிஷிகளுக்குப் போக முடியாத பல நல்ல ஆத்மாக்கள் இன்றும் உள்ளன. அந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் ஜீவன் கிடைக்கச் செய்யலாம்.
நாமெடுக்கக்கூடிய (தாய் தந்தை) ஆத்ம ஐக்கியத்தால் எடுக்கும் உயர் குணத்தைக் கொண்டு அத்தகைய ஆத்மாக்களுக்கு… தான் பெற முடியாத ரிஷி சக்தியின் செயலைச் செயலாக்கி வழிதரக் கூடிய நிலையை…
1.ஒவ்வொரு தம்பதியரும் ஆத்ம ஐக்கியத்தில் நல்ல உணர்வின் செயல் வாழ்க்கையால்
2.இப்பூமியைப் பக்குவப்படுத்தக் கூடிய இல்லற உணர்வின் இச்சையின் ஆசைக்கு
3.உடல் உணர்வின் உந்தலைப் பக்குவப்படுத்தும் நிலை செயல்படுத்தலாம்.
வாழ்க்கை வழிமுறையில் துறவறம் என்ற பிரமச்சரிய முறையால் ஆண்டவனை அடைய முடியுமா…? உயர் ஞான வாழ்க்கைக்கு எம்முறை உகந்தது…? என்ற வினா எழும்பலாம்.
உணர்வின் எண்ண குணத்தைச் சமப்படுத்தும் பக்குவத்தால்… ஒவ்வொரு நாளும் இப்பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து ரிஷிகளின் எண்ணத்துடனும்… விண்ணின் ஆற்றலைப் பெறும் எண்ணத்துடனும்
1.எண்ணத்தின் உணர்வைத் தினசரி எடுக்கக்கூடிய தியான முறையில்
2.உணவின் இன்பம் அனைத்தும் ஏகாந்தத்தின் இன்பத்தை உணரும் பக்குவ இன்பத்தில்
3.இனிமை சுரக்கும் அன்பின் ஆசை உணர்வு கொண்டு பெறப்படும் பக்குவத்தில் ஆத்ம ஒளியே ஒளிரும் நிலை பெற்று விட்டால்
4.உடல் உணர்வின் இச்சை எச்சுவையையும் தனித்து எடுக்கக்கூடிய ஏக்கத்தின் உணவிற்கு
5.நம் எண்ணத்தின் உணர்வே செல்லாது (இதை அனுபவத்தில் பார்க்கலாம்).
ஏகாந்தத்தின் இன்பத்தை நுகரும் பக்குவத்தை… ஆத்ம ஐக்கியத் தொடர்பு கொண்டு… இரண்டு ஆத்மாக்களுக்கும் ஒரே எண்ணத்தின் வழிப்படுத்தும் வழி முறையில் கிடைக்கும் ஆத்ம ஐக்கிய ஒளியால்… எச்சிருஷ்டியையும் சிருஷ்டிக்கவல்ல தன்மையைப் பெறலாம்.
ஆனால் இரண்டு எண்ணங்களின் குண நிலை மாற்றப்பட்டு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ரிஷி சக்தியின் தொடர்பில் அதைச் சீர்படுத்தும் பக்குவ நிலையாக ஜெப ஈர்ப்பில்
1.ஒருவர் மேல் ஒருவர் எண்ணத்தைச் செலுத்தி
2.ஆத்ம ஐக்கிய உயர் ஞானம் பெற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டே
3.இரு நிலையையும் ஒரு நிலையாகக்கூடிய தன்மைக்கு
4.நிச்சயம் செயல்படுத்திட முடியும்.
எந்தத் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து மண்டலமாக மகரிஷிகள் சிருஷ்டித்துக் கொண்டார்களோ அதனை நாமும் பெற வேண்டும்
மகரிஷிகள் இருளை வென்று உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் இன்றும் ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளார்கள். அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் சக்தி தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன்.
நாராயணன் என்றால் சூரியன். ஒளியின் சுடராக இருக்கும் சூரியன்
1.எதைத் தனக்குள் கவர்ந்தாலும் அதன் இனத்திற்கு அதன் அறிவாக ஊட்டுகின்றது.
2.அது அறியச் செய்கின்றது… அதனின் நிலையில் வளர்க்கின்றது.
3.உலகை உருவாக்குகின்றது உணர்வின் அறிவாக இயக்குகின்றது.
அதைப் போன்று தான் மனிதனாகத் தோன்றி தன் வளர்ச்சியின் பாதையில் இருளைப் போக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக நிலை கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள்… சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.
சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியநின் காந்த சக்தி தான் கவர்கின்றது. கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கிறது.
1.அந்த நினைவை நாம் நமக்குள் பதிவு செய்து வைத்திருந்தால் தான்
2.அதிலிருந்து வந்த உணர்வை அதை நகர முடியும்.
3.அதுவே நினைவில் இல்லாதபடி எடுக்க முடியுமா என்றால் முடியாது
துருவ நட்சத்திரத்தை நாம் கண்ணிலே பார்க்கும் நிலை பெற்றவர்கள். ஆனால் சப்தரிஷி மண்டலங்களை கண்ணிலே எப்படிப் பார்க்கப் போகின்றேன்…? சப்தரிஷிகளை எங்கே பார்ப்பது…? என்று சிலர் வினாக்களை எழுப்புவார்கள்.
ஏனென்றால் இதையெல்லாம் யாம் (ஞானகுரு) வெளியிலே சொல்லவில்லை… இப்பொழுது இங்கே வெளிப்படுத்திக் காட்டுகின்றேன்
துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றியவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வளர்கின்றார்கள்.
நட்சத்திரங்களும் கோள்களும் சூரியனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வளர்வது போல பிரபஞ்சத்திற்குள் உயிரணு தோன்றி மனிதனாக வளர்ச்சியாகி
1.பிரபஞ்சத்தின் உணர்வினை ஒளியாக மாற்றிய உயிரணுவின் ஒளியின் மாற்றம்
2.எந்தத் துருவத்தின் வழி நுகர்ந்து பூமி உணவாக எடுக்கின்றதோ
3.அதே துருவத்தில் நிலை கொண்டு ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றது துருவ நட்சத்திரம்.
இது தான் நமது குருநாதர் காட்டிய நிலைகள்…!
அந்த உண்மை வழிப்படி துருவ நட்சத்திரத்தினை உற்று நோக்கி அதைப் பதிவு செய்து அதிலிருந்து விளைந்த உணர்வின் ஆற்றல்கள் தான் மகரிஷிகள்… சப்தரிஷிகள்… சிருஷ்டித்துக் கொண்டவர்கள்.
ஆறாவது அறிவின் தன்மை ஏழாவது சப்தரிஷி… ஒளியின் உணர்வின் நாதங்களாகத் தனக்குள் இயக்கப்பட்டுச் சிருஷ்டித்துக் கொண்டவர்கள்
1.அந்த சப்தரிஷிகள் உருவாக்கிய உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.அதனின்று வளர்ந்த சப்தரிஷி மண்டலங்கள்… சிருஷ்டித்துக் கொண்ட அந்த மண்டல இயக்கத்தின் நிலைகள் நாம் பெற வேண்டும்.
ஒவ்வொரு நொடியிலும் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதைத் தனக்குள் சேர்க்க வேண்டும்
1.இது தான் பேரின்ப பெரு வாழ்வு
2.அழியாச் சொத்தும் அது தான்.
“உணர்வின் உந்தலைச் சமமாக்குவதில் கைதேர்ந்து” அதையே தனக்கு உரமாக்குபவன் தெய்வ நிலை பெறுகிறான்
1.ஆதியின்… படைப்பின் கடவுள்… இறைவன்… தெய்வம் என்ற தொடரில்…
2.மனித ஒளி சரீரத்தின் ஒளித் தன்மை கொண்டு…
3.அவ்வொளியின் நாத உயர்வில் இறை நிலை பெற்ற மனிதன் “தெய்வத் தன்மை பெறுகின்றான்…”
பூமிக்கும்… பூமியில் வளரும் சகல ஜீவராசிகளும் ஒளித் தன்மையின் நிலை பெற்றிருந்தாலும்… ஒவ்வொன்றின் தொடர்பலையில் வலுக் கொண்ட ஒளி நிலை பெற்று… ஒளி சக்தியை வளர்க்கும்
1.உயிர் ஞான வழியை அறியக்கூடிய நிலை
2.மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.
குயில் அழகாக… இனிமையாக… அதனுடைய குரல் ஒலியை எழுப்பினாலும்… மனிதனின் எண்ணத்தின் உணர்வு ஞானம் அதற்கு இல்லை.
மனித உணர்வுடன் ஒட்டி… ஒன்றின் தொடரில் வளர்ச்சியின் நிலை பெருக்கத் தொடருக்கு… ஞானத்தை உயர்த்தித் தன் பகுத்தறிவைக் கொண்டு “பல நிலைகளை மாற்றியமைக்கும்” செயல் மனிதனுக்குத் தான் உண்டு.
ஒலியின் நாதத்தை உணர்வின் எண்ண ஓட்டத்தில் பகுத்தறியும் ஞானத்தால் மனிதன் இச்சரீர உயர்வை எண்ணி… இவ்வுணர்வால் இறை சக்தியின் உன்னத நிலையான இவ்வுயிர் ஆத்மாவை… இறை குணத்தை… உணர்வின் எண்ண ஞானத்தால் பகுத்தறியும் செயலைக் கொண்டு இவ்வுடலையே இறையாக்கி… இறைவன் படைப்பில் இறை சக்தியை எடுக்கக்கூடிய ஒலி நாதத்தைத் தன் ஆத்ம உயிருக்காக இறை உணர்வு பெற்றுத் “தெய்வ நிலை பெறும் சத்திய நிலையை…” மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மனிதன் இன்று எடுத்துள்ள உடல் பிம்ப வாழ்க்கைக்குகந்த பேராசைப் பிடிப்பையே தெய்வ நிலை பெறக்கூடிய பேராசையாய் உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.
ஒளியின் ஒளிப் பெருக்கைப் பெருக்கவல்ல தொடரைப் பூமியில் படைத்த
1.ரிஷிகளின் சக்திக்கு ஒளி கூட்டும் ஒளி நிலை பெற
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஒலி கொண்டு
3.நம்முள் உள்ள இருளகற்றி ஒளி நிலையை நாம் பெற்றோமானால்
4.ஒளி கொண்டு மற்ற இருளையும் அகற்றும் சித்தை
5.நம் சித்தத்தின் உணர்வால் ஒவ்வொருவரும் பெறலாம்.
இச்சரீர அமைப்பைச் சிருஷ்டிக்கவல்ல சித்து சக்தியையே… இக்காற்றலையில் கலந்துள்ள சகல சத்திலிருந்து உருவை உருவாக்கும் சக்தியைப் பிரித்தெடுத்துச் செயலாக்கும் முறையை உயர் ஞானி அன்றைய தன் ஞானத்தால் செயல்படுத்திக் காட்டினான்.
ஆனால் இன்றைய விஞ்ஞானி தன்னைத்தான் தான் நம்பாமல் “இயந்திரங்களின் இயக்க ஒலி சக்தி கொண்டு தான்” விஞ்ஞானத்தில் சாதிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளான்.
பல முன்னேற்றங்கள் விஞ்ஞானத்தால் இன்று வளர்ந்திருந்தாலும் தன் ஆத்ம உயிருக்குக் கூட்டக் கூடிய ஒளியின் உயர்வைக் கூட்டாததால் அழிக்கும் நிலைக்குத் தன் உயிர் ஆத்மாவை மங்கச் செய்யும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.
அன்று ஞானிகள் காட்டிய உண்மைகளை எல்லாம்… ஞானிகள் தொடர்பால் இன்றும் எல்லோராலும் பெற முடியும்.
எண்ணத்தின் உணர்வை மனிதனுக்கு மனிதன்… தான்… எவ் ஒலி இறை உணர்வைப் பெற்று இச்சரீர உணர்வால் செயல்படுகின்றானோ அதே தொடர்தான் தன்னை ஒத்த மனித உணர்விலும் உள்ளதை அறிந்து கொண்டால்
1.தன் ஆத்ம பலத்தின் உயர்வைக் கூட்டிக் கொள்ளக் கூடிய உரம்
2.மனித உணர்வுடன் ஒட்டிய தொடர்பால்
3.பிறரிடம் இருந்து எதிர்படும் மூச்சலைகள்
4.நல் அலையின் உணர்வு கொண்டு பெறப்படும் தொடர்பால்
5.மனித உணர்வின் ஆத்ம உயிர் ஒலித் தன்மையின் வலு நிலையை
6.சம குணத்தின் அறுகுண ஈர்ப்பால் உயர்ந்த ஒளி ஞானியாகலாம்.
அதாவது… மனித உணர்வின் எண்ண வேட்கையின் சமைப்பின் ஒளி நிலை கொண்டு
1.ஒருவரின் மேல் உயர்ந்த குணத்தைப் பலரும் செலுத்தச் செலுத்த
2.அவ்வுரத்தின் உணர்வால் மனிதன் தெய்வமாகும் நிலையை
3.அன்றைய ஞானி உணர்ந்ததால் தான் அன்பையே தெய்வமாகக் காட்டினான்.
உணர்வுகள் உந்தப்பட்டாலும் அதைச் சமமாக்கும் பக்குவத்தை எவனொருவன் செயல்படுத்தி.. செயல் வழியில் உரத்தைப் பெறுகின்றானோ… அன்றே தெய்வ நிலை கொண்ட ஒளித் தன்மையில் செயல் கொள்ள முடியும்.
இக்காற்றலையின் சுழற்சியில்… மனித உணர்வில் பல உணர்வின் வேட்கை அலைக்கு மத்தியில்… “தன் ஞானத்தை உயர்வாக்க… உயர்ந்த ரிஷி சக்திகளின் எண்ண ஜெபத்தால்… உயர் காந்த மின் ஒளியின் தியானத்தைக் கொண்டு… மனிதன் தன்னைத் தானே தான் உணர்ந்து… தெய்வ நிலை பெறும் வழி நிலையை… அமைத்துக் கொள்ளல் வேண்டும்…”
எம்முடைய உபதேசங்களை “எழுத்து வடிவிற்குக் கொண்டு வரவேண்டியதன்… இரகசியம்”
நாம் எப்பொழுது தீமைகளைக் கண்டாலும் பத்திரிக்கை டி.வி.யில் பார்த்தாலும் கேட்டாலும் அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு போய் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1ஆனால் பழக்கம் இல்லை என்கிற போது
2.முதலிலே மாற்றும் எண்ணம் வராது.
பிற உணர்வுகளைக் கவர்ந்து கொண்ட நிலையில் அந்தத் தீமையின்பால் நினைவுகள் செல்லப்படும் பொழுது “என்ன உலகம்…?” என்று சலிப்படைந்த உணர்வு கொண்டு தான் பேசுவோம்.
1.அந்த உணர்வு இயக்கும் பொழுது இந்த ஆத்ம சுத்தி செய்யும் எண்ணம் வராது
2.ஆனால் அந்த நினைவைக் கட்டாயப்படுத்தி நாம் கொண்டு வர வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை நாம் எடுக்க வேண்டும்.
நோய் வந்துவிட்டது என்று தெரிந்தால் கட்டாயப்படுத்தித் தான் கசப்பான மருந்தை உட்கொண்டு அதை நீக்குகின்றோம்.
1.நமக்குள் வேதனை என்ற உணர்வு என்ற உணர்வுக்கு அந்த ஞானிகள் உணர்வு கசப்பு
2.வெறுக்கும் தன்மை கொண்டு நமக்குள் அதை எடுக்க விடாது
ஆனாலும் நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளை உள்ளுக்குள் செலுத்தி அந்தக் கசப்பினை மாற்றுதல் வேண்டும்.
1.அப்படி மாற்றுதல் வேண்டும் என்றால் “எடுக்கும் சக்தி” வேண்டும்
2.உங்களுக்கு. எடுக்கும் சக்தி வந்தாலும் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் அதைப் பயன்படுத்தக்கூடிய நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எப்படி…?
உதாரணமாக துணியில் சாயத்தை ஏற்றும் பொழுது துணியில் ஒட்டுவதற்குண்டான “அமிலத்தின் அளவு…” எப்படிச் சம பங்கு கொண்டு வர வேண்டும்…? என்று அந்த அளவுகோல் தெரிய வேண்டும்.
1.சீக்கிரம் சாயத்தை ஏற்றி நிறத்தைக் கொண்டு வந்து விடலாம் என்று
2.அளவுகோல் தெரியாதபடி அமிலத்தை அதிகமாகப் போட்டுவிட்டால் சாயம் இருக்கும்.
3.ஆனால் துணி சீக்கிரம் நைந்து விடும்.
ஆனால் அதே சமயத்தில்
1.குறைத்துப் போடுவோம்… லாபத்தை அதிகமாகக் கொண்டு வரலாம் என்றால்
2.சீக்கிரம் சாயம் போய்விடும்… துணி அழகு கெட்டுவிடும்
இப்படியும் போகும்… அப்படியும் போகும்…!
ஆகையால் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று உங்களுக்குள் திரும்பத் திரும்பச் சொல்வதனுடைய நோக்கமே
1.பல காலமாக நமக்குள் பதிந்த உணர்வுகள் ஏராளம் ஏராளம்
2.ஒவ்வொரு சமயத்திலும் அதனுடைய இரைக்காக வேண்டி உணர்வை உந்தும்.
3.அந்த மணம் வரும்
4.அந்த நினைவு வரும்… இயக்கும்
5.அது வளரும்.
சாமி சொன்னார்… ஆனால் நான் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்கின்றேன் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்…! இருந்தாலும் அடுத்து ஏதோ ஒரு வகையில் இடைஞ்சல் செய்கின்றார்கள் அல்லது இடைஞ்சல் வருகின்றது என்றால் அந்த உணர்வு முன்னாடி வரும்
1.தொடர்ச்சியாக வாழ்க்கையில் இப்படி வந்து கொண்டே இருக்கின்றது
2.அந்த அருள் உணர்வுகள் வரப்படும் பொழுது இந்த இடைஞ்சலும் சேர்ந்தே வரும்
3.இதுவும் வளரும் அதுவும் வளரும்
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
அந்த தீமையின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றால் முக்கியமாக இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது ஆத்ம சுத்தி கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று இந்த அடிப்படையில் நாம் உள்ளே கொண்டு போக வேண்டும்.
இப்படி எண்ணித் தனக்குள் சேர்த்த பின்பு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் என்னைப் பார்ப்போருக்கெல்லாம் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று
1.இப்படித்தான் நாம் எண்ண வேண்டுமே தவிர
2.எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்.., கெடுதல் செய்கிறார்… என்று அவர்களை முதலில் எண்ணி விட்டு
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அவர்கள் உணர்வுதான் முன்னாடி வரும்
4.அந்த நஞ்சு நமக்குள் கலந்து… நாம் எடுத்ததை நஞ்சாகத்தான் மாற்ற முடியும்
5.ஏனென்றால் இந்த உணர்வு… அவரின் எண்ணங்களைக் கொடுத்து இது முன்னாடி வந்து விடும்
ஆகவே… “என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம்” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… “நான் பார்ப்பவர்களுக்கெல்லாம்” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா ஏன்று இப்படி நாம் எடுத்துப் பழக வேண்டும்.
தனித்த நிலையில் இடைஞ்சல் செய்வோரின் உணர்வே நமக்கு நினைவுக்கு வரக்கூடாது ஏனென்றால் அது விஷம்…!
1.நினைவுக்கு வந்தால் மீண்டும் அந்த அணுக்கள் சாப்பாடு எடுத்துக் கொள்ளும்
2.சாப்பாடு கிடைத்த பின் கொஞ்சம் நிமிர்ந்து நிற்கும்… ஆன்மாவிலே அதைப் பரப்பும்
3.தனக்கு வலு கிடைத்தது… என்ற நிலையில் இரு… நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியமாக வளரும்
4.பின் நாம் போகும் பாதையைத் தடைப்படுத்தும்.
இதை எல்லாம் வரிசைப்படுத்தித் தெளிந்து… தெரிந்து தெளிவான நிலைகளில் செய்து பழக வேண்டும்.
அது மட்டுமல்ல…! சாமி மட்டும் சொல்கிறார் என்று இருக்கக்கூடாது. இந்த உணர்வின் ஆற்றலை… யாம் பதிவு செய்ததை… மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நோக்கத்தில் ஒவ்வொருத்தரும் நீங்கள் சொல்ல வேண்டும்.
இதைப் பயன்படுத்திப் பார்க்கும் போது நல்ல சிந்தனை வரும். அப்பொழுது இதை “எழுத்து வடிவிற்குக் கொண்டு வாருங்கள்…”
1.நீங்கள் வளர்ச்சி பெற்றால் தான் குருநாதர் பெற்ற நிலைகளை உலகுக்கே கிடைக்கச் செய்ய முடியும்
2.நான் ஒருவன் சொல்லிக் கொண்டே இருந்தால் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான்
3.சாமி நன்றாகச் சொல்கின்றார் என்ற ஒரே புகழோடு போகும்… பின் அதனுடன் மறைந்து விடும்…!
அந்த நிலை இருக்கக்கூடாது…!
வாழ்க்கையில் எதிர்பட்ட இன்னல்களிலிருந்து மீளும் ஞானம் பெற்று உயர்ந்தவர்கள் தான் எல்லா மகரிஷிகளும்
1.இச்சரீர உணர்வில் பெறும் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும்
2.அதிலே வரும் அந்தத் துன்ப உணர்விலிருந்து மீளும் நிலை எப்படி…? என்று அறிந்து
3.தன் வாழ்க்கையில் மோதப்பட்ட அத்தகைய சம்பவங்களினால் தான் சகல ஞானிகளும் மகரிஷிகளும் உருவானார்கள்.
வால்மீகியார் வேட்டையாடிப் புசிக்கும் வேடுவ குலத்தில் பிறந்து வேட்டை ஆடச் சென்ற காலத்தில் ஜோடியாக இருந்த இரண்டு புறாக்களில் ஒன்றை அம்பெய்து வீழ்த்துகின்றார்.
வீழ்ந்த புறா வேதனையில் துடிப்பதையும் வேதனையில் துடிக்கும் புறாவின் நிலையை அதனுடைய ஜோடிப் புறா பார்த்துத் துடிதுடிக்கின்றது.
பாச உணர்வால் துடிதுடிக்கும் புறாவின் வேதனையைத் தன் எண்ணத்தின் உணர்வில் உற்றுப் பார்த்த வேடனான வால்மீகியார்…
1.தாக்கும் நிலையை விடுத்துத் தன் ஞானத்தின் உயர்வை
2.வானை நோக்கி ஏகும் போது உண்மையை உணர்கின்றார்.
அந்த எண்ண அலைத் தொடரைக் கொண்டு அன்று அவருக்குப் பிறந்த ஞானம்தான் இராமாயணக் காவியமாக உருவாகியது.
அதற்குப் பிந்திய காலத்தில் மீனவனாய்ப் பிறந்த வியாசர்… மீன் பிடித்துத் தன் வாழ்க்கையை நடத்திச் சென்ற வழித்தொடரில்… கடலில் மீன் பிடிக்கச் சென்ற பொழுது கடலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு மீன் (டால்பின்) அவரைக் கரை சேர்க்கின்றது.
1.எந்த மீன் இனத்தைத் தான் இம்சித்தோமோ அதே இன ஜீவன்
2.தன்னைக் காத்ததை எண்ணி அப்பொழுது ஏங்குகின்றார்.
அந்த நேரத்தில் உதித்த ஞானத்தின் உணர்வுதான் அவரின் உயர் ஞான சித்தில் மனித வாழ்க்கைக்கு உயரும் பக்குவமான “கீதையின் உபதேசமாகத் தன் தத்துவத்தை” வடித்து வெளிப்படுத்தினார்.
பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்… இந்த மனித வாழ்க்கையில் மனிதன் எந்த நிலைக்குச் செல்ல முடியும்…? எதை எதைப் பெற முடியும்…? என்ற ஞான உணர்வில் அகஸ்தியர் காடுகளில் ஜெபமிருந்தார்.
அப்பொழுது ஓரிடத்தில் பிரசவ வேதனையுடன் ஓர் பெண்ணின் அழு குரல் கேட்டு அருகில் சென்று பார்க்கும் பொழுது… குழந்தையைப் பிரசவித்த நிலையில் நீருக்காக அத்தாய் அழுவதைப் பார்க்கின்றார்.
அது படும் வேதனையைப் பார்த்து அப்பெண்ணைக் கூட்டி வந்த பெண்ணும் தாகம் தீர்க்கத் தண்ணீருக்கு ஓடிய நிலையைக் கேட்டு அறிகின்றார்.
அப்பெண் தாகத்திற்காகத் துடிக்கும் நிலையறிந்து தண்ணீர் கொண்டு வருவதற்குள் தாகத்தால் அந்தத் தாய் உயிர் நீத்துவிடுகின்றது.
இதைக் கண்ட அகஸ்தியர் இத்தனை காலங்களாக தன்னால் சாதிக்க முடியாத ஜெப சக்தியை நாம் பெற்றுள்ளோம். இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பெண்ணின் தாகத்திற்கு
1.நீரைக் கொடுக்கக் கூடிய சக்தி இருந்திருந்ததென்றால்…
2.தாகத்தால் உயிர் நீத்த அத்தாய்க்கு
3.தன்னால் நீர் தர முடிந்திருக்கும் என்ற உணர்வின் ஏக்கம் கொள்கின்றார்.
அந்த எண்ணத்தைக் கொண்டு வீரிய ஜெபம் இருக்கின்றார். அதன் வழி வந்த ஞானத்தால்
1.தான் பெற்ற அகத்தின் உணர்வின் ஸ்திரத்தால் அகஸ்தியர் என்ற நாமம் பெற்று
2.அவரின் சித்தின் உயர்வின் ரிஷி சக்தியால்…
3.அவர் அமர்ந்திருந்த இடங்களில் எல்லாம்
4.ஜீவ நதிகள் உற்பத்தியாகும் வழித்தொடர் உருப் பெறுகின்றது
மனித உணர்வுக்கு ஒத்த ஜீவ நீர் அலைத் தொடரில் “தன் சக்தியை” இன்றும் செயலாக்கிக் கொண்டுள்ளார்.
இப்பூமியில் குறுகிய காலத்தொடரில் கொங்கணவர் பெற்ற வழித்தொடரும் இதே முறையில் தான்.
காட்சி:
குன்றுகள் போன்று சிறு சிறு மலைகள் தெரிகின்றன. மேடான ஒரு மலையில் ஓலை வேயப்பட்டுச் சிறு சிறு குடிசைகளும் அதற்குப் பக்கத்தில் சாணியைக் கொண்டு மெழுகிய தரை விசாலமாகவும் தெரிகின்றன.
அதற்குச் சிறிது தூரத்தில் சிறு சிறு பையன்கள் குதித்து விளையாடுவதைப் போன்றும், விளையாடும் பையன்களைப் பார்த்து அந்த வழியாகச் சிறு மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு வந்த பையன் மற்றச் சிறுவர்களுடன் தானும் விளையாடப் போகின்றான்.
எதிர்பாராது ஓர் கூர்மையான கல்லில் இடிபட்டுப் பலத்த காயமுடன் விழுந்து அலறுகின்றான். குடிசையிலிருந்த ஓர் தாய் அச்சிறுவனை அக்குடிசைக்குள் படுக்க வைத்து அச்சிறுவனுக்கு உண்டான காயங்களுக்கு மருந்திட்டுப் பாதுகாக்கின்றது.
பின் அதே சிறுவன் அத்தாயுடன் சிறிது வளர்ந்த நிலையில் அத்தாய்க்கு உதவியாக மருந்து அரைத்துத் தருகின்றான்.
அதன் பிறகு ஓர் கல்லறையும் அக்கலறையில் மண் மேட்டில் அதே சிறுவன் மீண்டும் வளர்ந்த நிலையில் அக்கல்லறையின் கால்மாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.
அக்கல்லறையிலிருந்து அச்சிறுவனுக்கு உதவிய தாயே வெளிச்சமுடன் கூடிய உருவமாய் அச்சிறுவனின் உருவமுடன் ஒன்றியதைப் போன்றும்… மேடான ஓரிடத்தில் ஓர் மரத்தை வெட்டி அம்மரம் ஐந்து ஆறு அடி உயரத்தில் உயர்ந்த மேடை போன்று இருப்பதைப் போன்றும்… அந்த இடத்தில் சிறுவனாய் இருந்து பெரியவனான அப்பையன் அமர்ந்திருப்பதைப் போன்றும்… அதே பையனின் உருவம் வயது முதிர்ந்த நிலையில் தெரிகின்றது.
மற்ற ரிஷிகள் தெரியும் பொழுது அடர்ந்த முடி தெரியும். ஆனால் இவரின் நிலை சிறு சிறு முடியுடன் சன்னமான தேகமுடன் அமர்ந்திருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.
அவரை வணங்கி யாரோ ஆசீர்வாதம் கேட்கும் பொழுது… என்னிடம் ஒன்றுமில்லை… அத்தாய் சக்திதான்…! என்று அத்தாயை எண்ணி அவர் வணங்குகின்றார்.
அவருக்கு முன் ஒளியாக அத்தாயின் உருவம் தெரிந்து அத்தாயிடம் தான் ஆசீர்வாதம் பெற்றுத் தன்னிடம் ஆசீர்வாதம் வேண்டி நின்றவர்களுக்கு இவர் அருள் புரிகின்றார்.
இதனுடைய உண்மைத் தத்துவம் அனாதையான சிறுவன் பட்ட துன்பத்தை நிவர்த்தித்து ஆதரவு தந்து அத்தாயின் சக்தியால் உயர்ந்த கொங்கணவர்…
1.அத்தாயின் உணர்வுடனே தன்னையும் ஐக்கியப்படுத்தி
2.தனக்கு ஆதரவு தந்து தன்னை உருவாக்கிய அத்தாய் சக்திக்குத்தான் தன் சக்தி சொந்தமென்று தவிர்த்து
3.தன்னை உயர்த்திக் கொள்ளாமல் தாயின் ஜெபத்துடனே தன் உயர்வைக் கொண்டு
4.தாயின் உயர்வுடனே சகல சித்துத் தன்மையையும் பெற்ற பக்குவ நிலை கொண்டு செயல்பட்டார்.
ரிஷி சக்திகளின் உண்மைத் தொடர்பு ஆரம்ப வாழ்க்கை நிலைகள் எல்லாமே சகல மனிதர்களை ஒத்த நிலைதான்…!
ஆனால்… தங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
1.எண்ணத்தின் உணர்வில் எதிர்ப்படும் மோதல் காலங்களில்
2.ஞானத்தின் உயர் ஞானத்தைக் கொண்டு உயர்ந்தவர்கள் தான் சகல மாமகரிஷிகளும்.
விண்ணில் கோள்கள் கரைவது போல் மண்ணுலகில் வரும் தீமைகளை நாம் கரைக்கப் பழக வேண்டும்.
நாங்கள் பார்ப்பவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவர்கள் பிணிகளில் இருந்து விடுபட வேண்டும் மெய்ப்பொருளுடன் ஒன்ற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அவர்களுக்கு அங்கே பாய்ச்ச வேண்டும்.
அதே சமயத்தில் சந்தர்ப்பவசத்தால் ஒருவருக்கொருவர் பகைமைகள் யார் யாரிடமெல்லாம் உண்டானதோ
1.அவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பத்தில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.அவர்கள் நலமாக வாழ வேண்டும்
4.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
5.அவர்கள் ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் பெற வேண்டும் என்று நாம் அவர்களை நினைக்க வேண்டும்.
இப்படி ஒருவருக்கொருவர் நம்மை அறியாது புகுந்த தீய வினைகளுக்கு உணவு கொடுக்காதபடி இப்படி எண்ணி ஒதுக்கிவிட வேண்டும். இதே போன்று அவர்களும் எண்ண வேண்டும்.
இப்படி இருவருமே பகைமை ஊட்டும் உணர்வுகளை இழுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை என்றால் அது விலகி அப்பால் சென்று விடும்.
நம் பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால்
1.சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் கோள்கள் சுழன்று கொண்டிருக்கிறது…
2.காந்த ஈர்ப்பு வட்டத்திலே தான் அது சுற்றி வருகின்றது
3.ஆனால் சூரியனின் ஈர்ப்பின் (காந்தம்) நிலைகள் இழந்து விட்டால் கோள்கள் எங்கோ ஓடிச் சென்று விடும்.
4.ஆரம்பத்தில் எந்த சூரியனை மையம் கொண்டு சுழற்சி நிலைகள் பெற்றதோ அதன் ஈர்ப்புக்குள் சென்று கரைந்து விடும்
ஒரு பிரபஞ்சத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் இருக்கின்றது
1.அதனுடைய அடிப்படை வரிசையிலே “சுழல் போன்று” ஒன்று (BLACK HOLE) உண்டு.
2.சூரியனின் சக்தி முடிந்தபின் (முதுமை அடைந்த பின்) அந்தச் சுழலுக்குள் ஈர்க்கப்பட்டு
3.தனது இனத்தைக் கவர்ந்து மீண்டும் கலக்கி பிரபஞ்சத்தில் பறக்கச் செய்யும்.
4.மற்ற இனத்திற்கு இதை உணவாகக் கொடுத்து அதை வளரச் செய்யும்.
இது இயற்கையின் சில நியதிகள்.
இது எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாக காட்டிய நிலைகள். நீ கோள் என்றும் நினைக்கின்றாய் சூரியன் என்றும் நினைக்கின்றாய் அதுவும் கோள்தான் அதனின் கடைசி நிலைன் இப்படி ஆகும் என்றார்.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் விண்ணிலே கரைவது போல் மண்ணுலகில் வரும் தீமைகளை நாம் கரைக்க வேண்டும்.
அதைத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தீமைகளை அகன்று செல்லச் செய்யும் நிலையாக அதைக் கரைக்கும் (கடலில்) நிலையாக “விநாயகர் சதுர்த்தி” என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
நம் எண்ணத்தால் எடுத்தது அணுக்களாக விளைந்திருக்கின்றது. அதனின் ஈர்ப்பாக… அந்த இழுக்கும் சக்தி இல்லாதபடி நாம் தடைப்படுத்தி பட்டால் அது இந்த பூமியின் சுழற்சியின் தன்மையில் விலகிப் போய்க்கொண்டே இருக்கும்.
உதாரணமாக கடல் அருகிலே சென்றால் அது அப்படியே இழுக்கும். அலைகள் மோதி மறுபடியும் தனக்குள் இழுக்கும். உள்ளே இழுக்கும் பொழுது எல்லாவற்றையும் இழுத்து உள்ளே கொண்டு செல்லும்.
இதைப் போன்று எந்தெந்த மனிதன் பால் நாம் உணர்வின் தன்மை எடுத்து வைத்திருக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை படர்ந்த பின் எதற்கும் சிக்கவில்லை என்றால் செடி கொடி மரங்கள் இருக்கிற பக்கம் செல்ல முடியாது. அது செவிட்டில் அறைந்தது போன்று அடித்துத் தள்ளிவிடும்.
மரம் செடி கொடிகளுடைய சத்து தான் மனிதனுக்குள் எண்ணங்களாக வந்தது இருந்தாலும் பிற தீமையின் உணர்வுகள் கலந்து அது வேறு சுவை கொண்ட நிலையாக மாற்றியது
ஆகையினால் மனிதனால் உருவாக்கப்பட்ட தீய வினைகள் அதாவது அந்தத் தீமையின் அலைகள் இங்கே போகாது.
விண்ணின் நிலைகளில் சூரியனின் பிடிப்பில்லை என்றால் அதன் ஈர்ப்பில் உள்ள கோள்கள் எங்கே போய் மடிகிறதோ சொல்ல முடியாது அதைப் போன்று
1.சுழற்சியின் ஈர்ப்பு வட்டம் தான் பெரும் கடல்… அது முதலில் உருவானது
2.கடல் அதைத் தனக்குள் எடுத்துக் கரைத்து மீண்டும் அது வெளிப்படும்.
3.அதாவது மனிதர்கள் ஒதுக்கித் தள்ளிய தீய வினைகள் கடலின் ஈர்ப்புக்குள் சென்று அது மூழ்கிவிடும்.
இதை உணர்த்துவதற்குத் தான் காவியத்தில் கருத்தினைச் சொல்லி விநாயகர் சதுர்த்தி…! களிமண்ணில் சிலையாகச் செய்து தீமைகளைக் கரைத்திடும் நிலையாகக் கடலில் கரைப்பதாகக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்.
தனக்குள் உறைந்த தீய வினைகளை பிறர் மேல் கொண்ட பகைமைகளைக் கரைக்கச் சொன்னார்கள்.
1.நாம் பார்க்கும் எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்று
2.அந்தப் பகைமைகளுக்கு இங்கே இடம் இல்லாதபடி செயல்படுத்த வேண்டும்
3.உலக மக்கள் அனைவரும் இப்படிச் செயல்படுத்தும் பொழுது தீமைகள் இங்கே இருக்காது… தீமைகள் கரைக்கப்படுகின்றது.
ஞானிகள் காட்டிய வழியிலே… சாஸ்திரப்படி இது பேருண்மை.
ஆதிசங்கரருக்குப் பின் மெய் வழி செல்லும் பாதையே மாறி விட்டது…!
எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும் ஆத்ம வலுக் கொண்டு ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு உயர் காந்த மின் ஒளியை ஜெபத்தால் எடுக்கும் நிலைக்கு வளர வேண்டும்.
1.இப்படிப்பட்ட வாழ்க்கை தொடரில் வளர்த்துக் கொள்ளும் உயிராத்மா இணைப்பில்
2.கணவன் மனைவியின் கூட்டு ஜெபத்தால் மனிதன் தெய்வ நிலை பெற முடியும்.
அண்டத்தின் அகிலமாய்… ஆதி சக்தியின் அனைத்துப் படைப்பிலும்…
1.ஆண்டவன் என்ற உயர்ந்த நிலையில்
2.அதன் தொடர் பெற்று வளரும் தன்மையை இறை நிலையாக்கி
3.இறை சக்தி கொண்டு… இறை உணர்வு பெற்று…!
4.தெய்வத் தன்மை கொள்ளும் தொடர்பு நிலை தான் “இயற்கையின் உண்மை நீதி நிலை…!”
மனிதனின் எண்ணத்தின் உணர்வில் பகுத்தறியும் உயர் ஞானத்தின் வழித் தன்மை கொண்டு இறை நிலை பெற்று… இறை சக்தியாய்… இறை உணர்வு குணத்தை… இச்சரீர வாழ்க்கையில் வலுப்பெறும் வளர்ச்சிக்கொப்ப… மனிதன் தெய்வமாகும் நிலை உண்டு.
மனித வாழ்க்கைக்குத் தேவையானதை… நாளை செயல் கொள்ள இன்றே சேமிக்கும் செயலை… அந்தத் திறமை கொண்டு வழி அமைக்கும் பக்குவம் “மனிதனுக்குதான் உண்டு…!”
வாழ்க்கையின் நடைமுறைக்கு உழுது பயிரிட்டுப் பலன் பெற்றுத் தான் இன்றைய மனிதன் சமைத்து உண்ணுகின்றான்.
உடலின் சுக நிலைக்கு ஏற்ற பல வழி முறைகளைத் தன் ஞானத்தால் மனித வாழ்க்கை நடைமுறையில் செயல்படுத்தும் நாம்…
1.நம் ஞானத்தின் உயர்வால் உயிராத்மாவைத் தெய்வத் தன்மை கொள்ளும் பக்குவத் தொடர் தான்
2.இங்கே இந்த உபதேச வாயிலாக விளக்கப்படும் இயற்கையின் உண்மையின் நியதிகள்.
மிருகங்கள் தனக்குக் கிடைத்ததை உண்டு உறங்கும் வாழ்க்கையாக அதனின் உணர்வின் எண்ணத்தின் நிலை இருந்தாலும் உயர் ஞானத்தால் செயல்பட முடியாத உண்மை நிலையை அன்றே ஞானிகள் தன் உணர்வின் எண்ணத்தால் கண்டுணர்ந்தனர்.
ஆனால் காலப் போக்கில் ஞானத்தின் வழி செல்வது என்பது பல நிலைகளில் மாற்றப்பட்டு… உண்மைத் தத்துவங்கள் மறைக்கப்பட்டு விட்டது.
தன்னுள் உள்ள இறை சக்தியை இறை உணர்வாக்கும் நிலையை மனிதன் அறிய முடியாமல்
1.இறைவன் என்பதையே யாரென்று அறிய முடியாமல்
2.பூஜித்துப் பலன் காணும் வேத விற்பனர்களிடம் அடிமைப்பட்டு
3.சிதறுண்ட நிலையாகத் தான் இன்றைய நிலை உள்ளது.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உணர்வின் எண்ணத்தில் தன் எண்ணத்தாலே சக்தி பெற்று… உயர்வை வளர்க்கும் உயர்ந்த தத்துவத்தை ஆதிசங்கரர் அத்வைத முறைப்படுத்திக் காட்டினார்.
அதற்கடுத்து வந்தவர்கள் நான்கு வகை வேதங்களாக்கி… மனித உருவங்களை அமைத்து… மந்திர ஒலி எழுப்பி… அறியக்கூடிய நிலைக்கும் பக்தி மார்க்க நிலைக்கும்… வானசாஸ்திரத்தின் தொடரை அறியவும் கொண்டு சென்றனர்.
அந்த நான்கு வேதங்களின் தொடரில் இது தான் பெரிது… இல்லை அது தான் பெரிது… என்று பல வேதங்களைப் பிரித்து மனிதனின் எண்ண உணர்வால் தெய்வத் தன்மை பெறக்கூடிய வழியை மாற்றி விட்டனர்.
அரசு நிலைக்கும்… குடிமகன் நிலைக்கும்.. நாட்டியக்கலை மற்ற இசைக்கலைகளுக்கும்… வேதத்தின் விற்பன்னர்களுக்கும்… என்று நான்கு மறையாக்கி வகுக்கப்பட்ட நிலையில் அந்தந்தத் தொடருக்குப் பல நிலைகளைப் பிரித்தனர்.
அது மட்டுமல்லாமல் காலப்போக்கில் ஒலி அலையின் தொடர் பெற்று உருவகங்கள் மாறி மாறி
1.அன்று கண்ட ஞானியின் உண்மைத் தத்துவத்தை
2.இன்றைய நிலையில் உணரும் தன் ஞானமும் அற்றுப் போய்
3.விஞ்ஞானப் பிடிப்பிலேயே வாழுகின்ற நிலை எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது.
இதிலிருந்து மீள வேண்டும் என்றால்… ஞானத்தின் வழித் தொடரில் உயர் ஞானமாக்கும் ஆத்ம தியானத்தால்… தன்னைத்தான் தான் உணரும் பக்குவம் பெற்று மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான “தெய்வ நிலை” பெற முடியும்.
உடலுக்குள் மாறிக் கொண்டே இருக்கும் செயல்கள் – இந்திரஜித்
பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகளைப் பெற்று வளர்ச்சியாகி வந்த நிலைகள் தான் மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்கள்… “தேவாதி தேவர்கள்…”
சித்திரபுத்திரன் கணக்குப் பிள்ளை (கணக்கு எழுதுகிறான்) என்று காட்டியுள்ளார்கள். நம் கண் கொண்டு எதை எல்லாம் உற்றுப் பார்க்கின்றோமோ அந்த உணர்வின் தன்மைகள் தனக்குள் (உடலுக்குள்) அமைக்கின்றது… அது தான் சித்திரபுத்திரன்.
அதாவது…
1.நாம் கண் கொண்டு பார்த்த உணர்வுகள் உயிரின் துணை கொண்டு புத்திரனாக (அணுக்களாக) விளைகின்றது
2.அதனின் (சித்திரபுத்திரன்) கணக்கின் பிரகாரம் நமக்குள் எண்ணங்கள் தோன்றுகின்றது.
உதாரணமாக சந்தர்ப்பத்தில் நாம் ஒரு கடும் விஷம் கொண்ட பாம்பைப் பார்த்து விடுகிறோம். பார்த்த பின் பாம்பின் நினைவு அதிகமாகிறது. காரணம் அதைக் கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோம்… பதிவாகி விடுகின்றது.
பாம்பின் நினைவு நமக்குள் ஆழமாகப் பதிவான பின்… அச்சத்தின் உணர்வுகள் அடிக்கடி வரப்படும் போது நஞ்சின் தன்மையாக உடலுக்குள் வளர்கின்றது.
இந்த நஞ்சின் தன்மை வளரப்படும்போது நமக்குள் இருக்கக்கூடிய தேவாதி தேவர்கள் அதாவது மனிதனை உருவாக்கிய நல்ல குணங்கள் அஞ்சுகின்றது… இனி என்ன நடக்குமோ…? என்று…!
1.பாம்பைப் பார்த்த நிலைகளில் நாம் எண்ணும் உணர்வுகள் இந்திரலோகமாக (இந்திரீகம்) மாறுகின்றது.
2.இந்திரீகம் என்றால் உணர்வின் கருக்களாகி அணுக்களாக உருவாவது
3.இந்திரலோகத்தில் இப்படி அணுவாகும் பொழுது இந்திரஜித்…!
4.அது எதுவாக உருவாக்குகின்றதோ அதன் செயலாக்கமாக அது உருவாக்கும்
5.இந்திரஜித் என்றால் மற்ற தீமைகளை விளைய வைக்கும் அதனின் செயலாக்கங்களாக “மாறிக் கொண்டே இருக்கும்…”
அது அதற்கு உண்டான… காரணப் பெயர்களை இப்படி வைத்து நம் உடலுக்குள் இயங்குவதைத் தெளிவாகக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள்.
நம் கண்களால் பார்த்தது சித்திரபுத்திரன் ஆகிறது. எந்த உருவை நாம் பார்க்கின்றோமோ அந்தச் சித்திரம் தனக்குள் அது இயக்கக்கூடிய “புத்திரனாக மாறியது” (இந்திரஜித்).
1.அந்தப் பாம்பை பார்த்த பின் அச்சத்தால் எவ்வளவு தீமைகளை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் தன்மை இங்கே விளையச் செய்கிறது.
2.அந்த விஷத்தின் தன்மை ஐயோ பாம்பு…! வீட்டிற்குள் வந்து விடுமே… கடித்துவிடுமே…! என்ற உணர்வு வருகிறது
3.இந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது இந்த எண்ணமே நமக்குள் எமனாகின்றது.
4.சித்திரபுத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் .
கண்ணிலே பார்த்த அந்தப் பாம்பின் உணர்வுகள் அச்சப்படும் நிலையில் எதை அதிகமாக வளர்க்கின்றோமோ அந்த உணர்வே நமக்குள் எமனாகின்றது.
சிந்தனையற்ற நிலையில் அவ்வாறு இயக்குவதை “எமன் எருமை மீது வாகனமாக வருவதாகக் காட்டுகின்றார்கள்…” சிந்தனை இல்லாதபடி
1.ஐயோ பாம்பு வருகிறது… என்ற உணர்வை… அந்த விஷத்தைத் தான்
2.வேதனையை எண்ணுகின்றோமே தவிர… “வேதனையை நீக்கும் வலுவை” நாம் எடுக்கவில்லை.
இதனையும் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகிறது. சிவனைக் காட்டி “சிவனுக்கு முன் நந்தீஸ்வரனை…” வைத்துக் காட்டுகிறார்கள்.
நம் உயிர் ஈசன் ஆகின்றது… நான் எண்ணிய உணர்வுகள் உயிரால் உருவாக்கப்படும் பொழுது அதுவும் ஈசனாக இருந்து நம்மை இயக்குகின்றது. நந்தீஸ்வரா…! எனக்குள் சென்று அது எனக்குள்ளே உருவாக்கும் நிலைகள் பெறுகின்றது..
எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அது அணுக்களாக உருவாகப்படும் பொழுது அதுவே உடலாகின்றது… சிவம் ஆகின்றது. சிவனுக்கு நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை…!
சாஸ்திரங்கள் இதை எல்லாம் நமக்குத் தெளிவாக காட்டுகின்றது அதில் தவறு இல்லை. அதன் வழி வளர்ந்தவர்கள் நாம் இதை எல்லாம் புரிந்து கொண்டால் போதும்.
ஆலயத்தில் காட்டப்படுவது அனைத்தும் துவைதம்…!
1.கண்களால் அந்தத் தெய்வ உருவங்களைப் பார்த்து… நினைவுகள் அந்த ஞானிகளுடன் ஒன்றும்போது
2அவர்கள் காட்டிய நல் வழியினை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளையும்.
தீமை அகற்றிடும் சக்தி உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இந்த விளக்கங்களைக் கொடுக்கின்றோம்.
குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தார்…! என்று நீங்கள் எண்ணலாம் ஆனால் இந்த அருள் வழியில் தான் அந்தச் சக்தியினைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.
அருள் வழியில் அன்றாடம் நினைக்க வேண்டியது
எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ… அப்போது உடலில் இருந்து வரக்கூடிய மணமே உங்களுக்கு எதிரியாக மாறி விடுகின்றது அதை அடிபணியச் செய்யும் நிலைக்கே “என்னுடைய (ஞானகுரு) ஆசீர்வாதம்…”
துன்பத்தை விளைவிக்கும் நோயோ… துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ… அதெல்லாம் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அருளாசி கொடுப்பதை நீங்களும் அப்படியே எண்ணிப் பெற்றால் அந்த ஞானிகளுடைய அருள் உணர்வுகள் உங்களுக்குள் படர்ந்து துன்பங்கள் அகலும்.
உதாரணமாக மாம்பழம் வாங்க வேண்டும் என்று விரும்பினால் நுகர்ந்த உணர்வு உங்களை அந்தக் கடைக்கு அழைத்துச் செல்கிறது. அதே போல்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் உடல் நோய் நீங்க வேண்டும்… துன்பம் நீங்க வேண்டும்
3.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… செயல் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
4.அது உங்களுக்குள் கிடைக்கப் பெறும்.
அதற்குப் பதிலாக சாமி…! என் துன்பம் என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது… “நீங்கள் தான் கடவுளாக இருக்கின்றீர்கள்…” என்று என்னை வணங்கினீர்கள் என்றால் “உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கின்றீர்கள்” என்று தான் அர்த்தம். நான் கொடுத்த உபதேசம் அனைத்தும் வீணாகிவிடும்.
இவ்வளவு தூரம் பெரியவர் உயர்ந்த கருத்துக்களைச் சொல்லுகின்றார் என்று என்னை உயர்த்தி விட்டு… உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள்
1.உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்… உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்த சக்தியைத் தாள் பணியச் செய்யுங்கள்.
எனக்கு குருநாதர் காட்டிய நிலைகள் அதுதான்…!
ஒருவர் துன்பப்படுகிறார் என்றால் “நம் சொல்” அவரைத் தீமையிலிருந்து மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… என்று எண்ணும் பொழுது நாம் முதலில் நலமாகின்றோம் நம் சொல்லும் செயலும் நல்லதாகிறது. நம் சொல் மற்றவர்கள் உள்ளங்களை மகிழச் செய்கின்றது.
அந்த மகிழ்ச்சியால்
1.மற்றவர்கள் நம்முடன் இணைந்து செயல்படும் நிலையாக
2.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிபடுத்துவதும்
3.தடையின்றி தொழில் நடப்பதும் தடையற்ற நிலையாக நமக்குள் எல்லாமே உருவாகின்றது.
இந்த அடிப்படையில் நீங்கள் எம்மிடம் ஆசி வாங்கினால் அது உங்களைப் பின் தொடர்ந்து எப்போதுமே உறுதுணையாக அமையும்.
1.உங்களைக் காக்கும்… உங்களுக்குள் உயர்வை ஊட்டும்
2.மெய் ஒளியின் தன்மையைப் பெறச் செய்யும்… நீங்கள் அருள் ஒளி பெறுவீர்கள்.
ஆக… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; நலமும் வளமும் நாங்கள் பெற வேண்டும்; எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்; எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்; எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் நல்ல உள்ளங்கள் வளர வேண்டும் என்ற இந்த உணர்வை எண்ணினால் இதுவே உங்களுக்கு எம்முடைய ஆசியாகக் கிடைக்கின்றது அருள் ஞான வித்துக்களாக…!
மகரிஷிகள் மனிதரைத் தேடி வரவேண்டிய அவசியம்
காட்சி: பிரகாசமாக சூரிய வட்டம் தெரிந்து பல ரிஷிகளின் உருவமும் அவர்களின் செயல் முறையும் தெரிகின்றது. உருவம் தெரிந்து அவ்வுருவம் அப்படியே பிரிந்து… ஒளியாக ஒரு உருவம் பிரிந்த பிறகு… மீண்டும் பல உருவங்களாகவும் தெரிகின்றது.
பல கோடி ரிஷிகள் உள்ள பொழுது இப்பூமியில் இன்று தன்னைத் தானே உணர முடியாமல் வாழ்கின்ற மனிதனின் மேல்
1.அவர்கள் வளரத் தன் சக்தியை ஏன் உபயோகித்துச் செயல்பட வேண்டும்…?
2.சிருஷ்டியின் தன்மையையே சிருஷ்டிக்கும் ரிஷிகள்
3.மனிதனின் உணர்வுடன் ஒட்டிச் செயல்படும் நிலைகள் எதற்கு…? என்ற வினா எழும்பலாம்.
சூரியனும் பூமியும் ஒன்றின் ஈர்ப்புத் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் தொடர்ந்து ஓடிக் கொண்டே செயல்படுகின்றது. ஈர்ப்பின் பிடிப்பில் இருந்து எந்த மண்டலமும் தனித்த ஒன்றாகச் சுழன்று செயல்பட முடியாது.
1.ஒன்றின் தொடர்பு பெற்று…
2.ஒன்று ஓடும் ஜீவ வளர்ச்சி ஏற்படும் தொடரில் தான்
3.எல்லா மண்டலங்களின் சுழற்சியும் உள்ளது.
இச்சுழற்சியின் மையக் கருவாக ஈர்க்கப்படும் சக்தியின் தொடர் வளர்ச்சியுற்றுக் கொண்டே… அத்தொடரின் வலுக்கொண்டு வளரும் தொடரில் தான்… மண்டலங்களும் அதில் வளரும் தொடரும் செயல் கொள்கின்றது.
அதைப் போன்று தான் சகல சித்து நிலையின் படைப்பின் படைப்பையே படைக்கவல்ல “ரிஷிகளின் தொடர்பிற்கு…” உணர்வின் எண்ணம் கொண்ட ஜீவ காந்த ஒலி சரீரத் தொடர்பின் எண்ணம் கொண்டுதான் அந்த ரிஷி சக்திகளின் மூலக்கருவே செயல் கொள்கின்றது.
1.தன்னுடைய வலுவின் தொடர் வலுவில் வளர்ப்பை வளர்க்கவல்ல நிலைக்கு…
2.ஜீவ காந்த உணர்வு எண்ண செயல் சக்தியைக் கொண்டு…
3.ரிஷிகளின் தொடர்புடன் மனித எண்ணத்தின் தொடர்பு சுழற்சி வலுப் பெறப் பெற…
4.ரிஷிகளைக் காட்டிலும் மனித உணர்வால் ஜீவ செயலில் உபதேசிக்கும் உண்மை உயர் ஞானத் தத்துவ ஈர்ப்பினால்…
5.மனித உணர்வின் அன்பைப் பெற்றானானால்…
6.மனிதச் சரீரத்தில் இருந்தே பலரின் அன்பான அலையின் வலுவைக் கொண்டு…
7.இச்சரீர ஆத்மாவிற்கு உயர்ந்த முலாமை வளர்த்துக் கொண்டு…
8.இச்சரீரத்தில் இருந்தே அஷ்டமாசித்தின் ஒளி சக்தி பெற்று உயர்வு நிலை பெற…
9.இச்சரீரத்தின் எண்ணத்தின் உயர்வில் வலு நிலை கூடுகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று ஜாதகப்படி உனக்குள் இருள் உள்ளது… தோஷம் இருக்கிறது… என்று சொல்வார்கள். அதைப் போக்குவற்காக வேண்டி யாகத்தைப் பெருக்கித் தவறுகள் செய்வோர் ஏராளம்.
“சாமி… தெய்வம்… என்ற பெயரைச் சொல்லி..,” மக்களை ஏமாற்றித் தவறுகள் செய்வோர் பலரும் உண்டு. இதற்குக் காரணம் என்ன…?
“நமது ஆசையின் நிமித்தம் தான்…” ஏமாற்றும் சாமியார்கள் அதிகமாகத் தோன்றுகின்றார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவதும் “நான் ஏமாந்து விட்டேன்” என்ற நிலையும் வருகின்றது.
ஆனால் “எல்லாச் சக்திகளும் உங்களுக்குள்ளே உண்டு..,” என்பதை நம்பிப் பழகுங்கள்.
இன்று எங்கே எடுத்தாலும் சாமி பெயரையும் தெய்வத்தின் பெயரையும் சொல்லி “ஏதோ அருளைப் பெற்றேன்…” என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.
இதைப் போன்ற தவறுகளைச் செய்தே இன்று உலகம் “நம் ஆசையைக் கண்டு… அந்த ஆசையில்… அவர்கள் தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்”. ஆக அவர்களுக்குள் நாம் அடிமையாகிவிடுகின்றோம்.
ஒரு விட்டில் பூச்சி என்ன செய்கின்றது?
ஒளி இருக்கிறது என்று வருகின்றது. அந்த ஒளியிலே வந்தபின் நெருப்பிலே விழுந்து கருகுகின்றது. இதைப் போன்று தான் நம் வாழ்க்கையின் நிலைகளும
1. யாரோ தருவார்
2. சாமியார் தருவார்
3. ஜோதிடம் தரும்
4. மந்திரம் தரும்
5. யாகம் தரும் என்ற நிலைகளில் நாம் செல்கின்றோமே தவிர “நம்மை நம்புகின்றோமா…?” என்றால் இல்லை…!
அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிகளை உங்கள் உடலுக்குள் ஏங்கிப் பெற்றுப் பழகுங்கள். உங்கள் அறியாத இருளைப் போக்க இது உதவும்.
“நீங்கள் எதை நுகர்கின்றீர்களோ” அதையே தான் உங்கள் “உயிர்” இயக்கிக் காட்டுகின்றது. இருளைப் போக்குகின்றது. மெய்ப்பொருளைக் காணவும் செய்கின்றது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அதைப் பெற்றேன் (ஞானகுரு). அதை நீங்களும் பெற வேண்டும் என்றுதான் அவர் காட்டிய அருள் வழியில்
1. உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்.
2. உங்கள் உடலைச் சிவமாக மதிக்கின்றேன்.
3. உங்கள் உடலை உயர்ந்த குணங்கள் கொண்ட ஒரு ஆலயமாக மதிக்கின்றேன்.
4. உங்கள் கண்களைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
5. உங்கள் சொல்லை இராமனாக மதிக்கின்றேன்.
இராமன் என்றால்.., வேதனை என்ற சொல் வரும் பொழுது வாலியாகின்றது. மகிழ்ச்சி என்ற சொல்லைச் சொல்லும்பொழுது சீதா இராமனாகின்றது.
ஆகவே “நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்…?” என்பதற்குத்தான் உங்களுக்குள் கூறுவது.
ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்திற்குள் விஷத் தன்மைகள் எது பரவினாலும் “துருவ நட்சத்திரம்” அதை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளது.
அதன் உணர்வை நமக்குள் சேர்த்தால்… நமக்குள் இருக்கும் நுகரும் அல்லது ஏற்கனவே இருக்கும் இந்த விஷத் தன்மைகளை மாற்றிக் கொள்ள முடியும்.
உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளியின் தன்மையாக மாற்றிக் கொள்ள முடியும். “அந்த நம்பிக்கை கொள்ளுங்கள்…”
எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தி பெற வேண்டும்
சாதாரண நிலையில் இன்று உடலை விட்டுப் பிரிந்தவர்கள் அடுத்தவர்கள் உடலில் பேயாக ஆடுவதைப் பார்க்கலாம்… அருளாடுவதையும் பார்க்கலாம்… துன்பத்தை விளைவிப்பதையும் காணலாம்.
இந்த உடலில் எதை விளைய வைத்தோமோ இறந்தபின் இன்னொரு உடலுக்குள் சென்று அதைத் தான் அங்கே விளைவிக்கச் செய்ய முடியுமே தவிர குழந்தையாகப் பிறக்க முடியாது.
1.இன்றைய சூழ்நிலையில் இறந்தவர்கள் மீண்டும் மனிதனாகப் பிறப்பதற்குண்டான வழி இல்லை.
2.காரணம் காற்று மண்டலமே நஞ்சாக மாறி விட்டது.
மீண்டும் மனிதனாக வரவேண்டும் என்றால் ஆடாகவோ மாடாகவோ சென்று… இன்னொரு மனிதனின் உடலுக்குள் சென்று வந்தால் தான் முடியும்.
ஆடு மாடு நாய் என்று எத்தனையோ செல்லப் பிராணிகளை வளர்க்கின்றோம். “என் கண்ணுக்குட்டி” என்று அன்புடன் பழகுகின்றோம்.
ஆனால் அது திடீரென்று இறந்து விட்டால் “ஐய்யய்யோ… நான் ஆசையாக வளர்த்த கன்று இறந்துவிட்டதே…!” என்ற இந்த ஏக்கம் நமக்குள் வரும் பொழுது அதனுடைய உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடும். வந்த பின் நாம் உடலில் மனித உணர்வை ஈர்த்து வளர்த்து… கருவாகி குழந்தையாக உருவாகி அப்படித்தான் மீண்டும் மனிதனாக வர முடியும்.
நாயை அன்புடன் வளர்க்கின்றோம்… நான் சொன்னதை எல்லாம் கேட்கின்றது… செல்லமாக நான் வளர்க்கிறேன் என்று சொல்லலாம்.
ஆனால் இறந்தபின் செல்லமாக வளர்த்த நாய் இறந்து விட்டதே…! என்று ஏங்கினால் அந்த ஆன்மா நம் உடலின் ஈர்ப்புக்குள் வந்துவிடும். நாம் சோறு போட்டு வளர்த்த நாயெல்லாம் அதே ஏக்கமாக இருக்கும்.
யார் உணவை அன்புடன் கொடுத்தார்களோ அதே ஏக்கத்திலே தான் இருக்கும் போட்டவர்கள் இல்லை என்றால் அது இறந்துவிடும்.
1.வேறு எங்கேயாவது சென்று உடலை விட்டுப் பிரிந்தாலும்
2.யார் சோறு போட்டார்களோ அந்த உடலுக்குள் வந்து மீண்டும் மனிதனாகப் பிறக்கும்.
ஆனால் நாம் மனிதர்கள் என்ன் செய்கிறோம்…? எத்தனையோ சந்தர்ப்பங்கள் எத்தனையோ காலகட்டங்களில் நம்மை அறியாது உடலை விட்டு உயிர் பிரிகின்றது.
பிரிந்தாலும் பாசத்துடன் வாழ்ந்த நிலையில் நம்முடைய நினைவுகள் கடைசியில் எங்கே செல்கின்றது…?
எட்டுப் பிள்ளைகள் இருக்கின்றது… ஏழு பேர் அதிலே பிழைத்துக் கொள்வார்கள் ஒரு பையன் சிரமப்படுகின்றான்… கஷ்டப்படுகின்றான்… அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று வேதனையை எடுத்து அந்தப் பையன் மீது நினைவு அதிகமாக இருந்தால் இறந்தபின் அவன் உடலுக்குள் தான் செல்லும்.
அங்கே சென்று இன்னும் கொஞ்சம் வேதனையை வளர்த்து அவனையும் மண்ணுடன் மண்ணாக்கி அவனை வீழ்த்தத்தான் இந்த ஆன்மா உதவும்.
இன்னும் கொஞ்சம் அதிகமான விஷத்தன்மையைத் தானும் பெற்று தன் குழந்தையும் பெறச் செய்ய முடியும்.
1.அங்கே சென்று வேதனையை விளைவிக்கத்தான் முடியும்…
2.அவனைக் காக்கவே முடியாது… மனித உடலுக்குள் விளைய வைத்த இந்த உணர்வுகள் இப்படித்தான் இயக்கும்.
இதை எல்லாம் நாம் வடிகட்ட வேண்டும்…!
ஒவ்வொரு குணத்திற்குள்ளும் வேதனையான உணர்வுகள் அடைபட்டுக் கிடைக்கின்றது. அந்த வேதனையை நீக்கும் உணர்வின் சக்தியாக ஞானிகளின் அருள் சக்திகள் உங்களுக்குள் இப்பொழுது நிரப்பப்பட்டுக் கொண்டுள்ளது.
நான் கொடுக்கக்கூடிய ஞான வித்தை வளர்க்கும் விதமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு பத்து நிமிடவாவது எடுத்துப் பழகுங்கள்.
1.எப்பொழுது சிரமங்கள் வருகின்றதா வேதனை வருகின்றதோ துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம்
2.மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்துக் கொண்டே இருந்தால் வேதனைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக “வாழ்க்கையே தியானமாகின்றது…”.
இப்படித்தான் சிறுகச் சிறுக வளர்த்துக் கொண்டு வர முடியும்…!
நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… மகிழ்ச்சி உங்களுக்குள் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த உபதேசமே அமைகின்றது.
ஆகவே நீங்கள் அதே பிரகாரம் எண்ணினால் உங்களுக்குள் இது ஓங்கி வளர்ந்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் செயல் அனைத்தும் புனிதமும் பெறும் உங்கள் பார்வையும் நல்லதாகும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நீங்கள் எண்ணி எடுத்தாலே போதுமானது.
2.உங்களுக்குள் அது தெளிவை ஊட்டிக் கொண்டே இருக்கும்.
குருநாதர் எனக்குள் இன்னல்களை ஏற்படுத்தி அதிலிருந்து மீண்டிட ஆற்றல்களைக் கொடுத்தார். ஆக…
1.ஆற்றல் மிக்க சக்தியாக இருந்தாலும் அதை ஆக்க ரீதியிலே எப்படி நீ பயன்படுத்த வேண்டும்
2.ஆற்றல் மிக்க சக்தியை நீ பெற்றாலும் அந்தச் சக்தியின் வழித் துணை கொண்டு
3.தனக்குள் ஆற்றல்மிக்க எண்ணத்தின் ஒளி கொண்டு வரும் பொழுது
4.”எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தியாக நீ எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று
5.காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் எனக்குக் காட்டினார்.
அதைப் போன்று தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் எல்லாமே துஷ்ட மிருகங்கள் போன்று தான் உடலுக்குள் இயங்கிக் கொண்டுள்ளது. “அதை எல்லாம் மாற்றுவதற்குண்டான சக்தியாகத்தான்” இப்பொழுது ஊட்டிக் கொண்டு வருகின்றோம்.
இந்த உடலை விட்டு நாம் சென்றால் நிலையான ஒளிச் சரீரமாக நாம் மாற வேண்டும்… அது தான் நிலையானது…!
நம் எண்ணத்தின் துரிதத்தைத் தீயவைகளுடன் மோதவிடாமல் “மகரிஷிகளுடன் மோதவிட வேண்டும்”
சாதாரணமாக ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டோமானால சில நாட்களில் அந்நீர் வழுவழுப்புத் தன்மை கூடி பாசி பிடிக்கின்றது.
“அவ்வழுவழுப்பு நிலை” ஏற்பட்ட பிறகுதான் அடுத்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே வளருகின்றது. “பிசின்” போன்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் அதன் ஜீவத்தன்மை முதிர்வு நிலை கொள்கின்றது.
அதுவே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் காய்ச்சும் பொழுது அப்பாத்திரத்திற்கு அடியில் மண் போன்று படிவங்கள் வெள்ளையாகப் படிந்து விடுகின்றது.
இதைப் போன்று…
1.மனித உணர்வில் எடுக்கப்படும் அலைத் தொடர்பின் உணர்வு
2.சரீரம் சமைக்கும் நிலை கொண்டு ஆத்ம அலையின் “படிவமாகி விடுகின்றது…”
ஆத்மாவின் வண்ணத் தன்மை கொண்டு பிரகாச நிலை ஒளி சக்திகளை இச்சரீர சமைப்பினால் மனிதன் பெற்றானானால் மனித சக்தியில் சித்து நிலை பெற முடியும்.
மகரிஷிகளின் உயர் காந்த அலையை… உணர்வின் எண்ணம் கொண்டு “விழி கொண்டு ஒளி பார்த்து இச்சரீரத்தின் உணர்வில் எடுக்கும் ஜெப முறையினால்…” மனித உணர்வின் சஞ்சலமற்ற சம உணர்வு வளர்ச்சியின் தியானத்தின் முறை அறிந்து… தன்னைத்தான் தான் உணரக்கூடிய வழி அறிந்தானானால்… தன் வாழ்க்கை செயலில் அமைதியையும் தன் ஆத்மாவின் உயர்வின் வழியையும் ஒவ்வொருவரும் பெறலாம்.
நம் தேவைக்குகந்த நெல்லைப் பயிரிடுகின்றோம். நிலத்தை உழுது பருவம் பார்த்துப் பயிரிட்டு அதற்குகந்த பாதுகாப்பு எல்லாம் செய்கின்றோம். பின் அதனுடைய பலனை நாம் கண்டு நெல்லை அறுத்துப் பக்குவமாய்ச் சேமிக்கவும் முற்படுகின்றோம்.
ஆனால் அதை நாம் எடுத்துச் சேர்ப்பதற்குள் பெரிய மழை வந்தால் எல்லாம் அழிகின்றது. அதைப் போன்று…
1.தியானத்தின் மூலம் பல பக்குவமான முறைகளை இச்சரீரத்தில் வளர்த்துப் பலன் பெறும் பக்குவத்தில்
2.உணர்வில் மோதும் பலமான மாற்றத்தினால் பல நாள் செயலின் பலனை இழந்துவிடும் நிலை போன்று
3.சரீர உணர்வால் எண்ணத்தில் பலமாக மோதும் எதிர்ப்பைத் தாங்காமல்
4.தவறிவிடும் நிலை உணர்வின் எண்ணத்தில் மோதுவது உண்டு.
ஆகவே… நெல்லை அறுக்கின்றோம் என்றால் அந்த நேரத்தில் மழை வருகிறது என்றால் அதற்குண்டான வேகத்தைச் செலுத்திப் பெற்ற பலனைப் பாதுகாக்கத் துரிதம் கொள்கின்றோம் அல்லவா…!
அது போன்று… நம் வழிமுறையில் நல்லொழுக்கத் தொடரில் வளர்த்த வலுவை…
1.எதிர்ப்படும் மோதலிலிருந்து பாதுகாக்கும் துரிதமாக
2.எண்ணத்தின் துரிதத்தைத் தீயவைகளுடன் மோதாமல்
3.நல்லதைப் பாதுகாக்கும் உணர்வு ஜெபமாகத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்…!
தன்னைத்தான் தான் உணரும் பக்குவத்திற்கு…!
உரமேறிய கட்டை…!
மனிதனுக்குத்தான் உணர்வின் எண்ணங்கள் பல நிலைகளில் பல வளர்ச்சியை வளர்க்கத்தக்க ஒளி நிலை கொண்ட உயிர் ஆண்டவனின் பிம்ப நிலை உண்டு.
1.உணர்வுகளை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்ற
2.அந்த வழித் தொடரில்தான் ஞானமே பிறக்கும்.
உணர்வில் கார அலைகள் (கோப அலை) உந்தா விட்டால் வீரம் பிறக்காது. ஆனால் அந்தக் கோப உணர்வு ஏற்படும் காலத்தில் அதன் வளர்ச்சியை சரீரம் அதே தொடர்பில் வளர்த்துக் கொண்டதென்றால் விளைவு வேறாகிவிடும்.
காரமான மிளகாய் விதையை மண்ணிலே ஊன்றியவுடன் அது வளர்ந்து மூன்று மாதத்திற்குபின் அதன் வளர்ச்சியின் பலனை அம்மிளகாய் விதை வளர்த்த மிளகாயை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்று
1.இக்கார உணர்வான கோப நெடியை நாமெடுக்க
2.அதே உணர்வைச் சரீரம் வளர்க்க இதன் தொடர் அன்றே தெரியாது.
3.கோப குணத்தின் அணுக்கள் சரீரம் முழுவதும் வளர்ந்து அதனுடைய பலனாக
4.மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குப் பிறகு
5.வாதமோ இரத்தக் கொதிப்போ இதய வலியோ மனிதன் நிச்சயம் பெறுகின்றான்.
ஆகவே கோப உணர்வு உந்தும் நிலையிலேயே அதைத் தன் ஞானத்தால் வீரமாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி அந்த வீர உணர்வை நாம் பெறும் பொழுது
1.எண்ணத்தின் வலுக் கொண்டு உயர் ஞானம் பிறந்து
2.மீண்டும் அக்கோபமான உணர்வில் நாம் சிக்காமல் இருக்கும் நிலையாக
3.பாதுகாப்பு வேலியான சாந்த குணத்தை நாம் நமக்குள் அவசியம் வளர்க்க வேண்டும்.
கோப குணத்தின் காரமான உணர்வால் எப்படி உடலில் நலிவை ஏற்படுத்திக் கொள்கின்றோமோ அதைப் போன்று
1.அதே கோபத்தை வீரமாக்கும் ஞானத்தின் சாந்தத்தால்
2.ஆத்ம வலு சரீரத்தையே உறுதியான தன்மைக்கு
3.எதற்கும் அஞ்சாத “உரமேறிய கட்டை அவன்…” என்ற ஞானத்தின் வழித் தொடரைப் பெற முடியும்.
ஆக… உறுதியான எண்ணத்தின் செயலுக்கு இச்சரீரத்தை இக்கோப உணர்வு உந்தினால்தான் அதைச் செலுத்தும் நிலைக்கொப்ப “உறுதி நிலையோ… அல்லது நலிவு நிலையோ…” ஏற்படும் தன்மை கொள்கின்றது.
இதைப் போன்று தான் மனித உணர்வின் எண்ணத்தில் உந்தப்படும் குணத் தன்மை ஒவ்வொன்றையுமே “தன் ஞானத்தால்” பக்குவ குணத்தை நாம் பெறல் வேண்டும்.
இதன் தொடரில் தான் பய உணர்வு ஏற்படும் பொழுது பயத்தின் தொடர்பில் “மரண பயம்” என்ற கோழை உணர்விற்குச் செலுத்தாமல்
1.தைரியம் என்ற பல உணர்வைச் சாந்தமுடன் நாம் செலுத்தும் பொழுது மன பலம் கூடி
2.ஞானத்தால் சிந்திக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.
குழந்தைகள் வளரும் நிலையிலேயே பயமுடன் கூடிய தைரியத்தில் மன பலம் கூடும் பக்குவத்தை வளர்க்கும் செயல் தான் “தந்தை சொல் மிக்க மந்திரமல்லை” என்று சொன்னதன் பொருள்…!
வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உபதேச உணர்வுகளை ஊட்டி குழந்தைகள் உயர் ஞானத்தை சிந்திக்கவல்ல மன பலம் கொண்ட தைரியத்தை ஊட்டி நாம் அவசியம் வளர்க்க வேண்டும்.
ஆனால் வெறுமணே பயத்தை ஊட்டி… மரண பயம் என்ற உணர்வில் அச்சத்தை ஊட்டும் குழந்தை கோழையாகிவிடும்.
மேலும் அந்தப் பய உணர்வின் எதிர் அலையால் அக்குழந்தையே விபத்தில் சிக்கும் சந்தர்ப்பம் உண்டாகின்றது. விபத்துகள் நடப்பதெல்லாம் அச்சத்தின் உணர்வு வளரும் இத்தகைய பய அலையினால்தான்.
ஆக மொத்தம்…
1.மனித உணர்வின் எண்ணம் எதை எடுக்கின்றதோ
2.அதில் ஜீவன் பெறுவதைத்தான் மனைவியாக அன்று ஞானிகள்
3.தத்துவ நூல்களில் மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்கள்.
இப்படி… எந்தெந்த எண்ணத்தை எக்குணத்தில் இச்சரீரம் வளர்த்துக் கொள்கின்றதோ… அஜ்ஜீவ வளர்ச்சியின் பலனை சாந்தமான நற்குணத்தைக் கொண்டு… இருபாலரும் இல்லற இணைப்பின் இறை சக்தியின் உண்மையை உணர்ந்து…
1.உயர் காந்த மின் சக்தியை
2.உணர்வின் எண்ணத்தால் வளர்க்கும்
3.ஆத்ம ஐக்கிய இணைப்பினால் ரிஷித் தன்மை பெறலாம்.
“நான் பார்த்த ஒவ்வொருவருக்கும்…” உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்
யாம் (ஞானகுரு) உபதேசித்ததைக் கேட்டுணர்ந்த நீங்கள் அடுத்து என்னைப் பார்க்கும் பொழுது
1.நான் நன்றாக இருக்கின்றேன்
2.நீங்கள் சொன்னபடி நான் எடுத்தேன்… என் உடலில் இருக்கும் நோய்கள் அகன்றது நன்றாக இருந்தது என்று
3.இந்தச் சொல்லை கேட்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி.
உங்களைத்தான் சதா நான் பிரார்த்தனை செய்கிறேன்…! நீங்கள் எத்தனையோ கோவிலுக்குப் போவீர்கள். ஆனால் உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி… உங்கள் உடலைக் கோவிலாக எண்ணி… உங்கள் உடலில் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வங்களாக எண்ணி…
1.அந்தக் கோவிலில் அனைத்தும் மகிழ்ச்சியாகச் செயல்பட வேண்டும்.
2.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று உங்களைத் தான்
3.நான் பார்த்த கோவில் அத்தனையும் “ஒவ்வொருத்தராக…” நான் தியானம் செய்து கொண்டிருக்கின்றேன்.
அதிகாலை 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்தனை செய்கிறேன். இதைக் கேட்டு பதிவு செய்தவர்களுக்கெல்லாம் அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும்.
அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.
உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த உணர்வுகள் நமக்கு நல்லது செய்யும் ஆற்றலாகப் பெற முடியும். அதைப் பெறச் செய்யும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
ஆகையினால் முழு நம்பிக்கையாக உங்களை நம்புங்கள்…!
ஏனென்றால்
1.உங்களிடம் அவ்வளவு சக்தி இருக்கின்றது… உங்களுக்கு முன்னாடி உயர்ந்த சக்திகள் இருக்கின்றது
2.அதை நினைத்தீர்கள் என்றால் உங்களுக்குள் கூடும்… நல்லதைப் பெற முடியும்… மெய் ஒளி காண முடியும்
3.மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை… ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.
சாமி சொன்னார் என்று சொல்லி சாமி சொன்ன சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். “சாமி செய்து கொடுப்பார்…” என்று எண்ண வேண்டாம்.
நான் உங்களை எல்லாம் பிராத்தனை செய்கின்றேன். அந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று உங்களுடன் உறுதுணையாக இருக்கின்றேன்.
சூரியனின் காந்த அலைகள் படுகின்றது… பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் முடியும் பிரபஞ்சத்தில் காற்றிலே பல சக்திகள் படர்கின்றது போகும் பாதையில் தான் ஈர்த்துக் கொண்டால் தான் பூமி வளர முடியும்
இதைப் போன்று தான் நீங்கள் எல்லோரும் ஞானிகள் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று யாம் எண்ணுகின்றோம். அந்த அருள் ஒளியை “நீங்கள் ஈர்த்துக் கொண்டால் தான்…” செயல்படுத்த முடியும்.
அதன் வழி நீங்கள் செயல்பட்டு நான் நன்றாக இருக்கின்றேன்; எல்லாம் நன்றாக இருக்கின்றது; என் உடல் நன்றாக இருக்கின்றது; காற்றிலிருந்து நல்ல சக்திகளை என்னால் பெற முடிகின்றது…! என்று
1.ஒவ்வொருவரும் அந்தச் சந்தோஷமான செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும்
2.அதை நான் கேட்க விரும்புகின்றேன்…!
உடலின் சேர்க்கை… உயிரின் சேர்க்கை…!
குருநாதர் காட்டிய அருள் வழியில் நாமும் ஒரு மதம் தான்…!
1.பிறவா நிலை என்ற (மதம்)… இந்த உலகப் பற்றை விட்டு
2.இந்த உடலின் பற்றை விட்டு… உயிரின் பற்றுடன் சென்றவர்கள் ஞானிகள்
3.மனிதர்களான நாம் உடல் பற்று… உயிரின் இயக்கம்…! எண்ணத்தை உயிரில் உணர்வாக இழுக்கப்பட்டு “உடலின் சேர்க்கை…”
ஆனால் “உயிர் ஒளியால் உணரப்பட்ட…” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றப்படும் பொழுது
1.அதாவது “உயிருடன் ஒன்றிய சேர்க்கை… ஒளி…!”
2.அவ்வாறு ஓளியாக ஆனவர்கள் மகரிஷிகள்
அப்படி மகரிஷிகளான நிலைகளில் நமது குருநாதர் காட்டிய நெறியைப் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் விண்ணுலக ஆற்றல் மண்ணுலகில் வந்து… மனிதனான பின் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கண்டான்.
விஞ்ஞானி… மண்ணுக்குள் கண்டாலும் புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான். ஆனால் அதே சமயத்தில் இராக்கெட்டை ஏவும் போது இந்த பூமியின் ஈர்ப்பு நிலைகள் அற்று அதைப் போல பன்மடங்கு வேகத் துடிப்பாக மாற்றி உந்து விசையாக அனுப்புகின்றான்.
புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்றபின் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு தானே மிதக்கும் நிலை வருகின்றது. எந்த வேகத் துடிப்பின் நிலைகள் கொண்டிருக்கின்றானோ அங்கே அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.
இதைப் போலத்தான் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்தான்.
1.குருநாதர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் இணைத்தார்
2.நான் (ஞானகுரு) உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.
அணுவின் ஆற்றலைத் தனக்குள் உணர்ந்து அணுவின் வளர்ச்சியின் தன்மையும் உணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதை வலு சேர்க்கின்றார் அகஸ்தியர்.
நமது பூமி விண்ணிலிருந்து வருவதைத் தனக்குள் ஈர்க்கும் போது அதை இடைமறித்து அந்த உணர்வை நுகர்ந்து அதனின் வலுவை பெறுகின்றான் அகஸ்தியன்.
1.அதனால்தான் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தைக் கொஞ்சம் உங்களை இடைமறிக்கும்படி சொல்லி
2.அதனின் ஆற்றலை உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.
உங்களைக் காலையில் எப்படியும் அந்த நேரத்திற்குத் தட்டி எழுப்பி விடுவதும்… அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதும் அதற்குத் தான்…! குருநாதர் இட்ட கட்டளைப்படி அவரது ஆணைப்படி இதைச் செய்கிறேன்.
1.மெய் உணர்வின் ஒலிகளை நீ எழுப்பு.
2.அதன் வழியிலே அந்த ஒளியின் நிலையை நீ பெறு
3.அனைத்து நிலைகளும் எல்லோரும் பெற வேண்டும் என்று நீ பெருக்கு.
4.அனைவரையும் மெய்ப் பொருள் காணும் நிலையைப் பெறச் செய் என்று தான் என்னிடம் சொன்னார்.
குருநாதர் காட்டிய வழிப்படி அருள் ஞானத்தை எப்படிப் பெருக்குவது…? வரும் தீமைகளை எப்படி அடக்குவது…? என்ற நிலைக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
நெல் விளைய வேண்டும் என்றால் உமியையா போடுவார்கள்…? இன்று ஒருவன் தவறு செய்கிறான் என்று தெரிந்தால் அந்தத் தவறுகளை நாம் செய்யக்கூடாது என்ற எண்ணங்களே நமக்குள் வர வேண்டும்.
ஏனென்றால் அவன் தவறு செய்கிறான் என்றால் அதை நுகரப்படும் போது அந்தக் குறைகள் நமக்குள் வந்தே தீரும். ஆனால் அதை நாம் நீக்குதல் வேண்டும்.
எப்படி…?
1.உமி இல்லை என்றால் அரிசி இல்லை
2.ஆக எதிலும்… எதனின் இயக்கத்திலும் அந்த விஷம் இல்லை என்றால் நல்ல உணர்வின் இயக்கம் இல்லை.
3.உணர்வின் இயக்கமாக விஷம் எல்லாவற்றிலும் கலந்துதான் வருகின்றது.
சூரியன் அல்ட்ரா வயலெட் என்ற நிலைகளில் நஞ்சை எப்படிப் பிரிக்கின்றதோ அதைப் போல் எத்தகைய நிலைகள் வந்தாலும் நாம் நுகர்ந்து அறியப்படும்போது
1.மகரிஷிகளின் உணர்வை அதனுடன் சேர்த்து
2.அந்த விஷத்தின் தன்மையை அடக்குதல் வேண்டும்.
அதற்குத் தான் உங்களுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
பிரம்மச்சரியத்தால் எச்சக்தியையும் பெற முடியாது
மெய் ஞானி அன்று தன் ஞானத்தின் உண்மை நிலையில் உணர்த்திய தத்துவ வழி முறையில்
1.தெய்வத்தின் செயல் நிலையில் சுட்டிக் காட்டிய விக்கிரக வழிபாட்டு முறையிலேயே
2.ஒரு உயிரணு மூல முதலாக வளர்ச்சியுற்ற வழித் தொடருக்கு
3.விநாயகன்…! என்ற யானையின் தோற்றமுடன்…
4.மனித உரு முருகா…! என்ற அறு குண அழகனைக் காட்டினார்கள்.
உருவத்தில் பெரியது யானை…. எண்ணத்தில் உயர்ந்தவன் மனிதன். அவ்வுயிரணுவைத் தெய்வமாகத் தொடர்புபடுத்திச் சுட்டிக் காட்டிய வழித் தொடரில்… உருவ அமைப்புகளில் ஆதியில் மெய் ஞானிகள் வழி காட்டிய தத்துவத்தில் “பல உண்மைகள் உண்டு…”
சில தெய்வங்களுக்குக் கிருஷ்ணாவதார கீதையின் தத்துவத்தில் ஒருவனுக்குப் பல ஆயிரம் மனைவிகளைச் சுட்டிக் காட்டினார்கள். அதன் உண்மைத் தத்துவத்தை நம் ஞானத்தால் எடுத்தால் அவ்வுண்மை நமக்குப் புரியும்.
மனிதன் பெற்ற ஒளி சக்தியில்… மனித எண்ண ஞானம்.. தான் பகுத்தறிவில் உயர் தன்மை கொண்டு மனித உடல் ஜீவனுடன் உள்ள பொழுது
1.உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எடுக்கப்படும் குணங்களின் வளர்ப்பு ஒவ்வொன்றையுமே ஜீவிதம் கொண்ட மனைவியாய்
2.பெண் சக்தி மனிதனுக்குள் வளரும் நிலை பெண் தன்மை கொள்ளும் குணங்களை எல்லாம் மனைவியாகச் சுட்டிக் காட்டி
3.கீதையின் தன்மையை நமக்கு அன்றே மெய் ஞானிகள் புகட்டினார்கள் பாட நிலையாக…!
இராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் எந்த அவதாரமாக இருந்தாலும்…
1.மனிதன் பிரம்மச்சரியம் கொண்டு எச்சக்தியையும் பெற முடியாது என்ற நிலையைத்தான்
2.மெய் ஞானிகளும் ரிஷிகளும் சுட்டிக் காட்டினர்
3.தானும் அவ்வழியில்தான் தன் ஞானத்தை வளர்த்தனர்.
இல்லற உணர்வில் எண்ணத்தில் வளர்க்கும் குணத்தில் இரு நிலை வளர்ச்சியின் அன்பால் பெறும் நிலையின் மகவுகளின் பரிவு பாசம் வளருமேயன்றி உணர்வின் எண்ணத்திலேயே
1.அன்பின் ஜீவிதத் தொடர்பின் உணர்வு பிணைப்பு வளரா விட்டால்
2.எத்தவசிகளும் ஞானிகளும் “சரீரம்” பெற்றிருக்க முடியாது.
ஜீவ உணர்வின் எண்ணத்தில் வளரும் குணத்தின் பிடிப்பு நிலை கொண்டு… தொடரும் இல்லறப் பிணைப்பின் உடல் தொடர்பின்… “ஆத்ம தொடர்பு கூடும் இரு எண்ணங்களும்…” ஒன்றாய் வலுக் கூடத் தொடங்கும்.
அப்படிக் கூடப்பெறும் எண்ணத்தின் உயர் ஞான தியானத்தால்… ரிஷி பத்தினி சக்தியின் வளர்ச்சி ஈர்ப்பில்… இரு நிலை கொண்டு ஒரு நிலை வளர்க்கும் செயல் வழி சரீரப் பிணைப்பில் மக்கள் தொடரும்.. ஆத்மப் பிணைப்பின் உயர் ரிஷி சக்தி பெறக்கூடிய படைப்பின் படைப்பிற்கு… இவ்விரு ஆத்மாவின் ஐக்கிய தொடர்பில் பிணைக்கப்பட்டு மூலக்கரு வளர்ச்சியுறும்.
அரசர்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு உயர்ந்த தத்துவங்களை ஞானிகள் கொடுத்தார்கள்… நாம் காப்பாற்றுகின்றோமா…!
குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும்… எதிர்காலம் சிறந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம் ஆனால் அவன் சரியாக வரவில்லை என்றால் “இப்படிப் பண்ணுகிறானே…” என்று வேதனைப்படுகின்றோம்.
ஒருவர் கஷ்டத்தைக் கேட்டால் வேதனை…! ஒரு காரியத்திற்காகப் போகிறோம்… அது தடையானால் வேதனை…
1.இது எல்லாம் விஷமாக மாறுகிறது… நாம் தவறு செய்யவில்லை.
2.வேதனை என்றாலே விஷம் தான்.
உதாரணமாக… சிறிதளவு விஷம் குடித்தால் மயக்கம் வரும்… அதிகமாகி விட்டால் மனித எண்ணமே இல்லாது போய்விடும். இதைப் போன்று வேதனை என்று விஷத்தின் தன்மை கொண்டு சிந்திக்கும் நிலை இல்லாது போய்விடுகிறது.
தேள் கொட்டி விட்டால் கடு…கடு… என்று இருக்கும். அந்த நேரத்தில் யாராவது சந்தோஷமாகச் சிரித்தால் இன்னும் கொஞ்சம் எரிச்சல் அதிகமாகும். நான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்… உனக்குக் கேலியாகத் தெரிகிறதா…? என்று ஆத்திரம் வரும்.
ஆனால் இப்படி எல்லாம் நீ வேதனைப்படாதே…! என்று சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு சொன்னால் “என்னைக் கிண்டல் செய்கின்றாயா…?” என்று எரிச்சல் வரும்.
இது போன்றுதான் இந்த விஷத்தின் தன்மை நம்மை அறியாமலேயே சேர்ந்து விடுகின்றது. வேதனை என்ற விஷத்தைப் போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
அதற்காக வேண்டித் தான் ஞானிகள் ஆலயத்தை உருவாக்கி இந்த உண்மைகளை உணர்த்தி அங்கே உயர்ந்த சக்திகளைப் பெறும்படி செய்தார்கள். ஆனால் கோவிலுக்குச் சென்று அப்படி யாரும் வேண்டுவதில்லை… ஞானிகள் சொன்னதை எடுப்பதில்லை.
உடலைக் கோவிலாக மதித்துத் தனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கு அபிஷேகம் ஆராதனை எப்படிச் செய்ய வேண்டும்…? புஷ்பங்களை எப்படிப் போட வேண்டும்…? எந்த மணத்தைக் கொடுக்க வேண்டும்…? என்று புறத்திலே காட்டி அகத்திற்குள் எடுக்கச் சொன்னார்கள்… அந்தக் கெட்டுப்போன குணங்களை ஈடு செய்வதற்காக…!
நல்ல குணத்துடன் இருந்தேன்… ஒருவன் கஷ்டப்படுவதைப் பார்த்து வேதனைப்பட்டேன். ஆனால் அந்த வேதனை
1.என் நல்ல குணங்களை மூடி மறைத்து விட்டது
2.இதைத்தான் அங்கே ஆலயத்தில் வைத்துக் காட்டுகின்றார்கள்
3.திரையை நீக்கி விளக்கைக் காட்டிப் பொருளை அறிவது போன்று
4.நம் உடலுக்குள் நல்ல குணங்களை மறைத்திருக்கும் இருளை அகற்றிவிட்டு
5.அந்த நல்ல குணத்தை மீண்டும் தட்டி எழுப்புவதற்கு அங்கு காட்டுகின்றார்கள்.
அப்படி இல்லாதபடி அந்தத் தெய்வத்தைப் பார்த்து அழுது வேதனைப்பட்டு
1.உன்னை எவ்வளவு நாள் நான் கும்பிடுகின்றேன்…?
2.என் பையனுக்காக உன்னிடம் எத்தனை முறை வேண்டினேன்…?
3.உன்னிடம் வரம் வாங்கித்தானே இவன் பிறந்தான்
4.நீ தானே இந்தக் குழந்தையைக் கொடுத்தாய்
5.ஆனால் இப்படிச் செய்கின்றானே… இது உனக்கே சாட்சியாக இருக்கின்றதா…? என்று வேதனைப்பட்டு அழுதால் என்ன பண்ணும்…?
இந்த எண்ணத்துடன் மீண்டும் பையனைப் பார்த்தால் “அவனை உதைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் வரும். இல்லை என்றால் அருகிள் இருக்கிற மற்ற பொருள்களை எடுத்து அடித்து நொறுக்குவோம்.
அவன் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் அதன்படி அவன் வரவில்லை என்றால் இப்படிச் செய்கின்றானே இப்படிச் செய்கின்றானே… படிப்பு அவனுக்கு வரவில்லையே…! என்று இதையே சொல்லிக் கொண்டிருப்போம்.
அவனுக்கு நல்ல முறையிலே படிப்பு வர வேண்டும்… ஞாபக சக்தி வர வேண்டும்…! என்று அந்தக் கோவிலுக்குச் சென்று இப்படிப்பட்ட நல்ல எண்ணங்களை எடுக்க வேண்டும் என்று தான் ஞானிகள் காட்டினார்கள்
ஆனால் அங்கு எல்லா அபிஷேகங்களையும் செய்து விட்டு அவன் இப்படிப் பண்ணுகின்றானே எதிர்காலத்தில் என்ன செய்யப் போகின்றானோ…? என்று அங்கே இப்படித்தான் கும்பிடுகின்றோம்.
அங்கே காட்டப்பட்ட மலரை போன்ற மணம் என் குழந்தை பெற வேண்டும்; அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்; பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; நான் சொல்வதைப் புரியக்கூடிய அந்தக் கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; நான் எண்ணிய அந்த உயர்ந்த நிலைகள் அவனுக்குள் செயல்பட வேண்டும்; பிறர் அவனைப் பார்க்கும் பொழுது அந்த நல்ல உணர்வுகள் அவனிடமிருந்து வெளிப்பட வேண்டும்…! என்று இப்படி அர்ச்சனை செய்தால் உங்களுக்கு இது நல்லதாகும்.
ஆனால் காசைக் கொடுத்து விட்டுக் குங்கும அர்ச்சனை அது இது என்று எத்தனையோ அர்ச்சனைகளைச் செய்கின்றார்கள். அந்த அர்ச்சனை முடிந்த பின்பு
1.அந்தக் குங்குமத்தை வாங்கிப் போட்டு வைத்தால் சரியாகிவிடுமா…!
2.எதை அர்ச்சனை செய்ய வேண்டும்… எதை அர்ச்சனை செய்கின்றோம்…?
அந்த ஞானிகள் உணர்வை எடுத்து அதைத் தன் குழந்தை பெற வேண்டும் என்று இப்படி அர்ச்சனை செய்தால் “அது அந்த குழந்தைக்குள் பாயும்…!” எப்படி…?
நன்மை செய்தார்கள் என்று நண்பர்களுக்குள் எண்ணினால் வெகு தூரத்தில் இருந்தால் விக்கலாகிறது. துரோகம் செய்தான் பாவி இவன் உருப்படுவானா…! என்றால் புரையோடும்.
ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு தான் இயங்குகின்றோம். “டெலிபதி மாதிரி” இந்த உணர்வு தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றது ரேடியோ டிவி அலைவரிசை இயக்குவது போன்று இயக்குகின்றது.
இந்த உணர்வு இப்படி இயக்கும் போது வேதனையாகி இன்னும் கொஞ்சம் ரிப்பேர் ஆகி நம் உடலில் அந்த வாசனைகள் பெருகி எங்கே பார்த்தாலும் வெறுப்பு வளரும்.
காலம் கெட்டுவிட்டது… என் ஜாதகம் நேரம் காலம் சரியில்லை… கெட்ட நேரம்…! என்று முடிவு செய்து ஜோசியக்காரனிடம் சென்றால் “அவன் ஒன்றைச் சொல்வான்…”
நம் வீட்டில் உள்ள இந்தக் குறைகளை எல்லாம் பக்கத்து வீட்டில் சலிப்படைந்து சொல்லிக் கொண்டிருப்போம். அதைக் கேட்பவர்கள் உனக்கு வேறு வேலை இல்லையா…? என்று இரண்டு தடவை சொல்லி விட்டால் போதும்.
இவர்கள் தான் ஏதோ செய்து விட்டார்கள் என்ற சந்தேகம் வரும். உள்ளுக்குள் இருந்தே நமக்கு ஏதோ கெடுதல் செய்கிறார்கள்… பக்கத்தில் இருந்தே நமக்கு எதிராகச் செய்கின்றார்கள்…! என்ற முடிவு கட்டுவோம்.
1.ஜோசியக்காரனிடம் சென்ற பின் அவன் இதை உறுதிப்படுத்துவான்.
2.உங்களுக்கு இன்னார் செய்வினை செய்திருக்கிறார்கள் என்று சொல்வான்
3.நான் நினைத்தேன்… “ஜோசியன் சரியாகச் சொல்லி விட்டான்…” என்போம்.
இப்படித்தான் இந்த வாழ்க்கையிலே சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றோம். காசைக் கொடுத்து வேதனையை விலைக்கு வாங்கும் நிலையில் தான் இருக்கின்றோம்.
1.நம்முடைய எண்ணங்களை அடுத்தவன் கையிலே அடமானம் வைத்து வாழுகின்றோம்.
2.ஏமாற்றுபவன் கையிலே காசைக் கொடுத்துவிட்டு எதையோ எதிர்பார்த்து
3.அந்த அடிப்படையில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
ஆக… எந்தத் தெய்வத்தை வணங்குகின்றோமோ… எந்தத் தெய்வ சக்தியை நாம் பெற வேண்டுமோ…
1.அந்தத் தெய்வ சக்தியை நாம் பெற முடியாதபடி
2.நம் அருகிலே வர விடாதபடி அடைத்து விடுகின்றோம்.
இது போன்ற நிலைகளை எல்லாம் மீட்டுவதற்குத் தான் குருநாதர் காட்டிய வழிகளில் உங்களைத் தெளிவாகிக் கொண்டு வருகிறோம்
நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தான் கோவிலிலே சித்தரித்துக் காட்டியுள்ளார்கள். அந்த குணங்களை எப்படிக் காக்க வேண்டும்…? எப்படி வளர்க்க வேண்டும்…? என்று தான் ஞானிகள் சொல்லிவிட்டுச் சென்றார்கள்
அரசனுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு உண்மைகளை வெளிப்படுத்திச் சென்றார்கள் அந்த ஞானிகள். ஆனால் அதை நம்மால் காப்பாற்ற முடியவில்லை.
திருமூலர் சொன்ன அந்த உயர்ந்த கருத்துக்களை மந்திரமாக மாற்றி விட்டார்கள். திருமூலம் என்கிற பொழுது
1.திரு என்றால் உயிர்… மூலம் என்பதும் உயிர்…
2.அந்த மூலத்திலே நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒலி ஒளியாக எப்படி இயங்குகின்றது…? என்று தான் அவர் கொடுத்தார்.
அடுத்த உடலில் (பாம்பின்) இருந்து மீண்டும் மனித உடலுக்குள்… ஒரு ஏழ்மையான உடலுக்குள் வந்த பிற்பாடு… உயர்வையும் தாழ்வையும் இரண்டையுமே இணைத்துப் பார்க்கும் போது தான்… அந்த மெய் உணர்வின் ஒலிகளை பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்துணர்ந்து பக்குவ நிலையை உணர்த்திச் சென்றார் அந்தத் திருமூலர்…!
தன்னை உணர்ந்து… தன்னை நம்பி… தன் உயர்வை… தான் வளர்க்க வேண்டும்…! என்று தான் ஞானிகள் சொன்னார்கள்
தன்னைத்தான்… தான்… தான் உணர்ந்து…
தன்னைத்தான்… தான் நம்பி
தன்னைத்தானே… தான் வளர்த்து…
தன் வழியின்… வழியறிந்து
தன் வழியை… தான் அமைத்து…
தன் உயர்வை… தான் வளர்க்க
தன்னில் தான்… இறை உணர்ந்து…
தன்னையே தான்… இறையாக்கி
தனதான இறை உயிரை…
தன்னில் தானே… இருள் அகற்றி
தன்னில் தானே… ஒளியாகலாம்…!
மனிதன் தன்னைத்தான் தான் உணர்ந்து… தன் வழியில் தன்னை நம்பி…
1.உண்மை நிலையை அறிந்து
2.தன் உயர்வை வளர்த்துக் கொள்ள
3.இப்பூமியில் மனித உணர்வு எண்ணம் செயல்பட்ட காலத்திலேயே
4.சித்தர்களும் சப்தரிஷிகளும் பல உண்மையை உணர்த்தியும் செயல்படுத்தியும் காட்டினர்.
ஆதிசங்கரின் காலத்தில் அத்வைதத் தத்துவப்படி… மனிதன் உணர்வின் எண்ணத்தை உயர் ஞானமாக்கி… உயரும் மார்க்கத்தை அணுவுக்குள் அணுவாக உணரும் பக்குவத்தை மனிதனுக்கு உணர்த்தினார்.
அதன் தொடரில் மனிதன் தன்னைத்தான் தான் நம்பி உயரும் பக்குவத்தை அவருக்கு அடுத்த நிலை நான்கு வகை வேதங்களாக்கி தன் வாழ்க்கை நிலைக்கு ஒத்த சௌகரியப்படி காலப்போக்கில் மாற்றி விட்டனர்.
1.வேத மந்திர உச்சரிப்புகளும் பலி பீட மந்திரங்களும் பல வழியில் பிரிக்கப்பட்டு
2.மகரிஷிகளினால் வழிப்படுத்தப்பட்ட தன்மைகள் எல்லாம்
3.மத வழிகளிலும் அரசாட்சியின் பிடிப்புக்கொப்ப மாற்றப்பட்ட தன்மையினால்
4.இன்று தெய்வத் தன்மையின் உண்மை நிலையையே அறிய முடியாமல் போய்விட்டது.
இன்றைய காலப்போக்கில் “பூஜையும்… பக்தியும்…” வழி தெரியாத முறையில் மனிதனின் நாட்டங்கள் சென்று கொண்டிருக்கும் சிதறுண்ட இத்தன்மையை மாற்றி
1.மனிதன் முதலில் தன்னைத்தானே தான் உணர்ந்து
2.தன்னை நம்பி… தன் வழியை மெய் அறிந்து…
3.உயர வேண்டிய ஒளித் தன்மையின் சத்தியத்தின் உண்மை நிலை அறிந்து செயல்பட வேண்டும்.
குருநாதர் என் ஒருவனுக்குத் தான் சக்தி (POWER) கொடுத்தார்
1.குருநாதர் எம்மைத் தொட்டு உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்தார் (பவர் கொடுத்தார்).
2.என் ஒருவனுக்குத் தான் குருநாதர் சக்தி கொடுத்தார் ஆனால் உங்களிடம் யாம் (ஞானகுரு) என்ன செய்கின்றோம்…?
3..அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
4.உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக மதித்து அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்கள் உயிருடன் நினைவை இணைக்கின்றேன்.
5.அந்த அலைகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் உயிர் மேக்னெட்.. கவரும்
6.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு நீங்கள் எல்லோருமே அந்தச் சக்திகளைப் பெற முடியும்.
ஒரு பக்கத்திலே கம்ப்யூட்டரை வைத்து இயக்குகின்றார்கள். அதிலிருந்து இணைப்பைக் கொடுத்த பின் “உலகம் முழுவதற்கும் அது இயக்குகின்றது…”
ஒரு இடத்திலே அதை வைத்து ஆணையிட்டாலும் அடுத்த பக்கத்தில் மற்றதை இயக்கும்படி வைத்திருக்கின்றனர். இதே மாதிரித் தான்
1.குருநாதர் கொடுத்த அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
2.இந்த உணர்வை அங்கே எண்ணி உங்களுக்குள் பதிவு செய்து… உங்களை எடுக்கச் சொல்கின்றோம்.
3.(உபதேசத்தின் வாயிலாகப் பல முறை பதிவு செய்திருக்கின்றோம்)
4.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கினால்… எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த உயர்ந்த நிலைகளை நீங்கள் பெற முடியும்.
இப்படித்தான் உயர்ந்த நிலைகளை யாம் உங்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கின்றோம்…!
ஏனென்றால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து இந்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஆனால் குருநாதரைப் பார்க்கும் போது ஒரு பைத்தியக்காரராகத் தெரிந்தார்… பைத்தியக்காரராகத் தான் நான் நினைத்தேன்.
ஆனால் நான் சொல்வதை இப்பொழுது நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்…? சாமி சாதாரணமாகச் சொல்கின்றார் என்று…!
1.சொல்லிலே சாதாரணம்…!
2.ஆனால் எம்முடைய வாக்கின் பதிவு “குரு அருளின் சக்தியை அப்படியே உங்களிடம் பதிவு செய்கிறேன்…!”
ஒரு கொலைகாரனைப் பார்த்த பின் அது பதிவாகி அவனை நினைக்கும் போதெல்லாம் நடுக்கமும் பயமும் உண்டாகின்றது.
அதே மாதிரி… தீமைகளை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பதிவு செய்யப்படும் பொழுது நமக்குள் முந்தி ஏற்கனவே பதிவு செய்த தீமையின் விளைவுகள் அதைக் கண்ட பின் நமக்குள் நடுக்கம் உண்டாகும்.
1.நான் நினைத்தேன்… ஒரு நாள் எடுத்தேன்… அடுத்த நாள் என்னால் எடுக்க முடியவில்லை… என் உடல் எல்லாம் நடுங்குகிறது
2.சிறிது நாளைக்கு அந்த நடுக்கம் வரும்.
காரணம்… ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்துப் பதிவு செய்த பின் அவனை நினைக்கும் போதெல்லாம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் எல்லாம் கிடு…கிடு… என்று நடுங்கும். அவனை நினைக்கும் போதெல்லாம் நல்ல செயல்களைத் தடைப்படுத்துகின்றது.
இத்தகைய சங்கடத்தை உருவாக்கும் தீமையின் நிலைகளை அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் யாம் பதிவு செய்ததை எண்ணி உயிருடன் ஒன்றி இந்த உணர்வினை நம் உடலுக்குள் ஆக்கினை இங்கே இணைத்து விட்டால் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் ஆணையிட வேண்டும். என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் நினைவினைச் செலுத்த வேண்டும்.
1.மகரிஷிகளின் உணர்வுகளைக் கண் கொண்டு தான் பதிவு செய்கிறோம். (பொட்டில் தொட்டு அதைப் பதிவு செய்ய முடியாது)
2.அதைப் பெற வேண்டும் ஏக்க உணர்வு கொண்டு பதிவு செய்து விடுகின்றோம்.
3.மீண்டும் இதை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது… இயக்கம் “அந்த உயிரின் இயக்கமாக வருகின்றது…”
இதை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உயிருடன் இணைத்துக் கொண்டு வர வேண்டும். முதலில் கண் கருவிழி பதிவாக்கி விடுகிறது. பதிவானால் தான் எடுக்க முடியும். ஆன்மாவில் வந்து உயிரிலே பட்டு நாம் தெரிய முடியும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தை இங்கே கொண்டு வரச் சொல்கின்றோம்… பதிவாக்கி விடுகிறோம். இது தான் “தொட்டுக் காட்டுவது…!” என்று சொல்வது.
“ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறத்தக்கதே…” இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தின் நியதி
ஒவ்வொரு ஞானியும் தன் வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வால் பெற்ற சஞ்சல அலையின் உண்மைகளைப் புரிந்து உணர்ந்து பெற்ற உயர் ஞானத்தால் தான் அந்த ரிஷி சக்தியைப் பெற்றார்கள்.
அதே போல் மனிதன் தன் உணர்வின் சஞ்சலத்தைப் போக்கி…
1.தன்னைத்தான் தான் உணர்ந்து
2.தன்னிடமுள்ள திரையை விலக்கி
3.உயர் ஞானத்தின் உண்மையின் ஒளி சக்தி பெற
4.உணர்வின் குணத்தைச் சமப்படுத்தி அறியும் பக்குவத்தைப் பெற
5.ரிஷிகளாய் அன்றும் இன்றும் தன்னுடைய உயர் தத்துவத்தை
6.மனித எண்ணத்தின் உணர்வின் வலுவிற்கு வழி காட்டுகின்றனர்.
தன்னைத்தான் உணரக்கூடிய வழி முறையில் தன் ஞானத்தைப் பெறும் பொழுது…
1.கோபம் வேதனை பயம் சலிப்பு போன்ற குணங்கள் உந்தப் பெறும் பொழுது
2.அந்த உந்தல்களைச் சமப்படுத்திட…
3.தைரியத்தின் உயர் ஞானம் கொண்டு உயரக் கூடிய வளர்ச்சிக்கு
4.இச்சரீர உயிர் அணு… உயிராத்மாவின் வலுவைக் கொண்டு…
5.உயர்ந்த ஒளி சக்தியை மனித ஞானம் வளர்த்துக் கொள்ளும் நிலைக்கு
6.மெய் வழி காட்டும் தொடரில் ரிஷிகள் படைத்த காவியங்களில் பல உன்னதத் தத்துவங்கள் உண்டு.
ஒன்றை ஒத்து ஒன்று… ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறத்தக்கதே இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தின் நியதி.
பூமியின் ஆரம்ப உயிர் அணுத் தோன்றி மனித உணர்வின் எண்ண குணங்கள் வளர்ந்தமைக்கும்… இன்றைய கலியில் மனிதப் பெருக்கத்தின் எண்ணத்தின் ஈர்ப்பலையும்… மின் காந்த வானொலி அலைத் தொடரும்… செயற்கையின் விஞ்ஞான அமிலத்தின் செயலும்… இக்காற்றலையில் அதிகமாக இன்று படர்ந்துள்ளது.
அன்று ரிஷிகள் காட்டிய தத்துவ முறைக்கும் இன்றைய கலியின் நடைமுறைக்கும் பல கோடி மாற்றங்கள் ஆகி விட்டது. நம் உணர்வின் ஞானத்தைச் சஞ்சலமில்லா சாந்தத் தொடரில் ரிஷிகளின் எண்ணமுடன் கலந்து… நாம் எடுக்கும் நேரடி சுவாச மின் காந்த உயர் சக்தியின் வலுவை.. இச்சரீரம் பெறப் பெற… இச்சரீரமே “ஒளித் தன்மை கொள்ளும்…!”
பக்தி மார்க்க வழித்தொடரில் மனதை அந்தந்தத் தருணங்களில் இனிமை கலந்ததாகப் பக்குவப்படுத்தலாமே தவிர தன் ஞானத்தை உயர் ஞானமாக்கும் நிலை இல்லை.
1.உணர்வின் எண்ணத்தைச் சஞ்சலமில்லா ஒளி சக்தியின் ரிஷி சக்தியின் தொடர்பால்
2.அவர்கள் பெற்ற சக்திகளை நம் உடலுக்குள் பெருக்கி அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் நம் எண்ணத்தின் உணர்வு வீரியம் கொள்ள வேண்டும்.
3.அவர்கள் வேறல்ல… நாம் வேறல்ல…! என்ற நிலையை அடைதல் வேண்டும்.
இக்கர்ம காரிய வாழ்க்கையில் பலவாகப் பல கோடி ஆண்டுகளாய் பல கோடி மனிதர்கள் எடுத்து வளர்த்த உணர்வலையின் சுழற்சியின் மத்தியில் வாழும் நம் உணர்வின் எண்ணத்தை இவ்வுலக ஈர்ப்பில் செலுத்தும் பொழுது தன்னைத்தான் உணர முடியாத நிலைக்கு இன்றைய உலக நிலை வந்துவிட்டது.
மேலும் இக்காற்றலையில் உள்ள உணர்வுகளின் வலுவையும் நம் ஆத்மாவில் ஏற்றிக் கொண்டு அதன் குறைவு நிறைவில்…
1.நம் சரீரத்தில் வளரும் உயிரணுக்களையும் உயிர் ஆத்மாவையும்
2.குறை உணர்வின் மத்தியில்
3.குறைவான எண்ணத்தில்
4.குறை கொண்ட வாழ்க்கையாக அமைந்து விட்டது.
இதிலிருந்து மீள… ஒளி சக்தியின் வீரியம் கொண்ட மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு… ஞானத்தால் உணரக்கூடிய “உயர் ஞான திருஷ்டி” என்ற சில உண்மைகளை உணர்த்தி வரும் அவர்கள் தொடர்பில் நாமும் வளர்ந்திடல் வேண்டும்.
அவர்கள் மூலம் பெற்ற நல் உணர்வின் சுவாசம் கொண்டு… நாம் வளரும் பூமியில்… நம் உணர்வின் சேவை… “பிறரையும் வளர்க்க…” சஞ்சலமில்லா உணர்வைச் சாந்தமுடன் நாம் பெற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக… ஒருவர் திட்டும்பொழுது அவர் உணர்வை பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். பின் என்ன நினைக்கின்றீர்கள்…?
1.என்னைத் திட்டினார் என்னைத் திட்டினார் என்று எண்ணுகின்றீர்கள்.
2.அடுத்து என்னைத் திட்டினால் அவன் உருப்படுவானா… உருப்படுவானா…?” என்று எண்ணுகின்றீர்கள்.
3.இந்த உணர்வு என்ன செய்யும்…? அங்கேயும் இயக்குகின்றது. இங்கேயும் இயக்குகின்றது.
அதே மாதிரி உங்கள் குழந்தை மேல் பாசமாக இருக்கின்றீர்கள். வெளி ஊரில் படிக்கின்றது. சமயத்தில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் “என்ன ஆனதோ..? ஏதாச்சோ…?” என்று வேதனைப்படுகின்றீர்கள்.
வேதனைப்படும் பொழுது அந்த வேதனை உங்களுக்குள்ளும் விளைகின்றது. அந்த குழந்தைக்கும் வேதனை வரப்படும்பொழுது… “சிந்திக்கும் தன்மை குறைந்து படிப்பில் கெடுகின்றது…”
குழந்தை… “இதற்கு முன்னாடி நன்றாகப் படித்துக் கொண்டிருந்ததே…!” என்று எண்ணுவீர்கள். இதைப் போன்று ஏதாவது வேதனை உணர்வுடன் உங்கள் குழந்தையை எண்ணினீர்கள் என்றால் குழந்தைக்கு என்ன செய்யும்…?
சிந்திக்க முடியாதபடி படிப்பிலே அது ஓரளவிற்கு நினைவை இழக்கச் செய்கின்றது. “
1.முக்கியமான பாடங்கள் இருக்கும்போது” நீங்கள் குழந்தையை வேதனைப்பட்டு எண்ணினால் “அது (படித்தது) நினைவிழந்து போகின்றது”.
2.நினைவில்லை என்கிற பொழுது “நான் நன்றாகப் படித்து வந்தேனே.., இப்படி ஆகிவிட்டதே…!” என்று அதுவும் வேதனைப்படும்.
இதுவெல்லாம்… “நம்மையறியாமல் செயல்படக் கூடிய நிலைகள்” என்பதை அடிக்கடி நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்.
“நீங்கள் எல்லோருமே… அருள் ஞானம் பெற வேண்டும்” என்று தான்
1.உங்கள் உயிரைக் கடவுளாக நான் வணங்குகின்றேன்.
2.உங்கள் உயிரை ஈசனாக மதிக்கின்றேன்.
3.ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் தான் உங்கள் உடல் சிவம் என்று மதிக்கின்றேன்.
“எண்ணத்தால் உருவானது தான் கண்” என்றும்… “கண்ணால் தான் உருவாகி எண்ணத்தைக் கொடுக்கின்றது” என்றும் எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை நான் மதிக்கின்றேன்.
எண்ணத்தால் தான் நாம் எல்லாம் இயக்குகின்றோம்.
1.நம் சொல்லே இராமனாகின்றது
2.கண்ணே கண்ணன் ஆகின்றது.
3.உடலே சிவம் ஆகின்றது என்ற நிலைகளை வைத்து
ஒவ்வொருவரும் நாம் இதைப் போல நினைக்க நேர்ந்தால் நாம் ஒவ்வொரு உயிரையும் ஒவ்வொரு உடலையும் கோவிலாகவும் ஈசனாகவும் சிவனாகவும் விநாயகனாகவும் சொல்லை இராமனாகவும் கண்களைக் கண்ணனாகவும் நாம் மதிக்க முடியும்.
இவ்வாறு மதித்து விட்டால்.., “நம்மை அறியாமல் வரும் தீமைகளை” அகற்றும் சக்தி “நாமே பெறுகின்றோம்…”
தீமையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம் உயிரிலே பட்டுத் தீமையை விளைவிக்கும் உணர்ச்சிகள் நம் உடலிலே சுழல்கின்றது.
உயிருக்கு “விஷ்ணு” என்று காரணப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
1.இயக்கத்தின் நிலையை ஈசன் என்றும்
2.இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்
3.வெப்பத்தால் ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும் தெளிவாக நம் ஞானிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.
நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உயிரிலே மோதும் பொழுதுதான் அந்த உணர்ச்சிகள் நம் உடலில் இயக்கத் தொடங்குகின்றது.
அதனால் தான் அவனைச் “சங்கு சக்கரதாரி” என்று தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள். இதைப் பல முறை உங்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளேன்.
பிறரின் வேதனைப்படும் நிலைகளை நுகர்ந்தோம் என்றால் அந்த வேதனையின் உணர்ச்சிகளே நம்மை இயக்குகின்றது. நம் உடலான ஆலயத்தில்… “அசுத்தத்தைச் சேர்க்கின்றோம்…” நம் உயிரான ஈசனுக்கும்… “துயரத்தைக் கொடுக்கின்றோம்”.
நம் கண்ணின் “கருவிழியால்” கண்ணுற்றுப் பார்க்கும் உணர்வின் தன்மை தெளிவாக்கும் நம் கண்ணுக்கே வேதனை என்ற உணர்வு வரும் பொழுது “கண் மங்கும் நிலையும்” சிந்திக்கும் தன்மையும் சீரான உணர்வைக் கவரும் தன்மையும் “இழக்கின்றது” என்பதையும் தெளிவாகக் கூறுகின்றோம்.
இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
1.ஒரு மனிதனை மதிக்கும் தன்மை வந்தால் நம்மை நாம் மதிக்கின்றோம் என்று பொருள்.
2.மற்றவர் உயிரை ஈசனாக மதித்தால் நம் உயிரை ஈசனாக மதிக்கின்றோம் என்று பொருள்.
3.பிறருடைய உடலைச் சிவமாக மதித்தால் நம் உடலைச் சிவமாக மதிக்கின்றோம் என்று பொருள்.
குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு நான் (ஞானகுரு) உங்களை உயர்வாக மதிக்கின்றேன். உங்களைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன். உங்கள் உடலைச் சிவமாக மதிக்கின்றேன்.
எனக்கு… “குருநாதர் அதைத்தான் உபதேசித்தார்”. அதைத்தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.
இதனை நீங்கள் கருத்தில் கொண்டு வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் நுகரும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும்.
இதைத் துடைப்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பதிவாக்கி அதனை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.“இருந்த இடத்திலேயே.., தீமைகளை அகற்றலாம்”.
2.உணர்வின் சக்தியை நீங்கள் பெறலாம் என்றுதான் சொல்கின்றேன்.
எப்பொழுதுமே… “உங்களிடம் தான்… நான் வரம் கேட்கின்றேன்”.
காரணம்… “உயிரான ஈசன் வீற்றிருக்கும் அந்த இடத்தில்” அமைதி கொண்ட உணர்வுகள் நீங்கள் சுவாசித்தால் அந்த அருள் உணர்வுகள் வெளி வரும்போது அதைக் கண்டு நான் ஆனந்தப்படுகின்றேன்”.
அப்பொழுது என் உயிரான ஈசனுக்கும் அந்த அமுதைக் கொடுக்கின்றேன்.
குறைகள் அகற்றுங்கள்… அருளைப் பெருக்குங்கள்… இருளை அகற்றுங்கள்.. மெய்ப்பொருள் காணும் அந்த அருள் சக்தியைப் பெற ஒவ்வொரு மனிதனின் நிலையையும் கடவுள் என்ற நிலையில் மதித்துப் பழகுங்கள்.
பெரும்பகுதியான பெண்களுக்குக் கை கால் குடைச்சல் இருப்பதன் காரணம் என்ன…?
பெண்கள் பெரும்பகுதி இரக்க மனம் கொண்டவர்கள் “அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்…” என்று எத்தனையோ நல்லதைச் செய்வார்கள்.
ஆனால் அவர்களிடம் பார்த்தோம் என்றால் வேதனை… வேதனை… வேதனை… என்று
1.நான் இப்படிச் செய்தேன்… அவர்கள் அப்படிச் செய்கின்றார்கள்…
2.நான் எல்லாவற்றையும் கொடுத்தேன்… ஆனால் என்னை ஏமாற்றுகிறார்கள்…
3.அவர்கள் இப்படி… இவர்கள் இப்படி… என்றும் என் பிள்ளைக்கு இந்த மாதிரி இருக்கின்றது என்றும்
4.இப்படி அடிக்கடி வேதனையாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்
5.அதனால் அவர்களுக்கு கை கால் குடைச்சலாக இருக்கும் 90% பெண்களுக்கு நிச்சயம் இது இருக்கும்
6.பிடரி வலி… இடுப்பு வலி எல்லாமே இருந்து கொண்டே இருக்கும்.
காரணம் என்ன என்றால் எதை எடுத்தாலும் “வேதனை வேதனை வேதனை வேதனை…” என்று தன்னை அறியாமலே உருவாக்கி விடுகின்றார்கள்.
என்னை குருநாதர் காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று பல உண்மை நிலைகளைக் காட்டித் தீமை எவ்வாறு வருகிறது…? நீ அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்…? தீமை நீக்கக்கூடிய சக்தியை எப்படி எடுக்க வேண்டும்…? என்று பல அனுபவங்களைக் கொடுத்தார்.
தர்மம் எப்படிச் செய்ய வேண்டும்…? தர்மம் செய்தால் அது எந்த நிலையாகும்…? தர்மம் செய்தாலும் நம்மைக் காத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றும் காட்டினார். குருநாதர் காட்டிய அந்த அருள் வழியினைத் தான் உங்களுக்கும் காட்டுகின்றோம்
1.தீமை தனக்குள் வராதபடி தடுக்கவும்…
2.தீமை வரும் பொழுது சுகாரித்து… உபதேசித்த அருள் உணர்வுகளை நினைவுக்குக் கொண்டு வந்து
3.அதைச் சமாளிக்கக்கூடிய எண்ணம்… அந்த ஞானம் உங்களுக்குள் வரவேண்டும் என்பதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருவது.
உங்களைத் திட்டியவர்களை நினைக்கும் போது உங்களுக்கு எப்படிச் சங்கடம் வருகின்றதோ… இதே மாதிரி சங்கடம் வரும் போதெல்லாம்
1.சாமி சொன்னார்… சங்கடத்தை இப்படி மாற்ற வேண்டும் என்று சொன்னார் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் கிடைக்கப் பெற்று அதை மாற்றி அமைக்கக்கூடிய எண்ணம் நிச்சயம் வரும்.
3.அப்படி வரச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே கொடுப்பது.
தனித்து ஒருவரால் அந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்க முடிவதில்லை. உங்களுக்கு அதை மீண்டும் மீண்டும் இங்கே ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.
வாழ்க்கையில் குறைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அவர் இப்படி.. இவர் இப்படி… என்று பல விதமான நிலைகளில் அதை அதிகமாக்கி… வேதனையை அதிகமாகக் கூட்டி… அன்றைக்கு நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்களையும் கெடுத்து விட்டு சும்மா உட்கார்ந்து கொண்டிருப்போம்.
இந்தக் கதையைப் பேசி அன்றையப் பொழுது போய்க் கொண்டிருக்கும்
1.குழந்தை வீட்டிலே சில்… சில்லென்று அழுக ஆரம்பித்தால் அதற்கு இரண்டு அடி கொடுப்போம்.
2.பெரியவர்கள் யாராவது நம்மைக் கூப்பிட்டால் இந்தா வர்ரேனே… என்று இந்தச் சொல் எதிர்மறையாகச் செல்லும்.
3.நான் கூப்பிடுகின்றேன்… என்ன இப்படிப் பேசுகிறாய் என்று எல்லா விதமான வம்பும் வந்துவிடும்
4.அந்தச் சொல்லுக்குள் “தொனி” மாறிக் கொண்டே வரும்… நாம் அல்ல…!
ஏனென்றால் இந்த உணர்வுகள் இந்த வேலையைச் செய்கின்றது இதுகள் எல்லாம் நமக்குள் அறியாமல் இயக்கக்கூடிய நிலைகள். காரணம்…
1.நாம் சாப்பிடக்கூடிய ஆகாரத்தில் நஞ்சு
2.நாம் குடிக்கும் தண்ணீரிலும் நஞ்சு
3.நாம் சுவாசிக்கும் காற்றிலும் நஞ்சு… மழை பெய்தாலும் நஞ்சு.
நாம் விவசாயம் செய்யும் பயிர்களில் பூச்சிகளைக் கொல்வதற்கு என்று பூச்சிக் கொல்லி மருந்துகளைப் போடுகிறோம். “நல்ல உணவுப் பயிர்களை நாம் வளர்க்கலாம்…!” என்று விரும்புகின்றோம்.
பூச்சிகள் சாகின்றது… ஆனால் விஷம் அதற்குள் படுகின்றது. சாகும்போது அந்த உடலில் அது பட்டு அது சுவாசத்திற்குள் போய் பூச்சிகள் இறந்தாலும் “உயிரிலே இந்த நஞ்சு சேர்ந்து கொள்கின்றது…”.
அடுத்து அதே இலையின் சத்தை அதே உயிர் அதிலிருந்து மீண்டும் கவர்ந்து உடல் பெறுகின்றது. எந்தச் சத்துடன் கலந்து… எந்த விஷத்தின் தன்மை இந்த உயிரான காந்தம் அந்த உடலில் தன்மை கவர்ந்து பெற்றதோ… அந்த விஷத்தின் தன்மை பெற்ற பிற்பாடு
1.அடுத்து நாம் பூச்சிகளைக் கொல்ல மருந்தைப் போட்டாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்கின்றது.
2.நீ வா தம்பி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அதையும் சத்தாக மாற்றி கொள்கிறது
3.ஏனென்றால் இது எல்லாம் பரிணாம வளர்ச்சியில் வரக்கூடியது.
ஆனால் மனிதனோ நாம் உயர்ந்த குணங்கள் கொண்டவர்கள். உதாரணமாக பால் நம் உடலுக்குச் சத்து கொடுக்கக்கூடியது அதில் விஷத்தைப் போட்டுக் குடித்தால் நம்மைக் கொல்கின்றது.
அதைப் போல்
1.நம் நல்ல குணத்துடன் வேதனை என்ற விஷத்தையும் சேர்த்து அடிக்கடி எண்ணப்படும் பொழுது நல்ல குணத்தை அது கொன்று விடுகிறது.
2.விஷத்திற்குள் நல்ல குணங்கள் சிக்கிவிட்டால் வேதனையைத் தான் நாம் பட வேண்டி இருக்கும்.
3.நாம் நல்லதை எண்ணினாலும் கூட அந்தக் கடுகடுப்புடன் பேசக்கூடிய நிலை வருகின்றது… கடுகடுப்பாகத் தான் நாம் இருக்கின்றோம்.
அதைச் சுவாசிக்கும் போது கிட்னி இரத்தத்தில் கலந்து வரக்கூடிய இந்த கடுகடுப்பான விஷத்தின் தன்மையை அது வடிகட்ட முடியாது போகின்றது. இந்த உணர்வுகள் இரத்தத்துடன் கலக்கப்பட்டு கை கால் குடைச்சலாக வருகிறது.
விஷத் தன்மைகள் உடல் முழுவதும் பரவினால் உப்புச் சத்தைப் பிரிக்க முடியாது போகின்றது. அதே போன்று சர்க்கரையையும் பிரிக்க முடியாது சென்று விடுகிறது.
இதை எல்லாம் நாம் மாற்ற வேண்டும் அல்லவா…!
மனிதன் ஒளி நிலை பெற வேண்டியதன் அவசியம் என்ன…?
தன் ஞானத்தின் வலுவை வலுப்படுத்தி… உயர் தியானத்தால் ஒளி சக்தியின் சக்தியை வலுப்படுத்தியதின் உண்மைத் தன்மை யாது…? (எதற்கு) என்பதை அறிதல் வேண்டும்.
ஒவ்வொரு செயலிலும் ஒன்று வளர்ந்து… அது மாறிப் பிறிதொன்றாய் வளர்ந்து தொடர் நிலை கொள்கின்ற வளர்ச்சி பெறும் உருவக அமிலத்தன்மையில்… பொருள் நிலை மாறினாலும் மூல ஒளி நிலை பெற்ற உயிர் அணு எவையுமே மடிவதில்லை…!
உயிர்களுக்கு என்றுமே அழிவில்லை…! ஆகையினால்..
1.ஒளி நிலை பெற்ற அந்த உயிரணுக்களின் கூட்டுச் செயல் நிலை வளர்ந்தால் தான்
2.அத்தொடரின் வலுவில் வலுவாகக் கூடிய மண்டல வளர்ச்சி உருப் பெற உரம் தர முடியும்.
அமிலமாய்… உருவாய்… ஆவியாய்… உருவாகும் உருத்தொடரின் உயிரணுக்களில்… வீரிய நிலை பெற்ற வளர்ச்சி உரு முதிர்வு நிலை என்பது “மனித உணர்வின் எண்ண ஓட்டச் செயல் நிலைதான்…!”
இச்செயல் நிலையையும் ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் வளர்ப்பு கொண்டுதான் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
அத்தொடரின் அழியா நிலை பெற… அன்று மாமகரிஷியாக உயர்ந்த மனிதன் தன் வலுவைக் கூட்டிக் கொள்ள மனித அறிவில் தன் உணர்வைச் செலுத்தி வளர்ச்சியுறத்தக்க நடைமுறைச் செயலுக்கு அன்று உள்ள மனித ஜனத்தொகை மிக மிக சொற்பம்… மிருக உணர்வின் தொடர்பில் உயர் ஞான எண்ணச் செயல் குறைவு,
அதன் தொடரில் தன் உயிராத்மாவிற்கு உயர் நிலை பெற தாவர இனத் தொடர்பில் தன் சரீரத்தைப் பல பக்குவங்களுக்கு உட்படுத்திக் “காயகல்ப சித்தி” பெற்றார்கள்.
ஆனால் இக்கலியில் நாம் இன்று வாழக்கூடிய வாழ்க்கைத் தொடரிலேயே….
1.எச்சக்தியையும் பெறக்கூடிய வலுவிற்கு
2.அன்று பெற்ற ரிஷி சக்திகளின் எண்ணமுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையை நம் ஜீவகாந்த சரீரத்திற்குச் செலுத்தச் செலுத்த
4.உயிரின் பரிமாணமும் உயிரணுக்களின் பரிமாணமும் கூடக் கூட
5.இவ்வாத்மாவின் ஒளி வட்டம் தன் இயக்கச் செயலினால்
6.தனித்து இயங்கும் ஒளி சக்தியின் வலுவைச் சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொள்ள முடியும்.
வேதனை வந்த பின் நம்மால் நல்லதைச் சிந்திக்கவே முடிவதில்லை… ஏன்…?
கீதையிலே சொல்லப்பட்ட உண்மை “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” எந்தக் குணத்தை நீ சுவாசிக்கின்றாயோ… அதுவாகின்றாய்…!”
உதாரணமாக… மாம்பழம் வேண்டும் என்று எண்ணும் பொழுது அதைத் தேடிச் செல்கிறோம். அதைச் சுவாசித்துக் கடைக்குச் சென்று அதை வாங்கும்படி செய்கின்றது. வாங்கிய பின் அதை ரசித்துச் சாப்பிடுகின்றோம். “மாம்பழம் வேண்டும் என்கிற போது இவ்வாறு செய்கிறோம்…”
அதைப் போல் மூஷிகவாகனா…! ஒருவர் குற்றம் செய்கிறார் என்று பார்த்த பின் அவரை உதைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்… அந்த உணர்வை எண்ணும் போது சுவாசிக்கின்றேன்.
1.அதே உணர்வு கொண்டு கம்பையோ மற்ற ஒரு ஆயுதத்தையோ எடுத்து அவனை அடிக்க வேண்டும் என்று செல்கின்றேன்.
2.ஆனால் இங்கே மாம்பழம் வாங்க வேண்டும் என்றால் கூடையை எடுத்துச் சென்று அதை வாங்கிச் சாப்பிடுகின்றோம்
3.அதனால் தான் நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய் என்று கீதையில் சொல்லப்பட்டது.
இன்றைய செயல் நாளைய சரீரம்…! இதற்கு முன் நல்லதைப் பெற வேண்டும் என்று எத்தனையோ சரீரங்களில் எடுத்தது பரிணாம வளர்ச்சியாகி மனிதனாக உருவாக்கியது.
“வராக மூர்த்தி…” என்று காட்டியது போன்று முந்தி நாம் பன்றியாக இருக்கும் பொழுது கெட்டதை எண்ணாது… நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்துள்ள நல்ல பருப்பைச் சுவாசித்து… அதை உணவாக எடுத்து வளர்ந்து மனிதனாகக் கொண்டு வந்தது.
ஆக மனிதனாக வளர்ந்து வரும் போது உடலில் உள்ள நாற்றத்தைச் சிறுக சிறுக அப்புறப்படுத்திவிட்டு
1.நல்லதைச் சிந்தித்து…
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய சக்தியாக
3.நல்ல உடலை மனிதனாகப் பெற்றிருக்கின்றோம்..
நல்ல சுவைமிக்க உணவை உட்கொண்டாலும் நம்முடைய மலம் நாற்றமாகின்றது.
ஆடு மாடு மற்றும் மிருகங்கள் கெட்டதைச் (விஷமானதை) சாப்பிட்டாலும் அந்தக் கெட்டதை உடலாக மாற்றுகின்றது ஆனால் நல்லதை மலமாக மாற்றி விடுகின்றது… அது நாற்றமாவதில்லை… நல்லதைத்தான் அது கழிக்கின்றது
வராக மூர்த்தி என்று அதனால் தான் பன்றித் தலையைப் போட்டு மனித உடலாகக் காட்டி இருக்கின்றார்கள்.
பன்றியாக இருக்கும் போது நாற்றத்தை நினைக்கவில்லை. அதற்குள் இருக்கும் நல்லதை நுகர்ந்த்து… நல்ல சுவாசத்தை எடுத்து நல்ல பருப்பை எடுத்தது.
அதிலே சேர்த்துக் கொண்ட அந்தச் சத்து தான்… படிப்படியாக… படிப்படியாகக் கெட்டதை நீக்கி… மனிதனாக இன்று வளர்ந்து இருக்கின்றோம். நாம் சாப்பிடுவது… நினைக்கிறது அதில் உள்ள விஷத்தை எல்லாம் கழிக்கின்றது மனித உடல்
ஆனால் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம்…?
என் பையன் நல்லவனாக வேண்டும் என்று ஒரு தடவை நினைக்கின்றோம் ஆனால் சேட்டை செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… என்று வேதனைப்படுகின்றோம்.
1.இதைப் பல முறை எண்ணுகின்றோம்.
2.இப்படிப் பல முறை தியானம் செய்தால் என்ன ஆகும்…? வேதனை தான் விளையும்.
வியாபாரத்தில் ஒருவருக்குக் கடனாக கொடுக்கின்றோம். கடனைக் கொடுத்த பின்பு நான் கொடுத்தேன்… அவன் திருப்பிக் கொடுக்கவில்லை… நான் கொடுத்தேன் கொடுக்கவில்லை… கொடுக்கவில்லை… என்று இப்படிப் பண்ணுகின்றார்களே இப்படிப் பண்ணுகின்றார்களே…! என்று வேதனையைத்தான் வளர்க்கின்றோம்.
1.ஒரு தடவை நல்லது செய்கின்றோம்.
2.ஆனால் பல தடவை வேதனையைத்தான் வளர்க்கின்றோம்… வேதனை தான் உடலுக்குள் வளர்கின்றது,
இதை மாற்ற முடிகிறதா…? நல்லதைச் சிந்திக்க முடியாதபடி போய் விடுகின்றது அதைத் தான் தியானம் பண்ணுகின்றோம். இதைப் போன்ற உணர்வின் தன்மைகள் எல்லாம் விஷம்.
விஷம் (வேதனை) அதிகமாகும் பொழுது…
1.அந்த விஷத்தை உடல் கழிக்க முடியாதபடி இரத்தத்துடன் கலந்து எல்லாமே நஞ்சாக மாற்றி விடுகின்றது.
2.கழிக்கக்கூடிய திறனை இழந்து விட்டால் எல்லாம் நஞ்சாகி நல்ல குணங்களும் நஞ்சாக மாறி விடுகின்றது.
நஞ்சை நீக்கும் சக்தி பெற்ற மனித உடலில் நஞ்சை அதிகமாகச் சேர்த்தால் நஞ்சின் வாசனை உயிராத்மாவில் அதிகமாகி… எவ்வளவு அளவுகோல் கொண்டு அதைச் சேர்த்திருக்கின்றோமோ மிருகங்களில் எந்த நஞ்சு இருக்கிறதோ அங்கே தான் போகும். அது “லபக்…” என்று நம் உயிராத்மாவை இழுத்துக் கொள்ளும்.
அங்கே தான் நாம் பிறப்போம். அதை உறுதியாக்க முடியும்… மனிதனாகப் பிறப்பது உறுதி இல்லை.
ஆனால் நாம் ஒளியாக மாற்ற வேண்டும்.
1.ஞானிகள் கண்ட வழியில் சென்றால் தான் துன்பத்தைத் (நஞ்சை) துடைக்க முடியும்… உணர்வை ஒளியாக மாற்ற முடியும்.
2.இதைத் தவிர வேறு வழி இல்லை.
காற்று மண்டலம் மட்டும் நஞ்சாகவில்லை… மனிதனும் நஞ்சாக மாறிக் கொண்டிருக்கின்றான்
அலை வரிசைகளின் மூலம் இன்று நாம் பார்த்து.. கேட்டுக் கொண்டிருக்கும் ரேடியோ… டி.வி. இண்டெர்னெட்… எல்லாமே எவ்வமிலத்தில் உலோகத்தைப் பூசி ஒலி பரப்பப்பட்டதோ.. அது காற்று மண்டலத்தில் பரவி… எத்தொடரில் ஒலிபரப்பானதோ… அவ்வொலியின் பலவாகப் பரவும் செயல் ஜீவன் கொண்டு… ஒரு இடத்தில் ஒலிப்பரப்பப்பட்ட நிலை இக்காற்று மண்டலம் முழுமைக்கும் பல மைல்களுக்கப்பால்… அதன் தன்மை கொண்ட அமில மோதல் தொடர்பில் ஜீவன் பெற்று விடுகிறது.
அந்த இணைப்பு பெறும் தொடர்பிலெல்லாம் ஒலிப்பரப்பாகும் ஒலியை நாம் அவ் ஈர்ப்பில் கேட்கும் பொழுது
1.எவ்விஷ அலையின் முலாம் பூசப்பட்ட அமில ஈர்ப்பின் ஒலிப்பதிவு
2.இந்தக் காற்று மண்டலத்தில் ஜீவன் பெற்றதோ
3.மீண்டும் அதே அலையின் உணர்வை நம் எண்ண உணர்வு எடுக்க எடுக்க
4.இவ்வுடலும் அவ்விஷ அலையின் ஈர்ப்பிற்குத்தான் செல்ல முடியும்.
எப்படி இயந்திரங்களை ஒன்றின் இணைப்பு கொண்டு பிறிதொன்றை இணைத்து ஓட்டும் பொழுது… அதன் தொடர்பில் இதுவும் ஓடுகின்றதோ அதைப் போன்று… உணர்வின் எண்ண அலையின் தொடர்பு அலையில் எத்தொடர்பில் ஒலி அலை.. ஒளி அலை பதிவு பெற்றனவோ… அவற்றின் ஈர்ப்பிற்கு மனிதர்கள் தம் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது… அவ் ஓட்டத்தின் சுழற்சியில் தன் உணர்வும் சிக்கி… அவ்விஷ அலையில்தான் இம்மனித ஆத்மாவும் செயல் கொள்ளத் தொடங்கி விட்டது.
இந்தக் குறுகிய நூற்றாண்டில் வளர்ச்சி கொண்ட இவ் அலையின் தொடர்பினால்… “பல கோடி ஆண்டுகளாக” வளர்ச்சியுற்ற வலுக் கொண்ட இவ்வுயிர் ஆத்மாவை நல் உணர்வின் ஞானமுடன் செயல்படுத்த முடியாத நிலை ஆகி விட்டது.
இன்றைய செயற்கை மின் காந்த ஒலி… ஒளிக் காட்சிகளின் தொடர்பினால்…
1.ஆத்மாவானது உயரும் நிலை பெறாமல்
2.உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன்
3.உயிருடன் வலுக் கொண்டு… உயிருடன் ஆத்மா வலுப் பெறாமல்
4.ஆத்மா சிதறுண்ட நிலையில் இக்காற்று மண்டல சுழற்சியில்
5.மனித உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அந்தந்த மோதல் நிலை பெற்று
6.தன் வலு நிலையை இழந்து விடுகின்றது.
ஆகவே.. ஆத்மாவுடன் கூடிய உயிரும்… ஆத்மா பிரிந்த அவ்வுயிரும் வலுவிழந்த நிலையில்… பிறப்பின் தொடருக்கு மீண்டும் மிகவும் கீழ் நிலையான உயிரின நிலைக்குத்தான் செல்ல முடிகின்றது.
இன்று இக்காற்று மண்டலமே மிகவும் நஞ்சாக உள்ளது. மனித உணர்வின் எண்ண ஆத்மாவிற்கு வேண்டிய உயர் காந்த மின் அலையை எடுக்கும் உயர் ஞானத்தின் சக்தி நிலை பெறத்தக்க சூழ் நிலையை
1.இன்றைய விஞ்ஞானம் காற்று மண்டலத்தில் கலக்க விட்டுள்ள பல அலையின் செயலினால்
2.அந்த மனித சக்தியையே வலுவிழக்கச் செய்துவிட்டது.
விஞ்ஞானத்தில் செயல்படும் நிலையே தன் ஞானம் செயல்படக்கூடிய வழி வளர்ந்த தொடரில் வளர்ந்திருந்தது என்றால்
1.இன்று இப்பூமியில் கலியின் கடைசியை அழிவு நிலை இல்லாமல்
2.மனிதனின் உயர்வு வளர்ச்சியான அடுத்த கல்கி அவதாரத்தை மனிதர்கள் பெற்றிருக்கலாம்.
சில நிலைகள் வெளிப்படுத்திய நிலையும் யூதர்களினால் அன்று மனித உணர்வின் ஆத்மா வலுப்பெற்ற நிலையும் அழிவு நிலைக்குச் சென்று விட்டது.
அன்றைய ஞானிகள் மனித ஆத்மா உயர்வு பெற மனிதன் எச்சக்தியையெல்லாம் பெற முடியுமென்ற தத்துவத்தை விளக்கிக் காட்டினர்.
1.அதை வளர்க்கும் நிலையைக் காட்டிலும் எதிர்க்கும் நிலையும்
2.தன் தேவைக்குத் தந்திரமான முறையில் செயல்படுத்தப்பட்டதினால்
3.இன்று அவை எல்லாம் வேறு ரூபமெடுத்துவிட்டன.
ஆயிரக்கணக்கான உயிர்களை நான் பிரார்த்திக்கும் பொழுது அந்த ஆயிரம் பேருடைய சக்தி எனக்குக் கிடைக்கின்றது
ஞானிகள் உணர்வுகளை இராஜதந்திரமாக குருநாதர் எனக்குள் எப்படி நுழைய வைத்தாரோ அதைப் போன்று தான் உங்களுக்குள்ளும் உயர்ந்த உணர்வுகளை தூண்டச் செய்து அதைத் தட்டி எழுப்பிக் கொண்டுள்ளேன் (ஞானகுரு).
துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் உங்கள் உடலில் இருந்து நீங்குவதற்கு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்ய யாம் உபதேசிக்கின்றோம்.
அந்த உபதேசித்த அருள் வழிப்படி நீங்கள் தியானம் எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் வரும் தீமைகளைப் போக்க இது உதவும்.
குருநாதர் எனக்குத் துன்பத்தை கொடுத்து இதைத் தெரிய வைத்தார்.
1.உங்களுக்குள் துன்பம் வரும் பொழுதெல்லாம் யாம் சொன்ன முறைப்படி செய்தால் அதை நீக்கிக் கொள்ள முடியும்.
2.நீங்கள் சொன்னதை எடுத்ததனால் “என் துன்பம் போனது… நன்றாக இருக்கின்றேன்…” என்று உங்கள் அனுபவம் பேசும்
3.கஷ்டம் இல்லாது இந்த உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றீர்கள்
4.”சாமி இலேசாகச் சொல்கிறார்…” என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
வாக்கினால் யாம் சொல்லும் பொழுது உங்களுக்கு நல்லதாகின்றது அதே எண்ணத்துடன் நீங்கள் நினைத்து வந்தால் உங்களுக்குச் சீக்கிரம் நல்லதாகும்.
தொல்லை கொடுக்கின்றாய்… நீ எல்லாம் உருப்படுவாயா…? என்றால் என்னை அப்படியா சொல்கிறாய்…? என்று அவர்கள் வார்த்தையை வாங்கினால் நம் வியாபாரத்தில் மந்தம்… குடும்பத்தில் குழப்பம்… உடலில் கை கால் குடைச்சல் எல்லாம் ஆகி நம்மைக் கீழே கொண்டு செல்கின்றது.
அடுத்தவன் வார்த்தையை வாங்கிய மாதிரி
1.”சாமி சொன்னார்… அவர் வார்த்தையை (வாக்கினை) எடுப்போம்…” என்று நீங்கள் எண்ணி எடுத்தால்
2.உங்கள் துன்பத்தைத் துடைப்பதற்கு காற்றிலிருந்து இந்த உணர்வு உதவி செய்யும்.
உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து நல்ல உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கும் பொழுது சில நேரங்களில் உங்கள் புருவ மத்தியில் “விண்…விண்…” என்று அந்த உணர்வுகள் ஈர்ப்பதைப் பார்க்கலாம். உங்களை அறியாமலே அது ஈர்க்கும்.
காரணம் உங்கள் உயிரை ஈசனாக மதித்து இதைச் செயல்படுத்துகின்றேன் உங்கள் உடலை உருவாக்கியதற்கு மூலமே “அவன்தான்… அந்த ஆற்றல் மிகுந்த சக்திதான்…!”
1.ஆயிரக்கணக்கான உயிர்களை நான் பிரார்த்திக்கும் பொழுது ஆயிரம் பேருடைய சக்தி எனக்கும் கிடைக்கின்றது.
2.அதே சமயத்தில் ஆயிரம் பேர் தனித்துத் தனித்து எண்ணும் பொழுது ஒன்று ஒன்று.. அது நீங்கள்.
3.உங்களுக்குள் அந்த உயர்ந்த ஒளிகள் பெற வேண்டும் என்று நான் எண்ணும் போது
4.அந்த ஆயிரம் பேருடைய உணர்வு எனக்குள் வலுப்பெற்றுச் செயல்படும்.
பல கோள்களின் சக்திகளை எடுத்துத் தான் சூரியன் ஒளியாக மாறுகின்றது. அதே போன்று நீங்களும் செயல்படுத்திப் பாருங்கள்.
மற்றவர்கள் உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது நீங்கள் வளர்கிறீர்கள்.
மற்றவர்கள் கெட வேண்டும்… கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணினால் முதலில் நீங்கள் தான் கெடுகின்றீர்கள். கெடுதலை உங்களுக்குள் விளைய வைத்த பின்பு தான் அடுத்தவர்களுக்குக் கெடுதலை உருவாக்க முடியும்.
இதைத் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை நம் உயிர் படைத்து விடுகின்றது.
அழிவை நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து திரும்பி “மகரிஷிகள் காட்டும் வழியில்” செல்ல வேண்டும்
மனிதனின் உணர்வின் எண்ணம்… தன் ஞானத்தின் உயர் ஞானத்தால் படைப்பின் பல பொருள்களை எல்லாம் இவ்வுடல் தேவைக்குச் செயலாக்கித் தன் சரீர ஜீவிதத்தை இன்று பக்குவப்படுத்திக் கொண்டுள்ளான்.
அதைப் போன்று… இவ்ஈர்ப்புப் பிடிப்பில் பூமியின் சுழற்சியுடன் சிக்குண்ட இஜ்ஜீவ உடலின் “உயிரையும்… உயிரணுக்களையும்…” இந்த உடலில் உள்ள பொழுதே இது வரை யாம் சொன்ன வழித் தொடர்பினால் உயர் காந்த மின் அலைகளை எடுத்துச் சேமிக்கும் பக்குவம் பெறல் வேண்டும்.
1.இஜ்ஜீவ காந்த சரீரம் இப்பூமிப் பிடிப்பின் சுவாசத்தை எடுத்து
2.சாதாரண வாழ்க்கையில் வளரும் நிலையிலிருந்து
3.உயர் தன்மைக்கு வீரியத்தைச் செலுத்திடல் வேண்டும்.
4.இப்படி மேல் நோக்கி ஈர்க்கப்படும் தொடர் சுழற்சியினால் இக்காற்று மண்டலப் பிடிப்பில் சிக்காமல் தப்ப முடியும்.
(உடலை விட்டுச் சாதாரண நிலையில் பிரியக்கூடிய உயிராத்மா இந்தப் புவியின் காற்று மண்டலப் பிடிப்பில் தான் சுற்ற முடியும்)
ஆக… வீரியத் தன்மை கொண்ட இவ்வுயிராத்மா மேல் நோக்கிப் பெற்ற உயிர் காந்த மின் அலையின் வளர்ச்சியினால்….
1.உயிருடன் உயிர் அணுக்களும் சேர்ந்த ஈர்ப்பின் உந்தலை
2.எண்ணத்தின் உந்தல் கொண்டு ஒளி கொண்ட ரிஷியின் ஈர்ப்பில் செலுத்தும் நிலையால்
3.ஒளியின் ஒளியாகப் பிரகாச நிலை அடைந்து
4.இந்த மனித உடலிலிருந்தே மனிதன் “பறக்கும் நிலை” பெற்றிருக்கலாம்.
ஆனால் உணர்வின் எண்ணம் இந்த உடல் வாழ்க்கையில் பூமிப் பிடிப்பில் தொடர் நிலையுடன் ஓடும் தன்மையால் சரீரம் அழுகிய நிலையில் உடலின் ஆத்மா பிரிந்ததென்றால்… உடலின் உயிரணுக்களும் வலுவிழந்த தன்மையால் பெற்ற உயிர் சரீர நிலையைக் காட்டிலும்… மீண்டும் பிறப்பு நிலையில் மனிதப் பிறப்புக்கே வந்தாலும் ஞானமும் அங்க அவயங்களின் தன்மையும் “குறுகிய நிலை தான்” பெற முடியும்.
விவசாயத்தில் இன்றெப்படி அதற்குகந்த வீரிய இரசாயண உரங்களைச் செலுத்தி மகசூலில் அதிக நிலையும் காய்கறிகளின் தன்மையை வீரியப்படுத்தி விவசாயம் வளர்ந்துள்ளது. அதைப் போன்று….
1.இச் சரீர உடலின் உயிராத்மாவிற்கு வீரியத் தன்மை தரும்
2.உயர் ஞானத்தின் செயலை மனிதன் செயலுக்குக் கொண்டு வராமல்
3.உடலின் ஆரோக்கியத்திற்கும்… உணவின் சுவைக்கும்தான்… தன் ஞானத்தைச் செலுத்தி விட்டான்.
உயிருக்கும் உயிரணுவிற்கும் தரப்படும் வீரியத் தன்மையில் உணர்வின் எண்ணத்தில் “பிற நிலையின் ஈர்ப்பு நிலையற்று… தன் செயலை வீரியப்படுத்தும் நிலையினால் தான்…” உயர்வு நிலைக்குச் செல்ல முடியும்.
உணர்வுகள் மாற்றப்பட்டு எண்ணத்தின் செயல் பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிற்குச் செலுத்தும் பொழுது மகான்களினால் அன்று வெளிப்படுத்திய சில உண்மை நிலைகளில் மருத்துவ நிலையும் இன்று விஞ்ஞானத்தின் விஸ்வரூபம் எடுத்து விட்டதைப் போன்று
1.அழிவு நிலைக்குச் சென்றுவிடும் பக்குவத்தின் பலனை அறிந்து
2.அதிலிருந்து மீண்டிட மகரிஷிகள் காட்டும் வழியில் செயல்படல் வேண்டும்.
என்னுடைய ஆசீர்வாதம் துன்பத்தைத் தாள் பணியச் செய்வதற்குத் தான்…!
வியாசகர் கீதையில் சொன்னது போன்று “குருக்ஷேத்திரப் போர் – ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணுங்கள்.. அது தான் உடலுக்குள் இருக்கும் அனைத்துக்கும் குரு.
ஓ…ம் என்பது பிரணவம் (ஜீவன்)… நாம் எண்ணியது ஜீவன் பெறுகின்றது ஆகவே உயிரை எண்ணி…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
3.குருக்ஷேத்திரத்தில் அவனிடமே கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து
3.அதைப் உணர்வு பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருங்கள்.
அந்த உணர்வின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று… நான் கொடுக்கும் இந்த உணர்வின் நிலைகள்… அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடியதாக தகுதி பெற்று…
1.யாம் உபதேசித்த ஆற்றல் மிக்க சக்தியை
2.எண்ணிய போது எண்ணிய நிலைகள் கொண்டு உங்களுக்குள் கிடைக்கச் செய்து
3.துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் தாள் பணியச் செய்வதே “என்னுடைய ஆசி… (ஞானகுரு)”
ஆகவே அதைப் பெற வேண்டும் என்ற ஆசை கொண்டு மேல் நோக்கி நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள்.
அந்த மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; என் உடலில் இருக்கக் கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும்; என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்; என் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்; நான் பார்ப்பதெல்லாம் அனைத்தும் நலம் பெற வேண்டும்; நான் பார்ப்போர் எல்லாம் நல்லதாக வாழ வேண்டும்…! என்று இதை மட்டும் எண்ணிக் கொண்டு வாருங்கள்.
1.உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அனைத்தும் தாழ் பணிந்து
2.உங்களுக்குள் ஒத்துழைத்து… உயர்வான எண்ணங்களுக்கு வழி காட்டியாக அது அமையட்டும்.
எது…?
எதுவும் கெட்டது அல்ல…!
1.உங்களுக்குள் வலுவூட்டும் வழி காட்டியாகவும் அது இருக்கும்.
2.கெட்டது என்று அதுதான் காட்டுகின்றது
3.அதை நீக்கி நாம் செல்ல வேண்டும்
4.கெட்டது என்று வழி காட்டினாலும் இந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்ந்து விடுகின்றது
5.ஆனால் வழி காட்டிய நிலைகளும் எனக்குள் பணிந்து நல் வழி காட்டியாக இருக்க வேண்டும்.
6.வழி காட்டிய அந்த நிலைகள் – “விஷமே” என்னை ஆட்கொண்டு விடக்கூடாது.
ஆசீர்வாதம் என்பது மெய் ஒளி பெறும் அந்தத் தகுதியின் தன்மை கொண்டு நாம் பெற வேண்டும் என்று அதுதான் ஆசி.
மீண்டும் மீண்டும் யாம் இதைச் சொல்வதன் நோக்கமே
1.அரசனுக்கு கீழ் பணிவது என்பது கௌரவத்திற்காக வேண்டிப் பணிவது
2.பெரியவரைக் கண்டால் பணிவது வேறு…
3.நமக்குள் ஒன்றைப் பணியச் செய்வது வேறு…!
அருள் வாக்கின் தன்மைகள் மெய் ஒளி நமக்குள் வளர்ந்து தீமை செய்து கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மை அதைத் தாள் பணியச் செய்வதே “ஆசீர்வாதம்…”
ஆகவே “நீங்கள் எப்பொழுதும் அந்த மெய் ஒளி பெற வேண்டும்…” என்று அந்த உணர்வின் அடிப்படையிலேயே உங்களுக்கு ஆசி வழங்குகின்றேன் அதை நீங்கள் பெறும்படி வேண்டிக் கொள்கின்றேன்.
உடலைக் காக்க முற்படும் மனிதனின் ஞானத்தால் உயிராத்மாவை தெய்வ நிலைக்கு உயர்த்த முடியாதா…!
இன்று விஞ்ஞானத்தில் மருத்துவத்துறையிலும் மற்ற தொழிலும் அணுக் கதிர்கள் செயல்படுத்தக் கூடிய நிலைக்கும் ஜீவ காந்த சரீரத்தின் வளர்ச்சியில் இச்சரீர செயலுக்கும் உயிர் அணுக்களின் செயல் எப்படிச் செயல் கொள்கிறது…?
மருத்துவ விஞ்ஞானத்தின் மூலமாக… மனித உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு… அதாவது நோயின் தன்மை அறிய உடலிலிருந்து வெளிப்படும் சிறு நீர் மலம் கபம் இவற்றையும் உதிரத்தையும் எடுத்துப் பரிசோதனைக்கு உட்படுத்த சில கால கட்டத்தில் அதிலுள்ள உயிரணுக்கள் பிரியா நிலையில் ஆராய்ந்து அதனுடைய தன்மையை அறிகின்றார்கள்.
உடலிலிருந்து வெளிப்பட்டு… “சில மணி நேரங்களுக்குள் அதைப் பரிசோதனைப்படுத்தினால் தான்…” அதிலுள்ள உயிரணுக்களின் தன்மையைக் காண முடிகின்றது.
செயலுடன் கூடிய ஜீவ ஓட்டத்தில் உயிர் கொண்ட உயிரணுக்கள்…
1.ஜீவ ஓட்டம் அற்றுப் பிரியும் பொழுது… ஈர்ப்பின் ஓட்ட நிலை இல்லாமல்
2.அந்த உயிரணு பிரிந்து காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றதல்லவா…?
3.அதைப் போன்று தான் இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தாலும்
4.இஜ்ஜீவ ஓட்டப் பிடிப்பு மாறியவுடன் காற்று மண்டலத்தில்
5.உயிரும் இந்த உடல் அணுக்கள் யாவையும் சுழலும் நிலை ஏற்படுகின்றது.
இதனுடைய தொடரிலிருந்து… உடலில் ஏற்படக்கூடிய சில வகை வியாதிகளுக்கு விஞ்ஞான மருத்துவ முறையில் மின் கதிரியங்களைச் செலுத்தி…
1.வளர முடியாத சில அணுக்களை வளர்க்க…
2.அதற்குகந்த மருந்தைச் செலுத்தி… அதற்குகந்த வீரியத்தைத் தர (உயிரணு வளர)
3.கதிரியக்க முறை விஞ்ஞான மருத்துவத்தில் மனிதன் முன்னேறி இருக்கின்றான்.
தன் ஞானத்தால் இந்த உடலில் வளரும் உயிரணுக்களுக்கு அடுத்த நிலை பெறக்கூடிய நிலையை… “வீரிய மருத்துவத்திலும்… மற்ற பல செயலிலும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞானம்…
1.தன் ஞானத்தைக் கொண்டு மனிதன் இன்று பறக்கும் நிலைக்கும்
2.எண்ணியதைச் செயலாக்கும் உயர் தெய்வ நிலைக்குச் செயலாக்கி இருக்கலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு துளி விஷம் பாலில் பட்டால் அதைக் குடித்தால் என்ன ஆகின்றது…? நம்மை மயங்கச் செய்கின்றது. சிறிது விஷம் அதிகமானால் மரணமடையும் நிலையே வந்துவிடுகின்றது.
இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தால் நாம் வேதனைப்படுகின்றோம்.
1.வேதனை என்பதே விஷம்… வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்ததென்றால்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இது பட்டபின் நம்மை “மயங்கச் செய்துவிடுகின்றது…”
அப்பொழுது சிந்தனை என்ற நிலைகளை இங்கே இழக்கச் செய்கின்றது. தன்னை அறியாமலே வெறுப்பும் வேதனைப்படும் நிலைகளைச் செயல்படத் தொடங்கிவிடுகின்றது.
இதிலிருந்து நாம் மீள வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன உபாயம் இருக்கின்றது…?
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் பதிவு செய்த அந்த வழிப்படி உங்களுக்குள் விஷத்தை அடக்கிடும் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.
பின் கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று “உள்முகமாகப் பாய்ச்சுதல் வேண்டும்…”
இப்படி எண்ணினால் அந்தத் தீமைகளை மறைத்து விடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை என்ற உணர்வுகள் “இழுக்காது… தடைப்படுத்தப்படுகின்றது”.
இது வலுப் பெறும் பொழுது நம் ஆன்மா மீது சுருண்டு கிடக்கும் வேதனைப்படச் செய்யும் தீமைகள் நீக்கப்படுகின்றது.
எத்தகைய நிலைகள் வந்தாலும் இதைப் போல நம்மைப் பாதுகாக்கும் வலுவான உணர்வுகள் வருதல் வேண்டும்.
இன்று இருக்கும் இந்த விஷமான உலகில்
1.“உங்களுடைய சிந்தனைகள் சிதறாது” அருள் உணர்வைச் சேர்த்துப் பழக்குவதற்குத்தான்
2.மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வுகளை உங்களுக்குள் அடிக்கடி உந்தச் செய்கின்றோம்.
3.உங்கள் “மனம் மாறும் நிலைகளில்” எல்லா உணர்வுகளுடன் இதைக் கலக்கச் செய்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.
பதிவாக்கியதை நினைவு கொண்டு நீங்கள் மீண்டும் ஏங்கினால் தீமைகளை அகற்றிட முடியும்.
1.அந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்…
2.உங்களை நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றோம்.
தீமையை வென்ற உணர்வின் தன்மை “உணர்ச்சிகளாகக் கொடுத்து” நீங்கள் எல்லோரும் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
இது உலகைச் சுற்றி ஊரைச் சுற்றிக் காட்டைச் சுற்றி உணவில்லாதபடி நான் அலைந்தேன். அகண்ட அண்டத்தின் நிலைகளையும் உலக அனுபவத்தையும் குருநாதர் கொடுத்தார்.
தீமை என்று நீங்கள் காணும் பொழுதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்.
2.தீமையிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.
3.தீமை செய்வோர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சினால்
4.“தீமையை நுகரும் சக்திகள்” அங்கே மாறிவிடுகின்றது.
இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்திலேயும் கணவனும் மனைவியும் இதைச் செய்தே ஆக வேண்டும்.
இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்கள் உங்களுக்குள் வளர்ந்து வரும் நிலையில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்த உயிர் எதை வலுவாக எடுத்ததோ அங்கே அழைத்துச் செல்கின்றது.
நாம் “பிறவியில்லா நிலை” அடைகின்றோம்.
உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை “எண்ணிய நேரத்திலே” மாற்ற முடியும்
மற்றவர்கள் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கப்பட்டு நீங்கள் உதவி செய்கிறீர்கள். ஆனாலும் அவர்கள் பட்ட வேதனை உங்களை அறியாமல் உங்களுக்குள் புகுந்து வாட்டி வதைக்கின்றது.
அதை மாற்றி… உங்களைக் காத்துக் கொள்வதற்கு ஞானிகள் உணர்வினை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் நிரப்புகின்றோம். அதை நீங்கள் பெருக்கிக் கொண்டு அந்த ஞானிகள் காட்டும் வழியில் செயல்பட்டீர்கள் என்றால் அந்த உணர்வு உங்களைக் காக்க உதவும்.
நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களைக் காப்பாற்ற முடியாது…!
1.குரு வழியில் நான் அதைப் பெற்றேன்…
2.எடுத்து எனக்குள் வளர்த்தேன்… என் துன்பத்தைப் போக்க முடிந்தது
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை என்னால் எளிதில் பெற முடிகின்றது
4.உங்களுக்குள் அதைப் பாய்ச்ச முடிகின்றது.
ஆகவே அந்த அருள் ஞானத்தைக் கொடுக்கின்றேன் நீங்கள் வளர்த்துக் கொண்டால் தான் அந்தப் பலனைப் பெற முடியும். ஞான வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… அதற்குண்டான நீரை ஊற்றினால் தான் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளையத் தொடங்கும். மற்ற யாரும் செய்து தர முடியாது.
எந்த ஞானியாக இருந்தாலும் யோகியாக இருந்தாலும்
1.நம்முடன் கலந்து உறவாடி அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த இணைப்பு இருந்தால்தான் சொல்லி…
2.உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்தவும் முடியும்… நாமும் அங்கு செல்ல முடியும்
4.அப்படி இணைப்பில்லாதவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.
நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வு மெய் ஒளியின் சுடரைக் கொண்டு “சிறு துளி பெரு வெள்ளம்…” என்று அந்த ஆற்றல்மிக்க சக்தியைக் கூட்டி அதை வளர்த்து அந்த எண்ணத்தின் தன்மை கொண்டு தான் நாம் எதனையும் செயல்படுத்த முடியும்.
நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்தவர்கள் “யாராக இருந்தாலும் சரி…” நம் குருநாதர் காட்டிய வழியிலே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்கள் இணைய வேண்டும் என்று அந்தந்த வீட்டாருடன் சேர்ந்து செயல்படுத்தினோம் என்றால் அவர்களை விண் செலுத்த முடியும்.
இன்னொரு உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விட்டு ஞானிகளின் அருள் வித்தின் தன்மையை விளைய வைக்க முடியும்.
சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிகுந்த சக்திகளை
1.நீங்கள் பெற வேண்டும் என்று யாம் எப்படிச் செய்தோமோ இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.உங்கள் எண்ணத்தை அங்கே மீண்டும் செலுத்தினால் தான் உங்கள் நினைவலைகள் அங்கே செல்லும்.
அது அல்லாதபடி… என் பிள்ளை “இப்படி இருக்கின்றானே… இப்படி இருக்கின்றானே…” என்று பிள்ளையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் இங்கே நோயாகி இறந்த பின் அவன் உடலுக்குள் சென்று அவனை இன்னும் கொஞ்சம் நாசமாக்கத் தான் முடியும். நான் நாசமானேன்.. அவனும் நாசமானான்…! என்ற நிலை தான் வரும்.
வேதனையுடன் இறந்தால் இதே உணர்வின் தன்மை தான் அங்கேயும் தோன்றும்.
நான் ஒருவனுக்கு உதவி செய்தேன்…! ஆனால் பதிலுக்கு அவன் இடைஞ்சல் செய்தான் என்றால் “பாவிப் பயல்… நான் நல்லது செய்தேன் எனக்கு இப்படிச் செய்தானே… இப்படிச் செய்தானே…!” என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.
கடைசியில் உடலை விட்டுச் செல்லும் பொழுது அவன் நினைப்பு தான் வரும். இதே உணர்வு கொண்டு அந்த உடலுக்குள் புகுந்து இந்த வேதனையை அங்கே விளைய வைத்து அவனையும் வாழ விடாது விஷத்தையே மீண்டும் எடுத்து வளர்த்துப் பல உடல்களுக்குள் சென்று தொல்லைகளைக் கொடுத்து விஷ ஜந்துக்களாகத்தான் பிறக்க முடியும்.
விஷ ஜெந்துக்களாகப் பிறந்தாலும் மனிதன் கையில் சிக்கி அடிபட்டு
1.அவனுடைய உணர்வைக் கவர்ந்தால் தான் மீண்டும் மனிதனாக வர முடியும்
2.அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று சொல்ல முடியாது…!
3.அது வரையிலும் எடுத்த வேதனையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்
ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் மெய் வழியின் தன்மை கொண்டு மெய் ஒளியின் தன்மை பெற்று அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்.
விஞ்ஞான உலகில் படர்ந்து கொண்டிருக்கும் நஞ்சின் தன்மையிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்கு இது உதவும்.
உங்களுக்கு இதிலே கஷ்டம் ஒன்றுமில்லை… நஷ்டமும் இல்லை. பக்தியிலே எப்படி நல்லதை நினைக்கின்றீர்களோ அதைப் போல் “ஞானிகளின் அருள் சக்திகளை எண்ணி எடுத்து… எனக்குள் அதை வளர்ப்பேன்…” என்று செயல்படுத்துவதே தியானம்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.என் சொல்லுக்குள் இனிமை பெறுவேன்
3.என் பேச்சு மூச்சும் நன்மை பெறும்
4.நான் பார்ப்பதெல்லாம் நல்லதாக இருக்கும்
5.நான் செய்வதெல்லாம் நல்லதாக இருக்கும் என்று
6.இதை எண்ணி வளர்த்துக் கொள்ளச் செய்யும் இந்தத் தியானம் உங்களுக்குக் கெட்டதா…?
ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியிலே நாம் சென்று பழகுதல் வேண்டும்.
குருநாதர் எனக்கு எப்படி வாழ்க்கையில் வந்த விஷத்தின் தன்மையை மாற்றுவதற்கு… ஞானிகள் உணர்வுகளை என் நல்ல உணர்வுடன் கூட்டச் செய்து அருள் உணர்வுகளைப் பெருக்கச் செய்தாரோ… எனக்குள் வரக்கூடிய துன்பத்தைத் துடைக்க எதைச் சொன்னாரோ… அவர் கற்றுக் கொடுத்ததைத் தான் உங்களுக்கும் உணர்த்துகின்றோம்.
அதன் வழி கடைப்பிடித்தால்…
1.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை
2.“எண்ணிய நேரத்திலே” அதை மாற்ற முடியும்… தெளிவு பெறும் தன்மையும் வரும்.
அந்த விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெற வேண்டும் என்று ஆசையிலேயே சொல்கின்றேன்.
1.அதைப் பெற வேண்டும்… அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்ற
2.அதே ஆசையில் நீங்களும் இருந்தால் இது சீக்கிரம் உங்களுக்குக் கை கூடும்.
அவ்வாறு நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கின்றேன்.
“விஞ்ஞானத்தின் வீரியத்தை” மனிதனை அழிப்பதற்குப் பயன்படுத்தாமல் மனிதனை உயர்த்துவதற்குப் பயன்படுத்தலாம் அல்லவா…!
“பல நூறு டன் எடையுள்ள மணலிலிருந்து” விஞ்ஞானத்தின் செயலில் ஒரு அவுன்ஸ்க்கும் குறைவான சில ரசாயன சக்தியை (URANIUM) மனிதன் பிரித்தெடுத்து இவ்வுலகத்தையே அழிக்கவல்ல வெடி குண்டுகளைச் செய்விக்கின்றான்.
மனிதனின் எண்ணமும் செயலும் எப்படித் தன் ஞானத்தைச் செயல்படுத்திச் சில சக்தி வாய்ந்த அழிவு நிலைக்கு உட்படுத்தும் குண்டுகளை உருவாக்குவது போல்
1.எண்ணத்தின் உணர்வை மாற்றியமைக்கும் உயர் ஞானத்தைக் கொண்டு
2.இவ் உடலின் ஒவ்வொரு அணுவையுமே வீரியத் தன்மைக்கு
3.சம உணர்வு கொண்டு பரிமளிக்கும் செயலினால்
4.மனிதன் தெய்வ நிலை கொண்டு வளர் சக்திகளை உருவாக்க முடியும்.
விஞ்ஞானத்தில் மனிதக் கருவையே உருவாக்கக் கூடிய ஞானமும் செல்கின்றது.
1.தாய் தந்தை இல்லாமல் அமிலச் சேர்க்கையின் உயிரணு வளர்ச்சி கொண்டு, ஜெட பிம்ப வளர்ப்பிற்கு விஞ்ஞானம் செல்கின்றது.
2.ஆனால் செயலின் பலன் எதிர் நிலையான உணர்விற்குச் சென்று விடும்.
3.அப்படி உருவாகும் சிசுக்கள் மனிதனைக் காட்டிலும் “வீரிய விஷச் சக்தி கொண்ட பிம்பமாய்த்தான் செயல்படுத்த முடியும்…”
இந்தப் பூமியில்… விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை இக்கலி கடைசியில் இன்றெப்படி மனிதன் செயல்படுத்துகின்றானோ அதற்கு மேல் வீரிய சக்தி கொண்டு வியாழனில் இருந்த மனிதர்கள் அன்று செய்தார்கள்,
1.நம் பூமியில் இப்பொழுது வளர்ந்துள்ள விஞ்ஞானத்தைக் காட்டிலும்
2.பல மடங்கு வீரியத் தன்மை கொண்ட விஞ்ஞானச் செயல்
3.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டதுண்டு.
4.அந்தச் செயலின் தொடர் இன்றளவும் சில நிலைகளில் தொடர் கொண்டுதான் உள்ளது.
தன் ஞானத்தின் உயர் ரிஷி சக்தியை… மனித உணர்வு வளரும் செயலுக்கு
1.தியானத்தில் சம உணர்வு கொண்டு எடுக்கப்படும் உயர் காந்த மின் சக்தியைக் கொண்டு
2.இஜ்ஜீவகாந்த சரீரத்தின் உயிர் ஆத்மா பெறும் உயர்வுதான்
3.ஒளியின் ஒளியாய் எதையும் வளர்க்கும் பிம்பச் செயலுக்குச் செயல்படுத்த முடியும்.
பரப்பிரம்மமாய்.. பிம்பமாய்… பரப்பிரம்மமாகச் செயல் தொடர் பெற.. எண்ணத்தின் உணர்வைக் கொண்டு இஜ்ஜீவகாந்தம் உயர் காந்த மின் ஒளியாய் ஒளி பெறும் தன்மை கொண்டுதான் ரிஷி சக்திக்குச் செல்ல முடியும்.
எண்ணத்தின் உணர்வை இச்சரீர கர்ம காரியத்தில் பொருளீட்டி… உண்டு… உறங்கி… கழித்து… வாழும் வாழ்க்கையில் இச்சரீர ஆசையை வைக்காமல்… எண்ணத்தின் உணர்வை உயர் ஞானத்தில் உய்யும் வழியை உணர்ந்தே… ஒளி பெறல் வேண்டும்.
வாழ்க்கையில் எவ் அலை சுவையை இவ்வெண்ண உணர்வு பெற்றதோ அதன் உந்தலுக்குகந்த இச்சையில்தான் நாம் வாழுகின்றோம்… வாழவும் முடியும்.
ஆனால் மனிதனின் உயர்ந்த தத்துவ சக்தியைக் கொண்டு ஞான ஒளி பெறும் வளர்ச்சிதானப்பா உயர்ந்த வளர்ச்சி…!
1.எல்லா உயிரனங்களிலும் உயர்ந்த நிலை கொண்ட இம்மனிதக் கரு வளர
2.சமமான எண்ணம் கொண்ட சாந்த உணர்வுடன் கூடிய ஜெபத்தால் பெறும்
3.உயர் காந்த மின் சக்தியின் அணுக்களைக் கொண்டு
4.இவ்வுயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே உயர்வு நிலை பெறச் செய்ய முடியும்.